கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்

Page 1
ஈழத்துத் தமிழ்
பொ.சங்கரப்பிள் சிந்தை
பதிப்பா
தமிழவேள் இ.
22 நீ,ை yu-APR , |
2000ஆம்

ழ்ப் பேரறிஞர் ளை அவர்களின்
னகள்
சிரியர்
க. கந்தசுவாமி
ஆண்டு

Page 2


Page 3

ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின்
சிந்தனைகள்
பதிப்பாசிரியர் தமிழவேள் இ. க. கந்தசுவாமி
“உண்டால் அம்மஇவ்வுலகம் தமக்கென முயலா நோன்றாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே'
(பாண்டியன் இளம் பெருவழுதி - புறநானூறு)
25484
2000ஆம் ஆண்டு

Page 4
நூலின் பெயர் : ஈழத்துத் தமிழ்ப் பேரறிஞர்
பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்
பதிப்பாசிரியர் : தமிழவேள் C)
7,57ஆம் ஒழுங்கை, கொழும்பு - 06
முதற்பதிப்பு : மார்கழி 2000
பிரதிகள் : 5OO
விலை w : 50/=
பதிப்பகம் : ஐடியல் பிரின்ட், கல்கிசை
பதிப்புரிமை : பதிப்பாசிரியருக்கு உரியது
இந்நூல் பதிப்பாசிரியர் நிதி உதவியாற் பதிப்பிக்கப்பெற்றது. தமிழ்ச் சங்கத்தில் இப் பெரியார் பெயரால் பல இலட்ச ரூபா உதவியால் அமைந்த புதிய கட்டிடத்திறப்பு விழாநாளில் 10-12-2000 (88ஆவது பிறந்தநாளில்) வெளியிடப் பெற்றது.

வாழ்த்துரை
தமிழறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் எழுதியுள்ள நான்கு தமிழ் நூல்களின் முன்னுரைப் பகுதிகளைத் தொகுத்து, 'தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை அவர்களின் சிந்தனைகள்' என்ற தலைப்பில் தமிழவேள் இ. க. கந்தசுவாமி அவர்கள் வெளியிடும் இச்சிறு நூலுக்கு இந்த வாழ்த்துச் செய்தியை வழங்குவதையிட்டுப் பெருமை யும், மகிழ்ச்சியும் அடைகிறோம்.
திரு சங்கரப்பிள்ளையவர்கள், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும், பின்னர் அதன்துணைத் தலைவர் மற்றும் தலைவர் பதவிகளை ஏற்றும், இச் சங்கத்தின் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றினார் என்பதை அறியும் போது, அவர் எந்தளவு தமிழ்ப்பற்று உடையவராக இருந்தார் என்பதை உணரமுடிகிறது. தவிர, இந்நூலின் கட்டுரைகள், அவரது தமிழ் இலக்கியப் புலமையையும், பொது விடயங்கள் குறித்த அவரது பரந்த அறிவையும் வெளிப்படுத்துகின்றன. எழுத்து மூலம் மட்டுமின்றி, கொழும்புத் தமிழ்ச் சங்கக் கட்டிடம் அமைக்கக் கணிசமான நிதியுதவி செய்ததன் மூலமும் தனது ஆழ்ந்த தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தி யுள்ளார். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழ்ந் திருந்த காலத்திலும் அவர் தமிழ்ச்சங்கத்தோடு கடிதத் தொடர்பு கொண்டு, சங்கத்தின் வளர்ச்சிக்கு ஆலோசனைகள் வழங்கி வந்தார் எனவும், தாம் மறைந்த பிறகும், தமது மனைவியும் மக்களும் இச் சங்கப்பணிகளுக்கு உதவியாக இருக்கப் பணித்திருந்தார் எனவும் அறியும் போது அவரது தமிழ்ப்பற்றைக் கண்டு வியப் புறாமல் இருக்க முடிய வில்லை. தந்தையாரின் அடியினையொட்டி இன்று அவரது புதல்வர் களும் இச்சங்கத்தின் பணிகளுக்கு ஊன்றுகோலாக விளங்குகின்றனர். இன்று இச்சங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடங்களுக்குத் தாராளமாக நிதியுதவி செய்துள்ளதோடு, இச்சங்கத்தில் தம் தந்தையார் பெயரில் அறக்கட்டளை நிதியம் அமைப்பதற்கும், இச் சங்கத்தில் பயனுள்ள தமிழ்த்துறைப் பணிகள் அமைவதற்கும் இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என அறியும் போது, தம் தந்தையர் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பையும், பெருமதிப்பையும் உணர முடிகிறது.

Page 5
திரு. சங்கரப்பிள்ளை குடும்பத்தினர், கொழும்பு இராமகிருஷ்ண மிஷனுடன் நெருங்கிய தொடர்பை உடையவர்கள் என்பதையும் இங்கு குறிப்பிடுவதில் பெருமையடைகிறோம்.
இத்தகைய தமிழ்ப்பற்றும், கொடை ச் சிந்தனையும் கொண்ட திரு. சங்கரப்பிள்ளை அவர்களது நினைவைப் போற்றும் வகையில் இச்சிறு நூலை வெளியிட முன்வந்த தமிழவேள் இ. க. கந்தசுவாமி அவர்களது பெருந்தன்மையையும், திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் மீது அவர் கொண்டிருக்கும் அன்பையும், பெருமதிப்பையும் பாராட்டாமல் இருக்க முடியாது. அது அவரது தமிழ்ப் பற்றின் காரணத்தினால் அமைந்தது எனலாம்.
திரு. சங்கரப்பிள்ளை அவர்களது நினைவை நிலை நிறுத்தும் நோக்கில் வெளியிடப்படும் இந்நூலைத் தமிழ் ஆர்வலர்கள் மிகவும் வரவேற்பர் என நம்புகிறோம்.
திரு. சங்கரப்பிள்ளை அவர்களது குடும்பத்தினரது சேவை தொடர வாழ்த்துகிறோம்!
சுவாமி ஆத்மகனாநந்தா

முன்னுரை
கொழும்புத் தமிழ்ச்சங்கத் தலைவராக இருந்த தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் அறிவியல் கலைத்துறைப் பட்டதாரி யாகி அரச பணிகளில் ஈடுபட்டிருந்த போதிலும், உயர்ந்த தமிழ்ப் பற்றும் தமிழ்ப் புலமையும் சமுதாய உணர்வும் உள்ளவர். இதனால் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் 1950ஆம் ஆண்டு ஆயுள் உறுப்பினராகி இச்சங்கம் இந்நிலத்தை விலையாகப் பெற உதவினார். இத் தொடர்பினால் துணைத்தலைவர்களுள் ஒருவராகச் சங்கப்பணிகளுக்கு உதவினார். பின்பு தலைவரான போது சங்க நிருவாகத்தையும் சங்கப் புணிகளையும் நன்கு நெறிப்படுத்தினார்.
சங்கப் பணிகளுக்கு நிதி உதவினார். முற்பக்கக் கட்டிட அமைப் புக்கு நிதிசேகரிப்புக்குத் தாமும் ஒருவராகி உதவினார். நிதி சேகரிப்புப் பணிக்குத் தமது சிற்றுந்து ஊர்தியை எப்பொழுதும் தந்து உதவினார். இச்சங்கம் இந்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக மாணவர்க்கும் வளர்ந்த வர்க்கும் நடத்தி வந்த பல்வேறு தமிழ்த் தேர்வுகளும் அவற்றிற்கான பரிசில்கள் வழங்குதலும் ஆண்டுதோறும் ஒழுங்காகத் தொடர்ந்து நிகழ்வதற்காக நிதிப்பரிசில் நிதியங்களை வங்கிகளில் நிரந்த வைப்பாக வைத்தற்கு ஒழுங்கு செய்து இவற்றில் இருந்து ஆண்டுதோறும் வரும் வட்டியை இப்பரிசில்களை வழங்க வழிவகுத்துத் தமது பெயரிலும் தமது மனைவி பெயரிலும் தமது பிள்ளைகள் பெயர்களிலும் நிதியங் களை வழங்கி இதேபோல ஏனைய அறிஞர்களும் இப்பரிசில் நிதியங் களை வழங்க வழிவகுத்து உதவினார். இதனால் இப்போது பதினாறு அறிஞர்களின் பரிசில் நிதியங்கள் இச்சங்கத்தின் பெயரில் வங்கிகளில் உள்ளன. இச்சங்கத்திற்கு உயர்வுதரும் பணிகளுள் ஒன்றாக இப்பரிசில் நிதியங்கள் உள்ளன.
இவரது வதிவிடம் சங்கத்திற்கு அண்மையில் இருந்ததினால் நாள்தோறும் சங்கத்திற்கு வந்து பலமணிநேரம் சங்கத்தில் இருந்து சங்க நிருவாகக் கடமைகளையும், பணிகளையும் பார்வையிட்டும் அறிவுரைகள் வழங்கியும் உதவினார். சங்கத்தலைவர் பொறுப்பில்

Page 6
இருந்து விலகி அ.ஐ.நாடு சென்று தம்பிள்ளைகளோடு தங்கியிருந் தாராயினும் அடிக்கடி கடிதங்களை எழுதிச் சங்கத்தின் வளர்ச்சியையும் பணிகளையும் அறிந்து ஆலோசனைகள் வழங்கி எமக்கும் ஊக்கம் தந்தார். தமிழும் தமிழ்ச்சங்கமும் எனக்கு உயிர் என கூட்டங்களில் அறிமுகம் செய்தார்.
தாம் இல்லாத போது தமது மனைவியும் மக்களும் எமது சங்கப் பணிகளுக்கு உதவியாக இருப்பர் எனவும் இதனைத் தம் மனைவிக்கும் மக்களுக்கும் தெரிவித்திருப்பதாகவும் ஒருமுறை கடிதம் ஒன்றில் எமக்கு எழுதியிருந்தார்.
சங்க முற்பகுதிக் கட்டிடம் சங்கப் பணிகளுக்கும் வளர்ச்சிக்கும் போதியதாக இல்லாமையால் நடுவிலும் பிற்பகுதியிலும் கட்டிட அமைப்புகளை அமைப்பதற்காக இவைக்கான கட்டிட வரைபடங்களை வரைவித்துப் பெரும் முயற்சியின் பேறாக மாநகரசபை அனுமதி பெறப்பெற்றது. இப்புதிய கட்டிட அமைப்புகளை அமைத்ததற்கு உரிய நிதி உதவும் படி இந்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உள்ள அறிஞர் பலருக்கும் அ.ஐ.நாட்டில் உள்ள பெரியார் பொ.சங்கரப் பிள்ளை அவர்களின் பிள்ளைகளுக்கும் எழுதினோம். தங்கள் தந்தையாரின் பெயரினால் ஒரு பகுதியை அமைக்க உதவுவதாகவும் இதற்குத் தங்கள் தந்தையின் பெயர் இட வேண்டும் எனவும் இதற்கு இச்சங்கம் ஒப்புதல் தரவேண்டும் எனவும் தெரிவித்தனர். இதற்கான ஒப்புதலைச் சங்க ஆட்சிக்குழு வழங்கியது.
பிற்பக்க மாடிகளை அமைக்க இவர்கள் உதவுவர் என விரும்பி னோம். ஆனால் இவர்கள் பயன்பாட்டுச் சிறப்பு நோக்கி நடுப்பக்க மேல் மாடிகளை அமைக்க உதவுவதாகத் தெரிவித்தனர். இதனால் ஆட்சிக்குழுவினதும் அறிஞர்கள் சிலரதும் நிதி உதவிகளினால் பிற்பகுதி -நடுப்பகுதி நிலமாடி அமைப்புக்கள் நிறைவு செய்யப் பெற்றன. இவற்றை விரைவில் நிறைவு செய்வதற்கு நிதிப்பற்றாக்குறை இருந்த தினால் இவை அமைப்பதற்கும் கடன் அடிப்படையில் இவர்கள் நிதி உதவினர்.
நடுப்பகுதி பிற்பகுதி முதல் மாடிகளுள் ஏதாவது ஒன்றை அமைக் கவே இவர்கள் உதவுவர் என நினைத்தோம். ஆனால் இவர்கள் இரு முதல் மாடிகளையும் அமைக்க முன்வந்தனர். இவற்றோடு நிலமாடிக் கும் நிதி உதவினர். இதனால் நடுப்பகுதி, பிற்பகுதி மேல்மாடிகளுக்கு இப்பேரறிஞரின் பெயர் பொறித்தற்கு ஆட்சிக்குழு அனுமதித்தது.

இப்பகுதிகள் தமிழ்ப் பேரறிஞர் வளாகம் எனலாம். நடுநிலமாடி பொதுக்கூட அரங்காக விளங்குகிறது. இச்சங்கத்திற்கு இந்நாட்டின் பெருமை தரும் இச்சங்க நூலகம் இவர்கள் விருப்பப்படி மேல் மாடிகளில் அமையும். இந்நூலகம் நவீன முறைப்படி விளங்குவதற்கும் இவர்கள் தொடர்ந்து உதவ உள்ளனர்.
இவற்றோடு தம் தந்தையார் பெயரால் அறக்கட்டளை நிதியம் இச்சங்கத்தில் அமைதற்கும் இச்சங்கத்தில் பயன் உள்ள தமிழ்த்துறைப் பணிகள் அமைவதற்கும் இவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவை அனைத்தும் திருவருட் செயல்கள் ஆகும்.
தந்தை வாக்கைக் காத்தவன் இராமன் என்பர். இதேபோலச் சங்கரப்பிள்ளை ஐயாவின் வாக்கை இவரது பிள்ளைகளும் இவரது மனைவியும் நிறைவு செய்துள்ளார்கள். இதனால் இவர்கள் சங்கரப் பிள்ளை அவர்களிடம் வைத்துள்ள பெருமதிப்பு நன்கு புலனாகின்றது.
சமயம் தொடர்பானவைகளுக்கு உதவுவதையே மிக உயர்வாக வும் இதனாலேயே பிறவிப்பயன் தங்களுக்குக் கிடைக்கும் எனவும் எம்மவர் நினைக்கின்றனர். இதனால் அளவற்ற பணத்தைச் சமயம் தொடர்பானவற்றுக்குப் பலர் வழங்குகின்றனர். தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் பெரும் சிந்தனையாளர். தத்துவஞானி. தமிழைச் சமயத்திலும் மேலானதாகவும் தமிழ்ப்பணிகளுக்கு உதவுவது பயன்தருமெனவும் சமயப்பணிகளுக்கு உதவிப் பெறும் பெரும் பயன் களைத் தமிழ்ப்பணிகளுக்கு உதவியும் பெறலாம் எனவும் அறிந்தவர். இதனால் இந்நாட்டில் இவரது இச்சிந்தனையும் இப் பணியும் உயர் இடத்தை வகிக்கின்றன.
தமிழ் மொழியை இறைவனே அருளினார் என்பர். இதனை நாயன்மார்களும் புலவர்களும் அருளாளரும் தங்கள் அருள் வாக்கு களினாலும், அருட் செயல்களினாலும் உறுதிப்படுத்தியுள்ளனர். ஆகவே தமிழுக்குச் செய்யும் அரும்பணிஇறைவனுக்குச் செய்யும் அரும்பணியே ஆகும்.
கடல்கொண்ட பழந்தமிழகப்பரப்பில் வடபால் எஞ்சிய நிலப் பரப்பே இன்றைய இலங்கை என்பது ஆய்வாளர் பலரது கருத்து. தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் உலகில் உயர் சிறப்பும் பழமையும் தருவன பண்டைய தமிழ்ச்சங்கங்களும் அவை தந்த இலக்கியங்களுமே யாம். பண்டைய அச்சங்கங்களின் வழிவந்ததே இன்றைய கொழும்புத்

Page 7
தமிழ்ச்சங்கம். நாடளவிய முறையில் சமய இன பிரதேச அரசியல் வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து மக்களையும் இணைத்து விளங்கு வது இத் தமிழ்ச் சங்கம். இத்தமிழ்ச்சங்கம் தமிழன்னைக்கு ஓர் ஆலயம் என்பது மதுரைச்சட்டவல்லுநரான தமிழறிஞர் ஒருவரது கருத்து.
பண்டைத் தமிழரசர்களின் மனைவியர் தம் நாயகர்களின் வழி நின்று திருக்கோவில்களுக்கும் திருக்கோயிற் பணிகளுக்கும் பெருநிதி வழங்கி அவைகளை நிலைபெறச் செய்துள்ளனர். அவ்வகையில் இன்று தமிழறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களின் மனைவி தம் நாயகன் விருப்பறிந்து இச்சங்கத்திற்குத் தாமும் நிதி உதவித் தம் பிள்ளைகளும் நிதி உதவச் செய்து இத்தமிழ்ச்சங்கமும் இதன் பணிகளும் இந்நாட்டில் தொடர்ந்தும் நிலைபெறச் செய்துள்ளார்.
மக்களினால் தம் கருத்துக்களைப் பிறர்க்கு வெளியிடவும் பிறர் கருத்துக்களை அறியவும் உதவுவது மொழி ஒன்றேயாம். மொழி உருவான பின்பே மக்கட்குலம் நாகரிகம் வளர்ச்சியில் வளர்ந்தது. சமயம், அறிவியல், கலைகள் என்பனவும் மொழியைப் பயன்படுத்தியே வளர்ந்தன. மக்கள் வாழ்வில் மொழியே முதன்மையானது. மொழி மக்கட்குல உயர்வுக்குத் த்ாயனைய தன்மையது.
தமிழ் தெய்வமொழி. உலகு உள்ளளவும் நிலைக்கும். இதனால் இத்தமிழ்ச்சங்கமும் நிலைக்கும். இங்கு இத் தமிழ்ப் பேரறிஞர் சங்கரப் பிள்ளை அரங்கும் இப் பணிகளும் இவைக்கு இவரது மனைவியும் மக்களும் வழங்கிய பெரும் நிதிஉதவியும் என்றும் இமயம் என உலகில் நிலைக்கும்.
இப்பெரியாரைப் போல இவர் மனைவி திருமதி மனோன்மணி சங்கரப்பிள்ளை, புதல்வர்கள் டாக்டர் நாகேந்திரன், டாக்டர் அசோகன், டாக்டர் சந்திரமோகன், டாக்டர் மகேந்திரன், டாக்டர் மனோகரன், புதல்விகள் ஜெயந்தி, மனோகரி ஆகிய இவர்கள் அனைவரும் தமிழ்ப் பற்றும் சமயப்பற்றும் சமுதாயப்பற்றும் உள்ளவர்களாவர். புதல்வர்கள் அ.ஐ. நாட்டிலும் புதல்விகள் அவுஸ்திரேலியாவிலும் உள்ளனர். திருமதி சங்கரப்பிள்ளை அவர்கள் பிள்ளைகளுடன் இருக்கிறார். இவர்கள் வெளிநாடுகளில் இருப்பினும் தாம் பிறந்து வளர்ந்த இந்நாட்டினதும் இந்நாட்டிற்குப் பணிபுரியும் இத்தமிழ்சங்கத்தினதும் பற்றினால் இச்சங்க வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் பெரும்பணி புரிந்துள்ளனர். இதனால் இச்சங்கமும் இந்நாட்டுத் தமிழ்ச்சமூகமும் இவர்களுக்குப் பெரிதும் கடமைப்பட்டுள்ளன. இச்சங்கம் இந்நாட்டிலும் உலகிலும் பெரும் புகழ்

பெற்ற அமைப்பாகவும் கற்பகத்தருவாகவும் கலங்கரை விளக்கமாகவும் வருங்காலத்தில் விளங்கும். இத்தாபனம் இறையருள் பெற்ற அமைப்பு ஆகும்.
திருமுறை அருளிய ஞானசம்பந்தர் தம்மைத் தமிழ் ஞானசம் பந்தன குறிப்பிட்டுள்ளார். இறையருள் பெற்ற இவரது இந்நிலை அனைவரும் உணர்வதற்கு உரியது. இத்தகைய உணர்வு நிலை பன் னெடுங்காலமாகத் தமிழுலகில் நிலைபெற்று வருகிறது.
தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்களும், இவர் மனைவியும் இவர் பிள்ளைகளும் இச்சங்கத்திற்குச் செய்த பெரும் பணிகள் என்றும் போற்றுவதற்கு உரியன. இவர்கள் அனைவரும் எமது பெரும் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரியவர்கள். இவர்களும் எமது தூய பணிகளை நன்கு உணர்ந்து எம்மைப் பெரிதும் மதித்தவர்கள். இவர்களது பெரும்பணிகளையும் இவர்களையும் போற்ற வேண்டிய கடமை எமக்கு உள்ளது.
தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அரங்கு திருப்பேரரு ளால் திறந்து வைக்கும் இத்திருநாளில் எமது கடமைப்பாட்டைப் பெரும் அளவில் தெரிவிக்கும் நிலை இல்லை. தமிழுலகு பயன் பெறுதற்கு இப் பேரறிஞர் நான்கு சிறந்த நூல்களை வெளியிட்டுள்ளார். இந்நூல்களின் முன்னுரைகளிலும் இந்நூல்களிலும் இவரது பெரும் சிந்தனைக் கருத்துகள் உள்ளன. இவை தமிழுலகிற்கு மிகப் பயன்தரும். ஆதலின் இவற்றைத் தொகுத்துத் 'தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப் பிள்ளை அவர்களின் சிந்தனைகள்’ என்னும் இந்நூலை எமது பணியாக வெளியிட்டுள்ளேன். இப்பேரறிஞர் எழுதிய நூல்கள் தமிழுலகிற்குப் பயன்தர இச்சிறு நூல் உதவும்.
பெரும் பொருள் வழங்குவர் என்னும் நோக்கத்தால் நிதி மிக உள்ளவர்களை அழைத்துப் புதிய கட்டிடங்களுக்கு அத்திவாரம் இடும் வழக்கம் இங்கு உண்டு. ஆயின் பொருளிலும் அருள் உயர்ந்தது. அது இத்தமிழ் சங்கத்தின் உயர்ச்சிகளும் வளர்ச்சிகளும் நிலைத்து நிற்பதற்குப் பெரிதும் துணையாகும் என எண்ணிப் பல ஆண்டுகளின் முன் இப்புதிய கட்டிடக் கால்கோள் விழாவுக்கு வருகை தந்து வாழ்த்திய கொழும்பு இராமகிருட்ண மிசன் தலைவர் சுவாமி ஆத்மகனானந்தா அவர்கள் இப்புதிய கட்டிடத்திற்குப் பெருநிதி வழங்கிய குடும்பத்தினரது விருப் பத்தை ஏற்று இப் புதிய கட்டிட நிறைவு நிகழ்வுக்கு வருகை தந்து வாழ்த்தியது ஒரு திருவருள் நிகழ்வு ஆகும். தமிழ்ப் பேரறிஞர் பொ.

Page 8
சங்கரப்பிள்ளை அவர்களது பிறந்த நாளுக்கு அமைவாகத் திருக்கார்த்தி கைத் தீபத் திருப்பூரணை நாளில் இப்புதிய கட்டிட நிறைவு நிகழ்வு நிகழ்வதும் திருவருட் செயல் ஆகும். இந்நிகழ்வுகள் இத்தமிழ்ச்சங்கத் தினதும் இச்சங்கப் பல்துறைப் பயன்தரு பணிகளதும் வருங்கால வளர்ச்சிகளுக்கு வழிகாட்டும்.
தமிழுக்கும் தமிழர்க்கும் உலகில் பெரும் பெருமை பெற்றுத்தந்த பண்டைய தமிழ்ச்சங்க வழியில் 1942ஆம் ஆண்டில் நல்லறிஞர்கள் இச்சங்கத்தை இந்நாட்டில் அமைத்தனர். 1950ஆம் ஆண்டில் இந் நிலத்தை விலையாகப் பெற்றனர். 1975ஆம் ஆண்டில் இச்சங்கக் கட்டிடப் பணி தொடங்கியது. இங்கு இருந்த பழைய வீட்டிற்குப் பதிலாகப் பலமாடிகள் உள்ள புதியகட்டிடங்கள் இங்கு அமைந்திருப்பதும் தமிழ்ச்சங்கப் பணிகள் பயன்தரு பல்துறைப் பணிகளாக பரந்திருப்பதும் இந்நாட்டில் தமிழ் பேசும் மக்களைப் பிரதேச சமூக மத வேறுபாடுகள் இல்லாமல் இணைத்து இச்சங்கம் விளங்குவதும் இந்நாட்டு மக்கள் அனைவரும் இங்கு வந்து பயன்கள் பெறுதற்கான கற்பக தருவாக இத்தமிழ்ச் சங்கம் இன்று விளங்குவதும் உயர் பணிகளினால் உலகப் புகழ் பெற்று விளங்குவதும் திருவருட் செயல்கள் ஆகும்.
1975ஆம் ஆண்டு தொடங்கிய இத்தமிழ்ச்சங்கக் கட்டிடப் பணியைத் தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை குடும்பத்தினர் நிறைவு செய்துள்ளனர். நிதிப்பற்றாக்குறையினால் காலம் மேலும் நீடிக்காமல் இவர்களின் நிதிப்பெருங்கொடை உதவியுள்ளது. கட்டிடத் தொடக்கக் காலத்தில் கட்டிட உதவி நிதிகள் 5 ரூபா முதல் 1000 ரூபா வரையுமே இருந்தன. இதனை இச்சங்க முன்னாட் தலைவர் க. செ. நடராசா அவர்களின் மகன் மகிழ்நன்நம்பி நடராசா அவர்கள் ஒரிலட்சமாக உயர்த்தினர். இதனை இக்குடும்பத்தினர்30இலட்சமாக உயர்த்தியுள்ளனர். இத்தமிழ்ச்சங்கம் பயன்தரு நல்ல பணிகளை நேர்மையாகவும் தூய்மை யாகவும் செய்து வந்ததினால் இந்நிதிப் பெருங்கொடைகள் இச்சங்கத்திற்கு வருதற்குத் திருவருள் உதவியுள்ளது. தமிழ்ப் பேரறிஞரின் மனைவி திருமதி. மனோன்மணி சங்கரப்பிள்ளை; ஆண்பிள்ளைகள் :டாக்டர் நாகேந்திரன், டாக்டர் அசோகன், டாக்டர் சந்திரமோகன், டாக்டர் மகேந்திரன், டாக்டர் மனோகரன், பெண் பிள்ளைகள்: ஜெயந்தி, மனோகரி ஆகியவர்கள் இந்நிதிப் பெருங் கொடைக்கு உரியவர்கள் ஆவர்.
இத்தமிழ்ச் சங்கத்தின் பயன்தரு பல்துறை நிரந்தரப் பரிசில்களுக்காக வங்கிகளில் வைத்தற்கான மூலநிதியங்களும் இவர்கள் வழங்கியுள்ளனர்.
10

இச்சங்கத்தில் எமது பணிகள் சிறப்பாக அமையக் கல்வி அமைச்சிலும் பின்பு றோயல் கல்லூரியில் தமிழ் ஆசிரியராகவும் பணிபுரிந்தது பெரி தும் உதவியுள்ளது. * ・ 。 གལ་ அனைத்துப் பணிகளுக்கும் என்றும் உறுதுணையாக உதவிய திருவரு ளுக்கும் அருளாளர்களுக்கும் அறிஞர்கள் ஆர்வலர்களுக்கும் உறுப் பினர்களுக்கும் எமது வணக்கங்கள் என்றும் உரியன. இத்தமிழ்ப் பேரறி ஞரின் உயர் சிந்தனைகளும் இப்பெரியாரது குடும்பத்தவரது இந்நிதிப் பெருங்கொடையும் என்றும் நிலைபெற்று இந்நாட்டிற்கும் உலகிற்கும் பெரும்பயன்கள் தந்து விளங்குக.
w பதிப்பாசிரியர் தமிழவேள்.இ.க. கந்தசுவாமி 7, 57ம் ஒழுங்கை, கொழும்பு 6
1.12.2OOO
11

Page 9
தமிழ்ப் பேரறிஞர் - சங்கப் புரவலர் திரு.பொ. சங்கரப்பிள்ளை அவர்களின்
வாழ்க்கைக் குறிப்புகள்
இலங்கைத் திருநாடு மிக்க தொன்மையும் புராண - இதிகாசங்கள் சங்க இலக்கியங்கள், காவியங்கள் ஆகியவற்றோடு தொடர்பும் உள்ளது. சிறந்த பேரறிஞர்கள் இந்நாட்டிலே தோன்றிப் புகழ் பரப்பியுள்ளனர். அவ்வகைச் சிறப்பு மிக்க இலங்கைத் தமிழ்ப் பேரறிஞர் வரிசையில் வந்தவரே தமிழ்ப் பேரறிஞர் பொ.சங்கரப்பிள்ளை அவர்கள்
தமிழ்ப் பேரறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் இலங்கையிலுள்ள வரலாற்றுப் புகழ்மிக்க யாழ்ப்பாணத்து மாவிட்டபுரம் என்னும் ஊரில் குமாரர் பொன்னம்பலம் அவர்களுக்கு மூத்த மகனாக 1913-ஆம் ஆண்டு திசெம்பர் 13-ஆம் நாள் பிறந்தார். முதலிற் தெல்லிப்பளை யூனியன் கல்லூரியிலும் பின்பு சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். பின்பு கொழும்புப் பல்கலைக் கழகத்திற் சேர்ந்து பொருளி யற் பட்டதாரி ஆனார்.
1937-ஆம் ஆண்டில் எழுது வினைஞராகக் கொழும்பு அட்டோர்னி யெனரல் அலுவலகத்திற் சேர்ந்தார். 1938-ஆம் ஆண்டு மங்கையர்குல மாமணியான மனோன்மணி அம்மையாரைத் திருமணம் செய்தார். பின்னர் பீ.எஸ்.சி, எம்.எஸ்.சி என்னும் அறிவியற் பட்டங்களைப் பெற்றார். பொருளியற் பட்டத் தேர்வில் முதற் பிரிவில் சித்தி பெற்றார். பின்னர் மோட்டார்ப் போக்குவரவுத் திணைக்களத்தில் உதவி ஆணை யாளராகப் பணி ஆற்றினார்.
ஓய்வு பெற்ற பின் 19-ஆண்டுகள் இலங்கைத் தேசீய வர்த்தக சம்மேளத்தில் நிருவாகச் செயலாளராகக் கடமையாற்றினார். கொழும்பு அக்குவைனாசு உயர் கல்வி நிலையத்திலும், கொழும்பு வித்தியோதயப் பல்கலைக்கழகத்திலும் பொருளியற்துறைப் பகுதிநேர விரிவுரையாள ராகக் கடமையாற்றினார். கல்வி அமைச்சுக் கலைச்சொல் ஆக்கக் குழுவிலும் பணிபுரிந்தார்.
இவருக்குச்சந்திரமோகன், அசோகன், நாகேந்திரன், மகேந்திரன், மனோகரன் என்னும் புதல்வர் ஐவரும், செயந்தி, மனோகரி என்னும்
12

