கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வானோசை 1995.03-04

Page 1
凸厂f母 - T岛岛岳
恒T院(G) ITI@ 履II)
 
 


Page 2
உங்கள் விருப்பு க்கேற்றவாறு
சகலவிதமான
மரவகைகளைப்
GLi i5
அரிந்து வழங்குவதுடன்
வீட்டுத் தேவைகளுக்கான விறகுவகைகளைக் கொத்தாகவும் , தூக்காகவும் பெற்றிட சுன்னாகத்தில்
:
t
தர்ஷன் மரக்காலை
காங்கேசன்துரைச்சாலை, சுன்னாகம்,
 

ku
* 亚呜 ーエ-量ー
இந்த ஒசையில்.
', வெளிநாட்டில் நோயாளரால் மருத்துவர் தற்கொலை
நம் நாட்டிலோ மருத்துவர்களால்.
A. மனிதன் இளமையாய் வாழ வழி தேடும் விஞ்ஞானிகள்
A உருக்குலைந்த குவாண்டாவிற்கு உதவத் தயங்கும்
F1 նեի եIII
Δ". பூமி அதிர்ச்சி எதனால் எப்படி நிகழ்கிறது:
ΑΎ பறைவைகளில் புறா இனம் 300 வனது
W\, விண்ணில் ஜப்பான்
A, நில உலகுக்கப்பால் வேறு நாகரிகங்கள் உண்டா?
புகைத்தல் செய்வதால் நன்மைகள் நான்கு "م
A கவிதை சொல்லும் கதை!
A பால், நிறத்தால் வெள்ளை வகையால்.
W\, உயிருக்காகப் போராடும் மனிதனை வாழ வைக்கும்
செயற்கை இருதயச் சிகிச்சைகள்
நீங்களும் இப்படிப் பட்டவர்களா?
துடுப்பாட்ட வரலாற்றில் மின்னும் பிராட்மன்
ஒரு மீள் பார்வை
வானோசை . 부 . கந்தர்மடம் , யாழ்ப்பாம்ே
udga-monusnumu.

Page 3
02வானோசை
劃食
i
態
ருவர், தனது நண்பரான மருத்துவர் (Doctor) ஒரு வர்து வீட்டிற்குச் சென்றிருந்
தார். அவர் சென்றதன் நோக் கம், வருத்தத்திற்கு மாத்திரை வாங்கி வருவதற்காக, மருத்து வர் கேட்டார் மூட்டுக்கு மூட்டு வலிக்கிறதா? தலை சுற்றுகிற மாதிரி இருக்கிறதா ? சாப்பாட் டைப் பார்த்தால், சாப்பிட
மனமில்லையா? நீங்கள் சொல்வ
தெல்லாம் சரி எனக் கூறிய நண்பர், எப்படி இவ்வளவு நுணுக்கமாக
நோய்களைக் கண்டுபிடி
த்தீர்கள்? என்று கேட்
டார் மருத்து வரை .
ஒன்றுமில்லை, அந்த
நோய்கள் எல்லாம் எனக்
கும் இருக்கிறது. அத
னால்தான் சொன்னேன்
என்று கூறிவிட்டு, எழு
ந்துசென்று 04மாத்திரை களைக் கொண்டுவந்து நண்பருக்கு இரண்டைக் கொடுத்துவிட்டு, தானும்
இரண்டைச் Fmr ut L. டார் .
மருத்துவர்கள் என் றால், நோய் நொடிகள் நாடாது என்றில்லை. அவர்களுக்கும் மன இறுக் கம் அதாவது, பதற்றம் (Tension) GT fih L u Gl Gmu gbi உண்டு, து, மருத்துவர் களின் கடமைகளையே பாதித்து விடுகிறது.
விளம்பரநிறுவனங்களில் வேலை செய்பவர்கள், பத்திரிகையாளர் கள், காவல்துறை அதிகாரிகள், விமானிகள் இவர்களை விட, அடுத்தபடியாக மன இறுக்கத் திற்கு உட்படுபவர்கள் மருத்து வர்கள்தானாம் . மருத்துவர்கள் மத்தியில் தற்கொலைகளும் நிகழ் கின்றன. இங்கிலாந்தில் வெளி

யிடப்பட்ட ஆராய்ச்சிப் புள்ளி விபரங்கள், இவற்றைத் தெரிவிக் கின்றன.
அதற்குக் காரணம் என்ன?
ஆய்வுகளின்படி, இந்த மன இறுக்கம் ஏன் வருகிறது என்றால், நோயாளிகளைப் பிழைக்கவைக்க வேண்டும் என்பதற்காக, இரவு முழுவதும் தூக்கம் இழந்து சேவை யில் ஈடுபடுவதாலாகும்.அது மாத் திரமல்லாமல், சில வேளையில் நடு இராத்திரியில் தொலைபேசி யில் மருத்துவருடன் தொடர்பு கொண்டு, வயிற்றை வலிக்குது என்ன செய்யலாம்? ஏதாவது சொல்லுங்கள் என்று வீட்டில் இருந்தாவது சிலர் கேட்பார்கள் . அதற்கு 9y6íb) u ihoöT (Asprin) மாத்திரையைப் போட்டுவிட்டுத் தூங்குங்கள் என்று கூறுவார் மருத்துவர், நோயாளியும், அவ் வாறே சாப்பிட்டுவிட்டுத் தூங்கு வார். ஆனால், மருத்துவர்களுக்
குத் தூக்கம் வராது; ஏன் தெரியுமா? வயிற்றுவலி என்று கூறியவருக்கு, அஸ்பிரினைச்
சாப்பிடச் சொல்லிவிட்டேனே. வயிற்றின் உள்ளே, வேறு ஏதா வது கட்டியாக இருக்குமோ? வேறு ஏதாவது பெரிய நோயாக இருக்குமோ? என்று எண்ணி, எண்ணித் தூங்காமலே இருக்க நேரிடுகிறது.
இங்கிலாந்தில் உள்ள எடின் பேர்க் பல்கலைக்கழகத்தைச்(Edi
nburgh University)Garitis Gurt
வானோசை03
சிரியர் ஜோன்கோப்பி (Pro , Jhon Goppy) மருத்துவர்கள் தொடர் பாக ஓர் ஆய்வு செய்துள்ளார். அவர் கூறுகிறார்:- தனது சக் திக்கு அப்பாற்பட்டு, நோயாளி களை ஏற்று, வைத்தியம் செய்து வருவதும் ஒரு கார ண ம் , நோயாளிகளின் கடுந்தொல்லை கள் காரணமாக, சகல பணியா ளர்களுடன் சினந்து விழுவதும் , இடையூறுகள், தா ம தங்க ள்
போன்றவற்றால் கோபமடை வதும் ஒரு காரணம். அந்தப் பேராசிரியர் மருத்துவர்களுக்கு
என்ன யோசனை சொல்கிறார் தெரியுமா? தாமதங்கள், இடை யூறுகள், நோயாளிகளின் தொல் லைகள் என்பன இருக்கத்தான் செய்யும் . அவற்றைத் தடுக்க முடி யாது. மருத்துவர்களாக இருப் பவர்கள், தங்களுக்கு இவை போன்ற இடையூறுகள், சூழ்நிலை கள் ஏற்படத்தான் செய்யுமென் பதை மனதார ஏற்றுக்கொண்டு, அதனால் பொறுமையை இழக் காமல் , உணர்வுப்பூர்வமாகத் தங்களது கடமைகளைச் செய் யப் பழகிக்கொள்ள வேண்டும் .
சிலபேர், தமக்கு என்ன நோய் என்பதை மருத்துவர்களிடம் சொல் வதே இல்லை . ஏன் நான் சொல்ல வேண்டும்? மருத்துவரே நோயைக் கண்டுபிடிக்கட்டுமே? என்று தங் களுக்குள் நினைதது விடுவதுண்.ே ஒருமுறை, ஒருவர் மருத்துவரிடம் சென்றார் . உடம்புக்கு என்ன நடந்

Page 4
U3
தது? என்று மருத்துவர் கேட்டார். - |- - அதை நீங்கத்ான் கண்டுபிடித்து இ ) لی۔ صلى الله عليه وسلم - 電 感 மருந்து தர வேண்டும் என்று கூறி ཕྱོ་ ཕྱི་ ཕྱི་ 器 岂 ". னாா அருகில் இருந்து இதைக் כי S בפת. 3:3-5%, ש S *選 密。 கவனித்த ஒருவர். இதோ பாருங் ” ே ਤੇ གྱི་སྒྱུ་ கள் ஐயா! உங்களுக்கு இருக்கிற 3 ਖੋs தோரை மருத்துவரிடம் எடுத்துக் སྒྱུ་ 5. கூறி, மருததைப் பெற்றுக்கொள் ཕྱི་ཡི་ 溪 ளுங்கள். அப்படி விருபபம் இல்லை 8 : பென்றால், அத்ேத தெருவில் ஒரு 巽 羲 높 형 வைத்திசாலை இருக்கிறது, 금 - s 3 s、 அங்கு போங்கள் என்றார். அது :  ெ 3. என்ன ஆஸ்பத்திரி என்று டிே நோயாளி கேட்டார். அது, மாடு SS à 한 க்ளுக்கு வைத்தியம் செய்யும் ஆல் 35 சூல் : :
பத்திரி என்றார், தூத்த ஒருவர்.
( "ஆடைகளிற் பல வண்ணம்; அவை கவரும் உங்கள்எண்ணம்'
(உங்கள் ஆடைவகைகளைச் சிந்தைக்கேற்பத் தெரிவு செய்திட ( றஞ்சனா வண்ண ஆடையகம்
(ఇa. 17, 18, 18ஏ, சிறப்பு அங்காடி, யாழ்ப்பாணம்.
(அடைக்களஞ்சியம் ரஞ்சனா ஆடவர், மகளிர்க்குத் தீஞ்சமாம்! LMLLLqT LLLSLzLLLL LLL LLLLL LL0 LLL LLLL LLLLLL LLLLLLLLe LLLLLL LLLLLLLLLLTTL LLM LLL LALeKS
(... நங்கையரே!!
ஆளுக்கு முழுமை தருவது ஆடை! - அந்த ( புத்தாண்டில் ஆடைக்கு முழுமை தருவது நீாங்கள்!
பி. ரி. ரெயிலேர்ஸ் ( P. T. TALORES
(sa. 8ெ ஏ, மின்சார நிலைய சாலை, யாழ்ப்பாணம்.

4. ஓரrேஇச 05
மனிதன்
இளமையாய்வாழ
விஞ்ஞானிகள்
ன்ன புராணக்கதை போல்
இருக்குதா? 18 வயதா கவே இரு என்று, மார்க்கண்டே பருக்குச் சிவபெருமான் திருவருள் புரிந்ததாகப் புராணத்திலே ஒரு கதை உண்டு. ஆம் அந்த வர லாற்றைப் போல, மனிதர்கள் இளமை குன்றாமல் இருக்கச் செய்ய, அறிவியலாளர்கள் ஆய் வுகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுவையாய் இருக்கின்றது அல் லவா? மேலும் கூறவா? மனிதன் ஏன் முதுமை அடைகிறான்? இது எல்லோரும் கேட்கிற ஒரு கேள்வி. பலபல ஆண்டுகளாகப் பல்வேறு அறிவியலாளர்கள் இதை ஆராய்த் திருக்கிறார்கள். நரை, திரை, முப்பு அதாவது முடி நரைத்தல், கண்பார்வை மங்குதல்; அதைத் தான் திரை என்று சொல்வார் கன். மூப்பு, அதாவது, முகச்சுருக் கம், உடல் தளர்வு, வலிமை இழந்த எலும்புகள் நினைவாற் றல் இழத்தல் இவை எல்லாம்
வழிதேடும்
முதிர முதிர அதிகரிக்கின்
Glu Lugii
இப்
இது தெரிந்த விடயம் என்றா லும், இது ஏன் நிகழ்கின்றது? என்பதுதான் தெரியாத விடய மாக இருந்துவந்தது. அறிவியலில், இதுகால வரையும் அதைப் பற்றி ஏதாவது கண்டுபிடித்து விட்டார் களா? என்றால், ஓரளவிற்கு ஆம் என்றுசொல்லலாம்கடந்தஜனவரி மாதம் பிரெஞ்சு அறிவியலாளர் கன் வெளியிட்டுள்ள ஆராய்ச்சி முடிவுகளின்படி, இதற்குக் கார னம், மனிதனின் உடலிற் காணப்
படும் டி. எச். ஈ. ஏ. சல்பேற் (D. H. E. W. Sulphate) GT Gör M) ஹ ரா ர்மோ ன் (Harmone).
அதாவது, அந்தத் திரவம் தான் இதற்குக் காரணம் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். இந்த ஹார் மோனை இப்போது தான் கண்டு பிடித்திருக்கிறார்களா, இல்லை யேல் முந்திய வரலாற்றிலேயே கண்டு பிடித்து விட்டார்களா

