கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொடர்பு 1993.10-11

Page 1
三
*毽
彗凰
 
 
 
 


Page 2
நுகர்வோரின் வசதிக்காக.
கொக்ரக்கோ ! wwInne 2
எருசலேமிலிருந்து. இயேசு வருகின்றார் --- வேதாகமம் பயில்வோம் un
ஆத்தும நேசரின் அங்க மகத்துவம் - 12 ஏனோக்கு - ஏ - நோக்கு 15 வேதாகமப்புதிர் - இல. 5 wuwun 20
ரசித்ததும் ருசித்ததும் - 21 யார் குற்றவாளி ? - விவாத அரங்கு 24 வாலிபனே! நீ ஓர் அம்பு! ww 28
LSA0AA0AA0A0YAAJY000JLSASY0S0Y0Y0LY0
அன்பார்ந்த வாசகர்களே,
:
★
சஞ்சிகையை வாசித்த பின் சகலருக்கும் அறிமுகம் செய்யுங்கள். ஆர்வமுள்ளோரின் விலாசங்களை அனுப்பி வையுங்கள். உரிய வேளை சஞ்சிகை வெளிவர ஊக்கமாக ஜெபியுங்கள்: சஞ்சிகை சம்பந்தமான சகல விடயங்களும் - The Editor, Thodarpu, Dason's, 90 Kandy Road, Kengalla 6T657 p. 656) its 5 துக்கும்,
Fjö 5 fT - p56ör Gatsit GOL — 55 Gir Mrs. B. K. Thurairajah, Director, “Biblecor - Lanka” 6, Bala henamulla Lane, Colombo-6, GT Gör so விலாசத்துக்கும்(காசோலை /காசுக்கட்டளை/ஒரு ரூபா பெறுமதி யான முத்திரைகள் மூலமாக) அனுப்பப்படல் வேண்டும். காசுக் கட்டளையாயின் காசுபெறும் தபாற்கந்தோர் “வெள்ளவத்தை" எனக் குறிப்பிடப்படல் வேண்டும். ஆண்டுச்சந்தா அறுபது ரூபா. ஆரம்ப பதிவுக்கட்டணம் பத்து ரூபா.
Thodarpu - A Christian Magazine for the whole family. Director - Mrs. B. K. Thurairajah B.A.
Editor — Bro. Devadason Jeyasingh
Letterpress - Kumaran Press,
201, Dam Street, Colombo- 12. Phone: 42 388
2th issue 大 THODARPU 25th October 993

இதழ் - 12 ஒக்டோபர் - நவம்பர் 1993
அன்பார்ந்த வாசகர்களே,
எல்லாம் வல்ல இயேசுவின் இனிய நாடகத்தில் உங்கள் ஆனை வருக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
இப் பன்னிரண்டாவது இதழை வெளிவரச் செய்த தங் கர்த்த ருக்கு ஸ்தோத்திரம்.
இவ்விதழில் புதிய கோணத்திலான சில செறிவுகள் உண்டு. சிறியோர், பெரியோர் அனைவருக்குமே சிந்தனைக்குரிய விட பங் களாக அவை அமையும் என நம்புகின்றேன்.
ஆதாமா. ஏவாளர். என்ற விவாத அரங்குக்கு நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது."கொக்ரக்கோ’உங்கள் கருத்துக்களை &ேண்டி நிற்கின்றார். 'ரசித்ததும் ருசித்ததும் பகுதிக்கு உங்கள் ரசனைகளை அனுப்புங்கள். பலருக்கும் அவை பயன்படட்டும்.
ஆண்டு இரண்டினைப் பூர்த்தி செய்துள்ள "தொடர்பு ஆந்ேத நத்தார் - நவ வருட இதழை மேலதிக பக்கங்களால் ஆலங்ஐரிக்க வுள்ளது. அதற்காக மேலதிக பொருளாதாரமும் தேவைப்படுகின் றது. இவற்றிற்காக ஜெபியுங்கள். வசதியுள்ளவர்கள் வாரி வழங் குங்கள், கரித்தர் உங்களை மென்மேலும் ஆசீர்திெப்பார்,
தற்காலிக தேவைகளுக்காக, நாம் தாராளமாகச் செலவிடு கிறோம். அதிலும் பண்டிகைக் காலமென்றால் ஈர்க்கத் தேவை யில்லை; அந்தச் செலவினத்திலே ஒரு பகுதி:ை ஒதுக்கி மேலும் ஓரிரு புதிய அங்கத்தவர்களுக்காக புதுவருட அன்பளிப்பாக தொடர் புக்கான ஆண்டுச் சந்தாவைச் செலுத்துவது ஒரு கிறிஸ்தவ சஞ்சி கையின் வளர்ச்சிக்கு உதவியதாக இருக்குமல்லவா ? சிந்தியுங்கள் ஜெபியுங்கள் செயற்படுங்கள்.
வல்ல தேவனின் வல்ல கரம் தல்லபடியாக உங்களை வழி நடத்தட்டும்.
கிறிஸ்துவின் :ணியில் தேவதாசன் ஜெயசிங்

Page 3
கொக்ரக்கோ!
அருள்திரு. ராஜ்பகதூர் அடிகளார்
)ே இவ்வாக்கத்தை எமது சஞ்சிகை யில் வெளியிட அனுமதி தந்த ஆக்கியோனுக்கு தொடர்பின் நன்றிகள்,
வேதமாணிக்கம் அழமாட்டாத குறையாக ஓடிவந்து கொக்ரக் கோவிடம் கூறிய அந்த அவலச்செய்தி என்னவென்று கேட்கிறீர் assift
"'உங்களுடைய செயல்களையும் பிரசங்கங்களையும் "தொடர்பு" என்னும் சஞ்சிகை அம்பலமாக்கி வருகிறது. இதனால் தொடர்பு வாசகர்கள் அனைவரும் தொடர்புக்கு கொக்ரக்கோவின் தொடர்பு வேண்டவே வேண்டாம்" என ஆர்ப்பாட்டம் செய்ய ஆயத்தமாகிச் கொண்டிருக்கிறார்களாம்.""
இது உண்மைதானா என்பதை அறிவதற்காக வாசகர்களை வாக்களிக்கும்படி கேட்கின்றது தொடர்பு.
வாசகர்களே! "கொக்ரக்கோ தொடர வேண்டுமா? நிறுத்தப் பட வேண்டுமா ?
உங்கள் விருப்பை ஒரு தபால் அட்டையில் எழுதி உடனடியாக தொடர்பு - ஆசிரியருக்கு அனுப்பி வையுங்கள்.
கரித்தருக்குச் சித்தமானால் அடுத்த முறை சந்திப்போம்:
இப்படிக்கு
Gastré Durái G35 mr |
நான் ஒருவராய் வானங்களை விரித்து நானே பூமியைப் பரப்பினவர் - ஏசா, 44 : 24
- 2 as
 

எருசலேமிலிருந்து . . .
. . . இயேசு வருகின்றார்
YLLLLLLLLLLLLLL0LLL0LL000M0LYY0LY00JLLL0LJ00YLLLJYYY0YYeLeeeYYeYYYYZYYYLLLL
() திருமதி B. K. துரைராஜா அன்பார்ந்த நேயர்களே,
கடந்த இதழில் "எருசலேமை நோக்கி இயேசு வருகின்றார்
என்றேன். இம்முறை "எருசலேமிலிருந்து இயேசு வருகின்றார்" என்கின்றேன்.
அன்று, ஆலயத்தில் பிரசங்கித்துக் களைத்த இயேசு இளைப் பாறுவதற்காய் பெத்தானியாவில இருந்த இல்லயொன்றுக்குள் பிரவேசிககன்றார். ፬Gö சகோதரன், இரு சகோதரிகள். ஆம் மார்த்தாள், மரியாள், லாசரு-இவர்கள் மூவருமே அவ்வில்லத்தின் அங்கத்தவர்கள். இவரிகளைத தர வேறு யாரும் அங்கு இல்லை. அச்சிறிய குடும்பத்த நா. அவர்கள் வரக்காரணம். "இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும், லாசருவினி டத்திலும் அன்பாயிருந்தtா’’ (யோ. 11:5)
ஏழை-பணக்காரன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன் என்ற பாகுபாடு இன்றி எல்லாரையுமே நேசித்தவர் இயேசு. ஆயினும், இந்த இலலத் திலே இருந்தவர்களிடம் அவர் ஒரு விசேஷிதத அன்பைச் செலுத் தியதைக் காணமுடிகின்றது. அதற்கும் காரணங்கள் இல்லாமல் இல்லை. அங்கிருந்த மூவரும் மூலறு வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டிருந்தார்கள், அக்குனங்களுக்கூடாக அவர் அவர்களை நேசிக்கின்றார்.
* மார்த்தாள்
இவள் உபசரணைப் பாங்குடையவள். விசேஷித்த முறையில் இயேசுவை வரவேற்க விரும்புகின்றாள். இயேசு வானவர் தம் இல்லம் வரக்கூடும் என ஊகிக்கின்றாள். அவர் வரும் களைப்படைந்த தன்மையை உணருகின்றாள். அவர் இளைப்பாற வேண்டிய அவ சரத்தை எண்ணிச் செயற்படுகின்றாள். இயேசுவின் சரீரப்பிரகார மான களைப்பைப் போக்கவேண்டும் உயர்ந்த ஆதாரங்களினால் அவரைப் போ: ஷிக்க வேண்டும். ஓய்ந்து இருப்பதற்கு அவருக்கு வசதிகள் செய்யவேண்டும். இளைப்பாறுவதற்கு ஏற்ற ஒழுங்குகளைக் கவனிக்க வேண்டும். இவைகளே அவளுடைய இலக்குகளாக இருக் கின்றன:
எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப்படுவதில்லை - ஏசா, 49; 23
----۔ ?؟ حس۔

Page 4
ானலே, ஏனைய இருவரையும் விட இவள் வேறுபட்ட கோணத் தில் நின்று ஒடியாடி வேலை செய்கிறாள். அரிகின்றாள்-அரிக்கின் றாள்-பொt&கின்றால் - நறுக்குகின்றாள் - பெருக்குகின்றாள். கழுவு கின்: ஸ்-துவிடக்கின்றாள். ஈடைசியாக இயேசு களைப்படைந்து வந்துவே:ள இவளும் இளைப்படைந்தவளாய் "ஆண்டவரே, நான் தனியே வேலை செய்யும்படி என் சகோதரி என்னை விட்டு வந்திருப் பதைக் குறித்து உமக்குக் கவலை இல்லையா? எனக்கு உதவி செய்யும்படி ச் சொல்லும்” (லூக், 10: 40) என்கிறாள். இயேசுவோ, :த்தாளே! நீ தே5 காரியங்களைக் குறித்துக் கவலைப் புட்டுக் கலங்குகிறாய். தேவையானது ஒன்றே. மரியாள் தன்னை விட்டு எடுபடாத நல்லங்கைத் தெரிந்து கொண்டாள்" (லூக்,4142) என்கிறார்.
நாம் உலக காரி:ங்களைக் குறித்து மட்டும் கவலையுள்ளவர் as இருக்கக் கூடாது, அது வாழ்க்கைக்குப் போதாது. "உடல் ரீதி:ன தொந்தரவு அல்லது ஆயாசம் மட்டுமே அது எனக் கூதுவரம். இன்று சமூகங்களில் ஏன்? நமது சபைகளில் பார்ப் போ8ாயின் அநேகர் இவ்வாறான உடல் ரீதியான காரியங்களில் ஐட்ேே: ஈடுபட்டு இளைப்படைந்து கொண்டிருப்பதைக் காணலாம்: ஓய்வு நாட் பள்ளி ஆசிரியராக, ஒழுங்காக கலை நிகழ்வுகளை அரங் கேற்பவராக, பாடகர்களாக, பேச்சாளர்களாக, ஆலய நிருவாகி கலு:க ஈடுபடுவோர் ப&ருண்டு. இவைகள் தேவையில்லை என்பதல்ல. ஆனால் ‘இலவ&ன் மட்டும்” என்பதுதான் தவறு. இவை ஒரு பக்கத் ஜே3&வகளின் நிறைவு மட்டுமே. மறுபக்கத் தேவையையும் கவனிக்க வேண்டியது கட்டாயம் "ரேம ஞானம்" என்னும் நல்ல பங்கு முன் னதைவிட இதுவே முக்கியமானது. ஆகவே இவையிரண்டுமே தேவை
மார்த்தாளின் உபசரிப்பு மகத்தானதாக இருந்தது. எவரென்று பாராமல் உபசரிக்கும்பொழுது சிலர் சில சமயங்களில் கடவுளையே உடசேரித்த வரலாறுகளும் நாம் அறியாததல்ல. ஆபிரகாம் தேவ தூதர்களை இன்னார் என்று அறியாமலே உபசரித்தான். ஆசீர்வா தத்தையும் பேற்றான். (ஆதி 18:1-16) "அந்நியரை உடசேரிக்க மறவா திருங்கள் ஆதனால் சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்த துண்டு’ (எபி. 3:2) என்கின்றார் பவுலடியார். எனவே, மற்றவரி களை உtசரித்தல் பிறருக்கு உதவிபுரிதல், உணவளித்தல், நல்ல காரிiங்களில் உடல் ரீதியாக உழைத்தல் போல்வன இறைவனுக்குப் பிரி:ான கரியங்xளாகும். இத்தகைய நற்பண்புடையோரை இறைவன் நேசிக்கின்றார்.
* மரியாள்
**மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல; தேவனுடைய வாயி லிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" (மித், 4:4) என்று எழுதியிருக்கிறதே. இதை இயேசுவான வரி சாத் தாதுக்கு மட்டும் கூறவில்லை. அவரை நோக்கும் அனைவருக்குமே அது பொருந்தும் அன்று இஸ்ரவேலர் வனாந்தரத்தில் வழிநடத்
நீங்கள் கலங்காமலும் பயப்படRமலும் இருங்கள் - ஏசா 44 : 8
 
 
 
 
 
 
 
 