புதல்வியர் இருவரும் உள்ளனர். புதல்வர்கள் ஐவர்களுள் மருத்துவ கலாநிதிகள். புதல்வர்களும் புதல்வியர்களும் அ.ஐ.நாட்டிலும் அவுஸ் திரேலியாவிலும் உள்ளனர். டாக்டர் பொ. நடராசா அவர்கள் இவரது சகோதரர் ஆவர்.
சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி அதிபராக இருந்த சைவப் பேரறிஞர் சு.சிவபாதசுந்தரம் அவர்களின் தொடர்பினால் இவர் தமிழ்ப் பற்றும் ஆர்வமும் உள்ளவராய் மொழி, சமயம், வரலாறு தொடர்பான பல நூல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆய்வு நோக்கோடு கற்றார். பொருளியல், அறிவியல் ஆகிய இரு துறைகளிலும் பட்டம் பெற்றமை இவரது ஆய்வுகள் சிறப்புப் பெறத் துணையாயின. வானியற் துறை யிலும் வல்லுநர் ஆக விளங்கினார்.
இவர் 'பொருளாதார பெறுமதிக் கொள்கை', நாம் தமிழர், சைவ சித்தாந்தம், கல்யாணப் பொருத்தம், மரணத்தின் பின் என்னும் ஐந்து சிறந்த நூல் எழுதி வெளியிட்டுள்ளார். பொருளாதாரப் பெறுமதிக் கொள்கை என்னும் நூல் இலங்கைக் கல்வி வெளியீட்டுத் திணைக்கள வெளியீடாக 1964-ஆம் ஆண்டு வெளிவந்தது. நாம் தமிழர் - கல்யாணப் பொருத்தம் என்னும் நூல்கள் இலங்கையிலும், சைவ சித்தாந்தம், மரணத்தின் பின் என்னும் நூல்கள் தமிழகத்திலும் குமரன் பதிப்பு நூல்களாக வெளிவந்தன. இந்நூல்கள் சிறந்த நான்கு துறைகளுக்கு உரிய சிறந்த நூல்கள். இந்நூல்கள் இவரது ஆய்வுத் திறனையும் நுண்ணிய அறிவுத் திறனையும் வெளிப்படுத்துவன. மரணத்தின் பின் என்பது சிறந்த மெய்யியற்துறை நூல். கிழக்கு - மேற்கு மெய்யியற் கோட்பாடு களை ஆராய்ந்துள்ளது.
தமிழறிஞர் சங்கரப்பிள்ளை அவர்கள் உயர்ந்த சமுதாய நோக்கும் உணர்வும் உள்ளவர். அதனாற் கொழும் புத் தமிழ்ச் சங்க ஆயுள் உறுப்பினராக 1950-ஆம் ஆண்டிற் சேர்ந்தார். 1977 - 79 ஆண்டுகளிற் துணைத் தலைவராகவும் 1980 - 83 ஆண்டுகளில் தலைவராகவும் இதன் பின் காப்பாளருள் ஒருவராகவும் விளங்கினார். உயிர் நீங்கும் வரை சங்கத்தோடு தொடர்பு கொண்டு ஊக்கம் தந்தார்.
இவர் தலைவராக இருந்த போது சங்கத்தின் கணக்கு வைக்கும் முறையை நன்கு நெறிப்படுத்தினார். ஆண்டுதோறும் மாணவர்க்கும் வளர்ந்தவர்களுக்கும் வழங்கும் பல்துறைத் தேர்வுப் பரிசில்களுக்கு நிரந்தரத் தேர்வுப் பரிசில் மூல நிதியங்களை ஏற்படுத்தினார். இவர் வகுத்த முறையின்படி பலர் வழங்கிய மூலநிதிகள் வங்கியில் நிரந்தர வைப்பில் இட்டு அவைகளில் இருந்து ஆண்டுதோறும் வட்டியாகக் கிடைக்கும்
13

Page 10
பணம் அவ்வத் துறைக்குப் பரிசிலாக வழங்கப் பெறுகிறது. இதனால், நாவன்மை, தமிழ்த்திறன், கவிதை, ஆய்வுக் கட்டுரைநூலாக்கம் முதலிய பதினைந்து துறைகளுக்கு நிதிப்பரிசில்கள் வழங்கப் பெறுகின்றன.
இப் பேரறிஞர் 18-2-90-ஆம் நாள் அ.ஐ.நாட்டில் கலிபோணி யாவில் உலகு நீத்தார். இவரது தகனக் கிரியைகள் முறைப்படி அங்கு நிகழ்ந்தன. இவரது அஸ்தி இந்தியாவில் உள்ள புனித தலங்களில் இடப்பெற்றது. இவரது மனைவியாரும் இளைய மகனும் இதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வந்தனர்.
இலங்கையிற் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இவருக்கான நினை வஞ்சலி நிகழ்ச்சி நிகழ்ந்தது. சட்டப் பேரறிஞர் எச்.டபிள்யூ.தம்பையா கியூ.சி, முதுபெரும் எழுத்தாளர் செ.கணேசலிங்கன், புலவர் த.கனக ரத்தினம், இலங்கை வர்த்தக சம்மேளன நிருவாகத்தர், பெரும்பாான்மை இனத்தவர் ஒருவர், இவரது நண்பர் ஒருவர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். தமிழின் பல துறைகளிலும் ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோராகிய இப்பேரறிஞரின் புகழும் பணிகளும் இவர்தம் நூல்கள் உலகு உள்ளவரை நிலைத்து நிற்பன. தமிழ் மொழிக்கும் தமிழினத் திற்கும் நாட்டிற்கும் கல்வித் துறைக்கும் இவர் செய்துள்ள பயனுள்ள பணிகள் பல ஆகும்.
இப்பேரறிஞரது 87ஆவது பிறந்தநாள் நிறைவில் இவரது பெய ரால் இங்கு அமைந்த நூலாக வளாகத் திறப்பு விழாவும் இவரது உருவப் படத் திரை நீக்கமும் இந்நூல் வெளியீடும் நிகழ்கின்றன.
★ ★ 女
* இவர் எழுதிய வேறு நூல்கள் :
1. வேலைவாய்ப்பு வட்டி பணம் பற்றிய பொதுக் கொள்கை
(எம். கீன்சு - மொழிபெயர்ப்பு) 2. பணம் (கிறவுதர் - மொழிபெயர்ப்பு)
* வெளிவர இருந்த நூல்கள்:
1. வட இலங்கைப் பொருளாதார அபிவிருத்தி 2. அரசியற் சிந்தனைகள் 3. சமூகவியற் சிந்தனைகள் 4. நான் யார்?
14

தமிழ்ப் பேரறிஞர் திரு. பொ.சங்கரப்பிள்ளை அவர்கள் தலைவர் கொழும்புத் தமிழ்ச் சங்கம் 198O - 1983

Page 11

பொருளடக்கம்
பக்கம்
வாழ்த்துரை e o os see O3
முன்னுரை . . O5.
தமிழ்ப்பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை
அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் . . 2
பொருளாதாரப் பெறுமதிக் கொள்கை
நூலின் முன்னுரை ..... ... ... 17
'கல்யாணப் பொருத்தங்கள்’
நூலின் முன்னுரை . . . . . . 2l . "மரணத்தின் பின்’ நூலின் முன்னுரையும்
உபஉரைகளும் ... . . . . 31
"நாம் தமிழர் நூலின் பகுதிகள் . . . . . . . . . . 36
'ஈழத்தில் நாம் தமிழர் நூலின் பகுதிகள் . . 48
'சைவ சித்தாந்தம் நூலின் பகுதிகள் . . ... 78
. தமிழ்ப் பேரறிஞர் பொ. சங்கரப்பிள்ளை
அவர்கள் 5-12-1981ஆம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் நிகழ்த்திய தலைமை உரை . 81
5

Page 12
காப்பு
“பொருப்பிலே பிறந்து தென்னன்
புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலேயிருந்து வைகை யேட்டிலே
தவழ்ந்த பேதை s நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே
நடந்தோரென மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே
வளருகின்றாள்"
16

பொருளாதாரப் பெறுமதிக் கொள்கை
முன்னுரை
“புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" சென்ற இருநூறு ஆண்டுகளில் மேனாடுகளில் வளர்ந்த புதிய கலைகளுட் பொருளியலும் ஒன்று.பொருளியில் சமூக வாழ்க்கையின் கலையும் விஞ்ஞானமும் ஆகும். ஆனால், இக்கலை தமிழருக்குப் புதியது அன்று. உயரிய கலைகளும் நூல்களும் மக்களின் உலக வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்டன. முன்னேற்றம் அடைந்த சமூகத்திலே இவைகள் வளருகின்றன. எச்சமுதாயமாவது அறிவு வளர்ச்சியின்றி முன்னேற்றம் அடைதல் இயலாது. முன்னேற்றமே அறிவுவளர்ச்சியின்அறிகுறி.ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னரே நாகரீகத்திலும் பண்பாட்டிலுஞ் சிறந்து, செல்வமுங் கல்வியும் பெற்று, நாடுநகரங்களுக்கும் நல்லரசும் அமைத்து, இல்லறம் என்பது நல்லறம் என்பதை விளக்கிய தமிழர் சமுதாயத்திற் பொருளியல் அறிவும் வளர்ச்சி அடைந்து இருந்தது வியப்பன்று. வாழ்க் கையின்நோக்கங்களையும், நெறிகளையும், முறைகளையும், காரணகாரியத் தொடர்புகளையும், பிரச்சினைகளையும் நன்கு ஆராய்ந்து நம்முன்னோர் சீரிய உண்மைகளை எடுத்து விளக்கினர்.
பண்டைத்தமிழர்வாழ்க்கையை அகம் புறம் எனவகுத்தனர். அகமும் புறமும் வாழ்க்கையில் ஒன்றிற்கு ஒன்று சார்பாய் இரண்டறக் கலந்து இருக்கின்றன. அவைகள் இரண்டுஞ் சேர்ந்ததே உலக வாழ்க்கையாகும். அன்புங் காதலும் பண்பும் பயனும் உடைய அக வாழ்க்கைக்குச் செல்வம் இன்றியமையாதது. சிறந்த அகவாழ்க்கையில்லாத மக்கள் எவ்வளவு செல்வம் உடையவராயினும் மனநிறைவும் வாழ்க்கை நலனும் அடையார். ஒன்றைவிட்டு மற்றதை வற்புறுத்துவதனாற் சிந்தனை மயக்கமும் வாழ்க் கைச் சீர்கேடுகளும் உண்டாகின்றன. மேனாடுகளிற் புறவாழ்க்கையே உலக வாழ்க்கை என்றும், அகத்திற்கும் புறத்திற்கும் தொடர்பு இல்லை என்றுங் கருத்துக்கள் இருப்பதனால் அங்கு வளர்ந்த பொருளியலில் தெளிவின்மை களும், முரண்பாடுகளும் ஐயங்களும் மலிந்து கிடக்கின்றன.
17

Page 13
பொருளியலைத் தமிழற் கற்றலுங் கற்பித்தலும் இயலாது என்பது சிலரின் கருத்து. இக்கருத்துப் பேதைமையானது. பொருளியில், சமூக வியல்களில் ஒன்று. ஆழமானதும் நுட்பமானதுமென உள சமூகவியற் கருத்துக்களை எல்லாம் விளக்குவதற்குத் தமிழ்மொழிக்குப் போதிய சொல்வளம் உண்டு.” ஆனாற் தமிழராகிய நமக்குத் தமிழ் மொழி நன்றாகத் தெரியாது. ஆங்கிலத்திற் கல்விகற்றோம். இன்றும் ஆங்கி லத்தில் தான் சிந்திக்கின்றோம்; பேசுகின்றோம்; எழுதுகின்றோம். பொருளியலைக் கற்றற்குங் கற்பித்தற்கும் வேண்டிய பாட நூல்களும், இலக்கியங்களும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் தற்பொழுது தமிழ் மொழியில் இல்லை என்பது மறுத்தல் முடியாது. ஆனால், நாம் தமிழிற் பொருளியலைக் கற்பிக்க முயன்றால் இவைகள் படிப்படியாகத் தாமா கவே தோன்றும் என்பது உறுதி. தமிழ் மொழியிற் பொருளியலை வளர்த்தற்கு ஆங்கில நூல்களை மொழிபெயர்த்தல் சிறந்த முறையன்று. நாம் ஆங்கிலத்திற் கற்ற அறிவைப் பயன்படுத்தி, எமது மொழியின் சொல் வளத்திற்கும் பண்பாட்டிற்கும் ஏற்றவாறு நூல்களை எழுதுவதே சிறந்ததாகும். ஒரு மொழியில் எழுதும் போது அம்மொழிச்சொற்களைக் கையாளுவதே சிறந்த மரபு. தமிழ் மொழியிர் சிறந்த சொற்கள் இருப்பப் பிற மொழிகளிலிருந்து கடன் படுவது அனாவசியம். ஆனாற் புதிய கருத்துக்களை விளக்கவும், தமிழ் மொழியை வளப்படுத்தவும் நாம் எம் மொழியினின்றுந் தயங்காது கடன்படலாம். இத்திசைச் சொற்களைத் தமிழிற் சேர்க்கும் போது இலக்கணவரம்புகளைக் கடத்தல் தகாது. கன்னித் தமிழ் என்றுங் கன்னித்தமிழாகவே விளங்குவதற்கு நம் முன் னோர் எத்திசையினின்றுஞ் சொற்களை ஏற்ற போதிலும் இலக்கண வரம்புகளை மீறாததே காரணமாகும். இந்நூலிற் வடசொற்கள் அதிக மாக வழங்கப்படுகின்றன. எனக்குப் போதிய தமிழறிவு இல்லாதது இதற்கு ஒரு காரணம், யாழ்ப்பாணத் தமிழில் வடசொற்கள் அதிகமாகக் கலந்திருப்பது மற்றைக் காரணம்.
தற்காலத்தைப் பொது மக்களின் காலம் என்பர். அரசர்கள் பிரபுக்களின் காலங்கள் அழிந்து போயின. முதலாளித்துவமும் தனியுரிமைகளும் அழிந்து போவது கண்கூடு. அரசியல் அதிகாரம் பொது மக்களின் கையில் இருக்கிறது. சமூகப் பொருளியற் சிக்கல்களை நன்கு உணர்ந்து, தகுந்த முடிவுகள் செய்தலும் சிறந்த உபாயங்களைக் கடைப்பிடித்தலும் அவர்களின் கடமையாகும். ஆதலால், அரசியல் பொருளியல் நூல்கள் பொதுமக்களும் எளிதில் விளங்கக் கூடிய எளிய இனிய தமிழில் எழுதப்படல் வேண்டும். ஆனால், எல்லா
18

மொழிகளிலும் பொருளியல் நூல்களின் வசனநடையுஞ் சொற்களுங் கற்றவர்களேயன்றி மற்றவர்கள் எளிதில் விளங்கமுடியாதிருக்கின்றன. பொருளியில் அறிஞர்கள் சூத்திரங்களிலும், மந்திரங்களிலும் பேசுகின்றனர் என்பது அவர்கள் மேற்சாட்டுங் குற்றங்களில் ஒன்று. கலை தூய விஞ்ஞானம் எனப் பொருளியலில் இரு பகுதிகள் உள. கலைப்பகுதியை நாம் பொதுமக்களும் விளங்குமாறு எழுதலாம். விஞ்ஞானப் பகுதியிற் தருக்க கணிதரீதி ஆராய்ச்சிமுறைகளையுங் கலைச்சொற்களையுந் தவிர்த்தல் முடியாது. இப்பகுதியை பொதுமக்கள் விளங்குவது சுலபமன்று.
பொருளியல் சமூக வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட பல பொருள்
கள் அடங்கிய பரந்த கலை, விரிந்த விஞ்ஞானம், அதன் தத்துவங் களையும் கொள்கைகளையும் விதிகளையும் ஒரு நூலில் விளக்கல் முடியாது. ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட சுருக்கமான பாடநூல்கள் இருப்பினும், அவற்றுக்கு அடிப்படையான விசேட இலக்கிய நூல்களும் இருப்பதனால், மாணவர் கற்றல் சுலபம். தமிழில் இப்பட்டிப்பட்ட இலக்கிய நூல்கள் இன்மையினாற் பாடநூல்கள் விரிவாக எழுதப்படல் வேண்டும். இந்நூல் ஒன்பது பாகங்களாகப் பகுக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு பாகத்தையுந் தனிப்பட்ட சிறுநூலாக வெளிப்படுத்துவதே எனது நோக்கம், இப்பாகங்களாவன:
Gumabait gisib (Production)
Gil IIIGD, GiuSair epaggigs, 6.115.56ir (Elements of Econimics)
GupyLD3d 6s, Tairaops (Theory of Value)
6u(5 DITGITypb, Lupi 8Gb (Income and its distribution)
- மக்கிரோ, அல்லது பேரண்டப் பொருளியல்(MacroEconom
ics)
Lugo.TCuplb Quijsselli (Money and Banking)
Gung, 6 JG (6)sGuo (Public Finance)
666psitt'G) Guitutulb (International Trade)
பொருளியினின் தன்மையும் வரைவிலக்கணமும் (Nature and
definition of Economics)
இவைகளேயன்றி அநேக வேற்றுப் பொருள்களும் பொருளிய
லில் அடங்கியுள்ளன. இப்பொருள்களைப் பற்றித் தனிப்பட்ட நூல்கள்
19

Page 14
தமிழில் வெளிவரல் வேண்டும். மேற்கூறிய வரிசையில் இந்நூல் மூன்றா வதாகும். பொருளியலிற் பெறுமதிக் கொள்கையே முக்கியமானது. எல்லாப் பிரச்சினைகளுக்கும் அடிப்படையானது. பொருளியலை 'விலை எனுந் தோற்றப்பாட்டின் விஞ்ஞானம்' என்பர் இவ் வரைவிலக்கணம் பெறும்திக்கொள்கையின் முக்கியத்துவத்தை நன்கு விளக்குகின்றது. "
இந்நூலிற் பல குற்றங்குறைகள் இருப்பதை நன்கு உணர்வேன்.
'குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகை நாடி மிக்க கொளல்" பண்பாடு. குறைகளைப் பொருட்படுத்தாது இந்நூலை ஏற்குமாறு தமிழ் அன்பர்களை வணக்கத்துடன் வேண்டிக் கொள்ளு கின்றேன். இந்நூலை எழுத ஊக்கம் அளித்த எனது நண்பர்களுக்கும் , பேராதரவளித்த கலாநிதி நந்ததேவ விசயசேகராவிற்கும் இதனை அச்சிட்டு வெளிப்படுத்தும் இலங்கை அரசகரும மொழித் திணைக் களத்திற்கும் எனது நன்றி உரியது.
பொ.சங்கரப்பிள்ளை
1964
2O

கல்யாணப் பொருத்தங்கள்
முன்னுரை
இக்காலத்திற் பலருக்குச் சோதிடத்தில் நம்பிக்கையில்லை. சோதிடத்தை ஏமாற்றுவித்தை யெனவும் மூடநம்பிக் கையெனவுங் கூறுகின்றனர். தம்மைத் தாமே பகுத்தறிவுகள் எனவும் விஞ்ஞானங்கள் எனவும் தம் பட்டம் அடிக்கின்றனர். சோதிடம் வேதாந்தங்களில் ஒன்றெனவும் அனுபவத்திலிருந்தும் ஞான யோகக் காட்சிகளிலிருந்தும் எம் முன்னோர் சோதிட விதிகளை வகுத்தனர் எனவும் வேறு பலர் கூறுகின்றனர். இக்கட்டுரை சோதிடத்தைப் பற்றியதன்று.சோதிடத்தின் உண்மை பொய் பற்றி வாதிக்க இங்கு இடமில்லை. சோதிடத்தை மறுக்கமுன் அதை நன்கு கற்க வேண்டும். அனுபவத்தோடு ஒப்பு நோக்கி ஆராய வேண்டும். இவ்வாறு செய்யாது மறுப்பது முட்டாள்தனமாகும். பகுத்தறிவுமாகாது. மறுதலையாக விளக்கமோ அனுபவச் சான்றோ வில்லாது சோதிடர் கூறுவதையெல்லாம் நம்புவது பேதமையாகும். மூடநம்பிக்கையாகும்.
'எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு'
(திருக்குறள்)
இக்கட்டுரை கல்யாணப் பொருத்தங்களைப் பற்றியதாகும். சோதிடத்தில் நம்பிக்கையில்லாவிட்டாற் கல்யாணப் பொருத்தங்கள் பார்க்க வேண்டியதில்லை. சோதிடத்தில் நம்பிக்கையிருப்பினும், எமது கல்யாணப் பொருத்தங்களில் எவ்வளவு உண்மையுண்டு என்பது ஆராய்ச்சிக்குரியதாகும். சோதிட மாமேதைகள் பலரே இவற்றிற் பலவற்றை அர்த்தமற்ற சோடனைகள் என்கின்றனர். எமது சமுதாயத் தில் நாம் இப் பொருத்தங்களை நெடுங்காலம் பார்த்து வருவதனால் இவற்றைத் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் என்பதும் இவற்றைத் தற்காலத்துக்குதவாப் பழங்கதைகள் என மறுப்பதுந் தவறாகும். உண்மைக்குப் பழமையோ புதுமையோ இல்லை. முடிபு கூற முன் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இக்கல்யாணப் பொருத்தங்களுக்குச் சோதிட அடிப்படையிலான விளக்கங்களென்ன? அனுபவச்
21

Page 15
சான்றுண்டா? இவற்றின் அடிப்படையிற் கல்யாணஞ் செய்யலாம் அல்லது செய்யப்படாது என்று சொல்லுமளவுக்கு இவை முக்கிய மானவையா? இக்கட்டுரையை வாசித்தபின் வாசிப்போரே இக் கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
எந்நோக்கத்துடன் இக்கல்யாணப் பொருத்தங்களைப் பார்க் கிறோம். இல்லறம் நல்லறமென்பர்:-
'மங்கல மென்ப மனைமாட்சி மற்றத னன்கல நன்மக்கட்பேறு' (திருக்குறள்)
இல்லறத்தைச் சிறப்பாக நடத்துவதற்கு ஆணுக்கும் பெண்ணுக்கு மிடையில் அன்பும் ஒற்றுமையும் இணக்கமும் வேண்டும். மேலும் எவ்வளவு ஒற்றுமையிருப்பினும் ஆயுள் ஆரோக்கியம், தனம், மாங்கல் யம், பாக்கியம், புத்திரரில்லாது இல்வாழ்க்கை சிறப்படையாது. குறித்த ஆணினதும் பெண்ணினதும் இல்வாழ்க்கை சிறப்பாக நடைபெறுமா என்பதைக் கல்யாணத்துக்கு முன்பே காண எத்தனிப்பது இயல்பான ஆவலாகும். இந்த இயல்பான ஆவலைப் பயன்படுத்திப் பலர் பொய் புனைந்து புராணங்கள் எழுதிப் பிழைக்கலாம். மக்களை ஏமாற்றலாம். பயமுறுத்தலாம்.
குறித்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இருக்கக்கூடிய இணக்கத்தையும் ஒற்றுமையையும் காண்பதற்கு நான்கு வழிகளைச் சுட்டலாம். (அ) காதல் (அ) சாதகங்கள் பார்த்தல் (இ) கல்யாணப் பொருத்தங்கள் பார்த்தல் (ஈ) ஒத்த சமூக நிலை, கல்வி, பண்பாடு, சமயம்.
(அ) காதல்:-
பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் தத்தம் துணைவரைத் தாமேதெரிவு செய்தனர். பண்டைத் தமிழர் காதல் வாழ்க்கையையும் வீர வாழ்க்கையையும் ஐந்நிலங்களிலுஞ் சங்கநூல்கள் கூறுகின்றன. அக்காலத் தமிழர் கல்யாணப் பொருத்தங்கள் பார்க்கவு மில்லை; அவர்களுக்கு மறையோன் வழி காட்டவுமில்லை. இவை பிற்கால வழக்கங்களாகும். பேசிப் பழகிக் காதலுற்றுப் பெற்றோர் சம்மதத்துடன் ஊரார் அறியக் கல்யாணஞ் செய்தனர். சிலர் பெற்றோர் அறியாமலே காதலனுடன் சென்றனர்.
22

'பொய்யும் வழவுந் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்க’
'மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க்கும் ஆகிய காலமும் உண்டே'
(தொல்காப்பியம்)
பத்துப் பொருத்தங்களைப் பார்க்கினும் பரஸ்பர காதல் சிறந்த தெனப் பிரஸ்ந மார்க்க கூறுகிறது. எனினும் பல காதற் கல்யாணங்கள் விவாகரத்தில் முடிவடைவதையும் அன்பு பகையாவதையுங் காண் கிறோம். எமது சமுதாயத்திற் பெற்றோர் பொருத்தம் பார்த்துப் பேசிச் செய்து வைக்குங் கல்யாணங்கள் பெரும்பாலும் நீடித்து நிலை பெற் றிருப்பதைக் காண்கிறோம். ஆதலால், நெடுந்தவணையில் இணக்கத் தையும் ஒற்றுமையையுங் காண்பதற்குக் கல்யாணப் பொருத்தங்கள் பார்க்க வேண்டுமெனச் சிலர் வாதிக்கின்றனர். மேனாடுகளிற் காதற் கல்யாணங்கள் முறிவடைவதற்கும் எமது சமுதாயத்திற் பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த கல்யாணங்கள் நிலைத்திருப்பதற்குங் காரணம் எமது பண்பாடேயன்றி இப்பொருத்தங்களல்ல. இஃது எவ்வாறா யினும், எமது வழக்கங் குருட்டுத்தனமானது. பல வேளைகளில் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசி இணக்கந் தெரிவியாமலே கல்யாண ஒழுங்குகள் செய்கின்றனர். மேனாடுகளிலே போலக் காதல் நாடகமாடுவது எமது பண்பாட்டுக் கொவ்வாதிருக்கலாம். எனினும் ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் சந்தித்து இணக்கம் தெரிவித்த பின்னரே கல்யாண ஒழுங்குகள் செய்ய வேண்டும். இருவரின் மன. இணக்கத்துக்கும் இடமளிக்க வேண்டும். இது போதுமா? மன இணக் கத்துடன் கல்யாணப் பொருத்தங்களையும் பார்ப்பது நன்றென வாதிக்
கலாம்.
(ஆ) சாதகங்கள் பார்த்தல்:
பலர் இன்று சாதகங்களைப் பார்ப்பதில்லை. இராசிக் குறிப்புக் களிலிருந்து நட்சேந்திரங்களின் அடிப்படையிற் பஞ்சாங்கப் பொருத்தங் களைப் பார்த்து முடிவு செய்கின்றனர். ஏதோ மனத் திருப்திக்காகவோ சாக்குப் போக்காகவோ பார்க்கின்றனர் போலத் தோன்றுகிறது. வாழ்க் கையில் எல்லாக் காரியங்களையும் சாதகங்களிற் பார்க்கும் விதிமுறை
: عہ ، களை எமது சோதிடநூல்கள் நுணுக்கமாகக் கூறுகின்றன. 1ம் வீடு-உயிர் உடம்பு ஆரோக்கியம், குணம், வாழ்க்கையின் அத்திவாரம், 2ம் வீடு
23

Page 16
-குடும்பம், தனம், வாாக்கு. 3ம் வீடு- சகோதரர், துணிவு, வீரம், ஆபர ணம், தீம் வீடு- மாதா, கல்வி சுகம், காணி வீடு, வாகனம், 5ம் வீடுபுத்திரர், புத்தி, புண்ணியம். 6ம் வீடு-நோய் பகைவர். 7ம் வீடு- களத் திரம், திருமணம், பங்குடைமை 8ம் வீடு- ஆயுள், பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானம், 9ம் வீடு- பிதா புண்ணியம், பாக்கியம், 10ம் வீடுதொழில், பதவி, சம்பாத்தியம். 11ம் வீடு-மூத்த சகோதரர், இலாபம். 12ம் வீடு- சயனசுகம், கீர்த்தி, செலவு. ஒவ்வொரு காரியத்துங் காரகங் கிரகமுமுண்டு. வீடு, அதிபர் காரகர் எனும் மூன்றின் அடிப்படையிலும் குறித்த காரியத்தைக் காணவிதிமுறைகளுள. ஸ்திரீகளுக்கே விசேடமான சோதிட விதிகளுமுள. பல நல்ல கெட்ட யோகங்களுமுள. இவற்றை யெல்லாம் புறக்கணித்துக் கல்யாணப் பொருத்தங்களிலிருந்து மட்டுமே ஆயுள், ஆரோக்கியம் குடும்பம், தனம், சுகம், களத்திரம், மாங்கல்யம் முதலியனவற்றை அறியலாமென்றாற் பொருந்துமா?
சாதகங்களைப் பாராது கல்யாணப் பொருத்தங்களை வற்புறுத்து வது அரிசியை விட்டு உமிக்குச் சண்டை போடுவதற்கு ஒப்பாகும். எனினும் எல்லாவற்றையுஞ் சாதங்களிலிருந்து பார்க்கலமாயினும், குறித்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலிருக்கக்கூடிய இணக்கத் தையும் ஒற்றுமையையும் தனிப்பட்ட சாதகங்களிலிருந்து அறிய முடியா தெனவும் இவற்றைக் காண்பதற்குக் கல்யாணப் பொருத்தங்களைப் பார்க்க வேண்டுமெனவும் வாதிக்கலாம்.
இப்பொருத்தங்கள் உண்மைகளாயினும், மன இணக்கத்தையும் ஒற்றுமையையும் மட்டுமே இவை காட்டலாம். இப்பொருத்தங்கள் இருந்தால் ஆயுள், ஆரோக்கியம், தனம், பதவி, புத்திரர் முதலியவை கிடைக்குமென எண்ணுவது பேதமையாகும். இவற்றுக்குச் சாதகங் களைப் பார்த்தல் முக்கியமானது. இப்பொருத்தங்களை மிகை நிரப்பி யாகப் பார்க்கலாம். நல்ல சாதகங்களுடன் பொருத்தமும் இருப்பது நன்றாகும். பொருத்தமான பெண்ணைக் கல்யாணஞ் செய்வதனால், இல்லாத யோகங்கள் உண்டாகப் போவதில்லை. பொருத்தமில்லாப் பெண்ணைக் கல்யாணஞ் செய்தால் இருக்கும் யோகங்கள் அழியப் போவதில்லை. எமது கல்யாணப் பொருத்தங்களின் அடிப்படையில் மட்டுமே செய்யலர்ம் செய்யப்படாது" என்ற முடிவுக்கு வரவியலா தெனக் கர்கி முனிவர் கூறுகிறார். எமது பஞ்சாங்கமே எச்சரிக்கை செய்கிறது. 'நட்சேத்திரங்களைக் கொண்டறியப்படும் பொருத்தங் களிலும் கிரகநிலையைக் கொண்டறியும் பொருத்தமே முக்கியமானது.
2.

