கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாற்றம் 1995.01-03

Page 1


Page 2
வோழ்த்துகிறோம்.
疊
■
LL T S S T L S S S S S S S S S S LS
s. M. Fe
Fe dlO
எஸ்.எம்.பெர்னான்டோ :
கண்ணாடி வழங்குபவர்கள்
责女★
■
■
■
轟
■
■
580 ஆஸ்பத்திரி வீதி,
இலங்கை வங்கி அருகில்) யாழ்ப்பாணம்.
--
T T S T S S S S S S S S S S S S S S
 
 
 
 
 

L III GTI O3 முத்திங்கள் சஞ்சிகை பாதை 10
மாற்றம் இன்று தனது பத்தாவது இதழை வெளியிடுகின்றது. வாசக நெஞ்சங்களின் திருப்தியையே நோக்காகக்கொண்டு இத்தனை இதழ்களும் கடந்து இரண்டரை ஆண்டு காலமாக சுட்டெரிக்கும் வெய்யில்; சுழன்றடிக்கும் புயற் காற்று கொட்டுகின்ற மழை கொதிக்கின்ற பூமி இத்தனையும் தாண்டி வெளியிடப்பட்டிருக்கிறது.
கோடிட்ட கொப்பித் தாள்களில் கால்பதித்து மாற்றம் - மாற்றம் பெற்று உலகின் நவீன கணணித்தொழில் நுட்பத்தில் உங்களின் ஆதரவுடன் உங்கள் கரங்களில் தவழ்கிறது.
ஆசிரியர் - این

Page 3
கலைஞானி தொல்பொருள் சித்திர, சிற்பக்கலைக்கூடம்
KALAIGNAN'S Treasure House Of Architectural
Sculptural, Artis tical Monuments.
3, Palaly Road, Thirunelvely, Jaffna. Sri Lanka
.S.9 ... ...../ع گواہ چض
1११ध्* te2 4, ÓS era' ہم جو 1 ختحہ الاھے ۔ S KAAeS SheeiiS MAASS S AAASAAA qq AihiSieq qiiq 7-1 - ہوئے۔ سب مجھے موی گھ نے^{ہ حمحے : . >s:نھ سے حمچہ۔۔۔ ܠܝ ܘܟ « CPC Spas-Cessar. AAAA S S AAAAA AAAA JJSA A MAqAq g AM z AAAA AAAASAAiSJi g AAA ܪܳ2 ܐ ܪ ܒܧ ܐ̄ܪ1 ܝܕܟ ܫܕ݁ܰܐ ܨܝܟ݂ ܗܶ ܟ- ܢ ܚ ܬܥܘ ܘܡܗ ܗܶܧ ܲܪܝ ܐ ܪܐܖ ܧ ܐ-ܬܵܐ* ܐ ، ܧܝ G ܗܳܝ ܝܧܚܗ ܕ݁ܠܺܝ ܐ ܩ ܗ ܢܗܪܶܗ ܐܗ . ܪܕܘ ܝܗ̇ ܀ saܘ à ¬ܚܧܼ به صحربع یح دی • عبھی حصہ سے غے گئے و حمRی Uco Caeru- \s فعمولاک خیل –፲ t محمں ٹxخc JSYqS qLeAAA Aiii Sqqqqq S TTLiq qA qiq SAAS AAALLAAAAAAS AAALMAAS
مستعمہ سند ہیں ۔ ان بھی ح&ح کہ ہب س ن ختم ^““‘‘خ““ ESM AA AMAMSJJ SMMLMSq qqq S iiqSLLqiALASSii qqqqq LLSAS q LSAA SAAAAAALeLYS سیدھے حتہ مجء عے محمد”چیخ ' محمدحے کو قلعے (کہ تمہ ہے (حeح تصحیے تھے 7 جیبروصہ ایف بھول نہ لکھ نہ 01:r" لکھے ہلاجک نشہ سمیعے محرخے ہیں لیٰ حیے وہ سچی n } Ai iLiLeqS SSS ii iiLLL MAS SAiAieJAAS AAA AiiSiSه ده به۲ده
'a ://2༽ ༥ ༩ ༦ عر G A. 5 Reis ఉఊ~ ఆలa_4, ܘ«-j7ملا اصل_۔ بازیگهٔ ' ? 0 <تے ہوتا ܨܝܿܙܔܢ ܢܖܝܢܝ
W え A... t
P A م -w- ” Soserv 。 ad ( M 27 ༧་ ་་་་་་ 7 ta | - e> á ° C - L', atá ·
.ars t A * را 必<入” به ا^مه བ་༡ཀུ༦ཉ༡༣ དང་ 2 4 برے چھہد<ھگے ܝܰ, ന
ببل“ چاہتمہ ہو۔ کوہہ ہو ۔ نیم ، مقا بھگدڑ',
af V لاجتمع as , بر SSSkSeYYS AqA MeAeA AA qqAiA AA eSMSAS A * * aSb ~ on a من عليه يجح حجحقق حسخه دہ یہ مہیجان *പ
8
) ? ' (' ') ലത്
یہ حصہ جو کہ سی ٹNدھکے ر دو سرعد 176احے 91ھ کیسے۔ دشمنی , ལ། ཅ་བག། } (ہسپاہرہ چھنگلہ دیشے
مجھے ہی علم همسایه " ; , , , ལམ་ ས་སྐྱའི་དར་སྤེལ་བའང་། ང་
 

சுமையிழந்த அந்த வறட் சியான வயல்வெளிப்பரப்பில் அங் காங்கே பச்சயம்பூசிய மரங்கள் தென் பட்டன. வெய்யிலுக்கு ஒதுங்கக்கூட இடமில்லாமல் செல்கிறது அந்த தார் வீதி. அந்த வீதியிலிருந்து ஒரு மணற் பாதைஅமல அன்னை அன்பகத்திற்குச் செல்கிறது. இது யாழ் நகரிலிருந்து நாலுமைல் தூரத்தில் அரியாலையில் உளளது.
வாசலில் இரண்டு சவுக்கு மரங்கள் வறட்சிக்குச் சவாலாக வளர்ந்து இருக்க, சிறியசெவ்விளநீர்க்கன்றுகள் வரிசையாக நிற்க. ஆங்காங்கே பூ மரங்களும், குறோட்டன்களும் அழகு காட்ட அங்கே வளரும் சிறுவர்களது உள்ளத்து நிறத்தில் தனக்கு வர் ணம்பூசிக்கொண்டு நிமிர்ந்துநிற்கிறது அந்த மாடிக்கட்டிடம்.
(அருட்) தந்தை S.A. மைக்கல்சாமி
ஐம்பது பிள்ளைகளின் தந்தை
நாம் அங்கு செல்லும் வேளை யில் சிறுவர்களது ஆரவாரம் அதிக மாகியது. அந்த பக்கமாக பார்வையைச் செலுத்தினோம். பாய்களும், ரவலிங் பைகளும் இல்லத்திலிருந்து வயல் வெளிப்பக்கம் வீசப்படுவது தெரிந்தது
திக்விஜயம்
விசாரிக்கையில் "அவர்கள் மூட்டை
களுடன் போராடுகிறார்கள்” என
தந்தை S.A. மைக்கல்சாமி கூறினார்.
அந்த அன்பகம் 1986ம் ஆண்டு திரு. ஜோசப்பாலா, திருமதி ராஜன் மங்களா, தந்தை வின்சன்ட் பற்றிக், அருட்சகோதரிசோபியா ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டதாம். கத்தோலிக்க மதத்தின் நிறுவனமான இதற்கு ஜேர்மன் நாட்டிலிருந்து மாதாந்தம் 25000ரூபா உதவியாகக் கிடைக்கிறதாம்.
இவ்வுதவி அன்பகத்தின் செலவினத்தில் பாதியை ஈடுசெய் கிறதாம். மீதியை பொதுமக்களதும், ஏனைய உதவிவழங்கும் நிறுவனங் களில் இருந்தும் இடைப்பதாக 1993ம் ஆண்டு தொடக்கம் பொறுப்பாக இருக்கும் அருட்தந்தை S.A.மைக்

Page 4
கல்சாமி கூறினார். மைக்கல் சாமிக்கு உதவியாக ஆசிரியர் ஒருவரும், றஞ்சினியும் சுகந்தியும் ஆடு, மாடு, கோழி போன்றவற்றைப் பராமரிக்க அருமை என்பவரும் உள்ளனர்.
அங்கு கிட்டத்தட்ட ஐம்பது சிறுவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் மாணவர்கள். ஆகப் கூடியது 18 வயது வரையானவர்கள் வரை உள்ளனர். ஆனால் தந்தை 16 வயதுவரையான மாணவர்களே உள்ளார்கள் என்றார்.
இங்குள்ள சிறுவர்கள் பூரீ பார்வதிவித்தியாலயத்திலும், பூம்புகார் பாடசாலையிலும் கல்விகற்கிறார்கள். சிறுவர்கள் ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்று அவர்களுடன் கதைக்கும் வேளை அ. பிரன்சீஸ் என்பவன் “காலையிலே 5.15க்கு எழும்பவேண்டும் லீவு நாட்களில் 6 மணிக்கு எழும்பலாம். தினமும் 10 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். காலை7 மணிக்குச்
※ i
சாப்பாடும் ரீயும். லிவு நாட்களில் 8 மணிக்கு கிடைக்கும். 11மணிக்கு ரீ அல்லது றிங்ஸ் தருவார்கள். 1மணிக்கு மத்தியானச் சாப்பாடும். மாலை 6 மணிக்கு ரீயும், இரவு 7.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை படிக்க வேண்டும். 8.30 மணிக்கு சாப்பாடு தருவார்கள். ” என கூறினான்.
- தர்வழிகன் -
அப்பன் என்னும் சிறுவன் மூட் டைப்பூச்சிகளுக்கு மருந்து அடித்துக்
கொண்டிருந்தான். அவன் எம்மைப்
பார்த்து “இங்கே மூட்டைப் பண்ணை போல எல்லாச் சாமான்களிலும் ஒரே மூட்டைப்பூச்சிகளாய்தானிருக்கு” என
சினந்தான். அங்கே ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தனித்தனிக் கட்டிலும், கபேட்டும் கொடுக்கப்
பட்டுள்ளதை எமக்கு ஒருவன் காட் டினான். கட்டிலுக்கு மேல் அடுக்காக
 
 
 
 
 

கட்டில் இருப்பதைப்பார்த்து"சிறுவர்கள் விழமர்ட்டார்களா?” என்று கேட்க “சிலபேர் விழுந்து எழும்பி இருக் கிறார்கள் தான்” என்றார் மைக்கேல் சாமி. "இந்தக் கட்டில்ல படுக்கிறது பெரிய ஆபத்தண்ணை” என்றான் ஒருவன்.
பழையகாலத்து றேடியோ ஒன்று யன்னல் கம்பியில் வைத்துக் கட்டப்பட்டிருந்தது. ரீ. வி. ஒன்று சீலையால் மூடிக்கட்டப்பட்டிருந்தது. புதிய நவீனரக ரேப்றெக்கோடர் ஒன்று அருட்தந்தையின் அறையினுள் வைக் கப்பட்டிருந்தது. இவை பாவிக்கப்படு கிறதா? என பிள்ளைகளிடம் கேட்ட போது “அண்ணை ஜெனரேட்டர் ஒன்று கிடக்கு பழுதாப்போச்சு அதைத்திருத்தினால் படம் பாக்கலாம். பாட்டுப்போடலாம். நீங்கள் அதை திருத்தி விச்சுத்தாங்ககோவன்.”
என்றான் அமலன். அவன் படிப்பிலும்
கெட்டிக்காரன் அனேகமான பாடங் களில் 75 புள்ளிக்கு மேலே எடுத்தி ருந்தான்.
அங்கே தொழிற்பயிற்சியும் கயிறுதிரித்தல், ஆடை தைத்தல், தோட்டம் செய்தல், ஆடு, மாடு, கோழிவளர்த்தல் போன்றன. தினமும் ஒரு ஒழுங்கு முறையில் தோட்டத்திற்கு
பிள்ளைகளுக்கு வழங்குகிறார்கள்
நீர் இறைக்கவேண்டும். விலங்குகளைக்
கவனிக்க வேண்டும். கூட்டிச்சுத்தம் செய்ய வேண்டும். “கோழிகள் 5 உள்
ளது. அதில் 4 முட்டை இடுகிறது. மாடும் பால்கறக்கிறது. இவற்றை நாங்கள்
தான் பாவிக்கிறநாங்கள். தோட்டத்து மரக்கறிகளையும் நாங்கள் தான் சாப்பிடுகிறநாங்கள்" என்றாள் சாந்தி
என்னும் வயதுக்கு வந்த பெண்பிள்ளை.
அங்கே நாம் போகும் விடுதியில் இருந் தவர்களில் அவளே பெரியவள்.
சாப்பாட்டுக் கோப்பைகள் வைத்
திருந்த இடத்திலிருந்து தேனீர்க்
குவளைகளை எல்லோரும் எடுத்துக் கொண்டு வாயிற்பக்கமாக பிள்ளைகள் போனார்கள். நாமும் முன்பக்கம் போனோம். பிள்ளைகள் வரிசையாக

Page 5
கோப்பைகளுடன் நிற்க றஞ்சினி எல்லோருக்கும் அளவாக குளிர்பானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தக்காட்சியை எமது கமராவுக்குள் படமாக்கிக்கொண்டு மறுபக்கம் பார்வையை திருப்பினோம். சதீஸ் என்னும் சிறுவன் அங்குள்ளவர்களில் மிகவும் இளையவன் குருவானவருடன் கட்டிப்பிடித்து விளையாடிக் கொண டிருந்தான். சிறிது நேரத்தில் உருட்டி விளையாடும் ஒரு தாரா விளை யாட்டுப் பொருளை உருட்டிக் கொண்டு ஒடித்திரிந்தான். அதை வேறொரு குரவானவர் அன்பளிப்புச் செய்ததாக கூறினார்கள்.
LDrrliguls) அங்கே பெண்பிள்ளைகள் தங்கும் இடம் என்பது புரிந்தது. அந்த இடத்துடன் இணைந்து மலசல கூடவசதி காணப்பட்டது. ஆயினும் மின்சாரமின்மை,தண்ணீர்ப்பிரச்சினை காரணமாக அவை பயன் படுத்துவ தில்லையென ஒரு பெண்பிள்ளை
ஏறிப்பார்த்தோம்
கூறினார். கீழே 4 மலசல கூடங்கள் இருப்பதாகவும் அவற்றில் 2 பாவிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் இரண்டை மட்டுமே தாங்கள் பாவிப்பதாகவும் இதனால் காலையிலே காலைக்கடன் கழிப்பதில் பெரும் சிரமங்களை தாங்கள் எதிர்நோக்கு வதாகவும் பிள்ளைகள் கூறினார்கள்.
தர்ஷினி என்ற சிறுமி மிகவும் சுறுசுறுப்பாக ஒடித்திரிந்தாள் அவளைக் கூப்பிட்டு கதைகொடுத்தோம். அவள் தனது இடம் கொக்குவில் என்றும் தனது தகப்பன் டொக்டர் என்றும் கூறினாள். றஞ்சினியிடம் விஷயத்தைச் சொல்லி விசாரித்த போது "தகப்பன் சிங்களம், தாய் தமிழ், தகப்பன் இறந்த பின்பு தாய் இவளை அநாதரவாக விட்டு விட்டு எங்கேயோ சென்று விட்டாளாம். இதன்பின் இவள் வீடு வீடாக அலைந்து திரிவதைப்பார்த்து விட்டு கொக்குவில் நவநீதன் டாக்டர் இங்குகொண்டுவந்து சேர்த்து விட்டார். அதுதான் தனது தகப்பன் டொக்டர் என்கிறாள் இங்கேயுள்ள கன பிள்ளைகள் இப்படியான பிரச்சினையுடையவர்கள் தான்” என்றார்.
சாப்பாடு எப்படி இருக்கிறது என்பதைப் பார்கக சமையலறைப் பக்கம் போனோம். அங்கே சுகந்தி என்கிற ஒரு குடும்பப் பெண் சமையய்க்காரியாக இருந்தாள். அவளுடனும் கதையைக் கொடுக் கையில் "நான் ஊர்காவற்துறை தற்போது இடம் பெயர்ந்து அரியாலை மணியரசன் முகாமில் இருக்கிறேன்; எனது குடும்பம் மிகவும் ஏழ்மையானது . இங்கு சம்ைச்சால் மாதமொன்றுக்கு
சமையல்,
 
