கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணக் காவியம்

Page 1


Page 2


Page 3

யாழ்ப்பாணக் காவியம் THE EPIC OF JAFFMNA
26990
ஆக்கியோன : மாவிட்டபுரம்
O திரு. க. சச்சிதானந்தன், B. A. (Hons) Lond; M. Phil. Lond. மதுரைய் பண்டிதர் பலாலி ஆசிரிய கலாசாலை, முன்னாள் உளவியல் விரிவுரையாளர், உப அதிபர்,
வானியல் வல்லுநர்.

Page 4
The Manuscript of Verses Written in 1967. May
Author:K.Sachithananthan B.A(hons)Lond.
Tjtle
Year
Size
Type Setting:
Printing
Binding
CopyRight
M.phil. London Madura Pandit Mavittapuram, Tellippalai Sri Lanka.
The Epic of Jaffna
1998
Demi one eighth
Jeya Graphics
: Navayoga Printers
: Navayoga Printers
: Author: K.Sachithananthan Mavittapuram,
Tellippalai.

யாழ்ப்பாணக்காவியம் பொருளடக்கம்
556 யாழ்ப்பாண அரசின் நாணயங்கள் A - B யாழ்ப்பாண அரச மாளிகை முகப்பு C
செய்யுள் எண் யாழ்ப்பாணக் காவியம் யாழ்ப்பாணக் காவியக்கதைக்கரு யாழ்ப்பாணக் காவிய பாத்திரங்கள் யாழ்ப்பாணக் காவிய நிகழிடங்கள் பிறப்புப் பாயிரம் 36 பாயிரம் 5
காப்பு -
நூல் அடிமைப்பருவம்
1. மறைக்காட்டுப்படலம் 141 2. பூங்கொடியைப் பிரிந்த படலம் 38 3. கூத்தியவத்தைப் படலம் 35 4. தலைவர்கள் கூடு படலம் 57 5. கஞ்சுகங்கனன்ற படலம் 28 6. தன்பமாலை 32 7. பரராசன் படலம் 44 8. மாளிகைகாண் படலம் 13 9. தலைமைதேடு படலம் 23 10. சிறைபுகு படலம் 60
பக்கம்
I - VI
VII - X
X- XII
XII - XIV
XV - X I X
XX
1 - 20
20 - 25
25 - 29 29-37
37-41
41 - 45
45 - 50
51-52
52-55
56-63

Page 5
செய்யுள் எண் ஆயத்தப்பருவம்
11. காளைவிடு படலம் 62 12. மந்திரப் படலம் 28 13. நினைந்துருகு படலம் 52 14. பணிச்சவனப் படலம் 63
15. பாலாவிப் படலம் 28
16. வாசுகிப் படலம் 104 17. ക്രങ്ങങ്ങ് அடைந்த படலம் 19 18. மக்களின் நிலைப் படலம் 43 19. பூங்கொடிதாதுப் படலம் 23 20. கஞ்சுகத்திற்கு மணம் பேசு படலம் 104
போர்ப்பருவம்
21. கஞ்சுகத்தைக் கவர்ந்த படலம் 43 22. மைந்தர் போரணி வகுத்த படலம் 16 23. முதலாம்நாட் போர் 64 24. மனுப்புலி மனமாற்றப் படலம் 39 25. இரண்டாம் நாட் போர் 58 26. மூன்றாம் நாட் போர் 46 27. நான்காம் நாட் போர் 50 28. ஐந்தாம் நாட் போர் 49 29. ஆறாம் நாட் போர் 37 30. ஏழாம் நாட் போர் 35 31. எட்டாம் நாட் போர் 67
பக்கம்
64 - 72
73-76
76 - 83
83-91
92-95
95 - 109
109 - 12
112 - 117
18 - 120
121 - 34
34 - 140
140 - 42
142 - 151
152 - 157
157 - 165
165 - 171
71 - 178
78 - 84
184 - 189
90 - 194
194 - 203

யாழ்ப்பாணக்காவியம்
செய்யுள் 32. ஒன்பதாம் நாட் போர் 131 23. பத்தாவது நாட் போர் 71
இன்பப்பருவம்
34. விடுதலைப் படலம் 44 35. முறையீட்டுப் படலம் 34 36. முடிகட்டு படலம் 81 37. ஆட்சிப் படலம் 143
38. பரிசளித்த படலம் 40
பக்கம்
203 - 222
222 - 231
232 - 237
238 - 242
242 - 253
253 - 273
273 - 278

Page 6
யாழ்ப்பாண அரசின் நாணயங்கள் A
 

யாழ்ப்பாண அரசின் நாணயங்கள் B
था ।

Page 7
யாழ்ப்பாண அரசின் மாளிகை முகப்பு C
 

யாழ்ப்பாணக் காவியம்
இக்காவியம் யாழ்ப்பாண அரசின் சரித்திரத்தில் கி.பி 1450 - 1467ம் ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப் பகுதியைப் பின்னணியாகக் கொண்டது.
இப்பதினோழு ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலச் சரித்திரத்தின் பிரதான சம்பவங்கள் பொதுவாக எல்லா யாழ்ப்பாணச் சரித்திர நூல்களிலும் ஒரே பெற்றித்தாய்க் கூறப்பட்டிருக்கின்றன. இக்காலத்தில் சிங்கள அரசுக்குத் தலைநகள் கோட்டை யாழ்ப்பாணத் தமிழரசுக்குத் தலைநகள் நல்லூர், கோட்டையில் ஆறாம் பராக்கிரமவாகு அரியாசனத்திருக்கிறான். நல்லூரில் கனக சிங்கையாரியன் சிங்காசனத்திற் செம்மாந்திருக்கிறான். வண்ணிப் பிரதேசத்தில் வன்னிச் சிற்றரசர்கள் வாழ்கின்றனர். ஆறாம் பராக்கிரம வாகுவின் வளர்ப்புப் பிள்ளையான சமுமால் குமாரையன் (சண்பகப் பெருமாள், சபுமால் - சண்பகம்) வன்னியர்களை வசமாக்கி, அவர்களின் உதவியோடு ஒருநாளிரவு யாழ்ப்பாணம் வந்து சதியாக முற்றுகையிட்டதால் கனகசிங்கையாரியன் தோற்கடிக்கப்படுகின் றான். அரண்மனையிலிருந்த அவனுடைய இரு ஆண் குழந்தைகளையும் பல் லக்குத் தாக்கும் சிவிகையாளன், கச்சாய்த்துறைக்குக் கொண்டுபோய், மரக்கலமேற்றி, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறான். திருக்கோவலூரிற் பலவித ஆயுதப் பயிற்சியையும் மக்களிருவரும் பெறுகின்றனர். விசயவாகு என்னும் படைத்தலைவன் உதவியோடு வன்னிய தளபதி யாழ்ப்பாண இராச்சியத்தை ஆள்கிறான். அப்பொழுது தமிழர் பலவித அடக்குமுறைகளுக்கும் இன்னல்களுக் கும் ஆளான போதும் அடங்காதிருக்கின்றனர். இந்தியாவிலிருந்து கனகசிங்கையாரியன் மக்களிருவரும் இலங்கை வந்து இரகசியமாகப் படைதிரட்டிப் போர் செய்து சிங்களவர்களிடமிருந்து மீண்டும் தமது அரசைப் பெற்று நல்லாட்சி புரிகின்றனர்.
கனக சிங்கையாரியனின் முத்தமகனான பரராச சேகரன் சிம்மா சனமேறகிறான்.
மேற்குறிப்பிட்ட காவியக் கதையின் பதினேழு ஆண்டுகளின் பிரதான சரித் திரம் பொதுவாக எல்லாச் சரித்திர நூல்களிலும் ஒரேபெற்றித்தாய்க் கடறப்படுகின்றது. ஆங்காங்கே சில சில சிறு சிறுபகுதிகள் மாறுபட்டுக் கிடக்கின்றன. ஆதாரமுள்ள சரித்திரத் தரவுகள் கிடைக்காதபோது, அவற்றைப் பொருத்துவதற்குச் சரித்தி ராசிரியர்கள் தமது ந ண்ணறிவையும் அபிப்பிராயங்களையும் பிரயோகித்துள்ளனர்.
ل

Page 8
யாழ்ப்பாணச் சரித்திர நூல்களிலுள்ளவற்றைப் பலர் பலவாறாக விமர்சனம் செய்துள்ளனர். அவற்றை மீண்டும் இங்கே தரவேண்டிய அவசியமில்லை. ஆனால் இக்காவிய சரித்திர காலமாகிய பதினேழு ஆண்டுகளில் நிகழ்ந்தவற்றை வெவ்வேறு நால்கள் எவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றன என்பதைச் சுருக்கிப் பார்த்தால் அவையெல்லாம் பிரதான சம்பவங்களை ஒருபெற்றித்தாகவே தருகின்றன என்பதை அறியலாம். அதனால் இக்காவியக் கதையைக் கூறும் சம்பவங்கள் பல நூல்களிலுமிருந்து திரட்டப்பட்டுள்ளன. ஒன்றில் இல்லாத தரவுகள் மற்றொன்றில் காணப்பட்டன. அவையெல்லாவற்றையும் கோவை செய்தே இக்காவியக்கதை எழுதப்பட்டது. நூல்களின் விவரங்கள் இறுதியிற் கொடுக்கப் பட்டுள்ளன.
நால்களை விட இன்னும் ஆராயப்படாத கருங்கல் வேலைகள் இலங்கையில் வடகீழ் பாகக் காடுகளிலே நிறையக் காணப்படுகின்றன. 1958ம் ஆண்டு சிறியேன் நெடுங் கேணியிலிருந்து மருதோடை வழியாகக் காஞ்சிரமோடை சென்று அங்கிருந்து காட்டுப்பூவரசங் குளத்தைக் கடந்து பணிச்சமடு என்னுமிடத்துக்குப் பலமுறை செல்லவேண்டியிருந்தது. இங்கு குறிப்பிடும் காடு மிக அடர்ந்தது. கொடிய வனவிலங்குகளும் பேராபத்தக்களும் நிறைந்துள்ளன. பனிச்சமடுவென்னும் ஏரியின் கரையிலே சிலநாள் வசித்த சிறியேன், மிக உயர்ந்த பாலை மரமொன்றின் உச்சியில் மூன்றாம் அடுக்குப் பரணில் நித்திரை செய்து வந்தேன். ஒருநாள் நள்ளிரவில் கடலிரைவது போல் நீரின் ஒசை கேட்டுப் பயந்தேன். ஆனால் நீர்ப்பெருக்கு சிறியேன் இருந்த இடத்தை அடையவில்லை. மறுநாள் சிறியேனும் வேறு பணியாளர்களும் பாதையற்ற காடுவழியே நீரோசைத் திசைநோக்கிச் சென்றோம். அக்காடுகளிலெல்லாம் இடிந்த பிள்ளையார் கோவில்களும், சிவன்கோவில்களும், தாண்களும் தாபிகளும் வாயிற்படிகளும் காணப்பட்டன. கருங்கல் வேலைகளும் சிற்பங்களும் அங்கங்கே போன வழி யெல்லாம் சிதறிக் கிடந்தன. ஈற்றில் ஒருயர்ந்த பிரதேசத்துக்கு வந்தபொழுது, கருங்கல்லாற் கட்டப்பட்ட ஒரு பெரிய அணைக்கட்டுக் காணப்பட்டது.
அங்கு பிரயோகிக்கப்பட்ட நீள்சதுரக் கனவடிவக் கருங்கற்கள் மிகப்பிரமாண்ட மானவை; அன்றியும் கருங்கல் வேலை மிக உன்னதமானது. அணையின் நடு விலே சில கருங்கற்கள் குலைந்தமையால் அந்த இடைவழியாக நீர் மிக உயரத்திலிருந்து குதிக்கிறது. ஒரு நீர்வீழ்ச்சிபோன்று குதிப்பதால் பேரிரைச்சல் உண்டாகிறது. விழுமிடத்தில் மிகப் பலமாக நீர்சுழன்று அகப்பட்டவற்றைப் பல பரிவலுவுடின் இழுத்துச் செல்கிறது. கால்வைக்கப்பயமாக இருக்கும். வழிந்த நீர் சிற்றாறு போல் ஒடுகின்றது. அதன் இருமருங்கிலும் கண்ட இயற்கைக் காட்சியை என்னென்பது பூக்களின் மகரந்தம் சொரிந்து, பசுமை கலந்தபொன்போன்று
I

நிலத்திற் பரந்திருப்பது நெஞ்சை அள்ளுகிறது. எத்தனை வண்ணச் சேர்க்கைகள் கொண்ட வண்ணாத்திப்பூச்சிகள்! விதம் விதமான புள்ளிசைகள், மிருகங்களின் உறுமல்கள்! இந்த நீர்வீழ்ச்சியின் ஓசை மனத்தைப் பறையடித்துக் கிளர்த்தியது. அதன் உன்னதம் உள்ளத்தை மீட்டியது. அந்த எழுச்சியே இக்காவியத்தைப் பாடுவதற்குச் சுருதியாயிற்று.
பின்னர் காஞ்சிர மோடையில் வாழ்ந்த முத்தரம்மான் என்ற மூத்தோரை இதன் வரலாறு பற்றிச் சிறியேன் கேட்டேன். அவர், "இது பரராசன் அணைக்க்ட்டு என்று கூறினார். இங்கு கருங்கற்களில் பல எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவை மங்கியிருந்தன. இவ்வணைகட்டுப் பற்றிச் சரித்திரநால்களில் தேடியபோது ஒன்றுங் கிடைக்கவில்லை. இப்பிரதேசம், வட, வடமத்திய, கீழ் மாகாணங்கள் பொருந்தமிடத்தில் தமிழ்ப் பிரதேசத்தில் உள்ளது. பதவியாவின் வடக்கே பத்துப் பதினொரு மைல் தாரத்திலுள்ளது. புறோகியர் என்பார். புறோகியர் (BrOhior 1934 P 41) இது பற்றிக் குறிப்பிட்டிருப்பவற்றைக் கீழே மூலத்திலுள்ளவாறு ஆங்கிலத்தில் தருகின்றோம்.
"AbOut ten Or eleven miles down more Or less sinuous course of Md. Oyo, which posses out the bredch of Podoviyo tonk, there is on Oncient Stone dom or weir which is entitled to toke One of the foremost ploce Omong the structures of the kind in Ceylon. This is known CIS VCrnССli POldm,
Only One Cauthority hos ever inspected this monument Of lobOur.
PCrker Sessiono poper,
XX1 1 Of T 886
வண்ணாத்தி பாலசிமண்று இதை வழங்குவர். கீழ் மாகாணத்தில் இயன் ஓயாப் பகுதியிலும், ஒரு வண்ணாத்தி பாலமுண்டு. அதனையும் இதனையும் வேறு பிரித்துக் கொள்க. இந்த அணைக்கட்டைக் கடந்து கிழக்கே சென்றால் கொக்கிளாய் தென்னமரவடி போன்ற இடங்களை அடையலாம்.
பதவியாப் பகுதி பற்றி இந்திரபாலா (1972, பக். 95) ஆராய்ந்துள்ளார். பதவியாவிலே கண்டெடுக்கப்பட்ட சாசனம் பதிவியாவுக்கு மறு பெயர் மதீபதி கிராமம் என்று கூறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலே குறிப்பிட்ட அணைக்கட்டைச் சுற்றி எத்தனையோ இடிந்த கோவில்கள் இருக்கின்றன.
III

Page 9
கல்லெழுத்துக்கள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி எழுதிய நால்கள் கைக்கெட்டவில்லை. மக்கள் வாழுந்ததற்கடையாளமாக, கிணறுகள், பாத்திரங்கள், மனைச்சிதைவுகள் காணப்படுகின்றன. பேராபத்துக்கள் நிறைந்த பிரதேசமானபடியால் அங்கு சரித்திராசிரியர்கள் செல்லவில்லைப் போலும்! அவ்வாறே மன்னாரின் தென்கிழக்குப் பகுதியிலும் மறிச்சுக் கட்டியின் கிழக்கேயுள்ள காடுகளிலும் கருங்கற் சிற்பவேலைச் சிதைவுகள் காணப்படுகின்றன.
பத்மநாதன் (1970 பக். 66-68) பரராசமகாராசாவின் பட்டயம் பற்றிக் குறிப்பிடுகிறார். பதவியாவிற் கண்டெடுக்கப்பட்ட கிரந்த எழுத்துக்களிலுள்ள வடமொழிக் கல்வெட்டில் லோகநாயகன் என்ற தண்டநாயக்கன் பற்றிக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறுகின்றார். ஆரியச் சக்கரவர்த்தியின் தளபதிகளுள் ஒருவனாகியிருக்கலாம். யாழ்ப்பாண அரசின் சின்னமான சேதுவும் குறிப்பிடப்பட்டுள்ளதாகச் சான்று பகர்கிறார்.
காவியத்தில் இப்பிரதேசங்கள் நிகழ்ச்சிக்களனாக வருகின்றன. கனககுரியனின் முத்தபுதல்வனான பரராசசேகரன் (பரராசசேகரன், செகராசசேகரன் என்பன பட்டப் பெயர்கள் என்பதை மனத்திற் கொண்டே எழுதப்படுகின்றன.) இங்குதான் யாழ்ப்பாண அரசை மீண்டடைவதற்குச் சில ஆயத்தங்கள் செய்தான் என இக் காவியம் கூறுகின்றது. அவன் தம்பிதிருக்கேதீச்சரத்தையடுத்த காட்டிலும் மறிச்சுக் கட்டிப் பிரதேசத்திலும் கரந்து வாழ்ந்தான் என்றும், அவன் காஞ்சிர மோடைப் பகுதிக்குச் செல்லும்போது, வன்னிச் சிற்றரசியைச் சந்தித்தானென்றும் இங்கு கூறப்பட்டிருக்கிறது. இவை சரித்திர நூல்களிற் காணப்படாதவை. காட்டுப் பூவரசங்குளம், காஞ்சிரமோடை தென்னை மரவடி என்ற இடங்களில் வாழ்ந்த வயோதிபர்களிடையில் பெற்ற கண்ணபரம்பரைக் குறிப்புக்களிலிருந்து இவை எழுதப்பட்டன. ஆனால், அடியேன் சரித்திர ஆராய்ச்சி செய்யத் தகுதியுடையவனல்லேன் என்பதை மனத்திற் கொள்க.
இப்பதினேழு ஆண்டுகளில் (1450 ~ 1467) வன்னிச் சிற்றரசர்களின் வரலாறு இருந்த வகையைத் திரட்டிப் பார்ப்பது சிரமமாயிருக்கிறது. எனினும் வன்னித் தலைவன் ஒருவனே யாழ்ப்பாண அரசை இக்காலத்தில் சபுமால் குமாரையனின் தளபதிகளான, விஜயபாகு, புவனேகபாகு என்பாரோடு ஆண்டான் என இக்காவியம் குறிப்பிடுகின்றது. இக்காலத்தில் வன்னி, கோட்டை யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மக்கள் வாழ்க்கை முறை அமைந்திருந்த முறையை மீள
|V

அமைப்பதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட சரித்திரத் தரவுகளிலிருந்தும் சரித்திராசிரியர்கள் கூறிய விமர்சனங்களிலிருந்தம், அத மீண்டமைக்கப்பட்டது. உதாரணமாக, சபுமால் குமாரையன் என்னும் சண்பகப் பெருமாள் யாழ்ப்பாணத்தரசை வென்றபின் தமிழ் மக்களைக் கொடுமையாக நடத்தினான் என்று யாழ்ப்பாணச் சரித்திர நால்கள் (Brito -C, 1879, பக் 24, முத்தத்தம்பிப்பிள்ளை 1933, பக் 43, பொன்னுச்சாமிப்பிள்ளை 1929 பக் 17-19, வேலுப்பிள்ளை, 1918 பக், 24~ 30) கூறுகின்றன.
சுதந்தரத்தை இழந்த யாழ்ப்பாண அரசு மீண்டும் சுதந்தரத்தைப் பெற்ற வரலாறே காவியக்கருப் பொருள்.
அநேகமாக எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சரித்திரச் சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டதால், இக்காவியம் உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. எனினும் நண்ணிய சம்பவங்களும் பாத்திர அமைப்புக்களும், சரித்திரத்துக்கு முரண்படாது, காவிய இலக்கணங்களை உள்ளத்திற் கொண்டு சிருட்டிக்கப்பட்டவை.
வாசுகி பூங்கொடி என்ற பெண் பாத்திரங்களின் வனைவுகள், காவியத்திற்கேற்பப் பொருத்தப்பட்டுள்ளன. தென்னாட்டுத் தொடர்பும், பிறநாடுகளின் நண்பும் சரித்திரத்திலிருந்து இயைக்கப்பட்டன. வடக்காரன் என்ற முசிலிம் போர்வீரனின் பெயரும் இவ்வாறே எடுக்கப்பட்டது. புவனேகவாகு, விஜயபாகு என்ற தளபதிகளின் பெயர்கள் நால்களில் வருவதை இதன்பின் வரும் நால்வரிசைகளை வாசித்தறிலாம். பிரதான கிராமங்களின் பெயர்கள் இன்று வழங்குபிவையே. முள்ளி ஆயம், கச்சாய்த்துறை, வேதாரணியம், தொண்டைமானாறு, சின்னமலைக்குகை, பருத்தித்துறை, மயிலிட்டி, காங்கேசன்துறை, ஊர்காவற்றுறை என்பன இன்று வழங்குமாறே காவியத்தில் வருகின்றன. போர்நிகழ்ந்த பிரதான களம் கோம்பையன் மணல் , அராலிவெளி என்றும், இரண்டாம் களம் பூநகரி என்றும் காவியத்தில் வருகின்றது. பூநகரி வழியாகத் தம்பதேனியா சென்று, தென்னிலங்கையிற் கோட்டையென்னுமிடத்தையடையும் தரைமார்க்கப் பாதை, நால்களிலிருந்தும் சிதறிய சரித்திரச் சம்பவங்களிலிருந்தம் , கண்ணபரம்பரைக் கதைகளிலிருந்தம் உய்த்துணரப்பட்டத.
எனவே இக்காவியம் உண்மைச் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் சரித்திர நூலன்று. சரித்திரம் நாகரிக மோதுதலைக் காட்டுவது. அவ்வளவில், இது சரித்திரப் பயனுடையது.
V

Page 10
இங்கு கூறப்பட்ட சம்பவங்களுக்கு அதாரமான நூல்களாவன :~
மயில்வாகனப் புலவர், யாழ்ப்பாண வைபவமாலை. 1736.
பதிப். முதலியார் குலசபாநாதன் சரஸ்வதிபுத்தகசாலை,175,செட்டித்தெருகொழும்பு. தவறின கயிலாய புராணம். செகராசசேகரன் பதிப். சிவசிதம்பர ஐயர் 1887. பொன்னையா வைத்தியர், ஜ, பரராசசேகரம்
யாழ்ப்பாணத்து வைத்திய நூல் வெளியீடு. Brito, C, Yalpanavaipava Malai. 1879.
வேலுப்பிள்ளை, க. யாழ்ப்பாண வைபவ கெளமுதி. 1918, шёѣ 24
பொன்னுச்சாமிப்பிள்ளை. சு. யாழ்ப்பாண வைபவம்,
சச்சிதானந்த யந்திரசாலை. அட்சய பங்குனி 1927.
ஞானப் பிரகாசர், சுவாமி. யாழ்ப்பாண வைபவ விமர்சனம்,
ஞானப்பிரகாச யந்திரசாலை, அச்சுவேலி 1928.
guT3 biTuasib, C. History of Jaffna in Tamil
யாழ்ப்பாணச் சரிததிரம்,
Sri Shanmuganatha Press Jaffna. 1933, 73 - 80
முத்துத் தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம்
நாவலர் யந்திரசாலை யாழ்ப்பாணம். 1923, பக் 44.45 , Sivaratnam. C. The Tamils in Early Ceylon
United Merchant Ltd, 71, Old Moor Street, Colombo 2. 1968.
பத்மநாதன், C.DR. வன்னியர்.
சைவப்பிரகாச யந்திரசாலை.
இந்திரபாலா. கா. யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்.
National Printer, Kandy. 1972.
Pathmanathan. S. History of Jaffna.
Pub. Arul Rajendran. 1978.
Brohier - Ancient Irrigation works. Part I
GOverment PreSS, Publication Bureau. 1934.
Parker Serrional Paper xxiii of 1886, P. 41. "AbOutten Or even miles down the more............ rOUrrert
of abour".
V|

யாழ்ப்பாணக் காவியக் கதைக்கரு இக்காவியக் கதையின் காலம் கி.பி. 1450 -1467
யாழ்ப்பாணத்து நல்லூரைத் தலைநகராகக் கொண்டு கனகசிங்கையாரியன் அரசாள்கிறான். ஒருநாளிரவு நிசிவேளையில், சபுமால் குமாரையன் என்னும் சண் பகப் பெருமாள், கனசிங்கையாரியனின் சேனைத்தளபதியாகிய வன்னியனைத் தன்வசமாக்கிச் சதியாக நல்லூர்க் கோட்டையை முற்றுகையிடுகிறான். கனகசிங்கை யாரியன் விழித்தெழுந்து போரிடுகிறான். நித்திரை செய்து கொண்டிருந்த அவன் குழந்தைகளிருவரையும் பல்லக்குத் தாக்கும் சிவிகையாளன், தாக்கிக்கொண்டு குதிரையில் கச்சாய்த்துறைமுகத்துக் கோடுகிறான். அவனைச் சண்பகப் பெருமாளின் குதிரை வீரர்கள் பின் தொடர்ந்த தரத்தகிறார்கள். சிவிகையாளன் கச்சாய்த் துறைமுகத்தில் நின்ற ஆழ்வான் என்னும் படகோட்டியிடம் குழந்தைகளைக் காப்பாற்றுமாறு ஒப்படைக்கிறான். ஆழ்வான் கடல்வழியாகக் குழந்தைகளைக் கொண்டு தென்னிந்தியாவுக்குச் செல்கிறான். போகையில் யாழ்ப்பாணம் எரியும் தீச்சுவாலையைக் கண்டு செல்கிறான்.
குழந்தைகளைக் கொண்டு சென்ற ஆழ்வான் மறைக்காடென்னும் வேதாரணியத்தை அடைகிறான். அங்கிறங்கி, குழந்தைகளை வளர்த்து, போர்ப்பயிற்சியும் பெற ஏற்றன செய்கிறான். குழந்தைகள் குமாரப் பருவமடைகின்றனர். ஒருநாளிரவு ஆழ்வான் நோயினால் சாகும் தறுவாயில் அக்குமாரரிருவரையும் கூப்பிட்டு, ‘மக்களே நீங்கள் என்பிள்ளைகள் அல்லர், நீங்கள் யாழ்ப்பாண மன்னன் கனசிங்கையாரியனின் பிள்ளைகள். உங்கள் நாடும் இதுவன்று. என்று கூறித் தனது கால் மாட்டிலே ஒரு இடத்தைக் காட்டுகிறான்."இங்கே நீங்கள் வெட்டினால் அரச சின்னங்களும், உங்கள் வரலாறு குறிக்கப்பட்ட ஏடும் உள்ளன என்று கூறி விண்ணுலகடைகின்றான்.
அவனுடைய ஈமக்கிரியைகளை வேதாரணியக் கடற்கரையில் அம்மன்னன் மக்கள் முடிக்கின்றனர். அவன் கூறியவாறு ஏட்டை எடுத்துப் பிரித்து வாசித்து ஈழத் தமிழகம் கனகசிங்கையாரியனின் போர், குமரர்களைக் கொண்டு வந்த வரலாறு என்பவற்றை அறிகின்றனர். உடனே குமரர்களிருவரும் இரகசியமாக யாழ்ப்பாணம் செல்லப் புறப்படுகின்றனர். இருவரில் இளையவனாகிய செகரா சசேகரன் (மூத்தவன் பரராச சேகரனென்றும், இளையவன் செகராச சேகரன் என்றும் பட்டப் பெயர் பெற்றவர்கள்) பூங்கொடி என்னும் பண்டியச் சிற்றரசன் மகளைக் கண்டு, பிரியாவிடை
VI

Page 11
கேட்கிறான். அவனை மனமாரக் காதலித்த பூங்கொடி விட்டுப் பிரிய மனமில்லாமல் கலங்குகிறாள். எனினும் விடை பெற்றுத் தமையனோடு சென்று, இருவரும் யாழ்ப்பாணத்துத் தொண்டைமானாற்றுக் கருகேயுள்ள சின்னமலைக்கருகே வந்திறங்குகின்றனர்.
கனகசிங்கையாரியன் போரில் விழுப்புண்பட்டு வீரமரணம் எய்தினான். சிங்களப் படைத் தலைவர்களின் உதவியோடு வன்னியன் யாழ்ப்பாண அரசை ஆளுகிறான். யாழ்ப்பாண மக்கள் சொல்லொணாத் தன்பமணுபவிக்கின்றனர். சிங்கள நடையுடைகளையும், புத்த சமயத்தையும் பின்பற்றுமாறு பலவந்தப்படுத் தப்படுகிறார்கள். குதிரைகளால் பிள்ளைகள் மிதிக்கப்படுகிறார்கள். கற்பகம் என் னும் பெண்ணின் தங்கை கற்பழிக்கப்படுகின்றாள். கற்பகம் சிங்களப் படையினரைப் பழிவாங்கச் சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறாள். சைவர் சவுக்கினால் அடிக்கப் படுகின்றார்கள். எனினும் அந்நிய அரசுக்கு அடிபணியாமல் அவர்களைத் தரத் தும் வகையை யாழ்ப்பாண மக்களின் தலைவர்கள் குடாரிப்பு என்னுமிடத்தில் இரகசியமாகக் கூடிச் சிந்திக்கிறார்கள். பின்னர் இதற்கேற்ற தலைவனெருவனைப் பல ஊர்களிலும் தேடுகிறார்கள்.
இரகசியமாக வந்திறங்கிய மன்னன் குமாரர்கள், யாழ்ப்பாண மக்களின் மனநிலையையுணர்ந்து இரகசியமாகப் போர்ப்படை திரட்டுகிறார்கள். ஆயுதங்களும் உருவாகின்றன. மூத்தவனாகிய பரராச சேகரன் நல்லூர்க் கோட்டையையும், அரண்களையும் பார்ப்பதற்காக இரத்தின வியாபாரியாக மாறுவேடம் பூண்டு, வன்னியன் மகள் கஞ்சுகத்தை அடைகிறான். சிங்கள நடையுடை பாவனைகளை ஏற்க மறுக்கும் கஞ்சுகம் இரத்தின வியாபாரியில் காதல் கொள்கிறாள். அன்றியும், அரண்மனை உட்பாகங்களையும் அவன் பார்க்க உதவுகிறாள். இரத்தின வியாபாரியில் ஐயங் கொண்டு, அவன் நடத்தைகளைக் காவலர் வன்னியனுக்கறிவிக்க அவன் அவ்வியாபாரியைச் சிறையிலிடுகிறான். கோம்மையன் மணல் என்றவிடத்திலே, ஒரு அரங்கமைத்து அடக்கமுடியாத முரட்டுக்காளையை இவன்மேல்விட ஒழுங்கு செய்கிறான்.
இளையவனாகிய செகராசசேகரன், தமையனை மீட்பதற்கு, இரகசியமாக போர்வீரரைப் பலவித மாறுவேடங்களிலும் கோம்பையன் மணல் அரங்குக்கு அனுப்புகிறான். அங்கே காளையைப் பரராச சேகரன் வீழ்த்தியதும், அவனைக் கொல்லுமாறு வன்னியண் தன்வீரர்களை ஏவுகிறான். இதற்கிடையில் அரங்கைப் பார்வையிடுவார் போல மாறுவேடத்திலிருந்த செகராசசேகரனின் இரகசியப் போர்
VII

வீரர்கள், போர் செய்து, பரராசசேகரனைக் குதிரையிலேற்றிக் கொண்டு செல்கின்றனர். ஒரே குழப்பமும் கூச்சலும் நிலவுகிறது.
இவ்வாறு காட்டினுட் செல்கையில் செகராச சேகரன் திருக்கேதீச்சுரப்பகுதியை அடைகிறான். தமையனைத் தேடிக் கிழக்கே தன் போர் வீரர்களோடு செல் கிறான். இடையில் வன்னி அரசின் தலைவியாகிய வாசுகியினாற் சிறைபிடிக்கப் படுகிறான். பின்னர் வாசுகி, சிறையிலிருந்த செகராச சேகரனின் அழகில் மயங்கி அவனை மணக்க விரும்புகிறாள். திருமணம் நடந்தேறுகின்றது. செகரராச சேகரன் அவளோடு தமையனைத் தேடிக் காண்கிறான்.
சிங்களத் தளபதியாகிய விசயவாகுவுக்குக் கஞ்சுகத்தை மணமுடித்துக் கொடுத்தால், வன்னியனின் அரசு நிலைக்குமென்றும், சிங்கள மன்னனின் உதவி பெருகுமென்றும் வன்னியனின் மந்திரிமார் சொல்ல, அதன்படியே வன்னியனுக்கும் கஞ்சுகத்தை மணமுடித்துக் கொடுக்க இசைகிறான். மணஞ்செய்ய ஆயத்தங்கள் நிகழ்கின்றன. இதற்கிடையில் பரராசன் கஞ்சுகத்தை அந்தப்புரத்தில் அவளிருந்த அறையின் சாளரத்துக்கூடாகக் கண்டு பேசுகிறான். அவன் போகும் போது வீதியிற் போர் நிகழ்கின்றது.
குறித்த நாளில் மணம் நிகழ்த்தக் கோட்டை அரசிருந்த பராக்கிரமவாகு, பல பரிசங்களையும் அனுப்புகிறான். யானை நிரை, குதிரைநிரை, சிங்களமாதர் தந்தப்பேழைகள் என்பன தம்பதேனியா வழியாகப் பூநகரியை நோக்கி வருகின்றன. பனிச்சமடு என்னும் காட்டுப் பகுதியில் இரகசியமாகப் போர்வீரர்களைப் பயிற்றிக் கொண்டிருந்த பரராசசேகரன் இதனை அறிகிறான். வனத்திலே குறுக்கிட்டு மாதர்களையும் குருமாரையும் போகவிட்டு ஏனையவற்றைத் தன் போர்வீரரைக் கொண்டு சிதறடிப்பிக்கின்றான். இதனை அவர்கள் நல்லூர் சென்று வன்னியனுக்கும் விசயவாகுவுக்கும் முறையிடுகின்றனர். திருமண ஓரையில் கஞ்சுகம் வந்து கொண்டிருக்க அவளைக் குதிரையில் தாக்கிக் கொண்டு, பரரர்சசேகரன் பறக்கின் றான்.
கனகசூரியன் குமரர்களே இவ்வாறு வந்தவர்கள் என்றறிந்த வன்னியனும், படைத்தளபதிகளாகிய புவனேகவாகுவிஜயவாகு ஆகியோரும் அவர்களைத் தேடுகின்றனர். இதனால் போர் மூளுகின்றது.
அராலிவெளியும், பூநகரியும், இரு போர்க்களங்களாக அமைகின்றன.
வன்னியனோடு மாப்பாணன் மனுப்புலி போன்றோர் விசுவாசமுடையவராக
IX

Page 12
நின்று போரிடுகின்றனர். முதனாட் போரின்பின் மனுப்புலி மனம் மாறி, பரராச சேகரன் படையோடு சேர்கிறான். அவன் மனைவியை வன்னியன் சிறையிலிடுகிறான். தங்கை கற்பழிக்கப்பட்ட வஞ்சந்தீர்க்க காலம் பார்த்து வன்னியனின் கோட்டையிலிருக்கும் கற்பகம் அவளுக்குக் காவலாகிறாள். அன்றியும் கோட்டை யின் இரகசியங்களைப் பரராசசேகரனுக்கறிவிக்கும் உளவாளியுமாயிருக்கிறாள்.
அராலி வெளியில் மேற்குப்புறம் பரராச சேகரன் செகராச சேகரன் அணியும் கிழக்கே சிங்களரும் வன்னியனும் சேர்ந்தெடுத்த அணியும் எதிரெதிராகப் போரிடுகின்றன. வடபாகத்தக் கடற்கரையிற் கப்பற்போரும் நிகழ்கிறது. பத்தநாட் போரின்பின், நல்லூர், பரராசசேகரன் செகராசசேகரன் ஆகிய இருவரின் வசமுமாகிறத. பரராசசேகரன் முடிசூடுகிறான். கஞ்சுகத்தை மணமுடிக்கிறான். இருவரும் யாழ்ப்பாண அரசைப் புனரமைத்து நல்லாட்சி செய்கின்றனர்.
யாழ்ப்பாணக் காவியப் பாத்திரங்கள் : காவியத்தில் வருமாறு
பராசசேகரன் :- கனக சிங்கையாரியனின் மூத்தமகன் செகராசசேகரன் ;~ கனக சிங்கையாரியனின் இளையபுதல்வன்
இவர்களிருவரையும் குழந்தைப் பருவத்தில் ஆழ்வான் தென் னிந்தியா கொண்டு சென்றான். அவர்கள் குமரர்களாக வளர்ந்து சிங்கள அரசைப் போரில் வென்று யாழ்ப்பாண அரசை மீட்டனர்.
ஆழ்வான் ;~ படகோட்டி. பரராசசேகரனையும், செகராச சேகரனையும் குழந்தைகளாகவிருக்கையில் தென்னிந்தியா கொண்டு சென்ற வன்.
பூங்கொடி ;~ பாண்டிய சிற்றரசன் மகள், செகராச சேகரனைக்
காதலித்தவள். -
நன்னர் ;~ சிங்களப் போர்வீரனால் சைவ சமயப் பற்றுக்காகச்
சவுக்கினால் அடிக்கப்பட்டவர்.
கற்பகம் ;~இவளுடைய தங்கை சிங்களப் போர்வீரரால் கற்பழிக்
X

கப்பட்டவள். வஞ்சந்தீர்க்கக் காலம் பார்த்திருந்தவள். வண்ணியன் ~ கனகசிங்கையாரியனின் படைத்தளபதி. சதியாக சபுமால் குமாரையனோடு சேர்ந்த யாழ்ப்பாண அரசைக் கைப்பற்றி யவன். சிங்களப் படைத்தலைவர்களோடு யாழ்ப்பாண அரசை ஆண்டவன். சபுமால் தமாரையண் அல்லது சண்பகப்பெருமாள்;~கோட்டை நகரிலிருந் தாண்ட ஆறாம் பராக்கிரம வாகுவின் வளர்ப்புப் பிள்ளை. யாழ்ப்பாண அரசை வன்னியனோடு சதி செய்த
கைப்பற்றியவன்.
dgulbl ;~ ஆழ்வானின் தாய். கற்கோவளத்தில் வாழ்ந்தவள். கஞ்சுகம் :~ வன்னியனின் ஒரேயொரு மகள். சிங்கள நடையுடை
களைப்பின்பற்றாது எதிர்த்தவள். பரராசசேகரன இரத்தின வியாபாரியாக மாறுவேடங்கொண்டு நல்லூர் மாளிகைக்கு வந்தபோத அவனைக் காதலித்தவள். பரராசசேகரன் அவளை மணப் பந்தலில் வரமுன் தாக்கிக் கொண்டு குதிரையிற் கொண்டோடினான்.
புவனேகவாத ;~ சபுமால் குமாரையன் படைத்தளபதிகளில் ஒருவன்.
விஜயவாத ;~ சபுமால் குமாரையனின் இன்னொரு படைத்தளபதி
இவர்களிருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து வன்னியன் அரசாள உதவியவர்கள்.
blu Tehidë ;~ வன்னியச்சிற்றரசி. செகராசசேகரனைச் சிறையிட்டவள். பின்னர் அவனைத் திருமணம் புரிந்து, யாழ்ப்பாணத்தை மீட்க எழுந்த போரில் பரராச சேகராச சேகரருக்குதவியவள். − メ
ஆறாம் பராக்கிரமவாத ~ காவிய காலம் கோட்டை நகரில்
அரசாண்டவன். உலகுடையதேவி என்னும் தமிழ்ப் பெண்ணை விவாகம் செய்தவன். இவன் சபுமால்குமாரைய. னென்னும் சண்பகப் பெருமாளை வளப்புப் பிள்ளையாகக் கொண்டவன்.
X

Page 13
மாப்பாணன் ~ கனகசிங்கையாரியனின் படைத்தலைவர்களில் ஒருவன்.
மனுப்புவி ~கனகசிங்கையாரியனின் படைத்தலைவர்களில் ஒருவன்.
இவன் வன்னியனோடு போர்த்தளபதியாயிருந்து, ஒரு நாட்போரைவென்று கொடுத்தவன். பின்னர் இரவோடிரவாக பரராச சேகரனைச் சேர்ந்தவன். பரராச சேகரனுக்கு ஒரு நாட்டளபதியாகச் சென்று போரை வென்றவன். இவன் மனைவியை வன்னியன் சிறைபிடித்தான்.
இராமநாதன்:~பரராசசேகரனின் பிரதான படைத்தலைவன்.
யாழ்ப்பாணக் காவியம் ! நிகழ்ந்த இடங்கள். காவியத்தில் வருமாறு. வேதாரணியம் அல்லது மறைக்காக ;~ தென்னிந்தியாவில் யாழ்ப்பாணத்
தக்கு மிக அண்மையானவிடம்
சின்னமலை :- தொண்டைமானாற்றுக்கும் வல்வெட்டித்துறைக்கும் இடை யில் கடற்கரைக்குன்றாக அமைந்தது.
கச்சாய் ;~தென்மராட்சிப்பகுதியில் உள்ள ஒரு தறை
●
முத்துச் சலாபம் :- மேற்கேயுள்ள இருதுறைகள். இங்கு மன்னார் முத்துக் குளிக்கப்படும்.
கூத்தியவத்தை ~ காங்கேசன்துறையிலிருந்து அரைமைல் தாரத்தில்
தெற்கே பாரிய மருதின் கீழமைந்த விநாகராலயம். மயிவிட்டிக்கிராமம் ;~ வடக்கே கடலிலுள்ள தறைமுகமான
மயிலிட்டியின் தெற்கேயுள்ள பழந்தமிழர் ஊர். இதனை ஆதி மயிலிட்டி என்பர். மாதகல் :~ யாழ்ப்பாண வடகடலில் மேற்கேயுள்ள ஒருதுறை. இதையடுத்து பழந்தமிழரின் பிரதான ஊர்களாகிய மாதகல், மூளாய், பண்டத்தரிப்பு, வட்டுக்கோட்டை, சித்தங்கேணி, தொல்புரம், பொன்னாலை என்பன உண்டு. புத்தார் ;~ நிலாவரைக் கண்மையிலிருந்து சிறிது தாரத்தில்
XIII

fBഖ് தமிழரின் தொன்மைமிக்க இரு ஊர்கள்.
கற்கோவளம் ~ பருத்தித்தறை முனையிலிருந்த, தெற்கே கடலோரமாக
அமைந்த பட்டினப்பாக்கம். இங்குதான் கனகசிங்கையாரியனின் புதல்வரைக் கொண்டுசென்று காப்பாற்றிய ஆழ்வான் என்னும் படகோட்டியும் அவன் மனைவியும் வாழ்ந்தனர்.
துன்னாலை ;~ கற்கோவளத்திலிருந்து தெற்கே வல்லிபுரக்கோவில்
அமைந்த இடம். இங்கு இலங்கையின் மிகப் பழைய வரலாற்றுச் சாசனம் கண்டெடுக்கப்பட்டது. இங்குள் ளோர் பொதுவாக உடல்வலி மிக்கவர்கள்.
தம்பதேனியா ;~ சிங்கள மன்னரின் ஒரு தலைநகரமாயிருந்தது.
கோட்டைத் தலைநகரிலிருந்து தம்பதேனியா வழியாக பூநகரிக்குக் காட்டினூடே ஒருதரைப்பாதையிருந்தத. கோம்மையன் மணல் :~ யாழ்ப்பாண நகருக்கு மேற்கேயுள்ளது. பழைய
காலச் சரித்திரச் சான்றுப் பொருள்கள் மூடிய மண்மேடுகளுண்டு. இதிலுள்ள வெளியில் முரட்டுக்காளையைப் பரராச சேகரன் மேல்விட வன்னியன் அரங்கமைப்பித்தான். தடாரிப்பு ;~ யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்குக் கரையோரத்தில் கடற்கரையிலிருந்து மூன்று மைல் தாரத்துக்கு அப்பால் பருத்தித்துறை மருதங்கேணித் தெருவிலுள்ள மணலூர், பூநகரி ;~ யாழ்ப்பாணக் குடா நாட்டையும் ஏனைய பெருநிலப்
பரப்பையும் இணைக்க அமைந்த தமிழரின் பழைய நகரம். இது வழியாகத் தெற்கேயிருந்துவரும் படைகளை மறித்துத் தமிழர் போரிட்டனர். காவியத்தில் இது பிரதான யுத்தகளம். பரராசசேகரன் அணைக்கட்டு :- பனிச்சமடுவிலிருந்து நான்கு மைல்
தாரத்திலிருக்கும் பாரிய அணைக்கட்டு. இலங்கையில் தலைசிறந்ததென்று பாக்கள் (Porker) என்னும் ஆங்கிலேயர் வியந்து குறிப்பிட்டுள்ளார்.
ΧΗ

Page 14
്യോങ്ങ്) :-
மட்டக்களப்பு :-
uDIsfl LLULib -
திருக்கேதீச்சுரம் :-
buttir:f بہ
அச்சுBவறி :-
ஆவரங்கால் 8 بیس
நிவாவரைக்கேணி;~
யமுனாரரி سح
SHIIEfslutaf بیحہ
இதனை வண்ணாத்தி பாலமென்று கூறுவர். கீழ் மாகாண வண்ணாத்தி பாலமும் இதவும் வேறாகும். கோணேஸ்வரர் கோயில் கொண்டருளிய மலையடுத்ததறை முக நகரம். கீழ்மாகாணத்தின் தெற்குப்பகுதியில் அமைந்த தறைமுக நகரம் தமிழரின் பழைய வரலாற்றுப்பதி. யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடலிலிருந்து ஒரு மைல் தாரத்திலுள்ள மிகப்புராதன சைவத்தலம்.சோழமகாராணி மாருதப்புர வீக வல்லியால் தாபிக்கப்பட்டது. மன்னாரையடுத்தப் பாலாவிக் கரையில் அமைந்ததும், சரித்திர காலத்துக்கு முட்பட்டதுமாகிய புராதன சிவத்தலம். போர்வீரரான வன்னியர் வாழ்ந்த காட்டுப் பிரதேசம். இன்றைய வவுனியாவை மையமாகக் கொண்ட பெருநிலப்பரப்பு. ஆயுதங்கள் இரகசியமாக வைக்கப்பட்ட இடங்கள். தொண்டைமனாற்றின் தெற்கே அமைந்த கிராமங்கள். சாவகச்சேரிபருத்தித்துறை வீதியிலுள்ளது. இங்கு காவிய காலம் ஆயக்கடவையிருந்தது. ஊருணி, காரைநகள், மாதகல், தொண்டைமானாறு, வல் வெட்டித்துறை, பருத்தித்துறை, மயிலிட்டி, காரைநகள், மாதகல் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையில் அமைந்த தறைகள். வடகடலிற் கப்பற்போர் நிகழ்ந்தது. இங்கு அடிகாணா வாவியுண்டு. இங்கு செகராச சேகரன் குதிரையை விட்டு இளைப்பாறினான்.
யாழ்ப்பாணத்து நல்லூரில் அரசிகள் நீராடும் குளம். பரராச சேகரன் படைகளுக்கும், சிங்களப் படைகளுக்கு மிடையில் நிகழ்ந்த பத்தநாட் போரின் பிரதான போர்க் களம். கோம்மையன்
மணலின் மேற்கேயுள்ளது.
XV

ύσύμύuτηiσώ
ஆயிரத் தொள்ளாயி ரத்தைம் பத்தெட்டில் ஏயின இனக்கல வரத்தின் பின்னர்யாம் தாயெனும் தமிழ்நிலம் காத்து நெல்லிட போயினம் ஒளிக்கதிர் புகாத காட்டினுள்
வடக்கொடு கீழ்வட மத்தி மாகாணம் இடைக்குறும் எல்லைகள் இணையும் கீழ்க்கரை படுக்குறும் தமிழ்நிலப் பணிச்ச மாவன மடுக்கரை அடைந்தனம் வயல்விளைத்திட
காட்டினை அழித்தநற் கழனி செய்திட மோட்டெரு மைக்குலம் பன்றி மொய்த்தன கூட்டமாய் யானைகள் குலைத்த Nத்தன நீட்டிய நெற்பயிர் நிலத்தில் லாமலே
ஓங்கிய பாலையின் உச்சி யின்கிளை தாங்கிடச் சமைத்தமூன்றடுக்கில் மேற்பரண் பாங்குற இருந்துகண் விழித்துப் பைம்பயிர் தீங்குறா வகைமிகக் காவல் செய்தநாள்
திரைகடல் உடைந்ததோ திசைகள் எட்டினைக் கரைகடந் தெழுவதோர் கால வெள்ளமோ இரைகொளப் பெருகிய ஆற்றெழுச்சியோ விரைகொளும் பேரொலி யாது மேலெழும்
என்றிரா முழுவதும் இமைகள் மூடிலோம் கொன்றிடும் அச்சமே குலைகுலைத்திட நின்றனம் இரவெலாம் நிமிர்ந்து சூரியன் குன்றிடை விடியலைக் குறிக்கு மட்டுமே
ஒலியெழு திசையினை ஒர்ந்து சென்றனம் தலையினைச் சீய்த்திடு தறுகண் முட்புதர் வலையிடும் தாறுகள் வழிவிடாக் கொடி இடையிடை முசிற்றினம் இவைகட் கூடுபோய்
XV

Page 15
தாழ்வதும் எழுவதும் தவழ்ந்த ரைந்துபோய் சூழ்வன வெட்டிமுன் தொடர்ந்து போவதம் வாழ்வன சருகிடை உடும்பு மாறுபோய் வீழ்வன விலக்கியும் விழுந்து சென்றனம்
Elgg
மட்க லங்களின் சிதைவும் வாழ்கலை வெட்கி டும்குறை விளக்குத் தாள்களும் உட்குழிந்தன செப்பின் ஒரமும் முட்க ளின் நடு கண்டு முன்செல
சாய்ந்த தாண்களும் சரிந்த கோபுரம் வேய்ந்த கற்களும் விழுந்த கற்சிலை தோய்ந்த நுண்கலைச் சுவடும் தாண்டிட ஓய்ந்த கால்செலா(து) உயர்ந்த தோர்நிலம்
ஏற ஏறநம் இடுப்பொ டிந்துமே ஆறு கின்றிலம் ஆசை முன்செல மீறு கின்றதோர் ஒலியின் பேரலை கூறு பட்டது செவியின் கோட்பறை
Bibligg
நேரிய குழியினுள் நிமிர்முளைக்கரை சேரிட அழுத்தியே பொருத்திச் செய்தது பாரிய கருங்கல் பலவடுக்கிமேற் சூரிய மண்டலம் தொடுவ தோசுவர்
படுத்ததோர் பாரிய கருங்கல் மாமலை எடுத்துமேல் நிமிர்த்திய(து) என எழுந்தது கடுத்தது கழுத்துமேல் நிமிர்ந்து கண்களோ முடித்தலை அளக்கிலாமுடிய நோக்கில
பதித்தமேற் கல்நடு விழுந்து பாடுறக் குதித்தது தடுத்தநீர் வீழ்ந்து மண்ணுறக் கொதித்தது சமுத்திரம் குலைந்து வீழ்ந்தென அவித்தது செவிடுற ஆர்த்த பேரொலி
XVI
O
II
I2
I3
I4

விழுந்த நீர் சுழன்றுபோம் வேகம் என்னிது வளைந்தபோய் மருங்கினில் அமைக்கும் மாமடுக் களைந்தநீர் தானுமே கதியிழப்பினும் இழந்தவ ராவராம் காலை இட்டவர்
வேரொடு மராமரம் சாய்ந்து தந்தலை நீரொடு இழுபட நிமிர்ந்து நிற்குமோ ஒரொரு கணத்தினுக் கொருக ணம்கரை தாரவே சென்றது தணிந்து நிற்பரார்
எட்டி நிற்பணஇரு கரையில் வீழ்மரம் முட்டி நிற்பனதலை முழுகு நீரினில்
குட்டியும் குறி தவறிடாக்கு ரங்குமே ஒட்டிநிற் பதமிதன் வேக ஒசையால்
மாற்றிலாப் பொன்றுகள் மருங்கு போர்த்திமேல் காற்றினாள் தாவிய பணிச்சங் கான்துகள் ஆற்றினாள் அணிந்ததோர் ஆடையாமென தோற்றிய அழகினைச் சொல்வ டிக்குமோ
தாரமே திரைத்தவெண் மணலின் திட்டுமேல் ஆரமாய் வரித்தபொன் அரிம ணிக்குலம் பாருமே விண்மீன் இமைத்தெனப் படும் காரெனா இருள் தயில் பணிச்சங் காட்டினுள்
உகுத்திடும் பொன்மலர்ப் படுக்கை ஒன்றிமன் வகுத்தன திருமண மேடை வைகுவ அகத்தறும் அன்பினால் வருடும் ஆணுடன் முகத்தொடு முகமுற முத்தம் முட்டியே
கழித்தன மயிற்குலத் தோகைக் கண்களால் விழித்தனள் காடெனும் மங்கை வேங்கைகள் குழித்தன சுவடுகள் குளிர்வெண் கான்மணல் அழித்தனள் அருகுறும் தளிர்க்கை ஆட்டியே
வகைகளும் எத்தனை வண்ணப் புட்குலத் தொகைகளும் எத்தனை கொண்டை சூட்டிய நகைகளும் எத்தனை நவந வப்படும் சிகைகளும் எத்தனை சிறப்புக் கோலமே
XVI
I5
I6
I7
I8
I9
2O
2I
22

Page 16
பறந்திடும் வண்ணத்துப் பூச்சி பன்னிறம் சிறந்தன மிதந்தன திசைகள் நான்கிலும் திறந்திடும் தேன்மலர் அழைக்கும் சித்திர நிறங்களோ தொகை அவை நிறங்க ளோதொகை
இன்னிசைத் தேன்பிழி எடுக்கும் ஓர்குரல் அன்னதற்கே விடை அளிக்கும் ஓர்குரல் இன்னமும் ஓரிசை இணையும் காதுகள் முன்னத நகருமோ முகக்கும் யாதையோ
காஞ்சிர மோடையில் கலந்து முத்தரை வாஞ்சையில் வினவிட வாய்ந்த நீரணை தீஞ்சுவைத் தமிழ்ப்பர ராசசேகரன் போஞ்சிலை யடுக்கியே புனைவித் தானென
தேடினம் நால்பல சிதைந்த ஏடுகள் நாடினம் சரித்திரம் புரட்டி நாற்றிசை ஒடியும் காண்கிலோம் ஒருவர் ‘பாக்கரே சூடினர் தலைமிசை அணையின் தோற்றமே
இலங்கையில் எடுத்தவை எவற்றிலும் மிகத் துலங்கிய சிற்பநூல் நுட்பம் தொட்டது தலங்களில் தலையுறும் நினைவுச் சின்னமே புலங்கொள இதுவுறும் என்று போற்றினார்
தயிலினும் மனத்திடைத் தொடர்ந்து கேட்குமே அயலுறும் அணையது போல ஓசைபோய்ப் புயலுறும் புகழுறும் எந்தை யாரர(சு) இயலிது எடுக்குமோர் முரச மாமென
போனத மனமெனும் புரவி யாழ்நகர் மானவெந் தையர்தவழ் மண்ணில் மாண் பர(சு) ஆனநல்லூரினில் அரச மண்டபத் தானம் நின்றது தமிழர் வேத்தவை
தலைநிமிர்ந் திடுமிருதோள்கள் தாமிரு மலைநிமிர்ந் தனவென உயரும் மார்பமும் நிலை நிமிர்ந்திடும் எம(த) அரசின் நீள்மணிக் கலைநிமிர் மண்டபக் காட்சி தோன்றவே
XV|| ||
23
24
25
26
27
28
29
3O

Elg
கணைகட்டிப் பகைவேந்தர் கரமுழுது சிவந்த தாளும் அணைகட்டில் கஞ்சுகத்தாள் அடங்காத கச்சுழுது தணைகட்டித் தழுவிவடு தொட்ட மார்பும் பணிச்சங்கான் அணைகட்டி அலைதடுத்த பரராசன் அவை கண்டேன்
மருப்பிழைத்த பேழைகளும் மணிக்குவையும் கொம்புகளால்
உருப்படுத்த சீப்பினொடு திறைகொடுத்தார் ஒருபுறத்தே பொருப்பெடுத்த சந்தனமும் புனுகோடு மணக்கவவன் செருப்பெடுத்தத் தலைவைத்தார் பரராச சேகரன்முன்
நல்லூரின் கோட்டைகளும் யமுனாவில் நங்கைமார்கள் சொல்லாடிப் புனலாடிச் சுகிக்கின்றார் சுந்தரமும் இல்லாத மருத்துவநூல் ஏடுகளும் எழிற்கலைகள் கல்லாலே கலையாகும் காட்சியுமே கண்கண்டேன்
நீரோசை முரசாகத் தமிழோசை நெஞ்சிலெழும் ஒரோசை மணவோசை யாகியெனை உந்துதலால் பாரோசை கேட்கவெனப் பாவாகி யாழ்ப்பாணப் பேரோசை காவியமாய்ப் பிறந்ததுவே செந்தமிழாய்
Bബg
சொன்ன வரலாற்றுச் சம்பவங்கள் தாமலராய் மன்னன் பரராசன் மாமுடியின் மாண்கதையே பின்னும் நறுநாராய்ப் பிணைத்தெடுத்த சொன்மாலை அன்னை தமிழுணங்காள் அடியிணையில் வைக்கின்றேன்
Bijligg
ஓசையும் தமிழ்ச் சொல்லின் ஒழுக்கமும் பேசவும் படக் கேட்கிலன் பேதையேp ஆசையால் தமிழ்க் காரம் புனைந்திடி ஏசு வாரெவரோ வென(து) ஏழ்மைக்கே
XX
3 II
32
33
34
35
36

Page 17
ஆக்கியோனின் ஆசிரியரும்,
தமிழிலக்கணத்தில் நிபுணரும் முதுபெரும் தமிழறிஞருமாகிய பண்டிதர், வித்துவான், தும்பளை, திரு. க. கிருஷ்ண பிள்ளையவர்கள் வழங்கிய
பாயிரம்.
எழுத்தொடு பொருளின் சொல்லின் இலக்கணம் இலக்கியங்கள் விழுப்பமாய் விளங்கக் கற்றோன் பிறர்க்கவை விரித்தல் செய்வோன். பழுத்த சொற்பொழிவும் ஆற்றிப் பன்மொழிக்கருத்தும் பார்ப்போன். செழிப்புற யாழ்ப்பாணக்கா வியமித செய்தான் சச்சி.
I வரத்தினாற் கவிசொல் மாண்பால் வரகவி என்னத் தக்கான். கருத்தொடு காலங் கண்டு பலன்சொலும் கணிமே தாவி விருத்தத்தால் யாழ்ப்பாணக்கா வியப் பொன்னை விளைத்தான் வீரன், தருக்கமும் வல்லான் சச்சி தானந்தன் சகத்தோர் போற்ற.
2 என்னிடம் கற்றோர் தம்முள் எற்றமே பெற்றான். இன்னும் தன்னுணர் வாலும் கற்றான் தந்தையின் அறிவும் உற்றான். 'பொன்விளை யாழ்பாணத்துப் புலவனெண் புகழும் பெற்றான். பின்னமில் உணர்ச்சியாலே பெரியவர் நட்பும் பெற்றான்.
அப்பத்தைச் சுடலாம் ஆரும், அதற்குளே தித்திப் பைத்தான் எப்படிப் புகுத்தினானோ எனச் சொல வைத்தான் சச்சி தப்பிலன் எதுகை மோனை, சந்தங்கள் தவறே யின்றி திப்பிய கற்பனைத்தேன் சிந்திட அணிசெ றித்தே
உச்சமாம் உவமை ஒப்பில் உருவகம் உயர்த்துக் கூறி நச்சிடும் அணிகள் நாடி நாவினிற் பொச்ச டித்து மெச்சிட யாழ்ப்பாணக்கா வியமாம்மெல் லியலைத் தந்தான் சச்சிதா னந்தம் பேர்சொல் புலவன்நற் சான்றோர் சாற்ற
XX

9) சிவமயம்
காப்பு
வேதத்து முற்பொருளாய் வேழுமுகமாய் அன்புமலர் பாதத்த வைத்துப் பணியும் முதல் வடிவாய் சோதிக்குட் சோதியாய், தன்பத்துள் தம்பிக்கைப் போதப் புணையாகும். பாதம் புகலடைந்தேன்
கனவாகிக் காற்றாகிக் கற்பனையாய்க் கண்காணா நினைவாகி நின்ற பொருளெல்லாம் நின்நோக்கால் புனைவாய் உயிர்பெற்றுப் புன்னகைக்கும் ஆதலினால் மனமாம் மலருன்றன் மணியான பீடமம்மா
நூல் έρωυρύ υιθαρίύ
மறைக்காட்டுப் படலம்
வெள்ளியை உருக்கி வார்ப்பின் மெல்லெனக் குளிர்வ்துண்டோ அள்ளிய அமுதம் கள்ளென்றார்ந்திட வெறிப்பதண்டோ ஒள்ளிய பசும்பால் மோக உவகையில் மயக்குங் கொல்லோ கொள்ளைகொள்கின்ற இந்தக் குளிர்மதிப்பாணம் யாதோ
கலையினைக் காணாக் கண்ணும் கவியினிைச் சுவையா நாவும் சலசல நதியின் கீதம் தாங்கொளாச் செவியும் பூக்கள் அலைதரு தென்றல் தொட்டங் கயர்ந்திடா மெய்யும் உண்டே நிலவினில் மயங்கா உள்ளம் நிலவுல கிருப்ப தண்டோ:
வானெனும் நீலப்பள்ளி வளர்நிசி மங்கை யென்பாள் தானெழுந்தாடி முல்லைத் தலையணி மாலை பிய்த்து மீனெனச் சிதறி னாளோ விண்ணகப் பரப்பி லெல்லாம் மோனமுற்றிமைக்கு மிந்த முத்தெலாம் உடுக்கள் தாமோ
நிலமகள் மடந்தை பார்க்கும் நீலவான் பளிங்கிற்கொத்தாய் இலைமுகிழ் கான முல்லை எழுந்தன சிரிப்ப போன்றும் கலைமுழு மதியென் வெள்ளிக் கலசத்து எளிட்டகோடி விலைமணியுதிர்த்த போன்றும் விண்ணகம்புளகம் கொண்டாள்
1

Page 18
உதிர்படு சருகும் மெல்ல ஒசைகொள் ளாது வீழும் எதிர்படு தென்றல்தானும் இதழ்பிரித் தொன்றும் பேசாள் கதிர்விடு தாரகைகள் கண்ணிமை மொழியிற் பேசும் முதிர்படு மோன வெள்ளம் முழுமதி வெள்ளம் தோயும்
அப்பர்வாய் மணிதிறக்க அந்தணர் பதிகம் மூட ஒப்பிலா ஒருவன் கோயில் உறைபதி கொண்ட ஊராம் செப்பரும் மறைக்கா டென்னும் தெய்வநன் மண்ணின் மீதம் கொப்பளிக்கின்ற இந்தக் குளிர்நிலா வீசிற் றம்மா
ஆயிரம் வேல்க ளென்ன அரசிலை அசையப் பர்ங்கர்ப் போயிருள் ஒளித்ததேபோற் புகுமிருட் குடிசை காண்மின் மாயமொன் றில்லை யென்றால் மன்னுயிர் உறங்கும் வேளை தேயொளி மங்கற் றீபம் தெரிவதிக் குடிலி லேனோ
மருந்தெழு மணமும் மூலி வகைதருமணமும் வந்தே வருந்துகின் றாரை உள்ளே வழிநழைந் தழைத்துக் காட்டும் பொருந்தவோர் அணையிற் சாய்ந்த புரளுவார் வாங்கும் மூச்சு விருந்தென விண்ணோர் நாட்டை விரைகிறார் என்னச் சொல்லும்
மூப்பினாற் பெரியார், சாந்த முகத்தினால் அறிஞர், கண்ணின் பூப்பினாற் புனிதர் நெற்றிப் பொலிவினாற் றவத்தோர்; எண்புக் கோப்பினாற் பிணியார் உள்ளக் குழைவினாற் றாயர், போர்வைக் காப்பினாற் கிடக்கின் றாரே கடையிர விதுவென் பார்போல்,
மைந்தர்கள் இருவர் நின்றார் மாடிரு புறத்து மேங்கி சுந்தர வதனத்தாரைச் சூழ்வதம் தன்பச் சாயை தந்தையை நோக்குகின்றார் தலைமருங் கோடி நின்று நொந்தவர் ஏதோ ஏதோ நவல்வதுஞ் செவியிற் கொள்வார்
நாவொரு பாதி சொல்ல நயனங்கள் பாதி சொல்ல ஏவுறு மூச்செழுந்தங் கிருமலும் குறையைச் சொல்ல நோவுறு விரல சைந்த ந வல்வது பாதி கூற ஆவியின் அடிபுதைத்த அருங்கதை தொடங்கலுற்றான்
தந்தை நானல்லேன், இந்தத் தரணியும் தாய்நாடன்று மைந்தர்நீர் மன்னன் மக்கள், மாயவெஞ் சூழ்ச்சி யாலே இந்தஏழ்ங் குடிலில் வந்தீர் இன்றொடும் எனது பாரம் சிந்தையில் தீர்ந்த தந்தச் செய்கையில் தித்திக் கின்றேன்
2
I. Ο
II.
2

அஞ்சன மயிலார் கையாம் அரவிந்த அமளி மேலும் பஞ்சென முல்லையிட்ட பவளக்கால் அமளி மேலும் கொஞ்சுமென் குதலை மாதர் குழைந்திசை பாடல் மேலும் தஞ்சுமுங் களையாணிந்தத் தாசியில் தஞ்ச வைத்தேன்
மிஞ்சிய மிடற டைத்தேன் வேறினி விளம்ப லாற்றேன் கொஞ்சிய மன்னர் பெற்ற குழந்தைகள் நீவி நம்மை அஞ்சியன்றடைக் கலந்தந் தளித்தது முதலாய் என்றன்
நெஞ்சினிற் புதைத்த வெல்லாம் நிலத்தினிற் புதைத்த வைத்தேன்
தாளணி சதங்கை வைரத் தண்டைமின் கனக ஞாணும் தோளணி மன்னார் முத்தத் தொடுத்திழை மாலை தாமும் வாளொடும் அரசர் தங்கள் மணிமுடி தாமும் யாழ் நாடு) ஆளுடை மன்னர் நீரென் றாயிரம் நாவிற் சொல்லும்
கட்டிலின் கீழே பாறைக் கல்லினைப் பெயர்த்தாற் பொன்னின் பெட்டியொன்றுளது காண்பீர் பேதையாம் பூமடந்தை கட்டிள நெஞ்சி னுள்ளே கரந்தனள் நிகழ்ந்த வெல்லாம் கட்டிய ஒலை நூலிற் கதையனெ எழுதியுள்ளேன்
ஏட்டினில் எழுதி வைத்தேன், இதயத்துப் புதைத்த வெல்லாம் காட்டுவேன் இடமு மென்று கையினாற் கால்மாடங்கே காட்டினார் குமரர் உள்ள அதிசயக் கனலை மெல்ல மூட்டினார் மொழியா முன்னம் மோனமாய்க் கலந்த விட்டார்
Biblgg
நந்தாத சுடர்விளக்கின் நாக்கழுத நடுநிசியிற் சிந்தாத சிறுவளியும் தென்றலென மூச்செறிந்தாள் பந்தாக நின்ற மதி படர்விசும்பின் தயர்முகமாய் முந்தாத மேகத்துள் முக்காடு மூடினளே
இரும்பான தோளுடையர் இதயமொடும் இருவிழியும் அரும்பான கமலமலர் அனையவர்க்கு முத்தாக அரும்பியிரு கவுளிழிந்தங் கருகோடி நெஞ்சிருந்த பெரும்பாறைத் தயர்கரைக்கப் பெருகுநீர் கண்ணிரே
I3
I4
I5
I6
17
I8
I9

Page 19
வீசுகின்ற திரைக்கையால் வெண்மணலாம் வயிறடித்துப் பேசுகின்ற காற்றென்னும் பிரியாத தோழியுடன் ஒசையெழு ஓவென்றே ஒலமிடுங் கடலணங்காள் ஆசைமகன் பிரிந்தவனென்றழு கையினாற் காட்டிநின்றாள்
பூமாதின் இமைப்புல்லிற் பொடித்தபணிக் கண்ணீரும் தேமாவின் கண்ணிலையிற் கடைநீரும் செங்கமலப் பூமூடிப் பொழிந்த விதழ்த் தேனொழுக்கும் தேங்குமுதம் தாமாகப் பொழிபுனலும் தாயியற்கை விழிநீரே
தாயில்லார் தமரில்லார் தரைமீது தனிகிடந்தாற் பாயல்லா தழுவதும் யார், பார்த்தவயல் மரமலறும், வாயல்லாற் கூகையொலி வாய்புலம்பும் சுற்றமலால் நாயெல்லாம் வேறாமோ நடுநிசியிற் பிரிந்தவற்கே
மடலோடிக் கண்வழியும் மயங்குநிலைச் சிறுதயிலில் உடலோடித் திடுக்குற்றாள் ஒருத்திகிழ மூதாட்டி கடலோடிச் சென்றவரைக் காத்திருந்தாள் தாலியுடன் உடலோடி உயிர்பிரிந்த தரைப்பாரார் ஆதலினால்
தளிர்வளரச் சருகுதிரும், தருமுளைக்க வித்ததிரும் ஒளிமுளைக்க இரவுதிரும் உயிர்முளைக்க இறப்புவரும் வெளிமுளைக்கும் வீரமகார் வேந்தரென மலரத்தன்
திளியிரத்த மொவ்வொன்றும் உதிர்த்துதிர்ந்தான் தாயவனாய்
ஊராரும் அயலாரும் ஒருங்கிருந்து தந்தையென பேராரென்றறியாரைப் பேரன்புப் பெருக்காட்டி நீரார முழுக்காட்டி நிறைவிழிநீர் மேலாட்டிப் பேரார வாரமுடன் பிணக்காட்டிற் கொண்டுய்த்தார்
குழலூட்டும் அகில்மணக்கக் குவிந்துவிழும் கோதையர்தம் சுழல்நாக்கள் ஆயிரத்தின் இடைக்கிடந்தார் சோதியான தழல்நாக்கள் ஆயிரமும் தாமரையின் இதழ்களென எழலாற்றா அமளிமிசை ஏறினார்கண் தயிலுதற்கே
பாலூட்டும் கைவேகப் பாலகரின் உள்வேகும் தாலாட்டும் நாவேகத் தானுதிரும் விழியருவி மேலாட்டிச் சீராட்டி விண்மதியின் எழில்காட்டிக் காலாட்டிக் கிடந்ததோள் கனலாட்டிக் கிடந்த தந்தோ
4
2O
2
22
23
24
25
26
ך2

தாயாகித் தந்தையாய்த் தமராகி இளம்பருவப் பாயாகிக் கிடந்ததோள் பரசேவை யாம்எரியில் ஓயாது புடமிட்டே ஒளிர்ந்தது தானமையால் வாயாகி எரியுண்ண வைத்ததவும் மிகையெண்பார்
செந்தமிழின் தேன்மணக்கும் சிந்தைசிறை யிட்டபல அந்தரங்கம் வீசிவரும் அன்புதழை யிட்டமணச் சந்தனத்தின் வாசமொடு சைவமணம் வீசிவரும் வெந்தெலும்பு செந்தழலில் வீசிவரும் போதெல்லாம்
முத்துதிர்த்தார் மூச்செறிந்தார் முன்னோக்கிக் கால்நடப்ப சித்தமது பிறகோடத் திகைத்தொருகால் நிற்பார்கள் புத்திரர்க ளல்லரெனப் புகன்றனர் தாமென்றாலும் பத்தநாட் பழகிடினும் பாசமத பொல்லாதே
பாகான பைந்தமிழும் மறக்கனக சிங்கனுடை மாகாதல் மைந்தரும்பொன் மணிப்பீடம் பெறுகவெனும் வேகாத ஆசையொன்று வெள்ளெலும்பின் புரையெல்லாம் போகாது பச்சொளிரப் புடச்சாம்பரிடைக்கண்டார்
நீலமணிக் கடற்றகட்டில் நெருப்பெழுதுஞ் செங்கதிரோன் காலையெனக் கைகாட்டக் கமலங்கள் வாய்திறக்க வேலைகரைப் பாறைமுர சடித்தார்க்கத் தந்தையர்க்குப் பாலகர் செய் கடன் முடித்துப் பாற்றெளிக்க நண்ணினரே
பொங்குதமிழ் நாவரசன் வாய்திறப்பப் பூட்ட்ழித்துச் செங்குமுதப் புகலியூர்த் திருவாயின் மணிமழலைக்(கு) அங்குருகிக் கதவடைத்த அருளாளர் அடிவருடிச் சங்கலைக்கும் திருக்கடலிற் சாம்பரினைக் கரைத்தார்கள்
காலைமுகச் சுடரொளியிற் கதிர்முத்தம் வீசிவர வேலைமுக மணற்பரப்பில் விதியெழுதங் கைபோல காலமுகம் கண்டிருந்த கிழவனார்தம் கரம்வரைந்த ஒலைமுகம் பிரித்தார்கள் உள்ளமுகம் விரித்ததுபோல்
விழிக்கடையில் முத்ததிர வீழ்ந்தமொழி நாத்தழும்ப கொழிக்கின்ற கடலோசைக் குரலினைய குன்றிரண்டைப் பழிக்கின்ற இருதோளார் முன்னிலையிற் பழங்கிழவன் விழிக்கின்ற தெனப்பேசும் சுருளோலை விரித்தார்கள்
5
28
29
3O
31
32
33
34
35

Page 20
Bibligg
ஐயனென என்னிடத்தில் அன்புருகு மக்காள் பொய்யனெனை எங்ங்ணம் பொறுத்தருளுவிரோ மையிருளில் மைந்தருமை யாருமறியாமல் செய்யவரும் எண்கணவின் தீவினை யென்சொல்வேன்
உந்தையர்விடுத்த வுதிரத்தினில் உடைந்து சிந்திய மடந்தையரின் செங்கணுகு நீரால் நொந்தவுள ஏட்டினினில் நனித்தெழுது கோலாய் சொந்தவுணர்வாக விது தோய்த் தெழுதுகின்றேன்
விக்கியிடை தொண்டையடைக் கின்றது, விழிக்குக் கக்கிவரும் நீர்த்திரை கரைத்தவிடம் ஏட்டில் உக்கிவரும், அவ்விடம் ஒழித்தவிடில் நன்றே நெக்குருகு மில்லையெனில் நெஞ்சமிருவீர்க்கும்
கல்லாக்கு வீர்நெஞ்சை, கனலாக்குங் கண்ணை சொல்லேற்குங் காதிரும்புத் தொளையாக்குவீரே!
புல்லார்க்கும் மேனியெலாம் புண்ணேற்கத் தோள்கள்
மல்லார்க்க மலையாக்க மனமாக்குவீரே
அன்னையெனை ஈன்றதிரு மண்ணிதவு மன்றே, பொன்னனைய நம்முதய பூமியித வலதே கன்னனையச் தேன்சிதறிக் கால்பாயக் கதலி பொன்னைய தேமாவின் பூவுதிர்க்கும் நாடே
நீலநிற மாலடியை நேடுமவர் என்ன வேலையத மேல்கரிய மேகவுரு வாகி மூலமறி யாதசிவன் பாதமலை மொய்த்து காலிணைகள் தாரைமழை யாற்கழவுமன்றே
கூடுமுகிலானகுழல் குன்றுகள் விரித்தங்(கு) ஒடுமொளி மின்னலென ஓசைநகை செய்து காடுகளைப் போர்த்தொளிர் கடம்பினை மிலைந்து வேடுவர் குதித்தநட மாடிட விளங்கும்
36
37
38
39
40
4I
42

இந்துவெனும் வேலைநடு விற்குளித் தெழுந்த சுந்தரியின் இன்பமுகம் தோற்றுவது போல
பந்திநிரை முத்தொடுசெம் பரற்பவள வாயால் சந்ததமும் புன்னகையின் தண்ணிலவு காலும்
ஒதையெழ வேகமுறு யானையை யுருட்டி மோதவரு சந்தன மரங்களை முறித்துத் தாதுமொழி வாரென மணித்திரள் சுமந்து பாதமலை யிற்றபுனல் கோணமலை பாயும்
கண்டியில்ரித்த மணற் கற்பவளச் சோற்றை வெண்டிரைகள் விட்டகரைச் சங்குகல மாக கொண்டுவரும் கோணமலைப் பாலர்விளையாட வெண்டரள ஆனைமருப்பின் விறகு வீசி
பாலையொடு வான்முதிரை பைங்கமுகு வீரை சோலையொடு வாரிவரத் தொற்றுமண் டூகம் ஆலைகளும் சாலைகளும் ஆலயமுங் காண மேலலையிற் கப்பல்வரும் வேடுவரை வெல்லும்,
கடலான காதற் பூ மடமாத கன்னி தடையாக நாணிட்டுத் தளையிட்ட போலே உடைவாகிக் கரைமீறி ஒடுநதி யெல்லாம் இடையான சுவர்கொண்டு குளமான தெங்கும்.
நெல்லிட்டு முத்தென்ன நீள்மஞ்ச எரிட்டுக்/ கொல்லிட்ட பொன்னென்னக் கொடிவள்ளி யிட்டுப் புல்லுக்குட் பொதிகண்டு கமுகிட்டுப் பச்சைக் கல்லிட்ட கிழிகொள்ளும் காராளர் நாடே.
குவித்த மலை நெல்லோடு கூடைநிறை தினையும் கவித்தவொரு கையோடு கஞ்சியிடு சாலும் அவித்தமர வள்ளியுடன் சோறுமெழும் அன்பிற் குவித்தவிரு கைகள்குறை யாதகொழு நாடே.
கரும்பாடு முதமேதிக் கடைவாயின் சாறும் சுரும்பாடு முகிழ்முல்லைத் தளியோடு கற்றா தரும்பாலும் முற்றத்திற் றமிழ்வாணர் பாவால் அரும்பான கடைமுரல் ஆறொழுகு நாடே.
7
43
44
45
46
47
48
49
5O

Page 21
தளிரான கமலவிலைத் தட்டத்தின் நீரின் குளிரான முத்துக்கள் ஏந்தமுகைக் கூட்டம் ஒளியான செஞ்சுடர்ப் பந்தங்கள் ஒச்சக் களியான மடவன்னம் நடமாடும் கயமே.
பொன்சொரியப் பூச்சொரியும் வேங்கைமரச் சாரல் பின்சரிய யானைதயில் கொள்ளுவதும் பின்னே மின்சரியும் மேகநிறப் பாறைகளும் ஒன்றாய்ப் பின்சரியும் வெங்களிறு பேதமையி னாலே.
அள்ளிக்கொள் புள்ளிக்கும் அழகூட்டும் மான்கள் தள்ளிக்கொள் வனமெங்கும் தொடுகொம்பராலே
கிள்ளிக்கொள் தேன்கடடு கலைந்திட்ட கிளையில் பிள்ளைக்கைத் தாய்மந்திப் பெண்ணேசும் வனமே.
உரைக்காத பொன்கொண்டு மதுகொண்டங்(கு) ஒடித் திரைக்காலிற் கலங்கொண்டு தேடிவரும் யவனர் நிரைக்காக அரைக்காசு கொள்ளாது நெல்லின் மரக்காலில் முத்தளக்கும் மணியீழ நாடே.
மலைவாசல் மிளகுக்கும் மயிற்பீலி ஏலப்
பலவாச அகிலுக்கும் உறவாடிப் பரவை
அலைவாசற் பிணியுண்ட கலமோடும் யவனர் தலைவாசல் நின்றிடுவர் தமிழ்பேசி யன்றோ.
ஏரேறி நின்றவயல் ஈன்றமணி மலையாய்க் காரேறிக் கொளநிற்க நிலமின்றிக் கவல்வார் நீரேறி வணிகர்வரு நிரைபார்க்க உச்சிப் போரேறிக் கலம்பார்ப்பர் பொலிதாற்றும் மள்ளர்.
விளைந்தன அறுக்குமுன் விளைக்கவுறு காலம் களைந்தன குவிக்கமுனம் கார்பொழியுங் காலம் வளைந்தன மிதிக்கமுணம் வயல்களுழு காலம் அளைந்தன அருந்தமுனம் அடுத்துநகர் காலம்.
கோயில்களிற் கோமுகை குளிர்ந்துவரு தீர்த்தம் வாயிலிடு சைவரென வாழுைமுகை சிந்தித் தோயுமத சொட்டஅணில் முக்குறியர் உண்டு பாயவிழும் மாங்கிளை பழுத்தபழ மெல்லாம்
8
SI
52
S3
54
S5
56
S7
58

காட்டெருமை கண்படுக்கும் வாவிகளில் தீவுக் கூட்டமோ ராயிரங் குவிந்தகடல் காண்பார் தோட்டிதழ் தளிர்த்தமதச் சொட்டுடையும் கஞ்சக் காட்டிடை முகக்கடல் நகைத்த திரை காண்பார்
நீலநெடு வான்மடுவில் நித்திலவெண் அல்லிக் கோலமிமை தாரகைகள் கொண்டழகு காட்ட மாலையினில் அல்லியை மடுக்களில் மலர்த்தி ஞாலமகள் வானழுகு காட்டுமெழில் நாடு
நிரைத்தகரை பொன்சொரியும் பணிச்சமலர் நீளம் உரைத்தபசும் பொற்றவி(சு) ஒளிப்பட விரிப்ப அரைத்துயில் படும்பிணை அணைந்தகலை கொம்பால் உரைத்ததை உளர்ந்துவகை ஊட்டுவள நாடே
கட்டிருளிற் கால்வழி யுணர்ந்த வருவோர்க்கு மட்டொழுகி இன்கனி வயிற்றுடை பலாவின் சுட்டபசும் பொற்சுளை விழுந்தன சுடர்க்க கட்டுபொதிச் சோறுண்ணத் தீபங்கள் காட்டும்
நாடகமயில் விரிக்கும் ஆயிரமென் நயனம் காடவிழும் முல்லைநகை கண்டுகளி கொள்ளும் பாடகமலர்ந்தன பசுங்கொடி சிரிக்க தோடவிழு நீலங்கண் ணிமைசெய்யும் சோலை
பாளைவெடித்த மடற்கமுகின் பருக்கை முத்துப் பரிசிலுற வாழையடுத்த கொடிவள்ளி வளைந்து நீட்டும் இலையல்லால் ஏழையொருவர் கரம் நீட்டி இரக்குந்தொழிலங் குறாதவகை ஈழத்திருநாட்டரசிருந்தான் எழில்கண்படுக்கும் இருபுயத்தான்
கண்டிக்கரசைப் புறங்கண்ட கனகசிங்கன் கழற்காலும் தொண்டிக்கிறைவர் தலைகளிலே துறைமுத்தேற்றும் பரநிருபன் தண்டைச் சதங்கைத் தளிரடியும் தவழ்ந்த புரண்ட நல்லூரே கொண்டுசிறு தேர் நீருருட்டிக் குறுகநடந்த தாய்நிலமாம்
59
6O
6.
62
63
64
6S

Page 22
சலாபத்தறைமுத்தெடுத்துத்தாம் திறைகொள்வயிர மணிக்கயிற்றை கலாபமயிலிற் களிமடவார் கமலக்கரத்தால் அசைத்தாட்ட நிலாவின் கடைவாய் நகையரும்பி நீவி உறங்கிக்கிடந்ததுவும் உலாவும் புகழான் கனகசிங்கன் உறங்கும் நல்லூர்த் தொட்டிலன்றோ
66 பசித்தும் கரிகள் பயிரழியா, பாம்பும் விடங்கொடா, பாய்புலியும் புசிக்கும் புலாலை மறுத்தொழித்த, பொங்கும்கடலுங் கரையிகவாள் நிசிக்குக் கணவர் நினைந்தழுவார் நெஞ்சம் படுபூங்கணையாலே கசிக்கும் விழிநீர்க் கடலல்லாற் கனகசிங்கன் கவிகைக்கீழ்
67 இழந்தார் தருமம் இரப்பாரை இன்றி தானம் வ்ழங்குநரும் தளர்ந்தார் ஏற்க எவருமின்றி சைவ அதிதிக் கிரந்தமனை நழைந்தார் அமுத விருந்தயர்ந்தார் நோக்கி இருந்தார் புரிதவத்தால் குழைந்தார் அல்லால் அழுவாரார் கொற்றக் கனகன் குடை நிழலில்
68 தென்னர் இலங்கை உறுகுணையார் செருவிற் படுத்த கணைவடுக்கள் இன்னங் குடைய நதல்மதியின் இருவாள் விழிவேல் இவையெறிந்தே அன்னம் நடப்பார் அதுவன்றி அமளிச்செருவில் அகலங்கள் பின்னும் தழும்பக் கவசமிடும் பெருந்தோள் அழகள் நகரெல்லாம்
69 சீனத்தவரும் யவனபுரச் செல்வத்தவரும் குறைத்தமிழில் மீனத்தவரோடளவளவ மேலைக்கிரேக்கர் விடுதாது தானத் திருப்பக் குடையின்கீழ்த் தருமம் கிடப்பத் தடந்தோளில் மரனத் தழும்பும் கிடந்துறங்க மணிப்பொற்றவிசில் இருந்தனனே
0ך காடு கலப்பை உழுதுவரக் காளையர் தம்மறமார்பிற் கோடு பொருத்திக் களிறுழவும் கூட்டும் கவியை எழுத்தாணி ஏடு நடந்து தமிழுழவும் இமையில் மடவார் எழுதுங்கோல் கோடுபடவும் நிருபன்தாள் குனிந்தோர் முடிகள் உழுதனவே
1ך குறைகேட்பவருக்கு மணிநாவும் கொடிய தடையென்றவலித்தோர்க்கு இறைகேட்டிருக்க எழுந்திருப்பான் இசையாமணியைப் பிணித்தொன்னார் பறைகேட்டெழுந்த திரள்தோள்கள் பணியாதவரைப் பணித்தவரைத் திறைகேட்டிருந்தான் கனகசிங்கன் செம்மாந் திருந்த தவிசினிலே
2ך கோணமலையிற் கொடியுயரக் குன்றிற்குகையிற் பகை மன்னர் பேணி உயிர்காத்திருந்ததவும் பெயர்ந்து தெற்கே தலைநகர்கள். காணப்பொருத செருத்திறனும் கானக்குயிலின் கவியாக்கி ஆணிப்பசும்பொற் சிறு தொட்டில் அசைப்பர் மடவார் குழுவிகட்கே
73
10