Page 5
06 வானோசை
என்பீர்கள். டி.எச்.ஈ.ஏ . சல் பேற் என்கிற ஹார்மோனை 1960 இல் பிரான்ஸ் நாட்டுப் பேராசிரியர் எடினே எமிலி வொலியோ (Edinee Emily Wolyo) எ ன் ப வர் கண்டுபிடித் தார். அதுமுதல், மனிதன் முதுமை அடைவதற்கும், அவன் உடம்பிற் காணப்படும் டி. எச். ஈ. ஏ. சல்பேற் என்ற இந்த ஹார் மோனுக்கும் இடையே என்ன தொடர்பு இருக்கிறது என்பதை ஆராய்ந்திருந்தார். இந்தஆராய்ச் சியில் , அ வருட ன் பா ரி ஸ் நகரத்தில் உள்ள சென் லூயி மருத்துவமனையின் (Saint Louis Hospital) பேராசிரியர் கைத் 5mrupov (Thomas) 676iru Jou(5шћ இணைந்து செயற்பட்டார். அப் போது, மனிதன் முதுமை அடை வதற்கும், டி.எச்"ஈ.ஏ. சல்பேற் என்கின்ற ஹார்மோனுக்கும் தொடர்பு உண்டு என்று கண்டு பிடித்திருக்கிறார்கள். t?- gre学. ஈ. ஏ. சல்பேற் ஹார்மோன், வயது அதிகம் ஆக ஆக மனித உடலிற் குறைந்து கொண்டே போகிறது என்பது, பல காலமா கவே ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரிந்த விடயம். அதாவது, விலங்குகளை(மிருகங்களை) வைத் துப் பரிசோதனை நடத்திய போது, டி. எச். ஈ. ஏ. சல்பேற் என்ற திரவம் உடலில் நோய் உரு வாவதைத் தடுப்பது தெரிய வந் தது. அதாவது, எலிகளில் இந்த ஆராய்ச்சிஒய முதலிற் செய்தார்
கள் . அப்போது எலிகளில் ஆராய்ச்சி செய்தார்கள் என்றால், மனிதருக்கு இந்த வகையான பரி சோதனை இன்னமும் செய்யப் படவில்லை என்கிறீர்களா? இல் லை; மருத்துவர் சாமுவேல் (DR. Samuel) ன்ன்பவர் இதுபோன்ற ஒரு பரிசோதனையைச் செய்தார். அதன் முடிவு என்ன? பேராசிரியர் வொலியோ அவர்கள், மருத்துவர் சாமுவேல் அவர்களின் பரிசோத னையின் முடிவுகளைப் பற்றிப் பேசும்போது, சாமுவேல் அவர் களின் பரிசோதனையிற் பங் கேற்ற முதியவர்களின் தசை களின் வலு அதிகரித்தும், தோல் சற்றுத்தடிப்பானதாகவும் அமைந் திருந்ததைக் காண முடிந்தது. எலும்புகள் கூடுதலான உறுதி யைப் பெற்றிருக்கின்றன. அந்த முதியவர்கள் மனநிலை, மூளைத் திறன் எல்லாமே உயர்வடைந்த நிலையில் இருக்கின்றன.
பொதுவாகச் சொன்னால், இந்த டி. எச். ஈ. ஏ. சல்பேற் ஹார்மோனைச் செயற்கையாகப் பெற்றதும், அந்த முதியவர்க ளின் உடல்நிலை நல்ல முன்னேற் றம் கண்டது. நாம் நல்ல உடல் நிலையிலிருப்பதாக, ஒருவருக்கு ஓர் உணர்வு ஏற்படுமே ; அந்த உணர்வு, குறிப்பாக அவர்களுக்கு அதிகரித்தது என்று சொல்கிறார் மருத்துவர் வொல்வ் ,
நல்ல மகிழ்ச்சி F6ð)6)}ll Isr
என்ன ஐயா தரும் செய்தியாகவும்,

கவும் இருக்கின்றது. அப்போ , இது இன்னும் ஆராய்ச்சி நிலை யில்தான் இருக்கின்றதா? இல் லையேல், புழக்கத்தில் வந்து விட் டதா எனக் கேட்பீர்கள். இல்லை; இன்னும் ஆராய்ச்சி நிலையில் தான் இருக்கிறது.
பிரெஞ்சு மருத்துவ அறிவியற் குழுவொன்று 100 முதியவர்க ளைத் தேர்ந்தெடுத்து, அவர் களுக்கு இந்த டி. எச்.ஈ. ஏ. சல் பேற் ஹார்மோனைக் கொடுத்து ஆராய்ந்து, அவர்கள் முதுமை அடைவது குறைக்கப்படுகிறதா எனக் கண்டறியப் போகிறார் ‹ኗE6Ñ .
இந்த ஆய்வில் வெற்றி பெற் ADrrâî), மக்கள் முதுமையடை வதைத் தடுத்து விடலாம். அப் போது, நோய்களையும் வரா மல் நிறுத்திவிடலாம்; அப்படித் தானே? இதுபற்றி தோமஸ் என் னும் மருத்துவரைக்கேட்டபோது, அவர் சொல்கிறார் :- துரதிர்ஷ்ட
வசமாக, இன்னும் நமக்கு அப் படிச் செய்ய முடியுமா என்று தெரியவில்லை , முதுமையை
வானோசை07
நிறுத்துவது அத்தனை சுலபமான விடயமில்லை. ஆனால் அதைச் சாதிக்கும் வழிமுறைகளுக்கு ஒரு துப்புக் கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார்.
அட! என்ன இது மருத்துவர் இப்படி 6) GT 616TT, கொள கொளா என்று சொல்லி முடித்து விட்டாரே என்று எண்ணுகிறீர் களா? உண்மைதான்; ஆனால், அதுதான் உண்மையான அறிவிய லாளர்களுக்கும் , கற்பனைக் கதாசிரியர்களுக்கு மிடையே உள்ள வேறுபாடு. அறிவியலா ளர்கள் மிகத் துல்லியமாகத் தம் முடைய ஆய்வின் முடிவுகளைக் கூறுவதுதான் மரபு. ஆனால் ஒன்று, டி. எச். ஈ. ஏ. சல்பேற் ஆராய்ச்சி வெற்றியில் முடியலாம் என்பதற்கு, மருத்துவர் சாமுவேல் அவர்களின் ஆராய்ச்சி முடிவுகள் ஒரு கோடி காட்டுகின்றன. என் றும் 16என்ற வ ரத்  ைத எல் லோருக்கும் அளிக்க, அறிவியல் தயாராக இருக்கிறது என்பதை மட்டும், இப்போது உறுதியாகச் சொல்லலாம்.
நாகரிகப்
இன்றே விஜயம்
ரகுராமன்
இல, 53, சந்தோசம் தெரு,
(கஸ்தூரியார் வீதி)
LMLMeLLeBL LLLOLLLSMLLSMLOLLMLLLLMOOLLLLLLLLBBBBBLLLLLLLSLLLOSYLKYL0LMLLLLL
பெணமணிகளின் நம்பிக்கைச் சின்னம் ! உங்களுக்குத் தேவையான 22 கரட் கொண்ட தங்க நகைகளை குறித்த தவணையில் ஒடர் செய்து பெற்றிட
செய்யுங்கள்!
நகை
யாழ்ப்பாணம்.

Page 6
ப்போது ருவாண்டாவின் இ நிலை எவ்வாறு உள்ளது: 10 இலட்சம் சிறுபான்மை துட்சி இன மக்கள் படுகொலை செப்பப் பட்ட மண்ணின் இன்றைய கதை என்ன? இன்னமும் படுகொலை கள் விளைவித்த சோகம் ஆறாத போதும், ஒப்பீட்டளவில் அங்கு அமைதி நிலவுவதாக இப்போது கூறப்படுகின்றது. இதற்கு கடந்த ஐ"லை மாத ம் தலைநகரான விகாவியைக் கைப்பற்றி, முறை யான் ஆட்சி ஒன்றை அமைத்து, தற்போது உப சனாதிபதியாகவும் பாது காப் பு அமைச்சராகவும் விளங்கும் துட்சி இனப்போராளி chair -ya. In Rai (Ruwandan Patriotic Front) is a gy an in i தளபதி போல் ஹக்காமே பிர தான காரணம் ஆவார் என்பது, நாம் சொல்லித் தெரிய வேண்டிய தில்லை. எனினும், இரண்டு பிரதான காரணங்களால் ருவாண் டாவின் எதிர்காலம் நிச்சயமின் மை என்கிற நச்சு வட்டத்தின் உள்ளே இன்னமும் உள்ளது. பழி வாங்கப் படுவோம் என்கிற அச் சம் காரணமாக, அண்டை நாடு களுக்குத் தப்பியோடிய பெரும் பான்மை குத்தூஸ் இன மக்களில் 20 இலட்சம் பேர் இன்னமும் தமது நாட்டுக்குத் திரும்பத் தயக் கம் காட்டுகின்றார்கள்.
அதேவேள்ை படுகொலைப் படு பாதகத்தைப் புரிந்த குத்துரஸ் இன் இராணுவம் தப்பியோடிய
e
g
|\၁) PD
பின்,ஸயரே நாட்டில் விசேடதங்க கங்களிலே இன்னமும் இராணுவ ரீதியில் ஒழுங்கு அமைக்கப்பட்ட நிலையில், குழப்பம் விளைவிக்கக் காலம் கனியாதா எனக் காத்து நிற்கின்றனர். எனவே, இத்த கைய நிலையில் தேசிய இணக் கத்தை உருவாக்கும் நோக்கிலும், தமது அரசு பழிவாங்க விரும்பும் துட்ஸி இனத்தின் அரசு என்கிற பழி வராமல் தடுக்கவும், துட்சி
 

இனப் போராளிகள் அ  ைம ப் பு ஆர். பி. எஃப் (R. P. P.) பல வகைகளிலும் முயல்கின்றது.
மிதவாதக் கூட்டு இனத்தாரைத் தமது அரசில் முக் கி ய பதவிக விலே மு த வில் அமர்த்தினர். அவை அதிகம் பயன் அளிக்காத நிலையில், இப்போது இன்னொரு புதிய முயற்சி ஒன்றையும் மேற் கொண்டு வருகின்றனர். தம்மை உலகம் அங்கீகரிக்க, அதன் சட்ட பூர்வத் தன்மையை ஏற்க வைக்க, குத்தூஸ் இன அகதிகளை நாடு திரும்பத் தூண்டும் முக மாக கடந்த டிசெம்பர் மாதத்திலே புதிய இடைக்காலத் தேசியமன்று அமைக்கப்பட்டது. 70 பேரை நாடாளுமன்ற உறுப்பினர்களா கக்கொண்ட இம்மன்றில் 08 கட் சிகள் அங்கம் வகிக்கின்றன . ஆர். பி. எஃப் அ  ைம ப் பின் சார்பில் 11 உறுப்பினர்கள் மட் டுமே இதில் இடம்பெறுகின்றனர். அதே வேளை இ ரா னு வத் திற்கு 05 ஆசனங்களும், காவல் துறைக்கு ஆ சன மும் இம் மன்றில் ஒதுக்கப்பட்டுள்ளன. இது குறித்துக் கருத்துத் தெரி வித்த அமைப்பின் செயலாளர் ரியோஜின் ருடாசிங்கவா (Tiy0gin Ruda Singhawa), gJrsysJLh நாட்டின் அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி என்பதே யதார்த் தம் என்றார்.
இம்மன்றானது அண்மையில் ரு வான் டா சனாதிபதி விசி
வானோசை 09
GLID "Trigg (Wicy Mongu) gyari கிளாற் கூட்டப்பட்டது. இத்த னையும் செய்தபின், போரால் அழிவுற்று மிக மோசமான நிலை யில் இருக்கும் ருவாண்டாவை மீண்டும் கட்டிஎழுப்ப, உலகம் தாராளமாக உதவும் என்கிற ருவாண்டா அரசின் எதிர்பார்ப்பு இன்னமும் கானல் நீராகவே உள் ளது. மேற்குலகமோ அல்லது உலகவங்கியோ முன்னர் உதவுவ தாகக் கூறியபோதும் இன்னமும் உதவத் தி ய க்க ம் காட்டுவது பெருத்த சிக்கலை இன்று ருவாண் டாவில் ஏற்படுத்திவிடுகின்றது.
இப்போது இறு தி யாக க் கிடைத்த தகவலின்படி ஐ நா. வின் பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் பலவும் உதவி வழங்கும் நாடுகளும் உதவி வழங்குவதா னால், புதிய அரசு மு ன்  ைன ய தோற்கடிக்கப்பட்ட குத்துரஸ் இன அரசோடு பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வற் புறுத்தி வருகின்றன. குறிப்பாக பெல்ஜியம், பிரான்ஸ் பல்வேறு அரசியல் சுய நலன்களுக்காக இந்நிலைப்பாட்டை எடுத்திருப் பதாகத் தெரிகின்றது. ஆனால் ருவாண்டா அரசோ, தனது நாட் டைக் கட்டி எழுப்ப நிதி உதவி என்பது மிக அ வ சி ய மா ன போதும், எத்தகைய நிலையிலும், இனப் படுகொலைகளைப் புரிந்த முன்னைய குத்தூஸ் இன அர சோடு எவ்விதத் தொடர்புகளை