 

800/= தருவார்கள் .” என்று கூறினாள். அவளுடைய சமையலறைச் செயற்பாடுகளில் எங்களைக் கண்ட வுடன் ஒருவித படபடப்பு இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது. சமைய லறைப்பக்கம் வந்த றஞ்சினி "நானும் மாதகல்லஇருந்துஇடம்பெயர்ந்துதான் இங்கு வந்திருக்கிறேன். நானும் அம்மாவும் தான் தனிய, அம்மாவும் என்னுடன் இங்குதான் இருக்கிறாங்க எனக்கு 1000/= சம்பளம் தருகிறார்கள்” στσότρυπή.
நேரம் ஒரு மணியிருக்கும் "அன்ரி கடலை சாப்பிட வாரட்டாம்” என்று கூறிக்கொண்டு முன்பக்கத்துக்கு சிறுவர்கள்ஓடினார்கள்.எல்லோருக்கம ஒவ்வொரு பிடி கடலை கொடுத்தார் றஞ்சினி. எமக்கும் ஒவ்வொருபிடி கடலை கிடைத்தது. “எங்களுக்காகத் தான் கொடுக்கிறீர்களோ? அல்லது வழமையாக கொடுக்கிறநீங்களோ? என்று கேட்க “ஒரு நாள் 600/=க்கு ஜஸ்கிறீம் கூட வாங்கிக்கொடுத்தி ருக்கிறோம்" என்று கூறினார்கள்.
பிள்ளைகளுக்கான மருத்தவ சுகாதார வசதிகள் எப்படி என்று
கேட்டபோது “கொலி குறோஸ் வைத்திய நிலையத்தினர் மாத மொருமுறை வந்து பரிசோதனை
செய்வார்கள். வேறு சுகயினங்கள்
இங்கு வந்தாலும் முதலில் அங்கு கொண்டு செல்வோம். அவர்கள் ஆலோசணைப்படியே சகல வைத்தி யங்களும் மேற்கொள்வோம்” என்றார் மைக்கல்சாமி.
வாசலில் அழகுக்காக வைக்கப் பட்டிருந்த மீன்தொட்டியிஞள்ள மீன்களுடனும், லவ்பேட்ஸ்களுடனும சிலர் விளையாட்டாக சில செயற் பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர்.
து. நிக்ஷயா என்பவருடன் கதைக்கும் பொழுது "என் அப்பா இறந்து விட்டார். படிக்கத்தான் விருப்பம் நான் ஆறாம் ஆண்டு வந்தேன். ஐந்துவருடம் இருக்கிறேன். நான் பிள்ளைகளுக்கு உதவி செய்ய வேண்டும். மற்ற வர்களுடன் ஒற்றுமையாய் வாழ வேண்டுமென்ற விருப்புமுண்டு” என் றார்.
அமைப்புக்கள் சில மத மாற்றம் செய்வதற்காக சேவை என்று சொல்லிக்கொண்டு செயற்ப டுகின்றன. அப்படியிருக்கும் வேளை யில் கிறிஸ்தவர்களால் நடத் தப்படும் அமல அன்னை அன்ப கத்தார் இந்து பிள்ளைகளை அங்கு இந்துக்களாகவே வாழ வழி அமைத்திருப்பது மிகவும் பண்பான செயல் என்றே எம்மை நினைக்கத் தூண்டுகிறது.
இனிவரும் காலங்களில் இந்த உலகத்தில் ஆதரவற்றவர்கள் என்று யாரும் அநாதரவாக அலைந்துதிரியக்

Page 6
கூடாது என்னும் நல்ல சபதத்தை ஏற்றிருக்கும் அமல அன்னை இல்லம் போன்ற அமைப்புக்கள் உலகின் மூலை முடுக்கெல்லாம் அமைக்கப்பட வேண்டும்.
பிறந்தநாட்களையோ நினைவு நாட்களையோ ஏன் நாம் இந்த ஆதரவற்ற சிறுவர், சிறுமியர் வாழும் இல்லங்களில் கொண்டாடி அவர்க ளையும் மகிழ்வித்து நாமும் மகிழ்
விக்கக்கூடாது? என்ற கேள்வி என்னுள் எழுந்தது.
இனிமேல் தோன்றுகின்ற
அரும்புகள் பூவாகுமுன்னம் கருகிப் போய்விடக்ககூடாது. அனைவரும் இத்தகைய சிறந்த தோள்கொடுத்து உதவிசெய்வோம் என்ற உறுதியடன் இல்லத்திலிருந்து வெளியேறினோம்.
தலையைக் கையில்
வைத்திருக்கும் தாய்
ஒளவையார்
U60 flig5 . .
குளிர்ச்சி பெற -
செம்பரத்தை இலையை நன்றாக அரைத்து அதன் சாற்றை தலைக்குத் தேய்த்து ஸ்நானம் செய்துவர முடி நன்றாக வளர்ந்து கண்ணுக்கும் குளிர்ச்சியை அளிக்கும். கண்பார்வை நன்கு பெற
பொன்னாங்காணிக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்து வர கண்பார்வை நன்கு தெரியும். வாய் வேக்களத்திற்கு -
அகத்தி, வல்லாரைக்கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துவர வாய்வேக்காளம் குணமாகும். நெஞ்சில் சளி ஏற்பட்டால்
தூதுவளை இலையை நன்றாக அரைத்து கொட்டைப் பாக்களவு காலை, மாலை, ஒரு நாளைக்கு இரண்டுவேளை சாப்பிட கபம் வெளியாகும்.
மாலைக்கண் நோய்க்கு
தினசரி முருங்கைக்கீரையை சிறிது நாள் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும்.
தொகுப்பு - க. கனகராசா
ஆக்கம் - பூரீகுமரகுருபரர்
 
 
 

siker வேலைகளையும் முடித் துக் கொண்டு புறப்பட நினைத்த போது பின்னேரம் ஆகி விட்டது. நிமிசக் கம்பி வேகமாக ஓடுவது போல். அவனுக்கு எரிச்சலாக வந்தது. கடிகாரத்தையே வெறித் துப்பார்த்த படி சற்று நேரம் நின்றான். அவை எதற்குமே அஞ்சாதவை போல் அமைதியாக ஒடிக்கொண்டிருந்தன.
"சே என்ன வாழ்க்கை” அவனு டைய உதடுகள் முணுமுணுத்தன். சைக்கிளை எடுத்தான். உடனே போய் கந்தசாமியைப் பார்த்திட்டு வாங்கோ. அவர் எங்கையோ தூரத் திலை ஒர் வீடு இருக்கு தெண்டு சொன்னவராம். நேற்றைக்குக் கந்தப்பு வாத்தியாரின்ரை செத்த வீட்டிலை வைச்சுப் பாக்கியமக்கா சொன்னவா அவரைப் பிடிச்சால் அந்த வீட்டை எடுத்துப் போடலாமாம்” கமலினி கூறிய வார்த்தைகள் அவனை ஒரேய டியாகக் கந்தசாமியின் வீடு நோக்கித் தள்ளிக் கொண்டிருந்தது.
“கந்தசாமி இப்ப தன்ரை வீட்டில் நிக்கிறானோ அல்லது எங்கை துலைஞ்சு போனானோ அவன் உள் ளதுக்கையே ஆளப்புளுகன்”ராசனின் சிந்தனை அலைகள் பல விதமாகவும் சுழன்று வீசின. அவனுடைய சலிப்பு
நியாயமானது தானா என்று அடிக்கடிதன்னைத் தானே கேட்டுக் கொண்டான். அவன் இளமையின் சுகங்களைத் துறந்து விட்டுப் பத்து வருடங்களுக்கு முன்னால் 9-6. திக்குச் சென்றவன். இவ்வளவிற்கும் அவன் படிக்க வேண்டு மென்ற ஆசை உள்ளவன் தான். படிப்பிலை கெட்டிக் காரன் வகுப்பிலை அவனை மிஞ் சிறத்துக்கு ஒருத்தரும் இல்லை. மாணவர் களின் எந்த ஒரு காரியமும் அவனுடைய வழிகாட்டலில்த்தான் நடைபெறும். ஆசிரியர்களுக்குக் கூட அவனுடைய அறிவுக்கூர்மையின் மீது ஒரு ஆச்சரியக் குறி இருந்தே வந்தது. இதன் காரணமாகவே அவன் மற்ற மாணவர்களை விட மேன்மை பெற்ற வனானான்.
கல்விப் பொதுத் தராதரச் சாதாரண பரீட்சையிலே சிறந்த பெறு பேற்றினைப் பெற்றுக் கொண்ட போது கூட அது பாடசாலையில் எல்லோரும் ஏற்கனவே எதிர்ப்பார்த்த ஒரு விடயமாகவே தென்பட்டது. எல்லோ ருடைய பாராட்டுகளையும் சுமந்து கொண்டு அளவிட முடியாத பெரு மிதத்துடன் வந்தான். தன்னுடைய வெற்றியினை உடனடியாக வீட்டிலே போய்த் தாய்க்குச் சொல்ல வேண்டும் என்ற உத்வேகமே அவனை உந்திக்கொண்டு இருந்தது.
"இதை உடனே போய்
அம்மாவிட்டைச் சொல்ல வேணும்
UllooU
அவா என்ரை நிப்பாட்ட

Page 7
எத்தினை நாள் நினைச்சவா" அவா நினைச்சதெல்லாம் பிழையெண்டு உடனை போய்ச் சொல்ல வேணும் நானும் மற்றவையளைப் போலை மேல்ப் படிப்புப் படிச்சுப் பல்கலைக் கழகம் போக வேணும். போகத்தான் வேணும். და — L—60) 60T அம்மாவிட்டை என்ரை முடிவைச் சொல்லிப் போடவேணும். அதோ டை".தகப்பனின் நினைவுவந்தபோது அவனுடைய முகம் திடீரெனக் கறுத்து- சுருங்கி- அவமான உணர்வால்க் குன்றிப் போனது. “சீ. மானங்கெட்ட பிறப்பு எங்களை அவ மானப்படுத்த எண்டே திரியுது”அவன் மனத்தில் முதல்நாள் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சங்கிலித்தொடராக நினை விற்கு வந்தன.
முதல் நாள்பின்னேரம், அவன் படித்துக்கொண்டிருந்தபோது படலை திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவன் தலையை நிமிர்த்திப் பார்த்த போது. ஆறுமுகத்தைக் கைத்தாங்கலாகப் பிடித்தபடி இரண்டு பேர் வளவிற்குள் வந்தனர். ஒரு விதத்திலும் நிலை கொள்ளாமல் ஆறுமுகத்தின் தலை சுழன்றாடிக் கொண்டு இருந்தது.
is......
போய்
வாயிலிருந்து வார்த்தைகள் அனுங் கல்களாக வெளிவந்தது கொண் டிருந்தன, அவனுக்கு எல்லாம் விளங்கி விட்டது. தாய் பரிமளம் ஒப்பாரி வைத்தபடி அங்கே ஒடினாள். அவள் எழுப்பிய ஒலம் கொஞ்ச நேரம் மூலை முடுக்கு எல்லாம் எதிரொலித்தது. வேலிகளிற்கு மேலாகச் சில பழகிய முகங்கள் எட்டிப் பார்த்துக் கொண் டன. ஆறுமுகத்கை கொண்டு வந்த வர்கள் நிகழ்ந்தவற்றைச் சொன் னார்கள்.
"இவர் மூக்கு முட்டின வெறியிலை கந்தப்பு வாத்தியாரின்ரை வீட்டுப் படலையடியிலை விழுந்து கிடந்தவர். உடுப்புகளும் கழண்ட நாங்கள் தான் கண்டிட்டு இவரை ஒரு மாதிரித் தூக்கி இஞ்சை கொண்டு வந்திருக்கிறோம்" அவர் களில் ஒருவன் சொல்லி வாய் மூடுவ தற்குள், ஆறுமுகம் வேகமாகப் பாய்ந்தார்.
டேய், ஆரை யடா மரியாதை
“மேகதூதன்”
யில்லாமல் குடிகாரன் எண்டு.” அவர்களை நெருங்குவதற்கு முன்னரே ஆறுமுகம் தன்னை நிலைப் படுத்த முடியாமல் தரையிலே மல்லாந்து விழுந்தார். ராசனுக்குப் பகீரென்றது.
" கந்தப்பு வாத்தியார் தானே எனக்கு வகுப்பாசிரியர் நான் கெட்டிக்காரன் எண்டு அந மனிசன் என்னிலை எவ்வளவு'அன்பும் மதிப்பும் வைச்சிருக்குது. அதெல்லாத்தையும் இ.ந்த”. அவனுக்கு ஓவென்று கதறி ஆழ வேண்டும் போலிருந்தது.
மெளனமாக இருந்தான். அவன் அவை களை மறக்கத்தான் முயன்று கொண் டிருந்தான். அவனுடைய வாழ்க்கையில்
 
 

இப்படி எத்தனையோ கசப்பான சம்ப வங்கள் உருண்டோடி விட்டன.
★女★
அவன் படலையைத் திறந்து ஏதோ குசு குசுத்துக் கதைத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கந்தசாமி அவனுக்குத் தூரத்துச் சொந்தக் காரன் தான். கந்தசாமிக்கு ராசனை விட ஐந்து அல்லது ஆறு வயது கூட இருக்கலாம். அவனுடைய வீட்டுக்கு அடிக்கடி வந்து போவான். கந்தசாமி தான் பரிமளத்திற்கு ஆலோசகன். அவனிடம் ஆலோசனை கேட்காமல் அவள் எந்த முடிவையும் எடுப்பதில்லை. அவள் அவ் வளவிற்கு அவனுடைய புத்திக் கூர்மையிலே நம்பிக்கை வைத்திருந்தாள்.
ராசனைக் கண்டவுடனேயே கந்தசாமி முந்திக் கொண்டான். "தம்பி வாரும் உம்மைப் பற்றித்தான் உம்மு டைய அம்மாவும் நானும் கதைச் சுக் கொண்டிருக் கிறோம்”.
“ஓம் ராசன் கந்தசாமியின்ரை சிநேகிதப் பெடியன் ஒருத்தன்
ஏஜென்சியாய் இருக்கிறானாம். இப்ப O O. O. O. O. O. O. to O O. O. O. O. O.
மனிதன்
விதிக் குழந்தையின் விளையாட்டிற்காக பிரம்மனால் உருவாக்கப்பட்ட விளையாட்டுப் பொம்மை. - கருண நேசன் -
கன பேரை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டானாம்.நம்பிக்கையான ஆளாம். அது தான் நகை நட்டை வித் தெண்டாலும் உன்னையும் சவுதிப் பக்கம் அனுப்ப யோசிக்கிறோம்” - - - - - - - - - - அவளும் சேர்ந்து கொண்டாள்.
அவனுடைய இதயமே ஒருகணம் அதிர்ந்தது. தான் பரிட் சையில் சித்தியடைந்ததைச் சொல்ல வேண்டு மென்று சொல்ல முடியாத ஆர்வத்துடன் வந்தவன். ஆனால் இங்கு.? கந்தசாமியைக் கொலை செய்து விட வேண்டும் போல் ஆத்திரம் பொங்கியது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான். கந்தசாமி தன் காவிபடர்ந்த பற்கள் தெரியச் சிரித்துக் கொண்டிருந்தான்.
"9DLDIT! ........... எத்தினையோ நாள்ச் சொல்லிப் போட்டேன். நான் ஒரு இடமும் போக மாட்டேன். படிக்க வேணுமெண்டது தான் என்ரை ஆசை. அதைச் சொல்லத்தான் நான் இப்ப ஓடி வந்தனான்".
அவர்கள் அவன் சொன்ன வைகளைப் புரிந்து கொண்டது போல் தெரிய வில்லை.
"இஞ்சேர் தம்பி, நான் சொல்லிறத்தைக் கேள். உன்னைப் படிப்பிக்க என்னட்டை என்ன வசதி இருக்குது? வயது வந்த ரெண்டு குமருகள் இருக்கு. நீ போய்க் கொஞ்ச மெண்டாலும் உழைச்சாத்தான் நான் அதுகளுக்கு ஏதாவது வழிபண்ணலாம். அதோடை நானும் வருத்தக்காரி என்ரை ஆயுளும் நிச்சயமில்லை. நீ இதுக்குச் சம்மதிக்க வேணும். இல்லை யெண்டால் நான் சாகிறத்தைத் தவிர வேறு வழியில்லை”
இதுக்கு மேல் ராசனுக்கு

