கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பண்பாடு 1997.05

Page 1
/ / /
PANPAIDυλ αμφα
தமிழ் ஆராய்ச்சி வரைவில
* 1980 க்குப் பிந்திய இலங்ை
* வைணவத்தின் தோற்றமும்
* தமிழர் பூப்பு நீராட்டு நடை
* ஈமக்கச் சி * ஈழததுச சறுகதை வளாசச
* தமிழர் பண்பாட்டில் இல்ல
மார்க்சிச கலை - இலக்கிய
இதழ்
Gales இந்துசமபக்லாசார அ
 
 
 
 
 
 
 
 
 
 

இதழ்
Journal
1997
க்கணமும் ஆய்வுப் பரப்பும்,
கத் தமிழ்ச் சிறுகதைகள்.
வளர்ச்சியும் - ஒரு நோக்கு.
கொழும்பு தக்கிற்சி முறைகள்,
്ഞു 墅、
■யில் பித்தனின் بھی ہو
கொழும்புத் தமிழ்ச் சங்க றம்
13 SEP 2003
நோக்கு
()
பீடு
வல்கள் தினைக்களம்

Page 2
பதிப்பு - 1997 வைகாசி
விலை: ரூபா 25/=
பதினைந்தாவது இதழி
1. பேராசிரியர் அ. பாண்டுரங்கன் . ஏம்.ஏ.
தமிழ்நாடு புதுவைப் பல்கலைக்கழகத்தி பணிபுரிபவர். மிகுந்த தமிழ் புலமை பெற்றவர். எழுதியுள்ளதோடு, தமிழ் மொழி தொடர்பான நூ
2. திருமதி. அம்மன்கிளி முருகதாஸ். எம். கிழக்குக் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்து தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வருபவ வருகிறார்.
3. பேராசிரியர் வி. சிவசாமி.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில், சமஸ்கி தொடர்பான ஆய்வுகளையும் , கட்டுரைகளையும்
4. திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் எ
யப்பான் கக்குயின் பல்கலைக்கழகத்தின் ஈடுபாடு கொண்டவர். இவருடைய கணவனார் ே தமிழ்த்துறைத்தலைவர் ஆவார்.
5. திரு. செ. யோகராசா. எம். ஏ.
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்து தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வ
6. திருமதி கலைவாணி இராமநாதன் . எ
யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் இந்து ந தொடர்பான ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுது
7. கலாநிதி. சோ. கிருஷ்ணராஜா.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பெ தொடர்பான சில நூல்களை எழுதியுள்ளார். கட்டுரைகளை எழுதி வருபவர்.

ன் கட்டுரையாசிரியர்கள்
பிஎச்.டி.
ல் தமிழ்த்துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் தமிழ், ஆங்கில மொழிகளில் பல ஆய்வுக் கட்டுரைகளை ல்களையும் வெளியிட்டுள்ளார்.
ஏ.
றை சிரேஷ்ட விரிவுரையாளர். தமிழ்மொழி, இலக்கியம் ார். இலக்கியத்துறையில் சிறந்த விமர்சனங்களை எழுதி
கிருத பேராசிரியர். இந்துசமயம் சமஸ்கிருதம், தமிழ்மொழி,
எழுதி வருபவர்,
ாம். ஏ.
ஆய்வாளர். தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளில் மிகுந்த பராசிரியர் சண்முகதாஸ். யாழ்ப்பான பல்கலைக்கழகத்தில்
றை சிரேஷ்ட விரிவுரையாளர். இலக்கியம், தமிழ் மொழி ருபவர். சிறந்த இலக்கிய விமர்சகர்.
ம். ஏ.
ாகரீகத்துறையில் சிரேஷ்ட விரிவுரையாளர். இந்துநாகரீகம் வதுடன் ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றார்.
ய்யியல் துறை தலைவராக விளங்குகின்றார். மெய்யியல் ஆய்வுகள் பல மேற்கொண்டு மெய்யியல் ஆராய்ச்சிக்
பண்பாடு பருவ இதழில் பிரசுரமாகியுள்ள கட்டுரைகளில் கூறப்பட்டடுள்ள கருத்துக்கள் யாவும் கட்டுரையாசிரியர்களின் சொந்தக் கருத்துக்களாகும். இவை இவ்விதழை வெளியிடும் திணைக்களத்தின் கருத்துக்களைப் பிரதிபலிப்பனவாக
on aflfhumf

Page 3
L IGoööTL
(பதினைந்தாலி
மலர் 7 இதழ் 1
ஆசிரிய சாந்திநாவு
;8؟ --
உதவி ஆசி எஸ். தெய்வ
ଜୋଗାଈjଣfluff
இந்து சமய கலாசார அலு இல; 98, வோட்
கொழும்பு

வது இதழ்)
1997 வைகாசி
Jiff க்கரசன்
arfluuii பநாயகம்
வல்கள் திணைக்களம்
G6T6),
- O7.

Page 4
பொருள
தமிழ் ஆராய்ச்சி வரைவிலக்கணமும் ,
அ. பாண்டுரங்கன்
1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ்ச்சி
அம்மன்கிளி முருகதாஸ்
வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
வி. சிவசாமி
தமிழர் பூப்புநீராட்டு நடைமுறைகள்.
மனோன்மணி சண்முகதாஸ்
ஈழத்துச் சிறுகதை வளர்ச்சியில் பித்தனி
யோகராசா
தமிழர் பண்பாட்டில் இல்லறம்
கலைவாணி இராமநாதன்
மார்க்சிச கலை - இலக்கிய நோக்கு
சோ. கிருஷ்ண ராஜா

ாடக்கம்
ஆய்வுப் பரப்பும்.
றுகதைகள்.
- ஒரு நோக்கு.
ன் கதைகள்.
O1
09
16
27
33
38

Page 5
தமிழ் ஆ வரைவிலக்கணமு
C ‘தமிழ் ஆராய்ச்சி” என்ற தொடர் தமிழைப் பற்றிய ஆராய்ச்சி என இரண்டாம் வேற்றுமைத் தொடராக விரியும். தமிழைப் பற்றித் தமிழிலும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளிலும் வெளியான நூல்கள், கட்டுரைகள் யாவும் தமிழ் ஆராய்ச்சி என்னும் பரப்பினுள் அடங்கும். தமிழ் ஆராய்ச்சி என்பதன் பொருளை விளக்க வந்த ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் பின்வருமாறு அதனைக் கூறுகின்றார்:
தமிழ்மொழி, அதிலுள்ள இலக்கியம் இலக்கணம் பற்றிய கொள்கைகள், தமிழ்ப் புலவர்களின் காலம், வாழ்க்கை, நூல்களின் தன்மை, தரம், அவை எழுதப் பெற்ற சூழ்நிலை, புலவருக்கும் அவரை ஆதரித்த அரசர், வள்ளல்கள் முதலியோருக்கும் இடையே திகழ்ந்த உறவு ஆகியவைகளைப் பொருளாகக் கொண்டு, விருப்பும் வெறுப்பும் இன்றி, நம்பத் தகுந்த ஆதாரங்களை வைத்துத் தக்க பரிசீலனை முறைகளைக் கையாண்டு, தற்காலப்பண்புடன் ஆராய்ந்து, உண்மையை நாடும் முயற்சியே தமிழ் ஆராய்ச்சி ஆகும். (1971:1)
தமிழ் ஆராய்ச்சி குறித்து ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடும் கருத்து மிகவும் கவனிக்கத்தக்கது. "தற்காலப் பண்புடன் ஆராய்ந்து உண்மையை நாடும் முயற்சியே தமிழ் ஆராய்ச்சி ஆகும்’ என அவர் கூறும்போது, தமிழ் ஆராய்ச்சியின் தற்கால நிலைமை பற்றி அவர் நன்கு கணித்திருப்பது தெரிகின்றது. "தற்காலப் பண்பு” என்று அவர் கருதுவது modern என்றஆங்கிலச் சொல்லின் தமிழாக்கம் ஆகும். நாடு, இனம், மொழி, சமயம் என்ற வேறுபாடுகளைக் கடந்து, விருப்பு வெறுப்புகள் அற்ற நிலையில், மனிதனை விளங்கிக் கொள்வது தான் தற்காலப் பண்பு. இந்தக் கண்ணோட்டத்தோடு முதன் முதலில் ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்கள் மேனாட்டிலிருந்து இந்தியாவுக்கு வந்து, தேவ ஊழியம் ஆற்றிய சமயத் தொண்டர்களே ஆவர். அவர்களின் குறிப்பிடத் தக்கவர் வீரமாமுனிவர் எனத் தன் பெயரைத் தமிழில் புனைந்துகொண்ட

Jmušřif: h Eiιίταιύ υπύιμίί
அ. பாண்டுரங்கன்
கான்ஸ்டண்டைன் ஜோஸப் பெஸ்கி (Constantine Joseph Beschi - 1680 – 1746) gomi. 4)plégijo! சமயப் பிரச்சாரத்துக்காகத் தமிழகம் போந்த வீரமாமுனிவர், தமிழ் கற்று, அதில் பெரும் புலமை பெற்றுக் காவியமும் பிரபந்தங்களும் பாடியதோடு, தமிழுக்கென்று புதிய முறையில் சதுரகராதியையும் கொடுத்தார். திருக்குறளை மேனாட்டார்க்கு அறிமுகப்படுத்தினார். தமிழ் மொழிக்குப் புதிய முறையில் இலக்கணம் எழுதினார். இவரைத் தொடர்ந்து பல மேனாட்டு அறிஞர்கள் தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாலும், இராபர்ட் கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (A Comparative Grammar of the Dravidian Languages) என்னும் ஆங்கில நூல் தான் தற்காலத் தமிழ் ஆராய்ச்சியின் விடிவெள்ளியாக எழுந்தது. இந்நூல் வெளியாகி இன்றுடன் (1846-1996) நூற்றைம்பது ஆண்டுகள் நிறைந்து விட்ட போதிலும், இன்னும் அந்நூல்தான் தமிழ் ஆராய்ச்சிக்கு மூல பண்டாரமாக - அடிப்படை நூலாக - விளங்குகின்றது. தற்காலத் தமிழ் ஆராய்ச்சிக்குப் பாதைகளையும் தடங்களையும் வகுத்துக் கொடுத்த பெருமை டாக்டர் கால்டுவெல்லுக்கே உரியது. இந்தியர்களுக்கு அச்சிடும் உரிமை வழங்கப்பட்ட பின்னர் (1835), அதுகாறும் ஏடுகளில் மறைந்து கிடந்த தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் மரபு வழியாகத் தமிழ் பயின்ற தமிழ் அறிஞர்களும் மேனாட்டுக் கல்வியால் தாக்கம் பெற்றுத் தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஊக்கம் பெற்ற நவீன காலத் தமிழ் அறிஞர்களும் பெரும்பாலான பண்டைத் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை அச்சிட்டு, தமிழ்மொழி வரலாற்றில் மறுமலர்ச்சியையும் புதுக்கிளர்ச்சியையும் ஏற்படுத்தினர்.
01. சங்க இலக்கியங்கள் உள்ளிட்ட பண்டைத் தமிழ் இலக்கிய, இலக்கணங்கள் கற்றறிந்த அறிஞர்களின் கவனத்தை ஈர்த்தன. பண்டைத் தமிழ் நாட்டைப் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் அதன் பழம் பெருமைகளைப் பற்றியும் ஆராய்ந்து அறிவதில் பெரும் ஊக்கமும், தாம் கண்டறிந்த பழம் பெருமை காரணமாகத் தமிழ் பற்றிய பெருமித உணர்வும் பொங்கி

Page 6
வழியத் தொடங்கின. தமிழக வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கும் அறிஞர்கள் பலர் முயன்றனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் வி. கனகசபைபிள்ளை, பி.டி. சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், கே. ஜி. சேஷ அய்யர், எஸ் கிருஷ்ணசாமி, துஅ கோபிநாதராவ், க.அ. நீலகண்ட சாஸ்திரியார், கே.வி. சுப்பிரமணிய அய்யர், தி. நா. சுப்பிரமணியம், தி.வை. சதாசிவ பண்டாரத்தார் போன்றோர் ஆவர். இவ் அறிஞர்கள் பண்டைத் தமிழ் இலக்கியங்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றின் துணையுடன் பண்டைத் தமிழகத்தை வரலாற்று உணர்ச்சியுடன் மீட்டுருவாக்கிக் கொடுக்க முனைந்தனர்.
பிரிக்கப்படாத பழைய சென்னை மாகாணத்தில் தமிழ் அறிஞர்களிடையே தோன்றிய புத்தெழுச்சியின் காரணமாக, ஆங்கிலேய அரசு சென்னையில் 1812ஆம் ஆண்டில் சென்னைக் கல்விச் சங்கத்தை நிறுவியது. இச்சங்கத்தின் சார்பில் தாண்டவராய முதலியார், விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் போன்ற புலவர் பெருமக்கள், பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கணங்களையும் வெளியிட்டனர். சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ், பாட மொழிகளில் ஒன்றாகக் கற்பிக்கப்பட்டது. இதுவரை, மடங்கள், கோவில்கள், புரவலர்கள் ஆகியோரிடம் ஒடுங்கிக்கிடந்த தமிழ் இலக்கியங்களும் இலக்கணங்களும் பல்கலைக்கழகக் கல்வி வாயிலாகக் கற்றோர் அனைவரையும் சென்று சேர்ந்தன. பல்கலைக் கழகப் பாடப் பயில்துறைகளுக்காக எட்டுச் சுவடிகள் முழுமையாகவோ பகுதிகளாகவோ அச்சுக்குக் கொண்டுவரப்பட்டன. மூல நூல் பதிப்புகளுடன் புத்துரைகளும் வெளியிடப்பட்டன. தமிழ் இலக்கியத்தை வரன் முறையாகப் புரிந்து கொள்ளும் நோக்கில், இலக்கிய வரலாறுகள் எழுதும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. பேராசியர் எஸ். வையாபுரிப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக் கழகத்தின் வாயிலாகக் கொண்டு வந்த தமிழ் லெக்சிகன், தமிழ் ஆராய்ச்சியின் முக்கிய பங்களிப்பு ஆகும். எம். எஸ். பூரணலிங்கம் பிள்ளை அனவரத விநாயகம் பிள்ளை, வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார், கே.என்.சிவராசபிள்ளை போன்றோர் ஆற்றிய பணிகள் தமிழ் ஆராய்ச்சிக்கு மேலும் ஒரு வலுவான தளத்தை அமைத்துத் தந்தன. 0.2. இத்தகைய புத்தெழுச்சியின் விளைவாக, மதுரையில் பாண்டித்துரைத் தேவர் முயற்சியால் மதுரைத் தமிழ்ச் சங்கம் 1901 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. தமிழ் ஆராய்ச்சிக்கென்று “செந்தமிழ்”
2

என்னும் ஆராய்ச்சி இதழும் 1903 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பழந்தமிழ் நூல்களை அச்சிடும் பணியையும் மதுரைத் தமிழ்ச் சங்கம் மேற்கொண்டது. "செந்தமிழில்" தமிழ் தொடர்பான அனைத்தும் புலமை நோக்கோடு விவாதிக்கப்பட்டன. மு.இராகவ அய்யங்கார் போன்ற தமிழ் நாட்டுப் புலவர்களுடன் சுன்னாகம் 9 - குமாரசாமிபிள்ளை, ஆ. முத்துத்தம்பிபிள்ளை, த. கனகசுந்தரம்பிள்ளை, நா. கதிரவேல்பிள்ளை, சுவாமிநாத பண்டிதர் போன்ற ஈழ நாட்டுப் புலவர்களும்“செந்தமிழ்” வழியாக நடைபெற்ற விவாதங்களில் பங்கேற்று, கட்டுரைகள் எழுதி, தமிழ் ஆராய்ச்சிக்கு ஒர் ஆழமான, அகலமான பார்வையைக் கொண்டு வந்தனர்.
மதுரைத் தமிழ்ச் சங்கம் பாண்டிய நாட்டில் தோன்றியதை ஒட்டி, சோழப் பெருமன்னர்கள் கோலோச்சிய தஞ்சைத் தரணியில், கருந்தட்டாங்குடியில் 1911 ஆம் ஆண்டு தமிழ்ச் சங்கம் ஒன்று நிறுவப்பெற்றது. இச்சங்கம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் எனப் புகழ் பெற்றது. பாரம்பரியத் தமிழ் புலமையில் சிறந்து விளங்கிய கவியரசு வேங்கடாசலம் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், பூவராகவம் பிள்ளை போன்றோர் தமிழ்ப் புலவர்களை உருவாக்கும் பணியில் இங்கு ஈடுபட்டனர். கரந்தைத் தமிழ்ச் சங்கம் “தமிழ்ப் பொழில்’ என்னும் ஆராய்ச்சி இதழை நடத்தியதோடு, அரிய தமிழ் நூல்கள் சிலவற்றையும் பதிப்பித்துள்ளது. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் 1929 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்டது. உ.வே. சாமிநாதையர், விபுலானந்த அடிகள், ர. ராகவ அய்யங்கார், ரா.பி. சேதுப்பிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார் போன்ற அறிஞர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் அழைக்கப் பெற்று, தமிழ் மொழிக்குச் சிறப்பான பணி ஆற்றினர். பல அரிய நூல்கள் புத்துரையுடன் பதிப்பிக்கப்பட்டதுடன், மூல பாட ஆய்வோடு கூடிய கம்ப ராமாயணப் பதிப்பும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
03. சங்க இலக்கியப் பதிப்புகளின் விளைவாகத் தமிழ் உணர்ச்சி மேலோங்கியது. ஆரிய, திராவிட நாகரிகங்கள் பற்றிய கருத்தாக்கங்கள் தனித்தமிழ் இயக்கத்துக்கு அறிஞர்களில் சிலரை இட்டுச் சென்றன. இவ் வியக்கம் சுயமரியாதை இயக்கத்தின் கடவுள் மறுப்பை ஒப்புக் கொள்ளாவிடினும், தமிழின் தொன்மை, தூய்மை, தனித்தன்மை பற்றி மிகுந்த நம்பிக்கையோடு உழைத்தது. மறைமலையடிகள், 8町。 சுப்பிரமணியபிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார்,

Page 7
தேவநேயப் பாவாணர் போன்றோர் எழுதிய நூல்கள், தமிழ் ஆராய்ச்சியின் மற்றொரு தடத்தைக் காட்டுவதாக இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களை வெளியிடுவதற்காகவே தென்னிந்தியத் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் 1921ஆம் ஆண்டில் தோற்றவிக்கப்பட்டமை தமிழ் வரலாற்றில் முக்கியமான நிகழ்ச்சியாகும். இக் கழகம் பழந்தமிழ் இலக்கண, இலக்கியங்களைப் பதிப்பித்ததோடு அவற்றுக்குப் புத்துரைகளையும் வெளியிட்டது. சைவத்தையும் தமிழையும் இணைத்து வளர்த்த தனித்தமிழ் இயக்க அறிஞர்களின் முயற்சியால், சைவ சித்தாந்த மகா சமாசம் நிறுவப்பட்டது. இச் சமாசத்தின் வெளியீடாகப் பல அரிய தமிழ் நூல்கள் வெளியாயின. அவற்றுள் குறிப்பிடத் தக்கது பேராசிரியர் எஸ்.வையாபுரிபிள்ளை அவர்களால் புதுமுறையில் வெளியிடப்பட்ட சங்க இலக்கியம் ஆகும்.
04. தமிழகத்தில் ஐம்பதுகளில் மொழியியல் ஆய்வு அறிமுகம் செய்யப்பட்டது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையம் 1958 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. பேராசிரியர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் தலைமையில் இயங்கிய இவ் உயராய்வு மையம் மொழியியலையும் தமிழையும் இணைக்கும் பாலமாக அமைந்தது. பழந்தமிழ் நூல்களுக்குச் சொல்லடைவுகள் உருவாக்கப்பட்டன. தமிழ் மொழி வரலாறு தெ. பொ. மீ. அவர்களால் உருவாக்கப்பட்டது. அவருடைய தலைமையில் பணியாற்றிய அறிஞர்கள் தமிழ்,பிற திராவிட மொழிகள் தொடர்பாகப் பல சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டுள்ளனர். பிரஞ்சு இந்தியா விடுதலை பெற்ற போது நிறுவப் பெற்ற பிரஞ்சு - இந்தியப் பண்பாட்டுக் கழகம் அதன் நிறுவனப் பேராசிரியரான ழீன் பிலியோசா அவர்களின் வழிகாட்டலில், தமிழ் ஆராய்ச்சியைத் திறம்பட வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தியது. தமிழ்ப் புராண இலக்கியங்கள் பிரஞ்சு மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டன. திருமுருகாற்றுப்படை, பரிபாடல், திருப்பாவை போன்ற நூல்களையும் மொழிபெயர்த்து இதுவெளியிட்டுள்ளது. பண்டிதர் நீ.கந்தசாமிபிள்ளை அவர்களின் உதவியுடன் சங்க இலக்கியத்துக்கு ஒர் அகராதியையும் பிரஞ்சு இந்தியா பண்பாட்டுக் கழகம் உருவாக்கியது. மேலும், தேவாரத்தை ஒர் ஆராய்ச்சிப் பதிப்பாக வெளியிட்டுள்ளது.
0.5 தமிழ் நாட்டிலும் தமிழ்நாட்டுக்கு வெளியிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழ் ஆராய்ச்சிகள் நடந்தேறியுள்ளன. ஒன்றுபட்ட சென்னை மாகாண த்திலிருந்த திருவேங்கடவன் பல்கலைக்கழகமும்

அங்கிருந்த கீழ்த்திசைச் சுவடிகள் நூல்நிலையமும் கணிசமான பணியாற்றியுள்ளன. திருவிதாங்கூர்ப் பல்கலைக்கழகமாகத் தோன்றி, கேரளப் பல்கலைக்கழகமாக உருமாற்றம் பெற்ற, திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக்கழகம், தமிழ் மொழி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டது. பண்டைச்சேர நாட்டுப்புலவர்கள் பாடிய பாடல்களைத் தொகுத்து “சேரவேந்தர் செய்யுட் கோவை’ என்னும் பெயரில் இரண்டு தொகுதிகளைக் கேரளப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. கேரளப் பல்கலைக்கழகத்தோடு இணைந்துள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நுால்நிலையமும் தமிழ்ப் பணிகளைச் செய்து வருகின்றது.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் உள்ள கீழ்த்திசைச் சுவடிகள் நூல்நிலையமும் தஞ்சாவூரில் உள்ள சரசுவதி மகால் நூல் நிலையமும் பல அரிய தமிழ்ச் சுவடிகளை ஆய்வு செய்து பதிப்பித்து வெளியிட்டுள்ளன. உ.வே. சாமிநாதையர் தொகுத்து வைத்திருந்த சுவடிகளைத் தன் பொறுப்பில் ஏற்றுக்கொண்ட கலாசேத்திரம், திருவான்மியூரில் உ. வே. சா. சாமிநாதையர் பெயரில் ஒரு நூல் நிலையத்தை நிறுவி, அவருடைய பணியைத் தொடர்ந்து நடத்தி வருகின்றது. உ.வே. சா. எழுதிய குறிப்புகளுடன் பல புது நூல்கள் இந்நூல் நிலையத்தால் பதிப்பித்து வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களிலும் எம். பில், பிஎச்.டி பட்ட ஆய்வேடுகள் பல அவ்வப்போது பணிக்கப்பட்டு வருகின்றன. இலங்கையிலும் மலேசியாவிலும் நடைபெறும் தமிழ்ப் பணிகள், இங்கு போதிய தரவுகளைத் திரட்ட இயலாத காரணத்தால், விரித்துக் கூறப்படவில்லை. எனினும், இலங்கை - குறிப்பாக, யாழ்ப்பாணம் - தமிழுக்குச் செய்துள்ள பணி குறைத்து மதிப்பிட முடியாத அளவுக்கு மிகவும் உயர்ந்தது. யாழ்ப்பாணப் பகுதியை ஆண்ட ஆரியச் சக்கரவர்த்திகள் காலத்திலிருந்தே யாழ்ப்பாணத்தில் தமிழ் உயர்நிலையை எட்டியிருந்த போதிலும், நவீன யுகத்தில் ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம் பிள்ளை, ஞானப்பிரகாசம் அடிகளார், கதிரைவேல்பிள்ளை, சுன்னாகம் குமாரசாமிபிள்ளை, கணேசய்யர்,வி. கனகசபைபிள்ளை, சைமன் காசிசெட்டி போன்றோர் ஆற்றிய தமிழ்ப் பணி மிகவும் சிறப்பான ஒன்றாகும்.
இவற்றுடன் தனி மனிதர்களாகச் சிலர், நிறுவனங்களைப் போன்று தமிழ் ஆராய்ச்சியில் ஈடுபட்டு நூல்களைப் பதிப்பித்து உதவியுள்ளனர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள்
3

Page 8
வைமு.கோபாலகிருஷ்ணமாச்சாரியாரும்மர்ரே எஸ்.ராஜம் அவர்களும் ஆவர்.வை.மு.கோபால கிருஷ்ண மாச்சாரியார் கம்பராமாயணம், வில்லி பாரதம், அஷ்டப் பிரபந்தம் போன்ற வைணவச் சார்பான இலக்கியங்களைப் பதிப்பித்தும் உரை எழுதியும் வெளியிட்டதோடு, சங்க இலக்கியமான பத்துப் பாட்டுக்கும் உரை எழுதியுள்ளார். தண்டியலங்காரத்துக்கும் அவர் உரை வரைந்துள்ளார். மர்ரே எஸ். ராஜம் அவர்கள் சங்க இலக்கியங்களையும் தமிழ் இலக்கியங்களில் பலவற்றையும் எல்லோரும் எளிதில் புரிந்து கொள்ளும் முறையில், சந்தி பிரித்து மலிவுப் பதிப்பாக வெளியிட்டு, பதிப்புத் துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். அவர் தொகுத்து வைத்திருந்த பல அரிய குறிப்புகள் இன்னும் நூல் வடிவம் பெறாமல் இருப்பது நம் தவக் குறைவே ஆகும். இன்று புத்திலக்கியப் படைப்புகளான நாவல், சிறுகதை, புதுக்கவிதை தொடர்பாகப் பல ஆய்வு நூல்கள் தொடர்ந்து வந்து கொண்டுள்ளன. சிற்றிதழ்களிலும் அவை இடம்பெறுகின்றன. தற்காலத் தமிழ் ஆராய்ச்சிக்கு வெகுசன ஊடகங்களான பத்திரிகைகளின் பங்களிப்பையும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
1. இதுவரை நாம், நவீன காலத்தில் தமிழ் இலக்கிய இலக்கண ஆராய்ச்சிகள் எவ்வெத்திசைகளில் நடைபெற்றன, நடைபெற்று வருகின்றன என ஒருவாறு சுட்டிக் காட்டினோம். இனி, இக்காலத்திற்கு முன்பு அதாவது, பண்டைக் காலத்திலும் இடைக் காலத்திலும் தமிழில் ஆராய்ச்சி ஏதேனும் நடைபெற்றதா என எண்ணிப் பார்க்க வேண்டும். அதற்குத் தற்காலத்தில் போல், தெளிவான, வெளிப்படையான சான்றுகளை நாம் காட்ட முடியாவிட்டாலும், அவர்கள் இயற்றிய/தொகுத்த நூல்களிலிருந்து அதனைத் தெரிந்து கொள்ள இயலும். ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் குறிப்பிடுவது போல,
பண்டைத் தமிழ்ப் புலவர் கையாண்ட இலக்கியத் தத்துவம், கைக்கொண்ட இலக்கியக் கருவி, எடுத்துக்கொண்ட இலக்கியப் பொருள் ஆகியவைகளின் முக்கிய இயல்புகளிலிருந்து அவருடைய இலக்கியக் குறிக்கோளை ஒருவாறு நாம் அறியலாம் (1971:16).
அதாவது, எந்த எந்த அடிப்படைகளில் இலக்கியத்தைப் படைத்தனர், எந்த எந்த அடிப்படைகளில் அவர்கள் தம்

பாக்களைத் தொகுத்தனர் என்று காணும்போது, அவர்கள் மேற்கொண்ட இலக்கிய ஆராய்ச்சி நமக்குப் புலனாகும்.
11 முதலில் சங்க நூல்களை எடுத்துக் கொள்வோம். இவை பாடல்களின் எண்ணிக்கை, பாடல்களின் அடி அளவு, பாடல்களின் பொருள், பா வகை என்னும் அடிப்படைகளில் தொகுக்கப் பட்டிருப்பதை நாம் உணரலாம். ஒரே தொகுப்பில்
ஒன்றுக்கு மேற்பட்ட அடிப்படைகளும் காணப்படுகின்றன. தொகை நூல்கள் எட்டும் பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில்
தொகுக்கப்பட்டிருப்பதை இறையனார் களவியல் உரை கூறுகின்றது. 4-8, 9-12, 13-31 என்னும் அடி அளவுகளில் தொகுக்கப்பட்டனவாக முறையே குறுந்தொகை, நற்றிணை, நெடுந்தொகை (அக நானூறு) அமைகின்றன. பொருள் அடிப்படையில் அகநானூறு, புறநானூறு அமைகின்றன. பத்துப்பத்துப் பாக்கள் என்னும் எண்ணிக்கை அளவில் பதிற்றுப்பத்து. குறுகிய (3-6) அடிகளால் ஆன, நூறு பாக்களைக் கொண்ட ஐந்து நூறுகள் ஐங்குறு நூறு. தொகை நூல்கள் தொகுக்கப்பட்டமைக்கான சமூக, அரசியல் காரணிகளை ஆராயும்போது, தமிழ் இலக்கிய உருவாக்கம் எவ்வாறு நடைபெற்றது என உய்த்து உணர முடியும். திணை வைப்பு முறையும், புறநானூறு போன்ற நூல்களின் பாடல்களின் வைப்புமுறையும் புலவர் பெயர் கிடைக்காத பாடல்களுக்குத் தொகுப்பாசிரியர் அப்புலவர்கள் பாடிய பாடல்களிலிருந்தே பெயர் சூட்டியிருப்பதும் தொகுப்பாளர்களின் கண்ணோ ட்டத்தை விளக்குகின்றன. பதிற்றுப் பத்துப் பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே பாடலில் பயின்று வரும் தொடர் ஒன்றால் பெயர் கொடுத்திருப்பதும் ஒவ்வொரு பத்தின் கீழும் பதிகம் அமைந்திருப்பதும் தமிழ் ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிகின்றன. பரிபாடல்களின் கீழ்க் குறிக்கப்பட்டுள்ள பாடலின் பண் பற்றிய குறிப்பு, பழந்தமிழ் இசை பற்றிய ஆராய்ச்சிக்குத் துணை செய்வதோடு, அப் பாடல்களைத் தேவாரப் பாக்களின் பண்ணமைதியோடு ஒருங்கு வைத்து எண்ணவும் நம்மைத் தூண்டுகின்றன.
1. 2. சங்கத் தொகை நூல்கள் தொகுக்கப்பட்டது போன்றே, சைவ, வைணவப் பக்தி இயக்கப் பாடல்களும் தொகுக்கப்பட்டுள்ளன. சங்க நூல்கள் தொகைகளாக இருப்பது போன்றே, சைவத் திருமுறை நூல்களில் பலவும் வைணவர்களின் நாலாயிரத் திவ்விய பிரபந்தமும் தொகை நூல்கள் ஆகும். கி.பி. ஆறாம்

Page 9
நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு முடிய நான்கு நூற்றாண்டு கால இடைவெளியில் பாடப்பட்ட பக்திப் பாசுரங்கள், திருப்பதிகங்கள் சோழப் பெருமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டன. சங்கப் பாக்களைத் தொகுப்பதற்கு அடிப்படையாக விளங்கிய காரணிகளைப் போன்றே இவற்றைத் தொகுக்கவும் சமூக,அரசியல் அமைப்புகள் காரணம் ஆகின்றன. தொகை முயற்சியில் சோழ அரசே ஈடுபாடு கொண்டிருந்ததாகத் தெரிகின்றது.
13. இலக்கிய உரைகள், இலக்கண உரைகள் ஆகியனவும் தமிழ் ஆராய்ச்சியின் போக்கைக் காட்டுகின்றன. வைணவர்கள் தமிழ் நீரோட்டத்திலிருந்து மெல்ல மெல்ல விலகி, தமக்கென மணிப்பிரவாளம் என்னும் ஒரு புது நடையை - வடமொழியும் தமிழும் கலந்த ஒரு கலப்பு நடையை - உருவாக்கிக் கொண்டதற்கான பின்புலம் விளக்கப்பட வேண்டும். வைணவர்களின் உபயவேதாந்தம் (உ.வே.) என்ற கருத்தாக்கம், அது இந்தியச் சிந்தனை மரபில் பெறும் இடம், ஆகியனவும் ஆராய்வதற்கு உரியன. பண்டைத் தமிழ் இலக்கணமான தொல்காப்பியம் உணர்த்திய அகம், புறம் பற்றிய மரபுகள் பன்னிரண்டு திணைகள் ஆவதும் எண்ணத் தக்கன. நால்வகைப் பாக்கள் காலப் போக்கில் பாவினங்களாக வளர்ச்சி பெறுவதும் ஆராய்வதற்கு உரியன. இவ்வாறு, நவீன காலத்திற்கு முன்பாக ஆக்கப் பெற்ற இலக்கிய இலக்கணங்களின் வளர்ச்சிப் போக்கை ஆராய்ந்து காண வேண்டும். தமிழ் ஆராய்ச்சி வரலாற்று எல்லைக்குள் இவை எல்லாம் இடம் பெறல் வேண்டும்.
2. தமிழ் ஆராய்ச்சி வரலாற்றை எங்கிருந்து தொடங்குவது? அது குறித்த அணுகு முறைகள் யாவை? என்பது பற்றிச் சிந்திப்போம். ஐரோப்பியர் வருகைக்குப் பிறகு, மேலை நாட்டார் தொடர்பால் நமக்குக் கிடைத்த புதிய கண்ணோட்டத்தின்படி நடைபெற்றுள்ள ஆராய்ச்சிகளையும் பண்டைக் காலத்திலிருந்து ஐரோப்பியர் வருகை மரபு வழியாகத் தமிழ் நூல்கள் எவ்வாறு ஆராயப்பட்டு வந்தன என்பது பற்றியும் நாம் கவனிக்க வேண்டும். எனவே, இந்த ஆராய்ச்சி வரலாறு இரண்டு பகுதிகளாக அமையும். அவை: (அ) ஐரோப்பியர் வருகைக்கு முற்பட்ட தமிழ் ஆராய்ச்சி (ஆ)ஐரோப்பியர் வருகைக்குப்பிற்பட்ட தமிழ் ஆராய்ச்சி.
இவ் வகையில் ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் அவர்களின் “தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி” என்ற நூல் ஒரு முன் முயற்சியாக விளங்குகின்றது. இந்நூல்

