கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1979.06.15

Page 1
8), HäßU Gr தியாகச் சுடர்களே நவீன பூதங்கள்
மனிதரில் இத்தனை
கேள்வி பதில்
 
 
 

மதிப்பீடு ISIFGAI - G
ಉಷಉಗ 蠶 LIT GDj Jjis
|4=.e.4 ಅ.79

Page 2
குமரன் மே மாத இதழ் வெளியிட முடியாது நேர்ந்தமைக்சி வருந்துகிருேம். . . . . .
தமிழ் நாட்டில் குமரன் இதழுக்கு தனி மதிப்பு உண்டு. குமரன். இதழ்கள் 54, 55 அங்குள்ளவர்களுக்குச் (பல்கலைக்கழகம், படிப் பகங்கள் உட்பட) சேரவில்லை என்பது மற்றேர் வருத்தமான செய்தியாகும். நாம் அனுப்புபவற்றை தபால் எலிகள் சாப்பிடுகின் றனவா? அல்லது கஸ்டம்ஸ் எலிகள் உண்ணுகின்றனவா? என்பது தெரியவில்லை. (சாப்பிடினும் ஜீரணிக்கத்தக்க உணவாக குமரன் இருக்காது என்பதை நாம் அறிவோம்.) :
ஏதோ ஜனநாயகம், சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை எங்கும் நிலவுவதாக கூறிக் கொள்கிறர்கள். ஐக்கிய நாடுகள் கல்வி ஸ்தாபன (Unesco) ஆணைப்படி உலக நாடுகளிடை பத்திரிகை, சஞ்சிகைகள் தபால் மூலம் பரிமாறப்படுவது தடைசெய்யப்படாது. என்ற அறிவித்தலும் இருக்கவே இருக்கிறது. ஆயினும் நடைமுறை யில் இவையாவும் காற்றில் தூற்றப்படும் ஆணைகளே; பொய்மை
வார்த்தைகளையே அனுபவபூர்வமாக காண்கிருேம்.
"கண்ணதாசன் - ஒரு மதிப்பீடு" கட்டுரைத்தொடர் இவ்விதழில் முடிவடைகிறது. ஏற்கனவே வந்த கட்டுரைகளைப் பாராட்டி பலர், எழுதியிருந்தனர். - ή 1
ம்ே தினம் பற்றி இரு கவிதைகளை இவ்விதழில் காண்க. வேல் சண்முகராசா என்பவர் நீண்டதோர் கவிதையை எழுதியுள்ளார். வர்க்க உணர்வு ஊட்டக் கூடிய வளமான கவிதை .
"கலையும் சமுதாயமும்" என்ற கட்டுரைத் தொடரை அண்மையில் எதிர்பாராது படித்தவர்கள் ஆரம்பத்திலிருந்து இதழ்களை வேண்டி எழுதியுள்ளனர். தமிழில் இதுவரை எவரும் முயலாத முயற்சி என்றும் பலர் பாராட்டியுள்ளனர். இவ்விதழில் ஓவியம் எவ்வாறு ? ஆதிக்கம் பெற்ற கலைவடிவமாக, யந்திர உற்பத்தியையொட்டி வ்ளர்ந்து வந்துள்ளது என்பது விளக்கப்படுகிறது. அதற்கு உதா ரணமாக ஒவியர் ரவிவர்மாவை மட்டும் எடுத்து விளக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் இலங்கையில் நடந்த ஒரு முக்கிய நிகழ்ச்சி கட்சியடிப்படையில் 10 ஆண்டுகளின் பின் நடைபெற்ற உள்ளூ" ராட்சி மன்றத் தேர்தலாகும். மாநகர சபைகள், நகர சபைகளுக் குரிய தேர்தல் மட்டுமே நடைபெற்றது. (கிராமிய மன்றத் பின்னர் நடைபெறும்.) - - পূৰ্ণ ।
 

இத்தேர்தலைப் பற்றி குறிப்பிடக்கூடிய முக்கிய அம்சங்கள் இரண்டு: (1) 1971இல் ஆயுதப்புரட்சி நடாத்திய மக்கள் விடுதலை முன்னணி முதல் தடவையாக தமக்கும் தேர்தலில் நம்பிக்கை உண்டு என்பதை நிலைநாட்ட கொழும்பு மாநகரசபை தேர்தலில் பங்குபற்றியமை (2) யூ. என்.பி.யின் இரண்டு ஆண்டு ஆட்சியில் நகர மக்கள் வெறுப்படைந்துள்ளார்கள் என்ற கூற்றுக்கு எதிராக அக்கட்சியின் ஆதரவு மேலும் வலுப்பெற்றுள்ளமை.
மக்கள் விடுதலை முன்ன்னி (ம.வி.மு.)யும் மற்றைய இட்து சாரிக் கட்சிகள் போலவே தோல்வியைத் தழுவியது. ம. வி. மு. இடதுசாரிக் கட்சிகளுள் தாம் தற்போது முன்னணியில் நிற்ப தாக வோட்டு எண்ணிக்கையை வைத்து வீரம் பேசி அறிக்கை விட்டது. அது உண்மையே.
ஆயினும் வர்க்க உணர்வின் நிலையை வைத்து ஆராயும்போது பல புதிர்கள் எழவே செய்கின்றன. உதாரணமாக கொழும்பு மாநகரை எடுத்துக்கொள்வோம். இங்கு வாழ்பவர்களில் 75% ம்ானேர் கூலி உழைப்பாளர்; தொழிலாளர். ஆயினும் இடதுசாரிக் கட்சிகளுக்கு வாக்களித்தோர் மொத்தத்தில் 10% மானவரே. மிகுதி 65%கூலி உழைப்பாளர். யூ. என். பி., சுதந்திரக் கட்சி ஆகிய தரகு முதலாளித்துவ ஆளும் கட்சியினருக்கே வாக்களித்துள்ளனர். ஏன்?
இவர்கள் வர்க்க உணர்வு குன்றியவரா? பாட்டாளி நிலையில் இல்லாது குட்டி பூர்ஷ்வா ஆகிவிட்டவர்களா? இடதுசாரிக் கட்சிகள் பாட்டாளிகளின் அணியில் இல்லை என நம்புகின்றனரா? ஆளும் வர்க்கத்துடன் சேர்ந்து கிராமப்புற பாட்டாளிகளை சுரண்டி வாழ் வதில் சுவைகண்டு விட்டார்களா? தேர்தலில் தொழிலாளர் அதிக நம்பிக்கை வைத்துள்ளார்களா ? −
இவ்வினக்களை எழுப்பி சரியான விடைகாண வேண்டியது மார்க்ஸிஸ்டுகளின் பொறுப்பாகும்.
குமரன் சந்தா விரபம்
1 ஆண்டு - . . . •פא א & ரூ. 7-50 6 மாதங்கள் . . . . . . a ரூ. 4-00 தனிப்பிரதி . pe B B O O. சதம் 60
பழைய சந்தாதாரர் தபாலட்டை எழுதி தமது பிரதிகளைப் பெற்றுக்கொள்ளலாம். VM
o 201, டாம் வீதி, கொழும்பு-12. குமரன விலை"
3

Page 3
நவீன பூதங்கள்
சிந்நாட்டின் எல்லைப் பகுதியில், மக்கள் அரசிற்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அயல் நாட்டவர் தம் நாட்டு எல்லைபுள் நுழைவதாக அரசு பிரசாரம் செய்தது. எல்லையைக் காவல் காக்க என அரசு 500 இராணுவ வீரரைக் கொண்ட பிரிவு ஒன்றை ஒரு தளபதியின் தலைமையில் அனுப்பியது. h *%、
ஒதுக்குப் புறமான ஓரிடத்தில் தளபதி கூடாரங்களை அமைத் தான். இராணுவ வீரருக்கு வேண்டிய வசதிகளையும் கவனித்தான்.
ஆறுமாதம் கழிந்தது.
தளபதிக்கு அந்த இடம் நன்கு வாய்ப்பாக இருந்தது. அப் பகுதியில் அமைதி நிலவிய ப்ோதும் தளபதி அடிக்கடி தன் படை யினரின் \உதவியுடன் திருட்டு, கொள்ளை, தீ வைப்பு, கற்பளிப்பு யாவையும் நடாத்திஞன். அவற்றை மக்கள் செய்வதாகவும் தானே அடக்கி வருவதாகவும் அரசுக்கு அறிக்கை அனுப்பி வந்தான். அங்கு நிரந்தரம்ாக இராணுவ முகாம் இருக்கவேண்டும் என அரசு தீர்மானித்தது. w
இரவு பகலாக நாட்டுக்காக உயிரையே அர்ப்பணித்து பணி : புரியும் இராணுவ வீரர்கள் நீராட, பொழுதுபோக்க வாய்ப்புக் குறைந்த வரண்ட பிரதேசம். அங்கு அவர்களுக்கு பயன்தர நீச்சல்* தடாகம் ஒன்று அமைக்க வேண்டும், அதற்குரிய மதிப்பீடு sets லட்சம் ரூபா மட்டுமே செலவாகும் என விபரப் பட்டியலுடன்" இராணுவத் தலைமைப்பீடத்திற்கூடாக பாதுகாப்பு அமைச்சுக்கு தளபதி விண்ணப்பம் அனுப்பினன். தலைமைத் தளபதியும் சிபார்சு செய்திருந்தான்.
அரச அனுமதி வழங்கி பணத்தை ஒதுக்கி அளித்தது.
எல்லேப்புற தளபதி பணத்தைப் பெற்று, 3 மாதங்களில் தடாகம் அமைத்து விட்டதாக உரிய ரசீதுகளுடன் இராணுவத் தலைமை நிலையத்திற்கு அறிவித்தான்.
ஒரு வருடம் கழிந்தது. இராணுவமுகாமின் அவசியம் மேலும் வலுவடைந்தே வந்தது.
ஆயினும் அத்தளபதியின் சிறந்த சேவையைப்பாராட்டி பதவி உயர்வுடன் தலைமை நிலையத்திற்கு இடமாறுதல் செய்தனர்.
புதிய தளபதி எல்லைப்புறத்தில் பொறுப் பேற்க ಶಿಫ್ಟಿ; அவனிடம் பழையதளபதி யாவையும் ஒப்படைத்த பின்னர் நீச்சல் தடாக கோவை (FILE)யையும் கொடுத்து, "இதைப் படித்து பயுள் படுத்திக் கொள்ளுங்கள்’ என்று கூறிஞன். ( *،
4.