தப்பட்ட நாட்களில் அவர்கள் இறைவனின் வார்த்தைகளுக்குக் காத்திருப்பதைக் காண்கிறோம்; --
மரியாளும் இங்கு அதையே செய்கின்றாள். மார்த்தாள் இயேசுவை வரவேற்கும் அதை வேளை இங்கு மரியாளும் தன் இதயத்தில் அவருக்கு இடமளிக்கிறாள். ஆத்ம இல்லத்தில் அவருக்கு வரவேற்பு வழங்குகின்றாள். அவரது வாயின் வார்த்தைகளால் தன் ஆன்ம உணவைப் பெற்றுக்கொள்ள முன்வருகின்றாள். இயேசுவின் வாயிலி ருந்து புறப்படப்போகும் ஒவ்வொரு வார்த்தையினாலும் தன் ஆன் மீக வாழ்வுக்குப் பிழைப்பு உண்டு என்ற உண்மையை உணர்ந்தவ ளாகின்றாள். அதுவே, என்றும் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கு என்ற முடிவுக்கு வந்தவளாய் அதையே தெரிந்து கொள்ளு கின்றாள். இயேசுவினது வாயின் வாரித்தைகள்-அங்வுணவு-அதுதான் தான் இரட்சிக்கப்படுவதற்குரிய ஞானம் என அதையே தெரிந்து கொள்ளுகின்றாள் மரியாள்.
எனவே அவள் அவருடைய பாதங்களண்டை அமர்ந்து அவரு டைய வார்த்தைகளை, அந்த ஆன்மீக உணவைப் புசித்தபடி இருக் கின்றாம்.
"கிறிஸ்து இயேசுவைப் பற்றியும் விசுவாசத்தினாலே உன்னை இரட் சிப்புக் கேற்ற ஞானமுள்ளவனாக்கத் தக்க பரிசுத்த வேத எழுத்துக் களை, நீ சிறுவயது முதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும். வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கின்றன: தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும் கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தத்துக்கும் நீதியைப் படிப்பிக்கு தலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கின்றன" (TI திமோ. 3:15-17)
மரியாள் முன்பு பாவச் சேற்றிலிருந்து இயேசு கிறிஸ்துவினால் மீட்பைப் பெற்றாள். அவன் மன்னிக்கப்பட்டவளாக அவரை ஏற்றுக் கொண்டிருக்கின்றாள். அவரது உபதேசங்கள் மட்டுமே அவளுக்கு அறிவு, வெளிச்சம், ஆன்மீக போஜனம் எல்லாம். இவ்வுலகில் இயேசு கிறிஸ்துவின் மூலமாக அன்றி வேறெவ்வழியிலும் மெய்ச்சமாதானம் இல்லை என்ற உண்மையை அனுபவரீதியாகக் கண்டு கொண்டவள் அவள். ஆகவே தான் உலகியல் ரீதியான வரவேற்பை விட ஆன் மீக ரீதியான வரவேற்பை அளித்து அவர் பாதத்தண்டை அமர்ந்து அவருடைய திரு வார்த்தைகளைப் புசித்துக் கொண்டிருக்கின்றாள்: இதனால் சகோதரிகள் இருவருக்குமிடையில் சச்சரவு ஏற்பட ஆரம்
வரும் காரியங்களைக் குறித்து என்னிடத்தில் கேளுங்கள் - ஏசா, 45 : 11
a 5 -

Page 5
பிக்கின்றது, இவ்விடத்தில் தான் இ:ேசு "மரியாள் நல்ல பங்கினைத் &ெரிந்துகொண்டாள் என்கிறார். அகிளது வரவேற்பு இல்லத்திற் குரியது மட்டுமல்ல; இதயத்திற்குரியதுமாகும்
இருவரது குணாதிசயங்களும் இணைய வேண்டும். இரண்டுமே அவசியமானவை;
大 லாசரு
பெற்றோரை இழந்த அந்த இல்லத்தின் ஆண்மகன் இவனே. யூத சட்டத்தின் படி "சகோதரன் வீட்டுக்குத் தலைவன்". அதன்படி ல: சரு அங்கு பொறுப்புள்ள வ? லினாக இருக்கின்றான். சகோதரி as sa at a Gaw 5? out it 3 5 சிக்கின்றான். அன்பான சகோதரனாய் அவர் கள் மத்தியில் காணப்படுகின்றான். கீழ்படியும் பிள்ளையாக தோன்று கின்றான். இதனால் இயேசுவின் ப*சத்தையும், நல்லெண்ணத்தை 4ம் பெறுகின்றன். ல, சரு தன் முழு இருதயத்தோடும் இயேசுவை வரவேற்கின்றான். அந்நியனாகவோ, விருந்தாளியாகவோ அல்ல; ஆண்டவராக மீட்பராக அவரை வரவேற்கினறான். அவ்வில்லத்தின் தலைமைத்துவம் தன்னிடம் இருத்தபோதிலும், இயேசுவை மதித்து பணிவுடன் வரவேற்கின்றான். இந்த லாசருவை இயேசு ஒரு இடத் தில் "என் சிநேகிதன்" என்று கூறியதை நாம் உணர வேண்டும். அவன் அவருடைய சிநேகிதனாக எண்ணப்பட்ட படியினால் அவன் மரித்தும் உயிர்த்தெழுப்பப்பட்டான்.
லாசருவைப்போல இயேசுவை ஏற்றுக் கொள்ளுபவர்களுக்கு நித் திய வாழ்வு உண்டு. ܗܝ
"கோயில் என்பதும் ஆலயமே! குடும்பம் என்பதும் ஆலயமே? என்பதாகப் பாடுகின்றான் ஒரு கவிஞன். இல்லறம் என்பது எவ்வாறு விமைய வேண்டும்? அதிலும் கிறிஸ்தவ (சகோதரத்துவ) குடும்பம் sтиLнд. இயங்க வேண்டும் என்பதை இவ் வரலாறு நன்கு சித்தரிக், கின்றது. மார்த்தாள் - மரியான் - லாசரு ஆகிய மூன்று கோணம் களையும் உள்ளடக்கியதாக குடும்ப ஜீவியம் அமைய வேண்டும். அப் பொழுது நிறைவாகிய கர்த்தரின் ஆசீர்வாதம் அங்கேயிருக்கும்; நிறைவானது வரும்போது குறைவுகள் எல்லாமே தீர்ந்துபோகும்
இதை வாசிக்கும் நாம் நமது இல்லற ஜீவியத்தில் இயேசுவுக்கு அளிக்கப்படும் இடம் என்ன? என்பது பற்றிச் சிந்தித்துச் செயற்படு வோம: க.
இதோ, உன் இரட்சிப்பு வருகிறது - ஏசா, 62 : 11
- ജ

-O ருேட்திரு.ஆர்.துரைராஜா
1984ஆம் ஆண்டு அருள் திரு. ஆர். துரைராஜா அவர்கள் எழுதிய “Pass the tOrch" என்னும் ஆங்கில நூலின் தமிழாக்கம்.
வையகம் ஒளியுற வளரும் சாட்சிகள்
3. சாட்சியாய் இருக்க ஆயத்தப்படல்
அப்போஸ்தலர் முதல் அதிகாரத்தில் படி அதை எழுதிய லூக்கா வின் நோக்கம் யறை பரப்பலாகும். புறg" தியினர் tத்துயில நம் பிக்கையை வலுப்படுத்துவதற்காக ஏனைய அ.ே: ஸ்தலர்கள் எழு திய ஒழுங்கிலேயே இவனும் கிறிஸ்துவின் நற செய்தியைத் தொடரு கின்றான். சபைக்குப் புறம்பான வகள் மத்தியில் திருச்சபை விசு வாசிகளைக் கொண்டே செய்தியைப் பரப்புவது லூக்காவின் பாணி யாக இருந்தது.
விசுவாசிகளின் பிரதிபலிப்புகள் அப்போஸ்தலர் முதல் அதிகாரத் தில் இரு பாகங்களாகப் பிரித்துக் காட்டப்பட்டுள்ளன.
1. இயேசுவானவர் ரமேறுதலுக்கு முற்பட்டவை (வச 1-11)
2. பரமேறனுக்கும் பெந்தெந்ொஸ்தே தினத்துக்கும் இடைப்
பட்டவை. (வ ச. 12 - 26)
இயேசுவானவர் உயிர்த்தெழுந்த பின்னர் நாற்பது நாட்கள் வரை அலரைப் பின்பற்றியவர்களுடன் இருந்து, விசுவாசிகளுக்குக் காட்சியளித்தார். (வச 3) புதிய ஏற்பாட்டின் வேறிடங்களில்
நான் உண்டாகாததற்கு முன்னும் நானே இருக்கிறேன் - ஏசா, 43 - 13
དག་མཁས་ 7 མཆག་ཤང་མ་

Page 6
அவர் தனிப்பட்டவரிகளுக்கும் காட்சியளித்ததாகக் கூறப்பட்டபோதி லும், ஒரு கூட்டத்தினருக்குத் தன்னை வெளிப்படுத்தியதாக அப். முதலாம் அதிகாரம் தெளிவுபடுத்துகிறது.
ஒருங்கிணைந்து காரியமாற்றவும், சாட்சிகளாக ஜீவிக்கவுமாக திருச்சபையின் தேவன் அவர்களை ஆயத்தப்படுத்தினார். அவர்கள் ஒன்றாயிருப்பார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களோடிருப்பார். "இக்தா, உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன் (மத், 28 : 20) என்பதாக இயேசு வானவர் அவர்களுக்கு வாக்களிக்கவில்லையா ?
இடைப்பட்ட அந்த நாற்பது நாட்களுக்குள்ளும் சிஷர்கள் மத்தி யில் உயிர்த்தெழுதலைப் பற்றிய நம்பிக்கை வளர்ந்து கொண்டே வந்தது. இப்பொழுது இயேசு கூறிய வார்த்தைகளெல்லாம் வெகு அர்த்தபுஷ்டியுள்ளவைகளாக அவர்களுக்குக் காணப்பட்டன, அவர் களுடைய ஜீவியம் முன்பு இருந்ததைவிட அவருடைய சத்தியத்திலே அதிகம் பின்னப்பட்டதாகக் காணப்பட்டது. அப், 1 : 8இல் இயேசு வானவரின் கூறறாகக் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைகளை அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன் கூறியிருப்பாரானால் அவை கேட்கிறவர்களுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருற் திருக்கமாட்டாது.
மனிதன் ஒப்புரவாகி - புதுப்பிக்கப்பட்டுப் பூரணத்துவம் பெறுவதற் காக இந்த நாற்பது நாட்களிலும் இயேசுவானவர் எமக்குத் தெளிவு படுத்திய செய்திகள் எத்தகைய சிறப்பு வாய்ந்தவை ? சிதறிப்போயி ருந்த சீஷர்களிடமாக அவர் திரும்பி, அவர்களை ஏற்றுக்கொண்டு, அவர்கள் மேல் நம்பிக்கை வைத்து, இரட்சிப்பின் செய்தியை முழு உல கிற்கும் கொண்டுசெல்லும் பாரிய பொறுப்பினை அவர்கள்மீது வைக் கிறார்.
இயேசுகிறிஸ்து பரலோகம் சென்றடைந்தபோது இடம் பெற்ற தாக பின்வரும் நிகழ்ச்சியை ஒரு எழுத்தாளன் வருணித்தான். இயேசுவானவர் பரலோகத்திற்கு எழுந்தருளியதும் அங்கே ஆவ லுடன் காத்திருந்த தேவதூதரிகளிடம் உலகிலே நடந்த சம்பவங் களைப் பற்றிக் கூறினார். ஆச்சரியத்தோடு அவற்றைக் கவனித்துக் கோண்டிருந்த தூதர்கள் "என்ன? துயர வேளையிலே உம்மைக் கைவிட்ட அந்த பெலவீனமான மனிதரிடமா உமது நற்செய்தியை விட்டு வந்தீர்?’ என்றார்கள்.
"அப்படியேதான்" - இது இயேசுவின் பதில்
“நானே கர்த்தர்; என்னையல்லாமல் இரட்சகர் இல்லை - ஏசா. 43 11
ല 8 ഞ

"அவர்கள் அதில் தவறிவிட்டால்..?" இவ்வாறு தைரியமாகக்
கேட்டான் ஒரு தூதன்.
"அதைவிட வேறு திட்டம் என்னிடம் இல்லை" என்றார் Guar.
இவ்வாறாக அச்சீஷர்கள் அவரது நம்பிக்கைக்குப் பாத்திரவான் களாக உயர்த்தப்பட்டார்கள். அந்நாட்கள் நம்பிக்கைக்குப் பாத்திர வானவையும், உதாசீனப்படுத்தமுடியாத - உண்மை நிறைந்த - மகிழ்ச்சிகரமானவையாயும் அமைந்திருந்தன. அந்த நாற்பது நாட் களிலும் இயேசுவானவரி அறிந்த முக்கியமான போதனைகளில் அடிப்படையான மூன்று விடயங்கள் அமைந்திருந்தன.
1. பரலோக ராஜ்ஜியத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி
6carnrif. w
தூய ஆவியானவரின் பிரசன்னத்தை உறுதிப்படுத்தினார்.
சீஷர்கள் பெற்ற அனுபவத்தைக் குறித்துச் சாட்சி பகரும் பொறுப்பினை அவர்களிடமே விட்டுவிட்டார்
* பரலோக ராஜ்ஜியத்தை மீண்டும் தருவீரா ?
இயேசுகிறிஸ்து பரலோக ராஜ்ஜியத்தைப் பற்றிப் பிரசங்கிக்கும் போதெல்லாம் கடவுளின் வல்லமையான இராஜரீகத்தை மையமாகக் கொண்டே போதிக்கிறார். அதுவே அப்போஸ்தலருடைய பிரசங்கங் களிலும் பிரதானமாக அமைந்தது. (அப். 20 : 25, 28 : 31) ஆதிக் கிறிஸ்தவர்கள் கடவுளின் மகத்தான கிரியைகளுக்கு மத்தியில் ஆவிக் குரிய இராஜ்ஜியத்தைக் கண்டார்கள். பரலோக ராஜ்ஜியத்தின் வருகையை அவர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பாரித்திருந்தார்கள் ஆனபடியினால்தான் அவர்கள் ஆண்டவரே, இந்தக் காலத்திலா இஸ்ரவேலுக்கு இராஜ்ஜியத்தைத் திரும்பக் கொடுப்பீர்?" எனக் கேட்டார்கள். இக் கூற்றானது யூதரின் மத்தியில் இருந்து வந்த புரியாத் தன்மையை அதாவது, "பரலோக ராஜ்ஜியம் இஸ்ரவேலின் பொற்காலத்துக்குரிய அரசியல் சொத்து" என்ற அவர்களது தவறான விளக்கத்தைப் பிரதிபலிக்கக் கூடியதாயிருந்தது.
ஆனால் இயேசுவோ, "தேவன் தமது திட்டங்களை எப்போது திட்டமிடுவாரி என்பது குறித்து நீங்கள் கவலைப்படாதிருங்கள். தமது ஜனங்களுக்குரிய நிகழ்ச்சித் திட்டங்களை அவரே தீட்டுகின் றார். பொறுமையுடன் காத்திருந்து நீங்கள் செய்யவேண்டிய பணி
நான் ; நானே உங்களுக்கு ஆறுதல் செய்கிறவர் - ஏசா. 51 : 12

