கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓம்

Page 1


Page 2

அடியார்க்கடியன்
தவத்திரு சிவகுருநாதன் அடிகள்
ஆன்மநேய ஒருமைப்பாட்டு அமைதி உலா நினைவுப் பதிப்பு 2-10-2001
பிரசுரம்
தத்துவ ஞானத் தவச்சாலை ܝ 31/21, டோசன் வீதி, கொழும்பு - 02. தொலைபேசி - 331439

Page 3
நூலின் பெயர்:
ஆக்கியோன்:
பொருள்:
பதிப்புரிமை:
அனுசரணை:
அச்சுப்பதிப்பு:
நூற் குறிப்பு
“ஓம்’
“அடியார்க்கடியன்” தவத்திரு சிவகுருநாதன் அடிகள்
ஆன்மீகம்
தத்துவ ஞானத் தவச்சாலை 31/21, டோசன் வீதி, கொழும்பு - 2.
அகில இலங்கை இந்து மாமன்றம் 91/5, சேர் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை, கொழும்பு - 2.
?
யுனி ஆர்ட்ஸ் தனியார் நிறுவனம் (வ) கொழும்பு - 13. தொலைபேசி - 330195
 
 
 

வெற்றி எல்லாம் திருவருட் சம்மதப்
மு னி னுரை
எமதருமையான மக்களே,
சிவமே பொருளெனத் தேற்றி என்னைச் சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச் சிவமாக்கிக் கொண்ட, பரவெளியில் ஒலியாகி, ஒலியில் ஒளியாகி நிற்கும் சற்குரு சித்திரமுத்தன் அறிவிக்க அறிந்தும், உணர்த்த உணர்ந்தும், தெளிவிக்கத் தெளிந்தும் பெற்ற அனுபூதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள அவனருளால் பணிக்கப்பட்டு 2001ம் ஆண்டு ஜூலை 20ந் திகதி முதல் ஆகஸ்ட் 5ம் திகதிவரை 360 மணி நேர தொடர் "பிரணவ பஞ்சாட்சர” அகண்டன் நாம ஜெபத்தை நடத்திய வேளை கதிர்காம சேத்திரத்தில் நிகழ்ந்த அற்புத நிகழ்வுகளைக் கண்டு, மெய் சிலிர்த்த அடியவர்கள் பிரணவ பஞ்சாட்சரத்தின் மகிமையையும் ஆற்றலையும் தாமும் அறிந்து தெளிதற்கு ஒரு நூல் வடிவில் வெளியிடக் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அடியேன் இப்பணியில் இறங்கியுள்ளேன்.

Page 4
வேதாந்த, சித்தாந்த எல்லைகளைக் கடந்து நிற்கும் நாதாந்த தெளிவில் பெற்ற இக் கருத்துக்கள் உங்களுக்கு மனதில் தெளிவை ஏற்படுத்துமானால் அடியேன் மேற்கொள்ளும் இப்பணி செம்மை பெறும் என்று துணிகிறேன்.
இப்பணிக்கு அனுசரணையாக இருந்து அச்சேற்ற உறுதுணையாக இருந்த அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பணிக் குழுவினர்களுக்கு பிரணவப் பொருளானின் நல்லாசிகள் கிட்ட பிரார்த்திப்பதுடன் அடியேனின் நல்வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கிறேன்.
மிகக் குறுகிய காலத்தில் இதனை அச்சேற்றி திறம்பட அமைத்த திரு விமலேந்திரன் அவர்களுக்கும் அவர் அச்சகம் சார்ந்த அனைவருக்கும் அடியேனின் நல்லாசிகள்.
வாழ்க வையகம், வளர்க நீதி.
அடியார்க்கடியன்

“ஆதி மூல மந்திரம்”
பிரணவம் என்பது, எக்காலத்தும் எவ்வகையிலும் மாற்றமடையாது, எல்லாவற்றிற்கும் ஆதார மூலமாக மாய்தல் (அழிவு) அற்று இருக்கும் பேராற்றல். அதனால் அதனை மாயா(த) சக்தி என்றனர். இது இயல்பாக எல்லாவற்றிலும் நீக்கமறக் கலந்து நின்றாலும் தன்னிலை மாறாது தனித்துவமாக இருப்பது. நாத வடிவானது. சப்தத்தை எழுப்புவதற்கு காரண கருவியான "நா"வை அசையாமலே, இயல்பாக எழும் ஓசையாதலால் இது "மந்திரம்” எனப்பட்டது.
இவ்வொலி பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பே ஒலித்தபடி இருந்ததும், பிரபஞ்சம் உருவாவதற்குக் காரணமாக

Page 5
6 விளங்கியதும் இப் பிரணவம் என்ற காரணத்தால் இதனை மூல மந்திரமாக ஆன்றோர் கொண்டனர்.
இத்தகைய பெருமையும் நுண்மையும் வாய்ந்த இவ்வொலி மனிதனிடத்து அவனது "நா" தம்பித்து அசைவற்று நின்ற போது வெளிப்பட்ட காரணத்தால் இதனை "நாதம்” என்றனர்.
இது மனித உடலின் சிரசாகிய கபாலத்தில் ஒலிப்பதால், அதனை மண்டை ஒட்டின் உருவான "ஒ" என்ற எழுத்தாலும், பிராணன் உள்முகமாய் அடைபட்டு புருவமத்தியில் கும்பகம் ஆவதால் "ம்" என்ற எழுத்தாலும் நம் ஆன்றோர் குறித்தளர்.
சிரசில் புருவமத்தியில், இமைகளின் மத்தியில் (இமையத்தில்) பிராணனாகிய சூரிய சந்திர அக்கினி கலைகள் கும் பிக் கப்படுகிறது. அப்போது ஆத்மசக்தியானது ஜோதியாக பிரகாசிக்கிறது. இதையே சீவனும், சிவனும் உறையுமிடம் என்று திருமூலர் கூறினார். இவ்விடத்தை குறிப்பால் உணர்த்தவே, இமைகளின் மேல் பகுதியை, பனிபடர்ந்த வெள்ளியங்கிரியாகப் பாவித்து வெண்ணிறு அணியவும், புருவ மத்தியை சீவனும் சிவனும் உறையுமிடமாக பாவித்துச் சந்தனமும் குங்குமமும் தரிக்கவும் நம் முன்னோர் பணித்தனர்.
எமது மூதாதையர் நாத வடிவான பிரணவத்தை வரிவடிவத்தில் ஆக்க எடுத்த முயற்சியின் விளைவே ஓங்காரப் பிரணவம், இதுவே மாயாசக்தி, ஆதிசக்தி,

7
பராசக்தி என்றெல்லாம் அழைக்கப்படும் உடலும், உயிரும், பூரணமும் ஒன்று சேர்ந்த ஆன்மா. அதையே பிரணவம் என்றும் முதலெழுத்தென்றும் நம் ஆன்றோர் மொழிந்தனர்.
“இறைவனை ஒளி வடிவினன்” என்று சகல
சமயங்களும் ஏற்றுக் கொள்கின்றன. பிரபஞ்சத்திற்கு
ஒளியாக விளங்குவது சூரியன். சூரியனின் ஒளிக்கு ஆதாரமாக இருப்பது வாயு. (நீர் வாயு - Hydragen) ஆகவே பிரபஞ்சத்தின் ஒளிக்கும் இயக்கத்திற்கும் மூலாதாரம் வாயு.
இது இயற்கையின் ஒரு அடிப்படைக் கோட்பாடு. வாயு என்பது; நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் என்னும் ஐந்து மூலப் பருப்பொருட்களில் ஒன்று. வாயுவில் இருந்து பெறப்படும் பிரகாசமும் வெப்பமும் அதன் ஆற்றலாகிய சக்தி. ஆதலால் ஆற்றலும் பருப்பொருள் மூலங்களும் பிரிக்கப்பட முடியாதவை. அவை ஒன்றின்றி ஒன்று இயங்க இயலாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஏகப்பொருள்.
இதுவும் இயற்கையின் ஒரு அடிப்படைக் கோட்பாடு. இந்த இயற்கையின் நியதியை அனுசரித்துச் சக்தியாகிய ஆற்றலும், பருப்பொருளாகிய சிவமும் பிரிக்கப்பட முடியாதவை என்ற கோட்பாடு எழுந்தது. அதனையே "சக்தியின்றிச் சிவமில்லை, சிவமின்றிச் சக்தியில்லை” என்று இந்துசமயம் விளக்குகின்றது.