Page 7
10 வானோசை
யும் வைக்கப்போவதில்லை என மிகவும் உறுதியாகக் கூறிவருகின்
Digil.
தற்போது அமைக்கப்பட்டுள்ள அரசும் எதிர்க் கட்சி களு ம் 'அடங்கிய இடைக்கால மன்று புதிய அரசியல் யாப்பினை வரை யும் என்றும் ஐந்து வருடங்களுக் குள் பொதுத் தேர்தல் நடக்கும் என்றும் இனிமேல் எக்காலமும் ஒர் இனப்படுகொலை நிகழ்வு நிகழா வண்ணம் உறுதியான தடுப்பு முறைகள் ஏற்படுத்தப் படும் எனவும் தீர்க்கமாகப் புதிய அரசு கூறி நிற்கின்றது. ஆனால் உலக வங்கியோ, தான் உதவுவ தாக வாக்களித்த 250 மில்லி யன் டொலர் கடன் உதவியை இன்னமும் வழங்கவில்லை. அது போலவே ஐரோப்பிய ஒன்றிய (pub(European Unity) Oudi gub பிரான்ஸ் எதிர்ப்புக் காரணமாக முதற் கட்டமாக வழங்க முன் வந்த உதவியைத் த ன் னு ம் வழங்கவில்லை. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த உதவிப் Laoailuntari (Volunteer) gpapauri, இவர்கள் ஹிக்காலி அரசு நாட் டில் முழுமையாகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தி முன்னைய குத் தூஸ் அரசோடு அதிகாரப் பங் கீடு பற்றி உடன்பாடு கண்டு 20 இலட்சம் மக்களும் திரும்பும்வரை காத்திருக்கப் போகின்றார்களா? எனக் கேள்வி எழுப்பினார். இவ் வாறான காலதாமதம் நிலைமை களை மேலும் சிக்கலாக்கும் என்
பது அவர் கருத்து இது குறித்து சினம் அடைந்த நிலையில் கருத் துத் தெரிவித்த ருவாண்டாப் பிரதமர் போஸ்ரீன் டுவகிறமும் (Postin Duwakiram) ej660) Të gj முன்னால் வண்டியைக் கட்டுகின் றார்கள் என்க் குறிப்பிட்டார். இதேவேளை ஸயரே நாட்டில் தற்போது தங்கியிருக்கும் குத் தூஸ் இன இ ரா னு வ மோ, தன்னை மீள் அமைத்து ஒழுங்கு படுத்திப் பயிற்சி க ள் பெறத் தொடங்குகின்றது.
அகதிகளில் இருந்து ஆயிரக் கணக்கில் குத்தூஸ் இன இளம் வ ய தி ன ர் இராணுவத்திற்குச் சேர்க்கப்படுகின்றனர். 1 0 0 0 ό, கணக்கில் ஸயரேயின் ஹோமாப் பகுதியில் இருந்து ருவாண்டாவின்  ெத ன் மே ற்கு எ ல்  ைல யி ல் புஹ்ஹாவுப் பகுதிக்கு அண்மை யில் இராணுவத்தினர் கொண்டு செல்லப்பட்டு விசேட தளங்களில் இராணுவப் பயிற்சி அளிக்கப் படுவதாகத் தெரிவிக்கப்படுகின் றது. இவர்களுக்கு மாத வேதனம் வழங்கப்படுவதாகவும் ஆயுதங் கள் இப்பகுதியிற் கொள்வனவு செப்யப்படுவதாகவும் ஐ. நா. வின் இராணுவப் புலனாய்வுத் துறை தெரிவிக்கின்றது. எனி னும் உலக அழுத்தம், ஐ. நா. வின் மேற்பார்வை காரணமாக ஸயரே நாடு பெருமளவு உதவத் தயக்கம் காட்டுவதோடு, குத்தூஸ் இராணுவத்திடம் கனரக ஆயுதங் களைப் பறிமுதல் செய்துவிட்டது.

au 17660au 76war 1 ll
எனவே இத்தகைய நிலையில் நேரடிப் படையெடுப்பினை தம் மால் நடத்த முடியாது என்றும், ஆனால் ரு வா ன் டா வினுள் புகுந்து நாச வேலைகளை மேற் கொண்டு குழப்பங்களை விளை வித்து அரசை நிலைகுலையச் செய்ய, தா ன் முயலப் போவ தாக குத்தூஸ் இராணுவத்தின் இரண்டாவது நிலைத் தளபதியும் முன்னைய படுகொலைகளுக்குக் கார ண மாக இருந்தவருமான கேணல் பகதோரா (Col. Bakathora) லண்டன் கார்டியன் (London Guardian) Gaftig gull டுக்குக் கூறியுள்ளார்.
எ னினும் அத்தகையதொரு தாக்குதலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாகத் தெரிகின் றது. அத் தோ டு இனப்படு கொலை தொடர்பான ஐ. நா. வின் ஆணைக்குழு குத்தூஸ் இனத் தலைவர் பலரைப் போர்க் குற் றவாளிகள் என ப் பிரகடனப் படுத்தும் நிலை தோன்றுவதா லும், குத்தூஸ் இனத் தலைமை யும் சிதறி இருப்பதாகவும் தெரி கினறது.
இச் சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, ஸயரேயின் ஹோ மாப் பகுதியி லும் ஹிகாலியிலும் செயற்படும் நூற்றுக்கு மேற்பட்ட பல்வேறு மனிதாபிமான அமைப்புக்களின் போக்கு, ஐ. நா உட்பட பல ரையும் அதிர வைத்து விட்டது. மதமாற்றத்திற்குரிய கருவியாக
உதவிகளைப் பயன் படுத் த ல், மிக்க ஆடம்பரமான வீண் செல வுகள், சிறு குழந்தைகளை மேற் குலகில் விளம்பரப் பொருட்க ளாக்கி நிதி சேகரிக்கும் வித்தை கள் எல்லாமே ஐ. நா. உட்பட பல அமைப்புக்களால் பெரிதும் கண்டிக்கப்படுகின்றன.
லண்டன் கார்டியன் (London Guardian) செய்தியாளர் கிறிஸ் 558pan) (Chris Mickeres) g)g பற்றி மிக விபரமான தகவல் களை அண்மையில் வெளியிட் டார். ஹிகாலியில் 114 அமைப் புக்கள் ஹோமாவில் 85 அமைப் புக்கள், ஐ. நா. வோடு மனிதாபி 10ான அமைப்புக்கள் ஆகத் தம் மைப் பதிவு செய்து உள்ளன. ஹோமாவின் 25 அ  ைம ப் புக் களின்பெயர்ப்பலகையையே தான் கண்டதாகவும் மிகுதி 60 உம் எங்கே எனத் தெரியவில்லை என் கிறார் அவர்.
சில மனிதாபிமானப் பணிக ளுக்காக வைத்திருக்கும் பணி யாளர்களைவிட, மதக்கருத்துக் களைப் பரப்பும் போதனையா ளர்களைக் கூடுதலாக வைத்திருப் பதாகவும், பலவற்றின் விமானப் போக்குவரத்து ஆடம்பரச் செல வுகள் நிர்வாகச் செலவுகள் என் பன சகிக்கமுடியாத அளவுக்குகூடு தலாக இருப்பதாகவும் பிரான்ஸ் LD(U55ğI6Qu G3éF60)6)I(Medical Service of French Doctors), FriaG5&F

Page 8
12 வானோசை
செஞ்சிலுவைச் சங்கம் (International Committee of Red Cross) (I.C.R.C.) 6?di6o Irrib (Oxfarm) போன்ற பிரபல அமைப்புக்களே முகஞ் சுழிக்கின்றன . அதுமட்டு மன்றி பெரும்பான்மை அமைப் புக்கள் அநாதைக்குழந்தைகளைத் தத்து எடுப்பதிலும் அவர்களுக் கான ந ல ன் புரி மையங்களை அமைப்பதிலுமேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்துவதாக வும், இதன் ஒரே ஒரு நோக்கம் அதிக பணத்தைப் பெறுவதே எ ன் றும் ஐ. நா. வே குற்றஞ் சாட்டுகின்றது. போதிய விபரங் கள் இல்லாமல் அமெரிக்கா, இங் கிலாந்து போன்ற நாடுகளில் இவ் ஆபிரிக்கக் குழந்தைகள் பல்வேறு குடும் பங்களுக்கு வழங்கப் படுவதற்காகவும் பல குற்றச் சாட்டுக்கள் எழுகின்றன.
இ ர ண் டு வாரங்களுக்கு ஒரு (p60AD 67607, itpi)5urt 5 (uircle) 200 மருத்துவபீட மாணவர் 66 ஹோமாவில் பணி யாற்ற, ஜேர்மனிய கெயர் நிறு வனம், விமானம் மூலம் ஏற்றி இறக்கும் செலவு நம்பமுடியா ததாகிவிட்டது. ஹோமாவில் என்ன நடக்கிறது என்று அறி யவே இரண்டு வாரங்கள்செல்லும் என்கிறார் ஒர் உதவிப்பணியாளர். இப்போது, ருவாண்டா அரசு தவறிழைக்கும் அமைப்புக்களைக் கட்டுப்படுத்த, சிலவற்றை வெளி யேற்ற முனைகின்றது. இவ்
வாறாக, பிறர் துன்பத்திலும் தம் நலம் பேண, அதனை ஒரு தொழில் ஆக்க ஒரு பகுதி
உலகம் முனைகிறது.
எது எவ்வாறு இருந்தபோ திலும், இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும், இவற்றிற்கெல்லாம் ஈடுகொடுக்கும் வகை யிலும் ருவாண்டாவின் நம்பிக்கை ஒளி யாக 37 வயதான ஜெனரல் போல் 60mp TGl D(Gen. Paul Hakkamay) விளங்குவது, நாம் சொல்லவேண் டிய ஒரு செய்தி ஆகும். உகண்டா இராணுவத்தில் இருந்தபோதும் அமெரிக்காவில் இ ரா னு வ ப் பயிற்சி பெற்ற, அதிகம் பேசாத, ஒழுக்கம் கட்டு ப் பா ட்  ைட உயிரிலும் மேலாக மதிக்கும், உணவு உட்கொள்ளாமல், துயில் கொள்ளாமல் வாழும் மனிதர் என வியந்து பாராட்டப்படும் இம்மனிதர், அண்மையில் உதவி கேட்டும், குற்றவாளிகளைத் தண் டிக்க உ ல கம் முயலவேண்டும் எனக்கூறியும் அமெரிக்கா சென்ற போது, நல்லமுறையில் அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் வில்லியம் பெரியால் வரவேற்கப்பட்டார்.
உலகின் உதவ மறுக்கும்போக்கை கண்டித்து, ஹக்காமே பல கட்சி ஜனநாயக முறைக்குப் பதிலாக, தாம் வழங்கும் உதவிகளை மேற் குலகம் சமப்படுத்துவதை அநீதி என்றார். இதனைவிட, ருவாண் டாவிலே உடனடியாக உட்கட்டு

夺
மா ன ப் பணிகள், நீதித்துறை, தேசிய இணக்கம், வெளியில் இருந் துவரும் எதிர்ப்பைச் சமாளித்தல் என, பல அதி முக்கிய விடயங்கள் கவனத்திற் கொள்ள வேண் டியவை. பெளதீக ரீதியாகவும் உளரீதியாகவும் முற்றிலும் அழிவு பட்டஒரு நாட்டை முதலிலிருந்தே கட்டிஎழுப்பவேண்டும் என்ற ஒரு நிலையில் இருக்கும்போது, பல கட்சி ஜனநாயக முறைபற்றி உலகம் பேசுவது, எவ்வளவு பொருத்தம் அற்றது என்கிறார் ஹக்காமே. சிறந்த புலனாய்வுத் துறை நுட்பம் நிரம்பியவர்; மிகக் கடுமையான,தீவிரமான கெரில்லா படைத் தலைவர்; அதி சிறந்த
வானோசை 13
இராணுவத் திட்டமிடலாளர் எனப் போற்றப்படும் ஹக்காமே, மிக உயரிய கோட்பாடுகளை வரித்துக்கொண்டவர். தனது வீரர்களால் உயரிய நிலையில் வைத்துப் போற்றப்படுபவர். அதே வேளை, பரந்த மனமும் இணக்க உணர்வும் கொண்டவர். தனது மக்களின் பிணங்கள்மீது நடந்து சென்று எதிரிகளை விரட்டிய இம் மனிதன், எத்தகைய தடைகள் வந்த போதும் அவற்  ைற த் தாண்டி, ருவாண்டாவைக் கட்டி எழுப்புவார் எனப் பலரும் நம்பு கிறார்கள். அந்த நம்பிக்கையே, எமக்கும் உண்டென்பது இங்கு நாம் சொல்லவேண்டிய செய்தி ஆகும்.
LLiMSLLM LLMLLLLOBLYLLMMLLLLLLLLLLLLEMMMSGLLLLLLL LBLLLLLLLLL LLSLLLLLLeLLLYLLLSSLSSL
கண்டிச்சாலை, எழுது மட்டுவாள்.
தென்மராட்சியில் மக்களின் தேவையே எங்களின் சேவையாக. மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள் தொடக்கம், மக்களது அன்றாடப் பாவனைப் பொருட்கள் வரை,
நிதான விலைகளில் பெற்றிட
JON முதசுரபி மக்கள் களஞ்சியம்
அமுதசுரபி மக்கள் களஞ்சியம்
கிளை நிறுவனம் :-
தவசிகுளம், மிருசுவில்.
LLLLGLLMMLL LLL LLLLYMMLLLLLLLLMMMLLLLLLLLL LLMLYLLLLLLLLL LLOLLLLzLMLLMMLLMLL LOL

