கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மாநில அரசு மறுமலர்ச்சிகொண்ட அறங்காவலர் அறநிலையம் அமைத்துச் சீர்செய்யவேண்டும்

Page 1
" சைவமும் தமிழும் :
s மன்ற வெளியீடு: 25 s அருள்மிகு திருக்கோனே
புனித தெய்வ சாந்
ம நில
மறுமலர்ச்ச
97 205, 5 İTQ GÖİ
"அன்பாலே மக்கள்
குலம் இனேந்து
வாழும்
வெளியிட்டோர் :
இளேஞர் அருள்
ஞானசம்பந்தர் வீதி, (இலங்கை
 

அ~டது-அடது—அ9 , !, சிவ
நம்பலம் s
தழைத்தினிதோங்குக."
எச்சரம் திருத்தலத்தின் நித்திய மாண்புக்கு
~动夏 5(
சிகொண்ட
அறநிலையம் சய்யவேண்டும்
ܘܢܘܩܙܡܩܘܗܪܘ
) பரப் புதலே
எமது நோக்கம்
s
s
s s
திருக்கோணமலை, ) 1989
s நெறி மன்றம்
அ"அ"அடது அ8
Pary アヌ5

Page 2
எமது எண்ணம்
ஈழத்திருநாட்டில் திருமுறைப் பனுவல்கள் பெற்ற திருக் ாலங்கள் இரண்டேயிரண்டு. வடமன நிலத்தில் அருள்மிகு திருத் "., சரமும், கிழக்கு மாநிலத்தில் அருள்மிகு திருக்கோணேச்சரமும். இவையிரண்டும் செத்தமிழ்ச் சிவநெறி உலகின் இருகண்மணிகளாக விளங்கியருளுவன். அருள்மிகு திருக்கேதீச்சரம் அவருக்காக இவருக் காக என்ற நிலைப்பாடில்லாமல், அவரும் இவரும் எல்லாம் வல்ல இறைவன் திருவருளுக்காக என்ற நிலையில் திருவருள்வழி நின்று வாழ்வை நன்னெறியில் வழிப்படுத்துகின்ற நிலை யும், சைவசமய ஆத்மீகத்தின் வழிநின்று அறங்காவலர்களின் அறநிலையம் திருத் தலத்தின் தெய்வ சாந்நித்தியத்துக்கமையப் பணியாற்றுகின்றது. பூசை ஆராதனைகள் திருவிழாக்கள் அனைத்தும் முறைப்படி நிகழ்ந்து நிறைவுபெறுகின்றது. .
ஆணுல், அருள்மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் ஒழுங்கு முறைகள் போன்று இங்கு அருள்மிகு திருக்கோணேச்சரத் திருத் தலத்தில் அமையவில்லை. எனவே, இங்கு சென்றகாலங்கள் முதல் இன்றுவரை சைவசமய ஆத்மீகத்தின் ஒழுங்குமுறை அமையாது பழுதான - சீரற்ற: முறைகளே பல்கிப்பெருகியுள்ளன. இந்நிலைமை களுக்கு அடையாளமாகத்தான் திருத்தலத்தில் வழிபாட்டுக்கென எழுந்தருளப் பெற்றிருந்த சந்திரசேகரர் திருவுருவம் வழிபடுகின்ற இடத்தில் இல்லை. வேறு இடங்களிலும் காணப்படவில்லை. அத் திருவுருவத்தின் நிலை என்ன? எங்குள்ளது? யாருக்கும் பணத்தின் ஆசைக்காகத் தாரைவார்க்கப்பட்டுள்ளதா? என்ற விபரங்கள் இது வரை தெரியவில்லை. இதுபற்றியெல்லாம் அரச அதிபருக்கும் கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை இப்படியான பழுதுநிலைகள் அதிகப்பெரும் பான்மைப் பெலம் பெற்றுள்ளது அருள்மிகு திருக் கோணேச்சரத்திருத்தல அறநிலைய நிர்வாகத்தில். எனவேதான் பழுதுகள் எல்லாம் அகற்றப்படவேண்டும். சைவசமய ஆத்மீகத்தில் ஆர்வமும் உணர்வும் கொண்டுள்ள அறிவுடைய பெருமக்கள் மட்டும் ஒன்றுகூடி அறங்காவலர்களாக அமைந்து அறநிலையம் துவங்கி திருத் தலத்தின் தெய்வசாந்நித்தியத்துக்கமைய அறநிலையம் நிர்வாகத் திருப்பணியை மேற்கொண்டு ஆற்கவேண்டும் என்பதே நமது எண் ணம். அதுவே இவ்வெளியீட்டின் நோக்கம் என்பதைப் பணிவன் புடன் தெரிவித்துக்கொள்ளுகின்றேம். .
f ஆண்டவனே அடக்க முயலாதீர்கள்
a 6hlu முயலுங்கள் y
வணக்கம். t 海 . . இவ்வண்ணம், இளைஞர் அருள்நெறி மன்றம் பணிவன்புள்ள அடியேன், நிருக்கோணமலை. 9. з яѣн Сp aь у п ар т .
30 - I - 1989 மன்றச் செயலாளரும், பொறுப்பாளரும்

מטנסנטוס56Cor6Oג6 I Iס6תj_שם tכס6 מטrםab ##မံထ.a+=c=[c*ရွှေးနုိင္မပe
婆
திருமுறைப் பனுவல் பெற்று விளங்கும் அருள்மிகு கோணேச்சரத் திருத்தலத்தின் தெய்வசாந்நித்தியத்துக்கும் தெய்வீக மாண்புக்கும் எனப் புதிதாக அறங்காவலர்களின் அறநிலைய நிர்வாகம் ஒன்று அமையவிருப்பதனைச் செந் தமிழ்ச்சைவ உலகமும், மற்றும்சகல ஆத்மீகத் தலைவர்களும் முழு மனதுன் வரவேற்று மகிழ்வர் என்பதில் ஐயமில்லை. எனவே புதிதாக அமையவிருக்கும் அறநிலைய நிர்வாகத்துக்கு வாழ்த்துக்கூறி வரவேற்கின்றேம். 女 இவ் வெளியீட்டில் குறிப்பிட்டுள்ள கருத்துக்களைக் கவனத்துக்கு எடுத்து அறங்காவலர்களின் அறநிலையத்தைச் சிறப்புடன் அமையுங்கள். ★ சென்ற காலத்துப் பழுதுகளையெல்லாம் நீக்குவதற்குத் திடசங்கற்பம் கொள்ளுங்கள். மீண்டும் பழுதுகள் ஏற்பட இடமளியாதீர்கள். ஈழத் திருநாட்டின் @8 கண்மணிகளாக விளங்குவ திருமுறைப் பனுவல் பெற்றுள்ள திருக்கேதீச்சரமும், திருக்கோ ணேச்சரமும். இவற்றை உயிரினும் மேலாக உச்சி மேற்கொண்டு தர்ம நீதியின் அடிச்சுவட்டில் வழிநடந்து திருப்பணியாற்று கின்றவர்கள் இம்மையிலும் மறுமையிலும் இறைவன் திருவருளால் அரவணைக்கப்படுவர்.
அவருக்காக இவருக்காக என்று இறைநலத்தைத் திசை திருப்பாதீர்கள்! இறைநலத்தின் அருள்நிலை அடிச்சுவட்டுக்கு அவரும், இவரும் திசைமாறித் தர்ம நீதியின் வழிக்குவந்து வாழ்வுப் பயணஞ் செய்யட்டும். இறைநலம் பெற்றுச் சிறந்தினிது வாழட்டும் - வாழ்வோமாக ! "வாய்த்தது நம்தமக்கு ஈதோர் பிறவி
மதித்திடுமின். ” * உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றேம் என்றவர்தம் சென்னிமிசைப் பாதமலர் சூட்டிஞன் சிவபெருமான் ??
இளைஞர் அருள்நெறி மன்றத்தினர்

Page 3

ஒம் "ஞாலம் நின்புழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே’’
* வாழ்க உலகெலாம்?
ஞாலமுய்ய நாமுய்ய சைவநன்னெறியின் சீலமுய்ய எழுந் தருளிய, இறைவன் அடியார்களாகிய மாதவச் சிவஞானச் செல்வர்களால் அருளப்பெற்றவைதான் திருமுறைப் பனுவல்கள். இறைவன் திருப்பெயரால் எழுந்துள்ள வா ழ் க் கை மு  ைற . மனிதா! சோம்பேறியாகத் திரியா தே, தேசபக்தியற்றுத் தெய்வ பக்தியற்று வாழ்வில் நடைப்பிணமாக வாழாதே. துரோகத்தின் மீதும், ஆசைகள்மீதும் பற்றுக்கொண்டு வாழ்வில் பதறிவாழாதே, எல்லாம் வல்ல இரக்கமுடையோனுகவும் பெருங்கருணையாள ஞகவும் நீக்கமற எங்கும் நிறைந்து விளங்குகின்ற இறைவன் திருவருளை வேண்டித் திருக்கோயில் வழிபாட்டுக்குச் செல்கின்ற மனிதா! உனது கல்விச் செருக்கையும், செல்வச் செருக்கையும் திருக்கோயில் கோபுர வாசற் படியோடு விட்டுவிட்டு உள்ளே சென்று, “நினைத்துத் தொழுவார் பாவம் தீர்க்கும் நிம ல ர் உறைகோயில்’ என்ற திருமுறை அறிவுறுத்தலின்படி உனது பாவங்களை, பழிகளை, செய்த - செய்கின்ற - செய்யவிருக்கின்ற பாதகங்களையெல்லாம் நினைந்துகொள். அதன் பலாபலன்கள் எல்லாமே உன்னைப் பண்ணிய உலகினில் பாவங்களையே பண் ணச் செய்வன. எனவே, அத்துர்ப்பாக்கியமான துன்மார்க்கத்தின் கொடுமைகளையெல்லாம் நினைந்து, அக்கொடுமைகளிலிருந்தும் பாவதினைப்புகளிலிருந்தும் என்னை விடுதலை அடையச்செய்வது உன்பாரமே என்று இறைவனிடம் ஒப்புக்கொடு. இது வ  ைர காலமும் பண்ணிய உலகினில் பயின்ற பாவங்களால் ஏற்பட் டுள்ள பாதகச் செயல்களே - எண்ணங்களை இறைவன் இருச்சந்நி தானத்தில் நிற்கும் நாம் நினைத்து இறைவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி நம் குறைகளையெல்லாம் குறைவில்ா நிறை வாகிய இறைவனிடம் ஒப்புக்கொடுப்பதுடன், நமது வஞ்சமனத் தின் அதர்மத்தின் வழிப்பட்ட துர்மாக்கங்களுக்காக அழவேண் டும். அழுதுபுலம்பும்போது வடிகின்ற கண்ணிர்மட்டும்தான் நமது பாவங்களையெல்லாம் கழுவிச் சுத்தம் செய்யும். ஆத்மீ கத்தின் தத்துவார்த்தமான நெறிமுறைப்படி, உலகளாவிய
3.

