கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1979.03.15

Page 1
கலையும் சமுதாயமும் கவிஞர் கண்ணதாச கண்ணதாசன் - சில FIDOI]] 6)|II]]fUIl மனிதரில் இத்தனை கேள்வி ? பதில்!
 
 
 
 
 


Page 2
சமூக நீதி
. மாதவன் .
“ரெயில் டிக்கெட்டுக்கு பணம் மட்டும் வாங்கிப் போடுருங்க. உட்கார சீட் மட்டும் கொடுக்கமாட்டாங்க?"
பதுளையை நோக்கி மலைக்குன்றுகளில் ஏறியும் இறங்கிவும் உத ரட்ட மெனிக்கா எக்ஸ்பிரஸ் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. நிற்கவே இடமில்லாது நெரிபடும் கூட்டம். அதற்கிடையே டிக்கெட் பரி சோதகர் இருவர். டிக்கெட்டுகளைப் பெற்று, சரிபார்த்து வெட்டிக் கொண்டிருந்தனர். காலில் தவம் நின்ற ஒருவர் தன் மனக்குமைச்சலை மறைமுகமாக டிக்கெட் பரிசோதகர் மேல் தீர்க்க முயன்ருர்.
"என்ன மிஸ்டர் டிக்கெட் இருக்கா என்று மட்டும் கேட்கிறீங்க. எங்களுக்கு சீட் கொடுக்க வேணும் என்பதைப் பற்றி மட்டும் உங் களுக்குக் கவலையில்லை"
ஒரு வாலிபன் உறைப்பாகக் கேட்டான். அவனது களைப்பும், அத ஞல் ஏற்பட்ட வேதனையும் அவன் குரலில் ஒலித்தது.
'இது எங்க டியூட்டி, நாங்கள் செய்கிருேம்." ஒரு பரிசோதகர் தன் தலையை நிமிர்த்தி தன் கண்ணுடிக் கூடாக அவ்னைப் பார்த்துவிட்டுக் கூறினர்.
“சீட் தருவது மட்டும் உங்க டியூட்டி இல்லையோ' வாலிபன் வெடுக்கெனக் கேட்டான். டிக்கெட் பரி சோ த கர் மெளனமாக தன் வேலையைத் தொடர்ந்தார்.
"இவங்களை உதைக்க வேண்டும்?" 'பாவம், இவங்க எங்களைப் போலவே கூலிகள்" "அரசாங்க ரெயில்வேயின் தவறு. இவங்களை திட்டி என்ன
வாலிபனை சுற்றி நின்றவரிடை பல்வேறு கருத்துகள் பரி மாறப்பட்டன.
"அரசாங்க ரெயில்வே என்ருல் ஆளும் வர்க்கத்தின் ரெயில்வே, மக்கள் ரெயில்வே யென்ருல் இத்தனை மோசமாக இருக்குமா?"
அரசு என்ருல் ‘மக்களது என்று அமைதிகாண முயன்ற ஒரு வருக்கு வாலிபன் பதில் கூறினன்.
தன்முன்னே நடைபெற்றுக்கொண்டிருந்த வேதனையும் வேடிக் கையும் நிறைந்த காட்சிகளையும் : உ  ைர யா ட ல் களை யும்,
- 2 pagpo

ஒரு மூலையிலுள்ள சீட்டில் மகளோடு இரு ந் த படி தங் கப் பன் பார்த்துக்கொண்டிருந்தான். அக்கூட்ட நெ ரி சலி ல் ஒரு வெள்ளைக்காரன் கூடநின்றன். சன்னல் ஊடாக குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தது. கீழே பசுமை நிறைந்த பள்ளத்தாக்கு. ப்ார்வைக்கு எட்டிய தொலைவில் புகார்ப் படலம் மலை உச்சியை முற்றுகையிட்டு இருந்தது. உள்ளும் வெளியுமாக இ வ. ற்  ைற வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள், தங்கப்பனின் பத்து வயது நிரம்பாத மகள் சோதிமலர்.
இரண்டுபேர் உட்காருவதற்கே உரிய சீட்டில் தங்கப்பனின் அருகே மற்ருெரு நடுத்தர வயதினரான தவராசா உட்கார்ந்திருந் தார். வெள்ளைச் சேட்டும், கடு நீல நிற கால்சட்டையும் அணிந் திருந்தார். காலிலே நன்கு பொலிஸ் செய்த சப்பாத்து.
தங்கப்பனின் மங்கிய சேட்டும் வேட்டியும் கலைந்த தலையும் அரும்பிய தாடியும் அவருக்கு ஒரளவு வெறுப்பை மனதுள் ஏற் படுத்தியிருக்கலாம். ஆயினும் தவராசாவுக்கு அந்தச் சிறு பெண் மேல் ஒரு கண். அருகேயிருந்த தங்கப்பனுடன் உரையாடாத போதும் அவனைப் பற்றியும் யாவும் ஊகிக்க முடிந்தது.
கொழும்புக் கோட்டையில் அவன் அப் பெண்ணுடன் ஏன் ரெயில் ஏற வேண்டும்? அவன் ஒரு தோட்டக்காட்டான்? அதா வது தேயிலை அல்லது ரப்பர் தோட்டக் கூலி. மகள் கொழும்பில் எங்கோ வீட்டு வேலைக்காரியாக இருந்தவள்; இப்போது பெ ரு நாளோ ஏதோ காரணம் காட்டி தோட்டத்திற்கு அழைத்துச் செல்கிருன்!
தவராசாவின் மனைவி அதே வயதிலுள்ள பெட்டை ஒன் றையே தனக்கு உதவிக்காக கேட்டுக்கொண்டிருந்தாள். 13, 14 கடந்த பெரிசான பெட்டைகளென்ருல் பக்கத்து வீட்டுப் பெடியங் களுடன் சேஷ்டைக்குப் போய்விடுவார்கள் என்பது அவரின் மனைவி யாரின் கோட்பாடு,
எப்படியும் அவனேடு பேச்சுக் கொடுத்து, அச்சிறு பெண்ணை வீட்டுவேலைக்குத் தட்டிக்கொள்ள வேண்டும் என்ற நினைவோடு கண்களை மூடியபடிசோய்ந்திருந்தவர் அரைத்தூக்கமாகிவிட்டார்.
ரெயிலில் நின்றபடி பிரயாணம் செய்தவரின் சலசலபும், டிக் கெட் பரிசோதகர்களும் அவரது தூக்கத்தைக் கலைத்து விட்டனர்.
“என்ன பிள்ளையைக் கூட்டிக்கொண்டு ஊருக்கா' "ஆமா கொழும்பிலை ஒரு வீட்டிலை வேலை செய்திட்டிருந்தாள். ' திாய்க்கு உடம்பு சரியில்லை. அதுதான் கூட்டியிட்டுப் போகிறேன்"
- 3 -

Page 3
தவராசாவின் மனக்கோட்டை உடைந்து விட்டது. ஆயினும் , நப்பாசை விடவில்லை.
'இனி கொழும்புக்கு எப்ப கூட்டிப்போகப்போகிருய்?"
“பிள்ளை வளர்ந்திட்டுது. தாய்க்கும் உதவியில்லை. தோட்டத் திலையே புல்லு வெட்டவும் அனுப்பலாம். அங்கேயிருந்தால் 2, 3 வருஷத்திலை தோட்டத்திலையே பேரும் பதிஞ்சிடலாம்"
தவராசா முற்முக நம்பிக்கையிழந்து விட்டார். ஆயினும் இவ னுடன் பழகி, இவனை தூண்டில்மீனுக வைத்து மற்ருெரு இருலை யாவது பிடித்து விடலாம் என்று எண்ணிக்கொண்டார். அவனது தோட்டத்துப் பெயர், இடமெல்லாம் விசாரித்துக்கொண்டார்.
*தோட்டத்திலை என்ன சம்பளம் தாருங்க” தவராசா கேட்
lit.
*சம்பளமென்று நாளைக்கு 10, 12 ரூபா, கொழுந்து பறிக் கிறதைப் பொறுத்து போடுவாங்க ஆணு மாதத்திலை 15, 20 நாள் தான் வேலையிருக்கும், மாதம்முடிய, சம்பளம் போ டு ற அன் றைக்கு கையிலை 10, 20 ரூபாதான் தேறும். மற்றதெல்லாம் கூட் பன் சாமான், சேமலாப நிதி என்று பிடிச்சுக்கொள்ளுவாங்க"
**வீட்டிலை எல்லாரும் வேலைக்குப் போவீங்களா'
"நானும் பெஞ்சாதியுந்தான் போகிருேம். அவளுக்கும் இப் பெல்லாம் உடம்பு சரியில்லை. இந்தப் பெட்டைக்கு இளை சா க இரண்டு இருக்கு. போதிய வேலையும், நல்ல கூலியும் கிடைச்சால் இந்தப் பிள்ளையை பதினைஞ்சு ரூபா சம்பளத்திலை கொழும்பு வீட்டிலை அடிமை வேலைக்கு விடவேணுமா?”
தவராசாவின் வினவின் உள் அர்த்தத்தை கிரகித்தபடி தங்கப் பன் பதில் கூறினன். தவராசா சிறிது நேரம் மெளனமாக இருந் தார்.
எதிரே கூட்டத்தில் நெரிபட்டபடி வெள்ளைக்காரன் நிற்பதை பார்ப்பது தங்கப்பனுக்கு கஷ்டமாக இருந்தது.
தங்கப்பன் திரும்பி தவராசாவைப் பார்த்துக்கேட்டான்:
**அய்யா கொழும்பிலையா வேலை செய்யிறது. எங்கே இந்தப் பக்கம்??
தவராசா இத்தகைய விசாரணையை அவனிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. ஆயினும் பதில் கூறவேண்டிய கடமை; சுருக்கமாக
கூறினர்:
۔ 4 سس۔

"கொழும்பிலைதான் வேலை. குடும்பம் பதுளையில். சனி, ஞாயிறு எங்களுக்கு லீவு, போயா விடுமுறையோடு வீட்டுக்குப் போகிறேன்" 'அய்யா எங்கே வேலை செய்யிறது? என்ன சம்பளம் கொடுக் கிருங்க?’ தங்கப்பனின் வினு அவரை மீண்டும் வியப்பில் ஆழ்த்தி ԱմՖl.
"சேட், கால்சட்டை போன்ற உடைகள் தைச்சு வெளி நாட் டுக்கு ஏற்றுமதி செய்கிற கொம்பனியிலை வேலை. மாதம் 650 ரூபா சம்பளம்”
தங்கப்பனுக்குப் புரியக் கூடிய விதமாகப் பதில் கூறினர். "நகரத்திற்கும் தோட்டப் புறத்திற்கும் எத்தனை வேறுபாடு காட்டுருங்க பார்த்தீர்களா. எங்களுக்கெல்லாம் வேலை செய்தால் தான் சம்பளம். 30 நாளும் வேலை செய்ய தயாராயிருக்கிருேம் பாதி நாளைக்குத்தான் வேலை தாருங்க. உங்களுக்கு 20 நாள் மட் டும் வேலை. இத்தனை சம்பளம் போடுகிருங்க” _தேயிலைத் தோட்டக்காரனது தரத்திற்கு மேலான பேச்சு. ஆயி னும் தங்கப்பன் கூறியதில் உண்மையிருப்பதையும் சமூக நீதி இல் லாமையையும் தவராசா ஒரளவு உணர்ந்தார். ஆனலும் இத்த கைய ஒப்புநோக்கை அவர் விரும்பவில்லை.
‘அதெப்படி நகரத்தையும் தோட்டப் புறத்தையும் இப்படி ஒப்பிட்டுப் பார்க்க முடியும்? நகரத்திலை செ ல வும் அதிகம் தானே”
'கிராமங்களிலில்லாத வசதிகளெல்லாம் நகரத்திலேதானே இருக்கிறது என்று எங்க யூனியன் தலைவர் அடிக்கடி கூறுவார், கிரா மங்களைச் சுரண்டித்தான் நகரத்தில் வேலை செய்பவர்களுக்கு கிரா மப்புறத்திலும் பார்க்க அதிக சம்பளமும் வசதிகளும் அளிக்கிருர் கள் என்றும் கூறுவார்’
தவராசாவிற்கு அவன் கூறியதில் ஓரளவு உண்மை இருப்பது போலதோன்றியபோதும் அதை முற்ருக ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. ஆயினும் உழைப்பிற்கும் கொடுக்கப்படும் கூலிக்கும் இடை யில் எவ்வித தொடர்பும் இல்லை என்பது அவருக்கு ஓரளவு புரிந் தது. சிறிதுநேரம் மெளனமாக சிந்தித்துக்கொண்டிருந்தார். தங்கப்பன் பார்வை அடிக்கடிஅந்த வெள்ளைக்காரன் மேல் பதிந்தது.
"நாங்க தைக்கிற சேட்- உடையெல்லாம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகிறது. டாலரில் அவங்க பணம் கொடுக்கிருங்க” ቆ "எங்க தோட்டத்துத் தேயிலையும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி யாகிறது" " - .
wamonu : است