Page 6
ஒளிக்கு ஆதாரமான வாயு விரிவடையும்போது வெப்பமும், ஒளியும், ஒலியும் பிறக்கின்றன. இந்த வாயுவை "வாசி" என்று சொல்வார்கள். வாசியின் தொடர் இயக்கம் "சிவா” எனத் திரிபடையும். ஆதலால் சிவா என்று திரிபடைந்த வாயுவே பிரபஞ்ச இயக்கத்திற்கு மூலமாக அமைகின்றது என்பது தெளிவு. حمہ "حصح۔ ۔ ۔ مہ حصہ ۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔******* * SAAAS SLSASqSqSqSSSSLS SSSS
சிவமென்ற வாசி விரியும் போது “அ” என்ற ஒலியையும், ஒடுங்கும் போது “உ” என்ற ஒலியையும், தரிக்கும் போது "ம்" என்ற ஒலியையும் எழுப்பும். அதனால் வாசியின் இயக்கத்தில் எழுந்த ஆதி நாதமே "ஓம்" எனும் எழுத்து. விரிதல், ஒடுங்கல், அடங்கல் எனும் மூன்று காரியமும் இடைவிடாது தொடர்பாக நடப்பதாலேயே இந்த உலகம் இயங்குகிறது. இவ்வாறு காற்றில் இயல்பாக ஏற்படும் அதிர்வலைகளால் "ஓம்" எனும் பிரணவ நாதம் எழுகிறது.
இதனை "ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து” என்றார் ஒளவைப்பிராட்டியார். இதுவும் ஒரு இயற்கையின் அடிப்படைக் கோட்பாடு.
இவ்வாறு நிகழும் இயக்கத்தினால் வெளிப்படும் ஆற்றலுக்கு இணையாக உலகில் வேறு எந்த ஆற்றலும் கிடையாது. அந்தப் பேராற்றலை "பூரணம்” அதாவது நிறைவானது என்றார் அகத்தியர். அந்தப் பூரண ஆற்றலைத் தன்னகத்தே கொண்டது ஆன்மா.

9
ஆன்மாவில் மறைந்து இருக்கும் இந்த ஆற்றலே ஆன்மசக்தி. அது விரிவடையும் போது எட்டு விதமான சித்துகளை தருகின்றன.
இவ்வாறு மனிதனில் ஆன்ம சக்தியாக பிரவாகிக்கும் ஆற்றலை “ஓம்” எனும் எழுத்தால் உலகுக்கு உணர்த்துவது இந்து சமயம்.
இந்த “ஓம்” எனும்நாதம் உலகமே அழிந்தாலும், தான் அழியாது நின்று ஒலிப்பது. அதனால் அதனை அழிவற்றது எனும் பொருள்பட “பிரணவம்” என்று அழைக்கின்றார்கள்.

Page 7
O
பிரணவம்
ஆதியிலே ஒலித்துக்கொண்டிருந்த இந்த அனாதி நாதமே “ஓம்" எனும் "பிரணவ மந்திரம்." அதுவே இந்து சமயத்தின் மூலக் குறியீடு. --
இந்த “ஓம்” அ+உ+ம் என்று இரு உயிர் ஒலிகளையும் ஒரு மெய் ஒலியையும் தன்னிடத்தே கொண்டு ஒலிக்கிறது. அது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களாய் விரிந்து நிற்கும் போது ஒவ்வொரு எழுத்திற்கும் தனித்தனி பொருள் விளக்கியும், சேர்ந்து ஒரெழுத்தாக நிற்கையில் தனித்துவமான பொருள் விளக்கியும் நிற்கின்றது.

1
அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களாய் விரிந்து நிற்கையில், “அ” என்பது ஆதி முதல் எழுத்தாக விளங்குகிறது. இது தமிழ் நெடுங்கணக்கின் முதல் எழுத்தாக அமைகிறது. மனிதன், பேசுவதற்கு முதற் காரணமாக அமைவதால் “அ” வைப் பேசும் எழுத்து என்று சித்தர்கள் வறினார்கள். அன்றியும் தமிழில் எண்களைக் பிக்கையில் “அ” என்பது எட்டைக் (8) குறிக்கிறது.
(1) g566 Jujib (2) தூய்மை (3) இயல்பறிவு (4) முற்றுணர்வு (5) பற்றின்மை (6) கருணை (7) பேராற்றல் (8) பேரின்பம் ஆகிய எண் குணங்களின் ஒன்றுபட்ட உருவமாக இறை யென்னும் பேராற்றல் விளங்குகிறது. அதனா லேயே அப்பேராற்றலை எண்குணத்தன் என்றார் வள்ளுவர்.
இவ்வாறு இந்த எட்டு சிரேஷ்ட குணங்களும் கைவரப் பெற்றால், அவனிடம் எட்டுவகைச் சித்துகள் கைகூடுகின்றன. அவற்றை அட்டமாசித்துகள் என்பார்கள். அவை முறையே,
Lé 99

Page 8
12 (1) அணுவிற்கு அணுவாக, கண்களால் காண
முடியாத சிற்றுருவத்தை அடைதல். (2) அண்டசராசரங்கள் யாவையும் வியாபித்து நிற்கும்
பேருருவத்தை அடைதல். (3) பேருருவாயினும் பாரமற்ற இலேசான உடலை
அடைதல். (4) சிற்றுருவாயினும் பாரமான உடலை அடைதல். (5) அண்டசராசரங்களையும் நொடிப்பொழுதில்
சஞ்சரிக்கும் வல்லமை அடைதல். (6) பிற உடலில் புகுதல், வேண்டும் பொருளை வேண்டு மிடத்திற்குத் தருவித்தல், விண்ணில் பறத்தல், நீர்மேல் நடத்தல், முக்காலத்தையும் உணர்தல் ஆகிய வல்லமைகளை அடைதல். (7) படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்தொழிலையும் செய்யும் ஆற்றலை அடைதல். (8) அண்ட சராசரங்களையும் நவக் கிரகங்களையும் தம்வசப்படுத்தும் ஆற்றலை அடைதல். என்பன.
இவ்வாறு எட்டுத் துய குணங்களையும் தன்னிடத்தே வளர்த்துக்கொள்வதன் மூலமாக மனிதனாகப் பிறந்த எவனும் அட்டமாசித்துகளையும், பெறலாம் என்று பிரணவத்தின் விரிவாகிய முதல் எழுத்தாம் "அ" உணர்த்தி நிற்கிறது.

13
இவ்வாறு பல மெய்ப்பொருட்களை மறைமுகமாக உணர்த்துவதால் தமிழை மறைமொழி (பரி பாசை) என்றும்; இறை பொருளை உய்த்துணர்தற்கு உரிய மொழி என்ற காரணத்தால் தெய்வீக மொழி (இறை மொழி - தேவ பாசை) என்றும் அழைக்கிறார்கள். ஆதலால் தமிழ் மொழியில் நம் ஆன்றோர் கூறிவைத்த நான் மறைகளின் மெய்ப்பொருளையும் ஆழ்ந்து சிந்தித்து உளங்கொள்ளுதல் வேண்டும்.
'g) ' பிரணவத்தின் இரண்டாவது விரிவெழுத்து “உ”. இது தமிழ் நெடுங்கணக்கில் ஐந்தாவது உயிர் எழுத்தாக அமைந்துள்ளது. இது அண்ணாக்கிலிருந்து பின்னுயிர் எழுத்தாக ஒலிப்பதால் இதனை ஊமை எழுத்தென்று சித்தர்கள் கூறினார்கள். மொழியியலாளர்களும் இக்கருத்தை இன்று ஆதாரப 'படுத்துகிறார்கள்.
ஆதியான மூலப் பிரகிருதிகள் ஐந்து. அதனால் "உ" ஐந்தாவது உயிர்ப்பொலியாக அமைக்கப்பட்டது. இவ்வைந்து மூலப் பிரகிருதிகளும், பருப்பொருள் (MATTER) 6T6 Ojib gas) D6) (ENERGY) 6T6 Olb இரண்டாகப் பிரிந்தும் கலந்தும் இயங்குகின்றன என்பது விஞ்ஞானத் தெளிவு. இவ் உண்மையை “சிவம்” பருப்பொருள் (MATTER), ஆகவும், “சக்தி” ஆற்றல் (ENERGY) ஆகவும் இயங்குவதாக சனாதன விதி (இந்து சமயம்) கூறுகிறது.

Page 9
14
KK y
பிரணவத் திணி 2 என்ற எழுதி து எண்ணிக்கையில் இரண்டை(2)க் குறித்து நிற்கிறது. அதாவது, முற் கூறிய எணி குணங்களும் , அட் டமாசித் துகளும் சிவம் , சக்தி எனும் இரண்டினிடமிருந்தே தோன்றுகின்றன என்பதாம். இதனைத் தமிழ் அறிந்தவர்கள் உணர்வர்.
வள்ளற் பெருமானின் அடியொற்றி வந்து, அருளொளி நிலையம் கண்டு, ஆத்ம விளக்கேற்றி வரும் சித்ரமுத்தனும் இவ்வுண்மையை,
எட்டும் இரண்டும் என்றது உன் கிட்டவே இருக்கின்றது வெட்டவெளியாகச் சொல்லலாம் - மறைபொருளை கெட்டதென துட்டர் தள்ளலாம்.
என்று குருமதிமாலையில் குறிப்பிடுகிறார்.
தமிழ் மொழியின் தோற்றத்தையும் அந்தப் பரிபாசை இன்னதென்பதையும் அறியாத மக்கள் மெய்ப்பொருளை உணரவோ ஏற்கவோ மாட்டார்கள். சனாதனமான மெய்ப்பொருளை முற்கால முனிவர்கள், சித்தர்கள் எல்லோரும் கூறியிருந்த போதும் மெய்ப்பொருள் உணர்வு அற்ற காரணத்தால் சமயவாதிகள் அதனை சிந்தித்து தெளிவுறாத சிந்தையராய் ஐதீக, வைதீக நெறிகளில் மயங்கிக் கிடக்கிறார்கள்.