Page 4
சகல ஆத்மீகச் சமயங்கள் அறிவுறுத்தி நிற்கின்ற அருட்போதனை களின் முடிந்த முடிப்புப்படி வேறு எதுவும், எந்தக் காரியங் களும், எந்தத் தான தர்மங்களும், எந்தச் சடங்கு சம்பிரதாயங் க்ளும், மனிதகுலத்தின் பாவங்களைக் கழுவிச் சுத்தம் செய்து மனித ஆன்மாக்களை சுத்தாத்மாவாகப் பாவங்களின் கட்டுக்களி லிருந்து விடுதலைபெற்ற உத்தமனுக ஆக்கவே முடி யா து . எனவே, பெளத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம், சீக்கியம் ஆகிய ஆத்மீகச் சமயங்களைச் சேர்ந்த பலகோடி மனித ஆன் மாக்களுக்கு அவர்கள்தம் ஆத்மீகச் சமயநெறிகள் வழிகாட்டித் தர்மநீதியின் அடிச்சுவட்டில் அரவணைத்துச் செல்லுந் தன்மை யும் தகமையும் உடையது திருமுறைகளே.
இறைநலம்மிக்கவை திருமுறைகள். திருமுறைப்பாடல் பெற்ற திருத்தலங்கள் அருட்டிறம் மிக்கவை. அங்கு மருட்டி றத்துக்கு இடமேயில்லை. நமது தமிழினம் சிறப்பாக சைவ சம யத்தவர்களாகிய நாம் நன்குணரவேண்டும். உணர்ந்தும் உணர்ச் சியற்று ஆர்வமற்று வாழ்வில் நடைப்பிணங்களாகப் பாவமூட் டைகளைச் சுமக்கும் சுமைதாங்கிகளாக வாழ்வதால், பன்றிக்கும் மனிதனுக்கும் வித்தியாசம் இருக்கமுடியாது. 'தின்று படுத்து ஈன்று வாழ்தல் வாழ்வல்ல பன்றிக்கும் உண்டாம் அப்பயன்” என்ற அறுவுறுத்தலை நினைவிற் கொள்ளுதல் நலம். நமது வாழ்வு மேன்மையுற்ருல் நமது விடும், நாடும் மே ன்  ைம யுறும் . ஒவ்வொரு மனித ஆன்மாவும் ஆன்மீக விடுதலை பெறவேண்டும். அதுதான் உலகியலில் கட்டுவிட்ட அதாவது, அடிமைத்தளை விட்ட உயர்நிலை. அகத்துறை வாழ்வியலில் மனித ஆன்மாக்கள் புலன்கள் வழி செல்லும் புல்லறிவாளர்கள் நிலையினின்று விடுதலை பெற வேண் டும். இதுதான் இறைவனுல் மனிதகுலத்துக்குக் கிடைக்கும் ஆன்மீகச் சுதந்திர விடுதலை, இவ்விடுதலை பெற்ற வர்கள்தான் வீட்டையும் நாட்டையும் ஆளமுடியும். இவ்வுண் மையைத்தான் அரசியல்நெறிக்கு அரண் அமைத்த கி ரே க்க அரசியல் தத்துவஞானி பிளேட்டோ மனிதகுலத்துக்கு அறி வுறுத்தியருளுகின்ருர்கள். இவ்வறிவுறுத்தலுக்கு இன்று எத்தனை ஆட்சியாளர்கள் இடமளித்து அரசியலில் வாழ்பவர்கள்? இல்லை வழிகாட்டுபவர்கள் ? இந்நிலை இன்றுள்ளவர்களுக்கு வர நியாய மில்லை. காரணம், இன்றுள்ளவர்கள் அரசியல் த ர் ம நீதி யில் வாழவில்லை. ஆனல் பிழைப்பு நடாத்துகின்றவர்கள். ஆகவே, இன்றுள்வர்களால் முடியாதுதானே. முடியாவிடில் முட்டுப்பாடு கள் இருக்க நியாயமிருக்கிறது.
4.

திருமுறைப் பனுவல் பெற்றுள்ள திருத்தலங்கள் நமது நாட்டில் இரண்டுமட்டுமே. ஒன்று திருக்கேதீச்சரம், மற்றது திருக்கோணேச்சரம். இத்திருத்தலங்கள் அமைந்து விளங்குகின்ற அமைப்பும் நமக்கு நல்லதொரு பாடத்தை அறிவுறுத்துகின்றது. அதுவும் நமது கோணேச்சரம் அமைந்துள்ள இயற்கை நிலையை திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளின் திருவுள்ளம் நன்கு கண்டு களித்திருக்கின்றது. இறைவனின் மலை தூரமான சமவெளியில் நின்றுபார்த்தால், சிவலிங்கமும், ஆவுடையாரும் அமைந்த நிலை யில் உள்ளது. குரைகடல் இறைவனின் திருவடித் தாமரைகளை பணிந்தேத்திச் செல்கின்ற மாதிரி அற்புதமான அமைப்பு.
திருமுறைப் பனுவல்பெற்றுள்ள திருத்தலங்கள் அத்தனை யும், சடங்கு சம்பிரதாயங்கள் என்ற போர்வைகளால் இறை நலம் மறைக்கப்பட்டு - மறுக்கப்பட்டு வியாபார வர்த்தக நிலைக்கு உட்படக்கூடாது. ஆடம் பரங்க ளி ன் களியாட்டங்களுக்கும், கேலிக்கூத்துக்களுக்கும், திருத்தலமாக விளங்கும் திருக்கோணேச் சரத்தில் இடமளித்தல் ஆகாது. திருத்தலம் அருட்டிறத்தினை மனிதகுலத்துக்கு வாரி வழங்கும் திருவிடமாக விளங்கவேண்டும். அருள்நிதி தர வரும் ஆனந்த மலையாகிய இறைவனின் திருத்தலம் பொருள்நிதி சம்பாதித்துக் கணக்குப் பார்க்கும் பஞ்சமர்களின் - சீலமற்றவர்களின் மறைவிடங்களாக திருமுறைப் பனுவல்பெற் றுள்ள திருத்தலங்கள் விளங்கக் கூடாது.
நமது திருத்தலங்களின் வழிபாட்டு முறைகள் அத்தனையும் திருமுறைகனின் அறிவுரைகளுக்கு அமைந்துவிட்டால், நமது உளத்தன்மையே அருள்முறைக்குப் - புனித முறைக்கு மாற்றம் பெறுகின்றது. இம்மாற்றம் உளத்தன்மையின் பரப்பைமட்டும் அல்ல, விரிந்த நிலப்பரப்பையே புனிதமாக்குகின்றது. இந்நிலை அமைந்தால்தான், சிந்தனையும் சாதனையும் ஒன்றிணைந்து எண் ணம் நிறைவுபெறும்.
திருத்தலமாகத் திருமுறைப் பனுவல் பெற்றுள்ள திருக்கோ ணேச்சரத்தின் திருக்கோயில் வழிபாட்டில் அதாவது சடங்கு சம்பிரதாயங்களில் இடம்பெறுகின்ற ஏராளமான அவசியமற்ற செலவுகளையும் செலவுகளுக்குரிய செயல்முறைகளையும் வெகுவாகக் குறைக்கவேண்டும். திருக்கோயில் பாவனைக்கு அடியவர்களால் கொணர்ந்து அளிக்கப்படும் பொருட்கள் தனிப்பட்டவர்களின் சுயநலப் பாவனைகளுக்கெல்லாம் பயன்படுத்தப்படுகின்றன. ஆத் மீக வழிபாட்டில் அரசியல் சட்டதிட்ட விதிமுறைகள் அறவே இடம்பெறக்கூடாது. ஆத்மீகப் பெரியவர்கள்தான் திருக்கோயில்
む

Page 5
அறநிலையப் பணிகள் முறைக்கு நாயகர்களாக இடம்பெற்று அற நிலையமுறை சீருடன் ஒழு ங் குட ன் விளங்க ஆவன செய்தல் வேண்டும்.
அவருக்கா? இவருக்கா? என்றில்லாமல், அனைவரும் இறை வன் திருவருளுக்காக என்ற நிலை உளத்தன்மையில் இடம்பெறல் வேண்டும்.
பெருமானின் ஊர்வலம் என்ற நிலையைக் கைவிடவேண்டும். இப்படியான செயல்கள் மூலம் தனிப்பட்டசுயநலவஞ்சகர்கள் தமது பிழைப்பு நடாத்தும் இழிசெயலுக்கு இறைவனின் திருப்பெயரால் அமையும் ஊர்வலம் என்ற செய்முறை இரையாகிவிடக்கூடாது. ஊர் வலம் என்ற நிலையில் பக்திப் பண்பு என்ற தெய்வ சாந்நித்தியமிக்க நன்நிலை முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுதான். டாக்டர் டபிள்யூ பாலேந்திரா அவர்களின் பெரு முயற்சியால் இன்றுள்ள இறைவனின் திருவுருவத் திருமேனிகள் கண்டெடுக்கப்பட்ட பின்பு கொழும்பிலுள்ள அருங்கலைப் பொருட்காட்சி நிலையத்துக்குச் செல்லாது தடுத்து நிறுத்தி, நாடளாவிய முறையில் எங்கும் நாட்டுவலமாகச் சகல அலங்காரச் சிறப்புக்களுடன் கொணர்ந்து, திருக்கோணமலையிலும் ஏழு யானைகள் சகல அலங்காரங்களுடன் புடைசூழச் சகல இனமக்களும் வழிபட்டு ஆனந்தக்கண்ணிர் மல்க எம்பெருமானின் மலைமீது அமைந்திருந்த மண்டபத்தில் எழுந்தருளச்செய்யப்பட்ட காலத்தில் அமைந்திருந்த தெய்வசாந் நித்தியமிக்கதான மக்களின் உளப்பண்பு இன்றில்லை. இ ன் று ஆடம்பரக் களியாட்ட நிலைகளில் அமைந்துள்ள மனநிலைகள் தான் அதிகப் பெரும்பான்மை. எனவே, இந்நிலைக்கு திருத்தல மாகிய கோணேச்சரமும், ஆராதனை வழிபாடுகளும் திருவிழாக் களும் பலியாக்கப்படக் கூடாது.
அடுத்து, தெ ப் பத் திரு விழா என்ற பெயரால் நடை பெறும் களியாட்டம் போன்ற கா னி வே ல் காட்சி போன்ற நிலைக்குட்பட்ட இத்தெப்பத்திருவிழாவை மீண்டும் இடம் பெறச் செய்தல் ஆகாது. அப்படி இடம்பெறுவதற்குத் திருத்தல நிர் வாக அறநிலையம் இடமளித்தல் ஆகாது. சைவ-இந்து சமய ஆத்மீகத்தையும், அதன் விழாக்களையும் சகல மக்களும் தங்கள் பொழுதுபோக்குக் களியாட்டங்கள் போன்ற நிலைகளுக்குப் பயன் படுத்துகின்ற இழிநிலைகளையே சென்றகர்ல நிகழ்வுகள் அத்தனை யும் நமக்கு எதுத்துக்காட்டியது. இது யாரும் மறுக்கமுடியாத உண்மை. இப்படியான கேளிக்கைக் களியாட்டம் போ ன் ற நிலைகள் மற்றும் பெளத்தம், கிறிஸ்த்தவம், இஸ்லாம் போன்ற