Page 4
தங்கப்பனின் விவேகமான பதில் அவரை வியப்புறச் செய்தது.
** தேயிலையை விவசாயப் பொருள் என்றும் தைத்த உடைகளை யந்திரப் பண்டம் என்றும் சொல்லுவார்கள். இரண்டிற்கும் இடை யில் வேறுபாடு இருக்கத்தானே செய்யும்"
"எந்தப் பொருளானலும் மனித உழைப்பால்தான் ஆனது என்று எங்க சங்கத் தலைவர் அடிக்கடி கூறுவார். அப்படியென் முல் மனிதர் உழைப்பிலே ஏனிந்த வேறுபாடு?’
தவராசாவால் அவன் வினவிற்கு சரியாக பதில் கூறமுடிய வில்லை. வண்டி ஒரு பாலத்தின் மேலாக செவிஅதிரும் சலசலப்பு டன் ஒடியதை தொடர்ந்து சிறிது நேரம் மெளனமாக இருந்தார்.
காலில் சப்பாத்தும் அரைக்கால் சட்டையும் சு வெட்ட ரு ம் அணிந்தபடி பொல் காவலையில் ஏறிய வேளை தொடக்கம் நின்று கொண்டிருந்த வெள்ளேக்காரன் மேல் தங்கப்பனுக்கு அடிக்கடி அனுதாபம் ஏற்பட்டுக்கொண்டிருந்தது. அவன் ஹிப்பிபோலவும் தோன்றவில்லை. விடுமுறையோடு வீடு செல்லும் கூட்டத்தோடு இவன் ஏன் இந்த மூன்றம் வகுப்பில் ஏறிஞன் என்பது 96). னுக்குப் புரியவில்லை.
அவனுக்கு மகளை மடியில் வைத்துக்கொண்டு சீட் கொடுப் போமா, விடுவோமா என்ற மனப்போராட்டம் அடிக்கடி ஏற்பட் டுக்கொண்டிருந்தது. சீட்டில் உட்கார அவன் மறுத்து விட்டால்...! அவனும் அவனது நாட்டில் எங்களைப்போல ஒரு தொழிலாளி யாகவே இருப்பான். நாமெல்லாம் உழைப்பு நேரத்தை விற்கும் தொழிலாளர்கள். ஆனலும் எத்தனை வேறுபாடு. அவனுல் 6000 மைல் கடந்து இங்கே வரமுடிகிறது. என் உழைப்பால் கொழும் புக்கே செல்ல முடியவில்லை. கடன்பட்டே செல்லவேண்டியிருக்கிறது. அவன் ஏகாதிபத்தியத் தொழிலாளி. நாங்கள் காலனி நா ட் டு த் தொழிலாளி. அப்படித்தானே. தங்கப்பன் சிறிது துணிச்சலுடன் தன் மகளை மடியில் வைத்துக்கொண்டு தவராசாவை தன் பக்கமாக நகரச் செய்தான். அந்த வெள்ளை நிறத்தவனை ஒரத்தில் உட் காரும்படி சமிக்கை செய்தான். தவராசாவும் வேண்டினர்.
தோங்யூ" என்று கூறியபடி அவன் உட்கார்ந்து. தன் முதுகில் சுமக்கும் பொதியை காலருகே இழுத்து விட்டுக்கொண்டான்.
"நீங்க அமெரிக்கன, இங்கிலிஷ்காரன" தவராசா ஆங்கிலத் தில் கேட்டார்.
**அமெரிக்கன்"

இரண்டாவது வகுப்புக்கு டிக்கெட் வாங்கிய போதும் அதற் குள் நுழைய முடியாததால் மூன்ரும் வகுப்பில் ஏறியதாக அவன் கூறினன்.
"அமெரிக்காவில் என்ன செய்கிறீர்கள்?" 'பால்மா தயாரிக்கும் பாக்டரியில் வேலை செய்கிறேன்”
‘என்ன சம்பளம் கிடைக்கிறது?"
'மணித்தியாலத்திற்கு இரண்டரை டாலர். நாளுக்கு 20 டாலர் கிடைக்கும்"
**நாளொன்றிற்கு 320 ரூபா. அப்பாடா. என் மாதச் சம் பளம் இரண்டு நாள் வேலையில் கிடைத்து விடுகிறது’
ஆங்கில உரையாடலை அரைகுறையாக புரிந்துகொண்ட தங் கப்பனுக்கு தவராசா தமிழில் விளக்கினர். அவர்களருகே நின்று கொண்டிருந்த அந்த வாலிபனும் அவர்களது உரையாடலை கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்தான். w
“ஒரு மாதம் முழுவதும் உழைத்தாலும் எனக்கு இவ்வளவு கூலி கிடைத்துவிடாது. நம் தலைவர் அடிக்கடி கூறுவது உண்மை தான். அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகளோடு வியாபாரம் செய்யுமட்டும் எங்க நாட்டிற்கு விமோசனம் கிடையாது’
தங்கப்பன் கூறினன். உடனே அதை மறுப்பவர் போல தவ Trt Fir G35 o strř.
'ஏனப்படிச் சொல்லுகிருய்?”
“எங்க தலைவர் அடிக்கடி நினைவூட்டுவார். பண்டங்களை பரி மாறும்போது மனித உழைப்பை பரிமாறுவதாக நாங்க எண்ணிக் கொள்ளவேண்டும் என்று. அதன்படி பார்த்தால் எங்க தோட்டத் துத் தேயிலையை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும்போது என் நாள் கூலி 10 ரூபாவையும், உங்க பாக்டரி உடைகளை ஏற்றுமதி செய்யும்போது உங்க நாள் கூலி 30 ரூபாவையும் அமெரிக்க பால் மாவை இறக்குமதி செய்யும்போது 320 ரூபா நாள் கூலியுடன் பரிமாறிக்கொள்கிருேம். இது எத்தனை மடங்கு கொள்ளை .. .
தங்கப்பன் தன் அறிவுக்கு எட்டியதை கூறிமுடிக்கு முன் தவராசா குறுக்கிட்டுக் சொன்னர்.
'உன் தலைவர் உனக்கு தவருகக் கணக்குச் சொல்லித் தந்
திருக்கிருர். மூலதனத்தைப் பற்றி அவருக்கு எதுவும் தெரியாது.
۔۔۔۔7 حس۔

Page 5
அமெரிக்காவில் பெரிய மூலதனம் போடப்படுவதால் அதிக கூலி யும் கொடுக்க முடிகிறது"
தங்கப்பன் கூறியதில் ஒரளவு தருக்க நியாயம் இரு ப் பது போல தவராசா உணர்ந்த போதும் அவரால் இத்தகைய பெரிய வேறுபாடு இருப்பதை ஏற்றுக்கொள்ளமுடியா நிலையில் பதில் கூறி ஞர். தங்கப்பனல் உடனே அவர் கருத்தை மறுக்கமுடியவில்லை. தலைவரின் கருத்து தவருக இருக்க முடியாது என்ற நம்பிக்கை அவனுக்கு இருந்தது. தான் ஒப்பிட்டுக் கூறியதில் ஏதாவது தவறிருக்குமா என்று சிந்தித்துப் பார்த்தான். அவ்வேளை தங்கப் பனுக்கு உதவ அந்த வாலிபன் திடீரென முன் வந்தான் அவன் தவராசாவைப் பார்த்துச் சொன்னன்:
*உங்க பேச்சுகளை நான் கேட்டுக்கொண்டுதான் வந்தேன். தோட்டத்தில் கூலிவேலை செய்தபோதும் அவரே சரியான உண் மையை தெரிந்து வைத்திருக்கிருர், இன்றைய உலகப் பிரச்சனையே இதுதான். ஏகாதிபத்திய நாடுகளெல்லாம் இலங்கை போன்ற மூன்ருவது உலக மக்களது உழைப்பை சமனில்லாத வகையான பண்டப் பரிவர்த்தனை மூலம் அபகரிக்கின்றன, சுரண்டுகின்றன என் பது உண்மையே. இன்றைய உலகின் பெரிய முரண்பாடு இதுவே தான்..?"
அந்த வாலிபனின் திடீர் பேச்சை மூவரும் தலையை நிமிர்த்தி கேட்டனர். அவன் மேலும் தொடர்ந்தான்:
"கிராமத்து மக்களது உழைப்பை சுரண்டியே எம் நாட்டில் நகரத்தவர்கள் ஓரளவு வாய்ப்பாக வாழ்கிருர்கள். பின்னர் நகரத் தவர் உழைப்பை சுரண்டி ஏகாதிபத்திய நாட்டவர் மிகவாய்ப்பாக வாழ்கின்றனர். இச் சுரண்டல் சாதாரண சுரண்டல்ல, இங்குள்ள 30 தொழிலாளர்களுடைய ஒரு நாள் உழைப்பை விற்றுவிட்டு அமெரிக்காவில் உழைப்பவரது ஒரு நாள் உழைப்பை வாங்கிக் கொள்கிருேம். இது எத்தனை ஏமாற்று பார்த்தீர்களா?”
இளைஞனது ஆர்வமான பேச்சைக் கேட்ட அமெரிக்கர் அவர் களது உரையாடல் விஷயத்தை அறிய விரும்புவாகக் கூறினர். வாலிபன் ஆங்கிலத்தில் விளக்கிக் கூறினன்.
"ஒ யெஸ்இம்பீறியலிசம் அன்ட் அன் ஈக்குவல் எக்சேஞ் ஒப் LGull' (Imperialism and unequal exchange of Trade).
இவை பற்றி முன்னரே கற்று அறிந்திருந்தவன்போல அவனது பேச்சு இருந்தது. வாலிபன் கூறிய விளக்கத்தை அமெரிக்கன் ஏற் றுக்கொண்டான். புதிய கண்ணுேட்டத்தில் விஷயங்களை ஆராயும் உரையாடலில் அவனும் சேர்ந்துகொண்டான்.
"இக்கொடுமைகளுக்கு என்ன விடிவு?"
(GO5rlíř uš: 31 umrtřšs)
- 8