கோல மடவார் இதழ்ப்பவளக் குமுத மலரும் கவிவாணர் ஒலை எழுதும் கரமலரும் உள்ள மலரும் முறையோ வென்(று) ஒல மிடுவார் குறைவாயும் உடனே சிரிப்ப அழுதோர்கண் நீலம் சிரிக்கும் கனகசிங்கன் நிறையும் நிலாவின் மதிமுகத்தால்
74 ஈசன் மலையைப் பெயர்த்தவலி இலங்கைக்கதிபன் புகழ்பாடி வாசப் பொழில் சூழ்பாலாவி மட்டுநகள் மீன் இசைபாடி ஆசைமடவார் அதரகனி அம்பவளந்திறந்து வார்க்கும் ஊசல் வரியிற் குயிற்குஞ்சங் குறங்குங் கனகன் நிழலினிலே
5ך வன்னித் தலைவர் நமக்கென்று வளர்த்துக் கொடுத்த புலிக்குட்டி முன்னுக் கிழுப்பத் தவழ்ந்திடுநம் முன்றிற் பரப்பிற் கனகசிங்கன் கன்னித் தமிழுக் கரிச்சுவடி கையாற் சுழித்த மணலன்றோ பொன்னுக் கொருமண் பெறுமீழப் பூமித்திருமண் நமதன்றோ
6ך விலையிற் படுக்கும் மணிமுத்தும் மீனும் மடவார் மடநெஞ்சும் வலையிற் படுக்கும் கடலாளர் மணலிற் குடிகோவளமுடையார் அலையிற் படுக்குங்கருங்கண்ணன் அடியிற் படுக்கும் அகத்தாளர் கலையிற் படுக்கும் புலோலியின்கீழ்க் கடையிற் கிடக்கும் மணலுர்ரில்
ךך மங்கை சிலம்பி மணிவயிற்றில் மருதன் தனக்கு மகனாகி வங்கம் செலுத்தி விளையாடி வடக்குங் கிழக்குங் கடலெனதாய் எங்கும் புகழ்போம் ஆழ்வானாம் என்னை இதயத் திருத்திய பெண் தங்கம் தனக்குமணவாளன் தானென்றுவந்து கரம்பிணைத்தேன்
78 தீவுக் கடலிற் குளித்தெடுத்த தேடாவினத்தி வலம்புரியும் சாவத் தடியேன் கலங்கொணர்ந்த தரளச் சிவிகை மணிவடம் பொன் ஒவத்தெழுதா உயிரணங்கார் ஒருநாறவரோ டெனதினிய ஆவிக்கரும்பும் நந்தை திரு அடியிற்கொடுத்துச் சரணடைந்தேன்
9ך வன்னிக் கிறையோர் வலநிற்ப வாமத் திருப்ப உறுகுணையார் பொன்னிக் கதிபன் பொருள்கொடுத்துப் போக்கி விடும் தாதருகிருப்பக் கன்னி சிரிப்பக் கனகசிங்கன் கடைக்கண்சிரிப்ப அரசிருந்த(து) என்னென்றுரைப்பேன் ஈழமதில் எழுதுகோலும் இடறுவதே
8O
11

Page 23
Hallg
இந்த ஈழமணித்திரு நாடு நம் சொத்த நாடு சுடர்முடி மன்னனும் உந்தையாம் நிருபன் பெரும் உண்மையைச் சிந்தை கொள்ளுதிர் சிங்கக் குருளைகாள்
தெங்குதிர்த்த திரவியம் சேர்தறை எங்கணும் புகழ் ஏறுகச்சாயினில் வங்கமோடு வதிந்தனன் ஓரிரா அங்கு வந்த அதிர்ச்சியை எண்சொல்வேன்
உந்தையின் விசுவாச உளத்தினன் வந்த மன்னன் வழிவழிச் சேவையான் சந்ததிச் சிவிகைத் தலை தாங்குவான் வந்துள் என்கலம் ஏறினன் மக்களே
ஏறு மூச்சினன் ஏந்தினன் உங்களை கூறு கின்றனன் மன்னன் குழந்தைகள் ஊறிலாதவர்க் காப்பதும் உண்கடன் நாறு வாம்பரி நோக்கித்தரத்தின
இக்கணத்தினில் எம்மை அணுகுமே பக்குவம் இந்தப் பாலரைக் கொண்டுபோய் அக்கரைப்படும் என்றனன் அக்கணம் மிக்கபார நங்கூரம் மிதத்தினேன்
ЕbluДІ
பறக்கும் தரத்தம் கடக்கும் பரியோசை பிறக்கும் நிலத்திற் பறக்குந் தகள் நாற்றம் குறைக்கும் சுடர்க்கும் கொழுத்தும் அனற்பந்தம் மறைக்கும் தடக்கும் மடக்கும் மரத்தாலே
தடிக்கும் நொடிக்கும் நொடிக்கும் இதயத்தாள் அடிக்கும் இடிக்கும் அணுகும் குதிரைக்கால் நடக்கும் ஒலிநீர் நனைக்குந் தறைகிட்டிக் கிடக்கும் கலத்தைப் பிடிக்கும் பொழுதெழுந்தேன்
81.
82
83
84
85
86
87

பிடிக்கும் படியோர் பேழைக்கலந் தந்து துடிக்கும் இதழ்வாய் சொலவே இயலாமல் மடிக்குள் விழுந்தான் மரத்துக் கலத்தட்டில் எடுக்கத் திணறும் விரைமுச் சியம்பினதே
'அரசன் சிறுவர் அறியார் தயில்கின்றார் முரசுங் குடையும் முழுதும் பறிபட்டோம் விரையும் பரிகள் வருமுன் விடுகப்பல் கரையிற் றெரியும் நிரையும் கணம்வருமே
விரித்தேன் சுருட்பாய் வீசும் வெளிக்கடலில் சிரித்தாள் வெளியிற் சிறுகாற்றுடனின்றே எரித்தாட் சுடர்கள் எதிரே வருமுன்னம் திரைத்தாழ் கடலின் நடுவே செலலானோம்
குறுமூச் சமரக் குளிர்வேர் வொழுகத்தன் எறிமுச் செடுத்தே இதனை மொழி கின்றான் பறிபோய் அரசும் பதியும் சதியாலே எறிவாள் முனையில் இறைவன் கிடக்கின்றான்
Balug
உறங்கா நீதி உலகம் புரக்க அறங்கா மன்னன் அமளி யுறங்கப் புறங்கா வன்னிப் புல்லன் சதியால் மறங்காவலரை மடிவித் தெழவான்
வாளும் வேலும் வாசல் நிறைக்கத் தோளும் தோளும் நெருங்கச் சுற்றி ஆளும் மன்னன் அணையை வளைத்தார் தாளும் தங்களும் பரிகள் எழுப்ப
ஊதும் அவதிச் சங்கும் ஒருநா நாதம் மணியும் நாவொட்டாமல் ஏதம் செய்தான், எங்கும் மெளனம் யாதம் தெரியார் எவரும் எதுவும்
13
88
89
90
9I
92
93
94

Page 24
வருசிங்களரும் வன்னித் தலைவன் தரு சங்கொலியிற் சணமுற் றனரால் திரிசங் கெனவே திகையா நின்றேன் எரிசெந் தழலிற் பந்தம் எழுவே
95 மதில்பாய் குநரும் வாள்வீசுநரும் பதில்பாய் குநரும் பரிபாய் குநரும் இதில் வாய் நழைய அதில்வாள் எறிய நதல் வாய்ப் பட்டு நொடிவீழ் குநரும்
96 அகழிப் புறமும் அமளிப் புறமும் பகழிப் போரிற் பரவிப் புகுவார் தகழித் திரியிற் றருசெஞ்சுடரில் மகிழத் தயிலும் மைந்தர்க் கண்டேன்
97 கதவம் பெயரக் கற்றாண் சரிய அதவும் அரசன் அமளிக் காலிற் பொதுவென் றிடியப் புகுவார் இறைவன் சதிவென் றிடுவான் தான்முன் எழுவான்
98 மயிலன்னாளும் மடநல்லாரும் துயிலின் விழிப்பார் தணுக்குற்றாரும் பயிலுங் கனவும் பாதிப்பட்டே அயலுஞ் சுவரும் அடைகின்றாரும்
99 விழுகின்றாரும் வெளிவந்திடுமுன் அழுகின்றாரின் நடுவில் அரசுக் கொழு கொம்பான குமரர்க் கண்டேன் எழுகென்றதுவுள் எடுவேன்றதுகை
OO வாவும் பரியும் வாளும் தொடரக் காவும் புதரும் கழியும் குழியும் தாவிப் பரியிற் றளரும் பொழுதென் ஆவிக் கணையாய் அடைந்தேன் உன்னை
IO
14

Elig; .
வாடாத அரசநெடும் மணிக்கொடியின் ம்லர்க்கொழுந்தை தேடாத செல்வத்தை, செந்தமிழின் திருத்தாய் கண்கள் மூடாத இருமணியை, முடிசாயாக் குலமரத்தின் ஆடாத வேரிரண்டை அடைக்கலமாய் அளித்தேன் இன்றே
I O2 பாலறர்க் குமுதவாய் பச்சையுளம் நாறும் காவி போலறாப் பெருகுபுனி தங்கடையிற் புலருங்கண்கள் காலைவாய்க் கமலமலர்ப் புதுவிதழாம் கரங்கள் மன்னர்க் கோலறா மரபுவழித் தழும்பிருந்து குலத்தைக் காட்டும்
IO3 அம்புயமும் செம்பவளத் தரக்காம்பல் உடனே பள்ளி தம்புருவங் கொண்டதெனத் தாமறியாத் துயிலில் நீந்தி அம்புருவ வாளுயர அழுகையின்றி அதிசயிக்கும் நம்பியரை நானுனத சரணத்தில் நம்பி வைத்தேன்
IO4
பண்டிருந்த பாட்டனுமுப் பாட்டனுமிம் மன்னர் தங்கள் தொண்டிருந்தார் சுகமெமக்கு மன்னவரின் தயரம் நீங்கக் கொண்டுயிரைக் கொடுத்தலெனக் குலத்தெமக்குப் பணித்தார் நாளும் உண்டிருந்த உப்புக்கும் உயிர்கொடார் உயர்ந்தோராமோ
IOS மைந்தருக்கு நிகழ்ந்தவிவை அறியாது மயில் சுழன்று செந்தழலில் விழுந்ததெனத் தாயுயிரைச் செகுக்கா முன்னம் முந்தியிது தெரிவிப்பேன், முடிக்குரிய அணிகள் யாவும் தந்தமிழை பேழையிதில் தந்திட்டேன் சரணு னக்கே
IO6 பாதமெனும் குருத்தலரைப் பாயருவிக் கண்ணின் நீரால் சீதமுற நீராட்டித் திரும்பிநெடு மூச் செறிந்து காதலரைப் பிரிபவர் போற் கடைநோக்கிக் கடலிற் பாய்ந்தான் மோதலையிற் கைகொடுத்து முன்நீந்தி முனையிற் சேர்ந்தான்
I of பொற்சிவிகை புடைதாங்கும் புனிதனித தந்துசெல்ல கற்சிலையுங் கண்ணருவி பொழிந்ததெனக் கரைந்த என்னைச் சிற்சிலர் நாவாய் கொண்டு தொடரத் தீப்பந்தம் சூழ்ந்து கொற்சிலையில் அம்புமிழுக் குஞ்சுகளைக் கீழே சேர்த்தேன்
15

Page 25
எயிறுகடிக் கின்ற காற்றிருபாயிற் புடைக்க வுதிக் கயிறுநெறு நெறிக்க வெதிர் கொந்தளிக்கும் கடலின் கைகள் வயிறுபிடித் தெடுத்துமரக் கலத்தையுயர் வானிற் கொள்ள வெயிறுடைக்கும் விமான மெனப் பின்வருவோர் வெட்கச் சென்றேன்
I09 அரியாலைக் கடல்நீங்கி ஆழிநெடுங் கடல்புகுங்கால் எரியான நாக்கிளைகள் எழுந்தண்ட முகடு நோக்கிப் பெரியாரும் புரவலரும் கண்மணியாய்ப் பேணு மெல்லாம் கரியாக உண்ணுகிற காட்சிகண்கண்டு சென்றேன்
IO
வரித்தமணி மாடத்தில் வளர்புறவம் வானெழுத்தீ எரித்தமயிர் முடைநாற்றம் எழுபுகையில் இடைகாண் வெண்மை பிரித்தமதி முகிற்சுருளில் உதிர்த்ததெனப் பிறங்கு தோற்றம் நெரித்தவிரு விழிக்கடையில் நீரொழுக நின்று கண்டேன்
II ஒள்ளொளியால் உறக்க மெழு மடவார்தங் கணவர் பற்றித் தள்ளிமுணம் ஓடுவார் தாமிருந்து கணியுந் தேனும் வள்ளைவாய்ப் பால்சேர்த்து வளர்த்தபொன் கூண்டிருந்து கிள்ளைவாய்க் குரல்கேட்டுக் கெஞ்சுகிறார் பின்னே நோக்கி
2 ஊடுவார் நடுயாமத் தள்ளளவும் ஒன்றிக் கொள்ளார் தேடுவார் தீபரவக் கணவர்தம் திரள்தடக்கைக்(கு) ஓடுவார் ஓலமிடுவார்முலையும் குழலும் பாரக் க்ாடுமாய் ஏங்குவார் கணவர்தம் கையிற் கண்டேன்
II.3 குழுவியெழுக் குறைபட்டு மாமியெழுக் குரல்காட்டித்தம் தழுவலிடை யீடுற்றுத் தளர்வார்பைங் கிள்ளை மாதர் வழுவிய பூந்துகிலொருகை மழலைமகன் ஒருகையாய்க்கண் ஒழுகிய நீர் அருவியுடன் நாணமிலா தோடு கின்றார்
II4 பிரிவாற்பூ அமளிக்கண் தலையணையை நணைப்பார் பெற்ற எரிவாலங் கெழுந்தகனல் உணரார்தாம் கனவிற் கண்ட பரிவான திடையறுமென்றஞ்சுவார் பஞ்சின் மெத்தை எரிவாக எழுந்து தடி தடிப்பார்கள் ஓடக் கண்டேன்
IIS நரைத்தாயர் தமைச்சுமந்து ஓடுவாரும் நகையின்பெட்டி அரைத்தாங்கி அழுவாரும் குழுவிகளை அங்கைக் கொண்டு இரைத்தாங்குக் கூடுவாரும் န္တိ၏။် இரவிற் சாவுக் கரைத்தாங்கி மீண்டாரும் பிணியோரைக் காவு வாரும்
II6 16

பரிமிதிப் பப்பதை பதைக்கும் பாலகரும் இரவுப் பாதி எரிமிதித்து வீதிவரும் இளையோரும் இதுவெண்னென்று தெரிவதற்குக் கூடுநரும் தீபரக்கத் திசைகள் மாறித் திரிவதனைக் கண்ணுற்றேன் சிந்தனை தீ மூள முள
II 7 கடலடியில் வடவையெனும் கனலிருத்தல் காவியத்தில் மடலிதழிற் கற்ற தண்டே, மைக்கடலில் நிழலாய்த் தோன்றும் அடலெரியின் விம்பத்தைக் கண்டேன் நான், அன்றே யென்றன் குடலெரியக் குலமெரியக் கொழுந்துகனல் நகர முண்ண
II.8 சுருண்டகரும் புகைச்சுருளாம் சுரிகுழல்நாற் றிசைபறக்க திரண்டிரியும் மக்களொலி நாவசைக்கத் தீமுகத்தால் மருண்டுவெளி பார்க்கின்ற மாநகர மாதைக் கண்கள் இரண்டுமழை பொழிய ஒரு கடைமுறையாய்க் கண்டு சென்றேன்
II 9 ஆழ்கடலின் திசையறியேன் அழுநமக்குப் பாலுங் காணேன் சூழ்திரையாற் சுழிக்காற்றாற் சுழல்கின்ற கலத்தைச் சோதி ஏழ்முனிவர் திசைகொண்டே எழுவானுக் கெதிர் செலுத்தி வாழ்திசையைக் காட்டவென வாயுவினை வணங்கி நின்றேன்
2O தெரியாத திசைக்கடலின் அலைமலையின் சுழலும் கோள எரியாகக் கதிரோன்வந் தெழுந்ததிசைக் கெதிரே வந்து சிரியாத திசைமுகமும் சிரிப்பதுபோற் கோபு ரங்கள் வரியாகிக் கரைவாயின் பற்களென வளரக் கண்டேன்
M 2. வேதவொலி பிறந்த மண்ணை விடைப்பாகர் திருநடத்தின் நாதவொலி எழுமண்ணை நாவெல்லாஞ் செந்தமிழ்த்தேன் மோதவரு திருமண்ணை மூவேந்தர் தவழ்ந்த மண்ணை பாதகரும் பதவிபெறும் பரததிரு மண்ணைச் சேர்ந்தேன்
22 பாலூட்டப் பசுவளர்த்துப் பழந்தமிழும் அறமுஞ் சேர்ந்த நாலூட்டப் பனைவளர்த்து நண்ணரச வித்தைக் கேய்ந்த வேலூட்டிக் கைவளர்த்த வீரமெனுங்கனலை மூட்டித் தோலுாட்டி நெஞ்சினுக்குக் கவசமெனத் தணிவுந் தந்தேன்
I23
17

Page 26
Billigg
விற்றந்து தோளினுக்கு வீரந்தந்து மற்றந்த மன்னவர்போல் பயின்ற பாண்மை முற்றத்து மரப்புண்கள் மொழியா வோநாக் குற்றத்த மாசுபடாக் குமுத வாயாய்
சொல்பட்ட வடுமாறாத் தயர உள்ளக் கல்பட்ட எழுத்தாகிக் கழறல் போல வில்பட்ட வடுவெல்லாம் போரில் வீரங் குல்லிட்ட முத்திரையாய் மரங்கள் கொள்ளும்
மதயானைப் பிடர்பாயாய் மத்த கங்கள் இதமான தலையணையாய் பரிகள் ஏறும் விதமான தவிசாக விளையாட் டுற் றீர் பதினாறு வயதின்முன் பாலர் நீவிர்
அம்புலியின் குறைபோன்ற ஆனைக் கொம்பில் அம்புருவி விளையாட நானும் அஞ்சி வெம்பி வர மலைக்குகையில் வேங்கை காக்க வெம்புலியின் குருளையுடன் துயின்றீர் மக்காள்
மலைநாகம் கயிறாக மதத்தயானை சிலையோடு பிணித்திடுவீர் சினத்த வேங்கை முலையான பால்கொண்டு முயல்வளர்த்தீர் கலைமானும் மரையாடும் காற்பின் செல்ல
மந்தியொடு பந்துவிளை யாடி வாங்கிச் சிந்துகனி வனக்குறவர் தேனுக் கீவீர் சந்தனமும் தான்வளர்ந்து குடையாய்ச்சாய பந்துகளாம் களிற்றினத்தைப் பாலித்தீரே
மிதிலைவரும் இருவரைப் போல் விளங்கி நீவீர் மதலைமொழிக் காலத்தே மடுவின் நாப்பண் முதலையெனும் படகேறி முளரிப் பூக்கள் முதலையறி யார் தமக்குக் கொய்தீர் முன்னே
18
I24
25
I26
I27
128
I 29
3O

பொன்னியர சாள்மகிபன் வீதி போங்கால்
மின்னிடையார் விழிக்காடும் வேந்தர் நின்றார் சென்னிழுடிக் காடுஞ்சாய்ந் திருப்பச் சென்றீர் தன்னிகரில் லாதார் போற் றலைசாய்க் காதே
மாற்றழியாப் பசும் பொன்னின் கயிறு வாங்கிக் கோற்றெடியார் தாலாட்டும் குழந்தை நீவிர் காற்றடிப்பத் தாங்குகொடிக் கயிற்றில் ஏறி ஆற்றுவழி கடந்ததுவும் அங்குக் கண்டேன்
கானாற்றிற் படுமணலிற் கோட்டை கட்டித் தேனாற்ற மலர்தாவி மதில்கள் செய்ய நானாற்றா(து) அழுதிருந்தேன் நகரம் செய்ய தானேற்ற தந்தையரின் கனவை எண்ணி
அருவியாற் றலைதடுத்த அணையும் மாந்தை மருவியதோர் வளநகரும் மருத ஓடைக்(கு) அருகமையப் பெருகிய நீர் அணையுந் தந்தை பெருகுமணப் பெட்டியிலே கனவ டைத்தார்
உப்பானை யிறவுத்தண் கடலை உண்ணிர்ச் செப்பாகக் காண்கனவுந் திருவின் செல்வ வைப்பாக வல்லிபுர மணலைக் கண்ட தப்பாருங் கனவுகளும் தகள்க ளான
கல்லெல்லாம் கையுளியாற் கலையே டாகச் சொல்லெல்லாம் தமிழாகத் தாண்க ளெல்லாம் வில்லொன்று புயங்கண்ட வீர மாக
எல்லெல்லாம் கண்டகன விடிந்து மண்ணாம்
மாவை நகள்க் கந்தனுக்கு மணியால் முத்தின் கோவையினாற் கோபுரமும் கட்டச் சென்று யாவை மணித் திருநாட்டில் எடுத்த வைரம் தேவையிலா தொழிந்தனவோ செல்வ மைந்தீர்
மட்டக்களப்பு மணிவாவி எழுகீதம் போற் சொட்டவிழும் தேன்யாழில் தவர்வாய் மாதர் மொட்டவிழும் குழுதவாய் முகிழ்த்துப் பாடக் கட்டியபொற் கிழிப்பரிசுங் கழன்ற தையோ
19
I31.
I32
133
I34
I35
I36
I37

Page 27
புலோலிநகர்ப் பசுபதிக்குப் புரிந்த தேரும் பலாலியிலே மண்டபமும் பாலாவிக்கண் உலாவிவர உமைநாதர் குன்றும் முத்துச் சிலாபமணித் தறைமுடியும் குறையோ சிற்பம்
எதிர்காலும் மணி வேலன் ஏழை பங்கன் கதிர்காமத் தையனுடை கழல்கள் பாடி விதிர்வாகி அடியெடுத்த வேலன் கோவை அதிர்வாகி அரையாகி அழிந்த தேயோ
முற்றுமினிப் படிப்பதுமேன் என்று மூத்தோன்
சொற்றமொழி கேட்டிளையோன் சுற்றி ஏட்டில்
விற்றடக்கை யிரண்டாலும் விழிநீர் ஒற்றிக்
கொற்றவனைக் கண்டவர்போற் குளிர்ந்தார் நெஞ்சம்
gńólaðisreapugü ởóð uulóLSub
பாண்டியன் திருமகள் பாவை சொற்பயில் கூண்டிளங் கிளியெனும் கொவ்வை வாயிதழ் காண்டவர் அழகினாற் கட்டுண்டார் மனத் தாண்டிலி னிரையெனத் தடிக்கின்றார் பலர்
காமனின் காடெனும் கரிய கூந்தலுள் "தேமலர்த் தாமரை செருகு கின்றவள்
கோமகள் மனங்களைச் சேர்த்துக் கூட்டியே பூமுகை யெனக்குழற் புரியிற் சூட்டுவாள்
மடவனம் நடப்பதும் மான்விழிப்பதும் பிடியசை கின்றதும் பேணிக் காண்கிலார் இடையசை வுறவுற இவள்செந் தாமரை அடியசை பெயர்த்திடும் அழகிற் காண்பரே
காவியங் கட்கடை நதலின் மேற்சுருள் மேவிய மென்குழற் கவினைத் தீட்டுவார் ஓவியர் கையலுத்தார்கள் ஒப்பனைப் பூவையர் திகைத்தனர் புனைய இன்மையால்
20
I39
I40
I4I

வெள்ளைவெண் விழியெனும் ஏட்டில் விந்தைசேர் கொள்ளைகொள் கருமையின் குழம்பு கொண்டுமுன் கள்ளவன் மன்மதன் எழுதும் காகிதம் கள்ளவிழ் தாமரைக் கண்ணென் றாரரோ
வாயென வருமிதழ்ப் பவளந் தீட்டிய மாயஅச் செந்நிறம் மறுத்தும் பெற்றிலான் ஆயிரமுறையழித் தலுக்கின்றா னயன் சேயிதழ்க் குமுதநன் மலர்கள் கூம்பவே
குடை யெடுத் தலகெலாம் ஆளும் கொற்றவர் விடையெடு தாதினர் விழையும் நண்பினர் படையெடுப்பதுமிவள் பாரமென்முலை இடையெடுப் பினில்வளை வெழுதும் வில்லினால்
முகிலெனக் கருங்குழல் முடித்த பாரமும் தகிலிடு மிருமுலைச் சுமையும் பொன்னெழில் புகலிடம் பொருந்திடச் சுமந்த பாரமும் தொகலிடப் பூங்கொடிப் பெயருஞ் சூடினாள்
கூண்டிளங் கிளியையும் கோதை யாரையும் பாண்டகு யாழையும் பயிலும் பாட்டையும் பாண்டியன் தமிழினிற் படித்த கூத்தையும் மாண்டகு மனையையும் மாது நீங்கினாள்
சண்பகத் தாதினிற் றவழ்ந்த தென்றலாம் ( பெண்புகு காவினிற் பிரிந்த மல்லிகை நண்புற நகையுற அன்னம் நானுற விண்பொலி கதிர்தொடு பொழிலின் மேவினாள்
முகையவிழ் குவளைகள் முரலும் வண்டொடு தொகையின விழித்திடத் தாய தண்குளம் வகையுற வரித்திடு முத்த வெண்கரை நகையுற இருந்தனள் நங்கை தண்மணல்
பெருங்க தவும்சுவர் அரணும் பின்மதில்
மருங்ககல் அகழியும்,மாதர் கண்ணெனும்
பெருங்கடல் அகழியும் நீந்திப் பேதையின்
கருங்குவ ளைவிழிக் கறுப்பிற் பூத்தனன்
21
O
I
I2,

Page 28
மைந்தரில் இளையவன் மல்லின் தோளினான் சுந்தரி தணுக்கிடச் சொல்லல் மேயினான் வந்திடு போயென வாழ்த்தம் நல்விடை தந்திடு போய்வரத் தாழ்த்தொ ணாதினி
பெற்றவள் கரங்களைப் பிணித்த அந்நியர் சுற்றமும் சுகத்தொடு வாழு ஆணென மற்றரு புயத்தையும் மார்பகத்தையும் உற்றிடு போர்முனை கொடாமல் ஓய்வனோ
அன்னமென் நடையினர் அரம்பை யாமெனுங் கன்னியர் எழில்விரிவதனங் காட்டினும் அன்னையென் றொருத்தியின் ஆசைப் பொன்முகம் இன்னதென் றறிகிலேன் ஈர்த்தல் விந்தையோ
தந்தையாதாயினர் தாயெங் குற்றனர் சொந்தநா டுற்றதே தென்னச் சோருதல் சிந்தனை மனையினிற் றெய்வமாய்ப்புகும் உந்தனின் முகவிளக் கொளிர்வ தாலரோ
தாயென ஒருத்தியுந் தவழ்ந்த தேசமும் நாயெனும் எனக்குமுண் டென்ற நல்லசொல் வாயினிற் கேட்டபின் வளரும் வெங்கனல் தேயவுங் கூடுமோ செல்கிலே னெனில்
என்றலும் இளங்கிளி இதயந் தண்ணென அன்றிலிற் றுடிப்பவள் ஆவி ஊதிய தென்றலுஞ் சுடச்சுடச் செவ்வரிக்டை சென்றிடும் அருவியாற் சிந்தை சொல்லுவாள்
கள்ளமொன் றறிகிலாக் கன்னிப் பேதையர் உள்ளமென்றிடுமனை ஒளிவிற் புக்கவர் கொள்ளை கொண்டண்புநோய் கொடுத்துக் கண்களில் வெள்ளமும் பெருக்குதல் வீரற் கேற்றதோ
ஒலிதரு வளைகழன் றோடியுங் கவின் பொலிதரு உடல், இடை போல்மெ லிந்துமே நலிதரு நோய் சொல லன்றி நாவினால் நிலைசொலா மாதரைப் பிரிதல் நீதியோ
22
I3
I4
IS
I6
I 7
18
I9
2Ο

நெஞ்சொளித்தனபல ஒளிக்கலா நிழல் வஞ்சியர் சேடியர் மறந்தனேன்; எனைக் கொஞ்சிமுத்தாடிய தாயைக் கூடிலேன் வஞ்சக வாலிபர்க்கோ இத் தாயுளாள்
மானோடு மயில்களும் மரமும் நாம்பயில் காணயற் புதர்களும் மறந்த காட்டினும் தேனுட னுாட்டிய செல்வ நிண்பெயர் தானிளங் கிளிமறந் திடுதல் சாலுமோ
மாதவிக் கொடியினில் மகிழில் நின்பெயர் மீதறப் பொறித்தனேன் மீளுங் காவெலாம் காதலர்ப் பெயரினைக் காட்டிக் காட்டியென் வேதனை மிகுப்பதம் வெற்றி யாவதோ
கட்டிய கரங்களாற் கண்புதைத் தென்குழல் ஒட்டிய தோள்களை ஒருங்கு சேர்த்திள மொட்டரும் பிடநறு முல்லை சூடினீர் விட்டிடு மோஅவை மறக்க வேண்டினீர்
அன்பிணை கலையினுக் கருமை நின்பெயர் மென்பிணை மானினுக் கெனது வீண்பெயர் முன்பு வைத் திட்டனேன், முற்றம் செல்பவை என்புக உகவெனைக் கரைத்தல் இன்பமோ!
மெல்லணை நணைதர விடியல் மட்டுமெம் புல்லியல் இமைநிறை பொங்கும் நீர்வரின் மல்லமர் தோளினார் மகிழ்ச்சிக் காவதோ வெல்லுதற் குரியவர் மென்மை மாதரோ
கட்கடை நீரினாற் கடலுங் காட்டுவார் உட்கிய உடலொடு நடிப்பர் பாவையர்; தட்பமும் வெளிவிடு சாலமும் காட்டிலா(து) உட்குரு காடவர் உள்ளம் ஆழமே
எரிபுகுவோம் இவர் இறப்பின் என்றவர் வரிபுகு விழித்தளி வழிந்து காயுமுன், தெரிவுற ஒருவரை மனத்திற் றேடுவார் அரிவையர் அன்பு மென்மெழுகினானதோ
23
2.
22
23
24
25
26
27
28

Page 29
ஒருமலர்க் கொருமலர் உவந்து தேனுணும் கருமணி வண்டுகள் காதலாடவர்; மருமமும் உயிரொடு மாசில் மேனியும் ஒருவருக் களித்தவள் உள்ளம் சாய்வளோ
மெழுகெனும் உளத்தினில் மெல்லியலார்வரை அழகெழு காதலர் அன்பின் ஓவியம் பழுகெழு உருக்கினாற் பாறை வார்த்திடும் தொழுதெழு சிலையெனல் துணிகிலீர் கொலோ
கர்தலும் நாணமும் கலாய்க்கும் பெண்ணுளம். ஆதலின் ஆடவர் அறிகிலார் என்றன் மீதலை மெல்லிய பட்டும் நெஞ்சினுள் மோதிய நாணமும் அன்பை மூடுமோ
போர்முக வடிக்கணைக்குடைந்த போகிலேன் கூர்முக மங்கையர் கொடிய வேலிணை நேர்முக நிற்கிலேன் முதகிட் டோடுவேன் ஆர்முகம் நினதல தஞ்சற் பாலதோ
உருப்பசி யிரப்பினும் அரம்பை ஒடியென் செருப்பினைச் சுமக்கினும் தேவகன்னியர் ஒருப்பட நடிப்பினும், உன்னை ஓவியம் விருப்புற எழுதிய விழியுங் காணு மோ
அடித்தலத் தொடுநிலம் அழியும் காலமும் வெடித்தன விண்டிரி மீன்கள் வீழினும் தொடித்தளை ஒலித்திடத் தாய என்மனம் பிடித்தகை வேறொரு பெண்ணைப் பற்றுமோ
அந்தணர் தரதித்திட அருக்கன் தோன்றிமுன் வந்திடிற் கமலங்கள் வாய்திறக்குமே சந்திரன் உதித்திடத் தானகைத்திடும் சுந்தரி ஆம்பலும் மலர்ந்து தோன்றுமோ
விடுத்திடு நின்பயம் விடைதந் தன்கரம் கொடுத்திடு நாயகன் கோழை என்றசொல் தடுத்தெனைக் காத்திடு தமிழ்த்தென் பாண்டியன் வடித்திடு சிலையென வளரும் பூங்கொடீ
24
29
30
3.
32
33
34
35
36

ஒரணைத் துயில்பவர்க் கிடையில் ஓங்கிய பாரனைத் தனையநீள் தாரம் பாரிக்கும் நேரணை கின்றவர் நெஞ்சில் ஒன்றியே பாரினில் எதிர்முனை வாழ்வர் பற்றினால்
பிரிந்தனர் இருவரும் பின்பு கூடவே அரிந்தனர் இதயமாம் ஒன்றை அன்பினில் விரிந்தபொன் முகத்தினில் விம்மி வந்தகண் சொரிந்தன மழையினைத் தாரம் செல்லவே
கூத்திய உத்தைப்படலம்
மாவை நன்னகள் மாடொரு கற்றொலை காவும் கன்னலும் தேனின் கதலியும் மாவும் ஓங்கி மருத நடுவிட மேவு கடத்திய வத்தை மிளிருமே
வானமோங்கும் மருதின் அடியிலே ஞான முற்றவர் நம்பினர் கூப்பினர் மோன முற்றவர் முத்தெனக் கண்ணென ஆனை மாமுகன் அங்கிடங் கொண்டனன்
கார்கழிந்து கழனியொன் சாய்த்திடும் மார்கழித் திருமாதமொர் நாளிலே நீர்கழிந்து நிறைந்த கண்வார்ந்திட ஏர்கழித்தகை அன்பன் இரங்குவான்
ஆதி நாயக அன்பர் படைத்திடும் மோத கப்பிரியாமுதல் மூர்த்தியே வேத மெய்ப்பொருள் வேழுமுகத்தனே சோதிக் கின்றனை யோதயர் காட்டியே
பொன்னை வேண்டிலன் பூமியை வேண்டிலன் சொன்ன நற்கலை சூடவும் வேண்டிலன் அன்னையைக் கண்டுடைந்திடும் ஆவென உன்னைக் கைதொழு ஒர்பயமுற்றதோ
25
37
38

Page 30
காப்புக் கட்டிய கையின ராயுனைத் தோப்புக் கண்ட மிடுநரைச் சிங்களர் காப்புக் கைத்தளை பூட்டிவன் சங்கிலிக் கோப்பிற் செல்லவுங் கொண்டனையோ வுளம்
நீறு புண்டர நெற்றியிற் சிங்களர் கூறு செய்த சவுக்கின் குறிகளோ ஏறு கண்டிகை எற்றபொன் மார்புகள் 2ஹறு கின்ற உதிரம் நணைப்பவோ
சித்த மென்ன தெரிகிலன் தெய்வமே பித்த னாகினன் பின்புனைக் காணவும் எத்த ரென்ன புரிகுவ ரோவினி பத்தர் தன்பம் படுவதம் ஏற்குமோ
என்றிரந்து இணைமலர் கூப்பியே கன்றி நின்றவர் கண்பொழியா நின்றார் அன்று காலையில் அப்பதி வாழ்பவர் நன்று நாமும் நன்ன ரென்றுள்ளவர்
அந்த வேளை அடைந்தனன் சோரமாய் கந்த சாமி கணபதி கும்பிட முந்தி நன்னரும் நின்றிடல் மோசமாய்ச் சிந்தை எண்ணித் திகைத்தனன் கல்லென
கண்ட நன்னி கதையைத் தொடங்குவார் விண்டிடேனி. தெவர்க்கும் விடுபயம் அண்டி நண்பர் அறுப்பவர் நாங்களோ கொண்டிடாதிரு கூடுசந்தேகமே
போர்த்த சால்வை எடுத்தனர் புண்ணிய மூர்த்தியாகிய நன்னரும் முக்குறி சார்த்து கின்ற முதகிற் சவுக்கடி சேர்த்துக் கன்றிய செங்கரும் புண்களே
இன்ன கண்டவர் மீண்டும் இயம்புவார் என்னை மன்னியென் நன்ன நின் எண்ணத்தைச் சின்னப் புண்மதி சென்றுசந் தேகித்தால் என்ன செய்குவம் இந்த நிலைமையோ
26
O
2
13

கந்த சாமியர் கண்புனல் கக்குவார் ஐந்து பொன் வயதாய அருமகன் வந்து பாய்ந்த வலிய குதிரைக்கால் சிந்திச் சீத்திடச் செத்தனன் கேட்டிரோ
கந்தன் மாக்கதை தொட்ட கரங்களால் வெந்த ஊனினை வெட்டிப் பதஞ்செய வந்த சிங்களர் வாய்மடுத் தார்க்கவும் அந்த மேயிது ஆர்செய்த பாவமோ
பொற்பதித்த கலன்கள் புனிதநல் கற்பெனக் கொளும் காவல் மடந்தையர் அற்பர் வேண்டி அருந்த மதக்கொடு நிற்பவும் விதியோ நினை நேர்ந்தவர்
உள்ளமென்னுங் கருங்கல் உருகிட வெள்ளமென்றுகண் நீர் மழை வீழ்ந்திட பள்ளி பாடிடும் காலையிற் சிங்களர் பள்ளுப் பாடவும் உம்முடை சித்தமோ
உன்னை நேர்ந்த விரதம் ஒழிந்ததே கன்னிச் செந்தமிழ் கைத்தளை பூட்டிமுன் சென்னி தாழ்ந்தனள் செய்பிழை என்னவோ அன்னை தன்னினும் அன்புடையாயன்றோ
வேத மோதிய நாக்களும் விண்டொடு சோதி மாட மணிகள் தடித்திடும் நாத நாவும் நமச்சிவ நாதமும் மோத மிவ்விடம் மோனமுமுற்றதே
ஏறுகின்ற குதிரை இடறிட மாறி ஓடிய மக்கள் தடிக்கிறார் சாறு செய்த தலையும் குருதியின் சேறு மன்றித் தெருக்களும் உள்ளவோ
வெட்டு கின்ற விகாரை அடித்தளம் கட்டுதற்குத் தலைக்கொடு கற்சுமை கொட்டுகின்றனர் நாவலர் கோத்தமிழ் சொட்டு கின்றனள் துன்பக் கண்ணிரரோ
27
I4
I5
16
I }
I8
I9
2O
2I

Page 31
ஓடும் பாலகர் வீதியிற் சிங்கள வேடுவப் படைவிட்ட குதிரைகள் ஒடியெங்கள் குழந்தை யொருவனைத் தேடிக் காலிற் சிதைத்ததென் செய்குவோம்
காலமும் பகையுற்றது காணெமைப் பாலனஞ் செயும் பார்த்திபன் மாண்டனன் கோல பூழிந்தது கொள்கை சிதைந்தது ஞால வாழ்வினி நாய்நமக்குண்டு கொல்
பேசவும் பின்னே பார்த்தலும் நீற்றினைப் பூசவுந் திருக் கண்டிகை பூணவும் மாசுலாங் களவாக மதித்தலும் கூசு கின்றதம் காலத்தின் கோலமோ
இட்ட வன்முத குன்சவுக் கேற்றிய(த) ஒட்டி நின்றெம் உமையொரு பாகன்றாள் தொட்டு நங்குறை சொல்லிய தாலன்றோ கட்ட மீது கணபதி காணு வாய்
என்று சொல்லி இருவரும் மண்மிசை சென்று சென்னி அவனடி சேர்த்தியே கன்றடைந்த பசுவிற் கரைந்துகண் சென்றுடைந்தன தெய்வமுன் தேம்புவார்
கேட்டதோ செவி கெஞ்சிய ஒளவையின் பாட்டினுக்கும் பழமறைக் கூவற்கும் ஏட்டினுக்கும் வியாசன் இயம்பற்கும் கேட்டிருந்த அவ் வேதக் கிளர்செவி
நீண்ட பச்சை வயலின் நெடுவெளி ஆண்டு நோக்கி அமைந்தனர் மோனத்தில் தாண்டி வெவ்வினை சஞ்சலஞ் சாய்ந்திட வேண்டு வார்க்கு விழிக்கடை காட்டுவார்
போர்த்தி வெண்பனி மென்புகைப் போர்வையால் கூர்த்த மெல்லறு காய குளிரிமை நீர்த்த தண்பனிக் கண்டுளி நீரொடு பார்த்த விம்மினள் பாரெனும் பாவையும்
28
22
23
24
25
26
27
28
29

சோலை சொட்டிய தன்பக் கண்ணிருக்குக் காலை வண்டு முகாரி கதறுமால் நீல வானமும் நெக்கினள் சிந்தினள் வேலி ரத்தக் கண்ணிருறமேகமே
மூக்கணிந்த வயிரங் கழற்றினர் காக்குங் கற்புடைக் கன்னியர் புல்நன தாக்குங் கோடி வயிரங்கள் சோபிக்க நாக்கிழந்தனர் நாணினர் ஆணின்முன்
பேணு செந்தமிழ் பெற்றநற் பாவலர் காணு கின்றனர் சிங்களம் கற்றிடும் ஆணையும் அதனாற்றலை சாய்வர்போல் நாணமுற்றன பைங்கதிர் நாற்றெலாம்
அலைய சைத்திடஅம்புய மெல்லனை தலைய சைக்கும் தவளையினங்களும் நிலைய சைந்ததம் நெஞ்சினிற் கோழையாய் விலையி சைந்த தமிழினை விற்பர்போல்
ஒற்றைக் காலிடு நாரையும் உள்வலி பெற்ற மானப் பெரியரும் சூல்வயி(று) உற்ற மாதரும் ஒண்டமிழ்ச் செல்வியும் முற்றடங்கினர் காலத்தை முன்னியே
வில்வளைந்திடில் வீரம் வளையுமோ புல்வளைந்திடும் பொங்கிய ஆற்றினால் நெல்வளைந்திடும் நிற்கும் நெடுமலைக் கல்வ ளைந்திடு மோஎந்தக் காலமும்
தலைவர்கள் ob uusb
கன்னி மடவார் கரைந்தழுத முத்தப்போல் புன்னை அரும்பிப் புனலின் கரைநிற்பச்
சென்னி தலைவைத்துச் சிறுநாவல் கண்ணயர அன்னங் கமலத்துட் குஞ் சொளிக்கும் அவ்வூரில்
29
30
3I
32
33
34
35

Page 32
விரித்த மணற் பரப்பில் வெள்ளி மலைக் குன்றாய்ச் சிரித்த தடமெல்லாம் செங்கமலக் காடாய் நெரித்த குலைத் தெங்குநெற் காட்டின் ஒரம் வரித்து நிரைநிற்கும் வளஞ்சேர் குடாரிப்பே
ஏறிமதச் சேர்க்காமல் எட்டிமணல் நின்றுபனந் தேறல் குடிப்பாரும், செவ்விளநீர் தென்னையிலே கீறிக் குடிப்பாரும், செந்நெல்லின் கீழ்த்தாளிற் பீறிக் கிடக்கும் பெருந்தேன் மடுப்பாரும்
அஞ்சி யொடுங்கி அவர்தம் குடில்களிலே நெஞ்சு கலங்கி நினைவ தறியாராய்க் கஞ்சி குடித்துத்தம் கால்வயிறு போதுமெனத் தஞ்சி மணலிற் சுகங்கொண்டார் தைமாதம்
பெய்த மழையின் பெரும் விளைவு வெட்டாராய்ச் செய்த வயல்சாயச் சிறுநாரைக்(கு) ஒலிட்டு நொய்தமனத்தால் நரைப்புனலிற் கண்மூடி நெய்தல் அழுதனள், நெஞ்சிருப்பார் தஞ்சுவரோ
தண்டமுறுவர் தமிழ்கற்றோர் என்றுபறை விண்டகுரற் கேட்டும் விரிந்தமணற் கைதைமலர் வண்டெழுதும் வாலொளிய வெண்மணலிற் காலினால் நண்டெழுதும் செந்தமிழாய் நாடறிய அந்நாளில்
புன்னைப் பொழிலிற் பூந்தாதுப் பொன்சொரிய அன்ன வரியூசல் ஆடும் மழலைத்தேன்
சின்னஞ் சிறுவர் திகைத்தொளித்த தாற்கயிறு பின்னிக் கிடக்கும் பெரும்பாம்பின் பக்கலிலே
Bijligg
ஊருறங்கிடவுந் தென்றல் உயிருறங் கிடவும் நங்கை பாருறங் கிடவும் பாயற் பள்ளிகொள்ளாத மேய்ந்த காருறங் கிடப்போய் மண்டிக் கனையிருட் டுஞ்சும் சோலை ஆருறங் கினரோ சாமம் அருகெலாங் காவலிட்டே
30

மட்டுமா நகரின் வள்ளல் மழவரா யரும்செந்தார
வட்டுமா நகர்தந் திட்ட வைத்தியர் முருக வேளும் எட்டுமா நிலங்க ளாளும் இரகுநா தரும்நீர் வேலிப் பட்டமார் கனகராயப் பெரியரும் பாயல் கொள்ளார்
உயர்மணற் குன்றின் பாங்கள் ஒளிரும் தீ வர்த்தி கால அயர்வகன் றகன்றுபோக அடிக்கடி அடைகாயுண்டு தயர்மனம் புகைந்த தெல்லாம் சொல்லினில் எரியக் கக்கி வியர்வரும் பிடநின்றேங்கும் வேதனை விளம்பலுற்றாம்
ஒட்டிய வயிறு காய உணவிலாச் சிறுவர் கஞ்சிச் சட்டியிற் பருக்கை தேடச் சரித்துப்பொற் குதிரின் நெல்லைக்
கொட்டினார் குதிரை தின்னக் கொடுமையைக் காணேனென்று
மட்டுமா நகரின் வேளாண் மரபினன் கதறுவானே
IO
II.
கொன்றனர் பசுவின் கூட்டம் குடில்களில் வளர்ந்த ஆட்டைத்
தின்றனர் சிவனார் கோயிற் றிருமணி மண்டபத்தள் பன்றியின் இறைச்சி யோடு பனைமதுக் குடம் நிரைத்து நின்றுசிங் களவர்ஆட நெஞ்சினிப் பொறுக்குமாமோ
கட்டிய கணவர் தம்முன் கற்புடை மாதரார்கை எட்டினர் இழுத்துச் செல்ல இனியுயிர் வேண்டுங் கொல்லோ சொட்டினர் கண்ணீர் சோரத் துவண் டரற்றிட்ட ஒலம் எட்டியும் வாளா மோனத் திருப்பவர் ஆண்க ளாமோ
குடித்தபால் வாயறாத குமுறிடக் குதிரைக் கர்லில் தடித்தனர் சிறுவர் ஆக்கை சுற்றிய நாலு காசோ(டு) எடுத்தெறிந் தேகு கின்றார், இதயமும் கல்லாய்ச் செய்தோ படுத்தணை தயின்றீர் வீரப்பரம்பரை பேசு வோரே
கட்டிளங் காளையர்கள் கற்றனர் தமிழென் குற்றப் பட்டதால் மன்னார் ஆழிப் பரவையின் இருட்கு கைக்குள் எட்டிய முத்துத் தேட, இணைத்தவன் இரும்பாற் கையைக் கட்டியே வரிசை செல்லும் காட்சிகண் காணலாமோ
அந்தணர் புரிநூல் எட்டி அறுத்துமீன் தாண்டில் நாலாய்ச்
செந்தலை இறால்மீ னிட்டுத் திரைக்கடற் பண்ணை யோரம்
நிந்தனை நெறியில் நின்ற நீசரைக் கண்டு நெஞ்சங்
கொந்தளித் தெழுவ தல்லாற் குறைதவிர்த் திடுவர் ஆரோ
31
2
3.
I4
IS
I6

Page 33
சாவினும் நமச்சிவாயஞ் சரணெனச் சொல்வ தல்லால் பாவியர் நாமஞ் சொல்லோம் எனப்பகர் சிவனார் பத்தர் பூவியல் மேனி புண்ணாய்ப் புழுதியில் உரோஞ்ச வேகத்(து) ஏவிய குதிரை வீரர் வார்க்கயிற் றிழுத்துச் செல்வார்.
I7 கோட்டுவெண் களிற்றுவேட்டை ஆடிட, குமரர் நங்கள் காட்டிடை அனுப்பப் பட்டார் காலம்பத் தாண்ட தாயும் மீட்டுவந் தாருமில்லை, விளம்பிய சொல்லொன் றில்லை கேட்டிடத் தணிவா ரில்லை, கெடுகினும் வரம்புண் டன்றோ
I8
உறுகுணையார்கள் தந்த ஒளிமருப்பியாழிற் றேனின் முறுகிய நரம்பு சிங்கன் முற்றிய வெற்றி பாட அறிதயில் கொள்ளும் முன்னோர் அமளியில் நீசர் தஞ்சச் சிறிதுகண் அயரா நிற்கும் தெருவெலாம் கொடுங்கோல் என்பான்
I9 கத்திடுந் தவளை யோசை கண்டுயில் குழப்பு மென்று பத்தரை மாற்றுத் தங்கப் பாவையர் வேலி யிட்டுச் சத்தமொன் றெழாத வாறு தடிகொடு நீரைத் தாக்க நித்திரை கொள்ளும் புல்லர் நெறிகளுக் கேதுசொன்னோம்
2O தாமரை இதழிற் சேக்குந் தளிரடி மயில்கள், ஆடுங் காமருங் கரங்கு விட்டார், கைமலர் வீணை விட்ட காமமேகலைகள் பூண்ட கண்படா இடைகள், கல்லும் தாமணற் சுமையுந் தாக்கித் தவண்டுதண் டாதல் நன்றோ
2I பாட்டிடைப் பயின்று தீந்தேன் பண்ணினில் வடித்துச் செஞ்சொற் கூட்டிய தமிழிற் றந்த கோநகர்ப் பேர்கள், வந்தோர் சூட்டிய நாமம் பெற்றால் தாயகாவியங்கள் பொய்யாய் ஏட்டினில் நடந்த காதை எழுந்தகற் பனையாகாதோ
22 ஓங்குமா லியமக் கோட்டில் உறுத்திய புலியும் வில்லும் தாங்கிடா நல்லூர்க் கோட்டைத் தமனிய முடியில் முன்னே ஏங்கியெம் படையைக் கண்டு திறைமணி இறைத்துப் பாதம் தாங்கிய மன்னர் வெற்றிக் கொடிதலை தரித்துக்கொண்டோம்
23 நடுங்குதோள் உத்தரீயம் நாற்புறம் அலைய அச்சத் தொடுங்கலால் நழுவி ஆடை உதரம் விட்டலைய, உச்சிக்கு இடுங்கலை வுற்ற பாகை அக்குளிற் குலைய மேனி ஒடுங்கிட நிரையில் ஒடும் உடையார்தம் மான மெங்கே
24 32

தீவினை நமதோ, அன்னார் செய்தவப் பயனோ, எங்கள் பூவியல் அரம்பை மாதர் பொன்னடி அலசப் போந்து காவியங் கண்ணரும்ப சிங்களக் கணிகை மார்க்குச் சேவகம் முற்றிப் பள்ளித் திருவடி வருடு கின்றார்
சாவகம் கொண்ட காதை, தமிழ் மகள் சங்கப் பீடப் பூவகம் மலர்ந்த காதை, புனல்கனல் பிழுைத்த காதை பாவகம் படித்த பாலர் பணிந்துகைம் முணுவின் காதை நாவகம் மிழற்று கின்றார், நாம் செவிமடுத்தக் கொண்டோம்.
உரைசெயப் பசும்பொன் கோடி ஒவ்வொரு எழுத்துக் கீந்து கரைசெயா இன்பங்காணும் கம்பனைச் சுமந்த கைகள் அரசடி நிழலில் எல்லாம் அயனுவின் புத்த கங்கள் சிரசினிற் சுமக்குங் காட்சி திருவிழிக் கியையப் பெற்றோம்
தோய்த்தலர் வெள்ளையாடை தோளிடு முத்தரீயம் போய்த்துணி மூட்டிக் கட்டிப் புண்மயிர் சீப்பி லிட்ட நாய்த் தமிழ்த் துரோகி யார்கள் நலனுற நம்முள் வாழச் சாய்த்திலோம் குடரை நாமும் தமிழரென்றிருந்து பார்த்தோம்
ஒட்டிய தாசு நீக்கி உலர் மயிர்க்கெண்ணெய் நீவி கட்டிய கந்தை நீக்கிக் கணகவட்டிலில் வயிற்றுக்(கு) இட்டசோ றெரிவதன்முன் ஏத்திவன் னியனின் பாதம் கட்டிநின் றடிமை யாகும் காவலர்க் கேதசெய்தோம்.
நயினையந் தீவில் அன்னை நாகபூசணியின் பாங்கள் வயினிரை விகாரை யிட்டு வளைந்துகற் பொறித்த ஏட்டில் அயனிலவோ டாதிதொட்டே அததமதுரிமை யென்றார் பயனுடைத் தமிழ்ப்பா வேற்றப் பண்டிதர் தலைய சைத்தார்
மருத்தவ நாலும் வான மண்டிலக் கோளின் நாலும் விரித்த தத்துவங்களோடு வேதமும் யானை ஏற்றி வரித்தபொற் கம்பளங்கள், விதானத்து மணிகள், வைரம் தரித்தபொற் கோலுங்கொண்டு சென்றிடச் சமர்செய் தோமோ
நல்லையம் பதியிற் சட்ட நாதரின் முடியைக் கொண்டார்; தில்லையம் பலமென் றோதும் செம்மலம் மூர்த்தி தன்னை எல்லையில் யமுனா ஏரி இட்டனர் இரவில் ஈது சொல்லவுந் தாதுண்டாயில் தணியரை உடுக்கலாமோ
33
2S
26
27
28
29
30
31
32

Page 34
திருக்குறள் படித்த வாயாற் பீடகம் மொழியெர்க்கத் தருக்கிய மனத்தினோடு சங்கமும் சேர்ந்த மேலோர் இருக்கவும், தமிழரென்றாம் நாகமும் இங்கு வாழ்ந்து பெருக்குறத்தடையின்றன்றோ மனிதர்க்குப் பிசகலாமோ
Bibligg
கற்பினின் கொழுந்தாய்க் காவியப் பொருளாய் சிற்பிகள் வடித்த சிலையெனும் செல்வம் கற்பகம் என்ற கவரிமா அன்னாள் பொற்புறு காதை புகன்றனன் புனிதன்
மரங்களும் உருகும், மண்கசிந் திளகும் உரங் கொள்வன் சிலையும் உளங்கொளும், நீராய் இரங்குமென் மனத்தீர்! என்செய்வீர்; காதைக் கரங்கொடு பொத்தம் காதையைத் தொடர்வேன்
என்றுகண் தடைத்தார் ஏழாலைக் கோமான் நின்றவர் எழுந்தார் நினைவினால் விம்மி அன்றொரு நாளென் றெடுத்தவர் புன்னை நின்ற கொப் பொடிய நிறுத்தினார் கல்லாய்
Billip
ஒடுங் குரங்கின் சிறுசேட்டை உண்டென்(று) ஆடுங் கிளையாற் பயந்தீர்ந் தங்குள்ளார்கள் காடும் அயற்பொழிலும் கண்தடவிப் புன்னையுயர் கோடும் கிளையும் ஒருவரிலர் உள்ளே
என்றுபயந் தீர்ந்திருக்கை அடைந்தார்கள், குன்றுங் கனியக் குரலெடுத்துக் கோமான் வென்றிக் குலமழவன் வேளாளன் மெய்ம்மரபிற் கன்று பிறந்தனள் கற்பகத்தின் தங்கை
எடுத்தவடிக் கிட்டலையும் மெல்லிடைக்குப் பாரம் கொடுத்த குழலும் குமிழும் போதாதென்றே அடுத்த குடமும் அழகும் சுமந்தாள் மடுத்துநீர் மொள்ளவோர் மாலை நடக்குங்கால்
34
33
34
35
36
37
38
39

கண்ணாம் எரிக்குக் கண்ணியெழில் நெய்யாகப் பெண்ணாளைக் கண்டார் பெரும்புரவி மீதிவர்வோர் அண்ணாவென அழுதாள் அன்னந்துவண்டனளே விண்ணாகப் பாய்பரியில் வீதிவழி கொண்டிவர்ந்தார்
40 கூந்தற் குலமலையக் கூவுங் குரலடைக்கக் காந்தட் கரங்கள் காப்பாரைக் கூப்பியழு சேந்த விழிநீர் திருவீதி சிந்திவர நீந்திக் கடந்தனள் நின்றபுலி ஆண்கடலை,
41 குலையும் தகிலுமொரு கூவுங் குரலடைக்கக் கலையும் குழலுமுறு மானமுமோர் கையால் நிலையிற் பிடிப்பாளை நீசர் கரமாம் வலையிற் பிடிக்கவும் வாய்பொத்தி நின்றோமே
42. ஒலக் குரல்கேட் டுயிர் திரண மாகத்தன் காலைக் கடும்பரியின் வேகத் திணையாக்கி சோலைக் கரையினிற் சுந்தரியைச் சேர்த்தவிடம் சாலக் கடந்தான் தமையனவன் தான்தனித்தே
43 மானங்குலைய மயிர்நீத்த மான்போல தானங்கிறந்து தரைகிடக்கும் தையலுடல் வானங் கவிகையிடக் கண்டனன் வாய்கடித்தான் தானங் கொடுத்தான் உயிருந்தன் தங்கைக்கே.
44 மூண்ட சினமோ முன்சென்ற கைவாளோ தீண்டி யிழுத்த கரமதனைச் செகுத்ததையா ஆண்டகையான் பேடியினைக் கொன்றான் அந்நாய்க்கடட்டம் மீண்டவனைக் கொன்றார் விரைந்தோடி வஞ்சனையால்
45 Bogg
கூடி நின்றவர் கொதித்தெழு, ஒருவரை யொருவர் நீடு பல்லிதழ் கடிப்பவர் நெருப்பெழ விழிப்பார் மாடி ருந்தனர், மவுனமும் மனத்துளே பேசக் கூடு மோர் மொழி யாயதே அவ்வயிற் குறித்தே.
46
35

Page 35
போன ஆயிரம் பேசியும் பயனெது புண்மை ஈன மென்பவை அழித்திட இனிவழி தொடர்வோம் மானமுள்ளவர் வாழ்கிலோம் மனிதராய் இறக்க ஞானமுள்ளவர் நவலுவீர் வழியினி நயந்தே.
வாழ்வு நம்மது கழிந்தத, வழிவழி வருவோர் தாழ்வும் அன்னவர் சாபமும் தமிழ்மகள் குலைந்த வீழ்வும் விட்டினி இறப்பமோ விதியென அன்றி ஊழ்கொடுத்ததை உயிர்கொடுத் தெதிர்த்திடமனமோ
உதிரும் மென்சரு(கு) உரமென மரத்தினுக் குணவாய் எதிரிடும் புது அரும்பிட இறப்பதங் கண்டோம் முதிரும் இவ்வுடல் கொடுத்தெமில் முளையிடும் கருவின் கதிர ரும்பிய குஞ்சுகள் காத்திடல் கடனே
பத்தடுக்கிய பலப்பல ஆண்டுகள் வாழ்ந்தே தத்தும் ஒவ்வொரு கணத்தினும் சாவது நன்றோ செத்து வாழவோர் செவ்விவந் தடைகையிற் சிறியேம் சித்தம் ஏங்குவ தேனினிச் செய்கையில் தெளிவோம்
என்ற வாசகம் இருசெவிக் கமுதெனக் கொண்டு நின்ற யாவரும் திரண்டனர் ஒருமுக நெறியில் பொன்றுவோ மிதில், இல்லையேல் அடிமையிற் புண்மை வென்று போகுவோம்’ என்றுதோள் வீங்கினர் எழுந்தே
குடிபகைத்திடக் கோல்கொளும் மன்னவர் யாரோ, அடிபகைத் தொருமலர் மரத் தலர்வதும் உண்டோ, அடிபணிந்தினி வாழ்கிலேம் எனவொரு அறுதிக் கொடிபிடித்திடிற் கோல்பணிந் தடிவரு டாதோ
வடியும் ஏழைகண் நீரெனும் வாட்படை பெருக மிடியெ னும்பகை வீதிகள் தோறும் நின்றார்ப்ப அடிய சைந்தநல் லறந்தரை வீழ்ந்திட அரசர் முடிய சைந்திடும்; போரிடும் முனைப்படை யெதற்கோ
எடுத்த சத்தியம் இரும்பிடு கவசமாம்; அறத்திற் படுத்த நெஞ்சொரு பாறையாம் சுதந்தர பானம் குடித்த நிற்கவும் கொதித்திடில் மன்னவர் படையும் தொடுத்த வன்கணை மாரியும் தகள்தகள் படாதோ
36
47
48
49
SO
SI
S2
S3
54

உருக்கு நெஞ்சினர் உயிர்விட, ஒருசிலர் துணியின் பெருக்கும் ஆயிரம் படைகளும் பின்னுடைந் தோடும் வெருக்கொள் சிந்த்ையராயினி வெள்கலீர், வேந்தர்
செருக்குலைத் தெமதீனமும் சிறுமையும் துடைப்போம்
அன்னை காளியின் ஆணயிைற் சத்தியம், குருதி சின்னமாகவெம் நெற்றியில் திலகமு மிடுவோம் என்ன நேரினும் இலக்கிதை விலகோம். எம்மைப் பின்ன மாக்கினும் ஒருவர்மற் றொருவரிற் பிரியோம்.
எடுத்த சத்திய விரதமும் இதழுறக் கடித்து மடித்த வாயுடன் மனமொரு வஞ்சினஞ் சொல்ல கொடுத்து நின்றனர் தம்மையிப் பணியினிற் கூடி அடுத்து நின்றவர் தழுவினர் அணைத்தனர் பிரிந்தார்.
கஞ்சுகங் கணண்ந படலம்
எழுதிய ஓவியம் இதழ்பிரித் தஞ்சொல் பழுதறப் பயின்றெனப் பளிங்கினிற் காட்டும் தொழுதகு மழகினைத் தோகையர் பொன்னின் பழு தரு கலங்களாற் பாரமே செய்தார்
கெஞ்சிலார் தம்முகம் நோக்கிலார் கேட்கார் நெஞ்சிலார் ஆடவர் என்றுளம் நெக்கு வஞ்சினம் தீர்ப்பவர் தோழியர் வாட்கண் நஞ்சினுக் கஞ்சன நஞ்சினைச் சேர்த்தார்.
கருமுகிற் சுருளினிற் கதிர்மதி நழைந்து தருமழ கிதவென மல்லிகைத் தாமம் சொருகினர் தரவளிடை சோருமென் றஞ்சார் அருமையும் மென்மையும் அழகிடு வோரே
முழுத்திரு முகமதிக் கறையெனுந் திலகம் எழுத்திடா எழில்பெரி தெனச்சிலர் அழிக்கப் பழித்தனர் ஒருசிலர் படுத்தமைத் திலகம் அழித்தகை சோர்ந்தனர் அழகுசெய்வோரே
37
55
56
57

Page 36
ஆர்த்தன வளையினம் அவள்பசுந் தளிர்க்கை சேர்த்தனர் சேடியர் ஆதலாற் சதங்கை போர்த்தன மெல்லடிப் புனிதமுற் றோமேன்(று) ஈர்த்தன இருகுழை செவியினூசல்போய்
தழைத்தபொன் இடைக்கொடி தரளமாய்ப் பூத்து பழுத்தது பவளமென்(று) இதழ்க்கனி சிவப்ப் குழைத்தன தவர்பல இவளிதழ் கூடா பிழைத்தன பெற்றிலார் படைத்தஅச் செம்மை
பூவிதழ் ம்லரடி பூசிய குழம்பு நோவென நண்மையில் நணங்கிய பொன்னை நாவியின் புழுகும் நறுஞ்செழுஞ் சாந்தம் மேவி நன்(கு) அழுத்துநர் மெல்லிய லாரோ
சுருள்மயிர் கரியன சுடர்நதல் தடவி வெருள்மலர் விழிக்கடை உருள்வன மாரன் இருள்வலை இளைஞரின் உயிரினுக் கிடுவான் அருள் பிறி திலன் விரித் தயலொழித் தனனோ
காசுமீரத் தினிற் கைவலான் புனைந்த தாசுபொன் பட்டினைச் சுற்றினள் தோழி தேசுவெண் பளிங்கினிற் றிருவுருக் கண்டாள் ஏசு கின்றனள் கொடி எரியுற விழிகள்.
உடுப்பதம்சிங்கள நடைபயில் ஒயிலோ தொடுப்பதும் துகிலினை ஒருபுறம் சுரித்துப் படுப்பதம் அவரிடு கட்டளைப் பயமோ தடுப்பதும் இத்தகில் மானமோ சற்று
பைங்கிளி யார்கனிப் பவளவாய்க் கொவ்வாச் சிங்களம் பயிற்றினீர் தேன்பொழி நம்வாய்க்(கு) எங்கணும் இசைவிலா ஒருமொழி பயின்றீர் அங்கமும் அவரிடைக் கடிமைசெய் ததவோ
நாணிலா ஆடவர் நாய்களாய் மானம் பேணிலார் என்றிடிற் பேதையர் நீவிர்
வாணிலா மூரலி, மானம் விட்டீரோ
காணிலாப் பெரும் பொருள் கற்பும் விற்றிரோ
38
O
II.
2

இடைக்கொடிக் கிளமுலைக் கெடுத்தடி பெயர்த்த நடைக்கெனப் பொருந்திட நங்கையர்க் கெல்லாம் படைக்கலக் கற்பினைப் பாதுகாத்திடவோர் உடைக்கணி தந்தனர் ஒண்டமிழ் முதியோர்
மயிலிடம் மானிடம் மலர்ப்பசுஞ் சோலை அயலிடம் அம்புயக் காட்டிடம் புல்வேய் வயலிடம் வண்டமிழ்த்தேன் கவிப் புலவோர் பயிலிடப் பெண்ணு டைப் பாங்குகண் டாரே
பெண்குல அழுகுமேல் பெற்றிடா உடையைக் கண்கொள உள்ளநீர் கவினெனப் போர்த்தீர் மண்கொளும் வேந்தரின் மனவழிப்பட்டீர் புண்கொள எம்மணம் பொழிதயர் அறியீர்.
ஏகுமின்; தந்தைக்கே இயம்புமின் நங்கள் ஏகநற் புதல்வியர் இரந்ததி:தென்று நோகவும் நுவல்கிலீர் செந்தமிழ் மடந்தைத் தோகையர் வேதனை சொல்லிடு வீரே
படையினை எடுத்தவர் பாருடன் கொற்றக் குடையினை எடுத்தனர் கோலினைக் கொண்டார் திடமுள மங்கையர் மனவரண் சுற்றிய உடையினை வென்றிலர் உரைத்திடு வீரே
மற்புயத்தினில் மறமார்பினில் வீர விற்புயத்தினில் விடு விறல்வலிக் கையில் நிற்பது வீரமோ மெல்லியல் நெஞ்சக் கற்பினிற் பிறப்பது வீரமோ காண்பீர்
கூறிய வாசகம் கொடியிடை நல்லார் ஏறிய அரியணை மன்னனுக் கியம்ப சீறினன் செங்கனல் தெறிபொறி கண்ணான் ஏறென எழுந்தனன் இருக்கையை நோக்கி
ஒதுங்கிய மகளிரை உயிருறு பாவை இதங்கனி மொழிமகள் இவண்வரு கென்றான் சதங்கையின் ஒலியொடு தளிரடி பெயர்த்துப் பதங்கொளும் அனமெனப் பயில்மயில் வந்தாள்
39
I3
14
IS
I6
17
I8
19
2O

Page 37
Bog
மன்னர் வணங்கி மலரடிக்கே மணிகள் வைப்பார் பின்னும் அடியில் முடியுழுவார் பெருமை போதார், என்னை எனது மகள் பொருதாள் என்ற மாற்றம் பொன்னைப் பொருவுங் கொடியாய்நீ புகுத்தினாயே
2I சாய்ந்து முடிந்த தரணிபரை மறவாச் சில்லோர் வாய்ந்த தருணம் வழிபார்த்த வாய்கள் மூடி ஓய்ந்தும் இருப்பார் போல்நடிப்பார் உள்ளில் மூள்வார் ஏயந்த தெதவும் உரைத்தனரோ உணக்கென் பொன்னே.
22 நேரே எதிர்க்கும் நெடுவொளுக் கஞ்சேன் மன்னர் ஆரே எனினும் அடுத்தணைவார் அகமுங் காதம் நீராய் நெகிழ்த்துச் சிரித்துறவாய் அண்டிக் கொல்லும் சேராத உட்பகை சேர்ந்தனையோ தெரியாச் செல்வீ
23 சொன்ன மொழிக்குத் தொடர்ந்து மொழி சொல்லாள் செவ்வான் கன்ன முருண்ட கதிர்முத்த மொழியும் செய்தி மன்ன ஒனுணர்ந்தான் மகளேயென் மருந்தே யாவும் உன்னை நினைந்தே உஞற்றினேன் உணராய் கொல்லோ
24 பாராளும் மன்னர் பணிகேட்ப அரசபீடம் ஆராள எம் குலத்தோர் வைத்தார் அவனி பற்கும் வாராளும் கொங்கை மனையார்க்கும் அடிமையானார் போராளர் நந்தையர், என்னோடப் புலவு போகும்
25
நீட்டும் வரிசை நினதுமுன்னவராம் நீசர் கேட்ட பறைக்குக் கிளர்ந்தெழுந்து நெடுவாட் சேனைக் காட்டிற் புகுந்து உயிர்கொடுத்தார் கனகத் தவிசிற் பாட்டும் மதவும் நகர்ந்துகண் படுக்க மன்னர்
26 புன்மை ஒழித்தேன் பூபாலர்க் கடிமை செய்யும் சின்மை ஒழித்தேன் தேடாத அரசுச் செல்வ வன்மை வளர்த்தேன் வருங்குலத்தோர் வடுவும் மாய்த்தேன் மென்மை மனத்தாய் விடுத்தி பிடி வாத மென்றான்
27
40

மொழியாள் எதுவும் முகங்கவிழந்து மவுனஞ் சொல்லும் விழியாம் இருவாய் விளக்குமினி எண்செய் தாலும் பழியேன் உடையிற் றமிழ் தந்த பரிசு மாற்றேன் அழியா அரசும் அவனியுமென் னடிக்கீழ்த் தாசே
28
garuupsteals
மன்னவன் வழிநின் றோரும் மானமே பெரிதென் றோரும் கன்னலின் தமிழின் தீந்தேன் காதலில் மயங்கி னோரும் தொன்னலச் சிவ நற்சைவத் தாய்மையைப் பற்றினோரும் இன்னலாம் நெருப்பிற் றோய்ந்தே ஒளிருதல் இயம்ப லுற்றாம்
I கட்டிய கோயில் வைத்த கடவுளைக் கல்லா மென்றார் எட்டியே உதைத்தார் காலால் இழித்தனர் என்றே யஞ்சிச் சொட்டுகண் ணிரினாலே மஞ்சனம் தோய்த்து நல்லூர்க் கிட்டிய யமுனா ஏரி வீழ்த்தினார் மூர்த்தி கீழே
வண்ணையில் மேல்பால் வாசன் வைத்தியன் சோமநாதன் பண்ணினாற் பாடியிசன் பதமொரு மலரைச் சாத்தி வெண்ணெய்போல் உருகியல்லால் விடிவதம் அறியான் தன்பக் கண்ணினிர் பெருக்கு கின்றான் காரணங் கேட்போம் இன்னே
3. காவியப் பரப்பிற் கம்பன் கவியமுதுண்டேயன்றி மேவிய பிடியோர் அன்னம் விழுங்கிடா விரதம் பூண்டார் மாவையம் பதியிலுள்ளார், மரத்தினிற் பிணிக்கப்பட்டார் ஆவியும் குரலும் சோர அரஅர என்னுகின்றார்
பாணனை வுற்ற செவ்வாய்ப் பசுந்தமிழ் மழலை யார்க்கு தேனினை உவர்க்கக்காட்டும் செழுந்தமிழ்க் கம்பன் பாவை ஊனினில் அழுந்தும் வண்ணம் ஊட்டினான் என்பதல்லால் தானொரு குற்றம் இல்லான் தவித்திடும் நிலைமை காணி
பாட்டியர் அன்னத்தோடு பானிலா மதியைக் காட்டி ஊட்டிய பாரதத்தின் உயர்கதை பொதிந்த 2ளனான்
வாட்டிய சவுக்கினாலே வழிந்திடும் இரத்த வெள்ளம் காட்டிய வில்லிபுத்தார்க் கவிமணங் கமழச் சாய்வான்
41

Page 38
எரிதரும் அருக்கன் நோக்கி இட்டபார்க் கல்லைத் தாங்கும் வரிதரு நதலார் நாவும் வரண்டிடக் கூவுகின்றார் சொரிதரு கண்ணின் நீரார் தவள்பவர் யாரோ காணி அரிதவர் பிரமர்காணா அடியினுக் கடிமை பூண்டார்.
உள்ளம்நெக் குருகி நீராய் உடைந்திட என்பழிந்து வெள்ளமாய்ப் பெருகு மின்ப விரிகடல் கலந்தொன்றாகி வள்ளலார் வாதவூரர் வாய்மொழி வாச கங்கள் விள்ளுவார் சவுக்கினாலே மேனிபுண்ணாகுகின்றார்
கொழுநிழல் அரசின் கீழே கோயிலும் நமதே அங்கு மெழுகென உருகி நின்று விரதமேற் றெங்கள் புத்தன் வழுவென வாத செய்த வாதவூர்ப் புராணங் கற்றீர் பழுதித பாறாங்கற்கள் சுமப்பது தண்டமென்றார்
பிட்டினை உண்டுமுன்னே பிரம்படி பட்டார் என்று கொட்டுகண்ணிரினோடு குழைகின்றீர் உங்கள் நாதன் கிட்டிவந்தம்மைக்காவா னோவெனக் காண்போம் கீழே கட்டிவைத் தடிக்கின்றோம் நம் கடவுளைக் கூவுமென்பார்
O ஆரிவள் நரைமூதாட்டி அறாதகண்ணிசொரிந்தாள் ஏரென எண்புதோன்றி எண்பிடை நரம்பு யாழின் நாரென எழுந்திட்டாலும் உள்ளமோ நடுங்காக்குன்றப் பாரெனப் பாய்ந்த அன்னை படுகதை கேட்பீரன்றே
I மதுவெறி மயக்க, செய்யும் காரியம் அறியா வீரர் வதிமனை தோறும் சூறை ஆடினர் மணியும் பொன்னும் விதிவலி தரப்ப இத்தாய் வீட்டிலும் புகுந்து தேடி நிதிபல கவர்ந்த பின்னர் நித்திலப் பெட்டி கண்டார்
I2 முத்தினால் இழைத்துத் தந்தம் முகத்திடை பதித்துச் செம்மை வித்தினாற் கரைக்கோடிட்ட விழிகவர் கோலப் பேழை சொத்தினால் நிறைந்த தென்று தாக்கினர் தடுத்தாள் அன்னை உத்தமி இறுகக்கட்டி உடலுடன் அணைத்துக்கொண்டாள்
I3 காலினால் உதைக்க வீழ்ந்து கதறுவாள் சிவனே ஒலம் ஞாலமே விற்றுக் கொண்டே மாற்றிலா நிதி நான் வைத்தேன் ஆலவாய் அமுதே கொண்டார் அதனைநீ காண்பாய் கொல்லோ காலனார்க் குதைத்த கால்கள் புறப்படக் காலம் வேறோ
42 4.

