கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அறிவியல் சிந்தனை அலைகள்

Page 1
TYYTTu uu u YYYA AAAA A AA AAAA A AAAS
:
D
அறிவி
莓
(விஞ்ஞானமும் புதி
ஆக்கம்: பா.
பொது நிறுவனங்களுக்க
விநாயகர் । தெணியம்மன் வி தி JGayri
உடலுழைப்பு x சிக் **ټيوټوپټيوبېټېنويې بيf پښتو يايوويبويې وايي** *
பிரதிகள் 2347 பக்கங்கள்
 
 
 
 
 

نيويوتيد الأوليفيموفيتي وقت الهاتف خلال
上 |-
லைகள்
சமூகப்பாதையும்)
தனபாலன்
െ
நூல் 1994
Siar வெளி }
நிதியம் விமேற்கு பருத்தித்துறை,
நன்ம் ※ சமத்துவம்
sailkate fiskal figuriak
ܕ ܐ .

Page 2

சிவமயம்
ar lo i rů s ø7 db
இம் மாநிலம் உருவாகி அதில் உயிரினங்கள் உருவாக தங்கள் சக்தியை எந்நேரமும்உதவிக் கொண்டிருக்கும் ஐந்து பூதங்களான காற்று, தீ, நீர், நிலம், ஆகாயம் இவற்றிற்கும் எம்மை உருவாக்கிய தந்தை, தாய், குரு முதலா னோருக்கும் நாம் வாழ உணவு அளித்துக் கொண்டிருக்கும் தாவர வர்க்கம் முதல் மனிதகுலம் வரையான சகல சீவராசிகட்கும் எமது வணக்கத்தைச் செலுத்தி இவர்கள் பாதார கமலங்கட்கு இந்நூலைச் சமர்ப்பணம் செய்வதில் பூரண ஆத்ம திருப்தி அடைகின்றோம்.
விநாயகர் தரும நிதியம் 31-12-94.
2SNZF-్వRF_SRFలSRz2షినెr_NN? dinosis- ཕྱིང་བ་
ι
இதழின் உள்ளே.
பாரதியார் கவிதைகள் 5 1. எல்லைகள் விரிகின்றன 9 2. "வெண் நிலவை வென்றவர்கள் 15 3. செயற்கைக் கோள்களும் பயன்பாடுகளும் 20 4. அண்டவெளியில் துரியக் குடும்பம் 24 5. நிலவை விழுங்கிய அரவம் 30 6. அணுசக்தியின் ஆற்றல்கள் 33 7. மின்சக்தி கிடைக்கும் வழிகள் 37 8. தொலைக்காட்சியின் புதிய பரிமாணங்கள் 41 9. புதிய பாதையில் கணணிகள் 46 10. அபிவிருத்தியும் சூழல் பாதுகாப்பும் 50 11. உலகை ஈர்க்கும் திரைப்படவியல் 55
12. 21ம் நூற்றாண்டின் தேடல்கள் 6 I

Page 3
I அறநீெறி 4 அறிவியல் சிந்தனை
முன்னுரை
MVrvʻ^Vfv^Vv^VVʻVrv
அறிவியல் மனிதனது சிந்தனையிலும், செயலிலும் புரட்சியை ஏற்படுத்தி வருகின்றது. உலகின் பல்வேறு நவீன சமூகப் பாதைகள் எல்லாம் விஞ்ஞான பரிமாணங்களுடன் தமது எல்லைகளை விரித்து நிற்கின்றன. புவி முழுவதிலும் ஒரு நொடிப்பொழுதில் பல வியத்தகு அறிவியல் இலக்கிய சாதனைகள் புரியப்படுகின்றன. அவற்றை எமது மக்கள் நுகர வேண்டுமென்ற அவாவுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், வாசகர்கள் அனைவருக்கும் பயனுடையதாக இந்நூலின் கட்டுரைகள் அமைகின்றன. அத்துடன் அறிவியல் விஞ்ஞான சாதனைகளும் அவற் றின் விளைவுகள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களும் உணர்த்தப் படுகின்றன. எனக்கு விண்வெளி ஆய்வுத் தகவல்களைத் தந்துதவிய அமெரிகத் தூதரகத்திற்கும், அமெரிக்க நாசா நிறுவனத்தினருக்கும், கடல் மின்சார ஆய்வுத் தகவல்களைத் தந்துதவிய இந்திய தூதரால யத்தினருக்கும், இந்திய அவிப்பூர் வானாராட்சி நிலையத்தினருக்கும், புவியின் சூழல் தகவல்களைத் தந்த சோவியத் சூழல் பாதுகாப்புச் சபையினருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனபாலன் அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். நாமும் அவர் கள் கூறிய நன்றிகளை எமது நிதியம் சார்பாக தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
இவ்வாறான விஞ்ஞான நூல் வெளியீட்டை மாணவரின் நன்மை கருதி நாமும் வெளியிட மனம் உவந்து ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு நல் கிய திரு. பா. தனபாலன் அவர்கட்கு எமது விநாயகர் தருய நிதியத் தின் சார்பாக நன்றியைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இந்நூலை மாணவர்களாகிய நீங்கள் பயன்தரு வழியில் பயன்படுத்தி எம் மொழியும், நாடும், மக்களும் மேன்நிலை அடைய உதவுமாறு அன்புடனும் பண்புடனும், பணிவுடனும் வேண்டுகின்றோம்.
93 மார்கழி அறத்தமிழ் ஞானத்தில் வெளியிடப் பெற்ற அறத் தீமிழ்ஞான சிந்தனையில் யப்பானைப் பற்றிய கைத்தொழில் விளக் கத்தை தொழில்வளம் பெருக்குவதற்காக மறுபிரசுரம் செய்துள்ளோம்
mpo நிறுவனர்

விநாயகர் தரும நிதியம் 6 - 3 அறநெறி
கொழும்புதமிழ்ச்சங்கம்
அறத்தமிழ் ஞான சிந்தலுைகள்
200prcులో AVV
எமது அறத்தமிழ் ஞானம் ஆடி, ஆவணி இதழ் 1-8-93 ல் யப்பானைப்பற்றி எ மது எண்ணத்தை வெளியிட்ட (யப்பானியரின் வாழ்க்கை வரலாறும் அவர்களது அறநெறிச் சிந்தனைகளும் கட்டுரை யில்) சிலகிழமைகளில் எமது எண்ணத்தை ஒத்த வகையிலே யப்பானியப் பிரதமர் வேறு எந்த நாடுகளும் கேளாமலே உண்மை நிலையை எடுத்துக் கூறி தமது நாடு உலக சமுதாயத்திற்கு இழைத்த கொடுமை களுக்காக பகிரங்க மன்னிப்புக்கோரி எந்த நாடும் செய்யாத செய்ய முடியாத அறநெறிக்கோட்பாட்டைக் கட்டி எழுப்பி, உண்மைக்கு உயி ரூட்டி உயர வைத்து விட்டார், அவர்களது மனமாற்றமும் உண்மையை மதிக்கும் தன்மையும் நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய முன் உதாரணங்களாகும். யப்பானின் இவ்வகையான செயற்பாடுகள் தான் அவர்களது ஒளி அணுவில் மாற்றத்தை உண்டுபண்ணி பொருளா தாரத்தை உயர்வடையச் செய்தது. எமது எ ல் லா இதழ்களிலும் எமது கோட்பாடாக உடலுழைப்பையே மு த லா க உணர்த்தி வந் துள்ளோம். யப்பானின் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் போது எமது கோட்பாட்டின் உயர்வை சகலரும் உற்றுணர ஏதுவாக அமைந்துள் ளது என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்வதோடு உண்மைக் கும் உடலுழைப்பிற்கும் மதிப்பளித்து உயர்வடையுமாறு அன்பாகவும், பண்பாகவும், பணிவாகவும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்.
அவர்கள் தமது தேசம் அழிந்ததும் மற்றவர்களைப் போல் சமயகைங்கரியம், நேர்த்திக்கடன் எவைகளையும் மேற்கொள்ளவில்லை. தொழிலைத் தவிர வேறுஒரு தெய்வம் இருப்பதென்பதை அவர்கள் ஒரு அணுவளவும் நம்பவில்லை. தேவை இல்லாத களியாட்டள்களிலோ பகட்டு வாழ்க்கையிலோ நேரத்த்ைச் செலவிடவில்லை. தமது குக்கும தேக சேமிப்பில் சேவை செய்ய வேண்டும் என்ற சிந்தனையை வளர்த்துக் கொண்டார்கள்.
இவ்வகையான சிந்தனை வளர்ந்ததும் ஞான அணுக்கள் விருத் தியடைய இடம் ஏற்டபட்டது. இவ்வாறான ஒளியணுக்கள் கூடியதும்; தம்நாடு வளர வேண்டும், தம் நாட்டுமக்கள் வளரவேண்டும், மொழி வாழ வேண்டும், அதற்காக நாம் என்ன செய்யவேண்டுமென்ற சித் தனையை வளர்க்கலாயினர். இவ்வகைச் சிந்தனை வளர்ச்சி காரண மாக சூழலைச் சுத் த மாக வைத்திருக்கும் ஆற்றலைக்கிரகித்துக் கொண்டார்கள். அவர்களிடம் அமைந்த சூட்டணு கா ர ணமா ●

Page 4
2 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
காற்று சுத்தம் அடைந்ததும், அவர்களது சிந்தனைகள் விசாலமான எண்ணங்களையே சிந்திக்கத் தலைப்பட்டன. அவர்களது ம ன தி ல் அதிகார ஆசைகள், பொருளாசைகள், மண் ஆசைகள் போன்றன வற்றுக்குரிய நீர் அணுக்கூறுகள் குறைவுபடலாயின. இவ்வகையான அறநெறிச் சிந்தனையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக தொழிலைத் தெய்வமாக வணங்கிக் கொண்டார்கள். தொழிலைத் தெய்வமெனப் போற்றியமையினால் மற்றவரிடம் கையேந்தும் நிலையை அவர்களது மனநிலை தமது வளர்ச்சிப் பாதைக்கு தடைக்கற்கள் என உணர்த்திக் கொண்டது.
உயிர்போகும் நிலையிலும் அடுத்தவர் பரிதாபப்பட்டுக் கொடுத் தாலும் கையேந்தக் கூடாதென்ற மனநிலையை ஆக் கி க் கொண் டார்கள். தனது காலிலே நின்று தன்கையே தன க்கு த வி என்ற தாரகமந்திரத்தை மந்திரமாகக் கொண்டு தமது வளர்ச்சிப் பாதையை நோக்கி தம் நாட்டைக்கட்டி எழுப்பலாயினர். தமக்குத் தேவையான பொருட்களைத் தாமே வடிவமைத்தார்கள் - உற்பத்தி செய்தார்கள்உருவாக்கினார்கள் - தொழில் வளத்தைப் பெருக்கினார்கள். தொழில் வளம் பெருகியதால் பணம் மலைபோல் குவியலாயின. இவ்வளவு தொகைப் பணத்தை அவர்கள் என்ன செய்வது என்பது அவர்களுக்கே விளங்கவில்லை. பணம் ஏராளமாக குவித்த தன்மையினால் - புதிய முறையில் வீதிகள் - பாலங்கள்- நாட்டு அபிவிருத்திகளுக்கான திட்டங் கள் எனப் பலவகைப்பட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அழிவினால் பொருளாதாரவளம் குன்றியிருந்த இந்நாடு பொரு ளாதாரவளம் கூடியதும் எந்த நாடும் உதவியென வேண்டியபோது அந்நாட்டுக்குத் தேவையான உதவிகளை மனத்திருப்தியுடன் வழங்கி வருவதை நாம் காணுகின்றோம். இவ்வகையான உயர்ந்த சேவையி னால் அவர்களது ஐந்துவித அணுக்கூறுகள் ஞான நிலைக்கு போகக் கூடிய தன்மையில் பலவித விஞ்ஞானப் பொருட்களை உருவாக்கும் சக்தியையும் பெற்றுள்ளார்கள்.
எந்த ஒரு தாடும் தான் செய்த பிழையை ஒத்துக் கொள்வது கிடையாது. இவர்கள் செய்த பிழையை ஒப்புக் கொள்ளுமாறு வேறு நாடு கேட்டதும் கிடையாது. அப்படித்தான் ஒப்புக் கொண் டு மன்னிப்புக் கேட்டதினால் எதுவித இலாபமும் இந் நாடு அடையப் போவதும் இல்லை என்பதும் தெரிந்த விடயந்தான். இவ்வாறான நிலையில் எமது சம ய வரலாற்றிலுள்ள ஞானிகளின் செயற்பாடு களுக்கு ஒத்த முறையில் இரண்டாம் மகாயுத்த காலத் தி ல் தமது இராணுவம் செய்த தவறுகளுக்காக உண்மைக்கு முதலிடம் கொடுத்து பகிரங்க மன்னிப்புக்கோரியது நினைத்துப் பார்க்க முடியாத உயர்ந்த

விநாயகர் தரும நிதியம் 6 - 9 அறநீெறி 3
செயல் என்றால் மிகையாகாது. வேறு எவருமே செப்ய முடி யாத உயர்ந்த செயலை அவர்கள் செய்ததின் காரணமாக அங்கே உள்ள மக்கள் எல்லாம் ஞான வழியில் பிறப்பை நீக்கவே போகின்றார்கள். நினைத்துப் பார்க்க முடியாத பல கண்டுபிடிப்புக்களை எல்லாம் கண்டுபிடித்து வளர்ந்து - உயர்ந்து உலகிலே நிமிர்ந்து நிற்கும் யப் பான் சிறிது காலத்திற்கு முன்னர் எழுபதினாயிரம் மக்கள் வாழக் கூடிய புதிய நகரம் ஒன்றையே கடலினுள் அமைத்து சாதனை படைத் தது யாவரும் அறிந்த விடயமாகும். இன்று 1994 ல் அதைவிட ஒரு படி மேலேறி வெளிச்சம் இல்லாமலே ஒருவர் த ன து புத்தகத்தை வாசிக்கக் கூடிய மூக்குக் கண்ணாடியைக் கண்டு பிடித்துள்ளார்கள். பக்கத்தில் உள்ளவர்கள் எவருக்குமே இவ்வெளிச்சம் தெரியப்போவ தில்லை. மேலும் உலகின் மிகச் சிறிய இயந்திர மனிதனை யப்பானிய நிறுவனமொன்று உருவாக்கி உள்ளது. ஒரு சோயா விதையினது பரு மனைக் கொண்ட இந்த றோபோவின் மீது ஒளி பாய்ச்சப்பட்டதும் ஒளிவரும் திசையை நோக்கி இது நகர்ந்து செல்லக் கூடியது. இன்னும் இதில் i பங்கு சிறிய இயந்திர மனிதனைத் தயாரிக்கவும் முற்பட்டுள் ளார்கள். இவ்வகையான புதிய புதிய கண்டுபிடிப்புக்களை நாளும் பொழுதும் உருவாக்கிய வண்ணமே உள்ளனர். அவர் க ள் தமது தொழிலை பணத்தை உழைப்பதற்காக மட்டும் செய்யவில்லை. தம் நாடு வளர வேண்டும், மொழி வளரவேண்டும், தம் நாட்டுமக்களின் சேவை மனப்பான்மை உயர வேண்டும் என்ற விரிந்த விசாலமான எண்ணத்துடன் செயற்படுவதினால் வளம் கொழிக்கும் நாடாய் சிறப், பாக நிமிர்ந்து நிற்கின்றது.
இவ்வகையான வெற்றிகளுக்கெல்லாம் மூலகாரணம் இவர்களது சிந்தனையில் ஒளியணுக்கள் கூடியமையேயாகும். அதிகாரத்திற்கும் ஆசைக்கும் அவர்கள் அடிமைப்பட்டிருந்தால் அதற்குரிய நீர் அணுப் பெருகி இன்றுள்ள உயர்வை அவர்களால் அடைந்திருக்க முடியாது. எமது அ ற த் தமிழ் ஈழத்திலும் தொழிலைத் தெய்வமாகப் போற்றும் மனப்பான்மை வளர்ந்து கிரகிக்கும் ஆற்றல் வளருமானால் மக்கள் யாவரும் ஞான வழியில் பிறவா நிலையை அடைவார்கள் என்பது மிகமிக உறுதியாகும். தொழிலே தெய்வம் எனப் போற்றும் அணுக்கூறுகள் மக்களிடம் பெருகுமானால் அந்நாடு மிகமிக குறுகிய காலத்தினுள் (10 வருடங்களில்) எவருமே நினைத்துப் பார்க்க முடி யாத எவரிடமும் கையேந்தாத தரும சிந்தனை உள்ள நாடாக வளர முடியும் என்பதை உறுதியுடன் நம்புகின்றோம். நாமும் முன்னுதாரண மாகத் திகழும் யப்பான் நாட்டைப் பின்பற்றி தொழில்வளத்தில் வளர்ந்து ஒளி அணுவைப் பெருக்கி தொழிலைத் தெய்வமாக மதிக் கப்பழகி எம் வாழ்வை உயர்த்தி புதிய வரலாற்றை எழுத வேண்டு மென்று பண்போடும், பணிவோடும், அன்போடும் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம். மறுபிரசுரம் - 31-12-1994. - நிறுவனர்.

Page 5
4 அறநெறி 4 அறிவியல சந்த0ை0,
- sh விநாயகர் தரும நிதியம் தெணியம்மன் விதி - புலோலி மேற்கு - பருத்தித்துறை.
LLLLLLLLLLLLLLLLLLLLLS LLLLLLLLLLLLLLLL
அறநெறி நூல் வெளியீடும், பரிசுகளும், ஊனம் உற்றோர் உதவிகள், நூல் வெளியீடுகள், உறுப்பெழுத்துக் கொப்பி வெளியீடு கள், நன்கொடைகள் ஆகியவற்றுக்கான கடந்த நாலாண்டுக்கான மொத்தக் கணக்குகள் பின்வருமாறு,
01-04-90 முதல் 31-03-91 வரை 38299 01-04-91 , , 31-03-92 , , , 10864.36 01-04-92 , , 31-03-93 , , I 1949 61 0 1-04-93 , , 31-03-94 , , 473286
3 137682
முப்பத்தொரு இலட்சத்து முப்பத்தேழாயிரத்து அறுநூற்றி எண்பத்திரண்டு ரூபாய்."
மாணவ மணிகளே!
*******
உங்களின் எதிர்கால வாழ்க்கை அற நெறி வாழ்க்கையாக
அமைய வேண்டுமென்ற அறநெறிச் சிந்தனையில் பல இலவச ஆக் கங்களுடன் அறத்தமிழ் ஞானம், அறம் வளர் இளந்தமிழ் போன்ற நூல்களையும் இலவசமாக வெளியிட்டு வருகின்றோம். அதில் அறம் வளர் இளந்தமிழ் மாணவ மணிகளுக்காகவே அறத்தை வலியுறுத்து வதற்கு ஆக்கப்பட்டது.
இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கமைய உங்களின் மனதில் இளமையிலேயே அறநெறிச் சிந்தனைகள் உருவாக வேண்டும் என்பது எம்முடைய விருப்பம். உழைப்பே உயர்வுக்கு வழி. அறநெறிச் சிந்தனைகள் மூலம் தொழில்வளத்தைப் பெருக்குவதே எமது குறிக் கோள். அதற்கு அமையவே பா. தனபாலன் அவர்களின் ஆக்கத்தில் உள்ள அறிவியல் சிந்தனை அலைகள் என்ற இந்த விஞ்ஞான நூலை உங்களுக்கு இலவசமாக வழங்குகின்றோம். இக்கல்வி மூலம் மாணவர் களாகிய நீங்கள் தொழில்வளம் பெருக்கி முன்னேற்றமடைய இறை சக்தியை வேண்டுகிறோம். − விநிாயகர் தரும நிதியம்,
புலோலி மேற்கு, . பருத்தித்துறை - 31-12-1994. - நிறுவன

விநாயகர் தரும நிதியம் 5 - 3 அறநெறி 5
பாரதியார் கவிதைகள் தேசிய கீதங்கள் 1. Ll 55 (6
O్య*****O
1. வந்தே மாதரம்
பல்லவி வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம் (வந்தே)
சரணங்கள் 1. ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)
2. ஈனப் பறையர்க ளேனும் - அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)
3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல்என்ன நீதி? - ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)
4. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)
5. பாரத தேசம்
பல்லவி பாரத தேசமென்று பெயர் சொல்லு வார் - மிடிப் பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்
சரனங்கள் 10. குடைகள் செய் வோம் உழு படைகள் செய் வோம்;
கோணிகள்செய் வோம்இரும்பாணிகள் செய்வோம்;

Page 6
6 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
l .
12.
13.
நடையும் பறப்புமுனர் வண்டிகள்செய் வோம்;
ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம் (பாரத)
மந்திரம் கற் போம்வினைத் தந்திரம் கற் போம்;
வானையளப் போம்கடல் மீனையளப் போம்;
சந்திர மண் டலத்தியல் கண்டுதெளி வோம்;
சந்திதெருப்பெருக்கும் சாத்திரம்கற் போம் (பாரத)
காவியம் செய்வோம், நல்ல காடு வளர்ப்போம்;
கலைவளர்ப் போம், கொல்லருலை வளர்ப் போம்
ஒவியம் செய்வோம் நல்ல ஊசிகள் செய் வோம்;
உலகத் தொழிலனைத்து முவந்து செய்வோம். (பாரத)
"சாதி இரண்டொழிய வேறில்லை" யென்றே
தமிழ்மகள் சொல்லியசொல் அமிழ்த மென்போம்;
நீதி நெறியினின்று பிறர்க்கு தவும்
நேர்மையர் மேலவர்; கீழவர் மற்றோர் (பாரத)
15. பாரத ஜனங்களின் தற்கால நிலமை
நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், அஞ்சி யஞ்சிச் சாவார் - இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே; வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த
மரத்தில் என்பார்; அந்தக் குளத்தில் என்பார்; துஞ்சுது முகட்டில் என்பார் - மிகத்
துயர்ப்படுவார்; எண்ணிப் பயப்படுவார் (நெஞ்சு)
.ع
மந்திர வாதி என்பார் - சொன்ன
மாத்திரத்தி லேமனக் கிலிபிடிப்பார்; யந்திர சூனி யங்கள் - இன்னும்
எத்தனை ஆயிரம் இவர் துயர்கள்! தந்த பொருளைக் கொண்டே ஜனம்
தாங்குவர் உலகத்தில் அரசரெல்லாம்: அந்த அரசியலை - இவர்
அஞ்சுதரு பேயென்றெண்ணி நெஞ்சம் அயர்வார்
(நெஞ்சு) நெஞ்சு பொறுக்கு திலையே - இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால், கொஞ்சமோ பிரிவினைகள்? - ஒரு
கோடிஎன் றால் அது பெரிதா மோ?

விநாயகர் தரும நிதியம் 5 அறநெறி 7
ஐந்துதலைப் பாம்பென் பான் - அப்பன்
ஆறுதலை யென் றுமகன் சொல்லி விட்டால், நெஞ்சு பிரிந்திடு வார் - பின்பு
நெடுநாள் இருவரும் பகைத்திருப்பார். (நெஞ்சு) 5. சாத்திரங்கள் ஒன்றும் காணார் - பொய்ச்
சாத்திரப் பேய்கள் சொல்லும் வார்த்தை நம்பியே கோத்திரம் ஒன்றா யிருந்தாலும் - ஒரு
கொள்கையிற் பிரிந்தவனைக் குலைத் திகழ் வார்; தோத்திரங்கள் சொல்லி அவர்தாம் - தமைச்
சூதுசெய்யும் நீசர்களைப் பணிந்திடுவார் ஆத்திரங் கொண்டே இவன் சைவன் - இவன்
அரிபக்தன் என்று பெருஞ் சண்டையிடுவார் (நெஞ்சு,
16. போகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்
4. ஜாதி நூறு சொல்லுவாய் போ போ போ
தரும மொன்றி யற்றிலாய் பேர் போ போ
நீதி தூறு சொல்லுவாய் காசொன்று
நீட்டினால் வணங்குவாய் போ போ போ
தீது செய்வ தஞ்சிலாய் நின்முன்னே
தீமை நிற்கி லோடுவாய் போ போ போ
சோதி மிக்க மணியிலே காலத்தால்
சூழ்ந்த மாசு போன்றனை போ போ போ
2. 5 if I 5 I ( 2. தமிழ்த் தாய் தன் மக்களைப் புதிய சாத்திரம் படைக்க வேண்டுதல் 9. புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்; மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை. 10. சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை; மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவியிசை யோங்கும்" 11. என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ? சென்றி டுவீர் எட்டுத்திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

Page 7
8 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
12.
தந்தை அருள் வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்,
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிடமிசை என்றும் இருப்பேன்.
3. தமிழ்
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்; பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும் இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு, நாமமது தமிழரெனக் கொண்டு இங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலகமெலாம்.
பரவும்வகை செய்தல் வேண்டும்.
யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,
வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
வாழ்கின்றோம்; ஒருசொற் கேளிர்! சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்!
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்; இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்; மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்லுவதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண் டாகும்; வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவுமாயின் பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம் விழிபெற்றுப் பதவி கொள்வார்; தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்.
※w※

* விநாயகர் தரும நிதியம் 4 - 3 அறநெறி 9
அறிவியல் சிந்தனை அலைகள்
1. எல்லைகள் விரிகின்றன LLLLLLcLLLLLM LLLLLLS
பரந்த இந்த உலகு போதாது என்று மனிதன் அண்டவெளிக்குள் பிரவேசித்தான். இது அறிவின் தேடல்; அவனது எல்லைகள் இன்று பல பரிணாபங்களில் விரிவடைந்து செல்கின்றன. விண்வெளியில் எத் த னையோ பல சாதனைகளை மனிதன் நிகழ்த்திக் காட்டிப் பல பயன்பாடுகளை அனுபவித்து வருகிறான்.
1957-ம் ஆண்டு ஒக்டோபர் 4-ம் திகதி உலக வானொலிகள் எல்லாம் பீப், பீப், பீப்! என்ற சத்தத்தை ஒலிபரப்பின. எல்லா மக் கள் மத்தியிலும் ஒரே அதிசய உணர்வு! உலகில் முதலாவது செய்மதி யான ‘ஸ்பூட்னிக் - " சோவியத் நாட்டினால் அன்றுதான் விண் வெளிக்கு ஏவப்பட்டது. அன்றுதான் விண்வெளி சகாப்தம் உலகில் உதயமானது. விண்வெளிப் பயணவியல் ( COSMO - NAUTICS) என்ற புதியதோர் துறையும் அன்றே தொடங்கப்பட்டது.
விண்வெளிக்கு செய்மதிகளை அனுப் பவும், மனிதர்களை& கொண்டு பறந்து செல்லவும் “றொக்கெற்’ இயந்திரங்களால்தான் முடியும். இதன் அடிப்படை இயக்கம் மிக எளிதானது. நியூட்டனின் 3ம் இயக்க விதிப்படி **ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமானதும் எதிரான துமான மறு தாக்கம் உண்டு' என்பதற்கமையவே இவை இயங்கு
கின்றன.
இவ் றொக்கெற்றுகள் முதலில் இராணுவ நோக்கத்திற்காகவே பயன்படுத்தப்பட்டன. 1933-இல் ஜேர்மனியில் ஏற்பட்ட மாற்றங்க ளினூடு ஹிட்லரின் அரசு றொக்கெற் ஆராய்ச்சியை பெருமளவு முதலீடு இட்டு நடாத்தி பல வகை றொக்கெற்றுகளை அமைத்தது. ஜேர்மனி யின் V எனப் பெயரிடப்பட்ட ( VERGELT UNGSWAFFE) பழி தீர்க்கும் ஆயுத றொக்கற்றுக்கள் உலகையே கிலி, கொள்ளச் செய்தன.
இந்த V, றொக்கெற்றின் உந்துவிசை 27 2 தொன்களாகும். சராசரியாக 1000 Kg (கிலோ கிராம்) எடையுள்ள வெடிமருந்துகளை 320 km க்கு அப்பால் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல் படைத்தது. இந்த றொக்கெற்றுக்கள் 2-ம் உலக யுத்தத்தில் நேச நாடுகளைக் கதி கலங்க வைத்தன.
1945-ம் ஆண்டு மே மாதம் ஜேர் ம னி யுத்தத்தில் வீழ்ச்சி யடைய இந்த றொக்கெற்றுக்கள் பற்றிய இரகசிய விபரங்களையும், தகவல்களையும், விஞ்ஞானிகளின் தொழில்நுட்பங்களையும் யுத்தத்