கண்ணதாசன்-சில குறிப்புகள் - செ. கணேசலிங்கன் -
“பாரதியார், இளங்கோவடிகள், கம்பன், வள்ளுவரிலும் பார்க்க கண்ணதாசனுக்குப் பின்னல் இன்று நிற்கும் கூட்டம் பெரிது" என்று கண்ணதாசன் ஒரு மதிப்பீடு என்ற கட்டுரையில் திரு. இராசா மணி கூறுவதை எவரும் மறுக்க முடியாது. ஆகவே இன்று தமிழகத் தில் மிகவும் செல்வாக்குப் பெற்ற கவிஞர் கண்ணதாசனின் கவிதை கள், எழுத்துக்கள் பற்றி ஒரு சரியான மதிப்பீடு செய்வது அத்தி யாவசியமாகும். இதன் முதற்படியே 'கண்ணதாசன் ஒரு மதிப்பீடு' என்ற கட்டுரையாகும்.
கண்ணதாசனின் வர்க்கம் என்ன? என்பதற்கு சரியான விடை கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. சிறுவுடைமை குட்டி பூர்ஷ்வா வர்க்க நிலையில் நின்று அதே வர்க்கத்தினருக்கே கண்ணதாசன் பாடுகிருர்; எழுதுகிருர்,
குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் உணர்வுகளை, தேவைகளை பிரதி பலிப்பதஞலேயே அவர் அவ் வர்க்கத்தினரிடை மிகவும் செல்வாக் குப் பெற்றவராகத் திகழ்கிருர் . இக் குட்டி பூஷ்வா வர்க்கத்தவர் கல்வி கற்றவர்கள். பெரும்பாலும் நகரங்களில் வாழ்பவர்களாவர். கிராமங்களில் இவர்களுக்குச் சிறு சொத்துகள் இருக்கலாம். நகரங் களில் வந்து அரசு, வாணிப நி* பங்களில் உழைப்பு நேரத்தை விற்று வாழ்பவராவர் இவர்கள் பாட்டாளிகளல்ல. ஆயினும் இவர் கள் உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவை-விலைவாசி ஏற்றங்களை சமாளிக்க முடியாது துன்பப்படுபவர். இவர்கள் அணிதிரளும் போது தொழிலாளி வர்க்கத்திற்காக அவரது கவிதைகள் விரியும். இவ் வர்க்கத்தவரின் மற்ருெரு பி ச்சனை கிராமங்களிலிருந்து அந்நியப் படுத்தப்பட்டமையாகும். இது முதலாளித்துவ வளர்ச்சியில் தவிர்க்க முடியாததாகும்.
கூட்டுச் குடும்பம், அதன் உணர்வுத் தொடர்புகளை முதலாளிற் துவ வளர்ச்சி ஈவிரக் கமின்றி உடைந்து விடுகிறது.
கண்ணதாசனின் சினிமாப்பாட்டுகளைத் தனியாகவும் பிற கவி தைகள், கட்டுரைகளை வேருகவும் ஆராய்வதே சிறந்த முறையா கும்.
ஏனெனில் சினிமா மூலமே அவர் ஸ்டார்போல உயர்வு பெற்று. இன்றைய வளர்ச்சிக்கு உயர முடிந்தது. சினிமா பாட்டுகள் வெறும் விற்பனைப் பண்டங்களே. அவை ஆக்கப்படும் முறைகளும் வேருகும்.
سمیر

Page 6
சினிமாவில் கதாசிரியர், டைரக்டர், இசையமைபாளர் கூடிப்பேசி கதையின் குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் பாடல்கள் இடம்பெறவேண் டும் என்பதை தீர்மானிப்பர். பெரும் பாலும் கதைச் சூழல், குறிப் 9 ill- சந்தர்ப்பங்கள், பாடலின் உட்கருத்துகள் பற்றிய விபரங்களே யும் கவிஞரிடம் கொடுப்பர். கவிஞர் எழுதும் பாடலை கதாசிரியர், டைரக்டர் சரிபார்த்து பெரும்பாலும் திருத்தங்களும் வேண்டலாம். பின்னர் இசையமைப்பாளர் கவிதைக்கு இசையமைக்கும் போதும் திருத்தங்கள் தேவைப்படலாம். இசையமைப்பாளர் வேண்டும்படி குறிப்பிட்ட சொற்கள் வரிகள் மாற்றப் படலாம். கண்ணதாசனின் கவிதை ஒன்றில் இலக்கணவழு இருப்பதாக ஒரு இலங்கையர் சுட் டிக்காட்டியபோது கண்ணதாசன் பின் வருமாறு பதில் கூறினர்.
"இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று" சினிமாப் பாடல்களில் உட்பொருளிலும் பார்க்க இசைக்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. ஏனெனில் சமுதாய மாற்றழ் சினிமா முதலாளிகளின் தேவையல்ல. அவர்கள் சினிமாகவ, சினி மாப்பாடல்களை விற்பனைப் பண்டமாகவே கருதுகின்றனர். கண்ண தாசன் பாடல் எழுதி, ராஜா இசையமைத்து, பாலு பாடின் படம் நல்ல வசூல் தரும் ரிக்கார்டு நன்கு விற்பனையாகும் என்பதே முத லீட்டாளரின் முதல் நோக்கமாகும். இசைக்காக கவிதை எழுதுவது என்பது உருவ வழிபாடாகும். இதன் மூலம் கவிதை அதன் ஆத் மாவை, அதன் தேவையையே இழந்து விடுகிறது.
ஆகவேதான் கண்ணதாசனின் சினிமாப் பாடல்களை தனியே ஆராயவேண்டும் என்று கூறுகிறேன்.
ஆயினும் ஒரே காம, காதல்ரச கோட்பாட்டிலேயே பெரும் பாலான கவிதைகளை அவர் உற்பத்தி செய்கிருர், மாறுபாடான சமுதாய உணர்வுள்ள கவிதைகளை அவர் எழுதவில்லை என நான் கூறவில்லை. கட்டுரையில் பல உதாரணங்களை திரு. இராசாமணி எடுத்துக்காட்டியுள்ளார். -
நகரங்களில் வந்து தனிமைப்பட்டு வாழ்பவர்களின் பாச உணர் வுகள், பாலுணர்வுத் கே வை! சூக்கேற்ப காதல், காமரசம் சொட்ட கவிஞரது கவிதைகள் இருப்பதைக் காணலாம். சினிமாவும் இப் பணியையே செய்கிறது. கவிஞரது கவிதைகள் அதற்குப் பக்கபல மாக,மேலும் வலுவேற்படுத்துவதாக உள்ளது. சினிமா என்ற நவீன தொழில்நுட்பக் கலை வடிவ மூலம் சிறந்த இசையமைப்பு. நவீன இசைக் கருவிகளும் இணைந்து கண்ணதாசனது பாடல்களை சிறப்பாக்கி வேகமாதப்பரவ துணை செய்துள்ளதையும் எவரும் மறுக்க முடியாது. ரேடியோ நிலையங்கள், இசைத்தட்டு. ரே ப்ரிக்காடர் ஆகியவையும்

பிற துணைகளாகும். 3-4 நிமிடங்கள் மட்டும் கொண்ட ஒரு பாடலை இசையோடு வெளிக்கொணர ரூ. 5000 தொடக்கம் ரூ. 10,000 வரை செலவு செய்யப்படுகிறது. அதற்கு மேலாக பல்லாயிரம் வரை செலவு செய்து அப் பாடலுக்கு சினிமாவில் கா ட் சி வடிவ ம் (WISUAL) தரப்படுகிறது. புகழ்பெற்ற சிறந்த பாடகர்களால் கண்ண தாசனின் பாட்டுகள் பாடப்படுகின்றன. ஸ்டார் என்ற கவர்ச்சியும் மதிப்பும் பெற்ற நாடக, நடிகைகளின் வாயசைவின் மூலம் கவிதை கள் வெளி வருகின்றன. ஆகவே சினிமாவில் வெறும் ஒலியோசை மட்டுமல்லாது ஒரு காட்சிப் பார்வையும் பாடல்களுக்குத் தரப்படு கின்றன. காட்சிப் பார்வை பாடலின் தரத்தை மேலும் உயர்த்தி விடுகிறது. இத்தகைய சிறப்புகளே கண்ணதாசனின் செல்வாக்கிற்கு முதல் காரணமாகும்.
ஓரளவு புரட்சி போலத் தோன்றும் கவிதைகள், சஞ்சிகைகளில் வெளிவந்து சில ஆயிரம் பிரதிகள் மட்டும் விற்பனையானவையே. அவற்றை ஆளும் வர்க்கம், அதை ஒட்டி நிற்கும் சினிமா தயாரிப்பு முதலாளிகள் திரைப் படங்களுக்காக பயன்படுத்த மாட்டார்கள். ஆகவே கண்ணதாசன் சினிமாவின் தேவைகளை பூர்த்தி செய்பவராக வும் கவிதையை விற்பனைப் பண்டம்ாக்குவதற்கும் எழுதவேண்டிய auptmaust si. ஆகவ்ே கண்ணதாசனின் சினிமாக் கவிதைகள் சிறந்த விற்பனைப் பண்டமாகவும் வெளிவருகின்றன. இப் பண்டங்களைப் பயன்படுத்த ஒரு பெரிய குட்டி பூர்ஷ்வா வர்க்கம் வளர்ந்து வரு வதும் தவிர்க்க முடியாததாகும்.
அடுத்ததாக ‘அர்த்தமுள்ள இந்துமதம்” பற்றியதாகும்.
ஒரு காலத்தில் தி. மு. க.வின் முன்னணியில் நின்று நாஸ்திகப் பிரச்சாரம் செய்தவர் பின்னர் அதிணின்று ஒதுங்கி மதப் பிரசாரக ராக மாறியதும் வேடிக்கையே. இதன் மூலமும் அவரின் பின்னே மற் ருேர் பெரிய கூட்டம் வளர்ந்து வருகிறது.
*அர்த்தமுள்ள சைவமதம்' என்று பிரச்சாரம் செய்யவில்லை கண்ணதாசன். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று அகில இந்திய ரீதியில் எடுத்துக்கொண்டதற்கும் காரணம் இல்லாமலில்லை முன்னர் நாஸ்திகராக இருந்து திட்டித் தீர்ந்த சைவ மதம். தமிழ் தெய்வங் களை பின்னர் போற்றி பாராட்டி வாழ்த் துவது பெரிய முரண்பாடா : கிவிடலாம் என்பதற்காகவே "இந்துமதம்" என பரவலாக எடுத் : துக்கொண்டார். இன்று அ. தி மு. கவின் ஆஸ்தான கவிஞராக: இருந்துகொண்டே மதப் பிரச்சாரம் செய்வது பலருக்கு வேடிக்கை: யாகவே தோன்றச் செய்யும்.
மதம் என்பது நிலப்பிரபுத்துவத்துடன் தோன்றியதே. இன்னும் கிராமங்களிலே மத நம்பிக்கையும் மூடநம்பிக்கையும் வ்லுவாக இருப்
- 11 -

Page 7
பதைக் காணலாம். அதனுல் நகரங்களில் மத நம்பிக்கை முற்ருக ஒழிந்துவிட்டது என்று கூறவில்லை. நகரத்தவரெல்லாம் கிராமங் களிலிருந்து உழைப்பை விற்க வந்தவர்களே. அரசு, வாணிப நிலையங் கள், தொழிற்சாலைகளில் உழைப்பை விற்க கிராமங்களிலிருந்து வந்த குட்டி பூர்ஷ்வாக்களிடம் மத நம்பிக்கை இருப்பது வியப்பில்லை. கல்வி கற்ற இவர்கள் மதத்தை ஒரளவு உயர்மட்ட நிலையில் நின்று பார்க்க முயல்வதில் வியப்பில்லை. ஆகவே குட்டி பூர்ஷ்வாக்ளின் தேவைக்கேற்ப ‘அர்த்தமுள்ள இந்துமதம்' என எழுதி வெற்றி பெற்றர். இன்று பல்லாயிரக்கணக்கில் இத்தொடர் நூல்கள் விற் பனையாகின்றன. கண்ணதாசன் பழைய கள்ளை புதிய புளாவில் தர முயல்கிருர். அவ்வளவேயாகும். அவர் கூறும் கருத்திலும் பார்க்க ஓசை நயமுள்ள கவிதை நடையிஞல் பெரும்பாலோர் கவரப்படு கிருர்கள் என்று கூறுவதிலும் தவறில்லை.
கண்ணதாசனின் சொல்லாட்சியும் ஒலிநயமும் சிறப்பானவை என்பதை நான் மறுக்கவில்லை. இது உருவம் பற்றிய பாராட்டே.
கண்ணதாசனின் இன்றைய கவிதை ஒன்றை எடுத்துக்கொண் டாலே பெரும்பாலும் அது, மாதிரியாக அவரது கவிதைகளை, இன் றைய கோட்பாடுகளைப் பிரதிபலிப்பதைக் காணலாம்,
சென்ற மாதம் கல்கியில் வெளியான 'தவக்கோலம்" என்ற கவிதையைப் பாருங்கள். ஒரு தஃக் காமம், கா த லை அ வ ர் பாலுணர்வு சொட்டப் பாடுகிருர்,
செங்க யலோடு விழுந்த விழிக்கொரு
சித்திரம் தீட்டுகிருள். பொங்கிய வாயிதழ் காட்டி எனக்கொரு
போதையை ஊட்டுகிருள்! வாலிபம் என்ற வலைக்குள் இழுத்தெனை
வஞ்சி நடத்துகிருள்-திரு ஆலிலை மீதொரு மேகலை ஆடிட
ஆடி மினுக்குகிருள் நூலிடை மீது குடத்தினே வைத்ததில் நோயினை ஊற்றுகிருள்-குணம் நாலையும் மேடைகளாக்கி அதில் ஒரு
நர்த்தனமாடுகிருள். அஞ்சிய பார்வையில் ஆசை வளர்த்தெனை
அஞ்சவும் சொல்லுகிருள்-அவள் கொஞ்சிய பாஷையில் ஓடியவார்த்தையை
கூட்டியும் காட்டுகிருள்
---سم 12 سس