திறந்தனர் நிதியங்கான திகைத்தனர் ஒலை கண்டு புறந்திருப் பட்டுச் சாத்திப் பொன்புனை கயிற்றிற் சுற்றி அறந்தலைப் பொருளைக் காம இன்பினை ஆய்ந்த கட்டி தறந்தவர் தறவாச் செல்வத் திருக்குறட் பொதியைக் கண்டார்.
IS ஒலையைச் செல்வமென்று உட்பொதிந் திறகக் காத்தாய் தோலென மதியும் சூம்பித் தளர்ந்ததோ சூழ்ச்சியுண்டோ பாலென நரைத்தாய் மண்ணிற் புதைந்தன செல்வம் காட்டும் நாலிதோ மறைத்த மாற்றம் நவலுவாய் என்றிடித்தார்
I6
ஏழ்கடற் பிறந்த முத்தும் இரும்புவி அகழ்ந்த பொன்னும் சூழ்கதிர் மணியும் தெய்வச் சுடர்விடு வயிரக் குன்றும் ஆழ்வயிறடக்கிப்பூமி வெளிவிடா அந்த ரங்கம் போழ்பவர்க் களிக்கும் பொன்னூல் போற்றினேன் கேண்மின் என்பாள்
I7 சிந்தனை புதித கண்டோம் எனமணஞ் செம்மாப் போர்கள் எந்தத்தொல் மொழியில் வல்ல எப்பெரும் புலவ ரேனும் வந்தினிப் பிறக்க நின்ற வல்லுநர் யாவ ரேனும் தம்தம தெண்ணமெலாம் இதனினிற் பழைதாய்த்தாழ்வார்
18
இறப்பினைக் கடந்து செல்லும் இரும்பொருள் காலங்கொல்லா அறப்பொருள் நிறைத்து வைத்தே அரசரும் காணா இன்பத் திறப்பொருள் நிறைந்த இந்தத் தெய்விகக் குறளை விட்டுப் புறப்பொருள் புதைத்தக் காக்கும் புண்மையும் எமக்குண்டாமோ
M I9 ஞாலமாம் பொருளை உள்ளே நறுக்கிய குறளிற்றாங்கி காலமாம் வெள்ளம் நீந்திக் கணக்கிலாப் போர்கள் கண்டு சீலமார் மக்கள் உள்ளக் கோயிலில் வாழ்ந்த இந்த மூலமாம் குறளை மூடி வைத்தத வியப்போ என்பாள் · ሶ
20 மைந்தனை இழந்தோம் ஐயா மணாளனை இழந்தேன் ஐயா சுந்தர அழகும் பெண்மைச் சோபையும் இழந்தேன் முன்னோர் தந்தபல் செல்வமெல்லாம் இழந்துளேன் தமியேன் நின்றேன் இந்தவோர் குறளின் செல்வம் என்னிடம் இருக்க ஈவீர்
2.
என்றுதன் கரங்கள் கூப்பும் ஏழையை இழுத்துச் செல்வார் நன்றுநின் செய்கை எங்கள் மொழியினை நாவிற் கொள்ளாய் வென்றுநாம் அடிமை கொண்டால் வேறுமக் கேத முண்டோ இன்றுநீ தமிழைக்காத்த குற்றமொன் றிழைத்தாய் என்றார்
43 22

Page 39
உடலினால் மெலிந்தா ரெல்லாம் உரனினால் மெல்ந்தாரென்று கொடுமையாற் சிறையாற் சித்தங் குலைத்திட எண்ணினோர்கள் மடமையால் இங்கே வந்தார் மலையெனக் குலையாச் சித்தத் திடமுளாள் சிறிதம் அஞ்சாள் திருமுகச்சுடரைக் காண்பீர்.
23 மாவையம் பதியிற் கீழ்பால் மயிலிட்டி வாசன் கன்னிப் பாவையர் பருகுந் தோளான் பணைத்தகை ஒன்றிழுந்து சாவையும் முரணி நிற்பான் தாளிடு விலங்கை மென்மைப் பூவென உதறும் காட்சி புருடர்கள் விருந்தே யன்றோ.
24 தந்ன்தயர் செல்வம் பாரான் தருநிதிக் குவையும் நோக்கான் கந்தனுக் கடிமைபூண்ட செல்வமே கண்ட செல்வம் நைந்துநைந் துருகு கண்ணி மாலையே நளிர்வெண் முத்தாம் பந்தமு முண்டா மென்றாற் பழனிவேல் முருகற் கென்பான்
25 உழுகைகள் பகலில் எல்லோன் உதிப்பதன் முன்னர்ப் பூவால் தொழுகைகள் வண்டிக்காளை துரந்தன அடக்குங் கைகள் அழுகையர் ஆகி மாதர் அணையினில் நினைக்குங் கைகள் ஒழுகுவார்க் கள்ளியள்ளி வழங்கிட ஓங்கும் கைகள்
26 கந்தனின் கழலிற் றாய கடிமலர் சொரிந்து கண்கள் சிந்திய நீரினாலே சேவடி நனைத்த போழ்து வந்தனர் விரைந்து வீரர் வருகவென் றிழுத்தார் அக்கால் சிந்தனை பிறிதாய் நின்றான் செவியினில் யாதும் கொள்ளான்
ך2 நீலமா மயிலும் வாயில் நித்திலச் சிரிப்பும் அந்தி போலவேற் படையும் கண்கள் பொழிதரு கருணை ஆறும் மூலமாய்ச் சிந்தை கண்டான் விழியினைத் திறந்த போழ்த காலராய் நின்ற நீசர் கரங்களில் வாளைக் கண்டான்.
28 வாவென இழுத்த போது வாளினைப் பறித்துக் கொண்டான் கோவிலிற் புகுந்தீர் இந்தக் கொடுமையைத் தாழ்ந்தே ஏற்கேன் ஆவியும் பொருளோ இந்த அநீதிவந் தடைந்த போது ஏவிய ஒருவன் யாரோ எமக்கிறை முருகனன்றோ.
29 என்றன மொழிந்த போது இருபுறங் குவிந்து சூழ்ந்தார் கொன்றுனைக் குவிப்போ மாகிற் கொடுமையிற் தப்பிக் கொள்வாய் வென்றிவாள் பறித்த உன்கை வீழ்வதே தண்ட மென்று நின்றவன் உயர்த்தா முன்னம் நெடுங்கரம் நிலத்தில் வீழ்த்தார்
3O 44

பன்னிரு கரமுளார்க்குப் பந்தமோ டடிமை பூண்டான் தன்னொரு கரமிழந்தாற் தவிப்பனோ தவத்தின் மிக்கான் இன்னுடல் எரியிலிட்டுச் சாம்பராய்ப் புதைத்திட்டாலும் முன்னவன் பாத நீழற் குளிர்ச்சியில் முழுகு வானே.
செந்தமிழ்க் காதலாலே திருவுடை மன்னன் காத்த அந்தமில் நன்றி யாலே அடிமைவாழ் விகழ்தலாலே சுந்தரச் சைவ நீறு சுடர்ந்திட விழுைத லாலே தந்தன தண்பமெல்லாம் தவமெனச் சகிக்கலுற்றார்.
பரராச சேகரன் மாளிகையைத் தரிசித்த படலம்
இருங்கடலும் பெருவழியும் கடந்தவனாம் இமயவடிப் பெருங்கங்கை நாடெல்லாம் வணிக முறப்பெயர்ந்தவனாம் அருங்கலைகள் மருங்குறவே ஆறுமுறை சுற்றிடினும் ஒருங்குடலைக் காட்டுவன வெண்டுகில்கள் உடையவனாம்
காசுமீரப் பட்டுடையும் காந்தார மணிகோத்துக் கூசிவிழி குருடாக்கும் மார்பார இரத்தினமும் நாசியினுக் கலுக்காது நவநவமாய் புதுமைதரும் வாசமொரு காதவழி வருவாரை யீர்ப்பனவும்
சங்கறுத்த வளையல்களும் சந்தனத்தின் விரைக்கொழுந்தும் வங்கமுறு மென்பட்டும் வாரணத்தின் மருப்பிழுைத்த சிங்கமுகக் காப்பினமும் சீனத்து விசிறிகளும் மங்கையரை மருளவைக்கும் மரகதக்கல் மோதிரமும்
அகங்காட்டா அரிவையரை ஆடவர்க்கு வெளிப்படுத்தும் முகங்காட்டும் ஆடிகளும் முழுநிலவிற் சேர்ந்தார்க்குச் சுகங்காட்டும் விரைப்பொடியும் சூடுகின்ற சிரமணியும் நகங்காட்டும் செந்தவரும் நாரியரைக் கவர்வனவாம்
யவனபுரம் உரோமபுரம் எழிற்சீனம் இவையன்றி அவனியிலே அழகுறையும் நாடெல்லாம் சென்றவனாம் மவுனமுறும் இமயமலை யோகியரின் மருந்தபல அவனுளனாம் அழைத்துவரத் தடையுளதோ அம்மவென்றார்
45
31
32

Page 40
என்றுமொழி தோழியர்கள் முடியாமுன் இளவரசி நன்றிவனைக் காண்பமெனா நவிலுதலும் முன்வந்தான் குன்றனைய பெருந்தோளிற் கொண்டமணிப் பேழையுடன் சென்றதிசை வென்று பொருள் சேர்க்கின்ற பெருவணிகன்
நினைப்பார்க்கு நினைத்தபடி நெஞ்சிலெழும் முதல்வனெனத்
6
தனைப்பார்க்கும் வனிதையர்க்குத் தம்முடைய உளம் வேண்டும்
வனப்பான வண்ணங்கள் வகைவகையாய் வளர்ந்துகாட்டி எனைப்பாலும் கதிரெறிக்கும் இரத்தினங்கள் காட்டினானே
எறிக்குமிளம் கதிரோனுக் கெதிரெறிக்கும் முத்துக்கள் பறிக்குமுளம் பாவையரை, பல்லொளியின் பால் நிலவால் வெறிக்குமுளம் கொடுக்கின்ற மெல்லியலார் அவைகண்டு நெறிக்கு நிலை கொள்ளாத நெஞ்சதனை அடக்குகின்றார்.
இமையாரை இமைப்பிக்கும்; இமைப்பாரை மூடுவிக்கும் எமையாளும் ஈசனுடல் ஒருபாதி மலைமங்கை உமையாளைக் கலந்ததென ஒளிவீசும் செம்பவளம் அமைவாக முழுநீலச் சுடர்வீசும் அடிக் கொருகால்
கண்டாாரின் காதலர்க்குக் கடன்கோடி யாய்ப் பெருகும் கொண்டார்க்குத் தேடிவரக் கோடிவழியாம் பயணம் கொண்டாடும் காளையர்க்குக் கோதையரின் புன் முறுவல் திண்டோட்குப் போர்விளைக்கும் திங்களொளி வைரங்கள்
அணிந்தாரை அருகழைக்கும் பொதியமலைச் சந்தனமும் மணந்தாரை மலர்ப்பள்ளி சேர்ப்பிக்கும் மென்புனுகும் தணந்தாரை இரவெல்லாம் கூடாரைத் தழுவவைக்கும் மணந்தாய சவ்வாதம் திறந்தவுடன் மயக்கினவே
வானத்துச் செங்கதிரோன் வசந்தத்துச் சித்திரையில் பானத்துக் கைக்கலசம் பகிர்ந்துண்ணும் மங்கைபிறைக் கூனொத்த ஒண்ணுதலிற் கொளுமுத்து வியர்வைக்குச் சீனத்துக் கைவிசிறி தெரிந்தெடுத்துக் காட்டினனே
மைப்படிந்த விழிமடவார் மறையொழுக்கம் பறையடிக்கக் கைப்பிடித்தாற் கலகலக்கும் கண்ணாடி வளையல்களும் ஒப்படைத்த உயிர்மாதர் மனைவாழ்க்கை நுதல் காட்டச் செப்படைத்த குங்குமமும் சின்னமெனத் திறந்தனனே
46
I. Ο
II
2
13

கற்பழிந்தால் உயிர்வாழாக் காரிகையாம் கவரிமான்கள் சொற்பிழையாக் கணவருயிர் தறந்தவுடன் நீத்தகுழல் வெற்புமயில் கழித்தகவின் கலாபமென விரையூட்டி விற்பதற்குக் கட்டியன வெவ்வேறாய்க் காட்டினனே
I4 வெயிற் காட்டும் மணிமாலை விரும்புவார்க்கு நினைத்தநிறம் அயற்காட்டும் மின்வயிரம் அணியணியாய்த் தெரிகுவார்க்கும் மயற்காட்டி மங்கையரின் மனம் வேண்டும் பொருள் கொடுத்து மயிற்காட்டில் நடுவுறங்கும் மதயானை போல நின்றான்.
IS மைவேண்டாக் கருவிழியால் மலர்நாணும் திருமுகத்தால் நெய் வேண்டாக் குழற்காட்டால் நினைவழிக்கும் செவ்விதழால் நைவாகும் மெல்லிடையால் நாரியரில் அரசியென தெய்வாதி தெய்வமென நின்றவளைத் தெரிந்து கொண்டான்
6 அடியெடுத்தால் அன்னமெனுங் கஞ்சுகத்தை நோக்கிநின்று படியடுக்கா நூம்பாத பங்கயத்தக் கிவையொவ்வா பிடியெடுத்த வெண்முத்தாற் செய்தபரற் சிலம்பொன்றை அடியெனுனக் களிக்கவது திருவுளமோ அம்மவென்றான்
I7 காந்தார மன்னருக்கும் கலிங்கருக்கும் பகைமூளத் தாந்தார மென்றிருக்கும் தலைவியர்கள் கோபமுற ஆந்தாண்டு காரணமாம் அணிசிலம்பை அரிதுபெற்றேன் பூந்தாதுப் பொன்னடிக்கே நாளையது கொணர்வ னென்றான்
8 காசுமீர நாட்டழகும் காந்தாரர் ஓவியமும் 1 ஆசிதரும்முனிவரர்தம் தவவலியின் அதிசயமும் கூடசுமுகம் திரையிட்ட ‘பாக்தாத்துக் கோதையரின் ஆசையுறும் உடையழகும் கேட்பதற்கும் அகமுடையோம்
I9
ஆதலினால் நாளையிவண் மாலையிலே அடைக வந்தப்
பாதமுறு சிலம்பதனைக் கொணர்கயாம் பார்வைசெய்த சீதமணிப் பரற்கேற்பத் தெரிந்துவிலை கொடுப்பமென்றாள் மாதருக்குள் மாணிக்கக் கஞ்சுகப்பேர் மனைவிளக்கே
2O வணிகனுந்தன் மணிப்பேழை முடியுடன் வணங்கிநின்று அணிகலனாய்க் கற்புடையார்க் கடியனனெதை அணிவிப்பேன் மணிகளுக்குள் மாதரெனும் குணமணியே நீரிட்ட பணிகளினி என்தலையிற் பளிங்குமணி யான வென்றான்
2. 47

Page 41
அரும்பவிழ்ந்து நறுமுல்லை அணைந்த இளந் தென்றலேற சுரும்பினங்கள் தேம்பிழியாழ்ச் சுருதியிட அந்திவானம் இரும்புருகும் குழம்பென்ன எழில் காட்ட இளம்பிறையில் கரும்பிழுைத்த சிலைக்கணைபோற் கொடுநிலவுக்கணை சொரிந்தான்.
22 தோழியர்கள் சூழாது சுந்தரத்தின் கொழுந்தென்ன நாழிகையும் நடவாத தனித்திருந்த நடமயிலை தாழிருகைச் சிலம்பேந்தித் தடந்தோளின் வனப்பேந்தி வீழுகருங் குஞ்சிவலை புறமேந்தி விரைந்துவந்தான்
23 அணிந்தாராற் றானழுகு பெறவேங்கும் அஞ்சிலம்பு குணந்தானே கொடியாகிக் குவளைமலர் நுனிபூத்து மணந்தாய குழம்புண்டு மாந்தளிராய்த் தழைத்தவடி பணிந்தேறத் தவஞ்செய்து வந்ததெனப் பாதமிட்டான்
24 Bijlug
புலித்தலையில் பொன்மலையும் பூமலரும் காசு மீரக் கலைத்தலைமைப் பொழில்நாடும் காவிரியும் கன்னிக்கோடும் மலைத்தலமும் சென்றுவந்தேன் மங்கையர்க்குள் அழகிலும்மை இலைத்தலைமை கொள்வோர்கள் ஏற்றருள்க அடிமை யென்றான்
A. 25
கிங்கைவள நாடுகளும் காவிரியும் யவன நாட்டுப் பொங்குவள நலம்பலவும் கண்டீரேற் புதுமை கூறீர் மங்கையர்தம் உடையுனைவும் நாகரிக நவமும் எங்கள் சங்கமுறு தமிழ் வளர்த்த தமிழ் நாட்டிற் சிறக்க உண்டோ
26 வெண்மேகச் சுருள்விழுங்கும் வெள்ளிமதி யென்னப் பெண்கள் கண்வேகம் மறையமுகம் திரையிடுவார்; காணார் மேலை மண் மேடும் விண்மேடும் வட்டமிடும் அரபி நாட்டில் பெண்பேணும்பொருள்கற்பும் பேசாத மடமு மாமே.
ך2 பனிமலையில் நிலவெறித்த பான்மையெனக் குளிர்ந்த கன்னம் நுனியிதழிற் றேன்சொட்டும் மலராகும் நுண்ணிடைக்குக் கனியிரண்டு பாரமாய் நதியாடும் காசு மீரத் தனிமடவார் மலர்க்காட்டிற் றோன்றழுகு சொல்லொணாதே
28
48

பொன்னியன்ற பதுமைகளோ பூவணங்கார் பூமிதன்னில் மின்னியல நடப்பவரோ எனச்சேர மென்மைமாதர் அன்னநிரைக் கூட்டங்கள் தடந்தோறும் ஆடுதல்போல் சென்னிமலைத் தாழுருவி வீழ்ச்சியெலாந் திகழ்ந்த காண்பார்.
29 பட்டிருந்து தொட்டிருந்து பசுமையுறும் பவள மேனிக் கட்டிருக்கும் சீனத்துக் கன்னியரும் பொன்னி யாற்றில் விட்டகரை மணற்பாங்கிற் சொரிந்தமலர் விளையாடித்தம் கட்டழகை மறைப்பதனால் அழகூட்டும் பெண்ணும் கண்டேன்
3O கற்பொன்றே உயிரென்ற தமிழ்நாட்டுக் கன்னி மார்கள் நற்பொறையும் நாற்குணமும் அணிகலனாய்ப் பூண்டார்; ஆனால் மற்பிறந்த தோள்வலத்தான் ஒருவனால் மனம்வேறாகி இற்பிறப்பும் மடநாணும் இழக்கின்ற செய்தி கேட்டேன்.
3 II அசையுநடைப் புரவிதனிற் பவனிவரும் இவன்றன் ஆண்மை இசைபரக்கும் பொலிவுதனைக் காணவோடி இதயத் தாளும் விசையடைத்த இற்கதவும் விரைந்துதிறந் தயவர்வார் அண்ணான் திசைதிரும்பத் தந்தமையே நோக்கினானென் றலைவார் சிந்தை.
32 கனவினிலே பெயர்புலம்பிக் கற்பழிந்த கன்னி மாரும் நினைவிருக்கும் அவனுருவம் நிறந்தோய்த்தங் கெழுதுவாரும் அனவரதம் விரதமதால் அவனுருவால் அழிகின்றாரும் மனைமடவார் அரசகுலம் மூன்றினிலும் மயங்குகின்றார்
A. 33
காதலித்த கன்னியர்கள் சபை நடுவே கண்வாங்காது ஆதரத்தில் நாணிழந்து அவனெழிலைப் பருக வீரர் மீதெழுந்து பகையானார்; விழியொருகாற் பாரானென்றே மாதர்களும் பகையானார் மாதரசே இவனுக் கென்றான்.
34 மணிவிற்று மனம்வாங்கும் வணிகரோநீர் மங்கை நல்லார் அணிகற்றிர் உரைசான்றீர் அவனியெலாம் பார்த்து வந்தீர் இணையற்றிர் எம்நாட்டு வளம்பலவும் கண்டீர் என்னில் பணிவுற்றேன் கண்டனதாம் பயமின்றிப் பகரும் என்றாள்
35 மொழியெல்லாம் தமிழென்றார் முன்றில்களில் முகத்தில் ஓடி வழியெல்லாம் கண்ணிரே காண்கின்றேன் வனப்பு மாதர் விழியெல்லாம் துண்பெழுதி வேதனையின் திலகமிட்டார் பழியில்லாக் கற்பொன்றே வளர்க்கின்றார் போலும் பாவாய்
36 49

Page 42
சிரித்தாலும் பொருளின்றிச் சிந்தையோடு சேரார் வாயைப் பிரித்தாலும் மனம்பிரியார் பேதலித்து நுதலின் கூட்டம் நெரித்தாலும் அழகுமிகும் நெகிழ்ந்தாலும் அழகுசேர்க்கும் எரித்தாலும் சுடரெறிக்கும் பொன்னனையார் இங்கு மாதர்
37 அங்கங்கள் ஒவ்வொன்றும் அழகினுக்கே எல்லையாகி அங்கங்கே கிடப்பனவாம் பலநாட்டின் அழகி மாரில் பொங்குமலர் மணமின்றிப் பொலிவனவும் உண்டே உம்மில் எங்கெங்குங் காணாத எழில் பலவும் இணைந்த வொன்றாய்
38 பொற்பிறந்த இமயவரை பாரதத்திற் புதுமை யாகும்; கற்பிறந்த சிலையெல்லாம் கலையாகும் சோழ நாட்டில் சொற்பிறந்த தமிழ் கவியாம் தொன்மதுரைப் பதியில், ஈழம் நிற்பிறந்த பெண்ணழகால் நிலையுயர்ந்தாள் புகழினாலே
39 முத்தினுக்காய்க் கடல்கடந்தார் கண்டிலரோ உன்னைமுன்னாட் சொத்தினுக்காய் நிலமகழ்வார் கண்டிலரோ தறந்த தாய பத்திவய முனிவரரும் பார்த்திலரோ பார்த்தி பர்க்கு நித்திரையும் வருமாமோ நின்னெழிலின் நிழலைக்கண்டால்.
40 கண்டனயாம் இதுவென்று கட்டுரைத்த முடிக்கு முன்னர் கொண்டவலை சுருட்கூந்தல் ஒதக்குவாள்போல் குறிப்பால் ஓரக் கண்டளிரின் நுனியினால் கலந்திட்டாள் காணானென்றே /பெண்டகைமை நுவல்வாரார் பேசாத மொழியொன்றுள்ளார்
4I சிலம்பளித்தீர் செய்ந்நன்றி எண்செய்கேன் ஆனாற் சென்ற தலம்பலவும் வளம்பலவும் தாமுரைக்கக் கேட்குமாசை நலம்பெருகும்; நாளொருகால் இவண்வந்து போக நாங்கள் குலம்பெருகத் தவஞ்செய்த கொண்டோமோ அறிகிலோமே.
42 பல்தேயப் பெண்ணழுகும் பகரவினி வருதல் வேண்டாம் வில்தேயும் தோளழகன் ஒருவனையும் விரித்துப் பேசிச் சொல்தேய வரவேண்டாம் சுந்தரமும் எங்கள் நாட்டு நெல்தேயக் கதிர்சாய்க்கும் நிலவளமும் கூற வம்மின்
43 என்றுரைத்துப் பிரிந்திட்டான் இடையிடையே கடைக்கண்ணாலே நின்றுரைத்துச் செல்வாளை நீலமயில் தோகை தாங்கச் சென்றசைந்த போவது போற் சிற்றிடைக்குக் கூந்தற் காடும் ஒன்றசைந்த எழிலுருவாய் மனக்கோயில் ஒருக்கினானே.
44 50

மாளிகை காண்படலம்
அமுதகுழைத் தழகெழுதம் சித்திரமே அகில மெல்லாம் தமதுகலை சிறந்ததெனத் தருக்கிப்பார் தலைகள் தாழ உமதுவளத் திருநாட்டில் ஒவியங்கள் திகழும் காண்பான் இமைதரியா ஆசையுளேன் இவைகாணக் காட்டுவார் யார்
ஒவியத்தாற் காவியத்தால் உயிரழுகால் உள்ளம் சான்றீர் நாவியலாத்தன்மனத்தின் கனவெல்லாம் நயந்து வண்ண ஆவிபெறும் சித்திரமாய்க் கனகசிங்கன் அமைத்த வெல்லாம் மேவியநற் சுவர் தோறும் விளங்குவன காட்டுகேனே
2 என்று கிளிப் பணிமொழியாள் இளவணிகன் தன்னைக் கொண்டு மன்றுகளும் மண்டபமும் மணியறையும் மரகதத்தக் குன்றுகளும் கோமனையும் பளிங்கியன்ற சுவர்கள் தோறும் வென்றிகளும் கனவுகளும் விரித்தவவை காட்டினாளே
3 புலியிமயம் பொறிந்தவரைப் போர் முகத்திற் புறங்கண்டன்னார் அலைகடலிற்றிவகங்கள் ஆயிரமும் நமதேயாக்கி விலைகணித்தற் கியலாத முத்தீனும் தறைகள் வென்றே உலகுபுகழ்ப் பரநிருபன் உலாவந்த காட்சியிதே
கதிரைமலைக் கரிமருப்பும் களனியலை மணியும் சேர்த்துக் குதிரைகளிற் கொண்டேற்றிக் குன்றுபடும் தேனைக் காட்டு முதிரையொடு கருங்காலிப் பேழைகளில் முன்னே தாங்கி எதிரடையும் உறுகுணையார் திறைக்காட்சி எழிலும் ஈதே
தலைகவிழக் கன்னியர்முன் நிற்போரும் தரளக் குன்றம் மலைகளெனக் குவிப்போரும் பரநிருபர் மகிழ ஏது நலமுடைய தெனத் தெரியார் நாரியரும் பட்டும் சீனக் கலைபொறித்த சித்திரமும் குவிக்கின்றார் ஈங்குகாணிர்.
காவியங்கள் வானூலின் கணிதத்துத் துறைகள் வண்ண ஆவியுறும் சித்திரங்கள் ஆயுளினைக் காக்கும் வேதம் மேவியநல் வைத்தியநால் விரிப்பார்க்குக் கொடுக்க வென்று கூவியபொன் முடிப்பெறியும் கனவினை யோர் காட்சி கொண்டான். . ך
51

Page 43
தமிழோசை உலகெல்லாம் தெருத்தோறும் தழைக்க வென்றே இமிழோசைக் கடல்கடந்தார் இருந்தாய்ந்து படிக்கும் முன்றில் உமிழோசை விருந்துண்ண உரோமர்களும் சீனர்களும் பந்தி செய்வார் அமிழாழக் கலைவாதம் செயுங்கனவின் காட்சி அஃதே
8 தணைகட்டிப்போரறியான் துணிந்து தனி புகுந்த போரில் கணைகட்டிச் சிலைக்கட்டிக் கைகட்டி நின்றார் தம்மை புணைகட்டக் கயிறீரும் மாநநிகள் பரந்து பொங்க அணைகட்டும் கனவிதனை வண்ணத்தால் அமைத்த தஃதே
மஞ்சணையும் வெண்சுருளாய் மலைமலையாய் நீலவானங் கொஞ்சிவரும் காட்சியென நினையாதீர் குவல யத்தார் கெஞ்சிவர ஆடையினுக் களிக்கவெனும் கனவைக் கீற்றில் பஞ்சடுத்த மலையாக்கிச் சித்திரித்தான் தணுக்காய்ப் பாங்கள்
IO கீழ்நந்திக் கடல்சேரும் மாநதியின் கிடக்கை பொங்கச் சூழ்சந்தி அணைகட்டி முப்போகம் சூடு வைப்பார் வீழ்கந்துக் கடாக்களினாற் பொலிதொலையார் வேழம் பூட்டி சூழ்வந்து சூடடிக்கும் காட்சியிது கனவாய்க் கண்டான்
II. ஆலைகளும் சாலைகளும் அமைக்குமாசை அஃதே; மூலிச் சோலைகளும் தறையரணும் சொல்லுதமிழ் தய்க்கும் சங்கக் கோலமுறு மண்டபமும் கோயில்களும் கனவாய் உள்ளம் மேலெழுந்த அவையெல்லாம் விரித்திட்டான் வண்ணக் கோயில்
I2 தோகைக்கொம் பசைந்தசைந்து சுந்தரமாம் பஞ்சிப் பாதம் நோகவடியெடுத்த யலே காட்டுகின்ற நுண்வண்ணத்துப் போகமனைச் சுவரிருந்த ஓவியத்தைப் புரிந்தான் போல மோகமுற முன்னடக்கும் ஒவியத்தை முழுதுங் கண்டான்
I3
ജ്ഞത്രെ 4ðyu೭೧Vib
கற்பினை யிழந்தயரும் கன்னியரும் பொன்னாண் பொற்பினை யிழந்தயரும் பூவையரும் செஞ்சொற்
சிற்பியர் செழுந்தமிழ்க் கவிஞரொடு சைவப் பொற்பென மிளிர்ந்தவரும் பொங்குகணற் கண்ணார்
52

மால்வரை புலித்தலை வரைந்தவர் பிறந்த கால்வழி பரம்பரை கனாவென மறைந்தோ பால்வழி யிளங் குழுவி பாசறைக்கு விட்டு வேல்வழி கொடுத்தமற மெல்லியர்செத் தாரோ
சாவையொரு தாசெனத் தரிப்பவர்செத் தாரோ ஆவியெரி தென்றடிமை ஆகிவிட லாமோ ஏவிய கணைத் தொகையை ஏற்றுமடிந்தெங்கள் பாவைதமிழ் மீட்கவொரு பாலியரும் இன்றோ
மன்னவர் பரம்பரை வயிற்றிலுகித் தன்றி இந்நில மடந்தைதயர் தீர்க்க இனி யாரும் தன்னுயிர் கொடுக்குமறத் தன்மையுறு வீரர் கன்னியர் மணந்திருப்பர் கர்ப்பமணு காரோ
என்றுதலை மைக்கொரு மகனையிவர் ஏற்கச் சென்றுபல ஊர்களிலும் தேடியலை கின்றார் குன்றனைய தோளிருந்தும் கூடசியிருப் போரை ஒன்றுபடச் சேர்க்கவொரு உத்தமனை நாடி
வன்னியர் மறக்குடியில் வந்தபர ராமன் அந்நியர் சிரம்பல அறுத்தநட ராசன் பொண்ணுறுசங்கானையயற் போந்திருக்கின்றார்கள் இன்னணம் நடப்பமென ஏந்திவரச் செல்வார்
A. மார்பகலம் தோளகலம் மாநில மருங்கில் யார்பருப்ப முற்றவர் இவர்க்கிணையர் என்ன கார்கறப்ப ஏர்பிடிக்கும் தன்னாலைக் கண்ணே போர்கறப்ப நின்றவரைத் தஞ்சமெனப் போனார்
வாழுமனையிற் பெரியவட்டமனை நெல்லு நாளுமிடக்கட்டியவர் நாகரிகள் மூளாய் ஆளுமவர் வேளாளர் ஆண்மையுடை யாரை சூழ வெனச் சுற்றிவரும் ஊர்த்தலைவர் சென்றார்
கட்டடிளமைக் கால்விலங் கறுத்தலத கன்னம் விட்டமயிர்க் கற்றைசவரஞ்செய மறுத்தார்; கட்டிளமைக் காதலர்தம் கன்னியரைப் பாரார், தொட்டசப தப்பணி முடித்தலத தஞ்சார்
53

Page 44
பொல்லநறுவைப்புரியிற் சோழனோடு போரில் வில்லினுறு நுண்கலையின் வித்தக மிழுைத்த நல்லைவரு நாகருடை கால்வழி யுதித்த வல்லவரைக் கால்தொழு வழிக்கொடு நடந்தார்
நொந்தடிமை சாகவென நோன்புபுரி வோரும் கந்தவிர தத்தினொடு காப்பணிகணேசர் அந்தவிர தப்படி அமைந்தொழுகு வோரும் இந்தவித மாயவர் எழுந்தனர் ஒருங்கே
நடந்தாலும் கன்னியரை நாணிழக்கச் செய்து தடந்தோளிற் கண்ணென்னும் காவிமலர் மாலை வடந்தோயப் பூண்டவனாம் வாலிபத்தின் கொள்ளைப் படந்தோய மனத்திரையிற் பாவையர்கண் உள்ளான்
ஊரறியார், பேரறியார், உடலெழிலாற் பெண்கள் வாரெறிய மணிமுலைகள் மதி நிலவு வாளால் ஈருகின்றார்; இவர் வீரத் தோளிணையால் எங்கள் நாரியரும் பகைவர்களும் உறுவார்கள் நாசம்
மந்தசனி இன்றிடபம் மாறிவிடலாலும் இந்து வொடு பொன்னவன் இயங்குகிற தாலும் வந்தொருவன் நம்மடிமை மாற்றவுதிப் பானென்(று) அந்தர விசும்பு கணி சோதிடர் அறைந்தார்
நேற்றிரவு நீண்டகன வொன்றிலிரு சிங்கம் தோற்றிமத யானையினம் தண்டுபடச் செய்தங்(கு) ஆற்றியதொர் வெற்றியினை ஆய்ந்துபலர் பார்த்து சாற்றிய குறிப்பொருளும் சாதகமே யென்றார்
ஓவியர் அழிந்துமழி யாதன உயிர்க்கும் சீவிய கலைக்கணிய சித்திரமுங் கல்லிற் காவிய மெனப்பொருவும் சிற்பமு மக்கள்ளப் பாவியர் கடத்துவது பார்த்திருக்க லாமோ
54
O
2
I3
I4
IS
I6

தாலிவிடத் தந்நகைகள் தானமிடு வோரும் வேலைவடிப் போமென விரைந்தவருங் கொல்லர் சாலைவழி ஏர்நுதி இரும்புதறிப்போரும் தோலைவரிந்துங் கவசம் சுற்றியணி வாரும்
ஏடெழுது மாணிகள் இறுக்கியன ஈட்டி ஊடெழுது கல்லுளி உருக்கியன வாள்கள் காடுகளை கத்திகள் மண்வெட்டிகள் மறைந்து வீடுகளில் வேலென விளங்குவன வன்றே
கந்தரோடைக் கனக ராயனெனும் காளை சொந்த வுரிற்பதினெண் சூரர்களைக் கூட்டி வந்தசேனாதிபதி யானவரை வாளால் சிந்திமுத கோட்டியவன் என்றவனைச் சேர்ந்தார்
மன்னவர் பரம்பரை வரன்மு றையிற் காத்த பொன்னவர் செங்குந்தரெனப் போர்முனை யிறந்தும் இன்னுமிருக் கின்றவரை இல்லற மிருந்த கன்னியரை மைந்தர்களைக் காணவெளிப் பட்டார்
EGI
முகக்குறியாற் கனகசிங்கன் முத்திரைபெற் றுள்ளான் அகக்குறியால் அடிமையினை அகற்றிடவே பிறந்தான் நகக் குறியால் நங்கையரை விலைகொள்வுான் நாட்டுச் சுகக் குறிகள் இவனாலே தோன்றுமெனச் சொல்வார்
அறியாதான் அந்நியனை உடன்றலைமை ஏற்றல் நெறியாகா தெனுமொன்றே யல்லாது நம்பாற் பறிபோன சுதந்தரமும் பண்பும்யாம் மீட்கக் குறியான தெல்லாமே கொண்டுள்ளா னிவனே
என்றிவனைச் சென்றுபலர் இன்றமிழோர் வாழும் தொன்றுபதி புலோயினிற் சூழ்ந்துகண்டு நாடு வென்றுசுதந் தரமடைய வேண்டியன செய்வோம் நின்றெமைநி வழிகாட்ட நெஞ்சுருள்க என்றார்
55
17
8
I9
2O
2.
22
23

Page 45
6645us ulasub .
செந்தமிழ் முழங்கும் ஈழத் செல்வநாட்டதிப மன்னர் வந்தடி வணங்கும் வீர், வன்னிமா மகிப, கேளாய் சுந்தர மடந்தை மாரும் தோகையங் கன்னி மாரும் வந்துதற் சூழ அந்தப் புரத்தறை வணிகன் யாரோ
முத்தொடு பவளம் விற்கும் வணிகமே முனைவான் போலச் சித்தமும் மங்கைநல்லார் செல்வமாம் அழகுங் கொள்வான் நித்தமும் பெண்கள் அந்தப் புரத்தினில் நிலைகொள் கின்றான் இத்தனை நாளும் ஈதிங்(கு) இறைவநீ அறிந்தி லாயோ
பகைவரும் பொழுதும் யாரும் பாய்ந்துசீறிய போதும் தான் நகைவரு முகத்தனாகி நண்பனாய்ப் பகைவர் வெல்வான் வகைவகைப் பொருள்கள் கொண்டு வனிதையர்க் கூட்டம் வென்றான் தொகைவரும் அரசுச் செய்தி தொகுக்குமோர் ஒற்றன் போலாம்
3. மந்திரி மாரும் செல்லா மருமமிக் கறைகள் எல்லாம் விந்தையிற் கலைகள் காணும் விருப்புளான் போலக் காட்டித் தந்திரத் தாலே பார்த்தான், தையலர் பள்ளி கூடச் சொந்தமே போலச் செல்லத் தணிந்தொரு வார்த்தை சொல்லார்
4. என்றடி தொழுது செல்லும் ஏவலர் தம்மை நோக்கி இன்றமிழ்ச் சுவையை மாந்தி எழிற்கலை காணவந்தோர் வன்றிறல் ஒற்ற ரென்றும் மாற்றுடைப் பகைவ ரென்றும் என்றுமே ஐயங் கொண்டால் எம்புகழ் வளர்வ தெங்கே
சொன்னது கொண்டோம் செல்வீர் சூழ்வன வல்லீர் நீரும் அன்னவன் செயல்கள் ஒற்றி அடிக்கடி உரைப்பீர் இங்கே என்னையே ஒழிக்க வென்றே ஏற்றதோர் காலம் பார்த்துப் புன்னகைப் பகைவர் பல்லோர் குடிகளாய்ப் பொருந்திவாழ்வார்
6 மூச்சென உயிர்த்துத் தென்றல் மூரல்மல் லிகையாய்ப் பூப்ப பேச்செனக் குயில்கள் கூவப் பிஞ்சுமாந் தளிர்க ளாய ஒச்சிய விரலசைத்து உயிர்களை உருக்கிக் கண்கள் வீச்சினிற் பேசுங்காலம் வேனிலாய் நடந்து வந்தாள்
56

அரவென இரையுங்கள்ளை அருங்கையிற் பிழாவில் ஏந்தி அருகிரு புறமும் வாயால் அலைபட ஊதிக் கொண்டு
பருகியும் இடையில் மண்மேற் பாதங்க ளிடையில் வைத்தும்
தருபனை நீழல் வந்தார் தமரொடு வயலில் நின்றோர்
கண்டுயில் செய்த நாத சுரந்துளை விழித்துக் கானப் பண்டரத் திறந்தும் கோயிற் பரண்விழா நிகழா தாக ஒண்டொடித் தளிர்க்கை மாதர் மணவினை உறவின் போது
விண்டொட ஒலிப்போ மென்ற ஆசையால் வெளியில் வந்தார்
மறந்தறை கருங்கல் நெஞ்சின் மாமரத் துணரின் வண்டு
பறந்துவெண் முல்லைப் பூவிற் பருவமார் பெடையைக் கீண்ட
திறந்தது மெழுகாய் நெஞ்சம்; சினந்தபின் காத லோரை மறைந்துபின் னோடிப் பின்னால் கற்றன மாரன்வேதம்
பொன்னென மலரின் பூவின் கொம்பரிற் கரிய வண்டு தன்னிய கோடி மொய்த்துத் தவள்தரச் சுகந்தத் தென்றல் தன்னலைக் கரத்தாற் றாக்கச் சமுத்திரப் படகி லாடும் இன்னிசைப் பரவர் போல எழுந்து தாழ்ந்தாடுமம்மா
சொருகிடாக் கூந்த லாலும் தவள்தரும் இடையி னாலும் அருகினில் மாதரார்க்கு நாணின, அணையா மஞ்ஞை கருகிய சருகின் மீது வரவர மரத்தின் கீழே முருகொடு தாது வீழ்ந்து முழுகிய பொன்னின் வெள்ளம்
பட்டன மரமும் ஓய்ந்து பாட்டியர் மனமும்/முற்றும் கொட்டிய இலையின் மாவும் கொடுவெயில் வேம்பும் பூத்து விட்டன அரும்பியென்றால் வேகுறுங் கன்னி மாரும் கட்டிளங் காளைமாரும் கருத்தினில் யாத பூப்பர்
போர்த்தன புதர்களெல்லாம் பூவினால், புறாவினங்கள் வேர்த்ததம் பெடையை மெல்ல விசிறின சிறகு கொண்டு சேர்த்தன கலைமான் கொம்பாற் சிறுகமெய் தடவிப் பேடை பார்த்தவெங் கணுமே மாரன் பவனிவந் தருளு கின்றான்
சாம்பலின் மறைந்த தீயின் தழலினிற் சிறுகால் ஊத ஆம்பெருஞ் சுடரே போல அன்புநாண் அடைத்த போதும் தாம் வசமிழந்தார் மாதர் தண்ணிய தென்றல் வீச ஆம்பலின் அதரச் செவ்வாய் தடித்திடக் காதல் மூண்டார்
57
O
II.
2
I3
I4
IS

Page 46
சந்தனப் பொருப்பில் வந்த தண்ணிய தென்றலேனும் இந்துவின் அமுதில் வந்த இளநிலாப் பாலே யேனும் அந்தியின் முல்லை யேனும் அணங்கனார் அனுப வித்தால் சிந்திய அழலாய்க் காட்டும் சித்திரை யாயிற் றம்மா
I6 יל கஞ்சுகம் பெண்ணே யன்றோ கன்னிமா மாடப் பாங்கர்க் கெஞ்சிய குயிலைப் பார்த்துக் கிள்ளைவாய் முருக்கைப் பார்த்தங்(கு) அஞ்சிய புறாக்கள் தம்மை அருகினில் அழைத்துக் கொண்டு மஞ்சளின் வேலிப் பின்னால் மாதெனப் பூத்து நின்றாள்
உள்ளத்தில் எழுதுங் கோலம் உருவெளி எடுத்ததோ என்று மெள்ளத்தன் அருகில் நிற்கும் வீரனைக் கண்டாள்; என்ன! கள்ளத்தீர் மதிலும் பூட்டுங் காவலுங் கடந்து வந்தீர் வெள்ளித்த முனை வாட் காடும் வீரரும் நழைந்த தெங்ங்ண்
8
உடையென்றுன் நாவசைந்தால் உருக்கரண் பெயர்ந்திடாதோ படையொன்றும் கடைக்கண் ஒரம் பழகும்புண் ணகையால் மண்ணும் இடையொன்றால் விண்ணும் வெல்வார் ஏறுவார் வான உச்சி புடைவந்தால் நானும் வாய்க்குப் புரமெல்லாம் பணிசெய்யாதோ
I9 சொன்மணி வணிபஞ் செய்வீர் சோடித்தீர் வார்த்தை யாலே கண்மணி வயிரங் கொள்ளக் காசினி சுற்றும் போது மன்மத மொழியினாலே மயங்கிய மங்கை மார்போல் என்மனம் கரைத்துப் பேதை ஆக்கவும் எண்ணமாமோ
2O
தொகையினாற் பலராய்க் கூடித் தணிவொடு போரில் வென்று பகையினாற் சிறைகொண் டோரைப் பார்த்துளேம் பாவை மாரில் முகையினால் அவிழ்ந்த சொல்லா மொழியினாற் கடைவாய் மென்புன் நகையினாற் சிறைகொண்டோரை நாமெங்கும் காண்கிலோமே
2. மலையொத்த தோளிருந்தென் மருமத்தில் மத்த யானை மலைவித்துக் கொம்பு பாய்ந்த மறுபல விளங்கி னாலென் கொலையொத்த வடிவேற் காட்டுள் குதிப்பவர் வீரர் தங்கச் சிலையொத்த அன்ன மன்னார் சிற்றிடைக் கடிமை செய்தார்
22
நாணென்றும் பெண்மை யென்றும் நலனென்றும் கற்பே யென்ற பூணென்னும் மதில்களிட்டுப் புறந்தரா தொளிக்கோ மானால் ஆணென்னும் கொடியோர் செய்யும் அடிமையின் அவலந் தன்னை தாணின்று உச்சி மட்டும் தரணியோர் காண்ப ரன்றோ
23 58

அன்னை யென் றொருவர்க் காணேன் அனைத்துமென் தந்தையென்றே இன்னண காலமெல்லாம் கழித்தனேன் இதய மென்னும் கன்னிமா மாடத்துள்ளே கரந்துவந் தொளித்துக் கொண்டீர் என்னயான் சொல்லு கேனிவ் வெளிய னேன் இரப்ப தல்லால்
24 அன்னையென் றொருவர் இல்லேன் ஆரெனத் தந்தை காணேன் இன்னுணவுடற் களித்தால் இயங்குமோ உயிரொன்றன்றே என்னுயிர் தளிர்ப்ப தாயின் இனியுண தண்புத் தண்ணீர் முன்னுற வார்க்க வேண்டும் மூரலால் வாழ்வு செய்வாய்
25 ஆழ்கடற் குகையி னுள்ளே அருங்கடற் பிறந்த முத்தம் தாழ்குழல் மாதர் மார்பிற் றானழு குறுவ தன்றோ, சூழிருட் காட்டி லெங்கோ தோற்றிய சந்தனந்தான் தோளினிற் சேர்ந்தாலன்றோ சுகந்தத்தாற் பெருமை கொள்ளும்
26 ஆரென அறியா உன்பால் நெகிழ்வதோ அன்பாம் என்றான் காரெனக் குழுலும் சாயக் கன்னிமை கனிந்த கொம்பு சோருவ தென்னச் சற்றே தவண்டிடை ஒசியக் கண்கள் நீரொடு நாணும் சேர்ந்த நிலங்கவிழ்க் கின்றாள் போலும்
27 கண்ணினாற் பருகுவார்பொற் கருத்தினிற் கலந்தார்க்(கு) உம்பர் விண்ணினால் அமுதத்தாலே விளைவதும் ஏதம் உண்டோ மண்ணிலே சுவர்க்கம் காணும் மந்திரங் கற்றுக் கொண்டார் கண்ணிமைப் பொழுதாய்க் காலம் கரைந்ததும் அறிகு வாரோ
28 அந்தியின் பொன்னின் கோடு அழிந்ததும் வானின் பந்தர்ச் சிந்திய முத்தின் கூட்டம் சிரிப்பதும் காணா ராகி முந்திவந் தொருவர் உள்ளம் மொழியிலார் மாறிப் புக்கார் சொந்தமாம் உள்ள மின்றிப் பிரிவது தணிவ தெங்கே
29 இன்னண வேளை ஒற்றும் காவலர் ஓடி வந்து மின்னென விலங்கு பூட்டி விரைவினில் இழுத்துச் செல்ல கன்னிகண் ணுடைந்து முத்தாற் கன்னங்கள் கழுவ நின்றாள் தன்னிரு கடைக்கண்ணாலே நோக்கியே சரிந்து சென்றாள்
3O இரவெலாங் காவலிட்டே எழுந்தது கதிரே யாகப் புரவலார் முதலி மார்கள் போர்வலார் அமைச்சர் கூடிப் பரவுவார் சின்னம் ஊதப் பணிவலார் ஒதுங்கி நிற்கும் திருவுடை அரச மன்றம் சேர்ப்பதற் கிழுத்துச் சென்றார்
- 3I.
59

Page 47
தேடிரு விழிக ளென்னும் செழுமுழு நீலக் காடும் ஒடிய குழிழ் சிரிப்பும் ஒவ்வொரு கதவிற் பூண்ட கோடுயர் கன்னி மாடங் கொங்கையும் முகமும் பூப்ப மாடமும் மனிதர் காய்க்கும் மறுகினிற் செல்லு கின்றான்
32 கைகளில் விலங்கு பூட்டிக் கனகமார்பிரும்பு பூட்டி மெய்யெலாம் புழுதியாக வீரனை இழுத்துச் செல்ல மையலார் மாதர் தத்தம் நெஞ்சினை அடியெ யர்த்து வெய்யவார்க் கயிறு பூட்டி வீதியில் இழுப்பக் கண்டார்
33
மலையெனுந் தோள்க ளெண்பார் மலர்மகள் படுக்கை யென்பார் கலைபயில் கண்களென்பார் கன்னமும் முதகுஞ் சோர்ந்து நிலைகுலை குஞ்சி நெஞ்சங் கொள்ளை கொண்டிடலால் மைந்தன் பலபட வருந்தல் காணார் பழுதிலும் அழகே காண்பார்
34 அழுந்திய இழுப்பி னாலே அவனியின் மண்ணின் மேலே விழுந்திடு வானோ என்று மெத்தையாய் உள்ள மிட்டுக் குழந்தையாம் மடவார் தத்தம் நெஞ்சினைக் கொடுபோய் வீதித் தளந்தொறும் முன்னே வைத்தார் தாளடிமிதித்துச் செல்ல
35 மலைநகு வயிர மார்பில் வாரினால் வடுக்கள் செய்ய முலைமுகம் வடுக்க ளுற்றார் கச்சினால் மூரல் மாதர் உலைமுக உயிர்ப்புற் றாரும் ஒடுங்கிடை அலச ஒடித் தலை முகக் காட்டினூடே சாளரம் நெருக்கு வாரும்
36 ஆணின தழகிற் கெல்லை உண்டெனும் அடங்கா மாதர் நாணினர் வீதிமுன்னே நடந்திவன் வந்த போது பூணொடும் உத்தரீயம் பூண்டதால் மறைந்த மார்பின் காணொணா அழகு கண்டார் கரந்தனர் நெகிழ்ந்த உள்ளம்
37 கொடுமையால் வியர்வை சிந்தக் குருதியின் ஒழுக்குச் சோர நடைவிடை யென்னச் செல்லும் நம்பியைக் கண்ட மூத்தோர் படையிலோம் என்று நைந்தோர் பாரமும் தயரும் போக அடிமையை அகற்ற வல்லான் ஆணிவன் போலும் என்பார்
38 மறைந்த நம் மன்னர் மன்னன் முகத் தெழு வீரம் வந்து உறைந்ததேர் முகமோ என்பார் உள்ளொளி தருமம் நீதி நிறைந்திடு விளக்கோ என்பார் நெறியிலார் அடிமை நீக்கத் திறந்துமன் வ்ெளியே வந்த தினகரன் உதய மென்பார்
39 60

பிணைத்தன கரங்கள் தம்மைப் பேரவைமுன் னவிழ்த்து மணித்தொகை விற்பான் போன்று மாதரார் மாடம் புக்கு திணித்தகாரிருளில் நின்றான் தேடிய கள்வன் அன்றி கணித்துறு காலம் பார்க்கும் ஒற்றணும் போலு மென்றார்
40 Biblgp
யானைநிரை முன்னடத்தி எறிகதிர் மின்னும் வாளின் தானைநிரை பின்னடத்தித் தாம்நடுவில் அரண்செய் வேந்தர் போனஅளவிற்றிரும்பிப் புகமுடியா அரணைப் புல்லோய் பூனையெனப் போய்ப்புகுந்தாய் உயிருனக்குப் புல்லோ என்றார்
4I உண்டசோ றுதரம் நிற்ப உணவளித்தவர்தம்கைக்கு கொண்டுவாள் வெட்டு வோரைக் குவலயம் மன்னராக்கில் பெண்டுறை மாடஞ் சென்ற பிழையத பெரிதோ ஐயா வண்டுகள் மொய்க்கும் தெய்வமலரணி மதவின் மார்ப
42
வணிகனே என்றும் வைய நாடுபோய் வந்தே னென்றும் அணிகலன் காட்டி யெங்கள் அரசினை ஒற்றும் நீயோர் தணிவுடை நெஞ்சு கொண்டாய் தடுக்குடன் வடுக்கள் சொன்னாய் பணிவுடை மொழியும் இல்லாய் பகர்ந்திடாய் உண்மை யெல்லாம்
43 தந்தைதாய் தமரொன் றில்லேன் தாய்நிலமென் றொன்றில்லேன் சொந்தமாம் இல்ல மில்லேன் தணிவுடை மனத்தேன் என்றீர் பந்தமொன் றில்லாருக்குப் பாரொரு துகளே ய்ாகும் அந்தவாறடிய னேற்கும் ஆருயிர் புல்லே யாகும்
44 ஒற்றணு மல்லேன் ஏதும் ஒளிக்கவும் இல்லேன் நீவீர் கொற்றவ னாய பாங்கு குவலயம் அறித லாலே மற்றவர் செயல்கள் யாவும் வஞ்சனை யான தையோ பற்றையும் பயந்தோருக்குப் பசாசெனத் தலைவிரிக்கும்
நன்றியைக் கொன்றிட் டேனோ நண்பரைத் தரோகம் செய்திே ஒன்றிடப் பகைவர்க்கூட்டி ஒளிமுடி ஆசை யாலே கொன்றவர் தவிசு பெற்றுக் குறுகிவாழ் கின்றேன் கொல்இோ நின்றது தரும மானால் நெஞ்சுரங் கோடி யன்றோ
61

Page 48
மாற்றம்.தரையா முன்னம் மாடுளார் தம்மைக் கூவிச் சீற்றமுங் செங்கண் வாயுந் தெறிகனற் பொறியைக் கக்க வேற்றொரு விளக்கம் வேண்டாம் விரைவினிற் சிறைசெய் மின்கள் ஏற்றொடு பொருதல் செய்திங்(கு) இவனுயிர் பிழைக்கிற் செல்க
47 இழுத்தனர் ஏவலாளர் இரும்பினின் விலங்கு பூட்டி அழுத்தினர் அரச பீடம் அருங்கடைக் கண்ணி னாலே கொழுத்தினர் கொடுமை யென்று முகங்களாற் குறித்தோ ரெல்லாம் வழுத்தினர் வாயால் மன்னா வழங்கினாய் நீதி யென்றே
48
Elgg
கடலலைகள் கால்கழுவக் கரையில் வந்து நடனமிட்டு நண்டுமணல் எழுதிப் பார்க்க அடிவருடும் கடலினுக்கு ஆகா யத்தாள் படமெழுதிச் செவ்வானப் படிமங் காட்ட
49 உடுக்கணம் போற் பொங்குநரை உடையும் போதில் அடிக்கடி தோன்றிக் கரையும் குமிழ்கள் ஆய்ந்து படிக்கின்ற பான்மைபோல் ஏதோ சிந்தித்(த) அடிக்கின்ற கவலையினில் ஆழ்ந்து நின்றான்
50 நம்பிசிறை பிடிபட்டான் நகரி லென்று வெம்பிமணங் கசிகின்றான் விடுவித் தற்கு வெம்படையும் பெரிதில்லை விடிவதன் முன் அம்பொடுவேற் பரிப்படையும் ஆக்கல் வேண்டும்
5 காவலுமோ கடிதிரவில் வீதி தோறும் ஏவலரும் கொலைப்படையும் எங்கும் எங்கும் ஆவியினில் ஆசைகொளில் அடிமை போமோ சேவலது கூவுமுன்னர்ச் செல்லல் வேண்டும்
52 ஏழாலைக் கதிர்காமர் வீடு சென்றால் வாளாக ஒருநாறும் வடித்த வேலும் தோளாண்மை வீரரொரு தொகையும் சேர்த்தால் நாளாறில் அண்ணனையும் நாங்கள் மீட்போம்
53
62

மக்கள்தம் இசைவிலன்றோ மன்னன் ஆவான் தொக்கபடைப் பயத்தாலே தோன்றும் ஆட்சி எக்கணமும் அழிந்தொழியும் ஆத லாலே மிக்கவலிப் படைவேண்டாம் வெல்லுதற்கே
தோளுரமும் கையுரமும் சுடரின் வீச்சு வாளுரமும் வல்லாரோர் கோடி வேண்டாம் ஆளுபவர் அந்நியரின் அடிமை நீக்க மூளுகிற நெஞ்சு ரத்தார் மூவர் போதும்
நாடோறும் சாவதினும் ஒருநாட் செத்து வீடேறும் தணிவுடையார் வீரப் புண்ணின் தோள்தோறும் விடுதலைக்குத் தோற்ற முண்டு காடேறும் உடலினையே கனகம் செய்வார்
காளையினால் உடல்கிழித்துக் காத லண்ணன் நாளையுயிர் நமன்கையிற் சேரா முன்னம் வேளையிலே விடுவித்துக் கொணர்தல் வேண்டும் ஆளிபிடர் சிலிர்த்திடவே நடுங்கும் ஆனை
என்றுபல மனத்தெண்ணி எண்ணிக் கொண்டு நின்றபரி மீதிவர்ந்து நெடிய பற்றைத் தன்றுபுதர் பலகடந்து தொண்டை மானா(று) ஒன்று குறுஞ் சேற்றுவழி ஒல்லை நீங்கி
புத்தாரும் பொழில் வாழைப் புறமுந் தாண்டி முத்தாரும் நிலாவரையில் நன்னீர் மொள்ள வித்தார வெண் குதிரை சிறிது கட்டி அத்தானம் சிறுதுயிலில் ஆறிச் சென்றான்
இரவிரவாய் இரகசியச் செய்தி சொல்ல அரவமிரா தொரு கூட்டம் ஆலோ சித்த விரைவினிலே கலைந்தார்கள் விடி வதன்முன் புரவிதனை ஒளித்தாரோர் பொழிலி னுள்ளே
63
54
55
56
57
58
59
60

Page 49
  

Page 50
வட்ட மாக வகுத்த வரிசையில் எட்டுத் திக்கும் பரியில் இவர்ந்தவர் கட்டுக் காவல் புரிந்திட வாய்கரம் கட்டி நின்றனர் காளையைக் காணவே
கயிற டைத்த கரையினை ஒட்டியே வயிறு கால்கொடு வேலி வரைந்தனர் அயிறலைக் கடல் ஆயிரம் ஆயிரம்
எயிறுடைச் சுவர் ஈதென நின்றனர்
மீதெழுந்ததோர் மேடையில் வன்னிய நாதன் வீற்றிருக் கின்றனன் நாற்புறம் பாத பூசை பணிபவர் வாய்புதைத்(து) ஏத கூறுவ தேவலென் றேங்குவார்
மன்னன் தேவியும் மாதரும் பக்கலில் அன்னப் பேடைகள் என்ன அமர்ந்தனர் கன்னிமார் கவரிக் கரக் காற்றினால் சென்னிவேர் சிறி தாற்றித் தெளிந்தனர்
சந்தனத்திற் றளிரில் மலரினில் பந்துபட்ட குழலினிற் பாவையர் வெந்துயிர்த்தமென் மூச்சில் அளைதலால் கந்த முற்றுக் கலந்தத கென்றலே
நெட்டுயர்ந்தவர் முன்வரி நிற்றலால் கட்டையர்வசை பாடிலப் காண்கி எட்டி எட்டி நுழைபவர் கம்தடை குட்டு கின்றனர் கோபமும் மார்பல
கைகள் கொட்டிக் கலகலத் தார்க்கவும் மெய்கள் முட்டி வியரிற் குளிக்கவும் செய்ய கண்கள் திறந்திமை யாமலே வெய்ய காளை விடுந்திசை நோக்கினர்
மூசி மூக்கிற் கயிற்றை முரணலாற் வீசி வீழ்ந்தனர் கைக்கொடு வீரரே நாசி கோத்திடு நாணயம் பற்றுவார் 2ஊசல் பட்டனர் உந்தித் திமிறவே
66
I6
I 7
I8
I9
2O
2.
22
23

மூக்கெழுந்திடு மூச்சில் விழுந்தனர் நோக்கு கின்றவர் நாற்றுவர் முன்வரி சேக்கு வெங்கனற் கண்கள் தெறித்திட ஏக்க முற்றயல் வீழ்பவர் ஏழையர்
வீறு கொண்ட நடைதொறும் வீங்கிய ஏற குண்றெனும் ஏரி அசைந்திட மாறு மாறு வலமிடம் கால்கொடு சீறி வந்தது காளை செருக்குடன்
எண்ணெய்நீவி இலங்கிடும் கொம்புகள் வெண்ணிலா எறி வாளென மேலுறக்
கண்ணிருந்தவர் கண்ணிமை யாவிடில் விண்ணிருந்தவர் யாதகொல் மேவுவார்
மண்ணைவாரி அடித்தத காலினால் விண்ணதிர்ந்த முக்காரத் தொணியினால் உண்ணடுங்கினர் ஆடவர் உண்மையில் பெண்ணிருந்தவர் பெற்றியுரைக்கவோ
காலடுத்த கயிற்றைக் கழற்றிட வாலெடுத்தத வாவியும் தாவியும் மேலெடுத்த கழுத்தை வெறிக்கொடு நாலு பக்கந் திமிறி நடந்ததே
முறுக்குமீசை முகத்திலரும்பிடப் பறிக்குங் கன்னியர் பார்வைக் கணையினால் தெறிக்கும் மார்புச் செழுமலைத் தோளிணைக் குறுக்களந்து முடித்திலர் கூடினோர்
சிங்கவேறு சினந்து நடந்தென அங்கை வீசி அழுகு சிதறிட மங்கைமார் விழி மார்பிற் சிதறிட செங்கை வீசித்தெறித்து நடந்தனன்
காணுமிந்த விலங்குமொர் காளையாம் ஆணிற் காளையுமுன்டென் றசைகுவான் நாணு மாடவர் காதல் நசையினால் பேணும் பெண்மை அவாவுகின்றாரரோ
67
24
2S
26
27
28
29
30
3I

Page 51
குடல்கிழித்திடக் கொம்பு நிமிர்த்தியே உடல்வளைத்தத முசியுள் உக்கிரம் படவெழுந்தது பாய்கிற வேளையில் அடலும் ஆடவன் கொம்புகள் பற்றினான்
32
ЕБш
ஓய்ந்ததிவன் உயிரென்று கண்மூடி எடுத்ததலை சாய்ந்தனர்கள் நிமிர்வதன்முன் சணப்பொழுதிற் காளையின்மேற் பாய்ந்தேறிக் கொம்பிரண்டும் பற்றியது கண்டார்கள் தேய்ந்தவுயிர் அவரவர்க்குத் திரும்பியதம் அப்போதே
33 கொந்தளித்த கடலென்னக் கூவிளித்தப் பார்ப்போர்கள் அந்தவெளி ஆர்ப்பரித்த நிறைவிக்க அரசனுங்கண் சிந்துசினத் தாற்சிவந்த சேவகரை நோக்கவன்னார் பந்திநிரை நின்றவரைப் பாய்ந்துசவுக் காட்டினாரே
34 தள்ளியெழும் முசிவிழும் தாக்கிமுத கிருப்பானை தள்ளிவிட இருகாலிற் றாவிவிழும் முக்கரிக்கும் வெள்ளிநுரை கக்கவிடை விரைந்தோடும் விழிபிதக்கும் கொள்ளியெனகொம்பசைக்கக் கூடாமற் குமுறுமன்றே
35
எடுத்தவுயிர்ப் படக்கினரும் இருவிழியும் பிதுக்கினரும் கடித்தவிதழ் வாயினரும் கைகொடுகண் பொத்தினோரும் பிடித்துவிழுத் தென்போரும் பிடிவிடேல் என்போரும் நொடிக்குநொடி மக்களெலாம் பட்டனவும் நுவலலாமோ
36 பிடிதளர்ந்து நிலம் விழுவான் பெயர்த்துமுத கேறிடுமுன் நொடியதனிற் செத்தார்போல் நொந்தழுதே ஆவென்பார் அடிதளர்ந்து காளைவிழ ஆர்ப்பரிப்பார் அவர்நெஞ்சு தடிதடிக்க வைப்பானோ காளையமர் தொடுக்கிறானோ
37 மல்லிகையின் மாலையென வெள்ளிநரை வாய்பிதிரப் பல்லிடையே நாத்தாங்கப் பதறியுடல் சோர மண்ணிற் கல்லுமலை யெனக்காளை காலெறிந்து வீழ்ந்ததன்றே கொல்லுகவே என்றொருகூடக் குரலெழுந்த தரசிடையே
38
68

வாள்வீரர் அரங்க நடுப் பாய்ந்தார்கள் வாலிபனைத் தோள்சேர்த்துப் பிடிப்பதன்முன் தொடாதேயென் றொலிகேட்க வாள்வீரர் நூற்றுவர்கள் வடங்கடந்து குதித்தார்கள் தேள்கடடிக் கடித்ததெனத் திடுக்கிட் என் வன்னியோனே
Bougg
தாள் கலந்தன தாள் பறந்தன வாள் சுழன்றன வாய் இலங்கினவால்
வாவும் பரிகளும் வாளின் விசிறலும் தாவும் மனிதரும் சாகுந்தலைகளுமாம்
வெட்டுண் டவர்பலர் விழுகின் றவர்சிலர் தட்டுண்டனபல சமரின் கருவிகளே
பாய்கின்றவர்கரம் படுகின்றது நிலம் ஓய்கின்றவர் விழ
உழல்கின்றத குதிரை
குத்தும் வேல்மழை கூரின் கணைமழை தத்தம் பரியினர் சரிகின்றனருடனே
யார்பகைத்தவர் யார் பணிந்தவர் யார் குதித்தனர் யாரிருந்தவரோ
என்ப தறிந்திலம் ஏவரு மொன்றாகி என்பு தகர்ந்திட ஏறிப் பொருகின்றார்
69
40
4I
42
43
44
45
46

Page 52
வேட மெடுத்தவர் வேலை யிழுத்தனர் கூடி நடித்தவர் கொண்டு குவித்தனரால்
சீறிய சிங்களர் சிந்தினர் தந்தலை ஏறிய குதிரைகள் எங்கும் சிதறினவே
ஓடினர் பற்பலர் ஒட்டி யொளித்தவர் தேடினர் பக்கலிற் சென்று பதங்கிடவே
El
உருண்டன ஆசனங்கள் ஓடினர் மாதர் பல்லோர் வெருண்டனர் மக்கட் கூட்டம் வீதிதோ றோடு கின்றார் மருண்டனர் அரச வீரர் மன்னனும் திகைத்திப்போது திரண்டதோர் சேனை யாரின் சேனையென் றேங்கி நின்றான்
காளையை யடக்கி வீழ்த்தும் காமனும் கலந்து போரில்
தோளோடு தோள்பொருந்தித் தணைவரோ டமர்புரிந்தான் வேளிவன் அவனோ அன்றி வேடமும் தமையன் தானோ ஆளிலும் பிரதியுண்டோ அற்புதம் என்னுகின்றார்
ஒடிய குதிரை வீரர் வருபவர்க் குதைத்து வீழ்த்த மாடியின் மாதரார்தம் சாளரம் அடைத்தார் வந்தோர் கோடியிற் புகுவோர் ஏறிக் குதிப்பதும் கேட்டுத்தங்கள் வீடகம் தாழிட்டார்கள் மென்மன மாதரெல்லாம்
சிதறிய மக்கட் கூட்டம் தெருத்தொறும் கலைய உள்ளம் பதறிய வன்னியோனைச் சிவிகையிற் பாது காத்து கதறிடும் மாதரோடு கன்னிமா மாடம் சேர்த்தார் உதறிய மனத்தானேனும் நாணத்தால் உதிருகின்றான்
70
47
48
49
SO
S1
52
53

s
வீதிக ளோடின வேகப் பரிகள் மீதிவர்கின்றவர் வீழ்தலி னெங்கும் ஓதி குலைந்திடப் பாதியுயிர்த்து மோதி விழுந்தனர் மோகன மாதர்
சேலை குலைந்திடத் தேகம் நடுங்கிட மாலை பிதிர்ந்திட மார்பினைக் கையால் சால மறைத்தவர் தம்முடை நெற்றிக் கோல மழிந்த குலைகுலை வுற்றார்
ஆடிமுன் நின்றுகை சோர அழித்துக் கோடிதரம் நுதல் இட்டத குங்குமம் ஓடி வியர்வையில் ஒன்று கலந்து
கூடிக் கரைந்தத கொஞ்சமும் பாரார்
பான மருந்திய பாத்திரம் போட்டு மான மழிந்திடல் காத்திட மங்கை போன திசைப்பட ஓடினள் முன்னே ஆனை வரக்கண்டு) ஆடவனுற்றாள்
Ebig
கடலைப் பொரியும் கதலிப் பழமும் வடையும் சுளகும் வரகின் அடையும் உடையச் சிதற உயிரைக் கொண்டு கடையை விடுத்திட் டோடினர்காதம்
Blig
சிங்கள வீரர் திசைதொறும் ஒடி அங்கங்கே சிதறுற்றனர் அண்டித்
தங்கும் படிபல தமிழ்மனை சென்று அங்கம் குறுகி அடிசரண் என்றார்
71
54
SS
56
57
58
59

Page 53
எறிந்தன வாள்கள்பல் லாயிரம் இங்கே பறிந்தன வேற்படை பன்னூறிடையில் வெறுந்தரை விட்டன ஆயிரங் கோடி அறுந்தன ஆயிரம் நின்றவர் கொண்டார்
அண்ண னிடும்பணி ஆணைநடந்தே எண்ணரு மாயுதம் இன்னண மெல்லாம் தண்ணென வந்தவர் சேர்த்தனர் சொத்தாய் கண்ணிமை செய்யுமுன் சென்றனர் காற்றாய்
மணிவிலை பேசிய மாய வணிகன் தணிவுடை வீரன் என்பதும் சுற்றி அணி நிரை கொண்டவர் ஆடினர் பாடிப் பணிவுரை கடத்தினர் என்பதும் பார்த்தோம்
72
6O
61
62

மந்தீரப்படலம்
Biblugp
படுத்த பள்ளியிற் பனிமலர் வாசனை மோவான் கொடுத்த பாலினைப் பார்ப்பதஞ்செய்திடான் குனிந்து விடுத்த நெட்டுயிர்ப் பெறிந்தனன், விரும்பி யோர்க்கெல்லாம் கடுத்த வெம்முகங்காட்டினன் சீறிய மொழியான்
மலர்ந்த தாமரை முகத்தியர் மதுக்கலம் பாரான் புலர்ந்த நாவுடன் புழுங்கிய மனத்தினுக் கங்கை மலர்ந்த சந்தன விசிறிகள் வளர்நெருப்பூட்டும் உலர்ந்த ஊதலைத் துருத்தியாய் உளக்கனல் மூட்டும்
விடுத்த தாதினில் விரைந்துவந் தடியிணை வீழ்ந்தோர்க்(கு) எடுத்த தண்கழுத் திருநிலங் கவிழ்ந்திட அரங்கில் தடுத்த வீரனைத் தம்பியைத் தனித்தனி வந்தோர் தொடுத்த போரினை மனக்கணிற் றொட்டுமாய் கின்றான்
தொகைத்த ஆயிரம் படையினர் தம்மையோர் தாசாய்த் திகைக்க வந்தவன் தனித்தனி செய்தபோர்க் கோடி நகைக்கிடந்தர ஒளித்ததும் நாணினன் பயந்தோர் பகைக்கு மாயிரர் ஒருவனுக் கிணைவரோ பாரில்
ண்ட பொன்முடி தலைக்கணி பாரமாய்ப் பொலியத்
ண்டு கின்றவாள் அணியென உறையினிற் றிகழ ஆண்டு மங்கையர் சிவிகையில் ஆணென அடைந்தேன் தீண்டுமொவினி வீரமாம் திருவுமென் றோளில்
வென்று சென்றவர் வெடிபட நகுவரென் றெண்ணான் அன்று கண்டவர் நகுவதும் ஆண்டகை யோர்கள் சென்று தம்முளே சிரிப்பதும் நினைந்திடான், அவன்றோள் வென்ற மங்கையர் சிரிப்பரே என்றுளம் விதிர்வான்
இருந்த வன்னியர் முன்னர்சிங் களப்படை முதல்வன் வருந்தி ஏங்கிய முகத்தனாய் வருவது கண்டு
பொருந்த ஆசனம் ஒன்றினைப் புறக்கணாற் காட்டி பெருந்தரைத் தலம் ஒன்றையே பிணிப்புறப் பார்ப்பான்
73

Page 54
நிகழ்ந்த காரியம் நினைந்தநெக் குருகுதல் விடுத்து திகழ்ந்த முன்வரு செயலினிற் புகுவது திறமாம் இகழ்ந்துளோர்களும் இனிப்புற இங்ங்ணம் சோர்ந்தால் புகழ்ந்தளோர்களும் தணைவரும் புறங்கொடுக்காரோ
மாத மொன்றினில் மதகரி யாயிரங் கொண்டு மோது வீரர்கள் முப்பதினாயிரர் வருவார் தாது போக்கினேன் தரிதமாய்த் தென்னிலங்கைக்கே ஆதலாலினி விடுகவில் வவலமும் அழிவும்
கேட்ட மாத்திரம் கிளர்ந்தெழு வானிலங்கேசன் கூட்டு வான்படை வீரரும் பரிகளும், இடையில் காட்டு வெம்புதர்க் கடுவழி இல்லையேல், இன்றே காட்டு வேனிரு கயவர்க்கும் வெம்படை வலியே
வீதி தோறும் நம்பரிப்படை வீரரை நிறுத்தி மாத ராயினும் பாலகராயினும் மறித்து வேத னைப்பட வருத்தினால் வெருக்கொடு பணிவார் நீதி யென்பது பயத்தினால் நிலைப்பதொன்றன்றோ
ஒப்பும் மக்களின் இசைவினா லுதிப்பதாட் சியென்றே செப்பும் மூடரின் அரசியல் செவிமடித் தால்நீர் இப்பொழு தேயும(த) உயிரினுக்(கு) இருப்பிடம் தேடித் தப்பு கின்றதே கடனினித் தரிப்பதும் பிசகே
மூளுவார் சிலர் உம்முடித் தகுதியை முரணி வாளி னாலவர் சிரங்குவித் தாலுமை வணங்கி நாளினால்மனம் மாறுவர் பயத்தினால் நயத்தால் ஆள லாமெனுங் கனவினால் ஆருயிர் தறப்பீர்
s சேனை தெற்கினில் எம்முடை திரண்டது நிற்க வானை முட்டிய பெருநிதி வளர்ந்தது கிடக்க ஏனை மன்னவர் இறைஞ்சினமென்றுகீழ் வீழ பூனை யாகிய இருசிறு புதல்வர்க்கோ பயந்தீர்
என்று கூறிய தலைவனை இருவிழி நோக்கிக் குன்று போலநம் தோள்குவிந் திருந்தன படைகள் மன்று சூழ்ந்தயல் நின்றன மதலையஞ் சிறுவர் வென்று போயினர் வீரமும் மங்கையருளமும்
74
II. Ο
II.
2
I3
I4
IS

பார்த்திருந்தநீர் பரிப்படை குலைந்ததும் வீரர் வேர்த்திருந்ததும் வீதிவாய்க் குலைந்ததும் நாங்கள் சேர்த்திருந்தவோ ராயிரர் திசைதிசை தெறித்தார் போர்த்திருந்தது கவசமோ கச்சதோ புகலீர்
ஓடி என்னுடை ஆணையை உருக்குலைத் திட்ட பேடிமையலாற் பிடித்த ஆயுதம் எண்ணில் கோடியுங்கொடுத் தவர்திறம் வீரமுங் கொடுத்தீர் நாடு காப்பவர் நகுவதற் கிதைவிட உண்டோ
கரத்தி லாயுதம் எடுக்கிலா முதகுகடன் கவிந்த நரைத்த தாயரோ வீரத்தின் செல்லிடம் நான்காய் நிரைத்த தானையும் வேல்களும் நேரிழை யாரை உரத்திறம் வரா உழவரை வெல்லவோ எடுத்தீர்
என்று கூறிய மன்னனுக் கினியன உரைப்பான் ஒன்று கூறுவண் அரசகேள், ஊரினில் மறைந்து நன்று செய்பவர் போல்நடிக் கின்றவர் நயந்தே ஒன்று வாயிலும் ஒன்றுதம் செயலிலும் ஒளிப்பார்
அன்ன வஞ்சகள் வேடத்தால் அடிபணி வார்போல் கன்னல் இன்னமு தென்னவே கணிகின்ற சொல்லுள் திண்னு நஞ்சையும் செறித்தளார், ஆதலின் செல்வ சொன்ன வாசகத் தாலொரு மனிதனைத் துணியேல்
கம்ப மாடுவர் போலவும் களிப்பவர் போன்றும், கும்ப மங்கலங் கொடியெடுப் பாரினைப் போன்றும், அம்பும் வாட்படை கேடயம் அவருடை ஒளித்து நம்ப வைத்தவ ரேயிந்த வஞ்சகம் நடித்தார்
தேடி அன்னவர் யாரெனப் பிடித்தவர் சிரத்தைக் கூடுஞ் சந்திகள் தாக்கிடிற் கொற்றவ பிழைத்தோம் மூடி நிற்குமிப் பகைவரைச் சிறிதென மொழிந்தால் கோடியாகி டப் பெருகிடும் அன்னவர் குவையே
சொற்றிறத்தவர் தணிவுடை யோர்விசு வாசம் நிற்றிறத்தினில் இறையிச காதவர், நின்னிற் பற்று மிக்கவர் உயிர்ப்பயம் கடந்தவர் பணிவோர் ஒற்றர் தங்களை ஊர்தொறும் பரப்புதல் வேண்டும்
75
I6
I 7
18
I9
2O
2I
22
23

Page 55
பொருந்தி நம்முடன் உயிரெனப் போற்றினர் கூட எரிந்த சாம்பலுள் நெருப்பென இருக்கையில் யாரைத் தெரிந்து கொள்ளுவேன், சிரித்திடும் உதட்டுடன் நாவும் இருந்த என்னுடன் தனித்தனி ஐயுறும் என்றால்
நின்ற கீழ்நிலம் கைவிடில் நிற்பதம் எங்கே ஒன்றே யென்றவர் தங்களை உடனிருப்போரை சென்ற ஒற்றரைத் தேர்ந்தவென் நண்பரை ஐய இன்றிங் கையுறில் இனியுயிர் வாழ்வதும் எங்கே
கூறி நெட்டுயிர்ப் பெறிதரு மன்னரைக் குளிர்வித் தாறு நன்மொழி கூறினான் அடக்குவேன் பயத்தால் வேறு செல்வழி இனியிலை, விடியுமுன் வீரர் நீறு செய்குவர் நின்வழி நிற்கிலர் தம்மை
வந்த வெம்படை குவிந்திடும் வணங்கிலார் சிரங்கள் சிந்து கின்றன தெருத்தொறும் சிறிதுநீ அஞ்சேல் அந்த வேடத்தர் தம்மையும் அவ்விரு வரையும் அந்த ரங்கநம் ஒற்றரால் அறிந்து சொல்கின்றேன்
இன்ன வாசகம் கூறிய தளபதி செல்ல வன்னி மன்னனும் வஞ்சினம் தீர்ப்பனென் றெழுந்தான் முன்னம் நின்றன நாணமும் தயரமும் முற்றும் துன்னு வஞ்சினச் சுடரெனக் கண்களிற் றுடித்த
நினைந்துருகு படலம்
பூவிற் கூடிய வண்டெனப் புதுமண மலரின்
மாவிற் கூடிய குயிலென மடந்தையர் கூடித் தாவிப் பாய்சின விடையினைச் சரித்தது பற்றி நாவுக் கேற்றன நாரியர்க் கேற்றன நவில்வார்
புகழ்ந்து பேசுவோர் யாவரே யாயினும், போரில் நிகழ்ந்த யாவதும் நிகழ்ந்தபோல் உரைப்பவ ரேனும் மகிழ்ந்து காளையர் இருவரின் மறவலி யுயர்த்தி இகழ்ந்து மன்னரை யுரைப்பவர் இறுதிகாண் கிற்பார்
7R
24
25
26
27
28

நடிக்கும் வேடத்தர் நயமொழி வஞ்சகள் நம்மை முடிக்க என்றுளே முற்றிய காலம்பார்த் திருப்போர் பிடிக்கு மன்னமே யாயினும் பிறர்வரக் கொடுத்தோர் தடிக்கவே சிரம் தணிபடச் சுழுலுவர் தெருவில்
எடுத்த ஆயுதம் இக்கணம் எம்மிடம் சரணாய்க் கொடுத்து வாழ்ந்தவர் வாழ்ந்தவராம் அவைகொண்டு நடித்து வாழ்ந்தவர் நமனுல கேறிடக் கையிற் பிடித்த ஏணிகள் இவையெனப் பெரிதுகொள் வார்கள்
பொன்னு மாயிரம் அரசவைப் புகழுறு பட்டம்
இன்னு மாயிரம் இருவரும் வதிவிடம் தெரிக்கில் அன்ன மாயினும் அருந்தநீ ராயினும் இவர்க்குச் சொன்ன நல்லறம் எனக்கொடுப் போர்தலை கொள்ளார்
என்று கொட்டிய முரசொலி இருசெவியுற்றும் அன்று கூடினர் கன்னிமா மாடத்தில் அணங்கார் வென்று சென்றவர் வீரமும் விடைவிழப் பொருத நின்ற கோலமும் மறக்குமோ வனிதையர் நெஞ்சம்
கள்ள நீள்விழி அளக்கிலாத் தோள்களும் கவின்போய்ப் பள்ளி கொள்ளு மார்பகலமும் பாவையர் மலர்ப்பூ உள்ளக் கோயிலில் மிதித்தவன் உயிர்கொள நடந்த துள்ளும் அந்நடை அழகினைச் சொல்வதோ என்பார்
t இருண்ட குஞ்சியை வார்ந்திலன் ஆதலால் எழுந்து சுருண்டு நின்றன கற்றையின் சுந்தர அழகில் மருண்டு நின்றனர் மங்கையர் எனினிவன் வார்ந்தால் புரண்டு செல்லுயிர் மீட்பரோ பூவையர் யாரும்
நமது பெண்ணெழிலாலுல காடவர் நலித்தனம் என்று மமதை யுற்றவர் மாதர்தம் முகமதி கவிழ குமுதத் தாலிதழ் பெற்றுமென் குறுநகை யென்னும் அமுதத் தாலொரு அம்புயம் பூப்பதோ என்றார்
அரும்பு மீசையின் அதரமென் முத்தமே வாழ்வில் விரும்பும் மெய்த்தவ மெனவரு விரதமுற் றாரும் கரும்பு வில்லினிற் கணைகளாற் கடலினிற் பட்ட தரும்பு போன்றதே தோகையர் உள்ளமும் உயிரும்
77

Page 56
தோழி கண்டனை யோவவன் துரிதமாய் எருதில் ஆளிபோலவே பாய்ந்ததம் அரைக்கணத் ததனை வீழச் செய்ததும் வென்றியில் நடந்தெம தயிரை மீளச் செய்ததும் விந்தை யோவிந்தையென் பார்கள்
அழகு என்பதன் எல்லைவந் தடங்குதல் பெண்ணின் ஒழுகு பேரெழில் உருவினில் என்றவர் திகைத்தார் பழகும் போதெலாம் பார்ப்பவர் கண்விருந் தாகும் புளகக் கண்களால் ஆடவர்ப் புகுந்தது மமதை
ஒருவன் தானினி அழகினுக் குளணிவன் என்றால் இருவர் பேரெழிற் கெல்லையாய்ப் பிரதியென் றிலங்கில் தருவன் நல்லெழில் என்றுதான் அயனிடம் தவஞ்செய் உருவிலாதவன் நான்முகற் பொறுப்பனோ ஒருகால்
உருவத் தாலவர் ஒருவரே யாயினும் வயதுப் பருவத் தாற்பிறி தாகுவர் பாலிய ரேனும் செருவப் போர்முனைச் சிங்கங்கள் இவர்தயில் கொண்ட திருவிற் செல்வியின் வயிறெனும் செல்வமே செல்வம்
வீரக் கட்கடை ஒழுகு பேரழகினை வியந்து நேரம் சென்றதம் நினைந்திலார் நெடிததிற் றிகைத்த வீரங் கண்டிலர் விடையொடு பொருததம் அறியார் போரங் குற்றதால் போமுளம் இவ்வயின் மீட்டார்
ஒடுகின்றவர் போரினுக் குடைந்துயின் ஒளித்துத் தேடுகின்றனர் கண்களால் திரும்பியோர் முறையாய்க் கூடும் ஆணழ காகிய குமரரைப் பார்த்து நீடு நின்றதும் பேசுவார் நேரிழை யார்கள்
மூத்தவன் பெரி தழுகனென் பார்களும் விடைப்போர் ஏத்தி நின்றவர் இளையனை எழிலனென் பாரும் கோத்து நின்றவர் தோழியர் குழாம் பிரிந்திரண்டாய் ஆர்த்து நின்றனர் அவரவர் அழகினுக் காக
முற்பிறந்தவன் அரங்குற மோகமுற் றோர்கள் மற்பிறந்ததோள் இளையனை மனத்துறு வார்பின் அற்புதந் தரும் அழகினால் மனதிரண்டானால் கற்புக் காப்பதம் கன்னியர்க் கவலமே யன்றோ
78
III
I2
I3
I4
I6
I7
I8

பேசுமங்கையர் மொழியெலாம் கஞ்சுகப் பேதைக் காசை யென்னுமோர் தீயினை மூட்டுமென் றறியார் வாச நண்மலர் புனைந்திலள் வரைந்திலள் மையும் தேசிழந் தனள் சிரித்திலள் திருமதி முகத்தாள்
வனப் பெனும்பொருள் புனைவதால் வருவதோ, அன்னாள் நினைப்பெனப்படும் நெருப்பினால் நீடெழு மூச்சின் முனைப்பினாற்சுட நீளிரு மலர்விழி முத்தின் நணைப்பினாற் பொன்னாய் மிகமிக நலம்பொலி கின்றாள்
ஊது தென்றலே ஊர்ந்திடும் முகில்களே நீவிர் மாதர் தம்மொடும் உடன்பிறந்திலிர்கொலோ வருந்தும் பேதை எண்மனம் கொண்டவர் பாலிளம் பெண்கள் தாதெனச் சொல்லிரோ என்றுவாய் தடித்தனள் புலம்பி
நடந்த அந்நடை எடுப்பினை நளினங்கள் ஒத்த விடந்தனிற்பயில் கண்களை வீரமே தயில்கொள் கடந்த தோளினைக் கறுத்ததால் உயிர்கொளும் குஞ்சியை மடந்தை எண்ணியே மலர்விழி நீர்வடிக் கின்றாள்
வெட்டும் வாள்களின் மின்னலால் வெருவியபோதும் கட்டிச் செல்கையில் கடைவழி பார்த்தஅப் பார்வை எட்டு கின்றதோள் பரிமிசை இவர்ந்தன எழிலால் நெட்டுயிர்த்தனள் அடிக்கடி நீலவான் நோக்கி
இரும்புத் தாளிடு நிறையெனும் இதயமென் கதவை கரும்பு வில்லியிற் காத்தவள் மூத்தவன் இதழ்மேல் அரும்பு மீசையால் அகமுடைந் தழிபவள் அதுவே திரும்பு கின்ற எத் திசையினும் தெரிதலால் நெகுவாள்
ஒவியத்தினும் எழுதொணா அழகினை ஒளித்தே ஆவியந்திரை தீட்டுவாள் அடிக்கடி அழித்துக் காவியத்திலும் கனவிலும் கலையிலும் வல்லோர் நாவ லத்திலும் உருப்பெறா நலம்வரை வாளோ
எல்லை மாமதில் கடந்ததம் எங்ங்ணம் என்னச் சொல்லி னாலத கூறிடான் துவரிதழ்க் குமுதம் மெல்ல வாய்விட விரிந்ததோர் புன்னகை யாலே கொல்லு வான்விடை கூறிய கோலமும் நினைவாள்
79
I9
2O
2I
22
23
24
25
26

Page 57
தந்தை கட்டளை தடுத்திலள் எனநினைந் தாரோ வந்து நின்றிலஸ் எனவெனை மறந்தவிட் டாரோ பந்த முற்றவர் பாவையர் பேதைய ரானால் வெந்து நிற்பதே செயலலால் வேறெது முடியும்
வெள்ளி யாகிய மடுவினின் விளிம்பினில் நிற்கத் தெள்ளி தாகிய நீரினில் தெரிகின்ற உருவம்
கொள்ளை போகிய அவனெனக் காட்டிடக் குழைந்து
வெள்ள மாகிய விழியினில் திரையிடக் காண்பாள்
ஊஞ்ச லுக்கணி செய்திடாள் ஒசியுமென் இடையால் பூஞ்சினைக்கணி செய்திடாள் பொற்கரம் தொட்டு மாஞ்சினைக் கணி செய் கிலாள் மயிலென இருந்து வாஞ்சை பற்றிட மலர்விழிநீரினாற் புனைவாள்
ஆடு மாமயில் சிதறிய தோகையாம் அளகக் காடும் பஞ்சணைப் பரப்பிலே கவினுறு முல்லை வாடு கின்றதே எனவுடல் படர்ந்திட வளர்வாள் மூடு கின்றிலஸ் கண்ணினை மொழிகிலள் தனிமை
காத்து நின்றபோ தொளித்தஅம் முல்லையின் காடு பூத்து நிற்பது புன்னகை புரிவது போலும்
கூத்த மஞ்ஞைகள் குதிப்பன நண்பர்கள் தன்பம்
பார்த்து நின்றவர்ப் பரிகசிப் பார்களும் உண்டே
கூறுந்தேன் மொழி மதரவாய்க் குயிலனாள் இன்று சீறு கின்றது சேடியர்க் கதிசய மாமோ! வேறு பட்டவர்க் கமுதமே விடமென லானால் சாறுந் தேன்பிழி கனிகளும் இனிப்பன தாமோ
கொடுத்த நன்மணி யாரமும் குவைகளும் பார்த்தே எடுத்துச் சென்றதன் உயிரினுக் குணர்வினுக் கீடாய் விடுத்துச் சென்றவை விலையில என்றதாற் போலும் படுத்த பள்ளியிற் கண்ணுகு முத்தொடு சேர்ப்பாள்
80
27
28
29
3O
3.
32
33

Bibligng
சித்திரம் புகையுணத் தேய்ந்த தாமென முத்திள முகமதி முகிலுற்றாமென நித்திரை மறந்தவள் நெடிதயிர்ப்பவள் புத்திள முகத்தினிற் பொலிவு தேய்ந்ததே
இன்னணம் இருந்தவள் அறையிற் பற்பல பொன்னணி வயிரங்கள் புனையும் பூந்துகில் பன்னிரும் புனுகுமாய்ப் படைத்த வாசங்கள் கன்னியர் இருவர்தம் கரத்தில் நீட்டினார்
விசய னென் றொருபெயர் வீரன் சிங்களர் திசைபுகழ்ப்படைகளின் முதல்வன், செப்பினோம் இசைகிலள் என்றதும் இவற்றைத் தந்தனன் கசையடிக் கஞ்சினோம் காக்க என்றனர்
தோகையென் றியலுநூம் தோழி பேரெழிற் காக என்றலைமையும் அடிமை யாக்கினேன் வேகுமென் மனத்தினை விளம்பு வீரெனப் போகவும் விடுத்தனன் பொருள்கள் தந்திவை
கனிந்தசெங் கொவ்வையே என்னுங் கண்ணினான் குனிந்திலன் செருக்கினாற் கொண்ட சென்னியன் நினைந்தவர் திடுக்கிட நெளிந்த மீசையன் நனைந்தது நறவினால் நாற்ற வாயிதழ்
அரைபடு தமிழொடு அதுக்கும் வெற்றிலைப் புரைபடு பல்லினன் புளிப்பு நாற்றத்தன் வரைபடு வயிற்றினன் வஞ்ச நெஞ்சினன் நரைபடு கின்றது நடுவிற் புண்மயிர்
பெண்களை அடிக்கடி நோக்கும் பெற்றியன் கண்களும் கழுகெனச் சுழல்வ போர்படு புண்களும் புயத்தளன் நடக்கும் பாதங்கள் மண்கொள நடக்கிலன் மமதை யாலென்றார்
81
34
35
36
37
38
39
40

Page 58
குழலெனுங் குரலினாற் கோபம் முற்றிய தழலெனுஞ் சுடுமொழி தகிக்க லாற்றுமோ! சுழல்கரு விழிகளும் சுழல்வ தீயென அழகெனும் உடைமையால் அவர்கள் தப்பினார்
எறிந்தனள் மணிகளை எடுத்துச் சிந்தினள் வெறுந்தரை குழிந்திட விளங்குகோவைகள் அறுந்திடக் குலைத்தனள் ஆரம் வாசஞ்சேர் நறுந்திர வியங்களை நாசஞ் செய்தனள்
பட்டினைக் கிழித்தனள் பர்வி ஏந்திய தட்டினைச் சிதறினள் தரளச் செப்பினைக் கொட்டினள் கொதித்தெழு கோபச் செவ்விதழ் வெட்டினள் பற்களால் வெடித்த உள்ளத்தாள்
பசித்துடல் நலிந்துயிர் பாயு மென்னினும் புசிக்குமோ புலியது புல்லை, காலின் கீழ் நசிக்குமோர் எலியிவன் நாயும் வன்னியர் வசிக்குமோர் தவிசினில் வரவும் எண்ணமோ!
செந்தமிழ் ஊறிடும் சிவந்த வாயினால் விந்தைகொள் சிங்கள வெறியர் தங்களைப் பந்தமென் றழுைத்திடப் படுதல் கூடுமோ சிந்தையும் தணிந்ததோ செலுத்தத் தாதுமே
அடிமையிற் கொணர்ந்தநம் அரச கன்னியர் குடிமையிற் பணிசெயும் கோட்டை இ.தென மடிமகன் இவனுக்கு மாற்றம் சொல் கிலீர் சுடுமொழி மொழிந்திலிர் தாதுவந்திரோ
செந்தமிழ்க் கன்னியர் செம்மை செப்பலீர் அந்தமில் செல்வமாய் அவர்கள் காப்பதும் சிந்தைகொள் நிறையெனச் சீறி நிற்கிலீர் வந்தனி மானமும் மதியும் கொண்டரோ
சானகி சரிதமும் கற்ற செந்தமிழ் மானகு மடந்தையர் மற்றும் வேறொரு ஈனரை மனத்தினும் தீண்ட ஏற்குமோ! ஏனித உரைக்கலா திங்கு வந்திர்நீர்
82
4I
42
43
44
45
46
47
48

கங்கையை முடித்தவன் கழலை ஏத்துமச் செங்கையைப் பற்றுமே யன்றித் தீவினை பொங்கிய வேறொரு புல்லர் புண்கரம் எங்கைகள் தீண்டவும் இயல்வ தாகுமோ
என்றுகண் சிவந்தவள் இவனுக் கோர்பரிசு இன்றுயான் அளிப்பதே ஏற்றதென்றுமுன் நின்றவர்க் கூவியோர் நீண்ட கூட்டுமா(று) ஒன்றினைச் செருப்புடன் ஒருக்கிக் கட்டினாள்
இவ்விரு பரிசையும் எடுத்துச் சென்றவன் திவ்விய முன்னிலை சேர்த்திச் சொல்லுமின் கொவ்வையங் கண்ணினள் குமுறும் நெஞ்சினள் இவ்வயின் விடுத்தனள் இவற்றை ஈந்தென
செருப்பிவை என்னவை அல்ல சீறடி விருப்பினாற் றலைக்கொள விழையும் ஆதலால் தரப்படும் ஒன்றினைத் தந்துளேன் என நெருப்பெழு உரைக்குதிர் நெஞ்சில் அஞ்சலீர்
uaförso 2gørừuu6Asub
பரியொடு கரிகள் காலாட் படையினர் உடைந்து போகத் திரியுநர் தெருவில் நிற்பச் சீறிடு சிங்க மன்னார் அரிவையர் கடைக்கண் வாங்கும் அம்புயத் தோளினோடு வெருவுறு கானம் நோக்கி விரைந்தது சொல்லலுற்றாம்
சேறுறு பண்ணைப் பூமி சிதைந்தமுட் பற்றைக் காடு தாறுறு வெளிகள் மேடு தொடர்ந்தன பாறை நன்னீர் ஆறுகள் புல்லுயாந்த அருஞ்சம வெளிகள் தாண்டி வேறுவேறாகச் சென்று விரைந்தனர் காட்டினுள்ளே
Biblug
இருமருங்கும் பணிச்சமலர்த் தாதுகுப்ப இளம் ဝါuTဂွါးဇု(ဈဂံ பருமணலின் படுக்கைதனை மூடியவக் காட்சிதன்ை ஒருமனமே சுவைத்திருப்ப ஒழியாதென் றுட நிதி நிரைமலரும் நதியழகும் நீள்கொடியும் காண்கின்றான்
83