سمیہ
புதிய தளபதி அக்கோன்வயை ஓய்வாகப் படித்தான். மூன்று மாதங்கள் கழிந்தன.
இராணுவமுகாம் நீச்சல் தடாகத்தில் வரட்சியின் வேளை போதிய நீரில்லை, சில பகுதிகள் உடைந்து விட்டன், நன்கு மீண்டும் பயன்படுத்த மூன்று லட்சம் ரூபா செலவாகும் என மதிப்பீட்டு விவரப் பட்டியலுடன் அவன் தலைமைப்பீடத்திற்கு விண்ணப்பித் தான். அது சிபார்சு பெற்று மூன்று லட்சம் ரூபா அதற்காக ஒதுக்கப் பட்டது. இரண்டு மாதத்தில் வேலைகள் முடிந்ததாக உரிய ரசீது களுடன் புதிய தளபதி தலைமை நிலையத்திற்கு அறிவித்தான்.
முந்திய தளபதி, அமைதியை நிலைநாட்டுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை புதிய தளபதியும் தொடர்ந்து செய்யத் தயங்க வில்லை.
ஒரு வருடம் கழிந்தது. மற்றேர் தளபதி அங்கு அனுப்பப் பட்டான். அவனிடம் யாவையும் ஒப்படைத்த 2வது தளபதி, கடைசி யாக நீச்சல் தடாக கோவையை அவனிடம் கொடுத்து நீ இதை பயன்படுத்திக் கொள்ளலாம்’ எனக் கூறிச் சென்றன்.
ஆறு மாதம் கழிந்தது.
*இராணுவமுகாம் நிரந்தரமாகி விட்டதால் வீரர்களுக்கு பொழுது போக்கு, விளையாட்டு ஆகிய யாவிற்கும் வசதிகள் உள்ளன. பெரும்பாலோர் குடும்பத்துடனேயே வாழவும் வசதி, ஏற்பாடு செய்யப்பட்டுவிட்டது. நீச்சல் தடாகத்தை தற்போது பயன்படுத்து வோர் குறைவு, சென்ற வெள்ளம், புயலின் போது மண்சரிவும் ஏற்பட்டு ' தடாகம் ஓரளவு பழுதாகியும் விட்டது. இதற்கு மேலும் பணம் செலவு செய்வது மக்களின் வரிப் பணத்தை மேலும் பாழ் செய்வ தாகும். தடாகம் இராணுவமுகாமின் முக்கிய இடத்தைப் பிடித் திருப்பதால் அது நன்கு மூடப்பட வேண்டும். ஆகவே இதற்காக ரூபா இரண்டு இலட்சம் ஒதுக்கும்படி வேண்டுகிறேன்."
புதிய தளபதி ம்திப்பீட்டு விவரப் பட்டியலுடன் தலைமைப்பீடத் திற்கு விண்ணப்பம் செய்தான்.
நீச்சல் தடாகத்தை மூடுவதற்காக இரண்டு இலட்சம் ரூபா ஒதுக் கப்பட்டது. - ٹ - இரண்டு மாதத்தில் தடாகம் மூடப்பட்டதாக பணத்திற்கு உரிய ரசீதுகளுடன் தலைமைப்பீடத்திற்கு புரிய தளபதி அறிவித்தான்."
மக்கள் வரிப் பணத்தில் 11 லட்சம் ரூபாவை ஏப்பம் விட்ட விெனதான நீச்சல் தடாக கோவை அத்தோடு மூடப்பட்டது.
- கணேஷ்

Page 4
கேள்வி: தில்!
கே உழைப்புச் சக்தி, உழைப்புத் திறமை என்பவற்றிடை வேறுபாடு
உண்டா? அவ்வாருயின் விளக்கமாகக் கூறுக.
மு. கந்தையா, கண்டி
ப; பெரிய வேறுபாடு உண்டு. உழைப்புச் சக்தி என்பது முதலாளித் - துவத்துடன் தோன்றியது. உழைப்புச் சக்தி முதலாளித்துவத்தில் ஒரு பண்டமாகிறது. தொழிலாளி தன் உழைப்புச் சக்தியையே முதலாளிக்கு கூலிக்காக விற்கிருன். (சிறு பண்ட உற்பத்தியின் போது தாமே உழைத்து ஆக்கிய பண்டத்தையே தச்சர், கொல்லர், விவசாயி ஆகியோர் விற்றனர்).
முதலாளித்துவத்தில் தொழிலாளி விற்பது தன் உழைப்பு திறமையை (Ability) அல்ல. உழைக்கத்தக்க ஆற்றலையே (Capacity) விற்கிருன். உழைக்கத்தக்க ஆற்றலைத்தான் மார்க்ஸ் உழைப்புச் சக்தி என்ருர். (உழைப்புச் சக்தி என்பது உழைப்பு அல்ல என்பதை மார்க்ஸ் உதாரணம் மூலம் விளக்கியுள்ளார். மனித உடல் உணவை ஜீரணிக்கத்தக்க ஆற்றலை நிரந்தரமாகக் கொண்டது. ஆயினும் ஜீரணிப்பு உணவை உட்கொள்ளும்போதே நடைபெறுகிறது. இதே போல உழைப்பு சக்தி என்பது வேலை செய்யும் ஆற்றலாகும். உழைப்பு வேலை செய்யும் செயலின் போதே நடைபெறுகிறது)
ம்னிதன் உழைப்புத்திறமை சோஷலிசம், கம்யூனிசத்திலேயே வெளிப்படுகிறது. அவன் உற்பத்தி செய்யும் உபரியில் உரிமை (கூலியல்ல) யிருப்பதால் அவன் சுதந்திரமாக தன் உழைப்புத் திறமையை வெளிப்படுத்த முடிகிறது. அதஞலேயே மார்க்ஸ் கம்யூனிசத்தில் திறமைக்கேற்ற உழைப்பு தேவைக்கேற்ப பண்டம் 676ör Gaprf.
கே: பஸ், ரெயில் போக்குவரத்து மிகவும் மோசமடைந்து வருகிறதே, م-- இதை சீர்திருத்த வழியே இல்லையா? மூ. சுந்தர் யாழ்.
ப: ஏன் இல்லை? கூலி அடிமைகளும் சாதாரண மக்களும் எப்படியும்
பிரயாணம் செய்வர் என்ற ஆளும் வர்க்கத்தின் அசட்டையே இதற்குக் காரணம். ஆளும் வர்க்கம் பூர்ஷ்வா வர்க்கத்தவருக்கு
அளித்திருக்கும் சலுகையில் ஒரு பகுதியைத் தானும் மக்களுக்கு அளிக்கவில்லை. w ベ
6.

பஸ், ரெயில் நெருக்கடி மோசமடைந்து வரும் அதே வேளையில் தனியார் கார்கள் அத்துமீறிப் பெருகி தெருக்களையே ஆக்கிரமித்திருப்பதை கொழும்பில் மட்டுமென்ன நாடு பூராவுமே பார்க்கலாம். 2, 3 கார் விலையில் (4, 6 பேர் வசதியாக பிரயாணம்
செய்வதற்குப் பதிலாக) ஒரு பஸ் வாங்கி 50, 60 பேர் வசதியாக
கே:
பிரயாணம் செய்ய முடியும். நாட்டிலே பஸ், ரெயில்கள் குறைந்து வருவதையும் கார்களின் தொகை அதிகரித்து வருவதையும் எளிதில் காணலாம், தரகு முதலாளிகளின் ஆட்சியில் மக்களுக்கு வாய்ப்பு எதுவும் சிறப்பாக எதிர்பார்க்க முடியாது. நீண்ட தூர பஸ், ரெயில் பிரயாணத்தில் பணம் கொடுத்து டிச்கெட் பெற்றும் நின்ற நிலையில் பிரயாணம் செய்வதை எம்நாட்டில்
தான் தாராளமாகக் காணலாம். it
கல்வியில் இன்று நிலவும். போட்டா போட்டியையும் g)6ruh வயதில் மாணவர் படும் துன்பங்களையும் ஒழிக்க முடியாதா?
ப. சிவமணி, திருமலை.
: முதலாளித்துவப் போக்கான அரசு நிலவும் வரை ஒழித்துவிட
முடியாது. ஏனெனில் முதலாளித்துவம் என்பது தனியாரின் போட்டா போட்டியில் வளரும் சமுதாய அமைப்பாகும். உற்பத்திக் கருவிகள் தனியார் ஆதிக்கத்தில் உள்ளன. இதனுல் இன்றைய சமூக அமைப்பில் மக்கள் உறவு தனியார் போட்டா போட்டியிலேயே அமைந்துள்ளது.
சந்தையில் பண்டங்களை விற்பதிலும் வ்ாங்குவதிலும் போட்டா போட்டி, நீங்கள் சந்தையில் எவரையாவது சந்திக்கும் போது நீங்கள் எதையாவது விற்கவோ, வாங்கவோ முயல் வீர்கள். அதிக விலையில் விற்று குறைந்த விலையில் பண்டங்களை
வாங்க முயல்வீர்கள். ஒவ்வொருவரும் மற்றவரில் தங்கியுள்ளனர்.
எமது உற்பத்தியில் மட்டும் தாம் வாழமுடியாது. அதை சந்தையில் விற்று மற்றத் தேவைகள்ை அங்கு வாங்க வேண்டும். ஆயினும் இது இன்றைய சமூக அமைப்பில் கடும் போட்டியாக அமைந்துள்ளது. ' .. . . . .
இத்தகைய உற்பத்தி உறவு மேல்மட்ட அமைப்பிலும் பிரதி பலிக்கிறது. விளையாட்டுகள், ஓவியம், கலை இலக்கியம் மட்டு மென்ன கல்வியிலேயே நிலைத்திருக்கும். கல்வியில் போட்டிப் பரீட்சைகள், தரம் பிரித்தல் யாவும் இருக்கவே செய்யும். எங்கும்
போட்டா போட்டி, ஒட்டப்பந்தயம் நடந்து கொண்டேயிருக்கும்.
சோஷலிசத்தில் கூட்டு உற்பத்தி, விநியோகம், பரிமாற்று இருப்ப தால் இத்தகைய தனியார் போட்டியும், துன்ப்மும் இருக்க மாட்டாது. -. . . . . . . . .
7

Page 5
28
29
SO
3.
32
கதியில் வளர்ச்சி பெற்றதடி ஏலேலோ
வெயிலும் மழையும் அடித்தது போதும் ஏலோலோ
மனிதரில் இத்தனை நிறங்களா! -கோவி. M பகுதி:3.2:அடிமைச் சமுதாயம்-வளர்ச்சி நிலை
மர வீடுகளின் தோற்றம்
குகையை விட்டு இறங்கி வந்து ஏலேலோ-ஆமா ஏலேலோ மரத்தை விட்டு இறங்கி வந்து ஏலேலோ மரத்தை வெட்டி மனையமைத்து ஏலோலா மந்தை வாழ்க்கை சிதறிப்போச்சு ஏலேலோ
மட்பாண்டத்தின் தோற்றம் மரத்தைக் குடைந்து ஒடஞ் செய்து ஏலேலோ-ஆமா ஏலோ மரத்தைச் செதுக்கி கலையஞ் செய்து ஏலேலோ 鼻鼎 மண்ணைப் பூசி நெருப்பில் வைக்க ஏலேலோ மண்ணுப் பாண்டம் பிறந்ததடி ஏலேலோ
செம்புக்கணி கண்டு பிடித்தது மண்ணுப் பாண்டம் செய்வதற்கு ஏலேலோ-ஆமா ரலேலோ மண்ணைப் பிசைந்து நெருப்பில் வைக்க ஏலேலோ 9. செம்பு க சிந்து கனிந்ததடி ஏலேலோ ஜெகத்தில் புதுமை மலர்ந்ததடி ஏலேலோ
y
உலோகக் கருவிகளின் தோற்றம் கட்டிச் செம்பைத் தட்டையிலே ஏலேலோ-ஆம்ா ஏலேனோ கண்டபடி நெளிந்து ம்ாற ஏலேலோ கத்தி அம்பு ஈட்டி எல்லாம்-ஆமா ஈட்டி எல்லாம்
சாகுபடிக்கு ஆள் போதாமை காட்டை எரிச்சுக் கழனியாக்க ஏலேலோ-ஆமா ஏலேலோ கட்டைக் கலப்பை ஏருபூட்டி ஏலேலோ 9 ஆற்றை மறிச்சு அணையைக்கட்டி ஏலேலோ ஆட்கள் ரொம்பப் போதலையே ஏலேலோ
-r கால்நடை மேய்க்க ஆள் போதாமை * -- ....... ۔۔۔ ۔ ۔ ? விலங்கை வளர்த்து விருத்தி செய்து ஏலேலோ-ஆமா ஏவேலோ
மந்தை பெருகி காட்டில் திரிய ஏலேலோ
மேய்க்க ஆளுப் போதலையே ஏலேலோ " . . ۲۴ »ن
8

மேதினம் எங்கள்
மேனியின் ரெத்தம்
மேதினமே நீ வாழ்க போராடி உழைப்பவர்கள் மேதினியில் உரிமை கேட்ட மேதினமே நீ வாழ்க
சூதாலும் வாதாலும் ஆளும் சுரண்டலர் படைகள் தன் மோதாத விடுதலையா? போதித்தாய் மேதினமே!
பாராள வேண்டு மெனில் பாட்டாளி வர்க்கம் எழுந்து போராட வேண்டும் என்றல்லோ போதித்தாய் மேதினமே!
காலாலும் கையாலும்
கஞ்சிக்காய் உழைத்தவர்கள் ஏலாது கொடுமை கொல்ல எழுந்த தினம் மேதினமே!
பஞ்சக் கொடியின் கீழ் பட்டினிச் சிறையின் கீழ் நஞ்சிலும் கொடிய சுரண்டல் நாய்களின் ஆட்சியின் கீழ்
ஒன்றென உழைக்கும் வர்க்கம் உருக்குப் போல் எழுந்ததாலே அன்று அங் அமெரிக்காவில் அவதரித்தது மேதினமே!
தம்முடன் ஒடி நின்று
உயிர் தரும் உதிரம் தன்னை
உழைப்போர் அன்று சிந்தியதால் உதித்தது மேதினமே!
இன்று அச் சிறப்பு நாளை இவ்வுலக மக்கள் எல்லாம் நன்று தம் விடுதலைக்கு நனவு தரும் நாளாய்க் கொண்டார்.
9