ஆதலால் ஸ்திரீபுருஷர்களின் கிரக நிலைகளை நன்காராய்ந்தே பொருத்த நிச்சயஞ் செய்ய வேண்டும்."
(இ) கல்யாணப் பொருத்தங்கள்:-
இவற்றை ஒவ்வொன்றாகப் பின்பு ஆராய்வோம். ஆனாற் குறித்த பொருத்தமிருந்தால் உண்டாகும் நன்மை பற்றியும் இல்லாவிட்டால் உண்டாகும் தீமை பற்றியும் நூலுக்கு நூல் முரண்பாட்டைக் காண் கிறோம். இவற்றைப் புராணக் கதைகள் போலக் காலத்துக்குக் காலம் மிகைப்படுத்திக் கூறியிருக்கிறார்கள். எவ்வளவுக்கு ஒரு பொருத்தம் அடிப்படையற்ற கற்பனையோ அவ்வளவுக்குப் பயமுறுத்தல் அதிக மாக இருக்கிறது. ஆயுள் ஆரோக்கியம் தனம், புத்திரர் முதலியவை இப்பொருத்தங்களைப் பொறுத்தவையானாற் சோதிடமே வேண்டிய தில்லை. மிகச் சுலபமாகக் கர்மத்தையே நாம் வென்று விடலாம். சந்திரன் நின்ற இராசியும் நட்சேத்திரமுமே எமது ப்ொருத்தங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படையாகும். சந்திரன் மனோகாரகன் எனவும் இரு சந்திரர்களும் ஒத்திசைவாக அதிர்வுற்றாற் குடும்ப வாழ்க்கையில் இணக்கமும் ஒற்றுமையும் உண்டாகும் எனவும் எடுத்துக் கொண்டாலும், மன இணக்கத்தையும் ஒற்றுமையையும் மட்டுமே இப்பொருத்தங்கள் காட்டலாம். எமது சோதிடர் ஐந்து பொருத்தங்கள் இருந்தாற் கல்யாணஞ் செய்யலாம் என்கின்றனர். ஒவ்வொரு பொருத்த மும் வித்தியாசப்பட்ட விளைவிற்குக் காலாகின், இவ்வாறு கூறவிய லாது. எல்லாப் பொருத்தங்களையும் வற்புறுத்த வேண்டும். ஐந்து பொருத்தங்கள் இருந்தாற் செய்யலாம் என்பதிலிருந்து, எல்லாப் பொருத்தங்களும் மன இணக்கத்தையும் ஒற்றுமையையும் காட்டுஞ் சுட்டிகள் என்பது தென்படை.
சந்திரன் நின்ற இராசி நட்சேத்திரத்திலிருந்து மட்டுமே மணவாழ்க்கையை நிருணயிக்க முடியாது. ஒவ்வொரு சாதகத்திலும் சூரியனுஞ் சந்திரனும் இலக்கினமும் முக்கியமானவை என்கிறோம். ஒவ்வோார் இலக்கினத்திற் பிறந்தவர்களினதுங் குணங்குறிகள் பற்றிச் சோதிட நூல்கள் பக்கம் பக்கமாகக் கூறுகின்றன. எமது சோதிடத்தில் இலக்கினமே முக்கியமானது. சந்திர விலக்கினத்தை மிகை நிரப்பியாக மட்டுமே பார்க்கிறோம். மன இணக்கத்தையும் ஒற்றுமையையுங் கவர்ச்சியையுங் காண்பதற்கு இலக்கினத்தின் அடிப்படையிலும் பொருத்தம் பார்க்க வேண்டுமல்லவா? கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் நட்பும் இணக்கமும் இருவருக்கிடையில் நட்பும் இணக்க
25

Page 17
மும் ஒத்தனவாகும். யார் யாருக்கிடையில் நட்புப் பெரும்பாலும் உண்டாகும் என்பதைச் சோதிட விதிகள் கூறுகின்றன:-
(1) உதய இலக்கினாதிபர் ஒருவராக அல்லது மித்துருக்களாக
இருப்பின்,
(i) நட்சேத்திரம், நட்சேத்திரபாதம் ஜென்ம ராசி ஒன்றாகின்.
(i) இராசியதிபர்கள் ஒருவராயின் அல்லது மித்துருக்களாயின்
எனவே, பொருத்தம் பார்க்கும் போது, உதய இலக்கினத்தைப் புறக்கணிக்க முடியாது. மேனாட்டவர் சூரிய, இராசியினை அடிப்படை யிற் பொருத்தம் பார்க்கின்றனர். எமது முறை சரியானது அவர்களுடைய முறை தவறானது எனக் கூற முடியாது. இரண்டிலும் ஓரளவு உண்மை இருக்கலாம்.
(ஈ) ஒத்த சமூக நிலை, கல்வி பண்பாடு, சமயம்,:-
மக்களின் கருத்துக்கள், நோக்கங்கள் முதலியனவற்றுக்கு அவர் களுடைய சமூக நிலை, கல்வி, பண்பாடு, சமயம் முதலியனவுங் காரணங்களாகும். காலஞ் செல்லச் செல்லக் குடும்ப வாழ்க்கையில் உடற் கவர்ச்சி குறைகின்றது. பிற்காலத்திற் பல பிணக்குகளுக்குக் கருத்து வேற்றுமைகளும் நோக்கங்களில் முரண்பாடுங் காரணங்களாகும்.
கல்யாணப் பொருத்தங்களைப் பலர் ஏளனஞ் செய்வதற்கு இவற்றைப் பார்ப்போரின் நடத்தை ஒரு காரணமாகும். இவற்றைப் பார்ப்பதற்குச் சோதிட அறிவோ, அதிக நேரமோ, சிரமமோ வேண்டிய தில்லை. பஞ்சாங்கத்தைப் பார்த்து உத்தமம், மத்திமம், அதமம் என எழுதுகிறார்கள். ஐந்து உத்தமமாயின், செய்யலாம் என்பர். ஏதோவுொரு குறித்த பொருத்தம் இல்லாவிட்டாற் சிலர் செய்யப்படாது எனப் பிடிவாதமாக நிற்பர். சரிக்கட்ட வேண்டுமானாற் சிலர் சரிக்கட்டித் தருவர். விளக்கங் கேட்டால் வீம்டு பேசுவர். சுலோகங்கள் பாடுவர். பெற்றோரைப் பயமுறுத்துவர். பொருத்தமானவற்றைப் பலர் பொருத்த மில்லாதவை என்கின்றனர் எனவும் பொருத்தமில்லாதனவற்றைப் பலர் பொருத்தமானவை என்கின்றனர் எனவுஞ் சோதிட மாமேதை கிருஷ்ண மூர்த்தி கூறுகின்றனர். சிக்கல்களைத் தீர ஆராய்ந்து சிந்தித்து முடிவு கூறுவதில்லை. ஓர் உதாரணத்தினால் இதை விளக்குவோம். சுக்கிரன் 7ம் வீட்டில் நிற்கிறான் என எடுத்துக் கொள்வோம். 7ம் வீட்டுக்குச் சுக்கிர னுக்குச் சில சோதிட நூல்கள் நற்பலன்களும் சில சோதிட நூல்கள்
26

கெட்ட பலன்களும் கூறுகின்றன. இது முதலாவது முரண்பாடாகும். காரகன்காரக வீட்டில் நிற்பது நல்லதன்று என்று சோதிடவிதியுமுண்டு. சுக்கிரன் களத்திரகாரகன். ஆதலாற் சுக்கிரன் 7ம் வீட்டில் இருப்பது நன்றன்று என மேலெழுந்த வாரியாகக் கூறலாம். ஆனாற் பெண்களுக்கு இது பொருந்துமா? ஏனென்றாற் பெண்களுக்குக் களத்திரகாரகன் வியாழன் எனச் சிலரும் செவ்வாயென வேறு சிலருஞ் கூறுகின்றனர். ஏழாம் வீடு சுக்கிரனுக்கு ஆட்சி அல்லது உச்ச வீடாகின் யோகமாகும் எனவும் இவ்விதி பொருந்தாது எனவுங் கூறுகின்றனர். இது மாளவிய யோகமாகும். சுக்கிரன் இலக்கினாதிபதிபன் அல்லது யோக காரக னானால் 7ம் வீடு சிறப்படையாதா? சுக்கிரன் பத்தாதிபன் என எடுத்துக் கொள்வோம். பெண்களுக்குப் பத்தாதிபன் 7ம் வீட்டிலிருப்பின், பலன் பின்வருவதாகும். 'கணவன் அதிட்டசாலியாவான். மிகவுயர்ந்த சமூக அந்தஸ்தும் பதவியும் அடைவான். இருவரும் இன்பமாக வாழ்வர்'
பஞ்சாங்கத்திலிருந்தே பொருத்தம் பார்க்கிறோம். ஈழத்திற் பெருவழக்கிலுள்ள பஞ்சாங்கங்கள் இரண்டாகும் - வாக்கியம், திருக் கணிதம். இவற்றிற் கூறப்பட்டவனற்றை அடிப்படையாகக் கொண்டே பொருத்தங்களை ஆராய்கிறேன். இரு பஞ்சாங்கங்களிடையிலும் பல முரண்பாடுகளைக் காண்கிறோம். எல்லாப் பொருத்தங்களுக்கும் விதிவிலக்குகளுள. இவை யாவும் பஞ்சாங்கங்களிற் கொடுக்கப்பட வில்லை. விதிவிலக்குகளை நோக்கும் போது பல பொருத்த விதிகள் அர்த்த மற்றவையாகின்றன. நூலுக்கு நூல் முரண்பாடுகளைக் காண் கிறோம். இதற்குட் பூச்சுமானங்கள், சோடனைகள் வைதீகக் கொள்கைகள்துவேஷங்கள் புகுத்தப்பட்டுவிட்டன. இப்பொருத்தங்கள் தர்க்க ரீதியாகச் சிந்திக்கப்பட்டு வகுக்கப்படவில்லை. காலத்துக்குக் காலங் கூட்டியுங் குறைத்தும் மிகைப்படுத்தியும் எழுதப்பட்டிருக் கின்றன. இவற்றிற் பலவற்றுக்குச் சோதிட விளக்கங் கூறவியலாது சோதிடத்திற்குள் ஒரு சிட்டுக்குருவிச் சோதிடம் போலிருக்கிறது. குடும்ப வாழ்க்கையை ஆராயும் பிரபல சோதிடர் கிரக நிலைகளின் அடிப்படையில் ஆராய்கிறார்களன்றி இப்பொருத்தங்களைக் குறிப் பிடுவதில்லை. இந்தியாவிலும் மலையாளத்திலே நான் கடுமையாகக் கல்யாணப் பொருத்தங்கள் பார்க்கின்றனர். இவ்வழக்கம் மலையாளத் திலிருந்து யாழ்ப்பாணத்துக்குப் பரவியிருக்கலாம்.
எனினும் இப்பொருத்தங்கள் எல்லாவற்றையும் கற்பனைகள் சோடனைகள் வைதிகப் புராணங்கள் எனப் புறக்கணிக்க முடியாது. சோதிடத்துடன் பல சோடனைகள் சேர்ந்து விட்டன. மணிகளுடன்
27

Page 18
பதர்கள் கலந்து விட்டன. பதர்களைக் களைந்து மணிகளை எடுக்க வேண்டும். இப்பொருத்தங்களைப் பார்ப்பதற்கு இலக்கினத்தையும் ஜன்ம நட்சேத்திரத்தையுஞ் சரியாகக் கணிக்க வேண்டும். இவற்றை எமது நாட்டுச் சோதிடர் பஞ்சாங்கங்களிலிருந்து குறிக்கின்றனர். கிரகநிலைகள் பஞ்சாங்கத்துக்குப் பஞ்சாங்கம் வித்தியாசப்படுகின்றன. எப்பஞ் சாங்கஞ் சரியானது? எவ்வாறு கிரக நிலைகள் கணிக்கப்படுகின்றன என்பதைப் பஞ்சாங்கத்தை வெளியிடுவோர் கூறுவதில்லை. மேனாட்டு வானியற் பஞ்சாங்கங்கள் கிரகங்களின் சயன நிலைகளைக் காட்டு கின்றன. அயனாம்சத்தைக் கழித்து நிராயண நிலைகளைக் காணலாம். ஆனால், அயனாம்சத்தைப் பற்றிய கருத்து வேற்றுமை சங்கடமாக இருக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கக் கிரக நிலைகளும், மேனாட்டு வானியற் பஞ்சாங்கங்களிலிருந்து அயனாம்சத்தைக் கழித்துப் பெற்ற கிரக நிலைகளும் பெரும்பாலும் ஏறக்குறைய ஒத்தனவாகும்.
இச்சிறு கட்டுரையிற் கல்யாணப் பொருத்தங்களுக்கு அடிப்படை யான சோதிட விளக்கங்கள் காண எத்தனிக்கிறேன். விளக்கமில்லா விட்டாலும், அனுபவச் சான்றிருப்பின் ஏற்றுக் கொள்ள வேண்டும். இத்துறையில் விளக்கங்கள் கூறுவதும் அனுபவச் சான்றுகள் காட்டு வதும், சோதிடரின் கடமையாகும். இவ்வாறு செய்யாது பிற்கால வைதிகப் பண்டிதரின் நூல்களிலிருந்து சுலோகங்கள் பாடுவது குருடு குருடுக்கு வழிகாட்டுவது போலாகும். இப்பொருத்தங்கள் உண்மை யற்றவை என்பதைக் காட்டப் பல உதாரணங்களைக் குறிப்பிடலாம். ஆனால், உண்மையை மறுப்பதற்கு இவ்வுதாரணங்கள் போதா. இவை விதிவிலக்குகளாக இருக்கலாம். சாதகங்களில் யோகங்கள் இருக்கலாம். மறுப்பதோ ஏற்றுக் கொள்வதோ எனது நோக்கமன்று. எல்லாவற் றையும் விருப்பு வெறுப்பின்றி ஆராய வேண்டும். முழுமையாகப் பார்க்க வேண்டும். ஒன்றிலிருந்து மட்டுமே முடிவு கூறமுடியாது.
இங்கு விதிவிலக்குகளை விரிவாக கூறுகிறேன். முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகிறேன். எவரின் பிழைப்பையாவது கெடுப்பது எனது நோக்கமன்று. பொருத்தம் பற்றிச் சோதிடர் முடிவு கூறுவதற்கு முன் இவர்கள் சோதிடத்தை நன்கு கற்க வேண்டும். ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். தமது முடிவுக்கு விளக்கங் கூறவேண்டும். கல்யாணப் பொருத்தங்கள் பற்றிய சில நூல்களின் பெயர்களை இறுதியிற் கொடுக் கிறேன். ஐந்தாம் அதிகாரத்தில் மேனாட்டவர் பார்க்கும் பொருத்தங் களிற் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறுகிறேன். இக்காலத்தில் எமது சோதி
28

டரிற் சிலர் மேனாட்டுச் சோதிட விதிகள் சிலவற்றையுஞ் சேர்க்கின்றனர். விளக்கங் காண எத்தனிப்பதன்றி முடிவு கூறுவது எனது நோக்கமன்று. எனினும், ஈற்றில் எனது அபிப்பிராயங்களைக் கூறுகிறேன். இவை முடிந்த முடிவன்று. மேலும் ஆராய்ச்சிக்குரிய வைத்துக்கோடல்க ளாகும். சுருக்கமாக எனது அபிப்பிராயங்களாவன:
(அ) கல்யாணப் பொருத்தங்களைப் பார்க்கினுஞ் சாதகங்
களைப் பார்த்தல் முக்கியமானதாகும்.
(ஆ) கல்யாணப் பொருத்தங்கள் உண்மைகளாயினும் மன
இணக்கம் ஒன்றை மட்டுமே இவை காட்டலாம்.
(இ) இவற்றிற் பல விளக்கமோ அனுபவச் சான்றோவற்ற
சோடனைகள்
(ஈ) சிலவற்றை மிகை நிரப்பியாகப் பார்ப்பது நன்று. ஆனால் இப்பொருத்தங்கள் இருந்தால் ஆயுள் ஆரோக்கியம் செல்வம் புத்திரர் கிடைக்குமென எண்ணுவது பேதமை.
(உ) பொருத்தங்களுக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் தவறானது. மூடநம்பிக்கை, பார்க்கின் பகுத்தறிவுடன் பாருங்கள். அற்பன்களுக்கு இழு பறிப்பட வேண்டாம். முக்கியமானவற்றைப் பாருங்கள். சந்தேகம் இருப்பின் சாதங்களைப் பாருங்கள். ஆணினதும் பெண்ணினதும் மன விருப்பங்களுக்கு இடமளியுங்கள்.
கேரள சோதிடர் 27 பொருத்தங்களைக் குறிப்பிடுகின்றனர். மேலுமிருக்கலாம். எமது பஞ்சாங்கத்திற் 14 பொருத்தங்கள் கொடுக்கப் படுகின்றன. (1) கிரக தோஷம் (2) நட்சேத்திரம் (3) கணம் (4) மகேந்திரம் (5) ஸ்திரீதீர்க்கம் (6) யோனி (7) இராசி (8) இராசியதிபர் (9) வசியம் (10) இரச்சு (11) வேதை (12) விருட்சம் (13) ஆயுள் (14) புத்திரர். கிரக தோஷமும் புத் திரஞ் சாதகங்களிற் சோதிட விதிகளின் படி பார்க்கப்படுகின்றன. விருட்சமும் ஆயுளும் மிகச் சிலரே இக்காலத்திற் பார்க்கின்றனர். எனவே, பொருத்தங்கள் பத்தென்பர்.
எமது பஞ்சாங்கங்களில் இன்று கொடுக்கப்படாத பொருத்தங் களாவன:- (15) நாடி (இது திருக்கணிதத்திற் கொடுக்கப்படுகிறது) (16) இலிங்கம் (17) வருணம் (18) கோத்திரம் (19) சாதி (20) ஆயம் (21) பஞ்சபட்சி (22) யோகினி (23) பஞ்சபூதம் (24) சந்திரகூடம் (25) தேசப் பிரதானம் (26) வருணப்பிரதானம் (27) நாம நட்சேத்திரம். 1960க்கு
29

Page 19
முற்பட்ட சில பஞ்சாங்கங்களில் இவற்றையுங் காணலாம். இன்று நாம் ஈழத்திற் பத்துப் பொருத்தங்களையும் கிரக தோஷத்தையும் புத்திரரையும் பார்க்கிறோம். சிலர் நாடியையும் பார்க்கின்றனர். ஏனையவற்றை மறந்து விட்டோம். சுமை குறைத்து விட்டது வட இந்தியர்நாடியை மிகமுக்கியமான பொருத்தமாகக் கருதுகின்றனர். நாம் முக்கியமானவையாகக் கருதும் இரச்சும் வேதையும் அவர்கள் பார்ப்பதில்லை. இவை பழைய நூல்களிற் குறிப்பிடப்படவில்லை.
பொ. சங்கரப்பிள்ளை
கல்யாணப் பொருத்தங்கள் (1980 ஏப்ரல், குமரன் அச்சகம், கொழும்பு)
30

மரணத்துக்குப் பின்
முன்னுரை
'மரணத்துக்குப் பின் வாழ்வுண்டா?’
'நான் யார்?
பண்டு தொட்டு இன்று வரையும் மக்கள் இக்கேள்விகளைப் பற்றிச் சிந்தித்து வருகின்றனர்.
நாம் வாழ்க்கையிற் காண்பவையும் அனுபவிப்பவையும் எல்லாம் நிலையற்றவை. அநித்தியமானவை. தோற்றமும் மாற்றமும் நாசமும்
DSN I 1686.
இவற்றையெல்லாங் கடந்த நித்திய மெய்ப் பொருளுண்டா என்பதை எறிய மக்கள் ஆவற்படுகின்றனர். காலத்துக்குக் காலம் பற்பல மெஞ்ஞானிகளும் திருவடியார்களும் தோன்றி இக்கேள்விகளுக்கு விடையளித்தனர்.
இவ்விடைகளைச் சாதாரண மக்கள் விளங்கிக் கொள்வது கடின மாகும். பலவிடைகள் முரண்பட்டவை போலவும் எமது பகுத்தறிவுக்கு ஒவ்வாதன போலவும் தோன்றுகின்றன.
உலகிற் பல சமயங்களுள. இச்சமயங்களும் கேள்விகளுக்கு விடையளிக்கின்றன.
சமய விடைகளுஞ் சில வேளைகளில் முரண்பட்டவையாக இருக்கின்றன. எனினும் இக்கேள்விகளுக்கு விடைகள் முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், எமது வாழ்வும் வளமும், சீருஞ் சிறப்பும், நோக்கங்களும் இலட்சியங்களும், சிந்தனைகளும் செயல் களும், பண்பாடும் நாகரிகமும், தர்மமும் அதர்மமும் நாம் இக் கேள்வி களுக்கு அளிக்கும் விடைகளைப் பொறுத்தனவாகும்.
ஒரு நாள் சொப்பன்கோவர் எனுஞ் சர்மன் தத்தவஞானி ஒரு பூங்காவில் நாடோடி போன்று அலைந்து கொண்டிருந்தார்.
பூங்காக் காவலன் 'நீ யார்?" என அவரைக் கேட்டான்.
31.

Page 20
"அதை அறியவே நானும் ஆவற்படுகிறேன்’ எனச் சொப்பன் கோவர் கூறினார்.
இந்திய முனிவர்களையும், ஞானிகளையும் பற்றியும் இப்படிப் பட்ட கதைகளுள.
நீ யார்? நான் யார்? எனத் திருவடியார் பிறான்சிஸ் கேட்கிறார்.
'உன்னை நீஅறி’ என்பது டெல்பி ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்
களில் ஒன்றாகும்.
'நீ யார்? உனது யாது? எங்கிருந்து நீ வந்தாய்? சகோதரனே
இவற்றைப் பற்றி சிந்தி’ எனச் சங்கராச்சாரியார் கூறுகிறார்.
கடவுள் ஒருவன் உளன் எனவும் ஆன்மாக்கள் பல உளவெனவும் ஆன்மாக்கள் இறைவனை உணர்ந்து அவனை அடைவதே முத்தி எனவும் ஆஸ்திக(Theistic) மதங்கள் கூறுகின்றன! இறைவனை உணருவதற்கும் தன்னையறிவது முதற்படியாகும்.
"மரணத்துக்குப்பின் வாழ்வுண்டெனச் சிலர் கூறுகின்றனர். இல்லையென வேறு சிலர் கூறுகின்றனர். இவற்றில் உண்மை யாது?’ இக்கேள்விக்கு விடையே நச்சகேது எமராஜனிடங் கேட்ட மூன்றதவது வரமாகும். இது தேவருமறியா இரகசியம் என எமராஜன் இக்கேள்விக்கு விடையளிக்க மறுத்தான். வேறு வரங் கேட்குமாறு சொன்னான் நச்ச கேது. வேறு வரங் கேட்காது தொடர்ந்து வற்புறுத்தவே எமராஜன் அவனுக்கு இப்பரம இரகசியத்தை உபதேசித்தானென்பது உபநிடதக்
கதை.
影
'பலகோடி மக்கள் இவ்வுலகில் இறந்த போதிலும் அவர்களில் எவராது திரும்பி வந்து எமக்கு உண்மையைக் கூறவில்லை. ஆதலால் மரணத்துக்குப் பின் என்ன என்பதை நாம் இறந்த பின்புதான் அறிய லாம்’- ஒமாக்காயாம். இவ்வாக்கியந்தானும் உண்மையானதா?
வாதத்தினாலும், தர்க்கத்தினாலும் உண்மையை அறிந்து விடலாமெனப் பல்ர நம்புகின்றனர். வாதத்திறனையும் தர்க்கச் சீரையும் பகுத்தறிவு நுட்பத்தையும் மெச்சுகிறோம். வாதப் புரட்டல்களுக்கு (Sophistry) பண்டைக் கிரேக்கர்களிடையில் மட்டுமட்றி இன்றும் எல்லா நாடுகளிலும் பெருமதிப்புண்டு. எனினும் வாதங்களுங் கொள்கைகளும் ஒரு பக்கச் சார்புடையவை. பூரண உண்மைக்கு வழிகாட்டா. காரணங்கள:
32

(அ)
(ஆ)
(g))
(я)
(s) )
வாதிப்போர் தமது முடிவுகளுக்கேற்ற வைத்துக் கோடல் களை மறுக்க முடியாத உண்மைகளாக எடுத்துக் கொள்ளு கின்றனர். இவ் வைத்துக் கோடல்களின் உண்மைகளை ஆராய்வதில்லை. வாதத்தின் ஒவ்வொரு படியிலும் மேலும் தனக்குச் சாதகமான வைத்துக்கோடல்களைச் சேர்த்துக் கொள்கின்றனர்.
காட்சி, காண் பொருளை மட்டுமன்றி ஓரளவுக்கும் காண்ப வனையும் பொறுத்ததாகும். அது போன்று வாத முடிவு களும் வாதிப் போன் அனுபவங்களையும், முற்சாய்வு களையும் பொறுத்தனவாகும். புதிய கருத்துக்களை விளக்கிக் கொள்வது கடினமன்று. ஆனால் எமது மனத்தில்
வேரூன்றிய பழைய கருத்துக்களைக் களைவது கடின்
மாகும்.
"எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் . அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப்தறிவு'
வாதங்களில் இந்த மனப்பான்மை இல்லை. முன்னரே தாம் கொண்ட கருத்துக்கள் முற்சாய்வுகளிலிருந்து வட்ட வட்டமாக வாதித்து மக்கள் தாம் முன்னரே நிச்சயித்த முடிவுகளுக்கு வருகின்றனர். வாதங்கள் பெரும்பாலும் பிரச்சாரங்களாகும். சர்வாதிகாரத்தைச் சனநாயகம் எனவும் முதலாளித்துவத்தை சோசலிசம் எனவும் சுரண்டலையும் அநீதியையும் தர்மம் எனவும், இன மதத்துவேஷத்தை மைத்திரியம் எனவும் வாதிக்கலாம். வாதத்தினால்
உண்மையைக் கண்டவர இல்லை. நிரூபித்தவருமில்லை.
வாதிப்போர், சொற்களுக்கே தமக்கேற்ற கருத்துக்களைக் கொடுக்கின்றனர். உதாரணமாக இந்திய தரிசனங்களில் மெய்மை, மாய்மை, சூனியம், அத்துவைதம முதலிய சொற்கள் பல கருத்துக்களிற் பயன்படுத்தப்படுகின்றன.
எல்லா மக்களுக்கும் ஆணவமும், நான் எனது என்ற அகங் காரமும் ஒரளவுக்காவதுண்டு. உண்மைக்கே சொத்துரிமை கோருகிறார்கள். உண்மையை அறிவதற்கு இந்த நான் பெருந் தடையாகும். சமயத்துறையிலும் பார்க்க அரசியற் பொருளா தாரத்துறைகளில் இந்த நான் போக்கு அதிகமாகவுண்டு.
33

