கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வே. ந. சிவராசா)

Page 1


Page 2


Page 3

திரு வே. ந. சிவராசா அவாகள தோற்றம் மறைவு 7-1 - 1934 :
| 2) lo).

Page 4

"மகேச பக்தர் மக்கள் நேசர்"
சைவம் சிவசம்பந்தம் உடையது. சிவராஜா சைவ சம்பந்த முடையவர். வே. ந. சிவராஜா என்றால் அவரை விளங்கிக் கொள்வதற்குப் பல குணங்களும் கோணங்களும் நம் முன்னே நிற்கின்றன. சைவக் கொள்கையில் உறைப்பான பக்தி உடைய வராய் திகழ்ந்த சிவராஜா குணம் என்னும் குன்றேறி நின்ற பெரியார்.
ஆயின் வெகுளி கொள்வாரோ எனின் இல், கோபம் இவருள் மூளவும் இல்லை. இவருக்குக் கோபம் மூட்டவும் முடியாது. சாது என்பதற்கு சிவராஜா அவர்கள் ஒரு சான்று. அடக்கமுடையவர், ஆளுமை மிக்கவர். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர். இந்து கலாச்சாரத்திணைக் களப்பணிப்பாளர், உள்ளுர் ஆட்சி ஆணையாளர், அரச கரும மொழித்திணைக் கள உதவி ஆணையாளர் என்னும் பதவிகள் இவரால் பயன்பெற்றன. அப்பதவிகளின் பணிகள் இவரால் கணிப்புப் பெற்றன.
திரு. சிவராஜா மகேச பக்தர் மட்டுமன்று, மக்கள் நேசனு
மாவார். எல்லோரிடமும் அன்பு செலுத்துதல், எல்லோருக்கும் ஆதரவு காட்டல், இவருடைய இயல்பூக்கங்களாகும்.
நமது நல்லை ஆதீனத்தில் கனத்த பற்று மிக்கவர். ஆதீன காரியங்களுக்கு ஆலோசனைகள், ஆக்க முயற்சிகள தேவையான போது உதவுவதில் முன்நிற்பவர். இவருடைய திடீர் மறைவு நம்மைத் திகைக்க வைத்து விட்டது. நாம் கொழும்பு இராம கிருஷ்ண மிஷனில் தங்கி இந்திய யாத்திரை சம்பந்தமாக ஆலோசனைகளை நடத்தியபோது நாள்தோறும் வந்து நல்ல \யோசனைகளைத் தந்தவர். இவர் இறவாயாக்கை உடையோராய் இருந்தால் இந்தத் தேசம் உய்ந்து போகும் என்ற உள்நோக்கத்தில் தீயூழ் தீய்த்து விட்டது போலும். இவர் மனைவி மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு நமது அனுதாபத்தைத் தெரிவிததுக் கொள்கின்றோம்.
திரு, சிவராஜாவின் ஆன்மா சிவனடி கண்டு இன்பப் பேறு பெற எல்லாம் வல்ல பரம் பொருளின் பாதாரவிந்தங்களைப் பணிந்து வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.
"என்றும் வேண்டும் இன்ப அன்பு' " பரீலமரீ குரு மஹா சந்நிதானம்.
-நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம்

Page 5
அமருங்கள்! நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?
ஒரு பெரியவர் அங்கே வீற்றிருக்கின்றார். அவர் ஆசனம் மான்தோல், அரையில் பால் போன்ற வெள்ளை வேட்டி. நெற்றியில் நிறைந்த விபூதி, ஆதிசங்கரர் அருளிய கணேச பஞ்சரத்தினம் நூல்களின் பிரதிகள் அவர் முன்னே குவிந்து கிடக்கின்றன. அவர் எதிலோ ஆழ்ந்த நிலையில் இருப்பது புலப் படுகின்றது.
அவர் இருக்கும் இடம் சரஸ்வதி கடாட்சம் நிறைந்துள்ளது. ஆத்மீக ஞானிகளின் உருவப்படங்கள், காமதேனு எனும் பசுவின் படம், தெய்வங்களின் படங்கள் அவர் இருக்கும் மண்டபத்தில் நிறைந்து காணப்படுகின்றன. அந்த வீட்டின் பெயர் கோகுலமசாஞ்சிஆராய்ச்சித் தோட்டம் கொழும்பு. மிகவும் குளிர்ச்சி நிறை (35pa)
இது முதன் முதலாக அவரைச் சந்திக்கின்றது. அப்பொழுது அவர் புன்னகையுடன ‘அமருங்கள். நீங்கள் யார்? எங்கிருந்து வருகின்றீர்கள்?"கேள்விகள் தொடர்கின்றன. இது பல நிமிடங்கள் மெளனம் சாதிக்கின்றது. பின்னர் "இவற்றை எல்லாம் தேடிக் கொண்டுதான் இது இருக்கின்றது" எனப் பதில் கூறியபொழுது,
D உடனடியாக எழுந்து ஓடிவந்து இதனைக் கட்டி அணைத்துக் கொணடார். தனது ஆசனததிலே தன்னுடனேயே அமர்த்திக் கொண்டார். அநதப் பெரியவர்தான் தரு, வே. ந. சிவராஜா ஐயா அவர்கள் ஆவர். இந்நிகழ்ச்சி 21-04-1900 ஆம் ஆண்டு கொழுமயில் உள்ள அவரது வீடடில் நடைபெற்றது.
0 அப்பொழுது இது சந்நியாசம் பூணுவதற்கு இந்தியா செல்லத் தயாராகக் கொண்டிருந்தது. அனறு ஆரமபித்த அன்பின தொடர்பு இறுதிவரைக்கும- ஆத்மீகமாகப்- பலபல தடவைகள் சநதிக்க வைத்தது.
u 09-11-1992இல் கொழும்பில், மெளனாச்சிரம ஏற்பாட்டில்
நடந்த முதலாவது திருமந்திர மகாநாட்டிற்குத் தலைை தாங்கிச் சிறப்பித்தார். 0 அண்மையில் தனது துணைவியாருடன் இந்திய புனித யாத்திரை மேற்கொண்டிருந்தார். அதற்குமுன் திரு. வி. சிவராஜசிங்கம் அவர்களுடனும், திரு. மு. கந்தையா அவர் களுடனும் இதை வந்து சந்தித்து ஆத்மீக விடயங்களை அளவளாவி விடைபெற்றார்.
சென்னை மாநகரில் இயற்கை எய்தியுள்ளார். அன்னாரின் ஆத்மா என்றும் பொன்னம்பலத்துப் பொன்னார் திருவடியில் கலந்தே இருக்கும்.
சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷிஓம்ஷர், மெளனாச்சிரம், கொழும்பு-6.

சிறந்த கர்மவீரன்
அன்றுகாலை புதினத்தாளை விரித்ததும் கண்களை ஈர்த்தது V N. சிவராஜா அவர்கள் மறைந்த செய்தி. இது சிறிதேனும் எதிர்பாராத செய்தி. ஒருவகை நடுக்கம் கலந்து திடுக் குற்ற உணர்ச்சி உடம்பு முழுவதையும் ஊடுருவிற்று. பிறந்தவர் களுக்கு இறப்பு நிச்சயம் என்பது எல்லோருககும் தெரிந்த உண்மையாக இருந்த போதும் இநநிகழ்ச்சி திடீரென நிகழ்நது அதிர வைத்தது.
சில தினங்கள் முன் இங்கிருந்து இந்திய யாத்திரையை மேற்கொண்டார். புறப்படும் தினத்துக்கு முன்னிரவுன்ன்னோடு சுமார் ஒரு மணிர்ேரம் சம்பாஷித்தார். அவருக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியிருக்கும் நடராஜப் பெருமான் மீது அளவு கடநத பக்தி. யாத்திரையை முடித்தபின் மிகுதி நாட்களை சிதம்பரத் திலே கழிப்பது என்றும், மார் கழித் திருவாதிரை வரையும் அங்கு தங்கி தரிசனக் காட்சியைப் பெற்றுத் திரும்புமாறு அவரிடம் கூறினேன். அதே தமது விருப்பம் என ஆமோதித்தார்.
இன்று இங்கிருந்து விடைபெறுவது என்னிடம் இறுதியாக விடை பெறுவதே என்பதை நான் சிறிதேனும் உணரவிலலை. அவரும் உணரவில்லை. இருந்தும், எனனை இறுதியாகச் சநதிதது விடைபெற்றுச் செலல வேண்டும் எனற உள்ளுணர்வு மேவிய எண்ணம் அவரை வந்து கடைசியாக விடை பெற்றுச் செல்லும்படி தூண்டிறலு. இங்கு என்னிடம் அடிக்க.டி வருவார். சிறுவர்களுக்கு \ர்வதபாடம நடத்தி வேதாத தியயனம் நடைபெறும் பொழுது ஒரு பககத்தல அமைதயாக இருநது அதில் லயிதது இருப்பார்.
இத்தியாவில் உடன்யாத்திரை செய்த வசந்தா வைத்திய நாதன் தம்பதியினரிடம் விசாரித்து விபரங்களைத் தொந்து கொண்டேன். உடல்நிலை சற்றுத் தளர்ச்சியை அவ்வப்போது உணர்நதவிடத்தும் அதை வெளிககாட்டாது கல்கத்தா விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு காசி திரும்பி அங்கும் கடமைகளை நிறைவேற்றி அலகாபாத் சென்று சமயச் சடங்குகளை முடித்துக்கொண்டு உடல்நிலை இடந்தராததால சென்னை நோக்கி பிரயாணமானார். சென்னையில் இரயில் நிலையத்திலிருந்து நேரே வடபழனிக்கு அருகாமையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி பெற்றார்.

Page 6
4
இலங்கையில் இருக்கும்பொழுதே பித்தப்பைக் கோளாறு காரண மாக நிகழவேண்டிய சத்திர சிகிச்சையை காலவரையறையின்றி பின்போட்டுக்கொண்டே வந்தார்.சென்னையில் விஜயா மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் ஒரு வாரமாக சத்திர சிகிச்சையை தாங்கும் வலிமை இல்லாததினால் அங்கும் அது பின் போடப்பெற்றது. 27ந் திகதி அதிகாலை 3.00 மணியளவில் நடராஜப் பெருமானின் திருவடிகளில் ஒன்றும் பேறு பெற்றார். கடைசிவரை அவர் நினைவிழக்கவில்லை என்பதை அவரை இறுதி நேரம் வரை சந்தித்தவர்கள் கூறினார்கள். காசி யாத்திரை செய்து தம் கைகளால் பூரீ விஸ்வநாதருக்கு கங்கை நீராட்டி வழி பட்டுத் தமிழ்நாடு திரும்பி புனித பாரத நாட்டில் உயிர்விடும் அரியபேறு அரிதினுமரிது.
சிவராசா அவர்கள் என்றும் மலர்ந்த முகத்தினர். அவரது வாயில் புன்முறுவல் எப்பொழுதும் வெளிவரும். பணிவு அவரின் அணிகலன்; தன்னைப் பற்றியே புகழ்பாடும் இயல்பு சற்றும் அற்றவர்; அப்படிக் கூற முற்பட்டாலும் பணிவுடன் நடந்த வற்றையே மிகைப்படுத்தாது கூறுவார் விசேடமான சமய ஈடுபாடு மிக்கவர்; சமய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது நிகழ்ச்சி நடைபெறுமிடத்தில் ஒரு பக்கத்தில் அமர்ந்து அமைதி யாக பங்கு பற்றுவார். இவ்வகை நிகழ்ச்சிகளில் அவர் துணைவி யாருடன் இருந்து பங்கு பற்றுவதையே எப்பொழுதும் காண நேரிடும்.
மென்மையுள்ள மிக்கவர் என்றும் பணிவுடன் அமைதியாக இருப்பவர்; எனினும் உறுதியுள்ளம் படைத்தவர்; சிறந்த கர்ம வீரன்; இவ்வுயர் பண்புகளை அவர் கடமையாற்றும் இடங்களில் நேரே கண்டு வியந்துள்ளேன். யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத் தில் பதிவாளராக உறுதியுடன் கடமையாற்றிய சிவராஜா அவர் களை அவ்வாறு பார்க்கும் பொழுதெல்லாம் இவர் மென்மை விரவிய இயல்பு எங்கே என்று நேருமளவிற்குப் பெரும் உறுதி படைத்தவர்.
முன் சில நாட்கள் இந்து கலாச்சார அமைச்சில் கடமை யாற்றும் காலம் முதல் இவருடன் நான் நெருங்கி பழகி வந்தேன். மனநிறைவு இல்லாத காரணத்தால் அவ்வமைச்சிலிருந்து விலகி, வேறு துறைகளில் கடமையாற்றும் பொழுதே, யாழ் பல்கலைக் கழகம் இவரை அழைத்தது. பின்னர் திருகோண மலையில் அரசாங்கத்தில் செயலாளராக கடமை புரிந்தார். எங்கு கடமை யாற்றினாலும் உறுதியாக நேர்மையாகக் கடமை புரிந்ததையே

s
அவதானிக்க முடிந்தது. அவர் சிறந்த கர்மயோகி. இவ்வாறு பல்கலைக் கழக பதிவாளராக, உயர்தி அதிகாரியாக, கடமை செய்த பொழுதும் அவருக்கு இயல்பான உயர் பண்புகள் அவரை விட்டு விலகாது நிலை கொண்டிருந்தன. வேலை பார்க்கும் பொழுதாயினும் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் ஒரே வகைத்தான பண்பாளராகத் திகழ்ந்தார். அவர் வாழ்க்?ை முழுவதும் ஊடுருவி நின்றது அவர் சமயப்பற்று.
புன்முறுவல் நிரம்பி வழியும் முகத்தை இனிக் காண முடியாது. அவர் இனிய வார்த்தைகளை கேட்கவும் இயலாது. ஆயினும் அவற்றை மறக்கவும் முடியாது. எமது நெஞ்சில் எண்றென்றும் இப்பண்புகள் பசுமரத்தாணியெனப் பதிந்து நிற்கும்.
அவர் வாழ்க்கைத் துணைவியார் திருமதி. சிவராஜா அவர்கள் உறுதியுள்ள உள்ளத்துடன் இவர் பிரிவைத் தாங்கும் ஆற்றலை அவருக்கு வழங்கும்படி இறைவனைப் பிரார்த்திக் கிறேன். அவருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
சிதம்பரநாதனின் தூக்கிய திருவடிகளின் கீழ் அவர் ஆன்மா என்றும் சாந்தியுடன் அமைவதாக,
ஓம் சாந்தி:
க. கைலாசநாத குருக்கள்.
கொழும்பு 11-10-1993

Page 7
ஓர் ஆத்மிக நிர்வாகி
*நந்தி"
தனது பெயருக்கு ஏற்ப அமரர் சிவராஜா ஆத்மிகத்தின் அமைதியில் நிர்வாகம் செய்த ஒரு கர்மயோகி,
எனக்கு அவருடன் தொடர்பு ஐந்து வருட காலம் (9 12839.1188) மிகவும் நெருக்கமாக இருந்தது. அப்போது அவர் யாழ்ப் பாணப் பல்கலைக் கழகத்தில் பதிவாளராக இருந்தார். நான் மருக்துவ பீடத்தில் பேராசிரியராகவும் பீடாதிபதியாகவும் இருந் தேன். அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் துணைவேந்தர்.
1983 எமது பிரச்சினைகள் புதிய திருப்பமும் உக்கிரமும் பெற்ற ஆண்டு. தொடர்ந்த ஆண்டுகள் எந்த நிர்வாகிக்கும் சோதனை காலம். யாழ் பல்கலைக்கழகம் அதற்கு விதிவிலக்கல்ல. நண்டர் சிவராஜாவின் நிர்வாக நாள் காலையில் பல்கலைக்கழக பரமேஸ்வரன் கோவிலில் ஆரம்பமாகும். இந்த ஆத்மிக ஆத்ம பல க்தில் நம்பிக்கை தான் அவருடைய நிர்வாகத்தின் ஆதாரமாக இருந்தது. பல பிரச்சினைகள்ை சரியாகவும் சுகமாகவும், நேர்மை யாகவும் நிதானமாகவும் தீர்ப்பதற்கு உதவிக் கை கொடுத்தது. துணைவேந்தர் வித்தியானந்தனின் கல்விசார் அல்லாத அன்றாட நிர்வாகத்திற்கு சிவராஜாவின் கர்ம கடப்பாடு துணை நின்றது; சில வேளைகளில் காப்பாற்றியது.
பலதரம் உத்தியோக அலுவலாக, பிரச்சினை முகத்துடன், போர்க்களம் போவதுபோல் அவருடைய அலுவலகத்திற்குப் போயிருக்கிறேன். அன்புடன் வரவேற்று, சிரித்து, இருத்தி, தான் பிரசுரித்த ஒரு சிறிய வெளியீட்டை- சிவபுராணமோ அதன் மொழி பெயர்ப்பையோ- அன்பளிப்பாக முன் வைப்பார். அதைப்பற்றி சில நிமிட அறிமுகம். "பிரச்சினைகள்' தீர்க்கப்பட வேண்டிய நிர்வாக நிர்மாணங்களாக மாறி நிம்மதியான நிலையில் தீர்க்கப்படும். நிர்வாக நேர்த்திக்கு உளவியலிலும் பார்க்க ஆத்மிக- அன்பு இயலை உபயோகித்தவர் அமரர் சிவராஜா. இது பலருடைய அனுபவம்.
இன்னும் ஒரு தொடர்பு. எனது சிறிய தந்தையார் மறைந்த பேராசிரியர் வி. செல்வநாயகம் அவருடைய ஆசிரியர். அவர் மேல் பக்தி வைத்திருந்தார். தனது ஆசிரியரின் பல

கட்டுரைகள் நூல் வடிவில் வரவேண்டும் என்று அவற்றைச் சேகரித்து என்னிடம் தந்தார்; ஞாபகமூட்டிக் கொண்டே வந்தார். இவ்வாறு எங்கே சிறப்பான நிறை மொழிகளைக் காண் கிறாரோ அவற்றை நூல் வடிவில் வெளிவர முயற்சி எடுத்தவர்
நாம் அறியாத நியதி போல், அவருடைய கடைசி நாட் களில், அவருடன் பேசவும் ஆறுதல் கூறவும், தம்பியர் பேல் கடமையாற்றிய நண்பர்கள் கணேசலிங்கம், சச்சிதானந்தம் ஆகியோருடன் சென்னை பெசன்ட் நகர் மயான பூமியின் நடந்த அவரது அந்திமக் கிரியைகளில் பங்குகொள்ளவும் எனக்கு வாய்ப்புக் கிட்டியது. அந்தவேளை யாழ் பல்கலைக் கழகத்தில் அவரின் மறைவைக் கேட்டு வருத்தும் நண்பர்களுக்காகவும் பிரார்த்தித்தேன். இந்த மானசிக பிரதிநிதித்துவம் எனக்கு நிம்மதி 岛屿西@· பல்கலைக் கழக நண்பர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன். w
அவருடைய அன்பு மனைவி மிகவும் புனிதமான 6 fanulu சூழலில் அந்திமக் கட்மைகளைச் செய்தார்கள். கங்கையில் இருந்து அவர்கள் கொண்டுவந்த நீரைத் தெளித்து பூத்தூவி ட்ெடு வைத்து, தீபம் சாட்டி: கும்பிட்டு அனுப்பி வைத்தார். நண்பரின் ஆத்மா சாந்தி அடைந்து விட்டது.

Page 8
அன்னார் சேவைகள் மறக்க முடியாதவை
அமைதியான தோற்றம், முகத்தில் எந்நேரமும் புன்சிரிப்பு, எவரைக் கண்டாலும் கைகூப்பி வணங்கும் எளிமை நிர்வாகம் அரசியல், சமயம் முதலான துறைகளில் பாண்டித்தியம். இவை எல்லாம் ஒருங்கே அமைந்த பண்பாளன் நான் அறிந்த வி.என். சிவராஜா. 1989இலே வடகிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளராக பெரும் பொறுப்பு வாய்ந்த பதவியை ஏற்றிருந்த வேளையிலேதான் இப் பெரியாருடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அமைதியிழந்து இருந்த வடகிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தை ஒருமுகப்படுத்தும் பொறுப்பினை மிகவும் கண்ணிய மாகவும் ஆழ்ந்த துரதிருஷ்டியுடனும் கையாண்டார் இப்பிரதம செயலாளர்.
புதிதாக அரசியலில் புகந்தவர்களுக்கு நீதி, நிதி நிர்வாகம் முதலிய துறைகளில் போதிய பரீச்சயம் இல்லாதிருந்த காலகட்டத்தில் அவர்களனைவரும் திரு. சிவராஜா அவர் களையே வழிகாட்டியாக நம்பியிருந்தனர் நிர்வாகக் கோட்பாடு களிலிருந்து பிறளாது, அதே நேரத்தில் அரசியல் அபிலாசை களுக்கு குந்தகம் விளைவிக்காத வகையில் திறம்படச் செயலாற்றி யவர் திரு. சிவராஜா. தகுந்த அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பது முதல், தளபாடங்கள் வாங்குவதுவரை எல்லாவற்றையும் தனி ஒருவராகக் கவனித்து வடகிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தைக் கட்டியெழுப்பிய பெருமை அவரையே சாரும். சகல துறைகளிலும் திறனுடையவர்களைத் தேர்ந்தெடுத்து சீர்குலைந்திருந்த வட கிழக்கு மக்களின் வாழ்க்கையை வளம்படுத்தும் பல ஆக்க பூர்வமான திட்டங்களைத் தீட்டினார். ஆனால் அவற்றை செயற் படுத்த அவருக்குப் போதிய அவகாசம் கிடைக்கவில்லை. அவரது திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு அவரது கனவுகள் நனவாகும் நாள் வெகு விரைவில் வரும். அவரது சேவைகளை வடகிழக்கு மக்கள் என்றுமே மறக்க மாட்டார்கள்.
அவரது ஆத்மா சாந்தியடைவதாக.
சொ. கணேசநாதன், பிரதம செயலாளர், வடகிழக்கு மாகாணம்,
திருகோணமலை

சிவநெறிச் சீலர்
இப்படியும் நிகழலாமோ என்று செய்தி கேட்டோர் எல்லாம் கண்கலங்க, இதயம் குமுற, இயற்கை எய்தி விட்டார் சிவநெறிச் சீலர் வே. ந. சிவராசா அவர்கள்.
யாழ்ப்பாணத்து வடமராட்சிப் பகுதித் துன்னாலை தெற்கு வேலுப்பிள்ளை நடராசா ஆசிரியரின் தலைமகனான சிவராசா அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனை ஒன்றில் 93.09.27 திங்கள் அன்று, மன்னா உலகத்து மன்னுதல் குறித்துத் தம் புகழ் நிறுவித் தனுகரண உடலை நீத்து இறையடி எய்தினர்.
புனித தலயாத்திரை செய்யப் புகுந்து காசி முகலாம் வடநாட்டுத் தலங்களைத் துணைவியாரோடு தரிசித்து சென்னைக்கு மீண்ட காலை சடுதியாகச் சுகவீனமுற்று மருத்துவ மனையில் இருந்தவேளை அமரத்துவம் பெற்றார்.
21-ஆவது வயதிலேயே பட்டதாரியாக வெளியேறிய இவர் யாழ்ப்பாணம் மத்தியக்கல்லூரியில் ஓராண்டுக் காலம் ஆசிரியப் பணியாற்றிப் பின் இலங்கை நிர்வாகப் பரீட்சையில் தேறி, பகதி அரசிறை உத்தியோகத்தராகவும், பின் உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் வவுனியா,மட்டக்களப்பு, திருகோண மலை மாவட்டங்களில் பணியாற்றி அவ்வப் பிரதேச மக்களின் மதிப்பையும் பாராட்டையும் பெற்றார் முகாமைத் திறமையும் உத்தியோகத்தர்களோடு அதிகாரத் தோரணை சற்றுமின்றி விநயமாகப் பழகும் மேதைகை மனப்பாங்கும், பொது மக்களிடையே காட்சிக்கெளியவராகக் கலந்துரையாடும் இனிய சொல்லினராய் விளங்கிய நேயப்போக்கும், அவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் பதவியுயர்வுக்கும், புகழ் மேம்பாட்டிற்கும் ஏதுவாயின.
அரசமொழித் திணைக்களத்தில் தமிழ்ப் பிரிவுப் பொறுப் புடைய உதவி ஆணையாளராகத் திகழ்ந்ததால் பல கலைச் சொற்தொகுதிகள் வெளியீட்டுக்கும் திணைக் களங்களில் பிரயோகிக்கப் படுவனவும், பொதுமக்கள் பாவனைக்குரியனவு மாகிய படிவங்கள் தமிழிலும் வெளியிடப் படுதற்கும் ஆவன செய்தார்.

Page 9
O
பின்னரி திறைசேரியில் சிரேட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றியிருந்த காலை, இந்துக் கலாச்சார அமைச்சு புதிதாக உருவாக்கப்பெற்ற வேளை இவரது சேவை நாடப்பட்டது. அவ் அமைச்சில் பணிப்பாளர் பதவியினை ஏற்று, செயலாளராகத் திகழ்ந்த திரு சிவ மாணிக்கவாசகர் அவர்களின் ஆலோசனை யுடன், இந்து சமய அபிவிருத்திக்குப் பல அரிய திட்டங்கள் வகுத்துச் செயலாற்றினார். அவர் ஆற்றிய சிறப்புப் பணிகளுள் அதிசிறப்புடையதாகச் சொல்லத்தக்கது சில பல இந்து ஆலயங் களில் நடைமுறையில் இருந்த உயிர்ப்பலி இடும் கொடிய வழக்கத்கைச் சட்டரீதியாக ஒழித்தன்மையாகும். சிகைந்து போன கோயில்களைப் புனருந்தாரணம் செய்ய உகவியும் ஆலய வரலாறுகள் எழுத அருந்துணை நின்றும் கதிர்காமப் பிள்ளைத் தமிழ் போன்ற பிரபந்தப் பிரசுரங்களுக்க வழிவகுத்தும் செயற்கருந் தொண்டு புரிந்தார் 1983 முதல் 1988 வரை யாழ்ப் பாணப் பல்கலைக்கழகப் பதிவாளராகவும் பின்னர் வடகிழக்கு மாகாண சபைப் பிரதம செயலாளராகவும் அவர் ஆற்றிய பணி நூல் வடிவில் தொகுத்துக் கூறற்குரியன.
திருவா த வூரடிகளைப் போன்று இப்பெருந்தகையின் உள்ளம் இளம் பருவத்திலிருந்தே தெய்வ ஞானத்தில் ஈடுபாடு கொண்டிருந்ததெனினும் தம் அரசபணிகளை வழுவாதும் திறம்படவும் நடத்தி வந்தனர். எனினும் ஒய்வு நேரங்களி லெல்லாம் ஆன்ம விசாரம், தெய்வத்தியானம் ஆகியவற்றில் ஈடுபட்டார். உத்தியோக பருவத் தொடக்க காலத்தில் திருகோண மலையில் வாழ்ந்த நாட்களில் சிவயோக சமாசத்து அருள்நெறிப் பீடக் குருமணி சுவாமி கெங்காதரானந்தாவின் கருணா கடாட்சக்திற்குட்பட்டவராகி அவர்தம் ஆன்மநெறி வழிப் பயில்வாராயினர். சுவாமிஜியின் வஜனாம்ருதம் என்னும் நூலில் உள்ள கல்வித்தொடர்பான கருத்துக்களைத் தொகுத்து தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் வெளியிட்டார். இவர் வெளியிட்ட பல நூல்கள் இலவசமாகவே வழங்கப் பெற்றன.
திருவாசகத்தில் அதீத ஈடுபாடு கொண்டு விளங்கினார். கப்பித்தாவத்தை விநாயகர் ஆலயம், பொன்னம்பலவாணேசர் கோயில் ஆகிய தலங்களில் திருவாசகமுற்றோ தலை ஆண்டு தோறும் நிகழ்த்துவிக்கும் கைங்கரியம் பூண்டிருந்தார். எதிர் காலத்தும் இது கிரமமாக நடைபெற வேண்டுமென்பதற்காக

I
இவ்வீரிடங்களிலும் நிதி ஏற்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடற் பாலது. அதியுயர் அரச பதவி வகித்த தற் கூர்ப்பு உணர்வு சற்றுமின்றி கோயில்களில் அடியவர்களோடு அடியவராகி கந்தபுராண படனத்தில் பங்கு கொள்ளும் காட்சி கண்ணுக்கும் செவிக்கும் விருந்தாக அமையும். கற்கை நெறியில் மாணவர் களுக்கு அளிக்கும் ஊக்கமும் உதவியும் அளவிடற்பாலனவன்று. உதாரகுணமும், "உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வகையில் உயரிய சிந்தனையும் இன்முகமும் இனிய பேச்சும் கொண்டு ஒருநாள் பழகினும் தேண்மையாலும், சான்றாண்மை யாலும் தன்வயமாக்கும் தண்ணளி பூத்த உருவத்தை இனிமேல் கண்டுவக்க இயலாதவாறு, மின்னாமல் இடித்தது போல,
தாரூரும் மலர்க் கொன்றைச் சடிலன் வாழும்
தண்ணிழலே சதமெனத் தேர்ந்து இம்மைக்கான
பேரூரும் உடல் விடுத்துச் சிவராசாவேள்
பெயராத வியற்கையுடன் அபின்னமானார்.
-வ. சிவராசசிங்கம்

Page 10
மனிதருள் தலையாய ஒரு மனிதர்
சுவாமி விவேகானந்தரது சிகாகோ நூற்றாண்டு விழாவிற் கலந்து கொள்வதற்குத் தனது துணைவியாருடன் கல்கத்தா சென்றிருந்த எமது பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய உழுவலன்பர் வே ந. சிவராஜா அவர்கள், நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டுச் சென்னையில் ஒரு மருத்துவமனையில் காலமானார் என்னும் செய்தி எமக்கெல்லாம் பேரதிர்ச்சியை உண்டு பண்ணியதுமல்லாமல், எம்மைப் பெருந்துன்பத்திலும் ஆழ்த்திவிட்டது.
"நல்லாரிணக்கமும், நின் பூசை நேசமும், ஞானமுமே யல்லாது வேறு நிலையுளதோ" என்பதனைத் தனது வாழ்க்கை யின் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்தவர் சிவராஜா அவர்கள்.
"நில்லா தவற்றை நிலையின என்றுணரும்
புல்லறிவாண்மை கடை"
என்பதனை நன்குணர்ந்த அவர் இடாம்பிக வாழ்க்கை, பணம், பண்டம், பேர், புகழ் என்பனவற்றைப் போற்றாது, மிக எளிமையான வாழ்க்கையையே நடத்தி வந்தார்.
ஓர் பட்டதாரியாகிய அவர், அரச கரும நிருவாகத் துறையிலும் எம்.பி ஏ. பட்டம் பெற்றிருந்தார். அரசாங்கத் துறையில் பல உயர் பதவிகளை வகித்து வந்தார். ஆரம்ப காலத்தில் உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமை புரிந்த பின்னர் உள்ளூராட்சி அமைச்சு, நிதி அமைச்சு ஆகியவற்றில் கடமையாற்றினார். இந்து சமய அமைச்சு முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டபோது, அவ்வமைச்சு அலுவலகத்தின் முதலாவது பணிப்பாளராக நியமனம் பெற்று அரும் பணி யாற்றினார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பல ஆண்டுகள் பதிவாளராகக் கடமை புரிந்து, ஈற்றில் வடகிழக்கு மாகாணச் சபையின் பிரதம செயலாளராகக் கடமையாற்றினார்.
வாழ்க்கையின் ஊதியக்தின் பொருட்டு மேற்கொண்டி ருந்த உத்தியோகத் துறையில் அவரது செயற்பாடு சிறந்து விளங்கிய அதே வேளை, சமயத்துறையிலும் பொது நலப் பணி யிலுமே அவரது செயலும், பயனும் மிக்குச் சிறந்தோங்கியது. நிதியமைச்சில் இருந்தபோதே, நற்சந்தர்ப்பம் பார்த்து, இறை வரி வருவாய்க்கு இடர் நேரக்கூடும் என அரசினர் குற்றம் கூறுவாரோ என்பதனையும், பொருட்படுத்தாது, மிக்க சாமர்த்தி

13
யத்துடன் சாதுரியமாக மதுபானத்திற்கு எதிராகப் பிரசாரம் செய்தது யான் அறிவேன். فر
அவரது உள்ளத்திற் குடி கொண்டிருந்த இன்னுமோர் ஈடுபாடு, "ஆகாத்தோம்பல்" என்பது, வெருவும் பிணியும் உற்றுNப் பசுவையும் பசுவர்க்கத்தையும் பேணிக்காத்து, 'புலத் தலைப் புல்லார்த்தி அலைத்தலை நிரூட்டி ஒம்புதல்" வேண்டும் என்பது அவரது, பேரவா. இவ்விடயம் பற்றிப் பொருத்தமான திருமுறைகளதும், ஏனைய சாத்திர நூல்களதும் மேற்கோள் காட்டித் தமது செலவில் பல தடவைகளில பல வெளியீடுகளைப் பிரசுரித்து யாவருக்கும் இலவசமாக விநியோகித்து வந்தார்.
சைவப் பன்னிரு திருமுறைகள் சிவராஜா அவர்களது உயிர். கொழும்பு விவேகானந்த சபையில் மூன்று முறை நடைபெற்ற பன்னிரு திருமுறை முற்றோதலில் தவறாது கலந்து கொள்ளு வார். பத்தாம் திருமுறையாகிய தமிழ் மூவாயிரம் என்னும் திருமூல நாயனார் அருளிய திருமந்திரம் அவரது உள்ளத்தைக் கவர்ந்தது. 1992ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வெள்ளவத்தையில் பூரீ உமாசங்கரானந்த சுவாமிகள் ஒழுங்கு செய்து நடத்திய திருமந்திர மகாநாட்டிற்குத் திருவாளர் சிவராஜா அவர்களே தகுதியுடையவராகக் கருதப்பட்டுத் தலைமை தாங்குமாறு அழைக்கப்பட்டார். ஒன்பது தந்திரங்கள் ஒவ்வொன்றின் மீதும் தகுதி வாய்ந்த அறிஞர்கள் உரையாற்றியபோது, தகுந்த முனனுரையும் தொகுப்புரையும் வழங்கி மாநாட்டிற்கு மெரு கூட்டினார் சிவராஜா அவர்கள்.
அவரது உள்ளத்தை மிக்குக் கவர்ந்த இன்னுமோரி திருமுறை மாணிக்க வாசக சுவாமிகள் அருளிய திருவாசகமாகும். ஈழத்துத் திரு நெறித் தமிழ் மன்றம், ஆண்டுதோறும், பதினேழா வது ஆண்டாக நடத்தி வந்த திருவாசக முற்றோதலில் பெரும் பங்கு கொண்டிருந்தார். மேலும் தாமாகவே கப்பித்தாவத்தை பூரீவிநாயகப் பெருமான் ஆலயத்திலும், பூரீபொன்னம்பல வாணேசர் ஆலயத்திலும் திருவாசக முற்றோதல் ஒழுங்கு செய்து நடத்தி வந்தார்.
சைவத் திருக்கோயில்களில் சமய நூல்களைக் கொண்ட நூல் நிலையம் அமைய வேண்டுமென்பது அவரது புத்தம் புதிய தோர் அருமையான கருத்து. அப்படியான ஒரு ஆரம்பத்தைத் தானாகவே கப்பிகாவத்தை பூரீ விநாயகப் பெருமான் ஆலயத் தில் தொடக்கி வைத்தார்.

Page 11
4
அமரர் சிவராஜா அவர்கள் "நல்லாரிணக்கம்" கொண்டி ருந்தார் என முன்னர்க் கூறினோம். இதற்கமைய, இந்தியாவி லும் இலங்கையிலுமுள்ள பெரு ஞானிகளோடு மிகத் தொடர்பு கொண்டிருந்தார். எமது நாட்டின் கண்ணே ஒளிபரப்பி விளங்கிய பூரீ சிவயோக சுவாமிகள், பூரீ கெங்காதரானந்த சுவாமிகள் ஆகியவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவ்விரு பெரியார்களது சிவஞானத் தொடர்பையும். பணியை யும் விளக்கி 1991ஆம் ஆண்டு, ஜனவரி 21ஆம் திகதியிட்டு வெளி யிட்ட பிரசுரம் எனது கைகளில் இப்போது திகழ்கின்றது. இதே போன்று நாவலர் பெருமான் மீதும் மிக்க ஈடுபாடுடையவர். சாதாரண மக்களுடனும் அன்புடன் பழகுவார். தகுந்த நேரங் களில் 'கூடுமெய்த் தொண்டர் குழாததுடன் கூடிப்" பிரார்த் தனை செய்தும், வேண்டுங்கால் நல்லுரை வழங்கியும், நலம் மிக நல்கி வந்தார். நல்ல ஞானியர்களுடன் பழகிய பழக்கத்தால், நல்ல பயன் தரு சந்தர்ப்பங்களை நற்சுவையுடன் பல வேளை களில் எமக்கெலலாம் சொல்லி வைத்தார்கள். இப்பெரியாரது பயன்தரு செயல்களையும், சாதனைகளையும் சொல்லச் சொல்லச் சொல்லில அடங்காது.
இப்பெரியாரது மறைவு தமிழ், சைவ உலகிற்கு ஈடுசெய்ய முடியாததோர் பேரிழப்பாகும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந் தவர்க்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமென்றால் அமரர் சிவராஜா அவர்களது வாழ்க்கையை எதுவிதத்தயக்கமின்றி எடுத்து காட்டி விடலாம். அவர்களது அருமைத் துணைவியாரும் அவரும் பூவும் மலரும் போலப் பிரிவிலாது வாழ்ந்து வந்தார்கள், ஈரூடலும் ஒருயிரும்போல என்று கூடக் கூறிவிடலாம். ஒருவர் விட்டு ஒருவர் பிரியாத இரட்டையாகள். அத்தகையதோர் அருமைத் துணை யாருக்கும் அன்னாரது அருமைச் சகோதர, சகோதரியர்களும் சகல உள்ளுர் உறவினர்க்கும் தமிழ், சைவ உலகின் மனம் கசிந்த அனுதாபம் உரியது.
சைவப் பெரியார் அமரர் சிவராஜா அவர்களுக்குத் 'தருவாய் உன் திருவடிக்கீழ் ஒரு தலை மறைவே' என்று நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பிரார்த்தித்து, வேண்டிக் கொள் Gaua DMT sis!
கொழும்பு-6 ܙ ஆ. குணநாயகம் 03-10-93

கொழும்புத் தமிழ்ச் சங்க அஞ்சலி திருமதி. கோ. சிவராசா அவர்கள் கொழும்பு-12
அம்மா,
தங்கள் கணவரும் சைவப் பெரியாரும் ஆகிய திரு. வே. ந.சிவராசா அவர்கள் சுவாமி விவேகானந்தர் சிகாகோ பேருரை நூற்றாண்டு விழாவுக்காகக் கல்கத்தா சென்று பின்பு இந்திய திருத்தல யாத்திரை மேற்கொண்டிருந்தபோது சென்னை யில் சிவபதம் எய்தியதையும் அங்கு நடந்த தகனக் கிரியைகளையும் அன்பர்கள் மூலமும் பத்திரிகைகள் மூலமும் அறிந்தோம். இவை ளை 3.10.93 நடைபெற்ற இச்சங்க ஆட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்தோம்.
இப்பெரியார் சைவம் தமிழ், ஆத்மீகம் ஆகியவற்றின் வளர்ச்சிகளுக்கும், யாழ்பல்கலைக் கழகம். வட-கிழக்கு மாகாண சபை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும், பிரதேச அபிவிருத்தி அமைச் சுக்கும், அரசுப் பொது நிருவாகத் துறைக்கும் பொதுத்தாபனங் களுக்கும் இச்சங்கத்திற்கும் டமையுணர்வொடு செய்த சிறந்த சேவைகளைச் சங்கத் தலைவர் அவர் களும் பொதுச் செயலாளரும் சபைக்குக் கூறினர். இரு நிமிடம் சபை இப்பெரியாரின் ஆத்ம சாந்திக்காக மெளன அஞ்சலி செய்தது. தங்களுக்கும் உறவினர் களுக்கும் அனுதாபம் தெரிவிப்பதெனச் சபை தீர்மானித்தது.
கொழும்பு தமிழ்ச் சங்கம் க.இ.க. கந்தசாமி பொதுச் செயலாளர் வெள்ளவத்தை 7.10.93, கொழும்பு-6-

Page 12
ஆன்மீகம், குடும்பம், முக்தி
சொல்லத் தகு வளம் எல்லாம் குலவிடும் துன்னையிலே எல்லையில் கீர்த்தி மருவு கொட்டிக் குளிப்பான்
இறைதாள் அல்லும் பகலும் தொழுபவர் தீவினை அற்றவராய் வெல்லப் பெறுவர் பிறவிப் பிணியின் விசனங்களே.
- கொட்டிக் குளிப்பான் விநாயகர் பதிகம்
நான்கு திசையும் கோவில்கள் சூழ்ந்த துன்னாலை தெற்குப் பகுதியில் திரு. நடராஜா நல்லநாயகம் தம்பதிகள் வசித்து வந்தனர். திரு. வேலுப்பிள்ளை நடராஜா அவர்கள் புனித இருதயக் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றி வந்தார். இவர் தினமும் அதிகாலை கொட்டிக் - குளிப்பான் பிள்ளை யாரை வணங்கிய பின்பே தம் அன்றாடப் பணிகளை மேற்கொள் வார் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் கந்தபுராணம்
படிப்பதில் அதிக ஆனந்தம் கொள்வார்.
"நல்லறம் மிக்க இல்லத்திலிருந்து ஒழுக்கமுடைய மக்கள் பிறக்கின்றனர்"
என்ற சுவாமி கெங்காதரானந்தாவின் வாக்குக் கிணங்க திரு. நடராஜா, நல்லநாயகம் தம்பதிகள் செய்த அருமதவப் பயனாக 1934 ஆம் வருடம் ஐப்பசி மாதம் 7ஆம் திகதி திரு. சிவராஜா அவர்கள் மூத்த புதல்வனாகப் பிறந்தார். இவர் திருமதி. அம்பாளின் அன்புக் கணவர். காலம் சென்ற நித்தியலக்ஷமி, பாலசுப்ரமணியம், டாக்டர் பாலகிருஷ்ணன், வீமவேற்பிள்ளை, சரஸ்வதி, பகவதி, சச்சிதானந்தமூர்த்தி, திரு. ஞானசம்பந்த பிள்ளை, விக்னேஸ்வரபிள்ளை ஆகியோரின் அன்பு அண்ணன்.
கல்வியும் உத்தியோகப் பணிகளும்.
திரு. சிவராஜா அவர்கள் ஆரம்பக் கல்வியை பருத்தித்துறை
ஹாட்லிக் கல்லூரியிலும், உயர்கல்வியைப் பேராதனை பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தமது 21ஆவது வயதிலேயே பட்டதாரி யாக வெளியேறிய இவர். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில்
ஓராண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.