Page 6
கலையும் சமுதாயமும் - 7 -
“கலை சித்தாந்த உள்ளடக்கம் கொண்டது. கலையும், அரசியலும் வெவ்வேறு மட்டங்களில் பணி புரிகின்றன, என்று லெனின் கூறினர். சிறந்த கலை வடிவமூலம் பிற்போக்கான சித்தாந்தங்களையும் மக்களிடை பரப்பிவிடலாம்; பொய்மைக்கு வெறும் கற்பனைக்கு கலை வடிவந்தந்து மக்களின் சிந்தனையை மழுப்பியும் விடலாம்.
ஓவியக் கலைவடிவம் ஆதி மனிதனேடு வளர்ந்து வந்த கலை வடிவ் மாகும். யந்திர உற்பத்தி வளர்ச்சியோடு இன்று மிகவும் ஆதிக்கம் பெற்ற கலைவடிவமாகவும் வளர்ந்து வந்துள்ளது.
ரவி வர்மா (1848-1906) கேரளத்தில் பிறந்தவர். திருவாங்கூர் மகாராசாவின் அரண்மனை ஓவியராக வாழ்ந்தவர். ஆயினும் இந்தி யாவின் பல பகுதிகளுக்கும் சென்று பணத்திற்காக ஒவியம் வரைந் தார். இவரது ஓவியங்களில் இரண்டாந்தர ஜரோப்பிய ஓவிய முறையின் சாயல் இருப்பதாக பூர்ஷ்வா ஒவிய வல்லுநர்கள் மதிப் பிடுகின்றனர். -
இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்திற்கு சேவை செய்த ஒவியர்களில் ரவிவர்மாவே முதன்மையான வர் என்று துணிந்து கூறலாம். இவர் இந்து மத தெய்வங்களுக்கு கற்பனை வடிவங் கொடுத்தார். அத் தோடு இந்திய புராண, இதிகாச காவிய மாந்தருக்கும் பொய்மை வடிவம் தந்தார்.
இந்தியாவில் காலனி ஆதிக்கம் உச்சநிலை அடைந்த காலம். அச்சு வாகனமும் வந்தது. யந்திர உற்பத்திப் பண்டங்களே விற்க விளம் பரம் தேவைப்பட்டது. அதன் ஒரு வடிவம் காலண்டராகும். நிலப் பிரபுத்துவத்தை உள்நாட்டில் உடையாது நிலை நிறுத்த ஏகாதிபத்தி பத்திற்கு மதமும் தேவைப்பட்டது. ரவிவர்மாவின் ஓவியங்கள், இத்து தெய்வங்களின் படங்கள் காலண்டருக்கு நன்கு பயன்பட்டன. ஆண்டு தோறும் கோடிக்கணக்காக ரவிவர்மா சிருட்டித்த 'தெய்வங் களின் படங்கள் வர்ணப் படங்களாகவே அச்சிடப்பட்டு இந்தியா பூராவும் விற்கப்பட்டது; பரப்பப்பட்டது, இன்னும் தொடர்ந்து அச்சிட்டு விற்கப்படுகிறது.
நாம் வீடுகளிலும் வியாபார நிலையங்களிலும் காலண்டர்களிலும் காணும் சிவபிரான், உமாதேவி, பிள்ளையார், லட்சுமி, சரஸ்வதி, நாரதர், கண்ணன், திருமால் படங்கள் யாவும் ரவி வர்மாவின் கற்பனைப் படைப்புகளே யாகும்.
10

ரவிவர்மா தீட்டிய ஓவிய வடிவங்கள் மக்கள் நினைவுகளில் பதிந்து விட்டன. பூசை அறைகளிவேயே அவை மாட்டப்பட்டு வழிபடப் படுகின்றன.
ரவிவர்மா சிருட்டித்த கற்பனை ஓவிய உருவங்கள் நாட்டில் பரம் பரை பரம்பரையாகவே இன்று ஆதிக்கம் பெற்றுவிட்டன. அதே தெய்வங்களை புதிய ஓவியர் வரையும் போதும் ரவிவர்மா காட்டிய உருவிலேயே அமைக்க வேண்டியுள்ளத. உதாரணமாக சரஸ்வதியை வேறு உருவத்தில் மற்ருேர் ஓவியர் தீட்டின் மக்கள் சரஸ்வதியின் வடிவம் என ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
இதுதவிர இன்று நாடகத்திலே யாயினும், சினிமாவிலே யாயினும் தெய்வங்களை ரவிவர்மாவின் ஒவியத்தை ஒட்டிய உருவிலேயே கொண்டு வரவேண்டும். நாடகம், சினிமா, சிற்பம் யாவற்றிலும் ரவிவர்மாவின் ஒவியங்கள் ஆதிக்கம் பெற்றுவிட்டன. இதஞல் ரவிவர்மா படைத்த ஓவிய வடிவிலேயே நாடகமேடை, சினிமாவில் நாம் நடிகர்களையும் அதே மேக்கப்பில் காண்கிருேம்.
இது ஓவியக் கலையின் ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் காட்டு கிறது. ஒவியம் கூட முதலாளித்துவத்தின் விற்பனைப் பண்டமாகும். அது பெறும் ஏக போகத்தையும் காட்டுகிறது.
தெய்வத்தைக் கூட மனிதன், கலைஞன் மனித உருவிலேயே காண் கிருன். தன்னிலும் பார்க்க உt ர்ந்த சக்திகள், திறமை உள் இருப்ப தாகவும் படைக்கிருன் . மூன்று, ஆறு முகங்கள், நாலு, ஆறு, பன்னிரு கரங்கள் இருப்பதாகவும் வரைகிருன் ஆயினும் எங்கோ ஒவியனைக் கவர்ந்த, நெருங்கிய, பழக்கப்பட்ட உருவங்களே அவல்ை மறந்துவிட முடிவதில்லை. ரவிவர்மா படைத்த பெண் உருவங்களில் தன் மகளின் சாயலைப் பதித்துள்ளார் என பூர்ஷ்வா ஒவிய நிபுணர்களே கூறு கின்றனர்.
கலைவடிவத்தின் மூலம் பொய்மையையும் சிருட்டித்து உண்மை யென்று, நம்பிக்கை ஏற்படுத்தி வ்ெற்றிகாண முடியும் என்பதற்கு உதாரணமாகவே ரவிவர்மாவைக் கூறினேன்.
yr 69 auri Dry மட்டுமென்ன இன்றைய நிலப்பிரபுத்துவ, (1p 5 லாளித்துவ கலைஞர்களே பல்வேறு கல்ைவடிவங்கள் மூலமும் இத்தகைய ஏமாற்று வித்தையையே செய்து வருகின்றனர். இவை யாவும் ஆளும் வர்க்க நலன் பேணுவதால் சமுதாய அந்தஸ்தும் பெற்று விளங்கு கின்றன.
11

Page 7
சமுதாய உணர்வுக்கு? சமுதாய வளர்ச்சிக்கு உதவாத கற்பனை, விஞ்ஞான பூர்வமான உண்மையை, வரலாற்றை ஒட்டாத கற்பனைப் படைப்பு யாவும் பொய்மையை, பொய்யைப் பரப்ப முயலும் படைப்பு களே யாகும்.
நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவமும்ே கலைஞர்கள் பொய், புழுகு கூற லைசென்ஸ் பெற்றவர்கள் என்று தம் வர்க்க நலன் பேணும் கலைஞர்களை போற்றி வாழ்த்துவர். சோஷலிசம் இத்தகைய பொய் ஏமாற்றுகளுக்கு இட*ளிக்காது யதார்த்த நிலைக் கோட்பாட்டை முன் வைப்பதாகும்.
உண்மையான நிகழ்ச்சியை மிகைபடுத்திய கற்பனையாக, நடை முறைக்கு சாத்தியமற்றதாக காட்டுவதே கற்பளு வாதமாகும். இவ் வாறு காட்டுவதால் இரு தவருன நிகழ்வுகள் ஏற்பட காரண மாகின்றன.
(1) உண்மையென நம்புகிறவர்கள் ஏமாறுகின்றனர்,
(2) பொய், கற்பனை என எண்ணிபவர்கள் கலையின் உண்மையான பயனை அறிய முடியாத வராகின்றனர்.
இது சலையின் ஒரு திரிந்த நிலையே ஆகும். மதகுருமார், மன்னர்கள், நிலப்பிரபுக்கள் கலையை இந்நிலையிலேயே வைத்திருந் தனர். பூர்ஷ்வாக்களும் ஆரம்ப நிலையில் கற்பனவாதத்தையே பேணினர்.
முதலாளித்துவத்தில் கலையெடுத்த இயற்பண்பு வாதமும் மற் ருேர் திரிபான நிலையே, உண்மையை அப்பழுக்கின்றி காட்டுவதாக கூறி மக்களுக்கு பயனற்ற நிலையை மட்டும் படம் பிடித்தனர். பரவ லான மக்களின் உணர்வுகளை ஒளித்தனர். இது அவர்களது சுய நலனைக் காப்பதற்கும் பயன்பட்டது.
இந்திய திரைப்படங்கள் யாவும் கற்பனவாத நிலையிலேயே உள்ளன. உண்மையான வாழ்க்கை நிலைகளை இவற்றில் காணமுடியாது. இவை திரைப்படங்களைப் பார்க்கும் மக்களுக்கு எவ்வாறு தீங்கு விளேக்கிறது?
உதாரணமாக சென்னை நகரில் கதை நடப்பதாக கொள்வோம். மதுரை அல்லது கொழும்பிலுள்ள மக்கள் அத்திரைப்படத்தை பார்க்கின்றனர். இவர்களில் ஒரு சிலர் தவிர எவரும்ே சென்னை நகரை நேரில் பார்த்ததில்லை.
சென்னையில் மரீன கடற்கரை, அடையாறு வீடுகளையே படத்திலே, காட்டுகின்றனர். அதுவே சென்னை என காட்ட முயலுகின்றனர்.'
12