ஆத்மீகச் சமயங்களில் இடம்பெறவே முடியாது, காரணம், அந்த ஆத்மீகச் சமயங்கள் ஆத்மீகத்தோடு தொடர்பான விதி முறைகளுடன் அமைந்து தெய்வசாந்நித்தியமான நிலை யில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, பணிவு ஆகிய உயர்பண்பு களைப் பின்பற்றியுள்ளமைதான். ஆனல், நமது ஆத்மீகச் சம யத்தில் ஆத்மீகத்தோடு தொடர்புள்ள விதிமுறைகள் எல்லாமே நம்மவர்களால் புறக்கணிக்கப்பட்டுத் தனிப்பட்ட மனிதர்களின் அவர்களோடு இணைந்த கூட்டத்தினர்களின் விதிமுறைகள்தான் இன்றைய நிலைப்பாட்டில் ந ம து சைவசமயத் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. உதா ரணமாக, நமது சைவசமய ஆத்மீகத்தின் திருக்கோயில் வழி பாட்டு முறைகளை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு கோயிலில் வெவ்வேறுவிதமான பூசை, ஆராதனை முறைகள். ஒரு ஊருக்கு மற்ற ஊர் வழிபாட்டுமுறைகள் வித்தியாசப்பட்டு நிற்கின்றன. ஏன் அப்படியென்று கேட்டால், "இந்த ஊர், இந்தக்கோயில் நடைமுறை அடிப்படித்தான்” என்ற பதில் வருகின்றது. இதன் உண்மையென்ன? நமது சைவசமயத்தின் ஒழுக்க அடிப் படையிலான விதிமுறைகள் இன்று கைவிடப்பட்டுள்ளது. தனிப்பட்டவர்களின் வர்த்தக நோக்கின் அடிப்படையில் எழுந் துள்ள பணம் திரட்டும் விதிமுறைகள்தான் அதிகப் பெரும் பான்மைப் பெலம் பெற்று விளங்குகின்றதை நாம் நமது சைவ ஆத்மீகத்தின் திருக்கோயில் வழிபாட்டு முறைகளிலும், சடங்கு சம்பிரதாய முறைகளிலும் கண்முன் காணமுடிகின்றது. அத் துடன் நமது சைவ சமயத்தின் இன்றைய விதிமுறைகள் அனைத் தும் சமயவிதிமுறைகளென அதற்கென பொய்மைத் தத்துவங் களை ஏற்படுத்திக்கொண்டு, ஒழுக்க அடிப்படையிலான சைவ சமய ஆத்மீகத்தின் தர்மநீதி வழிப்பட்ட உண்மைத் தத்துவங் களின் அடிப்படையிலான விதிமுறைகள் அத்தனையும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்மாற்றம் இன்றைய நிலையில் அருள் நி3லக்குக் கணக்குப் பார்க்கும் நமது சைவசமய ஆத்மீகநெறி மாற்றம் பெற்றுப் பொருள் வரு வாய் நிலைக்குக் கணக்குப் பார் க் கும் இழிநிலையைப் பெற்றுள்ளது, இந்நிலைப்பாடுகள், திருமுறைப் பனுவல்பெற்ற திருத் த ல மா கி ய அருள்மிகு கோணேச்சரத்தின் அற நிலை ய நிர்வாகத்தில் எக்காரணங் கொண்டும் இடம்பெறுதல் ஆகாது, அந்த வகையில் மனித ஆன்மாக்களின் அருளார்ந்த ஆத்மீகத்தின் பெறுபேற்றுக்கு அருள்மிகு கோணேச்சரம் வழிகாட்டுதல் வேண்டும். அவ்வழி காட்டலுக்குரிய முறையில் திருத்தலத்தின் அறநிலையம் அதன் நிர்வாகத்தில் ஆத்மீகநலங்கொண்ட நாயகங்களின் - பெரியார் களின் - அறிவுடைப் பெருமக்களின் தலைமைத்துவ வழிகாட்டல்
7

Page 6
முக்கியமான இடத்தை வகிக்கவேண்டும் - தனித்துவத்தில் வழி காட்டவேண்டும். அவ்வழியின் அடிச்சுவட்டினைப் பின்பற்றி நமது இளையவர்கள் சமுதாயமும் அருள்மிகு கோணேச்சரத்தின் திருத்தல அறநிலையப் பணிக ளி ல் தம்மை முழுக்க முழுக்க அர்ப்பணித்து இறைவனின் அருள்நிறை தர்மநீதியின் அரவணைப் பில் அணைந்துகொண்டு தா மும் வாழ்வியலில் முன்னேற்றங் கண்டு அதேவேளையில் மற்றவர்களையும் அன்பு, பணிவு, அடக் கம், அருள்நிறை நெஞ்சம் ஆகியவற்றின் துணையுடன் இறை நலப் பணிகளுக்கு அழைத்துச்செல்ல வேண்டும். அரசியலால் வேறுபட்டிருந்தாலும் சைவசமய ஆத்மீகத்தின் அரவணைப்பில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செந்தமிழினத்தின் ஆன்மநேய மான ஒருமைப்பாட்டை வளர்ப்பதே நாம் எ ல் லா ம் வல்ல இறைவனை நோக்கி விண்ணப்பித்து வழிபாடாற்றிப் பெறுகின்ற மேலான - நலமான அருட்பேறு என்பதை அனைவரும் எண்ணத் திற்கொண்டு ஆத்மீகப் பணிகளில் பீடுநடை போட வேண்டும். இந்நடைக்கு எல்லாம் வல்ல பேரருளாளனும் இரக்கமுடை யோனுமாகிய திருச்சிற்றம்பலத்து இறைவன் திருவருள் தோன் ருத் துணையாக விளங்கி வழித்துணையாக அமைந்து காத் தருளுமாக. இதில் ஐயம்வேண்டாம்.
நமது சைவசமயத் திருக்கோயில்களில் அரு ச் சனை கள் நடைபெறுகின்றன. இவ்வருச்சனையில் இடம்பெறுகின்ற பெயர். நட்சத்திரம், குலம், கோத்திரம், அனைத்து விபரங்களும் அருச் சனை செய்கின்றவர்களுக்காகச் சொல்லப்படுகின்ற, இவ்வளவு விபரங்களும் எல்லாம் வல்லவராகவும், சகலரையும் முறைப்படி தர்மநீதியின் அடிச்சுவடு தவழுது இயக்கி வழிநடத்தியருளுகின்ற வருமாகிய இறைவனுக்குத் தெரியாதா? எனவே, இப்படியான முறைகள் நமது சைவசமய ஆத்மீகநெறியில் வேண்டப்படுவ தல்ல. இந்நிலையில் இன்று மனித ஆன்மார்கள் மட்டும் தமக்கு அரு ச் சனே க ள் செய்யவில்லை, ஆட்டுக்கும் மாட்டுக்கும் கூட அருச்சனைகள் செய்விக்கின்ருர்கள். மோடார்கார், மோட்டார் சையிக்கிள், ஸ்கூட்டர், கலப்பை இயந்திர றைக்ட்டர் ஆகியன வற்றுக்கெலாம் இ ன் று நூல்கட்டுவிக்கின்ருர்கள். இதன் அர்த்தமென்ன? நமது ஆத்மீக அறிவுடமை அவ்வளவு உயர் நிலைக்கு வளர்ந்துள்ளதா? அல்லது இறைவனின் அருள் நிலையை வீணுன முறையில் துஷ்பிரயோகம் செய்கின்ற இழிநிலை வளர்ந் துள்ளதா? இதை அறிவுடையவர்கள் சற்று எண்ணிப்பார்க்க வேண்டும். எனவே, எங்கு வேண்டுமானலும் இந்த முறைகள் நடக்கட்டும் பாதகமில்லை. ஆனல், தி ரு மு  ைற ப் பனுவல் பெற்று விளங்குகின்ற திருத்தலமாகிய அருள் மிகு கோணேச்
8

சரத்தில் இப்படியான பணம் வசூலிக்கும் முறையும், மனித ஆன்மாக்களை ஏமாற்றுகின்ற நிலையும் இடம்பெறுதல் ஆகாது. இறையடிவர்களின் திருவுள்ளங்களின் எண்ணங்கள் நிறைவுபெற வேண்டும். ஆண்டவனுக்கு நாமும் நமது துன்பங்கள் துயரங் களைச் சொல்லி விண்ணப்பம் செய்து முறையிட்டு அருச்சனைகள் சேய்தோம் என்ற மனநிறைவும் இறைவழிபாட்டில் ஒன்றெனக் கலக்கத்தான் வேண்டும் என்பதை யாரும் மறுக் க முடியாது. அப்படி மறுப்பது ஆத்மீகத்தின் தர்மநீதியை மீறுகின்ற செய லாகும். பெரும் பாதகமாகும். ஆகவே, எல்லாம் வல்ல இறை வனுக்கு அருச்சனை நடைபெறும் நேரம் விபரமாகக் குறிப்பிட்டு அறிவித்தல் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்நேரத்தில் திருக் கோயிலில் அருள்மிகு கோணேசப்பெருமானுக்கு பூசை ஆரா தனைகள் ஆற்றியருளுகின்ற குரு க் கள் ஐயா அவர்கள் மனித ஆன்மாக்களின் நல்வாழ்வுக்காகவும், துன் பங்கள் துயரங்கள் நீங்குவதற்காகவும், உலகெலாம் சிறந்தினிது வாழ்வதற்காகவும் அருச்சனையைக் குறிப்பிட்ட நேர த் தி ல் துவங்கிப் பின் குறிப் பிட்ட நேரத்தில் நிறைவுசெய்து கொள்ளலாம். அருச்சனை நடை பெறும் நேரத்தில் அடியார்கள் திருச்சந்நிதானத் திருவாயிலுக்கு ஒழுங்க்ாக வரிசையாகச் சென்று ஒருவர் பின் ஒருவராகத் தமது பெயர், நட்சத்திரம், குலம், கோத்திரம் ஆகியன அனைத்தையும் சொல்லித் தமது எண்ணத்தில் உள்ள கருத்துக்களையும் அருச் சனை நேரத்தில் இறைவனிடம் விண்ணப்பம் செய்துவிட்டு மற்ற அடியவர்களுக்கு இடமளிக்கலாம். இதில் பல பிரச்சனைகளும் சிரமங்களும் ஏற்படும் என்று தட்டிக்கழிக்க வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்ருேம். எவ்வளவோ பிரச் சனைகளுக்கும் சிரமங்களுக்கும் ஒரு தீர்வு காணுகின்ற நிலைப் பாட்டில், இது நமது ஆத்மிகத் திருநெறியில் பெரிய பிரச் சனையோ சிரமமோ அ ல் ல. ஆனல், ஒன்றேயொன்றுதான் முக்கியமாக வேண்டப்படுவது. இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ள நாம் அனைவரும் சமம். பேதாபேதங்கள் இல்லை. அனைவரும் இறைவனின் அடியவர்கள். போ ட் டி பொருமைகளுக்கோ, ஏற்றத்தாழ்வுகளுக்கோ, போ லிக் கெளரவங்களுக்கோ நாம் இடமளித்தல் ஆகாது என்ற மன நினைப்பு திருத்தல வழிபாட் டில் கலந்துகொள்கின்ற அனைவ்ர் திருவுள்ளங்களிலும் எழுச்சி பெற வேண்டும். அறநிலையத்தின் நிர்வாகத்தின் திருப்பணி களில் உள்ளவர்களாலும், இறைவழிபாட்டின் அணுக்கமான அருளாளர்களாகவும் விளங்குகின்ற குருக்கள் ஐயா அவர்களா லும், அடியவர்கள் நெ ஞ் சத் தி ல் மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஒழுங்கு முறைகள் அமைவதற்கு உத வி ய ரு ள முடி யும் என்பது நமது உறுதியான நம் பி க்  ைக ஆண்ட வ னின்
9