5
629
D
அடுத்தது பிரணவத்தின் மூன்றாவது விரிவெழுத்து “5” என்ற மெயப் யெழுத் தாகும் . இது மெய்யெழுத்துக்களுள் பத்தாவது எழுத்தாக அமைகிறது. இதனை "அடைப்பு மூக்கொலி” என்று மொழியியலாளர் மொழிவர். தமிழில் எண்களைக் குறிக்கையில் பத்தை (10) “ய” என்ற உயிர்மெய் எழுத்தால் குறிப்பர். "ய” என்பது அங்கத்தில் மூக்கின் நுனியைக் குறிக்கும். பிராணாயாமத்தில் இது கும்பகம் செய்யும் இடமாக அமையும்.
அகரமும் உகரமும் ஒன்று கூடிய ஒலி தரிக்கும் (அடைபடும்) இடம், மூக்கின் உள்வெளியும், தொணி டையின் மேல் இடமும் சந்திக்கும் சுழிமுனையாகும். இங்கு உயிரும் மெய்யும் இணைந்து ஒலிக்கும் உயிர்மெய் எழுத்தே "ம்" என்பதாகும். சிவமும் சக்தியும் கூடிய அமுக்க அதிர்வில் அடைப்பொலியாக பிறந்த நாதமே பிரணவம் என்னும் ஓங்கார நாதம்.
இந்த ஆதி ஒலியான பிரணவ நாதம் இரண்டாகப் பிரிந்து, நாதம், விந்து என்று பரிணமித்தது. இவ்வாறு பிரிந்த நாதத்தோடு விந்து கலந்து உடல்கள் உருவாகின. அந்த உடல்களில் கலையாகிய பிராணன் குடிபுகுந்ததால் உயிர்கள் தோன்றி இயங்குகின்றன. அதனால் நாதம்; விந்து; கலையாகிய மூன்றுமே ஆதி என்பது தெளிவு

Page 10
நாதம் என்ற ஒலிமயமான சுரோனியமும், விந்து என்ற ஒளிவடிவான சுக்கிலமும் ஒன்று சேர்ந்து அண்டமாகிய கருவறையில் கூடி சடமாக வளர்ந்து உரிய காலத்தில் புவியில் தலை கீழாகப் பிறக்கிறது. பிறந்த சடம் பிரபஞ்ச ஈர்ப்பால் வெளியிலிருந்து பிராணனைப் பெற்று மூச்சுவிடத் தொடங்குகிறது. இவ்வாறு உட்புகுந்த பிராணன் அவ்வுடல் அழியும் வரை அதைக் காத்துநிற்கிறது.
நாதத்தால் உடலும், விந்துவால் உயிரும், கலையினால் பிராணனும் உருவாகி உலகத்தில் சீவராசிகள் தோன்றின. அதனால் அவை மூன்றும் ஆதியானவை. ஆதியான இவை அணி டப் பெருவெளியில் எவ்வித அதிர்வும் இல்லாமலே இயல்பான ஒலியாகவும் , சுயப் பிரகாசமான ஒளியாகவும், உயிர்ப் பாகிய கலையாகவும் விளங்குகின்றன. நிலையாக உள்ள இவற்றின் கூட்டே ஓங்காரப் பிரணவம்.

7
ஆதி
அண்டப் பெருவெளியில் கோடான கோடி தன்னொளி நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன. அப்படிப் பிரகாசிக்கும் நட்சத்திரங்களில் ஒன்றே நாம் காணும் சூரியன். அது தன்னிடத்தில் அளப்பரும் ஈர்ப்பு ஆற்றலையும் பிரகாசத்தையும் கொண்டுள்ளது. தன்னை மையப்படுத்தி பிறகோள்களைத் தன்னுடைய ஈர்ப்பு விசையால் ஈர்த்துக்கொண்டு இயங்குகிறது. அதுமட்டும் அன்றி தன்னுடைய பேராற்றலை அண்டசராசரங்கள் எங்கிலும் பரப்பிக்கொண்டும் இருக்கிறது. அந்த ஒளிப்பிரகாசமும் ஈர்ப்புவிசையும் பிரதி பலிக்கும் கோள்கள், பிரதேசங்கள் யாவும்

Page 11
8 சூரிய மண்டலம் எனப்படுகிறது. இந்தச் சூரிய மண்டலத்தில் ஒன்பது பெரிய கோள்கள் உள்ளன. அவை சூரியனின் பேராற்றலை உள்வாங்கி தத்தமது இயல்புகளுக்கு ஏற்ப பிரதிபலிக்கின்றன.
ஆதியிலே இந்த அண்டம் (MICROCOSM) சலனமற் றிருந்தது. அப்போதும் ஓர் ஓசை இடையீடின்றி கேட்டபடி இருந்தது. பிரபஞ்சத்தின் அனாதி நிலை பற்றி ஆராய்ந்த வானியல் வல்லுனர்கள் அதைக் கண்டுபிடித்து "பேர் ஒலிக் G3a5'T'UTTG” (BIG BANG THEORY) 6T6ögo! Éógpj660TTİsraits6ĩ. இயல்பாக இயங்கும் நாதத்தின் தன்மையையும் பிறப்பையும் உணராத காரணத்தால் “BANG' என்பதற்கு ஒரு திடப்பொருள் வெடித்தல் என்னும் கருத்தை வருவித்து விளக்கியுள்ளனர். அந்த அசரீரி (விண்ணொலி) "ஓம்" என ரீங்காரித்தது. அந்த ஒலியை “பிரணவம்” என்கிறது உபநிடதம். கிறீஸ்த்தவமும் இக்கோட்பாட்டை, "ஆதியிலே வார்த்தை (நாதம்) இருந்தது. அது தேவனிடத்து இருந்தது. அதுவே தேவனாயும் இருந்தது.” என்கின்றது:
ஆதியிலே இந்த அண்டப் பெருவெளியில் உருவமற்ற பருப்பொருட்கள் (MASS) எவ்வித பற்றுக்கும் (ஈர்ப்புக்கு) ஆளாகாத காரணத்தால் சலனம் அற்று ஓய்வு நிலையில் இருந்தன. அந்த நிலையிலும் பிரணவ அசரீரி ஒலித்தபடியே இருந்தது. அதனால்

9
அவ்வொலியை "ஆதி ஒலி” என்றார்கள். இவ்வாறாக எவ்வித ஈர்ப்பும் அற்ற ஓய்வு நிலையை மெஞ்ஞானிகள் சமாதி என்றார்கள். அதாவது; மனம், வாக்கு, காயம் மூன்றும் ஒன்றி எவ்வித பற்றும் அற்று ஓய்வு நிலையில் ஏற்படும் ஆன்ம ஒடுக்கமே சமாதி. இது பிரபஞ்ச விரிவுக்கு முன் இருந்த ஆதிநிலை. அதனால் ஆதிக்கு சமமான நிலை என்னும் பொருள்பட “சமாதி” என்றனர். வானியல் வல்லுனர்கள் இந்நிலையை "நிலைத்த p5606)” (STEADY STATE) 6T6örp Tirab6ft.
இந்த ஒய்வு நிலையாகிய சமாதி நிலையில் இருந்த பருப்பொருட்களிடத்தில், ஈர்ப்புக்குக் காரணமான மாயா(த) சக்தியின் பற்று (மனத்தின் செயற்பாடான எண்ணம்) சலனத்தை ஏற்படுத்தியது. அச்சலனத்தால் ஏற்பட்ட அசைவை, வானியல் வல்லுனர்கள் “அலை அசைவுக் கோட்பாடு” (OSCILLATINGTHEORY) என்றார்கள். அதாவது, பருப்பொருள் உந்து அல்லது ஈர்ப்புவிசையில் அகப்பட்டு நகரும் போது, அதற்கு எவ்வித புறத்தாக்கங்களும் ஏற்படாதவிடத்து ஒரே சீரான கதியில் தொடர்ந்து இயங்கியபடியே இருக்கும் என்பதாகும்.
அதன்படி விரிவும் ஒடுக்கமும், மாறி மாறி ஏற்படுவன. இதனை பிரளயகாலத்தில் பிரபஞ்சம் முழுவதும் ஓங்காரத்தில் நாதவடிவாகி ஒடுங்கியும், பின் மீண்டும் ஓங்காரத்தில் இருந்து மாயா(த)

