கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லரித்த செந்தமிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த தண்டமிழத் தாமோதரனார்

Page 1
。一、
செல்லரித்த செந்தழ
புதுவாழ்வு தண்டமிழத் த
101 ஆவது ஆண்டு மன
2 ! り、
LDIT. 5. Hyp
கொழும்புத் த 200

ஒழ்ச் சுவடிகளுக்கு கொடுத்த
ாமோதரனார்
உறவு நினைவுக்கட்டுரை
வேந்தன்
மிழ்ச் சங்கம்

Page 2
தலைப்பு:- செல்லரித்த செந்தழிழ்ச் சுவடிகளுக்கு புதுவாழ்வு கொடுத்த :ே * , தண்டமிழத் தாமோதரனார்
蔷, ஆசிரியர்
மா.க. ஈழவேந்தன்
வெளியீடு:- கொழும்புத் தமிழ்ச் சங்கம் 7, 57" ஒழுங்கை கொழும்பு - 06
பதிப்பு:-
IIIIHF EUDF,
விலை
LIT 20.00
தமிழ்ச் சங்க வெளியீடுகளிலுள்ள் கருத்துக்கள் அவ்வவ் ஆசிரியர்களுடையவை. அவ்ை சங்கத்தின் கருத்துக்களல்ல.

سیہہ ہیP\| لکسمجھ
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தழிழ் செய்யுமாறே
சி. டப்ளியு. தாமோதரம்பிள்ளை
B.A., B. ... it...)
தோற்றம்: 12.09.1882 LI aᏆ0 ᎢᎠᏍil : 01 - 01 .1901