Page 7
வழி பா ட் டு க்கு வருகின்ற இறையடியார்கள் அனைவருமே அறிவுடையவர்கள் என்ற நிலையில் இருக்க மா ட் டா ர் க ள். %ஞல், வழிபாட்டுக்கு வருகின்றனர்கள் அறியாமையாக நடந்து விட்டாலும் செயற்பட்டுவிட்டாலும் அவர்களை அ ன் புட ன் அணுகி அவர்களுக்கு வேண்டிய அறிவுரைகளை எடுத்துச்சொல்லி வழிபாட்டிற்கு வரும் அவர்களுக்குத் துணைசெய்வதும் இறை பணிகளில் சிறந்த பணி. இப்படியான நற்பணிகளில் ஆர்வமும் உணர்வுங்கொண்டு ஈடுபட்டுப் பணியாற்றி ஒர் உதாரண எடுத் துக்காட்டாக விளங்கும் நன்னிலையை, எழுச்சிபெறவிருக்கும் அருள்மிகு கோணேச்சரத் திருத்தலத்தின் அறநிலையத்தின் நிர் வாகத்தின் நற்பணியாளர்களாகிய ஆ த் மீக நாயகர்களும், இளையவர்களாகிய நமது வருங்காலச் செல்வங்களாகிய இளைஞர் களும் ஏற்படுத்திப் பயன்பெறச்செய்யவேண்டும். இத்தனைக்கும், அன்பும், அருளும், பணிவும், அடக்கமும், இரக்க சிந்தையும் அனைவரிடமும் ஒருங்கேயமைந்து விட்டால் தென்கயிலை என ஏற்றிப் போற்றபெறுகின்ற அருள்மிகு கோணேச்சரத்திருத்தலம் சைவ நன்னெறியின் ஒழுக்கசீலத்துக்கும் தெய்வசாந்நித்தியமிக்க தான பாவணுசக்திக்கும் ஒரு உதாரண எடுத்துக்காட்டாக விளங் கிச் சைவநெறியின் ஆத்மீக உலகுக்கு வழிகாட்டமுடியும் என் பதில் சந்தேகமில்லை. இது சத்தியம்
அருச்சனைகள், ஆராதனைகள், நேர்கடன்கள் ஆகியவற்றின் பேரில் அடியவர்களால் தரப்படும் பணம் உண்டியலிலேயே போடப் படல்வேண்டும். இறைபணியில் உள்ள குருக்கள் ஐயா மார்களோ, பூசை வழிபாடு, கோயிலின் உட்கருமங்களில் ஈடுபட் டுள்ளவர்களோ, அல்லது அறநிலையத்தவர்களோ யாருமே கைநீட் டிப் பணம்பெறுதல் ஆகாது. அடியவர்கள் மற்றும் யாரும் கோயி லுக்குப் பணஞ்செலுத்தவேண்டுமெனில் அவர்கள் செலுத்தும் பணம் எந்த நிலைக்குரியதாக இருப்பினும் அப்பணம் திருக்கோ யில் உண்டியல் என்ற நிலைக்குச் சேர்த்துவிடல் வேண்டும். அதா வது உண்டியலில் போட்டுவிடல் வேண்டும். நல்ல சுவையான பலகாரம் உண்டு மகிழவேண்டும் என்பதற்காகக் கோயிலுக்குப் பணம்கொடுத்தால் வீட்டுக்குப் பலகாரம் கோயில் பிரசாதம் என்ற முறையில் வரும் என்ற நமது சமுதாயத்தவர்களின் மன நிலைக்கு மாற்றம் தேவை. இறைவனிடமிருந்து வாழ்வின் வளத் துக்கு அருளைப் பெறவேண்டிய மனிதனின் அறிவுடமையானது வயிற்றின் வளத்துக்கும், ஆசையின் நிறைவுக்குமாக இறைவன் திருச் சந்நிதானத்திலிருந்து இன்சுவைப் டவகாரம் வேண்டிநிற் கின்ற அளவுக்கு இறைவனின் திருச்சந்நிதானத்தை ஒரு விருந்து உபசார விடுதி போன்று கருதுகின்ற நமது சமுதாயத்தவர்களின் அறியாமையை என்னென்பது ஐயா ? இதனைத்தான் நமது அபி ராமிப்பட்டர்பிரான் :
10

' கல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒருகாலத்திலும்
செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே ' என்று அறியாமையில் உழன்று வாழ்கின்றவர்களின் தொடர்பு பற்றி நமக்கு எச்சரிக்கின்றர்கள் எனவே, இப்படியானதொரு அறியாமை நிலைக்கோ, ஆத்மீகத்துக்கொவ்வாத செயற்பாடுக ளுக்கோ எதிர்காலத்தில் அமையவிருக்கும் அருள்மிகு கோணேச் சரத்தின் அறநிலைய நிர்வாகம் இடமளித்தல் ஆகாது என்பதே தாழ்மையான வேண்டுகோள்.
அடுத்து, கோயிலைப் பராமரிப்புக்குரிய செலவுகளுக்கு என்ன செய்வது என்று ஏங்கவேண்டியதில்லை. கோயிலில் பூசை ஆராதனைகள் செய்கின்ற குருக்கள் முதற்கொண்டு சகலருக்கும் முறைப்படி சம்பளம் கொடுக்கலாம். அத்துடன் அவர்களுக்குக் குடியிருக்க வீட்டு வசதிகளும் செய்துகொடுக்கலாம். திருக்கோன மலை மாவட்டத்திலுள்ள சகல அரச அலுவலகங்கள் பள்ளிக்கூடங் கள் ஆகியவற்றில் பணியாற்றுகின்ற சையசமயத்தைச் சேர்ந்த வர்களிடமிருந்து ஒவ்வொரு மாதமும் ரூபாய் 2 வீதம் பெற்றுக் கொள்வது. அவர்களிடமிருந்து பெறுகின்ற பணத்தை அவர்க ளது அலுவலக முதல்வர், பள்ளிக்கூட முதல்வர் ஆகியோருக்கு அறிவித்து ஒவ்வொரு மாதச் சம்பளத்தின்போது பெற்று அருள் மிகு கோணேசர் திருநலத்தின் பணிகளுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்வது நலம். கோட்டைக்குள் கோயில் அருகாமையின் சுற் முடலில் உள்ள கட்டிடங்களைக் கோயில் குருக்கள் மார் மற்றும் பணியாளர்களின் குடியிருப்புக்கு ஒதுக்கிக்கொடுக்கலாம். அத்து டன், வருவாய் கருதி ஏற்படுத்தப்பட்டுள்ள செலவுகளுக்குரிய சில சடங்கு, சம்பிரதாய முறைகளைத் தவிர்க்க வேண்டியவற் றைத் தவிர்க்கலாம். விலக்கவேண்டியவற்றை விலக்கலாம்.
மனத்தால் உணர்ந்து திருக்கோயில் வழிபாட்டுக்கு வரும் அடியவர்களே போதும் ஆணுல், ஒலிபெருக்கியமைத்து இரந்து கூவி அழைக்கத் தேவையில்லை. திருக்கோயில் வழிபாட்டு முறை களை நேரில் வந்து கண்டு ஆனந்தம்பெற்று வழிபடட்டும். ஆணுல், வீட்டிலே டாம்பீகவாழ்லில் சுகமாக இருந்துகொண்டு ஆண்டவ னின் திருக்கோயில் வழிபாட்டு நிகழ்ச்சிகளை கேட்கின்ற வகை யில் ஒலிபெருக்கி அமைத்து ஓலமிடத் தேவையில்லை வழிபாடு என்பது தன்னை யுணரச்செய்வது. தன் குற்றம் குறைகளை தாமா கவே அறிந்து உணரவைப்பது. உணர்ந்து சிந்திக்க வைப்பது. சிந்தனையைச் சாதனையாக்குவது. இவைகள்தான் இறைவழிபாட் டிஞல் கிடைக்கின்ற சற்பிதசாதம். பொதுவாகச் சொன்ஞல் மனித ஆன்மாக்கள் வாழ்வே நன்னெறியில் வழிப் பட் டு
ll

Page 8
இறைவனின் தர்மநீதியின் அடிச்சுவட்டில் பீடு நடைபோட்டு பீடுடைய பெருவாழ்வுக்கு மனித ஆன்மாக்களை ஆற்றுப்படுத் திச் செல்வது இதுதான் வழிபாட்டினுல் உயிர் உய்யுங்காலம் வரை பெற்றுய்கின்ற நற்பெரும்பேறு. இப்பேற்றினை மனித ஆன்மாக்கள் பெற்று எழுச்சியும் மகிழ்ச்சியுமடைய அருள்மிகு கோணேச்சரத் திருத்தலத்தின் வருங்கால அறநிலையம் செயற் படுத்திச் சிறந்தினிய தெய்வசாந்நித்திய வாழ்வு க்கு அரண் செய்யுமாக.
தமிழ் நாட்டுத் திருக்கோயில்களில் எ ல் லா ம் வர்த்தக வியாபாரம்தான் நடைபெறுகின்றது. பண்டைப் பெருமன்னர் களினதும், சிவனடியார்களினதும் திருநிலைக் குறிக்கோளின் இறை நலம் இக்காலத்தில் பணம்பெருக்கும் நோக்கத்தால் இறைவன் திருவருளுக்கும் மனித ஆன்மாக்கள் நெஞ்சத்துக்குமுரிய திரு நிலைத் தொடர்பு மறைந்துபோய், பணத்தைக் கொடுத்தால் இறைவனையே நம் பின்னல் கூட்டிச்செல்லலாம் எ ன் கி ன் ற கண்மூடிக்கொள்கைகள் இன்று வர வர அதிகப்பெரும் பான் மைப் பெலம் பெற்றுள்ளது, இந்நிலையைத்தான் அருட்சோதி இராமலிங்க சுவாமிகள். 'கண்மூடிக்கொள்கைகள் எ ல் லா ம் மண்மூடிப் போகட்டும்" என்றருளுகின்றர்கள். எனவே மண் மூடுவதற்கு முன் நாம் கண்திறப்பது நலம், தமிழ் நாட்டின் தரித்திர நிலை நம்மையும் இன்று நமது நாட்டையும், சைவ சமய ஆத்மீகத்தையும் தொற்றுநோய் போன்று பற்றித் தரித் திர நிலைக்கு உட்படுத்தி வருகின்ற இழிநிலைகள் பயிற்சிபண்ணத் துவங்கியுள்ளன. இந்நிலை எங்கள் அருள்மிகு கோணேச்சரத் திருத்தலத்தின் முறைகளையும் பீடிக்காதிருக்க. அமையவிருக்கும் அறநிலைய நிர்வாகம் கண்ணும் கருத்துமாக விழிப்புடன் அமைந்து விளங்கவேண்டும்.
"ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம்மதியே”
என்பதுவும், "விண்ணரசுபோலவே மண்ணரசிலும் உமது திரு நாமம் புகழ்ந்தேத்தப் படுவதாக" என்பதுதான் ஆத்மீகத்தின் ஆன்மநாதம். ஆஞல், இன்றைய நிலையில் இறைவன் திருநாமம் இகழப்பட்டாலும் போகட்டும், நமதுபுகழ், பெருமையெல்லாமே புகழப்படட்டும் என்ற நிலைமைதான் இன்றைய நமது சைவ சமய ஆத்மீகத் திருநெறியில் அதிகப் பெரும்பான்மையாக அட விக்காடு போன்றுள்ள மனநிலைகள் வளர்ந்துள்ளன. உலகத்தில் அதாவது நாம் நமது நாட்டில் மனித உருவில் பிறவியெடுத்து வாழ்வது ஒரு மாண்புமிக்க சிறந்த குறிக்கோளை நிறைவு செய்
2