Page 7
களுக்கான வல்லமையை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண் டியதே உங்களது பணியாகும். அவர் உங்களைப் பரிசுத்த ஆவியி னால் அபிஷேகம் பண்ணுவதாக வாக்களித்துள்ளார்" என்பதாக திடமான பதிலொன்றை அங்கே வழங்கினார்.
தேவனுடைய ராஜ்ஜியமானது அவருடைய திருச்சபைக்குள் ளேயே இருந்தது. அந்த ராஜ்ஜியத்துள் இருப்பது என்பது "கிறிஸ்து வுக்குள் இருப்பது" என்னும்போது "பரிசுத்தாவியின் அபிஷேகத் தைப் பெறுவது" என்ற விளக்கம் அவரிகளில் உதயமாயிற்று.
* பரிசுத்த ஆவியின் அபிஷேகங்கள்
லூக்கா குறிப்பிட்டுள்ள "பரிசுத்தாவி" என்னும் பதத்தினைப் புரிந்து கொள்ளாமல் அப்போஸ்தலர் நடபடிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுதல் சிரமமானது. பரிசுத்த ஆவி, தேவ ஆவி, கிறிஸ்துவின் ஆவி அனைத்தும் ஒன்றே. எனினும், ‘பரிசுத்த ஆவி' என்பதே அதிகமாகக் குறிப்பிடப்படுவது.
"ஆவி" என்ற பதத்திற்கு எபிரேய - கிரேக்க மொழிகளில் காற்று அல்லது மூச்சு என்றே பொருள் கொள்ளப்படுகின்றன. பரிசுத்த ஆவி என்பது கடவுளின் மூச்சேயாகும். இதுவே கடவுளின் இயல்பு. அது பார்க்க முடியாதது; ஆனால் உணரக்கூடியது. அதனால் நேரி டும் விளைவுகளையோ கண்டுகொள்ளலாம். அது ஒரு மனிதனில் இறங்கி அவனுக்குள் கிரியை செய்து அவனது ஜீவியத்தையே மாற்றி விடக் கூடியதாகும்.
அவ் விசுவாசிகளுக்குப் "பரிசுத்த ஆவி புதுமையானதாய் இருக்க வில்லை. "பரிசுத்த ஆவியே கடவுள்" என்பதை அவர்கள் அறிற் திருந்தார்கள். மேலும், கடவுளைப் பற்றியும், அதற்கு மேலாகவும் அவர்கள் அறிந்திருந்தார்கள். அது ஒரு உண்மையான விசுவாசியின் ஜீவியத்தில் கடவுளின் மர்மமான ஒரு வல்லமையாக இருந்தது. அது அறிவு - ஞானம் . தைரியம் - அன்பு - பெலன் இவைகளுக்கூடாக "கடவுள் எம்மோடிருக்கிறார்; கடவுள் நமக்குள்" இருக்கிறார் என் னும் உணர்வுகளைக் கொண்டதாக இருந்தது.
"பரிசுத்த ஆவி பண்டைய காலங்களிலேயே அறியப்பட்டிருந்த ஒன்றாகும், பழமை வாய்ந்த எபிரேய நூல்களிலும் - பழைய ஏற் பாடு முழுவதிலும் அதுபற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. பரிசுத்த ஆவி மனிதா' மீதிறங்கி அவர்களுக்குப் புதுமையான பலத்தினை அருளிய
நானே எல்லாவற்றையும் செய்கிற கர்த்தர் - ஏசா. 44 :24

தாக எபிரேயர் எழுதியிருக்கிறார்கள். (நியா 6:34) - அது தாவீது போன்றோரை நீதியும் ஞானமும் உள்ளவர்களாக ஆக்கிற்று. (ஏசா. 11 : 2) காலப்போக்கில் பரிசுத்தாவியானவருக்கூடாக கடவு வால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியமானது சாதாரண புனிதர்களை யும் தீர்க்கதரிசிகளாக மாற்றியது
கடவுளின் பிரசன்னத்தை ஆவி பிரதிபலித்தது. இப்பிரசன்னத் தின் பிரதிபலிப்பே இஸ்ரவேலின் மேல் வரப்போகும் அழிவின் செய் தியை எசேக்கியேல் அறிந்து கொள்ள உதவியாக அமைந்தது. பார்வோனின் சொப்பனங்களுக்குப் பொருள் கூற யோசேப்புக்கு வல்லமையை அளித்தது. தீர்க்கதரிசிகளுக்கூடாக தேவனுடைய வார்த்தைகளைக் கொடுத்து எச்சரித்தது. (சக. 7 : 12) (நெகே. 9:30) மோசேயினுாடாக யோசுவாவுக்கும். எலியாவுக்கூடாக எலிசாவுக்கும் தெரியப்படுத்தியது. "இந்த ஆவி தன்னில் தொடர்ந்து நிலைத்தருக்க வேண்டும்" என்றே தாவீது வேண்டுதல் செய்தான். (சங், 51 10,1) ஏசாயா அந்த ஆவியை "தேவ குமாரன்" எனக் குறிப்பிட்டான். (ஏசா. 42 : 1, 61 : 1). யோவான் ஸ்நானகன் "அக்கிணியினாலும், ஆவியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பவர் இயேசுவே" என்றான்.
அப்போஸ்தலர் நடபடிகளிலே செயற்படும் ஆவியானவர் வேறு
பட்டதும், விந்தையானதுமான ஒருவரல்லர். ஆதியில் இருந்த அதே ஆவியானவரே.
பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெறுங்கள்" என லூக்கா எழுதுவது ஏன் ? ஏனெனில், இயேசுவானவர் தமது ஞானஸ் நானத்தின்போது தான் பரிசுத்த ஆவியானவரால் அபிஷேகிக்கப் பட்டு தேவனுடைய குமாரன் எனவும் பிரகடனப்படுத்தப்பட்டார். வேதாகம வரலாற்றிலும், இயேசு கிறிஸ்துவின் ஜீவியத்திலும் இது பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இயேசுவானவர் செய்ததும் உபதேசித்ததுமான சகலமும் அவருக்கூடாகச் செயற்பட்ட கடவு ளின் மகத்தான வல்லமையென நற்செய்தியின் ஆரம்பத்தில் குறிக் கப்பட்டுள்ளதையே பேதுருவும் அப், 10 : 38 இல் சுட்டிக்கட்டு கின்றான். மாற்குவும் இதே நிலையிலேயே சுவிசேஷத்தை ஆரம் பிக்கின்றான்.
குறித்த ஒரு நோக்கத்திற்காக வழமைபோல பரிசுத்த ஆவி இறங்க வேண்டியதாயிருந்தது. அதாவது கிறிஸ்துவுக்குள்ளான கட வுளின் செயற்பாடுகள் இயேசுவின் சீஷர்சளுடைய சாட்சிகளுக் கூடாக நிறைவேற வேண்டியிருந்தன. அப்படியே சீஷர்கள் கிறிஸ்து வின் சாட்சிகளானார்கள். (தொடரும்)
என் வாக்கைக் கவனியுங்கள்; வேதம் என்னிலிருந்து வெளிப்படும் -
SJafa, 51 : 4 r !! --

Page 8
ஆத்தும நேசரின் அங்க மகத்துவம்
1882-ம் ஆண்டு வரையப்பட்ட ஒரு பாவியின் தியானக்காட்சி
1. இயேசுவின் பாதம் * இயேசுவின் பாதத்துக்குக் கல்லும் பஞ்சு போன்றதே.
*உமது பாதங்கள் கல்லில் இடறாதபடிக்கு அவர்கள் உ ம் மைத் தங்கள் கைகளில் ஏந்திக் கொண்டு போவார்கள்' - லூக், 4 : 11
இதை உண்மை யென்று நிலைநாட்ட சாத்தானின் அறிக் கை ஒன்றே போதும். வனாந்தரத்தில் இயேசு சோதிக்கப்பட்ட வேளை 'உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு. * என்பதாக பக்தருக்குச் சொல்லப்பட்ட வாசகம் இரட்சகருக்கே செல்லும் என்பதாக அறிக் கையிடுகின்றான்; அவருடைய பாதம் கல்லில் இடறாதாயின் அப் பாதங்களுக்குக் கல்லும் பஞ்சு போன்றது தானே.
* பிணியாளிகளின் வைத்தியசாலை
*சப்பாணிகள், குருடர், ஊனர், ஊமையர் முதலிய அநேகரை திர ளான ஜனங்கள் கூட்டிக் கொண்டு இயேசுவினிடத்தில் வந்து, அவர் களை அவர் பாதத்திலே வைத்தார்கள். அவர்களை அவர் சொஸ்தப் படுத்தினார் . மத், 15 : 30
இயேசுவின் காலத்தில் ஒரே ஒரு வைத் திய சா லை மட்டுமே அங்கு இருந்ததாகக் கூறப்படுகின்றது. அது ஐந்து மண்டபங்கள் உள்ளதாய், பெதஸ்தா குளத்தருகே இருந்தது. அக்குளத்தில் அற் புதங்கள் நடவாவிட்டால் அந்த மண்டபமும் இருந்திராது இயேசுவின் பாதம் ஒரு பெரிய வைத்தியசாலையாக இருப்பதனால் வேறு கட் டடம் அவசியமேயில்லை! இவ்வுலகில் தொற்று வியாதிகளுக்காக பல்வேறு வைத்தியசாலைகள் கட்டப்படுகின்றன. ஆனால், இயேசு வின் பாத வைத்தியசாலையில் வியாதிகள் தொற்றினதில்லை. வியாதி யஸ்தர் அநேகர் அவர் பாதத்தில் கூடிக்கிடந்தார்கள். அவர்களை
உங்கள் செவியைச் சாய்த்து என்னிடத்தில் வாருங்கள் - ஏசா, 55 : 3
- 12 -

அவர் குணமாக்கினார் உலக வைத்தியசாலையில் போன்று "பிண அறை இயேசுவின் பாத வைத்தியசாலையில் இல்லை. அங்கு வந்த அனைவருமே குணமடைந்தார்கள்.
* பிணி நீங்கினவர்களின் பள்ளிக்கூடம்,
பிசாசுகள் விட்டுப் போன மனுஷன் வஸ்திரம் தரித்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்தி தெளிந்திருக்கிறதைக் கண்டு பயந்தார் கள்" (லூக், 8 : 35) 'மரியாள். இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து அவருடைய வசனத்தைக் கேட்டுக் கொண்டிருந்தாள். (லூக், 10 : 39)
பிசாசுகள் நீங்கின மனிதனும், மரியாளும் அவருடைய பாதத் தையே தமது பள்ளிக்கூடமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்: பாவ நோயால் வருத்தப்பட்டு, பாவப் பாரத்தால் நொந்து போனவரி களுக்குப் பாவ மன்னிப்பாகிய இளைப்பாறுதலைக் கொடுக்கிறது மட்டுமல்ல; சாந்தமாயும் மனத் தாழ்மையுமாய் இருக்கிற என்னி டத்தில் வந்து ஞான மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள் என்றும் அழைக்கிறார் இயேசு
* தியானத்திற்கு
1. ஆத்துமாவே, மேகங்களை இரதமாக்கி, காற்றின் செட்டை களிலே பறக்கிறவருக்குக் கல் பஞ்சாவது அதிசய மோ? அதிசய மல்ல, என் ஆத்துமாவின் பாதங்களோ பொருளாசை என் னும் முட்களினாலும், பெருமை, அகங்காரம் என்னும் கற்க ளாலும் அடிக்கடி காயப்பட்டிருக்கின்றன. துன்பங்களும் வியா குலங்களும் என் ஆத்துமாவின் பாதங்களைக் கொப்புளம் ஆக்கி விடு கின்றன. இன்றோ நான் கல்லும் பஞ்சாக இருக்கக்கூடிய கனம் பொருந்திய பாதத்தையடைந்தேன்? அவருடைய பொற்பாதத்தின் துணையால் என் ஆத்தும பாதைகளை இனி ஒன்றும் சேதப்படுத்த மாட்டாது. இரட்சணிய பாதையில் எனது பாதங்கள் சறுக்காமல் போகும். ஏனெனில், கல்லும் பஞ்சாகிப் போகும் அப் பரிசுத்த பாதம் எனக்கு முன் சென்று சகல இடர்களையும், மோசங்களையும் ஒதுக்கி விட்டு எனது பாதக்களைச் சமாதான வழியிலே நிறுத்தும்,
2. ஆத்துமாவே, இதிலும் அதிகமாய் என் இரட்சகரின் பாதம் எனக்கு நல்ல வைத்தியசாலையாயிருக்கிறது. இனி என் பாவ நோய் தீரும்படியாக எங்கே ஒடுவேன்? என ஏன் புலம்பித் திரியவேண் டும்? பாவ நாசராய் வந்தவரின் பாதத்தில் சரீரப் பிரகாரமான
நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன் - ஏசா 44:19
r 18 -