Page 59
திரைக்கரத்தால் அடிதொழுது குமிழ்ச்சுழியால் சிறுநகைத்தே இரைக்குமிசைப் பண்பாடி இளங்கொடிகள் தாவிவிட்ட விரைக்கனக மலர்சேர்த்து வெற்றிபெறு கென ஆறு கரைக்குவரு மிளவரசைக் கைதொழுது வரவேற்றாள்
தேன்புள்ளின் சிறுகூட்டம் இருந்தனவோ அன்றிநீலக் கான்கொள்ளும் காயாவோ மலர்ந்ததெனக் கண்மயங்க வான்கொள்ளும் தருக்களிடை மரகதத்தேன் புள்ளிருக்கும் தேன்விள்ளும் நீலமலர் சிரித்திருக்கும் தெரிவோர் யார்
படுத்துறங்கும் மலைப்பாம்பு படியாக மிதித்தேறி மடுத்துறையில் நீர்மொண்டு மதயானை மேற்செல்லும் அடுத்தகரை உதிர்ந்தமலர் அமளியின்மேற் கலையினங்கள் எடுத்திருக்கும் மணக்கோலம் இதற்குமயில் நடமாடும்
புற்றாழிச் சோறுண்ணப் புன்கரடி யகழ்குழியில் அற்றார கைக்கணம்போல் அருமணிகள் இமைப்பனவாம் பொற்றாது தாவியிடை போர்ப்பதனால் நட மகளிர் சிற்றாடை போல்வனவும் திகழுவன இடைஇடையே
மயிலான தோகையர்கள் மடுநீராம் ஆடிதன்னில் ஒயிலாக உடல்பார்ப்பர் உறிஞ்சுகின்ற மானினமும் பயிலாத கன்னியர்போற் பார்க்கின்ற உடலழகு துயிலாத காமியராய்த் தாறிருந்து புலிபார்க்கும்
மிதந்தவரும் மரங்களும்வாய் விரித்திருக்கும் முதலைகளும் விதந்தெரியா உயர்ந்திடையே மேனிIர்ந்த கருங்கல்லும் மதந்துதைந்த களிறுகளின் மத்தகமுந் தெரியாவாம் சிதைந்தனதேன் உடைந்தனவும் சிறுசுனையுந் தெரியாவாம்
தாழ்ந்தவரும் சினைகளிலே சாய்ந்திருக்கும் மந்திகளின் வீழ்ந்தநெடு வால்கள் கீழ் வெள்ளநனைந் திருப்பவரால் சூழ்ந்துவரு மிரையென்று கடிக்கவவை தாக்குவன ஆழ்ந்தகடல் தாண்டிலிடும் மீனவராய் ஆகுமாமே
84
IO

கொத்தாக மலர்ந்தகொடி குவிந்துபடி கூட்டவண்டால் பத்தாகி நின்றவர்போற் றலைகுனிவ படிந்தவண்டு அத்தாரை அள்ளுதலாற் பறப்பண்பின் அமர்தலாலே வித்தார மீனவர்போல் மீண்டுயர்த்தித் தாண்டிலிடும்
தாதசொரி தருக்களின் கீழ்த் தலைதாழ்த்திப் படுத்தறங்கும் மேதிகளும் பொன்னாகி விளங்குவன வேடமுற்ற தாதிகளர்ம், தலைநிமிர்த்தும் கலையினங்கள் கொம்புகளால் மீதுவளர் தேன்குத்த விழிநனைந்து வெருண்டோடும்
காமருயூங் கமலமலர் நாளங்கள் வளைந்துபூத்த தேமலர்கள் கவிகையாத் திரையேறும் தாராக்கள் காமமன நடனமிடும் கன்னியராய்க் களிப்பூட்ட தாமரையாம் இலைத்தவிசில் தவளையர சிருக்குமாமே
Elig.
குக்கிடும் புள்ளும் கூவிடும் புள்ளும் கொக்கிடும் குரல் மாறிடக் கூப்பிடும் சிக்கொலிப்புள்ளும் சீழ்க்கைசெய் புள்ளுமாய் திக்குகட்கொரு தேனிசை கேட்குமே
வந்தவந்த மணங்கொளுந் தென்றலால் சிந்துகின்ற தகள்மலர்த் தேம்பொடி பந்தி மான்களின் கண்கள் படிதலால் அந்தராகி அலைந்தன அவ்வயின்
மாலை வந்த குறுகிட மன்னவன் சாலையும் வழியுந்தனி சார்கிலான் பாலை நீண்மரப் பாயல்கண் கொள்ளவே மேலி வர்ந்து விழுச்சினை பற்றினான்
சீறிப் பாயும் சினப்புலி வீறொலி மாறிக் கூப்பிடும் வான்கர டிக்குரல் மீறிப்பாயும் நதிக்குரல் வெம்மரை ஏறிப்பாயும் ஒலியிவை யெங்கணும்
85
I
2
I3
I 4
15
I6"
ך1

Page 60
மடமடக்க மரமுறிக்குங்கரி அடியெடுக்க அவைபொடி யாகொலி இடையெழுந்த நரியொலி என்பவை புடையொலிக்கும் புலிக்குரல் சீறவே
வெஞ்சினப்புலியின் விழி வீசொளி பஞ்சு மின்மினி பற்றையிற் றாக்கொளி தஞ்சு மானையின் தாயவெண் கோட்டொளி நஞ்சு நாக மணிச்சுடர் நாற்புறம்
தானடித்த மரையினைச் சாப்பிடும் கானவெங்கட் சிறுத்தையைக் காய்ந்திடும் மானவெம்புலி வாய்பிளக்குங்குரல் கானமெங்கும் கலங்க நடுக்கிடும்
பன்றி சுற்றிய நீள்மைைலப் பாம்பினை நின்ற மற்ற நிரைநிரைப் பன்றிகள் கொன்று குத்தும் நரிகள் குழாமதைத் தின்று பார்க்கச் சிலவடி முன்வரும்
ஊட லுற்ற கரடி யுவந்திட ஒடி ஒடியோர் ஆண்பணிவுற்றத தேடி வேறொரு பெண்வந்த சேர்ந்தது சாடிப் பாய்ந்தது தாரமென் றாயத
முன்னவண்பர ராசன் முழுவிர(வு) இன்னணம் கழித்தான்மரம் ஏறியே மின்னலாற் கரை மேகம் எழுதினன் செந்நிறத்தத் திரையினிற் சூரியன்
கடவுங் கோழி குறித்த திசையினில் மேவு கின்றனன், மெய்தளர் கின்றது ஆவி சோர அடுபசி கூறிட நாவு லர்ந்திட மெல்ல நடந்தனன்
சென்ற அந்தத் திசையினிற் போயொரு குண்றெனும் சிறு பாறையிற் கோமகன் நின்று பார்த்தனன் நீள்புகை தோன்றலால் ஒன்று புன்குடில் உள்ள தணர்ந்தனன்
86
I8
I9
2O
2I
22
23
24
25

அடைந்த காலையில் அங்கொரு மூதவை கடைந்த மோருங் கரைபழஞ் சோறுமாய் நடந்த வெங்களை தீர்ந்திட நல்கினாள் உடைந்த உள்ளத்தள் யாரென் றுசாவினாள்
வேட்டை மேவி விரும்பினன் யானொரு காட்டு வாழ்க்கையன் கால்வழி தப்பினேன் கூட்டி வாழ விரும்பினிற் கொஞ்சநாட் பாட்டி யுன்றன் பதியினில் வைகுவேன்
செந்தமிழ் மொழி பேசினை சேர்க்கிறேன் வந்த சிங்களர் வாட்டுதல் தாங்கிலோம் நொந்து வந்தனம் நூற்றுவர் இவ்வயின் வந்து சேருவர் இக்கணம் மாசி லோய்
என்று கூறி இருக்கையிற் காட்டிடை - சென்றவர்வந்த தேடிய மன்னவன் ஒன்று கூடினன் என்றுவந் தண்மையை நின்ற தாய்க்கும் மொழிந்தனர் நேரிலே
மானின் கூட்டம் மறையும் அழகையும் தேனின் பூமலர் சிந்தும் அழகையும் வேனில் மங்கையின் மென்விளை யாட்டையும் கான வாழ்வின் களிப்பெனக் கண்டனன்
காட்டினிற்கரந் தாரிரு காளையர் நாட்டுவாரினி நந்தமிழ் ஆட்சியென்(று) 2ளட்டுவார்களி உள்ளம் வலிகொள நாட்டு மாந்தர் நடந்தன ஓர்ந்துளார்
வந்த காட்டிடை மன்னனைக் கூடிய பந்து வாயவர் பற்பலர்தத்தமக்(கு) எந்த வெந்தப் பணியியைந் தேற்றதோ அந்த அந்தப் பணியினை ஆற்றுவார்
கொண்டு சேர்த்த குதிரை வளர்ப்பரும் மண்டு காட்டில் மதகரி பற்றிடக் குண்டு கண்கிடங் காக்கிக் குழிப்பரும் தொண்டுகள் செயச் சூழ்ந்துநிற் கின்றனர்
87
26
27
28
29
30
31
32
33

Page 61
கட்டி வந்த கரியைப் பழக்குவார் ஒட்டி நின்றுகொள் ஒற்றுரை சொல்லுவார் நெட்டி ரும்பை நெருப்பினிற் காய்ச்சியே வெட்டு வாளொடு வேல்வடிக் கின்றனர்
காட்டை வெட்டிக் கழனி அமைப்பரும் கோட்டை யாய்க்குகை சூழ்ந்த குடைநரும் வேட்டை யாட விரைந்துசெல் வோர்களும் நாட்டை யாள நலிந்தனர் சேவையில்
Вашир
ஓங்கிய மரத்தின் கீழே ஒளிர்கனல் விறகுத் தீயின் பாங்கொரு வட்டமாகத் தொண்டர்கள் பணிந்திருப்ப தேங்கிய வீங்கை சிரித்தமர் தோளான் காளை ஆங்கவர் விகள் இன்ன இன்னென அறைகின்றானே
சருகுகள் உதிர்ந்தா லன்றித் தளிர்பிறப்பதுவு முண்டோ பெருகு நீர்ச் சுனையின் நீரை அள்ளினா லன்றிப் பின்னர் வருகுளிர்ப் புதுநீர் உண்டோ! வாழ்பவர் மற்றோர்க்காக உருகுயிர்த் தியாக மின்றி உதிக்குமோ புதிய வாழ்வு
மகப்பெறத் தானே ந்ோகும் தாயென மக்கள் நாங்கள் சுகப்பெரு வாழ்வு பெற்ற சுதந்தரம் உதய மாக தகப்பெறும் உயிரை யிந்து தளிர்விடும் மக்களாய முகைப்புத மலர்கள் வந்து முளைத்திடப் பசளை செய்வோம்
எண்ணிய சுகங்கள் யாவும் இன்னணம் விடுத்தல் வேண்டும் பண்ணிய கரும மல்லாற் பார்க்கவே றுருவங் காணோம் மண்ணினைப் பள்ளி யாக்கி வன்கரம் அணைய தாக்கி எண்ணமும் சுதந்தி ரத்தின் இலக்கமாய்த் துயிலுவோம் யாம்
நாவொரு சுவைகேளாத, நல்லுடல் அணைகே ளாத பாவடி செருப்புக்கேளா, படர்தலை எண்ணெய் கேளா(த) ஏவிய பணியே யன்றி இன்னிசை காது கேளா மேவிய வியர்வை யன்றி மேனி சந்தன முறாது
88
34
35
36
37
38
39
40

BGggi
இறக்குமிவ் வுடல்கொடுத் திறக்கிலாப் புகழை உறக்கொளும் வாணிபம் உவந்ததே யன்றி நிறக்கணல் கொளுத்திடும் நெய்யென உடலைச் சிறக்கெரிக் குணவிடல் தெரிந்தவர் செயலோ
பசியொடு நீர்விடாய் கண்டுயில் பாரார் நிசியொடு பகலென நிலவென இருளும் நசிவுறு காடென நாடெனப் பாரார் அசைவிலர் சுதந்தர இலக்கினை அடைவோர்
ஆதலின் யாவரும் அர்ப்பணம் செய்வோம் மாதிவள் தாயெனும் மண்ணினை மீட்போம் மோதிமுன் வருமிடர் முன்னெதிர் செல்வோம் நீதியும் நேர்மையும் நெஞ்சணி கொள்வோம்
செயவல திதவெனத் தெரிந்தவர் சொலுமுன் இயலுவ தாற்றுதல் எம்கடன் அறிவீர் முயல்பவர் பணிப்பவர் எனும்முறை முடிக நியமமும் விடுதலை இலட்சியம் நினைவீர்
என்றுகொண் டினையன இளவர சுரைப்ப நின்றவர் குதித்தனர் நிலத்தினில் இருந்தோர் வென்றவர் போலெழுந் தாடினர் வீர மன்றுரை சபதங்கள் வானெழு மொழிந்தார்
வாயிதழ் கடிக்குநர் தோளிணை வலிப்பார் தாயென மண்ணிற் றடம்புரள் கின்றார்
காயமும் உயிரொடு களித்தனக் கீந்தோம் தேயமே தாயெனச் சென்னிகை வைப்பார்
இவ்வணம் சுதந்தர எழுச்சியிற் கொதித்தோர் அவ்வவர் செய்வன அடுத்தவர் சொலுமுன் செவ்வையில் ஆற்றினர் சேவையே நாட்டின் தெவ்வரை விரட்டுதல் இலட்சியம் தெரிந்தார்
89
41
42
43,
44
45
46
47

Page 62
தெளிந்தன ஓடைகள் சிரிப்பன மலர்கள் நெளிந்தன அருவிகள் நிரைப்பன மான்கள் வழிந்தன பாறையில் மதமலர் சிந்தி எழுந்தன வண்டினம் எங்கணும் பாடி
தனிமையில் தருக்களில் நல்லுரை படித்தான் இனிமையில் வண்டினம் இயம்புரை கேட்டான் பனிமலர்ச் சிரிப்பினிற் பாடங்கள் கற்றான் சுனைமலர்த் தெளிவினிற் றாய்மையைப் பெற்றான்
பாறைகள் எழுதிய பலகைகளாக ஆறுகள் ஆசிரியர்க்குழுவாக ஏறுயர் மரங்களும் ஏடுகளாகத் தேறினன் இயற்கையின் தேர்வினில் இறையோன்
மான்கள்பின் ஒடியும் மரநிழல் அமர்ந்தும்
தேன்புள்ளின் கீதத்திற் செவியறி கொடுத்தும் கடன்படு விற்கலைப் பயிற்சிகள் கொடுத்தம் கான்படுங் கரியினம் பழக்கியுங் களித்தான்
மாந்தரின் முகங்களிற் கண்டிட வாராத்
தீந்திரு மலர்ச்சியைச் சிரித்திடும் மலரின் பூந்துகள் இதழினிற் கண்டனன் புகழின் வேந்தனுக் கியற்கை விளம்பினள் பாடம்
நெற்றலை சாய்ந்திடும் நிலங்களி லெல்லாம் பற்றைகள் தாறுகள் படர்வது கண்டான் சிற்றலை ஆறுகள் தெளிந்துகு நீரைச் சுற்றிய உவர்க்கடல் தொகுப்பது கண்டான்
ஆற்றினை மறிப்பது அதனிழி நீரால் நூற்றொரு காவதம் நோக்கிய இடங்கள் நாற்றிசைப் பரப்பிலும் நாரியர் நாற்றுச் சேற்றிடை நடுவதும் சிந்தையிற் கண்டான்
காடுகள் அழிந்துநற் கழனிகள் தோன்றும் கோடியென் கன்னியர் குரவைகள் ஆடி பாடிநெல் அரிந்திடும் பசியநற் காட்சி ஓடிமுன் கண்ணினிற் றோன்றிடும் உடனே
90
48
49
50
SI
52
53
54
55

கோயில்கள் தோன்றிடுங் கோபுரந் தோன்றும் வாயில்கள் மனைதொறும் மணிச்சரம் தோன்றும் நோயிலர் தன்பிலர் நுண்மதிக் குடிகள் ஆயிரம் ஆயிரம் அகக்கணிற் கண்டான்
இனிவரும் சுதந்திர அரசியற் றோற்றம் தனிநதிக் கரையினிற் சார்ந்தபோ தெல்லாம் மனநதிக் கற்பனை ஊற்றென வழியும் கனவுகள் ஆயிரம் கற்பனை கண்டான்
அணிநகர்த் தெருத்தொறும் அந்நிய தேய வணிகரின் நிரைபல மாறிய மொழியில்
மணிகளும் பொன்களும் மலையெனக் குவித்துப்
பணிகொளும் பாண்மையும் கற்பனை காண்பான்
ஊரினுக் கொன்றெனக் கால் நடை மருந்து தேரிட மனைகளும் தெருத்தொறும் முதியோர் சாரிட மனைகளும் கலைபயில் சாலையும் நேரிட அமைவுறும் அரசினை நினைப்பான்
வானசை கோள்நிலை வரையறுப்போர்க்கும் கோனிலை அரசியற் குணம்விரிப் போர்க்கும் ஊனிலை மருத்துவம் உடன்வளர்ப் போர்க்கும் தானிறை கரத்தாற் றமனியங் கொடுப்பான்
எப்படிப் பாவலர் முன்னிரை இருப்பார் எப்படி மன்னவர் இறைஞ்சினர் நிற்பார் எப்படிச் செந்தமிழ் இசைவலர் வருவார் அப்படி யாகவே கற்பனை அமைப்பான்
ஒருபிடி மண்ணிலம் எமதென வரட்டும் திருவளர் தேன்மொழி நாடெனச் செய்வோம் பருவரல் மறைந்திடும் பாவங்கள் தொலையும் ஒருவரும் வருந்திடா வரசு வந்துதிக்கும்
என்று தன் கற்பனை கட்டிய வாறே சென்றுபல் ஆற்றினிற் றிரும்பிடம் பார்ப்பான் நின்றுநின் றழகிடும் காட்டிடை நிரைக்கும் கொன்றையும் கோங்குடன் மலர்வன காண்பான்
91
56
57
58
59
60
6I
62
63

Page 63
uelussreiù luuleusub
இவ்வண்ணம் மூத்தோனும் பெருங்காட்டில் இருப்பத் தெவ்வருக்கும் எட்டாத திருக்கேதீச் சரத்தில் கவ்வுமிருள் ஒருவ னன்றிக் கள்வருமே போகா அவ்வனத்தின் நடுவிருந்தான் அழகிருக்கும் இளையோன்
அந்தணரிற் சிறந்தோனும் அருமறையே கண்ணாய்க் கொந்தலரும் உமையணையக் குளிர்ந்துவிழி அலரும் செந்தழலிற் றிருமேனித் திருநடத்தான் தனக்குச் சந்தமும் பூசைபுரி தருமலிங்கள் வாழ்ந்தார்
மக்களெனும் விளக்கில்லா வாழ்விரு ளாமென்று சொக்கரிரு தாள்வணங்கிச் சொல்லுவோற் கிரண்டு செக்கரிள நிலவனைய திருமேனிப் பவளம் தக்கவருட் புதல்வரெனத் தவந்திரட்டிக் கொடுத்தான்
விறகுகொள வேண்டியிரு புதல்வோரும் காணப்
புறமடைந்தார் வழியிழந்த பொல்லாத காட்டின் சிறையடைந்த சிக்கினராற் சினவேங்கை உறும அறிவிழந்தார் அலறினரால் அரனேயோ வென்று
ஒலமொழி கேட்டிடலும் உடைவாளை யுருவி வேலனைய பற்கிழித்து வேதியநற் புதல்வர் மேலெழுந்து பாய்புலியை வீழ்த்தவுடன் பாய்ந்தான் காலிரண்டும் தோள்போட்டுக் கடும்புலியும் சீறும்
சீறுகின்ற சினப்புலியின் செந்தழல்வாய்க் குள்ளே வீறுகொண்டு வாள்புகுத்த வேங்கைநகங் கொண்டு கீறியவன் மார்பகத்திற் கிழித்ததரம் பெருக்கி ஆறியுடல் நிலஞ்சாய ஆவிவிட்ட தன்றே
வேங்கைபடு வடுச்சுமந்த இருதோளால் வீரன் ஆங்கவலக் குரலெடுத்த அந்தணரைத் தாக்கி பாங்கவர்கள் வழிதேடிப் பலகாதம் அலைந்து தாங்குமணிக் குரல்கேட்ட வழிநடந்தான் தொடர்ந்தே
92

மைந்தரைமுன் காணாது மறுகியுயிர்துடித்து கொந்தலரும் கொன்றைமுடிக் கூத்தன்முன் வீழ்ந்து சிந்துமிரு கண்ணிராற் றிருவடிகள் நனைக்கும் அந்தணர்முன் தோன்றினான் அடலேறே அனையான்
வந்திபொருட் டன்றுதலைச் சும்மாடு வைத்த வந்ததிரு வடியிணையோ இன்றுவழி மறந்த அந்தணர்தம் பொருட்டாக அடவிதனிற் றோன்றி இந்தவுரு வடைந்ததென அதிசயித்தார் இரங்கி
உண்டிகொடுத் தறையுளளித் தபசாரம் புரிந்து பண்டுபல ஆண்டுகளாய்ப் பழகியவன் போலக் கொண்டிருந்த நண்பிறுகிக் கொற்றவனென் றறியான் பண்டிருந்த தன்னிலையும் இந்நிலையும் பகள்வான்
முத்திழைத்த சிவிகையிலே முரசொலித்த மன்னர் பத்திகொள அழைத்ததவும் பல்கோடி செம்பொன் கொத்தளந்து யானைநிரை கொடுபோகத் தந்தே அத்தனுடை மணித்தாண்கள் அமைத்ததுவும் மொழிவான்
பொன்சாய்க்கும் வயல்கொடுத்தான் பூச்சாயும் பொழிலும் மின்சாய்க்கும் கோபுரமும் வெள்ளியினால் தம்பம் முன்சாய்க்கும் மணிக்கனத்தால் முத்திழைத்த சிவிகை பின்சாய மென்பட்டும் பிறவுமிறைக் களித்தான்
முடிசாய்ந்த கால்வடுவும் முன்னிரைத்த மறையோர் அடிசாய்ந்தே அன்னாரின் காலிழைத்த வடுவும் நொடியாய்ந்த வேதவொலி மறையோர்க்கு நூறாய்ப் பிடியாய்ந்த பொன்வடுவும் கரம்பிறங்கும் மன்னன்
இன்றடிமை யாகியதால் இறைவனுடை தொண்டுக்(கு) என்றிரந்து பூசைபுரிகின்றேனை இன்னும் கொன்றனைய ஆணைமொழி கொதித்தசெவி கொடுத்தார் சென்றுமறை இளையவரைத் தேடுகின்றார் இன்னும்
உயிர்கொடுத்தும் விலையாகாச் சுதந்தரத்தை விற்று செயிரடுத்த புன்மேனித் திறம்வளர்த்தல் நன்றோ மயிர் கொடுத்தால் வாழாது மானென்றால் மனிதர் தயர்கொடுத்தால் மானமதைத் தறப்பாரோ என்றான்
93
IO
II.
2
I3
I4
IS

Page 64
என்றினைய அந்தனனும் கூறுதலும் இளையோன் நின்றபொறை அருளாளர் நெஞ்சிதவே யானால் வென்றிதரும் போர்தேடும் வீரர்நெஞ் சென்னாம் என்றுணர்ந்து நிலைசெய்வோம் இந்நெறியே என்றான்
பேரழகால் வீரத்தால் பெருங்குணத்தாற் செய்த போரழுகால் மன்னவரின் மகன்போல்வீர் யார்நீர் பாரனைத்தும் ஒருகுடைக்கீழ்ப் பாலிக்கும் குறிகள் சேரவிரு தோளுடையீர் செய்திசொலும் என்றார்
சூசகமாய்த் தன்குலமும் பிறப்பவையும் சொல்லும் வாசகத்தில் மன்னருடை மகனென்றல் மறைத்தான் வாசமனை உண்டியொடு வழங்கவிசை வுற்ற பூசுரரின் மனையிருந்த புரிகடமை நினைவான்
Billag
கைப்படு சவுக்கடியிற் காயமடைந் தோரும் செப்புசிவ நன்னெறியிற் சென்றுபிச காதோர் கொப்பளிக்கும் புண்ணுடையர் கோபமுடையோரும் முப்பொழுதும் வந்தவனை முன்விழுந்து தாழ்ந்தார்
ஆவிதனை இப்பணியில் அர்ப்பணித்தும் என்றும் சாவுதனை முத்தமிடத் தாம்வருவ மென்றும் தேவையுறும் எப்பொருளும் சேர்த்திடுவ மென்றும் சேவையினிற் றம்முடலைச் சென்றுபலி யிட்டார்
கக்குகணற் கண்ணு டையர் கன்னியர்கள் சூழ்ந்தார் ஒக்கவுடல் ஆவிதனை ஒப்புவிப்பர் அன்னோன் சொக்குமழ கிற்கடிமை யாகினரோ சொந்த மக்கணிலம் மீட்கவெனும் வாஞ்சைபெரி தாமோ
சூளுரை இயம்புநர்கள் காரணமும் சொல்லார் மூளுகனல் மங்கையரின் மோணவுளம் முட்டும் நாளுமொரு நாயகரை நாடுபவ ரேனும் பாழடைந்த கற்புடையம் என்றுவெளி சொல்லார்
94
I6
I7
18
2O
2I
22

என்புலறி முன்குனியும் அன்புருவப் பாட்டி வன்புமொழி சொல்லியிள மக்களை விடுத்தாள் அன்புபிரி யாதவரும் ஆடவரைத் தாண்டி முன்பு செல வீரமொழி சொல்லியனல் முள்வார்
இப்படியெழுந்தவரை யாருமறியாமல் முப்பொழுதும் போர்பயிற்றி முன்னணிதிரட்டி செப்பிய சமிக் ஞையினிற் சேரவழி சொல்லி அப்படி அவர்க்குரிய ஊர்களில் அமைத்தான்
பாலாவியின்கரையும் பற்றைவெளிக் காடும் நாலாதிசைக்கோடும் நல்லபரி யெல்லாம் மேலாகக் கைப்பிணிப்பர் மேலிவர்ந்து போரின் வேலான காட்டிடையில் வேட்டை கற்பிப் பாரே
சோறுகுறை யாதிருக்கத் தொட்டவயல் ஓர்சாண் நாறுபறையாகவிளை வித்தனர்கள் நொந்த சாறுபடு கன்னலினைக் கட்டிசெய்து சாற்றின் தேறலொடு பாகுசெய்வர் தேவையுறு மென்றே
B5U四川
இன்னணம் போரினுக் கெழுகின் றாணுயிர்த் தன்னுடைத்த மையனைத் தேடி நோகின்றான் பொன்னனை புதுமலர்க் காடும் ஊர்களும் பன்னக மலைகளும் பலரை ஏவினான்
நாற்றிசை ஒற்றரும் சென்று நாடியும் தோற்றிலன் அண்ணனென் துணைவன்என்றுகண் ஆற்றுறு நீரென அவலிப்பான்வயின் நேற்றுறு தாதுவன் நிகழ்த்தி னானிவை .
2ssrorist u astb
சுதனனென் றிடுபெயர் ஆணிற் சுந்தரன மதனென மங்கையர் மனத்தில் வாழ்பவன் நதிகளும் கானமும் நடந்து நாப்பணோர் அதினவ எழிற்பதி அடையு முன்னரே
95
23
24
25
26
27
28

Page 65
நில்லென நிறுத்தினர் நேரில் வேல்கொடு கொல்லெனும் ஆணையிற் குவிகின் றார்பலர் வில்லினர் கொலைத்தொழில் விரும்புங் காதலர் அல்லெனும் மேனியர் அடர்ந்த மீசையர்
எல்லையைக் கடந்துளி ஆதலால் எங்களின் செல்வியின் ஆணையை மீறினீர் சிரம் சொல்லியபடிதிறை கொடுத்துச் சுந்தரி மெல்லிய திருவடி மேவுவீர் என்றார்
பெண்ணொரு மடந்தையைத் தலைமை பேணிய அண்ணலே முகங்களில் அரும்பி நின்றது கண்ணுறு மீசையோ அன்றிக் காட்டினில் மண்ணுறு புல்லதோ மான வீரரே
எடுத்தவோர் அடியினைப் பின்னெடுக்கிலோம் தடுத்துநின் றெம்முடன் சமர்தொடுத்திடும்
அடுத்ததோள்வலியுடை ஆண்க ளாமெனின் விடுத்திடும் அன்றெனின் வீம்பிப் பேச்சுக்கள்
இன்னுமாயிரர்தணை வேண்டும் என்றிடில் கன்னியாம் அரசிபாற் கடிதிற் சென்றுயாம் பன்னிய பகருவீர், படைகள் கொண்டுநீர் பின்னிவண்வருமள வெங்கும் போகிலோம்
நூற்றுவர் யாமென ந வலுவீர்இவண் ஆற்றிடை செலவிடில் அருமை நண்பராம் வேற்றுமைப் படினுமை வென்று செல்வராம் சாற்றிய இரண்டனுள் யாத சம்மதம்
என்றுயாம் கூறலும் எதிர்கொளாதெமைச் சென்றுநீர்வருகெனச் சினமு மாறினார் வன்றிறற் புரவியில் வழிக் கொண்டோம் புதர் துன்றிய கான்களும் தாறும் நீங்கினேன்
மரங்களும் கொடிகளும் இருண்டு மண்டியே குரங்கினுக் கரியவாம் கொம்பர் நீண் டெழிற்(கு) அரங்கெனும் வனத்தினில் நாப்பண் மாந்தரின் சிரங்களும் கரங்களும் தெரியக் கண்டனேன்
96

அடையவர் யாரையும் ஐயுற் றாய்கிறார் படைபயில் கின்றனர், பண்ணை காக்குநர் நடைபல காவதம் நண்ணி மீள்பவர் தடைபல கடக்குநெஞ் சுரத்துத் தாபதர்
செந்தமிழ்க் குயிர்விடும் திறத்தி னோரித செந்தமண் எனவெழு தோற்றப் பெற்றியர் கந்தமூலங்களும் கனியும் உண்ணு நர் சிந்துநர் வியர்வையும் செங்கண் நீருமால்
ஓங்கிய மரநுனி இருந்து பார்த்திட்டேன் தாங்கிய இலட்சியத் தகைமை வீரராம் வீங்கிய தோளினர் நமக்கு வேண்டிய பாங்கரே போல்வராம் பகைவர் போன்றிலர்
ஒற்றணும் இங்ங்ணம் ஒத மன்னனும் பொற்றடந் தோளினன் பூண்ட புன்னகை சுற்றிய இதழினன் சொல்லின் செல்வனாம் கற்றவர் மணியினைக் கலந்து சொல்லுவான்
சென்றுநீ அவரெவர் தெவ்வ ராங்கொலோ அன்றுநம் நண்பரோ அறிதி, யாரையும் வென்றிடும் மொழியினாய் வெற்றி கொண்டவர் நன்றியும் வலிமையும் நமதென் றாக்குவோம்
கூறிய வாசகங் கேட்ட கோதிலான் ஏறிய பரியினன், இசைந்த நண்பராம் நாறெனும் தொகையினர் நெறியிற் சூழ்ந்திட ஆறினிற் பொருந்தினர் அடவி நோக்கியே
இடைபடு வன்னிய அரசின் எல்லையில் தடைபட நிறுத்திய தறகண் காவலர் படைபடச் சூழ்ந்தனர் பாவை வாசுகி விடைகொடுத் தல்லது மேல்வி டோம்என
ஆரிவள் பெண்ணென அறியும் ஆவலோம் பாரினை ஆண்டிடப் படைத்த போர்வலிக் காருளர் ஆடவர் என்ற போழ்தினில் நாரியர் ஆள்வதும் நவம்செய் தின்றதே
97
O
II
12
I3
I4.
IS
I6
I7

Page 66
சிங்கள அரசினர் திக்கெலாம் கவர்ந்(து) எங்களை அடிமையில் இறைசெய் போழ்தினில் திங்களின் முகத்தொரு செல்வி இவ்வயின் எங்ங்ணம் ஆள்கிறாள் இதுவும் விந்தையே
என்றலும் காவலர் இவளின் வல்லமை ஒன்றென உரைப்பமோ உலகெ லாமொரு வென்றிடு குடையினில் விதிக்கு மாண்மையாள் அன்றியும் மதனனும் அழகும் தங்குவார்
போர்மு கத்தினிற்படு புண்ணின் மார்பினர் பார்முகம் ஆளுமோர் பாக்கியம் பெறார் வார்முகம் பொருமுலை மலரின் மார்பினள் ஆர்முகம் நோக்கினும் அவள்முன் தாழ்கிறார்
பொன்னொடு மணிபுனை மகுடம் பூண்டுநாம் என்னது பெருமையை எய்துவோமிவள் புன்னகை அரும்பிடப் புரியும் சேவையில் முன்னுறு தவம்பல முயல்கின் றோமென்பார்
அரசுற அமரிடில் அன்ன மன்னவள் சரசமென் னிதயமாம் தவிசில் ஏறிலோம் சிரசுறப் பதமலர் தீண்டும் பாக்கியம் தரையுறத் தாழ்ந்திடில் அடைகுவோ மென்பார்
புரிந்திலர் போரெதிர் புன்ன கைச்சுடர் வருந்தவப் பேறென மனத்துக் கொண்டவர் சரிந்தன எதிர்வரும் தானை, கட்கிடை புரிந்ததோர் பார்வையாற் போர்விடுத்தரோ
என்றனுக் கவள்கரம் என்றிகல் செய்வார் கன்றினர் தமக்குளே கலகஞ் செய்வதால் வென்றிசெய் வீரமும் வெள்ளி ஒண்முகம் நின்றவந் நிலவினுக் கடிமை யாகினர்
தந்தையார் போரினில் மடியத் தானொரு நொந்தவோர் பெண்ணென நோக்கி னாளலள் வந்தநல் வீரமே வழியிற் சொத்தென அந்தநற் பதியினை அரசு செய்குவாள்
98
8
I9
2Ο
2I
22
23
24
25

வாசுகி எனும்பெயர் வனிதை கானகத் தேசமும் ஆளுவாள் சிங்களப் படை நாசகா ரர்களும் நண்ணிலாரிவண் வீசுமா ணையிலார் மேவு வார்கொலோ
என்றலும் வீரருட் டலைமை எய்தியோன் நன்றித எம்முடை நாயகிக் குரைத்(து) இன்றிவண் வருகுவம் கடிதில் எல்லையில் நின்றவிந் நிலை பெயர்த் தடியும் செல்கிலீர்
மலர்நெடுங் கண்களும் மானின் பார்வையும் அலரெனும் மேனியும் அமுத வாசகம் நிலவிய இதழ்களும் நிலவின் தாரைகள் குலவிய குறுநகை வதன மாய்க்கண்டான்
அடியெடுத் தசைந்திடில் அன்ன மென்னலாம் நொடியொரு அழகிடும் மேனி நுண்ணிய இடையசை மாந்தளிர் மென்மை என்னலாம் குடியிருப்பதமதில் ஆண்மைக் கொற்றமோ!
வாளினாற் பெறுவன வார்த்தை யாற்பெறும் தோளினால் மலைவன சுடர்க்கண் நோக்கினால் சூழினாற் பெறுவன தாய உள்ளத்தால் ஆளுமே மென்மையும் அரசென் றேங்குவார்
இமைப்பதும் ஆணையென் றெழுந்து நிற்பவீர் அமைப்பவர் அழகினைச் சிலையென் றாக்குவர் சுமப்பவர் அவள்பெயர் சொல்லித் தாக்கிடில் உமிப்பழு வாகிடும் உயர்ந்த மாமலை
கல்லெனும் தோள்களும் கனலின் கண்களும் வில்லிடும் கைகளும் வேண்டும் வேந்தர்க்கு மெல்லிடும் இடையதும் மிருது மேனியும் சொல்லிடு மதரமும் அரசைத் தாக்குமோ
எண்ணிடிஜ் நாற்றுவ ரேனும் தம்உளம் திண்ணியிர் ஆதலிற் கோடி தெவ்வராம் எண்ணிய முடிப்பவர் போலும் ஏற்றத்தர் கண்ணிய முடையவர் போலக் காண்பரால்
99
26
27
28
29
30
3I.
32
34

Page 67
யாவரும் கடந்திட இன்னும் சிந்தியாக் காவலை ஒருபொருள் என்று காண்கிலர் தேவிநின் காவலர் எமைச்சி ரித்தனர் ஆவியும் அவருக்குத் திரணம் போலுமாம்
இறப்பினைச் சிரிப்பவர்க் கெதிரில் யாவராம் சிறப்பினின் றிருவடி சேவிப் போமெமை பிறப்பினிற் பேடிகள் என்று பேசினும் மறப்பமோ உன்றனை இகழும் மாற்றமே
வைத்தகால் வாங்கிலோம் என்கின்றாரவர் . சித்தமே மகிழ்ந்திடச் செல்ல விட்டிடில் உத்தமர் போலுமாம் இல்லையேல் உண்னொடு யுத்தமாம் இதிலெது நின்ன தென்கிறார்
ஏவரென் னினுமென தாணை எல்லையைத் தாவதிற் பவர்தலை கொய்தல் தக்கத காவலீர் அவர்சொலும் கருத்தை ஆய்ந்திடின் ஆவலும் உடையனேன் அவரைநோக்கிட
தண்டமும் புரிவத தகுந்த தாயினும் கொண்டுயி ருடன்இவண் கொணர்தல் தக்கதே விண்டவர் சொல்வன விந்தை விந்தையே கண்டிலர் இவர்கள்ை ஒத்த காளையர்
நட்டகால் பெயர்க்கிலோம் என்னும் நம்பியர் தொட்டதோர் இலட்சியத் துணிவு ளார்போலும் விட்டிடில் எம்முடை ஆணை வீழ்வுறும் கட்டியே கொணர்ந்திடும் உயிரைக் காத்தரோ
என்றிதழ் மூடுமுன் விரைவின் ஏகுவார் கொன்றவர்க் கொணர்வதே எளித கோமகள் வென்றுயி ருடன்கொளப் பணித்தாள் எங்ங்ணம் பொன்றிடத் துணிந்தவர் அடிமை புல்லுவார்
படைக்கலம் தொடுத்திடில் மாய்வர் பாதமுற்(று)
அடைக்கலம் புகுவதோ அவருக் கின்மையால் உடைக்குவ முளத்தினை உரையி னாலென நடக்கையிற் றந்திரம் நன்கு சிந்திப்பார்
100
35
36
37
38
39
40
41
42

போயவர் புறத்தரைத் தொழுது சொல்லுவார் தீயன பேசினோம் பொறுக்க செய்பிழை நாயகி நும்பெயர் கேட்டு நங்களைப் போயுடன் கொணர்கெனப் பணித்துப் போயினாள்
விருந்தென லாயினிர் வேறு சொல்வதேன்! புரிந்தன பொறுத்திடும் போரும் இல்லையே அருந்திடும் உண்டியென்(று) அமுது நல்குவார் சிரந்தலை தாழ்த்துவார் தேனின் சொல்லினார்
உண்டியும் உறையுளும் உவந்த சொற்களும் கொண்டெமை மகிழ்தரும் கொள்கை நல்லதே உண்டிட உறவிடக் காலம் இல்லையால் பெண்டிருக் கரசியைப் பின்பு காண்கு வோம்
இப்பொழு திவ்வழி ஏகுவோம்நலம் செப்பிடும் எனத்தலைச் செல்வன் சென்றிட அப்பரி யாளரும் அவன்பின் பற்றிடும் அப்பொழு திருமெனத் தலைவன் ஆற்றுவான்
வந்தநல் விருந்தினை வருத்தி னோமென்றும் நொந்தன கூறினோம் என்றும் நூற்று வர்க்(கு) உந்தியின் பசிகெடச் சோற்றின் ஒர்பிடி தந்திடும் பண்பிலோம் என்றும் சாற்றுவர்
சீறுவாள் எங்களை ஆதலாற் சீரியோய் ஆறியே ஒருபிடி அன்னம் உண்ணுவீர் ஏறிய பரிகளும் இளைப்பு நீங்குமாம் நாறுபேர் விருந்தண நுணங்கும் ஊரிதோ
சொன்னவின் மொழியினிற் சொக்கி நண்பராய் அன்னவர் பரியினின் றிழிந்தனர் மரம் பின்னிய பொழிலிடைப் பிறங்கு பூந்தரை மன்னினர் அந்தியில் மலர்க்கண் தஞ்சுவார்
தேம்படு மலர்களிற் சிந்தும் தாதுகள் மேம்பட விரிந்ததோர் வெளியிற் கண்பட வாம்பரி அனைத்தையும் வாங்கி ஓரிடம் போம்பரி சகற்றினர் பொய்யின் தோற்றத்தார்
101
43
44
45
46
47
48
49
50

Page 68
விழித்தவர் பரிகளை வெளியிற் காண்கிலார் சுழித்தனர் விரகினால் தோல்வி பட்டமென்(று) இழித்தனர் தங்களை இனியென் செய்குவோம் வழித்தலைப் படுவதே மார்க்கம் என்றனர்
செல்பவர் தங்களைச் சிரித்த காவலர் வெல்வது நுமக்கினி அரிது வேண்டுமேல் செல்வியின் பதமலர் இறைஞ்சித் தேவிவாய்ச் சொல்வன பணிந்திடிற் சுகமு மாமென்றார்
பன்னெடுங் காவதம் நடந்த பாங்கரோர்
மின்னெடு மாளிகை அடைந்து மெல்லியற் பொன்னிற மயிலெனப் பூத்தபெண் கொடி மன்னவை படர்ந்தெனக் கண்டு மாழ்கினர்
சீறினள் தேனெனும் மொழியினால்எனை மீறினீர் எல்லையில் வெல்லு மாசையாற் கூறினீர் இழித்தெனைக் கொதித்தெழுந்தனின் வேறுநீர் சொலாதன வசையும் வேண்டுமோ
சிறந்தவாய்ச் செம்பவளங்கள் சேர்க்குமுன் பறந்தன தலைவனின் பார்வைக் கட்பொறி புறந்தர ஒட்டுவோம் போரில் நின்படை
இறந்தவ ராகிலோம் பெண்ணுக் கேவலாய்
தண்டுகள் செய்யினும் தசையைத் தொட்டொரு பெண்டுகட் கடிமைசெய் வாழ்வு பேணிலோம் உண்டுகொல் உனக்கொரு உள்ளம் வீரமும் கண்டுகொள் எம்முடை தோளிற் கன்னியே
இழுத்திவண் வாய்த்துடுக் கோயும் எல்லையும் அழுத்தியே சவுக்கினால் அடிமின், மண்ணினில் விழுத்தியே பரிகொடு மிதிக்க ஏவுமின் கொழுத்திய இரும்பினாற் குறிகள் செய்விரே
என்பன ஆணைகள் இடுமுன் சேவகள் என்பினில் இடித்தனர் எனினும் சொல்லுவான் மென்பழுத் தழகெனும் தெய்வம் மேவிய அன்பொழு(கு) இதழ்களுக் கடுக்குமோவிவை
1 O2
SI
52
53
S4
55
56
57
58

தாமரை மலர்ந்ததோர் சந்திரத் தடம் காமனைக் கணித்திடும் ஆம்பல் ஒல்கிடும் மாமயில் நடையிவை கூடின் வாயிதழ் தாமலர்ந்து அன்பினைத் தவிரத் தாங்குமோ
இன்னவை என்னுருக் கேற்ற தென்னினும் சொன்னவை என்பணி தவிரச் சொல்லுவோர் இன்னொரு தலைமையர் இல்லை என்பதை மன்னவைக் குறுத்தவே மற்றிஃதென்றனள்
இட்டது நடக்குமென் றெண்ணும் எண்ணமே கட்டிய அரசினைக் காக்கும் மூலமாம் கொட்டிய கருணையும் குளிர்த்த பார்வையும் கட்டளை இடுபவர்க் கரசைக் கல்லுமால்
நண்பினர் இவரென நமது பேரெனப் பண்பொடும் அழகொடும் பணிமென் சொல்லொடும் கண்பொழி கருணையில் அரசுண்டாகுமோ திண்புறும் உறுதியிற் செனித்த தாணையே
ஆதலின் எனைப்பணிந்(து) உய்ய லாமெனில் மீதமண் வீழ்ந்திவண் வேண்டும் யாவையும் யாதெனக் கூறியே பெறுமின் அல்லெனில் மாதயர்க் காட்பட மணங்கல் லாக்குவீர் 4
மானெனும் மங்கையர் அடிமை யாகியே நானொரு ஆணென நவில்தல் தக்கதோ ஊனினை அறுக்கினும் உயிரைப் போக்கினும் மாணமே பெரிதென மகிழ்ச்சி எய்தவேன்
எத்தனை கொடுமைகள் இழைக்க நேரினும் சத்தியம் மானமெம் தாய்மண் என்பவை அத்தனை காக்கவும் அர்ப்பணம் உயிர் சித்தமே எதிர்த்திடத் தேவி உன்னையே
103
59
60
6
62
63
64 .
65

Page 69
மல்லிகைப்பள்ளி இன்துயில் மாமயில் மெல்லெழுந்து தன் மேனியிற் றீண்டுறும் சில்லெழுந்தபூந் தென்றலின் தீயினால் அல்லின் சாமத் தலர்க்கண் மலர்த்தினாள்
வாளெடுத்தனள் வாயில் கடந்தனள் நீளழுத்திய சாலையில் நேருற ஆள டுக்கிய வெஞ்சிறை அத்திசை தாளெடுத்தனள் சார்ந்தனள் வாயிலை
காவலர்நிலம் தாழ்ந்திரு கைதொழ தேவி நின் சரண் என்பவர் சென்னிதாழ்ந்(து) ஏவ லுக்கென முன்கை இறைஞ்சிட ஆவலுற்றிட ஆணையிட் டாளரோ
பூட்டினைத்திறமின்கள் புருடரை வாட்டி வைத்த சிறையினைக் காண்பமென்(று) ஆட்டினள்சிறு அம்புய மென்விரல் கேட்டிருந்தவர் கேட்டத செய்தனர்
மூக்கு டைந்த குருதி முழுவதாய் நாக்கடைத் தெழு தாகம் நலிவுற வீக்க முற்றிடு மேனியைக் கண்களால் நோக்கினாளிளையான்படு நோவினை
இன்னும் என்றன(து) ஆணையை யேற்றிட என்ன தாமதம் என்றுசொல் வாளுக்குக் கன்னியே இந்தக் காவலில் நீயுற என்ன மாதவம் செய்தனம் என்றனன்
ஈரமென்பதிறையும் இலாயென்றும் நாரியர்க்குறு நாணமில் லாயென்றும் மாரனும் மறை கின்றனன் மங்கையுன் வீர் மஞ்சி னன் என்றும் விளம்பினார்
O4
66
67
68
69
0ך
1ך
2ך

நாம்படுந்துயர் கண்டவை நீக்கிடப் பூம்படுக்கை விடுத்தனிர் போந்துளிர்
வேம்படைக் களம் நிற்பினும் மெல்லியற்
றேம்பும் தன்மை சிறிது வராது கொல்
சாயல் மஞ்ஞை எனும் நின் தளிர்மையும் போயொளித்தநின் புன்னகை மின்னலும் நீயொளித்த நின் நேயமென் நெஞ்சமும் ஒய ஒய அடிக்கையில் உண்ணினேன்
பெண்படும்மண்ம் சற்றும் பிறக்கிலாய்
மண்படுத் தடல் வாட்டி அடித்ததாற் புண்படும் உடல் பூவைநின் அஞ்சனக் கண்படுந்தொறுங் காயங்கள் ஆறுமே
நஞ்சிருப்பன வாயினும் நல்லதேன் வஞ்சனைப்படும் பூக்களில் வண்டுகள் நெஞ்சிருக்கும் நின தெழில் மோகத்தால் நஞ்சிருப்பத நாடிய எம்முடல்
என்று கூறினன் ஏற்றிய புண்களால் கன்று மேனியன் கார்முகிற் கீற்றுளே நின்று முத்தின் நிலவொளி வீசிடும் ஒன்றுவாமதி மேலும் ஒளிரல்போல்
சற்றிரங்குமென் தண்ணளி உள்ளத்தால் முற்றும் நான்சரண் மூழ்கினென் என்னுவீர் வெற்றியும் நூமதாக விளம்புவீர் கொற்றமும் கொண்ட கோலும் சரிந்திடும்
என் சரண்புகில் இன்பம் விடுதலை பின் சிறப்பதம் நுங்கள் பெருமையே என் சிறைக்குள் இருக்கும் நுமக்கொரு வன் சினப்படும் வீரமும் வாய்க்குமோ
ஆத லாலென்றன் ஆணையை ஏற்றிடிற் போது வீர் புறப்பட்ட புரத்தினில் யாது வேண்டினும் யாந்தரு கின்றனம் ஈத யாவுமோர் சொல்லில் எளிவரும்
105
73
74
75
76
ךך
78
79
8O

Page 70
என்று கூறிய நங்கைக் கியம்புவான் வென்று நம்மை அடிமை விரும்பிடில் ஒன்று தான்படை உள்ளத புன்னகை சென்றுதான் சரண் சேர்க்கும் நின் வாயிதழ்
வேட்டைக் கோலம் புனைந்த விடுப்பினும் ஆட்டையும்புலி ஆக்கிடலாகுமோ கேட்டவள் நெஞ்சின் பெண்மைக் கிளர்ச்சியைப் போட்டடைப்பினும் வாய்ச்சொல் புதைக்குமோ
நோய்ப்படும் நுமை நோக்கவும் காக்கவும் தாய்ப்படுங்குணத் தாதியர் மூவரை ஏய்ப்ப நல்கினன் என்றுரை சொல்லுமுன் தோய்ப்ப கண்கள் தளியதிர் முத்தினால்
வந்து நுங்கள் வருத்தம் அறிகுவன் அந்த மூவர் அடுப்பன செய்குவார் இந்த வாறு மக்(கு) ஏற்பன செய்திடில் சிந்தை மாறினன் என்றயல் செப்பிடேல்
Burgg
சென்றவள் அமளியிற் சேரச் சாளரத் தென்றலும் நிலவிடும் தாரை வாள்களும் கொன்றன யாரிடம் கூறுவாளிதை வென்றவன் ஆடவன் என்று வெள்குவாள்
சிறைவிடுத் தப்புறம் செல்கு வானெனின் நிறையென தழியுமே நெஞ்சில் வாழ்பவன் சிறையினிற் கிடப்பதும் சிந்தை தீய்க்குமே இறையுமென் கண்டுயி லாதென் செய்குவேன்
இவ்வணம் படுதயர் யார்க்கும் கூறிலாள் கொவ்வையங் கனியிதழ் வெளுத்துங் கூர்விழி செவ்விய வாடியும் திலக வாணுதல் அவ்வயின் அவ்வயின் பொடித்தங் கூறுமால்
106
8.
82
83
84
8S
86
87

இன்னணம் படுதுயர் ஏழைப் பெண்மனம் கன்னியர் அறிகுவார் ஆதலாற் சென்று தன்னிய மந்திரி மார்க்குச் சொல்லுவார் அன்னவர் குறிப்பினில் அறிந்து செய்குவார்
கற்பெனுங் கொடிதரும் கொழுந்துக் கன்னியே நிற்சிறை கிடப்பவன் தன்னை நீங்கிலா அற்புதச் சிறைகொளும் வழியொன் றாக்குவோம் விற்படை வேண்டிலோம் வேண்டும் நின்மனம்
இல்லறச் சிறைபிடித் திவனை எம்வழி நில்லென நிறுத்துதல் நினைந்துளேம் என்றனர் இல்லெனக் கூறிலள் மவுனம் எய்தினள் நல்லதோர் ஒரையும் நாளும் பார்த்தனர்
காவலிற் கிடந்துள காளைக் கிண்ணத மேவினர் உரைத்தலும் மிகுந்த ஒகையான் யாவரும் விடுதலை எய்தி அவ்வயின் மேவிய விருந்தென இருந்து துய்த்தனர்
BSlugg
தோரணம் நிரைத்தனர் சுற்றிமலர் தாவினர் , நாரியர் நங்கையர் நடனமிடு கின்றனர் காரணம் இன்றியே கலகலக் கின்றனர் யாரவர் யாரிவர் என்பவை தெரிகிலர்
மாலைகள் கட்டிடும் மங்கையர் தம்மொடு சாலையில் வாழைகள் நடுமிளந் தநயரும் கோலங்கள் இடுநரும் பந்தர்கள் கோலிடும் வாலிபர் தம்முடன் வாய்கொடுத் தாடினர்
மனைதொறும் கொடிகளும் மனந்தொறும் உவகையும் வனைதொழில் வல்லவர் கைதொறும் கலன்களும் சினைதொறும் தாக்கிய சித்திர வடிவமும் நனை தொறும் மலர்களின் வாசமும் எங்கனும்
107
88
89
90
9I.
92
93
94.

Page 71
தாமணஞ் செய்பவர் ஆயினர் தையலர் மாமண்க ளாயினர் மக்களில் மூத்தவர் காமன்க ளாயினர் காளையர் நரையவர் போமண்பு மீண்டிடப் புத்திளங் காளையர்
95 பட்டுடை தெரியவர் பாவையர் கணவரைக் கிட்டியே விதவிதக் காதணி கேட்குநர் சட்டையும் சேலையும் தாநிறம் பொருத்தநர் ஒட்டி யாணங்களும் ஒப்புதல் பார்க்குநர்
96 பந்தெனக் குழலினை முடிகுவர் பார்த்ததைச் சிந்தியே அவிழ்க்குநர் சிறுபுரி பின்னுவர் கந்தென முறுக்கியே கரந்திடை சொருகுநர் சிந்தையும் கூந்தலும் சிறித பாடுற்றவோ
,97 நாதசுரம் வானிடை மங்கலம் நயந்திட வேதவொலி முழங்கிட மேல்முர செழுந்திட மாதரொடு காளையர் மனமுர சொலித்திட காதலிளங் குமரனும் கன்னியும் சேர்ந்தனர்
98
கோதையும் குமரன்றானும் குலவிய இன்பம் இந்தப் தல ஆண்பெண் கூட்டப் புதமணம் என்ப தாக
୍ களிப்பு விஞ்சி மிசை மிசை ஆடிப் பாடி ஆதரம் பெருக அன்பின் விருந்தினிற் கலக்கின்றார்கள்
Գ9 சூட்டிய தொடையல் மாலைத் தளையிலும் சுடர்ப்பூஞ் செங்கை பூட்டிய அணைப்பிலுந் தான் புறமகிழ்ந் துள்ளான் போலக் காட்டினும் உள்ள மெல்லாம் கருதிய குறிக்கோள் தன்னில் நாட்டியே இருப்ப தாலே நங்கைக் கிவ்வாறு சொல்வான்
OO எடுத்ததோர் கருமம் உள்ளோம் இடைநின தேவலாளர் தடுத்தனர் அதனாற் காலந் தாழ்ந்ததே அன்ன மின்னே விடுத்தவர்ப் பிழைத்தோம் நாங்கள் விரைந்திடப் புரவியீந்து கொடுத்திடு விடையும் என்றான் கோதைவாண் முகத்தை நோக்கி
I OI
108

எந்தையும் யாமுங் கொண்ட இலட்சியம் நம்மதாய விந்தையும் பெரிது காண்பீர் விளங்கிழை தம்மின் மேலோர் சிந்தையிற் கொண்டார் தம்மைப் பிரிவரோ தெரியினம்மா எந்த வெந் நரகுக் கேனும் இவளையும் நடத்திச் செல்வீர்
I O2 காவலின் மிகுதி சொன்னான் கானக விலங்கின் கூட்டம் போவது விரித்தச் சொன்னான் புகும்வழிக் கொடுமை சொன்னான் சாவினை அழைத்தல் போலும் என்பதுஞ் சொன்னான் தையல் தாவிய பரியின் மீது தானவன் முன்னர் நின்றாள்
IO3 எழுந்தனர் குதிரை வீரர் இருவரின் பின்னும் சென்றார் வளைந்தனர் சுற்றி மற்ற வனிதையின் வீரரெல்லாம் இளந்தளிர் தளிர்த்த கானும் இடையிடை யிழுக்கற் சேறும் வளந்தரு கனியின் காவும் வழிவழிக் கடந்து சென்றார்
IO4.
அண்ணனை அடைந்த படலம்
சென்றவர் கானகத்தின் செழுநிழல் மிடைந்த ஓர்பால் நின்றனர் விடுத்த ஒற்றர் நெடிதபோய்க் கடுகி வந்த குண்றெனத் திரண்ட தோளார் கொண்டதோர் சபத முள்ளார் கன்றிய மனத்தார் அன்னார் நடுவினிற் கண்டோம் என்றார்
I மடந்தையர் மனத்தை வாங்கும் தோள்களும், மதனன் நீங்கான் கிடந்தனன் ஒளித்த மார்பும் கிளரொளி முகமுஞ் சிங்கம் நடந்தென நடையும் கொண்டான் ஒருவனை நடுவிற் கண்டோம் அடைந்தவர் உள்ள மெல்லாம் அடைவுகொள் கின்றான் போலும்
2 பூண்டதோர் சபத முள்ளான் பூட்டிய வில்லான் சுற்றி ஈண்டிய வீரர் பல்லோர் ஏவலுக் கேங்க நிற்பான் ஆண்டகை யாரும் மெச்சும் அழகினிற் பொலிய நிற்பான் ஆண்டிடும் சிங்களர்க்கு நண்பனாய் அமையான் போலும்
என்றிவர் நினைக்க முன்னே இவர்களின் வருகை யோர்ந்த குன்றெனும் தோளான் வீரக் குமரரை நோக்கிச் சொல்வான் நின்றனர் குதிரை வீரர் நெடுவெளி யதனில் பார்க்கச்
சென்றவர் திரும்பு முன்னர்த் திசைகளைக் காவல் செய்வீர்
109

Page 72
எடுமெனக் கூறுமுன்னர் இழுத்தனர் வாளை வந்து
திடுமெனக் குதித்தார் சேர்ந்து திசை தொறும் பிரிந்து சென்றார்
இடமவர்க் குரியவற்றில் இமைகொளா திருந்த போது அடவியிற் சென்ற ஒற்றன் அண்மியிஷ் வாறு சொல்வான்
சிங்களர் படைய மன்று தெரிந்தநம் குழுவு மன்று பொங்கிய வேகத் தாரெம் புறம்வளைந் தடுவார் போலும்
மங்கையும் ஒருத்தி முன்னே வருபடைத் தலைமை பூண்டாள்
அங்கையில் வாளும் கொண்டாள் அருந்தமிழ்ச் செல்வி போலும்
எமக்குறு சின்னங் காட்டி இசைத்தநம் சங்குக் கேற்ற அமைக்குரல் கொடுத்தாரன்று ஆதலால் அறியார் ஆனால் சுமக்குறு பரியும் தாங்கும் கொடிகளும் சிங்க ளர்க்கும் நமக்குமில் லாத தொன்று நாயக அறியும் என்றார்
வளைந்தவர் குதிரை யெல்லாம் வனத்திடை போக முன்னே நழைந்திடை பொருதற் கேற்ற நுண்முறை அணிவகுப்பீர் விளைந்தன கனியும் நெல்லும் விதவித உணவுந் தாங்கி களந்தனில் வாரா வண்ணம் வழித்தடை கடித செய்வீர்
நாயகன் கூறா முன்னம் நான்முனம் நான்முன் என்று போயினர் களத்தை நோக்கி புண்படா நாள்க ளெல்லாம் ஆயின அவமாய் என்று தடிப்பவர் அணிதி ரண்டும் ஆயுதம் தன்னில் அன்னார் நெஞ்சமே கூர்ந்த தம்மா
வருபடை கண்டார் இப்பால் பரித்திரள் வளைந்து வாங்கி இருபிரிவாக்கி வந்தோர் இடைப்பட வகுத்துக் கொண்டு தெரிவையோர் தலைமை பூணச் செல்வனோர் தலைமை பூண ஒருவருக் கொருவர் தோலா உள்ளத்தார் நடத்திச் சென்றார்
Balig
வாள்கள் சுழன்றன தோள்கள் விழுந்தன
பரிகள் குதித்தன நெரிய மிதித்தனர்
11 O
6
IO
II.

சிரம் பறந்தது கரந் தெறித்தத நரம்ப வந்தது மரம புரணடனவால
12
ஒருமணிப்பொழு திருபடைகளும் பொருதிடும் பொழு தரு கதிர்ந்ததவால்
- I3
Bugg
கட்டினர் இருபத் தைந்து கவனவாம் பரியினாரை வெட்டினர் எதிர்த்தோர் தம்மை விலங்குடன் கொண்டு சேர்த்தார் விட்டனர் தலைமையான வேந்தன் முன் வினவு கின்றான் கட்டிளங் காளையிரே யாருமக் கதிபர் என்றான்
I 4 பங்கயச் செல்வி நீங்காப் பரந்தெழு வீரத் தோளான் மங்கையர் மனத்தை வாங்கும் மார்பினான் மலர்வேள் தஞ்சும் செங்கணான் துறந்த வேந்தன் சிறுவரில் ஒருவனாகும் சிங்கமே அரசர்க் கெல்லாம் சிறுவனே எனினும் ஐயா
I5 ஆண்டவெம் அரசை மீட்கும் அதுவலாற் குறிக்கோ எரில்லான் பூண்டதே விரத மல்லாற் புரிவன அறியான் அண்ணன் ஆண்டகை யானைத் தேடி அலைகிறான் அதனால் இங்கே ஈண்டினோம் இதுவே யெங்கள் காரியம் என்றான் மன்னோ
I6 கேட்டதும் கிளர்ச்சி பொங்கி முகமெல்லாம் பொலிய இன்னே ஒட்டமுற் றண்ணன் சேனைக் கிடர்விளை யாதென் றோதும் காட்டுமின் நட்புக்கேற்ற கொடியினை காலந் தாழிர் ஈட்டியும் வாளும் யாவும் இடுகவே உறையுள் என்றான்
I7 ஊதிய சங்கம் நண்புக் குரியதாம் என்று கேட்டு மோதிய படைகள் நின்று முகம் முகம் மலர்ந்து நோக்க மாதுடன் வந்த வீரன் மன்னனை நேரிற் கண்டு தாதனே யானென் றெல்லாம் சொல்லினான் தம்பி சொன்ன
8
111

Page 73
அண்ணனுந் தம்பி தன்னை அன்புறத் தழுவிக் கொண்டான் எண்ணிய முடித்தற் கேற்ற இளைஞரும் ஒருங்குசேர்ந்தார் வெண்ணகை மடந்தை நல்லாள் வியப்புடன் விருந்து செய்ய உண்ணெகிழ்ந் தழைத்த தாலே உடனவர் அங்கு சென்றார்
மக்களின் நிலைப்படலம்
காளையர்கள் மறைந்ததுவும் கலாம் விளைத்த வாறும் நாளைவரு வாரெனவே நம்பிவரும் மக்கள் வேளைவரு மென்றிருந்த வேதமுதல் வேண்டி தோளிணைகள் வன்மையுறச் செய்வனவும் சொல்வாம்
ஒடுங்கியடிபணிந்திருந்தால் உயர் வேறும் அல்லால் நடுங்குதயர் படவேண்டும் நமக்கேணி தென்றும் கொடுங்கோலை விழுத்துதற்கே கொடுக்கலாமெம் முயிரை அடங்கோமிவ் வடிமைக்கே என்பாரும் ஆனார்
பட்டங்கள் உயிர்ந்துவரும் பதவிவரும் பணமும் கிட்டிவரும் கிளர்ச்சியிலா திருப்போமென் பாரும் ஒட்டியிருந்துளவு சொலி உய்யலாமென் பாரும் வெட்டிடினும் விடுதலைக்காய்ப் போர்நாடு வோரும்
முந்தியடி பணியுங்கள் முத்தாரம் போட்டு சந்திதொறும் சிங்களர்க்குச் சாயுங்கள் தலையை செந்தமிழிற் சிங்களமே மேலென்று சொன்னால் நொந்திருக்க வேண்டாமே என்றொருவர் நாற்றில்
கஞ்சிக்கோர் உழைப்பில்லை காசில்லை உற்றார் தஞ்சமினியில்லையாம் தனியென்ன செய்வோம் பஞ்சமுமோ பெரிதாகும் படமுடியா தென்று மஞ்சளுடை தரித்துமயிர் மண்டையுடன் மழித்தார்
தொகைசிறியோம் பகைபெரியோம் போராடில் தோற்போம் வகையில்லை விடுதலைக்கு வந்தவரும் மறைந்தார் நகைசெய்து பகைவருடன் நண்பாடிக் கொண்டால் இகவாழ்வு போக்கலாம் என்பாரும் உண்டே
112
I9

பூமாலை மணியாரம் பொன்னிழைத்த புத்தர் பாமாலை பண்ணிழைத்த பாட்டுக்கள் என்று தாமாகக் கொண்டுசென்று தலைசாய்த்த வணங்கி ஆமாமென் றாட்டுவோர் அடிபணிந்து நின்றார்
தோளிரண்டும் தடிதடிப்பார் தரதிபாடச் சென்று
தாளிணைக்குத் தலைசைாய்க்கும் தன்னலத்தப் புலவோர்
ஏழைமைக்கு வெடிக்காத தந்நெஞ்சை எண்ணி வாளிரண்டு கைக்கின்றி வாய்கடிக்கும் மைந்தர்
மானத்தை விற்றுவர மன்னவைக்குச் செல்லும் ஈனத்து மங்கையரின் இழிவுமனத்தடக்கி
மானொத்த மடந்தை யரிற் கற்புள்ளார் அஞ்சி தேனொத்த மொழிபேசிச் சிரிப்புவர வழைத்தார்
என்றுதளை அகலுமினி எப்பொழுது வருவார் கொன்றைமுடி எம்மானே என்றுள்ளே தொழுதே அன்றுதமை ஆட்சிசெய்வோர் அருமைதனை வாயால் சென்றுரைப்பார் மடந்தையரில் வேடமிடும் சில்லோர்
வடித்தகணை வாள்முதலாம் கருவிகளை ஒளித்தே அடித்தலத்த நிலம்புதைத்தார் அவைகெடுமோ என்றே அடிக்கடியே நிலம்புரட்டிப் பார்க்கின்றார் அல்லில் பிடிக்கவயல் வருவோரின் குறிபார்த்துப் பின்னே
இரவுபகல் இடைவிடாது படைவீரர் காவல்/ வரவுமதி கரித்ததனால் வாய்விட்டுப் பேசி இருவருறை பதிதேட இயலாது தனியே மருவுமனத் தள்வேவார் மைந்தர்களிற் பல்லோர்
எட்டுமதி சென்றுமவர் இருக்குமிடம் அறியார் கட்டுடையில் வேளாளர் கரந்தனர்கள் கூடி கட்டுமரம் கரந்துகட்டி நள்ளிரவில் ஏற்றி
மட்டுநகள் அனுப்பினரே மானிப்பாய் மகனை
பன்றிபல பண்ணைகளிற் படுத்தமழி வென்ன வென்றுவரு வீருமத வேட்டையிலென் றரசர் நின்றபணி தலைகொடுப்ப நேர்ந்தார்போற் சென்றார் அன்றுதமைப் பிரிந்தவரின் அடிச்சுவடு தேடி
113
I. Ο
2
I3
I4

Page 74
பனங்காவற் குடிலிருக்கும் பாவையர்கள் கொக்கான் மனங்காத்துக் கண்மூடி எறிவார்கல் மண்ணில் முனங்காண வீழ்ந்ததிசை முடிக்குரியார் இருக்கும் இனங்காவற் றிசையென்றே இளங்குமரர்க் குரைத்தார்
கந்தபுராணக் கதையிற் கயிறிடுவார் மருதில் வந்தவனைப் பூக்கொண்டு வழிபடுவார் ஆடும் சந்தமுறு காவடிக்கு நேர்வார்கள் முருகன் வந்தபகை முடிப்பனென வருந்தாதோர் பல்லோர்
மானிப்பாய் மாப்பாணர் வத்தராயன் செல்லர் தேனிப்பால் வழிந்தோடும் செல்வநகள் மாவை ஞானப்பால் உண்டசிவ நமசிவாயப் பெரியோன் ஆனைக்கோட்டைப் பொன்னர் அனைவோரும் சேர்ந்தார்
மாதகலிற் கடலோரம் மணற்றிடரில் இருந்தார் யாதுவழி யாதுசெய்கோம் இருவரையும் தேட மோதுகடல் வழியின்றி முடிந்தவழி யில்லை பாதைதரை மார்க்கமெலாம் பகலிரவு காவல்
முள்ளியிலோர் ஆயமுண்டாம் முழுத்துக்கோர் காவல் நள்ளிரவும் உறங்காது நளிகடலே மார்க்கம் வெள்ளிகிழக் குதயமிட மீன்பிடிப்பார் போல வள்ளமதில் முல்லைத்தீ வேகவிவண் வருவோம்
புத்தாரார் போகட்டும் மேற்குக்கு, போவோர் நத்தாரும் மன்னாரில் நாநாட்டான் முதல்வன் கத்தாரிக் கந்தைய வைத்தியனைக் கண்டு இத்தாரம் வந்த கதை எடுத்தியம்ப வேண்டும்
என்றிவர்கள் கூறியவா றெழுந்துவெள்ளி முளைக்க சென்றனர்கள் இருதிசையும் திருக்குமரர்த் தேடி வென்றிதர வீரமுண்டு விறல்வலிவு முள்ளோம் என்றிடினும் தலைவனிலார் ஏதுசெய்ய முடியும்
தென்றலுறும் போதெல்லாம் தேமாவின் பூவில் மன்றலிளங் குயில்கூவ மறைந் தவரைக் கண்டு சென்றணையும் தாதென்பார் கஞ்சுகமாம் செல்வி இன்றுவரும் நாளைவரும் என்றிருப்பாள் பேதை
114
IS
I6
ך1
8
I9
2O
2I
22

Billig
வன்னிக் காட்டிலும் மருத மேட்டிலும் பொன்னின் பூந்துணர் போர்த்த குன்றிலும் சின்னஞ் சிற்றிலில் தெருவி டத்திலும் மன்னர் மைந்தரை மறைந்து தேடுவார்
காவி போர்த்தவர் கண்களைமிக மேவி நோக்குவர் மேனி நோக்குவர் ஒவியத்திலும் எழுதொணாவெழில் யாவ ருக்குளர் அவரை எட்டினார்
மங்கை மார்களில் மயிர்முகத்தியர் தங்கள் வாண்முகம் சற்று நோக்குவர் பொங்கு தோளினர் பொன்னின் மார்பினர் சிங்க ஏற்றினர் சிலரை நாடினர்
புலியை வென்றதொர் புருடனின் கதை சில மடந்தையர் செவியில் வீழ்தலும் நிலமடந்தையின் கேள்வன் நின்றவன் குலமகன் மகன் என்று கூறுவர்
இந்து லாவிய இளைய புன்னகை கந்தை மூடினும் கரக்க ஒண்னுமோ இந்த மானிடர் இடையிருந்திடில் விந்தை அன்னவர் வெளிவராததே
மாய மாகவே வந்த மன்னரைத் தேய மெங்கணும் தேடிச் சிங்களர் ஒயவும் தரும்உளவிலாததும் மேய வன்னியவன் தயரை மிக்குமே
காவ லாளரைக் கடிகுவாணயல் மேவு வாரையும் வெடித்தரைக்குவன் ஏவ லாளரும் எட்டி நின்றனர் கோப மாகுவன் என்று கூறியே
115
23
24
25
26
27
28
29

Page 75
கடலில் வீழ்ந்தனர் கண்டோம் என்றனர் உடலை மீண்பல உண்ட தென்றனர் விடலைக் காளையர் வீரம் சொப்பனம் குடலை வாங்கிடும் கோவினுக் கென்பார்
சீறு வெம்புலி தின்ற தென்பரும் ஆறு கொண்டது மீளார் அன்னவர் ஆறு கென்றவற் கமைதி சொல்வரும் வேறு வேறவன் விரும்பச் சொல்லுவார்
மக்கள் எம்வசம் மனது வைக்கையில் ஒக்க வெம்பகை ஒல்லுமோஅவர் மிக்க ஆண்மையின் விறலை எண்ணிநீர் தக்க மெய்துதல் வீணிச் சோர்வுமேன்
என்று கூறிய அமைச்சர் இன்முகம் ஒன்று நோக்கியே உடன்பகருவான் வென்று போனவர் மீண்டும் சார்குவர் கொன்றிடாப்பகை கூற்ற மாகுமே
நீறு மூடிய நெருப்பும் நம்முடல் வீற டங்கிய நோயும் வெம்புலித் தாற டங்கிய குட்டியும் செய்வினை வேறு விட்ட குறையும் வளருமே
குடிகள் நம்பலம் ஆயிற் கோமகர் அடியெடுத்திவண் அன்று சேர்வரோ கொடியெ டுத்தநம் வீரக் கொற்றமும் பொடியெடுத்தமண்ணுடன் புரண்டதே
மறைந்த வெம்பகை மாய்ந்த தாய்மகிழ் நிறைந்த வாழ்வத நேரும் உண்மையைத் தறந்த கற்பனைச் சொர்க்கம் வாழ்ந்திடும் நிறைந்த மூடரின் வாழ்க்கை நேருமே
116
30
3.
32
33
34
35
36

ஆயிரம் பொன் அளிக்குவம் அன்னவர் போயிருக்கும் இடம்புகல் வோருக்கும் சேயவர்கள் சிரங்களிரண் டுயிர் போய வேனும் புலால்கொணர் வோருக்கும்
என்று சாற்றுக இன்பறை என்றவன் நன்று சொல்லலும் நாட்டினில் வள்ளுவர் நின்று சந்திமுழக்குவர் கேண்மினோ கொன்றுவந்த கொடுக்கினும் ஆயிரம்
கேட்ட மக்கள் கிளர்ந்த கொதித்தனர். கூட்ட மாகவும் நின்றிலர் தம்மணம் மூட்டு கின்றகனல்சுட மூட்டுவார் வீட்டில் வந்து வெடித்து வெகுளுவார்
Gogg
மையெழுதாள் கண்ணினுக்கு மலர்கடாள் கூந்தல் கையெழுதுங் கோலமிடாள் கண்ணாடி பாராள் வெய்துயிர்ப்போ டமளிமிசை விழுந்திரங்கு வாளை நெய்யரிக் கண் மடநல்லார் நெஞ்சாற்று கின்றார்
சிங்கத்தின் குட்டிகள்தாம் நரிவலைசிக் கிடுமோ பொங்குமழ களிற்றினையும் புறப்பிணிக்க முடிமோ செங்கனிவாய்க் குறுநகைக்கே சிக்குண்ட தோள்கள் பொங்குசுடர்ப் படைக் கலத்தாற் பொருந்துமோ பிணிக்க
மனத்தகத்தால் செந்நாவால் மக்களகப்படுத்த முனைத்த கருங் கண்வேலால் முகிழ்த்தநகை நிலவால் நினைத்தவிடம் அகப்படுத்தும் நின்னொருத்தி யன்றி மனித்தருமோ, குமரரினை மடக்கிவர முடிமோ
ஆசைமுகம் கண்டிடலாம் அகப்படுத்திக் கொணர்ந்தால் பேசிடலாம் ஒருவார்த்தை என்றிருப்பாள் ஆனால் நாசமுறம் அந்நியரால் எனவெண்ணும் நங்கை ஆசையெனும் அலைக்கரத்தால் அங்கிங்கு புரளும்
117
37
38
39
40
4.
42
43

Page 76
பூங்கொடி தூதுப்படலம்
இன்னணம் இருந்தகாலை இளையவன் இருந்த காட்டில் பன்னெடுங் காததாரம் பசியொடு நடந்து சோர்ந்து பொன்னினர் சொரியும் கொன்றைப் புதுமலர்த் தவிசின் சாரல் மன்னவன் பாண்டிநாட்டு மறையவன் சார்ந்தயர்ந்தான்
மறையவன் தன்னைக் கண்ட மறைந்துறை வீர் ரோடி சிறைபிடித் தன்னான் தன்னைச் சேர்த்தனர் தலைவன்முன்னே நிறைமுக மதியன் நெஞ்சு களிப்பினாற்றுளும்பு கின்றான் உறைபதி உமது தேடி உலர்ந்தனன் இறைவ என்றான்
வேதியன் முகத்தைக் கண்டு விளம்பிய மொழிகள் கேட்டு மோதிய விருப்பினாலே முன்னுற வணங்கித் தாழ்ந்து ஏதிவண் வந்ததையா எறிகடற் பரப்புத் தாண்டி தாதையும் மகளும் அங்கே சுகத்தடன் தங்கினாரோ
என்றுநற் றலைவன் கேட்ப எறிதிரை தாண்டிவந்தேன் குன்றுயர் தோளாய் உன்றன் கோண்மனை தேடலானேன் மன்றுகள் யாவும் நீவி மறைவிடத் துள்ளி ரென்றும் கொன்றுநம் தலைகள் தந்தாற் கொடுப்பதம் கோடி யென்றார்
கேட்டது முதலாக் கண்கள் உறங்கிலேன் கிளர்ந்தேன் தேடி நீட்டிய நடையேன் குன்றும் நெருங்கிய ஊரும் காடும் பூட்டிய கதவும் காற்றுப் புகுந்திடாக் குகையும் தேடி வாட்டினேன் உடலை யல்லால் வாழ்பதி கண்டிலேனே
கண்டிலேன் என்று கூறிற் கனிமொழிக் கொடியாள்தானே கொண்டுயிர் விடுவள் என்னும் கொடும்பயம் தரப்ப இந்த மண்டிய புதரும் கானும் மன்னவர் வணங்கும் பாதம் கொண்டுசெங் குருதிசோரத் தனியனாய் அலைவேன் கோவே
தேடிய பூண்டு காலில் திடுக்குறத் தடக்கு மாபோல் வாடிய பயிரும் வானின் மழைவிழத் தளிர்த்தாற் போலும் நாடிய தெய்வம் வந்த நயந்தத கேட்டாற் போலும் காடுகள் நடந்த யானுன் கமலத்தைக் கண்ட தையா
18

மற்றது விரிப்ப தேனோ மங்கைபூங் கொடியாள் விட்ட உற்றநற் தாதனையா உவந்துமக் கெழுதம் ஒலை
மற்றவர்க் காணாவாறு மறைத்திவண் கொணர்ந்தேன் கன்னி உற்றது சொல்வன் அன்னாள் உளத்தினை இதிலே காண்பீர்
நீண்டபெரும் மூச்செறிந்து நீலவான் நோக்குவாள் பின் பூண்டவியர் நுதல்பணிப்பள் பூவிதழின் கண்ணிறைப் பாள்
கூண்டுறை கிளிபோல் வாடும் கொடியனாள் உன்றன் தோளின் ஆண்டகை செய்த பொல்லா அடிமையாற் சாம்பு கின்றாள்
எண்ணிய ஒருவர் அல்லால் எவரையும் மனத்துக் கொள்ளேன்
கண்ணிறை அவரே வந்து கரங்கொடுக் கில்லா ராகில் மண்ணினில் மாய்வேன் அன்றி வாழ்கிலேன் என்பதாலே பெண்ணினிற் றெய்வ மானாள் பெற்றவர் வருத்த முற்றார்
பொற்குவை தந்தம் என்னைப் பொருகடல் விடுத்தும் வேண்டும்
பற்பல பணிசெய் வோரைப் பாங்குடன் அளித்தம் தாதை நிற்பதி தேடவைத்தார் நெஞ்சினைக் கொடுத்தார் பால்நீ கற்சிலை உள்ளம் செய்தால் கன்னியர் வாழுவாரோ
பூத்தவிளம் முல்லை வெண்பூ பூமியில் வீழா முன்னம் காத்திளம் பருவம் பார்த்துக் கருங்குழல் கடி னன்றி மீத்தரை வீழ்ந்தால் அஃது கொள்வரோ அழகுக் கன்னி மூத்திடின் காதல் வாழ்வு முழுநில வெறிக்கு மாமோ
ஆவியிற் கலந்து கொண்டு அடிமைசெய் தவிரே பேதை பாவியேன் எழுதும் ஒலை பார்த்திப கண்டு கொள்க காவியங் களிலே கண்டேன் கவிகளிற் கேட்டே னின்றோ மேவிய வாழ்விற் காண்பேன் மெல்லிய லார்கள் தண்பம்
பூம்படு தென்றலோடு புதமதி நிலவிற் பூத்த தேம்படு முல்லை வாசம் திறந்தசா ளரத்து வந்தால் மேம்படச் சுகிக்கின்றார்கள் மேனியில் தொட்ட போது பாம்பெனப் பதைத்து நிற்பேன் பார்த்திப உம்மா லன்றோ
தோழியர் கூட்டம் நிற்பேன், சுந்தரி மார்க ளோடு நாழிகை பலவும் போகும், நானவர் நடுவில் நின்றும் பாழுமென் உள்ளத்தோடு தனிமையே படுகின்றேன்யான் வாழவும் வழியுண்டானால் அதவும்நூம் சித்த மாமே
119
I. Ο
II.
2
I3
I4
IS

Page 77
உடைந்துயிர் இறுவ தேனும் உட்படு காதல் நெஞ்சம் மடைந்தையர் குலத்தி லுள்ளார் மற்றவர்க் குரையாரன்றே உடைந்துகு கண்ணி முத்தம் ஊதுநெட்டுயிர்ப்பும் உம்மால் அடைந்தஎன் நிலைமை சொன்னால் அதுஇனி ஒளிக்க லாமோ
காத்திருப் பேண்யான் அந்தக் கல்லினிற் காலமெல்லாம் பார்த்திருப் பேன்நீர் என்றோ, பாசத்தால் வருவீ ரென்றே ஆர்த்திருப் பேனெண் உள்ளம் ஆண்டுகள் ஓடினாலும் சேர்த்திடும் விதிதா னென்ற சிந்தையின் ஆசை யாலே
என்ற வாச கங்கள் தம்மை இருவிழி மலர நோக்கி
சென்றநாள் கழிந்த வீணே செய்வினை இலக்குற் றார்க்கு மன்றலங் காதலேத மடந்தையர் கூட்ட மேத w வென்றவர்க் குறுகி னல்லால் மெலிபவர் சுகிப்ப தென்றோ
அடைவதே இலக்கை யல்லால் ஆண்மையின் பாற்பட்டார்கள் உடைவதே உயிரென்றாலும், உற்றது விலகார் இன்பம் தடையென நினைப்ப தல்லால் தழுவிட நினையார் நெஞ்சந் திடமுடைக் கல்லா நிற்பர், தேவியார் விதியி லாரே
சுந்தரச் சுகந்தம் முல்லைத் தாமலர் விரிப்பதேனும் அந்தநாள் முடிவில் மண்ணில் உதிர்ந்திடில் அதனால் யாதோ இந்தவின் நிலவே காலும் எழிலிள நகையா ளேனும் முந்திட மூத்தாளாகின் மோகனம் யாது செய்யும்
எமைநினைந் தருகு வாரை யாநினைந் தருகோ மாயின் அமையுமோ மனித உள்ளம், ஆதலால் அந்த ணற்கு சுமையிது நீக்கி யெங்கள் சுதந்தரம் விரைவில் நாட்டி அமைவுற வருவதாக அவட்குரை செய்யச் சொன்னான்
மதியினைச் சாட்சி யாக மலர்விரல் கழற்றித் தந்த இதுவுயிர், கணையாழிக்கே என்மனப் பூசை எல்லாம் புதுவித அணிகள் ஆக்கிக் காதலைப் புகழேன் ஆனால் அதுவவள் கையிற் சேர்த்தால் அத்தனை அன்பும் சொல்லும்
என்று மோதிரங் கொடுத்தவ் இனிய அந் தணனை நோக்கி வென்றுபோர் வருவேன் அன்று வீர்ஆ ராத்தி சுற்ற நின்றநின் அழகுகாண விரைகுவேன், நிகழ்வ தெல்லாம் ஒன்றுமே விடாது ரைத்தால் ஒண்டொடி அமைவள் என்றான்
120
I6
I7
8
I9
2O
2.
22
23

கஞ்சுகத்திந்கு daorubaust uusb
மன்றலிளந் தென்றலுறும் போது
மாமரத்திற் பூங்குயில்கள் கோதி
ஒன்றவரும் அன்றிலினைக் கூவி ஒய்யார வேனிலுறும் போது
வைகாசி மாதத்தில் அத்தம்
வந்தமுழு மதிநிலவில் ஓர்நாள்
மெய்காவ லாளருடன் வன்னி
வேந்தநிலா முற்றத்த வந்தான்
அவனினைவே தம்நினைவாய்ப் புத்தி
அருகிருந்து முகமகிழச் சொல்லிப்
பவனிவரும் அமைச்சர்பின் சூழ
பளிங்குநிலா முற்றத்தில் இருந்தான்
விண்ணான வெளியினிலே பூத்த
வெள்ளிநிலா தாரகைகள் யாவும்
புண்ணான இதயத்தைப் புறத்தே
புனைந்திருக்கும் கொப்புளங்கள் ஆன
போய்மறைந்த இளையவரைக் காணான்
புத்திரியின் பிடிவாதம் வேறு
வாய்மறைந்த பேசுகின்ற நண்பர் வதனத்தின் புன்சிரிப்பு வேறு
இத்தனையும் வருத்துவதைத் தாங்கான் இதற்குவழி யாதென்று பக்கல்
ஒத்துவரும் அமைச்சரைப்பின் பார்த்தான் ஒருகுரலிற் புத்திமதி சொல்வார்
கஞ்சுகத்தை விசயற்குத் தாங்கள்
கலியாணம் செய்துவிடில் உங்கள்
நெஞ்சுவரும் கவலைவிடும் நிருப
நேராரும் தாள்பணிவர் என்றார்
121