Page 8
10 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
தொடர்ந்து இத்துறையில் ஆராய்ந்து பல றொக்கெற்றுக்களை உரு வாக்கின. 1948-ம் ஆண் டு அமெரிக்கா தன் செய்மதிகளை விண் வெளிக்கு அனுப்பும் திட்டத்தை வெளியிட்டது.
என்றாலும் 1957-ம் ஆண்டு சோவியத்நாடு தனது முதலாவது “ஸ்புட்னிக் - 1’ என்ற செய்மதியை விண் வெளி க்கு அனுப்பி சாதனை நிகழ்த்தியது. தொடர்ந்து * "ஸ்பூட்னிக் - 2 ‘ கலத்தையும் சோவியத்நாடு அனுப்பியது. இதில் 1-வது விண்வெளிப் பிராணியான *லைக்கா" என்ற பெண் நாயும் சென்ற து. 1958-ம் ஆண்டு அமெரிக்கா முதன்முதலாக “எக்ஸ்பிளோரர் - ' என்ற செய் மதியை விண்வெளிக்கு அனுப்பியது.
இவ்வாறு பல செய்மதிகள் பல விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ ஆய்வுகளுக்காகவும் புவியிலிருந்து அனுப்பப்பட்டன. மனித னின் சமூக வளர்ச்சியில் விண்வெளிப் பிரயாணமும் ஆராய்ச்சியும் இன்றியமையாததாகும். மனிதர்கள் ஒரு கா லத் தி ல் ஞாயிற்றுத் தொகுதி எங்கணும் பரந்து வாழ்வார்கள் என்ற ஆவலோடு விண் வெளியில் மனிதர்களை அனுப்பும் முயற்சிகள் வெற்றி பெற்று, நிலவு வரையிலும் மனிதன் சென்று தனது சாதனையை நிலைநாட்டியுள் G6
விண்வெளிக்கு நாய்கள், குரங்குகள், சுண்டெலிகள், பூச்சிகள், பக்றீரியாக்கள், தாவர வகைகள் ஆகியன அனுப்பி ஆராயப்பட்டன. தொடர்ந்து மனிதர்கள் பி ர யா ணம் செய்வதற்கான ஆய்வுகள் விரைவாக நடைபெற்றன. இதற்காக வீரர்கள் தெரிவு செய்யப்பட்டு பல்வேறு கடினமான பயிற்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். இவர் களது இருதயங்கள், நாடிகள், மையநரம்புத் தொகுதி, நுரையீரல் கள், சிறுநீரகங்கள் என்பன மருத்துவ பரிசோதனை மூலம் தீவிரமாக ஆராயப்படும்.
புவியிலிருந்து புறப்படும் றொக்கெற் முதலில் அதிவேகமான வளர்ச்சியை அடையும், அப்போது விண்வெளிப் பிரயாணி உக்கிர விசையுடன் கீழ் நோக்கி அழுத்தப்படுவார். தனது நிறையை விட பத்து மடங்கு நிறை அழுத்துவதைத் தாங்க வேண்டும். இதனால் இரத்த அழுத்தம் வேகம் பெறும். உடலில் பலவித மாற்றங்கள் நிக ழும். இவற்றைச் சமாளிக்கவும், விண்வெளி உடைகளைப் பயன்படுத் தவும் மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. ஆனாலும் இன்று இப்பயிற்சிகள் இலகுவாக்கப்பட்டுள்ளன.
விண்வெளியில் நடைபெறவுள்ள ஆராய்ச்சிகள் பற்றிய விரி வான விசேட அனுபவங்களும் வீரர்களுக்குக் கொடுக்கப்படும். விண் வெளிக்குப் புறப்படுவதற்கிடையில் பி ர யா னி மேற்கொள்ளவுள்ள

விநாயகர் தரும நிதியம் 4 ஆறந்ெறி
ஒவ்வொரு அசைவும் பல்வேறு முறைகளில் ஒத்திகை பார்க்கப்படுகின் றது. ஆய்வுக் கருவிகள், மற்றும் விண்கலத்தை இயக்குவது, முழுமை யாகத் திருத்துவது. புதிய பிரச்சனைகளை எதிர்நோக்குவது போன்ற பல அம்சங்களில் இவர்களுக்குச் சிறப்புத் தேர்ச்சி வழங்கப்படுகிறது.
பூமித்தாயின் எல்லைகளை மேலும் விரிவாக்க, ‘வொஸ் டொக் - 1' என்ற விண்கலம் சோவியத்தின் பைகோனூர் தளத்தி லிருந்து 1961-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் திகதி விண்வெளிக்கு மேஜர் யூரி ககாரின் என்ற முதலாவது மனிதரை ஏற்றிக்கொண்டு பறந்தது. இந்த நிகழ்ச்சியை மாஸ்கோ வானொலி அறிவித்தது. சோவியத் நாட்டு மக்களுடன் உலக மக்களும் ஒன்றிணைந்து ஒரே பரபரப்பு! ஆரவாரத்தில் முழ்கினர்.
வசீகர ஆளுமையுடைய 27 வயதைக் கொண்ட சோவியத் விமானப்படை வீரர் மேஜர் யூரி ககாரின் விண்வ்ெளியிலிருந்து முதல் பேசிய வார்த்தை! ஆம். விண்வெளியில் மனித ன் பேசிய முதல் வார்த்தை "ஆகா என்ன அழகு, இங்கிருந்து பார்க்கும்போது பூமி யின் அடிவானமும், விண்மீன்களும் எவ்வளவு அழகு ததும்பும் தத் ரூபப் பொருட்களாகவுள்ளன? என வர்ணித்தார். இவரை ஏற்றிச் சென்ற வொ ஸ்டொக் - 1 கலம் 328 km உயரத்தில் புவியை 1 மணி 48 நிமிடங்களுக்குள் ஒரு முறை வலம் வந்தது. பின் பரசூட்டின் உதவியுடன் சோவியத் நிலப்பரப்பில் வந்திறங்கியது.
மனித னு  ைட ய அறிவுத் தேடலின் முதல் பாய்ச்சலைத் தொடர்ந்து அமெரிக்காவின் அவன் செப்பர்ட் என்ற விண்வெளி வீரர் ஃபீடம் 7 என்ற விண்கலத்தில், யூரி ககாரின் பிர யான ம் செய்து சரியாக 23 நாட்களின் பின் விண்வெளிக்குப் பயணமானார். இவரது பிரயாணம் 15 நிமிடங்கள் 22 செக்கன்களே நடைபெற்றது. பூமியைச் சுற்றாமல் நேரே மேலெழும்பி விண்வெளிக்குள் பிரவேசித்து எட்டிப் பார்த்தபின் உடனே பூமி திரும்பி அத்தலாந்திக் சமுத்திரத் தில் வந்து வீழ்ந்தது விண்கலம். பின்னர் அமெரிக்கப் போர்க்கப்ப லும், ஹெலிக்கொப்டர்களும் அவரையும் கலத்தையும் மீட்டன.
அமெரிக்க ஜெமினி வரிசை விண்கலங்கள் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளன. இவையே மனிதன் சந்திரனுக்குச் செல்லும் அடிப் படைகளுக்குப் பெரும் துணை புரிந்தன. ஜெமினி - 4 விண்கலத்தின் வீரர் எட்வர்ட் வைற் 21 நிமிடங்கள் கலத்திற்கு வெளியே விண் வெளியில் சஞ்சரித்து மிதந்தார். இதற்கு சில வாரங்களுக்கு முன்
னையை நிகழ்த்திக் காட்டினார்.

Page 9
12 அறிவியல் சிந்தனை'
(
பொதுவாக விண்வெளிப் பிரயாணத்திலும் சிறப்பாக சந்திரனை அடையும் பிரயாணத்தில் இரு கலங்கள் ஒன்றிணைதல் அவசியமாக இருந்தது. இவ்வகையில் அமெரிக்க ஜெமினி - 8 விண்கலம் ஏவுவ தற்கு 90 நிமிடங்களுக்கு முன் அற்லஸ் அஜீனா என்ற கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. சுமார் 6 மணி நேரம் துரத்திய பின்னர் ஜெமினி - 8 அற்லஸ் அஜீனாவை இந்து சமுத்திரத்தின் மேல் வைத்துப் பிடித்தது பின்னர் இவ்விரு கலங்களும் அருகருகே வந்து ஒன்றுடனொன்று இணைந்து கொண்டன. இவ்விரு ஒருங் கிணைவு (DOCKING) விண்வெளியில் முதற் சாதனையாகும். இதனைத் தொடர்ந்து பல ஒருங்கிணைவு நிகழ்வுகள் நடைபெற்றன.
இவ்வாறு விண்வெளி ஆய்வு வளர்ச்சிகளின் பயனாகச் சந்திர னுக்கு ஆட்கள் இல்லாத கலங்களை ரஷ்ய நாடும் அமெரிக்க நாடும் அனுப்பி பல தகவல்களைப் பெற்றன. சந்திரனுக்கு ரஷ்ய நாடு 1959ம் ஆண்டு லூனா - என்ற பெயர் கொண்ட விண்கலத்தை முதலில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து லூனா வரிசையில் பல அனுப்பப்பட்டு அரிய பல படங்களையும் தகவல்களையும் விஞ்ஞானிகள் பெற்றனர். சந்திரனுக்குச் சென்று மறுபடியும் தன்னியக்கத்தாலே பூமிக்கு மீண்டு சாதனை படைத்த கலமாக ஸொன்ட் - 5 என்ற ரஷ்ய கலம் பெற்றது. தொடர்ந்து நவீன கலங்கள் மூலம் ஆட்கள் இல்லாமலே தன்னியக்க முறையில் சந்திரனின் பல்வேறு இயல்புகளை ஆராய்ந்து சந்திர மண், கற்களையும் இ  ைவ பூமிக்குக் கொண்டு
அமெரிக்கா ஆள் இல்லாத றேன்ஜர் ரக விண்கலங்கள் முத லில் சந்திரனை ஆராய்ந்தன. தொடர்ந்து சேர்வயர் விண்கலங் களும் லுரனர் ஒர்பிற்றர் கலங்களும் பல்வேறு புகைப்படங்களை அனுப்பியதுடன் மனிதன் இறங்கக் கூடிய பகுதிகளைத் தெரிவு செய்யும் வேலைகளிலும் ஈடுபட்டன. இவற்றைத் தொடர்ந்து சந்திரனில் மனிதன் கால்களைப் பதிக்க முயற்சிக்கும் அப்பலோத் திட்டம் ஆரம்பமாகி வெற்றி பெற்றது.
இவ்வாறாக விண்வெளி ஆராய்ச்சியின் விளைவாகப் பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டபோதும், இவற்றுடன் புவியின் வளி மண்டலம், காலநிலைகள், மருத்துவ ஆராய்ச்சிகள் போன்ற பல் வேறு துறைகளின் விருத்திக்கு விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் உதவியுள்ளன. 30 நாட்களுக்கு முன்னதாகவே திட்டவட்டமான வானிலை முன்னறிவித்தல்களைக் கொடுக்கக்கூடிய வகையில் செய் மதிகள் இயங்குகின்றன. நவீன செய்தித் தொடர்பு சாதனங்கள் செய்மதிகளின் உதவியினாலே விருத்தியடைந்துள்ளன மனிதனின் எ ல்  ைலகள் வி ரி வ  ைட ந் தாலு ம் அவ ன து தொடர்புகள்

விநாயகர் தரும நிதியம் 12 - 3 அறநீெறி 13
மிக வலுவுள்ளதாக இன்று காணப்படுவதற்கு விஞ்ஞானத்தின் அறி வியல் வளர்ச்சி பெரிதும் உதவி வருகிறது. விண்வெளி ஆராய்ச்ஓ யின் ப்யன்களை அடைய 1975 ம் ஆண்டைய செய்தித்தொடர்புச் Gyuild g; St Li Sá) (COMMUNICATION SATELLITES) gauri கையும் சேர்ந்தது. விண்வெளியில் வலம் வரும் செய்மதிகளுடன் தொடர்பு கொள்ள பாதுக்கை என்ற இடத்தில் தரை நிலை யம் ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையின் கால நிலை, வானிலைத் தன்மைகள் போன்ற துறைகளில் விருத்தி ஏற்பட் டுள்ளது. அத்துடன் உலக நாடுகளிடையேயான தந்திச் சேவைகளும் சீரான முறையில் நடைபெறுகின்றது.
இன்று ரஸ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் பிரான்ஸ், பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளும், யப்பானும், சீனா வும், இந்தியாவும் விண்வெளி ஆய்வுத்துறையில் உலகில் முன்னின்று செயற்படுகின்றன. இந்திய முதல் விண்வெளி வீரர் ராகேஸ் சர்மா ஆவார். இந்தியா பல்வேறு செய்மதிகளை உள்நாட்டிலேயே உருவாக் கும் திறனைப் பெற்றுள்ளது. இவ்வாறாக விண்வெளி ஆய்வுகளும் சாதனைகளும் இன்று மானிடத்தின் எல்லைகளை விரிக்கும் மகுடங் களாக விளங்குகின்றன. முதலில் விண்வெளி, பின்னர் ச ந் தி ர ன், அதனைத் தொடர்ந்து பிறகோள்கள் என்ற வரிசையில் விண்வெளி ஆய்வுகள் விரிவாகின. விண்ணிலே பல காலம் இக்கலங்கள் இயங்கு வதற்குச் சூரியசக்தியைப் பயன்படுத்தும் கலங்கள் செய்மதிகளுடன் இணைக்கப்பட்டிருக்கும். தற்பொழுது கோள்களின் ஈர்ப்புச் சக்தி யைப் பயன்படுத்தி நீண்டதூரம் செல்லும் விண்கலங்கள் சக்தியைப் பெறும் முறைகளும் வந்துவிட்டன.
O
ஈர்ப்புச் சக்தி என்பது ஒருவகைக் கவர்ச்சியே. தனக்குப் பிடித் தமானவர்களை ஏதோ ஒரு வகையில் ஈர்ப்பது மனித இயல்பு, இதேபோல கோள்களும் குறிப்பிட்ட சில ஒழுங்குகளுக்கு அமைய ஒன்றுடன் ஒன்று ஈர்ப்புச் சக்தியால் கவர்ந்து கொண்டுள்ளன. இவ் ஈர்ப்புச்சக்தியைப் பயன்படுத்தி அமெரிக்க விண்கலம் 'வாயேஜர் - 2 ‘ இன்றும் விண்வெளிக் கோள்கள் பற்றிய பல தகவல்களை அளித்துக் கொண்டிருக்கின்றது. இதுபோன்ற நீண்ட தூரம் செல்லும் விண்கலங் களிற்கு நிறைய எரிபொருள் தேவை. ஆனால் தற்போது இயற்கை அளித்த ஈர்ப்புச் சக்தியைப் பெ ரும ள வு பயன்படுத்திக் கொள்ளும் திறனை மனிதன் பெற்று விட்டான். இவ் அமெரிக்க வாயேஜர்-2 விண்கலம் குறிப்பிட்ட சக்திமுதலுடன் ஏவப்பட்டு செவ்வாய், வியர் ழன் போன்ற கோள்களைத் தாண்டிச் செல்லும்போது அதிதீவிர மாகக் கோள்களிலுள்ள ஈர்ப்பு விசைத்திறனைச் சக்தியாக" மாற்றிச் சேகரிக்கும் கருவிகள் மூலம் நிறைந்த சக்தியைப் பெற்று தொடர்ந்து பறக்கிறது.

Page 10
f 14 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
இவ்வாறு கோள்களுக்கு அருகில் சென்று அவற்றின் ஈர்ப்புச் சக்தியைப் பயன்படுத்தி எரிபொருள் நிரப்புவது போல சக்தியைப் பெற்றுப் பறந்து கொண்டிருக்கிறது இவ்விண்கலம். இன்று ஈர்ப்புச் சக்தியை பன்முகத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் புதிய முறைகள் அறிமுகமாகியுள்ளன. அமெரிக்க விண் வெளி ஆய்வு நிறுவனமான *நாசா’’ இவ் வாயேஜர் - 2 விண்கலத்தை 1977-ம் ஆண்டு புவி யிலிருந்து ஏவியது. இக்கலம் சூரியக் குடும்பக் கிரகங்களுக்கு அருகில் சென்று ஆராய்ந்து தகவல்கள் பலவற்றை அனுப்பியுள்ளது. யூரேனஸ், நெப்டியூன் கிரகங்களுக்கு அருகிற் சென்று அக்கிரகங்களைச் சுகம் விசாரிப்பது போல ஆராய்ந்து அரிய பல படங்களை அனுப்பியுள்ளது. இன்றுவரை சூரியக் குடும்பம் முழுவதையும் ஒரே பார்  ைவ யி ல் எக்கலமும் படம் எடுக்கவில்லை. இவ் அரிய சாதனையை வாயேஜர்-2 செய்யும் என அமெரிக்க விஞ்ஞானிகள் தவம் இருக்கிறார்கள் என்றே கூறவேண்டும். இவ்வளவு காலமும் இவ் விண்கலம் தொடர்ந்து பிர யாணம் செய்ய ஈர்ப்புச்சக்தி பயன்படுத்தப்பட்டதாலேயே பல நன்மை கள் கிடைத்துள்ளன. இச்சக்தி கோள்களின் ஈர்ப்புவிசைச் சக்தி யாலேயே கிடைத்துள்ளது. இவ்வாறு மனிதன் பயன்படுத்தும் சக்தித் திறன்கள் உயர உயர அவனுடைய அறிவியல் ஆற்றல் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
3ᎧᎧ9ᎧᎧ3ᏫᎧ3ᏫᎧᏋ9>Ꭷ3ᎧᎧ9ᎧᎧ3ᎧᎧ3ᎧᎧ3ᏫᎧᎧᏋ9Ꭷ9ᏫᎧᏋ3ᏫᎧ9ᏫᎧ3ᏫᎧ3Ꮥ
பாரதியாரின் பள்ளுப் பாட்டு
LcLLLLLLLLL LLLLLLLcLSLLLLLSLLLLLSLcLLLcLLLLLSLLSLLLLELSSLLLLLLS
ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று (ஆடு)
3, எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததே - பொய்யும்
ஏமாற்றும் தொலைகின்ற காலம் வந்ததே - இனி நல்லோர் பெரியரென்னும் காலம் வந்ததே - கெட்ட நயவஞ்சக் காரருக்கு நாசம் வந்ததே. (ஆடு)
4. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித் திருப்போரை நிந்தனை செய்வோம் விழலுக்கு நீர் பாய்ச்சி மாய மாட்டோம் - வெறும் வீணருக்கு உழைத்துடலம் ஒயமாட்டோம். (ஆடு) 5 நாமிருக்கும் நாடுநமது என்பதறிந்தோம் - இது
* நமக்கே உரிமையாம் என்ப தறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் - பரி பூரணனுக் கேயடிமை செய்து வாழ்வோம். (ஆடு

விநாயகர் தரும நிதியம் 6 அறிநெறி l
f
2. வெண்நிலவை வென்றவர்கள்
LLLeLkLLLLLLLSLLLLLLLLLSLLLMLSLLLLLLSLLLLLLLALSLSLSL SLL
சிந்திரன் பூமியிலிருந்து சுமார் நான்கு இலட்சம் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. எமது பூவுலகிலிருந்து பார்க்கும் மக்களுக்கு மகிழ் வைக் கொடுக்கும் வெண் நிலவைப் பாடாத கவிஞர்கள் இல்லை. 'நிலா நிலா ஓடி வா' எனச் சந்திரனைக் கூவி அழைக்காத குழந்தை கள் இல்லை. பறவைகளாக மாறி சந்திரனை அடைவதாகப் பலர் கற்பனை செய்த காலம் கடந்து விட்டது. ஆமாம் மனிதன் 1969ம் ஆண்டு நிலவை வென்று தனது பாதச் சுவடுகளைப் பதித்தான். விண் வெளி யில் செயற்கைக் கோள்களைச் செலுத்தத் தொடங் கிய பின்பு சந்திரன் தொடர்பான ஆய்வுகள் விருத்தி அடைந்தன. சோவியத் ரஸ்யாவும், அமெரிக்காவும் பல கலங்களை அனுப்பின் சந்திரனுக்கு முதலில் அனுப்பப்பட்ட கலம் லூனிக் - 2 என்ற ரஸ்ய கலமாகும். இது 1959-09-15 அன்று அனுப்பப்பட்டது. தொடர்ந்து ரஸ்யக் கலங்கள் பல ஆய்வுகளைச் செய்து சந்திரனின் மண்ணையும் புவிக்குக் கொண்டுவந்தன.
அமெரிக்க ஜனாதிபதி கென்னடி தமது நாட்டின் மீது அளவு, கடந்த பற்று வைத்துள்ள தேசபிதா ஆவார். சோவியத் ரஸ்ய நாடு விரைவாக விண்வெளித்துறையில் முன்னேற்றமடைந்தது போல அமெரிக்காவும் முன்னேற வேண்டும்; 1970 ம் ஆண்டுக்கு முன்னர் அமெரிக்கர்கள் சந்திரனில் இறங்கி மீண்டும் பூமிக்குத் திரும்ப வேண் டும் என விஞ்ஞானிகளுக்கும் ஆய்வாளர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார். அதற்காக முழு ஆதரவு தருவதாகவும் உறுதியளித்தார். அவரது நாட்டுப்பற்றுடன் கூடிய அ வா  ைவ ஏற்றுக் கொண்டு ஆய்வுகளில் தீவிரம் காட்டினர் அமெரிக்க தேசிய விண்வெளி ஆராய்ச் சிக் கழக விஞ்ஞானிகள். முதலில் ஒருவர் விண்வெளிக்குச் செல்லக் கூடிய “மெர்குரி’ விண்வெளிக் கப்பலும் பின்னர் இருவர் செல்லக் *ஜெமினி விண்கலங்களும், தொடர்ந்து மூவர் செல்லக்கூடிய * அப்பலோ விண்கலமும் தயாரிக்கப்பட்டன "அப்பலோ’ என்பது கிரேக்க நாட்டு அதிசக்தி வாய்ந்த சூரியக்கடவுளின் பெயர். இத் தெய்வத்தைப் போல தனித்துவமான சக்தி கொண்டதாக அப்பலோ
விண்வெளிக் கப்பல் தயாரிக்கப்பட்டது.
அமெரிக்க நாட்டில் ஃபிளாரிடா மாநிலத்தில் ‘கென்னடி முனை’’ என்ற இடத்தில் இருந்து தான் விண்வெளிக்கு ரொக்கெட் டுக்கள் மூலம் கலங்கள் அனுப்பப்படும். இந்த நிலையத்தில் ரொக்கெட் டுக்கள் தயாரிக்கும் கேந்திர நிலையம் 157 மீ ற் ற ர் உயரமுள்ள

Page 11
6 அறநெறி, 5 அறிவியல் சிந்தனை
மாபெரும் கட்டடமாகவுள்ளது. இந்த இடத்திற்கு அருகில் தான் விண்வெளிக்கப்பல்களையும் ரொக்கெட்டுக்களையும் த யா ரிக் கும் ஆராய்ச்சிச்சாலையும் ரொக்கெட்தளமும் உள்ளது.
அப்பலோ விண்கலங்கள் சந்திரனைப் பற்றிய பல தகவல்களை வழங்கின. அப்பலோ - 8 கலத்தில் மூன்று அமெரிக்கவீரர்கள் அனுப் பப்பட்டனர். இவர்கள் சந்திரனுக்கு 112 km தூரம் வரை சென்று பல கோணங்களில் படங்களை எடுத்ததுடன் ஆய்வுகளையும் நடாத் தினர். இதன் பின் அப்பலோ 10 கலம் சந்திரனுக்கு 16 km வரை அருகில் சென்றது. அதிலிருந்த ஆய்வாளர்கள் சந்திரனை முழுமை யாக ஆராய்ந்து, மனிதன் இறங்கச் கூடிய பிரதேசம் ஒன்றைத் தெரிவு செய்து அதற்கு 'அமைதிக் கடல்" என வும் பெயரிட் ட ன ர். ச ந் தி ர னு க்கு மனிதரைக் கொண்டு போகும் அப்பலோ- 11 என்ற விண்கலம் தயாரிக்கப்பட்டது. இந்தக் கலத்தை "சார்ட்டன் - 5 என்ற மிகப்பெரிய ரொக்கெட் விண்வெளிக்கு எடுத் துச் செல்லும். இந்த ரொக்கெட் மிக வும் சக்தி வாய்ந்தது. 85M நீளமுடையது. விண்கலத்தையும் ரொக்கெட்டையும் சேர்த்தால் 109 M ஆகும். இவ் விரண்டினதும் எடை முப்பத்தொரு இலட்சத்து இருபதாயிரம் கிலோ கிராம் ஆகும். சார்ட்டன் தயாரிக்க 100 கோடி அமெரிக்க டொலர் களுக்கு கூடுதலாகப் பணம் செலவழிக்கப்பட்டது. இதனைச் செய்து முடிக்க 6 வருடங்கள் சென்றன. இக்கல உற்பத்தி வேலைப் பணிக ளுக்கு ஒரு இ லட் சம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
அப்பலோ-11 விண்கலம் இரு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று தாய்க்கலம். இதன் பெயர் கொலம்பியா. மற்றது சேய் க் கலம். இதன் பெயர் கழுகு. தாய்க்கலத்தில் அமர்ந்து மூன்று வீ ரர் க ள் பயணம் செய்வார்கள். சந்திரனுக்கு அருகில் சென்றதும் இரு வ ர் சேய்க்கலத்தின் துைைன கொண்டு சந்திரனில் இறங்குவார்கள். இரு கலங்களுக்குள்ளும் வாயுச் சிலிண்டர்கள், ஒட்சிசன் வாயு, உலர்த்தப் பட்ட பழங்கள், இறைச்சி, ரொட்டி போ ன் ற பாதுகாக்கப்பட்ட உணவுகள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதுடன் கோப்பி தயாரித்துக் குடிக்கக்கூடிய வசதிகள் இருந்தது. வீரர்கள் வெப்பத்தாலோ, குளி ராலோ பாதிக்கப் படர்மல் இருக்க சிறப்பான அலுமினியப் பாது காப்புத் தகடுகள் க லத் தி ல் பொருத்தப்பட்டிருந்தன. சந்திரனுக்கு அப்பலோ - 11 கலத்தில் பயணம் செய்ய நீல் ஆம்ஸ்ரோங், எட் வின் ஆல்ரின், மைக்கல் காலின்ஸ் ஆகியோர் தெரிவு செய்யப் பட்டார்கள். இவர்களுக்குத் தொடர்ச்சியாகப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தன. உடல் சம்பந்தமான பயிற்சிகள், மற்றும் தாய்க்கலம், சேய்க் கலத்தை இயக்குவது, இரண்டையும் பிரிப்பது, இணைப்பது, ஈர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும் சந்திரனின் புதிய சூழலுக்கு ஏற்ப எப்படி இயக்குவது போன்ற பல்வேறு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன,

விநாயகர் தரும நிதியம் 4 - 3 அறநெறி 17ב
வானத்தில் இருக்கும்போது ஆய்வு க ளி ன் ஒளிப்படங்களை அனுப்பவும், செய்திகள், தகவல்கள் பரிமாறவும், வானியல் காட்சி களைத் துல்லியமாகப் பட ங் கள் எடுக்கவும், தொலை நோக்கிகள், தொலைக்காட்சிக் கமராக்கள், லேசர் ரெஃளெக்டர்கள், செஸ்மோ மீற்றர் போன்ற பல கருவிகள் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்தன. விண்வெளி வீரர்களுடைய உடலியல் அசைவுகள், இதயத் துடிப்புகள்,
இரத்த ஒட்டங்கள் போன்றவை :இத்ரீஇ #oo! லிருந்ே Y அவதானிக்கக் கூடிய நவீன ஆய்வு"ந்ேநிேக்ஃக்ஃத்திஆழ்
வாகியிருந்தது.
邏 1969 ம் ஆண்டு ஜூலை Edifig23. I கென்னடி முனையிலிருந்து கிள்ம்பும் சப் ஆeடு ஏராள
மான மக்கள் ரொக்கெட் புறப்படுவதைப் பார்க்க கென்னடி முனை. குப் புறப்பட்டார்கள். ரொக்கெட் கிளம்புவதை 5Km தூரத்திற்கு அப்பால் இருந்து தான் பார்க்க முடியும். ஏனெனில் அதன் து சத் தம் சாதைச் செவிடாக்கி விடும். ஒளியைப் பார்த்தால் கண்ணுக்கு கெடுதல் ஏற்பட்டு விடும். பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் ர்ொக்கெட் புறப்படுவதைப் பார்க்கிக் கூடினர். உலகம் முழுவதிலும் உள்ள தொலைக் காட்சிகளில் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட் டிருந்தன. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்ஸன் வெ ள்  ைள மாளிகையிலிருந்தபடி விண்வெளிப் பயணத்தைப் பார்க்கவும், வீரர் களுடன் பேசவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஜூலை 16-ம் திகதி கென் ன டி முனையிலிருந்து 9 மணி 32 நிமிடத்திற்கு அரை வினாடி தாமதத்துடன் ரொக்கெட்டின் முதற் பகுதி ஐந்து பெரிய எஞ்சின்கள் இயக்கப்பட்டன. ரொக்கெட் மேலெழுந்து பேரிரைச்சி அலுடன் பறந்தது. அறுபது கிலோ மீற்றர் உயரம் சென்றதும் ரொக் கெட்டின் முதற்பகுதி பிரிந்து விழ இரண்டாவது பகு தி தானாக இயங்கியது. மணிக்கு இருபத்திரண்டாயிரத்து நானுாறு கிலோ மீற் றர் வேகத்துடன் பூமியிலிருந்து 185 Km உயரம் செல்ல மூன்றாவது பகுதி இயங்கியது. பின் பூமியைச் சுற்றி வந்த அப்பலோ - 11 கலம் மணிக்கு 38,900 கிலோ மீற்றர் வேகத்தைப் பெற்று புவியீர்ப்புச் சக்தியிலிருந்து விடுபட்டுச் சந்திரனை நோக்கிச் சென்றது.
விண்கலம் ஜூலை 16 ம் திகதி புறப்பட்டு ஜூலை 19 ம் திகதி சந்திரனுக்கு சுமார் 110 Km உயரத்தில் சுற்றிக் கொண்டிருந்தது. அங்கிருந்து தாம் காணும் காட்சிகளை விண்வெளி வீரர்கள் அவ்வுப் போது தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். புவி யி ன் கட்டுப்பாட்டு நிலையத்திலிருந்தும் பல தகவல்களை விஞ்ஞானிகள் அனுப்பினர். கலம் 13 ஆவது தடவை சந்திரனைச் சுற்றிக் கொண்டிருக்கும் போது தாய்க்கலத்திலிருந்து சேய்க்கலம் பிரிக்கப்பட்டது. விண்வெளி வீரர் காலின்ஸ் தாய்க்கலத்தைச் சந்திரனைச் சுற்றி இயக்க, ஆழ்ஸ்ரோங்