Page 21
(ஊ)
(at)
சமய வாதங்களிலும் இந்த நானைக் காணலாம். 'எனது சமயமே உண்மையானது. எனது கடவுளே, உண்மையான வர்' எனப் பல நான்கள் வாதிக்கின்றனர்.
உண்மையை உணருவதற்கக் கொள்கைகளுங் கோட்பாடு களும் தடைகளாகும். பகுக்கப் பகுக்க நாம் உண்மை யிலிருந்து மேலும் மேலும் விலகிச் செல்லலாம். வரைந்த எல்லைகளுக்குள்ளும் வகுத்த இலக்கணத்தின் படியும் நாம் சிந்தித்து முடிவு காண்பதைப் பகுத்தறிவு அல்லது பொது வறிவு என்கிறோம். இப்பகுத்தறிவின் எல்லைகளை உணரு வதே சிறந்த பகுத்தறிவாகும். எமது பொது அறிவையும் பகுத்தறிவையும் முற்றாகப் புறக்கணிக்கவும் முடியாது. புறக்கணித்தால், சிந்தித்து முடிவுகாணச் சாதாரண மக்க ளினால் இயலாது. எல்லாக் கொள்கைகளையும் பற்றி விரு ப்பு வெறுப்பின்றிச் சிந்திக்க வேண்டும். பூரண உண்மையை அறிவதற்கு நூற்படிப்பும், பகுத்தறிவும் போதா. இவற்றுக்கு மேம்பட்ட உள்ளுணர்வு அல்லது மெஞ்ஞானம் வேண்டும்.
விஞ்ஞானங்கள் பயன்படுத்தும் தர்க்கமுறைகள் சடவுல கைப் பற்றிய தராதர (ralative) உண்மைகளை அறிய உதவுகின்றன. பூரண அல்லது பரம(absolute) உண்மையை அறிய உதவா. இவை தொடர்புகளைக் காட்டினும் மூல காரணத்தைக் காட்டா. விஞ்ஞான உண்மைகள் தவ றானவைகளல்ல. ஆனாற் பரிபூரணமானவைகளுமல்ல.
காண்டல் கருதல் உரை எனும் மூன்று பிரமாணங்களில் மேனாட்டார் முதலிரண்டையும் மட்டுமே ஒப்புக் கொள் கின்றனர். சடவுலகைப் பொறுத்தமட்டில் இவை ஓரளவு போதுமானவையாக இருக்கலாம். சடங் கடந்த தத்து வங்கள் உண்டென்றால் அவற்றைப் புலன்களினாலும் அளவைகளினாலும் பகுத்தறிவினாலும் அறிய முடியாது. வேறோர் அறிவுக்கருவி வேண்டும்.
இதனை ஆழ்மட்ட உள்ளுணர்வு அல்லது மெய்ஞ்ஞானம் அல்லது இறையருள் எனவும் மனிதனுக்கு உள்ளார்த்தமாக இச் சக்தி உண்டெனவும் இச்சக்தியை வெளிப்படுத்தினால் மறைபொருளை அறியலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
34

‘நான் யார்? மரணத்துக்குப் பின் வாழ்வுண்டா? என்ற வினாக் களுக்குச் சைவசித்தாந்தம் கூறும் விளக்கங்களைச் 'சைவசித்தாந்தம்" என்ற தனி நூலிற் ஆராய்ந்துள்ளேன்.
இதே வினாக்களுக்குச் சடவாதம், பெளத்தம், வேதாந்தம், மறைஞானம், கீபுறு, கிறித்துவ மதங்கள், ஆவியியலார், ண்படை எகிப்தியர், சோகிரட்டீஸ், பிளேற்றோ போன்ற அறிஞர்கள், தற்கால மேனாட்டு அறிஞர்கள் கூறியவற்றை இந்நூலில் ஆராய்ந்துள்ளேன்.
விருப்பு, வெறுப் பற்ற சிந்தனை மூலம், நான் எனது என்ற எண்ணமற்ற சிந்தனை மூலம் உண்மையைத் தேடிக்காண முயலுங்கள்.
பொ. சங்கரப்பிள்ள்ை
35

Page 22
நாம் தமிழர்
முன்னுரை
முதற்பதிப்பு: 1979 யூன் இரண்டாம் பதிப்பு: 1981 பெப்ரவரி
முதலாம் அத்தியாயம்
"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினு மப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு'
நாம் தமிழர், எமது மொழி தமிழ், தமிழ் என்ற சொல்லுக்கு 'இனிமை', 'தூய்மை' 'அன்பு’ என்பவை பொருளாகும். எமது மொழி,அமிழ்தம் போன்று இனிமையுடையது. மொழிகள் யாவற் றுக்கும் மூலமும் முதலுமானது. இன்றும் தனது சீரிளமை குன்றாது விளங்குகிறது. பண்டைக்காலத்தில் நாம் உலகாண்டோம். எமது மொழியும் பண்பாடும் நாகரிகமும் சமயமும் உலகம் முழுவதும் பரவியிருந்தன. எங்கும் நாடு நகரங்கள் அமைத்து நல்வாழ்வு நடத்தி னோம். பாலிற் குளித்தோம். பட்டாடை உடுத்தினோம். எமது பிள்ளைகள் தேரோடி விளையாடினர். இவற்றையெல்லாம் மக்கள் மறந்தனர். ஏன் நாமே மறந்தோம்! தன்னையுமறியாது தனது துணைவனையுமறியாதுதுயருறும் உயிர்போல வாழுகின்றோம். இன்று
அடிமைப்பட்டோம். சிறுமையுற்றோம் அல்லற்படுகிறோம்.
நாம் தமிழர். எமது நாகரிகம் உலகம் முழுவதும் பரந்திருந்த நாகரிகமாகும். பசுபிக் கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் மேற்கே அமெரிக்கா வரையும் மத்திய இரேகைக்கு இருமருங்கிலும் தொடர்ச் சியாகப் பரந்துகிடந்த நாடுகளிற் பண்டைக்காலத்திலே நிலவிய நாகரிகம் இதுவாகும். இதனை மேனாட்டவர் பண்டைநடுநிலக் கடலக நாகரிகம் எனவும் இம்மக்களை நடுநிலக் கடலக மக்கள் எனவுங் குறிப்பிடுவர். இந்நாடுகளிற் சில உதாரணமாக அத்திலாந்திசும் இலே மூரியாவும் - கடற்கோள்களினால் அழிந்துவிட்டன. பல நாடுகளில் வடபுல மக்களின் படையெழுச்சியினால் இந் நாகரிகம் அழிக்கப்பட்டு விட்டது.
36

மக்களின் தொட்டில் - அதாவது மனிதன் முதன் முதலில் தோன் றிய இடம் இலேமூரியா எனவும் அக்காலத்தில் அவர்கள் பேசிய மொழி தமிழ் அல்லது திராவிடம் எனவும் இலேமூரியாவிலிருந்து மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர் எனவும், குடியேறிய நிலத்திற்கு ஏற்றவாறு நிறம், மொழி, நடையுடை, நாகரிகம் வேற்றுமை யடைந் தனர் எனவும் கர்ணாமிர்த சாகரங் கூறுகிறது.
'நிலைபெற்றோங்குந் தமிழகத் தாறறிவுடைமைப் பேறுறுமக்கள் முன்னர்த் தோன்றி மன்னிக் கெழுமி இமிழிய லொலிசேர் தமிழ்மொழி பேசி, மண்ணிற் பலவிட நண்ணிக் குடியிருந் தவ்வவ் விடத்துக் கொவ்விய வண்ணம் கூற்று நடையுடை வேற்றுமை யெய்தி பற்பல வினப்பெயர் பெற்றுப் பெருகினர்".
பண்டை எகிப்தியரும் திராவிடரும் ஓரின மக்கள் எனவும் மிகப் பழைய காலத்திலே இப்பழுப்புநிற மக்கள் இந்தியாவிலிருந்து ஸ்பெயின் வரையும் பரவியிருந்தனர் எனவும் பேராசிரியர் கக்சிலி கூறுகிறார். உலகவரலாற்றுச் சுருக்கத்தில் யி. வெல்சு கூறுவதாவது:-
"இக்கரிய பழுப்புநிற மக்கள் இந்தியாவிற்கு அப்பாலும் பசுபிக் சமுத்திரம் வரையும் பரவினர். இவர்களே ஆதியில் நாகரிகம் அடைந் தவராவர். புதுக்கற்கால நாகரிகம் இவர்களுடையதாகும். உலகில் தற்காலத்திலுள்ள எல்லா மக்களும் அடிப்படையில் இவ்வினத்தவரே”
'இந்தியாவில் நீண்டகாலமிருந்து நாகரிகம் வளர்த்த பின்பு, திராவிடர் மேற்கு நோக்கிக் குடிபெயர்ந்தனர். மெசொப்பொற்றாமியா முதலிய பல நாடுகளில் தங்கிப் பிரிட்டிஷ் தீவுகள் வரையும் தமது நாகரிகத்தைப் பரப்பினர்’ என வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார் கூறுகிறார். இத்துறையிற் சமீக காலத்தில் ஆராய்ச்சி செய்த உரூசியர் வடதுருவப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்களும் திராவிட இனத் தைச் சேர்ந்தவர் என ஊகிக்கின்றனர். பண்டைக் காலத்தில் உலகம் முழுவதும் கடலாட்சியும், நிலவாட்சியும் செய்த மக்கள் திராவிட இனத்தவராவர்.
மக்களின் தொட்டிலைப்பற்றிய கதை பல நாடுகளில் உண்டு. மனித இனம் ஓரிடத்தில் தோன்றியதா அல்லது பலவிடங்களில்
37

Page 23
தோன்றியதா? ஓரிடத்திலாயின் அவ்விடம் யாது? இவ்வாதங்கள் பயனற்றவையாகும். ஓரின மக்களின் குலத்துக்கும் இனத்துக்கும் பண்பாட்டிற்கும் நாகரிகத்துக்கும் அம்மக்களின் நடத்தையே சான்றாகும்.
'பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தெர்ழில் வேற்றுமை யான்."
"மேலிருந்து மேலல்லார் மேலல்லர் கீழிருந்துங்
கீழல்லார் கீழல் லவர்’ (திருக்குறள்)
பழைய கற்காலந் தொட்டுத் தமிழர் நாகரிகத்துடனும் பண்பாட்டுடனும் சுதந்திர மக்களாக வாழ்ந்தனர் என்பதைக் காட்டுவதே இந்நூலின் நோக்கமாகும். இது வரலாற்று நூலன்று. எனினும் இந்நூலில் தமிழரின் சீரையுஞ் சிறப்பையும் நாம் குமரி நாட்டில் வாழ்ந்த காலத்திலிருந்து (கி.மு. 16,000)) சுருக்கமாகக் கூற எத்தனிக்கிறேன். மேலும், இந்நூல் எழுதமுன், ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை வாசித்தேன். வாசிக்கும்போது குறிப்புக்கள் எழுதி வைத்திருந்தேன். இக் குறிப்புக்களிலிருந்தே இந்நூலை எழுதுகிறேன்.
எமது முன்னோர் தமது வரலாற்றை எழுதிவைக்கவில்லை. இந்திய மக்களுக்கு வரலாற்றுணர்ச்சி இல்லையென்பர். ஒரு வேளை எழுதியிருந்தாலும் அவை எமக்குக் கிடையாது அழிந்துவிட்டன. அல்லது அழிக்கப்பட்டு விட்டன. பெரும்பாலான தமிழ் நூல்கள் காலத்தினாலும் பற்பல கடற்கோள்களினாலும் மறைந்துவிட்டன. இந்நூல்களிற் சில இரண்டாம் அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த பல நூல்கள் இன்று எமக்குக் கிடைக்கவில்லை யென்றால், பழைய நூல்களின் மறைவு வியப்பன்று.
'ஏரண முருவம் யோக மிசை கணக் கிரதஞ்சாலத் தாரண மறமே சந்தத் தம்பநீர் நிலமுலோகம் மாரணம் பொருளென்றின்ன மானநூல் யாவும்வாரி வாரணங் கொண்டதந்தோ வழிவழிப் பெயருமாள’ பண்டைத் தமிழகமாகிய குமரிநாடு இந்துமகா சமுத்திரத்திற் குள்ளே ஆழ்ந்து கிடப்பதினாற் புதைப்பொருள் ஆராய்ச்சிக்கு இட மில்லை. எனினும் இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளையும் எமது இலக்கியங்களையும் நோக்கி எமது பழைய
38

வரலாற்றை ஓரளவுக்கு அறியலாம். புராணங்கள் புளுகு மூட்டை களாயினும் அவற்றிலிருந்தும் சில உண்மைகளைப் பெறலாம்.
மேலும் சம்பவங்கள் நடைபெற்ற காலங்கள் சிற்சில யுகங்களின் கணக்கில் எமது நூல்களிற் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பண்டு தொட்டு இன்றுவரையும் இந்த யுகங்களின் ஆண்டுகள் தொடர்ச்சியாகக் கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த யுகங்களை மறுப்பது, மேனாட்டு வரலாற்றில் கிறித்துவ வருடக் கணக்கை மறுப்பதற்கு சமனாகும். ஆராய்ச்சியாளர் இந்த யுக வருடக் கணக்குகளைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை. இந்த யுகங்களின் தொடக்கங்களாவன:-
கலியுகம் - கி.மு. 3102 -பெப்றுவரி 17/18
உதிரட்டிர யுகம் - கி.மு. 3076
சாகர் யுகம் - கி.மு. 550
சாலிவாகன யுகம் - கி.மு. 76
விக்கிரமாதித்த யுகம் - கி.மு.56 வள்ளுவர் ஆண்டு - கி.மு.31
வடமொழிகளிலோ தென் மொழிகளிலோ சாசனங்களிலோ நூல்களிலோ இந்த யுகங்களின் ஆண்டுகள் கொடுக்கப்பட்டிருப்பின் சம்பவம் நடைபெற்ற காலத்தைப் பற்றிச் சந்தேகத்திற்கு இடமில்லை. கலாநிதிகளின் பகுத்தறிவுடன் இஃது இணக்கமில்லாதிருப்பின் அவர்களுடைய பகுத்தறிவு தவறானதாக இருக்கவேண்டும்.
இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் எமது புராணங்களையும் இதிகாசங்களையும் முற்றாகப் புறக்கணித்தனர். இவை பெளணிக மதமும், பிராமணருஞ் செல்வாக்கடைந்த பிற்காலத்தில் எழுதப் பட்டவையாகும். புத்த சமய சமயத்தவர் பெளராணி மதக் கொள்கைகளை எதிர்த்தபோதிலும் பிராமணரைப் போன்று தமது சமய புராணங்களையும் எழுதினர். புராணங்கள் அண்ட்ப்புளுகுகளும், கட்டுக்கதைகளும், நிறைந்தவையென வில்லியம் லோகுஸ் என்பவ்ர் குறிப்பிடுகிறார். 'உண்மைக்கு மாறாக பொய் நிறைந்த கதைகளை இப்பிராமணர் தமது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காகவும் பிழைப்பிற்காகவும் எழுதினர். இவையாவும் வெறிதே புனைந்துரைகள். புழுகு மூட்டைகள்.'
39

Page 24
பிற்காலத்திற் சிற்றரசர்களும் செல்வர்களும் தமது குலத்துக்குங் குடும்பத்துக்கும் புகழ்நாடிக் கூலிகொடுத்துப் புராணங்கள் எழுது வித்தனர். இப்புராணங்கள் மரபு முறைப்படி எழுதப்பட்டவையாகும்.
(1) முன்னோன் தோற்றமும் புகழும், குலத்தின் சிறப்பும், ஒவ்வொரு குலமும் ஆதியில் அக்கினியிலிருந்தோ, யாகத் திலிருந்தோ, சந்திர சூரியர்களிலிருந்தோ, தேவர்களி லிருந்தோ முனிவர்களிலிருந்தோ, சிங்கத்திலிருந்தோ, யாழியிலிருந்தோ தோன்றியதாக எழுதினர்.
(2) முன்னோன் புகழை மறைமுகமாகப் பின்னோனுக்குச்
சாற்றுவது.
(3) பின்னோன் புகழ் பாடுவது
(4) எதிரிகளைத் தூற்றுவது சமய நூல்களாயின், பிறமதக்
கண்டனம்.
இக்காலத்திற் செத்தவர் மேற் பாடப்படும் கல்வெட்டுக்களிற் போல, இப்புராணங்களிற் பெருமளவு புளுகும் ஓரளவு உண்மையும் இருக்கும். எனினும் அப்புராணங்களை முற்றாகப் புறக்கணிக்க முடியாது. இப்புளுகு பெட்டிகளுக்குள்ளிருந்தும் சில உண்மைகளைப் பிரித்தெடுக்கலாம்.
இந்திய வரலாறு இந்தியாவிற்கு வேலைக்கு வந்த சில ஆங்கிலேயரினாற் பதினெட்டாம்பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. ஏதோ பொழுது போக்கிற்காக இவர்கள் ஒரு செத்த மொழியிலுள்ள சில நூல்களை அரைகுறையாகக் கற்றவுடன் இந்திய வரலாற்றை எழுதத் துணிந்தனர். தொடர்ச்சியற்ற சில சம்பவங்களை எடுத்து வரலாற்றாக்கினர். கால வரையறைகள் ஆதாரமற்ற ஊகங் களாகும். இந்தியாவின் பழைய மக்கள், மொழிகள், பண்பாடு, சமயம் முதலியன பற்றி இவர்களுக்கு அறிவில்லை. இந்தியாவிற்குட் புகுந்த பல குழுக்களுள் ஒரு நாகரிகமற்ற நாடோடிக் குழுவின் பாட்டுக் களிலிருந்து பண்டை இந்திய வரலாறெழுதினர். இக்குழு இந்தியா விற்குட் புகமுன் இந்தியாவிற் பல மக்கள் வாழ்ந்ததையும் பல நாகரிகங் கள் தோன்றி மறைந்ததையும் புறக்கணித்தனர். இந்து சமயத் தத்துவங் களை இக்குழுவின் நாடோடிப் பாடல்களிற் காண எத்தனித்தனர். இந்தியாவின் மிகப் பழைய மொழியாகிய தமிழை இவர் கற்றிலர்,
பண்டை இந்திய நாகரிகங்களுக்கும் சமயங்களுக்கும், கலைகளுக்கும்
40

இருப்பிடம் இந்தியாவின் தெற்கும் வடகிழக்கும் மத்திய பகுதிகளும் என்பதை இவர்கள் உணரவில்லை.
இன்று இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டது. அடிமை மனப்பான்மையும் ஓரளவு குறைந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற புதைபொருள் ஆராய்ச்சிகளிலிருந்து பல உண்மைகளை அறிகிறோம். இந்திய வரலாறு புதிதாக எழுதப்படுகிறது. தமிழ் இனத்தின் வரலாற்றை இந்திய வரலாற்றிலிருந்து பிரிக்கமுடியாது. ஏனென்றால் முன்னொரு காலத்தில் இந்தியாவில் இமயந் தொடக்கம் ஒளிநாடு வரையும் வாழ்ந்தவரும், ஆண்டவரும் தமிழர் அல்லது திராவிடராவர், பிற்காலத்திலே மங்கோலிய, சித்திய, சாக்கேசியக் குழுக்கள் இந்தியாவிற்குட் புகுந்தபோதிலும், இன்றும் இந்திய மக்கள் அடிப்படையிற் பெரும்பாலும் நடுநிலக் கடலக இனத்தைச் சேர்ந்த திராவிடராவர்.
மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் முடிபுகளுக்கும் கருத்துக் களுக்கும் சில தவறான வைத்துக் கோடல்களும் எடுகோள்களுங் காரணங்களாகும். இவற்றிற் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம்.
1. இந்திய வரலாறெழுதிய ஆங்கிலேயர் பெரும்பாலுங் கிறிஸ் தவர்களாவர். பழைய உலில்லியவேதத்தை வரலாற்றுண்மையையாக எடுத்துக் கொண்டனர். ஆதாமும் ஏவாளும் முதல் மனிதர். உலகிலுள்ள எல்லா மக்களும் இவர்களுடைய சந்ததிகள். ஆதாம் ஏவாள் தோன்றிய இடம் மத்திய ஆசியா அல்லது மேற்காசியா அல்லது கிழக்காபிரிக்கா வாகும். அவர்களுடைய காலம் கி.மு. 8000 அளவிலாகும். இவ்வெடு கோள்கள் உண்மைகளாயின் பின்வரும் இரு முடிபுகளும் இயல்பாகவும் தர்க்க ரீதியாகவும் பெறப்படும்.
(அ) மனிதவினம் உலகிலே தோன்றிய காலம் பத்தாயிரம்
வருடங்களுக்குட்பட்டதாகும்.
(ஆ) மேற்கு அல்லது மத்திய ஆசியா அல்லது கிழக்காபிரிக்கா விலிருந்தே மக்கள் உலகம் முழுவதும் பரவியிருக்க வேண்டும். இந்தியாவிற்குள்ளும் புகுந்திருக்கவேண்டும். இக்கருத்தை வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ மேனாட்டவர் நூல்கள் பலவற்றிற் காணலாம். எனவே, மேனாட்டவர் எகிப்திய மெசொப்பற்றாமிய நாகரிகங்களை இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டவையாகவும் மூலமாகவும் எடுத்துக் கொண்டது வியப்பன்று.
41

Page 25
இந்திய நாகரிகத்தை ஆராயமுன் அவர்கள் புதை பொருளாய்ச்சி களிலிருந்து பண்டை எகிப்திய சுமேரிய நாகரிகங்களைப் பற்றி நன்கறிந் திருந்தனர். எனவே இந்திய நாகரிகத்தைச் சுமேரிய நாகரிகத்துடன் தொடர்புறுத்தினர். இந்தியாவிலிருந்து எகிப்திய சுமேரிய நாகரிகங்கள் பரவியிருக்கலாம் என்பதையோ ஒத்த நாகரிகங்கள் பலவிடங்களில் ஒரே காலத்திலே தோன்றலாம் என்பதையோ இவர்கள் சற்றேனும் சிந்தித்துப் பார்க்கவில்லை. இந்தியாவில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் மேனாடுகளில் வழங்கிய ஆரிய என்ற சொல்லையும் ஒரே இன அடிப்படைக்கருத்துடையவையாக எடுத்துக்கொண்டனர். இதனால், வட இந்தியச் சேர்மனி கொக்கோசியாவிலிருந்து வந்தவர் என ஊகித்தனர். வந்த காலத்தையும் வரையறை செய்தனர். இதற்கியையச் சம்பவங்களை வியாக்கியானஞ் செய்தனர். இக்காரணத்தினால் இந்திய மரபுக் கதைகளை யும் புராணங்கன்ளயும் இலக்கியங்களையும் இவர்கள் புறக்கணிக்க வேண்டியதாயிற்று.
இவர்களுடைய எடுகோள்களும் முடிபுகளும் உண்மைக்கு ஒவ்வாதவையென்பதில் ஐயமில்லை. உலகம் தோன்றிய காலத்தையும் மக்கள் உலகிலே தோன்றிய காலத்தையும் பற்றிப் பல அபிப்பிராயங்களும் மதிப்பீடுகளும் இருப்பினும், இவற்றைத் திடமாக அறுதிசெய்ய முடியாது. ஆனால், உவிலில்லிய வேதங் குறிப்பிடுங் காலத்துக்குப் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகில் மக்கள் வாழ்ந்தனர் என்பதற்குப் பல சான்றுகளுண்டு. மேலும், இந்து சமுத்திரத்திலிருந்த ஒரு கண்டத்திலிருந்தே மக்கள் சென்று பல நாடுகளிற் குடியேறினர் எனத் தற்கால ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர்.
(அ) "பண்ட்’ எனும் ஒரு நாட்டையும் அதிலுள்ள ஒவீர் எனுந் துறைமுகத்தையும் அதனருகே கிடைக்கப்பட்ட தங்கம், தேக்கு, மண்வகைகள் முதலியவற்றையும் பற்றிப் பண்டை எகிப்திய கதைகள் குறிப்பிடுகின்றன. இந்நாடே பண்டை எகிப்திய மக்களின் தாயகம் எனவுங் கூறுகின்றன. இந்நாடு தமிழராகிய எமது பண்டைத் தாயகமாகிய குமரி நாடாகும். (ஆ) மேற்கு ஆபிரிக்காவிற் சீரியா இலியோன் எனும் நாடெர்ன்றுண்டு. இன்று, இந்நாட்டவர் பிரெஞ்சு மொழி பேசுகின்றனர். எனினும், இவர்கள் தம்மைத் தமிழ் நாட்டி
லிருந்து வந்து குடியேறிய தமிழராகக் கருதுகின்றனர். தமிழ் மொழியிலும் பண்பாட்டிலும் ஆர்வங் காட்டுகின்றனர்.
42

(g))
(FF)
(2-)
(ஊ)
(67)
(στ)
(ஐ)
(ஒ)
மேற்கு ஆசியா, சின்ன ஆசியா நாட்டுப் பழைய மக்கள் தாம் கிழக்கேயுள்ள "எல்லம்’ எனும் நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்றனர். இது குமரி கண்டத்தில் இருந்த ‘ஏழ் நாடாகும். பண்டைக் காலத்தில் இங்கிலாந்தில் வாழ்ந்த 'குறுயிட்' மக்களின் பழக்க வழக்கங்களையுஞ் சமயத்தையும் ஆராய்ந்த அறிஞர் இவர்கள் நடுநிலக் கடலக மக்கள் எனவும் இந்து சமுத்திரத்திலிருந்து ஒரு கண்டத்திலிருந்து வந்து குடியேறியவர் எனவுங் கூறுகின்றனர். ஸ்பெயின் தேசத்திலுள்ள கற்றிலோனியா மக்களும் பாஸ்க் மக்களும் நடுநிலக்கடலகத் திராவிடரெனக் கெறஸ் பாதிரியார் கூறுகிறார்.
'பிரளயர்ாகற்குப் பிறகு முதன் முதலாக இந்தியாவிலே தான் மனிதவினம் தோன்றியது. ’’ (பேராசிரியர் ராலே)
'தென்னாசியாவிலே மிகவும் பழமையான பகுதி தென்னிந்தியாவாகும்"
'மனிதனின் பிறப்புத் தோற்றம் எல்லாமே தென்னிந்தியா வில்தான்’ (சேர். யோன் எட்பான்ஸ்)
'மனிதனின் மிகப் புராதனமான நாகரிகம் தென்னந்தியா விலேதான் இருந்தது. இவற்றைத் தென்னிந்திய மக்களின் வரலாறு கூறுகிறது. இம்மலைப் பகுதிகள் இமயமலையை விடத் தொன்மையானவை. இமயமலை இந்தியாவின் கடற்பகுதிகளிலிருந்து வெளிவந்தது.
(ஸ்கொற் எலியட்)
இரையிலர் எனும் ஆராய்ச்சியாளர் இந்தியாவிற் கற்காலங் களையும் உலோக காலங்களையும் வரையறை செய்திருக்கிறார்.
Lupgou spassTalib (Eolithic Age) - 5). (p. 400,000-S. Cup.35,000 கற்காலம் (Paleolithic Age) -கி.மு.35,000-கி.மு.10,000. Ligji 5j5Tajib (Neolithic Age) - கி.மு.10,000-கி.மு.5000
சிந்துவெளி நாகரிகத் தொடக்கக் காலம்- கி.மு.10,000.
43

Page 26
சிந்துவெளி நாகரிகம் இறுதிக்காலம் -கி.மு.3000- கி.மு.2000. இரும்புக் காலத் தொடக்கம் -கி.மு.4000.
பழைய கற்காலத்திலேயே திராவிட மக்கள் இந்தியாவில் வாழ்ந்தனர். இம்மக்கள் வாழ்ந்த கற்குகைகளும் இவர்கள் பயன் படுத்திய கற்கோடரிகளும் தென்னிந்தியாவிலுள்ள மதுரை, திருச் சிராப்பள்ளி, தஞ்சை, வடஆற்காடு, செங்கற்பட்டு, பெல் லாரி, கடப்பை, குர்நூர், நெல்லூர், கோதாவரிவெளி, மைசூர், ஐத்தராபாத் முதலிய இடங்களிற் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. புதுக் கற்கால மக்களின் வாழ்க்கைச் சின்னங்கள் தென்னிந்தியாவிற் பலவிடங்களிற் கிடைத்துள்ளன. புதுக்கற்கால மக்கள் நிலையான வாழ்க்கை நடத்தினர். நிலத்தை உழுது பயிர் செய்தனர். நூல் நூற்று நெசவு செய்தனர். மண் சட்டிபானைகள் வனைந்தனர். இறையுணர்ச்சியுடையவராக இருந்தனர். தலைச்சங்க காலமும், இடைச்சங்க காலத்தின் முதற் பகுதியும் புதுக்கற்காலமாகும். இக்காலத் தனிப்பட்ட நானில வாழ்க்கையைத் தொல்காப்பியங் கூறுகிறது.
இந்திய கால வாய்ப்பாட்டை எல்லாப் பஞ்சாங்கங்களிலுங்
காணலாம்.
யுகம் ஆண்டுகள்
கிருதயுகம் 1,728,000 திரேதாயுகம் 1,296,000 துவாபரயுகம் 864, OOO கலியுகம் 432,000 சதுர்யுகம் 4,320,000
1 மனுவந்தரம் - 71 சதுர்யுகங்கள் 1 கற்பகம் - 1000 சதுர்யுகங்கள்
ஒவ்வொரு கற்பத்தின் முடிவிலும் பூமி அழியும், இப்போது நடப்பது சுவேதவராக கற்பகமாகும். இதில் ஏழாவதாகிய வைவஸ் வத மனுவந்தரம் நடக்கிறது. இதில் 27 சதுர்யுகங்கள் சென்றுவிட்டன. 28வது சதுர்யுகத்தில் கிருதா திரேதா துவாபரயுகங்கள் கழிந்து இப்போது கலியுகத்தில் 5078வது ஆண்டு நடக்கிறது. எனவே, இக்கற்பகத்திலே பூமி தோன்றி ஏறக்குறைய 1961 மில்லியன் வருடங்கள் சென்றுவிட்டன.
4 4