Page 9
நோயாளிகளுக்கு இடம் கிடைத்த போது எனக்கு ஏன் கிடையாது ? நன்மையே செய்ய இயலாதிருந்த இந்த ஆத்தும சப்பாணிக்கு இப் பொழுது நன்மை செய்ய ஆசையும் தீர்மானமும் எழும்புகின்றன. ஆத்தும நேசரைக் காணாதிருந்த கண்களுக்குத் தெளிவு பிறக்கின் றன. ஆத்துமாவின் சத்துவங்கள் முறிந்து போய், பாவப் புழுதியில் உருண்டு கிடந்த ஊனனாகிய எனக்கு, அற்த பொற்பாதத்திலிருந்து புறப்படும் தைலம் புதிய் அவயவங்களைத் தருகின்றது. பாவமன் னிப்பின் சந்தோஷ கீதங்கள் ஒருநாளும் எழும்பாத என் ஊமை ஆத்துமாவின் உதடுகள் துதியின் கீதம் பாட இதோ துடிக்கின்றன. உபத்திரவங்ளே! வியாகுலங்களே துன்பங்களே! நாச மோசங்களே! பட்டயங்களே அதிகாரங்களே! வல்லமைகளே! பசியே மரணமே? உயர்வே: தாழ்வே! உங்களில் எவராலேயாகிலும் என் இயேசுவின் பாதத்திலிருந்து என்னைப் பிரிக்கவே முடியாது.
3. ஆத்துமாவே, நீ இயேசுவின் பா த த் தி லிருந்து பெற்றுக் கொண்ட நன்மைகளுக்காக உன்னை அவர் பாதத்திலேயே வைத்து வைப்பேன். அது என் வைத்தியசாலையாய் மாத்திரமல்ல; பள்ளிக் கூடமுமாய் இருக்கிறது, புனித பவுலுக்கு கமாலியேவின் பாதம் பள்ளிக்கூடமாய் இருந்தது. நானோ, இயேசுவின் பாத பள்ளிக் கூடத்தில் சேர்ந்து கொண்டேன். அன்பு - சந்தோஷம் - சமாதானம் தாழ்மை - நீடிய சாந்தம் - தயவு - உண்மை - பொறுமை - இச்சை படக்கம் - உலகத்தை வெறுத்துப் பரத்தை நோக்குதல் போன்ற ஞானகலைகளையும், பிசாசு, பாவம், உலகமாகிய பலத்த சத்துருக் களை ஜெயிப்பதற்கேற்ற புத்த கலையையும் ஆயுத பரிட்சையையும் avid Gas Luigi Guair. (தொடரும்)
திருமறைக் குறள் சில.
* யோர்தான் நதித்துறை ஓங்கும் விடிமீனை
யார்தான் புகழா தவர்.
காட்டுத்தேன் உண்டுழைத்துக் கான்வெளி நின்றமைத்து வீட்டுத்தேன் காட்டும் யோவான்.
大
பெருகவே யெம்மான் சிறுகவே நான்என்று உருகிய யோவானைப் பற்று.
★
ஆன்மாவை தூய்மைசெய் தாயத்த மாக்கும்யோ வான்மா முனிவனை வாழ்த்து.
உன்னை இரட்சிக்கும்படி நான் உன்னுடனே இருக்கிறேன் - எசே, 1 : 19

ஏனோக்கு - ஏ = நோக்கு
* 3. சாம் ஜெபத்துரை
2. நோக்கிப் பார்
ஏனோக்கு" என்ற பெயருக்கு "பிரதிஷ்டை செய்யப்பட்டவன்" என்ற பெயர் இருந்தாலும் கூட தமிழ்மொழியில் அவர் பெயருக்கு விசேஷ-வினோத அர்த்தம் உண்டு. ஏனோக்கின் பெயரை நாம் ஏ-நோக்கு என்று பிரிக்கலாம். தேவனை மட்டுமே நோக்கிப் பார்ப் பவர் என்பது அதன் பொருள்
பூமியின் எல்லை யெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்." (ஏசா. 45:32) அவர் கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாசமடைந்தார்கள் ; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை." (சங், 34:5)
உதாரணமாக, தானியேல்" என்ற பெயருக்கு "கரித்தரி நீதி செய்கிறவர்" என்று அரித்தம். அதே நேரத்தில் தானியேல் என்பதை தமிழ்மொழிக்கேற்ப விசேஷ விநோத வகையில் நோக்கினால் தா-நீ-ஏல்" "உனக்குரிய எல்லாவற்றையும் தா" என்று அர்த்தம், எந்த ஒரு மனுஷன் தனக்குரிய எல்லாவற்றையும் கர்த்தருக்குக் கொடுக்கச் சித்தமாய் இருக்கிறானோ, அவனுக்குப் பரலோகத்தின் ஐசுவரியம் எல்லாவற்றையும் தர கரித்தர் ஆயத்தமாய் இருக்கிறார்" என்பதே அதன் பொருளாகும்,
ஏ நோக்கு - பரலோகத்தின் தேவன் பூமியிலுள்ளவர்களை ஏ நோக்கு நோக்கு" என திரும்பத் திரும்ப அழைக்கிறார், "பூமியின் குடிகளே, என்னை நோக்கிப் பாருங்கள்" என்று அன்போடு கூப்பிட்டுப் பார்க்கிறார், ஆனால், மனுஷனோ தன் தன் வழியிலேயும், தன் பாவ ஜீவியத்திலும், துணிகர அக்கிரமங்களிலும் ஜீவித்துக் கொண் டிருக்கிறானே தவிர, கர்த்தரை-தன்னை சிருஷ்டித்தவரை நோக்கிப் பார்ப்பதே இல்லை. பூமிக்குரியவைகளையே தேடுகிறார்களே தவிர, மேலானவைகளைத் தேடுவதில்லை, நித்தியத்திற்கானவைகளை வாஞ்சிப்பதில்லை. பரலோக மகிமைகளைத் தியாவிப்பதில்லை. கர்த்தரை நோக்கிப் பார்க்காதபடி இப் பிரபஞ்சத்தின் லோகாதிபதி ஜனங்களின் மனக் கண்களைக் குருடாக்கிப் போட்டான், பாவமயம்
நீ என்னால் மறக்கப்படுவதில்லை - ஏசா. 44 : 21
r 15 m

Page 10
கங்கள், இச்சைகளின் மயக்கங்கள், கர்த்தரை நோக்கிப் பார்க்கா தபடி கண்களைச் செருகிப் போகப்பண்ணின. பாவங்களும் அக்கிர மங்களும் தடுப்புச் சுவராகி-உலகத்தாருக்கும் கர்த்தருக்கும் இடை யில் பிரிவினை உண்டாக்கிவிட்டன. உணர்வுள்ளவன் இல்லை, நீதி மான் இல்லை.
"தாம் பூமியில் மனுஷனை உண்டாக்கினதற்காக கர்த்தர் மனஸ் தப்பட்ார். அது அவர் இருதயத்திற்கு விசனமா இருந்தது." (ஆதி. 6:6)
அப்படிப்பட்ட நாட்களில் கர்த்தரை நோக்கிப் பார்த்த ஒரே ஒரு மனிதன்தான் ஏனோக்கு பாவ உலகத்தில் ஜீவித்தாலும் தன்னைப் பரிசுத்தமாய்ப் பாதுகாக்க வல்லமையுள்ளவரை நோக்கிப் பார்த்தார். அனுதினமும் கர்த்தரோடு சஞ்சரிக்க முதற்படிதால் கர்த்தரை நோக்கிப் பார்ப்பது. இரட்சிக்கப்பட வேண்டுமென்றால் என்னசெய்ய வேண்டும்? 'பூமியில் குடிகளே, என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்" என்கிறது வேதம்,
மனுஷருக்கு கரீத்தரை நோக்கிப் பார்த் விருப்பமில்லை. விவரது கட்டளைக்குக் கீழ்ப்படிய பிரியமில்லை. கட்டுப்பாடான ஜீவியம் செய்ய மனமில்லை. கண்களின் காட்சியின்படியே மனதும் மாம்சமும் விரும்பியபடியே ஜீவித்து எதிர்காலத்தைக் குறித்து அக்கறையற்றவர்களாக ஜீவிக்கிறார்கள்.
மேலேயே நோக்கிப் பார்க்காத மிருகம் இன்று உண்டு, அது பூமியின் அருவருப்பையே பார்த்துக் கொண்டு நடக்கும். அது சாகப் போகும் போதுதான் முதல் முறையாக வானத்தை நோக்கிப் பார்க் குமாம். அதன் நான்கு கால்களையும் கட்டி தலைகீழாகத் துரக்கிக் கொண்டு போகும்போதுதான் அது சூரியளைப் பார்த்துப் பிரமிக்கு: மாம். அது என்ன மிருகம் எனக்கேட்டால் உடனே "பன்றி” எனக் கூறிவிடுவீர்கள்
வேதாகமத்தில் ஐகவரியவான் ஒருவளைப் பற்றி வாகிக்கிறோம். 'அவன் இரத்தாம்பரமும் விலையேறப் பெற்றதுமான வஸ்திரம் தரித்து, அனுதினமும் சம்பிரமமாய் வாழ்ந்து கொண்டிருந்தான்." (லூக். 16:19)
அவனுக்கு நித்தியத்தைக் குறித்து எண்ணமில்லை. தேவனை நோக்கிப் பார்க்கவோ, அவரோடு சஞ்சரிக்கவோ கொஞ்சமும் மன மில்லை, உலகத்திற்காகவே வாழ்ந்தான். பூமியைப் பார்த்தே ஜீவித்து மரணித்தான். அதன் பின்னரே அவன் மேலே நோக்கிப் பார்க்க வேண்டிய பரிதாபமான நிலை வந்தது. ஆம். காலம் கடந்த
என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன் -ஏசா41 : 10
- 1, 8 -

பின் நரக அக்கினிக் கடலில் வேதனைப்படும் போதுதான் தன் கண்களை ஏறெடுத்து தூரத்திலே ஆபிரகாமையும் அவன் மடியிலே வாசருவையும் கண்டான். நித்தியமான வீடுகள், நித்திய ஆறுதல், நித்திய மகிழ்ச்சியை அவனது கண்கள் பார்த்ததேயொழிய அவனோ, அக்கினிக் கடலிலே, அக்கினி ஜ"வாலையிலே, அகோர தாகத்தோடு நித்தியமாய்ப் பாதிக்கப்பட்டுக் கிடந்தான்.
கர்த்தரோடு நடப்பதற்குப் பூமியில் வாழும்போது சந்தர்ப்பம் கொடுக்கப்படுகிறது. தேவபிள்ளையே, நீ இப்பொழுதே கர்த்தரை நோக்கிப் பார் எதிர்பார்ப்போடும் விசுவாசத்தோடும் நோக்கிப்
Tř.
"ஆண்டவரே, நான் உம்மோடு வழிநடக்க விருப்பப்படுகின்றேன். உம்மை நெருங்கிக் கிட்டிச்சேர நான் விருமபியும் அடிக்கடி சோர்ந்து போய் விடுகிறேனே! அடிக்கடி விழுந்து விடுகிறேனே! ஆண்டவரே! நீர் ஒருவரே என்னை ஜெயமாய் நடத்த வல்லமையுள்ளவர் என்பதை விசுவா சிக்கிறேன்" என்று ஜெபத்தோடு அவரை நோக்கிப் பார்! நிச்சய மாகவே அவர் உன் கைகளைப் பிடித்து நடத்துவார். அவரது அன்பின் சிநேகம் எவ்வளவு உத்தமமானது என்பதை எப்பொழுது நீ அறிந்து கொள்ளுவாய்,
நீ மனுஷரின் முகங்களை எதிர்பார்த்து ஏமாந்தது போதும்: கர்த்தரை நோக்கிப் பாரி
பர்வ்தங்களை நோக்கிப் பார்!
6 எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்." (சங். 121:1)
சகல ஒத்தாசைகளும், சகல நன்மைகளும், சகல ஆசிர்வாதங் களும் கர்த்தரிடத்திலிருந்தே இறங்கி வருகினறன. அவரை நோக்கிப் பார்க்காமல் இருப்பது எப்படி?
வேதவசனம், "பர்வதம்" எனக் குறிக்காமல் "பர்வதங்கள்" என்றே குறிப்பிடுகின்றது.ஆம், மலை ஒன்றுதான்; ஆனால், பர்வ தங்கள் பன்மையில் இருக்கின்றன. பிதாவாகிய பர்வதத்திலிருந்து வல்லமையின பராக்கிரமும், குமாரனாகிய பர்வதத்திலிருந்து தெய்வீக அன்பும், பாவமன்னிப்பின் இரத்தமும், பரிசுத்தா வியாகிய பர்வதத் திலிருந்து ஆவியின் வரங்களும், கனிகளும் நம்மை நோக்கி இடை விடாமல் வந்துகொண்டேயிருக்கின்றன. அல்லேலூயா!
நாம் நோக்கிப் பார்ப்பதற்கு எவ்வளவு மேன்மையான காரியங் கள் உண்டு. அநேகர் மேலே நோக்கிப் பார்க்காமல் பூமியையே பார்த்துக் கொண்டு நடக்கிறார்கள். ஒரு சிறுவன் ஒருநாள் கீழே கிடந்த ஒரு ரூபாய் தோட்டைக் கண்டெடுத்தான். அந்த ஆசை அவனைப் பண ஆசைக்கு அடிமைப்படுத்தியது. அது முதல் அவன்
என் கரத்தின் நிழலினால் உன்னை மறைக்கிறேன் -ஏசா. 51: 16
سس H7 سمم-سه