Page 8
என்னசொல்வதென்று தெரியவில்லை அவனுடைய மெளனம் அவர்களுக்குப் பச்சைக் கொடி காட்டி விட்டது. இறுதியில் அவனுக்கு வேறு வழி தெரியவில்லை.
女★女
அவனிடமிருந்து ஆழ்ந்த பெருமூச்சு வெளிபட்டது. நினை வலைகள் மாறிமாறிப் புரண்டு கொண் டிருந்தன. இன்னும் கொஞ்சத் தூரம் போனால் கந்த சாமியினுடைய வீடு வந்துவிடும்.
女女女 அவன் சவுதியில் ஐந்து வரு டங்களாக மாடாய் உழைத்தி
ருக்கிறான்.கொதிக்கும்வெய்யிலிலும். கொட்டும் பணியிலும் அவன் பட்ட துன்பங்கள். அவைகளை இன்னும் ஒரு தடவை நினைத்துப பார்க்கவே அவனால் முடியவில்லை. அதற்குப் பிறகு கொழும்புக்கு வந்து தன்னுடைய பழைய சினேகிதன் ஒருவனின் உதவியோடு ஜெர்மனிக் குப் போய்விட்டான். பரிமளம் எத்னையோ கடிதங்கள் அனுப்பிய பின்னரும் கூட் அவன் கொழும்பி லிருந்துதன்னுடைய வீட்டுக்கு வரவே யில்லை; ஜெர்மனியில் ஐந்து வருடங்ககள் ஓடாய்த் தேய்ந்து. இரண்டு அக்காமாருக்கும் அடுத் தடுத்துக் கல்யாணம் நடைபெற்று விட்டது. இப்போதுஅவன்தன் சொந்த மண்ணிலே மீண்டும் கால்வைத்து நான்கு ஆண்டுகள் தான் ஆகின்றன. அவன் இங்கு வந்த போது கந்த சாமியின் ஆலோசனையோடு பரிம ளமே தேடிக் கமலினியை அவனுடன் இணைத்து விட்டாள்.
அவன் தன்னிடம் மிச்சமாய்
. காப்பிற்காக
இருந்த ஐந்து இலட்சம் ரூபா பணத்தில் ஒரு சிறிய கல் வீட்டினைக் கட்டு வித்தான். தானும் கமலினியும் மேற் கொள்ளப் போகின்ற புதிய வாழ்க் கைக்காகத் தனது மேற்பார் வையிலேயே அதனை முடித்து விட் டதில் அவனுக்குப் பெருமைதான். கிட்டத் தட்ட வேலைகள் யாவும் முடி வடைந்து விட்டன. புதிய வீடடில் குடி புகுந்து கொள்வதற்காக நிர்ணயிக்கப் பட்டிருந்த அந்த வாரத்தில்த் தான் மீண்டும் கொடியயுத்தம் தொடங்கியது அந்தக் கிராமம் இராணுவ முகாமை அண்டிய பிரதேசமாக இருந்தமையால் ஆபத்தான பிரதேசமாகிப் போய் விட் டது. மக்கள் எல்லோரும் பாது வெவ்வேறு கிராமங் களிற்கு இடம்பெயர்ந்து செல்ல ஆரம்பித்து விட்டனர்.
அவர்களுக்கும் வேறு கிரா மத்திற்கு போக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ராசனுடன் ஒன்றாகப்படித்த மூர்த்தியின் வீட்டில்த் தற்காலிகமாகத் தங்கினார்கள். அங்கிருந்த படியே வேறு ஒரு தனி வீடாகப் பார்த்து வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்பது திட்டம். இடம் பெயர்ந்த சில நாட்களின் பின்னர் தான் அந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்தது. அதைக் கேட்ட போதே இடி விழுந்தது போல் அவர்கள் கலங்கிப் போயினர். அவனுடைய ஆசைகள் - எதிர் பார்ப்பு கள் யாவுமே கொடூரமாகச் சிதைக்கப் பட்டு விட்டனவா? அவனால் நம்பவே முடியவில்லை. நேரடியாகப் போய்ப் பார்த்த போது அவனுடைய வீடு இருக்கவில்லை. பதிலாக அவ்வி டத்தில்க் கற்குவியல்தான் இருந்தது. அவ்வ்ளவிற்குக் குண்டு வீச்சினால் வீடு தரை மட்டமாகத் தகர்க்கப் பட்டி
 
 

ருந்தது. வீட்டினுள் இருந்த பொருட் கள் கூரைமரங்கள் யாவும் நாசமாகிப் போயின
“என்ரை வீடு.? என்ரை உழைப்பு.? இனி எங்கடை எதிர்காலம்.?" அவனுக்கு ஒரு கணம் தற்கொலை செய்து விட
லாமோ என்ற எண்ணம் தோன்றியது. மறுகணம்.கமலினியின் ஏக்கம் ததும்பிய முகம். அவன் தன்முடிவை மாற்றிக் கொண்டான். இல்லை, சாகக்கூடாது. வாழத்தான்வேண்டும். எனக்காக இல்லாவிட்டாலும் அவளுக் காகவாவது. இனி எப்படி வாழுது? இவ்வளவுகாசை இனி எப்படி உழைப்பது." அவனுடைய மனத் திலே திரும்பவும் சுருக்கங்கள் ஏற்பட்டன. தன்னைத் தானே தேற்றிக் கொண்டு அவளையும் தேற்றினான்.
அதன்பின் வாடகைக்கு வீடு எடுப்பதற்காக அலைந்து திரிந்தான். வீடுஅகப்படவில்லை. எத்தனையோ இடங்களில் - அவனுக்குத் தெரிந்த எத்தனையோ முகங்களிடம் விசாரித்து விட்டான். ஏமாற்றம் தான். இப்பொழுதெல்லாம் வீடு தேடுவதே அவனுக்கு நாளாந்த வேலையாகி விட்டது.
S S S S S S SL LS N
ஏன் ? பயிற்றம் கொடியே ஏன்இந்தப் பாவம் செய்தாய் என் பைங்கொடியின் கொடியிடையை ஏன் கொள்ளையடித்துக் கொண்டாய் நீ.
- தயா. லோகதாசன் 7ے
dji Domesot
மூர்த்தி நல்லவன் தான். பிரச்சினைகளிற்குப் போகாதவன். என்றாலும் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் இருப்பது என்றால்ச் காரியந்தான். நாளாக நாளாகப் புதிய பிரச்சினைகள் தோன் றவே செய்தன. இவர்களினுடைய ஏழ்மை நிலை அவர்களிற்குத் தெரிய
ஆரம்பித்து விட்டது. சில வேளைகளில்
அவர்களுடைய குடும்பத்தில் அடுப்பு எரிந்து கொண்டிருக்கும் போது இவர்களுடைய குடும்பத்தில் அடுப்பிற் காளான் பூத்துக் கிடந்தது. இவை எல்லோருக்குமே சங்கடத்தினை ஏற் படுத்தும் நிகழ்ச்சிகளாக இருந்தன. அத்தோடு கமலினிக்குப் பெண் குழந்தை ஒன்று பிறந்து விட்டது. அவனுக்குப்புதிய கவலைகளும் பிறந்து விட்டன.
“நாங்கள் எங்கையாவது தனியப்போய் இருந்திட்டால் ஒரு கரைச் சலுமில்லை. கஞ்சியைக் குடிச் சிட்டுக் கிடந்தாலும் ஒருத்தருக்கும் தெரியாது"அவள்- அதிலும் உண்மை இருப்பது போலவே அவனுக்குத் தோன்றியது.
பலத்த தேடுதல் முயற்சிக்குப் பின்னர் ஒரு வீடு கிடைத்தது. வாடகை உச்சந்தான். இருந்த போதிலும் வேறு வழிஇருக்க வில்லை. அந்த வீடு ஆறு மாதமாய் யாரும் வசிக்காமல்ப் பூட்டப் பட்டுக்கிடந்திருக்கின்றது. ஒரே தூசிப் படலமாகக் காட்சி யளித்தது. எத்தனையோ பேர் வீட்டுக்காக அலைந்து கொண்டிருக்கும் போது இந்த வீடுமட்டும் இவ்வளவு காலமும் தப்பிக் கிடந்திருக்கிறதே. எப்படி? அவனுக்கு எல்லாம் ஆச்சிரியமாகவே தோன்றியது.
குடி புகுந்த சில நாட்களின்

Page 9
பின்னர்தான் அந்த மர்மங்கள் துலக்கமாகின. அயலவர்களிடமிருந்து சிலஉண்மைகள் இவர்கள் காதுகளில் விழுந்தன- ஒரு வருஷத்துக்கு முதல்
அந்த வீட்டில் ஒருவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்தி ருக்கிறார். அதன் பின்னர் அந்த
வீட்டில் நடுச்சாமத்தில் விநோதமான சத்தங்கள்கேட்க ஆரம்பித்து விட்ட னவாம். செய்தி அச் சுற்றாடலில்ப் பரவியபோது . அங்கு குடியிருக்க வந்தவர்கள் யாவரும் இதனை அறிந்து முன்னரே விலகிக் கொண்டனர். ' அந்த வீட்டைப் பற்றி ஒரு விதமான பயம் கலந்த மனநிலையை அச்சூழலில்
நிலவியது. அவளிடமிருந்தும் இடை
யிடையே நச்சரிப் புகள் வெளிப்பட ஆரம்பித்து விட்டன.
ஒரு நாள்த் திடீரென் வானிலே முளைத்த குண்டு வீச்சு விமானங்கள "தாறுமாறாகக் குண்டுகளை வீசத் தொடங்கின. அவற்றுள் ஒரு குண்டு பக்கத்து வீட்டில் விழுந்து வெடித்த போது. கொஞ்ச நாட்க ளுக்குள் ளேயே அவளுடன் உடன் பிறவாச் சகோதரியைப் போலப்பழகிப்பாசத்தைப் பொழிந்த -பாக்கியமும் அவளுடைய ஒரே மகனும் கணப் பொழுதில் தலை சிதறி. sraஅதன் பின்னர் அவள் மனநிலை பாதிக்கப் பட்டவள் போலானாள். தூக்கத்தில்ப் புலம்புவதும். காரண மில்லாமல் அழுவதும் . சிரிப்பதும். கோவிப்பதும். அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதன் பின்னர் மாதக் கணக்கில் வீடு தேடும் படலத்தில்த் திரிந்தான். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு இடத்தில் வீடு
இருப்பதாய்த் தான் சொன்னார்கள். ஆனால் அவன் உடனடியாக அங்கு
போய்ச் சேருவதற்குள் யாராவதுமுந்திக் கொண்டு விடுவார்கள். எவ்வளவோ பிரச்சினைகளிற் கிடையிலும் அவன் ஒய்ச்சல் இன்றித்தேடிக் கொண்டிருந் தான்.
அதன்பின் எதிர்பாராத வகையில் ஒரு வீடு கிடைத்தது. ஒரு வித நிம்மதிப் பெருமூச்சுடன்-மூட்டை முடிச்சுகளுடன் அங்கு வந்து சேர்ந் தார்கள். அங்கு வந்து சேர்ந்த பின்னர் தான் மற்றொரு உண்மை புரிந்தது. அந்த வீடு கெளரவ மான வாழ்க்கைக்கு ஏற்றதல்ல என்று தெரிந்தது. அயல் வீடுகளில் வெவ்வேறு இடங்களிலிருந்தும் இடம் பெயர்ந்து வந்த வெவ்வேறு பண்பாட்டுச் சனங்கள் குடியிருந்தார்கள். இரவு - பகல் என்று பாராமல் எப்பொழுதும் குடியும் கும் மாளமும் தான். சண்டைகள். அதன் விளைவாக ஏச்சுக்கள். தூசணங் கள். அத்துடன் திருட்டுக்களும் மலிந்து விட்டன. எந்தப்பொருளையும் நம்பி வீட்டுக்கு வெளியே வைக்க முடியாத நிலைமை உருவாகி விட்டது. கூடவே இன்னும் ஒரு வீடு தேடும் UL-6uld......
இப்போது கந்தசாமிக்குத் தெரிந்த இடத்தில் - எங்கேயோ - வீடு இருப்ப தாக அவளுக்குத் தகவல் கிடைத் திருக்கிறது. விளைவு. அவன் சைக்கிளை எதிர்க்காற்றில் வலிந்து செலுத்திக்கொண்டிருக்கிறான். உற்றா ரை.உறவினரை. நண்பர்களைப் பிரிந்து எங்கேயோ வசிப்பதற்காக . அந்தவீடாவது கிடைக்குமா? "எல்லா வற்றையும் இழந்து - சொந்த நாட்டிலையே அந்நியப் பட்டுப்போய். அகதிா"இது எங்குடைய நாட்டிலை இன்னும் ஒரு சாதி." அவன் தன்னிையும்” மறந்து வாய்விட்டுச் சிரித்தான்.கந்தசாமியின் வீடு நெருங்கிக் கொண்டிருந்தது.
(முற்றும்)
 
 