மறுபடியும் பிரளயத்திற்கும் பூமி அழிவதற்கும் 2359 மில்லியன் வருடங் கள் இருக்கின்றன. இக்கால வாய்ப்பாட்டை மேனாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பீடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
ஆரம்பத்திலே இவ்வுலகம் அனற் பிளம்பாகக் கிடந்தது என்கின்றனர். வெப்பந் தணிந்து உயிரினங்கள் தோன்றப் பல நூறு மில்லியன் வருடங்கள் சென்றிருக்க வேண்டும். மனிதவினந் தோன்ற மேலும் பல மில்லியன் வருடங்கள் சென்றன. கண்டெடுக்கப்பட்ட மிகப் பழைய மனித எழும்புகள் 500,000 வருடங்களுக்குச் சற்று முற்பட்டவையாகும். இவை இந்தியாவிலும், சீனாவிலும், கிழக்கிந்திய தீவுகளிலும், கிழக்காபிரிக்காவிலும், கண்டெடுக்கப்பட்டுள்ளன. இம் மனிதருக்கு 'இராமப் பிதிக்கஸ்' எனப் பெயரிடப் பட்டிருக்கின்றனர். இவர்களிலிருந்தே நாம் தோன்றினோம். சமீப காலத்தில் பர்மாவில் 40 மில்லியன் வருடங்களுக்கு முற்பட்ட மனிதரின் எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலெனவும், இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியிலெனவுங் கூறப்படுகிறது. கிருத யுகமே வேதகாலம் எனவும் பலர் நம்புகின்றனர். மேலே கூறப்பட்ட கால வாய்ப்பாட்டின்படி இவை நம்பமுடியாத கற்பனைகளாகும். ஆனால், மேலே கூறப்பட்டது தேவ வருட வாய்ப்பாடாகும். மனித வரலாற்றுக் கால வாய்ப்பாடு வேறொன்று இருந்தது. இதை மக்கள் மறந்துவிட்டனர். வருடங்களைச் சூரிய வருடங்களாக (அதாவது நாட்களாக) எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாய்ப்பாட்டின்படி:-
யுகம் வருடங்கள்
கிருதயுகம் 2OO
திரேதாயுகம் 24OO
துவாபரயுகம் 36OO
கலியுகம் 48OO
சதுர்யுகம் 12,000
இப்போது நடப்பது கலியுகம் 5078வது வருடமாகும். கலியுகந் தொடங்கியவுடன் பகவான் கிருட்டினர் உயிர்நீத்தார். மகாபாரதப் போர் 36 வருடங்களுக்கு நடந்தது- கி.மு. 3138 இல் என்க. மேலும் கபாடபுரத்தை அயோத்திக்கிருட்டினர் கி.மு.3105இல் அழித்தனர் என்ற
45

Page 27
கதையுமுண்டு. இடைச்சங்க காலம் கலியுகத் தொடக்கத்துக்கு முற்பட்டதாகும். இராமாவதாரம் திரேதாயுகத்தின் இறுதியிலாகும் - கி.மு. 6702இற்கு முன் என்க. இதற்கு முன்பே இலங்கை இந்தியா விலிருந்து பிரிந்திருக்கலாம். இரணியன் காலம் கிருதயுகத்தின் இறுதியி லாகும் -கி.மு.9102 இற்கு முன் என்க. கி.மு.9000 தொடக்கம் கி.மு.3000 வரையிலுமான சம்பவங்களைக் கி.மு.2000 அளவில் இந்தியாவிற்குட் புகுந்த ஒரு துருக்கிய - ஈரானியக் குழுவுடன் தொடர்புறுத்த எத்தனித்த மேனாட்டு வரலாற்றாசிரியர்களின் பேதமையை என்னென்றுரைப் போம். பண்டை இந்திய மக்களிடையில் இராமாயண மகாபாரதக் கதைகள் வழக்கமாக இருந்தன. நூல்களும் இருந்திருக்கலாம். இந்நூல்களிலிருந்து இக்கதைகள் பிற்காலத்திலே சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட காலங்களை ஆங்கிலேய வரலாற்றாசிரியர் வரயைறை செய்தனரன்றி மகாபாரத இராமாயண காலங்களையல்ல.
பாண்டவரில் ஒருவனாகிய அர்ச்சுனன் பாரதநாடு முழுவதும் தீர்த்த யாத்திரை செய்தான் எனவும், நகுலமலையைக் கொண்ட மணிபுரத்திற்கு வந்தான் எனவும் அங்கு சித்திராங்கனை எனும் நாக கன்னியைக் கண்டு காதல் கொண்டு அவளை மணந்தான் எனவும் பின்பு இவர்களுடைய புத்திரனாகிய சித்திரவாகனன் என்பவன் அசுவமேத யாகத்திற்காகத் திக்கு விஜயஞ் செய்த தனது தந்தையை வென்றான் எனவும் சித்திரவாகனின் கொடிகள் சிங்கக் கொடியும் பனைக்கொடியும் எனவும் மகாபாரதங் கூறுகிறது. சித்திராங்கனை நாகர்குலத் தமிழ்ப் பெண். அருச்சுனன் அவளுடன் எம்மொழியிற் பேசினான்? அவனுக்கு எவ்வித மொழிப் பிரச்சினையாவது இருந்ததாகவோ அல்லது அவன் தன்னுடன் மொழிபெயர்ப்பாளரைக் கொண்டு சென்றதாகவோ எவ்விடத்திலாவது கூறப்படவில்லை. தென்னாட்டரசரும் பாரதப் போரிற் கலந்துகொண்டதாக மகாபாரதங் கூறுகிறது. கிருட்டினரைத் தாசர் அரசர்களில் ஒருவனாக இறிக் வேதங் குறிப்பிடுகிறது. அக்காலத்தில் வடக்கில் ஓரினமும் தெற்கில் வேறொரினமும் இருக்கவில்லை. எனவே மகாபாரத காலத்திலே இமயத் தொடக்கம் குமரி வரையும் (ஈழமும் உட்பட) வாழ்ந்த மக்கள் ஓரினத்தவர் என்பதும் ஒரே மொழியையோ கிளை மொழிகளையோ பேசினர் என்பதும் தென்படை.
இராமாயண காலம் கி.மு. 6702இற்கு முற்பட்டதெனக் கூறி னோம். இராமாயணப் போர் கங்கைச் சமவெளியிலாண்ட இராமன்
46

எனும் திராவிட அரசனுக்கும் இலங்கையிலாண்ட இயக்கர் குலத்தவனான இராவணன் எனும் திராவிட மன்னனுக்கும், இடையில் நடைபெற்ற போராகும். இராமன் நிறத்திற் கறுத்தவன், இராவணன் செந்நிறத்திவன். அனுமான் சீதையுடன் தேவ மொழியிற் பேசாது, மதுரமொழியாகிய மனுஷ மொழியிற் பேசினானென வால்மீகி கூறுகிறார். இம்மொழி பண்டைத் திராவிடமொழி அல்லது பண்டைத் தமிழாகும். அனுமான், சுக் கிரிவன் என்போர் மனிதர்களேயன்றி குரங்குகளல்லர். இவர்கள் முண்டர் சாதியினர். இவர்களுடைய கொடி குரங்குக் கொடியாகும். வானரர் எனப்பட்டனர். பிற்காலத்திலே இக்கதையை வடமொழியில் எழுதிய வால்மீகி என்பவர் இவர்களைக் குரங்குகளாக வருணித்தனர். வால்மீகி பழைய கதையை எடுத்து அதற்குள் தமது பெளராணிகக் கொள்கைகளை புகுத்தினர். இதனா லுண்டான முரண்பாடுகளை மகாபாரதத்திலும் இராமாயணத்திலும் பல விடங்களிற் காணலாம். இராமனும் இராவணனும் இந்துக் களானபடியால் கம்பர் இருவரையும் மத அடிப்படையில் 'ஆரியர்' என்கின்றனர். வால்மீகி, விசுவாமித்திரர், அகத்தியர், மனு என்பவை பண்டைத் திராவிடப் பெயர்களாகும். இராமாயண காலத்தில் இந்தியா முழுவதிலும் வாழ்ந்த மக்கள் திராவிடராவர். பேசப்பட்ட மொழி பண்டைத் திராவிடம் அல்லது பண்டைத் தமிழாகும்.
'திராவிடரே இப்போது இலங்கை முதல் இமயம் வரை பரவி யிருக்கும் மக்கட் கூட்டத்தாரிற் பெரும் பகுதியினராகக் காணப்படுகின்றனர்." (பேராசிரியர் ரிசிலி)
'இந்திய மக்களின் பண்டைத் தொகுதியில் மிகப் பெரும் பாலானனர் திராவிடராவர். இவர்கள் பிற்காலத்தில் வந்த ஆரியருடனும் சிதியருடனும் ஓரளவு கலப்புற்றனர். (பேராசிரியர் றாப்சன்)
47

Page 28
ஈழத்தில் - நாம் தமிழர்
"புத்த மதத்தின் மூலம் வட நாட்டுப் பண்பாடு புகுந்து சிங்கள மொழி வேறுபடுவதற்கு முன், இலங்கை தமிழகமாக இருந்தது. சிங்களம் வேறுபட்ட பின்பும், வட இலங்கை தமிழ் நாட்டைவிடத் தொன்மை மிக்க தமிழகமாகவே இருந்து வந்தது. ஈழ நாட்டவரான வட இலங்கைத் தமிழர் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவரல்லர். அவர்கள் சிங்களவரிலும் பழமையான இலங்கை நாட்டு மக்களாவர்”- பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை. 'அதிசயம் மிக்க இந்து வெளி நாகரிகத்தை உண்டாக்கிய திராவிட இனம் பண்டைக் காலத்தில் இந்தியா முழுவதும் பரவியிருந்தது. ஹதரபாட்டில் எடுக்கப்பட்ட பிரேதங்கள் புதைக்கும் தாளிகளும், தின்னவேலி மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட மட்பாத்திரங்களும் கேகாலையினுள்ள குகை யொன்றிற் காணப்பட்ட கல்வெட்டுப் பொறிப்புகளும் இதற்குச் சான்று பகர்கின்றன’’ வணக்கத்துக்குரிய கெறஸ் பாதிரியார், 'இலங்கையில் முதன் முதலிற் குடியேறியவர் தென்னிந்திய மக்கள் என்பதையும் விஜயன் வருகைக்கு முன்னர் திராவிடமும் திராவிட நாகரிகமும் இலங்கை முழுவதும் பரவியிருந்தன என்பதையும், வட மாகாணத் தொல் பொருள் ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இலங்கையின் வடக்கிலேதான் நாகரிகம் முதல் முதலில் தோன்றிப் பின்பு ஏனைய பகுதிகளுக்குப் பரவிற்று’ புலவர் C.S. நவரத்தினம்.
'சிங்களம் உண்மையில் ஒரு திராவிட மொழியாகும். தமிழ் அடிப்படையில் வளர்ந்தது. பாளியிலிருந்தும் சமஸ்கிருதத்திலிருந்தும் பெருந்தொகையான சொற்களைக் கடன்பட்ட போதிலும் அஃது அமைப்பிலும் அறிகுறிகளிலும் தமிழின் குழவியாகும். சொற்றொடரில் மரபு வழக்கியல்.விதிகள் பெரும்பாலும் தமிழ் விதிகளை ஒத்தனவாக இருக்கின்றன’’ - முதலியார் குணவர்தன.
சிலர் பாண்டி நாட்டைச் செந்தமிழ் நாடென்பர். வேறு சிலர் சோழநாட்டைச் செந்தமிழ் நாடென்பர். ஆனால், வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடென்பதை இவ்வதிகாரத்திற் காணலாம். பண்டு தொட்டுத் தமிழுக்கும் சைவத்துக்கும் ஈழம் இருப்பிடமாக விளங்கியது. ஈழத்தை நினைக்கும் போது,
48

'எந்தையும், தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந் நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து சிறந்ததும் இந்நாடே என்பதை நினைவு கூர்வோமாக.
இன்று இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலமாகும். விஞ்ஞான உலகம், முன்னோக்குப் பேசுகிறோம். எனினும், இலங்கை வரலாறாக ஒரு புராணங் கற்பிக்கப்படுகிறது. மகாவம்சம் அநுராதபுரத்திலாண்ட சிற்றரசர் வசம்சத்தின் புராணம் அல்லது மான்மியமாகும். இச்சிற்றரசர் புத்த மதத்தையும் சங்கத்தையும் ஆதரித்தபடியினால், அவர்கள் புகழைப் புத்த குருமார் பாடினர். சங்கத்தின் செல்வாக்கையும், அதிகாரத்தையும் நிலை நாட்டுவது இந்நூலின் நோக்கமாகும். புராண முறைப்படி எழுதப்பட்டது. புராணங்கள் எழுதுவதிற் புத்தகுருமார் எமது பிராமணரிலும் பார்க்க குறைந்தவர்களல்லர்.
பண்டைக் காலத்தில் இந்தியாவிற் பல்லாயிரஞ் சிற்றரசுகள் இருந்தன. ஒவ்வொரு குலமுங்குடியும் தன்னைத்தானே ஆட்சி செய்தது. காலத்துக்குக் காலம் பேரரசுகள் தோன்றின. தென்னாட்டிலே சேர, சோழ, பாண்டியர் பேரரசுகள் நெடுங்காலம் நீடித்திருந்தன. எனினும், இவர்களும் சிற்றரசர்களாக இருந்த காலங்களுமுண்டு. சிற்றரசர் பேரரசருக்கு திறை கட்டினர். பேரரசர் பலங்குன்றிய காலத்திலே திறை கட்ட மறுத்தனர். அடிக்கடி போர்கள் மூண்டன இலங்கையிலும் பல சிற்றரசுகள் இருந்தன. அநுராதபுரச் சிற்றரசு இவற்றில் ஒன்றாகும். அநுராதபுர அரசர் இலங்கையிற் பேரரசாக இருந்தனரா? அவ்வாறாயின் எவ்வெவ் காலங்களில்? அநுராதபுரச் சிற்றரசின் புராணம் இலங்கையில் வரலாறாகாது. இந்தியாவிற் சிற்றரசர் புராணங்கள் பல்லாயிரம் உள. இலங்கையிலும் இவை போன்ற புராணங்கள் உள. சிங்களத்தில் மகாவம்சம், சூளவம்சம் முதலியன தமிழில் யாழ்ப்பான வைபவமாலை, வன்னியர் புராணம், கோணேஸ்வர புராணம், மட்டக்களப்பு மகாத்மிகம் முதலியன.
சிங்களவர் தம்மை ஆரியர் என ஒரு கட்டுக்கதை எழுதி வைத்திருக்கின்றனர். ஆரியர் எனுஞ் சொல்லின் பல கருத்துக்களையும் முன்னர் படித்தோம். எக்கருத்தில் இவர்கள் தம்மை ஆரியர் என்கின் றனர். இன அடிப்படையில் ஆரியரா? அதாவது இந்தியாவிற்குட் புகுந்த
49

Page 29
காக்கேசிய ஈரானியக் குழுக்களின் சந்ததிகளா? அல்லது திசை அடிப்படையில் ஆரியரா? அதாவது வட இந்தியாவிலிருந்து வந்தவரா? விஜயன் இலங்கைக்கு வரமுன் இந்நாட்டில் வாழ்ந்த மக்கள் நாகரும், இயக்கரும் முண்டரும் என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர்.
இவர்கள் அழிந்து விடவில்லை. இலங்கையில் வாழும் மக்களிற் பெரும்பான்மையானோர் தமிழராயினும் சரி சிங்களவராயினும் சரி இவர்களின் சந்ததிகளாவர். நாகர் இலங்கையின் மேற்குப் பகுதியில் வாழ்ந்தனர். ஆதலால் தமிழர் பெரும்பாலும் நாகராவர். இயக்கரும் முண்டரும் கிழக்குப் பகுதிகளிலும் மத்திய பகுதிகளிலும் வாழ்ந்தனர். ஆதலாற் சிங்களவர் பெரும்பாலும் இயக்கரும் முண்டருமாவர். இவை யாவுந் திராவிட இனங்களென முன்பு கூறினோம். எவராவது சந்தேகப் பட்டால் தம்மைத்தாமே கண்ணாடியிற் பார்த்துத் தெளிவு பெறலாம்.
அக்காலத்திற் குடிவரவுக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆதலாற் பண்டுதொட்டுத் தென்னிந்தியாவிலிரந்து பல குழு மக்கள் பற் பல காலங்களில் இலங்கைக்கு வந்து குடியேறினர். இங்கு வாழ்ந்த நாகர் இயக்கர், முண்டர்களுடன் கலந்து ஒன்றாகினர். வட இலங்கையிற் குடியேறியவர் பெரும்பாலும் பாண்டி நாட்டிலிருந்தும் சோழ நாட்டிலிருந்தும் வந்த தமிழராவர். சிங்களவர் தங்களை விஜயனின் சந்ததிகள் எனக் கூறிக்கொள்ளுகின்றனர். விஜயனின் அரச பரம்பரை, ஐந்தாம் தலைமுறையுடன் அழிந்தது எனவும் அதற்குப் பின் நாகர் வமிசத்தவரும் தமிழரும் கலப்பு மிசிர குலத்தவரும் அநுராதபுரத்தில் ஆண்டனர் எனவும் மகாவம்சமே கூறுகிறது. சிங்களவரிற் சிலர் விஜயனின் சந்ததிகள் என எடுத்துக் கொண்டாலும், எல்லாச் சிங்களவரும் விஜயனின் சந்ததிகளாக இருக்க முடியாது. விஜயனும் திராவிடன் என்பதை அறிந்தால் அவனையே தூற்றுவர். இக்காலச் சிங்களவர் போல் இருக்கிறது. விஜயன் கலிங்க தேசத்திலிருந்து காவாலித் தோழர்களுடன் நாடு கடத்தப்பட்டவன். கலிங்கம் பழைய காலத்தில் ஆந்திராவின் ஒரு பகுதியாக இருந்தது. தக்கணத்தில் இருக்கிறது. அன்றும் இன்றும் இந்நாட்டில் வாழும் மக்கள் திராவிட ராவர். விஜயன் திராவிடன். இந்து மதத்திவன். இதில் எவருக்காவது சந்தேகமிருந்தால் ஒரு முறை கலிங்கத்துக்குப் போய் அங்கு இன்றும் வாழும் மக்களைப் பார்த்துத் தெளிவு பெறலாம்.
இதை உணர்ந்த பிற்காலச் சிங்களவர் சிலர் தாம் இன அடிப் படையில் ஆரியர் என்பதை நிலைநாட்டுவதற்கு விசயனின் தாயகம்
50

வங்காளம் என வாதித்தனர். வங்காளம் போனாலும் அங்கு வாழும் மக்கள் மங்கோலிய திராவிடர் என்பதை இவர்கள் உணரவில்லைப் போலும். ஒருவர் கலிங்க நாடு மலேசியாவில் இருந்ததெனவும், அங்கிருந்தே விசயன் வந்தான் எனவும் எழுதினர். இதன் உண்மை எவ்வாறாயினும், மலேசியாவிற்குப் போனாலும் அங்கு வாழும் மக்கள் மங்கோலிய - நாகர்திராவிட இனத்தவர் என்பதை இவர் உணரவில்லை. இப்போது ஒரு புதுக்கதை தோன்றியிருக்கிறது. சிங்களவர் அலெக்சாண்டருடன் இந்தியாவிற்குட் புகுந்த படைகளின் சந்ததிகளாம். ஒருவேளை தாயகத்தை வட துருவத்துக்குக் கொண்டு சென்றாலும், செல்லலாம். அங்கு வாழும் எஸ்கிமோர்களும் திராவிடர் என்பதை அறிந்தால் இவ்வாறு செய்யமாட்டார். ஒரு கட்டுக்கதைக்கு ஆதாரம் தேடி எத்தனை கட்டுக்கதைகள்? புராணங்கள்? அண்டப் புழுகுகள்? இலங்கை வாழ் சிங்களவரும் தமிழரும் பெரும்பாலும் விசயன் வருகைக்கு முன் இலங்கையில் வாழ்ந்த நாகர், யக்கர், முண்டர், லம்பகர்ணர், கபோயியர், மிசிரர், மோரியர், புலையர், முரி திசர், வேளிர், தமிழர், வணிகர், பிராமணர் குலங்குடிகளாவர்.
சிங்களவர் பெரும்பாலும் நாகரும், இயக்கரும், முண்டரும் கலிங்கரும் கலந்த இனத்தவர். பிற்காலத்தில் வேறு பல குலங்களும் இங்கு வந்து குடியேறிக் கலந்தன.
(அ) பாண்டிய சோழப் படை வீரர் - பெரும்பாலும் மறவர் படைகள் - சிங்களப் பிரதேசங்களிற் குடியேறிச் சிங்களவருடன் கலந்து இன்று சிங்களவராகி விட்டனர்.
(ஆ) வன்னியர் - சோழப்படைகளுடன் வன்னியர் இந்நாடு வந்து குடியேறினர். வன்னியர் வரலாறு பற்றிப் பல நூல்கள் உள. வன்னியர் விசேடமாகத் தொண்டை நாட்டவர்; காடவர் மரபினர். காடுகள் அடர்ந்த முல்லை நிலங்களில் வாழ்ந்தனர். படைக்கலப் பயிற்சியிற் சிறந்து விளங்கினர். போரில் வீரர், மறவருக்குச் சமமானவர். தென்னாட்டு வேந்தருக்குப் படைத்தலைவர்களாகப் பலர் இருந்தனர். இலங்கைக்கு வந்த வன்னியரிற் பெரும்பாலானோர் இன்று சிங்களவராகி விட்டனர். வன்னியருடன் இங்கு வந்த வேறு பல குலத்தவரும் - வில்லி துரையர். வாகையர், ஒட்டர், மலையாளிகள் -இலங்கையிற் குடியேறினர். இவர்கள் வடமத்திய மாகாணத்திலும் வடமேற்கு மாகாணத்திலும் இன்று பெருந்தொகையினராக வாழுகின்றனர். சிங்கள மொழி பேசுவதனால் இன்று சிங்களவராவர் -
51

Page 30
பத்தாம் நூற்றாண்டிற்குப் பின்பு தென்னிந்தியாவில் இருந்து மூன்று குலத்தவர் -கரவர், சலாராகமா, துவர் -இங்கு வந்து குடியேறினர். இவர்கள் இந்தியாவின் மேற்குக் கரைப் பகுதிகளிலிருந்து வந்தனர். இவர்களுடைய தாயகங்களைப் பம்பாய்க்கும், மலையாளத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளாகக் கருதலாம். இவர்களும் தம்மைப் பற்றி புராணங்கள் எழுதி வைத்திருக்கலாம். எனவே சிங்களவர் எக்குலத்தவராயினும் திராவிடர், அவர்கள் மொழியுந் திராவிட மொழிகளில் ஒன்றாகும். பண்டை இலங்கை மக்களின் மொழி ஈழு அல்லது எலு எனப்படும். புத்த சமயத்தின் பின் பாளி சமஸ்கிருதக் கலப்பினாற் சிங்களமாயிற்று. கிறிஸ்து சகாப்தத்தின் பின் சிங்களம் இலக்கியமும் இலக்கணமும் பெற்றது - வட இலங்கையில் ஈழு மொழி தமிழுடன் கலந்து தமிழாயிற்று.
இந்நாட்டில் வாழும் தமிழரும் சிங்களவரும் ஓரினத்தவர் -திராவிடர். மொழியாலும் மதத்தாலும் வேறுபட்டவர். இன்று மொழிகளின் அடிப்படையில் இனங்கள் வகுக்கப்படுகின்றபடியினால் ஈரினத்தவர் எனக் கூறலாம். பண்டுதொட்டு இந்நாடு சிங்களவருக்கும் தமிழருக்கும் சொந்தமானது. பல நாடுகளில் இரண்டு மூன்று இன மக்கள் ஒற்றுமையாகவும் நாகரீக மனிதராகவும் வாழ்வதைக் காண் கிறோம். இரண்டு மூன்று மொழிகள் பேசப்படுகின்றன. இலங்கையில் ஏன் ஆக்கிரமிப்பும் அநீதிகளும் அட்டூழியங்களும் நடைபெறுகின்றன? ஈரின மக்கள் சரிசமனாகவும் ஒற்றுமையுடனும் பொதுவுடைமைச் சமுதாயத்தில் மட்டுமே வாழலாம் எனப் பொதுவுடமைவாதிகள் கூறுகின்றனர். இஃது உண்மையா? இக் கேள்விகள் அனைத்துக்கும் பதில் அளிப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும். ஆனால் வேலியே பயிரை மேய்ந்தால் என்ன செய்யலாம்? பொதுவுடைமை வாதிகள் கூறுவது உண்மையானால், யாவரும் பொது உடைமைவாதி களாவது நன்று!
இப்போது ஈழத்தில் தமிழராகிய எமது வரலாற்றைச் சுருக்கமாகப் பார்ப்போம். வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக்காலத்திலே எமது நாடு தமிழகமாகிய குமரி நாட்டிற்கு வடக்கேயும் தாமிரபரணியாற்றுக்குத் தெற்கேயும் இலேமூரியாக் கண்டந்திலிருந்த பகுதியாகும். இப்பகுதி இராமாயணக் காலம் வரையும் இந்தியாவுடன் தொடர்பாக இருந்தது. மாலைதீவுகள் வதரயும் பரவிக் கிடந்தது. அக்காலத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் திராவிட இனத்தவரான முண்டரும் இயக்கரும் நாகருமாவர்
52

மிருகேந்திர புராணம் இவர்களை மிலேச்சர் எனக் குறிப்பிடுகிறது. தலைச்சங்கமிருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் ஈழநாட்டு நாகர் குலத்தவராகக் கருதப்படுகின்றனர். தொல்காப்பியர் ஈழநாட்டுக் 'காப்பியர்' குலத்தவரென இராச நாயக முதலியார் கூறுகிறார். கடைச்சங்கப் புலவர்களுள் ஈழத்துப் பூதந்தேவனாரும் ஒருவராவர். இவருடைய ஏழுபாடல்கள் சங்கநூல்களிற் காணப்படுகின்றன. இவை எவ்வாறாயினும் இம் மிகப் பழைய காலத்திலே ஈழநாடு தமிழ்நாடாக இருந்தது என்பதில் ஐயமில்லை.
இராமாயண காலத்தில் இயக்கர் கோனாகிய இராவணன் இலங்கையிற் பேரரசனாக இருந்தான். இக்காலத்துக்கு முன்னரே சிற்சில கடற்கோள்களினால் இலங்கை இந்தியாவிலிருந்து பிரிந்து விட்டது. இராவணன் தென்னிந்தியாவிலுஞ் சில பகுதிகளை வென்று ஆண்டான். இவன் மறத்தமிழன். சிவ பக்தன்.
'தென்றிசையைப் பார்க்கின்றேன்
என் சொல்வன் என்றன்
சிந்தையெலாம் தோள்களெலாம்
பூரிக்குதடடா
அன்றிருந்த இலங்கையினை
ஆண்ட மறத்தமிழன்
ஐயிரண்டு திசைமுகத்தும்
தன்புகழை வைத்தோன்' (பாரதிதாசன்)
இராவணன் காலத்துக்குப் பின்பு இயக்க அரசர்கள் வலிகுன்றி
அவர்களுடைய சீருஞ்சிறப்பும் செல்வமும் புகழும் மறைந்தன. அன்று இயக்கர் குலத்தை இனத்துரோகி ஒருவன் வேதம் பேசி அழித்தான். இன்று எம்மைப் பலர் பணஞானம் பேசி அழிக்கின்றனர். நாகர் அரசுகள் தோன்றின. ஒருவேளை இயக்கர் சிற்றரசர்களாகச் சிலவிடங்களில் இருந்திருக்கலாம். இராவணனின் மனைவி மண்டோதரி. இவள் மாதோட்டையில் வாழ்ந்த நாகர் அரச குலத்தவள். இக் கம்மிய நாகரைப் பற்றி இராசநாயக முதலியார் அநேக வரலாற்று விபரங்கள் கொடுக்கிறார். இப்பண்டைக் காலத்திலே யாழ்ப்பாணத்தின் நிலைமையைப் பற்றியும் அவர் கூறுகிறார். மகாவம்சம், சூளவம்சம், யாழ்ப்பாண வைபவமாலை முதலியவை போன்று இவருடைய நூல் புராணமன்று. இது வரலாற்று ஆராய்ச்சி நூலாகும்.
53