Page 12
r18 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
கும், ஆல்ரினும் சேய்க்கலத்தைச் சந்திரனில் இறக்கினார்கன் 16-ம் திகதி கிளம்பிய விண்கலம் 21-ம் திகதி அதிகாலை சந்திரனில் இறங் கியது. பின்னர் கருவிகள் எல்லாம் சரிபார்த்த நீல் ஆம்ஸ்ரோங் ஏணி வழியாகச் சந்திரனில் தமது இடது காலை ஊன்றி இறங்கினார். அக்காட்சியை உலகின் அனைத்துத் தொலைக்காட்சிகளும் அஞ்சல் செய்தன.
உலக மக்கள் ஆச்சரியத்தில் மூழ்கி வியந்தார்கள். மனிதனது எல்லைகள் அடுத்தபடியாக விரிவடைந்தன. கவிஞர்களுக்கும், காத லர்களுக்கும் கற்பனைப் பொருளாக இருந்த சந்திரன் மனிதனின் கைக்குள் அகப்பட்டு விட்டான். சந்திரனில் தன் பாதச்சுவட்டைப் பதித்த ஆம்ஸ்ரோங் பூமியில் உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு முதல் பேசிய வார்த்தை ‘நான் சந்திரனில் காலடி வைத்து விட்டேன். தனி மனிதனான எனக்கு இது ஒரு சிறு காலடி தான், ஆனால் மனித இனத்திற்கோ இது ஒர் இராட்சதப் பாய்ச்சல்' என்ற்ார். தொடர்ந்து ஆல்ட்ரினும் சந்திரனில் இறங் கினார். இருவரும் இணைந்து பல்வேறு ஆய்வுகளைச் செய்தார்கள். சந்திரனிலிருந்து ஏனைய கோள்களையும், நட்சத்திரங்களையும் அவ தானித்தார்கள். சந்திரனிலிருந்து பூமியை நோக்கினார்கள்.
பூமி உதயமாவது உன்னதமான காட்சியாக இருக்கிறது என வர்ணித்தார்கள். தமது பணிகளையும், ஆய்வுகளையும் செய்து சந்திர மண், கற்களையும் சேகரித்தார்கள். விண்வெளி வீரர்கள் அமெரிக்கக் கொடியை சந்திரனில் நாட்டினார்கள். உலகத் தலைவர்களின் நல் லெண்ணச் செய்தி பொறிக்கப்பட்ட சிலிக்கா தட்டையும் பொறித் தார்கள். தொடர்ந்து நீல் ஆம்ஸ்ரோங் நி  ைன வுக் க ல் ஒன்றைப் பொறித்து அதன் வாசகத்தை உரக்கப் படித்தார். உலகத் தொலைக் காட்சிகள் அனைத்தும் இதை ஒலிபரப்பின. 'பூவுலகைச் சேர்ந்த மனிதர்கள் முதன்முதலாக கி. பி. 1969-ம் ஆண்டு சந்திரனில் கால் வைத்தார்கள். நாங்கள் மனித குலத்தின் அமைதிப் பணித் தூதுவராக வந்தோம்’ விண்வெளி வீரர்களும், அன்றைய அமெரிக்க ஜனாதிபதியும் ஒப்பமிட்டிருந்தனர். பின்னர் காலஞ்சென்ற சோவியத் நாட்டு விண்வெளி வீரர்களான ககாரின், கொமாராவ் ஆகியோரது பதக்கங்சளும் சந்திரனில் வைக்கப்பட்டன. விபத்தில் இறந்த மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களின் நினைவுச் சின்னங் களும் நிலவில் விடப்பட்டன. கலத்திற்கு வெளியே சுமார் இரண்டு மணி நேரம் ஆய்வுப் பணிகளை முடித்தபின் கலத்தினுள்ளே சென் றார்கள். 'முழுமையாகச் சந்திரனில் 21 மணி நேரம் இருந்தார்கள். அதுவரை நித்திரை கொள்ளவே இல்லை. தம் ஆய்வுகளை முடித்து விரைவில் பூமியை அடைவதே அவர்களது அவாவாக இருந்தது.
y

விநாயகர் தரும நிதியம் 4 அறநீெறி 19
சேய்க்கலம் தாய்க்கலத்துடன் இணைந்தது. சந்திரனில் இருந்து பூமி நோக்கிப் பயணமானார்கள், புவியின் பசுபிக் சமுத்திர கவாயி லிருந்து 1840 km தொலைவில் உள்ள கடலில் விண்கலம் இறங்கியது. அங்கு ஹார்னட் என்ற கடற்படைக் கப்பல் கலத்தையும், அவர்களை யும் மீட்டது. உலக மக்கள் அனைவருமே மூன்று விண்வெளி வீரர் களையும் புகழ்ந்து பேருவகையுடன் வரவேற்றார்கள். மானிட இனத் தின் அறிவியல் வளர்ச்சி இதனால் ஓர் படி உயர்ந்து தன் பரப்பை விரிவாக்கிக் கொண்டது. அமெரிக்க, ரஸ்ய வீரர்கள் சந் தி ர  ைன ஆராய்ந்ததிலிருந்து; பூமியில் கிடைக்காத உலோகங்கள் சந்திரனில் கிடைப்பதுடன், அங்கு ஈர்ப்புச்சக்தி புவியை விட 1/6 குறைவாக இருப்பதால் சந்திரனிலிருந்து பொருட்களைக் கொண்டு வருவதும் இலகுவாகும். சந்திரனின் மண் மிருதுவானது. இதன் துருவங்களில் தண்ணிர் இருப்பதற்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவற்றுடன் ச ந் தி ர னி ல் காற்று மண்டலம் இல்லாததால் உலோகங்கள் துருப்பிடிக்காததுடன், நிலவிலிருந்து அண்டவெளி நட் சத்திரங்கள், கோள்கள் பற்றி ஆராயவும் வசதியாக இருக்கும். மனித இனம் நல்ல பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சந்திரனில் குடியேறி வசிக் கலாம் என்பதை அமெரிக்க, ரஸ்ய விஞ்ஞானிகள் ஆய்வுகள் மூலம் புலப்படுத்தி இருக்கிறார்கள். அமெரிக்கர்கள் நிலவில் குடியிருப்புக்களை உருவாக்க கி. பி. 2000 ஆண்டில் செல்ல இருக்கிறார்கள். இதற் கான பயிற்சிகள் 1985-ம் ஆண்டே ஆரம்பமாகி விட்டன. கட்டடத் தொழிலாளர்கள், பொறியியல் வல்லுநர்கள் மற்றும் ஏனைய துறை சார்ந்தவர்கள் எந்த இடையூறுகளையும் சமாளித்துச் சா த  ைன செய்ய அவாவி நிற்கின்றனர். கட்டடங்களை அமைக்க சந்திரனி லுள்ள கற்கள் சீமெந்துடன் மிக இறுக்கமாக இணைந்து கொள்வது வரய்ப்பாக உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள்.
இவ்வாறாக மனிதனுடைய முயற்சியும் , சாதிக்கும் மனப்பர்ன் மையும் பெருகப் பெருக அவனது சாதனைகளும், இ லக் கு களு ப உயர்ந்து கொண்டே செல்கின்றன. இன்று மனிதனுக்குத் தேவை யான ஒவ்வொரு துறைகளும் விருத்தியடைவதுடன் புதிய துறைகளும் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இதனால் மனிதனது பல்வேறு தே  ைவக ள் பூர்த்தியாவதுடன், மேலும் தனது நிலையை உறுதி செய்ய உத்வேகமும் அவனுக்குக் கிடைக்கின்றது.
பாரதியாரின் தேசியத் தலைவர்கள்
அறத்தினைத் தமதோர் அறிவினாற் , கொண்ட மட்டிலே மானிடர் மாண்பெற லாகார் அறமது தழைப்ப நெஞ்சகம் காட்டி வாட்குத்து ஏற்று மாய்பவர் பெரியோர் அவரே மெய்ம்மையோர், முத்தரும் அவரே.

Page 13
20 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
3. செயற்கைக் கோள்களும் பயன்பாடுகளும்
YVWV ^V^V^VM MVV MVV MVW MVAMA MWYN YMMV,
விண்வெளி யுகம் ஆரம்பமானதைத் தொடர்ந்து செயற்கைக் கோள்கள் பல்வேறு தேவைகளுக்காக விண்வெளிக்கு அனுப்பப்படுகின் றன தேவைகளுக்கேற்ப பல வகைகளாகவும் இவை பிரிக்கப்படுகின்றன. புவியின் நில இடப் பொருட்களை ஆராய இட ஆய்வு செயற்கைக் கோள்களும் (Geodelical Sate - lites) விலங்கு, தாவர உயிரிகளை ஆராய உயிரியல் செயற்கைக் கோள்களும் (Biology Satellites), செய்திகளைப் பரிமாற செய்திப் போக்குவரத்துச் செயற்கைக் கோள் களும் (Communi-Cation Satellites), வானிலைச் செயற்கைக் கோள் கள் (Weather Satellites) வானிலை, கால நி ைல விடயங்களை ஆராயவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இச்செய்மதிகள் பொரு ளாதாரப் பயன்பாடுகள் நிறைந்ததாகக் காணப்படுகின்றன. இராணு வத் தேவைகளை நிறைவு செய்யவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் இன்றைய வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் செய்மதி களைப் பயன்படுத்துவது அதிகரித்து வருகின்றது. விவசாய கடல்வள
"பாதுகாப்பு அபிவிருத்திக்கு காலநிலையையும், பருவகாலங்களையும்
சிறந்த முறையில் பயன்படுத்த செய்மதிகள் உதவுகின்றன.
உலகம் இன்று சுருங்கி வருகிறது. அதாவது உலகின் எந்தப் பகுதி யில் என் ன நடைபெறுகிறது என்பதை உடனுக்குடன் செய்தித் தொடர்புச் சாதனங்கள் அறிவித்து விடுகின்றன. இதற்கு முக்கிய காரணம் செய்மதிகளைப் பயன்படுத்துவதேயாகும். இதிலும் தகவல் தொடர்புச் செய்மதிகளே பெரும் பங்காற்றுகின்றன. 1962ம் ஆண்டு டெல்ஸ்டார் - உலகின் முதலாவது தகவல் தொடர்புச் செயற்கைக்
கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது. அது புவியிலிருந்து பெறும்
அலைச் சமிக்கைகளைப் பெற்றுப் பெரிதாக்கிப் பி ன் ன ர் பூமிக்குத் திருப்பி அனுப்பும். புவியிலும் தரை நிலை யங் கள் செயற்படும். டெல்ஸ்டார் - செயற்கைக்கோளால் அமெரிக்கர்கள் ஐரோப்பிப் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், ஐரோப்பியர்கள் அ மெ ரி க் க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் காணக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. அத்தோடு இரு நாட்டு மக்களும் எளிதாகத் தொலைபேசி மூலம் கணிதக்கவும் இச்செய்மதி வழிவகுத்தது. -
செய்தித் தொடர்பின் வளர்ச்சியாக வியாபார ரீதியான முதலா வது செய்கோள் அமெரிக்க தனியார் கம்பனியால் 1965 ம் ஆண்டு ஏர்லி பேர்ட் (Early Bird) எனப் பெயரிட்டு விண்வெளிக்கு அனுப் பப்பட்டது. இச் செயற்கைக் கோளைப்பயன்படுத்த கட்ட ண ம்

விநாயகர் தரும நிதியம் 4 - 3 அறநெறி 21
வசூலிக்கப்பட்டது. பல நாடுகள் தொலைக்காட்சி நிகழ்ச் சிக ள்
வற்றிற்காக இச்செய்கோளைப் பயன்படுத்தின இவ்வாறு பல செய் கோள்கள் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டன, சோவியத் நாடும் பல தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப் பிப் பயன்கள் பல பெற்று வருகிறது. இவ்வாறே பிரான்ஸ் நாடு 1965-ம் ஆண்டு முதல் செயற்கைக் கோளான ‘ஏ - 1* ஜ அனுப் பியது. யப்பான் 1970-ம் ஆண்டு தன் முதலாவது ஒசுமி (OSumர்) யையும், சீனா தனது முதலாவது செய்கோளான சின் கோம் - 1 (Chincom - 1) ஐ 1970-ம் ஆண்டிலும், இந்தியா 1975-ம் ஆண்டு தன் முதலாவது ஆரியபட்டா செய்கோளையும் அனுப்பி விண் வெளித்துறையில் பங்குகொண்டு; இந்த நாடுகளும் தகவல் தொடர் புச் செய்கோள்களை உருவாக்கிப் பயன்படுத்தி வருகின்றன.
இன்று உலகின் பல நாடுகள் செய்தித் தகவல் செய்கோள்களை விண்வெளிக்கு அனுப்பாவிட்டாலும், பயன்படுத்தி வருகின்றன. இவற் றின் மூலம் தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகள் ஒளி, ஒலி பரப்பப்படுவதுடன், செய்திப் பரிவர்த்தனை தொலைபேசித் தொடர்பு களும் விஸ்தீகரிக்கப்பட்டுள்ளது, இன்று பூமியைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட தகவல் தொடர்புச் செயற்கைக் கோள்கள் சுற்றி வருகின் றன. இவ்வாறான செய்கோள்கள் மூலம் இன்று வீட்டில் இருந்த படியே இன்னொரு நாட்டில் உள்ளவருடன் எளிதில் தொடர்பு கொள் வதுடன், தொலைக்காட்சிப் பெட்டியிலேயே அ வ  ைர ப் பார்த்துப் பேசலாம். அவரும் தம் நாட்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டியில் நம்ன்மப் பார்த்துப் பேசலாம். இதனால் சர்வதேச வர்த்தகம், வியா பாரம் வளரவும், பொருளாதாரப் பாங்கு மேலும் விரிவடையவும் வழி ஏற்பட்டுள்ளது.
1982-ம் ஆண்டு உலகின் பெரிய தகவல் அஞ்சல் செயற்கைக் கோளான ‘இன் சாட் - 5 - 41 விண் ணி ல் செலுத்தப்பட்டது. இந்தச் செய்மதி உலக நாடுகளின் சமாதான ஒருங்கிணைவை எடுத் துக் காட்டுகிறது. மொத்தமாக 106 நாடுகள் இதன் பங்காளிகள். இது தொலைதூரத் தகவல்களை நாடுகளுக்கிடையே பரப்புகின்றது. இது போன்ற இன்சாட் வகை செய்கோள்கள் தொடர்ந்து செலுத் தப்படுகின்றன. தகவல் தொடர்பு செய்கோள்கள் போலவே வான லைச் செய்கோள்களும் முக்கியமானவைகளாக உள்ளன. 1960-ம் ஆண்டு 'டைரோஸ் (Tiros) என்ற முதலாவது, வானிலைச் செய் கோள் அமெரிக்காவினால் விண்வெளிக்குச் செலுத்தப்பட்டது. இது மேகக் கூட்டங்கள், வானிலை முன்னறிவிப்புக்கள், காலநிலை விடயங் கள் தொடர்பான தகவல்களை அனுப்பியது. தொடர்ந்து பலவாணி

Page 14
22 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
யல் செய்கோள்கள் அனுப்பப்பட்டன. ரஸ்யா காஸ்மாஸ் (Cosmos) ரக செய்மதிகள் மூலம் பல வானியல் தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று உலகளாவிய ரீதியில் வான்லை பற்றிய தகவல்கள் மிக அவசிய மாகத் தேவைப்படுவதால் ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானியல் அமைப்பு செயற்பட்டு வருகின்றது. வானியல் பற்றி முழுத் தகவல் களும் திரட்டப்பட்டு இந்த அமைப்பின் மூலம் உலக நாடுகள் அனைத் திற்கும் தெரிவிக்கப்படுகிறது. மற்றும் புயல், வெள்ளப்பெருக்கு போன்ற தகவல்களும் முன்கூட்டியே பெறப்படுகின்றன. உலகளாவிய இந்த நிறுவனத்தின் சேவையால் 45 ஆயிரம் கோடி ரூபாய்கள் வரு டம் ஒன்றுக்கு மீதப்படுத்துவதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வானியல் தொலைக்காட்டிகள் ஈரப்பதன், வெப்பநிலை, புயல் அபாயம் போன்ற தகவல்களை ஒரு நாளின் 24 மணி நேரமும் தருகின்றன. மேலும் இத்தகவல்களால் விமான விபத்துக்கள் ஏற்படா மலும் தடுக்கப்படுகின்றன. வான வெளியில் உள்ள வாயுக்கள், மூலக் கூறுகள், காற்று வீசும் திசை, மின்னல், சூரியன் உதிக்கும் மறையும் நேரங்களைக் கணக்கிட்டு துல்லியமாக அறிவிக்கின்றன. வானிலை செயற்கைக் கோள்களின் வளர்ச்சியாக கடல் ஆராய்ச்சிச் செயற்கைக் கோள்கள் உள்ளன. கடலின் ஆழமான பகுதிகளின் கனிய வளங்க ளைக் கண்டுபிடிக்கவும், மீன்கள் அதிகமாக இருக்கும் இடங்களை அறியவும் இவற்றின் மூலம் முடியும். அமெரிக்கா செய்மதிகளின் உதவி யுடன் மீன்பிடித்துறையில் 50% அதிக இலாபத்தைப் பெற்று வரு கின்றது.
கடற்பயணப் பாதுகாப்பிற்காகவும் செயற்கைக் கோள்கள் பயன் படுகின்றன. கடலில் கப்பல் எங்கே இருக்கிறது, அதற்கு அபாயும் ஏற்பட்டுள்ளதா என்பதை அறியவும், அதிக சுற்று இல்லாமல் இலகு வாகக் குறைந்த எரிபொருளுடன் கடற்பாதை வழிகளைக் கண்டறி யவும், அமாவாசை, பெளர்ணமி காலங்களிலும், புயல் நேரத்திலும் பனிக்கட்டி நகர்வுகள் பற்றியும் முன்கூட்டியே அறிவித்து கடல்வழிக்
இவ்வாறாகப் பல வகைகளாக உருவாக்கப்பட்டு வரும் செய்கோள் எனப்படும் செய்மதிகளால் வானிலை, செய்தித்தொடர்பு, விவசாயம், மருத்துவம், இராணுவத்துறை ப்ோன்ற பல்வேறு துறைகள் விருத்தி யடைந்துள்ளன. அண்மையில் அமெரிக்க விஞ்ஞானிகளால் விண் வெளி க்கு ச் செலுத்தப்பட்ட “ஒறப்பில்' என்ற செய்கோளின் தொலைக்காட்டி விண்வெளியின் ஒரு குறிப்பட்ட இடத்தில் ஏராள மான புதிய நட்சத்திரங்கள் தோன்றிக் கொண்டிருப்பதைக் கண்டு பிடித்துள்ளது. இந்தப் புதிய நட்சத்திரங்கள் தோன்றிக் கொண்டி ருக்கும் அண்டத்திற்கு 'ஆர்ப் 220 என விண்வெளி ஆய்வாளர் கள் பெயர் சூட்டியுள்ளார்கள். இந்த அண்டம் புவியிலிருந்து 23

விநாயகர் தரும நிதியம் 4 அற்நெறி 23
கோடி ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. ‘ஹாப்பில் செய்மதி மூலம் அவதானிக்கப்பட்ட ஆர்ப் 220 அண்டத்தின் படங்களைப் பார்க்கும்போது அங்கு மாபெரும் நட்சத்திரக் கொத்துக்கள் உருவா கிக் கொண்டிருப்பதை அறிய மு டி ந் த து என எட்வர்ட் ஷாயா என்ற மேரிலாந்து பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விண்வெளி விஞ் ஞானி தெரிவிக்கின்றார். இங்கு உருவாகும் ஒவ்வொரு நட்சத்திரக் கொத்தும் சூரியனை விடப் பத்தாயிரம் கோடி மடங்கு பெரியவை யாக உருவாகி இருப்பதாகவும், இரு அண்டங்கள் ஒன்றுடனொன்று மோதியதாலேயே இந்த நிகழ்வு உருவாகி இருப்பதாகவும் கருதப்படு கிறது. இவ்வாறு இரு அண்டங்கள் மோதும்போது கோடிக்கணக்கான சூரியன்கள் அவற்றிலிருந்து வெடித்துச் சிதறுகின்றனவாம்.
இப்படியான நிகழ்வு முடிவடைய பல இலட்சம் ஆண்டுகள் செல்லும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை ஆராய்வ தன் மூலம் கோள்களின் உருவாக்கம், உயிர்களின் தோற்றம், கோள் களின் இயக்கம் போன்றவற்றை ஆராய முடியுமென அமெரிக் க விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு பல்வேறு அறிவியல், சமூக, பொருளாதார விடயங்கள் வளர்ச்சியடைய செய்மதிகள் பயன் படுகின்றன. இவ்வாறாக விண்வெளித்துறை பல பரிமாணங்களில் வளர்ச்சியடைந்தது. எதிர்காலத்திலும் எல்லைகளை வி ஸ் தீ க ரி க் க அமெரிக்கா 2001-ஆம் ஆண்டுக்கு முன் குறைந்த செலவில் நவீன நுட்ப உபகரணங்கள் மூலம் சூரிய மண்டலத்தை முழுமையாக ஆராய் வதுடன், சந்திரனில் குடியிருப்புக்களை அமைக்கவும், புதிய ரக செய் மதிகளை உற்பத்தி செய்யவும் முனைந்துள்ளது. ரஸ்யா விரைவில் விண்வெளி நகரம் (Space City ) ஒன்றை விண்ணில் அமைக்கவும். செய்வாய்க் கிரகத்தில் ரஸ்யர்கள் இறங்கவும் திட்டம் தீட்டியுள்ளார் ó@T。
பிரான்ஸ், ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு, யப்பான், சீனா, இந்தியா, போன்ற நாடுகளும் விண்வெளி ஆய்வுச் சாதனைகள் செய்ய பல திட்டங்களைத் தீட்டியுள்ளன. இவ்வாறாக மனிதனது அறிவுகள், ஆய்வுகள் வளர வளர அவனது சகல துறை எல்லைகளும் விரிவடை கின்றன. இந்நோக்கில் பல செய்மதிகள் விஞ்ஞான, தொழில்நுட்ப ஆய்வுகளுக்குப் புவியிலிருந்து தொடர்ந்து அனுப்பப்படுகின்றன. மணி தனின் சமூக வளர்ச்சியில் விண்வெளிப் பிரயாணமும், விண்வெளி ஆராய்ச்சியும் இயற்கையானதும், இன்றியமையாததுமான ஒரு கட்ட, மாகும். ம னி த ர் க ள் ஒரு காலத்தில் ஞாயிற்றுத் தொகுதியுடன் ஏனைய அண்டங்களிலுள்ள கோள்களிலும் பரந்து வாழும் அவாவை நிறைவேற்ற விண்வெளித்துறையின் ஆய்வு க ள் சாதனைகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

Page 15
24 அறநெறி 12 அறிவியல் சிந்தனை
4. அண்டவெளியில் சூரியக்குடும்பம்
LLLLLLLLcLcLLLLcLLcELLLLLLLLaLLLLLLLaLLLLLLLLLLLLAcLLLLLLLSLLLLLLLS
பிரபஞ்சத்திலே கூட்டம் கூட்டமாகப் பல கோடி விண்மீன் கள் உள்ளன. ஒவ்வொரு விண்மீன்கள் கூட்டமும் ஒவ்வொரு ஆகாய a: pši 60 95 (GALAXY) எனப்படுகின்றன . இவ் ஆகாய கங்கைகளில் ஒன்றுதான் பால் வழி (MILK , WAY) என்ற விண்மீன்கள் கூட்டம் இக்கூட்டத்தின் ஒரு விண்மீன்தான் எமக்கு ஒளியைத் தந்து உயிரூட்டி நிற்கும் ஞாயிறு. நாம் சந்திரன் இல்லாத ஒரு தெளிந்த இரவு வானத்தை நோக்கும் போது வடக்குத் தெற்காக விண்மீன்கள் அடர்ந்து நீண்டிருப்பதை அவதானிக்கலாம். விருச்சிகம் அல்லது வேட்டைக்காரன் போன்ற பெரிய விண்மீன் கூட்டங்கள் உச்சி வானில் உள்ளபோது வானத்தை நோக்கின் விண்மீன்களின் ஒளி வெள்ளம் வானவீதியில் பாலைக் கவிழ்த்து விட்டது போலக் காட்சியளிக்கும் இதையே பால் வழி என்று அழைப்பர். பால் வழியிலுள்ள பத்தா யிரம் கோடி விண்மீன்களில் ஒரு சாதாரண விண்மீன் தான் சூரியன்.
இச்சூரியனிலிருந்து கோள்கள் உருவாகியமை ப ற் றிப் பல கருதுகோளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். பால்வழியிலே காணப்பட்ட சடப்பொருட்கள் எண்ணற்ற தூசிகள் ஒன்றுடன் ஒன்று மோதி வெப்பத்தையும் சுழற்சியையும் பெற்று புகையுருக் கோள்க ளாயின. இவ் வா றாக மூலச் சூரியன் தோன்றி பால்வழியில் இன்னொரு விண்மீனுடன் மோதியதன் விளைவாகவே கோள்கள் உருவாகியுள்ளன என மோதுகைக் கருதுகோளை வெளியிட்டவர் கள் கூறுகின்றார்கள். இதை விடுத்து இயற்கைக்கு அப்பாற்புட்ட சக்தி காரணமாக பல பொருட்கள் தம்மிடையே ஈர்த்துக் கவரப் பட்டு மோதி வெப்பம், சுழற்சியைப் பெற்று புகையுருக் கோள்க ளாக மாறின எனப் புகையுருக் கருதுகோளை உருவாக்கியவர்கள் வாதிடுகின்றனர்.
சூரியனுக்கு அருகில் வேறொரு விண்மீன் வந்தபோது பெருக்கு ஈர்ப்பு விசை ஏற்பட சூரியனிலிருந்து சடப்பொருட்கள் வெளியே இழுக்கப்பட்டன அவையே திரண்டு கோள்களாகின என பெருக்குக் கருதுகோளை வெளியிட்டவர்கள் கூறுகின்றனர். இக்கருதுகோள்களை வெளியிட்ட அறிஞர்கள்;
r1, மோதுகைக் கருதுகோள்:- லூயிபபன். பிங்கேட்டன்
2. புகையுருக் கருதுகோள்:- லாப்லாஸ், இமானுவேல் கான்ற்’
ஒட்டோசிமிட், பிரெட் ஹெயில் 3. பெருக்குக் கருதுகோள்:- W F. செற்விச், சாம்பர்லின்,
மோல்ரன், ஜேம்ஸ் ஜீனஸ்

விநாயகர் தரும நிதியம் 12 அறநெறி 25
இவ்வகையிலே சூரியன் தொடக்கம், கோள்களின் உருவாக்கம் பற்றிப் பலதரப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன. சூரியனைச் சுற்றி ஒன்பது கோள்கள் (PLANETS) உள்ளன. இவற்றைக் கிரகங்கள் எனவும் அழைப்பர். இவை நீள்வட்டப் பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ், நெப் டி யூன், புளூட்டோ ஆகியவையே இக்கோள்கள். இவற்றில் ஆறுக்கு உப கோள்களான சந்திரன்களும் உண்டு. ஒன்பது கோள்களில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய நான்கும் அகக் கோள்கள் எ ன் றும், வியாழன், ச வி, யூரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை புறக்கோள்கள் எனவும் கூறப்படும். இக்கிரகங் களில் வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய ஐந்தைத் தான் கண்களாற் பார்க்க முடியும். ஏனையவற்றைத் தொலைநோக்கி மூலமாகவே பார்க்கலாம். ج
கோள்களின் 9 U L G D Gir
கோள்கள் சராசரித தூரம சுறறும களின் தானே சுற்ற
G3gs Tisq 5)GS6wfr g)
மீற்றர்களில் வருடம் நாள் தொகை எடுக்கும் காலம் புதன் 5 8 - 1 88 - P (Mercury) 88 நாட்கள் வெள்ளி 10 8 25 2 || -س w-ana 25 மணித்தி
(Venus) யாலங்கள்
•புவி 24 மணித்தி
I4 9 一 1365基 (Earth) 4. யாலங்கள் செவ்வாய் 24 மணி
22“ & (Mars) 322 2 37 நிமிடம் வியாழன் - 9 மணி 77 . 8 I 16 (Jupiter) I 315 55 நிமிடம் சனி 10 paoof (Saturn) 142 7 29 67 17 14 நிமிடம் ųGU GOTGiv 10 மணி (Uranus) 287 - O 84 7 5 48 நிமிடம் . நெப்டியூன் 15 மணி
449“ 7 764 28 (Neptune) 9 2 40 நிமிடம் , புளூட்டோ O 6 நாள் čрино) | 590 0 248 255 - 1 9 மணி