வஞ்சி விரித்த கரங்களிலே என வாவென கெஞ்சுகிருள்-மித
மிஞ்சிய போதையில் கண்கள் சிவந்திட
வேதனை கொள்ளுகிருள்
இத்தனை காமரசம் சொட்டுவதுபோல் எழுதிய கவிதைக்கு ஒரு திருப்பம் தருகிருர் அடுத்த வரிகளில். இவையெல்லாம் தன் வாலிய நாட்கள் என கூறிவிட்டு தற்போது 'உடம்பில் இரத்தம் இருப்பி னும் எண்ணம் அரும்பவில்லை' என சொல்லிவிட்டு தமிழ் ஞானி களின் மரபுக்கு வருகிருர், அருணகிரிநாதர், பட்டினத்தடிகளின் நிலைக்கு வந்ததாக பாடுகிறர்.
" . . இனி, தன்னந் தனிமையில் தவம்புரிவோமெனக் கதவினைச் சாத்திவிட்டேன்"
கண்ணதாசன் பாட்டாளிகளைப் பற்றி பாடியவற்றை புலவர் எடுத்துக் காட்டுகளுடன் கட்டுரையில் கூறியுள்ளார். இன்று அவர் அர்த்தமுள்ள இந்துமதத்தோடு ஐக்கியமாகிவிட்டார். ஆயினும் ஒன்றை துணிந்து கூறமுடியும், இலக்கிய வரலாற்றில் அவரது காதல், காமரசக் கவிதைகள் யாவும் அடிபட்டுப்போக, சமுதாய உணர்வுடன், வளர்ந்துவரும் பாட்டாளிகளின் நலன் வேண்டி ஆங்காங்கே அவர் எழுதிய கவிதைகளே நிலைத்திருக்கும்.
பிழைத்த குறள்
உழுதுண்டு வாழ்வார் பின்னே-பிறர் தொழுதுண்டு பின் செல்வர் என்று முக்காலமும் உணர்ந்து எக்காலத்துக்கும் பொருந்த பாடியவன் என பார்புகழும் வள்ளுவனே! வாழ்ந்து மடிந்தோனே உழுந்துண்டு வாழ்வோர் மண் கிண்டும் அடிமைகளாய்
சுரண்டுவோர் பின்னே தொழுதுண்டு செல்லும் இக்காலத்தை நீர் எச் காலத்தில் 8வத்தீர்?
- கே. வி. சண்முகராஜா -
w ~~ 13 &reas w

Page 8
கலையும் சமுதாயமும் - 5
சோஷலிச சமுதாயம் என்பது கூட்டுச் சமுதாயமாகும்; தனிச் சொத்துடைமை, முதலாளித்துவத்திலுள்ள தனிமனித உற்பத்தி, விநியோகம், பரிமாற்று மறைந்து கூட்டு உற்பத்தி, கூட்டுவிநியோகம், கூட்டுபரிமாற்று ஏற்பட்டுவிடும்.
இது ஒரு புதிய அனுபவ உணர்வுகொண்ட புதிய சமுதாய மாகும். ஆகவே அத்தகைய புதிய அனுபவத்தையும் வாழ்க்கையை யும் பிரதிபலிக்கும் புதிய கலை, இலக்கியம் அங்கு எழுவதும் இயல் பானதேயாகும்.
இச் சமூக அமைப்பின் தேவ்ைகளை ஒட்டியே கலை, இலக்கியங் களும் படைக்கப்படும், முதலாளித்துவத்தில் உள்ளதுபோன்று தனி நபர்கள் விரும்புவது போன்ற கலை, இலக்கியங்கள் இங்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டா.
கலை, இலக்கியங்கள் சோஷலிச சமூக அமைப்பில் கூட்டாகவே படைக்கப்படும். தனி மனிதர் கலை, இலக்கியங்களைப் படைக்கலாம். ஆயினும் மக்களே அவை சமுதாயத் தேவையை ஒட்டியதாக உள் ளதா என்பதை தீர்மாணிப்பர் மக்களிடை பரவ அனுமதிப்பர்.
இதிலிருந்து நாம் அறிவது ,யாதெனின், உற்பத்தி உறவு எவ் வாறு சமூகத்தில் அமைகிறதோ அதற்கு சேவை செய்வதாகவே மேல்மட்ட அமைப்புகள் யாவும் அமையும் என்பதாகும்.
கூட்டான உற்பத்தி உறவு சோஷலிச சமுதாயத்தில் ஏற்படு வதைத் தொடர்ந்து அரசியல், சட்டம், நீதி, கலை, இலக்கியங்கள் ஆகிய மேல்மட்ட அமைப்புகளும் அத்தகைய உற்பத்தி உறவிற்கு சேவை செய்வதாகவே, நீதிப்படுத்துவதாகவே அமையும். நிலப்பிர புத்துவ உற்பத்தி உறவில் மேல்மட்ட அமைப்புகள் நிலப்பிரபுத்து வத்தை நீதிப்படுத்தின .நிவப்பிரபுவே மதம், சட்டம், நீதி, அரசியல், சாதி அமைப்பு, கலை, இலக்கியங்களை நிலப்பிரபுத்துவத்திற்கு சேவை செய்வதாக ஆக்கிக்கொண்டான். முதலாளித்துவத்தில் இதே மேல் மட்ட அமைப்புகள் முதலாளித்துவ உற்பத்தி உறவிற்கு சேவ்ை செய்தன. கூலி அடிமை உழைப்பு இங்கு நீதிப்படுத்தப்பட்டது.
இவற்றைப் பற்றி நாம் முன்னர் வெளிவந்த கட்டுரைகளிலும் ஆராய்ந்தோம். ஆயினும், இன்று வெளிவரும் கலை, இலக்கியப் படைப்புகளை அல்லது அவற்றைப் படைக்கும் எழுத்தாளர்களையும்,
- 14 -

அவர்கள் நீதிப்படுத்தும் உற்பத்தி உறவுகளைக்கொண்டே நாம் வகைப்படுத்தலாம்.
சாதி, மதம், பெண்ணடிமை, நிலப்பிரபுத்துவ கலை, இலக்கியங் களிலுள்ள கோட்பாடுகளை இன்றும் நீதிப்படுத்தும் கலை, இலக்கியம் படைப்போர் முதல் வகை. வள்ளுவர், கம்பன் காலத்தை பொற் காலம் என இவர்கள் இன்னும் இறுக்கிப்பிடிப்பர். எம் நாடு இன்னும் அரை நிலப்பிரபுத்துவ, அரைக்காலணி நாடாக இருப்பதனலேயே இவர்கள் இன்னும் நிலைபெற்று வருகின்றனர்.
இரண்டாவதாக முதலாளித்துவத்தை நீதிப்படுத்தும் கலை, இலக் கியம் படைப்போராவர். தேசீய முதலாளிகள் வளர்ச்சியடைந்து. நிலப்பிரபுத்துவம் முற்ருக உடைக்கப்படாததால் முதலாளித்து வத்தை நீதிப்படுத்தும் கலை, இலக்கியங்கள் எம் நாட்டில் மட்டு மென்ன தமிழ்நாட்டிலும் இன்னும் ஆதிக்கம் பெறவில்லை. மிகப் பெரிய விற்பனைப் பண்டங்களாக ஆதிக்கம் பெற்ற தமிழ் சினிமா, குமுதம், விகடன், கல்கி போன்றவையே இன்னும் நிலப்பிரபுத்து வத்தை முற்ருக உடைக்கவிரும்பாது கலை, இலக்கியம் படைப்பதை நாம் காணலாம். குமுதம், விகடன், கல்கி ஆகியன தரகு முதலாளி களின் உற்பத்திப் பண்ட விளம்பரங்களிலேயே தங்கியிருப்பதைக் காணலாம். ஏகாதிபத்தியத்தின் தரகர்கள் என்றும் இந்தியாவின் ஏகாதிபத்திய ஊடுருவலை, கூட்டு தொழில் நிறுவன அமைப்புகளின் ஆதிக்கத்தை, அரைக்காலணி நிலையை எதிர்த்து எழுதுவதை நாம் காணமுடியாது. அதே வேளை உள்நாட்டிலும் இவர்கள் நிலப்பிரபுத்து வத்தைப் பேணுவர், ஏனெனில் ஏகாதிபத்தியம் உள்நாட்டில் நிலப் பிரபுத்துவத்தைப் பேணுவதன் மூலமே நிலைக்க முடியும்.
மூன்ருவதாக புதியதோர் சமூக அமைப்பை வேண்டி கலை, இலக் கியம் படைக்கும் கலைஞர்களை நாம் வகுத்துப் பார்க்கிருேம். இவர் கள் புரட்சிகர அரசியலைக்கொண்டவர்களாக இருப்பர். மார்க்சிய கோட்பாடுகளை, விஞ்ஞான பூர்வமான சமூகவியலை, வர்க்கப்போராட் டத்தின் வெற்றியை முன்வைப்பவராக இருப்பர்.
முதலாவதாக. இன்றைய சமுதாய அமைப்பை அப்படியே ஏற் றுக்கொள்ளுகின்ற கோட்பாடுடைய கலை, இலக்கியங்களாகும். எம்மாற்றத்தையும் விரும்பாத இவற்றை நிலை நிறுத்தவியல் (ESTABLISHMENT) என்பதன் கீழ் வகுக்கிருே எம்மைப் பொறுத்த வரை இதுவே படுபிற்போக்கான கலை இலக்கியக் கோட்பாடாகும்.
இரண்டாவதாக, இன்றைய சமுதாயத்தை ஏற்றுக்கொள்ளும் அதே வேளையில் சமுதாய அமைப்பில் சிற்சில சீர்திருத்தம் வேண்டு
- 15 -