Page 3

அறிமுகம்
செல்லரித்து சீரழிய இருந்த செந்தழிழ்ச் சுவடிகளுக்கு வாழ்வு கொடுத்தவர்கள் பலர். அவர்களுள் மூவர் எம் நினைவில் நிற்கின்றனர். இதனை தழிழ்த் தென்றல் திரு.வி.க. தனது “வாழ்க்கைக் குறிப்புக்கள்” என்ற நூலில் தனக்கே உரிய தனி நடையில் இம்மூவரின் பெருமையை முறையே சாற்றிச் செல்கின்றார். இதோ அவர் செப்பியவை “பழந்தழிழ் இலக்கிய வெளியீட்டுக்கு கால் கொண்டவர் ஆறுமுகநாவலர், சுவர் எழுப்பியவர் தாமோதரம்பிள்ளை, கூரை வேய்ந்து நிலையம் கோலியவர் சுவாமிநாதஐயர்” இவ்விதம் திரு.வி.க.வை விட வேறு யார் தழிழ் அறிஞர் ஆற்றிய பணியினை அழகுற ஆணித்தரமாக எடுத்துரைக்கமுடியும்.
பரிதிமாற் கலைஞரின் உள்ளம் உருக்கும் இரங்கற் பாடல்
தழிழக அறிஞர்கள் மறைந்த போது ஈழத்து தழிழ் அறிஞர்கள் எடுத்தியம்பிய இரங்கல் உரைகள் நிறைய உள்ளன. ஆனால் ஈழத்து அறிஞர்கள் மறைந்த போது அதே துடிப்புடன் தம் துயரைத் தெரிவித்த தழிழக அறிஞர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. எனினும் புறநடையாக - விதிவிலக்காக நம் தாமோதரனார் மறைந்த போது அவரின் அளவிடற்கரிய பெருமையை புகழ்படைத்த பரிதிமாற்கலைஞர் தமது உள்ளத்தில் எழுந்த துயர் உணர்வினை காலத்தாற் சாகாது ஞாலத்தில் நிலைத்து நிற்கின்ற முறையில் உள்ளம் உருகும் பாடலாக பின்வரும் முறையில் பெருக்கெடுக்கப் UITQuisité Tsil:
"காமோதி வண்டுதேன் கடிமலர் கூட்டுதல்போல்
நாமோது செந்தமிழில் நன்னூால் பதிப்பித்த தாமோ தரம்பிள்ளைச் சால்பெடுத்துச் சாற்றவெவர் தாமோ தரமுடை யார்’
வேறு சொற்களில் விளம்பின் தாமோதரனாரின் தரம் உணர்ந்தவள்கிள் தான் அவரின் பெருமையை எடுத்துரைக்க முடியும் என்பது இப்பாடலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Page 4
சிறுப்பிட்டி தந்த செந்தமிழ்ச் செம்மல்
தமிழ் ஈழத்தின் ஓர் அங்கமாக விளங்கும் யாழ்ப்பாணத்தின் தலைநகராம் நல்லுாரில் 05.12.1822 இல் ஆறுமுகநாவலர் பிறக்க 10 ஆண்டுகள் கழித்து சிறுப்பிட்டி எனும் சிற்றூரில் 12.09.1832 இல் வைரவநாதன் பெருந்தேவி ஆகியோருக்கு தாமோதரனார் மகனாகப் பிறந்தார்.தமிழ் இன எண்ணிக்கையின் ஏற்றத்தில் அக்கறை கொண்டிருந்த இவரின் தந்தையார் எட்டுக் குழந்தைகளைப் பெற்றார். அவள்களுள் மூத்தவர் நம் தாமோதரனார். தந்தை ஆசிரியராக இருந்ததினால் தந்தையின் அறிவு இவரின் வளர்ச்சிக்கு துணை நின்றது. அத்தோடு இவரின் மேல்நிலைக் கல்வி மேம்பட சுன்னாகத்து முத்துக்குமார நாவலர் துாண்டு கோலாக விளங்கினார். தமிழ்க்கல்வியில் ஊன்றிக் கவனம் செலுத்திய இவர் 1844 - 1852 வரையான காலப்பகுதியில் தெல்லிப்பழை மிசன் பாடசாலை, வட்டுக்கோட்டை கல்வி நிலையம் ஆகியவற்றில் பயின்றதோடு யாழ்ப்பாணக் கல்லுாரியில் ஆங்கிலத்தில் ஆழமான அறிவைப் பெற்றார்.
இவர் பயின்ற சென்னை மாநிலக் கல்லுாரியின் சிறப்பு
தனது இருபதாவது அகவையில் கோப்பாய் ஆரியர் பயிற்சிக்கல்லுாரியில் ஆசிரியராக விளங்கிய இவர் 1856 இல் “பெர்சிவல்” பாதிரியார் சென்னையில் நடத்திய “தினவர்த்தமானி’ இதழில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவரின் சென்னை வாழ்வு 1856 இல் தொடங்க 1857 இல் சென்னை மாநிலக்கல்லுாரியில் தமது ஆசிரியப் பொறுப்பை ஏற்றார். இம்மாநிலக்கல்லுாரியில் தான் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதஐயரும் சில காலம் ஆசிரியப்பணி புரிந்ததை இங்கு நினைவு கொள்வோமாக. இக்கல்லூரியின் முன்றலில் உ.வே.சாமிநாத ஐயரின் சிலை அவரின் பெருமை பேசும் முறையில் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. இச் சென்னை மாநிலக்கல்லுாரியில் இலங்கை அரசியலில் அரைநூற்றாண்டு அரசோச்சிய சேர்.பொன்.இராமநாதன் பயின்றவர் என்பது இங்கு பெருமையுடன் குறிப்பிடத்தக்கது. இலங்கையில் அமைதி காண மிக நெருக்கடியான காலகட்டத்தில் பெரும்பணியாற்றிய திரு.ஜி.பார்த்தசாரதி அவர்களும் இங்கேயே பயின்றார். இவருடன் பயின்றவர் இலங்கையின் கல்வித்துறை இயக்குனராக விளங்கிய திருமதி.இரத்தினா நவரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது. திருமதி. இரத்தினா நவரத்தினம் அவர்கள் பல நுால்களை எழுதியதோடு திருவாசகத்துக்கு அழகிய ஆங்கில உரை வழங்கியதோடு யோகர்சுவாமிகள் அவர்களின் புகழையும் ஏற்ற மிகு ஆங்கிலநடையில் ஒரு நுாலாக வரைந்துள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் சிக்கலை ஒட்டி திரு.பார்த்தசாரதி அவர்களை நான் அடிக்கடி சந்தித்த போது