Page 16
26 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
கோள்களின் சுற்றுப்பாதை அனைத்துமே ஒரே த ளத் தி ல் அமைந்துள்ளன. எனவே சூரியனையும் சந்திரனையும் போல வே கோள்களும் இராசி வட்டத்திலிருந்து பிறழாமல் சுற்றி வருகின்றன. இராசி வட்டத்திலுள்ள பன்னிரண்டு வி ன் மீன் கூட்டங்களையும் தெரிந்து வைத்திருந்தால் கோள்களை அடையாளம் காண்பது இலகு வாக இருக்கும். சாதாரண கண்களால் பார்க்கக்கூடிய ஐந்து கோள் களும் எப்போதும் பன்னிரண்டு இராசி விண்மீன் கூட்டங்களில் ஒன் றிற்கு அருகில் தான் இருக்கும். རྩ་་་་་་་་་
பன்னிரு இராசி வட்ட விண்மீன் கூட்டங்கள் SIGNS OF THE ZODIAC
1. Guayth - Aries 7. துலாம் - Libra 2, fflanguib -- Taurus 8. Gioid-5a5b - Scorpio 3. LÉggoth - Gemini 9. தனுச் - Sagittarins 4. SL Silb - Cancer 10. மகரம் - Capricornus 5. சிம்மம் - Leo 11. கும்பம் - Aquarius 6. கன்னி - Virgo 12. மீனம் - Pisces
பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு வான் பொருளும் ஒன்றுட னொன்று ஈர்ப்பினால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. 17 ம் நூற்றாண் டில் வாழ்ந்த ஐசக் நியூட்டின் என்பவரே இந்த ஈர்ப்பு விதியைக் கண்டுபிடித்தார். சூரிய மண்டலத்தின் ஒவ்வொரு கோ ஞ ம் இரு இயக்கங்களையுடையன. ஒன்று சுற்றுகை. மற்றது சுழற்சி. கோள் கள் தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின் றன. பிரபஞ்சத்திலுள்ள சூரியனும் அதைப்போன்ற நட்சத்திரங்க ளும் குறித்த ஒழுங்கிலேயே இயங்குகின்றன. சூரியன் ஒரு மு ன்ற தன்னைத் தானே சுற்ற 30 நாட்களாகின்றன. பூமியில் உயிர்களின் இயக்கம் சூரியன் இல்லாவிட்டால் நடைபெறாது. சூரியனிலிருந்து 150 மில்லியன் கிலோ மீற்றர் தூரத்திலிருந்து வரும் சூரிய ஒளியே நேரடியாகவும் மறைமுகமாகவும் பூமிக்குத் தேவையான சக்தி முழு வதையும் கொடுக்கின்றது. வெப்பம், மழைவீழ்ச்சி, காற்றின் இயக் கம், தாவர, விலங்குகளின் பரம்பல் ஆகிய யாவற்றிற்கும் மூலசக்தி சூரியனே. சூரிய குடும்ப எல்லாக் கிரகங்களையும் விடப் பூமி எமக்கு மிக முக்கியமானது. இங்கு மட்டுமே உயிர்கள் வாழ்ந்து கொண்டிருப் பதை நாம் அறிகின்றோம். புவியின் அமைப்பு, வாயு மண்டலம் நீரால் சூழப்பட்ட நீர்க்கோளம், நிலப்பரப்பான கற்கோளம் ஆகிய மூன்று கூறுகளைக் கொண்டுள்ளது. புவி இ ற்  ைற க் கு முந்நூறு சோடி வருடங்களுக்கு முன் தோன்றியிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர். தன்னைத் தானே ஒருமுறை சுற்ற 23 மணித்தியா லம் 56 நிமிடங்கள் எடுக்கிறது. இது ஒரு நாள் எனவும், சூரியனைச் சுற்ற 365 நாட்கள் எடுக்கிறது. இது ஒரு வருட காலம் எனவும்

விநாயகர் தரும நிதியம் 5 ܗܝ அறநெறி 27
அளவிடப்பட்டுள்ளது. புவியைச் சில ஆகாயக்கற்கள், குறுங்கோள் கள் தாக்கியுள்ளன. இனியும் தாக்கலாம். அப்படித் தாக்கினால் அதைத் தடுக்கும் வழிகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார் கள் . 1908 ம் ஆண்டு யூன் 30 ம் திகதி சைபீரியாக் காட்டில் வடமத்திய பகுதியில் ஒரு பெரிய விண்கல் விழுந்ததால் 5,600 சதுர கிலோ மீற்றர் அழிக்கப்பட்டது. ஒரு பெரிய குழியையே ஏற்படுத்தியிருக்கிறது. இவ்வாறான விண் கற்க ள் மற்றும் குறுங்கோள்கள் புவியைத் தாக்கும் சந்தர்ப்பத்தில் அதைத் தவிர்க்க இவ் விண் கல் அல்லது கோள்களின் பாதையை முன்கூட்டியே மாற்ற புவியிலிருந்து அணு ஏவுகணைகளைப் பயன்படுத்தலாம் எனவும் ஆலோசனைகள் தெரி விக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு அருகில் வரக்கூடிய குறுங்கோள்கள் (MINOR PLANETS)
குறுங்கோள் சூரியனைச் சுற்ற எடுக்குங் க்ாலம்
(ஒளியாண்டுகளில்) 1. ஏராஸ் 76 2. sy uprri 2 * 67 3. அப்போலோ 87 4. அடோனிஸ் 2 - 76 5. ஹெர்மெஸ் 1 * 47 6. ஜகாரஸ் 1 * 12
இங்கு ஒளியாண்டு என்பது ஒளியின் வேகத்தை அடிப்படை யாகக் கொண்டு அளக்கப்படும் அலகு ஆகும். தொலைவிலுள்ள கோள்கள், நட்சத்திரங்களின் தூரத்தைக் கணிக்கப் பயன்படும் அலகு ஆகும். சராசரியாக ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 30,00,000Km ஆகும் இந்த வேகத்தில் ஒரு ஆண்டில் ஒளி எவ்வளவு தூரத்தைக் கடக்கிறதோ அந்தத் தூரமே ஒரு ஒளியாண்டு எனப்படும். இவ்வ கையிலே பிரபஞ்சத்திலுள்ள சூரிய குடும்பத்தில் பல்வேறு கோள்கள் குறுங்கோள்கள், விண்கற்கள், எரிகற்கள், வால் நட்சத்திரங்கள், உபகோள்கள் போன்ற பலவகை பொருட் கள் உள்ளன. இவற் றைப் புவியிலுள்ள மனிதர்களின் அறிவு வள ர் ச் சி யா ல் உணர் முடிந்தது. நாம் இப் போது இதை வாசித்துப் பயின்றுகொண்டிருக் கிறோம். இந்த ஒவ்வொரு நொடிப்பொழுதும் புதிய தகவல் கள் 'கிடைத்துக் கொண்டேயிருக்கிறது. மனித அறிவியலின் வளர்ச்சி யால் புவியைப் போன்று இப் பிரபஞ்சத்தில் வேறு கோ ள் களி ல், உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சிகளும் புதிய துறையாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. பழைய காலத்திலிருந்தே மனிதன் வேறு உலகத்தவர்கள் பற்றிய கற்பனைகள் செய்து வந்திருக்கிறான். ஆதிகால இலக்கியங்களில் வேறு உலகங்களிலிருந்து தேவதைகள் வந் தாகக் கூறப்படுகிறது. இன்றும் நாம் அவ்வப்போது பறக்கும் தட்டு கள் பற்றிய பரபரப்புச் செய்திகளையும் கேட்கிறோம்.

Page 17
28 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
1971-ம் ஆண்டு அமெரிக்காவின் ‘அமெஸ்" ஆய்வு மையத் தில் அயல் உலக அறிவுப் பிராணி பற்றிய ஆராய்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பயோனியர், வாஜேயர் போன்ற நெடுந்தூரம் இன்றும் சென்று கொண்டிருக்கும் விண்கலங்களில் எல்லாம் அயல் உ ல க ப் பிராணிகளுக்கான செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன. இச்செய்மதி விண் கலங்கள் சூரிய மண்டலத்தைத் தாண் டி அண்டவெளியில் உள்ள போது எங்காவது அறிவுப் பிராணி வாழும் கோள்களில் இற ங் க நேரிட்டால் அவர்கள் நமக்குப் பதில் அனுப்பலாம். எமது பால்வழி விண்மீன் கூட்டங்களில் மட்டும் இரண்டு இலட்சம் கிரகங்கள் உள்ளன. இவற்றில் எங்காவது உயிர்கள் இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இவ்வாறாக இன்று அயல் உலக அறிவியல் வளர்ச்சியடைந்து வருவ துடன் எல்லோரையும் கவரவும், ஆவலை ஏற்படுத்தவும் ஆரம்பித் துள்ளது.
எமது புவியிலும் பிற கிரக உயிரிகள் பிரவேசித்தமைக்கான பல ஆதாரங்கள் கிடைத்திருக்கின்றன. இவ் ஆதாரங்கள் உண்மை யானவையா என இப்போது தீவிரமாக ஆராயப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் நடைபெற்ற அசாதாரண பிற கிரகத்திலிருந்து புவிக்கு வந்த நிகழ்வுகள் சில கீழே தரப்படுகின்றன. 1989 யூன் 6-ம் திகதி வெலோக்டா பிராந்தியத்தில் வானிலிருந்து சில வாகனங்கள் பூமியில் தரை இறங்கின. இதைப் பாடசாலை மாணவர்களும் வயது வந்த சிலரும் கண்டார்கள். கிராமப் பகுதியில் மஞ்சள் ஒளி தென் பட்டதாகவும், விரைவில் பளபளப்பான ஒரு ப லூ ன் போல் அது காட்சியளித்ததாகவும், வானிலிருந்து தரையில் இறங்கி இரண்டாகப் பிளந்தபோது கரும் உடை அணிந்த ஒரு மனிதர் அதிலிருந்து வெளி வந்தார். தொடர்ந்து மூன்று பலூன்கள் வந்து அதே இ ட த் தி ல் தரையிறங்கின. அதிலும் சில மனிதர் இருந்தனர் என்றும், அவர்கள் மார்பில் பிரகாசமான வட்ட வடிவமான ஒரு பொருளை அணிந் திருந்ததையும் கண்டார்கள். சில நிமிடங்களில் அவை வானி ல் பறந்து மறைந்தன.
1977 - 1978 இலும் பூமியின் சில பாகங்களில் சில நிமிட இடை வேளைக்குள் பிற கிரக வாகனங்கள் அவதானிக்கப்பட்டன. 1981 யூலை 28-ம் திகதி மெட்வெடிட்ஸா நயிெல் சில விசித்திரமான ஒளிக் கற்றைகளை வீசிய பிளம்புகள் புவிக்சருகில் வந்தபோது “பீப், பீப், பீப்" என்ற சத்தமும் கேட்டதாகப் பார்த்தவர்கள் கூறுகின்றார்கள். அக்சு மலையில் ஏறிக்கொண்டிருந்த ஒரு பமீர் மலை ஏறும் குழுவி னர் பிரகாசமான ஒரு பொருளைக் கண்டனர். அது எவ்வித இரைச்ச லுமின்றி மேலே மேலே சென்று கொண்டிருந்தது. ஒரு சில விநாடி ளிகல், அது சிறு நட்சத்திரமாக மாறியதையும் அவதானித்தார்கள்.

விநாயகர் தரும நிதியம் 4 - 3 அறநெறி 29
கம்சட்காவிலுள்ள கினியுசெல்ஸ்கி எரிமலையின் சரிவில் ஒரு புவி யியலாளர் குழு பணியாற்றிக் கொண்டிருந்தது. இருள் சூழ்ந்திருந்த ஆகாயத்தில் திடீரென ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றி நக ராமல் 12 நிமிடங்கள் நின்றதுடன் புவியை நோக்கிச் சில ஒளிக்கதிர் களைச் செலுத்தியது. அப்போது தரையில் சில பகுதிகளில் வெளிச் சம் தென்பட்டது. பின்னர் அப்பிரகாசமான பொருள் ம ைற ந் து விட்டது. இவ்வாறான பற்பல நிகழ்வுகள் நடைபெற்றாலும், இவை வெளிஉலக அறிவியல் உயிரிகள் என ஊகிக்க முடிந்ததே தவிர தெளி வாகக் கூற முழுமையான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனினும் இவ்வெளி உலகப் பிராணிகளின் ச ஞ் சா ர ம் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. விரைவில் இம்மர்மமான அசாதாரணச் செய்திகளை விஞ்ஞானி கள் விடுவிக்க முயன்று கொண்டே இருக்கிறார்கள்.
S262626262636263626252626262526
L) ir O f år (p g Jir
*(*(?:(*(?:(
23. வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர்! - இங்கு
| ovп ழும் மனிதரெல் லோர்க்கும்; பயிற்றி உழுதுண்டு வாழ்வீர்! - பிறர்
பங்கைத் திருடுதல் வேண்டாம்.
24 உட்ன்பிறந் தவர்களைப் போலே - இவ்
வுலகினில் மனிதரெல் லோரும்; திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்கு
தின்று பிழைத்திட லாமோ?
み
வலிமை யுடையது தெய்வம், - நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்;
மெலிவுகண் டாலும் குழந்தை - தன்னை
வீழ்த்தி மிதித்திட லாமோ ?
26. தம்பி ச றே மெலிவானால் - அண்ணன்
4.1 கன மை கொள்ள லாமோ ? செம்பு கும் கொம்புக்கும் அஞ்சி - மக்கள்.
8 டி மைப்பட லாமோ?

Page 18
30 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
5. நிலவை விழுங்கிய அரவம்
LLLLLLLLMLLLLLL LLLLL LLLLL SLLLLLLLAS
சூரியனின் கோள்கள் வரிசையில் முதலில் உபகோளான சந் திரனைக் கொண்டது பூமியே ஆகும். பூமியில் உள்ளவர்களுக்கு அண்ட வெளியில் மிக அண்மையில் உள்ள பொருள் சந்திரனே; குளிர்ந்த நிலா வெளிச்சத்தில் குதூகலிக்காதவர்களே இல்லை எனலாம். இந் நிலவைப் பற்றி எமது புராண இதிகாசங்களிலே பல சு  ைவ ய ஈ ன கதைகள் உள்ளன. இருபத்தி ஏழு நட்சத்திரங்களைத் திருமணம் செய்து கொண்ட சந்திரன் தேய்ந்து வளர்வதற்கும் பல காரணங்கள் கூறப் படுகின்றன. இவ்வாறே சில காலங்களில் சந்திரனின் தீய செயல்களி னால் அரவத்தால் (பாம்பு) விழுங்கப்பட்டதாகவும், பின்னர் மன்னிக் கப்பட்டதாகவும் எமது முன்னோர்கள் கூறுவார்கள். இப்படி பாம்பு சந்திரனை விழுங்கும் காலம் பயங்கரமானது, அபாயங்கள் ஏற்படும் எனவும் அஞ்சினார்கள். இக் காலத்தைக் கிரகண காலம் என்றும் அழைத்து வந்தார்கள்.
மக்கள் அஞ்சியதற்குச் சில விஞ்ஞானக் காரணங்கள் உள்ளன. ஆனாலும் இவர்கள் நம்பியது போல் சந்திரனை விழுங்கியது பாம்பு அல்ல. பூமியானது சந்திரனுக்கும் சூரியனுக்குமிடையே நேர் கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுகிறது. அப்போது சந் திரனின் உருவம் முழுவதும் அல்லது அதன் ஒரு பகுதி படிப்படியாக மறைந்து பின்னர் விடுபடும். இதுவே சந்திர கிரகணமாகும். இவ் வாறான பூமியின் நிழலையே முன்னையோர் பாம்பு எனக் கருதியிருக் கிறார்கள். சூரிய குடும்பத்தில் சூரியனுக்கே சுயமான ஒளி உண்டு. ஏனைய கோள்களும், உபகோள்களான சந்திரன்களும் சூரியனின் ஒளி யையே பிரதிபலிக்கின்றன. நேர் கோட்டில் செல்லும் ஒளிக்கதிரை ஏதும் பொருட்கள் தடை செய்யுமானால் பொருளினுடைய மறு புறத்தில் அதனுடைய நிழல் ஏற்படுகிறது. இந்த நிழல்படும் பகுதியில் இருப்பவர்களுக்கு ஒளியைப் பிரகாசிக்கும் கோள்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறே கிரகணங்கள் தோன்றுகின்றன;
பூரணை நாட்களிலேயே சந்திரகிரகணம் ஏற்படுகிறது. எனினும் ஒரு மாதத்திற்கு ஒரு முறை பூமியைச் சுற்றும் சந்திரனில் ஏன் ஒவ் வொரு பூரணை நாட்களிலும் கிரகணம் ஏற்படுவதில்லை எனவும் ஆராயலாம். சந்திரன் பூமியைச் சுற்றும் பா  ைத யின் தளம் பூமி சூரியனைச் சுற்றும் பாதையின் தளத்துடன் 5° கோண வேறுபாடு கொண்டுள்ளது. அத்துடன் பூமி சூரியனைச் சுற்றும் போது, சந்திரன் பூமியைச் சுற்றும் பாதை அவற்றிற்குச் சமாந்திரமாவே அசைகின்றது.

விநாயகர் தரும நிதியம் 6 அறநெறி 3.
இதனால் சூரியன், பூமி, சந்திரன் ஆகியவை ஒரே நேர் கோட் டி ல் தொடர்ந்து வருவதில்லை. பூமி குறிந்த பூரணை நாளில் சூரியனுக் கும், சந்திரனுக்கும் இடையில் நேராக மத்தியில் வரும். அப்போது பூமியின் நிழல் சரியாகச் சந்திரனின் மீது விழுவதால் ச ந் தி ர ன் மறைக்கப்படுகிறது. இந்த கிரகண நிகழ்வை புவியில் சந்திரன் தோன் றும் எல்லாப் பகுதிகளிலும் காணலாம். இச்சந்திர கிரகணம் சரியாக ஒன்றே முக்கால் மணி நேரம் நீடிக்கும். சந்திரகிரகணம் தோன்றும் காலங்களில் கடல் பெருக்கு ஏற்படுகிறது. சூழலில் சில அசாதாரண நிகழ்வுகளும் ஏற்படுகிறது. இதற்குக் காரணம்; சந்திரன், பூமி, சூரி யன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருவதால் ஈர்ப்புவிசை மிகவும் கூடுதலாகின்றது. புவியின் நிலப்பகுதி கடுமையாக இருப்பதால் நீர்க் கோளமான கடல் பொங்கி எழுகின்றது. சந்திரனினதும், சூரியனின. தும் ஈர்ப்புவிசை அதிகரிப்பதால் இது நிகழ்கின்றது.
சந்திர கிரகணம் இனித் தோன்ற இருக்கும்
காலங்கள்:
ஆண்டு மாதம் திகதி ഖഞ8
1994 மே 25 பாதி கிரகணம் 1995 ஏப்ரல் 15 பாதி கிரகணம் I 996 ஏப்ரல் 7 04 முழுக் கிரகணம் 1996 Golf li li li turi 27 முழுக் கிரகணம் 1997 மாச் 24 பாதி கிரகணம் 1997 செப்டம்பர் 6 முழுக் கிரகணம் 1999 யூலை 28 பாதி கிரகணம் 2000. ஜனவரி 21 முழுக் கிரகணம்
ஒரு வருடத்தில் சந்திரனும் பூமியும் இணைந்து ஒரு முறை சூரியனைச் சுற்றுகின்றன. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஒரே நேர் கோட்டில் வரும். அப்போது சூரிய ன் முழுவதுமோ அல்லது அதன் ஒரு பகுதியோ பூமியிலுள்ள சில பகுதிகளில் உள்ள வர்களுக்குத் தெரியாமல் போகும். இவ்வாறு சந்திரன் மறைக்கும் போது சூரிய கிரகணம் (Solar Eclipse) உண்டாகிறது. சூரிய கிர கணம் அமாவாசையின் போது தா ன் ஏற்படுகிறது இக்காலத்தில் சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் மையத்தில் இருக்கிறது. இச்சமயம் இவை மூன்றும் ஒரே தளத்தில் இருந்தால் நிலவினுடைய நிழல் பூழி யில் விழும் பகுதியில் சூரியன் மறைக்கப்பட்டு கிரகணம் தோன்று கிறது. இச்சூரிய கிரகணம் புவி முழுவதும் தெரிவதில்லை. 250 கிலோ மீற்றர் அகலமும் 10,000 கிலோ மீற்றர் நீளமும் கொண்ட பகுதியில்" கிழக்கு மேற்காகவே இது தோன்றும். முழுச் சூரியகிரகணம் ஏனைய கோள்களில் அல்லாமல் புவியில் மட்டுமே தோன்றுவது ஒரு சிறப் பியல்பாகவுள்ளது. இது பூமி அமைந்துள்ள இட அமைவாலேயே ஏற்

Page 19
32 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
பட்டுள்ளது. கிரகணத்தின்போது சூரியன் முற்றிலும் மறைக்கப்படு: நேரம் ஆகக் கூடியது 7 நிமிடங்கள் 58 செக்கன்கள் ஆகும். சந்திரகிர கணத்தை விடச் சூரிய கிரகணத்தின்போது விஞ்ஞானிகள் பல ஆய்வு சளைச் செய்துள்ளார்கள். பல்வேறு வானிய ஆய்வுகளுக்கு இக் காலம் வரும் வரை விஞ்ஞானிகள் காத்திருக்கின்றார்கள்.
சூரிய கிரகணம் இனித் தோன்ற இருக்கும் காலங்கள்
வருடம் மாதம் திகதி assis
1994 மே 10. முழுக் கிரகணம் 1994 நவம்பர் 03 முழுக் கிரகணம் 1995 ஏப்ரல் 29 பாதிக் கிரகணம் 1995 ஒக்டோபர் 24 முழுக் கிரகணம் 1996 ஏப்ரல் 17 பாதிக் கிரகணம் 1996 ஒக்டோபர் 12 பாதிக் கிரகணம் 1997 Dmitri aj 09 முழுக் கிரகணம் I997 செப்டம்பர் O பாதிக் கிரகணம் 1998 பெப்ரவரி 26 முழுக் கிரகணம் 1998 ஆகஸ்ட் 22 பாதிக் கிரகணம் 1999 பெப்ரவரி 6 பாதிக் கிரகணம் 1999 ஆகஸ்ட் முழுக் கிரகணம் 2000 பெப்ரவரி 05 பாதிக் கிரகணம் 2000 யூலை Ol பாதிக் கிரகணம் 2000 யூலை 3. பாதிக் கிரகணம் 2000 டிசம்பர் 25 பாதிக் கிரகணம்
சூரிய கிரகணத்தைச் சாதாரண கண் களால் பார்த்தால் பார்வை கெட்டுவிடும். எனவே புகையூட்டிய கண்ணாடியால் பார்த் தால் பாதுகாப்பாக இருக்கும். முழுமையான சூரியகிரகணம் சிறிய நேரத்தில் நடைபெறுகின்றது. என்றாலும் இதனால் பல வியப்பூட்டும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. சூரிய கிரகணத்தின் போது சூரியன் திடீரென மறைகிறது. உடனே பறவைகளும் ஏனைய விலங்குகளும் மாலை நேரம் கடந்து இருள் சூழ்ந்து விட்டதாக எ ண் ணி த் தம் இருப்பிடங்களை அடையும். ஆனால் சில நிமிடங்களில் சூரியன் தென் படஎல்லா உயிரிகளும் சத்தங்களை இட்டுக் கொண்டு மீண்டும் இரை தேடிப்புறப்படும். சூரிய குடும்பத்தின் வெள்ளி, புதன் ஆகிய கோள் களும் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் வரும் போது சூரிய  ைன முழுமையாக மறைக்காது, கரும்புள்ளியாகக் கடந்து செல்லும். இவ் வாறான நிகழ்வை டிரான்ஸிட் (Transit) எனக் கூறுவர். பு தன் கிரகத்தீன் டிரான்ஸிட் 1993 நவம்பர் மாதம் ஏற்பட்டது. இனி 1999ம் ஆண்டு நவம்பர் 15ல் ஏற்பட இருக்கிறது. இவ்வாறே வெள்ளிக் கிரகத்தின் அடுக்க டிாான்விட் 2004 ம் அண்டில் ஏற்பட இருக்கின்றது

விநாயகர் தரும நிதியம் 6 கொ ம்ச்ச்ே
6. அணுசக்தியின் ஆதுலகம்
LLLLLLLLLLcLLLLLLLLLcLLLL V VWM
உலகளாவிய ரீதியில் இன்று அணுசக்திபற்றித் தெரியாதவர்களே இல்லை எனலாம். இவ் அணுசக்தி என்ற உடனேயே அழிவுகள் தான் எம் மனதில் நிழலாடுகின்றன. என்றாலும் கூட பெருமளவு ஆக்கப் பணிகளுக்கு அணுசக்தியை உபயோகிக்கும் விழிப்புணர்வுகளும் செயற் திட்டங்களும் நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றன . எரிபொருள் சக்தி வளத்திற்கு மாற்றீடாக அணு ஆற்றலைக் கொண்டு பெருமளவு மின் சக்தியைப் பிறப்பாக்கும் அணு உலைகளின் பயன்பாடும் அதி கரித்துள்ளது. அணு உலைகளில் 1000 கிராம் யூரேனியத்திலிருந்து பெறக்கூடிய அணு ஆற்றல் சக்தி 2000 டன்கள் நிலக்கரியின் ஆற்ற லுக்குச் சமமாகும். எனவே உற்பத்திச் செலவு குறைந்த, பெருமளவு பொருளுற்பத்தி பெறக்கூடிய வழியாக அணு சக்தித்துறை உள்ளது.
இரண்டாம் உலகப்போர் ஆரம்பமாகி கடுமையாக நடந்து கொண்டிருந்தது. பிரித்தானிய ஆதிக்கத்திலிருந்த இலங்கையில் 1942ம் ஆண்டு ஏப்ரல் 5 ம் திகதி கொழும்பிலும், 7 ம் திகதி திருகோண மலையிலும் யப்பானிய குண்டு வீச்சு விமானங்கள் குண்டுகளை வீசின. யப்பான் நாடு பெரும் முடிவுறாத யுத்தத்தில் ஈடுபட்டு உலக நாடு களையே தாக்கியது. 1941 ல் அமெரிக்காவின் பேள் துறைமுகத்தையும் யப்பான்ய விமானங்கள் குண்டுகளை வீசி நாசமாக்கின. இந்த யுத் தத்தில் ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகள் அடக்கப்பட்டாலும் 2 ம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு காரணம் அணுகுண்டே யாகும். அமெரிக்கா 1945 ம் ஆண்டு ஆகஸ்ட் 6 ல் ஹிரோஷிமாவிலும், ஆகஸ்ட் 9 ல் தொழில் நகரான நாகசாகியிலும் அணுக்குண்டுகளை வீசியது.
இக்குண்டுகள் தரை மட்டத்திலிருந்து 700 மீற்றர் உயரத்தில் வெடித்துச் சிதறின. அவ்விரு அழகி ய நகரங்களும் முழுமையாகச் சீரழிந்தன. வீடுகள் கட்டடங்கள் சாம்பலாகின, ஒரு லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்கள் இறந்தார்கள், 75,000 பேரைக் காண வில்லை. பல ஆயிரம் பேர் கதிர் வீசலுக்கு இலக்காகிக் காயமுற்றனர். இப்பேரழிவுடன் யப்பான் நாடு சரணடைந்தது. 2 ம் உ ல கப் போர் முடிவுற்றது. இன்றும் இம் மாபெரும் அணுக்குண்டு அழிவு எல்லோ ரையும் திகைக்க வைக்கிறது. பல ஆண்டுகள் சென்றும் புல் பூண்டு கள் முளைக்காத பாழ்நிலமாகக் காட்சியளிக்கின்றன ஹிரோசீமாவும், நாகாசாகியும், 2 ம் உலக யுத்தத்தின் பின் அணுக்குண்டு பயன்படுத்த வில்லை என்றாலும் கூட அமெரிக்கா, ரஸ்யா, பி ரா ன் ஸ், சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அணுகுண்டுப் பரிசோதனைகளை நடாத்தி

Page 20
34 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
யுள்ளன. இரகசியமாகப் பல நவீன அணு ஆயுதங்களும் ஏவுகணைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உலகின் ஏனைய பல நாடுகளும் அணு ஆயுத உற்பத்தியில் ஆர்வம் காட்டுகின்றன. எனினும் அணு சக்தியை ஆக்க சக்தியாகப் பயன் படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு உலகின் எல்லா மக்களிடையே இருந்தும் எழத் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வுத்திட்டங்களுக்கு சக்தி வளத்தைப் பெறவும், அணு சக்தியைப் பயன்படுத்தும் திட்டங்கள் தற்போ து விரிவாகி வருகின்றன. ரஸ்யாவில் கஸ்பிரியன் கடலின் கிழக்குக் கரையில் மிக வரண்ட பாலை நிலத்தில் ஷெவ்சேன்கோ என்ற நகரம் உள்ளது, மிக மிக வரண்ட வெப்பமான காலநிலைச் சூழலில் இந்த நகரம் செழிப்பாகப் பச்சைப் பசேல் என்று காட்சியளிப்பது வியப்பாக உள்ளது. உப்பு நீர் கொண்ட பாலை நிலத்தில் பசுந்தரையா! வியப்புத்தான். ஆனால் உண்மை. அங்கே பெரிய மரங்களும் அழகான சோலைகளும் உள்ளன, அதிசய மாகவே உள்ளது. V
இது இயற்கையின் இயல்பு அல்ல, மனிதர்களின் சாதனையே ஆகும் ஷெவ்சேன்கோ நகரில் அணு மின்சார நிலையம் இருப்பதால் தான் இது நடக் கிற து. இந்த அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சக்தி முழுவதும் உப்பு நீரை நன்னீராக மாற்றுகின்ற பாரிய தொழிற்சாலைக்குக் கிடைக்கிறது. இந்த நகரத் துக் குத் தேவையான முழுநீரும் இத் தொழிற்சாலையிலிருந்து உற்பத்தி செய் யப்படுகிறது. உப்பு நீரை நன்னீராக மாற்றிப் பயன்படுத்தும் முறை மிக எளிமையானதே. உப்பு நீரைக் கொதிக்க வைத்து அதிலிருந்து வெளிவரும் நீராவியை ""கண்டென்சர்கள்? எனப்படும் நுண் சிறப்பு வாய்ந்த தாங்கிகளில் சேகரித்து குளிர விடப்படும் போது சுத்தமான நன்னீர் கிடைக்கின்றது. இது மக்கள் குடிப்பதற்கும், துணிகஒைாத் துவைப்பதற்கும், பூங்காக்கள் பயிர் வகைகளுக்குப் பாய்ச்சவும் பயன் படுகின்றது. இவ்வாறு வளங்கள் அற்ற ஒரு பாலைவனப் பகுதியில் இயற்கையின் எழில் பூக்கும் சோலைகள் உருவாக அணுசக்தியே பயன் படுத்தப்படுகிறது. இன்று ஏனைய பல நாடுகளில் இருந்தும் விஞ் ஞானிகள் ஷெவ்சேன்கோ நகரம் சென்று பார்த்துத் தமது நாடுகளி லும் இவ் வா றாக உருவாக்க முனைந்து கொண்டிருக்கிறார்கள். துருவப்பகுதிகளினூடாகப் பிரயாணம் செய்யும் கப்பல்களுக்கு பனிக் கட்டிகள் இடையூறு செய்கின்றன. இவ்வாறான இடங்களில் பனிக் கட்டிகளை உடைத்துப் பிரயாணம் செய்யக் கூடிய அணுசக்திக் கப் பல்தள் இப்போது பாவனைக்கு வந்து விட்டன. அத்துடன் அணு ஆற்றலால் இயங்கும் நீர் மூழ்கிக் கப்பல்களும் பெருமளவு பயன்படுத் தீப்பட்டு வருகின்றன.
நவீன கைத்தொழில் விஞ்ஞான மருத்துவத் துறைகளில் அணு சக்தி சிறந்த முறையில் பயன்படுகிறது. பல கைத்தொழிற்சாலைகளை இயக்கும் மின்சக்தி அணுசக்தியிலிருந்து பெருமளவு பிறப்பிக்கப்படு