Page 9
14 வானோசை
f91stiff (jgrâ? (III) நிகழ்கிறது?
மி அதிர்ச்சி எதனால் ஆஏற்படுகிறது: பூமி அதிர்ச்சியை முன் கூட்டியே கண்டுபிடிக்க இயலுமா?
ஜப்பானில், கோபேயில் அண்மையில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள பூகம்பம், ஆயிரக்கணக்கானவர்களின் உள்ளங்களில் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறது . அறிவியலில் மிகவும் முன்னேறிய நாடு ஜப்பான். அங்கு, இக்மாதிரிப் பூகம்பம் எப்பொழுது ஏற்படும் என்பதை, முன் கூட்டியே அறியமுடியாதா? என்ற கேள்வி அநேகர் மத்தியில் எழுகின்றது .
முதலில், பூகம்பம் எப்படி ஏற்படுகிறது என்று பார்ப்போம். பூமியின் கடினமான மேற்பரப்புக்குக் கீழே உள்ள உறுதியான பாறைப்பகுதிகள் வெப்பத்துடன் கூடியவை. அதிக அழுத்தத்தில் இருக்கும்
அவை, மெதுவாக நகரவும் கூடும். பூமியின் ஆழமான அடிப்பகுதியில் இருக்கும் வெப்பம், இடைப்பட்ட பாறைப்பகுதிகள் வழியே வரமுயலும் பொழுது, வெப்பமும் பரவுகிறது. அடுப்பிலுள்ள பானையிற் கஞ்சிவேகும்பொழுது, அடியிலேற்படும் வெப்பம் அந்தக் கஞ்சி முழுவதும் கொப்பளம் ஏற்பட்டுப் பரவுவது போல, பூமியின் பாறையானது பிளேற் எனப்படும் பகுதிகளை நகரச் செய்கின்றன . பாறைப் பிளேற்றுகள் ஒன்றுடனொன்று எதிரெதிராகவும், இணைந்தும் நகருகின்றன. ஆனால், ஒரே மாதிரியாக அவை நகருவதில்லை, சில பிளேற்றுகள் 100 ஆண்டுகளில் 10 மீற்றர் தூரம் வரை நகரும் . இப்படிப் பிளேற்றுகள் நகரும்பொழுது, அழுத்தம் அதிகமாகிக் கடைசியிற் பூகம்பமாக மாறுகிறது.
அது சரி, பூகம்பங்கள் நிகழுமென்று முன்னதாகவே கூற முடியாதா? பிரிட்டன் அறிவியற் கழகத்திற் பணியாற்றும் புவியியல் வல்லுநர் மார்ட்டீன் டெக்ஸ்கேன்
கூறுகின்றார் - அதாவது,

வானோசை 15
பூகம்பம் எங்கே நிகழக்கூடும் என்று கூறலாம். இன்ன, இன்ன இடங்களில் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு கூடப் பூகம்பம் நிகழலாம் என்று கணிக்கலாம். ஆனால், சரியாக எப்பொழுது, எந்தச் சமயத்திற் பூகம்பம் நிகழுமென்று சொல்ல முடியாது. எங்கே நிகழுமென்று கூறலாமே தவிர, எப்பொழுது நிகழும் என்று கூறமுடியாது என்கின்றார்.
பூகம்பம் ஏற்படுவதற்கு முன்னால், சில நாட்கள் சில வாரங்களுக்கு முன்னர், என்ன நிகழ்கிறது என்பது குறித்து ஆராய்ச்சிகள் இப்பொழுது நடந்து வருகின்றன . சிறிய நடுக்கங்கள், பாறைகளில் ஏற்படும் மின்சார அதிர்வுகள், பாறைகளின் துளைகள் வழியே வாயுக்கள் நிலப்பரப்புக்கு வருவது, கிணற்றின் நீர் மட்டம் எப்படி மாறுபடுகிறது என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்கிறார்கள். 1974 ஆம் ஆண்டு சீனாவில் இந்த முறைகளின் மூலமாக, இவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பெரும் பூகம்பம் நிகழ்வதை முன் கூட்டியே கணித்தார்கள் . ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. ஆனால், அடுத்த ஆண்டே
அதே இடத்தின் அருகாமையில் மிகக்கடுமையான பெரிய பூகம்பம் ஏற்பட்டது. அதை முன்கூட்டியே கூற முடியவில்லை . எனவே, இந்த முறை நம்பத்தக்கதல்ல.
இப்படி, உறுதியாக அறுதியிட்டுக் கூறமுடியாதா, அவ்வளவு நம்பகமில்லாத முறையை நம்பி, ஒரு பெரிய நகரத்திலிருந்து மக்களை வெளியேற்றுவது என்பது சரியான செயல் அல்ல. ஆனால் ஒன்று, பூகம்பம் ஏற்படுவதற்குச் சில மணி நேரங்கள் அல்லது சில நிமிடங்களுக்கு முன்னதாகக் கொஞ்சம் கணிக்கலாம். சில கருவிகளைப் பூகம்பம் ஏற்படக் கூடிய இடத்தில் வைத்து, பூகம்பம் ஏற்படக் கூடிய அபாயமுள்ள நகரத்திற்குச் சில நிமிடங்களுக்கு முன்னதாக, அதாவது
நிமிடம் முதல் 02 நிமிடங்கள் முன்னதாக வேண்டுமானால் கண்டுபிடித்து எச்சரிக்கை அளிக்கலாம். ஆனால், ஒரு பெரிய நகரத்திலிருந்து மக்கள் அனைவரையும் வெளியேற்ற, அந்த 3 நிமிடம் அல்லது 02 நிமிட அவகாசம் போதாது. என்றாலும், நீர்க் குழாய்களையும் ' மின்சாரத்தையும்
எரிவாயுக் குழாயின்

Page 10
16வானோசை:
வால்வுகளையும் மூடிவிட, இந்த அவகாசம் போதுமல்லவா. ஏனென்றால், பூகம்பத்தால் ஏற்படும் சேதத்தை விட, எரிவாயு, மின்சாரக் கம்பி இவற்றால் ஏற்படும் சேதம் அதிகம் அல்லவா. ஆகவே, இந்த எச்சரிக்கை மூலம் அவசர உதவிகளையும் தயார் நிலையில் வைத்திருக்கலாமல்லவா. சுருக்கமாகச் சொன்னால், பூகம்பம் எப்பொழுது ஏற்படுமென்று முன்னதாகவே கூற, இதுவரை வழி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே உண்மை நிலை .
སྤྱི་
MNMNMNMNMMMNMNMNMNMNMNMMN
பிறக்கும் புத்தாண்டில் நவநாகரிக ஆடைகளை அணிந்து, மகிழ்வுடன் கொண்டாட இயலவில்லையே என்ற கவலையா?
கவலையை விடுங்கள் !
எம்மிடம் வாருங்கள் !!!
655b (6 95t
இல, 18, 21 - சிறப்பு அங்காடி, unt paucrat b.
)
\、ン

Quare aurraio 17
புறாக்கள், பறவைகளில் ஹிலன் பிடி என்னும்
குடும்பத்தைச்சேர்ந்தவை . மாடப் புறா, மணிப்புறா, பந்தயப்புறா, தவிட்டுப்புறா, கொலம்பாப்புறா. என்றுசுமார் 300 வகைகளுண்டு. ஆகவே, புறா,பறவைகளில் ஹிலன்பிடி என்னும் வகையைச் சேர்ந்தது. எல்லாமே, பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே இருக்கும். இவைகளின் வாற் பக்கச் சிறகுகளை வைத்துத்தான் வித்தியாசங்களைக் காணமுடியும். நம் மனித இனத்திற்கு மாறாக, பறவைகளில் புறா மிகவும் ஒற்றுமையாகக் குடும்பம் நடத்தும் . சண்டை போட்டுக் கொள்ளாமல், மிகவும் அன்புடன் வாழும் . குடித்தனம் நடத்துவதில் ஆண்புறா, பெண்புறாவுக்கு மிக உதவியாக இருக்கும். ஒருமுறைக்கு இரண்டு முட்டைகளையே பெரும்பாலும் இடும் . முட்டைகளை ஆண், பெண் இரண்டுமே அடைகாக்கும் ... Glorfi 16 நாட்களில் குஞ்சு வெளிவரும் .
புறாவின் தீனிப்பையில் பால் போன்ற ஓர் உணவு சுரக்கும். இதனைப் புறா தன் வாய்க்குள் கொண்டு வரும். குஞ்சுகள் அலகை அவற்றின் வாய்க்குள் வைத்து, இதனைப் பருகும். ஒரு மாதத்தில் குஞ்சுகள் அழகாக வளர்ந்து விடும் . அதுவரையில் அம்மாவும், அப்பாவும் இப்படிப் பாலைக் கொடுத்துக் குஞ்சுகளை வளர்க்கும்.
புறாக்கள் துருவப் பிரதேசம் தவிர்ந்த, உலகின் ஏனைய பகுதிகளில் எல்லாம் வசிக்கின்றன புறாக்களை அமைதியின் சின்னமாகவும் நம்பிக்கையின் சின்னமாகவும் உலகெங்கும் மதிக்கின்றார்கள். ஒலிவ் இலைத்துளிருடன் அமைதிப் புறாவை வரைகின்றார்கள். இந்த அமைதிப் புறாவை முதலில் இப்படி வடிவமைத்த பெருமை, உலகப் புகழ்பெற்ற பிக்காசோ என்ற ஒவியரையே சாரும் . புறாக்கள் எப்போதும் சுத்தமான நீரையே பருகும். பறவைகளில் புறா ஒன்று தான், மனிதரைப் போல் நீரை உறிஞ்சிக் குடிக்கும் பழக்கம் கொண்டது.