Page 78
சிங்களவர் செந்தமிழர் என்ற
சிறுபிரிவும் நீங்கிவிடும் நண்பு
பொங்கி வரும் உங்களர சாட்சி
பூதலத்தில் அழியாது பிரபு
வென்றரசை நாமெடுக்க வன்னி
வேறொருவன் ஆளுவதும் ஏனோ
என்று சில சிங்களவர் எண்ண
இப்பொழுது தலைப்பட்டார் அரசே
மண்ணாசை யாரைத்தான் நீங்கும்
மனத்தினிலே விசயற்கு நின்ற்ன்
பெண்ணாசை அதனுடனே சேர்ந்தால்
பித்தாக்கும் அவனையிது பிசகோ
கஞ்சுகமே திருத்தேவி ஆனால்
கவலைவிடும் அரசெவர் பெற்றாலென்
நெஞ்சுநிறை மருமகனாய் விசயன்
நேர்ந்தவிடிற் போர்புரிய நாமேன்
என்றுபல இதம்பேசும் அமைச்சர்
இருமருங்கும் ஒருகுரலிற் சொல்ல
நின்ற தமிழ்க் கன்னியர்கள் வேற்று
நிருபர்களை மணம்புரிதலுண்டோ
கொள்ளார்கள் பூதலத்தோர் நண்பும்
கொடும்பகையாய் முடிந்துவிடும் மகளும்
எள்ளாளோ இதைக் கேட்டே என்ற
இறைவனுக்கு மென்மேலும் சொல்வார்
மன்னவரும் பூங்கொடியும் பெண்ணும்
மருங்கிருக்கும் எதுவேனும் பற்றும்
அன்னமனை யாரெனினும் ஏற்பார்
அழகில்லான் அருகிருந்தான் ஆயின்
ஆதலினால் கஞ்சுகத்தை விசயன்
அடுத்தமண ஒரையிலே உள்ளக்
காதலினால் மணம்புரிவான் என்றே
கடிதோலை போக்குதலே கருமம்
122
O
II
12
I3
I4
IS

சிங்களர்கள் ஆர்ப்பரிப்பார் இங்கு
சேனைகளும் வந்தடையும் மறைந்தோர்
தங்குமிடம் புலனாகும் இதுவே
தக்கதென்றார் மந்திரத்தத் தமரார்
மண்ணாளும் ஆசையினால் உரிய
மன்னவரைச் சதிசெய்தா னேனும்
பெண்ணாளைச் சிங்களர்க்குக் கொடுக்கப்
பின்னின்றான் மதியிழந்த போதும்
மயலாகும் மன்னவற்கும் ஏற்ற
மதிவந்தே உதித்திடினும் என்றும்
அயலாகும் மநதிரிமார் கரைத்தால்
அடுத்த கல்லும் கரையாதோ கனிந்தே
விசயனுக்குத் தன்கருத்தைச் சொல்ல
விதிமுறையே அமைச்சரைமுன் விட்டான்
இசையவினித் தருணமித வென்றே
இருந்தவவன் தலையாட்டி நின்றான்
கணிப்பாரும் ஒரைசொல்லத் தாது
கால்பறக்கும் குதிரைகளிற் செல்லப்
பணிப்பாரும் பறப்பாரும் களிக்கப்
பதைப்பார்கள் ஆயினரே மக்கள்
நெஞ்சழிந்தாள் கஞ்சுகத்தாள் நின்ற
நேரிழையார் தெருட்டுதலும் வறிதே மஞ்சமதில் நடனமயில் வீழ்ந்து
மயிர்க்கோலம் பரந்ததெனக் கிடந்தாள்
முத்திழைத்த விதானங்கள் தெருவின்
முகக்குறுக்கே அமைப்பதற்கு பொன்னோர்
பத்திரட்டும்ஆயிரங்கள் கேட்டார்
பந்தலுக்கோ பலகோடி என்பார்
நல்லூரில் நெசவாளர் பட்டில்
நனிநுணுகும் நால் தேடிச் செல்வச்
சில்லாலை சென்றனரால் சரிகைச்
செழும் பொன்னே தேடுகின்றார் பின்னும்
123
I6
I7
8
I9
2O
2
22
23

Page 79
பொற்கொல்லர் வீடெல்லாம் உலையின்
புகைக்காடாம் சாயமிடு வோர்கள்
இற்கொள்ளா வண்ணமடு புகையாம்
இதயத்தே மக்களுக்குப் புகையாம்
BGlugg
அன்னமெண் மயிர்க் கம்பளந் தேடினார்
அத்தர்தேடிக் காந்தாரத்துக் கோடினார்
சோடி வெண்பரி நல்லன நாடினார்
சுந்தரத்தியர் மல்லிகை சூடினார்
ஒத்துழைப்பவர் மானமில்லாதவர்
ஒமெனும்பத மன்றிச் சொல்லாதவர்
எத்திசைக்கும் திரும்பும் மனத்தினர்
ஏழைநெஞ்சினர் உள்ளம் இனித்தனர்
வானளாவும் விதான மமைத்திட
வண்ணக் கோலங்கள் கூடிச் சமைத்தனர்
மீனின் பூம்பொழி வாணமி மைத்திறன்
விண்பறக்கும் மவிட்டு மமைத்தனர்
கொட்டு மேளம் முழக்குவர் முன்றிலிற்
கோடி பொன்கொளப் பல்லிளிக்கின்றனர்
தொட்டவின் குழல் தேடினர் கண்டிலர்
தாயதோடியாலாபன முண்டவர்
சிலம்ப காரர்கள் மூலையிற் சாத்திய
சிறுகழைத்தடி தேடினர் கூத்தினர்
நலம்பு னைந்தனர் நாடகத் தாடுவார்
நல்லிசைப் புலவோர் ஒத்துப் பாடினர்
காசுக்காய்க் கவிபாடுநர் சொற்களில்
கடிமணத் தலைவன்புகழ் விற்கிறார்
வீசுகின்றனர் மங்கையர் நாட்டிய
வித்தையைவிலை பேசினர் கூட்டினர்
124
24
25
26
27
28
29
30

பந்தியிடு வோர்களொடு பந்தலிடு வோரும்
பற்பல வகைச்சுவை விருந்தயரு வோரும்
செந்திநறு முல்லைசிறு சண்பக மலர்கள்
சேர்த்தவரக் காவினிடை சென்றுவரு வோரும்
சோடியிது தக்கதன்று என்றுமணம் வேக
சொல்லமுடி யாது முகம் கோணலிடு வோரும்
மாடிகளின் மூலைகளிற் தாடைகளிற் கையும் மலர்விழியில் நீருமென மாதரழி வோரும்
கணவரொடு சீறுநரும் கறிகளிலே உப்பு
கைவந்த வாறிட்டுப் பிழைகளுறு வோரும்
உணவுகொள மனமின்றி அணைகளிலே நெஞ்சை ஊன்றிநெடு மூச்சயரு வோருமிள மாதர்
Elg
பெண்கள் என்செயலாமென மாதரிற்
பேசநாவுடையார் பலர் பேசுவார்
கண்கள் செய்தன பாவமென் பாரிந்தக்
கடிமணத்தினைக் காணநிகழ்ந்திடின்
வேதியர்கள் கலாம்விளைக் கின்றனர்
விதிகள் இல்லையெனத்தடு மாறுவார்
ஆதி அந்தணர் கூசிட அப்பொழு(து)
ஆசையுற்றவர் ஆகமங் காட்டினார்
ஆடுமாமயில் வீழ்ந்தது போலவே
அளகபாரம் விரித்தனர் மஞ்சமேல்
கூடுகின்ற கணவரைக் கோபிப்பார்
கொஞ்சமும் பிழைகண்டிலராயினும்
மாவுலாவிய பூங்குயில் கூவிட
மந்தமாருதம் வந்தயல் தொட்டிட
ஆவியானவர் தோள்களிற் சாய்ந்திட
ஆசை யுற்றவர் உள்ளங் குழம்பினர்
125
3I
32
33
34
35
36
37

Page 80
பாசறைப்படு வீரருமாடினார்
பனையின் நாட்படு கள்ளினை மாந்தியே வீசுகின்றனர் காசுகள் வீதியில்
வெறியினாற்செய்வ தேதமுணர்ந்திலர்
இன்னவாறு கடிமணச் செய்தியூர்
எங்கணும் பரந் தேக்கம் விளைத்திடப்
பொன்னி னன்னவள் பூங்கொடி கஞ்சுகம் பூவைமார்நடுவிற்புகல் கின்றனள்
உள்ளமென்ப தொருத்தருக் கோர்முறை
உயர்ந்த கற்புறு மாதர் கொடுப்பரால்
கொள்ளுமோமனம் வேறொரு ஆடவர்
கோடிகோடி நலன்கள் குவிப்பினும்
தந்தைக் கேயிவை சொல்பவ ரில்லையோ சாற்று மந்திரச் சுற்றமும் மாண்டதோ
சிந்தை மங்கையர்க் கில்லையென்றார்கொலோ
திகைத்த நிற்பதம் சேடியர்க் காகுமோ
உருகுகின்ற மனத்தை உணர்ந்திலீ
ஒழுகுகின்ற விழியிவை சொல்லவும்
அருகு நின்றெனை ஆற்றுகின் றீரன்றி
அடாத தென்றிவண் ஆர்க்குரை செய்துளிர்
முல்லை தாவிய மென்மலர்ப் பள்ளிகண்
முத்ததிர்த்தனள் ஊதலை மூச்சினள்
மெல்ல வேர்வை அரும்பிய நெற்றியள் வேறு வேறு குலைந்த குழலினள்
இன்னணம்படும் பேதையின் அந்நிலை
எடுத்துரைப்ப தெவரிடம் காவலால்
பொன்னின் மாநகரும்புற வீதியும்
போகும் யாவரும் சோதனைப் பட்டனர்
தம்பையாகிய சிங்கள மாநகர்
தாங்கு கோட்டைகளிப்பினில் மூழ்கிட அம்பரத்திற் கொடிகள் பறந்தன
அங்குமிங்கும் அலைபவர் கோடியே
126
38
39
40
4I.
42
43
44
45

6ഖത്തു
மஞ்சள் போர்த்தவர் மண்டை மழித்தவர் கொஞ்ச மாகச் சுருக்கும் குடையினர் விஞ்சு மோலை விசிறிக் கரத்தினர் தஞ்ச மானசொல் சாதவென் றேதுவார் 46
ஆயிரர்கள் அடைந்து திரண்டனர் வாயில் மந்திரம்ஒதினர் புத்தனின் கோயில் மண்டபம் கூடினர் ஒகையால் தேய மன்னர் சிறக்குக என்றனர்
47
வீதிதோறும் விழாவணி வித்தனர் சாத சாத எனுமொலி தாரணி மோதி நிற்ப முழங்கின பேரிகை காதற் காளையர் உள்ளம் ஒலிக்கவே 48 தாமரை மணம் மங்கையர் தாழ்குழல் தாபமிட்ட சுகந்தம் பன்னீர் மணம் தாமலர்ப்படு பாளையின் சோடனைத் தாமப் பந்தல்கள் தந்தன இன்மணம் 49
வட்டமான முரசினை வைத்திளங் கட்டு மங்கையர் சூழ்ந்த கரங்களாற் கொட்டு கின்றனர் மங்கலங் கொள்ளொலி எட்டு கின்ற திதயங்கள் யாவிலும்
50
ஆற்றுநீர் குடைந்தாடுவர் நாவிலும் சேற்றிற் செந்நெல் நடுபவர் நாவிலும் போற்று கின்றவர் நாவிலும் போய்வரும் காற்றிலுங் கதையிது கலந்ததே
SI ஆனை நாற்றொடும் ஐம்பத பொன் சுமந்(து) ஏனை வாம்பரி எண்ணில பின்செல கான கத்து வழியினிற் காப்பவர் போன முன்வழியே புகு கின்றன
52
127

Page 81
மருப்பிலாகிய மந்திரப் பேழையில் விருப்பிலான பரிசம் மிகவடைத்(த) உருப்பசித்தகு ஒண்டொடியார் செல திருப்பமுற்ற சிவிகை வரிசையே
குந்தம் வேலொடு கூடி யுராய்வன சிந்து கின்ற பொறியொடு செந்தழற் பந்தமும் வழி காட்டிடப் பாதையில் பந்தியிற் செலும் பற்பல கூட்டமே
ஓசை விட்டெழும் ஒண்பனைக் கள்ளினுக்(கு) ஆசை யுற்றவர் ஆயிரர் மங்கலம் பேச லுற்றனர் பின்செல லாயினர் நேச முற்ற வடக்கை நினைந்தரோ
கண்டியிற் கருங்காலி கடைந்துகண் கொண்ட முத்திற் பதித்தன கொம்புடை கண்டவர்கவர் யானைகள் கையுறை கொண்டு சென்றனர் கோதையர் கூட்டமே
தாலமாம் தலப்பத்து விசிறியும் ஆல வட்டமும் ஆரக்குடைகளும் மேலெழுந்த கொடிகளும் வேண்டிய நாலு கையுறை கொண்டு நடந்தனர்
பொதிகள் கொண்டன காளைகள் பூர்விக விதியினாற்பவ மாயதோர் வெஞ்சுமை கதிகள் தோறும் சுமப்பவர் காணவே பதியை விட்டுப் பரந்தன சாலையில்
Bijligg
காப்பாளர் முன்னடக்கக் கரிநடக்கச் செல்லும் கோப்பான கலியாண வரிசையிலே குழம்பி
கூப்பாடு போட்டலறக் குதிரை நிரை சிதற மூப்பாளர் கீழ்வீழ முன்னிரையோர் பிரிந்தார்
128
53
54
SS
56
57
58
59

என்னநிகழ்ந் ததவென்று பின்னிருந்தோர் இடையே முன்னிருந்த பலபேரை வினவுதலும் மொழியார் சின்னமடை கின்றபடை வீரரையும் வாள்கள் மின்னுதலும் கண்டார்பின் வெருண்டார்கள் ஓடி
கானகத்தக் கள்வர் முன் மறித்திட்டார் காத்துப் போனவரைக் கொன்றிட்டார் பொன்னிழுைத்த சிவிகை தானெடுத்தார் பரியினத்தைக் கவர்ந்தார்கள் இன்னும் மாணமதைக் கொள்ளைகொண்டார் வழியிதனில் என்றார்
ஆனைநிரை அத்தனையும் அருங்காட்டுட் செலுத்தி போனவரைப் புண்ணியத்தால் ஓடவிட்டு மாதர் மோனநிரைக் கூறுசெய்யார் உடனுதவி முதிர்ந்து தேனழிந்த செழும்பழமும் செஞ்சோறும் கொடுத்தார்
தந்தத்துச் சிவிகைதனிற் சந்திரன்போல் முகத்தச் சுந்தரியார் தமையேற்றிச் சுமப்போரைக் கூவி எந்தவித இடையூறும் அணுகாத காப்போம் இந்தவழியே செல்வோம் இருமருங்கும் வருவோம்
என்றவரைப் பலகாதம் வழிநடத்தி இடையில் சென்றுவரு கெனவிடுக்கும் சிறுகணத்தில் ஒருவன் நன்றியுடன் நங்கையரில் தலைவியருக் குரைத்தான் மன்றிருக்கும் மன்னருக்கு ஒலையிது காட்டும்
தாய்நாட்டின் மண்ணினொரு தனிப்பிடிக்கும் 24யிரைப் போய்நாட்டி அர்ப்பணிக்கத் திடங்கொண்டோம் போரில் வாய்காட்டிப் புறமோடும் வகையறியோம் உள்ளோம் நாய்காட்டும் இழிவடிமை மீட்பதற்கு நயந்தே
போற்றுகின்ற அந்தணர்க்கும் புனிதர்க்கும் நல்லோம் நேற்றுவரும் சதிகாரர் நிலமாள அவரை ஏற்றவர்தம் புகழ்பாடி இசைந்திருப்போர் தமக்கே கூற்றுவர்யாம் எனமொழிவீர் கோமகனார் முன்னே
மாற்றாரே யாயிடினும் மடவார்கள் ஆயின் போற்றுகிறோம் என்பதுவும் புகல்வதநூம் கடனே காற்றோடு சுழல்கின்ற கோழைகளின் மன்னர் தோற்றோடச் சமர்புரியத் துணிந்துள்ளோம் என்பீர்
129
60
61.
62
63
64
65
66
67

Page 82
மக்களுடை கண்ணிரும் மாதர்பெரு மூச்சும் திக்கற்றோர் சிந்துகின்ற உதிரமுமோர் கோடி தொக்கபரிப் படையாகித் துலங்குபடை வாளாய் பக்கமுறத் தோள்வலித்தோம் பார்த்தபடி சொல்வீர்
அன்னமெனும்பெண்மயிலை அவர்விருப்ப மறியா வன்னியரின் கூடிருந்து விடுவிக்க் வருவோம் கன்னியரின் கற்பறியான் களிக்கன்ற விஜயன் சென்னிதலை உருளுமந்தத் திருப்பந்தல் முன்னே
பாதிவழி கானகத்தப் பக்கபல மாகி வீதி வழி போமென்று விடுத்துவில கினரே மாதர்கண்ணிருகுத்தார் மணித்தோளின் வனப்பும் சோதிமலர் முகச்சுடரும் தோன்றினகண்ணிருள்
சென்றவர்கள் பூநகரி அடையாமுன் சேர்ந்தார் நின்றுபல திசையோடிப் போனவர்கள் நிமிர்ந்தே அன்றுவரை வழிகாத்து அடைந்தோர்கள் போன்றும் வென்றுபல பகையழித்த வீரர்களே போன்றும்
பரியெங்கே கரியெங்கே பரிசங்கள் எங்கே விரியும்வெண் குடையின்றிக் கொடியின்றிப் படையின் நிரையின்றி ஊர்வலமோ நிற்கின்றீர் மரம்போல் உரையின்றி, பெண்கொடுப்போர் மானத்தை உடைத்தீர்
படையிருந்தம்பரியிருந்தம்பதுங்கியகள் வருக்கே உடையவுமோர் விதியென்றால் உலகிலினி நிமிர்ந்த நடையுடைனே மன்னரென நாம் செல்ல லாமோ குடையுடனே சாய்த்தீரெம் கொற்றத்தை என்றார்
உயிர்ப்பணய மாடுவார்முன் உலகிலெவர் நிற்பார் மயிர்ப்புரைகள் ஒவ்வொன்றும் தாய்நாட்டு மண்ணின் உயிர்ப்பிருக்க ஓடுகின்ற வியர்வையிலும் தாய்மண் தயர்க்கதையே சொட்டுகிறார் தணிவுக்கே பிறந்தார்
மங்கையரை வாங்குகின்ற மார்பகத்தார் ஆயின் தங்கையரைப் போலவரை நோக்குகிறார் தம்முன் ப்ொங்கிவரும் பகைவரையும் புன்னகையால் வெல்வார் இங்கிவர்போற் குருளைகளை எங்குமறி யோமே
130
68
69
7Ο
1ך
2ך
73
74.
5ך

மாற்றானின் வீரத்தை மார்பகத்தைப் புகழ்ந்தீர் சோற்றாலே உடல்வளர்த்துத் தணிவினையே கழித்தீர் தோற்றோடி வந்திதனைச் சொல்வதன்முன் வீரக் கூற்றோடு செல்லாத கூட்டோடு நின்றீர்
என்றுகடிந் தரசனவர் இயலாமைக் கேசான் மன்றலுற வந்தோரை மதிப்பதுதன் கடனாய் குண்றென்னும் சோற்றருகிற் குருத்திலையைப் படைத்த நன்றென்று புடைக்குமட்டும் விருந்திட்டான் நயமாய்
வந்தபரி சனங்களை முன் வழிமறித்தல் கேட்டு சிந்துமணற் கண்ணினனாய் இதழ்கடித்துச் செருக்கி வெந்தவிச யச்சிங்கம் விரைந்தோடி அவரைக் கந்தகளிற் பிணித்தல்லால் கண்ணுறங்கேன் என்றான்
சிங்கமதன் மரபுதித்தோம் திசையெல்லாம் வென்றோம் அங்கமெலாம் வீரப்புண் அடையாளம் பெற்றோம் இங்கெமது கொடிபொறித்தோம் இடைவழியில் மான பங்கமுறச் செய்தவர்கள் பழித்திருக்க மணமோ
பரிநிரைகள் முன்செல்க, வாட்படைகள் பாய்ந்த விரையுங்கள் விடிவதன்முன் கானகத்தின் மறைந்தது திரிகின்ற சதிகாரர் சிரங்கொய்தே யல்லால் எரியின்முன் மணஞ்செய்ய இசையேன்யான் என்றான்.
என்றவனைக் கையமர்த்தி இளஞ்சிங்க ஏறே ' மன்றிலினை இனிதாக்கி மகிழ்ந்திடுமின் யாமே வென்றவரைப் பிணித்திங்கே கொணர்ந்திடுவோம் வீணே குன்றிலொரு எலிபிடித்தல் கோவேந்தர்க் கழகோ
இவ்வண்ணம ஆற்றினார்க் கிசையான்போல் இசைந்து செவ்வரிக்கண் மயிலினையே சிந்தனையில் இருத்தி ஒவ்வோர் சிற்றருங்கணமும் உலைபோல ஊதி வெவ்வேறாய் மனங்குலைந்து வேகின்றான் விசயன்
குலை சாயும் கதலிகளைக் கூலிக்காய் வீதி தலைசாய நடுவாரும் சந்திதொறும் பூவால் மலைபோல விகாரையென வடிவமைக்கின்றரும் இலையாலே விதானங்கள் இழைக்கின்ற
131
76
ךך
78
סך
8O
8.
82
83

Page 83
இரவெல்லாம் பகலாக்கி எறிக்குநிலா காட்ட மரமெல்லாம் நிலவுமழை நனைந்திருப்ப மாடச் சிரமெல்லாம் வெண்சுதையாற் றீற்றியபோல் மிளிர உருவிலான் காவலிட உயர்மாடி யருகே
சாளரத்தின் கண்வழியே தரளநில வெறிக்கும் நீளழகு நெடுவீதி நெட்டுயிர்த்தப் பார்த்து மீளவழி இல்லையென விழிவழியே புகுந்த காளையினை உன்னியுன்னிக் கண்ணுதிர்ப்பாள் முத்தே
பந்தல்களும் விதானித்த வளைவுகளும் பாங்கள்ச் சந்திகளின் கோபுரமும் தழைத்தகுலை வாழை சிந்துகின்ற தேன்மணமும் தென்றலொடு வந்த நிந்தனையும் நெருப்புமென நின்றவளைச் சுடுமே
வருவாரென் றெழுமாசை வற்றாது வாயில் தெருவெல்லாம் கடுங்காவல், சிறையெல்லாம் நல்லோர் அருகுள்ளார் அச்சத்தார் ஆர்வருவார் எனினும் உருவெல்லாம் அவனென்றே உத்தமியின் தோற்றம்
ஒன்றிணைந்த காதலுக்கே உலகுதலை வணங்கும் என்றபிடி வாதத்தாள் என்றேனும் ஒருநாள் வென்றுவரு மவ்வளவும் விழித்திருப்பேன் காலம் கொன்றுவரு மாயிடினும் குலைந்திருப்பேன் காத்த
சாளர மருங்கினிடை தண்ணிலவை நீக்கி ஆளரவம் கேட்டதுவும் அதிர்ந்துகொடி பார்த்தாள் காளையவ, னின்முகத்திற் காலுமொளி யாலே வேளைமுடி கின்றதென விண்டுரைத்தல் கண்டான்.
வாட்கடலும் ஆட்கடலும் வன்னியரும் சூழ்வார் தோட்டிய மிகுந்தவலி என்னவித சொல்லும் நாட்பகலின் வெண்ணிலவில் நங்கையர் புரத்தில் ஆட்படுதல் வாழுவரும் ஆடவருக் கழகோ
உள்ளுருவம் தோன்றுவதோ உண்மையோ வென்றே கள்ளவிழி புகுந்தவரும் காளையினை முன்னே கொள்ளவறி யாதுதிகைக் கின்றவளைக் குறித்து மெள்ளவிரு என்றுவிரல் வாய்வைத்து மிளிர்ந்தான்
༄འི་132
84
85
86
87
88
89
ԳO
9I.

விழியிரண்டில் மொழிகண்டான் வேறேதும் பேசான் எழிலுருவின் மலர்முகத்தில் இனியவிதழ் பிரிக்கும் மழலையிளங் குறுநகையில் மங்கைமயக் குற்றாள் அழகுருவம் இருவருமே அசைவின்றி நின்றார்
தோழியரும் சயனித்தார், தோகையரும் தயிலின் ஆழியிடை அழுந்தினார் அரசேநீர் வருகை குழமதிற் காவலரும் கண்டனரோ அறியேன் பாழுமணம் பயத்தினாற் பாதியுடை யேனே
என்றவளும் சொல்லாமுன் இளங்காளை நக்கான் குன்றுவரும் மதில்பலவும் கோட்டைகளும் பூட்டும் வென்றுவரும் அன்பென்றால் விளங்குபடை யஞ்சேன் கொன்றுவரும் நின்வாட்கண் அஞ்சினேன் கோதாய்
சொல்வதன்முன் தளியாகும் நீருகுப்பத் தோகாய் வெல்வது தான் இருமதியில் சிறைமீட்பேன் விரித்துச் சொல்வதற்கு வேளையிலை, தொடர்ந்துவரு கின்றார் மல்வளமும் வில்வளமும் காட்டுவோம் மணநாள்.
என்பதன்முன் பரிபுகளும் ஒலிதெருவிற் கேட்டார் பின்பறக்கும் பாய்குதிரைப் படையெழுப்பும் பெருந்தாள் அன்புருவை மறைப்பதனை அசையாது பார்த்தாள் எண்புருகும் பாவையினுக்(கு) இருவிழியும் நீரே
வெண்ணிலவில் விதானித்த வளைவுகளும் ஒளிர்ந்த வண்ணத்துப் பந்தர்களும் வரிசைபிரிந் தனவே சுண்ணத்து வெண்சுவரிற் சுவட்டிரத்தம் தோயும், கண்ணயர்ந்த மாதர்களும் கன்னியரும் ஒலம்
தீப்பந்தம் சிந்துதலாற் றெருவோரம் கிடந்த பூப்பந்தர் புகைப்பதனை அவிப்பாரும் பொய்யாய்க் காப்பவர்போல் அவிப்பாரும் கவினழிய வாழ்த்தி நாப்பந்தர் போடுபவர் நடுத்தெருவில் நிறைந்தார்.
மந்திரத்துச் சுற்றமதை மணிநாவால் அழைத்தான் தந்திரமிச் சதிசய்தார் கொல்லேற்றுக் குறித்த அந்தவிழாவின்பொழுது அமளியிபடப் பொருத சுந்தரர்கள் தாமென்றே சூழ்ந்தவர்கள் சொன்னார்.
133
92
93
94
95
Գ6
97
98
99

Page 84
மங்கைமண நாளிதனை வ்ரைந்தபடி தினத்தில் சிங்கமெனும் வீரர்கள் புடைசூழ்ந்து காக்கப் பங்கமொன்று மில்லாத நிறைவேற்றிப் பார்த்துச் சங்கொலித்து நில்லோமேல் சிரியதோ தரணி
சீறியவெம் குருளையெனும் திடமுடையார் வீரர் நாறிருக்கப் போதுமன்றி நுண்மதியால் எம்பால் சோறுபெற்று மனதவர்பால் தொண்டுசெயும் கோடி வீறுபெறு வீரர்களால் வினைவிளையும் என்றார்.
வைத்தபடி ஒரைதனில் மணநிகழும் மக்காள் ஒத்திருந்தே உழையுமென முரசெல்லாம் ஒலிக்கச் சித்திரத்தப் பாவையர்கள் தேம்புமணத் தவராய் முத்தரும்பும் கண்ணிரை முன்மறைத்து நகைத்தார்
குலைந்தவிழ்ந்த விதானங்கள் குப்பையாய்ச் சிதறி நிலந்தெரியா வீதிகளை நிறைத்திருக்கப் பணியோர் கலந்திருந்தார் கதைக்கடலில் காவலர்கள் வருங்கால் புலந்திருத்து வார்போலப் பொய்திருத்தினார்கள்
கரும்பினமும் கதலிகளும் காய்த்தவிளந் தெங்கும்
குரும்பைகளும் வீதிதொறும் கொடிமாட வாயில்
நிரம்பமிடைந் தணிவித்த நிறுத்துதலாற் கரிகள் விருந்தயரா பசியுடைய பந்திகளியில் விடுத்தே
ώυ τίτύυδαμώ கஞ்சுகத்தைக் கவர்ந்த படலம்
மல்லிகை அரும்புதெரி வாருமிள மன்றல் முல்லையொடு பிச்சிமலர் மூரலுறும் ஆம்பல்
கொல்லைதொறும் கொம்புதொறும் கொண்டகொடி தோறும்
அல்லொடு பகல்பல அலைந்துதிரி வோரும்
சுள்ளிகள் தருப்பையொடு சூழ்ந்துதெரி வேத
வள்ளலெனும் அந்தணர்கள் மன்றல்வினைக் கொவ்வார்
வெள்ளிய பணத்தொடுமிகுத்துவரு தானம் அள்ளுமறையோர்சிலர் அதிற்கிசைவு கொள்வார்
134
IOO
IOI
I O2
IO3
IO4

பாயசவடைக்கொழுகும் ஆசைமிகலாலே வாயசைய நாவுற கூட்டமொடு வாங்கிப் போயரையிற் கட்டவொரு பொற்பட்டுக் காக நேயமுறும் கூட்டமொடு நின்ற பெருங் கூட்டம்
ஆதிவழி வந்தசில அரசவழிச் சேவை நாதசுர விற்பன்னர் நலமில்லை, மேனி ஆதலின் எனக்கூறித் தாம் நழுவ ஆசை மோதிவரு நாதசுரர் முன்வருகின்றார்கள்
தேம்படுகணிக்குலைகள் சேர்த்துவரு வாரும் மேம்படு மணப்புகை விரைப்பொடி கலந்து தாம்பல தெரிந்துசிமிழ்ச் செப்பிடுகின்றாரும் ஒம்படுவராகியெது வேலையெனக் கேட்பார்.
வெள்ளிமழை விறிசுகளும் விரிந்தபல நிறமாய்க் கொள்ளைகொளும் மத்தாப்புக் கோட்டைவருமெலிகள் தள்ளுபுகை மேலெழும் அவிட்டுகள் சமைப்பார் உள்ளமெது வென்றறிய ஒன்றுமறியார்கள்.
சுட்டமொழி யாற்கணவர் தாரவசிப் பாரை கிட்டவரு கென்றுமொழி கெஞ்சுமட வாரும் பட்டுகளில் வண்ணநிறம் பார்த்தெடுக்க மாட்டார் கட்டிவர ஒன்றொன்று கண்கவர்த லாலே
வெண்பரிகள் சோடிதெரிகின்றவரும் வெள்ளிை மண்பட விரித்திட மயிற்கணிழை சேலை கண்படு நிறத்தின தெரிந்தனர் கவர்ந்தார் புண்படு மனத்தினர் புறத்துமகிழ் கின்றார்
சுண்ணமொடு செந்துவரும் தாரிகைதொடாத வண்ணமொடு அஞ்சனமும் வாங்குவர் நிறைந்தார் எண்ணமறி கின்றகலை ஏதுமறியார்கள் கண்ணினிலெழுங்கவலை கற்றறிகுவார்கள்
சித்திர முகப்படாம் செய்தகரிக் கூட்டம் பத்திபட முன்னணி நடத்தியவை பார்த்து ஒத்திசை புரிந்தனர் உவப்புறுவர் போலே மெத்தநடிக்கின்றனர் வியண்தெருவி லெல்லாம்
135
O

Page 85
சிலம்படி பயில்பவர் செழுங்கணுறு மூங்கில் நிலம்பட நடக்குநர் நெடுந்தெருவி லெல்லாம் வலம்படு புலிக்குருளை வாவுபரி வேடம் நலம்புனைவர் ஒப்பனையில் நாட்டியமிக் கோரே
மஞ்சளுடைப் புத்தகுரு மார்மறுகு தோறும் கஞ்சமலர் கைக்கொடு நடப்பவரும் சாத
விஞ்சொலி கிளப்புநரும் விண்ணதிர நிற்பார் நெஞ்சிலெழும் ஆனந்த நீத்த நிறைவாலே
காவல்புரி வீரர்படை கண்ணுறக்க மில்லார் ஆவல்புரி மங்கையரும் அத்தகைய ராணர் ஏவல்புரி வாருமிறை தாக்கமிலர் எங்கும் போவர்வரு வார்களெலாம் பொன்னகரம் சூழ்ந்தார்
Bligg
பளிங்கொடு பவளங் கோத்தப் பன்மணி நிரைகள் தாங்கும் விளங்குபொன் வயிரம் சேர்த்த விதானத்தின் முத்துப் பந்தர்
களங்கமில் வானம் போலும், கரைகளிற் பவளத்தாண்கள் உளங்களில் நினைத்தன்றி ஒருநிறம் வேறு காட்டா
பார்த்தவ ரிழைக்க மாட்டாப் பளிங்குமா மண்டபத்தில் சேர்த்திய யாளிப் பூங்கால் திருமணத் தவிசின் மீது மூர்த்தியாய் வீற்றிருக்கும் மோகனக் காளை தோளில் சேர்த்திய மாரன் சென்று திருநடம் பயில லானான்.
காவியின் மஞ்சள் போர்த்த கருணைசேர் புத்த ரோர்பால் ஓவியப் பதமை போலும் சிங்கள மாதரோர்பால் காவியங் கண்ணினார்செந் தமிழ்மடவார்களோர்பால் மேவிய பந்தர்க்காட்சி விழிக்கொரு விருந்தே யம்மா
காவலர் மதிலாய்ச் சுற்றும் கடிமணப் பந்த ருள்ளே ஏவலர் போவாரல்லர், எவருமுட் செல்லார் காணும் ஆவலுள் ளாரும் வீதி அப்புறத் தாயினார்கள் காவலன் அமைச்சர் மற்றுங் கன்னியர் உள்ளே செல்ல
136
II
12
13
I4
I5
I6
I7

தாமரை வாசத்தாலும் சந்தனப் புகையினாலும் ஒமகுண்டத்துச் சுள்ளி உடன்தரு வாசத் தாலும் தேலர்ச் சரங்கள் தாவும் செழுமலர்த்தாதி னாலும் காமனும் கரும்பு வில்லைக் கைவிட நழுவு மன்றே.
வன்னியர்க் கதிபன் மன்னர் மருங்கினில் மாதங் கூடி கன்னியைத் தென்னி லங்கைக் காவலன் வீரனுக்கு முன்னிய தீயின் முன்னே முறைப்படி மணஞ்செய் தற்கே இன்னணம் இருந்த காட்சி எழிலுக்கோர் வடிவமம்மா
முப்புரி நாலின் மார்பர் முன்மழி குடுமி யாளர் செப்புறு வேத மோவா நாவினர் செந்தீ ஏற்ற ஒப்பினர் ஒவ்வொன்றாக உரியன ஒழுங்கு பார்த்தார் தப்பிய தேதமில்லைச் சரியெனத் தலைய சைத்தார்
விதவித வண்ணச்சேலை விரித்தமா மயிற்கடட்டத்தள் எதவெது பார்த்திட்டாரோ இருவிழி எடுக்க மாட்டார், மதுமலர்க் கணைகள் தீர்ந்தான் மன்மதன், அழகு தானும் புதுவிதம் கணங்கள் தோன்றும் பொருளெனப் புரியமாட்டான்
வார்க்கடங்காத கொங்கை மங்கையர் வதனக்காடும் போர்க்கடங்காத தோளிற் காளையர் முறுவல் பூத்த ஆர்க்கடங்காத கண்ணும் அலர்ந்தன வல்லிக் காடாய் தேர்த்தட அல்கு ளாள்தன் திருமணப் பந்தர்க் குள்ளே கட்டிய கூந்த லொவ்வோர் கைவணப்புடையர் செய்து விட்டதோர் அழுகின் சின்னம் வெண்பிறை நுதலில் வீழ்ந்து பட்டன சுருளின் கேசம் பார்த்திடும் வீரத்திண்டோட் கட்டிளங்காளை மாரைக் கரைப்பன கண்ணினோடு
மல்லிகை மாலை வாசம் மருங்குசெம் பங்கி வாசம் முல்லையின் அரும்பின்வாசம் முகிழ்ப்பவர் முறுவல்வாசம் வில்லியல்புருவ நாப்பண் விளங்கிய திலக வாசம் மெல்லிய தென்றல் தொட்டான் விரும்புவார் தாது போல
துளைபொழிந் தெழுந்த நாத சுரத்தின்கல் யாணி ராகம் மழையமு தாக நிற்க வளைந்தன நட்டவாழை குழைகளும் தளிர்ப்ப போன்ற கோமளத் தாண்களெல்லாம் இழைபடும் உருகும், காதல் இதய முள்ளாருக் கென்னாம்
137
8
I9
2Ο
2I
22
23
24
2S

Page 86
மங்கல வேத மோதி மறையவர்மணி எடுக்க மங்கையர் அலறு மோலம் கேட்டது மாதர் சில்லோர் எங்கணும் சிதறியோட எழுந்தன வீரர் கூட்டம் பொங்கிய ஒலியின் பின்னேபோயினர் புரவி மீதே
கவர்ந்தனர் கன்னி யாளை என்றதும் புரவி மீது இவர்ந்தனர் இமையின் போதில் காற்றெனப்பின் தொடாந்தார் கவந்தமும் கழுத்து மாக விழுந்தனர் காவலாளர் நிவந்தன புரவிக் கூட்டம் நெடுமதில் பாய்ந்து பாய்ந்து
Bougy
மாதர் குலைந்தனர் மாலை குலைந்தன வேதிய ரோடினர் வேட மழிந்தனர் கோதிய குஞ்சியும் கூடிய நாலும் பாதியறுந்திடப் பாய்ந்தனர் வீதி
கும்ப குடங்களும் கூட்டிய சுள்ளியும் கம்ப மலர்களும் காலடி பட்டன செம்பு புரண்டது சீதள சந்தனம் தம்பலத் தட்டுகள் சாய்ந்து சரிந்தன
எத்தனை நேரம் இருந்து முடித்தன புத்தலரோடு குலைந்தன பூங்குழல் முத்தணி கொங்கைகள் மூடிய தானைகள் எத்தனை போவன என்பது கண்டிலர்
பாலகர் ஒலிடப் பாவையர் மோதினர் நூலக மெல்லிடை நோவ ஒசிந்தனர் மேலக வீடுநர் மென்மலர் மல்லிகைக் கோல மலர்விழு கொம்பென வாயினர்
வெண்ணரை மூதவர் வீதி தெரிந்திலர் கண்ணரை யாயினர் காலு மியங்கிலர் திண்ணிடு காளையர் சேயிழை மார்களை நணணி நடத்தினர் பெண்ணினர் மாடம்
138
26
ך2
28
29
3O
3 I
32

சிங்கள மங்கையர் தங்களை வாலிபர் அங்கொரு மண்டபம் சேர்த்தனர் காவியர் பொங்கிய புத்தரைப் பொன்னகர் உள்ளிடம் தங்க விடுத்தனர், சங்கைசெய் திட்டனர்
Baligng
பொங்கிய மனத்தான் வேந்தன் பொறிதரு சிவந்த கண்ணான் சிங்கமென் றெழுந்தான் இன்னேசென்றுடல் செகுமின் என்றான் அங்கமும் பதறலானான், அணிபடைத்தலைவர் யாரும் சங்கமாய்த் திரள்க என்றான் தவளமா கூடத் தொன்றாய்
சிந்திப்பதெதவுமில்லை திரட்டுக படையைக் கீழ் பால் முந்திப்போய் நகரங் காக்க ஓரணி முனையோர் மேற்கில் சந்திக்க வன்னிப் பாதை தாமதி யாத காக்க நிந்தித்த கொடியோர் தம்மை நெடுங்குடல் கிழித்துத் தீர்க்க
பாவையைக் கொண்டு சென்ற பாதகள் அடியை யொற்றி வாவுவெம் பரியின் வீரர் வழி வழிச் சென்று மீட்க
ஆவியென் றுள்ள என்றன் அன்னத்தைக் கொணர்க அன்னாள்
மேவியிங் குறாளேல் போரில் வெற்றியும் வெறித கண்டீர்
மங்கையைக் கவர்ந்து செல்ல மானமு முடையராமோ இங்கெமக் குயிரும்பாரம், எதிரிகள் நகுவர் இன்னே எங்கெத வகுக்க வேண்டும் எவரெவர் தணைகள் வேண்டும் உங்களின் திட்டமொன்றை உடனுருப்படுத்துவீரே
என்றலும் சேனாவீரர் இணைந்தனர் சங்க மாக குன்றெனும் புயத்தரேனும் கூர்மதி யில்லாராகில் வென்றிடலாமோ ஒன்றாய் விதித்தனர் களங்கள் மேற்கே ஒன்றுகோம் பையன் மணல்மற் றுற்றது விதிக்கலானார்
பூநகரி வழியடைத்தால் தம்பைநகர்ப் போர்வீரர்கள் மாநகர மிங்கு வாரார் மன்னவன் தம்பை வேந்தன் போனவரை மீட்டிடாமற் பொழுதிறை தயிலமாட்டான் ஆனதனால் வன்னிப்பாதை அமைந்ததொரு முனையாகட்டும்
139
33
34
35
36
37
38
39

Page 87
இருந்தவர் எழுந்தார் யாரும் இசைந்தனர் முனைகள் தாங்க பொருந்திய படைகளோடும் புரவியின் நிரைகளோடும் தருந்தள பதியின் பின்னே சென்றனர் சங்கு கொம்பு பரந்தன முரச மார்க்க பாசறை முகத்து முன்னே
சித்திரப் பதுமை யாளைத் தேடிய குதிரை வீரர் அத்தினத் தந்திப் போது அடைந்தனர் காட்டின் பாதை எத்திசை செல்வார், நின்று இளைப்புறுபுரவி ஆற்றி முத்திசை வீரர்தம்மை ஒற்றுற முன்னே விட்டார்
ஒசிந்தபூங் கொம்பினாளை ஒரடி பெயர்த்தாற் கன்றிக் கசிந்திடும் அடியினாளைக் கவர்ந்தவர் புரவிeத நொசிந்திடச் சேய்மை செல்லார், நொந்தவட்கிங்கு தானே இசைந்திடும் மென்மை செய்வார் ஒற்றுவீர் இரவில் என்றார்
வானுற வளர்ந்து நின்ற மருதமா மரத்தில் ஏறி கானுறு நாலா திக்கும் கண்ணளந் திட்டார் விண்ணில் மீனுறு நிலையால் தங்கள் பூநிலை விதித்துக் கொண்டார் பானிற ஒளியுங் கண்டார் பசுங்கொடி மறைவினுள்ளே
மைந்தர் போரணி வகுத்த ulat
மாதினைக் கவர்ந்த வீரர் மன்னவன் மக்களென்றே காதொடு காதாய் மக்கள் பேசினர் காதல் மிக்கார் நீதியும் நெறியும் தங்கள் நீண்டநாட் சுதந்திரத்தின் போதம் வந்தற்ற தென்று புளகமுட் கொள்ளலானார்.
தொண்டைமா னாற்றின் கீழ்பால் தோற்றிய குன்றின் கீழே மண்டப மொன்றுண்டென்று மற்றையோரறியாரங்கு விண்டிறல் வலிய தோளார் வீரரின் தலைவர் வந்து
கொண்டபோர்க் களங்கள் தம்மைக்குறித்த மந்திரஞ் செய்கின்றார்
கோம்பையன் மணல்மண்மீது குவித்தனர் குதிரை காலாள் மேம்படு தம்பை மன்னர் வீரரே வெகுண்டு நிற்பார் ஒம்பட நின்ற மற்றோர் உள்ளத்தால் வேறு காண்பீர் தாம்படப் பொருதவாரோ தமது மண்ணடிமையாக்க
140
40
4I.
42
43
2

Biblugg
மக்கள் யாவருந் தாய்தரு மண்ணினை எக்கணத்தினில் மீட்குவமென்றுதாம் தக்க காலமும் சார்ந்தவர் கட்டளை ஒக்க நாடினர் உள்ளமொன்றாயினர்
நாகர்கோயிற் புறத்தினி னாவலின் பாகம் மணணினிற் பற்றை புதைத்திடும் வேக விற்களும் வாட்களுமீட்டியும் போக வேண்டுவ பூநகரிப்புறம்.
நாவற் காட்டினில் நாடியொளித்தவை ஏவலாளர்கள் இக்கணம் கொண்டுபோய் மேவி வன்னி வழிக்கரை வில்லியல் ஆவி நண்பர்கள் அன்பரைச் சேர்க்குக
அச்சு வேலியில் ஆவரங்காலினில் மிச்ச மான படைக்கலம் மேற்கினில் அச்சமின்றி அணிசெயும் ஊரெழு மெச்சுவீரர் வெளிக்களம் சேர்க்குக
மாவை மாநகர் மாதகல் மண்முனைச் சேவையாளரைச் சேர்க்குக மேலையில் வேவு காரர்கள் வேந்தனின் மாளிகைக் காவலாளர் களநிலை ஒற்றுக
அந்தி சாய்ந்ததம் ஆருங்காணாமலே பந்தி யாகக் குதிரைகள் பாய்ந்துபோய் முந்தி நிற்குக கோம்பையன் முன்மணல் நந்தியின் கொடி நாட்டுக முன்னணி
நண்டுக் காலென நண்ணுவியூகமும் கொண்ட தாமரைக் கூடுவியூகமும் மண்டு சக்கர மாயவியூகமும் அண்டி நிற்க அடுத்துப் பின்னாகவே
141
O

Page 88
ஒடமும் படகுந்துறை ஊறணி மாடுசேர்மயிலிட்டியும் மாதகல் கூடுகாவற்றுறையும் குவிக்குக நாடி நிற்குக நாம் தருசைகையை
முத்தெடுக்க மன்னார்த்தறை முன்தரு பத்தடுக்கிய பாய்மரக் கப்பல்கள் சித்தமாகுக வேலணை சேர்ந்திட புத்தளத்தப் புறக்கடல் காக்குக
கோணமாமலைக் குன்றிலுள்ளாருடன் மாணு தம்பல காமமருங்குளார் பேணிச் சேருக வாசுகிப் பெண்தலை பூணுகின்ற பொருபடைப் போரணி
கற்பகக்கொடி கட்டிய பெண்படை சிற்ப கூடத்த மண்டபம் செல்வழி நிற்பதாகப் பணிக்குக, நின்றிடில் பிற்புறத்திலும் போர்முனை பெற்றிடும்
Eag
வகுத்த அணிநிரை வாய்த்தன பலமுறை தெளிந்து /தொகுத்துக் கூறுவர் தோழமை பூண்டவர் தமக்கு
மிகுத்துக் கூறுவ வேறிலை, புதுப்புத நிலைக்குப்
பகுத்த புத்தியைப் பயன்படுத்திடுவதே கடனாம்
என்று கூறலும் தளபதி யாவரும் இனிதே வென்றி சூடுவம் எனப்பிரிந் தனர்வெளியிரவும் வன்றிரைக்கரம் மணல்மடிவருடிய க்டலும் அன்றிவேறொரு அந்நியர் அவர்வர வறியார்
முதலாம் நாட்போர்
படரிருள் விழுங்கிய பாதி வெண்ணிலா நடுநகள் மூடிநல் லூரில் நாயகர்
விடுபடை வகுத்திடும் விரகுத் தந்திரம் அடுபவர் அறிகிலா(த) அடர்ந்து கட்டினாள்
42
II
2
I3
I4
II 5
I6

சோதிடம் வல்லவர் தணிந்து கூறிய தேதியில் சேரமாவாசை கொண்டு சேய் பாதியில் ரோகிணி இடபம் பார்த்திட மோததல் முதன்முதல் என்று முன்னினார்
உடுக்கலை உணர்ந்திடும் பிக்கு மார்களும் நடுக்கடை நிசியின்யின் நண்ணு மோரையில் தொடுக்கவும் காலமே தணிந்தங் கொப்பினார் எடுக்கவும் விடுகணைக் கிதநல் வேளையாம்
வீரமா காளிக்கு வெற்றி வீழ்பலி சேரவே செய்திடல் வேண்டும் கார்க்கடா வாரொடு கொணர்கவே வாளும் பூசையும் நாரொடு மலர்களும் நறிய சேருமின்
Bibligg
பறையொலி முழங்கக் கொம்புப் பல்லியம் எழுந்துகூவக் குறைபடு நிணமும் சேர்ந்த குருதியும் படைத்துக் கள்ளால் நிறைபடு குடமும் முன்னே நிரைத்தனர் அரைத்த சாந்தும் முறைபடப் பூசி வாளை முன்னிரை சாத்தி வைத்தார்
அம்மையே யருள்வாய் வெற்றி அமர்க்களம் நீயே வந்த எம்முடன் பக்கல்கொண்டே இருந்திடு தரந்த போரில் மும்மடி பலம்நமக்கு முதல்வியே பாலித்தாள்வாய் தம்மடி வணங்கினாரைத் தாயரும் விடுவதுண்டோ!
கருங்கடா நிறுத்தி வாளைக் கைக்கொடு உயரத்தாக்கி மருங்கினிற் பூசை செய்வார் மந்திரம் செவியில் ஒத சிரங்குறை சிந்தி வீழச் செகுத்தனர், செந்நீர் வெள்ளம் அரங்கினில் ஆட்டிக்காளி அம்மைமுன் விழுந்தெழுந்தார்
வன்னிமா மகிபன் கையில் வாளினை எடுத்தான்மற்றோர் பின்னிரை பந்தி செல்லப் பிளந்தது வானை வெல்க மன்னனும் நாடும் என்ற மாபெரும் கிளர்ச்சியோசை சின்னமும் கொடியும் சங்கும் சேர்ந்தன பறையினோடு
143

Page 89
Hills
புரவிப்படை புழுதிப்படை யுகள நிரையிற்கரி அருகிற்செல நிமிரும் கரையிற்பறை அதிரக்கொடி ககனத் திரையிற்பட உயரத்தறும் திகழ
மலைகள்தொறும் மதியின்பிறை யெனவே நிலையின்கரி வளை கொம்புகள் நிமிரும் தலையின்மிசை தமையுந்துவர் தருமோர் கொலையிண்குறி எதுவென்பது கொண்டு
எட்டுத்திசை கொட்டும்பறை எட்ட முட்டும் வெளி வானத்திரை முகடு தட்டும்படி அதிர்கின்றன தாளம்
வெட்டும்படி விழுகின்றது குணிலே
எங்கள்தனி இறைவற்கொரு இணையோ உங்கள்படை உலகங்களும் உருளும் சிங்கங்களைச் சினமூட்டினர் எனவே சங்கின்தொனி எழுகின்றது தலையில்
கண்ணின்பொறி வாளின் பொறி காய்ந்தார் உண்ணும்வடி வேலின் பொறி உரசும் திண்ணென்படி வருகேடயம் சிதறும் விண்ணின்பொறி எட்டுத்திசை விசிறும்
தோலின்வரி கவசங்களும் சுற்றிக் காலின்வரி கழலுந்தலை யணியும் கோலும்வரி வில்லுங்கணை குறையா ஞாலம்பட நடக்கின்றிலர் எழுவார்
பின்னின்றெறி வேலின்ந தி பிளவா(து) அன்னம்படு நடையார்கரம் அணைக்கச் சின்னம்படும் முதகின்புறம் சேரும் கன்னந்தொடும் மீசைப்புதர் காதால்
144
O
I
12
I3
I4
IS

மஞ்சள்குறு அரிசிக்குவை மணிகள் செஞ்சந்தனம் தீபத்திரி கொண்டு அஞ்சொல்லவர் ஆரத்திகள் சுற்றி எஞ்சுந்தில கங்கள்துதல் இட்டார்
I6 அணைகின்றவர் மடமங்கையர் அமளிப் புணைசென்றவர் போரின்பறை ஒலியால் இணைகின்றனர் இறுகிக்கரம் தழுவி பிணைகின்றனர் பிரிவின்பயம் பெரிதால்
I7
போகம்படும் இளமங்கையர் புருடர் போகும்வழி பொழியும் விழி நீரால் சோகம்படப் பிரிகின்றனர் தணைவர் வேகம்படு படையின்தலை விரைவார்
8 நிமிரும்முழு நெஞ்சின் கவசங்கள் அமரின் முனர் இறுகின்றன அடுதோள் திமிரும்படத் தினவுற்றன உயரத் தமரம்பறை தருகின்றன தாளம்.
I9
Bulu
கோழியின் முனங்கோம்பையன் மணல் குறித்த நாழியின் முனம் அணிநிரைத்தனர் நடுவில் கழுசக்கரவியூக முற்றனர் சுற்றி ஆழு சிங்கள அணியடுக்கினர் பிறையாய்
2O Elig.
சேனாதிராய னெனும் தளபதியும் பராக்கிரம சிங்கஏற கோனாதி குலத்ததித்துக் கடன்மறவா மாப்பாணக் கொற்ற ஏறும் மேனாளெச் சமர்முகத்தும் வாகையலால் அறியாதார் வரைந்த கோட்டில் நானாதி படையணியும் நிரைத்திருப்பக் கதிரோனும் நயந்த பார்த்தான்
2 எதிர்முகத்தில் இலங்கையனும் ஏழாலைக் கதிர்காம இராமநாதன் கதிர்முகமும் கவசமுமாய் பதிகளெனப் புரவிIசைக் கண்டபோத அதிர்முரசம் திசைகுலுங்க விடைக்கொடியும் ஆகாயம் அலசி நிற்ப முதிர்மணிகள் நிலஞ்சாயும் அராலிவெளி போர்க்களமாய் முடிந்த தன்றே
22
145

Page 90
Bolugg
முரசொலி முழங்கிடவிடைக்கொடி யெழுந்தே அரசிவர் அடுத்தவர் எனக்குறி கொடுப்ப நிரையணி பலப்பல நெடுங்கடல் நிகர்ப்ப கரையிலை இதற்கெனக் கண்டவர் மருண்டார்
உடுவிலன் உமைபதி முதலணி நிற்க நடுவினில் மாதகல் நாயகம் நிற்க விடுகணை வில்லினன் மயிலனி முருகன் படைகளைக் களமுறப் பயிற்றினன் நின்றான்
நேற்றிவர் கலப்பையின் நெடுந்தலை பிடித்தார் நாற்றினை நட்டவர் வில்லினை எடுத்தார் கூற்றென விழிக்குநர் கொடுங்கணை பிடிக்கும் ஆற்றலை அடைந்தனர் ஆர்க்கிவர் கொடுத்தார்
எழுகதிர் இளவெயில் வேல்நுனி பட்டு தளபதி மார்முடி தருமணி தொட்டு விழுமொளி விடியலின் எதிரொளி யாக களமதின் மேல்திசை கீழ்த்திசை காணார்.
Blg
போரெழுந்தபறை போயடுத்த செவி நிமிரவே பாரில் முட்டுகில பாத மென்றபடி பரிகளும் வாரடங்கியிடவில்லை யென்னிலவை வாயுவில் நேரெழுந்துமுனை பாயுமென்றநிலை நின்றன
Elgg
மத்தகத்தறு வேல்கள் மாரியிற் குத்தகின்றன கொம்பு கொண்டவை
மொத்த கின்றன முட்டு கின்றன பொத்துப் பொத்தெனப் புவியில் வீழ்வரே
146
23
24
25
26
ך2
28

சுற்று தேர்களைத் தாக்கி வீசின கொற்ற நீள்கொடி குடைதவைத்தன ஏற்றி வீசின எதிரின் யானையின் நெற்றி முட்டுவ நிமிரும் குன்றென
காலொடிந்திடினும் கையினிற்படை வேலிழந்திலராக வீரமே மேலெழுந்திட வீசுகின்றனர் நாலு பக்கமும் நண்ணி னோரையே
சீறுகின்றசெங் குருதி சென்னியில் பீறுகின்றது குடல்பி ளந்தவர் கூறு பட்டனர் குருதி கொண்டலை ஆறு பட்டத அவ் வமரின் முன்னணி
மழவ ராயனும் மட்டு வில்மணி இளவ லுங்களம் விழ இருந்தவர் அளவில் வெங்களம் அணுகி முன்னணி நுழைவில் வீழ்த்தினர் நூறு பேரையே
வீழ்ந்த வெங்களம் போல மேற்றிசை சூழ்ந்த செம்மையடர்ந்து சூரியன் வீழ்ந்து நிற்கையில் வெற்றியூதினர் வாழ்ந்த வன்னியன் வாகை யென்னவே
Hill II
ஊதும் சங்கொலி நஞ்சென ஒருபதி இராம நாதன் காதினில் விழுந்திட நாள்முதற் சமரின் போத சென்றது பொருபடை பாசறை புகட்டும் ஈத கட்டளை என்றனன் எழுந்திடு வோர்க்கே
Egg
ஒடுகின்றபடை குதிகள் காண்பதலது ஒய்கிலோம் போடுகின்ற கவசங்கள் வீண்சுமைகள் பொருகணை
தேடுகின்றதலை சிறிது தாமதம் செய்விரேல் கோடு நிற்கிலவெங் கால்கள் என்றுகுரல் கொட்டினார்
147
29
3O
3 II
32
33
34
35

Page 91
கம்ப மாடியவர் கடலை விற்றவர்கள் விழவிலே நம்ப ஆடியவர் நடன தேசிகரும் தோளிலே அம்பு மாரிதரு தாணி தாக்கியவர் ஆயினார் கொம்பு சங்குபறை கொண்டெழுந்தறை கூவினார்
மாலை கட்டியவர் மலர்தொ டுத்தவர்கள் பந்தலில் சேலை கட்டியவர் திருமணக் குறையில் ஓடினோர் வேலெடுத்தவர்கள் வீசு வாள்களுடன் கேடயம் மேலெடுத்தவர்கள் வெற்றி வெற்றியென எழுகிறார்
எங்கு செய்ததிவை தேர்கள் என்றெவரும் அறிகிலார் அங்கு மிங்குமவை அணிதிரண்டுலவ அதிசயம் சிங்க மென்றவர்கள் சீறி முன்னணி நிரப்பினார் அங்க மெங்குமுறுக்கேறக் குந்தமுனை யாட்டினார்
Esplugg
இத்தனை படைகள் எங்கு இருந்தன என்று யாரும் தத்தமக் கணுகினோரை வினவினார் மருட்கை கொண்டு சித்தமும் உடலும் எல்லாம் தேசத்தின் விலங்கு நீக்கச் சுத்தமாய் அர்ப்பணித்தார் தோள்வலி ஒன்று நாறே
மலரெடுக்கின்ற கைகள் மழுவெடுத் தேந்தி நின்ற புலருற உழவாரத்தப் பொருபடை யன்றி வேறே உலகுறக் குருதிதோயும் ஒருபடை தொட்டு மில்லார் அலருறும் சுதந்திரத்தின் ஆசையால் படைகள் தொட்டார்
ஞானத்துக் குரியசைவர் நன்னெறியன்றி வேறே ஈனத்துக் கடிமையாகோம் என்றுயிர் தறந்தோர் போரில் தானத்து முன்னேநின்றார், சாவினை முத்தமிட்டோர் மானத்துக் குயிரை விட்டோர் மைந்தரும் அணியில் நின்றார்
சேனாதி ராயன் றன்முன் சிங்கள அணியில் நின்ற தானாதி பதிகள் சூழச் சக்கர வியூகமாகப் போனான் தென்பால் வளைந்து புரவியோர் முன்னே செல்ல, ஆனாலும் நண்டுபோல அணிசெய்தான் இராமநாதன்
148
36
37
38
39
40
41
42

சென்ற தேரொடு தேர்கள் முட்டின ஒன்று சில்லுகள் உரசு வெங்கனல் சென்று யானையின் சென்னி முட்டின நின்று பாய்ந்தனர் நிரையின் வீரரே
தோள றந்தவர்கள் தொடைகள் சில்லுறக் காலொடிந்தனர் கிட்டிமுட்டிய வாளொடிந்தனர் எனினும் வன்புயம் வீழ வெட்டினர் வீர் முந்தவே
சரிந்து வீழ்ந்துகு திரைக்குள் தாளொடு நெரிந்து வீழ்ந்தனர் நேர்செலுத்தினர் திரிந்த வெட்டுநர் சிரமறுந்தனர் விரைந்த சென்றன வெகுளி யானைகள்
BGuggi
மடித்த வாயினர் மழவனை மட்டுவில் மணியைக்
கொடுத்துப் பாசறை புகுவதோ கணமிரு கொடுமின் முடித்து மீள்குவம் போரென எழுந்தவர் முதல்வன் கொடுத்த கட்டளை மீறிலர் கொதித்தனர் மீண்டார்
புண்பிளந்திடு வீரரை மருத்துவர் புகன்ற பண்பிற் பச்சிலை அரைத்தன தைலமுந் தடவி நண்பும் இன்சொலும் நயணமென் மொழிகளும் வழங்கி கண்பொருந்திய இமையெனக் காத்தனர் மருங்கே
இராமநாதனும் இருமருங் கிருந்ததன் தோழருக்(கு) இராவின் மோனமும் கலைவுற இதுமொழி புகல்வான் பராமு கம்படப் பொருதிலம் பணித்தன பிழையும் வராமற் காத்தனம் கரிநிரை யவர்க்குறு வலியே
கண்டியானைகள் கையுறப் பழகின தம்பை கொண்ட காவலன் கொடுத்ததும் ஆயிரம் குவித்தார் மண்டு கானக மத்தியில் பழக்கிய நமது மிண்டு யானைகள் இவண்வரின் வெல்வதும் எளிதே
149
43
44
45
46
47
48
49

Page 92
என்று கூறிய தலைவனின் மொழிகளுக்கிசைந்த நன்று நன்றென நயந்தனர் நாமினிச் செய்வ(த) இன்று யாதெனப் பணிக்குக என்றனர் இருந்தோர் ஒன்று கூறுவன் உமக்கென உழைத்தனன் தலைவன்
நாம் பழக்கிய கரித்திரள் இவண்வர நயந்து மேம்படத் திரு ஒலையும் தாதரும் விடுத்து வாம்பரித்தரு வீரரரைப் போக்குக வழியில் ஒம்பு மன்னவன் துணைதருசேனையும் உளதாம்
ஆதலாலெமக் குதவு பூநகரியின் அணியை வீதி காக்கவும் விளம்பிய கோட்டையின் வேந்தன் மோத விங்கனுப்பிய படை முறிந்திடப் பொருதல் தாதர் சொல்லுக என்றனன் சோர்வறி யாதோன்
இன்ன வாறிவர் இருக்கையில் எதிர்முனை நல்லூர் மன்னராதியோர் மகிழ்வினாற் குதித்தலும் குடித்துச் சென்னியேறிய செருக்கொடு ஆடலும் சிறிதே பன்னுவாமவை பதர்களின் வெற்றியின் பாங்கே
உறக்க முற்றிலர் ஊனொடு நாட்படு தேறல் உறைக்க ஆக்கிய கறியொடு உண்டனர் உடலில் மறைக்கு மாடையும் குலைந்திட மதிகெடக் கலத்தை நிறைக்க என்பவர் நிலத்தினிற் கால்பட நில்லார்
நின்ற சிங்கள அதிபதி நேயரைத் தழுவி நன்று நன்றென நகுபவர் நாட்டியம் ஆடி தின்ற ஊனினைத் தீற்றுநர் கரங்களைப் பிணித்து ஒன்றி யாடுநர் ஒவிளி யெடுக்குநர் ஒருங்கே
கொட்டு பேரிகை முழுவொடு தடிபல கூடி வெட்டி டக்குதித் தெழுபவர் விழுந்தவர் தாங்கிக் கட்டி நிற்பவர் கலத்தினை எறிபவர் கரத்தால் கொட்டி நிற்பவர் தோளினை கூவென விளிப்பார்
வென்றி யாடுநர் சிங்கள வீரரும் விருந்தில் நன்றி கூறுநர் சிவந்தன விழிகளும் நாடி ஒன்றி ஆடுநர் விலைதரு மாதரும் ஒடிந்து சென்ற வீணையின் நரம்பிசை செல்வழி சேர்ந்தே
R
SO,
SI
S2
53
S4
SS
56
57

அடிமை யின்தளை அகன்றிடும் இனியென நம்பி கொடிகளும் புதுக் கினர்சிலர் கோதையர் தவண்டு நெடித மூச்சுற உறங்கிலர் நேயரை வீணே சுடுமொழிக் கனல் வீசிடத்தாற்றினர் தொடர்ந்தே
முடித்த போரினில் முழங்கிய தென்னவர் முரசம் இடித்தலைப்படு பாம்பென இருசெவி விழுதலும் முகங்கள் நொடிக்குள் வாடினர், நிலத்தறு முகத்தினர் நொந்து அடித்தபுண்வடுத் தடவினர் அரண்பதம் இறைஞ்சி
பதைத்த மங்கையர் பள்ளியில் மெல்லணை முகத்தைப் புதைத்த நின்றனர் கனவுறு கின்றனர் புலத்தக் குதித்த போர்க்களம் காண்டலும் கொழுநரென்றறியார் உதைத்தனர் அருகுறங்கினர் அணைத்திடும் போத
போரினுக்கிவர் பொருத்தமும் இலரென விலக்க ஊரில் நின்றவர் ஆடவர் உடன் கொதித்தெழுந்தார் நேரில் நின்றிலம் எனக்கவல் கின்றனர் உண்மை வீரமென்பதும் மனப்படும் உறுதியின் வேகம்
தொடங்கு நாளினிற் தோற்பவர் வெல்வதே முடிவில் சடங்கு சாத்திரம் புகன்றத சரியிது, அதனால் மடங்கி நிற்பதம் மறுதரம் கடாவிடிப் பதற்கென்று அடங்கு வாயினர் ஆசையில் கூறினர் தளரார்
எங்களின்விடு தலைக்கென இரத்தமும் சிந்தி பொங்கு போரினிற் புகுந்தவர் தொகையொடு நாமும் அங்கு சேர்ந்திடில் அவர்பலம் ஆயிரம் அவமே இங்கு சோம்பினம் எனஏழுகின்றனர் முதியோர்
மறைந்த மன்னவன் மைந்தராம் குருளைகள் இரண்டும் நிறைந்து வெல்லுக நின்மலா நெடிதநாம் பொறுக்கோம் அறந்தழைத்திடும் என்பதும் பிழைபடும் ஆமோ நிறைந்த கண்ணினர் நீரினால் இறையடி நணைப்பார்
151
58
59
60
6.
62
63
64

Page 93
udapitual udavud/Assistfulfilstb
ஒற்றைவான் நிலவுக் கீறு உதித்தது சாளரத்தில் கற்றையாய்ப் பொழியும் வெள்ளிக் கனகமா வமளி மீது நெற்றியிற் றடவித் தென்றல் நீவியே நெறியிற் செல்ல மற்றவர் யாருமின்றி மனுப்புலி தனியனானான்.
சிற்றடிப் பாவை வந்து செங்கரம் நீட்டும் பாலும் மற்றவள் கடந்தற் காட்டுள் வளர்பிறை நிலவுங்காணான் விற்றிறற் போரிற்றான்செய் வெற்றியின் பெருமை யெல்லாம் குற்றமே போல நெஞ்சிற் கொல்லுலை உயிர்ப்புற்றானே
இதந்தரு நறவம் மாந்தி இறைச்சியின் சூடுசேர்த்துப் பதந்தரக் கடித்துக்கொண்டு பாடுநராடுநர்ப்பின் விதந்தரு நடனமாடும் வீரரின் குழாத்தைவிட்டு சுதந்திரத் தனிமை சார்ந்த சூத்திரம் யாத கொல்லோ
கொவ்வையும் நானும் வாயாற் கொடியனாள் பரிந்து கேட்ப எவ்விதம் சொல்லு கேன்யான் எழுந்தவென் மனத்துப் போரை செவ்வியேன் அல்லே னென்றோர் செவியொலி மனத்துட் கேட்கும் தெவ்வரார் நண்பர் யாவர் எனமணம் தெளித லில்லேன்
4. பிறந்தமண் ணடிமை நீக்கப் பிள்ளைக ளிரத்தஞ் சிந்தித் திறந்தபோர் முன்னே நிற்கச் சிலைகுனித் தவரைக் கொல்ல பறந்துபோய்க் கணைசொரிந்தேன் பகலுறு போரும் வென்றே அறந்தலை வந்து நீட்டும் ஆயிரங் கணைக்கென் செய்கேன்
இன்றடு போரில் வெற்றி யென்னது வென்று வீங்கி நின்றிடு வீரரோடு நிசிக்களி யாடற் கொவ்வேன் கொன்றிடும் மனத்தை அன்னான் குண்றென வீழ்ந்த போது வென்றது பாவ மென்றால் வென்றியும் தோற்ற வர்க்கே
தாய்தனை மீட்க நிற்கும் தநயரை வீழ்த்திப் போரில் வாய்தரு வெற்றியின்பின் வளர்ப்பதும் அடிமையன்றோ தோய்தரு குருதி வாளைத் தொட்டிடேன் உள்ளஞ் சோர்ந்தேன் வேய்தரு தோளினாயென் வேதனை யிதவே யம்மா
152

என்றவன் கூறாமுன்னம் இளங்கிளி கூறலுற்றாள் ஒன்றிய போருட் சென்று ஒருப்படா மனத்தரானால் அன்றவரிட்ட சோற்றுக்கு அடாதன செய்வோராவோம் நன்றியும் வளர்த்தார் மாட்டு நாய்க்குளதில்லை யாமோ
ஆதியில் வளர்த்த மன்னன் அருநிசி தயிலும் போது பாதியில் வளைத்து வென்ற பான்மையை எதிர்த்து நின்று நீதியை நாட்டா நின்று நெடும்பழி தேடிக்கொண்டோம் மோதிய போரிற் பாவம் வென்றிட முனைசெல் வோமோ
தேர்த்தல நின்று வாளி சிந்திய குருளைக் கூட்டம் வேர்த்திடக் கடும்போர் செய்தேன் விடுதலை வீரரெல்லாம் போர்த்தலம் வீழந்தபோது பொங்கிய உவகை யாலே ஆர்த்ததும் அடிமை கொண்ட அந்நியர் முரச மன்றோ
விற்கலை பயிற்று வித்த விடுபரி யேற்று வித்த மற்கலை முதல வாய போர்க்கலை வளர்த்துச் சோறும் நற்கலை முழுமும் தந்த நன்றியை மறந்த மாற்றார் இற்கத வடைந்த போது எச்சிலுக் கேங்கி நின்றோம்
எதிர்வரும் பகைவர் தம்மை எதிர்த்திடாதே) இலகுவாக உதிர்வரும் பருக்கைச் சோறு உண்டிடக் கிடைக்குமென்று கதிர்வயல் நிலத்தச் சாயும் கனகமாத் தாய்நன் நாட்டை அதிர்வர அடிமை பூண்ட அந்நியர்க் காக்கிவிட்டோம்.
ஆதலால் நெஞ்சம் என்னை ஆயிரம் ஈட்டி கொண்டு மோதலால் துயிலு மில்லேன் மோனமும் நகைக்கு மம்மா மீதுறும் அடிக்கல்லாக விதைத்ததும் அதர்ம மானால் ஏதொரு வெற்றி தானும் எப்படி நிலைக்கு மிங்கே
மதம்பொழி களிற்றின் முன்னே மார்பகம் பொருத்தும்போரான் நிதம்வழிந் தருகு நெஞ்சாம் மெழுகினன் உள்ளே மூண்ட அதந்தரு போருக்காற்றான் அமளியும் அமைதி தானும் இதந்தரா நிலவுங் காற்றும் நெருப்பலாதயிர்ப்பதுண்டோ
மென்விரற் காந்தள் கொண்டு வெதும்பிய ந தலைநீவி முன்வரு முறுவல் முல்லை முகையினால் முகத்தை வெல்லப் பின்வருங் கூந்தற் காட்டைப் பிள்ளையாம் தென்றல் தாக்கிப் பொன்வரு தோளிற் சாத்தப் பூவையாள் புதுமை செய்தாள்
53
I. Ο
I
I2
I3
I4
I5

Page 94
ஏங்கிய மனத்தானாகி இதந்தர இசைவி லானை பாங்கொரு தனிமைவிட்டுப் பாவையாள் சென்ற போது தாங்கிலான் அமளி விட்டுச் சுருங்கையின் வழியே சென்று பாங்கவர் மேற்கிலிட்ட பாசறை மிதிக்கலானான்
காவலர் கண்டு கையைப் பிணித்தனர் சதியே யென்று மேவிய பதியின் பக்கம் விரைந்தனர் விடுத்தபோது தாவிய தலைவன் வாளில் தலைதுணித்திடவெழுந்தான்
I6
ஆவியைச் செகுத்தால் வேண்டும் அனைத்தனையும் அறியலாமோ
அவர்புறத் தந்தரங்கம் அறிவதற்குரியானென்றே கவர்பிணி கரத்தின் கட்ட விழ்த்தனர் கவிழ்ந்த கண்ணான் எவர்புறம் வந்தீர் நீவிர் என்றுமுன் பதியுங் கேட்கும் உவர்படு மொழிகட்கெல்லாம் உடைந்தனன் கூறலுற்றான்
மாற்றவர் அணியில் நின்று வன்சமர் பகலின் முற்றித் தோற்றவ ரிங்கு வந்தாற் சூழ்ச்சியென்று உரைத்தல் சாலும் ஏற்றிய வெற்றியின் பின் எதிரிமுன் தணிந்து சென்றால் சாற்றுமோ போரின் நீதி சதிசெயுங் கோழை யென்று
நாட்படு தேறலுண்டு நடமிடுங் களியாட்டத்துள் ஆட்படா திங்கு வந்தால் அதிசய மாகு முங்கள் வாட்படும் இறப்பு நன்றாம், மனத்தெனைப் பிளந்து தர்மந் தோட்படத் துண்டு செய்யுந் தயரமே பொறுக்க லாற்றேன்
சோறிட்டான் பின்னர் சுற்றத் தணியிட்டான் நன்றி கொன்று மாறிட்டோம் இடையில் வந்த மனிதருக் கடிமையாக வீறிட்டுச் செய்யுமிந்த விடுதலைக் கெதிர்த்து வென்றால் காறிட்டு எச்சில் செய்யும் காசினி முழுது மன்றோ
கசையடிப் புண்சுமந்த கமத்தறும் உழவர் கைகள் இசைபடும் வாளையேந்த இந்தமண்ணடிமை யென்ற வசைபடு மொழியி னாலே வண்சமர் எதிர்நாம் நின்றால் திசைபடும் புகழும் வீரச் செல்வமும் அவர்மாட்டன்றோ
தப்புற Nதழின் மாதர் தகினெகிழ்ந் தோடும் போதும் குப்புற வீழந்த சைவர் குடுமிகள் குலைந்த போதும் எப்புறம் பார்த்திட்டாலும் எதிரிகள் ஆர்த்த போதும் அப்புறம் உடலும் என்றன் அகமுமிங் குள்ளதானேன்
154
I7
8
I9
2O
2I
22
23

பொன்னிரைச் சதங்கை யார்ப்பத் தவழ்ந்தவிப் புழுதி மண்ணில் அந்நியர் கொம்பன்யானை அடியினில் எமது மைந்தர் சின்னமாய்ப் பின்னமாகச் சிந்திய குருதி கண்டும் இன்னமும் எச்சிலுக்காய் இசைவனோ வில்லை யேந்த
வன்னியன் வெற்றியென்றால் வாழ்வதும் அடிமை கொண்ட அந்நிய ரென்னு முண்மை அறியநாளதிகம் பெற்றோம் முன்னிய போரிலின்று முழக்கிய முரச வோசை என்ன நீ செய்தா யென்றிடித்திடா தமையு மாமோ
உட்படு போருக்காற்றேன் உமக்குறு பணிக ளாற்றக் கட்படா திங்கு வந்தேன் கருத்தினில் ஐய ஏதம் எட்பட இருக்கு மாயின் இக்கணம் ஆவி போக்கித் தட்படு சாந்தி செய்து தருமத்தில் உய்ப்பீ ரென்னை
என்றவன் கூறலோடும் இராமநாதன்பு கல்வான் கன்றிய போரில் மாற்றார் கரந்திடுந் தந்திரங்கள் ஒன்றெனக் கூற லாகா உவகையாற் சிரிப்பார் போல ஒன்றிடக் கூப்புங்கையுள் ஒளிப்பரே படைக்கலங்கள்
ஆய்ந்துசெய் யாத நட்பும் அந்நியர் சடுதி நட்பும் தோய்ந்திட வளர்ந்த நட்பிற் றோற்றிய ஐயப்பாடும் மாய்ந்திடும் தன்ப மாக்கும் வாக்கியம் பெரியொர் சொன்னார் காய்ந்திட மாட்டோம் ஆனால் காலத்தாற் சிறித பார்ப்போம்
தஞ்சமென்றடைந்தார் தம்மைத் தாங்குதல் நீதி யாகும் நெஞ்ச நீ உடைதற்கேற்ற நிகழ்ச்சிகள் பொருந்தவுண்டு வெஞ்சமர்க் கெதிர்த்தா யென்ற வெறுப்பினால் ஐயங்கொண்டால் அஞ்சிய குடிகளெல்லாம் அந்நியர் நண்பராமோ
வெறுக்கிலோம் உன்னை மாற்றார் அணியினிற் பொருதற்காக ஒறக்கிலோம் உன்றன் உள்ளம் ஒருசிறி(து) உரமுண்டானால் இறுக்கியே வேந்தையன்று சூழ்ந்தபோ(து) எதிர்த்தார் தம்மைப் பொறுக்கிலா திருந்தபோதும் பொருந்திநீ பின்னர் வாழாய்
தளபதி சாற்று மாற்றம் தன்செவியடைத லோடும் உளமிக உடைந்து சொல்வான் உத்தம அன்று நாமே களமது வகுத்துக்கொண்டால் அழிவதே கரும மல்லால் உளபொருள் வேறொன்றாகா(த) உனக்கித தெரியுமன்றே
155
24
25
26
27
28
29
30
3I.