முதலில் 1951இல் வெளியிடப்பட்டு 1971இல் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது. அடுத்து, இத்துறை பற்றி வந்துள்ள முக்கியமான நூல் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் “தமிழில் இலக்கிய வரலாறு: வரலாறெழுதியல் ஆய்வு” என்னும் நூலாகும். புதுவைப் பல்கலைக் கழகத்தின் காரைக்கால் மையத்தில் எம்.பில். ஆய்வு பட்டப் பேற்றுக்கு உரிய பாடமாக எம்மால் தமிழ் ஆராய்ச்சி வரலாறு அறிமுகப்படுத்தப்பட்டு, 1988 முதல் 1993 முடிய ஆறு ஆண்டுகள் கற்பிக்கப்பட்டது. அப்போது அறிமுகம் செய்யப்பட்ட பாடத்திட்டம் பின் இணைப்பில் தரப்பட்டுள்ளது. காரைக்கால் மையத்தில் இலக்கியப் பதிப்புகள் பற்றியும் பதிப்பாசிரியர்கள் பற்றியும் எம்.பில். ஆய்வுப் பட்டங்களுக்கு ஆய்வேடுகள் அளிக்கப்பட்டன. யாப்பருங்கலக் காரிகை, சிலப்பதிகாரம், நாலாயிரத் திவ்விய பிரபந்தம் போன்ற நூல்களின் பதிப்புகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் அக்கால கட்டத்தின் முன்னோடிப் பதிப்பாசிரியரான சி.வை. தாமோதரம்பிள்ளையின் பதிப்புப் பணி பற்றியும், வேங்கடராசுலு ரெட்டியார் அவர்களின் இலக்கணப் பணிகள் குறித்தும் மதிப்பிடப்பட்டன. சென்னைப் பல்கலைக் கழகத்திலும், 1970 ஆம் ஆண்டு முதல் தமிழ் ஆராய்ச்சி வரலாறு ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்துள்ளது.
இப் புலமைப் பாடம் நாம் மேலே குறித்தவாறு ஐரோப்பியர் வருகைக்கு முன்,ஐரோப்பியர் வருகைக்குப் பின் என இரண்டு கூறுகளாகப் பகுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதியில் தொகை நூல்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள், சைவ, வைணவத் திருமுறைத் தொகுப்புகள், இலக்கிய, இலக்கண உரைகள், மணிப்பிரவாள உரைகள், காப்பியங்கள், சிற்றிலக்கியங்கள், இலக்கண மரபுகள் ஆகியவை நம் முன்னோரால் எவ்வாறு பேணப்பட்டன எனக் காணுதல் இடம் பெறுகின்றது.
எடுத்துக் காட்டாக, சைவத் திருமுறைகளில் திருஞான சம்பந்தர் தேவாரம் ஏன் முதலில் வைக்கப்பட்டுள்ளது? கால அடைவில் தேவாரத்தைத் தொகுத்திருந்தால், நாவுக்கரசர் பாடல்களே முதலில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். திருஞான சம்பந்தருக்குக் காலத்தால் முற்பட்ட திருமூலருடைய திருமந்திரம் பத்தாம் திருமுறையாகக் கொள்ளப்படுவது ஏன்? சைவத் திருமுறைத் தொகுப்பாளர்கள், அவர் நம்பியாண்டார் நம்பிகள் என ஒருவராக இருந்தாலும்
5

Page 10
பலராக இருந்தாலும் ஒர் நெறியை மனத்தில் கொண்டே திருமுறைப் பாகுபாட்டைச் செய்திருக்கின்றார் என அறிய முடிகின்றது.
நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைப் பொறுத்த அளவில், அவை வடமொழி, வேதங்களோடு சார்த்தி நோக்கப்பட்டமையை அதன் நான்கு உட்பிரிவுகளான முதலாயிரம், பெரிய திருமொழி, இயற்பா, திருவாய்மொழி என்பன தெரிவிக்கின்றன. திராவிட வேதங்களான இவை நான்கும் வடமொழி வேதங்களுக்குச் சமம் ஆனவை என்ற கருத்தாக்கம் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இக் கோட்பாடே வைணவத்தின் உபய வேதாந்தக் கோட்பாட்டுக்கு, வைணவ உரையாசிரியர்களை இட்டுச் செல்கிறது என்பதை நாம் கவனிக்க முடிகின்றது. சைவத் திருமுறைகளில் போன்றே, வைணவத் திருமுறைகளிலும் கால அடைவை ஒட்டி நூல்கள் வரிசைப்படுத்தப்படவில்லை. காலத்தால் பிற்பட்ட பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டே முதல் நூலாக நாலாயிரத்திவ்விய பிரபந்தத் தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது. வைணவ மரபில் இதற்குரிய காரணம் மணவாள மாமுனிகளால் உபதேச ரத்தின
மாலையில் விளக்கப்படுகின்றது.
காப்பிய மரபுகளில் சிந்தாமணி ஓர் எல்லைக் கோடாக அமைகின்றது. சிந்தாமணிக்கு முற்பட்ட சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் நாம் சங்கப் பாடல்களின் தொடர்ச்சியாக - கதை தழுவிய பாடல் கூற்றாக விளக்க இயலும். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைக் கூற்றாகப் பாடியிருப்பதைக் கூர்ந்து நோக்கினால் உணர முடியும்.
அகப்பொருள் மரபுகளில் காட்சியுலகிலிருந்து புலவர்கள் விடுபட்டுக் கருத்துலகுக்குள் சென்று விடுவதை, இறையனார் களவியல் உரையிலிருந்து நம்மால் உணர முடிகின்றது. எனவே, பாண்டிக் கோவையிலிருந்து எல்லாக் கோவை நூல்களும் தலைவன்-தலைவி சந்திப்பு முதல் கோவையை ஒரு நாடகம் போலப் படைத்துள்ளன. சங்க இலக்கிய அகத்தினை மரபுகளுக்கு மாறாக, ஒவ்வொரு கோவைக்கும் ஒரு பாட்டுடைத் தலைவனும் ஒரு கிளவித் தலைவனும் இடம்பெறுவது தவிர்க்க முடியாத மரபாகி விடுகின்றது. இடைக் காலத் தமிழ் இலக்கியத்தில் வடமொழித் தாக்கம் எந்த அளவுக்கு உள்ளது என்று
6

காண்பதும் தமிழ் ஆராய்ச்சிக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
ஐரோப்பியர் வருகைக்கு பின் என்ற இரண்டாம் பகுதியில் தரவுகளைத் தொகுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. எம்முடைய பாடத் திட்டத்தில் அது ஆறு அலகுகளாகப் பகுத்துக் கூறப்பட்டுள்ளது. நாம் மேலும் சில அலகுகளைச் சேர்க்க இயலும். ஒவ்வொரு அலகின்கீழும் இடம்பெற்றுள்ள நூல்கள், செய்திகள் அனைத்தும் தொகுக்கப்பட்டு விரிவாக ஆராயப் பெறுதல் வேண்டும். கல்வெட்டுச் சான்றுகள், தொல்லியல் சான்றுகளுடன் அவை ஒப்பிட்டுக் காணப்பட வேண்டும்.
தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விடயங்களுள் ஒன்று, நூலின் வரலாறு (The History of the Text) (5.55g) gly Tiii.6) g g (05th. (SLO606) நாடுகளில் HERMENEUTICS என்னும் பெயரில் அது வளர்ந்து வருகின்றது. உதாரணமாகச் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொண்டால், நூலைப் பாடியவர் வேறு, பதிகத்தைப் பாடியவர் வேறு என அறிய முடிகின்றது. காதைகளின் இறுதியிலும் உள்ள வெண்பாக்களைப் பாடியவரும் இளங்கோவடிகள் அல்லர். ஒவ்வொரு காண்டத்தின் இறுதியிலும் கட்டுரைப் பகுதிகள் உள்ளன. இவையும் நூலாசிரியருடைய எழுத்து அல்ல என்று உணர்கிறோம். ஆனாலும், இன்றைய சிலப்பதிகாரம் இவை அனைத்தும் சேர்ந்ததுதான்! காலத்தின் தேவைகளை ஒட்டி இவை அவ்வப்போது சேர்க்கப்பட்டிருக்கலாம். இந்த அடிப்படையில் மூல நூலை விளங்கிக் கொள்வது தான் நூலின் வரலாறு ஆகும். பண்டை இலக்கியங்களையும் இடைக்கால இலக்கியங்களையும் இவ்வாறு நாம் வரலாற்று வளர்ச்சி அடிப்படையில் விளக்க இயலும்.
தமிழ் ஆராய்ச்சியின் வரலாறு விரிவான பல தளங்களிலிருந்தும் நிகழ்த்தப்பட வேண்டியது ஒன்றாகும். வரலாறு, தொல்லியல், சமூகவியல், மொழியியல், ஒப்பியல், திறனாய்வியல், இலக்கிய வரலாற்றியல் எனப் பல துறைகளோடு ஊடாடிக் கருத்துகள் திரட்டப்பட வேண்டும். இது மிகவும் முக்கியமான பணி. எல்லாவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இன்றைய உலகில் தமிழின் பெறுமதி என்ன? என்று காண்பதற்குத் தமிழ் ஆராய்ச்சி வரலாறு பெருந்துணை புரியும்.

Page 11
பயன்படுத்தி
I. சிவத்தம்பி, கா, தமிழில் இலக்கிய 6
சென்னை
2. சுப்பிரமணிய அய்யர், ஏ.வி, தமிழ்
சென்னை.
பின்னிை
புதுவைப் பல்க
தமிழ்த்து
பிஎச். டி. பட்டப்பட தாள் - தமிழ் ஆராய்ச்சி வரல
இத்தாள் பரந்த அடிப்படையில் தமிழ் ஆராய்ச்சி வரலாற்றை விளக்க முற்படுகின்றது. தொகை நூல்களின் தொகுப்புகள், இலக்கணங்கள், கீழ்க்கணக்கு நூல்கள், பக்தி இலக்கியங்கள், இலக்கண உரைகள், சிற்றிலக்கியங்கள் ஆகியன எந்த அடிப்படையில் பாடப்பட்டன, தொகுக்கப்பட்டன, உரை வரையப்பட்டன என்னும் செய்திகளை ஆராய்ந்து, ஆராய்ச்சி வரலாற்றை உருவாக்குதல் முதல் பிரிவில் இடம்பெறும். ஐரோப்பியர் வருகையால் ஏற்பட்ட தாக்கத்தால் உருவாகிய பழைய இலக்கியங்களின் பதிப்புகள், மொழிபெயர்ப்புகள், இலக்கணங்கள், புத்துரைகள், கல்வெட்டு, வரலாறு ஆகியவை இலக்கிய வரலாற்றுக்குத் துணை செய்தமை, மேனாட்டார் முறையைப் பின்பற்றி இலக்கியத் திறனாய்வு, இலக்கிய வரலாறு படைக்கப்பட்டமை, புதிய படைப்புகள் பற்றிய ஆராய்ச்சி இரண்டாம் பிரிவில் இடம்பெறும். இவ்விருபெரும் பிரிவுகளையும் துல்லியமாகக் கற்று மதிப்பிடுவதன் வாயிலாகத் தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சியும் போக்கும் தெளிவாகும்.
பிரிவு - அ
1. இலக்கிய ஆராய்ச்சி என்பதன் பொருள்
இலக்கிய ஆராய்ச்சியும் இலக்கியத்
திறானங்வும்-இலக்கிய வரலாறும் இலக்கியக்
கொள்கையும்-ஒவ்வொன்றின் தனித்தன்மை
தமிழ் ஆராய்ச்சி வரலாற்றின்
இன்றியமையாமை.
. பண்டைத் தமிழ்ப் புலவரின் இலக்கிய நோக்கு
12. பொருள் பாகுபாடு - அகம், புறம்.

ய நூல்கள்
வரலாறு, வரலாறெழுதியல் ஆய்வு, 1988,
ஆராய்ச்சியின் வளர்ச்சி, 1971,
னப்பு
லைக்கழகம்
துறை
டிப்பு / எம்ஃபில் uomiT gol (History of Tamil Research)
13. முத்தமிழ்ப் பகுப்பு
1. 4. திறனாய்வுப் போக்கு - பாக்களின் அடிவரையறை-ஒவ்வொரு திணைக்கும் நூறு பாடல்கள்-எண்கள் அடிப்படையில் பாக்களைத் தொகுத்தல்-அரச மரபினர் அடிப்படையில் பாக்களைத் தொகுத்தல்- ஐங்குறு நூற்றில் திணை வைப்பு முறை-புறநூனுாற்றில் பாடல் வைப்பு முறை-பத்துப் பாட்டின் வைப்பு முறை
14. 1. பெயரில்லாத புலவர்களுக்குப் பாடல் அடியால்
பெயர் சூட்டுதல்
1. 4.2. பாடிய பாடல், திணை, துறை, ஆகியவற்றால்
பெயர் பெறுதல்
15. பாயிரங்கள், பதிகங்கள் காட்டும் இலக்கியத்
திறனாய்வு
16. திருவள்ளுவ மாலை காட்டும் இலக்கிய
ஆராய்ச்சி
2. சமயப் பாடல்களின் இலக்கிய நோக்கு
2.1. சைவத் திருமுறைகளின் தொகுப்பு தொகுக்கப்பட்ட முறை - திருமுறை வரிசைகளின் காரணிகள்-பண்முறைதலமுறை-இயற்றமிழ்த் தொகை நூல் பதினோராம் திருமுறை-பெரியபுராணம்
2.2. நாலாயிரத் திவ்வியபிரபந்தம்-தொகுப்பு நெறிநான்கு பிரிவு-இசைத் தமிழ்-இயற்றமிழ்திராவிட வேதம்-உபய வேதாந்தம்.
2. 3. இலக்கிய உரைகள்-அடியார்க்கு நல்லார், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், மணக்குடவர்,
7

Page 12
2. 4.
2.5.
2, 6.
3.1.
3. 2.
3. 3.
3. 4.
3. 5.
4. .
4.2.
5. 2.
காளிங்கர், பரிதி, பரிப்பெருமாள் உரைகள்ஆசிரியர் பெயர் அறியப்படாத உரைகள்புறநானூறு, பதிற்றுப் பத்து, ஐங்குறு நூறு, அகநானூறு உரைகள்.
இலக்கண உரைகள்-இறையனார்களவியலுரை, இளம்பூரணர், நச்சினார்க்கினியர், பேராசிரியர், சேனாவரையர், தெய்வச்சிலையார், கல்லாடர், ஆகியோரின் தொல்காப்பிய உரைகள்புறப்பொருள் வெண்பா மாலை உரையாப்பருங்கல விருத்தியுரை-மயிலைநாதருரை. திருக்கோவையார் உரை - பேராசிரியர்
வைணவ இலக்கிய உரைகள்-ஆறாயிரப்படி, ஒன்பதனாயிரப்படி, பன்னிராயிரப்படி, இருபத்து நாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படிஉரைகளின் அமைப்பு. காப்பியங்கள்-நாற்பொருள், தன்னேரில்லாத் தலைவன், வருணனை மரபுகள்.
சிலம்பு, மணிமேகலைக் காப்பியங்கள்-அமைப்பு முறை- காப்பியக் கொள்கை. காப்பியங்களின் வடமொழித் தாக்கம்பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி, கம்ப இராமாயணம்-காப்பியக் கொள்கை. புராண, சமயக் காப்பியங்கள் - பெரிய புராணம், அரிச்சந்திர புராணம், தேம்பாவணி, சீறாப் புராணம் ஐம்பெருங்காப்பியங்கள்-ஐஞ்சிறுகாப்பியங்கள் - பாகுபாடு வடமொழி அணியிலக்கணக் கோட்பாடுகளின் தாக்கம். பிரபந்த இலக்கியங்கள் அகப்பொருள், புறப்பொருள் மரபுகள்
Fou uėF FITrif
பிரிவு - ஆ
ஐரோப்பியர் தொடர்பு
ஐரோப்பியர் தமிழுக்கு ஆற்றிய பணிகள்வீரமாமுனிவர், சீகன் பால்கு, கால்டுவெல், ஜியு போப்-உரைநடை வளர்ச்சி-கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்-தமிழ் இலக்கண ஆராய்ச்சிஅகராதித் தொகுப்புகள்-சதுரகராதி.
சங்க இலக்கிய, இலக்கணங்களின் பதிப்பு முயற்சிகள்-ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை, உ.வே. சாமிநாதையர்,

5. 3.
5. 4.
5. 5.
5. 6.
5. 7.
6.
6. .
6. 2.
சுன்னாகம் குமாரசாமிபிள்ளை போன்றோர் ஆற்றிய பணிகள்.
தமிழ் நாட்டின் வரலாறு, பண்பாடு பற்றிய ஆராய்ச்சி-பேராசிரியர் சுந்தரம்பிள்ளை, வி.கனகசபைபிள்ளை, பி.டி. சீனிவாச அய்யங்கார், இராமச்சந்திர தீட்சிதர், எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், து. அ. கோபிநாதராவ், க.அ. நீலகண்ட சாஸ்திரியார், கே. வி. சுப்பிரமணிய ஐயர், தி. நா. சுப்பிரமணியம், தி. வை. சதாசிவ பண்டாரத்தார்
போன்ற வரலாறு, கல்வெட்டு அறிஞர்களின்
ஆய்வுகள்.
சென்னை மாகாணக் கல்விச் சங்கம்சென்னைப்பல்கலைக்கழகம்-தமிழ் லெக்சிகன் கே.என். சிவராசபிள்ளை, எம். எஸ். பூரணலிங்கம்பிள்ளை, அனவரத விநாயகம் பிள்ளை, வி.கோ. சூரியநாராயண சாஸ்திரியார் போன்றோர் பணிகள். மதுரை, கரந்தைத் தமிழ்ச்சங்கங்கள் மு. இராகவ அய்யங்கார், அரசன் சண்முகனார். ந. மு. வேங்கடசாமி நாட்டார், வேங்கடா சலம்பிள்ளை பணிகள்
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்விபுலானந்த அடிகள், ரா. ராகவ அய்யங்கார், கா. சுப்பிரமணியபிள்ளை, ச. சோமசுந்தர பாரதியார் தனித் தமிழ் இயக்கம் - பரிதிமால் கலைஞர், மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர்.
புத்திலக்கியப் படைப்புகள்
நாவல் - சிறுகதை - கட்டுரை - பயண இலக்கியம் போன்றன.
இலக்கியத் திறனாய்வு, இலக்கிய ஆராய்ச்சி
பரிந்துரை நூல்கள்
1.
சுப்பிரமணிய ஐயர் ஏ. வி. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, 1971 ஆமுத நிலையம் லிடெட், சென்னை Karthikesu Sivathambi, Literary History in Tamil, 1986, Tamil University, Thanjavur.
கார்த்திகேசு சிவதம்பி, தமிழில் இலக்கிய
வரலாறு, வரலாறெழுதியல் ஆய்வு 1988 என். சி. பி. ஹெச், சென்னை.

Page 13
1980 க்கு இலங்கைத் தமி
அறிமுகம்:
ஈழத்துச் சிறுகதைகள் மேனாட்டு, இந்தியத் தொடர்புகளால் தோன்றின. மூலவர்களாக சம்பந்தர், இலங்கையர்கோன் சி. வைத்திலிங்கம் ஆகியோர் கருதப்படுகின்றனர். இவர்களின் கதைகள் புராண, ஐதிக, வரலாறு சார்ந்தனவாக அல்லது தமிழ்நாட்டைப் பின்புலமாகக் கொண்டனவாக அமைந்திருந்தன. சிலவே இலங்கையைப் பின்னணியாகக் கொண்டன.
1940களில் மெல்ல மெல்ல மறுமலர்ச்சிக் குழுவினருடன் கருப்பொருளில் மாற்றம் பெற்றன. 1960கள் முக்கியமானவை. இடதுசாரி இயக்கப் போக்குகள், மேலாதிக்கம் பெற்றிருந்தன. முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் அதற்கெதிரான நற்போக்கு இயக்கங்களும் முக்கியம் பெற்றன. சீதனம், தீண்டாமை, வர்க்கப் போராட்டம் என்பன எழுத்துகளில் முக்கியம் பெற்றன
1980களின் அரசியல் சமூகநிலை :
இலங்கை வரலாற்றிலும், இலங்கைக்கலை இலக்கிய வரலாற்றிலும் மிகமுக்கியமான காலம். 1948 இலிருந்தே மெல்ல மெல்ல வளர்ந்த இனப்பிரச்சினை முனைப்புப் பெற்று உரிமைப் GuTTiTuh மிதவாதிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டு ஆயுதப் போராட்டமாக வளர்ந்தகாலம். 1958, 1977, 1983 இனக்கலவரங்கள் தமிழ்மக்களை அகதிகளாக்கின. சாதியும், வர்க்கப்போராட்டமும், சீதனமும் ஆகிய பிரச்சினைகளுக்கு மேலாக தமிழ்பேசும் முழுச்சமூகமும் புதிய பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. இதனால் இக்காலக் கலை இலக்கியமும் இன்னொரு வழியில் திரும்பியது.
நிதரிசனத்தில் துன்பங்களைச் சுமந்து வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் சத்தியக்குரலாக அது வெளிவந்தது. அங்கு போலிகளுக்கு இடமில்லை.

Ů ÚĪūU ழ்ச் சிறுகதைகள்
அம்மன்கிளி முருகதாஸ்
அல்லது எழுத்தாளர் போலியாகவேனும் தமது வாழ்க்கைச் சூழலைச் சித்திரிக்க வேண்டியேற்பட்டது.
சிறுகதை வெளிவந்த பத்திரிகைகள்,
சஞ்சிகைகள்.
1980க்குப் பிந்திய இலங்கைத் தமிழ்ச்சிறுகதைகள் என்று பார்ப்போமெனில் சராசரி மாதாந்தம் 35-40 சிறுகதைகள் வெளிவருவதைக் காணமுடியும். உண்மையில் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இலங்கையில் வெளிவரும் தினசரிகள் மாதமொன்றுக்கு நான்கு சிறுகதைகளை வெளியிடுகின்றன.
வீரகேசரி, தினகரன், ஈழநாடு, ஈழமுரசு, ஈழநாதம் முரசொலி, சிந்தாமணி, உதயன் என்பன இக்காலத்தில் இலங்கையில் சிறுகதைகளை வெளியிட்ட பத்திரிகைகளாகும். இப்பத்திரிகைகளிற் சில தற்போது வெளிவருவதில்லை. ઈી6u சிலபகுதிகளுக்குக் கிடைப்பதில்லை.
திசை யாழ்ப்பாணத்திலிருந்து மாதமொன்றாய் வெளிவந்தது. நல்ல சிறுகதைகளை வெளியிட்டது. ஆனால் சிலகாலத்துள் நின்றுவிட்டது. சரிநிகர்’ மாதமிருமுறை வெளிவருகிறது. நல்ல சிறுகதைகளை வெளியிடுகிறது.
"மல்லிகை, சிரித்திரன், தாயகம், அவ, சமர், புதுசு, வெளிச்சம், மாற்றம், சுதந்திரப் பறவைகள், நங்கை, பெண்ணின்குரல், கிருதயுகம், படி, தாகம், தீர்த்தக்கரை, கிழக்கொளி, என்பனவும் வேறும் சிலவும் இக்காலத்து வெளிவந்த சஞ்சிகைகளாகும். இவற்றுட் பலவற்றுக்கு ஆயுசுகுறைவு. மிகச்சிலவே தொடர்ந்து வருவன. சில இடைக்கிடைவருவன. அலை, சமர், புதுசு, நங்கை, கிருதயுகம், படி, என்பன நின்றுவிட்டன. மல்லிகை, மாதமொருமுறைவருவது. பெண்ணின்குரல் இடைக்கிடைவரும். சுமாரான கணக்குப் போட்டால்
9

Page 14
மாதம் 24-28 கதைகள் பத்திரிகைகளிலும் 4-8 கதைகள் சஞ்சிகைகளிலும் வெளிவருகின்றன.
இவற்றைவிட வானொலிச் சிறுகதைகள், கையெழுத்து சஞ்சிகைகள் என்பவற்றிலும் புலம்பெயர் தேசங்களிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன.
இவற்றில் எழுதுவோர்:
1980க்கு முன்னிருந்தே எழுதியவர்களும் 1980இன் பின்புதிதாக எழுதுபவர்களும் என இவர்களை வகைப்படுத்தலாம். ஜிவா, தெணியான், நந்தி தெளிவத்தை ஜோசப்,என்.எஸ்.எம். ராமையா, மண்டூர் அசோகா, செ. குணரத்தினம் வ. அ. இராசரத்தினம், நீர்வை பொன்னையன், நந்தினி சேவியர், கமால், ஆப்தீன், உமfவரதராசன், ஹனிபா, தாமரைச் செல்வி, கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், செங்ண்க ஆழியான், ராஜேஸ்வரி போன்றோர் முன்பிருந்தே எழுதுபவர்கள். ரஞ்சகுமார், திருக்கோயில் கவியுவன், செல்வமதீந்திரன், சாள்ஸ், சுரேஸ் சுப்பிரம்ணியம், நளாயினி க்ணபதிப்பிள்ளை, ஊரிகஸ்தூரி அல் அசூமத் மொயின் சமீம் புோன்றோர் பின்னர் எழுதியவர்கள். இவர்களில் சிலர் எழுதுவதை நிறுத்தி விங்டனி. சிலர் தொடர்ந்து எழுதுகின்றனர்.
இரண்டாவது வகையினர்1980 இன் பின்னர் ஏற்பட்ட தேசிய் இனப்பிரச்சினையின் விளைவாகத் தோன்றியவர்கள். இவர்களின் தோற்றத்தளம் முன்னர்க்குறிப்பிட்டவர்களின் தோற்றத்தளத்தை விட வேறுபட்டது.
முற்கூறப்பட்டதுபோல இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளாகக் காணப்பட்ட, ச்ாதி, வர்க்கப் பிரச்சினை, சீதனம், வறுமை, என்பவற்றுக்கு மேலால் அகதிப் பிரச்சினை ஏற்பட்டது. எல்லாச் சாதியினரும் ஒரு மரத்தின்கீழ், ஒரு கோயிலின் கீழ் ஒதுங்கவேண்டியேற்பட்டது.
இந்த அழுத்தம் இளைஞர்களை நாட்டைவிட்டு வெளியேற வைத்தது. சீதனப்பிரச்சினை இன்னொரு வடிவம் கொண்டது. ரூபாய்கள் டொலர்களாயின. ஊரின் வீடுகள் மதிப்பற்றுப் போக கொழும்பு வீடுகள் சீதனமாயின. பெண்களை மணப் பெண்ணாக அனுப்ப அவளது சகோதரன், பெற்றோர் இரத்தம் சிந்தி உழைக்க வேண்டியிருந்தது.
10

ஐரோப்பாவின் சகலநாடுகளும், அவுஸ்திரேலியாவும் அமெரிக்காவும், கனடாவும், அடைக்கல நாடுகளாயின. அகதிகளாகச் சென்ற இளைஞர் தாங்கள் தமது வீடுகளில் கூடச் செய்ய மறுக்கின்ற வேலைகளைச் செய்தனர். காலநிலை மாற்றத்துடன், கலாசார அதிர்ச்சியையும் ஏற்றுக் கொண்டனர்.
இந்த வரலாறு 1980 இற்குப் பிந்திய சிறுகதையாளர்களை எங்ங்ணம் பாதித்தது அல்லது இப்பிரச்சினைகள் அவர்களின் பார்வையில் எவ்வாறு தரிசனம் கொண்டன என்பதைப் பார்ப்பதும் தாம் தரிசித்ததை எவ்வாறு வாசகனுக்கு கொடுப்பதில் வெற்றி பெற்றனர் என்பதைப் பார்ப்பதும் முக்கியமானதாகும்.
சிறுகதைகள் வெளிப்படுத்திய உணர்வுகள்
இலக்கியம் என்பது சமூக இயைபுடையதாகவும் எழுத்தாளர் பங்குதாரர்களாகவோ, பெறுவோனாகவோ இருக்கும் சமகாலப் பிரச்சினைகள் பற்றியனவாகவும் அழ்ைதல் வேண்டும் என்பர்.
1980இற்குப் பிந்திய சிறுகதைகள் பலவும், 95 விகிதிமானவை என்றுகூடச் சொல்லலாம், இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தொட்டுச் சென்றுள்ளன. வ.அ. இராசரத்தினம் ஆகலாம் ஜீவா ஆகலாம், ஜோசப் ஆகலாம், அசோக ஆகல்ாம்சமீன் ஆகலாம் ஆப்தீன் ஆகலாம் அறபாத் ஆகலாம், இவர்களின் சிறுகதைகள் யாவும் இந்த இலங்கைச் சூழலைப்பற்றி/சூழலில் கண்ட பிரச்சினைகள் பற்றிக் கவனம் செலுத்தியவையே. இவ்வாறு இவை அமைந்தமைக்கு 1960 களில் ஏற்பட்ட விமரிசன முறைக்கு நன்றிகூறவேண்டும். இந்த விமரிசகர்களால் /விமர்சனங்களால் தான் இலங்கைத் தமிழிலக்கியத்தில் அழகியல் சிதறிப் போனது என்ற குற்றச்சாட்டு உண்டெனினும், முட்டாள்தனமான கதைகள் தோன்றாமல் இருந்தமைக்கும் இதுவே காரணமாகும்.
1980 காலப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் சமூகமாற்றம் சிறுகதைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திற்று. அதன்காரணமாக சிறுகதைகளின் பெரும்பாலானவை பின்வரும் விடயங்களைப் பிரதான கதைக் கருவாகக் கொண்டிருந்தன. இந்த அமிசங்கள் நாடுதழுவியனவாக வடபகுதி, கிழக்குப் பகுதி

Page 15
மலையகம், முஸ்லிம், எனவேறு பிரித்துப் பார்க்காதனவாக அமைந்தன.
i தேசிய இனப்பிரச்சினை
i தேசிய இனப்பிரச்சினிை தோற்றுவித்த
விளைவுகள்
1. இளைஞர்கள் இயக்கங்களில் சேருதல், இயக்க முரண்பாடுகள், கைதுகள், கொலைகள்
2. அகதிநிலைமை, பதுங்குகுழி வாழ்க்கை
3. வெளிநாடுகளுக்குச் செல்லுதல், புகலிட
இலக்கியம்
iii பெண்ணிய எழுச்சி
இக்காலப்பிரிவில் இனப்பிரச்சினை பற்றி வெளிவந்த கதையாக முதலில் வ.அ. இராசரத்தினத்தின் 1+1 =2; 1 - 1 = 2 என்ற கதையைக் குறிப்பிடல் வேண்டும். இது 1981 இல் வெளிவந்த சிங்களம் மட்டும் அரசகரும மொழியாக்கப் பட்டதும், ஆயுதப்படைப் பொலிஸ்காரன் ஒருவர் தமிழ்மக்கள் சிங்களம் படிக்க வேண்டும் என எடுத்துக் கூறுவது இச் சிந்தனைக்கு வழிவகுக்கின்றது. அதில்வரும் சிலவரிகளை இது சம்பந்தமாகக் குறிப்பிடலாம்.
“என்மனம் 1958 இலும் 1977 இலும் நடைபெற்ற வகுப்புக் கலவரங்களை எண்ணிப் பார்த்தது. முன்னைய கலவரத்தில் ஆயுதப்படைகள் குண்டர்களை அடக்கினர். காரிய்ாலயங்களில் சிங்கள உத்தியோகத்தர் தமிழ் உத்தியோகத்தருக்குப் பாதுகாப்பு அளித்தனர். பிந்தியதில் கலகத்தை நடத்தியவர்களே பொலீஸ்காரர் தானே. துவேஷம் நடுத்தர வகுப்பினரிடையேயும் பரவியது. காரியாலயங்களிலேயே எந்தத் தமிழனுக்கும் பாதுகாப்பு இல்லை". இறுதியில் கொல்வின் ஆர். டீ. சில்வா, இரண்டு மொழி ஒரு நாடு; ஒரு மொழி இரண்டு நாடு என்று கூறியதைக் குறிப்பிட்டு ஒரு மொழி இரண்டு நாடு என முடிக்கிறார். (அலை 198)
கண.மகேஸ்வரனின் எல்லைவேம்பு, ச.முருகானந்தனின் ஒரு கிராமத்தின் கதை என்பன தமிழ்ப்பிரதேசங்களில் நிறுவப்பட்ட சிங்களக் குடியேற்றங்களை பற்றித் தெரிவிப்பன. குந்தவையின் 'இணக்கம் தமிழர் சிங்களப் பிரதேச மக்களால் எவ்வாறு பார்க்கப்படுகின்றனர் என்பதைக் காட்டும். இனப்பிரச்சினையின் விளைவுகள் தமிழீழத் தேசிய போராட்டத்தின் விளைவுகளைச் சித்தரிப்பன பல. இளைஞர் குழுக்கள், இயக்கங்களாக இணைதல்,