விநாயகர் தரும நிதியம் 5 அறநெறி 35
Vhwww mik
கிறது. இவ்வாறாக இன்றைய உலகில் அணுசக்தி வளம் அமைதிப் பாதைக்கும் ஆக்கப்பயன்பாடுகளுக்கும் உதவும் அற்புதச் சக்தியாகத் திகழ்கின்றது. 19 ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தால்ற்றன் என்ற விஞ்ஞானி மூ லக ங் கள் என்ற கருத்தையும், சடப் பொருட்களின் துணிக்கைக் கொள்கையையும் ஒன்று சேர்த்து அணுக்கொள்கையை அறிமுகம் செய்தார். எல்லா வகையான சடப்பொருட்களும் மிக நுண் ணிய துணிக்கைகளால் ஆனவை. இத்துணிக்கைகளே அணு என்று கூறினார். இவ்வாறான அணுக்களாலேயே மூலகங்கள் ஆனவை உலகி லுள்ள எல்லாச் சடப்பொருட்களும் ஏறத்தாழ நூற்றிஐந்து மூலகங் களால் ஆக்கப்பட்டுள்ளன. ஒரு மூ ல கத் தி ன் அணுக்கள் யாவும் எல்லா வகையிலும் ஒன்றை ஒன்று ஒத்தவையாக உள்ளன. உலகிலே பெரும்பாலும் மூலகங்கள் வேறு மூலகங்களுடன் இணைந்து சேர்வை களாகவே உள்ளன. இங்கு நாம் கூறும் அணு என்னும் மிகச் சிறிய துணிக்கையின் கருவில் புரோத்திரன்களும், நியூத்திரன்களும் இருக்க கருவைச் சுற்றி இலத்திரன்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. ஜேர் மனிய விஞ்ஞானிகள் வியப்புக்குரிய ஒன்  ைற க் கண்டு பிடித்தனர். அணுவின் கருவில் உள்ள நியூத்திரன்களால் யூரேனியம் என்ற மூல கத்தின் அணுக்கருவைத் தாக்கினால் யூரேனியா அணுக்கரு சம இரு கூறாகப் பிரிவதுடன் அளவு கடந்த சக்தியையும் வெளிப்படுத்துகிறது என்ற பரிசோதனை முடிவை வெளியிட்டனர்.
இந்தச் சோதனை முடிவுகள் புகழ்பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஐன்ஸ்ட்டீனுக்குத் தெரிவிக்கப்பட்டன. சோதனை அடி ப் ப  ைட ஆய்வுகளைக் கொண்டு பயங்கர வெடி குண்டான அனுகுண்டைத்/ தயாரிக்க முடியும் என்பதை ஐன்ஸ்ட்டீன் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிவித்தார். ஜனாதிபதியும் அணுக்குண்டைத் தயாரிக்க ஒப்புதல் வழங்கினார். வேலைகள் ஆரம்பமாகின. 1940 ல் என்ரிகோஃபெர் மின் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு வேலைகளைத் தொடங் கின. 1942 ல் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான்களின் குழு வினரால் அணுக்கருப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட் டது. தொடர்ந்து அணுக்குண்டை விட ஐ த ர சன் குண்டு சுமார் ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கது. இ  ைத விட ச் சக்தி வாய்ந்த கோபால்ட் குண்டுகளும் இன்று தயாரிக்கப்பட்டுள்ளன.
தற்போது மனிதன் அழிவுப் பாதையை விட்டு ஆக்க வழியில் அணு சக்தியைப் பயன்படுத்த முனைகிறான். அணுக்கருவில் அடங்கி யிருக்கும் ஆற்றலை ஒரு வெடிப்பின் மூலம் பாழாக்காமல் அதை அடக்கி மனித குல மேம்பாட்டுக்காக நெறிப்படுத்தலாம். இவ்வாறு ஆற்றலை நெறிப் படுத் தும் அ  ைம ப் பை அணுஉலை என் பர். இன்று சிறியவகை அணுஉலைகள், கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல் *ளுக்கும், பெரிய அணு உலைகள் மூலம் மின்சாரம் வெப்பசக்தி பெற

Page 21
36 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
வும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வாறான அணுஉலை அமைப்புக் கள் மிகப்பாதுகாப்பாகவே தயாரிக்கப்படுகின்றன. ஏதும் விபத்துக் கள் ஏற்பட்டால் பேரழிவுசஞக்கு ஏதுவாகலாம். உயிரினங்களுக்கு மிகக் கொடிய பெரிய தாக்கங்களும் ஏற்படும். இவ்வாறு சிறு சிறு அணுஉலைக் கசிவுகள் ஏற்கனவே ஏற்பட்டு தாக்கங்களும் நிகழ்ந்துள் ளது. இவ்வாறு நிகழ்ந்த மிகப் பெரிய தாக்கம் சோவியத் ரஸ்யா வில் நிகழ்ந்தது. 1986 ஏப்ரல் 20 ம் திகதி அதிகாலை 1 24 மணி யளவில் செர்னோபில் அணுசக்தி உலையில் ப யங் க ர வெடிப்புகள் ஏற்பட்டன. இவ் அணுஉலை வெடிப்பின் போது 500 தொன் எடை யுள்ள கொங்கிறிற் பாதுகாப்புத் தகடுகள் வானில் தூக்கி வீசப்பட் டன. கதிர் வீச்சு மூலப்பொருட்களான செஸியம் - 37, புளூட்டோ னியம் - 239, ஸ்தோத்தியம் - 90 போன்றவை காற்றி ல் பரவின. கரும் நச்சுப்புகை முகில்களுடன் கூடிய இராட்சத நெருப்புப் பந் தொன்று வானை நோக்கி எழுந் த து. ஹிரோஷிமாவில் போட' பட்ட அணுக்குண்டை விட பத்துமடங்கிற்கும் அதிகமான அழிவுச் சக்தி வாய்ந்த இந்த மரண முகிலை காற்று வடமேற்குத் திசையாக நகர்த்திச் சென்றது. இதனால் ரஸ்யாவிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் பீதி ஏற்பட்டது. ஆபத்தான வலயத்திலிருந்து 1, 16, 000 மக்கள் அகற்றப்பட்டனர். 6, 00, 000 மக்கள் இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டார்கள். 1989 ம் ஆண்டின் பிற்பகுதியில் கூட 145 பேர் கூரிய கதிர் வீச்சு நோயினால் பீடிக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
எனவே அணுசக்தியைப் பயன்படுத்துவது மிக அவதான மாகவே மேற் கொள்ளப்பட வேண்டும். புதிய தொழில் நுட்பக்கண்டு பிடிப்புகளால் அணுசக்தியைப் பயன்படுத்தும் போது அதிக, மேலதிக பாதுகாப்புக்கள் வழங்கும் ஏற்பாடுகள் விரிவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது செர்னோபில் அணு விபத்துக்கதிர் வீசலின் பாதிப்புக்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கதிர் வீசலினால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொருட்கள் பிரமாண்டமான கொங்கிரீட் புதை குழிகளில் போட்டு மூடப்பட்டுள்ளது. வழமையான நிலைக்கு மக்கள் திரும்பி விட்டார்கள். அணு ஆலை மீண்டும் இ கத் தொடங்கி விட்டது. மனித ஆரோக்கியத்திற்குத் தற்போது எது வித பாதிப்புக்களும் இல்லை என்று மருந்துவ நிபுணர்கள் கூறுகின்
f7f7 9.5GT. v
ua 73cua (faöv és 3337.j ut9”i
தர்மமே வெல்லுமேனும் சான்றோர்சொல் பொய்யா மோ? கர்ம விளைவுகள் யாம் கண்டதெலாம் போதாதோ? 4. மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும் நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ? 5
sy {

விநாயகர் தரும நிதியம் 5 - 3 அறநெறி 37
26. 7. மின்சக்தி கிடைக்கும் வழிகள்
இன்றைய உலகின் பொருளாதார சமூக வளர்ச்சிக்கு சக்திப் பாவனை மிக அவசியமாகவுள்ளது. இச்சக்தியை உயிர்ச்சக்தி, உயிரில் சக்தி எனப் பிரிக்கலாம். மனித மற்று ம் மிருகங்களின் உழைப்பு மூலம் உயிர்ச்சக்தியையும், நிலக்கரி பெற்றோலியம் ஏனைய சக்தி வளங்களை உயிரில் சக்தி என்றும் வகைப்படுத்தலாம். நவீன விஞ் ஞான தொழில்நுட்ப வளர்ச்சிகளில் மனித வின் சக்தி வளங்களைச் சிக்சனமாகப் பயன்படுத்துவதுடன், மாற்றுச் சக்தி வளங்களைப் பயன் படுத்தவும் முயற்சி செய்து வருகின்றான். இன்றைய உலகில் சூழல் பாதுகாப்பிற்குப் பங்கம் விளைவிக்காத சிறந்த சக்தியாக மின்சக்தி தொடர்ந்து பயன்பட்டு வருகிறது. அத்துடன் மலிவாக அதிக அள வில் இம் மின்சக்தியைப் பெறும் முறைகள் நடைமுறைக்கு வந்து விட்டன. w
நெடுங்காலத்திற்கு முன்பே மனிதன் மின்சாரம் பற்றிய அறி வைப் பெற்றிருந்தான். கிறீஸ்துவுக்கு 600 ஆண்டுகளுக்கு முன் கிரேக் கர்கள் ஆம்பர் தடித்துண்டை பட்டுத் துணிமீது தே ய் த் த போது ஆம்பர் தடித்துண்டு காந்த மயமாகி சில சிறு பொருட்களைக் கவர்ந் தது. இதை விஞ்ஞான ரீதியில் கி. பி. 1600 ம் ஆண்டு காலப்பகுதி யில் ஆராய்ந்த வில்லியம் கில்பெர்ட் என்பவர் ஆம்பர் சிறு தடிகள் போல கண்ணாடி, கந்தகம் போன்றவற்றைப் பட்டுத் துணியால் தேய்க்க அவற்றின் மீதும் சிறு துணிக்கைகள் ஒட்டிக் கொள்வதைக் கண்டார். இவ்வாறு பல ஆய்வுகளைச் செய்த வில்லியம் கில்பெர்ட் இப்பொருட்கள் மின்சாரக் கா ந் த மயமாகின்றன எனக்கூறி, மின் சாரத்திற்கு 'எலெக்ட்ரிசிடி? (ELECTRICITY) என்ற சொல்லை முதல் முதல் பயன்படுத்தினார். அச் சொல் எ ல க் ரோ ன் என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. கிரேக்க மொழியில் எலக் ரோன் என்பதற்கு ஆம்பர் என்று பொருள்படும். பேராசிரியர் லூகி கல்வாணி 1789 ம் ஆண்டு காலப்பகுதியில் ஒரு தவளையை வெட்டி பரிசோதித்துக் கொண்டிருந்த பொழுது அவர் உபயோகித்த இரு உலோகத் தகடுகள் தவளையின் ஒரு நரம்பில் பட்டபோது அதிர்ச்சி யினால் உதைப்புக்குள்ளாகின. இதை உணர்ந்த பேராசிரியர் கல் வாணி த வ  ைள யி ல் மின் சா ர ம் இருப்பதாக க ரு தி னா ர். இதை இத்தாலிய விஞ்ஞானி அலெஸ்ஸான்நோவேல்டா எதிர்த்து!" இரு வேறுவகையான உலோகங்களை சில குறித் த ஊடகங்களில் வைத்தால் மின் சா ர ம் உருவாவதை செய்து காட்டி னா ர். தொடர்ந்து இவர் பல பரிசோதனைகள் மூலம் வேல்டா கலத்தை "ருேவாக்கினார். இவ்வாறாக முதலாவது மின்சார பட்டறி உருவா

Page 22
38 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
னது. இது வேல்டா கலம் எனப்பட்டது. இதன் பின் அடுத்தடுத்து பல வளர்ச்சிப் படிகளில் மின் கலங்கள், உருவாகின. சிறிய அளவான மின்சாரத்ண்தப் பெற இவ்வாறான கலங்கள் உதவுகின்றன. இன்று சிறந்த முறைகளில் உலர் மின்கலங்களாகப் பயன்படுத்தப்பட்டு, பல் வேறு பொருட்களை இயக் கும் சாதனங்களாக இவை உள்ளன். 1820 ல் டென்மார்க் நாட்டு விஞ்ஞானி ஹன்ஸ்ஒர்ஸ்ட்டேட் என்ப வர் இரும்புத் துண்டைச் சுற்றி மின்னைப் பாய்ச்சும் போது அவ் இரும்புத் துண்டு காந்தமயமாவதையும் மின் பாய்ச்சுதல் நிறுத்தப்பட் டால் இரும்புத் துண்டு காந்தத் தன்மையை இழப்பதையும் கண்டு பிடித் சார். இதன் பின்னர் மின்சாரத்தைத் தொடர்ச்சியாகப் பெரு மளவில் பெற பல முயற்சிகள் நடைபெற்றன.
மைக்கல் பரடே என்ற 13 வயது இரும்புக் கொல்லரின் மகன் விஞ்ஞானத் துறையில் ஈடுபட்டான். புகழ் பெற்ற லண்டன் நகர விஞ்ஞானி ஹம்ப்ரி டேவி என்பவருடைய ஆதரவு பெற்று விஞ்ஞா னத்துறையில் ப ர டே முன்னேறினார். பரிசோதனைச் சாலையில் படிப்படியாகப் பல ஆய்வுகளை நிகழ்த்தினார். கப பிச் சுருளில் மின் சாரம் பாய்ச்சப்பட்டால் காந்தத் தன்மை உருவா கி றது என்ற ஓர்ஸ்ட்டேடின் கண்டு பிடிப்பைத் தொடர்ந்து காந்தத்தினால் மின் சாரத்தை உருவாக்கலாமா எனச் சிந்தித்துப் பல செயல்களில் ஈடுபட் டார் மைக்கல் பரடே, காந்தத் துண்டு ஒன்  ைற க் கம்பிச் சுருள் களுக்கிடையில் வைத்தார். அவர் எதிர்பார்த்தபடி மின்சாரம் வர வில்லை. காந்தத்தை மெதுவாக இயக்கினார் மின்சாரம் உருவானது. காந்தத்தை வேகமாக இயக்க அதற்கேற்றபடி மின் ஆற்றல் அதிக மாகியது. இதை அடிப்படையாகக் கொண்டு பரடே முதன் முத லாக டைனமோவை உருவாக்கினார். வேகமாக இயங்கும் நீர் வீழ்ச் சியின் உதவியுடன் சக்கரத்தை இணைத்து டைனமோவைச் சுழிலச் செய்து மின்சாரத்தைப் பெருமளவு உற்பத்தியாக்கிக் காட்டினார்.இந்த டைனமோக் கண்டு பிடிப்புடன் ஒரு மின்சாரப் புரட்சியே ஏற்பட்டது. புவியிலே மலைகளில் இருந்து ஆறுகள் விரைவாக, வேகமாகப் பாய்கின்றன. இவ்வாறு மலைகளுக்கு நீர் எவ்வாறு சென்றது என நோக்கினால் சூரிய ஒளியின் வெப்பத்தால் மண், தாவரம், குளம், கடல், சமுத்திரம் ஆகியவற்றிலிருந்து சராசரியாக ஒரு நிமிடத்திற்கு ஒரு பி ல் லியன் டன் நீர் நீராவியாக மாறி மேலே செல்கின்றது. நீராவி காற்று மண்டலத்துடன் இணைந்து குளிர்வடைந்து மழை யாகப் பூமியில் பெய்கிறது. இவ்வாறு பெய்யும் மழை நீரோட்டங் களாக, ஆறுகளாக நீர் வீழ்ச்சிகளாக உருவாகின்றன. இவற்றின் விசையைக் கொண்டு பெருமளவான சக்கரங்கள் மூலம் டைனமோக் களை இயக்கி பெருமளவு நீர் மின்சாரம் பெறப்படுகிறது. இவ்வாறு நீரோட்டத்தின் ஆற்றலைக் கொண்டு மலிவாகப் பெருமளவு மின்சா ரம் இன்று உற்பத்தியாக்கப்படுன்றன.

விநாயகர் தரும நிதியம் 12 அறநெறி 39
உலகின் மிகப் பெரிய நீர் வீழ்ச்சி நயக்கரா ஆகும். கனடா வுக்குச் செல்வோர் அனைவரும் அதைப் பார்க்காமல் திரும்பமாட் டார்கள். குறித்த மூன்று மைல் தூரத்துக்குள் அதன் வீழ்ச்சி 216 அடியாக இருந்து எல்லோரையும் வியக்க வைத்து பிரமாண்டமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நீர் வீழ்ச்சியில் இருந்து ஒரு மணி நேரத்தில் 25 கோடி டன்" நீர் வெளியேறுகிறது. இதிலிருந்து 50 லட்சம் குதிரைத்திறன் மின்சாரம் பெறப்படலாம். இன்று இப்பிர தேசம் கைத்தொழிற்துறையில் முழுமையாக நீர்மின்சாரத்தைப் பயன் படுத்தி வளர்ச்சியடைந்து வருகின்றது. இலங்கையில் 1949ம் ஆண்( கல்லோயா நீர்மின் திட்டம் 1-வது பலநோக்கு அபிவிருத்தித் திட்டமா உருவாக்கப்பட்டது. இதனுடன் லக்சபானா, மவுசா கலை நீர்மின்திட டங்சளும், இறுதியாக மகாவலி அபிவிருத்தித் திட்டம் மூலம் பெரு மளவு மின் வலுவைப் பெறும் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன மகாவலி அபிவிருத்தித் திட்டம் விவசாயம், நீர்ப்பாசனம் போன்ற வற்றுடன் நீர்மின்வலு உற்பத்தி அதனூ டா க கைத்தொழில் வளர்ச்சி என்ற பல நோக்கு அபிவிருத்தித் திட்டமாக மிளிர்கிறது
இலங்கை வெளிநாட்டு தொழில்நுட்ப, மூலதன உதவிகளுடன் இத் திட்டத்தை நடைமுறைப் படுத்துகின்றது. பன்முகப்படுத்தப்பட்ட மகாவலித் திட்டத்தில் கொத்மலை, விக்ரோறியா, ரந்தனிகலை ஆகிய நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு முறையே, சுவீடன், பிரித்தானியா, ஜேர்மனி ஆகிய நாடுகள் உதவி வருகின்றன. இவ் வாறாக இலங்கை எதிர்காலத்தில் செலவு குறைந்த நீர்மின்சாரத்தின் மூலம் தனது பொருளாதாரத்தை வளர்க்கக் கூடியதாக இருக்கும். இன்று நீர் வலுவுடன், அணு சக்தி, சூரிய சக்தி, காற்றின் சக்தி, கடல் அலையின் சக்தி ஆகியவற்றின் மூலம் மின்சாரத்தைப் பெறும் முறைகள் உலகின் பல பாகங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாகக் கடல் வளம் கூடிய எமது நாட்டில் கடலலைக்ளைக் கொண்டு மின்சாரத்தைப் பெறுவது இலகுவானதாகக் கருதப்படுகிறது.
அலை கடலிலிருந்து மின் சக்தியைப் பெறும் முயற்சி 19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் முதல் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் வர்த்தக ரீதியில் இது இன்று முழுமை பெற்று வருகிறது. வளியின தும்,கடலின் மேற்பரப்பினதும் கூட்டுச் செயற்பாட்டுச் சக்தியே கடல் அலையிலிருந்து கிடைக்கிறது. கடல் அலைச் சக்தி அராபியக் கடல் வங்காள விரிகுடா ஆகிய இட ங் களி ல் அதிகம் பெறக்கூடிய தாகவுள்ளது. ஷெஸ் (CESS) என்ற கடல் சார் அறிவியல்கள் பிரி வின் தலைவரான டாக்டர் பா பா வின் கூற்றுப்படி காற்றில் இருந்து நேரடியாக சக்தியைப் பெறுவதை விட அலைகளில் இருந்து சக்தியைப் பெறுவது சிறப்பானது. ஏனெனில் காற்றிற்கும் சுதந்திர மான மா கடல் மேற்பரப்பிற்கும் இடையில் ஏற்படும் கூட்டுச் செய்ற்

Page 23
40 அறநெறி 12 அறிவியல் சிந்தனை
பாடு காரணமாக அலைகளில் சக்தி அடர்த்தியாகவுள்ளது. தெரிந்த ஒரு இடத்தில் காற்று வலு உள்ளூர் காற்று முறையிலேயே கிடைக்க அதே வேளை அலைவலு மா கடலின் பல்வேறு பகுதிகளிலும் பரந்து பட்ட முறையில் கிடைக்கிறது.
அலை சக்தி தொடர் பா ன ஆய்வுகள் பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், சுவிடன் ஆகிய நாடுகள் மும்முர மாக நடாத்துகின்றன. ஆனால் பெரிய அளவில் பொறி அமைப்பை ஜப்ப ா ன் நா டே அமைத் துள்ளது. "காய்மாய் போய்” (KAMAI BUOY) என்ற இந்த சாதனம் ஒரு மெகவாட் உற்பத்தி சக்தியைக் கொண்டது. ஜப்பான் கடலில் அமைக்கப்பட்டுள்ள இச் சாதனம் மின்சக்தியை உற்பத்தி செய்வதுடன் கடல் நீரிலிருந்து யூரேனியத்தையும் பிரித்து எடுக்கிறது. இந்த இயந்திர உருவாக்கத் திற்கு 0.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளது. இ னி இவ்வாறான இயந்திரங்களை உற்பத்தி செய்து ஜப்பான் வர்த்தக ரீதியில் ஏ  ைன ய நாடுகளுக்கும் விற்ப  ைன செய்யத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது. அலைசக்தி ஜெனரேட் டர்களின் மிக சாதகமான அம்சம் அவற்றிற்கு எரி பொருள் முற் றாகத் தே  ைவ யில்  ைல. அத்துடன் தொடர்ந்து புதுப்பிக்கப்படக் கூடியது. சூழல் மாசை ஏற்படுத்தாது. மனிதர்களின் உடல் நலத் திற்கு ஆபத்தை ஏற்படுத்தாது. பன்முகத் தேவைகளுக்கு பயன் படுத்தக் கூடியதாக இருக்கும். v
சக்திக்கான குறிப்பாக புதுப்பிக்கக்கூடிய சக்திக்கான புதிய மூலவளங்களை நோ க் கி உலகில் தேடுதல்கள் இடைவிடாது தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவ்வகையிலேயே கடல் அலை கள் மூலவள விடயத்தில் இந்தியாவும் முனைந்துள்ளது. கடல் அலை களில் இருந்து மின்சக்தி உற்பத்தி செய்யும் ஒரு பொறியையும் இந்திய தொழில் நுட்பக் கல்வி நிலைய விஞ்ஞானிகள் உருவாக்கி யுள்ளார்கள். கேரளாவில் திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள கடல் பகுதியில் அமைத்துள்ளார்கள். இது அதி உச்ச நிலையான 150 கிலோ வோல்ட் மின்சக்தியை உற்பத்தி செய்யக் கூடியது. திருவனந்தபுரத்தில் அமைக்கப்பட்ட பொறி அலைகளின் செயற் பாடு காரணமாக மேலும் கீழுமாக அசையும் ஒரு பகுதி அமைப்பை உடையது. இவ் அசைவின் மூலம் மின்சார ஜெனரேட்டர் இயந்திர உருளை ஒரே திசையில் சுழல மின்சாரம் உற்பத்தியாகின்றது. இந்த * நிலையம் 13mx 17m x 14m அலைசக்தி அளவு கொண்: து. இன்று உலகில் இயற்கையாகக் கிடைக்கும் மாகடல் சக்தி வளத்தை 2000 ஆவது "ஆண் டி ற்கு ஸ் திட்டமிட்டுப்பயன்படுத்த பல நாடுகள் முனைந்துள்னன. இதனால் பெற்றோலிய எம் பாருள் வளங்களைச் சேமிக்கவும் முடியும்.

விநாயகர் தரும நிதியம் 12 .י א அறநெறி 41
இவ்வாறே இன்று காற்று வளத்தையும் சூரிய சக்தி வளத் தையும் பெ ரும ளவு பயன்படுத்த விஞ்ஞானிகள் முனைந்து கொண்டிருக்கிறார்கள். தற்போது அமெரிக்காவில் பெருமளவு பகலில் பயன்படுத்தப்படும் கல்குலேட்டர்கள், சிறு மின் அடுப்புக்கள், விசிறிச் சாதனங்கள், சிறியவகை விளையாட்டு உபகரணங்கள் எல்லாம் சூரிய சக் தி யி னா லே யே இயக்கப்படுகின்றன. சூரிய சக்தி மின் சாரத்தைப் பயன்படுத்தி லண்டன் - பாரிஸ் நகரங்களுக்கு இடையே விமானப் போக்கு வரத்தும் வெற்றிச் சாதனையாக நடாத்திக் காட்டப்பட்டுள்ளது.
விண் வெளியில் ஒரு குறித்த கோணத்தில் இருவேறு உலோகத் தகடுகளை வைக்கும் போது மின்சாரம் உற்பத்தியாவதை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். இது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. மிக இலகுவாக எதுவித சிரமமும் இன்றி மின்னைப் பெறும் வழியாக இது இருந்தாலும் கூட விண் வெளியில் இருந்து புவிக்கு எவ்வாறு மின்சாரத்தை கொண்டு வருவது பற்றியும் பல் ஆய்வாளர்கள் ஆலோசனைகள் நடாத்தி வருகின்றார்கள். இவ்வகையிலே எதிர்கால உலகின் சக்தித் தேவை "யின் உயிர் நாடியாக மின்சக்தியே திகழும் என்பதுடன் அதைச் சிறப்பாகப் பயன்படுத்தவும் முயற்சிக்க வேண்டும். 大
O 3 O
8. தொலைக் காட்சியின் புதிய பரிமாணம்
LALLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLL
நீவீன சரித்திரத்திற்குரிய புதிய வரலாற்றில் தொலைக் காட்சி யினால் ஏற்பட்ட மாற்றங்கள் உலக மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தொடர்பு சாதனங்களான பத்திரிகை கள், வானொலி, சஞ்சிகைகள், திரைப்படங்கள் போன்றவற்றை விட தொலைக்காட்சி புலன்களுக்கு உடனடியாகப் புதுச் செய்திகள் எட் டக்கூடிய முறையில் சக்தி வாய்ந்த சா த ன மா கப் பொதுமக்கள் மத்தியில் பரிணமித்து வளர்ந்து வருகின்றது. தொலைக்காட்சியை ஆங்கிலத்தில் "Television" (டெலிவிசன்) என்பர், இங்கு "Tele’ (டெலி) என்றால் தொலைவு "Vision" என்றால் காட்சி என்று பொருள்படும். இத் தொலைக்காட்சி மூலம் துரிதமாக அ  ைச யும் பொருட்களின் படங்களையும், காட்சி நிகழ்ச்சிகளின் படங்களையும் ஒர் இடத்தில் இருந்து இ ன் னே (ா ர் இடத்திற்கு பரிமாற்ற அஞ்சல் செய்ய முடியும்.