Page 9
வதாகும். இவற்றையே சீர்திருத்தவியல் (Reformism) என்கிருேம். ஒரளவு சமுதாய உணர்வும் முற்போக்கும் கொண்டவர்களிடை இப் போக்கைக் காணலாம். இவர்களில் பலர் இவ்வித சீர்திருத்தக் கருத்து களால் சமுதாய மாற்றத்தைக்கொண்டு வந்துவிடலாம் என எண்ணு கின்றனர் சமூக விஞ்ஞானம் பற்றிய சரியான, விஞ்ஞான பூர்வமான கோட்பாடுகளை அறியாதவர்களே இவர்களாவர் சாதி, சமய வேறு பாடுகளை கண்டித்தல், பணத்தால் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளை சாடுதல், வர்க்க வேறுபாடு க%ள மறைந்து மனிதாபிமானம் பேசுதல் ஆகிவற்றை இவர்களது கலை, இலக்கியப் படைப்புகளில் காணலாம். இன்றைய சமுதாய அமைப்பின் குறைகளை இவர்கள் கூறலாம். ஒரு புதிய சமுதாய அமைப்பிற்கு இவர்களால் வழிகாட்ட முடியாது.
மூன்ருவது ஒரு புதிய சமுதாயத்தை (NEWSOCIETY) நோக்கிய கலை, இலக்கியமாகும். மார்க்சிய விஞ்ஞானத்தை கிரகித்தவர்களா லேயே இத்தகைய நோக்குடைய கலை, இலக்கியத்தை படைக்க முடி யும். இவை சமுதாயத்தை அதன் வளர்ச்சிப் போக்கில் சித்தரித்து, வர்க்கப்போராட்டத்தை முன்வைக்கும் படைப்புகளாகும்; தனியுடை g ஒழித்து சமூக உடைமையை வலியுறுத்தி கூட்டு உற்பத்தி, விநியோகம், பரிமாற்றலுக்கு வழிகாட்டும் படைப்புகளாகும். புதிய சமுதாயத்தை நோக்கிய படைப்புகள் வேருகவும் பின்னர் சோஷலிச சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்கு பயன் படும். படைப்புகள் வேரு கவும் இருக்கும் என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும்.
உற்பத்தி உறவுகள் மாற்றமடைய அவற்றின் மே ல் மட்ட அமைப்புகளின் தேவைகளும் மாற்றமடையும் என்பதை முன்னரும் கூறினுேம்,
உற்பத்தி உறவுகள் மாற்றமடையும் போது கலை, இலக்கியங் களின் தேவைகள் மாற்றமடைவது உண்மையே. ஆயினும் அவ்வேளை கலை, இலக்கியங்களின் வடிவங்களும் மாற்றமடையுமா என்ற சந்தே கம் பலருக்கு எழலாம். 'உட்பொருளே வடிவங்களைத் தீர்மானிக் கிறது’ என்பதே எமது கோட்பாடாகும்.ஆயினும் திடீரென கலை உரு வங்களில் மாற்றமேற்பட்டுவிடாது.
நிலப்பிரபுத்துவ கலை, வடிவங்கள் முதலாளித்துவத்தில் இடம் பெறுகின்றன. அவை சிறு சிறு மாற்றங்களடையலாம்.
ஆயினும் முதலாளித்துவத்திலும் அவை நிலைத்திருப்பதைக் காணலாம். கவிதை, கூத்து, அபிநய நாடகம், ஒப்பரா, ஓவியம், சிற் பம் ஆகியவை யாவும் நிலப்பிரபுத்துவத்திலேயே வளர்ச்சியடைந்த கலை வடிவங்களே யாகும். இவை முதலாளித்துவத்தில் மே லும்
- 6 -

வளர்ச்சியடைந்துள்ளன. சிறுகதை, நாவல், சினிமா ஆகியவை முதலா ளித்துவத்தில் தோன்றி வளர்ந்த கலை வடிவங்களாகும். சோஷலிச அமைப்பிலும் முதலாளித்துவத்திலுள்ள கலை வடிவ்ங்கள் யாவும் புதிய தேவையை நோக்கி, பயன்படுத்தப்படும். காலப்போக்கில் சில கலை வடிவங்கள் வலிவிழந்துபோக புதிய கலை வடிவங்கள் தோன்றி ஆதிக்கம் பெறுவது தவிர்க்க முடியாததாகும். பெளதிக விஞ்ஞானத் தின் வளர்ச்சி கலை வடிவங்களுக்கெல்லாம் புதிய மெருகூட்டி வரு வதையும் எவரும் ம்றுக்க முடியாது. *
நுண்கலைகளில் கூடபெளதிக விஞ்ஞான வளர்ச்சி பாதிப்பு ஏற் படுத்தியுள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இசைக் கருவிகள், கம்பியூட் டர் மூலம் தயாரிக்கப்பட்ட இசைகளெல்லாம் இன்று ஆதிக்கம் பெற்று வருவதைக் காண்கிருேம். ஆயினும் யந்திரங்களோ, யந்திர கலை வடிவங்களோ மனிதனுலேயே ஆக்கப்படுகின்றன என்பதை நாம் மறந்துவிடப்படாது.
புதிய கலை வடிவங்கள் பழையவை யாவையும் ஒதுக்கிவிடப் போவதில்லை. பழையன களைந்து புதியன படைப்பதே சோஷலிசத் தின் கோட்பாடாகும்.
சோவியத் திரிபுவாதம்
சோவியத் பிரதமர் கொஸியின் பங்களூரிலுள்ள இந்துஸ்தான் மெஷின் ரூல்ஸ் தொழிற்சாலைய்ை பார்வையிட்டபோது, தானும் முன் னர் போர்மனுக ஒரு தொழிற்சாலையில் வேலை செய்ததை நினைவு கூர்ந்து, அத் தொழிசாலையின் போர் மனை பார்க்க விரும்புவதாக கூறிஞர்.
போர்மனை அழைத்து கொலியினுக்கு அறிமுகம் செய்தனர். இருவரும் உரையாடினர். ※
நாளொன்றிற்கு 8 மணி நேரம் தாம் வேலை செய்வதாகவும் மூன்று ‘சிப்டு" (SHIFT)கள் வேலை நடப்பதாகவும் ஒரு தொழிலாளி கூறியதைக் கேட்டு கொளியின் ஆச்சரியமடைந்தார்.
“எமது தொழிலாளர் நாளொன்றிற்கு ஏழு மணி நேரம் வேலை செய்கின்றனர். வாரத்தில் 2 நாள் ஒய்வு, இரண்டு “சிப்டுகளே வேல் செய்கின்றனர்' என்ருர் கொளியின்,
"மாஸ்கோ திரும்பியதும் இந்திய தொழிலாளர்கள் தம் நாட் டின் அபிவிருத்திக்காக எத்தனை கடுமையாக உழைக்கின்றர், என்று எமது தொழிலாளரிடம் கூறுவேன்' என்ருர் கொளியின். (இந்து) சோவியத் தொழிலாளர் தம் நாட்டு அபிவிருத்திக்கு உழைப்பது போதாது என்பதே அதிகாரத்துவ முதலாளியான கொளியினின்" கருத்தாகும். இந்தியாவிலுள்ள (தரகு) முதலாளித்துவ சுரண்டலை மற்றேர் அதிகாரத்துவ முதலாளியால் எவ்வாறு பிரித்துக் காண முடியும்? சோஷலித்தின் ஆரம்ப அறிவை கூட அவர் மறந்து விட்
L.
- 17 -

Page 10
கே:
கே:
கேள்வி? தில்!
.வேல்.
அமெரிக்கா, சோவியத் ரஷ்யா, சீனு ஆகிய மூன்று நாடுகளுக் கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
மு. சின்னையா, யாழ்.
அமெரிக்கா சென்ற சில ஆண்டுகள்வரை ஆக்கிரமிப்பு நிலை யிலுள்ள ஏகாதிபத்தியமாக வளர்ந்து வந்தது. வியத்நாம் யுத்தத் தோல்வியோடு தற்காப்பு நிலைக்கு மாறிவிட்டது. முன் தன் ஆதிக் கத்திலிருந்த நாடுகளையே ஒவ்வொன்றக இழந்து வரு கிறது. அதேவேளையில் தற்காப்பு நிலையிலிருந்த சோ வியத் ரஷ்யா சமூக ஏகாதிபத்தியமாக மாறி உலக நாடுகளை ஆக்கிர மிக்கும் நிலைக்குவளர்ந்துள்ளது அமெரிக்கா இழக்கும் ஒவ்வொரு நாடும் சோவியத் ரஷ்யாவின் ஆதிக்கத்தில் வருகிறது. வியத் நாம் வெற்றியைத் தொடர்ந்து பல ஆபிரிக்க நாடுகளையும் அண்மையில் ஆப்கானிஸ்தான், ஈரான், கம்பூச்சியாவையும் ஆக் கிரமித்துக்கொண்டது. சீனு தன் எல்லைகளைக் காப்பாற்றும் தற் காப்பு நிலையிலேயே உள்ளது.எந்தநாட்டையும் ஆக்கிரமிக்கும் கோட்பாடு சீனுவிற்கு கிடையாது. ஆக்கிரமிப்புக் கோட்பாட் டைக் கடைப்பிடிப்பதாயின் இந்திய, வியத்நாம் எல்லைகளில் கைப்பற்றிய இடங்களை மீளக்கொடாது தன் நா ட் டோ டு சேர்த்திருக்கலாம். (இஸ்ரேல், எகிப்திய பிரதேசங்களை விட்டுக் கொடாததுபோல்) அது மட்டுமல்ல. கம்பூச்சியாவையே வியத் நாம் ஆக்கிரமிப்பதற்கு முன்னர், சில நாள் யுத்தத்தில் சீன தன் ஆதிக்கத்தில் கொண்டு வந்திருக்கலாம். வியத்நாம் ஆக்கிர மித்தபோது வெற்றுக் குரல் எழுப்பியதே தவிர தடுக்கவும் செல்
லவில்லை.
காலணி, அரைக் காலணி, நவகாலனி நாடுகள் என்ற மூன்று சொற்களுக்குமுள்ள வேறுபாடுகள் என்ன?
ம. சுந்தரம், கொழும்பு. காலணி என்பது ஓர் ஏகாதிபத்திய நாடு மற்றேர் நாட்டை ஆக் கிரமித்து, தன் படைகளை அந் நாட்டில் வைத்து நேரடியாக அந்நாட்டு வளங்களையும் உழைப்பையும் சு ர ண் டு வ தா கும். உ+ம் 1947 வரை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் பிரிட்ட னின் காலணிகளாகவே இருந்தன. அரைக் காலணி என்பது பல் வேறு ஏகாதிபத்திய, முதலாளித்துவ நாடுகள் ஒகு நாட்டில்
രു 8 അ

கே:
தமது மூலதனம், தொழில்நுட்ப அறிவு, நிர்வாகம் ஆகியவற்றை 'நுழைத்து மறைமுகமாக அந்நாட்டைச் சு ர ண் டு வதாகும். உ+ம் 1947ன் பின் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகள் அரைக் காலணி நாடுகளாகவே உள்ளன. நவகாலணி என்பது ஒர் ஏகாதி பத்திய நாடு மட்டும் தன் மூலதனம், தொழில் நுட்பம், நிர்வா கத்தை ஒரு நாட்டில் நுழைத்து மறைமுகமாக தன் ஆதிக்கத் தையும் சுரண் டலையும் நடாத்துவதாகும். உ+ம் லத்தீன் அமெ ரிக்க நாடுகள் அமெரிக்காவின் மூலதனப் பிடியில் அகப்பட்டு சுரண்டப்படும் நிலையினல் நவகாலணி நாடுகள் என அந்நாடுகளை அழைக்கிருேம். சோவியத் யூனியனில் ஏற்பட்டது போன்ற திரிபுவாதம் சீனுவில் வில் ஏன் ஏற்பட்டுவிட முடியாது?
த. பொன் மலர், யாழ்.
உற்பத்தி உறவாகிய அடிப்படை அமைப்பை வைத்துக்கொண்டே இரு நாட்டினதும் சமூக அமைப்பை ஆராய்வதே மார்க்சிய கோட்பாடாகும். சோவியத் ரஷ்யாவில் ‘உழைத்துவிட்டு மாதக் கடைசியில் கூலியைப் பெற்று செலவு செய்கின்றனர். தாம் உற் பத்தி செய்த உடரி உழைப்புப் பற்றி அவர்கள் கவலெப்படு வதில்லை. அங்கு உற்பத்தி உறவு அதிகாரத்துவ முதலாளித்துவ உற்பத்தி உறவாக மாறியிருப்பதையே காண்கிருேம்.
சீளுவின் கம்யூன் அமைப்பு கம்யூனிசத்திற்கு வளர்ச்சியுற இடப்பட்ட அடித்தளமாகும். கூட்டு உற்பத்தி, கூட்டு விநியோ கம், கூட்டு பரிமாற்று ஆகியவை கம்யூன் அமைப்பில் நிலை பெற்றுவிட்டன.
இக் கூட்டு உற்பத்தி உறவும் சோஷலிச, கம்யூனிச சமுதாயம் பற்றிய சிந்தனை பூர்வமான நினைவும் மேல்மட்ட அமைப்புகளும் உறுதியாகிய பின் இவற்றை மாற்றி அமைப்பது என்பது இய லாதது ஒன்ரு கும்.
சின்னஞ் சிறுசுகளை
பாதைகளில் பரதேசிகளாய் பங்களாக்களில் அடிமைகளாய் அலையவிட்டும் அடக்கி வைத்தும் ஆனந்தம் காணும் சமுதாயமே! 蛇一
சிறுவர் ஆண்டென சிறப்பாக விழா வெடுப்பது பூனை கண்ணை மூடிக்கொண்டு பூவுலகு இருண்ட தென்பதாகாதோ? - கே. வி. சண்முகராஜா -
ہس۔ 19 -- '