Page 31
'இப்போது குடாநாடாகவிருக்கும் யாழ்ப்பாணம் முன்னொரு காலத்தில் - அதாவது கிறித்துவுக்கு அநேகவாயிரம் ஆண்டுகட்கு முன்னர் - இரண்டு தீவுகளாகவிருந்தது. மேற்கே நாகதீவம், மணி நாகதீவம், மணிபுரம், மணிபல்லவம் எனும் நாமங்களால் வழங்கப்பட்ட பெருந்தீவும், கிழக்கே எருமை முல்லைத்தீவு, எருமைத்தீவு என்று பெயர்பெற்ற சிறு தீவும் ஆக இரு பிரிவாக இருந்தது. காலந்தோறும் பூகம்பங்களினாலும், பிரளயங்களினாலும் அழிக்கப்பட்டு, மேற்கே ஒன்றாயிருந்த தீவகம் பல தீவுகளாகப் பிரிந்தது. காரைத்தீவு, வேலணை, மண்டைதீவு, புங்குடுதீவு, அனலைதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலிய தீவகங்களும் வலிகாமமும் இப்பெருந் தீவகத்தின் பகுதிகளேயாம். அவ்வாறே, கிழக்கே ஒன்றாயிருந்த சிறு தீவகம் களப்புக் கடலால் வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப் பள்ளியெனும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
பண்ணைக்கடல், பூநகரிக் கடல், யானையிறவுக்கடல், எனுங் களப்புக் கடல்கள், முன்னே வங்காளக் குடாக் கடலுடன் சேர்ந்து ஆழமும் அகலமும் உள்ளனவாயிருந்தன. அன்றியும் மேலைத்தேசங் களிலிலும் சீனம் முதலிய கீழைத்தேசங்களிலுமிருந்து போக்குவரத்து செய்யுங் கப்பல்களுக்குப் பெரு வழியாகவும், சோளகம், வாடைக் காற்றுக்கள் தொடங்கும் காலங்களில் உண்டாகும் புயல்களுக்கு அக்கப்பல்களின் ஒதுக்கிடமும் உறைவிடமுமாகவும் இருந்தன. LL LLLL SLSSL LS LSL SSSS S LLL LL LS LSL SLL L L LS SSL S LSL L S L S S SL L SL SL SS L L S S S L L SS SLSS SLSL LL LS LS SLS L L S LS SSSL LL LL SL SS LS LSL LLS ஓவியரல்லாத மறுநாகர் வகுப்பைச் சேர்ந்த அரசர்கள் கந்தரோடையிலும், எருமை முல்லைத் தீவிலும், குதிரை மலையிலுமிருந்து அரசாண்டு வந்தார்கள். அல்லியரசாணியும், எழுனரியும், பிட்டங் கொற்றணும், குமணனும் குதிரை மலையிலும், ஆந்தை, ஆதனழிசி, நல்லியக் கோடன், வில்லியாதன் என்பார் மாந்தையிலும், எருமையூரன் எருமை முல்லைத் தீவிலும் இருந்து அரசாண்டமை பண்டைத் தமிழ் இலக்கியங்களால் அறியலாம். . . . . LSL SS SL SL LSL LS S SL SLL 0S S LL S LSLLL LLLL LLLL S S SL LSL S LS S L LSL SLSLS LSL SL L L LS S SLLL LLLL LLLL S SS SL L L S SL SLL 0L SSL SL SL L L SL S LSL L L SL S SLSL LL LSL பன்னெடு காலமாகப் பீனிசியர் என்னும் அரேபிய தேசவாதிகள் இந்தியா இலங்கையுடன்கப்பல் மார்க்கமாக வாணிபம் நடத்தி வந்தார்கள். விவிலிய நூலில் 'ஓவிர் தேசத்திலிருந்து பொன்னும் வெள்ளியும், தந்தமுங், குரங்குத் தோகையுங் கொண்டுவரப்படும்’ என்று சொல்லப்பட்ட ஒவிர் தேசம் ஒவியராகிய நாகர் வாழ்ந்த டிரந்தையூேர்
54

வட இலங்கையிலுள்ள பெரிய குளங்கள்
வவனிக் குளம், பாவற்குளம் முதலியவை விசயன் இலங்கைக்கு வரமுன் கட்டப்பட்டவையாகும். கி.பி. முதலாம் இரண்டாம் நூற் றாண்டுகளிற் கட்டப்பட்ட பெரியகுளம், மாமடு, ஒலுமடு, கனகராயன் குளம், பண்டாரகுளம் முதலியவையுந் தமிழராற் கட்டப்பட்டவை யாகும். திருகோணமலைப் பகுதியிலுள்ள கந்தளாய்க் குளமும் விசயன் காலத்துக்கு முற்பட்டதாகும். நாகதீவு, நாகர்கோயில், மாதோட்டம் முதலியவை பற்றிய குறிப்புக்கள் குறுந்தொகையிற் காணப்படுகின்றன.
புத்தமதம் இலங்கைக்கு வரமுன் ஈழ மக்கள் இந்துக்களாக இருந்தனர். மத மாற்றத்தினால் இன மாற்றம் ஏற்படுவதில்லை.
"விசயன் இலங்கைக்கு வருவதற்கு ஆதிகாலத்துக்கு முன்னரேயே இலங்கையிற் பெயர் பெற்ற ஐந்து சிவாலயங்கள் இருந்தனதிருக்கேதீசுவரம், மனீசுவரம், தண்டேசுவரம், திருக்கோணேசுவரம், நகுலேசுவரம்' -பீரிஸ். இந்த ஐந்து கோயில்களையே இன்று சில சிங்களவர்கள் பறிக்க எத்தனிக்கின்றனர்.
திருகோணமலையிலுள்ள கோணேசுவரர் கோயில் பற்றிப் பல நூல்கள் உள; தட்சண கைலாச புராணம், கோணேசர் கல்வெட்டு, திருக்கோணாச வைபவம். இக்கோயிலின் தொடக்கத்தைக் கோணேசர் கல்வெட்டுக் கூறுகிறது.
'திருந்துகலி பிறந்தைஞ்ஞாற் றொருபதுட னிரண்வாண்டு சென்ற பின்னர் புரிந்திடப மாதமதி லீரைந்தாந் தேதி திங்கள் புணர்ந்த நாளில்" அதாவது கி.மு. 2590இல் என்க. குளக்கோட்டன் சோழ மகராசா என்ற புராணக் கதையை நாம் நம்பவேண்டியதில்லை. புராணத்திற் சாதாரண மனிதனும் மகாராசாவாகிறான். நாடு கடத்தப்பட்ட விசயஜ் மகாவம்சபுராணத்திற் சிங்கத்திலிருந்து உதித்த கலிங்கத்து இளவரசனாக வில்லையா?
திருகோணமலை எக்காலத்திலும் சைவத்திருத்தலமாகிய தமிழ்
நாடாக இருந்தது. சோழப் பேரரசுக் காலத்தில் திருகோணமலையைச் சோழப் பிரதிநிதிகள் நேராக ஆண்டனர். திருகோணமலையிலாண்ட
55

Page 32
சிற்றரசர் சில காலம் தனியாட்சி செய்தனர். சில காலம் சிங்கள அரசருக் குத் திறைகட்டி ஆண்டனர். ஆனாற் பெரும்பாலும் யாழ்ப்பாணப் பேரரசின் கீழ்ச் சிற்றரசர்களாக இருந்தனர். திருகோணமலை தேவாரப் பாடல்கள் பெற்ற திருப்பதியாகும்.
"மந்திரத்து மறைப் பொருளுமாயினான் காண் மாகடல் சூழ் கோகரணம் மன்னினானே'
-திருநாவுக்கரசு நாயனார்.
'மாதரொடு மாடவர்கள் வந்தடி யிறைஞ்சி நிறை மாமலர் கடுய்க் கோதைவரி வண்டிசை கொள்கீத முரல் கின்றவளர் கோகரணமே?
-திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார். நம் பொத்த என்ற சிங்கள நூல் வட இலங்கையைத் தமிழ்ப் பட்டணம் எனவும் இப்பட்டணத்துளடங்கிய இடங்களுள் திருகோண மலை ஒன்றாகும் எனவுங் குறிப்பிடுகிறது. போர்த்துக்கீசப் பாதிரியார் குவைறோஸ் என்பவர் கோணேசுவரர் கோயிலைப் பற்றிப் பின்வரு மாறு குறிப்பிடுகிறார்.
'இக்கோயில் கீழைத் தேசத்திலுள்ள கிறிஸ்தவரல்லாத மக்களின் உரோம புரியாகும் : இத்திருத்தலத்துக்கு யாத்திரிகர் கூட்டங்கள் இடையறாது வந்து சென்றன. இந்தியாவிலுள்ள புண்ணிய தலங்கள் பலவற்றைக் காட்டிலும் - இராமேஸ்வரம், காஞ்சிபுரம், திருப்பதி, திருமலை, ஜகத்நாத், விஜந்தி முதலியவற்றைக் காட்டிலும்- திருகோண மலை சிறந்த புண்ணிய தலமாகக் கருதப்பட்டது."
கி.மு. 1000இற்கு முற்பட்டிருந்தே தென்னிந்தியாவிலிருந்து தமிழ் மக்கள் வந்து வட இலங்கையிற் குடியேறி அங்கு வாழ்ந்த மக்களுடன் கலந்தனர். விசயன் வருகைக்கு முன்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இராமேஸ்வரத்தை ஆண்ட சூளோதரன் நாக தீவிலாண்ட மாகாதரனின் மருகன் என மகாவம்சங் கூறுகிறது. தென்னிந்தியாவிற்கும் வட இலங்கைக்குமுள்ள நெருங்கிய தொடர்பை இது காட்டுகிறது.
கி.மு.ஆறாம் நூற்றாண்டு தொடக்கம் தென்னிந்தியத் தமிழ ருக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் சமுதாய மணத் தொடர்புகள் இருந்தன. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலும் முதலாம் நூற்றாண்டின் முதற்பகுதியிலும் தமிழர் மரபினர் இலங்கையிலாண்
56

டனர். கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் கி.பி.முதலாம் நூற்றாண்டுக்கும் இடையில் பாண்டிய நாட்டவரும் இலங்கை நாட்டவரும் ஒரே தமிழ்க் குடிமக்களாக வேற்றுமையின்றி நேசத் தொடர்பு கொண்டிருந்தனர். இத் தொடர்புகள் வட இலங்கைத் தொடர்புகள் என்பதில் ஐயமில்லை.
கி.மு. 543இல் விசயன் இலங்கையில் இறங்கியதாக மகாவம்சங் கூறுகிறது. இப்புராணக் கதை எவ்வளவுக்கு உண்மையானது என்பதை அறியோம். விசயன் கலிங்க தேச இளவரசன். அவ்வாறாயின், திராவிட இனத் தெலுங்கன். சைவமதத்தவன். விசயன் மரபினருக்கும் வட இலங்கை அரசருக்கும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்புகளை வைபவமாலை கூறுகிறது. இயக்கர் குலத்து மாது குவேனியைத் துரத்தியபின், பாண்டிய பேரரசன் மகளை விசயஜ் மணந்தானென மகாவம்சங் கூறுகிறது. இது பெரும் புளுகுக் கதையாகும். விசயன் யாழ்ப்பாணத்திலாண்ட நாக அரசகுலத்தில் மணஞ் செய்தான். மேலும் தேவநம்பியதீசனின் அன்னையும் மூத்த சிவனின் மனையுமாகிய பெண் யாழ்ப்பாண நாகர் குலத்தவள்.
மகாவம்சத்தில் தமிழர் வெற்றிகளெல்லாம் இந்தியாவிலிருந்து வந்த படைவீரர் வெற்றிகளாகக் குறிப்பிடப்படுகின்றன. பிற்காலத்திலே சோழ, பாண்டிய பல்லவப் பேரரசர் இலங்கையில் படையெடுத்து வென்றது உண்மையே. ஆனாங், அநுராசபுர அரசின் ஆரம்ப காலத்தில் அதை வென்று ஆண்ட தமிழர் வட இலங்கையிலாண்ட தமிழராவர். சுப்பன் எனும் காவற்காரன், சேனன் எனும் குதிரை வாணிகன், ஏலேல சிங்கன் அநுராபுரத்திலாண்ட மறவர் தலைவர் ஐவர், பாண்டு வமிசத் தவர் - இவர்கள் யாவரும் வட இலங்கைத் தமிழராவர். இவ்வுண்மையை H.W. கோடிறிங்கன் எனும் வரலாற்றாசிரியர் வற்புறுத்துகிறார்.
'போதிய பலமுடைய நிலையான தமிழ்க்குடிகள் அருகில் இருந்திருக்காவிட்டால், ஏலேலசிங்கன் அன்னிய மக்களான் அனுராதபுரத்துச் சிங்களவரை 43 ஆண்டுகள் ஆண்டிருக்க முடியாது. தென்னிந்தியாவிலிருந்து இடையறாத குடிவரவினால், அக்காலத்தில் வட இலங்கை தமிழ் நாடாக இருந்தது. மன்னார் மாவட்டத்திற் சிங்களப் பெயர்களோ சின்னங்களோ முற்றாக இல்லாதிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்’ மன்னாரைப் போர்த்துச்க்கீசர் அழித்தனர்.
கரிகாலன் காலத்திலிருந்து தென்னிந்தியாவில் ஆட்சி செய்த பாண்டிய, சோழப், பல்லவ, அரசர் இலங்கைமேற் படையெடுத்து வெற்றி கண்டனர். இந்திய வரலாற்றிலும் சாசனங்களிலும் பல
57

Page 33
இலங்கைப் படையெடுப்புக்களும் வெற்றிகளும் குறிப்பிடப்படு கின்றன. இவற்றுட் பல மகாவம்சத்திற் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், இக்குறிப்பிடப்படாத படையெடுப்புக்கள் வட இலங்கை அரசின் மேலாக இருந்திருக்கலாம். சிங்கள அரசர் பாதிக்கப்படாவிடின், மகாவம்சங் குறிப்பிடக் காரணமில்லை. இலங்கையிலாண்ட அரச வம்சங்கள் யாவும் தென்னிந்திய அரச வம்சங்கள் என்பதை உணர வேண்டும். இவை கலிங்கர், பாண்டியர், கலிங்கரும் நாகருஞ் சேர்ந்த மிசிரர் முதலிய குலங்களாகும். பிற்காலத்திற் கண்டி அரசர் மலையாள வம்சத்தவர். கோட்டையிலாண்ட அளகக்கோனார் குடும்பமும் மலை யாளத்தவராக இருக்கலாம். நடுக்கால ஐரோப்பிய அரச குடும் பங் களிடையிற் போல இவர்களிடையிலும் நெருங்கிய உறவும் மணத் தொடர்புகளும் இருந்தன.
வட இலங்கையில் தனிப்பட்ட அரசு இருக்கவில்லையென இக்காலத்திற் சில சிங்களவர் முழுப் பூசணிக்காயைச் சோற்றுக்குள் மறைக்கப் பார்க்கின்றனர். விசயன் வருகைக்கு முன்பு வட இலங்கையி லிருந்த நாகவரசுகளைக் குறிப்பிட்டோம். விசயன் வருகைக்குப் பின் னும் இவ்வரசுகள் தொடர்ச்சியாக இருந்தன. அக்காலத்தில் அநுராதபுரச் சிற்றரசர்களும் வட இலங்கை சிற்றரசர்களுக்கும் இடையில் நெருங்கிய உறவும் தொடர்புமிருந்தன. அக்காலத்திலே தான் சில தமிழ் அரசரும் சேனை வீரரும் அநுராதபுரத்தைக் கைப்பற்றிச் சில காலங்களில் ஆட்சி செய்தனர். சிங்கள அரசருக்குத் தமிழ்ப் பிரதானிகள் இருந்தனர்.
வட இலங்கையிற் சிங்கை ஆரியர் ஆட்சி கி.பி. 785 இல் உக்கிர சிங்கனுடன் தொடங்கி கி.பி.1620 இற் சங்கிலியுடன் முடிவடைகிறது. எட்டு நூற்றாண்டுகள் காலம் இவர்கள் தொடர்ச்சியாக ஒருவர் பின் ஒருவராகப் பரராசசேகரன், செகராசசேகரன் எனச் சிங்காசனப் பெயர்கள் பூண்டு அரசு செலுத்தினர் முதலாம் பராக்கிரமபாகு சிங்கை ஆரியர் வம்சத்தவன். கி.பி. 1215இற் கலிங்கமாகன் சிங்கை ஆரியர் அரசைப் பேரரசாக்கினான். பொலனறுவாவை வென்று இலங்கை முழுவதுக்கும் பேரரசனானான். சக்கரவர்த்தி எனப் பெயர் பூண்டான்.
'தென்னன் நிகரான செகராசன் தென்னிலங்கை மன்னவனாஞ் சிங்கை யாரிய மால்’ போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த போது சிங்கை அரசர் கடற்படையோடு தரைப்படையுங் கொண்டு வலிமைமிக்க அரசர்களாக விளங்கினர். இவ்வரசின் பரப்பையும் தமிழ் மொழி பேசப்பட்ட பகுதிகளையும் ஜே.ஆர்.சின்னத்தம்பி என்பவர் 'தமிழ்
58

ஈழம் - நாட்டு எல்லைகள்’ எனும் நூலில் தெளிவாக விளக்குகிறார். மேற்கே கரையோரமாக மாஒயாவரையும் - சிலாபம் முனிஸ்வரம், குசலை, உடைப்பு, ஆனைமடு, புத்தளம், கற்பிட்டி, வண்ணாத்தி வில்லு, குதிரை மலை, வில் பற்று, நானாட்டான் முதலிய பகுதிகள் -ஆரியச்சக்கரவர்த்திகள் ஆட்சியில் இருந்தன. கிழக்குக் கரையோரமாகக் குறுப்பன் ஆறுவரையுமிருந்த நிலப்பரப்பும் ஆரியச் சக்கரவர்த்திகளின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. இவ்விராச்சியம் பல பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம், தீவுப் பற்று, பச்சிலைப்பள்ளி, கரைச்சிக்குடியிருப்பு என்பவை அரசரின் நேராட்சி யில் இருந்தன. ஏனைய பகுதிகள் வன்னிமைகளினால் ஆளப்பட்டன. வன்னிமைகள் ஆரியச் சக்கரவர்த்திகளின் மேலாணை ஏற்றனர். திறை கட்டினர். இவ்வாறு வன்னிமைகளினால் ஆளப்பட்ட பகுதிகள் முள்ளிய வளை வன்னிமை, கொட்டியாற்றுப்பற்று வன்னிமை, பழுகாம வன் னிமை பாணமை வன்னிமை, பனங்காம வன்னிம்ை, கரைத்துறை வன்னிமை, கரைவாகுப் பற்று வன்னிமை, கற்பிட்டிவன்னிமை என்பவைகளாகும்.
குமண, உகந்தை, பொத்துவில், அம்பாறை முதலிய பகுதிகள் பானமை வன்னிமையின் ஆட்சியில் இருந்த, மகாவலிகங்கையை மேற் கெல்லையாகவும் வெருகல் ஆற்றை வடக்கெல்லையாகவும் கொண்ட தும் மட்டக்களப்பு, உகணை, ஒமுனை முதலிய ஊர்களை உள்ளடக் கியதும் பழுகாம வன்னிமையாகும். வெருகல் ஆற்றுக்கு வடக்கேயும் பறங்கி ஆற்றுக்குத் தெற்கேயும் உள்ளதும், செருவிலை, மூதூர், தம்பல காமம், திருகோணமலை, கந்தளாய், பதவியாக்குளம், பன்குளம், திறப்பனை, குச்சவெளி, நிலாவெளி முதலிய ஊர்களை உள்ளடக்கியதும் கொட்டியாற்றுப்பற்று வன்னிமையாகும். முல்லைத்தீவு வவுனியாப் பகுதிகள் முள்ளியவளை வன்னிமையில் இருந்தன. மன்னார்ப்பகுதிகள் பனங்காம வன்னிமையில் இருந்தன. மாஒயா தொடக்கம் முசலிவரையும் கரைத்துறைப்பற்று கற்பிட்டி வன்னிமைகள் இருந்தன.
போர்த்துக்கீசர் சங்கிலியை வென்றபோது ஆரியச் சக்கரவர்த்தி களின் இராச்சியத்திலிருந்த எல்லாப் பகுதிகளையும் வெல்லமுடிய வில்லை. குடாநாட்டிற்கத் தென்கிழக்கிலிருந்த வன்னிப் பகுதிகளும் முள்ளியவள வன்னிமையும் போர்த்துக்கீசரின் மேலாண்மையை ஏற்கமறுத்தன. எனினும் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடவில்லை. தன்னாட்சி செய்தன. கொட்டியாற்றுப்பற்று, பழுகாமம், பாணமை, வன்னிமைகள் கண்டி அரசரின் பாதுகாப்பை நாடி அவர்களுடைய
59

Page 34
மேலாண்மையை ஏற்றன. எனினும் இப்பகுதிகள் தன்னாட்சித் தமிழ்ப் பிரிவுகளாக இருந்தன. ஆனால் இக் காலந்தொட்டுச் சிங்களவர் இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர்.
சிங்கள அரசர் ஆரியச் சக்கரவர்த்திகளுக்குப் பயந்தோ திறை கொடுக்க மறுத்தோ தமது இராசதானியை அநுராதபுரத்திலிருந்து பொலநறுவாவிற்கும் பின்பு குருநாகலைக்கும் தம்பதெனியாவிற்கும் கம்பளைக்கும் மாற்றினர். கி.பி. 1344 இல் இலங்கைக்கு வந்த இஸ்லா மியப் பிரயாணியாகிய இபுன் பற்றுாற்றா என்பவர் அக்காலத்திலாண்ட ஆரியச் சக்கரவர்த்தியைப் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.
'இவ்வரசனின் பெயர் ஆரியச் சக்கரவர்த்தியாகும். கடற்படை வலிகொண்டவன். மலையாளத்திலே நான் தங்கியிருந்த போது, இவன் நாவாய்கள் சிறியவையும் பெரியவையுமாக நூறு கப்பல்கள் நங்கூர மிட்டுக் கெம்பீரமாக அங்கு நின்றன. இவன் அதிதிகளை உபசரிக்கும் அன்புசார்ந்த நெஞ்சினன். பாரசீகமொழியில் வல்லுநன். அம்மொழி யில் என்னுடன் உரையாடினான். எனக்கு நல்ல பரிசில்களை வாரி வாரியிறைத்தான். தனது இராச்சியத்திற் கிடைக்கும் திறமான முத்துக் களையும் பரிசாக ஈந்தான். நான் விரும்பியவண்ணம் ஆதாம் மலைக்கு யாத்திரை செய்ய உதவியுஞ் செய்தான்."
சிலாபத்தில் முத்துக்குளிக்கும் உரிமை சிங்கை ஆரிய அரசருக்கே இருந்தது. கி.பி. 1278இல் யாப்பகுவாவில் ஆரியச் சக்கரவர்த்தியின் வெற்றிக்குப் பின்பு வடமத்திய மாகாணத்தின் பெரும் பகுதியும் யாழ்ப்பாண அரசின் கீழிருந்தது. உக்கிரசிங்கன் தொடக்கம் சங்கிலி வரையுமான சிங்கை ஆரியச் சக்கவர்த்திகளின் பெயர்களும் காலங்களும் III வது அட்டவணையிற் கொடுக்கப்படுகின்றன.
போர்த்துககிசரும் ஆரியச்சக்கரவர்த்திகளும் கி.பி. 1519 தொடக்கம் கி.பி. 1620 வரை ஒரு நூற்றாண்டு காலம் போராடினர். ஈற்றில் கி.பி. 1620இற் போர்த்துக்கீசரின் நேராட்சி தொடங்கிற்று. சங்கிலி சிரச்சேதம் செய்யப்பட்டான். சிங்கை ஆரியர் அரசபரம்பரை அழிந்தது. ஈழத்தமிழ் மக்கள் அடிமைகளாகினர். பல விடுதலைப் போராட்டங்கள் தோல்வி யடைந்தன. போர்த்துக்கீசர் பத்தொன்பது வருடங்கள் மட்டுமே ஆட்சி செய்தபோதிலும், இவர்களுடைய கொலை, களவு, கொடுமைகள் 140 வருடங்கள் நடைபெற்றன.
6 O

கி.பி.1638 தொாடக்கம் கி.பி. 1799 வரையுமான 157 வருடங்கள் ஒல்லாந்தர் இந்நாட்டை ஆண்டனர். கண்டி இராச்சியத்தையும் கயிலாய வன்னியன் ஆண்ட வன்னிப் பகுதிகளையும் இவர்களினாாற் கைப்பற்ற முடியவில்லை. அக்காலத்து மேனாட்டவர் பலர் ஈழத்திலே தமிழர் வாழ்ந்த பகுதிகளைத் தெளிவாகக் காட்டுகின்றனர்.
கண்டி அரசனின் படைகளினால் திருகோணமலையிற் சிறைபிடிக் கப்பட்ட றொபேட் நொக்ஸ் என்னும் ஆங்கிலேயர் கி.பி. 1679இல் தப்பி அநுராதபுரத்தின் வழியாகச் சென்றார். அக்காலத்தில் அநுராதபுரத்திற் சிங்களமொழி தெரிந்தவர் எவருமில்லையெனவும் தமிழ் மொழி தெரிந்தவர்களே அங்கு வாழ்ந்தனர் எனவும் கூறுகிறார். கைலாய வன்னியனின் தனியாட்சியையுங் குறிப்பிடுகிறார். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் இலங்கைக்கு வந்த ரேலண்ட் என்பவர் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
'இந்தத் தீவின் பெரும்பகுதி தமிழர்களின் வாழ்விடமாக உள் ளது. இந்தப் பகுதி (வன்னி) கைலாயவன்னியனால் ஆட்சி செய்யப் படுவதுடன் அவனின் நாடு எனவும் அழைக்கப்படுகிறது. இவர்கள் சிங்களவர் ஆட்சிக்குட்பட்ட குடிமக்கள் அல்லர். எங்கள் (ஒல்லாந்தர்) ஆட்சிக்குட்பட்டவருமல்லர். கரையோரப் பகுதிகளில் உள்ள மக்களுட் பெரும்பான்மையினோர் தமிழ்மொழி பேசுகின்றனர். நீர்கொழும்பில் இருந்து தெற்கே தேவேந்திரமுனைவரை உள்ள கரையோரப் பகுதிகளிற் சிங்கள மொழி பேசப்படுகிறது."
கி.பி. 1700 இல் இலங்கைக்கு வந்த சுவைட்சர் என்பவர் பின் வருமாறு குறிப்பிடுகின்றார்.
"இத் தீவின்மற்றக் குடிகளான தமிழர் காலி, மட்டக்களப்பு, திரு கோணமலை, மன்னார், யாழ்ப்பாணம், அரிப்பு, கற்பிட்டியிலிருந்து நீர் கொழும்பு வரையும் வாழ்கிறார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழரைத் தவிர ஏனைய தமிழர் ஒல்லாந்தர் ஆட்சியின் கீழ் உள்ளார்கள். வன்னி நாட்டிலுள்ள தமிழர் தமக்கென ஓர் அரசைக் கொண்டுள்ளார்கள்.
ஒல்லாந்தர் தமிழ்ப் பகுதிகளையும் சிங்களப் பகுதிகளையும் தனித் தனியாகப் பிரித்து ஆட்சி செய்தனர். ஒல்லாந்தர் தாம் ஆண்ட பகுதிகளை ஆறு ஆட்சிப் பிரிவுகளாகவும் மூன்று நீதிப் பிரிவுகளாகவும் வகுத்தனர். கொழும்பு ஆட்சி மாவட்டம், புத்தளம் -கற்பிட்டி ஆட்சி மாவட்டம் யாழ்ப்பாண ஆட்சி மாவட்டம், திருகோணமலை ஆட்சி
61

Page 35
மாவட்டம், மட்டக்களப்பு ஆட்சி மாவட்டம், காலி ஆட்சி மாவட்டம், நீதிப் பிரிவுகள்: யாழ்ப்பாணம், கொழும்பு, காலி.
ஆங்கிலேயர் ஆட்சி கி.பி. 1795 தொடக்கம் கி.பி. 1948 வரையிலு மான 153 வருடங்களாகும். கி.பி. 1815 இற் கண்டி அரசையும் ஆங்கி லேயர் கைப்பற்றினர். தமிழ் மொழியே கண்டி அரசின் ஆட்சி மொழி. இலங்கை முழுவதையும் ஒரு குடைக்குக் கீழ் கொண்டு வந்தனர். எனினும் கி.பி. 1829 கோல்புறுக் திட்டம் வரையும் தமிழ்ப் பகுதிகளை யும் சிங்களப்பகுதிகளையும் தனித்தனியாக ஆட்சி செய்தனர். ஆங்கி லேய ஆட்சியாளர் சிலரின் குறிப்புகளையும் பார்க்கலாம்.
கி.பி. 1799 இற் கிளெர்க்கோர்ன் குறிப்புகள் பின்வருவன:-
'இலங்கைத் தீவானது மிகப்பழங்காலந் தொட்டே இரு வெவ் வேறு நாட்டினங்களால் வெவ்வேறு பகுதிகளாக உடமை கொண் டாடப்பட்டது. இத்தீவின் நடுப்பகுதியும் தெற்குப் பகுதியும் வளவை ஆற்றிலிருந்து சிலாபம் வரையுமுள்ள மேற்குப் பகுதியும் சிங்கள நாட்டினத்தால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும். இத் தீவின் வடக்குக் கிழக்குப் பகுதிகள் தமிழர்களினால் ஆட்சி செய்யப்பட்ட பகுதியாகும்’ இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன் சிங்களவரும் தமிழரும் நாட்டினங்களாக கருதப்பட்டனர். இன்று ஏகாதிபத்தியச் சொற்களான பெரும்பான்மை சிறுபான்மை என்பவை பேசப்படுகின்றன. என்னே எமது அரசியல் அறிவு வளர்ச்சி. கி.பி. 1806 இல் அலெக்சாண்டர் யோன்சனின் குறிப்புப் பின்வருவதாகும்.
'நான் சேகரித்த உள்நாட்டு வழக்கத்திலுள்ள சில சட்டங்கள் புத்தளம், யாழ்ப்பாாணம், திருகோணமலை மட்டக்களப்பு, ஆகிய நான்கு மாகாணங்களிலும் வழமையில் உள’ மேலும் அக் குறிப்பில்;
'வட மேற்கிலுள்ள புத்தளத்தில் இருந்து தென்கிழக்கே உள்ள நிலப்பகுதி தமிழர்களின் குடியிருப்பாகும். மேற்கே சிலாபம் ஆற்றி லிருந்து தென் கிழக்கேயுள்ள குமணை ஆறு வரையுள்ள நிலப்பகுதி சிங்களவரின் குடியிருப்பாகும்’ ஆங்கிலேயரும் சுரண்டலுக்காக இங்கு வந்த போதினும், அவர்களுடைய ஆட்சிக்காலத்தில் நாடு முன்னேறியது எங்கணும் அமைதி நிலவிற்று. காடரையும் கொள்ளைக் காரரையும் அடக்கினர். சட்டத்தையும் நீதியையும் நிலைநாட்டினர். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர். பொலிஸ் இராணுவ அட்டூழியங்கள் இல்லை. தமிழராகிய நாம் கல்வியிலும் பொருளாதாரத்திலும் முன்னேறிவோம்."
62