திருமதி.இரத்தினா நவரத்தினம் அவர்களின் நலன் பற்றி விசாரிக்கத் தவறியதில்லை. இவ்வினிய செய்தியை இரத்தினா நவரத்தினம் அவள்களிடம் நான் சொல்லிய போது நன்றி மறவாத நண்பர் எம் பார்த்தசாரதி என்று கூறி உவகையுற்றார்.
எம் பணியையும் உணர்ந்திருந்த நம் இரத்தினா நவரத்தினம் 96 liras6i, “You are a man of ideas and ideals” (9) S1356 fullb 6T606T600Tsslds6ft உண்டு அந்த எண்ணங்கள் ஏற்றமும் உண்டு.) என்று எம்மை ஏற்றிப்போற்றியதையும் இங்கு நினைவு கூர்ந்து உவகையுறுகிறேன்.
தமிழகத்தில் தாமோதரனாரின் பல்துறைப் பணி
12.09.1832 இல் தமிழீழத்தில் தோன்றிய தாமோதரனார் தமிழகம் சென்று மாநிலக் கல்லுாரியில் பயின்று சென்னைப்பல்கலைக் கழகத்தின் முதல் இளங்கலை (B.A) பட்டதாரியானார். தாமோதரருடைய நிழற்படம் சென்னை பல்கலைக்கழகத்து நுாலகத்தில் தனிச்சிறப்புடன் பேணிப் பாதுகாக்கப்படுகின்றது. அவரது நினைவுக் கூட்டங்களின் போது இவ்வோவியத்துக்கு மலர் மாலை ஆட்டி சிறப்புச் செய்யப்படுகின்றது. சென்னை மாநிலக்கல்லுாரியில் இருந்து கள்ளிக்கோட்டை அரசினர்கல்லுாரிக்கு மாற்றம் பெற்றுச் சென்ற இவர் தனது 32 வது அகவையில் 1871இல் இளங்கலைச் சட்டம் (B.L) பட்டம் பெற்றார். அரை நூற்றாண்டை இவர் எய்கையில் 1882இல் அரசு பணியிலிருந்து ஒய்வுபெற்றார். பின்பு 1884இல் சட்டத்துறையில் இவள் பெற்றிருந்த சிறப்புக் காரணமாக புதுக்கோட்டை அரசின் முறைமன்ற நடுவராக பணியாற்றும்படி இவருக்கு அழைப்புக் கிடைத்தது. 1890இல் இப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற இவருக்கு 1895இல் “இராவ் பகதூர்” பட்டம் வழங்கப்பட்டது. தமிழீழத்தில் தோன்றிய இவர் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள புரசைவாக்கம் என்ற பகுதியில் தனது அறுபத்தொன்பதாவது அகவையின் தொடக்கத்தில் 1901ம் ஆண்டு சனவரி முதலாம் நாள் இறையருளில் இரண்டறக்கலந்தார்.
முனைவர் அரசேந்திரன் மொழிந்தவை
碑
நம் சி.வை.தாமோதரனார் ஆற்றிய பணிகள் பல. ஆனால் அவருக்கு அழியாப்புகழைத் தந்து நிற்பது அவர் பதிப்பித்த நூல்களாகும். “தமிழீழம் தந்த தாமோதரனார்’ என்ற தலைப்பில் சென்னை கிறித்தவக்கல்லுாரியின்' தமிழ்த்துறைப்பேராசிரியராக விளங்கும் முனைவர்

Page 5
(டாக்டர்) கு.அரசேந்திரன் தாமோதரனார் பற்றி தான் வரைந்த நுாலில், பதிப்பித்த நூல்களைப் பின்வரும் முறையில் ஆண்டடிப்படையில் தந்திருப்பது எமக்கு அகமகிழ்வினைத் தருவதோடு அவரின் ஆய்வுள்ளத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
1. நீதி நெறிவிளக்கம் 1854 7. கலித்தொகை 1887
2. தொல் சேனாவரையம் 1868 8. இலக்கணவிளக்கம் 1889
3. வீரசோழியம் பெருந்தேவனார் 9. ஆளாமணி 1889 உரையுடன் 1881 10.தொல் எழுத்து 891
4. இறையனார் களவியல் 1883 11.தொல்-சொல் (நச்) 1892
5. தணிகைப்புராணம் ': 1883
6. தொல்பொருள். நச் 1885
மேற்குறித்தவற்றை வெளியிட்ட தாமோதரனார் 1898இல் அகநானூற்றை வெளியிட எடுத்த முயற்சியும் அவர் வரலாற்றில் அறியத்தக்கதாக இருக்கின்றது சொற்பிறப்பு ஆய்வாளர் முனைவர் கு.அரசேந்திரன் கூற்றுப்படி “பதினொரு நூல்களில் தொல் எழுத்து மகாலிங்க ஐயர் பதிப்புத்தவிர பிற அனைத்தும் அவரால் மட்டுமே முதன் முதலாக அச்சேற்றப்பட்டன என்பதை நாம் நினைக்க வேண்டும்”
என்று வலியுறுத்திச் செல்லும் கூற்று தாமோதரனாரின் தலை சிறந்த பதிப்புப் பணிக்கு சான்று பகள்கின்றது.
முனைவர் அரசேந்திரனுக்கு கவிஞர் காசி.ஆனந்தன் வழங்கிய பாராட்டு
“தமிழீழம் தந்த தாமோதரனார்’ பற்றி முனைவர் கு.அரசேந்திரன் வரைந்துள்ள நுால் குறள் போல் குறுகிய வடிவம் கொண்டிருப்பினும் இதுவரை தாமோதரனார் பற்றி ஏனைய அறிஞர்கள் குறிப்பிடாத பல அரிய குறிப்புக்களை இதனில் தந்துள்ளதனால் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிஞர் முனைவர் க.பஅறவாணன், “திருக்குறளில்” கரைகண்ட போராசிரியர் இளங்குமரன், சைவ சித்தாந்த நுாற்பதிப்புக் கழக மேலாளர் திரு. முத்துக்குமாரசாமி உட்பட பலஅறிஞர்கள் இந்நூலை உகந்து போற்றியுள்ளததினால்,
'தமிழைக் கொண்டு உண்மையை
வாழ வைக்கும் அறம்
உண்மையைக் கொண்டு தமிழை
வாழவைக்கும் திறம்.
இவர் தான் அரசேந்திரன்'