தெல்லியூர் வெ. சக்திவேல்
ழந்தையை வளர்க்கும்போது விடும் தவறுகள் பிற்காலத்தில் குழந் தையின் மனநலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகின்றது. முதல் மூன்று வருடங்கள் குழந்தை தாயைப் பிரிந்து இருப்பின் பிற்காலத்தில் பல் வேறு மனநோய்களுக்கு ஆளாக நேரி டும் என உளவியலாளர்கள் முக்கியத் துவத்தை உரைக்கக் கூடியதாயுள்ளது. மனத்தளர்ச்சி (Depressive posychosis) 6TSJúo GibsTuỦ gb6öOT களைவிட பெண்களிடம் அதிகமாக காணப்படுகின்றது.பெரும்பாலும் நடுத் தர வயது பெண்கள் தொடக்கம் முதிர்ந்த பருவ பெண்கள் வரை இந் நோயினால் பாதிக்கப்படுகின்றனர்.
நரம்புத் தளர்ச்சி நோயானது (Nevrosis) பெரும்பாலும் 20 முதல் 50 வயது வரை பாதிக்கப்படுகின்றனர். இந்நோயினால் பாதிக்கப்ப டுவர்களில்60% வீதம் பெண்களாகும். uuLig, LCS biTui (Anxiety Neuvosis) sissioörfurt (Hysterical Neurosis) காரணமற்ற அச்ச நோய் (hoic Neuvosis) நரம்பியல் சார்ந்த மனத்தளர்ச்சி நோய் (Depressive Neurosis) ஆகிய நரம்புத்தளர்ச்சி நோய்களும் ஆண்களைவிட பெண் களையே கூடுதலாக பாதிக்கின்றது. $s6ivạrfluuT (Hysterical Neurosis) எனும் நோய் ஆண்பெண் இருபா லாருக்கும் ஏற்படக்ககூடியது. பெண் களில் பெரும்பாலானோர் பருவ வய தில் இந்நோயினால் அவதியுறு கின்றனர். பாலுணர்வில் ஏற்படும்
குடும்ப சிக்கல்களும் ஏமாற்றங்களும்
இதற்கு முக்கிய காரணங்களாக கருதப் படுகின்றன.
மேலைநாட்டு பெண்களிடையே
மதுபாவனை அதிகரித்து வருவதால் கோர்சகாவ் மனநோய்க்கு(KorSOrcof Psychosis) ஆட்படுகின்றனர். அனொ செரக்ஸியா நேர்வோசா (Anorexia NirvOso) எனும் மனநோயானது பெண்களையே அதிகமாகத் தாக்கு கின்றது. பெரும்பாலும் 11- 18 வயதிற்கு இடைப்பட்ட பெண்களையே தாக்கு கின்றது. இந்நோய்க்கு மாதவிடாய் நிறுத்தப்படல், நிறைகுறைதல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.
திருமணமாகியும் பலவருடங்கள் பிள்ளைப்பேறு இல்லாதவர்கள் தமது கணவனின் அன்பை பெற வேண்டும் என்ற எண்ணத்தினால் பொய்க்கர்ப்பம் (Pseudo pregnancy) 6tgun 6t நோய்க்கு தள்ளப்படுகின்றனர். இதில் மாதவிடாய் நின்று போவதுடன் குமட்டல், வாந்தி, மார்பகம் பெரிதாதல் அதில் நிறமாற்றம் உண்டாதல்,குழந்தை வயிற்றில் வெளிக்காட்டல். ஆனால் மருத்துவ பரிசோதனையில் அப்பெண் கருத்தரிக்கவில்லை எனத்தெரியவரும். "ஆண்பாதி பெண்பாதி அதில் ஒன்று நீங்கினால் வேதனை பாதி " என்ற கூற்றிற்கமைய பெண் சமுதா யத்தை தனித்தோ அல்லது ஆண் சமுதாயத்தை தனித்தோ குறை கூறுவதில் பயனில்லை என்பதை உணர்ந்து யதார்த்த உள ரீதியான சிக்கல்களை களைந்து குடும்ப உறவினை வளர்க்க முற்படுவோமாக.
★女女

Page 10
ழரீ. கதிரேசன், நல்லூர் சமாதானம் வருமா? சம - தானம் வந்தால் (தமிழர்க்கு)
ப. பிரசாந், உரும்பராய். என்று தனியுமெங்கள் சுதந்திர - தாகம்? எல்லோர்க்கும் தாகம் வந்த பிறகு.
மு. சாந்தன், கரவெட்டி, வர்ணாச்சிரம தர்மக் கொள்கை இக்காலத்துக் கேற்றதா? எக்காலத்துக்கும் ஏற்றது.
வ. காண்டீபன், கோப்பாய் உங்களுக்குப் பதிலளிக்க மட் டுந்தான் தெரியுமா? பதிலிற்கே பலர் ஒடித்திரிகிறார்கள், கேள்வி கேட்டால்..?
அ. நாதன், கொக்குவில் அன்பரே! ஏமாளி என்பவன் யார்? என்னை அறிஞராய் நினைத்துக் கேள்வி கேட்கும் நீர்தான்.
ப. வேணி, வரணி. ஜயங்களுக்கும் வினாக்களுக்கும் என்ன தொடர்பு? முன்னது பின்னதை எழுப்பும்.
வி. சுந்தர், கோப்பாய் மத்தி ஒர் அறிஞர் வேதத்தை செப்பனிட
வேண்டுமென்கிறாரே? சிவசிவா! பத்திரிகையில் நானும் பார்த்தேன், அந்தணர்கள் சங்கத்திற்கு இக்கேள்வியை அனுப்புங்கள்.
வ. ரகுநந்தினி, மயிலிட்டி வையத்துள் வாழ்வாங்கு வாழ் வான்.? இவ்வுலகில் முட்டாளாய்க் கருதப்படும்.
சி. நாகரூபன், 1ம்குறுக்குத்தெரு. கம்பன் கழகம் கய இலாப நோக்கம் கருதும் நிறுவனமா? என்ற கேள்விக்கு "ஆம்" என்று பதில் சொல்லியுள்ளிரே உமக்கு வெட்க lfsbosuuir? இதில் வெட்கப்பட என்ன இருக்கிறது. உண்மைத் துறவியைத் தவிர சுயநல மில்லாமல் இயங்க வேறு யாராலும் முடி யாது. பொய் சொல்ல எனக்கு விருப்ப மில்லை.
க. குமரன், திருநெல்வேலி.
உங்களுக்கு தமிழ் தெரியாதென் கிறீர்கள். பல்கலைக்கழகத் தமிழ றிஞர்களுக்கும் தமிழ் தெரியா தென்கிறீர்கள். அப்படியானால் தமிழ் தெரிந்தவராக
uITGDogi.
القلعة
 
 

கின்றீர்கள்?
கருவி நூல்கள் எனப்படும் நிகண்டு, நியாயம், தருக்கம், இலக்கியம் ஆகி யவை கற்றுப்பின் இருபது நூற்றாண் டுகள் வெளிவந்த இலக்கியங்களைப் பயின்று அப்புலைமையைத் துணைக் கொண்ட மெய்நூற்கள் எனப்படும் தத் துவ நூல்களை எவர் கற்றுக் தெளிகி றாரோ? அவரே தமிழ் தெரிந்தவர் என்று சொல்லத்தக்கவர்.
ப. தயாபரன், நெல்லியடி. பேராசிரியர் சண்முகதாஸ் உங்கள் கழகத்தின் போஷகர். அவரே பல்க லைக்கழகத் தமிழத்துறையின் தலைவர். அப்படியிருக்க பல்க லைக்கழகத் தமிழறிஞர்கள் பற்றிய கேள்விக்குப் 'பாவம் - தமிழ் என்று பதில் சொல் லியுள்ளீர்களே! அது அவரையும் தாக்காதா? அதையேன் கேட்கிறீர். தாக்கியே விட் டது. பேராசிரியர் "கம்பன் கழகத்தில் இருந்து இராஜினாமாச் செய்தி ருக்கின்றார். விமர்சனம் வேண் டுமென்று சொல்லித்திரிந்தவர்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும் விதம்
கண்டு வியக்கின்றேன். சரி, நான் சொன்னதன் சரி, பிழை பற்றி ஆராய்வோம்.
வெளிச்சம் பத்திரிகைக்கு பேராசிரியர் சண்முகதாஸ் அளித்த செவ்வியில் தங்களிற்குப் பின் யார்? என்ற கேள்விக்கு கலாநிதிகள் சுப்பிரமணிய ஐயர், பாலசுந்தரம், மெளனகுரு ஆகிய மூவரையும் மட்டும் பெயர் சொல்லிக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அவரே, இம்மூவர் தவிர்ந்த மற்றவர்களை நிராகரிக்கிறார் என்பது தெரிகின்றது. அதே பேட்டியில், மேற்குறிப்பிட்ட மற்றவர்கள் ஆழமான ஆய்வுகளில் ஈடுபடாமல் பதவிகள் நோக்கமாகச் செயற்படுகின்றனர் என்று சொன் னதோடல்லாமல், தமிழ்த்துறை, இனி வடலி வளர்த்துத்தான் பனங்கிழங்கு தின்ன வேண்டியுள்ளதாக (அதென்ன புதுப் பழமொழி:) மிக வெளிப்படை யாகக் கூறியுள்ளார், ஆகவே, சண் முகதாசின் கருத்தைக் கொண்டு இம் மூவர் தவிர்ந்த மற்றவர்களைப் பற்றி ஆராய்கிற தேவை இல்லாமல் போகி
D3b. இனி, குறிப்பிடப்பட்ட மூவரில் இருவர் இங்கில்லாதபடியால ‘அவர்களின்
ஆற்றலை ஆராய்வது தேவையற்றது. எஞ்சிநிற்பவர் சுப்பிரமணியஐயர், அவர் தமிழிற் புலமையுள்ளவர் என்பதை ஒத்துக்கொள்கிறேன். அவரது உண் மைப் பலம் மரபிலக்கியங்களில்தான். ஆனால், பாவம் அவர் நவீன இலக்கிய ஆட்சிதான் பலமென்று கருதி அது தனக்கு இருப்பதாகக் காட்ட முயன்று வருகிறார்.பலத்தைப்பலஹினமாகவும், பலஹினத்தைப் பலமாகவும் கருதும் அவரும்தமிழைக்காக்கப்போவதில்லை. இந்நிலையில் பேராசிரியர் சண்மு
கதாஸ் பாவம், தோப்பாக முடியாத

Page 11
தனிமரம், எனவே, மீண்டும் சொல் கிறேன் பாவம் - தமிழ் மட்டு மல்ல.சண்முகதாசும் கூடத்தான்.
ந. விமலன், சங்குவேலி.
பொன். கணேசமூர்த்தியின் இலங்கை மண் நாடகம் பற்றி.? இராம ராச்சியம் வேண்டுமென சிலர் விரும்புவர்.இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன என்றி ருப்பர் வேறு சிலர், இதில் மாறுபட்டு இராவண ராச்சியம் வேண்டு மென்கிறார் பொன்- கணேசமூர்த்தி, இதைப்பற்றி நான் எதைச் சொல்ல.
த. இந்திரநாத், நல்லூர்.
உலகத்திற்கும் புதிதி சொல்கின்றீரே நீர் பெரிய உத்தமனா?
"ஆம்" என்று பதில் எழுத அறிவு விழைந்தாலும் மனச்சாட்சி பொய் சொல்ல மறுக்கிறது.
/
கனவும் N
நியமும்
கனவுகள்:
கற்பனைகள்
வரைகின்ற
காகிதங்கள்
நியங்கள் பகட்டான வாழ்க்கையின் பரிதாபச்
சொத்துக்கள்.
ಆಹಾ! பந்தன்“ ܢܠ
ச. முகுந்தன், யா/ இந்துக்கல்லூரி. இயலா, இசையா எது உயர்ந்தது? சமமா சரிகமபதநி சரி சமமா? (சங்கீத பூஷணம் கணபதிப்பிள்ளை மன்னிப் பாராக)
தே மயூரன், சண்டிலிப்பாய் பாமர மக்களைத் திருத்த என்ன GI?
படித்தவர்கள் திருந்துவது.
சு. மகேஸ்வரன், கச்சேரி. கம்பனை இவ்வளவு புகழ் கின்றீரே? அவனில் அப்படி என்ன தான்
இருக்கிறது?
என்னதான் இல்லையென்கிறீர்?
எஸ். சோதிலிங்கம், நீர்வேலி காதல் இன்றைய துழநிலையில் தேவையில்லையென்கிறார்கள் சில அறிஞர்கள் உங்கள் கருத்து?
சொந்த அபிப்பிராயங்கள் பற்றி சொல்வதற்கில்லை.
வ. ரமணன், ஊரெழு. ஏழைகளுக்கு உதவ இந்து மதத்திற்கு வசதியில்லை. வசதி யுள்ளவர்கள் மதம்மாற்றி உதவு கிறார்கள். இதிலென்ன நியாயப் பிழை இருக்கின்றது? நீங்கள் சொல்வதை நியாயமாக ஏற்றால் நம் சமுதாயத்தில் ஏழைகள் யாருக்கும் மனைவிகள் இருக்க மாட்டார்கள்.
தி. காண்டீபன், வட்டுக்கோட்டை. கம்பன் திராவிடனா? ஆரியனா? புலவன்.
 

மாற்றப்படும் உடலுறுப்புகள்
LDனிதன் செய்த சாதனைகளுள் வைத்தியத்துறையில் செய்த சாதனையும் அதனால் பெற்ற வெற் றிகளும் மகத்தானவையாகும்.
மோட்டார் வாகனங்களுக்கு தேவை ஏற்படுகின்ற வேளைகளில் உதிரிப்பாகங்களை எப்படி மாற்றீடு செய்கிறார்களோ அதேபோன்றுமனித உடலிலும் தேவையேற்படும் போது மாற்றீடு செய்யக் கூடிய 35ற்கும் மேற்பட்ட உறுப்புக்கள், உறுப்பின் பகுதிகள் கண்டுபிடிக்கப்படுள்ளது.
மனித உடலிலிருந்தே மனித உடலுக்கு மாற்றக்கூடியஉறுப்புகளும் உள்ளன. இதைவிட செயற்கை யாகவோ அல்லது வேறுவிலங்குகளின் உடற்பகுதியோ மனித உறுப்பிற்காக பிரதியீடு செய்யும் நிலையும் உள்ளது. உதாரணமாக சில மாற்றீடு செய் யப்படும் சில உறுப்புகள் வருமாறு.
மனித உடலிலிருந்து மனித உடலுக்கு மாற்றி பொருத்தப்படும் உறுப்புகள். விழிவெண்படலம் நுரையீரல் இருதய வால்வு இருதய பிரிசுவர் ஈரல் சிறுநீரகம் என்புத்துண்டுகள் போன்றவை.
மனித உறுப்பிற்கு பதில் பிரதியிடப்படுபவை.
இதற்கு உலோகங்கள் பிளாஸ்
7
ரிக்குகள் போன்றன பொதுவாக பயன் படுத்தப்படுகின்றன. மண்டை ஒட்டுத் தகடு - உலோகம் காது - பிளாஸ்ரிக் செவிச்சிற்றென்பு - பிளாஸ்ரிக் கண்வில்லை - பிளாஸ்ரிக் தாடைஎன்பு - உலோகம் பற்கள் - றெமிக் பிளாஸ்ரிக் உலோகம் செவிட்டு உதவி கருவி - காது தோள் மூட்டு - உலோகம் மார்பகம் - பிளாஸ்ரிக்
கை, கால், - உலோகம், பிளாஸ்ரிக்
மொழிகள், மூட்டுகள் - பிளாஸ்ரிக், உலோகம் நாடிகள் - பின்னப்பட்ட நார்போன்றன.
உலகே வியக்கும் வைத்தி யத்துறையின் சாதனைகள் எண்ணில் அடங்கா. விபத்தொன்றில் மரணித்த மனிதனொருவரின் இதயம் லூயி வாஷான்ஸ்கி (53வது வயதில்) என் பவருக்கு 1967ம்ஆண்டுபொருப்பட்டது.
இருதய நோயுள்ள அனை வருக்கும் இருதயம் மாற்றீடு செய்ய முடியாது. அசாதாரண அமைப்பு கொண்டஉடையவர், வாழமுடியநிலை ஏற்பட்டவர்களுக்கே இம்மாற்ற அறு வைச் சிகிற்சை மேற்கொள்ளப்படும்.
கண்ணில் விழிவெண்படல மாற்று அறுவைச்சிகிச்சை 1930ல் ெேற் றியீட்டியுது. இதன் பின்னரே ‘கண் தொடர்பான பல சிகிச்சைகளுக்கு பல வழிகள் பிறந்தன.
女女女

Page 12
விபச்சாரி இவள் நிர்வானத்தை விற்கின்றாள்.
ا(960ی வாங்குவதற்காக.
LIéf ஏழைகளின் உடன் பிறப்பு, பட்டினியின் பிரிய(ா) நண்பன்.
- கருணை நேசன்
மது குடி கெடுக்க வந்த
!... واورا)
பணம் முதலாளிகளின் வீட்டுச் சிறையின் நிரந்தரக் கைதி!
ஏழைகளின் எட்டாப்பழம்!
-சியாமணாளன்
“மாற்றம்" சஞ்சிகையின் சில நோக்கங்கள்
ഗി மொழியும், தமிழ் மண்ணும்
கொண்டிருக்கும் பெருமைக்கு மேலும் அணி
செய்யுமாறு ஆக்கங்களை அளித்தல்.
2。 தமிழ் சமுதாயத்தில் புரையோடியுள்ள குறைபாடுகளை நயமாக எடுத்துக்கூறி அவற்றைப் படிப்படியாகத்திருத்தும் வழிவகை களையும் அதனால் ஏறுபடும் நன்மைகளையும் விளக்கவல்ல விடயதானங்களை வழங்குதல்.
3. uങ്ങgഞഥഖg, சிந்தனைகளால் முன்னேற்றம் பாதிப்புற்ற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கமுடியாமல் திணறிக்கொண்டிருப்பவர்களுக்குவிழிப்புணர்ச்சி ஏற்படும்வகையில் புதியபுரட்சிகரசிந்தனைகளை
முன்வைக்கும் ஆக்கங்களைத்தருதல்.
A. எவரையும் தனிப்பட்ட முறையில் புண்படுத்தாத வண்ணமும், ஆனால் அவரது நடவடிக்கைகளால் சமுதாயம்பாதிப்புறும் போது, அதைத் தடுத்து நிறுத்தும் வகையில் அவருக்கு - அவரின் போக்கை மாற்றி விட வல்லதான இலக்கிய வடிவங்களை நயம்பட வழங்குதல்.
5、 தமிழரின் பண்டைய கலாசார பண் பாட்டுக் கோலங்கள் சிதைவுறாது பார்த்துக் கொள்ளும் அதே வேளை, அவற்றை நவீன விஞ்ஞான உலகின் அணுகுமுறையோடு இசைந்துசெல்லுமாறுசெய்யவல்லமாற்றங்களை எழுத்தின் மூலம் அறிமுகப்படுத்துதல்.
6. தமிழ் சமூகத்தின் உயிர் நாடியான மாணவர் சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான அறிவியல் சார்ந்தவிடயதானங்களையும் அளித்து மொழி அறிவியல், போட்டிகளையும் நடாத்தி ஊக்கப்படுத்துதல்.
7. தமிழர் சமூகத்தைப் புரட்சிகரமான மாற்றங்களுக்கு இட்டுச் சென்ற செல்லுகின்ற - செல்லவைக்கும் சிந்தனையாளர்களையும், சேவையாளர்களையும், தொண்டர்களையும்
3. வருடம் ஒருமுறையாவது தமிழுக்கு விழா எடுத்து "மாற்றம் " சஞ்சிகையின் ஆண்டுமலரை ஆங்கு வெளியிட்டு பல்துறை சார்ந்தபேரறிஞர்களைக்கொண்டுசஞ்சிகையை விமர்சனம் செய்து, மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை ஏறுக்கொண்டு செயற்படுதல்.
 