வட இலங்கையே செந்தமிழ் நாட்டிற் செந்தமிழ் நாடாகும்; தமிழுக்கு இருப்பிடம் பண்டைத் தமிழ் நாடு. அன்னியர ஆட்சிக் காலங்களிலும் தமிழர் பண்பாடும் மரபு முறைகளும் அழிந்து விட வில்லை.
'நல்லைநகராறுமுக நாவலர் பிறந்திலரேற் சொல்லு தமிழெங்கே சுருதியெங்கே - யெல்லவரு மேத்து புராணாகமங்களெங்கே பிரசங்கமெங்கே யாத்த னறிவெங்கே யறை"
நாவலர் பரம்பரை மிக நீண்டதாகும். அவர் அக்காலத்துக்கு ஒரு சந்ததி முன் இருபாலைச் சேனாதிராயரும் நல்லைச் சரவணமுத்துப் புலவரும் இவர்களுக்கு ஒரு சந்ததி முன் நெல்லைநாத முதலியாரும் மயில் வாகனப் புலவரும் இவர்களின் குரு கூழங்கைத் தம் பிரான். இவ்வாறு அரசகேசரி வரையும் செல்லலாம். சிங்கை ஆரியச் சக்கரவர்த்திகள் இரு தமிழ்ச்சங்கங்களை நிறுவினர். இரகுவம்சம் முதற் பல புகழ் பெற்ற தமிழ் நூல்கள் ஈழத்தில் தோன்றின. செந்தமிழுக்கு இன்பத் தமிழுக்கு இனிய தமிழுக்கு, தூய நூல்கள் ஈழத்தில் தோன்றின. செந்தமிழுக்கு இன்பத் தமிழுக்கு இனிய தமிழுக்கு, தூய தமிழுக்கு வட இலங்கை என்பர்.
63

Page 36
எமது மொழி தமிழ்
தமிழ் என்ற சொல்லுக்கு 'இனிமை', 'தூய்மை', 'அன்பு" என்பவை பொருளாகுமென இந்நூலின் ஆரம்பத்திற் குறிப்பிட்டோம். இனிமைக்கும் தூய்மைக்கும் தன்னொப்பிலா மொழி தமிழாகும். ‘தேனினுமினியது தமிழ், தெவிட்டாச் சுவையது தமிழ்; இலக்கணஞ் சிறந்தது தமிழ்; இயல் வளஞ் செறிந்தது தமிழ்; ஒப்புயர்வற்றது தமிழ்; ஒண்கலை நிறைந்தது தமிழ்; தன்னேரிலாதது தமிழ்; தனிப் புகழ் வாய்ந்தது தமிழ்; பண்ணிற் சிறந்தது தமிழ், மண்ணிற் பழையது தமிழ்; செந்தமிழ்; உயர்தனிச் செம்மொழி’ என்றெல்லாம் புகழ்பெற்ற மொழி எமது தமிழ். இவ்வாறு நாம் மட்டுமன்றி, மொழிகளை ஒப்பிட்டுச் சீர்தூக்கி ஆராய்ந்த மேனாட்டவருங் கூறுகின்றனர்.
'தமிழ் தழிஇய சாயலவர்' (திருத்தக்கதேவர்)
'தமிழ் பாட்டிசைக்கு தாமரையே’ 'என்றுமுள தென்றமிழியம்பியிசை கொண்டான்’ (கம்பர்)
'இனிமையு நிர்மையுந் தமிழெனலாகும்’ (பிங்கள நிகண்டு)
மேலும், 'தமி’ என்ற பதத்திற்கு 'ஒப்புயர்விலாத’ என்பதும் கருத்தாகும். இறைவனைத் 'தமியன்’ என்கிறோம். இறையிலக்கணம் தமிழுக்கும் பொருத்தமாகும். எமது தமிழ் ஆதியும் அந்தமுமில்லாத மொழி. அன்பே உருவமானது. அருள் வடிவானது. இன்பத் தமிழ். தெய்வத்தமிழ். கந்தன் அருளிய தமிழ்.
'கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோட மர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந்தமிழ், ஏனை மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிபோல எண்ணிடைப்படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”
(திருவிளையாடற் புராணம்)
'வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத் தொடர்புடைய தென்மொழியை உலகெலாம் தெழுதேத்தும் கொழு
64

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்’ (காஞ்சி புராணம்)
'சங்கத் தமிழின் தலைமைப் புலவா தாவே தாலேலோ" (குமரகுருபரர்)
'தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்ததும் முதலை உண்ட பாலனை அழைத்ததும் என்புபெண்ணுருவாக் கண்டதும் மறைக் கதவினைத் திறந்ததுங் கன்னித் தண்ட மிழ்ச்சொலோ, மறுபுலச் சொற்களோ? சாற்றீர்?
(பரஞ்சோதியர்)
'ஆதியிற் றமிழ்நூல் அகத்தியர்க்
குணர்த்திய மாதொரு பாகன்’
பண்டு தொட்டுத்தமிழ்மக்கள் இறையுணர்ச்சியுடைய வாழ்க்கை நடத்தினர். இந்த இறையுணர்ச்சியை வெளிப்படுத்தத் தமிழ்மொழி போன்று அருள்மொழி வேளில்லை. தமிழிலுள்ள பெரும்பாலான நூல்கள் சமய நூல்களாகும், பக்திப்பாடல்களாகும். நாயன்மாரும் நம்மாழ்வாாரும் தமிழ் இசையையும் இறைவனையும் ஒன்றுபடுத்தி அன்புருகினர். பண்ணார்த்த பாட்டிசைத்தனர். ஞானசம்பந்தர் தம்மை 'நற்றமிதழ் ஞானசம்பந்தன்’ என்கிறார். 'தமிழொடு இசைபாடல் மறந்தறியேன்” எனத் திருநாவுக்கரசர் உருகுகிறார். சுந்தரர் இறைவனையே தமிழுக்கு ஒப்பிடுகிறார்.
'பண்ணிடைத் தமிழ் ஒப்பாய்
பழத்தினில் சுவை ஒப்பாய்’
'மற்றுநீவன்மை பேசி வன்தொண்டன் என்னும் நாமம் பெற்றனை நமக்கும் அன்பில் பெருகிய சிறப்பின் மிக்க அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் தம்மைச் சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்.'
65

Page 37
திருமூலர்:-
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
பூதத் தாழ்வார்:-
"அன்பே தகளியா, ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா- நன்புருகி ஞானச் சுடர்விளக்கேற்றினேன் நாரணற்கு ஞானத் தமிழ்புரிந்த நான்’
இப் பக்தி உணர்ச்சிக்கு உதாரணமாக இரட்சணிக யாத்திரீகத் திலுள்ள சிலுவையின் பெருமையைப் பற்றிய பின்வரும் பாடலைப்
பார்க்கலாம்.
'தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திச பன்னரிய பல்பாடு படும்போதும் பரிந்தெந்தாய் இன்னதென அறிகில்லார்தாம் செய்வதிவர் பிழையை மன்னியும் என்று எழற்கனிவாய் மலர்ந்தார் நம் அருள் வள்ளல்"
தமிழுக்கு எம்மதமுஞ் சம்மதமென்பர். எல்லா மதநூல்களும் தமிழில் உள. எல்லா மதத்தவரும் இறைவனைத் தமிழிற் பாடி
இன்புற்றனர்.
சைவம்:-
வைணவம் :-
பெளத்தம்:-
சமணம்:-
கிறிஸ்தவம்:-
இஸ்லாம்:-
பனனிரு திருமுறைகளும் பதின்னான்கு சித்தாந்த சாத்திரங்களும், பிற்காலத்தில் பட்டினத்தடிகள் பாடல்கள், அருணகிரிநாதர் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், இராமலிங்கசுவாமிகள் பாடல்கள்.
நாலாயிரப் பிரபந்தம், பாகவத புராணம். மணிமேகலை, வீரசோழியம், திருப் பதிகம், சித்தாந்தத் தொகை, புத்த ஜாதகத் கதைகள். நாலடியார், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
தேம்பாவணி, இரட்சணிய யாத்திரீகம்.
சீறாப்புராணம்,
இயல், இசை, தாடகம் என முத்தமிழ் என்பர். தொல்காப்பியரே இசைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவரென்றால், அவர் காலத்துக்கு
66

முற்பட்டே தமிழிற் பல இசைநூல்கள் இருந்திருக்க வேண்டும். சிலப் பதிகாரம் இயல் இசை நாடக நூல்களாகும். பலவகைப் பட்ட இசைப் பாடல்கள் சிலப்பதிகாரத்திலுஞ் சங்கநூல்களிலுங் குறிப்பிடப்படு கின்றன:- "ஆற்றுவரி, சாந்துவரி, சாயல் வரி, நிலைவரி, முரிவரி திணைநிலைவரி, அம்மானை வரி, ஊசல்வரி, முகவரி, முகமிலவரி, வள்ளைப்பாட்டு முதலியவை. தேவாரம், திருவாசகம், நாலாயிரப் பிரபந்தம், திருப்புகழ் முதலியவை பண்ணார்த்த இசைப் பாடல்களாகும். கீர்த்தனம், சிந்து, தெம்மாங்கு, பல்லவி, பாவையர் பாட்டு, ஒப்பாரி முதலியவை பிற்காலத்திலே தோன்றின. வடமொழியில் இசைநூல்கள் இயற்றிய பரதரும் சாரங்கதேவரும் தமிழிலிருந்து கடன்பட்டனர்.
'ஏற்றப் பாட்டும் இறைவைப் பாட்டும் காவடிப் பாட்டும் சப்பற் பாட்டும் படையி னெழுச்சியும் பள்ளியெழுச்சியும் சிந்தமுஞ் சந்தமுந் திருத்தா லாட்டும் கல்லுளிப்பாட்டுங் கவனெறி பாட்டும் பாவைப் பாட்டும் பலகறை பாட்டும் மறத்தியர் பாட்டுங் குறத்தியர் பாட்டும் பள்ளுப் பாட்டும் பலகடைத் திறப்பும் வள்ளைப் பாட்டும் பிள்ளைப் பாாட்டும் கறத்தற் கயர் திறத்துரை பாட்டும் பொருத வேந்தர் விருதுப் பாட்டும் கணாலப் பாட்டும் காதற் பாட்டும்’
சங்கநூல்களிற் பல கூத்து வகைகள் குறிப்பிடப்படுகின்றன:-
'அகக்கூத்து, புறக்கூத்து, வேத்தியல், பொதுவியல், வசைக்கூத்து, புகழ்க்கூத்து, சாந்திக் கூத்து, இயல்புக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க்கூத்து, விநோதக் கூத்து, தேசியக் கூத்து, பழைய நாடகத் தமிழ் நூல்கள் பல மறைந்து விட்டன. அகத்தியம், பரதம், குணநூல், கூத்த நூல் சந்தம், சயந்தம், செயன்முறை, செயிற்றியம் மதிவானர் நாடகத் தமிழ் நூல், முறுவல், பூம்புலியூர் நாடகம், விளக்கத்தார் கூத்து.
பலவகைப்பட்ட இயல் நூல்கள் தமிழில் உள. காப்பியங்கள், வீரகாவியங்கள், புராணங்கள், பிரபந்தங்கள், தோத்திரங்கள், வேதாந்த சித்தாந்த சாத்திரங்கள்.
67

Page 38
காப்பியங்கள்
ஐம்பெருங் காப்பியங்களாவன:- சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி, பிற்காலத்திலெழுந்த பெருங் காப்பியங்களாவன:- கம்பர் இராமாயணம், வில்லிபுததுரர் ஆழ்வார் மகாபாரதம், சேக்கிழார் பெரியபுராணம், கச்சியப்ப சிவாச்சாரி யார் கந்தப்புராணம், வீரமாமுனிவர் தேம்பாவணி, உமருப்புலவர் சீறாப்புராணம், ஐஞ்சிறுங் காப்பியங்களாவன; சூளாமணி, நீலகேசி, யசோதர காவியம், நாக குமார காவியம், பெருங் கதை வீரகாவியங் களாவன: புறநானூறு, சிலப்பதிகாரம், மதுரைக் காஞ்சி முத்தொள்ளாயிரம், நந்திக்கலம்பகம், கலிங்கத்துப்பரணில மூவருலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள். நீதி நூல்கள்:- திருக்குறள், நாலடியார், பதினென் கீழ்க் கணக்குநூல்கள், ஒளவையார், இலக்கணநூல்கள்: பெருநூல் இயல்நூல், குமரம், அகத்தியம், ஐந்திரம், தொல்காப்பியம், நன்னூல், வீரசோளியம், தண்டியலங்காரம், யாப்பருங்கலக்காரிகை உரிச்சொல் நிகண்டு, இலக்கணக் கொத்து.
இவற்றைவிடப் பல புராணங்களும் அருட் பாடல்களும், பிரபந்தங்களும், உரைநூல்களும் தமிழில் உள.
'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச, பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்: மெத்த வளருது மேற்கே -அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை" எனப் பாரதியார் மனம் உருகினார். இன்று இக்கலைச் செல்வங் களும் தமிழில் உள. இலக்கிய இலக்கண வளங்களில் உலகில் முதனிலை யிலுள்ள மொழிகளில் தமிழும் ஒன்றாகும்.
"கிரேக்க மொழியைப் பார்க்கினும் தமிழ் செம்மையுந் திட்பமும் உடையது. இலத்தின் மொழியைப் பார்க்கிலுஞ் சொல் வளம் உடையது. நிறைவிலும் ஆற்றலிலும் தமிழ் தற்கால ஆங்கிலத்தையும் சர்மன் மொழியையும் ஒத்ததாகும்' கலாநிதி வின்சிலோ. தொன்மையிலும், சொன்னயத்திலும், இலக்கிய இலக்கண வளத்திலும், அறிவிலும், இனிமையிலும், தெளிவிலும், பண்பாட்டிலும், சிறப்பிலும் தமிழுக்கு ஒப்பான மொழியில்லையென இந்நூலிற் பலவிடங்களிற் கூறினோம். மொழியுலகில் தமிழ் அன்னை சிறப்பாசனம் வகிக்கிறாள். இப்போது
68

தமிழைப் பற்றிய புலவர் பாடல்களிற் சிலவற்றைப் பார்ப்போம். தமிழின் தொன்மையைப் பின்வரும் பாடல்கள் காட்டுகின்றன:
'தொன்று நிகழ்த்தது அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணரும் இவள்
என்று பிறந்தவள் என்று ணராத
இயல்பினளாம் எங்கள் தாய்" (பாரதியார்)
'பற்பல ஆயிரம் ஆண்டுகள் -இந்தப் பாரினில் இருந்தறம் பூண்டவள் அற்புதம் இன்னமும் கன்னியே - புது அழகு தரும் தமிழ் அன்னையே’ (நாமக்கல் கவிஞர்)
"பேராற் றருகில் பிறங்கு மணி மலையில் சீராற்றுஞ் செங்கோ றிறற் செங்கோ - நேராற்றும் பேரவையிலேநூற் பெருமக்கள் சூழ்ந்தேத்த
பாரரசு செய்த தமிழ்ப் பைந்தேவி' (தமிழ் விடுதூது)
'சதுர்மறை ஆரியம் வருமுன்
சகம் முழுவதும் நினதாயின்
முது மொழி நீ அனாதி சென
மொழிகுவதும் வியப்பாமே? (மனோனமணியம்)
'பல்லுயிரும் பல உலகும் படைத்தளித்துத் துடைக்கினு மோர் எல்லையறு பரம் பொருள் முன் இருந்தபடி இருப்பது போல் கன்னடமும் களி தெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் ஆரியம் போல் உலக வழக் கழிந் தொழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே” (மனோன்மணியம்)
69

Page 39
இன்பத் தமிழ், அமிழ்தத் தமிழ், அருமைத் தமிழ், எங்கள் தமிழ்:-
"யாரறிவார் தமிழருமை? என்கின்றே னெனின் அறிவீனமன்றோ? உன்மதுரை மூதூர் நீரறியும், நெருப்பறியும், அறிவுண்டாக்கி நீயறிவித்தாலறியும், நிலமுந் தானே' (பரஞ்சோதியார்)
'பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத் திருப்பிலே யிருந்து வைகை யேட்டிலே தவழ்ந்த பேதை நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரென மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்
(பாரதம்)
"ஞாலமளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்”
(சேக்கிழார் பெருமான்)
"வானார்த்த பொதியின் மிசைவளர்க்கின்ற மதியே மன்னிய மூவேந்தர் சடம் மடிவளர்ந்த மகளே தேனார்த்த தீஞ்சுளைசால் திருமாலின் குன்றம் தென்குமரியாயிடை நற் செங்கோல் கொள் செல்வி கானார்ந்த தேனே கற்கண்டே! நற்கனியே கண்ணே கண்மணியே! அக் கட்புலம் சேர் தேவி ஆனாத நூற்கடலை அளித்தருளும் அமிழ்தே அம்மே நின்சீர்முழுவதும் அறைதல் யார்க்கெளிதே'
(கவியரசு வெங்கடாசலம்பிள்ளை)
'இருந்த தமிழே உன்னால் இருந்தேன் இமயவர்தம், விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்’
(தமிழ்விடுதூது)
"நீராரும் கடலுடுத்த நிலமடைந்தைக்கு எழிலொழுகும் சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதில் தக்கசிறு பிறைநுதலுந் தரித்தநறுந் திலகமுமே தெக்கணமும் அதிற் சிறந்த திராவிடநற்றிருநாடு
70

அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுறு எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெருந் தமிழணங்கே’
(பேராசிரியர் சுந்தரம்பிள்ளை)
'இயற்கையிலே கருத்தாங்கி இனிமையிலே வடிவெடுத்துச் செயற்கை கடந்தியலிசையில் செய் நடமே! வாழியரோ பயிற்சி நிலப் பயிர்களெலாம் பசுமை யுற ஒளி வழியே உயிர்ப்பருளும் திறம் வாய்ந்த உயர் தமிழ்த் தாய்! வாழியரோ
(வி.கல்யாணசுந்தர முதலியார்)
'தேவினை நெஞ்சில் திகழவும் வைத்தாய்; சித்தியை ஞானியர் செப்பவும் வைத்தாய்; பாவினை நூலிற் சுவைக்கவும் வைத்தாய்; பத்தியைத் தொண்டர் புகழ்க்கிடை நட்டாய்; பூவினைக் காக்கென வேத்தியல் சொற்றாய்; புத்தியைக் காக்கப் புலவரை யுய்த்தாய்; யாவினைக் குங்குடி மக்களை வைத்தாய்; எத்தனை செய்தனை? நற்றமிழன்னை;'
(ரா.இராகவையங்கார்)
‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி வாழிய வாழியவே' 'வாழிய செந்தமிழ் வாழ்கநற்றமிழர்” (பாரதியார்)
'தமிழே, தமிழே, தமிழர்க்குயிரே அமுதே, அழகே யன்பே அருளே சங்கரன் போற்றிய சங்கத் தமிழே மங்கலம் பொலியும் மாமணி விளக்கே பாண்டியன் வளர்த்த பச்சிளஞ் செல்வியே வேண்டிய வரங்கள் ஈண்டிய திருவே"
(பைந்தமிழ்ச் சேடலை)
71.

Page 40
“மூவேந்தர் தாலாட்ட முச்சங்கத்தே கிடந்து பாவேந்தர் செந்நாளில் நடைபழகி மொழி பயின்று மங்குலுறை வேங்கடமும் வான்குமரிப் பேராறும் தங்குமிடைத் தமிழுலகும் அரசுபுரிந் தமிழ்த்தாயே"
"மாவாழ் பொதிய மலையிற் பிறந்து வரமுனிவன் பூவாழ் கரமெனும் பொற்றொட்டி லாடிப் புலவர்சங்கப் பாவாழ் பலகை இருந்து ஏட்டி லேதவழ்பாவையென்றன் நாவாழ்வு உகந்தமை நான் முன்பு செய்திட்ட நற்றவமே
'தவந்தரு மேலாந்தனந்தரும் இன்பத் தருந்தனியா நவந்தரு சீர்தரும் நட்புத் தரும் நல்ல வாழ்வு தரும் பவந்தரு தீவினை வேரும் மரமும் பறித்தழியாச் சிவந்தருஞ் செந்தமிழ்ச் செல்வியின் ஞானத் திருவடியே’
(நவாலியூர்.சு.சோமசுந்தரப் புலவர்
“என்ன புண்ணியம் செய்தேனே நான் இந்நன்னாட்டினில் வந்து பிறந்திடவே"
“மன்னவர் மூவரும் வளர்த்த தீந்தமிழ் இன்பம் காதினிலே என்றும் சேரவே"
"அம்புவி யோர்க்கெல்லாம் அமுதென வேவளர் கம்பநாடன் தரும் காவியம் கேட்கவும் இன்ப வாழ்க்கையே எய்த மெய்ம் மதற தந்த வள்ளுவன் தமிழ் படிக்கவும்”
(ம.ப.பெரியசாமித்துரல்
வீரத் தமிழ் எங்கள் தமிழ் :
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்குங் காணோம் பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொல்லப்
72

பான்மை கெட்டு நாமமது தமிழரெனக் w கொண்டு இங்கு வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்! தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்"
‘யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோ வைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை; உண்மை; வெறும் புகழ்ச்சியில்லை; ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம் ஒருசொற் கேளீர் சேமமுற வேண்டுமெனில் செழிக்கச் செய்வீர்" (பாரதியார்)
"வெண்ணிலாவும் வானும் போலே வீரனும் கூர் வாளும் போலே வண்ணப்பூவும் மணமும் போலே மகரயாழும் இசையும் போலே கண்ணும் ஒளியும் போலே எனது கன்னல் தமிழும் நானும் அல்லவோ? வையகமே உய்யுமாறு வாய்த்த தமிழ் என் அரும் பேறு துய்யதான சங்க மென்னும் தொட்டிலில் வளர்ந்த பிள்ளை (தம்) கையிலே வேலேந்தி - இந்தக் கடல் உலகாள்மூவேந்தர் கருத்தேந்திக் காத்தார் அந்தக்
கன்னல் தமிழும் நானும் நல்ல'
73

Page 41
"தமிழ் எங்கள் இளமைக்குப்பால் - இன்பத் தமிழ் நல்ல புகழ் மிக்க புலவர்க்கு வேல்! தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்!- இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்! தமிழ் எங்கள் அறிவுக்கத் தோள்- இன்பத் தமிழ் அங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்! தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்!-இன்பத் தமிழ் அங்கள் வலமிக்க உளமுற்ற தீ!"
"தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழுக்கு மணமென்று பேர் - இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமிந்த ஊர்”
"நல்லுயிர் உடம்பு செந்தமிழ் மூன்றும் நான் நான் நான்”
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு" (பாரதிதாசன்)
‘எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி என்றென்றும் வாழியவே" (பாரதியார்)
நங்கை தமிழை, மங்கை தமிழை, மாது தமிழை அன்னை தமி ழைக் கண்டேன். காலாதி காலமெல்லாங் கண்டேன். பெருவள நாட் டிலே பிறங்கு மணிமலையில் பெருமக்கள் சூழ்ந்தேத்தப் பாரரசு செய்யக் கண்டேன். குமரி நாட்டிலே பாண்டியர் ஆட்சியிலே சங்கமேறக் கண் டேன். கிழக்கிந்திய தீவுகள் தொடக்கம் அத்திலாந்திசு வரையும் மத்திய ரேகைக்கு இருமருங்கிலுமிருந்து நாடுகளிற் பேருலா வரக்கண்டேன். இமயந் தொடக்கம் இந்தியா முழுவதிலும் தனியரசு செய்யக் கண்டேன். ஆடல் புரியும் அரன் தமிழ்ப் பாடல் புரியும் பரன் வாழ் கூடலிற் சங்கப் புலவர் போற்ற மங்களமாக வீற்றிருக்கக் கண்டேன். நம்மாழ்வார் நாயன்மார் நாவில் திருநடனம் புரியக் கண்டேன் சோழப் பேரரசில் உலகாளக் கண்டேன். இன்று என்ன காட்சி, என்ன கோலம்! பூவிழந்து
74

பொட்டிழந்து எமது அன்னை தலை விரித்தழக் கண்டேன். காலில் தளைகள், கைக்ட்டுச் சங்கிலிகள், காடையர் பூசிய தார் திருமேனியில், அடி உதைபட்டுப் புண்பட்ட அங்கம், வாடிய வதனம், நீர் பெருக்கெடுத்து ஒடுங் கண்கள்.
‘பதியிழந்தனம், பாலனையிழந்தனம், படைத்த நிதியிழந்தனம் இனி நமக்குளதென நினைக்கும் கதியிழக்கினும் கட்டுரை இழக்கிலேன்' அரிச்சந்திரனின் இந்நிலைமையே இன்று எமதுமாகும். இந்நிலைமையிலும் அரிச்சந்திரன் நேர்மையிலிருந்து விலக மறுத்தான். இதுவன்றோ விரதமும் வைராக்கியமாகும். என்ன நேரினும் எமக்குத் தமிழ் மொழியில் நீங்காப்பற்றுந் தணியாஆர்வமும் இருக்க வேண்டும்.
'எண்ணிய வெண்ணியாங் கெய்துப வெண்ணியார் திண்ணிய ராகப் பெறின்"
இது பொய்யாப் மொழிப்புலவரின் வாக்காகும்.
கால அட்டவணை
கி.மு. 3,000 இற்கு -சேரன் இமயவரம்பன் என்ற வானவரம்பன், சூரியச் சோழன், மதியன் என்ற சுந்திரபாண்டியன் مح۔
கி.மு.30,000-கி.மு.29,920 - நெடியோன், மாகீர்த்தி எனப்பட்ட முதலாம் நிலந்தரு திருவிற்பாண்டியன்.
கி.மு.30,000 - கி.மு.16,500-பஃறுளியாற்றத் தமிழ் சங்கம்
கி.மு. 16,000 - பொதியமலை அகத்தியரும் பொதியமலைத் தமிழ்ச் சங்கமும்
கி.மு.16,000 - கி.மு. 14,550 - மகேந்திர மலைத் தமிழ்ச் சங்கம்
கி.மு. 14,550 - கி.மு.14,470 - மணி மலைத் தமிழ்ச் சங்கம்
கி.மு. 14,550 - முத்தூர் அகத்தியர்
7.5

Page 42
கி.மு. 14,490-இந்தியாவிற்குள் மங்கோலியர் வருகை.
கி.மு.14,100 - கி.மு.14,030 - முசுகுந்தச் சோழன்.
கி.மு. 14,058 - தமிழ் நாட்டில் முதற் கடற்கோள், வாதாபி அகத்தியர்
கி.மு. 14,004 - கி.மு. 14,004 - குன்ற மெறிந்த குமரவேள் தமிழ்ச்சங்கம்
கி.மு. 14,004- கி.மு.9594 - தலைச் சங்கம்
கி.மு. 14,004 - காய்ச்சின வழுதி என்ற இரண்டாம் நிலந்தரு திருவிற் பாண்டியன்
கி.மு. 9,564 - தமிழ் நாட்டில் இரண்டாங் கடற்கோள்.
கி.மு. 9000 -இந்தியாவிற்குட் சிதியர் காக்கேசியக் குழுக்களின் வருகை
கி.மு.7500-கி.மு.6700 -பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி காலத்துத் தமிழ்ச் சங்கம்.
கி.மு.6805 - கி.மு.3105 -இடைச்சங்கம்
கி.மு. 6805. கி.மு. 6730 - வெண்டோர்ச் செழியன் என்ற நேர்மாறன் பாண்டியன்.
கி.மு.6000-கி.மு. 5,925 -மூன்றாம் நிலத்தருதிவிற் பாண்டியன்.
கி.மு. 345- கி.மு.3105 -பெருசோற்று உதியன் சேரலாதன்
கி.மு. 3105-கடற்கோள்
கி.மு. 3102-கலியுகந் தொடக்கம்
6.(p. 2450 -és jó GassmrGir (Enoibias)
76

. 2387 -கடற்கோள் (இலங்கை வரலாறு Tennent)
. 2341 -s góG3&sntair (Urohur)
2344-கடற்கோள் (பழைய விவிலிய வேதம்)
. 2300 -கடற் கோள் (ஆஆரியசப்த பிராமணம்)
. 2150-கடற் கோள் (கீபுறு வரலாறு)
. 2000-கடற் கோள் (பாபிலோனிய வரலாறு)
. 1730-கி.மு. 1695 -மூன்றாம் முடத்திருமாறன் என்ற பாண்டியன்
. 1715 - கடற் கோள்
. 1715 - கி.பி. 235 - கடைச்சங்கம்
120 - கி.மு. 90 - முதலாங் கரிகாலன்
. 50-கி.பி.37. இரண்டாங் கரிகாலன்
, 31 - வள்ளுவர் ஆண்டு தொடக்கம்
கி.பி.85-கி.பி. 160 - இளங்கோவடிகள்
கி.பி. 235 -பாண்டி நாட்டிற் களப்பிரர் ஆட்சித் தொடக்கம் கடைச் சங்க (Մ)ւգoւ].
77