அவர்களின் தியாகங்கள், அவர்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாடுகள், அழிவுகள் மக்களைப் பாதித்த அரசின் அல்லது இயக்கங்களின் நடைமுறைகள் என்பவற்றை இலக்கியங்கள் சித்தரித்தன: உயிர்ப்புகள், பிரம்படி, மோகவாசல், கஸ்தூரியின் ஆக்கங்கள், காலச்சாளரம் போன்ற தொகுதிகள் இந்நிலைகளைக் காட்டி நிற்கின்றன. இனப்பிரச்சினை தந்த விளைவுகளை ரஞ்சகுமார், திருக்கோயில் கவியுவன், கஸ்தூரி ஆகியோர் குறிப்பிடத்தக்க அழகியற் கவனத்துடன் எழுதியுள்ளனர்.
இனப்பிரச்சினையும் பின்விளைவுகளும் குடும்பங்களையும் மனிதர்களையும் எவ்வாறு சிதைத்தன என்பதை உயிரும் சதையுமாக இவர்கள் காட்டினர்.
படைப்பாளியின் மனதைத் தொடுகின்ற நிகழ்வு வாழ்க்கையின் வகை மாதிரியாக அமைதல் வேண்டுமென்பர். அந்த நிகழ்வுப்பதிவு அந்தக் கலைஞனின் ஆளுமையிலிருந்து வெளிப்படுகிறது. இந்த ஆளுமை படைப்பாளரை மற்றவரிடமிருந்து வேறுபடுத்துகிறது. ரஞ்சகுமாரின் கோசலை, கஸ்தூரியின் அவர்களுக்குத் தான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே, திருக்கோயில் கவியுவனின் இனியும் ஒருசாவு ஆகிய மூன்றும், மூவரினதும் தனித்துவத்தை அடையாளம் காட்டுவன. ஒட்டமாவடி அறபாத்தின் நினைந்தழுதல் வடக்கிலிருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்களின் துயர் வாழ்க்கையைக் காட்டுகிறது. போராளிகளின் வாழ்க்கையைப் பின் வருவோர் சித்தரித்தனர். ரஞ்சகுமார், கஸ்தூரி, சிவனேஸ், கருணாகரன் ஆதிலட்சுமி, பாரதி, இயல்வாணன், இளையவன், மலரவன் என்போர் அவர்கள். போராளிகளின் வாழ்க்கைபற்றிய சிறுகதைகளில் குறிப்பிடத்தக்கது சிவனேஸ் எழுதிய வீரி' என்பது. இதனைப்பலர் வாசித்திருக்க முடியாது. சிறுகதை என்பது தனித்துவமான அல்லது தனிப்பட்ட தாக்கத்தினை ஏற்படுத்துவதற்கான செறிவினையும் கூர்நோக்கினையும் உடையதாக இருக்கும். தாக்க முழுமையே இவ் இலக்கிய வகையின் பிரதான நோக்கமாகும். அத்தன்மையை அந்த சிறு கதையில் காணலாம்!
தமிழ்ப்பிரதேசத்தின் பொருளாதாரத்தடையின் தாக்கங்களைப் பலகதைகள் வெளிப்படுத்தியிருப்பதும் 'A. R. V. தடுப்பூசி ' குறிப்பிடற்குரியதாக கூறப்படுகிறது.
11

Page 16
பெண்கள் பிரச்சினை
உலகளாவிய நிலையில் பெண்கள் பிரச்சினை முக்கியமானதாக உள்ளது. போராட்டங்களில் மிக அதிகமாகப் பாதிக்கப்படுபவர் பெண்களே. கற்பழிக்கப்படுதல், விதவைகளாதல், மக்களை இழத்தல் என்பவற்றுடன் பொருளாதார ரீதியிலும் முற்றிலும் பாதிக்கப்படுகின்றனர்.
சீதன நடைமுறையாலும், பெண் அடக்கு முறையாலும் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றியும் குழந்தைகளின் மனங்கள் பாதிக்கப்படுதல் பற்றியும் அதிகமாக எழுதியவர் சட்டநாதன். உலா, மாற்றம் தொகுதிகள் இதனை பிரதிபலிக்கின்றன. வித்தியாசமானவர்கள், உலா என்பன அவரின் கதைகளின் குறிப்பிடத்தக்கன. பெண்கள் அடக்கப்படுதலையும், சீதனமுறையால் பாதிக்கப்படுதலையும் கதைகள் சித்தரிக்க, அடக்குமுறைக் கெதிராகக் கிளம்புவது பண்பாட்டுக்கு எதிர்ானது எனவும் நம்பப்பட்டன. அதை கதைகளும் சித்தரித்தன. உதாரணமாக, வரதராசனின் நிலவு குளிர்ச்சியாக இல்லை, மன்சூரின் முக்காடுகள் மீட்டும் முகாரிராகங்கள் (1981) என்பற்றில் வரும் பெண்கள் அடங்கிப் போகின்றனர் அல்லது தற்கொலை செய்கின்றனர். ஆனால் மாறும் காலகட்டத்தைச் சேர்ந்த புதிய பெண்பாத்திரங்கள் இதனை எதிர்க்கின்றன. சட்டநாதனின் வித்தியாசமானவர்களில் வரும் பெண், வீட்டாரை எதிர்த்துத் தன்னிலும் வயது குறைந்தவனைத் திருமணம் செய்கிறாள். கஸ்தூரியின் நிர்ப்பந்தங்களில் வரும் வாசுகி, தாயும், தந்தையும் தடுக்கத்தடுக்க விழுந்து விழுந்து சைக்கி ளோடப்பழகுகிறாள். இச்சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டு குமுறுகிறாள் நிஃமத்தின் எரிகொள்ளியில் வரும் கமலம் கணவனின் கொடுமையின் கோரம் தாங்காது கொள்ளிக் கட்டையுடன் அடுப்பை விட்டு வெளியே வந்தாள். சிவனேசின் வீரியில் வரும் அவள் கைக்குண்டுகளை வீசுவதில் வல்லவள்.
இவ்வாறு காலத்தின் மாற்றம், சமூக மாற்றத்திற்கேற்ப பெண்களின் பங்களிப்பு மாறி வருவதை சிறுகதைகள் காட்டின. கற்புக் கோட்பாடு இக்காலக் கதைகளில் வினாவுக்குரியதாக்கப்படுகிறது. ஊரியின் கழுத்துக் கயிறு இல் வரும் அவள் கணவன் திருமணம் செய்து ஒரு கிழமைக்குள் வெளிநாட்டுக்குச் செல்கையில் இன்னொரு ஆடவனுடன் உறவு கொள்கிறாள். இறுதியில், தற்கொலை செய்கிறாள்.
2

சமூகம் அவளின் மனநிலையப்புரிந்து கொள்ளவில்லை. ஆயின் சுரேஸ் சுப்பிரமணியத்தின் புகலிடக் கதாநாயகி இன்னும் வேறுபட்டவள். கணவன் இருக்கையிலேயே கணவனை ஏமாற்றி இன்னொருவனுடன் உறவு கொள்கிறாள். இவை தமிழ்ச் சமூகத்தில் எதிர்பார்க்க முடியாத கதாபாத்திரங்கள். புகலிடக்கதை ஒன்றில் இன்னொரு அம்மா, தனது மகளின் சட்ட பூர்வமற்ற தாய்மையைப்பற்றி வினா எழுப்பாதவளாக உள்ளாள். இந்த நிலையும் தமிழ்ச் சமூகத்தில் எதிர்பார்க்க முடியாத ஒன்று.
புகலிடச் சிறுகதைகள்.
இவைகள் கலாசார அதிர்ச்சிகளைப் பிரதிபலித்ததுடன் சென்றதை நினைந்து அழுதலாகவும் அமைந்தன. அதனால் புகலிடச் சிறுகதைகளில் வரும் பெண்களின் பாத்திரம் வேறுபட்டதாக அமைகிறது. கீழைத்தேச பாரம்பரிய அடக்குமுறைகளுக்குள் வாழ்ந்த பெண்களுக்கு புகலிடம் கொடுக்கும் கலாசார அதிர்ச்சி முக்கியமானது. என்னதான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் இங்கிருந்து சென்ற ஆண்களில் பெரும்ப்ாலாசினீர் இங்கிருந்து செல்லும் பெண்களையே டிணம் முடிக்க விரும்புகின்ற்னர். இன்னும் சொல்லப் போன்ால், அதே சாதி, அதே கோத்திரம், தன்னில் குறைந்த வயது, அழகு, நீண்டமுடி, அடக்கம் என்பனவற்றுடன் சீதனம், நகைகளும் வேண்டப்படும் தகுதிகளாக உள்ளன. எனினும் இந்தப் பெண்கள் அங்கு சென்றாலும் எதிர்கொள்ளுகின்ற கலாசாரம் இவர்களை இவர்களின் போக்கில் வாழ வைக்க முனைகிறது. இந்த மாற்றங்களை ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சுரேஸ் சுப்பிரமணியம், செல்வமதீந்திரன் ஆகியோசின் கதைகள் தெரிவிக்கின்றன.
பெண் எழுத்தாளர்கள்
பெண் எழுத்தாளர் பற்றி ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், குறிப்பிட்டதை இவ்விடத்துக் குறிப்பிட வேண்டியது அவசியமானது.
இது காலவரை ஏன் பெண்கள் ஆண்களின் எழுத்து நடையைப் பின்பற்றி எழுதுகிற7ர்கள் என்ற7ல் இலக்கியம் எப்போதும்
ஆண் ஆதிக்கத்திற்குள் ഖബ7ffമകൃ/ வந்திருந்தமையின77ல/7கும். ஆண்களின்
எழுத்துகள் கருத்துகள் என்பன ஆண்களின் சுயநலத்தை, ஆசைகளை, இச்சைகளை, எதிர்ப7ர்ப்புகளை கற்பனையில் பிரதிபலித்தன.
வீரகேசரி 26-8-95

Page 17
இந்த நிலை இலங்கையின் பெண் எழுத்தாளர் மத்தியில் காணப்பட்ட தெனினும் பெண்கள் தங்களைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியமையையும் அவர்களின் கதைகள் காட்டின.
1980 કંજી முந்தியகாலப்பகுதியில் குறமகள், குந்தவை, கோகிலா, தாமரைச் செல்வி, பவானி எனப்பலர் எழுதினர். இவர்களின் கதைகளுள் 1960 களில் வெளியான பவானியின் கதைகள், தமிழ்ச் சிறுகதை உலகுக்கே அல்லது தமிழ்ச் சமூகத்துக்கே அதிர்ச்சி வைத்தியம் பார்த்தவையாக அமைந்தன.
1980 இன் பின்னர் தாமரைச்செல்வி கோகிலா, பத்மா சோமகாந்தன், யோகா பாலச்சந்திரன், மண்டூர் அசோகா, நயிமாசித்திக் போன்றோர் தொடர்ந்து எழுதுகின்றனர். பின்வந்தோர் பலர் உள்ளனர்.
இலங்கையின் தமிழ்ப் பெண்களிடையே பெண்ணியம் பற்றிய சிந்தனை 1976 இல் ஆரம்பித்தது எனல் பொருந்தும். 1983 இன் பின் பெண்கள்
விடுதலைப் Gurry T'll இயக்கங்களுடன் இணைதலுக்கும் இது வழிவகுத்தது. விடுதலைப் போராட்ட இயக்கங்கள் பெண்களுக்கான
சஞ்சிகைகளை வெளியிட்டன. பெண் எழுச்சி, சுதந்திரப் பறவைகள் அவ்வாறானவை. பெண்கள் இயக்கங்கள் சில சஞ்சிகைகளை வெளியிட்டன - பெண்ணின் குரல்(W.B.R.C) நங்கை (பெண்கள் அபிவிருத்தி நிலையம்) போன்றன அவ்வாறு வெளியிடப்பட்டவை. இவர்களால் பெண்களின் ஆக்கங்கள் தொகுத்து வெளியிடப்பட்டன. இவை தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் பெண்கள் சஞ்சிகைகளைப் போலல்லாது (மங்கை, மங்கையர்ம்லர்) கோட்பாட்டிலும் அமைப்பிலும் பெருமளவு மாறுபட்டவை. இந்தச் சஞ்சிகைகள் பெண்களின் பிரச்சினைகளை கட்டுரை, கவிதைகளாகவும் சிறுகதைகளாகவும் வெளியிட்டன.
இலங்கையின் சிறுகதை எழுத்தாளிகளின் களம் வீட்டிலிருந்து நாட்டுப் பிரச்சினைவரை விரிவடைந்து திருமணத்திலிருந்து புகலிட வாழ்க்கைவரை விரிவடைந்தது. மண்டைதீவு மீனவர்படுகொலை, வெளிநாடு சென்ற கணவரின், மனைவியரின் மனப்பிரச்சினைகள், வேலைக்காரச் சிறுமிகள் குழந்தைகளின் மனநிலை, சீதனப்பிரச்சினைகள், விடுதலைப் போராட்டம் என்ற பல தலையீடுகளையும் இவர்கள் நோக்கினர். பெண்கள் தங்கள் நிலைமைகளைத் தங்கள் கண்கொண்டு

நோக்கினர். உ+ம், குந்தவியின் இணக்கம் எந்த கதையிலிருந்து:
நான் தெருவைப் பார்க்கல7னேன். ஒரு രിz/ൺ് வயிற்றுச் 460Zo Gaz//762/b கூடைச்சுமையோடும் மெதுவாகத் தெருவில் ۶z7 Z//762/zz0/7۶ و 7/7// 4 ,242977677ی) A22/ (6) ۶/76aa7zzهه இருந்தது. இந்நிலையிலும் அவளைச்ச7ம7ன்கள் வ/7ங்கவிட்ட அந்த முகமறியாத கணவன் மிது ஆத்திரம7க வந்தது. அதற்குள் அவளின் கணவன் டே/7ல காணப்பட்ட ஒருவன் மறுபுறத்திலிருந்து வந்து அவளோடு சேர்ந்து கொண்டான்.
- a தன் பின7ஸ்டிக் கூடையை அவளிடம் கொடுத்து, அவளின் ட/7ரமான மூங்கில் கூடையைத்த7ன் வாங்கிக் கொள்வரன் எனப்பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் முடக்கில் சென்று மறை4/ம் வரை அது நடக்கவில்லை
பெண்ணின் வயிற்றுச் சுமையைப் பற்றிச் சிந்தித்தலும், அவளது பாரத்தை உணராதிருத்தலும் இந்த வரிகளுடாக வெளிப்படுகின்றன.
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கதைகளை எழுதும்போது களம் விரிவடைந்தது. ஆண் பெண் வேறுபாட்டை, பெண்களுக்கு எதிரான அடக்குமுறையை அநீதியை அவர்கள் தெளிவாகச் சித்தரித்தார்கள். கஸ்தூரியின் நிர்ப்பந்தங்கள் என்ற கதை இவ்வகையில் குறிப்பிடத்தக்கது. ஆண் பெண் வேறுபாட்டை / ஆணுக்கும் பெண்ணுக்குமாக இச்சமூகம் கடமைகளை விதித்துள்ள முறையை மிக நிதானமாக எடுத்துக் காட்டும் வரிகள் பின்வருவன.
அக்காவின் இறப்பு நிகழ்வைச் சுற்றி நடைபெறும் ' இக்கதையில் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி விளக்கப்படுகிறது.
ض%7zیی% روی م٪7۶۶//62 ض60/7z 60 وی76//yz7Gzی ஆத்திரமாகவரும். ஏன்தான் என்னை மட்டும் இப்படிச் செய்யாதே அப்படிச் செய்யாதே என்கிற7ர். அண்ண77 எவ்வளவு சுதந்திரம7கத் திரிகிறான். உடுப்பு/வாங்குவத7க இருந்த7ல் கூட தனியாகத் த7ன் பே7கிற7ன். நேரங்கழித்து வீட்டுக்கு வருகிறான். வீட்டில் ஒரு வேலைகூடச் செய்வதில்லை. ஒரு நாள் கூட தேனர் வைத்தறிய7ன். எவ்வளவு வளர்ந்து விட்ட7ன். تھی۔ 4ی بھی تھی۔ 4 //6762) ظz/74/ تجوی///762) 7/zoفغyzیے கேட்பதில்லை. அண்ண7 என்ன, அப்பாவுக்கே இன்னும் சமைக்கத் தெரியாது த7னே.
13

Page 18
போர் நிகழ்வுகளைப் பெண்கள் பார்ப்பதற்கும் ஆண்கள் பார்ப்பதற்கும் வேறுபாடு இருப்பதாகத் தோன்றுகிறது. க. தணிகாசலத்தின் பிரம்படி தொகுதியில் வரும் பிரம்படி கதையும் கஸ்தூரியின் ஆக்கங்களில் வரும் அவர்களுக்குத் தான் எமக்கு விடிவதில் விருப்பமில்லையே கதையும் ஒரே சம்பவத்தை இருவரும் நோக்கிய முறையில் வேறுபாடு தெரிகிறது.
இந்திய இராணுவத் தாக்குதலில் கொக்குவில் பிரம்படியில் 60க்கு மேற்பட்ட மக்கள் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் உட்படக் கொல்லப்பட்டனர். புகையிரத வீதி வழியே கொண்டு வரப்பட்ட Chain - DOZerமக்களை நெரித்துத்துவம்சமாககிய சம்பவத்தை இரண்டும் சொல்கின்றன. க.' தணிகாசலம் அங்கு அகப்பட்ட மக்கள் அனைவரையும் கொண்டு வருகிறார். கோட்பாட்டு ரீதியாக வேறுபட்ட இரண்டு பாத்திரங்களை வைத்து கதை சொல்லப்படுகிறது. அதாவது இந்தியாவை முழுமையாக நம்பும் வேதாந்தியான ஒருவர் ஒருபுறம்; அதனை நம்பாத இடதுசாரி இளைஞன் மறுபுறம். மக்கள் கொல்லப்பட்டு அகதிகளான நிலைமைகளின் பின் முத்துசாமி வீட்டுக்குச் செல்கிறார். வீடு உடைந்து கிடக்கிறது. காந்தி படம் மட்டும் உடையவில்லை. அவர் அதையிட்டுச் சந்தோஷப்படுகிறார். சிவனாதனோ காந்தியின் கைத்தடி விழுந்து எங்களைக் காயப்படுத்திப் போட்டுது என்று இடிந்த வீட்டை வெறித்துப் பார்த்தபடி கூறுகிறான். வார்த்தைகள் ஆயிரம் பிரம்படிகளாக முத்துசாமியின் இதயத்தில் பட அதிர்ச்சியுடன் அவனைத் திரும்பிப் பார்க்கிறார் அவர். விமர்சன முறையில் இது அமைந்திருக்கிறது.
கஸ்தூரியின் கதையின் தலைப்பில் அவள் இந்தியாவின் போக்கு இப்படித்தான் என்பதைக் காட்டுகிறாள். கதை செத்துப்போன மகள், மகன், தாய் இவர்களைச் சுற்றி அமைந்தது. அங்கு அவர்களையும் இருட்டையும் செல்லடி துப்பாக்கிச் சத்தத்தையும் தவிர வேறேதும் இல்லை. ஒரே பயங்கரம். வாசித்து முடிக்கும் போது இறப்பில் அந்தப் பயங்கரத்தில், நாங்கள் பங்கு கொள்கிறோம். அந்தக் கதையின் உணர்வு ரீதியான கதைப் பின்புலம், முழு யதார்த்தத்தையும் மனக் கண்முன் கொண்டு வருகிறது. அந்த வர்ணனை மிக அற்புதமாகச் செய்யப்பட்டுள்ளது. தாயின் நிலை சித்தரிக்கப்பட்டவிதம் மனதைத் தாக்குவதாக எல்லோர் மனதினுள்ளும் விழுந்த ஆயிரம் செல்லடிகளாக அமைந்துள்ளது.
14

எந்த உயிரினமும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. பெருமூச்சு, து/ம்மல், இருமல், குறட்டை, மூச்சை அடைக்கும் சளியை உள்ளே இழுத்து வா4/7ல் கொர்ரென்று காறித்துப்பும் கரகரத்த ஒலி எதுவும் இல்லை
கைகட்டி வ/7யப் பொத்தி காற்றுக் கூட கம்மென்று உட்கார்ந்து கொண்டது. காற்று வீச7த பாலைவனம், அப்படி ஒரு அமைதி வீட்டின் மரணஒலம் ஊர் முழுவதினதும் சே7கம7க மனதினைக் கவிவிக் கொள்கிறது. இது பெண் தனது பார்வையில் அந்தச் சூழலைநோக்கியதின் வெளிப்பாடு.
மண்டூர் அசோகா, தாமரைச் செல்வி, கோகிலா, ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், யோகா பாலச்சந்திரன் போன்றோர் பெண்களின் பிரச்சினைகளை வெளிப்படுத்துகின்றனர்.
முடிவுரை:
மொத்தத்தில் 1980 க்குப் பிந்திய சிறுகதைகளில் முதலாளி, தொழிலாளி அடக்குமுறை, சாதீய எதிர்ப்பு, வறுமை, சீதன நடைமுறை என்பவைகளும் பொருளாகி உள்ளன. எனினும் இவற்றுக்கு மேலாக தேசிய இனப்பிரச்சினை மேலெழுந்து அவற்றின் விளைவு, பிரச்சினைகள் மேற்கிளம்பியுள்ளன.
சாதிப்பிரச்சினையில் சற்று மாற்றம் தெரிகிறது. (ச.முருகானந்தனின் மீன்குஞ்சுகள் தொகுதி) சாதி பற்றிய பழைய பிடிவாதம் சற்று இளகிப் போவதை இவை காட்டுகின்றன. ஆனால் அகதியாய்ப் போன இடங்களில் ஏற்பட்ட பிரச்சினையும் சிலகதைகள் விளக்கியுள்ளன. (சாகாத மானுடம் - செங்கை ஆழியான்) எனினும் ஒரு குழுவினர் பழைய கோட்பாடுகளிலிருந்து விடுபடுவதையும் அதுகாட்டுகிறது.
புகலிடப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் சிறுகதைகள் பல தோன்றியுள்ளன - ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், சுரேஸ் சுப்பிரமணியம், செல்வ மதீந்திரன் குறிப்பிடற்குரியவர்கள்.
பெண்ணிய நோக்கு விரிவடைதலைக் காணமுடிகிறது. இது விடுதலைப் போராட்டத்துடன்

Page 19
முனைப்புப் பெறுகிறது. அத்துடன் உலகளாவிய பெண்ணிய கருத்துக்கள் இலங்கையில் ஏற்படுத்தும் தாக்கமும் முக்கியமாகும். போராட்டங்களின் அனுபவங்கள் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்பட்டன.
சிறுகதையின் Ց|Ա(Ց என்பது உள்ளடக்கத்தாலும் பாத்திரங்கள் சூழலைச் சொல்லும் விதத்தாலும் தீர்மானிக்கப்படுவது. எழுத்தாளனை அங்கு காணக் கூடாது. பாத்திரங்களூடாக சம்பவங்களை - மன உணர்வுகளை தனது மொழியில் சொல்லும் திறமையில் அதன் அழகு வெளிக்கிளம்பும்.
இக்காலத்து இலங்கைச் சிறுகதைகளிற் குறிப்பிடத்தக்கன எனப்பின்வருவனவற்றைக் கூறலாம்.
உலா - சட்டநாதன்
கோசலை,
காலம் உனக்கொரு பாட்டு எழுதும்
ரஞ்சகுமார்
கோளறு பதிகம் அரசனின் வருகை - உமா வரதராசன்
அவர்களுக்குத்தான் எமக்கு விடிவதில்
விருப்பமில்லையே - கஸ்தூரி
பிரம்படி - க. தணிகாசலம்
வீரி - சிவனேஸ்
ரஞ்சகுமார் ஒரிடத்திற் கூறியதை இவ்விடத்திற் கூறிமுடிக்கலாம்.
27ஆம்நூற்றாண்டுத்தமிழிலக்கியத்துக்கு வ7ைமூட்ட வல்லவர்கள் நம்மிடையே உள்ள7ர்கள். அவர்கள் மிக இளைஞர்கள், சிறுவர்கள் என்று கூடச் செ7ல்லலாம். அவர்களது எழுத்துகள் மிக அரிதாகவே இந்தப் பரந்த உலகில் எங்கே7 ஒரு மூலையில் வெளிய7கிக் கொண்டிருக்கின்றன. அவை ச7ம/7கச் சேர்க்கப்பட வேண்டும். அந்த
இளைஞர்கள் 4777/774, அடை4/77ைங் .க/7ண7ப்படுவ/7ர்கள் .ضz?ق7Gةa2/6dکz - Gل5/76007ZZZى ஏனெனில் அது எமது வரல7ற்றுத் தேவை. நம்முன்னே உள்ள7பணி அதுதான்."

- எடுத்தாளப்பட்ட நூல்கள்
4ސ............
தகவம் பரிசுக்கதைகள் தொகுதி 2.
யாழ்ப்பாணம் நவ. 1998.
சுகந்தம் - 1981
ச. முருகானந்தன் மீன் குஞ்சுகள்.
மல்லிகைப்பந்தல் மற்றும் குறிஞ்சி வெளியீடு, கொழும்பு மே 1994
செ. யோகநாதன் பதிப்பு - ஒரு கூடைக்
கொழுந்து; காந்தளகம், சென்னை 1994.
உயிர்ப்புகள், கலாசார கூட்டுறவுப்
பெருமன்றம் கரவெட்டி 1986.
ரஞ்சகுமார், மோகவாசல், ஏப்ரல் 1995
சென்னை.
கஸ்தூரி, கஸ்தூரியின் ஆக்கங்கள்
யாழ்ப்பாணம், Gun 1992
Third Eye.
சரிநிகர் மார்ச் - 9-22; 1993
மோகவாசல், உயிர்ப்புகள் தொகுதிகளுக்கு எழுதப்பட்ட பேராசிரியர் சிவத்தம்பியின் பின்னுரைகள். 1980 க்குப் பிந்திய சிறுகதைகள் பற்றிய மிக முக்கியமான தகவல்களைக்
கொண்டுள்ளன.
வெள்ளிப் பாதசரம் செ. யோகநாதன் பதிப்பு,
சென்னை 1993.
15

Page 20
வைணவத்தின் தோ
இந்து சமயத்தைச் சேர்ந்த "ஆறுவகை நெறிகளிலொன்றான” வைணவம், விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டிலங்குகிறது. “ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமிலார்க்காயிரம் திருநாமம்பாடிப்” பரவும் வழிபாட்டு முறைக்கேற்ப, விஷ்ணுவிற்கு நாராயணன், கிருஷ்ணன், வாசுதேவன், பகவான், திருமால், பரந்தாமன் எனப் பல திருப்பெயர்கள் உள்ளன. விஷ்ணுஸஹஸ்ரநாமாவலியிலே அவருக்குரிய ஆயிரம் திருப்பெயர்கள், அவரின் பெரும் சிறப்புக்களையும் இயல்புகளையும் எடுத்துக்கூறும். இறைவன் ஒருவனேயாயினும் அவனைப் பல திருநாமங்களிலே மக்கள் வணங்கி வந்தனர். இவ்வகையிலே நோக்கும் போது வைணவமும் விஷ்ணு பரத்துவத்தையே வலியுறுத்தும் ஏகதெய்வ வழிபாடேயாகும்.
இவ்விஷ்ணு வழிபாடு மிகப் பழைமைவாய்ந்தது, சிந்துவெளி நாகரிக காலம் தொட்டாவது இற்றைக்காலம் வரை சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு கொண்டதெனலாம். இதன் வரலாறுபற்றி அறிவதற்கு வேத இலக்கியம், இதிகாசங்கள், புராணங்கள், வைகானச ஆகமங்கள், தந்திரங்கள், பிற்காலவடமொழி இலக்கியம், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நிலவும், தமிழ் முதலிய பல்வேறு மொழிகளிலுள்ள இலக்கியங்கள், பிறநாட்டறிஞர் சிலரின் குறிப்புக்கள், தொல்லியல் சின்னங்கள் எனப்பலவகையான மூலங்கள் உதவிசெய்கின்றன.
மிகப்பழைமை வாய்ந்த இவ்வழிபாட்டின் வரலாற்றினை உற்றுநோக்கும் போது, இதிலே பல்வேறு மரபுகளின் தாக்கங்களையும், சேர்க்கைகளையும், சங்கமங்களையும் அவதானிக்கக்கூடியதாயிருக்கிறது. இதன் தோற்றத்தினை நன்கு அறிய முடியாதுள்ளது. இந்தியாவின் மிகப்புராதன நாகரிகமாகிய சிந்து வெளிநாகரித்திலே இதன் சில அமிசங்கள் தென்பட்டன, எனச் சேர். ஜோன்.மார்சல்,அஸ்கோபர்போலா, முதலிய அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலுமிதற்கு முன்பே மேற்காசியாவிலே முகிழ்ந்த சுமேரிய நாகரிகத்திலிடம் பெற்ற எப அல்லது என்கிடு எனும் தெய்வம் நீரின் நடுவண் அறையிலே துயில்கிறார் என்ற கருத்து நிலவிற்று. இவ்வமிசம் அனந்த சயனியாக விளங்கும்
16

ற்றமும் வளர்ச்சியும்
நாக்கு
வி. சிவசாமி
பரந்தாமனை நினைவூட்டுகின்றது,. ஆகவே இதன் அடிப்படையான கருத்துக்கள் சில மேற்காசியாவிலே தோன்றியிருக்காலம்.
காலவரன்முறையிலான இலக்கியச்சான்றின் அடிப்படையிலே நோக்கும்போது, வேதஇலக்கியம் முதலில் கவனத்தை ஈர்க்கின்றது. காலத்தால் முந்திய இருக்கு வேதத்திலுள்ள 1028 பாடல்களிலே ஐந்து மட்டும் விஷ்ணுவைப்புகழ்ந்துரைப்பன. மேலும், சுமார் நூறு பாடல்களிலே அவரின் பெயர் வருகின்றது. எனினும் இந்நூலிலே முக்கியமான ஓர் இடத்தினை அவர் பெற்றிருந்தார் எனலாம். குறிப்பாக இருக்கு வேதத்தின் பிரதான தெய்வமான இந்திரனுடைய ஒரு முக்கியமான நண்பராக இவர் இலங்குகிறார். மேற்குறிப்பிட்ட பாடல்களிலே விஷ்ணுவின் மூவடிகளும், இளமைத் தோற்றமும், அவர் அளிக்கும் பேரின்பமும் குறிப்பிடற்பாலன. அவருடைய "அதிஉயர்ந்த திருவடி விண்ணிலே கண்போன்று மிளிர்கின்றது’ (1. 22) எனவும், "அவருடைய பிரியமான இவ்விருப்பிடத்திலே (வைகுண்டத்திலே) ஞானிகள் பேரின்பத்தை த்துய்க்கின்றனர்; அங்கே தேன்சுனை உளது” எனவும், தேவர்கள் அங்கு ஆனந்தமாய் உள்ளனர் (1. 154) எனவும் இருக்கு வேதம் குறிப்பிடுகின்றது. தொடக்கத்திலே விஷ்ணு எனும் பதம் சூரியனைக் குறித்ததாகக் கருதப்படுகின்றது. இவரின் மூவடிகளும் சூரியனின் உதயம், உச்சம், அஸ்தமனம் ஆகியனவற்றைக் குறிக்கும் என ஒரு சாரார் கருதுவர். பிரபஞ்சத்தின் மூன்று பகுதிகளிலும் சூரியன் செல்லுவதை இவைகுறிக்கும் என வேறு சிலர் கருதுவர். விஷ்ணு என்ற பதம் ' எங்கும் வியாபித்து நிறைந்துள்ளார்” என்ற கருத்துப்படும். பிருஹத்தேவதா என்ற நூலில், இச்சொல் ‘எங்கும் நிறைந்துள்ள’ எனப்பொருள்படும், 'விஸ்’ எனும் வினையடியாகத் தோன்றி எங்கும், எல்லாமாக நிறைந்துள்ள சூரியனைக்குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது, விஷ்ணு, பத்ம, வாயு, பிரமாண்ட புராணங்களின்படி விஷ்ணு எனும் பதம் 'விஸ் (புகுதல்) எனும் வினையடியினின்று தோன்றி விஷ்ணுவாக எங்கும் புகுந்துள்ளார் எனும் பொருள்படும். துன்பத்திலுள்ள மக்களுக்காக மூன்று தடவை இவர்

Page 21
பூமியின் பகுதிகளிலே சென்றார்’ (6. 49) எனவும், மனிதனுக்கு வசிப்பிடம் அளிப்பதற்காகப் பூமியிலே திரிகிறார் (7 - 100) எனவும், இந்திரனோடு சேர்ந்து பெரிய அடிஎடுத்து வைத்து நாங்கள் (மக்கள்) வாழுதற்கு உலகங்களை விஸ்தரித்தார்(6.69) எனவும் இருக்கு வேதம் கூறுகின்றது. இவர் மூன்று திருவடிகள் எடுத்து வைத்தமைபற்றிய கருத்து பிற்கால வாமன அவதாரத்தின் முன்னோடியாக இருந்திருக்கலாம்.
பிந்திய வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள் முதலியனவற்றிலே விஷ்ணு பற்றிய கூடுதலான கருத்துக்கள் சில காணப்படுகின்றன. குறிப்பாக நாராயணன் என்ற பெயரிலேதான் இவர் ஒரு முக்கியமான தெய்வமாகச் சதபத பிராமணம் போன்ற நூல்களிலே கூறப்பட்டுள்ளர். நாராயணன் எனும் பதத்திற்கு பலவாறாகப் பொருள் கூறப்படும். சிலர் இஃது ஒரு கோத்திரப்பெயர் என்பர். வேறுசிலர் நார்அய-அன்' என்ற திராவிடச் சொற்களின் அடியாக வந்த பதம் என்பர். நீர் நார' எனப்படும். நவின் பிள்ளைகளான நாரா (நீர்) பரம்பொருள் தங்குமிடமாகையால், அவர் நாராயணன் என அழைக்கப்பட்டார் என ஒரு சாரார் கருதுவர், கடவுள் மக்களின் புகலிடம்’ எனவேதான் நாராயணன் (நர-அயன) என அவர்அழைக்கப்பட்டார். சதபிதப்பிராமணம் நாராயணனைப் பரம்பொருள் எனக் குறிப்பிடுகின்றது. உபநிஷததத்துவ சிந்தனையிலும் நாராயணன் குறிப்பிடத்தக்க ஓரிடம் பெற்றுள்ளார்.
சிவபிரானைப் பரப்பிரமமாகக் கூறும் ஸ்வேதாஸ்வதரோபநிஷத் போன்று நாராயணனைக் கூறும் உபநிஷதங்கள் உள்ளன. தைத்திரீய
ஆரண்யகத்தில் விஷ்ணுவுக்குரிய காயத்திரீ மந்திரம் வருகிறது.
வைணவத்தின் பெருவளர்ச்சியினையும், மலர்ச்சியினையும் இதிகாசங்களிலும், புராணங்களிலும் பரக்கக்காணலாம். குறிப்பாக மஹாபாரதம் கவனித்தற்பாலது. பகவத் எனும் சொல்செல்வமுடைய எனும் பொருள்படும். இது பக்தி எனும் பதத்துடன் தொடர்புள்ளது. இது தொடக்கத்திலே பங்கு, பகுதி முதலியனவற்றைக் கருதிற்று. பின் இது பங்கிடப்பட்டது, 'ஒதுக்கப்பட்டது' எனவும் பொருள்பட்டது. மேலும், இறைவனிடத்து ஆன்மா கொண்டுள்ள பேரன்பு பக்தி' எனப்பொருள்பட்டது. இப்பதங்கள் நாராயண வழிபாட்டுடன் நெருங்கிய தொடர்புடையவை. நாராயணனை வழிபடுவோர் பாகவதர் என அழைக்கப்பட்டனர். இவ்வழிபாடு பாகவதம் எனப்பெயர் பெற்றது. மஹாபாரதம் சாந்திபர்வனிலே பரம்பொருளான நாராயணன் விஷ்ணு எனப்படுகிறான். மஹாபாரதத்திலுள்ள“நாராயணியம்” எனும் பகுதியிலே நாராயணன், விஷ்ணுவாக,