Page 12
20 சக்தியின் ஈர்ப்பால் நாதம் விரிவடையும் என்றும், விரிவடையும் நாதமானது நாதம், விந்து என இரண்டாகப் பிரிந்து பிரபஞ்ச உற்பத்தியை தொடங்கும் என்றும் கூறுவர். இதனை விஞ்ஞானிகள் (EVOLUTION THEORY) என்பார்கள். மெய்ஞ்ஞானிகள் பிரபஞ்ச உற்பத்தி என்பார்கள். பாமரர் விதி என்று கூறுவார்கள்.
இவ் வாறு அணி டவெளியாகிய சூரிய மண்டலத்தில் மாயா சக்தியின் பற்றுக் காரணமாக ஏற்பட்ட சலனத்தால் உருவாகியதே நாம் வாழும் Ալճ).
இப் பூமியும் மற்றைய நவகோள்களைப் போல் சூரியனின் பேராற்றலை உள்வாங்கித் தனது இயல்புகளுக்கு ஏற்ப பிரதிபலிக்கின்றது. நவக்கிரகங்களின் தாக்க ஈர்ப்பு வேறுபாடுகளையும் நிலை மாற்றங்களையும் கணித்து விதிக்கப்பட்ட கோட்பாடே ஜோதிடம். இது ஜோதி மயமாக விளங்கும் சூரியனை மையப்படுத்தி கணிக்கப்படுவதால் ஜோதிடம் எனப்படுகிறது. நாம் வாழும் பூமியும் இந்தச் சூரிய மண்டலத்தில் ஓர் அங்கமாக விளங்குகின்றபடியால் சூரியனால் அண்டத்தில் ஏற்படும் தாக்கங்களும் ஈர்ப்புகளும் பூமியையும் பாதிக்கின்றன. இயற்கையின் கூறுகளான காலை, உச்சி, மாலை, இரவு, சாமம் முதலாம் பொழுதுகளும்; கார், கூதிர், வசந்தம், இளவேனில், முதுவேனில், எனும் பருவ மாற்றங்களும்;

21
உயிரினங்களின் தோற்றங்களும் மறைவுகளும்; ஆக்கங்களும் அழிவுகளும் எல்லாம் இந்தத் தாக்க ஈர்ப்பு வேறுபாடுகளின் விளைவுகளே.
ஈர்ப்பு விசையால் எற்பட்ட சலனத்தால் காற்று உருவாகியது. காற்றின் இயக்கத்தில் பருப் பொருட்கள் அசைந்தன. அந்த அசைவில் அவை ஒன்றுடன் ஒன்று உரசின. உரசலில் வெப்பம் பிறந்தது. அந்த வெப்பம் காற்றுடன் சேர்ந்து தீப்பற்றியது. தீயின் வெப்பத்தால் காற்று விரிவடைந்தது. விரிவடைந்த காற்று ஆவியாக மாறியது. ஆவி சடத்துடன் இணைந்து குளிர்ந்து நீராகப் பொழிந்தது. நீர் சடத்துடன் சேர்ந்து அமுக்கத்தால் இறுகி மண் உருவானது.
இவ்வாறு காற்று, தீ, நீர், மண் முதலிய நான்கும் அண்டவெளியில் அடங்கியிருக்கின்றன. ஆதலால் காற்று, தீ, நீர், மண், வெளி ஆகிய ஐந்தும் மூலப் பிரகிருதிகளாகக் கொள்ளப்பட்டன. இவை ஐந்தையும் பஞ்ச பூதங்கள் என்றார்கள். பிரணவம் என்னும் பேராற்றலுடன் இவ் ஐந்து பூதங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து இந்த உலகு உருவாகியது. ஐந்து பூதங்களும் தத்தமது அளவுகளிலும் ஆற்றல்களிலும் பேதப்பட்டு கலந்து இயங்குவதால் பிறப்புகள் ஏற்படுகின்றன.
"பரமாய சக்தியுள் பஞ்சமா பூதம் தரம் மாறில் தோன்றும் பிறப்பு.”

Page 13
22
என்று இக்கருத்தைத் தமிழ் தந்த மூதாட்டி ஒளவை தனது ஞானக் குறள் வாயிலாக ஆதாரப்படுத்துகிறார்.
ஐந்து பூதங்களும் வெளியில் இருந்து தோன்றியதால் சகல பூதங்களிலும் வெளியானது குறித்த அளவில் கலந்து இருக்கிறது. அவ்வாறே காற்றிலிருந்து தீ தோன்றியதால் தீயில் வெளியும், காற்றும் கலந்திருக்கின்றன. தீயிலிருந்து நீர் தோன்றியதால் நீரில் வெளி, காற்று, தீ மூன்றும் கலந்து இருக்கின்றன. நீரில் இருந்து மண் தோன்றியதால் மண்ணில் வெளி, காற்று, தீ, நீர் ஆகிய நான்கும் கலந்திருக்கின்றன. ஐந்து பங்கு மண்ணும், நான்கு பங்கு நீரும், மூன்று பங்கு நெருப்பும், இரண்டு பங்கு வாயுவும், ஒரு பங்கு வெளியும் கொண்டு உருவாகிய கலவையே நாம் வாழும் உலகு. இதனை,
"நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே உலவை இரண்டு ஒன்று விண்.”
என்பார் ஒளவையார்.
காற்று, தீ, நீர், மண், வெளி ஆகிய பிரகிருதிகளின் கூட்டால் உருவான பூமிக்கு அண்மையில் இருக்கும் கோள் சந்திரன். இது சூரியனின் ஆற்றலை உள்வாங்கி பூமிக்கு வழங்குகிறது. சந்திரன் பூமிக்கு அண்மையாக இருப்பதால் அதனால் ஏற்படும் தாக்கமும் ஈர்ப்பும்

23 பூமியில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது. இதனைக் கருத்திற் கொண்டு கணிக்கப்படும் ஜோதிடபலனைக் கோசாரபலன் என்கின்றார்கள். ஆதலால், பூமியின் இயக்கத்தில் சூரியனும், சந்திரனும் கூடிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது தெளிவு. உலகு உருவாவதற்கு காரணமான காற்று, தீ, நீர், மண், வெளி ஆகிய ஐந்து மூலப் பிரகிருதி களுடன் சூரியனும், சந்திரனும் சேர்ந்து ஏழும் பிரபஞ்சத்தின் பங்குகளாக விளங்குகின்ற போதும் அவற்றால் பிரபஞ்ச உயிர்களைத் தோற்றுவிக்க முடிவதில்லை. இவையாவும் பெளதீகங்கள். இவற்றைவிட விஞ்ஞான ஆய்வுக்கு அகப்படாமல், கருவி கரணாதிகளால் அறிதற்கு அரியதாக இருந்துகொண்டு அவற்றை இயக்கும் தனியாற்றல் ஒன்றுளது. அதனைச் சமயவாதிகள் இறைசக்தி, மாயாசக்தி, ஆத்மசக்தி, மனோசக்தி என்று பலவாறு பெயரிட்டார்கள். விஞ்ஞானிகள் பகுத்து அறிவதற்கு இயலாத அந்த சக்தியை (OCCULTPOWER) என்று கூறுகிறார்கள். இதன் நிறைவாற்றல் கருதி அதனைப் பூரணம் என்றார் அகத்தியர்.
பூமி உருவாவதற்கு மூலமான நிலம், நீர், தீ, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களுடன் சூரியன் சந்திரன் இரண்டும் சேர்ந்து ஏழு பெளதீகப் பொருட்களும் "பூரணம்” என்னும் ஆத்மாவும் சேரும் பொழுதே பிரபஞ்ச உற்பத்தி தொடங்கியது. அதாவது, உயிரினங்கள்

Page 14
24
தோன்றின. அதனால் பிரபஞ்ச உற்பத்திக்கு மேற்கூறிய எட்டுமே மூலங்கள் என வகுத்தார்கள்.
“மண்ணோடு நீரங்கி மதியொடு காற்றுரவி
விண்எச்ச மூர்த்தியோடு எட்டு.
என்று இந்த மெய்ப்பொருள் உண்மையை தனது ஞானக்குறள் வாயிலாக ஆதாரப்படுத்துகிறார் ஒளவை.
பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், பூரணம் ஆகிய எட்டு மூலங்களினாலும் உருவாகி இயங்குவதே இந்த உலகு. இவற்றில் பூமியானது ஒரு பெளதீகத் தொகுப்பு. மற்றயவை சக்திகள் . சூரியசக்தி வெப்பத்தையும், சந்திரசக்தி குளிர்மையையும், பூரணம் உயிர்ப்பையும் கொடுக்கின்றன. இவை எட்டும் ஒன்றுடன் ஒன்று கலந்து தாதுக்கள் உருவாகின்றன. அவ்வாறு உருவாகும் தாதுக்களை ஏழாக வகுத்தார் ஒளவையார். س
"தொக்கு உதிரத்தோடு ஊன்மூளை நிணமென்பு சுக்கிலம் தாதுக்கள் ஏழு.”
என்பது அவரது குறள்.
இவ்வாறு அட்ட மூலங்களால் உருவான தோல், இரத்தம், தசை, மூளை, கொழுப்பு, எலும்பு, சுக்கிலம் எனும் ஏழு தாதுக்களும் கூடி உருவாவது எமது