Page 95
அடங்கிய நெருப்பும் மோதப் பின்னிடும்ஆடும் வாங்கி முடங்கிய அலையும் முன்னே கரந்திடும் உடலின் நோயும் இடங்கனி காலம் பார்த்திருப்பதே யன்றி வாய்த்தால் மடங்குபல் கோடியாகும், வலியுடன் மீளத்தாக்கும்
காலத்தாற் பிந்திவிட்டேன் என்பது கண்ட குற்றம் சாலத்தால் வந்தே னென்றால் தாங்கொணா வுள்ளம் என்னை மூலத்தே யொறுத்த தண்டம் முழுவதும் போதா தென்றால் ஞாலத்தார் அறிய என்னை நாட்டுநாள் வந்திடாதோ
உன்னைப்போல் வந்து சேர்ந்தார் ஒருவரோநாறுநூறாம்
தன்னைப்போல் உவமையில்லாத் தளபதி நேற்று வீழ முன்னைப்போல் நாறுபங்கு முனைவரத் தணிந்து சேர்ந்தார் பொன்னைப்போற் சுடரும் வீரப் புண்பட இசைந்த மக்கள்
மனத்தினால் நம்மைச்சார்ந்து மாய்ந்திடத் தணிவில்லாரோர் தினத்தினில் அடைந்ததோல்விச் செய்தியால் எழுச்சிபெற்றுச் சினத்தினாற்றியாகஞ் செய்யச் சித்தமும் வலித்தார் தோல்வி இனத்தினால் தம்மைக் கூட்டும் என்பதாற் சூடற் பாற்றே
வந்துவந்தடையும் மக்கள் தம்மொடு வதிந்தே யுன்றன் சிந்தையைச் செயலதாக்கித்திறம்படப் பயிற்றுவித்துப் பந்தியின் படைகளோடும் படைநிரை வகுத்துக் கொண்டாற் சிந்திய போரில் நிற்போர் செருமுனை தலைமை செய்வோம்.
Bibligg
வெள்ளி ஒளிரும் பிறைக் கோடும்
விண்ணின் நகத்தின் மென்கோடாய் மெள்ள மேல்பாற் கடலின் கீழ்
வீழ்ந்தே யிருள்பார் படர்ந்தபோது அள்ளிச் சுமந்த அழகோ(டு)
அளக பாரம் பொறுக்காதாள் பள்ளி வெறிதாய் விதவைகொளப்
பார்த்தாள் திகைத்துப் பரப்பெல்லாம்
156
32
33
34
3S
36
37

கூவியழுைத்தும் குரல் கேளாள்
கோவே யென்றன் கண்மணியே வாவென் றலறி அடிசாய்ந்தாள்
மயில்போற் கூந்தல் மண்பரப்பி நாவு முலர்ந்தாள் விழிகரைந்தாள்
நறிய முல்லை குழல்கடும் பூவும் பிதிர்த்தாள் குங்குமத்தின்
பொட்டுங் கரைத்தாள் பூங்கொடியாள்
தாரப் பறையின் ஒலியடங்கும்
சுகித்த கள்ளின் மணமடங்கும் சேருங் குரவைக் கரம்பிரியும்
சிவந்த கண்கள் தயிலடங்கும் ஆரக்கடித்த குறையிறைச்சி
அங்கங் கெலும்பு நாய்கடிக்கும் ஆரும் அடங்கும் நிசிதன்னில்
அவள்கண் சிறிதும் அடங்காதே
இரண்டாம் நாட்போர்
கொம்பினொடு சங்குபறை கொண்டிட மொலிக்க பம்புதடி பொங்குமொலி பாசறை நிரம்ப தம்புயமெழுந்தவலி சற்றுமணையின்றி அம்பொடு தடிப்பன அவற்கெதிரி நாடி
தேர்களொடு தேர்கள்வழி திக்குகளடைப்ப வார்களொடு வந்துவளர் மார்பக மெழுந்து ஆர்களம் எழுந்தவர் அவர்க்கெதிர் நிறுப்போம் போர்தருவ மென்றவர்கள் பொங்கியெழு கின்றார்
தாமரை வியூகமெனச் சார்கள மமைத்து வாமநிரை யானைகளை வைத்திடைவகுத்து காமரு பரித்திரள் கடைத்தலை நிறுத்தி கோமகரும் வீரர்களும் கொண்டிடை நிரைத்தார்
157
38
30

Page 96
கீழ்த்திசை யுதித்தகதிர்ச் செங்கிரண கேசம்
ஆழ்த்தியது போர்க்களம் அனைத்தினையும் செம்மை
வீழ்த்திய வுடற்குறைகள் விண்வெளி விளங்கும் தாழ்த்தியசெம் மேகவரிக் கூட்டமெனச் சாரும்
சேனாதி ராயனணி முன்னிரையிற் செல்ல தானாதிபர்களொடு மாப்பாணன் சார்ந்து நானாதி போர்க்கல நடுக்கொடியுயர்த்தி வானாதி யானதுகள் மஞ்சிடை வரிக்கும்
நேற்றுவரு தோல்வியை நினைத்துளம் அழிந்து வேற்றணியை மோதிட விரைந்தவரு வெள்ளம் காற்றென வெழுந்ததுசெங் கட்கனல் பொறிப்ப ஆற்றுவர்கள் யாவரினி ஆனதுவோ 2ளழி
மானமுயிர் அன்றிமர ணம்கொளு மனத்தே சேனைமுனை செல்பவர்கள் சீறிவரும் போது ஈனமுறு கூலிபெறும் எப்படை யெதிர்க்கும் ஊனொடு தலைக்குறை உருண்டிட மலைந்தார்
யானைநிரையைச் சிதற ஏதுவழி யென்றே தானபதி நண்டுவடி வாகமுன் சமைத்த சேனையையி ராமபதிதன்முனை செலுத்த ஆனவிரு பக்கமணி யாய்ந்தனமுன்னேறும்
பக்கவழி வந்தவையைப் பாய்பரிகள் ஏவி சிக்கென மறிக்கவென மாப்பாணன் செல்ல மிக்கவரும் ஆட்படைகள் வெட்டியெறி கின்றார் தொக்கபரி வீழுவன தாண்டுபவ ரோடே
பாய்ந்தபரி பாரில்விழுகின்றன மடிந்து தோய்ந்தகுரு திக்கிடை தடிப்பன அவற்றுள் மாய்ந்தவர்கள் யாவரென மட்டிடவு மொண்ணா சாய்ந்தவர் பிழுைத்தவர்கள் செங்குருதி தாழ்வார்
ஏறுகளிற்றின் நிரையை எப்படியும் பின்னே
கூறுபடத் தாக்கவெனக் கொண்டுவரு வோர்கள்
நாறுபட நாறுபடத் தாம்வரிசை யுற்றே சாறுபடப் பின்னிருந்து தாக்குதல் செய்தார்கள்
158
O
I

கந்தகமும் ஐந்துபொருள் காரமொடு சேர்த்த வெந்தழலை எத்திசையும் வீசியெறி கின்றார் வெந்தன களிற்றுநிரை வேகமுற ஒடி சிந்தின குலைத்தன திருத்திய வியூகம்
ps us களிற்றுவரி உண்ணிரையுடைத்து நாடியவர் யாவரெனினும்வர நசித்துச் சாடின மிதித்தனதம் பாகரையும் தாமே தேடின எதிர்த்தவரைச் செங்கணனல் கக்க
ஒழுங்குறு வியூகமுனை உட்படையு டைத்து விழும் பொழுது வேகமுறத் தங்குதிரை ஏவி இளம் குமரர் தாக்குகென ஏவிய இராமன் களங்கடை யிருந்துகளி றோடுவன கண்டான்
சிந்திய களிற்றுநிரை சென்றதிசை பாரா உந்திவரும் தம்மிடையும் என்றுதணிவுற்று பந்திகளின் முன்னிரையிற் தீவரம்பு பற்றி வந்தன திரும்பியிட வைத்தனர் நெருப்பே
நண்பகல் முதிர்ந்து கதிர் மேற்றிசையை நாட எண்பதொடு எண்பதெனும் எண்ணடுக்கும் வீரர் மண்பட விழுந்தனர்தம் மால்களிற்றி னாலே புண்படுவர் தம்படையைத் தாமழிப்ப தாலே
செய்வதறி யாததிகைக்கின்றமாப் பாணன் 4 தெய்வமினி விட்டவழி செய்வதெது வென்றே உய்வழியைச் சிங்கள உடன்பதியை நாட செய்வழி திருத்தியிடத் திட்டமிடு கின்றான்
நெருப்பொடு பொறிக்கனல் மிதித்திடினும் யானை வெருக்கொளு மெனத்தெரிவர் வீழ்விரகு செய்தார் நெருக்கிவரு கின்றபடை நின்றபடை மாய்க்கும் அருக்கினிடை வீழ்வதன்முன் அப்படையைக் காப்போம்
குந்தமுடை யோரணியைக் கூட்டியிரு கூறாய் அந்தமிரு பாலுமவர் உட்பட அமைத்தால் முந்திவரு கின்றபரி முன்னுற இயங்கும் வந்தபடை மீள்வதிலை வைத்ததை வளைப்போம்
159
2
I3
I4
IS
I6
17
I8
I9

Page 97
என்றவன் இயம்புதலும் ஈட்டியெடு வீரர் சென்றனர் வளைந்திரு திசைப்பட நிரைத்து வென்றுவரும் பாய்பரிகள் முன்னுற விரைந்த கொன்றுவரும் அம்முனை குலைந்தது கணத்தில்
m 2O சூழ்ந்துவரும் ஈட்டியர் தொடர்ந்தநெடும் போரில் வீழ்ந்தவர்கள் ஆயிரம் இருந்தவர் விரைந்து போழ்ந்தனர் பரிப்படை புகுந்தனருள் ளுடே தாழ்ந்தவர்கள் போலமுனை சந்தித்து நின்றார்
2. சென்ற குதிரைப்படையின் செங்குந்தராலே ஒன்றிவளைக் கின்றதை உடற்றின னிராமன் நின்ற நிரைத் தேர்ப்படையை நேர்ப்பட விடுத்தான் மின்றரு கணத்தினில் விலக்கின னவ்வேலி
22 நாப்பணுறு வாவுபரி நாற்றிசையும் தாக்கும் காப்பன களிற்றுநிரை தன்னிலை கலைந்து தீப்பொறிக ளாற்குலையச் சேதமுறு வோரின் மீப்பரிகள் தாமுகள்வ வெற்றிவெறி யாலே
23 சற்றுமெதிர்ப் பில்லையெனத் தாவியவர் மேலும் வெற்றியுடன் வெற்றிபெற மேலைமலை வெய்யோன் நிற்றலிலன் செங்கடலில் நீந்திவிழுகின்றான் முற்றியது போரென முழங்கியது சங்கு
24
Bibliog
இனிப்போர் இன்றொழிந்தோமென் றிருமருங்கும் பாசறையுட் தனிப்போயடங்கத் தரளமதி கீழ்முகட்டிற் சார்ந்தனனால் பனிப்போர் வையினுட் பார்மடந்தை படுகளத்தப் பிணமூடி முனைப்போரின் புலால் மறைத்தாள் முளைத்த மதிதண் முகங்காட்ட
25 மேலை அராலி வெளிதண்ணில் இராமனோடு பாசறையுள் சாலக் களைத்த தளபதிகள் சந்தித் திருந்து சாற்றுகின்றார் கோலக் கரிகள் குலைத்தவும் குதிரை ஏவிக் கொன்றதுவும் மூலப்பலத்தை முடித்ததுவும் மெச்சி மெச்சி மொழிகின்றார்
26
160

நேற்றுக் கொடுத்த உயிர்ப்பலிக்கு நெஞ்சம் நிறைந்த வென்றிகண்டோம் வேற்றுப்படையார் வென்றிட்டார் என்ற சேதி மக்களுள்ளே நாற்றுக்கொருவர் தவிர்ந்தனைவோர் நொந்தார் நம்மை வந்தடைந்தார் கூற்றுக் கினிமேல் விருந்தளிப்போம் கூலிப்படையின் திரளெல்லாம்
27 மணிக்கால் முத்தின் கதிர்தெறிக்கும் மன்னர் கோயில் மண்டபத்தே அணிக்கால் கழலார் அதிபதிகள் மாப்பாணருடன் சிங்களத்தார் பணைக்காற் களிற்றுப் பந்தியினார் பலருங் கூடிப்பட்டதோல்வி பிணக்கா டெனவே வளர்ந்ததெனப் பின்னே நடப்ப சிந்தித்தார்
28 நடிப்பார் பலரும் நம்மிடையில் நாள்நாள் மலிந்தார் 2ளனுடனே குடிப்பாரல்லால் சிந்தையெலாம் குடிபோய் மாற்றார் வசமடைந்தார் எடுப்பார் வாளைக் கூலியினுக் கிவர்போல் கோடி இங்கிருந்தால் கொடுப்பார் வெற்றி அவருக்கே கூற்றும் இங்கே குடிகொண்டான்
29 மனுப்புலிப் போர்த்தளபதியார் மறைந்து போன மாயமென்ன தனிப்போ யிருந்தார் சடுதியிலே மறைந்தார் மாற்றார் கொண்டாரென் றினிப்போய்க் கூறுவ ரிங்குள்ளார் ஏது சொல்வோம் இது நகையே இனிப்பார் போல் இங்குள்ளார் உள்ளறுப்பார் விடமன்றோ
30
தீமிதித்த களிறுபல சென்று நாட்டில்தெருவழியே தாமிதிக்கும் கண்டாரை தையலாரும் தலைவிரித்தார் நாமிதற்குக் கண்மூடில் நட்டாரும் நம் பகைவராவர் ஆமென் பார்தம் நட்பினிலும் பகைவேறொன்றை அறிவீரோ
3I.
தென்னிலங்கைக் காவலனின் செல்வ மைந்தன் சினந்து சொல்வான் கன்னிதன்னைக் கடிமணத்தே கவர்ந்த அந்தக் கயவரையான் சென்னி மீது கல்லெடுத்துத் தென்கோட்டைப் புரந்தனுக்கு வன்னி வழியே நடப்பித்து வடிப்பேன் வள்ளல் சிலையொன்றை
32 இழந்தோம் இன்று பலகோடி ஈடு செய்யத் தென்னிலங்கை வளந்தோய் மன்னன் தமக்கோலை கடிதில் வரைந்து தாதருக்கே தளர்ந்தோ மென்றே சற்றேனும் காட்டா தெங்கள் தந்திரத்தால் முழுந்தாட் படியில் மாற்றாரைக் கொணர்ந்து வெற்றி முழக்குவேனே
33 மன்னர் மணிமண்டபத் தினிலே சூழ்ச்சி தேரும் பொழுதுமக்கள் இன்னந் தயிலார் எடுத்தவென்றி தங்கள் தங்கள் என்பதுபோல் முன்னே வீட்டுத் தலைவாசல் மூடி முகிழ்த்து முகங்காட்டி பன்னும் மொழிகள் பலவின்றி பயின்றார் கண்ணின் மொழியாலே
34 16

Page 98
அடுத்த வீட்டார் செய்குற்றம் அனைத்தும் காணார் பகைநீங்கி கொடுத்த கடனும் திருப்பிக்கேட் கில்லார் குளிர்ந்த மொழிபகள்வார் தொடுத்த கன்றும் பாலூட்டக் காணார் சோறும் பதந்தப்பி வடித்தும் விடார்தம் வாயிலுறும் வென்றி மொழியே வளர்க்கின்றார்
35 தோள்கள் வளர்ந்த உயர்ந்தனபோல் தொட்டுப் பார்ப்பார் முதியோரும் நாள்கள் திதிகள் நயந்தரைப்பார் சோதிடர்கள் நல்லூர்மண் தாள்கள் எடுத்துக் கண்ணொற்றித் ததிப்பார் தோன்றும் சுதந்திரத்தின் தாள்கள் தொழுவார் தாமிழந்த தனித்தெய்வம்வந் ததித்ததேபோல்
36 உண்டி மறந்தாள் ஊட்டும்பைங் கிளியை உடன்மறந்தாள் கால் தண்டை மறந்தாள் தளிர்க்கரத்தின் சங்கு வளையல் தனைமறந்தாள் கொண்டற் குழலின் மலர்மறந்தாள் கோடும்புருவ மைமறந்தாள் கொண்ட மனத்திற் கோயில்கொள் மனுப்புலியாரை மறவாதாள்
37 நெங்சு கரைந்து நினைந்தழுவாள் நீலந் தறந்த நெடுங்கண்ணாம் மஞ்சு பொழிந்த மழைநீரில் நனைவாள் மணாளன் இல்லா விதவையாம் மஞ்சம் நனைப்பாள் தோழியரை மறந்தாள் சேதிக் காய்வேண்டி கெஞ்சிக் குழைவாள் எண்செய்வாள் கிளையுதிர்ந்த மலரன்னாள்
38 தேடிக் கொணர்ந்த களிறெல்லாம் தின்னுங் கரும்பால் மகிழ்வித்து முடிப் பந்தி களிலிட்டார் மொய்த்தார் பாகள் முழுநிசியில் கூடிப் பெரிதும் சிந்தித்தார் கொழுத்தும் தீயின் வெருள்வடங்கி நாடிக் களத்தே யுய்ப்பதற்கு நாள்கள் வேண்டும் சிலவென்றார்
39 சூழ்ந்த அரச மணிமன்றில் தொடர்ந்த நிசியும் களம் வகுத்தார் போழ்ந்து அராலி முனைநோக்கிப் போகும் திகிரி வியூகங்கள் சூழ்ந்து சுழுலப் பரிப்படையும் அவர்பின் ஈட்டிப் படையினரும் தாழ்ந்து தேரும் பின்போகச் சார்வார் மழுவேல் தாக்குநரே
4Ο
நாளை நமது முனைநோக்கி நடத்தும் வீர்க் குணவின்றி வேளைப் பொழுதில் இரவிரவாய் வீதித் தடைகள் வகுத்திட்டால் தாளிற் பணிய வைத்திடலாம் சதியும் இதுவே சரியென்றார் ஆளுக்கொருவர் தளபதியர் அங்கங் கிதனைச் செய்வதென்றார்
4I இருநாள் இவரைப் பசியிட்டால் இலங்கைத் தம்பைக் களிற்றோடு வருமாம் படைகள் அவ்வளவும் வளர்க்கோம் வெற்றி அவருக்கே செருமா முனைக்குச் சக்கரமாய் செலுத்தம் அதுவே வழியென்றார் கருமா முகத்தக் களிற்றோடு காலா எரிழந்த நல்லூரார்
42 162

மறைக் காடிருந்த வருங்கலங்கள் மன்னார்க் கலங்கள் ஊர்காவற் றுறைக்கே சென்று தொகுத்த செந்நெல் சூழ்ந்து தடுத்தல் முடியாதாம் நிறைப்பார் வண்டி நிரைநிரையாய் நேற்றே மாத கல்வழியில் பறப்பா யினவாம் களத்திற்கே பாதி வழியில் பறித்திடுவோம்
43 வத்தி ராயன் கொடிகாமம் வயலார் தங்கள் அறுவடையில் கொத்தால் மரக்கால் கொடுத்தாராம் கொண்டு கோப்பாய்த் தெருவழியே இத்தால் இரவில் உடுவிலுக்கே ஏற்றுப் பொதியில் கொணர்வதெலாம் அத்தா னத்துக் காவலரால் அனைத்தம் நமக்கே பறித்திடுவோம்
44 கூறிக் கலைந்தார் மந்திரத்தார் கோழிக் குரலால் குளிரிரவைக் கீறிக் குதிரை பாய்ந்தசில கிழக்குக் கோய்ப்பாய் நெடுவழிக்கே சீறிக் கிளர்ந்த சிங்களத்தார் சென்றார் மேலை உடுவிலுக்கே ஆறித் தயின்றார் தளபதியார் அடுத்த நாளுக் கணிசெய்ய
45
ஊரும் வண்டி நிரையிரவில் ஒளியும் ஒலியும் இல்லாதே ஆரும் அறியார் கழுத்தினிலே அகற்றும் மணியும் அவிழ்த்ததினால் கூரும் இருட்டில் குளிர்ப்பணிக்கும் கொள்ளிச் சுருட்டும் கொளுத்தியிலர் பாரம் மிகுத்துச் சில்லெடுத்தம் பகரார் உரத்தக் கூவிளியே
46 இன்ன வாறு நெற்குவையும் எடுக்கும் உணவுச் சரக்குகளும் முன்னமேய களத்தருகில் மூடும் பூமிக் களஞ்சியத்தில் சொன்ன வாறு கொண்டுய்ப்பார் தரக்கும் பரியின் குளம்போசை பின்னே வருதல் கேட்டார் பெரிதும் தணுக்குற்றசைவில்லார்
47
செல்லும் வழியின் இருமருங்கும் சிறைத்து மிறைத்துப் பரவிமேலோர் நில்லும் எனப்போரிட்டார்கள் நிறுத்தி வண்டிக் காவலோர்கள் கொல்லும் மழுவால் கொடுவாளால் குதிரைக்கழுத்தைத் தணிப்பாராம் வல்லே பொருதார் சாரதிகள் வளர்த்தார் கடும்போர் வழிமருங்கே
48 மூக்கின் கயிற்றை அறுத்தோடும் மூசி இடிக்கும் முன்பரியை தாக்கும் காலால் எருதுசில தாமும் சுமக்கும் நெற்பாரம் போக்கும் அடிமை எனவுணர்ந்து பொருவார் போன்றார் நுகப்பாரம் நாக்கின் நுரையே வரப்பொறுத்தும் நாட்டின் பாரம் சுமந்தனவே
49 அச்சாணிதம்மை அகற்றிச்சில் அடித்த வீழ்த்திக் குடைசாய்த்தார் கைச்சா தனங்கள் கொடுபோரிற் கலந்தார் பயிலாச் சாரதியார் எச்சார் மருங்கும் தானியங்கள் இறைந்து சிந்த இறைபொறுக்கார் மைச்சார் இருளிற் போரிடுவார் வாளும் பரியுந் தருசமரில்
163
50

Page 99
வரணித் தனியூர் அருகுமுள்ளி வைத்த ஆயக் கடவைதனில் நிரையில் வண்டி வருமென்று நெடுவாள் குந்தம் ஏந்தியிரு கரையும் காத்தார் கடந்தநிசி காலைக்கோழி சிறையடிக்கும் வரையும் வாரா திருப்பதனால் மனத்தே ஐயம் வளர்த்திட்டார்
SI சேறும் சகதிச் சிறுவழியும் திடரும் உப்பு வெளிகடந்து ஆறும் அடுத்த தாழைகளும் ஆரும் அறியா வகைகடந்து நாறும் நிரைத்த இருமடங்கும் நுழைந்தார் கதலி நீர்வேலி சோறும் கொடுத்து முனைமருங்கில் தணிவும் கொடுப்பார் உழுவோரே
52
Bougg
உயிரைத் திரணம் எனமுன் கொண்டு உணவைக் களமுன் உய்த்திருங்கள்
மயிருக் கொருநாறெப்தம் வெற்றி மானத் தமிழீர் மறவிரென்றே
உயரக் கூரை முடிமேற் கோழி ஒருகால் வைத்துக் கொண்டை யுயர்த்தி
தயரக் கடல்போம் தணிவீ ரென்றே சொல்லிச் சொல்லிக் கூவும்பெடைமுன்
S3
Billigg
வாய் உடைந்தம் திறவாத மலரரும்பால் பெடையால் போயுறங்கும் இணைவண்டு புடைபெயர்ப்பால் புள்ளின் தாயுறக்கம் நீங்குதலால் தண்பனிநீர் சொட்டி விேயுறங்கும் நுனிமுத்தால் விடியல்வர வுணர்ந்தார்
54 மைநீக்கி வான்திரையில் மணிப்பவளத் தவரால் கைநீட்டிப் பொற்கோடு கதிரெழுத கங்குல் பைநீட்டித் தாரகையாம் பனிமுத்தைச் சேர்க்க செய்நோக்கும் உழவருக்குச் செம்முகமாம் கிழக்கே
S5 கடையாமச் சங்கொலிக்கக் கண்விழியார் மதரவின் புட்ையேறும் சிவப்பொழியார் புரண்டிருப்பார் அணையில் நடையேறும் பரிவீர் நாட்பிறத்தல் முனிந்தார் படையேறும் களமேறப் பாதிமனம் கொண்டார்
56 வெற்றிமணம் மூதார விழுந்தணையிற் காதல் ஒற்றிமுலை மார் ஞெமுங்க ஒன்றிணைந்த மாதர் இற்றைவரை இன்மொழியும் முத்தமுமாய்ப் பகிர்ந்தார் சற்றருகு துயில் கொள்ளச் சங்கொலிவந் தெழுப்பும்
S 164 ך

பொழுதோடு நீராடிப் புனிதராய்க் கோவில் தொழுதார்கள் தண்புற்றார் விடுதலைக்கே வெற்றி முழுதாக என்றிறைவன் முன்விழுந்து கூப்பி அழுதார்கள் அடிமையிலே அடிபட்ட தழும்போர்
மூண்நாம் நாட்போர்
கரியின்நிரை பரியின்நிரை காலாள் விரையும்கட லலையென்றிட விடிவில் கரையும் விரி கதிரின்ஒளி தொடுவான் நிரையில்பல நிறசித்திரம் வரையும்
எட்டுப்படு கோணத்தொடும் இடையில் வட்டம்பட நிரைசெய்தனன் வளைவாய் கொட்டுந்தடி சங்கின்குரல் கூடி எட்டுத்திசை எழுகின்றது நல்லூர்
செல்லுந்தலை சேனாதியன் ஊர கொல்லுங்கணை வில்லாதிபர் கூடி மல்லின்புய வாளேந்துவர் அருகே வெல்லும்படி சுவர் செய்தனர் விடியல்
நந்திக் கொடி வானேறிட நடுவில் பந்திக்கரி முக்கோணிடப் பாதி இந்துப்பிறை வடிவாக்கிய இடையில் முந்தித்திரி தேர்செல்வன முடியா
இராமன்முதல் அணியிற்றலை எய்த அராவும் ந தி வேலின்படை அருகே உராயும் நதிக் குந்தப்படை உடனாய் அராலிப்பதி குணபால்வரை அடையும்
Bibligg
அடுக்கிய குதிரையின் அணிகளின் முன்னே விடுத்தனன் வாளினர் விரைவினில் தாக்கும் நொடிப்படை யாளரை நுழைந்தமுன் னேறும் இடிப்படை சிலரையும் இவருடன் சேர்த்தே
165
58

Page 100
சிங்களத் தளபதி மார்கடாம் தேர்ந்த
பொங்கனற் படையினைப் பொருத்தினர் அருகே
சிங்கமும் புலிகளும் சீறிடும் காடு எங்கணும் போலவே எதிரெதிர் நின்றார்
அடிமையை நீக்கிட அடுகளம் உயிரை விடுகுவம் என்றுகள் விடுத்தவர் மைந்தர் நெடுநிரை நின்றனர் நெஞ்சினிற் கவசம் இடுவதும் சுமையென எண்ணினார் எதிரே
சுழன்றன வாட்படை கல்படு மேகம் அழன்றிடு மின்னென அனலனல் பொறிக்கும் கழன்றன தலைகளும் கரங்களும் தோளும் உழன்றன குதிரைகள் ஒருங்கு சாயவே
குந்தமும் ஈட்டியும் குதிரை குற்றியே அந்தரம் நிமிர்ந்தன அடுக்கினில் நிற்றல் அந்தியிற் கதிரவன் விரித்தன அம்பொன் சிந்தியகிரணமே சிவந்தன போலும்
முடுக்கிய தேர்முடி முறிந்த சாயவும் அடுக்கிய குதிரைகள் அவனி வீழவும் தடுக்கினர் சுதந்தரர் தள்ளினர் சூழ்ந்து நடுக்களம் புகுந்தனர் நமனையும் எதிர்ப்பார்
ஏறியே முன்செலும் இளைஞரின் பின்னே தேறிய பரிப்படை செலுத்தினார் பக்கம் நாறெனுந் தேர்களும் நுனித்தவேற் படையார் வீறொடு வீங்குதோள் உந்திட முன்னே
மதிப்பிறை வளைவினில் மத்தியில் ஏறும் ததிப்படை நோக்கிய சேனாதிச் சூரன் சதிப்பவன் சடுதியில் தளர்ந்தனன் போலப் புதுப்பலம்திரட்டினன் புலியெனச் சீறி
உள்வர விடுத்தனன் உடைந்தசெல் வர்போல் கொள்வலி வாளினர் கூட்டிய சிலரைக் கள்வரிற் பின்னணி கொணர்ந்தனன் பக்கம் கொள்வரை வளைத்திடக் குறிகளும் காட்டி
166
O
II.
I2
I3
I4

முன்னணி ஏறினர் முன்முனாய்ச் சென்று இன்னமும் உட்செல இருமருங் கிருந்தும் சொன்னவம் முறைப்படி சூழ்ந்துசென் றிட்டார் பின்னுடைந் தவர்களும் பிறைவளை வானார்
நாற்புறத் தினில் தமை நன்குசுற்றிடுதல் வேற்படை இளைஞரும் விரகெனக் கண்டார் தோற்பதைக் காட்டிலும் தொடர்ந்துமுன் சென்று ஏற்பத சாவினை எனமணங் கொண்டார்
எலியினம் கோடியாய் எழுந்துவந் தரவைப் பலிகொள எண்ணுதல் பகடியாம் கூலி விலைகொளப் பொருபவர் விடுதலை வேண்டும் தலையினை எழுப்பினார் போவரோ தப்பி
வட்டமா கியவியூ கத்தினை வரைந்து எட்டுமா திசைகளும் எதிரெதிர் பிரிந்து திட்டமாகியபடி சினங்கொடு விரைந்து வெட்டுவார் சூழ்பவர் வேலிகொள்ளாதே
உருளுகின் றணதலை ஒழிந்ததோள் தடிப்ப சுருளுகின்றனபரி சுமந்தவர் வீழ புரளுகின்றனவுடல் புழுதிப்பா யற்கண் அருளுகின்றனர் புறங் கொடுத்தவர்க் காவி
தொகைசிறி தாயினும் தடிக்கும் உள் ளத்தால் மிகைபெறு வலியினர் விரைந்தனர் போரில் பகைபெற முன்னிடம் நிற்கிலார் பயந்த நகையுற நடுங்கினர் உடைந்தனர் நடுவே
Bബg
நடுவுடைந்தகல் படைவராவகை இடைபுகுந்தனர் இளைஞர் ஏறெனப்
புடைபரந்தனர் புகுந்திடா வகை படைநெருங்கினர் பதைபதைக்கவே
167
I5
I6
I7
8
I9
20
2I

Page 101
சூழ்ந்து கோலிய வேலி சுக்குறப் போழ்ந்து வெட்டிய போது பூமியில் வீழந்து வீரரின் குருதி ஆற்றினில் ஆழ்ந்து போயினர் தாழ்ந்து போகிலார்
ஈத கண்டசே னாதி எஞ்சிய பாதி வீரரைப் பக்க முற்றிடச் சேதி சொல்லினன் திகிரி யாயணி மோத முற்றினன் முனைவகுத்தனன்
புதிய போரணி எதிர்பு குந்தத கதிக லங்கிடக் கனலெழுந்திட எதிரடைந்தவர் எமனடைந்திட அதிர டிப்படை யாக மாறினார்
இடமருங்கினில் எழுந்த சிங்களப் படைமருங்கினிற் பாதி வந்தது அடைவதன்முனம் அதனை முன்முகத் தடைகொடுத்தனர் தருண மாகவே
சிரமறுந்தன சிலையொடிந்தன கரமறுந்தன கண்ட தண்டமும் நரமலைக்குவையாக நண்ணிட அரையுயிர்க்குறை அவைதடித்தன
உதிரம் பீறிய உடல்களின் குறை எதிரெழுந்துமலை யெனவுயர்ந்தன அதிரவந்தபடை அணியின் கேடயம் உதிரத் தாக்கினர் குதிரை வீரரே
வெட்டு மின்னலும் வீழும் தோள்களும் முட்டும் தேர்களும் முரிகொடிஞ்சியும் விட்ட வேல்நுனி வீழ்த்தும் மார்பொடு பட்ட செந்தலை பதை பந்ைததே
அலையின் செங்குருதி ஆறும் வெட்டிய தலைகளின் குவையும் சரியும் தோள்களின் மலைகளும் குவையு மன்றி மற்றெவர் நிலையில் வென்றவர் என்றல் நேர்கிலார்
168
22
23
24
25
26
ך2
28
29

இப்படிப்பொழுதேழு நாழிகை எப்புறங்களிலும் ஏறு போரினில் முப்புறங்களிலும் முழுதும் வெற்றியுடன் தப்பி மீண்டனர் தாயை மீட்பவர்
இமையெடுத்திலன் இராமநாதனும் சுமையெடுத்த மனம் தள்ளி மேலெழுத் தமையெடுத்தவரைச் சங்கு பொங்கவென அமையும் ஆணையை அருகு சாற்றினான்
ஊது சங்குகள் உலகளந்தன மோது பேரிகை விண்ணை முட்டின காத டைத்தத களமுடிந்ததினிப் போதும் போதுமெனப் பொழுது செப்பினார்
Elgg
பொற்கரத்தால் போர்க்களத்தின் குருதி யஸ்ளி நற்கனிந்த முழுநீலத் தெறிவான் ஞாலம் கற்கவொரு பாடமெனக் காலா காலம் அற்புதங்கள் கண்டிட்ட அருக்க தேவன்
சிங்களத்தின் தென்னகத்துச் சேனை வீரன் பங்கமுறப் படுகளத்தில் வீழந்த சேதி எங்கணு மே எட்டுதலும்எழுந்தார் தம்பைச் சிங்கமெனும் போர் வீரர் சினத்தின் மூழ்கி
கொன்றவரின் குடல்மாலை கழுத்தி லிட்டு வென்றுவரும் அவ்வளவும் விழிகள் மூடோம் சென்றுவரும் தாதருக்குச் சிங்க வேந்தன் என்றுவரும் கரிப்படையென் றியம்பினானோ
வாளிருந்தென் வில்லிருந்தென் வடித்த தாணி தோளிருந்தென் சுற்றிவரும் தேரிருந்தென் ஆளிருந்தும் அடுத்திருப்பார் சதித்தால் கோடி வேளிருந்தும் வெற்றிபெற விதிவ ராதே
169
30
3I
32
33
34
35
36

Page 102
பரநிருபன் குமரர்களைப் பாய்ந்து கொய்த சிரமிரண்டும'தம்பதெனி சென்றா லன்றி கரமிரண்டும் நாம் கொண்டு கடுகலாமோ புரமிரண்டும் ஒன்றாளும் புகழென் னாமோ
நல்லூரின் படைத்தலைவர் நயமாய்த் தங்கள் சொல்லாடும் கலையினாற் றுடிக்கும் சிங்க வில்லாளர் தமக்குறுதி விளக்கிக் காட்டி எல்லாரும் பாசறைக்கே ஏக என்றார்
தென்னகத்தான் தலைகளத்துச் சிதைந்த சேதி மின்னகத்துப் பாய்ந்ததென வீதி செல்லப் புன்னகைத்தார் புளகமிட்டார் வெற்றிமாலை தன்னகத்தார் தமிழகத்தில் தளைபூண் டோரே
நம்பிக்கை இழந்தவரும் நாடிச் சென்று தம்பிக்கைப் பிள்ளைக்குத் ததிகள் பாட தம்பிக்குத் தரைபுரண்டு சரணம் சொன்னார் கம்பித்துக் கண்ணிரும் மலருமிட்டார்
மாதரார்தம் மனைவிளக்கில் என்று மில்லாச் சோதியென ஒளி தோன்றும் சுடர்மு கத்தால் ஹீதியையே வெளிச்சமிடும் மென்மைப் பெண்கள் பாதியையே மனங்காட்டி மறைத்தார் பாதி
பாசறையுட் புகுந்தவர்கள் பலவாறாக பேசியொரு போர்முறையை வகுத்தப் பின்னே நாசமுற எதிரிபடை நலிந்து போகப் போசனத்தைத் தடுப்பதற்குப் புதித சொன்னார்
மறைக்காடு முத்தப்பேட்டை மன்னார் என்னும் தறைக்கேகி வருகலங்கள் சோற்று நெல்லும் குறைக்காத சம்பாவும் கொண்டு சேர்த்தார் நிறைக்காமல் வயிறிருந்தால் நெடும்போராமோ
குறுக்கோடி நங்கலங்கள் கொண்டு நெல்லை பறிக்கோமேல் வளர்ந்திடுவார் படுகளத்தில் வெறிக்கோடும் யானைபல வெல்லா வெம்போர் நிறைக்காத நெல்மரக்கால் வெல்லு மன்றோ
17O
37
38
39
40
4I
42
43
44

வடகடலில் செல்லுகநம் கலங்கள் யாவும் படகுகளும் கச்சாயை நீங்கிப் பண்ணைக் குடகடலில் நின்றிடுக குறுக்கே நின்று அடுகளமும் சமுத்திரமே ஆக நாளை
இவ்வாறு தளபதிகள் இணைந்து பேசி , அவ்வாறே ஆங்காங்கே ஒலை போக்கி தெவ்வாரும் திறந்தகடற் செருமு னைப்போர் எவ்வாறு வகுப்பதென எண்ணு கின்றார்
நான்காம் நாட்போர்
எழுதரிய இந்திரத்த முழுநீலக் கடலில் பொழுதென்பான் பொன்னுருண்டை யாயுதிக்கப் புவனம் தொழுதெழுவார் மயிலூர்ந்த தோற்றமிது முருகன் முழுதெறிக்கும் கதிர்ச்சோதி முகமேயென் பார்கள்
அடிவானத் தார்ந்துவரும் அடித்தலையில் பாய்கள் கடிவாள மடங்காத கவனபரி நிரையாய் விடிவான பொற்றிரையின் பின்னணியில் விளங்கத் தொடுவானம் பொன்கரைக்கச் சோதியிது என்னே
பருத்தித்து றைக்கடலில் பாய்விரித்துக் கலங்கள் திருத்தமுறு நிரையாகிச் செல்கின்ற கோலம் விரித்தபாய்க் காங்கேயன் மீண்படகு நின்றார் நெரித்தவிழி விருந்தெண்ன நேரொளியில் கண்டார்
ஊர்காவற்றுறைக் கடலில் ஊர்ந்த நிரைக் கலங்கள் போர்காவற் கரைப்பிறையாய்ப் புறமிரண்டும் வளைந்து நேர்பார்த்து நின்றவணி நீல்கடலிற் கண்டோர் சீர்பார்த்த அழுகுகண்டார் செருக்களத்தம் சிறிதே
பாயாகும் கவசமிடு மரக்கலங்கள் நிமிர்ந்து ஓயாது எழுந்துவிழும் அலைப்புரவி ஊர்ந்து சாயாத கம்பமெனும் மலைநிமிர்த்திச் சமரில் வேயாத கோட்டையென வெளிக்கடலில் நின்ற
71
45
46

Page 103
நேற்றிரண களம்விழுந்த நிணந்தாக்கும் கழுகும் சேற்றுதிரம் அளைந்த சிறைச் செங்காக்கையினமும் கூற்றுவனின் தோழரெனக் குடியிருந்த பருந்தும் காற்றெதிரக் கைச்சிறைஓய்ந் தண்கலத்தில் அமரும்
தவழ்ந்ததிரு மண்ணினையாம் தளையறுத்து மீட்போம் கவிழ்ந்தமுகம் நிமிர்ந்திடஇக் கலப்போரை வென்று அவிழ்ந்தகொடி நல்லூரின் மீதுயர்த்தி அல்லால் அகழ்ந்து கடல்மீனெடுக்கோம் அவ்வளவும் என்றார்
காங்கேசன் தறைக்கலங்கள் காரைநகர் செல்ல பாங்கோடி மயிலிட்டிப் படகுகள்பின் போகும் நீங்காமல் மாதகலார் கட்டுமரம் நிரைக்க ஆங்காங்கே கடல்நடுவில் அமைந்ததுபோர்க் களமே
அன்னவுருப் படகுதன தாயிரங்கால் ஆன கன்னமுறு தடுப்புகளால் கடல்நடக்கும் மிதந்த சின்னமுறு கொடிபறக்கச் சிங்கமுக நாவாய் மின்னுமலைக் கடல்பாய்ந்து மிதந்துவரும் அருகே
ஓங்குமரம் விரித்தனபாய் விடியலுறு பொன்னால் ஆங்குமரக் கலமோபல் லடுக்குமாளிகையோ வீங்குமலைக் கோட்டையோ விரிகடலில் என்னத் தாங்கிவரும் தாய்மண்ணின் தளையவிழ்ப்பார் தம்மை
விட்டெழுந்த சுறாவினங்கள் விளையாடும் பிரியா(து) இட்டபடி வலைகிடக்க எழுந்தனநண் டினங்கள் கட்டுமரம் மீன்பிடியா கலம்வலையை எடுக்கா கொட்டுமுர சறைபோர்க்குக் குவிந்தனநீள் கடலில்
ஈனமுற அடிமைவாழ் வினிப்பொறுக்கோம் தாயின் மானமறப் பயந்தொளித்து வாழ்வதினி விடுவோம் ஆனவரை போர்முகத்தில் அமர்முடிப்போம் எல்லா மீனவரும் கட்டுமரம் மேல்கடலில் விட்டார்
கடல்நடுவே களமமைத்துக் கலங்கணிரை யாக அடல்நெடுவேற் படைவீரர் அராலியிரு மருங்கும் உடல்நடுவார் மனிதகுல வேலியென உயிரை விடல்நமது கடமையென வேலேற்க நிற்பார்
172
O
II.
2
I3

Eligi
கொட்டு கின்றன முரசினம், கூவுகின்றன சங்கினம் எட்டு கின்றது வானிடை எதிரெதிர்த்தவர் பேரிகை வெட்டு கின்றது மின்னலாய் வேலெழுந்தன விண்பொறி முட்டு கின்றன தேர்களும் முன்துகட் படல்மூடவே
Billig
தென்னிலங்கையின் சிங்க மொன்றினைச் செற்றவர் தன்னுயிர்கொடு தப்பி ஏகுதல் சாலுமோ முன்னிரைப்படு சேனை முற்றுமெம் வெஞ்சினம் தன்னிரைப்படப் போதுமோவெனச் சாற்றினார்
சினமெழுந்துவிழி சிந்துகின்றசே னாதியன் முனமெழுந்துவர முரசெழுந்தது முன்னிரை தின வெழுந்துவரு தோளடங்குகிலர் சிங்கமாய் முனைநடந்தவர்கள் அடியெழுந்ததுகள் மூடவே
முரச பந்தமென முனைவகுத்தனர்முன் குதிரைகள் நிரைசிறந்தவென நிறுவி நாற்றிசைகள் தேர்களும் உரச நின்றன மின் ஒளிருங் குந்தநிரை ஓரமாய் வரிசை சென்றவர்கள் வாய்கடித்தனர் செங்கண்ணினார்
A இராம நாதனுடை தலைமை ஏகியவர் பின்னுறும் அராம டிந்தவியூகமாக அமைத்தனர் அராவி நெய்யுறும் அம்பு தாக்கியவர் அணிவர விராவி வெம்பரி வீரர் முன்னணி விடுத்தனர்
தோற்ற வெஞ்சினம் தாண்டி யுந்திட வேகமாய் மாற்றணிப்படை மீது பாய்ந்தனர் மண்ணிடை நாற்றடுக்கிய தலையுருண்டன நொடிபிளந்து ஆற்றுகின்றலர் அஞ்சுகின்றிலர் ஆயினும்
ஊடு வந்தவரை ஒற்றிவந்தவர்கள் உள்வர மூடு கின்றிலத முன்னுடைந்தமுனை, பரிகளும்
ஓடி யுட்புகுவ பின் தொடர்ந்தனர்கள் உடனுடன் மாடு நின்றவர்கள் குந்தர் மானிட மதிலென
173
I4
IS
I6
17
I8
I9
2Ο

Page 104
கண்டு சற்று மிளைத்திலன் முனைக் காவலன் தண்டு பட்டிடினும் சுற்றுநாக வளைப்பினுள் கொண்டு சிக்கிடுவர் கோப முற்றவர்கள் பின்வரும் தண்ட மிப்பொழுது தாமுணர்ந்திலர்கள் சரிசரி
கண்ணளந்த முடியாத மார்பினன் கைச்சரப் புண்ணளந்துமுடி யாத போரினன் சேகரன் மண்ணெனுந்தனத தாயை மீட்டிடுவஞ்சினன் தண்ணெணத் தரகத்திலேறித் தணித்தனன்
பக்க முற்றவர் பாதியாயினர் முன்னணி மிக்கு வந்தவர் வீழ்ந்துருண்டனர் மின்னிடக் கைக்கு வந்தவர் கண்ட மாயினர் முன்னுளோர் திக்கடைந்தனர் நிற்கிலாத திகைத்தனர்
கோவை யம்பதிக் குமரர் தம்மொடு குதிரைசேர் மாவையம்பதி மறவர் சூழ்ந்தனர், மட்டுவில் மேவு காளையர் விரைவில் வந்தனர் விடுகணை ஏவு கின்றனர் மாரிபெய்தென இடைவிடார்
தேர்கள் நேர்வர சிலைகள் சிந்தகணை சிரநடு வேர்கள் பட்டற வேகமுற்றுவரும் கேடய வார்கள் பட்டறவ வாள்பிடித்தகர முற்றசை நீர்கள் விட்டறுவ நாலு பக்கமுஞ் சிந்தவே
விட்ட தேரின்நடு வேகமுற்றுவரும் தேர்களும் முட்ட மூண்ட கனல் பொறியெழுந்திடுவ ஆணிகள் கட்ட றந்துவிழக் கடைசரிந்தனவும் வீழ்பிணத் திட்டி மாமலையில் மோதிநிற்பனவும் செல்கில
சண்ட மாருத வேகமாக முனை தாவினோர் கொண்டு மேலுற குதிரை செல்லுகில குந்தமும் விண்டு முன்னுற விரைய ஒர்வழி காணிலார் அண்டி வந்து நெருங்குகின்றனர் அணியணி
வந்து வந்து நெருங்கு வாட்படை வீரரால் உந்தி முன்செல ஊடு போகவழி யின்மையால் தந்தி ரத்தினில் இராம நாதனும் தன்படை முந்தி நின்றிலன் மூட எண்ணினண் பாம்பணி
174
2.
22
23
24
2S
26
27
28

பக்க மாணவியூக பாம்பணி வாலினை ஒக்க மூடுவ துள்ளிடைப்படு வார்களை சிக்க வைப்பதெனச் சிந்தை கொண்டவன் தேரொடு மிக்க காற்படையை ஒரமாய்முனை விட்டனன்
முன்னெதிர்த்தவர் முடிகள் சிந்தின முட்டினர் சின்ன பின்ன முறச் சிந்து செங்குருதி யலையிட பன்ன கத்துநிரை வால்வளைந்தது பக்கமாய் மின்னல் வேகமதில் மேலும் மேலுமுன் சென்றனர்
பார்த்திருந்த மாப்பாணன் பாய்பரி யாளரைச் சேர்த்திவர்களைத் திட்டமிட்டபடி முன்செலா(த) ஆர்த்தெதிர்ச்சுவர் கட்டியப்புறம் அவர்வரு நேர்த்தி சைக்கு நெடும் படையணி நிறுவினான்
இன்ன வாறிவர் இடைவளைந்திட அலைகடற் சொன்ன போரணி குழ்ந்தெதிர்த்தவகை நோக்குவாம் சின்ன மொடுபறை திசை பிளந்திடுவ ஓடியே முன்னும் முன்னுமென முட்டு போர்க்கலங்கள் கிட்டியே
Bugg
படிப்பவர் மிடுக்கொடு பறைக்குணி லடிக்க முடிப்பவர் இசைக்கொரு மொழிக்குரல் ஒலிக்க தடிப்பவர் மனத்தினிற் சுகப்படு மிசைக்குத் தடுப்புகள் நடப்பன தொலைப்படு கடற்கே
இறுக்கிய கயிற்றினை யிடைக்கிடை காற்று நெறுக்கிட முறுக்கிடும் நினைத்ததிசை பாய்கள் நெறிப்பட மறுப்பன நிரைப்படு துடுப்பால் குறிப்பட நடுத்துவர் கொடுங்கடல் முனைக்கே
நிறைத்தன மரக்கல நென்மணி கவிழ்க்கக்
குறித்தனர் கலங்களைக் குறுக்கிட மறித்துத் திறத்தொடு செலுத்துவர் திசைக்கதி கணித்து மறத்தவர் கனச்சிலை வளைத்திடுவர் ஊடே
175
29
3O
3. I
32
33
34
35

Page 105
வளைத்தன சிலைக்கரம் வடிக்கணை பொழிந்து தளைத்தனர் மரக்கலம் தணித்தனர்மேற் பாய்கள் தளத்திடை யிருந்தவர் தலைக்கெறிவர் ஈட்டி விழுத்தினர் மிகைப்பட இறுக்கிய கயிற்றை
துடுப்பினை வலிப்பவர் தோள்படமுன் அம்பு விடுப்பவர் விழுந்திட விட்டெறிவர் வேலை தடுப்பவர் தலைக்கெறிவர் சாய்ந்தனர் தளத்தே நொடிப்பொழுதில் நல்லூர் நனித்தளம் அடைந்தார்
பாய்ந்தவர் மேற்றள மிருந்தவரைப் பற்றி சாய்ந்திட வாள்கொடு சரித்தனர் சிரத்தை ஓய்ந்தன வலிப்பவர் தோளிணை ஒடிந்து தோய்ந்தன சோரியில் தடிப்பன கிடந்தே
Biblgg
குறித்தபடி குறுக்கோடி நெல் சுமந்த மரக்கலத்தை பறித்தநடுக் கடல்கவிழ்க்க மந்திரஞ்செய் நல்லூரார் வெறுத்துயிரை விடுதலைக்காய்க் கொடுத்தவரின் கலம்புரட்ட அறுத்தனர்பாய்க் கயிறுகளை அம்பிலக்கின் கலைவல்லார்
பிாய்கிழிந்து பக்கமுறு ப்லகைவிட அலைப்புரட்டில் தோய்கிறத மேற்றளமும் குழ்நீரில் கனமேறி ஒய்கிறது கதியிழந்து உவர்நீரை எடுத்திறைத்தும் தாய்கணகத் திருநாட்டின் தளையறுக்கச் சபதமுற்றார்
சுழியோடிச் சுற்றிவரு மரக்கலக்தைத் தளைக்க வென்று வழியோடிக் கீழ்புகுந்தார் மறிகடலில் மூழ்கினர் போல் குழியோடிப் பொருத்திடையே பிரித்தனர் பின் கொண்டமூச்சு வெளியோட நாசிவரை மிதந்தனர்தாய் விடுதலைக்கே
நெல்லேறும் கலங்கவிழும் நீந்திவரும் மீகாமன் மல்லேறும் பணியாளர் மணற்கரையைக் குறியிட்டார் வில்லேறும் நல்லூரார் விட்டகணை பட்டிடாமல் கல்லெறித் தலையொளித்தக் கட்டுமரம் கிட்டிடுவார்
176
36
37
38
39
40
4I
42

எடுத்தவினை முடித்தனமென் றிறுமாப்புக் கொள்வதன்முன் அடித்தளமும் நீர்நிறைய அதகண்டார் நல்லூரார் கொடுத்தனர்தம் செல்வவளம் குறையாது மிகுந்ததென எடுத்தளவின் மிகுபுகுமாம் ஏறகடல் நீர்வரையே
ஆழ்ந்தகலம் அலைக்கடலின் அடிசெல்ல அதுநீங்கிச் சூழ்ந்த சிறு நாவாய்கள் தணையாகக் கரைசேர்ந்தார் தாழ்ந்ததலை யினராகித் தளபதியார் முன்சென்று வீழ்ந்திறைஞ்சி மாற்றாரின் வீரதியாகஞ் சொன்னார்
Bibligrp
கட்டுமரம்மீளவருங் கலத்தில் இட்டுவரும் நெல்மணியை இழக்கா(த) ஒட்டிவரு வார்காவல் ஒச்சிக் கட்டிவரும் இமைகாக்கும் கண்போல்
கடல்விரிந்த பரப்பெல்லாம் கண்ணில் படல் விரித்த கட்டுமரப் பாய்கள் அடல் விரித்த மீனவரும் அடிமைப் படல் விடுக்கத் திரண்டிருந்தார் பாங்கே
இந்தவகை கடலின்போர் இருக்க முந்திவரும் விடுதலையார் முனையில் சிந்தவரு வார்தலைகள் செக்கர் அந்திவர அமரொழிசங் கூதம்
தத்தமத முகாஞ்சென்று தளபதிகள் தங்கள் சித்தமெத வெனத் தெரிந்து திறந்தபுயப் புண்கள் தைத்ததற்குத் தைலமிடச் சார்ந்தவரும் வேலின் குத்துமுனை கூர்படுக்கக் கொடுத்தவருமானார்
ஆயிரமோ சுக்கிரர்கள் அடிவானத் தென்று சேயிருக்கும் மரக்கலங்கள் சிமிட்டுவன விளக்கால் தாயிருக்கும் திருநாடு தளையறுக்க அலைமேல் போயிருப்பார் கண்போல் பொழுதுகணம் துயிலா
26990 177
43
44
45
46
47
48
49

Page 106
வாழைமடல் பிரித்தமது வழிந்தோடும் மண்ணில் தாழைமடல் பொன்னுதிர்க்குந் தமிழ்நாடு வேண்டி ஆழமறியாதகடல் அடிமணலும், கொம்பின் வேழமறியாதவழி வெங்காடுங் கண்டார்
ஐந்தாம் நாட்போர்
விக்கிரம சிங்கரொடு புவனேக வீரர் உக்கிர மடைந்தனர் உடன்முடிந்த போரில் தக்கபடி சரணடையச் செய்தில மெனக்கண் கக்குமணல் மின்பொறியர் காறியுமிழ்கின்றார்
மரக்கல மிழந்ததுவும் மலைத்லைய செந்நெல் கரைக்கடைய விட்டதுவும் கவலையென எண்ணார் திரைக்கடலின் மீனவரும் மக்களுமாய்ச் சேர்ந்து நிரைப்படுவர் நெஞ்சினை நிமிர்த்துதல் பொறுக்கார்
நீண்டுவரும் போரினில் நிற்பதரி தாகும் வேண்டுவன கொடுத்திடினும் வேற்றரசர் என்றே ஆண்டுவரும் எங்களையும் அவமதிக்கலானார் பூண்டோடு நமை யொழிக்கப் பொழுதுபார்த்துள்ளார்
EGGluggu
கூறிய மாற்றங் கேட்டுக் கொதித்தனர் அவையில் உள்ளார் சீறிய சிங்கம் பல்லும் செவ்விய நகமும் இன்றேல் ஆறிய பசுவும் வந்த அருகினிற் சேமங் கேட்கும் நாறெனப் படைகள் வேண்டாம் நிமர்த்திய நெஞ்சே நோன்மை
ஊதியம் வேண்டிப் போர்முன் உழைப்பவர் காசு வீரம் ஈதெம தன்னை மண்ணென்(று) இலட்சியத் தெழுந்த வீரப் பாதியு மாமோ மாற்றார் பலியிடத் தம்மைத்தந்து மோதிய போது முன்னே நின்று தான் பிடிக்க லாமோ
மாற்றவர் திறனைச் சொல்லல் மதிநலமன்று போருக் காற்றலு மன்று; போக, புரிவது சிந்திப்போமென்(று) ஏற்றன வகுக்கலானார் இனிக்கரிப்படையைத்தாண்டி மேற்றிசை நிறுத்திக் கொண்டு விரைபரி விடுவம் பின்னே
178
SO

முடித்திட வேண்டும் போரை மூவிரு தினங்கட் குள்ளே இடித்திடும் கொம்பன்யானை இருதினத் தெய்தும் இங்கே வடித்திடும் கணையும் வேலும் புதியன வந்து சேரும் எடுத்தது முடிக்க இன்னும் இருப்பதும் எமது வீரம்
Baling
மந்திரத்தர் மறைத்தனர் சூழ்ச்சிகள் சிந்தித் தேகினர் செல்வன தேறினர் புந்திக் கூரினர் போர்க்கலை வல்லுநர் அந்தி சாத்திய அந்த காரத்திலே
மேற்றிசைப்படு வீரரின் பாசறை நாற்றிசைக் கணும் நாட்டினர் காவலர் ஏற்றவாறே இயற்றினர் முன்னணி கூற்றி னுக்கு விருந்திடக் கூடுவார்
காலை மங்கையின் கன்னம் சிவந்தெனக் கோல ஞாயிறு குங்குமம் சிந்தினான் கால தேவன்றன் கண்றிறக் கின்றனன் ஞால நங்கை நடுங்கினள் அஞ்சுவாள்
கொம்பெ முந்தன கூவின பல்லியம் பம்பை பேரிகை பாசறை யின்முர(சு) அம்பரத் தெழுந் தார்த்தன வெங்கரி கொம்பு கூரிய கூடி நடந்தன
ஆறு கோணவியூக மமைத்தனர் வேறு வேறு நிரைத்தனர் வீரரை ஏற தேர்ப்படை இட்டனர் வெங்கரி கூறு பட்டுக் குலைந்துசெல் லாமலே
விண்ணெழுந்த விடைக்கொடி காற்றினில் மண்ணெழுந்த துகட்படை மத்தியில் கண்ணளந்த விருந்தெனக் கண்டனர் எண்ணிறந்தவர் ஈட்டிகள் நீட்டவே
179
O
I
2
I3

Page 107
எட்ட டுக்கியிராமனியற்றிய வட்ட மான வியூகத்தின் வாய்த்தலைக் கொட்டு தேளின் கொடுக்கெனக் கூர்முனை விட்ட மைத்தனன் வேந்தர் நடுங்கவே
Billig
குத்தி வீழ்த்தின யானை கோடுற மொத்த கின்றன மோத மாமலை ஒத்த கின்றன ஊன்று காலிடைச் செத்து வீழ்ந்தனர் சென்னி சுக்குற
நெற்றி யோடைகள் நீறு பட்டன அற்ற கொம்புகள் அடிகி டந்தன எற்றி யெற்றி எடுத்து வீரரைச் சுற்றி நாற்புறம் தவையல் செய்தன
தாங்கு கைகளைச் சுற்றி முட்டின தாங்கு மண்ணடித் தரை குழித்தன பாங்கி ருந்தவர் பாதி தாள்பட ஓங்கி வீசின உடல்கள் சிந்தின
குன்றின் உச்சியிற் கருங்கற் கூனிடை நின்று பெய்மழை நீரின் தாரையாய்ச் சென்று விற்கணை திரளு மத்தகத்(து) ஒன்று குத்தின கரிகள் ஓடவே
Bibligg
ஈட்டி கொண்டுசெவி இருபுறங்களிலும் தோட்டி போடுமிடம் தளைப டுத்தினர்முன் நீட்டு கின்றகரம் நெடிய வாளுருவி மாட்டி வீழ்த்தினர்கள் மண்ணில் துண்டுபட
தண்டு பட்டபனை சோரி பட்டதென கண்ட கண்டவிடம் கரியின் கையுருள்வ கொண்டு தேருருளக் குற்றி போடுவன மண்டை யோடுகளும் மத்த கங்களுமுன்
18O
I4
IS
I6
ך1
8
2O
2

மேலே முந்துசெலும் விடுதலைப்படைகள் கோலு வெஞ்சிலையின் கணைகள் கொண்டுகரி நாலு பக்கலிலும் தாக்கி நாசமுற வேலெ டுத்தபடை மேலும் மேலுமுறும்
Bigg
திரைக் கடற்புறம் திசைக்கு நின்றன மரக் கலங்களும் படகும் மாநிரை கரைக் கணித்தன காவல் செய்கலம் அரைக் கணத்தினில் அணியில் நின்றன
Bhill
வன்னி மாமகிபன் வாடை சென்றகலம் பின்ன தாகவரும் பெரிய நாயகியும் முன்ன தாகவரும் முதலிற் போனகலம் அன்ன நாயகியும் அருகு சென்றனையும்
காவலந்துறையிற் கட்டி நின்றகலம் ஒவி லாதுநெல் உடனிறக்கியது மேவி யத்திசையில் விரையும் நாயகிகள் தாவிச் சூழுவன சமர்தொ டக்கினமுன்
எரியும் எண்ணெயொடு மெழுகு சூடமுறு திரியும் கொண்டுவரும் திசையெ டுத்தவரும் பெரிய நாயகியும் பிடித்த வாளினரை உரிய நாழிகையில் உடன்சுமந்துவரும்
வடக டற்புரவி வள்ளம் நாறினொடு படகு நாலுபுறம் பக்கமுற்றுநெல் இடக ரைக்குவரும் இதனை முற்றுகையில் அடைக என்றுவரும் அணையும் நாயகி
நின்ற கட்டுமர நிரைகள் சுற்றி வரும் சென்று நாயகியைச் சூழும் திடுதிமென ஒன்று வாளினர்கள் உட்புகுந்தனர்கள் கொன்று சாய்த்தனர்கள் குடல்கள் பீறிடமுன்
181
22
23
24
2S
26
27
28

Page 108
பாய்ந்து கட்டுமரப் பால வீரர்களும் தோய்ந்த ஈட்டியினர் சுற்று வோர்உதிரம் ஆய்ந்த வாட்கலையின் அருமை யின்னதென தீய்ந்து மின்னலிட சென்னி வீழ்த்தினர்கள்
வெட்டு கின்றவொலி வீழு கின்றவொலி கட்டு கின்றன கலம் கவிழுகின்றவொலி எட்டி முட்டுவர் எதிரு கின்றவொலி கொட்டு கின்றகடற் குரலி ஒனும் பெரிது
சிந்து தீயினைமுன் செந்நெற் கப்பல்களில் பந்தம் செய்தெறியப் பற்று கின்றசுடர் அந்தி வாணமென அயலி ருந்த கலம் வெந்த போகும்புகை விண்ணில் மேகமென
மேற்றளத்தினில் வீழ்ந்த செங்குருதி ஊற்று நீல்கடலில் ஒழுகி வீழுவெழுங் காற்றிற் றிப்பிழம்பு கனக சோதிதர தோற்ற மென்னவித சூழ்ந்து செம்மையுற
கருகி வீழ்ந்தவரும் கடலிற் பாய்ந்தவரும் உருகு சூடமெழு குடலொளிர்ந்தவரும் 'அருகு நிற்கவிய லாதகன்றவரும் ஒருக ணப்பொழுதும் உயிர்த ரித்திலர்கள்
ஓடு கட்டுமரம் உடனிருந்த வர்கள் நாடு கின்றனர்கள் நண்ணு தீப்பொறியைப் போடு கின்றவர்கள் புகைய நாயகியில்
நீடு பாய்மரமும் நீறுபட்டுவிழ
Eblgg
இனிப்போதும் என்றடித்த முரசங் கேட்டும் முனைப்போரை விட்டொழியார், முழங்கு தீயால் தினப்போதம் நீண்டுபகல் இரவு தேறார்
மனப்போரும் ஓய்ந்திலதால் வஞ்சினத்தால்
182
29
30
3I.
32
33
34
3S

பெற்ற திரு மண்காக்கும் பிள்ளை வீரர் பற்றுறுமம் மண்மடியே பாயாய்த் தஞ்சி செற்றகரிக் கரக்குறையிற் சென்னி சேர்த்தார் கொற்றவனும் நல்லூரான் குளிர்ந்தான் கண்கள்
நெல்லேந்தும் மரக்கலங்கள் நெருப்பின் நாவைப் புல்லேந்தும் மலைபோர்த்த பூவாய்க் கண்டு புல்லார்ந்து புளகித்தான் போரின் வெற்றி நல்லூரான் தென்னவர்க்கு நன்றி சொன்னான்
மாப்பாணன் குதித்தெழுந்தான் மதவை வார்த்தான் தீப்பாய்ந்து நாயகிகள் தீர்ந்திட் டாலும் சாப்பாடு தடுத்ததினால் சரண மாவார் காப்பாளார் இழந்ததுவும் கவலையில்லை
பாடிமனை புகுந்திட்ட பதியிராமன் வாடிமுகம் கவிழ்ந்திட்டான் வாலிபர்கள் ஒடிமுனை உயிர்கொடுத்தும் உற்ற போரில் கூடிவரும் இழப்பெண்ணிக் குன்று கின்றான்
அன்றுபடும் தோல்வியினை ஆய்வ தற்கே ஒன்றுபடக் கூட்டினான் உடன்தோழர்கள் மன்றுபட மனம்சேர்த்தார் மதியும் சேர்த்தார் வென்றுவிடும் விதம்வகுத்தார் சிங்க மானார்
M விழுந்தனவே அவர்யானை விரைந்து நேற்று இழந்தனவும் இருநாற்றுக் கதிக மாகும் எழுந்துவர இனிவிடாமல் தடுத்தல் வேண்டும் ஒழிந்தனவும் உளவர்களால் ஒற்ற வேண்டும்
எனக்கூறி முடிவதன்முன் இருந்தோர் நாப்பண் வினைக்காவல் தனைமுடித்தவீரன் சொல்வான் சினக்காவற் கரியினங்கள் தென்னன் ஈந்தான் தினக்கோடும் எல்லைமுன்றிற் சேரு மிங்கே
வன்னிவழி வருவதென ஒற்றி னாலே முன்னமறிந் தோமிதனை முழுதும் உண்மை இன்னமுறங் கிடுவோமேல் எதிரி யார்கள் பின்னுமெழு மடங்காவார் பெரிதும் இன்னல்
183
36
37
38
39
40
4I
42
43

Page 109
ஆதலினால் பூநகரிக் கப்பால் காட்டில்
மோதவதே போர்நாலின் முறையாம் எங்கள் தாதுவர்போய் அம்முனையைத் தரித மாக்கி பாதைவழி யானைகளைப் படுக்க வேண்டும்
புரவிதனிற் தாதனுப்பிப் போன பின்னர் இரவுதணித் திருந்துபடை இயக்கம் ஆய்ந்து வரவிருக்கும் புதுவீரர் வலிமை யோர்ந்து நிரைவகுத்தான் அரைவடிவ நிலவுக் கீறாய்
மயிர்கொடுத்தால் இறந்துபடும் மானினம் போல் உயிர்கொடுக்கும் வீரர்களை ஒருங்கு சேர்த்தான் அயர்விடுத்தான் அழிவிருந்த உறுதி கொண்டான் வியர்விருந்தே வெற்றிவரும் வீரர்க் கென்றான்
முன்னிரையும் முடித்தோரும் அணிக ளாக்கிப் பின்னிரையும் புரவிகளும் பிடித்த குந்தர் மின்னிரையும் இடையாக்கி மிளிரும் வேலோர் வன்னிரைக்கும் வாணிரையைப் பின்னே வைத்தான்
இருந்ததிரு மண்ணைபீட்க எடுத்தபோரில் வருந்தநயர் விழுந்தறங்கும் வருத்தம் தாங்காள் கருந்துகிலாற் களம்போர்த்த கங்குல் மங்கை வருந்துபனித் தளிக்கண்ணாள் வான்சி வக்க
வீடேறி விடியல்சொல் வெற்றிச் சேவல் பீடேறிக் குரல் கொடுக்கா, பிணைந்து நின்ற பேடேறிச் சூடுயர்த்தா, பேதை யார்போல் கோடேறும் செவ்வானைக் குழைந்து கூவும்
ஆநாம் நாட்போர்
அலராத அரும்பிதழிற் பொழியுந் தேனும் மலராகிப் பிலிற்றுகின்ற மதவின் சொட்டும்
உலராத நுனிப்புல்லில் ஒளிரும் நீரும் புலரான மங்கைவிழி பூத்த நீராம்
184
44
45
46
47
48
49

நல்லூரான் நயனங்கள் திறந்தான் நேற்று வில்லாரும் கரியினமும் ஈட்டும் வெற்றி சொல்லாடிச் சுகித்திருந்தான் யானைக் கூட்டம் நில்லாதே வருமென்று நெஞ்சம் பூத்தான்
g
கடவு கின்றன சங்கினம்
கொட்டு கின்றன பல்லியம்
தாவுகின்றன பாய்பரி
சாடு கின்றன வெங்கரி
வாள்கள் மின்னிடும் வாணிலா
வார்ந்த தென்னையின் ஒலைபோல்
தாள்கள் சென்றன வானிடை
சுற்றி நாலுயுறங்களும்
பிள்ளை மாமதிக் கீறுபோல்
பின்னமைத்தவி யூகத்தில்
மள்ளர் ஆயிரம் கூட்டினான்
மான மைந்த னிராமனே
நேரெ திர்த்தசே னாதியன்
நீடு சக்கர மாக்கினான்
ஆரெ திர்த்தவர் என்றதோர்
ஆணவத்தினில் நோக்கினான்
சென்று தாதவர் காட்டிடைச்
சேனை வீரரைக் கண்டனர்
அன்று பூநகரிக் குறும்
ஆனை பற்றின சொல்லுவார்
தோளு யர்த்தினர் சோமனும்
தோழர் தங்களைக் கூவினான்
ஆளடுக்கினர் ஓர்கணம்
அணிய மைத்தனன் காட்டிடை
185

Page 110
Egg
காளைகள் எழுந்தனர் காடுகள் அதிர்ந்திட நீளொலிச் சங்குகள் ஊதினர் நேயரை மீளவுங் கூடுக மேல்கரைப் பாலென ஆளிரண் டாயிரர் அக்கணங் கூடினார்
எப்பணி சொல்லுக என்றனர் காளையர் கைப்படு வில்லினர் கட்டிய தாணியர் செப்பின செய்கையில் வார்ப்பவர், குருதிகள் கொப்பளிக் கின்றவர் கூற்றினை ஏற்பவர்
வரிசையில் வருவன கரிநிரை வழியினில் எரிதழல் மூட்டுக எங்கணும் காட்டிடை இரிதர யாரையும் ஒட்டுக இப்பணி சரிதரச் செய்திடிற் சமரெம தாகுமே
கேட்டனர் எழுந்தனர் கிளர்ந்தனர் எழுந்தழல் மூட்டினர் நாற்றிசை முழங்குறும் நாவினை நீட்டினன் அக்கினி நீண்டுயர் பைந்தரு 2ளட்டினன் தன்பசிக் கொருவிருந் தென்னவே
புள்ளின மான்களும் புலிகளும் மரைகளும் உள்ளமும் ஒன்றின உயிரினுக் கோடின பள்ளமும் புதர்களும் பாய்வன தாங்கிய குள்ளவெந் நரிகளும் குறைபடும் வாலின
குஞ்சொடு கிடந்தன கூட்டினில் அணைந்தன சஞ்சலிக் கின்றன தாயினம் தீவர மிஞ்சிய வலியில தாக்கவும் வேகுதற்(கு) அஞ்சின கெஞ்சின ஆணினைக் கடவியே
கலையினைத் தின்றன கடுமர வேரெனும் மலையினப் பாம்புகள் மண்டிய தீயினால் நிலைகுலைந் தார்வன நிற்பன பன்றிகள்
தலையினில் என்பதும் தாமுணர் கின்றில
86
O
II.
2
I3
I4
IS

செந்தளிர் தீவன, சிலையொடு சாய்வன பந்தியின் மரநிரை, பறப்பன புள்ளினம் வெந்தன வீழ்ந்தன வீசிய வெங்கனல் அந்தரத் தப்புறம் அமரருக் கெட்டின
கண்டியிற் கொம்பனும் தம்பையிற் கரிகளும் கொண்டுறும் வழியினிற் கூடிய வெவ்வனல் கண்டன பாகரைக் கைக்கொடு வீசின எண்டிசை சிதறின இரிவன காட்டினுள்
வெடித்தெழும் செந்தழல் வீசிமத் தகத்தற முடித்தலை ஓடைகள் மூண்டெரிப் பட்டதால் இடித்தன மரங்களை எற்றின பாகரை அடித்தன காலிடை அருகுறு வாரையே
காட்டுறும் கரிகளும் கண்டியர் கொம்பனும் கோட்டுயர் புகரனும் கூடியே ஓடின கேட்டது பிளிற்றொலி கிழக்கினிற் காவதம் மூட்டிய செவ்வனல் முன்வழி சூழவே
எடுத்த பல்லக்கினில் இருந்த கன்னியர்களுக்(கு) அடுத்துறும் புரவியர் ஆறுதல் கூறினார் தொடுத்தவெஞ் சரத்தொடு சுற்றினர் வில்லினர் விடுத்தனர் ஒற்றரை வேவுமுன் பார்க்கவே
Af சென்றவவ் வொற்றரும் திரும்பினர் சொல்லுவார் கன்றிய காட்டிடைக் காளையர் போரணி நின்றது நெருப்பிது மூட்டினார் இவர்களே என்றதும் சிங்களர் எழுந்தனர் சீறியே
கக்குவெங் கண்ணினர் கைப்படு வாரினர் ஒக்கவோர் அணியினர் ஓடிமுன் சென்றனர் அக்கமும் பக்கமும் அவர்களைக் காத்தனர் சிக்குற வைத்திடச் செய்தனர் சக்கரம்
மழுைத்துளி நிலத்திடை வந்தசிந் திடாவகை இழுத்தவாள் சுற்றுவார் எடுத்தபோர் முன்செலக் கழுத்துகள் வீழ்வன முன்னெதிர் காளையர் விழுத்தின தோளொடு விஞ்சுகின் றாரையே
187
I6
I7
8
I9
2O
2.
22
23

Page 111
Baugg
வெட்டிமின்னிடு வாள்களும்
வில்லெழுந்தன மாரியும்
கொட்டு கின்றன குருதியும்
குடல்பிளந்தன உடல்களும்
எட்டி வீழ்வன குதிரையும்
இடைசரிந்தவர் தோள்களும்
கட்ட றந்தக வந்தமும்
காட்டிலுற்ற தொர் காட்சியே
சிந்தி ஓடிய குருதியும்
தேகமோடிய வேர்வையும்
வந்த கூடின காட்டினில்
மருங்கு பாய்வன ஆற்றுடன்
பந்தியாமரக் கூட்டமும்
பார்சரிந்தன போலவே
கந்த றந்த கவந்தமாய்
காடு வந்து நிறைந்ததே
Billig
கரியிழந்தன பாகரும் காவல் வந்தவர் வீரரும் வரிசை தாக்கிய பேர்களும் மடிந்து வீழ்ந்தவர் வாள்கொடு
நிரை சமைத்தனர் நெஞ்சிலே நின்று வீர் மெரிந்ததால் அரச ருக்குறு போரென ஆர்விலத்தினர் தென்னவர்
ஏழு நாழிகை போரினில் ஏறி நின்றவர் செந்தமிழ் வாழு நாட்டினை மீட்டிட மாணமேயுயிர் என்றனர் மூளுகின்ற நெருப்பென முன்முன்ஏறிவெல் கின்றனர்
ஆளுகின்றவர் செய்திடும் அடிமை யால்மனம் கூணினார்
நேரு நிற்பவர் தேடுகின்றனர் நின்றபேரெதி ரில்லையே யாரு மில்லை எதிர்த்தவர் யானையும்கித றிக்கெடும் தேரு மில்லை யினிப்பொரச் செய்வ தென்னென ஓர்கிலார் போருமில்லை யெனப்படும் பொழுது வந்தது மாலையாய்
188
24
2S
26
27
28
29
3u

கரமிழந்து கிடப்பினும் காலினால் ஒரு வேலினை பொர விடுத்தனன் தம்பையிற் புகர் செலுத்திய பாகனே உரமடுக்கிய தோளினார் ஒன்று மாயுத மின்மையால் மரமெடுத்து மலைந்தனர் மானமுள்ளவத் தென்னவர்
Bougg
ஓலமிடும் புள்ளினத்தின் குரலடங்க ஒளிருகின்ற நீலநிற வானிழப்ப நெருப்பொளிரும் சிவப்பழுகின் கோலமுறும் அந்தியென நிலங்காட்டக் குளிர்ந்தகாற்றும் பாலையென அனல்வீச மாலைமகள் பதைத்திருந்தாள்
நரியெடுக்கா படுபிணத்தை நாள் முழுதும் பசித்திருந்தம் வரியெடுத்த புலியினமும் வாயெடுக்கா விருந்தயரப் பரியடுத்து வீழ்ந்தனவும் பாம்பினங்கள் வாய்திறந்து இரையெடுக்கா எழுந்தவனல் ஒளியினிலே இருந்து நோக்கும்
யானைநிரை சிதறியதும் எழுந்த போரில் பூநகரிச் சேனை நிரை வென்றதுவும் சிங்களத்துக் கன்னியர்கள் கானவழி சிவிகையினிற் கடந்துவர விடுத்ததுவும் ஆனதிரு முகத்தெழுதி அனுப்பினான் சோமநாதன்
வாள்பிளந்த புண்ணுறுத்தும் வலிமறந்தார் வேனுனியால் தோள்பிளந்த தயரறியார் வியர்வறியார் சுடுங்கனலின் தாள்பறந்த கொப்புளமும் தொட்டறியார் அடிமைபோகும் நாள்பிறந்த தெனக்களித்தார், நடுக்காட்டிற் பாடிவீட்டில்
இருகாத தாரமென எட்டுவனத் தெல்லை தோறும் வருகாவற் காளையரை நிறுத்தியயல் வரவுபார்க்க அருகாக ஒற்றரையும் அமைத்தனலில் வழிபார்த்து ஒருகாலும் காணாத உவப்பூரக் கண்ணயர்ந்தார்
வந்துவிடும் களிற்றுநிரை யெனவிருந்த வன்னியற்கு வெந்தழலால் அவைசிதறும் விரகுமாற்றம் பூநகரி
முந்திருந்த தளபதியார் முறையெழுதம் ஓலைதாக்கி வந்திருந்த பரிவீரன் வழங்கியதும் தணுக்கமுற்றான்
189
3 I
72
33
34
35

Page 112
ஏழாம் நாட் போர்
வேலை முகட்டில் சுழல்நெருபில் விளங்கும் கோளச் சினமுகத்தான் கோல நிறங்கள் சிதறிவிடும் குங்குமச்செங் கரங்கள் வீசி மூலைமுடுக்கின் மரச்சினைகள் முதகில் முலாமிட் டெழுதுகிறான் காலையென்னும் வாலிபனான் கனன்றெழுந்தான் கீழ்த்திரையில்
Bibligg
கரிகள் அடைந்தில எனினும் கணக்கில பரிகள் நிரைத்தன படையின் இடைப்படு வரிகள் தொறுங்கதிர் வாளினர் நின்றனர் எரிகள் சுழன்றிடு கண்கள் பொறித்தன
சிங்க மெனப்படு சீறிய சிங்களர் பொங்கிய கண்ணினர் போர்முக முன்னணி தங்கினர் சந்திர வட்ட வியூகமும் அங்கணி செய்தனர் அம்பினர் முன்னுற
வீர சுதந்திர வேக மெழுந்திடப் போரணி புக்கவர் நானென நானென நேரணி நின்றிட இராமன் எழுந்தனன் பாரெழு தாளிகள் பாசறை மூடிட
தேள்வடி வான வியூகமும் தேரொடு வாள்வடிவேலினர் வந்துபிறைப்படு நீள்வரி வேலியும் நிற்க அமைத்தனன் சூழ்வர முற்படு குதிரை தொடர்ந்தன
சங்கொலி கொம்பொலி யோடுசமர்ப்பறை எங்குமெழுந்திட இருபுற வீரரும் அங்கணு மிங்கணு மாக அசைந்தனர் தங்களுக் கிட்டன தளபதி மார்தர
வேக வனப்புலி போல விரைந்தெதிர் போகும் பரிப்படை புவியில் உருண்டிடப் பாகர் சரிந்திடப் பாதி முரிந்தன ஏகிய தேர்களும் இற்றன அச்சுடன்
190

சுற்றிய வாட்கரம் தோளொடு போய்ப்பறந்(து)
எற்றி விழுந்தன இடைமுரி தேரினில் பற்றிய கேடயம் வானிற் பறந்தன இற்றன தாணிகள் எழுந்தன முட்டின
எங்களின் மண்ணித என்றுமுன் சென்றவர் பொங்கிய வீர பொறிக் கனல் கண்விட திங்கள் வியூக நடுப்படை சென்றனர் தங்களின் பின்னணி சார்வன கண்டிலர்
காணக மீது கரிப்படை கொன்றது மாணவு ணர்வை மனத்தில் எரித்திடச் சேனை நடத்திய சிங்களர் தம்முயிர் ஏனினி என்றுமுன் னேறினர் கடிதே
சென்று புகுந்தவர் தேரணி பின்வரக் கொன்று குவித்தனர் கூடுவியூகம் வென்று பிரித்தனர் வீர சுதந்திரர் நின்று மடக்கினர் நீண்டது போரித
உயர்த்திய கேடயம் ஊடு பறக்கவும் வியர்க்குள மாகவும் வெட்டி விழுந்தவர் உயிர்க்குறை யானவர் ஓரொரு கையினர் மயிர்க்குறை யென்றுதம் முயிரை மதித்தனர்
ஏதெது கையிலிருந்தது கொண்டவர் மோதுவர் வீசுவர் மூச்சிருக் கும்வரை பாதியுயிர்ப்பவர் பாதவிரல் கொடு மீதி வலிக்குறை மீள உதைத்தனர்
வீர சேனாதியன் விட்ட கொடும்படை நேரணிதேளினை நெக்க வுடைத்தது சாரணி வாட்படை தம்மை எதிர்த்துச் சோர மடக்கினர் சுற்றி வளைத்தனர்
நான்கெனும் நாழிகை உக்கிர வெஞ்சமர் வான்கெழு தாசி மயங்க நடந்தத ஊன் கெழு தாசி உடற் குறை செம்மலை தான்ககனத்த வளர்ந்த தடுத்தத
191
LO
II
I2
13
14
IS

Page 113
பாலியர் தம்படை பட்டது கண்டதும் வாலுடை தேளை வளைத்திடு கட்டளை நாலு நொடிக்குள் நடந்தது இராமனும் மேலு மவர்க்குறு தணைகள் விடுத்தனன்
சந்திர வட்ட விளிம்பினர் சார்ந்துடன் தந்திர மாய்ப்புரித் தட்டென மாறினர் வந்து சுழன்றுட் படுத்தினர் வாலினை அந்தி வரும்வரை அமர் தொடர் கின்றது
வாள்படு கின்றது வந்த நெடும்படை தாள்படு கின்றத சுற்றி வளைத்தனர் நாள்படு கின்ற தெனும்பறை நாவொலி தேள்படு கின்றது சென்றவர் காதினில்
வீரசுதந்தர வெம்படை வாலிபர் பாரில் விழுந்தனர் பாயெனத் தாயென நேரில் உறங்கினர் கண்டு நிமிர்ந்தனர் தார விருந்தசே னாதியன் சுற்றமே
ஆடுவர் பாடுவர் ஆனந்தக் கூத்தினில் கூடுவர் சிங்களக் கோமகர் தங்களை நாடுவர் வெற்றி நயந்தரை பற்பல சூடுவர் சூழ்வர் நல்லூர்ப்படை மீண்டவர்
தாழ்ந்த சிரத்தினன் தரையினை நோக்கினன் ஆழ்ந்த மனத்தினன் இராமனடைந்தனன் சூழ்ந்திடு பாடிமனைப்புறம் தோற்றினன் வீழ்ந்த சகோதரர் வீரமுரைப்பான்
முன்னடி வைத்தவர் முடிதலை வீழினும் பின்னடி முண்டம் பிறக்கிட வீழந்தில என்னுடை மண்ணித என்றவர் மார்பகம் பொன்னுடை தாய்மடி பொத்தென வீழ்ந்தது
வஞ்சக மாக வளைத்த முனைப்பினும் நெஞ்சக முன்கொடு நின்று தடுத்தனர் நஞ்சக மாணவர் நாற்றிசை சுற்றியும் அஞ்சிலர் நின்றமர் ஆற்றி மடிந்தனர்
192
I6
I7
I8
I9
2O
2I
22
23

தோழரை வாலிப சோதரர் தங்களை வீழ முடித்தவர் மேலுல கங்களில் வாழ முடிப்பதையன்றி யெமக்கினி நீள நினைப்பது வேறெது நின்றது
சித்திரக் கம்மியர் தேர்வடிக் கின்றவர் நித்திரை நீங்குக, நீளுக நாள்மணி வித்தகர் கொல்லுலை வெம்மையும் எம்முடை யுத்தமொடேறுக யோசனை வேறிலை
உழுபவர் கைகளும் ஓய்வில தாகுக விழுவது வேர்த்துளி யாம்மழை யாகுக புழுவொடு புற்களும் போரிலிறங்குக முழுவதம் போர்முனைக் காக முடிக்குக
தெற்கி லிருந்து திரும்பி வராவகை மற்புய வீரர்கள் கான்வழி காக்குக முற்புற முனையினுக் கெழுபது நிரையினர் அற்புத வில்லினர்க் கமைகவொர் தளபதி
என்றலும் யாவரும் மனுப்புலி சேரிடம் வென்றவர் போலவிழித்தனர்நோக்கலும் ஒன்றுகொலா மென உள்ளமுள்ளாரென இன்றிவரேயுப தளபதி என்றனர்
மாற்றவர் மரும முணர்ந்தவர் போர்முனை தோற்றன தொட்டறி யாதவர் வாலிபர்க்(கு) ஏற்றவர் ஏற்றன செயலில் வடிப்பவர் மாற்றிய நெஞ்சினர் வருகென வாழ்த்தினர்
மனுப்புலியார் மனம் மாறி மகிழ்ந்தனர் முனைப்புல நோக்கி முடிப்பன சொல்லினர் வினைப்பல மேமுனை வெற்றியைத் தருமென நினைப்பன யாவையும் நிசியில் வகுத்தனர்
193
24
25
26
27
28
29
3O

Page 114
EbIT
அறுநாறு வாலிபரை அணியாக்கி அவர்க்குமுன்னே மறுநாறு குந்தமுனை மதிலாக்கித் தேர்ப்படையைப் புறநூறு நிறுத்தியவர் புரக்குமாறு புரவிநிரைத் திறநாறு வகுத்திட்டார் சினப்புலியாம் மனுப்புலியே
31
புண்ணடைந்தோர் போர்முனையில் குருதிபொழிந் திறக்கா வண்ணம்
கண்ணிமைக்கு முன்தாக்கிக் கருது மருத்துவர்க் குய்ப்ப எண்ணொரு நாறிருத்தினான் வீரரை முன், இரவுபகல் உண்ணுவன தடையுறா தடன் பெறவும் ஒருங்கிணைத்தான்
எற்றதொரு வியூகமிது எனமுனவே வகுத்திடாமல் ஏற்றபொழு தேற்றவிதம் இசைத் திடவும் கணப்பொழுதில் மாற்றிடவும் மனுப்புலியார் எண்கொடுத்து வகுத்தபான்மை போற்றினரால் இராமனொடு புடைசூழ்ந்த தோழுரெல்லாம்
செய்வண்ணத் திறனமைத்தச் செருமுனைப் பாடகம் புகுந்தார் மைவண்ணக் காரிருளும் மதியென்னும் திலகமிலாள் கைவண்ணம் செய்யாத விதவையெனும் ககனமாதம் பொய்வண்ணம் பூசினார் பூமியெனும் பொறுமையாட்கே
சிரிப்பொலியும் சிந்தும்தக் குடம் வெறிதாம் திரிபொலியும் விருப்பொடு சூட்டிறைச்சியினை விருந்தயர்வார் விழ வொலியும் நெருப்பொளியில் நின்றாடும் தென்னவரின் முரசொலியும் விருப்போடு கேட் டமளிபெறான் நல்லூரின் வேந்தர்கோ
லீட்டாம் நாட் போர்
Elg
குங்குமத்தைச் சிதறியபோல் குணபாற் கோலம் செங்கதிரும் சித்திரிக்க சிரித்தி ருந்தாள்
மங்கையெனும் புலரிமகள் மண்ணின் மீது சிங்கமற வீரரணி திரண்டபோது
194
32
33
34
35

சேனாதி மாப்பாணன் சிங்களத்தார் நானா பல்லியமியம்ப கொம்பின் நாதம் வானாகி அறைகூவ முரச வாரும் தானாகி எழுந்தடிப்பச் சமர்முன் சென்றார்
அதிர்முகத்து முரசுக்கு மாற திர்ந்த எதிர்முகத்து மனுப்புலியும் எழுந்து நின்றான் புதிர்முகத்தார் போர்முகத்தார் தேடிக் காணாக் கதிர்முகத்தைக் காலைவெயில் கண்ட போது
Bijligg
மேலெழுந்தபரி வேகமுற்றுவர வீரமே போலெழுந்து மனுப்புலியெனத்திகழ போர்முகக் காலெழுந்த தகள் ககனமுற்றடையக் கண்ணொடு வேலெழுந்த கனல் மின்னல் மின்னலிடும் வெட்டியே
வேகசிங்கமெனப் பாய்ந்து வெட்டியவர் முன்னிரை போக வாலிபரும் புகுவர் வீரமொடு முத்தலை ஆகு சூலமென அணிகள் மூன்றுபட அமர்முனை ஏகி யூடுசெல எதிர்முகத் தணியர் சுற்றினார்
தேரணிப்படைகள் சேர்ந்து பக்கமுறப் புலியினான் நேரெழுந்துநிமர் கின்ற வாட்படையை நீட்டினான் கூரெழுந்த திரிசூல முத்தலைகள் கொடித போய் ஓரணிப்படையின் ஊடுசென்று பிளவாக்கின
மேலும் மேலுமவர் ஊடுசெல்வர்வெகு வேகமாய் சூலமுற்படையின் தணிவு கண்டவர்கள் தொடர்கிறார் வேலை விண்டுகரை வெள்ள முற்ற தெனப் பின்னவர் நாலு பக்கமுற நடுவில் தென்னவர்கள் சிக்கினார்
ஆனபோதுமவர் அச்ச முற்றிலர்கள் ஆண்மையோர் தான நின்றதனி சமர்தொடுப்பவர்கள் தளர்வுறாதே) ஏனை யோரணியை ஏகுமென்று சேனாதியன் தானு மங்கடையச் சமர்முகம் பெரிதானதே
195

Page 115
குந்த முற்படையும் கொலைவில் லாளிகளும் ஓடியே இந்த முன்னணியை எதிர்கொளச் செல இடைநடு முந்தி நின்றபரி யாளர் நாற்றுவரை முன்செல தந்திரப் பணியிட்டனன் புலி தருணமாய்
சூனியப் பிரதேசமாக நடு தோற்றிடும் தானநோக்கிவரு சதமெனப்படு பரியினம் ஏனையோரையினி முன் புகாவகை இடைமறித்(து) ஆனதோர்மதில் இட்டதெனநடு வாயினார்
முற்புறத்தினில் மொய்த்த குந்தர்தமை மூச்சினில் பிற்படப்பொருத பிணமலைக் குவை யாக்கினார் விற்படைக்கு மிடைவேற்படைக்கு மிடை வேகமாய் அற்புதத்தினில் அணுகுவார்கண மாகுமுன்
சிர மறுந்த குறை தினவெழுந்த புயமீதிலே கரமறுந்தவுடல் கதியழிந்தபரி மீதிலே சரமழைக்கு மிடைதலைவளைந்து நிமிர் பரிகளில் பொரு மறத்தவர்கள் புரிசமர்க்கு நிகள் புகல்வதோ
முத்த லைப்படு சூல முற்றவர்கள் மூடியே அத்தலப்படுவார்கள் யாரையும் அமரினிற் தத்தளித்திடத் தலைகள் சிந்தியமர் தாக்கினார் பொத்தெனப்புவி விழுவர் வாளொடு புயமிலார்
சோற்றை யுண்டகடன் தணியுடுத்த கடன் போக்குவார் ஏற்ற தம்பணியை இம்மியுங்குறை விடுகிலார் ஆற்று கின்ற சமர் அந்நியர்க் கரசை யீயினும் மாற்று கின்றிலர் மரணமுத்தமிடு கின்றனர்
தேர்க்கு முன்வருவர் சிறித தங்கள்பரி தாழ்த்தியே நேர்க்கு வந்தகணை நெடித போக தலை நீட்டுவார் வேர்க்க நின்றநெடு வாளின் வீரர்தமை வெட்டுவார் வார்க்கு மிஞ்சி யெழும் பரிதெரிந்து செலும் வழிகளில்
யானை ஆயிர மும் என்னசெய்யுமிளஞ் சிங்கமுன் சேனை யாயிரமும் என்னசெய்யுஞ் சிறுவயதினர் மாணமோடுதம தன்னை மண்ணிதனை மீட்டிட ஏனெமக்குயிர் என்று கொண்டுறுதி செய்வரேல்
196
IO
II
2
I3
I4
IS
I6

சிதறு தம்படையைச் சேணிருந்த சேனாதியன் கதறு சங்கினொலி யாற்களத்த வரக்கட்டளை பதற இட்டதனை பணிய முற்படுகின்றவர் உதறி மேலெழு பரிகள் உற்றுவர மோதினார்
17 வந்த முற்படு கின்ற வாட்படையை வாலிபர் அந்த அந்த விடம் அசைவுறாதபடி வீழ்த்துவார் எந்த எந்தவிடம் செல்ல வேண்டுமென ஏவுறா முந்து கின்றபரி முறைதெரிந்து செயற் படுவபோல்
I8 பத்து நாழிகை பட்ட வெஞ்சமரிற் படுகளம் எத்திசைத்திறனும் பிணமலைக்குவை எழுவதால் அத்த மிக்கவரு கதிரின் பொன்னொளிகள் அவைபட சித்திரத்தினிற் பவள மால்வரைகள் திகழுமால்
I9 வேர்க்குளத்தினிற் குருதிவெள்ளமும் வீழ்படத் தேர்க்குடங்களும் சில்லுமற்றன சிகரமும் வார்க்கடங்கில கவச மார்புகளும் வாள்களும் போர்க்களம் புரள்கின்ற மாலையின் பொன்னிலே
2O சினமெழுந்து வரு சிங்களப் படைகள் ஏறிமுன் முனைமுகத்தவர மோதயானைகள் முன்வர திணவெடுத்தமனுப் புலிவிடுத்தபடை செல்லமுன் தின முடிந்த தெனும் பறைமுழுக்க மிடச் சீறினர்
21. வெற்றி வெற்றியென முரசடித்தன விண்ணகம் முற்றினும் செலச் சங்கெழுந்தன மொய்த்தனர் சுற்றிலும் மனுப் புலியினைக்கரம் தாக்கினர் எற்றி யெற்றி எறிந்தி தங்கரம் ஏந்தவார்
22
BGligg
வான்பிளக்க வன்னியனார் மனம்பிளக்க விடுதலைக்கு நோன்பிருந்த தமிழர்களின் செவியூடு நண்டுளையிற் தேன்பிலிற்றக் கொம்பெழுந்து திசை நிறைக்கும் மனுப்புலியார் தான்படைக்குத் தலைமையொடு பாடிமனை சார்ந்தபோது
23
197

Page 116
பட்டார் சிங் களப்படையார் பகல்முடிந்த வெம்போரில் நட்டார் செந் தமிழர்கள் நல்லூரான் நடுப்படையும் கெட்டாரென் றிடுமாற்றம் கேட்டார்செந் தமிழகத்தார் விட்டார்தம் மனப்பாரம் விளக்கிடுவார் மனமனைக்கே
Biblugg
மறைந்த மனுப்புலியாரின் மருமம் நீங்க சிறந்ததுமங் கலநாணும் திலகம் நெற்றி நிறைந்ததமுன் நெஞ்சழிந்த மனையாளுக்கே அறைந்தபறை அவள் காதில் அமுதம்மா
கேட்டுருகும் ஆனந்தக்கிளர்ச்சி பொங்கக் கூட்டுருகும் கிளியன்னாள் மறைத்துக் கொண்டாள் ஏட்டெழுதா மொழியெழுதி இதயந் தன்னைக் காட்டிவிடும் கண் சிரிப்பை மூடலாமோ
தாசுபடர் தாரிகையைத் தடைத்தாள் மையைப் பூசிவிழி தீட்டினாள் மென் புரியின் கூந்தல் வீசுமண மல்லிகையால் விந்தாரித்தாள் தேசுமுகம் கண்ணாடி திறந்து பார்த்தாள்
"கொடும்புலியின் குகைப்பட்ட குட்டி மான்புல்
தொடும்; புறவு கூட்டுறினும் சுகிக்கும் தேனை கொடும் பகையும் சூழ்ச்சிகளும் அறியாள் பேதை உடம்பொடுயிர் தளிர்த்திருந்தாள் உவகை பொங்க
வன்னியனும் அழைக்கின்றாான் வருக வென்று அண்ணநடை அரம்பையர்வந் தணுக அன்னாள் மின்னலிடை சரிந்தழகு வழிந்து வீழ இன்னதென அறியாது சென்றாள் இன்னே
சென்றவிடம் மறைத்திருந்தாய் செஞ்சோற்றுக்கு நின்றவுடல் இங்கேயும் அங்கே நெஞ்சும் என்றிருக்கும் நம்முறவிங் கினிவேண்டாமே கொன்றிருக்கும் பகைநன்று கொடித நண்பே
198
24
25
26
27
28
29

நானூட்ட உண்டகையால் நமனை ஊட்டி தானுட்டும் பெரும்புகழைத் தரணி யேற்று வேணாட்டும் வீரரிடை மதிக்கு மாமோ கோனாட்டி அரசுசெயக் குறித்துள் ளானோ
மறைந்தாரென்றறிவ னல்லால் மாற்றார் திறந்தானே சேர்ந்ததுநான் தெரியேன் ஐயே இறந்தாள்போல் இருந்தேனை இன்னும் வாட்டல் அறந்தானோ அரசேயென் றடியில் வீழ்ந்தாள்
கண்ணீரால் கன்னமெலாம் கழுவ எண்ணல் பெண்ணிர்மை யென்றறிவேன் பேசாதே நீ கண்ணாளன் உழைத்ததனிற் பாதி கற்புப் பெண்ணாளுக் குடைமையன்றோ பிறித பேசேல்
காலமுறும் நோய்போலக் கரந்து வாழ்ந்து ஆலவிட மென்றிருப்பீர் அதுவளர்க் கேன் பாலமுதம் 2ளட்டினார்க்கும் பரிசி தாமோ மேலுமொழி புகலாதே வெந்த ளேற்கு
பெண்ணென்று விடுகின்றேன் பின்கை கட்டி கண்ணின்று கணவனுனைப் பார்க்க யுத்த மண்ணின்று விறகடுக்கி வளர்த்த தீயை உண்ணின்று உடல்கொடுப்பேன் உண்மை என்றான்
சிறைப்படுக்க, சென்றெங்கும் மறைந்திடாமல் அறைப்படுத்துச் சிங்களவல் லரக்கி மாரை உறப்பணித்துக் காவலிடும் உலகுக் கெல்லாம் பறைப்படுத்தி இவள் நிலையைப் பரப்பு வீரே
என்ற மொழி கூறா முன்னம் இழுத்து மாதர் சென்று சிறை யறைப்படுத்தி சிங்களத்த வன்றிறலின் மாதரைமுன் காவ லிட்டார் சென்றுபுகும் சிறுமான்போல் இருந்தாள் செல்வி
செருமுகத்தச் சிங்களவர் பட்ட செய்தி ஒருமுகமாய் ஊர்பரக்க உளம் பொறாது வருமுகமும் நிலமுகமாய் வாய்க டித்தார் தரைமுகமும் குடியேறித் தமத செய்தார்
199
31.
32
33
34
35
36
37
38

Page 117
கொதித்தெழுந்த குடியேற்றச் சிங்களத்தார் சதித் தெழுந்தார் தமிழிரென சாந்த ஞான மதித்திறந்தார் மாதரிவர் முதியோ ரென்று மதித்திலர்வாழ் மனைகள் தீக் கிரைப்படுத்தார்
குலைசாய்க்கும் வாழைகளைக் குறுக்கில் வெட்டி தலைசாய்க்கும் பொன்னெல்லைத் தழலு மூட்டி நிலைசாய்த்துக் குடில்களை முன் நின்ற பெற்றம் கொலைசாய்த்துக் குடிகளுக்குக் கொடுமை செய்தார்
ஆற்றாதார் கமக்கருவி ஆயு தத்தால் மாற்றாரைத் தலைகிள்ளி மடித்தாாரில்லம் நீற்றோடு கரியாமுன் நீர் நனைத்துக் காற்றோடும் எரியோடும் கடும் பொர் செய்தார்
கற்பன்றிச் செல்வமேதம் அறியாக் காதல் இற்பிறப்பு மடவாரைக் காத்த மைந்தர் எற்புதொறும் தன்மானம் இழைத லாலே மற்புயமும் மலைப்புயமாய் வளர்ந்த மாதோ
இந்த விதம் எரியூட்டிக்கலாம் விளைக்கும் செந்தமிழர் நடுவிருக்கும் சிங்களத்தார் சொந்தமுறு சோதரரைப் போலிருந்தார் பந்தமினி இல்லையெனப் பகைவரானார்
மங்கையர்கள் குலைந்திடினும் மனைகள் தீயில் பங்கமுறப் படவுறினும் வன்னி வேந்தன் சிங்களத்துத் தளபதிகள் சினத்துச் சீறிப் பொங்குவரே யென்றுமணம் புழுங்கு கின்றான்
மங்கைசிறைப் பட்டயறை மாற்றங் கேட்டுத் தங்கையராய்த் தவித்தழுதார் பெண்களெல்லாம் கங்குலெனும் மகளழுதாள் கற்பின் மாதர் வெங்கனலாய்ச் சீறுகின்றார் வெய்துயிர்த்தே
சுற்றிவரும் தோழுரொடு தொடர்ந்த போரில் வெற்றிதரும் புகழ்மொழியாம் விருந்த யர்ந்த பற்றுசெவிப் பறைமீது பாவை சிறைப் பறையினோசை புற்றரவைப் போல்நுழையும் புலியினார்க்கே
200
39
40
4I.
42
43
44
45
46

எதிரேறும் களிற்றுமலைக் கேத மஞ்சான் கதிரேறும் வேல்பாயக் கலக்க மில்லான் அதிரேற வரும் படைக்கும் அஞ்சா நெஞ்சன் சதிரேறும் மெல்லிடையாள் சிறைக்குச் சாய்ந்தான்
விற்புருவ வளை கோட்டால் விழுந்த கேச மற்சுருளால் முரலெனும் அரும்பு முல்லைப் பற்பிறக்கும் பால்நிலவாற் சிறைப்படுப்பாள் கற்பிருந்த சிறைமணத்தாள் கதவுள் ளாளோ
ஆண்டகைய தோள் சோரும் அம்பு தேய்த்த நீண்டகரம் நிலைதளரும் நேரில் நிற்கப் பூண்டகவசம் பொருந்தாப் போரின் நெஞ்சம் கூண்டிருந்தாள் கிளியென்னக் குழைந்து நெக்கும்
மனஞ் சோரும் மனுப்புலியை மாற்றி னல்லால் இனஞ்சோரும் என்றறிந்தார் இளைஞர் யாரும் அனஞ்சோரும் நடையழகி அவளைக் கங்குல் தினஞ்சேர விடிவதற்குள் சேர்ப்ப தென்றார்
கற்பகமென் றொருவல்லி காலம் பார்த்து நிற்பதனை உளவாளர் நேர்ந்த சொல்ல சொற்படுவ செயல்வடிக்கும் தொண்டர் சில்லோர் முற்படுவர் மரணத்தை முத்தம் கொள் வோர்
கற்பிழந்து கன்னியளாய்க் குதிரை வீரர் பொற்பழியச் சோதரியைப் புவியிற் சாய்த்த முற்பழியைத் தீர்ப்பதற்குக் கோட்டை முன்னிக் கற்பகத்தாள் பற்கடித்துக் காலம் பார்த்தாள்
உள்ளிருந்த கற்பகத்தால் உளவு வாங்கி நள்ளிரவில் மனுப்புலியார் மனைவி யாரைக் கொள்ளை கொளக் குறித்திருந்தார் தொண்டர் கீழே பள்ளமுறு சுருங்கைவழிப் பாதை சென்றார்
கடுங்காவல் மதிலெல்லாம் கதவு தோறும் கொடுங்கோலின் காவலார் கூற்றம் போல்வர் நெடுங்காத வழிநிற்பார் நிலைகள் ஒற்றி இடங்காலங் குறியொற்றி எழுந்து வந்தார்
201
47
48
49
SO
SI
52
S3
54

Page 118
உறங்குகின்ற பெண்ணிருக்கை உட்புகுந்து இறங்கியவர் பெண்வேடந் தாங்க லாலே புறங்கிடந்த சிறுக்கியரும் புதிது காணார் மறங்கிடந்த சிங்களத்த மாதர் என்பார்
கங்குலிமை மூடாது காவல் செய்யும் சிங்களத்தின் அரக்கியரும் திரியும் பெண்கள் அங்குளசெந் தமிழ்மணிகள் என்ன ஐயச் சங்கையிலார் தளர்ந்திருந்தார் சாமந் தன்னில்
சிறைக்கதவைக் கணிச்சியினால் திறந்து கற்பின் நிறைக்கலத்தை நீண்டதடங் கைகள் தாங்கி இறைக்கணமும் தாமதியார் சுருங்கை சேர்த்தார் குறைக்கணுறு காவலார் கூச்ச லிட்டார்
ஆபத்துப் பறையொலிக்க அருகு காத்தோர் மூபத்த வீரர்களும் முடுகியோடித் தீபத்தின் ஒளிகொண்டு தேடி னார்கள் கோபத்துக் கனல்நாவின் கொழுந்துக் கண்ணார்
Blug
தங்கள் காலொலி யன்றியொர் சத்தமும் அங்கு கேட்டிலர் அருகுத் தெருக்களிற் சிங்களக்கடுங் காவலர் தேடியும் எங்குமோர் பிற வீர ரெதிர்ப்படார்
மாய மீதென வாயிலைக் காத்தவர் போய பக்கமும் புக்க புறங்களும் ஆய லாயினர் தெய்வ அதிசயம் தோய நின்றதோ சுந்தரி கற்பிதோ
என்று கூற முன் ஏந்திழை யாளினைச் சென்று சேர்த்தனர் சிங்க மனுப்புலி நின்றசோக முகத்தினன் நீள்கரம் ஒன்று சேர்த்ததும் உற்றுயிர் பெற்றனன்
2O2
SS
S6
57
58
59
6O
6.