Page 24
42 அறநெறி 5 அறிவியல் சிந்தனை
ஒரு நிலையத்திலிருந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அனுப் புவதற்கு மின் காந்த அலைகளே பயன்படுத்தப்படுகின்றன. இந்த மின் காந்த அலைகள் ஒரு வினா டி யில் 297600 கிலோ மீற்றர் வேகத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் சுமந்து செல்கின்றன. எனவ்ே தான் நிகழ்ச்சிகள் நிகழும் அதே வினாடியில் நாம் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் கண்டும் கேட்டும் அனுபவிக்கக் கூடியதாக வுள்ளது. இம் மின்காந்த அலைகளில் தொலைக்காட்சிப் படங்களும், உருவங்களும், ஒலி களும் கலந்து ஒளிபரப்பு நிலைய உணர் கொம்பு (Antenna) பரப்பிகள் மூலம் பரப்பப்படுகின்றன. இவ்வாறு பரப்பப் படும் மின் காந்த அலைகள் தூரத்திலுள்ள வாங்கி உணர் கொம்பு கள் மூலம் பெறப்பட்டு தொலைக்காட்சிப் பெட்டியில் சுருதி செய்து ஒளி, ஒலி அலைகள் பிரிக்கப்பட்டு ஒளி பரப்புச் செய்யப்பட்ட இடத் தில் காட்சி எவ்வாறு தோன்றியதோ அவ்வாறே தொலைக்காட்சிப் பெட்டியின் திரையிலும் தோன்றுகிறது. .
புதிய சமுதாய தேவைகள் தேடல்களுக்கு இன்று வழிகாணத் தொலைக்காட்சிக் கமராக்கள் மூலம் குறும்படங்கள், விவரணச்சித்தி ரங்கள், நாடகங்கள், செய்திக்கதிர்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இலகுவாக மக்களின் மனதில் கருத்துக்களைப் புரிய வைக்கும் கவர்ச் தித் துறையாக இத் தொலைக்காட்சித்துறை வளர்ச்சியடைந்துள்ளது. தொலைக்காட்சி பற்றிய எண்ணக் கருவை விரிவாக்கிச் செயல் வடி வத் திட்டங்களை வகுத்தவர் ஸ்வாரிக்கின் என்ற ரஸ்ய விஞ்ஞானி யாவார். இவரே தொலைக்காட்சியின் தந்தை எனப் போற்றப்படு கின்றார். இவர் தன் ஆராய்ச்சிகளின் படி அமெரிக்க வாஷிங்டன் நகரிலிருந்து 130 மைல்கள் தூரத்திலுள்ள பிலடெல்பியாவுக்கு உரு வப்படம் ஒன்றை அனுப்பி வெற்றி பெற்றார்.
இவரைப் போல ஜான் லாகிபெய்ர்ட் (Johnlogiebaird) என் னும் பொறியியல் விஞ்ஞானி தனது தனி முயற்சியாக பழைய இரும் புக் கடையிலும் மறு விற்பனை செய்யும் கண்ணாடிக் கடையிலும் பல பொருட்களை வாங்கி; மரப்பெட்டிகள் வில்லைகளை ஒழுங்கு செய்து மின் ஆற்றல் மூலம் ஒளியையும் நிழல்படங்களையும் செலுத்த முயன்றார். இவ்வாறு சோதனை நடாத்திக் கொண்டிருந்த போது ஒரு அறையில் இருந்து ஒளிபரப்பிய பொம்மையின் உருவம் அடுத்த அறையின் திரையில் விழ க் கண் டார். பேருவகையடைந்தார். பெய்ர்ட் வேறு சிலரையும் அ  ைழ த் து ஒளிபரப்பும் விளக்குகளின் கீழ் அமரச் செய்து அவர்களின் உருவங்களையும் ஒளிபரப்பி வெற்றி பெற்றார். இது ஒரு பெரும் சாதனையாக மலர்ந்தது. 1928ம் ஆண்டு ராயல் கழக அறிவியல்துறை உறுப்பினர்கள் நேரடியாக பெய்ர்ட்டின் சாதனைகளை ஆராய்ந்து பாராட்டியதுடன் அவருடைய கண்டு பிடிப் புக்கும் ஒப்புதல் அளித்தனர். 1929 ம் ஆண்டு இங்கிலாந்தின் ஒளிபரப்

விநாயகர் தரும நிதியம் 4 அறநெறி 43
நிலையமான பி. பி. சி. சில சோதனைத் திட்டங்களை நடாத்தித் தொலைக்காட்சி ஒளிபரப்பை ஆரம்பித்து பின்னர் பல்வேறு புதிய ஆராச்சி மாற்றங்களினூடாகத் தொலைக் காட்சித்து:ற இங்கிலாந் தில் விரைவாக வளரத் தொடங்கியது. அமெரிக்காவில் பல கட்ட , வளர்ச்சிகளினூடாக 1930 ம் ஆண்டு நியூ யோக் நகர மக்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை முதன் முதல் பார்த்தனர். எனினும் தொலைக்காட்சித் துறையில் நிகழ்ச்சிகள் தெளிவாகத் தெரியா த நிலைகள் நீடித்தன. இவற்றைச் சீர் செய்ய 1939 ம் ஆண்டு “ஆர்த் திக்கின்" (Orthicon) என்ற சாதனம் கண்டு பிடிக்கப்பட்டது, இதன் பின்னர் தொலைக்காட்சித் துறையில் புதுயுகம் உதயமானது. 1947ம் ஆண்டு வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளும் அறிமுகமாகின.
தற்போது பலவகையான தொலைக்காட்சிப் பெட்டிகள் எல் சீலாரையும் வியக்க வைக்கும் அளவுக்கு உற்பத்தியாகி , வருகின்றன. யப்பா னின் மட்சுஷிடா நிறுவனம் சிறிய எடையுள்ள 15 அங்குலத் திரையைக் கொண்ட தொலைக்காட்சிப் பெட்டிகளைத் தயாரிக்கிறது. இது மின்கலத்தினால் இயங்கக் கூடியது. இலங்கை ரூபாவில் இதன் விலை ஐயாயிரமாகும். இச்சிறிய தொலைக்காட்சிப் பெட்டிகள் பல் வேறு ஒளிபரப்பு நிலையங்களிலிருந்து நிகழ்சிகளைச் சிறப்பாகக் காண் பிக்கக்கூடிய சக்தி வாய்ந்தவைகளாக உள்ளன. குறித்த நேரத்தில் இயங்கி தன்னியக்க மூலம் தானாகவே நிற்கக்கூடிய தொலைக்காட்சிப் பெட்டிகளும், றிமோகொன்றோலர்கள் மூலம் தூரத் தி ல் இருந்து இயக்கக் கூடிய நவீன ரக தொழில்நுட்ப முறைகளும் நடைமுறைக்கு வந்து விட்டன. நீருக்கு அடியில் சென்று படம் பி டி க்க க் கூடிய  ைசக் ளா ப் ஸ் கமராக்களும் (Cyclops Camera) பல வகையான ஆரர்ய்ச்சிகளுக்குப் பயன்படுகின்றன.
தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களில் நிகழ்ச்சிகளைத் தயா ரிக்கும் அரங்குகள் பல வசதிகளுடன் உள்ளன. ஒலி, ஒளியமைப்புக் கள், படப்பிடிப்புக் கமராக்கள், பல்வேறு காட்சிகளைச் சித்தரிக்கும் அறைக்கலன்கள் (Furniture), இவ்வாறான சாதனங்களை இயக்கும் தொழில் நுட்பவியலாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள், மேலாளர் கள் போன்றவர்களும் தொலைக்காட்சி அரங்குகளில் இயங்கிக் கொண் டிருப்பார்கள். உதாரணமாக ஒரு நாடகத்தை ஒலிபரப்ப வேண்டும் என்றால் சில மாதங்களுக்கு முன்னரே அதற்கான திட்டங்கள் தயா ரிக்கப்படுகின்றன. எழுத்து பிரதி உருவாக்கப்பட்டு, அதனூடாக நாடகத்தை ஒளிபரப்புவதற்கான அனைத்துத் திட்டங்களும் தயாரிக் கப்படும். பின்னர் நெறியாளர், நடிகர், நடிகைகளைத் தேர்ந்தெடுப் பர். திட்ட அமைப்பு (Desigh), காட்சி அமைப்பு போன்ற விடயங் களை நெறியாளரும், தொழி ல் நுட் ப, பொறியியலாளர்களும் இணைந்து ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.

Page 25
44 அறநெறி 12 அறிவியல் சிந்தனை
தொடர்ந்து நாடகத்திற்கான பயிற்சிகள் நடைபெறும். زیبایی னுடன் ஒத்திகைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ் ஒத்திகைக் கெனத் தனியாகத் தொலைக்காட்சி நிலையங்களில் அரங்குகள் உள் ளன. அங்கேயே திட்ட அமைப்பாளர், நெறியாளர். கலைஞர்கள், பொறியியலாளர்கள் இணைந்து இறுதிப்பிரதியைத் தயாரிப்பார்கள். இன்று தொலைக்காட்சி நிலைய அரங்குகளில் மிக நவீன மின்னணுக் கணணிகள் பெருமளவு கையாளப்பட்டு வருகின்றன. இவை தன்னி யக்க முறை யில் பல தொழில்நுட்ப முறைகளை வெகு எளிதாகச் செயற்படுத்த உதவுகின்றன. இதனால் தற்போது தயாரிக்கப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மிகவும் கவர்ச்சிகரமாகவும், பயனுறுதி வாய்ந்த  ைவ ய |ா கவும் உயிர்ப்புடையவையாகவும் உள் ளன. தொலைக்காட்சியரங்கில் படம் பி டி ப் பது மின்னணு முறையில் இயங்கும் படப்பிடிப்புக்கமராவால் ஆகும். நேரடியாகக் காட்சி களைப் பதிவதுடன், உணர் ஒளி அலைகளை மின் அலைகளாக மாற்றி கம்பி வடம் வழியாக அப்பால் உள்ள ஓர் இடத்தில் பதிவும் செய்து கொள்ளலாம். இல்லாவிடின் காட்சியரங்க நிகழ்ச்சி களை நேரடியாகவும் ஒளிபரப்பலாம். அரங்கங்களைத் தவிர்த்து வெளிப்புறப் படப்பிடிப்புக்கு 16Mm சுருள் தொலைக்காட்சி படப் பிடிப்புக் கருவியைப் படுத்துகின்றார்கள். இவை சாரதாரண மோட்டார் வாகனங்கள், உலங்கு வானூர்திகளில் இருந்து நிகழ்ச்சி களைப் படம்பிடிக்கவும், சாதாரணமாகத் தோளில் சு ம ந் து கொண்டு படங்களைப் பிடிக்கவும் வசதிகள் கொண்டுள்ளன.
இன்று திறந்தவெளி ஒளிபரப்பான வெளிப்புறப்படப்பிடிப்பு எல்லோரையும் கவர்ந்து ஸ்ள து. கவர்ச்சிகரமான இந்நிகழ்வு தொடர்பு சாதனங்களில் தொலைக்காட்சிக்குத் தனிச் சிறப்பைக் கொடுத்துள்ளது. இவ்வெளிப்புறக் காட்சி 1937-ம் ஆண்டு பிரித்தா னிய ஆறாம் ஜோர்ஜ் மன்னரின் முடிசூட்டு விழா ஊர்வலத்தை முதல் முதல் காட்டியதிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின் குதிரைப் பந்தயங்கள் விம்பில்டன் டெனிஸ் போட்டிகள் மற்றும் பொது மக்கள் கருத்துக் கணிப்புக்கள், பேட்டிகள், கருத்தரங்குகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. வெளிப்புற ஒளிபரப்பின் அவசியம் இன்று பலராலும் உணரப்படுகின்றன. உலக சுற்றாடல் கல்வி மற்றும் சமூக கலாச்சார எழுச்சிகளை சித்தரிக்கும் குறும்படத் தயாரிப்புக்கள், அறிவியல் உயிரியல் பற்றிய விஞ்ஞான நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு தேவைகள் எல்லாம் தொலைக் காட்சிக் கமராக் களால் தற்போது காட்சிப்படுத்தப்படுகின்றன.
கேட்கிறேன் - மறந்துவிடுகிறேன், பார்க்கிறேன் ஞாபகமிருக் கிறது என்பதற்கமைய கல்வித்துறையில் கேட்பது, படிப்பது என்பது டன் நவீன அறிவியல் வளர்ச்சியில் பூார்ப்பதும் உணர்வதும் அவசி

விநாயகர் தரும நிதியம் 4-1 அறநெறி 45
யமாகின்றது. ஏனெனில் கற்பிக்கும் துணைக் கருவிகள் மூலம் கல்வி பயிலும் மாணவர்களுடைய அறிவு, பண்பு நலன்கள் பெருகியுள்ளன. மாணவர்கள் தம் கண்களினால் பார்த்து உணர்வதன் மூலம் பல விடயங்களை அவர்கள் உள்வாங்கி மனதில் பதித்து விடுகின்றனர். வரலாறு, சமூகக்கல்வி, விஞ்ஞானம் ஆகிய பாடங்களின் பாடப் பரப்புத் தகவல்கள் காட்சிப்படுத்தப்படும் போது கற்றல் இலகுவா கின்றது. அத்துடன் மாணவர்கள் தொடர்ந்தும் கற்கத் தூண்டப் படுகின்றார்கள். உதாரணமாக வரலாற்றைக் கற்கும்போது பண்டைய கட்டடங்கள், கலைகள், குளங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள், புதை பொருட்கள் போன்றவற்றைத் தொலைக்காட்சியினூடாகப் பார்த்து ஒளிப்பட உணர்வுகளின் ஊடாகக் கற்க முடிகிறது.
இவ்வாறு பல வழிகளில் புதிய பரிமாணங்களை தொல்ைக் காட்சி விரிவாக்கம் நவீன மின்னணு கணணிகள் மூலமும் விண்வெளி செயற்கைக் கோள்கள் மூலமும் சிறப்பாக நெறிப்படுத்தப்பட்டு வரு கின்றன. ஐரோப்பாவிற்கும், அமெரிக்காவிற்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பரிமாற்றவும், உலக ரீதியில் நிகழ்ச்சிகளை எவ்வித தடை யும் இன்றி தெளிவாகப் பார்த்துப் பயனடையவும் புதிய தொழில் நுட்பமும் செயற்கைக் கோள்களும் உதவுகின்றன. உலகின் ஒவ்வொரு நாடுகளும் தமது பண்டைய பெருமைக்கும், பண்பாட்டின் செழுமைக் கும், கல்வி வளர்ச்சிக்கும் பல செயற் திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றன. இவற்றிற்குத் தொடர்பு சாதனங்களில் தொலைக் காட்சித்துறை பெரிதும்பயன்படுகிறது. அமெரிக்காவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை அமைப்பதில் பல தனியார் நிறுவனங்கள் போட்டியிடு கின்றன. ABC, NBC, PBS போன்ற நிறுவனங்கள் மிகவும் முன்ன ணியில் நிகழ்ச்சிகளை உருவாக்கி வருகின்றன.
அமெரிக்காவில் தொலைக்காட்சிச் சக்தியை பல பிரமுகர்கள் ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துகின்றார்கள். வேஹாரி பெலஃபாண்டே என்ற பிரபல பாடகர் யுத்தத்தின் பிடியிலிருந்து உலகத்தை மீட்டு FLDJTafli di T600/lb (pufi)Surts "We are Children of the war'' 15(Tril கள் போரின் குழந்தைகள் , என்ற நிகழ்ச்சியைப் பல சிறுவர்களைப் பயன்படுத்தி நடாத்தி வருகிறார். இந்நிகழ்ச்சி பலரின் மனதை நெகிழவைத்துப் புதிய சிந்தனைகளுக்கு ஊன்றுகோலானது. இவ்வாறே போதை மருந்துகள், எயிட்ஸ் நோய் போன்றவை பற்றிய விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆக்கபூர்வ மாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாகத் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு கற்பனைத்திறனும், பொதுநல ஆளுமை களும் வேண்டும். பல பிரச்சனைகனளத் தங்களுடைய கற்பனை மற் றும் ஆற்றல்களால் எதிர்நோக்கி வெற்றியடையச் செய்யலாம். குறித்த பலதரப்பட்ட சிறப்புக் கலைகளைப் பற்றிய அறிவு இருப்பதுடன், மணி தர்களுடைய தனித்தன்மைகளை ஊடுருவிப் பார்க்கும் கண்ணோட்ட மும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் சிறப்பாக அமைய உதவுகின்றன.

Page 26
46 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
9. புதிய பாதையில் கணணிகள்
MMLML EMeMMLLLLLL LLLLLLLLeLELMLMLLLLMLMLMMLMMMLMLeLLLMLLLLL
னிதனின் அறிவியல் வளர்ச்சி ஆற்றலின் உன்னத வெளிப்பா டாக இன்று கணணிகள் ( COMPUTER) பயன்பாடுகள் உள்ளன. விஞ்ஞானம், மருத்துவம், தொழில்நுட்பம், கணிதவியல், இலக்கியம் இவ்வாறு மனித சமூகத்தின் அனைத்துத் துறைகளிலும் கணணிகள் பல வியத்தகு சாதனைகளையும், புதுமைகளையும் உருவாக்கியுள்ளன. எனவே இன்று உலக நாடுகளிடையே கணணிகள் எனப்படும் மின் கணிப்பான்களின் அறிமுகமும், பயன்பாடுகளும் பல்கிப் பெருகி வரு கின்றன. நவீன கணணிகள் உயர் சணக்குப் பொறிகளாக, பெட்டி " உருவ இயந்திர மூளைகளாக செயற்கை மூளை கொண்ட ரோபோக் களாக, சிறுவர்கள், பெரியோர்கள் விளையாடும் பொறிகளாகப் பல துறைகளில் செயலாற்றுகின்றன. இக் கணணித்துறை வி ைர வாக வளர அதன் சிறப்பியல்புகளான விரைவான செயற்பாடு, நம்பகர மும , துல்லியமும், நினைவு ஆற்றல், களைப்பின்மை, தானாக இயங் கும்திறன், பல்வகைத்திறன்கள் போன்றனவே காரணங்களாக உள்ளன. பல்வேறு தேவைகளுக்கு உதவும் கணணிகள் அதிகளவு விபரங்களை உள்ளளிப்புச் செய்து சேகரிக்கவும், பெருமளவு தகவல்களை விரை வர்கப் பெறவும் ஆற்றல் கொண்டுள்ளன. இவற்றின் பயன்பாடுகளை நோக்கின்
i) பொது நிர்வாக, வர்த்தக வங்கியியல், கணக்கியல் செயற்பாடு
களுக்கும், கணிப்புக்களுக்கும். ii) தனித்துவமான துறைகளின் விபரங்களைத் தொகுத்தல்களும்,
சேகரிப்புக்களும். ii) தே  ைவ ய ர ன துறைத் தகவல்களை விரைவாகவும், பிழை இன்றியும் திரும்பிப் பெற. م ty) உண்மையான சூழ்நிலைகளை மாதிரிப்படுத்தல்.
y) செய்தித் தொடர்புச் செயற்பாடுகளும், பதிவு செய்தலும். wi) கற்பிக்கும் ஊடகங்களாகப் பொழுது போக்குச் சாதனங்களா
கச் செயற்படல். wiர்) மனிதன் கொடுத்த தகவல்கள், கட்டளைகளுக்கு இ னங் க"
கவிதை எழுதுதல், சித்திரம் வரைதல், பாடுதல், இசைமீட்டல். yi) செய்தித் தொடர்புச் சாதனங்களாகச் செயற்படல்.
இவ்வாறாக மனிதனது வாழ்வில் கணணிகள் இணைந்து விட் டன. இக்கணணிகள் இலக்கியத்துறையில் கவிதைகள் கூட இயற்று கின்றன. வியப்பாகவே உள்ளது. உண்மையில் கணணிக் கவிதைகள்

விநாயகர் தரும நிதியம் 4 அறநெறி 47
கம்பியூட்டர் இயலின் ஒரு பகுதியான செயற்கை அறிவைச் சார்ந்த விடயமாகும். மனிதனின் அறிந்து கொள்ளும் திறனைக் கணணிகள் உள்வாங்கிக் கொள்வதுதான் இந்த செயற்கை அறிவு. அறிவின் மிக முக்கிய அம்சம் மெர்ழியாகும். இம்மொழியினை கணணிகளில் இலக் கணக்கோட்பாடுகள், வேற்றுமை உருபுகள், பால் பாகுபாடுகள் இன் னும் பிற தனித்தனிக் கொத்துக்களாகக் கொடுக்கப்பட்டு சேகரித்து வைக்கப்படுகின்றன. பின் இறுதிப் பலன் பற்றிய விவரணையின்றி (Random) நிகழ்ச்சி நிரல் கணணிகளுக்குள் நுழைக்கப்படுகிறது. இதன் பின் கணணி இயல்பான செயற்பாட்டுடன் ம னி த  ைன ப் போல உணர்ச்சிகளின் தூண்டுதலற்று தன்னிடம் சேகரித்தவற்றுள் தேவை யானதை எடுத்து இலக்கணக் கோட்பாட்டின் துணையுடன் கவிதை வாக்கியங்களை அமைக்கின்றது. இக்கவிதை வாக்கியங்கள் இல்க்க ணத் தெளிவாய் இருந்த போதிலும் சில நேரங்களில், அர்த்தமற்றும் போவதுண்டு எனினும் வாக்கிய அமைப்பின் சொல்தேர்வை கணணியே நிர்ணயிக்கின்றது. இந் த த் தேர்வுதான் கம்பியூட்டர் கவிதைகளின் மிக முக்கியமான வசீகரக் கவர்ச்சியாகும். அடுத்ததாகச் சில கணணிக் கவிதைகளைப் பார்க்கலாம். இக்கவிதைகள் ராக்டர் (Racter) என்ற நிகழ்ச்சி நிரலில் 64 கிலோபைட் ஞாபகக் கலங்கள் கொண்ட Z80 மைரோப்ராஸஸர் கணணியினால் எழுதப்பட்டது. ஆங்கில மொழியில் உருவான இக்கணணிக் கவிதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
காலத்தில் இருந்தும் தண்ணிரிலிருந்தும்
அந்தமுகம் எழுகிறது அழிகிறது! எனது கனவுகளின் இனிய சலனத்தை
இழந்து விட்டேன், ஓய்வையும் உறக்கத்தையும் நாடுகிறேன், a e o a oe a ஒரு கேள்வியோடு நாம் தொடங்குவோம்
இறைச்சித் துண்டம் கீரையைக் காதலிக்குமா? @కీaఎ பதிலளிக்க மிகக் கடினமாகவும்
முடியாததாகவும் இருக்கிறது இதோ ஒரு கேள்வி ஓர் எலக்ட்ரான் புரோட்டானைக் காதலிக்குமா?
இல்லை நியூட்ரானைக் காதலிக்குமா?. காதல் எனக்கு சுவாரஸ்யமாகவும் உங்களுக்கு
கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. ஆனால்! பில்லுக்கும் டயானாவுக்கும் அது வேதனை தருவது,
அது தான் காதல்!
கவிதைகள் சுவைக்கக் கூடியதாகத்தான் உள்ளது. இமனிதன்
ஏன் கணணிக்குள் மொழியையும், ஏனையவற்றையும் நுழைத் து
இ8 பூழ்ச்சி நிரல் தயாரித்து அதைக் க வி ைத புனைய வைக்கிறான்
மனிதனின் பல் வேறு சாகச விளையாட்டுக்களில் இதுவுமொன்றா
f

Page 27
48 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
வுள்ளது. இது ஏனையோரைக் கவிதை எழுதத் தூண்டவும், கவித் துவத்தைத் தேடும் ஆரம்ப முயற்சியாகவும் தொடரலாம். இவ்வாறு மனிதனின் கலாச்சார வாழ்வில் கணணிகள் புதுமைகளை நிலைநாட்டி யுள்ளன. எனினும் கணணிகளின் பரவலான, விரிவான, துல்லியமான செயற்பாட்டிற்கு மனிதன் நிற்க முடியாத சம்பவங்களும் பலவுள்ளன. இன்று தனி மனிதனைவிட விரைவாகச் செயற்படக்கூடிய கணணி களினால் மனித மனமே வீரியமற்றுப் போய்விடுமோ! தனி மனித உணர்வுகளுக்கு இடமில்லாத சூழ்நிலை உருவாகுமோ எனப் பலர் பயப்படுகிறார்கள். எனினும் கணணிகளைச் செயல்பட வைப்பவன் மனிதன்தான். 18-ம் நூற்றாண்டு தொழில் புரட்சி யை மனிதன் வெற்றிகரமாகச் சமாளித்தான். தெருக்கூத்து, நாடகம் என்ற நிலை யிலிருந்து திரைப்படம் தொலைக்காட்சி, முப்பரிமாண ஸ்பரிச உணர் வுகளுடன் கூடிய திரைப்படங்கள்-வரை வந்து விட்டான். நடந்தும் மிருகங்களிலும் திரிந்த மனிதன் விண்வெளியில்வேறு கிரகங்களுடன் விண் வெளிக் கலங்களில் செல்கிறான். எனவே கணணிகள் மனிதனை வளர்ப் பவையே அன்றி அவனை அழிப்பவையாக நோக்குவது தவறாகும்.
மற்றும் நிர்வாகக் கணக்கியல் துறைகளில் கணணிகள் பயன் பட்டால் தொழில்துறை வேலை வாய்ப்புக்கள் குறைக்கப்படுகின்ற6 என்ற கருத்தும் உள்ளது. இது இன்று மாற்றத்துக்குள்ளாகி வருகின் றது. கம்பியூட்டர்களின் உற்பத்தி, முகாமைத்துவம், விற்ப  ைன போன்ற பல துறைகளில் புதிய வேலைவாய்ப்புக்கள் உருவாகியுள்ள துடன், கணணிகள் எழுத்துக்களையும், இதமான உச்சரிப்பு ஒலிகளை யும் கொண்டு எழுதப்படிக்கக் கற்றுக் கொடுக்கின்றன. மாணவர்க ளுடைய கேள்விகளுக்குத் தெளிவான விளக்கங்களை அளிப்பதுடன் பல்வேறு தகவல்களையும் உடனுக்குடன் காட் டி விளக்குகின்றன. மாணவர்களுக்கான புதிய புதிய அறிவியல் விளையாட்டுக்களையும், ஓவிய இசைக்கலையின் புதிய வடிவங்களையும் கணணிகள் உணர்த்தி ஒரு புதுவிதமான பாதைக்கு எல்லோரையும் இட்டுச் செல்கின்றன.
இவை களைப்போ, சலிப்போ இல்லாது சாதாரண மனிதர்க ளைப் போல ஆற்றலுக்கும், எண்ணத்திற்கும் மக்கள் சேவையை மட்டுப்படுத்தாது பணியாற்றக் கூடியனவாகவுள்ளன. அமெரிக்காவில் மரியாதையுடன் நோயாளிகளையோ, வேலைதேடி வருபவர்களையோ, பாடசாலைகளில் இடம் தேடி வருபவர்களையோ வரவேற்றுக் கேள்வி கன் கேட்டுப் பதில் கொடுக்கும் வகையில் கம்பியூட்டர்கள் பொதுச் சேவையை இன்று ஆற்றி வருகின்றன. இது மனித அறிவியலின் புதிய பிரவேசமாகும். CAM வகைக் கம்பியூட்டர்கள் தொழிற்துறை உற் பத்திச் செயற்பாடு மற்றும் உற்பத்திப் பொருளின் தரம் ஆகியவற் றைக் கண்காணிக்கின்றன. இதனால் உலக சந்தையில் உற்பத்தியா கும் சகல விதமான பாவனைப் பொருட்களின் தரங்களில் உயர்ந்த தன்னும் காணப்படுகின்றது.

விநாயகர் தரும நிதியம் 6 அறநெறி 49
இவ்வாறு விமானப் பயணத்தில் விமானம் பறக்கத் தொடங்கு தலில் இருந்து இறங்கும் வரை கணணிகளே சகல விதமான செயற் பாடுகளையும் கட்டுப்படுத்துகின்றன. மற்றும் எழுத்துப்பிரதி, தட்டச்சு, அச்சிடுதல் போன்ற துறைகள் இன்று மிகவும் முன்னேற்ற மடைந்துள்ளன. இத்துறைகளிலும் கணணிகளின் செல்வாக்கே விஞ்சி நிற்கின்றது. போக்குவரத்துக் கட்டுப்பாட்டுத் துறைகளிலும் பெரு மாற்றங்கள் நடைபெறுகின்றன. கனடாவின் டொரோண்டோ நகரில் கணணிகளின் உதவியுடன் அமைக்கப்பட்ட போக்குவரத்துக் கட்டுப் பாட்டுத் தொகுதி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இக்கணணித் தொகுதி செயற்பாட்டால் முப்பது சதவீதம் கூடுதலாக போக்கு வரத்தை உறுதி செய்யக் கூடியதாக இருந்தது. இதனால் இந்த நகர்ப் புறத்தின் வர்த்தகப் பொருளாதாரம் வெகுவாக விருத்தியடைந் துள்ளது. i
கணணிகள் நகரின் முக்கிய சந்திப்புக்களில் உள் ள போக்கு வரத்து நிலைகளை ஆய்வு செய்து, ஒவ்வொரு திசையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கையையும் அடர்த்தியையும் மூன்று வினாடி களுக்கு ஒரு முறை கணக்கில் எடுக்கின்றன. இவ்விபரம் ஏ ற் கன வே சேர்த்து வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாதிரிகளுடன் ஒப்பிட்டு நோக்கப்படுகிறது. பின் வரையறுக்கப்பட்ட உத்தரவுகளின் அடிப்ப டையில் சந்திப்புகளில் உள்ள சமிஞ்ஞைகளை மாற்றிப் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகின்றது. சுவீடன் நாட்டிலுள்ள எல்லா பெரும் நகரங் களில் வாழும் மக்களின் அடிப்படை மருத்துவ விபரங்களை அந்நகரில் உள்ள மருத்துவமனை கணிணிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ் விபரங்களின் அடிப்படையில் குறிக்கப்பட்டவர் சிகிச்சைக்கு வரும் பொழுது அவரின் மருத்துவக் குறிப்புக்களை கணணிகள் உடன் வழங்கி விரைவான சிகிச்சைக்கு வழி கோலப்பட்டுள்ளது. இவ்வாறு மருத் துவத்துறையில் பல சா த  ைன கள் கணணிகளால் ஏற்பட்டுள்ளன. கனணிகளில் த வ று க ள் பிழைகள் மனிதச் செயற்பாடுகளினால் ஏற்படுகின்றன. இதைத்தடுக்க கணணிகளின் எல்லைகளை அறிந்து அதற்கு மேற்பார்வைக் கணணிகள் இன்று பொருத்தப்படுகின்றன. மனிதனால் ஏற்படக்கூடிய பிழைகளைத் திருத்தக்கூடிய புதிய முறை கள் நடைமுறைக்கு வந்து விட்டன. என்றாலும் தொடர்ந்து இது பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய ஆய்வுகள் தொடர்கின்றன.
1980 ம் ஆண்டு யூலை மாதம் ஒரு கணணியின் தவறான பிர யோகம் காரணமாக சோவியத்நாட்டு ஏவுகணைகளால் அமெரிக்க நாடு தாக்கப்பட்டுவிட்டது என அமெரிக்க விமானப்படைத் தலைமை' நம்ப வேண்டிய அதிர்ச்சி தரும் நிலை ஏற்பட்டது. பின் தகவல்கள் மூலம் செய்தி பிழை என அறியப்பட்டதுடன் அக்கணணியும் திருத் தப்பட்டது. இவ்வாறு சில பிழைகள் நடந்துள்ளதால் கணணிகள்
( ,