25 உடல். அவ்வுடலில் பிராணன் என்னும் மூச்சு குடிபுகுந்து இயக்கத் தொடங்கியதும் உடல்களுக்கு உயிர்ப்பு ஏற்படுகிறது. அதனால் அவை உயிர்கள் எனப் பெயர் பெற்றன. தோன்றிய உயிர்கள் தம்முள் கலந்து மேலும் தம்போலும் பல உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.
இவ்வாறு உயிர்கள் பரிணமிக்க மூலமாக அமைவன முறி கூறிய அட் டமூலங்களும் சப்ததாதுக்களும் ஆகும். இவை ஒன்றாகி அமைந்த உடலில், அவையெல்லாம் கூடி உருவாவது விந்து. இது நாதத்தில் இருந்து பிரிந்தது மீண்டும் நாதமயமாகி தோன்றிய இடத்திலேயே ஒடுங்கி விடுகிறது என்பதை ஒளவையார்.
“இவை யெல்லாம் கூடி உடம்பாய ஒன்றில் அவையெல்லாம் ஆனது விந்து.
என்று தனது ஞானக்குறளில் கூறியுள்ளார்.
ஆகவே, பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுவதற்கு மூலமாக அமைவது "விந்து” என்பது தெளிவு. "விந்து" என்றாலும் “வித்து” என்றாலும் பொருந்தும். அதனாலேயே, "வித்தில் லாத சம் பிரதாயம் , முன்னுமில்லை பின்னுமில்லை” என்ற முதுமொழியும் வழங்களாயிற்று.

Page 15
26
(வி)இந்து திரிய உலகு பிறந்தது. இந்து என்பது ஆண்பெண் கருக்கள். அவை ஒன்றுடன் ஒன்று கூடித் திரிபு அடைவதால் பிரபஞ்சம் உருவாகிறது. அதனால் அது இந்திரியம் எனப்பட்டது. இந்திரியம் என்பது மனிதக்கரு. கரு என்பது மூலம். அதனால் இந்த மூலக் கோட்பாட்டை அநாதியானதாக கொண்டு “சனாதன தருமம்” என்றனர். இதுவே இந்து சமயத்திற்கு மறு பெயர்.
ஆதலால் இந்து சமயம் என்னும் பெயர், இந்திரியம், என்றதன் அடியொற்றிப் பிறந்த தென்பதை நாம் முதலில் உணரவேண்டும்.
ஆங்கிலேயரும் மேலை நாட்டவரும் தாம் கண்டறிந்ததாக கூறும் , “சிந்து” நதிக் கரை “நாகரீகத்தின் பெயரால் ஏற்பட்டதல்ல. என்பதையும் நாம் புரிந்து கொள்ளவேண்டும். “சிந்து” என்ற பதம் எவ்வகையாலும் "இந்து” என்று திரியவழி இல்லை என்பது இலக்கண நூலோர் முடிபு.
ஆதலால் இந்து சமயம் என்னும் வாழும் நெறி. உலகின் இயக்க, இயங்கு சக்திகளின் அடிப்படை விதிகளின் பெயரால் ஆக்கப்பட்டது என்பது. தெளிவு.

27
இந்து சமயத்தின் தோற்றம்
இப்பரந்த உலகில் மனிதப் பிறப்பெடுத்த சகலரும் அன்னை தந்தையரின் நேசத்தால், அவர்களது நாத விந்துக்களின் கூட்டுறவில், தாயாரின் கருவறையில் 300 நாட்கள் தவநிலையில் இருந்து பரிநாம வளர்ச்சி பெற்று தோன்றியவர்களே.
எத்தனை கோடியுகங்கள் கழிந்த போதும் இனிக் கழிந்தாலும் இந்த அடிப்படைநியதி மாறப்போவது இல்லை. இது மாற்றவோ மாறவோ முடியாத இயற்கையின் நியதி.
தற்கால விஞ்ஞானி பரிசோதனைக் குழந்தையை உருவாக்கிச் சாதனை படைத்து விட்டதாக

Page 16
28 நம்புகிறான். ஆனால் அவனால் கூட இந்த அடிப்படை (தத்துவத்தில்) நியதியில் மாற்றம் காண முடியவில் லை. ஆணி , பெணி , இருவரினி இந்திரியங்களான சுக்கில, சுரோனிதத் துளிகள் இன்றி அவனால் அக் குழந்தையை உருவாக்க முடிந்ததா? அன்றியும் அக் குழந்தையை ஒரே மாதத்தில் அல்லது பன்னிருமாதத்தில் உருவாக்க முடிந்ததா? முடியவில் லையே. அதுதான் இயற்கையின் நியதி.
இந்த இயற்கையின் நியதிதான் அனாதியான பிரபஞ்சக் கோட்பாடு. அதனை அடிப்படையாக வைத்தே, இந்து சமயம் பிறந்தது.
ஆகையால் எம்முன்னோர், தாம் வகுத்த வாழ்வியல் நெறியை, "இந்து நெறி' என்று அழைத்தனர்.
இந்து நெறி பிரமச்சரியம், கிருகஸ்தம் , வானப்பிரஸ்தம், சந்நியாசம் எனும் நான்கு பருவத்திலும் (சமயத்திலும்) பயன்படுவதால் "இந்து சமயம்" எனப்பட்டது. இது அனாதி உருவானதால் சனாதன நெறி அல்லது தர்மம் எனப் போற்றப்படுகிறது.
அணுவிற்குள் அணுவாகி நிற்கும் ஆற்றலை ஆராய்ந்தான் மனிதன். "அவனருளாளே அவன் தாள் வணங்கு என்பது மாணிவாசகர் கூற்று. அது போல் அணுக்கள் திரண்டு உருவான மனிதன் தான் அணுக்களின் கூட்டு என்பதை அறிந்திருந்தும்,

29 அணுவைப் பிளந்து அறிய முயன்று வெற்றியும் கண்டான். இதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஆனால், அவன் கண்டறிந்த விடயங்கள்தான் வியப்பிற்கு உரியவை. அணுவைப் பிளந்த மனிதன், அதனுள் இருவேறு பொருட்களைக் கண்டான். அவை இரண்டையும் இயக்கும் ஒரு தனி ஆற்றலையும் உணர்ந்தான். இவ் ஆற்றலை பகுத்து அறிவதற்கு இயலாத சக்தி (Occult Power) என்று பெயரிட்டான். இவ்வாறு இன்றைய விஞ்ஞானி பலகோடி பணத்தை விர யஞ் செய்து கணி டுபிடித்த உணர்மையை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் மெஞ்ஞானி எவ்வித விரயமுமின்றி தன்னிலே தான் நுணுகி ஆராய் நீது கணி டவற்றை இந்து சமய மெய்ப்பொருளாக ஆக்கித்தந்துள்ளான்.
அதன் சூட்சுமமே ஓங்காரம் எனும் பிரணவமாக விளங்குவது தான் விந்தையிலும் விந்தை. எதை அறியாமை, மூடநம்பிக்கை என்று இடைக்கால மனிதன் எள்ளி நகையாடினானோ, அதையே தற்கால மனிதன் மாபெரும் ஆற்றல் என்று போற்றுகிறான். இந்து பூரணம் என்ற இப் பேராற்றலை தன்வயப்படுத்திக் கொள்ளும் மார்க்கத்தையும் s600i LIT6. 560)6Ousto0T 5606loula) (Steady State) மனிதன் இருக்க முடியும் என்று உணர்ந்தான். அதனை "நிர்விகற்ப சமாதி நிலை’ எனச்

Page 17
3O
சொன்னான். இராமலிங்க வள்ளலார் கூறிய "மரணமற்ற பெருவாழ்வை வாழும் வழியைப் புகட்டுவதே இந்து சமயம்.
சிரேஷ்டமான எண் குணங்களையும் மனிதப் பிறப்பெடுத்த யாவரும் பெற்று நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக வகுக்கப்பட்ட வாழும் நெறியே இந்து சமயம் . இநீ த எட்டுக் குணங்களையும் தன் அகத்தே வளர்த்துக் கொள்பவன் எவனோ அவனே மனிதன். மனதை ஆள்பவன் எவனோ அவன் ஒருவனே மனிதனாகப் பிறந்ததன் பயனை எய்துகிறான். மனதைப் பக்குவப்படுத்தச் சிறந்த வழி, முறையான இல்லறமே! என்று வகுத்துக் கூறும் சமயம் இந்து சமயம்.
நான்கு புருடார்த்தங்கள்
மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு இந்து சமயம் வகுத்துத் தந்த நெறிகள் நான்கு. அவை இளமை நெறி, இல்லற நெறி, சற்சன நெறி, சிவ நெறி என்பன. இவற்றையே வேத நூல்கள் பிரமச்சரியம், கிரகஸ்த்தம், வானப்பிரஸ்த்தம், சன்னியாசம் என்று வடமொழியில் கூறுகின்றன. இவை மனிதனாய் பிறந்த சகலரும் கைக்கொள்ள வேண்டிய நான்கு பருவ நெறிகளாகும். இந்த நான்கு பருவங்களும் மனித வாழ்வில் தவிர்க்க முடியாதவை. இந்நான்கு