ஆயிரங்கரி கூட்டிய அவ்வலி தோயும் தோளினன் சோதி முகத்தினன் வாயடங்கிய வீரமும் மாதினால் போய டைந்தது பொன்மலைத் தோளிலே
கண்ணரும்பிய நீரினள் கன்னங்கள் தண்ணரும்பிய தாரைகள் வீழ்ந்திட பெண்ணரும்பிய நாணமும் பின்னிட அண்ணலின் பத அம்புயம் வீழ்ந்தனள்
நெஞ்சடக்கிய விம்மல் நெகிழ்ந்திட மிஞ்சு வெந்துயர் தேம்பலின் மீதற கஞ்ச மென்கரத் தாலவன் காலினை கொஞ்சியன்புறக் கொண்டு புலம்பினாள்
உருக்கெனப்படும் உள்ளம் நெகிழ்ந்தனன் பொருக்கெனத் கரு நீர்விழி பொங்கினான் இருக்கை பெற்றிலன் வெம்பினன் ஏந்தினான் மருக்கொழுந்தெனும் மங்கையின் கைகளை.
சிறையடக்கிய வன்னியன் சிங்களர் குறையுடற்படக் கொல்ல விழுந்தனர் இறையினித்தயில் எய்திலேன் வென்றியின் பறையினிப்பட போர்முனை பாய்குவேன்
என்று சத்தியம் செய்தனன் ஏந்திழை
நின்ற தாரை நெடுங்கண் பனித்தளி
கொன்று கூத்திடும் கூற்றமும் ஆயத அன்று கண்டனர் அங்குள வீரரே
ஒண்பதாம் நாட்போர்
பரநிருபன் சிறுவரொடு பள்ளிகொளும் நிசிபார்த்து
அரவமிலா தட்புகுந்து வன்னியரோ டடைந்தவனாம்
பரவுபுகழ்ப் பராக்கிரமன் சேனாதிபதியானான் விரவுபுகழ் நல்லூரை வெற்றிகொள முற்றுமந்நாள்
203
62
63
64
65
66
67

Page 119
கோட்டைகளும் கோயில்களும் கொழுந்தபடும் பெருநெருப்பால் வேட்டைகொள வீதிதொறும் சிங்களத்தார் போர்ப்படைகள் ஈட்டிவரும் வென்றியினை எதிர்த்துநெடும் போர்புரிய கூட்டிவரும் தமிழரணிக் கொடும்படையில் பலர்பு குந்தார்
தளியிரத்தம் வரையுமவர் போராடித் தொடர்ந்த தல்லால் எளியவுயிர் பெரிதென்னார் எழுந்தபடை பெரிதென்னார் மொழியினொடு தந்நாடு மூச்சென்றார் முன்னின்றார் தெளியதமிழ் மண்ணுக்காய்ச் செருக்களத்தில் மடிந்தபோனார்
அல்லாவும் குறானுமன்றி அறியானோர் நெறிபிறிது சொல்லாளன் தமிழுயிரான் தாயமுஸ்லீம் வடக்காரன் வில்லாளன் வெம்போரில் பராக்கிரமன் தளபதியைச் செல்லாத செய்தசெரு திசைபரந்த புகழன்றோ
ஒருவாளே கைக்கொண்டு உடனெதிர்த்தார் தலைவீழ வருவாரின் படைநிறுத்தி வழியடைத்தான் வைகலேழு ஒருவாரம் போர்முடித்தான் உடன்பிறப்பாம் சைவரோடு இரவாரும் அடங்கியபோ திவன்தலையை வீழ்த்தினாரே
தந்தையினை வீழ்த்தியதைத் தவழ்ந்துவரும் மகன்கேட்டான் சிந்தையினிற் செருவயிரம் சேர்த்திட்டான் சினமுடிக்க முந்திவரும் நாள்பார்த்தான் முனையோடுவளர்ந்து வரும் அந்தநெடுஞ் சபதமொடும் ஆண்டாண்டு வளர்கின்றான்
வடக்கார முஸ்லீமின் மகனாய வாலிபனும் அடக்காத பெருஞ்சபதம் அகம்பீறி மாற்றாரை முடிக்காமல் உறக்கமிலை எனப்படையில் முந்திவந்தான் தடுக்காதீர் செருமுகத்தில் தருணமிது தாருமென்றான்
சினமுகத்தான் செருக்களத்தச் செல்லவிரு திணிதோளும் திணவெடுத்தான், சீற்றமொடு புகன்றதனைச் செவிமடுத்து நினைவெடுத்தார் வடக்காரன் வீரமதை நின்றமைந்தன் முனைகொடுத்தால் முடித்திடுவான் போரென்று முழங்கினாரே
உன்னையொரு பதியாக்கி உக்கிரவெஞ் சமர் முனைக்கு இன்னுமொரு பகல்கழிய எழுந்திடுவோம் நின்பிறகே மண்ணியவெஞ் சினமாறி வரும்பகலை எதிர்கொள்க என்னமனுப் புலிமொழிய இருந்தவரும் வழிமொழிந்தார்
204

காலையிளங் கதிர்வந்த ககனமெனும் மேடைக்குச் சேலைபல செந்நிறமும் பொன்னிறமும் விரித்திருக்க வேலைமகள் திரைக்கரத்தால் விளிம்பினுக்குக் கரைகட்ட காலமகள் அடியெடுத்தாள் கன்னிநடைபோடுதற்கே
எழுந்தொலிக்கும் முரசுக்கு ஏற்றநடைப் பரியினமும் செழுந்தளர மணித்தேரும் சினக்கரியும் வரிநடக்க எழுந்துகளை ஒவ்வொன்றாய் இலங்குபடைக் கலவொளியும் விழுந்த கதிர்ச் செங்கரமும் விளக்கிவரும் போர்முனைக்கே
மத்தளவார் அடுக்கென்ன வியூகநிரை வரிப்படுத்தி குத்திடுகுந் தப்படையார் குதிரைவரிப் பின்செல்ல மத்தகத்த மலைக்கரிகள் மதிலாகி முண்செல்ல பத்தடுக்கும் தேர்ப்படைகள் பரந்தபுறம் விரைந்து வரும்
மாப்பாணன் தளபதியாய் வாவுபரித் தலைச் செல்லக் காப்பாக இருமருங்கும் ககனபரி நிரைசெல்ல மீப்பாகள் அங்குசத்தை மிஞ்சுகரி முரசொலிக்கும் கூப்பாடும் சங்கொலிக்கும் குழலினுக்கும் எழுந்தனவே
மாதிரமும் அதிர்ந்துவர மனுப்புலியார் ஏற்றமொடு மீதிவரும் வெண்குதிரை மிகவுயரம் தனிக்காட்ட மோதவரும் எதிர்ப்படைக்கு முதலிவரே தோற்றுவதால் தீதுவரும் சிறுபொழுதில் என்பதுவுஞ் செவிக்கொளாரே
Af
அறுகோண வியூகமுனை அமைத்திருபால் தேரணியும் முறுகோடும் தினவுபுய வாலிபரின் முன்னிரையும் சிறகோடும் குதிரைகளும் சினக்கரியின் பின்னிரையும் பிறகோடி வளைக்கும் வாட்பேரணியும் சீர்செய்தான்
Bigg
அணிக்கொரு நடைக்கென அடித்தெழு பறைக்கே இணைத்திடு குழற்குல மெழுந்தொலி முழங்க
கணத்தினை அளந்தபடி கால்படுவ தாளம் பணித்தவர் உரைப்படி படைத்தலை நடந்தார்
2O5
IO
II
2
I3
I4
IS
I6

Page 120
Eo
வாரின்நிரை மணிமத்தள அணியின் போரின்நிரை புகுவான் மனுப்புலியார் தேரின்நிரை செலவிட்டிடை வாளின் வீரர்நிரை விட்டான்வெகு விரைவில்
சேனாதியன் தேரின் நிரைப்பின்னே போனான் மனுப்புலியின் படைதன்னை நானாதிசை சிதறும்படி நடுவே ஊனா டிய வேலின் படையூக்கி
வாளேந்திய வீரர்படை வலமாய் சூழும்படை தாண்டும்பணி யாலே வீழும்பரி வேகத்தெதிர் குந்தர் தோளும் குடலோடும் விழும் தண்டாய்
முரசம் படுவாரின் நிரை மூடி நிரைவந்தத நிமிடம் செலப் புலியார் உரைவந்ததங் கூடேசெல உடனே திரைவந்தெனக் குந்தப்படை செல்லும்
சரிகின்றன தலைகள்பல் கூறாய்த் தெரிகின்றன முண்டம்பல செல்லும் பரியின் மிசை பிணமும்செலும் வந்தோர் இரியும்படி சுழல்கின்றனர் இன்னே
இதுகண்டதும் சேனாதியன் எதிரே கொதி கொண்டனன் குதிரைப்படை ஏவி நுதிகொண்டொரு முனையின்நிரை நுழைய அதிகம்படு தொகைவிட்டனன் அணியாய்
சுற்றும்படி தாண்டும்பணி யாலே சற்றுந்தெரி யாதேதலை சிந்தி எற்றும்படி எதிர்க்கின்றனர் புலியார் முற்றும்படி விடுகின்றனர் வளைவாய்
206
I7
I8
I9
2Ο
2I
22
23

தேரின்முடி சிதறும்வரும் சில்லும் பாரின்மிசை படவீழ்வன எதிரே சேரும்படை தெறிகெட்டன சிதறிக் கோரம்படும் போரின் முனை கூற்றாய்
தண்டம்படு தோளும்பிடி வாளும் முண்டங்களும் உருள்கின்றன பரிகள் கண்டம்பட விழுகின்றன கரமும் கொண்டம்புக ளோடும் விழும் குறையாய்
தொட்டம்புகள் தாணிக்குறை வீழும் எட்டும்படி விடுதேர்பல தரையில் மட்டம் படச் சரிகின்றன மண்ணில் கொட்டும் குருதிக்குட் கடல் நீந்தும்
போகும் மனுப்புலியின் படைப் போரின் வேகம் பொறுக் கில்லார்விழ விரைவில் ஏகும்படி சேனாதியன் ஏவும் நாகம்படை வருகின்றது நடுவில்
மின்னற்படும் வாள்கள்விடுவேல்கள் பொன்னிற்படு பொறியின் கனல் சிந்தும் முன்னிற்பலர் கவசங்களும் முடியும் தன்னிற்றரை சரிகின்றன நொடியில்
தருணம்படத் தாயைத்தளை செய்தோர் சரணம்படச் சபதந்தரும் இளைஞர் மரணம்பட மலையும்மன வலியால் கரணம்படும் அவரின்கர வாள்கள்
விசயன்படை வருகின்றத விரைவில் அசையுங்கரி அணியின்நிரை வருமுன் திசையிண்வழி செல்கின்றது புலியார் விசையின் விடு களிற்றின்நிரை வேகம்
மொத்தம்மலை மலையோடுடன் மோதம் குத்துங்குறை கொம்புங்குறை முறியும் எத்தங்கரம் எறிகின்றன எதிர்வோர் சித்தம்பிர மிக்கும்படி செல்லும்
2O7
24
25
26
ך2
28
29
30
3I.

Page 121
காலிற்றுக ளானோர்பலர் கரமும் வேலிற்குறை புயமும்விழ விடுதேர் வாலிற் படுவளியிற்பட முறியும் ஒலப்படும் ஓடிக்களி ஹறவே
கரியும்வரு கரியும்பொரும், அதனால் சரியும்மலை யெனவீழ்வன தரையில் நெரியும்பல தேர்சேரணி நிரையும் தெரியும்பிண மலையின்சிக ரங்கள்
சிங்கந்தரு விசயன்படை சீறி பங்கம்படப் பொருகின்றனர் பாய்ந்து பொங்குங்கனல் விழியிற்பட பொடியாய் அங்கங்குறு அணியைத்தரை வீழ்த்தார்
வாளுக்கொரு கலைஞர்கர வடிவேல் ஆளத்திறம் இவர்முற்றினர் ஆளிக் காளைப்படு குமரர்படை பாய்ந்து தாளிற்படப் பொருகின்றனர் தணிவே
தலையிற்பதி விசயன்பொரு சமரால்
நிலையிற்படு புலியார்படை நிரைகள் குலையத்தலை முனையிற்புலி கொண்டான்
தலையெத்தனை விழுகின்றன தரையில்
l
அழிந்தன கரிகள் நாரே ஆயிரம் வீரர் பட்டார் விழுந்தன தேரும் என்று விசனமுற் றில்லார்வீர்க் கொழுந்தெனும் விசயன் பட்ட புண்ணினைக் குறித்து மானம் இழந்ததே எண்ணி எண்ணி எரிதழல் நெஞ்ச மானார்
நிலங்கவிழ் தலையராகி நெஞ்சகந் தழல்பட் டார்க்கு நலம்புவ னேகபாகு நாமொழி மருந்தா லொற்றி கலங்கிடும் தமிழர் சேனை காணுமின் நாளை என்றன் குலம்படு சிங்க மாவேன் குதிக்கிறேன் முனையில் என்றான்
208
32
33
34
35
36
37
38

ஒருகுடைத் தனிக்கோ லாட்சி உடைந்திரு குடைக ளாமோ சொருகிய வாளிழுத்தால் சூழ்ந்தசெந் தமிழர்சேனை பருகியே உறையுட் செல்லும் பராக்கிர மத்துப் பூபன் அருகினில் உயிரைக் கொண்டு ஆர்செல்வார் வென்றியின்றி
39 சென்றளத் திசையும் எந்தச் சேனையும் அடிப னித்து வென்றவப்புகழும் என்றன் வீரமும் வடக்கே விட்டுத் தென்றிசை திரும்பு வேனோ திறம்படு தமிழர் சேனை கொன்றவப் பிணத்துக் குன்றில் கொடிபறக் காதோ நாளை
40 கூறிய மாற்றங் கேட்டுக் கொதித்தெழு மனத்த ராகி ஏறிய புருவக் கண்கள் எரிதழற் கனல தாக வேறினிப் புகல்வ வேண்டாம் விடிவதன்முன் வியூகம் ஏறிடச் சுழ்க நாமே எடுத்தத முடிப்போ மென்றான்
4I
209

Page 122
Bibligg
நாளையினி நான்தலைமை செல்வேன் நண்பீர் காளையிளந் தமிழரெலாம் காலனுக்கு வேளைசொலி வந்தவர்போல் வீரச் சாவைத் தோளிலிட வருகின்றார் தணிவும் என்னே
வாலிபரின் வலியடக்கி வளைந்து வந்து கோலியவர் தமையடக்கிக் கொண்டால் மற்றோர் நாலுபுறம் சிதறிடுவார் நண்டுக் காலின் வேலியென வியூகமிடச் சூழ்ந்து சொன்னான்
என்பின்னே பரிப்படையும் எழுக தேர்கள் முன்பின்னாய் அணிதிரள்க முரட்டு யானை தன்பின்னே செங்குந்தர் சார்ந்து செல்க மின் பொழுதில் வேற்படையார் விரைந்து சூழ்க
அங்கங்கே வகுத்தமுனை அத்த னைக்கும் சிங்கமெனும் சிலவீரர் செல்க யாமே இங்குறுவார் சேனாதி மாப்பா ணர்தம் பங்கிலுறும் படைகளுடன் பார்ப்போம் என்றான்
மடங்காத பூநகரி வளைந்து கொள்ள அடங்காத வன்னியரை அனுப்ப வேண்டும் திடங்காவற் றுறையினுக்கு நாவாய்க் கூட்டம் இடங்காதம் எனநின்றே எதிர்க்க வேண்டும்
க்ரந்து பல வாலிபர்கள் காலம் பார்த்து விரைந்துநகர் முற்றுகைக்கு விரதம் பூண்டு திரைந்தகர முதியவர்போல் திரியும் செய்தி நிரந்தர மொற்றர் செவியில் நிறைக் கின்றார்கள்
மனுப்புலியார் மனைக்கிழத்தி மறைந்த மாயம் நினைப்பவர்க்கு நல்லாரார் நெஞ்சில் வஞ்சம் தனைப்புகலும் சோறுண்ட தருமம் எண்ணார் எனைப்பொழுதும் சுதந்தரமே எண்ணுகின்றார்
210
42
43
44
45
46
47
48

பெண்ணினமும் பேதையர்போல் நடிக்கின்றார்கள் வண்ணமிடு வனிதையர்போல் மறத்த மாதர் நண்ணியந் தப்புரத்து நல்லூர் முற்ற எண்ண மிடு கின்றாரீ தறிந்திலீரோ
நேர்நின்ற பகைவரிலும் நேயம் பூண்டு சேர்கின்ற பகைவருக்குட் சிக்கி யுள்ளோம் போர் வென்றும் பயனில்லை புகுந்தார் உள்ளே பார்வென்று எமையகற்றப் பணிகொள் டுள்ளார்
ஆதலினால் அணிதிரள் வோம் நாமே போரில் மோதவதே கடனன்றி முகிழ்த்த தோழர் எதிலராம் பராக்கிரமன் கொடியை வீழ்த்த போதுவரும் என்றிருப்பார் புகையும் நெஞ்சார்
மணப்பந்தல் நடுவினிலே மானங் கெட்டோம் நிணப்பரப்பில் நீசருடல் குருதி நீந்த பிணப்பரப்புக் காண்கின்றேன் பிடித்த வாளால் கணப்பொழுதில் தலையுருளக் காண்பீர் நாளை
வெஞ்சபதஞ் செய்திட்டான் விடிவ தற்குள் பஞ்சகல்யாணிக்குதிரை பலநிரைத்து அஞ்சுவதே அறியாத தென்னர் தம்மை நெஞ்சுவரி கவசமொடு நிரைத்திட் டானே
நாவாய்கள் காங்கேசன் தறைக்கு நாடிக் காவாத ஊர்காவற்றுறையைக் காக்க ஒவாது சுற்றிடுக கடலை உள்ளே போவாரை மறித்திட்டால் தாங்கார் ஒர்நாள்
Elg
வணைவார்தம் திறனன்றி வனப்புக்கோர் எல்லையிலை
புனைவாரும் கேடயமும் புரவிவரும் ஆணழகும் எனைவாரிக் கொண்டதம்மா இருவரையும் எதிர்நோக்க
வினைவாரிக் கொண்டதலால் வெம்பகையாய்க் கொள்ளலாமோ
211
49
SO
SI
52
S3
54
S5

Page 123
ஆணழுகின் வரம்பாரை அநங்கனையும் குனிவித்த தோணலத்தின் பிறப்பிடத்தைத் தண்டுபட நிலம் வீழ்த்தி பூணுவதும் வெற்றியெனிற் புகழாமோ சாகாத மாணழகை மடிவித்தால் மற்றொருகாற் பெறலாமோ
படை நழுவும் போர்முனையில் பார்த்திபரின் கோல்தளரும் குடைநழுவும் கோங்குமுலைக் குறுநகையார் கன்னியரின் இடைநழுவும் தகிலோடு நாணமுமாய் இறையோருக்கு
இடையிருப்பார் கடமைகளும் இனிநழுவும் எனநினைப்பான்
தொட்டிலொடுகிடந்த அந்நாள் தாக்கியிடோம் எண்செய்தோம்
விட்டிலென அழுகினிலே விழுகின்றோம் வீரம் போய்க் கட்டிலென இவர்தோளில் கண்துயிலும் என்றாலும் வெட்டியிவர் சிரம் வீழ்த்தி வெற்றியினை நாட்டுவேனே
என்றவனும் இளங்கிரண வெயிலினிலே இளமைபூத்து
நின்றவரை நோக்குகின்றான் நெடிதவரை நோக்கியபின் வன்றிறலார் தளபதிகள் வரிசையினைக் கண்ணளந்தான் குள்றெனவே நின்றனதேர் குடுமிபடு வெயில் கண்டான்
காலையிளம் கதிருக்கே எதிரெறிக்கும் வாட்படையும் வேலையெனப் பரந்திருக்கும் மேல்பாலிற் குந்தர்களும் மூைைலதொறும் களிற்றினமும் முன்னாகப் பரிப்படையும் வேலிளைஞர் மறப்படையும் கண்டுளமே வியந்திருந்தான்
மறப்புலியாம் மனுப்புலியும் இராமனொடு வடக்காரன் உறப்பரியின் மீதிவர்ந்தான் உக்கிரசெங் கண்ணழுலான் இறப்பதல்லா திவ்வடிமை இனியில்லை என்று களம் குறிப்பவரைக் கண்டிட்டான் கூலியரைக் கண்டிலனே
நிமிர்புரவிப் புறமிருந்த நேர்நோக்கும் கம்பீரம் அமர்பொருத பெருமிதத்தாற் பெற்றுதவோ வென்றியினால் திமிர்புரளும் திண்டோளும் செருக்களத்தைத் தேடினவோ தமர்புடைசூழ் அணிநிரையான் புவனேகன் தானென்றார்
ஒருபாலில் சேனாதி ஒருபாலில் மாப்பாணன் தெரிவார் நல்லூர்ப்படையும் சிங்களத்தார் சினப்படையும் இருபாலும் பரந்திருப்பப் புவனேகன் ஏறெனவே பரிமீது வருகின்றான் பறைகளெழுந் தொலித்தனவே
212
56
57
58
59
6O
6.
62
63

கொம்பனொடு புகள்முகத்த கொடுங்களிறோ(டு) உறுகுணையும் தம்பதெனியும் கொடுத்த தறுகணினம் கண்டிதரும் கும்பகட கரிகளுடன் குறுங்கண்ண கடடிவரும் பம்பையொடு காகளங்கள் பறையினுக்கு மாறதிரும்
திண்புயத்தில் சினவேந்தர் செருக்கடக்கிச் சிறைகொண்டு மண்புரக்கும் பராக்கிரமன் மலரடியில் கொணர்ந்த அந்நாள் கண்பொலிய அணிவித்த விருதுகளும் கன்னத்தில் பெண்பருவம் கொள்ளையிடும் மீசையுடன் பிறங்கினவே
நேர்வரிசை எதிர்நிற்பார் நெஞ்சணியும் கவசங்கள் கூர்வரிசை வாளொளியால் கொழுந்தனல்போல் சிவந்திருக்கத் தேர்வரிசை முன்னிற்கும் சிங்களத்தார் சிவந்தவிழி வார்வரிசைக் கேடயங்கள் சிவப்பிக்கும் வளர்பொழுதில்
Bilugi
பாய்கின்றன குதிரைப்படை பட்டுத் தோய்கின்றன குருதிப்புனல் தங்களில் தேய்கின்றன தேரும்படு தேரும் மாய்கின்றனர் மடிகின்றனர் மண்ணில்
சீறும் சினச் சிங்கம் பொரு பரியில் ஏறும்புவ னேகன்தன தெதிரில் ஏறும்படை எவையும் விழ தலைகள் கூறும்பட வாள்கொண்டனன் கொடிதே
எறியும் தலை வேலிற்படு மிரதம் முறியும்முடி தரையும்பட மோதம் குறியின்படி கணையின்மழை கொண்ட நெறியில்தலை சரியும்படி நிமிரும்
வலமுஞ்சுழல் இடமுஞ்சுழல் வாளால் நிலமும்படும் தலைகள் நிமிடத்தில் பலமும் புவ னேகன்விடு பரியின் புலமுற்படு கதியும்விழி புணரா
213
64
65
66
67
68
69
70

Page 124
அங்கோவிவன் இங்கோவென அறியார் எங்கேபடை விழுகின்றது இவனும் அங்கேபரி மிசைநின்றனன் அமரின் சிங்கேறெனப் பாய்கின்றனன் திசைகள்
வெட்டும்படி எழுகின்றவர் விழுவார் எட்டும்படி நிற்பான் எதிர் இமைகள் கொட்டும் முனம் அவர்கள்தலை குருதி சொட்டும்படி விழுகின்றது துகளில்
வாளின் பிடி யோடுங்கரம் வானில் தோளின் குறை யொடுஞ்சிரம் தண்டாய் போழுங் குறை முண்டங்களும் போகும் வீழும்மலை யாகும் பிணம் விரைவில்
தேரும்வரு தேரும்வரு சில்லும் நேரும்பட மோதும் நெரி வாகி வாரும்பட கவசங்களும் வாளும் சேரும்படி கீழற்றன சிதறி
கணையின்மழை பொழிகின்றது கரையில் இணையும் படை எதிருற்றன கரிகள் பணையின் கரம் பனையென்பன சுற்றி பிணையும்படி பொருகின்றன பின்னே
அடிமைத்தளை விடுவித்திட அமரில் அடிவைத்தவர் அணியைப்புவ னேகன் கடிகைப்பொழு தாகக்கர வாளில் முடி கைப்பட விழவைத்தனன் மோதி
சுற்றும்கர வாளின் கலைச் சுருதி முற்றும்படி திறமுற்றவன் முடுக எற்றும்படி பொருகின்றனர் இளைஞர் முற்றும்படி முனைகின்றனன் புவனன்
வளையும்படி வருசிங்களார் தம்மை நுழையும்படி இடைவிட்டனர் நுணுகி மழையின்கணை பொழிகின்ாச ” குழையும்தனு கூனி’
214
7 Ι
2ך
73
74
75
76
ךך
78

உள்ளிற்புகு தென்னர்படை யூடே தள்ளிப்புகும் இளைஞர்படை துண்டாய்க் கிள்ளப்படும் சிரமென்பன கீழே வெள்ளப்புனல் குருதிப்படும் மிகவே
பார்த்தான் புவ னேகன்படை நடுவில் ஆர்த்தான் பரி மீதேயவர் அணியை நேர்த்தாக்கினன் நிமிடத்தினில் இளைஞர் சேர்த்தார்பலம் சென்றாரவர் முன்னே
இவரும்பரி அறிகின்ற திவன்போர் எவர்தானறி வாரோவதன் திசையை சுவரும்பட வாளின்நிரை தோன்ற அவரின்மனம் அதனின்படி செல்ல
ഖയ്യ
மனுப்புலியின் மருங்கிருந்த இளைஞர் தம்மை எணைப்புறமும் வாட்படுத்தான் எழுந்த போரில் முனைப்புறமும் தாளிபடும் முன்வளைத்துத் தனைப்புறஞ்சூழ் தமிழர்படை குவியக் கண்டான்
வடக்காரன் மகன் வந்தான் வஞ்சினத்தான் குடக்கோரக் குந்த ரொடு வில்லியர்கள் அடுக்காகச் சூழ்தலுமே அவரை யெல்லாம் மிடுக்கோடித் தலைகொய்தான் வீரர்வீரன்
புரவிவரும் இளைஞரணி புவியில் வீழ்த்தி பரவிவரும் பாலியரின் படையில் புக்கே இரவொருங்கும் கரியமுகில் எமனார் ஏத்த வருவிருந்து செய்திட்டான் வாளொன் றாலே
பார்த்திருந்த வடக்காரன் பருவ மைந்தன் நேர்த்திசையில் புரவிகொடு நிறுத்தி வட்ட வார்த்தலையின் கேடயத்தால் வாளின் வீச்சைப் போர்த்தலையின் சிங்கமெனப் புடைசரித்தான்
215
9ך
8O
81.
82
83
84
85

Page 125
கொட்டுமிமைப் பொழுதிற்குள் கோடி மின்னல் வெட்டுபுவ னேகன் வாள் வீச்சை வீழ்த்தி ஒட்டிவரும் பரிக்கதியை உடன்நிறுத்தி எட்டிவடக் காரமகன் எதிர்த்து நின்றான்
சிங்களர்தம் சினப்படையும் சேர்ந்து முற்றிப் பங்கமுற மனுப்புலியின் படையைத் தாக்கப் பொங்குகனற் பொறிதெறிக்க இராமன் சூழ்ந்து திங்களிளம் பிறைவடிவாய்ச் சேனை செய்தான்
ஆவி கொடுத் தடிமைநிலை அகற்று மைந்தர் தாவிவரும் சேனாதி தனை நிறுத்தி தாவுகணை மழைபொழிந்து தரகம் வீழ்த்தி ஏவுகிறார் தேர்ப்படையை இன்னும் உள்ளே
வீரமற மாப்பாணன் விடுத்தான் யானை கோரமுறக் குத்திமலை பொருதெண்னத் தேரமர்ந்து சில்லுடையச் சிரங்கள் சிந்தி பாரறைந்து படையணியைச் சாந்து செய்யும்
கரையோடிக் காவலூர் காக்க வந்து நிரையோடி நிற்கின்ற கலங்கள் ஆற்றா திரையோடுங் கட்டுமரம் படகு சேர்ந்த அரையாழி நிரைக்கின்ற அவற்றைச் சூழ்ந்து
சுற்றி வரும் கலங்களிலே தோன்றும் மைந்தர் பற்றினரால் வன்னியனார் படைகள் தம்மை வெற்றியெனக் கொடியேற்றி வீர ரார்த்தார் எற்றுவரும் விடுதலையென்று ஏங்கி நின்றார்
எடுத்ததொரு வாளினால் இமைக்கு முன்னே அடுத்துவரும் இளைஞரணி அவனி வீழத் தொடுத்துவரும் புவனேகன் தரித போரை தடுத்து வரப் பரநிருபன் தநயர் சென்றார்
பாய்ந்துவரும் ஏறெனவே பரரா சன்றன் ஏய்ந்த பரி மீதடைந்து இழுத்த வாளால் காய்ந்த புவனேகன்றன் கழுத்தி லக்காய் சாய்ந்து விழ வீசினான் தடுத்தான் மற்றோன்
216
86
87
88
89
90
91.
92
93

பட்டொலிக்கும் பளிச்சென்று மின்னல் மின்னும் வெட்டொலிக்கும், விண்பரக்கும் பொறிகள் தோளில் கட்டிளமைக் காளையரின் திறனின் எல்லை எட்டிவர வாட்கலையை எடுத்த போது
94 பகைப்புலத்தார் முதகன்றிப் படைகாணாத மிகப்பலத்தான் புவனேகன் எள்ளி விந்தை நகைப்பு லத்தான் சிறுவனென்று, நாழி ஒன்றில் திகைப்படைந்தான் சிரமீத வாள்போய்ச் சேர
95 கற்றிடுதன் வாள்வித்தை கணத்துக் கொன்றாய்ச் சுற்றியிடம் வலமாகத் தொடுத்தான் போரில் எற்றியிளம் பரராசன் இவன்தோள் மார்பிற் குற்றிவரும் செயல்கண்டு கொதித்தெழுந்தான்
96 வந்திங்கு சேர்ந்தபடை வாசல் காத்த தந்திரமாய் நல்லூரைத் தாங்கிக் கொண்டால் சிந்திடுவேன் செந்தமிழர் தலைகள் எல்லாம் பந்தபடும் பாடுபடும் படைகள் நாளை
ךQ
Bougg
போர்த்தலைவன் புவனேக வாகுவெனப் புகன்ற மாற்றம் சேர்த்திட்டாள் இராமனுக்குக் கற்பகமாம் செல்வி உள்ளே ஆர்த்திட்டாள் கரந்துறையும் அணங்காருக்கு அவர்கள் தங்கள் போர்த்திட்டம் புகன்றிட்டாள் மருமமெலாம் போர்த்திட்டாளே
98 ஒற்றிவரும் போர்மருமம் உடனறிந்த குமரர் தங்கள் சற்றினியும் தாமதித்தல் சரியாகா தென்றிராமன் சுற்றிவரத் தளபதிகள் தம்மோடு சுழ்கின் றார்கள் வெற்றிவர வியூகமது விதித்திட்டார் விடியு முன்னே
99 கண்டதுமே கலங்கியவன் கால்விழுந்தார் மன்னரல்லால் மிண்டிவரு போரெதிர்த்தார் இல்லையெனும் புகழால் மிக்குக் கொண்டபயம் குலைநடுக்க வாள் விழுமாம் குமரீர் நீங்கள் பண்டெமத தமிழ்வீரம் பராக்கிரமன் பார்க்கச் செய்வீர்
OO
217

Page 126
தம்பதெனி குருநாகல் வரைதரத்திச் சமர்வென் றிட்ட எம்பழைய புகழ்பாடி எதிரிவலி குறைத்துப் பார்த்தோம் அம்புமழை விற்கலையான் அரசரைமுன் குனிவித் தந்நாள் வம்புதரு வன்னியரின் வலியழித்தான் வருவான் நாளை
வாலிபத்தாற் பயமறியாக் குருளைகளே வாட்போர் தன்னில் கூலிபெறும் படைகளென இவர்போரைக் குறைத்ண்ெ ணாதீர் சாலிவளை உறுகுணையான் பராக்கிரமன் தரணி யாள மேலுமுயிர் கொடுப்பதற்கு விரதமுளான் மரண மஞ்சான்
Bibligg
குடுமிச் சிகரம் கோணா மலையில் வடுவித் தணிமீன் வரையும் தமிழர் அடிமைப் படவும் அவர்தம் மண்ணில் கொடுமைப் படவும் குனியத் தகுமோ
மானத் தடனே மடிவோம் இன்றேல் ஈனத்தடிமை இன்றே யொழிய ஊனத் தடலை உயிரைக் கொடுப்போம் ஏனித் தனைநாள் இத செய் திலமே
நண்டுக் காலின் நகரும் முனைபோல் மிண்டிப் படைகள் விரைவின் வளையும் அண்டிக் கரையில் தேரும் அசையும் தண்டித் திடநாம் தரகம் விடுவோம்
நானே புவனேகன் முன்நாளை தானா பதியாய்ச் சமரிற் செல்வேன் ஏனைக் குமரர் என்பின் வருக சேனைப் பிரிவு செல்க மூன்றாய்
கரிகள் கரையில் அணிசெய் திடுக எரிகண் குமரர் இடையில் நான்காய் வரிசெய் திடுக வாளின் வீரர் விரைசெய் குந்தர் முன்னே விடுக
218
IOI
I O2
IO3
IO4
IOS
IO6
IO7

குதிரைப் படையின் குந்தர் செல்க எதிருக் கெதிர்வேல் ஈட்டிப் படைமுன் உதிரக் கடல் செய் உரவோர் நிரையும் இதரக் குமரர் அணியும் எழுக
என்றே பரரா சண்முன் னியம்ப அன்றே அரசைப் பெற்றார் போல நின்றார் நெஞ்சம் நிமிரப் பெற்றார் வென்றோம் என்றார் வேளை வருமுன்
செகரா சன்றன் திணிதோள் கொட்டி இகரா சர்க்குள் எவரோ எமக்கு நிகரா வார்கள் நிலமும் எமதே தகரோ மோவிஷ் வடிமைத் தளையை
நல்லூர் தயிலும் நடுவின் நிசியில் சொல்லார் களமும் குறியார்கதாய்ப் பொல்லாண்பு குந்தான் புவனே கன்தான் வல்லா னென்று வருகின் றானோ
எந்தை எழுமுன் இருளிற் சூழ்ந்தான் நிந்தைப் படவே நிசிவென் றானின் சிந்துங் குருதிச் சிரங்கைக் கொண்டு சொந்தத் திருமண் தோய்விக் கேனோ
நீற்றுக் குறியிட் டார்கள் நெஞ்சில் கீற்றுச் சவுக்கு வடுவைக் கீறி நேற்றுப் பிறந்த நெறியைப் பெரிதென்(று) ஏற்றுக் கொளுமென் றானாம் இவனோ
காண்போம் சமரிற் கைவண்ணங்கள் நாண்போய் வில்லில் நாதம் செய்தால் பூண்பார் கவசம் வீணாம் புறம்போய் ஆண்பால் வீரம் அழிவார் அதனால்
219
IO8
IO9
IO
III
I 2
II3
II.4.

Page 127
Bogg
இருகுருளை இளவரசர் எழுந்துசொலும் சூளுரையால் அருகமரும் காளையர்மார் பகலமுறும், பணிப்புரைகள் தருகவென முன்னிற்பார், சாவுதனை முத்தமிட வருகவென எழுகின்றார் தவழ்ந்த தமிழ் மண்ணினுக்காய்
Balligg
அச்ச மென்பதே மருந்தினுக் கமைந்திலார், வேண்டும் எச்ச மயத்திலும் எமது பொன்னாட்டினிற் குயிரை நிச்ச யங்கொடுப் போமென நெஞ்சினிற் றட்டி அச்சு வேலியிற் குமரரா வேசமு மடைந்தார்
பூவுடன் தொழும் சைவரைப் புழுதியில் மிதித்து ஏவி நற்பரி சவுக்கினாற் புடைத்தவர் இனியும் ஆவிகொண்டெம தன்னைமண் இருப்பதோ என்று மாவை வாலிபர் மார்புதோள் தட்டினர் எழுந்தார்
பளப ளத்திடும் வேல்கொடு எதிர்வரும் படைக்குக் களப மார்பினைக் கவசமும் அணிந்திடோம் கொடுப்போம் முழுவறைந்திட வரும்புவ னேகனை முனையில் விழ நடத்துவம் போரென உழுவரும் வெகுண்டார்
ஆள்வ ரோஇனி அன்னைமண் அமர்முனை வந்து மீள்வ ரோதனிப் பராக்கிர மண்முனம் வென்றித் தோள்வலம் சொல உயிர்கொடு தொடர்வரோ என்று வாள்வலம் படச் சுழற்றினர் மாதகல் மள்ளர்
செல்லுவோம்முனை வெல்லுவோமெனச் சினந்து மல்லுலாவிடு தோள்களை வலம்பட உயர்த்திக் கொல்லுலைப்படப் புதுக்கிய கூர்மழு சுழற்றி வல்லையாடினர் புலோலியர் வரும்பொழு தெரன்
கட்டு கச்சினர் கவசமும் அணிந்திடார், மலைபோல் கட்டு லாவிய தோள்களை உயர்த்தினர் கன்னம் மட்டு லாவிய மீசையை உருவினர், வாளை மட்டு மாநகள் மீனிசை மறவரும் எடுத்தார்
22O
IIS
II6
II 7
8
I IQ
2O

மீன்பொறித்திடு கோணமா மலையினர் வெகுண்டே ஊன்பறித்திடும் ஈட்டியும் ஒளிவிடும் வேலும் கூன்பொறிச்சிலை உருக்கினில் வடித்தனர் கொழுவி ஏன்புறப்படு வதற்கினித் தடையென எழுந்தார்
கண்ணளந்திடா அகன்மலை மார்பினர் காதற் பெண்ணளந்திடா மீசையர் பிறைக்குறை தரித்த அண்ண லாருறை மாந்தையர் எழுந்தனர் அடங்கார் புண்ணுலாவிய தோளொடும் போரினிற் புகுவார்
போரடங்கிலார், புவியடங்கிலார்மற வீரர் வாரடங்கிலாக் கவசமும் வாள்களு மன்றி ஏரடங்கிலாக் கையினர் வன்னியர் எழுந்தார் ஆரடங்கினும் அடங்கிலோம் போர்முனைக் கென்றே
Belugp
வடக்காரன் மகனெழுந்தான் மனுப்புலியும் அவனையொரு இடக்காவற்றளபதியாய்ப் பணிகொடுத்தான் எழுந்தேற்றான் நடக்காது மேற்பறக்கும் நாற்படையும் புவனேகன் மடக்காத முன்னேற வியூகமுனை வகுத்திட்டான்
பாடிமனைப் படாம் விழுத்தி கடுங்காவல் புறமிட்டு கூடியவர் தத்தமிடம் குறுகியிரு கண்ணயர்ந்தார் கோடிவரும் தாரகைகள் கண்ணயரா குடிமக்கள் கூடுவிழி கூடாத குறைத்தயில் கொண்டதுபோல
நல்லூரின் கோட்டையினில் கற்பகமாம் நங்கையாளுக்(கு) எல்லாரும் தயில்போதில் இரகசியத் தாதனுப்பிப் பல்லாளும் படைப்பலமும் மீண்டறிந்த முற்றுகைக்கு வில்லாளர் வரும்போது வேண்டுமவள் தணையென்றான்
தென்கதவும் திருப்புமுனை வழியிரண்டும் தெரியாத பின்தகவும் காவலரை உள்ளிருந்து பின்தாக்க முன்கடிதம் வரைந்தபடி முடித்துள்ளோம், கன்னியரும் என்கரத்தார் இவர்வீரம் பொழுதுவர இருந்து பார்ப்பீர்
221
122
1.23
I24
125
26
I27
128

Page 128
என்றதனை உளங்கொண்டு தளபதிகள் இன்துயிலிற் சென்ற யரத் திசையெட்டும் அசையாது திகைத்திருப்பக் குன்றுயரக் கோட்டையினில் கடையாமப் பறையடிக்க என்றுவரும் விடுதலையென்று ஏங்குகின்றார் மக்களெல்லாம்
I29 மண்பிறந்த மன்னருக்கு நிழல்வழங்கி மகிழ்ந்தமரம் விண்பிறந்த வேதனையாம் வெளிக்காற்றில் தலையுளர்ந்த கண்பிறந்த தளியான பனிநீரைக் கடையகுத்தே எண்பிறந்த உடுக்கணத்தை இமையாமற் பார்க்கும்மா
I 30 ஊதிவரும் வெளிக்காற்றும் உட்புகுந்து கோட்டையினில் சேதிகொளச் சென்றுவரும் செம்மாந்த சிகரங்கள் போதுவரும் பொறுத்திருங்கள் எனப்புகலும் கண்துயிலார் நீதிவரும் என்றதமிழ் நெஞ்சினரைப்போல் நிமிரும்
I31.
பத்தாவது நாட்போர்
Hall[II
வேலையாகிய முரசெழுந்தடித்திட வானச் /சேலையாகிய திரையினிற் செந்தரம் பரப்பிக் காலையானவள் சிதறிய கைத்திறன் கால மூல நாயகன் கதிரவன் முகங்கொள எழுந்தான்
குடையடங்கிலாச் சக்கர வர்த்திகள் கொண்ட படையடங்கிலா அரசெலாம் பார்மிசைப் பார்த்தோன் புடையடங்கிலா இளமுலை யழகியர் புருவம் கடையடங்கிலாக் கோடுழக் கண்டவன் சிரித்தான்
Elgg
இருபுருவ நதல் நிமிர்த்தி எதிர்நிரைத்த அணிவகுப்பை வருபுரவி மீதமர்ந்து புவனேக வாகு கண்டான்
ஒருபொழுதும் காணாத இத்தனையும் ஒளித்திருந்த மருமமதைச் சிந்தித்து மனத்துள்ளே அதிசயித்தான்
222

வெண்புரவி மீதமர்ந்து விரிந்ததிசை முகக்கின்ற திண்புயங்கள் இருவரையும் வேறாக்கித் தெரிப்பதனால் மண்புரக்கும் வயவேந்தன் கனகனிரு மைந்தரெனக் கண்பிறந்த விருந்தாகக் காண்கின்றான் களத்தினிலே
காண்பரிய கட்டழகைக் கைப்படுத்தும் நான்முகனும் வீண்பொழுது செய்தானோ எமைப்படைத்து, விற்கரும்பில் நாண்படுத்தம் மன்மதனும் நாணிலனோ ஆசையுற்றார் ஆண்பிறவி யென்றாலிங்(கு) அணங்காரென் படுவாரோ
Elg
கழுத்தொன்றே இலக்காகக் கடிகை மூன்று இழுத்தநெடு வாளினாலோர் இரண மேனும் அழுத்தமுனை கின்றவனை அடுக்க டுக்காய் முழுத்தோளின் வலிகொண்டு மோது கின்றான்
இளையவனும் எதிர்வந்த சிங்களர்தாம் வளையவரும் சதிகண்டு வலத்த வாளால் களையவரும் சிரமெல்லாம் ககன மார்க்கம் வெளியடையும் விண்குருதி மழையே கொட்டும்
முன்னேறும் முனையடக்கி வடக்கா ரன்றன் பொன்னேறும் புதல்வனிடும் போரி னாலே பன்னூறு சிங்களத்தார் பதைப தைத்தார் என்னேயிம் மடங்கலென இறும்பூ தானார்
சிதைந்தனசிங் களர் படைகள் தேர்கள் வீழ்ந்த விதந்தருநற் கரியினமும் வீர ரின்றி மதந்துதைந்து வழிமாறி மாப்பாணன் முன் சுதந்திரமாய் அவன் படையைத் தாள்செய் கின்ற
திக்கற்றுச் செல்கின்ற தென்னர் தம்மை பக்கத்தச் செந்தமிழர் பாய்ந்து சென்று சிக்குற்ற வியூகமுனை செப்பனிட்டார்
கொக்கரித்துச் சேனாதி குறுகி வந்தான்
223
IO

Page 129
அகப்படுத்திச் சேனாதி பரியை வீழ்த்தி திகைப்படைய நாற்புறமும் சேர்ந்து சூழ்ந்தார் முகப்படுத்த தென்னரெல்லாம் முதகு காட்டார் பகைப்புலமே பாயாகி மண்ணிற் சாய்ந்தார்
Balig
முட்டிய தறகண்யானை முனைப்படு குருதிச் சேற்றால் பட்டெனச் சறுக்கி வீழும் படுத்தன கரத்தா லெற்றும் மொட்டொடு தேர்கள் வீழ்ந்த முறிந்தன சில்லும் ஆண்மை கட்டொடு கிடந்த தோளார் தமிழ்மகார் கலக்கி னாரே
இத்தனை வளர்த்தா ருக்கே இனியுயிர் கொடுப்ப தல்லால் வைத்தகால் வாங்கல் செய்யோம் வருவது வரட்டுமென்று சித்தமும் வலித்தார் நல்லூர்ச் செந்தமிழ் வீர் ரெல்லாம் குத்துவேல் கிடப்ப நெஞ்சிற் குந்தத்தாற் சிரங்கள் கொய்வார்
முன்னணி முகங்க ளெல்லாம் முறைப்படு சுற்றம் போலும் கொன்னுனைப் பகழிகொண்ட குமரரே தநயர் போலும் மின்னுவாள் சிரத்தை வீழ்த்த வீசினார் மருகள் போலும் என்னினும் சிரம்வே றாக்கி ஏறினர் எதிர்ப்படைக்குள்
சோற்றினுக் குயிர்கொடுப்பார் சுதந்தர தாகத் தாலே கூற்றினை விருந்துகொள்வார் கொதித்தெழ நிற்பராமோ ஏற்றிய கணையி னோடும் இழுத்தநாண் வில்லி னோடும் மாற்றிய பரியினோடும் மண்மிசைப் புரளு கின்றார்
முற்படு மிளைஞர் சேனை முதற்படு வெற்றியாலே விற்படை வீழத் தாக்கி வேகமாய் முன்னே சென்றார் எற்படு முன்னே நல்லூர் ஏகிமுன் மதிலைத் தாண்டி கற்பக நல்லாள் காத்த கதவினை அடைய நண்ணி
சிங்களர் அணிக ளெல்லாம் சிதறுவ கண்டு தம்பி தங்கவெண் தரக மேறித் தரத்தினன் தொடர்ந்தார் வன்னி மங்கையாள் கொடுத்த வீரர் மறித்தெதிர் பொருவா ரெல்லாம் அங்கவர் சிலையின் அம்பால் அவனியை முத்த மிட்டார்
224
12
I3
I4
IS
I6
I7

விரைந்தன தரகம் நல்லூர் வேந்தனின் கோட்டை நோக்கிப் பரந்தன படைகள் சுற்றிப் பார்த்துகள் மீது மேகம் கரந்தன கிரண மென்னும் கதிரவன் கரங்கள் தம்மை சிரந்தறி முண்ட மெல்லாம் சிதறின களத்தில் எங்கும்
கற்பக நல்லாள் காத்தக் கிடந்தவத் தருணம் வந்த பொற்புறப் பொருந்த லாலே பூவையர் தம்மைச் சேர்த்தப் பிற்புறக் கதவுப் பாங்கள்ப் பெரும்படை குவித்த நின்றார் எற்படு வதற்கங்(கு) இன்னும் இரண்டரை நாழி நிற்க
கோட்டையைக் காத்துநின்ற கொடும்படைச் சிங்க ளத்தார் ஈட்டியர் வில்லர் யானை இவர்ந்தவர் இழுத்த வாளர் பூட்டிய கவசர் போகும் உயிரொரு திரண மென்பார் ஒட்டிய குதிரை மீது உலவுவர் அங்கு மிங்கும்
Bogg
இளைய வள்ளலை எதிர்வரும் பரி வீரரும் வளைய நின்றனர் வாங்குகின்றதொர் அம்பினால் தளைபடுத்தனன் தண்டுபட்டன மார்பகங் களையெடுத்தனர் கவிழுகின்றனர் பரியிலே
ஏறிமுன் செலும் இராமனின் படை முற்படச் சீறி நின்றனர் சிங்களப்படை வீரரும் மாறி மாறி வரும் பெருங்கணை மாரியால் கூறுபட்டன நீறுபட்டத கொல்களம்
மனுப்பு லித்தலை செல்ல முன்வரு வாரொடு முனைப்படுத்திய குந்தர் முந்தினர் சிங்களர் சினப்பு யத்தினர் சீறி வந்தது தாங்கிலார் எணைப்புறத்திலும் இரிய நின்றனர் ஏறனார்
சுற்றி வந்ததிராமனின் படை தாள்பட எற்றி வீழ்த்திய தோள்கள் சிந்தின எங்கணும் குற்றுயிர்ப்படும் குதிரை வீரரும் குந்தரும் அற்று வீழ்ந்தனர் அவனி பாயெனத் துஞ்சினார்
225
8
I9
2O
2I
22
23
24

Page 130
ஓரை இரண்டரை சென்றும் ஓய்விலர் வாட்கலை நேர மொன்றென மாறி வெட்டினர் நெஞ்சினில் வீர மென்பது ஈரமற்றது விதியினின் ஓர முற்றவர் போருரைத்திடல் ஒண்ணு மோ
புண்படப்புவ னேகன் வாள்வரு போதெலாம் விண்பறந்திட வீசு கின்றனர் குதிரையின் கண்பறந்திட மாற்று வெட்டுவன் மைந்தனும் மண்புரந்தவர் மதலையென்பது நாட்டுவான்
தாழ்ந்தெழுந்தது குதிரை தன்னுடை நாயகன் வீழ்ந்திடா வகை மேலெழுந்தது பின்னரும் சூழ்ந்திடா திடைகூற்றி நின்றது தரிதமாய் ஆழ்ந்த சிந்தையர் போலவன் பரி அணுகுமே
உற்றெழுந்தனர் உறுகுணைப்படை கால்விழ வெற்றிகொள் சமர்கற்ற வித்தைகள் வீண்படும் மற்று மன்னரை வீழ்த்த டக்கிய வாட்கலை சற்றுமேபலிக் காத தென்னெனச் சாம்புவான்
சிறுவன் என்றெளி தெண்ணி னேனிவன் தேர்ந்தபோர் மறவன் என்றது கண்டனேணினி மாயமாய் உறுவன் முன்னணி ஓர முற்றினிப் பரியினை முறையின் மோதவன் முழுவலிக்கொடு வீழவே
ஓர மாயுடன் ஒடிநின்றது உள்ளமும் நேர மென்செய வேண்டு மென்பதும் நிச்சயம் ஒரு மப்பரி உள்ளில் சென்றது புவனனும் வீர சாகச வாளின் வீச்சுகள் காட்டினான்
வேக மாய்ப்பர ராசசேகரன் வெண்பரி போகவும் புவனேகனின் பரி சேரவும் ஆக நின்றது நொடியில் ஆயிரத் தோர்கணம் மேக மொன்றின வென்ன வீசின மின்னல்கள்
ஒருவர் வெட்டிடை ஒருவர் வெட்டுவந் தோசைகள் மருவ நிற்றலின் மனிதர் கண்களும் செவிகளும் இருவர் போரினை எளிது காண்கில இமைகளும் புருவ மும்வலி கொண்டனர்விழிப் புதுமையால்
226
25
26
27
28
29
30
3I.
32

தம்பியன்செகராச சேகரன் சக்கர அம்பு முன்னணி ஒன்ற மைத்தனன் ஆயிரம் வெம்ப டைக்கல வீரர் தங்களை வீழ்த்தினான் தம்புபட்ட திராமனின் படை சுற்றினார்
ஏறி நின்றிடு சக்கரத்தணி எவலால் நூறு நாறென வீழ்ந்தனர்பரி வீரரும் கூறு பட்டத சேனை எங்கணும் குருதியின் ஆறு பட்டது அவனி யென்பவள் மடியிலே
தேரொடிந்தது சில்லு மச்சொடு போய்விழும் வாரொடிந்தன கவச மார்பினிற் புண்படும் பாரணைத்தனர் பாயல்கொண்டனர் போரினில் வீர மென்பது வேண்டுமென்றவர் தென்னவர்
சக்கரத்தணி தம்பியோடுமுன் னேறவும் பக்கலுற்றவர்கள் பரிக ளோடு விழுந்திட மிக்க வேக மடைந்தனர் தமிழ் விடுதலை இக்கணம் வருமென்றெழுந்தனர் இளைஞரே
முன்னெதிர்ப்பவர் யாரு மில்லென முற்றுகை வன்னி மன்னவன் கோட்டை செய்திட வரிசையில் சொன்ன சக்கர வீரரோடு தொடர்ந்தனர் மின்னல் வெட்டினில் வேக வெம்பரி மீதிலே
தாசெழுந்தது வானடைத்தது தாள்படும் ஓசை கேட்டது ஆயு தங்களின் உள்ளொளி வீசுகின்றது வேகவெம்பரிக் கால்பட
நாசமுற்றத நாலு பக்கமும் காற்றினால்
மாட சாளர மூடு கண்டனன் வன்னியன் ஓடி வாளினைக் கையெடுத்தனன் உற்றவர் கூட வந்திடக் குதிரை யொன்றிலிவர்ந்தனன் வீடுகாத்திட வேண்டு மென்று விதித்தனன்
வாயில்தோறும் வகுத்த வீரரும் வாளுடன் போயடைத்தனர் புழுதி மண்டலப் போர்வையும் மேய தண்மையில் மேலு முட்செல விடுகிலார் வேய நின்றனர் வீரரும்மதில் மேலெலாம்
227
33
34
3S
36
37
38
39
40

Page 131
கோட்டைவாயிலடைத்தனர் மரங் கொழுவியே பூட்டுகின்றனர் சாளரங்களும் புகுவழி நாட்டு கின்றனர் நம்புகின்றவர் தங்களை நீட்டு கின்றனர் வேலுங் குந்தமும் நேரிலே
மதிலில் வைத்தன எந்திரக்கணை மழைவிடும் அதில மைத்தன கவணியங்கின ஆயிரம் பதிலடித்தன பாறைவீசின பக்கமும் அதலமுற்றன அதிர்வெழுந்தது அகிலமும்
ஆழமாகிய அகழியின்நிறை முதலைகள் வாழ வந்தது காலமென்றன வாய்களை சூழ நின்று திறந்த பற்கொடு சூப்பின வேழு மும்விருந்தாகுமென்ற விருப்பினால்
வெந்த எண்ணெயை வீசுகின்றனர் வீழ்பட கந்தகத்தை யுருக்கிவீசினர் காலினைச் சிந்து கின்றனர் தீப்பிழம்புகள் சீறியே வந்தவர் நழைவாயில் முன்னணு காமலே
உருக்கியற்றிய முட்கள் தாவினர் உள்ளெலாம் நெருக்கி வாள்கொடு வீரர் நின்றனர் கீழ்வழி
இருக்கு மவ்விடம் எவரு முள்நழை யாவகை சிருக்கு கின்றனர் தரித மாய்ச்செய லாற்றுவார்
செப்புருக்கிய தீக்குழம்பினை எந்திரம் கொப்பளித்தத குத்துகின்றன குதிரையில் இப்புறத்தவர் எறியும் வேல்களும் ஈட்டியும் அப்புறத்தவர் பிற்புறத்தவர் ஆகவே
சக்க ரப்படைத் தலைமையிற் செக ராசனும் உக்கிரக் கணை எதிர்பொழிந்தனன் உள்ளுளே கக்கு செந்தழல் எந்திரங்களைக் கைக்கொள பக்க முற்ற சுருங்கை வாயிலைப் பற்றினான்
காத்து நின்றவர் தலையுருண்டன கதவினில் தீத்தெ நித்தன சிந்தினாரெரி செந்தழல்
மீத்தெழுந்து புகைந்து நின்றன மேல்மதில் கோத்த கையின ராகி ஏறினர் கூடியே
228
4.
42
43
44
45
46
47

மாத கற்பகம் மங்கை மார்தமைக் கூடியே மீது மேல்மதில் ஏறுகின்றவர் கைப்பட பாதியிற் கயிறெறிய வந்தவர் பற்றினார் மீதியும் சொல வேண்டுமோ வருவீர்க்கே
சுருங்கை காத்தவர் சுற்றி நின்றவர் வாளொடு நெருங்கு கின்றனர் நின்ற மாதரை நீக்கினார் மருங்குல் மங்கையர் மாற்றுவேட மிழந்தனர் ஒருங்கெ முந்தனர் உக்கிரப்படு வீரராய்
கரந்த வாளினர் கச்சை யுட்படக் கட்டினார் பரந்த தோளினர் பாலியப்பரு வத்தினர் உரந்துயில் கொளும் மார்பினர் கரம் ஓங்கியே சிரந்துணித்தனர் சென்றடைந்தவர் யாரையும்
உள்ளிருந்தவர் காவல் செய்தவர் ஒன்றியே கள்ளமாக நழைந்த வீரரைக் கைப்படுத்(து) ஒள்ளொளிக் கதிர்வாட்கள் வீசினர் உக்கிர மள்ளர்வந்தவர் மாறெதிர்த்து மடித்தனர்
சோறு தந்தவன் சுற்றமென்றவன் வன்னியன் வேறென் றெண்ணிலம் போரெதிர்ந்தவர் வீழ்ந்திட கடறசெய்துடல் குருதி யாறு மிதந்திடும் ஏறி வந்தவர் இனியுயிர் கொடு மீள்வரோ
கதவிடிப்பன நெற்றியால்விடு கரியினம் மதிலுடைப்பன கொம்பு யானைகள் மத்தகம் அதிலுளைந்திடும் தினவு தீர்ப்பன, அவ்வொலி மதலை மங்கையர் மனமிடித்தது உள்ளிலே
கூந்த லுந்தகி லுங்கை கொண்டவர் ஓடுவார் ஏந்து வாளின ராக எங்கணும் தோன்றவே போந் தொளித்தனர் போகலாவிடம் வன்னியன் சாய்ந்த மஞ்சமும் சாருவா ருயிராசையால்
எந்திரங்களை எதிர்மு கத்திசை மாற்றியே வந்தங்கு உள்திசை யாக மாற்றினர் வைத்ததீ சிந்து கின்றது சென்ற சென்ற விடங்களில் கொந் தளித்தனர் நெஞ்சழிந்தனர் கூவியே
229
49
50
SI
52
53
54
SS
56

Page 132
உடைபழக்கினர் ஒயில்பயிற்றுநர் சிங்கள நடைபழக்கிய நங்கை மார்களும் ஓடினார் இடைவழுக்கிய சேலையுங்கர மேந்தியே படையெடுத்தவர் இடைமறித்திலர் பாவமே
தொட்ட வீணையும் சுருதியும் பிறிதாகவே விட்டெறிந்தனர் வீசினர் குழல் மத்தளம் எட்டியோடினர் எங்கு போவது எங்கணும் வெட்டு கின்றனர் வீர வெஞ்சமர் விளைதலால்
மாடவெண்புற வங்களோடின மாதரைத் தேடுகின்றன சென்று சென்று பறந்தன ஓடு கின்றவர் முத்து மாலைகள் உதிர்வன நீடு கண்படுமுத்தினார நிறைக்கவே
இட்ட தாளொடு கதவு வீழ்ந்ததே யென்னலும் எட்டி வைத்தவன் வன்னியான் எதி ரேறினான் பட்ட வாள்ந தி யால் விழுந்தனர் பற்பலர் தொட்ட தொட்டசி ரம்விழுந்தன தரிதமாய்
கொன்று வீழ்த்திடிற் கூடிடும் மற சொர்க்கமே என்றுணர் செக ராசசேகரன் இவனையே சென்று கட்டுமின் சிறிது புண்பட லின்றியே வென்ற மென்பதில் வீர் மென்பது விலையுறும்
வேலி யிட்டனர் வேலி னாரைநிறுத்தியே கோலி வட்டமும் குந்தரிட்டனர் குதிரைகள் நாலு பக்கமும் நிரைபடுத்தின நடுவினில் பால வீரரும் பரவினாரவன் பணியினால்
கைப்பிடிக்கொடு வாள்கழன்றது கணையினால் எப்படிக்கிதைச் செய்திட்டாரென எண்ணமுன் முப்புறத்திலும் முன்னுறக் கயிரெற்றினர் இப்படிப்பட எதிரொலித்தது சங்குகள்
போரொழிந்தது, பொழுதொழிந்தது புவனனும் வீர சொர்க்க மடைந்திட்டா னென விண்ணிலே ஆர வார முழக் கெழுந் ததம் ஆயிரம் பேரிகைக் குரல் வான்பிறந்தது பேசவோ
23O
57
58
59
60
6.
62
63.
64

பொங்கு கின்றன சங்கு கொம்புகள் போர்முனை எங்கும் எங்கும் எழுந்து தள்ளினர் ஏறியே அங்கு காற்றினில் நீந்துவாரென ஆயினார் செங்குழம்புகள் சிந்தியந்தி சிரித்தனள்
Ell
கொந்தளித்தார் வீரரெலாம் குரைகடல்போய் விண்மு கட்டில் வந்தடித்த ஒசையென ஆர்ப்பரவம் வான்வளரும் அந்தரத்தில் தள்ளுகிறார் ஆடுகிறார் ஆனந்தம் சிந்தவிரு தோள்தட்டிச் சிவப்படைந்தார் படைக்கரத்தால்
பரராசன் வெண்புரவி முன்னடக்கப் பரியி னங்கள் நிரையாகப் பின்செல்ல கரிசெல்ல நிமிர் தேர்கள் வரையாகி வழிசெல்ல வாட்படையும் குந்தர்களும் திரையான பாசறையின் சுவர்புகுந்தார் சிரமமாற
வானுடுக்கள் கண்விழித்த வாழ்த் திசைக்கும் தாமரையும் தேனுகுத்துக் கைகூப்பும் சிறுமையினி யொழிந்ததென தானெடுத்த தென்றலெனும் உயிர்ப்பினால் தையலிரா 2ஹனெடுத்த போர்ப்புண்கள் ஊதுகிறாள் மெல்லமெல்ல
கோட்டையினுட் செகராச சேகரனும் குமரரோடு நாட்டினனே நந்தியினை எழுதுகொடி நறுநெய்யிற் பூட்டினனே திருவிளக்கு கற்பகமும் பூவையரும் பாட்டிசைத்தார் குரலெடுத்தப் பண்ணெழுந்து விண்ணிறைக்க
வெற்றியென முழங்குகிற விடுதலையின் வீரரெலாம் சுற்றிவர நாற்புறமும் காவலிடத் துயிலொழிந்தார் அற்றொழிந்த தடிமையென ஆர்ப்பரிப்பார் ஆதலினால் வெற்றடைந்த மஞ்சமெலாமி விழிமூடார் ஆம்பலென
பொருகளத்தப்புவனேக வாகுவிழுந்தானென்ன இருகரமும் சிரசேற இறைவனடி தொழுகின்றார் அரகரவெண்பா ரொலியும் ஆனந்தப் பேரொலியும் பெருகலையாய் வருகின்ற புறநகரின் பின்னுள்கள்
23
65
66
67
68
69
0ך
1ך

Page 133
BauütuHØJub 45bpapastulastb
சிந்தாத பனித்துளியும் தேன்தளியும் சேர்ந்தவிதழ் அந்தாதுப் பொன்னுகுத்தே அரும்பவிழ்க்கும் வைகறையில் நந்தாத திருக்கோவில் மணிகளெலாம் நாக்கறங்கும் எந்தாயென் றிறைவனடி ஏத்துகின்றார் நாத்தழும்ப
ஒடுங்குமுடல் விரிந்ததுபோல் உணர்வாரும்,மார்பகங்கள் மடங்குவன அகன்றனபோல் தடவுவாரும், மனைகளெல்லாம் முடங்குவன இடம்படவே காண்பாரும் முற்றமெல்லாம் இடங்கடந்து பரந்ததுபோல் எல்லைசெலக் காண்கின்றாரும்
உள்ளடக்கும் ஆமையென உணர்வடக்கி நாவடக்கி கொள்ளமுடி யாதமனப் பாரத்தால் குமுறினோர்கள் மெள்ளநெடு மூச்செறிந்தார், மேவிவரும் தென்றலுமே தள்ளிவரும் சுவர்மதில்கள் இல்லனபோற் சுதந்திரத்தால்
உருவெழுத வொண்ணாத ஒருவனையே மனங்கண்ட திருவெழுதிப் பிறைகடிச் செழுங்கொன்றைத் தாரெழுதி மருவிவரும் சித்திரங்கள் மறைத்ததெலாம் கண்ணிரண்டின் அருவிவர மனையெல்லாம் அணிவித்தார் அங்கங்கே
இமைவரம்பின் எல்லைபடும் திருநீறும் இல்லறத்துக்(கு) அமைவரம்பாம் கற்புமலாத ஒழிந்தனதாம் அடங்காவாம்; சுமைவளர்த்த உள்ளமெலாம் சுதந்தரத்தால் வெறிதாக தமைவெளியிற் காற்றெடுத்தாற் போலுணர்ந்தார் தமிழரெலாம்
பழந்தமிழர் மண்மிசையே பரவுகின்ற பொன்னொளிக்கு விழுந்திடுசெம் மேகங்கள் வீண்தடையாய் நிற்பதுவும் செழுந்திரு வாகாதென்றே தினகரனும் தெளிந்திடுவான் எழுந்தனனே சுதந்தரமாய் இதயமெலாம் சுடரெறிப்ப
நந்திவரும் கொடியோடு நாவாய்கள் வடகடலில் பந்திவரும் படகுவலிக் கின்றவர்கள் பாட்டெல்லாம் முந்திவரும் காற்றினிலே முழங்குகடல் சுதந்தரத்தில் சிந்திவரும் முத்தெல்லாம் திரைக்கரத்தால் வெண்மணலில்
232

இனிக்குழுவி யானாலோ என்பார்கள் எண்பத்துத் தனிக்கிழவர் தளர்ந்தநரைத் தாயரெலாம் மக்கள்போர் முனைக்களத்திற் பட்டதுவும் மறந்தார்கள், மாதராரும் மனைக்களத்தை நனைக்கின்றார் மங்கலநீர் தெளிக்கின்றார்
வேதியர்க்குக் குரலொலியும் விண்ணளக்கும் மலைமகளின் பாதியர்க்குப் பூசைமணி பாரளக்கும் தேவாரம் ஒதுவர்க்கோ ஓசைவரும் ஓங்காரக் கணபதிக்கு மோதகமும் அவல்பொரியும் முப்பழமும் முன்வருமே
கிளிக்கதவைத் திறப்பாரும் கெஞ்சுமொழி நாகணவாய் வெளிக்ககனம் பறக்கவென விடுவாரும் மென்கையில் அளிக்கவரும் வெண்புறவை விண்பறக்க அனுப்புவாரும் களிக்கவரும் சுதந்திரத்தின் கருத்தவிரிக் கின்றார்கள்
காளைகளை ந கமவிழ்த்தார் கன்றுகளைக் கட்டவிழ்த்தார் ஆழிவலை சுருக்குகிறார் அவரவரே தம் சுமையைத் தோளிருத்திச் சுமக்கின்றார் சுமையெல்லாம் சுதந்தரத்தால் காழிழந்த பஞ்செனவே காற்றெழுந்த காரணத்தால்
மனக்கதவு திறந்ததனால் மறைத்தன பைங்கிளியனையார் இனிக்கரக்க முடியாமல் எண்ணங்கள் எழுந்தபடி இனிக்கவரு காதலர்க்கே எடுத்துரைப்பார் நாணமொடு தனிக்கவரு சொல் மறந்தார் தோள்சாயத் துடிக்கின்றார்
மழித்திடுவார் வளர்த்தமயிர் வஞ்சினமும் முற்றுதலால் கிழித்திடுவேல் மார்பேற்றுக் களம்புகுந்து கிடப்பதற்கே எழுத்திருக்க வில்லையென இகழுகிறார் ஆடவரில்
பழுத்திருக்கும் முதியவரும் பாலியரில் மெலிந்தோரும்
ஒருமுகத்தை இனிப்பாரேன் உளம்புகுந்த உமையல்லால் மருமமிது இருவருக்கும் மறைத்திருப்போம் என்றிட்டேன் செருமுகத்திற் சென்றாரே என்றேங்கும் கன்னியரின் திருமுகத்தின் ஒளியினுக்குச் செங்கதிரும் ஈடாமோ
களம்புகுந்தார் கணவரெலாம் கட்டழகும் மொட்டவிழும் இளம்பருவச் செல்வமும்வீண் என்றிருந்த இளங்கிளியார் தழும்புபட அணைக்கின்ற மெல்லமளி சரிசெய்தார் விழும்பளிங்கு வளையல்களும் தடையென்று வேண்டிலரே
233
O
II
2
I3
I4.
IS

Page 134
சோதிடமும் பலித்ததென்பார் சுக்கிரன்பொன் னோன் செவ்வாய் கோதறநின் றார்களெனக் குறித்துநிலை கொடுக்கின்றார் வேதமுறை வைத்தியரும் வீடுவர லாமென்று பாதிவழி பார்க்கின்றார் பாசறைக்கப் பாலிருந்து
Eblug
போரொழிந்தது போற்றிலர் திண்புயம் சேருகின்ற தினவு செறிதலால் ஆரெதிர்ப்பவர் ஆருளார் என்றுவேல் நேரெடுத்தனர் நேரலர் தேடியே
புண்படும் புயம் மாற்றிலர் ஆற்றலின் கண்வடுக்களைக் காத்தனர் வீரரே திண்படுத்திய தோள்களைத் தேய்த்தனர் நண்பரிற்பட நாடுவரின்மையால்
படையெடுக்கவும் பாரினை ஒர்தனிக் குடையெடுக்கவும் கொற்றவன் கோட்டைமுன் நடையெடுக்கவும் நாடுபிடிக்கவும் விடைகொடுத்திட வேண்டுகின்றாரரோ
உறைகழித்தன ஒள்ளொளி வாள்களை உறைபுகுத்திட ஒப்பிலர் சென்றுதாம் சிறைபிடித்தவர் செங்கை விலங்கொடு பறையடித்திவண் பார்த்திட வேண்டுவார்
காவிநீள்விழிக் கண்ணிணை முத்தொடு தேவிமார் தெருப்பார்த் திருப் பாரென ஆவி சென்றவர் ஆகம் தழுவலால் மேவு வெற்றுடல் பாசறை தங்குமே
வெஞ்சமர்க்களம் வேல்கொடு விட்டனர் நஞ்சடக்கிய நங்கையர் வீரரை நெஞ்சடக்கிய காதல் நினைவுற பஞ்சடக்கிய மெல்லணை பார்த்தனர்
234
I6
I7
18
I9
2O
21
22

புண்மருத்துவர் பூசு மருந்தினும் பெண்மலர்க்கை பிடித்திட நாடுவார் நண் மழுப்படு புண்ணினும் நோவது தண்மலர்க்கணை தந்தவடுக்களே
மற்புயங்கள் மலைந்த பெருமையும் விற்பிடித்ததும் வீரமும் போர்முனை அற்புதங்களும் ஆவிகொடுத்ததும் கற்பொறித்தனர் கண்படு வீரர்க்கே
கைமை யற்றவர் கால்களைக் கற்புடைத் தெய்வ மென்று சிரமிசைச் சூடுவார் பெய்வர் கண்மழை பேசு தியாகத் தீ மெய்விளக்கிய வீரருக் காகவே
Bibligg
சொல்லமுந்திய தாதவர் பூநகரிக்குச் செல்லுகின்றனர் வெற்றியை உரைத்தலும் சேர்ந்து புல்லுகின்றனர் பொருபடை உயர்த்தினர் புவனன் இல்லையென்றதம் எழுந்தனர் எக்களிப் பாலே
கூவுகின்றனர் கொடிகளும் முரசமும் முன்னாய் மேவிநின்றிட விரைந்தனர் வெடிபடு நல்லூர் , வாவியும் வயற்கரைகளும் வளங்களும் கடந்தார் ஏவு கின்றது சுதந்தரம் என்றொரு உயிரே ::
மருங்கிரண் டிலும் வழிவழி கூடினர் மக்கள் கரங்கள் கூப்பினர் களித்தனர் ஆர்த்தனர் மேலும் ஒருங்கு சேர்ந்தனர் ஒருதரம் வீரரைப் பார்க்க மரங்கள் மக்களின் தலைகளைக் காய்ப்பன வளைந்தே
கொல்லு லாவிய கொடும்படை அந்நியர் பரிகள் செல்வ மாகிய சிறுவரை இடறிடச் சிந்திய தெருவில் செல்லலா மொரு பயமிலை இனியெனத் தெரிந்து வெல்லு வார்களை வாழ்த்தினர் விண்பட மருங்கே
235
23
24
25
26
27
28
29

Page 135
காசெறிந்தனர் கைமலர் தாவினார் பன்னிர் வாசமெற்றினர் சந்தனம் வருவழி தெளித்தார் தாசெழுந்ததும் அடங்கிடத் துலங்கினர் வீரம் வீசு கின்றதோள் அசைந்திட விரைந்தனர் நல்லூர்
வன்னி மாமகள் வழங்கிய பரித்திரள் நடப்ப முன்ன ராய்த்தள பதிகளும் முரசமும் செல்ல சின்ன மாகிய சினவிடைக் கொடிகளும் எழுந்து பொன்ன கள்ப்புறம் நடந்தன புறமதில் மருங்கே
படைநடத்திய தளபதி மார்களும் முன்னே விடையழுத்திய கொடிகளும் விண்ணகம் ஒலிப்ப புடையடிப்பன முரசமும் பொங்கிய சங்கும் நடையெடுத்தவர் மனமென நாற்றிசை முழங்கும்
ஏறுவெண்பரி இவர்ந்தனன் எழுகதிர் எதிரே வேறு செங்கதிர் விரித்தென இளம்பர ராசன் வீறு கொண்ட அவ் வெற்றியின் பெருமிதம் விஞ்சு மாறு சென்றனன் மன்மதன் அடிதொழு மருங்கே
அல்லும் கண்துயில் அறிந்திலன் அடிமையை அகற்றி வெல்லும் பற்பல அணிநிரை விதித்தவன் தணிந்த சொல்லு கின்றன செயற்றிறம் வடித்தவன் சூழச் செல்லும் இராமனின் திண்புய அசைவினைக் காணிர்
Baggi
சினமுடித்த வடக்காரன் செல்வன் போரில் முனையெடுத்த வடுக்க ளெலாம் முத்தினாரம் எனவிடுத்து வருகின்றான் இருமருங்கும் மணமடுத்த உவகைவெறி மக்கள் கூட்டம்
வென்றியலா தொன்றறியான் வீரத் தோளில் குன்றிருக்கும் பிளவெனவே குறித்த அம்பு
சென்றிருக்கும் புண்மறைக்கான் தேரின் மீது நின்றிருக்கும் மனுப்புலியை நிமிர்ந்து காணி
236
30
31.
32
33
34
35
36

அச்சமிலார் ஆயுதங்கள் அறியா தன்றே எச்சமயம் கேட்டாலும் இரும்பில் வார்த்தார் பச்சைபடும் வாட்புண்கள் பரந்த தோளார் அச்சுவேலி வீரர்செல் அணிகா னிரே
மார்பளவுந் தோற்கவசம் மறைக்கா(து) ஒடும் வேர்வளவுந் திண்மேனி விரித்தார் வெற்றி போர்வை யென்று புகழ்தலினால் கதலி சாய்க்கும் நீர்வையெனும் பதிவீரர் நேரே காணி
நெல்விளைத்த கை களினால் அடிமை நீக்க வில்வளைத்தார் வெம்போரில் விசயன் முன்னே மல்விளைத்த மார்பில்வேல் ஏற்று மாற்றுக் கொல்விளைத்த கணையுடையார் கோப்பாயாரே
வட்டவியூகத்தின்முன் வளைந்துசெல்ல எட்டடுக்காய் நிரைசெய்து ஏறி உள்ளே வெட்டியவர் தலைகொய்த வீரம் ஏற்ற மட்டுநகள் மறவரிவர் காணி இன்னே
யார்செல்வர் இவ்வணிக்குள் என்றிராமன் சோர்கின்ற போதுயிரைத் தச்ச மாக்கி நேர்சென்றார் நிரைத்தவணி நிலைகுலைத்தப் போர்வென்றார் புலோலியரின் புண்கள் காணிர்
சிறையிருந்த செல்விமனுப் புலியின் தேவி 7 அறையிருக்கும் சுருங்கைவழி அரண்கள் தாண்டிக் கறையிரவில் கடுங்காவற் கோட்டை புக்க துறைவிரவு மன்னாரின் தோழர் காணிர்
கண்டியினக் கரிகளுடன் கரிகள் ஏவிக் கொண்டுகளம் பொருதிட்டார் கொம்பன் கீறிக் கிண்டியுழு மார்புடையார் கிழித்த கோடு கண்டுகொளச் சுளிபுரத்தார் நடத்தல் காண்மின்
மூசுவிடைக் கொடியேற்றி முரசடித்தார் மாசுபடு அடிமையினி மாய்ந்த தென்று வீசுமிளங் காற்றெழுந்து வெற்றி சொல்லி ஆசைமண மக்களினை அணைக்கு மம்மா
237
37
38
39
40
4I
42
43
44

Page 136
ypaðABUfŽNb üuul6Sub
Bibliog
புண்படு வன்னியன் புழுதி தோய்ந்திடத் திண்படு தோள்களும் சிரக்கிரீடமும் விண்படு கொடியொடு வீழ வீரமும் கண்படுக் கின்றதே எண்னக் காணு வான்
தாக்கினர் சேவகர் தரிதமாய்ப்பரி ஊக்கினர் ஒருகணத்(து) ஊர்கள் தாண்டினர் நோக்கினர் படைவரும் வழியை நண்ணிய போக்கினர் பூநக ரிக்கும் போயினர்
பச்சிலைச் சாறொடு படர்ந்த மூலிகை வச்சிரம் படஅரை மருந்து வைத்தனர் உச்சியில் நசியமும் ஒருங்கு சேர்த்தனர் உச்சரிக்கின்றனர் உணர்வு மந்திரம்
எழுந்தவன் இருவிழி திறந்த நோக்கினன் அளந்தனன் அயலினை அமரின் கோலமும் பிளந்தன பிணங்களும் பிறவும் காண்கிலான் விளைந்தது யாதென வினவி னானரோ
மொழிந்தன முகங்களும் விழியும் கீழுற அழிந்தனம் என்பது அரச மாமுடி விழுந்ததற் கிரங்கிலன் வெள்கினான்சமர்க் களந்தனில் தயின்றிடக் கால மின்மையால்
சிங்களக் குடிகளும் சேர்ந்து தென்றிசை பங்கமுற் றோடினர் பராக்கிரமனிடம் பொங்கிய மக்களின் புதல்வர் போரினை அங்கவர் கண்டவாறு அனைத்தும் சொல்லவே
தாதுவர் காவலர் தோகையர்குரு மாதவர் புத்தரின் மறைகள் சொல்லுவர் தாதியார் எஞ்சிய தறுகண் வீரர்கள் நீதியர் கூடினார் நெறியிற் சென்றிட
238

இருமருங்கிலும் சிலர் காவல் ஏற்றனர் பொரவரு வாரெனப் புறமும் சுற்றினர் ஒருவர்தாம் முதகுறில் உயர்த்தி டார்படை தருமமும் அறிந்திலர் தமிழர் போர்முறை
முடியிழந் திடினும் வன் னியனை முத்துறு பிடியுறு சிவிகையில் ஏற்றிப் பிரிகிலா(த) அடியுறும் அவனுயிர்க் காவலர் சுமந்து ஒடியினும் அந்நியர் சுமக்க ஒப்பிலார்
பொற்றுவராடையர்புத்த வேதகர் சிற்றிலை விசிறியும் குடையும் சேர்த்தவர் நற்றவர் நடப்பதம் நாணிச் சிங்களர் பொற்றவி சேற்றினார் புயங்கள் தாக்கினார்
பணிச்சமும் நாணிய பாத பங்கயம் இனிச்சில அடிகளும் எடுக்கு மோவென மனச்சிலை வனப்புறு மங்கை மார்களை தனிச்சிவி கைக்கொடு தாங்கிச் சென்றனர்
விட்டன எலும்புகள் விரைந்து மூட்டொடும் ஒட்டிடப் பட்டையின் மருந்தும் உற்றபோார்ப் பட்டன புண்களைப் பச்சிலைக்களி தொட்டனர் மாற்றினர் புத்தசோதியர்
போதிருந் தனகரு வண்டு பொம்மென மீதெழுந் தனகிளை மேலெழுந்துபொன் தாதுகுத் தனஉடை தமனியத் தவர் மாதவர் அணிவபோல் மாற்று கின்றன
குரங்குகள் தாவிடக் கொம்பர் தாழ்தலின் மரங்கனிந்தன பழம் மகளிர்க் கெட்டுவ இரங்குவ மலர்களும் இவர்கள் உண்டிடச் சிரங்களைத் தாழ்ப்பன தேனி றால்கொள
239
IO
II
I2
I3
I4

Page 137
Bougg
கண்மலர்ந்தன தோகையை விரித்துப் பெண்மகிழ்ந்திட நடமிடும் மயில்கள் புண்மனத்தவர் போரினிற் பட்டன ஆற்றத் தண்முகங் கொடு சிறகரால் ஆற்றுவ சார்ந்தே
கள்ளமற்றன மானினம் கலையொடு குளநீர்
மொள்ளு கின்றில முனைபடும் முன்வராத் தோல்வி உள்ளு கின்றன ராதலின் விடாய்த்தனர் உண்ணத் தெள்ளு நீர்நிலை சேறுறா வகை செயத் தெரிந்தே
அந்தியின் நிறச் செம்மையைப் பழித்திடும் ஆம்பல் பந்த மொத்தன அரும்புகள் பள்ளநீர்க் குளத்தில் குந்த நட்டெனக் கண்டனர் கொடுஞ்சமர் தோற்றுச் சொந்த மண்ணினை நாடுவர் தொடர்ந்தஅப் பொழுது
தண்ணறுஞ்சினை தாழ்தலின் உகுத்தன தாது புண்ணடைந்தவர் தோள்களிற் போர்த்தலில் மருந்தாற் கண்ணடைப்பன தருக்களும் கண்டனர் தாண்டி மண்ணடக்குநர் வன்னியும் தம்பையும் மறைய
பொறிதெறிப்பன கண்களும் புயங்களில்வீர் வெறிதெறித்திட வீற்றிருக் கின்றவன் கோட்டை நெறிதுரந்தனர் தோற்றினர் நிகழ்ந்தன சொல்லார் வறித நின்றனர் வாடிய முகஞ்சொல விட்டே
தோற்றிலாப் புவனேகனுந் தஞ்சிய தறிந்தான் ஆற்றிலான் மிக அகங்கொளுந்துயரினை விட்ட காற்றினாற் சுடக் கண்களில் 2ளதிய நெருப்பை ஏற்றி னாலென இருந்தனன் மொழியெடுக் காதே
தோகை மங்கையர் விசிறிய அன்னமென் தாவி நோக நின்றது வளிபடும் அரவமே யல்லால் ஆக நின்றது அமைதியே என்னினும் அவையில் வேக நின்றது அவரவர் உள்ளமும் விழியும்
240
II 5
I6
I7
8
I9
2O
2.