அதன் பின்பு இலங்கை நிர்வாகப் பரீட்சையில்(SLAS) தேறி அரசிறை உத்தியோகத்தவராகவும் (DRO) பின்னர் உள்ளுராட்சி உதவி ஆணையாளராகவும் (ACLG) வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் பணியாற்றினார்.
முகாமைத் திறமையும், உத்தியோகத்தர்களோடு அதிகாரத் தோரணை சற்றுமின்றி விநயமாகப் பழகும் உயாந்த மனப் பாங்கும். பொது மக்களிடையே காட்சிக்கு எளியவராய், இனிய சொலலினராய் விளங்கிய நேயப்போக்கும், அவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் பதவி உயர்வுக்கும் புகழ் மேம்பாட்டிற்கும் ஏதுவாயின.
தமிழ் மொழிக்கும், இந்துசமய வளர்ச்சிக்கும் தன்னாலி யன்றதைச் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் துடிப்பும் அவர் உயிர் மூச்சாக இருந்தது.
அரசமொழி திணைக்களத்தில் தமிழ்ப்பிரிவில் பொறுப் புடைய உதவி ஆணையாளராகத் திகழ்ந்த காலை, பல்கலைச் சொற்தொகுதிகள வெளியீட்டுக்கும், அரச திணைக்களங்களில் பிரயோகிக்கப்படுவனவும், பொதுமக்கள் பாவனைக்குரியனவு மாகிய படிவங்கள் தமிழில் வெளியிடப்படவும் ஆவன செய்தார்.
இந்நாளில் பொது நிர்வாகத் துறையில் முதுநிலைக் கல்வியை (MPA) பூர்த்தி செய்தார். நிதி அமைச்சரவையில் சிரேட்ட துணைச் செயலாளராகப் பணியாற்றினார்,
அந்நாளில் இந்து கலாச்சார அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்ட வேளை இவரது சேவை நாடப்பட்டது. இரு சிவராஜா அவர்கள் இந்து கலாச்சார அமைச்சில் பணிப் பாளர் பதவியை ஏற்று இந்துசமய அபிவிருத்திக்குப் பல அாய திட்டங்கள் வகுத்துச் செயலாற்றினார்.
திரு சிவராஜா அவர்கள் ஆற்றிய சிறப்புப் பணிகளுள் முக்கியமாகச் சொல்லத்தக்கது, சில இந்து ஆலயங்களில் நடை முறையில் இருந்த உயிர்ப்பலி இடும் கொடிய வழக்கத்தைச் சட்ட ரீதியாக ஒழித்தமையாகும்.
சிதைந்துபோன கோவில்களைப் புனருத்தாரணம் செய்ய உதவியும் ஆலய வரலாறுகள் எழுத அருந்துணை நின்றும் சொல் லற்கரும் தொண்டுகள் பல புரிந்தார்.
1983 இனக்கலவரத்தின் பின் யாழ்ப்பாணம் சென்ற இவர்,
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் திரு. வித்தியானந்தனின்
2۔سے

Page 13
18
அழைப்பின் பேரில் யாழ் பல்கலைக் கழகத்தில் பதிவாளராகப் பணிபுரிந்தார்.
பல்கலைக் கழக மாணவர் பலருக்கு வழிகாட்டியாகவும் தோழராகவும் இருந்து கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்தார்.
அதன்பின்பு 1989ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாண சபை உருவாக்கப்பட்ட போது அரசு தரப்பில் அதன் பிரதம செயலாள ராசு சிறிதுகாலம் இருந்து பின்பு அரசாங்க உத்தியோகத்தில் இருந்து ஓய்வு பெற்றார்.
அதன் பிறகும் வித்தியோதயா பல்கலைக் கழகத்தில் பகுதி நேர விரிவுரையாளராகவும், UNICEF cDA போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கட்டுரைகள் எழுதியும் வந்தார்.
இவர் உத்தியோக பூர்வமாக அவுஸ்திரேலியா, இங்கி லாந்து, ஜப்பான் மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இநதயா ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய் துள்ளார்.
ஆன்மீகத் துறையில்.
உத்தியோகப் பருவத் தொடக்க காலத்தில் திருகோண மலையில் வாழ்ந்த நாட்களில் சிவயோக சமாஜ அருள் நெறிப் பீடக்குருமணி சுவாமி கங்காதரானந்தாவின் சீடரானார்.
'தன்னறிவு தெளியும் வரையில் சான்றோன்
ஒருவனை நாடி நிற்பதால் பெரும்பயன் உண்டு"
என்ற சுவாமி கெங்காதரானந்தாவின் கூற்றுப்படி அவரிடமே ஆன்மீக நெறியைப் பயின்றார். சுவாமிஜியின் வஜனாம்ருதம் மற்றும் அவர் மணிமொழிகளை தொகுத்தும் ஆங்கில, சிங்கள மொழிகளில் மொழிபெயர்த்தும் வெளியிட்டார்.
'அன்பு அறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு'
என்ற திருவள்ளுவரின் வாக்குப்படி பொருட் செல்வத்தில் ஈடுபாடற்று அருட்செல்வத்தை ஈட்டி, சான்றோனாய் வையத் தில் வாழ்வாங்கு வாழ்ந்து, எமக்கும் மண்ணில் நல்லவண்ணம் வாழ வழிகாடடினார்.

9 அன்பு மகனாக.
ஈன்ற பொழுதில் பெரிது உவக்கும்-தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்"
என்ற திருவள்ளுவர் வாக்குப்படி பெற்றோருக்கு பெருமையும் உவகையும் ஈந்த மகனாக திரு. சிவராஜா அவர்கள் விளங்கினார். கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் மற்ற மாணவரைப்போல ஆங்கிலேய உடை அணியாது. எளிமையாக வேஷ்டி சட்டை அணிந்து வந்தார். தன் குடும்பத்தில் நிறைந்த அன்பும் மிகுந்த பொறுப்பு உணர்ச்சியும் கொண்ட இவர், இளைய சகோதரர் களின் கல்லூரி, பல்கலைக்கழக செலவுகளை மகிழ்வுடன் பொறுப் பேற்றார்.
மன்னாரில் உத்தியோகத்தில் இருந்தபோது பள்ளிக்கூட விடுமுறை நாட்களில் இளைய சகோதரர்களும் பெற்றோரும் பெருமையாக திருக்கேதீஸ்வரம் யாத்திரை போய் வருவார்கள்.
தந்தை காட்டிய வழியில் கோவில் பற்று உள்ளவராகவும், சமயகுருமாரில் ஆதரவுள்ளவராகவும் கோவில் கூட்டுப்பிரார்த்த னைகளில் சிறுவர்களை ஈடுபடுத்தியும் தந்தைக்குப் பெருமை சேர்த்தார்.
அன்புக் கணவராக.
1967 ஆம் ஆண்டு இவர் தம் நண்பர் திரு. நல்லைநாதனை தன் தங்கை நித்தியலசுஷ்மிக்கு மணம் முடித்து வைத்து, வின்னர் நல்லைநாதனின் சகோதரியான அம்பாளை தான் திருமணம் புரிந்தார்.
தன் மனைவியின் சந்தோஷமே தன் சந்தோஷமென்று வாழ்ந்தார். குழந்தைப்பேறு கிடைக்காத இவர் தம் மனைவி யிடம்
"தாயே! உனக்கென்று ஒரு குழந்தை இல்லாவிட்டாலும் உலகத்துக் குழந்தைகள் எல்லாருக்கும் நீ தாய் போல"
என்று பூஜீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் மனைவி சாரதா
தேவிக்குக் கூறியதைக் கூறுவார்.
திரு. சிவராஜா அவர்கள் தன் மனைவியையும் ஆலயங்
களிலும் ஆன்மீகத் துறையிலும் அதிக ஈடுபாடு கொள்ள

Page 14
20
வைத்தார். இருவரும் கணவன் மனைவியாகவும் சிறந்த நண்பர் களாகவும் வாழ்ந்தார்கள். -
திரு. சிவராஜா அவர்கள் தரும காரியங்களில், கோவில் அன்னதானங்களில் நிறைய ஈடுபாடு கொண்டிருந்தார்.
பதினாறு செல்வங்களில் ஒரு செல்வமான 'தடைகள் வாராத கொடை' மனைவி அம்பாளினால் அவருக்குக் கிடைத்தது. கணவரின் தருமகாரியங்களுக்கு எதுவித தடையும் கூறாது. அவர் மனைவி அம்பாளும் சேர்ந்து செய்து மகிழ்ந்தார்.
இருவரும் நிறைய திருத்தல யாத்திரைகள் போயிருக்கிறார் கள். இறுதியாகச் சென்ற தலயாத்திரையிலும் காசி, ரிஷிகேசம். ஹரித்துவாரம் வரை ஒன்றாகச் சென்று திரும்பிய வேளை நோய்வாய்ப்பட்டு 17-09-93இல் சென்னை விஜயா மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
இவருக்கு மனைவி அம்பாளே இரவு பகல் பாராது, கண் துஞ்சாது அன்புடன் பணிவிடை செய்தார்.
காசியைத் தரிசித்த அவர் கண்கள் இந்த நீச உலகில் வேறெதையும் காண விரும்பாது, 27-9-93 அன்று நிரந்தரமாக மூடிககொண்டன. உறவினர்கள் யாரும் அருகிலில்லாத அந்த அவல நேரத்தில் உத்தம நண்பர்கள் துணையோடு மனைவி அமபாளே தம் கையால் அவர் இறுதிக் கடன்களை நிறைவேற்றி
a
அன்பு அண்ணனாக.
"அண்ணா" என்று அன்போடும் பக்தியோடும் ஒன்பது இளைய சகோதர, சகோதரிகளாலும், 'ஆசை அண்ணா" என்று பாசத்தோடு ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளாலும் "மகனே சிவராசா" என்று தாய்வழி, தந்தைவழி மூத்த உறவினராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.
ஒரு தமையனுக்குரிய அன்போடும் தந்தைக்குரிய முதிர்ச்சி யோடும் தன் இளையவர்களை வழி நடத்தினார்.
தம்பி! என்று ஆறுதலாக அழைத்து அவர் கூறும் அறிவுரை களை வாழ்க்கையின் விசனங்களைத் தீர்க்கும் மருந்தாக இளைய வர்கள் உணர்ந்தார்கள். இளையவர்களின் குழந்தைகளைக் கொணும் பொழுதெல்லாம் குதூகலத்துடன் தேவாரம் சால்லிக் கொடுப்பார்.

21
அவர் தம் கையால் கடைசியாக 1-9-93 தம்பி திருவுக்கு எழுதிய கடிதத்தில் "இவ்வுலகத்தில் எமது மனமும் உடலும் தூய்மையாகவும் திடமாகவும் இருக்க ஒரே வழி மதுவையும் மாமிசத்தையும் கைவிடுதல் ஆகும். சத்துவஊணவை உட்கொண்டு உயர்ந்த சாத்வீக மனிதராய் நாம் இப் பிறப்பிலேயே வாழலாம். எங்கள் குழந்தைகளையும் நல்ல இந்துக்களாக வாழ வழிகாட்டல் வேண்டும்" என்று எல்லோருக்கும் அறிவுரை கூறியிருந்தார்.
அவர் சுகவீனமுற்று மருத்துவமனையில் இருந்தபோது தினமும் தொலைபேசியில் எல்லாத் தம்பியரும் அண்ணியுடன் பேசி வந்தார்கள். ஆனால் நோயின் கடுமை தெரியாமல் அண்ணா வின் அருகில் யாரும் இருக்கவில்லை என்ற ஏக்கத்தில் துடிக் கிறார்கள்.
அவரது மூன்றாவது தம்பி வீமவேற்பிள்ளை இந்தியா சென்று அண்ணாவின் 31வது நாள் அந்தியேட்டிக் கடன்களை
இராமேஸ்வரத்தில் முடித்துவிட்டு அண்ணியையும் அழைத்து இலங்கை செல்வார்.
முக்திப் பேறு
"எல்லாப் பிறப்பும் பிறந் திளைத்தேன் எம்பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"
என்ற மாணிக்கவாசகரின் திருவாசகத்தை ஓயாது ஓதி உணர்ந்த தால் இமயம் வரை சென்று இறைவனைத் தரிசிக்கும் பேறு பெற்றார். காசியை நினைத்தாலே முக்தி என்பர். கண்மூடுமுன் சாசி விஸ்வநாதரைத் தரிசித்த அவரது தூய ஆத்மா, இறைவன் திருவடி நிழலை அடைந்து வீடுபேறு பெற்று பேரின்பம் துய்க்கும் என்பதில் ஐயமில்லை.
-அமரர் திரு. வி. என். சிவராஜா அவர்களின் தம்பியின் மனைவி திருமதி நளாயினி சச்சிதானந்தமூர்த்தி.

Page 15
ஆத்மீக ஞானி
துன்னாலை வடக்குக் கரவெட்டி வேலுப்பிள்ளை நடராஜா ஆசிரியரின் முதல் மகன் சிவராஜா அவர்கள் 27-09-93 திங்கட் கிழமை தனியார் மருத்துவமனையில் சென்னையில் பூதவுடல் நீத்து புகழுடம்பு பெற்றார்.
தீர்த்தயாத்திரையை மேற்கொண்டு காசி வரை புனித தீர்த்தங்களில் நீராடித் தமது துணைவியாருடன் புண்ணிய தலங்களைத் தரிசிக்க மீண்டும் சென்னைக்கு வந்து திடீர் சுகவீன முற்றதன் காரணமாக விஜயா மருத்துவமனையில் அன்பு மனைவி அருகிருக்க அமரரானார்.
பேராதனைப் பல்கலைக் கழகக் கலை மாணிப் பட்டதாரி யான திரு சிவராஜா அவர்கள் யாழ் மத்திய கல்லூரியில் பட்ட தாரி ஆசிரியராகப் பதவியேற்றுச் சில காலத்தில் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையில் சித்திபெற்று, உள்ளூர் ஆட்சிச் சேவையில் உதவி ஆணையாளராக யாழ்ப்பாணம் திருகோண மலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களில் நிருவாக சேவையில் தமது கடமையை நேர்மையாகச் செய்துள்ளார்.
வவுனியாவில் உதவி ஆணையாளராகக் கடமையாற்றும் போது. திருக்கேஸ்வர நாதப் பெருமானிடம் அடிக்கடி சென்று வழிபட்டு வந்தது. ன் அச்சுவேலி சிவபூணி ச. குமாரசுவாமிக் குருக்கள், கொக்குவில் பூரீ. த குமாரசுவாமிப்புலவர் ஆகியோரது நட்புரிமையும் ஆத்மீக ஈடுபாடும் ஏற்பட்டது.
திருக்கேதீஸ்வரத்தில் நடைபெறும் திருவாசக விழாவிற்குச் சென்று பத்து நாட்களும் திருக்கேதீஸ்வ்ரப் பெருமானை வழி படுவதும், திருவாதவூரடிகள் புராணத்தைக் கேட்பதும், திருவாசகம் முற்றோதலில் பங்குபற்றுதலும் சிவராஜா அவர் களது ஆத்மீக ஞானத்தை வளர்க்கப் பெரிதும் உதவின.
சைவ ஆசார சீலராக சமய வாழ்வில் பற்று உடையவராக புராண படனவிருப்புடையவராக விளங்கிய சிவராஜா அவர்கள் தமது இயல்புக்கேற்ப ஒழுகும் தன்மைவாய்ந்த கோகிலாம்பாள் அவர்களை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று இல்லறமாம் நல்லறத்தை இனிதே நடத்தி வருவாராயினார். அறநெறிப்பட்ட வாழ்க்கையில் ஆலய வழிபாடும், அடியார் இணக்கமும், பக்தி நெறியில் ஈடுபாடும் சமய நூல்களின் ஆராய்ச்சியும் முக்கிய பொழுது போக்குகளாக அமைந்தன.

23
திருகோணமலையில், சிவயோக சமாஜத்தின் தொடர்பும் அதன் தாபகராகிய சுவாமி கெங்காதரானந்த ஜீ அவர்களது உறவும் ஏற்பட்டதைப் பெரும்பாக்கியமாகவே கருதினார். சமூக சேவையில் இயல்பாகவே விருப்புடையவரது ஆர்வம் சிவயோக சமாஜத்தினால் வளர்ச்சியுற்றது.
1967ஆம் ஆண்டு அரச கரும மொழித் திணைக்களத்தில் தமிழ்மொழி நிருவாகத்திற்குப் பொறுப்பான உதவி ஆணை யாளராகக் கடமையேற்றதன் பின் மொழி ஆராய்ச்சி மதியுரைக் குழுத் தலைவராயிருந்து 1970 ஆம் ஆண்டு அரசாங்க அமைப்புகள் உத்தியோக பதவிப் பெயர்கள் தொகுதி (ஆங்கிலம்-தமிழ்) வெளியிடுதற்குப் பெரிதும் துணை செய்தார்.
உள்ளூராட்சித் துறையில் புலமைப்பரிசில் பெற்று அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் விசேடப் பயிற்சி பெற்று மீண்டும் எமது நாட்டுக்கு வந்து நிருவாகத்துறையில் அரும்பெரும் சேவையாற்றியவர் என்பது குறிப்பிடற்குரியது.
கொழும்பில், சாஞ்சி ஆராய்ச்சித் தோட்ட த்தில் வசிக்கும் பொது சைவத் தமிழ்க் கழகம் ஒன்றினைத் தாபித்து, தலைவரா யிருந்து (1) ஜகந்நாத ஷண்முகர் வருகை, (2) கந்தர் சஷ்டிக் கவசம் (3)கதிர்காமக்கந்தன் திருப்புகழ் முதலான பல நூல்களைப் பதிப்பித்தார்.
கப்பித்தாவத்தை கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை பண்டாரநாயக்க மாவத்தை சிவசுட்பிரமணிய சுவாமி கோவில் முதலான இடங்களில் புராண படன நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பித்து வரும் வழமை உடையவர்.
இலங்கை வானொலியிலும் சமய விடயங்களை ஆழமாகச் சிந்தித்துப் பேசும் ஆற்றல் மிகுந்தவரானார். இதன் விளைவாக கொழும்புஉருத்திராமாவத்தையில் சுவாமி சிவானந்த சரஸ்வதிஷி ஓம்ஷர் அவர்கள் நடத்திய திருமூலர் விழாவிலும், இந்து சமய இந்துக் கலாசார அமைச்சு பம்பலப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடத்திய பக்திப்பெருவிழா காலை கருத்தரங்கிலும் தலைமை தாங்கி நடத்தி வைத்த பெருமைக்குரியவரானார்.

Page 16
24
Ժաամu60ծի
இந்து சமய இந்துக் கலாசார அமைச்சின் முதலாவது இந்து சமயப் பணிப்பாளராகக் கடமையாற்றும்போது, மாத்தறை கதிர்காம மடத்துக்கு அருகில் உள்ள முருகன் கோயில் புனரமைப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டார். அனைத் துலக இந்து மகாநாடு நடப்பதற்கான ஒழுங்குகளை மேற் கொண்டார். இலங்கையில் உள்ள இந்துக் கோயில்கள் பலவற்றை யும் பதிவு செய்வதற்கு இந்து சமய இந்துக் கலாசார அமைச்சிலே பூர்வாங்க வேலைகள் அனைத்தையும் தொடக்கி வைத்தார்.
ஆலய புனருத்தாரண வேலைகள், திருக்கேதீஸ்வரக் குரு குலம், அந்தணச் சிறார் கல்வி கற்கும், வேதாகம பாடசாலை, அறநெறிப் பாடசாலை போன்றவை நன்கு பேணப்பட வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டினார்.
இந்தியாவிலே பாடல் பெற்ற தலங்களுக்கு யாத்திரை செய்து தல விசேடங்கள் பற்றி அறிந்து, அவற்றின் சிறப்புக்களை யாவரும் அறியும்படி செய்தார்.
சமயப் பெரியார்களை நன்கு மதித்து, உபசரித்து, அவர்களுடன் அன்புடனும் பண்புடனும் பழகுவார்.
சிவஞானவாரிதி கு. குருசாமி
தினகரன் 3.10.93

அவருக்கு மரணமில்லை
சிலருடைய வாழ்க்கை என்றைக்கும் மற்றவர்களுக்கு வியப்பூட்டுவதாகவும், பார்த்துப் பின் பற்றத்தக்கதாயும், ஒப்பற்ற தாயும் அமைந்து விடுகின்றது. உயர்குணம், சான்றாண்மை தலைமைப் பண்பு, தயாளசிந்தை என்பன ஒரு மனிதரிடத்தில் ஒருங்குசேர அமைவதென்பது அபூர்வமாகிவிட்ட இக்காலத்தில், இத்தகைய குணங்கள் அமையப் பெற்ற ஒருவர் அடக்கமாக வாழ்ந்து, அமைதியாக மறைந்து போயிருப்பது ஈடு செய்ய முடியாத ஒரு இழப்புத்தான்.
இத்தகைய குணங்கள் அமையப் பெற்றவ்ர் அமரர் வே. ந சிவராஜா.
எத்தனையோ சிறந்த மனிதர்களை இலங்கையின் வளர்ச்சிக்கு அளித்த வடமராட்சியில், துன்னாலையில் பிறந்தவர் திரு. சிவராஜா. தகப்பனார் திரு. வே. நடராஜா, பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர். தாயார் திருமதி நல்லநாயகம். பத்து குழந்தைகள். மூவர் பெண்கள், ஏழு ஆண்கள். அவர்களுள் மூத்தவர் இளமைப் பருவமே சுறுசுறுப்பும், கடவுள் பக்தியும் இரக்க குணமும் கொண்டதாக அமையப் பெற்று பிறரால் பாராட்டப் பெறும் தகைமைகள் பெற்றிருந்தார் திரு சிவ ராஜா.
திரு. இருதயக்கல்லூரியிலும், ஹாட்லிக் கல்லூரியிலும் குறிப்பிடத்தக்க மாணவனாயிருந்தார். ஹாட்லியிலிருந்து பல்கலைக் கழகப் படிப்பிற்கு 1953இல் தேர்வானார். 1956இல் கலையியல் பட்டதாரியாக வெளியேறினார்.
பட்டதாரியாக வெளியேறிய இவர் 1956-37 காலப் பகுதியில் யாழ் மத்தியக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றி னார். 1937 பிற்பகுதியிலேயே டி.ஆர் ஒ. பரீட்சையில் வெற்றி பெற்றார். பயிற்சிக்கால நியமனமாக (Training Appointment) மட்டக்களப்பிற்குச் சென்றார்.
டி.ஆர்.ஒ.வாக முதல் நியமனம் பெற்று, மன்னார் நானாட்டானிற்குச் சென்றார். உற்சாகமும் கனிவும் எதையும் ஒழுங்குறச் செய்யும் திறனும் கொண்ட இந்த இளைஞர், அந்தப் பகுதி மக்களின் நல்லபிமானத்திற்கு வெகு விரைவிலேயே

Page 17
26
ஆளானார். தங்களின் உன்னதமான அன்பராகவே மக்கள் இவரைக் கருதினார்கள். நானாட்டானில் அமைந்த ஒரு பாட சாலைக்கு இவர் மேல் கொண்ட அன்பின் அடையாளமாக "சிவராஜா வித்தியாலயம்" என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.
1959g) â gav råvarps SF6đảo G3Fř 6ý6iv (Ceylon Civil Service) பரீட்சையில் தேறி திருகோண மலையில் உள்ளூராட்சி உதவி ஆணையாளராக (A CL.G.) நியமனமானார். இதே பதவியோடு வவுனியா, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய இடங் களில் சிறந்த சேவை ஆற்றினார்.
திருகோணமலையில் 1960 இல்(A.C.LG) நியமனம் பெற்றபொழுது திரிகோண மலையில் பணியாற்றிய காலத்தில் சிவயோக சமாஜத்தின் தொடர்பும் உண்டாயிற்று. அதன் நிறுவனராகிய சுவாமி கெங்காதரானந்தாஜியின் பணி களில் பக்கபலமாக நின்று சமாஜ வளர்ச்சிக்கு உதவியதை இவர் தனது பெரும்பாக்கியமாகக் கருதினார்.
1966இல் இவருக்கு ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் புலமைப் பரிசில் கிடைத்தது. அங்கிருந்து திரும்பியதும் உள்ளூராட்சி அமைச்சிலேயே கொழும்பில் உள்ளூராட்சி உதவி ஆணையாள ராகப் பதவியேற்றார்.
1967 பெப்ரவரி முதலாம் திகதி திருக்கேதீஸ்வரத்தில் இவாது திருமணம் நிகழ்ந்தது. இளவாலையின் சிறந்த குடும்பத்தைச் சேர்ந்த கோகிலாம்பாள் இவரின் வாழ்க்கைத் துணை வியானார் மனமொத்த இனிய தாம்பத்யமாக அமைந்தது இவர்களின் வாழ்க்கை, தன் குடும்பத்தை மட்டுமன்றி, தன் உடன் பிறந்தவர்களையும் மேனிலைக்கு கொண்டு வருவதில் மிகந்த அக்கறையும் ஆர்வமும் காட்டினார் இவர். நேர்மையும், இரக்கமும், ஒழுங்கம் எப்போதும் இவர் செயல்களில் அடி நாதமாக மிளிர்ந்தன.
1967-1970இல் அரச கரும மொழித்திணைக் களத்தில் இவர் ஆற்றிய பணி மிகவும் பயன் நிறைந்தது. தமிழ்மொழி பெயர்ப்பு வேலை உற்சாகமாக நடந்த காலப்பகுதி இது.
1974 மே-யூலை மாதங்களில் யப்பானுக்கும், 1975இல், டெல்லிக்கும் தன் பணி சம்பந்தமாக இவர் பயிற்சி பெறச் சென்றார். 1979இல் இங்கிலாந்துக்கும் பணி நிமித்தம் சென்று திரும்பினார். * Հ

27
1979இல் இந்துக் கலாச்சார அமைச்சின் முதல் பணிப் பாளராகி, அதை ஒழுங்கமைத்து உருவாக்குவதில் பெருங்கவனம் செலுத்தினார். ஓய்வின்றி உழைத்து அதைச் சாதித்தார். 1981 தையில் மதுரையில் நிகழ்ந்த உலகத் தமிழாராய்ச்ஓ மகாநாட்டிலும் பங்கேற்றார். இதே ஆண்டிலேயே நிதியமைச் சிற்கு மூத்த உதவிச் செயலாளராகச் சென்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளராக 1983இல் நியமிக்கப்பட்ட இவர், தனது தலைமைப் பண்பை முழுமையாக நிரூபித்தார். சிக்கலும் பல பற்றாக்குறைகளும் நிறைந்த காலப் பகுதியில், தன்னுடைய நிதானமும் அனுபவமும் வாய்ந்த பணித் திறனால் ஒப்பற்ற முறையில் பல்கலைக்கழகம் செயல்பட உறு துணையானார்.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பொது நலவாய நாடு களின் பல்கலைக்கழக மகாநாட்டில் இலங்கைப் பல்கலைக் கழகங்களின் பிரதிநிதியாக இவர் பங்கேற்றார்.
1983-1988 வரை யாழ் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய காலத்தில் அங்குள்ள பரமேஸ்வரன் ஆலயத்திற்கு ஒரு கோபுரம் அமைய முயற்சி எடுத்து அதில் வெற்றியும் gaört_rrữ. 1972 (g)ả. M. P.A. (Master of Public Administration) பட்டம் பெற்றார்.
1.9.1990இல் இவர் அரச பணியிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால் அது பெயரளவிலான ஒய்வாகவே இருந்தது.
இதே அண்டில் பொது நிர்வாக மாகாண சபைகள் அமைச்சின் ஆலோசகராகப் பணியேற்றார். பின்னரும் இவர் ஓயவில்லை. பொது நிர்வாக அதிகாரிகளக்கு பகுதிநேர விரிவுரைகள் செய்து அவர்களை நெறிப்படுக்த உகவினார். இவரது சோர்வறியா அர்ப்பணிப்பான உழைப்பு வடகிழக்கு மாகாண சபைக்கு கிடைத்தது இதன் முதலாவது தலைமைச் செயலாளராக அமர்ந்து இவர் ஆற்றிய பணி சொல்லில் அடங்காது விடாபிேடியாக அரசிடம் போராடி பெறக்கூடிய எல்லா வளங்களையும் பெற்று இச்சபையை உயிர்ப்பு. ஸ்ர இயங்க வைத்தார். தன் காலத்தில் வேலையற்ற படித்த இளைஞர் களுக்கு இவர் உருவாக்கிக் கொடுத்த வேலைவாய்ப்பு, தமிழ்ச் சமூகம் என்றும் மறக்க முடியாத ஒன்று.
பணியிலிருந்தபோதே ஆத்மீகத் துறையில் இருந்த தாட்டம், பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் மேலும் விரிவு

Page 18
28
பெற்றது. 1993 செப்டம்பர் 11,12,18, 19ஆம் திகதிகளின் கல்கத்தா மாநாட்டுக்கு, பூரீராம கிருஷ்ண மடத்தவருடனும் குழுவினருட னும் தன் துணைவியாருடனும் பயணமானார் இவர். உலக சமய மகாநாடு 1893இல் சிக்காக் கோவில் நடை பெற்றபோது அதில் சுவாமி விவேகானந்தர் இந்த சமய மேன்மை பற்றி பிாசங்கம் செய்தனர். அகன் நூற்றாண்டு நினைவாக இம்மகா நாடு நடைபெற்றது. 7993இல் ஆரம்பமான பயணம் பேலூர் மடம், தச்கிணேஷ்வர்,கமார் பூர், ஜயராம்பட்டி காசி, அலகபாத், திரிவேணி சங்கமம் வரை 15 9.93வரை நீடித்தது. 16-9-93இல் பயணச்தை முடித்துக் கொண்டு நிறைந்த மனதுடன் சென்னை திரும்பினார். நோய் உபாகை அப்போதே தொடங்கிற்று. வந்ததும் நண்பர் செ. கணேசலிங்கன் உதவியோடு வடபழநி விஜயா மருத்துவமனையில் சேர்ந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. உறுதியான மனதோடு சகித்துக் கொண்டார். நம்பிக்கையோடிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் 28.9.93 அதிகாலை 3 மணிவரை இறைவனடி சேர்ந்தார்.
அவரின் வாழ்க்கை எப்போதும் சளையாத உழைப்பாக இருந்தது. அவர் மன மும், செயலும் தூய்மையும் அர்ப்பணிப்பும் கொண்டவை. மிக எளிமையானவர் அவர். மலை போன்ற உறுதியும் தனக்குச் சரியெனத் தெரிந்தவற்றை செய்து முடிக்கிற ஆர்வமும் அவரின் பிறவிக்குணம், அவர் யாரையும் வெறுத்த இல்லை. ஆனால் தவறான எதற்கும் அவர் உடன்போனதில்லை. அவற்றிலிருந்து முற்றாக விலகிக் கொண்டார். இதுவே அவரின் எதிர்ப்பைத் தெரிவிக்கும் இயல்பு. அவர் ஒரு ஆன்மீகவாதி. மானிட நேயம் கொண்டவர். இவற்றை வாழ்நாள் முழுதும் கைக் கொண்டு நிறைவான வாழ்வு வாழ்ந்தவர்.
அவருக்கு என்றும் மரணமில்லை.
செ. யோகநாதன்

எல்லாம் சிவமயம்
நாமமும் சிவமயம், சிந்தனையும் சிவமயம். திரு. V.N.gif ராஜா அவர்கள் அறிவில் கடல்; பண்பின் உயர்ந்தவர்; ஆற்றலில் வல்லுனர்; சிந்தனையில் தோய்ந்தவர்; தொழிலில் சிறந்தவர்; செய்கையில் களஞ்சியம் போன்றவர்.
எமது ஒளவைப் பிராட்டியாரின்.
* நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொற் கேட்பதுவும் நன்றே - நல்லார்
குணங்கள் உரைப்பதுவும் நன்றே யவரோ
டிணங்கி இருப்பதுவும் நன்று" என்ற செய்யுளைப் போன்று எமக்கு அவரைப் போன்ற நல்லார் கிடைக்கப் பெற்றது நாம் செய்த புண்ணியப் பலனென்றே கருத வேண்டும்.
யாழ்குடா நாட்டுக்குப் பல பெரியார்களை உருவாக்கிய பெருமை உளது. ஆறுமுகி நாவலரைப் போன்ற அறிவாளிகளும் போகர் சுவாமிகள் போன்ற ஆத்மீக யோகிகளும் உளர். திரு. சிவராஜா அவர்கள் இரண்டும் இணைந்து திகழ்நதவர். அவரின் ஆத்மீக அலையில் அசைவு பெற்ற சிறியேன் சில வார்த்தைகள் அவரை நினைத்து எழுதுவது பிழையன்றோ.
இவரின் குணத்தை எந்த அளவு கோலினாலும் அளந்துவிட முடியாது. சிறு வயதினில் "ஆத்திசூடி' நன்றாக மனத்தில் பதியும் வண்ணம் படித்துள்ளார் போலும்,
அறம் செய்ய விரும்பு ஆறுவது சினம்"
என்பதற்கிணங்க தொடக்கம் முதல் இறுதிவரை வாழ்ந்து காட்டும் பண்பு பெற்றிருந்தார். சாதாரண மனிதன் வாழ்வதற்கு அவசிய தேவைகள் கிடைத்தால் போதும் என்று நினைப்பவர். மற்றவர்கள் தன்னைப் புகழவேண்டும் தான் பெரிய அறிவாளி என்ற குணமே இல்லாத நிலையில் இருந்தவர். தன் வேலை உண்டு தான் உண்டு என்பதுதான் சிந்தனை. வேறு எவரும் எதைக் கதைத்தாலும் 'எல்லாம் சிவன் செயல்" என்பதே அவரின் பொன் மொழியாக வருவதைக் கேட்கலாம்.

Page 19
30
மன்ம் ஒரு நிறைகுடம் போன்று என்றும் தளராமல் இருப்பதின் இரகசியம் எதுவாக இருக்கும்? குறைக் குடத்தில் வரும் எதிரொலியைப் போன்று சலனமான சூழ்நிலை வராமல் இருப்பதற்குக் காரணமே இவரின் பக்குவ நிலையாகும். அன்பு, அடக்கம், சாந்தம், தியாகம் அனைத்தும் மனத்தில் நிரப்பி வைத்துள்ளார். இவ்வாறு மனப்பக்குவம் பெற்ற ஒருவர் என்றும் போற்றிப் புகழ வேண்டியவர் அன்றோ!
சில சமயங்களில் நல்ல அறிவான கதைகளைக் கூறுவார். ஆத்மீக விளக்கங்களையும் மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதில் ஆனந்தம் அடைபவர். இத்தனையும் தன் செயல் என்று கூறுவ தில்லை "எல்லாம் சிவன் செயல்' என்பார். ஆண்டவன் ஆட்டு விக்கிறான். நான் ஆடுகிறேன். என்பது சிந்தனை.
* கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்"
இக் குறளின் பிரகாரம் தனது வாழ்க்கையை வகுத்துக் கொண்டவர் இறைவன் தாள் பணியும் பண்பு என்றும் அவரிடம் நிறைந்து நின்றது. சமயத்தில் ஊறிய பண்பினர் ஆனதினா லன்றோ எந்த ஜீவனையும் இறைவன் அவதாரமாக நினைப்பவர். சமயத்தை வளர்க்க வேண்டும் என்று அயராது பாடுபட்ட தகைமை அவரிடம் உள்ளங்கை நெல்லிக் கனியாகத் திகழ்ந்தது. வாழ்க்கையை அன்பு மயமாக அமைத்துக் கொண்டவர்.
* அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலர் அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருப்பாரே"
என்பது திருமூலரின் திருமந்திரம். இதற்கிணங்க அன்பே சிவமாய் வாழ்ந்தவர்.
நல்ல வாழ்க்கைத் துணைவி கிடைப்பதற்கும் நற்பலன்கள் புரிந்திருக்க வேண்டும்.
* மனைத்தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை."
என்பது குறள். குறளுக்கேற்ப மனைவியை அடைந்தார். நற்குணங்களும் நற்பண்பும் உடைய அம்மையார் அவர்கள் கணவனுடைய

விருப்புக்கேற்ப அளவறிந்து நடந்து பெருமை தேடிக் கொடுத் துள்ளார். இது இறைவன் கொடுத்த வரமாகவே அமைந் துள்ளது. பெயரிலும் சிவனுக்கேற்ற அம்பாளாகவே வாழ்ந்து வந்துள்ளார். இவர்களின் இல்வாழ்க்கை,
* அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது'
என்ற குறள் வாக்கினைப் போன்று திகழ்ந்தது.
படிப்பில் பட்டதாரியாகப் பட்டம் பெற்றுப் பல இடங் களில் தொழில் புரிந்துள்ளார். சைவ சமயத்தில் அசையாத நம்பிக்கை வைத்திருந்தார். எட்டுத் திசைகளிலும் ஒலிப்பது சிவனின் நாதமே எனற எண்ணம் மனத்தில் நிறைந்திருந்தபடி யால் எக்கோணத்திலிருந்தாலும் சிவ தியானத்தை மறக்கவில்லை. தியான சிந்தனை வரும்பொழுது மனதில் அமைதி வந்து விடு கின்றது. தொழிலில தென்படும எதிர் நீச்கல்கள் எல்லாவற்றை யும் தயான சிந்தனையுடன் எதிர் நிற்காமல் தன் வழியே போக விடும் எண்ணம கொணடவர். ‘அடிபட்டவனுக்குத்தான் அடியின் வலி புரியும்" என்பார்.
பலயோகிகள் ஞானிகளின் தரிசனம் கிடைக்கப் பெற்றவர். யாழ்ப்பாணத்து யோகர் சுவாமிகளுடனும், திருக்கோணமலை சிவயோக சமாஜத்து பூரீமத் சுவாமி கெங்காதரானந்த "அவர்களு டனும் நெருங்கிய தொடர்புடையவர். சிவபுராண நாட்டமே பூனிமத சுவாமி கெங்காதரானந்தா அவர்களின் நிழலில் வளர்ந்தது என்று பல முறைகளில் பகர்ந்துள்ளார். உல்லாசப் பயணததைவிட ஆத்மீகப் பயணமே சிறந்தது என நினைத்து ஆத்மீகப் பயணங்கள் செய்துள்ளார்.
எல்லாச் சமயங்களும் ஒரே நோக்கம் உடையவை, பக்தி மார்க்கமே எல்லாச் சமயங்களிலும் தென்படுகின்றது என்ற
அசையாத நம்பிக்கை வைத்திருநதார். ஒருமுறை பூரீ சத்திய சாயிபாபாவின் முத்திரைச் சன்னத்தைக் கூர்ந்து நோக்கிய
வண்ணம் "இதில் எல்லாச் சமயங்களும் ஒரு மரநிழலில் இருக்கும் அற்புதத்தைக் கண்டேன்' என்று ஆனந்தத்துடன்
விளக்கியதைக் கண்டோம்.
சிவனடியார் கூட்டத்துள் தானும் அடியானாக இருந்து காட்டியுள்ளார். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் தனக்கென்று வைப்பதில்லை. உடனே தான தர்மம் தான் மனத்தில் வரும்.