31 பருவங்களிலும் மனதில் எழும் சலனங்கள், சஞ்சலங்கள் பல. அவற்றை எவ்வாறு கடந்து, கடைத்தேறுவது என்பதைப் புகட்டும் வாழ்வியல் நெறிகளே! இந்து சமய நெறிகள். ஆதியை அறிந்து, தெளிந்து, மனிதன் தனக்கு இயல்பான வாழ்வை வாழவேண்டும் என்பதற்கு ஆக்கப்பட்டவையே அறநெறிகள். −
மனிதன் இளமையாக இருக்கும் சமயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கநெறி ஒன்று. அவன் காதல் வாழ்வு என்னும் குடும்ப வாழ்வு வாழும் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கநெறி வேறு. அதே மனிதன் சமூகத்தில் மனமுதிாச்சி அடைந்து சகமக்களுடன் உறவாடும் சமயத்தில் கைக்கொள்ள வேண்டிய வாழ்க்கை முறைமை முன்னையற்றை விட வேறுபட்டது. அதன் பின் வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்து மனத்தில் தெளிவும் உண்மை உணர்வும் எற்படும் சமயத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் வேறு. இவ்வாறு நாலு சமயங்களிலும் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளை முறையாக விளக்கும் சமயமே, இந்து சமயம்!
மனிதனாய் பிறந்த சகலரும் கைக்கொள்ள வேண்டிய நான்கு பருவ நெறிகளே இவை. ஆனால் சமயவாதிகள் இவற்றை உயர் குலத்தவர்களாகக் கருதப்படும் பார்ப்பணர், சத்திரியர், வைசியர்களுக்கு மட்டுமே உரியதாகத் திரிவுபடுத்தி விட்டதால், இது

Page 18
32 பொது மக்களிடம் பயிலப்படாது மறையலாயிற்று.
“தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத் தரும்சக்தி பின்னமிலான் எங்கள் பிரான்.”
என்பது உமாபதியார் திருவாக்கு இறையிடம் பட்சபாதம் கிடையாது. விண்ணின்று பெய்யும் மழையும், விண்ணில் காயும் கதிரவனும், ஆற்றில் ஒடும் நீரும் எல்லோர்க்கும் பொதுவானது போல இறைவனது எணர் குணங்களும் எல்லோருக்கும் பொதுவானது. எமது உலகமும் உயிர்களும், பேர் அண்டத்தின் சிறு துளியாக அதன் பிரதிவிம்பமாக அமைந்திருக்கின்றது. குளத்தில் இருக்கும் நீரை ஒரு குடத்தில் முகந்தால் குடத்து நீருக்கும் குளத்து நீருக்கும் பேத மிருக்குமா? இருக்காது. இவை பேதமில்லாதது போலவே அண்டத்தில் கலந்து உள்ள பஞ்ச பூதங்களுக்கும் பிண்டங்களாகிய பிறப்புகளில் கலந்து இருக்கும் பஞ்ச பூதங்களுக்கும் பேதமில்லை. அவை அளவில் வேறுபட்டாலும் ஒத்த தன்மையனவே. அதனால் அண்டத்தில் இருந்து பிண்டம் தோன்றியதா? அல்லது பிண்டத்தில் இருந்து அண்டம் தோன்றியதா? என்ற கேள்விக்கு இடமில்லை. அண்டமும் பிண்டமும், பராதி மாவும் ஜூவாதி மாவும் இரணி டுமே அநாதியானவை. அதனாலேயே ஒரு அடியவன்

33 “என்று நீ அன்று நான் உன் அடிமை அல்லவா” என்று பாடினார். அப்படியிருக்க, அப்பண்புகளை எல்லோரும் பெறமுடியாது இருப்பதற்குக் காரணம் அவரவர்களின் முயற்சியின்மையே.
"முயற்சி திருவினை யாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்.”
என்றார் வள்ளுவர்.
நாம் முயற்சி செய்தால்த்தான் எதையும் அடைய முடியும். தண்ணிரில் இறங்கினால் தான் நீச்சலடிக்க முடியும். நாம் சாப்பிட்டால்தான் பசி தீரும். மற்றவர்கள் சாப்பிட்டால் எமக்குப் பசி தீருமா? அதுபோல நாம் முயன்றால்த்தான் இறையின் எண் குணங்களையும் எம்மில் வளர்த்துக்கொள்ள முடியும்.
“நலமிலன் நண்ணார்க்கு நண்ணினர்க்கு நல்லன் சலமிலன் பெயர் சங்கரன்.”
என்று முயற்சிக் காதவரிடத்து சேராமலும் முயற்சிப்பவர்களைச் சேர்ந்தும் இருப்பான் இறைவன். அவனிடத்து பேதமை என்ற சலனம் கிடையாது 61 601 இறைவனின் பேதமற்ற தன்மையை " விளக்குவார் உமாபதியார்.

Page 19
மனிதப்பிறவி
பிரணவம் என்னும் இந்தத் தாரக மந்திரத்தை ஆதார மாகக் கொண்டே உலகையும் உயிர்களையும் பிரமன் படைக்கிறான் என்கிறது வேதம்.
பிரமன் பிரணவத்தின் பொருளை மறந்தகாலத்தில் சிருஷ்டிக்கப்பட்டவர்களே அசுரர்கள். பிரணவத்தின் பொருளை மறவாதகாலத்தில் சிருஷ்டிக்கப் ப்ட்டவர்களே தேவர்கள். அதனால் அறிவு, அறம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் கூடிய சுரர்களுக்கும் (தேவர்கள்), அறியாமை, மறம், ஒழுக்கமின்மை ஆகியவற்றுடன் கூடிய அசுரர்களுக்கும் (நரகர்) இடையே எப்பொழுதும் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. சுரர்கள் அசுரர்களால் பல கொடுமைகளை

35
அனுபவித்தார்கள். அக்கொடுமைகளில் இருந்து தேவர்களை காத்து இரட்சிக்க தேவசேனாபதியாக முருகன் அவதாரம் எடுத்தான்.
அவன் பிரமனிடம் படைப்புக்கு ஆதாரம் என்ன? எனக் கேட்டான். பிரமனும் தயங்காமல் பிரணவம் என்று கூறினான். அப்படியானால் பிரணவத்தின் பொருள் என்ன? என்று கேட்டான் முருகன். பிரணவத்தின் பொருளை மறந்திருந்த பிரமன் பொருள் கூற அறியாது நின்றான். முருகன் அவனைத் தலையில் குட்டி சிறையில் அடைத்து விட்டுத் தானே சிருஷ்டியைத் தொடங்கினான் என்று கந்த புராணம் சொல்லுகிறது.
முருகனால் சிருஷ்டிக்கப் பட்டவர்கள் மரணம் அற்றவர்களாக, நித்திய ஜீவர்களாக, சிரஞ்சீவிகளாக வாழ்ந்தார்கள். அதனால் பூமாதேவி பாரம் தாங்கமாட்டாது இறைவனிடம் முறையிட்டாள். இறைவன் முருகனை அழைத்து; பிரணவத்தின் பொருளை அவன் மூலம் மீண்டும் உலகிற்கும், பிரமனுக்கும் அறிவிக்கச் செய்தான். அதனால் முருகனுக்கு கலியுகவரதன் என்றும், தந்தைக்கு உபதேசித்ததால் சிவகுருநாதன் என்றும் பெயர்கள் வழங்கப்படுகின்றன என்பதும் புராண வரலாறு.
இவ்வாறு கந்த புராணத்தில் கூறியது போல பிரணவத்தின் புனிதத்தை உணராத, அறியாத இன்றைய மனிதன் , ஒழுக்க மற்று அதர்ம சிந்தையுடனும், பேராசை, சுயநலம் பொறாமை முதலியவை பேயாக அவன் உள் ளத்தில்