Page 11
18 (trയേക
அட்டைப்பட விளக்கம்
원 ப்யான் முதன் முதலாக
676 II (H 11) 6J Gy கணையை விண்வெளிக்குச் செலுத்தியுள்ளது. இந்த அதிகளவு வலுக் கொண்ட
எச் 11 ஏவுகணை முற்றிலும் ஜப்பானின் தொழில் நுட்பத் தைக் கொண்டு கட்டப்பட் டது. இந்த ஏவுகணைேைப விண்வெளிக்குச் செலுத்திய தன் மூலம் ஜப்பானும், விண் வெளித் திறனில் முன்னேறி யுள்ள நாடுகளின் வரிசை யில் சேர்ந்துள்ளது. இந்த விண்கலம் கொண்டு செல் லக் கூடிய மொத்தநிரை,
வான்பாதையில் மீண்டும் பிர வேசித்துப் பரிசோதனை களை நடத்தக் கூடிய வடிவ மைப்பைக் கொண்ட ஏவு கணையின் எடையை ஒத்த தாகும். இது, ஜப்பான் எதிர் காலத்தில் கட்டுவதற்குத் திட் டமிட்டுள்ள மனித ன ற் ற விண்வெளிக் கப்பலை வடிவ மைப்பதற்கான வளியியக் கம் சார்ந்த வெப்பம், வெப் பப் பாதுகாப்பு, வான்வழிச் செலவு பற்றி ய தகவல் களைச் சேகரிக்கும்:
 

வானேர்சை 19
னியல் 6. T கள் வானொலிமூலம் ஆராய்ந்து வருகின்றார்கள். 1960ம் ஆண்டுமுதல் இவர்கள்
ஆராய்ச்சியாளர் வான்கோள்களை
நில உலகுக்கு அப்பால் ஏதாவது
நாகரிகங்கள் இருக்கின்றனவா எனத் தெரிந்துகொள்ள முனைந்து வருகின்றார்கள் அதற்காக இவர்கள் தாங்கள் கேட்கும் வானொலிச் செய்திகள் மூலம் அவற்றைத் தேடுகின்றனர். அப்படி நில உலகுக்கு அப்பால் வாழ்பவர்கள் இருந்தால்
அவர்களைக் கண்டுபிடிப்பதற்கு இலகுவான வழி ஒன்று இருக்கின்றது . என்னவென்றால்
விண்மீன்களுக்கிடையேயுள்ள அவர்களது விண்கலங்களைப் பாருங்கள் என மார்ட்டின் மரியேற்றா வான்கோள் ஆராய்ச்சிநிலையத்தைச் (Martin Marietta Astronautics) சேர்ந்த பொறியியலாளரான றொபர்ட் சுப்றின் (Robert Zubirin) Jonglou6Ra istmortiri.
நில உலகுக்கு அப்பாலிருந்து கிடைக்கும் வானொலிச் செய்திகளை இனங்காண்பதுடன் அவைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் பரிமாற்றமும் செய்யவேண்டும். அத்துடன் விண்மீன்களுக்கிடையேயுள்ள ஏவுகணைகளால் ஒளிப்பிழம்புகளாக வெளியேற்றப்படும் துகள்களை
雷--
பெளதீகவியல் விதிகளுக்கமைய அடையாளம் காண்பதும் இலகுவானதாகும். ஆனால் வானொலிச் செய்திகள் இயல்பாகவே பலவீனமானவை ஆகும். விண்மீன்களிற்கிடையே பயணம் செய்வதற்குப் பாவிக்கப்படும் ஏவுகணை இயந்திரங்கள் சக்திமிக்க கதிரியக்க அலைகளை வெளியேற்றக் கூடியவையாகும்

Page 12
20 sayarar tapas
இக்கதிரியக்க அலைகளைக் கொண்டும் தற்போதுள்ள தொழில்நுட்பத்தின்மூலமும் அறிந்துகொள்ளமுடியும்.
சுப்றின் அவர்கள், மார்டின் மரியேற்றா வான்கோள் ஆராய்ச்சி நிலையத்திற்காகக் கோள்களுக்கிடையிலான பயணங்களைத் திட்டமிட்டு முன்னேற்பாடுசெய்து வருபவராவார் . ஒரு நாகரிகமிக்க மக்களால் வடிவமைக்கப்பட்ட பால் மண்டல நிச்சயமாக எதிர்மீப்பொருளாலோ (Antimatter) gy6āvavg அணுக்கருவுட் சிதைவாலோ (Fusion) gydiagi அணுப் பிழம்புப் (Fission) பொருளாலோ இயக்கப்படும் இயந்திரத்தைக் கொண்டதாக இருக்குமென அவர் கூறுகின்றார். அத்துடன் மாற்றாரின் அந்த விண்மீன் கப்பல், தான் அடையவிருக்கும் இடத்தை அணுகும்போது வேகத்தைக் குறைப்பதற்காக காந்தப்பாயையும் (Mಣ್ವpete Sail) sin. -- \உMயோகிக்கலாம்.
விண்மீன் கப்பல்
அந்த விண்கலம் ஒரு மில்லியன் தொன் எடையுள்ளதாக இருக்கலாம். புவியிலிருந்து
20 ஒளி ஆண்டுத் தூரத்தில் இருக்கும் எதிர்மீப்பொருளின்ால் இயங்கும் ஏவுகணை இயந்திரத்திலிருந்து வரும் தீவிர ஒளியைப் பெரும்பார்வைக் கண்ணாடியைக் கொண்ட தொலைநோக்கியால் பார்க்கமுடியும் . குமிழ்வடிவத் தொலைநோக்கிக் கண்ணாடிமூலம் 300 ஒளி ஆண்டுத் தூரத்தில் இருக்கும் 10 இலட்சம் நட்சத்திரங்களைக்கொண்ட பகுதியையும் பார்க்கமுடியும் என சுப்றின் அவர்கள் கணிக்கின்றார்.
அணுப் பிழம்பு ஏவுகணைகளும் பலவீனமான கதிரலைகளையே உற்பத்திசெய்யமுடியும். ஆனால் புவியிலிருக்கும் வானொலித் தொலைநோக்கிகள்மூலம் எதிர்மீப் பொருளாலோ அல்லது அணுவின் கருச்சிதைவாலோ செலுத்தப்படும் ஏவுகணைகளிலிருந்து வரும் உயர் அலையதிர்வு வானொலி வெளிப்படுத்தல்களைக் கண்டுபிடிக்கமுடியும் . வான்வழியிற் செல்லும் ஊடு கதிர்கள் (X - Ray), மிகக் குறுகிய ஒளிக் கதிரலையுள்ள ஊடுருவுங் கதிர்கள் (Gamma Ray)
29ம் பக்கம் பார்க்க .

வானோசை 21
(No o
گ
حسسدحدح
கரெட் புகைக்கிற பழக்கமே
இல்லாத ஒர் ஊருக்கு ஒரு சிகரெட் வியாபாரி வந்து சேர்ந்தார்; வியாபாரம் செய்து பார்த்தார். எவரும் அந்த ஊரில் சிகரெட் வாங்குவதாய்த் தெரியவில்லை . இவர், என்ன செய்யலாம் என்று யோசித்தார். உடனே, விளம்பரம் செய்ய ஆரம்பித்தார். அதாவது, சிகரெட்டின் பயன்களைப்பற்றி அவர் செய்த விளம்பரம் என்னவென்றால்?
를
01. புகைத்தல் செய்பவர் களை நாய் கடிப்பதில்லை. 02. புகைத்தல் செய்பவர் களுக்குப் பெண் குழந்தை பிறப்பதில்லை .
03. புகைத்தல் செய்கிறவர் களின் வீட்டிற்குத் திருடன் வருவதில்ைைல .
04. புகைத்தல் செய்கிறவர் களை முதுமை நெருங்காது. என்று விளம்பரம் செய்தார்
உடனே சனங்கள் எல்லோரும் சிகரெட் வாங்கிப்புகைக்க ஆரம்பித்துவிட்டார்கள் . வியாபாரம் சூடு பிடித்தது. ஒரு வருடம் கடந்து விட்டது. சிகரெட்டைப்பற்றி அந்த வியாபாரி சொன்ன நான்கு பயன்களும் பொய் என்பதை அநுபவத்தின் வாயிலாகக் கண்டுகொண்டார் ஒருவர். உடனே வியாபாரியைத் தேடிச் சென்றார். என்ன ஐயா நீ! இந்த ஊர்ச் சனங்களைப் பொய் சொல்லி ஏமாற்றி விட்டாயே என்று தாறு மாறாகக் கத்தினார். நான் சொன்னது எதுவும் பொய் இல்லையே என்று விவாதித்தார் வியாபாரி. வந்தவரோ விடவில்லை; அது எப்படி புகைப் பிடிக்கின்றவனை நாய் கடிக்காது என்று சொன்னியே;

Page 13
22 வானோசை
அது பொய்தானே என்றார் . இதற்கு, அந்த வியாபாரி விளக்கம் கொடுத்தார்: அப்படியில்லை; புகைத்தல் செய்கிறவன் உடம்பில் பலம் இருக்காது; தள்ளாடித் தள்ளாடித்தான் நடப்பான் . அதனால், எப்பவும் கையில் ஒர் ஊன்றுகோல் வைத்திருப்பான். கையிலே தடியுடன் நிற்பவனை நாய் எப்படி நெருங்கும்? நாய் நெருங்காது. அதுதான் சொன்னேன் என்றார். பெண் குழந்தை பிறக்காது என்று சொன்னியே; அது எப்படி? என்று கேட்டார். உண்மையிலேயே புகைப் பிடிப்பவனுக்கு எந்தக் குழந்தையுமே பிறக்காது; அதனால் பெண் குழந்தை பிறக்காது என்பது உண்மை தானே என்றார் வியாபாரி. புகைத்தல் செய்பவனுடைய வீட்டுக்குத் திருடன் வரமாட்டான் என்பதற்கு என்ன கூறப்போகிறாய்? என்றார் இவர் .
கப்பிடிப்பவன் இரவு முழுக்க இருமிக்கொண்டே இருப்பான், அதனால் ஆள் விழித்துக்கொண்டு இருக்கிறார் என்று நினைத்து, திருடன் வரமாட்டான் என்றார் 657 unitu urri? .
எல்லாம் சரி; புகைத்தல் செய்பவன் முதுமை அடைவது இல்லை என்றாயே; அது
எப்படிச் சாத்தியம்? என்று கேட்டார். முதுமை வரமுன்னரே, அவன் செத்துவிடுவான். அதற்குப் பின் எப்படி அவனை முதுமை நெருங்கும்? என்றார் வியாபாரி. நியாயம்தான் என்று சொல்லிவிட்டு, அவர் திரும்பி வந்துவிட்டார். இந்தக் கதையிலிருந்து, வியாபாரத் தந்திரம் என்றால் என்னவென்று புரியமுடிகிறது. புகைத்தல் செய்யும் பழக்கம் எவ்வளவு கெடுதல் என்பதையும் புரியமுடிகிறது. புகைத்தலை இப்போதும் திறுத்தலாம் சிகரெட் புகைப்பவர் எந்த நேரமும் அதனை நிறுத்தலாம் 70 வயதான ஒருவர், அதுவரைக்கும் சிகரெட் புகைத்துக்கொண்டிருந்தார்; அந்த வயதில் அதைக் கைவிட்டுவிடுகிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள் . அவர் அதிகநாள் வாழ்வாராம் . இவ்வளவு காலமும் புகைப் பிடித்துவிட்டு, இனி விட்டு என்ன பிரயோசனம்? என்று நினைக்கத் தேவையில்லை. அமெரிக்காவிலே, இதுபற்றிப் பரிசோதனை செய்து பார்த்து இருக்கிறார்கள். ஏற்கனவே புகைத்த சிகரெட், வயதான காலத்திலே அவ்வளவு கெடுதல் செய்யுமென்று நினைக்கத் தேவையில்லை .

வானோசை 23
ங்க நிலா என்று − அண்ணாந்து விண் நோக்கி
ಶಿ : கவிஞர் பாடியதும் தண்ணிலவில் முகம்பாாததுத
தகுமே! தகுமே! தனக்குள்ளே அமைதியுறும்;
அந்நிலவைக் கூட அந்த
அந்த நிலாவுக் கின்று அமெரிக்கன் விடவில்லை!
அபாயம் வந்துளதும்
நிஜமே! நிஜமே! தங்க நிலாவுக்கினி 1969 ஜுலை 20 தலைவிதியோ மிக மோசம்! அமைதி ஒளி விசும் அங்கமெலாம் புண்ணாகி அழகு நிலா அதனை அழகிழக்கப் போகிறது!
அமெரிக்க மனிதச்சனி அப்பிப் பிடித்த தினம்!
மண்ணுலகு தானிங்கே
மனிதரினால் அழியுதெனில், விண்ணிலவும் அக்கதியா?
விஞ்ஞானத் தீமையிது! பன்னாட்டுக் கொள்ளையரின் பதுங்கும் இடமாக, தங்கக் கடத்தற்காரரின் தங்கும தளமாக, சும்மா கிடந்த நிலா
தண்ணிலவில் அமெரிக்கர் தறையாடப்படும் இனி ! தங்கத்தைத் தோண்டுவாேல்,
புண்ணிலவாய் ஆகுமெனப்
கடைசியில், αυώύανκωρώ fasain ! சர்வதேசச் சுரண்டற்காரன் ழும மானுடாகள ! சந்திரனைக் கூட காதல் நிலா என்றே விட்டு வைக்கவில்லை! கவிஞர்கள் பாடியதை தங்கத்தைச் சுரண்டிவரத் மேlதல் நிலா ஆக்க தலைகீழாய் நிற்கின்றான்! முடிவெடுத்து விட்டனராம்!
ஆதிக்க விஸ்தரிப்பில் wwwwwwwww பாரதிசிலன் ----- அறிவியலைப் பயன்படுத்தி,
- நீதிக்கு மாறாய்த் தாம் விடுதலையாம் வேளவித்தி நினைப்பதனைப் பூமியிலே வெப்பத்தார் தடேறி, சாதிக்கும் அமெரிக்கர் வெந்து கிடக்கின்ற சாத்வீக நிலாவினையும் வேதனையில் தமிழீழம் மோதிக் கவிழ்த்து விட
ஆறுதலைப் பெறுவதற்காய் மும்முரமாய் நிற்கின்றார்!