தேசாபிமானி 94
ஜீவ சேவைக்காக தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட மனித மாணிக்கங்களில் மக்களின் அபிலா ஷைகளின் படி கடந்த ஆண்டுக்கான தேசாபிமானியாக பசுமையின் நண்பன் கலாநிதி க. கனகராசா (மில்க்வைற் சவர்க்காரத் தொழிலக அதிபர்) தெரியப்பட்டமை யாவரும் அறிந்ததே.
இவருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் யாழ்ப்பாணம்
நல்லூரில் பேராசிரியர் செ. சிவஞான சுந்தரம் (நந்தி) தலைமையில் இடம் பெற்றது.
மண்டபம் நிறைந்த மக்கள் கூட்டத்தில் பிரபல எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள், சேவையாளர்கள் தேசா பிமானியை பொன்னாடை போர்த் தியும், வாழ்த்துப் பா வழங்கியும், மாலையிட்டும் கெளரவித்தனர்.
மக்கள் சேவையாளர்களை உயிருடன் கெளரவிப்பதன் அவசியம் குறித்து தமது கருத்தினை பேச்
சாளர்கள் வலியுறுத்தினர்.
தேசாபிமானியின் பதிலு
ரையுடன் விழா முடிவுற்றது. இது
தமிழ்த்தாய் மன்றத்தினால் வழங்
கப்பட்ட இரண்டாவது தேசாபிமானி விருது என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவது விருதை தேசாபிமானி 93 திரு. ஆ. சி. முருகுப்பிள்ளை அவர்கள் கடந்த ஆண்டு பெற்றுக்கொண்டது அறிந்த விடயமே. ***

Page 13
நளினமாகப் பேசுவதே நங்கையருக்குச் சிறப்பு!
"எவர் பேசுவதையும் கேட் டுக்கொள். ஆனால் சிலரிடமே பேச்சுக் கொடு எவர் துன்பத் தையும் தெரிந்துகொள். ஆனால் உன் கருத்தைக் கூறிவிடாதே" என்பது ஷேக்ஸ்பியரின் பொன் மொழியாகும்.
நன்கு யோசித்து உரையாற்றி னாலே எமது எதிர் காலம் வளம் பெறமுடியும். கள்ளம் கபடமின்றி சிலர் உள்ளம் திறந்து மடமடவென பேசி விடுவதுண்டு. அதனால் அனர்த்தங்கள் பல விளையலாம்.
நாவடக்கம் தோன்றின் அமை தியான சுபாவம்தானாகவே நம்முடன் ஒட்டிக்கொண்டுவிடும். பேசவேண்டிய இடத்தில் பேசத்தான் வேண்டும்.
உரையாடத்தான் வேண்டும். ஆனால் "
எதையும் யோசித்துக் கச்சிதமாகப் பேசுவது நன்றல்லவா.
வீதியில் நங்கையர் உரத்துப் பேசுவதால்,சிரிப்பதால் மற்றவரின் பரிக சிப்புக்கு ஆளாகலாம்.எம்விலாசத்தை நாமே அம்பலப்படுத்தி ஆபத்தை விலைக்கு வாங்கலாமா? இல்லை, தாவறான அபிப்பிராயத்திற்குத் தான் ஆளாகலாமா?
பொது இடங்களில் கவனக் குறைவாக பேசுவதோ, உரத்து உரை யாடுவதோ நன்மை பயக்காது.
"தீயினால் சுட்ட புண் ஆறும், நாவினால் சுட்ட புண் ஆறாது" என இற்றைக்கு எத்தனையோ ஆண்டுக
’ளுவர்.
ளுக்கு முன் கூறிப் போந்தார் திருவள் நாம் பேசுவது மற்றவர்க்கு இன்பம் அளிப்பதாக, ஆறுதல் கூறுவ தாக இருக்க வேண்டுமேயன்றி மற்ற வர்களின் மனதை நோகப்பண் ணுவதாக இருக்கக் கூடாது.
ந. அஞ்சலி
இனிய சொற்களை இதமாகப் பேசுவதானால் கல் நெஞ்சத் தவர்க ளைக் கூட கவர்ந்து விடலாம். அன்பு கனிய இனிய சொற்களை நிதானமாக, மெதுவாகப் பேசுவதே நங்கையருக்குச் சிறப்புத் தருவதாகும்.
இளைஞர்களே!
贪贪食食贪食贪贪
காதலை காவியத்துக்கு விட்டு விடுங்கள். உங்கள் திருமணத்தை பெற்றோரிடம் ஒப்படையுங்கள். பின்னர் உங்கள் எதிர்காலத்தைப் பாருங்கள் வாழ்க்கையில் பாலுணர்வும் ஒரு பகுதியே தவிர அதுவே வாழ்க்கையாகி விடாது. குடும்பத்தை பிரிந்து தாய்தந்தையரை வெறுத்து ஒருத்தியின் பின்னால் ஒடுவது நிரந்தர நிம்மதியைத் தராது. - கண்ணதாசன்
 
 

சே. பிரதீபா, கொழும்பு -6
食
பஸ் பிரயாணங்களில் சன நெரிசலைக் குறைக்க என்ன வழி. இருக்கைகளை (சீட்) பிடுங்கி விடுங்கள்.
க. மாறன், கொட்டடி.
女
இன்றைய ஈழத்துச் சஞ்சிகை களின் நிலை பற்றி. இடியப்பம் கட்டவும் இட்லி சுத்தவும் - பழைய பேப்பர் கடைக்கு போகமுடியாத நிலை (அளவு)
ஏ. மூர்த்தி, மருதானை.
சில பெண்கள் கொழும்பில் தலைவிரி கோலமாகத் திரிகிறார் களே? ஊஷா அவர்கள் பாஞ்சாலியின் பக்கத்துவீட்டுக்காரர்கள்.
எஸ். சுகந்தி, ஏழாலை,
女
பெண்களுக்கு அரிவை, தெரிவை, பாவை, மடந்தை. என்று பரு வங்கள் இருக்கிறது. ஆண்களுக்கு 36.606vuT2
ஏன் இல்லை. பாலன்(1-7), மீளி
(8-10), மறவோன்(14), திறவோன்(15), காளை (16) விடலை(17-30), முதுமகன் (30-மேல்.)
அ. குகதாஸ், நவாலி
女
வீதியில் பக்கம் பக்கம் செல்லும் பிறப்பிக்கள் பற்றி. அவை ஒட்டிப் இரட்டைப்பிறப்புக்கள்.
பிறந்த
எஸ். வேல்மாறன், யாழ்ப்பாணம்.
女
b
★
அ
இன்றைய தமிழ் சினிமாக்களைப் பற்றி. இதென்ன குப்பையைக் குழப்பிற கதையாக் கிடக்கு, இப்பத்தான் பிரசாந் - குஷ்புவை மறந்து போய் இருக்கிறோம்.
சுதர்ஷா. கீ/ நகுலேஸ்வர மகாவித்
தியாலயம். சுருட்டியாரே! கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ன வென்று அர்த்தம்? கண்டபடி கேள்விகள் கேள் விகள் கேட்டால் என்னவென்று அர்த்தம். மிஸ்டர் சுருட்டியாரே! மரியா தையாக நீர் ஆணா? பெண்ணா? அலியா? என்ற வினாவுக்கு பதிற் கணை தொடுக்கணும் முடியுமா? மிஸ்டர் என்றாலே ஆண் தானே!
தேவா, அத்தியடி.
உங்களின் புகைப்படத்தை மாற்றம் சஞ்சிகையில் பிரசுரிப்பீர்களா?
ஏன் நாவூறு கழிக்கவா?
. தமிழரசி, தாவடி
நீங்கள் யாரையாவது காதலித்துக் கைவிட்டதுண்டா?
நான் கைவிடுகிற அளவுக்கு பெண்களை காதலித்ததில்லை.
女女女

Page 14
தோற்றத்தில் மட்டும் அசலாக இருந்து பயன்பாட்டில் ஏமாற்றம் தரு
வன போலிகளாகும். நூற்றுக்குத் தொண்ணுறு வீதமானோர் போலி களை நம்பி ஏமாறுபவர் ஆவார். எனவே போலிகள் எடுத்த எடுப் பிலேயே பார்ப்பவர் மனதில் நம்பிக் கையூட்டி அவர்களை மாற்றிவிடும் ஆற்றல் படைத்தவை. இந்த மாற்றம், ஏமாற்றமுற்றோரின் அறிவு தெளி வாகும் வரை நிலைத்து நிற்கக் கூடி யது. சில வேளைகளில் போலிகள் விளைவித்த மாற்றம் மனதை விட்டு அகல நெடுங்காலம் எடுப்பதுண்டு.
இருந்தாற்போல் பத்திரி கைகளில், போலிப்பணநோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாகவும், அதுபற்றி அவதானமாக இருக்கும்படியும் கேட்கப்பட்டிருக்கும். மிகநுணுக்கமாக ஒப்பிட்டுப்பார்த்தாலொழிய அசலான பணநோட்டுக்கும்,போலிக்குமிடையே வேறுபாட்டைக்கண்டுபிடிக்கமுடியாது. அவ்வளவு நேர்த்தியான முறையில் போலிப்பணநோட்டுகளை அச்சடித்து வெளியிட்டுவிடுகிறார்கள். பொருளா தாரச்சீர்குலைவை ஏற்படுத்தித் திடீர்ப்பணக்காரராகும் எண்ணத்தில் சில பேர்வழிகள் இக்கைங்கரியத்தில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் சட்டத்தின் பிடியில் அகப்படும் போது கடும் தண்ட னைக்கு ஆளாக வேண்டி ஏற்படும் என்பதைப்பொருட்படுத்தாமலே பேரா சையில் உந்தல்காரணமாக இவ்வா றான மோசடிச் செயலில் இறங்கு கிறார்கள்.
தயாரிக்கும்
போலிக் கடவுச்சீட்டுக ளைப்பயன் படுத்தி சுங்க அதி காரிகளின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு எத்தனையோபேர் நாடுவிட்டு நாடு தாவி விடுகிறார்கள். சிலர் அகப்படும் போது அந்நிய நாட்டுச் சிறைகளில் அடைக்கப்படும் வேத னைமிக்க சம்பவங்கள் நிகழ்கின்றன. ஒரு நாட்டுக்குள் செல்வதற்கான கட் டுப்பாடுகளையும், அதற்கான விதி முறைகளையும் லட்சியம் செய்யாது குறுக்குவழியில் அந்நாட்டுக்குள் பிர வேசித்து விடவேண்டும் என்ற எண் ணமே போலிக்கடவுச்சீட்டை நாடச்
S L S - "அக்கரைச்சக்தி”
செய்கிறது. எத்தனையோ நவீன கம்பி யூட்டர் கூடக்கண்டுபிடிக்க முடியா தபடிக்குப் போலிக்கடவுச் சீட்டுத் 6iug, TUGOTssig,6ir us) உலகப்பிரசித்தி பெற்ற நகரங்களில் இயங்கிவருகின்றன.
விளம்பரங்களில்தான் எத்தனை போலிகள்? அசல்பட்டுச்சேலையாம். வர்ணங்களோ அற்புதம், வடிவமைப்போ பார்த்தோரை மயக்கும். அதன் தோற் றத்தில் மனதைப்பறி கொடுத்த நங் கையர் பல ஆயிரம் கொடுத்து மனங் குளிர வாங்குவர். கொண்டாட் டங்களுக்கு அணிந்து மற்றை யோருக்கும் காட்டிப் பெருமைப்படுவர். ஆனால் அதைத் தோய்க்கும் போது சாயம் அகல, நடந்து செல்லும் போது கிழிசல் ஏற்பட, மடித்து வைக்கும் போது அந்தமடிப்பின்வழியே கூறுபட, அப்போதுதான் வாங்கிய நங்கையரின்
 
 