என்ற ஆய்வாளர் அரசேந்திரனை உச்சி மீது வைத்து உவந்து போற்றும் நம் கவிஞர் காசி.ஆனந்தன் அவர்கள் மேலும் ஒருபடி சென்று,
"சூழ்ச்சியார் பொய்யும் புரட்டும்
களைந்து - வளைவுற்ற தமிழும்
தமிழ்மணன்னும் நிமிர்த்தும்
உயிர்ப்புள்ள ஆய்வும் எழுத்தும்
இவர்’
என்ற வரிகள் ஊடாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட நம் தாமோதரனாரின் பல வியத்தகு பணிகளை மக்கள் முன் அரசேந்திரன், அவர்கள் நிறுத்தியுள்ளார் என்பதை நம் கவிஞர் நிலைநாட்டியுள்ளார்.
தன் பணி பற்றித் தாமோதரனார்
தன் வாழ்நாள் முழுவதையுமே பதிப்புத் துறைக்கு அர்ப்பணித்த நம் தாமோதரனார் தான் ஏன் இப்பதிப்புத்துறையில் மூழ்கித் திளைத்தார் என்பதனையும் பின்வரும் சொற்களில் எடுத்துக்காட்டுகிறார். இச் சொற்கள் அவர் உள்ளம் உருகி வெளியிட்ட சொற்களாக காட்சியளிக்கின்றன. இதோ அவர் மொழிந்தவை.
. . . . . . . . : : ; "நல்ல தமிழ் நூல்களுக்கு வந்த விதியையும் கையெழுத்துப் பிரதிகளுக்கு வந்த கதியையும் அவை அடைந்திருக்கும் ஸ்திதியையும் பார்த்துச் சகிக்க மாட்டாமை ஒன்றே என்னை இத்தொழிலில் வலிப்பது”
t பல பெரும் வித்துவான்கள் இந்நூலை (தொல்காப்பியத்தை)
அச்சிட விரும்பியதும் முயன்றதும் இரண்டொரு பிரதிகள் தேடிப் பார்வையிட்டதும் தமக்கு நிகழ்ந்த சந்தேகங்களால் இதனை அச்சிடின் தம் பெயருக்கு குறைவு நேரிடுமென்று தம்முயற்சியைக் கைவிட்டதும் அடியேன் J600TLDIT6. அறிவேன். ஆதலால் பண்டிதர் கவிராஜபண்டிதர் மகாவித்துவான் L|ബബ് என்றின்ன பெரும்பட்ட சுமையை தலைமேலேற்றிக்கொள்ளாது இன்னும் பலகாலம் தமிழ் படித்ததற்கு உரிமை பூண்டு நிற்கும் என் போலியரே இதில் கையிடுவது பேரவசியமாயிற்று”