வாசுதேவனாக விளங்குகிறார். பரம்பொருள் சாத்வதர், பாகவதர், பாஞ்சராத்திரர், ஏகாந்தின் எனக் குறிப்பிடப்படுகின்றது. பாகவதம், பஞ்சராத்திரம் முதலியன முதலிலே வேறு வேறாயிருந்து பின் வைணவத்திலிடம் பெற்றன. விஷ்ணுவை வழிபடுவோர் வைஷ்ணவர் ஆயினர். வைஷ்ணவ எனும் பதம் முதன் முதலிலே மஹாபாரதத்திலேதான் வருகின்றது. இது போலவே, கிருஷ்ண, வாசுதேவ, சங்கர்ஷண, பாலதேவ போன்ற பதங்களும் தனித்தனி கருத்தும் முக்கியத்துவமுமுடையனவாய் மிளிர்ந்து பின் வைணவத்திலிடம் பெற்றன. இவற்றுள்ளே நாராயண, சங்கர்ஷண, கிருஷ்ண போன்ற பதங்கள் விவசாயம், செழிப்பு முதலியனவற்றுடன் தொடர்புள்ளவை எனக் கருதப்படுகிறது. வாசுதேவகிருஷ்ணன் யாதவரைச் சேர்ந்த சத்வத குலத்தலைவன் எனக் கொள்ளப்படுகின்றார். வாசுதேவன் முதலிலே தனித்தெய்வமாய்த் திகழ்ந்தவர். இப்பதம் எல்லா உயிர்களிலும் வாழும் தெய்வம்' எனப்பொருள்படும். மேலும், வாசுதேவன், கிருஷ்ணன் முதலிய தெய்வங்கள் வைதிக சமூக வட்டாரங்களுக்குப் புறம்பாகத் தோன்றிப்பின் வைதிகமரபிலிடம் பெற்றனர். எனவும் கருதப்படுகின்றது. தனித்தெய்வமாக விளங்கிய 'லக்ஷமி விஷ்ணுவின் சக்தியானாள். மேலும் லக்ஷமி ழரீதேவியாகவும், பூமிபூதேவியாகவும் திருமாலின் இரு சக்திகளாயினர். விஷ்ணு வழிபாட்டிலே திருப்பாத
வணக்கமும் குறிப்பிடற்பாலது. இவ்வணக்கம் வேதத்திலே வரும் 'மூவடி பற்றிய கருத்திலிருந்து தோன்றியிருக்கலாமெனக் கருதப்டுகிறது.
மஹாபாரதத்திலுள்ள பகவத்கீதா, ஹரிவம்சம், ராமாயணம், புராணங்கள் குறிப்பாக விஷ்ணுபுராணம், பாகவதபுராணம் முதலியனவற்றிலே விஷ்ணு வழிபாட்டின் பல்வேறுநிலைகளைக் காணலாம்.
கிறிஸ்தாப்தத்திற்குச் சற்று முன்பின்னாக சில நூற்றாண்டுகளிலே தான் வைணவம் பல்வேறு நிலைகளிலே நன்கு வளர்ச்சியுற்றது. வடமேற்கு இந்தியாவில் இக்காலத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த வேற்று நாட்டவர் மத்தியிலேயும் வைதிக சமயங்களான சைவம், வைணவம் ஆகியவற்றின் ஈடுபாடு நிலவிற்று. பெஸ்நகரிலுள்ள கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவைச் சேர்ந்த கல்வெட்டொன்றின்படி ஹெலியோடறஸ் எனும் கிரேக்கதூதன் மத்திய இந்தியாவிலுள்ள பெஸ்நகரிலே கருடத்துரண் ஒன்றினை நிறுத்தினான் என அறியப்படுகின்றது. ஏறக்குறைய சமகாலத் தென்பாரதத்திலே சாதவாகனப் பேரரசிலும், தமிழகத்திலே சங்ககாலத்திலும் வைணவம் குறிப்பிடத்தக்க அளவு செல்வாக்கு பெற்றிருந்தது எனலாம். இந்தியாவிலே குப்தப்பேரரசு காலத்திலே
17

Page 22
வைணவம் பெரும்பிரபல்யம் அடைந்தமைக்குச் சமகால இலக்கிய, தொல்லியல் மூலங்கள் சான்று பகருவன. தமிழகத்திலே விஷ்ணு வழிபாடு சங்ககாலம்தொட்டு நிலவிவந்தமைக்கு தக்கசான்றுகள் உள்ளன. சங்க இலக்கிய மரபிலே போற்றப்பட்டு வந்த திணைக் கோட்பாட்டிலே திருமால் ஐவகை நிலங்களிலொன்றான முல்லை (காடும், காடு சார்ந்த பிரதேசமும்) நிலத்தெய்வமாகும். TITLO, கிருஷ்ண, பலராமவணக்கங்கள் பற்றிய குறிப்புகளும் சங்கநூல்களிலே வந்துள்ளன. நற்றிணையிலுள்ள கடவுள் வாழ்த்தினைப்பாடிய பெருந்தேவனார்,
மாநிலஞ்சேவடியாகத்தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கையாக விசும்பு மெய்யாகத் திசைகையாகப் பகங்கதிர்மதி:மொடு கடக்கண்ணாக இயன்ற எல்லாம் பயின்றகத்து அடங்கிய வேதமுதல்வன் என்ப நீரற விளங்கியதிகிரியோனே'
எனத் திருமாலின் நெடிய தோற்றத்தினை வியந்து பாடியுள்ளார். பரிபாடலில் எட்டுப்பாடல்கள் திருமால்ைச் சிறப்பித்துக் கூறுகின்றன.
சங்கநூல்களையடுத்துத் தமிழில் எழுந்த சிலப்பதிகாரத்தில், திருவேங்கடம், திருவரங்கம், திருவனந்தபுரம் முதலிய வைணவத்தலங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. ஆய்ச்சியர் குரவையில் திருமாலின் திருவவதாரங்களிலே ராம, கிருஷ்ண, திரிவிக்கிரம அவதாரங்கள் கூறப்பட்டுள்ளன.
சிலப்பதிகாரத்தில்ே வால்வளை மேனிவலியோன் (பலராமன்) கோவிலும், "நீலமேனி நெடியோன் கோயிலும்”மூன்றாவது காதையிலே (3171 172) குறிப்பிடப்படுகின்றன. மாதவி ஆடிய பதினொரு ஆடல்களில் மூன்று (அல்லியம், மல், குடம்) திருமால் ஆடியவை. ஆய்ச்சியர் குரவையிலே திருமாலின் சிறப்புக்களைப் பற்றிய பாடல்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக,
மூவுலகும் ஈரடியான்முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி சேப்பத்தம்பியொடும் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகர்சீர் கேளாத செவிஎன்ன செவியே’ திருமால்சீர் கேளாத செவிஎன்ன செவியே (சிலம்பு 1735) எனவரும் பகுதியினைக் குறிப்பிடலாம்.
மணிமேகலையிலே சமயக்கணக்கர்தம் திறன்
கேட்ட காதையிலே (27 - 88 - 90) வைணவவாதி
தன்மதம் பற்றிக்கூறிய போது ‘காதல் கொண்டு கடல்
18

வண்ணம் புராணம் ஒதினன் நாரணன் காப்பு என்று உணர்ந்தனன்” என மிகச் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது.
பல்லவர்-பாண்டியர் கால (கி. பி. 6 -9, நூ. வரை)த் தமிழகத்திலேற்பட்ட பக்தி இயக்கத்தின் விளைவாக வைதிக சமயங்களாக சைவமும், வைணவமும் புத்துயிர் பெற்றன. இப்பக்தி இயக்கத்தின் வைணவ அணியினைப் பன்னிரண்டு ஆழ்வார்கள் அலங்கரித்தனர்; வைணவத்திற்குப் புதுமெருகும், புதுப்பொலிவும் ஊட்டினர். இவர்களுடைய திருப்பாடல்களடங்கிய நாலாயிரத்திவ்ய பிரபந்தம் எனும் தொகுப்பு நன்கு குறிப்பிடற்பாலது. இத்திருப்பாடல்கள் வேதங்களின் சாரமாக, தமிழ்வேதம்/தமிழ்மறை என வைணவடிரபிலே கொள்ளப்படுகின்றன.
முதலாழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார்
"அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகுசிந்தை இடுதிரியா -நன்புருகி
ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ்புரிந்த நான்’ என அன்பு தெறியினையும், அகப்பூசையினையும் வெகுஅழகாக எடுத்துக்கூறியுள்ளார்.
ஆழ்வார்களைத் தொடர்ந்து நாதமுனிகள், யமுனாச்சாரியார் குறிப்பாக ராமானுஜர் முதலிய ஆச்சாரியர்கள் தோன்றி வைணவதத்துவத்தினை நன்கு வகுத்துள்ளனர். ராமானுஜர் வகுத்துள்ள தத்துவம் விசிட்டாத்துவவைதம் (சிறப்பான அத்துவைதம்) என அழைக்கப்படும். உபநிஷதங்கள், பிரம்மசூத்திரங்கள், பகவத்கீதை ஆகிய பிரஸ்தானதிரயங்களுக்கு இவர் எழுதியுள்ள பாஷ்யங்கள் (விளக்க உரைகளில்) குறிப்பாக பிரம்மசூத்திரங்களுக்கு இவர் எழுதியுள்ள பாஷ்யத்திலிவரின் தத்துவக் கருத்துக்களைச் சிறப்பாகக் காணலாம். ராமானுஜர் பரப்பிரமத்தினை சகுணமாக ஈஸ்வரனாக, நாராயணனாகக் கண்டார். ஈஸ்வரன் (பிரமம்), சித் (ஆன்மா), அசித் (சடம்) ஆகிய மூன்றும் அனாதியானவை. ”ஒருபுறம், சித், அசித் தொடர்பும், மறுபுறம் பிரமம் (ஈஸ்வரன்) தொடர்பும், உடம்பு ஆத்மா தொடர்பும் போன்றதாக உள்ளதே சரீர சரீரி பாவம் எனப்படும். இக்கருதுகோள் வேதத்திலே விஷ்ணுவின் சர்வ வியாபகத்துவம் பற்றி வரும் யஸ்ய ஆத்மா சரீரம் யஸ்ய பிருதுவீ சரீரம் தானிசர்வாணி தத்வபுஹ" (அவருடைய உடம்பு ஆத்மா, அவருடைய உடம்பு பூமி; யாவும் அவருடைய உடம்பே) என்ற கருத்தினை நினைவூட்டுகின்றது. ராமானுஜரின்

Page 23
கருத்துக்களைக் குறிப்பாக உள்ளடக்கியதே பூநீவைணவமாகும்.
பரப்பிரமம் விஷ்ணு/நாராயணனே அவருக்குத் திருமேனியுண்டு; எண்ணிறந்த நற்குணங்க்ள் கொண்டவர். அவரே மேலான கடவுள். ஆன்மாவிற்கும். இறைவனுக்குமுள்ள தொடர்பு சசேகீபாவம் (சேவகன் - சேவிக்கிப்படுபவன்) எனப்படும். ஆன்மாவின் இறுதியான இலக்கு விடுதலை-அவருடைய வைகுண்ட உலகத்தில் அவரைச் சேவித்து அழியாத இன்பம் துய்த்தலாகும். சரணாகதியே இறைவனை அடைதற்கான வழியாகும்.
ஆன்மாக்கள் டிைர் p,பூொருள், இன்பம் வீட்டினைப் Ergibijzigi နိ#@= (1) இறைவன்
(i) ஜீவாத்மா, O (i) இறைவனை 45AD (iv) இறைவனை அடைவதற்கான வழிகள், (v) அவற்றிலுள்ள இடையூறுகள் என ஐந்து கருதுகோள்கள் (அர்த்தபஞ்சகங்கள்) இங்கு கூறப்படுகின்றன. பிரபஞ்சப்படைப்புக்கான உபதானகாரண (material cause) மாகவும்
நிமித்தகாரணமாகவும், சஹகாரிய காரணமாகவும் (Auxiliary cause)இறைவன் செயற்படுகின்றான்.
வைணவத்தில் இறைவனின் ஐந்து வடிவங்கள் குறிப்பிடற்பாலன. அவையாவன: யாவும் கடந்து நிற்கும் வடிவம் (பரம்). கூட்டானவடிவம் (வியூகம்), அவதாரவடிவம் (விபவம்), உள்ளார்ந்த வடிவம் (அந்தர்யாமித்துவம்), விக்கிரகவடிவம் (அர்ச்சை) என்பன. இவற்றுள்ளே பரா (மேலான) நிலையிலே நாராயணன் பரப்பிரமமாக, பராவாசுதேவனாக வைகுண்டத்திலே வீற்றிருக்கிறார். இந்நகர வ்ாசல்களை வாயில் காப்பாளரும், காவலர்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மணிமண்ட பத்திலுள்ள ஆதிஷேடன் வடிவிலான படுக்கையில் அவர் வீ ற்றிருக்கிறார்.அப்ப்டுக்கைக்கு தர்மம் முத்லிய s எட்டுக்கால்கள் உண்டு. பூரீதேவி (திருமகள்), பூதேவி (பூமகள்) லீலா ஆகியோர் அவரைக்கவனிக்கின்றனர். அவர் சங்கு, சக்கரம் முதலிய தெய்வீக ஆயுதங்களையும், அணிகளையும் தரித்திருக்கின்றனர். மங்களமான அமிசங்கள் ஞானம், ஆற்றல் முதலியன கொண்டிலங்குகின்றன. அனந்தன், கருடன், விஷ்வக்சேன முதலியோரும், விடுதலையடைந்த ஆன்மாக்களும் அவருடைய சந்நிதிதானத்திலே பேரின்பத்தைத்துய்த்துக் கொண்டிருக்கின்றனர்.

வியூக என்பதிலே பராவே வழிபாட்டு வசதிக்காகவும், சிருஷ்டி முதலியவற்றுக்குமான, வாசுதேவ, சங்கர்ஷண, ப்ரத்யும்ந, அநிருத்த ஆகிய நான்கு வடிவங்களைத்தாங்கித் திருப்பாற்கடலிலே அனந்த சயனத்திலே சயனித்திருக்கிறார். இங்கிருந்து பிரத்யும்னவாகப் படைத்தலையும், அநிருத்தனாகக் காத்தலையும், சங்கர்ஷணனாக அழித்தலையும், வாக்தேவனாக ஆன்மாக்களை பிறவிச்சுழற் சியினின்றும் விடுவித்தலையும் செய்து கொண்டிருக்கிறார். V−
விபவத்திலேதான் மீன், ஆமை, இராமன், கிருஷ்ணன் முதலிய பத்து அவதாரங்களும் அடங்குவன. இவைபற்றிப் பின்னர் கூறப்படும்.
அந்தர்யாமி எனில் உள்ளே (உள்ளத்தில்) உறைபவன் எனப்பொருள்படும். இந்நிலையில் அவர் எங்கும் எல்லாவிடத்தும் உள்ளார்.
அர்ச்சா என்பது வீடுகள், கிராமங்கள், நகரங்கள் முதலியனவற்றிலே வழிபடுவோன் விரும்பிய பொருளால் செய்யப்பட்ட விக்கிரகங்கள்/சிலைகள் முதலியனவற்றைக்குறிக்கும். பக்தர்கள் மேற்குறிப்பிட்ட எவ்வடிவிலும், தாம் விரும்பியவாறும், விளங்கிக் கொண்டவாறும் அவரைவழிபடலாம்.
இக்கருத்துக்கள் சிலவற்றின் மூலங்கள் வேத இலக்கியத்தில் ஒரளவு தென்பட்டாலும் இதிஹாசங்களிலும், புராணங்களிலும் தான் இவை நன்கு வளர்ச்சியுற்றன. இவற்றுள் அவதாரக் கோட்பாடு பகவத்கீதையிலே நன்கு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. உலகில் நன்மை குன்றித் தீமை அதிகரிக்கும் போது நல்லோரைக் காப்பதற்கும், தீயோரை அழிப்பதற்கும் பகவான் தாம் காலம் தோறும் அவதரிப்பதாக கீதையில் கூறியுள்ளார். இவ்வவதாரக் கோட்பாட்டின்படிமத்ஸ்ய (மீன்), கூர்ம (ஆமை) வராகம் (பன்றி), நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், கிருஷ்ணன் ஆகிய ன்பது அவதாரங்களையும் திருமால் மேற்கொண்டுள்ளார். கல்கி என்னும் பத்தாவது அவதாரம் இனிமேல் நண்ட்பெறவுள்ளது. சிலநூல்கள் பலராமனுக்குப் பதிலாக புத்தரைச் சேர்த்துக்கூறுவன. சில இரண்டினையும் சேர்த்துப் பதினொன்றாகக் கூறுவன. இவ்வவதாரக் கோட்பாடு ஒரு வகையிலே உயிரினங்களின் பரிணாமவளர்ச்சியினையும் (Evolution) எடுத்துக் காட்டுகின்றதென்பர். இவ் அவதாரக்கோட்பாடின் மூலம் பல்வேறு சமயப்பிரிவுகள் வைணவத்திலே முரணின்றி இடம் பெறலாயின. ஒரு பிரிவினை அழித்துப் பிறிதொன்றை மட்டும்
19

Page 24
வளர்ப்பதற்குப் பதிலாக பலவற்றையும் ஒன்றில் இணக்கப்படுத்த முடிந்தது. இந்து சமயத்தின் தனிச் சிறப்புக்களிலொன்றான சமரசம், சகிப்புத்தன்மை நன்கு மிளிர வழிகோலப்பட்டது. பிற்காலத்திலே இந்தியாவில் பெளத்தம் தனிமதமாகத் தொடர்ந்து நிலவாது, இந்து சமயத்திலே முரணின்றி இணைந்து ஒன்றுபட இவ் அவதாரக்கோட்பாடும் நன்கு துணைபுரிந்துள்ளது.
பல்லவர், ust 6Tyuff காலப்பக்தி இயக்கத்தினைத் தொடர்ந்து கி. பி. 12 - 17 ம் நூற்றாண்டுவரை மஹாராஷ்டிரத்திலும், அப்பாலுள்ள வடநாட்டிலும் ஏற்பட்ட மத்தியகாலப்பக்தி இயக்கத்திலே ராம', 'கிருஷ்ண வணக்கங்கள் பெரிதும் முக்கியத்துவம் பெற்றது. எடுத்துக்காட்டுகளாக ஞானேஸ்வரர் பகவத்கீதைக்கு மராத்திய மொழியில் எழுதிய ஞானேஸ்வரி எனும் உரை (கி. பி. 12ம் நூ), கங்கைச் சமவெளியிலே துளசிதாசரின் ராமசரிதமானஸம் போன்றவற்றிலே கிருஷ்ண, ராம வணக்கங்களும், வங்காளத்திலே சைதன்யர் போற்றிய கிருஷ்ணவணக்கமும் பிரபல்யமடைவதைப் பார்க்கலாம். கி.பி. 13ம் நூற்றாண்டளவிலே தமிழகத்தில் நிலவிய வைணவத்திலே வடகலை, தென்கலை எனும் இருபிரிவுகள் வடநாட்டுத் தென்னாட்டு மரபுகளின் அடிப்படையிலே தோன்றின. இவற்றிற்கிடையிலுள்ள பிரதான வேறுபாடு கடவுளின் திருவருளும், அதனைப் பெற்று மனிதன் முத்தியடைதற்குச் செய்யவேண்டிய முயற்சியும் பற்றியதாகும். இருதரப்பினரதும் கருத்துக்கள் குறிப்பாக இரு எடுத்துக்காட்டுகள் மூலம் புலப்படுத்தப்பட்டன. வடகலைப்படி முத்தியடைதற்கான இறைவன் ஆன்மா தொடர்பு பெண்குரங்கு - குட்டிதொடர்பு போன்றதாகும். அதாவது தாய்க்குரங்கு ஒரு மரக்கிளையிலிருந்து பிறிதொன்றிற்குப்பாயும். குட்டி அதனை இறுகப்பிடித்துக் கொள்ளும். தவறி விழுந்தால் அதனை கைவிடும். இது போலவே பக்தன் இறைவனை இறுகப் பற்றிக் கொண்டாற்தான் முத்தியடையலாம். ஆனால் தென்கலையில் இத்தொடர்பு பெண்பூனை-குட்டிதொடர்பு போன்றதாகும். அதாவது அது குட்டியைப் பாதுகாப்பான இடத்திற்குத் தானே தூக்கிச்செல்லும். அதுபோல இறைவன் தாமேஆத்மாவை ஆட்கொண்டு ஈடேற்றுவர்.
தென்கலையினர் கருத்துப்படி பிரபக்தி (ஆத்மா இறைவனைச்சரண் அடைதல்) முத்தியடைதற்கு அவசியமாகும். வடகலையினர் கருத்துப்படி, முத்தியடைதற்கு பிரபக்தி ஒரு வழியாகும். கர்மயோகம், பக்தியோகம், ஞானயோகம் போன்றவற்றினைப் பின்பற்றாதோரே இதனை மேற்கொள்ளுவர். தென்கலையினர் ஆழ்வார்களின் திருப்பாடல்களுக்கும்
20

மிகமுக்கியத்துவம் அளித்தனர். சமூக சமத்துவம் அளித்தனர்.
தத்துவரீதியிலே ராமானுஜரைத் தொடர்ந்து ஏற்பட்ட மத்துவரின் துவைதம், நிம்பர்க்கரின் பேதாபேதம் முதலியனவற்றைக் குறிப்பிடலாம். இந்த நூற்றாண்டிலேகாந்தியடிகள் ராமநாமத்தினையே தமது தாரகமந்திரமாகக்கொண்டு இந்திய விடுதலைக்காகப் பெரிய தேசீயப் போராட்டத்தினை வெற்றிகரமாக நடாத்தினர்.
ஏற்கனவே குறிப்பிட்டவாறு பல்வேறு வடிவங்களையுடைய திருமால்வழிபாட்டுடன் அவருடைய சக்திகளாக பூரீதேவி, பூதேவி விழிபாடு, அவருடைய சக்கரவழிபாடு, அவருடைய திருவடிவழிபாடு, அனுமார்வழிபாடு, வாகனமாகிய கருடாழ்வார் வழிபாடு
முதலியனவும் நன்குகவன்த்தற்பாலன.
இணக்கமுறை, இணைப்பு, சேர்க்கை எனப்பல்வேறு வழிகளிலே நாராயணன், விஷ்ணு, திருமால் எனப் பெயர்களாலழைக்கப்படும் பெருங்கடவுளின் வழிபாட்டிலே பலவகையான கருத்துக்களும், சமயப்பிரிவுகளும் சங்கமித்துப்பிற்கால வைணவம் உருவாகியுள்ளது. இதன் அவதாரக்கோட்பாடு மூலம் எம்மதமும் இதிலே முரணின்றி இணக்கமாக இலங்கமுடியும்.
மேலும் இந்து சமயத்தின் பிற பிரிவுகளுக்கும் வைதிக நெறிக்குப்புறம்பான பெளத்தம் போன்றவற்றுக்குமிடையிலே ஒற்றுமையம்சங்கள் உள்ளன.
வைணவ மரபுகள் வளர்ச்சியடைய விஷ்ணுவின் பல்வேறு வடிவங்களைக் குறிக்கும் படிமங்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் இருக்கும் நிலை, நிற்கும்நிலை, சயனநிலை ஆகியவற்றிலுள்ள நிலைகள் குறிப்பிடற்பாலன. வைணவசமயதத்துவங்களுடன் விக்கிரகவியல் பற்றிய நூல்களும் எழுதப்பட்டன. தமிழகத்திலுள்ள வைணவ விக்கிரகவியல் பற்றிய G56 YT66. gsi. FihLJ656VerG) "The Vainava Iconography in Tamil Nadu (gbi Sgip (BTi” 196ïo 60)6), Isig 6007 விக்கிரகவியல்)" எனும் நூலிலே நன்கு ஆராய்ந்துள்ளார். திருமாலின் பல்வேறுபடிமங்களையும், திருவிளையாடல்களையும் சிறப்பிக்கும் புண்ணிய தலங்களும், கோவில்களும் எழுச்சிபெற்றன. இவற்றுள்ளே தமிழகத்திலுள்ள பூரீரங்கம், தமிழகத்தின் வட எல்லையில் ஆந்திராவிலுள்ள திருப்பதி போன்றவற்றினைக் குறிப்பிடலாம். முன்னைய

Page 25
இடத்திலுள்ள கோவிலிலே மிக அண்மைக்காலத்திலே மிகப்பெரிய கோபுரம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலே வைணவம்
இலங்கையில் இன்று நிலவுகின்ற பிரதான மதங்களில் இரண்ட்ான பெளத்தம், சைவம் ஆகியவற்றில் வைணவத்தின் அமிசங்கள் பல்வேறு நிலைகளிலே காணப்படினும், இந்நாட்டில் இதன் தொடக்கம் பற்றியறிய முடியாதுள்ளது. இந்தியாவிற் போன்று தனிப்பட்ட சமயப்பிரிவாக இது விளங்கியதாகத் தெரியவில்லை. பொதுவாகச்
சைவத்தில் இணைந்து நிலவி வந்துள்ளது.
வரலாற்றுரீதியாக நோக்கும்போது, புராதன இலங்கையின் ஆரியமயமாக்கம் ஏற்பட்டபோது வைணவமும் அதில் இடம் பெற்றிருக்கலாமெனத் தெரிகின்றது. ஆரியப்பண்பாட்டுடன் விஷ்ணு, கிருஷ்ணன் வணக்கம் முதலியனவும் பரவியிருக்கலாம். இலங்கையிற் கிடைத்துள்ள காலத்தால் முந்திய பிராமிக்கல்வெட்டுக்கள் சிலவற்றிலே வரும் சிறப்புப் பெயர்களிலே பலதேவ, கோபால், கிருஷ்ண, ராம, ழரீ முதலியன வருகின்றன. இவை ஒருவேளை அக்காலத்திய மக்கள் சிலர் மத்தியிலாவது நிலவிய வைணவக் கருத்துக்களை எடுத்துக் காட்டுவனவாகலாம்.
புராதன இலங்கையின் பெளத்த-சிங்கள வரலாற்று மரபை அடிப்படையாகக் கொண்டெழுந்த மஹாவம்சத்திலே வரும்பந்துகாபியனின் இளம் பிராயம் பற்றிய கதைகள் கிருஷ்ணனின் இளம் பிராயக் கதைகளைப் பெரிதும் ஒத்துள்ளன. இவற்றை ஆராய்ந்த இலங்கை வரலாற்றாசிரியர்கள், இவை மஹாபாரதம், ஹரிவம்சம் ஆகியனவற்றிலுள்ள
கருதுகின்றனர். மஹாவம்சம், சூளவம்சம் முதலிய நூல்களிலே ஒருசிலவிடங்களில் விஷ்ணு இதே பெயரில் அல்லது வேறு பெயர்களில் குறிப்பிடப்படுகிறார்.
பெளத்தத்திலே மஹாயான வளர்ச்சியும், இந்துசமய தாக்கம் அதிகரித்தலும், பெளத்தத்தின் இயல்பான பரந்த நோக்கும், வைணவ சமய அமிசங்கள் சில ஏதோ வகையிலே பெளத்தத்திலோ அல்லது பெளத்தர் வாழ்க்கையிலோ இடம்பெற வழிவகுத்தன எனலாம். தமிழ் நாட்டிலே பல்லவர்-பாண்டியர் காலத்திலேற்பட்ட பக்தி இயக்கத்தின் விளைவாகச்

சைவ, வைணவக்கருத்துக்கள் தமிழ் நாட்டில் மட்டுமன்றிக் கடல் கடந்து இலங்கையிலும் தென்கிழக்காசியாவிலும் மேலும் நன்கு பரவின. குறிப்பாக, இந்திய வர்த்தகர்களும், வர்த்தககணங்களும் இந்நாடுகளிலே இந்திய சமய, பாண்பாட்டுப் பரம்பலுக்கு உதவின.
மேலும் கி.பி. 7ம் நூற்றாண்டுதொட்டுத் தென்னிந்தியாவிலேற்பட்ட பல்லவர், பாண்டியர், சோழப்பேரரசுகளின் எழுச்சியும், குறிப்பாகச் சோழப் பேரரசின் ஆதிக்கப்படர்ச்சி ஈழத்திலேற்பட்டமையும் குறிப்பிடற்பாலன. அநுராதபுர காலத்தின் பிற்பகுதியிலும், பொலநறுவைக் காலத்திலும், அதனையடுத்துள்ள காலப்பகுதியிலும் யாழ்ப்பாணம், தம்பதேனியா, கம்பளை, கோட்டை, கண்டி ஆகிய இடங்களை ஆதிக்கமையங்களாகக் கொண்டிருந்த அரசுகளிலும் வைணவக் கருத்துக்கள் நன்கு நிலவியதற்கு சான்றுகள் உள்ளன. குறிப்பாகத் தலைநகரங்களிலும் துறைமுகப்பட்டினங்களிலும் பல 60) F6), வைணவக் கோவில்களிருந்தன. எடுத்துக்காட்டாக, இலங்கையின் தென்முனை யிலுள்ள தேவந்துறை (தேவநுவர, DOrdra) யிலே பிரபல்யமான விஷ்ணு கோயில் நீண்டகாலமாக நிலவியதாகத் தெரிகிறது. அங்கு உபுல்வன் (உத்பல்லவன் அல்லது வருணன்) எனும் தெய்வவ்ழிபாட்டுடன் விஷ்ணு வழிபாடு இணைந்து நிலவிய தெனத்தெரிகிறது. உபுல்வன், உத்பலவன்ன ஆகிய பதங்கள் ஒரே கடவுளைக் குறிப்பதாயின் திருமாலையும் குறித்திருக்கலாம். உத்பலவன்ன விடமொழியிலுள்ள “உத்பலவர்ன’ ஆகும். நீலோற்பலமலரின் நிறம் எனப் பொருள்படும். திருமால் நீலமேனியன். எனவே உத்பலவன்ன எனும் பதம் விஷ்ணுவுக்குரிய ஒரு பெயராகலாம். உபுல்வன் எனும் தெய்வம் குறிப்பிட்ட ஓரிடத்துக்குரிய தெய்வமாய் விளங்கிப் பின் வருண விஷ்ணு வழிபாடுகளுடன் இணைந்ததென்லாம்.
எனினும் கி. பி. எட்டாம் நூற்றாண்டு தொடக்கமாவது அவ்விடத்திலே திருமால் ஆலயம் ஒன்றிருந்ததாகத் தெரிகின்றது. தப்புல் என்னும் அரசன் கி. பி. ஏழாம் நூற்றாண்டிலே தேவந்துறையில் உபுல்வனுக்கொரு கோவில் கட்டுவித்தான் என அறியப்படுகின்றது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கும், தென்கிழக்காசியாவுக்கும் சென்றவர்கள் தம் நாட்டுச் சமய, பண்பாட்டு மரபுகளையும் கொண்டு சென்றனர். உதாரணமாகத் தென்சீயத்திலுள்ள தகுபா
2

Page 26
எனுமிடத்திலே அவனிநாரணன்' என்ற விருதுப்பெயருடைய மூன்றாம் நந்திவர்மனின் பெயரில் ஒரு கோவிலும், குளமும் அமைக்கப்பட்டிருந்தன எனத் தெரிகின்றது. சோழப் பேரரசின் ஆதிக்ககாலத்திலும், அதன்பின்னரும் அமைக்கப்பட்ட கோவில்களிலே வைணவக் கோவில்களும் இடம் பெற்றன. சோழர் காலத்திலே பொலந்நறுவையில் அமைக்கப்பட்ட கோவில்களிலே பத்துச்சிவன் கோவில்களும், ஐந்து விஷ்ணு கோவில்களும் குறிப்பிடற் பாலன. கடவலகோறளை, அம்பல, பண்டுவாசதுவர, யாப்பகூவ, குருநாகல் வன்னிப்பிரதேசம் முதலிய வேறிடங்களிலும் வைணவக் கோவில்களமைக்கப்பட்டிருந்தன. மேலும் வைணவக் கோவில்கள் சில காலப்போக்கிலே வேறு வழிபாட்டிடங்களாக மாற்றப்பட்டு வந்துள்ளன.
கல்லினாலும், உலோகத்தினாலும் அமைக்கப்பட்ட விஷ்ணு விக்கிரகங்கள் சில கிடைத்துள்ளன. பொலநறுவையில் கண்டெடு க்கப்பட்டுக் கொழும்பு நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள வெண்கலத்தாலான இரு கத்திகளோடு கூடிய இரு விஷ்ணு சிலைகள், நடனநிலையிலுள்ள கிருஷ்ணன் சிலை, திருகோணமலையிற் கிடைத்த லக்ஷ்மிசிலை, குருநாகல் பாலகிருஷ்ணன் சிலை, கிழக்கு இலங்கையிலே கிடைத்த ஹனுமான் சிலை முதலியன குறிப்பிடற்பாலன. அண்மைக்காலத்திலே பொல நறுவையிற் கிடைத்த நடன நிலையிலுள்ள பாலகிருஷ்ணன்சிலை, விஷ்ணுசிலை முதலியனவும் குறிப்பிடத்தக்கவை.
யாழ்ப்பாண அரசிலே சைவக்கோவில்களும், வைணவக்கோவில்களும் இருந்தன. இங்கிருந்த
ஆகியஇடங்களிலிருந்தவை முக்கியமானவை. இவ்விரு தலங்களைப்பற்றிப் பெளராணிக ரீதியிலே, இடைக்காலத்திலெழுந்த தக்ஷணகைலாசமாஹாத்மியம் எனும் நூல் வருணிக்கின்றது. இதே நூலில் இவற்றைவிட வேறுபல இடங்களிலிருந்த விஷ்ணு கோவில்கள் பற்றிப் பொதுவான குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி. பி. 15ம் நூற்றாண்டிலே தென்மேற்கு இலங்கையிலிருந்த கோட்டையரசில் எழுதப்பட்ட சிங்கள தூதுகாவியங்கள் சிலவற்றிலும் விஷ்ணு கோவில்கள் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. குறிப்பாகக் கோகிலசந்தேசய எனும் நூலிலே பொன்னாலையிலே சுரதேவனுடைய ஆலயமிருந்தது பற்றி குறிப்பிடப்படுகிறது. சுரதேவன் இந்திரனையும் குறிப்பதாகலாம். எனினும் இப்பதம் விஷ்ணுவையும்
22