யும் பெருமையை நிலைநாட்டவேதான் என்பதை மறத்தல்,மறுத் தல் ஆகாது. அதேபோன்று, திருக்கோயில் வழிப்பாட்டுக்குச் செல்லும் நாம் நமது வாழ்வுப் பயணத்தை சன்மார்க்க நன் னெறியில் வழிப்படுத்துவது என்ற உயர்ந்த குறிக்கோளை நிலை நார்ட்டுகின்ற இறைநலத்தின் பெருமையைக் கைவரப் பெறுவ தற்கே யொழிய, நமது துன்மார்க்க வாழ்வுமுறைகளின் பெரு மைக்குச் சாதனமாக இறைவனை, இறைவன் வழிபாட்டைப் பயன்படுத்திச் சுயநலவஞ்சகப் பெருமையை நிலைநாட்ட அல்ல என்பதை மறப்பது, மறுப்பது மனித நாகரீகமல்ல. எனவே, நமது சைவசமய ஆத்மீகச் சமுதாயத்தின் தர்மவழிப்பட்ட மேன்மைக்கும் மாண்புக்கும் தெய்வசாந்நித்தியத்துக்கும் அருள் மிகு கோணேச்சரத் திருத்தலத்தின் அறநிலைய நிர்வாகம் தகுதி யுடன் அமைந்து வழிகாட்டல் வேண்டும்.
இறுதியாக, “ பிறப்பென்னும் பேதமை நீங்கிச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு”
என்ற திருவள்ளுவப் பெருமானின் அறிவுறுத்தலுக் கமைய, மனித வாழ் வில் ர ற் படுகின்ற பேதமைகள் நீங்கவும் , அறிவுடமைபெற்று சிறப்பென்னும் செம்பொருள் காணுகின்ற அறிவாற்றலைப் பெறவும் திருக்கோயில் வழிபாடு, பூசை ஆராதனைகள், திருவிழாக்கள் ஆகிய அனைத்து நிலைப்பாட் டிலும் வழிகாட்டுதல் வேண்டும். நமது வாழ்வியலில் மண்டிக் கிடக்கும் பேதமைகள் என்ற அறியாமை நீக்கப்படவேண்டும், அறிவுடமை வாழ்வில் வளம்பெறவேண்டும். ஞானத்தைப் பேசி விட்டுப் பின் அஞ்ஞானத்தைப் பேணுவது தகாத செயல் • குறைவுள்ள மனித ஆன்மாக்களை நிறைவுசெய்துகொள்ள வழி காட்டுவதுதான் குறைவிலா நிறைவாகிய பரமதயாளனுகிய பரம்பொருள் இறைவனின் திருச்சந்நிதானத்தைக் கருவாகக் கொண்டுள்ள திருக்கோயிலின் அறக்கடமை. ஆனல் மறந்தும் மடமைக்கும் மூடக்கொள்கைகளுக்கும் வழிகாட்டுவதாக எல்லாம் வல்ல இறைவனின் திருக்கோயிலும் வழிபாடுகளும் எண்ணங்க ளும் அமைந்துவிடக்கூடாது. இந்நிலையில், அருள்மிகு கோணேச் சரத் திருத்தலத்தின் அறநிலைய நிர்வாகத்தின் திருப்பணியானது வழிகாட்ட வேண்டும்.
திருமுறைப் பனுவல் பெற்று விளங்கும் அருள்மிகு திருக் கோணேச்சரத் திருத்தலத்தின் வரலாறு பல மொழிகளில் சிறு புத்தகமாக வெளியிட்டு வழங்கவேண்டும். திருக்கோணேச்சரத் தைப்பற்றியெல்லாம் தவருண முறையில் உண்மைக்குப் புறம்பாக விளக்கங்கள் மற்றும் இனத்தவர்களால் பிரச்சாரப்படுத்தப்படுகின் றது. முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து வருகின்ற சுற்றுலாப்
翠品

Page 9
பயணிகளுக்கு சுற்றுலாப் பகுதியினரால் தவருண முறை யில் அருள்மிகு திருக்கோணேச்சரம் பற்றிய வரலாறுகள் உண்மை யற்ற வகையில் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. சுற்றுலாப் பய னிகளுடன் கூடவரும் வழிகாட்டிகளும் ஒருபக்கச்சார்பாக நின்று பொய்யான தகவல்கள் விளக்கங்கள் கொடுக்கின்ற இழிநிலையைப் போக்குவதற்குப் பல மொழிகளிலான வரலாறுண்மையை நன்கு விளக்கும் வகையில் சிறு வெளியீட்டுப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்குதல் வேண்டும். இப்பணி மூலம் தவருன கருத்துக்களை யும் விளக்கங்களையும் விலக்கமுடியும்.
அருள் மிகு கோணேச்சரத்தில் பழம்பெருமைவாய்ந்த சோழப் பேரரசின் காலத்திய அழகிய திருவுருவமைப்புக் கொண்ட சந்திரசேகரர் திருவுருவம் திருக்கோயிலில் வழிபாட்டிடத்தில் காணப்படவில்லை. அத்திருவுருவத்தின் நிலையென்ன? எங்குள் ளது? அதற்கு என்ன நட்ந்தது ? வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு விற்கப்பட்டதா ? இதுவிடயத்தில் புதிதாக அமைய விருக்கும் அறங்காவலர் அறநிலைய நிர்வாகம் முழு க் கவனம் செலுத்தி ஆவணசெய்து உண்மையை கண்டறிதல் வேண்டும் எனப்பணிவன்புடன் வேண்டுகின்றேன்.
14
 

வாழ்த் தி வரவேற்கின்ருேம்!
நமது மாநில அரசு, இலங்கை அரசின் நிர்வாகச் சேவை யில் திறமையான அனுபவங்கள் பெற்ற நல்லறிவுடைப் பெரு மக்களை, பண்பாடுடையவர்களை, நிர்வாகத்தை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் சமதானம் வழங்கிச் சமாதானத்தை நிலைநாட்டி மனிதகுலத்தின் சேவையே மகேஸ்வ்ரனின் - இறைவ னின் பூஜை என்ற உயரிய எண்ணத்தையுடைய உத்தமர்களைப் பெற்றுள்ளது. அவர்கள்தான் மாநில அரசு நிர்வாகத்தில் பொறுப்புடையவர்களாக விளங்கும், உயர்திருவாளர்கள் சி. எம். கணேசலிங்கம், ந. சிவராசா, சு. சிவதாசன், த. வாமதேவன், என். பத்மநாதன், ஜணுப் மன்சூர், டாக்டர் நச்சிஞர்க்கினி யன் ஆகியோர்களே. இவர்கள் அனைவரும் அரச நிர்வா கத்தில் ப ல் துறை க ளில் அனுபவங்க ள் பெற்றவர்கள். மாநில அரசின் முதலமைச்சர் அவர்களின் முன்னேற்றப் பணி களுக்கு நல்லாதரவாக அமையப்பெற்றவர்கள். முதலமைச்சர் அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் இளையவரே, ஆளுல், நன் னெறிப்படுத்தி வழிகாட்ட நற்றுணையாளர்களாக விளங்குபவர் கள், மாநில அரசுப் பயணத்தில் முதலமைச்சர் அவர்களுக்கும், நாட்டுக்கும் வழித்துணையாக அமைந்து விளங்குவார்கள் என்ற நிலைப்பாட்டில் நாம் எழுச்சியுடையோர்களாகின்ருேம். மகிழ்ச்சி யடைகின்ருேம், மாநில அரசுக்குக் கி  ைட த்த உத்தமர்களை நிர்வாகத் திறமையாளர்களை வா ழ் த் தி வரவேற்பது ந ம து தலையாய அறக்கடமையாகின்றது.
இவர்கள் அனைவருமே திருக்கோணமலை மாவட்டத்தின் எழுச்சிமிக்க பணிகளுக்கும் அபிவிருத்திகளுக்குமாக நன்கு உழைத் துப் பணியாற்றியவர்கள். சகல இன மக்களினது தேவைகளை நன்கு உணர்ந்தவர்கள். யார் யார் எத்திசையில் என்பதையும் நன்முக விளங்கிக்கொண்டவர்கள், பேதாபேதங்களின்றி சன் மார்க்க நெறி நின்று, அனைவரும் அனைத்தும் பெற்றுச் சமவாழ்வு வாழவேண்டும் என்ற நலமான எண்ணமும் குறிக்கோளுமுடைய வர்கள். சகல இன மக்களுக்கும் நன்கு தெரிந்தவர்கள். இவர் கள் திருக்கோணமலை மாவட்டத்தின் சிறப்புக்கும் வளர்ச்ன் குப் பணிபுரிந்த காலம் ஒரு பொற்காலமாக விளங்கியது. மீசிக்

Page 10
டும் விளங்க இறைவன் மீண்டும் அழைத்துள்ளான். இவர்கள் அனைவரும் அன்று ஆற்றிய பணிகள் நினைவுச் சின்னங்களாக இன்றும், அன்று இவர்கள் ஆற்றிய பணிகளின் பலாபலன்கள் நிலைத்து நிற்கின்றன. இது குறித்து நம்மவர்கள் மகிழ்ச்சியடை கிருர்கள், மீண்டும் அந்தப் பொற்காலம் இன்று மாநில அரசின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஒரு நற்காலமாக உருப்பெற்றுள்ளது குறித்து மாநில அரசின் சகல இன குடிமக்களும் பெருமையடை யாமல் இருக்கமுடியாது.
மாநில அரசு ஏற்றமிகு தமிழினத்தவர்களையே பெரும் பான்மையாகக் கொண்டிருப்பினும், இதுபற்றி மற்றும் இனமக் கள் அஞ்சத்தேவையில்லை என்ற நிலையையும், மாநில அரசில் எக்குறையுமின்றி நாமனைவரும் வாழ்கின்ருேம் என்ற நிலையும் மத, இனம், மொழி வேற்றுமைகள், துவேஷங்கள், குரோதங் கள் எதுவுமின்றி அனைவரும் அனைத்திலும் சமதானம் பெறுகின் ருேம், மனநிறைவில் சமாதானமாக ஒருமைப்பாட்டுணர்வு . கொண்டவர்களாக வாழ்கின்ருேம் என்ற் நன் நிலைகளை நமது மாநில அரசு உருவாக்கிச் சகல இன மக்களின் சமதர்ம சமத் துவ வாழ்வுக்கு வழியமைத்து மனித குலத்தின் மேன்மையை, மாண்பை நிலைநிறுத்துவதுதான் மாநில அரசின் தர்மநீதி அடிச் சுவட்டின் வழிசெல்லும் ந ல் ல ற ப் பயணமாகப் பணியாக விளங்கவேண்டும்,
மாநில அரசி ன் பணிகள், ஆட்சிமுறைகள் அனைத்தும் வருங்காலத்தில் ஓர் சிறந்த உதாரண எடுத்துக்காட்டாக மத்திய அரசுக்குக் காட்டவேண்டும். மத்திய அரசின் ஆட்சிமுறையில் இ ல் லா த சமதானம், ஒருமைப்பாடு, பே த ங் க ள ற் ற பெருவாழ்வு அனைத்தும்பெற்று அனைத்து இன மக்கட் சமூகங்க ளும் எழுச்சிபெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர் என்ற உய ரிய மனிதப் பண்பாட்டின் மாண்பினை மத் திய அரசு முதல் அண்டை நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக நமது மாநில அரசு ஆட்சியைச் செயற்படுத்திக்காட்டவேண்டும் எ ன் பதே எமது எண்ணம். எண்ணம் நிறைவுபெறப் பணிபுரிய வந்திருக்கும் நிர் வர்க உத்தமர்களையும், மாண்புமிகு முதலமைச்சா அவர்களை யும் நெஞ்சார்ந்த உணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்த்தி வரவேற்கின்ருேம்.
6

நமது எண்ணமும் வேண்டுகோளும்
நெருக்கடிகள் பிரச்சனைகள் மிகுந்துள்ள சூழ்நிலையில் மா நில அரசின் நிர்வாகத்துக்கு நற்றுணையாக அமைந்து வழிநடத் தும் மேலான எண்ணத்துடன், திருவாளர்கள் : எம். சி. கணேச லிங்கம் அவர்களும், ந. சிவராசா அவர்களும், சு. சிவதாசன் அவர்களும், த வாமதேவன் அவர்களும், என். பத்மநாதன் அவர்களும், ஜனப். மன்சூர் அவர்களும், டாக்டர். நச்சினர்க் கினியன் அவர்களும் ஒன்றிணைந்த நன்னிலையில் திருக்கோண மலைக்கு வருகைதந்து மாநில அரசின் நிர்வாகத்தை சமதான நிலையில் மனித ஆன்மாக்களுக்குப் பயன்படச்செய்யவும், சமத் துவம் சமாதானம் ஆகிய உயர் பண்புகளை வளர்த்து வீட்டை யும் நாட்டையும் வளமாக்குகின்ற பெரும்பணியில் ஈடுபட்டுள் 6767 ft.
மாநில அரசின் பெரும்பணிகள் அரசியல், ஆத்மீக ம் ஆகிய அடிப்படையில் மனித குலத்தை அறியாமையினின்றும் விடுவித்து அறிவுடமையை வந்தணையச் செய்யவேண்டும். ஆர்வ மும் உணர்வும் கொண்டுள்ள இளைஞர்கள் சமுதாயம் உடை நடை பாவனைகளில் உயர்நிலைகளில் அமைந்திருந்தாலும் அவர் கள் அறிவுடமையைப் பொறுத்தவரையில் பா ல க ர் க ளே. எனவே, அவர்களிடையே நல்லறிவினைப் புகட்டி அவர்கள் மீது யாரும் வெறுப்புணர்வு கொள்ளாத முறையில் அ வ ர் க ளி ன் உண்மைநிலைகளை உணர்ந்து அவர்களின் வாழ்க்கைத் தேவை களுக்கும் சமூக நலப்பணித்துறையில் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை அளித் து அரவணைத்து வீட்டுக்கும் நாட்டுக்கும் நாளைய புதியதோர் உலகத்தின் எதிர்கால வாழ்வுக்கு ஏற்ற வர்களாகவும் தகைமையும் தகுதியுமுடையவர்களாகவும் மாற்றி யமைக்கும் பணியானது ஆயிரம் திருக்கோயில்கள் எழு ப் பி ஆண்டவனுக்கு கும்பாபிஷேக ஆரா த னை கள் செய்வதிலும் பார்க்க ஆயிரம் மடங்கு மேலானதொரு ஏற்றமிகு நற்பணி. இதுதான் எல்லாம் வல்ல இ ைற வன் திருவுள்ளங்கொண்டு விரும்புகின்ற திருப்பணி.
ஆகவே, இவ்வளவுகாலங்களில் நமது நாட்டில் நிகழ்ந் துள்ள அரசியல் ஆத்மீக நிகழ்வுகள் அனைத்தும் நல்லதொரு படிப்பினையாக நமது மாநில அரசுக்கு அமைந்துள்ளது. இவ்
17