Page 20
36 குடிகொள்ள; கற்பு நெறி தவறி: காமாந்தகார எண்ணத்துடன் உடல் உபாதைக்கு மட்டுமே முதலிடம் கொடுத்து விலங்குகளிலும் கேவலமாக உடலுறவில் ஈடுபட்டு அதன் விளைவால் உருவெடுத்த ஈன ஜென்மங்களே, இராக்கதர்கள் போலும் காருண்யம் அற்று; கொலை, கொள்ளை, வஞ்சகம், விபச்சாரம் முதலியவற்றுள் மூழ்கிக்கிடக்கின்றன.
ஆனால் முற்கூறியபடி இந்துசமயம் வகுத்த
இல்லறநெறியில் நிற்பவரிடம் இறைவன் தூய பிரமமாக இந்திரியத்தில் கலந்து சற்புத்திரர்களைப் பெறுவதற்கு வழிகாணுகிறான். அல்லாதபேர்கள் தத்தமது மனோபேதத்திற்கமைய புத்திரர்களைப் பெறுகிறார்கள்.
மனிதன் நிறைவான வாழ்வு வாழக் காரணமான பூரணத்தை அறிந்து கொள்ளத் தெளிந்த உள்ளம் வேண்டும். ஆன்மீக உணர்வும், மனிதனுக்கு இயல்பாகவே இருக்க வேண்டிய மனிதநேயமும் வேண்டும். இவை அனைத்தும் கூடிவந்தால், அந்தப் பூரணப் பொருளை உணர்த்த ஒரு குரு அவசியம் வருவார்.
ஆகவே மனிதர்கள் மேற் கூறிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து, குருமூலமாய்ப் பூரணத்தை அறிந்து பயின்று புேரின்பப் பெருவாழ்வு வாழ்வதே பிறப்பெடுத்ததன் பயன் என்று கூறுவது இந்து சமயம்.
இதைப்பரிபூரணமாக உணர்ந்த படியால்த்தான் அகத்திய மாமுனி உடலும் உயிரும் பூரணமும் ஒன்றான பிரணவத்தைப் போற்றினார்.

37
Gödö
"உலக குரு ஒருவன் இறைவன் அவனருளால் பல பொருளும் பாரிலுள”
என்பார் அருளொளி அண்ணல்.
உலகு முழுவதையும் இயக்கித் தானும் இயங்கி நிற்கும் பேராற்றலே பூரணம். அது குருவடிவாக வந்து மனிதனின் அறியாமையைப் போக்குகிறது என்பது சமயவாதிகளின் நம்பிக்கை.
ஆனால் இன்று மக்கள் மெய்ப்பொருளுணராத வேடதாரிகளையும் அவர் களது வார் தி தை ஜாலங்களையும் நம்பி, மயங்கி அவர்களையே

Page 21
38
குருவாகக் கொண்டு மீளாத் துன்பத்தையும்
துயரத்தையும் அனுபவிக்கிறார்கள். இதனை,
குருட்டினை நீக்கும் குருவினைக் கொள்ளார் குருட்டினை நீக்கா இருவினைக் கொள்வர் குருடும் குருடும் குருட்டாடமாடிக் குருடும் குருடும் குழிவிழுமாறே.
என்று விளக்கும் திருமூலர் குருவாக வருவது அப்பரிபூரணமான ஆற்றலே என்பதை
குருவே சிவம் எனக் கூறினன் நந்தி குருவே சிவம் என்பது குறித்து ஓரார் குருவே சிவனுமாய் கோனுமாய் நிற்கும் குருவே உரை உணர்வற்ற ஓர் கோவே.
என்றும் கூறுகிறார்.
இந்தப் பூரணத்தை விளக்க வந்த அகத்தியர்
பூரணமே தெய்வமென உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னதென்று பகல வேண்டும் காரணத்தைச் சொல்லுகிறேன் நினைவாய்க் கொள்ளு கலையான பதினாறும் பூரணமே.
என்று கூறினார்.

39
"கலை" என்ற பதம் அறிவு, காலத்தின் நுட்பம், சுயப் பிரகாசம். என்று பல பொருள்களை உணர்த்தி நிற்கின்ற போதும், அவை கலையின் முழுமையான தனி மை யைப் புலப் படுத் தவில் லை எனிறு ஆதங்கப்பட்டார் அகத்தியர். அதனால் அவர் கலையைப் பூரணம் என விழித்தார்.
இத்தகைய தத்துவ நிலையை மெய்யறிவு பெற்ற நாதாந்திகள் அல்லாது மற்றவர்களால் அறிய முடியாது. என்கிறார் தெட்சணாமூர்த்தி சுவாமிகள்.
சிவன் வேறு சீவன் வேறென்று இரண்டாய்ச் செப்பும் அவன் சிவனை என்றும் அறியாதான் - தவமில்லா உள்ளத்து ஆர்க்கு எய்துமோ? ஊர்க் குருவி ஆகாசம் எள்ளப் பறந்து அறியுமே.
சிவனையும் சீவனையும் வேறு வேறாகக் கருதி மயங்கும் சித்தாந்த வாதிகளால் நாதாந்தம் என்னும் பிரணவத்தின் ஒருமை நிலையை எப்படி அறிய (Մ)ւգաւք?

Page 22
40
நாதாந்தம்
"நாதாந்தம் என்பது பேசாமறை. நாதமாகிய பிரணவத்தின் மெய்ப்பொருளாம் ஆதியையும் அந்தத்தையும் குருவருளால் உணர்த்த, உணர்ந்து தெளிந்து இரண்டற நிற்கும் நிலையே நாதாந்தம்"
வேதத்தை ஐயம் திரிபறக் கற்று, வேதத்தின் முடிவாகிய அந்தத்தை அறிந்தவன் வேதாந்தி. சித்தத்தைச் சிவன்பால் நிறுத்திச் சித்தத்தின் அந்தத்தை அறிந்தவன் சித்தாந்தி. ஆதி அந்தமற்ற பிரணவத்தை தன் மெய்யிலேயே அறிந்துணர்ந்து ஓங்கார நாதத்தின் கீதத்தை அனுதினமும் கேட்டும், விந்து அமுதத்தை பருகியும், கலை ஒளியைக் கண்டும் அதுவதுவாகி

41
நின்று நாதத்தின் அந்தத்தை அறிந்து உணர்ந்து நாத அந்தமாக விளங்குபவன் நாதாந்தி.
இந்த நாதாந்தப் பெருநிலையை குருவருளால் நந்திதேவரிடம் அறிந்துகொண்ட திருமூலர் பின்வருமாறு விளக்குவார்.
ஊமை யெழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை யகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஒமய முற்றது உள்ளொளி பெற்றது நாமய மற்றது நாமறி யோமே.
ஆமையானது சஞ்சாரத்தின் போது தனது மேல் ஒட்டிற்கு வெளியில் தலையையும் நான்கு கால்களையும் நீட்டிச் செயற்படும். ஆபத்து அல்லது இடையூறு வரும் தருணத்தில் வெளியே நீட்டிய தனது ஐந்து அவயவங்களையும் ஒட்டிற்குள் ஒடுக்கிக் கொள்ளும். அதனால் தனக்கு வரும் துன்பத்தில் இருந்து தன்னைக் காத்துக்கொள்ளும். அதுபோல மனிதராகப் பிறந்து மெய்யறிவு பெற்ற பெரியோர் தமது பிராணன் உறைந்திருக்கும் கபாலமாகிய மண்டை ஒட்டினுள் துன்பத்திற்கு துணை போகும் சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் ஐந்து புலன் களையும் ஒடுக்கி ஒருமை நிலை அடைவதன் மூலம் மரண பயமற்றுச் சிவமயமாக வாழ்கிறார்கள்.

Page 23
42
இவ்வாறு ஐம்புலன்களையும் ஒடுக்கி ஒன்றில் நிற்கும் மார்க்கமே நாதாந்தம். (உ) என்று சொல்லப்படுகின்ற "ஊமை எழுத்தாகிய அண்ணாவுடன், (அ) என்று சொல்லப்படுகின்ற பேசும் எழுத்தாகிய நாவை இணைக்க வேண்டும். அப்படி இணைப்பதால் ஆமை போலும் தோற்றமுடைய எமது கபாலமாகிய மண்டை ஒட்டினுள் ஐந்து புலன்களும் ஒடுங்கி விடுகின்றன. அப்போது ஓங்காரமாகிய பிரணவம் மண்டை ஒட்டினுள் ஒளிமயமாகப் பிரகாசிக்கும்.
பிரணவ ஒளி பிரகாசிக்கவும் "நான்” “நான் என்று வல்லமை பேசி எம்மைப் பிரித்தறியத்துாண்டும் பேயறிவு மறைந்து விடுகிறது. தான் அதுவாக மாறி ஏதுமறியாத சூனிய நிலை பிறக்கிறது. பேதமற்ற அபேத நிலை பிறக்கிறது. அந்த அபேத நிலையில் சிவத்தை அன்றி எதையும் அறிய முடியாது. அதுவே பிரபஞ்ச விரிவுக்கு முன் இருந்த ஆதி நிலையான "சமாதி” நிலை. வானியல் வல்லுனர்கள் கூறிய “நிலைத்த நிலை” அதாவது என்றும் சாஸ்வதமாக இருக்கும் (STEADY STATE), பெளத்தர்கள் கூறும் நிர்வான (நிப்பான) நிலையும் இதுவே.
92
நான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வான்பற்றி நின்ற மறைபொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் தான்பற்றப் பற்றத் தலைப்படும் தானே.
என்றார் திருமூலர்.