குறித்திருக்கலாம். மேலும் இதேநூலில் வல்லிபுரம் பற்றிக் மறைமுகமான குறிப்பு வருவதாக ஒருசாரார் கருதுகின்றனர். யாழ்ப்பாணத்தைக்காக்கும் உபுல்வன் (விஷ்ணு) பற்றிய குறிப்பு வருகின்றது. யாழ்ப்பாணத்திலே நிலவிவரும் கர்ணபரம்பரையான கவிதைகளின்படி, பொன்னாலையிலே ஏழு பிரகாரங்கள் கொண்ட ஒரு பெரிய விஷ்ணு கோவில் இருந்ததாக அறியப்படுகின்றது. இதன்ஏழாவது பிராகாரம் இருந்த இடத்திலேதான் இன்றைய பிள்ளையார் கோவில் அமைக்கப்பட்டுள்ளதெனக் கூறப்படுகின்றது. இக்கருத்து வரலாற்றுரீதியில் உறுதி செய்யப்பட வேண்டியதாகும். மேலும் யாழ்ப்பாணத்திலும், இலங்கையின் கரையோரப் பகுதிகளிமிருந்த பெளத்த, இந்துக்கோவில் களனைத்தும் கி. பி. பதினாறாம் நூற்றாண்டிலே போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டன. அவற்றின் கட்டிடப்பகுதிகளை அவர்கள் தமது தேவாலயங்களையும், கோட்டைகளையும், பிறவற்றையும் கட்டுதற்கும் பயன்படுத்தினர். 1824லே புத்தூரிலே கிறிஸ்தவ ஆலயமொன்றிலே திருத்தவேலைகள் செய்தற்குப் பணியாட்கள் நிலத்தைத் தோண்டிய பொழுது விஷ்ணு சிலையொன்று கிடைத்தது, இஃது ஒருவேளை அப்பகுதியிலிருந்த கோவிலிலே வழிபடப்பட்ட சிலையாகவிருக்கலாம்.
போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலத்திலிருந்த மிகப்பிரபல்யமான இந்துக் கோவில்களிலே தேவிநுவரயிலிருந்த விஷ்ணு ஆலயமும் ஒன்றாகும். கி. பி. 14ம், 15ம், 16ம், நூற்றாண்டுகளில் இக்கோவில் மிகப் பெரிய தொன்றாகப் பல்கலைச் சிறப்புக்கள், செல்வங்கள் கொண்டிலங்கியதெனவும் பல தரப்பட்ட வரலாற்று மூலங்கள் குறிப்பிடுகின்றன. கி.பி. 1344ல் இலங்கைக்கு வந்த மொறோக்கோ நாட்டுப்பிரயாணியான “இபின் பட்டுட்டா” இதனைப் பின்வருமாறு வருணித்துள்ளார்.
“தினவர் (தேவிநுவர) கடற்கரையோரமாக உள்ள பெரிய நகரம். இங்கு வணிகர் வாழுகின்றனர். இங்குள்ள பெரிய கோவிலிலே (தினவர்) திருமால் விக்கிரகம் உள்ளது. இக்கோவிலிலே 1000 பிராமணரும், யோகியரும் உள்ளனர். மேலும் இவ்விக்கிரகத்தின் திருமுன்னிலையில் இரவு முழுவதும் 500 இந்துப்பெண்கள் (தேவரடியார்) பாடுவர்; ஆடுவர். இந்நகரமும் சுற்றாடலும் இக்கோவிலுக் குரியவை. கோவிலிலுள்ள விக்கிரகம் பொன்னாலாயது. அதற்கு மாணிக்கக்கற்களாலான கண்கள் இருந்தன”. இவ்வருணனை சமகால தென்னிந்தியாவிலிருந்த மதுரை, யூரீரங்கம், போன்ற

Page 27
கோவில்நகர்களை நினைவூட்டுகின்றன. தென்னிந்தியக் கோவில் மரபுகளிங்கும் பேணப்பட்டிருப்பன. இசை,நடனம், தேவரடியார் முறை முதலியனவும் இங்கு இடம் பெற்றிருந்தமை குறிப்பிடற்பாலது, பூநீராகுலதேரரும் இக்கோவிலில் இடம்பெற்ற நாட்டியம் பற்றி வருணித்துள்ளார்.
கி. பி. 15ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இலங்கையிலே சீனச் செல்வாக்கு நன்கு ஏற்பட்டது. சமகாலச் சீனப் பேரரசரின் ஆணைப்படி பொறிக்கப்பட்ட தமிழ்ச்சாசனம் காலியிலே கிடைத்துள்ளது. இதன் மூலம் இக்கோவிலின் சிறப்புப் பற்றிச் சீனப் பேரரசர் அறிந்திருந்தார் என்பதையும், இதற்கு அவர் பலவகையான பெரிய தானங்களை வழங்கினார் என்பதையும் அறியலாம். சீனப்பெருமன்னர் “தேனவரை ஆழ்வாருக்கு காணிக்கையாகக் கட்டினது (ஆ) கப்படி பொன், வெள்ளி, துலுக்கி, பட்டு, சந்தனம், எண்ணைக்காப்புப் பலகாணிக்கைவகை, பொன்களஞ்சு ஆயிரம், வெற்றிஐஞ்சாயிரம் (ஐயாயிரம்) பலநிறத்துத்துலுக்கி ஐம்பது எனப் L6) தானவகைகளைக் கோவிலுக்கு வழங்கினார்” எனக் குறிப்பிடப்பட்டள்ளது.
இத்தானங்களிலே, 6066) 36 LT 6 விளக்குகளும், உபகரணப்பொருட்களும் அடங்குவன. சீனப்பெருமன்னரின் சாசனம் தமிழிலே பொறிக்கப்பட்டுள்ளமை இப்பகுதியிலிருந்த தமிழ் வைணவரின் செல்வாக்கினைக் காட்டுவதாகலாம்.
போர்த்துக்கீசர் வந்த காலத்திலே (கி. பி. 16ம் நூற்றாண்டு) சிவனொளிபாதமலைக்கு அடுத்தபடியாக மேற்குறிப்பிட்ட கோவில் பிரசித்தி பெற்றிருந்ததாகப் போர்த்துக்கீச ஆசிரியர் குறிப்பிட்டுள்ளனர். இப்பெரிய கோவிலை 'அவர்கள் 1588லே சூறையாடித் தரைமட்ட்மாக்கினர். றியெய்ரோ எனும் ஆசிரியர் தேவிநுவர் ஓர் அழகிய நகரம் எனவும், அங்குள்ள பிரதான கோபுரம் முற்றிலும் செம்பினால் பூசப்பட்டிருந்ததெனவும் அங்கு நறுமணமுள்ள மலர்கள் இருந்தன எனவும், போர்த்துக்கீசர் அதை அழித்துப் பசுக்களை கொன்று மாசுபடுத்தினர் எனவும் குறிப்பிட்டள்ளார். கூத்தோ எனும் ஆசிரியரும் இதே பாணியிலே மேலும் பல விபரங்களைக் குறிப்பிட்டுள்ளார். இக்கோவிலிலே போர்த்துக்கீசர் சூறையாடிய பொருட்களின் ஒரு பகுதி ஏற்கனவே காலியிலுள்ள சாசனத்திலே குறிப்பிடப்பட்டவை. கெய்றோஸ் எனும் ஆசிரியரின் கூற்றுப்படி திருகோணமலைக்கு அடுத்ததாக இக்கோவில் பிரசித்திபெற்றிருந்தது. இதற்குப் பலதூண்கள்

இருந்தன. சீனமன்னருடைய தமிழ்க்கல்வெட்டிலும் இவை பற்றிக் குறிப்பிடப்படுகிறது. அம்மன்னருக்கு இக்கடவுளில் ஈடுபாடு இருந்தது. இக்கோவிலை அழிக்க முற்பட்டபோதிலும் அதன் அழகிலும், சிறப்பிலும் கவரப்பட்ட போர்த்துக்கீசர் அதனை அழிக்குமுன் வரைபடமொன்றினை வரைந்தனர். இது இன்றும் லிஸ்பன் நூதனசாலையிலுள்ளது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலே இலங்கை வரலாற்றினை எழுதிய ஸேர். எமேர்ஃன் ரெனன்ற் என்னும் ஆங்கில ஆசிரியர் இலங்கையிலிருந்த மிக முக்கியமான இந்துக் கோவில்களிலொன்றாக இக்கோவில் விளங்கிற்று எனவும் உச்ச காலக்கட்டத்திலிது போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்டதெனவும் குறிப்பிட்டுள்ளார்.
போர்த்துக்கீசர் காலத்திலும், அவர்களுக் குப்பின் இலங்கையின் கடற்கரைப் பிரதேசங்களிலாதிக்கம் பெற்ற ஒல்லாந்தர் காலத்தின் பெரும் பகுதியிலும் பெளத்த, இந்துமதங்கள் அரச ஆதரவையிழந்தன; அடக்கப்பட்டன. ஆனால், ஒல்லாந்தர் ஆட்சிக்காலப் பிற்பகுதியிலும், தொடர்ந்து ஏற்பட்ட பிரித்தானியர் காலத்திலும் மத சுதந்திரம் வழங்கப்பட, பழைய இடங்களிலும், புதிய இடங்களிலும் ஆலயங்கள் அமைக்கப்படலாயின.
ஏற்கனவே, ஒல்லாந்தர் காலத்தில் அவர்கள் தமது சொந்தப் பொருளாதார நலன் கருதி தாம் இந்தியாவிலிருந்து கொணர்வித்த நெசவாளருக்குச் சமய சுதந்திரம் வழங்கியிருந்தனர். குறிப்பாக, யாழ்ப்பாணத்திலுள்ள பெருமாள் கோவிலும், தெஹிவளையிலிருந்த நெடுமால்கோவிலும் அவர்கள் சுதந்திரமாக வ்ழிபாடு செய்தார்கள். மரபுவழி வரலாற்றின்படி, யாழ்ப்பாணம் பெருமாள் கோவில் யாழ்ப்பாண மன்னர் காலத்திலே கி. பி. 14ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாகும். பொன்னாலை, வல்லிபுரம் ஆகிய இடங்களிலே போர்த்துக்கீசரால் அழிக்கப்பட்ட கோவில்கள் இருந்த இடங்களிலோ அவைகளுக்கு அண்ம்ைபில்ோ புதிய ஆலயங்கள் அமைக்கப்பட்டன. இவற்ன்றவிடக் கொக்குவில் கீரிமலை, புத்தூர், பளை, சாவகச்சேரி முதலிய இடங்களிலும் இன்று விஷ்ணு ஆலயங்கள் உள்ளன.
. சைவசமயத்திலே சிவனின் ஒரு அமிசமாகவும், மும்மூர்த்திகளிலொருவராகவும் விஷ்ணு விளங்குகிறார். காத்தற்தெய்வமாய்ச் சிவனே விஷ்ணுவாகியுள்ளார். மேலும், சிவனின் சக்தியாகவும், சக்தியினுடைய சகோதரனாகவும் விஷ்ணு விளங்குகிறார். சிவ-விஷ்ணு ஐக்கியத்தின், அதாவது
23

Page 28
சிவனுக்கும் மோஹினி வடிவம் தாங்கி வந்த திருமாலுக்கும் தோன்றிய ஹரிஹர புத்திரன் (திருமால், சிவன் ஆகியோரின் மகன்) என அழைக்கப்படும் ஐயனார், சைவத்தையும் வைஷ்ணவத்தையும் இணைப்பவராகவும் இலங்குகிறார். இவ்ஐயனார் வழிபாடு புராதன இலங்கையில் இந்துக்கள் மத்தியில் மட்டுமன்றிப் பெளத்தர் மத்தியிலும் நன்கு நிலவியதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. மேலும் திருமால் சிவசக்தியின் சகோதரனாக, சிவனின் மைந்தர்களாகிய பிள்ளையார், முருகன் ஆகியோரின் அருமை மாமனாராக மிளிர்கின்றார். ஆகவே சிவபெருமானைப் பரம்பொருளாகக் கொண்டிலங்கும் சைவத்திலே திருமாலுக்கு முக்கியமாக ஒர் இடமுண்டு. அவரைத் தனிப்பட்ட கோவில்களில் மட்டுமன்றி, சைவக்கோவில்களிலே பரிவார மூர்த்தியாகவும் சைவர் வழிபட்டு வருகின்றனர். சைவக்கிரியைகளில் இவருக்கு ஒரு முக்கியமான இடமுண்டு. இந்தியாவிற் போன்று இலங்கையிலே சைவ, வைணவத்துவேசம் நிலவவில்லை. மாறாகப் பெரும்பாலும் சைவத்தில் ஒன்றிணைந்த பகுதியாகவே விஷ்ணு வழிபாடு நிலவுகின்றது. மேலும் இலங்கையில் இன்றுள்ள விஷ்ணு கோவில்கள் பலவற்றிலும் வைணவ ஆகமங்கள் பின்பற்றப்படினும் பெரும்பாலும் சைவப்பிராமணர்களே அர்ச்சகராயிருக்கின்றனர். விபூதி வழங்கப்படுகின்றது. இவற்றிற்குச் சென்று வழிபடும் பெரும்பாலான மக்கள் சைவர்களேயாவர். கிழக்கு இலங்கையிலே, குறிப்பாக மட்டக்களப்பிலே விஷ்ணு வழிபாடு பிரபல்யமானதாகும்.
மண்டூர், பழுகாமம், கிரான், கழுவாஞ்சிக்குடி, காரைதீவு, குருக்கள்மடம் முதலிய சுமார் இருபது இடங்களிலே விஷ்ணு கோவில்கள் உள்ளமை குறிப்பிடற்பாலது. இவற்றுள்ளே குருக்கள் மடம் போன்ற இடங்களிலே சிவன் விஷ்ணு சிலைகளும் கிடைத்துள்ளன.
இலங்கைப் பெளத்தமரபிலும் விஷ்ணுவுக்கு முக்கியமான ஓரிடமுண்டு. பெளத்த வழிபாட்டுத் தலங்களிலும், வேறுசில இடங்களிலும் கணபதி, ஸ்கந்தன், விஷ்ணு முதலிய இந்து சமயத்

தெய்வங்களும் வணங்கப்டுகின்றனர். இலங்கைப் பெளத்த மரபிலே இலங்கையின் காவல் தெய்வங்களில் விஷ்ணுவுமொருவர். இந்து சமயத்தெய்வமாயினும் பெளத்தசமயசாயல் உள்ளவராக இவர் முக்கியத்துவம் வகித்து வந்துள்ளார். பரிநிர்வாணம் அடையுமுன் புத்தபெருமானின் வேண்டுகோளிற்கேற்பத் தேவர்களின் அரசனான சக்க (சக்ரன்-இந்திரன்) இலங்கையின் பாதுகாப்பினை உத்பலவன்னனிடம் ஒப்படைத்ததாக மஹாவம்சம் கூறும். இதனை நிறைவேற்றுவதற்காக இத்தெய்வம் இங்கு வந்தார். இவரும் விஷ்ணுவும் ஒருவரே என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது பற்றி ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
இந்துசமயத்தினைப் போலவே, இலங்கைப் பெளத்தத்திலும் அவர் காத்தற்கடவுளாக விளங்குகிறார்; பெளத்தசாசனத்தின் பாதுகாவலராகக் கருதப்பட்டு வந்துள்ளார். எனவே பெளத்தவழிபாட்டிடங்களில் இவர் ஒரு முக்கியமான இடம் பெற்றிருப்பதைக் காணலாம். மேலும் காத்தற்பணிக்கேற்ப இலங்கையின் வடகோடியிலே வல்லிபுரத்திலும் தென்கோடியிலே தேவிநுவரவிலும் விஷ்ணுவாலயங்கள் அமைந்துள்ளமை நன்கு குறிப்பிடற்பாலது. பெளத்தர்களின் ஒரு சாரார் தமது அன்றாட வாழ்க்கையின் இன்னல்களை நீக்கும் பொருட்டு வணங்கப்படும் தெய்வங்களில் “விஷ்ணு தெய்யோவும்” ஒருவராவர். விஷ்ணு சிலைகளும் ஒவியங்களும் பெளத்த ஆலயங்களிலும் இடம் பெற்றுள்ளன. பெளத்த பெளராணிகவியலில் இவருக்கும் ஓரிடமுண்டு. இசுருமுனிய, தம்புல்ல, மஹியங்கண முதலிய இடங்களிலே புராதன விஷ்ணு சிலைகள் உள்ளன.
ஆகவே இலங்கையின், பெளத்த சைவ மரபுகளிலே விஷ்ணுவுக்குமொரு சிறப்பிடம் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடற்பாலது. எனவே, இலங்கையின் பெளத்த சைவ மரபுகளை ஒரு வகையில் இணைக்கும் வழிபாடாகவும் சமகாலத்திலும் விஷ்ணு வழிபாடு பிரபல்யமாக விளங்குவதும் குறிப்பிடற்பாலது.

Page 29
10.
11.
12.
13.
14.
ii.
iii.
ii.
sg9Alq d5(g).
Marshall Sir John, Mohonjodaro and civilization, Delhi 1973, Ch.V
News Letters of the Scandinavian Ins Studies, No. 3, January 1970, Copenha pp. 6-8.
Jaisval, Suvira Origin and Developme Delhi, 1967, P. 46.
- do - Ibid., P.50
Hastings, J. (Ed.) Encyclopaedia of Re vol.xii, New york, 1921, P. 571
Macdonell, A., Vedic Mythology, Delh
Hopkins W/Epic Mythology, Delhi, 19
Monier Williams, A Sanskrit English) 1951, P. 999 Tamil Lexicon, vol. VI. Pt.I, Madras, 1
Macdonell A., (Ed. and Tr.), Brhaddev Bharadvaja K., A Philosophical study New Delhi, 1981, P. 45.
Jaisval Sivira, op.cit., PP33-34
do - op. cit, P. 34
do - op. cit, P. 37-39
do - op. cit, P. 88
do - - op. cit, P. 63
do - op. cit, P. 88
Pandey, R. B., Ed Historical and Liter Varanasi, 1962, PP. 43-44

ப்ெபுகள்
the Indus
wa
titute of Asian
gen
nt of Vaisnavism,
ligion and Ethics,
i 1974, PP.37-38
174, PP. 202-203.
Dictionary, OUP,
934, P. 3652.
ata, Delhi, 1965, P.50
of the Concept of Visnu in the puranas,
ary Inscriptions,

Page 30
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
31.
32.
33.
34.
ii.
மகாதேவன். டி. எம்.பி, இந்து சமயத்தத்து சென்னை, 1964, 2. 175.
பகவத்கீதா, iv,7-8
Paravitaraná, S. (Ed.), Inscriptions 1970, Cxxiii.
Mahavamsa, Ch. x.
Ray H.C., (Ed.), History of Ceylon PP. 109-110
இந்திரபாலா கா. இலங்கையில் வளர் கொழும்பு, 1970, ப. 7
மேற்படி, ப. 13
Coomaraswamy A.K., Memoirs of A No. 1 Ceylon, 1914, plates, vi, ix,
நாகலிங்கம்பிள்ளை, (தமிழ்மொழிபெயர்ப்பு) யாழ்ப்பாணம், விபவ, அத். 21-22
மேற்படி.இ ப. 4-6
Kokilasandesaya, v. 257.
- do - ,v. 287
JCBRAS vol. xxiii Navaratnam, C.S., A. Short History
Jaffna, 1964, P 70.
Hussain M., (Eng.Tr), The Reha O Oriental series, No. cxvii, Baroda, 1953, P.224.
Epigraphia Zeylonica, Vol. iii, Leid Pieris P.E., (Eng. Tr.), Ribeiro's Hii
JRASCB, Vol. xx. 60, 1908, P. 375
Rasanayagam C., Ancient Jaffna, M
Tennent, J.E., Ceylon, London, 185
கந்தையா வீ.சீ. மட்டக்களப்புச் சை மட்டக்களப்பு: 1983,212.
& Fir
JCBRAS - Journal of the Ceylon OU P. - Oxford University Press, Ch. Chapter; geš. geģöÉLTu Jh.

வம், (தமிழாக்கம்),
of Ceylon, Colombo,
vol, I, part I, Colombo, 1959,
ந்த திராவிடக்கட்டிடக்கலை,
the Colombo Museum Series, xiv, xxi, xxiii.
, தகூவிணகைலாச புராணம்,
y of Hinduism in Ceylon,
f Bin Batuta, Gaekwards"
en, 1933, PP. 335-336
story of Ceilao.
adras, 1926, P214.
9, PP. 113-114.
வக் கோயில்கள்,
ருக்கங்கள்
Branch of the Royal Asiatic Society.

Page 31
ճւնքն այն
I互GDL凹
தமிழரது வாழ்வியலில் பூப்புநீராட்டு ஒரு முக்கிய நடைமுறையாகப் பண்டைக்காலம் தொட்டு வழக்கமாகவுள்ளது. பெண் குழந்தை பருவம் அடைவதைப் பலரும் அறியும்படி விழா நிலையில் தமிழர் கொண்டாடி வந்துள்ளனர். இத்தகைய சிறப்புக் கொண்டாட்டம் இன்னும் உலகெங்கும் வாழுகின்ற தமிழர்களுக்கு இன்றியமை யாததாகும். எனவே பூப்பு நீராட்டு நடைமுறைகள் பற்றிய தகவல்களை தமிழர் யாவரும் அறியும் வண்ணம் ஆவணப்படுத்த வேண்டியதும் எமது பொறுப்பாகும். தமிழர் மட்டுமன்றி உலகத்து ஏனைய பண்பாட்டாளரும் இவற்றை அறிந்து கொள்வதற்கும் இது வாய்ப்பினை நல்கும்.
பூப்புநீராட்டுநடைமுறைகள் இன்று இடத்துக்கிடம் சற்று வேறுபட்டிருந்தாலும் அடிப்படையில் ஒற்றுமையான பண்புடையனவாகவே உள்ளன. பிறபண்பாட்டுத் தாக்கங்களாலும் சூழ்நிலை வேறுபாட்டாலும் காலமாற்றத்தாலும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டமை தவிர்க்க முடியாததே. எனினும் அடிப்படையை விளங்கிக் கொண்டால் இந்நடைமுறை தமிழர் வாழ்வியலில் என்றும் நிலைத்து நிற்கும் என்பதில் ஐயமில்லை.
1. பூப்படைதல் :
பெண் குழந்தையின் வளர்ச்சி நிலையிலே பருவமடைதல்' என்பது இன்றியமையாதது. ஆண் குழந்தையின் வளர்ச்சியிலும் இந்நிலை முக்கியமானதே. எனினும் உடல்நிலையிலே ஆண்குழந்தையின் வளர்ச்சிநிலை வெளிப்படையான மாற்றங்களைக் கொண்டது. ஆனால் பெண் குழந்தையின் வளர்ச்சி நிலையிலே உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் சில அவ்வாறு வெளிப்படையாகத் தெரிவதில்லை. பெண்குழந்தை பூப்படையும் போது அக்குழந்தை இன்னொரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தகுதியைப் பெற்றதை எல்லோரும் அறிய வேண்டும் என்பதே பூப்பு நீராட்டு விழாவின் முக்கிய அறிவிப்பாகும். இன்னும் அப் பெண்குழந்தை உடல் நிலையில் மட்டும் அன்றி

பு நீராட்டு றைகள்
மனோன்மணி சண்முகதாஸ்
உள்ளத்திலும் பெருவளர்ச்சியைப் பெறுகிறது. புத்தியறிதல்,பக்குவப்படல்,'சாமத்தியப்படல், பெரிய பிள்ளையாதல்’ போன்ற சொற்றொடர்களால் பூப்படைதல் குறிப்பிடப்பட்டமை இதனை நன்குணர்த்துகின்றது. குழவிப் பருவம் நீங்கும். குமரியாகும் பெண் குழந்தையின் அழகும் பூப்படைந்த பின்னரே முழுமையான நிலையிலே வெளிப்படுகின்றது. ஏறக்குறைய ஒன்பது வயதிலிருந்து பதினைந்து வயதுக்குள் பெண்குழந்தை பூப்படையும். இவ்விடைப்பட்ட காலப்பகுதியில் அதன் வளர்ச்சி நிலையிலும் போதிய கவனம் கொள்ள வேண்டியுள்ளது. இக்காலகட்ட வளர்ச்சியை வீட்டவர்கள் மட்டுமன்றிச் சமூகத்தவர்களும் எதிர்நோக்கியிருப்பர். பூப்பு நடைமுறைகள் எல்லோருக்கும் தேவையான விளக்கங்களைக் கொடுக்கும் வகையிலே கையாளப்பட்டு வந்துள்ளன.
2. பூப்பு நடைமுறைகள்:
தமிழரது பூப்பு நடைமுறைகளிலே அடிப்படையாக அமைந்த விளக்கம் ஒன்றுண்டு. பெண் வளமான நிலத்தைப் போன்றவள். அவளுடைய உடல் வளத்திற்கேற்ப நிறையக் குழந்தைகளைப் பெறும் தன்மையுடையவள். நிலத்தின் வளத்திற்கேற்ப பயிர் செழித்துப் பயன் தரும், அதே போன்று பூப்பெய்திய பெண்ணும் நல்ல திடமான உடல்நிலை கொண்ட குழந்தைகளைத் தந்து சமூகத்திற்கும் மனித இன வளர்ச்சிக்கும் நல்ல பங்களிப்பைச் செய்ய வல்லவள். இன்று விஞ்ஞான வளர்ச்சியினால் மனித பலத்தைவிட கருவிக்கையாட்சி நாளாந்த வாழ்வில் நன்கு தொழிற்பட்டு வருவதாலும் உலக குடித்தொகைப் பெருக்கத்தாலும் குழந்தைப்பேறுகட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையிலே தமிழர் வாழ்வியலிலும் பூப்பு நடைமுறைகள் அடிப்படை விளக்க நிலையிலிருந்து வழுவி அழகியல் நடைமுறைகளாக மாறிவருகின்றன.
தமிழர் பண்பாட்டு நிலையிலே பூப்பு நடைமுறைகள் காலத்தால் அழியாத பண்புடையன. அவற்றைப் பண்டைய காலத் தமிழரது
27

Page 32
செயற்பாட்டுக்கமைய இன்றும் நாம் கையாள்வது நமது பண்பாட்டை நாம் பேணுவதற்கு வாய்ப்பளிக்கும்.
2:1 பால் அறுகு வைத்து நீராட்டல்
பூப்பு நீராட்டுச் செய்யும்போது பெண்ணுக்குப் பால் அறுகு வைத்த பின்னர் நீராட்டுவது நடைமுறையாகும். பூப்பெய்திய ஐந்தாம் நாள் அல்லது ஏழாம் நாள் இந்நடைமுறை இன்று செய்யப்படுகின்றது. பால், அறுகு இரண்டும் வளத்தைக் குறிப்பன. பால் சமய நிலையிலே புனிதப்படுத்துகின்ற பொருட்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அறுகம்புல் ஆழவேரூன்றிப் படர்ந்து செழித்து வளரும் தன்மையானது. பெண்ணுக்கு இவ்விரண்டையும் தலையிலே வைத்து நீராட்டும் போது அவள் நீண்டகாலம் வளமாக வாழ்வாள் என்ற நம்பிக்கையைத் தமிழ்ர் கொண்டிருந்தனர். சங்கத் தமிழ்ப் பாடலிலும் திருமணத்தின் போது அறுகு பயன்படுத்தப்பட்டதாகச் செய்தியுள்ளது. எனவே இன்றும் இந்நடைமுறை பொருத்தமானதாகச் செய்யப்பட வேண்டியதொன்றாக அமைந்துள்ளது.
பால், அறுகு வைக்கும்போது முதலில் பெண்ணின் தாய்வழி மாமனும் மாமியுமே வைப்பர். பின்னர் திருமண நிலையிலே அவர்கள். தொடர்புறுவதால் அவர்களுக்கு முதல்நிலை வழங்கப்பட்டது. ஏனைய நெருங்கிய உறவினர்கள் அவர்களைத் தொடர்ந்து பால், அறுகு வைத்த பின்னர் தலைக்கு நீரூற்றலும் இவ்வொழுங்குநிலையிலேயே செய்யப்படும். பழைய காலத்திலே வீடுகளில் கிணறு இன்றிப் பொதுக் கிணறு பயன்பாட்டில் இருந்தபோது பூப்படைந்த பெண்ணை அக்கிணற்றடிக்கு அழைத்துச் சென்று நீராட்டுவர். அல்லது அக்கிணற்றிலிருந்து ஏழு குடங்களிலே நீரை அள்ளி வந்து வீட்டிலே நீராட்டுவர். ஆரியப் பண்பாட்டுக் கலப்பின் பின்னர் இவ்வேழு குடத்து நீரும் ஏழு புனித தீர்த்தங்களென்ற நம்பிக்கையும் உருவாகிவிட்டது. பால், அறுகு உள்ள தட்டிலே சில்லறைக் காசு போடுகின்ற வழக்கமும் பிற்காலத்தில் ஏற்பட்டுள்ளது. தொழில் நிலை அத்தட்டைச் சுத்தம் செய்வோருக்குரிய பணமாக அது கொடுக்கப்பட்டது.
2:2 ஆடை அலங்காரம்
பூப்பு நீராட்டு விழாவிலே பெண்ணை மணப்பெண் போலவே அலங்காரம் செய்வது நடைமுறையாகும். புதிய பட்டுச் சேலை அணியப்படும். சிலர் பெண்ணின் தாயின் கூறைப்புடவையையும் பயன்படுத்துவர். தாய் மாமனே புதிய பட்டுச்சேலை, சட்டையை வாங்குவதுண்டு. நகையும் வசதிக்கேற்ப அணிவிப்பார். ஏனைய நெருங்கிய உறவினர்களும்
28

தங்கநகைகள் போடுவர். உச்சிவரி, நெற்றிவரி, சூரியப்பிறை சந்திரப்பிறை, சடைநாகம், குஞ்சம் போன்ற தலைநகையணியப்படும். இத்தலையலங்காரத்தை முழுமையாகப் பூக்களாலே செய்யும் நடைமுறையும் உண்டு. காதில் தோடு, ஜிமிக்கி, தொங்கட்டான், மயிர்மாட்டி அணிவர். கழுத்தில் அட்டியல், சங்கிலி, பதக்கச்சங்கிலி, முத்துமாலை, 556 அணியப்படும். இடுப்பில் ஒட்டியாணம், மேகலை அணியப்படும். கையில் காறையும் (தோள்வளை) காப்பும், மோதிரம், மோதிரமாட்டி என்பன அணிவர். காலில் காற்சங்கிலி அணியப்படும். கழுத்திற்கு நீண்ட மலர்மாலை (ஆண்டாள் மாலை) அணிவர்.
நெற்றியில் செஞ்சாந்தும் விரல்களுக்கு மருதோன்றி (மருதாணி)யும் போடுவர். கன்னத்திலே கண்ணுறுபடாமல் சிறிய கறுப்புப்பொட்டு வைக்கப்படும். மூக்கிலே மூக்குத்தி கட்டாயம் போடப்படும். இவ்வணிகலன் பழைய காலத்தில் ஆணையும் பெண்ணையும் வேறுபடுத்தும் அணிகலனாகத் தமிழராலே கொள்ளப்பட்டது. பூப்பெய்திய பெண் தொடர்ந்தும் மூக்கணியை அணிந்திருக்க வேண்டுமென்ற கட்டுப்பாடு கூட முன்னர் நிலவியது.
புடவையின் நிறம் மஞ்சள், அல்லது சிவப்பாக இருக்க வேண்டுமென்ற நியதியும் முன்னர் இருந்தது. சிவப்பே பெரும்பாலும் உரிய நிறமாகக் கொள்ளப்பட்டது. பூப்பெய்திய பெண்கள் செவ்வாடை அணியும் வழக்கம் இருந்ததை பழைய தமிழ்ப் பாடல்களும் பதிவு செய்து வைத்துள்ளன. பூப்பெய்திய பெண் (மாறாடி) மாற்று ஆடையை அணிவது பழந்தமிழர் வழக்கமாயிருந்துள்ளது.
2.3 மணவறையும் தோழியும்
பூப்பு நீராட்டு விழாவிலே மணவறை அமைப்பும் முக்கிய நடைமுறையாகும். நீராடிப் புத்தாடை அணிகலன்களால் பொலிவு செய்யப்பட்ட பெண், இருப்பதற்கு பீடம் கொண்ட மணவறையும் அமைக்கப்பட்டது. இம் மணவறை பூக்களால் அல்லது வண்ணக் கடதாசிகளாலும் பல்வேறு நிற மணிகளாலும் ஆக்கப்பட்டது. அதனுள் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு அதன்மேல் வெள்ளைத்துணி விரிக்கப்படும். நீராடிய பெண்ணும் தோழியும் அதன் மேல் அமர்வர். பூப்படைந்த பெண்ணுக்குச் செய்யப்படுகின்ற நடைமுறை களின்போது உதவுவதற்காகத் தோழியாக ஒரு பெண் தொழிற்படுவாள். சில இடங்களில் தாய்மாமன் மனைவியிலே இப்பொறுப்புச் சுமத்தப்படும். எனினும் பொதுவாக குழந்தைப் பேறுபெற்ற, பெண்ணுக்கு மச்சாள் முறையான பெண்ணே தோழியாகத்

Page 33
தொழிற்படுவது வழக்கம் தோழியும்புத்தாடை அணிந்து அணிகலன் பூண்டு தன்னை அழகுபடுத்தி நிற்பதே நடைமுறையாக உள்ளது. தற்காலத்தில் அழகுணர்வைக் கூட்டுவதற்காக சில பெண்குழந்தைகள் அலங்கரித்துத் தோழிகளாக நடமாடும் வழக்கமும் சேர்ந்துள்ளது.
பெண்ணுக்கு ஆரத்தி எடுக்கும்போதும் ஏனைய நடைமுறைகளைச் செய்யும்போதும் நடைமுறைகளை நன்குணர்ந்த ஒருவர் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காகவே, குழந்தைப்பேறுள்ள பெண் தோழியாக நிற்கவேண்டுமென்ற நடைமுறை ஏற்பட்டது. நடைமுறையிலுள்ள சடங்குகளைச் செயற்படுத்தும் போது அவற்றைப் பிழையறச் செய்ய வேண்டுமெனத் தமிழர் நம்பிக்கை கொண்டிருந்தனர். நடைமுறைகளைச் செய்யும் போது தடைஏற்படின் அது பூப்பெய்திய பெண்ணின் வளமான எதிர்காலத்தைப் பாதிக்குமென்ற நம்பிக்கையும் தமிழரிடையே இருந்தது.
2:4ஆரத்தி எடுத்தல்
பூப்பு நீராடிய பெண்ணை மணவறையிலே நிற்கவைத்து பல ஆரத்திகளை எடுப்பதும் நடைமுறையிலுள்ளது. இந்த நடைமுறையின் அடிப்படையும் பெண் ஒரு விளைநிலத்திற்கு ஒப்பானவள் என்ற கோட்பாட்டை வலியுறுத்திக் காட்டுவதாகவே அமைந்துள்ளது. அவற்றின் வகைநிலை, எண்ணிக்கைநிலை, ஒழுங்குநிலை என்பவற்றில் இடத்துக்கிடம் வேறுபாடுகள் இன்று காணப்படுகின்ற போதிலும் அடிப்படை ஒன்றாகவே அமைந்துள்ளது. இந்த ஆரத்தித் தட்டுகளின் எண்ணிக்கை ஏழு பொதுவானதாக பல இடங்களில் நடைமுறையாக உள்ளது. ஆனால் மேலதிக எண்ணிக்கைகளான ஒன்பது, பதினொன்று, பதின்மூன்று என்பவை செல்வநிலைக்கும் சமூகமதிப்புக்குமேற்ற வகையில் காலப்போக்கில் சேர்த்துக் கொள்ளப்பட்டவையாக இருக்கின்றன எனலாம். ஏழு ஆரத்திகளைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.
1. மூன்று மூலைப் புட்டுக் கொண்ட தட்டம், 2. மூன்று உழுத்தம்களி உருண்டை கொண்ட
தட்டம். 3. மூன்று பாற்சோற்று உருண்டைகள் கொண்ட
தட்டம். 4. மூன்று தேங்காய் கொண்ட தட்டம். 5. முக்கணி (வாழை, மா, பலா) கொண்ட தட்டம். 6. சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மலர்கள் கொண்ட
தட்டம்.