ஞானம் வெளிக்கும். போலியில் மயங்கிய மனத்தின் பூஷணம் விளங்கும். ஐயகோ! என்று தலையில் கைவைத்து அழவேண்டியதேயன்றி வேறென்ன செய்யமுடியும்?
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் போலிவேஷத்தை நம்பி, வெளிநாட்டுச் சொகுசுவாழ்க்கை யைக் கற்பனையில் நினைத்துக் கொண்டு லட்சம் லட்சமாய் முக வர்களுக்கு இறைத்துவிட்டு இளை ஞர்களும், யுவதிகளும் இலவுகாத்த கிளிகளாய்வெளிநாட்டு"யோகத்தை” எதிர்பார்த்துக்காத்திருக்க, போலி முகவர்கள் இப்படியான பல ஏமா ளிகளின் கோடிக்கணக்கான பணத் தைச்சுருட்டிக் கொண்டு தலைமறை வாக ஒட, அவர்களைக்கண்டுபிடிக்கக் காவல் துறையினர் வலைவிரிக்க, இவ்வாறே சம்பவங்கள் முற்றுப்பெறாத கதையாய்த் தொடர்கின்றன. என் றாலும் புத்திவருகிறதா! வெளிநாட்டு மோகம் தான் இளைஞர், யுவதிகளை
சங்கிலிய மன்னன் கால சரித்திர ஏரி
&
aupan gif
முன் உந்தித்தள்ளி மீண்டும் மீண்டும் போலி முகவர்களிடம் பணம் பறி கொடுக்க வாய்ப்பு அளிக்கிறது. வெளி நாட்டில் இருக்கும் உள்ளூர் மாப்பிள்ளை ஊருக்கு அல்லது தலை நகருக்கு வந்து திருமணம் செய்ய முடியாமலுள்ளதாம்.ஏனென்றால் அவர் "கள்ள” க்கடவுச்சீட்டின் உதவியோடு நாட்டு எல்லைகளைக்கடந்துதான் வெளிநாடு சென்றவர். சொந்த நாட் டுக்கு அப்படிக்'கள்ளமாகவரமுடியாது என்பதுஉண்மையே!அதனால் சொந்த நாட்டிலிருந்து "பெண்” அவருக்குப் "பார்சல் பண்ணப்பட வேண்டும். ஆமாம்! இதற்கென்றே விசேஷ முகவர்கள் இருக்கிறார்கள்.அவர்களை நம்பி பெண் புறப்படுகிறாள். பல லட்சங்களோடு தான். ஆனால் முகவர் அவளை இடையில் ஏதோ ஒருநாட்டில் இறக்கிவிட்டுவிட்டு. அல்லது கடலில் தத்தளிக்க விட்டு விட்டுத்தலை மறைவாகிவிடுகிறான் பணத்துடன். நடுவில் அந்தரிக்கும் பெண் சில விபரீத அனுபவங்களுக்கு உட்பட நிர்ப்பந் திக்கப்படுகிறாள். அவளது பாரம்பரிய கட்டுப்பாடு, ஒழுக்கம், இதுவரை கட்டிக்காத்துவந்த மானம் என்பவை செல்லாக்காசாகின்றன. இவ்வாறு பெண்" அவதிப்படுதலை வாய்ப்பா கக்கருதி அவளைத்துர் நடத்தையில் ஈடுபடவைத்துப்பொருள் சம்பாதிக்கும் பேர்வழிகள் கையில் அவள் அகப்படாமல் தப்புவது மிக அபூர்வம். சிலவேளை தப்பிப்போய் தனக்குப்பேசிய மாப்பிள் ளையைச் சென்றடைந்தாலும் அவள் "கற்பு” இடையில் சோதனைக்
குள்ளாகியிருக்கமாட்டாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமுமில்லை. சரி, ஏதோ அதிருஷ்டவசமாக "தூய்மை”
யான பெண்ணாகவே மாப்பிள்ளையிடம்

Page 15
சேர்ந்து விட்டாள் என வைத்துக் கொள்வோம்.திருமணம் பேசும் போது மாப்பிள்ளையின் படிப்போ, தகுதியோ பார்க்கப்படுவதில்லையே! கனடா, ஜேர்மனி, லண்டன் தானே அவர்களது தராதரம்? மாசம் 40,000ரூபா சம்பளமாம். என்ன வேலை என்று கேட்டால் எவருக்கும் தெரியாது. மாப்பிள்ளையும் சொல்லமாட்டார், அதுபற்றி எவரும் அலட்டிக்கொள்வதுமில்லை. ரூ 40,000= அதுவே போதும். பணம்! பணம்!! செத்த பிணம் கூட வாய் திறக்குமல்லவா? ஆகவே பணம்! என்றால் மற்றவை பற்றி ஏன் கவலை? பூெண் மாப்பிள்ளையோடு சேர்ந்து வாழும் போதுதான் அவரது ரகசியங்கள் அம்பலத்துக்கு வரு கின்றன. அவரதுபாலியல் நடத்தைகள், ரூ40,000/= உழைக்க அவர் கையாளும் வழிகள்! பவுடர் வியாபாரம், தங் கக்கடத்தல். ஒவ்வொன்றாய்ப்பெண் ஞக்குத் தெரியவருகின்றன. உண் மையை எவ்வளவுகாலம் மூடி மறைக்க
"தமிழ்தந்த தாதாக்கள்" தந்த தாத்தா
१९४१ : 8
* 签 ; : 领
3. 婆。 fA. ※ S ASAeAiSASASYSYSeSSAS SSAS SYS
அமரர் க. சி. குலரத்தினம்.
முடியும்? மிக ரோஷமுள்ள பெண்கள் அந்த மாப்பிள்ளையை விட்டு நாடு திரும்பிய சம்பவங்களுமுண்டு. பணத் திற்கும் பகட்டுக்கும் மயங்கிய பெண்கள் அழிந்ததோடு அழியட்டும் என்று அப்படியே வாழ்தலுமுண்டு. போலித்தனத்தின் பொல்லாப்பில் அகப்பட்ட பெண்களின் வாழ்க்கை இப்படியாய் முடிந்து போகிறது.
ஊரில் பிரபல சமூக சேவை யாளராம்.
அவர் அங்குள்ள சகல சமூக * முன்னேற்றச் சங்கங்களுக்கும் "போஷ கராம்” சில அபிவிருத்திச் சங்கங் களுக்குத் "தலைவருமாம்" பாடசா லையில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளிலும் அவரது "ஆசியுரை கட்டாயம் இடம் பெற்றுவிடும். பல ஆலயங்களுக்கு முக்கிய பூஜை உபய காரரும் அவர்தான். நெற்றிநிறைய விபூதியும், சந்தனப் பொட்டும், பட்டு வேட்டி சால்வையும் அணிந்து அவர் ஆலயத்திற்கு வருகை தந்து உபய மாகப் பூஜை ஒன்று நடத்தினாரென் றால் கேட்கவே வேண்டியதில்லை. மற்றவர் ஒரு மேள செட் பிடித் திருந்தால் இவர் இரண்டு செட் ஓடு வந்திருப்பார். சுவாமியை அலங்காரம் செய்யப்பல்லாயிரக்கணக்கில் அள்ளிக் கொடுத்திருப்பார். ஒலி பெருக்கியும் அன்று கோயிலில் ஒலமிடும். பெரிய சங்காபிஷேகம், யாகம், எல்லாம் அமர்க்களமாக நடத்துவார். அன்று பிரசாதமும் பிரமாதமாயிருக்கும்.தான் நடத்தும் "சிறப்புக்களை வீடியோ படமும் எடுக்கத்தயங்கமாட்டார். கிட்டடியில் தனது 65வது அகவை விழாவையும் தன் செலவிலேயே
/ கொண்டாடி ஊர் மக்கள், மற்றும்
 
 
 

ஏனைய பிரமுகர்களால் மாலை மரியாதை பெற்றவராம். இவரது உள்வீட்டு விஷயங்களைக் கேட்டால், இவருக்கு இதெல்லாம் செய்யப்பணம் எவ்வாறு கிடைத்தது என்று ஆராய்ந்தால் தானே தெரியும் இவர் ஒரு போலி ஆசாமி என்று. பெரும் ”பாலும் இப்பிரமுகர் வர்த்தக ரீதியான தொழில் செய்பவராக இருப்பார். அங் குதானே நன்கு மக்களைச் சுரண்ட வழியிருக்கிறது. கூட்டுறவுச் சங்கக் கடைக்கு நிவாரணமாய் கொடுப் பதற்கெள்று வருகின்ற பொருட்களில்
முக்கால்வாசி எவ்வாறோ இவரிடம்,
போய்ச்சேர்ந்துவிடும். எப்படி இது நடக்கிறது என்ற மர்மம் அவருக்கும், கூட்டுறவுச்சங்கக்கடை மனேஜ ருக்கும் மட்டுமே தெரியும். பணத்தை 'றோல் பண்ணுவதில் மகா கெட்டிக் காரராய் இருப்பார். வட்டியோடு குட்டியையும் கறந்துவிடுவார். இவரது வர்த்தக ஸ்தாபனத்தில் மற்றைய இடங்களை விட எப்போதும் ஓரிரண்டு ரூபா அதிகமாகவே சாமான்களின் விலை இருக்கும். இவர் இலகுவில் யாரையும் பகைத்துக் கொள்ளாமல் கவனமாக நடந்து கொள்வார். எல்லோரிடமும்பல்காட்டுவார்.இடைக் கிடை நகைச்சுவையையும் அள்ளித் தெளிப்பார். இந்த நடிப்பு ஏனென்றால், யாராவது பகையாளிஏற்பட்டுவிட்டால் தனது குட்டுகள் அம்பலமாகிவடும். அதனால் தனது "வருமானத்திற்கும் கெளரவத்திற்கும்” பங்கம் ஏற்பட் டுவிடும் என்ற அச்சமே காரணமாகும். இத்தகைய சமுதாயப் போலிகளை இலகுவில் அடையாளங்காண முடி யாது சாதாரண மக்கள் தடுமாறிக் கொண்டிருப்பார். மக்களின் பலவீ னமான ஆராய்ச்சி அறிவு இவர்
அழிவு நிலையில் சங்கிலியன்
அரண்மனை வாயி
செயல்களுக்கு இடமளித்துக் கொண் டிருக்கும். பெரிய புள்ளிகளாக இருக் கும் சமுதாய நடிகர்களைச்சரியாக இனங்காணாதவரை சமூகம் முன் னேறவோ, பயன் பெறவோ முடியாது.
"நல்லவகையான கருத் தடை மாத்திரைபாவித்தால் பிள் ளையே பிறக்காது! குடும்ப சுகத்தை விரும்பியவாறு அனுப விக்கலாம்" என்று விளம்பரம் வந்திருக்கும். இனியென்ன? அந்தக்கருத்தடைமாத்திரை விற்கும் கடைக்கு ரகசியப்படையெடுப்பு நடக்கும். ஒன்றன்பின் ஒன்றாகப் பெண்ணின் வாய்க்குள் மாத்திரை போகும். சிறிது காலத்தில் விளைவு? கருப்பைக் கோளாறுகளால் சில பெண்கள் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று கொண்டிருப்பர். சிலர் இல்லறசுகத்தின் விளைவான தங்கள் வாரிசுகளை வயிற்றில் சுமந்து
கொண்டுஜயோ!ஏமாந்துவிட்டோமே! என்று அரற்றுவர்!
கருத்தடை

Page 16
மாத்திரை விளம்பரத்தில் கருத்தி னைப்பறிகொடுத்து ஏமாற்றத்தை விலைக்குவாங்கும் 'சுகம் தேடிய தம்பதியரின் நிலையை என்னென்று கூறுவது? போலிக்கருத்தடை மாத்தி ரைகளை நம்பி இவ்வாறு ஏமாறு வதைவிட, கருத்தடை பற்றிய தெளி வான அறிவை, உரிய முறையில் பெற்றுவாழ்வில் ஈடுபடுதலே சிறந்தது. இதற்கு இத்துறையில் தேர்ச்சியும் அனுபவமும் மிக்க வைத்தியர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள் வது நல்லது.
பத்திரிகைகளில் ஏன் விளம் பரங்கள் அநேகபக்கங்களை நிரம்பு கின்றன? " விளம்பர மின்றேல் வியா பாரம் இல்லை" என்ற பழமொழி ஏன் ஏற்பட்டது? விளம்பரம் மூலம் ஏமாறும் மக்கள் அதிகம் என்பது தான் காரணம். மிக இலகுவாக மக்களை வசியம் செய்ய விளம்பரம் உதவுகின்றது. விளம்பரத்தில் கூறப்படும் என்ன பொருள் அல்லது பண்டம் கூடாதது? ஒன்றுமேயில்லை! எல்லாமே தரங்கூடியவையாம். நீடித்து உழைக் கக் கூடியவையாம். வாங்கிப் பாவித்தால் அல்லவோ தெரியும் அவற்றின் மகிமை? இருந்தாலும் மீண்டும் விளம்பரத்தைபார்த்து மயங்கும் மனம்மட்டும்மாறுவதில்லை. எனவே விளம்பரங்கள் மேலும் மேலும் அதிகரிக்கின்றனவே தவிரகுறைவது இல்லை.
திருமண விளம்பரங்களில் கூறப்படும் எல்லா மணமகள்களும் அழகிகள் தானாம். உயர் சாதியாம். நல்ல குடும்பப்பாங்கானவர்களாம். மணமகன்களோ எக்கெளண்டன்,
எஞ்சினியர், டொக்டர் எனச்சிலரும்,
இல்லையாம்.
வெளிநாட்டு மாப்பிள்ளைகளாகப் பல ருமாய் இருப்பர். குடிப்பழக்கங்கள் மணமகன்களுக்கு அழகிய பெண்களே தேவையாம். வெளிநாடுகளுக்குக் கூட்டிச் செல்ல. இத்தியாதித்தகவல்கள் கொண்ட விளம்பரங்களை நம்பி தொடர்புகள் கொண்டவர்கள் அவற்றில் கூறப் பட்டவாறு மணமகன்களையோ, மண மகள்களையோ அடைகிறார்ளா? தாம் எண்ணியபடி அனைத்தும் சரியாக இருக்கிறதா என்றால் அதுதான் கிடையாது. விளம்பரத்தை நம்பித் திரு மணம் செய்தபின்தான் பின்னணிகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. எஞ்சினியர் என்று விளம்பரம் கொடுத் தவர் சாதாரண மெக்கானிக்காக இருப்பார். அழகி என்று விளம்பரம் கொடுத்தவளின் அந்தரங்கவாழ்க்கை அசிங்கமாக இருக்கும். அழகுக் குள்ளே ஆலகால விஷமும் அடங்கி யிருக்கும். கவனம்!!
போலிகளை இனம் காணப் பொதுமக்களுக்கு அறிவு வேண்டும். ஒவ்வொரு விடயத்தைப் பற்றியும் ஆழமான சிந்தனையுணர்வுவேண்டும். ஒவ்வொருகட்டத்தையும் விழிப்புணர் வோடு அணுகவேண்டும். மூட நம்பிக்கைகள், பிடிவாதக் கொள்கை கள்,அசட்டுத்தனமான எதிர்பார்ப்புகள் கைவிடப்பட வேண்டும். விஞ்ஞான பூர்வமான கண்ணோட்டம் வேண்டும். துTர நோக்குடன் &algul நடவடிக்கைகள் வேண்டும். குறுகிய மனப்பான்மை, சுயநலசிந்தை ஒழிய வேண்டும். பேராசையெனும் பிணிக்கு அகப்பட்டுவிடாமல் போது மென்ற திருப்தி கொண்ட நெஞ்சம் இருக்க வேண்டும். போலிகளைக்கண்டு தடுமாறி வழிதவறாதிருப்போமாக.*
 

சிறகுக asy
- பவான் கப்பிரமணியம்
செந்த காலத்து டிசம்பர் பூக்கள் மலர்ந்துள்ள 'சுவிற்சிலாந்தின்’ மலர்வனச் சதுக்கத்தின் எழில்போல இனபந்துக்களின் ஆடை அலங் காரங்களினால் அந்த ஆலயம் ஆக்கிர மிக்கபபட்டுக் கிடந்தது.
ஹற்றன் மேட்டுநிலத்து ஐந்து ரியங்களை பிளாஸ்டிக்கின் கலை வண்ணங்கள் கைப்பற்றிக் கொண்
60T............ ۔۔۔۔۔۔۔۔۔
கவரிலே தொங்கும் “ஜப்பான்” மணிக்கூடு காட்டும் இலங்கை நேரம்
T65)6) 10.45........
வாசலிலே நின்ற த - 4032 இலக்கத்தகட்டு கார் புதுமணத் தம்பதிகளுடன்புறப்பட்டது. சுபாஸ் உல்லாச விடுதிக்கு
* இவை வெறும் கடதாசிக் காசல்ல.இவை எம் இரத்தத் துளிகளின் திரட்டு எங்கள் தங்கைகளுக்கு சிறகுகள் வேண்டும் என்ற چ&J எண்ணத்தால். சொந்தங்களை பகைத்து. சோகங்களுடன். சிந்தின இரத்த வியர்வை.
நாங்கள் காசை மரத்திலே இருந்து பிடுங்கேல்லை. கஸ்டப்பட்டு.உழைச்சனாங்கள். நீங்களும் எங்களைப் போல ஆம்பிளையன் தானே...பிறகேன் எங்கடைபிச்சைக் காசு. மனுக்குலம் மிட்பதற்கு ஆணிகள் கடாவ சொந்தக்கரங்கள் தந்தவன்
ஆலயத்திலுமா இந்த பகல் கொள்ளை." என்று கத்தவேண்டும் கண்ணிர் வடிக்க வேண்டும் போல
இருந்தது 'கணேச மூர்த்திக்கு" ஆனாலும் தன் தங்கைநித்திலாவுக்கு இறக்கை ஒன்றை கொடுத்த
திருப்தியில் மெளனமானான் எரிமலை ஒன்று அவனது சின்ன இதயத்துள் தணிந்து கொண்டது!
இப்போது தான் சீதனத்
தொகை மூன்று இலட்சத்துக்கும்
இரண்டு சாட்சிகளுடன் 'முருகேசர் கையொப்பமிட்டார். நித்திலாவுக்கு முதல் பேசிய கலியாணம் முடிந்தி ருக்குமானால் இன்று ஆண்டு-05 இல் அவள் பிள்ளை புலைமைப்பரிசில் பரிட்சை எழுதி இருக்கும். அவன் வாழ்வில் இடம் பெற்ற அனேக பூர்வாங்கப்பேச்சுக்கள் பொருளாதாரம் இல்லாத காரணத்தால் முறிந்து. கொண்டன. இதனால் அடுப்படிக்கே அவள் அடிக்கடி அனுப்பப்பட்டாள்.
வறுமை வட்டத்தால் வெட் டப்படும் பெண்கள் வயதுக்கு வரும் போதெல்லாம் கொல்கொதா மலைக் கல்லவா கொண்டு செல்லப்படு
கி