43 தான் நாதாந்தப் பெருநிலையில் அனாதி மூலமான பிரணவத்தைப் பற்றி நின்று உணர்ந்து சுவைத்த மறை பொருள் (வான் - அமிழ் தம்) பற்றிச் சொல்லுவதானால் அது எமது இந்த ஊனுடலாகிய இந்த தேகத்தில் உணரப்பட வேண்டிய ஒரு மந்திரம். அந்த மந்திரத்தை இடைவிடாது பற்றிக் கொள்ள முயல வேண்டும். அப்படி முயல அது நம்மைப் பற்றிக்கொள்ளும். அதனால் சமாதி என்கின்ற ஆதி நிலையை அடைந்து பிறப்பிறப்பற்ற பேரின்ப நிலையை அடையலாம், என்பது அவர் கூற்று.
பற்றுக பற்று அற்றான் பற்றினை - அப்பற்றை பற்றுக பற்று விடற்கு. என்றும்
பற்று அற்ற கண்ணே பிறப்பறுக்கும் - மற்று நிலையாமை காட்டி விடும். என்றும்
இதே கருதி தைதி திருவள்ளுவரும் ஆதாரப்படுத்துகிறார். பிரணவத்தை உணர்தலாகிய பற்றே பற்றப்பட வேண்டியது. அப்பற்றைப் பற்றிக் கொண்டால் பிரபஞ்ச விரிவுக்குக் காரணமாகிய மாயா ஈர்ப்பு அற்று விடும். அவ்வீர்ப்பு அற்றபோது பிறவிக்கும் பிரபஞ்ச விரிவுக்கும் காரணமான அலை அசைவு ஏற்படாது. அதனால் நிலைத்த

Page 24
44 நிலையாகிய சமாதிநிலை கைகூடுகிறது. இது தவிர்நி த மற் றைய எந்த முயற்சியும் நிலையாமையாகிய பிறப்பு, மூப்பு, பெரும்பசி, வான்பிணி, இறப்பு ஆகிய துன்பச் சாகரத்திற்கே வழிவகுக்கும் என்கிறார்.
நாதாந்த நிலையைப் பற்றுதலே பிறப்பறுக்க ஒரேவழி என்று கூறிய திருமூலர், அத்தோடு நின்று விடவில்லை. அதற்கு மார்க்கமும் கூறுகிறார். தாம் அனுபவித்த பேரின்பத்தை உலகத்தவராகிய சக ஆன்மாக்களும் பெற்றுய்ய வேண்டும் என்பதே அவரது பெருநோக்கம்.
நாவின் நுனியை நடுவே விசிறிடில் சீவனும் அங்கே சிவனும் உறைவிடம் மூவரும் முப்பத்து மூவரும் தோன்றுவர் சாவதும் இல்லை சதகோடி ஊனே.
என்று, G8 Lu a3 Ld5 எழுதி தா கலிய நா வை (அ) மேல்நோக்கித் தூக்கி, சூரிய சந்திர கலைகள் எனப்படும் இடகலை, பிங்கலை ஆகிய இரு சுவாசங்களும் இணையும் சுழி முனை, (உ) ஊசி முனை என்று சொல்லப்படும் நடு வழியை அடைத்து விட்டால், மூக்கு வழி ஓடுகின்ற சுவாசமாகி சீவன் வெளியே செல்ல வழி அறியாது திகைத்து நிற்கும். அப்போது சீவனாகிய

45 உயிர் கும்பகத்தால் (ம்) சிவமயமாகி விடுகிறது. சிவன் உறையும் ஓங்கார வீடாகிய கபால வீட்டில் நாதமி விநிது கலையாகிய மூன்று மூல முதல்வரும், அவர்களின் விரிவுகளாகிய முப்பத்து முக்கோடி தேவாம்சம் பொருந்திய சக்திகளும் தோற்றி மரணமற்ற பெருவாழ்வை நல்குவார்கள். நூறு கோடி உயிர்களும் மரணமற்று நித்திய சீவன்களாவர். சிரஞ்சீவிகளாக (சிரம் ஆகிய ஓங்கார வீட்டில் சீவிப்பவர்கள்) என்பது திருமூலர் கூற்று.
நாக்கை மேல் மடித்து வச மாக்கிட வன்மை யுண்டானால் தாக்கலாம் சுவாச மதனை - கபாலத்தி லுண் டாக்கலாம் பிரகாச நாதனை.
என்றும் நாவினை மடித் துயர்த்தி m ஆவியை நிறுத்தி யூதத் தேவியுனைத் தேடுவாளையா - அவளொளியில் தாவிவிளை யாடலா மையா.
- என்றும் இதே கூற்றை அருட்திரு சித்திரமுத்தடிகள் மிக எளிமையாகக் குருமதிமாலை எனும் மெய்ஞ்ஞான நூலில் விளக்கி உள்ளார்கள்.

Page 25
பேசாத மந்திரமும் இதுவேயாகும். பேரொளியின் வடிவமாகும் பேருமாகும். நேசாருங் கலைகளெலாந் தானே யாகும். நிலையான ஓங்கார பீடமாகும்.
இந்த ஓங்காரப் பிரணவத்தை பேசாத மந்திரம் என்றும்; பேரொளியின் வடிவம் என்றும்; பற்றோடு எம்மை வாழ்விக்கும் சூரிய சந்திர அக்கினி ஆகிய மூன்று கலைகள் என்றும்; அவை யாவும் ஒன்றாகி நிலைத்து நிற்கிற பீடம் ஓங்கார வீடாகிய சிரகிரியே என்றும் தமது ஞானப்பாடலில் கூறுவார் திருமூலர்.
மேலும் நாதாந்தத்தை விளக்கும் குருமதிமாலை எனும் நூலில்
ஆதியை அருகிருக்கும்
சோதியை துலக்கமாக
ஒதிடப் பிரணவ மொழி - உறுதியிது
நீதியாய்த் திறக்குமே சுழி. o
எனறு
ஆதிமூலமான நாதத்தையும் அதில் ஒளிரும் அருட்பெரும் ஜோதியையும் கண்டு களிக்க பிரணவ மொழியாகிய ஓங்காரத்தின் மெயப்ப்பொருளை குருமூலமாக அறிந்து தெரிந்து ஒதிவந்தால் செய்யும் அறத்தின் தன்மைக்கேற்ப சுழிமுனையென்னும் பரவெளி வாயில் திறந்து பேரின்ப சாகரத்தில் திளைக்கலாம். இது உறுதியான சத்திய வார்த்தை என்றும்.

47
எங்குமே நிறைந்தொளி போல் கங்குகரை இன்றியொரு பங்கமற் றிருக்கின்ற தையா - அதே பிரமம் தங்கிடு முனதுள்ளத் தையா
என்று அண்ட பகிரண்டமெலாம் நீக்கமற நிறைந்து நிற்கும் அருளொளி மயமான சைதனிய பிரமம் உன்னிடத்திலே உள்ளது. அதை நீ உன்னிடத்தில் நிலை பெறச் செய்யவேண்டும் என்கிறார்.
அந்தப் பிரமமே பிரமனாகப் படைத்தலைச் செய்கிது. அதன் ஆக்க சக்தியாக அமைவது கலையாகிய கலைமகள். அந்தக்கலையே பூரணம். அதனால் தான் “கலை நிறை கணபதி” என்று பிரணவ சொரூபனை போற்றினார் வள்ளல் பெருமான்.
அருணகிரியோ முற்கூறிய அனைத்தையும் சுருக்கமாக
நாத - விந்து - கலை. ஆதி நமோ நம வேத மந்திர சொரூபா நமோநம
என்று கூறினார். ஆம் . நாதமி , விந்து, கலை மூன்றும் அனாதியானவை. அவையே வேத மந்திரத்தின் உட்பொருளான ஓம் எனும் பிரணவம்,

Page 26
48
பிரணவரின் பாவநாச யாகம்
தமிழக அரசின் முதலாவது பாரதி விருது பெற்ற கவிமாமணி மதிவண்ணன
ஆதி மூல பிரணவரின்
பாவ நாச யாகம்
ஜோதியாகி சூழ்ந்து நமது
துயரமெலாம் ஒட்டும்!
வன்முறையால் நமது வாழ்வு
வாடியன்றோ போகும்!
நன்முறையாம் வேள்விசெய்து
நலமனைத்தும் பெறுவோம்!
அனைவருமே ஒன்று சேர்ந்து
ஆதி மூலம் என்றால்
இனி வருமோர் காமெலாம் இதய சாந்தி பூக்கும்!
கனியிருப்பக் காய்கவர்தல் கட்டாயம் தீது! மனை சிறக்க மனம் சிறக்க
மந்திரமே ஒது!
“காவியம்”
6/15, நேதாஜி தெரு, சீனிவாசநகர், பெருங்களத்தூர், சென்னை - 600 063.


Page 27