Page 11
வளவைவும் மாநில அரசின் அறிவுடைய நல்லோர்களாகிய நிர்வாகத்தின் வழிகாட்டிகளாகிய பெரியவர்கள் குழு நினைவிற் கொண்டு, சென்றகாலத்துப் பழுதிலாச் சிறப்புக்களை மட்டும் ஏற்றிப் பழுதுள்ள சிறப்புக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டு அறிவாற்ற லுடன் நன்கு சிந்தனைசெய்து சிந்தனைவழி சாதனையாக்கிச் செயற் பட்டு மனிதகுலத்தைச் செம்மை வாழ்வுக்கு அ ர வணை த் து ச்
செல்லவேண்டும் என்பதே நமது எண்ணமும் தாழ்மையான வேண்டுகோளும்.
நமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய இளையவர்களாகிய இளை ஞர்கள் சமுதாயமும், பேதங்களையும், வெறுப்புணர்வுகளையும், பகைமைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும், அறவே மறந்து நாம் இனத்தால் செந்தமிழன்னையின் அன்புச்செல்வங்கள் என்ற மன நிலையை வளர்ந்து வாய்த்துள்ள மனிதப் பிற வி யை நன்கு மதித்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழச்செய்து மனித குல வாழ்வை வளமாக்கும் பெரும்பண்க்காகவே நமக்கு இம் மனிதப்பிறவி என்பதை இளம்நெஞ்சங்கள் நினைவிற்கொண்டு சிந்தனைக்கு முதலிடம் அளித்து நற்சாதனைகள் நிலைநிறுத்தல் வேண்டும். இந்நிலைதான், "தலைநிமிர் தமிழா உன்தன் தாயின் மனங்குளிர" என்ற உயர்நிலையில் வீட்டையும் நாட்டையும் கூனிக் குறுக்ாமல் நிமிர்ந்து வாழச்செய்யும் என்ற உண்மையை இளைஞர்கள் சமுதாயம் நன்குணர்ந்து சிந்தித்துச் செயலாற்றித் தற்பெருமைகளுக்கு இடமளிக்காது, அறிவுடைபெருமக்களாகிய மூத்தவர்களின் அறிவுரைகளுக்கு இளைஞர்கள் தமது இளம் நெஞ்சங்களில் இடமளித்து வாழ்ந்து வளம்பெற்று வரும்காலத் தில் புதியதோர் மாண்புமிக்க உலகைத் தாங்கி நிற்கும் அறப் பணியைத் தலைவணங்கி ஏற்றுச் சிறந்தினிது ஏற்றமிகு வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் எண்ணமும் தாழ்மையான வேண்டுகோளும். தயவு கூர் ந்து ஏற்றருளுவீர்களா? நன்றி
யுடையோம்.
18
 

நமது இளையவர்களாகிய இளைஞர்கள் சமுதாயத்துக்கு நமது தாழ்மையான விண்ணப்பம்!
இன்றைய உலகியல் நடைமுறைகள் மாற்றங்கள் பெரும் பாலானவை இளையவர்கள் பக்கமே அதில் எந்தக் கோணத்தி லிருந்து கண்காணித்துக் கணக்கிட்டாலும் தவறுகள் இல்லை. இளைஞர்கள் சமுதாயம் பெறுகின்ற எழுச்சிமிக்க வாழ்வின் மறு மலர்ச்சிதான் வருங்காலத்தின் வாழ்வியலின் அடிப்படையான ஒழுங்கும் ஒழுக்கவியலும் என்பதில் ஐயமில்லை. ஆயினும், உணர் வும், ஆர்வமும் இளையவர்கள் சமுதாயத்தில் வீறுகொண்டெழுவ திலும் குற்றமில்லை. ஆனல், ஆர்வமும் உணர்வும் நலமான சிந் தனையிலும் சிந்தனை வழி நிற்கு ம் குறிக்கோளிலும் தான் வீறு கொண்டெழுகின்ற இளையவர்கள் சமுதாயத்தின் பொற்காலம் நற்காலமென உருவெடுக்கும் நிலை தங்கியுள்ளது. எனவே, சிந் தனைவழி குறிக்கோளும், குறிக்கோள்வழி உணர்வும் ஆர்வமும் வீறுகொண்டெழுச்சி பெற்ருல் வீ டும் நாடும் மகிழ்ச்சியுறும். வளம் பெருகும்,
இளையவர்கள் சமுதாயத்தைப் பின்னணியில் வைத்துக் கணக்கிட்டதின் பலாபலன்கள்தான் இன்று வீறுகொண்டெழுந் திருக்கும் நிலப்பாடுகள். நமது சமுதாயத்தின் வாழ்வியலில் இளையவர்கள் சமுதாயம் அதிகப் பெரும்பான்மை நிலையில் பங்கு கொள்வதில் யாரும் குற்றம் குறைகள் சொல்வதற்கில்லை. அதே நேரத்தில், 'பொய்களும் பேதாபேதங்களும், குரோதங்களும் துன்மார்க்கங்களும் ஆகியன அமர்வதற்கு ஒருவன் அல்லது ஒரு சமுதாயம் சிம்மாசனம் அமைத்தால், அது உ எண்  ைம . சம தா ன ம், ஒரு மை ப் பா டு , சன்மார்க்கங்கள் ஆகிய அத்தனைக்கும் தூக்குமேடை அமைத்ததாகும் ” எ ன் ற அறிவு ரையை மறந்து செயற்படல் ஆகாது. உலகியலில் அறிவுடை சான்றேர்களின் அரவணைப்பில் வாழ்க்கைப் பயணத்தைத் திறமை யுடன் திடகார்த்தத்துடன் நடாத்தவேண்டும். அப்பொழுது தான் வாழ்க்கைப் பயணம் ஆபத்துக்கள் விபத்துக்களின்றி தனி யொருவர் முதல் வீடும் நாடும் சிறந்தினிது வாழ நன்னிலை அமையும், உலகியல் வாழ்வில் தனியொருவர் செய்யும் குற்றம் ஒரு இழிவினையை ஏற்படுத்தலாம். ஆனல், இழிவும் இகழ்ச்சி
19

Page 12
பும் வாழ்வின் எழுச்சிக்கும் ஒழுக்க உபாசனைக்கும் வழிபிறக்கச் செய்யும். இவ்வழியைத் தனியொருவரின் மனச்சாட்சிதான் அமைக்கும். இழிவுகளும் இகழ்ச்சிகளும் ஒருவனின் வாழ்வுக்கு நிரந்தரமானதல்ல, இழிவுகள் இகழ்ச்சிகள் மூலம் நாம் வாழ் வில் மருண்டுவிடக்கூடாது. திண்ணமான நெஞ்சத்துடன் இழிவு நிலை இகழ்ச்சிநிலை ஆகியவற்றிலிருந்து நாம் பற்பல உண்மை அனுபவங்களைப் பெற மு டி யு ம் . தொட்டுப்பட்டுக் கெட்டு அறிந்து பெறுகின்ற அனுபவங்கள்தான் ஒருவனின் உண்மையானஉயர்வான - நிரந்தரமான செல்வம் ” கல்வியின் குறிக்கோளே இதுதான். அறியாமையை அகற்றி அறிவுடமைக்கு ஆற்றுப் படுத்துவதுதான் கல்வியென்னும் செல்வத்தின் நோக்கம். அறி யாமை யென்னும் வறுமையில் வாடுகின்ற மாணவனை அறி வுடையவனுக்கி அறிவுடைச் செல்வஞக வீட்டுக்கும் நாட்டுக்கும் அளிப்பதுதான் கற்றறிந்த நற்சான்றேர்களாகிய ஆசிரியப் பெரு மக்களின் அறக்கடமை. இக்கடமை இன்று பலவீனப்பட்டுப் போகின்றது. விழிப்படைதல் வேண்டும். எழுச்சிபெற வேண் டும். அறியாமை என்னும் இருளைச் சகல நிலைப்பாடுகளிலுமி ருந்து அகற்றவேண்டும். அறிவுடமை என்ற ஒளிவளர் விளக்கை ஏற்றவேண்டும். அறியாமையால் மனிதகுலம் வீழ்ச்சியுறுவது உலகியல் நியதி ஆனல், அவன் தலைவிதி என்று அறிவுடைய பெருமக்கள் வீழ்ச்சியுற்றவனை - வீழ்ச்சியுற்றவர்களை அப்படியே விட்டுவிடக்கூடாது. அறியாமையை அதன் கொடுமையை எடுத் துச்சொல்லவேண்டும். வீழ்ச்சியுற்ற நிலையை மாற்றிச் சிந்தனை நிலையை ஏற்படுத்தவேண்டும். சிந்திக்கவேண்டிய சூழ்நிலைகளை அமைத்தல் வேண்டும். அப்பொழுதுதான் சிந்தனை செயலுருப் பெற்றுச் சாதனையாகத் திருவுருப்பெறும். அதே நேரத்தில் சிந் தனையும் சிந்தனை வழிச் சாதனையும் மனிதாபிமானத் தர்ம நீதி யின் அடிச்சுவடு பற்றிச்செல்வதாக இருப்பதுதான் மிக மிக இன்றியமையாத முக்கியம் என்பதை மறத்தல்-மறுத்தல் ஆகாது.
* எங்கெல்லாம் அறியாமை உண் டோ
அங்கெல்லாம்தான் எனக்கு வேலை உண்டு " என்று அடிக்கடி அறிவுறுத்துகின்ற உளத்தன்மை கொண்டவர் தான் கிரேக்கத் தத்துவ மேதை சாக்ரட்டீஸ் அவர்கள். அவர் கள் வழி நமது அறிவுடைப் பெருமக்களும் செயற்படவேண்டும். இளையவர்கள் தவறுகள் பல செய்யலாம் - செய்வார்கள். அது அவர்களின் இளம்நெஞ்சங்களிலிருந்து எழுகின்ற ஒருவித உணர்வு. அந்த உணர்வு எழுவது இயல்பு. ஆனல் அந்த உணர்வு அறி யாமை நிலையில் ஆர்வம் கொள்கின்றது. அந்த ஆர்வம் செய லாக மாற்றம் பெறுகின்றது. இவ்வுண்மையைத் தமது தத்து
20