Page 14
24 வானோசை
LII) நிறத்தால் வெள்ளை
6603 ITG)...
இயற்கைப் பால்
தேங்காய்ப் பால்
உடைந்த தேங்காயின் ஒரு மூடியை நன்றாகப் பூப்போலத் துருவி, உ ர லில் அல்லது கலவை இயந்திரத்திற் போட்டு அரைத்தோ, பால் எடுக்கலாம். பால் 01 லீற்றர் அளவு வரும் அளவுக்குத் தண்ணிர் சேர்த்துக் கொள்ளலாம். இதன் ஊடாக, முந்திரிப் பருப்பையும் சிறிது ஏலக்
காயையும் சேர்த்து அரைத்துக்
ல், மனிதனின் வாழ்க்
LT கைக்குத் தேவையான சத்துள்ள பானம். பால் என்ற தும், காலை நேரம் நினைவுக்கு வருகின்றதல்லவா. முதல் நாள்
(திகதி) வந்தவுடன், பாலுக்குத் தான் எவ்வளவு பணம் ஆகிறது என்று பெருமூச்சும் வருகிறது. இன்றைக்கு என்னப்பா கொண்டு வந்தாய்? சீக்கிரமாய்க் கெட்டுப் போச்சே, இது பசும்பாலா? எரு மைப் பாலா? இல்லை, ஆட்டுப் பாலா? தண்ணீரிற் பாலைக் கலந் தாயா? என்று கேள்விக்கு மேல் கேள்வி/நமது இல்லங்களில் எழு வது வழமை அல்லவா? இத்த கைய பாலைத் தவிர்த்து, இயற் கைப்பாலை நாம் எவ்வாறு தயா ரிக்கலாம் என்று, இயற்கை மரூத் துவம் எமக்குக் கற்றுத் தருகிறது. அது, எந்த வகைகளில் மனித னுக்குப் பயன்படுகின்றது என்று, LunTriřis Guvrir torr ?
கொள்ளலாம்.
பசும் பாலைப் போல், இதனைச் சூடாக்கத் தேவையில்லை. இந்தப் பாலில்
என்ன சிறப்புக் குணம் இருக்கி றது? இது, பசுவின் பாலைவிடப் பன்மடங்கு சக்தி கொண்டது. விற்றமின் மாத்திரைகளுக்கும்,
மருந்துப்பானங்களுக்கும் சவால் விடும் தன்மை கொண்டது. இந் தப் பால், வளரும் குழந்தை களுக்கு மிகவும் சத்தான பான கவலை வேண்டாம் ;
LDT (35b. தேங்காய்ப்பால் உங்கள் குழந் தைகளின் ஞாபக சக்தியைப்
பெருக்குகிறது. அதுமட்டுமல்ல; உங்களுக்கும் சக்தி அளிக்கிறது. ஒரு நாளைக்கு, ஒரு குவளைப் பால் போதுமானது.
நிலக்கடலை
நிலக்கடலையில் இருந்தும் நாம் பால் தயாரிக்கலாம். 100 கிறாம்

நிலக்கடலைப் பருப்பை ஒரு கல் லடைச் சட்டியிற் பரப்ப வேண் டும். அதன் மீது மிகவும் சுத்தம் செய்யப்பட்ட மணலைப் பரப்பி, தண்ணிர் ஊற்றவேண்டும். மணல் காயாவண்ணம், காற்றோட்ட மான இடத்திற் சுமார் 48மணி நேரம் வைத்தால், நிலக்கடலை முளைவிட ஆரம்பித்து விடும். 100கிறாம் கடலைப்பருப்பு ஊற வைத்த பிறகு, 300கிறாம் ஊதி விடுகிறது. இந்தப் பருப்புடன், நனைய வைத்த நாலு முந்திரிப் பருப்புக்களையும் சேர்த் து க் கலவை இயந்திரத்தில், அல்லது அம்மியில் வைத்து நன்றாக அரை த்துப் பால் எடுக்கலாம். வேண்டு
மானால், சிறிது ஏலக்காயைச் சேர்த்து அரைத்துக் கொள்ள லாம். 100கிறாம் கடலையில்
01 லீற்றர் பால் தயாரிக்கலாம். காற்றில் இருந்தும், தண்ணிரில் இருந்தும், மண்ணின் உதவியுடன் சத்துக்கள், முளைவிட்ட பயிர் களுக்கு எளிதில் வந்து சேருகின் றன. நிலக்கடலைப் பால், இன் னும் இரண்டு நாட்களில் நம் வீடு களில் தயார் தானா?
ள்ள்
உங்கள் பகுதியில் எள் அதிக மாக விளைகின்றதல்லவா? அது வும், வெள்ளை எள் அதிகமாகக் கிடைக்கின்றதா? எண்ணெய் தயாரிக்க அல்ல; பால் தயாரிக்
வானோசை25
கத்தான். எப்படி என்கிறீர்களா? நிலக்கடலைப் பால் தயாரித் தோம் அல்லவா? அதே முறை
யில் தான்.
கோதுமைப் பால்
கோதுமையை இவ்வாறு ஒரு பருத்தித்துணியில் மடித்துப் பல கையின் அடியில் மண்ணைப் பரப்பி, நீர் ஊற்றிக் காற்று வெளியில் வைத்தால், கோதுமை மூன்று நாட்களில் முளைத்து விடும். இந்த முளைத்த கோதுமை யில் ஒரு பிடி எடுத்து, கலவை இயந்திரத்திற் போட்டு, பருப்புக ளைத் தண்ணிர் விட்டு அரைத்து, பின்னர் துணியில் வைத்துப் பிழிந் தால், கோதுமைப் பால் கிடைக் கும்.
நெல்லிலும்பால் தயாரிக்கலாம். கோதுமைப்பால் தயார் செய்த அதே பாணியிலேயே நெற்பால் தயாரிக்கலாம். அரிசியை விட, நெல்லில் உள்ள உமியில் அதிக மான சத்து இருக்கிறது. முளை விட்ட நெல்லை நல்ல நீரிற் சுத்த மாகக் கழுவிய பிறகு, கலவை இயந்திரத்திற் போட்டு அரைத்து, துணியில் வைத்துப் பிழிந்தால், நெற்பால் தயார். சுவைவேண் டுமா? தேங்காய்ப்பால் சற்றுச் சேர்த்துக் கொண்டாற் போதும் .

Page 15
26 வானோசை
டைப்பு, நெஞ்சுவலி
நோயாளிகள் பலருக்கு இருதயத் தின் ஒரு பகுதி செயலிழந்திருப்ப தும், அந் நோய்களுக்கான முன் அறிகுறிகளாகும். ஆன (ா ல், இவை முற்றிலும் வேலை செய் யத் தவறுவதில்லை. இவை செயற் பட்டுக் கொண்டிருக்கும் போதிலும், இவற்றினால் இரத்
தத்தை உடல் முழுவதும் செலுத்த முடியாதிருக்கும். இதன் காரணமாக, உடலின் சில பகுதி களுக்கு இரத்தம் குறைவாகவே செல்கின்றது.
தற்போது இம் முறையைச் g செய்வதற்காக, இருதய மாற்று அறுவைச் சத்திர சிகிச்சை முறையொன்று வந்துள்ளது. கிறிஸ்ரியன் பேர்னாட் என்னும் மருத்துவர் ஒருவர் தென்னாபிரிக் காவில் இந்தச் சத்திர சிகிச்சை யைச் செய்துள்ளார் என்பது எல் லோரும் அறிந்ததே இங்கும் 905 பிரச்சினை எழுந்திருந் தது. தற்கொடையாளி ஒருவர், தாமாகவே மனம் உவந்து தனது இருதயத்தை நன்கொடையாகக்
கொடுத்தல் அவசியமாயிற்று" அத்தகைய ஒருவரைக் கண்டு பிடிப்பதும், மிகக் கஷ்டமான
காரியமாகத்தான் இருந்தது.
அத்துடன், உடல் புதிய இரு தயத்தை ஒதுக்கித் தள்ளாமல் தடுப்பதற்கு வேண்டிய பலவகை யான மருந்துகள் இப்போது இருந்த போதிலும், அதிலும் பெரிய அபாயங்கள் இருக்கத் தான் செய்கின்றன . எனவே, பல ஆண்டுக் காலமாக மருத்துவர்கள் செயற்கை இருதயம் ஒன்றைத் தயாரித்துப் பொருத்துவதற்கு ஆராய்ச்சிகள் செய்த போதிலும், அந்த எண்ணம் தற்போது தான் கைகூடியுள்ளது . இந்த ச் செயற்கை இருதயங்கள் கடந்த

avarGgot (7AD6 27
10 ஆண்டுக் காலமாகச் சந்தைப் படுத்தப்பட்டிருந்தன என்றே சொல்லலாம். ஆனால், முழு அளவிலான செயற்கை இருதயங் களை உடலிற் பொருத்துவதற் கும், பல மருத்துவச் சிக்கல்களை யும், அதிக அளவு மின்சாரத் தேவையையும் சமாளிக்க வேண் டியிருந்தது. எல்லா நோயாளர் களுக்கும் இந்த இருதய மாற்றை ஒரு தீர்வாகக் கருத முடியாது.
தற்போது மேற்கொள்ளப்படும் இந்த முயற்சி கூட, ஒரு பரிசோ தனையேயாகும். பிரித்தானியாவி லுள்ள “பார்ப்போர்” மருத்துவக் கூடத்தில் இந்தப் பரிசோதனை கள் ஆரம்பிக்கப்பட்டு இருக்கின் றன. இதில் நோயாளிகளின் உடலிலுள்ள இயற்கையான இரு தயங்கள் பயன்படுத்தப்பட்டு வரு கின்றன. செயற்கை முறையி லான இயந்திரம் ஒன்றும் பயன் படுத்தப்பட்டு வருகின்றது.
இந்தச் சிகிச்சை முறையில், வயிற்றின் மேற் பக்கத்தில் ஒரு காற்றடிக்கும் (Pump) இயந்திர மொன்று (இயந்திர இருதயம்) பொருத்தப்படுகின்றது. இரத் தோட்டத்தைச் செயற்படுத்துவது தான் அதன் வேலை. இருதயத் தின் இடது பக்கத்திலுள்ள அறை தான், இரத்தத்தை முக்கிய நாளங்களுக்குச் செலுத்துகின்றது. (பம் செய்கின்றது) பழுதடைந்த இருதயங்களில் அந்த வேலை
செய்யப்படுவதில்லை. எனவே, அந்த இடது பக்க அறையின் வேலையை இந்த இயந்திரங்கள் செய்கின்றன.
இந்த இயந்திரம் பிளாஸ்ரிக் கும் சிறு உலோகங்களும் கொண்ட ஒரு கலவையினாற் செய்யப்படு
கின்றது. ஆனால், இது மின்சா ரம் மூலமே இயங்குகின்றது. இதன் அளவு, சாதாரணமாக
உள்ளங்கை அளவே இருக்கும் . இந்தக் கருவியை இயக்குவதற்கு, ஒரு விசேஷமான பட்டியொன் றைத் தயாரித்துள்ளார்கள். அந் தப் பட்டியினுள் தான் மின்கலங் கள் வைக்கப்படுகின்றன . அந்தப் பட்டி உடலின் வெளிப்புறத்தில் இடுப்பிற் கட்டப்படுகின்றது.
இருதயச் சத்திர சிகிச்சை செய் வதற்குச் சில காலம் எடுக்குமா னால், இந்தச் சத்திர சிகிச்சையின் மூலம் அந்நோயாளிக்கு இந்தப் பம்மைப் பொருத்தி விடுகிறார் கள். நன்கொடை இருதயங்க ளைப் பெறுவதற்காக, சுமார் 200 நோயாளிகள் வரை இந்தப் பம்மின் உதவியுடன் உயிர் பிழைத்துள்ளார்கள். இவர்கள், இந்தப் பம்மை ஒரு குறுகிய காலத்திற்குத்தான் வைத்திருக்க முடியும் . நீண்ட காலமாகப் பாவிக்கக்கூடிய ஒரு முறையைக் கண்டு பிடிக்கத்தான், பிரித்தானி யர்கள் முயன்று கொண்டிருக்கின் றனர்.