படத்தைப் பார்த்த வெளியூர் மக்கள் அதுவே சென்னை நகரம் என நம்பிவிடுகின்றனர். அங்குள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை, வீடுகளை, உடைகளை, உண்ணும் உணவுகளை அவர்கள் காட்டுவதில்லை. எங்கோ வட்சத்திற்கு ஒருவராக வாழ்பவரின் நடை, உடை வாழ்க்கை ஆசாபாசங்களையே காட்டுகின்றனர். இதனுல் உண்மையில் வ்ெளியூர் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். சென்னை சென்றவர்கள், விவேகமுள்ளவர், அந்நகர் வாழ்க்கை பற்றி கற்றவர்கள் மட்டுமே இது பொய்மை என கண்டு கொள்ளுகின்றனர். இது தவிர. அன்ருட வாழ்க்கைப் போராட்டங்களையும் யதார்த்த நிலையில் காட்டாது போலி நிலையில் காட்டுகிறர்கள். சாதாரண உழைக்கும் மக்களின் அன்ரு ட பிரச்சனைகளை காட்டி அவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு முன்னேறுவதை காட்டுவதில்லை. அவர்கள் அறியாத காதல், ஆடம் பர வாழ்வு, குடும்பப்பற்று, பாச உறவுகள் பற்றியே கற்பனையாக காட்டி பிரச்சனைகளை திசை திருப்புகின்றனர்.
கலைவடிவத்தில் காணும் போலி கற்பனைகளை நம்பி நீந்துபவர்கள் யதார்த்த வாழ்வை தரிசிக்க முடியாதவர்களாகின்றனர்; உற்பத்தி, உழைப்பில் ஆர்வம் குன்றி போலிக் கற்பனையில் வாழமுயலும் ஹிப்பி எண்ணம் படைத்தவர்களாகி விடுகின்றனர்; அபின், கஞ்சா, எல். எஸ். டி. (LSD) போதைகளில் அகப்பட்டவர்களாகின்றனர்; மனே பலம் இழந்த, திரிந்த மனநிலை உள்ள நோயாளராகி சமூகத்திற்கு பயனற்றவர்களாகி விடுகின்றனர்.
யதார்த்த வாழ்வை கலைவடிவில் காண்பவர்கள் கடலின் ஆழத்தை அறிந்து கொண்டே நீரில் இறங்கி நீந்த முனைபவர்களாவர். வாழ்வின் உண்மை நிலையை அறிவு பூர்வமாகவும் அவர்கள் உணர்ந்து கொள்ளு கின்றனர். கற்பனைக்கும் யதார்த்தற்குமிடையில் அவர்களுக்கு முரண் பாடு ஏற்பட வழியில்லை.
கலை வடிவங்கள் பலம் வாய்ந்தவையே. பொய்மையையும் நம்ப வைக்கும் சக்தி வாய்ந்தவை. கற்பனவாதத்திலிருந்து விடுபட மற்று மொரு வாய்ப்பு உண்டு. அது நாம் நிஜவாழ்வை பார்க்க வில்லை, வாழ்க்கையை கலை வடிவங்கள் மூலம் காண்கிருேம் என்ற நினைவை அடிக்கடி ஏற்படுத்திக் கொள்வதாகும். நாம் நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிருேம் அல்லது தியேட்டரில் திரையிலே படங்கள் மூலம் கதையை தெரிந்து கொண்டிருக்கிருேம் என்ற / எமக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். அப்போது லையின் வடிவம் எம்மை ஏமாற்றி விடமுடியாது. பிரெட்சின் கோட்பாட்டின் சிறப்பை இங்கு நாம் மீண்டும் தரிசிக்கிருேம்.
13

Page 8
தியாகச்சுடர்களே!
. . . . . . தியாகச் சுடர்களே! அமெரிக்கசிக்காக்கோ நகரில் நீங்கள் சிந்திய இரத்த துளிகள்
இன்றுஉங்கள் நினைவுகளால் இம்மாநில மெங்கும் உயிர்த் தெழுகின்றன ஆருயிர்த் தோழர்களே அன்று
1886-ல் அமெரிக்க முதலாளித்துவ அடக்குமுறை கொடுமுடி மூர்க்கத் தனமாய் . முழு மூச் சாய் ஆலை, நிலக் கரி-அனைத்து தொழிலாள வர்க்கத்தின் உடல் உழைப்பை. தோலிருக்க, சுளை விழுங்கிகளாய். உயிர் இருக்க, உடல் உதிரத்தை உறிஞ்சி. இரவு பகலாக,
இருபது மணி நேரம் சுரண்ட .
அந்த - அநீதிக் கெதிராய் . .
அக்கிரமச் செயலுக்கெதிராய்.
பாதகரின் தீச் செயலை பாரினிலே அழித்துவிட. *பால்டிமோர்’ நகரத்தில் பசியோ டுழைத்திட்ட வார்ப்பு தொழிலாள வர்க்க தலைவர் - *வில் யம் எஸ் சுவில்ஸ்' வீரத்தலைமையின் கீழ் அறுபது தொழிற் சங்க அங்க பிரதிநிதிகள் "எட்டு மணி நேர வேலை” என்ற திட்டம்எட்டு திசையெங்கும், முதலாளித்துவ-மூர்க்க
கொடு நாகங்களின் செவிகளுக்குஇடி யென எட்ட
அது
விடிவுக் குரலாய். . 69 gr(335m & Drruil --- மண்ணிலிருந்து, விண்ணுேக்கி . மாநில மெங்கும் தேன் மழையாய் பொழிய. வசந்த கால வரவுக் காய். புரட்சி கீத மிசைத்த புத்துலக் குயில்களே! இன்று
gp .ᏰᏂᎸ ᏪᏏ ᎧYᎢ -- புரட்சிக் குரல்கள் புத்துயிர்த் தெழுந்து
எங்கள், --
ஆத்ம உயிர்த் துடிப்பை அதிகரிக்கச் செய்கின்றன. ஒ1 ஜஞதிபதி*செஸ்டர் ஏ ஆதர்'
“எட்டு மணி நேர வேலை சட்டம் அமுல் தடத்த நிலத்தில் எச்சக்தியும் நிர்ப்பந்திக்க ஏலாயென்னை" என்று- f வர்க்கத் திமிரால் கொக்கரித்து நின்றவனே! நீ தானே . .
அன்று
நீதிமன்றம்
ஜனதிபதி பாராளுமன்றம் வரை யாருக்கு சேவை செய்கின்றன? யாரைக் காத்து நிற்கின்றன? என்பதற்கு எடுத்துக்
GHT" - ---- TIL . . . . . .
துவக்கை
தோளிலேந்தி நின்று,

போராட்டத் தீக்கு நெய் வார்த்தவன்! இன்றுஉன்-கல்லறையிலிந்து
கண் விழித்துப் பார்! உன்-மண்ணில் மடிந்த
மக்கள் மலர்கள் மீண்டும்
புரட்சி மலர்களாய் பூத்தெழுவதைக் காண. . உன்-மூடிய கண்கண்
திறக்க மறுக்கின்றனவோ? திமிர் பிடித்தவனே! இன்று
உனக்கெதிராய். உன் வர்க்கத்துக்கெதிராய். உலகெங்கும் ஒலிக்கும் உழைக்கும் வர்க்கத்தின் புரட்சி கோசங்கள். புல்லனே! 畿_窃”一
புலன்களுக் கெட்ட
வில்லையோ? எட்டு மணி நேர கீதம் எங்கும் முழங்க. அங்கேஅமெரிக்கசிக்காக்கோவிலே, “பிரஜைகள் கமிட்டி’ என்றபெயரிலே, பெரிய வர்த்தகக்குழு தொழிலாளருக் கெதிராய் தோள் சேர்ந்து செயல்பட பத்திரிகைகள்பாட்டாளிக்கெதிராய் ஒட்டுறவாய் ஓலமிட *சிக்காக்கோ மெயில்?’- ‘பாட்டாளி வர்க்க தலைவர்கள் பயங்கர சக்திகள்" என-வர்ணிக்க. உழைக்கும் வர்க்கமோ /உறுதியுடன் ஒன்றிணைந்து * கறுப்பர்-வெள்ளையர்
ஆண்-பெண்
குடியிந்தோர்-குடியேறியோர் என்ற-வேறுபாடுகள் எள்ளளவு மின்றி எட்டு மணி நேரபோராட்டம் வெல்க! GLTrrib GS disl என்றண கோச கீதத்துடன் கொதித்தெழுந்த போதுஅப்போது
அங்கேநிராயுத பாணிகளாய் நின்ற உழைப் போரை ஆயுத பாணிகளாய் அடக்க வந்த கொடு முடி ஆளும் வர்க்கத்து காவல் நாய்கள் ஏவல் காரணத்தால் எச்சரிப்பு ஏதுமின்றி வேட்டு வைத்தனரே! ஓ! எம் தோழர்களே! பாட்டாளி வர்க்க தியாக குதியாறு சிக்காக்கோ மண்ணை செஞ் சிவப்பாக்க . .
வீர மரணத்தை
15
வீறுடன் அணைத்துக் கொண்டநான்குவீர ஆத்மாக்களே! மரணவாயில
உங்கள்ஆத்ம ராகங்கள் விடுதலை கீத மிசைக்க வீழ்ந்துற்ற செம்மலர்களே!
. . . அன்று
நீங்கள் சிந்திய செங்குருதி துளிகள் இன்று
எம் கருத்துக்களை சிவக்கச் செய்து விட்டன புரட்சி மலர்களே!
அன்று
இரத்தத்தில், w அடியெடுத்து வைத்த ஆர்ப்பாட்ட உளர் வலங்கள். .

Page 9
குருதியில், தோய்த் தெடுத்த செங்கொடிகள். இரத்த காட்சிகளின் இதய பீடங்களின் போராட்ட தீப்பொறி பூமியெங்கும் சிதற. “ஹேமார்க்கட் சதுக்கம்" என்று மிலாதவாறு கண்டனக் கூட்டத்தால் கரை கடந்து நிற்க. கதி கலங்கி நின்ற காவாலி கூட்டம் குள்ள நரிகளாய் கூடி போட்ட திட்டத்தால் அங்கேயும்ஆதிக்க வெறியரின்அடி தடி அக்கிரமம், அட்டூழியம், அநியாயங்கள். ஓ. எம்முயிர் தோழர்களே! அன்று - நீங்கள், குண்டர்களின் குறுந்தடிகளால் நெஞ்சங்களில் சுமந்த அடிகள் இன்று
Tid, ஆத்மாக்களைஅழச் செய்கின்றன, சீரழிந்த சிக்காக்கோவில் சிங்கங்களாக உதித்த மக்கள் தலைவர்களே! ஸ்பைஸ், Urrafsir, பீல்டன். ஓ! அன்று நீங்கள் கொட்டும் மழையிலும் குளிரை உங்கள்வார்த்தைகளால் சூடேற்றி ஆற்றிய உணர்ச்சி உரைகள் தூங்கிக் கிடந்தஅந்தராத் மாக்களை விழித்தெழச் செய்த போது .
குள்ளநரி முதலாளிகளின் கள்ளத் தன திட்டப்படி
வெள்ளாடுகளின் மத்தியிலே
வேங்கை வந்து பாய்ந்தாற்
Gurreio
அங்கே
வதங்கி விழுந்ததோர் பொலி
di L-6)
அதன் விளைவு
‘உரிமைகள் -
பிறர் பொருளாக திருடவல்ல
போராடி வென்றெடுப்பது, என்றவரலாற்று சத்தியத்தை வழி வழி உணர்ந்த வந்த. மேதினியில் உழைப் போரின் மேன்மையான நாளான 'மே தினம்"
இங்கே -
இந்த நாட்டிலே. எங்கள் ஈழத்திலே. . முதலாளித்துவ ! ஆட்சி விளையாட்டாய். களியாட்ட விழாவாய். ஆக்கப்பட்டு.ஆடப்பட்டு அன்று
நீங்கள் பட்ட,
அடிகள்
உதைகள்,
சித்திரவதைகள், சிறை வாழ்க்கை, சிந்திய இரத்தம், அளித்த இன்னுயிர் அவை அனைத்தையும் மூடி மறைத்திட. . முதலாளித்துவ நாடகத்தால்பாட்டாளி வர்க்கத்து பழைய வடுக்களை பாலுணர்வு சித்திரங்களாக. பச்சை வர்ணங்களால் ... கோலங்கள் போட்டு கொடி கட்டி மறைத்தாலும். உங்கள்இரத்தக் கறைகளால் தோய்ந்த இம்மாநிலம் இருக்கும்வரையும் '

எங்கள்
ஆத்மாக்கள் ஆவேசம் கொண்டெழும். ஒ? இரத்த உறவால் இணைக்கப் பட்டு விட்ட இனிய தோழர்களே! அன்று
"எமது கல்லறைகளின் மெளனம்
எமது சொற்பொழிவுகளை விட அதிக கதை சொல்லும்" என்று -
இறுதியால் . எங்களுக்காய். உழைக்கும் வர்க்கத்துக்காய். உரைத்து சென்ற
தியாகிகளே? தீரர்களே! ஆம்! இன்றுஉங்கள் கல்லறைகள், அமைதியில் துயிலஉங்கள் மெளன வழி காட்டல்களால்செந்நிற ஆடையுடுத்து சிவப்பு கொடி யேந்தி அணிவகுத்து செல்லும் அனைத்துலக போராளிகளால் - உங்கள் புனித நாமங்கள் உலகம் உள்ளளவும் புத்துயிர்த் தெழும் புரட்சி மலர்களே!
- சண்முகராசா
滋
கூலி
தொழிலாளர் முதலில் தமது அடிப்படை வாழ்க்கைத் தேவைக்கு உழைக்கின்றனர். அதன் மேல் உழைப்பதே உபரியாகும். முதலாளித்து வத்தில் உபரியும், வாழ்க்கைக்கு தேவையான உழைப்பும் பிரிக்கப் படுவதில்லை. தொழிலாளர் தமது உழைப்பு நேரம் முழுவதையும் தொழிற்சாலையில் கழிக்கின்றனர். இடையில் சங்கூதி வாழ்க்கைத் தேவைக்கு உழைத்து விட்டீர்கள் இனி நீங்கள் உழைப்பது உபரி என எவரும் கூறுவதில்லை.
அடிமைகள் போலல்லாது தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கப் படுவதால் அது தொழிலாளரின் உழைப்பிற்கு சமமான கூலி என்ற பொய்மையை ஏற்படுத்தி விடுகிறது.
17