Page 17
MATRAM Cfo S.V. RAW 37/3, Kcarlshue Gorden
Colombo -10
அந்த "திரெளபதிகள்" துச்சாதனன் களால் அல்ல கிருஸ்ண பகவான்களால் அல்லவா துகில் உரியப்படுகின்றார்கள்.?
அந்த தொலைந்த காலங்களை கணேசமூர்த்தியால் மறக்க முடிய வில்லை
‘வாற சித்திரையோட உங்களோட சம்பந்தம் பேசி முழுசா ஒருவருசம் முடியுது. இன்னும் எங்கட கண்டிசனுக்கு நீங்கள் வரேல்லை எண்டால் நாங்கள் வேற எங்கேன் பார்க்கவேண்டி வரும். தயவுசெய்து குறை நினைக்க வேண்டாம். என நாகமுத்தர்' விஸ்பரூபத்தை காட்டினார்
எனினும் 'முருகேசரால் அவர் கேட்டதொகையை கொடுப்பதென்பது மிகவும் கடினமான தொன்றே.
சொத்துக்களையும், பொறுப்புக் களையும் கணேச மூர்த்தி வர்த்தக் பாடத்தில் மட்டும் படித்திருந்தான் அனுபவத்தில் அல்ல இப்போது அது நிதர்சனமாக அவன்தலைமேல் விழுந்து விட்டது.
"யாழ்ப்பாணத்தில் இன்று கனத்த பொருண்மியத்தை சேர்க்கும் ஒரே வழி வெளிநாடு செல்வது தான்" எனவே முருகேசர் அந்த முடிவுக்கு வருவது ஏதும் விதிவிலக்கல்ல.
வெளி நாட்டிற்கு கணேச மூர்த்தியை அனுப்பும் பணிகள் ஆரம்பமாயின.
சொந்த வீடும் காணியும் ஈடுவைக்கப்படுகின்றது.
பொறுப்புகளுடன் காசுகள் கைமாறப்படுகின்றன.
படித்துக் கொண்டிருந்தவன்
 

காசுழைக்கும் இயந்திரமாக்கப் ULT66T.
இற்றைக்கு ஐந்து ஆண்டு களுக்கு முன்னர் இப்படிப்பட்ட பெரும் எதிர்பார்ப்புக்களுடன் சுவிற்சிலாந்தில் சரண் புகுந்தான்.
அவன் படும் துன்பம் அவனுக் குத்தான் தெரியும். அப்போதெல்லாம் தாயையும், தங்கையும் நினைத்துக் கொள்ளுவான். தகப்பனில் அனுதாபப்படுவான். நாக முத்தரில் ஆத்திரப்படுவான் கடவுளில் மட்டும் பழியை முடிப்பான்.
அவன் எழுதும் கடிதங்களில் விழும் கண்ணிர்த் துளிகளின் உப்பின் கைப்பை தாய் மட்டும் உணர்ந்து கொள்வாள்.
-9ud ud fT. நாங்கள் எங்களுக்குள் குமுறும் ஏரிமலைகளின் வெப்பம் உங்கள் கண்களுக்கு புலப்படக்கூடாது என்பதற்காகவே பனிக்கட்டிளைக் கையில் வைத்து படம் எடுத்து அனுப்புகின்றோம். "பிளிஸ் அந்தப் படங்களை காட்டி எங்களுக்கு பெண் பார்க்க
வேண்டாம். என்ற அறிவு றுத்தல் கடிதங்களின் நிபந்தனையில்“மீளவும் நித்திலாவின் திருமணப்படலம் தொடங்கியது.
அந்தப் போக்கில் ஆசிரியர். ' குருநாதன் இடைப்பட்டார் ஏனோ அவனும் வெறும் மூன்று லட்சத் தையாவது கேட்டுவிட்டான் நல்ல
வேளை வீடுவளவு கேட்காதது கேட்டிருந்தால்.
'கணேச மூர்த்தி கை கொடுப்பான்’ என்ற ரீதியில் எத்தனையோ எயர்மெயில்கள்’
இருப்பிடந்தேடி விரைந்து சென்றன. அந்த நிகழ்வுதான் இந்தத் திருமணம். அதுவும் அவன் யாழ்குடா வரும் வரை தடைப்பட்டது.
சிறகு கிடைத்த தங்கை உறவுடன் பறந்துகொண்டிருக்கிறாள். தன் வசந்தங்கள்யாவையும் துறந்து
கொண்டவன் கையசைத்தபடி நின்றான். இன்னமும் இரத்தம் பிறீட்டுக்கொண்டிருக்கும் சிலுவை
நாதரின் தலை தாழ்ந்து கொண்டே இருந்தது. ★女女
డకత.ఆay ఆకర్ష్మీ-త్ర్చా န္ဒြီဒီ့ဗ်ာန္ဟစ္ထိ၊
கில்முற்ை r5 ممت6 مہینے பொங்க (്

Page 18
திரு. நா. கோபாலசிங்கம் (ஒய்வு பெற்ற கட்டிட அளவையாளர்) இம்முறை மாற்றம் வாசகர்களிடம் சில புதிர்களைக் கேட்கிறார். நீங்கள் செய்யவேண்டியது இது தான் புதிருக்கான விடைகளை தனித்தாளில் எழுதி "மாற்றம்" முகவரிக்கு தபாலில் சேர்த்துவிடுங்கள். முதலாவது அதிஷ்டசாலிக்கு 5, 000/= பரிசு வழங்கப்படும். ஏனையோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதோ புதிர்கள்.
★ ஒரு வீட்டுக்கு நாலு மூலைகள். ஒருவன் முதலாவது மூலைக்கு கொஞ்ச ஆணிகள் கொண்டு ஏறுகிறான். இவன் கொண்டு போகின்ற அளவு ஆணி அங்கே இருக்கிறது. அவற்றையும் எடுத்துத் தேவையான அளவு ஆணியை அறைந்து விட்டு இறங்குகிறான். பின் இரண்டாவது மூலைக்கு ஏறுகிறான். அங்கேயும் அவன் கொண்டு போகின்றளவு ஆணி அங்கேயும் இருக்கிறது. அவற்றையும் எடுத்துக்கொண்டு தேவையான அளவு ஆணிகள் அறைந்து விட்டு இறங்குகிறான். இவ்வாறே நாலு மூலைகளிலும் செய்கின்றான். இப்போது அவனிடம் ஆணிகள் இல்லை. நான்குமறையும் அறையப்பட்ட ஆணிகள் சமன். அவன் கொண்டு போனது எத்தனை ஆணிகள்? ஒவ்வொரு மூலைகளிலும் வைத்த ஆணிகள் எத்தனை?
பூசாரி ஒருவன் கொஞ்சம் பூக்களோடு கோவிலுக்கு போகிறான். முதலாவது கோவில் குளத்தில் அவற்றைக் கழுவுகிறான். அவன் கொண்டு போன ஒவ்வொரு பூவும், இரண்டாக மாறுகின்றது. அவற்றில் கொஞ்ச பூவை பூசை செய்து விட்டு மிகுதியைக்கொண்டு போய் இரண்டாவது குளத்தில் கழுவுகிறான். அங்கேயும் ஒரு பூ இரண்டு பூவாகிறது. அவற்றில் கொஞ்சம் பூவை இரண்டாவது கோவிலில் பூசை பண்ணுகிறான்.மிகுதிப்பூக்களைக்கொண்டுபோய்மூன்றாவது கோயிலின் குளத்தில் கழுவுகிறான். அங்கே ஒரு பூ இரண்டு பூவாக மாறுகிறது. அவற்றைக் கொண்டு போய் மூன்றாவது கோவிலில் பூசை பண்ணுகிறான். இப்போது பூசாரியிடம் எல்லாம் பூக்களும் முடிந்து விட்டது. பூசாரிமூன்று கோவிலுக்கும் பூசை பண்ணுகிறான். மூன்று தரம் கழுவுகிறான். பூசாரி எத்தனை பூ கொண்டு போகிறான்? ஒவ்வொரு கோவிலுக்கும் எத்தனை பூ பூசை பண்ணுகிறான்?
演 ஒரு யார் நீளமான ஒரு யார் அகலமான துணியை கால் யார் நீளம் கால் யார் அகலமான எத்தனை துண்டுகளாக வெட்டலாம்?
* ஒரு அடி நீளம், ஒரு அடி அகலம் ஒரு அடி 5,000 ME ஆழனமான கிடங்கொன்று உளளது. அப்பேற்பட்ட
கிடங்கில் எவ்வளவு மண் இருக்கும்?
f நூறுக்குள் எத்தனை ஒன்பதுகள் உண்டு?
II (r 责 ஒன்றும் மூன்றும் இரண்டும் எத்தனை?
 
 
 

உடல் கோளாறுகளைக் களையும்
நெல்லிக்கனி
தாரணமாக எங்கள் வீட்டு வளவுகளிலும், தோட்டங் களிலும் பராமரிப்பற்றுவளர்ந்து கணிக ளைச் சுமந்து நிற்க்கும் நெல்லி மரத் திற்குள் உள்ள இரகசியங்களை நாம் உணர்வதில்லை.
நெல்லிக்கனிகள் எம் உடலில் ஏற்படுகின்ற எத்தனையோ நோய் களை அழிக்கும் ஆற்றல் உள்ளன.
இக்கனிகள் புளிப்புச்சுவை
மிகுந்தன. இவற்றில் விற்றமின் " C”
மிகையாக உண்டு. இந்நெல் லிக்கனிகளை உண்டபின் நீர் அருந் தினால் இனிக்கும் தன்மையை பலர் உணர்ந்திருக்கலாம். இது உடல் எரிச்சலைக் குறைத்து குளிர்ச்சியை பெருமளவு தருகிறது. இதற்கு குடவிளக்கம் செய்யும் தன்மையும் உண்டு. பசிஏற்படாதவர்கள் நெல்லிக் கனிகளை உண்டால் பசி உணர் வையும் இவை ஏற்படுத்தும்.
நெல்லிக்கனிகள் எம் உட லிற்கு ஆற்றும் தொண்டுகள் மேற் கூறியவை மட்டுமல்ல. இன்னும் எவ்வளவோ உள்ளன.
மூலவியாதியை குணமாக்கும் இயல்பு இக்கனிகளுக்கு உண்டு. இருதயம், துரையிரல், கல்லீரல்,
தோல் போன்ற முக்கிய சில அங் கங்களில் ஏற்படும் கோளாறுகளை களையும் ஆற்றல் இவற்றிற்கு உள்ளன. மூக்கிலிருந்து இரத்தம் வழி தலை இது தடைசெய்யும்.
பித்தக் கோளாறுகளால் எமது உடலில் ஏற்படும், மயக்கம், தலைவலி, வாந்தி, தலைச்சுற்று போன்றவற்றை அகற்றி குணமாக்கும்.
குருதி விருத்தி அடைவதற்கும், குருதியின் தூய்மையை பாதுகாப்பதற் கும் நெல்லிக்கனிகள் சிறந்த உணவு. நெல்லிக்கனிகளை ஊறுகாய் போட்டு அருந்தி வந்தால் இரப்பையில் மிகையாக சுரக்கப் படும் ஐதரோக் குளோறிக்கமிலம் (Hc) என்று அழைக் கப்படும் அமிலச்சுரப்பி நீங்கி இரப்பை சீராக தொழிற்படும். இதனால் குடற் புண் போன்ற அசாதாரண நிலைகளை முன்கூட்டியே தடுக்க முடியும்.
நெல்லிக்கனிகளை ஊறவைத்து பின் பிழிந்து எடுத்து அப்பிழிசாற்றிற்கு சிறிதளவுதேன்கலந்துஅருந்திவந்தால் மலச்சிக்கல் தீரும். உடலிற்கு எந்த ஒரு பக்க விளைவுமின்றி சிறந்த மருந் தாகவும் அமையும்.
കZദ്രങ്ങുമ്പ്ര്

Page 19
நெல்லிக்கனிகளை அரைத்து அவற்றை உடல் பூராக பூசி சில மணி நேரம் ஊறவைத்த பின் நீராடினால் தோற்பகுதிகளில் ஏற்படுகின்றசொறி, சிரங்குகள் அழிவதுடன் தோல் மென் மையடைகின்றது.
நெல்லிக்கனிச்சாற்றை நாள் தோறும் அருந்தி வந்தால் தடிமல் அகலும். தும்மல், சளிசுரம் நீங்கும்.
நெல்லிக்கனிகளை பக்குவப்ப டுத்தி பதப்படுத்தி அதற்கு வேறும் சில மருந்து மூலிகைகளை சேர்ப்பதன் மூலம் காய்ச்சல் போன்ற வேறும் பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகவும் அமைகிறது.
நெல்லிக்கனிகளை விட அவற்றின் இலைகளை அரைத்து பிழிசாற்றை அருந்தினால், தொண் டைப்புண், உதட்டுப்புண், கண்நோய் என்பன நீங்கும். அத்துடன் குடற் பூச் சிகளின் தொல்லைகளும் குறையும்.
நெல்லிமரப்பட்டைகளையும் ஊறவைத்தும் நீராடலாம். நெல் லிக்கனிகளின் விதைகள் ஆஸ்மா, சுவாசப்பாதை தொடர்பான நோய்கள், மற்றும் பெண் இனப்பெருக்க தொகுதியில் ஏற்படும் சில நோய்கள் (Leucorrhoeo), வாந்தி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்துவப்பொருளாக அமைகின்றன.
எனவே இனியாவது பராமரி ப்பற்று இருக்கும் நெல்லி மரங்களை பராமரித்து அவற்றிலிருந்து எம் உடல் பாதுகாப்பை உறுதிசெய்து கொள் வோம். 女女女
செல்வி ஜெ. ஷோ
(E)
உலக நாடுகளில் சின்னங்கள்
vo
இலங்கை - வாள்ஏந்திய சிங்கம் அவுஸ்திரேலியா - கங்காரு இங்கிலாந்து ரொபின் (றோஸ்) இந்தியா - அசோகச்சக்கரம் இத்தாலி - வெள்ளை அல்லி எகிப்து - தாமரை ஜப்பான் - கோழி கனடா - வேப்பமிலை கிறீன்லாந்து - செல்பிளஸ் தென்னமெரிக்கா - நீலக்கொக்கு பாரசீகம் - சிவந்த றோசாப்பூ மெக்சிக்கோ - நாற்காலி டென்மார்க் - கடற்கரை ரஷ்யா - கரடி வட அயர்லாந்து - முத்துச் சென்னிற் பறவை வேல்ஸ் - பொடிஸ்புஷ்பம் ஜேர்மனி - வெள்ளைக் கொக்கு ஐக்கிய அமெரிக்கா - கழுகு ஸ்பெயின் - மாதுளம்பழம் ஸ்கொட்லாந்து - முட்செடி
- கதா
 