Page 6
கற்றோர் ஏற்றும் கலித்தொகை
தாமோதரனார் பதிப்பித்த பல நூல்களில் அவருக்கு பெரும் புகழை தேடிக் கொடுத்தது அவரின் “கற்றோர் ஏற்றுங் கலித்தொகை” ப் பதிப்பேயாகும். அவவரின் 59வது அகவையில் 1887இல் இந் நுால் பதிப்பிக்கப்பட்டது. தனது அகவை 22இல் 1854இல் நீதிநெறி விளக்கத்தை தனது முதல் நூலாக வெளியிட்டவரும் இவரே. கலித்தொகைச் சுவடியை தான் பதிப்பிக்க முனைந்தபோது தனக்கு ஏற்பட்ட தொல்லைகளை பின்வருமாறு அவர் நெஞ்சம் நெகிழ உரைக்கின்றார். கலித்தொகை பிரதிகள் தேட யான் பெற்ற கட்டம் வாயினால் கூறும் அளவைத்தன்று. முதன்முதல் யான் பார்த்தது புதுவை நயனப்ப முதலியாரது மூலப் பாடப்பிரதி. அது தலையும் கடையுமின்றிய குறைப் பிரதி. மேலும் பெரும்பாலும் எழுத்துக்கள் சிதைந்து ஒரு பாட்டின் சேருறுப்பாவது முற்றும் வாசிக்கமுடியாமற் கிடந்தாற் படிப்பதற்கே வெறுப்புண்டாய் நீக்கி விட்டேன்.
“பின்னர் தொல்காப்பிய பரிசோதனைக்காக தேடிய போது ரீல பூரீ ஆறுமுகநாவலர் அவர்களது பிரதி அகப்பட்டது. அது கொண்டு கலித்தொகை அருமை உணர்ந்து அது எப்படியும் உலகிற்கு பயன்படவேண்டும் என்னும் அவாவுற்று பல ஆதீனங்களுக்கு விண்ணப்பம் செய்த போது தனக்கு திருவாவடுதுறை ஆதீனம் துணை நின்றது” என்று கூறி ஆறுதலடைகிறார்.
செல்லரித்த நூல்கள் சிதறுண்டு கிடந்ததைக் கண்டு கலங்கியவர்
“என் சிறு பிராயத்தில் எனது தந்தையார் எனக்கு கற்பித்த நுால்கள் இப்போது தமிழ் நாடெங்கும் தேடியும் அகப்படவில்லை. ஒட்டித்தப்பியிருக்கும் புத்தகங்களும் கெட்டுச்சிதைந்திருக்கும் நிலைமையை தொட்டுப்பார்த்தாலன்றோ தெரியவரும். ஏடெடுக்கும் போது ஓரம் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முரிகிறது. ஒற்றை புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையுமின்றி நாலுபறமும் பாணக்கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கிறது” இதை விட பண்டைத்தமிழ் நூல்களை வெளியிட்ட அவர் பட்ட பாட்டினைச் சொல்வதற்கு வேறு சொற்கள் வேண்டுமா?
இவை அனைத்தையும் நினைவில் வைத்துத் தான் தாமோதரனாரை மதிப்பிடுகின்ற போது முனைவர் அரசேந்திரன் தாமோதரனாருடைய பெருமையை ஆய்வுள்ளத்தோடு இவ்விதமொழிகிறார். “சமயப்பற்று மிகுந்தவரே நம் தாமோதரர். என்றாலும் தமிழின் தமிழரின்