அஞ்சி யோடிய பகைவரும் அவன்சமர் கேட்டுத் தஞ்ச மென்றென(து) அடியினில் தாழ்ந்தவர் தாமும் எஞ்சிறைப்பட இருந்த சிற்றரசரும் இனிமேல் நெஞ்சு தாக்குவர் நிமிருவர் என்றனன் மன்னன்
இரவி சாய்ந்திடில் உடுக்களே இறைவராம் இரவில் பரவு தாமரை கூம்பிடிற் பாசியும் மலராம் விரவு சிங்கமும் வீழ்ந்திடில் வேந்தனும் நரியே பொருமுகத்தினிற் புல்லரும் வாளெடுப்பாரே
இனியொழிந்தது போர்முனை எமக்குறு கோட்டை தனியெழுந்திடு புகழொடு சாய்ந்தது போலும் எனவழுங்கினன் என்னினும் புவனனைப் படுத்த YA சினவிடைக் கொடிச் சிறுவரைச் சிந்தையில் மறவான்
கண்ணளக்கிலா மார்பினிற் கவினைச்சொல் வோமோ விண்ணடுக்கிய கார்முகிற் சுருள்களை வென்று பெண்ணலத்தினைச் சிறைகொளும் குஞ்சியைப் பிறங்கும் வண்ண நாசியின் வடிவினை உரைத்திடு வோமோ
காளை யாகிய கட்டிளம் பருவமே கறுத்து வேளையாலரும்பு இதழ்படு மீசையை விரிக்க நாளையாயிடும் ஆண்மையின் பெருமிதம் நடக்கும் தோளை யென்சொல முன்னவர் தரகமேல் வரவே
தாயகம் பெறத் தம்முயிர் கொடுத்திடும் விரதர் தோயு மன்பினால் மக்களின் தோழரே உள்ளக் கோயிலுற்றனர் குமரரே யாயினும் அறிவால் ஆயிரம்முது அமைச்சரே போன்றனர் தெரிவீர்
புள்ளியானைகள் ஆயிரம் போர்நிரைப் படுத்தென் தள்ளுமாயிரம் தரகமும் வீரமும் விடுத்தென் வெள்ளமாய்வரு மக்களின் விடுதலை ஒலியைத் தள்ளுமோபுவ னேகனின் வாட்படு சமரே
ஈத எம்முடை அன்னையின் மடியென எழுந்த காத லாலுயிர் கொடுக்கவும் கடுஞ்சமர் எதிர்த்து மோதவும் பசியிருக்கவும் முயற்சிகள் விடுத்து வேதமும் போரெனப் பயிலவும் நின்றனர் வேந்தே
241
22
23
24
25
26
27
28
29

Page 138
அறிதி மன்னவ அவர்பொருந் திறன்பெரி தன்று வெறிது கண்டனர் உடலெலாம் வெற்றியின் இலக்குக் குறிதிறம்பிலா தொண்றென உயிர்த்தனர் கொள்கை உறுதி யொன்றலாத உயர்ந்தத வேறவர்க் குளதோ
அல்ல் லுற்றழு கண்ணினீர்த் துளிகளும் ஆற்றாக் கொல்லுலைப்படு மூச்சொடு குருதியும் அல்லால் வில்லிறுத்தன கணைகளும் வாள்களும் வெம்போர் வெல்ல நின்றவோ வேந்தனே புவனனைக் கொன்றே
ஆண்ட வன்னியன் அமர்படு புண்ணினன் எம்மோ(டு) ஈண்டு வந்தவன் இடையினில் மரைக்குளம் நின்றான் மீண்டு போர்செய வேண்டிய முயலினும் அவனைத் தீண்டு கின்றிலர் செந்தமிழ் நிலத்தினர் வெறுத்தே
எங்கள் வீரரும் எங்களின் யானையும் கொண்டே அங்கு போர்செய அகமுளான் ஆதலின் அரசே உங்கள் சேவடிக் கிவற்றினை உரைப்பதும் உண்ட எங்கடன் வர வேண்டுவது இயற்றுக என்றான்
குடிபெயர்ந்தவர் இவணிருந் தவ்விடம் கொற்றம் அடிபெயர்ந்திடச் சிதறினர் அகன்றனர் தென்பால் தொடி பெயர்ந்து யாம் தாழ்த்தியங்கிருந்திடில் நவல அடியெம் எஞ்சிடோம் அறிகவென் றமர்த்திறம் சொன்னார்
yeJičNb ul-6LSub
மணிமுடி சூட்டிட மறையோர் ஒரையும் தணிவுற வகுத்தனர் வியாழன் சுக்கிரன் அணிவுற நன்மனை அணுகு நாளினில் கணிமதி முன்பிறை கலந்த போதென
சூட்டுநாள் கேட்டதும் தள்ளினார்தலை ஆட்டுவார் அணைகுவார் அடுத்த நண்பரைப் பூட்டுவார் கைகளில் பூத்த புன்னகை காட்டுவார் முகங்களிற் காதல் மக்களே
242
3O
3 II
32
33
34

Bougg
குறையெரிந்தன கூரை திருத்தினார் கறைபடிந்தன கல்லொடு வெண்சுதை முறைபரப்பினர் முத்து விதானங்கள் பிறைவளைப்புகள் வீதி பிணைத்தனர்
முத்த டுக்கிய முன்றில் முகப்புகள் கொத்த டுக்கிய பூந்துணர் கொத்தினர் பத்தடுக்கிய தாணிரைப் பாற்சுதை ஒத்தி ருந்த தொழுகு நிலாவென
வீழ்ந்த யானையின் கொம்புகள் வெட்டியே போழ்ந்து பூந்தவிசிற் குறு காலெனச் சூழ்ந்த டுக்கினர் சோதி வயிரங்கள் ஆழ்ந்த ழுத்தினர் ஆன நிரையிலே
காலிழந்து களத்திற் கிடப்பன வேலெடுத்தனர் வேலி சமைத்தனர் கோல மிட்டனர் கோபுரந் தீற்றினர் கால மிட்ட கறையைத் தடைத்தரோ
நாலொளித்த பொற் கொல்லரும் நண்வினை மேலெடுத்தனர் மேதினி யாளுசெங் கோலெடுத்தனர் கூசும் வயிரங்கள் மேலழுத்திட வேண்டுமென் றார்களே
கோண மாமலைக் குன்றின் அடியிலும் காணு மாவலி யாற்றங் கரையிலும் வாணி லாவயிரங்கள் மணித்திரள் காண லாமெனக் காடு கடந்தனர்
சிப்பி யோடு திரையுறு சங்குகள் குப்பை செய்யும் மன்னார்க்கரை கூடினர் ஒப்பி லாதன ஒள்ளொளி முத்துக்கள் கைப்படும் என்னும் ஆசைக் கருத்தினால்
243

Page 139
வாலுளைந்த வலம்புரிச் சங்குகள் நீலமாகடல் நீரிணை தேடினார் கால மல்லதங்(கு) ஆயினும் காத்தொறும் மேலும் நீர்விடு வார்மலர் வேண்டியே
ஊசியின் கண்ணும் ஒண்டொடி யார்கண்ணும் காசு மீரத்துப் பட்டிழை கண்களும் பேசும் ஓவியக் கண்களும் பெற்றிலா மூசு மின்துயில் முன்றில்கள் தோறுமே
மையொழிந்தது மாண்விடை தீட்டலால் கையலுத்தனர் கைவினை ஒவியர் மெய்யலுத்திலர் வீதிகள் கட்டுவார் செய்ய வேண்டிய தேடி முடித்தனர்
மூங்கிற் கம்பில் நடக்குநர் மூர்க்கமாம் வெங்கை போற்பல வேடம் புனைகுவர் தாங்கு கையின யானை தரகம்மான்
வீங்கு பன்றியின் வேட்டை பயிலுவார்
நீண்டவாற் குரங்காகவும் நெற்றியில் தீண்டு கொம்புடைச் சிங்கமொன் றாகவும் தாண்டு தந்திர வால்நரி யாகவும் வேண்டு வேடம் புனைந்த பழகினார்
தொட்டிலாத தளைபடு தீங்குழல் கட்டு நீக்கினர் கண்கள் தடைத்தனர் கட்டி லாதன கட்டி யிறுக்கின கொட்டு மேளங்கள் கூட்டி முழக்கினார்
மாந்தை நெல்லும் மலைபடும் மட்டுளார் ஈந்த நெல்லும் இறங்கு துறைப்படும் தீந்தமிழ்ச்சுவை விஞ்சிய தேன்கலம் ஏந்தி வந்தனர் ஏற்றொடு வன்னியர்
சொல்லி லாது தடித்தனர் செந்தமிழ் வல்ல பாவலர் வாழ்த்துகள் பாடுவோர்
நல்ல நல்ல சுரங்களை நாடியே பல்ல வாகிய பண்படைத் தார்களே
244
IO
I
2
13
14
IS
I6
I7

அரங்குதோறும் அரம்பை மடந்தையர் மருங்கொசிந்தும் மனமொசி கின்றிலர் ஒருங்கு பாடுவர் ஓய்ந்திலர் தாழ்ந்து முன் சிரங்குனிந்த சிறுமைகள் தீர்ந்ததால்
வாழை தேடுநர் வண்ணக் கமுகினம் பாளை தேடுநர் பாக்கின் குலைகளும் வேளை பார்த்தனர் வேண்டிய ஈதலால் ஏழை என்பவர் யாவரு மில்லையே
தோர ணங்களும் தாமலர் மாலையும் பூரணப்புதப் பொற்குடக் கும்பமும் பார முற்ற பழக்குலை வாழையும் சேர நின்ற திருவிளைக் கின்றன
கஞ்சுகத்தை மணவினையிற் கண்டு பின்னர் நெஞ்சுகுளிர் முடிவிழாவை நிகழ்த்தி னாலோ கொஞ்சுமட வார்கடடிக் குமுத வாயால் அஞ்சிவிடும் விண்ணப்பம் அதவே யாகும்
பாராளு மன்னருக்குப் பாவை பக்கல் சேராது முடிகடல் சிறப்போ என்றார் வாராளும் கொங்கைமட மாதர் கொண்ட ஆராத அன்பினுக்கும் எல்லையுண்டோ
நரைசாய்ந்த அந்தணரும் நான்கு வேதம் கரைபோந்த தவத்தினரும் கணிதர் தாமும் நிரைவேய்ந்த படையினரும் நேரார் அந்த வரைவேய்ந்த ஒரைமுடி வளர்க என்றார்
Balug
தந்தை வாழ்ந்திடக் கேட்டனள் தளிர்த்தாள் அந்த முற்றது அடிமைசேர் அரசும் சிந்தை பூத்தது திருமணத் தெய்வம் அந்த வள்ளலை அடைவதம் என்றோ
245
I 8
I9
2O
2I
22
23
24

Page 140
கன்னி மாரொடு கற்பக நங்கை முன்ன தாய்வர பரிகளும் முரசும் சின்னமும் வழி சேர்ந்திடச் சிவிகை தன்னி லுய்த்தனர் தையல் கஞ்சுகத்தை
பூத்த பொன்மலர் புதுமணம் அள்ளி ஏத்து கின்றன தென்றலை இவளைக் காத்த நில்லெனக் கான்வழி கடந்து வேத்த வைக்குற விடும் பொழுதளவும்
தேன்வழிந்திடு கமலமும், செல்லுங் கான்வழிப்படு நீலமும் கவிழும் தான்விழித்திடத் தன்னருகணைய மான் விழித்திடும் சோலைகண் மருட்டும்.
பங்க முற்றனர் பதைபதைத் தோடுவார் சிங்க வீரர்கள் துறந்திடு செருப்பும் அங்கியும் பல அணிகளும் புதரில் தொங்குகின்றன தோன்றிடக் கண்டாள்
பட்டி னாடையும் பவளமும் பரலாய் விட்டெறிப்பன நீலமும் வீழ்ந்து கொட்டி விட்டன எடுக்கிலார் குலைந்து விட்டிருப்பன வியப்பொடு கண்டாள்
காய்ந்தலர்ந்தன குருதியின் கறையும் பாய்ந்து சென்றன பரிகளின் சுவடும்
ஓய்ந்த போதவர் உண்டிடச் சமைத்த தேய்ந்த கற்களும் சிதறின கண்டாள்
புள்ளு லாவிய வாவியும் புதிதாம் கள்ளுலாவிய கமலமுங் கண்டு கொள்ளை போய்வருங் கண்களால் கொடுந்தீ அள்ளியுண்டகான் அருகினிற் கண்டாள்
காலெழுந்ததாற் கருகிய கானில் வாலெரிந்தன நரிகளும் மயிர்க்கால் தோலெரிந்தன கரடியும் தோற்றா பாலொளித்தன பாவைமுன் கண்டாள்
246
25
26
27
28
29
3O
3.
32

ஆடை கட்டவும் தானையைச் சொருகி மாடு சேர்க்கவும் மாதரைப் பழக்க வீடு கட்டினர் சிங்களர் விடுத்தே ஓடி விட்டனர், ஒருவரும் காணாள்
தென்னகந்துறந்த சிங்களர் தமது மன்னவர் தரவருங் குடியேற்றம் சின்ன மாகிடத் தெருத்தொறும் வெறிதாய் கன்னி மாடங்கள் கிடப்பன கண்டாள்.
சந்தனத்தொடு தமிழ்மணம் அள்ளி வந்து லாவிய மாருதம் மணக்க சிந்து செங்குரு திச்செரு முகத்துத் தந்த நாற்றமும் பொறுக்கிலள் தையல்
கூறு பட்டன உடல்களும் குருதிச் சேறு பட்டன சிரங்களும் கண்டால் வேறு பட்டிடும் மனமென விடுத்தே ஆறு பட்டனர் அடுத்தொரு வழியே
கஞ்ச மென்மலர் கண்டிடக் குழையும் விஞ்சு மென்மொழி போர்முகம் கண்டால் நெஞ்ச மென்படும் என்பதை நினைவார் அஞ்சி மென்மலர் அருகுற நடந்தார்
கூத்த மஞ்ஞையின் தோகையிற் குளிர்ந்த பூத்த நீலமும் புதுமலர்க் காயா காத்து நின்றன நீலமுங் கண்டு நீத்தி லள்விழி நெடும்பொழு தளவும்
பட்டு லாவிய வெண்மணற் பரப்பில் மொட்டு வீழ்ந்தன புன்னையின் முத்தாய் மட்டு லாவிய கைதையின் மலர்கள் தொட்டுலாவிய மாருதஞ் சுகித்தாள்
247
33
34
35
36
37
38
39

Page 141
Hill)
மான்கடந்து மயில்கடந்து மலர்கடந்து தேன்கடந்து மைவிழியார் சிறந்துகழ வான்கடந்த விடைக்கொடியும் வளர்ந்தலைப்பத் தான்கிடந்த மாளிகைக்குத் தையல் வந்தாள்
எந்தாயென் பிழைபொறுக்க என்றெடுத்துச் சிந்தாது சிந்திவிழும் செங்கண் நீரைப் பைந்தாதாப் பனையோலை படிய வொட்டாள் நொந்தாள்பெண் திருமுகத்தின் நாலுங் கட்டி
உரைக்குமுனம் ஓடிவரும் தாதுவர்பால் மரைக்குளத்துச் சேர்க்கவென மடல்கொடுத்தாள் வரித்தவரைச் சேர்ந்திடினும் செம்மை மாதர் அரைக்கணமும் மறப்பாரோ அன்னை தந்தை
சென்றார்கள் திருமுகத்தை வன்னி யன்பால் மன்றாடிச் சேர்த்தார்கள் மடிப்பு நீங்கி குன்றாத பாசமுடன் குறித்த தெல்லாம் ஒன்றேனும் தள்ளாமல் உள்ளங் கொண்டான்
இழந்ததனம் எடுத்தவர்போல் இதயம் பூத்தான்
அழிந்தமுடிக்(கு) அவலிக்கான் அமரில் தோற்றே இழந்ததற்கும் இரங்குகில்லான் எடுத்த பிள்ளைக் கொழுந்ததன தடணில்லாக் குறைக்கு நோவான்
மனங்கொண்டார் மங்கையர்க்குக் கணவராகும் சினங்கொண்ட தெவ்வருன்றன் தெய்வமானால் தினங்கண்டு திருமணத்தைப் பெரியோர் செய்க வனங்கண்டு வாழ்கின்றேன் வருவேன் ஒர்நாள்
பிள்ளையிடம் பாசத்தாற் பேதலித்தான் உள்ளமத திருமுகத்தில் ஒன்று காட்டி விள்ளும் எனது ஆசியென விடுத்த தாதர் கிள்ளைமொழிக் கரம் சேர்த்தார் கிடைத்ததோலை
248
40
4I
42
43
44
45
46

பூங்கணையான் தாதுவரப் பொன்னின் மேனி தாங்கிவரும் பசலைசொலும் காதற்றாபம் பூங்கொடியின் தாதைவிடும் பூசுரர்கள் ஆங்கடைந்தார் செகராசன் அருகு நாடி
தென்பொதியின் சந்தனமும் தேக்கிழுைத்த பொன்பொதியும் பேழைகளும் புனுகும் தேர்ந்த தன்பதியின் பட்டுகளும் தாளில் வைத்தார் எண்பொதியும் இவன் மொழியென் றேங்கி நின்றார்
வில்லெனவே வளைபுருவம் வியர்வ ரும்பும் கொல்லுலைபோல் நெடுமூச்சும் கொதிக்கும் கண்கள் எல்லையறு வெளிபார்க்கும் இரங்கும் ஏங்கும் அல்லலுறும் நின்பொருட்டால் ஐய என்றார்
போர்முடித்தோம் இனியென்றன் பூவை வாழ நார்முடித்த மலர்மாலை சூட நானே சீர்முடித்து வருகின்றேன் திங்கள் மேலே கார்முடித்த குழலிக்கென் கருத்துச் சொல்லும்
அண்ணனுக்கு முடிசூட அரசு தன்னைத்
திண்ணமுற வகுத்ததன்பின் சிறிதும் நில்லேன் எண்ணமிது தங்தையினுக் கியம்பு மென்றான் கண்ணவளின் உருவல்லால் வேறு காணான்
மணித்திரளும் வாசனையின் பொருளும் மன்னர் அணித்தரளக் குவையல்களும் அமரில் வீழத் தணித்தகரிக் கோடுகளும் தாதர்க் கீந்த பிணித்தமனம் பேதையிடம் போக நின்றான்
கேட்டிருந்த வாசுகியார் கிளர்ந்து கோபம் கூட்டுமனம் கொதித்தவராய்த் தாதர்க் கூவிச் சூட்டுமுடி விழாமுற்றித் தோன்றல் தம்மைக் கூட்டிவரப் பணித்திட்டாள் குழையும் நெஞ்சாள்
வீரமலால் வேறொருத்தி தயிலாத் தோளை நாரியிவள் பகிர்வாளோ நானிருக்க பாரிடமும் இவ்வரசும் பாரேன் உள்ளம் வேருடனே பறித்தார்க்கு விற்று விட்டேன்
249
47
48
49
ՏՕ
SI
S2
53
S4

Page 142
என்றிருந்தார் வாசுகியார் ஏற்றவாறு வென்றிமுடி சூடுவிழா நிகழ வேண்டிக் குன்றனைய நெற்குவையும் கொம்புத் தேனும் சென்றடையப் பணித்திட்டாள் திருவின் செல்வி
மக்களின் மனமே போல மலர்ந்தன கமலம் எட்டுத் திக்கிலும் அடிமைபோலச் செறியிருள் இரியச் சேவல் கொக்கரித் தரிமை சொல்லக் குங்குமம் குணபாற்செய்ய சக்கரம் போலவந்தான் கதிரவன் தரணியாள
மங்கலப் புதுநீராடி மனையெலாம் நீர்தெளித்த எங்கணும் வாசத் தாபம் இட்டனர், இறைவன் பாதம் கொங்கலர் மலர்கள் தாவித் தொழுதனர் கூடி நின்று பொங்கினர் மனமும் கண்ணும் புதுமகிழ் நிறைத லாலே
மரக்கலம் விடுத்த ஆழ்வார் கொடுத்த வம் மணிவாள் மாலை நிரைக்குறு மணிகளாரம் நினைவொடு எடுத்தார் நெஞ்சில் சுரக்குறும் அன்பினாலே ததித்தனர் அவரின் பாதம் கரக்கிலார் நிகழ்ந்த வெல்லாம் கண்ணினாற் காட்டிநின்றார்
அந்தணர் முதியோர்முன்னை ஆகமர் சோதிடர்கள் வந்தனர் தைலம் பூசி வளர்பர ராசனுக்கு கொந்தலர் வாச நீரும் குங்குமச் சாந்தும் கொண்டு சிந்தனை குளிர ஆட்டித் திருவெழுப் பொலிவித் தாரே
பட்டினுக் கழகு காண்பார் படுத்தரை சுற்றுவார்கள் இட்டன ஆரமெல்லாம் எழிலுறும் இவன்றன் மார்பால் தொட்டிடப் புனைவார் கைகள் கூடசுவ ஆத லாலே கிட்டினர் புனைகிலாது மயங்கினர் கேள்வ ரெல்லாம்
புனைவது விடுவதேதென் றறிகிலார் புதுமை செய்வோர் வனைகுவர் தத்த மக்குள் வாதஞ்செய் திடுவ ரல்லால் நினைவது முடிக்க மாட்டார் நேரம்வந் தற்ற தென்ன அனைவரும் ஒருங்குசொன்னார் அழகினுக் கெல்லை காணார்
250
55
56
57
S8
59
60
6.

மணியிமை மரக தத்து மாசறும் ஆச னத்தில் அணியுற இருத்தினார்கள் அந்தணர் வளர்த்த ஓமம் கணியுறும் ஓரை சேரக் கலந்தது கீத மோடு மணியொலி கிளர்ந்த நாத மங்கலம் நிறைந்த தெங்கும்
Egg
பன்னிற மணிகொடு பதித்த தாண்களில் பொன்னிறம் குயின்றன உடுக்கள் போல்வன கன்னியர் காதணி மாறொளிர்தலால் மின்னல்கள் எதிரெதிர் மிளிர்வ போல்வன
வளைந்தன விதானங்கள் வரிசை மண்டபம் எழுந்தழல் ஓமத்தப் புகையின் இன்சுருள் அழுந்தின அவற்றிடை கனக மாலைகள் கொழுந்திரள் இரத்தினக் கோவை சேர்வன
பளிங்கினிற் குயிற்றிய பவளத் தாண்களில் இளங்கிளி மடந்தையர் எடுத்த சாமரம் விளங்குறு சிலையென விழியிற் காண்கிலார் வழங்குவ காற்றென மெய்யில் வாங்குவார்
சுடர்விட அழுத்திய சுதைசெய் கீழ்நிலம் இடர்தரும் இருநிழல் எதிரெ றிப்பதால் அடர்தரு குழலியர் முகத்தின் அம்புயம் படர்தரு காடுறப் பாதம் வைக்கிலார்
முத்தணி செவ்விதழ் முரற் கற்பகம் பத்தியின் மங்கையர் பக்கல் சூழறச் சித்திரப் பதுமையிற் றிகழக் கண்டவர் எத்தனை திங்களோ இங்கே யென்றனர்
அடித்தலம் பெயர்த்திடில் அன்ன மன்னவர் வடுத்தர விழித்திடும் மலர்க்கண் நீலங்கள் தொடுத்தனர் மாவையின் சுந்த ரத்தியர் அடுத்தணி யிருந்தனர் அழகு செய்குவர்
251
62
63
64
65
66
67
68

Page 143
அந்நியர் ஒழிந்தலால் அழகு செய்கிலோம் என்னமுன் வஞ்சினம் எடுத்த மட்டுவிற் கன்னியர் புன்னகைக் கவினுக்கீடிலாப் பொன்னகை அணிந்தவர் புறத்திருந்தனர்
ஆளுநர் பணிப்படி ஆடை சுற்றிலார் சூளுரை பகர்ந்தவர் சுதந்தரம் பெறு நாளினைப் பார்த்தவர் நளினஒண்ணிலா நீளெழு மண்டபம் நிறைந்திருந்தனர்
மால்கெட மறப்புயம் வளர்க்கத் தம்முலைப் பால்கொடுத் தவர்களப் பாலி யர்புக வேல்கொடுத் திட்டவர் புலோலி மெல்லியர் சேல்கெட விழித்தனர் சேர்ந்தி ருந்தனர்
முறத்தினாற் புலிப்பகை முறிய ஒட்டிய
திறத்தினார் தீற்றிய செந்நெற் சோறொடு மறத்தினை ஊட்டிய வன்னி மங்கையர் நிறத்தினால் மண்டபம் நிலவு கான்றதே
எத்தனை மக்களை வேண்டும் என்றவர் பத்த மாதங்களும் பகலெனச் செல
சித்தமும் விழைந்தவர் செருவிற் கீந்திட நித்தமும் கொடுத்தவர் நீரின் வேலியார்
தோளிடு கவசமும் சுரிகைத் தாக்கமும் தாளிடு செருப்பொடு தைத்த தையலார் காளையர் கலங்கிட விழிக்கும் கன்னியர் வேளெனும் அநங்கனை விருந்துக் காக்கினார்
நானமும் நறுமணப் புனுகும் நாண்மலர்த் தேனுறு வாசமும் சுமந்த தென்றலான் தானுறு களிப்பினாற் சற்றும் மற்றிடம் ஏனெனி உறுவதென்று இருக்கை யுற்றனன்
கொட்டிய மேகமும் குழலும் கொம்பொடு கிட்டிய ஒரையிற் கிளர்ந்தெ ழுந்திட
மட்டற களிப்பினால் நரையின் மாதவன் இட்டனன் மணிமுடி எங்கும் ஆர்க்கவே
252
69
סך
1ך
2ך
73
74.
75
6ך

Bബ
கோயிலின் மணி கோபுர மாமணி வாயி லிண்மணி மாடங்க ளின்மணி தாய மன்றுகள் தாக்கிய நாமணி போயொலித்தன மெய்ம்மயிர் புல்லிட
கண்ணிருந்த பயன்பெறு கின்றனர் நண்ணி மண்டபம் நாடி யிருந்தவர் அண்ணன் கோலத் தழகு பருகினான் எண்ணி லாதன இன்னல்கள் தாண்டினான்
அறுகெடுத்தனர் அந்தணர் ஆகமர் பெறுக என்றனர் பேறுகள் யாவையும் உறு களிப்பினில் வேதத்தின் ஒங்கொலி மறுகு கேட்கவும் மங்கலம் சொல்லினார்
அன்னை வாழிய அன்பறம் வாழிய மன்னன் வாழிய செந்தமிழ் மங்கையாம் கன்னி வாழிய காலமெலாம் சைவம் மன்னி வாழிய மண்ணுல கெங்கணும்
ஆனைமா முகன் அன்பருள் பாடினார் சேனை யோடுநல் லூரினிற் சேர்ந்தனர் கான வள்ளி மணாளனைக் கந்தனை
ஊனெகத் தொழு துள்ளம் மலர்ந்தனர்
ê9ủểửư_6usti)
ךך
78
סך
8O
8.
உத்தம சற்குணமுடையார் உள்ளம் என்றும் பத்திவழி நின்றொருபாற் கோடார் பைந்தேன் முத்தமிழின் சுவைகண்டார், மூத்தோர் உளரின் அத்தனைக்கும் தலைவரெனத் தெரிந்தார் அங்கே
ஊர்ப்பெரியார் யாவருமே ஒன்று சேர்ந்து தீர்ப்பர்தம் தலைவனெனச் சிறந்தான் தன்னை, பார்ப்பிடமும் பலசேர்ந்த பாலனத்தின் சேர்ப்பிடமாய் செகராசன் திருத்தினானே.
253

Page 144
பூநகரிப் போர்க்களத்தின் குறையுடல்கள் தாநகர்த்தி ஆய்ந்தாய்ந்து சத்திரஞ்செய்(து) ஆனவுடற் கூறெலாமங் காதி பாதம் ஞானவைத்திய ரெழுதி நல்லூர் சேர்த்தார்
தேடரிய மூலிகைகள் தேடுவாரும் ஏடரிய ஒளடதங்கள் எழுதுவாரும் மாடயலே மூலிவனம் வளர்க்கின்றாரும் காடொருவிக் கத்தாரி சேர்க்கின் றாரும்
பொதியமலை இமயமலை பூண்டு தேடி நிதியமொடு சென்றாரும் நேபாளத்தப் புதியமுறை கற்பாரும் யவனம் புக்கு விதியறிந்து மருத்துவநால் விளக்கினாரே
கட்டியுடல் கரைந்திடவோர் கருவியின்றி அட்டைவிடும் நண்முறையும் ஆயுர் வேதச் சுட்டுவிடும் முன்முறையும் தொகுத்தார் ஏட்டில் கட்டியொரு பெருநாலாய்க் கண்ணிற் காத்தார்.
விடந்தீர்க்கும் விதிமுறையும் உலோக பற்பம் புடந்தீர்க்கும் இராசயனம் புடைத்த வாத முடந்தீர்க்கும் முறையும்முன் தேரையர்கள் இடந்தோய்ந்து புலிப்பாணி ஏடும் செய்தார்
வானியங்கு கோணிலையும் வளியெழுந்து தானியங்கும் திசைநிலையும் மழையும் தந்த தானியங்கள் இடுநாளும் தார்வேந் தர்க்கு சேனையிடு திருநாளும் நூலிற் செய்தார்
பின்வருவ கோணிலையாற் பேசு வேதத் தன்விழியாம் சோதிடமும் சமயா னுட்டம் முன்மொழியும் விதிமுறையும் முகூர்த்த ஒரை நன்மொழியிற் றொகுத்தெழுதி நாட்டி னாரே
ஆன்காக்க அங்கங்கே அமைத்தான் சாலை தான்காத்தான் கண்ணெனவே தரும மெல்லாம் வான்பார்த்த வயல்களுக்குக் குளங்கள் கட்டித் தேன்பாயக் கமலமலர் சிரிக்கச் செய்தான்.
254
O

ஓடிவரும் நதிக்கணையை உயர்த்திக் கட்டிக் கோடிவயல் குளிர்வித்தான் பணிச்சங் கானில் சூடுமிளம் கேதீச்சரத்துச் சொக்கள் நீடுயரும் கோபுரமும் நிமிர்த்தி னானே.
அருந்து தமிழ்க் கவியமுதில் அமிழ்ந்தி னோர்க்கு விருந்தினொடு முடிப்பொன்னும் வேறளித்தான் பருந்துவரச் சேமங்கள் புறாக்கள், பக்கல் இருந்துவின வுங்குடையின் இனிய நீழல்.
B5g
தறையிறங்கிய தாரதே சத்தினர் நறைபி லிற்றிய மாம்பழம் நக்கினார் முறைகொணர்ந்த முழுதும் வழங்கினர் நிறைகொ டுத்தபொன் நேர்விலை யின்றென.
பனையிறக்கிய பக்குவ நீர்மொள நனையிறக்கிய நாவினர் அந்நியர் எனைய தாயினும் பொன்விலை யிட்டனர் முனையிறுக்கு பிழாவின் முகப்பிலே
பன்ன வேலைகள் சித்திரப் பாங்குறு வன்ன வேலைகள் வைத்தன கண்டவர் பொன்ன முத்திய பூவிதழ் போற்றிலர் என்ன கைத்திறன் என்றிறும் பூதினர்
தேர்செ தக்கிய சித்திரச் சிற்பங்கள் ஊர்வ தோறும் உரைப்பன காவியம், வேர்வ டித்தன வாச விசிறிகள் சேர்வ மக்களின் சிந்தை மயக்குமால்
ஏற்ற மேலே நடப்பவர் இன்னிசை ஏற்றின் நாணயஞ் சுண்டினர் இன்னிசை நாற்று நட்டமென் நாரியர் பாவொடு காற்றில் வந்த கலந்தது எங்கணும்.
255
II
I2
13
I4
I5
I6
I7

Page 145
இல்லையேபளிங் காடிகள் என்றிலார் முல்லை மூரலின் முத்தழகின்கவின் வில்லு மண்டபந் தாக்கிய மேற்கருங் கல்லழுத்த கண்ணாடியிற் பார்த்தனர்.
இட்ட கட்டளை ஏட்டிலும் கல்லிலும் பட்டை தீர்ந்து வரைந்தனன் பாருள மட்டும் பூசை வழாத வரன்முறை திட்ட மாகச் செயற்பட வேண்டியே
கீழ்பு லோலியிற் கிட்டிணன் ஆலயம் பாழ்படுத்திய பார்த்தப் புதுக்கினான், ஆழ்படுத்தினன் அம்புய வாவிகள் கீழ்படித்துறைக் கேணிக ளாக்கியே
மேற்கமைந்த பொன்னாலையில் விட்டுணு பாற்கடல்படும் பாயலிற் செய்தனன் போற்கிடந்தன கோபுரம் பொன்னொளி மேற்கிடக்கப் புதுக்கினன் விஞ்சிட
ஏரியிட்ட கருங்கல் இறைசிலை நீரில் நின்றும் எடுத்தனன் நின்றவவ்வுே) ஊரெலாம் இவை உற்சவம் கண்டபின் சேர வேண்டிய கோயிலிற் சேர்த்தனன்
கூட்டினான் தமிழ்ச் சங்கமும் கூவினான் பாட்டி னாரைப் பசுந்தமிழ் நூலெலாம் ஏட்டினிற் றர ஏவினன் பொன்கொடுத்(து) ஊட்டினான் தமிழ் ஓங்கிட வேண்டியே.
தக்க ணக்கயி லாயத் தலத்தினை மிக்கவும் பொலிவித்திட வேண்டியே திக்குகள் தொறும் தேடிய கற்களால் புக்குவான் தொடக்கோபுரம் போக்கினான்
அந்தணப் பெரியாரை அமைத்தனன் சொந்த வீடுகள் சுற்றமும் தங்கிடத் தந்த மைத்தனன் சாற்றியவேளையில் சிந்தை யாய்ச்சிவ பூசை நடக்கவே
256
I8
I9
2O
21
22
23
24
25

மாடுசேர்மடைப் பள்ளிகள் வந்தவர் ஆடு கின்றவர் அம்பலத்தான் பதம் ஒடியோடி யுடன்பணி செய்யவும் கோடி கோடி குவித்தனன் பொற்குவை
மேள வாத்தியர் விண்புகு தீங்குழல் தாள வாத்தியர் தம்புரு வாத்தியர் நீள நின்றனர் நின்மலன் சேவையில் வாழ வென்று வகுத்தனன் மானியம்
நாண்மலர்பெற நந்தவனங்களும் தாண்மிடைந்தன மண்டபம் சுற்றிலும் பூண்மிலைந்த பொற் பூவையர் தம்முடை ஆண்களோடுறச் சிற்பமமைத்தனன்
பஞ்சு நாலையும் பாவலர் நாலையும் கொஞ்ச மாகும் குறுகிடை நாலையும் அஞ்சு பொற்றொழி லாரிடு நாலையும்
நெஞ்சில் அந்தணர் நாலையும் நேர்செய்தான்.
முன்னி றங்கிய கூண்விழு மூதவர் என்ன வேலையும் செய்யு மியல்பிலார் அந்நியர் பிற தேசியர் அங்குற அன்ன சத்திரம் ஆயிரம் ஆக்கினான்
நீதி வந்தது நேரம் பிந்தாமலே பாதி கேட்டதும் பக்கமும் இல்லையே வீதி வந்தது வீரச் சுதந்தரம் ஆதி யாம் அறம் அஃதுடன் வந்தது
கப்பல் கட்டினன் காவற் படைக்கென ஒப்ப நாற்படை ஓங்கப் பெருக்கினன் எப்போ தாயினும் ஏவர்முற் போருறின் தப்பி லாது சரண்செயத் தாபித்தான்
சாகரம்படு தண்டயல் மார்களும் வேகபாய்மரம் மேற்கொளும் வீரரும் ஏகமான தலைமைக் கிசைந்திடப் பாக மாகினர் பாலியர் யாவரும்
257
26
27
28
29
3O
3 I
32
33

Page 146
நீர்ப்பெருக்குறு நேரமும் வற்றுற நேர்ப்படுங்கொடி நேரமுங் காட்டுவார் கூர்ப்படுத்திய கோணக்கணக்கினர் சேர்ப்ப வந்தனர் சேவைசெய் வோமென
வந்தி றங்கும் குதிரை வரிசைகள் பந்தி யிட்டனன், ஆயினும் பைந்தரை எந்த எந்த இடமுளது அங்கெலாம் சொந்த மாய் வளர்ப்பித்தனன் சுற்றியே
நண்பு செய்துள(வு) ஒற்றிடு வோர்களும் எண்பு டைத்திசை ஏவல்செய் வார்களும் மண்பு கும்பிற தேயத்தர் வாழ்த்திட பண்பு செய்வரும் பாலிய ராக்கினான்
2SO2STBing
ங்கொடியாள் படுந்துயரம், பூசு ரர்சொல்
ங்குகிலா உள்ளத்தான், இளையோன் நெஞ்சில் பூங்கணையான் புண்செய்யப் பொறுக்க லாகான் ஆங்கணைந்த புலவோருக் கமர்ந்த சொல்வான்
தென்பாண்டித் திருநாட்டில் செந்த மிழ்சேர் அன்பாளர் அழைக்கின்றார், அவைய மைத்து இன்பான கலைவளர்க்க என்றான் அண்ணன் மன்பாரம் எளித செயும் மந்தி ரத்தான்
சென்றுவர விடைகேட்டான் செகரா சன்றன் ஒன்றுவரும் உள்ளத்தான் அண்ணன் றன்பால், வென்றுவரு கென்றிட்டான் வேண்டும் யாவும் அன்றுவரப் பணித்திட்டான் ஆணை யாலே
நீலமணிக் கற்களொடு நித்தி லத்தின் கோல நிரைக்குவை, கரியின் கோடும் நீல வேலைபடும் சங்குகளும், வினைத்திறத்த ஒலைபடும் பெட்டிகளும், ஒன்று சேர்த்தான்
258
34
3S
37
38
39
40

காங்கேயன் தறைமுகத்திற் கலத்திற் சேர்த்தான் பாங்காகப் படகுகளும் பாது காக்க தீங்காற்றுத் திசைவழியே தான்செலுத்த மாங்காவும் மறைக்காடும் தெரியக் கண்டான்
Hall!
கரையடைந்தவரை வருகவென்றவர்கள் கடி மலர்களொடு பரவுவார்
திரைகடந்து வரும் இளைய சேகரனைச்
சிரநெடுங்கடலில் ஆழ்த்தவார்
கனக தண்டிகையில் அழகு பொற்றவிசில்
கவரிகொண்டலைகள் செய்குவார்
புனைகடற்படகில் மனிதநீள் கடலில்
புரளு வெண்டிரைகள் செய்குவார்.
மங்கலக்குழலும் பொங்குவார் முரசும்
வானெழுந்து செய மென்னவே
எங்கும் மக்கணிரை காணமுன் னெழுவர்
இரைகுவாரிடி படுகிறார்.
முந்த தாதையரும் அந்த வேதியரும் முறைமொழிந்தனர்கள் ஆசியே
இந்த மைந்தனைமுன் கண்டம் யாமெனவே
இனமுரைத்தவர்கள் உவகையார்
தோளசைந்தவரத் தாண்மறைந் தெழிலைத்
தய்க்கு மங்கையர்கள் உய்ந்தனர்
சாரளங்களிடை தனிநடந்தவர்கள் தாபநோய் வலைப்பட்டனர்.
உயிர்கொடுத்தவரை உணவு தந்தவரை உள மிருத்திய நன்றியால்
தயர் படுத்திய நாளில் தம்மையிரு
தோள்படுத்திய வள்ளலின்
259
4I.
42
43
44
45
46
47

Page 147
சாம்பல் வெந்தவிடம் தகனமிட்டகரை
சார்ந்து தன்னிருகண் பொழிகுவான்
தேம்பு கின்றசிறு பிள்ளை போலுருகிச்
சிந்தை கோயிலு மாக்கினான்
மறையுணர்ந்தவர் அபர நற்கிரியை
வழுவிலாவகை ஆற்றினார்
நிறையும் நீர்விழியும் இருகண் முத்துதிர
நீரும் எள்ளினொடு வார்த்தனன்.
வாடு பூங்கொடி மலர்மு கத்தினள்
வருகை கேட்டுயிர் உருகுவாள்
சேடி மாரொடு கூடித் தன்னெழில் சித்திரித்திட லாயினாள்
புனைவர் பொன்னிழை புதுமை செய்வன
பொழுது தோறுமொவ் வொன்றதாய்
வணைவ ரென்றிடினும் மனநிறைந்தமிலர்
வருவனப்புகள் வேறுற
குழல்முடிக்குமொரு கலையுணர்ந்தவர்கள்
/ கூடியொவ்வொரு ஒப்பனை விழல்முடித்ததென முனமுடித்ததனை
விடமணத்திலர் மாற்றுவார்.
பொழுது சென்றுமே ஆடி முன்னவர்
புத்தி சென்றது புதுமையில்
எழுதும் அஞ்சனம் இவள் விழிப்பட
எழில் தனக்கென எய்தலால்
நரை முடித்த திருமறையுணர்ந்தவர்கள்
நாளிதென்று வருமோரையும்
உரைமுடித்தனர்கள் உலகறிந்தகொள
உடனடித்தனர்கள் முரசமே
260
48
49
SO
S.
52
S3
S4

El
குறு நிலம்படு மன்னர் பற்பலர்
குலமரம் படர் கிளைஞரும்
மறு நிலம் படு வீரர் வீரரும்
மணவினைக்கெழு கின்றனர்
தந்தை சென்றனர் முன்வழிப்படத்
சார்ந்த வீதிகள் கும்பமும்
பந்த ரும்திரு மங்கலங்களும்
பக்கமெங்கும் நிரைத்தனர்
இசைவடித்தனர் வருகவென்றனர்
இரும ருங்கினும் சாமரை
அசைவ, தென்றலும் அவனைவாவென அள்ளி வந்தனள் வாசமே
மாளி கைத்தலம் வருக என்றலும் மைந்தனும் மகிழ்வெய்தியே
கேளிகைப்படு மக்கள் தம்மொடு
கீழை வாயில் புகுந்தனன்.
மகர தோரண வளைவு வாசலிடை
வாழை பைங்கமுகு நாட்டியே
நிகரி லாத தொரு பந்தர் நித்தில
நிலவு காலவிடை குறுகினான்
Buggi
இருதினஞ் செல எழு மணப்புதத் திருதிருத்திய பந்தர் தேன்மலர் விரைதொடுத்தன சிந்தவேதியர் நரைதொடுத்தவர் நண்ணி நின்றனர்
பூமலர்ப்பொழில் புதிய புற்றரை
மாம ரம்வளர் மருத வான்கரை தாமணைந்தவர் தருவர் பக்கலுற ஓம குண்டமுன் உடனிருந்தனர்
261
5S
56
S7
58
59
6O
61

Page 148
மறையொலித்தவர் மணியொலிக்கவும் முறையெடுத்த குழல் மோகனம் பிழிய அறையும் வார்முர(சு) அதிர அக்கினிமூன் நிறையும் நாணினை நேர்த்தி னானரோ
ஒழுகு வார்குழலும் ஒர நீல விழி இழுகும் மோகனமும் இடைமுறிக்குமென அழகெடுத்தவளுக் கறுகெடுத்தவர்கள் விழவெடுத்தனர்கள் விதிமுறைப்படி
மோத கம்வடை முப்பழக்குவை போதும் போதமெனப் புகலு வாரலால் ஏதம் கூறுகிலர் எழுமுடிந்திலர் மீத ருந்திய விருந்திருந்தவர்
முத்து நீற்றிய சுண்ணம் நீவிய கொத்த வெற்றிலை கூடு வாசனை அத்தர் சந்தனம் அமைய மீதெழும் சுத்த மானகராம்பு தொட்டதால்
வந்த பண்டிதரும் வரவ ழைத்தவரும் செந்த மிழ்ச்சுவை சிந்தை உண்பதால் அந்த அந்தமுன் இலைகள் மேலமுது பந்தி மிஞ்சியத பசியிலாமையால்
சங்க மொன்றிலவர் தமது நால்களைப் பங்க மில்லதெனப் பலர்முன் ஏற்றியே திங்கள் ஒன்றுதிரு வாரூர் சீர்சபையில் தங்கி னர்தமிழ் ஆயுந் தன்மையால்
மங்கை யும்மகனுந்தமிழ் தரு சங்க முற்றபுல வோர்கள் தம்மொடு வங்க மேறினர் வடகடற்றுறை அங்கி றங்கினர் மக்கள் ஆர்க்கவே
262
62
63
64
65
66
67
68

Biblugg
அந்தணரும் அடியாரும் அழகு பூத்த இந்தமுக மங்கையரும் இரும ருங்கும் வந்துநிரை நிற்கநடு மணமகாரும் பந்தலிடு வீதிநடைப் பவனி வந்தார்.
இவ்வாறு பவனிவரும் எழிலைக் கேட்டு எவ்வாறு பொறுத்திருப்பாள் இளையோன் தன்னை, செவ்வாரும் இருவிழியும் திவலை சொட்ட ஒவ்வாத வாசுகியாள் உருகு கின்றாள்.
செப்பிய அச் செய்திதரும் தாதைச் சீறி எப்பொழுது கண்டதென்பாள் எரிவாள் ஆணின் எப்பிழையைப் பொறுத்தாலும் இன்னொருத்தி ஒப்பமணம் பகிருவதை உளங்கொள் வாளோ
Hall I
பூவிழந்தனள் பூங்குழற் கற்றையில் நாவிழந்தது தீஞ்சுவை நங்கையர் மாவி தழ்க்கரம் யாழ்பட மாடெழும் பாவினங்களும் பாம்பெனக் காதறும்
தேசகாரிய சேவையைச் செவ்வியர் பேசு மந்திரர் பெற்றிட பெண்மயில் வாசுகிக்கொடி மல்லிகை தாவிய தாசு பள்ளி தவண்டு கிடந்தனள்
ஊது லைப்படு நெஞ்சமும் உள்ளலை மோத கின்றது முத்துறு செவ்விழி பேதை யென்பது பேசுவ வீரமும் காதலாற் கரை கின்றது போலுமே.
ஆண்படாமனம் பட்ட அடிமையும் வீண்படாநெஞ்சின் வீரங் குலைந்ததும் மாண்படாமன ஆடவர் மையலாம் காண்படாவலை வீழந்ததுங் காணு வாள்
263
69
70
1ך
2ך
73
14
75

Page 149
எத்தி றத்தவர் என்னினும் ஆடவர் கொத்தி ருத்திய பூக்களைப் போய்நகள் சித்த முள்ளன, தேன்படுவண்டுகள் ஒத்திருப்பவர் என்றனர் உள்ளிலே
சேடி மாரையும் தேன்மொழி யாரையும் கூடி நின்றதன் கொற்றவை மாதராம் வாடி நின்றதன் வண்மயி லாரையும் ஏடி செய்வதும் என்றிரந் தாளரோ
கொண்டவர்செயும் குற்றம் மறப்பதும் பெண்டிர் நம்கடன் பேதலி யேல்மனம் உண்டு காரியம் உற்றது யாதெனக் கண்டு பின்பு கருத்தினை ஆய்குவாம்
சிறைபிடிப்பதன் முன்புதன் சித்தமாம் திறைபிடித்தொரு செல்வி யிருத்தினால் நிறைய பூழிந்தத நிற்படு குற்றமே குறையவற் படுமோமலர்க் கோதையே
முன்னமேயவன் மொய்ம்புறு தோளினில் இன்னொருத்தி இணைந்தவ ளாயிடின் பின்னொருத்தி பொருந்திற் பிழையது அன்னமேயினி ஆரிடம் என்றனர்.
சென்ற சென்ற திசைகளி லாடவர் என்று போர்வரு மோஎனும் ஏக்கினர் வென்று செல்வதும் வீரத்தைக் காப்பதும் அன்று செய்யும் கடனென ஆகுமே
ஆத லாவர் அன்பிலர் என்பதும் மாதொருத்தியை மட்டுமல்லாமலே காதலித்தனர் கற்பிழந்தாரென வாத செய்வதும் வாசுகிக் காகுமோ
தேய்ந்த நாண்மதி போலச் சிறையினில் ஓய்ந்த போதும் இதழ்களின் ஓரத்து வேய்ந்த மீசையில் வீழ்ந்ததன் உள்ளத்தை காய்ந்து கொள்ளுத லாற்பயன் காணு மோ
264
76
ךך
78
9ך
8O
8.
82
83

மஞ்சு செய்த சுருளென வாங்கிய குஞ்சி செய்மனக் கொள்ளையை எண்ணு வாள் விஞ்சு வீர் முறுக்கிய வன்னியர் நெஞ்சு போன நெகிழ்ச்சிக் கிரங்குவாள்
புண்ணளந்த வடுக்கள் பொறித்தது திண்ணளந்தவத் தேமலர்த் தோள்களை கண்ணளந்ததும் ஊன்றிய கண்களைப் பெண்ணளந்தெடுக்காததும் பேதமை
ஓர மென்ற இதழ்க்கடை ஒண்மலர் சேர நின்றவச் சிற்றரும் புண்ணகை சோர முற்றது தோகையெண் நெஞ்சினில் வீர முற்ற களத்தினில் வெல்வரோ
தேசமென்ற அத் திண்ணிய பாரத்தைத் தாசெனச் சுமக்கின்றவெண் தாமனம் மோச முற்றது மொய்ம்புறு மார்பினால் ஆசை யுற்றவ ளிற்பிழை யாகுமோ
தண்பிறந்த செந் தாமரை யொப்பன கண்பிறந்த கவின்நகர்ந் தாகுமோ புண்பிறந்த மனங்கொடுப் போரலால் பெண்பிறந்தவர் யாவர்பிழைப்பரோ
கற்றை தாழ்வுறு கார்ச்சுருட் குஞ்சிசேர் நெற்றியிற்படு கின்ற நிலாவினால்
குற்ற முற்றவர்யாமெனிற் கோதையாள் மற்றவள் தனை மாசுசொல் கின்றதேன்
இன்னவாறுதன் ஏழ்மை மனத்தினைக் கன்னி வாசுகி காண்பள் பிழையென எண்ணி னாருயிர் ஏங்குதற் கென்செய்வாள் பின்னும் பின்னும் தயருறு பேதையாள்
265
84
85
86
87
88
89
90

Page 150
Bugg
சிவந்த கண்ணினர் தினவு தோளினர் நிவந்த நெற்றியர் நெருப்பு நெஞ்சினர் தவந்த ருந்தம தரசியைத் தவிர்ந்தே) உவந்த பெண்ணினுக்(கு) ஒப்பு கின்றிலர்.
கட்டு வில்லினைக் கழற்று கின்றனர் வெட்டு வாள்ந தி தீட்டி வீரவன் கொட்டு வார் முர சார்க்குங் கொள்கையர் மட்டிலாச் சினம் மனத்தில் மூட்டினர்
அன்னவர்க்கெலாம் அமைக என்றனள் மின்னி டுங்கதி வேக தாதுவர் இன்னணம் வர ஏவி நின்றனள் மன்னவற்கொரு மடல் வரைகுவாள்
Eulig
ஏதி லாரையும் ஏழுமை யாரையும் தீததீர்த்(து) அபயங் கொளும் கோன்முறை நீதி மன்னவ நேரிழை வாசுகி Aாதந் தொட்டுப் பணிந்தித கூறுவேன்
சென்று மீள் குவன் திங்க ளிரண்டினில் என்று கூறிப் பிரிந்தனிர் இன்னொரு மன்றல் மங்கை மலர்க்கரம் பற்றினீர் நின்ற நீதி நிருபர்க் கடுக்குமோ
வழியிழந்தவர் வாய்வலி யற்றவர் விழியுடைந்து விழுந்தருள் வேதனைத் தளி தடைப்பது நின்கடன் தோகையர் பழி சுமப்பதும் பார்த்திபர்க் காகுமோ
பட்ட ரும்பிப் பரந்த விரிந்திடா மொட்டிருந்த புழுவென மூடியே தொட்டரிக்கும் கவலைதளைத்த புண் பட்ட உள்ளம் படுவதை என்சொல்வேன்
266
9I
92
93
94
95
96
97

மேம்படுங்குடி மங்கையர் வேதனை வேம்படும்மன மாயினும் விஞ்சிய தாம்படுந்துயர் சாற்றுவ ரோவெளி ஒம்பு தல்செயும் உத்தம மன்னனே
செப்பு மந்தணர் தீவலம் வந்தெனைக் கைப்பிடித்த பின் வேறொரு காரிகை எப்படிக் கரம் தீண்டுவீர் என்னையோர் வைப்பணிப் பெண் எனமணம் வைத்திரோ
அன்று நான் சிறையிட்ட அதற்குநீ வென்று போயினை வீரவன் றோளினால் சென்று போனது சிந்தையும் உன்னுடன் ஒன்று தான்மணம் உள்ளதறிகுவீர்
பருவ மங்கையர் பாற்பிழை யாயினும் ஒருவ ருக்கொருக் கால்மனம் ஒப்புவர் உருவ ழிந்தயிர் உக்குகுமாயினும் நிருப நெஞ்சினை மீட்டிட லாகுமோ
தென்றலஞ் சிறுசெல்வனும் என்வயின் நின்று தீமைநிகழ்த்துதல் நேர்ந்தனன் அன்று நீரருகாக அமர்கையில் ஒன்று சேர்த்தவன் உள்ளம் வேறாயினான்
எண்ணி லாதன தாரகை ஈண்டியும் பெண்ணி லாரெனப் பேதையென் சாளரம் வெண்ணிலாவர வேனிலன் என்றொரு கண்ணி லானும் கலந்ததற் கென்செய்வேன்
எம்மையேமறந் தாருக்கிரங்கிடும் வெம்மையால் மலர் தீய்வன வெற்றென உம்மை நீங்கிய உத்தமப் பள்ளியும் கைம்மை நோற்பத காணுதி மன்னவ
தோழியர்நடுச் சுற்றி யிருப்பினும் ஏழை என்மனம் ஏன்தனி யாவத் வீழுகின்றது நஞ்சென வீணையின் ஏழிசைக் கனி என்செவி என்செய்கேன்
267
98
99
OO
O
II 02
IO3
IO4.
IO5

Page 151
இப்புறத்தினில் என்னை மணந்தபின் அப்புறத்தினில் ஆழ்கடல் நீங்கினால் ஒப்புமோமனம் ஓர்மகள் மெய்தொட தப்பு கின்றதற் கோமணம் சார்ந்தனை
மன்றலும்மணத் தாலியும் வன்னியர் ஒன்று நற்குடி உத்தமப் பெண்களும் வென்று நீர் விளையாடும் விடுபொருள் என்றுகொண்ட கருத்தித என்பதோ
Bibliog
வார்ந்த மடலில் வரைந்த எழுத்தாணி சேர்ந்து நடுங்கச் சிறுவிரல்கள் சேந்திருப்ப நேர்ந்த நிருபர்க்கு நெஞ்செழுதம் வாசுகியார் தேர்ந்தெடுத்த தாதுவர்பால் சேர்த்திடவே வேண்டினார்
பாண்டிமக ளோடு பள்ளியறை சேர்ந்திருக்கும் ஆண்டகையான் கையில் அதசேர்த்தார் தாதுவர்கள் தீண்டும் பொழுது திருவுடையாள் கைமேல் நீண்ட விரல்கள் நெருடுவ போல் வாங்கினான்
பிரித்த பொழுது பெண்முகத்தில் கண்ணீர் திரைத்த தறிந்தான் தெய்வத்தால் வந்த புரைக்கு மருந்தறியான் பூதலத்தில் மேலோர் ஒருத்திக் கொருவன் வகுத்த முறைக் கொவ்வாதே
கலங்கி இருந்தான் கருத்தறிந்த பூங்கொடியாள் மலங்கும் கணவன் தயரறிவாள் மாதரார் பலங்கொடுத்துத் தங்கணவர் பாரமத நீக்கும் குலங்காக்கும் பெண்மை வழி கொண்டிருந்தாள் தன்மனத்தே
காணமுனங் கட்டழகு மோகமுற வீழ்த்தமெனில் ஆணழுகும் விடமன்றோ அதுபடைத்த நான்முகனே பேணவரும் வேதமுறைப் பிதாவென்றால் உங்களுக்கு பூணவொரு பெண்போதும் என்றுவிதி எழுதுவனோ
268
IO6
IOI
O8
IO9
O
III
2

கற்பழிக்குங் கட்டழகுக் காளையரைக் கொண்டார்க்கு நிற்பதவர் கண்விழியில் நீரன்றி வேறுண்டோ இற்பணித்த கட்டளையை இகவாத நெஞ்சுரமும் கற்கனிய நின்றுருகும் பெண்ணினத்தால் கலங்காதோ
காப்பதுவுங் கோவேந்தர் கடனாயிற் கன்னியரின் கூப்புகரம் குறையிரந்தால் கொடுக்காரேல் கோன்முறையும் நீப்பரென எழுதாத நீதிமுறை பழுதலவோ பூப்பரிய எழில்கொண்டு பிறப்பதுவும் பொல்லாதே
வடுப்படுத்த மென்மேலும் வனப்பெறியும் நின்றோள்கள் கெடுக்கும் அறம் எண்செய்வீர் கேட்டுவரும்வேதவிதி கொடுக்குமொரு மங்கைக்கு ஒருவனையே கோவேந்தே தடுப்பதவுன் எழிலானால் சார்த்துவரோ பழியுன்மேல்
கண்ணாளன் தயர்போக்கிக் காப்பதுவுங் காதலித்த பெண்ணாளின் கடனெண்பர் பேதலியேல் கொற்றவநின் புண்ணான உள்ளத்தைப் புரைநீக்கி யான்புகுவேன் எண்ணாத எண்ணங்கள் இனிவிடுக என்றிரந்தாள்
Soug
பாதியென்னுயிர் பகிர்ந்திருந்த நீ மீதியும் கொண்டனை மிகுந்த எண்பிழை யாதெனச் சிறிதிதயம் கொள்கிலாய் காதலை வளர்த்திடக் கருவி யாக்கினாய்
எதளது எப்படி நடக்கு மென்பது முதவினை முன்னரே முடித்த தென்பரால் மதியொடு மனவுரம் வாய்த்த போதிலும் விதிவலி யதனையும் விலக்க வல்லரோ
இன்றொரு திருமுகம் எழுதுவேன் எனை வென்றவள் தோற்றனள் போல வெம்பினாள் தின்றனள் திருமுக எழுத்தி னால் இனும் நின்றதோர் ஆண்மைதான் நீரு மாயதே
269
II.3.
II 4
IIS
II6
II 7
II9

Page 152
விரைவினில் வருவதாய் விடுத்த ஒலையை வருபரித் தாதினர் வாங்க ஈந்தனன் நிருபனாம் அண்ணனை நேரில் மற்றிவை உரைதரச் சமயமும் உணர்ந்திருந்தனன்
இன்னணம் இருக்கையில் மேலை வாணிகள் தென்னி லங்கையின் குறு மன்னர் சீனர்கள் வன்னியர் குழுவினர் வளவ நாட்டினர் பொன்னினர் நிரைத்தனர் பூபன் முன்றிலில்
முந்திரி தரும்பிழி முதிர்ந்த பானமும் விந்தை கொள் மணிகரை விரித்த கம்பளம் மந்தையின் கம்பளி மயிரிற் போர்வையும் முந்திய யவனரும் முதற்கண் வைத்தனர்
தொட்டிடிற் கையொடு சுகமு ணர்ந்திடு பட்டொடு நவநவப் பாத்தி ரங்களும்
கட்டிய விசிறியும் கவின்கொள் ஒவியப் பெட்டியும் பேழையும் சீனர் வைத்தனர்
வேங்கையின் பல்லொடு விரவி மாவலி தேங்கிய கரையினிற் சிரித்த பண்மணி தாங்கிய ஆரமும் சமர்ப்பணித்தனர் வீங்கிய தோள்வலி வீர வன்னியர்
கந்த றப்பன கடாக்க ளின்கொம்பில் விந்தை நற்கலை வினைசெய் பேழையும் சுந்தர மயிலினந் தறந்த பீலியும் தந்தனர் இன்னமும் வன்னி சார்ந்தவர்
கொம்பி னிற்கடை சீப்புக் குஞ்சியர் நம்பு வேற்கதிர் காம நாதனின் சம்பு டத்துவி பூதி சந்தனம் பம்பு தென்னவர் பரவியீந்தனர்
பூத்த புன்னகை வாயிற் பொங்கிட ஏத்து மங்கையை ஈந்தனர்முனம் காத்தி டுங்கலிங் கத்தர் கன்னடர் சேர்த்தத சிலையென யவனர் எண்ணிலார்
270
2O
I2I
122
I23
I24
I25
I26
I27

Egg
முற்றிய கராம்பு மூக்கெடு வாசனை சுற்றிய பாக்குத் தாள்படச் சுகிப்பர்தம் வெற்றிலை வாசம் விரித்தது வீதியில் கற்றொலை போகக் காற்றொடு வந்தார்
மறுமையைக் கேட்க வந்தவர் மாவையான் முறுவலில் மயங்கி முழுவதும் மறந்தனர் வெறுமையில் உள்ளம் கலந்தனர் வேலன்வாய்க் குறுநகை கோடி குவித்தது போதுமே
வேர்ப்படு சாயம் விசிறிடும் தாரிகை நீர்ப்பட எழுதும் நெறியினர் சேலைகள் போர்ப்பன இவைகள் பொறித்திடும் சித்திரம் ஊர்க்கரை மருங்கில் உவந்தனர் வியந்தனர்
எண்டிசை யிருந்து விருந்தென ஈண்டினர் உண்டபின் கழித்த உணவிடு சிற்றிலை கண்டனர் மலைபோல் குவிந்தது கரையெலாம் தொண்டர்கள் நீக்கித் தாய்மைசெய் தார்களே
வடையொடு பாய சம்பல வகைப்படு அடையொடு பலாவின் அஞ்சுவைத் தேனொடு படையலிற் பணிசெய் பாவையர் பூங்கொடி இடையசை மயங்கி எழுபசி மறந்தனர்
தொட்டெழு நாத சுரம்பிழி இன்னிசை கொட்டிய மேளக் குணில்படு தாளம் கட்டியங் கூறக் காதினில் அமுதம் எட்டிய விருந்தினர் எழுந்தெழுந் தாடினர்
B5ШД!
நாடு காண்பவர் நகரு லாவுவர் மாடு பல்வளம் மருங்கு பார்ப்பவர்
கூடி யாடுவர் குரவை செய்குவர் வீடெ லாமவர் விடுதி யாகவே
271
28
I29
I3O
I3 I
I32
I33
I34

Page 153
Eblgg
வெண்மணல் தெரிந்திட வெறுமை யானபோல் உண்மையில் நிறைந்தநீர் ஊற்று வாவியின் அண்மையில் வந்தவர் அகல மாட்டிலர் தண்மையின் கீரிமா மலையின் சாரலில்
நரைப்படு பனைமத நகர மாந்தியும் திரைப்படு கடலிடைத் திளைத்த நீந்தியும் கரைப்பட மனமிலார் கடிகை யாகியும்
நிரைப்பட ஆடுவர் தீர்த்த நீரிலே
Big
மாம்பழம் உண்டு மனமகிழ்ந் திருந்தவர் வ்ாம்பரித் திரளும் வணிகமும் விட்டனர் வேம்பையும் இனிக்கும் என்றனர் விந்தைசெய் தேம்படு செந்தமிழ் மண்ணின் செய்கையால்
விருந்தொடு அருந்த வள்ளியின் கிழங்கினை முருந்தொடு சமைத்த மாறினர் முழுவதும் இருந்திருந்துண்ட ஏப்பமிக் கெழுகினும் பொருந்திலர் நிறைவும் போடும்போ டுமென்றனர்
ஏறுவர் பின்னர் இறங்குவர் ஏற்றமேல் மாறுவர் மிதிப்பர் மனிதரின் வாழ்வியல் கூறுவ ரே கொல் என்றவர் கூடிய வேறுதே யத்த விருந்தினர் வியப்பினால்
Bugg
குறுநில மன்னரும் திறைகொடு கூடிய மறுநில மன்னரும் யவனரும் சீனரும் நெறிநிலை யிருந்திட நித்திலப் பந்தர்க்கீழ் அறிநிலை அந்தணர் வேதமே மேலெழ
மங்களம் பொங்கிடக் கஞ்சுக மங்கையை அங்கையிற் பற்றினன் அந்தணர் தீமுனம் சிங்கவே றெனும் பர ராசமண் திசையெலாம் பொங்கிய முரசமும் குழல்புணர்ந்தெழுந் திட
272
I35
136
I37
I38
I39
I40
I4I

கூந்தலின் பாரமும் நறுமலர்க் குவைகளும் ஏந்திய கஞ்சுக மங்கையின் இடைஇற வேந்தனும் மங்கல நாணினைப் பூட்டியே சேர்ந்திட மகிழ்கிறான் திருவெனத் திகழவே
I42 எம்மலர் இதழ்களில் எடுத்தவள் வைப்பினும் செம்மையாய்க் கனிந்திடும் பஞ்சிமென் சிற்றடி அம்மிமேல் வைத்தனன் அரசர்கள் தம்முடி மும்மணி வடுச்செய முறைசெயும் கைகளால்
I43
பரிசளித்த படலம்
எழை என்பவர் யாருளர் இந்நிலம் ஆளு கின்ற அரசனும் தானென தோளுயர்த்தினர் துள்ளினர் ஒவ்வொரு வாழு கின்றவச் செந்தமிழ் மக்களே
நீதி மன்றங்கள் நிற்பவர் செந்தமிழ்க் காதலாற் கலைநுட்பங்கலாய்த்தவர் வாதஞ் செய்பவரன்றிமற் றாருளர்
போத ஞானமெய் காணுறு புத்தியார்
இரும்பு வேலைத் தருத்தியின் மூச்சொடு விரும்பும் யோகியர் மூச்சும் விரிகடல் நிரம்பும் நித்திலம் தேடுவர் மூச்சுமே வரம்பு நின்றிடும் செந்தமிழ் மண்ணிலே
தேரிற் சித்திரச் சிற்பஞ் செதுக்குவார் கூரின் நுண்ணுளி வேண்டுவர் கூட்டமும் ஏரின் முன்கொழு வேண்டுவர் ஈண்டினார் ஒரம் நிற்பரும் கொல்லுலை முன்னரே
பாடு வாருக்குப் பள்ளத்த வெள்ளம்போல் ஓடு கின்ற(து) உயிர்க்கவியாதலால் ஏடெழுத்தினர் கையலுத் தார் எழுத்(த) ஊடு செல் எழுத்தாணியும் ஓய்ந்திட
273

Page 154
அன்று மன்னவன் மக்களை ஆழ்கடல் நின்ற பாய்க்கலம் சேர்த்திட நீள்நிசி சென்ற பல்லக்குச் செல்வனுக் கோடியே வென்ற அந்நிலம் மேற்பரி சாக்கினான்
வடக்கு நோக்கி வரும்பெரும் ஆற்றினை மடக்கியோர் மடுகட்டி மறித்துமண் அடக்கும் அத்தனை யுந்தந்தை யார்பெயர் நடக்கவே கனகன்பெயர் நல்கினான்
கரந்து வாழ்ந்த அந்நாளினிற் கான்நடு விருந்து தந்தவே ளாண்மையர் யாவர்க்கும் பொருந்த மாநிலம் பூணும் பரிசெனச் சுரந்தனன் நன்றி தோய்கடன் முற்றுவான்
Bougg
தாணெலாம் சுவரெலாம் தணியெலாம் தாரிகை மாணு லா வண்ணங்கள் சுண்ணங்கள் மால்செயும் காணு வார் கண்களே கண்களாம் மண்ணினிற் சாணெலாம் சான்றவர் சாருமா வைப்பதி
ஹடகடல் நடுவினில் வழிதெரியார்கலம் தொடுகாை கண்டிடத் தோன்றுமக் கோபுர முடிகளில் முகிலுற மாண்வினை முற்றினான் படிகளும் தவமுறும் மாவையம் பதியினில்
ஆதியாம் ஐங்கரற் கமைத்தனன் இணுவிலில் மீதுபோய் விண்தொடும் கோபுரக் கோயிலை வேதியர்க் கூட்டமும் விண்ணெழுப் பண்ணிசை ஒதவார் கூட்டமும் பட்டயம் ஒட்டினான்
Ebi
சித்திரப்பூ மண்டபத்துப் பூந்தவிசிற் சேயிழையார் முத்திழைத்த கவரிகொளத் திறைவேந்தர் முன்னிருப்ப பத்தியுறும் அந்தணர்கள் பாலிருந்தே ஆசிசொல வித்தகரைக் கூவியவர் விதமறிந்து பரிசளித்தான்
274
IO
II.
2

வனத்துறு பனிச்சமடு மாநதி மறித்தே கனத்தகருங் கல்லணை முடித்தவர் இவர்க்கே இனைத்தென அளந்துபரிசு) எல்லையிட லாமோ நினைத்தபடி எல்லைசொல நிலமெட்டுப் பெறுக
அருவியாற் றலைகட்டி மாந்தைவளம் செய்தார் மருவியாங்(கு) எடுத்தனர் மறித்தகுளம் அன்னார் கருவியால் அளவாத முருங்கனைக் கையளித்(த) அருளுவீர் இவர்பெறுகெண்(று) ஆணையிட் டானே
எருதோடிச் சால்கட்டி இடுநெல்லைச் சூடாய் மருதோடை குவித்த போர் மலைமீது நிற்பார். வருதோணி நந்தியங் கடல்காண வைத்தார் மெருகேறு பொற்காசு ஒருநாறு பெறுக
தக்கிணக் கைலையங் கிரித்தல புராணம் பக்குவச் செழுந்தமிழ் படைத்திவர் அளித்தார் மிக்கசை வப்பண்டி தப்பெயர் மிலைந்தார் தொக்கபொன்னாயிரங்கிழி பெறுக சுற்றி
பொருராச போர்க்களப் புகழ்மாலை பாவாய் பரராச சேகரனுலாவென்று பாடி தருராச புலவரிவர் தகுமேசொல் சொல்லுக்(கு) ஒருநாறு காசென்று கொள்கவிவர் உடனே
திரைக்கடல் நிரைப்பட விசைக்கதி திறக்கும்" மரக்கல வினைக்கலை வடிக்குமிவன் எங்கள் கரைக்கொருவர் வந்தணு கிடாதபடி காக்க பொருக்கள கடற்படை புதுக்கினன் அதற்கே
தளபதியும் தானாதி பதியுமிவன் மேல்பால்
எழுபதிகள் கொள்கமுத்(து) இட்டுமணி வைரம் முழுவதும் கரையிட்ட உடைவாளும் முறைகள் எழுதியபொற் பட்டயமும் இவர்பெறுக இன்னே
செந்தமிழ் விளங்கவெனச் சேர்ந்தபுல வோர்கள்
முந்தசபை நல்லூரிற் கூட்டினம் முடிப்பொன்
ஐந்தொடு பத்தாயிர மிவர்க்குநிதி யாக
தந்தனமென் பட்டினொடு தங்கவரித் தட்டில்
275
I3
I4
IS
I6
If
8
I9
2O

Page 155
Lugp
முத்திழைத்த விதான முன்னிசுரர் பத்தி மண்டபம் பாற்பெற இக்கிழி வைத்த தென்று வழங்கினன் எண்மலை முத்திரைக்(கு) இடபக்குறி முற்றினான்
கந்தன்மாக் கதிர்காம மலையினில் பந்தி யானைகள் ஆயிர முங்கொடுத்(த) எந்த நாளும் செய்பூசைக் கெழுத்தினில் தந்தனன்வயல் மானியம் சாரெலாம்
கோணமாமலைக் குன்றிற் பசுபதி காண மண்டபங் கட்டி நிரைத்தவர் தாணு மாயிரம் தாக்கிய பாலகள் ஆணு மாயிரம் ஆக்கிய சிற்பியர்
கல்லெலாமுயிர்க் கன்னிய ராய்க்கதை சொல்லவே வடித்தார்கள் தொடுமணிக் கல்லினாயிரம் கட்டிய ஆரங்கள் புல்லுவார்கலை தாங்கும் புயங்களில்
அண்ணலார் திரு மாமலை ஆங்கிடம் நண்ணி னாருக்கு நாடொறும் பூசையில் எண்ணில் ஏழிசை ஒதந் திருமறைப் பண்ணி னாருக்குப் பட்டயம் தோற்றினான்
அஞ்சு பொன்னையும் நீற்றுவர் ஆந்துளி விஞ்சு பாதரசத்தையும் வேகிடச் செஞ்சிவப்புச் செந்தாரம் மருந்தென நஞ்சு மேயமுதாக்கிடும் நாடியர்
ஒன்று கூட்டிய சங்க மிதற்கொரு மன்றும் ஆயிரம் பொன்னும் வழங்கினாம் என்று கூறினன் ஏடுகள் நாற்றிசை சென்று சேர்த்திடச் செல்வம் வழங்கினான்
276
2.
22
23
24
25
26
27

கண்ணி ருந்தவர் கையிலிருப்பினும் எண்ணித் தேடுவர் எங்கென ஆடையை நண்ணி தாயவை நால்தெரி யாதவை பண்ணி னாருக்குப் பைம்பொன் கொடுத்தனன்
பிடிகளோடித் தழுவின பின்புகள் அடிமரத்ததறுவாகன ஆனையை வடிமரக்கலை வல்லவர் நுண்மையால் முடிகிழிப்பணம் முத்தொடு நல்கினான்
பாண்டியன் திருப்பாவை மகிழ்ந்திட வேண்டு மன்னம் வழங்கிட வீதிகள் பூண்ட சத்திரம் போற்றிட மானியம் ஈண்டு செய்தனன் எழையிலாதவன்
BGblugg
எருதுக்கும் குதிரைக்கும் எழுதும் பொன் னுரலுக்கும் விருதுக்கும் மகனுக்கும் பள்ளிக்கும் வேலை பொருதிட்ட படகுக்கும் புனைவித்த பெயர்கள் இருவர்க்கும் இடுவித்த பெயராகி மாய்வார்
EGGluggu
ஊட்டு வாரும் நிலவின் ஒளிக்கதிர் காட்டுவாருங்கை காதற் குழந்தைக்கு நீட்டுவாரு மிவர்கதை நெஞ்சினில் சூட்டு வாரன்றித் தாயர் துயில்வரோ
நீரை எற்றி நெடுங்கண் சிவப்புற ஏரி யாம் யமுனா எழுந்தாடு வார் நாரி யார்நகை யோடிவர் வீரமும் போருமே புகழ்வார் புனை பாட்டிலே
மாந்தை வந்தவர் மேலை மரக்கலம் ஏந்தி நின்றன ஏற்றிய பாரத்தால் நீந்தி லாது நிலம் படுகின்றன போந்த தாக்குவர் எந்திரம் பூட்டியே
277
28
29
3O
3. I
32
33
34

Page 156
வானம் பொழியும் வரையிகவாத் தண்கடல் தானும் தரளக் குவையோடு சங்கீனும் தேனின் கிழங்கும் படும்நிலத்தில் சேகரர்க்(கு) ஆனும் பொழியும் அவர்செய்த ஆட்சியிலே
கன்னற் கவிக்கு முடிப்புப்பொன் ஈந்தபெரு மன்னைப் பழித்த மதரத்தேன் மாங்கனிகள் மின்னைப் பழித்த பசும்பொன்னாய்க் கைநீட்டும் வன்னக் கிளைகள் கரங்களாய் மாமரங்கள்
நத்தைக் குலங்கள் பாவலராய் நாடிவர சித்தம் மகிழ்ந்து தெளிந்த நீர்த் தண்கயத்தில் புத்தப் புதுநீர்த் துளிகள்பைந் தட்டிலையில் முத்தைக் குவிக்கும் கமலங்கள் முன்பரிசாய்
மல்லின் பணைத்தோட் செகராச மன்னனுடை வில்லின் திறம்பண் குறிஞ்சியாய் வித்தரிக்கும் அல்லின் கருவண்டு) அதற்குப்பூம் பந்தர்கள் முல்லை முகைகள் முத்தாக முன்பரப்பும்
தாவிக் குதித்துத் தவழ்ந்தநட மாடுமணில் கடிவும் மணிப்புட் குரலுக்குத் தாளமிடும் மேவும் பரிசு விதைக்கின்ற மாதளைகள் தாவும் வெடித்து மணிப்பரலாய்ச் சுற்றிவர
கோடைக் கதிரோன் குளிர்ந்து முகங் காட்டுவான் வாடை தவறாள் மதியென்ற மங்கைமுகம் நீடு குனிந்து நிலம்பார்ப்பள் மக்களென ஒடி நடக்காதே ஊர்ந்துவரும் தென்றலுமே
278
35
36
37
38
39
40

அடுச்
பருவப்பாலியர்படும்பாடு
நாலாயிரத்து முந்நூறு கவிதைகளாலான மகாகாவியம்
ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பது முதல் நாற்பத்திரண்டு வருட இலங்கை வரலாற்றுக் காவியம்.
செல்வன் என்னும் தமிழ்ச்சிறுவனும் அவன் பள்ளி மாணவரும் பத்துவருட காலத்தில் என்ன பாடுபடுகிறார்கள் என்பதைக் கருவாகக் கொண்டத.
ஒரு கண்ணிக் காவியம்.
நெஞ்சை உருக்கும் பாத்திரங்கள்.
இலங்கைக் காடுகள், யாழப்பாணக் கிராமங்கள், கொழும்பு. கண்டி, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, கிளாலித்துறைமுகம் என்பவற்றை நிலைக்களமாகக் கொண்டது.
மஞ்சுகாசினியம்-இயங்குதமிழியல்
மொழியியல், தொல்காப்பிய அடிப்படையில் தமிழுக்கோரிலக்கணம், பிரயோக இலக்கணம்.
இன்றைய வழக்கையும் இலக்கண வரம்புக்குள் அடக்குவது.
புணர்ச்சிபகுபத உறுப்புக்கள், மொழியாக்கம், இடைச்சொல் என்பவற்றைப் புதிய கோணத்தில் மொழியில் அடிப்படையில்,
தொல்காப்பியர் காட்டியவாறு எழுதப்பட்டது.

Page 157


Page 158