Page 10
கவிஞர் கண்ணதாசன் - 3
- ஒரு மதிப்பீடு - - த. ச. இராசாமணி -
கண்ணதாசன் சிறுவுடைமை வர்க்கத்தினன். பொதுவாக சிறுவு டைமை வர்க்கம் பாட்டாளி வர்க்கத்திற்குப் பின்னால் நிற்காது. நிற்குமென்று எதிர்பார்க்கக்கூடாது. மத்தியதர வர்க்கம் அங்கே நிற்கும். அப்படியில்லையென்றால் இந்த வர்க்கம் எதிர் அணியிலே நிற்கும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மாற்று வழியை - திட் டத்தைத் தொழிலாளி வர்க்கம் - உழைக்கும் வர்க்கம் நடைமுறைப் படுத்த வேண்டாமா? இன்னும் கண்ணதாசன் பல இடங்களிலே பாடுகிறான்.
விண்ணையிடிக்கும் தலை இமயம் - எனும் வெற்பை இடிக்கும் திறனுடையார் - தினம் தொன்னை பிடித்துத் தெருவினிலே - நல்ல சோற்றுக் கலையும் புகழ்நாடு.
இன்னும் பல்வேறு இடங்களிலே நமது நாட்டின் நிலையைப் படம்
பிடிக்கிறான்.
முரண்பாடு
ஆக இப்படியெல்லாம் பலவிடங்களிலே கண்ணதாசன் பாடுகின்ற
பாடல்களைப் பார்க்கின்றோம். இன்னும் சில சமயங்களிலே
அவருடைய பாடல்கள் எப்படியிருக்கும் என்பதை நான் மறக்க
வில்லை. மறக்கவும் விரும்பவில்லை.
ஒர்கையிலே மதுவும் ஒர்கையில் மங்கையரும் YNX சேர்ந்திருக்கும் வேளையிலே ஜீவன் பிரிந்தால்தான் நான் வாழ்ந்த வாழ்க்கை நலமாகும்; இல்லையெனில் ஏன்வாழ்ந்தாய் என்றே இறைவன் எனைக் கேட்பான்.
இதுவும் கண்ணதாசன் பாட்டுத்தான். நீங்கள் நன்றாகப் பார்க்க வேண்டும், கண்ணதாசனின் முரண்பாடுகளை, அப்படிப் பாடிய கண்ண தாசன் இங்கே இப்படி நிற்கிறான் என்றால், தொழிலாளி வர்க் கத்தின் வீச்சு, வேகம் இல்லையென்றால், சிறுவுடைமை வர்க்கத்தின் நோக்கம் அங்கேதான் போகும், என என் நண்பர் அடிக்கடி “சொல் வார். மகத்தான மனிதர்கள் கூடினால் அவர்களுடைய பேச்சுக்களிலே "
தத்துவங்கள் கிடைக்கும். சாதாரண மக்கள் கூடினால் அங்கே நட
18

வடிக்கைகளைப்பற்றி பேச்சு இருக்கும். மட்டமான மனிதர்கள் கூடினால் மனிதனைப்பற்றிய பேச்சு இருக்கும், என்று அந்த முறையிலே, ஒரு கவிஞனுடைய கவிதை வெளியே வரவேண்டு மென்றால், என்ன ஆகும்?
மருவற்ற பெண்கூட்டத்தின் மடியிலே புரண்டு நித்தம் ஒரு கிண்ணம் மாற்றி மாற்றி
உலகத்தை அனுபவிப்பேன்.
சிறுவுடமையின் சிறுமை
நான் எதற்காக இதையெல்லாம் சொல்கின்றேனென்றால் இந்த சிறுவுடைமை வர்க்கம் என்பது தொழிலாளி வர்க்கத்தோடு இணைந்து நிற்கவேண்டிய வர்க்கம். உழைக்கும் கிராமத்து மக்க ளோடு இணைந்து நிற்வேண்டிய வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் உணர்ச்சிகளைத் தன்னுடைய உணர்ச்சியாக ஏற்றுக் கொண்டு, மேலெழுந்து, புரட்சிக்குத் தூண்டுதலாக இருக்கவேண்டிய வர்க்கம். சமுதாயத்தின் பிரதிபலிப்புக்கள்தான் இந்த வர்க்கத்தை அங்கே, கொண்டு தள்ளுவதும், இங்கே கொண்டு தள்ளுவதும் ஆகும். நமது நாட்டிலே கூட பார்க்கலாம். அந்த வர்க்கம் - சமுதாயத்திலே பெரிய மாற்றங்கள் நிகழ்கிறபோது, பெரிய புரட்சிக்கனலோங்கும்போது, அங்கே இணைந்து நிற்கும். அடியுதைமட்டும் வாங்குகிறபோது மகா பிற்போக்குவாதியாக, கோழையாக இருப்பதை நாம் பார்க்கிறோம்
அதனாலே கண்ணதாசன் இன்றைக்கு எங்கே நிற்கிறான்.
நமக்குத் தெரிகிறது.
கள்ளிக்காட்டை வெட்டப் போராடுகின்ற நீங்கள் 60556) வெட்டிக் கொள்ளாதீர்கள் என்கிறான், இரத்த புஷ்பத்தில், தகராறு தொடங்குகிறதைப் பார்க்கிறயோது அவனுக்குப் பின்னாலே சிறை யிலே அடிபட்டு, சிந்திரவதைப் பட்டுச் சாகிறானே, அதற்குப் பின்னாலே மக்களுடைய எழுச்சி பெரிதாக இருக்குமானால், இந்த வர்க்கத்திற்கு ஓர் உணர்ச்சி வருகிறது. ஒரு வேகம் வருகிறது. ஆனால் ஒரு இராஜனையோ, ஒரு சீராளனையோ கொன்றால் கூட இந்தச் சமுதாயத்தில் பிரதிபலிப்பு இல்லாது இருக்கிறது என்றால் இந்த வர்க்கம் அஞ்சி நடுங்குகிறது.
வர்க்க பிரதிபலிப்பே
y அதனாலே கண்ணதாசனை நாம் சாதாரணமாக மதிப்பிடக் கூடாது என்று நினைக்கிறேன். ஏனென்றால் கண்ணதாசன் இப் பொழுது எழுதுவது எல்லாம் சரியா என்றால், அது ஒரு வர்க்கத்தின்
19

Page 11
பிரதிபலிப்புத்தானே. அந்த வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தோடு இணைந்து நின்றால் (எதிர் பார்க்க முடியாது) இந்த மாற்றத்தை உண்டாக்க முடியும். அதுமட்டுமல்ல.
தொழிலாளி வர்க்கத்தினுடைய விடுதலையிலேதான் எல்லா வர்க்கத்தின் விடுதலையும் சேர்ந்திருக்கிறது என்று உணர்கின்ற போது, அப்படி உணர்ந்து செயல்படுகின்ற போதுதான் இந்த நாட்டிலே ஒரு பெரிய மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று அந்த வர்க்கம் உணர்ந்து, அப்படிச் சித்தாந்த ரீதியாக, தத்துவார்த்த ரீதியாக அதை நடைமுறைப்படுத்துகின்ற போதுதான், நடை முறையிலே அந்த வர்க்கம் ஈடுபடுகின்ற போதுதான், நாம் பார்க் கிறொம், அந்த வர்க்கத்திலிருந்து பெரிய பெரிய தலைவர்கள் எல் லாம் வந்திருக்கிறார்கள். ஆனால் அந்த வர்க்கத்திலேயிருந்து வந்த வர்கள் கூட, தொழிலாளி வர்க்கத்தின் உணர்வுகளைத் தம்முடைய கொள்கைகளாக அவர்கள் கையிலே எடுத்துக்கொண்டு, அதன்மேலே வருகின்ற போதுதான் அந்த வர்க்கம் மேலே போகிறதே ஒழிய, இல்லை யென்றால் கீழேதான் இருக்கிறது. சமுதாய அதிகாரிகள் முரண்பாடுகள்
இந்தச் சமுதாய அமைப்பு என்ன செய்கிறது? கிராமப் புறங் களிலே பார்க்கிறோம். ஒருவனுக்கு நான்கு குழந்தைகள் என்றால், ஒருவன் கல்கத்தாவிலே வேலை பார்க்கிறான். இன்னொருவன் சென்னையிலே வேலை பார்க்கிறான். ஒருவன் டெல்லியிலே வேலை *க்கிறான். ஒருவன் பம்பாயிலே வேலை பார்க்கிறான். சில குடும் டததில் மேல்நாட்டிலேகூட வேலை பார்க்கிறான். ஒரு கூட்டுக் குடும் பத்தை இந்தச் சமுதாய அமைப்பு ஈவிரக் கமில்லாமல் உடைத்துத் தூக்கி எறிவதைப் பார்க்கிறோம், அல்லவா, அதுமட்டுமல்ல.
இன்றைக்கு கலெக்டராக இருக்கிறார்கள். டி. எஸ். பி. யாக இருக்கிறார்கள். பேராசிரியராக இருக்கிறார்கள். கல்லூரியிலே பணி யாற்றுகிறவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய தகப்பனார், அவர்களுடைய தகப்பனாருக்குத் தகப்பனார், அவ்ர்களுடைய தகப்பனாருக்குத் தகப்பனாருக்கும் தகப்பனார் ஆகியவர்கள் நேரடி யாக உற்பத்தியிலே ஈடுபட்டிருந்த தொழிலாளியாக இருப்பவர்கள் அல்லது கிராமப்புற பாட்டாளிகளாக இருந்திருப்பவர்கள். ஆனால் படித்துவந்த பின்னாலே உற்பத்தி உறவில் நெருக்கடி வரும்போது மிகமிகப் பிற்போக்கான உற்பத்தி உறவை உழைக்கும் வர்க்கத்தின் தலையில் தூக்கி வைக்கிறபோது, இந்தக் கல்வி அவர்களை என்ன
20