Page 28
50 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
இன்று பல கோணங்களில் தவறுகளைத் தானாகவே சுட்டிக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
மனிதனது அறிவுக்கடல் அளவற்றது. இன்று கணணிகள் இல் லாது தொழில் நுட்ப அறிவியல் துறைகளில் முன்னேற்றம் காண முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. உலகின் எல்லாப்பக்கங்களில் இருந்தும் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள் தொழில் நுட்ப வளர்ச்சியையும் பல்வேறு சாதனை ஓளையும் அறிந்தவண்ணம் உள்ளன. ஆராச்சிகள் எல்லாத்துறைகளிலும் பெருமெடுப்பில், மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இவைகள் யாவும் ஏதோ ஒரு வகையில் கணணிகள் மூலம் நெறிப்படுத்தப்படுகின்றன என்பது சாதாரணமாகி விட்ட இக்காலத்தில் மனிதன் புதிய பாதையில் சென்று கொண்டி ருக்கிறான் என்பது தெளிவாகவே புலனாகிறது.
10. அபிவிருத்தியும் சூழல் பாதுகாப்பும்
LLLLeLLLLLLLLLMLLLLLMLMLLLLLLL
இன்று உலக நாடுகள் எல்லாம் அபிவிருத்திப் பாதையில் முன் னேறிக் கொண்டிருக்கின்றன. இங்கே அபிவிருத்தி என்பது பொருளா தாரத்துடன், சமூக ரீதியான கல்வி, சுகாதாரம் போன்ற பல காரணி களின் சேர்க்கையாகவே உள்ளது. அபிவிருத்தி அடைந்த நாடுகளும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தமது வளர்ச்சியைப் பாரிய அளவில் துரிதமாக முன்னேற்ற முயலும் போது சூழல் சம நி ைல தொடர்பான பிரச்சனைகளும் எழுகின்றன. இவ்வாறாக உலக நாடு களின் அபிவிருத்திப் போக்குகள் சூழலை மாசடையச் செய்யும்துக்க கரமான நிலைமைக்கு இட்டுச் செல்ல எத்தனிக்கும் இவ்வேளையில் சூழல் பாதுகாப்பு என்ற எண்ணக்கரு அவசிய மா க நோக்கப்பட வேண்டியுள்ளது. புவி இயற்கையின் எழில் கோலமாக இருந்த நிலை மாறி தொழிற்சாலைக் கழிவுகள், அணுக்கதிர் வீசல்கள், இயற்க்ை அழிவுகளால் சூழல் மாசடைந்து நோயுற்ற உலகமாகக் காணப்படு கிறது. இந்நிலையைப் போக்க ஒரு புதிய அரசியல் நோக்கு ஐரோப் பாவில் தோன்றி ஏனைய நாடுகளிலும் பரவி வருகிறது. அதுதான் g6ðrupy sy g as o mr s L' GusFLÜLuGb 6 stödår i faħ (Green Peace) இயக்கமாகும். புவி இன்று விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள், நாகரீக வளர்ச்சி, சனத்தொகைப் பெருக்கம், அணுகுண்டுப் பரிசோதனைகள், நச்சுவாயுக் கழிவுகள், விபத்துக்கள் காரணமாக அழிவுப் பாதையில் சென்று கொண்டிருப்பதுடன் உயிர் வாழ்வதற்குத் தகுதியற்ற அசுத் தப்படலமாக மாறிக் கொண்டிருக்கும் நிலையைத் தவிர்க்க பல நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நமது பூமி பற்றி ய சிந்தனை; அது பாதுகாக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் மனித

விநாயகர் தரும நிதியம் 4 அறநெறி 51
இனமே அழிந்துவிடும் அபாயம் எற்படும் என்ற உணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது. ஐரோப்பாவில் "Green Peace” இயக்கம் இன்று ஒரு அரசியல் இயக்கமாக வளர் ந் து வருவது சூழல் பாதுகாப்பிற்கான அறைகூவலாக உள்ளதுடன் உலகளாவிய ரீதியில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. துரித பொருளாதார அபிவிருத்தியை நோக்கி கைத்தொழிற் பொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளே முன்னணி யில் தொழிற்சாலைகளைப் பயன்படுத்துகின்றன. இன்று அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளும் தமது கைத்தொழில் துறைகளை சூழல் பாதுகாப்புப் பற்றிய எவ்வித அக்கறையும் இல்லாமல் வளர்த்து வரு கின்றன. இதனால் தொழிற்சாலைக் கழிவுகள் பெருமளவில் ஆறுகள், கடல்களுடனும், வளிமண்டலத்துடனும் கலக்கின்றன. இதன் விளை வாக இன்று மேற்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அமில மழை, ஓசோன் படைகள் அகன்றமை, காலநிலையில் பாரிய மாற்றங்கள் உலகின் (ஏனைய பகுதிகளுக்கும் பரவும் அபாயம் இன்று ஏற்பட்டுள்ளது.
புவி மேற்பரப்பின் சராசரி வெப்பநிலை 0°5 - 0 6 டிகிரியாக அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் காபனீரொக்சைட்டு 04 சதவீதமும், மீதேன் வாயு 0 1 சதவீதமும், நைதரசன் மோனோ ஒக்சைட்டு 0 2 சதவீதமும் அதிகரிப்பதனாலேயே வெப்பநிலை வளி மண்டலத்தில் கூடுகின்றது. இவ்வாறான வாயுக்களின் அதிகரிப்புக்கு "செயற்கை எரிபொருட்களும், கைத்தொழிற்சாலைகளின் அபரிமித
மான கழிவுகளுமே காரணங்களாகின்றன.
மனிதனது செயற்பாடுகளினாலும், தூண்டுதலின் காரணமாக வும் இவ்வாறு வெப்பநிலை அதிகரிக்கின்றது. இதைத் தடுக்கத் தற் போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் ஒவ்வொரு பத்து ஆண்டும் 95 டிகிரி என்ற கணக்கில் தொடர்ந்து உலகின் வெப்ப நிலை உய்ர்ந்து வருகிறது. இந்த அளவு மிகச் சிறிதாகத் தோன்றி னாலும் கூட ஆசியாவிலும், ஆபிரிக்காவிலும் பாலைவனப் பிரதேசங் கள் உருவாகும் வேகத்தை இது மேலும் அதிகரிக்கின்றது. ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக அறுபது லட்சம் ஹெக்டயர் நிலங் கள் பாலைவனங்களாகின்றன என்று விஞ்ஞானிகளும் புவியியல் ஆய் வாளர்களும் தெரிவித்துள்ளார்கள். வடஅமெரிக்காவிலும், சைபீரியா விலும் பருவ நிலையில் தொடர்ச்சியான மாறுதல்கள் ஏற்பட்டு வரு கின்றன. வெப்பநிலையின் அதிகரிப்பால் உலகளாவிய மற்றொரு விளை வாக உலக மாகடல்களின் நீர் மட்டங்கள் உயர்ந்து வருதல் அதிகரித் துள்ளது. கடந்த நூற்றாண்டில் மாகடல்களின் நீர் மட்டம் 10 - 12 சென்ரி மீற்றர் வரை உயர்ந்துள்ளது. தற்போது இது பத்து மடங்கு வேகமடைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அடுத்து புவியின் மேற்பரப்பை வந்தடையும் சூரியனின் புற ஊதாக்கதிர்கள், ஓசோன் படைகள் நலிவடைவதால் மனிதர்களிடையே தோல் புற்று

Page 29
52 அறநெறி 6 அறிவியல் சிந்தன்ன
நோய், தாவர உயிரினங்களையும் கடுமையாகப் பாதி க்கு ம் நிலை அதிகரித்துள்ளது. சூரியனின் தீங்கு விளைவிக்கும் புறவூதாக் கதிர் களைப் புவி மேற்பரப்பில் பரவாமல் தடுக்கும் படை யாக ஓசோன் படை உள்ளது. இப்படையில் துளைகள் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானி கள் கண்டறிந்துள்ளார்கள், ஐரோப்பா, அமெரிக்கா, அந்தாட்டிக்கா பகுதிகளில் இத்துளைகள் பெரிதாகவுள்ளன.
நுணுக்குக்காட்டி மூலமும், பரிசோதனைக் குழாய்கள் மூலமும் சடப்பொருள் மற்றும் உயிரினங்களை ஆராயலாம். ஆனால் மனிதனை அவ்வாறு ஆராய முடியாது. வரையறுக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்குள் வைக்க முடியாத நிலையில் மனிதன் சூழலுக்குப் பல்வேறு தாக்கங் களை ஏற்படுத்திவருகிறான். இதில் ஓசோன் படையில் து ைள க ள் ஏற்பட்டதும் ஒன்றாகும் உயிரினங்களின் கவசமான ஓசோன் படை களின் அழிவுக்கு குளிர்சாதனப் பெட்டிகள், மற்றும் குளோரோ பிளோரோ காபன்கள் பெருமளவு பயன்படுத்துவதனாலாகும். இவற் றில் இருந்து வெளிவரும் குளோரின் வாயு, நைதரசன் ஒக்சைட் போன்ற மூலக்கூறுக்ள் ஓசோன் மூலக்கூறுகளை ஒளி இரசாயன வினை எதிர் செயல் முறையில் அழித்து விடுகின்றன. கடத்த 16 ஆண்டு களாகப் புவியின் வடவரைக் கோளத்தின் மேலுள்ள வளிமண்டலத்தில் ஓசோன் வாயு உள்ளடக்கம் சராசரியாக மூன்று சதவீதம் குறைந் துள்ளது, இவ் ஓசோன் படை ஒருசதவீதம் குறைந்தாலும் தோல் புற்று நோய்கள் 57 சதவீதம் அதிகரிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள் ளது. சல்பர் டை ஒக்சைட், நைதரசன் ஒக்சைட் ஆகியன தொழிற் சாலைகளில் இருந்து வெளியேறி வளிமண்டலத்துடன் கலக்கின்றன. இதன் காரணமாக மழையிலும், பனியிலும், மூடுபனியிலும் அமிலத் தன்மை கடுமையாக அதிகரிக்கின்றது. இது அமிலமழை எனப்படுகின் றது. இன்று இவ் அமில மழை சூழலைப்பாதிக்கும் ஒரு பெரும் 'பிரச் சனையாகவுள்ளது. இதனால் பயிர்கள் காய்கறி வகைகள் அழிகின்றன. தூய்மையான நீர்த் தேக்கங்கள் அசுத்தமாவதுடன் உயிர் வாழும் அங்கிகளும் அழிகின்றன. எனவே பொருளாதார அபிவிருத்தி என்ற நோக்கில் பாரிய தொழிற்சாலைக் கட்டடங்களை இயற்கைச் சூழலை அழித்துக் கட்டி, பல கோடி லாபங்கள் கிடைத்தாலும், தொழிற் சாலைக் கழிவுகள் சூழலை மாசாக்கி ம னி தனு ம் பெரும்பாலான உயிரினங்களும் அழிய ஏதுவாகின்றது.
ஒவ்வொரு ஆண்டும் பல கோடி டன் தொழிற்சாலைக் கழிவுப் பொருட்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இவை மீன் உண்ணும் உணவுகளுடன் கலக்கின்றன. பால்டிக் கடலிலுள்ள "காட்” வகை மீனில் ஒரு கிலோ கிராமுக்கு 800 மில்லி கிராம் அளவில் பாதரசம் சேர்ந்து விடுகிறது. இத்தகைய ஐந்து அல்லது எட்டு மீன் களை உணவாக உட்கொள்ளும் ஒருவரின் உடலில் ஒரு வெப்பமானியில்

விநாயகர் தரும நிதியம் 6 - 3 அறநெறி 53
இருக்கும் அளவுக்குப் பாதரசம் (Hg) சேர்ந்து விடுகிறது. 1988ம் ஆண்டு வடகடலில் பல ஆயிரம் கடல் நாய்கள் என்றழைக்கப்படும் கடல் வாழ் விலங்குகள் மாண்டு போயின. இதற்கு ஒருவகை பிளேக்கு நோயும், தொழிற்சாலைக் கழிவுகள் கடலை அடைந்ததுமே காரணங் களாகும். இவ்வாறு இறந்த கடல் நாய்களின் உடல்களை ஆராய்ந்த போது நூற்றியம்பது நச்சுப் பொருட் சேர்க்கைகள் இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.
இவ்வகையில் வட கடலில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடை பெற்றது. பொன்னிற ஒரு கலமுடைய கடல் பாசி வகை முன் எப் போதும் கண்டிராத வகையில் பல்கிப் பெருகியது. தெற்கு ஸ்கண்டினே வியாவில் பத்து கிலோ மீற்றர் நீளத்திற்கும் முப்பத்தைந்து கிலோ மீற்றர் ஆழம் வரையிலும் பரவியிருந்த இக்கடல் பா சி மண்டலம் ஒரு நாளில் இருபத்தைந்து கிலோ மீற்றர் வேகத்தில் வளரத் தொடங் கியது. மேலும் இது ஒக்சிசனை உறிஞ்சி விடுவதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் அழித்து விடுகின்றது. முதுகெலும்பில்லாத உயிரி னங்கள், சிறு வகை மீனினங்கள் ஆகியவற்றைப் பெரும்பாலும் அழித்தது. இவ் வகைப்பாசிகளின் திடீர் அசாதாரண வளர்ச்சிக்குக் கடலில் கொட்டிய இரசாயனக் கழிவுப் பொருட்களே காரணம் என நிபுணர்கள் கூறுகின்றார்கள்.
நச்சுப் பொருட்களைக் கடலுடன் கலத்தலுடன் ஒரு இடத் திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கொண்டு செல்லுவதும் உயிரின வாழ்க்கைச் சூழல் சமநிலைக்குப் பெரும் அச்சுறுத்தலாகவுள்ளது. எனவே இனி வருழ் காலத்தில் தொழிற்சாலைக் கழிவுகளைக் குறைப் பதுடன் கழிவுப் பொருட்களை மீண்டும் பயன்படுத்தக்கூடிய உப யோகப் பொருட்களாக மாற்றுவது பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இதற்குப் புதிய தொழில்நுட்ப முறைகள் பிரயோகிக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது. நமது புவியில் பல வகையான உயிரினங்கள் குறைந்து வருவது மற்றொரு உலகளாவிய பிரச்சனையாகும். உலகில் அன்றாடம் பல்வேறு வகையான விலங்குகள் தாவரங்கள் அழிந்து வருகின்றன. மனிதர்களின் செயற்பாடுகள், அழிப்புக்கள், நாடுகளுக் கிடையே உயிரினங்களைச் சட்ட விதிகளை மீறிக் கடத்தல் போன்ற நடவடிக்கைகளால் பல அருமையான உயிரினங்கள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதுவும் சூழல் சம நிலையைப் பாதிக்கும் நடவடிக் கையாகும். இன்று பாலைவனங்களின் விரிவாலும், மண்அரிப்பு முற்றும் பல பிரச்சனைகளினாலும் ஆபிரிக்க, லத்தீன அமெரிக்க நாடுகளில் லட் சக் கணக்கான மக்கள் தமது இருப்பிடங்களில் இயற்கைச் சூழல் சம நிலை அழிந்ததால் வாழமுடியாமல் புதிய சூழலைத்தேடி ஓடிக் கொண் டிருக்கிறார்கள். இது உயிரின“வாழ்க்கைச் சூழல் அகதிகள் ༠, ༡༡

Page 30
54 அறநெறி masy 12 அறிவியல் சிந்தனை
பரிணாமத்தில் இன்று பல தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது. ஏரல் கடல் பிராந்தியத்தில் நவீன கைத்தொழிற்துறை நிலையங்கள் பெரு மளவு பொருளாதார அபிவிருத்தி கருதி நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதனால் சூழல் சமநிலை குழம்பியுள்ளது. இந்தியாவின் ஆக்ராவிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான தாச்மகால் கட்டடம் அருகிலுள்ள தொழிற்சாலைக் கழிவுகளால் மாசாகி வருகின்றது. இவ்வாறு பொரு ளாதார உறவுகள் உயிரின கல்ாச்சார வாழ்க்கைச் சூழலை பாதிக்கும் ஒன்றாக வளர்ந்து வருகின்றது.
விவசாயப் பசுந்தரை இயற்கைக் காடுகள், சுரங்கங்கள் ஆகிய வற்றில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட கைத்தொழில் விவ சாய நடவடிக்கைகளால் சூழல் மதிப்பிழக்கும் ஆபத்துக்கள் மேலும் உருவாகியுள்ளது. காட்டு நிலங்கள் அழிக் க ப்ப ட் டு ஏற்றுமதிப் பொருட்களை உற்பத்தியாக்கும் நிலங்களாக்கப்பட்டமை, கணிப் பொருட்களை அகழ்ந்து எ டு க்கு ம் நிலங்களாக்கப்பட்டமையால் ஒவ்வொரு வருடமும் 11 மில்லியன் ஹெக்டயர் அயனவலயக்காடுகள் அழிக்கப்படுகின்றன. காடுகளைப் பாதுகாத்தல், மீள்காடாக்கல் புதியகாடுகளை வளர் க் கும் திட்டங்கள் குறைந்த அளவிலேயே செயற்படுத்தப்படுகின்றன. பொருளாதாரத் திட்டங்கள் பல நாடு களில் இலாப நோக்கை மட்டும் பேணும் அடிப்படையில் மேற்கொள் ளப்படுவதால் சூழல் பாதுகாப்புத் திட்டங்கள் புறக்கணிக்கப்படும் நிலை யில் உள்ளது. இயற்கைச் சமநிலையைப் பேணி பொருளாதாரம் ஈட்டும் கொள்கைகள் இன்று அவசியம் தேவைப்படுகிறது. சூழல் பாதுகாப்புப் பற்றிய ஒரு சமூக ஒருங்கிணைப்பு உலகளாவிய ரீதியில் உருவாக்குவது மிக அவசியமாகும். அபிவிருத்தி பற்றிய கொள்கை களும், சூழல் பாதுகாப்புப் பற்றிய வாதங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. இவ் அபிவிருத்தியும், சூழல் பாதுகாப்பும் இன்று ஒன்றை ஒன்று மீளவலியுறுத்தி நிற்கின்றன. எனவே இயற்கைச் சமநிலையைப் பேணி பொருளாதார அபிவிருத்தியை மேற்கொண்டு புதிய வளர்ச்சிப்பாதையை நிர்ணயிக்க உழைப்போமாக. (9
பாரதியாரின் அன்னையை வேண்டுதல்
எண்ணிய முடிதல் வேண்டும்
நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்;
தெளிந்தநல் லறிவு வே'டும்; பண்ணிய பாவ மெல்லாம்
பரிதிமுன் பணியே (பால நண்ணிய நின்முன் பகு
நசித்திடல் வேண்' ம்

விநாயகர் தரும நிதியம் 6 அறநெறி 55
11. உலகை ஈர்க்கும் திரைப்படவியல்
LLLLLLLLALLLcLLLLLLLLLLLLLLLLLJLLLLLLL LLLLLLLLMLALSLSLLLLLSLLLLLLLLLL LLLLLLLLSLLLLLLLS
திரைப்படவியல் இருபதாம் நூற்றாண்டின் புதியதொரு கலை வடிவமாகும். பொதுவாக இயல், இசை, நாடக அழகியற் கலை வடிவங்களின் பரிணாம வெளிப்பாடாக இத்துறை வளர்ந்ததுடன் g விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களின் துணையுடன் இன்று உலக மக்களை ஈர்க்கும் உன்னத கலை வடிவமாகத் திரைப்படவியல் விளங்கு கின்றது. இதுவரையில் மனிதர்களுக்குக் கிடைத்துள்ள கலை வடிவங் களில் சர்வதேச ரீதியாகப் பொதுமை கொண்ட கலை வடிவமாக உள்ள சினிமாத்துறை வெவ்வேறு நாடுகளில் பல்வேறு தனித்துவங் களுடன் தயாரிக்கப்பட்டு உலகெங்கணும் காண்பிக்கப்படுகிறது; இரசிக்கப்படுகின்றது. தொழில் நுட்ப ரீதியாக வளர்ச்சி பெறுகின்ற ஒரு நவீன கலை வடிவமாக இத்துறை உள்ளது.
சர்வதேச ரீதியாகச் சாதனைகள் பட்ைத்துள்ள திரைப்பட வியல் உலகக் கருத்துப் பரிமாற்றத்திற்கும், படைப்புத்துறையில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் பரஸ்பரம் தொடர்பு கொண்டு உற வாடுவதற்கும் உரிய ஊடகமாக மலர்ந்துள்ளது. இன்றைய மனித வாழ்வின் அனைத்துப் பிரிவுகளையும் மிக நுணுக்கமாகக் கலை வடி வச் சிறப்புடன் வெளியிடும் திரைப்படவியல் துறை உலகின் பெரும் பாலான மக்களை ஈர்த்து வைத்துள்ளது என்பதை மறுக்க முடியாது. பல்லுப்போன பாட்டி முதல் படிக்கும் மாணவர்கள்வரை திரைப் படங்கிளைப் பார்க்க ஆவலுறுகிறார்கள். நவீன திரைப்படங்கள் பெரும்பாலும் பொழுது போக்குத் துறையினூடாக அதிக இலாபம் உழைக்கவே திரையிடப்பட்டாலும் கல்வியியல், அறிவியல் விஞ்ஞான உயிரியல் துறை சார்ந்த பல வகையான படங்களும் உருவாக்கப் படுகின்றன. え
முதன் முதலில் சினிமாவைக் கண்டு பி டி த்த வர் எடிசன் (EDISON) ஆவார். இதன் பின் படிப்படியாக மெளனத் திரைப் படங்களும் அதனைத் தொடர்ந்து பேசும் படமும் இதன் வளர்ச்சி யாக ஈஸ்மன் என்பவரின் ஆராச்சியின் விளைவாக வ ண் ண நிறங் களையுடைய கலர்த்திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. மெளனப் படங்களாக வந்த திரைப்படங்கள் பல காட்சிகளை உணர்ச்சி வெளிப் பாடாக உணர்த்தி நின்றன. 1928 ம் ஆண் டி லே தான் முதன் முதலாக The ja22 Stuger என்ற பேசும் படம் திரையிடப்பட்டது. இதன் பின் மனித உணர்வுகள் உரையாடல் நிகழ்ச்சிகளினூடாகக் காட்சிப்படுத்தப்பட்டன. சினிமாத்துறை ஆரம்பித்து வளரும் நிலையில் இத்துறையைப் பயன்படுத்திக்"காட்டியவர்கள் LUMIERE லுமிெயிரா

Page 31
56 அறநெறி 6 அறிவியல் சிந்தனை
சகோதரர்களும், MELIES மெலஸ் என்பவரும் ஆவார்கள். அவர்கள் மனித வாழ்க்கைச் செயற்பாடுகளையும், நேர டி நிகழ்வுகளையும் தமது படங்களில் காட்டினார்கள். பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் இவர்களுடைய படங்களில் அலசப்பட்டன.
திரைப்படவியலின் வளர்ச்சி மாணவர்களின் கல்வி உலகிலும் பல உயர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக சுற்றாடல் பற்றிய கருத்து நிலைகளின் வளர்ச்சிக்கு சூழலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக் கப்பட்ட பல திரைப்படங்கள் உதவியுள்ளன. வோ ல் ட் டி ஸ் னி (Walt Disuey) விவரணத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் விலங்கு உலகம், பாலைவனங்கள், பனி நிறைந்த தண்டராஸ் பிரதேசங்கள், கர்டுகள், கடலின் அடிப்பகுதிகள் போன்றவற்றை விரிவாகத் திரைப் படங்களில் உருவாக்கியுள்ளார்கள். வெவ்வேறு நாடுக ளின் கலாச் சாரம் மக்களுடைய பண்பாட்டு வாழ்க்கை பெளதீகச் சூழல் மற்றும் வரலாற்று நிகழ்ச்சிகள். பயணச் சம்பவங்கள், பயங்கர நிகழ்வுகள் போன்றவற்றைக் கொண்டு பல படங்க ள் தயாரிக்கப்படுகின்றன. நமது நாட்டில் ஆங்கிலத் திரைப்படங்கள் பார்ப்பது வரையறைக்கு உட்பட்டதாக இருப்பினும் மேற்கூறிய விடயங்கள் மற்றும் அண்ட வெளி, தாவர உலகம் பற்றிய திரைப்படங்களை மா ன வ ர் க ள் பார்ப்பது நல்லது, ஆபிரிக்கக் காடுகளில் விலங்குகளின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட 'உறடாரி" திரைப்படத்தைப் பார்க்கும் அதிஸ்டம் உங்களுக்குக் கிடைக்க வேண்டும். அதில் இருண்ட கண்டம் என வர்ணிக்கப்படும் ஆபிரிக்காவில் வாழும் அதிசயவிலங்குகளின் வாழ்க்கை முறைகள் காட்டப்படுகின்றன.
இன்று பலவாறாக "டைனோசோம்கள்” பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள், மல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இவ் விலங்குகள் பற்றியும் அவற்றின் தனித்துவமான வாழ்க்கை இயல்புகள் அடங்கிய விஞ்ஞானக் கண்ணோட்டத்தில் ‘* ஜுராஸிக்பாக் ? என்ற திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இட படத்தை பார்த்ததனாலேயே பல விஞ்ஞானிகள் டைனோசோம்கள் பற்றித் தொடர்ந்து ஆராச்சி செய்யத் தூண்டப்பட்டார்கள், எகிப்திய நாகரீகத்தைத் தத்ரூபமாகச் சித்தரிக்கும் **தசபனத' திரைப்படமும் பெளத்த கலாசாரத்தை எடுத்துக் காட்டும் "அங்குலி pTả.” திரைப்படமும் மனிதகுல பண்பாட்டை, கோலங்களை, தனித் துவமான உணர்வுகளைப் பறைசாற்றுபவையாகத் தயாரிக்கப்பட்டுள் ளது. கொலம்பஸ் அத்திலாந்திக் சமுத்திரத்தை கடந்து அமெரிக் காவை கண்டுபிடித்த அனுபவங்களையும், ரொபின்சன் குருசோ தனியாக ஒரு தீவில் வாழ்ந்த வாழ்க்கையையும் வெகு சிறப்பாகத் திரைப்படமாக்கியுள்ளார்கள்.

விநாயகர் தரும நிதியம் 12 - 3 அறநெறி 57
இவ்வாறு உலக வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய போர்கள் நிகழ்ச்சிகள் பற்றியும் படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆத்மீகச் சுதந்திரப் போராட்டம் நடாத்திய மகாத்மா காந்தியின் வரலாற்றைச் சித்தரிக்கும் ‘காந்தி? திரைப்படம் பலகோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்டது. காந்தியடிகளின் வாழ்க்கையை, நண்பர் களுடனும், உறவினர் சளுடனும் பழகிய விதங்களை உயிர்ப்புடன் இப்படம் எடுத்துக்காட்டுகின்றது. உலகின் பலகோடி மக்கள் இப் படத்தைப்பார்த்து ஆர்ப்பரித்துள்ளார்கள். இவ்வகையில் பல ஆண்டு களுக்கு முன் தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘கப்பல் ஒட்டிய தமிழன்' என்ற படமும் ஒரு குறித்த காலத்தில் நடைபெற்ற இந்திய சுதந்திர வரலாற்று நிகழ்வுகளைச் சிறப்பாக எடுத்து விளக்குகிறது. இதில் வ. உ. சிதம்பரனாரின் வரலாறும் அவருடன் வாழ்ந்த பாரதியார் சுப்பிரமணிய சிவா போன்றவர்களின் செயற்திறன்களும் தெளிவா இக் காட்டப்படுகின்றன. இதில் பாரதியார் பாடிய ஒடி விளையாடு பாப்பா என்ற பாடல் உயிர்ப்புடன் எளிமையான காட்சியமைப்பில் எடுத்தாளப்படும் விதம் பார்வையாளர்களைப் பரவசப்படுத்துகின்றது.
தற்போது சினிமா: பார்ப்பவர்களுடைய மனங்களைப் பல விதங்களில் பாதிக்கின்றது. இது நல்ல பாதிப்பாகவும் சில வேளை களில் தீயபாதிப்புகளாகவும் உள்ளன. இன்று நடைமுறை வாழ்வை அப்படியே எடுத்துக்காட்டும் யதார்த்த பூர்வமான திரைப்படங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்துறையின் த ந்  ைத என றோசலினி (ROSSELLINI) வர்ணிக்கப்படுகின்றார். இவருடைய "ROMA OPEN CITY? போன்ற படங்களில் நடைபெறும் காட்சிகள் ரசிகர் களின் நெஞ்சங்களை சுண்டி இழுப்பவைகளாகவுள்ளன. இப்படங்க ளில் வரும் எந்த நடிகரும் நடிகராகத் தோன்றுவதில்லை, ஒரு வீட்டின் சுவர்களுை அப் புறப் படுத் தி விட் டு அதில் வாழும் குடும்பத்தைப் போலவும் இப்படங்களில் காட்சியமைப்புக்கள் தோன்று கின்றன. அன்றாட மனித வாழ்க்கையின் உளத் தேவைகள், ஆசை உணர்வுகள் பிரச்சனைகளை விடுவிக்கும் செயல் வடிவங்கள் அழகி பல் நோக்கில் இங்கு அரங்கேற்றப்படுகின்றன.
திரைப்படத்துறையின் புதிய வளர்ச்சி, தொழிநுட்ப விருத்தி யினாலும் உலகில் உடனடியாக நிகழும் விறுவிறுப்பூட்டும் மனித உணர்வுகளைத் தூண்டும் நிகழ்வுகளினால் படங்கள் உருவாக்கப்பட் டன. உதாரணமாக 1986ல் கப்பல் ஒன்றில் அனாதைகளாக கனடா வந்த தமிழர்களின் கதையைத் தழுவி "WEL COMETO CANADA" என்ற படம் தயாரிக்கப்பட்டது. இப்படத்தை கனேடிய தேசிய படச்சபை தயாரிக்க, உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஜோன்சிமித் நெறியாழ்கை செய்துள்ளார். பல திரைப்பட விழாக்களில் இப்படம் பரிசுகளைப் பெற்றதுடன் மேலைத் தேசத்தவர்களின் மன உணர்வு