Page 16
28 வானோசை
ஒரு வார காலத்தினுள் எட் டுப் பேருக்கு இந்தச் சிகிச்சை யளிக்கப்பட்டு, இவர்களை அவ தானிப்பதற்காக வைத்தியசாலை யில் நிறுத்தியுள்ளார்கள். இந்த ஒரு வார காலமாக அவர்கள் நல்ல நிலையில் இருப்பதுடன், நடந்துகூடச் செல்கின்றனரென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருட காலத்திற்கு இந்தப் பம்" வேலை செய்யுமா? பிரச்சி னைகள் எதுவும் இன்றி இருக் கின்றதா என அறிந்துகொண் டால், இது நோயாளிகளுக்கு நன்மை அளிக்கும். நன்கொடை யாளர் எனக் குறிப்பிடப்பட் டோர், இறந்த பின்னர் பீடத் தமது இதயத்தை ஒருவருக்குத் தானம் செய்யலாம். பின்னர், அதே இதயத்தை வெட்டி நோயுள் ௗவருக்குப் பாவிக்க முடியும் . வைத்தியத் துறையினரின் கண் கள், தற்போது சிகிச்சை பெற்று வரும் எட்டுப் பேர்களின் பக்கம் திரும்பியுள்ளன. இவர்கள் ஒரு வருடம் சுகமாக இருந்து விட் டால், இந்நோய்க்கான பிரச்சி னைகள் எதுவும் இருக்கமாட் o-Tತ್ತಿ -
இரத்தத்திற் பிராணவாயுவின், அதாவது ஒக்ஸிஜன் (0xygen) அளவு குறைந்தால், உடனே மரணம் தான். உடனடியாகி முதலுதவி செய்வது மிகவும் அவ சியம். ஒக்ஸிஜனின் அளவு குறை
யும்போது, மூளையில் உள்ள ஷெல்கள் தம் செயலை இழந்து
விடும்.
ஒக்ஸிஜன் குறைவு எதனால் ஏற்படுகிறது? என்று முதவிற் பார்க்க வேண்டும் .
1. சுவாசப்பைகளில் உணவுப்
பொருட்கள், இரத்தம் ஆகி யவை அடைத்துக் கொள்ளு தல்
8. ஏதேனும் விபத்து ஏற்பட்டு, மார்புப் பகுதியிற் பலத்த அடிபடுதல்.
3. நச்சுவாயுவைச் சுவாசித்தல் ,
4. மின்சார அதிர்ச்சியிற் பாதிக்
கப்படுதல்,
5. முகத்தில் பிளாஸ்ரிக் பை (Plastic bag) ஏதாவது மாட் டிக் கொண்டு மூச்சுத்திணறல் ஏற்படுதல்.
6. தொய்வினால் (Asthma)
அவதிப்படுவது போன்றவை. ஒக்ஸிஜன் குறைவு தைக் கண்டு பிடிக்க
ஏற்படும் அறிகுறிகள்:-
ஏற்பட்ட உடலில்
1. சுவாசிக்க முடியாமற் திண
றுவிதி
3. மூச்சு இழுத்து விடும்போது,
சத்தம் ஏற்படுதல்,

29
3. முகம் நீலநிறமாக மாறி
விடுதல்,
4 தலை, கழுத்துப் பகுதியில் உள்ள இரத்த நாளங்கள் வீங்குதல், பாதிக்கப்பட்டவர் சிறிது சிறிதாக நினைவை இழத்தல் .
முதல் உதவி செய்வது எப்படி? மூச்சுக்குழாயில் ஏதாவது அடைத் துக் கொண்டு இருக்கிறதா என்று பார்த்து, அதை உடனே நீக்க வேண்டும். சுத்தமான காற்று உள்ள சூழ்நிலையில் நோயாளி யைத் துரங்க வைக்க வேண்டும். முகத்தைச் சுற்றியோ, அல்லது கழுத்தைச் சுற்றியோ இறுக்க மாக ஏதாவது கட்டப்பட்டு இருந் தால், உடனே அதை நீக்கிவிட வேண்டும். நோயாளி சுவாசிக்கின் றாரா என்று, மூக்கின் அருகிற் கை வைத்துப் பார்க்க வேண்டும். இல்லையேல், செயற்கைச் சுவா சம் கொடுத்து உடனடியாக மருத்துவரிடம் கொண்டுசெல்ல வேண்டும்.
20ழ் பக்கத் தொடர்ச்சி
மற்றும் கண்ணுக்குப் புலப்படாத G.Firra, sir (Satellites) என்பன மற்றைய வெளிப்படுத்தல்களைக் கண்டுபிடிக்கமுடியும் .
நில உலகுக்கப்பாவிலுள்ள விண்கலன்களின் இழுப்புச் சாய்வுபோலச் செயற்படும் காந்தப் பாய்கள், அவற்றைக் கண்டுபிடிப்பதற்குத் தேவையான சாத்தியக் கூறுகளை வழங்குகின்றன . விண்மீன்களுக்கு மத்தியில் தயாரிக்கப்படுகின்ற குறைந்த அலையதிர்வு கொண்ட வானொலி அலைகளுடன் காந்தப்பாய்கள் மோதும்போது அவை ஒரு அடக்கமான அதிர்வை உருவாக்குகின்றன.
JJSLLLLLLLGGLLLeMGGGLLLeLLLLL LLLLLLLGLLGLLLLLLLLLLLL LGLLLHLHeaLKLLL LLLLLLLHMeLLG
F.
இன்றைய வாழ்க்கைநிலை
தமிழீழத்தில்
பருத்தித்துறைச் சாலை,
Le LLLeLeeLCLMzLCCMMMLLMLeSMLzLLLLGLLLLSLLeeeLLLLLLeeLGLGLLCLLSLSLLLLLLG LSee
பிரியர் சுருககு ് =חייו ועוד 4 ת
இதயத்தைத் தொடும் கலையாய் தயாரிக்கப்படும் வீடியோ நாடாவில் பார்த்து மகிழ்ந்திட
C5, TT RÍO GRUNDT
திரைப்படங்களை
இன்றே நாடிடுவீர்!
கல்வியங்காடு.

Page 17
நியூட்டன் அக்கடமி
நிறைவான கல்வியே நியூட்டனின் இலக்கு!
ஆண்டு 1 முதல், ஆண்டு 11 வரை சகல பாடங்களும் தனித்துவம் வாய்ந்த ஆசிரியர்களினால் கற்பிக்கப்படுகின்றன . இவற்றுடன் 01 - 04 - 95 தொடக்கம், O/L பகல் முழு நேர வகுப்புக்கள் ஆரம்பமாகியுள்ளதென்றும் தெரிவித்துக்கொள்கின்றோம் .
நியூட்டன் அக்கடமி இருபாலைச் சாலை, கோண்டாவில் “கல்வியறிவே உண்மைக்கண்!
கற்றுத் தெளிவது நமது மண்!”
O O "நோயோடு வருவோர்க்குத் தாயாகிச் சுகமளிப்பது!’’
நாயன்மார்க்கட்டு முறிவு,நெரிவு வைத்தியசாலை
* முறிவு , * நெரிவு + கண்டல் * பழைய நோவு + வாதம் * உடல் வைத்தியம் * சரும ரோகம் * நரம்பு வியாதிகள்
* மலட்டு ரோகம்
- இவற்றுடன் குழந்தை இல்லாதவர்களுக்கும், பாலியற் கோளாறுகளுக்குமான விசேட சிகிச்சைகளுக்கு
நாயன்மார்க்கட்டு முறிவு, நெரிவு வைத்தியசாலை செம்மணிச் சாலை, நல்லூர்.
நாயன்மார்க்கட்டு,

வானோசை 31
நீங்களும் Silio III LafaiaTTo
நேர்மைக்குக் காலமில்லை
அவர் ஒரு பெரிய மனிதர். ஒருநாள் அவருக்குத் தெரிந்த ஒரு வர் அவரைத்தேடி வந்து, ஐம்பது ரூபா இருந்தாற் கொடுங்கள். அடுத்த திங்கட்கிழமை திருப்பித் தருகிறேன் என்று கேட்டார். திருப்பிக்கொடுப்பார் என்ற நம்பிக்கை பெரியவருக்கு இல்லை. இருந் தாலும் கொடுத்தார். சரியாக அடுத்த திங்கட்கிழமை, சொன்ன படியே பணத்தைத் திருப்பிக் கொடுத்தார் அவர் . மீண்டும் ஒரு மாதம் கழித்து அந்தநபர் வந்து, ஐயா! ஐம்பது ரூபா கடன் வேண்டு மென்றார். உடனே அந்தப் பெரியமனிதர் பார்த்தார். உன்னை நம்பிப் பணம்கொடுக்கமுடியாது போ என்று கோபமாகக் கூறினார். என்னையா சொன்னபடி சொன்னநாளில் பணத்தைத் திருப்பிக் கொடுத்தேன்தானே; என்னை நம்பமுடியாதென்று சொல்லுகிறீர் களே. உடனே பெரியவர், ஆமாம் போன தடவை நீ பணத்தைத் திருப்பித் தரமாடடாய் என்று மனப்பூர்வமாக நம்பிப் பணத்தைக் கொடுத்தேன்’ ஆனால் நீ பணத்தைத் திருப்பிக் கொடுத்து, அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கி விட்டாய். ஆகவே, பணந்தர முடி யாது சென்றுவா என்றார்.
ஆயுள் 10 நாள்
f ஒருநாள் ஒருவர் , வீதியால் வேகமாக ஒடிக்கொண்டிருந்தார். ஏன் ஓடுகின்றாய்? என்று இன்னொருவர் கேட்டார். இன்னும் 10 நாட்கள்தான் ஆயுள் என்று மருத்துவர் (டொக்ரர்) சொல்லிப் போட்டார் . அதுதான் ஒடுகிறேன் என்றார். அப்படியென்றால் ஏதாவது நல்லகாரியம் செய்வதற்கா? ஆமாம்; என் சிநேகிதனைப் பார்த்து, 10 ரூபா பணம் வாங்கிக்கொண்டு வருவதற்காக ஓடுகி றேன் என்றார். எதற்குப் பணம்? என்றுகேட்டார் . 10 நாட்கள் ஆயுள் என்று மருத்துவர் சொன்னது எனக்கில்லை; அவனுக்குத் தான்; ஆதலினால் இப்பவே ஏதாவது வாங்கினாற் சரி; அதனால்தான் ஒடுகின்றேன் என்றார்.
திருட்டினால் வந்த ஆசை ( அரிசி அரைக்கும் ஆலையில் நெல்லைப்போட்டுக் காயவைத் திருக்தார்கள். அவற்றைத் திருடியதால், ஒருவன் சிறைச்சாலைக்கு

Page 18
32ਨਾ
வந்துவிட்டான். சிறை அதிகாரிகளிடம் மிகவும் நெருக்கமாகப் பழகி னான். தண்டனைக்காலம் முடிந்து, விடுதலையாகி வெளியிற் புறப் பட்டான். புறப்படுவதற்கு முன்னர், சிறைச்சாலை அதிகாரி வெளியே போய், என்னப்பா செய்யப்போகின்றாய்? என்று கேட்டார். மறு படியும், எங்கேயாவது நெல்லைக் காயவைத்திருந்தால், அவற்றைத் திருடலாமென்று யோசிக்கின்றேன் என்றான். ஏன்டா பாவி நீ கொஞ்சங்கூடத் திருந்தவில்லையா? என்றார் அதிகாரி. திருந்திவிட் டேன் ஐயா! இருந்தாலும், எப்பவும் உங்களிடமே தொண்டுசெய்ய வேண்டுமென்று, எனக்கு மிகுந்த ஆசை. ஆகவே, அதைவிட வேறு வழி இல்லை.
அப்பாக்களுக்கு அறிவு அதிகம்
డి ஒருவர் சொன்னார்:- மனவளர்ச்சி குன்றிப்போகிறது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தக்காலக் குழந்தைகளுக்கு அறிவு வளர்ச்சி அதிகமாக இருக்கிறது. அதனாற்தான், இப்போது பிரச்சினை என்றாராம். அதை எப்படிச் சொல்லுறீங்கள்? என்று மற்றவர் கேட் டாராம் . அவர் தனது பிள்ளையைப் பற்றிச் சொன்னாராம். அவன் கேட்டானாம்:- ஏன் அப்பா! அப்பா சொல்வதைத் தான் பிள்ளை கள் கேட்க வேண்டுமா? பிள்ளைகள் சொல்வதை அப்பாமார் கேட் கக்கூடாதா? என்று. அப்படி இல்லை மகனே! பிள்ளைகளைவிட அப்பாக்களுக்கு அறிவு அநுபவம் அதிகம் என்று சொல்வியிருக்கி றார் அப்பா. சரியப்பா வானொலியைக் கண்டுபிடித்தது யார்?" என்று கேட்டான் மகன் . மார்க்கோனி என்று விடையளித்தார் அப்பா. அதை ஏன் மார்க்கோனியின் அப்பா கண்டுபிடிக்கவில்லையென்று கேட்டானாம் மகன்
அப்பறக்கு அப்பன் மகன்
『 ஒரு திருடன், தனது மகன் யோக்கியனாக இருக்கவேண்டு மென்று நினைத்தான். அவனை எப்போதும் உட்காரவைத்து
நீதி போதனை செய்வான். இதோ பாரப்பா நான் சொல் வதை நன்றாகக் கவனி. உன்னைப்போல ஒரு சின்னப் பையன் ஒரு பெரியவரிடம் பணப்பையைக் களவாடிவிட்டான். அந்தப் பணப் பையில் பறிகொடுத்தவரின் விலாசமும் 15 ரூபாப் பணமும் இருந்தன. அவன் மனம் திருந்தி, அந்தப் பெரியவரிடமே கொண்டுபோய்க் கொடுத்துவிட்டான். அந்தப் பெரியவர், பையனுடய நேர்மையைப் பாராட்டி 0.5 ரூபா பரிசாகக் கொடுத்தார். அதாவது, அந்தப் பணப்