செய்கிறது? அந்தக் கலெக்டர், டி. எஸ். பி, யாருக்கு உதவியாக இருக்கிறார். தன்னைப்போன்றோரின் தாய்க்கும், தந்தைக்கும் விரோதமாக இருக்கிறார். நான் ஏன் இதைச் சொல்கிறேனென்றால் இந்தக் கல்வியானது, இந்த மக்களையே தாய்க்கும் தந்தைக்கும் விரோதமாக திருப்பிவிடவில்லையா?
மேல்மட்ட அமைப்பு
கல்வியைப்பற்றிப் பாரதிதாசன் பாடினார், கடவுணைப்பற்றிச் சாடினார் என்று சொன்னார்கள், இவைகளெல்லாம் என்ன? மூல தனத்தைப் பாதுகாக்கிற மேல்மட்டக் கட்டுக்கோப்புதான். அடிப் படை கீழே இருக்கிறது. மதத்தைக் சாடினால், கல்வியைச் சாடினால் போதுமா? நீதியைச் சாடினால் போதுமா? சட்டத்தைச் சாடினால் போதுமா? மூலதனத்தின் கொடுமைகளை உடைத்து எறிகின்ற பொழுதுதான் மேல்மட்ட அமைப்பாகிய கட்டுக்கோப்புகள் அசையும், சரியும். ஆனால் அந்த மட்டத்திலே விட்டுவிடுவுதில்லை. ஒரு கலாச் சர்ர புரட்சியை நடத்தும் புதிய பொருளாதார அமைப்பு இந்த நாட்டிலே அது தனக்கு ஒரு கலையை, தனக்கு ஓர் இலக்கியத்தை, தனக்கு ஒரு சட்டத்ன்த, தனக்கு ஒரு நீதியை, தனக்கு ஒரு பண் பாட்டு வடிவத்தை அமைத்துக் கொள்ளும். அப்படி அமைத்துக் கொள்வது மட்டுமில்லாமல், பழைய பண்பாட்டு வடிவங்கள் இருக் கின்றனவே, அதை ஈவிரக்கமில்லாமல் அழித்துத் தள்ளுவதன் மூலம் நிலைபெறும். இங்கே ஏடுகளை "சென்சார்’ செய்தார்களே, இவைக ளெல்வாம் எதைக் குறிக்கின்றன? அனல்வாதம், புனல்வாதம், இவைகளெல்லாம் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின் மீது நடத்திய கலாச்சார புரட்சிதான். சீனத்திலே கலாச்சார புரடசி நடந்தது. ஒரு வர்க்கம் மற்றொரு பொருளாதார மார்க்கத்தை மாற்றி அமைத்துக் கொண்டால், இந்தப் பொருளாதாரத்தைப் பாதுகாக்க, அந்தச் சமுதாயத்தின் அடித்தளத்திலே இருக்கிற பொருளா தாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்காக, மேல்மட்டமாக இருக் கின்ற அமைப்புகளை அழிக்கும் ஆக ஒரு வர்க்கம் போய் இன்னொரு வர்க்கம் சமுதாயத்திலே ஆதிக்கம் செலுத்துகிறபோது, பழைய வர்க் கத்தின் நீதிகளை, கருவிகளை, கலை இலக்கியங்களை ஈவிரக்க மில்லாமல் அடித்துக்கொல்லும்.
அதைத் தான் பாப்பையா அவர்கள், தவறாகச் சொன்னார் களோ அல்லது புரியாமல் சொன்னார்களோ, தத்துவங்கள் அழிவ தாகச் சொன்னார்கள். ஒரு வர்க்கம் சமுத்ாயத்திலே இருந்து தூக்கி யெறியப்படுகிறபோது அந்த வர்க்கத்தைப் பாதுகாத்துக் கொண் டிருந்த மேல்மட்ட அமைப்பாக இருந்து அழுத்திக்கொண்டிருக்கிற
21

Page 12
தத்துவம், செத்தே போகும். ஆனால் பொதுவுடைமையென்று குறிப் பிட்டாரே, அந்தத் தத்துவம் எந்த வர்க்கத்தின் தத்துவம்? தொழி லாளி வர்க்கத்தின் தத்துவம் அல்லவா?
தொழிலாளி வர்க்கம்
தொழிலாளி வர்க்கம் அழிந்தால்தான் அந்தத் தத்துவம் அழியும். தொழிலாளிவர்க்கம் அழிகிறது என்றால் உலகம் அழியப்போகிறது என்று அர்த்தம். உலகம் அழியுமா? உலகம் அழியாது எனவே தொழிலாளி வர்க்கம் அழியாது அல்லவா. ஆக, பாரதிதாசன் சொன்னதைப்போல ‘காண்பன யாவும் தொழிலாளி செய்தான்’ பாட்டாளி மக்கள்தான் எந்தக் காலத்திலேயும் சமுதாயத்திலே ஒரு வர்க்கமாக நிலைத்து நிற்கின்ற வர்க்கம். இந்த வர்க்கத்தின் தத்துவம் பொதுவுடைமை. ஆக அது அந்த வர்க்கத்தின் தத்துவ மாக இருக்கின்றபோது, எப்படி அந்தத் தத்துவம் சாகமுடியும்? அது வளருமே ஒழிய, சாகாது; அழியாது; உடையது. உடைகிறது என்றால், அதனால் பிழைக்கிறவர்கள் உடைவார்களேயொழிய, அழிவார்களேயொழிய அந்தத் தத்துவம் அழியாது. சாகாது. அதனா லேதான் அவர்களுக்கும் சொல்கிறேன், அதை நீங்கள் யாரும் நம்ப வேண்டியதில்லை. வைணவம் உடையலாம், அழியலாம். அதைக் காத்த ஒரு வர்க்கம் சமுதாய ஆதிக்கத்திலிருந்து தூக்கியெறியப் பட்டது. உடைந்துபோனது. ஆனால் பாட்டாளி வர்க்கம் அழியுமா? அழியாது. அதனாலேதான், இந்தப் பொதுவுடைமைத் தத்துவம் அழியாது என்பது மட்டுமல்ல, அது ஒரு சரியான விஞ்ஞானம். அது ஒரு வளரும் விஞ்ஞானம், என்பதை நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். .
auffäss Gover)
கண்ணதாசனைப் பார்க்கவேண்டுமென்றால், பாரதியாரைப் பார்க்கவேண்டுமென்றால், பாரதிதாசனைப்பார்க்க வேண்டுமென் றால், வள்ளுவனைப் பார்க்க வேண்டுமென்றால், அவர்கள் எந்த வர்க் கத்தின் நலனைப் பிரதிபலிக்கின்றார்கள், எந்த அளவுக்கு வர்க்க சார்பாக இருக்கிறார்கள் என்று எண்ணிப்பார்த்து, அவர்கள் வர்க் கத்தைச் சார்ந்தவர் என்பதை விஞ்ஞான உரைக்கல்லிலே உராய்ந்து பார்த்து, உற்பத்தி உறவினிலே இவர்களுடைய பங்கு என்ன என் பதை, இவர்கள் எதை நியாயப்படுத்துகிறார்கள் என்பதை வைத்துக் கொண்டு, இவர்கள் யார் என்று அடையாளம் கண்டு, மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை, நமக்ரு இருக்கிறது. அந்த வகையிலேதான் திருவள்ளுவரைப்பற்றிக்கூட எனக்கு மாறு கட்ட கருத்து உண்டு. ஆனாலும் சொல்கிறேன், இந்தச் சமுதாயத்திலே மிகமிகப் பிற்போக்
22

கான நூல், பிற்போக்குத் தத்துவத்தை நிலவுடைமைத் தத்து வத்தை வலியுறுத்துகின்ற நூல் திருக்குறள். மிகச் சிறந்த தத்துவங் களைத் தாங்கியிருக்கின்ற நூல் அல்ல என்று எழுதியிருக்கிறேன். அதற்கு மாறுபட்ட கருத்து விஞ்ஞான ரீதியிலே வருமென்றால், அது சரிவாக இருக்குமென்றால், அதை முதலாவதாக வரவேற்கிற ஆள் நானாகத்தான் இருப்பேனே தவிர வேறு ஆளே. இருக்க முடியாது. முதலிலே, எங்களுடைய பார்வை, முற்போக்கு எழுத்தாளர் களுடைய பார்வை, விஞ்ஞான நோக்கிலே எழுகின்ற பார்வை, எங்களது அணுகுமுறை விஞ்ஞான அடிப்படையிலே எழுகின்ற அணுகுமுறை. அந்த முறையிலேதான், நாங்கள். எந்த எழுத்தாள னையும், கவிஞனையும், அவன் எந்த வர்க்கத்தை சார்ந்து நிற் கிறாள் என்று பார்க்கிறோம். ஒரு கவிஞனுக்கு, ஒர் எழுத்தாளனுக்கு ஒரு காலத்திலே புகழ் இருக்கிறது. இன்னொரு காலத்திலே புகழ் இல்லை என்றால், ஓங்கியிருந்த வர்க்கத்தின் குரல் கீழிறங்கும்போது, அவ்வர்க்கத்தின் தத்துவம் நலிந்துகொண்டிருக்கும்போது, அதை மக்கள் தூக்கி எறிகிறபோது அதனைப்பற்றியிருந்த, கவிஞனும் எழுத்தாளரும், தூக்கியெறியப்படுவான், இன்னும் சொல்லப் போனால் வரலாற்றின் குப்பைத் தொட்டியிலே தூக்கியெறியப்படு வார்கள் என்பதை உங்களிடத்திலே நான் கூறிக்கொள்கிறேன்.
குட்டி பூர்ஷ்வா வர்க்கமே
கண்ணதாசனைப்பற்றி அதிகம் சொல்ல வேண்டும். நான் இரண்டு பகுதியைமட்டும் லேசாகத் தொட்டுக் காட்டினேன். கண்ணதாசன் சிறுவுடைமை, குட்டி பூர்ஷ்வா,மத்தியதர வர்க்கத்தின் உணர்வுகளைப் பிரதிபலிக்கிறான். வரலாற்றிலே தொழிலாளி வர்க்கம் ஓங்கிநின்ற காலத்திலே, தொழிலாளிவர்க்கத்தின் வீச்சு வேகமாக இருந்த காலத்திலே அவனுடைய கவிதைகள் எவ்வ்ளவு வேகமாக, வீறு கொண்டதாக இருந்தன! சமுதாயத்தில் தொழிலாளி வர்க்கத்தினு டைய உயர்வு சோர்ந்து, நலிந்துபோனபோது, அதன் வீக்சு குறைந்த போது, அவனுடைய பங்கு சமுதாயத்திலே எங்கேபோய் நிற்கிறது என்பதை நாம் பார்க்கிறொம்.
இன்றைக்கு அவனுடைய நூல்களை யார் வாங்குகிறார்கள்? இந்த நடுத்தர வர்க்கம் / குட்டி பூர்ஷ்வா என்று சொல்கிறொமே, சிறுவுடைமையாளர்கள், இவர்கள்தான் அதிகமாகப் படித்தவர்கள், இவர்கள்தான் அதிகமாக வாங்குகிறார்கள். இவர்களுடைய உணர்வை அவன் மிக அழகாக வெளிப்படுத்துகிறான். இவர்களுடைய உணர்வுக்கு அவன் தீனிபோடுகிறான். அதனாலேதான் அவர்கள் இவனுடைய நூலை அதிகமாக வாங்குகிறார்கள்.
23

Page 13
இந்த நடுத்தரமக்களின் உணர்வுகள் என்ன? பாட்டாளிவர்க்க உணர்வுகள் என்ன? பாட்டாளிவர்க்க உணர்வு ஒரு மாதிரி நிலப் பிரபுத்துவ உணர்வு ஒரு மாதிரி. அதேபோல ஏகாதிபத்தியங்களுடைய உணர்வுகள் வேறு வேறானவை. இந்த உணர்வுகளெல்லாம் வேவ் வேறுவகைப்பட்டவை. இவற்றினுடைய நோக்கங்கள் வெவ்வேறு வகைப்பட்டவை. அதனாலேதான் இந்த ஒவ்வொரு வர்க்கத்தின் உணர்வுகளும் நடைமுறைகளும் - போர்த்தந்திர முறைகளும் - வேறு படுகின்றன. இந்த உணர்வுகளில், நடுத்தரவர்க்க உணர்வுகள் என்ன? அவ்ை எப்படி எப்படி யெல்லாம் பிரதிபலிக்கின்றன? என்பதை முழுமையாகப் பார்த்தால் கண்ணதாசனை நாம் முழுமையாகப் பார்க்க முடியும். ஆகவே கண்ணதாசனைக் கொச்சையாகத் தூக்கித் தள்ளிவிடவும் முடியாது. அதே நேரத்திலே அவன் சொல்வதெல்லாம் சரி என்று தலையிலே தூக்கி வைத்துக்கொண்டு ஆடவும்கூடாது. அவனிடத்திலே பலகீனம் உண்டென்றால், அது சிறுவுடைமை வர்க்க பலகீனமாகப் பிரதிபலிக்கிறது. அவனிடத்திலே எழுச்சி, உணர்ச்சி இருக்கிறது என்றால், தொழிலாளிவர்க்க உணர்வுகளை நடைமுறைப் படுத்தவேண்டுமென்கிறான் என்றால், மனித உடல்களின் நாளங் களைத் தட்டியெழுப்புகிறானென்றால், முறுக்கேற்றுகிறானென்றால், இது மத்தியதர வர்க்கத்தின் மேல்படிகின்ற தொழிலாளிவர்க்க உணர்வு என்று எடுத்துக் காட்டவிரும்புகிறேன்.
(மதுரையில் முற்போக்கு எழுத்தாளர் சங்க முதல் மாநாட்டில் ஆற்றிய உரையின் சுருக்கம்)
உபரிமதிப்பு
முதலாளித்துவ உற்பத்தி முதலாளிக்காகவே நடைபெறுகிறது: அவனுக்கு லாபம் தருவதற்காகவே நடைபெறுகிறது. இது தவிர வேறு எதற்காகவும் உற்பத்தி நடைபெறுவதில்லை. லாபம் தரா விடின் தொழிலாளரை வேலைக்கு அமர்த்துவது வீணுகும். லாபத்தை உறுதிப்படுத்துவதற்காக தொழிலாளர்களை உபரிமதிப்பு தரும் வித ம்ான உற்பத்தியில் உழைக்கச் செய்ய வேண்டும். முதலாளித்துவ உற்பத்தியில் தொழிலாளர் உழைப்பின் மதிப்பிற்கு சமமாக அவர் களுக்கு வழங்குவதாயின் ஓர் உற்பத்தியும் நடைபெற மாட்டாது;
24