Page 11
கவிஞர் கண்ணதாசன்
- ஒரு மதிப்பீடு -
- த. ச. இராசாமணி --
கண்ணதாசன் என்றவுடனே உற்சாகத்தோடு பார்க்கிறவர்களும் உண்டு முகத்தைச் சுளிக்கின்றவர்களும் உண்டு. ஏனென்றால் கண்ணதாசனைப்பற்றி நாம் குறிப்பிடுகின்றபோது அவர் எந்த வர்க்கத்தினுடைய பிரதிநிதியாக இருக்கின்றார். அந்த வர்க்கம் எந்த உணர்வுகளை உடையது என்பதை நாம் கணித்து விடுவோமே யானால் இந்தப் பிரச்சினைக்கே இடமில்லாது போய்விடும்.
பாரதிதாசன் பாடல்
முதலாவது, கவிதை என்பது என்ன, கலை இலக்கியம் என்பது என்ன என்பதை நாம் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பாரதிதாசனுடைய பாடல் ஒன்று எனக்கு நினைவிற்கு வருகிறது. அவர் நிலவைப்பற்றிப் பாடுகின்றார். ஓர் அருமையான சொற் கோவை அது.
“நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்து
நிலாவென்று காட்டுகின்றாய் ஒளி முகத்தைக் கோலமுழு தும்காட்டி விட்டால் காதற்
கொள்ளையிலே இவ்வுலகம் சாமோ? வானச் சோலையிலே பூத்ததனிப் பூவோ நீதான்
சொர்க்கவெள்ளிப் பாற்குடமோ, அமுத ஊற்றோ காலை வந்த செம்பரிதி கடலில் மூழ்கிக்
கனல்மாரிக் குளிரடைந்த ஒளிப் பிழம்போ'
கவிஞனுடைய கற்பனை எப்படிப் போகிறது பார்த்தீர்களா. நீல வானத்தை ஆடையாகக் கட்டிக்கொண்டு - நிலவு என்ற ஒளி முகத்தைக் காட்டிக்கொண்டு - ஒரு மங்கை தோன்றுகிறாளாம்.
ஒ நிலவுப் பெண்ணே ஒன்னுடம்பில் ஒரு பகுதியைத் தானே எங்களுக்கு காட்டுகின்றாய். அதுவே கொள்ளை அழகாய் இருக் கிறது. உன்னழகு முழுவதையும் எங்களுக்கேன் காட்டவில்லை? காட்டினால் என்ன நடக்குமென்று நினைக்கிறாய்? எங்கள் உள்ளத்தில் காதல் தோன்றி கணப்பொழுதில் அது காட்டாற்று வெள்ளம்போல் பெருகி எங்களையெல்லாம் அழித்துவிடுமென்று பயப்படுகிறாயா?
外
سے 220. سیی۔

ஏ அழகுப் பெண்ணே, நீ யார்? வான்மாகிய சோலையிலே பூத்த ஒப்பற்ற பூவா? கலப்பற்ற வெள்ளியால் செய்த பாற்குடமா? இல்லை. நீதான் அமுத ஊற்றா? காலையில் தோன்றினாலே சுட் டெரிக்கும் வெயிலை உமிழ்கின்ற கதிரவன். அவன் எங்கே?. காணவில்லை? ஒகோ. அவன்தான் கடலில் மூழ்கி வெப்பத்தை யெல்லாம் இழந்து குளிரடைந்து ஒளிப்பிழம்பாக உன்வடிவிலே தோன்றியிருக்கிறானோ?
இப்படிப் பாடுகின்றார்.
கவிதையும் கலையும்
இது ஒரு அருமையான பாடல். ஆனால் இது ஒரு சிறந்த பாடலே யொழிய, ஒரு சிறந்த கவிதையே யொழிய, ஒரு நல்ல இலக்கியம் அல்ல. ஒரு நல்ல கலை அல்ல. ஏனென்றால் இலக்கியத் திற்கும் கலைக்கும் ஒரு சமுதாயக் கண்ணோட்டம் இருக்க வேண்டும். அந்தச் சமுதாயக் கண்ணோட்டம் என்பது பல்வேறு வடிவில்ே இருக்கலாம்.
மூன்று கோட்பாடுகள் ་་ ஒன்று, பழைய சமுதாய அமைப்புகளை, பழைய சமுதாய நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது, ‘ாஸ்டாபிளிஷ் மென்ட் - நிலைநிறுத்தக் கோட்பாடு, அதை நியாயப் படுத்துவது என் புது, இந்தச் சமுதாயக் கண்ணோட்டத்தில் இன்று பலர் இருக் கிறார்கள்.
அடுத்தபடியாக, இருக்கின்ற சமுதாய அமைப்பில் மேற்பகுதியிலே சில சில்லரைச் சீர்திருத்தங்கள் செய்வது ரிஃபார்மிசம்' - சீர்திருத்தக் கோட்பாடு. ஆனால் அடிப்படையை அப்படியே ஏற்றுக்கொள்வது. சமுதாயக் கண்ணோட்டத்திலே இப்படி ஒரு பகுதி இருக்கிறது,
இன்னும் ஒன்று இருக்கிறது. சமுதாய அமைப்பையே மாற்றி யமைப்பது - "ரெவல்லூஷனிசம்" - மாறுதல் கோட்பாடு.
ஆக சமுதாயக் கண்ணோட்டம் என்றால், இந்த மூன்று வகையிலே, தான் நாம் சமுதாயத்தை அணுக முடியும் ! சமுதாயத்தைப் பார்க்க” முடியும், இதைப் பார்க்கிறபோது, கண்ணதாசன் எங்கே வருகிறார். என்று நாம் பார்க்க வேண்டும்.
1. பழைய சமுதாய நீதிகளை, பழைய சமுதாய அடிப்படையை, பழைய சமுதாய நடவடிக்கைகளை அப்படியே ஏற்றுக் கொள் கிறாரா? அல்லது -
- 21 -

Page 12
2. அந்த அடித்தளத்தை அப்படியே வைத்துக் கொண்டு, மேலே பல சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று சொல் கிறாரா? அல்லது
3. அடிப்படையையே உடைத்தெறிந்து விட்டு ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்துவதற்குத் தன் கவிதைகள் பயன்படவேண்டும் என்று நினைக்கிறாரா என்பதை நாம் பார்க்க வேண்டும்.
அப்படிப் பார்க்கின்றபோது, நான் முதலிலே குறிப்பிட்டது போல, கண்ணதாசன் எந்த வர்க்கத்தைப் பிரதிபலிக்கிறார் என் பதை நாம் பார்க்க வேண்டும்.
கண்ணதாசன் எங்கே?
கண்ணதாசன் சில கவிஞர்களைப் போல முதலாளிகளுடைய நலனைப் பிரதிபலிப்பவன் அல்லன். அதேபோது நிலவுடமை அமைப்பு களை அல்லது நிலவுடைமை கருத்தோட்டங்களைப் பிரதிபலிப்ப வனும் அல்லன்.
இன்னொரு பகுதியிலே வெளிப்படுகிறானா அல்லது அந்த அணியிலே நின்று, அந்த உணர்வைத்தன் உணர்வாக ஏற்றுக் கொண்டு, எந்த அளவுக்குத் தன் கவிதையைப் படைக்கின்றார் என்பது ஒரு கேள்வி.
இந்த இரண்டு வர்க்கங்களுக்கும் இடையிலே இன்னொரு வர்க்கம் இருக்கிறது.
கூட்டம்
நீங்கள் ஒன்று பார்க்க வேண்டும். தமிழகத்திலே பாரதியார் கவிதைகளுக்குப் பின்னாலே நிற்கின்ற கூட்டத்தைக் காட்டிலும், திருவள்ளுவருக்குப் பின்னாலே நிற்கின்ற கூட்டத்தைக் காட்டிலும், கம்பனுக்குப் பின்னாலே இருக்கின்ற கூட்டத்தைக் காட்டிலும், சங்க இலக்கியத்திற்குப் பின்னாலே இருக்கின்றதை காட்டிலும், நெஞ் சை அள்ளும் சிலப்பதிகாரம் என்று சொல்கிறோமே அந்த இலக்கியத் திற்குப் பின்னாலே இருக்கின்ற கூட்டத்தைக் காட்டிலும், கண்ண தாசனுக்குப் பின்னாலே இருக்கின்ற அவனுடைய கவிதைகளுக்கு, உரைநடைகளுக்குப் பின்னாலே இருக்கிற கூட்டம் அதிகம் என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். சமுதாய அமைப்பிலே பத்துப்பேர் முட்டாளாக இருக்கலாம். நூறு பேர் முட்டாளாக இருக்கலாம். ஆனால் சமுதாயமே முட்டாள் என்று சொல்லமுடியுமா? அப்படிச் சொன்னால், யாரை நம்பி இந்தச் சமுதாயத்தை மாற்றுவது? நன்றாக எண்ணிப்பார்க்க வேண்டும், கண்ணதாசனு
- 22 -

டைய நூல் வெளிவருகிறது என்றால், பல்லாயிரக் கணக்கிலே ஒரு சில நாட்களிலே விற்பனையாகிறதை நீங்கள் பார்க்கலாம். ஆனால் அதை யார் படிக்கிறார்கள் என்பதையும் நீங்கள் நன்றாகக் கூர்ந்து பார்க்க வேண்டும்,
பாரதியாரின் கவிதைகளைப் படிப்பதற்கென, சுவைப்பதற்கென இங்கே பலர் இருக்கிறார்கள். சங்க இலக்கியங்களை சுவைத்துச் சுவைத்து ரசிக்க ஒரு கூட்டம் இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை. அதேபோல பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் கவிதைகளைப் படித்து உணரும் கூட்டம் இருக்கிறதா? இருக்கிறது. அதேபோல் கண்ணதாசன் பாடல்களைப் படித்து, சுவைத்து, ரசிக் கின்ற கூட்டம் தமிழகத்திலே இருக்கிறதா என்றால், எல்லாவற் றைக் காட்டிலும் அதிகமாக இருப்பதை நீங்கள் மறந்து விடக் &al-fig7. விற்பனை வெற்றி
நீங்கள் திருக்குறளை எடுத்துக் கொண்டாலும் சரி, அதை எவ் வளவு மலிவுப் பதிப்பாகப் போட்டாலும் சரி, அது விற்பனை யாகிறதைவிட, கண்ணதாசனுடைய பாடல்களோ, கவிதைகளோ உரைநடைகளோ வந்தால், மிக மிக அதிகமான பிரதிகள் விற்பனை யாவதை நீங்கள் பார்க்கலாம்.
நான் இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், திருக்குறளைத் தமக்கு வழிகாட்டவோ அல்லது ரசிக்கவோ, சுவைக்கவோ மக்கள் சிலர் வைத்துக் கொண்டுள்ளார்கள். அதேபோல் மற்ற எத்தன்ை யோ இலக்கியங்கள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் தன்னுடைய உணர்வுகளுடைய பிரதிப்பலிப்புக்களை அவர்கள் பார்க்கவில்லை. ஆனால் அதே சமயத்தில் கண்ணதாசன் ஒரு வர்க்கத்தினுடைய பிரதி பலிப்பை நன்றாக எடுத்துக் காட்டுகிறான். நீங்கள் அதை எண்ணிப் பார்க்க வேண்டும். அதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
வர்க்கம்
இந்தச் சிறுவுடைமை > குட்டி பூர்ஷ்வா - வர்க்கம், மத்தியதர வர்க்கம் என்று சொல்கிறோமே, அந்த வர்க்கத்தினுடைய உணர்வு களைக் கண்ணதாசன் பிரதிபலிக்கிறான். அப்படிப் பிரதிபலிப்பதால் தான் அந்த வர்க்கம் அவனுடைய நாவல்களுக்கோ, கவிதைகளுக் கோ பின்னாலே நிற்கும். அவர் நடை அழகாக இருக்கிறதா என்ப தல்ல. எத்தனையோ பேர் அழகாக எழுதுகிறார்கள். ஆனாலும்
கண்ணதாசன் நிமிர்ந்து நிற்கமுடிகிறது என்றால், எப்படி நிற்க
முடிகிறது? நீங்கள் அதை எண்ணிப்பார்க்க வேண்டும்.
சில பாடல்கள் *
கண்ணதாசனுடைய ஒரு சில பாடல்களை நீங்கள் பார்க்க
வேண்டும். எப்படி இந்தப் பாடல்களையெல்லாம் அவன் பாடினான்