தனிப்பெரும் மாண்புகளைச் சமஸ்கிருதம் விரவாத தனித்தமிழ் நூல்களாகப் பழந்தமிழ்நூல்களே இருந்த படியால் அவற்றை மீட்டலே தமிழுக்கும் தமிழருக்கும் செய்யும் அடிப்படை பணிகளில் முதன்மை என்றே கருதியிருக்கின்றார். முனைவரின் இக்கூற்றை வரவேற்று நாமும் வழிமொழி கூறும் நிலையிலிருக்கிறோம். . . .
வையாபுரிப்பிள்ளை வாழ்த்தும் வையமேற்றும் தாமோதரனார்.
தமிழ் அறிஞர்களை மதிப்பீடு செய்து அவர்களுக்கு உரிய இடம் வழங்குவதில் தமிழ் ஆய்வாளர் வையாபுரிப்பிள்ளை அவள்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. அவர் தனது “தமிழ்ச்சுடர் மணிகள்” என்ற நூலில் தாமோதரனார் பற்றி வழங்கியுள்ள மதிப்பீடு அவர் நடுநிலை நின்ற்ே தாமோதரனாரை மதிப்பீடு செய்துள்ளார் என்பதற்கு சான்று கூறுகிறது. பூரீ ஆறுமுக நாவலர் சைவசமய நூல்கள், குறள், பாரதம் வெளியிடுவதோடு அமைந்து விட்டார்கள். வித்துவான் தாண்டவராயன் முதலியார், திவாகரம் முதலிய நூல்களையும் பள்ளி மாணவர்களுக்கு வேண்டும் வசனநூல்களையும் அச்சேற்றுவதில் ஒடுங்கிவிட்டார்கள். மழவை மகாலிங்கஜயர் தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தை நச்சினார்க்கினியர் உரையோடு பதிப்பித்து வேறு சில நூல்களையும் வெளியிட்டு அத்துடன் நின்று விட்டார்கள். களத்தூர் வேதகிரி முதலியார் நாலடி, நைடதம் முதலிய நூல்களை வெளியிட்டு அவ்வளவில் திருப்தியுற்றார்கள். திருத்தணிகை விசாகப் பெருமானையர் முதலியோர் குறளுக்குத் தெளிபொருள், பிரபுலிங்கலீலை, சூடாமணி, நிகண்டு முதலிய வற்றைப் பிரசுரித்து அவ்வளவில் தங்கள் முயற்சியைச் சுருக்கிக் கொண்டார்கள். திருவேங்கட முதலியார், இராசகோபாலப்பிள்ளை முதலானவர்கள் இராமாயணம் வெளியிடுவதிலும் நாலடி முதலியன பதிப்பித்தலிலும் ஈடுபட்டு நின்றனர். பூர் உ. வே. சாமிநாதஐயர் அவர்கள் அப்போது தான் சீவகசிந்தாமணி பதிப்பு முயற்சியில் போராடிக் கொண்டிருந்தார்கள். ஆகவே நமது பிள்ளை அவர்கள் தன்னந்தனியராய்ப் பண்டைத்தமிழ் செல்வப்புதையலை தமிழ் மக்களுக்கு அகழ்ந்தெடுத்து உதவும் பெரும் முயற்சியை மேற்கொண்டார். இவ்விதம் தாமோதரனார் தகைமை பற்றி கூறிய பேராசிரியர் வையாபுரி அவர்கள் மேலும் ஒருபடி சென்று “தாமோதரர் தமிழ் ஆர்வம் அவர் உள்ளத்திலே மங்கள ஒளியாய் திகழ்ந்து ஒரு காலைக் கொருகால் வளர்ந்து முடிவில் பேரொளிப்பிளம்பாக சுடர் விட்டெரிந்தது” என்று எம் தாமோதரனார் புகழை உச்ச நிலையில் வைத்து உவந்து போற்றுகிறார். நம் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களும் இத்துறையில் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின்

Page 7
கருத்தினை ஏற்றிய நிலையிற் போலும் “பாழ்பட்டுக் கிடந்த பண்டைய தமிழ் ஏட்டுச் சுவடிகளுக்கு எப்படியும் உயிர் கொடுக்க தாமோதரனார் ஆற்றிய பணி தலையாய பணி” என்று ஓரிடத்திற் குறிப்பிட்டுள்ளார்.
தாமோதரனார் தாள் பணிந்து சாமிநாதஐயர் பாடிய இரங்கல் பாடல்
நம் சி. வை. தாமோதரனார் அவர்கள் 01.01.1901 இல் சென்னையில் மறைந்தபோது தனக்கு வழிகாட்டியாக விளங்கிய தண்டமிழ் தாமோதரனாருடைய சிறப்பை சாமிநாத ஐயர் பின்வரும் முறையில் உள்ளமுருகப் பாடி தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். இதோ அவள் ԼյTIգԱյ6006)]:
"தொல்காப் பியமுதலாந் தொன்னூல் களைப்பதிப்பித்து
ஒல்காப் புகழ்மேவி யுய்ந்தபண்டயின் - அல்காத் தாமோ தரச்செல்வன் சட்டகநித் திட்டதுன்பை யாமோ தரமியம்ப வே”
என்ற பாடலில் “பண்பின் அல்காத் தாமோதரர்” என்று குறிப்பிட்டிருப்பது தமிழ் உள்ளவரையில் தாமோதரனார் புகழை நாமும் எம் வழித்தோன்றல்களும் ஏற்றிப் போற்றுவது ஏற்புடைத்து என்பதை எடுத்துரைக்கின்றது அன்றோ.


Page 8
"GLOBELGRAPH Tee-753

"No:- 14,57" Line, Colombo-06
F-75-S