Page 11
கீழேயே பார்த்து நடக்கலானான். அவனது எண்ணமெல்லாம் தரை யிலே வேறு ரூபாய் நோட்டுக்கள் கிடைக்காதா? காசு கிடைக்காதா? என்றே சுழன்று கொண்டிருந்தது. தரையையே பார்த்து நடந்த அவனது முதுகு கூனிப்போனது. தன் மரண நேரத்தில் அவன் இழே இடந்து சேகரித்த பொருள்களை விடாமல் பிடித்துக் கொண்டிருந் தான். அவைகள் சோடா மூடிகள், குண்டூசிகள், பொத்தான்கள் இவ்வாறான இன்னும் சில அற்பப் பொருள்கள். அத்தோடு அவனது ஆயுள் முடிந்தது.
மகிமையான பொன்னொளி வீசும் பரலோக ராஜ்யத்தை வாஞ்கிக்காமல் கர்த்தருடைய இனிய முகத்தை நோக்கிப் பாரித்து நடக்காமல்-உலகத்தை அற்ப இச்சைகளையே நோக்கிப் பார்த்து நடப்பதால் பயன் என்ன?
தேவபிள்ளையே! நீ எதை நோக்கிப் பார்க்கிறாய்? “பூமிக்குரியவை களையல்ல; மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோ 3:2)
நட்சத்திரங்களை நோக்கிப் பார்!
"உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளை சிருஷ்டித் தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத் திட்டமாய்ப் புறப்பட்ப் பண்ணி, அவைகளையெல்லாம் பேர் பேராக அழைக்கிறவராமே", (6Java. 40:26)
இயற்கை நாம் தேவனுடைய மகத்துவங்களை அறிய எமக்கு உணர்த்துகிறது. தேவனோடு சஞ்சரிக்க எம்மைத் தட்டி எழுப்பு கிறது, வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின் றன. ஆகாய விரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக் கிறது, நட்சத்திரங்கள் அவரே நமது சிருஷ்டிகள் என நமக்கு அறிவுறுத்துகின்றன. மட்டுமல்ல நட்சத்திரங்களை வழிநடத்தும் விடிவெள்ளி நட்சத்திரமாகிய கிறிஸ்து நமக்கு உண்டு என்னும் போதிக்கிகின்றன,
நட்சத்திரங்களை நோக்கிப் பாருங்கள். உங்களைச் கிருஷ்டித்த அதே தேவன்தான் அவைகளையும் சிருஷ்டித்திருக்கின்றார். அவரி அவைகளையெல்லாம் பேர் பேராக அழைக்கிறவர் என வேதம் சொல்கிறது. அவர் உன்னையும் பெயர் சொல்லி அழைக்கிறார், அவர் உன்னை அறிந்திருக்கிறார்.
வாலிபன் ஒருவன் தேவ ஊழியன் ஒருவரிடம் ஒருநாள் இரவு சென்றான். "ஐயா, கிறிஸ்தவ ஜீவியத்திலே நான் விழுந்துவிடு வேனோ. என்கிற பயம் என்னை வாட்டுகிறது. என்னால் முடிவு பரியநிதம் நிலைநிற்க முடியுமா? என்கிற சர்தேகம் எனக்குள் அடிக்
எழும்பு எழும்பு; பெலன் கொள் - ரசா. 51 :9
= - 8 -

கடி எழுகிறது"-என்றான், அந்த ஊழியரி அவனுக்கு நட்சத்திரங் களைக் காட்டி "அவைகள் எல்லாம் விழுந்துவிடுமோ? நமது ஆண்டவர் அத்தனை கோடி நட்சத்திரங்களையும். அந்தரத்திலே, ஆகாய வெட்ட வெளியிலே லட்சம் லட்சமான வருடங்களாகவிழாதபடி தாங்கி வைத்திருக்கிறாரே. உன்னையும் விழாதபடி அவர் எளிதாகக் காத்துக் கொள்ளுவாரி என்றார். ஆம். அந்த நட்சத் திரங்களை உருவாக்கிய தேவனே நம்மையும் உருவாக்கினார் உருவாக்குகிறார். கடைசி வரை நம்மை நடத்துவார்.
வயல் நிலங்களை நோக்கிப் பார் !
"நோக்கு" எனக் கட்டளையிடும் கர்த்தரி நமது கண்களை வயல் நிலங்களை நோக்கித் திரும்பச் செய்கிறார். "இதோ, வயல் நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்."" (யோ. 4:35)
'வயல் நிலங்களை நோக்கிப் பாருங்கள்" கர்த்தர் அங்கலாய்ப் போடு நம்மைப் பாரித்துச் சொல்கிறார். "அறுப்பு மிகுதி. வேலை யாட்களோ கொஞ்சம்."
பக்தனான வில்லியம் கேரிக்கு இந்திய மக்களின் ஆத்தும மீட்பை யிட்டு அளவில்லாத பாரம் இருந்தது. அவர் இங்கிலாந்து தேசத்தில் செருப்புத் தைக்கும் தொழிலாளியாக வேலை செய்துகொண்டிருந்த போதிலும், அவரது உள்ளக் கண்கள் இந்திய நிலங்களின் அறு வடையை எண்ணியே ஏங்கிக்கொண்டிருந்தன. தனது மேசைக்கு முன்னால் பெரியதோர் இந்திய தேசப்படத்தைத் தொங்கவிட்டார். கைகள் செருப்புகளைத் தைத்துக்கொண்டிருந்தன. உள்ளமோ ஜெபித்துக் கொண்டிருந்தது. கண்களோ இந்திய படத்தை நோக்கிக் கண்ணிரை வடித்தபடி இருந்தன. “எப்பொழுது இந்தியாவைச் சந்திப்பீர் ஆண்டவரே!" என அக்கண்ணிர்த் துளிகள் கவலையோடு கேட்டன.
அவர் இந்தியாவுக்கு வந்தார்: கல்கத்தாவை மையமாக்கி வேதாகமக் கல்லூரி ஆரம்பித்தாரி. பல இந்திய மொழிகளில் வேதா கமத்தை மொழிபெயர்த்தார். அந்த வேதாகமத்தின் மூலமே "தேவனை நோக்கிப் பார்த்து அவரோடு சஞ்சரிப்பது எப்படி” என் பதை நாம் அறிந்து கொண்டோம்
தேவபிள்ளையே, ஏ-நோக்கு என்ற சொல்லில் எத்தகைய ஆழமான தேவசெய்தி உள்ளடங்கியிருக்கிறது பார்த்தாயா?
* தேவனை நோக்கிப் பார்! * ஒத்தாசை வரும் பரீவதங்களை நோக்கிப் பார்!
நட்சத்திரங்களை நோக்கிப் பார்! * ஏனோக்கின் வாழ்க்கையை நோக்கிப் பாரி (தொடரும்)
இதோ, உன்னைப் புடமிட்டேன் - ரசா. 45; 10
سے 19 سست۔

Page 12
வேதாகமப் புதிர் - இல. 005
★
8.
10.
சகல வினாக்களுக்கும் சரியான விடைகளை எழுதியவர்களுள் தேர்ந்தெடுக்கப்படும் முதல் மூவருக்கு 'பொக்கட் சைஸ் புதிய ஏற்பாடு" வழங்கப்படும். சரியான விடைகளை எழுதிய ஏளை யோரின் பெயர்கள் தொடர்பில் பிரசுரிக்கப்படும்:
உங்கள் விடைகளை அனுப்பும்போது கட்டாயமாக உங்களுடைய "தொடர்பு அங்கத்துவ எண்" ணைக் குறிப்பிடல் வேண்டும். அங்கத்துவ எண்ணைக் கொண்டிராதவை பரிசீலிக்கப்படமாட்டா a6M-5 sit selišs air Gíslaðir Fišgy Gär The Editor, Thodarpu,. Dason's, 90. Kandy Road, Kengalla. Grairp Gilantarëgdej 25.11.98 க்கு முன்னர் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.
இது யார் ?
"ஆறுதலின் மகன்" எனப்படுவது யார்?
பவுல் "பிரியமான வைத்தியன்" என்றது யாரை?
தேவனோடு போராடி மேற்கொண்டவன்" யார்?
திதிமு" என்ற மறு பெயர் கொண்டவன் யார்? . இஸ்ரவேலிலே நான் தாயாக’ என்றது யார்?
“சுவிசேஷகன்" என்று புதிய ஏற்பாட்டில் அழைக்கப்படுவது யார்? . "இதோ! கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" என அழைக்கப்படுவது
umrj? w இயேசுவுக்கு அன்பாயிருந்த சீஷன் யார்?
. ‘விசுவாசத்தில் உத்தம குமாரன்’ என பவுல் குறிப்பிடுவது யாரை?
"தேவனுடைய சினேகிதன்” என எண்ணப்பட்டவன் யார்?
புதிர் இல. 004 இல் பரிசு பெறுவோர்
- B, R, மாணிக்கம் - கொட்டகல: - செல்வி. ஜெபமலர் ஐயாத்துரை. பலாங்கொட, - A. வேதபாலகன் - மட்டக்களப்பு.
நித்திய கிருபையுடன் உனக்கு இரங்குவேன் - ஏசா, 54 : 8
سمتیہ 20 سے

ரசித்ததும் ருசித்ததும்
* தேனி
சிறந்த தேவ ஊழியன்
நமக்கு நல்லதொரு "மாதிரியாய்த் திகழ்ந்த பவுல் அப்போஸ் தலனின் சொந்த ஜீவியத்தைப் பற்றிய மூன்று குறிப்புகளை இங்கு அவதானிப்போம்,
பரிசுத்த ஜிவியம் *
"நான் இன்ன விதமாய் இருந்தேன் என்பதை நீங்கள் அறிந்தி ருக்கிறீர்கள்" (அப். 20 18)
‘விசுவாசிகளாகிய உங்களுக்குள்ளே நாங்கன் எவ்வளவு பரிசுத்த மும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தோம் என்பதற்கு நீங்களும் தேவனும் சாட்சி" (1 தெச 2 10)
"தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும் விசேஷ மாக உங்களிடத்திலேயும் கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோம் என்று எங்கள் மனது எங்களுக்குச் சொல்லும் சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது. (2கொரி 1 12)
"கர்த்தருக்கு முன்பாக மாத்திரமல்ல; மனுவுருக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிறோம் (2 கொரி 8 21) "நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறது போல, நீங்களும் என் னைப் பின் பற்றுகிறவர்களாயிருங்கள்". (1 கொரி. 4 18, 11 : 1) என்றெல்லாம் பவுல் தைரியமாய்ச் சொல்லக்கூடியதாய் இருந்தது.
தேவ ஊழியத்தில் காணப்படும் வல்லமைக்கு ஒரு பெரிய இரக சியத்தை இங்கே காண்கிறோம். அதென்ன? ஊழியக்காரனுடைய குற்றமற்ற ஜீவியமே. ஒருவனுடைய வார்த்தைகளல்ல; அவனுடைய ஜீவியமே அதிக வல்லமையுள்ளது. நமது பிரசங்கத்தைப் பார்க்கி லும் நமது நடக்கையையே ஜனங்கள் அதிக நுட்பமாய்க் கவனிப் பார்கள். நாம் ஓய்வு நாட்களில பிரசங்கிக்கிற நேரமெல்லாம் சேர்ந்து ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரமாயிருக்கலாம். ஆனால் நமது நடத்தையோ அந்த் வாரம் முழுவதிலும் பிர சங் கித் துக் கொண்டேயிருக்கும், அநேகர் வேதத்தை வாசிக்க மாட்டார்கள். அதைப் பிரசங்கிக்கிறவர்களையே கூர்ந்து கவனிப் பார்கள். நாம தான் அவர்களது வேத புத்தகம். நம்முடைய தவறான ஜீவியத்திலே நாம் பேசுகின்ற ஊக்கமான வார்த்தைகள் வல்லமையற்றுப் போகின்றனவா? நாம் செய்யும் பிரசங்கங்கள் சாதுரியமும், சொல்
இதோ, உன்னை என் உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன். ஏசா, 49:16
என 2 எண்க

Page 13
நளினமும், பொருளடக்கமும் பொருத்தியதாயிருக் கலாம். அது முக்கியமல்ல. நமது ஜீவியம் கிறிஸ்துவின் வாசனை பொருந்திய தாக இருக்கின்றதா? அதுதான் விசேஷம் நாம் ஆலயத்திலிருந்து மடமடவென்று பொழிகிற பிரசங்கத்தையல்ல; தெருவில் நின்று போடுகிற சண்டையையே ஜனங்கள் கவனிக்கிறார்கள். நாம் சில வேளைகளில் கடமைக்கென்று செய்கிற ஆவிக்குரிய வேலையையல்ல; ஓயாமல் நாம் செய்கின்ற லெளகீக வேலையையே அவர்கள் கூர்மை யாகப் பார்க்கின்றார்கள்.
நம்மில் அநேகருடைய நல்ல வேலையில் மெய்யான பலன் காணப் படாமல் போகிறதற்குக் காரணமே நமது ஜிவியம்தான்,
*சொல் வினையும் செய்வினையும் வேறுபட்டால் கண்ணால் கன் டதைச் செய்வார்களே யொழிய காதால் கேட்டதை எண்ணாரிகள்" என்றார் வீரமாமுனிவர்.
நம்முடைய சொல் வினையும் செய் வினையும் ஒன்றுதானா? நாம் பிரசங்கிக்கிறபடி நாமே செய்கின்றோமா?
பவுலின் போதனையும் சாதனையும் ஒன்று. "ஒன்றுக்கும் கவலைப் படாதிருங்கள்" (பிவி. 4 6) என எழுதியவர் "நான் ஒன்றையும் குறித் துக் கவலைப்படேன்" (அப். 20 23, 24) எனவும் தன்னைப் பற் றிக் குறிப்பிட்டார். "போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம் (1 தீமோ. 6 : 6) என எழுதியவர் "எல்லாவற்றி லும் மன ரம்மியமாய் இருக்கக் கற்றுக் கொண்டேன் (பிலி. 4 : 1) என்கிறார். "தேவ ஊழியக்காரன் இழிவான ஆதாயத்தை இச்சியா தவனும், பண ஆசையில்லாதவனுமாயிருக்க வேண்டும்" (1 தீமோ 33 என்று கூறியவர் "ஒருவனுடைய வெள்ளியையாகிலும் பொன் னையாகிலும் வ ஸ் திர த் தை யாகி லும் நான் இச்சிக்கவில்லை” (அப் 20 33) என்றும் கூறியுள்ளார்,
தேவ ஊழியரே! உங்களுடைய காரியம் எப்படி? இவ்வித ஜாக் கிரதை உங்களிடத்தில் உண்டா? உங்களுடைய ஜீவியத்தின் சகல விஷயங்களிலும் பரிசுத்தம் காணப்படும்படி நாடுகிறீாகளா ஆராய்ந்து பாருங்கள். உங்களுடைய தனி ஜீவியம் எப்படிப்பட்டது? லெளகீக வேலைகள், உலக கவலைகள், பன ஆசைகள் இவைகள் உங்களில் கானப்படுகின்றனவா? உங்களைக் கவனிக்கிற உங்கள் சபை யார் லெளகீகத்தையா கிறிஸ்துவையா உங்களில் காண்கிறார்கள்?
மறைத்து வைக்கப்பட்டிருக்கும் அந்தரங்க பாவம் ஏதாவது உங்களில் உண்டா? அசுத்தமான பார்வை, அசுத்தமான பேச்சு அசுத்தமான கிரியை என்பன உண்டா? உங்கள் குடும்ப ஜீவியத் தில் பரிசுத்தம் காணப்படுகிறதா? உங்களுக்கும் சபையிலுள்ள எந்த மனுஷனுக்கும் இடையிலே சண்டை உண்டா? உங்கள் வீட்டார் வேறெந்த வீட்டா ரோடும் பேச்சு வார்த்தை இல்லாதிருக்கிறார்களா? உங்கள் வீட்டுக்குள்ளே புருஷனுக்கும் மனைவிக்கும் மனஸ்தாபம்
பயப்படாதே உன்னை மீட்டுக்கொண்டேன் - ரசா. 48; 1
- 22 -