7.
நிறைநாழி (நெல்லு அளக்கின்ற கொத்து நிறைய நெல் நிரப்பி நடுவே வெற்றிலையும் எலுமிச்சம்பழமும் செருகிய சத்தகத்தைச் (சிறு அருவி வெட்டும் கத்தி) செருகியபடி நிறுத்தி வைத்தல்).
ஒன்பது ஆரத்தியின் ஒழுங்குநிலை :
.
மூன்று மூலைப் புட்டு. மூன்று உழுத்தம் களி உருண்டை மூன்று பாற்சோற்று உருண்டை. மூன்று வகையான சிற்றுண்டி மூன்று தேங்காய்,
முக்கணி. சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மலர்கள். சுட்டி விளக்கு மூன்று.
நிறை நாழி,
பதினொன்று ஆரத்தியின் ஒழுங்குநிலை :
1
மூன்று மூலைப் புட்டு. மூன்று உழுத்தம் களி உருண்டை. மூன்று பாற்சோற்று உருண்டை. மூன்று வகையான சிற்றுண்டி, பால்ரொட்டி.
மூன்று தேங்காய்.
முக்கனி,
சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மலர்கள். சுட்டி விளக்கு மூன்று.
. நிறைகுடம்.
நிறைநாழி.
பதின் மூன்று ஆரத்தியின் வகையொழுங்கு :
3.
மூன்று மூலைப் புட்டு. மூன்று உழுத்தங்களி உருண்டை. மூன்று பாற்சோற்று உருண்டை. எள்ளுருண்டைப் பலகாரம். பயற்றம் பலகாரம். உழுத்தம் பலகாரம்.
பால்ரொட்டி,
மூன்று தேங்காய்
முக்கணி.
. சிவப்பு, வெள்ளை, மஞ்சள் மலர்கள்
சுட்டி விளக்கு மூன்று.
நிறைகுடம்.
நிறைநாழி.
29

Page 34
இந்த ஆரத்திகளைச் செய்தபின்னர் மஞ்சள் நீரால் ஆரத்தி எடுத்துக் கண்ணுாறு கழித்தல் நடைபெறும். சில இடங்களில் முன்னர் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளே மஞ்சள்நீர் ஆரத்தியை அடக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. ஆனால் ஏனைய பண்பாட்டு நடைமுறைகளின்போது மஞ்சள்நீர் ஆரத்தி கண்ணுாறு கழித்தற் பொருட்டுச் செய்யப்பட்டு வருவதால் மஞ்சள்நீர் ஆரத்தி தனியாகவே செய்யப்பட்டு வந்திருக்க வேண்டும் என்பதே பொருத்தமானதாகும்.
ஆரத்திகள் எண்ணிக்கைநிலை, செல்வ நிலைக்கும். சமுகமதிப்பு நிலைக்கும் ஏற்றவகையிலே வேறுபட்ட மைந்தாலும் அவற்றின் ஒழுங்கு நிலையிலே ஒரு கோட்பாடு இருந்தமை புலப்படுகின்றது. முதலாவது ஆரத்தி பெண்ணின் மகப்பேற்று நிலையிலே முலைப்பால் வளத்தைச் சுட்டுகின்றது. பூப்படைந்த பெண் குழந்தைக்குத் தாயாகும் போது தாய்ப்பால் வளமுடையவளாக இருப்பின் குழந்தை நலமாக வளரமுடியும். உழுந்து அடுத்துப் புரதச்சத்துநிலையிலே தாயின் உணவு வளத்தைச் சுட்டுகின்றது. அகநானூற்றுப் பழைய பாடல் ஒன்று தமிழரிடையே இம்மரபு இருந்த வரலாற்றைப் பதிவு செய்து வைத்துள்ளது. இன்னும் நெற் பயிர்ச்செய்கைக்கு முன்னர் சிறுதானியப் பயிர்ச்செய்கையே தமிழர் உணவு வளமாக இருந்தது. உழுந்து, பயறு, எள் போன்ற தானியவளம் சுட்டவே அவை ஆரத்திநிலையில் நடைமுறைகளாகியுள்ளன. அதன் பின்னர் நெல்லரிசி உணவு தமிழர் வாழ்வில் முக்கிய உணவாக வந்தபோது பாற்சோறும் ஆரத்திநிலையில் இணைந்தது. தேங்காயும் முக்கனியும் கூட இவ்வாறே வந்தமைந்தன. தமிழ்நாட்டு வெட்பதட்ப நிலைக்கேற்ப இக்காய்கனிகள் பெருவளமாக இருந்தன. அத்தகைய வளமுடைய பெண்ணாகப் பலர் பயன்பெற உதவும் கரமாக அவளை வாழ்த்த முன்னோர் காய், கனிகளையும் ஆரத்தியெடுத்து வாழ்த்தினர். மலர்களைப் பெண்ணின் அழகு நிலைக்கு ஒப்பாகக் கூறும் வழக்கம் உண்டு. சிவப்பு, வெண்மை, மஞ்சள் நிறங்கள் மங்கலமான மலர்களாகக் கருதப்பட்டன. இன்னும் அணிகலன் நிலையிலே பெண்ணுக்கு மலரின் பயன்பாடு இன்றியமையாததாகவிருந்தது. பொன், வெள்ளி அணிகலன்களின் பயன்பாட்டிற்கு முன்னைய காலங்களில் மலர்களே கூந்தல், கழுத்து, இடை, கை என்பவற்றை அலங்கரிக்க உதவின. மாலை, கண்ணி, இண்டை, தார் கோதை, ஆரம், தழையாடை எனப்பலதர வகைப்பட்ட மலரணிகள் பழைய தமிழிலக்கியப் பாடல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே அவற்றைப்
30

பூப்பு எய்திய பெண் குறைவின்றிப் பெறவேண்டி முன்னோர் ஆரத்தி நிலையில் வாழ்த்தினர். அடுத்து விளக்கு, ஒளி நிலையில் பெண் திகழவேண்டுமெனச் சுட்டும் ஆரத்தியாக உள்ளது. தன்னைச் சார்ந்தவர்களுக்கு நல்ல ஒளிகாட்டும் இல்லப்பணியை ஏற்கும் தகுதியைப் பெற்றவள் பெண். நிறைகுட ஆரத்தி நீர்வளத்தைச் சுட்டும் ஆரத்தியாக அமைந்துள்ளது. பயிர்வளம் பெற நீர் எத்துணை இன்றியமையாததோ அதேபோல பெண் உடல் வளம் பெற நீர் தேவை. பூப்படைந்தபின் உடல் தூய்மை நிலையில் நீர்வளம் பெரிதும் வேண்டப்படுவதொன்று. நிறைவு நிலையான ஆரத்தியாக அமைவதினால் நிறைநாழி சிறப்புப் பெற்று விளங்குகின்றது. நிறைநாழியின் அமைப்பு முழுக்க பயிர்ச்செய்கை வளத்தைக் காட்டுகின்ற மங்கலப் பொருளாக உள்ளது. நெல்லை நாழியிலே நிரப்பி அதனுடன் கதிரறுக்கும் கத்தியையும் செருகிவைப்பதும் இதனை நன்குணர்த்துகின்றது. கத்தியிலே செருகப்படும் வெற்றிலையும் எலுமிச்சம் பழமும் செல்வத்தைச் சுட்டி நிற்கின்றது. வெற்றிலையைத் திரு(லக்ஷிமி) என்றும் சொல்வர். அதுபோல எலுமிச்சம் பழத்தை அம்மன் அருள் என்றும் குறிப்பிடுவர். பூப்பெய்திய பெண் செல்வமும் இறையருளும் பெற்றுநீடு வாழ நிறைநாழி ஆரத்தி எடுக்கப்படுகிறது.
ஆரத்திகளின் ஒழுங்குநிலையின் பொருள் விளக்கத்தை நன்கு உணர்ந்து கொண்டால் அதனைச் செயற்படுத்துவதில் சிக்கல் எழாது. ஆனால் நம்மவர் பலர் தற்போது இந்த ஆரத்திகளைச் செய்யும்போது அழகுநிலை ஒழுங்குக்காக அவற்றை மாற்றியும் செய்கின்றனர். எமது பண்பாட்டு நடைமுறைகளை அறிய விரும்பும் பிறபண்பாட்டாளர் இதனால் தமிழர் வாழ்வியலின் சீரமைப்பினை உணரமுடியாத நிலை ஏற்படலாம். தமிழர்நடைமுறைகள் வெறுமனே மூடநம்பிக்கையின் வெளிப்பாடுகளல்ல. அவை வாழ்வியல் ஒழுங்கு நிலையையும், கட்டமைப்பையும் பின்னவர்க்கு உணர்த்தி நிற்பவை என்பதை எல்லோரும் உணரவேண்டும்.
3. கண்ணுாறு கழித்தல் : பரிசு கொடுத்தல்
பூப்பெய்திய பெண்ணின் அழகுத் தோற்றம் பலரையும் கவரும். பொறாமைப்பட வைக்கும். எனவே பிறரது பார்வையால் பாதிக்கப்பட்டிருப்பின் அதை நீக்குமுகமாக மஞ்சள் நீரால் ஆரத்தி எடுக்கப்படும். ஒரு தட்டத்திலே மஞ்சளை நீரில் கரைத்து அதில் சில பச்சரிசிகளைப் போட்டு இரண்டு வாழைப்பழத்துண்டுகளிலே திரியிட்டு ஏற்றி ஆரத்தி மும்முறை சுற்றுவர். பின்னர் திரியை அணைத்து

Page 35
பூப்பெய்திய பெண்ணைத் தட்டினுள் காறித்துப்பும்படி செய்வர். திரிகருகிய சாம்பரிலே கருப்புப் பொட்டைப் பெண்ணின் நெற்றியிலிடுவர். தட்டிலுள்ள மஞ்சள் நீரை பெண்ணின் தலைக்கு மேலே வீசி வெளியே கொட்டுவர். அதன் பின்னரே பூப்பெய்திய பெண் மணவறையை விட்டு வருவாள். தாய்மாமன் காலடியில் விழுந்து வணங்குவாள். அவர் அவளுக்கு பரிசில் கொடுப்பார். தொடர்ந்து பெற்றோர், உறவினர், நண்பர் வாழ்த்திப் பரிசில் வழங்குவர். பழைய காலத்தில் நெல், உழுந்து, பயறு, எள், தேங்காய், அரிசி என்பவையும் பரிசில்களாகக் கொடுக்கப்பட்டன. தற்போது பணமே பெரும்பாலும் கொடுக்கப்படுகிறது.
4. விருந்தளிதல்
பூப்பு நீராட்டு விழாவில் விருந்தளித்தலும் முக்கிய நடைமுறையாகும். பெண்ணின் வளர்ச்சி நிலையைக் கொண்டாடு முகமாக நல்ல உணவு விருந்தாகும். புலால் உணவு, மரக்கறி உணவு என அவரவரது உணவுப்பழக்க நிலைக்கேற்ப உணவு வழங்கப்படும். மரக்கறி உணவில் கறிகளின் எண்ணிக்கைகளை ஆரத்திகளின் எண்ணிக்கை களுக்கேற்ப அமைக்கும் நடைமுறையும் தந்போது வழக்கமாகிவிட்டது. அறுசுவை உணவே பெருவழக்காகி விட்டது. இவ்விருந்திலே பூப்பெய்திய பெண்ணும் தோழியும் சிறப்புவிருந்தினராகக் கணிக்கப்படுவர். உழுத்தம் களியும், புட்டும் சிறப்புணவாக ஆக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படும்.
இந்து சமய நிலையான பூப்பு நீராட்டு விதிமுறைகள்: (ருதுசாந்தி)
தமிழர்களில் இந்துக்கள் சமயநிலையிலே பூப்புநீராட்டு விழாவினைச் செய்யும்போது சில விதிமுறைகளைக் கடைப்பிடிக்கும் வழக்கம் உண்டு. பிரதேச நிலைக்கேற்ப தனித்துவமான முறைகள் கையாளப்பட்டாலும் அவற்றிடையே இந்துக்கள் கையாளும் நடைமுறைகளில் ஒரு பொதுமை ஒழுங்கு நிலையும் உண்டு. அவற்றையும் சிறு விளக்கமாகத் தருவது பயனுடையதாகும்.
புண்ணியாகம்:
இந்நடைமுறையினைத் துடக்குக் கழிவு என்றழைப்பர். அந்தணகுரு ஒருவரைக் கொண்டு

கிரியா பூர்வமாக சில நடைமுறைகள் செய்யப்படும். பூப்பெய்திய பெண்ணின் உடல் தூய்மை நிலைக்கேற்ப நான்காம் நாள் அல்லது ஐந்தாம் நாள் அல்லது ஏழாம் நாள் செய்யப்படும். இக்கிரியையில் வீட்டவரும் மாமன் மாமியும் பங்குகொள்வர்.
2. பால்அறுகு - நீராட்டு
பால் அறுகு கொண்டு நீராட்டுவதற்குப்பதிலாக புண்ணியாக நீரைக் கொண்டு நீராட்டும் நடைமுறை. 3. அலங்காரம்
பூப்படைந்த பெண்ணின் அலங்காரநிலையிலே சமயநிலையில் நெற்றியில் விபூதி மூன்று கீறாக அணிதல்.
4. பெண் அழைப்பு
நீராடிப் பெண்ணை அலங்காரம் செய்த பின்னர் சுமங்கலிகள் ஐவர் சேர்ந்து பெண்ணை மணவறைக்கு அழைத்து வரல். அச்சமயம் மங்கலப் பொருட்களுடன் (மஞ்சள், குங்குமம், பழம், பாக்கு, வெற்றிலை, பூ, காசு) வாசல் வழியாக மண்டபத்திற்கு அழைத்து வருவர். நீராட்டு நடைபெற்ற கிணற்றடியிலிருந்து வீட்டு வாசல் வழியாகப் பெண் உள்ளே வரவேண்டும் என்பது விதிமுறையாகக் கையாளப்படும்.
5. அட்ட மங்கலப் பொருட்களின் தரிசனம்:
நீராட்டு முடிந்து அலங்காரம் செய்தபின் பெண் அட்டமங்கலப் பொருட்களைத் தரிசனம் செய்ய வேண்டும். அவையாவன : 1) பால், 2) நெல், 3)வெள்ளைப்பூ, 4) பவுண், 5) காசு, 6) மஞ்சள், 7) குங்குமம், 8) பழம் - பாக்கு - வெற்றிலை - கண்ணாடி என்பனவாகும். இப்பொருட்களில் ஏதாவது ஒன்றைப் பெண் எடுக்க வேண்டும். அவ்வாறு அவள் தேர்ந்தெடுக்கின்ற பொருளின் மூலம் அவளுடைய எதிர்கால வாழ்க்கைப் பலன் தீர்மானிக்கப்படும். இது பற்றிய விரிவான விளக்கங்களை அந்தண குருவிடம் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
6. ஏற்றி இறக்குதல் :
சமய நிலையிலே பூப்பெய்திய பெண்ணை நீராட்டி அலங்காரம் செய்த பின்னர் சில குறிப்பிட்ட பொருட்களைத் தட்டங்களிலே வைத்துபெண்ணின் தலையைச் சுற்றி மேலிருந்து கீழாகச் சுற்றிப்பாதத்துடன் முடிப்பர். மேலிருந்து கீழாகச் சுற்றி எடுப்பதால் இந்நடைமுறை ‘ஏற்றி இறக்கல்’ என அழைக்கப்படுகிறது. இவ்வாறு ஏற்றி இறக்கும் பொருட்கள் வருமாறு.
31

Page 36
நிறைகுடம்.
தீபம்.
நிறைநாழி. புட்டு-களி. பழம்-பாக்கு. சாத உருண்டை - 14
சாத உருண்டைகள் பதின்நான்கில் 12 உருண்டைகளையும் திக்கிற்கு மூன்றாக நான்கு திக்குகளுக்கும் வீசிவிடுவர். மீதி இரண்டு உருண்டைகளை ஆரத்தி எடுத்தற்குப் பயன்படுத்துவர்.
7. ஆசீர்வாதம்:
பூப்பெய்திய பெண் குரு தொடக்கம் உறவினர் அனைவரிடமும் ஆசீர்வாதம் பெறுதல். பெரியவர்களின் பாதங்களிலே வீழ்ந்து வணங்கல்.
8. ஆரத்தி - மங்களம் :
இறுதியாக ஆரத்தி எடுத்தல், சாத உருண்டையில் தீபமேற்றி ஆரத்தி எடுத்தல்,
சமய நிலையான பூப்புநீராட்டு நடைமுறைகளும் தமிழரது வாழ்வியல் நிலையான தொடக்ககால நடைமுறைகளும் இன்று ஒன்றிணைந்து நடைமுறையிலே ઈી6u சிக்கல்களையும் ஏற்படுத்துகின்றது. விருந்து நிலையிலே பூப்பு நீராட்டு நடைபெறும் இல்லத்தில் இந்துசமயக் கிரியைகளைச் செய்தபின்னர் புலால் உணவுவகைகளை விருந்தினர்க்கு அளிக்கலாமென்ற நிலையும் இன்று உருவாகிவிட்டது. வெளிநாடுகளிலே வாழ்கின்ற தமிழரது இல்லங்களிலே சமயக் கிரியைகள் முடித்து விருந்தினைப் பொது மண்டபங்களிலே செய்யும் வழக்கமும் வந்துவிட்டது. இது சமயநிலையைக் குழப்பாத வண்ணம் அமைந்தால் நன்று. ஆனால் சமயக்கிரியைகள் நடைபெற்ற அதே இடத்தில் புலால் உணவைத் தவிர்ப்பது நன்று. ஏனெனில் இந்துசமய நடைமுறையில் புலால் உணவுவகை தவிர்க்கப்பட வேண்டுமென்ற நியதி உண்டு.
துடக்கு நிலையிலே பூப்படைந்த பெண்ணைத் தூய்மைப்படுத்தும் நடைமுறை கைக்கொள்ளப்பட்டு வருகின்றது. அதிலும் எவ்வளவு காலத்திற்கு துடக்குநிலை பேணப்பட வேண்டும் என்ற வரையறையிலும் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. தொழில் நிலையிலே முற்காலத்தில் துடக்குநிலை பேணும் நாட்களின் கால எல்லை வேறுபட்டிருப்பதை உணரமுடிகின்றது. எனவே இன்று பூப்பெய்திய பெண்ணின் உடல் தூய்மை நிலைக்கேற்ப
32

துடக்குநிலையைப் பேணுவதே பொருத்தமானதாகும். முதற் பூப்புநிலையிலே மட்டுமே அதனையும் இன்று செய்யமுடியும். பழைய காலத்தில் பெண் மாதவிலக்கு நிலையிலே வீட்டுக்கடமைகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதைப் பழைய சங்க இலக்கியப் பாடல் பதிவு செய்து வைத்துள்ளது. ஆனால், விஞ்ஞான வளர்ச்சியும் நாகரிக முன்னேற்றமும், பெண்ணின் தூய்மை பேணும் சாதனங்களும் அதை மாற்றிவிட்டன. காலமாற்றத்தோடு தமிழர் வாழ்வியலும் மாற்றம் பெறுவதும் தவிர்க்க முடியாததே. சமயம் தூய்மை நிலையிலே சில நியதிகளைப் பேணுவதை வற்புறுத்தியது. இன்று பழைய அமைப்புகள் மாறவே நடைமுறைகளும் சில வழக்கொழிந்து விட்டன. பெண்ணின் முதற்பூப்பு பற்றி அறிவிக்கை என்றும் தேவையானதே. எனவே அதனைச் செய்யும் காலத்திற்கு இயைந்த நடைமுறைகளையும் நாம் கையாள வேண்டும். வாழும் சூழல், வாழ்க்கைநிலை என்பவற்றிற்கேற்ப நடைமுறைகளை மாற்றும் போது அடிப்படையான - காலத்தால் சிதையாதவற்றைக்
கட்டாயம் கைக்கொள்ள வேண்டும்.
மேலைநாடுகளிலே பெண்ணின் முதற்பூப்பு இன்று பெரியதொரு விடயமாக நோக்கப்படுவதில்லை. ஆனால் உடல் மருத்துவ நிலையில் அதற்குத் தனியான கணிப்பு ஒன்றுண்டு. எனவே மேலைநாட்டவர் மத்தியிலே இல்லாத இப்பூப்பு அறிவிக்கை நிலையைத் தமிழரும் இன்று கைவிட்டு விடும் நிலையும்
உருவாகலாம். ஆனால் ஏனைய நாட்டுப் பண்பாடுகளின் மத்தியிலே தமிழரை இனம் காட்டும் பண்பாட்டு நடைமுறைகளை அவர்கள்
பேணவேண்டியதும் இன்றியமையாததே. பூப்பு நீராட்டு அவசியமா என்ற கேள்விக்கு இது விடையாக அமையலாம். இன்னும் எல்லாவற்றையும் காலக்கணிப்பின் மூலம் அறிந்து வாழும் தமிழர் மரபில் பெண் பூப்பெய்தும் நேரமும் இன்றியமையாத ஒன்றாகவே இன்னமும் கணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பு : இச்சிறிய கட்டுரையிலே /நடைமுறைகள் Z/aaf/a الاصل على/قيق7ي தகவல்களைத் தந்துதவிய /7ழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்துந7கரிகத்துறைப் GL/7/7ĕa/zř LV. Ges/rz//76vø67øaýv6ØØ7ggovešø ഒ7ഞ്ഞ് മഞ്ഞഗ്ഗിക്ക്.

Page 37
ஈழத்துச் சிறுகை பித்தனின்
ரெறத்தாழ கடந்த இரு தசாப்தங்களாக தமிழகச் சிறுகதைத் துறையில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன:
i) எழுத்தாளரது படைப்புகள் யாவும் கொண்ட முழுமையான தொகுப்பு வெளிவருதல் (எ-டு: புதுமைப் பித்தன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன்)
ii) எழுத்தாளர் படைப்புகள் பற்றிய மறுவாசிப்பு
நிகழ்தல் (எ-டு: புதுமைப்பித்தன், க.நா. சு)
ஆனால், ஈழத்துச் சிறுகதைத்துறையோ முற்றிலும் மாறானதாக பரிதாபத்திற்குரியதாக - உள்ளது. முன்னோடி எழுத்தாளர் பலரது படைப்புகள் இன்றுவரை நூலுருப்பெறாதுள்ளன (உ+ம் : சம்பந்தன்). முன்னோடிகள் மரணிக்கும் போதுதான் அவர்கள் சிலரது படைப்புகளுக்கு வாழ்வு கிடைக்கின்றன ( உ + ம் : சி. வைத்தியலிங்கம்
ஆய்வு நிலையில் இதனால் ஏற்படும் பாதிப்புகள்
6)
(அ) எழுத்தாளரது படைப்புகளுக்கு உரிய இடம்
கிடைக்காமை.
(ஆ) காலந்தப்பி வெளிவரும் போது எழுத்தாளரது படைப்புகளை மதிப்பீடு செய்வதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள்.
(இ) ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி பற்றிய அரையும் குறையுமான ஆய்வுகளே தொடர்ந்து வரும் நிலை. இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு எழுத்தாளரான காலமான பித்தனின் (1920 - 1994) சிறுகதைகளும் இத்தகைய துர்ப்பாக்கிய நிலைக்குட்பட்டுள்ளன. எனவே சுருக்கமான மதிப்பீடு ஒன்றினை

த வளர்ச்சியில் கதைகள்
செ. யோகராசா
நிகழ்த்த வேண்டியது அவசியமானது; பொருத்தமானது.
1. பித்தன் காலத்து இலக்கியச் சூழல் :
11 ஈழத்துச் சிறுகதைச் குழல்
பித்தன் சிறுகதை எழுதத் தொடங்கிய காலத்தில் ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி நிலையில் இரண்டாவது காலகட்டம் முடியுந் தறுவாயிலிருந்தது. ஆரம்ப காலகட்டத்து (1930 தொடக்கம்) முன்னோடிகளான முதலாவது தலைமுறையினரது சிறுகதைகள் பொருள் ரீதியில் பின்வரும் பண்புகளைக் கொண்டிருந்தன: -
(அ) கணிசமான படைப்புகள் புராண, இதிகாச, வரலாற்றுச் சம்பவங்களைப் பொருளாகக் கொண்டவை.
(ஆ) தனிமனித அவலங்களை, உணர்ச்சிகளைப் பொருளாகக் கொண்டவை; மனோரதியப் பாங்கிலமைந்தவை.
(இ) ஆண் - பெண் உறவுகளை அடிப்படையாகக்
கொண்டவை.
இரண்டாவது தலைமுறையினர் (1940 தொடக்கம்) எழுதியுவை பொதுவாக கிராமிய பண்பாட்டுத் தளத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்தன.
மூன்றாவது தலைமுறையினர் (1960 தொடக்கம்) எழுதியவை அடி நிலைமக்களது வாழ்க்கை நிலையை, வர்க்க நோக்கில் அல்லது பொது நிலையில் 9 g(5u606i. மேற்கூறிய இரண்டாவது தலைமுறையினர் எழுதத் தொடங்கிய இரண்டாவது தஸாப்தத்திலும் (1950) மூன்றாவது தலைமுறையினர் எழுதத் தொடங்கிய காலத்திலுமே பித்தனது (1950 -
33

Page 38
1970) சிறுகதைகளுள் பெரும்பாலானவை வெளி வருகின்றன. இவை முற்கூறிய சிறுகதைப் பண்புகளிலிருந்து பெருமளவு வேறுபட்டிருந்தன.
1.2 மட்டக்களப்பு சிறுகதைச் சூழல் :
மட்டக்களப்பின் ஆரம்பகாலச் சிறுகதை முயற்சிகள் நாற்பதுகளின் பிற்கூற்றில் தொடங்குகின்றன. இக்காலகட்ட (1945-1955) எழுத்தாளருள் பெரும்பாலானோர் கல்கி பாணிக் கதைகள் எழுதிக் கொண்டிருந்தனர்.
ஐம்பதுகளின் பிற்கூற்றில் வந்து சேர்ந்தோருள் ஒரு சாரார் பிரதேசப் பண்புகள் கொண்ட கதைகளை ճTԱք5 முற்படுகின்றனர் (எ-டு:தங்கன், ஆ. பொன்னுத்துரை, அன்புமணி)
முஸ்லிம் எழுத்தாளர்கள் என்றுநோக்கும்போது அ. ஸ. அப்துல் ஸமது (1955 தொடக்கம்) முஸ்லிம் மக்களது அன்றாட சாதாரண வாழ்க்கை நிலையினைப்பொருளாகக் கொண்ட சிறுகதைகளை எழுத ஆரம்பிக்கின்றார்; எனினும் கூர்மையான சமூகக் கண்ணோட்டத்துடன் அவர்களது வாழ்க்கையை அறுபதுகளில் அணுக முற்படுகின்றார் மருதூர்க் கொத்தன்.
மேற்கூறிய சிறுகதைச் சூழலை நன்கு மனதில் இருத்திக்கொண்டு, பித்தன் சிறுகதைகள் பற்றி அவதானிப்பது பயனுடையது.
அத்துடன், பித்தன் (கே. எம். எம். ஷா) முஸ்லீம் இனத்தவராயிருப்பினும் தம்மை முஸ்லிம் எழுத்தாளர் என்று பாகுபடுத்தி நோக்குவதை விரும்பியவரல்லர் என்பதும் நினைவுகூரப்பட வேண்டியது.
2. பித்தனது சிறுகதைகள்
2.1 பித்தனது சிறுகதைகள் பற்றிச் சிந்திக்கும்போது அவரது படைப்புகள் பெண்களது துயரங்களையும், மன உணர்வுகளையும் திறம்படச் சித்திரிக்கின்றமை முதலில் விதந்துரைக்கப்பட வேண்டியதாகிறது. வறுமை காரணமாக திருமணம் தடைப்பட்ட அல்லது காதல் நிறைவேறாத பெண்களினதும், விதவைகளினதும், வேலைகாரப் பெண்களினதும், வயோதிபநிலையிலுள்ள
34

பெண்களினதும் வாழ்க்கைத் துயரங்களும், மனப் போராட்டங்களும், மன உணர்வுகளும் நுணுக்கமாகவும் வெகு அநாயாசமாகவும் வெளிக்கொணரப்படுகின்றன.
'ஊர்வலம் சிறுகதையில் வரும் ரகுமத்து வறுமை காரணமாக திருமணம் செய்ய முடியாத நிலையில் இருப்பவள். அவளது அயல் வீட்டு தோழிக்குத் திடீரெனத் திருமணம் நடக்கிறது. ரகுமத்தின் முன்நாள் காதலனே மணமகன். கதை இவ்வாறு ஆரம்பிக்கிறது.
" மனிதன் ஏன் பிறக்கிறான்? என்ற கேள்விக்கு பலதரப்பட்ட பதில்கள் வரலாம்! ஆனால், பெண் ஏன் பிறக்கிறாள் என்று கேட்டால், பிள்ளைகளைப் பெற்றெடுக்க'என்ற பதில் உடனே வரும்!
முகத்தைத் திருப்பிக் கொள்வதில் பயனில்லை கொஞ்சம் நேராகப் பார்க்கும் தைரியம் வேண்டும் நமக்கு.
நமது சமூகமும் அதன் அமைப்பும் இப்படி முகத்தைத் திருப்பிக் கொள்ளும் மனப்பான்மையில்தான் பின்னப்பட்டுக் கிடக்கிறது. பெண்களைப் பற்றி எண்ணிப் பார்க்கும் பொழுது தாய்மையும் தனித்துநின்று அழிந்து போகும் தன்மையும் தான் எஞ்சி இருக்கின்றன. இவற்றைவிட வேறு ஏதாவது இருக்கிறதா?...”
இவ்வாறு ரகுமத்து தனக்குத் தானே கேட்டுக் கொள்ளும் கேள்வியுடன் ஆரம்பிக்கும் கதை, அயல்வீட்டுக் கல்யாண ஆரவாரம் அடுக்குகளின் பின்னணியில் ரகுமத்தின் பழைய நினைவுகள், மனக்குமுறல்களுடன் வளர்ந்து செல்கிறது. உள்ளத்தை உருக்கும் வண்ணம் - உள்ளத்தில் ஒலிக்கும் வண்ணம் - இவ்வாறு முடிகின்றது:
“ஊர்வலம் வருகுது புள்ள...! நமக்கென்ன உம்மா! ஊர்வலம் பார்க்க நீவரல்லியா புள்ள? என்னத்த பாக்கிற உம்மா! நானும் ஒருநாளைக்கு ஊர்வலமாய் போறவள் தானே!”