Page 13
என்பதை எண்ணிப்பார்த்தால், கண்ணதாசனைப்பற்றி நாம் நன் றாகப் புரிந்துகொள்ள முடியும். ஓர் இடத்திலே பாடுகின்றான், நன்றாகக் கவனிக்க வேண்டும்.
“ஒஉேறா மனிதர்களே,
உச்சிமுட்டும் மாளிகையில் சா காமலே யிருக்கச்
சதையெடுத்து வந்தவரே. போகாத பாதையெல்லாம்
போய்த்திரும்பும் பூச்சிகளே நோகாமல் வாழ்வதற்கு
நோற்று வந்த சாமிகளே. காலம் புவிக்களித்த
கடல்போன்ற செல்வ்மெலாம் ஒலையிலே நீர் எழுதி
உள்வீட்டில் வைத்துவிட்டீர். எல்லாத் தலைமுறைக்கும்
இப்பொழுதே சேர்ப்பதென்று செல்லாத பக்கமெலாம்
சென்று பொருள் தேடுகின்றீர். இல்லை ஒரு வாய்கவளம்
என்றழுவார் தம்வயிற்றில் அள்ளி ஒரு கையளித்தால் ஆஸ்தி குறைவுறுமோ? ஆடைஒரு கோவணமும்
ஆஸ்திஒரு பானையுமாய் வாடையிலும் கோடையிலும்
வதைவாரைக் காணவில்லை.
தாசியவள் மனம்போலச்
சாலக் கிழிந்திருக்கும் தூ சிபடி துண்டுதலை
சுமப்பாரைக் காணவில்லை, போடுபட்டுப் பட்டு
பலகாலமாய் உலகில் கேடுகெட்டு வாழ்ந்திருக்கும்
கீழாரைக் காணவில்லை! இப்படியே மேடையெங்கும்
எத்தனைபேர் கேட்டுவிட்டார்! அப்படியும் உங்கள்
உள்ளம் அசையவில்லை! என்ன விளைந்ததின்று?
எதிலே முடிந்ததின்று? பின்னிப் புரட்டிஉமைப்
பிணமாக்கச் சிலரெழுந்தார்!
- 24 -

(பண் முதலைகளைச் நிலவுடைமையாளர்களைக் கடுமையாகச் சாடுகின்றார்).
வேலையில்லை; வந்தாலும் வேண்டும் வசதியில்லை ஆலைப்பற் சக்கரம்போல்
அவதி குறையவில்லை! (இந்தச் சமுதாயச் சிக்கலிலே மக்கள் சுழன்று கொண்டிருக் கிறார்கள்);
அவனும் பிறந்தவன்தான்
அன்னை மணிக்கொடிக் கீழ் கவலை நிறைந்தவனாய்க்
கண்ணிர் வடித்தவன்தான்!
(வயிறு காய்ந்து கொண்டிருக்கிறானே, அவனும் பாரத மணிக் கொடிக் கீழ் பிறந்தவன்தான். அவன் எங்கோ சீனத்திலோ, அமெரிக் காவிலோ, கியுபாவிலோ பிறந்தவன் அல்ல).
‘ஆடுவோமே பள்ளுப்
பாடுவோமே" என்று
ஆடிக் களித்தவன்தான்
அடிமை தவிர்த்தவன்தான்!
காந்தி வழிநாடிக்
காத்திருந்து நல்குரவை
ஏந்தி வந்ததன்றி
ஏக்கம் குறையவில்லை,
(நல்குரவு என்றால் வ்றும்ை).
நாட்டின் வறுமை
காந்தி தத்துவத்தைப் புகழும் அரசில் பார்க்கிறோம் அல்லவா. வறுமையின் எல்லைக்கோட்டின் கீழ் மக்கள் அதிகமாக வந்திருக் சிறார்களே யொழிய, இந்த நாட்டுமக்களின் வறுமை அதிகமாகியிருக் கிறதே. தவிர, இந்த நாட்டு மக்களின் ரத்தம் உறிஞ்சப் பட்டிருக் கிறதே ஒழிய, வறுயை குறைந்திருக்கிறதா, ஏழ்மை குறைந்திருக் கிறதா, அவலம் குறைந்திருக்கிறதா, கொடுமை குறைந்திருக்கிறதா,
சித்திரவதை குறைந்திருக்கிறதா, கண்ணதாசன் எழுதுகிறான். காந்தி
யால் பயிற்றுவிக்கப்பட்ட மாணவர்கள், சிஷ்யர்கள், இவர்தான் என் வாரிசு என்று காந்தியாலேயே சொல்லப்பட்டவ்ர்கள் கூட

Page 14
இந்த நாட்டிலே வாழ்ந்தார்கள் அல்லவா! ஆண்டார்களல்லவா! அவர்களாலேயே பல ஆண்டுகளாக வறுமையை நீக்கமுடிய வில்லையே என்று)
"சோஷலிசம்’ என்று சிலர்
சொன்னால் உடனே நீர் *கோஷலிசம்’ என்றல்லோ
கோமாளிச் சொல்லுரைப்பீர்! "வருமோ சமதருமம்?
வறுமையினைப் பங்கிட்டுத் தருமோ?’ என்றெல்லாம்
தத்துவத்தைக் கேலிசெய்வீர்! சோஷலிசம்
என்ன, இந்த நாட்டிலே நிலத்தை எடுத்துக் கொடுத்தால் என்ன வந்து விடும். நமது நாட்டில் சோஷலிசம் என்று பலர் திருட்டுத்தனம் பண்ணுகிறார்கள். எல்லாவற்றையும் அரசுடைம்ை யாக்குவது சோஷலிசம் அல்ல. சோஷலிசம் என்றால் இந்தக் கூலி அடிமை முறையை உடைத்தெறிவதுதான். எவன் உற்பத்தி செய் \கிறானோ, அவனுக்குத்தான் என்ன உற்பத்தி செய்யவேண்டும், ; எப்படி உற்பத்தி செய்யவேண்டும், எவ்வளவு உற்பத்தி செய்ய
வேண்டும், என்று நிர்ணயிக்கிற உரிமை இருக்க வேண்டும்.
அதேபோல உற்பத்தி செய்த பின்னாலே, அதை யாருக்கு விநி யோகம் பண்ணவேண்டும், எவ்வளவு விநியோகம் பண்ணவேண்டும், எப்படி விநியோகம் பண்ணவேண்டும் என்று நிர்ணயிக்கிற உரிமை அவனுக்குத் தான் உண்டு. அதுதான் சோஷலிசமே யொழிய, வேறன்று. இன்றைக்கு என்ன பார்க்கிறோம்.
சோஷலிசம் என்று கோஷம் போடுகிறானே, என்ன அய்யா இது? நிலம் உழுகிறவனுக்கு சொந்தம் என்றால், வேட்டி நெய் கிறவனுக்குச் சொந்தமா? வீடு கட்டுகிறவனுக்குச் சொந்தமா? சட்டை தைக்கிறவனுக்குச் சொந்தமா? செருப்புத் தைக்கிறவனுக்கு உரிமையா? என்று கேள்விகளை அடுக்கிக்கொண்டு போனவர்களை நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இன்றைக்கு எப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது?
இந்த நாட்டிலே நிலத்தையெல்லாம் எடுத்துக் கொடுத்தால் ான்ன வந்துவிடும்? நம் நாட்டிலே சோஷலிசம் என்று பலர் திருட்டுத் தனம் பண்ணுகிறார்கள். எல்லாவற்றையும் அரசுடைமையாக்குவது சோஷலிசம் அல்ல. சமுதாய உடைமை ஆக்க வேண்டும்.
- (தொடரும்)
سيد 26 ـ " "

சமனற்ற வாணிபப் பரிவர்த்தனை
லெனின் வாழ்ந்த காலத்திலேயே ஏகாதிபத்தியம் வளர்ந்து அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஏகாதிபத்தியம் முதலாளித் துவத்தின் உச்சக் கட்டம் என்று லெனின் கூறியது மட்டுமல்ல அதற்கு இலக்கணமும் வகுத்தார். அதன் படி ஏகாதிபத்தியம் மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டதாகும்:
(1) மூலதன ஏற்றுமதி (2) யந்திர உற்பத்தி மூலதனமும் வங்கி மூலதனமும் ஒன்றிணைதல் (3) ஏகபோக உற்பத்தி.
மார்க்சிய சித்தாந்த ஆய்வு லெனினுேடு நின்றுவிடவில்லை. ஸ்டாலின், மாஒ மட்டுமல்ல, உலகிலுள்ள மார்க்சிஸ்டுகள் தொடர்ந்து ஏகாதிபத்தியத்தின் அமைப்பு, நவீன போக்குகள்பற்றி ஆராய்ந்து வருகின்றனர். இயக்கவியல் சித்தாந்தப்படி ஏகாதிபத்தியமே ஒரு நிலையான அமைப்பல்ல. அது உலக உற்பத்தி, விஞ்ஞான வளர்ச்சி, வர்க்கப்போராட்டத்தை ஒட்டி, நிலைபெற மாற்றமடைந்துகொண்டே வருவதும் வரலாற்று நியதியாகும்.
லெனினது ஏகாதிபத்தியம் பற்றிய இலக்கணம் உற்பத்தியை ஒட்டியதாகும். மார்க்ஸிய பொருளாதாரம் உற்பத்தி, விநியோகம், பரிமாற்றம் ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டதாகும். பண்டப் பரிமாற்றலே முன்வைத்து ஏகாதிபத்திய அமைப்புக்கு மற்ருேர் விளக் கமும் இன்று கூறப்படுகிறது. அதுவே சமனற்ற வாணிபப் பரி Guri š5ð07 (Unequal Exchange of Trade) GT Gör gp FinspiùLuG6?pg.
முதலாளித்துவப் பொருளாதாரத்தின்படி வாணிபச் சமநிலை (Balance of Trade) இன்மையாலேயே இலங்கை, இந்தியா போன்ற மூன்றுவது உலக நாடுகளில் அந்நியச்செலாவணியின் பற்ருக்குறை, பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது என்று கூறுவர். உதாரண மாக இலங்கையின் ஏற்றுமதி, இற்க்குமதிகளை எடுத்துக்கொள் வோம். 1955இல் இருந்து தேயிலை, றப்பர் விலை வீழ்ச்சியடைந்து வரும்போது ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் யந் திரங்கள், யந்திரப் பண்டங்களின் விலைகள் தொடர்ந்து ஏறிக். கொண்டேயிருக்கின்றன. ܚ
இவற்றிற்கு உலகச்சந்தை விலையையே குறைகூறுவர். உண்மை . அவ்வாருக இல்லை. யந்திர உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் ஏகாதி
- 27 -