Page 43
சைவ சித்தாந்தம்
(யூன் 1985)
பக்தி
வைணவம் கிறித்தவம் போன்று சைவமும் பக்தி மார்க்கச் சமயங் களுள் ஒன்றாகும். ஆத்திக சமயங்கள் பெரும்பாலும் பக்தியையும் திருவருளையும் வற்புறுத்துகின்றன. சரியை, கிரியை, யோகம், ஞானம் எல்லாம் பக்திக்கு வழிகள் ஆகும். முதிர்ந்த பக்தியே ஞானம். எமது ஏட்டுப் படிப்புகளும் பட்டங்களும் பகுத்தறிவும் தர்க்கங்களும் வாதங்களும் ஞானமாகா.
இறைவன் ஒருவன் உளன். நாம் அவனின் உடைமைகளாகிய ஆன்மாக்கள் எம்மைப் பீடித்திருப்பது மலம். இம்மலத்தினின்று நீங்கி நாம் அவனடி சேர்ந்து நித்திய பேரானந்த வாழ்வடைய வேண்டும். இறைவனுக்கும் எமக்கும் தொடர்புண்டு. அவனே எமக்கு எல்லாம். அவனுடைய திருவருள் எமக்கு என்றும் உறுதுணையாக இருக்கிறது. இவ்வுண்மையை உணருவதே ஞானம். இதை உணர்ந்து நாம் இறை வன்பாற் பேரன்பு பூண வேண்டும். அன்பு கனிந்து பக்தியாக வேண்டும்.
இறைவன் பாலன்பு எல்லா உயிர்கள்பாலும் அன்பாக விரிய வேண்டும். எமது சிறுமைக்குக் காரணம் நான் எனது என்று அகங்காரமும் சுயநல நோக்கமும் ஆகும். அன்பின் வழி செயற்பட வேண்டும். சிந்தனையில் அன்பு. செயலில் அன்பு. இதற்கு அவன் தாளைப் பற்றுவதே வழியாகும். "பற்றுக பற்றற்றான் தாளிணை; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு (திருக்குறள்)
பல சமயங்கள் போதிக்கும் பக்தி நெறியைப் பற்றிப் பல நூல்கள் உள. அற்ப வித்தியாசங்கள் இருப்பினும் இப்பத்திநெறி எல்லா ஆத்திக சமயங்களுக்கும் பொதுவானவாகும். ஆதியும் அந்தமும் தோற்றமும் ஈறும் இல்லாதவனும் ஆதாரமும் உறுதுணையும் ஆகிய இறைவன்பால் எமக்கு எழும் கவர்ச்சியே பக்தியாகும். அன்பையோ பக்தியையோ விளக்க முடியாது. வரையறை செய்ய முடியாது. இறை பக்தியில் எம்மை மறந்து விடுகிறோம். மோகங்கள் பாசங்களை மறந்து விடுகிறோம். எங்கும் அவன் எல்லாம் அவன் செயல். இறைவனின்
78

குணத்தைப் போற்றுவது, உருவத்தைத் தியானிப்ப்து, அவனை இடைவிடாது நினைப்பது, அவனுக்குச் சேவை செய்வது, (மனத்தினால் வாக்கினால் செயலினால்) அவனுக்குப் பூசை செய்வது, அவனுடன் நட்புறவு கொள்வது, காதலாகிக் கசிந்து நேசிப்பது, பிரிவாற்றாமை, அவனுக்குத் தன்னை அர்ப்பணிப்பது, இறையுணர்வாக இறைமயமாக நிற்பது முதலிய பதினொரு வடிவாகப் பக்தி பரிணமிக்குமென நாரதா பக்தி சாத்திரம் கூறுகிறது.
பக்தியின் முதிர்ச்சியினாற் பிரபத்திநிலை உண்டாகும்போது பக்தன் தன்னுணர்வற்றுத் தனக்கென ஒன்றையுங் கோராது இறையுணர் வாகின்றான். பக்தியிற் பலவகைகளும் பல படிகளுளே பக்திச் சாதனைகளில் ஏழு படிகள் குறிப்பிடப்படுகின்றன. சிரத்தை அடியரோடும் நல்லாரோடும் கூடி வாழ்தல், ஞான சாதனங்களைப் பழகி அவ்வழியாக மனதின் அழுக்குகளைப் படிப்படியாகப் போக்கல், மனதிலிருந்து உலக ஆசைகளையும் பாசங்களையும் அகற்றல், ஞான சாதனங்களை முறையாகப் பழகி வருதல், தன்னம்பிக்கை, பக்தியிற் பேரவா, பக்தியில் தாசமார்க்கம், புத்திரமார்க்கம், சகமார்க்கம், சன்மார்க்க வகைகள் குறிப்பிடப்படுகின்றன. இறைவனை ஆண்டானாகவும் எம்மை அடிமையாகவும் கருதி வழிபடுதல் தாசமார்க்கம் எனப்படும். இறைவனைத் தந்தையாகவும் எம் மை மைந்தனாகவும் கருதி வழிபடுதல் சற்புத்திர மார்க்கம் எனப்படும். இறைவனை ஸ்மது ஆன்மாவுக்கு உயிராகக் கருதி வழிபடல் சன்மார்க்கம் எனப்படும்.
அன்பு போன்று பக்தியும் உள்ளெழும் ஓர் அனுபவம் ஆகும்.
இந்த உணர்ச்சியை இதுவெனச் சுட்டவோ விளக்கவோ முடியாது. அனுபவத்தில் உணர வேண்டும். பக்தியைப் பற்றிப் பல நூல்களைப் படிப்பதனாற் பக்தி உண்டாகப் போவதில்லை. இக்காலத்தில் எமது கல்வி பகுத்தறிவுக் கல்வி, பகுத்துப் படுத்து வாழ்க்கையிற் சலித்துப் போகிறோம். பக்தியைக் காட்டுவதற்கு அடியார்களின் பாடல்கள் பல. அவற்றுட் சில.
'அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர், அடியார்
நிச்சம் உறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்,
நச்சம்மிடறுடையார் நறுங்கொன்றை நயந்தாளும்,
பச்சம் உடை அடிகள் திருப்பாதம் பணிவாரே'
(திருஞானசம்பந்த நாயனார்)
79

Page 44
'தாயும் நீயே தந்தையும் நீயே சங்கரனே அடியேன் ஆயும் நின் பால் அன்பு செய்வான் ஆதரிக்கின்றது உள்ளம் ஆயமாய காயந் தன்னுள் ஐவர் நின்று ஒன்ற ஒட்டார் மாயமேயென் நஞ்சு கின்றேன் வலிவலம் மேயவளே’
(திருஞானசம்பந்த நாயனார்)
'சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரைப் பத்தி மலர்தூவ முத்தி ஆகுமே"
(திருஞானசம்பந்த நாயனார்)
பொ. சங்கரப்பிள்ளை.
8 O

திருவள்ளுவர் ஆண்டு கார்த்திகை மாதம் 20ம் நாள் (05-12-81) நடைபெற்ற கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் 39ம் ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் தலைவர்
பொ. சங்கரப்பிள்ளை அவர்கள் நிகழ்த்திய
தலைமை உரை
தமிழ்ச்சங்கதத்தின் இவ்வாண்டுப் பொதுக்கூட்டத்துக்கு கெளரவ அமைச்சர் இராசதுரை அவர்களைப் பிரதம மேன்மை தங்கிய அதிதியாக நாம் அழைத்திருப்பது பொருத்தமுடையதாகும். இவர் தமிழில் ஆழ்ந்த புலமையுடையவர், தன்னேரிலாப் பேச்சாளர். தமிழகத்துக்குக் கருணா நிதி போன்று ஈழத்துக்கு இராசதுரை என்பர். பிரதேசஅபிவிருத்தித் தமிழ் மொழி அமுலாக்கல், இந்துசமய பண்பாடு முதலிய துறைகளுக்கு இவர் அரசாங்க அமைச்சர். தமிழ்ச் சங்கத்தின் சார்பிற் கெளரவ அமைச்சரை வரவேற்கிறேன்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம் 1942இல் அன்று கொழும்பில் வாழ்ந்த தமிழ்ப் பெரியார்கள் பலரினால் நிறுவப்பட்டது. இது சாதி சமய வேற்றுமைகளும் அரசியல் தொடர்பும் அற்ற தாபனமாகும். தமிழர் கலைகள், பண்பாடு, கலாசாரங்களைப் பேணுவதும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்குப் பல வழிகளில் உழைப்பதும், உறுப்பினரின் கல்விநிலை செம்மையுறுதற்கேற்ற வாய்ப்புக்களை அளிப்பதும் சங்கத்தின் நோக் கங்களாகும். இன்று சங்கம் அடைந்திருக்கும் உயர்நிலைக்குக் காரணம் பல வள்ளல்களின் நன்கொடைகளும், பல தொண்டர்களின் அயராத உழைப்புக்களுமாம். இவர்களுடைய பெயர்களைத் தனிப்படக் குறிப் பிட நான் விரும்பவில்லை. நேரமுமில்லை. இவர்கள் யாவருக்குஞ் சங்கத்தின் நன்றியைத் தெரிவிக்கிறேன். நன்றி மறத்தல் நன்றன்று.
தமிழ் மொழியின் சிறப்புக்கள் பற்றிப் பலர் அழகாக மேடைகளிற் பேசுகிறார்கள். அடுக்கு மொழி, உடன் மறந்து விடுகிறார்கள். பேச்சுக்களிற் பயனுண்டா? ஒரு தொன் சொற்களைப் பார்க்கிலும் ஒரு துளி செயல் மேலானது. 'எனது சமூகத்தின் மொழியின் வளர்ச்சிக்கு அற்பமாவது உதவியிருக்கிறேனா? எனது கடமையைச் செய்தேனா?* என ஒவ்வொரு தமிழனும் தன்னைத்தானே கேட்கவேண்டும். இன்றே கேளுங்கள், தவறாது கேளுங்கள். 'நாமமது தமிழரெனக் கொண்டு
81

Page 45
இங்கு வாழ்தல் நன்றோ? சொல்வீர்?’ என்று பாரதி அன்று முழங்கி னான். ஆதலால், இம்மேடையிலிருந்து ஓர் அழைப்பு விடுகிறேன். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உழைக்க முன்வாருங்கள். தமிழ்ச் சங்கத்திற் சேருங்கள். எங்கள் பணிகளிற் பங்குபற்றுங்கள். இப்பணி களை நாடு முழுவதும் பரப்புங்கள். விண்ணப்பப் பத்திரங்கள் இங்கு உள. எடுத்து நிரப்பி ஆயுள் உறுப்பினராகுங்கள்.
கொழும்புத் தமிழ்ச் சங்கம், மதுரைத் தமிழ்ச் சங்கம் போன்று அமைந்துள்ளஇடத்தின் பெயரைக் கொண்டுள்ளது. ஆனால் உண்மை யில் இஃது இலங்கைத் தமிழ்ச் சங்கமாகும். தமிழ்மொழி, கலாசாரம், முதலியவற்றின் வளர்ச்சிக்காக இலங்கை முழுவதும் பணியாற்றுகிறது. உலகத் தமிழர் கலாசாரப் பணிகளிலும் பங்கு கொள்ள விரும்புகிறது. 'கொழும்பில் மட்டும் கூட்டங்கள் நடத்துவது போதாது. சங்கப் பணிகள் நாடு முழுவதும் - விசேடமாக வடக்கிலும், கிழக்கிலும், மலையகத்திலும் பரவ வேண்டும்', என எமது அமைச்சர் முன்பு நடந்த சங்க நாள் விழாவிற் கூறினார். இதை நாம் மறந்து விடவில்லை. அடுத்த அடுத்த ஆண்டுகளிற் சங்கப் பணிகள் ஏனைய இடங்களுக்கும் பரப்பப்படும். அதே வேளையில் வடக்கில் ஒரு தமிழ்ச் சங்கமும் கிழக்கில் ஒரு தமிழ்ச் சங்கமும் , மலையகத்தில் ஒரு தமிழ்ச் சங்கமும், நிறுவ அவ்வப் பகுதி மக்களும், தலைவர்களும் விரைவில் ஆவன செய்வார்களென நம்புகிறேன்.
தமிழ் மொழியைத் தேசிய மொழியாக அமுலாக்கவும், இந்து மத கலாச்சாரத்தை வளர்க்கவும் மாட்சிமை தங்கிய சனாதிபதி கெளரவ அமைச்சர் இராசதுரை அவர்களை நியமித்திருக்கிறார். மாட்சிமை தங்கிய சனாதிபதிக்கு எமது நன்றியைத் தெரிவிக்கிறோம். சனாதிபதி எமக்கு அறியாதவரல்லர். பலகாலம் இவரை நாம் எமது தொகுதிப் பாராளுமன்றப் பிரதிநிதியாகத் தெரிவு செய்து அனுப்பியிக்கிறோம்.
இத் தெதாடர்பில் ஒரு முக்கியமான விடயத்தை அமைச்சரினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழ் மக்களின் பிறப்பு, இறப்பு, திருமணப் பதிவுகள் தமிழிற் செய்யப்பட வேண்டுமெனச் சென்ற ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மாட்சிமை தங்கிய சனாதிபதிக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கும் அனுப்பினோம். அமைச்சர்களை நேரிற் கண்டும் எமது கஷ்டங்களை எடுத்துக் கூறினோம். தமிழ் மக்கள் பெருந் தொகையாக வாழும் கொழும்பு மாவட்டத்தில் முதலில் இதைச்
82

செயற்படுத்துமாறு கேட்டோம். மேலதிகச் செலவில்லாது இதைச் செயற்படுத்த வழிவகைகளையும் எடுத்துக்காட்டினோம். அமைச்சர்கள் எமது வேண்டுகோளைச் செயற்படுத்தப் போவதாகத் தினசரிகளிற் செய்திகள் வெளிவந்தன. ஆனால் அரசாங்கம் இதுபற்றி எவ்வித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை சட்டத் தடைகள் இருக்கலாம். அவ்வாறாயின் சட்டத்தைத் திருத்தி எமது வேண்டுகோளை நிறைவேற்றித் தருமாறு அரசாங்கத்தையும் சம்பந்தப் பட்ட அமைச்சர்களையும் மறுபடியும் வேண்டிக் கொள்கிறோம்.
சங்கத்தின் பணிகளை ஆண்டறிக்கை கூறுகிறது. இவற்றைத் திரும்பவும் கூறுவது எனது நோக்கமன்று. எனினும், முக்கியமான ஒன்றிரண்டு விடயங்களைச் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன். ஆண்டறிக்கையின் பக்கத்திற் சங்கத்தின் வழக்கைப் பற்றிய ஒரு குறிப் பைக் காணலாம். கொழும்புத் தமிழ்ச் சங்கமா, வழக்கா எனச் சிலர் ஆச்சரியப்படலாம். இவ்வழக்கின் விவரங்களைக் கூற நான் விரும்ப வில்லை. பழைய ஆட்சிக் குழு ஒன்றில் இருந்த ஒரு சிலரின் பொறுப் புணர்ச்சி அற்ற தவறான செயலினாலும் வேறொரு சிலரின் சூழ்ச்சி யினாலும் இவ்வழக்கு ஏற்பட்டது. இவ்வழக்கினால் அதிருப்தியடைந்த பலர் சங்கத்தை விட்டு விலகினர், சங்கப் பணிகளும், வளர்ச்சியும் தடைப்பட்டன. இவ்வழக்கு இல்லாதிருந்தால் சங்கக் கட்டடங்கள் முழுவதையும் இதுவரை கட்டி முடித்திருக்கலாம். இன்று 3/4 பகுதியை மட்டுமே கட்டி முடித்திருக்கிறோம். கட்டடச் செலவுகள் நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிகரித்து விட்டன. இவ்வழக்கினாற் சங்கம் அடைந்த நட்டம் பல இலட்சம் ரூபாய்களாகும். மேல் முறையீட்டு மன்றத்திற் சங்கத்தின் சார்பில் இலவசமாக ஏற்பட்டு அதிக சிரமம் எடுத்து வழக்கிற் சங்கத்துக்கு வெற்றியீட்டித் தந்த எமது காப்பாளர் திருவாளர் சி. இரங்க நாதன், கியூ. சி. அவர்களுக்குச் சங்கம் என்றும் கடமைப்பட்டுள்ளது. அன்னாருக்கு எமது நன்றியைத் தெரிவிக்கிறேன்.
இப்படிப்பட்ட ஆட்சிக்குழுத் தவறுகளும், தனியார் சூழ்ச்சிகளும் இனிமேல் நடைபெறாது தடுப்பதற்குச் சென்ற ஆண்டுப் பொதுக் கூட்டத்திற் சங்க அமைப்பு விதிகளைத் திருத்தி ஒம்படையாளர் சபை ஒன்றை நிறுவ முடிவு செய்தோம். சபை உறுப்பினர் ஐவரும் இக் கூட்டத்தில் தெரிவு செய்யப்படுவர். இனிமேற் சங்கச் சொத்துக்களை நிருவகிப்பது இச்சபையின் கடமையாகும். இத்தொடர்பிற் கெளரவ அமைச்சரின் கவனத்திற்கு ஒரு விடயத்தைக் கொண்டுவர
83

Page 46
விரும்புகிறேன். கோயில்கள், தர்மத்தாபனங்கள், கலாசார நிலையங்கள்
முதலியனவற்றின் சொத்துக்களைச் சிலர் அபகரிப்பதும், சிலர் அப
கரிக்க எத்தனிப்பதும் ஆட்சிக்குழுக்களின் அங்கத்தவர் சிலர் இவற்றைத்
தமது நன்மைக்குப் பயன்படுத்துவதும் எமது சமுதாயத்திலுள்ள சாபக்' கேடுகளில் ஒன்றாகும். இஃது எமது சமூகத்திற்கே அவமானம். சட்டத்
திலும் இச்சொத்துக்களுக்குப் போதிய பாதுகாப்பில்லை. இன்று
தமிழ் மொழி, இந்து மதக் கலாசாரம் என்பவற்றுக்குத் தனிப்பட்ட அமைச்சு ஒன்று நிறுவப்பட்டிருப்பதனால் இவ்வமைச்சு இச்சொத்துக்
களுக்குப் போதிய பாதுகாப்பளிக்கச் சட்டங் கொண்டுவர வேண்டும்.
சங்கத்தின் பணிகளில் ஒன்று புதிய பழைய தமிழ் நூல்களை அச்சேற்றி வெளியிடுவதாகும். இதுவரையும் சங்கம் வெளியிட்ட நூல்களாவன, பாவலர் சரித்திரம் (1ம் 2ம் பாகங்கள் வெளிவந்துவிட்டன, 3ம் பாகம் வெளிவரவிருக்கிறது). வையா பாடல், புவியியல், சிறுவர் மலர், எழுத்தாளரை ஊக்குவிக்கும் பொருட்டுச் சங்கஞ் சில நூல்களுக்கு விதப்புரை வழங்கியிருக்கிறது. 17ஆம் 18ஆம் 19ஆம் நூற்றாண்டுகளில் ஈழத்தில் வெளிவந்த பல தமிழ் நூல்கள் இன்று மறைந்து விட்டன. இவற்றைத் தேடி எடுத்து அச்சேற்ற வேண்டும். தமிழில் நாவன்மை, கவிதை, கட்டுரைப் போட்டிகளை நடத்துகிறோம். பரிசில்கள் வழங்கு கிறோம். ஆராய்ச்சி அரங்குகள் இங்கு நடைபெறுகின்றன. ஆராய்ச்சிக் கட்டுரைகள் வாசிக்கப்படுகின்றன. அடுத்த ஆண்டில் வெளியிடுவதற்கு எம்மிடம் பல நூல்களும், கவிதைகளும், கட்டுரைகளும் உள. பணமின்மையே இம்முயற்சிக்குத் தடையாகும். ஆதலால் இந்நூல்களை வெளியிடுவதற்கு உதவி செய்யத் தமிழ் வள்ளல்கள் முன்வர வேண்டும்,
ஆனோல்ட் சதாசிவம் பாவலர் சரிதைகள் 1875 உடன் முடிவடை கின்றன. சென்ற 100 வருடங்களில் ஈழத்திற் பல புலவர்களும் தமிழ் அறிஞர்களும் இருந்தனர். இவர்களுடைய சரிதைகளையுஞ் சுருக்கமாக எழுதி வெளியிட வேண்டும். இதைப் பற்றி எமது அமைச்சருடன் கதைத்தபோது இப்பொறுப்பை அவருடைய அமைச்சே ஏற்கவேண்டு மெனக் கேட்டுக்கொண்டோம். சென்ற 100 ஆண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த புலவர்களைப்பற்றி அறிந்தவர்கள் அப்புலவர்களின் சரிதை களை மிகச் சுருக்கமாக எழுதித் தமிழ்ச் சங்கத்துக்கு அனுப்பி வைக்கு மாறு வேண்டிக்கொள்கிறேன்.
சிறுகதைகள், சினிமாக்காரரைப்பற்றிய செய்திகள், சிரிப்புக்கள், கண்டனங்கள், அரசியல் நூல்கள் தவிர்ந்த ஏனைய தமிழ் நூல்களை
84

இங்கு வெளியிடுவோர் நட்டமடைவது திண்ணம். மேலும் எமது நாட்டு மக்களுக்கு இறக்குமதிகளில் மோகமுண்டு, கஞ்சலாயினும் பிறநாட்டுப் பொருட்களை விரும்புவர், உள்நாட்டுச் சரக்குக்கு மதிப்பில்லை. தமிழர் பொற்காலம் எனப்படும் சங்க காலத்தில் பேரரசர்களுஞ் சிற்றரசர்களும் தமிழ்ப் புலவர்களையும், அறிஞர்களையும் ஆதரித்தனர். சங்ககாலத் துக்குப்பின்னும் இவர்கள் அரசரின் ஆதரவைப் பெற்றனர், இந்நாட்டில் தமிழ்ப்புலமையை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் வேண்டுமானால் தமிழ்ப் புலவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆதரவும், உதவியும் அளிக்க வேண்டும்.
'புத்தம் புதிய கலைகள் - பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே - அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை?
என அன்று பாரதி வருந்தினார். இன்று இக்குறைபாடு ஒரளவுக்கு நீங்கிய போதிலும் நாம் அதிக முன்னேற்றம் அடையவில்லை. மொழி பெயர் ப்பு சொல்லாக்கத் துறைகளிலும் பல பிரச்சினைகள் தோன்றிவிட்டன. மொழிபெயர்ப்பாளன் ஒவ்வொருவனும் சொல்லாக்குவோனானாற் பெருங்குழப்பமே விளைவாகும். இதைப் பற்றி மேலும் கூற நான் விரும்பவில்லை. அடுத்த ஆண்டிற் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு முதலியவை பற்றி ஆய்வரங்குகள் நடத்தவிருக்கிறோம். இவற்றிற்பங்கு பற்றிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு இத்துறைகளில் வல்லுநரை அழைக்கிறேன். மேலும் அரசகரும மொழித் திணைக்களத்தின் தமிழ்ச் சொல்லாக்கப் பகுதி தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சிற்கு மாற்றப் பட வேண்டும். &
கல்வி அமைச்சின் வெள்ளை அறிக்கை பெரும்பாலும் வரவேற் கத்தக்கதாகும். எமது இளங்கல்வி அமைச்சரைப் பாராட்டுகிறோம்; பாடசாலைக் கொத்தணி கொள்கையளவிற் சிறந்தது, போலத் தோன்றினும், நடைமுறையிற் பல பிரச்சினைகளுக்குக் காலாகும். தமிழ்ப் பிள்ளைகளுக்கு மரபு முறைப்படி தமிழ் கற்பிக்கப்பட வேண்டும். பழைய இலக்கிய இலக்கண நூல்களைப் பயன்படுத்த வேண்டும். தற்கால விநோத விளையாட்டு முறைகளும் சுருக்க வழிகளும் வேண்டாம். அந்நிய மொழியினருக்குத் தமிழைக் கற்பிப்பது போன்று தமிழ்ப் பிள்ளைகளுக்குத் தமிழைக் கற்பிக்க வேண்டாம். இன்று இரண்டுங் கெட்ட நிலை. பிள்ளைகளுக்குத் தமிழுந் தெரியாது,
85

Page 47
ஆங்கிலமுந் தெரியாது. மாணவர்கள் சர்வகலாசாலைகளுக்குத் திறனின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட வேண்டும்,
கொழும்பிற் சிறந்த தமிழ் நூல்நிலையம் ஒன்று அத்தியாவசியம். இதுவுந் தமிழ்ச் சங்கத்தின் நோக்கங்களில் ஒன்றாகும். இக்கட் டடத்துக்குப் பின்னுள்ள பழைய கட்டத்தின் இடத்தில் நூல்நிலையம், வாசிகசாலை, அவைக்களம் முதலியவற்றிற்குத் திட்டமிட்டிருந்தோம். மேற் கூறிய வழக்கினால் இம்முயற்சியுந் தடைப்பட்டது. பன்னிரண்டு வருடத்தடை, பாண்டவர் வனவாசம். இன்று புத்தகங்களை ஒரறைக்குட் பூட்டி வைத்திருக்கிறோம். வாசிகசாலைக்கு இடமில்லை. பலகாலம் புதிய நூல்கள் வாங்கவில்லை. இவ்வழக்கு முடிந்தவுடன் புதிய கட்டடத்தை நிறுவி ஒரு சிறந்த நூல்நிலையத்தை அமைப்பது எமது நோக்கமாகும்.
இன்று அரசாங்கம் சமயத் தாபனங்களுக்கும், பண்பாட்டு நிலையங்களுக்கும் ஊக்கமளிக்கிறது. உதவிகள் செய்கிறது. சலுகைகள் கொடுக்கிறது. பல வருடங்கள் விண்ணப்பஞ் செய்த போதிலும், எமக்கு அரசாங்கத்திடமிருந்து எவ்வித உதவியுங் கிடைக்கவில்லை. காசு தராவிடினும் இத்தமிழ்ச் சங்கத்தைத் தமிழ்ப் பண்பாட்டு நிலையமாக அங்கீகரித்தாற் போதும், உதவிக்குப் பதிலாக நாம் தடைகளுக்குமேல் தடைகளை அனுபவித்து வருகிறோம். வரி அறவீட்டாளர் எம்மைக் கிளப் - குழுக் களரி என்கின்றனர். கூத்தாடவோ களியாடவோ இங்கு நாம் கூடவில்லை. மாநகர சபை எம்மை வீடு அல்லது விடுதியகம் என வாதாடுகிறது. இருக்கவோ அறைகளை வாடகைக்குக் கொடுத்துக் காசுழைக்கவோ இங்கு நாம் வரவில்லை. தமிழ்ச் சங்கம் தமிழர் பண்பாட்டு நிலையம் என்பதையும், அதன் பணி பொது நலம் என்பதையும் மறுபடியும் வற்புறுத்த விரும்புகிறேன்.
இத்தடைகள், சங்கடங்கள் மத்தியில் மனந்தளராது, அயராது உழைத்து வரும் சங்கக் கெளரவப் பணியாளருக்குச்சங்கம் கடமைப்பட் டுள்ளது. எமது கெளரவ செயலாளர் ஆசிரியர் கந்தசுவாமி அவர்களை விசேடமாகக் குறிப்பிட விரும்புகிறேன். இவர் பிரமச்சாரி. பெண்டு பிள்ளைகள் தொல்லைகள் இல்லாதவர். தனது முழு நேரத்தையும் தமிழ்ப் பணிக்கு அர்ப்பணித்திருக்கிறார். கனவிலும் இவருக்குத் தமிழ்.
எமது மொழி தமிழ். பண்டைச் செம்மொழிகளில் இன்று வழங்கு வது தமிழ் ஒன்றே. பழமைக்குப் பழமையாகவும், புதுமைக்குப் புதுமை யாகவும் விளங்குகிறது. ஆனால் பழமையைப் பற்றிப்
86

பெருமைப்படுவதனாலோ, தமிழ், தமிழ் என மேடைகளில் முழங்கு வதினாலோ பயனில்லை. நம் தமிழ் செந்தமிழ் உலகெலாம் பரவ வேண்டும், வெளிநாட்டவர் மதிக்கத்தக்க புது நூல்களைத் தமிழில் இயற்ற வேண்டும், எமது மொழியின் வளர்ச்சிக்கு உழைக்க முன்வாருங்கள். கடமையைச் செய்யுங்கள். பயனை எதிர்பார்க்காதீர்கள்.
'எண்ணுறும் போது தமிழையே எண்ணிர் இசைத்துழி தமிழையே இசைப்பீர் பண்ணுறும் போது தமிழ்ப் பணிதனையே பழுதறப் பண்ணியின்புறுவீர் உண்ணுறும் போதும் உயிர்த்திடும் போதும் உயிருளம் துடித்திடும் போதும் கண்ணினும் இனிய தமிழைக் கருதிக் காரிய வுறுதி கொண்டெழுமின்’ 'வாழிய செந்தமிழ் ; வாழ்க நற்றமிழர்”
O5-12-1981 பொ. சங்கரப்பிள்ள்ை
தலைவர்.
87

Page 48


Page 49


Page 50