உண்டாகிறதுண்டா? உங்கள் குடும்ப ஜீவியத்தில் சீகரித்தருக்குப் பரிசுத்தம்" என்கிற வாசகத்தைத் தீட்டலாமா? தேவ னிடத்தில் உத்தரவு சொல்லுங்கள்.
உன் வார்த்தைகளைப் பாக்கிலும் உன் ஜீவியம் அதிக சத்த மிடுகிறதினால் நான் உனது வார்த்தைகளுக்குச் செவி கொடுக்க முடியாது" என்பதாக ஆங்கில வித்துவான் ஒருவர் எழுதியிருக்கின் றார். ஆம். உங்கள் வார்த்தைகளைப் பார்க்கிலும் உங்கள் ஜீவியமே அதிகமாக சத்தமிடக்கூடியதாயிருக்கிறது. அது எப்படிப்பட்ட சத் தம்? வாலிப னொ ருவன் இன்னொரு வாலிபனை நோக்கி, இயேசுவை நீகாண விரும்பினால் என்னோடு வா. என்று அழைத் துக் கொண்டு போய் ஒரு தேவ ஊழியனைச் சுட்டிக்காட்டி அதோ அவர் இயேசுவின் அச்சடையாளம்! கிறிஸ்து அவரில் வாசம் செய்கி றார். அவரைக் கவனி, இயேசுவை அவரில் காண்பாய்" என்றான். அதல்லவா கிறிஸ்தவ ஜீவியம் பவுல் அ ப் போ ஸ் த ல னு டை ய வார்த்தைகள் பலித்ததற்குக் காரணம் இதுதானே. "உங்களுக்குள்ளே நாங்கள் எவ்வளவு பரிசுத்தமாய் நடந்தோம் என்பதற்கு நீங்கள் சாட்சி" என்று கூறினாரே. உங்கள் சபை யார் நடுவில் நின்று கிறிஸ்தவர்களாகிய உங்களுக்குள்ளே நான் எவ்வளவு பரிசுத்தமும் நீதியும் பிழையின்மையுமாய் நடந்தேன் என்பதற்கு நீங்களும் சாட்சி தேவனும் சாட்சி" என்று உங்களால் கூற முடி யுமா? அவ்விதம் இருந்தால் நம்முடைய வார்த்தைகளில் பலன் இருக்கும்,
நம்முடைய சொந்த ஆத்துமஜீவியத்தின் வளர்ச்சிக்குத் தக்க தாகவே நமது சபையாரின் வளர்ச்சியும் இருக்கும். குரு எப்படியோ அப்படியே சீஷன். ஆகவே, சபையாரைப் பார்த்தால் தேவ ஊழி யணின் தன்மையை அறியலாம். சபையின் நிலைமை தேவ ஊழிய ரின் ஆவிக்குரிய ஜீவியத்தின் அளவு கருவியாகும். தங்க ளு ட்ை ய இடறலான ஜீவியத்தினால் கிறிஸ்துவுக்கென்று சாட்சி சொல்லக் கூடாதவர்கள்ாயிருக்கிற ஊழியர் அநேகர் இல்லையோ? அவ்வித மாய்ச் சொல்லப்படும் சாட்சியையும் தேவன் உபயோகிக்கக்கூடுமோ? அசுத்தமான பாத்திரத்தில் சுத்த_ஜலம் வார்த்து தாகத் துக் குக் கொடுப்போமா? கொடுக்க மாட்டோமே. அப்படியே தனது சொந்த ஒவியத்தில் சரியாயிராத எந்த ஊழியன் மூலமரயும் தாகழுள்ள ஆத்துமாவுக்கு ஜீவத் தண்ணிர் கொடுக்க தேவன் விரும்புவாரா?
"ஒருவன் இவைகளை விட்டுத் தன்னைச் சுத்திகரித்துக் கொண் டால் அவன் எஜமானுக்கு உபயோகமான பாத்திரமாயிருப்பான்" (2 தீமோ 2 : 21)
எஉன்னைக் குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையா யிரு; இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்கள்ையும் இரட்சித்துக் கொள்ளுவாய்" (1 தீமோ. 4 16)
O 1992 செப்டெம்பர் 'தூதன்' சஞ்சிகையிலிருந்து.
(அடுத்த இதழில் நிறைவுபெறும்
உன்னைப் பேர் சொல்லி அழைத்தேன் - ஏசா. 43 : 1
unius 23 ----

Page 14
விவாத அரங்கு
யார் குற்றவாளி ?
ஏவாளே குற்றவாளி !
* ஆதாமே குற்றவாளி என்றார்? ரூபராணி ஜோசப்
* இல்லை. ஏவாளே குற்றவாளி என்கிறார்கள் -
ஏ. பி. வி. கோமஸ் செல்வி. புளோரன்ஸ் ஜேசன்
* இதற்கு உங்கள் பதில் என்ன?
"யார் குற்றவாளி? ஆதாமே குற்றவாளி என்று குறை சுமத்தி யுள்ளார் ரூபராணி ஜோசப்.
மன்னிக்கவும். முதலில் எந்த ஒரு பொருளுக்கும் இரு பக்கங் as air got using yib “Every Picture has two sides' ' 'One man's meat is another man’s poison”” GTGår uGoda uyuh syarif - Lospjög af டாரி போலும். மேலும்,
அடுத்தவனை நோக்கி ஒரு விரலைச் சுட்டிக்காட்டும்பொழுது மூன்று விரல்கள் நம்மை நோக்கி மடக்கப்பட்டிருப்பதை நாம் நினைவு கூர்தல் வேண்டும். இது பொது விதி. ஏன் பெருவிரல் மேல் நோக்கி இருப்பதைக் கூட காணலாம். "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை; என்னைச் சொல்லிக் குற்றமில்லை; இறைவன் செய்த குற்றமடா" என்று சொல்வது போலுள்ளது. இந்த உண்மையைக் கட்டுரை ஆசிரி யர் 'கடவுளையுமே காரணமாக்க முயலுவதையும் இங்கு அவதானிக்க முடிகின்றது." ஏன்? விவாதத்துக்காக எடுத்துக்கொண்டால் இதில் என்ன தவறு இருக்கிறது. அது இறைவனின் விருப்பமாக இருந்தது' (The Wil of God) என்பதாகவும் இருந்தது. மேலும்,
*ஏவாள் - இவனது எலும்பின் எலும்பும், மாம்சத்தில் மாம்சமு மான மனைவியாக இருந்தமையினால் அவளும் இக்கட்டளையை அறிந்திருந்தாள் என்பதும் சொல்லாமலே விளங்கும்" என்று திட்ட
என்னை நோக்கிப் பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்சுக -
ஏசா, 45 : 22 മ്മ, 24 ത്ത

வட்டமாகக் கூறும் ரூபராணி, ஆதாமைக் குற்றவாளியாக்குவது விற் தையிலும் விந்தையே, ஆதாமிடம் கொடுக்கும் முன்னால் ஏவாள் கிந்தித்துப் பார்த்திருக்க வேண்டுமல்லவா? இதனால்தானோ என் னவோ "பெண் புத்தி பின் புத்தி" என்று சொல்கின்றனர். தொடர்ந்து
"ஆதாம் ஆண்டவரின் கட்டளையைத் தெரிந்திருந்தும் அதை மீறியுள்ளான்”, என்கிறார். இதனால் கீழ்ப்படியாமை இங்கே பிரதி பலிக்கின்றது” எனகிறார், "இதன் பொருட்டு மனிதவி தன் தற்தை யையும் தாயையும் விட்டு தவ மனைவச்யாடு ஒவறிததருப்பான’ (ஆதி 2:24) இவ்வாறிருக்கையில், ஆதாம~ஏவாள் கொடுத்ததை வாங்காமல இருநதிருநதால எண்ண திட-ந்திருக்கும். சிந்தனையை உங்கள் கறயனைக்கே விட்டுவிடுகினறேன,
மேலும, ஆதாமுக்குரிய அதே நிலையிலிருந்த ஏவாள் är Gåvsaw செய்தாவா எனபதை ஆதியாகமம 3:6 துலாமிபரமாகக் கூறவில லையா? "அப்பொழுது பென அந்த மரததவ கனி திவபதறகு நல்லது பார்வைக்கு இணியது அறிவைப Vறுவதறகு விரும்பத தக்கது எனக் கண்டு, அதைப் பறித்து - தானும் உண்டாள்; தன் கண வனுக்கும் கொடுத்தாள்.'" ஆக யார் முதலில் குற்றம் புரிந்தது என பது விளங்குகிறதல்லவா ஆதாமா முதலில் உண்டான்? "திரினும் உண்டாள் தவ கனவனுக்கும் கொடுததாள்" என்று தேடடத தெளிவாகக் கூறப்படுகிறதே. ஒருவேளை தான் குறறம் “+ባlffió! விட்டு ஆதாமையும் குறறத்துக்குவ இழுத்துப்போடவேணடும் என்று இப்படிசி செய்தாளோ? யார் கனடாாகள? என்னூ இருந்தாலும் முதல் குற்றவாளி - பாரிய குற்றவாளி ஏவாளேதான்.
இன்னுமோரிடத்தில் "ஆதாமின்பலவீனம் பளிச்சிடுகிறதல்லவா? என்கிறார் ரூபராணி, யார் பலவீனர்? என்பதை சாத்தான் கூட அறிந்திருந்தாளே, அதனால்தான் சர்ப்பம் ஏவாளிடம் சென்றது: ஆதாமிடம் வரவில்லை வந்திருந்தால் அதன் கழுத்து நெறிபட்டிருக் குமோ என்னவோ?
எனவே, ஏவாளே முதல் குற்றவாளி என்பது உள்ளங்கை நெல் லிக் கனி, -- ኛ - ஏ. பி. வி. கோமஸ்"
நீ அக்கினியில் நடக்கும்போது வேகாதிருப்பாய் - ஏசா, 43 : 2
sa 25 ans

Page 15
இன்ப லனமாம் ஏதேன்தோட்டத்துக் கதாநாயகன் ஆதாம். அவ னுக்குத துணையாய் சிருஷ்டிக்கப்பட்டவள் ஏவாள் (ஆதி. 2:17) தேவன் இட்ட கட்டளையை பூரணமாக நம்பியிருந்தால், அததுடன் ஆதி. 2:24ல் கூறியுள்ளபடி வ்ாழ்நதன். (புருஷன் தன் தாயையும், தந்தையையும்விட்டு, தன் மனைவியோடே இவசந்திருப்பான்; அவர்கள் ஒம்ர மாம்சமாய் இருப்பார்கள்):
ஆதாம் கடவுளால் படைக்கப்பட்ட மனிதன்; சிறு குழந்தை யல்ல. பூரண அறிவுளளவன். ஆத. 3:6னபடி ஏவாள அதின கனியைப் பறத்து, புசித்து, தன் புருஷனுக்குக் கொடுத்தாள், கணவனுக்குக் கொடுக்கு முனபே தான் புசிககறாள். வீட்டிலுள்ள ஆண்கள சாப்பிடு முன் சமைதததுமே பெண்கள சாப்படுவது சிறநத ஒரு செயலா? தன கணவனை அவன மதததிருந்தால சாப்பம் சொன்னதைக் கூறி யிருப்பாள, அல்லது ஆத முக்கு முதலில் கொடுத்திருப்பாள். சொன் ாைளா? இல்லை! கொடுததாளா? இல்லை! தான புசித்து பின் கொடுத்தாள. கணவனை மதிக்கவில்லை. இது முதற் குற்றம்.
இத்நிலையில் ஆதாம் "புசிக்க வேண்டாம்" என தேவ்ன் கூறிய கட்டங்களயை அறிந்திருந்தும் ஆதாம் புசித்தான். ஏன்? மனைவி மேலுள்ள அன்பு. கட்டளையை மீறிய ஏவாளுக்கு நிச்சயம் தண்டனை உவைஸ்டன்பதை அறிவான்.அவனுக்குத் துணையாக சிருஷ்டிக்கப்பட்ட ஏவாள் தனித்து வேதனைப்பட அவன் மனம் இடநதரவில்லை. இருவரும் ஒரே மாம்சமாய் இருப்பார்கள் என்பதை அறிந்திருந்த ஆதாம் தானும் புசித்தான். இன்பத்தில் மட்டுமன்ற துன்பத்திலும் பங்கு கொள்கறன். இவன்னப் போய் "குற்றவாளி வருவகிறாாகமள7 இது பொருநது மா? புசிக்கு முன்பே தெரிந்திருந்தால் கணடித்திருப் பான். தான் புசிதத பினனர் தாமன ஏவரில் அமி டுஹதாள, பிழையைச் செய்தபின் கண்டிப்பதில் லாபம் என்ன? மனைவி பிழை செய்து விட்டாளே எா அவனை விரட்டி விடாமலே அவளது பாவத் தில் பங்கு கொள்கிறானே- அவ்னைப் போறுப்பு வாய்ந்த கனவ வில்லை எனக் கூறுகிறார்களே! அதுதான் பொருந்துமா?
விருட்சம் அந்த இன்ப வனத்தின் நடுவிலே இருந்தது. அங்கு தான் சர்ப்பம் அவளிடம் பேசியது. இவள் ஏன் கணவனை விட்டுத் தனித்து வந்தாள்? இன்ப வனத்தில் தனித்து வந்த வஞ்சியிடம் வஞ்சகன் சர்ப்பம் பேசிய வஞ்சக வார்த்தைகள் நெஞ்சினில் நிறைந்திட - அஞ்சாமல் கனியைப் பறித்திட்டாள். தேவன் கூறியதை அப்படியே சர்ப்பத்திடம் கூறுகிறாள். (ஆதி. 3:2, 3) இது
நீ என்னுடையவன் - ஏசா, 43 :
- 26 -