Page 15
பத்தியங்களின் ஆதிக்கம் மூன்முவது உலக நாடுகளிலும் நிலைத்திருக் கின்றன. ஏகாதிபத்தியங்கள் உற்பத்தி செய்யும் யந்திர உற்பத்திப் பண்டங்கள், கனரக யந்திரங்கள், இராணுவ தளபாடங்கள் ஆகிய வற்றின் விலைகளை அவர்களே தீர்மானிக்கின்றனர். அதேவேளையில் “எம் நாடுகளில் பெரும்பாலாக உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பண்டங்களை வாங்கும் விலையையும் அவர்களே தீர்மானிக்கின்றனர்: இதனுலேயே எம் நாட்டுத் தொழிலாளர், விவசாயிகளின் உழைப் பிற்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை.
சமனற்ற பரிமாற்றத்தைப் புரிந்து கொள்ள மற்ருெரு கோண முண்டு. உள்நாட்டிலேயே இப்பரிமாறலைப் பார்ப்போம். இங்கும் யந்திர உற்பத்தி, விநியோகம், பரிமாறலில் ஈடுபட்டிருப்போரே ஆளும் வர்க்கமாக உள்ளனர். இதனுல் கிராமங்களில் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டிருப்போரின் உழைப்பிற்கு ஏற்ற கூலி கிடைப்ப தில்லை. யந்திர உற்பத்தியாளர் தம் பண்டங்களை விற்கும் விலையையும் கிராமப்புற விவசாயப் பண்டங்களை வாங்கும் விலையையும் தீர்மானிக் கின்றனர்.
ஆகவே பண்டங்களை பரிமாறும் போது ஏற்படும் சுரண்டலென்ற சங்கிலித் தொடர் பெரியதோர் வட்டமாகும்.
கிராமப்புற விவசாயிகளது உழைப்பை ஆளும் வர்க்கத்தவர் மலிவு விலையில் அபகரித்து ஏகாதிபத்தியங்களுக்கு விற்கின்றனர். ஆகவே சுரண்டல் கிராமத்திலிருந்து, நகரங்களுக்கு வந்து, ஏகாதி பத்தியங்களுச்குச் செல்கிறது.ஏகாதிபத்திய சுரண்டலின் சுற்று வட்ட மாக மூன்ருவது உலக நாடுகள் விளங்குகின்றன. இதனலேயே மூன்ருவது உலக நாடுகளிலுள்ள கிராம மக்கள் இன்றும் வறுமையில் வாடுகின்றனர் போதிய உணவேயின்றி பட்டினி நிலையில் வைத்துச் சுரண்டப்படுகின்றனர்.
ஏகாதிபத்திய யந்திர உற்பத்திப் பண்டங்களான லாரி, டிராக் டர், உதிரிப்பாகங்கள், கிருமிநாசினி, உரம், தண்ணிர் இறைக்கும் பம் செட் ஆகியவை யாவும் இன்று கிராமங்களிலேயே நுழைந்து விட்டன. இவற்றின் விலைகள் தொடர்ந்து ஏறிக்கொண்டிருப்பதை 'யும் காணலாம். அதேவேளையில் யந்திர உற்பத்திப் பண்டங்கள் ஏறும் விகிதத்தில் விவசாய உற்பத்திப் பண்டங்களின் விளைகள் ஏறுவதில்லை. யாழ்ப்பாணத்து விவசாயிகள் கூட இந்த உண்மையை நன்கு உணர்ந்து அண்மையில் அடிக்கடி குரல் எழுப்புவதைக் காண லாம். இதற்குரிய காரணத்தை முன்பும் சுட்டிக்காட்டினுேம். கார உணம் ஆளும் வர்க்கம் தரகு முதலாளி வர்க்கமாக இருப்பதுவே. அவர்கள் ஏகாதிபத்திய யந்திர உற்தத்திப் பண்டங்களின் விலை :உயர்வை கட்டுப்படுத்த இயலாநிலையில் உள்ளனர். அதேவேளை
- 28 -

விவசாயப் பண்டங்களது விலையை கட்டுப்பாடு விதித்தோ, இறக்கு மதியை கூட்டியோ கட்டுப்படுத்தி விடுகின்றனர். நகரங்களில் வாழும் தரகு முதலாளித்துவ தொழிற்சாலை, வாணிப, அரசு நிறுவனங் களில் உழைப்பவர்களுக்கும் குறைந்த விலையில் விவசாயப்பண்டங் களை வழங்கவேண்டியதும் ஆளும் வ்ர்க்கத்தின் கடமையாகும். அல் லது அவர்கள் உயர்ந்த கூலிகேட்டு ஆர்ப்பாட்டம் செய்வர். இப் போக்குகளால் அத்துமீறிச் சுரண்டப்படுபவர் நாட்டின் பெரும் பாலான கூலி, ஏழை விவசாயிகளேயாவர்.
பண்டங்களை எம் நாடுகளிலிருந்து ஏ ற் று ம தி செ ய் வ து, ஏகாதிபத்திய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வது ஆகிய பரிம்ாறல் என்பது மனித உழைப்புச் சக்தியை பரிமாறுவதாகும். உழைப்புச் சக்தியை நாம் நேரக் கணக்கிலேயே அளவிட வேண்டும். பண்ட உற்பத்தி வளர்ச்சியடையாத ஆதி மனிதனது காலத்தில் பண்டமாற்று முறையிருந்தது. அதனல் உழைப்புச் சுரண்டல் இருக்க வில்லை. பண்ட உற்பத்தி வளர்ச்சியடைந்து, பணம் பண்டப் பரி மாறலுக்காக தோன்றிய பின்னர் சுரண்டல் மிக எளிதாகியது. இன்றைய ஏகாதிபத்தியச் சுரண்டலை மனித உழைப்பு நேரத்தோடு ஒப்பிடும் போது எத்தனை கொடூரமானது என்பதை யாவரும் அறிய லாம். ‘சமநீதி’ என்ற சிறுகதை சமனற்ற வாணிபப் பரிமாற்றலை ஒர ளவு கோடிட்டுக் காட்டும் என நம்புகிருேம். இவ்விஷயம்பற்றி மேலும் தொடர்ந்து கட்டுரைகள் வெளியிட முயல்வோம்.
குமரன் சந்தா விபரம்
1 ஆண்டு m A v p a ரூ. 7-50
6 மாதங்கள் . O O u un 5. 4-00
தனிப்பிரதி . e o 8 O சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் ! பெற்றுக்கொள்ளலாம்.
* 201, டாம் வீதி, கொழும்பு-12, குமரன தொலைபேசி : 2 388
س- 29 --س-

Page 16
மனிதரில் இத்தனை நிறங்களா?
பகுதி 3 - அடிமைச் சமுதாயத்தின் தோற்றம்
23.
24.
- கோவி -
ஒன்னு உழைச்சு நன்கு வாழ்ந்த
உலகம் செத்தாச்சு - கண உலகம் செத்தாச்சு
ஒருத்தன் உழைப்பில் ஒருத்தன் வாழும்
உலகம் வந்தாச்சு - புது உலகம் வந்த ஈச்சு பத்துப் பேரின் உழைப்பைச் சுரண்டி
ஒருவன் மேலாக - ஆமா (ம்) ஒருவன் மேலாக எல்லாப் பேரும் சரிநிக ரென்ற
சட்டம் போயாச்சு - பழைய சட்டம் போயாச்சு
மனுச னிலே பலநி றங்கள்
தோன்றிட லாச்சு - ஆமா தோன்றிட லாச்சு
ஆண்டான் அடிமை ஜாதி எல்லாம்
வந்திட லாச்சு - புதுசா வந்திட லாச்சு
உடைமை கொண்ட ஆண்டா னுக்கு
பற்பல அடிமை - ஆமா (ம்) பற்பல அடிமை
உளுத்துப் போன சுரண்ட லுக்கு
முழுமுதல் வடிவம் - இதுதான் முழுமுதல் வடிவம் !
- 30 -

(8ம் பக்கத் தொடர்ச்சி) தங்கப்பன் தன் தலைவர் கூறி வந்த புரட்சி வழியைக் கூற விரும்பாதவனக வினவெழுப்பினன்.
"அரபு நாடுகள் எண்ணெய் சுரண்டலை தற்போது நிறுத்தி தாமே விலையை நிர்ணயிப்பதுபோல மூன்ருவது உலக நாடுகள் ஒன்றிணைந்து தமது விவசாயப் பொருட்களுக்கு கூடிய விலையை கேட்டுப்பெற வேண்டும்"
அமெரிக்கன் விடிவுக்கு ஒரு வழி கூறினன். தவராசாவும் அதை ஏற்பவர் போல தலையாட்டினர்.
"அது நடைமுறையில் சாத்தியமாகாது. மூன்ற வது உலக நாடு களிலெல்லாம் ஏகாபதிபத்தியங்களுக்கு தரகர்களான தரகு முத லாளிகள் ஆளும் வர்க்கமாக உள்ளனர். புரட்சி மூலம் இவர்களை ஒழித்துக்கட்டி அரசியலாதிக்கத்தை தொழிலாளி, விவசாயிகள் கைப்பற்ற வேண்டும். அதன் பின்னரே இத்தகைய சுரண்டலை ஒழித்துக்கட்ட முடியும்’
வாலிபன் கூறினன். தங்கப்பனின் உதட்டில் ஒரு புன்னகை அரும்பியது. அவனது மார்பில் தூங்கிய மகள் எழுந்து சுற்றுமுற் றும் பார்த்தாள். நாவலப்பிட்டி வந்து விட்டதா என வினவினள்.
*அடுத்த ஸ்ரேசன் அதுதான்’ தங்கப்பன் கூறியபடி அவளது தலைமயிரை வருடிஞன்.
அமெரிக்கன் அவளது கன்னத்தைக் கிள்ளிவிட்டு ஒரு சுவிங்கம் பாக்கெட்டைக் கொடுத்தான். தாங்யூ" என்று சொல்லிக்கொண்டே அதை ஆர்வத்தோடு தந்தை முகத்தைப் பார்த்தபடி வாங்கிக் கொண்டாள். அவள் கொழும்பில் வேலை செய்த வீட்டுப் பிள்ளைகள் அதை ஆர்வத்தோடு சப்பி சுவைப்பது அவள் நினைவில் வந்தது* “பல்லுக்கு கெடுதலான இந்த சுவிங்கம் fin. Lسس தற்போது இங்கு இறக்குமதியாகிறது. ஏன்? இதைச் சாப்பிட வ ச தி யும் வாய்ப்பும் உள்ள ஒரு வர்க்கம் இருக்கிறது. அந்த வர்க்கத்தை ஒழிக்காமல் எம் நாட்டிற்கே என்றும் விமோசனம் கிடையாது."
அந்த வாலிபன் கூறினன். メ நாவலப்பிட்டியில் தங்கப்பன் மகளுடன் இறங்கும்போது, தான்
இருந்த இடத்தில் அந்த வாலிபனை உட்காரச் செய்தான்.
- 3 -

Page 17
KUMARAN 54-20
வெளிவந்துவிட்டன
சங்கர ஐயர் புதிய உயர்தர விலங்கியல்
தமிழவேள் எழுதிய காரை
தயாளன் தய கணிதம் 1 கணிதம் 2 விஞ்ஞானம் அரசின் க. பொ, த, (சாதாரண
தாள்களுக்கு அமைய எழுத விளக்கமான விடைகளு
தமிழவேள் எ புதிய சைவசமய பாட
சைவசமயம் க.பொ
தமிழ்ப் பயிற்சி க. பெ
தமிழவேள்'
கம்பராமாயணம் (க்ாட்சி, நி
மற்றும் தமிழ், ஆங்கில சிங்கள ரு
வி, பி. பி. கவனி வியாபாரிகளுக்கு கபூ
விஜயலட்சுமி ட
248 காலி விதி
கொழும்பு
இப்பத்திரிகை கொழும்பு-1, 2011 டாம் வீதியின்
களால், அதே முகவரியிலுள்ள புதிய குமார் அசின் திருவான ஆசிரியர் செ. காேசவிங்கன்
 
 
 
 
 
 
 

AMSTREET, COLOMBO-12, tered as a Newspaper in Sri Lanka,
எழுதிய
- பகுதி ரூ. 12.00 பகுதி II (அச்சில்) க்காலம்மையார் ரூ.7.00
ாரித்த 5. 3.00 ਸੁ3.75
b. 5-75 எம்) புதிய மாதிரி விஞத்
iப்பட்ட விளுக்களும் டனும் கூடியது.
ழுதிய டம் 8 - ரூ. 3.75
1. த. - ரூ. 8.00 ா. த. - ரூ. 500
எழுதிய ந்தனே படலம்-அச்சில்)
நூல்கள் யாவும் கிடைக்கும். க்கப்படும்.
நிவு உண்டு.
புத்தகசாலை, வெள்ளவத்தை,
6.
தொலைபேசி 8 8 9 30
வசிக்கும் செ. கணேசவிங்கன் அவர் ாத்தின் அசிடப்பட்டு வெளியிடப்பட்டது
ܫܠ