Page 20
32.
இறைவன் படைத்த அனைத்து ஜீவன்களையும் அவர் குழந்த்ை களாகப் பாவனை செய்வது போல, குழந்தைகள் இல்லை என்ற, குறையே இல்லாமல் உடன் பிறப்புக்கள் அனைவரையும் குழந்தை களாகப் பராமரித்துள்ளார். எந்த ஜீவனுக்கு எது அவசியமோ தன்னிடம் இருப்பதைத் தடையில்லாமல் வழங்கி கருணை சுரந்தவர். வலக்கை புரிவதை இடக்கை அறியக் கூடாது என்ற சிந்தனையாளர். எனவே சில சமயங்களில் யோகிகளைப் போலவும் நடந்துள்ளார். கோபம் வராது; வெறுப்பும் வராது; ஆணவம் வராது; எல்லாம் சிவன் செயல் என்று தான் வரும்.
மாணிக்கவாசகரின் சிவபுராணம் என்றால் இவரின் உயிர் நாடி. சிவபுராணத்தைச் சிவத்தலங்களில் விசேச தினங்களில் அடியார்கள் கூட்டத்தைக் கூட்டிச் சிறப்பாக ஓதி முடிப்பார். தனது சொந்தச் செலவில் தேவாரங்கள், சமயச் சொற்பொழிவு கள் என்பவற்றை அச்சிடுவித்து இலவசமாக வழங்கும் கொடை வள்ளல். இது இறைவனால் இவருக்கு இட்ட ஆக்ஞையோ தெரிய வில்லை.
சிவபூமியாகிய இந்தியாவிற்கு யாத்திரை சென்று தனது பூத உடலை அம்மண்ணிலே சமர்ப்பித்த செயலும் சிவன் செய லாகத்தான் இருக்கவேண்டும். W ~
'நமச்சிவாய வாழ்க நாதன் தாழ்வாழ்க
இமைப்பொழுதும் மென்னெஞ்சினிங்கா தான்றாள் வாழ்க" என்று வாழ்ந்ததால் தானோ,
'உங்கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம்"
என்று அரவணைத்து விட்டார் இறைவன்.
அவரது மறைவு எம் அனைவரையும் ஆறாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் ஆத்ம சாந்திக்காக நாம் அனை வரும் பிரார்த்திப்போமாக.
லோகநாயகி சற்குணநாதன்

இயற்கையின் குரூரம்
'கல்கத்தாவிற்கு விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழி வின் நூற்றாண்டு விழாவிற்குக் குழுவாகச் செல்கிறோம். அவ்விழா முடிந்தபின் காசி, திருவேனிசங்கமம் முடித்து சென்னை வந்து ஒய்வாகத் தங்குவோம். செப்டம்பர் 20 ஆம் திகதி வரையில் வருவோம்' என நண்பர் சிவராசா கொழும்பிலிருந்தே எழுதி யிருந்தார். ஆவ லோடு அவரது வருகையை எதிர்பார்த்திருந் தேன். ஆனால் செப்டம்பர் 17 அன்று நள்ளிரவு வரையில் எங்கள் வீட்டு வாயிற்படி வரையிலேயே அவரால் வரமுடிந்தது. ஆற்றா நோயுடன் படிக்கட்டிலேயே உட்கார்ந்து விட்டார். உடல் நிலையைப் பார்த்து அச்சமுற்றேன்; பதட்டமடைந்தேன்.
சென்னையில் பிரபலமான விஜயா ஆஸ்பத்திரி எங்கள் வீட்டுக்கு அண்மையிலேயே கால்மணி நேரத்திலேயே அங்கு சேர்த்துவிட்டோம். 15 நிமிடங்களிலேயே இதயக் கோளாறு எதுவும் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது. பித்தப்பையில் இருந்த கல் குடலுக்குச் செல்லும் தொடர்பை அடைத்துவிட்டது. ரெயில் வண்டியில் 36 மணிநேரமாக இப்பிரச்சனையால் வாந்தி யுடன் துன்பப்படும் காலத்தில் உடலின் உட்புறத்தில் தொற்று களால் பல பிரச்சனைகள். அவற்றைக் கட்டுப்படுத்தி ஆபரேசன் செய்து பித்தப்பையை எடுத்து விடுவதற்காக டாக்டர்கள் உடலைத் தேற்றி வந்தனர்.
இன்னும் இரண்டு நாளில் ஆபரேசன் என்ற மன ஆறுத லுடன் இருந்த வேளை செப்டம்பர் 27 காலை எதிர்பாராது உடலதிர்ச்சி ஏற்பட்டு நிலைமை மோசமடைந்தது. டாக்டர் களின் முயற்சி எதுவும் பலனளிக்கவில்லை. விடியும் அதிகாலை 3 மணிவரையில் நடைபெற்ற இயற்கையின் குரூரத்தை எவரா லும் வென்று விட முடியவில்லை.
1981இல் நிதி அமைச்சு அலுவலகத்தில் அவர் பணிபுரிந்த வேளை ஓரளவு அறிமுகமான போதும் 1983ன் பின்னர் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றேன். வடகிழக்கு மாகாண செயலாளராகப் பதவி ஏற்கும் காலத்திலிருந்து மேலும் மேலும் நெருக்கம் ஏற்பட்டது. அன்புடனும் பண்புடனும் பழகும் தனித் தன்மை வாய்ந்த மனிதர். அரசு நிர்வாகத்தில் அவருக்கிருந்த அறிவும் ஆற்றலும் அனுபவமும் வியக்கத்தக்கது. சில ஆண்டு களிலேயே வடகிழக்குப் பகுதியைச் சீராக்கி விட முடியும் என்ற
3 سے

Page 21
34
தன்னம்பிக்கையுடன் செயலாற்றினார். ஆனால் அரசியல் நிலைமைகள் அவரை அங்கு பணியாற்ற முடியாது ஒதுங்கச் செய்தது.
கருத்தியலில் அவரும் நானும் எதிர்முனைகளில் நின்றோம். அவர் ஆழ்ந்த சமயம் சார்ந்து கருத்து முதல் வாதியாக இருந் தார். நான் இயங்கியல் பொருள்முதல்வாதியாக இருப்பதை அவர் அறிவார். 'எல்லோரும் இறைவனை வழிபடுவதில்லை. உங்களைப் போன்றவருக்கும் சேர்த்தே நாமும் மற்றவரும் வழி படுகின்றோம் கவலை வேண்டாம்" என்று சிரித்தபடி சமரசம் கூறுவார்.
அவர் எவ்விஷயத்திலும் பதற்றமடைய மாட்டார். இறை வனிலும் இயற்கை விதிகளிலும் நம்பிக்கை வைத்து ஆறுதலடை வார். அவரது நடைமுறை, பேச்சுகள், செயலாற்றல் யாவுமே சைவ, தமிழ்ப் பண்புமிக்க மனிதராக அவரை இனங்காட்டும். ஆசுபத்திரியில் நோயினால் துன்புறும் வேளையிலும் மற்றவரின் பொழுது, அலைச்சல் பற்றியே கருத்திற்கொண்டு 'நீங்கள் களைத் திருப்பீர்கள். வீடு சென்று ஒய்வெடுங்கள் என்றே கூறுவார். இத்தகைய பண்பட்ட, நல்ல மனிதரை, நண்பரை இழந்த துன்பத்தை மறப்பது அத்தனை எளிதல்ல என்பதை உணர் கிறேன். அண்மையிலுள்ள ஆஸ்பத்திரி வேறு கடந்து செல்லும் வேளையெல்லாம் அவருக்கு இயற்கை ஏற்படுத்திய குரூரத்தை நினைவூட்டுகிறது. அன்னாரே தன் ஒரே துணையாக வாழ்ந்து அவரை இழந்து தனித்து நிற்கும் அவரது மனைவியருக்கு எப்படி ஆறுதல் கூற முடியும்.
அன்னாரின் கடைசி நாட்களில் ஏற்பட்ட பொறுப்பும், கடமையும் எனக்கும் பதட்டமேற்படுத்தியது. அக்குறுகிய கால கட்டத்திலும் பின்னர் இறுதிக் கடமைகளிலும் எனக்குத் துணையும் ஆறுதலும் தந்தவர்கட்கு என் நெஞ்சார்ந்த நன்றி. நண்பர் சச்சிதானந்தன், என் மருமகன் சிதம்பரநாதனும் அவரது தம்பியார் அவரின் நண்பர்களும், சிறப்பாக மொகிதீனுக்கும், டாக்டர் நந்தி, என் மகள் மான் விழி, மகன் குமரன் மற்றும் யாவர்க்கும் என் அன்பும் நன்றியும்.
செ. கணேசலிங்கன் 22-10-9S

தெளிவான சிந்தனையாளர்
வடக்கு-கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம செயலாளர் திரு. வே. ந. சிவராசா அவர்கள் கடந்த 27-9-93 அன்று விண்ணகம் புகுந்து விட்டனர் என்ற திடுக்கிடும் செய்தி அன்னாரை நன்கு அறிந்தவர்கள் அனைவரையும் துக்க சாகரத் தில் ஆழ்த்திவிட்டது.
அன்பர் திரு. சிவராசா தனது துணைவியாருடன் காசி யாத்திரையை மேற்கொண்டு ஆத்ம திருப்தியுடன் இலங்கை திரும்பும் சமயம் நோய்வாய்ப்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் இறைபதம் அடைந்தனர்.
இஃது "நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்து இவ் உலகு" என்ற பொய்யா மொழியினை எமக்கு ஞாபகமூட்டி நிற்கின்றது.
அமரர், பழகுவதற்கு இனிய பண்புகள் படைத்தவர்; மென்மையாகப் பேசுபவர்; சாதுக்களின் சத்சங்கத்தை பெரிதும் நாடுபவர்; ஆசார சீலர் கடமையில் கட்டுப்பாடும் கண்ணியமும் உடையவர்; தெளிவான சிந்தனையாளர்; சமூக சேவையாளர்: மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.
சமயப்பணிகளில் தன்னை முற்றிலும் அர்ப்பணித்து உழைத்தவர்; இவருடைய தலைமைத்துவத்திலும், வழி காட் டலிலும் பல சமயப் பணிகள் அண்மைக் காலத்தில் நிறைவேறி யுள்ளன. இவர்கள் இந்து சமய, கலாச்சார ராஜாங்க அமைச்சில் கடமையாற்றும் சமயம் இலங்கையில் உள்ள இந்து ஆலயங்கள் அனைத்தையும் பதிவு செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தனர்.
அன்னார் மறைவு இந்து சமய மக்களிடையே ஓர் வெற்றி டத்தினை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பிரிவினால் துயருற் றிருக்கும் அன்னாரின் துணைவியாருக்கும், உற்றார் உறவின ருக்கும் இந்தப் பேரிழப்பினைத் தாங்கக்கூடிய சக்தியை அழிக்க வேண்டுமெனவும், அன்னாருடைய ஆத்மா எல்லாம் வல்ல பரம் பொருளின் திருவடிகளின் கீழ் பேரானந்தத்தை என்றும் அனுபவிக்க வேண்டுமெனவும், பகவான் பூரீ ராமகிருஷ்ணரை
உளமாரப் பிரார்த்திக்கின்றேன்.
சுவாமி ஆத்மானந்தா
இராமகிருஷ்ண மிஷன் கொழும்பு-6

Page 22
பிரார்த்தனையின் பலனுக்கு சிவராஜா அவர்கள் பிரத்தியட்சப் பிரமாணமே
1986-இல் மலேஷிய, சிங்கப்பூர் பயணங்களை முடித்துக் கொண்டு திரும்பியிருந்தேன். நல்லூர் வளாகத்தில் அப்பொழுது வாசம். நல்லைக் கந்தன் தேரடியில் திருவாசகமுற்றோதல் நடக்கிறது. அதிலே கலந்து கொள்ளும் அடியார்களுக்கு அமுது செய்வித்தல் தங்கள் பணி என்று கூறினார் காலஞ்சென்ற சிவநேசச் செல்வர் மருத நமசிவாயம் அவர்கள். ஏற்றுக்கொண்டு மதியம் முருகன் அருள் பிரவாகத்தில் அடியார்களை எதிர் பார்த்து நின்றேன். ஒரு மணியளவில் ஒரு திருக்கூட்டம் மெல்ல அசைந்து வந்தது. அக்கூட்டத்தின் கோடியில் அப்பாலும் அடி சார்ந்த அடியராய் பல்கலைக் கழகப் பதிவாளர் சிவநெறியாளர் வி.என். சிவராஜா நின்றார்கள். 'சார், முன்னால் வாருங்கள்" என்று அழைத்தேன். கையைத் தூக்கி அபயக் காட்சி காட்டி "இன்று இந்த இடத்தில் முன்பின் என்பதற்கு இடமில்லை. எல்லோரும் சிவனடியார்களே. திருவாசகம் ஓதி விட்டல்லவா வருகிறோம்" என்றார்கள். சட்டென்று என் சிந்தையணுக்கள் சாத்வீகமாயின, முந்திய முதல் நடு இறுதியுமானாய் என்ற திருவாசக அடிகள் நினைவுக்கு வந்தது. சிவகோஷ்டியில்ஒன்றேயான பரம்பொருளின் அடியார்களில் படிப்பு பதவி, மற்றும் உலகியல் அம்சங்கள் அற்றுப் போகவேண்டும் என்ற அறிவு கொளுத்தது. சிவராஜா அவர்கள் ஒரு சிவதொண்டனே.
கொழும்பில் இந்து கலாசார இராஜாங்க அமைச்சு நடாத்திய பக்தி விழா கருத்தரங்கிற்கு சிவப்பழம் சிவராஜா தலைமை தாங்கினார். நானும் வேறு அறிஞர்களும் சொற்பொழி வாற்றினோம். தலைமை ஏற்றவர் கழுத்தில் போட்ட மாலை, நிகழ்ச்சி முடியும் வரை கழற்றப்படவில்லை. எல்லாம் நிறைவாகி யதும் கழுத்து மாலையுடன் என் அருகில் போன தலைவர் "மாலையைக் கழுத்தில் போட்ட உடன் கழற்றிவிடக் கூடாது. மாலையை உருவாக்கவும் அதனைப் பெற்று பிறருக்கு அணிவித்து அலங்கரிக்கவும் எத்தனை பேர் முயற்சி எடுத்திருப்பார்கள். அந்த முயற்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் மாலையை உடனே கழற்றாமல் போட்டபடியே சபையில் இருக்க வேண்டுமென்று என்றோ நீங்கள் சொன்னது உங்களைக் கண்டவுடன் நினைவுக்கு

37
வரவே, அந்த யோசனையை நடைமுறைப்படுத்தினேன்" என்றார், நல்ல கருத்துக்கள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் சான்றாளரான சிவராஜா அவர்கள்.
இந்திய யாத்திரைக்கான சிவனடியார் கூட்டத்தோடு நல்லை ஆதீனம் அவர்கள் கொழும்பு இராமகிருஷ்ண மிஷனில் தங்கியிருந்தார்கள். அங்கு வந்துபோன பெரியார். "சிவா. நீங்கள் பக்கத்தில் இருப்பதால் அடிக்கடி இங்கு வாருங்கள் உங்கள் உதவியும் தேவைப்படலாம்" என்றார்கள். அனைவரை யும் ஒன்று சேர்த்து காரிய சித்திக்காய் உழைத்த உத்தமர் சிவராஜா அவர்கள்.
அமரத்துவம் யாருக்குக் கிடைக்கும்? காலமானவர் அனை வரும் அமரர் ஆவரா? என்னும் ஐயம் எம்மில் பலருக்கு உண்டு. அமரருக்கு ஏற்றுக்கொள்ளும் தகுதிகளை வளர்த்துக் கொள் பவர்கள் வானுறையும் வாய்ப்புப் பெற்றவர்களே. இதனையே "வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல்' என்னும் குறளால் திருவள்ளுவர் தெளிய வைத்துள்ளார். அமரரான வி.என். சிவராஜா அவர்கள் அமரர் உலகுக்கு உரியவரே என்று அடித்துச் சொல்லமுடியும். பல பரிமாணங்களுக்குரிய பண்பாளரான சிவராஜா அவர்கள் "மேன்மை கொள் சைவ நீதி' எங்கும் பரவ வேண்டுமென்ற வேணவாவோடு வாழ்ந்தவர்.
ஒரு உண்மையை உடைத்துப் பார்ப்போமா? சிவராஜா அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. இனத்தவர்களும் இல்லாத இந்திய மண்ணில் அவர் இயற்கை எய்தினார். திடீர் மரணம். கூடச் சென்ற மனைவியையும் திகைக்க வைத்த நிகழ்வு. திருவருள் என்னவெல்லாம் செய்தது. நண்பர்களைக் கூட்டி வைத்தது. "தொண்டரொடும் கூட்டு கண்டாய்" என்றபடி குறையொன்று மில்லாது கருமங்களை நடத்தி வைத்தது. நம்பிக்கையோடு தோய்ந்த பிரார்த்தனையின் பலனுக்கு சிவராஜா அவர்கள் பிரத்தியட் சப் பிரமானமே.
-க, சிவானந்தன்
ஆசிரியர் : ஆலயமணி

Page 23
எளிமையாக வாழ்ந்த சிந்தனையாளர்
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்பவரின் பின்னால் பலர் கவரப்படுகின்றனர். பலதர மக்கள் திரு.சிவராசாவின் சிந்தனை பும் இதய சுத்தியுமுள்ள அரிய குணத்தால் ஈர்க்கப்பட்டனர். அவரைக் கண்டு பழகியவர் வாழ்நாள் பூராவும் நண்பராயினர். திரு சிவராசா அரச சேவிையில் மிக ஆர்வமுள்ளவராக விளங்கினார். அத்தோடு தமக்கும் சமூகத்திற்கும் அர்த்தமுள்ள திாக சமய, கலாசார செயற்பாடுகளிலும் ஈடுபட்டார்.
இயல்பாகவே அவர் உணர்ச்சியும் கூர்உணர்வும் கொண் டவர். யாழ்ப்பாணத்தில் வளர்ந்த சமூக சூழ்நிலைச் சிந்தனையை யும் மதிப்பையும் வெளிப்படுத்தும் பண்பினர். இந்து சமய நூல்கள், தமிழ் இலக்கியத்தினூடாக தன் அறிவையும் ஒழுக்க வாழ்வையும் அமைத்தார். தான் கற்றவற்றில் ஆழ்ந்த அர்த்தங் களைக் காண்பவர். உயர் கல்வி மூலம் தன் வாழ்க்கையில் அமைதி யையும் உயர்ந்த கோட்பாட்டுச் செயல்களையும் ஆற்றுவதை அனைவராலும் எளிதில் காணமுடியும். உயர்ந்த அறிவை மட்டுமல்ல ஒழுக்கநிலையையும் பார்க்கலாம். இவ்வாறு வாழ்வது மிகவும் கடினம்ானது; திரு. சிவராசா வாழ்ந்து காட்டினார்.
அரச சேவை மனித இனத்திற்கு ஆற்றும் சேவைக்குக் இடைத்த வாய்ப்பாகக் கொண்டார். உத்தி யோக, தனிப்பட்ட சொத்த வாழ்வில் மிக இறுக்கமாக நாணயத்தைக் கடைப் பிடித்தார். உறுதியான ஒழுக்கவாழ்வு துணிச்சலான செயலூக்கத்திற்கு வழிகாட்டியது. தர்மத்தின் வழி நின்றதால் அவரின் தீர்மானங்கள் நீதியாகவும் குறிக்கோளை நோக்கிய தாகவும் இருந்தன.
அவர் கையாண்ட ஒவ்வொரு செயலிலும் சேவையுணர்வை யும் பூரணத்துவத்தையும் காணலாம். வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு பிரதம செயலாளராக அவர் பெற்ற பதவி அவரது உயர்ந்த சாதனைக்கு வழிவகுத்தது. அவரது துணிச்சலான தலைமையின் பங்களிப்பே சபையின் மேலெழுச்சிக்கு உதவியது. அவருடன் பணியாற்றிய செயலர்களிடை அவர் முதன்மையாகத் திகழ்ந்தார். அனைத்து உத்தியோகத்தருக்கும் அவர் துருவ நட்சத்திரமாக விளங்கி வழிகாட்டினார்.
ஆதிக்கமும் அதிகாரமும் அவரை எவ்விதமும் அசைத்து விடவில்லை. எளிமையாக, சிந்தனையாளராக வாழ்ந்தார். தாமரையிலைத் தண்ணீர் போல சமூக இழுக்குகளிலிருந்து ஒதுங்கி சுதந்திரமாக வாழ்ந்தார். அவரின் நோக்கும் வாழ்வும் எப் பொழுதும் உறுதியானது. அதனால் அவரைப் பற்றிய புத்தொளி எப்பொழுதும் பரந்து வீசிக் கொண்டிருந்தது. திரு சிவராசா அனைவரும் பின்பற்றக்கூடிய ஆழ்ந்த நினைவுச் சுவடுகளை
எம்மில் பதித்துச் சென்றார்
எஸ். சிவதாசன்

அவர் மறைந்து விடவில்லை
சுதந்திரத்தின் பின் அரச நிர்வாகத்தில் ஒளிவிட்டவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். இலங்கை சுதந்திரம் பெற்றப் பின் ஏற்பட்ட புதிய அரச நிர்வாகத்தின் தீரராக விளங்கிய திரு. வே. ந. சிவராசா அவர்கள் அண்மையில் தமது 59வது வயதில் மறைந்துவிட்டார்.
பருத்தித்துறைப் பகுதியில் பிறந்து ஹாட்லிக் கல்லூரியில் கல்வி கற்று பிரபல இந்துக் குடும்ப பண்பாட்டுடன் அரச சேவையில் D.R.O. வாக சேர்ந்து பின்னர் தொடர்ந்து பல பதவிகளை வகித்தார்.
அதிகார பரவலாக்கல் முயற்சி வீணாகாது. காலப் போக்கில் மாகாண சபைகள் உருவாகின. வடகிழக்கு மாகாண சபையின் முதலாவது பிரதம செயலாளராக பணியாற்றினார். இதற்கு முன்னர் 1983-88 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பதிவாளராக கடமையாற்றிய அனுபவம் பிரதம செயலாளர் பதவியை அடைய உதவியது. மாகாண சபையின் அமைப்பு, பணியாளர் நியமனம், செயலாற்றல் ஆகியவற்றில் முன்னின்று உழைத்தார். அவருடன் இணைந்த உத்தியோகத்தர்கள் திறமையும் செயலாற்றலும் கொண்டவராய் சிறப்புற்றனர். அமைதியற்ற இக்கட்டான சூழ்நிலைகளில் வடக்கு கிழக்கு மாகாண சபை இலங்கையின் மற்றப் பகுதிகளின் நிர்வாகத்திற்குக் கூட வழிகாட்டியாக அமைந்தது. இச்சிறப்பை அடைவது சிவாவிற்கு எளிதாக இருக்க வில்லை. ஆணை செலுத்தாது, குரலை உயர்த்தாது இங்கும் அங்குமாக குறிப்புகளையும் ஆலோசனைகளையும் கூறி வெற்றி பெற்றார்.
அவரின் நண்பர்களாக விளங்கிய நாம் மூன்று நான்கு தசாப்தங்களாக அரசசேவையில் தியாக உணர்வுடன் செயலாற்றி நாங்கள் எதைக் கண்டோம்' என்று அவருடன் பேசிச் சோர்ந்த துண்டு. எமது பணியில் நம்பிக்கையுடன் செயலாற்ற முயன்றோம். ஆனால் அரசநிர்வாகம் இத்தனை கீழ்நிலைக்கு இறங்கும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அரச ஊழியர்களின் சுலோகங்களையும் குறைபாடுகளையும் நாம் ஓரளவு வெறுப் புடன் பார்த்தோம். ஆனால் சிவா தன் ஆன்மீக கண்ணோட்டத்
தில் எம்போன்று கணிக்கவில்லை. அவருக்கு அரச நிர்வாகம்

Page 24
40
தொழிலாகவும் மதசார்பற்ற பணியாகவும் இருந்தது. அவருடைய கொள்கை யாதெனில் அரசாங்க உத்தியோகத்தினரின் வெளித் தோற்றம் உள்ளுணர்வை மாற்றிவிடாது. பயிற்சி, நல்லொ ழுக்கம், நீதிக்கும் சட்டக் கோட்பாடுகளுக்கும் கட்டுப்படுதல், ஆன்மீக பழக்கவழக்கங்கள், இவற்றுக்கும் மேலாக சமய வெளிப் பாடுகளே சிறந்த அரச ஊழியர்களை உருவாக்க முடியும். மக்கள் சேவைக்காக ஆர்வத்துடன் பணிபுரிதல் சமயக்கடமை என்பார்.
இன்றும் இலங்கையில் நடைமுறையிலுள்ள மேல்நாட்டு ' பண்பாட்டு விழுமியங்கள், ஒழுக்கங்கள் கொண்ட அரச நிர்வாக கோட்பாடுகளின் தரம் உயர்த்தப்பட வேண்டும். அரச நிர்வாகத்தின் மையமாக சைவம், புத்தம், இஸ்லாம், கிருஸ்தவம் ஆகியவற்றின் உள்ளொளியுடன் அணுகப்பட வேண்டும். இந்து சமயத்தின் உயர்வான புரிந்துணர்வும், தமிழ் இலக்கிய அறிவின் ஆர்வமும் மாணவரைக் கடைசி நாள் வரை மேம்படுத்த வேண்டும். நல்லாய் வாழ்வது என்பது நன்மை செய்வது என்பதல்ல என்பார். கற்பித்தல் போல் நல்ல மனிதராக வாழ்ந்தார். அரச நிர்வாகியாக வாழ்ந்தது பெருமைக்குரியது. அவருடைய வழிக்காட்டலை இழந்து துன்புறுகிறோம்.
அவர் எம்மைவிட்டுப் பிரிந்து விடவில்லை. எமது எழுச்சி யுணர்வின் உயர்ந்த பகுதியாக மாறியுள்ளார். அதுவே வேறுபாடு
எம். சோமசுந்தரம் கொழும்பு-3

4M
1993 ஜனவரி 1-ம் திகதி சிவராசா அவர்களின் நாட்குறிப்பில் எழுதப்பட்டிருந்தபடி. :
UPANISHAD PRAYER
1. From the world which is untrue, lead me to truth. From the darkness of ignorance, lead me to light, from death, lead me to immortality.
2. Death here means moving to rebirth immortality Connate freedom from rebirth. Removal of mortality is the only way to immortality.
3. Narrow and immoral ideas like being unjust and unkind, causing harm to others, must be set aside, whatever ends in another person is also the same divine spirit what is
in you.
மரணத்திற்குப் பின்
வாழ்க்கையின் முடிவு மரணம் என்பது அனைவரும் அறிந்த விஷயம். மரணத்திற்குப் பின் என்ன? என்பதை யாரும் அறிவதில்லை.
விஷய ஞானம் இல்லாத இடத்தில் பயம், பீதி முதலிய மனக் கஷ்டங்கள் தோன்றுவது சகஜம்.
மரணம் என்று நினைக்கும் பொழுது மரணத்திற்குப் பின் என்ன நிகழ்கின்றதென்று சரியான அறிவில்லாததால் மரண பயம் உண்டாகின்றது.
மரணம் என்பது ஜீவனைப் பொறுத்த வரையில் புதிய சக்தியும். உற்சாகமும், புது ஆற்றல் திறமையும் உயிரில் உருவாகும் ஒரு புனிதமான நிகழ்ச்சி.
பகல் முழுவதும் உழைத்துக் களைப்படைந்தவர்களுக்கு இரவு உறக்கம் களை தீர்த்துப் புத்துணர்வும், தெம்பும் அளிப்பது போன்று, வாழநாள முழுவதும் பல துறைகளிலும் செயலாற்றி வாழ்வில் களைப்படைந்த மனிதர்களுடைய ஜீவன் சுயமாகவே ஏற்றெடுத்த ஒரு தீர்க்க கால உறக்கம் அல்லது ஒய்வு தான்
Droof).
பழுதடைந்த உடையை மாற்றிப் புது உடை அணிவது போன்று " இலட்சியத்தை அடையும் வரையும் பழுதடைந்த சரீரத்தை மாற்றிப் ச் சரீரத்தில் 6) DI வேண்டியிருக்கிறது. ற்றிப் புது த்தில் நுழை
ஆதாரம் : ஞான மண்டலம் ஆசிரியர் : பூரீமத் சுவாமி கெங்காதரானந்தா

Page 25
நன்றி
என்அன்பிற்குரிய கணவர் இறைவனடி சேர்ந்த வேளை: எனது கணவர் சுகவீனமுற்று மருத்துவமனையிற் சேர்க்கப்பட்ட காலம் தொடக்கம்; அவரது இறுதிக் காலம் வரை சகல விஷயங் களிலும் உதவி செய்த உடன் பிறவாச் சகோதரர் கணேசலிங்கம், கடைசி நாள் அவருக்கு இரத்தம் கொடுத்து சகல உதவிகளும் செய்த அவரது மகன் குமரன், என் கூட இருந்து எனக்கு ஆறுதல் கூறி என் துக்கத்தைக் குறைத்த அவரது மகள் மான்விழி அவர் இறந்த இரவு என் கூட இருந்து, ஈமக் கிரிகைகளின் போதும் சகல விதமான உதவிகளையும் செய்த அவரது மருமகன் சிதம்பரநாதன், நண்பர்கள் சகோதரர்களுக்கும்,
அவரது இறுதிக் கிரிகைகளுக்கு ஒழுங்கு செய்த சகோதரர் சச்சிதானந்தம், இறுதிக் கிரிகைகளின் போது என்னுடன் இருந்து எனக்கு ஆறுதலளித்த உடன் பிறவாச் சகோதரி திருமதி சச்சிதானந்தம் அவர்களுக்கும்,
சுகவீனமுற்று மருத்துவமனையிலிருந்த பொழுதும், இறுதிக் கிரிகைகளின் பொழுதும் உடனிருந்து ஆறுதலளித்த Dr. நந்தி அவர்களுக்கும்.
இறுதிக் கிரிகைகளில் நேரில் கலந்து ஆறுதல் கூறினவர் களுக்கும், மருத்துவமனையில் இருந்தபொழுது வந்து பார்த்து சுகமாக வேண்டும் என்று பிரார்த்தித்தவர்களுக்கும்,
வீட்டுக் கிருத்திய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும்,
நினைவு மலர் சிறப்பாக அமைய உழைத்த திரு. சச்சி தானந்தம், திரு. கணேசலிங்கம் அவர்களுக்கும், உரைகள் எழுதித் தந்த பெரியோர்களுக்கும்,
என் மனம் நிறைந்த நன்றியை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மனைவி கோகிலாம்பாள் சிவராசா சகோதரர்கள்

பகுதி இரண்டு

Page 26
நல்லூரான் திருவடி
நல்லூரான் திருவடியை நான் நினைத்த மாத்திரத்தில் எல்லாம் மறப்பேனெடி-கிளியே! இரவுபகல் காணேனெடி,
ஆன்மா அழியாதென்று அன்றெனக்குச் சொன்னமொழி நான்மறந்து போவேனோடி-கிளியே நல்லூரான் தஞ்சமெடி
தேவர் சிறைமீட்ட செல்வன் திருவடிகள் காவல் எனக்காமெடி-கிளியே கவலையெல்லாம் போகுமெடி,
எத்தொழிலைச் செய்தாலென் ஏதவத்தைப் பட்டாலென் கந்தன் திருவடிகள்-கிளியே! காவல் அறிந்திடெடி.
பஞ்சம்படை வந்தாலும் பாரெல்லாம் வெந்தாலும் அஞ்சுவமோ நாங்களெடி-கிளியே ஆறுமுகன் தஞ்சமெடி,
சுவாமி யோகநாதன் சொன்னதிருப் பாட்டைந்தும் பூமியிற் சொன்னானெடி-கிளியே பொல்லாங்கு தீருமெடி.

உள்ளே.
பன்னிரு திருமுறைத் திரட்டு அபிராமி அந்தாதி சகலகலாவல்லிமாலை நவரத்தினமாலை விநாயகர் அகவல் விநாயகர் கவசம் கந்தரனுபூதி கந்தரலங்காரம் கந்தர்கலிவெண்பா கந்தர் சஷ்டி கவசம் சண்முக கவசம்
இன்னும் பிற

Page 27
பாட்டு முதற்குறிப்பு அகராதி
(பாட்டு - பக்க எண்)
அக்கினி 95 ஆக்கும் 86 இனமெ 146 என்மே 5 அங்க ஆங்கா 1 14 ғғ. зғөрт т 14 என்னும் 68 அடப் 60 ஆதசம் 62 ஈண்டுல 147 என்ன 7 அடலரு 106 ஆசைக் கட 73 ஈன்றாளு 15 ஏகதந் 95 அடியேன் 47 ஆசையறு 62 உங்கை 39 ஏத்தும் 72 அடியைக் 102 ஆடும் 99 pLubu T 61 ஏரகத் 1 4 அண்ட 140 ஆத்தா 82 உடம்பி 6 1 ஏறுமயி 97 அண்ணா 38 ஆதார 102 உடைத்த 72 ஏனிந்த 49 அணங்கே 79 ஆதாளி 104 உடையாளை 80 ஐந்து 67 அதிசய 7 1 ஆதித்த 82 உடையான் 5 2 ஐயன் 76 அதுபழ 33 ஆதியா 140 உண்டேன் 65 ஐயுறு 142 அந்த 21 ஆதியும் 34 உண்ணா 2 ஒண்ணித் 35 அந்தி 87 ஆய 8 5 2 GSSTñT 45 ஒருபூ 3 அப்பன் 18 ஆர்த்த 37 உணர்வு 63 ஒருமை 54 அம்மை 52 ஆரறி 60 உதிக்கி 69 ஒருவரை 08 அமரர் 132 ஆரார் 59 உதித்தா 112 ஒல்லை 2 அமரும் 100 ஆலுக் 115 உதியா 101 ஒலியெழ 142 அயன் 43 ஆவகை 43 உமையும் 73 ஒலையு 0 அரனம் 76 ஆவிக்கு 122 உய்த்தாத் 20 ஒளியில் O7 அராப் 117 ஆளுகை 74 உருத்திர 96 ஒளிவள 56 அரிதா 101 ஆறா 105 உருவள 5 ஒற்றை 93 அருணன் 32 ஆனந்த 70 உருவா 105 ஒன்றாய் 76 அருணாம் 77 ஆனா 1 0 2 р өbәрптағ 99 ஒன்றி அரைச 45 இடங் 7 4 உலக்கை 40 ஒன்றும் 47 அவ்வினை 3 இடரி 8 உலகெலா 67 ஒன்றே 62 அவனு 67 இடுத 121 உளம் 155 ஓங்கார 96 அழகு 78 இனக்க 144 உற்றுமை 9 ஓங்கிய 142 அழகே 49 இத்தனை 150 உறுதி 141 ஒரவொட் 107 அழித்து 06 ಸ್ಥಿ: 45 உறை 71 ஒரொரு 38 அளிஆர் 80 ரப்ப 12 உன்னி 148 ஒளவிய 42 அளிக்கு 83 இராப் 121 ஊரணி 141 ககனமு 77 அறிந்தே 69 இருசெவி 140 ஊரெலா 60 கங்கை த 18 அறியாத 62 இல்லாமை 76 எங்குந் 62 கடத்தி 0 அறிவா 64 இல்லே 102 எங்கே 21 கடல்து 25 அறிவொ 105 இலைமலி 23 எஞ்சிடா 141 கடுவிட 43 அறுகெடு 40 இலைமா 66 எண்ணு 13 கடைய 5 அன்பி 44 இழந்து 146 எத்தாய 12 கண்களி 78 அன்பு 61 இழைக்கு 73 எத்திக் 155 கண்க ளி 53 அன்றே என் 48 இளமை 146 எந்தாயு 105 கண்காட் 4 அன்றே தடு 73 இறகுடை 146 எந்தை 59 கண்காணி 62 அன்னம் அ 147 இறவாத 68 எல்லா 12 கண்டு அன்னம் பா 11 இன்று 7 எவர் 89 கண்டேன் 147 அன்னே 36 இன்றை 45 என்குறை 78 கண்ணார் 48
அன்னை 22 இன்னி 33 என்பொடு 5 கண்ணிய 70

கதிதனை
கரவா கருத்த கருதா கரும்பு கருமான் 85CO5QI T
கல்லா கலையே கவிக் saluunt
கழித்தி களவு கற்றவ கற்றும் கறைக் கன்ற காசணி காட்டி காட்டு கானக்
காதலா காதார் காமருபூ காயமே διττLρπ காவிக் காளைக் கிரிவாய் கிழியும் કીeffીGu! கிளைத் குங்கும குசைநெ குந்தி குப்பாச குமரா குயிலாய் குரம்பை குலம்பா குழலொலி குழைத்
2.
104.
7 O
0.
93
9 5
6
6 103
66
2 94
5
68
56
86
25 47
40
9
28
87
37
94
18
OO
2.
O2 O3
114
7
89
08 64
08
9
82
75
5.
59
46
பாட்டு முதற்குறிப்பு அகராதி
(பாட்டு - பக்க எண்)
குழையை 82
குற்றம் 9 குறித்தே 7. 9 குறியை O4 குறைவி 45 குனித்த
s 100 கூட்டி 79 கூர்கொண்ட 118 கூர்வேல் 02 கூவின 32 கூற்றா 4 கூறும் 47 கொடுவாய் 100 கைக்கே 74 கைத்த 97 கைவாய் O கொடியே 72 கொத்த 7 கொள்ளி 122 கொள்ளேன்புர49 கொள்ளேன் ம72 கோடாத 7 கோமள 82 கோழிக் O9 கோழி 36 ங்கரமே I43 சங்கநிதி 9 சங்கம் 42 சங்கர 4 சதுரம் 4. சலங் 2. சலத்தி 43 சளத்தி O7 சஷ்டி 32 &*f S5fT 04
夺fT@ö 4 சாடுஞ் 6 சாடுந் 04 சாதல் 54 சாநாளு 2 சிகராத் 14 சிங்கார O3 சித்தியு 73
சிந்தனை செ 64 சிந்தனைநின் 50
சிந்தா 03 சிந்திக் 5 சிலைம 98 சிவகுரு 52 சிவசிவ 62 சிறக்கு 8. சிறையா 2 சிறைவர 98 சின்னங் O 9 சின்னஞ் 76 சீதக் 9 சீதனங் 98 சீருந் திருவும் 58 சுடரும் 75 சுந்தர 40 சுந்தரி 70 சுழித் சூடகந் 4. துரிற் 3 தலம் 22 செங்க 38 செங்கே 2. செப்பிள s செப்பும் 7 g செம்மான் 100 செம்மை 54 செல்வா 103 சென்னி 7 O சேந்த சேல்பட் 12 சேல்வா 17 சேதுங் 58 சேவிக்க 58 சேலிற் 20 சொல்லா 57 சொல்லு 08
சொல்லும் 84 சொல்விற் 84 சொற்கும் 85 சொற்று 7 சொன்ன 109 சோதியா 46
ஞமலி ஞானக் ஞான ஞானத் டமருக தகட்டி தங்கச் தங்குவர் தஞ்சம் தஞ்சா தடக் தடுங் g568 TT தண்ண தத்து தத்தை ததியுறு தந்தது தந்தை தமமை தமை தலைக் தலையே தவளே தவன் தன்மை தன்ன தாதை தாமம் தார் தாரா தாவடி தாழ் தானெ திக்க திகட திங்கட் திங்கள் திணியா திமிரத் திரளக் திருக் திருந்த திருநாம
143 43
86
8 1 4 3 18 7 7
7. 9 7 ገ 63
20
O 8 0 7 63 56
7 O
46 6
23 78 27
6 75 144 27 105
59 78 69 18 108 95
28 98 56 73
67
OO
98
98 8 07 9

Page 28
பாட்டு முதற்குறிப்பு அகராதி
(பாட்டு - பக்க எண்)
திருநின்ற 24 நாடகத் 49 பண்ணு 84 பூசுவது 5 திருவடி 121 நாடிப் 90 பனந் 55 பூத்தவ 7 திருவா 93 நாடும் 83 பத்தரா 25 பூதங்க 33 திருவிள 93 நாதா 103 பத்தனா 1. பூமேவிய 88 திருவே 13 நாமார்க் 19 பத்தித் திரு 113 பூமேவு 23 தில்லை 23 நாயகி 76 பத்தித் துறை111 பூவியல் 40 துஞ்ச 8 நாயிற் 48 பத்தியை 113 பெரும் 07 துணையும் 69 நாயே 77 பதத்தே 81 பெறுதற் 6 துதிப் 132 நாளும் 21 பதிபசு 60 பேயடை 4 துருத்தி 118 நாளென் 112 பந்தாடு 118 பேராசை 101 தூக்கும் 83 நானென் 63 பப்பற 33 பேரா 39 தூசா 104 நிட்டை 57 பயிரவி 79 Guy Iuh I தூண்டு 14 நிணங் 112 பரம்என்று 80 பேற்றை 60 தெண்ணி 67 நிருமல 149 பரிபுரச் 75 பைங்கு 37 தெய்வ 109 நிரைகழல் 10 பல்லது 144 பொக்கக் 1 10 தெள்ளிய 120 நில்லா 61 Lugo G) 6 பொங்கா 115 தென்பா 51 நிலைபெறு 13 பவளக் 74 பொட்டக 111 தேங்கி 118 நிறம்பல 6 3 U TagoLib 35 Goumt uiuuu 25 தேடித் 89 நின்றும் 70 LuTGSh 84 பொய்யெ 54 தேரண் 106 நினைந் 153 UTL 50 பொருந்தி 70 தேறும் 77 நீதியா 15 பாதா 36 பொருடபிடி 114 தேனக 43 நீநாளும் 4 பாதித் 115 பொருளே 74 தேனமர் 7 நீயான 113 பார்க்கும் 80 பொன்வண் 64 தேனென 107 நீர் உண்டு 155 பார்ப் 63 பொன்னர 22 தையலா 54 நீர்க் 118 பார்பத 46 போக்கு 117 தைவந்து 82 நீலச் 110 பாரும் 78 போதோ 55 தொண்டர் 120 நீள 26 பாரொ 52 போற்றிஅ 39 தொண்டு 75 நெஞ்சக் 99 unto) 53 போற்றின் 32 தொல்லை 29 நெஞ்சம் 15 பாலே l l 2 dS DIT 99 தொழுது 65 நெய்விள 89 பாலினும் 77 மங்கலை 7 Σ தோடுடை 1 நெற்றா 115 பாலுந் 93 மங்கள 89 தோத்தி 78 நெற்றி N 62 பாலென் 110 மங்கை O தோலா 113 நெறியல் 54 பாழ் 103 மட்டுர் 00 நகையே 81 நோயுற் 147 பிடியத 1 மண்கண் 85 நஞ்ச 5 பக்க 95 பித்தா 20 மண்கம 20 நடுவு 61 பங்கே 119 பாலுக் 58 மண்ன 6 O நத்தார் 27 பஞ்சப் 84 பிரமன் 154 மண்ணில் 8 நமைப் 144 பட்டிக் 115 பின்னே 72 மண்ணிலு 145 நமச்சி 29 பட்டிப் 63 புடைவை 81 மண்ணு 57 நயன 79 படிக்கி 117 புண்ணிய 7 4 மணியே 72 நற்ற 22 படிக்கு 113 புரந்த " 58 மருவார் 22 நன்று 3. படிக 85 புலனை 3 மதிகெட் 05 நன்றே 8 li Lu GSL 108 புவனி 34 மதிஞா 95
நன்மை 68 பண்ணி 21 புற்றில் 52 மதிநுத s

மந்திர மரகத மரணப்
LOGY)GA) UT மற்றுப் மன்னிய
மனமெனு
மனிதரு மாகத் மாசில் மாடு மாதர்தீங் LDT5írü மால் மாலறி
fÒTGEGA) மாலோன் மாவேழி மாறற மாறிநின் மானி மானேநீ மானேர் மிண்டு மின்ஆ மின்னி மின்னே šošov LT மீனா
(LypLq-(LurT முத்தணி
88
109
14 27 26 16
69
18
18
42
90 12
80
35
89
9
104 23
44
35
47
57 76
43
102
55
26.
II
4.
35
பாட்டு முதற்குறிப்பு அகராதி
(பாட்டு - பக்க எண்)
முத்தி 54 வடதிசை முத்து 39 வடிவுந் முத்தே 87 வடிவே முந்திய 33 வண்ண மும்மை 24 வனங் முருகன்கு 101 வந்தி முருகன்த 100 வந்திப் முன்னம் 13 வந்தே முன்னிக் 38 வம்ப முன்னை 36 வருந்தா மூலக் 86 வரைய மூவிரு 1 5 6 Ausüboolu மெய்தான் 49 வலை மெய்யே 102 வவ்விய மெல்லிய 81 வழிதலை 65LDug (U 2 வளர்சி மையமர் 42 வளைக் மைவரு 18 gaugentu மொய்தா 109 வாட்ட மொய்யா 37 வாணுதல் மொழிக் 80 வார்கொண் மொழியி 65 வாழ்க யகரமே 145 வாழ்கி urrGuorr 101 வாழ்வா யாவர் 61 வாழும் யான்பெ 60 வாள்வரி யான்றா 120 வான் யானே 50 வானா ரஞ்சனி 88 வானே ரஞ்சித 145 வானோ லகர 145 விண்ண வட்ட 44 விரவும்
46
10
14
9
9
65 71
73
24
8.
5
78 88
7 l.
8
94
4
99 4.
74
24
O 50
28 75
6
56
50 3 99 34
80
விருது விரும்பி விழிக்கு விழிக்கே விதி விற்றுக் விறகில் வினை வீணே வெட்டு GauGisTLT வெள்ளைக் வெள்ளை வெளி வெறுக் வென்றி வேடிச்சி வேண்டத் வேதநெ வேதம் வேதமு வேதமோ வேதா வேயுறு வேலா வேலே வேள்பட வேற்றா வையகம் வையம்
வையிற்
81 6 7. 9 03 26 8 104 77 6
83 90 90 7 1 75 96 14 48 68
5 44
09
19 0
16 41 76 109

Page 29
விநாயகர் காப்பு
ஓங்கார வடிவான உன்பாத தாமரையும்
உபயபரிபுர மறைகளும் உதிக்கின்ற செங்கதிர்க ளொருகோடி நிகரொளியும்
உத்தூள நீற்றினொளியும் பாங்கார் கஜாநநழும் உபயகரமும் வளர்புயப்
பவளாச லங்கணான்கும் பாசமுட னங்குசங் கொம்போரி லட்டுகம்
பட்சமொடு வைத்தகரமும் நீங்காத அருண்மாரி பொழியுந்த்ரி யம்பகமும்
நிறையுமும் மதமாரியும் நீள்சடா டவியும் வெண்பிறையு மொரு தொந்தியும்
நெஞ்சிலொரு காலும் மறவேன் காங்கேயன் மகிழ்தமைய னேகங்கை நதிபெருகு
காசிவாழ் துண்டிராச கணபதியெனும் பெரிய குணமேரு வேயருட்
கருணாநிதிக் கடவுளே.

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தேவாரம் திருச்சிற்றம்பலம்
திருவலிவலம்
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
திருப்பிரமபுரம்
தோடுடைய செவியன்விடை யேறியோர் தூவெண் மதிதடிக் காடுடைய சுடலைப்பொடி பூசியென் னுள்ளங் கவர்கள்வன் ஏடுடைய மலரான்முனை நாட்பணிந்தேத்த வருள்செய்த பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மா னிவனன்றே.
திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும்
அங்கமும் வேதமும் ஒது நாவர்
அந்தனர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்கய லார் புனற் செல்வ மல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.

Page 30
திருவண்ணாமலை
உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே.
திருநெய்த்தானம்
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ ணிரே.
திருவலிவலம்
ஒல்லையாறி உள்ளம்ஒன்றிக் கள்ளம் ஒழிந் துவெய்ய சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றன்நாமம் நாவில்நவின் றேத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவலமே யவனே.
திருத்தூங்கானைமாடம்
சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை
சலிப்பாய வாழ்க்கை யொழியத்தவம் ஆமா றறியா தலமந்துநீர்
அயர்ந்துங் குறைவில்லை ஆனேறுடைப் பூமாண் அலங்கல் இலங்குகொன்றை
புனல்பொதிந்த புன்சடையி னான்உறையும் தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர்
தூங்கானை மாடந் தொழுமின்களே.
திருத்தோணிபுரம்
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால் முறையாலே உணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறையாருங் கடல்தோணி புரத்தீசன் துளங்கும்இளம் பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே.

திருப்பழனம் வேதமோதி வெண்ணுால் பூண்டு வெள்ளை யெருதேறிப் பூதஞ்தழப் பொலியவருவார் புலியி னுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பா எனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழன நகராரே.
திருச்சிராப்பள்ளி
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே றொன்றுடையானை உமையொருபாகம் உடையானைச் சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறளன்னுள்ளங் குளிரும்மே.
பொது
அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர் உய்வினை நாடா திருப்பதும் உந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீலகண்டம்.
திருவையாறு
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட் டைம்மே லுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்
றருள்செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவதிர மழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவை யாறே.
திருவழுந்தூர்
வானே மலையே யெனமன் னுயிரே தானே தொழுவார் தொழுதாள் மணியே ஆனே சிவனே யழுந்தை யவரெம்
மானே யெனமா மடம்மன் னினையே.

Page 31
திருமறைக்காடு சதுரம் மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம் பொழில்துழி மறைக்காட் டுறைமைந்தா இதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன் கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
திருச்சாய்க்காடு நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
திருமயிலாப்பூர்
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில் துளக்கில் கபாலீச்சரத் தான்தொல் கார்த்திகைநாள் தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும் விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.
திருவெண்காடு
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும் பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும் பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும் வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும் வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர் தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவாலவாய்
மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே.

பொது வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி மாசறு திங்கள் கங்கை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் །ག་་་ ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியா ழம்வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே ←ቌቌዏዐ! நல்ல நல்ல அவை நல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. என்பொடு கொம்பொடாமை யிவைமார் பிலங்க
எருதேறி யேழையுடனே பொன்பொதி மத்தமாலை புனல்துடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஒன்பதொ டொன்றோ டேழு பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம் அன்பொடு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 2 உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து
வுமையோடும் வெள்ளை விடைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் திருமகள் கலையதுார்தி செயமாதுபூமி
திசைதெய்வ மான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 3
மதிநுதல் மங்கையோடு வடபாலி ருந்து
மறையோதும் எங்கள் பரமன் நதியொடு கொன்றைமாலை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் கொதியுறு காலனங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 4.
நஞ்சணி கண்டன்எந்தை மடவாள் தனோடும்
விடையேறு நங்கள் பரமன் :

Page 32
துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும்
அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வாள்வரி யதளநடை வரிகோ வணத்தர் மடவாள் தனோடும் உடனாய் நாண்மலர் வன்னிகொன்றை நதிதுடி வந்தென்
உளமே புகுந்த அதனால் கோளாரி யுழுவையோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
செப்பிள முலைநன்மங்கை யொரு பாகமாக
விடையேறு செல்வ னடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா
அப்படி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்தன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய் வாண்மதி வன்னிகொன்றை மலர்துடி வந்தென்
உளமே புகுந்த அதனால் ஏழ்கடல் துழிலங்கை அரையன்ற னோடும்
இடரான வந்து நலியா ஆழ்கடல் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. பலபல வேடமாகும் பரனாரி பாகன்
பசுவேறும் எங்கள் பரமன் சலமக ளோடெருக்கும் முடிமே லணிந்தெ0
உளமே புகுந்த அதனால்

மலர்மிசை யோனுமாலும் மறையோடு தேவர்
வருகால மான பலவும்
அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. 9
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு
குணமாய வேட விகிர்தன் மத்தமு மதியுநாகம் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரோ டமனைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே அத்தகு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. O
தேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதியாய பிரமா புரத்து
மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய் ஆனசொல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆனை நமதே.
திருக்கோடிகா
இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால் பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின் மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல் கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
திருவலஞ்சுழி
என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல்
வையத்து முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி தழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே.

Page 33
திருக்கேதீச்சரம் விருது குன்றமா மேருவில் நாணர வாவனல் எரிஅம்பாப் பொருது மூவெயில் செற்றவன் பற்றிநின் றுறைபதி
யெந்நாளும் கருது கின்றவூர் கனைகடற் கடிகமழ் பொழிலனி
மாதோட்டம் கருத நின்ற கேதீச்சரங் கைதொழக் கடுவினை யடையாவே.
திருவாவடுதுறை இடரினுந் தளரினும் எனதுறுநோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமா றிவதொன் றெமக்கில்லையேல் அதுவோவுன தின்னருள் ஆவடுதுறை யரனே.
திருவம்பர்ப்பெருந்திருக்கோயில்
வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர் உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.
பொது
துஞ்சலுந் துஞ்ச லிலாத போழ்தினும் நெஞ்சக நைந்து நினைமின் நாள்தொறும் வஞ்சகம் அற்றடி வாழ்த்த வந்தகூற் றஞ்சவு தைத்தன அஞ்செ முத்துமே.
திருப்பிரமபுரம் மண்ணில்நல் லவண்ணம் வாழலாம் வைகலும் எண்ணில்நல் லகதிக்கி யாதுமோர் குறைவிலைக் கண்ணில்நல் லஃதுறுங் கழுமல வளநகர்ப் பெண்ணில்நல் லாளொடும் பெருந்தகை யிருந்ததே.

திருவாலவாய்
மானி னேர்விழி மாதராய் வழுதிக்கு மாபெருந் தேவிகேள் பானல் வாயொரு பாலன் ஈங்கிவன் என்று நீபரி
வெய்திடேல் ஆனை மாமலை யாதியாய இடங்களிற்பல அல்லல்சேர் ஈனர்கட் கெளியேன லேன்திரு ஆலவாயரன் நிற்கவே.
பொது
காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே.
திருவாலவாய்
குற்றம்நீ குணங்கள்நீ கூடலால வாயிலாய் சுற்றம்நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்தும்நீ அருத்தமின்ப மென்றிவை முற்றும்நீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே.
திருத்தேவூர் வண்ணமுகி லன்ன எழில் அண்னலொடு சுண்னமலி
வண்ண மலர்மேல் நண்ணவனும் எண்ணரிய விண்ணவர்கள் கண்ணவன்
நலங்கொள் பதிதான் வண்ணவன நுண்ணிடையின் எண்ணாரிய அன்னநடை
யின்மொ ழியினார் திண்னவண மாளிகைசெ றிந்தஇசை யாழ்மருவு
தேவூ ரதுவே.
திருப்பிரமபுரம் உற்றுமை சேர்வது மெய்யினையே
உணர்வது நின்னருள் மெய்யினையே கற்றவர் காய்வது காமனையே
கனல்விழி காய்வது காமனையே

Page 34
O
அற்றம் மறைப்பதும் உன்பணியே
அமரர்கள் செய்வதும் உன்பணியே
பெற்றும் உகந்தது கந்தனையே
பிரமபு ரத்தை உகந்தனையே.
திருவாலவாய்
மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநா யகனால்
வேதமும் பொருள்களும் அருளி அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவா யாவதும் இதுவே.
திருக்கோணமலை
நிரைகழல் அரவஞ் சிலம்பொலி யலம்பும்
நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும் அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடல் ஒதம் நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே.
பொது
வாழ்க அந்தணர் வானவர் ஆனினம் வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக ஆழ்க தீயதெல் லாம்அரன் நாமமே தழ்க வையக முந்துயர் தீர்கவே.

1.
திருநாவுக்கரசு நாயனார்
தேவாரம்
சிதம்பரம் அன்னம் பாலிக்குந் தில்லைச்சிற் றம்பலம் பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை என்னம் பாலிக்கு மாறுகண் டின்புற இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே.
பத்தனாய்ப் பாட மாட்டேன் பரமனே பரம யோகீ எத்தினாற் பத்திசெய்கேன் என்னை நீ இகழ வேண்டா முத்தனே முதல்வா தில்லை அம்பலத் தாடு கின்ற அத்தாவுன் ஆடல் காண்பான் அடியனேன் வந்த வாறே.
ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட் சிற்றம்பலத்துநட்டம் என்றுவந் தாய்என்னும் எம்பெரு மான்றன் திருக்குறிப்பே. குனித்த புருவமும் கொவ்வைச் செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே.
திருப்புள்ளிருக்கு வேளூர் பேராயிரம்பரவி வானோ ரேத்தும்
பெம்மானைப் பிரிவிலா அடியார்க் கென்றும் வாராத செல்வம் வருவிப் பானை
மந்திரமும் தந்திரமும் மருந்து மாகித்

Page 35
2
தீராநோய் தீர்த்தருள வல்லான் தன்னைத்
திரிபுரங்கள் தீயெழத்திண் சிலைகைக் கொண்ட
போரானைப் புள்ளிருக்கு வேளூ ரானைப்
போற்றாதே ஆற்றநாள் போக்கி னேனே.
திருவையாறு மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர் பின் புகுவேன் யாதும் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன் கண்டே னவர் திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.
இரப்பவர்க் கீய வைத்தார் ஈபவர்க் கருளும் வைத்தார் கரப்பவர் தங்கட் கெல்லாங் கடுநர கங்கள் வைத்தார் பரப்புநீர்க் கங்கை தன்னைப் படர்சடைப் பாகம் வைத்தார் அரக்கனுக் கருளும் வைத்தார் ஐயன்ஐ யாற னாரே.
எல்லா வுலகமு மானாய் நீயே
யேகம்பம் மேவி யிருந்தாய் நீயே நல்லாரை நன்மை யறிவாய் நீயே
ஞானச் சுடர் விளக்காய் நின்றாய் நீயே பொல்லா வினைக ளறுப்பாய் நீயே
புகழ்ச்சே வடியென்மேல் வைத்தாய் நீயே செல்வாய செல்வந் தருவாய் நீயே
திருவையா றகலாத செம்பொற் சோதீ.
திருவானைக்கா எத்தாயர் எத்தந்தை எச்சுற் றத்தார்
எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வந் துதவுவார் ஒருவ ரில்லை
சிறுவிறகால் தீமூட்டிச் செல்லா நிற்பர் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித்
திருவானைக் காவுடைய செல்வா என்றன்

3
அத்தாவுன் பொற்பாதம் அடையப் பெற்றால்
அல்லகண்டங் கொண்டடியேன் என்செய் கேனே.
திருவாவடுதுறை திருவேயென் செல்வமே தேனே வானோர்
செழுஞ்சுடரே செழுஞ்சுடர்நற் சோதீ மிக் உருவேஎன் னுறவேஎன் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தி னுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற்
கருமணியே மணியாடு பாவாய் காவாய் அருவாய வல்வினைநோய் அடையா வண்ணம்
ஆவடுதண் டுறையுறையும் அமர ரேறே.
திருப்புகலூர் எண்ணுகேன் என்சொல்லி எண்ணு கேனோ
எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால் கண்ணிலேன் மற்றோர் களை கண் இல்லேன்
கழலடியே கைதொழுது காணின் அல்லால் ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் - ஒக்க அடைக்கும்போ துணர மாட்டேன் புண்ணியா உன்னடிக்கே போது கின்றேன் பூம்புகலூர் மேவிய புண்ணியனே.
திருவாரூர் முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்
மூர்த்தி யவனிருக்கும் வண்ணங் கேட்டாள் பின்னை யவனுடைய ஆரூர் கேட்டாள்
பெயர்த்து மவனுக்கே பிச்சி யானாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள்
அகன்றாள் அகலிடத்தார் ஆசா ரத்தைத் தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்கு மிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்து மாடிச்
சங்கரா சயபோற்றி போற்றி யென்றும்

Page 36
4
அலைபுனல்சேர் செஞ்சடையெம் ஆதீ யென்றும்
ஆரூரா என்றென்றே அலறா நில்லே.
சங்கரனே நின்பாதம் போற்றி போற்றி
சதாசிவனே நின்பாதம் போற்றி போற்றி பொங்கரவா நின்பாதம் போற்றி போற்றி
புண்ணியனே நின்பாதம் போற்றி போற்றி அங்கமலத் தயனோடு மாலுங் கானா
அனலுருவா நின்பாதம் போற்றி போற்றி செங்கமலத் திருப்பாதம் போற்றி போற்றி
திருமூலட் டானனே போற்றி போற்றி.
திருமறைக்காடு தூண்டு சுடரனைய சோதி கண்டாய்
தொல்லமரர் துளா மணிதான் கண்டாய் காண்டற் கரிய கடவுள் கண்டாய்
கருதுவார்க் காற்ற எளியான் கண்டாய் வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்
மெய்ந்நெறி கண்டாய் விரத மெல்லாம் மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்
மறைக்காட் டுறையும் மணாளன் தானே.
திருப்பூவணம்
வடிவேறு திரிதலந் தோன்றுந் தோன்றும்
வளர்சடைமேல் இளமதியந் தோன்றுந் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில்வெண் குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில் திகழுந் திருமுடியு மிலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில்திகழும் பூவணத்தெம் புனித னார்க்கே.
திருஅதிகை வீரட்டானம் கூற்றாயின வாறு விலக்ககிலீர்
கொடுமைபல செய்தன நானறியேன் ஏற்றா யடிக்கேஇர வும்பகலும்
பிரியாது வணங்குவன் எப்பொழுதும்

5
தோற்றாதென் வயிற்றின் அகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட
ஆற்றேன் அடியேன் அதிகைக்கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
நெஞ்சம்முமக் கேயிட மாகவைத்தேன்
நினையாதொரு போதும் இருந்தறியேன் வஞ்சம்மிது வொப்பது கண்டறியேன்
வயிற்றோடு துடக்கி முடக்கியிட நஞ்சாகி வந்தென்னை நலிவதனை
நணுகாமல் துரந்து கரந்துமிடீர் அஞ்சேலுமென் னிர்அதிகைக் கெடில
வீரட்டா னத்துறை அம்மானே.
நீதியால் வாழமாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன் ஒதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான் ஆதியே அலந்து போனேன் அதிகைவி ரட்ட னிரே.
கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன் ஊண்கண் நோக்கி உணர்வெனும் இமை
திறந்து • ܀ விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக்
கொண்டேன் அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவி ரட்ட னிரே.
திருப்பாதிரிப்புலியூர்
ஈன்றாளு மாயெனக் கெந்தையு மாயுடன் தோன்றினராய் மூன்றா யுலகம் படைத்துகந் தான்மனத் துள்ளிருக்க ஏன்றான் இமையவர்க் கன்பன் திருப்பா திரிப்புலியூர்த் தோன்றாத் துணையா யிருந்தனன் தன்னடி யோங்களுக்கே.
அருவாய்க் கிடந்துன் கழலே நினையுங் கருத்துடையேன் உருவாய்த் தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதி நீபா திரிப்புலி யூர்,அரனே.

Page 37
6
திருக்கச்சியேகம்பம்
கருவுற்ற நாள்முத லாகவுன் பாதமே காண்பதற்கு உருகிற்றென் உள்ளமும் நானுங் கிடந்தலந்
தெய்த்தொழிந்தேன் திருவொற்றி யூரா திருவால வாயா திருவாரூரா ஒருபற்றி லாமையுங் கண்டிரங் காய்கச்சி யேகம்பனே.
திருஒற்றியூர் மனமெனுந் தோணி பற்றி மதியெனும் கோலை யூன்றிச் சினமெனுஞ் சரக்கை ஏற்றிச் செறிகட லோடும் போது மதனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா துணையுனும் உணர்வை நல்காய் ஒற்றியூ ருடைய கோவே.
திருக்கயிலாயம்
வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஒவாத சத்தத் தொலியே போற்றி ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
பொது
தலையே நீ வணங்காய்-தலை, மாலை தலைக்கணிந்து தலையா லேபலி தேருந் தலைவனைத்
தலையே நீ வணங்காய்.
கண்காள் காண்மின்களோ-கடல், நஞ்சுண்ட
கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும் பிரான்றன்னைக்
கண்காள் காண்மின்களோ. 2 செவிகாள் கேண்மின்களோ-சிவன், எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்திறம் எப்போதுஞ்
செவிகாள் கேண்மின்களோ. 3

7
மூக்கே நீருமுரலாய்-முது, காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கேதீ முரலாய். 4
வாயே வாழ்த்து கண்டாய்-மத, யானை யுரிபோர்த்துப் பேய்வாழ் காட்டகத் தாடும்பிரான் தன்னை
வாயே வாழ்த்துகண்டாய். 5
நெஞ்சே நீ நினையாய்-நிமிர், புன்சடை நின்மலனை மஞ்சா டும்மலை மங்கை மணாளனை
நெஞ்சே நீநினையாய். 6 கைகாள் கூப்பித்தொழிர்-கடி, மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக்
கைகாள் கூப்பித்தொழிர். 7 ஆக்கை யாற்பயனென்-அரன், கோயில் வலம்வந்து பூக்கை யால் அட்டிப் போற்றியென் னாதஇவ்
ஆக்கை யாற் பயனென். 8 கால்க ளாற்பயனென்-கறைக், கண்ட லுறை கோயில் கோலக் கோபுரக் கோகரணஞ் துழாக்
கால்க ளாற்பயனென். 9
உற்றா ராருளரோ-உயிர், கொண்டு போம்பொழுது குற்றா லத்துறை கூத்தனல் லால்நமக்
குற்றார் ஆருளரோ, O இறுமாந் திருப்பன்கொலோ-ஈசன், பல்கணத்
தெண்ணப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச் சென்றங்
கிறுமாந் திருப்பன்கொலோ.
தேடிக் கண்டுகொண்டேன்-திரு, மாலொடு நான் முகனும்
தேடித் தேடொனாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன். 2
பொது
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுனை யாவது நமச்சி வாயவே.

Page 38
8
காயமே கோயில் ஆகக் கடிமணம் அடிமை யாக வாய்மையே தூய்மை ஆக மன்மணி இலிங்கம் ஆக நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப் பூசனை ஈச னார்க்குப் போற்றவிக் காட்டி னோமே.
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தை இணையடி நீழலே.
விறகில் தீயினன் பாலிற் படுநெய்போல் மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வு கயிற்றினால் முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே.
ஞானத் தால்தொழு வார்சிவ ஞானிகள் ஞானத் தால்தொழு வேனுனை நானலேன் ஞானத் தால்தொழு வார்கள் தொழக்கண்டு ஞானத் தாய்உனை நானுந் தொழுவனே.
கங்கை யாடிலென் காவிரி யாடிலென் கொங்கு தண்கும ரித்துறை யாடிலென் ஒங்கு மாகடல் ஒதநீ ராடிலென்
எங்கும் ஈசனெ னாதவர்க் கில்லையே.
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ ܫ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ஞம்நீ
ஒருகுலமுஞ் சுற்றமும் ஒரூ ரும்நீ
துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் தும்நீ
இறைவன்நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணி றணியாத திருவி லூாரும்
பருக்கோடிப் பத்திமையாற் பாடா வூரும்
பாங்கினொடு பலதளிக ளில்லா வூரும்

19
விருப்போடு வெண்சங்கம் ஊதா ஹபூரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும்
அருப்போடு மலர் பறித்திட் டுண்ணா வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே.
திருநாமம் அஞ்செழுத்துஞ் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில் ஒருகாலுந் திருக்கோயில் துழா ராகில்
உண்பதன்முன் மலர் பறித்திட் டுண்ணா ராகில் அருநோய்கள் கெடவெண்ணி றணியா ராகில் அளியற்றார் பிறந்தவா றேதோ என்னிற் பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்துப்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.
சங்கநிதி பதுமநிதி இரண்டுந் தந்து
தரணியொடு வானாளத் தருவ ரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில் அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
அவர் கண்டீர் நாம்வணங்குங் கடவு ளாரே.
நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை தாமார்க்குங் குடியல்லாத் தன்மையான
சங்கரன்நற் சங்கவெண் குழையோர் காதிற் கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்மலர்ச்சே வடியினையே குறுகி னோமே.

Page 39
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
தேவாரம்
திருவெண்ணெய்நல்லூர்
பித்தாபிறை சூடிபெரு
மானே அருளாளா எத்தான்மற வாதேநினைக்
கின்றேன்மனத் துன்னை வைத்தாய்பெண்ணைத் தென்பால் வெண்ணெய்
நல்லூர் அருட்டுறையுள் அத்தாஉனக் காளாயினி
அல்லேன்எனல் ஆமே.
கோயில்
உய்த்தாடித் திரியாதே உள்ளமே
ஒழிகண்டாய் ஊன்கண் ஒட்டம் எத்தாலுங் குறைவில்லை என்பர்காண்
நெஞ்சமே நம்மை நாளும் பைத்தாடும் அரவினன் படர்சடையன்
பரஞ்சோதி பாவந் தீர்க்கும் பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம்
பெருமானைப் பெற்றா மன்றே.

2.
திருக்கழிப்பாலை
எங்கே னும்மிருந்துன் அடியேன் உனைநினைந்தால் அங்கே வந்தென்னொடும் உடனாகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட் டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே.
திருக்குருகாவூர் வெள்ளடை
பண்ணிடைத் தமிழொப்பாய் பழத்தினிற் சுவையொப்பாய் கண்ணிடை மணியொப்பாய் கடுவிருட் சுடரொப்பாய் மண்ணிடை அடியார்கள் மனத்திடர் வாராமே விண்ணிடைக் குருகாவூர் வெள்ளடை நீயன்றே.
திருக்கோலக்கா
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சம்பந்த னுக்குல கவர்முன் தாளம் ஈந்துஅவன் பாடலுக் கிரங்கும்
தன்மை யாளனை என்மனக் கருத்தை ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சும் கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
திருப்புன்கூர்
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத
அவனைக் காப்பது காரன மாக வந்த காலன்தன் ஆருயி ரதனை
வவ்வினாய்க் குன்தன் வண்மைகண் டடியேன் எந்தை நீஎனை நமன்தமர் நலியின்
இவன்மற் றென்னடி யான்என விலக்கும் சிந்தை யால்வந்துன் திருவடி அடைந்தேன்
செழும்பொ ழில்திருப் புன்கூர் உளானே.

Page 40
22
நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன்
நாவி னுக்கரையன் நாளைப்போ வானும் கற்ற துருதன்நற் சாக்கியன் சிலந்தி 举
கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள் குற்றஞ் செய்யினும் குணம்எனக் கருதும்
கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன் பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும்
பொய்கை தழ்திருப் புன்கூர் உளானே.
திருமழபாடி பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
திருப்பாச்சிலாச்சிராமம்
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையுமென் றிருந்தேன் என்னையும் ஒருவன் உளன்என்று கருதி
இறையிறை திருவருள் காட்டாய் அன்னமாம் பொய்கை தழ்திரு பாச்சி
லாச்சிரா மத்துறை அடிகள் பின்னையே அடியார்க் கருள்செய்வ தாகில்
இவரலா தில்லையோ பிரானார்.
திருக்கடவூர் மயானம்
மருவார் கொன்றை மதிதடி
மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு
மகிழ்ந்து பூதப் படைதழத் திருமால் பிரமன் இந்திரற்கும்
தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப்
பெரிய பெருமா னடிகளே.

23
திருப்புகலூர்
தம்மை யேடிகழ்ந் திச்சை பேசினும்
சார்வி னுந்தொண்டர் தருகிலாப் பொய்ம்மை யாளரைப் பாடா தேயெந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள் இம்மை யேதரும் சோறுங் கூறையும்
ஏத்த லாம்இடர் கெடலுமாம் அம்மை யேசிவ லோகம் ஆள்வதற்
கியாதும் ஐயற வில்லையே.
திருநாகைக்காரோணம்
மாற்றமேல் ஒன்றுரையீர் வாளாநீர் இருந்தீர்
வாழ்விப்பன் என ஆண்டீர் வழியடியேன் உமக்கு ஆற்றவேற் றிருவுடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர்
அணியாரூர் புகப்பெய்த அருநிதியம் அதனில் தோற்றமிகு முக்கூறில் ஒருகூறு வேண்டும்
தாரீரேல் ஒருபொழுதும் அடியெடுக்கல் ஒட்டேன் காற்றனைய கடும்பரிமா ஏறுவது வேண்டும்
கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
திருத்தொண்டத்தொகை
திருவாரூர்
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்
திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்
இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன் வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன்
விரிபொழில்துழி குன்றையார் விறன்மிண்டர்க் கடியேன் அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1
இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன்
ஏனாதி நாதன்றன் அடியார்க்கும் அடியேன்

Page 41
24
கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்க் கடியேன்
கடவூரிற் கலயன்றன் அடியார்க்கும் அடியேன்
மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் சாறன்
எஞ்சாத வாட்டாயன் அடியார்க்கும் அடியேன்
அலைமலிந்த புனல்மங்கை ஆனாயர்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
மும்மையால் உலகாண்ட மூர்த்திக்கும் அடியேன்
முருகனுக்கும் உருத்திர பசுபதிக்கும் அடியேன் செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன்
திருக்குறிப்புத் தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன் மெய்மையே திருமேனி வழிபடா நிற்க
வெகுண்டெழுந்த தாதைதாள் மழுவினால் எறிந்த அம்மையான் அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
திருநின்ற செம்மையே செம்மையாக் கொண்ட
திருநாவுக் கரையன்றன் அடியார்க்கும் அடியேன் பெருநம்பி குலச்சிறைதன் அடியார்க்கும் அடியேன்
பெருமிழலைக் குறும்பர்க்கும் பேயார்க்கும் அடியேன் ஒருநம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன்
ஒலிபுனல்துழி சாத்தமங்கை நீலநக்கர்க் கடியேன் அருநம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வம்பறா வரிவண்டு மனம்நாற மலரும்
மதுமலர்நற் கொன்றையான் அடியலாற் பேனா எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன்
ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன் நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன்
நாட்டமிகு தண்டிக்கும் மூர்க்கர்க்கும் அடியேன் அம்பரான் சோமாசி மாறனுக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே
மறவாது கல்எறிந்த சாக்கியர்க்கும் அடியேன்
சீர்கொண்ட புகழ்வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்

25
கார்கொண்ட கொடைக்கழறிற் றறிவார்க்கும் அடியேன்
கடற்காழிக் கனநாதன் அடியார்க்கும் அடியேன் ஆர்கொண்ட வேற்கூற்றன் களந்தைக்கோன் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 6 பொய்யடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன்
பொழிற்கருவூர்த் துஞ்சிய புகழ்ச்சோழர்க் கடியேன் மெய்யடியான் நரசிங்க முனையரையற் கடியேன்
விரிதிரைதழ் கடல்நாகை அதிபத்தர்க் கடியேன் கைதடிந்த வரிசிலையான் கலிக்கம்பன் கலியன்
கழற்சத்தி வரிஞ்சையர்கோன் அடியார்க்கும் அடியேன் ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 7 கறைக்கண்டன் கழலடியே காப்புக் கொண்டிருந்த
கணம்புல்ல நம்பிக்கும் காரிக்கும் அடியேன் நிறைக்கொண்ட சிந்தையான் நெல்வேலி வென்ற
நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன் துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றுஞ் சோதித்
தொன்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன் அறைக்கொண்ட வேல்நம்பி முனையடுவார்க் கடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 8
கடல்தழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான்
காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன் மடல்துழ்ந்த தார்நம்பி இடங்கழிக்குந் தஞ்சை
மன்னவனாஞ் செருத்துணைதன் அடியார்க்கும் அடியேன் புடைதழ்ந்த புலியதள்மேல் அரவாட ஆடி
பொன்னடிக்கே மனம்வைத்த புகழ்த்துணைக்கும்
அடியேன் அடல்தழந்த வேல்நம்பி கோட்புலிக்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 9
பத்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன்
பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன் சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்க்கும் அடியேன்
திருவாரூர்ப் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன் முப்போதுந் திருமேனி தீண்டுவார்க் கடியேன்
முழுநீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்

Page 42
26
அப்பாலும் அடிச்சார்ந்த அடியார்க்கும் அடியேன்
ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே. 1 0
மன்னியசீர் மறைநாவன் நின்றவூர்ப் பூசல்
வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன் தென்னவனாய் உலகாண்ட செங்கனார்க் கடியேன் திருநீல கண்டத்துப் பாணனார்க் கடியேன் என்னவனாம் அரனடியே அடைந்திட்ட சடையன்
இசைஞானி காதலன் திருநாவ லூர்க்கோன் அன்னவனாம் ஆரூரன் அடிமைகேட் டுவப்பார்
ஆரூரின் அம்மானுக் கன்பரா வாரே.
மீளா அடிமை உமக்கே ஆளாய்ப்
பிறரை வேண்டாதே மூளாத் தீப்போல் உள்ளே கனன்று
முகத்தால் மிகவாடி ஆளாய் இருக்கும் அடியார் தங்கள்
அல்லல் சொன்னக்கால் வாளாங் கிருப்பீர் திருவா ரூரீர்
வாழ்ந்து போதீரே.
விற்றுக் கொள்வீர் ஒற்றி அல்லேன்
விரும்பி ஆட்பட்டேன் குற்றம் ஒன்றுஞ் செய்த தில்லை
கொத்தை ஆக்கினிர் எற்றுக் கடிகேள் என்கண் கொண்டீர்
நீரே பழிப்பட்டீர் மற்றைக் கண்தான் தாரா தொழிந்தால்
வாழ்ந்து போதீரே.
திருக்கோளிலி
நீள நினைந்தடியேன் உமை
நித்தலும் கைதொழுவேன்
வாளன கண்மடவாள் அவள்
வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டை
யூர்ச்சில நெல்லுப்பெற்றேன்

27
ஆளிலை எம்பெருமான் அவை அட்டித் தரப்பணியே.
திருக்கேதீச்சரம் நத்தார்படை ஞானன்பசு ஏறிந்நனை கவிழ்வாய் மத்தம்மத யானை உரி போர்த்தமண வாளன் பத்தாகிய தொண்டர்தொழு பாலாவியின் கரைமேல் செத்தார் எலும் பணிவான்திருக் கேதீச்சரத் தானே.
திருஅஞ்சைக்களம்
தலைக்குத் தலைமாலை அணிந்த தென்னே
சடைமேற் கங்கைவெள்ளம் தரித்த தென்னே அலைக்கும் புலித்தோல் கொண்டசைத்த தென்னே அதன்மேற் கதநாகக் கச்சார்த்த தென்னே மலைக்குந் நிகர் ஒப் பணவன் திரைகள்
வலித்தெற் றிமுழங் கிவலம் புரிகொண் டலைக்குங் கடலங் கரைமேல் மகோதை
அணியார் பொழில்அஞ் சைக்களத் தப்பனே.
திருப்பாண்டிக் கொடுமுடி மற்றுப் பற்றெனக் கின்றி நின்திருப்
பாத மேமனம் பாவித்தேன் பெற்ற லும்பிறந் தேன்இ னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான்ம றக்கினும்
சொல்லும் நாநமச்சி வாயவே.
திருநாவலூர்
தன்மையி னாலடி யேனைத்தாம்
ஆட்கொண்ட நாட்சபைமுன் , வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார்

Page 43
28
புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப் போகம்புணர்த்த
நன்மையி னார்க்கிடம் ஆவது
நந்திரு நாவலூரே.
திருக்கேதாரம்
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம் பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான் தாழாதறஞ் செய்மின்தடங் கண்ணான்மல ரோனும் கீழ்மேலுற நின்றான்திருக் கேதாரமெ னிரே.
திருநொடித்தான்மலை
தானெனை முன்படைத்தான்
அதறிந்துதன் பொன்னடிக்கே நானெனப் பாடலந்தோ
நாயி னேனைப் பொருட்படுத்து வானெனை வந்தெதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து ஊனுயிர் வேறுசெய்தான்
நொடித் தான்மலை உத்தமனே.
ஊர்த்தொகை
காட்டுர்க் கடலே கடம்பூர் மலையே
கானப் பேரூராய் கோட்டுர்க் கொழுந்தே அழுந்து ரரசே
கொழுநற் கொல்லேறே பாட்டுர் பலரும் பரவப் படுவாய்
பனங்காட் டுரானே மாட்டுர் அறவா மறவா துன்னைப்
பாடப் பணியாயே.

29
மாணிக்கவாசக சுவாமிகள்
திருவாசகம் திருவாசகச் சிறப்பு
தொல்லை இரும்பிறவிச் தழும் தளைநீக்கி அல்லலறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லை மருவா நெறிஅளிக்கும் வாதவூர் எங்கோன் திருவா சகம்என்னும் தேன்.
சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சி னிங்காதான் தாள்வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள்வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க ஏகன் அனேகன் இறைவ னடிவாழ்க 5 வேகங் கெடுத்தாண்ட வேந்த னடிவெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஒங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க O ஈச னடிபோற்றி எந்தையடி போற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி 5 ஆராத இன்பம் அருளு மலைபோற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்தாள் வணங்கிச்

Page 44
30
சிந்தை மகிழச் சிவபுரா னந்தன்னை முந்தை வினைமுழுது மோய உரைப்பனியான் 2O கண்ணுதலான் தன்கருனைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன். 25 புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 3 O எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யனன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற 海 மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனஓங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே 35 வெய்யாய் தனியாய் இயமான னாம்விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே 40 ஆக்கம் அளவிறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பில் நாற்றத்தின் நேரியாய் சேயாய் நனியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே 45 கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் சிறந்தடியார் சிந்தனையுள் தேனுாறி நின்று பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்னோர்க ளேத்த மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்தன்னை 50 மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த்தெங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை

3
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய 55 விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காஅட்டி நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60 தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனா ரமுதே சிவபுரனே s பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் 65 பேராது நின்ற பெருங்கருணைப் பேரர்றே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியென் ஆருயிராய் நின்றானே இன்பமுந் துன்பமும் இல்லானே உள்ளானே 7 O அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின் 75 நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும்வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தோற்றச் சுட ரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய் 80 மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேஎன் சிந்தனையுள் ஊற்றான உண்ணா ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப
ஆற்றேன்எம் ஐயா அரனே ஒ என்றென்று 85 போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 9 O

Page 45
32
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்ச் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95
திருப்பள்ளியெழுச்சி
திருப்பெருந்துறை
போற்றிஎன் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் ,
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்துழி
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே.
அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் துரியன் எழஎழ நயனக்
கடிமலர் மலரமற் றண்ணல் அங் கண்ணாம் திரள்நிரை யறுபதம் முரல்வன இவையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே
அலைகட லேபள்ளி எழுந்தரு ளாயே. 2
கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஒவின தாரகை ஒளியொளி உதயத்து
ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளினை காட்டாய்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே யாவரும் அறிவாரி யாய்எமக் கெளியாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 3

33
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 4
பூதங்கள் தோறும்நின் றாயெனின் அல்லால்
போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
கேட்டறி யோம் உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
சிந்தனைக் கும்மரி யாய்எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 5
பப்பற வீட்டிருந் துனரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தாரவர் பலரும். மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் றார்அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கள் மலருந்தண் வயல்தழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே இப்பிறப் பறுத்தெமை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 6
அதுபழச் சுவையென அமுதென அறிதற்
கரிதென எளிதென அமரரும் அறியார் இதுஅவன் திருவுரு இவனவன் எனவே
எங்களை ஆண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவளர் மொழில்திரு வுத்தர கோச
மங்கையுள் ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறுஅது கேட்போம்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

Page 46
34
பந்தணை விரலியும் நீயும்நின் னடியார்
பழங்குடில் தொறும் எழுந் தருளிய பரனே செந்தழல் புரை திரு மேனியும் காட்டித்
திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தன னாவதும் காட்டிவந் தாண்டாய்
ஆரமு தேடபள்ளி எழுந்தரு ளாயே. 8 விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டர்
விழுப்பொரு ளேஉன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 9
புவனியிற் போய்ப்பிற வாமையின் நாள்நாம்
போக்குகின் றோம்அவ மேஇந்தப் பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
படவும்நின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமு தேபள்ளி எழுந்தரு ளாயே. O
திருவெம்பாவை
திருவண்ணாமலை
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்கன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோர் எம்பாவாய்.

35
பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் ,
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடமீதோ விண்னோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 2
முத்தன்ன வெண்ணகையாய் முன்வந் தெதிரெழுந்தென்
அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர் புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டாற் பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய், 3
ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்னெக்கு நின்றுருக யாமாட்டோம் நீயேவந்து
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 4
மாலறியா நான்முகனும் கானா மலையினைநாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலுாறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்னே பிறவே அறிவாரியான் கோலமும் நம்மை ஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்று ஒலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 5
மானே நீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றாலும் நானாமே

Page 47
36
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவாரியான் தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர்
எம்பாவாய். 6
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய் என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வெறாய் இன்னந் துயிலுதியோ வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 7
கோழி சிலம்பச் சிலம்புங் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 8
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே
பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய். 9
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

37
பேதை யொருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்னோரும் மண்ணும் துதித்தாலும்
ஒத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்தன் கோயிற் பினாப்பிள்ளைகாள்
ஏதவனுார் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய். ... O
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோங்காண் ஆரழல்போற்
செய்யாவெண் ணிறாடி செல்வா சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநி ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன் இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோர் எம்பாவாய். 2
பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்க்ைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய், 13
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்

Page 48
38
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 4
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர நீரொருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்னோரைத்
தான்பணியாள் பேரரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும்
வித்தகர்தாள் வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 15
முன்னிக் கடலைச் சுருக்கி யெழுந்துடையாள் ァー என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு முன்னி அவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 16
செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதம் தந்தருளுஞ் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 17
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவி றற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப்

/
பெண்ணாகி ஆனாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப்பூம்புனல்பாய்ந் தாடேலோர்
எம்பாவாய். 8
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றுங் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய். 19
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாஞ் செந்தளிர்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாவுயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய். 20
திருப்பொற்சுண்ணம்
தில்லை
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமக ளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன் ஐ யாறன்அம் மானைப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.

Page 49
40
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்கவேண்டும் மாவின் வடுவகி ரன்ன கண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்னங் கோன்எங்கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே.
சுந்தர நீறணிந் தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள்கொழுநற்கு
ஏய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே.
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்றுவாழ்த்தித் தேசமெல் லாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்துநின்று
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
அறுகெடுப் பார்அய னும்மரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெ டுக்கவொட்டோம் செறிவுடை மும்மதில் எய்தவில்லி w
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கண்அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெ லாம்உரல் போதாதென்றே

41
கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதென்றே
நலக்க அடியோமை ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் துருடத்தந்த
மலைக்கு மருகனைப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணம் இடித்துநாமே. 6
தடகந் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பஆர்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப பாடக மெல்லடி யார்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு ஆடக மாமலை அன்னகோவுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 7
வாட்டடங் கண்மட மங்கைநல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கை பொங்கத் தோட்டிரு முண்டந் துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரான்என்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற்க டைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 8
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கைநாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடப்பொற் சுண்ணம் இடித்துதாமே. 9
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச்
சித்தஞ் சிவனொடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப்

Page 50
42
பித்தெம் பிரானொடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட
அத்தன் கருணையொ டாடஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 0
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெரு மானைத்தேடிச்
சித்தங் களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன் தன்னை ஐயனை ஐயர் பிரானை நம்மை
அகப்படுத் தாட்கொண்-டருமை-காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணினைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 2
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்னமர் மென்மொழியீர் என்னுடை ஆரமுது எங்கள் அப்பன்
எம்பெரு மான்இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன்தகப்பன்
தமையன்எம்ஐயன் தாள்கள் பாடிப் பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 3
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்ப
தாழ்குழல் துருழ்தரு மாலையாடச்
செங்கனி வாய் இத ழுந்துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான்கழற்கே

43
பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப் *
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 4
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை நாடற் கரிய நலத்தைநந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச்
சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பானல் தடங்கண் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 5
ஆவகை நாமும்வந் தன்பர்தம்மோடு
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ்செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெரு மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே. 16
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளை பாடி
மால்விடை பாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்யஅன்று போனக மாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்துநாமே. 7
அயன்தலை கொண்டுசெண் டாடல்பாடி அருக்கன் எயிறு பறித்தல்பாடிக் கயந்தனைக் கொன்றுரி போர்த்தல்பாடிக்
காலனைக் காலால் உதைத்தல்பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டுகொண்ட நயந்தனைப் பாடிநின் றாடி யாடி v
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே. 8

Page 51
44
வட்ட மலர்க்கொன்றை மாலைபாடி மத்தமும் பாடி மதியும்பாடி சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம்ப லத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுனக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டுநின் றாடும் அரவம்பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்துநாமே. 9 வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியு மாய் இரு ளாயினார்க்குத்
துன்பமு மாய்இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயினார்க்குப்
பந்தமு மாய்வீடும் ஆயினாருக்கு ஆதியும் அந்தமும் ஆயினாருக்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே. 20
கோயில் திருப்பதிகம்
தில்லை
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காணவந் தருளாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.
அன்பினால் அடியேன் ஆவியோ டாக்கை
ஆனந்த மாய்க்கசிந் துருக என்பரம் அல்லா இன்னருள் தந்தாய்
யானிதற் கிலனொர்கைம் மாறு முன்புமாய்ப் பின்பு முழுதுமாய்ப் பரந்த
முத்தனே முடிவிலா முதலே தென்பெருந் துறையாய் சிவபெரு மானே
சீருடைச் சிவபுரத் தரைசே. 2

45
அரைசனே அன்பர்க்கு அடியனே லுடைய
அப்பனே ஆவியோ டாக்கை புரை புரை கனியப் புகுந்துநின் றுருக்கிப்
பொய்யிருள் கடிந்தமெய்ச் சுடரே திரைபொரா மன்னும் அமுதத்தெண் கடலே
திருப்பெருந் துறையுறை சிவனே உரையுணர் விறந்துநின் றுணர்வதோர் உணர்வே
யானுன்னை உரைக்குமா றுணர்த்தே. 3
உணர்ந்தமா முனிவர் உம்பரோ டொழிந்தார் உணர்வுக்கும் தெரிவரும் பொருளே இனங்கிலி எல்லா வுயிர்கட்கும் உயிரே
எனைப்பிறப் பறுக்கும்எம் மருந்தே திணிந்ததோர் இருளில் தெளிந்தது வெளியே
திருப்பெருந் துறையுறை சிவனே குணங்கள்தாம் இல்லா இன்பமே உன்னைக்
குறுகினேற் கினியென்ன குறையே. 4
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்தென்
மனத்திடை மன்னிய மன்னே சிறைபெறா நீர்போல் சிந்தைவாய்ப் பாயும்
திருப்பெருந் துறையுறை சிவனே இறைவனே நீஎன் உடலிடங் கொண்டாய்
இனியுன்னை என்னிரக் கேனே. 5
இரந்திரந் துருக என்மனத் துள்ளே
எழுகின்ற சோதியே இமையோர் சிரந்தனிற் பொலியும் கமலச்சே வடியாய் திருப்பெருந் துறையுறை சிவனே நிரந்த காயம் நீர்நிலம் தீகால்
ஆயவை அல்லையாய் ஆங்கே கரந்ததோர் உருவே களித்தனன் உன்னைக்
கண்ணுறக் கண்டுகொண் டின்றே. 6
இன்றெனக் கருளி இருள்கடிந் துள்ளத்து
எழுகின்ற ஞாயிறே போன்று

Page 52
46
நின்றநின் தன்மை நினைப்பற நினைந்தேன்
நீயலால் பிறிதுமற் றின்மை
சென்றுசென் றணுவாய்த் தேய்ந்துதேய்ந்தொன்றாம்
திருப்பெருந் துறையுறை சிவனே
ஒன்றும்நீ யல்லை அன்றியொன் றில்லை
யாருன்னை அறியகிற் பாரே. 7
பார்பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப்
பரந்ததோர் படரொளிப் பரப்பே நீருறு தீயே நினைவதேல் அரிய
நின்மலா நின்னருள் வெள்ளச் சீருறு சிந்தை யெழுந்ததோர் தேனே திருப்பெருந் துறையுறை சிவனே யாருறவு எனக்கிங்கு ஆரயல் உள்ளார்
ஆனந்தம் ஆக்குமென் சோதீ. 8
சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம்
ஒருவனே சொல்லுதற் கரிய ஆதியே நடுவே அந்தமே பந்தம் அறுக்குமா னந்தமா கடலே தீதிலா நன்மைத் திருவருட் குன்றே
திருப்பெருந் துறையுறை சிவனே யாதுநீ போவதோர் வகையெனக் கருளாய்
வந்துநின் இணையடி தந்தே. 9 தந்ததுன் தன்னைக் கொண்டதென் தன்னைச்
சங்கரா ஆர்கொலோ சதுரர் அந்தமொன்று இல்லா ஆனந்தம் பெற்றேன்
யாதுநீ பெற்றதொன்று என்பால் சிந்தையே கோயில் கொண்டனம் பெருமான்
திருப்பெருந் துறையுறை சிவனே எந்தையே ஈசா உடலிடம் கொண்டாய்
யானிதற் கிலன்ஒர்கைம் மாறே. : O
குழைத்தபத்து
திருப்பெருந்துறை
குழைத்தாற் பண்டைக் கொடுவினைநோய் காவாய்உடையாய் கொடுவினையேன்

47
உழைத்தா லுறுதி யுண்டோதான்
உமையாள்கனவா எனையாள்வாய்
பிழைத்தாற் பொறுக்க வேண்டாவோ
பிறைசேர்சடையாய் முறையோவென்று
அழைத்தால் அருளா தொழிவதே
அம்மானேயுன் அடியேற்கே.
அடியேன் அல்லல் எல்லாம்முன்
அகல ஆண்டாய் என்றிருந்தேன் கொடியே ரிடையாள் கூறானங்
கோவேஆஆ என்றருளிச் செடிசேர் உடலைச் சிதையாத
தெத்துக்குஎங்கள் சிவலோகா உடையாய் கூவிப் பணிகொள்ளா
தொறுத்தால்ஒன்றும் போதுமே. 2
ஒன்றும் போதா நாயேனை
உய்யக்கொண்ட நின்கருணை இன்றே யின்றிப் பொய்த்தோதான்
ஏழைபங்கா எங்கோவே குன்றே அனைய குற்றங்கள்
குணமாமென்றே நீகொண்டால், என்றான் கெட்ட திரங்கிடாய்
எண்டோள்முக்கண் எம்மானே. 3
மானேர் நோக்கி மணவாளா
மன்னேநின்சீர் மறப்பித்திவ் வூனே புகளன் தனைநூக்கி
உழலப்பண்ணு வித்திட்டாய் ஆனால் அடியேன் அறியாமை
அறிந்துநீயே அருள்செய்து கோனே கூவிக் கொள்ளுநாள்
என்றென்றுன்னைக் கூறுவதே. 4
கூறும் நாவே முதலாகக்
கூறுங்கரணம் எல்லாம்நீ

Page 53
48
தேறும் வகைநீ திகைப்புநீ
தீமைநன்மை முழுதும்நீ
வேறோர் பரிசிங் கொன்றில்லை
மெய்ம்மைஉன்னை விரித்துரைக்கில்
தேறும் வகைஎன் சிவலோகா
திகைத்தால்தேற்ற வேண்டாவோ.
வேண்டத் தக்க தறிவோய்நீ
வேண்டமுழுதுந் தருவோய்நீ வேண்டும் அயன்மாற் கரியோய்நீ
வேண்டிஎன்னைப் பணிகொண்டாய் வேண்டி நீயா தருள்செய்தாய்
யானும்அதுவே வேண்டின்அல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவும் உன்றன் விருப்பன்றே.
அன்றே என்றன் ஆவியும்
உடலும்உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னை ஆட்
கொண்டபோதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்டோள்முக்கண் எம்மானே நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.
நாயிற் கடையாம் நாயேனை
நயந்துநீயே ஆட்கொண்டாய் மாயப் பிறவி உன்வசமே
வைத்திட்டிருக்கும் அதுவன்றி ஆயக கடவேன் நானோ தான்
கான்னதோ இங் கதிகாரம் காயத் திடுவாய் உன்னுடைய
கழற்கீழ்வைப்பாய் கண்ணுதலே.
கண்ணார் நுதலோய் கழலிணைகள்
கண்டே ல் கண்கள் களிகூர்
எண் ை திாவும் பகலும் ந 1 ன்
அவையேக விண்ணும் அதுவல்ல7ல்

49
மண்மேல் யாக்கை விடுமாறும் வந்துன்கழற்கே புகுமாறும் அண்ணா எண்ணக் கடவேனோ
அடிமைசால் அழகுடைத்தே. 9 அழகே புரிந்திட் டடிநாயேன்
அரற்றுகின்றேன் உடையானே திகழா நின்ற திருமேனி
காட்டிஎன்னைப் பணிகொண்டாய் புகழே பெரிய பதம்எனக்குப்
புராண நீதந் தருளாதே குழகா கோல மறையோனே
கோனே என்னைக் குழைத்தாயே. O
திருச் சதகம் திருப்பெருந்துறை
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விை
யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர் ததும்பி
வெதும்பியுள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய
போற்றியென்னும் கைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்
கண்டுகொள்ளே. கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு
குடிகெடினும் நள்ளேன் நினதடி யாரொடல் லால்நர
கம்புகினும் எள்ளேன் திருவரு ளாலே இருக்கப்
பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்
உத்தமனே.
அறிவுறுத்தல்
நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நான் நடுவே வீ - கத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

Page 54
50
ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புணக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே.
யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன் வானேயும் பெறில்வேண்டேன் மண்னாள்வான்
மதித்துமிரேன் தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனேனம் பெருமான்எம் மானே உன் அருள்பெறுநாள் என்றென்றே வருந்துவனே.
வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க் கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட் டாழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே தழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய் வெள்ளத்தே.
சுட்டறுத்தல்
சிந்தனைநின் றனக்காக்கி நாயி னேன்றன்
கண்ணிணைநின் திருப்பாதப் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்
மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்கள் ஆர வந்தனை ஆட் கொண்டுள்ளே புகுந்த விச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையே உன்னைத் தந்தனைசெந் தாமரைக்கா டனைய மேனித்
தனிச்சுடரே இரண்டுமிலித் தனிய னேற்கே.
ஆனந்தாதீதம்
பாட வேண்டும்நான் போற்றி நின்னையே
பாடி நைந்துநைந் துருகி நெக்குநெக் காட வேண்டும்நான் போற்றி அம்பலத்
தாடு நின்கழற் போது நாயினேன் கூட வேண்டும்நான் போற்றி இப்புழுக்
கூடு நீக்கெனைப் போற்றி பொய்யெலாம் வீட வேண்டும்நான் போற்றி வீடுதந்
தருளு போற்றிநின் மெய்யர் மெய்யனே.

5
நீத்தல் விண்ணப்பம்
உத்தரகோசமங்கை கடையவ னேனைக் கருணையி
னாற்கலந் தாண்டுகொண்ட விடையவ னேவிட் டிடுதிகண்
டாய்விறல் வேங்கையின்தோல் உடையவ னேமன்னும் உத்தர கோசமங் கைக்கரசே சடையவ னேதளர்ந் தேன்எம்பி
ரானென்னைத் தாங்கிக்கொள்ளே.
திருத்தெள்ளேனம்
தில்லை குலம்பாடிக் கொக்கிற கும்பாடிக் கோல்வளையாள் நலம்பாடி நஞ்சுண்ட வாபாடி நாடோறும்
அலம்பார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற சிலம்பாடல் பாடிநாம் தெள்ளேனம் கொட்டாமோ
திருச்சாழல்
தில்லை பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலும் கானேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.
தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன் பெண்பா லுகந்தான் பெரும்பித்தன் கானேடீ பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர் விண்பால் யோகெய்தி வீடுவர் காண் சாழலோ.
அன்னைப் பத்து
தில்லை
வேத மொழியர்வெண் ணிற்றர்செம் மேனியர் நாதப் பறையினர் அன்னே என்னும் நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும் நாதரிந் நாதனார். அன்னே என்னும்.

Page 55
52
கோயில் மூத்த திருப்பதிகம் உடையாள் உன்றன் நடுவிருக்கும் உடையாள்
நடுவுள் நீயிருத்தி அடியேன் நடுவுள் இருவிரும் இருப்ப
தானால் அடியேனுன் அடியார் நடுவுள் இருக்கும்அரு ளைப்புரி
யாய்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும்
வண்ணம் முன்னின்றே.
வாழாப்பத்து திருப்பெருந்துறை பாரொடு விண்ணாய்ப் பரந்தஎம் பரனே பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடு பொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் துறையுறை சிவனே ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத் துரைக்கேன்
ஆண்டநீ யருளிலை யானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகனன் றருள்புரி யாயே.
அச்சப்பத்து தில்லை
புற்றில்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம்
மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல்
பாதம் நண்ணி மற்றுமோர் தெய்வந் தன்னை உண்டென
நினைந்தெம் பெம்மாற் கற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம்
அஞ்சு மாறே.
பிடித்தபத்து
தில்லை அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்தஆ ரமுதே

53
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே.
பால்நினைந் தூட்டுந் தாயினுஞ் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப்பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருப்படையாட்சி
தில்லை
கண்க ளிரண்டும் அவன்கழல் கண்டு
களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு
கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு
மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து
வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படும் ஆயிடிலே.

Page 56
54
அச்சோப் பதிகம்
தில்லை
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச் சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம் குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு அறியும் வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே.
திருச்சதகம் ஆத்துமசுத்தி ஆடு கின்றிலை கூத்துடை
யான்கழற் கன்பிலை என்புருகிப் பாடு கின்றிலை பதைப்பதும்
செய்கிலை பணிகிலை பாதமலர் துடு கின்றிலை சூட்டுகின்
றதுமிலை துணையிலி பினநெஞ்சே தேடு கின்றிலை தெருவுதோ
றலறிலை செய்வதொன் றறியேனே
காருணியத்திரங்கல் தரிக்கிலேன் காய வாழ்க்கை
சங்கரா போற்றி வான விருத்தனே போற்றி எங்கள்
விடலையே போற்றி ஒப்பில் ஒருத்தனே போற்றி உம்பர்
தம்பிரான் போற்றி தில்லை நிருத்தனே போற்றி எங்கள்
நின்மலா போற்றி போற்றி
ஆனந்த பரவசம் யானே பொய்என் நெஞ்சம் பொய்என் அன்பும்பொய் ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும் மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே

55
திருக்கோவையார்
ஐயம்
போதோ விசும்போ புனலோ பணிக ளதுபதியோ யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த துாதோ வனங்கன் றுனையோ வினையிலி
தொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்பதியே.
கண்டமை கூறல்
பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே
மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பி மடப்பிடிவாய் நிணந்தாழ் சுடாரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே.
புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்
மீண்டா ரென உவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிருவர் முன் போயின ரேபுலி யூரெனைநின் றாண்டான் அருவரை ஆளியன் னானைக்கண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை
சொல்லியதே.

Page 57
56
திருவிசைப்பா திருமாளிகைத்தேவர்
ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே! உணர்வுதழ் கடந்ததோர் உணர்வே! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே!
சித்தத்துள் தித்திக்கும் தேனே! அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே!
அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
சேந்தனார் கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றனஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண்(டு) உள்ளம்
குளிரனன் கண்குளிர்ந் தனவே.
கருவூர்த் தேவர் தத்தையங் கணையார் தங்கள்மேல் வைத்த
தயாவைநூ றாயிரங் கூறிட்(டு) அத்திலங்(கு) ஒருகூ(று) உன்கண்வைத் தவருக்(கு)
அமருல(கு) அளிக்கும்நின் பெருமை பித்தனென்(று) ஒருகால் பேசுவ ரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்யும் கைத்தலம் அடியேன் சென்னிவைத்த கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!

57
சேந்தனார் திருப்பல்லாண்டு மன்னுக தில்லை! வளர்கநம்
பத்தர்கள்! வஞ்சகர் போய்அகல பொன்னின்செய் மண்டபத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவி யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
மிண்டு மனத்தவர் போமின்கள்;
மெய்யடியார்கள் விரைந்து வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
ஈசற்காட் செய்மின் குழாம்புகுந்து: அண்டங் கடந்த பொருள் அள
வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள் பண்டும் இன்றும்என்றும் உள்ளபொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே. 2
நிட்டையி லாவுடல் நீத்தென்னை
ஆண்ட நிகரிலா வண்ணங்களும் சிட்டன் சிவனடி யாரைச்
சீராட்டுந் திறங்களுமே சிந்தித்(து) அட்ட மூர்த்திக்கென் அகம்நெக
ஊறும் அமிர்தினுக்(கு) ஆலநிழற் பட்டனுக்(கு) என்னைத்தன் பாற்படுத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 3
சொல்லாண் டசுரு திப்பொருள்
சோதித்த தூய்மனத் தொண்டருள்ளிர்! சில்லாண் டிற்சிதை யுஞ்சில
தேவர் சிறுநெறி சேராமே வில்லாண் டகன கத்திரள்
மேரு விடங்கன் விடைப்பாகன் பல்லாண் டென்னும் பதங்கடந்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 4.

Page 58
புரந்தரன் மாலயன் பூசலிட்(டு)
ஒலமிட்(டு) இன்னம் புகலரிதாய் இரந்திரந்(து) அழைப்பனன் னுயிராண்ட
கோவினுக் கென்செய வல்லமென்றும் கரந்துங் கரவாத கற்பக
னாகிக் கரையில் கருணைக்கடல் பரந்தும் நிரந்தும் வரம்பிலாப்
பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே.
சேவிக்க வந்தயன் இந்திரன்
செங்கண்மால் எங்குந்திசை திசையன கூவிக் கவர்ந்து நெருங்கிக்
குழாங்குழா மாய்நின்று கூத்தாடும் ஆவிக்(கு) அமுதைஎன் ஆர்வத
தனத்தினை அப்பனை ஒப்பமரர் பாவிக்கும் பாவகத்(து) அப்புறத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 6
சீருந் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு
பெற்றேன்; பெற்றதார் பெறுவாருலகில்? ஊரும் உலகுங் கழற
உளறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும்
பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே.
சேலுங் கயலுந் திளைக்குங்
கண்ணார் இளங் கொங்கையிற் செங்குங்குமம் போலும் பொடியணி மார்பிலங்
குமென்று புண்ணியர் போற்றிசைப்ப மாலும் அயனும் அறியா
நெறி தந்து வந்தென் மனத்தகத்தே பாலும் அமுதமும் ஒத்துநின்
றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. 8
பாலுக்குப் பாலகன் வேண்டி
அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான்

arro
59
மாலுக்குச் சக்கரம் அன்(று)அருள்
செய்தவன் மன்னிய தில்லைதன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற
சிற்றம் பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயிலவல்
லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
தாதையைத் தாளற வீசிய
சண்டிக்கிவ் அண்டத்தொடு முடனே பூதலத் தோரும் வணங்கப்பொற்
கோயிலும் போனகமும் அருளிச் சோதி மணிமுடித் தாமமும்
நாமமும் தொண்டர்க்கு நாயகமும் பாதகத் துக்குப் பரிசுவைத்
தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்குங் குழாம்பெருகி விழவொலி விண்ணளவுஞ் சென்று
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த பழஅடி யாரொடுங் கூடி
எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
ஆரார் வந்தார்? அமரர்
குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன்
அங்கி இரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
எந்தை எந்தாய் சுற்ற(ம்) முற்றும்
எமக்கமுதாம் எம்பிரான் என்றென்று சிந்தை செய்யுஞ் சிவன்சீர்
அடியார் அடிநாய் செப்புரை
O
2

Page 59
60
அந்தமில் ஆனந்தச் சேந்தன்
எனைப்புகுந் தாண்டுகொண் டாருயிர்மேல்
பந்தம் பிரியப் பரிந்தவனே
என்று பல்லாண்டு கூறுதுமே. 3
திருமூலர் திருமந்திரம்
மண்ணகத் தான்ஒக்கும் வானகத் தான்ஒக்கும் விண்ணகத் தான்ஒக்கும் வேதகத் தான் ஒக்கும் பண்ணகத் தின்னிசை பாடலுற் றானுக்கே கண்ணகத் தேநின்று காதலித் தேனே.
யான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம் வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே. ஆரறி வார்எங்கள் அண்ணல் பெருமையை யாரறி வார் இந்த அகலமும் நீளமும் பேரறி யாத பெருஞ்சுடர் ஒன்றதின் வேரறி யாமை விளம்புகின் றேனே.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற் பதியினைப் போற்பசு பாசம் அனாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசநில் லாவே.
ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப் பேரினை நீக்கிப் பினமென்று போரிட்டுச் துரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே.
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார் மடக்கொடி யாரொடு மந்தனங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.

6.
புடைவை கிழிந்தது போயிற்று வாழ்க்கை அடையப்பட் டார்களும் அன்பில ரானார் கொடையில்லை கோளில்லை கொண்டாட்ட மில்லை நடையில்லை நாட்டில் இயங்குகின் றார்கட்கே,
கல்லா அரசனுங் காலனும் நேரொப்பர் கல்லா அரசனிற் காலன் மிகநல்லன் கல்லா அரசன் அறம்ஒரான் கொல்லென்பான் நல்லாரைக் காலன் நணுகநில் லானே.
யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை யாவர்க்கு மாம்.உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.
அன்பு சிவம் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.
நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள் எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினுங் கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே.
நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர் நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர் நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர் நடுவுநின் றாரொடு யானும்நின் றேனே.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான் என்று உடம்பினை யானிருந் தோம்புகின் றேனே.

Page 60
62
கண்காணி யில்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா விடமில்லை காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கு நின்றானைக் கண்காணி கண்டார் களவொழிந் தாரே.
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நானாமே சென்றே புகுங்கதி யில்லைநுஞ் சித்தத்து நின்றே நிலைபெற நீர்நினைந் துய்மினே.
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன்னறி வாகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியா தறிவானை யாரறி வாரே.
ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆதச மாமிடம் ஆரும் அறிகிலார் ஆதச மாமிடம் ஆரும் அறிந்தபின் ஆதச மானிடம் ஆசூச மாமே.
ஆசை யறுமின்கள் ஆசை யறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை யறுமின்கள் ஆசை படப்ப்ட ஆய்வருந் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்த மாமே.
சிவசிவ என்கிலர் தீவினை யாளர் சிவசிவ என்றிடத் தீவினை மாளுஞ்
சிவசிவ என்றிடத் தேவரு மாவர்
சிவசிவ என்னச் சிவகதி தானே.
எங்குந் திருமேனி எங்குஞ் சிவசத்தி எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குஞ் சிவமா யிருத்தலால் எங்கெங்குந்
தங்குஞ் சிவனருட் டன்விளை யாட்டதே. நெற்றிக்கு நேரே புருவத் திடைவெளி உற்றுற்றுப் பார்க்க வொளிவிடு மந்திரம் பற்றுக்குப் பற்றாய்ப் பரம னிருந்திடஞ்
சிற்றம் பலமென்று சேர்ந்துகொண் டேனே.

63 .
தத்துவம் எங்குண்டு தத்துவன் அங்குண்டு தத்துவம் எங்கில்லை தத்துவன் அங்கில்லை தத்துவ ஞானத்தின் தன்மை யறிந்தபின் தத்துவன் அங்கே தலைப்படுந் தானே.
நானென்றுந் தானென்றும் நாடினேன் நாடலும் நானென்றுந் தானென் றிரண்டில்லை யென்பது நானென்ற ஞான முதல்வனே நல்கினான் நானென்று நானும் நினைப்பொழிந் தேனே.
பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுள குட்டிப் பசுக்களோ ரேழுள ஐந்துள குட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும் பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினாற் பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.
உணர்வுடை யார்கட் குலகமுந் தோன்றும் உணர்வுடை யார்கட் குறுதுய ரில்லை உணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம் உணர்வுட்ை யார்கள் உணர்ந்துகண் டாரே. நிறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் ஈசன் அறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் இன்பம் மறம்பல எவ்வண்ணம் அவ்வண்ணம் பாவம் புறம்பல காணினும் போற்றகி லாரே. தஞ்சாவூர்த் தட்டான் தலத்துக்கு நாயகன் மஞ்சாடி கொள்ளான் வழக்கன்றி மன்றேறான் துஞ்சான் உறங்கான் தொழில்செய்யான் சோம்பான் அஞ்சாறு நாளைக் கவதியிட் டானே.

Page 61
64
காரைக்காலம்மையார் அற்புதத் திருவந்தாதி
அறிவானுந் தானே அறிவிப்பான்தானே
அறிவாய் அறிகின்றான் தானே-அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாசம் அப்பொருளுந் தானே அவன்.
குந்தி நடந்து குனிந்தொருகை கோல்ஊன்றி நொந்திருமி ஏங்கி நுரைத்தேறி - வந்துந்தி ஐயாறு வாயாறு பாயாமுன் நெஞ்சமே ஐயாறு வாயால் அழை. பொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மேனி பொலிந்திலங்கும் மின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
வீழ்சடை வெள்ளிக்குன்றம் தன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
மால்விடை தன்னைக்கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம்
ஆகிய ஈசனுக்கே.
சேரமான்பெருமாள் நாயனார் பொன்வண்ணத்தந்தாதி சிந்தனை செய்ய மனம்அமைத்
தேன்செப்ப நாஅமைத்தேன் வந்தனை செய்யத் தலைஅமைத்
தேன்கை தொழஅமைத்தேன் பந்தனை செய்வதற் கன்பமைத்
தேன்மெய் அரும்பவைத்தேன்

65
வெந்தவெண் ணிறணி ஈசற்
கிவையான் விதித்தனவே.
நக்கீர நாயனார் கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
தொழுது நமனுந்தன் தூதுவர்க்குச் சொல்லும் வழுவில்சீர்க் காளத்தி மன்னன் - பழுதிலாப் பத்தர்களைக் கண்டாற் பணிந்தகலப் போமின்கள் எத்தனையுஞ் சேய்த்தாக என்று.
அதிராவடிகள்
மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை
மொழியின் மறைமுதலே முந்நயனத் தேறே கழிய வருபொருளே கண்ணே-தெழிய கலாலயனே எங்கள் கணபதியே நின்னை அலாதையனே தழாதென் அன்பு.
பட்டினத்துப்பிள்ளையார் திருவிடைமருதூர் மும்மணிக்கோவை
வந்திகண் டாய் அடி யாரைக்கண்
டால்மற வாதுநெஞ்சே சிந்திகண் டாய்அரன் செம்பொற்
கழல்திரு மாமருதைச் சந்திகண் டாயில்லை யாயின்
நமன்தமர் தாங்கொடுபோய் உந்திகண் டாய்நிர யத்துன்னை
வீழ்த்தி உழக்குவரே.
நம்பியாண்டார்நம்பி கோயில் திருப்பண்ணியர் விருத்தம்
உண்டேன் அவரருள் ஆரமிர்
தத்தினை உண்டலுமே
கண்டேன் எடுத்த கழலும்
கனலுங் கவித்தகையும்

Page 62
66
ஒண்டேன் மொழியினை நோக்கிய
நோக்கும் ஒளிநகையும்
வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்
தாடும் மணியினையே.
ஆளுடையபிள்ளையார் திருவந்தாதி
கவிக்குத் தகுவன கண்ணுக்
கினியன கேட்கில்இன்பம்
செவிக்குத் தகுவன சிந்தைக்
குரியன பைந்தரளம்
நவிக்கட் சிறுமியர் முற்றில்
முகந்துதஞ் சிற்றில்தொறும்
குவிக்கத் திரைபரக் குங்கொச்சை
நாதன் குரைகழலே.
திருநாவுக்கரசுதேவர் திருவேகாதசமாலை
இலைமா டென்றிடர் பரியா ரிந்திர னேயொத் துறுகுறை வற்றாலும் நிலையா திச்செல்வ மெனவே கருதுவர்
நீள்சன் மக்கட லிடையிற்புக் கலையார் சென்றரன் நெறியா குங்கரை
அண்ணப் பெறுவர்கள் வண்ணத்திண் சிலைமா டந்திகழ் புகழா மூருறை
திருநா வுக்கர சென்போரே.

67
சேக்கிழார் திருத்தொண்டர் புராணம்
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்; நிலவு லாவிய நீர்மலி வேணியன்; அலகில் சோதியன்; அம்பலத் தாடுவான் மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார். ‘தெண்ணிலா மலர்ந்த வேணியாய் உன்றன்
திருநடம் கும்பிடப் பெற்று மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்ஆம்’ என்று கண்ணில் ஆனந்த அருவிநீர் சொரியக் கைம்மலர் உச்சிமேற் குவித்துப் பண்ணினால் நீடி அறிவரும் பதிகம்
பாடினார் பரவினார் பணிந்தார். திங்கள்சேர் சடையார் தம்மைச் சென்றவர் கானா முன்னே அங்கணர் கருணை கூர்ந்த அருட்டிரு நோக்கம் எய்தத் தங்கிய பவத்தின் முன்னைச் சார்புவிட் டகல நீங்கிப் பொங்கிய ஒளியின் நீழல் பொருவில்அன் புருவம் ஆனார்.
அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கல் அன்பென்றும் அவனுடைய அறிவெல்லாம் நமைஅறியும் அறிவென்றும்

Page 63
68
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாம்என்றும் அவனுடைய நிலை இவ்வா றறிநீ என் றருள்செய்வார்.
நன்மைபெரு கருள்நெறியே வந்தணைந்து நல்லுரரின் மன்னுதிருத் தொண்டனார் வணங்கிமகிழ்ந்
தெழும்பொழுதில் 'உன்னுடைய நினைப்பதனை முடிக்கின்றோம்!”
என்றவர்தஞ் சென்னிமிசை பாதமலர் துட்டினான் சிவபெருமான்.
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின்
வேண்டு கின்றார் 'பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல்
உன்னை என்றும் மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டுநான்
மகிழ்ந்து பாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ்
இருக்க' என்றார். களவுபொய் காமம் கோபம் முதலிய
குற்றம் காய்ந்தார்; வளமிகு மனையின் வாழ்க்கை நிலையினார்;
மனைப்பால் உள்ள அளவைகள் நிறைகோல் மக்கள் ஆவொடு
மேதி மற்றும் உளவெலாம் அரசின் நாமஞ் சாற்றும்
அவ்வொழுக லாற்றார்.
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித் துள்ளமும் ஓங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.

69
அபிராமி பட்டர் அபிராமி அந்தாதி
காப்பு
தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்தில்லை ஊரர்தம் பாகத்து உமைமைந்தனே! உலகுரழும் பெற்ற சீர்அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே கார் அம்ர் மேனிக் கணபதியே! நிற்கக் கட்டுரையே.
நூல்
உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது, மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்குமத் தோயம்என்ன விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே.
துணையும், தொழுந்தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும், பனிமலர்ப்பூங் கணையும், கருப்புச்சிலையும், மென்பாசாங் குசமும், கையில் அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே. 2
அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு செறிந்தேன், உனது திருவடிக்கே, திருவே, வெருவிப் பிறிந்தேன், நின்அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால் மறிந்தே விழும் நரகுக்குஉற வாய மனிதரையே! 3
மனிதரும், தேவரும், மாயா முனிவரும் வந்துசென்னி குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த புனிதரும் நீயும்என் புந்தி எந்நாளும் பொருந்துகவே. 4

Page 64
7 O
பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை அம்புயம்மேல் திருந்திய சுந்தரி, அந்தரி பாதம்என் சென்னியதே. 5
சென்னியது உன்பொற் றிருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னியது உன்திரு மந்திரம்; சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி முறைமுறையே பன்னியது, என்றும் உந்தன் பரமஆகம பத்ததியே! 6
ததியுறு மத்தில் சுழலும்என் ஆவி, தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருதுகண் டாய் கமலாலயனும், மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கிஎன்றும் துதியுறு சேவடியாய்! சிந்துர ஆனன சுந்தரியே! 7
சுந்தரி எந்தை துணைவி,என் பாசத் தொடரையெல்லரம் வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல் அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன் கந்தரி கைத்தலத்தாள் மலர்த் தாள்என் கருத்தனவே. 8
கருத்தன எந்தைதன், கண்ணன, வண்ணக் கணகவெற்பில் பெருத்தன, பால்அழும் பிள்ளைக்கு நல்கின, பேர்அருள்கூர் திருத்தன பாரமும்; ஆரமும், செங்கைச் சிலையும்,அம்பும் முருத்துஅன மூரலும், நீயும்.அம்மே; வந்துஎன் முன்நிற்கவே. 9
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுஉன்னை: என்றும் வணங்குவது உன்மலர்த் தாள்;எழு தாமறையின் ஒன்றும் அரும்பொருளே! அருளே! உமையே! இமயத்து அன்றும் பிறந்தவளே! அழியா முத்தி ஆனந்தமே! O
ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய், வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும் தான்.அந்த மான சரணார விந்தத் தவளநிறக் கானம்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே. 1 1.
கண்ணியது உன்புகழ் கற்பதுஉன் நாமம்; கசிந்துபத்தி பண்ணியது உன்இரு பாதாம் புயத்தில்; பகல்இரவா நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து; நான் முன்செய்த புண்ணியம் ஏது? என்அம்மே!புவி ஏழையும் பூத்தவளே! 12

7
பூத்தவளே புவனம் பதி னான்கையும், பூத்தவண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே! மாத்தவளே! உன்னை அன்றி, மற்றஒர்தெய்வம் வந்திப்பதே!13
வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்; சிந்திப்பவர், நல் திசைமுகர் நாரணர்: சிந்தையுள்ளே பந்திப்பவர், அழியாப் பரமானந்தர்; பாரில் உன்னைச் சந்திப் பவர்க்கு எளிதாம் எம்பிராட்டி நின் தண்ணளியே. 14
தண்ணளிக்கு என்று முன்னேபல கோடி தவங்கள்செய்வார், மண்அளிக்கும் செல்வமோ பெறு வார்?மதி வானவர்தம் விண்அளிக்கும் செல்வமும், அழியா முத்தி விடும்அன்றோ? பண்அளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே 15
கிளியே!கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே! ஒளிரும் ஒளிக்குஇடமே எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே! அளியேன் அறிவு அளவிற்குஅள வானது அதிசயமே! 6
அதிசய மான வடிவுடை யாள் அரவிந்தமெல்லாம் துதிசயஆனன சுந்தர வல்லி! துணை இரதி பதிசய மானது அபசய மாகமுன் பார்த்தவர்தம் மதிசய மாக அன்றோ,வாம பாகத்தை வவ்வியதே? 17
வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும் செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே அவ்வியம் தீர்த்துஎன்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து, வெவ்விய காலன்என் மேல்வரும் போது, வெளிநிற்கவே! 18
வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து,என் விழியும்நெஞ்சும் களிறின்ற வெள்ளம் கரைகண்டது இல்லை; கருத்தினுள்ளே தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ! ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே! 19
உறைகின்ற நின்திருக் கோயில்,நின் கேள்வர் ஒருபக்கமோ? அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம் நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சகமோ? என்தன்
நெஞ்சகமோ? மறைகின்ற வாரிதி யோ? பூர ணாசல மங்கலையே! 20

Page 65
72
மங்கலை, செங்கல சம்முலை யாள்,மலையாள், வருணச் சங்குஅலை செங்கைச் சகல கலாமயில், தாவுகங்கை பொங்குஅலை தங்கும் புரிசடையோன் புடையாள், உடையாள், பிங்கலை, நீலி,செய்யாள், வெளியாள் பசும்பெண்
கொடியே. 2. கொடியே இளவஞ்சிக் கொம்பே எனக்குவம்பே பழுத்த படியே! மறையின் பரிமளமே! பணிமால் இமயப் பிடியே! பிரமன் முதலாய தேவரைப் பெற்றஅம்மே! அடியேன் இறந்துஇங்கு இனிப்பிறவாமல் வந்துஆண்டு
கொள்ளே! 22, கொள்ளேன் மனத்தில்நின் கோலம்அல் லாது, அன்பர் கூட்டம்
தன்னை
விள்ளேன்; பரசமயம் விரும்பேன்; வியன்மூவுலகுக்கு உள்ளே! அனைத்தினுக்கும் புறம்பே உள்ளத்தே விளைந்த கள்ளே! களிக்கும் களியே! அளியளன் கண்மணியே! 23
மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் மணிபுனைந்த அணியே! அணியும் அணிக்குஅழகே அணு காதவர்க்குப் பிணியே! பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே பணியேன் ஒருவரை, நின்பத்ம பாதம் பணிந்தபின்னே! 24
பின்னே திரிந்துஉன் அடியாரைப் பேணிப் பிறப்புஅறுக்க முன்னே தவங்கள் முயன்றுகொண்டேன்; முதல் மூவருக்கும் அன்னே! உலகுக்கு அபிராமி என்னும் அருமருந்தே! என்னே? இனிஉன்னை யான்மற வாமல்நின்று ஏத்துவனே! 25
ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல்அணங் கேமணம் நாறும்நின் தாள்இணைக்குஎன் நாத்தங்கு புன்மொழி ஏறிய வாறு நகையுடைத்தே 26 உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும்.அன்பு படைத்தனை பத்ம பதயுகம் துடும் பணிஎனக்கே அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம்நின்
அருட்புனலால் துடைத்தனை சுந்தரி! நின்அருள் ஏதென்று சொல்லுவதே 27
சொல்லும் பொருளும் என, நட மாடும் துணைவருடன் புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்

7 3
அல்லும் பகலும் தொழும்அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவ லோகமும் சித்திக்குமே, 28
சித்தியும், சித்தி தரும்தெய்வம் ஆகித் திகழும்பரா சத்தியும், சத்தி தழைக்கும் சிவமும், தவம்முயல்வார் முத்தியும், முத்திக்கு வித்தும், வித்தாகி முளைத்தெழுந்த புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தைஅன்றே. 29 அன்றே தடுத்துஎன்னை ஆண்டுகொண் டாய்;கொண்டது
அல்லளன்கை நன்றே? உனக்கினி நான்என் செயினும், நடுக்கடலுள் சென்றே விழினும், கரையேற்றுகை நின் திருவுளமே ஒன்றே பலஉருவே! அருவே! என் உமையவளே! 30
உமையும் உமையொரு பாகரும் ஏக உருவில்வந்துஇங்கு,
என்மயும் தமக்குஅன்பு செய்யவைத் தார்; இனி எண்ணுதற்குச் சமையங்களும் இல்லை; ஈன்றுஎடுப் பாள்ஒரு தாயும்இல்லை; அமையும், அமையுறு தோளியர் மேல்வைத்த ஆசையுமே! 31
ஆசைக் கடலில் அகப்பட்டு, அருள்அற்ற அந்தகன்கைப் பாசத்தில் அல்லற்படஇருந்தேனை, நின் பாதம் என்னும் வாசக் கமலம் தலைமேல் வலியவைத்து ஆண்டுகொண்ட நேசத்தை என்சொல்லுவேன்! ஈசர் பாகத்து நேரிழையே! 32
இழைக்கும் வினைவழியே அடும் காலன் எனைநடுங்க அழைக்கும் பொழுதுவந்து, 'அஞ்சல்' என்பாய்; அத்தர்
சித்தம்எல்லாம் குழைக்கும் களபக் குவிமுலை யாமளைக் கோமளமே! உழைக்கும்பொழுது, உன்னையே 'அன்னையே’ என்பன்,
ஓடிவந்தே. 33
வந்தே சரணம் புகும் அடியார்க்கு, வானுலகம் தந்தே, பரிவொடு தான்போய் இருக்கும் சதுர்முகமும், பைந்தேன் அலங்கற் பருமனி ஆகமும், பாகமும்,பொற் செந்தேன் மலரும், அலர்கதிர் ஞாயிறும், திங்களுமே. 34
திங்கட் பகவின் மணம்நாறும் சீறடி சென்னிவைக்க, எங்கட் கொருதவம் எய்தியவா? எண்இறந்த விண்ணோர் தங்கட்கும் இந்தத் தவம்எய்துமோ? தரங்கக் கடலுள் வெங்கட் பணிஅணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே!35

Page 66
74
பொருளே! பொருள்முடிக்கும் போகமே! அரும்
போகம்செய்யும் மருளே! மருளில் வரும்தெருளே! என் மனத்துவஞ்சத்து இருள்ஏதும் இன்றி ஒளிவெளி ஆகியிருக்கும் உன்றன் அருள் ஏது அறிகின்றிலேன், அம்புயஆதனத்து
அம்பிகையே! 36
கைக்கே அணிவது கன்னலும் பூவும்; கமலம்அன்ன மெய்க்கே அணிவது வெண்முத்து மாலை; விடஅரவின் பைக்கே அணிவது பன்மணிக் கோவையும் பட்டும்;எட்டுத் திக்கே அணியும் திருவுடை யான்இடம் சேர்பவளே! 37
பவளக் கொடியில் பழுத்தசெவ் வாயும், பனிமுறுவல் தவளத் திருநகை யும்துணையா, எங்கள் சங்கரனைத் துவளப் பொருது,துடிஇடை சாய்க்கும் துனைமுலையாள் அவளைப் பணிமின் கண்டீர் அமராவதி ஆளுகைக்கே. 38
ஆளுகைக்கு உன்தன் அடித் தாமரைகள்உண்டு; அந்தகன்பால் மீளுகைக்கு உன்தன் விழியின் கடைஉண்டு; மேல்இவற்றின் மூளுகைக்கு என்குறை நின்குறையே அன்று; முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு தொடுத்தவில்லான் பங்கில்
வாள்நுதுலே! 39
வாணுதல் கண்ணியை, விண்ணவர் யாவரும் வந்துஇறைஞ்சிப் பேணுதற்கு எண்ணிய எம்பெரு மாட்டியை பேதைநெஞ்சில் காணுதற்கு அண்ணியள் அல்லாத கன்னியை, காணும்.அன்பு பூணுதற்கு எண்ணிய எண்ணம்அன்றோ, முன்செய்
புண்ணியமே! 40
புண்ணியம் செய்தனமே மனமே! புதுப் பூங்குவளைக் கண்ணியும்,செய்ய கணவரும் கூடி,நம் காரணத்தால் நண்ணி இங்கேவந்து, தம்அடி யார்கள் நடுஇருக்கப் பண்ணி, நம் சென்னியின்மேல் பத்மபாதம் பதித்திடவே. 41 இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு இறுகி இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை மலைகொண்டு இறைவர்
வலியநெஞ்சை நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி! நல்அரவின் படங்கொண்ட அல்குல் பனிமொழி, வேதப் பரிபுரையே. 42

75
பரிபுரச் சீறடிப் பாசாங்குசை, பஞ்சபாணி, இன்சொல் திரிபுர சுந்தரி, சிந்துர மேனியள், தீமைநெஞ்சில் புரிபுர வஞ்சரை அஞ்சக் குனிபொருப் புச்சிலைக்கை, எரிபுரை மேனி இறைவர்செம் பாகத்து இருந்தவளே! 43
தவளே இவள் எங்கள் சங்கரனார் மனைமங்கலமாம்; அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினள்; ஆகையினால், இவளே கடவுளர் யாவர்க்கும் மேலே இறைவியுமாம்; துவளேன், இனிஒரு தெய்வம்உண் டாகமெய்த்
தொண்டுசெய்தே. 44
தொண்டு செய்யாது, நின்பாதம் தொழாது, துணிந்துஇச்சையே பண்டு செய்தார் உளரோஇலரோ? அப்பரிசு அடியேன் கண்டு செய்தால்,அது கைதவமோ அன்றிச் செய்தவமோ? மிண்டு செய்தாலும் பொறுக்கைநன்றே, பின்
வெறுக்கைஅன்றே. 45
வெறுக்கும் தகைமைகள் செய்யினும், தம்அடியாரை மிக்கோர் பொறுக்கும் தகைமை புதியதுஅன்றே; புதுநஞ்சை உண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே! மறுக்கும் தகைமைகள் செய்யினும், யான்உன்னை
வாழ்த்துவனே. 46
வாழும் படிஒன்று கண்டுகொண்டேன்: மனத்தே ஒருவர் வீழும் படிஅன்று; விள்ளும்படி அன்று; வேலைநிலம் ஏழும், பருவரை எட்டும் எட்டாமல், இரவுபகல் தழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே. 47
சுடரும் கலைமதி துன்றும் சடைமுடிக் குன்றில்ஒன்றிப் படரும் பரிமளப் பச்சைக் கொடியைப் பதித்துநெஞ்சில், இடரும் தவிர்த்து, இமைப் போதுஇருப்பார் பின்னும்
எய்துவரோ குடரும் கொழுவும் குருதியும் தோயும் குரம்பையிலே? 48
குரம்பை அடுத்துக் குடிபுக்க ஆவி,வெங் கூற்றுக்குஇட்ட வரம்பை அடுத்து மறுகும்.அப்போது, வளைக்கை அமைத்து அரம்பை யடுத்த அரிவையர் தழவந்து, 'அஞ்சல்' என்பாய், நரம்பை அடுத்த இசைவடி வாய்நின்ற நாயகியே! 49

Page 67
76
நாயகி, நான்முகி, நாராயணி, கை நளினபஞ்ச சாயகி, சாம்பவி, சங்கரி, சாமளை, சாதிநச்சு வாயகி மாலினி, வாராகி துலினி, மாதங்கிஎன்று ஆயகியாதி உடையாள் சரணம் அரண் நமக்கே. 50
அரணம் பொருள்என்று அருள் ஒன்றுஇலாத அசுரர்தங்கள் முரண் அன்று அழியமுனிந்த பெம்மானும் முகுந்தனுமே, ‘சரணம் சரணம்’ எனநின்ற நாயகிதன் அடியார், மரணம் பிறவி இரண்டும்எய்தார், இந்த வையகத்தே. 5
வையம், துரகம், மதகரி, மாமகுடம், சிவிகை, பெய்யும் கனகம், பெருவிலை ஆரம், பிறைமுடித்த ஐயன் திருமனை யாள் அடித் தாமரைக்கு அன்புமுன்பு செய்யும் தவமுடை யார்க்கு உளவாகிய சின்னங்களே. 52
சின்னஞ் சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும், பென்னம் பெரிய முலையும், முத்தாரமும், பிச்சிமொய்த்த கன்ன்ங் கரிய குழலும், கண் மூன்றும் கருத்தில்வைத்துத் தன்னந் தனிஇருப் பார்க்குஇது போலும் தவம்இல்லையே. 53 இல்லாமை சொல்லி, ஒருவர்தம் பால்சென்று, இழிவுபட்டு நில்லாமை நெஞ்சில் நினைகுவிரேல், நித்தம் நீடுதவம் கல்லாமை கற்ற கயவர்தம்பால் ஒரு காலத்திலும் செல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே. 54
மின்ஆயிரம் ஒரு மெய்வடி வாகி விளங்குகின்ற அன்னாள், அகமகிழ் ஆனந்த வல்லி, அருமறைக்கு முன்னாய்,நடுஎங்குமாய், முடிவாய முதல்வி தன்னை உன்னாது ஒழியினும் உன்னினும், வேண்டுவது
ஒன்றில்லையே. 55
ஒன்றாய் அரும்பிப் பலவாய் விரிந்து, இவ்வுலகுஎங்குமாய் நின்றாள்,அனைத்தையும் நீங்கிநிற்பாள் என்தன் நெஞ்சினுள்ளே பொன்றாது நின்று புரிகின்றவா! இப்பொருள் அறிவார் அன்று ஆலிலையில் துயின்ற பெம்மானும் என்ஐயனுமே. 56
ஐயன் அளந்தபடி இருநாழி கொண்டு, அண்டமெல்லாம் உய்ய அறம்செயும் உன்னையும் போற்றி, ஒருவர்தம்பால் செய்ய பசுந்தமிழ்ப் பாமாலையும் கொண்டு சென்றுபொய்யும் மெய்யும் இயம்பவைத்தாய்: இதுவோ உன்தன் மெய்யருளே? 57

77
அருணாம் புயத்தும்,என் சித்தாம் புயத்தும், அமர்ந்திருக்கும் தருணாம் புயமுலைத் தையல் நல்லாள்,தகை சேர்நயனக் கருனாம் புயமும், வதனாம் புயமும், கராம்புயமும், சரணாம் புயமும் அல்லால் கண்டிலேன்,ஒரு தஞ்சமுமே. 58
தஞ்சம் பிறிதுஇல்லை. ஈதுஅல்லது என்று, உன் தவநெறிக்கே நெஞ்சம் பயில நினைகின்றிலேன்; ஒற்றை நீள் சிலையும் அஞ்சுஅம்பும் இக்குஅலராக நின்றாய்! அறியார் எனினும், பஞ்சுஅஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே. 59
பாலினும் சொல்இனி யாய்!பனி மாமலர்ப் பாதம்வைக்க, மாலினும், தேவர்வணங்க நின்றோன் கொன்றை வார்சடையின் மேலினும், கீழ்நின்று வேதங்கள் பாடும்மெய்ப் பீடம்ஒரு நாலினும், சாலநன்றோ அடியேன் முடை நாய்த்தலையே? 60
நாயே னையும் இங்குஒரு பொருளாக நயந்துவந்து, நீயே நினைவின்றி ஆண்டுகொண் டாய்,நின்னை
உள்ளவண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாய்; என்ன பேறுபெற்றேன்! தாயே, மலைமகளே, செங்கண் மால்திருத் தங்கைச்சியே! 61
தங்கச் சிலைகொண்டு, தானவர் முப்புரம் சாய்த்து, மத வெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன் மெய்அடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி, கோகநதச் செங்கைக் கரும்பும், மலரும்எப் போதும் என்சிந்தையதே. 62
தேறும் படிசில ஏதுவும் காட்டி,முன் செல்கதிக்குக் கூறும் பொருள்,குன்றில் கொட்டும் தறி,குறிக்கும் சமயம் ஆறும் தலைவி இவளாய் இருப்பது அறிந்திருந்தும், வேறும் சமயம்உண்டு என்று கொண்டாடிய வீனருக்கே. 63
வீணே பலிகவர் தெய்வங்கள் பால்சென்று, மிக்கஅன்பு பூனேன்; உனக்குஅன்பு பூண்டு கொண்டேன்;
நின்புகழ்ச்சியன்றிப் பேனேன், ஒருபொழுதும்; திரு மேனிப்ரகாசம் அன்றிக் காணேன் இருநில மும்,திசை நான்கும் ககனமுமே. 64
ககனமும் வானும் புவனமும் காண ,விற் காமன்அங்கம் தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்

Page 68
78
முகனும் முந்நான்கு இருமூன்றுஎனத் தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோ? வல்லி நீசெய்த வல்லபமே. 65
வல்லபம் ஒன்றறியேன்; சிறியேன் நின் மலரடிச்செம் பல்லவம் அல்லது பற்றுஒன்று இலேன்; பசும் பொன்பொருப்பு வில்லவர் தம்முடன் வீற்றிருப்பாய், வினையேன் தொடுத்த சொல்அவ மாயினும், நின்திரு நாமங்கள் தோத்திரமே. 66
தோத்திரம் செய்து தொழுதுமின் போலும்நின் தோற்றம்ஒரு மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர் வண்மை,குலம், கோத்திரம், கல்வி, குணம்குன்றி, நாளும் குடில்கள்தொறும் பாத்திரம் கொண்டு பலிக்குஉழலா நிற்பர் பாரெங்குமே. 67
பாரும், புனலும், கனலும்,வெங் காலும், படர்விசும்பும்; ஊரும் முருகு சுவைஒளி ஊறுஒலி ஒன்றுபடச் சேரும் தலைவி, சிவகாம சுந்தரி சீறடிக்கே சாரும் தவம் உடையார் படையாத தனம்இல்லையே. 68
தனம்தரும்; கல்வி தரும்; ஒரு நாளும் தளர்வுஅறியா மனம்தரும்; தெய்வ வடிவும் தரும்:நெஞ்சில் வஞ்சம்இல்லா இனம்தரும்; நல்லன எல்லாம் தரும்அன்பர் என்பவர்க்கே, கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 69
கண்களிக் கும்படி கண்டுகொண் டேன், கடம் பாடவியில்: பண்களிக்கும் குரல் வீணையும், கையும், பயோதரமும், மண்களிக்கும் பச்சை வண்ணமும் ஆகி, மதங்கர்குலப் பெண்களில் தோன்றிய எம்பெரு மாட்டிதன் பேரழகே. 70
அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி, அருமறைகள் பழகிச் சிவந்த பதாம்புயத் தாள்,பனி மாமதியின் குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க, இழவுற்று நின்றநெஞ்சே! இரங்கேல்! உனக்கு என்குறையே? 71
என்குறை தீரநின்று ஏத்துகின் றேன்; இனி யான்பிறக்கின். நின்குறையே அன்றி யார்குறை காண்1இரு நீள்விசும்பின் மின்குறை காட்டி மெலிகின்ற நேரிடை மெல்லியலாய்! தன்குறை தீர,எம் கோன்சடை மேல்வைத்த தாமரையே. 72
தாமம் கடம்பு; படைபஞ்ச பாணம்; தனுக்கரும்பு; யாமம் வயிரவர் ஏத்தும் பொழுது:எமக்கென்று வைத்த

79
சேமம் திருவடி; செங்கைகள் நான்கு, ஒளி செம்மை;அம்மை நாமம் திரிபுரை ஒன்றோடு இரண்டு நயனங்களே. 7 3
நயனங்கள் மூன்றுடை நாதனும், வேதமும், நாரணனும், அயனும் பரவும் அபிராம வல்லி அடிஇணையைப் பயன்என்று கொண்டவர், பாவையர் ஆடவும் பாடவும்,பொன் சயனம் பொருந்து தபணியக் காவினில் தங்குவரே. 74 தங்குவர் கற்பகத் தாருவின் நீழலில்; தாயர் இன்றி மங்குவர், மண்ணில் வழுவாப் பிறவியை, மால்வரையும், பொங்குவர் ஆழியும், ஈரேழ் புவனமும் பூத்தஉந்திக் கொங்குஇவர் பூங்குழலாள் திரு மேனி குறித்தவரே. 75 குறித்தேன் மனத்தில், நின்கோலம் எல்லாம்;நின் குறிப்பறிந்து மறித்தேன் மறலி வருகின்ற நேர்வழி; வண்டுகிண்டி வெறித்தேன் அவிழ்கொன்றை வேணிப் பிரான்ஒரு
கூற்றைமெய்யில் பறித்தே குடிபுகுதும் பஞ்ச பாண பயிரவியே! 76
பயிரவி! பஞ்சமி பாசாங் குசைபஞ்ச பாணி!வஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி! காளி ஒளிரும்கலா வயிரவி! மண்டலி மாலினி தலி! வராகிஎன்றே செயிர்அவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. 77
செப்பும் கனக கலசமும் போலும் திருமுலைமேல் அப்பும் களப அபிராம வல்லி அணிதரளக் கொப்பும், வயிரக் குழையும், விழியின் கொழும்கடையும், துப்பும் நிலவும் எழுதிவைத்தேன் என் துணைவிழிக்கே. 78
விழிக்கே அருளுண்டு அபிராம வல்லிக்கு வேதம்சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு:அவ் வழிகிடக்கப், பழிக்கே சுழன்று, வெம்பாவங்களே, செய்து, பாழ்நரகக் குழிக்கே அழுந்தும் கயவர்தம் மோடுஎன்ன கூட்டுஇனியே! 79
கூட்டியவா என்னைத் தன்அடி யாரில், கொடியவினை ஒட்டியவா, என்கண் ஒடியவா, தன்னை உள்ளவண்ணம் காட்டியவா, கண்ட கண்ணும் மனமும் களிக்கின்றவா, ஆட்டியவா நடம், ஆடகத் தாமரை ஆரணங்கே. 80
அணங்கே அணங்குகள் நின்பரி வாரங்கள் ஆகையினால் வணங்கேன் ஒருவரை வாழ்த்துகிலேன் நெஞ்சில்; வஞ்சகரோடு

Page 69
80
இணங்கேன்; எனதுஉனது என்று இருப்பார்சிலர் யாவரொடும் பிணங்கேன் அறிவொன்றி லேன்,என் கண்நீவைத்த
பேரளியே! 8
அளிஆர் கமலத்தில் ஆரணங்கே அகிலாண்டமும் நின் ஒளியாக நின்ற ஒளிர்திரு மேனியை உள்ளுதொறும் களியாகி, அந்தக் கரணங்கள் விம்மிக் கரைபுரண்டு
வெளியாய் விடின்,எங்ங்னே மறப்பேன் நின் விரகினையே? 82
விரவும் புதுமலர் இட்டு,நின் பாத விரைக்கமலம் இரவும் பகலும் இறைஞ்சவல்லார், இமையோர் எவரும் பரவும் பதமும், அயிரா வதமும், பகீரதியும் உரவும் குலிசமும், கற்பகக் காவும் உடையவரே. 83
உடையாளை, ஒல்குசெம் பட்டு உடையாளை, ஒளிர்மதிச்செஞ் சடையாளை, வஞ்சகர் நெஞ்சடையாளை, தயங்கும் நுண்ணுால் இடையாளை, எங்கள் பெம்மான் இடையாளை,
இங்கென்னை இனிப் படையாளை, உங்களையும் படையா வண்ணம்
பார்த்திருமே. 84
பார்க்கும் திசைதொறும் பாசாங் குசமும், பனிச்சிறைவண்டு ஆர்க்கும் புதுமலர் ஐந்தும், கரும்பும்,என் அல்லல்எல்லாம் தீர்க்கும் திரிபுரையாள் திரு மேனியும், சிற்றிடையும், வார்க்குங்கும முலையும், முலைமேல் முத்து மாலையுமே. 85
மால்அயன் தேட, மறைதேட, வானவர்தேட நின்ற காலையும் துடகக் கையையும் கொண்டு, கதித்தகப்பு வேலை வெங்காலன் என்மேல் விடும்போது,
வெளிநில்கண்டாய்! பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே!86
மொழிக்கும் நினைவுக்கும் எட்டாத நின்திருமூர்த்தி, எந்தன் விழிக்கும் வினைக்கும் வெளிநின்ற தால்;விழியால் மதனை அழிக்கும் தலைவர் அழியா விரதத்தை, அண்டமெல்லாம் பழிக்கும் படி,ஒரு பாகம் கொண்டுஆளும் பராபரையே! 87
பரம்என்று உனை அடைந்தேன் தமியேனும், உன்பத்தருக்குள் தரம்அன்று இவன்என்று தள்ளத் தகாது; தரியலர்தம்

8
புரம்அன்று எரியப் பொருப்புவில் வாங்கிய, போதில்அயன் சிரம்ஒன்று செற்ற கையான்இடப் பாகம் சிறந்தவளே! 88
சிறக்கும் கமலத் திருவே! நின் சேவடி சென்னிவைக்கத் துறக்கம் தரும்நின் துணைவரும் நீயும், துரியமற்ற உறக்கம் தரவந்து, உடம்போடு உயிர் உறவு அற்றுஅறிவு மறக்கும் பொழுது,என் முன்னே வரல்வேண்டும்
வருந்தியுமே. 8
வருந்தா வகை என் மனத் தாமரையினில் வந்துபுகுந்து இருந்தாள், பழைய இருப்பிடமாக, இனி எனக்குப் பொருந்தாத ஒருபொருள் இல்லை; விண்மேவும் புலவருக்கு விருந்தாக, வேலை மருந்தானதை நல்கும் மெல்லியலே! 9 O
மெல்லிய நுண்இடை மின்அனை யாளை, விரிசடையோன் புல்லிய மென்முலை பொன்அனை யாளைப் புகழ்ந்து, மறை சொல்லிய வண்ணம் தொழும்.அடி யாரைத்தொழும் அவர்க்கு பல்லியம் ஆர்த்துஎழ, வெண்பகடு ஊரும் பதம் தருமே. 91
பதத்தே உருகி, நின்பாதத்திலே மனம்பற்றி, உன்றன் இதத்தே ஒழுக, அடிமை கொண் டாய்; இனியான் ஒருவர் மதத்தே மதிமயங் கேன்;அவர் போனவழியும் செல்லேன்! முதல்தேவர் மூவரும் யாவரும் போற்றும் முகிழ்நகையே!. 92
நகையே இஃதுஇந்த ஞாலம்எல் லாம்பெற்ற நாயகிக்கு முகையே, முகிழ்முலை மானே முதுகண் முடிவில்அந்த வகைய்ே பிறவியும் வம்பே; மலைமகள் என்பதுநாம்; மிகையே, இவள்தன் தகைமையை நாடி விரும்புவதே. 9 3
விரும்பித் தொழும் அடியார்விழி நீர்மல்கி, மெய்புளகம் அரும்பித், ததும்பிய ஆனந்த மாகி, அறிவிழந்து, சுரும்பிற் களித்து, மொழிதடு மாறி,முன் சொன்னஎல்லாம் தரும் பித்தர் ஆவரென்றால், அபிராமி சமயம்நன்றே! 94.
நன்றே வருகினும், தீதே விளைகினும், நான் அறிவது ஒன்றேயும் இல்லை; உனக்கே பரம்;எனக்கு உள்ளஎல்லாம் அன்றே உனதென்று அளித்து விட்டேன்; அழியாதகுணக் குன்றே! அருட்கடலே! இம வான்பெற்ற கோமளமே! 95

Page 70
82
கோமள வல்லியை, அல்லியந் தாமரைக் கோயில்வைகும் யாமள வல்லியை, ஏதம் இலாளை, எழுதரிய சாமள மேனிச் சகலகலா மயில் தன்னைத்தம்மால் ஆமளவும் தொழு வார்,எழு பாருக்கும் ஆதிபரே. ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன், போதில் பிரமன், புராரி, முராரி, பொதியமுனி, காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்முதல்
சாதித்த புண்ணியர் எண்ணிலர் போற்றுவர் தையலையே.
தைவந்து நின் அடித்தாமரை சூடிய சங்கரற்குக், கைவந்த தீயும் தலைவந்த ஆறும் கரந்ததுஎங்கே? மெய்வந்த நெஞ்சின் அல்லால், ஒருகாலும் விரகர்தங்கள் பொய்வந்த நெஞ்சில் புகல்அறியா மடப் பூங்குயிலே!.
குயிலாய் இருக்கும் கடம்பா டவியிடை கோலவியன் மயிலாய் இருக்கும் இமயாசலத் திடை வந்து உதித்த
96
97
9 8
வெயிலாய் இருக்கும் விசும்பில்; கமலத்தின்மீது அன்னமாம்,
கயிலாய ருக்கு அன்றுஇமவான் அளித்த கணங்குழையே.
99
குழையைத் தழுவிய கொன்றையந் தார்கமழ் கொங்கைவல்லி,
கழையைப் பொருத திருநெடுந் தோளும், கருப்புவில்லும்,
விழையப் பொருதிறல் வேரிஅம் பானமும், வெண்ணகையும்,
உழையைப் பொருகண்ணும், நெஞ்சில் எப்போதும்
உதிக்கின்றவே! 100
நூற்பயன்
ஆத்தாளை, எங்கள் அபிராம வல்லியை, அண்டமெல்லாம்
பூத்தாளை, மாதுளம் பூநிறத் தாளை, புவி அடங்கக் காத்தாளை, அம்குச பாசாங் குசமும் கரும்பும்அங்கை சேர்த்தாளை, முக்கண்ணியைத் தொழுவார்க்கு
ஒருதீங்கில்லையே.
முற்றிற்று.

83
பூரீ குமரகுருபர சுவாமிகள்
சகல கலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின் பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொ
லோசக மேழு மளித் துண்டா னுறங்க வொழித்தான்பித்
தாகவுண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே. 2
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே .
சகல கலாவல்லியே. 3
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய்

Page 71
84
வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும்
தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணங் காட்டும்வெள் ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
சொல்விற் பனமு மவதான முங்கவி சொல்லவல்ல
நல்வித்தை யுந்தந் தடிமைகொள் வாய்நளி னாசனஞ்சேர்

85
செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே
ககல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
ய்ார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசன்ன நானநடை கற்கும் பதாம்புயத்தாளே சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகல கலாவல்லியே.
சரஸ்வதியந்தாதி
காப்பு
ஆய கலைக ளறுபத்து நான்கினையு
மேய வுணர்விக்கு மென்னம்மை-துாய
O
உருப்பளிங்கு போல்வாளென் னுள்ளத்தி னுள்ளே
இருப்பளிங்கு வாரா திடர்.
படிக நிறமும் பவளச்செவ் வாயுங்
கடிகமழ்பூந் தாமரைபோற் கையும்-துடியிடையும் அல்லும் பகலு மனவரத முந்துதித்தாற்
கல்லுஞ்சொல் லாதோ கவி.

Page 72
86
லலிதாம்பிகை
நவரத்தின மாலை
ஞான கணேசா சரணம் சரணம் ஞான ஸ்கந்தா சரணம் சரணம் ஞான ஸத்குரு சரணம் சரணம் ஞானா னந்தா சரணம் சரணம்
காப்பு
ஆக்கும்தொழில் ஐங்கரனாற்றநலம் பூக்கும் நகையாள் புவனேஸ் வரிபால் சேர்க்கும் நவரத்தினமாலையினைக் காக்கும் கனநா யகவா ரனமே! மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே
மாதா ஜெயஒம் லலிதாம்பிகையே (மாதா)
வைரம்
கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங் கனவான தவம் பெற்றும் தெரியார் நிலையென்னில் அவர்
பெருகும் பிழையென் பேசத் தகுமோ பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்க் கெமனாக எடுத் தவளே வற்றாத அருட் சுனையே வருவாய்
மாதா ஜெயஓம் லலிதாம் பிகையே! (மாதா)
நீலம்
மூலக் கனலே சரணம் சரணம்
முடியா முதலே சரணம் சரணம்

87
கோலக் கிளியே சரணம் சரணம்
குன்றாத ஒளிக் குவையே சரணம் நீலத் திருமே ணியிலே நினைவாய்
நினை வற்றெளியேன் நின்றேன் அருள்வாய் வாலைக் குமரி வருவாய் வருவாய்!
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)
முத்து முத்தே வருமுத் தொழிலாற் றிடவே
முன்னின் றருளும் முதல்வி சரணம் வித்தே விளைவே சரணம் சரணம்
வேதாந்த நிவா ஸினியே சரணம் தத்தே றியநான் தனயன் தாய்நீ −
சாகா தவரம் தரவே வருவாய் மத்தே னுததிக் கிணை வாழ் வடையேன்
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)
பவளம்
அந்தி மயங்கிய வானவி தானம்
அன்னை நடம் செய்யும் ஆனந்தமேடை சிந்தை நிரம்ப வளம்பொழி வாளோ
தேம்பொழி லாமிது செய்தவ ளாரோ எந்தை யிடத்து மனத்தும் இருப்பாள்
எண்ணுப வர்க்கருள் எண்ணமி குத்தாள் மந்திர வேத மயப்பொரு ளானாள்
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)
மாணிக்கம்
காணக் கிடையாக் கதியா னவளே
கருதக் கிடையாக் கலையா னவளே பூணக் கிடையாப் பொலிவா னவளே
புனையக் கிடையாப் புதுமைத் தவளே நாணித் திருநா மமும் நின் துதியும்
நவிலாதவரை நாடா தவளே! மாணிக்க ஒளிக் கதிரே வருவாய்
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)

Page 73
88
மரகதம்
மரகத வடிவே சரணம் சரணம்
மதுரித பதமே சரணம் சரணம் சுரபதி பணியத் திகழ்வாய் சரணம்
சுதிஜதி லயமே இசையே சரணம் அர ஹர சிவனன் றடியவர் குழும
அவரருள் பெற அரு ளமுதே சரணம் வரநவ நிதியே சரணம் சரணம்
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)
கோமேதகம்
பூமே வியநான் புரியும் செயல்கள்
பொன்றாது பயனும் குன்றா வரமும் தீமேல் இடினும் ஜெயசக் தியெனத்
திடமாய் அடியேன் மொழியுந் திறமும் கோமே தகமே குளிர்வான் நிலவே
குழல்வாய் மொழியே தருவாய் தருவாய் மாமே ருவிலே வளர்கோ கிலமே
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே! (மாதா)
பதுமராகம்
ரஞ்சனி நந்தினி அங்கனி பதும
ராகவி காசவி யாபினி அம்பா சஞ்சல ரோக நிவாரணி வாணி
சாம்பவி சந்த்ர கலாதரி ராணி அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி
அம்ருத சொரூபிணி நித்யகல் யாணி மஞ்சுள மேரு ச்ருங்க நிவாஸினி
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே (மாதா)
வைடுரியம்
வலையொத்த வினை கலையொத்த மனம்
அருளப் பறையாற் றொளியொத் தவிதால்
நிலையற் றெளியேன் முடியத் தகுமோ
நிகளம் துகளாக வரம் தருவாய்

89
அலையற் றசைவற் றநுபூ திபெறும்
அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத் துவசன் மகளே வருவாய்
மாதா ஜெயஒம் லலிதாம் பிகையே (மாதா)
நூற்பயன் எவர் எத் தினமும் இசைவாய் லலிதா நவரத் தினமாலை நவின் றிடுவார் அவர் அற்புதசக் தியெலாம் அடைவார் சிவரத் தினமாய்த் திகழ்வா ரவரே. (மாதா)
குங்குமத்தாய் நாமாவளி
மங்களக் குங்குமத் தாயே! பொங்கும் மங்களம் தருவாயே!
குங்குமத்தை அணிந்திருக்கும் தாயே என் குறைகளைத் தீர்க்க வருவாயே மஞ்சளையும் கொண்டிருக்கும் தாயே, இங்கு மங்களமாய் வந்திருப்பாய் நீயே!
நெய்விளக்கு ஏற்றி வைத்தேன் தாயே-இங்கு நித்தமென்னைக் காத்திடுவாய்-நீயே கைவிளக்காய்த் துணையிருப்பாய் தாயே என் கவலைகளைப் போக்கிடுவாய் நீயே!
மாலை ஒன்று கட்டி வைத்தேன் தாயே-உன் மனதை மட்டும் எனக்கருள்வாய் நீயே பால் பழங்கள் நான் படைத்தேன்-தாயே அதன் பலனை எல்லாம் எனக்களிப்பாய் நீயே!
தேடித்தேடி அலைந்திருந்தேன் தாயே-உன் திருவருளைக் காட்டிடுவாய் நீயே பாடி அழுது ஏங்குகிறேன் தாயே-இந்தப் பாலன் முகம் பார்த்தருள்வாய் நீயே!

Page 74
90
சரஸ்வதி துதி
நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக்கொழிக்குங் கவிவாணர்நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்துநடம் ஆடிக் களிக்கும் மயிலே உன்பாதம் அடைக்கலமே.
-தேசிக விநாயகம்பிள்ளை.
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீனைசெய்யும் ஒலியில் இருப்பாள், கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறுபாவலர் உள்ளத் திருப்பாள், உள்ளதாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள், கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள் -வெள்
மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள் கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள் கோத கன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில் ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் -Gaugin -பாரதியார். வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள்-வெள்ளை அரியா சனத்தி லரசரோ டென்னைச் சரியா சனம்வைத்த தாய்.
-காளமேகப் புலவர்

9
ஒளவையார்
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன் அரை ஞானும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் 5 வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும், O இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ் ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூடிக வாகன! 5 இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல் ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து, 2O குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள்என வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக், கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டிகான் செவியில் 25 தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி, ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம்

Page 75
92
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக், கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே, ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே, இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக், கடையிற் சுழுமுணைக் கபாலமுங் காட்டி, மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக், குண்டலி யதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து, மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச், சண்முக தூலமுஞ் சதுர்முகச் தக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப், புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக், கருத்தினிற் கபால வாயில் காட்டி, இருத்தி முத்தி இனிதெனக் கருளி, என்னை அறிவித், தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன அருள் தரும் ஆனந்தத் தழுத்தி, என்செவியில் எல்லை இல்லா ஆனந் தமளித்(து) அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச், சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்,
3 O
35
40
45
5 O
55
6 O

93
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் 65 கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக், கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத், 7 O தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
விநாயகர் அகவல் முற்றிற்று.
காப்பு
கரும்பும் இளநீருங் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங் கணபதியே இக்கதைக்குக் காப்பு. திருவிளங்கு மான்மருகா சேவதனில் ஏறி வரும்அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு முன்பிறந்த யானை முகவா உனைத்தொழுவேன் என்கதைக்கு நீஎன்றுங் காப்பு.
விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும்-உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமு கத்தானைக் காதலாற் கூப்புவர்தம் கை.
ஒற்றை மருப்பும் ஓரிரண்டு கைத்தலமும் வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொழுதுங் கொண்டக்கால் வாராது கூற்று.
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலுந்துஉனக்கு நான்தருவேன்-கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.

Page 76
94
கச்சியப்ப சுவாமிகள்
விநாயக கவசம்
வளர்சிகையைப் பராபரமாய் வயங்குவிநா
யகர்காக்க வாய்ந்த சென்னி யளவுபடா வதிகசவுந் தரதேக
மதோற்கடர்தா மமர்ந்து காக்க விளரறநெற் றியையென்றும் விளங்கியகா
சிபர்காக்க புருவந் தம்மைத் தளர்வின்மகோ தரர்காக்க தடவிழிகள்
பாலசந் திரனார் காக்க.
கவின் வளரு மதரங்கச முகர் காக்க
தாலங்கணக் கிரீடர் காக்க நவில்சிபுகங் கிரிசைசுதர் காக்கநனி
வாக்கைவிநா யகர்தாங் காக்க அவிர்நகைதுன் முகர்காக்க வள்ளெழிற் செஞ்செவி பாசபாணி காக்க தவிர்தலுறா திளங்கொடிபோல் வளர்மணிநா
சியைச்சிந்தி தார்த்தர் காக்க,
காமருபூ முகந்தன்னைக் குணேசர்நன காக்ககளங் கனேசர் காக்க வாமமுறு மிருதோளும் வயங்குகந்த பூர்வசர்தா மகிழ்ந்து காக்க ஏமமுறு மணிமுலைவிக் கினவினா
சன்காக்க விதயந் தன்னைத் தோமகலுங் கனநாதர் காக்கவகட்
டினைத்துலங்கே ரம்பர் காக்க.

95
பக்கமிரண் டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவ நீக்கும் விக்கினக ரன்காக்க விளங்கிலிங்கம்
வியாளபூ டனர்தாங் காக்க தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர்
காக்கசக னத்தை யல்லல் \உக்ககண பன்காக்க வூருவைமங்
களமூர்த்தி யுவந்து காக்க, 4 தாழ்முழந்தாண் மகாபுத்தி காக்கவிரு
பதமேக தந்தர் காக்க வாழ்கரங்கப் பிரப்பிரசா தனர் காக்க முன்கையை வணங்கு வார்நோய் ஆழ்தரச்செய் யாசாபூ ரகர்காக்க விரல்பதும வத்தர் காக்க கேழ்கிளரு நகங்கள்விநா யகர்காக்க
கிழக்கினிற்புத் தீசர் காக்க. 5 அக்கினியிற் சித்தீசர் காக்கவுமா
புத்திரர் தென்னாசை காக்க மிக்கநிரு தியிற்கனே சுரர்காக்க
விக்கினவர்த் தனர்மேற் கென்னுந் திக்கதனிற் காக்கவா யுவிற்கசகன்
னன்காக்க திகழு தீசி தக்கநிதி பன்காக்க வடகிழக்கி
லீசநந் தனரே காக்க. 6 ஏகதந்தர் பகன்முழுதுங் காக்கவிர
வினுஞ்சந்தி யிரண்டன் மாட்டும் ஒகையின்விக் கினகிருது காக்கவிராக்
கதர்பூத முறுவே தாள மோகினிபே யிவையாதி யுயிர்த் திறத்தால்
வருந்துயரு முடிவி லாத வேகமுறு பிணிபலவும் விலக்குபுபா
சாங்குசர்தாம் விரைந்து காக்க. ' 7 மதிஞானந் தவந்தான மானமொளி
புகழ்குலம்வண் சரீர முற்றும் பதிவான தனந்தானி யங்கிரக
மனைவிமைந்தர் பயினட் பாதிக்

Page 77
9 6
கதியாவுங் கலந்துசர்வா யுதர்காக்க
காமர் பவுத் திரர்முன் னான
விதியாருஞ் சுற்றமெலா மயூரேச
ரெஞ்ஞான்றும் விரும்பிக் காக்க, 8
வென்றிசீ விதங்கபிலர் காக்ககரி யாதியெலாம் விகடர் காக்க என்றிவ்வா றிதுதனைமுக் காலமுமோ
திடினும்பா லிடையூ றொன்றும் ஒன்றுறா முனிவரர் கா ளறிமின்கள் யாரொருவ ரோதி னாலு மன்றவாங் கவர்தேகம் பிணியறவச்
சிரதேக மாகி மன்னும். 9
கி.வா. ஜகந்நாதன் விநாயகர் வழிபாடு
ஓங்கார மென்கின்ற பிரண வத்தின் உறுபொருளாய்த் திகழ்கின்றான்; உருவம் போற்றப் பாங்கான திருவருளைப் புரிந்து நிற்பான்; பரமசிவன் திருப்புதல்வன்; சித்தி புத்தி ஆங்காளும் மனைவியரை மணந்து கொள்வான்; அறவாழி அந்தணனாய் மணந்து நின்றான் யான்கான மறவன்புலம் மேவி நின்றான்; எந்தையவன் சரணங்கள் ஏத்த வாரீர். உருத்திரன்தன் தலைமகனாய்த் தோன்றி வந்தான்; உமைமைந்தன், மறவன்புலம் கோயில் கொள்வான், திருத்திகழும் அருள்வாழி, தொண்டர் கூட்டம் சிறந்தோங்கி வளம்பெற்றுச் செழித்து வாழி: மருவுமன்னர் ஆட்சிசெய்து மலர்ந்து வாழி: மதிப்புடைய கல்விஉள்ளார் சிறந்து வாழி; வெருவலின்றி யாவருமே பிள்ளை யாரின் விரவியநல் அருள்பெற்றே வாழி! வாழி!

97
அருணகிரிநாத சுவாமிகள்
திருப்புகழ்
விநாயகர் துதி
கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடு மரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய - முதல்வோனே முப்புர மொரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை யிபமாகி அக்குற மகளுட னச்சிறு முருகனை
அக்கண மனமருள் பெருமாளே
முருகன் துதி
ஏறுமயி லேறிவிளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறுமடி யார்கள்வினை தீர்க்குமுக மொன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்றமுக மொன்றே

Page 78
9 8
மாறுபடு துரரை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுக மொன்றே
ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம் அமர்ந்தபெரு மாளே!
கந்தரந்தாதி திமிரத் திமிரக் கதரங்க கோபசெவ் வேலகைவேல் திமிரத் திமிரக் ககுலாந் தகவரைத் தேன்பெருகுந் திமிரத் திமிரத் தனையாவி யாளுமென் சேவகனே திமிரத் திமிரக் கனலாய சந்தன சீதளமே.
சீதனங் கோடு புயங்கைகொண் டார் தந் திருமருக சீதனங் கோடு முடியாளர் சேய்தனக் கேதுளதோ சீதனங் கோடு னிதருமென் பார்தொழுந் தேவிபெறுஞ் சீதனங் கோடு கொடிவேன் மயூரஞ் சிலையரசே,
சிலைமத னம்படு மாறெழுஞ் சேய்மயி லுச்சிட்டவெச் சிலைமத னம்படு சிந்துவை யிந்துவைச் செய்வதென்யான் சிலைமத னம்படு காட்டுவர் கேளிருஞ் செங்கழுநீர்ச் சிலைமத னம்படு தாமரை வாவி திரள் சங்கமே.
திரளக் கரக்கரை வென்கண்ட வேலன் றிசைமுகன்மால் திரளக் கரக்கரை யான்பாட நாடுதல் செய்யசங்க
திரளக் கரக்கரை காண்பான்கைந் நீத்திசை வார்பனிக்க திரளக் கரக்கரை வானிட்டு மைந்தர் புந் திக்கொக்குமே.
திக்கத்திக் கோடு படிபுடைச் சூதத் தெறிபடபத் திக்கத்திக் கோடு கடடக் கடறடி சேப்படைச்சத் திக்கத்திக் கோடு துறைத்திறத் தற்ற குறக்குறச்சத் திக்கத்திக் கோடு பறித்துக்கொ டாதி சிறைபிறப்பே. சிறைவர வாமையி லேறிச் சிகரி தகரவந்து சிறைவர வாமையில் கூப்பிடத் தானவர் சேனைகொண்ட சிறைவர வாமையில் வாங்கிதன் றேங்கழல் யாங்கழலாச் சிறைவர வாமையி னெஞ்சுட னேநின்று தேங்குவதே.

99.
கந்தரநுபூதி
காப்பு நெஞ்சக் கனகல்லு நெகிழ்ந் துருகத் தஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர் செஞ்சொற் புனைமாலை சிறந் திடவே பஞ்சக் கரவானை பதம் பணிவாம்.
நூல் ஆடும் பரிவே லணிசே வலெனப் பாடும் பணியே பணியா யருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியா னைசகோ தரனே.
உல்லாச நிராகுல யோக விதச் சல்லாப விநோதனு நீ யலையோ எல்லாமற என்னை யிழந்த நலஞ் சொல்லாய் முருகா சுரபூ பதியே. 2 வானோ புனல்பார் கனல்மா ருதமோ ஞானோ தயமோ நவில்நான் மறையோ யானோ மனமோ எனையாண் டவிடந்
தானோ பொருளா வதுசண் முகனே. 3 வளைபட்டகைம் மாதொடு மக்க ளெனுந் தளை பட் டழியத் தகுமோ தகுமோ கிளைபட் டெழுது ருரமுங் கிரியுந் தொளைபட் டுருவத் தொடுவே லவனே. 4
மகமாயை களைந்திட வல்ல பிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தைய ரென் றயருஞ் சகமாயையுள் நின்று தயங் குவதே. 5

Page 79
10 O
திணியா னமனோ சிலைமீ துனதாள் அணியா ரரவிந்த மரும்பு மதோ பணியா வென வள்ளி பதம் பணியுந் தனியா வதிமோக தயா பரனே.
கெடுவாய் மனனே கதிகேள் கரவா திடுவாய் வடிவே லிறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனைதூள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே.
அமரும் பதிகே ளகமா மெனுமிப் பிமரங் கெடமெய்ப் பொருள் பேசியவா குமரன் கிரிராச குமாரி மகன் சமரம் பொரு தானவ நாசகனே.
மட்டுர்குழல் மங்கையர் மையல் வலைப் பட்டுசல் படும் பரிசென் றொழிவேன் தட்டு டறவேல் சயிலத் தெறியும் நிட்டுர நிராகுல நிர்ப் பயனே.
கார்மா மிசைகா லன்வரிற் கலபத் தேர்மா மிசைவந் தெதிரப் படுவாய் தார்மார்ப வலாரி தலாரி யெனுஞ் துர்மா மடியத் தொடுவே லவனே.
கூகா வெனவென் கிளைகூ டியழப் போகா வகைமெய்ப் பொருள்பே சியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகா மணியே.
செம்மான் மகளைத் திருடுந் திருடன் பெம்மான் முருகன் பிறவா னிறவான் சும்மா இருசொல் லறவென் றலுமே அம்மா பொரு ளொன்று மறிந்திலனே'.
முருகன் தனிவேல் முனிநங் குருவென் றருள்கொண் டறியா ரறியுந் தரமோ உருவன் றருவன் றுளதன் றிலதன் றிருளன் றொளியன் றெனநின் றதுவே.
O
2
3

O
கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற் றுய்வாய் மனனே யொழிவா யொழிவாய் மெய்வாய் விழி நாசியொடுஞ் செவியாம் ஐவாய் வழி செல்லு மவாவினையே.
முருகன் குமரன் குகனென்று மொழிந்
துருகுஞ் செயல்தந் துணர்வென் றருள்வாய்
பொருபுங் கவரும் புவியும் பரவுங் குருபுங்கவ எண்குண பஞ் சரனே.
பேராசை யெனும் பிணியிற் பிணிபட் டோரா வினையே னுழலத் தகுமோ வீரா முதுதுர் படவே லெறியுஞ் துரா சுரலோக துரந் தரனே,
யாமோதிய கல்வியு மெம் மறிவுந் தாமே பெற வேலவர் தந்ததனாற் பூமேல் மயல்போ யறமெய்ப் புணர்வீர் நாமேல் நடவீர் நடவீ ரினியே.
உதியா மரியா வுணரா மறவா விதிமா லறியா விமலன் புதல்வா அதிகா வநகா வபயா வமரா பதிகா வலதுர பயங் கரனே.
வடிவுந் தனமும் மனமுங் குணமுங் குடியுங் குலமுங் குடிபோ கியவா அடியந் தமிலா அயில்வே லரசே மிடியென்றொரு பாவி வெளிப் படினே.
அரிதா கியமெய்ப் பொருளுக் கடியேன் உரிதா வுபதேச முணர்த் தியவா விரிதாரன விக்ரம வேளி மையோர் புரிதா ரக நாக புரந்தரனே,
கருதா மறவா நெறிகாண எனக் கிருதாள் வனசந் தரளன் றிசைவாய் வரதா முருகா மயில்வா கனனே விரதா கரதுர விபாட னனே.
4
5
6
7
8
9
2 O
2.

Page 80
O2
காளைக் குமரேச னெனக் கருதித் தாளைப் பணியத் தவமெய் தியவா பாளைக் குழல் வள்ளி பதம்பணியும் வேளைச் சுரபூபதி மேரு வையே.
அடியைக் குறியா தறியா மையினால் முடியக் கெடவோ முறையோ முறையோ வடிவிக் ரமவேல் மகிபா குறமின் கொடியைப் புணருங் குணபூ தரனே,
கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே சேர்வே னருள் சேரவு மெண்ணுமதோ துர்வே ரொடு குன்று தொளைத்தநெடும் போர்வேல புரந்தர பூப தியே.
மெய்யே யெனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியே னலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலே றிய சேவகனே.
ஆதார மிலே னருளைப் பெறவே நீதா னொரு சற்று நினைந்திலையே வேதாகம ஞான விநோ தமனோ தீதா சுரலோக சிகா மணியே.
மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான் என்னே விதியின் பயனிங் கிதுவோ பொன்னே மணியே பொருளே யருளே மன்னே மயி லேறிய வானவனே.
ஆனா அமுதே அயில்வே லரசே ஞானா கரனே நவிலத் தகுமோ யானாகிய வென்னை விழுங்கி வெறுந் தானாய் நிலைநின் றதுதற் பரமே.
இல்லே யெனுமா யையி லிட்டனைநீ பொல்லே னறியாமை பொறுத் திலையே மல்லே புரி பன்னிரு வாகுவிலென் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே.
22
23
24
25
26
27
28
29

1 0 3
செல்வா னுருவிற் றிகழ்வே லவனன் றொஷ்வா ததென வுணர்வித் ததுதான் அவ்வா றறிவா ரறிகின் றதலால் எவ்வா றொருவர்க் கிசைவிப் பதுவே.
பாழ்வாழ் வெனுமிப் படுமா யையிலே வீழ்வா யென என்னை விதித்தனையே தாழ்வா னவைசெய் தனதா முளவோ வாழ்வா யினிநீ மயில்வா கனனே.
கலையே பதறிக் கதறித் தலையூ டலையே படுமா றதுவாய் விடவோ கொலையே புரி வேடர்குலப் பிடிதோய் மலையே மலை கூறிடு வாகையனே.
சிந்தா குலவில் லொடுசெல் வமெனும் விந்தா டவியென்று விடப் பெறுவேன் மந்தா கினிதந்த வரோ தயனே கந்தா முருகா கருணா கரனே.
சிங்கார மடந்தையர் தீநெறி போய் மங்காம லெனக்கு வரந் தருவாய் சங்க்ராம சிகா வலசண் முகனே கங்கா நதி பால க்ருபாகரனே.
விதிகானு முடம்பை விடா வினையேன் கதிகாண மலர்க்கழ லென் றருள்வாய் மதிவா னுதல்வள் ளரியையல் லதுபின் துதியா விரதா சுரபூ பதியே.
நாதா குமரா நமவென் றரனார் ஒதா யெனவோ தியதெப் பொருள்தான் வேதா முதல் விண்ணவர் துடுமலர்ப் பாதா குறமின் பதசே கரனே.
கிரிவாய் விடுவிக் ரம ‘வேலிறையோன்' பரிவா ரமெனும் பதமே வலையே புரிவாய் மனனே பொறையா மறிவால் அரிவா யடியோடு மகந் தையையே.
3 O
31
32
33
34
35
36
37

Page 81
1 O 4
ஆதாளியை யொன் றறியே னையறத் தீதாளியை யாண் டதுசெப் புமதோ கூதாள கிராத குலிக் கிறைவா வேதாள கணம் புகழ்வே லவனே.
மாவேழி சனனங் கெடமா யைவிடா மூவேடணை யென்று முடிந் திடுமோ கோவே குறமின் கொடிதோள் புனருந் தேவே சிவ சங்கர தேசிகனே.
வினையோட விடுங் கதிர்வேல் மறவேன் மனையோடு தியங்கி மயங் கிடவோ சுனையோ டருவித் துறையோடு பசுந் தினையோ டிதனோடு திரிந் தவனே.
சாகா தெனையே சரணங் களிலே காகா நமனார் கலகஞ் செயுநாள் வாகா முருகா மயில்வா கணனே யோகா சிவஞா னொபதே சிகனே.
குறியைக் குறியாது குறித்தறியும் நெறியைத் தனிவேலை நிகழ்த் திடலுஞ் செறிவற் றுலகோ டுரை சிந் தையுமற் றறிவற் றறியா மையு மற்றதுவே.
தூசா மணியுந் துகிலும் புனைவாள் நேசா முருகா நினதன் பருளால் ஆசா நிகளந் துகளா யினபின் பேசா அநுபூதி பிறந் ததுவே.
சாடுந் தனிவேல் முருகன் சரணஞ் துடும் படிதந் ததுசொல் லுமதோ வீடுஞ் சுரர்மா முடிவே தமும்வெங் காடும் புனமுங் கமழுங் கழலே.
கரவா கியகல்வி யுளார் கடைசென் றிரவா வகைமெய்ப் பொருளி குவையோ
குரவா குமரா குலிசா யுதகுஞ் சரவா சிவயோக தயா பரனே.
38
39
40
41
42
43
44
-1 5

எந்தாயுமெனக் கருள்தந் தையுநீ சிந்தா குலமா னவைதீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே யுமையாள் மைந்தா குமரா மறைநா யகனே.
ஆறா றையுநீத் ததன்மேல் நிலையைப் பேறா வடியேன் பெறுமா றுளதோ சீறா வருதுர் சிதைவித் திமையோர் கூறா வுலகங் குளிர்வித் தவனே.
அறிவொன் றறநின் றறிவா ரறிவிற் பிறிவொன் றறநின் றபிரா னலையோ செறிவொன் றறவந் திருளே சிதைய வெறிவென்றவ ரோடுறும் வேலவனே.
தன்னந் தனிநின் றதுதா னறிய இன்னம் மொருவர்க் கிசைவிப் பதுவோ மின்னுங் கதிர்வேல் விகிர்தா நினைவார் கின்னங் களையும் க்ருபைதழ் சுடரே.
மதிகெட்டறவா டிமயங் கியறக் கதிகெட் டவமே கெடவோ கடவேன் நதிபுத் திர ஞான சுகா திபவத் திதிபுத் திரர்வீ றடுசே வகனே.
உருவா யருவா யுளதா யிலதாய் மருவாய் மலராய் மணியா யொளியாய்க் கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவா யருள்வாய் குகனே.
O 5
46
47
48
49
5 O
5

Page 82
d 06
கந்தர்லங்காரம்
; ?* காப்பு . அடலரு ணைத்திருக் கோபுர்த் தேயந்த் வாயிலுக்கு விட் வருகிற் சென்று கண்டுகொண் டேன்வரு வ்ார் தலையில் தடப டெனப்படு குட்டுடன் சர்க்கரை மொக்கியகைக் கடதட கும்பக் களிற்றுக் கிளைய களிற்றினையே:)
સંo { நூல. பேற்றைத் தவஞ்: சற்றுமில்லாத வென்னைப்ர பஞச
. : . : ! , மென்னுஞ் சேற்றைக் கழிய வழிவிட்ட வாtசெஞ் சடாடவிமேல் ஆற்றைப் பணியை யிதழியைத் தும்பையை யம்புலியின் கீற்றைப் புனைந்த பெருமான்.குமாரன் க்ருபாகரனே. 1
ኝ ̆, --~~ .” ۔ ۔ . . . ; Š } }ነ ፣` " . :خانه، ز : : " : " : ":: {; { { { - அழித்துப் பிறக்கவொட் டிாவயில், வேலன் ட் T1:
கவியையன்பால்
எழுத்துப் பிழையறக் கற்கின்றி லீரெரி மூண்டதென்ன
விழித்துப் புகையெழப் பொங்குவெங் கூற்றன்
விடுங்கயிற்றாற்
கழுத்திற் சுருக்கிட் டிழுக்குமன் றோகவி கற்கின்றதே. 2
தேரணி யிட்டுப் புரமெரித் தான்மகன் செங்கையில்வேற் கூரணி யிட்டனு வாகிக் கிரெளஞ்சங் குலைந்தரக்கர் நேரணி யிட்டு வளைந்த கடக நெளிந்ததுதுர்ப் பேரணி கெட்டது தேவேந்தர லோகம் பிழைத்ததுவே. 3

07
' ரிட்டுனதாள் சேரவொட் டாரைவர் செய்வதென்யான் சென்று'
SaAJSJSSSJS S S S SASASAS SSSSS S S S தேவருய்யச்
ஒரவொட் டாரொன்றை யுன்னவொட் டார்மல
” : ఒ{ சோரநிட் டூரனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக் , கூரகட் டாரியிட் டோரிமைப் போதினிற் ኃ ‰X” } ኣ ;'ኙጅሻ ‰...ፆ Yov፡` $•Xቖ ኣ•ረ AS SiiS S SAAS S SSLaSS கொன்றவனே. 4
திருந்தப் புவனங்களின்றபொற் பாவை திருமுலைப்பால் அருந்திச்சரவணப் பூந்தொட்டி லேறி யறுவர்கொங்கை: விரும்பிக் கடலழக் குன்றழச் சூரழ விம்மியழுங் :ே குருந்தைக் குறிஞ்சிக் கிழவனென் றோதுங் குவலயமே. 5
பெரும்பைம் t புனத்தினுட் சிற்றேனல் காக்கின்ற - பேதை لا
že* , :. سۂ 2-.......4
விரும்புங் குமரனை மெய்யன்பி னான்மெல்ல · · · · · · · ·**': . . . . . . ; S S S S S S S S " மெல்லவுள்ள அரும்புந் தனிப்பர மாநந்தந் தித்தித் தறிந்தவன்றே கரும்புந் துவர்த்துச்செந் தேனும் புளித்தறக் கைத்ததுவே. :ே சளத்திற் பிணிபட்டசட்டு க்ரியைக்குட் டவிக்கு
. . . ' * 2 *్ళ ". . . . மென்றன் உளத்திற் ப்ரமத்தைத் தவிர்ப்பா யவுண ருரத்துதிரக் குளத்திற் குதித்துக் குளித்துக் களித்துக் குடித்துவெற்றிக் களத்திற் செருக்கிக் கழுதாட வேல்தொட்ட காவலனே. 7
ஒளியில் விளைந்த வுயர்ஞான பூதரத் துச்சியின்மேல் அளியில் விளைந்ததொ ராநந்தத் தேனை யநாதியிலே " வெளியில் விளைந்த வெறும்பாழைப் பெற்ற
". . . . . . . ^ ... ‘့် ပုပ္ပ: ;ား வெறுந்தனியைத் தெளிய விளம்பிய வா! முகமாறுடைத் தேசிகனே. : 8
தேனென்று பாகென்றுவமிக் கொணாமொழித்
தெய்வவள்ளி, கோனன் றெனக்குப தேசித்த தொன்றுண்டு கூறவற்றோ? வானன்று காலன்று தீயன்று நீரன்று மண்ணுமன்று 『二' \ど தானன்று நானன் றசரீரி யன்று சரீரியன்றே 9

Page 83
108
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்துசும் மாவிருக்கு மெல்லையுட் செல்ல எனைவிட்ட வாஇகல் வேலனல்ல கொல்லியைச் சேர்க்கின்ற சொல்லியைக் கல்வரைக்
கொவ்வைச் செவ்வாய் வல்லியைப் புல்கின்ற மால்வரைத் தோளண்ணல்
வல்லபமே. O.
குசைநெகி ழாவெற்றி வேலோ னவுணர் குடர்குழம்பக் கசையிடு வாசி விசைகொண்ட வாகனப் பீலியின்கொத் தசைபடு கால்பட் டசைந்தது மேரு அடியிடவெண் டிசைவரை தூள்பட்ட அத்துாளின் வாரி ኦ 3 திடர்பட்டதே. 卫星
படைபட்ட வேலவன் பால்வுந்த வாகைப் பதாகையென்னுந் தடைபட்ட சேவல் சிறகடிக் கொள்ளச் சலதிகழிந் துடைபட்ட தண்ட கடாக முதிர்ந்த துடுபடலம் இடைப்பட்ட குன்றமு மாமேரு வெற்பு மிடிபட்டவே. 12
ஒருவரைப் பங்கி லுடையாள் குமார னுடைமணிசேர் திருவரைக் கிண்கிணி யோசை படத்திடுக் கிட்டரக்கர் வெருவரத் திக்குச் செவிடுபட் டெட்டுவெற் புங்கனகப் பருவரைக் குன்று மதிர்ந்தன தேவர் பயங்கெட்டதே. 13
குப்பாச வாழ்க்கையுட் கூத்தாடு மைவாரிற் கொட்படைந்த இப்பாச நெஞ்சனை ஈடேற்று வாயிரு நான்குவெற்பும் அப்பாதி யாய்விழ மேருங் குலுங்கவிண் ணாருமுய்யச் சப்பாணி கொட்டிய கையா றிரண்டுடைச்
சண்முகனே. 14
தாவடி யோட்டு மயிலிலுந் தேவர் தலையிலுமென் பாவடி யேட்டிலும் பட்டதன் றோபடி மாவலிபால் மூவடி கேட்டன்று மூ தண்ட கூட முகடுமுட்டச் சேவடி நீட்டும் பெருமான் மருகன்றன் சிற்றடியே. H5 தடுங்கோள் மனத்தை விடுங்கோள் வெகுளியைத்
தானமென்றுட இடுங்கோ ளரிருந்த படியிருங் கோளெழு பாருமுய்யக் கொடுங்கோபச் சூருடன் குன்றந் திறக்கத் தொளைக்கவை
வேன் விடுங்கோ னருள்வந்து தானே யுமக்கு வெளிப்படுமே. 16

09
வேதா கமசித்ர வேலா யுதன்வெட்சி பூத்ததண்டைப் பாதார விந்த மரணாக அல்லும் பகலுமில்லாச் சூதான தற்ற வெளிக்கே யொளித்துச்சும் மாவிருக்கப் போதா யினிமன மேதெரி யாதொரு பூதர்க்குமே. 7
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும் நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ங்ண் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18
சொன்ன கிரெளஞ்ச கிரியூ டுருவத் தொளைத்தவைவேல் மன்ன கடம்பின் மலர்மாலை மார்பமெள னத்தையுற்று நின்னை யுணர்ந்துணர்ந் தெல்லா மொருங்கிய நிர்க்குணம்
பூண் டென்னை மறந்திருந் தேனிறந் தேவிட்ட திவ்வுடம்பே. 19
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய் ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம் ஆழப் புதைத்துவைத் தால்வரு மோதும் மடிப்பிறகே. 20
மரணப்ர மாத நமக்கில்லை யாமென்றும் வாய்த்ததுணை கிரணக் கலாபியும் வேலுமுண் டேகிண் கினிமுகுள சரணப்ர தாப சசிதேவி மங்கல்ய தந்துரகூடிா பரணக்ரு பாகர ஞானா கரசுர பாஸ்கரனே. 2
மொய்தா ரணிகுழல் வள்ளியை வேட்டவன் முத்தமிழால் வைதா ரையுமங்கு வாழவைப் போன்வெய்ய வாரணம்போற் கைதா னிருப துடையான் தலைபத்துங் கத்தரிக்க
எய்தான் மருகன் உமையாள் பயந்த இலஞ்சியமே. 22
தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே வைவைத்த வேற்படை வானவ னேமற வேனுனைநான் ஐவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலையுமுன் னேவந்து காத்தருளே. 23
கின்னங் குறித்தடி யேன்செவி நீயன்று கேட்கச்சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது கோடுகுழல்
சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யான முயன்றவனே. 24

Page 84
  

Page 85
12
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே. 38
உதித்தாங் குழல்வதுஞ் சாவதுந் தீர்த்தெனை யுன்னி
லொன்றா விதித்தாண் டருள்தருங் காலமுண் டோவெற்பு நட்டுரக பதித்தாம்பு வாங்கிநின் றம்பரம் பம்பரம் பட்டுழல மதித்தான் திருமரு காமயி லேறிய மாணிக்கமே. 39
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன் வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன் கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
40
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும் மாலே கொண்டுய்யும் வகையறி யேன்மலர்த் தாள்தருவாய் காலே மிகவுண்டு காலே யிலாத கணபனத்தின் மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்
வேலவனே. 4
நிணங்காட்டுங் கொட்டிலை விட்டொரு வீடெய்தி
நிற்கநிற்குங் குணங்காட்டி யாண்ட குருதே சிகனங் குறச்சிறுமான் பனங்காட்டு மல்குற் குருகுங் குமரன் பதாம்புயத்தை வணங்காத் தலைவந்தி தெங்கே யெனக்கிங்ங்ண்
வாய்த்ததுவே. 42
கவியாற் கடலடைத் தோன்மரு கோனைக் கணபணக்கட் செவியாற் பணியணி கோமான் மகனைத் திறலரக்கர் புவியார்ப் பெழத்தொட்ட போர்வேன் முருகனைப்
போற்றி யன்பாற் குவியாக் கரங்கள்வந் தெங்கே யெனக்கிங்ங்ண் கூடியவே. 43

3
தோலாற் சுவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம் பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த
அகம்பிரிந்தால் வேலாற் கிரிதொளைத் தோனிரு தாளன்றி
வேறில்லையே. 44
ஒருபூ தருமறி யாத்தனி வீட்டி லுரையுணர்வற் றிருபூத வீட்டி லிராமலென் றானிரு கோட்டொருகைப் பொருபூ தரமுரித் தேகாச மிட்ட புராந்தகற்குக் குருபூத வேலவ னிட்டுர துர குலாந்தகனே. 45
நீயான ஞான விநோதந் தனையென்று நீயருள்வாய் சேயான வேற்கந்த னேசெந்தி லாய்சித்ர மாதரல்குற் றோயா வுருகிப் பருகிப் பெருகித் துவஞமிந்த மாயா விநோத மநோதுக்க மானது மாய்வதற்கே. 4 6
பத்தித் திருமுக மாறுடன் பன்னிரு தோள்களுமாய்த் தித்தித் திருக்கு மமுதுகண் டேன்செயன் மாண்டடங்கப் புத்திக் கமலத் துருகிப் பெருகிப் புவனமெற்றித் தத்திக் கரைபுர ஞம்பர மாநந்த சாகரத்தே. 47
பத்தியை வாங்கிநின் பாதாம் புயத்திற் புகட்டியன்பாய் முத்திரை வாங்க அறிகின்றி லேன்முது துர்நடுங்கச் சத்தியை வாங்கத் தரமோ குவடு தவிடுபடக் குத்திர காங்கேய னேவினை யேற்கென் குறித்தனையே.
48
துரிற் கிரியிற் கதிர்வே லெறிந்தவன் தொண்டர்குழாஞ் சாரிற் கதியன்றி வேறிலை காண்தண்டு தாவடிபோய்த் தேரிற் கரியிற் பாரியிற் றிரிபவர் செல்வமெல்லாம் நீரிற் பொறியென் றறியாத பாவி நெடுநெஞ்சமே. 49
படிக்குந் திருப்புகழ் போற்றுவன் கூற்றுவன் பாசத்தினாற் பிடிக்கும் பொழுதுவந் தஞ்சலென் பாய்பெரும்
பாம்பினின்று நடிக்கும் பிரான்மரு காகொடுஞ் சூர னடுங்கவெற்பை இடிக்குங் கலாபத் தனிமயி லேறு மிராவுத்தனே. 50

Page 86
14
மலையாறு கூறெழ வேல்வாங்கி னானை வணங்கியன்யின் நிலையான மாதவஞ் செய்குமி னோநும்மை நேடிவருந் தொலையா வழிக்குப் பொதிசோறு முற்ற துணையுங்கண்டீர் இலையாயினும்வெந்த தேதா யினும்பகிர்ந் தேற்றவர்க்கே.
့်ပွဲ ့ကို၄,် ၃ ့ ့ ့ ့် ' ငွ:::''; 、 肇n、5班, சிகராத்ரி கூறிட்ட வேலுஞ்செஞ் சேவலுஞ் செந்தமிழாற் பகரார்வமீ; பணி பாசசங் க்ராம பணாமகுடம்: : நிகராட்சமபட்ச பட்சி துரங்க ந்நபகுமரக : குமராட் சசபட்ச விட்சோப தீர குணதுங்கனே
،"الام ... , * : : /
:00
y ﷽ ‹‹y(§፡፰፥ ፩ ?t
v» . y. 2 -É *.sʻ~, *ğ :*:. :''; & , ‹‹.” ፶ : ; "; *? جناب ! اچھا ؟ : .
வேடிச்சி கொங்கை விரும்புங் குமரனை மெய்யன்பினாற் பாடிக் கசிந்துள்ள போதே கொடாதவர் பாதகத்தாற் 8: றேடிப் புதைத்துத் திருட்டிற் கொடுத்துத் திகைத்திளைத்து வாடிக் கிலேசித்து வாழ்நாளை "வீனுக்கு மாய்ப்பவரே:
.2 AHAAS SAAAAASiSSSS SLSSS SS SS S SS S S S S S S S SSK SS ۔۔۔ :,'; . . a ہو۔ ء ہوا۔ ,, . is a & .{ సీ.శ 4 - ( ! ? SSLLL SLS SSSSsKS S SSSeAS0SJ S SSS S AAS S S SATT 5含子
சாகைக்கு மீண்டு பிறக்கைக்கு மன்றித் தளர்ந்தவர்கொன், றிகைக் கெனைவிதித் தாயிலை யேயிலங் காபுரிக்குப் : போகைக்கு நீவழி காட்டென்று போய்க்கடல் தீக்கொளுந்த,
வாகைச் சிலைவளைத் தோன்மரு காமயில் வாகனனே. 54
ஆங்கா ரமுமடங்காரொடுங் கார்பர மாநந்தத்தே : தேங்கார் நினைப்பு மறப்பு மறார்தினைப் போதளவும் ஓங்காரத் துள்ளொளிக்குள்ளே முருக னுருவங்கண்டு: தூங்கார் தொழும்புசெய்யாரென்செய் வார்யமe tr
咎县、 ---། தூதருக்கே. 55
கிழியும் படியடற் குன்றெறிந் தேர்ன்கவி கேட்டுருகில் if: இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக் ! குழியுந் துயரும் விடாப்படக் கூற்றுவனுார்க் குச்செல்லும்; வழியுந் துயரும் பகரீர்ஃபகரீர் மறந்தவர்க்கே :ெ 56
பொருபிடி யுங்களிறும்விளையாடும் புனச்சிறுமான்ல்: தருபிடி காவல சண்முக வாவெனச் சாற்றிநித்தம் : இருபிடிக்சோறுகொண் டிட்டுண்டிருவினை
ஒருபிடி சாம்பருங் காணாது மாய வுட்ம்பிதுவே. சில் 57%
 
 
 

is
நெற்றாம் பசுங்கதிர்ச் செவ்வேனல் காக்கின்ற நீலவள்ளி)
முற்றாத் தனத்திற் கினிய பிரானிக்கு முல்லையுடன்
பற்றாக்கை யும்வெந்து சங்க்ராம வேளும் படவிழியாற்
செற்றார்க் கினியவன் தேவேந்த்ரலோக சிகாமணியே:
பொங்கர்ர வேலையில் வேலைவிட் டோனருள் போலுதவ் எங்கா யினும்வரு மேற்பவர்க் கிட்ட திடாமல்வைத்த 1. வங்கா ரமுமுங்கள் சிங்கார் வீடு மடந்தையருஞ் : : சங்காத மோகெடு வீருயிர் போமத் தனிவழிக்கே:59
^ ※ ジ も *** 、 。緑ぶ\窯* 豪。 *一Xぶ *
{సీ.శ. ۰۰۰۰ع يقية فيه...}
சிந்திக்கிலேனின்று சேவிக்கி லேன்றண்டைச் சிற்றடியை வந்திக் கிலேனொன்றும் வாழ்த்துகி லேன்மயில் s:- & M. , t#န္ဒိ, )},႕ရုံ မှ ..., . ;့်် ဖွင့္ ႏွံ႔ႏွ; ; ; {, " + :வாகனனைச் சந்திக் கிலேன்பொய்யை நிந்திக் கிலேனுண்மை சாதிக்கிலேன் புந்திக் கிலேசமுங் காயக் கிலேசமும் போக்குதற்கே. 60
-
3: E.
မုံ့ ဎွိပ္ပင္ "?
வரையற் றவுண்ர் சிரமற்று'வ்ாரிதி வ்ற்றிச்செற்ற் '
புரையற்ற வேலவன் போதித் தவா பஞ்ச பூதமுமற்'
றுரையற்றுணர்வற்றுடலற் றுயிரற்றுபாயமற்றுக்ஸ் ஆலேஜ்ஜ
கர்ையற் றிருளற் றெனதற் றிருக்குமக்ஃகாட்சியதே. 61,
t
SAAA AAAA S SeTtAttS ceLeO kgOggAeMM LLSALASS Aglke
ஆலுக் கணிக்லம் வெண்டலை மாலை யகிலமுண்ட மாலுக் கணிகலந் தண்ணந் துழாய்மயிலேறுமைய்ன்ஜ்ஜ்க்ஸ் காலுக் கணிகலம் வானோர் முடியுங் கடம்புங்கையில் வேலுக் கணிகலம் வேலையுஞ் சூரனு மேருவுமே.
གཙང་
iż
: , ; , , ጅ`፭`::, ፭፨, 8 .`፩ · § :
பாதித் திருவுருப்பச்சென் றவர்க்குத்தன் பாவனையைப் போதித்த நாதனைப்போர் வேலனைச்சென்று போற்றியுய்யச் சோதித்த மெய்யன்பு பொய்யோ அழுது தொழுதுருகிச் சாதித்த புத்திவந் தெங்கே யெனக்கிங் நுண்சந்தித்ததே.63
-- છr v. વિtિ if uri : 一、勤 ཅི་ཅིན་ பட்டிக் கடாவில் வருமந்த காவுனைப் பாரறிய வெட்டிப் புறங்கண் டலாதுவிடேன் வெய்ய தரனைப்போய் முட்டிப் பொருதசெவ் வேற்பெரு மாள்திரு முன்புநின்றேன். கட்டிப் புறப்படிக்ாசத்தி வாளென்றன் கையதுவே. 64

Page 87
6
வெட்டுங் கடாமிசைத் தோன்றும் வெங்கூற்றன் விடுங்
கயிற்றாற் கட்டும் பொழுது விடுவிக்க வேண்டும் கராசலங்கள் எட்டுங் குலகிரி யெட்டும்விட் டோடவெட் டாதவெளி மட்டும் புதைய விரிக்குங் கலாப மயூரத்தனே. 65
நீர்க் குமிழிக்கு நிகரென்பர் யாக்கைநில் லாதுசெல்வம் பார்க்கு மிடத்தந்த மின்போலு மென்பர் பசித்துவந்தே ஏற்கு மவர்க்கிட வென்னினெங் கேனு மெழுந்திருப்பார் வேற்குமரற் கன்பிலாதவர் ஞான மிகவுநன்றே. 6 6
பெறுதற் கரிய பிறவியைப் பெற்றுநின் சிற்றடியைக் குறுகிப் பணிந்து பெறக்கற் றிலேன்மத கும்பகம்பத் தறுகட் சிறுகட் சங்க்ராம சயில சரசவல்லி இறுகத் தழுவுங் கடகா சலபன் னிருபுயனே. 67
சாடுஞ் சமரத் தனிவேல் முருகன் சரணத்திலே ஒடுங் கருத்தை யிருத்தவல் லார்க்குகம் போய்ச்சகம்போய்ப் பாடுங் கவுரி பவுரிகொண் டாடப் பசுபதிநின் றாடும் பொழுது பரமா யிருக்கு மதீதத்திலே. 68
தந்தைக்கு முன்னந் தனிஞான வாளொன்று சாதித்தருள் கந்தச் சுவாமி யெனைத்தேற் றியபின்னர்க் காலன்வெம்பி வந்திப் பொழுதென்னை யென்செய்ய லாஞ்சத்தி
வாளொன்றினாற் சிந்தத் துணிப்பன் தனிப்பருங் கோபத்ரி தலத்தையே. 69
விழிக்குத் துணைதிரு மென்மலர்ப் பாதங்கள் மெய்ம்மை
குன்றா மொழிக்குத் துணைமுரு காவெனு நாமங்கள் முன்புசெய்த பழிக்குத் துணையவன் பன்னிரு தோளும் பயந்ததனி வழிக்குத் துணைவடி வேலுஞ் செங்கோடன் மயூரமுமே.
7 O துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித் தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக
மென்னுங் குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன கருத்தை மனத்தி லிருத்துங்கண் டீர்முத்தி
கைகண்டதே. 7

17
சேந்தனைக் கந்தனைச் செங்கோட்டு வெற்பனைச்
செஞ்சுடர்வேல் வேந்தனைச் செந்தமிழ் நூல்விரித் தோனை விளங்குவள்ளி காந்தனைக் கந்தக் கடம்பனைக் கார்மயில் வாகனனைச் சாந்துணைப் போது மறவா தவர்க்கொரு
தாழ்வில்லையே. 72
போக்கும் வரவு மிரவும் பகலும் புறம்புமுள்ளும் வாக்கும் வடிவு முடிவுமில் லாதொன்று வந்துவந்து தாக்கு மநோலயந் தானே தருமெனைத் தன்வசத்தே ஆக்கு மறுமுக வாசொல் லொணாதிந்த ஆநந்தமே. 73
R
அராப்புனை வேனியன் சேயருள் வேண்டு மவிழ்ந்த
அன்பாற் குராப்புனை தண்டையந் தாள்தொழல் வேண்டுங்
கொடிய ஐவர் பராக்கறல் வேண்டும் மனமும் பதைப்பறல் வேண்டு
மென்றால் இராப்பக லற்ற இடத்தே யிருக்கை யெளிதல்லவே. 74
படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே. 75
கோடாத வேதனுக் கியான்செய்த குற்றமென்
குன்றெறிந்த தாடாள னேதென் தணிகைக் குமரநின் றண்டையந்தாள் துளுடாத சென்னியு நாடாத கண்ணுந் தொழாதகையும் பாடாத நாவு மெனக்கே தெரிந்து படைத்தனனே. 7 6
சேல்வாங்கு கண்ணியர் வண்ணப் பயோதரஞ்
சேரளண்ணி மால்வாங்கி யேங்கி மயங்காமல் வெள்ளி மலையெனவே கால்வாங்கி நிற்குங் களிற்றான் கிழத்தி கழுத்திற்கட்டு நூல்வாங்கி டாதன்று வேல்வாங்கி பூங்கழல் நோக்கு
நெஞ்சே. 77

Page 88
8
கூர்கொண்ட வேலனைப் போற்றாம லேற்றங்கொண்
. . . டாடுவிர்காள் போர்கொண்ட கால னுமைக்கொண்டு போமன்று : । মে’ 11- c : ' ' 。 பூண்பனவுந் தார்கொண்ட மாதரு மாளிகை யும்பணச் சாளிகையும் ஆர்கொண்டு போவரையோ கெடுவீர்நும் *::::. . .
மறிவின்மையே. 78
பந்தாடு மங்கையர் செங்கயற்’ப்ார்வையிற் ப்ட்டுழலுஞ் சிந்தா குலந்தனைத் தீர்த்தருள் வாய்செய்ய வேல்முருகா கொந்தார் கடம்பு புடைதும் திருத்தணிக் குன்றினிற்குங்
கந்தா இளங்குமரர் அம ராவதி காவலனே. '
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தாலென்முன்னே தோகைப் புரவியிற் றோன்றிநிற் பாய்சுத்த நித்தமுத்தித் த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப் பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80 தாரா கணமெனுந் தாய்மார் அறுவர் தருமுலைப்பால் ஆரா துமைமுலைப் பாலுண்ட பால னரையிற்கட்டுஞ் சீராவுங் கையிற் சிறுவாளும் வேலுமென் சிந்தையவே வாரா தகலந்த காவந்த போதுயிர் வாங்குவனே. 81
தகட்டிற் சிவந்த கடம்பையு'நெஞ்சையுந் தாளிணைக்கே புகட்டிப் பணியப் பணித்தரு ளாய்புண்ட ரீகனண்ட முகட்டைப் பிளந்து வளர்ந்திந்த்ர லோகத்தை
వ్య: 4 x ... . . . . முட்டவெட்டிப் பகட்டிற் பொருதிட்ட நிட்டூர சூர் பயங்கரனே. 82
தேங்கிய அண்டத் திமையோர் சிறைவிடச் சிற்றடிக்கே பூங்கழல் கட்டும் பெருமாள் கலாபப் புரவிமீசை : தாங்கி நட்ப்ப முறிந்தது சூரன் தளந்தனிவேல் : வாங்கி யனுப்பிடக் குன்றங்க ளெட்டும் வழிவிட்டவே.
மைவருங் கண்டத்தர் மைந்தகந்தாவென்று வாழ்த்துமிந்தக் கைவருந் தொண்டன்றி மற்றறியேன் கற்ற கல்வியும்போய் பைவரும் கேளும் பதியுங் கதறப் பழகிநிற்கும்
ஐவருங் கைவிட்டு மெய்விடும் போதுன் னடைக்கலமே.84

39
காட்டிற் குறத்தி பிரான்பதத் தேகருத்தைப்புகட்டின், வீட்டிற். புகுதன் மிகவெளி தேவிழி நாசிவைத்து மூட்டிக் கபாலமூ லாதார நேரண்ட மூச்சையுள்ளே .
ப்பிடித்தெங்கு மோடிாமற் சாதிக்கும். யோகிகளே. 85
................. } ፮፻ ̈"ኜ ̆ :: ̇• 3 . 五、“ வேலா யுத்ன்சங்கு சக்ராயு தன்விரிஞ் சன்னறியாச்' சூலா யுதன் தந்த கந்தச் சுவாமி சுடர்க்குடுமிக் காலா யுதக்கொடி யோனரு ளாய கவசமுண்டென் பாலா யுதம்வரு மோயம னோடு பகைக்கினுமே. 'ல்
{ಳ: * ;0 ; : ! ، ڈچینی: ؛ پناہ ہو؛ 'وجہ:"%, 4 ۔۔۔۔۔۔۔۔۔پڑھ :)A4;نیٹو پ குமரா சரணஞ் சரணமென் றண்டிர்:குழாந்துதிக்கும் அமரா வதியிற் பெருமாள் திருமுக் மாறுங்கண்ட .ே தமராகி வைகுந் தனியான ஞான தபோதனர்க்கிங் கெமராசன் விட்ட கடையேடு வந்தினி யென்செயுமே:87 * (f。 . * 室., *、*、* :。ミー . . . . . . . is வணங்கித் துதிக்க அறியா மனித ருடனினங்கிக் குணங்கெட்ட துட்டனை யீடேற்றுவாய் கொடி யுங்கழுகும் : பிணங்கத் துணங்கை யலகை கொண்டாடப் பிசிதர் தம்வாய்
நிணங்கக்க விக்ரம வேலா யுதந்தொட்ட:நிர்மலனே. 88
பங்கே ருகனெனைப் பட்டோ லையிலிடப் பண்டுதளை தங்காலி லிட்ட தறிந்தில னோதனி வேல்ெடுத்துப் - . பொங்கோதம் வாய்விடப் பொன்னஞ் சிலம்பு எங்கோ னறியி னினிநான் முகனுக் கிருவிலங்கே , 89,
மாலோன் மருகனை மன்றாடி மைந்தனை வானவர்க்கு மேலான தேவனை மெய்ஞ்ஞான தெய்வத்தை மேதினியில் சேலார் வயற்பொழிற் செங்கோடனைச்சென்று ... . . . . . ' ' கண்டுதொழி நாலாயிரங்கண் படைத்தில னேயந்த நான்முகனே, 90
கருமான் மருகனைச் செம்மான் மகளைக் களவுகொண்டு வருமா குலவனைச் சேவற்கைக் கோளனை வானமுய்யப் பொருமா வினைச்செற்ற போர்வேல னைக்கன்னிப்
* கல்?: : பூகமுடன் g5CF5Drt மருவுசெங் கோடனை வாழ்த்துகைசாலநன்றே. 91

Page 89
20
தொண்டர்கண் டண்டிமொண் டுண்டிருக் குஞ்சுத்த
ஞானமெனுந்
தண்டயம் புண்டரி கந்தருவாய் சண்ட தண்டவெஞ்துர்
மண்டலங் கொண்டுபண் டண்டரண் டங்கொண்டு
மண்டிமிண்டக் கண்டுருண் டண்டர்வின் டோடாமல் வேல்தொட்ட
காவலனே. 92
மண்கம முந்தித் திருமால் வலம்புரி யோசையந்த விண்கமழ் சோலையும் வாவியுங் கேட்டது வேலெடுத்துத் திண்கிரி சிந்த விளையாடும் பிள்ளைத் திருவரையிற் கிண்கிணி யோசை பதினா லுலகமுங் கேட்டதுவே. 93
தெள்ளிய ஏனவிற் கிள்ளையைக் கள்ளச் சிறுமியெனும் வள்ளியை வேட்டவன் தாள்வேட் டிலைசிறு
வள்ளைதள்ளித் துள்ளிய கெண்டையைத் தொண்டையைத் தோதகச்
s சொல்லைநல்ல வெள்ளிய நித்தில வித்தார மூரலை வேட்டநெஞ்சே. 94
யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி
யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன்க்ரு பாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே. 93
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்நி வடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக் கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத் திடர்க்கப் புறத்துந் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
சேலிற் றிகழ்வயற் செங்கோடை வெற்பன் செழுங்கலபி ஆலித் தநந்தன் பனாமுடி தாக்க அதிர்ந்ததிர்ந்து காலிற் கிடப்பன மாணிக்க ராசியுங் காசினியைப் பாலிக்கு மாயனுஞ் சக்ரா யுதமும் பணிலமுமே. 97

21
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்கந்த
வேல்முருகா நதிதனை யன்னபொய் வாழ்விலன்
பாய்நரம்பாற்பொதிந்த பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப்
போதவிட்ட விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம்
வேகின்றதே. 9 8
காவிக் கமலக் கழலுடன் சேர்த்தெனைக் காத்தருளாய் தூவிக் குலமயில் வாகன னேதுணை யேதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம் பிலாத தனிக்கொடிபோல் பாவித் தனிமனந் தள்ளாடி வாடிப் பதைக்கின்றதே. 99
இடுதலைச் சற்றுங் கருதேனைப் போதமி லேனையன்பாற் கெடுதலி லாத்தொண் டரிற்கூட் டியவா! கிரெளஞ்ச
வெற்பை அடுதலைச் சாதித்த வேலோன் பிறவி யறவிச்சிறை விடுதலைப் பட்டது விட்டது பாச வினைவிலங்கே. 100
சலங்காணும் வேந்தர் தமக்கு மஞ்சார் யமன்
சண்டைக்கஞ்சார் துலங்கா நரகக் குழியணு கார்துட்ட நோயனுகார் கலங்கார் புலிக்குங் கரடிக்கும் யானைக்குங்
கந்தனன்னூல் அலங்கார நூற்று ளொருகவி தான்கற் றறிந்தவரே. 101
திருவடி யுந்தண்டை யுஞ்சிலம் புஞ்சிலம் பூடுருவப் பொருவடி வேலுங் கடம்புந் தடம்புயம் ஆறிரண்டும் மருவடி வான வதனங்க ளாறும் மலர்க்கண்களுங் குருவடி வாய்வந்தென் னுள்ளங் குளிரக் குதிகொண்டவே.
O2 இராப்பக லற்ற இடங்காட்டி யானிருந் தேதுதிக்கக் குராப்புனை தண்டையந் தாளரு ளாய்கரி கூப்பிட்டநாள் கராப்படக் கொன்றக் கரிபோற்ற நின்ற கடவுள்மெச்சும் பராக்ரம வேல நிருதசங் கார பயங்கரனே. O 3
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்

Page 90
122
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந்
தெதிர்நிற்பனே. 104
ஆவிக்கு மோசம் வருமா றறிந்துன் னருட்பதங்கள் சேவிக்க என்று நினைக்கின்றி லேன்வினை தீர்த்தருளாய் வாவித் தடவயல் தழுந் திருத்தணி மாமலைவாழ் சேவற் கொடியுடை யானே யமர சிகாமணியே. 05
கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையுமென்றன் உள்ளத் துயரை யொழித்தரு ளாயொரு கோடிமுத்தந் தெள்ளிக் கொழிக்குங் கடற்செந்தின் மேவிய சேவகனே வள்ளிக்கு வாய்த்தவ னேமயி லேறிய மாணிக்கமே. 106
துலம் பிடித்தெம பாசஞ் சுழற்றித் தொடர்ந்துவருங் காலன் தனக்கொரு காலுமஞ் சேன்கடல் மீதெழுந்த ஆலங் குடித்த பெருமான் குமாரன் அறுமுகவன் வேலுந் திருக்கையு முண்டே நமக்கொரு மெய்த்துணையே O7

23
பூரீகுமரகுருபர சுவாமிகள்
திருச்செந்தூர்.கந்தர் கலிவெண்பா
O.
1.
. பூமேவு செங்கமலப் புத்தேளும் தேறரிய
பாமேவு தெய்வப் பழமறையும் - தேமேவு
. நாதமும் நாதாந்த முடிவும் நவைதீர்ந்த
போதமும் காணாத போதமாய் - ஆதிநடு
. அந்தம் கடந்தநித்தி யானந்த போதமாய்ப்
பந்தம் தணந்த பரஞ்சுடராய் - வந்த
. குறியும் குனமுமொரு கோலமுமற்று எங்கும்
செறியும் பரம சிவமாய் - அறிவுக்கு
. அனாதியாய் ஐந்தொழிற்கும் அப்புறமாய் அன்றே
மனாதிகளுக்கு எட்டா வடிவாய்த் - தனாதருளின்
. பஞ்சவித ரூப பரசுகமாய் எவ்வுயிர்க்கும்
தஞ்சமென நிற்கும் தனிப்பொருளாய் - எஞ்சாத
. பூரணமாய் நித்தமாய்ப் போக்குவரவும் புணர்வும்
காரணமும் இல்லாக் கதியாகித் - தாரணியில்
. இந்திரசாலம் புரிவோன் யாரையும் தான்மயக்கும் If 35 கும
தந்திரத்தில் சாராது சார்வதுபோல - முந்தும்
கருவின்றி நின்ற கருவாய் அருளே
உருவின்றி நின்ற உருவாய்த் - திரிகரணம்
ஆகவரும் இச்சை அறிவு இயற்ற லால்இலய போகஅதி காரப் பொருளாகி - ஏகத்து
உருவும் அருவும் உருஅருவும் ஆகிப் பருவ வடிவம் பலவாய் - இருள்மலத்துள்

Page 91
124
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
20.
2.
22.
23.
24。
25.
26.
மோகமுறும் பல்லுயிர்க்கு முத்திஅளித் தற்குமல பாகமுறவே கடைக்கண் பாலித்துத் - தேகமுறத் தந்த அருவுருவம் சார்ந்தவிந்து மோகினிமான் பெந்த முறவே பிணிப்பித்து - மந்த்ரமுதல் ஆறத்து வாவும் அண்டத்து ஆர்ந்தஅத்து வாக்களும்முற் கூறத் தகும் சிமிழ்ப்பில் கூட்டுவித்து - மாறிவரும் ஈரிரண்டு தோற்றத்து எழுபிறப்புள் யோனிஎன்பான் ஆரவந்த நான்குநூ றாயிரத்துள் - தீர்வரிய கன்மத்துக்கு ஈடாய்க் கறங்கும் சகடமும்போற் சென்மித்து உழலத் திரோதித்து - வெந்நிரய சொர்க்காதி போகமெலாம் துய்ப்பித்துப் பக்குவத்தால் நற்காரணம் சிறிது நண்ணுதலும் - தர்க்கமிடும் தொன்னூல் பரசமயம் தோறும் அதுவதுவே நன்னூல் எனத்தெரிந்து நாட்டுவித்து - முன்னுால் விரதமுத லாயபல மெய்த்தவத்தின் உண்மைச் சரியைகிரி யாயோகம் சார்வித்து - அருள்பெருகு
சாலோக சாமீப சாரூபமும் புசிப்பித்து ஆலோகம் தன்னை அகற்றுவித்து - நால்வகையாம் சத்திநி பாதம் தருதற்கு இருவினையும் ஒத்துவரும் காலம் உளவாகிப் - பெத்த மலபாரி பாகம் வருமளவில் பன்னாள் அலமருதல் கண்ணுற்று அருளி - உலவாது அறிவுக்கு அறிவாகி அவ்வறிவுக்கு எட்டா நெறியில் செறிந்தநிலை நீங்கிப் - பிறியாக் கருணை திருஉருவாய்க் காசினிக்கே தோன்றிக் தருபரனென்று ஒர்திருப்பேர் கொண்டு - திருநோக்கால் ஊழ்வினையைப் போக்கி உடலறுபத் தெட்டுநிலம் ஏழும் அத்துவாக்கள் இருமூன்றும் - பாழாக
ஆணவமான படலம் கிழித்து அறிவில் காணரிய மெய்ஞ்ஞானக் கண்காட்டிப் - பூணும்

25
27.
28.
29.
3 O .
3 1.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
4 0.
அடிஞானத் தாற்பொருளும் ஆன்மாவும் காட்டிக் கடியார் புவனமுற்றும் காட்டி - முடியாது தேக்குபர மானந்தத் தெள்ளமுதம் ஆகிஎங்கும் நீக்கமற நின்ற நிலைகாட்டிப் - போக்கும் வரவும் நினைப்பும் மறப்பும் பகலும் இரவும் கடந்துஉலவா இன்பம் - மருவுவித்துக் கன்மமலத் தார்க்குமலர்க் கண்மூன்றும் தாழ்சடையும் வன்மழுவும் மானுமுடன் மால்விடைமேல் -
மின்னிடந்துப் பூத்த பவளப் பொருப்புஒன்று வெள்ளிவெற்பில் வாய்த்தனைய தெய்வ வடிவாகி - மூத்த கருமமலக் கட்டறுத்துக் கண்ணருள் செய்து உள்நின்று ஒருமலத்தார்க்கு இன்பம் உதவிப் - பெருகியெழு மூன்றவத்தை யும்கழற்றி முத்தருட னே இருத்தி ஈன்றபர முத்தி அடைவித்துத் - தோன்றவரும் யானெனதென்று அற்ற இடமே திருவடியா மோனபரா னந்தம் முடியாக - ஞானம் திருஉருவா இச்சை செயலறிவு கண்ணா அருளதுவே செங்கை அலரா - இருநிலமே சந்நிதியா நிற்கும் தனிச்சுடரே, எவ்வுயிர்க்கும் பின்னமற நின்ற பெருமானே - மின்னுருவம் தோய்ந்த நவரத்நச் சுடர்மணியால் செய்த
பைம்பொன்
வாய்ந்த கிரண மணிமுடியும் - தேய்ந்தபிறைத் துண்டம்இரு மூன்றுநிரை தோன்றப் பதித்தனைய புண்டரம் பூத்தநுதல் பொட்டழகும் - விண்ட பருவமலர்ப் புண்டரிகம் பன்னிரண்டு பூத்தாங்கு அருள்பொழியும் கண்மலர் ஈராறும் - பருதி பலவும் எழுந்துசுடர் பாலித்தாற் போலக் குலவு மகரக் குழையும் - நிலவுமிழும்

Page 92
126
4 .
42.
43.
4 4.
45.
46.
47.
48.
. 9 قه
5 O.
5 .
5 2.
53.
54.
புன்முறுவல் பூத்தலர்ந்த பூங்குமுதச் செவ்வாயும் சென்மவிடாய் தீர்க்கும் திருமொழியும் -
வின்மலிதோள் வெவ்வசுரர் போற்றிசைக்கும் வெஞ்துர னைத்தடிந்து தெவ்வருயிர் சிந்தும் திருமுகமும் - எவ்வுயிர்க்கும் ஊழ்வினையை மாற்றி உலவாத பேரின்ப வாழ்வுதரும் செய்ய மலர்முகமும் - தழ்வோர் வடிக்கும் பழமறைகள் ஆகமங்கள் யாவும் முடிக்கும் கமல முகமும் - விடுத்தகலாப் பாச இருள்துரந்து பல்கதிரில் சோதிவிடும் வாச மலர்வதன மண்டலமும் - நேசமுடன் போகமுறும் வள்ளிக்கும் புத்தேளிர் பூங்கொடிக்கும் மோகம் அளிக்கும் முகமதியும் - தாகமுடன் வந்தடியில் சேர்ந்தோர் மகிழ வரம்பலவும் தந்தருளும் தெய்வமுகத் தாமரையும் - கொந்தவிழ்ந்த வேரிக் கடம்பும் விரைக்குரவும் பூத்தலர்ந்த பாரப் புயசயிலம் பன்னிரண்டும் - ஆரமுதம் தேவர்க்கு உதவும் திருக்கரமும் தர்மகளிர் வேமக் குழைந்தணைந்த மென்கரமும் - ஒவாது மாரி பொழிந்த மலர்க்கரமும் பூந்தொடையல் சேர அணிந்த திருக்கரமும் - மார்பகத்தில் வைத்த கரதலமும் வாமமருங் கிற்கரமும் உய்த்த குறங்கில் ஒருகரமும் - மொய்த்த சிறுதொடிசேர் கையும்மணி சேர்ந்ததடங் கையும் கறுவுசமர் அங்குசம்சேர் கையும் - தெறுபோர் அதிர்கே டகம்சுழற்றும் அங்கைத் தலமும் கதிர்வாள் விதிர்க்கும் கரமும் - முதிராத கும்பமுலைச் செவ்வாய்க் கொடியிடையார்
வேட்டணைந்த
அம்பொன் மணிப்பூண் அகன்மார்பும் - பைம்பொன்

55.
5 6.
57.
59.
6 O.
6.
62.
63.
64。
65.
6 6.
67.
6 8.
127
புரிநூலும் கண்டிகையும் பூம்பட் டுடையும் அரைஞாணும் கச்சை அழகும் - திருவரையும் நாதக் கழலும் நகுமணிப்பொற் கிண்கிணியும் பாதத்து அணிந்த பரிபுரமும் - சோதி
இளம்பருதி நூறா யிரங்கோடி போல வளந்தரு தெய்வீக வடிவும் - உளந்தணில்கண்டு
ஆதரிப்போர்க்கு ஆருயிராய் அன்பரகத் தாமரையின்
மீதிருக்கும் தெய்வ விளக்கொளியே - ஒதியஐந்து
ஓங்காரத்து உள்ளொளிக்கும் உள்ளொளியாய்
ஐந்தொழிற்கும் நீங்காத பேருருவாய் நின்றோனே - தாங்கரிய மந்திரமே சோரியா வான்பதமே மாமுடியாத் தொந்தமுறும் வன்னமே தொக்காகப் - பந்தனையால்
ஒத்த புவனத் துருவே உரோமமாத் தத்துவங்க ளேசத்த தாதுவா - வைத்த
கலையே அவயவமாக் காட்டும்அத்து வாவின் நிலையே வடிவமா நின்றோய் - பலகோடி
அண்டம் உருவாகி அங்கம் சராசரமாய்க் கண்டசக்தி மூன்றுட் கரணமாய்த் - தொண்டுபடும்
ஆவிப் புலனுக்கு அறிவு அளிப்ப ஐந்தொழிலும் ஏவித் தனிநடத்தும் எங்கோவே - மேவ வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம் தரும்அட்ட யோகத் தவமே - பருவத்து அகலாத பேரன்பு அடைந்தோர் அகத்துள் புகலாகும் இன்பப் பொருப்பும் - சுகலளிதப் பேரின்ப வெள்ளப் பெருக்காறும் மீதானம் தேரின்ப நல்கும் திருநாடும் - பாரின்பம்
எல்லாம் கடந்த இருநிலத்துள் போக்குவரவு அல்லாது உயர்ந்த அணிநகரும் - தொல்லுலகில்

Page 93
28
69.
7 O.
7 . .
7 2.
73.
74。
7 5.
7 6.
77.
78.
79.
8 O.
8 . .
ஈறும் முதலுமகன்று எங்குநிறைந்த ஐந்தெழுத்தைக் கூறி நடாத்தும் குரகதமும் - ஏறுமதம் தோய்ந்து களித்தோர் துதிக்கையினால் பஞ்சமலம் காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் - வாய்ந்தகிவ பூரணத்துள் பூரணமாம் போதம் புதுமலரா நாரகத்துள் கட்டு நறுந்தொடையும் - காரணத்துள் ஐந்தொழிலும் ஒவாது அளித்துயர்த்த வான்கொடியும் வந்தநவ நாத மணிமுரசும் - சந்ததமும் நீக்கமின்றி ஆடி நிழலசைப்பான் போல்புவனம் ஆக்கி அசைத்தருளும் ஆணையும் - தேக்கமழ்ந்து வீசும் பனுவல் விபுதர் தனித்தனியே பேசும் தசாங்கமெனப் பெற்றோனே - தேசுதிகழ் பூங்கயிலை வெற்பில் புனைமலர்ப்பூங் கோதையிடப் பாங்குறையும் முக்கண் பரஞ்சோதி - ஆங்கொருநாள் வெந்தகுவர்க்கு ஆற்றாத விண்ணோர் முறைக்கிரங்கி ஐந்து முகத்தோடு அதோமுகமும் - தந்து திருமுகங்கள் ஆறாகிச் செந்தழற்கண் ஆறும் ஒருமுகமாய்த் தீப்பொறியாறு உய்ப்ப - விரிபுவனம் எங்கும் பரக்க இமையோர் கண்டு அஞ்சுதலும் பொங்கும் தழல்பிழம்பைப் பொற்கரத்தால் -
அங்கண்
எடுத்தமைத்து வாயுவைக்கொண்டு ஏகுதியென்று
எம்மான் கொடுத்தளிப்ப மெல்லக் கொடுபோய் -
அடுத்ததொரு பூதத் தலைவகொடு போதிஎனத் தீக்கடவுள் சீதப் பகீரதிக்கே சென்றுய்ப்பப் - போதொருசற்று
அன்னவளும் கொண்டமைதற்கு ஆற்றாள்
சரவனத்தில் சென்னியில் கொண்டு உய்ப்பத் திருஉருவாய் -
முன்னர்

129
82.
83.
84。
85.
86.
87.
88.
89.
9 O.
9 .
92.
93.
94.
95.
அறுமீன் முலையுண்டு அழுதுவிளை யாடி நறுநீர் முடிக்கனிந்த நாதன் - குறுமுறுவல் கன்னியொடும் சென்று அவட்குக் காதலுருக்
காட்டுதலும் அன்னவள்கண்டு அவ்வுருவம் ஆறினையும் -
தன்னிரண்டு கையால் எடுத்தனைத்துக் கந்தனெனப் பேர்புனைந்து மெய்யாறும் ஒன்றாக மேவுவித்துச் - செய்ய முகத்தில் அனைத்துஉச்சி மோந்து முலைப்பால் அகத்துள் மகிழ்பூத்து அளித்துச் - சகத்தளந்த வெள்ளை விடைமேல் விமலன் கரத்தில் அளித்து உள்ளம் உவப்ப உயர்ந்தோனே - கிள்ளைமொழி
மங்கை சிலம்பின் மணிஒன்ப தில்தோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து - தங்கள் விருப்பால் அளித்தநவ வீரருக்குள் முன்னோன் மருப்பாயும் தார்வீர வாகு - நெருப்பிலுதித்து
அங்கண் புவனம் அனைத்தும் அழித்துலவும் செங்கண் கிடா அதனைச் சென்றுகொணர்ந்து -
எங்கோன்
விடுக்குதி என்றுஉய்ப்பஅதன் மீதிவர்ந்து எண்திக்கும் நடத்தி விளையாடும் நாதா - படைப்போன்
அகந்தை உரைப்பமறை ஆதி எழுத்தென்று உகந்த பிரணவத்தின் உண்மை - புகன்றிலையால் சிட்டித் தொழிலதனைச் செய்வதெங்ங்ண் என்றுமுனம் குட்டிச் சிறையிருத்தும் கோமானே - மட்டவிழும் பொன்னம் கடுக்கைப் புரிசடையோன் போற்றிசைப்ப முன்னம் பிரமம் மொழிந்தோனே - கொன்னெடுவேல் தாரகனும் மாயத் தடங்கிரியும் தூளாக வீரவடி வேல் விடுத்தோனே-சீரலைவாய்த் தெள்ளு திரை கொழிக்கும் செந்தூரில் போய்க்கருணை வெள்ளம் எனத்தவிசின் வீற்றிருந்து - வெள்ளைக்

Page 94
30
96.
97.
98.
99.
O O.
O.
O2
03.
04.
O 5.
O 6.
O7.
O 8.
O9.
கயேந்திரனுக்கு அஞ்சல் அளித்துக் கடல்துழி மயேந்திரத்தில் புக்கு இமையோர் வாழச் -
சயேந்திரனாம்
துரனைச் சோதித்துவரு கென்றுதடம் தோள்விசய வீரனைத் தூதாக விடுத்தோனே - காரவுணன்
வானவரை விட்டு வணங்காமை யால்கொடிய தானவர்கள் நாற்படையும் சங்கரித்துப் - பானு
பகைவன் முதலாய பாலருடன் சிங்க முகனைவென்று வாகை முடித்தோய் - சகமுடுத்த
வாரிதனில் புதிய மாவாய்க் கிடந்தநெடும் துருடலம் கீண்ட சுடர் வேலோய் - போரவுணன்
. அங்கம்இரு கூறாய் அடன்மயிலும் சேவலுமாய்த்
துங்கமுடன் ஆர்த்தெழுந்து தோன்றுதலும் -
அங்கவற்றுள்
. சீறும்அர வைப்பொருத சித்ரமயில் வாகனமா
ஏறி நடாத்தும் இளையோனே - மாறிவரு
சேவல் பகையைத் திறல்சேர் பதாகைஎன
மேவத் தனித்துயர்த்த மேலோனே - மூவர்
குறைமுடித்து விண்ணம் குடியேற்றித் தேவர் சிறைவிடுத்து ஆட்கொண்ட தேவே - மறைமுடிவாம்
சைவக்கொழுந்தே தவக்கடலே வானுதவும் தெய்வக் களிற்றை மணம்செய்தோனே - பொய்விரவு
காமம் முனிந்த கலைமுனிவன் கண்ணருளால் வாமமட மானின் வயிற்றுதித்துப் - பூமருவு
கானக் குறவர் களிகூரப் பூங்குயில்போல் ஏனற் புனங்காத்து இனிதிருந்து - மேன்மைபெறத் தெள்ளித் தினைமாவும் தேனும் பரிந்தளித்த வள்ளிக் கொடியை மணந்தோனே - உள்ளம்உவந்து
ஆறுதிருப் பதிகண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறும் அவர் சிந்தைகுடி கொண்டோனே - நாறுமலர்க்

31.
0.
I .
2.
3.
14.
5.
6.
17
8.
9.
20.
2 .
22
கந்திப் பொதும்பர்எழு காரலைக்கும் சீரலைவாய்ச் செந்திப் பதிபுரக்கும் செவ்வேளே - சந்ததமும் பல்கோடி சன்மப் பகையும் அவமிருத்தும் பல்கோடி விக்கினமும் பல்பிணியும் - பல்கோடி பாதகமும் செய்வினையும் பாம்பும் பசாசும்அடல் பூதமும்தீ நீரும் பொருபடையும் - தீது அகலா வெவ்விடமும் துட்ட மிருகமுதலாம் எவையும் எவ்விடம்வந்து எம்மை எதிர்ந்தாலும் - அவ்விடத்தில் பச்சைமயில் வாகனமும் பன்னிரண்டு திண்தோளும் அச்சம் அகற்றும் அயில்வேலும் - கச்சைத்
திருவரையும் சீறடியும் செங்கையும் ஈராறு அருள்விழியும் மாமுகங்கள் ஆறும் - விரிகிரணம்
சிந்தப் புனைந்த திருமுடிகள் ஓராறும் எந்தத் திசையும எதிர்தோன்ற - வந்திடுக்கண்
எல்லாம் பொடிபடுத்தி எவ்வரமும் தந்துபுகுந்து
உல்லாசமாக உளத்திருந்து - பல்விதமாம் ஆசுமுதல் நாற்கவியும் அட்டாவ தானமும்கீர்ப் பேசும் இயல் பல்காப் பியத் தொகையும்-ஒசை எழுத்துமுத லாம்ஐந்து இலக்கணமும் தோய்ந்து பழுத்த தமிழ்ப்புலமை பாலித்து - ஒழுக்கமுடன் இம்மைப் பிறப்பில் இருவா தனை அகற்றி மும்மைப் பெருமலங்கள் மோசித்துத் - தம்மைவிடுத்து
ஆயும் பழைய அடியா ருடன் கூட்டித் தோயும் பரபோகம் துய்ப்பித்துச் - சேய
. கடியேற்கும் பூங்கமலக் கால்காட்டி ஆட்கொண்டு
அடியேற்கு முன்னின்று அருள்.
திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா முற்றிற்று

Page 95
32
தேவராய சுவாமிகள் கந்தர் சஷ்டி கவசம்
காப்பு
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்(து)ஓங்கும் நிஷடையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி ஆட மையல் நடஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லால்எனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக 功「GuG55T L」Gug DrD「D「Dr D「D「Dr
fou GooT L-uugF ffrff ffrf விணபவ சரவண வீரா நமோ நம

33
நிபவ சரவண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டு இலங்க விரைந்து எனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஐயும் நிலைபெற்று என்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாம்சிவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு தின்புயத்து அழகிய மார்பில் பல்பூ ஷனமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இரு தொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம் பொலிமுழங்க செககன செககன செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண 功「D「D「Dr D「D「D「Dr TD「D「Dr DrD「Dr ffገffገffገnfገ rfገffገffገffገ rfገnfገffገffገ [fገffገffገ G)G)GG) GGGG) GGGS)G) GGGS) டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து

Page 96
34
முந்து முந்து முருகவேள் முந்து என்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரம்மகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன்திரு வடியை உறுதியென்று எண்ணும் என்தலை வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க
நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என் இளம் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடி இணை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க

1 35
பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவில் சரஸ்வதி நல்துணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி துனியம் பெரும்பகை அகல வல்ல. பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்ப்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்துடன் மனையில் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும்

Page 97
36
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட கால தூதாள் எனைக் கண்டால் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரன்று புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஒடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டு உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில்செதி லாக சொக்கு சொக்கு துர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலொரி தனலெரி தனலெரி தணல் அதுவாக விடுவிடு வேலை வெருண்டு அது ஒட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந்து ஒட தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் துலைசயம் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் புருதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரனை பருஅரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாது ஒட நீஎனக்கு அருள்வாய் ஈரேழு உலகமும் எனக்கு உறவாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே

137
பரிபுர பவனே பவம்ஒளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்து தேவர்கள் கடும்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்து உறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தில் மாமலை உறும் செங்கல்வ ராயர் 3FLDUT புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யான் உனைப் பாட எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசம் ஆக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருளாக அன்புடன் இரகூS அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவள் ஆமே பிள்ளையென்று அன்பாய்ப் பிரியம் அளித்து மைந்தன் என்மீதுன் மனம்மகிழ்ந்து அருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட அருள்செய்

Page 98
38
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசா ரத்துடன் அங்கம் துலக்கி
நேச முடன் ஒரு நினைவது ஆகி கந்தர் சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத்து ஆறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறு அணிய அட்ட திக்கு உள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமதன் எனவும் நல்லெழில் பெறுவர் எந்த தாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் • பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்து அடி அறிந்து எனதுள்ளம் அட்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்து உணவாகச் துஞரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்து அமுதளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோர் அரசே

39
w
மயில்நடம் இடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்!
பகழிக் கூத்தர்
திருச்செந்தூர் முருகன்
பிள்ளைக் தமிழ்
பேரா தரிக்கு மடியவர்தம்
பிறப்பை யொழித்துப் பெருவாழ்வும் பேறுங் கொடுக்க வரும்பிள்ளைப்
பெருமா னென்னும் பேராளா சேரா நிருதர் குலகலகா
சேவற் கொடியாய் திருச்செந்தூர்த் தேவா தேவர் சிறைமீட்ட
செல்வா வென்றுன் றிருமுகத்தைப் பாரா மகிழ்ந்து முலைத்தாயர்
பரவிப் புகழ்ந்து விருப்புடனப் பாவா வாவென் றுனைப்போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாரா திருக்க வழக்குண்டோ
வடிவேல் முருகா வருகவே வளருங் களபக் குரும்பைமுலை
வள்ளி கனவா வருகவே.

Page 99
40
பாம்பன் சுவாமிகள்
சண்முக கவசம்
அண்டமா யவனி யாகி
யறியொனாப் பொருள தாகித் தொண்டர்கள் குருவு மாகித்
துகளறு தெய்வ மாகி எண்டிசை போற்ற நின்ற
வென்னரு ஸ்ரீச னான திண்டிறற் சரவ ணத்தான்
றினமுமென் சிரசைக் காக்க. ஆதியாங் கயிலைச் செல்வ
னணிநெற்றி தன்னைக் காக்க தாதவிழ் கடப்பந் தாரான்
றானிரு நுதலைக் காக்க சோதியாந் தணிகை யீசன்
றுரிசிலா விழியைக் காக்க நாதனாங் கார்த்தி கேய
னாசியை நயந்து காக்க.
இருசெவி களையுஞ் செவ்வே
ளியல்புடன் காக்க வாயை முருகவேள் காக்க நாப்பன்
முழுதுநற் குமரன் காக்க துரிசறு கதுப்பை யானைத்
துண்டனார் துணைவன் காக்க திருவுடன் பிடரி தன்னைச்
சிவசுப்ர மணியன் காக்க.
(1)
(2)
(3)

4
ஈசனாம் வாகு லேய
னெனதுகந் தரத்தைக் காக்க தேசுறு தோள்வி லாவுந்
திருமகண் மருகன் காக்க ஆசிலா மார்பை யீரா
றாயுதன் காக்க வென்றன் ஏசிலா முழங்கை தன்னை
யெழிற்குறிஞ் சிக்கோன் காக்க. (4) உறுதியாய் முன்கை தன்னை
யுமையிள மதலை காக்க தறுகனே றிடவே யென்கைத்
தலத்தைமா முருகன் காக்க புறங்கையை யயிலோன் காக்க
பொறிக்கர விரல்கள் பத்தும் பிறங்குமான் மருகன் காக்க
பின்முது கைச்சேய் காக்க. (5) ஊணிறை வயிற்ன்ற மஞ்ஞை
யூர் தியோன் காக்க வம்புத் தோணிமிர் சுரேச னுந்திச்
சுழியினைக் காக்க குய்ய நானினை யங்கி கெளரி
நந்தனன், காக்க பீஜ ஆணியைக் கந்தன் காக்க
வறுமுகன் குதத்தைக் காக்க. (6) எஞ்சிடா திடுப்பை வேலுக்
கிறைவனார் காக்க காக்க அஞ்சக னமொரி ரண்டு
மரன்மகன் காக்க காக்க விஞ்சிடு பொருட்காங் கேயன்
விளரடித் தொடையைக் காக்க செஞ்சர ணேச வாசான்
றிமிருமுன் றொடையைக் காக்க, (7) ஏரகத் தேவ னென்றா
ளிருமுழங் காலுங் காக்க சீருடைக் கணைக்கா றன்னைச்
சீரலை வாய்த்தே காக்க

Page 100
142
நேருடைப் பரடி ரண்டு
நிகழ்பரங் கிரியன் காக்க
சீரிய குதிக்கா றன்னைத்
திருச்சோலை மலையன் காக்க.
ஐயுறு மலையன் பாதத்
தமர்பத்து விரலுங் காக்க பையுறு பழநி நாத
பரணகங் காலைக காகக மெய்யுடன் முழுது மாதி
விமலசண் முகவன் காக்க தெய்வநா யகவி சாகன்
றினமுமென் னெஞ்சைக் காக்க,
ஒலியெழ வுரத்த சத்தத்
தொடுவரு பூதப் ரேதம் பலிகொளி ராக்க தப்பேய்
பலகணத் தெவையா னாலுங் கிலிகொள வெனைவேல் காக்க
கெடுபரர் செய்யுஞ் சூன்யம் வலியுள மந்த்ர தந்த்ரம்
வருத்திடா தயில்வேல் காக்க. ஓங்கிய சீற்ற மேகொண்
டுவணிவில் வேல்து லங்கள் தாங்கிய தண்ட மெஃகந்
தடிபர சீட்டி யாதி பாங்குடை யாயு தங்கள்
பகைவரென் மேலே யோச்சின் தீங்குசெய் யாம லென்னைத்
திருக்கைவேல் காக்க காக்க. ஒளவிய முளரூ னுண்போ
ரசடர்பே யரக்கர் புல்லர் தெவ்வர்க ளெவரா னாலுந்
திடமுட னெனைமற் கட்டத் தவ்வியே வருவா ராயிற்
சராசர மெலாம்பு ரக்குங் கவ்வுடைச் துர சண்டன்
கையயவில் காக்க காக்க.
(8)
(9)
(10)
(11)
(12)

1 4 S
கடுவிடப் பாந்தள் சிங்கங்
கரடிநாய் புலிமா யானை கொடியகோ னாய்கு ரங்கு
கோலமார்ச் சாலஞ் சம்பு நடையுடை யெதனா லேனு
நானிடர்ப் பட்டி டாமற் சடிதியில் வடிவேல் காக்க
சானவி முளைவேல் காக்க. (13) ங்கரமே போற்ற பூழிஇ
ஞானவேல் காக்க வன்புள் சிகரிதே னண்டுக் காலி
செய்யனே றாலப் பல்லி நகமுடை யோந்தி பூரா
னளிவண்டு புலியின் பூச்சி உகமிசை யிவையா லெற்கோ
ரூறிலா தைவேல் காக்க, (14) சலத்திலுய் வன்மீ னேறு
தண்டுடைத் திருக்கை மற்றும் நிலத்திலுஞ் சலத்தி லுந்தா
னெடுந்துயர் தரற்கே யுள்ள குலத்தினா னான்வ ருத்தங்
கொண்டிடா தவ்வவ் வேளை பலத்துட னிருந்து காக்க
பாவகி கூர்வேல் காக்க. (15) ஞமலியம் பாரியன் கைவே
னவக்கிர கக்கோள் காக்க சுமவிழி நோய்க டந்த
தலையாக் கிரான ரோகம் திமிர் கழல் வாதஞ் சோகை
சிரமடி கர்ண ரோகம் எமையணு காம லேபன்
னிருபுயன் சயவேல் காக்க. (16) டமருகத் தடிபோ னைக்குந்
தலையிடி கண்ட மாலை
குமுறுவிப் புருதி குன்மங்
குடல்வலி யீழை காசம்

Page 101
1 44
நிமிரொணா திருத்தும் வெட்டை நீர்ப்பிர மேக மெல்லாம் எமையடை யாம லேகுன்
றெறிந்தவன் கைவேல் காக்க,
இணக்கமில் லாத பித்த
வெரிவுமா சுரங்கள் கைகால்
முணக்கவே குறைக்குங் குஷ்ட
மூலவெண் முளைதீ மந்தம்
சனத்திலே கொல்லுஞ் சன்னி
சாலமென் றறையு மிந்தப்
பிணிக்குல மெனையா ளாமற்
பெருஞ்சத்தி வடிவேல் காக்க.
தவனமா ரோக வாதஞ்
சயித்திய மரோச கம்மெய் சுவறவே செய்யு மூலச்
துடிளைப் புடற்று விக்கல் அவதிசெய் பேதி சீழ்நோ
யண்டவா தங்கள் தலை எவையுமென் னிடத்தெய் தாம
லெம்பிரான் றிணிவேல் காக்க.
நமைப்புறு கிரந்தி வீக்க
நணுகிடு பாண்டு சோபம் அமர்ந்திடு கருமை வெண்மை
யாகுபஃ றொழுநோய் கக்கல் இமைக்குமுன் னுறுவ லிப்போ
டெழுபுடைப் பகந்த ராதி இமைப்பொழு தேனு மென்னை
யெய்தாம லருள்வேல் காக்க.
பல்லது கடித்து மீசை
படபடென் றேது டிக்கக்
கல்லினும் வலிய நெஞ்சங்
காட்டியே யுருட்டி நோக்கி
எல்லினுங் கரிய மேனி
யெமபடர் வரினு மென்னை
(17)
( 18)
(19)
(20)

145
ஒல்லையிற் றார காரி
ஒம்ஐம் ரீம்வேல் காக்க, (21)
மண்ணிலு மரத்தின் மீது
மலையிலு நெருப்பின் மீதும் தண்ணிறை ஜலத்தின் மீதுஞ்
சாரிசெய் யூர்தி மீதும் விண்ணிலும் பிலத்தி னுள்ளும்
வேறெந்த விடத்து மென்னை நண்ணிவந் தருளார் சஷ்டி
நாதன்வேல் காக்க காக்க, (22)
யகரமே போற்து லேந்து
நறும்புயன் வேன்முன் காக்க அகரமே முதலா மீரா
றம்பகன் வேல்பின் காக்க சகரமோ டாறு மானோன்
றன்கைவே னடுவிற் காக்க சிகரமின் றேவ மோலி
திகழைவேல் கீழ்மேல் காக்க. (2 3)
ரஞ்சித மொழிதே வானை
நாயகன் வள்ளி பங்கன் செஞ்சய வேல்கி ழக்கிற்
றிடமுடன் காக்க வங்கி விஞ்சிடு திசையின் ஞான
வீரன்வேல் காக்க தெற்கில் எஞ்சிடாக் கதிர்கா மத்தோ
னிகலுடைக் கரவேல் காக்க. (24)
லகரமே போற்கா ளரிங்க
னல்லுட னெளிய நின்று தகரமர்த் தனமே செய்த
சங்கரி மருகன் கைவேல் நிகழெனை நிருதி திக்கி
னிலைபெறக் காக்க மேற்கில் இகலயில் காக்க வாயு
வினிற்குகன் கதிர்வேல் காக்க. (25)

Page 102
46
வடதிசை தன்னி லீசன்
மகனருட் டிருவேல் காக்க விடையுடை யீசன் றிக்கில்
வேதபோ தகன்வேல் காக்க நடக்கையி லிருக்கு ஞான்று
நவில்கையி னிமிர்கை யிற்கீழ்க் கிடக்கையிற் றுாங்கு ஞான்று
கிரிதுளைத் துளவேல் காக்க. (26)
இழந்துபோ காத வாழ்வை
யீயுமுத் தையனார் கைவேல் வழங்குநல் லூனுண் போது
மால்விளை யாட்டின் போதும் பழஞ்சுரர் போற்றும் பாதம்
பணிந்துநெஞ் சடக்கும் போதும் செழுங்குணத் தோடே காக்க
திடமுடன் மயிலுங் காக்க. (27)
இளமையில் வாலி பத்தி
லேறிடு வயோதி கத்தில் வளரறு முகச்சி வன்றான்
வந்தெனைக் காக்க காக்க ஒலியெழு காலை முன்னெ
லோஞ்சிவ சாமி காக்க தெளிநடு பிற்ப கற்கால்
சிவகுரு நாதன் காக்க, (28)
இறகுடைக் கோழித் தோகைக்
கிறைமுனி ராவிற் காக்க திறலுடைச் சூர்ப்ப கைத்தே
திகழ்பினி ராவிற் காக்க நறவுசேர் தாட்சி லம்ப
னடுநிசி தன்னிற் காக்க மறைதொழு குழக னெங்கோன்
மாறாது காக்க காக்க. (29)
இனமெனத் தொண்ட ரோடு
மிணக்கிடுஞ் செட்டி காக்க

147
தனிமையிற் கூட்டந் தன்னிற் சரவண பவனார் காக்க
நனியனு பூதி சொன்ன
நாதர்கோன் காக்க வித்தைக்
கனிவொடு சொன்ன தாசன்
கடவுடான் காக்க வந்தே. (30)
சிதம்பர சுவாமிகள்
திருப்போரூர் சந்நிதி முறை
நோயுற் றடராமல் நொந்துமணம் வாடாமல் பாயில் கிடவாமல் பாவியேன்-காயத்தை ஒர்நொடிக்குள் நீக்கியெனை ஒண்போரூர் ஐயாநின் சீரடிக்கீழ் வைப்பாய் தெரிந்து.
கன்றழைக்கு முன்னே கருதிவரும் ஆப்போல நின்றழைக்கும் நாயேற்கு நேர்தோன்றி-ஒன்றினுக்கும் அஞ்சாதே வாவென்(று) அழைப்பாய்தென் போரூரா எஞ்சாதே பேரருளால் இன்று.
ஈண்டுலகில் உன்னை இனங்கறியா நாயேனை ஆண்டருள்போ ரூர்வேல் அரசனே-மாண்டு பிறவாமல் உன்தன் பதப்பூப் பெருந்தேன் இறைவா எனக்கருள்நீ இன்று.
அன்னம் அளிக்குமூர் அண்டினரைக் காக்குமூர் சொன்ன மழைபோற் சொரியுமூர் - உன்னினர்க்குத் தீதுபிணிை தீர்க்குமூர் செவ்வே ளரிருக்குமூர் ஒதுதிருப் போரூரெம் மூர்.
கண்டேன் கவலைநோய் காண்கிலேன் மும்மலமும் விண்டேன் சுகவீடு மேவினேன்-தொண்டனேன் காரூரும் பூஞ்சோலைக் காலருவித் தேன்பாயும் போரூரன் வாழும் பொருப்பு.

Page 103
148
ஆறுமுக நாவலர்
கதிர்காமத் திருமுருகன் கீர்த்தனங்கள்
இராகம் - சாவேரி, தாளம் - ஆதி பல்லவி
உன்னிருபாதந் தெரி - சனஞ்செய்த பின்னரே யுவகைக்கடலு - லாழ்ந்தேனே
அநுபல்லவி தன்னிகரில் கதிரை - தனில்வாழும் போதனே சற்குண்ய பரிபூரண - சண்முக நாதனே (SDGT) சரணங்கள்
ஆதி நடுவிறுதி நீங்கினோய் - சித்தோ டசித்தாம் பிரபஞ்சமுற்றுந் - தாங்கினோய்
சோதிவடிவாய் நின்ற தலபாணி புதல்வா துரனாதி மூவரைத் தொலைத்தருளும் முதல்வா (உன் சனன மரணத்துயரத் தாழ்கின்றேன் - இன்னுஞ் சஞ்சலச் சாகரத்துள் வீழ்கின்றேன்
இன்னமும் பாராமுகஞ் செய்யா தெனக்குருகுவா யேதிலாத முத்தி யின்பந் தருகுவாய் (உன்
அருளுங்கருணைக் கடலல்லையோ - முன்ன ரமரரிட ரகற்ற வில்லையோ
ஒருவிலெனது நோயை யோட்டுத லருமையா உன்னையே நம்பிவந்தேனுக் குருகாமை பெருமையா
(உன்)

49
இராகம் - துசாவந்தி, தாளம் - சாபு
பல்லவி
ஏனிந்தக்கேடு நெஞ்சே - ஐயையோ - உனக் கேனிந்தக்கேடு நெஞ்சே
அநுபல்லவி மோனந்திகழுஞ் சைவ - முனிவருறை கதிரை முருகா - முருகா - முருகாவென் றுருகிலை (ஏனிந்த)
சரணங்கள்
பொய்யாமுலக வாழ்வை நீங்கி - நித்திய பூரணானந்த வாழ்விற் றேங்கி
மெய்யா மறிவானந்த - வேதமுடிவாய் நின்ற விமலா விமலா - விமலா - வென்றுருகிலை
)ஏனிந்த( /ر
சனன மரணத் துயர் தீரும் - மது தானாயமரு நிலை சாரும்
கனகசபை நடனக் கருணாகரன் முன்றந்த கந்தா - கந்தா - கந்தாவென் றுருகிலை (ஏனிந்த) அங்கியிடை மெழுக தென்னக் - கசிந் தளவிலானந்த மிகத்துன்ன
கொங்கு கமழ் கடம்பு குல்லையொடு புனைந்த குகனே - குகனே - குகனேயென் றுருகிலை (ஏனிந்த)
இராகம் - சுருட்டி, தாளம் - ஆதி
பல்லவி
நிருமல பரசிவசண்முகா - சுத்த நித்திய - சத்திய - வித்தகனாங்குக
அநுபல்லவி
திருவுலாவு மிலங்கையின் மேவிய சீர்திகழுங்கதிர் காமத்துறைதரு

Page 104
50
சிற்பரா - அருள் தற்பரா - அன்பர் சிந்தையுகந் தமருந்தனி வேலனே (நிரு)
சரணங்கள் பரமனருளும் புதல்வா - பரமானந்தசிவ பத்தர்க்கருளு முதல்வா
கருணைசேர் சச்சி தானந்த வடிவே கணிப்பிலாச்சது மறையின் முடிவே கந்தனே - உமை மைந்தனே - என்னைக் காத்து மலவிருள் தீர்த்தினிதாளுவாய் (நிரு) அறிவுக்கறிவாய் நின்றவா - கிரெளஞ்சகிரியுடன் அவுணர்கி ளையைக் கொன்றவா
குறிகுன மிறந்திலகு முருகா கூர்ந்துளாயணி மருமன் மருகா கோலனே - புரிநூலனே - ஒற்றைக் கொம்பினன் பின்வரு தம்பியே யின்பருள் (நிரு) அயனைச் சிறையில் வைத்தவா - அகத்தியமுனிவனுக் கருளோடுப தேசித்தவா
வியனு லகமரருக் கருள் தாளா வின்னுதல் வள்ளிக்கொடி புணருந் தோளா மெய்யனே - எமதையனே - அர விந்தமலர்நிக ரும்பாதந்தந்தருள் (நிரு)
இராகம் - ஆகிரி, தாளம் - சாபு
பல்லவி
இத்தனை கொடு வேதனைப்படல் கண்டு முமக் கின்னு மிரக்க மில்லையா
அநுபல்லவி
சித்தி முத்திகடருந் தெய்வ மாணிக்க நதி சேருங் கதிரை நகர் - திகழ் சுப்பிரமணியரே நான் (இத்) சரணங்கள்
அண்டரிடரகற்றும் போதரே - அன்பர் அனவரதம் பணி பொற் பாதரே

5
கண்டங்கரிய சோதி காதலரே யெனது கண்னேயென் கண்மணியே காருண்ய சாகரமே (இத்)
எள்ளினெய் போலெங்கும் நிறைவிரே - உமக்
கென்றுயர் தெரியாதோ அறைவீரே
தெள்ளுந் தமிழால் வைதார் தமக்கு மருள்வீரென்று தீதிலருணகிரி தேவர்சொல் நம்பிவந்தேன் (இத்)
உம்மையல்லாது துனை யறியேனே - துய ரோட்டிலீரேனு மும்மைப் பிரியேனே
இம்மை மறுமை வீடு மூன்று மும்மாலே யாகும் இதுவே சத்தியஞ் சத்தியமென்று துணிந்து வந்தேன்
(இத்)
இராகம் - கல்யாணி, தாளம் - ரூபகம்
பல்லவி
என்மே லிரக்கமில்லையா சாமி - புதல்வனுக்குத் தந்தை இரங்காதிருந்தா லென்சொல்லும் பூமி
அநுபல்லவி
தன்னிகரில்லாக் கதிரைமலை வாழுந் தற்பரானந்த சாமி சுகாரம்ப வுன்னுபய சரணாம்புய மல்லாம லொன்றும்புக லிடமின்றினியாகுதல் (என்)
சரனங்கள்
துய்யசடட்சரத்தோ ரெழுத்தையுஞ்
சொல்லிலே னென்செய்வேன் சிறியேன்
கோடி துரியப் பிரகாசமான வரோதய சுவாமி உய்வகையறியேன் செய்யநின் னாமத்தைநினையேன் பவந்தீரா துலைகின்றேன் வினையேன் அன்னை தெய்வமுநீயே அடியேனுக்குய் வருள்வாயே
அருள்சேர் சீலா - பாலா கோலா
நல்லனு கூலா - செங்கதிர்வேலா - இன்னும் (என்)
நித்தியபரி பூரணானந்த நிருமலா தீதமுருகா பாம்பில் நிருத்தம் புரியும்

Page 105
152
பரந்தாமனுக்கு நிகரில்லாத நன்மருகா துத்திய வள்ளி மணாளா பல தொண்டர்
வணங்கிடுதாளா என்மேற் துதை யெண்ணாதே என்னையிந்த வாதை பண்ணாதே கனமிகு துய்யா - மெய்யா - பொய்யா பன்னிருகையா - ஐயா - செய்யா - இன்னும் (365)
ஆறுமுகவென் றழைக்குங் கீரனுக் கருள்புரிந்திடு முதல்வா
அனவரதமுந் துதிசெயுந்திரி யம்பகற்கொரு புதல்வா சீறுமவுணனை வென்றாய் குறத்தேவி முன்வேங்கையாய் நின்றாய் நின்மேற் சிந்தனைவையே னொருக்காலும் வந்தனை செய்யேன்
கன ஈழதேசா - ராசா - விலாசா நல்லையில் - வாசா - நேசா - ஈசா - இன்னும் (என்)
இராகம் - அசாவேரி, தாளம் - ஆதி
பல்லவி
சிவகுரு நாதருக்குச் செய மங்களம் - நல்ல செங்கமல பாதருக்குச் செய மங்களம்
அநுபல்லவி
பவமறுத் தெனையாளும் பன்னிரு தோளருக்கு தவமுனிவர்களுளந் தங்கருளாளருக்குச் (சிவ)
சரனங்கள்
கன்னி வள்ளிநேசர் பாவ நாசருக்கு மங்களம் கதிர் காமவேல ரீழ தேசருக்கு மங்களம் மன்னுமடியார்க் கருளு மாசில் குமரேசருக்கு துன்னிய வனந்தகோடி துரியப் பிர காசருக்குச் (சிவ)
மங்கையுமை பாலர் வடி வேலருக்கு மங்களம் மன்னுமறை நூலரனு கூலருக்கு மங்களம்

153
புங்கமிகு சிவகாம போதக சுசீலருக்குச் செங்கையில் விளங்குவளைத் தெய்வயானை லோலருக்குச்
(சிவ)
சங்கரன் குமாரர்குல்லைத் தாரருக்கு மங்களம் தன்னிக ரில்லாதநல் லூரருக்கு மங்களம் பொங்குசினத் தவுனரைப் போரில் வென்ற வீரருக்குத் துங்கவகத் தியற்கருள் தோமிலதி தீரருக்குச் (சிவ)
இராமலிங்க அடிகளார்
திருவருட்பா
ஞானசரியை
நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்
னிரதனால் உடம்பு நனைந்து நனைந்தருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை
நாயகனே என்று வனைந்துவனைந் தேத்துதும்யாம்
வம்மின் உல கியலிர் மரணமிலாப் பெருவாழ்வில்
வாழ்ந்திடலாங் கண்டீர் புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன் பொற்சபையில் சிற்சபையில்
புகுந்தருணம் இதுவே.

Page 106
154
தெய்வமணிமாலை
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவுவேண்டும் உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
உறவுகல வாமைவேண்டும் பெருமைபெறு நினதுபகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும் பெருநெறிபி டித்தொழுக வேண்டும்மத மானபேய்
பிடியா திருக்கவேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்கவேண்டும் மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வில்நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
பிரமன் இனி என்னைப் பிறப்பிக்க வல்லனோ
பெய்சிறையில் இன்னும் ஒருகால் பின்பட்டு நிற்குமோ முன்பட்டகுட்டில்
பெறுந்துயர் மறந்துவிடுமோ இரவுநிறம் உடைஇயமன் இனிஎன்னைக் கனவினும்
இறப்பிக்க எண்ணம் உறுமோ எண்ணுறான் உதைஉண்டு சிதைஉண்ட தன்உடல்
இருந்தவடு எண்ணுறானோ கரவுபெறு வினைவந்து நலியுமோ அதனைஒரு
காசுக்கும் மதியேன்எலாம் கற்றவர்கள் பற்றும்நின் திருவருளை யானும்
கலந்திடப் பெற்றுநின்றேன் தரமருவு சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

55
நீர்உண்டு பொழிகின்ற கார் உண்டு விளைகின்ற
நிலன்உண்டு பலனும்உண்டு நிதிஉண்டு துதிஉண்டு மதிஉண்டு கதிகொண்ட
நெறிஉண்டு நிலையும்உண்டு ஊர் உண்டு பேர் உண்டு மணிஉண்டு பணிஉண்டு
உடைஉண்டு கொடையும்உண்டு உண்டுஉண்டு மகிழவே உணவுண்டு சாந்தம்உறும்
உளம்உண்டு வளமும்உண்டு தேர்உண்டு கரிஉண்டு பரிஉண்டு மற்றுள்ள
செல்வங்கள் யாவும்உண்டு தேன் உண்டு வண்டுறு கடம்பணியும் நின்பதத்
தியானம்உண் டாகில் அரசே தார் உண்ட சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
உளம்எனது வசம்நின்ற தில்லைஎன் தொல்லைவினை
ஒல்லைவிட் டிடவும் இல்லை உன்பதத் தன்பில்லை என்றனக் குற்றதுணை
உனை அன்றி வேறும்இல்லை இளையன்அவ னுக்கருள வேண்டும்என் றுன்பால்
இசைக்கின்ற பேரும்இல்லை ஏழைஅவ னுக்கருள்வ தேன்என்றுன் எதிர்நின்
றியம்புகின் றோரும்இல்லை வளம்மருவும் உனதுதிரு அருள்குறைவ தில்லைமேல்
மற்றொரு வழக்கும் இல்லை வந்திரப் பேர்களுக் கிலைஎன்ப தில்லைநீ
வன்மனத் தவனும்இல்லை தளர்விலாச் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே. எத்திக்கும் என்உளம் தித்திக்கும் இன்பமே
என்உயிர்க் குயிராகும்ஒர்

Page 107
S 6
ஏகமே ஆனந்த போகமே யோகமே
என்பெருஞ் செல்வமேநன் முத்திக்கு முதலான முதல்வனே மெய்ஞ்ஞான
மூர்த்தியே முடிவிலாத முருகனே நெடியமால் மருகனே சிவபிரான்
முத்தாடும் அருமைமகனே பத்திக் குவந்தருள் பரிந்தருளும் நின்அடிப்
பற்றருளி என்னை இந்தப் படியிலே உழல்கின்ற குடியிலே ஒருவனாப்
பண்ணாமல் ஆண்டருளுவாய் சத்திக்கும் நீர்ச்சென்னை கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.
கச்சியப்ப சிவாசாரிய சுவாமிகள்
கந்தபுராணம் விநாயகக்கடவுள்
திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம்.
மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி ஏவருந் துதிக்க நின்ற இராறுதோள் போற்றி காஞ்சி மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி யன்னான் சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்முறை யறங்க ளோங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக வுலக மெல்லாம்
திருச்சிற்றம்பலம்


Page 108


Page 109