Page 39
ரகுமத்து எந்த ஊர்வலத்தைப் பற்றிச் சொன்னாள் என்பது அந்தத் தாய்க்குத் தெரியாது. தெரிந்து கொள்ள அந்த முதியவள் ԱրանռնÛ606):
மேலே இடம் பெற்றுள்ள ரகுமத்தின் வார்த்தைகளும் முதியவள் மனநிலையும் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கும் போது, ஒரு பெண்எழுத்தாளர் எடுத்துரைப்பது போன்றே பித்தன் பெண்கள் மனநிலையினை எடுத்துரைக்கிறார் என்று கூறத் தோன்றுகிறது.
ஊர்வலம், கதையில் சற்று அடங்கியிருந்த பித்தன் குரல் தாகம் கதையில் ஆக்ரோஷத்துடன் குமுறுகின்றது.
"நேற்றுத்தன்னைப் போல்தனியாக குமரியாக இருந்த ருக்கியா இன்று மனைவியாக மாறிவிட்டாள் பணம் எப்படியெல்லாம் மனிதனை மாற்றி விடுகிறது ?ஒரு பெண்ணுக்கு மட்டும்தான் ஆண் தேவையா? ஆணுக்குப்பெண்தேவையில்லையா? தேவையென்றால் இந்த ஆண்கள் ஏன் ஆடு மாடுகளை விலை கூறிவிற்பது போல் தங்களைத் தாங்களே விலை கூறிவிற்கிறார்கள்.
மஹாப் பணம் கொடுத்து பின்னர்தான் கணவன் என்ற உரிமையோடு ஒரு பெண்ணின் கையைப் பிடிக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுவதாக ஹதீன் சொல்லுகிறார்கள். இது வெறும் பிரசங்கம் மட்டும் தானா? வாழ்க்கையின் நடை- முறைக்கு வர வேண்டாமா? குர்ஆர்னின் கோட்பாடுகளை வாழ்க்கையிலும் கடைப்பிடித்தாலென்ன?”
இவ்வாறு தொடரும் தாகம் கதையும் பாதிக் குழந்தையும் (பின்னர் அது பற்றிக் கூறப்படும்) வேறு

சிலவும் முஸ்லிம் எழுத்தாளருள் துணிச்சல் மிக்க ஓர் எழுத்தாளராக பித்தனை இனங்காட்டி நிற்கின்றன என்பதில் ஐயமில்லை.
2. 2. அடுத்து, முஸ்லீம் சமூகம் பற்றிய பித்தனது சிறுகதைகள் பற்றிக் குறிப்பிட வேண்டும்.
மேற்கூறிய, சிறுகதைகளிலிடம்பெற்றுள்ள பெண்கள் முஸ்லிம் பெண்களே. எனவே, அதுபற்றி மறுபடி எடுத்துரைக்க வேண்டியது அவசியமன்று.
முஸ்லிம் குடும்பங்களிலிடம்பெறும் குடும்பப் பிணக்குகள் பற்றியும்பித்தன் எழுதியுள்ளார். 'அமைதி இவ்விதத்தில் முக்கியமான படைப்பு. இலகுவில் தீர்க்கக் கூடிய சிறுசிறு பிணக்குகள் கூட, பெரும் விரிசலாகி விபரீதமாகும் நிலையிலுள்ள ஒரு குடும்பத்தின் கதையே அமைதி, ரஷீத்தும் சமீமாவும் நல்லவர்கள்தான். இருந்தாலும் நிம்மதியற்ற வாழ்க்கை அவர்களுடையது. காரணம் என்ன? சமூகத்தினைச் சாடுகின்றார் ஆசிரியர்:
“விவாகமான தம்பதிகளின் வாழ்க்கையில் ஏற்படும் கோளாறுகளைத் தீர்க்க வேண்டு மானால் கணவன் மனைவி இருவரையும் நெருங்கித்தான் முடிவு கட்ட வேண்டும். ஆனால் சமீமாவை நெருங்கமுடியாதே? இவள் இஸ்லாமியப் பெண் . . . . .
இத்தகைய சமூகப்பின்னணியில் இரு நல்லவர்களைப் படைத்து கதையை நடத்திச் செல்வது கத்திமுனையில் நடப்பது போன்றது. ஆயினும், அக்காரியத்தைத் திறம்படச் செய்துள்ளார் பித்தன். ரஷித்து . . . குடிகாரனாகவும், இறுதியில் தற்கொலை செய்து கொள்பவனாகவும், மாறினாலும் கூட ரமீமாவில் நாம் ஆத்திரம் கொள்ள முடியவில்லை. சிறுகதையின் கட்டமைப்பு சிதையாவிதத்தில் இத்தகைய கதை அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகிறது.
மகனிருந்தும் அநாதரவான ஒரு முஸ்லிம் பெண்ணின் வாழ்க்கைச் சித்திரமாகியுள்ளது
இருட்டறை.
முஸ்லிம் செல்வந்தர் ஒருவரின் மறுபக்க
வாழ்க்கையை அம்பலப்படுத்துவது என்ற விதத்தில்
விதந்துரைக்கப்பட வேண்டியது பலராலும் அறியப்பட்ட
35

Page 40
பாதிக்குழந்தை' செல்வந்தரான ஹாஜியார் உமரு லெப்பை அனாதையான வேலைக்காரி சுபைதாவை தனது காமவெறிக்குப்பலியாக்குகின்றார். விளைவாக ஒரு குழந்தையைச் சுமந்த சுபைதா அது பிறக்கும் தறுவாயில் பிணமாகி விடுகின்றாள். குழந்தையும் பிறப்பதற்கு முன் பிணமாகியிருந்தது. ஹாஜியாரை பின்வருமாறு அறிமுகப்படுத்துகின்றார் ஆசிரியர்.
“ ஹாஜியார் உமரு லெப்பை அந்தக் கிராமத்துக்கே பெரிய மனிதன். LIHTLIQypitió LisborypLió அவரைப் பெரிய மனிதனாக்கிவிட்டது. வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுப்பது போல செய்த பாவங்களைத் தீர்ப்பதற்காக ஒரு முறை மக்காவுக்குப் போய் வந்தார். பிறகு திரும்பவும் அகரத்தில் ஆரம்பித்துக் கொண்டார் தனது சுபாவத்தை.
பாப மூட்டைகளைத் தாங்கிக் கொள்ள மக்கா என்றொரு சுமைதாங்கியை அமைத்துக் கொண்ட பிறகு, பணக்காரன் பாபம் செய்யப்பயப்பட வேண்டியதில்லையல்லவா? இந்தத் தைரியத்தில் கண்மூடிக்காலம் கழித்தார் ஹாஜியார்"
தாயும் குழந்தையும் தெருவில் பிணமாகக் கிடக்கின்றனர். கதை இவ்வாறு முடிகின்றது:
“... ... -- சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக நாலைந்து கார்கள் அந்த வழியே பறந்தன. அதில் முதலாவது காரில் உமருலெப்பை ஹாஜியார் இரண்டாவது முறை மக்காவுக்குப் போகிறார்"
பாதிக்குழந்தை' எழுதி முப்பதாண்டுகளின் பின்னர் அதன் உட்புறத்தைத் தொட்டுக்காட்டுவதாக ‘விடிந்தும் விடியாத . . . என்றொரு கதை பித்தனால் எழுதப்படுகிறது. (களம் - ஜூலை 84). தாம் செய்த பாவங்களுக்காக வருந்தி, தருமங்கள் செய்து, உயிர் விடும் ஹாஜியாரை அதிலே காணமுடிகின்றது. ஆயினும், பித்தனது ஏனைய கதைகளுடன் ஏற்படும் ஒட்டுறவு இக்கதையைப் படிக்கும்போது எமக்கு ஏற்படவில்லை என்றே கூறத்தோன்றுகிறது.
2.3. பித்தன் சிறுகதைகள் பற்றி அடுத்துக் கூறத்தக்கது, வறுமையின் பன்முகத் தோற்றங்களையும்
36

படம்பிடிக்கும் சிறுகதைகள் பலவற்றை அவர் படைத்துள்ளமை பற்றியாகும். பசிக் கொடுமையால் (தங்கமோதிரமிருப்பினும்) உணவைமட்டும் திருடும் தானியேல், பணமின்மையால் திருமணஞ் செய்ய முடியாத ரகுமத்து, ருக்கியா, மனைவிக்கு திருவிழாவில் பொருட்கள் வாங்குவதற்காக முதலாளியிடம் கடன்கேட்கும் தன்மானமுடைய முருகப்பன், எசமானிடம் தன்னை இழக்கும் வேலைக்காரி சுபைதா முதலானோரின் வாழ்வில் வறுமை எவ்வெவ்விதங்களிலெல்லாம் விளையாடுகின்றது என்பதனை அவரது சிறுகதைகள் நன்கு படம் பிடித்துள்ளன.
2. 4. பித்தன் சிறுகதைகளில் சமூகத்தின் அடிமட்டத்தைச் சார்ந்த சாதாரண பாத்திரங்களே - மூட்டை தூக்குவோர், ஹோட்டல் சமையல்காரன், வேலைக்காரர், வண்ணாரப் பெண் முதலானோர் உலாவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
2. 5. மேற்கூறிய பாத்திரங்களின் மன உணர்வுகள், மனப்போராட்டங்கள் என்பன முதன்மை பெற்றாலும் அவை வெறும் அகவய உணர்வுகளாக அன்றி புறவயஞ் சார்ந்து -சமூக நெளிவு சுளிவுகளை விமர்சிப்பனவாக இடம் பெற்றுள்ளன. அத்தகைய விமர்சனம் வெளிப்படையாகத் துருத்திக் கொண்டமையாமல் கதையோடு கதையாகப் போகிற போக்கில் இடம் பெறுவதுதான் பித்தன் கதைகளின் ઈptUth சமாகின்றது. எடுத்துக்காட்டாக, பாதிக்குழந்தையில் இடம்பெறும் பின்வரும் பகுதியைக் குறிப்பிடலாம்:
இந்த உலகத்தில் எத்தனையே/7 /ேர் இருக்கிற7ர்கள். ஏன் உமருலெப்பை கூடத்தான் இருக்கிற7ர். அவருக்கு நன்றாகத் தெரியும் தன்னுடைய இரத்தத்தில் இருந்து ஒரு புது இவன் உதயம7கப் போகிறது என்று. ஆனால் அவர் என்ன செய்து விட்ட7ர7இந்தக் கிழநரயை விட அவ்வளவு கிழமாகிவிட்டார்? இல்லையென்றால் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி இருப்பாரா? உம். அவர் என்ன செய்வார்? அவர் குடியேறி இருக்கும் உலகம் அப்படி ஏன் இந்த சமூகமும் அப்படித்தான்' . . . . .
2. 6. பித்தன் கதைகளை நுணுக்கமாக அவதானிக்கும் போது பித்தன் என்ற எழுத்தாளனுள்

Page 41
ஒரு கலைஞன் குடியிருப்பதையும் கண்டு கொள்ள முடிகிறது. ஊர்வலம், தாகம், பாதிக்குழந்தை முதலான சிறுகதைகள் இதற்குச் சான்று பகர்கின்றன.
2. 7. தவிர, இன்றைய சிறுகதைகள் பலவற்றிலுங் கூட இடம்பெறாத சிறுகதைக்குரிய செறிவு, முத்தாய்ப்பான முடிவு முதலான அம்சங்கள் பித்தன் கதைகளில் காணப்படுகின்றன. உதாரணமாக சோதனை (காதலில் மூழ்கிய ஒரு ஓவியனின் கதை இது) யின் முடிவு இவ்வாறு அமைகிறது:
“இப்பொழுது என்னதான் செய்யப் போகிறாய் மார்க்கண்டு”என்று கேட்டேன். 'நான் அவள் வீட்டுக்கு முட்டை கட்டுகிறேன் ” என்றான். அதன் பிறகு? அவன் கலைஞனாக இல்லை. கணவனாகி விட்டான்'
2. 8. ஆசிரியரது நடை பல இடங்களில் கவித்துவம் பொருந்தியதாக வெளிப்படுகின்றது. ஆங்காங்கே சில பகுதிகள் கவிதையடிகளை நினைவூட்டுவன வாயுமுள்ளன :
"அவளுக்கு அவன் இனித்தான்.
அவனுக்கு அவள் இனித்தாள். இருவருக்கும் வாழ்க்கை இனித்தது”
-தாம்பத்யம்
2. 9. சலித்துப்போன பழைய காதல் விடயங்களைக் கூட சுவையான சிறுகதையாக எழுத முடியுமென்பதற்கு ஊதுகுழல் சான்றாகிறது. கண்ணன் - ராதை காதல் பற்றியதே அப்படைப்பு.
2. 10. பித்தனது சிறுகதைகளின் தலைப்புகள் குறியீடுகளாகவோ (உ+ம் - இருட்டறை) இரட்டை அர்த்தம் கொண்டனவாகவோ (உ+ம் ஊர்வலம்) அமைவதும் பொதுவாக இன்றைய சிறுகதைகளில்

காண இயலாத பண்பாகிறது. (ஒரு சிறுகதையின் சிறப்பு அம்சங்களிலொன்று, இடப்படும் தலைப்புமாகும்).
2. 11 தமிழ்ச் சிறுகதைகளில் நன்கு பரிச்சயமான ஒருவர் பித்தன் சிறுகதைகளை வாசிக்கும் போது சில கதைகளில் புதுமைப் பித்தனையும் சில கதைகளில் கு. ப. ரா. வையும் காணமுடியும். *அவ்வாறெனில் அது பித்தனின் தோல்வியை அல்ல
வெற்றியையே குறித்து நிற்கிறது எனலாம்.
பித்தன் சிறுகதைகளின் குறைபாடுகள் பற்றி இங்கு பேசப்படவில்லை. அதன் கருத்து குறைபாடுகள் இல்லை என்பதன்று; இன்னோரிடத்தில் அது பற்றி கவனித்துக் கொள்ளலாம் என்பதே.
3. பித்தனுக்குரிய இடம்:
இதுவரை கூறியவற்றை வரலாற்றுப் பின்னணியில் நின்று இன்னும் ஆழமாக நோக்குமொருவர் பித்தன் கதைகள் பற்றிய பின்வரும் முடிவுகளுக்கு வருவர்:
AX பித்தன் மட்டக்களப்பு சிறுகதை முன்னோடி.
பித்தன் ஈழத்துச் சிறுகதை முன்னோடிகளுள் ஒருவர்.
அறுபதுவரையில் மட்டக்களப்பு கண்டு கொண்ட இரு சிறந்த எழுத்தாளருள் ஒருவர்.
(பித்தன் தம்மை முஸ்லிம் எழுத்தாளர் என்று வகைப்படுத்துவதை விரும்பாதவர் என்பதை தவிர்த்துவிட்டு நோக்கின்) ஈழத்து முஸ்லீம் சிறுகதை முன்னோடி.
anse அது மட்டுமன்று; இன்றைய பெண்நிலை நோக்கில் நின்று அவதானிக்கும் போதும் அவர் (சில கதைகளே எழுதியிருப்பினும்) முதன்மை பெறுபவர்.
37

Page 42
தமிழர் பண்பாட்
ஒருவனுக்கு ஒருத்தி
அறம் என்பது இருவகையிலே தமிழ் இலக்கியங்களிலும் சமயத்திருநூல்களிலும் பேசப்பட்டுள்ளது. அவையாவன: இல்லறம், துறவறம் எனப்படும். இவையிரண்டும் அறம், பொருள், இன்பம், வீடு என மேலும் நான்காக விபரிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றினை
“ஈதல் அறம் தீவினைவிட்டீட்டல் பொருள் காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதின்பம், பரனை நினைத்து இம்மூன்றும் விட்டது பேரின்ப வீடு!
என நால்வகை வழிகளையும் வாழ்விலே எவ்வாறு ஒருவர் பின்பற்ற வேண்டுமென ஒளவையாரும் விளக்கினார். காதலர் இருவர் கருத்தொருமித்து வாழ்வது இல்லற இன்பம் எனவும் பரமபிதாவாகிய பரமேஸ்வரனை வழிபட்டு பற்றுவிடுதல் பேரின்பமாகிய துறவுநிலை எனவும் இவற்றினை அறியலாம். இவ்விரு அறங்களில், பிரமச்சரியம், கிருகஸ்தம் என்பவற்றை இல்லறம் என்னும் பகுதியிலும், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என்பனவற்றை துறவறம் என்ற பிரிவிலும் அடக்கித் தமிழ் இலக்கிய நூல்கள் விரித்துரைப்பதனையும் காணலாம்.
பிரமச்சரியமாகிய கல்வி கற்கும் பருவம், கிருகஸ்தம் என்னும் இல்லறவாழ்விலே காலூன்றி நிற்பதற்குரிய பயிற்சியையும் மனப்பக்குவத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் பருவமாகும். சரியம் என்பது நடத்தை. ஆகவே பிரமமாகிய பரம்பொருளை அறிந்து ஒழுகி அந்தப் பாதையிலே நடக்கும் பள்ளிக்கூடமாகவே இல்லறநிலையம் அமைய வேண்டும் என்பது தமிழர்களது பண்பாட்டு மரபாக பண்டைக் காலம் தொட்டு இருந்து வருகின்றது. மரபு, நம்பிக்கை சார்ந்தது; அறிவு என்பது ஆராய்ச்சி பூர்வமான
38

ட்டில் இல்லறம்
இறுதிவரை உறுதி
கலைவாணி இராமநாதன்
அறிவியல் நோக்குடையது. பொருளிட்டலுக்கு அறிவியலும் - இல்லறத்திலே நிலைபெற்று அருளிட்டலுக்கு மரபு சார்ந்த பண்பாட்டு நம்பிக்கைகளும் தமிழ் மக்கட்கு ஆதிகாலம் முதல் கைகொடுத்து வந்திருக்கின்றன. திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர் என்றும் தாரமும் குருவும் தலைவிதி என்றும் கூறப்பட்டு வரும் முதுமொழிகள் தமிழ் மக்கள் இருவர் இணையும் இல்லறவாழ்வினையும் ‘ஒருவனுக்கொருத்தி’ என்பதிலே அம்மக்கள் கொண்டிருக்கும் அசையாத நம்பிக்கையினையுமே எடுத்துக் காட்டுகின்றன எனலாம்.
தாயும் தந்தையும் தலைவிதி' எனக் கூறாது தாரத்தையும் குருவினையும் கூறியது யாதெனில் வாழ்விலே முக்கால் பகுதியும் இவர்கள் இருவருடனும் தான் பொழுது கழிகிறது. எனவே அவர்களைச் சரியாகத் தேர்ந்தெடு என்பதே இவ் அறிவுரையாகும். குழந்தைப் பருவம் தவிர்ந்த கல்விபயிலும் பருவம் ஆசிரியர்களுடனும்-கல்வி முடிந்து குடும்பவாழ்வை மேற்கொள்ளும் நிலையிலே கணவன் மனைவியாகவுமே வாழ்வு அமைகிறது. குறைந்தது இருபது வருடங்கட்குக் குறையாது பெற்றோர்களுடன் வாழ்ந்த ஒரு பெண்ணும் ஆணும் திடீரென ஒரு நாள் பெரியோர் வார்த்தையிலே நம்பிக்கை வைத்து தம்பதிகளாகி தம்மை ஒருவர்க்கொருவர் அர்ப்பணித்து வாழ முன்வருகின்றனர் எனில், அது வெறும் ஆண் பெண் கவர்ச்சி மட்டுமல்ல; ஆழமான நம்பிக்கையுடன் இணைந்த அன்பிலே கட்டுப்பட்டிருக்கச் சம்மதித்தலே எனலாம். இத்தகைய திருமணங்கள் ஐம்பது வருடங்கட்கும் மேலாக நிலைத்திருக்கின்றமையினைக் காணும்போது 'ஒருவனுக்கொருத்தி' என்ற தமிழ்ப் பண்பாட்டுப்பாரம்பரியத்தின் பெருமை என்றே இதனைப் போற்றலாம்.

Page 43
சங்ககாலமுதலே வடநாட்டுப் பண்பாடும் தென்னாட்டுப் பண்பாடும் கலந்தே வளரவேண்டிய சூழலால் இருசாராராலும் எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் அனைத்திலுமே மொழிபெயர்ப்புக்களும், தழுவல்களும், மூலநூலாக்கங்களுமாகச் சேர்ந்து கலந்து கொண்டன. நாளடைவிலே தமிழ்ப்பண்பாடும் வடநாட்டுப் பண்பாடும் இணைந்து இந்துப் பண்பாடாக மலர்ச்சி பெற்றன. உதாரணமாக, இந்தியாவில் மட்டுமல்ல ஈழத்தின் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் சமூகத்தை எடுத்துக் கொண்டாலும் இந்து தர்மத்தைத் தழுவி வாழும் மக்கள் மட்டுமல்ல; கிறிஸ்தவ, இஸ்லாமியத் தமிழ் மக்களுட்பட இனத்தால், மதத்தால், மொழியால் வேறுபட்டாலும் கூட, அவர்கள் தம் உணவுவகை, நடை உடை பாவனைகளிலுங் கூட தமிழ்ப்பண்பாடே மேலோங்கிக் காணப்படுவதை அனைவரும் அறிவர். இந்திய உபகண்டம் முழுவதையும் எடுத்துக் கொண்டாலும் சகல பெண்மக்களும் தாய்மார்களும் இன்றும் சேலை அணிவதனை தமது பாரம்பரியப் பண்பாடாகப் பின்பற்றி வருவதனை எந்த மாநில மொழித் திரைப்படங்களினூடாகவும் காணமுடியும். நவீன நாகரிகப் பாணியிலே சுரிதார், பஞ்சாபி, நீளமான கவுண்கள் போன்ற உடையமைப்புக்கள் இளம் சந்ததியினரிடையே செல்வாக்குப் பெற்றாலும், உரியநேரத்திலே பூப்புனிதச் சடங்குகளிலே திருமணங்களிலே திருவிழாக்களிலே சேலையே அணியும் மரபு இன்றளவும் பேணப்பட்டு வருவதானது தமிழ்ப்பண்பாட்டின் ஆழமான செல்வாக்கின் விளைவே எனலாம்.
சமீபகாலங்களில் ஐரோப்பிய சமூகத்தைச் சேர்ந்த பலபெண்கள், ஆண்கள் தென்னாட்டிலே பல இடங்கட்கும் தமிழகத்திற்கும் வந்து மணம்புரிந்தும், தனியாகவும் ஈழம் போன்ற நாடுகட்கு வந்து செல்லும் போதெல்லாம் தமிழ்ப் பண்பாட்டைப் பெரிதும் விரும்பி சேலைகட்டி, நகைகள் அணிந்து குங்குமப்பொட்டு வைத்து பாராட்டிச் செல்வதை தமிழக சஞ்சிகைகள் வாயிலாகவும் அறிகிறோம். ஆண்ால் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்ற சில தமிழ்ப் பெண்கள் இயல்புக்கு மாறாக, நடை உடை பாவனைகளில் மேலைநாட்டுப் பண்புகளைத் தழுவி வருவது தமிழ்ப் பண்பாட்டு வளர்ச்சிக்கு உகந்ததன்று. இடம்பெயர்ந்தாலும் பண்பாட்டை மறவாது பேணி நடப்பதுதான் தமிழ் மக்கட்கு அழகு என்பதனை பல தமிழ்ப் பெற்றோர்களே மறந்துபோயிருப்பது பலரின் விமர்சனத்திற்குரியதாகவும் காணப்படுகின்றது. ஐரோப்பிய நாடுகட்குப் போன

மறுவாரமே தமிழையே மறந்து போனோம் என்று கூறும் நாகரிகம் வளர்ந்து வருவது பற்றியும் இங்கு பலரும் முணுமுணுப்பது காதில் விழுகின்றது. பண்பாட்டுப் பிரியர்கட்கு இதனை ஏற்பது கஷ்டமான காரியம் தான். நல்லவேளை, பெற்ற தாயையும் பிறந்த நாட்டையும் கட்டிய கணவனையும் மறந்து போனோம் என்று சொல்லாதவரை தமிழ்ப்பண்பாடு தழைத்து வளரும் என
ਵੰbறுதலடையலாம்.
இவற்றிற்கெல்லாம் தமிழ்ப்பண்பாட்டினதும் இல்லறவாழ்வினதும் ஆழமான அர்த்தங்களைப் பற்றி போதிய விழிப்புணர்வு தமிழ் மக்களிடையே அருகிவருவது ஒரு காரணமாகலாம். பண்டைத் தமிழ் இலக்கியங்களில் இருந்து ஒரு விடயத்தை மாத்திரம் இங்கு எடுத்துக் கூறுவது பொருத்தமானது.
சங்க கால நூல்களில் காலத்தால் முற்பட்ட தமிழ் நூலான தொல்காப்பியம் தமிழ்ப் பெண்களின் சிறப்பியல்புகளை பின்வருமாறு வகுத்துள்ளது. "
"செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பாலன”
என்று கூறுவதை நோக்கின் பண்பாட்டைப் பேணுவதில் ஆண்களைவிடப் பெண்களின் பங்கு அதிகம் என்பது புலப்படுகின்றது. இதே கருத்தானது பிற்காலத்தில்,
நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் திமிர்ந்த ஞானச் செருக்கும் உள்ளதால்
செம்மைமாதர் திறம்புவதில்லை. ”
எனப் பாரதியாரும் கல்வி அறிவு சான்ற மாதர்கள் ஒருபோதும் தம்இயல்பினின்றும் திரிவதில்லை எனக் கூறியதை இங்கு ஒப்பிடலாம். அறியாமையினை அகற்றும் கல்வி அறிவில் பெண்களும் சங்ககாலமுதல் சிறந்து விளங்கினர். புராண யுகத்திலே புரவியில் செல்வது வேகமென்றால் - அணுயுகத்திலே விமானத்தில் செல்லுதல் வேகமாகும். பெண்களைக் கட்டுப்படுத்தி அவர்களை வீட்டிற்குள் பூட்டிவைத்து ஏட்டைத் தொடவும் தடை விதித்தது இடைக்கால சமுதாயம். ஆனால் ஒளவையும் வெள்ளிவீதியும், வெண்ணிக்குயத்தியும், நன்முல்லை என்ற பெண்பாலார்களும் நல்லிசைப் புலமைபெற்று நானிலம் போற்ற வாழ்ந்தது இடைக்காலத்திற்கு முற்பட்ட சங்ககாலமாகும். அன்று பெண்கள் முன்னேற்றம்
39

Page 44
பெரும் அணையைத் தாண்டி வரவேண்டியிருந்தது. இன்று பெண்களின் உயர்வு உயிரோட்டமுள்ள பேராறுபோலத் தடையின்றி ஓடிவந்து அகிலத்தை வாழ்விக்கின்றது. ஆதலால் நற்பண்புமிக்க சான்றோர்கள் இன்று தமிழ்ச் சமுதாயத்தில் விரும்புவதெல்லாம் பெண்ணும் ஆணும் ஒருவர்க்கொருவர் ஒத்துழைத்து ஆதரவாக அன்பாக நல்ல கணவன் மனைவியாக - பெற்றோராகத் தமிழ் பண்பாட்டைப் பேணி விளங்க வேண்டும் என்பதேயாகும்.
சங்கச் சான்றோர் வாழ்க்கையினை அகம் என்றும் புறமென்றும் இரண்டாக வகுத்தனர்.ஒருவனும் ஒருத்தியும் தமக்குள் காதல் கொண்டு இன்புறும் ஒழுக்கம் அகத்திணை எனப்பட்டது. இதற்கு ஒத்துழைக்கின்ற வாழ்வின் உயர்வுக்கும் தொழிலுக்கும் ஆதரவாக உள்ள புறத்தியல் கூறுகள் யாவும் புறத்திணை' எனப்பட்டது. இவ் இரண்டின் அடிப்படையிலேயே சங்க இலக்கியமும் மலர்ந்தது. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து திணைகளின் அடிப்படையிலேயே 'அன்பினைந்திண்ை' என அகவாழ்வு போற்றப்பட்டது. இவ்வாறான அகத்திணைக் காதல் வாழ்வும் இரண்டு வகைப்படும். ஊரறியாது வயது வந்த ஆணும் பெண்ணும் சேர்ந்து இன்புறுவது களவொழுக்கம் எனவும்; தமரறிய - ஊரறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் வாழ்வு கற்பொழுக்கம் எனவும் கூறப்பட்டது.
"கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரிமரயின் கிழவன் கிழத்தியை கொடைகுரிமரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”
என்றார் தொல்காப்பியர். எனவே களவுமணம் கற்புமணமாக முடியவேண்டும் என்பதே அக்காலச் சான்றோர் நோக்கமாகும். இதனால் காதல் வாழ்வினைக் கற்பு மணத்தினால் பெற்றோர் அங்கீகரிக்கும் முறையும் வழக்கில் இருந்தமை புலப்படும். மேலும் வயதுவந்த ஆணும் பெண்ணும் தமக்குத் தாமே உறவு கொள்ளுதலைச் சமூகம் பழித்துத் தூற்றியதற்கான சான்றுகள் பலவும் சங்க இலக்கியங்களிலே காணப்படுகின்றன. அதனால் பெற்றோர்க்குத் தெரியாது காதலில் ஈடுபட்டவர்கள் உடன்போக்கில் செல்வதும், இப்படி நடக்குமென்றால் மணம் செய்துவைத்திருக்கலாம் எனப் பெற்றோர் புலம்புவதும், காதல் நிறைவேறாத தலைவன் மடலேறி உயிர்விடத் துணிவதும் கூட அக்கால இலக்கியக்
40

குறிப்புக்களில் இடம்பெற்றுள்ளன. இச் செய்திகளால் பொருந்தாக் காதலுக்கும், பெருந்திணைக் காமத்திற்கும் தமிழ்ச் சமூகத்தில் பெரும் எதிர்ப்பிருந்ததையும் அறியலாம். எனவே சங்காலத்தில் காதல் திருமணம் தான் வழக்கு என்ற மயக்கத்திற்கு இடமில்லை. பெற்றோர் முடித்து வைக்கும் திருமணங்களே பெருவழக்காகவும் காதல் திருமணங்கள் சிறுவழக்காகவும் நடைபெற்றன என்பதனை காணமுடியும். எனினும் சங்கத்திற்கு சற்று முற்பட்ட காலங்களில் காதல் மணம் சிறந்திருந்தது என்பதனை மறுப்பதற்கில்லை. சிறு சிறு குழுக்களாக வாழ்ந்த மக்கட் கூட்டத்தாரிடையே அவை நிகழ்ந்தன. தாய் வழி, தந்தைவழி இருவகையிலும் உறவில்லாதார் இடையே மணம் நடந்தபோது உலகியல் போலன்றி அவர்கள் புதுவகையான முறையிலே கணவன் மனைவியாயினர் என்பதனையும் அவர்களது காதலின் சிறப்பினையும்.
“யாயும் ஞாயும் யாராகியரோ - எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்-நீயும் யானும் எவ்வழியறிதும் செம்புலப் பெயல்நீர்போல்
As
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”
எனச் சங்கப் பாடல் ஒன்று போற்றுகின்றது.
ஆங்கு மக்கள் வஞ்சனை, ஏமாற்றுகள் இன்றி நம்பிக்கை வழியில் ஒழுங்கான வாழ்வு நடத்தியிருக்கின்றனர். சமூகம் நாகரிகத்தில் முன்னேற்றம் அடைந்தவேளை பொய், வஞ்சனை, ஏமாற்றுதல் போன்ற குணங்களும் கூடவே வளர்ந்ததனாற் போலும், சமூகம் சில வரையறைகளையும், அடக்குமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நடை முறைக்குக் கொண்டு வந்தது. இதனை,
“பொய்யும் வழுவும் தோன்றியபின்னே ஐயர் யாத்தனர் கரணம்”
என்ற தொல்காப்பியச் சூத்திரத்தால் அறியலாம். இங்கு 'ஐயர்' என்பது பிராமணர் அல்ல எனவும் தமையன் அல்லது தந்தையையும், சிலசமயம் மதிப்பிற்கு உரியவர்களையும் பண்டைய மரபு சுட்டியதென்பர். 'ஐய சிறிதென்னை ஊக்கி’ எனக் கலித்தொகையும் பெரியவர்களைக் குறித்துச் சுட்டியது. அகத்திணையில் தமிழர் திருமணம் பற்றி இரண்டு செய்யுட்கள் இடம் பெற்றுள்ளன."

Page 45
கற்பினின் வழா அநற்பல உதவி பெற்றோர் பெட்கும் பிணையாக”
எனத் திருமணவாழ்த்து அமைந்துள்ளமையினை நோக்குமிடத்துமணமக்கள் இருவருக்கும் கற்பின் திறம் வலியுறுத்தப்படுவதை உணரலாம். இச் சடங்குகளிலே அந்தணர் பற்றியோ அம்மி மிதித்தல், தீவலம் செய்தல். அருந்ததி காட்டல் போன்ற குறிப்புகளும் இடம்பெறவில்லை. ஆதலால் இவையாவும் சடங்குக் கொள்கை வளர்ச்சியில் காலப்போக்கிலே ஏற்பட்ட மாற்றம் எனவும் சிலர் கருதுவர்.
கணவனை இழந்த பெண்கள் கூந்தலைக் களைந்தனர், பூவணி நீக்கினர், வளையல் துறந்தனர் எனக் கூறுவதன்றி, தாலி நீக்கினர் என்பதாக எவ்விடத்தும் செய்திகள் கிடைத்தில. இத்தகைய செயல்கள் கூட கணவரிடத்து அன்புமீதுTரப் பெற்ற பெண்கள் தாமாகக் களைந்தனரே தவிர பிறபெண்களாலோ சுற்றத்தவராலோ வலிந்து களைவிக்கப்பட்டதாகவும் சங்கநூல்களில் குறிப்புகள் இல்லை. எனவே கைம்பெண் நோன்பு, பால்யவிவாகம், உடன்கட்டை ஏற்றுதல் பற்றிய தகவல்களும் ஆங்கு காணப்படவில்லை. மேற்குறிப்பிட்ட கொடுமைகள் யாவும் இடைக்காலத்தில் பெண்கள் மீது மரபியல்' என்ற பெயரிலே திணிக்கப்பட்ட கொடுமைகளாகவே
கூறலாம். இச்செயல்கள் ஒரு மனைவியின் சுயவிருப்பிலும், அன்பிலும், பக்தியிலும் தங்கியிருக்கின்றனவேயன்றி பிறரால்
திணிக்கப்படுவதானது பேரதிர்ச்சி நிறைந்த துன்பமாகும். இத்தகைய அடக்குமுறைகளே பிற்காலம் பெண்களைச் சுதந்திர வாழ்விற்காகப் போராடத்தூண்டின என்றால் தவறில்லை.
சங்கச் செய்திகள் பலவற்றாலும் ஒருவனுக்கொருத்தி என்ற உறவே பல இடங்களில் வேரூன்றிக் காட்டப்பட்டுள்ளது. தம்பதியரது நீண்டகால இல்லறம் பற்றியும் நிறையச் செய்திகள் காணக்கிடக்கின்றன. இல்லறம் என்பது வெறும் உடற்காமம் அல்ல - அது நீண்டகாலம் நிலைத்து நிற்பதற்கான மனஉறுதி, அன்பு கற்பொழுக்கம் சார்ந்தது என்பதில் தமிழ்மக்கள் அசையாத உறுதிகொண்டிருந்தனர். கணவன், மனைவி உறவு திடீரென்று ஏற்படுவதல்ல; பல பிறவிகளிலும் தொடர்ந்து வருவது. ஊழின் வலிமையால் மீண்டும் மீண்டும் அத்தகைய தம்பதியர் கூடுவர்.