தேவைதானா? பெண்களிடம் ரகசியம் கூறக்கூடாது என்பார்களே! இதற்குத்தான் போலும். அதைவிட தன் தந்தையின் (தேவன்) பேச்சைவிட மாற்றானின் பேச்சை கேட்கிறாளே, இவள் குற்றவாளி இல்லையோ?
இன்ப வனத்தில் ஆண்டவரின் குரலொலியைக் கேட்டு ஒளிந்து கொண்டபோது.முதலில் ஆதாமிடம் கேட்கிறார். "எனக்சுத் துணையாய்த் தரப்பட்ட ஸ்திரியே தந்தாள். நான் புகித்தேன். என்கிறான். அதன் பின்புஸ்திரீயிடம் "நீ இப்படிச் செய்தது என்ன?" எனக் கேட்க "சர்ப்பம் என்னை வஞ்சித்தது; நான் புசித்தேன்" என் கிறாள்.
தேவன் முதலில் செய்தது என்ன? (ஆதி. 3:14,15) சர்ப்பத்தைச் சபிக்கிறார். இரண்டாவதாக (ஆதி. 3:16) ஸ்திரிக்குத் தண்டனை வழங்குகிறார்.மூன்றாவதாகவே (ஆதி 3:17) ஆதாமுக்குத் தண்டனை வழங்குகிறார். இருவரிலும் ஆதாமே குற்றவாளியாக இருந்திருந்தால் தேவன் முதல் தண்டனையை ஆதாமுக்கே கொடுத்திருப்பா ரே. இங்கே நடந்தது என்ன? ஆதாமுக்கு முதல்- ஸ்திரியே தண்டனை பெறுகிறாள். ஆகவே ஆதாமைப் பார்க்கிலும் ஏவாளையே தேவன் குற்றவாளியாகக் காண்கிறார் என்பது தெட்டத் தெளிவாகிறது. தான் தவறு செய்தது மட்டுமல்ல; தன்_கணவனையும் தவறிழைக்க வைக்கிறாள். தான் பிழை செய்வதோடு பிறனையும் பிழை செய்ய வைப்பது பெரிதான குற்றமல்லவா?
இத்தகைய ஏவாளைக் "குற்றவாளி அல்ல" எனக் கூறுவது வெறும் அடமாள பொய். ஏவாள்தான் குற்றவாளி என்கிறேன் நான் இதற்குச் மறுப்புச் சொல்பவர் யார்? - செல்வி. புளோரன்ஸ்
அகஸ்திய ஞானம் 30:20
இது யாரைக் குறிக்கிறது?
வணங்குவாய் ஜெகஜோதி ஒருவனாகி மாநிலத்தை ஒரு நொடியில் வகுத்தே மண்ணில் குணமான மனிதரையும் படைத்த பின் குவலயத்திற் றானுதித்துக் குருவாய்வந்து கனமான சமுசாரம் ஒன்றில்லாமல் சன்யாசி போலிருந்து தவத்தைக்காட்டி அன்பான சித்தர்களை யிருத்திப்போட்டு ஆகண்டத8ஞ் சென்றவரை யண்டுவாயே
(சித்தர் - சீடர், அகண்டதலம் - பரலோகம்)
பயப்படாதே; நான் உன்னோடே இருக்கிறேன் - ஏசா, 43 : 5
- 27 ജ്ഞ

Page 16
வாலிபன்ே ! நீ ஒர் அம்பு !
தேவஊழியர்:- S.J. பத்திநாதன்
**வால வயதின் குமாரரி பலவான் கையிலிருக்கிற அம்பு" களுக்கு ஒப்பாயிருக்கிறார்கள்" (சங். 127 : 5)
இன்றைய வாலிபர்களை நாம் நோக்கும் பொழுது, அவர்கள் எமது கண்களுக்கு ஒரு வித்தியாசமானவர்களாகவே காணப்படுகி றார்கள். அவர்களுடைய நடை, உடை, பழகிகவழக்கம் பேச்சு, போக்கு எல்லாமே வியப்பும் ஆச்சரியமுமாக இருக்கின்றன. சில வாலிபர்களும், யுவதிகளும் வீட்டில் தரிக்காமல் கண்போன போக்கி லும், கால் போன பாதையிலும் தன்னிச்சைதாரிகளாகத் திரிந்து தங்கள் தாய், தந்தையர்கள். முழுக்குடும்பத்திற்குமே அவமானத் தைத் தேடி வைக்கிறார்கள். இன்னும் சில வாலிப உள்ளங்களை உற்று நோக்கும் பொழுது, அவர்கள் ஒரு வித சோர்வடைந்த நிலையில், "வாலிபம் ஒரு வெள்ளித் தட்டு” என்ற வார்த்தைக்கு எதிராக உற்சாகமிழந்தவர்கள் போலவும் பயத்துடனும், தி கிலுட னும் காட்சியளிக்கிறார்கள். ஒருசில வாலிபர்கள் தங்களுடைய மனக் கவலைகளைத் தீர்ப்பதற்கும், ஒருவித புதிய ரக (புத்தி தெளிவிக்கும்) புத்துணர்வைப் பெற்றுக் கொள்வதற்கு போதை மருந்துகளைப் பாவித்து மதுவை நாடி மாதைத்தேடி தங்கள் வாழ்க்கையின் எதிர் காலத்தைத் தாங்களாகவே சீரழித்துக் கொள்வதுடன், தங்களுடைய வாலிப சரீரத்தையும், பெலனையும் கறைப்படுத்திக் கெடுத்துக் கொள்வதுடன் தீராத நோயையும் தேடி, வலுவிழந்து போகிறார் கள். இறுதியாக அவர்களின் நிலை (நீதி 7: 21-03) ன் படி முடி வடைகின்றது.
இவ்வாறாக இன்றைய வாலிப சமுதாயம் இன்றைய கால கட் டத்திலே சீரழிந்து, போவதற்குக் காரணம் என்ன? இப்படியான வாலிபரைத் திருத்தவே முடியாதா? யார் இவர்களைத் திருத்துவது? இவர்களுக்கும் ஒரு எதிர்காலம் இருக்கிறதல்லவா?
ஆம் நிச்சயமாகவே இவர்களைத் திருத்த முடியும் இதை வாசிக்கும் வாலிபனே! நீ திருந்த முடியும் உனது எதிர்காலம் ஒளி மயமானதாகத் திகழும் ஜெக ஜோதியாப் விளங்குவாய் 'வாலிப ரின் அலங்காரம் அவர்கள் பராக்கிரமம்" (நீதி, 20:29) உன் வாழ்வு
நீ தண்ணீர்களைக் கடக்கும்போது நான் உன்னோடு இருப்பேன்-ஏசா,43:2
-- 28 ജ

ஜெய ஜீவியமாய் விளங்கும். இதற்கு நீ ஒரு காரியம் செய்ய வேண் டும். உன்னை யாராலுமே திருத்த முடியாவிட்டாலும், (பைபிள்) பரிசுத்த வேதாகமம் உன்னைத் திருத்தப் போகின்றது. நிச்சயமா கவே நீ திருந்துவாய், வேதக் கூறுகிறபடி நீ உன் வாழ்க்கையைத் திருத்தி அமைத்துக் கொள்வர் யானால், அதன்படி செய்வாயானால், நீ என்றும் பிழைத்து உலகத்தில் சுடராகப் பிரகாசிக்க முடியும்: ஆகவே வாலிபனே, நீ வேதத்தை வாசி தினமும் அதை தேசி, நீ சுகவாகி 'வாலிபன தன் வழியை ன்தனால் சுத்தம் பண்ணு வான்? உமது வசவித்தின்படி தன்னைக் காத்துக் கொள்வதால் தானே". ான வேதமே உனக்குப் புத்தி கூறுகிறது.
* “நீ உன் வாலிபப் பிராயத்தில் உன் சிருஷ்டிகரை
நினை' (பிர. 12:2)
இதுவே உனக்கு வேதம் கூறும் முதல் அறிவுரை. வாலிபர்கள் TTTTTLLS LLLLL TT kL S T ATTAe AALLAA SLALALL LLLLL LLLL LLLLLL TTT LT TTT சிருஷ்டித்தவராகிய (ஆதி 2:7) தேவனை நினைத்தால ஒரு போதுமே இடறலில்லை, ஆம், வாலி. சமேதராக ச்வ1 9:த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வளருங்கள்! நீங்கள எப்படிபபட்ட வராயிருப்பினும் தருந்தி வாழ முடியும். இயேசுவினுடைய இளமைப் பிாரயததை நினை! அவர் நடப்பித்த கரியத்தை நினை. அவரு டைய போதகத்தை நினைத்துப்பார் அவா செயத அற்புத அடை யாளங்கள நோயையான ஊழிய அர்ப்பணிப்பின் வாழ்ககையை நினைத்துப்பாா! அவருடைய கீழ்ப்படிதல், நீடிய பொறுமை, தாழ் மையை நினை! அவருடைய சிலுவைப்பாடுகளை நினை! மரணத் தையும் உயிர்த்தெழுதலையும் நினை! நிச்சயமாகவே உன் வழக கையில் மாறறம் காணப்படும், "ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல, கால் துரிதமானவன் தப்ப நடக்கிறான்” (நீதி 19:22 நீ உன் குடும்பத்தில் வாலாகாமல் தலையாவாய், கீழாகாமல் மேலா வாய், உன்னுடைய பெலத்தின் - ஞானத்தின் அம்புகளாய் உனது தந்தையும் தாயும் தங்கள் அம்பறாத் தூணியை நிரப்பி பாக்கிய வான்களாக இருந்து, அவர்கள் ஒரு போதும் நாணமடையாமல் எந்த இடத்திலும் நின்றுகொண்டு சத்துருக்களோடே பேசுவார்கள்? (நீதி 23: 19-26)
*வாலிபரே பொ ல் லாங் கனை நீங்கள் ஜெயித்தீர்கள்’ ( 1 G3 unir 2:13).
நீ ஆறுகளைக் கடக்கும்போது அவைகள் உன்மேல் புரளுவதில்லை -
ஏசா. 43 : 2
-مس، 9 دست

Page 17
* சாலமோன் ஞானி வாலிபர்களை ஏன் அம்புக்கு
ஒப்பிடுகின்றார் :
1. "அம்பு” குறித்த இலக்கை நோக்கி எய்வதற்குப் பயன்படுத்தப்
படுகிறது,
2, "அம்பு" எதிரியைத் தாக்குவதற்கு உதவியாக எந்த நேரமும் கூர்மை
யாக்கப்பட்டு அம்பறாத்தூணியிலே தயாராக இருக்கும்,
3. “அம்பு' எய்தால் தீவிரமாக முன்னோக்கியே செல்லும்; ஒரு போதும்
பின்நோக்கி வராது.
1. இதே போல வாலிபர்களும் குறித்த ஓர் இலக்கைத் தங்கள் வாழ்க்கையில் திட்டம் பண்ணிக்கொள்ள வேண்டும், இருமன முள்ளவன் தன் வழிகளிலெல்லாம் நிலையற்றவன்ாக இருக்கிறான். நீ தேவனுக்கென்று ஊழியம் செய்யப் போகிறாயா? அந்த இலக் கையே நோக்கி ஓடு, ஒருவன் தேவனுக்கும், உலகப் பொருளுக்கும், பிகியமாக இருக்கவே முடியாது உழைப்பும் வேண்டும், படிப்பும் வேண்டும், பட்டமும் வேண்டும் ஊழியமும் வேண்டும் என்றால் நமது வாழ்க்கையிலே ஒரு இலக்கு இருக்கவே முடியாது. இறுதியாக ஆவிக்குரிய வழியிலே ஜிவிக்க முடியாதவர்களாகப் பலவிதமான சோதனைகளில் அகப்பட்டு காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருப்பார்கள். அப். பவுல், ஒரு குறித்த இலக்கை தனக்கு நியமித்துக் கொண்டார். அந்த இலக்கை நோக்கியே இறுதி வரையும் ஓடினார், பெறுமையாக ஓடினாசி, ஜீவகிரீடத்தைப் பெற்றுக் கொண்டார். "என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்." (நீதி, 9 : 11) ஆகவே வாலி பர்களே! பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஒரு இலக்கை நோக்கி பொறு மையாக ஒடுங்கள்.
2. "இளவயதும் வாலிபமும் மாயையே" (பிர, 9 10) ஆகவே இந்த மா:ை எல்லாம் மாயையான உலகிலேகு (எபே.6:12) ன் படி (யோவான் 16 : 33) ன் பிரகாரம், உலகிலே பல விதமான சோதனைகளை மேற்கொள்ளவும், உலகம், மாம்சம், பிசாசு, இவை களை வெல்லவும், இவற்றிற்கு எதிராகப் போராடவும் வாலிபர்கள் தயாராக இருக்க வேண்டும். ஆண்டவரே கூறினார்:- "உலகத்தில் உங்களுக்கு உடத்திரவம் உண்டு ஆனாலும் திடன் கொள்ளுங்கள் நான் உலகத்தை ஜெயித்தேன்’ என்று (யோ. 16 : 33) ஆனபடி யால், (எபேசி, 6 13-17) இவைகளை நீங்கள் தரித்துக்கொண்டு, **வாலிபரே நீங்கள் பலவான்களாயிருக்கிறீர்கள்" (1யோ; 2:14)
உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் - எசே, 1 : 8
ം 80 -