Page 32
58 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
களில் பல மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளது. மனித இதயங்களைக் கிழித்து அதில் புதைந்திருக்கும் சிக்கல்களையும், புறழ்வுகளையும், புதி ரான உணர்வுகளையும் வெளிப்படுத்த ஒளியும், நிழலும் பாய்ந்த கலை ஊடகமாக இத்திரைப்படத்துறை வளர்ந்துள்ளது.
நாடகமேடை (Proscenium) என்பதைக் கைவிட்டுப் பார்வை யாளர்களுக்கு அருகே நிகழ்வைக் கொண்டுவர சினிமா உதவுகிறது. சினிமாவில் வரும் பாத்திரங்களின் பார்வை அசைவுக்கு ஏற்ப கண் ணோட்டங்சளும், பாத்திரங்களின் வருதல் போதலுக்கான திரைத் தி  ைசக ஞம் ஒன்றிணைக்கப்படுகின்றன. இவ் ஒன்றிணைப்புக்களில் இருந்தே சினிமா என்ற கலை வடிவம் தோன்றுகின்றது. சினிமாக் கதைகளின் நகர்வு கமரா இயக்கங்களினூடாகப் (Camera Movements) பதிவு செய்யப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் இயக்குனர், பாத்திரங் கள், மற்றும் பார்வையாளர்கள் ஆக மூன்று தரப்பினர்க்கும் ஒத்தி சைவான கள அமைப்புக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இத் தேர்வுகள் பலகோணங்களில் பல உத்திகளைக் கொண்டு உருவாக்கப் படுகின்றன. இத்தகைய சினிமாத்துறை வெகுசன சாதனத்தின் வர்த் தகக்கவர்ச்சி என்பதுடன் தனித்துவமான கலை ஊடகமாக இன்று பிரதி பிம்பங்களை ஏற்படுத்தி வருகின்றது. திரைப்படவியலில் பல் வேறு துறைச் செயற்பாடுகளில் முக்கியமானது படத் தொகுப்பாகும் பல்வேறு காட்சிகளாக எடுக்கப்பட்ட படத்தின் கதைக்கு ஏற்ப காட்சி யமைப்புக்கள் தொகுக்கப்படுவதே படத் தொகுப்பாகும். இத்துறை சினிமாவுடனேயே பிறந்து விட்டது. பல்வேறு காட்சிகளை வெட்டித் தொகுப்பதன் மூலம் (Cut / Joint) தொடர்ச்சியற்ற இடங்களில் இடகாலரீதியான ஒரு தொடச்சியைக் காண விளையும் கலைதான் படத் தொகுப்பு ஆகும். f
வெவ்வேறு கள பரிமாணங்கள், கோணங்கள், அசைவுகள், ஒளிப் பின்னணிகள் மூலமாக ஒரு காட்சியானது செயற்படுத்தப்படுகிறது. இவ் வாறான காட்சியமைப்பின் மூலம் இயங்கியல் ரீதியாக சினிமா தோன் றுகிறது. ஒரு நிகழ்வு காட்சியாக எடுக்கப்படும் போது முதலில் அதன் தனித்துவப் போக்கு உறுதி செய்யப்படுகிறது. பின் வெவ் வே று கோணங்கள் மூலமாகக் காட்சி எடுக்கப்படும் போது அந்நிகழ்வானது உயிர்ப்படைகிறது. இவ்வாறான பல நிகழ்வுகளின் படிமாணங்களே திரைப்படமாகக் கட்டி எழுப்பப்படுகிறது. இதை அழகுபடுத்தப்பட்ட பல உத்திகள், இசை என்கின்ற ஜாலம், திரைக்கதை வசனம், பாடல் கள் போன்றன மேலும் சுவைக்கக் கூடிய கவர்ச்சியான ஊடகமாக்கு கின்றன. ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் ப்ோது அதில் ஏதும் மகத் தான கருத்துக்கள் உள்ளனவா என ஆராய வேண்டும். அம்மகத்தான உருவங்களைப் படத்தில் பார்க்கும் போது நீங்கள் அடையும் a-6öð7rit எங்கிருந்து வருகிறது. உங்கள் மனதில் மகத்தான எண்ணங்களை உரு

விநாயகர் தரும நிதியம் 6 அறநெறி 59
வார்க்க அப்படத்தின் எழுத்தாளரும். இயக்குனரும் எவ்வளவு ஆழமான உணர்வுகளைக் கொண்டிருந்திருப்பார்கள்! கதாபாத்திரங்களையும், நிகழ்ச்சிகளையும் படைக்க எத்தகைய துல்லியமான திறமைகளை அவர்கள் கொண்டுள்ளார்கள். இவை பற்றியெல்லாம் ஒரு படத்தை அல்லது நாடகத்தைப் பார்க்கும் போது சிந்திக்க வேண்டும். இவ் வாறான சிந்தனைகள் நாளை உங்களையும் இயக்குனராக, எழுத்தாள ராக மாற்றக் கூடியன.
சினிமாத்துறைக்கான ஈர்ப்புக்களை சரிவரத் தேர்ந்தெடுப்பதில் இயக்குனருக்கு திறமையும் அனுபவமும் உதவுகிறது. நுண்உணர்வு மூலம் தேர்ந்த ஈர்ப்புகளைச் சரிவர ஒருங்கமைத்தால் சினிமா என்ற கலை வெற்றிபெறும். அந்த வெற்றியின் அடிப்படையில் புதியதொரு மொழியே உருவாகிறது. அருமையான காட்சி; என்னை அழ வைத் தது; என்ன வித்தியாசமான முடிவு! கமராவே கத்ை பேசியது என் றெல்லாம் இயக்குனரைப் பாராட்டும் புதிய மொழிகளாக இவை அமைந்து விடுகின்றன. அமெரிக்காவில் ஹலிவூட் வட்டாரப் பகுதி யில் திரைப்படங்கள் பிரமாண்டமாக, மிக நவீன மின்னணு உபகர ணங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஸினிரமா, ஸினிமாஸ் கோப், முப்பரிமாணம் போன்ற பல வகைகளில் திரைப்படங்கள் காண்பிக்கப்படுகின்றன. இன்று எமது தமிழ் சினிமாக்களில் ஸினி மாஸ்கோப் என்கிற பெரிய விம்பங்களைக் கொண்ட காட்சி அமைப் புக்கள் நடைமுறைக்கு வந்து விட்டன.
இங்கு ஸினிரமா என்ற வகையில் திரையிடப்படும் திரையின் அகல்ம் 64 அடி, உயரம் 23 அடி ஆகும். மூன்று தனித்தனி கமராக் கள் மூலம் ஒரே காட்சியை ஒரே சமயம் படமாக்கி, வ  ைள ந் த பிர மாண்டமான திரையில் மூன்று தனித்தனி படம் காட்டும் இயந்திரங் களின் மூலம் ஒரே சமயத்தில் ஒரே திரையில் காண்பிக்கப்படும். இதற்கு மிகப்பிரமாண்டமான அரங்கு தேவைப்படுகிறது. இக்காட்சி கள் இயற்கைத் தன்மையுடன் படம் பார்க்கிறோம் என்ற உணர்ச்சி யின்றி காட்சிகள் நடைபெறும் இடத்திலேயே பார்ப்பவர்கள் இருப் பது போல அமைந்திருக்கும். மேற் கூறிய முறையில் எளிமையாகத் தற்போது முப்பரிமாணப்படங்கள் நடைமுறைக்கு வந்து விட்டன. இப்படங்களைக் குறித்த வில்லைகளையுடைய மூக்குக் கண்ணாடிகள் அணிந்தே பார்க்க வேண்டும். இவ்வாறான புதிய நுட்ப முறைகளினூ டாகத் திரைப்படவியல் இயக்குனர்கள் ப ல் வேறு தனித்துவமான சிறப்புகள் கொண்ட படங்களை இன்று தயாரித்துக் கொண்டிருக்கிறார்
5 GT. w
இவ்வாறு புகழ் பெற்ற பல இயக்குனர்கள் சினிமாத் துறையிலும் பொது வாழ்விலும் உயர்ந்தவர்களாகக் கணிக்கப்படுகிறார்கள். இந்

Page 33
60 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
திய கலாச்சார வாழ்வின் தலைமைத் தெய்வம் என்று சிறப்பிக்கப்படும் சத்தியஜித்ராய் பல படங்களை கலாதரிசனமாக இயக்கி உலகப் புகழ் பெற்றவர். 37 வருடங்கள் திரைப்படத்துறை வாழ்வில் எண்ணற்ற விருதுகளைப் பெற்றார். 1955 ம் ஆண்டு தனது மனைவியின் நகைகளை அடகு வைத்து "பாதர் பதஞ்சலி' என்ற படத்தை முதலில் வெளி யிட்டார். இப்படம் இந்திய கிராமிய வாழ்க்கையைச் சித்தரிக்கும் உன்னத கலைப்படைப்பாக உருவானது. இந்திய திரைப்படவியல் கலைஞர்கள் சர்வதேசத் தரத்தை விட உயர்ந்தவர்கள் என்பதை சத்யஜித்ராய் மெய்ப்பித்தார். இப்படத்திற்கு அதிசிறந்த மனித ஆவண விருது கென்னஸில் நடைபெற்ற ஐரோப்பிய விழாவில் வழங்கப்பட் டது. இவருக்கு ஒக்ஸ்போட் பல்கலைக் கழகம் கெளரவ கலாநிதிப் பட்டம் வழங்கியது. தொடர்ந்து இவர் தயாரித்த இருபத்தைந்துக் கும் மேற்பட்ட படங்கள் பல பரிசுகளைப் பெற்றதுடன் அழியாத கலைவடிவங்களாக உலகையே பரவசப்படுத்துகின்றன.
கலைஞர்கள் மனித நேயத்தின் பால் விசுவாசம் கொண்டவர் கள். மனிதனை அடிமைப்படுத்துகின்ற கருத்துக்களை எதிர்ப்பதிலும், அவனது உணர்வுகளை மதித்து அவற்றையே கலை நுணுக்கங்களினூ டாகப் புதிய படைப்புக்களை உருவாக்குகிறார்கள். இவ்வியல்பு சினி மாத்துறைக்கும் பொருந்தும் . ஆனாலும் இன்று வியாபார நோக்கம் கொண்ட மனிதனின் பிறழ்வான உணர்வுகளைத் தூண்டக் கூடிய படங்கள் பெருவாரியாகத் திரையிடப்படுகின்றன. இவற்றினால் தீய மூக விளைவுகளும் ஏற்படலாம் எனப்பலர் கருத்துக்களை வெளியிட் டுள்ளனர். எனவே சினிமா என்ற கலை நுணுக்கப் பயன்பாடு பல வழிகளில் ஆராயப்பட வேண்டி உள்ளது. உலகில் நாம் வாழுகின்ற காலகட்டத்தை வரலாற்று ரீதியாக உணரும் உணர்வெழுச்சிகளாகக் கலைப் படைப்புக்கள் திகழ வேண்டும். அப்போதுதான் நாம் படைக் கப் போகின்ற புதிய வரலாறுகள் மனித சாதனைகளாக மலரும்.O
Ꭷ3ᎩᎧ3ᎩᎧ3ᎧᎧ3ᏕᎧ9ᎧᎧ3ᎧᎧ9>Ꭷ9ᎧᎧ3>Ꭷ9ᎧᎧ3ᎧᎧ3ᎧᎧ3ᏫᎧ38Ꭷ3ᎧᎧ
பாரதியாரின் முரசு
7. சாதிப் பிரிவுகள் சொல்லி - அதில்
தாழ்வென்றும் மேலென்றும் கொள்வார் நீதிப் பிரிவுகள் செய்வார் - அங்கு
நித்தமும் சண்டைகள் செய்வார். 8. சாதிக் கொடுமைகள் வேண்டாம்; - அன்பு தன்னில் செழித்திடும் வையம்; ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; - தொழில் ஆயிரம் மாண்புறச் செய்வோம்.

விநாயகர் தரும நிதியம் 4 அறநெறி 61
fћ.
12. 21 ம் நூற்றாண்டின் தேடல்கள்
LLLLLL LLLLLLLLLLLLLLLLLLLALLLLLLLL
பினிதனின் அறியாமை பல வழிகளில் அகன்றுள்ளது. தன்னிட முள்ள வளங்களைப் பயன்படுத்தி உ ல க மே ஒரு குடும்பமாக 21 ம் நூற்றாண்டை எதிர் நோக்குகின்றது என்றாலும் இன்று உலக மக்கள் பல கோணங்களில் பிரச்சனைகளை எதிர் நோக்கியுள்ளார்கள் தேவை களின் அதிகரிப்புடன், அரசியல் பொருளாதர்ர, இராணுவரீதியாக ப்ல சிக்கல்களை எதிர்நோக்கும் நிலை யில் 21 ம் நூற்றாண்டு பற்றிய சிந்தனைகள் பல தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. ஒரு புறம் விஞ் ஞான அறிவியல் ஆக்கசக்தித் தேடல்களாக மனித செயற்பாடுகள் மலர, மறு புற ம் இப்பூமியையே அழிவுப்பாதைக்கு இட் டு ச் செல்லும் நடவடிக்கைகளிலும் மனிதன் ஈடுபடுகிறான்.
21 ம் நூற்றாண்டு ஜனனிக்க இருக்கும் இத்தருணம் அச்சுறுத் தல் நிறைந்ததாகவுள்ளது. மனித நாகரிகம் எதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது? உலக சனத்தொகை 1050 கோடியாக இருக்கும் போது 100 கோடி மக்கள் உணவு இன்றி வருத்தப்படப் போகிறார் கள். இராணுவ, தொழில்மய நடவடிக்கைகளால் சூழல் பாதுகாப்பு மனித அழிவுகளை எல்லாம் நினைக்கும்போது புதிய நூற்றாண்டின் இறுதிவரை மனித ஜாதி நீடிக்குமோ என்று அஞ்சவேண்டியுள்ளது எனப்பேராசிரியர் விளநிமீஸமினேவ் கூறுகிறார். தற்போது அதிக சனத் தொகை கொண்ட மூன்றாம் உலக நாட்டு மக்களில் மூன்றில் ஒரு பங்கினருக்கு எவ்வித  ைவ த் தி ய பராமரிப்பும் கிடையாதுள்ளது. அபாயகரமான கழிவுப் பொருட்கள் மூலம் சூழல் நச்சுப்படுத்தப்பட் டுக் கொண்டிருக்கிறது. அடுத்த சில நூற்றாண்டுகளில் இப்போதுள்ள பெற்றோலிய வளங்கள் அற்றுப் போய்விடும். அணுசக்தி வளம் எவ் வகையில் பாதுகாக்கப்படப் போகிறது என்ற பீதியும், உலகளாவிய ரீதியில் கொடிய எயிட்ஸ் நோயின் பரம்பல்களின் தாக்கங்களும் அதி கரித்துள்ளன. ஆயுதப் போட்டி நாடுகளிடையே வளர்ந்து கொண்டே செல்கிறது.
ஆபிரிக்காக் கண்டத்தில் வரட்சியும், வறுமையும் கொ டி ய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன். இங்கு சராசரி நபர் விகித கலோரி நுகர்வு 2200 அலகுகளிலும் குறைவாகவுள்ளது. விவசாய, பண்ணை உற்பத்திகள் தொடர்ந்து வீழ்ச்சியுற்று வருகின்றன. இதேவேளை சனத்தொகை வருடத்திற்கு 32 சதவீதமாக அதிகரிக்கிறது. 2000ம் ஆண்டில் ஆபிரிக்க சனத்தொகை 70 கோடியைத் தா ன் டு ம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பல இலட்சம் மனித உயிர்கள்

Page 34
62 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
பட்டினியால் துடித்து இறக்கும் அபாயம் எதிர்நோக்கப்படுகின்றது. ஆசிய, லத்தீன், அமெரிக்க மிகவறிய 15 நாடுகளின் தனிநபர் விகித வருடாந்த வருவாய் 16 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இத் தகைய வறிய நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவ தாக ஐ. நா. சபையின் யூனிசெப் நிறுவனம் அறிவித்துள்ளது. இந் நாடுகளின் பொருளாதார நிலையும் மிகக் கீழ் மட்டத்திலேயேயுள் ளது. அரசியல், இராணுவ, சமூக பொருளாதாரப் பிரச்சனைகள் இந்த நாடுகளைப் பீடித்துள்ள கொடிய நோய்களாகத் தொடர்கின் றன.
பொதுவாகப் பெருமளவு சனத்தொகையைக் கொண்ட அபி விருத்தியடைந்து வரும் நாடுகளின் மொத்தத் தேசிய உற்பத்தி மட் டம் மிகவும் குறைவானதாகவேயுள்ளது. ஒரு காலத்தில் ஏகாதிபத்திய, குடியேற்றவாத ஆட்சிகளின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற இந்நாடுகளில் இன்றும் அன்றைய ஏகாதிபத்தியவாத தாக்கங்கள் நிலவுகின்றன. அ ன்  ைற ய ஏகாதிபத்திய ஆட்சி குடியேற்ற நாட்டு மூலவளங்களை யும், வியாபார, வர்த்தக உணவுப் பொருட்க  ைள ப் பயன்படுத் தியதுடன், தமது முடிவுப்பொருட்களின் சந்தைகளாகவும் இந் த நாடுகளை ஆக்கிரமித்துக் கொண்டன. இன்றைய உலக சந்தைக்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் தொடர்ந்து அ டி ப் ப  ைட இலாபத்தைப் பெறத் தவறிவிடும் பொருட்களையே ஏற்று மதி செய்வதுடன் த மது நுகர்வுப் பாவனைக்கு பெற்றோலியம், கைத் தொழில் மற்றும் உணவுப் பொருட்களைப் பெருமளவு இறக் குமதி செய்கின்றது, இதனால் இவ்வளர்முக நாடுகள் பல பிரச்சனை களை எதிர்நோக்குகின்றன.
1) தொழில்நுட்பப் பயிற்சி இன்மையும், இருக்கு b வளங்களைச்
சிறப்பாகப் பயன்படுத்தாமையும்,
2) கைத்தொழிற் துறையில் முன்னேற்றமின்மை.
3) வாழ்வாதாரப் பயிர்ச்செய்கை, வி லங்கு வேளாண்மைகளில்
விருத்தி காணப்படாமை.
4) சனத்தொகை துரிதகதியில் பெருகும் நிலை; இதனால் பெருமளவு மக்களுக்குத் தேவையான கல்வி, சுகாதாரம், பொதுவசதிகளுக்கு செலவு அதிகரிக்கின்றது.
5) நுகர்வுச் செலவுகள் பெருமளவு அதிகரிக்க முதலீடுகள் குறைக்கப் படுகிறது. வேலையில்லாப் பிரச்சனைகள் பெருமளவாக அதிகரிக் கிறது. வருமானக் குறைவு ஏற்படுகிறது.
6) கல்வியறிவு இன்மை, பகுத்தறிவு, அறிவியல் துறைகளில் ஆர்வம் இல்லாமல் பழமை பேணும் தொழிற்துறைகளால் வளர்ச்சி மந்தம்.

விநாயகர் தரும நிதியம் 6 அறநெறி 63
இவ்வாறான பல பிரச்சனைகளை எதிர் நோக்கும் மக்கள் உலக சனத்தொகை விகிதாசாரத்தில் பெரும் பங்கு வகிப்பவர்களாகவுள்ளார் கள். தற்கால விண்வெளிப் பயண, கம்பியூட்டர் யுகத்தில் பல நாடு களில் வாழும் மக்கள் மண்ணை உழுவதற்கு மரக்கலப்பைகளையே இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நவீன போக்குவரத்து வசதிகள்! செய்திப்பரிமாற்றங்கள்! நாகரிக வளர்ச்சிகள்!!! மனிதன் காலத்தையே வென்று விட்டர்ன் எனப்புளகாங்கிதம் அடைகின்றனர் பலர். ஆனால் அம்மனித இனத்தைச் சேர்ந்தவர்களே உணவைத் தேடி அலைந்து இறந்து கொண்டிருக்கிறார்கள். இது உலகிற்கே அவ மானமாகும். எனவே மேற்கூறிய பிரச்சனைகளில் இருந்து வளரும் நாடுகள் மீட்சியடைய முயல்கின்றன. வளர்ந்த நாடுகளினதும் சர்வ தேச நிறுவனங்களினதும் உதவிகளைப் பெற்று வருகின்றன. 21 ம் நூற்றாண்டில் இந்நாடுகள் தமது கால்களை உறுதிபட்ப்பதிக்க உயர்ந்த தொழில் நுணுக்க முறைகளைக் கைக் கொண்டு தமது நாட்டு வளங் களுக்கு ஏற்ப திட்டங்களை வகுத்தல் வேண்டும்.
சுதந்திர வர்த்தக வலயங்களை உருவாக்கி கைத்தொழிற்துறை வளர்ச்சியுடன் வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொள்ளலாம், கல்வியறிவினுரடாக சனத்தொகையை மட்டுப்படுத்தல், சு கா தா ர மனப்பான்மை மாற்றங்களை ஏற்படுத்தல், சமூக உறவுகளை விருத்தி யாக்குதல் மூலம் வளர்முக நா டு கள் புதிய 21 ம் நூற்றாண்டை எதிர் நோக்கலாம். இன்று வளர்ந்த நாடுகளும் பல விதமான பிரச் சனைகளை எதிர் நோக்குகின்றன. இவற்றை எல்லாம் தீர்க்க உலக நாடுகள் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய உலகளாவிய பொது அமைப்புக்களும் மேலும் உறுதியாக வளர்க்கப்படல் வேண்டும். மானுட நேய அடிப்படையில் எமக் கே உரித்தாக உடைய இந்த ஒரே ஒரு உலகத்தை எல்லோரும் காத் து 21 ம் நூற்றாண்டுக்கு இட்டுச் செல்ல வேண்டும்.
'வயிற்றுக்குச் சோறுண்டு கண்டீர் - இங்கு வாழும் மனிதர் எல்லோர்க்கும்' "அறிவை உயர்த்திட வேண்டும் - மக்கள்
அத்தனை பேருக்கும் ஒன்றாய்?" "அன் பென்று கொட்டு முரசே - அதில்
யாவர்க்கும் விடுதலையுண்டு*
என்ற பாதியின் பாடல் வரிகள் உணர்த்தும் பொதுமைக் கொள்கை புவியல் புத்துக் குலுங்க எல்லோரும் உழைக்க வேண்
டும். மனிதனுடைய சு வியல் விஞ்ஞானத் தேடல்கள் எல்லாம் ஆக் கப்பணிகளுக்காக அர்பணித்தல் அவசியம்.

Page 35
64 அறநெறி 4 அறிவியல் சிந்தனை
பா. தனபாலன் அவர்களின் கடிதம்
aLLLLLL LLcLLLLLLLLLLLL
சுழிபுரம் , 27- - 1994.
தங்களின் ஈகை என்னை மெய்மறக்கச் செய்தது. உலகி லே இமயமலை உயர்வானது. அதேபோல தங்களின் தருமமும் மிக மிக உயர்வானது. தங்களின் தெளிவான சிந்தனைகள் போல் இவ்வுலகில் எவருமில்லை. கனிவான, அன்பான, சிநேகிதமான தங்களின் மானுட அறம் என்னைப் பலவாறு கவர்ந்தது. அதேசமயம் கண்டிப்பான, கட்டுப்பாடான, நேர்மை, தைரியம், கடமையுணர்வு, தார்மீக ஒழுக் கம் இவை எல்லாம் உழைப்பு என்ற ரீதியில் தங்களுடன் இரண்டறக் கலந்திருப்பதை என்னால் உணர முடிகிறது. தாங் கள் ஏனைய யாரையும் வேதனைப்படுத்தாமல் அறம், தருமம் செய்ய வேண்டும் எனச் செயற்படும் பெருமனிதர். தங்களின் அணுச் சேர்க்கை அபூர்வ மான அதிசக்தி வாய்ந்ததாகவே உள்ளது. தங்களிடம் ஓர் பேரொளி இருப்பதை உணர முடிகிறது. இத்தனைக்கும் மேலாக நடைமுறை யதார்த் த வாழ்வில் உழைப்பு, சிக்கனம், உண்மை என்பவற்றின் ஊடாக அறிவியலை வளர்த்து அதன் மூலம் இத்தேசம் வளர வேண் டும். பல்வேறு தொழில்துறைகள் விருத்தியடைய வேண்டும். யப்பானை போல நாம் உயர வேண்டும் என்ற தங்களின் எண்ணக்கருவும், அதனை வழிகாட்டும் செயற்பாடுகளும் மிக மிகப் போற்றுதற்குரியவை. மனித னின் பிரதான கற்றல் உபகரணம் தாய்மொழி என அமெரிக்கத் தத் துவஞானி ஜோன் ரூயி என்பவர் வெளியிட்டுள்ளார். அது சமூகத்தின் ஓர் உற்பத்தியும் சமூக அனுபவங்களால் கற்கப்படுவதுமாகும். மொழி யானது அச்சமூகத்தின் ஒழுக்கங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள் ஆகியவை தொகுக்கப் பெற்ற அறிவுக்களஞ்சியமாகும். இந்த ஞானக் கோவையை பிள்ளைகளுக்குப் பெற்றுக் கொடுப்பது பாடசாலைகளாக அமைய வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்தச் சிந்தனை தங்களிட மும் முழுதாகவே உள்ளது என்பதைக் காணக் கூடியதாகவே உள்ளது. இள் மாணவர்களுக்கு பல்வேறு செயற்திட்டங்களை வளர்க்க, கற்க, சிந்திக்க தாங்கள் செய்யும் பணி போற்றுதற்குரியது.
ua. Go7uar av Gö7

· @5mųortolo) · @lego waelo
© onų efteg) ! @ togo ustello · @ qsu,
*
į-| 4
呎477
〜،...
、 ----
~ -
む Q
0:3
I o ‘‘O Į |63 " Q I ' ? : '&' I '6 |8 {2. I o ! Þz ‘6 I 'z' i 'g ·
· și ‘91 ‘ ’ i ‘z 'g'
1 *} :ょうa**すす*****ー、,,
i - O2 Wis te
--------
$('T) nųoftog)
į }
ܝ- ܫ ܼ ܝ ܚ ܚܫܚܙܝܫ
Masywursta
G
|× + į į ș *
い
* • • 事、青事
例
o acɛseɛ
ors§ 6 I o £66 s og 66 I
3沖† 6 6 I, o £66 I ‘ 3 66 I ;
しきもきシ
“・iiー・ド* と 、ミくま、も*
!??F 「 0 Ç Ç I 0 09 I 009 r ỹ & 2 &
0g 99 s
ぷぬg 0 0 & z ggぬ 00Z 0 g & {} {
**} もドミ*・・
*
( o ), ár?, 90
シ段冠野)g
--:ņ9,5×009 y vo Ø §đồ goofy op.sto
Ç66 I
wwwM-Mkwam- ------
~ :3 ž661 og 661 s *に|-§ 66 I 03 I|† 6 og 6 og 66 I ! 09母|3 66 I 8 ț¢ -3 66 I
I66 I I 66 I ‘ 0 6 6 I
SLLLLLSLLLLC LEEE LLLLSSSqSSMLALALCE LTESTTLMMTSELELCSLSLSLSLMLMLkLqMLCSLLSLkLkLSkSkkkSkSLLSLSLLLLLSAAALLS
*Yos:s...xxxxxxuxotex:s....... v.
-} 0 £į† 6 - || '066 I 9的}† 6 ‘ō 66 s κ, ή}|-I 6 * 066 s }r. o }+»* * · *، ، į „o ř| fo 'o 6 · 16 '066 i και Ο{686 1
o qīne Jo
ዘbጫwwwrረ “ብጾwሕ¬ል' (ኤፈ፡ኋ”›**ww.ሣ...wሆvጫሣ'w-ሥ**
af@raeg)IT-TOETŲ esteg)
シ%·*
,%シ
~3,477,497,9 000 nosẾ Ở on v%ệ tạo
PFrür:;"2"-25;&.
|
Mwaka Sys::Mer*RÉTTMYNYSWYMNRK3s:
SASTLTLTES SELCYz00LSEEEkqL kMSELLELE ESLMLSLLkSLeLaJJLLLL LLLLGLLLSLLLSLLL zLLLSELLLHELELMSMMMSSr
残感
ogogo) o
せ
es vo) đi giỡ șasso :
********・
*****ト*****り
149 footgestão
Ke
geggs、もQrbg news.ogg og gjoaso leo) urī0ņģg daoqi ftoți uno scolae) as go@gség Jiĝos,
1çosseossae omso@sko og I| fıçı Jogos șđĩ)rīkṣṭīstīta - † 1| 1,90||??@@ * s; I { Iseselī£1@Joe) reff? (Nori · z I}
·匈44与可đigno · I I} 491 sĩ . gloe 1111? - 0 I \, qiq goqiệures)-a lui 199ffo · 6 · * geçeği Haegeri ņogoņose) : 8 * | Z
@gugores) ress? Non
*****き、ま***まきt** メ***ミょき****き*****:き
f(9)ĪẤ
qī ofte socco 1,9±√© √ngsorto Norgots %擎-平城主神여 3シ卧) ro grafio ·
$ (Y) * :
*_达
qī£11@fùlo (Foog o
!co ựTūfīg) 199 #7T sijos:90)
シ
☆ 3|-
i.svaarwewiczkowsk
{
き*****うど*
松 #
A. ܚܣ*
wrauss
qALSLSLSLS ST TLALSLSLSLSLSLLLS qLSSLCSC
t
-

Page 36

எமது வெளியீடுகளை
பின்வரும் விலகசங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
1 1 5܂
青 ாவுைபூர்புனித அந்ே வியார்
* ਜੇ.ਜੇ.
கொழும்த்துவி சிவ ஆற்முகசாமி
கோனாவளை கிழக்கு
கொக்குவில் -- வழி இலக்கிய வட்டம்
அபிராமி மருந்தகம் நீர்வே சூரியா பார்மசி புத்து 表、。
சங்கரத்தை வட்டுக்கோட்டே 、*。
இணுவில் தமிழ்மாமன்றம் இருபர்வை
கோப்பாய் அஷ்டலட்சுமி கலண்டர் நிறுவ
தண்டிறோட் விதி:
சிவம் மருந்தகம் . ܕ ܪܝ - * 函、芷
கொடிகாமம் கலைச்சோவை
வல்வெட்டித்துறை S K சாமி - நெல்லியடி
- அன்னை மருந்தகம் - பருத்தித்துறை
இவ் வெளியீடு புலோ 議リ。 விநாயகர் 壹匹" விநாயகர் தரும நிதிய அச்சகத்தில் 95= பதிப்பிக்கப்பெற்றது