வெளிவந்துவிட்டது!
தமிழவேள் எழுதிய *۔
கம்பராமாயணம் காட்சிப் படலம் 4-75 காரைக்காலம்மையார் புராணம் 7–00 தமிழ் பயிற்சி 8ம் வகுப்பு 7-50
சைவசமய பாடம் (அச்சில்)
க. பொ. த. சாதாரண வகுப்பு
தயாளன் எழுதிய புதிய பெளதிகவியற் பயிற்சி(வெப்பவியல்) 9-50
க. பொ.த. உயர்தர வகுப்பு கணிதம் - பாடநூல் 9, 10 (அச்சில்)
பொ. சங்கரப்பிள்ளை M.Sc. (Econ) எழுதிய நாம் தமிழர் (A Short History of the Tamils) ტიხ. 12-50
萨°
விஜயலட்சுமி புத்தகசாலை | 248, காலி வீதி வெள்ளவத்தை தொலை: 88930

Page 14
சினிமா உலகம்
யார் இந்த பாலச்சந்தர்? . . . . . சென்னை செல்வன்
பாலச்சந்தரின் படங்கள் நகரங்களில் வாழும் நடுத்தர வகுப் பினரால் பெரும்பாலும் பாராட்டப்படுகின்றன: புதுமை விரும்பு பவர்களாலும் விரும்பிப் பார்க்கப்படுகின்றன. ஆயினும் பெரும் பாலோர் ஒர் உண்மையை மறந்து விடுகின்றனர். அவரது படங் களில் சில ஒரு வகையில் முற்போக்கானவையாகக் காணப்படலாம். ஆயினும் ஆழ்ந்து பார்க்கும்போது அவை யாவும் படு பிற்போக் கானவையாக இருப்பதைக் காணலாம்; நிலப்பிரபுத்துவ மரபுகளை இறுகத்தழுவியவையாக உள்ளதையும் காணலாம்.
அரங்கேற்றத்தில் விபசாரத்தைத் தொழிலாகக் கொண்டிருந் ததை அறிந்த காதலன் அவளை திருமணம் செய்ய தயாரானபோதும்
விடுகிறர்.
அபூர்வராகங்களில் வயதும்ாறிய காதலை கலியாணத்தில் முடிக்க அவர் தயாராக இல்லை (40 CARETS என்ற ஆங்கிலப் படத்தில் திருமணத்தில் முடிகிறது) அவர்களில் தர்லியைக்கழட்டி உண்டியலில் போடும் துணிச்சலான பெண் பழைய காதலனை அல்லது புதிய
பாலச்சந்தர் விரும்பவில்லை. விபசாரியான கதாநாயகியை சொன்று
காதலனை திருமணம் செய்ய துணிச்சல் இல்லாதவளாக ரெயில் ஏற்றி விடுகிறர். , .
மூன்று முடிச்சில் காதலனைக் கொன்றவனைப் பழி வாங்க அவனது கிழட்டுத் தந்தைக்குக் கட்டி வைக்கிருர், வில்லனின் அண்ணனகவோ தம்பியாகவோ ஒரு இளைஞனை உருவாக்க முடியவில்லை.
மன்மதலீலை இயல்பான பாலுணர்வு கொண்ட உண்மை பேசும் சாதாரண மனிதனை காமுகன், அயோக்கியன் என ஒரு பிராடின பிரசங்கிமூலம் அவரே திட்டித்தீர்க்கிருர், :
இவ்வாறு அவரது ஒவ்வொரு திரைப்படத்திலும் அவரது பிரா மணீயத்தின் பிற்போக்கைக் காணலாம்.
are

தமது வெற்றிக்காக பாலச்சந்தர் கையாளும் மற்ருெரு தந்திரம் தம் ஒவ்வொரு படத்திலும் ஒரு பிறழ்வான பாலுறவு (Sex Scandal) காட்சியைக் கொண்டு வருவதா கும், அவள் ஒரு தொடர் கதைமகளைக் காதலிப்பவன் தாயுடன் பாலுறவு கொள்வது. பட்டதாரி (Graduate) என்ற அமெரிக்கப் படத்திலிருந்து திருடப்பட்ட சம்பவம். அபூர்வராகங்கள் - தாய் ஒருவரின் மகனைக் காதலிக்க அவன் தந்தை அத்தாயின் மகளைக் காதலிப்பது. மன்மதலீலை-ரோங் நம்பர் முதல் கைவிட்ட காதலனே பழிவாங்க கதாநாயகனுடன் உறவு கொள்ளல் முதலியன. அரங்கேற்றம் - விபசாரம் முதல் பழைய காதலனே விபசார வீட்டுக்குச் சென்று எதிர்பாராது காதலியைச் சந்திப்பது.
பாலச்சந்தரின் படங்களில் வரும் மாந்தர் யாவ்ரும் நாடகப் பாணியிலேயே வசனம் பேசுவதைக் காணலாம். இயல்பாக கதா மாந்தர் பேசுவது போல இருப்பதில்லை. நாடக மரமே முன் நிற்பதை இங்கும் காணலாம். வசனங்கள் யாவும் நாடக மரபை ஒட்டியே எழுதப்படுகின்றன. மெலோ டிராமா (Melo Drama) பாணியிலேயே கதையமைப்பு யாவையும் அமைத்து விடுகிறர். ஆயினும் சினிமா ஓர் வலிமை வாய்ந்த கலைவடிவமானதால் அவரையறியாமலே இடையிடை நாடகமற்ற சினிமா வடிவம் வந்து விடுகிறது. உதா ரணமாக மூன்று முடிச்சின் ஆரம்பப் பகுதி, அபூர்வராகங்களில் கமலஹாசன் மத்தளம் மூலம் பூரீவித்தியாவின் கேள்விகளுக்குப்
பதில் கூறும் பகுதிகளைக் கூறலாம். உரையாடல்களை பாதியாக
குறைப்பின் பாலசந்தரின் படங்கள் ஓரளவாவது சினிமா வ்டிவத் தைப் பெறலாம்.
சில சிறப்புகள் இருந்த போதும் பல குறைபாடுகளையும் கொண் டிருந்ததினலேயே பாலசந்தரின் வீழ்ச் சி ஆரம்பமாகியுள்ளதை இன்று யாவரும் காண்கின்றனர். பிற்போக்கான கோட்பாடுகளைக் கொண்ட கலைஞர்கள் சினிமாநட்சத்திரங்கள் போலவே உதிர்ந்து விடுவர். சினிமா என்ற கலைவடிவத்தை நன்கு புரிந்து கொள்ளாமை= நாடக ம ர பிலிருந்து வந்த  ைம, ஆக்க த் திறமை யின் றி (Creative Talent) திருடமுயல்வது, பாலுணர்வை படவெற் றிக்கு அதிகமாக நம்புவது, பிற்போக்கான கோட்பாடுகள் ஆகிய குறை பாடுகளே அவரது இன்றைய வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாகும்.
27

Page 15
கலை இலக்கியப் பிரச்சினைகள் பிரச்சினை: கலை இலக்கியம் என்றால் என்ன?
முன்னுரை: -ஆல. விந்தன் 0. l. எங்கும் வியாபித்திருக்கும் கலை:
நமது வாழ்க்கையில் கலை இலக்கியங்கள் பிரிக்க முடி யாத அம்சமாக விளங்கி வருகிறது. மாபெரும் நகரங்கள் முதல் சாலைப் போக்குவரத்தே இல்லாத குக்கிராமங்கள் வரை கலை இலக்கியங்கள் ஏதோவொருவகையில் பரவியிருக்கின்றது. கோலூன் றும் கிழவர்களும் இளமை ததும்பும் இளைஞர்களும் துள்ளியாடும் சிறார்களும் அடுப்பூதும் அன்னையரும் பிள்ளைகளைப்பெற்ற தாய் மாரும் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் தாத்தா பாட்டிகளும் கலையிலக்கியங்களோடு சம்பந்தப்பட்டிருக்கின்றனர். எழுத்தைப் படித்த மேதைகளும் அவற்றைப் படியாத பாமரர்களும் கலையிலக் கியங்களைச் சுவைக்கவே செய்கின்றனர். எனவே, கலை இலக்கியம், பால் பருவம் கல்வியறிவு பிரதேச எல்லைகளை எல்லாாம் கடந்து எங்கும் வியாபித்திருக்கிறது. 0. 2. உழைப்பு-நேரம்-பணம் முதலானவற்றை முழுங்கும் கலையிலக்கியம்:
பல கோடி மக்கள் கலை இலக்கியங்களோடு சம்மந்தப்பட் டுள்ளனர். கலைகளைக் கண்டும் கேட்டும் மகிழ்கின்றனர்; இலக் கியங்களைப் படித்துப் பரவசமட்ைகின்றனர். திரைப்படக் கொட்ட கைகளிலும் நாடக மன்றங்களிலும் இசையரங்குகளிலும் அல்லது இவைபோன்ற கலை மேடைகளிலும் மக்கள் திரளாகக் கூடுகின் றனர், நாவல்களையும் சிறு கதைகளையும் கவிதைகளையும் புரா ணங்களையும் கடைகளிலிருந்து வாங்கிப் படிக்கக் கடைகளுக்குச் செல்கின்றனர். இத்தகைய கலையிலக்கிய நாட்டத்தினால், அவற்றை நாடும் மக்களுக்கு, விலை மதிக்க முடியா உழைப்பு அல்லது ஒய்வு நேரம், பணம் மற்றும் உழைப்பு முதலியன செலவாகின்றது.
இன்னொருபுறம், கலையிலக்கியங்களை மக்களுக்குத் தயா ரித்து அளிக்கும் பணியில், பல்லாயிரக்கணக்கான உழைக்கும் பாட் டாளிமார்களும், ஆயிரக்கணக்கான கலைஞர்களும், நூற்றுக்கணக் கான தயாரிப்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர், ஒரு திரைப் பட்ம் அல்லது நாடகம் போன்ற கலையைத் தயாரித்து அளிப்ப திலோ, ஒகு தாவல், சிறு கவிதை.போன்ற இலக்கியத்தை அச்சடித்து வெளியிடுவதிலோ, பாட்டாளிம்ார்-கலைஞர்கள்-தயாரிப்பாளர் முத லானோரின் மதிப்புமிகு உழைப்பு நேரம், உழைப்பு மற்றும் பணமூல தனம் செலவாகின்றன.
28