பரிசுத்த ஆவியினால் நன்றாகப் பெலனடைந்து கூர்மையாக்கப்பட்ட அம்புபோல தயாராக இருக்கும் போதுதான், எதிரியான வனையும், மற்றும் எமக்கு விரோதமாக வரும் காரியங்களையும் ஜெயிக்க முடி யும், யோசேப்பு என்னும் வாலிபனைப் பற்றி ஆதியாகமத்தில் வாசிக்கிறீர்கள். அவனுக்கும் பலவிதமான சோதனைகள் அவனது வாலிப வயதினிலே ஏற்பட்டன. தானியேல், சாத்ராக், மேஷாக். ஆபேத்நேகோ என்னும் வாலிபர்களை தானியேலின் புஸ்த* த்தில் பார்க்கிறீர்கள், அவர்களுக்கும் பாபிலோன் ராஜா வினால் பெரிய பிரச்சினைகள் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்து நேரிட்டது, ஆனால் இவர்கள் எல்லாவற்றையும் ஜெயித்தrர்கள். காரணம். தேவாதி தேவன், ராஜாதி ராஜனாகிய கர்த்தரை விசுவாசித்தார்கள், அவர் மேல் உறுதியான அன்பு வைத்து, அவருடைய ஆலோசனைகளைக் கேட்டு உண்மையும் உத்தமமுமாக நடந்தபடியால் இஸ்ரவேலின் ஜெய பலமா னவர் அவர்களோடிருந்து அவர்களைப் பாதுகாத்தார். அவர்களுக்காக யுத்தம் செய்தார், அவர்களை வாலாக்காமல் - தலையாக்கினார். கீழா காமல் மேலானார்கள். அல்லேலுயா!
"அம்பு' களை எதிரியுடன் போராடுபவர்களின் 'அம்பறாத் தூணி" யிலே நிரப்பி அவர்களின் பின்புறமாக கோளில் மாட்டி வைத்திருப்பார்கள். அது பின்புறமாகவே தொங்கிக் கொண்டிருக் கும், வில்லில் வைத்து அம்பு எய்வதற்ஆரிய நோம் வரும் சமயம் அதை வைத்திருப்பகிர் பின்னால் திரும்பிப் பார்த்து 'அம்பு'களில் ஒன்றைத் தெரிவு செய்து எடுக்கமாட்டார். பின்னால் திரும்பினால் முன்னால் நிற்கும் எதிரியினால் தாக்கப்படலாம். இதனால் ஒரு அம்பு" வில்லில் வைத்து ந:ணேற்றி எய்தவுடன் உடனடியாகத் தன் கையைப் பின்னே செலுத்தி அம்பறாத் துர கிரியிலே இருக்கும் ஓர் "அம்பை" எடுத்து வில்லிலே வைப்பான். ஆகவே இந்த வில் லிலே வைக்கப்படும் 'அம்பு" எந்நேரமும், தலக்கி கூர்மையாக்கப் பட்டுத் தயாராகவே இருக்க வேண்டும். ஆகவே வாலி. சகோத ரர்களே! நீங்களும் தயாரான நிலையில் இருக்கிறீர்களா? "தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார்" (பிர, 11:9) என்பதை அறிந்து செயல்படுவாயாக, கர்த்தரிலும் அவரு.ைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படு! தினமும் வேதத்தை வாசி! ஜெபம் பண்ணு! ஆவிக்குரிய அறிவைப் பெற்றுக் கொள்! பரிசுத்த ஆவியானவர் உன்னைப் பெலப்படுத்துவார். பெலன் தருலார் உன் னைத் துலக்கி கூர்மையான 'அம்பு' ஆக்குவார். ‘என்னைத் துலக்க மான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத் தூணியிலே மூடிவைத்
தார்’ (ஏசாயா 49:2).
3; 'அம்பு" எய்தால் மிகவும் தீவிரமாக முன்னோக்கியே செல் லும்; ஒரு போதுமே பின்னோக்கி வராது:-
உருக்கமான இரக்கங்களால் உன்னைச் சேர்த்துக் கொள்வேன் -ஏசா 54:7
ഷം 81 -

Page 18
**கலப்பையின்மேல் தன்கையை வைத்துப் பின்னிட்டுப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவனல்ல" என்றார் இயேசு.
அன்பான வாலிபரே! யுவதியரே! நீங்கள் இன்றுவரை இயேசு கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக் ஏற்றுக்கொள்ளவில்லையா? (Too Late) "இளவயதும் வாலிபமும் மாயையே" என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என வேதம் கூறுகிறது. 'நீ உன் வாலிபப் பிராயத்திலேயே உன் சிருஷ்டிகரை (தேவனை) நினை" ஏற்றுக் கொள்! உனது சிநேகிதம் அவருடன் இருக்கட்டும்! உனது அன்பு அலிருடன் மகிமைப்படட்டும்! அவரோடு உறவாடு பேசு, அவருடன் ஐக்கியம் வைத்துக்கொள்! "எல்லாமே உனக்கு வாய்க்கும்" அவர் உன் ஆயுள் நாட்களைப் பெருகப்பண்ணி, உனக்கு நல் ஆலோசனைகளை யும், ஞானத்தையும் தருலார். உன்னை இடறாத செவ்வையான வழியிலே வழிநடத்துவார். பொன்னையும், பொருளையும், வாங் காதே! உனக்கு ஒரு வேதாகமத்தை (Bible) வாங்கிக் கொள்! அதிலே வாலிபனாகிய நீ வாசிக்க வேண்டியது: நீதிமொழிகள் முதல் 7 அதிகாரம் வரை, "அவைகள்தான் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்" (நீதி, 1:9) "என் மகனே! பாவிகள் உனக்கு நயம் காட்டினாலும் நீ அதற்குச் சம்மதி யாதே' (நீதி, 1:10)
இன்று அநேகம் வாலிபப் பிள்ளைகள் ஞானஸ்நானம் பெற்று (மறுபடியும் பிறந்து) இரட்சிப்பை ஏற்றுக் கொண்டு ஆவிக்குரிய ஜீவியம் ஜீவித்து, பரிசுத்த ஆவியானவருடைய அபிஷேகத்தைப் பெற்றும், வரங்களைப் பெற்றுக்கொண்ட பின்பும், இடறி விழுந்து டோகிறார்கள். "நீ கிறிஸ்து என்னும் சிலுவையில் அறையப்பட்டால் முன்னோக்சியே பார்க்க வேண்டும், சிலுவையில் அறையப்பட்டவன் பின்னே பார்க்கவே முடியாது. உனக்காகவும், உன்னை மீட்பதற் காகவும் இயேசு கிறிஸ்து பாடுகளை அனுபவித்து தீவிரமாக கொல் கொதாவை முன்னோக்கிச் சென்று மரித்தார். இரத்தம் சிந்தினார். ஆகவே! நீ இன்றே சிலுவையைச் சுமந்து கொண்டு தீவிரமாக முன் G6Tr孟岛。并 செல்வாயானால், நீ பாக்கியவான் ! " "முன்னே செல் வோம் நாம் எல்லோரும் முன்னே ச்ெல்லும் நாள் இதுவே" இன் னுங் கொஞ்சம் செல்வோம், இயேசு பக்கம் செல்வோம், முன்னே செல்வோம் நாம். வாலிபரே! யுவதிகளே கிறிஸ்தவ ஜீவியத்திலே நீங்கள் பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். "அம்பு" போல 'விர்" என்று முன்னே தீவிரமாக செல்லுங்கள் கர்த்தருக்கு ஊழியஞ் செய்யுங்கள், இலங்கைத் தீவை கர்த்தருக்கென்று ஆதாயம் பண் ணுங்கள். கரித்சராகிய ஆண்டவர் வரும்பொழுது உங்கள் ஆவி, ஆத்துமா, சரீரங்கள் குற்றமற்றதாக இருக்கட்டும். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார். 大
Y
பயப்படாதே; நான் உனக்குத் துணை நிற்கிறேன் - ஏசா. 41 : 13
سen+ 32 سسسس

ஸ்தோத்திர ஆராதனை
ஆராதனை முடிந்தது. அங்கியையும் மாற்றிவிட்டார் குருவான வர். வெஸ்ட்றி அறையில் வேகமாக நுழைந்த சபை உறுப்பினர் ஒருவர் நூறு ரூபாவை நீட்டி"ஐயா, இந்தக்காணிக்கையை ஏற்றுக் கொண்டு ஒரு ஸ்தோத்திர ஆராதனை ஏறெடுக்க வேண்டும்" என்றாா.
**இப்பொழுதுதானே ஆராதனை முடிந்தது. கொஞ்சம் முன்பே கொண்டு வந்திருக்கக் கூடாதா?’ என்றார் குருவானவர். அதற்கு அவர் சொன்ன பதில் குருவானவரை அதிர்ச்சியடைய வைத்தது.
**மலையாளத்திற்கு அனுப்பிய கள்ளக்கடத்தல் பொருள்கள் நல்லபடியாகப் போய்ச்சேர்ந்ததென்று இப்போதுதானையா தந்தி வந்தது.”* - வித்வான் ஆர். எஸ். ஜேக்கப்
இதோ! ஓர் இனிய செய்தி !
இ) இலவச - வேதாகம - அஞ்சல்வழிக் கல்வி
எல்லாம் வல்ல இறைநோக் கை
சொல்லால் காட்டும் சொரூபம் அது வல்லோன் இயேசு வாழ்வினை யும்
வளமாய் அருளும் வார்த்தை அது நல்லோர் தீயோா அனைவரை யும்
நடுநிலை தீர்க்கும் நாட்டம் அது அது வேதம் - சத்ய வேதம்.
அத் திருமறையாம் அருமறையை அழகு தமிழில் - இலகு நடையில் இலவசமாய்ப் பயின்று இறுதியில் பெறுவீர் சான்று ! * விபரங்களுக்கு 10 ஒரு ரூபா முத்திரைகளை
Directress, BBLECOR, 6, Balahenamulle Lane, Colombo-6 என்ற விலாசத்துக்கு அனுப்பி வையுங்கள்.
நீங்கள் விடு மாறினால்.
இன்றே உங்களது
புதிய முகவரியை
எமக்கு எழுதுங்கள் !
O பழைய முகவரியையும் இணைக்க
மறவாதீர்கள்.

Page 19
படித்துப் பாருங்கி
இலங்கை ஒல்லாந்த சீர்திருத்த இது. ஆன்மீகப் பசிக்கு அற்புத உண விபரங்களுக்கு : பாஸ்ற்றர் V மாவத்தை - !
வெள்ளி விழா ஆண்டை அணு
இலக்கியத் திங்களேடு. மட்டக்கள
தின் வெளியீடு, கதைகளுக்கூடாக சஞ்சிகை,
விபரங்களுக்கு : ஆசிரியர் - கி.
சமூகத் தொ
த. பெ. எண்
*இலங்கை இல்லந்தோறும் நற்ெ
பாக வெளியிடப்படும் மாசிகை. மும் அள்ளித் தரும் நல்லதோர் கி விபரங்களுக்கு : ஆசிரியர் - C, 6, i u Trij; u G
நாலாவது தசாப்தத்தைக் கிய - ஆன்மீக உணவளிக்கும் ஒரு வசனம் நிறுவனத்தால் வெளியிடட
விபரங்களுக்கு : ஆசிரியர் M.
தபால் பெட்டி
கண்டி மறை மாவட்டத்தின் ட
தொரு கிறிஸ்தவ செய்திப்பத்திரிை
விபரங்களுக்கு : ஆசிரியர் - அ
மறைக்கல்வி
15, குறுக்குத்
Printed by Meenambal Ganeshalingam Colombo-12, and Published by Bro. 90, Kandy Road, Kengalla for BIBLEC Lane Colombo 6, on 25.9.93.

கள் !
தூதன் * சபையின் காலாண்டுச் சஞ்சிகை ாவு தரும் அருமையான சஞ்சிகை. ', ராஜ்மோகன், 2, முதலியார் கொகுவெல, நுகேகொடை,
தொண்டன் * ணுகிக்கொண்டிருக்கும் கிறிஸ்தவ
ப்பு சமூகத் தொடர்பு நிலையத் கருத்துப் பரிமாற்றம் செய்யும்
ங்ஸ்லி றொபட், டர்பு நிலையம், ண் 44, மட்டக்களப்பு.
மன்றாடல் * செய்தி நிறுவனத்தால் விறுவிறுப் புத்தம்புது உணவுகளை நித்த றிஸ்தவ சஞ்சிகை.
P. சத்தியநாதன், ளேஸ், கொழும்பு 5.
சத்திய வசனம் * கண்ட - வளர்ச்சியுற்ற - அழ சாலாண்டுச் சஞ்சிகை. "சத்திய ப்படுவது.
S. வசந்தகுமார்
1012, கொழும்பு,
அருள் ஊற்று * மாதாந்த வெளியீடு இது. சிறந்த S is ருள்திரு. H. N ஏபிரகாம் நிலையம் , தெரு, நுவரெலியா.
at Kumaran Press. 201, Dam Street, Devadason Jeyasingh of Dason's COR - LANKA”, No. 6. Balahenamulla