வார்த்தமான அனுபவத்தின்மூலம் தத்துவ மேதையான சாக் ரட்டீஸ் அவர்களின் மாணவர் பிளேட்டோ குறிப்பிடுகின் ருர் கள். எனவே, இளையவர்கள் சமுதாயம் அறியாமையை அடியொற் றிச்செல்கின்றபோதில் அவர்களைத் திசைதிருப்பி அறிவுடமைக்கு ஆற்றுப்படுத்தி அரவணைத்துச் செல்வது அறிவுடமையின் - அறி வுடைப் பெரியார்களின் கடமையாகின்றது. இக்கடமையைச் சரிவர ஆற்றினுல்தான் அது மதிநுட்பமாக மாறுகின்றது. இம் மாற்றம் விதியைக் கூட விலகிச் செல்ல வழியாக அமையு மல்லவா? இந்நிலை புதிய த ல் ல, புனைந்துரையல்ல. இன்று உலகியலின் நிலைப்பாட்டில் உண்  ைம யென விளங்குகின்றது. தேவையென வேண்டப்படுகின்றது. இது பண்டும் இன்றும் என்றும் உள்ள நிலை, இந்நிலையை மனித ஆன்மாக்களுக்கு விளக் கத்தான், ஆன்மநாயகனுகிய இறைவன் தனது திருச்சடையில் பிறைச்சந்திரனைச் சூடியுள்ளார். அவருக்கு மதிசூடிய பரம தயாளன் என்றதொரு திருப்பெயரும் உண்டு, பிறைசூடியதன் அர்த்தம் என்ன? மனிதா! உனக்கு விதியென்கின்ற ஒரு இயற் கை நியதியுண்டுதான். ஆணுல், நீ உனது மதியைப் பயன்படுத்தி ஞயானல், அதாவது உன் அறிவைப் பயன்படுத்தினயானுல் விதியி னின்று நீ விடுதலை பெறுவாய் என்பதே. உதாரணமாக, பங் குனிமாதம் சூரியனின் ஒளியானது தாங்கமுடியாத நிலை யில் கடும் வெய்யிலாக எறிக்கின்றது. இது இயற்றை விதி, ஆணுல், நாம் நமது மதியை - அறிவைப் பயன்படுத்தலாம் அந்த வகை யில் சூரியனுக்குக்கொண்டுபோய் ஒரு குடையைப் பிடிக்க எண்ண லாமா? எண்ணம் தவருனது. ஆனல், வெய்யிலின் கொடுமையை விலக்கவேண்டுமெனில் நாம் நமது தலைக்கு நேரே ஒரு குடை யைப் பிடிப்பதுதான் மதிநிறைந்த நற்செயல். இவ்வுண்மையை அறிவின் நோக்கத்தை மனித குலத்துக்குத் தமது திருச்சடையி லுன்ௗ பிறைச்சந்திரன் மூலம் அறிவுடமையை வாரி வழங்கி யருளுகின்ருர் மதிசூடிய ஐயன். இவ்வுண்மையை அறிவுடமை யின் விளக்கத்தை எத்தனை பேர்கள் உணர் ந் துள்ள ன ர் ? அடுத்து, இறைவனின் முதலையும் முடிவையும் காண்பதற்காகப் பிரமனும் திருமாலும் அன்னத்தின் வடிவிலும், பன்றியிள் வடி விலும் விண்ணை நோக்கியும், மண்ண்ைநோக்கியும் மேலாகவும் கீழாகவும் செல்கின்றனர். இவர்கள் பொறு  ைம யிழந் தன் காரணத்தால் அறியாமையில் மூழ்கினர். அவசரக்கோலத்தில் இறைவன் திருவடித்தாமரையின் இன்சுகந்தை அனுபவிக்க வேண்டிய அன்னப்பறவை, மேல் நோக்கி இறைவனின் திருச் சடைக் காட்டை அடையச் சென்றது. இறைவனின் திருச் சடைக் காட் டி ல் இன்சுகத்தை அனுபவிக்கவேண்டிய பன்றி யானது மண்ணிற் ஆதாளபாதாளம் நோக்கிச் சென்றது. இத
2I

Page 13
ஞல், இறைவனின் திருவடித்தாமரையில் அனுபவித்தின்புற வேண்டிய அன்னப்பறவையும், இறைவனின் திருச்சடைக்காட்டில் அனுபவித்தின்புறவேண்டிய பன்றியும் தத்தமது அவசரப்புத்தி யால் அறிவிழந்து அறிவுடமையை மறந்ததின் பலாபலன் இப் படி அமைந்துவிட்டது. இது புராண வரலாறு. ஆனல், அறி வுடமைத் தத்துவார்த்தங்கள் ஏராளம் உண்டு. இவ ற் றை இளையவர்கள் சமுதாயம் நன்கு தெரிந்து - தெளிந்து விளங்கிக் கொள்வது அவசியம் என்பதே நமது தாழ்மையான விண்ணப்பம்.
மண்ணரசில் பழிக்கப்படுவதும், இகழப்படுவதும் விண்ணர சில் போற்றப்பெறும், புகழப்பெறும். மண்ணரசில் போற்றப்படு வதும், புகழப்படுவதும் விண்ணரசில் தூற்றப்படும் இகழப்படும். எனவே, அறிவுடமையும் அருளுடமையும் இந்நிலையில் மனிதகுலத் துக்குப் பாவணுசக்தியாக பயன்படல் வேண்டும், ஏமாற்றப்படு வது ஒரு இழுக்காகும். ஆணுல், ஏமாற்றத்தின் நிலைப்பாட்டில் பல அறிவுடமையும் உண்டு. ஏமாற்றத்தால் நான் வருந்துவது போன்ற நிலை மற்றவருக்கும் இரு க்கும் எ ன் ற உண்மையும், ஏமாற்றத்துக்கு இனி யும் இடம்கொடுக்கக்கூடர்து. நானும் பிறரை ஏமாற்ற நினைக்கக்கூடாது, பிறரும் என்னை ஏமாற்ற இடமளித்தல் ஆகாது என்ற மன உறுதியும் அறிவுடமையின் தாத்பரியமும் ஏற்பட வாய்ப்பேற்படுகின்றது. இந்நிலையால் "வாய்த்தது நந்தமக் கீதோர் பிறவி மதித்திடுமின்” என்ற திரு முறையின் அறிவுரையும் நமக்கு நமது உறுதிப்பாட்டுக்கு நல்லா தரவாக அமைந்து விளங்குகின்றது. எனவே, அறியாமையின் விளைவு ஏமாற்றம், அதே நிலையில் ஏமாற்றத்தினுல் நமக்கு ஏற் பட்ட இழப்பினை நினைந்து விளங்கி மாற்றங்கண்டு வாழ்வது அறிவுடமை. எனவே நன்மையில் மட்டும் அறிவுடமையென்பது கருத்தல்ல. அறியாமையால் ஏற்படுகின்ற தீமைகளிலும் பெறு கின்ற அனுபவங்கள் நலமான அறிவுடமையை வழங்கி வாழ் வை வளமாக்குகின்றதையும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது. எனவே, நமது அன்புக்கும் பாசத்துக்குமுரிய இளை யவர்கள் - இளைஞர்கள் சமுதாயம் அறியாமைகளிலிருந்து விடு தலைபெற்று, அறிவுடமை என்ற செல்வத்தைப் பெற்றுச் சிறந் தினிது வாழ முயற்சிகள் மேற்கொள்வதும் தலையாய கடமை யாகக் கொள்வதும் இளைஞர்கள் சமுதாயத்தின் எ தி ர் கால வாழ்வுக்கு நல்லதொரு மாண்புநிலை அர ண க அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே, நமது இளையவர்கள் சமுதாயமும் பொறுமை யிழக்காது செயற்படவேண்டும். அன்பும், பணிவும், பண்புடமை களாகக்கொள்ளவேண்டும். இனப் பிரிவினைகளை ஒதுக்கவேண்டும்.
2名

ஒரே இனத்துக்குள் பலநிலைப்பட்ட மோதல்கள். குழப்பமான மன நிலை க ள் ஆகிய கருமுகிற்கூட்டங்களை அகற்றவேண்டும். இனவழி வாழ்வால் வளத்தால் நாம் ஆன்மநேய ஒருமைப்பா டுள்ளவர்கள் என்ற நன்னிலையை மீண்டும் வளர்த்தல்வேண்டும். பகைமைகள் நீக்கி ஆன்மீக விடுதலைக்கு வழிகாட்டும் தலையாய கடமை நமது செந்தமிழ் இளைஞர்கள் சமுதாயத்தின் திருவுள் ளங்களின் எழுச்சியில்தான் தங்கியுள்ளது. எனவே தமிழினம் அரசியல்வழி அறியாமையில் உழன்று உருத்தெரியாத ஓர் இன மாக மாற்றம்பெறக்கூடாது. அரசியல்வழி ஏற்படுகின்ற பிரிவினை களும், பிரிந்து வாழும் பரிதாபகரமான நிலைமைகளும் நமது தமிழினத்தை நலிவடையச் செய்துகொண்டேவருகின்றது. இந் நிலையில் பொதுவாகச் சொன்னுல் செந்தமிழினத்தினிடையே விழிப்புணர்வு ஏற்படல் வேண்டும். ஆங்கிலேய வெள்ளைக்காரர் கள்தான் நமது இனத்தைப் பிரித்தாண்டார்கள். என்ற பேச்சு உண்மைக்குப் புறம்பானது, இப்பேச்சு அறியாமையின் தோற் றம். நமது நெஞ்சங்கள் பிரிவினை நோயால் பீடிக்காதிருந்தால் அன்று முதல் இன்றுவரை நமது தமிழினம் பிரிவினையென்கின்ற கொடுநோய்க்கு ஆளாகியிருக்கமுடியாது. நமது இனத்தின் சுய நலம், சுயகெளரவம், வஞ்சக மன நிலைகள் ஆகியன காரணங்க ளால்தான் பிரிவினை என்ற காரியம் நமது தமிழினத்தை இன்று இருள்நிலைக்குக் கொண்டுசெல்கின்றது. இது நமது இனத்தின் அறியாமைநிலை. இந்நிலையை இனிமேலாவது நமது தமிழினத் தின் வருங்காலச் சந்ததியினராக விளங்கும் இளைஞர்கள் சமுதா யம் தமது இளம் நெஞ்சங்களின் கருத்துக்கு எடுத்துக்கொண்டு இந்நோய் தீர வழிகாணவேண்டும். இதுதான் தமிழினத்தை அறி யாமையிலிந்து விடுதலைபெறச்செய்து, அறிவுடமையென்ற சுதந் திரச் செல்வத்தை அனுபவிக்கச்செய்வதற்குரிய ஒரே வழி இது தான். நிரந்தரமான, மாற்றம்பெற முடியாத தனிப்பட்ட வழி வேறு உண்டா தம்பி ? அப்படியிருக்குமெனின் அது நிரந்தர மற்றது. தற்காலிகமானது. தமிழினத்தைப் பல்துறைகளில் பர தவிக்கச்செய்து தரித்திரமான நிலைக்குத்தான் கொண்டுசெல்லும். எனவே, அன்புக்கும் பாசத்துக்குமுரிய இளையவர்களே! செல்வங் களே ! இனிமேலாவது தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள், தமி ழினம் பல்வேறு பிரிவினைகள் என்ற அடிமைத் தளைகளிலிருந்து விடுபட்டு ஒன்றிணைந்து ஆன்மீக ஒருமைப்பாட்டுச் சுதந்திரத்தை பெற்றுவிட்டால், பஞ்சமும், பசியும், பற்ருக்குறையும், பழிபாத கங்களும் நீங்கிவிடும் - ஒழிந்துவிடும். பின்பு பஞ்சம் ஏதடா ? பசியும் ஏதடா ? பாரினில் உயர்ந்த உன் வீட்டிலும் நாட்டிலும் என்ற உளத் தன்மையின் உன்னத நிலையே தமிழினத்துக்குச் சொந்தமாகிவிடும். ஐயுறவேண்டாம்.
23