அத்தகைய காதலன்பு கடலைவிடப்பெரிது என்பதனை,
“சாதல் அஞ்சேன் அஞ்சுவன் காதல் பிறப்பு பிறிதாகுவதாயின் மறுக்கும் என்கொல் என் காதலன் எனவே?
என மனைவி தன் கணவனிடத்து கூறுவது இதற்கு சிறந்த உதாரணமாகும். மனைவிக்கு வயதானபோது கணவன் அவளைக் காப்பாற்ற வேண்டும் என நற்றிணை நூலில் ஒரு புலவர் அறிவுறுத்துகிறார்.
கணவன் தொழிலிற்காகப் பிரியுமிடத்து மனைவியை உடன் வருவது துன்பம் எனத் தடுப்பதும் மனைவியோ; அன்புறச் குழாதே ஆற்றிடை நும்மொடு துன்பமும் துணையாக நாடின் அதுவல்லது இன்பமும் உண்டோ எனக்கு” " எனப் புலம்புவது தம்பதியரின் கருத்தொருமித்த காதலன்பை வெளிப்படுத்தும் இடங்களில் ஒன்றாகும். சீதையும் நின்பிரிவினும் சுடுமோ பெரும்காடு' என இராமருக்கு கூறி உடன் வனம் சென்றதை கம்பரும் அழகுற விளக்குவர். அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என இல்லறத்தின் மாண்பினை வள்ளுவரும் எடுத்துக் காட்டினார். இல்லறத்திலே விருந்தோம்பல் ஒரு தனியறமாக விளங்கியது. ‘தென்புலத்தார், தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஓம்பல் தலை’ என்ற திருக்குறளின் கருத்து சிலப்பதிகாரத்திலும் கம்பராமாயணத்திலும் வேரோடிப் Ulis 5) காணப்பட்டது. துறவோர்கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்தேன்’ எனக் கண்ணகி புலம்புவதனை சிலம்பும், அருந்தும் மெல்ல டகுயாரிட அருந்தும் விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும். 'என இராமனைப் பிரிந்த சீதை துன்புறுவதை கம்பராமாயணமும் இதனை விளக்குவதிலிருந்து இல்லறத்தின் மாண்பு புலப்படும்.
இங்ங்ணம் பண்டைத் தமிழ் மக்கள் குடும்ப வாழ்வு-இல்லறம் பற்றியும் மிக உயர்ந்த கொள்கைகளைக் கொண்டிருந்தனர். அவர்கட்கு அறம் வாழ்க்கையின் ஒரு பகுதியல்ல - வாழ்க்கை முழுவதுமே அறமெனப் போற்றப்பட்டது. துறவு வாழ்க்கைக்கு அவர்கள் அதிக முக்கியத்துவமளிக்கவில்லை. மாறாக, சிறப்பான இல்லறம் பேணி காதல் அன்புடன் பிள்ளைகளுடன் இணைந்து அறம் புரிந்து சுற்றம் பயிலுதலை சிறந்ததென வகுத்தனர். வள்ளுவமும்
41

Page 46
இதனையே உணர்த்தியது. மக்கள் உள்ளம் பக்குவப்பட்டு மனம்விரிந்து தன் மனைவி, தன்பிள்ளை, தன் சுற்றம் என்ற மனநிலைகளைக் கடந்து அனைத்து உயிர்கட்கும் அன்பு செய்யும் நிலையடைவதே வாழ்வின் நோக்கமெனக் கொண்டனர். இத்தகைய மனப்பக்குவத்தைக் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாகவே இல்லற வாழ்வினைத் தமிழ் மக்களின் மூதாதையர் வகுத்துக் கொடுத்தனர்.
காதலும் கற்பும் உயர்ந்ததெனக் கொண்ட தொல்லோர் ஆண் பெண்களது ஒழுக்கமே நீடித்த இல்லறத்திற்கும் நிலையான அன்பிற்கும் பாலமாக அமைத்தனர். ‘ஒருவனுக்கொருத்தி என்ற உயர்ந்த லட்சியத்திலே நினைத்த வாழ்க்கைத் துணை கிடைக்காதவிடத்து மடலேறி உயிர்விடும்தன்மையினை பழந்தமிழ் நூல்கள் விளக்கின. கற்பொழுக்கமே கணவன் மனைவியரை நிரந்தரமாகப் பிணைக்கும் அன்புச் சங்கிலியாக அமைந்தது.
பெண்ணின் பெருந்தக்கயாவுள' - கற்பெனும்
திண்மையுண்டாகப் பெறின்’
எனக் கற்பின் திறமும் - “கற்பெனப்படுவது சொற்திறம்பாமை' எனவும் வலியுறுத்தப்பட்டது. வாக்குத் தவறாமையும் - பெண் தன்னைத் தான் காத்துக் கொள்வதுமே கற்பெனப் போற்றினர். கணவன்-மனைவியாக, பதிபத்தினியாக அவையோர் சாட்சியாகச் சத்தியம் செய்து தம்பதியானவர்கள் அந்த வாக்குத் தத்துவத்தை இறுதிவரை இருவருமே காப்பாற்றியாக வேண்டும் என்றே வலியுறுத்தப்பட்டது.
இடைக்கால சமூக வளர்ச்சியில் பெண்கள் வாழ்விலே குழப்பநிலை ஏற்பட்டது. விதவைகள் துன்புறுத்தப்பட்டமை, மறுமணம் மறுக்கப்பட்டமை, பால்யவிவாகத்தில் 56T66)6 இழந்தால் மறுவாழ்வளிக்க மறுத்தமை, பெண்கல்வி நிராகரிக்கப்பட்டமை, தொழில் வாய்ப்புக்களில் பின் தள்ளப்பட்டமை போன்ற பிரச்சினைகள் தலைதூக்கின. மேல்நாட்டார் வருகையும் ஆங்கிலக் கல்வி வளர்ச்சியும் ஒர் புதிய பார்வையை தமிழ் சமூகத்திலும் ஏற்படுத்தின. பாரத நாட்டிலே காணப்பட்ட இக்கொடுமைகட்கு சம்பிரதாயம், மரபு எனப் பெயரிடப்பட்டது. 18ம்
42

நூற்றாண்டிலே முதன் முதலாக சேர். ராஜாராம் மோகன்ராய் அவர்களின் பெருமுயற்சியினால் 1829ல் மறுவிவாகச் சட்டமும், 1910ல் உடன் கட்டை ஏறத்தடை செய்யும் சட்டமும் அரசினால் அங்கீகரிக்கப்பட்டு பெண்கட்கு ஒருபக்கச் சார்பாக இழைக்கப்பட்ட தீமைகட்கு ஒரளவு பரிகாரம் காணப்பட்டது.
நாடுகளிடையே விடுதலைவேண்டும் தேசியவாதம் வளர்ச்சியடையத் தொடங்கியதும் - நாடும் தாய் - பெண்ணும் தாய் எனவே தாய்மையின் விடுதலை தாய்நாட்டு விடுதலை என்ற ஒரு கோஷமாகிறது. வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்’ எனப் பாரதி பெண் விடுதலையினை முன்வைத்துப் பாடினார். கல்விஞானமுள்ள பெண்கள் ஒழுக்கமேன்மை
அடைந்தவர்களாயிருக்க வேண்டும் என்பதுடன்
“கற்பென்று சொல்ல வந்தால்-இருபாலார்க்கும் அதனைப் பொதுவில் வைப்போம்”
என ஒழுக்கசமத்துவம் ஆண் பெண் இருவருக்கும் அவசியம் என்பனையும் பாரதியார் எடுத்துக் காட்டினார். இவ்வாறிருக்க‘சற்றே ஏறுமாறாக இருப்பாளேயாமாகில் கூறாமல் சன்னியாசம் கொள்' என ஆணுக்கு அறிவுரை வழங்கும் ஒளவையாரும், “கொழுநற் தொழுதெழுவாள் பெய் எனப் பெய்யும் மழை" எனக்கூறும் வள்ளுவரும் தகுதியில்லாத கணவன்மாருக்கு ஏன் அறிவுரை வழங்க முன்வரவில்லை என்ற கேள்வி ஒன்று தற்கால தமிழ்ச்சமுதாயத்தினால் எழுப்பப்படுகின்றது. கல்லானாலும் கணவன்’ என்ற மூதாதையர் கல்லானாலும் மனைவி' எனவும் ஏன் சமநீதி புகட்டப் பின்தங்கிவிட்டனர் என்பதும் சிந்தனைக்குரியவை,
"ஆணுக்கொரு நீதி பெண்ணுக்கொரு நீதி’ என இவ்வாறிருப்பது நல்ல தமிழர் இல்லற வாழ்விற்கு இடையூறானவையாகும். கணவனாயினும் மனைவியாயினும் தவறு, குற்றம் என்பன இருவருக்கும் பொது என்ற நிலையில் முன்னேற்றம் நிரந்தரமாக ஏற்படும்போதுதான் பண்டைய தமிழர் கண்ட பண்பாட்டு மலர்ச்சியில் இனிய இல்லறமும் - ஒருவனுக்கொருத்தி என்ற உயர் இலட்சிய வாழ்க்கையும் நீடித்து நிலைத்து நிற்க முடியும்.

Page 47
அடிக்குற
நற்றிணை 4, 119, அகநானூறு 7, குறுந்தெ
அகம் :383.
அகம் 315.
குறுந்தொகை 17
தட்சணாமூர்த்தி, அ, தமிழா நாகரிகமும் பண்
தஞ்சாவூர், 1980. பக், 45-47.
குறுந்தொகை : 40.
புறம்: 297 . . . தட்சணாமூர்த்தி, அ. தமிழர் நா
அகம், 86, 136.
பிள்ளை கே.கே, தமிழக வரலாறும் மக்கள் பண்
குறுந்தொகை, 49.
கலித்தொகை. 6
உசாத்துணை
இராசமாணிக்கனார், டாக்டர் இரா, தமிழர் நா
பிள்ளை, கே.கே, தமிழக வரலாறும் மக்கள் பன் சாமி சிதம்பரனார், எட்டுத்தொகையும் தமிழர் ட
வித்தியானந்தன், சு, டாக்டர், தமிழர் சால்பு.
தட்சணாமூர்த்தி, அ. தமிழர் நாகரிகமும் பண்ட
கைலாசபதி, க, பண்டைத் தமிழர் வாழ்வும் வழி
Raymond Firth, Elementsof Social orga
Ananda Coomarasmy, Dr., Dance of Sh

லிப்புகள்
ாகை : 29,
பாடும், வெற்றிச்செல்வி வெளியீடு,
கரிகமும் பண்பாடும்,பக்.49-50
ாபாடும், பக்.131-132.
ா நூல்கள்
கரிகமும் பண்பாடும்.
TUITGh.
ண்பாடும்.
ாடும்.
பாடும்.
nization.
V.
43

Page 48
மார்க்சிச கலை -
குறிப்புரை
மார்க்சிச விமர்சகர்களும், மெய்யியலாளர்களும் கலை இலக்கியங்கள்பற்றிய உருவவாதக்கருத்துக்களால் ஒருபொழுதும் கவரப்படவில்லை. கலை இலக்கியங்களின் சமூகவியல் பற்றியே இவர்கள் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்கள். சமூகம்,அரசியல்,பொருளாதாரம், வரலாறு என்பவற்றுடன் தொடர்புபடுத்தி கலை பற்றி ஆராய்ந்தார்கள். கலைக்கும் சமூக உறவுகளுக்குமிடையிலான தொடர்புகளே மார்க்கிச விமர்சகர்களது அக்கறைக்குள்ளானது. சமூக இலட்சியத்திற்கான பங்களிப்பு, வரலாற்று ரீதியான பங்களிப்பு என்பவற்றை மனதிற்கொண்டே கலை இலக்கியங்கள் மதிப்பிடப்பட்டன.
கலை - அழகியல் பற்றிய விரிவான ஆய்வுகளெதுவும் கார்ல் மார்க்கிசினாலோ அல்லது ஏங்கல்சினாலோ மேற்கொள்ளப்படவில்லை. அவர்களது ஆக்கங்களில் குறிப்பாக 1844ல் கார்ல் மார்க்சினால் எழுதப்பட்ட “பொருளாதார மெய்யியற் கையெழுத்துப் பிரதிகள்’ என்ற நூலில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை ஆதாரமாகக் கொண்டு பிற்கால மார்க்சிச சிந்தனையாளர்கள் கலை-இலக்கிய ஆய்வுகள் பலவற்றைச் செய்துள்ளனர். பொருளாதார மெய்யியற் கையெழுத்துப்பிரதியில் காணப்படும் கலைஅழகியற் கருத்துக்கள் வருமாறு:
1. நிஜ உலகுடன் மனிதர் கொண்ட அழகியல்
நிலைப்பட்ட உறவு ஓர் சமூக உறவாகும்.
2. கலைஞன் தன் அகத்தூண்டல் காரணமாக, தன்
உழைப்பினால், ஸ்தூலமான புலப்படுபொருளாய், கலாபூர்வமாக நிஜஉலகைத்

இலக்கி நோக்கு
சோ. கிருஷ்ணராஜா
தன்வயப்படுத்திய பொருளாய் கலையை உற்பத்தி செய்கிறான்.
3. கலையுடன் மனிதன் கொண்ட தொடர்பு சமூகச்
சார்பான குணாதிசயமுடையது.
4. கலைகள் "அழகின்” விதிமுறைகளிற்கேற்பக்
கலைஞரால் படைக்கப்படுகின்றன.
5. கலையானது முதலாளித்துவ உற்பத்தி முறைகளின் ஆளுகைக்குட்படும் பொழுது தன்னியல்பிலிருந்து அந்நியப்பட்டு விற்பனைப் பண்டமாகிறது.
கால் மார்க்சின்மேற்குறித்த கருத்துக்களிலிருந்து "அழகு" மனிதரால் உருவாக்கப்பட்ட சமூகச் சார்புடைய எண்ணக்கருவென்பதும்; அழகியலுணர்வு மனிதனின் இயல்பானதும், உள்ளார்ந்தமான குணாதிசயமல்ல வென்பதும் அது மனிதரின் வாழ்நிலையனுபவங்களினூடாக சமூகரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் வளர்த்தெடுக்கப்படுகிற தென்பதுவும் பெறப்படும்
இது தொடர்பாக, கிறிஸ்தோபர் கோட்வெல் (Cristopher Caudwell) 6T 6TUITf6óT guiu 6856T குறிப்பிடத்தக்கன. சமூகவியலடிப்படையில் அழகு எனும் எண்ணக்கருவை வரையறுக்க முயன்ற கோட்வெல் அதனைச் சமூகத் தொடர்புடையதும், மனித உணர்ச்சி சார்ந்ததுமான எண்ணக்கருவாக வரையறுக்கிறார். வரலாற்று ரீதியான நோக்கில் காலத்திற்குக் காலம் அழகு பற்றிய கருத்தோட்டம் மாறிமாறி வந்திருக்கிறது. எந்தவொரு சகாப்தத்திலும் வாழ்ந்த மக்கள் தம் முனோர்கள் ‘அழகியதென’ எடுத்துக் காட்டிய வற்றுடன் மட்டும் திருப்தியடையவில்லை. மரபிலிருந்து

Page 49
மாறுபட்டு "அழகியதென”புதியவற்றை உருவாக்கினர்.
அழகு பற்றிய கருத்தோட்டத்தில் பழையதுடன் புதியனவாகவும் பலவற்றைச் சேர்த்துக் கொண்டனர்.
மனிதன் தன் தோற்றத்தில் மாறாத பொழுதும் அவனது கலையின் வண்ணம், அவனது கவிதை, அவனால் கட்டப்பட்டவை அனைத்தும் மாறிமாறி வந்துள்ளன. வரலாற்றின் எந்தக் காலகட்டத்திலும் அழகு பற்றிய அவனது கருத்து மாற்றமுறாதுநிலையாக இருந்ததில்லையென கோட்வெல் குறிப்பிடுகிறார். இவரது அபிப்பிராயப்படி கலை உணர்ச்சிக்கூறு, அறிக்கைக்கூறு என இரு கூறுகளை உள்ளடக்கியது. முதலாளித்துவ சமுதாயம் உணர்ச்சியம்சத்தை மட்டுமே கலையின் இலக்கணமாக முதன்மைப்படுத்தி அதனை விற்பனைப் பண்டமாக்கிற்று. இதன்பேறாக, கலையின் அறிக்கைக்கூறும் அதன் சமுதாயத் தொடர்பும் புறக்கணிக்கப்பட்டு மனிதனின் இயல்பூக்கத்தை மட்டுமே திருப்திப்படுத்துமொன்றாக முதலாளித்துவ சமுதாயம் கலையை மாற்றியுள்ளது. நாவல்கள், திரைப்படங்கள் ஆகியவை மட்டுமல்ல இசைகூட, முதலாளித்துவ சமுதாயத்தில் கலையின் பெயரால் தரப்படும் வணிக நிலைப்பட்ட உற்பத்திப் பண்டங்களேயென கோட்வெல் வாதிடுகிறார்.
ஒரு குறிப்பிட்ட வகையான வரலாற்று நிர்ப்பந்தமே குறிப்பிட்ட வகையான கலையைத் தோற்றுவிக்கிறது. எனவே கலை பற்றிய விளக்கத்திற்கு அக்கலையின் தோற்றத்திற்கான வரலாற்று நிர்ப்பந்தங்கள் பற்றிய அறிவு இன்றியமையாதது. குறிப்பாக, கலை பிரதிபலிக்கும் கருத்துநிலை அல்லது அது முன்னெடுக்கும் கருத்துநிலை என்பவற்றினடி யாகவே கலைப்படைப்புக்கள் ஆராயப்பட வேண்டும்.
சமூகநலனும், நகரக்குடியரசின் தேவைகளுமே பண்டைய கிரேக்கத்தில் கலைகளைத் தோற்றுவித்தன. தனிப்பட்டவர்களின் தேவைகருதியோ, வருவாய் கருதியோ கலையாக்கத்திலிடுபடும் தேவை அக்காலக் கலைஞர்களுக் கிருக்க வில்லை. ஆனால் மறுமலர்ச்சிக்காலத்திலோ நிலைமை முற்றிலும் மாறி விட்டது. அக்கால கலையை அதாவது மறுமலர்ச்சிக் கால கலையை அக்கால சமூக நிறுவனமான ("கில்டு") தொழிற்கழகங்கள் என்பதுடன் தொடர்புறுத்தாது 8Ffutures விளங்கிக் கொள்ள (plugi.

வர்க்கநிலைப்பட்ட ("கில்டு") என்ற கழகங்களே பூர்வீக முதலாளித்துவத்தை மறுமலர்ச்சிக் காலத்தில் தோற்றுவித்தன. இக்காலத்தில் கலையாக்க முயற்சி, கூட்டு முயற்சி என்பதிலிருந்து விடுபட்டு தனியார் முயற்சியாக மாற்றம் பெற்றது. கூட்டுப்பண்பாட்டு முறைமை தனியார் பண்பாட்டு முறைமையாக மாற்றம் பெற, அம்மாற்றம் இக்காலக் கலையிலும் பிரதிபலித்தது. பூத்திய காலத்தில் இறைவனின் கண்களால் உலகை அணுகிய கலைஞர்கள் இக்காலத்தில் தமது கண்களினூடாக உலகைப் பார்க்கத் தொடங்கினர். மனிதனை மையமாகக் கொண்ட உலகநோக்கு முதன்மை பெறலாயிற்று. கலைப்படைப்புகள் ஒவ்வொன்றும் தனித்தனிக் கலைஞர்களின் ஆக்கங்களாயின. லியனார்டோ டாவின்சி, மைக்கல் ஏஞ்சலோ போன்ற புகழ்பெற்ற ஒவியர்கள் பூர்வீக முதலாளித்துவ சமூகத்தின் படைப்பாளிகளில் குறிப்பிடத்தக்கவர்கள்.
கலைப்படைப்புகளை எவ்வாறு அணுகுதல் வேண்டும்? அதற்குரிய மதிப்பிடுகள் யாவை? என்பனவெல்லாம் நுகர்வோனின் கருத்துநிலைச் சார்பினாலேயே தீர்மானிக்கப்படுகிறதென மார்க்சிச விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இவர்களது அபிப்பிராயப்படி கலைஞனது கருத்துநிலைச்சார்பு அவனது கலையாக்கத்தில் பிரதிபலிக்கிறது.
கலைஞனது கருத்துநிலைச்சார்பு தொடர்பாக பேத்தோவன் (Beethoven) என்ற மேற்கத்திய இசைவாணர் பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை, பேத்தோவன் 19வது இளைஞனாக இருக்கும் பொழுது பிரெஞ்சுப்புரட்சி நிகழ்ந்தது. மனித உரிமைகள், எல்லா ஆண்களுக்குமான வாக்குரிமை, திருச்சபையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுச் சுயாதீனமாக இயங்குதல் என்பன போன்ற பிரகடனங்களினடிப்படையில் புதிய அரசு செயற்பட்டது. பிரான்சில் காணப்பட்ட மக்கள் எழுச்சி ஜேர்மனியையும் பாதித்தது. ஜேர்மனிய நாட்டைச் சேர்ந்தவரான பேத்தோவன் பிரான்சின் புதிய குடியரசை வரவேற்று தனது ஆக்கங்களில் ஒன்றான “மூன்றாவது சிம்ஃபனி" (Third Symphony) solu Glps Gum Göu6offices சமர்ப்பணம் செய்திருந்தான். ஆனால் 1804இல் நெப்போலியன் தன்னை சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்தமையால் பின்பு பேத்தோவன் தனது சமர்ப்பணத்தை “வாபஸ்” பெற்றுக் கொண்டான்.
45

Page 50
புதிய அரசியற் சூழலில் மத்தியதரவர்க்கத்தின் பிரதிநிதியாகவே பேத்தோவன் செயற்பட்டான். இதுவரைகாலமும் அரசவையிலும் பிரபுக்களின் இல்லங்களிலும் நடத்தப்பட்டு, அவர்களின் ரசனைக்குரியதாயிருந்த மேற்கத்திய சாஸ்திரிய சங்கீதம் பேத்தோவனாலும் அவனது ஆதரவாளர்களாலும் மக்கள் ரசனைக்குரியதாக மாற்றப்பட்டது. மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவுடன் அவரது இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தனது காலத்தின் சமூக முரண்பாடுகளைப் புரிந்து கொண்டு, ஜனநாயக சமூக அரசியலில் நம்பிக்கையுடையவராக பேத்தோவன் வாழ்ந்தாரென சிட்னி பின்கில்ஸ்ரேய்ன் (Sidney Finkelstein) குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு கால சமூக பொளாதாரக் கட்டமைவும் எவ்வாறு அவ்வக் காலக் கலையிலும், கலைஞர்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறதென்பதை மார்க்சிச விமர்சகர்கள் அவ்வக்காலக் கலை வரலாற்றிலிருந்து தெளிவுபடுத்தின்ர். இது தொடர்பாக 19 நூற்றாண்டுக் கலைவரலாறு பற்றிய மக் ரபேல் (Max Rapheal) செய்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கவை.
19ம் நூற்றாண்டில் கட்டுப்பாடிலாச் சந்தைப் பொருளாதாரம் பொருள் உற்பத்தி முறையில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த, அவை சமூக அரசியலரங்கிலும் மாற்றங்களை ஏற்படுத்தலாயின. மரபுவழிக் கலைகள் கீழ் நிலைக்கு இழிந்து செல்ல கட்டுப்பாடில்லாத வர்த்தகம் வழிவகுத்தது. கட்டடக் கலையில் இம்மாற்றம் தெளிவாகப் புலப்பட்டது. பழையகாலப் பாணியிலான கட்டட அமைப்பு முறை இக்காலத் தேவைக்கு முற்றிலும் பயன்படாதவையாகவே மாறிவிட்டது. இரும்பு, சீமெந்து, கண்ணாடி போன்ற புதிய மூலப்பொருட்களைப் பயன்படுத்தும் கட்டடக்கலை முதலாளித்துவப் பொருளாதார செயற்பாடுகளிற்கு இன்றியமையாதிருந்தது. கலையம்சத்துடன் கூடிய பாரிய கட்டங்களும், சுவரோவியங்களும் தமது மகிமையை இழந்தன. “கன்வசில்” வரைதலே பெருவழக்காயிற்று.
இக்காலத்தில் கலையின் கருப்பொருளாய்
கலைஞர்கள் புதிய புதிய விடயங்களைத்
தெரிந்தெடுத்தனர். கிரோக்க, ரோமானிய, மத்தியகாலக்
46

கிறீஸ்தவக் கலைகளில் ஜதீக வரலாற்றுச் சம்பவங்களே பிரதான கருப்பொருளாயிருந்தது. ஆனால் முதலாளித்துவ சமூக அமைப்பில் இத்தெரிவு யதார்த்தவாதத்தையும், புலனின்ப வாதத்தையும் நோக்கி நகரலாயிற்று. மனே (Manet) டிகாஸ் (Degas) போன்ற ஒவியர்கள் மத்தியதர வர்க்கத்தின் சமூக வாழ்க்கையையே தமது ஒவியங்களில் கருப்பொருளாக்கினர். மோனே (Monet)றினோர் (Renior)இயற்கையை முற்றிலும் புதிய முறையில் அணுகினர். றோடின் (Rodin) பிரதிமை வரைதலில் புதியபார்வையென்றைக் காட்டினார். கலையில், குறிப்பாக ஒவியத்திலும் சிற்பத்திலும் தராதர நியமங்கள் புறக்கணிக்கப்பட்டு சார்புநிலை முதன்மை பெறலாயிற்று
இவ்வாறு மார்க்சிச விமரிசனமானது கலை வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களை அவ்வக்காலங்களிற்குரிய சமூக பொருளாதார வரலாற்றடிப்படையில் ஆராய்வதன் மூல்ம் அவ்வக்காலக் கலையின் மெய்யான இயல்புகளையும் அவற்றின் கருத்து நிலைச் சார்பையும் வெளிக்கொண்டுவரவும், அதனூடாக கலைகளைப் புரிந்து கொள்ளவும் முயலுகிறது.மார்க்கிசவிமரிசனத்தையதார்த்தவாதமாகவோ அல்லது சோசலிச சமுதாயத்தின் கலை பற்றிய பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகாணும் ஒர் தத்துவமாகவோ குறுகிப் பார்க்க முயலுவது கலைஇலக்கியம் பற்றிய தவறான கருத்தோட்டத்திற்கு இட்டுச் செல்லும். இது தொடர்பாக லூக்காஸ் (Lucas) பிறெஃக்ட் (Bertolt Brecht) என்பவர்களுக்கிடையிலான கருத்து முரண்பாடுகள் அவதானிக்கத்தக்கது. கலை-இலக்கியத்தின் இன்றியமையாக் குணாதிசயமாக யதார்த்தவாதம் இருத்தல் வேண்டுமெனவும் நிஜ உலகை பிரதிபலிப்பதுடன் சமூக முரண்பாடுகளை அதன் நெருக்கடிகளை, கலைத்துவ ஒழுங்குடன் அவை வெளிக் கொண்டு வருவனவாயிருத்தல் வேண்டும் எனவும் லூக்காஸ் வாதிட்டார். ஆனால் லூக்காசின் யதார்த்தவாதம் பற்றிய விளக்கத்தை பிறெஃக்ட் முற்றாக நிராகரித்தார். கலை இலக்கியங்களின் யதார்த்தவாத உருவக ஒழுங்கமைப்பு என்ற கருத்தாக்கம் நிராகரிக்கப்பட்டது. பால்ஸாக், டால்ஸ்டாய் வகையறா யதார்த்த வாதத்தை கலை இலக்கியங்கள் அனைத்திற்குமான பொதுவடிவமாக அங்கீகரிப்பசை பிறெஃக்ட் நிராகரித்தார். ஒரு குறிப்”

Page 51
காலத்தைச் (19ம் நூற்றாண்டிற்குரிய) சார்ந்த கலைஇலக்கிய வடிவத்தை எல்லாக் காலத்திற்குமுரிய கலைக்கோட்பாடாக அர்த்தப்படுத்தக் கூடாதெனவும் , அவ்வாறு அர்த்தப்படுத்திக் கொள்வது ஒருவகையான உருவவாதமேயாகுமென பிறெக்ட் எச்சரிக்கிறார். மாறா இயல்புடைய, எக்காலத்திற்கும் பொருத்தமான கலை இலக்கிய விதிகளென எதுவுமில்லையென்பது இவரது நிலைப்பாடாகும்.
சோசலிச யதார்த்தவாதம் என்ற கலைஇலக்கியக் கோட்பாடு முன்னைய சோவியத்யூனியனின் எழுத்தாளர் ஒன்றியத்தால் (1932-34) முன்வைக்கப் பட்டதொன்றாகும். 19ம் நூற்றாண்டின் யதார்த்தவாதமும், 1917ல் நடைபெற்ற புரட்சியின் விளைவாகக் கருக்கொண்ட அரசியற் கொள்கையும் இணைக்கப்பட்டு சோசலிச யதார்த்தவாதம் பிறப்பிக்கப்பட்டது. “எழுத்தாளர்கள்” மனித ஆன்மாவைச் சீர்செய்யும் பொறியியலாளர்கள்” என்ற ஸ்டாலினது கூற்று 1934ம் ஆண்டு எழுத்தாளர் மகாநாட்டில் நினைவூட்டப்பட்டு வற்புறுத்தப்பட்டது. மகாநாட்டுத் தலைவரான அந்ரே ஷாடனோவ் இலக்கியம் வர்க்கச் சாப்புடையதே என்றும், வர்க்கச்சார்பில்லாத, அரசியற் சார்பில்லாத இலக்கியமென எதுவுமில்லை என்றும் பிரகடனம் செய்தார். இதிலிருந்தே சோசலிச யதார்த்தவாதம் இலக்கியத்தில் ஓர் அரசியற் கோட்பாடாக உதித்தது.
LS LS LSSS SS SLSLLLLLSLLGLLLLSS SLSLSLS SSS SSSLSSS LSSLSLS S SLSL S LSLSLSLS S S S LSLCLC SGSS SSS SSS SSSCLL
(இந்து சமய கலாசார அலுவல் ஆண்டு நவம்பர் மாதம் 24 ஆம்,
விமர்சனம் இன்றைய போக்குகள்”
இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தி
| கிருஷ்ணராஜா, அவர்களினால் வாசி

ஆனால் கலை-இலக்கிய ஆக்கத்தில் அரசியற் திணிப்பை ஏற்றுக்கொண்டவர்களாக மார்க்சிசத்தின் மூலவர்கள் காணப்படவில்லை. கலை-இலக்கியங்கள் தம் காலத்து சமூகநிலைமைகளை, மனித உணர்ச்சிகளை வெளியிடுவனவென்பதில் அவர்கள் அசையாத நம்பிக்கை கொண்டிருந்தனர். விற்பனைப் u6iot Lom 85 உற்பத்தி செய்யப்படும் பொழுது ஈடுபாட்டுடன் கூடிய ஆக்கத்திறன் அற்றுப்போய் விடுகிறதென மாக்ஸ் குறிப்பிட்டார். மார்கறட் ஹார்க்னஸ் (Margaret Harkners) என்பாரின் நாவல் பற்றிக் கடிதமெழுதிய (1888) ஏங்கல்ஸ் அவரது நாவல் வெளிப்படையான சோசலிச நாவலாக இல்லாதிருப்பதையிட்டுப் பாராட்டினார். வரலாற்று அறிஞராலும் பொருளியலாளனாலும் கணிதவியலாளர்களாலும் தர முடியாத அளவிற்கு சகல பொருளாதார விபரங்களுடன் தன்காலத்துப் பிரெஞ்சு சமூகத்தை தம் கருத்துநிலைச் சார்பிலிருந்து விடுபட்டு பால்ஸாக் தருவதாக ஏங்கல்ஸ் ஒருமுறை குறிப்பிட்டார். “எழுத்தாளர்கள் தாம் விரும்புவதை எழுதலாம், அதற்கு அவர்களிற்கு சுதந்திரமுண்டு. ஆனால் அவர்கள் (எமது) கட்சியின் நிலைப்பாட்டை ஏற்காதவரை கட்சி வெளியீடுகள் தமது ஆக்கங்களை வெளியிட வேண்டுமென எதிர்பார்த்தலாகாது”எனக்கட்சியமைப்பும் கட்சி இலக்கியமும், (1905) என்ற கட்டுரையில் லெனின் குறிப்பிட்டவையையும் இங்கு மனங்கொள்ளுதல் தகும்.
LS S S SLSSSS SSSSSSMSSSS SS SSLSGSSS SS SS SS SSLG SeeS S SMSSSSSSS S SLSS S S ༄༽
கள் திணைக்களம் கடந்த 1995 ஆம் 25ஆம், திகதிகளில் கொழும்பு தில் நடத்திய “தமிழ் இலக்கிய எனும் கருத்தரங்கில் கலாநிதி சோ. க்கப்பட்ட கட்டுரையிது.)
LSLS S SSS S LSLS LS SkSkLSSSLSLS SS LS S S LS SS SS SSLS S أر

Page 52
10.
11.
12.
13.
14.
5.
16.
17.
18.
திணைக்களத்தில் விற்ப
நல்லதோர் வீணை
தி. முத்துக்கிருஷ்ணன் இலக்கியமும் பண்பாடும் டாக்டர். இ. சுந்தரமூர்த்தி பொருள் கோள்
ச. அரங்கராசன் மக்கள் பெயராய்வு
டாக்டர். சு. சக்திவேல். கலித்துறைப் பாட்டியல் வ. உ. சி. வாழ்க்கை வரலாறும் இலக்
அ. சங்கரவல்லி நாயகம் பொன்வால் நரி
பாரதியார் நவீன இலக்கியச் சிந்தனைகள்
பனைவர் ம. மதியழகன் புதுக்கவிதையில் இலக்கிய இயக்க
டாக்டர். இரா. சம்பத். அறிவியல் உருவாக்கத் தமிழ் தமிழியல் ஆய்வு வரலாறு
முனைவர் ம. மதியழகன் தற்கால இந்தியச் சிறுகதைகள்
uTGun 1 அறிவியல் அகராதி பெரியபுராணம் ஒர் ஆய்வு
பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் கோணேசர் கல்வெட்டு இந்துக் கலைக்களஞ்சியம் பகுதி 1,
(பகுதி ஒன்றின் விலை)
கதிரை மலைப்பள்ளு
ஆறுமுகநாவலர் பிரபந்ததிரட்டு
(மேற்படி நூல்களை திணைக்கள வி 9.30 மணியிலிருந்து பிப 300 மண

னைக்குள்ள நூல்கள்
ரூபா. 50.00
ரூபா. 40.00
ரூபா. 68.75
ரூபா. 30.00
ரூபா. 50.00
கியப் பணிகளும் ரூபா. 120.00
ரூபா. 12.50
ரூபா. 87.50
o ரூபா. 150.00
ரூபா. 32.00
ரூபா. 100.00
ரூபா. 125.00
ரூபா. 312.50
ரூபா. 420.00
ரூபா. 60.00 2, 3 ரூபா. 250.00
பிற்பனை நிலையத்தில் காலை, பிவரை பெற்றுக் கொள்ளலாம்)

Page 53


Page 54
ܩ ܠܐ ܼܲ +1ܨܠܸܐ: 5+1 ܠܐܒܐ
PRINTED IT L'EART
 

கொழும்பு தமிழ்ச்சங்கம்
11 ഓട്
II", "IL | |