விலங்கினமாக இருந்தாலும், தாவர இனமாக இருந்தாலும் அது பலகோடி கலங்களால் ஆன உருவ மேயாகும். அதற்கு மாறுபாடாக ஒரே
கலத்தினாலான (Ce) உயிரும் உண்டு எனும் உண்மையைக்கண்டு பெரிய விஞ்ஞானிகளே வியப்பில்
மூழ்கியுள்ளார்கள். இந்த ஒரே கல உயிரினத்திற்கு யுக்ளினா என்று பெயரிட்டிருக்கின்றனர். இதை நம் சாதாரண கண்களினால் பார்க்க இயலாது. சக்திவாய்ந்த நுணுக்குக் காட்டிகளால் மட்டுமே இவ்வுயிரி யைப்பார்க்க முடியும்.
பலகோடி கலங்கள் கொண்ட ஒரு யானையின் உடலுக்குள் நடை பெறக்கூடிய அவ்வளவு செயல்களும் இந்த ஒரே கல உயிரியினுள் நடை பெறுகின்றது என்பது ஒரு விந்தை யாகும். சுவாசிப்பது, உணவு உட் கொள்வது, ஜீரணிப்பது கழிவுப் பொருட்களை அகற்றுவது, இனப் பெருக்கம் செய்வது போன்ற அத் 'தனை பணிகளும் இந்த ஒரே கல
உயிரியினுள் நடைபெறுகின்றது.
சுத்தநீர் தேங்கி நிற்கும் இடங்களில் இது வாழ்கிறது. அதன் உடல் நீண்டு, உருண்டு, ஒரு முனை தட்டையும், மறுமுனை கூர்ந்தும் இருக்கும். தட்டையான பக்கமே அதன்முன் புறம். அப்பக்கத்தில் காணப்படும் ஒரு குழிவான இடத்தி லிருந்து நூல் போன்ற ஒர் உறுப்பு வெளிப்புறமாக நீண்டு வளர்ந்
திருக்கிறது. அந்த உறுப்பை வளைத்துப் பக்கங்களில் அசைத்து யுக்ளினா நீரில் நீந்திச் செல்கின்றது. முன் பக்கத்தில் செந்நிறமான ஒரு பொட்டு காணப் படுகிறது. அந்த உயிரியின் கண்ணாக அது பயன்படுகின்றது. அதன் அருகில் நடுவில் வட்டமாகவும் சுற்றிலும் நீண்ட கோடுகளைப் பெற்றும் விண்மீன் வடி வில் தோன்றும் ஒர் உறுப்பு உள்ளது. யுக்ளினாவின் உடலில் தோன்றும் கழிவுப்பொருள் அவ்வுறுப்புக்குள் வந்து நிறைந்து பின்னர் அங்கிருந்துவெளியே அகற்றப்படுகிறது. அசுத்தப்பொருள் நிறைந்திருக்கும் போது அவ்வுறுப்பு தெளிவாகப்புலப்படும். மற்ற வேளை களில் அது கண்ணில் படுவதில்லை.
யுக்ளினாவின் உடலில் இலை களில் இருப்பதைப் போன்ற பச்சை நிறம் காணப்படுகின்றது. அதன் உத வியால் யுக்ளினா, சூரியனிடமிருந்து சக்தியைப் பெற்று கரியமிலவாயு, நீர் இவற்றிலிருந்துமாப்பொருளைத்தயார் செய்து கொள்கிறது. அம் மாப் பொருளை அதன் உடலில் பல இடங் களில் காணலாம். அதுவே அவ்வு யிரியின் முக்கிய உணவாகும். அத் துடன் தண்ணீரில் அழுகிக்கலந் திருக்கும் பொருட்களையும் அதன் மேல் தோலினால் உறிஞ்சியெடுத்துக் கொள்வதும் உண்டு.
இவ்வுயிர் தன் இனத்தை விருத்தி செய்வதும் ஆச்சரியமான
விஷயமாக உள்ளது. அதுதன் உடலை பிளந்து
நீளத்தில்
இரண்டாகப்

Page 20
கொள்கிறது. இரண்டு பகுதிகளும் பின்னர் தனித்தனி உயிர்களாக வளர்ச்சியடைகின்றன.
யுக்ளினா, மற்றொருவகை யாலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. படைப்பில் தாழ்ந்த படி யிலிருக்கும் யுக்ளினா முதல்,ஒவ்வோர் தொழிலைச் செய்வதற்கும் தனித்தனி உறுப்புக்களையுடைய உயர்ந்த இன விலங்குகள், தாவரங்கள் ஈறாகவுள்ள உயிர்களை ஆராய்ந்த அறிஞர்கள், அவற்றின் அமைப்பில் படிப்படியான ஒரு முற்போக்கு அமைந்துள்ளதை உணர்கின்றனர். இவ்வகை ஆராய்ச் சியில் தலைசிறந்தவர் சார்ள்ஸ் டார்
வின் என்பவராவார். இவர்உயிர்களின் பரிணாமவளர்ச்சி குறித்து தெளிவான தகவல்களை, தம்முடைய ஆராய்ச்சி மூலம் கண்டறிந்து வெளியிட்டார்.
உலகிலே முதன் முதலில் தோன்றியது ஒரு கல உயிர்களே என்றும், நாளடைவில் அவை பல கல 9 Luíîi 356 TTJ; வளர்ச்சி யடைந்து வந்திருக்கின்றன என்றும் டார்வினகறியிருக்கிறார். மனிதன் வரை யிலான உயிரின் வளர்ச்சிக்கு யுக் வீனா போன்ற ஒரு கல உயிர்தான் அடிப்படைத் தொடக்கமாக இருந் திருக்கிறது என்கிறார் அவர்*
நவலோகங்கள்
பொன்
வெள்ளி
பித்தளை
இரும்பு
துத்த நாகம்
நாகம்
தாமிரம்
T-Fu Jŭo
கஞ்சம்
நவதானியங்கள்
நெல்
கோதுமை
L66
உழுந்து
துவரை
மொச்சை
սաՄ)
எள்ளு
கொள்ளு
“தெரிந்ததும் தெரியாததும்”
நவரத்தினங்கள் முத்து
66) மாணிக்கம் வைரம்
LojJigso புஸ்பராகம்
நீலம்
கோமேதகம் வைடூரியம் நவரசங்கள் கருணை
சாந்தம்
அற்புதம் சிருங்காரம் ஹஸ்யம் (நகைச் சுவை)
Juulio
அருவருப்பு
வீரம்
கோபம் - ந. தேவா -
 

)crof யில் முதலிடங்கள் A
ته به چه : په لا ده ؟ .
* விண்வெளிப்பயணவிதிகளை வரையறுத்த முதல் அறிஞர்: சேர். ஐசாக்நியூட்டன். (1642 - 1727) வெளியிட்ட நூல் “இயற்கைத் தத்துவத்தின் கணிதக்கோட்பாடுகள்."
* பூமியில் இயக்கப்பட்ட முதல் ஒடம்:-
சந்திரனில் இறங்கிய ஆளற்ற "லூனா கோடி” எனும் ஒடம் 1970 நவம்பர் 17 இல் பூமியில் இருந்து இயக்கப்பட்டது.
* விண்வெளியியை சுற்றிவந்த முதல் செயற்கைக் கோள்:- ரஷ்யாவின் "ஸ்புட்னிக்” 1957 அக்டோபர் 4இல் ஏவப்பட்டது. எடை 83, 6 கிலோ கிராம். 2285.9 கிலோமீட்டர்கள் உயரத்தில் மணிக்கு 28565 கிலோமீட்டர்கள் வேகத்தில் இயங்கியது.
大 முதல் விண்வெளி வீரர்
யூரிககாரின். 1951 ஏப்பரல் 12 இல் 4, 65டன் எடையுள்ள "வாஸ்டாக்” (கிழக்கு எனப்பொருள்படும்.) விண் கலத்தில் 89, 34 நிமிடங்களில் ஒரு முறை புவியைச் சுற்றித்திரும்பினார்.
大 முதல் விண்வெளி வீராங்கனை:-
வாலெண்டினா தெரஸ்கோவா எனும் ரஷ்யப்பெண்மணி. 1963 ஜூன் 16ல் "வாஸ்டாக் - 6” விண்கலத்தில் 2 நாட்கள் 22 மணிக்கூறுகள் 42 நிமிடங்களில் 48 முறை புவியைச் சுற்றினார். ஸ்வெத்லேனா சாவித்ஸ்கயா எனும் ரஷ்யமங்கை இரண்டாவது விண்வெளி வீராங்கனை.
* விண்வெளியில் இறங்கி நடந்த முதல் வீரர்
அலெக்ச் ஏ. லியனெவ் 1965 மார்ச் 18 அன்று தமது வாஸ்கோட் - 2 விண்கலத்தினின்று இறங்கி ஊர்திக்கு வெளியே திறம்படச் செயற்பட்டவர்.
* விண்வெளி சென்ற முதல் தம்பதிகள்:-
அமெரிக்காவின் ஜேண்டேவிசும் அவரது கணவர் மார்க்லீயும் 1992 செப்டம்பரில் விண்வெளியில் பயணம் செய்தனர்.
தொகுப்பு
- சுகந்தி

Page 21
துணுக்குகள் . . .کسکے
மெஸோஸோயிக்யுகம்:- (mesosoic era) இற்றைக்கு 230 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நடந்த காலமாகும். இக்காலத்தில் வாழ்ந்த இராட்சத டைனோசர்கள் 167 மில் லியன் ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்தன.
காதுகளின் திறமை -
சராசரியாக வேகமாகப் பேசும் ஒரு மனிதன் கூட நிமிடத்திற்கு 160
வார்த்தைகள் பேசமுடியும். ஆனால் மனிதனின் காதுகளுக்குத்திறமை மிக மிக அதிகம். நிமிடம் ஒன்றுக்கு மனிதன் 700 வார்த்தைகள் வரையில் கேட்டும், புரிந்து கொள்ளவும் முடியும்.
உள்ளதை உள்ளபடி.
நாம் நிமிர்ந்து நின்று தோள் பட்டைகள் அகலமாக இருக்கும் படி வைத்து எதிரிலிருப்பவரின் கண்க ளையே நேரடியாகப்பார்த்தபடி பேசி னால் "நாம் தெளிவுடன், நம்பிக் கையுடன், மன உறுதியுடன் பேசு கிறோம் என்று பொருள். உள்ளதை உள்ளபடி பேசுகிறோம் என்பது பொருள்.
ஆள்காட்டி விரல் காட்டினால்?
Çş
மற்றவர்களிடம் எதைப்பற்றிப் பேசினாலும்,
வாதாடினாலும் ஒரு
போதும் ஆள்காட்டி விரலைக்காட்டிப் பேசக்கூடாது. இதை எவரும் விரும்ப மாட்டார்கள். கர்வத்தின் அடையாளமே இது ஆள்காட்டி விரலைச் சுட்டிக் காட்டும் போது, துப்பாக்கி முனையைக் காட்டுவதைவிட மோசமான சூழ்நிலை உருவாகும்.தன் மனத்திலுள்ள வெறுப் புணர்ச்சியையும், பொறாமையையும், பழி உணர்ச்சியையும் வெளிப்படுத்து வதாக இது உணர்த்தும். நண்பர் களைவிட எதிரிகளை நாம் அதிகம் பெற்று வாழ்க்கையில் தோல்விகளைச் சந்திக்க நேரிடும்.
V - for Victory புகழ் பெற்ற பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்கு இடுப்பில் இருகைகளையும் வைத்தபடி வேகமாக நடக்கும் பழக்கம் இருந்தது.இரண்டாம் உலகப்போரில் பிரிட்டன், ஜேர்ம னியையும், ஜப்பானையும், முறியடித்து வெற்றிகாணவேண்டும் என்பதை மக்களுக்கு வலியுறுத்த V என்று தெரியும்படி அடிக்கடி விரல்களைக் st it, 60TTff. V - for Victory 616(TLIGig, இவர் முழக்கமாக இருந்தது. இவர் இடுப்பில் இருகைகளையும் வைத்து நடக்கும்போது பார்த்தாலும் அவர் உடலில் V என்ற எழுத்து தெரிவது போலிருக்கும் என்றார்கள் பார்த்த வர்கள். சர்ச்சில் காட்டிய அந்த வழியைக் கடைப்பிடித்துத்தான் இன்று உலகம் முழுவதும் பலர் இரண்டு விரல்களைக்காட்டுகிறார்கள்.
 

£49ů sluiss??aru, «Jawố spø|-úseyó egůso அடிக்கிட்டிங்க இனி
•ów śwewNow?) 90ải upės
總劑欄>—- -off'taegs
op.os.msnišstil/8s%.origiós ésű)
ș, făšůșğ鱷ğ ໂມງໃນຕrgosovsvslöjš5)soğu, Y -JĦířágiấățăó... | șiștii: 8’li yo
粉碧) -- -*-硅#點
‘57f’‘LG骨.

Page 22
குறுக்கெழுத்துப் போட்டி இல. 08
LO
மேலிருந்து கீழ்
Li இடமிருந்து வலம் 1. கழுதைப் பாலில் குளித்த எகிப்திய
1. சொன்னதைச் சொல்லும் . என்
பார்கள். அழகி 4. இது உடலுக்கு உரம் சேர்ப்பது. 望。 இது வகை மரம் குழம்பி 5. கொம்பில்லா விலங்கை இதற்கும் பிருக் றது.
பயன்படுத்துவார்கள். 3. இதில் குழம்பியுள்ளது நாணயம், இது
5. இது ஒரு இராகம் நாணயம்கெட்டதால் கீழிருந்துமேலாக
Glenó தானம் கெட்டது.
ವ್ಹೀ''ತಿ வகை நவீன தெ அறி 5 அகிம்சை வாதியின் ஈற்றெழுத்து
மேலிருந் 感 ஒழிந்தது.
ಟ್ವಿ' ழை இதனால் 7. ஆதிகால மனிதர்கள் பாதுகாப்புக்காக,
இதனை நாடினார்கள். குழம்பியுள்ளது. மேலுள்ள கூப்பனை நிரப்பி மாற்றம் முகவ ஒ. இதனை மனிதனால் எழுத முடியாது. ரிக்கு அனுப்பிவையுங்கள், பரிசு 29 நபா.
குறுக்கெழுத்து போட்டி முடிவுகள் 07
இடமிருந்து வலம் மேலிருந்து கீழ்
1. வைகுண்டம். விவகாசிநாள்.
காற்படை . குற்றுயிர்.
சிறுபான்மை, ண்பபாடு (பண்பாடு) 置上 Lifu . இருபஜ்,
பரிசு பெறுபவர் செல்வன். க. மதிதரன். யாழ், மத்திய கல்லுரி.
இச்சஞ்சிகை 372, கால்சு காமன்.கொழும்பு-10 இல் அமைந்துள்ள காபந்திரி வெளியிட்டத்துக்காக, பாதுமூரான் அவர்களால் அச்சிட்டு வெளியிட்டப்பட்டது.
[ဗွို႔ျဖစ္သစ္ကို ဗွို nxirrin
 
 

தரம் நாடுவோர்
தவறாமல் நாடுமிடம்
ஜூவல்லறி
இல, 2, கஸ்தூரியார் வீதி,
(ஸ்ரான்லி வீதிச் சந்தி)
யாழ்ப்பாணம்.
பூரண உரிமையாளர்: சண்முகம் இராஜேஸ்வரன்

Page 23
எத்திசையும் தித்திக்கும் தேன்
தயாரிப்பதில் மு.
R
Creann |
米米
75. பாங்சால் வீதி,
 
 
 

சிந்தும் ஐஸ்கிறீம் வகைகள் ன்னோடிகள்
O
D660
யாழ்ப்பாணம்