Page 14
அறியாமையின் காரணமாக இளையவர்கள் சற்று வழி தவறலாம். ஆணுல், அறிவுடைப் பெருமக்கள் அவர்களை அணுகி அரவணைக்கவேண்டும். அறிவுடமைக்கு இளையவர்களை அழைத் துச் செல்லவேண்டும். இளையவர்களும் எ க்கா ர ன ங் க ள் கொண்டும் மனம் கோணுது அறிவுடையவர்களாகிய உத்தமப் பெரியவர்கள் சொல் லை த் தட்டிக்கழியாது, அறிவுடையவர் களிடம் தமது எண்ணங்களையும், எடுத்துச்சொல்ல வேண்டும். உங்கள் எண்ணங்களுக்கும் அறிவுடைப் பெ ரும க் கள் மதிப் பளித்து நல்லனவற்றை ஏற்பார்கள். தீயனவற்றைத் தக்க காரணங்களுடன் உங்களிடமிருந்து விடுபடச்செய்வார்கள். இளையவர்கள் செல்வங்களும் இந்நிலைப்பாட்டுக்கு இசைந்தவர் களாக உட்படவேண்டும் இந்நிலைக்கு உட்படுகின்ற இளைய வர்கள் சமுதாயத்தை அறியாமைகளிலிருந்து விலக்கி, அறிவுட மைக்கு நெருக்கமாக்குவது ந ம து தமிழினத்தின் அறிவுடைச் சான்ருேர்களின் அறக்கடமையாகின்றது, எ ன வே , கொண்ட நெறிமுறைகளை மறந்து கண்டகண்ட நெறிமுறைகள் பின்னே சென்று மயங்கி மாய்ந்து வாழும் ஆபத்தான நிலைப்பாடுகளிலி ருந்து நமது தமிழினத்தின் செல்வங்களாகிய இளைஞர்கள் சமு தாயத்தை எப்பாடுபட்டேனும், இளையவர்கள் இளமையின் அறி யாமை காரணமாகத் துன்பங்களை ஏற்படுத்தினுலும், செய்தா லும் அவற்றைப் பொருட்படுத்தாது பொறுமையுடன் அறி வுடைப் பெருமக்கள் சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக்கொண்டு காப்பதுவும் நன்நெறிப்படுத்துவதும்தான் இம்மனிதப் பிறவியில் நாம் செய்யமுடிந்த நற்றிருப்பணி. இதுதான் எல்லாம் வல்ல பெருங் கருணையாளனும் இரக்கம்கொண்டவனுமாகிய இறைவன் திருவுள்ளங்கொண்டு ஏற்றருளுகின்ற பூசையும், ஆராதனையும், திருவிழாவும், வேள்வியும் என்பதை நமது எண்ணத்திற்கொண்டு பணியாற்றின் திருவருளும் தோன்ருத்துணையாக அமைந்து வழி காட்டியருளும் என்பது சத்தியம். " வைராக்கியமும் தியாகமும்? வேண்டும். இதுதான் வாழும் முறை. மற்ற முறைகள் எல் லாம் உயிருட ன் வாழ்ந்துகொண்டே மா ழு ம் முறை மறவாதீர்கள் !
s
எல்லாம் வல்ல இறைவன் வழி நடத்தவேண்டும்.
24
 

வாழ் த் து க் க ள்
திருக்கோணமலை மாவட்டரீதியில் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ள, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளு மன்றத்தின் தமிழ், சிங்கள, முஸ்லீம் உறுப்பினர்களுக்கு நமது நன்றியும் வாழ்த்துக்களும் உரியதாகுக. அரசியலில் ஈ டு படும் ஒவ்வொருவரும், அவர்கள் பக்கச்சார்பான மக்களும் அவ்வப் பொழுது ஏற்படுகின்ற பலாபலன்கள் மூலம் நலமான அனுப வங்களைப் பெறமுடிகின்றது. அனுபவங்கள் தமது குறைகளையும் நிறைகளையும் எடுத்தியம்பும் உண்மை வரலாழுகவும் அமைகின் நறது. ஒவ்வொருவரும் போடுகின்ற கணக்குகள் அத்தனையும் வஞ்சமணமற்ற உளத்தன்மையுடன் அமைத்திருப்பின் நலம் பல விளைக்கும், மனிதர்கள் கணிக்கும் கணக்கு நிறைவாகவும் இருக் கலாம். அதேநேரத்தில் குறைவாகவும் இருக்கலாம். ஆனல், கணக்கின் முடிபு இறைவனின் தருமநீதியின் கண்காணிப்பிற்குட் பட்டுள்ளது ஒருவருக்கு அல்லது ஒரு குழுவினருக்குச் சாதக மாக அமையவேண்டும். என்ற எதிர்காலக் கணிப்பை முன் கூட்டியே ஒருவர் அல்லது ஒரு குழுவினர்கள் ஏற்படுத்தலாம். ஆஞல் அந்த ஏற்பாட்டில் ஒருபக்கச் சார்பு எண்ணமும் அமைய லாம். அதில் நமக்கு நன்மையும் பிறருக்குத் தீமையும் என்ற மனநிலையும் அமையலாம். ஆனல், அத்தனையுமாகிய திட்டங்ள் கணிப்புக்கள் எல்லாமே இறைவனின் தருமநீதிக்குட்பட்டது. *"ஒன்றே குலம் ஒருவனே இறைவன்’ என்பது திருமுறையின் அறிவுரை. எனவே, அரசியலின் அறப்பணியானது ஒரேகுல மாகிய மனிதகுலத்துக்கு நலம் பல விளைக்கவேண்டும் என்பதே. இதுதான் இறைநிலைப்பட்ட அறிவுடமை. இவ் வறிவு ட  ைம மொழியாலும், இனத்தாலும், மதத்தாலும் இன்று பிரிந்து பேதாபேதங்கள், பிரிவுணர்வுகள் வெறுப்புணர்வுகள் ஆகியன வற்றை வளர்த்து நிற்கின்றது. அரசியலின் தருநீதியானது அனைத்துக்கும் அனைவருக்கும் பொதுநிலை. பக்கச்சார்பற்ற பெரு நிலை. இந்நிலை இன்று தமது சொந்தச் சுயநலத்திற்காகப் பயன் படுத்திப் பலியிடப்பட்டுள்ளது. அதன் பலாபலன்கள் அரசியல் வாதிகளுக்கும், அவர்களைச்சார்ந்த மக்களுக்கும் நல்ல படிப்பினை யாகவும், நலமான அனுபவங்களாகவும் வெளிப்பட்டுள்ளமையும் யாரும் மறுப்பதற்கில்லை. மறப்பதற்குமில்லை. எனவே, இவ்வளவு அனுபவங்களையும் சிந்தித்து அறிவுடமைபெற்றுவிட்டால், அது தான் ஒவ்வொருவரையும், ஒவ்வொரு அரசியல் வாதிகளையும் மனிதகுலத்தில் முன்னணியில் கொண்டு நிறுத்தும் எ ன் பதில் ஐயமில்லை.

Page 15
நமது நாடளாவிய அரசியல்வாதிகளும், அாவியலாரும்
சிறப் பா க நமது திருக்கோணமலை மாவட்டத்தின் பாராளு மன்றத்தின் உறுப்பினர்களும் இவ்வளவுகால அனுபவங்களைவும் படிப்பினைகளையும் சிந்தையிற்கொண்டு சென்றகால பழுதுகளை யெல்லாம் விலக்கி, இனி எதிர்காலத்தில் அப்படியான பழுது கள் எல்லாம் ஏற்படாவண்ணம் அமைந்து மனிதகுலத்தின் வாழ்வுக்கும் வாழ்வின் வளத்துக்கும் தாம் மேற்கொள்கின்ற பணிகளைப் பயன்படுத்தல் வேண்டும் தருமநீதியின் கண்க: ரிைப்பு எங்கும் எதிலும் ஊடுருவி நிற்கின்றது என்பதை மறத்தல்-மறுத் தல் ஆகாது. மண்ணைக்காக்க மனிதசக்தியால் முடியாது மண் னின் சக்திதான் மனிதகுலம் வாழ்கின்ற இஞ்ஞா லத் தைத் தாங்கி நிற்கின்றது. மண்ணின் சக்திதான் மனிதகுலத்தை சக்தி யு ள் ள வ்ர் கா ளா க உ லா வி வர ச் செய்கின்றது. 'மண்ணை ஆண்டவர் மண்ணிலும் கோடி இன்னும் ஆள்பவர் எத்தனை கோடியோ” என்ற அறிவுரையும் மனித குலத்துக் கென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, வீறுகொண்டெழுச்சி பெற்றுள்ள இளையவர்கள் சமுதாய ம் இவ்வளவையும் தமது திருவுள்ளங்களில் கொண்டு, கிடைத்துள்ள வாய்ப்பினை தழுவ விடாது அறிவுடமையுடன் நன்கு பயன்படுத்தி மனிதகுலத்தின் வீட்டையும் நாட்டையும் வளமுறச்செய்வது தான் எல்லாம் வல்ல இறைவன் விரும்பும் திருப்பணி. அத்துடன், நீரில் கிழித்த வடு மறைவதுபோன்று சென் ற கால குற்றங்கள் குறைகள் மனத்தாங்கல்கள் அத்தனையையும் மறந்து அனைவரும் ந ம து வீடும் நாடும் வளம்பெற பிறரை எதிர்தோக்கிக் கையேந்தும் இழிநிலைகள் ஒழிய, கடமை கண்ணியம் கட்டுப்பாடு ஆகியன வும், அன்பு பணிவு கருணை இரக்கம் ஆகிய ச ன் மா ர் க் கம் தழைக்கவும் அனைவரும் ஒன்றிணைந்து கொள்ளவேண்டும். பணி யாற்ற வேண்டும். வாழ்த்துக்கள்.
 

SATP IRASAT HA M
“Those who received your help and service in the world,
6R will welcome you in the hôven When you go there'
大
எதிர்பார்த்துக் காத்திருக்கும் !
r மனித ஆன்மனே ! உதவிகளும் சேவைகளும் உலகியலில் பயன்படுகின்றது. அவற்றைப் பெறுகின்றவர்கள் பலராக இருக் கலாம். ஆஞல், அவற்றை அறிவுடமையுடன் கணிப்பவர்கள் மிக மிகச் சிலரே. எது எப்படியிருப்பினும், உனது உதவிகளை யும் சேவைகளையும் கணிக்கும் தகைமை விண்ணரசுக்குத்தான் உண்டு. எனவே, விண்ணரசின் அரவணைப்பும் வர வேற்பு ம் நீ அங்குசெல்கின்ற நன்னளை எதிர்பாத்துக் காத்திருக்கும்.
★
எமது பரம்பரை
நாம் நாடாண்ட பரம்பரையோ அல்லது கா டா ன் ட பரம்பரையோ அல்ல, அந்த நிலைப்பாடுகள் இன்றிருக்கும் நாளை மறையும், மாண்பு அற்றுப்போகும். ஆஞ்ல், எது வும் இப் பொழுதும் எப்பொழுதும் மறையாது-மாருது மா ண் புட ன் விளங்குகின்ற ஒரு தனித்துவமான பரம்பரையைச் சேர்ந்தவர் கள் நாம். அப்பரம்பரை தான், 'திருக்கையிலாய பரம்பரை" மாருது மறையாது, மாண் புடன் விளங்கும் தனித்துவத் தன்மையானது, அன்பும் அருளும் இணைந்த அற வாழ் வே அரண்ணெனப் பெற்றது. வெண்ணை கடையும் மத்துக்கும் கயிற் குக்கும் சமநிலைத்தொடர்பில்லைய்ெனில் வெண்ணை திரண்டெழு மென எதிர்பார்த்து ஏ மாந்து அலமந்திருப்பது அறிவுடமை யல்ல.

Page 16

AFRESS
Buildin" singer Street. not