рды тарапталл. 33
பையில் இருந்தது 15 ரூபா. அதில் இருந்து 05 ரூபா இவனுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார். இதிலிருந்து நீ என்ன புரிந்து கொன் டாய்? என்று திருடன் தன் மகனைக் கேட்டான். மகன் மெதுவாக யோசித்து விட்டு, அப்பா! அந்தப் பையனுக்கு 10 ரூபா நட்டம் என்பதைப் புரிந்துகொண்டேன் என்றான் ,
OLDIGI077 SPILS" GET 25, ANGET
கணவன், மனைவி, குழந்தை மூன்று பேரும் ஒரு நீச்சற் اوf குளத்திற்குப் போனார்களாம். கணவன் குளத்தில் இறங்கி நீர்சல் போட ஆரம்பித்தார். குழந்தை அதைப் பார்த்து, தானும் இறங்க வேண்டுமென்று. அடம்பண்ண ஆரம்பித்தது. நீ எல்லாம் குனத்தில் இறங்கக்கூடாது என்று தாயார் கண்டிப்பாகச் சொல்ல, அப்பா மட்டும் இறங்கலாமா? என்று குழந்தை கேட்டது அதற்குத் தாயார், அவர் ஆயுட்காப்புறுதி பண்ணியிருக்கிறார்" அதனால்தான் அப்பாவை இறங்கச் சொன்னேன் என்றார்.
உங்களது உடலில் ஏற்படும். 0 தொய்வு நாட்பட்ட சரி 0 pisao இவற்றிற்கான கண்கடி
இருதல் சிகிச்சைகளுக்கு மூக்கரிப்பு தாசிபரிப்பு ky i gruaj G. i"
தொய்வு - முட்டு
சிகிச்சை நிலையம்
இல. 33, 14 ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம். SMAAeTALAMTTA MATTTA MTA AMTA MMAMA AMAMMTAMMA

Page 19
34 வானோச்ை
g) (EpũIIm, f. - 6àmU6òmùpữ6ĩò மின்னும் பிராட்மன்
ளையாட்டு வீரர்கள்
6Y uvaU 8far 9 60)GaT66ap6mTü புரிந்து வருகின்றனர். குழுக்களுக்கான விளையாட்டுக் களிற்கூட, சாதனை புரிந்த பலர் இருப்பதை நாங்கள் அவதானிக்கின்றோம். அவ்விளையாட்டுக்களை இரசிக்கும் மக்கள் கூட, மிக ஆர்வத்துடனும், வியப்புடனும், இருப்பதை நாம் காண்கின்றோம். அவ்வாறு சாதனை படைத்தவர்கள் வரிசையில் வந்தவர்தான், அதிசிறந்த துடுப்பாட்டக்காரரான அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சேர். டொன் பிராட்மன் (Sir. Don Bradman)67airuava omi இவரை உங்களுக்கு அறிமுகஞ் செய்வதிலே பெரு மகிழ்ச்சி அடைகின்றோம்.
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த டபிள்யூ ஜீ கிறேஸ் (W. G. Grace) at 6ituari முதல்தரமான நூற்றிஇருபத் தாறு ஓட்டங்களை பெற்று, அந்நாட்டில் சாதனையைப் ப்டைத்த போதிலும், அவர் அதிக புகழ் பெற்றவராக இருக்கவில்லை. அதைத் தொடர்ந்து, சராசரியாக 39.66 வீத
ஓட்டங்களை பிராட்மன் பெற்றபோது, அச்சாதனை அந்நாட்டை மிக உச்சநிலையில் வைத்தது. அவர் வழமையாகப் பெற்றுவந்த 100 ஒட்டச் சாதனைகள் எல்லாம், லின்சே ஹஸெற் (Lindsay Hazet) GurGirp அவுஸ்திரேலியர்கள் பெற்ற நூறோட்டச் சாதனைகளின் இரட்டிப்பாகவே
SIT6TL LL.6T. 1930 ஆம் ஆண்டில் இங்கிலாந்திற் கெதிரான ரெஸ்ற் ஆட்டத்தின் போது இவர் ஒர் இன்னிங்சில் 300 ஓட்டங்களைப் பெற்று உலக சாதனையை நிலைநாட்டினார்.
867 Tiao sa
இவரது ஆரம்ப ஆட்டம் இங்கிலாந்தில், வோர்செற்சயரில் ஆரம்பமானது" இவ் ஆட்டத்தின்போது 236 ஒட்டங்களைப் பெற்றார் . இந்த ரெஸ்ற் ஆட்டத்திற்குச் சென்ற இவர் (County)
* மாகாணப் போட்டி,
ரெஸ்ற் போட்டி ஆகிய

இரண்டு ஆட்டங்களிலும் 2960 ஓட்டங்களைப் பெற்று சராசரி 98 , 66 என்ற விகிதத்தில் இருந்தார். இவர் இப் போட்டிகளில் பத்துத் தடவை நூறு ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார். அவற்றில் நான்கு ரெஸ்ற் விளையாட்டுக் களின்போதேயாகும் . அந்த ரெஸ்ற் விளையாட்டின் போது, அவர் எடுத்த ஓட்டங்கள் 974 ஆகவும், சராசரி 139, 14
ஆகவும் இருந்தன.
லீட்ஸ் மைதானத்தில் ஆடியபோது, ஒரு விக்கட் இழப்பின் பின்னர் விளையாட்டுத் திடலினுள் நுழைந்த இவர், அன்றைய ஆட்ட முடிவில் ஆட்டமிழக்காது 309 ஒட்டங்களைப் பெற்றிருந்தாா . மறு நாட்காலை தொடர்ந்து ஆடிய இவர், 334 ஓட்டங்களைப் பெற்று உலகச் சாதனையை நாட்டித் தமது விளையாட்டை
நிறுத்திக்கொண்டார். \லோட்ஸ் மைதானத்தில் நடந்த ஆட்டத்தின்போது, இவர் 254 ஓட்டங்களையும், ஒவலில் நடந்த ஆட்டத்தின் போது 232 ஆட்டங்களையும் பெற்றுக்கொண்டார். 1930 ஆம் ஆண்டிலிருந்து 1948 ஆம் ஆண்டு ஒய்வெடுக்கும் வரையில் இங்கிலாந்திற்கு நான்குமுறை
வானோகை 35
சென்றுள்ள இவர், அன்றைய உலகின் முன்னணித் துடுப்பாட்ட நட்சத்திரமாகவுத் திகழ்ந்தார். 1948ஆம் ஆண்டில் ஒவல் மைதானத்தில் நடந்த அவரது இறுதி ரெஸ்ற் ஆட்டத்தின் போது, எரிக்ஹோலீச் என்பவரின் பந்து வீச்சிற்கு எவ்வித ஓட்டங்களையும் பெறாது ஆட்டமிழந்தார். அவருடைய துடுப்பாட்டத்தின் சர்வதேசச் சராசரி
9 9 94 ஆக, நம்பமுடியாதளவு உயர்வாகக் காணப்பட்டது" அவருடைய சராசரி ஓட்டங்கள் 100 ஆவதற்கு ' இன்னும் நாலு ஓட்டங்களே அவருக்குத் தேவைப்பட்டன. கிறேசின் பின்னர், பொருளாதாரத் துறையிலும் இவரைத் தவிர வேறு எவராலும் உரிய இடத்தைப் பெறமுடியாமற் போய்விட்டது. இவர் சாதாரணமாகத் துடுப்பெடுத்து
ஆடுவதைப் பார்ப்பதற்காகவே
மக்கள் பெருந்திரளாக மைதானங்களிற் குழுமி இருந்தனர். இவர் புரிந்த சாதனையான 334 ஓட்டங்களை இங்கிலாந்தைச் சேர்ந்த லென் ஹட்டன் (Leonard Hutton) 364 ஓட்டங்களை எடுத்து இவரது சாதனையை முறியடித்தார். துடுப்பாடுந் தொழிலில்

Page 20
| L
ஈடுபட்டவர்களால் இவரது அடிகள் இரக்கமற்ற தாக்குதல்களாகத் கணிக்கப்பட்டபோதிலும், அவர் ஒரு திறமைமிக்க துடுப்பாட்டக்காரராக் இருந்தமையினால், அதை அவ்வாறு கணிக்கமுடியாது. எல்லாப் பந்துகளையும் எதிர்நோக்கக்கூடிய கூர்மையான கண்களையும், திறமையான ஆற்றலையும் இவர் கொண்டு இருந்தார். (பிராட்மன் அவுஸ்திரேலியப் படையணியிற் சேருவதற்காகச் சென்றபோது, வைத்தியரீதியாக இது உறுதிசெய்யப்பட்டது.) அவர் தன்னம்பிக்கை உடையவராகக் காணப்பட்டார். முழு நிச்சயத்துடன் அவர் தனது தாக்குதல்களை நிறைவேற்றினார். நேரக்கணிப்புடன் பந்துகளை வேகமாகத் திருப்பிவிடுதல், அவற்றை வெட்டியடித்தல், அவரின் புகழ்மிக்க பின்வாங்கித் தாக்குதல்போன்ற ஆட்ட உத்திகளால் பார்ப்பவர்களின் கண்களை வியப்பினால் விரிபச் செய்தது . அவர், பந்தை முன்னரே தெளிவாசுக்கண்டு, அதன் வேகத்தையும் நீளத்தையும் கணித்து, மற்றவர்கள் தகுந்த நிலைகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே செயலாற்றும் திறமைமிக்கவராவார்.
பிராட்மன் தான் பல தடவைகள் உரையாற்றும்போது, தனக்கும் முன்னாள் பெரும் வீரர்களுக்கும் இடையேயான ஒப்பீட்டடிப்படையிலுள்ள பெறுமதிகளைக் கூறத் தவறிவிட்டார். தான், வேகப் பந்து வீச்சுக்களுக்கும் வேகங் குனந்த சுழற் பந்து வீச்சுக்களுக்கும் இடையே எதிர் நோக்கியிருந்த சமர்களையும் கூறவில்லை. 1931ஆம் ஆண்டில் விக்கெட்டுகளின் அளவுகள் உயர்த்தப்பட்ட போதும், இவர் விளையாடியது தெரிந்ததே 1937ஆம் ஆண்டில், விக்கெட்டுக்களுக்குமுன் கால் வைக்கும் நியதி மாற்றப் படுவதற்கு முன்னரும் பின்னரும் இவர் விளையாடியிருக்கிறார். இம் மாற்றங்கள் இருந்தபோதெல்லாம் பிராட்மனின் வீரநடை உறுதி மிக்கதாகவே இருந்தது. உண்மையில், அவர் ஓர் அற்புத மனிதராகவே காணப்பட்டார்.
கியே முதன் மு+யாக ஈபுரு ாரிப் போட்டி நடத்திய நாடு
ਲ இக்கரிகம் முறை முதன்முதலாகப் ப ரி - ல் தொடங்கப்பட்டது

நீகாந்தா மென்பானத் தொழிலகர்
எமது உற்பத்திகளான -
0 ஒரேஞ் பார்லி
() où Goyri est
() வின்ரோ
O Glaut pati i
() இஞ்சி சோடா
() ஒமவாட்டர்
இவற்றுடன் இறக்குமதி செய்யப்பட்ட எசன்ஸ் எமலசன் வகை கண்கா மொத்தமாகவும் சில்லறையாகவும்
கழிவு விலையில் கொள்வனவு செய்திட
ருநீகாந்தா மென்பானத் தொழிலகம் இல, 2 அரசசாலை, தல்லுரர்.

Page 21
நீகாமாட்சி 9t
। திருத்தம் செய்து அவ Ga、T山山 °f【
॥ திருந்தம் செய்வதில்
=
பூணீகாமாட்சி அம்மன்
காங்கேசன்துறைச் சாலை,
SLLK D D D SS u uD D DCDS q KS
för 6JT JITF TT GIDELTf 603
அனைத்து மோட்டார் 6 ஒ நீர் இறைக்கும் தி
ਨੇ /p//
ਪ
சின்னராசா மோட்டார் சைக்
புகையிரத நிலையச் சாலை,
于 H o
மாலதி பதிப்பகம் வண்

16
(:IDITÍLIŤ 35DI?
ற்றிற்கான மின்னினைப்பு
இறைக்கும் இயந்திரங்களையும்
|
நிபுணத்துவம் பெற்றோ
மோட்டார் கறாஜ்
பாழ்ப்பாணம்.
a
சிவநாதன் க்கிள் திருத்தகம்
ਲ リのリーの方。 岛、
து வழங்குவதில் முன்னோடிகள்
சிவநாதன்
bகிள் திருத்தகம் -
நன்னாகம்,
5 - பண்னை, யாழ்ப்பாணம்,