0. 3, ஆரம்ப அரிச்சுடி.எத்தனை பேர் அறிவோம்?
தயாரித்தளிப்பதிலும் சுவைத்தனுபவிப்பதிலும், கோடிக் கணக்கானோரின் உழைப்பையும் நேரத்தையும், பணமூலதனத்தை யும் விழுங்கியுள்ள கலையிலக்கியத்தைப் பற்றி நம்மில் எத்தனை பேர் சரியாகத் தெரிந்து வைத்துள்ளோம்? கலையிலக்கியம் என்றால் என்ன என்ற ஆரம்ப அரிச்சுவடியை எத்தனை பேர் தெளிவாக உணர்திருக்கின்றேம்? பலர் சரியாக அறியவில்லை; சிலர் தெளி வாக உணரவில்லை; பலர் பல்வேறு அபிப்பிராயங்களில் எது சரி யானதென்று தெரியாமல்-எதைத் தேர்ந்தெடுப்பது என்று புரியா மல் தவிக்கின்றனர். கலை இலக்கியப் படைப்பாளிகளும், திறன றிந்து விமர்சிக்கின்ற "பண்டித ரசிகர்களும்’ (விமர்சகர்களும்), மெத்தப்படித்த கலை இலக்கிய மேதைகளும் கலை மாணவர்களும் கூட கலை இலக்கியம் என்றால் என்ற என்ன கேள்விக்குத் தெளி வாக விடை சொல்வதில்லை. அப்படி ஏதாகிலும் சொன்னால் ஒவ்வொருவரும் ஒவ்வொருமாதிரியாகச் சொல்கிறார்கள்.
0. 4. பலதரப்பட்டவரும் அபிப்பிராயபேதம் அல்லது மயக்கம் அல்லது தெளிவின்மையோடு இருக்கின்ற கலையிலக்கியத்தின் அரிச்சுவ டிப் பிரச்சினையான கலை இலக்கியம் என்றால் என்ன என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். கலை இலக்கியம் என்றால் வெவ்வேறு விதமான கோட்பாடுகள் எவ்வாறு விளக்குகின்றன. அவற்றின் சாதக பாதகங்கள் என்ன, அவற்றில் எது சரியாக இருக்க முடியும், சரியாக இருந்து வந்திருக்கிறது அல்லது இருந்து வருகிறது என்ப வற்றையும் நாம் பார்ப்பதும் அவசியமாகும். 1. 1. தத்தம் வாழ்க்கையையொட்டிய விளக்கங்கள்: -
மக்கள் பகுதியை அல்லது கலையிலக்கியச் சுவைஞர் பகுதியை, கலை இலக்கியம் என்றால் என்ன என்று கேட்டால் பல தரப் பட்ட கருத்துக்ககளைக் கூறுகின்றனர். (1) வாழ்க்கை நெடுகிலும் துன்பப்பட்டு துயரப்பட்டு அல்லற்பட்டு அடிபட்டு யுகவாழ்வில் நம் பிக்கையற்ற ஒருவனைக் கேட்டால், கலை இலக்கியமா. அப்படி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. அதெல்லாம் மாயை.எல் லாம் மாயை என்கிறான். (2) 2த நம்பிக்கையும் கடவுள் பக்தியு முள்ள ஒருவனைக் கேட்டால், ஆண்டவனின் அழகுக் காட்சிகள் எல்லாம் கலைகள், அவனது திருவிளையாடல்கள் எல்லாம் கலைகள், அவனது விந்தைத் தோற்றமெல்லாம் கலைகள், அவனது அருள் உபதேசங்களும் நீதிமொழிகளும் ஞான உரைகளும் இவைபோன்ற னவும் இலக்கியமாகும் என்கிறான். (3) கையில் “பசையும் (பசை. காசு) நெஞ்சில் துடிப்புமுள்ள வாலிபனையோ அல்லது வயோதி கனையோ கேட்டால் அழகே கலை; அழகிய பெண்களை ரசிப்பது
29

Page 16
கலை; அழகிய பெண்கள் அசைவது, ஆடுவது, அங்கம் குழைய ஆவ லைத் தூண்டும்படி அப்படி இப்படி நிற்பது, நடப்பது, பார்ப்பது, இ.இ.என இழிப்பது. உண்பது, உடுப்பது, உறங்குவது, ஏன் உறு முவதும்.எல்லாம் கலை என்கின்றனர். (4) கள்ளமில்லா விளையா டுஞ் சிறுவர்களைக் கேட்டால், தாங்கள் அன்னையர் மடியில் தத் தித் தவழ்ந்து விளையாடியதும், தாத்தா பாட்டிகளோடு மழலை கள் பேசியதும், தோழர்களோடு ஓடிப் பிடித்து கண்கட்டி விளை பாடியதும் கலைகள் என்பர். -
யுகவாழ்வில் நம்பிக்கையற்றவனும், கடவுள் நம்பிக்கையுள்ள மதவாதியும், "பசையுள்ள வாலிபனும், வயோதிகனும், விளையாடும் சிறுவர்களும், கலை இலக்கியம் என்றால் என்ன என்பதற்குக் கூறி யுள்ள விளக்கங்கள் தத்தம் வாழ் நிலைகளை யொட்டி மட்டும் அமைந்திருக்கின்றனவே தவிர, தத்தம் தனியனுபவத் தொகுப்பு களாக மட்டும் அமைந்துள்ளனவே தவிர, எல்லோருடைய வாழ்க் கை நிலைகளையொட்டி பொது அனுபவத் தொகுப்புக்களாக இல்லை. பரவலான அனுபவ தொகுப்பின் அடிப்படையில் யாரும் கருத்துக் கூறவில்லை.
1. 2. கலை இலக்கியங்களில் கொஞ்சம் 'விபரம் தெரிந்தவர் களைக் கேட்டால்-அவற்றோடு நெருங்கிய சம்மந்தம் உடையவர் களைக் கேட்டால்-கலையா, அது திரைப்படம் நாடகம் நாட்டியம் கச்சேரி சிற்பம் ஒவியம். இலக்கியமா, அது செய்யுள் நாவல் சிறு கதை புராணம் கவிதை கட்டுரை.என்றெல்லாம் அடுக்கடுக்காய்க் கூறுகின்றனர். மேலே சொன்ன விளக்கத்தைக் கத்துக்குட்டிக் கலைஞர்கள் மட்டுமல்லாது பெரும் புகழ்வாய்ந்த கலைஞர்களும் கூறி வந்திருக்கிறார்கள் என்று டால்ஸ்டாய் எடுத்துக் காட்டுகிறார்.
மேலே சொன்னவை எவையெவை கலைகள் எவையெவை இலக்கியங்கள் என்று பட்டியல் போட்டுக் காட்டுகின்றனவேயொழிய, கலை இலக்கியம் என்றால் என்ன என்பதற்கான விடையைக் கூறு வனவாக இல்லை. எனவே கலை இலக்கியம் என்றால் என்ன என்ற கேள்வி பலர் நினைப்பது போல் சுலபமான கேள்வியல்ல; எளிதாக விடையளிக்கக்கூடியதுமல்ல.
1. 3. கலை இலக்கியம் என்றால் என்ன, பல்வேறு கோட்பாடுகள்:
கலை இலக்கியம் என்றால் என்ன என்பதற்கு பல்வேறு கோட்பாடுகள், பல்வேறு விதமாக விடை தந்திருக்கின்றன. அவற் றில் கீழ்க்ண்ட கோட்பாடுகள் மிக முக்கியமானவைகள் ஆகும். அவை பின்வருமாறு:
30

1) இறை அல்லது ஆன்மீக அல்லது மாயைக் கோட்பாடுகள் 2) அழகிய கோட்பாடுகள் 3) மாயை-அழகியல்-மார்க்சீயம் அல்லது பிற கோட்பாடுகள் 4) மார்க்சியக் கோட்பாடுகள்
மேலே சொல்லப்பட்டுள்ள நான்கு கோட் பா டு களும் என்னென்ன சொல்கின்றன, அவற்றில் எது சரி, அல்லது அற்றின் அடிப்படையில் ஒரு தெளிவான ஒரு விளக்கத்தை நாம் உருவாக்க வேண்டும்; மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். 2. 1. ஆன்மீக கடவுள் மாயைக் கோட்பாடுகள்:
கலை இலக்கியம் என்பது மாயை அல்லது கடவுளின் வெளிப் பாடு என்பது இக் கோட்பாட்டின் சாராம்சம் கெகேல், பிட்சே, ஸ்கெல்லிங், ஸ்கோபன்கர் போன்ற மேலை நாட்டவரன்றி நம் நாட்டவர் பலரும் இக்கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராய் இருந்து வந்துள்ளனர். இக்கோட்பாட்டைப் பெரிதாக விளம்பரப் படுத்தியவர்கள் வெளிநாட்டவரேயாகும். ஆதிசங்கரர் போதித்த அத்வைதத்தின் ஏகம்பிரம்மம் மந்திரம், அதில் உள்ளடங்கிய தன் னைத் தவிர பிறவெல்லாம் மாயை என்ற கருத்து. இந்திய மண் ணில் இக்கோட்பாட்டின் அடிப்படையில் கலை இலக்கியங்களை விளக்கத் துணை புரிந்துள்ளன.
கருவிலே திருவுடையாரும் கடவுள் அருள் கைவரப்பெற்ற வரும் கலை இலக்கியங்கள் படைத்தாகக் கூறி, அதன் மூலம் கலை இலக்கியம் என்பது கடவுளின் அற்புதச் செய்ல்களால் விளைபவை என்ற கருத்து நம் நாட்டில் இன்னமும் மேலோங்கியுள்ளது. உன்ம யம்மை ஞானப்பாலை ஊட்ட, ஆளுடைய பிள்ளையார் ஞானசம் பந்தர் “தோடுடைய செவியன்." என்ற சைவசமயத்தின் சாரத் தையே உள்ளடக்கிய பாடலைப் பாடினார் என்றும்-மீனாட்சி அம் மையின் அருளால் சிறுவனாயிருந்து பிறவிக்குருடரான குமரகுருப ரர் பாடும் அருளைப் பெற்றார் என்றும்-பரத்தனாயிருந்த அருண கிரி முருகன் அருளினால் திருப்புகழ் பாடினார் என்றும்-காஞ்சி ஏகாம்பர ஈசுவரரின் அருளினால் வயிற்றுவலி நீங்கி கூற்றாயின வாறு " என்ற பாவமன்னிப்பு பாடலை அப்பர் பாடினார் என் றும் ம.இது போல இன்னும் ஏராளமான கதைகள் நம் நாட்டிலே நிலவி வருகின்றன. அன்றியும் கலையிலக்கியங்கள் படைத்து வந்த வர்கள் எல்லாம், படைத்து வருபவர்கள் எல்லாம் கடவுள் வாழ்த் துடன் தத்தம்து கலையிலக்கியங்களைப் படைப்பது, கலை இலக். கியங்கள் கட்வுளின் செயல்; அல்லது கடவுளின் செயல்களே கலை இயக்கியங்கள் என்ற கருத்தை வலியுறுத்துகின்றன. A
31

Page 17
KUMARAM 56 - 201, DAM. S. R. Registe
வெளிவந்துவிட்டன :
சங்கர ஐயர் ெ புதிய உயர்தர விலங்கியல்
曹曹 தமிழவேள் எழுதிய காரை
தயாளன் தய கணிதம் 1 ரூ கணிதம் ரூ விஞ்ஞானம் ( அரசின் சு. பொ.த (சாதாரண தாள்களுக்கு அமைய எழுத விளக்கம்ான விடைக்கு
தமிழவேள் எ புதிய சைவசமய பார்
ngang DLLID E. Gli தமிழ்ப் பயிற்சி க. ெ
தமிழவேள்' கம்பராமாயணம் - காட்
மற்றும் தமிழ்,ஆங்கில சிங்கள
ଜଳ, tଳ .. to, '#ଶi sof * வியாபாரிகளுக்கு க
விஜயலட்சுமி
248 காலி வீதி -
Թ5IIլքthԼ
இபதிரிகை கொழும்பு-12, 20 டாந்தியில் ாேகி அதே முகவரியிலுள்ள புதிய குமரன் அச் நிருவாக ஆசிரிப்ா செ. கணேசலிங்ான்

EEL GUILLUM HU-1 А
red as a Newspaper in Sri Lanka
ழுதிய
- பகுதி 1 ரூ. 12.00 பகுதி ဂျို့ကြီး
காலம்மையார் ரூ.7.00
rf孟函 5. 3.00
3.75
5. 5一了5
ாம்) புதிய மாதிரி விஞத் ப்பட்ட வினுக்களும் டனும் கூடியது.
ழுதிய
- լb 8 Վ5- 3.75
த Ա5- 8.00 কাে. হু... = গঢ়- 5.00 எழுதிய சிப் படலம் ரூ. 4-75
நூல்கள் யாவும் கிடைக்கும்.
க்கப்படும்.
ழிவு உண்டு.
புத்தகசாலை
வெள்ளவத்தை,
-6.
தொலைபேசி 88980
வசிக்கும் செ. கணேசலிங்கன் அவர் சாத்தில் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது.