கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 1
நெரு மக்களும்
Wਜੇ
нняHн
சு.சிவநாயகமூர்
B.A. Dip E.
 

NWT || ||
MEN
岛*

Page 2

நெடுந்தீவு மக்களும் வரலாறும்
சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர்-இலங்கை
ரொறன்ரோ-கனடா

Page 3
Title of the BOOk Author
Language Date Of Publication Edition Number Of Pages price أن الأنواع Type setting Cover Design Printer
Copyright
நூலின் பெயர் ஆசிரியர் பதிப்பு
தட்டச்சு
அச்சகம் அட்டைப்படஅமைப்பு பதிப்புரிமை * :
: Delft People & History * Subramaniam Sivanayagamoorthy
Tamil : April 2003 : First Edition : 216
: Kodees and JUVan
: Sutha
: Viveka Printers : Author
: நெடுந்தீவு மக்களும் வரலாறும் : சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி
முதற்பதிப்பு வெளியீட்டுத் தினம் :
; கோடீஸ் +ஜிவான் : விவேகா அச்சகம், ரொறன்ரோ : சுதா : நூலாசிரியருக்கே உரியது
சித்திரை 2003 .

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி இருப்பச் செயல்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 4
நெருந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர் OUR FOUNDER PRINCIPAL
C.V. EDWARD NAVARATNASINGHAM Esqr.
அமரர் திரு. C.W. எட்வேட் நவரட்னசிங்கம் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் சேவை செய்த காலம்
17.01.1946 - 31.07. 1964
நெடுந்தீவின் கல்வி வளர்ச்சிக்காகப் பதினெட்டு வருடங்களுக்கு மேலாகத் தன்னை அர்ப்பணித்து அதிபராக அரும்பணியாற்றிய அமரர் சி.வி.எட்வேட் நவரட்னசிங்கம் அவர்களுக்குக் காணிக்கையாக இந்நூலைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
சு. சிவநாயகமூர்த்தி
 

பொருளடக்கம்
அணிந்துரை . I மதிப்புரை . III ஆய்வுரை . V சிறப்புரை . VIII வாழ்த்துரை . XIII ஆசியுரை . XIII முன்னுரை . XV நெடுந்தீவுக்கீதம். XIX இலங்கைப்படம் . XX நெடுந்தீவுப்படம் . ΧΧΙ
இயல் V பக்கனண்
1. நெடுந்தீவின் நிலையமும் பெயர்களும். 2. நெடுந்தீவின் புவியியல் தன்மை. 5 3. மக்கள் குடியேற்றம். 14 4 அரசியல் . 17 5. சமய வளர்ச்சி . 31 6. கல்வி வளர்ச்சி . 36 7. தொழில் வளங்கள் . 48 8. நெடுந்தீவின் பொருண்மிய வளங்களும், அவற்றை
மேம்படுத்துவதற்குரிய வழிவகைகளும். 60 9. நெடுந்தீவின் பிரதான துறைமுகங்களும்
வரலாற்றுச் சின்னங்களும் . 72 10. நெடுந்தீவுடன் தொடர்புடைய அயல் தீவுகள் . 91 11. நெடுந்தீவுப் பெரியார்கள் . 108 12. தீவகம் தந்த பண்டிதர்களும் பாவலர்களும். 135 13. கவிஞர்களும் எழுத்தாளர்களும். 141
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 5
14.
பல்துறை அரச சேவையாளர்கள். 146
15. நெடுந்தீவில் சேவையாற்றிய முன்னாள்
பாடசாலை அதிபர்கள் . 164 16. நெடுந்தீவுப் பிரதேச நிர்வாக சேவையாளர்கள். 170 17. நெடுந்தீவு கிராமசபை, பிரதேசசபைகளின்
தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள். 173 18. நெடுந்தீவின் சுதேச வைத்தியர்கள்,
அண்ணாவிமார். 177 19. DELFT (Neduntheevu) ............................................ 178 20. Notes From Romantic CEYLON
By. R.H. Bassett 1929 ................................................ 18 21. நெடுந்தீவின் சோக சம்பவம் . 183 22. ஆய்வுத்துணை நூல்கள் SLLLSLSS SSLSLLLLSLLLLLSL0LLLLLLSLLLLLSLLLLLLSLLLLLLLSLLLSLSLLLLLSLLLLLLLL LLLLLLLLSLSLLLLLSLLLSLSLLLLLS 184
பின் இணைப்பு:
நெடுந்தீவில் காணப்படும் மூலிகைகளிற் சில. 185
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

அணிந்துரை பேராசிரியர் இ. பாலசுந்தரம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்
ஆசிரியர் சிவநாயகமூர்த்தி அவர்களின் இந் நுாலாக்கப்பணி காலத்தின் தேவையையும், தாயகப் பற்றினையும் வெளிப்படுத்தும் அரும்பெரும் சேவையாகும். தாயகச் சிந்தனை என்பது உணர்ச்சி ரீதியாகவும் அமையலாம். அறிவு பூர்வமாகவும் செயற்படலாம். அறிவு பூர்வமான எண்ணங்கள் சமகாலத் 麥。》 தேவைகளையும் எதிர் கால செயற்பாடுகளையும் கருத்திற் கொண்டனவாக அமைதல் இயல்பு. இவ்வகையில் சு. சிவநாயகமூர்த்தி அவர்கள் ஈழத் தமிழரின் சமகால உணர்வுகளையும், எதிர்காலச் சந்ததியினர் எமது நாட்டவர் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ளவும், உதவும் வகையில் தகவல்களைத் திரட்டி, ஆவணப்படுத்தித் தந்துள்ள நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்னும் இந்நூால் காலத்தின் தேவையை நிறைவு செய்வதாக வெளிவருகின்றது. சிந்தனைத் தெளிவுடனும், தக்க சான்றுகளுடனும் எழுதப்பட்டுள்ள இந்நூல் நெடுந்தீவின் வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு பொக்கிசமாகும்.
இதிகாசக் கதைகளுடன் தொடர்புடையதும் வரலாற்றுப் பழமை மிக்கதும் பல்வேறுபட்ட சமூக பொருளாதார விடயங்களைத் தன்னகத்தே கொண்டதுமாகிய நெடுந்தீவின் பல்வேறு அம்சங்கள் பற்றித் திரட்டக்கூடிய தகவல்களை ஒன்றுசேர்த்து வரலாற்றுக் கண்ணோட்டத்தில் இந்நுால் எழுதப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் இத்தீவு எத்தகைய செய்திகளைக் கொண்டிருந்தது? இத் தீவுடன் தொடர்புடைய வெடியரசன் காலத்து வரலாற்று உண்மைகள் எவை? இத் தீவுடன் தொடர்புபடுத்தப்படும் புராண இதிகாசக் கதைகள் எவை? வரலாற்று ஆரம்பகாலத்தில் தமிழகத்துடனும், யாழ்ப்பாணத்துத் தமிழரசர்களுடனும் எத்தகைய தொடர்புகள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 6
காணப்பட்டன? போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எத்தகைய நடவடிக்கைகள் இத்தீவில் இடம்பெற்றன? இத்தீவு மக்களின் பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் எவை? ஆலய வரலாறுகள் தரும் செய்திகள் எவை? கலை இலக்கிய நடவடிக்கைகள் எத்தகைய வளர்ச்சிப் போக்கைப் பெற்றிருந்தன? கால மாற்றங்களுக்கமைய இத் தீவில் ஏற்பட்ட கல்வி வளர்ச்சி, பொருளாதார முன்னேற்றம், மக்கள் புலப்பெயர்ச்சி முதலான பல்வேறு விடயங்கள் ஆராயப்படுகின்றன.
இத்தீவில் வாழ்ந்து, அரும்பணிகள் ஆற்றிச் சென்ற மூத்த தலைமுறையினர் பற்றிய செய்திகள் இன்றைய தலைமுறையினருக்கே தெரியாதவை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். எனவே மறைந்தும், மறந்தும் போகும் செய்திகளை அரிதின் முயன்று சேகரித்து ஆவணப்படுத்தி அவற்றைத் தீவின் வரலாற்றோடு அறியத்தரும் இந் நுால் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. இத் தீவு மக்கள் ஈழத் தமிழரின் அரசியல், கல்வி, பொருளாதாரம், கலை, இலக்கியம், நிர்வாகம் முதலான துறைகளில் ஆற்றிய சேவைகளையும் பங்களிப்புகளையும் ஆசிரியர் முன்நாள் கல்வி அதிகாரியும், பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றவருமான சிவநாயகமூர்த்தி அவர்கள் மிக்க ஆதாரங்களுடன் எடுத்து விளக்கியிருப்பது இத்தீவு மக்களின் ஈழம் தழுவிய செயற்பாட்டினை அறிவுறுத்துவதாக அமைகின்றது.
நெடுந்தீவின் பெயர் விளக்கம், அதன் இயற்கை வளம், பொருண்மிய வள்ளம், தீவுடன் தொடர்புடைய வரலாற்றுப் பின்னணி, சமுதாய அமைப்பு, அந்நியர் ஆட்சிக்காலத்தில் இத்தீவில் இடம்பெற்ற வணிக, சமய, கல்வி தொடர்பான விடயங்கள், சைவசமய நடவடிக்கைகள், இங்கு வாழ்ந்த சமய, சமூகப் பெரியார்கள், சம காலத்து நாட்டுப் பற்றாளர்கள், அறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு விடயங்களையும் அரிதின் முயன்று தேடித் தொகுத்து எழுதியுள்ள ஆசிரியரின் எழுத்துப்பணி மகத்தானது. இத்தகையோரை ஞாலம் நன்றியுடன் நினைவில் வைத்துக்கொள்ளும். இத்தகு நூல்கள் ஒவ்வொரு ஊருக்கும் எழுதப் பட வேணி டும் என்பதே எமது வேண்டுகோளாகும்.
பேராசிரியர் இ. பாலசுந்தரம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் ரொறன்ரோ

மதிப்புரை க.கந்தசாமி முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர்
நெடுந் தீவு "மக்களும் வரலாறும் " என்ற ፴9 GlÖ காத்திரமான நுாலை எழுதி வெளியிடும் திரு.சு. சிவநாயக மூர்த்தி அவர்கள் இக்காலத்தின் தேவையொன்றை நிறைவு செய்துள்ளார். வரலாறு என்றதும் எமது மனதில் வருவன அரசர், அரசராணிகளின் பெயர்கள், அவர்கள் ஆண்ட காலங்கள், தொடுத்த போர்கள், கைப்பற்றிய தேசங்கள் முதலியனவே. அநேகமான பாடநூல்களும் இவற்றைத்தான் கூறுகின்றன.
யாழ்ப்பாணச் சரிதத்தையும் இவ்வாறு குறுக்கி எழுதியுள்ளார்கள். இந்நுால் ஆசிரியர் அவ்வாறு அல்லாது மக்கள் வாழ்க்கை முறைகளையும், அவை மாறி வந்த போக்குகளையும், உற்பத்தி முறைகளையும், அவற்றை உறிஞ்சிய சக்திகளையும் வரலாற்றுப் போக்கில் சித்திரித்துள்ளார். இந்த வகையில் இந்நூல் ஏனைய வரலாற்று நுால்களிலிருந்து வித்தியாசமானதாக மிளிர்கிறது.
நாட்டுப் பற்றும், ஊர்ப் பாசமும் உள்ள இந்நூலாசிரியர், தனது ஊரின் முன்னோர் செய்த அரும்பெரும் பணிகளையும், செல் வங்களையும் ஆவணப்படுத்த வேண்டும் என்ற பொதுப்பணியாகச் செய்துள்ளார்.
இத்தீவில் யார் வாழ்ந்தார்கள்? எங்கிருந்து குடியே றினார்கள்? எங்கு குடியகல்ந்தார்கள்? மக்களின் பிரதான தொழில்கள் எவை? உற்பத்திப்பொருட்கள் எவை? அவை நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 7
எவ்வாறு சந்தைப்படுத்தப்பட்டன? என்பவற்றை சரித்திரப் போக்கில் விளக்கும் நூல் இதுவாகும்.
அந்நியர் ஆட்சிக் காலங்களில் நமது நாடு துண்டாடப்பட்டதுமல்லாது நமது வளங்களும் வனப்பு இழந்தன. ஒல்லாந்தர் நெடுந்தீவைக் கைப்பற்றிய பின்னர் கிணற்று நீர் உவர்பெயர்ந்தது ஏன்? விவசாய முறைகள் மாறியது ஏன்? உற்பத்திப் பொருட்கள் மாறியது ஏன்? இப்படியான வினாக்களுக்கு ஆதாரரீதியான விடைகள் இந்நூலில் உண்டு.
நெடுந்தீவு மக்களின் வளர்ச்சிக்கு கல்வி ஒரு முக்கிய பங்கு அளித்துள்ளது. கல்வி வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்த மூத்தோர்கள் முன் தலை முறையினர் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு இந்நூலில் ஆவணப் படுத்தப் ‘ பட்டுள்ளது. நெடுந்தீவுப் பாடசாலைகளின் தோற்றமும் வளர்ச்சியும், அப்பாடசாலைகளின் அழியா அரசுகளாக இருந்த அதிபர்கள், ஆசிரியர்கள், வித்தியாதானம் செய்தவர்கள் பெயர்களும், அவர்கள் பற்றிய விபரங்களும் இந்நுாலில் அடங்கியிருப்பது இந்நுாலின் பெறுமதியை மதிப்பிட முடியாதளவிற்கு உயர்த்தியுள்ளது. தமிழருக்குப் பெருமை தேடித்தந்த வண. தனிநாயகம் அடிகளார், ஊருக்கு உயர்வு தந்த பெரியார்கள் முதலியோரது விபரங்கள், கத்தோலிக்கமத வளர்ச்சி என்பன பற்றி ஆசிரியர் மிகத் துல்லியமாகக் கூறியுள்ளார். 种
நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற இந்நூல் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளரான திரு.சு. சிவநாயகமூர்த்தி அவர்களின் அறிவுபூக்கத்தையும் , ஆய்வூக்கத்தையும் மேலோங்கச் செய்துள்ளது. இந்நூலாக்கம் ஏனைய ஊர் மக்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாகும். அவர் பணி தொடர வாழ்த்துகிறேன்.
க.கந்தசாமி முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாணக்
கல்விப் பணிப்பாளர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் IV

ஆய்வுரை
பண்டிதர் நா. கந்தையா
“வந்தே மாதரம்" என்று தாய்த் திருநாடாம் பாரதத்துக்கு வணக்கம் கூறிய பாரதியார்,
"பெற்றதாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே"
என்று தாய்நாட்டின் சிறப்பை உயர்த்தியுள்ளார். இந்த வகையில் தன் தாய் நாடாம் நெடுந் தீவின் சிறப்புக்களை ஆவணப்படுத்த வேண்டும் என்ற தாய்நாட்டுப் பற்றால் உந்தப்பட்டு ஆசிரியர் திரு. சிவநாயகமூர்த்தி அவர்கள் நெடுந் தீவு மக்களும் வரலாறும் என்னும் இந்நுாலை ஆக்கியுள்ளார். ஆழ்கடலால் சூழப்பட்டு, பிரயாணமும் கஷ்டமாக இருந்தமையால் நெடுந்தீவைப் பற்றி வெளிநாட்டார் அதிகம் அறியமுடியாதிருந்தது. வெளிநாட்டு மக்களும், புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் நெடுந்தீவின் எதிர் காலச் சந்ததியினரும் நெடுந்தீவின் வளங்கள் பற்றியும், அதன் வரலாறு பற்றியும் அறிய வேண்டுமென்பதை ஆசிரியர் நன்கு உணர்ந்திருந்தார். இதுவே இந்நூலை எழுதவேண்டும் என்ற ஆர்வத்தைப் பல வருடங்களாக ஊட்டி இருந்தது.
ஒரு நாட்டின் அல்லது ஒரு சமுதாயத்தின் வரலாற்றை, நன்மை தீமைகளை ஆவணப்படுத்தி வைத்தல் இன்றி யமையாதது. தமிழரின் ஆதிவரலாறு சரியாக ஆவணப்படுத்தப் படாமையாலேயே பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நிலையில் நெடுந்தீவைப் பற்றிய இந்நூல் சிறந்த ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
ஆசிரியர் திரு.சு. சிவநாயகமூர்த்தி அவர்கள் என்னிடம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் . . V

Page 8
பக்தியும் பற்றும் மிக்க பழைய மாணவன். அடக்கம், பொறுமை, சமூகசேவைப் பிரியம் அயலார் நேசம், பரோபகார சிந்தை முதலிய அருங்குணங்களைக் கொண்ட பண்பாளர். நுண்மாண் நுழைபுலம் மிக்கவர். இத்தன்மைகளே இவருக்கு ஆசிரியர், கல்வி அதிகாரி, பிரதிக் கல்விப் பணிப்பாளர் என்ற உயர் பதவிகளை விரைவில் அளித்தன. ஆயினும் "பெருமைக்கு வேண்டும் பணிதல்" என்ற வள்ளுவர் வாய் மொழிக்கு இலக்கியமாக பதவிகளால் பெருமைப்படாது வாழ்பவர்.
இவர் உயர்தர பரீட்சை வரை பல வருடங்கள் என்னிடம் புவியியலை முறையாகக் கற்றவர். அந்த அறிவியற் கண்ணோட்டத்தில் நெடுந்தீவைப் பார்த்துள்ளார் என்று கருதுகின்றேன். பல கோணங்களில் இருந்து தான் அவதானித்தவற்றையும், முதியோர் கூற்றையும், யாழ்ப்பாண வைபவமாலை, யாழ்ப்பாணச் சரித்திரம், யாழ்ப்பாண கெளமுதி முதலிய பழைய வரலாற்று நுால்களையும் ஆதாரமாகக் கொண்டு இந்நுாலை ஆக்கியுள்ளார்.
இத்தீவின் பண்டைய வரலாறு, இந்திய நாட்டில் இருந்து வந்த குடியேற்றம், ஆட்சித் தொடர்பு, வெடியரசன் ஆட்சி முதலிய விடயங்களை ஆவணச் சான்றுகள் கொண்டு விளக்கியுள்ளார். இக்காலத்திலும் பின்வந்த அந்நியர் ஆட்சிக் காலத்திலும் நெடுந் தீவின் பிராந்திய முக்கியத்துவம. இந்தியாவுடனான வர்த்தக, பிரயாணத் தொடர்புகள் நன்கு தரப்பட்டுள்ளன. போர்த்துக்கீசர் காலம், ஒல்லாந்தர் காலம், ஆங்கிலேயர் காலம் என்ற முக்காலப் பகுதிகளிலும் இருந்த சமய நிலை, கல்வி நிலை, விவசாயம், மந்தை வளர்ப்பு என்பவற்றை சிறப்புற எழுதியுள்ளார்.
நெடுந்தீவின் கல்வி ஆதிகாலம் முதல் இன்று வரை வளர்ச்சியடைந்துள்ள வகை சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளது. தான் கற்றுத் தேறிய மகாவித்தியாலயத்தின் வளர்ச்சியையும், சேவையையும் அங்கு கடமையாற்றிய
நெடுந்தீவு மக்களும் வரலாறும் VM

ஆசிரியர்களின் சேவையையும் சற்று விரிவாகத் தந்துள்ளமை அவரது நன்றியுணர்வைக் காட்டுகின்றது.
நெடுந்தீவாம் தாய்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்த சான்றோர்கள், அறிவியலாளர்கள், சமய ஆர்வலர்கள், சமயக் குருமார்கள் என்பாரைப் பற்றிய செய்திகளும் இரத்தினச் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. சில முக்கிய இடங்களைப் பற்றித் தந்துள்ள செய்திகள் உல்லாசப் பயணிகளுக்கு நல்விருந்தாகும்.
இந்நூலை யாழ்ப்பாணத்தில் இருந்து எழுதுவதாயின் உடனுக்குடன் வேண்டிய தகவல்களைப் பெற்றிருக்க வாய்ப்பாக இருந்திருக்கும். ஆயின் புலம்பெயர்ந்த கனடாவில் இருந்துகொணி டு இத்தகைய நுாலை ஆக்கியமை பாராட்டுக்குரியதே.
நெடுந்தீவு மக்கள் ஒவ்வொருவரிடமும் இந்நூல் இருக்கவேண்டும். புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழும் நெடுந்தீவு மக்களின் இளைய பரம்பரையினரும் இனிவரும் பரம்பரையினரும் தமக்கும் ஒரு தாய்நாடு உண்டு என்ற பெருமிதத்துடன் இருக்க இந்நூல் பெரிதும் உதவும்.
நெடுந்தீவு மக்களும், இவர்களுடன் தொடர்பு உடையோரும், நெடுந்தீவைப் பற்றி அறியும் ஆர்வம் உடையோரும் இந்நூலைப் பெற்று ஆசிரியருக்கு ஊக்கம் தரவேண்டுமென வேண்டுகிறேன்.
இவரின் இப்பணி மேலும் தொடர்ந்து சிறந்த ஆக்கங்களைத் தர இறைவன் ஆசீர்வதிப்பாராக.
பண்டிதர் நா.கந்தையா முன்னாள் அதிபர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் VM

Page 9
சிறப்புரை
நெடுந்தீவின் வரலாற்றைக் கூறும் நிறைவான பொன் நுால்
நெடுந்தீவைப் பற்றி நெடுந் தீவைச் சேர்ந்த அறிஞர், பெருமக்கள், ஆராய்ச்சியாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் காலத்துக்குக் காலம் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள், கவிதைகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளனர். காலஞ் சென்றவர்களின் வரலாற்றைக் கூறும் நினைவு வெளியீடுகளான கல்வெட்டுகள் பலவற்றிலும் சிறு சிறு பாடல்களிலும் கூட நெடுந்தீவின் வரலாறுகளையும் நெடுந்தீவின் வளத்தையும், நெடுந்தீவு மக்களின் பண்புகளையும் நாம் காணக்கூடியதாக உள்ளது. முதலாவது நெடுந்தீவு வரலாற்றைக் குறிப்பிடும் நுால் மாதகல் மயில்வாகனப் புலவர் அவர்களால்
எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையே. அதிலே புலவரவர்கள் இருமரபுந்துாய தனிநாயக முதலி குடியேறிய நெடுந்தீவும் ஈழ நன்மண்டலமே என்று குறிப்பிட்டுள்ளார். முதலியார் இராசநாயகம் அவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற நூலும் யாழ்ப்பாண வைபவ கெளமுதியும் நெடுந்தீவுச் சரித்திரத்தைக் குறிப்பிட்டுள்ளன.
மேலே காட்டப்பட்டுள்ள நூல்களும் கட்டுரைகளும் கவிதைகளும் நெடுந்தீவைப் பற்றிய நிறைவான வரலாறுகளை வழங்கி வாசகர்களின் நெஞ்சத்தை நிறைவடையச் செய்தாலும் நெடுந்தீவு வரலாறு அவற்றுடன் முடிவடைந்து விடுவதில்லை.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் " ; VIII
 

நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற பெயரில் இலங்கையின் முன்னாள் பிரதிக் கல்விப் பணிப்பாளர். திரு.சு. சிவநாயகமூர்த்தி அவர்களால் எழுதப்பட்ட இந்த நூலைப் பார்வையிடும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன். நெடுந்தீவு சம்பந்தப்பட்ட வரலாற்றினை முழுமையாகக்காட்டும் இந்தநூல் நெடுந்தீவின் வளத்தையும் நில அமைப்பையும் நெடுந் தீவின் எதிர் கால நலனுக்கான வழிகளையும் காண்பிக்கிறது. ஆசிரியர் பலவிதமான நீர்ச்சுனைகளின் கண்களைத் திறந்து பேராறாக ஓடச் செய்ததுபோல் மறைந்து கிடந்த பல செய்திகளைக் கண்டுபிடித்துக் கொணர்ந்து, இதை ஓர் பெருங்காப்பியமாக வெளியிட்டுள்ளார். நெடுந்தீவு சம்பந்தமான சகலத்தையும் எக்காலத்திலும் அறியவும் நயக்கவும் வியக்கவும் உதவும் இனிய நூல் "நெடுந்தீவு மக்களும், வரலாறும்" என்னும் இந்நூலாகும். மிகக் கடினமான உழைப்பினால் இந்த நுாலை நமக்களித்த பேரறிஞர் சிவநாயகமூர்த்தி அவர்களுக்கு நெடுந்தீவு மக்களாகிய நமது பாராட்டு என்றென்றும் உரித்துடையது.
தொல்லுலகின் வகை வகையாந் துறையாய்ந்த பேரறிஞன் கல்வியினைப் பேண லங்கா அரசின் உயர்அதிகாரி பல்லினத்து மனிதர்களும் பாசமுடன் காதுயர்த்த நல்ல பல நீதிகளை
நானிலத்துக்கினிதுரைப்பான்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் IX

Page 10
நெஞ்சினிலே நீதி வழி நிறைந்திருக்கும் மனத்தினிலே சஞ்சலமோ சிறிதேனும் தவழாத திடமுடையான் வஞ்சகமும் சூதுகளும் வம்புகளும் நிறையுலகில் தஞ்சமளித் துண்மைகளைத் தளராது காத்து வரும்
சிவநாயகமூர்த்தி செல்வ நெடுந்தீவு மகன் புவனி எங்கும் புகிழ்ந்தேத்த புதுமை நிறை கருத்தொளிர அவனியுளோர் மறுத்துரையா தாராய்ந்த உண்மைகளை உவமையுடன் நெறி பிறழா துலகினர்கள் உவந்தேத்த
நெடுந்தீவு மக்களும் வரலாறும் எனும் பெருநூல் படைத்தெமக்குப் பசிக்காது படித்தினிமைப் பழம் உண்ணும் வகை செய்தான் கசிந்து வரும் செய்தியெல்லாம் கண் திறந்து பேராறாய்ப் புகுந்து மக்கள் உள்ளமெல்லாம் புத்தெழுச்சி பெற்றிடவே
நாகேந்திரர் அமிர்தரட்னராஜா முன்னாள் அதிபர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

வாழ்த்துரை
அருட்கலாநிதி. அமுது ஜோசப் சந்திரகாந்தன் பேராசிரியர் ரொரன்ரோ பல்கலைக்கழகம்
LJụp60) LDujLô, LJỡi 60) LDu Lô, T= செழுமையும் நெடுந்தீவு மண்ணுடன் இணைந்து வாழ்பவை. இத்தீவின் இயற்கை வளமும், கடல் வளமும், நிலவளமும் ஈழத்தமிழர்களையும் கடந்த நிலையில், ஒல்லாந்தர் ஆங்கிலேயர் போன்ற காலனித்துவ ஆட்சியாளர்களையும் கவர்ந்திழுத் துள்ளது என்பது இடைக்கால வரலாறு இத்தீவின் பூர்வீகப் பெருங்குடிகளின் வருகை, வளர்ச்சி, வாழ்வியல் தொடர்பாடல்கள், சமூக பண்பாட்டு உறவு முறைகள், கல்விப் பேராளர்களின் தனித்துவம், கலைஞர்கள், கவிஞர்கள் போன்றோரின் அறாத்தொடர்ச்சிகள் போன்றவற்றின் பதிகையை உள்ளடக்கிய இந்நூல் ஓர் நீண்டகால வரலாற்றுத் தேவையை நிறைவு செய்து நிற்கின்றது. இத்தகைய நூலின் தேவையை ஈழத்தமிழர்கள் அனைவரும் உள்ளுணர்வோடு வரவேற்பார்கள் என்பதும், இதுபோன்ற நுண்ணிய தரவுகளை உடைத்தான நூல்களை ஆக்கவேண்டியதன் தேவையினை ஏனைய தீவகக் கல்விசார் அறிஞரும், ஈழத்தின் பழம்பெருமையுடைத்தான ஊர்களையும், நகர்களையும் தாய்மண்ணாகக் கொண்ட தமிழறிஞரும் தருவார்கள் என்பதும் எமது நம்பிக்கையாகும். இது இக்காலத்தின் இன்றியமையாத தேவையுமாகும்.
ஈழத்தமிழர்களின் சமூக, அரசியல் வளர்ச்சியில் கடந்த நூற்றாண்டின் கடைக்கால் (1975-2000) பல்வேறு வரலாற்றுத் நெடுந்தீவு மக்களும் வரலாறும் X

Page 11
தனித்துவங்களை உள்ளடக்கியதாகும். மண்ணுரிமை, மனித மாண்புரிமை, தன்னாட்சித் தனியுரிமை சார்ந்த மக்கள் போராட்டம் இக்காலத்தில் முனைப்புப் பெற்றதென்பது ஒருபுறமிருக்க, இதே கால அடைவில் ஈழத்தமிழரின் சர்வதேச குடியுகல் வாழ்வு அதன் எண்ணுக்கணக்கில் உச்சநிலையடைந்ததென்பதும் தெளிவு. இங்குதான் இத்தகைய குறுகிய சமய, சமூக, பண்பாட்டு, கலை, கல்வி சார்ந்த, பூர்வீக, இடைக்கால, சமகால வரலாற்று நியதிகளை ஆய்வுநோக்குடன் முன்கொணரும் நூல்களின் முக்கியத்துவம் முன்வைக்கப்படவேண்டும். இப்பெரும் பணியில் முன்னாள் ஆசிரியரும், பிரதிக் கல்விப் பணிப்பாளரும், ஆய்வாளருமாகிய திரு.சு.சிவநாயகமூர்த்தி அவர்கள் வழிவழிவரும் வரலாற்று ஆசிரியர்களுக்கு வழிகாட்டியாகவும், திசைகாட்டியாகவும் செயற்ப்டுகின்றார். இத்தகைய நூல்களின் அவசியத்தையும், பொருளருமையையும் எமக்குப் பின்வரும் சந்ததியினரே நன்றியுணர்வுடன் போற்றிப் புகழ்வர்.
அந்நிய நாடுகளில் அடுத்தடுத்து அறாத்தொடர்ச்சியாக அணி வரும் ஈழத் தமிழரது, தன்னினத் தனித் துவ அடையாளங்காணலை ஆவலோடு ஆராய்கின்ற தேவை, தன் விழுதுகளைக் கொண்டு வேர்களைத் தொட்டுணர ஏற்படும் இனத்துடிப்பு என்பன துரிதப்படுத்தப்படும் வேளையில், இன்னும் ஐம்பது நூறு ஆண்டுகளின் பின்புதான் இத்தகைய பதிகைகளை உள்ளடக்கிய ஒரு நூல் புத்துயிர்ப்புப் பெறும்.
இந்நூலாசிரியரின் இப்பொதுப்பணி தொடர வேண்டுமென வாழ்த்துகின்றேன்.
அருட்கலாநிதி. அமுது ஜோசப் சந்திரகாந்தன் பேராசிரியர் ரொறன்ரோ பல்கலைக்கழகம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் X

ஆசியுரை
கனடா இந்துமத பீடாதிபதி சிவபூரி தியாகராசாக் குருக்கள் கணேஷ்சுவாமிகள் அருள்மிகு ரொறன்ரோ பூரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம் (ஸ்தாபகர், அறங்காவலர் சபைத்தலைவர், பிரதமகுரு)
மருத்துவ மாமலைவனம் என்று தமிழர்களாலும், அவுசத லோகய என்று சிங்களவர்களாலும் போற்றப்பட்ட தீவு நெடுந்தீவாகும். அபிஷேகத் தீவு என்று இத்தீவினை அழைப்பதிலிருந்து சைவசமய வழிபாட்டில் நெடுந்தீவு முக்கிய இடம் வகித்திருப்பது புலனாகிறது. அரச கால முதல அந்நியர் ஆட்சிக்காலத்திலும் அதனைத் தொடர்ந்து அண்மைக் காலம் வரையிலும் சரித்திரத்தில் பல பதிவுகளைக் கொண்ட இப்பதியில் யாம் பிறந்ததையிட்டுப் பெருமைகொள்ளும் இவ்வேளையில் இச்சிறப்புக்களையெல்லாம் நூலுருவில் கொணரும் திரு.சு. சிவநாயகமூர்த்தி அவர்களின் நல்லெணிணம் கண்டு பெருமகிழ்வுறுகிறேன்.
நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலையில் எனது ஆசானாக இருந்த திரு.சு. சிவநாயகமூர்த்தி அவர்கள் பிறந்த பதியின்மீது அளவற்ற விருப்புக்கொண்டவர். அவ்வூர் மக்களின் கல்வி மேம்பாடுகளில் அதிகம் அக்கறை கொண்டவர். மாணவர்களிடம் மிகவும் அன்பாகவும், பண்பாகவும் பேசி கல்வியில் ஊக்கமேற்படுத்தியவர். தனது இளவயதிலேயே இப்பாடசாலையில் கல்வி கற்பித்த இவர் தொடர்ந்து அதிபராகவும், அதன்பின்னர் கல்வி அதிகாரியாகவும் உயர்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சினால் பிரதிக்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் '. ΧΙΙΙ

Page 12
கல்விப் பணிப்பாளர் பதவியும் வழங்கப்பட்டது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்ற இந்நூாலை எழுதுவதற்கு மிகவும் பொருத்தமானவர் இவரே. இந்நூலில் பல அரிய விடயங்களைச் சேர்த்திருக்கிறார். ஆதிகால வரலாறுகளைச் சரித்திரச் சான்றுகளுடன் தொகுத்திருக்கின்றார். ஊர்ச்சிறப்பினை ஆழ்ந்து அநுபவித்து எழுதியிருக்கிறார். அன்றுமுதல் இன்றுவரை நெடுந்தீவில் வாழ்ந்து ஊருக்கும், நாட்டுக்கும் மட்டுமன்றி உலகுக்கே பெருமைசேர்த்த பல பெரியார்களின் செயற்பாடுகளை விளக்கியிருக்கிறார். கிடைத்தற்கரிய பல விடயங்களைப் படங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். மிகவும் சிரமமான இப்பணியினை இவர் செய்வதற்குரிய ஊக்கத்தினையும், ஆர்வத்தினையும் உருவாக்கியது தெய்வ அருளே என்பதில் ஐயமில்லை. வரலாறு என்பது காலத்தின் பதிவு மட்டுமல்ல. எதிர்காலத்தின் உயர்வுக்குத் துணைநிற்கும் அத்திவாரக் கல்லாகும். இவ்வாறான வரலாறுகளைப் படிக்கும்போது எம்மை அறியாமல் நம் ஊரின் மேலும், நம் நாட்டின்மேலும், நம் இனத்தின் மேலும் அக்கறையும், ஈடுபாடும் ஏற்படும். இந்த வளர்ச்சியில் நாமும் ஒரு அங்கமாக வேண்டுமென்ற உந்துசக்தி ஏற்படும். அதற்கான வழிவகை செய்துதந்த ஆசிரியர் அவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும.
துர்க்கை அம்பாளிடம் இவர் மிகுந்த பக்தி கொண்டவர். ரொறன்ரோ பூரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானத்தில் இவரைப் பல தடவைகள் சந்தித்து இருக்கிறேன். அம்பாளின் அருள் இவர் மேலும் பல சேவைகள் செய்ய உறுதுணை செய்யும். ஆசிரியர் அவர்கள் நீண்டகாலம் வாழ்ந்து பல சேவைகள் புரிய அம்பாளைப் பிரார்த்தித்து எனது ஆசிகளை வழங்கிக்கொள்ளுகிறேன்.
சிவழறி தியாகராசாக் குருக்கள் கணேஷ்சுவாமிகள் அருள்மிகு ரொறன்ரோ பூரீதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம் (ஸ்தாபகள், அறங்காவலர் சபைத்தலைவர், பிரதமகுரு)
நெடுந்தீவு மக்களும் வரலாறும் XM

முன்னுரை
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்கே காணப்படும் சப்த தீவுகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவாக விளங்குவது நெடுந் தீவாகும். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அரசர்களும் அன்னியர்களான போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரும் , கோட்டைகள் கட்டி பரிவாரங்க ளுடன் இங்கிருந்தே ஏனைய தீவுகளையும் ஆட்சி செய்து வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக விளங்கியது, இத்தீவு தென் இந்தியாவிற்கு மிக அண்மையிலிருந்தமையும் தங்களின் பாதுகாப்பைக் கருதி தென் இந்தியாவிலிருந்து வரும் எதிரிகளைக் கண்காணிக்கக் கூடிய முக்கிய இடத்தில் அமைந்திருந்தமையுமேயாகும். இதன் காரணமாக நெடுந்தீவு பல வரலாறுகளைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இந்த வரலாறுகள் வெடியரசன் காலத்தின் பின்னரே வெளி உலகிற்குத் தெரியக்கூடியதாக வந்துள்ளது. நெடுந்தீவின் வரலாறுகள் சில வெளி உலகிற்குத் தெரியாமலே மறைந்துள்ளன. இத்தீவு இலங்கையின் பிரதான நிலப்பரப்பிலிருந்து நெடுந் தொலைவில் இருந்தமையும், அக் காலங்களில் பிரயாண வசதிகள் போதியளவு இல்லாதிருந்தமையும், தற்காலத்தில் உள்ளது போன்ற ஊடகங்கள் இல்லாதிருந்தமையுமே இதற்கான காரணங்களாகும். எனினும் சில வரலாறுகள் கர்ணபரம்பரைக் கதைகள் மூலமும் வரலாற்று ஆசிரியர்களின் தரவுகளிலிருந்தும் அறியக் கூடியதாகவிருந்தன. ஒரு மனிதன் தன் தாயைப் பற்றி அறிந்திருப்பது போல தனது தாய் நாட்டைப் பற்றியும் ஓரளவாவது அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் XV

Page 13
இன்றைய காலகட்டத்தில் இது மிக முக்கியமானதாகும். இன்றைய நிலையில் எமது தீவகத்திலிருந்து பெருந் தொகையான மக்கள் புலம் பெயர்ந்துள்ளார்கள். 1950 ல் இலங்கை அரசினால் கொண்டு வரப்பட்ட குடியேற்றத் திட்டங்களில் பல நுாற்றுக் கணக்கான குடும்பங்கள் நெடுந்தீவிலிருந்து வேறு மாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்தனர். இவர்களில் பெரும்பாலோர் கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் சென்று குடியேறினர். 1983 ற்குப் பின்னர் இலங்கையிலேற்பட்ட உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக மேலும் பல குடும்பங்கள் இந்தியா, கனடா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடம் பெயர்ந்து சென்றுள்ளனர். இந்நிலையில் எம் தீவகமக்களின் சந்ததியினரே தம் மூதாதையர்களின் பிறந்த தாயகத்தைப் பற்றி ஒன்றும் தெரியாதவர்களாகி விடுவார்கள். நெடுந்தீவில் வசிக்கின்ற பிள்ளைகளுக்கே எம் தாயகத்தின் பெருமை தெரியாமல் போய்விடலாம். இந்நூலின் மூலம் எம்நாட்டின் வளங்கள் பற்றி தெரியாதவர்களும் தெரிந்துகொள்வதோடு அவற்றை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என அங்குவாழும் இளம் சந்ததியினர் சிந்திக்கவும், புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் எம் தீவக மக்கள் அத்தீவின் மூலவளங்களை அபிவிருத்தி செய்வதற்கு அங்குள்ள மக்களுக்கு எவ்வாறு உதவலாம் எனச் சிந்திப்பதற்குமே இந்நுாலை எழுதவேண்டுமென்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
நெடுந்தீவைப் பற்றி வெளி உலக மக்களில் பெரும்பாலார் அது ஒரு தீவு என்றும், அது யாழ் குடாநாட்டிலிருந்து வெகு தொலைவிலுள்ளதென்றும், அங்கு பிரயாணம் செய்வது பயங்கரமானதென்றுமே பெரும்பாலும் அறிந்து வைத்திருந்தனர். ஆனால் அத்தீவின் இயற்கை அழகு பற்றியோ, அங்குள்ள மக்களின் கலை, கலாச்சாரப் பண்புகள் பற்றியோ நன்கு அறியக்கூடிய வாய்ப்புக்கள் முற்காலங்களில் அரிதாகவே காணப்பட்டன. அங்கு செல்ல வாய்ப்புக் கிடைத்த சிலரே அத்தீவைப் பற்றியும் அங்குள்ள மக்களின் நல்ல பண்புகள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் - XM

பற்றியும் அறிந்திருந்தனர். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னரே அத்தீவிற்கான பிரயாண வசதிகள் அதிகரித்ததோடு நெடுந்தீவு பற்றியும் அங்கு வாழ்ந்த மக்களின் திறமைகள், குணாதிசயங்கள் வரலாறுகள் பற்றியும் வெளிவரத் தொடங்கின. அங்கு வாழ்ந்த சமயப் பெரியார்கள், அறிஞர்கள், பண்டிதர்கள், பாவலர்கள் பற்றிய விபரங்கள் வெளிநிலப் பரப்பில் வாழ்ந்த அக்கால தீவக மக்களே அறியாதரிருந்தார்கள். இவற்றையெல்லாம் வெளிக்கொணர வேண்டுமென்ற விருப்பமும், இங்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் நம்பிக்கையையும், முயற்சிகளையும் ஊக்குவிக்க இது உதவுமென்ற எண்ணமும், எம் தீவின் வரலாற்றை எம்தீவக மக்களும் பிறநாட்டு மக்களும் ஓரளவாவது அறிந்துகொள்ள இந்நூல் உதவ வேண்டுமென்ற அவாவுமே நெடுந்தீவு மக்களும் வரலாறும் என்னும் இந்நூலை எழுத என்னைத் துாண்டியது.
எனக்கு இந்நூலை எழுதுவதற்குத் தேவையான நல் ஆலோசனைகளைத் தந்தும், இந்நுாலுக்கு அணிந்துரை எழுதியும், என்னை உற்சாகப்படுத்திய பேராசிரியர். கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கட்கும், மதிப்புரை வழங்கி இந்நூலின் தரத்தை பாராட்டிய வடக்கு, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் க.கந்தசாமி அவர்கட்கும், இந் நூலாக்கத்தின் போது எழுந்த ஐயங்களைத் தீர்த்தும் , பயனுள்ள கருத்துக்களை வழங்கியும், ஆய்வுரை எழுதியும் இந் நூலை அழகுறச் செய்த எனது ஆசிரியரான பண்டிதர். நா. கந்தையா அவர்கட்கும், கச்சைதீவு பற்றிய தகவல்களைத் தந்தும் பாவினால் சிறப்புரை வழங்கியும் சிறப்பித்த முன்நாள் அதிபர் நா.அமிர்தரட்னராஜா அவர்கட்கும், நல் ஆலோசனைகள் நல்கியும் வாழ்த்துரை வழங்கியும் இந் நூலை ஆக்க உதவிய பேராசிரியர் அருட் கலாநிதி அமுது ஜோசப் சந்திரகாந்தன் அவர்கட்கும், ஆசியுரை வழங்கிய எனது பெருமைக்குரிய மாணவரான, கனடா இந்து மத பீடாதிபதி, றரீ துர்க்கா தேவி அம்பாள் தேவஸ்தான பிரதம குருக்கள் சிவபூரீ தியாகராஜா குருக்கள் கணேஷ்சுவாமிகள் அவர்கட்கும், ஆசிரியர் பற்றி அறிமுக உரை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் XM

Page 14
வழங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்நாள் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.அ. கணபதிப்பிள்ளை அவர்கட்குமி, எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். மேலும் இந்நூலை எழுதுவதற்கு வேண்டிய ஆக்கமும், ஊக்கமும் தந்த என் துணைவியார் சி.தனலட்சுமி அவர்கட்கும்,வேண்டியநேரங்களிலெல்லாம் பிரதிகளை யெடுப்பதற்கும், திருத்தங்கள் செய்வதற்கும் உதவிய எனது மகன் ரவீந்திரன் அவர்கட்கும் , எனது நன்றிகள் உரித்தாகட்டும். நூலின் அட்டைப் படத்தை வரைந்து உதவிய சுதா அவர்கட்கும் இந் நூலை அழகுற அச் சிட்டு உதவிய விவேகா அச்சகத்தினருக்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்.
இந் நுாலின் முழுமையான சில விபரங்கள் தவறவிடப்பட்டிருக்கலாம், அன்றேல் சில தவறுகள் விடப்பட்டிருக்கலாம். தாய்க்ப் பற்றுள்ள பெரியோர் அவற்றை எனக்குச் சுட்டிக்காட்டினால் அவற்றை அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்ள உதவியாகவிருக்குமென்றே எண்ணுகின்றேன். எம் தீவகம் பற்றிய வரலாற்றை என்னால் முடியுமானவரை வெளிக் கொணர வேண்டுமென்பது எனது நீண்டநாள் அவாவாகவேயிருந்து வந்துள்ளது. இம்முயற்சிக்குத் தாயகப் பற்றுள்ள சகலரும் ஒத்துழைப்பு வழங்கி ஊக்கமளிப்பீர்களென எண்ணுகிறேன்.
சு. சிவநாயகமூர்த்தி நூலாசிரியர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் XM

நெடுந்தீவுக் கீதம் பல்லவி நினைக்க மனதில் இனிக்கும் நெடுந்தீவே - உன்னை நெஞ்சிலே நினைந்து மக்கள் அஞ்சலி செய்தோம்
சரணங்கள் தெய்வ மணி மாளிகையின் சித்திரத் தோற்றம் - ஆண்டு
சென்றாலும் உன்னழகில் இல்லையே மாற்றம் நெய்யோடு பாலளித்தாய் பேர் பசுத்தீவே - உன்னால்
நெஞ்சுருகும் நிலை குலையும் எங்களின் நாவே!
கற்பகம் என்றுபுகழ் பனையின் வளங்கள் - உந்தன்
காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்
பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - திராப்
போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்
கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை
காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள்
தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகள் - உனைத்
தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்
சங்கத் தமிழ் துாது சொன்ன தனிநாயகம் - அடிகள்
தவத்தால் அவதரித்த தமிழர் தாயகம்
தெங்கின் இலைக் கீற்றுகளில் பச்சைக் கிளிகள் - அங்கே
செந்தமிழில் இசை பாடும் தேனின் மொழிகள்
அன்பினிலே விருந்தினர்க்கு அன்னம் ஊட்டிட - வேறு ஆளிடமும் கூறுவாரோ ஈழ நாட்டிலே
செம்பினிலே பால் கறந்து மதுரை வீதியில் - அன்று
தேரோடும் போதளித்தாய் கேட்டோம் சேதியில்
தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்
திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள்
உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்
பதினாறு அறங்கற்ற பத்தினிப் பெண்கள் - தாய்ப்
பாசத்திலே நிகரற்ற மாமணிக் கண்கள் முதிராத இளைஞர்கள் கயிற்றை எறிந்து - காளை
மூர்க்கம் அடக்குகின்ற வீரம் அறிந்து
நினைக்க மனதில் இனிக்கும் நெடுந்தீவே - உன்னை நெஞ்சிலே நினைந்து மக்கள் அஞ்சலி செய்தோம்
வித்துவானர் எஸ். அடைக்கலமுத்து
நெடுந்தீவு மக்களும் வரலாறும் XIX

Page 15
@GOTĖJ60D35 - Sri Lanka
iyo
(് ി്രl. 荡”
yê
நெடுந்தீவு மக்களும் வரலாறும்
 
 
 

நெடுந்தீவு
அரசாங்க அதிபர் பிரிவு
நேருந்தின் மத்தி 6vიჩg) (Jಶ್ಯೆ
\ ዓቘቇቇ፰ሩ!
தி i பிநடுநீதிlேமநீதி நிழர் 4) 争 lᏗ8 கிழக்குtர
disfig )-8فقام عمله
.. கடல்
கேந்தா
ஆதாரம்: நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 16

இயல்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்
பெற்றதாயும் பிறந்த பொன் நாடும்
நற்றவ வானினும் நனி சிறந்தனவே
நெடுந்தீவின் நிலையமும் பெயர்களும்
இலங்கையின் சிகரமென விளங்கும், யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கே காணப்படும் சப்த தீவுகளில் ஒன்றாய், ஆழ்ந்த அலைகடல்களின் மத்தியில் முத்தென விளங்குவது பசுத்திவெனும் நெடுந்தீவாகும். இத்தீவு யாழ்ப்பாணத்திற்கு தென் மேற்கே 45 கிலோ மீற்றர் தொலைவிலும், குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து 7 கிலோ மீற்றர் துாரத்திலும், தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரத்தில் இருந்து 38 கிலோ மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. இத் தீவானது கிழக்கு மேற்காக 8 கிலோ மீற்றர் நீளமும், வடக்குத் தெற்காக 6 கிலோ மீற்றர் அகலமும் உடையதாய் சுமார் 48 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட பிரதேசமாக அமைந்துள்ளது. இத்தீவும் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றுப் பாரம்பரியங்களைக் கொண்டுள்ளது.
இத் தீவு பசுத்தீவு, அபிஷேகத் தீவு, மருத்துவ மாவனம், புட்கரம், நெடுந்தீவு, டெல்வ்ற் எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இவை யாவும் காரணப் பெயர்களாகும். ஆதிகாலத்தில் பசுக்கள் நிறைந்து காணப்பட்டமையாலும், பாற்பண்ணைத்தொழில் நன்கு விருத்தியுற்றிருந்தமையாலும், இத் தீவு பசுத் தீவென்று அழைக்கப்பட்டது.
போர்த்துக்கீசர் ஆட்சிக்காலம் வரை இப்பெயராலேயே அழைக்கப் பட்டு வந்துள்ளமை அறியப் பட்டுள்ளது. போர்த்துக்கீசரும், தமது மொழியில் -இல்காஸ் டாஸ் வாகாஸ்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்

Page 17
என அழைத்தனர். பசுத்தீவு என்னும் பெயர் இப்பகுதியின் தரைத் தன் மையையும் , மக்களின் பொருணி மரிய நடவடிக்கைகளையும் அடிப்படையாகக் கொண்டு வழக்குப் பெற்றதாகும். இத்தீவின் கிழக்குப் பகுதியும், தென் பகுதியும் பரந்த புல்நிலங்களாக அமைந்தமையாலும, மந்தைகள் மேய்வதற்குப் பெரிதும் பயன்பட்டமையாலும் இத்தீவுக்குப் பசுத்தீவு என்ற பெயர் ஏற்பட்டதென இடப்பெயர் ஆய்வாளர் பேராசிரியர் இ. பாலசுந்தரம் கூறுவது பொருத்தமாகிறது. இங்கிருந்து பால், தயிர், இளநீர் ஆகிய அபிஷேகத் திரவியங்கள் தென் இந்தியாவிலுள்ள இராமேஸ்வரர் ஆலயத்திற்கு லிங்கேஸ்வரப் பெருமானின் அபிஷேகத்திற்காகக் கொண்டு செல்லப்பட்டு வந்தமையால், அபிஷேகத் தீவு என அழைக்கப்பட்டு வந்தது.
இராம இராவண யுத்தகாலத்தில் மயக்கமுற்றிருந்த தமது வீரர் களைக் காப்பாற்றுவதற்காக, அனுமன் இந்தியாவிலுள்ள சஞ்சீவி ம்லையொன்றினைப் பெயர்த்தெடுத்து தோழில் சுமந்து கொண்டு ஆகாயமார்க்கமாகப் பாக்குத் தொடுகடலைக் கடந்து இலங்கைக்கு வரும் பொழுது ,அம்மலையின் சிறு பகுதி உடைந்து பாக்குத் தொடுகடலில் வீழ்ந்து விட்டதென்றும், மூலிகைகள் நிறைந்து காணப்படும் அப்பகுதியே நெடுந்தீவென்றும் கூறப்படுகிறது.
இங்கு அனேக நோய் தீர்க்கும் மூலிகைகள் காணப்படுவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் இங்கு பொற்சீந்தில், சாறணை, மிசிட்டை, பிரண்டை, வீணாலை போன்ற பல மூலிகைகள் நிறைந்து காணப்படுகின்றன.இதனால் வைத்தியத் தொழிலில் புகழ்பெற்ற வைத்திய இராஜசிங்கன், என்ற பட்டப்பெயரைப் பெற்றவனான செகராசசேகரன் என்னும் யாழ்ப்பாண மன்னன் பசுத்தீவை, மருத்துவ மாவனம் எனக் குறிப்பிட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை என்னும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிங்கள மக்கள் இக்கருத்தில் அவுசத லோகய என்று அழைத்தார்கள். இதன் கருத்து சஞ்சீவி உலகமென்பதாகும் . இங்கு மூலிகைள் நிறைந்து காணப்பட்டதாலும், அவற்றை அங்கு வாழ்ந்த மக்கள் முற்காலங்களில் உண்டு வந்ததாலுமே நீண்ட ஆயுள் உள்ளவர்களாகவும், வயோதிப காலங்களிலும், தலைமயிர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் • 2

நரை விழாமலும், உதிராமலும், பற்கள் விழாமலும் உடல் திடகாத்திரமுள்ளவர்களாகவும், நுாறு தொடக்கம் நுாற்றி இருபத்தைந்து வயதுக்குமேல் வாழ்ந்துள்ளார்கள் எனவும் அறியக் கிடக் கின்றது. இங்குள்ள மக்கள் நான்கு தலைமுறைகளுக்கு மேலாக வாழ்ந்தார்களென்பதற்கான ஒரு கதையுண்டு.
நெடுந்தீவு மந்தை வளர்ப்புக்கேற்ற இயற்கை வளம் கொண்டது. இங்கு சில மக்கள் பட்டி பட்டியாக ஆடு வளர்ப்பதை ஒரு பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். ஆடுகள் வாங்குவதற்காக வியாபாரிகள், இங்கு காலத்திற்குக் காலம் வருவார்கள். மேய்ச்சல் நிலங்களில் மந்தைகள் மேய்ந்து கொண்டிருப்பதைக் கண்ட வியாபாரிகள் மேய்த்துக் கொண்டிருக்கும் இளைஞனை அணுகி, விற்க ஆடு உண்டா எனக் கேட்டால் இளைஞன் மறு மொழியாக ஆம் உண்டு, ஆனால் அப்புவிடம் கேட்கவேண்டும் எனக் கூறி அப்புவிடம் அழைத்துச் செல்வான். அப்பு துாரத்தே வேப்பமர நிழலில் உட்கார்ந்திருப்பார். அப்புவிடம் வியாபாரி ஆடு விற்க உண்டா எனக் கேட்பார். அவரும் மறுமொழியாக ஆடு விற்க உண்டு எனக்கூறி, எழுந்து அப்புவிடம் கேட்போம் என வீட்டிற்குள் போவார். அப்பு வெளியில் சாய்வு நாற்காலியில் படுத்திருப்பார். அவரும் அப்புவிடம் கேட்போம் என உள்ளே செல்வார். அங்கே அப்பு உறிபோன்ற ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருப்பார். அவரிடம் போய் அனுமதி பெற்று வருவார். இவ்வாறு அநேக குடும்பங்கள் நான்கு தலைமுறையாக வாழ்ந்ததாகவும் சில குடும் பங்கள் ஐந்து தலைமுறையாக வாழ்ந்ததாகவும் அறியப்படுகிறது.
புராண காவியங்களிலும், இலக்கியங்களிலும் இத்தீவு அதிக தொடர்புடையதாக விளங்கியதென்றும் புட்கரம் என்பது, நெடுந் தீவையே குறிப்பதாகவும் ஆராயப்சி சியாளர்கள் கருதுகின்றார்கள். இத்தீவானது யாழ்க்குடா நாட்டிலிருந்து நெடுந் தொலைவில் இருப்பதால் நெடுந்தீவு என்று அழைக்கப்பட்டது. இன்றும் தமிழில் இத்தீவு நெடுந்தீவு என்றே அழைக்கப்பட்டு வருகிறது. டெல் விற் என்ற பெயர் ஒல் லாந்தரின்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 3

Page 18
ஆட்சிக்காலத்தில் அவர்களாலே பசுத்தீவிற்குச் சூட்டப்பட்ட பெயராகும். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் எல்லாத் தீவுகளுக்குமி, தங்கள் நாட்டில் காணப்பட்ட இடங்களின் பெயர்களைச் சூட்டினார்கள். நெடுந்தீவிற்கும் தங்கள் நாட்டிலுள்ள ஒரு பாற்பண்ணை நகரின் பெயரான டெல்வ்ற் என்ற பெயரைச் சூட்டினார்கள். டெல்வ்ற் என்ற இப் பெயராலேயே இன்றும் இத்தீவு அழைக்கப்பட்டு வருகிறது.
ぐ
x:
:8 భఖ ိ၊ ဂို. ရွှို; {x్యభట్టి: * : : قسمقسمة
m میباشیدبن
பரந்த புல்வெளிகள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 4.
 
 
 

இயல்" 2
நெடுந்தீவின் புவியியல் தன்மை பெளதீகத் தன்மை
யாழ்ப்பாணத்தைப் போன்றே நெடுந்தீவிலும் மேற்கில் சுண்ணக் கற்பார் காணப்பட, கிழக்கில் முருகைக் கற்பார் காணப்படுகின்றது. தீவின் மத்தியில் நில மட்டத்துக்கு மேலே வெளிப்பட்டு இக் கற்பாறைகள் காணப்படுகின்றன. முருகைக் கற்களிலும் இரணர் டு வகையான முருகைக் கற்கள் காணப்படுகின்றன. அவை நீர் முருகை, மாமுருகை என்னும் பெயர்களால் அழைக்கப்படுகின்றன. நெடுந்தீவின் மேற்கே மிக வயிரித்த கோளாங் கற்பாறைகள் காணப்படுகின்றன. இவை சாறாப்பிட்டி, பெரியதுறை ஆகிய பகுதிகளில் கூடுதலாகக் காணப்படுகின்றன. இவை உடைப்பதற்கு கஷ்டமானவை. சாறாப்பிட்டிப் பகுதியில் இந்த வைரக் கற்பாறைகள் நிலமட்டத்தில் கொங்கிறீற் போட்டது போல தட்டையாகப் பரந்து காணப்படுகின்றன. கிண்டிச்சாறுவதற்குக் கஷடமென்பதால் சாறாப்பிட்டி எனப் பெயர் ஏற்பட்டது. நெடுந்தீவின் மத்திய பகுதி ஒருகாலத்தில் கடற்கீழ் இருந்திருக்கலாம் என்று ஊகிக்க இடமுண்டு. இப்பகுதியில் நிலத்தைத் தோண்டும் பொழுது அதிக ஆழம் வரை சிப்பி, சங்கு, ஊரி முதலிய கடற்பிராணிகளின் ஓடுகள் காணப்படுவதும், மண் உவர்க் கழியாகவும், நிலக்கீழ் நீர் அதிக உப்புத் தன்மையாகவும், வெளியே தெரியும் கற்பார்கள் கரடு முரடாகவும் இருப்பதும் இப்படி ஊகிக்கக் காரணிகளாகும்.
சாறாப்பிட்டி வைரித்த கோளங்கற்பாறைகள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 5

Page 19
தரைத்தோற்றம்
தரைத்தோற்ற வேறுபாடுகள் அதிகமில்லாவிடினும் கழுவு நீர்ப் போக்கைக் கொண்டு தரையின் சரிவை அவதானிக்கும் பொழுது தென்பகுதி உயரமான மேட்டுப் பிரதேசமாகவும் மத்திய பகுதி தாழ்ந்த பகுதியாகவும் காணப்படுகின்றது. பொதுவாகக் கடற்கரை எல்லாம் உயர்ந்தும் மத்திய பகுதி பதிந்தும் இருப்பதால் இது ஒரு பேசின் வடிவினதாகக் காணப்படுகிறது. வெட்டுக் கழி, பெரிய கழி ஆகிய குளங்களையடுத்துள்ள பகுதிகள் சதுப்பு நிலங்களாகக் காணப்படுகின்றன. கடற்கரை ஓரங்கள் ஒழுங்கானதாகக் காணப்பட்ட பொழுதிலும் வடகரை ஓரம் உள்வளைந்து குடாக்களாகக் காணப்படுகிறது. தென்மேல் பருவக் காற்றால் குவிந்தாமுனைப் பகுதியும் வடகீழ்ப் பருவப் பெயற்சிக் காற்றால் கிழக்கே தீர்த்தக் கரைப் பகுதியும் கடலினால் அரிக்கப்பட்டு வருவதைக் காணலாம். தெற்கே வெல்லை, மேற்கே பூ முனை, பெரியதுறை, மத்தியில் மணற்றுறை ஆகிய பகுதிகளில் கடற்கரைகள், கற்பார்கள் குறைவாய், மணற்பாங்காக இருக்கின்றன. இதனால் மரக் கலங்கள் வரக் கூடிய துறைமுகங்களாக அமைந்துள்ளன. ஏனைய கடற்கரைகள் பெரிய கற்பார்களால் நிறைந்து காணப்படுகின்றன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 6
 

D600 6) 6TD
மண்வளம் பாறைத் தன்மைகளுக்கேற்ப அமைந் ’துள்ளதைக் காணலாம். நெடுந்தீவின் மேற்கே சிறப்பாகக் கருமையான இருவாட்டிமண் காணப்படுகிறது. இங்கு காணப்படும் நன்னீரும், மண் வளமும் தோட்டப் பயிர்ச் செய்கைக்கு ஏற்றதாக அமைந்துள்ளன. பொதுவாக ஆழமான தனி மண்படைகள் இங்கு இல்லை. பொட்டல் மண்ணும், கற்பாறைகளும் சிறு கற்களும் சேர்ந்தே நிலம் அமைந்துள்ளது. வெள்ளைக்கழிமண் தீவின் தென்பகுதியிலும், மத்திய பகுதியிலும் காணப்படுகிறது. கடற் கரைகளில் மணல் காணப்படுவதோடு வடபகுதியில் அதிக அகலத்திற்கு மணல் பிரதேசம் காணப்படுகிறது. இப் பிரதேசம் தென்னைச் செய்கைக்கு மிகவும் உகந்ததாய் இருக்கின்றது. இங்குள்ள மண் தன்மையும், சுவாத்தியமும் பனை வளர்ச்சிக்கும் விருத்திக்கும் வாய்ப்பாக இருக்கின்றன.
நெடுந்தீவின் மண்வளப் பாகுபாடு
கற்பாறை : நரைமண்
ஊரிகலந்தமண்
D6016)LD60:
ஆதாரம் நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 7

Page 20
நீர்வளம்
நெடுந்தீவின் மேற்குப் பகுதியிலும், கிழக்கே சில பகுதிகளிலும் மத்தியில் சில குறிப்பிட்ட இடத்திலுமே நன்னீர்ப் பிரதேசம் காணப்படுகிறது.பொதுவாக கடற்கரையை அடுத்தே நன்னீர் ஊற்றுக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக, மணற்றுறை, சாறாப்பிட்டி, தென்கீழ்க்கரை, கோட்டைக்காடு என்பவற்றைக் குறிப்பிடலாம். இது சிந்திக்கப்படவேண்டியது. அவ்விடங்களிலேயே நன்னீர்க் கிணறுகள் தோண்டப்பட்டு மக்களின் தேவைக்காக உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றன. நெடுந்தீவின் ஏனைய பகுதிகளின் நீர் மட்டம் மேலாக இருந்த பொழுதிலும் உவர் நீராகவே இருக்கின்றது. ஆதிகாலத்தில் மக்கள் பல கேணிகளையும் குளங்களையும் தங்களின் மந்தை வளர்ப்பிற்காகவும்,விவசாயத்திற்காகவும் வெட்டியிருந்திருக்கி றார்கள். இவை மன்னராட்சிக் காலங்களிலும், அரசர்களால் திருத்தப்பட்டு விவசாய விருத்திக்கும் மந்தை வளர்ப்பிற்கும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடக்கின்றது.
அங்கு வெட்டுக் கழி, பெரியகழி, பேய்க் கழி, வெள்ளைக் கழி, செம்பட்டைக் கழி, இராமிழாப்புக் கழி, இரவதைக் கழி போன்ற கழிகளும் சண்ணாங்குளம், நெழுவினிக்குளம், கம்பராமடை போன்ற குளங்களும் காணப்படுகின்றன. இவை யாவும் மாரிகாலத்தில் மழை நீர் நிறைந்து காணப்படும் நன்னீர் குளங்களாகவே இருந்தன. இவற்றை உபயோகித்தே மக்கள் தம் விவசாயத்தையும் மந்தை வளர்ப்பையும் செய்து வந்தனர். போத்துத்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களில் மக்களின் விவசாய முயற்சிகளுக்கு அதிக ஊக்கம் அளிக்கப்படவில்லை. போத்துக்கீசர் மாரி காலத்தில் குளங்கள் பெருக்கெடுத்து நாட்டுக்குள் வெள்ளம் வருவதைத் தடுப்பதற்காகவும், தமது உல்லாசப் பிரயாணங்களுக்காகவும் பெரிய கழிகளையும் கடலையும் இணைத்து வாய்க்கால்களை வெட்டி விட்டதால் அக்கழிகளுக்குள் கடல் நீர் புகுந்து அவைகள் உவர் நீர்க் கழிகளாக மாறின. இதன் காரணமாகவும் மக்களின் விவசாய முயற்சிகள் பாதிக் கப்பட்டன. காலப்போக்கில் நிலக்கீழ் நீரில் உப்புத்தன்மை கூடிக்கொண்டே போகிறது. பல வருடங்களுக்கு முன் குடிக்கக் கூடிய
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 8

நன்னீராகவிருந்த கிணறுகள் பல இப்பொழுது குடிக்கமுடியாத உவர்ப்பு நீராகிவிட்டன. சாறாப்பிட்டியில் காணப்பட்ட நீரே ஒரு காலத்தில் சிறந்த நன்னீராகவிருந்தது. அடிக்கிணறுகள்வரை ஒரே கற்பாராக இருந்த படியால் உவர் சேர வாய்ப்பின்றி இருந்தது. ஆதியில் தோணி டப்பட்ட கிணறுகள் பல சாறாப்பிட்டியில் இருக்கின்றன. சில குடிநீர்க் கிணறுகளாகவும் சில குளிப்பதற்கும் உபயோகப் படுகின்றன. இங்கிருந்தே குழாய் நீர்த்திட்டம் ஆரம்பமாகி மத்தி, கிழக்குவரை நீர் வழங்கப்பட்டு வருகிறது. இப்பொழுது இங்குள்ள நீரும் முன்போல அல்லாது சிறிது உவர்ப்பாகவே மாறிவிட்டது.
ஆங்கிலேயர் காலத்தில் சில குளங்களுக்கும், கழிகளுக்கும் கடல் நீர் உட்புகாது சில தடைகள் போடப்பட்டிருந்ததாயினும் அவற்றால் அதிக பயன் ஏற்படவில்லை. இவற்றைத் திருத்தி, சில அடிகள் ஆழமாய் தோணி டிக் கடல் நீர் உட்புகாதிருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் விவசாயத்திற்கும் மந்தை வளர்ப்பிற்கும் ஏற்ப சிறந்த பண்டைக்கால பசுத்தீவாக இத்தீவு மாறும் என்பதில் ஐயமில்லை.
glpfulgift 6igiC3u IITsub - Water Supply Service
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 9

Page 21
நெடுந்தீவின் தரைக்கீழ் நீரின் பரம்பல் ரூமோணிகன *ళ్ల
്വീഴ്ച്. 份 2ஜர்நேர்மை Mதவறந்த பகுதி F "ஆர்மீர்த8 sa E-daga
ஆதாரம்: நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 10
 
 
 
 
 
 
 
 
 

இயற்கைத் தாவரம்
இங்குள்ள இயற்கைத் தாவரங்களில் முக்கியமானது பூவரசாகும். தென்கிழக்குப் பகுதியில் இம் மரங்கள் அடர்த்தியாகக் காணப்படுவதனால் பூவரசங்காடு என அழைக்கப்படுகிறது. இவற்றுடன் வேம்பு, ஆல், அரசு, இத்தி, புளி, நொச்சி போன்ற மரங்களும் சிறிய அளவில் காணப்படுகின்றன. இவற்றைவிட இங்கு பனையும் , தென்னையுமே அதிகமாகக் காணப்படுகின்றன. தீவின் பெரும்பகுதிகளில் வரஸ்நில வளரிகளான முட்பற்றைகள், நாகதாளி, கற்றாளை, போன்ற செடிகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் பெரும்பாலான செடிகள், கொடிகள் மருத்துவ மூலிகைகளாகும். பெரிய துறையை அடுத்தும், மாவிலித்துறையை அண்மிய பகுதிகளிலும் கற்றாளை காடுபோல் வளர்ந்து காணப்படுகின்றன. பனங்காணி குடவிலிப் பகுதிகளில் நாகதாளிப் பற்றைகள் செறிந்து காணப்படுகின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பரவலாக எங்கும் காணப்பட்ட நாகதாளிச் செடிகளை அழிப்பதற்காக விஞ்ஞான முறையில் இப்பயிர்களை அழிக்கும் பூச்சிகளை உற்பத்தியாக்கி அழித்தனர்.
இவற்றை விட ஈந்து, பிரண்டை, முள்ளி, தும்பை, தூதுவளை, காரை, சூரை, வல்லொட்டி, நெருஞ்சி, குறிஞ்சா, காட்டுக்கருணை எனப்படும் வீணாலை, சாயணை, எருக்கலை, கொடிக்கள்ளி, சதுரக்கள்ளி, இயங்கு, கொவ்வை, சீந்தில் போன்ற செடிகளும் கொடிகளும் காணப்படுகின்றன. மென்மையான தணி டையும் பசுமையான மெல்லிய இலைகளையும் உடைய காவோதி என்னும் சிறு செடிகளும் இயற்கைத் தாவரமாக எங்கும் உற்பத்தியாகி வளர்ந்தன. அவை மாரி காலத்தில் மட்டும் வளர்வன. புகையிலைத் தோட்டங்களுக்குச் சிறந்த பசும் பசளையாக இவை உபயோகிக்கப்பட்டன. இவற்றை வெட்டிக் கட்டுகளாக்கி பிற ஊர் விவசாயிகளுக்கு விற்றனர். விசேடமாக அனைலைதீவுக்கு ஏற்றப்பட்டது. பிள்ளைகள், வளர்ந்தவர்கள், வயோதிபர்கள் எல்லோரும் இதனால் பணம் உழைக்கும் ஒரு காசுப் பயிராக இது இருந்தது. இரசாயனப் பசளைகள் உபயோகத்திற்கு வந்த நெடுந்தீவு மக்களும் வரலாறும் 11

Page 22
பின் இது கைவிடப்பட்டது. தீவின் மத்திய பகுதியில் சதுப்பு நிலங்கள் காணப்படுகின்றன. பனை, தென்னை ஆகிய கற்பக தருக்கள் தீவின் வடபகுதியில் அதிக அளவில் வளர்ந்து காணப்படுகின்றன. தென்பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் புல் பரந்து காணப்படுகின்றன. முக்கியமாக அறுகு, கோரை போன்ற புற்கள் செழித்து வளருகின்றன. இவை தரைக்கீழ்நிலை காரணமாக என்றும் பசுமையாக இருப்பதோடு, கால் நடைகளுக்குச் சிறந்த உணவாகவும் இருக்கின்றன. இதன் காரணமாகத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன் ஒல்லாந்தரால் கொண்டு வரப்பட்ட குதிரைகள், இன்றும் கால ஓட்டத்தில் அழிந்து போகாமல் பல்கிப் பெருகி கூட்டம் கூட்டமாகத் தீவை அழகு செய்கின்றன. பசுத்தீவாக அன்று இருந்ததற்கும் இப்புல்வெளிகளே காரணமாக இருந்தன.
காலநிலை
நெடுந்தீவின் காலநிலை அது அமைந்திருக்கும் நிலையத்திற்கு அமைவாக, வெப்ப நிலை, மழை வீழ்ச்சி என்பவற்றின் தாக்கத்தைக் கொண்டுள்ளது. இத்தீவானது வடக்கு அகலக்கோடு 9 - 30 இலும், கிழக்கு நெடுங்கோடு 79 - 25 இலும் அண்ணளவாக அமைந்துள்ளது. அயன வலயத்தில் உள்ளதால் வருடத்தின் எல்லா மாதங்களிலும் உயர்வான வெப்ப நிலையையே கொண்டுள்ளது. வடஅகலக் கோடுகளில் சூரியன் செல்லத் தொடங்கும் காலங்களில் வெப்பம் அதிகரித்துக் காணப்படுவதோடு வரட்சியான தன்மையும் காணப்படும். கடலினால் சூழப்பட்டிருப்பதனால் கடல், தரைக் காற்றுக்களின் செல்வாக்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்குள்ள சராசரி மழை வீழ்ச்சியின் அளவானது நூறாண்டுகளுக்கு முன்பிருந்ததைவிடப் படிப்படியாகக் குறைந்து வந்துள்ளதையே காட்டுகின்றது. இங்கும் யாழ்ப்பாணக் குடாநாட்டைப் போலவே வடகீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்று (வாடைக்காற்று) வீசும் காலங்களான ஒக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே மழை இடையிடையே பெய்கிறது. இம் மழையரின் அளவு அயனச் சூறா வழிக் காற் று, அவையேற்படுத்தும் தாக்கம் என்பவற்றால் மாறுபடுகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 12

இம்மழை வீழ்ச்சியினால் நெடுந்தீவு மக்களின் நீர்த்தேவை ஈடு செய்யப்படுகிறது. தென்மேல் பருவப் பெயர்ச்சிக் காற்றுக் (சோழகக்காற்று) காலங்களில் அதிக மழையில்லாது விட்டாலும் சித்திரைச் சிறுமாரி என்பதற்கேற்ப சிறிய அளவு மழை பெய்கிறது. சில வருடங்களில் இம்மழையின் அளவுகள் கூடியும் சில வருடங்களில் குறைந்தும் காணப்பட்டுள்ளது. இம்மழை நீரினால் கோடைகாலங்களில் குளங்களும், கிணறுகளும் நீரைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுகின்றது. வைகாசி, ஆனி, ஆடி மாதங்களில் சோழகக் கச்சான் என்னும் வரட்சியான காற்று வேகமாக வீசுவதைக் காணலாம். இக்காற்றுக் காலங்களில் கழிகள் நீர்வற்றிப் புழுதிகள் பறப்பதையும், அவை மரங்களிலும், கழியை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களின் வீட்டுக் கூரைகளில் படிந்திருப்பதையும் காணலாம். பொதுவாக வரட்சிக்காலமே கூடுதலாகவுள்ளது. அண்மைக்காலத்தில் பெறப்பட்ட ஓராண்டுக்கான வெப்பநிலை மழைவீழ்ச்சியின் பரம்பல் கீழே தரப்பட்டுள்ளது.
மாதாந்த வெப்பநிலை, மழைவீழ்ச்சி- பரம்பல்
மாதங்கள் வெப்பநிலை(C*) மழைவீழ்ச்சி (மி.மீ) ஜனவரி 22.2 3.55 1பெப்ரவரி 21.2 3.02 LDTfår 26.0 2.05 ஏப்ரல் 28.0 2.07 மே 27.0 2.06 E. 26.0 2.01 யூலை 22.0 2.03 ஆகஸ்ட் 25.0 2.01 செப்ரெம்பர் 24.4 2.02 ஒக்ரோபர் 21.1 2.04 நவம்பர் 13.74 21.1 ܀ ọGFLDUÏT 22.1 8.72
ஆதாரம் : நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 13

Page 23
இயல் 3 மக்கள் குடியேற்றம்
நெடுந்தீவில் பல நுாறு வருடங்களுக்கு முன்பிருந்தே மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதும்,மக்கள் வாழக்கூடிய வசதிகள் இங்கு இருந்தன என்பதும் அங்கு கண்டெடுக்கப்பட்ட பழைய பாத்திரங்கள், உரோமர் காலநாணயங்கள், கல்லாலான கருவிகள், இடிந்த பண்டைக்கால வீட்டுச் சுவர்கள் என்பவற்றாலும், இங்கு பண்டைக்காலம் முதலாக மக்கள் வாழ்ந்து வந்தமையை அறியக்கூடியதாகவுள்ளது. மக்கள் குறைந்த இடங்களில், தென் இந்தியாவிலிருந்து மக்களைக் கொணர்ந்து யாழ்ப்பாண அரசர்கள் குடியேறச் செய்த பொழுது, நெடுந்தீவிலும் குடியேற்றினார்கள் என அறிய முடிகிறது. இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வெடியரசன் நெடுந்தீவையே இராசதானியாகக் கொண்டு, கோட்டை கட்டி, பிரதானிகள் சகிதம் ஆட்சி செய்தமையும் நெடுந்தீவில் மக்கள் நெடுங்காலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது.
சிங்கை ஆரியன் என்னும் மன்னன், புவனேகபாகு என்னும் மந்திரியுடனும், பரிவாரங்களுடனும் யாழ்ப்பாணம் வந்து நல்லுாரை தலைநகராகக் கொண்டு கி.பி. 950 வரையில் ஆட்சி செய்தான். முதல் ஆரியச் சக்கரவர்த்தியான இவன் மனுநீதி வழுவாது ஆட்சி செய்து வருங்காலத்தில் குடிசனம் குறைந்த இந்நாட்டிலே அனேக பிரசைகள் வாசம் செய்ய வேண்டுமென்று ஓர் நாள் மந்திரியாகிய புவனேகபாகுவுடன் ஆலோசனை செய்து இங்கும் சில தமிழ்க் குடிகளைக் குடியேற்ற வேண்டுமென்று, இந்தியத் தமிழ் அரசர்களுக்கு கடிதம் அனுப்பினான். அத் தமிழ் அரசர்கள் இவனது வேண்டுகோளுக்கிசைந்து சிற்சில இடங்களிலிருந்து தமிழ்க் குடிகளை அனுப்பி வைத்தனர். அவர்கள் தங்கள் அடிமை, குடிமைகளுடன் யாழ்ப்பாணம் வந்தனர். இவர்களில் இந்தியாவிலிருந்து வந்த பிரபுக்களை அவரவர் அடிமை குடிமைகளுடன் திருநெல்வேலி, மயிலிட்டி, தெல்லிப்பழை,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 14

இணுவில், பச்சிலைப்பள்ளி, புலோலி, தொல்புரம் கோயிலாக்கண்டி, இருபாலை போன்ற இடங்களுக்கு அதிபதிகளாக்கிக் குடியமர்த்தினான். இவர்களுடன் வந்த பிரபுவான சேயூர் வேளாளனும், இந்திரனைப்போன்ற செல்வனும், நீதி, பொறுமை ஆகிய நற்குணங்களை யுடையவனும், வாசனை பரிமளிக்கும் குவளை மாலை தரித்த மார்பனும் மிகுந்த கீர்த்திப்பிரதாபனும், தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவனும் ஆகிய தனிநாயக முதலியை அவரது பரிவாரங்களுடன் நெடுந் தீவிற்கு அதிபதியாக்கினான்.
இவ்வரலாறு பற்றி யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிலும், யாழ்ப்பாண வைபவ கௌமுதி என்ற நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளன. தனிநாயக முதலியின் பரம்பரையினரே ஏனைய தீவுகளுக்கும் அதிபதியாக்கப்பட்டனர் என்றும் இங்கிருந்தே ஏனைய தீவுகளுக்கும் மக்கள் சென்று குடியேறினர் என்றும் அறியக்கிடக்கின்றது. இதனால் தான் இன்றும் நெடுந்தீவு மக்களுக்கும் ஏனைய தீவு மக்களுக்கும் இடையே மொழி, சமயம், கலை, கலாச்சாரப் பண்புகள் ஒத்தனவாகவே காணப்படுகின்றன. இவை மட்டும் அன்றி, மக்களுக்கு இடையே பல நுாறு வருடங்களுக்கு முன்பிருந்தே குடும்ப உறவுகள, நிலைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சமய ரீதியாகவும் நெடுந்தீவு மக்கள் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயம், புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயம், அனலைதீவு ஐயனார் ஆலயம், வேலணை அம்மன் ஆலயம் ஆகியவற்றின் உற்சவங்களிலும் பெருந் தொகையாகக் கலந்து கொள்வர்.இவ்வாறாகப் பண்டைக்காலத்தில் வந்து குடியேறிய மக்களே நெடுந்தீவின் பரம்பரை மக்களாவர்.
இன்று நெடுந்தீவில் மக்களின் தொகை குறைந்து காணப்படுவதற்கான காரணங்கள் பல உண்டு. 1950 களில், இலங்கை அரசினால் ஏற்படுத்தப்பட்ட குடியேற்றத்திட்டங்களில், பல விவசாயக்குடும்பங்கள் கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல் லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் சென்று குடியேறியமையாலும், உத்தியோகங்கள், வியாபாரம் முதலியவற்றின் காரணமாக மக்கள் வெளியூர்களில் சென்று குடியேறியமையாலும் மக்கள் தொகை படிப்படியாகக்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 15

Page 24
குறைவதாயிற்று.
1981ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டின்படி நெடுந் தீவு மக்களின் குடிசனத் தொகை 5620 என மதிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு முந்திய கணிப்பீடுகளின்படி 8000 மக்கள் வரை வாழ்ந்தார்கள் என அறியப்பட்டது. இதற்குப் பிற்பாடு 1983ம் ஆண்டு தொடக்கம் நாட்டில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு யுத்தம் காரணமாக, மிகுதியாக அங்கு வாழ்ந்து வந்த மக்களில் பெரும் தொகையானோர் இந்தியா, கனடா. இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்றுள்ளனர். நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பணிமனையிலிருந்து பெறப்பட்ட அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
மொத்தக் குடித்தொகைப் போக்கு (1871-1981)
ஆண்டு மொத்தக் இடைக்கால வருடாந்த குடித்தொகை அதிகரிப்பு -ീl
1871 3025
1881 2637 -386 -1.18
1891 2826 189 0.72
1901 3906 1080 3.82
1911 3728 - 178 -0.46
1921 4051 323 0.87
1946 6338 2287 2.26
1953 5987 -351 -0.79
1963 5945 -42 -0.07
1971 5607 -338 -0.71
1981 5620 13 0.02
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 16

இயல் 4 அரசியல்
ஆதியில் இலங்கையில் தென்பகுதியில் இயக்கர்களும் வடபகுதியில் நாகர்களும் வாழ்ந்தனர். தென் இலங்கை மன்னவனான இராவணன், மாந்தை, திருக்கேதீஸ்வரம் பகுதியை ஆண்ட, மயன் என்னும் சிற்பியின் மகளான மண்டோதரியை மணஞ்செய்திருந்தான். வடபகுதி மாந்தையில் வசித்த மயன், நாகர் இனத்தைச் சேர்ந்தவனே. இச் சம்பவங்கள் திரேதாயுகத்தில் நடந்த கதைகளாக நம்நாட்டுச் சரித்திரங்கள் கூறுகின்றன. வடக்கே அரிப்பு, சிலாபத்துறை, மன்னார், வடகுடாப்பகுதிகளான இலுப்பைக் கடவை, விடத்தல் தீவு, வெள்ளாங்குளம் பகுதிகளிலும், யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த ஆதிக்குடிகளும் நாகர்களே. இவர்கள் சிறந்த நாகரீகமுடையவர்களாகவே வாழ்ந்தனர். பாரதப்போர் நடைபெற முன் அர்ச்சுனன், தீர்த்த யாத்திரை செய்தபோது இந்தப் பகுதிகளுக்கும் விசயம் செய்தான். அப்பொழுது மன்னாரின் தென் குடாக்கடல் பகுதியைச் சேர்ந்த அரிப்புத் துறையில், அல்லி என அழைக்கப்பட்ட நாககன்னி கோட்டைகட்டி ஆண்டிருக்கின்றாள். ஆண்வாடை படாமல் வாழ்ந்த அந்த அரச கன்னியை அருச்சுனன் தந்திரமாகத் திருமணம் செய்ததாக பாரதக்கதையில் கூறப்படுகிறது. இது இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சம்பவமாகும். இக்காலத்தில் அருச்சுணனின் தமயனான வீமன் நெடுந்தீவிற்கு வந்திருக்கின்றான் என்றும் நெடுந்தீவின் காட்டுப்பிள்ளையார் ஆலயத்தின் வடபுறத்தே வீமன் அடி என்னும் காணி இப்பொழுதும் அதே பெயரில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்திலும் நெடுந்தீவில் அரசும் மக்களும் இருந்திருக்கவேண்டும். இக்காலத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பே நெடுந்தவை வெடியரசன் ஆண்டிருக்கிறான். நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை முறை, அரசியல் அமைப்புக்கள், வெடியரசன் ஆட்சிக் காலத்திலிருந்தே வெளியுலகிற்குத் தெரியவந்துள்ளன என வரலாறு கூறுகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 17

Page 25
வெடியரசனின் ஆட்சிக்காலம்
வெடியரசன் நெடுந் தீவின் மேற்குப் பகுதியிலுள்ள கோட்டைக்காடு என்னும் இடத்தில் கோட்டை கட்டி இராசதானி அமைத்து, பிரதானிகள், படைவீரர் பலருடன் ஆட்சி புரிந்துள்ளான். வெடி அரசனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுகிறது.
கண்ணகி வழக்குரை காதையிலே வெடியரசன் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (வி.சீ.கந்தையா-1967) வெடியரசன் தீவுப் பகுதிகளின் மன்னனாகவிருந்தான். அவன் நெடுந்தீவில் கோட்டைகட்டி நெடுந்தீவையே இராசதானியாகக் கொண்டு ஆட்சி புரிந்தான். வெடியரசன் நெடுந்தீவையும், அவன் தம்பி வீரநாராயணன் புங்குடுதீவையும், விளங்கு தேவன் நயினா தீவையும், ஏரிளங்குரவன் வேலணைத் தீவையும் ஆட்சி புரிந்தனர் என நாட்டார் இலக்கியங்கள் கூறுகின்றன.
இவனது சகோதரர்கள் மற்றைய தீவுகளிலும் யாழ்ப்பாணக்குடா நாட்டின் தெற்கு, மேற்குக் கரையோரங்களிலும், வெடியரசனின் கீழ்ச் சிற்றரசர்களாக ஆட்சி புரிந்தனர் எனக் கூறப்படுகிறது. வெடியரசன் பெரும் செல்வமுடையவனாகவும், மற் றைய பேரரசர்களுக்கும் கடைக் க முடியாத நாகரத்தினங்களைத் தன்னிடத்தே வைத்திருந்தானென்றும் அறியக்கிடக்கின்றது. வெடி அரசன் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில், சோழ மன்னன் ஒருவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி கண்ணகியின் சிலைக்குக் காற்சிலம்பு செய்வதற்காக வெடியரசனிடம் நாகரத்தினங்களிருப்பதாக அறிந்து, அவற்றைப் பெற்று வருமாறு தனது கடற்படைத் தளபதிகளில் ஒருவனான மீகாமன் என்பவனைச் சேனைகளுடன் நெடுந்தீவிற்கு அனுப்பினான்.அவன் கடற்படையுடன் வந்து வெடியரசனிடம் நாகரத் தினங்களைக் கேட்ட போது வெடியரசன் நாகரத்தினங்களைத் தர மறுத்ததால், மன்னனுடன் பெரும் போர் ,புரிந்து நாகரத்தினங்களைப் பெற்றுச் சென்றான் எனவும் கூறப்படுகிறது. (ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை 1933:26). மீகாமன்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 18

அரசனுடன் கடும் போர் செய்து, அரசனைக் கைதுசெய்து தனது கப்பலுக்குக் கொண்டு சென்றான் என்றும் ,இதையறிந்த வெடியரசனின் தம்பிமார் தமது படைகளுடன் சென்று சோழ மன்னனின் படைத்தளபதியான மீகாமனுடன் சண்டையிட்டு வெடியரசனை விடுவித்ததோடு மீகாமனைச் சிறைப்படுத்தி நெடுந்தீவிற்குக் கொண்டு சென்றனர் எனவும், இதற்கு முன்பாக வெடியரசனை மீகாமன் கைது செய்து கொண்டு சென்று விட்டான் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட வெடியரசனின் மனைவி துயர் தாங்காது உயிர் நீத்தாள் என்றும் கூறப்படுகிறது. மனைவியின் இழப்பைத் தாங்காது வெடியரசனும் அவனது தம்பிமாரும், மனைவியின் இறுதிக் கிரியைகளைச் செய்து முடித்தபின் தங்கள் குடிசனங்களுடன், நெடுந்தீவை விட்டு வேறு இடம் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. சோழச் சக்கரவர்த்தியின் கடற்படையைக் கண்டு அஞ்சிச் சரணடையாது வெடியரசன் வீரத்துடன் எதிர்த்துப் போரிட்டு மாண்டதாக நயினாதீவு நாகபூசணி அம்மன் திருத்தல வரலாற்றில் கூறப்படுகிறது. கண்ணகி வழக்குரை காதை என்னும் நூலிலும் வெடியரசன் கதை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. (வி.சீ. கந்தையா
1967) நெடுந்தீவு மன்னனான வெடியரசன் போரில் இறந்த பின் அவனது உறவினர்கள் கடல் வழியாக மட்டக்களப்பு பகுதிக்குச் சென்று குடியேறியதாக, ஈழத்து முஸ்லிம் வரலாற்றை எழுதிய முஸ்லிம் அறிஞர் குறிப்பிட்டிருந்தார். இதனை உறுதிப் படுத்தும் வகையில் பழுகாமத்துக்கருகில், நெடுந்தீவார் எனும் ஒரு பகுதியினர் தனித்துவமாக வாழ்ந்து வருவதாக அறியப்படுகிறது. இந்நிகழ்வுகள் இன்றைக்கு 2000ம் ஆண்டுகளுக்கு முன் நடந்தனவாகவுமி, கண்ணகி காலத்துக்கு பிற்பட்டனவாகவும் உள்ளன. இவற்றையெல்லாம் ஆராயுமிடத்து வெடியரசன் சோழமன்னனின் படைகளுடன் நடந்தபோரில் வீரமரணமடைந்தான் என்பதே உண்மையெனக் கருத இடமுண்டு.
வெடியரசனின் வாழ்க்கை வரலாறு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைப் பகுதியில் வெடியரசன் நாடகம் என்ற பெயரில் மிகவும் பிரபல்யம் பெற்றிருந்தது. மேலும் வெடியரசன் பற்றிய திரு. டானியல் ஜோன் என்பவரின் (டானியல் ஜோன் 1878:6) கூற்றும் ஈண்டு நோக்கற்பாலது. வெடியரசன் நெடுந்தீவில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 19

Page 26
கோட்டை, கொத்தளங்களை நிறுவி, தீவுப் பற்றுக்களை தன்னடிப்படுத்தி, அரசியலுக்குரிய படைக்கலங்களுடன் இராச்சியம் பண்ணினான். நாகரத்தினங்களைப் பெறுவதற்காக வந்த மீகாமனுடன் நடந்த சமரின் பின் வெடியரசன் மீகாமனுடன் சமரசம் செய்ததாகவும் பின்னர் நாகரத்தினங்களைக் கொடுத்து அனுப்பினான் என்றும் கூறப்படுகிறது. வெடியரசன் காலத்தில் மன்னார்க் குடாப் பகுதியில் முத்துக்குளிப்பும், முத்து வணிகமும் சிறப்பாக நடந்ததாக அறியப்படுகிறது. இவ்வரசன் இராமேஸ்வரர் கோவில் பூசைக்குத் தினந்தோறும் பாலும் பழமும் அனுப்பிவைத்தான் எனவும் குறப்பிடப்பட்டுள்ளது. வெடியரசன் கோட்டை தற்காலம் அழிந்து கிடப்பதை மேற்குப் பகுதியில் காணலாம். வீரநாராயணன் பொன்னாலை முனை புகுந்து, எலுமிச்சை மலையில் தனக்கும் தன் பரிவாரத்திற்கும் ஏற்ற கட்டிடங்களைக் கட்டி, தனது ஆணை செலுத்தி, கிருட்டினர் கோயிலை ஸ் தாபித்து பிரஸ் தாபமுற்றிருந் தான் . அவ்விடத்திலுள்ள சதுரங்க மணல், மாளிகை அடைப்பு முதலாம் இடங்களும் அவ்விடமிருந்த அட்டோப அலங்காரங்களைக் காட்டுகின்றன. விளங்கு தேவன் சுளிபுரத்தின் வடபகுதியிலுள்ள திருவடிநிலையிலும் போர்வீரகண்டன் கீரிமலையிலும் தத்தம் பரிவாரத்தோடு அவ்வப்பகுதிகளை ஆண்டிருந்தார்களென்பதை வெடியரசன் வரலாறு கூறுகிறது. அவனது சகோதரர்கள் பற்றிய விபரங்கள் வெடியரசன் வரலாறு என்ற நூலிலும் கூறப்பட்டுள்ளது. (சிவப் பிரகாசம் :1987) வெடியரசன் தீவுப் பகுதிகளின் மன்னனாகவிருந்தான். அவன் நெடுந்தீவில் கோட்டை கட்டி, நெடுந்தீவையே இராசதானியாகக் கொண்டு ஆட்சிபுரிந்தான். வெடியரசன் விவசாய அபிவிருத்திக்காகப் பல சிறு குளங்களை வெட்டுவித்தான் என்றும், இவன் காலத்தில் மந்தை வளர்ப்பும், விவசாயமும் சிறந்து விளங்கியதாகவும் அறியப்படுகிறது.
சோழர் ஆதிக்கம்
வெடியரசன் காலம் முடிந்து சில நூற்றாண்டுகளின் பின்பே கீழைத் தேசத்தைச் சேர்ந்த பல நாடுகளிலும் சோழர்களின் ஆதிக்கம் பரவத் தொடங்கியது. இலங்கையின் பல பகுதிகளிலும் சோழர் ஆதிக்கம் வேரூன்றியது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 20

பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு இலங்கையின் பெரும் பகுதியைச் சோழர்கள் ஆண்டு வந்தனர். முதலாம் இராசராசசோழன் என்னும் மன்னனி, உலகில் பெரும் ஆதிக்கம் செலுத்தினான். யாவா, சுமத்திரா, போர்ணியோ முதலிய கிழக்கிந்தியத் தீவுகளும் அவன் ஆட்சிக்குட்பட்டிருந்தன. பிரதமர் பண்டிதர் ஜவகர்லால் நேரு எழுதிய உலகசரித்திரம் என்ற நுாலிலும் , உலகிலே முதல் முதல் கப்பற் படையை உண்டாக்கியவனுமி, தனக்குக் கீழ் பெரும் இராச்சியத்தை ஆண்டவனும் இராசராசசோழனே என்று கூறப்படுகின்றது.
வெடியரசனின் காலம் முடிந்த சில நூற்றாண்டுகளின் பின்பே சேயூர், பொன்பரப்பி, கோலியலுார் ஆகிய இடங்களைச் சேர்ந்த குடிமக்களுடன் சேயூரை முக்கிய உரிமை நாடாகக் கொண்ட தனிநாயகமுதலியும் அவரது சகோதரர்களான குணநாயக முதலி, குலதிலக முதலி, கனகராயமுதலி, ஐயம்பெருமாள் முதலி முதலான ஏழு சகோதரர்களும், தங்கையான மரகதவல்லியும் நெடுந்தீவில் வந்து குடியேறினர். அக்காலத்தில் மிக வல்லமை படைத்த சோழப் பேரரசனின் பிரதானியாகவிருந்துதவிய, தனிநாயக முதலியை, கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த, நெடுந்தீவிற்கு அதிபதியாகவும், அவர்களின் சகோதரர்களை, இதேபோன்று முக்கியத்துவம் வாய்ந்த ஏனைய தீவுகளிலும் குடியேற்றி இலங்கைக்குச் செல்லும் சோழ வீரர்களுக்கு உதவியதாகச் சொல்லப்படுகிறது.
தனிநாயக முதலிக்கு மேழிக் கொடியும், படை பரிவாரங்களும் அளித்து ஒரு சிற்றரசனாக ஆளவைத்ததாகச் சரித்திரம் கூறுகிறது. யாழ்ப்பாண வைபவமாலையில், மயில்வாகனப் புலவர் இரு மரபும் துாய வேளாளரான தனிநாயக முதலி, குடியமர்ந்த நெடுந்தீவாம் ஈழ மண்டலமே என்று பாடியுள்ளார். யாழ்ப்பாணச்சரித்திரம் எழுதிய முதலியார் இராசநாயகமும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது பற்றி நெடுந்தீவைச்சேர்ந்த கவிஞரும் அதிபருமான நெடுந்தீவுச் சுப்பிரமணியம் ஆசிரியர் இராசராசசோழனது கட்டளைப்படி தனிநாயகமுதலி நெடுந்தீவுக் குடியேற்றத்துக்குத்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 21

Page 27
தலைமைதாங்கி வந்தாரெனக் குறிப்பிட்டுள்ளார். 1947 இல் நெடுந் தீவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சியினரின் கூட்டமொன்றில் திரு. பிற்றர் கெனமன் அவர்கள் பேசும பொழுது, நெடுந்தீவு சோழ மன்னர்களால் ஆளப்பட்டதாகவும் நெடுந்தீவின் மிகப்பெரிய குளமான வெட்டுக்கழியை திருகோணமலையில் இருந்து இலங்கையை ஆண்ட, இளவரசனான குளக்கோட்டன் என்ற மன்னனே வெட்டுவித்தான் என்றும் கூறியுள்ளார். திருகோணமலையிலுள்ள கோணேசர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் திருமலைக் கோட்டையில்
முன்னே குளக்கோட்டன் மூட்டும் திருப்பணியைப் பின்னைப் பறங்கி பிடிப்பனே - மன்னா கேள் பூனைக்கண் செங்கண் புகைக் கண்ணனாண்ட பின்பு மானே வடுகாய் விடும்
என்ற தீர்க்கதரிசனச் செய்யுளொன்று ஒரு கல் வெட்டில் பொறிக்கப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தீவுப்பகுதியை மேற்பார்வை செய்த இவர்கள் நெடுந்தீவிலிருந்து நல்லுாருக்குப் பயணம் செயப்வதற்குப் பயன்படுத்திய துறைமுகம் கொழும் புத் துறை ஆகும் . தனிநாயக முதலியரின் பரம்பரையினருக்கு சிங்கை நகரச் சக்கரவர்த்தியால் கிளிநொச்சிப் பகுதிக் காணிகள் விவசாயத்திற்காக வழங்கப்பட்டதாவும் கிளிகளும், நொச்சி மரங்களும் நிறைந்த காட்டை அவர்கள் கழனிகளாக்கினர் என்றும் அறியப்படுகின்றது. தனிநாயக முதலிக்கு மைத்துனர் முறையான கந்தப்பு முதலியும் தனது பரிவாரங்களுடன் நெடுந்தீவில் ஆட்சிசெய்ததாகவும், அவரின் பரம்பரையில் வந்தவர்கள் இன்றும் தாம் கந்தப்பு முதலியின் பரம்பரையினர் என்று சொல்லிக்கொள்ளுகின்றார்கள். இக்காலத்தில் யாழ்ப்பாண அரசின் வளர்ச்சிக்கு நெடுந்தீவு மக்கள் உணி டி கொடுத்தும், உயிர் கொடுத்தும் உதவியுள்ளார்கள். இவற்றை முன்நாள் காணி அதிகாரியாகக் கடமையாற்றிய நெடுந்தீவைச் சேர்ந்த திரு.ம. அமிர்தலிங்கம் என்பவர் வெளியிட்டிருந்தார். இதற்கு ஆதாரமாக கிளிநொச்சிப் பகுதி நிலங்கள், நெடுந்தீவு தனிநாயக முதலிக்கும் அவர்களின் வழி வந்தோருக்கும் உரிமையானவை என்பதை உறுதிப்படுத்தும் பழைய ஆவணங்கள் யாழ்ப்பாணக் கச்சேரியில் உள்ளன என்றும் குறிப்பிட்டிருந்தார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 22

போத்துக்கீசரின் ஆட்சிக்காலம்
போர்த்துக்கீசர் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய பின் தமிழ் அரசர்களின் பரம்பரையான அரசியல் முறைகளையே பெரும்பாலும் மாற்றாது கையாண்டனர். யாழ்ப்பாண நாடு முன் போலவே வலிகாமம், தென்மராட்சி, வடமராட்சி, பச்சிலைப்பள்ளி என்னும் நான்கு பிரிவுகளுடன் தீவுப் பற்றும் ஒன்றாகவிருந்தது. தீவுப் பற்றுக்குள் மக்கள் குடியேறிய தீவுகளும், குடியேற்றமில்லாத தீவுகளான கச்சைதீவு, பாலதீவு, காக்கைதீவு, காட்டுத்தீவு என்பனவும் அடங்கின. போர்த்துக்கீசர் தங்கள் பாதுகாப்பிற்கு இத்தீவுகளின் முக்கியத்துவம் அவசியமென உணர்ந்தனர். இதனால் கேந்திர முக்கியத்துவம் பெற்றதும் தென் இந்தியாவிற்கு அண்மையிலுள்ளதுமான நெடுந்தீவிலும் தமது ஆட்சியை நிலைநிறுத்தினர். இதனால் அங்கு ஒரு கோட்டையையும் கட்டி போத்துக்கீச அதிகாரிகளையும், படைகளையும் வைத்து ஆட்சி நடாத்தினர். அப்பொழுது அங்கு வாழ்ந்த மக்கள் உள்ளூர் உற்பத்திப் பொருட்களான சிறுதானியங்கள், பனையின் கொடைகளான பனாட்டு, பனங் கிழங்கு, ஒடியல் , கருப்பட்டி என்பவற்றிலும் மந்தைவளர்ப்பினால் பெறப்பட்ட பால், இறைச்சி, தயிர், மோர், நெய் போன்றவற்றிலும், மற்றும் மூலிகை உணவுகளிலுமே தங்கியிருந்தனர். நெற்செய்கை பெரிதாகவிருக்கவில்லை. மாடுகளை பாலுக்கும், உழவுத் தொழிலுக்கும், வண்டிகளை இழுத்துச் செல்வதற்குமே பயன்படுத்தினர். மாட்டின் இறைச்சியை ஒரு போதும் உணவிற்காக அக்காலத்தில் வாழ்ந்த மக்கள் பயன்படுத்தினாரல்லர்.
போர்த்துக்கீசர் வந்த பொழுது நெடுந் தீவிலும் யாழ்ப்பாணத்தில் இருந்தது போன்ற சில சாதிப் பிரிவுகளும் இருந்தன. போர்த்துக்கீசர் முன்பிருந்த தேச வழமைச் சட்டங்களின் பிரகாரமே ஆட்சி நடாத்தினர். காணிகளுக்குத் தோம்புகள் எழுதினர். இன்றும் நெடுந்தீவுக் காணிகளின் சில தோம்புகள் யாழ்ப்பாணக் கச்சேரியில் உள்ளதாகக் கூறுகின்றனர். இராசகாரிய முறையில் மக்களிடம் வேலைகள் வாங்கப்பட்டன. சாயவேர் வரி, மீன் குத்தகைவரி, தலைவரி
நெடுந்தீவு மக்களும் வரலாறும் w 23 ܗܝ

Page 28
என்பவற்றின் மூலம் வரிகளைப் பெற்றனர். மேலான உத்தியோகங்கள் யாவும் போர்த்துக்கீசரிடமேயிருந்தன. உயர் குல வேளாளருக்கே ஏனைய உத்தியோகங்கள் வழங்கப்பட்டன. போர்த்துக்கீசர் தமது சமயமான கத்தோலிக்க சமயத்தைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டினர். இதற்காகப் பல கத்தோலிக்க குருமார்களை நெடுந்தீவிற்கு வரவழைத்தனர். நெடுந் தீவின் மத்தியிலும் கிழக்கிலும் கத்தோலிக்க ஆலயங்களைக் கட்டினர். இந்தியாவிலிருந்து பெறப்பட்ட தமிழில் எழுதப்பட்ட கத்தோலிக்க சமய நுால்களை மக்களுக்கு வழங்கியதோடு ஆலயங்களுக்கு வந்து சமயப் பிரசங்கங்களை கேட்குமாறு மக்களைக் கட்டாயப்படுத்தினர். கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவர்களுக்குப் பல வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டதோடு சிறிய உத்தியோகங்களும் வழங்கப்பட்டன. அங்கு வாழ்ந்த சைவ சமய மக்கள் போர்த்துக் கீச அதிகாரிகளுக்குப் ப்யந்து சைவ சமயத்தைத் தலைமறைவாகவே அனுட் டித்தனர். விரதங்களை அனுட்டிப்பதற்கும் பயந்த நிலையில் இருந்த மக்களின் பழக்க தோஷத்தினாலேயே இன்றும் மக்கள் விரதங்களை அனுட்டித்தபின் வாழையிலையைக் கூரையில் செருவும் முறை கையாளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே மக்களால் வழிபட்டு வந்த சைவ ஆலயங்கள் சில தேடுவாரற்று தாமாகவே அழியும் நிலை எய்தின. இவற்றிற்கு உதாரணமாக நெடுந் தீவு கிழக் கிலுள்ள முருகன் கோவில் , குடவிலிக்கண்மையிலுள்ள வீரபத்திரர் கோவில் ,மாவிலித் துறைக்ககண்மையிலுள்ள பிடாரி அம்மன் ஆலயம்,மேற்கிலுள்ள புக்காட்டுவயிரவர் கோவில் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். போர்த்துக்கீச அதிகாரிகளில் சிலர் மக்களிடம் கடுமையாகவே நடந்தனர். தங்களின் சமயங்களைப் பின்பற்றியோரைமட்டும் சமய விடயங்களில் சமமாக நடாத்தினர். போர்த்துக்கீசர் நம்நாட்டுச் சமயங்களின் வளர்ச்சிக்குத் தடையாயிருந்ததோடு, அச்சமயங்களைப் பின்பற்றி ஒழுகியோருக்குத் தீராத் துன்பங்களையும் விளைவித்தனர். அவர்களின் ஆட்சி குறுகிய காலத்தில் முடிவுற்றதாயினும் பலவருடங்களாகியும் அவர்களின் மதமான கத்தோலிக்க சமயமும், அவர்களின் மொழிச் சொற்களான கமிசு, கழிசான், சட்டை, சப்பாத்து, மேசை,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் . 24

கதிரை, பேனை, கடதாசி முதலிய சொற்களும் இன்றும் எம் மத்தியில் நிலைத்து நிற்கின்றன. இவர்களும் தங்கள் தேவைகளுக்காகக் குதிரைகளை இறக்குமதி செய்து வைத்திருந்தார்கள். ஆனால் ஒல்லாந்தரைப்போல் அவற்றில் அதிக கவனமெடுக்கவோ, ஏற்றுமதி செய்யவோ இல்லை என அறியப்படுகிறது.
ஒல்லாந்தர் ஆட்சிக்காலம்
ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியபின், தங்களின் பாதுகாப்பிற்கு, வடக்கேயுள்ள தீவுகளைக் கைப்பற்றி அரண் செய்வது மிகவும் முக்கியமெனக் கருதினர். அதனால் தீவுகளிலிருந்த போர்த்துக்கீசர் ஆட்சியைக் கைப்பற்றி, அவர்களைத் துரத்தியதோடல்லாமல், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஊர்காவற்றுறை, நெடுந்தீவு ஆகிய தீவுகளில் தம் கோட்டைகளைக் கட்டிப் பொறுப்பான அதிகாரிகளையும் நியமித்தனர். இன்றும் நெடுந்தீவில் இக்கோட்டைகளின் சிதைவுகள் காணப்படுகின்றன. ஒல்லாந்தர் காலத்தில், போர்த்துக்கீசர் காலத்தை விட நெடுந்தீவில் மக்கள், விவசாயங்களை மேற்கொள்ளவும், சமயங்களை ஒரளவு பயமின்றிக் கைக் கொள்ளவும் முடிந்தது. வியாபார நோக்கையே பிரதானமாகக் கொண்டிருந்த ஒல்லாந்தர் நெடுந்தீவில் குதிரை வியாபாரம் செய்தனர். இதனால் அதிகவருமானத்தையும் பெற்றனர். இவர்கள் குதிரை வளர்ப்பிற்காக குதிரைகளுக்கான லாயங்களையும், நீர்த்தொட்டிகளையும, கேணிகளையும் வாய்க்கால்களையும் கட்டினர். நெடுந்தீவின் மேற்கே சாறாப்பிட்டி என்ற பகுதியில் குதிரைகள் கட்டிய நீளமான லாயங்களின் பலதுாண்கள் இன்றும் நிமிர்ந்து நிற்பதைக் காணலாம். இவர்கள் குதிரைகளை இறக்குவதற்காகவும் ஏற்றுமதி செய்வதற்காகவும் தெரிந்தெடுத்த துறைமுகமே இன்று மாவிலி என அழைக்கப்படுவதும், நெடுந்தீவு மக்களின் பிரதான துறைமுகமாக விளங்குவதுமாகும். குதிரைகள் ஏற்றப்பட்ட துறைமுகம் ஆகையால் மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று. இவர்கள் காலத்தில் சாயவேருக்கு அதிக கிராக்கி இருந்தது. நெடுந்தீவில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 25

Page 29
காணப்பட்ட சாயவேர் தரத்திலும் உயர்ந்து காணப்பட்டது. இதனால் நெடுந்தீவில் சாயவேர் கிண்டுவதையும் ஒல்லாந்தர் ஊக்கப்படுத்தினர். இதனாலும் ஒல்லாந்தர் அதிக வருமானம் பெற்றனர்.
நெடுந்தீவு மக்களால் கைக் கொள்ளப்பட்ட பருத்திச் செய்கை இவர்கள் காலத்தில் கைவிடப்பட்டது. ஒல்லாந்தர் தம் சமயமான கிறிஸ்தவ சமயத்தை வளர்ப்பதிலும் மக்களிடமிருந்து அதிக வரிகளை அறவிடுவதிலுமே அதிக கவனம் செலுத்தினர். தம் மதகுருமார்ளை நெடுந்தீவிற்கு வரவழைத்ததோடு, மக்களுக்கு மத போதனைகளையும், பிரசங்கங்களையும் நடாத்தினர். கோயிற் பற்றுப் பாடசாலைகளை அமைத்துச் சுதேச மொழிகளையும் போதிக்க உதவினர். சைவசமயத்தவர்கள் இவர்களுடைய காலத்திலும் ஓரளவு பயத்துடனேயே தமது சமிய அனுட்டானங்களைக் கையாண்டு வந்தனர். ஒல்லாந்தர் தம் நாட்டிலுள்ள ஒரு இடத்தின் பெயரான டெல்வ்ற் என்னும் பெயரையே நெடுந்தீவிற்கும் இட்டனர். ஒல்லாந்தரின் மாகாணப் பிரிவுகள் பழைய படியேயிருந்தன. யாழ்ப்பாணப் பிரிவை ஓர் கொமாண்டோர் கொழும்புக் கவர்னரின் கீழ் ஆண்டு வந்தான். அவனின் கீழ்த் திசாவைகள் நியமிக்கப்பட்டனர். இவனுக்குக் கீழ் ஒப்பர் கூப்மன், ஒண்டர் கூப்மன் ஆகிய உத்தியோகத்தர்களும் இவர்களுக்குக் கீழ் முதலிமாரும் நியமிக்கப்பட்டனர். நெடுந்தீவிலும் ஒப்பர் கூப்மன் போன்ற அதிகாரிகளும், டொன் பிலிப் என்னும் முதலியும் பிற மேலதிகாரிகளும் நியமிக்கப்பட்டிருந்தனர். நெடுந்தீவிலும் ” நீதிபரிபாலனத்திற்காக கீழ்க்கோடு இருந்துள்ளது. இவர்களுடைய நீதிபரிபாலனம் வாய்முறைப் பாடுகளிலேயே தங்கியிருந்தது. தீவுப்பற்றுக்களில் முதலியார்மாரே நீதிபரிபாலனம் செய்தனர். இவர்கள் காலத்திலும் இராசகாரிய ஊழியம் செய்தல், தலைவரி, நிலவரி கொடுத்தல், தென்னைவரி, கல்யாணவரி, போன்ற பல வரிகள் இருந்தன. பள்ளிக்கூடம் விட்ட சகல ஆண்பிள்ளைகளும் தலைவரி இறுக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். வயது சென்றவர்களும், அங்கவீனர்களுமே விலக்கப் பட்டிருந்தனர். வருடத்துக்கொருமுறை மக்களின் பிரதானிகள் ஒல்லாந்த அதிகாரிகளை வந்து சந்தித்து, காணிக்கைகள் கொடுத்து
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 26

தம் குறை நிறைகளைத் தெரிவிக்க வேண்டுமெனக் கேட்கப்பட்டனர். சிறு சிறு வர்த்தகங்களையும், நெடுந்தீவு மக்கள் செய்யத் தலைப்பட்டனர். துறைமுகத்தில் பல வத்தைகளும், பாய் வள்ளங்களும் தரித்து நின்றன. இந்தியாவிற்கு பனாட்டு, கிழங்கு, எண்ணெய், தேங்காய்,
பனைமரம் ஆகியன விற்று வந்தனர். சில வருடங்களின் பின்னர்
நெடுந்தீவு மக்கள், நேரடியாக இந்தியாவிற்குச் சென்று வருவதை
ஒல்லாந்தர் தடை செய்தனர். ஒல்லாந்தர் காலத்தில் யாழ்ப்பாணத்திலும் அதிக சாதிப்பிரிவுகளிருந்தன. அதேபோல்
நெடுந்தீவிலும் தொழில் ரீதியான சில சாதிப் பிரிவுகளிருந்தன.
வேளாளர் உயர்ந்த சாதியினராகக் கணிக்கப்பட்டனர். இவர்களின் தொழில் கமமாகவேயிருந்தது. சிறிய உத்தியோகங்களும்
இவர்களுக்கே வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த மக்களைப் பற்றி போல்டேயஸ் பாதிரியாரின் கூற்று நெடுந்தீவில் அப்பொழுது வாழ்ந்த மக்களுக்கும் பொருந்தும்.
கிறீஸ்தவ மார்க்கம் இங்கு உண்டான நாள் முதல் வேளாளர் சாதியே தமிழரின் தலையிடத் தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றது. முற்காலம் பிராமணர் தம்மை முதற்
சாதியென்பர். வேளாளர் சீலையை இடுப்பிற் கட்டி
கால்களுக்கூடாக இழுத்துக் சொருகிச் கொள்வார்கள். காலில்
செருப்புத் தொடுப்பார்கள். மேற் சொல்லிய அரைச்சீலையிலே
மடிவிட்டு அதிலே வெற்றிலை பாக்கும் தேவையானபோது பாவிப்பதற்காக கொஞ்சம் கடதாசியும் வைத்திருப்பார்கள். இடையிலே ஓர் வெள்ளி கட்டிய எழுத்தாணியும் வைத்திருப்பதுண்டு. காது இளமையிலேயே குத்திக் கடுக்கன் போட்டிருப்பார்கள். இவர்களின் தொழில் கமமே. அனேக ஆடு மாடுகளை வைத்திருந்தார்கள். இவர்கள் வீடு வளவுகள் புனிதமாயிருக்கும். கொல்லைகளில் வெற்றிலை முதலியன நாட்டப்பட்டிருக்கும். வேளாளர் தங்கள் குடும்பத்திலேயே விவாகம் செய்வார்கள். வழக்குப் பேசுவதில் கெட்டிக்காரர். ஒருவர் ஒருவரில் எரிச்சலுள்ளவர்ளாயிருப்பதால் ஓர் அற்ப காரியத்திற்கும் கோட்டுக்குப் போய்விடுவார்கள். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் நெடுந்தீவு மக்கள் போர்த்துக்கீசர் காலத்தை விட, நிம்மதியாகவும்,
முன்னேற்றமாகவும் வாழ்ந்தனர் என்றே அறிய முடிகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 27

Page 30
ஆங்கிலேயர் ஆட்சிக்காலம்
ஒல்லாந்தரிடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஆங்கிலேயர் தங்கள் நிர்வாகத்தை இலகு படுத்தும் நோக்கமாக இலங்கையை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தனர். யாழ்ப்பாண நாடு வடமாகாணத்திற்குள் அடங்கியது. யாழ்ப்பாண நாடு, யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு, வலிகாமம் கிழக்கு , வலிகாமம் வடக்கு, வடமராட்சி, தென்மராட்சி, பச்சிலைப்பள்ளி, தீவுப்பற்று என்னும் எட்டு மணியகாரர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. வடமாகாண அதிகாரியான ஏசெண்டருக்குக் கீழ் ஒவ்வொரு ஊருக்கும் அவருக்கு உதவியாக ஒவ்வொரு மணி யகாரரும், அவரின் கீழ் பல உடையார் மார்களும், விதானைமார்களும் நியமிக்கப்பட்டிருந்தார்கள். நெடுந்தீவிலும் மணியகாரர் ஒருவரும் உடையார் ஒருவரும், நெடுந்தீவின் மேற்கு, மத்தி, கிழக்கு ஆகிய மூன்று பிரிவுகளுக்கும் மூன்று விதானைமார்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அரசிறையை ஒழுங்காகச் சேர்ப்பதற்கும், பிரசைகளைப் பாதுகாப்பதற்கும் உதவி புரிந்து வந்தனர். மணியகாரரின் காரியாலயமும் நெடுந்தீவின் மத்தியில் ஒல்லாந்தரின் கோட்டைக்கண்மையில் அமைக்கப்பட்டிருந்தது. வழக்குகளை விசாரிப்பதற்கான கிராமக்கோடு ஒன்றும் இக்காரியாலயத்திற்கு அண்மையில் அமைக்கப்பட்டிருந்தது. இக்கிராமக் கோடு இன்றும் இயங்கிவருகிறது. சிறிய வழக்குகளை விசாரிக்க வெளியில் இருந்து நீதவான் வருவார். வழக்கறிஞர்கள் பேசுவதில்லை. நீதவானுக்கு உதவியாக உள்ளுரிலுள்ள யூரிமார்களின் தீர்மானப்படி தீர்ப்புகள் நடந்தன. தீவுப்பற்றுக்கான பொலீஸ்கோடு ஊர்காவற்றுறையில் நிறுவப்பட்டிருந்தது. பணக்காரர், ஏழைகள், படித்தவர், படிக்காதவர் என்றில்லாது சகலருக்கும் சம நீதி கிடைக்க வாய்ப்பேற்பட்டது. வழக்குத் தீர்ப்புக்களில் திருப்தியடையாதவர்கள் மேற்கோடுகளுக்கு வழக்குகளைக் கொண்டு செல்லவும், அதிலும் திருப்திப் படாதவர்கள் மறு பரிசீலனைக்காக சுப்ரீம் கோட், பிரிவுக் கவுன்சில் ஆகியவற்றில் மேல் முறையீடு செய்யவும் வாய்ப்புக்கள் அளிக்கப் பட்டன. மக்கள் சுதந்திரமாகத் தமது பூசைகளையும்,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் Y ጎ ሩ 28
坎

சமய அனுட்டானங்களையும் கைக்கொண்டனர். பூசைகளின்றியும், மக்கள் வழிபாடின்றியும் இருந்த சைவ சமய ஆலயங்கள் புனருத்தாரணஞ் செய்யப்பட்டன. புதிதாகவும் சில ஆலயங்கள் அமைக்கப்பட்டன.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இங்கிலாந்திலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் பல கத்தோலிக்கமத குருமார்களும், கிறீஸ்தவமத குருமார்களும் தமது மதத்தைப் போதிப்பதற்காக ஆங்கிலேயரால் வரவழைக்கப்பட்டார்கள். அவர்களின் வருகையால் யாழ்ப்பாண மக்களின் கல்வி நிலை உயர்ந்தது. தீவுப்பற்றில் வட்டுக்கோட்டையில் அமெரிக்க மிசனறிமார்களினால் பெரிய ஆங்கிலக் கல்லுாரியான யாழ்ப்பாணக் கல்லுாரி ஸ்தாபிக்கப்பட்டது. உடுவிலில் பெண்களுக்கான ஆங்கிலக் கல்லுாரி ஸ்தாபிக்கப்பட்டது. இக்கல்லுாரிகளில் வசதி படைத் த கிறிஸ்தவ மதத் திற்கு மாறிய சில மாணவர்களும்,மாணவிகளும் நெடுந்தீவிலிருந்தும் சென்று கல்வி கற்றார்கள். நெடுந்தீவிலும் அமெரிக்கன் மிசனறிப் போதகர்கள் வந்து சமயத்தைப் பரப்பியதோடு நெடுந்தீவு கிழக்கிலும் மேற்கிலுமாக இரு அமெரிக்கன் மிசன் பாடசாலைகளை அமைத்து, தமிழ் மொழிமூலம் கல்வி போதித்தார்கள். பின்னர் மேற்கிலுள்ள பாடசாலை எரிந்து போனதினால் கைவிடப்பட்டது. நெடுந்தீவின் பிரதான வீதியின் இரு பக்கமும் வீதி எங்கும் நிழல் தரும் மரங்கள் நாட்டப்பட்டன. மக்களின் விவசாயத்திற்காக ஆங்காங்கே காணப்பட்ட பல குளங்கள் திருத்தப்பட்டு வடிகால்கள் அமைக்கப்பட்டு உவர்நீர் உட்புகாதவாறு தடைகள் போடப்பட்டன. விவசாயத்திற்காக பெரிய கழி, வெட்டுக்கழி, தாமிழாப்புக் கழி, சண்ணாங்குளம், நெழுவினிக் குளம் போன்ற நன்னீர்க் கழிகளும்,குளங்களும் ஆழமாகத் தோண்டப்பட்டு, மழை நீர் சேகரித்து வைக்கப்பட்டு விவசாயத்திற்கு உபயோகப்படுத்த ஆவன செய்யப்பட்டது. மக்கள் தம் வெளியூர்ப் பிரயாணங்களுக்காகப் பாய் வள்ளங்களையும், வத்தைகளையுமே முன்னர் பயன்படுத்தி வந்தனர், ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் முதன்முதலாக
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 29

Page 31
1937ஆம் ஆண்டில் சில்வஸ்பிறே என்னும் மோட்டார் லோஞ் நெடுந் தீவிலிருந்து ஊர்காவற்றுறைக்குச் சேவைக்காக விடப்பட்டது. இதில் நாற்பது பிரயாணிகள் மட்டுமே செல்ல முடியும். இதில் முதலாம் வகுப்பு இரண்டாம் வகுப்பென இரண்டு பிரிவுகள் இருந்தன. இவ் வகுப்புக்களுக்கான கட்டணங்களும் வேறாகவேயிருந்தன. இம் மோட்டார் படகு ஒருநாளில் ஊர்காவற்றுறையில் இருந்து புறப்பட்டு நெடுந்தீவை வந்தடைந்து மீண்டும் ஊர்காவற்றுறையை அன்றுமாலையே சென்றடையும். ஒரு முறை நெடுந்தீவிலிருந்து ஊர்காவற்றுறையைச் சென்றடைய மூன்று மணித்தியாலயங்கள் எடுக்கும். இது அக்காலத்தில் நெடுந்தீவு மக்களுக்குக்கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவே யிருந்தது. மக்கள் செலுத்திவந்த வரிகளான சாயவேர் கிண்டல் வரி, தலைவரி, மீன்வரி என்பனவும் நீக்கப்பட்டன. கல்வி வளர்ச்சிக்காகவும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கத்தோலிக்க திருச்சபை, சைவ வித்தியா விருத்திச் சங்கம், அமெரிக்க மிசனறி போன்றன பல சுதேசிய பாடசாலைகளை அரசின் அங்கீகாரத்துடன் ஆரம்பித்தன. இவற்றுக்கான மானியங்களை ஆங்கிலேயரின் அரசு வழங்கியது. ஆங்கிலேயர் காலத்தில் நெடுந் தீவில் விவசாயம் , சிறுகைத்தொழில் மீன்பிடி என்பனவும் விருத்தி பெற்றதோடு சிறிய வியாபார முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆரம்பத்தில் பண்டமாற்று வியாபாரங்களும் நடைபெற்றன. இக்காலத்தில் LD&856f ஒற்றுமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்தார்கள். கூட்டுறவு முறையில் தங்கள் கருமங்களைச் செய்தார்கள். கமம்செய்தல், வீடு வேய்தல், வேலியடைத்தல், பகிர் கட்டுதல் போன்ற பல வேலைகளைக் கூட்டுறவு முறையில் வெகு இலகுவாகவும் மகிழ்வுடனும் செய்தனர். ஒருவருக்கொருவர் உதவி செய்தல் விருந்தோம்பல் ஆகிய அரும்பெரும் குணங்களில் சிறந்து விளங்கினர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் மக்கள் போர்த்துக்கீசர் ஒல்லாந்தர்காலத்தை விட நிம்மதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தார்களென்றே அறியமுடிகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 30

இயல் 5 GFLDuu 66TsfőFf
நெடுந்தீவு மக்கள் ஆதிகாலம் தொட்டு சைவசமயத்தவர் களாகவேயிருந்திருக்கின்றார்கள், என்பது அன்னியராட்சிக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே கட்டப்பட்ட சைவ ஆலயங்கள் காணப்படுவதைக்கொண்டு இதனை உணர்ந்து கொள்ளலாம். அன்னியரான போர்த்துக்கீசரின் வருகையின் பின்பே அங்கு கத்தோலிக்க மதம் பரவியது. போத்துக்கீசர் தமது ஆட்சியில் கத்தோலிக்க மதத்தைப் பரப்புவதில் அதிக ஆர்வம் காட்டினர். பல கத்தோலிக்க குருமார்களைத் தங்கள் நாட்டிலிருந்து வரவழைத்து, மக்களுக்கு கத்தோலிக்க சமயத்தைப் போதித்தனர். போர்த்துக்கீசரின் கட்டாய மதம் பரப்பலினாலும், கத்தோலிக்க மதத்தைப் பின்பற்றியவர்களுக்குக் கொடுக்கப்பட்ட சலுகைகளினாலும், நெடுந்தீவின் மத்தியில் அநேகரும் கிழக்கில் சிலரும், கத்தோலிக்க மதத்திற்கு மாறினர். போர்த்துக்கீசர் காலத்தில் சைவமக்களை அஞ்ஞானிகளென அழைத்தனர். அவர்களைக் கடுமையாகவும் நடாத்தினர். அவர்கள் பயத்துடனும் மறைவாகவுமே சைவசமயத்தை அனுட்டித்தனர். கத்தோலிக்க சமயத்தில் சேர்ந்தோருக்கு வரிச் சலுகைகள் அளிக்கப்பட்டதோடு சிறிய உத்தியோகங்களும் வழங்கப்பட்டன. இதனால் போர்த்துக்கீசர் எம்மைவிட்டுச் சென்று பல ஆண்டுகளாகியும் அவர்களின் சமயம் மக்கள் மத்தியில் இன்றும் நிலைத்து நிற்கின்றது. அச்சமயம் எமது தீவின் கல்வி வளர்ச்சியில் அரும்பணியாற்றியதோடு பல சேவையுள்ளம் கொண்ட கத்தோலிக்க மதகுருமார்களையும், கன்னி யாஸ்திரிகளையும், உலகப்புகழ் பெற்ற பேரறிஞர். வண.தனிநாயகம் அடிகளாரையும், பல கல விமான் களையும் , தோற்றுவித்துள்ளமை போற்றுதற்குரியதாகும். கச்சதீவிலிருந்த அந்தோனியார் கோவிலுக்கும் நெடுந்தீவிலிருந்தே கத்தோலிக்க குருமார்கள் சென்று பூசை செய்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. நெடுந்தீவு மக்களும் வரலாறும் 31

Page 32
பல வருடங்களுக்கு முன் நெடுந்தீவு கிழக்கில் உள்ள அங்தோனியார் கோவிலில் இருந்து அந்தோனியார் சொருபம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மேற்கில் உள்ள பெரியதுறைத் துறைமுகத்திலிருந்து பாய்த் தோணிகள் மூலம் கச்சதீவுக்கு கொண்டுபோய் உற்சவம் நடத்தினர். பங்குனி மாதத்தில் நடக்கும் இந்த உற்சவத்தில் கத்தோலிக்கர்களும் ஏராளமான சைவசமயத்தவரும் சென்று வழிபட்டனர். ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் அவர்கள் தம் சமயமான (பாதிரிசமயம் என மக்களால் அழைக்கப்பட்ட புரட்டஸ்தாந்து சமயம் ) கிறிஸ்தவ சமயத்தை வளர்ப்பதிலேயே அதிக ஆர்வம் காட்டினர். இவர்கள் காலத்தில் கட்டாய சமயம் பரப்புதல் இல்லாதிருந்த போதிலும் தம் சமயத்தில் சேர்ந்தவர்களுக்கே உத்தியோகங்களையும் வரிச் சலுகைகளையும் அளித்தனர். மேற்கில் ஒன்றும் மத்தியில் ஒன்றுமாக இரண்டு கோவிற்பற்றுப் பாடசாலைகளின் மூலம் தம் சமயத்தைப் பரப்பினர். இக்காலத்தில் வாழ்ந்த கத்தோலிக்க மக்களும் சைவசமய மக்களும் உறுதியுடனிருந்ததால் இச் சமயத்திலி சேர்ந்து கொண்ட மக்கள் மிகச் சிறு தொகையினராகவே இருந்தனர். சிலர் அரசின் சலுகைகளுக்காக அகத்தில் சைவராகவும், புறத்தில் கிறீஸ்தவராகவும் நடந்து கொண்டனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மக்களுக்குப் பூரண மத சுதந்திரம் வழங்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் தத்தம் மதங்களைச் சுதந்திரமாக அனுட்டித்தனர். சைவசமய ஆலயங்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதோடு புதிய ஆலயங்களும் அமைக்கப்பட்டன. இக்காலத்தில் பல உள்ளூர் இந்து சமயப் பெரியார்களும், சைவசமயப் பிராமணக் குருமாரும் சைவம் தழைக்க அரும் தொண்டாற்றினர். இவர்கள் வரிசையில் பிராமணக் குருக்கள் மார்களான நாகலிங்க ஐயர், அவர்களின் வழித்தோன்றல்களான தியாராசாக்குருக்கள், இரத்தினசாமிக்குருக்கள் ஆகியோர் தீவின் மேற்குப் பகுதியிலும், கிழக்கில பசுபதி குப் புச் சாமி ஐயர் அவர்களும் அரும்பணியாற்றினார்கள். இவர்களுடன் அங்கிருந்த சைவசமயப் பெரியார்களும், பண்டிதர்களும், சைவஅதிபர்களும் ஆசிரியர்களும் பாடசாலைகள் மூலமும், ஆலயங்கள் மூலமும் சைவத்தையும்,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 32

தமிழையும் வளர்த்தனர். இன்று நெடுந்தீவில் நெழுவினி விநாயகர் ஆலயம், கரமத்தை முருகன் ஆலயம், ஐயனார் ஆலயம், காளிகோவில், நடுக்குறிச்சிப் பிள்ளையார் கோவில், காட்டுப் பிள்ளையார் கோவில், கந்தசாமியார் கோவில், பிடாரி அம்மன் கோவில், வீரபத்திரர் கோவில், பப்பரவர்கோவில், தெற்கேயுள்ள அம்மன் கோவில் எனப் பத்துக்கு மேற்பட்ட சைவ ஆலயங்களும், அந்தோனியார் கோவில், சவேரியார் கோவில், மாதா கோவில், யுவானியார் கோவில், ஆசையப்பர் கோவில், தொம்மை அப்பர் கோவில், சென்ற் லோறஞ்சியார் கோவில் என ஏழு கத்தோலிக்க தேவாலயங்களும், ஒரு புரட்டஸ்தாந்து மத ஆலயமும் இருக்கின்றன.
இவற்றில் பூசைகளும் வருடாந்த உற்சவங்களும் சிறப்பாக நடந்து வருகின்றன. நெழுவினி விநாயர் ஆலயத்திலும், கரமத்தை முருகன் ஆலயத்திலும் திருவிழாக்கள் வருடம் தோறும் சிறப்பாக நடாத் தப் பட்டு வருவதோடு இத் திருவிழாக் களில் வெளிமாவட்டங்களில் குடியேறிய நெடுந்தீவு மக்களும் பெரிய அளவில் கலந்து கொள்வார்கள்.வடமேற்கிலுள்ள ஐயனார் கோவிலிலும், நடுக்குறிச்சிப் பிள்ளையார் கோவிலிலும் சில வருடங்களுக்கு முன் வருடாந்த உற்சவங்கள் நடைபெற்றன. மக்கள் புலம் பெயர்ந்தமையால் இவ்வாலயங்களின் உற்சவங்கள் தடைப்பட்டுள்ளன. காட்டுப்பிள்ளையார் கோவில்,புனரமைப்புச் செய்யப் பட்டு சிலவருடங்கள் அலங்கார உற்சவங்கள் நடைபெற்றன. இவ்வாலயம் மீண்டும் புனருத்தாரணம் செய்யப்பட்டதோடு அங்கு சிறப்பாக கும்பாபிஷேகமும் நடைபெற்றுள்ளது. கிழக்கிலுள்ள கந்தசாமியார் கோவிலிலும் முன்னர் வருடாந்த உற்சவங்கள் நடந்ததென அறியப் படுகிறது அங்கு முற்காலத்தில் தேர்த் திருவிழா நடைபெற்று வந்துள்ளது.இதற்கு ஆதாரமாக அங்கு அண்மைக்காலம் வரை மரத்தாலான ஒரு பெரிய தேர் இருந்தது. சைவ சமயத்தவரும், கிறிஸ்தவ, கத்தோலிக்க மதத்தினருமான நெடுந்தீவு மக்கள் சமய சமரசத்துடன், தத்தம் மதங்களைச் சிறப்புடன் பின்பற்றி வருகின்றனர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 33

Page 33
புனித யுவானியார் தேவாலயம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 34
 

ஆலமாவனப் பிள்ளையார் ஆலயம்
श्र 'ड्रल | ;" š:
་་་་་་་་་་་་་་་་་་་་་
༣.
,
காளிகோவில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 35

Page 34
இயல் 6 கல்வி வளர்ச்சி
நெடுந்தீவில் சமய அடிப்படையிலான கல்விக்கூடங்கள் ஆரம்பிக்கப்பட முன்பே, பல திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வந்தது. ஆரம்பத்தில் எழுத வாசிக்கத் தெரிந்தால் போதும் என்ற அடிப்படையிலேயே கல்விகற்பிக்கப்பட்டு வந்தது. பின்னர் சில மாணவர்கள் புராணங்கள், இலக்கண நூல்கள், நிகண்டு முதலியவற்றையும் கற்கக்கூடிய வாய்ப்புக்களையும் பெற்றனர். மேற்கில் பிடாரி கோயிலடி, சென்ற். லோறஞ்சியார் கோயிலடி, மத்தியில் ஆஸ்பத்திரியடி, கிழக்கில் கந்தசாமியார் கோயிலடி, காட்டுப்பிள்ளையார் கோயிலடி முதலிய இடங்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்கள் நட்ைபெற்று வந்துள்ளன. பெற்றோர் கொடுக்கும் ஊதியத்துடனும், குரு சிஷய முறையிலும் இப்பள்ளிக்கூடங்கள் நடைபெற்றன. அந்நியர் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் றோமன் கத்தோலிக்க குருமார்களாலும் புரட்டஸ்தாந்து சமயப் போதகர்களாலும் கல்லுாரிகள் நிறுவப்பட்டன. இவற்றில் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களுக்கு மாறியோருக்கே கூடிய வசதிகளும், உயர் கல விக் கான வாயப் ப் புக் களும் அளிக் கப்பட்டன. நெடுந்தீவிலிருந்தும் மதம் மாறிய ஒரு சில மாணவர்கள் கொழும்புத் துறை, தெல்லிப்பழை, உடுவில் முதலிய இடங்களிலுள்ள கிறீஸ்தவ கல்லுாரிகளுக்கும் சென்று கற்று ஆசிரியர்களாகவும், அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் நியமனங்கள் பெற்றனர்.
மதமாற்றத் தை விரும் பாதவர்களும் , தக்க துாண்டுதல்களைப் பெறாத மாணவர்களும் வாளாவிருந்தனர். ஏனையோர் திண்ணைப் பள்ளிக் கூடங்களிலேயே கல்வி கற்றனர். கத்தோலிக்க மதகுருமாரின் வருகைக்குப் பின்னரே நெடுந்தீவு மக்களின் கல்வி முறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இக்காலத்தில் அடிகளார் சவுரிமுத்து சந்திரசேகரம் அவர்கள், கல்வி வளர்ச்சிக்கு அளப்பரிய தொண்டாற்றினார். இவரது காலத்தில் திணிணைப் பள்ளிக் கூடங்கள் பொதுப் பாடசாலைகளாக மாறின. நெடுந்தீவின் மூன்று குறிச்சிகளிலும் நெடுந்தீவு மக்களும் வரலாறும் 36

மூன்று கத்தோலிக்க பாடசாலைகள் நிறுவப்பட்டன. இவைகளில் கிழக்கில் நிறுவப்பட்ட சவேரியார் கோவில் பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக திரு. தும் பரிவினாயகரும் (கொனிஸ்ரன்ரைன்) மத்தியில் அமைக்கப்பட்ட யுவானியார் பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக திரு. நாகநாதரும் (பற்றிக்)மேற்கில் அமைக்கப்பட்ட பாடசாலைக்கு தலைமை ஆசிரியராக திரு. வைரவநாதன் (ஜோசேப்) ஆகியோரும் கடமையாற்றினார்கள். முதலில் நெடுந்தீவில் றோமன் கத்தோலிக்க பாடசாலைகளும் புரட்டஸ்தாந்து மதப் பாடசாலைகளுமே நிறுவப்பட்டன. மாவிலித் துறையில் அர்ச்சவேரியார் பாடசாலையும், நடுக்குறிச்சியில் றோமன் கத்தோலிக்க பாடசாலையும், ஒரு அமெரிக்க மிசன் பாடசாலையும், மேற்கில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலையும் சாறாப்பிட்டி என்ற இடத்தில் ஒரு கத்தோலிக்க பாடசாலையும் நிறுவப்பட்டன. இவை தம் சமயத்தை பரப்பும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப் பட்ட போதிலும் பலரைச் சமயம் மாற்றியது மட்டுமன்றி ஏனைய பல மாணவர்களுக்கும் கல்வி பயிலும் வாய்ப்பை அளித்தன. இப்பாடசாலைகளிலிருந்தே நெடுந்தீவில் கல்வி மறுமலர்ச்சி ஏற்பட்டது. இவற்றின் பின் பல ஆண்டுகளுக்குப் பின்னரே சைவ சமயப் பற்றுள்ள பல பெரியார்களும் பணவசதி படைத்தவர்களும் விழிப்புற்று சைவ சமய ஸ்தாபனங்களை நிறுவி, சைவ சமய அடிப்படை அறிவை மக்கள் பெற ஆவன செய்தனர். 1923 ஆம் ஆண்டில் சைவ வித்தியாசாலையையும் நிறுவி, சைவ சமயக் கல்வியை வளர்த்தனர். இப்பாடசாலைகளை அரசில் பதிவு செய்வதற்கு பல மாதங்கள் எடுத் தன. முதலில் சுப் பிரமணிய விதி தியாசாலையே பதிவுசெய்யப்பட்டது. சைவப் பிரகாசவித்தியாசாலையை பதிவு செய்வதில் ஏற்பட்ட தாமதத்தால் வீடுதோறும் பிடியரிசி சேர்த்து அதன் வருமானத்தைக் கொண்டே பாடசாலை இயங்கியது. பின்னர் இப்பாடசாலை சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தினரிடம் கையளிக்கப்பட்டது. இப்பாடசாலையை நெழுவினிப் பிள்ளையார் கோவிலில் வைத்து சைவ சமய சம்பிரதாயப்படி பொறுப்பு ஏற்றுக்கொள்ள சைவ வித்தியாவிருத்திச் சங்கச் சார்பில் வந்தவர் நெடுந்தீவின் பரம்பரையில் உதித்தவரும் பின்னாளில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் *ሩ 37

Page 35
இலங்கைப் பாராளுமன்றத்தின் முதல் சபாநாயகருமான சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களாவார். இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்காக திரு. அம்பலவாணர் கணபதிப்பிள்ளை, திரு. சு.நாகேந்திரர், திரு.இ. சுவாமிநாதர், திரு.நா. வேலுப்பிள்ளை ஆகிய சைவ அபிமானிகள் முன்னின்று உழைத்தனர். மேற்கில் சைவப்பிரகாச வித்தியாசாலையும், மத்தியில் றோமன் கத்தோலிக்க பாடசாலையுமே சிரேஷ்ட பாடசாலைகளாக இயங்கி பத்தாம் வகுப்பு வரை கல்வி புகட்டின. மத்தியில் அமைந்த றோமன் கத்தோலிக்க பாடசாலை, கத்தோலிக்க மாணவருக்கு மட்டுமன்றிப் பல சைவமாணவர்களும் சேர்ந்து படித்து கல்வியில முன்னேற்றம் பெற வாயப் ப் பளித்தது. இப்பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் பலர் ஆசிரியர்களாகவும், அதிபர்களாகவும் பணியாற்றினர். மத்தியில் அமைந்துள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் எட்டாம் வகுப்பு வரை கல்வி கற்கக் கூடியதாகவிருந்தது.
மேலும் பல வசதி படைத்த பெற்றோர் தம் பிள்ளைகளை யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டையிலுள்ள யாழ்ப்பாணக்கல்லூரி, மத்தியகல்லூரி, வேம் படி மகளிர்கல லுரி, இராமநாதன் கல்லுாரி, ஸ்கந்தவரோதயாக் கல்லூரி, இளவாலை கன்னியர் மடம் முதலிய கல்லூரிகளுக்கு அனுப்பிப் படிப்பித்தனர். இம்மாணவர்களின் திறமையையும் விவேகத்தையும் அவதானித்த அக்கல்லூரிகளின் அதிபர்கள் நெடுந்தீவிலிருந்து வரும் மாணவர்களை விரும்பிச் சேர்த்துக் கொண்டனர். நெடுந்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ வித்தியா விருத்திச் சங்க அனாதைகள் விடுதிச் சாலைக்கும்,இப்பொழுது முத்துத் தம்பி மகா வித்தியாலயம் எனப்படும் முன்னாள் சாதனா பாடசாலைக்கும் முக்கிய பங்குண்டு. தமிழ்க் கல்விக்காக பலர் அங்கு சென்று கற்று நல்ல தமிழ் அறிவைப் பெற்று ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். அக்காலத்தில் மதம்மாறிய பலர் மீண்டும் சைவசமயிகளாக மாறிச் சைவசமயப் பணிகளில் முழு மூச்சாக ஈடுபட்டனர்.சிலர் சைவப்பாடசாலைகளை நிறுவுவதற்கும் உதவியளித்தனர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 38

பிற் காலத் தில் நிறுவப் பட்ட சைவ ஆரம்ப பாடசாலைகளுள் பூரீஸ்கந்தா பாடசாலையை அமரர் திரு. நா. வேலுப்பிள்ளை ஆசிரியரும், மங்கையற்கரசி வித்தியாசாலையை அமரர் திரு. க. கணபதிப்பிள்ளை ஆசிரியரும், மகேஸ்வரி வித்தியாசாலையை அமரர். திரு. ஆ. கந்தையா ஆசிரியரும், சகோதரர்களும், இராமநாத வித்தியாசாலையை திரு. இரா. சுப்பிரமணியம் ஆசிரியரும், பாரதி வித்தியாசாலையை திரு.தி. கணபதிப்பிள்ளை ஆசிரியரும் நிறுவித் தாமே பல ஆண்டுகள் அதரி பர்களாக விருந்து நடாத்தனர். செல் லம் மா வித்தியாசாலையை அமரர் திரு. சு. நகேந்தரர் நிறுவினார். இவர்கள் எல்லோரும் காணிகளை இலவசமாக வழங்கியும், கட்டிடங்களைத் தம் செலவில் கட்டியும், சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பேற்று அரசில் பதிவு செய்யும் வரை சகல செலவுகளையும் தாமே பொறுத்து கல்வியையும் இலவசமாக வழங்கினர். மாணவர்கள் அதிக துாரம் சென்று சிரமப்படாமல் தத்தம் கிராமங்களில் கல்வி பெறும் வாய்ப்பை ஏற்படுத்திய இவர்களின் கல்விச் சேவை நெடுந்தீவின் கல்வி வளர்ச்சியின் முக்கிய பங்களிப்பாகும்.
மற்றும் புங்குடுதீவைச் சேர்ந்தவரும், நெடுந்தீவில் திருமணம் செய்தவருமான திரு.எஸ். சேதுபதி, திரு.அ. திருச்செல்வம், திரு.எஸ். ஞானப்பிரகாசம், திரு.வே. சின்னையா, திரு.எஸ். சின்னப்புநாயகம், திரு.எஸ். அமிர்தநாதர், திரு. யோசேப் சின்னத்துரை என்பாரும் ஆரம்ப காலம் முதல் பல ஆண்டுகள் அதிபர்களாகவிருந்து கல்விப்பணி புரிந்தவர்களாவர். திரு. ஏ.டீ. தம்பையா, திரு.க. இராமநாதன் என்பார் அமெரிக்கமிசன் பாடசாலை அதிபர்களாகவிருந்து அரும்பணியாற்றினார்கள். திரு. ஆ வைத்தியநாதர், திரு.இ. வேலுப்பிள்ளை, திரு.வே. நாகநாதர், திரு.க. இரத்தினராசா, திரு.சோ. ஞானராசா என்போர் பிந்திய காலப்பகுதியில் அதிபர்களாகவிருந்து சேவையாற்றி இத்தீவின் கல்வி வளர்ச்சிக்கு உதவினர். இவர்கள் மட்டுமல்லாது உதவியாசிரியர்களாகவும் உதவி ஆசிரியைகளாகவுமிருந்து இத்தீவின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றிய அனைவரும் பாராட்டுக்குரியவர்களாவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 39

Page 36
செல்லம்மா வித்தியாசாலையில் குரும்பசிட்டியைச் சேர்ந்த திரு.எஸ். இளையதம்பி என்பவர் அதிபராகவிருந்த பொழுது நடந்த ஐந்தாந்தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரே முறையில் மாணவர் பலர் தெரிவாகினர். அவர்கள் பின்பு வேலணை மத்திய மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் உதவியுடன் கற்று, உயர் கல்வியையும் முடித்து அரசாங்க உத்தியோகங்களைப் பெற்றனர்.
சைவ வித்தியாவிருத்திச் சங்கம் மேலும் ஆறு பாடசாலைகளைப் பொறுப்பேற்று நடாத்தியது. இதற்காகக் காணிகளைக் கொடுத்தும், கட்டிடங்களைக் கட்டிக் கொடுத்தும், சைவப் பெரு மக்கள் உதவினர். நெடுந்தீவு மத்தியில் பெண் பிள்ளைகளின் கல்விக்காக ஒரு கத்தோலிக்க கன்னியர் மடமும், பெண்கள் பாடசாலையும் ஆரம்பிக்கப்பட்டன. இதனால் பெண்கள் பலர் கல்வி கற்று முன்னேற்றம் பெறமுடிந்தது. 193540 ஆம் ஆண்டுகளில் சைவப் பிரகாச வித்தியாசாலை கல்விவளர்ச்சியில் அதி சிறப்புற்று விளங்கியது.ஒய்வு நாட்களிலும் மாலை நேரங்களிலும் வகுப்புகள் நடந்தன. கனிட்ட சிரேஷ்ட வகுப்பு மாணவர்கள் மூன்று குறிச்சிகளிலுமிருந்து வந்து இங்கு கல்வி கற்றனர். பண்டித, பால பண்டித வகுப்புகளும் இங்கு நடைபெற்றன. அதிக ஆர்வத்துடன் மாணவர்களுக்கான இவ்வகுப்புக்களை நடாத்தி பல மாணவர்கள் பால, பண்டிதப் பரீட்சைகளில் சித்தியடையப் பெரும் பணி புரிந்தவர் அக்காலத்தில் உதவியாசிரியராகவிருந்த திரு. தி.கணபதிப்பிள்ளை ஆசிரியர் அவர்களே.
1945ல் இலங்கையில் கொண்டு வரப்பட்ட இலவசக் கல்வித் திட்டத்தினால் இலங்கையின் கல்வி வளர்ச்சியில் ஒரு பெரும் புரட்சியே ஏற்பட்டதெனலாம். இதன்காரணமாக நெடுந்தீவிலும் ஒரு கனிட்ட வித்தியாலயம் ஆங்கிலம் கற்பிப் பதற்காகத் தறக் கப்பட்டது. இதுவே பின் னர் மகாவித்தியாலயமாக வளர்ச்சி பெற்றது. இப்பாடசாலை பல பெரியார்களின் முயற்சியினாலும் அப்போதைய அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பாலும் 1946ல் நெடுந்தீவு மத்தியில் திறக்கப்பட்டது. இதற்காக முன்னின்று உழைத்த பெரியார்களில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 40

தரு. சு.நாகேந்திரர் (கொடிவேலி விதானையார்) முதன்மைக்குரியவராவார். இவருடன் பல உள்ளூர்ப் பிரமுகர்களும் ஆசிரியர்களும் அடங்குவர். இப்பாடசாலை 1946ல் அப்பொழுது கல்வி அமைச்சராகவிருந்த மதிப்பிற்குரிய சி.டபிள்யு. கன்னங்கரா அவர்களால், முன்னாள் சபாநாயகர் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. இது நெடுந்தீவின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இதற்காக மக்கள் பணமும் பொருளும் உதவிப் பாடசாலையை ஆரம்பிக்க உதவினர். ஆங்கில மொழி மூலம் இலவசக் கல்வி போதிக்கும் திட்டம் மக்களிடையே அதிக ஆர்வத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தியது. வேறு பாடசாலைகளின் உயர்தர வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த பல மாணவர்களும் இப்பாடசாலையில் வந்து சேர்ந்தனர். இப்பாடசாலைக்கு முதல் அதிபராக பண்டத்தரிப்பைச் சேர்ந்த திரு.சி.வி.எட்வேட்நவரட்னசிங்கம் அவர்கள் நியமிக்கப்பட்டார். இவர் அதிபராகக் கிடைத்தது நெடுந்தீவுமக்கள் செய்த பாக்கியம் என்றே கூறலாம். இவரின் நிர்வாகத் திறமையாலும், வழிகாட்டலாலும், பாடசாலையின் வளர்ச்சியும், மாணவரின்கல்வி வளர்ச்சியும் வெகு வேகமாக முன்னேறியது. இப்பாடசாலையின் வரவால் நெடுந்தீவு மேற்கிலுள்ள சைவப்பிரகாச வித்தியாசாலையிலும். மத்தியிலுள்ள றோமன் கத் தோலிக்க பாடசாலையிலும் மாணவர் தொகை குறைவடைந்தது. கனிட்ட வித்தியாலயத்திலிருந்த ஆசிரியர்கள் யாவரும் மாணவரின் கல்வி வளர்ச்சியிலும் சமூக முன்னேற்றங்களிலும் அதிக பங்காற்றினர். அதிபரின் அயராத முயற்சியினாலும் , ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் கனிட்டவித்தியாலயம், மகாவித்தியாலயமாகத் தரம் உயர்ந்தது. வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்றனர். விஞ்ஞானம், கணிதம், மரவேலை, நெசவு, விவசாயம் ஆகிய விசேட பாடங்களும் கற்பிக்கப்பட்டன. வருடம் தோறும் மாணவர்கள் எல்லாப் பாடங்களிலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். அதிபர் நவரட்னசிங்கம் அவர்களின் சிறந்த நிர்வாகத்தினாலும், வழி காட்டல்களினாலும் மாணவர்கள் பல துறைகளிலும் ஆற்றல் பெற்று விளங்கினர். மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவர்கள் பொறியியலாளர்கள்,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 41

Page 37
வைத்தியர்கள், தபால்அதிபர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், கிராம சேவையாளர்கள், விவசாய உத்தியோகத்தர்கள், சங்கீத நடன ஆசிரியர்களெனப் பலதுறைகளிலும் நியமனம் பெற்றனர்.
அதிபர் திரு. நவரட்னசிங்கம் அவர்களுடன் ,ஒரு தமிழ் ஆசிரிய தராதரப் பத்திரமும், சங்கீத தராதரமும் பெற்ற திரு.க. வல்லிபுரம், ஆங்கில சிரேஸ்ட தராதரப் பத்திரம் பெற்ற செல்வி. பவளம் இராமசாமி ஆகிய மூன்று ஆசிரியர்களுடனும், இருபத்திமூன்று மாணவர்களுடனுமே இவ்வித்தியாலயம் ஆரம்பமானது. அதன் பின்னர் நான்காவது ஆசிரியராக நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட பண்டிதர் திரு.நா. கந்தையா முதல் நியமனம் பெற்று இப்பாடசாலைக்குச் சேவையாற்ற வந்தார். இவரே இவ்வித்தியாலயத்தில் முதல் நியமனம் பெற்ற பயிற்றப்பட்ட தமிழாசிரியராவர்.
ஆங்கிலக் கல்விக்காக வந்து சேர்ந்த வயதான மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருந்தது. இது அதிபர் திரு. நவரட்னசிங்கம் அவர்களின் நெஞ்சை உறுத்தியது. கனிட்ட வித்தியாலயத்தில், அதுவும் ஒரு ஆங்கில பாடசாலையில் தமிழ் சிரேட்ட வகுப்புக்களை நடாத்த முடியாதிருந்தது. மாணவர்களின் நலம் கருதி அவ்வகுப்பை நடாத்த விசேட அனுமதியைப் பெற்றார். இதனாலும் மாணவர் பலர் வந்து சேர்ந்தனர். சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்புகளும் திறமையாக நடந்தன. பலர் விரைவில் சிரேஷ்ட தராதரப் பத்திரம் பெற்று முன்னேற வாய்ப்புண்டானது. இது அதிபர் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனையைக் காட்டுகிறது. இதனை அறிந்த பின்பே ஏனைய தீவுகளிலிருந்த கனிட்ட வித்தியாலயங்களிலும் இவ்வகுப்புக்கள் வைக்கப்பட்டன.
அதிபரின் திறமையையும், நிர்வாக ஆற்றலையும் நேரில் வந்து பார்த்துப் பாராட்டிய அப்பொழுதிருந்த யாழ்ப்பாணக் கல வி அதிகாரியான திரு. நற் குணம் அவர்கள் இவ்வித்தியாலயத்தை வடபகுதியில் ஒரு முன்மாதிரிப் பாடசாலையாக அமைக்க வேண்டுமென ஆர்வம் கொண்டார். அதனால் வேண்டிய வசதிகளைச் செய்து கொடுக்க முன்வந்தார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 42

எல்லாத் துறைகளுக்கும் உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். முத்தமிழையும் வளர்க்க இயற்றமிழுக்கிருந்த பண்டிதர் கந்தையாவுடன், இசைத்தமிழுக்கு புங்குடுதீவைச் சேர்ந்த சங்கீத பூசணம் திரு.பாலசுந்தரம் என்பவரும், நாடகத் தமிழுக்கு இணுவிலைச் சேர்ந்த திரு.எஸ்.சுப்பையா என்பவரும், கணித பாடத்திற்கு கரவெட்டியைச் சேர்ந்த திரு.எம்.ஏ. கந்தப்பு என்பவரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். வடபகுதியில் நடனக் கல்விக்கென ஒரு ஆசிரியரை முதலில் அரசாங்கம் நியமித்தது, இப்பாடசாலைக்கே என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பேறாக மேன்மை தங்கிய எலிசபெத் மகாராணியார் இலங்கைக்கு வந்தபொழுது பொலனறுவையில் நடந்த வரவேற்பு விழாவில் இப்பாடசாலை மாணவர்களைக் கொண்டு நடன ஆசிரியர் திரு. சுப்பையா அவர்களால் தயாரித்து வழங்கிய அருவி வெட்டு நடனம் அகில இலங்கையிலும் முதலாம் இடத்தைப் பெற்றுப் பலரினதும் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
வட்வெட்டித்துறை திரு. எஸ். புவனேஸ்வரராசா (நெசவு), உடுப்பிட்டி திரு. எஸ். வேலுப்பிள்ளை, புங்குடுதீவு திரு. எஸ். பாலசுந்தரம் (சங்கீதம்), இணுவில் திரு. கந்தசாமி ஐயர் (ஆங்கிலம்), நெடுந்தீவைச் சேர்ந்த திரு.மு. நாகமணி, திரு.கா. வேலாயுதம்பிள்ளை (நெசவு), திரு. எஸ். இராசரட்னம், திரு.கே. செல்லையா, மீசாலை எஸ். ராசையா, புத்துார் திரு. எஸ். செல்லத்துரை, கொடிகாமம் பண்டிதர். பொ. கந்தையனார், வசாவிளான் திரு. எஸ். நாகரத்தினம் (மரவேலை) ஆகியோர் மகா வித் தியாலயத் தில் ஆசிரியர்களாகக் கடமை யாற்றியவர்களாவர். இவர்களுடன் ஆசிரியைகளான நயினாதீவு, செல்வி விமலா சின்னப்பு, வேலணை செல்வி. பராசக்தி, செல்வி. சிவக்கொழுந்து, மானிப்பாய், திருமதி. வண. மில்ஸ் போதகள், திருமதி. வண. அம்பலவாணர் போதகள், ஆகியோரும் கடமை யாற்றினார்கள்.
தமிழ்மொழி மூலம் எழுதுவினைஞர் தேர்வுக்காக அரசாங்கம் நடாத்திய பரீட்சையில் தோற்றிய மாணவர்களில் பலர் சித்திபெற்று எழுதுவினைஞர்களாகத் தெரிவாகினர். இதில் இருந்து வித்தியாலயத்தின் தமிழ்மொழிக் கல்வித்திறமை வியந்து
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 43

Page 38
பாராட்டப்பட்டது. இவர்கள் உடனடியாகவே எழுதுவினைஞர் பதவிகளைப் பெற்றதோடு பிற்காலங்களில் உயர் பதவிகளையும் வகித்தார்கள்.
நிரந்தர காணியோ, நிரந்தர கட்டிடங்களோ, தளபாட வசதிகளோ இல்லாத கஷ்டமான காலப்பகுதியில் கடல் கடந்து வந்து இவர்கள் ஆற்றிய சேவைகள் பாராட்டப்படவேண்டியவை. இவர்களுக்குப் பின்னர் நெடுந்தீவைச் சேர்ந்த திரு.எஸ். சோமசுந்தரம், திரு.கு. இராசரட்ணம், என்போரும் கல்விப் பணியைத் தொடர்ந்தனர்.
அதிபர் திரு.சி.வி. எட்வேட் நவரட்னசிங்கம் அவர்களுக்குப் பின்னர் அதிபர்களாக திரு.யோ.க. ஆசிநாதன், திரு.நா.குருநாதி, திரு.ஆர். சின்னத்தம்பி, திருமதி. புஸ்பம் அன்ரனி, ஆகியோர் கடமையாற்றினர். இவர்களில் திரு. ஆசிநாதன் சில மாதங்களும் திரு.குருநாதி சில வருடங்களும் கடமையாற்றினார்கள். திரு.குருநாதி. அதிபராக இருந்த காலத்திலே, புதிதாக விஞ்ஞான கூடத்திற்கு மேலும் ஒரு விஞ்ஞானத்திற்கான அறை கட்டப்பட்டதோடு, விஞ்ஞான பாடத்திற்கான உபகரணங்கள் சிலவும் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் இவருடைய காலத்திலேயே வர்த்தக பாடப் பிரிவும் ஆரம்பிக்கப்பட்டது. அவர்களின் தொடர்ச்சியான சேவைகளும் பாராட்டுக்குரியதே. திரு.ஆர். சின்னத்தம்பி அவர்கள் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பதில் அதிபராகவும், அதிபராகவுமி, நெடுந்தீவுப் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும், பின்னர் பிரதிக் கல்விப்பணிப்பாளராகவும் இருந்து நெடுந்தீவு மாணவர்களுக்கு அதிக சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமதி.புஸ்பம் அன்ரனி அவர்கள் அதிபராக பணியாற்றியதோடு உதவியாசிரியராக இருந்த காலத்தில் விஞ்ஞானக்கல்வியை தொடக்கி வைத்ததோடு மாணவர்கள் விஞ்ஞானப் பாடங்களில் நல்ல பெறுபேறுகளையும் பெறக் காரணமாயிருந்தார். தற்பொழுது திருமதி. சாரதா கிருஸ்ணதாஸ் அவர்கள் அதிபராக இருந்து பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றி
வருகின்றார். இன்றும் இம் மகாவித்தியாலயம் நெடுந்தீவு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் ༣ 44

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒரு சுடர் விட்டெரியும் தீபமாகவே விளங்குகின்றது. நெடுந்தீவின் கல்வி வளர்ச்சியில் கனிட்ட மகாவித் தியாலயம் ஆரம்பமாவதற்குப் பல வருடங்களுக்கு, முன்பிருந்தே கல்விச் சேவை ஆற்றிவந்த சைவ சமயப் பாடசாலைகளும், கத்தோலிக்க பாடசாலைகளும், அமெரிக்க மிசன் பாடசாலைகளும், பல ஆசிரியர்களையும் அறிஞர்களையும் உருவாக்கியதை எவரும் மறுக்க முடியாது. அப்பாடசாலைகளில் சிறந்த சேவையாற்றிய அதிபர்களும், ஆசிரியர்களும் மக்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளனர்.
முன்னர் நெடுந்தீவில் பதினைந்து பாடசாலைகள் இருந்தன. இவற்றுள் ஒரு மகாவித்தியாலயமும், இரண்டு கனிஷ்ட மகாவித்தியாலயங்களும், ஒரு றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரியும், பதினொரு ஆரம்ப பாடசாலைகளும் அடங்கும். அவையாவன மகாவித்தியாலயம், சைவப்பிரகாச வித்தியாசாலை, றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி, றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலை, மங்கையற்கரசி வித்தியாலயம்,மகேஸ்வரி வித்தியாலயம். பாரதி வித்தியாலயம், பூரீஸ்கந்தா வித்தியாசாலை, சிகிரியாம் பள்ளம் றோமன் கத்தோலிக்க பாடசாலை, செல்லம்மா வித்தியாசாலை, சவேரியார் கோவில் பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை, இராமநாதன் வித்தியாசாலை, அமெரிக்கன் மிசன் பாடசாலை, சாறாப்பிட்டி றோமன் கத்தோலிக்க பாடசாலை என்பனவாகும். இவற்றுள் அமெரிக்கன்மிசன் பாடசாலை மகாவித்தியாலயத்துடன் இணைக்கப்பட்டுவிட்டது. மேற்கிலுள்ள கத்தோலிக்க பாடசாலையும் மூடப்பட்டுவிட்டது.
நெடுந்தீவு மகாவித்தியாலய விஞ்ஞான கூடம் நெடுந்தீவு மக்களும் வரலாறும் 45

Page 39
-------------------- yyyyyyyyyyyyyyyyyyyySDSSSyyDeBSDSyyySDDShS
றோமன் கத்தோலிக்க மகளிர் கல்லூரி
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 46
 

மகாவித்தியாலய விளையாட்டுப்போட்டியில் மாணவர்கள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும்
47

Page 40
இயல் 7 நெடுந்தீவின் தொழில் வளங்கள்
நெடுந்தீவின் பொருளாதார வளர்ச்சி அத்தீவின் மூலவளங்களுக்கு ஏற்ப பண்டைக்காலம் தொட்டு வளர்ச்சி பெற்று வந்திருப்பதைக் காணக்கூடியதாகவிருக்கின்றது.
6)68 Tulub
விவசாயமும் மந்தைவளர்ப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்தவையாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தன. பேர்திய விஞ்ஞான, தொழில் நுட்ப வசதிகள் அற்ற அக்காலத்தில் மக்கள் மந்தைகளை வளர்த்து அவற்றின் பயன்களை உணவிற்காகப் பயன்படுத்தியதோடு அவற்றின் உதவிகளுடனேயே விவசாயத்தையும் மேற்கொண்டு வந்தனர். நிலத்தை உழுவதற்கும், சூடுமிதிப்பதற்கும், எருது மாடுகளைப் பயன்படுத்தினர். மந்தைகளின் எருக்களைப் பசளையாக உபயோகித்தனர். உள்ளூர்ப் பிரயாணங்களுக்கு மாட்டு வண்டிகளைப் பாவித்தனர். ஆரம்ப காலங்களில் குளங்களில் நீரைத் தேக்கி வைத்து அவற்றின் உதவியுடன் விவசாயம் செய்தனர். சில இடங்களில் நெற்செய்கையும் இருந்தது. இன்றும் வரம்புகள் கட்டப்பட்ட வயல்கள் காணப்படுவதும், சில காணிகளின் பெயர்கள் வயல்கள் என அழைக்கப்படுவதும் காணக்கூடியதாகவிருக்கின்றது.
தென்மேற்கில் சபை வெளி என்ற பல ஏக்கள் நிலத்தை அரசாங்கம் நிவாரண உதவித்திட்டத்தின் கீழ் மக்களைக் கொண்டு கிளறிக் கற்களை அகற்றிப் பணி படுத்தி நெற்செய்கைக்காக மக்களுக்கு வழங்கியது. அங்கு போதிய பயன் கிடைக்காமையால் நெற்செய்கை கைவிடப்பட்டது. முற்காலத்தில் மொண்டி என்ற சிறு தானியமே பெரிய அளவில் பயிரிடப்பட்டது. கற்பாறைகளுக்கிடையே மண் செறிந்த, நீர் தேங்கி நிற்கக்கூடிய தாழ் நிலங்களில் இது பயிரானது. இது
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 48

மூன்று நான்கு அடி உயரம்வரை வளரும். உமிகளுக்குள்ளேயே அரிசி இருக்கும். இதற்கு அதிகம் உழுது பண்படுத்த வேண்டியதில்லை. அப்படி அடுத்தடுத்து உழவும் முடியாது. உழக்கூடிய மண் பகுதிகளை சுமார் அரை முழத்திற்கு ஒரு சாலாகக் கலப்பையால் உழுது விதைப்பர். இவை அதிக விளைச்சலைக் கொடுத்தன. முற்காலத்தில் பல வண்டிகளில் மூடைக்கணக்காக இத்தானியம் வீடுகளுக்குக் கொண்டு வரப்பட்டன.
குடியிருப்பு நிலங்களிலும், பிற மேட்டு நிலங்களிலுமே வரகு, சாமை என்ற தானியங்கள் பயிரிடப்பட்டன. முற்காலத்தில் மக்களின் பிரதான உணவாக இத்தானியங்களும், பனம் பொருட்களுமே இருந்தன. இவை மக்களின் சுயதேவைக்குப் போதியனவாகவிருந்தன. நீர்ப்பாசனத் திட்டங்களும், குடியேற்றத் திட்டங்களும் வரமுன் இலங்கைக்கு நெல் அரிசி பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டது. இரண்டாம் உலகப்போர் ஏற்பட்டதால் இவை இறக்குமதி செய்யமுடியாது தடைப்பட்டபோது வெளியூர் மக்கள் பெரிதும் கஷ்டப்பட்டனர். பங்கீட்டு அட்டைக்கு அரைப்படி அரிசி வீதம் வழங்கப்பட்டது. இதனால் நெடுந்தீவு மக்கள் பாதிக்கப்படவில்லை. இச்சிறு தானியங்களும் பணம் பொருள் உணவுகளும் ஈடு செய்தன.
அந்நியராட்சிக் காலங்களில் விவசாயம் பெரும்பாலும் வளர்ச்சி குன்றியது. இதற்கான காரணங்களாக நெடுந்தீவை ஆட்சிசெய்த போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், விவசாயத்தில் அதிக அக்கறை காட்டாதிருந்ததோடு, விவசாய வளர்ச்சிக்கு வேண்டிய உதவிகளையும் செய்யாதிருந்தனர். இதன் காரணமாக விவசாயத்தில் மக்களுக்கும் ஊக்கமில்லாது போயிற்று. அத்தோடு போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆட்சிக்காலங்களில் அவர்களின் பிரயாண வசதிகளுக்காகக் கடலையும் பெரியகுளங்களையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட கால்வாய்களால் கடல்நீர் உட்புகுந்து குளங்களில் உவர்நீர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 49

Page 41
கலந்ததால் அவை விவசாயத்திற்குப் பயன்படாது போயின. இதனால் நாளடைவில் நெற்செய்கை முற்றாகக் கைவிடப்பட்டது. மக்கள் சிறு தானியங்களையே தம் உணவிற்காகப் பயிரிட்டனர். பண்டைக்காலத்தில் நெடுந்தீவில் விளைந்த பருத்தியானது பருத்தித்துறைத் துறைமுகம் வழியாக தென் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக திரு.ச. சிறீகாந்தா என்பவர் தமது விவசாய நுாலில் குறிப்பிட்டுள்ளார். இன்று சிறுதானியப் பயிர்ச் செய்கைகளுடன் பணப்பயிர்களான வெங்காயம், மிளகாய், பீடிப் புகையிலை மற்றும் மரக்கறிப் பயிர்களும் பயிரிடப்படுகின்றன.
நீர்ப்பாசனத் திட்டங்களும், குடியேற்றத் திட்டங்களும் வந்தபின் மக்கள் புலம் பெயர்ந்து கிளிநொச்சி, வவுனியா முதலிய இடங்களுக்குச் சென்று குடியேறி நெற்செய்கையை மேற் கொண்டதால சிறு தானியச் செய்கை மிகக் குறைந்துவிட்டது. மொண்டி பயிரிடல் இல்லையென்றே கூறலாம்.
மண்செறிவு சிறிது கூடுதலாக உள்ள கோட்டைக் காட்டுப் பகுதியிலும், தென்கிழக்குப் பகுதியிலும் நிலத்தைக் கிளறி கற்களை அகற்றிப் பண்படுத்தியும், சாறாப்பிட்டிப் பகுதியில் கற்பாறைகளுக்கு மேல் வேறிடத்தில் இருந்து மண் எடுத்துப் பரவியும், தோட்டம் செய்தார்கள். இவ்வாறு விவசாயத் துறையில் நெடுந்தீவு மக்கள் பல கஷ்டங்களுக்கிடையேயும் அதிக பிரயாசையுடன் செயற்பட்டார்கள். இத்தன்மையை அறிந்தே அரசாங்கம் குடியேற்றத் திட்டங்களில் இவர்களுக்கு முன் உரிமை வழங்கியது.
குடியேற்றத் திட்டங்களுக்குச் சென்று குடியேறிய மக்கள் மிகுந்த பிரயாசையுடன் காடுகளைக் கழனிகளாக்கினர். பலர் சிறந்த விவசாய மன்னர் விருதுகளைக்கூடப் பெற்றனர். இளைஞர் குடியேற்றத் திட்டங்களிலும் இளைஞர், யுவதிகள் குடியேறிப் பணப்பயிர்களான மிளகாய், வெங்காயச் செய்கையில் அதிக வருமானத்தைப் பெற்றனர். நெடுந்தீவிலிருந்து குடியேற்றத்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 50

திட்டக் காணிகளுக்கு இடம் பெயர்ந்த பல விவசாயக் குடும்பங்களிலிருந்து பல படித்த இளைஞர்கள், யுவதிகள், அரச உத்தியோகங்களைப் பெற்றதோடு நாட்டின் அபிவிருத்தியிலும், அரசியலிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்கள். இதனால் அப் பிரதேசங்கள் செழிப்பும், செல்வமும் பெற்றன. உள்நாட்டு யுத்தங்கள் காரணமாகவே இப்பிரதேசங்கள் அழிவுற்றதோடு, அங்கு வாழ்ந்த மக்களும் உள்நாட்டிலுள்ள தென்னிலங்கை நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் புலம்பெயர்ந்துள்ளனர். களிநொச்சி, வவுனியா, முலி லைத் தவு போன்ற மாவட்டங்களிலுள்ள குடியேற்றத் திட்டங்களில் வாழ்ந்த இளைஞர்கள், யுவதிகள் விடுதலைப் போருக்கும் தம் பங்களிப்பைச் செய்ததோடு பலர் தம் இனிய உயிர்களை அர்ப்பணித்து மாவீரர்களாகியுமுள்ளனர்.
வெல்லையில் குதிரைக் கூட்டம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 51

Page 42
மந்தை வளர்ப்பு
முற்காலங்களில் நெடுந்தீவு மந்தை வளர்ப்பில் பிரபல்யம் அடைந்திருந்தது. அங்கு காணப்படும் பரந்த புல்வெளிகளும் கடற் சுவாத்தியமும் இதற்குச் சாதகமாக இருந்தன. இதனால் அக்காலத்தில் மக்களுக்குப் பால், தயிர், மோர், நெய் ஆகிய உணவுப் பொருட்கள் அங்கு தாராளமாகக் கிடைத்தன. எங்கு பார்த்தாலும் பசுக்கள் கூட்டம் கூட்டமாய் மேய்வதைக் காணலாம். இக்காலங்களில் தான் பாலும் தயிரும் இங்கிருந்து இந்தியாவிலுள்ள இராமேஸ்வரர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆடுவளர்ப்பும் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. பசுக்கள் சுதந்திரமாக மேய்ந்து விட்டு காலையிலும் மாலையிலும் கன்றுகளைத் தேடிப் பட்டிக்கு வருவதும் கன்றுகளுக்கு பால் கொடுப்பதும், பால் கறந்த பின் மீண்டும் புற்தரைகளை நோக் கிச் செல்வதும் வழமையான காட்சிகளாகும்.இப் பட்டிகளிலேயே தைமாசம் பட்டிப் பொங்கல் சிறப்பாக நடைபெறும். மாடுகளின் வளர்ப்பினால் உணவை மட்டும் மக்கள் பெறவில்லை. விவசாயச் செய்கைக்கும் அவை முக்கிய கருவிகளாகப் பயன்பட்டன. உழவிற்கும், சூடு மிதிப்பதற்கும் வண்டில்களை இழுப்பதற்கும் அவை பெரிதும் பயன்பட்டன.
இன்று, இம் மந்தை வளர்ப்பு அந்நியர் ஆட்சிக் காலங்களில் போதிய ஊக்குவிப்பு இன்மையினாலும் கடல் நீர் இக் குளங்களில் புகுந்தமையாலும் புற்றரைகள் செழிப்பிழந்தமையாலும் பாதிப்படைந்துள்ளது. இன்றைய அரசியல் பொருளாதார மாற்றங்களாலும் மந்தை வளர்ப்பில் மக்களுக்கு இருந்த ஊக்கம் குறைந்துள்ளது. இவற்றைச் சரியான முறைகளில் கைக்கொண்டு விஞ்ஞான முறைகளை அனுசரித்து மந்தை வளர்ப்பை அரசு ஊக்கப்படுத்தினால் மந்தை வளர்ப்பு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 52

நெடுந்தீவு மக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் ஒரு தொழிலாக மிளிரும் என்பதை எவரும் மறுக்க முடியாது. மந்தை வளர்ப்பில் குதிரை வளர்ப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சிசெய்த காலத்தில் குதிரைகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து தமது தேவைக்காக வளர்த்ததோடு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அதிக வருமானத்தையும் பெற்றனர்.
அவர்கள் நாட்டைவிட்டுச் சென்று பல வருடங்கள் ஆகியும் அவர்களால் விட்டுச் செல்லப்பட்ட குதிரைகளின் வாரிசுகள் பல்கிப் பெருகி பல நூறு குதிரைகளாக இன்றும் வெல்லைப் பகுதிகளில் தன்னிச்சையாகப் பார்ப்பவர் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை நல்ல முறையில் பராமரித்து ஏற்றுமதி செய்தால் நல்ல வருமானத்தை நெடுந்தீவு மக்கள் பெற்றுக் கொள்ள வாய்ப்புண்டு.
புல்வெளியில் மேயும் பசுக்களின் கூட்டம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 53

Page 43
மீன்பிடித்தொழில்
நெடுந்தீவில் மீனவ மக்கள் பண்டைக்காலம் தொட்டே மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இத்தீவு நான்கு பக்கமும் ஆழ்கடலால் சூழப்பட்டிருப்பது மீன் பிடித் தொழிலுக்கு மிகவும் வாய்ப்பாக உள்ளது. முற்காலங்களில் மீன் பிடிப்பதற்கான வளங்களிருந்தும் மீன்பிடித்தொழில் சம்பந்தமான போதிய அறிவுகள் இன்மையாலும், வேண்டிய உபகரணங்கள் இன்மையாலும், மக்களால் அதிக வருமானத்தைப் பெற முடியவில்லை. முற்காலத்தில் கட்டுமரங்களில் சென்றே மீன் பிடித்தார்கள். ஆனால் இன்றோ இத்தொழிலுக்கு வேண்டிய விஞ்ஞான அறிவுகளும் தொழிலுக்குத் தேவையான மீன்பிடி உபகரணங்களும் தாராள்மாக உள்ளன. அத்துடன் பிடிக்கும் மீன்களைப் பழுதாகாமல் பாதுகாக்கக்கூடிய குளிரூட்டிச் சாதனங்களும், ஆழ் கடலுக்குச் சென்று மீன்பிடிக்கத்தக்க இயந்திரப்படகு வசதிகளும் சந்தைப்படுத்துவதற்கான நல்ல வாய்ப்புகளும் உள்ளன. அந்நியர் ஆட்சிக் காலங்களில் இத்தொழிலை விருத்தி செய்வதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மீன்பிடித் தொழிலாளர்களும் தாங்கள் பிடிக்கும் மீன்களால் கிடைக்கும் வருமானத்துக்கேற்ப மீன் வரி செலுத்தினார்கள். பெரும்பாலும் வெகு சிரமங்களின் மத்தியிலேயே மீன்பிடித் தொழிலை மக்கள் செய்து வந்தார்கள். அங்கு பிடிக்கப்பட்ட மீன்களை வெளியூர்களுக்குக் கொண்டு சென்று விற்கக்கூடிய பிரயாண வசதிகளோ, பழுதடையாது பாதுகாக்கக்கூடிய வசதிகளோ இல்லாதிருந்தது. இதனால் மீன்களை உள்ளுரிலேயே விற்பனை செய்ய வேண்டியிருந்தது. இந்த நிலையில் இங்குள்ள மீனவர்கள் பலர் முல்லைத்தீவு மன்னார் முதலான வெளியூர்களுக்குச் சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டனர். இன்றோ மீன்பிடிப்பதற்கான பல தொழில்நுட்ப சாதனங்களும், ஆழ்கடலுக்குச் சென்று மீன்களைப் பிடிப்பதற்கான இயந்திரம் இணைக்கப்பட்ட வள்ளங்களும் நெடுந்தீவு மக்களும் வரலாறும் x 54

பாவனைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக இன்று நெடுந்தீவு மீனவர்களும் ஆழ்கடலுக்குச் சென்று மீன்பிடிக்கிறார்கள். இவர்கள் பிடிக் கும் மீண் களில் உள்ளூர் தி தேவை போக மிகுதியானவற்றைக் கருவாடாக்கி வெளியூர்களுக்கு அனுப்புகிறார்கள் இன்றுள்ள பிரயாண வசதிகளைக் கொண்டு, குளிரூட்டிய பெட்டிகளில் அடைத்து கொழும்பிற்கு நேரடியாகவும் அனுப்புகிறார்கள். இங்கு காலத்திற்குக் காலம், மைலிட்டி, தாளையடி, முல்லைத்தீவு முதலிய இடங்களிலிருந்தும் மீனவர்கள் வந்து வாடி அமைத்து மீன் பிடிப்பது வழக்கமாகும். இன்றைய தொழில் நுட்ப வசதிகளைப் பயன் படுத்தி இத் தொழிலை அபிவிருத்தி செய்வதன் முலம் நெடுந்தீவு மீனவர்கள் அதிக வருமானத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.
மீன்பிடி வள்ளங்கள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 55

Page 44
கைத்தொழில்கள்
இங்கு பெருந்தொகையாகக் காணப்படும் கற்பகதருவான பனை ஒரு வான்பார்த்த பயிராகும். இதன் எல்லாப்பாகங்களும் பல கைத்தொழில்களுக்கு உபயோகமாகின்றன. இதன் கொடைகளிலிருந்து பனங்கிழங்கு, பனாட்டு, பனம்பழம், நுங்கு, கருப்பணி, ஒடியல், புழுக்கொடியல், பழச்சாறு, கருப்பட்டி போன்ற பல உணவுப் பதார்த்தங்கள் பெறப்படுகின்றன. இவற்றைக் கொண்டே பல மக்களுக்கு பல தொழில் வாய்ப்பினையும் வருமானத்தையும் கொடுக்கக்கூடிய பல சிறு கைத்தொழில்கள் இருந்தன. பனை ஓலையைக் கொண்டும் அதன் ஈக்கு, மட்டையில் பெறப்படும் நார் போன்றவற்றைக் கொண்டும் பாய், கடகம், பெட்டி, கூடைகள், வர்ணவேலைப் பாடுகள் கொண்ட அலங்காரப் பொருட்கள் ஆகிய ப்ல் வேலைகளை சிறிய வீட்டுக் கைத்தொழிலாகவே மக்கள் செய்து வந்தனர். இவற்றின் மூலம் வருமானத்தையும் பெற்று வந்தனர். பாய் இழைத்தல் அதிக மக்களால் கையாளப்பட்டது. இவற்றை முற்காலத்தில் கடைகளுக்குக் கொடுத்து பண்டமாற்றாக வேண்டிய பொருட்களைப் பெற்றனர்.பாய்கள் யாழ்ப்பாணத்திற்கு ஏற்றுமதியாகின.
அந்நியர் ஆட்சிக்காலங்களிலும் மக்கள் இவற்றைத் தங்கள் தேவைகளுக்காகச் செய்துவந்தனர். அக்காலங்களில், இவற்றைப் பெருமளவில் செய்து விற்பனை செய்வதற்கான பிரயாண வசதிகளும், சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களும் மிகவும் அரிதாகவே இருந்தன. ஆனால் இன்று இத்தொழிலைச் சிறந்த முறையில் செய்வதற்கான தொழில் நுட்ப வசதிகளும், சந்தைப்படுத்துவதற்கான பல வாய்ப்புக்களும் இருக்கின்றன. எனவே இப்பனங் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதன் மூலம் மக்கள் அதிக வருமானத்தைப் பெறக்கூடிய நல்ல வாய்ப்புகள் இருக்கின்றன. பண்டைக்காலத்தில் நெடுந்தீவில் நெசவுத்தொழில் நடைபெற்றதாகவும் அறியக்கிடக்கின்றது. இதற்கு ஆதாரங்களாக அங்கு பருத்திச் செய்கை இருந்ததோடு பண்டைநாட்களில் சில வீடுகளில் நெசவுத் தறிகள், மற்றும்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 56

நுால் நுாற்றலுக்கான உபகரணங்களும் இருந்திருக்கின்றன. நெடுந் தவிலே இரு விதமான முருகைக் கற்கள் காணப்படுகின்றன. இவற்றில் ஒன்று சுண்ணாம்பு செய்வதற்கான மா முருகைக் கற்களாகும். இவற்றைக் கொண்டு சுண்ணாம்பு உற்பத்தி செய்து வந்திருக்கின்றார்கள். இன்றும் இங்கு சிறு கைத் தொழிலாக சூளை வைத்து தமது வீடுகளைக் கட்டுவதற்கும், விற்று வருமானம் பெறுவதற்கும் இத்தொழிலைச் செய்து வருகின்றனர். நெடுந்தீவு சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூடிய ஒரு இடமாக இருக்கின்றது. இங்குள்ள வசந்தமான கடற்காற்றுமி, அழகான மணற் கடற்கரைகளுமி, ஓசை எழுப்பும் அலைகளும், குதிரைகள் கூட்டம் கூட்டமாகப் பவனி வரும் காட்சிகளுமி, மழைக்காலத்தில் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலுள்ள சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து வரும் வண்ணப்பறவைகளின் ரீங்கார ஓசைகளுமி, காலை மாலை சூரியனின் உதய அஸ்தமனக் காட்சிகளும், பார்ப்போர் கண்களுக்கு அற்புதமான காட்சிகளாகவும் கேட்போர் செவிகளுக்கு தெவிட்டாத இன்னிசை விருந்தாகவும் இருக்கின்றன. இச்சுற்றுலாத்துறையை விருத்தி செய்வதற்கு திவகத்தின் சிறப்புகளை வெளிநாட்டவரும் அறிய வாய்ப்புகளேற்படுத்துவதோடு, தங்குமிட வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் அதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 57

Page 45
வர்த்தகம்
நெடுந்தீவு மக்கள் வர்த்தகத் துறையில் அந்நியர் ஆட் : காலங்களில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என்றே அறியக்கூடியதாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் போதிய போக்கு வரத்து வசதிகள் இல்லாதிருந்தமையே ஆகும். அத்துடன் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து அதிக துாரத்திலிருந்தமையால் பொருட்களை அங்கு சென்று கொள்வனவு செய்வதிலும், உள்ளூர்ப் பொருட்களைக் கொண்டு சென்று விற்பதிலும் பல கஷடங்களை எதிர்நோக்க வேண்டி இருந்தது. இக் காரணங்களால் நெடுந்தீவு மக்கள் தென் இந்தியக் கடலோரமாக உள்ள நாகபட்டினம், இராமேஸ்வரம் போன்ற பட்டினங்களுடனேயே வியாபாரத் தொடர்புகளை வைத்திருந்தனர். அப் பட்டினங்களிலேயே தங்களின் பொருட்கொள்வனவு விற்பனவுகளை பணரீதியாகவும் பண்டமாற்று முறையிலும் வைத் திருந்தனர். பிரயாண வசதிகள் முன்னேற்றமடைந்த பின்னரே வர்த்தகத் துறையிலும் நெடுந்தீவு மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினர். இக் காலத்தில் பல சிறிய கடைகளும், கூட்டுறவுக் கடைகளும் நெடுந்தீவின் மூன்று குறிச்சிகளிலும் சிறிய வர்த்தகர்களால் ஆரம்பிக்கப்பட்டன. நெடுந்தீவு மத்தியில் சந்தைக் கடை என்ற பெயரில் ஒரு கடையை ஆரம்பித்து திரு.வேலாயுதம் பெருமையினார் (சின்னத்துரை) திரு. ஆறுமுகம் தாமோதரம்பிள்ளை (செல்லத்துரை) ஆகிய இரு சகோதரர்கள் நடாத்தி வந்தார்கள். இக் கடையில் மக்களுக்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் உள்ளூரிலேயே பெறக்கூடியதாக இருந்தது. இவர்கள் வியாபாரத்தோடு நில்லாது மக்களுக்குப் பல நல்ல சமூக சேவைகளையும் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இன்று நெடுந்தீவு மக்கள் வர்த்தகத் துறையிலும் அதிக ஈடுபாடு காட்டத்தொடங்கியுள்ளனர். இன்று நெடுந்தீவில் மட்டுமன்றி இலங்கையரிலும் வெளிநாடுகளிலும் வர்த்தகத் துறையில் சிறப்பாக ஈடுபட்டு வருவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 58

அரச சேவை வாய்ப்பு
இன்று நெடுந் தீவு மக்களில் பலர் அரசாங்க சேவையாளர்களாகப் பல துறைகளிலும் உத்தியோகம் பார்க்கின்றார்கள். வைத்தியர்களாக, பொறியியலாளர்களாக, ஆசிரியர்களாக, கல்வி உத்தியோகத்தர்களாக, உதவி அரசாங்க அதிபர்களாக, தபால் அதிபர்களாக, லிகிதர்களாக, விவசாய உத்தியோகத்தர்களாக, கிராம சேவையாளர்களாக, தாதிகளாக இன்னும் பல பொதுச் சேவை ஸ்தாபனங்களிலும், பல தனியார் கம்பனிகளிலும் வேலை பார்க்கின்றார்கள்.
சுருங்கக் கூறின் நெடுந்தீவின் பொருளாதாரம், விவசாயம், மந்தைவளர்ப்பு, மீன்பிடி, பனங்கைத்தொழில், வர்த்தகம், அரசாங்க உத்தியோகம் என்பவற்றிலேயே அதிகம் தங்கியுள்ளது. இவற்றுடன் அங்கு காணப்படும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வளங்களைப் பயன்படுத்தி சுற்றுலாத் துறையையும் அபிவிருத்தி செய்வதன் மூலம் நெடுந்தீவை வளங்கொழிக்கும் தீவாக மாற்றலாம்.
அரசினர் வைத்தியசாலை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 59

Page 46
இயல் 8
நெடுந்தீவின்,பொருண்மியவளங்களும் அவற்றை,மேம்படுத்துவதற்கான வழிவகைகளும்
விவசாயம்
நெடுந்தீவின் மண்வளம், நீர்வளம் என்பன விவசாயச் செய்கைக்கு பெரிய அளவில் உகந்ததாகவில்லாவிடினும் முற்காலத்தில் மக்கள் தம் உணவிற்கான சுயதேவைப் பூர்த்தியை விவசாயமூலம் பெற்றனர். நெற்செய்கை பெரிய அளவில் இல்லாதிருந்த போதும், சிறுதானியப் பயிர்ச் செய்கையில் அதிக விள்ைச்சலைப் பெற்றனர். ஆனால் இன்று அந்நிலை மாறியுள்ளதைக் காண்கிறோம். இதற்குப் பல காரணங்களுண்டு. மண்வளங்கள் பண்படுத்தப்படாது தரிசுகளாக விடப்பட்டமையாலும், அந்நியராட்சிக்காலங்களில் வெட்டப்பட்ட கால்வாய்களால் கடல்நீர் குளங்களில் கலந்து குளங்களிலுள்ள நன்னீர் உவர்நீராக மாறியமையாலும்,நிலங்கள் தம் செழிப்பையிழந்துள்ளன. அடுத்ததாக விவசாயம்பற்றிய விஞ்ஞான ரீதியான அறிவுகள் விசாயிகளுக்கு போதிய அளவு வழங்கப்படாமையும. நவீன விவசாய உபகரணங்களை விவசாயிகள் பெற்றுக் கொள்ள முடியாத பொருளாதாரக் கஷ டத் திலிருப்பதும் , அனுபவம் வாய் நீத 6) விவசாயக்குடும்பங்கள் வெளிமாவட்டங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றமை என்பனவும் முக்கிய காரணங்களாகும்.
இப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு விவசாயத்தை அபிவிருத்தி செய்யப் பின்வரும் நடவடிக்கைகளை எடுத்தல் அவசிமாகும தூர்ந்து போயிருக்கும் குளங்கள் உட்பட சகல குளங்களையும் புனரமைத்தல் செய்வதோடு, தரிசு நிலமாக மாறியுள்ள விவசாய நிலங்களைப் பண்படுத்தி விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அந்நியராட்சிக் காலத்தில் குளங்களையும் கடலையும் இணைப்பதற்காக வெட்டப்பட்ட
நெடுந்தீவு மக்களும் வரலாறும் · · · 60

கால வாயப் களை மூடுவதற்கான நடவடிக் கைளும் எடுக்கப்படவேண்டும். விவசாயிகளுக்கு விஞ்ஞானரீதியான விவசாயம் பற்றிய அறிவுகளை வழங்குவதோடு, உபகரணங்கள், விவசாயக் கடன் போன்றவற்றை உரிய காலங்களில் வழங்குதல் வேண்டும். சந்தைப் படுத்தலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் முக்கியமாகும். இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் விவசாயத்தை மேலும் அபிவிருத்தி செய்யமுடியும்.
மீன்பிடித் தொழில்
நெடுந்தீவின் வளங்களில் அதிக வருமானத்தைக் கொடுக்கக் கூடிய வளமாக விளங்குவது கடல் வளமாகும். இத்தொழிலிலும் அதிக லாபத்தை மீனவர்கள் பெற முடியாமலிருப்பற்குப் பல காரணங்கள் காணப் படுகின்றன. மீன் பிடியாளர்களின் குடும்பங்கள் பல வறுமைக்கோட்டிற்குக் கீழேயேயுள்ளன. நவீன மீன்பிடி உபகரணங்கள், மீன்பிடி பற்றிய தொழில் நுட்ப அறிவுகளில்லாமை, இந்திய மீனவர்கள் நெடுந்தீவு மீன்பிடிப் பிரதேச எல்லைகளுக்குள் அத்து மீறி மீன்பிடித்தல். கடற் படையினரின் மீன்பிடி எல்லைக் கட்டுப்பாடுகள், போதிய பிரயாண வசதிகளின் மை, சந்தைப் படுத்துவதற்கான வசதிகளின் மை ஆகியனவும் மீன் பிடித் தொழிலின் அபிவிருத் திக் குத் தடையாகவுள்ளன. இத் தொழிலை முன்னேற்றமான முறையில் அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் பின்வரும் நடவடிகைகளை எடுத்தல் வேண்டும். மீனவர்களுக்கு மீன்பிடி சம்பந்தமான நவீன தொழில் நுட்ப அறிவுகளை வழங்கல், மீன் பிடிக்கான நவீன உபகரணங்களை கடன் அடிப்படையில் வழங்குதல், இந்திய மீனவரின் ஊடுருவலைத் தடுத்தலும், மீன்பிடித் துறைமுகங்களை நிறுவிக் கொடுப்பதுடன், 'கடற் தொழிலை அடிப்படையாகக் கொண்ட கைத்தொழில்களை உருவாக்குதல், கடற் படையினரால் கொண்டுவரப்பட்டுள்ள மீன்பிடி எல்லைச் சட்டத்தை நீக்குதல், சந்தைப் படுத்தலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் இத்தொழிலை அபிவிருத்தி செய்ய முடியும். இதன்மூலம் அதிக வருமானத்தையும் மீன்பிடித் தொழிலாளர்கள் பெற்றுக் கொள்ளமுடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 61

Page 47
மந்தை வளர்த்தல்
பண்டைக்காலம் தொட்டே இத்தொழில் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்த செய்ததோடு, ஓரளவு வருமானத்தையும் கொடுத்து வந்துள்ளதை அறியக்கூடியதாக வுள்ளது. ஆனால் இன்று இத்தொழிலின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பல காரணங் களைக்கூறலாம். புதிய முறையிலான தொழில்வாய்ப்புக்கள் மூலம் அதிக வருமானத்தைப் பெறக்கூடியதாகவிருத்தலினால், இத்தொழிலில் மக்களுக்கான ஆர்வம் குறைந்தமை, பண்டைய புல்வெளிகள் உவர் நீர்க் கலப்பினால் வளம் குறைந்து போனமையால் மந்தைகளுக்கான புற்களின் அழிவு நிலமை, நீர்க் கேணிகள் உவர்த் தன்மையாக மாறியுள்ளதால் மந்தைகளுக்கான நன்னித் தட்டுப்பாடு, மந்தைகளை ஒழுங்கான முறையில் பராமரித்து வளர்க்காது சுயேச்சையாக விடுதலினால் அவற்றின் விருத்திக்குறைவு. பால்ப் பொருட்களுக்கான சந்தைப் படுத்தல் வசதிகளின்மை, மந்தைகளுக்கேற்படும் நோய்களைக் கண்டறிந்து பராமரிப்பதற்கான வைத்திய வசதிகளின்மை போன்ற காரணங்களாகும். இக் குறை பாடுகளை நீக்கப் பின்வரும் சில நடவடிக்கைகளை எடுக்கலாம். நன்னீர்க் கேணிகளை வருடம்தோறும் இறைத்துத் துப்பரவு செய்தல், பால்ப் பண்ணைகளை அமைத்தலோடு, சந்தைபடுத்தல் வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்தல், மந்தைகளை ஒழுங்காகப் பராமரித்துப் பாதுகாத்தல். மந்தைகளுக்கு வரும் நோய்களைக் கண்டறியுவுமி, பராமரிக்கவும் மிருக வைத்திய நிலயங்களை நிறுவுதல் போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்வதன்மூலம் இத் தொழிலை அபிவிருத்தி செய்வதோடு, மந்தை வளர்ப்பினால் மக்கள் அதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ள முடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 62

பனை, தென்னை வளக் கைத்தொழில்கள்
நெடுந்தீவின் இயற்கை வளங்களில் கற்பகதருவாம் பனை வளம் முக்கிமானதாகும். இவ் வளத்தைப் பாவித்தே பண்டைக்காலமக்கள், தங்கள் உணவுத் தேவையின் பெரும் பகுதியையும் தமக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பாய், கடகம், பெட்டி, அலங்காரப் பொருட்களையும், பெற்றதோடு, வீடுகட்டவும், கூரை வேயவும், வேலி அடைக்கவும், பட்டிகட்டவும் தொட்டிகட்டவும் பனையின் கொடைகளிலேயே தங்கியிருந்தனர். இன்று இவ்வளத்தின் பயன் பாடுகள் குறைந்து காணப் படுவதோடு, பனையின் தொகையும் குறைந்து கொண்டே செலி கினி றது. தென் னை வளமும் மக் களின் அக்கறையின்மையால் உற்பத்தி குறைந்து கொண்டே செல்கிறது. தேங்காய், எண்ணெய், தும்பு என்பன வற்றை அதிகமாகப் பெறக் கூடியதாகவிருந்தும் அவற்றைச் சந்தைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களும், தேவையான தொழிற் சாலைகள் இன்மையும், தென்னைவள உற்பத்தியையும் பாதித்துள்ளன. இவ் வளங்களின் உற்பத்தியும் பல காரணங்களால் இன்று பாதிப்படைந்தேயுள்ளது. இதற்கான சில காரணங்களை அறியமுடிகிறது. தற்கால உலகின் புதிய பிரதி உணவுப் பொருட்கள் தாராளமாகக் கிடைக்கக் கூடியதாகவுள்ளமை. விஞ்ஞான யுக்திகளைக் கொண்டு செய்யப்பட்டு விற்பனையாகும் அலங்காரப் பொருட்களின் பாவனை. தொழிலாளர்களுக்கான போதிய பயிற்சிகளின்மை, பனை வெல்லம், தேங்காய் எண்ணெய் உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலைகளின்மை, மக்கள் பனைவளத்தைப் பயன்படுத்தும் விருப்பமின்மை, தேவையின்மை என்பனவாகும். இத்தொழிலை அபிவிருத்தி செய்ய வேண்டுமெனில் தொழிலாளர்களுக்கான பயிற்சித்திட்டங்களை வகுத்துத் தொழிலாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் வேண்டும். அத்துடன் வெல்லத் தொழிற்சாலை, தேங்காய் எண்ணைத் தொழிற்சாலை என்பவற்றை நிறுவிச் செயல்ப்படுத்த வேண்டும். அலங்காரப் பொருட்களுக்கான சந்தைப்படுத்தல் வசதிகளை ஏற்படுத்தல் வேண்டும். அத்துடன் அழிந்து வரும் பனை, தென்னை வளங்களை நாற்று நடுகைகளின் மூலம் அதிகரிக்கச் செய்ய வேண்டும். இவற்றின் மூலம் பனை, தென்னை வளங்களை அபிவிருத்தி செய்து அதிக பயனைப் பெறமுடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 63

Page 48
சிறு கைத்தொழில்கள்
இங்கு தச்சுத் தொழில், சீவல்த்தொழில், கல்லுடைக்கும் கைத்தொழில், சுண்ணாம்பு உற்பத்தித் தொழில் போன்ற சிறு கைத்தொழில்களும் பண்டைக்காலம் தொட்டே நடைபெற்று வந்துள்ளன. இத்தொழில்களின் வளர்ச்சிக்கு தொழிலாளர்களிடம் போதிய நவீன கருவிகளின்மையும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு போதாமையும், பொருளாதாரக் கஷ்டங்களும், போக்குவரவு வசதிக் குறைவுகளும், சந்தைப்படுத்துவதற்கான வசதிகளின்மையும் தடையாகவுள்ளன. இத் தொழிலாளர்க ளுக்கும் கடன் அடிப்படையில் நவீன உபகரணங்களை வழங்குவதன் மூலமும் போதிய பயிற்சிகளை அளிப்பதன் மூலமும் சந்தைப்படுத்தலுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல் மூலமும் இத் தொழில்களை அபிவிருத்தி செயயமுடியும். இதன் மூலம் இத் தொழிலாளர்களும் அதிக வருமானத்தைப் பெறமுடியும்.
சுற்றுலாத்துறை
நெடுந்தீவில் மன்னர் ஆட்சிக்காலம் தொடக்கம் ஆங்கிலேயர் ஆட்சி காலம் வரையிலான சரித்திரபூர்வமான கோட்டைகளும், கட்டிடங்களும், சின்னங்களும்,வியத்தகு விருட்சங்களும், சவாரி செய்வதற்கும், வந்தோரை வரவேற்கவும் முன்னிற்கும் குதிரைகளும், இயற்கையளிக்கும் காட்சிகளான ஆரியோதய, அஸ்தமனக் காட்சிகளும், சுகந்தமான கடற்காற்றும், மனத்திற்கு இதந்தரும் மணற்கடற்கரைகளும், பார்ப்பதற் கழகான பனஞ்சோலைகளும், தென்னம் சோலைகளும், அவை தரும் கருப்பணி, நொங்கு, இளநீர் போன்ற சுவையூட்டும் பானங்களும், அதிசயமான கல் வேலிகளும், சுற்றுலா வரும் மக்களை வாருங்கள் வாருங்கள் என அழைக்கும் கடல் அலைகளின் ஒசைகளும், மாரி காலங்களில் குளங்களில் துள்ளி விளையாடும் கயல் மீன்களின் காட்சியும், பறவைகளின் ரீங்கார ஓசைகளும் சுற்றுலாப் பயணிகளுக்கோர் அரும் பெரும் விருந்தாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 64

இன்று இக்கட்டிடங்களும், சின்னங்களும் பாதுகாக்கப் படாதுவிடப்பட்டமையால் அழிந்து கொண்டே செல்லுகின்றன. இவற்றைப் பாது காக்க நடவடிக்கைகள் எடுக்கப் படுவதோடு இயற்கைக் கொடைகளாகக் காணப்படும், கடற்கரைகள், விருட்சங்கள் என்பவற்றையும் நன்கு பேணுவதோடு அவற்றை மேலும் அழகு படுத்த வேண்டும். சுற்றுலாப் பயணிகளை கவரும் விளம்பரங்களைச் செய்வதோடு அவர்கள் தங்குவதற்கான விடுதி வசதிகளையும் அமைத்தல் வேண்டும். இத்துறையை விருத்தி செய்வதன் மூலம் அதிக வருமானத்தைப் பெறுவதோடு நெடுந்தீவின் சிறப்புக்களை வெளி உலகத்தினர் அறியவும் வாய்புக்களை ஏற்படுத்தலாம்.
மூலிகை மருந்துற்பத்தித் தொழில்
நெடுந்தீவில் நூற்றுக் கணக்கான மூலிகைகள் காணப்படுகின்றன. எனினும் இவற்றுள்சிலவே அங்குள்ள மக்களினால் உணவாகவும், கைவைத்திய மருந்துகளாகவும் பாவிக்கப்பட்டு வருகின்றன. முன்பிருந்த ஆயுள் வேத வைத்தியர்கள் இவற்றின் தன்மைகளை அறிந்து சிலவற்றை வைத்தியத்திற்கு உபயோகித்தார்களெனினும், அவற்றை மருந்தாக்கிக் கொள்வதற்குப் போதிய வசதிகளின்மையால் பல சிரமங்களுடனேயே அவற்றைச் செய்தனர். அத்துடன் ஆங்கில வைத்திய மருந்துகள் அறிமுகமானதினாலும் நாளடைவில் மூலிகைகளைக் கொண்டு மருந்துகள் தயாரித்தலைக் கைவிட்டனர். இங்குள்ள மூலிகைகள் எத்னையோ நோய்களை நிரந்தரமாகத் தீர்க்கக் கூடியனவாகவிருந்தன வென்றும், ஆங்கிலேய வைத்தியமுறைகள் வருவதற்கு முன்னர் எத்தனையோ சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களே இம்மூலிகைகளினால் சத்திர சிகிச்சையில்லாது குணப்படுத்தப் பட்டன என்றும் கூறப்படுகிறது. இன்று இம்மூலிகைகளுள் பல தேடுவாரற்றுக் காட்டுத் தாவரங்களாகவே விடப்பட்டுள்ளன. இவற்றைச் சிறந்த முறையில் ஆராய்ந்து அவற்றைக் கொண்டு மருந்துகள் தயாரிப்பதன்மூலம் மக்கள் அதிக பயனைப் பெற வாய்ப்பேற்படுவதோடு, வருமானத்தையும் பெறமுடியும். இதற்கான ஒரு தொழிற்சாலையை இங்கு அமைப்பதன் மூலம் மூலிகைகளைச் சிறந்தமுறையில் பயன் படுத்துவதோடு தொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்தலாம்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 65

Page 49
அரச சேவைத் தொழில்கள்
கல்வி
மனிதவளத்தை, பயனுள்ளதாகச் செய்வதற்குக் கல்வியே முக்கிய தளமாகவுள்ளது. கல்வியின்மூலமே ஒரு நாட்டிற்குத் தேவையான சேவையாளர்களை உருவாக்கமுடியும். கல்வி இல்லாவிட்டால் மனிதவளத்தின் சிறந்தபயன்களைப் பெற முடியாது. மனித குலத்தின் வளர்ச்சிக்கு கல்விச் சேவை இன்றியமையாததாகும்.
இன்று இங்கு பல பாடசாலைகளின் மூலம் ஆர்ம்பக்கல்வியும், உயர் கல்வியும் சிறந்த முறையில் கற்பிக்கப்பட்டு வரப்படுகின்றன. உயர் கல்விக்கான மகாவித்தியாலயம், கனிட்ட மகாவித்தியாலயங்களிருந்த பொழுதிலும், இன்றைய உள் நாட்டு யுத்தம் காரணமாகக் கல்வி நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள், மக்களின் இடப் பெயர்வுகள், பிரயாணவசதிகள் போதியதாக இல்லாதிருத்தல், விசேடபாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறை, தளபாடங்கள், விஞ்ஞான பாட உபகரணங்கள் போதிய அளவு வழங்கப்படாமை, கணனி போன்ற கருவிகள் மாணவர் மத்தியில் இடம் பெறாமை போன்றனவாகும். இதை நிவிர்த்தி செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். விசேட பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள் வதோடு விஞ்ஞானபாடத்திற்கான உபகரணங்கள், தளபாடவசதிகள் என்பன செய்து கொடுக்கப்படுவது இன்றியமையாததாகும். மகாவித்தியாலயம் சிறந்த கல்விக்கூடமாக இயங்கிப் பல மாணவர்களைக் கல்வித்துறையில் சிறந்து விளங்கக் காரணமாகவிருந்து வந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இங்கு ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்ப்படுவதற்கு முக்கிய காரணம் உள்ளுர் ஆசிரியர்கள் வெளி இடங்களுக்குச் செல்வதும் வெளியூர் ஆசிரியர்கள் உள்ளுருக்கு வந்து சேவையாற்றப் பிரயாண வசதிகள் தடையாக இருப்பதும் காரணமாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 66

இந்நிலையை மாற்றி பிரயாண வசதிகளை ஏற்ப்படுத்துவதோடு உள்ளுர் ஆசிரியர்களும் உள்ளுரில் சேவை செய்ய முன்வர வேண்டும். அத்துடன் விஞ்ஞான பாடத்திற்கான உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், கணனிகளையும் வழங்கி அதற்கான ஆசிரியர்களையும் நியமனஞ்செய்தல் அவசியமாகும்.
சுகாதாரசேவை
மக் களின் நல வாழ் விற்கு முக் கியமான சேவைகளிலொன்று சுகாதார சேவையாகும். இங்கு மத்தியில் ஒரு மருந்தகமும். அதன் அருகே நோயாளிகள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்கான விடுதி வசதிகளைக் கொண்ட வைத்திய சாலையும் அமைந்துள்ளது. ஆண் நோயாளிகளுக்கான விடுதி, பெண்நோயாளிகளுக்கான விடுதி, பிரசவ விடுதி என்பன இதில் இடம் பெறுகின்றன. இங்கு உள்நாட்டு யுத்தங்கள் ஆரம்பமாவதற்கு முன்னர் ஒரு நிரந்தரமான வைத்திய அதிகாரியும். அவருடன் ஒரு உதவி வைத்திய அதிகாரியும், நான்கு தாதிமார்களும். ஆறு கங்காணிமார்களும், இரண்டு சிற்றுாழியர்களும் பணியாற்றினார்கள். ஆனால் இன்று நிரந்தரமான வைத்திய அதிகாரி இல்லாதிருப்பதோடு, போதிய மருந்து வசதிகளும் இல்லாது நோயாளிகள் பல சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். முன்பிருந்த அவசர சிகிச்சைக்காக நோயாளிகளை யாழ்ப்பாண வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கான அம்புலன்ஸ் மோட்டார்ப் படகுச் சேவையும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலைமையைச் சீர் செய்ய வேண்டியது அவசியமாகும். இங்கு நிரந்தரமான வைத்திய அதிகாரியை நியமிப்பதோடு, மருந்துத் தட்டுப்பாடுகளையும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். தொழிலாளர்கள் பற்றாக்குறையையும் நீக்குவதோடு, நோயாளிகளின் படுக்கை வசதிகள், இடவசதிகள் என்பனவும் அதிகரிக்கப் படுதல் அவசியமாகும். நிறுத்தப் பட்டுள்ள அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளைக் கொண்டு செல்லும் அம்புலன்ஸ் மோட்டார்ப் படகுச் சேவையும் மீண்டும் சேவையிலிடுபடுத்தப் படவேண்டும். இந்நடவடிக்கைகள் மூலமே சுகாதார சேவையை மக்களுக்கு நன்மை பயக்கத்தக்கதாகச் செய்யமுடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 67 ی

Page 50
போக்குவரத்துச் சேவை
நெடுந்தீவின் சகல அபிவிருத்திகளுக்கும் போக்கு வரத்துச் சேவை முக்கியமானதாகும். கடந்த காலங்களிலும், நெடுந்தீவு மக்கள் கல்வி, பொருளாதாரம் என்பவற்றில் பின்தங்கியிருந்தமைக்கும, போக்குவரத்துச் சேவைகள் சீராகவில்லாமலிருந்தமையே காரணமாகும். இன்று உள்ளுர்ப் பிரயாண சேவைக்காக ஒரு பஸ் வண்டி மட்டுமே சேவையிலிடு படுத்தப் பட்டுள்ளது. இதன்சேவை இவ்வண்டி பழுதடையும் காலங்களில் மாற்று நடவடிக்கைளின்மையால் சேவை முற்றாகத் தடைப் படுகிறது. வெளியூர்களுக்கான மோட்டார்ப் படகுச் சேவைகளும் போதியனவாக இல்லாதிருக்கிறது. முற்காலங்களில் மக்கள் தோணிகள், பாய் வள்ளங்கள், கட்டுமரங்கள் என்பவற்றின் மூலமே யாழ்க்குடாநாட்டிற்கும் ஏனைய தீவுகளுக்கும் சென்று வந்தனர். 1937 ஆம் ஆண்டில் அரசாங்கத்தால் சில்வஸ்பிறே என்னும் இயந்திரப் படகு, சேவையிலfடு படுத்தப்பட்டது. 1950ற்குப் பின்னர் பிரயாண வசதிகள் மேலும் முன்னேற்றம் கணி டன. காலத்திற்குக்காலம் இராசேஸ்வரி, எலாறா, குமுதினி, வடதாரகை, அலையரசி என்பன சேவையிலிடு படுத்தப்பட்டன. சேவைகள் தினமும் ஒன்றிலிருந்து இரண்டாகின. பின்னர் ஒரு நாளைக்கு முன்று சேவைகள் இடம் பெற்றதோடு இரண்டு படகுகள் சேவையிலிடுபடுத்தப்பட்டிருந்தன. அத்துடன் தனியார் படகுச் சேவைகளும் நடை பெற்றன. குறிகாட்டுவான் பாலம் திறக்கப்பட்டத்ால், பிரயாண நேரமும், தூரமும் குறைந்தது. எனினும் உள்நாட்டு யுத்தந் தொடங்கிய பின்னர் இச்சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இன்று ஒருநாளைக் கொரு சேவையே நடைபெற்று வருவதோடு குறித்த நேரத்தில் கடற்படையினரின் பல கட்டுப்பாடுகளுக்குட்பட்டே சேவை நடை பெற்று வருகிறது. இதனால் பல அத்தியாவசிய கருமங்களுக்கே மக்கள் உரிய நேரத்தில் செல்லமுடிவதில்லை. வெளியூர் அரசாங்க உத்தியோகத்தர்களும் பல சிரமங்களுக்குள்ளாகிறார்கள். ஆகவே இப்பிரயாண சேவைகள் அதிகரிக்கப் படுவதோடு கடற் படையினரின் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாகப் பிரயாணம் செய்ய இடமளிக்கப்படவேண்டும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 68

அஞ்சல் சேவை
மக்கள் தொடர்பு சாதனங்களில் அஞ்சல்சேவையும் முக்கியமானதொன்றாகும். நெடுந்தீவின் மத்தியில் ஒரு பெரிய தபாலகமும், மேற்கிலும், கிழக்கிலுமாக இரண்டு உப தபாலகங்களும் இருக்கின்றன. இவற்றின் சேவைகள் போதியதாகவில்லை. அண்மைக்காலத்தில் இவற்றுக்கான தொலைத் தொடர்பு வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ள போதிலும் மத்திய தபாலகத்திற்கான தொலைத் தொடர்பு வசதிகள் போதியதாகவில்லை. இன்று உலகெங்கிலும் பரந்து வாழும் நெடுந்தீவு மக்கள் தங்கள் உறவினர்களுடன் தொடர்பு கொள்வதற்கும், அவசியமான நேரங்களில் விரைவாகச் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளவும் இங்குள்ள தொலைத் தொடர்பு வசதிகளை மேலும் அதிகரிக்க வேண்டும். இதனால் வருமானமும் அதிகரிக்க வாய்ப்புண்டு.
நீர் விநியோகம்
முன்பு குழாய்நீர் விநியோகம் நடைபெற்று வந்தது. இந்நீர் விநியோகம் இடையில் சில காலம் நடை பெறாது தடைப்பட்டிருந்தது. மீண்டும் 1998ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட்டு வருகின்றது. ஆனால் இந்நீர் விநியோகம் தொட்டாரப் பகுதிக்கும், மேற்கில் உள்ள சில பகுதிகளுக்கும் இல்லாதிருப்பது பெரும் குறையாகவுள்ளது. அப்பகுதிகளில் வாழும் மக்களும் கோடை காலங்களில் நன்னிரைப் பெறுவதில் பெரும் கஷ்டங்களுக்கு உள்ளாகிறார்கள். ஆகவே இத்திட்டத்தை மேற்கூறிய பகுதிகளுக்கும் விஸ்தரிக்க ஆவனசெய்தல் வேண்டும்.
மின்சார விநியோகம்
மின்சார விநியோகம் சில காலம் ஒழுங்காக நடைபெற்று வந்து பின்னர் சில காலம் தடைப்பட்டிருந்தது. மீண்டும் இச் சேவை நடை பெற்று வருகிறது. மின்சாரம் கிழக்கு, மேற்கு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் V 69

Page 51
மத்திய பகுதிகளில் குறிப்பிட்ட சில இடங்களுக்கு மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் வழங்கப்பட்டு வருகிறது. இச்சேவை மேலும் சில இடங்களுக்கு விஸ்தரிக்கப்படுதல் வேண்டும். அத்துடன் நேர அளவும் கூட்டப்படுவதன் மூலம் மக்கள் அதிக பயனைப் பெறமுடியும்.
வங்கிச்சேவை
ஒரு பிரதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கிச் சேவை முக்கியமானதாகும். இன்று நெடுந்தீவில் கூட்டுறவு வங்கி ஒன்று மட்டுமே யுள்ளது. இதன் மூலம் உள்ளுர் மக்கள் அதிக பயனைப் பெறமுடியாதுள்ளது. இன்றுநெடுந்தீவு மக்கள் வெளிநாடுகளில் அதிக உறவினர்களைக் கொண்டுள்ள மையாலும், மீன்பிடித் தொழில், வியாபாரம், அரசாங்க உத்தியோகத்தரின் சம்பளம் என்பவற்றாலும் உள்ளுரில் பணக்கைமாறல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் பணத்தைப் பாதுகாக்கவும், முதலீடு செய்யவும்,இலகுவாகக் கொடுக்கல், வாங்கல்களைச் செய்யவும் வங்கிச் சேவைகளின் தேவை அதிகரித்துள்ளது. இன்று மக்கள் தனியார் வங்கிச் சேவையைப் பெறவேண்டுமானால் வேலணைக்கோ அன்றேல், யாழ்ப்பாணமே செல்ல வேணி டியுள்ளது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகிறார்கள். ஆகவே இந்நிலையை மாற்றி மக்கள்வசதியாகப் பணங்களைக் கை மாறவும், முதலீடு செய்யவும் இங்கு ஒரு தனியார் வங்கிக் கிளையையாவது திறக்க வேண்டியது அவசியமாகும்.
நூல் நிலையச் சேவை
இங்கு நெடுந்தீவு கிழக்கு, மேற்கு, மத்தி ஆகிய பகுதிகளில் தனித்தனியாக மூன்று நூல்நிலயங்கள் இருக்கின்றன. இவை மக்களுக்குப் பல நூல்களையும் சஞ்சிகைகளையும் வழங்கி அறிவை வளர்ப்பதில் நல்ல ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைச் செய்துவருகின்றன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 70

இவற்றுக்கும் போதிய நூல் களைப் பெறுவதற்கும் அவற்றின்மூலம் வேறு சேவைகளை முன்னெடுப்பதற்கும் நிதி பற்றாக்குறையே பிரச்சனையாகவுள்ளது. இவற்றை மேலும் வளர்ச்சியுறச் செய்வதற்கு உதவ அங்குள்ள பிரதேசசபை, பலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் போன்ற அமைப்புக்கள் கூடிய உதவிகளை வழங்க முன்வரவேண்டும்.
பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இந்த மக்களின் அமைப்யானது மக்களுக்குப் பல சேவைகளைச் செய்து வருகிறது. இதன்மூலம் கல்வி அபிவிருத்தி, பிரயாணவசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் வாய்புக்கள் அளித்தல், மக்களுக்கான பொருட் கொள்வனவு விற்பனவு நிலையங்களை நடாத்துதல் போன்ற பல சேவைகளைச் செய்து வருகிறது. இச்சங்கமும் தனது சேவைகளை மேலும் விஸ்தரிக்க நடவடிக்கைகளை எடுப்பதன்மூலம் மக்கள் அதிக பயன் பெறமுடியும்.
வேறு சேவைகள் இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் அங்கு சேவையாற்றி வருகின்றன. அவற்றில் முக்கிமானவை தென் இந்தியத் திருச்சபைத் தேவாலயம், யு.என்.டி.பி, கெயர் நிறுவனம் போன்றவை மக்களுக்குச் சிறந்த சேவையாற்றி வருகின்றன. கனடாவிலுள்ள-கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியமும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக நெடுந்தீவுப் பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்காக.அரும்பணியாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன்தலைவர்களாகக் கடந்த காலங்களில் திருவாளர்கள் வை.இராசேஸ்வரன்.க.வரதராசா.சுநடராசா,க.மோகன்.பொ.சபேசன் ஆகியோர் சேவையாற்றியுள்ளனர்.இச்சேவையும் திட்டமிடப்பட்டு மேலும் விரிவாக்கம் பெறுவதன்மூலம் நெடுந்தீவுக் கல்வி வளர்ச்சிக்கு மேலும் பல உதவிகளைப் புரியக்கூடிய வாய்ப்புக்களை ஏற்படுத்தமுடியும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 71

Page 52
இயல் 9 நெடுந்தீவின் பிரதான துறைமுகங்களும் வரலாற்றுச் சின்னங்களும்
நெடுந்தீவின் துறைமுகங்கள் பெரியதுறை
நெடுந்தீவிலிருந்து மக்கள் பண்டைக் காலத்தில் வேறு இடங்களுக்குப் பிரயாணம் செய்துள்ளார்கள். தென் இந்தியாவிலுள்ள நாகபட்டினம், இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு மக்கள் சென்று பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவது வழக்கமாய் இருந்திருக்கிறது. அக்காலத்தில் மக்கள் பட்டினம் போய் வருவதாகக் கூறுவது இந்தியாவிலுள்ள நாகபட்டினம் போய் வருவதையே குறிக்கும். இதற்காகப் பாவிக்கப்பட்ட துறைமுகம் பெரியதுறை என அழைக்கப்பட்டது. இங்கிருந்து மக்கள் பாய் வள்ளங்களிலும், வத்தைகளிலும் யாழ்ப்பாணக் கிட்டங்கிக்கும், ஊர்காவற்றுறை, புங்குடுதீவு ஆகிய தீவுகளுக்கும் பிரயாணஞ் செய்தனர். வெளி நாடுகளிலிருந்து போர்த்துக்கீசரும், ஒல்லாந்தரும் பாய்க்கப்பல்கள் மூலம் பொருட்களை இத்துறை மூலமே இறக்கினர். இவற்றை விட வேறு சிறிய துறைகளுமிருந்திருக்கின்றன. அவையாவன: கிழக்கே கிழக்குத் துறை, வடக்காக தாளைத் துறை, குடவிலித்துறை, தெற்காக குவிந்தாத்துறை, வெல்லைத்துறை என்பனவாகும். எனினும் பெரிய துறை என்ற பெயரைக் கொண்ட இத்துறையே மிகவும் பெரிய துறையாக அக்காலத்தில் விளங்கியது என்பதனை அறியமுடிகின்றது. இத் துறை நெடுந்தீவின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ளது. மன்னராட் சிகி காலங் களிலும் இத் துறைமுகமே வழக்கிலிருந்திருக்கிறது. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் எவரும் இத்துறையிலிருந்து இந்தியாவிற்குச் செல்லாதபடி தடை விதிக் கப்பட்டிருந்ததாக அறியக் கிடக் கின்றது. இத் துறைமுகத்தையண்டியே வெடியரசனுக்கும் மீகாமனுக்கும்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 72

சண்டை நடந்ததாக வரலாறு கூறுகின்றது. நெடுந்தீவின் தென்கிழக்குக் கரையிலுள்ள முனியேந்திரன் காட்டுக் கடற்கரையில் உள்ள கோரி, பெரியதுறைத் துறைமுகம், இந்தியாவுடனிருந்த தொடர்புகள், நெடுந்தீவின் டச்சுக்கோட்டை, குதிரைகளிறக்கிய மாவிலித் துறைமுகம் ஆகியன பற்றி நெடுந்தீவுக் கிராமசபை ஊழியரான திரு. சொக்கலிங்கம் இராமநாதன் என்பவர் தனது பேத்தியார் மூலமும், வேறு சில முதியோர்களிடமும் பெற்ற வரலாறு பற்றி என்னிடம் கூறிய விபரங்கள் சிலவற்றைக் கீழே தந்துள்ளேன். நெடுந்தீவின் தென்கிழக்குத் திசையில் உள்ள முனியேந்திரன் காட்டு கடற்கரையில் உள்ள கோரியின் மேலே பட்டுக்கொடி ஒன்று மிகவும் உயரத்தில் பறந்ததென்றும் அக்கொடியைக் குறிபார்த்து, கப்பல் ஒன்று இராமேஸ்வரத்திலிருந்து தினமும் வந்து, பசுப்பாலை ஏற்றிக்கொண்டு போய், இராமேஸ்வர லிங்க நாதருக்கு பாலால் அபிஷேகம் செய்தது எனவும், அத்துடன் பண்டைக்காலம் தொட்டு, தங்களின் தொடர்பு இந்தியாவுடன் இருந்ததென்றும், மேற்கேயுள்ள பெரியதுறை பண்டைக்கால மக்களின் துறைமுகம் என்றும் , இந்தியாவிற்கும் , தங்களுக்குமான துறையாய் விளங்கியதெனவும், தங்களின் தந்தையார் சென்னை பட்டணம், நாகபட்டணம் போய் வருவதெனவும், எனது பாட்டி கூறினார்.
அத்துடன் யாழ்ப்பாணத்தைப் பிடித்துக் கோட்டை கட்டி ஆண்ட, டச்சுத் தளபதி எங்கள் தீவையும் தங்களுக்குத்தளமாய் ஆக்கி, கோட்டை கட்டி அரசு ஆளும் காலத்தில் ஒல்லாந்திலிருந்து, குதிரைகள் கொண்டு வந்து இறக்கிய துறைக்கு மாவிலி என்னும் பெயர் வந்தது எனவும் அதன் பின் இங்குள்ள மக்கள், இங்கிருந்து யாழ்ப்பாணம் போய் வரத் தொடங்கவே டச்சு அரசன் ஒருவரும் இந்தியாவிற்குப் போக முடியாதபடி தடை உத்தரவு போட்டானென்றும் அதன்படியே மக்கள் இந்தியாவிற்குப் போகவில்லை என்றும், பாட்டி கூறினார். நோளன் துரை மிகவும் அவதானமாக குதிரைகளை வளர்த்தானென்றும் வேகமான குதிரைக் கிடாய்களை வருடம் ஒருமுறை கப்பலில் ஏற்றி யாழ்ப்பாணக் கோட்டைக்கு அனுப்பினானென்றும் எனது தந்தையின் தாயாரும் எனது பேத்தியுமான நுாறு வயதிற்கு மேற்பட்ட இராமாசிப் பிள்ளையிடமும், வேறு பல வயோதிபர்களிடமும் கேட்டு அறிந்தேன்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 73

Page 53
மாவிலித்துறைமுகம்
மாவிலித்துறைமுகத்திற்கு மாவிலி என்ற பெயர் வந்ததற்குப் பல கதைகள் கூறப்படுகின்றன. மாவிலி என்ற பெயர் வரக்காரணம் தென் இந்திய அரசன் மாவல்லவன், இத்தீவை ஆண்டதாகவும் அதனால் மாவல்லபுர மக்கள் இத்துறைமுகத்தை மாவிலி என அழைத்ததாகவும் ஒரு கர்ணபரம்பரைக் கதையுணி டு. இதற்கான சரித்திரச் சான்றுகளில்லை. ஒல்லாந்தர் நெடுந்தீவை ஆட்சி செய்த காலத்தில் இத்துறைமுகம் மூலமாகவே குதிரைகளை இறக்கி ஏற்றினார்கள். மா என்ற சொல்லுக்கு குதிரை, பெரிய என்ற அர்த்தங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆகவே குதிரைகள் ஏற்றி, இறக்கியதனாலேயே மாவிலி என்ற பெயர் உண்டாயிற்று என்பதே உண்மையான காரணமாகும். இத்துறைமுகமே இன்று நெடுந்தீவு மக்கள் ஏன்னய தீவுகளுக்கும், யாழ்ப்பாணக்குடா நாட்டிற்கும் கடல்மூலம் பிரயாணஞ் செய்யப் பயன்படும் பிரதான துறைமுகமாகவும் விளங்குகின்றது. இது ஏறக்குறைய 300 அடி நீளமும் 75 அடி அகலமும் கொண்டுள்ளதாகக் காணப்படுகிறது. பிரயாணிகள் இறங்கவும், பொருட்களை இறக்கவும் கொங்கிறீற்றினால் கட்டப்பட்ட துறை ஒன்று உள்ளது. இது கடலினுள் 15 அடி நீளமமும், 10 அடி அகலமுமமாகக் கட்டப்பட்டுள்ளது. முற்காலத்தில் வத்தைகள் மூலமும், பாய் வள்ளங்கள் மூலமும் பிரயாணம் செய்த மக்கள் ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தின் பிற்பகுதி தொடக்கம் இன்று வரை இயந் தரப் படகுகள் ep 6) (pf இயந்திரமிணைக்கப்பட்ட வள்ளங்கள் மூலமும் குறுகிய நேரத்திலும் வசதியாகவும் இத்துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்கின்றார்கள். இதற்காகச் சில்வஸ்பிறே, இராசேஸ்வரி, குமுதினி, வடதாரகை, எலாரா எனப் பல இயந்திரப் படகுகள் காலத்திற்குக் காலம் சேவையிலிடுபடுத்தப்பட்டன. இவற்றுடன் பல தனியார் வள்ளங்களும், இயந்திரப் படகுகளும், வத்தைகளும் சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மாவிலித்துறையுடன் பேரூந்து செல்லும், பிரதான வீதி இணைக்கப் பட்டுள்ளது. மாவிலித்துறையிலிருந்து மேற்கேயுள்ள குருக்கள் மடம் வரையும், கிழக்கே மாவிலித்துறையிலிருந்து
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 74

தீர்த்தக்கரை என்ற இடம் வரையும் (பஸ்) பேரூந்துச் சேவை நடைபெற்று வருகிறது.
மாவிலித் துறையிலுள்ள வெளிச்சவீடு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 75 سي

Page 54
வெடியரசன் கோட்டை
இது நெடுந்தீவின் மேற்கே கோட்டைக்காடு என்னும் *பகுதியில் அமைந்திருந்தது. இங்கிருந்தே வெடியரசன் என்னும் மன்னன் தனது ஆட்சியைச் செலுத்தினான். இக்கோட்டை சோழர் காலக் கட்டிட முறைப்படியே கட்டப்பட்டிருந்தது. இதன் வடிவமைப்பு பல சித்திர வேலைப்பாடுகளைக் கொண்டி ருந்திருக்கலாமென அதன் சிதைந்த பகுதிகளைக் கொண்டு புதை பொருள் ஆராட்சியாளர்கள் கருதுகிறார்கள். இன்று இக் கோட்டை அழிந்த நிலையிலுள்ளது. இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டமான நாணயங்கள், சதுரமான நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அழிந்த நிலையிலுள்ள வெடியரசன் கோட்டை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 76
 

போர்த்துக்கீசர் கோட்டை
போர்த்துக்கீசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுந்தீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறைமுகத்திற்கண்மையில் ஒரு கோட்டையைக் கட்டி அங்கிருந்து ஆட்சி செய்தனர். இக்கோட்டை இடிந்த நிலையில் மண்மேடாகக் காட்சியளிக்கிறது. இக்கோட்டை பற்றி பாசெற் என்னும் பாதிரியார், இது ஒரு இரண்டு மாடிக் கட்டிடமாகக் கட்டப்பட்டிருந்தது. இதன் சுவர்கள் மிகவும் அகலமாகவிருந்தன. மேலே இரண்டு அறைகளும், கீழே இரண்டு அறைகளுமிருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. அதற்குக் கதவுகள் போடப்படவில்லை. அவ்வறையிலிருந்து மேலறைக்குச் செல்லக்கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தட்டையாகவிருந்தது எனவும் கூறியுள்ளார்.
போர்த்துக்கீசரால் கடலையும் வெட்டுக்கழியையும்
இணைத்து வெட்டப்பட்ட கால்வாய்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 77

Page 55
ஒல்லாந்தர் கோட்டை
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இக்கோட்டை நெடுந்தீவின் மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக் கண்மையில் கடற்கரைப் பக்கமாகக் கட்டப்பட்டிருந்தது. இதனுள் சுரங்க அறை ஒன்றும் காணப்படுகிறது. இதுவும் இன்று அழிந்த நிலையிலேயே உள்ளது. இதன் சுவர்கள் மிக அகலமானவை. இதன் உள்ளும் புறமும் பல உடைந்த ஒல்லாந்தர் பாவித்த பொருட்களும், செப்பு நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. இதன் சுவர்கள் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிக்கின்றன.
ஒல்லாந்தர் கோட்டை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 78
 

குதிரைகள்
ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில், அவர்கள் தங்களின்
தேவைகளுக்காகவும் , வியாபாரத்திற்காகவும் பல நுாற்றுக்கணக்கான குதிரைகளை அரேபியா, பேர்சியா, முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இவை யாவும் உயர்ந்த இனத்தைச் சேர்ந்த குதிரைகளாகும். இவற்றுக்காக ஒல் லாந்தர் பல கிணறுகளையும் , கேணிகளையும் கட்டியிருந்தார்கள். அத்துடன் பல குதிரை கட்டும் லாயங்களையும் அமைத்திருந்தார்கள். இவையின்றும் சிதைந்த நிலையில் நெடுந் தீவின் மேற்கே காணப்படுகின்றன. இக்குதிரைகள், ஒல்லாந்தர் நாட்டை விட்டுப் போனதும், போதிய பராமரிப்பின்மையாலும், அவற்றைத் தேடுவாரின்மையாலும், அவை சுயேச்சையாகத் தீவின் தெற்கேயுள்ள புல்வெளிகளில் சுதந்திரமாகத் திரிவதைக் காணலாம். இவை இன்று காட்டுக் குதிரைகளாக மாறிவிட்டன. இவற்றின் வாரிசுகள் வெல்லையென அழைக்கப்படும் புல்வெளிப் பிரதேசத்தில் கூட்டம், கூட்டமாகத் திரியும் காட்சி பார்ப்போர் கண்களுக்கு நல் விருந்தாகும். இன்று இவற்றின் தொகை குறைந்துகொண்டே செல்கின்றது.
குதிரைக் கூட்டம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 79

Page 56
குவிந்தா
இது நெடுந்தீவின் தென் கிழக்கே காணப்பட்ட உயரிய முக்கோண வடிவமாகக் கட்டப்பட்ட வெளிச்சவீட்டுக் கோபுரமாகும். இதனை ஒல்லாந்தர்களே கட்டினார்கள். இவர்களால் கட்டப்பட்ட இக்கோபுரத்திற்கு இராணியின் கோபுரம் எனப் பெயரிட்டார்கள். இதுவே நாளடைவில் மக்களால் குவிந்தா என அழைக்கப்பட்டது. நெடுந்தீவை நோக்கி வரும் பெரிய கப்பல்கள் திசைமாறிச் செல்லாதிருக்க இது ஒரு திசைகாட்டிக் கோபுரமாக விளங்கியது. குவீன்ரவர் என்ற பெயரைக் கொண்டு சிலர் இக்கோபுரத்தைப் பிரித்தானியர்களே கட்டியிருக்கக் கூடுமெனக் கருதியபோதிலும், இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்திலேயே கட்டப் பட்டதென மூதாதையர்களின் கர்ணபரம்பரைக் கதைகளாலும், அக்கோபுரத்தின் கட்டிட அமைப்பு, காலம் என்பவற்றைக் கொண்டும் அதனைக் கட்டியவர்கள் ஒல்லாந்தரேயென அறியப்பட்டுள்ளது. இன்று இக்கோபுரம் அழிந்த நிலையில் உள்ளதைக் காணலாம்.
༦༦༦༦ར་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
குவிந்தா
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 80
 

பூதம் வெட்டிய கிணறுகள்
சாறாப்பிட்டி கோளாங்கற் பாறைகளின் மத்தியில் பொழியப்பட்ட சில நன்னீர்க் கிணறுகள் காணப்படுகின்றன. சுமார் முப்பது கிணறுகள் வரை ஒன்றுக்கொன்று மிக அண்மையில் காணப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் சுமார் பத்தடி ஆழமுடையன. சில கிணறுகளை இணைத்துக் கட்டிய வடிகால்களும் நீர்த்தொட்டிகளும் சிதைந்த நிலையில் காணப்படுகின்றன. குதிரைகளுக்காகவே இக்கிணறுகள் வெட்டப்பட்டன என அறியப்படுகிறது. இவை இயந்திரங்கள் இல்லாத காலத்தில் பொழியப்பட்டிருப்பதால் இவை மனித வலுவுக்கப்பாற்பட்ட ஒரு சக்தியினால்தான் வெட்டப்பட்டிருக்க வேண்டுமென மக்கள் கருதுவதால் இவற்றைப் பூதம் வெட்டிய கிணறுகள் என அழைக்கின்றார்கள். இவற்றில் சில கிணறுகளிலிருந்தே தீவிற்கான குடிநீர், குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படுகிறது.
குடி நீர் விநியோகத்திற்காக மூடிக் கட்டப்பட்டுள்ள கிணறு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 81

Page 57
குதிரை லாயங்கள்
ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காகக் கட்டப்பட்ட பலதுாண்கள இன்றும் சாறாப்பிட்டிப் பகுதியில் காணப்படுகின்றன. இவை பலநூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்துவிடாமல் இன்றும் நிமிர்ந்த நிலையில் காட்சியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன.
குதிரை கட்டும் லாயங்கள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 82
 

நாற்பதடி மனிதனின் காற்பாதம்
நெடுந்தீவு மேற்கில் சாறாப்பிட்டி கோளாங்கற்பாறைகளின் மத்தியில் ஒரு பெரிய மனிதனின் பாதம் காணப்படுகிறது. இது சாதாரண மனிதர்களின் பாதங்களை விட மிகவும் பெரிதாகக் காணப்படுவதால் நாற்பதடி மனிதனின் கால் பாதம் எனக் கூறப்படுகிறது. அத்துடன் இப்பாதத்தை இராமபிரானின் கால்பாதமெனவும் சிலர் கூறுகிறார்கள்.
நாற்பதடி மனிதனின் கால் பாதம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 83

Page 58
பழமைவாய்ந்த ஆலமரம்
நெடுந்தீவின் கிழக்கே பிள்ளையார் கோவிலின் அருகே நூறாண்டுகளுக்கு மேல், பழமைவாய்ந்த ஒரு ஆலமரம் பெரிய விருட்சமாக அரை மைல் விஸ்தீரணத்திற்குக் கிளைகளைப் பரப்பிப் படர்ந்து காணப்படுகிறது. இதன் இலைகளை ஆடுமாடுகள் உண்பதில்லை. இதன் அருகே ஓர் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இவ்வாலயம் இந்த ஆலமரத்தின் அருகே இருப்பதால் ஆலமாவனப் பிள்ளையார் ஆலயமென அழைக்கப்படுகிறது.
நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 84
 

அரசனைய அரசு
நெடுந்தீவின் மேற்கிலுள்ள புக்காட்டு வயிரவர் கோவிலின் அருகே பல நுாறு வருடங்கள் பழமை வாய்ந்த பெரிய அரசமரம் ஒன்றுள்ளது. இது மூன்று ஏக்கள் நிலம் வரை வியாபித்துள்ளது. கிளைகள் நீண்டு வளைந்து நிலத்தில் பொறுத்து பின் மேலோங்கி வளருகின்றது. மகாவித்தியாலயத்தின் ஐந்தாண்டு நிறைவு மலரில் இணுவிலைச் சேர்ந்த முன்னாள் அதிபர் திரு. ஆனந்தர் பி.ஓ.எல் அவர்கள் இதனைப் பார்த்து அரசனைய அரசு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
பழமை வாய்ந்த பெரிய அரசமரம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 85

Page 59
பெருக்கு மரம்
இம்மரம் நெடுந்தீவின் கிழக்குப் பகுதியில் காணப்படுகிறது. இம் மரம் பலநுாறு வருடங்களுக்கு மேற்பட்டதெனக் கூறப்படுகிறது. இதன் அடிமரம் மிகவும் விசாலமானது. இதன் பூக்கள் வெண்மை நிறமாகவும், காய்கள் வட்டமான பச்சை நிறமாகவுமுள்ளன. இத்தகைய மரங்கள் இலங்கையிலே மிகச் சிலவே உள்ளன எனக் கூறப்படுகிறது. இம்மரங்கள் இஸ்லாமியரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டன என அறியப்படுகிறது. இவை இன்று பெரும்பாலும் கால நிலை மாற்றங்களால் அழிந்து கொண்டு செல்கின்றன எனக் கூறப்படுகிறது. - e^-
பெருக்கு மரம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 86
 

மணல் கடற்கரை
இது நெடுந்தீவின் மத்தியில் வடகடற்கரையில் அமைந்துள்ளது. மணல் வெள்ளையாகக் கடற்கரை நீளத்துக்குப் பரந்து காணப்படுகிறது. இதனருகேயுள்ள கடல், கற்பார்கள் அற்றதாகவும், குளிப்பதற்கும், நீந்துவதற்கும் இதமானதாகவும் அமைந்துள்ளது. இதனருகே பல நன்நீர்க் கிணறுகளும் கட்டப்பட்டுள்ளன. இதனருகேதான் ஒல்லாந்தர் கோட்டையும் அமைந்திருந்தது. இக்கடற்கரை சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் ஒரு இடமாகும்.
மணல் கடற்கரை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 87

Page 60
வெல்லைக் கடற்கரை
நெடுந் தீவின் தெற்கே வெல் லைக் கடற்கரை அமைந்துள்ளது. இதன் கரைகள் பெரிய பாரைக்கற்களின்றியும், மணற்பாங்காகவும் உள்ளது. வெளியூர்களிலிருந்து காலத்திற்குக் காலம் மீன் பிடிப்பதற்காக வரும் மீனவர்கள் இக்கரை நீளத்திற்குத் தங்கள் வாடிகளை அமைத்திருப்பதைக் காணலாம். வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலங்களில் இப்பகுதிக் கடல் மிக அமைதியாகவிருக்கும். இக் காலங்களில் கட்டுமரங்களிலும், மோட் டார் வள்ளங்களிலும் பல நுாற்றுக்கணக்கான மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்று, திரும்பிவரும் காட்சிகளும், மீன்கள் வாங்கப் பணத்துடனும், பண்டமாற்றுப் பொருட்களுடனும் மக்கள் கூடும் காட்சிகளும், ஒரு தனி அழகாக விருக்கும். இக் கடற் கரையை அணி டிய புல்வெளிகளிலேயே குதிரைகளையும் கூட்டம், கூட்டமாகக்
85IT6006 TLD.
வெல்லைக் கடற்கரை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 88
 

Luaśl (கற்களைக் கொண்டு அடுக்கப்பட்ட வேலி)
நெடுந்தீவின் விசேடங்களில் ஒன்று, தீவை அழகுபடுத்தும் கற்களால் கட்டப்பட்டு அரண் செய்யும் பகிர் என அழைக்கப்படும் கல் வேலிகளாகும். இவற்றை இலங்கையில் வேறெங்கும் தொடராகக் காணமுடியாது. நெடுந் தீவிலுள்ள சகல கமக்காணிகளும், வீட்டுக்காணிகளும் (சில வீட்டு மதில்களைத் தவிர) கற்களால் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுக் கட்டப்பட்டிருப்பதைக் காணலாம். சிறிய கற்களை அத்திவாரமாக அடுக்கி அவற்றின் மேல் பெரிய கற்களை அளவிற்கேற்ப முதலில் அடுக்கி பின்னர் சிறிய கற்களை மேல் நோக்கி ஒன்றன் மேல் ஒன்றாகப், படிப்படியாக அடுக்குவார்கள். இவை ஆடுமாடுகள் வெளியிலிருந்து வராமல் பாதுகாப்பளிக்கின்றன. சிலர் இவற்றுக்கு மேலாகப் பனை ஓலைகள் வைத்து அடைத் துமிருப்பர். இவற்றுக்கு வாசலில் கதவுகள் போட்டிருப்பார்கள். கமக்காணிகளுக்கு, இரண்டு பனம் துண்டங்களைக் கொண்டு ஆட்கள் மட்டும் நுழையக்கூடியதாக ஆங்கில எழுத்து வி வடிவத்தில் வழியமைத்திருப்பார்கள். இவற்றைப் பனந்துண்டங்களைக் கொண்டே பெரும்பாலும் அமைத்திருப்பார்கள். இதனால் இவற்றைக் கொட்டுப்பனையென அழைப்பர்.
ჯXX
கல் வேலி ( பகிர் )
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 89

Page 61
சைபீரியாத் தாராக்கள்
நெடுந்தீவின் தென்பகுதியிலே பல குளங்கள் உள்ளன. இவை யாவும் மாரிகாலத்திலே நீர் நிறைந்து காணப்படும். இக்காலங்களிலே இக்குளங்களில் பல்லாயிரக்கணக்கான தாராக்களும், வேறு பல்லினப் பறவைகளும் நிறைந்து காணப்படும். இத்தாராக்கள், பல்லாயிரம் மைல்களுக்கப்பாலுள்ள சைபீரியா போன்ற நாடுகளிலிருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இப் பறவைகள், குளங்களில் வரிசையாக நீந்தும் காட்சிகளும், வரிசையாக வானில் பறந்து வந்து குளங்களில் இறங்கும் காட்சிகளும் பார்ப்போர் கண்களுக்கு விருந்தாகும். இவற்றின் பல்வேறுபட்ட ஒலிகளையும் கேட்கலாம். வேட்டை விரும்பிகள் இவற்றை வேட்டை ஆடுவர்.
مجمہ ببر
சைபீரியா தாராக்கள்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 90
 

இயல் 10 நெடுந்தீவுடன் தொடர்புடைய அயல் தீவுகள் மக்கள் குடியேற்றமுள்ள தீவுகள்
நயினாதீவு
புங்குடுதீவு
அனலைதீவு லைடன்தீவு எழுவைதீவு
காரைதீவு மண்டைதீவு
மக்கள் குடியேற்றமில்லாத தீவு
கச்சதீவு நயினாதீவு
நெடுந்தீவிற்கு மிக அண்மையில் உள்ள தீவு நயினாதீவாகும். இத் திவானது நெடுந் தவிலிருந்து கிட் டத் தட்ட ஐந்து மை ல | தொலைவிலுள்ளது. இத்தீவிற்கு நாகதீவு, நயினாதீவு, நாகநயினாதீவு,
மணிபல்லவத் தீவு, மணித் தீவு." நாகேஸ் வரம், மணிபல்லவம் , நாகதீபம் எனப் பல பெயர்களுண்டு. இச்சிறு தீவானது சரித்திரப் பெருமை வாய் நீதது. சிலப் பதிகாரம் , மணிமேகலை போன்ற நூல்களில் மணிபல்லவம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. இங்கு ஈழப் பிரசித்தி பெற்ற நாகபூஷணி அம்பாள் ஆலயம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 91

Page 62
அமைந்துள்ளது. இதன் உற்சவ காலங்களில் இலங்கையின் எல்லாப் பாகங்களிலுமிருந்து மக்கள் வந்து அம்பாளைத் தரிசித்து அருள் பெற்றுச் செல்வார்கள். அம்பாளின் ஆலயத் திருவிழாக்காலங்களில் மக்கள் மோட்டார் படகுகளிலும் வள்ளங்களிலும் வத்தைகளிலும் தினமும் பெருந்திரளாக வந்து வணங்கிச் செல்வது வழமையான நிகழ்வாகும். ஆழ் கடலில் பிரயாணம் செய்யும் நெடுந்தீவு மக்கள் பிரயாணம் செய்யும் வேளைகளிலெல்லாம் அம்பாளின் அருள்வேண்டி கோபுரத்தைப் பார்த்தே வணங்கிச் செல்வர். அம்பாளின் அருளினால் இதுகாலவரை கடற் பிரயாணத்தினால் நெடுந்தீவுமக்களுக்கு எந்த இடையூறுகளும் ஏற்படவில்லை. புத்தர் கால மணிபல்லவம் என அழைக்கப்பட்ட தீவு இதுவென்றே கூறப்படுகிறது. இங்கு பழம் பெருமை வாய்ந்த பெளத்த விகாரைகளும் அமைந்துள்ளன. இது பெளத்த மக்களுக்கும், இந்துக்களுக்கும் புனித தலங்கள் அமைந்த தீவாக விளங்குகின்றது. வடமாகாணத்திற்கு விஜயம் செய்யும் அமைச்சர்கள், வெளிநாட்டவர்கள் உட்பட எராளமான சிங்களப் பெளத்த மக்களும் இவ்விகாரைகளையும், அம்பாள் ஆலயத்தையும் வருடம் தோறும் தரிசித்துச் செல்வார்கள். திரு விழாக் காலங்களில் இலங்கையின் பலபாகங்களிலுமிருந்து இவ்வாலயத்தைச் சைவமக்கள் தரிசித்துச் செல்வார்கள். இங்கு கத்தோலிக்க மக்களுக்கான தேவாலயம் ஒன்றும், இஸ் லா மரியர் களுக்கான பள்ளிவாசல் ஒன்றும் , புரட்டஸ்தாந்தியர்களுக்கான ஆலயம் ஒன்றும் இருக்கின்றன. இங்கு அமுதசுரபி என்ற பெயரில் ஒரு அன்னதானசபை, அத்தீவக மக்களால் நடாத்தப்பட்டு வருகிறது. இச்சபையானது நாகபூசணி அம்பாள் ஆலய உற்சவ காலங்களில் அங்கு வந்து செல்லும் பலலட்சம் மக்களின் பசிப்பிணியை நீக்கி, மதிப் பிடற் கரிய பெரும் சேவையாற்றி வருகிறது. தென்கிழக்காசியாவிலேயே சிறந்த கண் வைத்திய நிபுணரான டாக் டர் இ.பரராசசிங்கம் , இலங்கைப் பொலிஸ் அத்தியட்சகராகவும், இன்று உலகப் புகழ்பெற்ற பொலிஸ் படையில் சேவையில் உள்ளவருமான திரு. இ.சுந்தரலிங்கம்
ஆகியோர் நயினாதீவு பெற்றெடுத்த பெருமக்களே. உலகிலுள்ள இந்து ஆலயங்களுக்கெல்லாம் சென்று கும்பாபிஷேகங்களில் சிறப்புப் பணி ஆற்றி வருபவரும்,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 92

அதி உயர் இந்துமத சாஸ் த ரங் களை எல்லாம் ஐயம் திரி பறக் கற்றுத் தேர் ந்தவரும் நாகபூஷணி அம்மன் ஆலயப் பிரதம குருக்களாகப் பணி யா றி றுப வருமான பிரதிஷ்டா பூஷணம் பிரம்ம பூரீ கைலாச நாதக் குருக்களும் நயினாதீவைப் பிறப்பிட மாகக் கொண் டவரே. நயினாதீவு மகாவித்தி யாலய முன்னைநாள் அதிபர் திரு.வே. விசு வலிங்கம், முன்நாள் கல்வி அதிகாரி திரு. ஏ.எஸ். நல்லையா, நாகபூஷணி வித்தியாலய முன்னைநாள் அதிபர் திரு. நா. விசுவலிங்கம், கணேஷ வித்தியாலய அதிபர் திரு. தியாகராசா, அதிபர் திரு. நா.க.சண்முகநாதபிள்ளை போன்றோரும் தீவகத்தின் கல்வி வளர்ச்சிக்காக உழைத்த பெரியார்களாவர். இன்று கனடாவிலும் பிரபல சட்டத்தரணிகளாகக் கடமையாற்றும் திரு.பி.கைலாசநாதன், திரு. தம்பையா பூரீபதி ஆகியோரும் நயினாதீவு பெற்றெடுத்த பெருமக்களே. இங்குள்ள மக்கள் கல்விக்கு மிகுந்த மதிப்பளிப்பதோடு கற்றவர்களையும் நன்கு மதிப்பவர்கள். அம்பாளின் அருளினாலும், அயராத முயற்சிகளினாலும் இத்தீவகமக்கள் பலர், கல்வியில் உயர்ச்சி பெற்று விளங்குவதோடு பல உயர் உத்தியோகங்களிலும் இருக்கிறார்கள்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 93

Page 63
புங்குடுதீவு
இத்தீவானது நெடுந்தீவிற்கு மிக அண்மையிலுள்ள மற்றொரு தீவாகும். நெடுந்தீவு மக்கள் குறிகாட்டுவான் துறைமுகத்திற்குச் சென்றே தற்பொழுது யாழ்ப்பாணத்திற்கும் ஏனைய தீவுகளுக்கும் செல்கின்றார்கள். இத்தீவின் மக்களுக்கும், நெடுந்தீவு மக்களுக்கும் பரம்பரையான குடும்பத் தொடர்புகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றது. தனிநாயக முதலியும் அவரது பரம்பரையினரும் நெடுந்தீவில் குடியேறிய காலம் தொட்டே இவ்விரு தீவு மக்களுக்குமிடையில் நெருங்கிய குடும்ப உறவுகள் நிலைபெற்று வந்துள்ளன. தமிழகத்திலுள்ள பூங்குடிக்கிராம மக்கள் குடியேறியமையால் பூங்குடியென்றும், அக்காலத்திலே செல்வம் கொழித் திருந்தமையால் பொன்கையூர் என்றும், புங்கை மரங்கள் நிறைந்து காணப்பட்டமையால் புங்குடுதீவென்றும் அழைக்கப்பட்ட தெனவும் கூறுகிறார்கள். இங்குள்ள மக்களில் பலர் இலங்கையின் பல பாகங்களிலும் வர்தகத்தில் சிறந்தவர்களாக விளங்கியதோடு, ஆங்காங்கே தமது விலாசங்களையும் நிலைநிறுத்தினர். இங்கு பல சைவப் பெரியார்கள், சைவ சமய வளர்ச்சிக்காகவும், கல்வி வளர்ச்சிக்காகவும் அருந்தொண்டாற்றினர்.
இங்குள்ள கண்ணகையம்மனின் ஆலயம் சரித்திரப் பிரசித்தி பெற்றதாகும். இங்கு நடைபெறும் உற்சவங்களுக்கு இலங்கையின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து வணங்கி கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுச் செல்வார்கள். இத்தீவிலிருந்து வேலணை வரை ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இது புங்குடுதீவையும் வேலணையையும் இணைக்கும் மிக நீண்ட பாலமாகும். இப் பாலத்தைக் கட்டுவதற்குப் பெருமுயற்சி எடுத்தவர் பெரியவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட திரு. அம்பலவாணர் என்னும் பெரியாராவர். இப்பாலம் அவர் பெயராலேயே வேலணைவாணர் பாலம் எனவும், வாணர் தாம்போதி எனவும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் தீவக மக்களின் கடற் பிரயாணதுாரம் குறைக் கப்பட்டு மக்கள் விரைவாக யாழ்ப்பாணத்திற்குச் செல்லக்கூடிய வசதிகளும் ஏற்பட்டன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 94

இன்று நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணத்தறகும, ஏனைய தீவுகளுக்கும் செல்வதற்கு, புங்குடுதீவிலுள்ள குறிகாட்டுவான் துறைமுகமே பிரதான துறையாக அமைந்துள்ளது. இதனால் அதி நீண்ட தொலைவிலுள்ள நெடுந்தீவு மக்களின் கடல் பிரயாண துாரமும் பிரயாண நேரமும் குறைந்துள்ளது. புங்குடுதீவில் காலத்திற்குக்காலம் பல தமிழ் வளர்த்த பெரியார்களும், சிறந்த கலைஞர்களும், சமூக சேவையாளர்களும் இருந்து வருவது குறிப்பிடத் தக்கதாகும். யாழ்ப்பாணப் புகையிரத நிலையக் கட்டிடத்தை வடிவமைத்த சிவில் ரெயில்வே பொறியியலாளர் திரு.வ.ஈ. வைத்தியலிங்கம், தென்இந்தியத் திருச்சபை ஆயர் வண. அம்பலவாணர், பேராசிரியர் செல்வநாயகம் முதலிய பெரியார்களும் வித்துவான் சி.ஆறுமுகம், வித்துவான் பொன் கனகசபை, புலவர் ஈழத்துச் சிவானந்தன் போன்றோரும், சமூகசேவையாளர் திரு. திருநாவுக்கரசு(சர்வோதயம்) அவர்களும், சங்கீதபூசணங்களான பொன் சுந்தரலிங்கம், திரு. கணேசலிங்கம், திரு. கனகலிங்கம், திரு. பாலசுந்தரம் போன்றோரும் புங்குடுதீவு பெற்ற பெருமக்களே. இத்தீவக மக்களும் உலகில் பல பாகங்களிலும் கல்வியிலும், வர்த்தகத்திலும் சிறந்து விளங்குகின்றார்கள்.
குறிகாட்டுவான் துறைமுகம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 95

Page 64
அனலைதீவு
நயினாதீவிற்கு மிக அண்மையிலுள்ள ஒரு அழகான சிறிய தீவாகும். இத்தீவைச் சூழ நான்கு புறமும் கடல் அலைகளால் தாக்கப்படாது கற்பாறைகள் அணைபோல் அமைந்திருப்பதால் அணலை தீவு என்ற பெயர் வந்ததெனவும் பின்னர் இப் பெயரே அனலைதீவென மாறியதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள மக்கள் அனைவரும் சைவ சமயிகளாகவேயுள்ளனர். இங்கு வேறு மதங்களைப் புகவிடாது தடுத்த பெருமை இவ்வூர் மக்களையே சாரும். இத்தீவிலுள்ள மக்களுக்கும் நெடுந்தீவு மக்களுக்கும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே குடும்பத் தொடர்புகளிருந்து வருகின்றன. இத்தீவானது சிறந்த மண்வளமும் நீர்வளமும் கொண்டு விளங்குகிறது. இங்குள்ள மக்களில் பெரும்பாலானோர் விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருந்தனர். இங்குள்ள ஐயனார் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இவ்வாலயத்தின் விழாக்காலங்களில் பல இடங்களிலுமிருந்து மக்கள் வந்து ஐயனாரின் அருள் பெற்றுச் செல்வர். இத்தீவக மக்களில் பலர் இன்று உத்தியோகங்களிலும், உயரிய வியாபாரத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள். இத்தீவகத்திலிருந்தும் பெருந் தொகையான மக்கள் இலங்கையின் அரசாங்கக் குடியேற்றத் திட்டங்களிலும், உள்நாட்டு யுத்தங்கள் காரணமாக புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடுகளிலும், இந்தியா, கனடா, இங்கிலாந்து அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் வாழுகின்றார்கள். இங்கும் பல கல்வி மான்களும்,சமூகசேவையாளர்களும் இத்தீவகத்தின் வளர்ச்சிக்காக அரும் பணியாற்றியுள்ளார்கள்.
லைடன் தீவு (வேலணை)
வேலணை, சரவணை, நாரந்தனை, புளியங்கூடல், சுருவில், பருத்தியடைப்பு. கரம்பொன், ஊர்காவற்றுறை முதலிய பகுதிகள் இதில் அடங்கும்.இவை லைடன் என்ற அதிகாரிக்குக் கீழ் இருந்தமையால் லைடன் என்ற பெயர் வந்ததென்பர். முருகப்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 96

பெருமானின் வேல் வந்தடைந்த இடமாகையால் வேலணை என்ற பெயர் வந்ததெனவும், சிலர் வேலன் என்ற பிரதானியின் கீழிருந்தபடியால் வேலணை என்ற பெயர் வந்ததெனவும் கூறுகின்றார்கள். லைடன் தீவின் வேலணைப் பிரதேசம் நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குச் செல்லும் வழியிலுள்ளது. புங்குடுதீவு வேலணைப்பால இணைப்பிற்கு முன்னரும் நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணம் செல்வதற்கு வேலணையைப் பிரதான இறங்கு துறையாகப் பாவித்தனர். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அவர்கள் தமது ஆட்சியைப் பலப்படுத்தும் நோக்கத்துடன் வங்களாவடிச் சந்தியிலிருந்து கால் மைல் துாரத்தில் ஒரு கோபுரத்தைக் கட்டி கடல் வழியாக வரும் அந்நியர் வருகையைக் கண்காணித்து வந்தனர். இக்கோபுரம் இன்று சிதைந்த நிலையில் காட்சியளிக்கிறது. இங்குள்ள வேலணை அம்மன் கோவிலும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு விவசாயம் பெரிய அளவில் செய்யப்பட்டு வந்ததாயினும், தற்பொழுது மக்கள் தோட்டப் பயிர்ச்செய்கையிலேயே அதிகம் ஈடுபட்டுள்ளனர். வேலணை மக்களுக்கும் நெடுந்தீவு மக்களுக்கும் இடையில் அதிக குடும்ப உறவுகளும், வியாபாரத் தொடர்புகளும் நெடுங்காலமாகவிருந்து வந்திருக்கின்றன. நெடுந்தீவிலுள்ள சில காணிகளில் வேலணை மக்களுக்குப் பங்குகள் இருந் திருக்கின்றன. இன்றும் நெடுந்தீவிலுள்ள சில காணி களுக்கு வேலணையார் காணிகளென்று உறுதிகளிருப்பதாகச் சொல்லப் படுகிறது. இப்பகுதி யாழ்ப்பாணக்குடா நாட்டுடன் அதிக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் ஆரம்ப காலங்களிலிருந்தபடியால் இங்குள்ளமக்கள் கல்வியிலும், உத்தியோகங்களிலும், வியாபாரத்துறைகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள். முன்னைய பாராளுமன்ற உறுப்பினர்களான, திரு.வி.எ. கந்தையா, திரு. கா.பொ. இரத்தினம் ஆகியோர் வேலணையைச் சேர்ந்தவர்களே. இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் திரு. பொன் பாலசுந்தரம்பிள்ளை, பேராசிரியர் சிவச்சந்திரன் முதலியோரும் வேலணையைப் பிறப்பிடமாகக் கொணி டவர்களே. இங்கும் பல கல விமான்களும் , சமூகசேவையாளர்களும் நாட்டிற்காகச் சிறந்த சேவை களையாற்றியுள்ளார்கள்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 97

Page 65
ஊர்காவற்றுறை
ஊர்காவற்றுறை லைடன் தீவின் வடகரையிலுள்ளது. ஊர் காவற்றுறைத் துறைமுகத்திற்கு அண்மையில் ஒரு கடற்கோட்டை உள்ளது. இக்கோட்டை ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்டது. முற்காலத்தில் இந்தியாவுடன் வர்த்தகத் தொடர்பு கொண்ட இத்துறைமுகம் வழியாக, இந்தியாவிலிருந்து பெரிய படகுகள்மூலம் கள்ளிக்கோட்டை ஓடுகள்,வடக்கன் மாடுகள், பிற பொருட்கள் எனப் பல பொருட்கள் சுமார் ஐம்பது ஆணி டுகளுக்கு முன் இறக் குமதி செய்யப்பட்டன. ஊர் காவற்றுறையிலிருந்த முற்கால மக்கள் சிறந்த கப்பலோட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்கள் இந்தியா, மலேசியா, பர்மா போன்ற நாடுகளுக்கெல்லாம் பாய்க் கப்பல்களில் சென்று வணிகம் செய்திருக்கின்றார்கள் என அறியப்படுகிறது. நெடுந் தீவு மக்கள் குறிகட்டுவான் துறைமுகத்திலிருந்து பிரயாணஞ் செய்யத் தொடங்குமுன், ஊர்காவற்றுறைக்குப் படகுகள் மூலம் சென்று அங்கிருந்தே தமது யாழ்ப்பாணப் பிரயாணத்தை தொடர்ந்தார்கள். அந்தக் காலங்களில் ஊர்காவற்றுறையே முக்கிய துறையாகவும், மக்கள் தங்கிச் செல்வதற்கும், தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்குமான கடைகள் நிறைந்த பட்டினமாகவும் விளங்கியது. இங்கு தீவுப் பகுதிகளுக்கான நீதிவிசாரணை மன்றம், பெரிய வைத்தியசாலை, பாராளுமன்ற உறுப்பினர்களின் காரியாலயம் என்பன இருந்தன. இதனால் தீவுப் பகுதிகளிலிருந்து குடாநாட்டுக் குப் போய் வருவதற்கான மக்கள் , வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெறுவதற்காக வரும் மக்கள், நீதிமன்றத்துக்கு வழக்குகளுக்காக வரும் மக்கள், அரசாங்கக் காரியங்களுக்காக வரும் மக்களென தினமும் இங்கு பெருந்தொகையான மக்கள் கூடுவர். இங்குள்ள புனித அந்தோனியார் கல்லுாரி , விளையாட்டு மைதானத்தில் தீவுப்பகுதிக் கல்வி வட்டாரப் பாடசாலைகளின் விளையாட்டுப்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 98

போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வந்தன. நெடுந்தீவுப் பாடசாலைகளிலிருந்தும் மாணவர்கள் இவ்விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வர்.தீவுப்பகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகவிருந்த அல்பிரட் தம்பிஐயா அவர்களும், பிரதம நீதியரசராகவிருந்த சர்வானந்தா அவர்களும், ஊர்காவற் றுறையைச் சேர்ந்தவர்களே. தீவுப் பகுதி மக்களுக்கு ஊர்காவற்றுறைத் துறைமுகம் பிரயாணத்திற்கு அக்காலத்தில் மிகவும் வசதியாகவிருந்தது.
ஊர்காவற்றுறைப் புனித அந்தோனியார் கல்லூரி
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 99

Page 66
ஊர்காவற்றுறைக்கும், காரைநகருக்கும் இடையிலுள்ள கடற்கோட்டை
இத்தீவானது யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் பொன்னாலைத் தரை வழிப் பாலத்தால் இணைக்கப்பட்டு நல்ல போக்கு வரவு வசதிகளைப் பெற்றதோடு செல்வச் செழிப்பையும், நல்ல கல்வி வசதிகளையும் பெற்றுள்ளது. இதனால் இத்தீவு காரதீவு என்ற தன்மையைவிட்டு பல வசதிகளையுமுடைய காரை நகரானது. இங்குள்ள மக்கள, கல்வியில் உயர்வு பெற பல நல்ல வாய்ப்புக்களையும்,அதன்மூலம் பல உயர் உத்தியோகங்களையும் பெற்றார்கள். யாழ்ப்பாணத்தோடு ஆரம்ப காலத்திலிருந்தே நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதால் வெளிநாடுகளிலும் அக் காலந்தொட்டே பல வேலை வாய்ப்புக்களையும் பெற்றிருந்தார்கள். இதன்காரணமாக ஒரு காலகட்டத்தில் சிங்கப்பூர், மலாயா போன்ற வெளிநாட்டு அரசாங்கங்களிடமிருந்து ஓய்வுபூதியம் பெறும் அனேக இளைப்பாறிய உத்தியோகத்தர்கள் இருந்தார்கள். இவை மட்டுமன்றி இங்குள்ள மக்கள் வர்த்தகத் துறையிலும் இலங்கையின் பல பாகங்களிலும் சிறந்து விளங்குகின்றார்கள்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 100
 

இன்று உலகின் பல பாகங்களிலும் பல நல ல உத்தியோகங்களில் இருக்கின்றார்கள். இவர்களில் பலர் புலம் பெயர்ந்த நாடுகளிலுள்ள மக்களுக்கு நல்ல சேவைகளையும் ஆற்றி வருகின்றார்கள். இங்கு ஈழத்துச் சிதம்பரம் எனப் போற்றப்படும் ஒரு சிவன்கோவில் உள்ளது. இங்கு நடைபெறும் வருடாந்த உற்சவங்களில் இலங்கையரின் பல பாகங்களிலுமிருந்து சைவமக்கள் பெருந்தொகையாகக் கலந்துகொள்வர். வடபகுதிக்கான இலங்கை அரசின் கடற்படைத் தளமும் இங்கு அமைந்துள்ளது. கோவளம் என்னும் இடத்தின் கடற்கரையில் ஒரு வெளிச்சவீட்டுக் கோபுரம் உள்ளது. இங்குள்ள கசூர்னா கடற்கரை மிகவும் பிரபல்யமானது.
குறிகட்டுவான் துறைமுகம் போக்குவரத்துக்காக திறக்கப்படாதிருந்த காலத் தில , நெடுந் தரீவு மக்கள் ஊர்காவற்றுறைத் துறைமுகத்தை மோட்டார் படகுகள்மூலமும் வள்ளங்கள் மூலமுமி, சென்றடைந்து அங்கிருந்து பாதைகள் மூலமும் ,மச்சுவாய் என்றழைக்கப்படும் சிறிய வலி வள்ளங்கள் மூலமும் காரதீவுத் துறையைச் சென்றடைவர். அங்கிருந்தே பேரூந்து வண்டிகள் மூலம் யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்தனர். காரைதீவு மக்களுக்கும் நெடுந்தீவு மக்களுக்குமிடையில் வியாபாரதி தொடர்புகள், திருமணத் தொடர்புகள் இருந்திருக்கின்றன. பல நண்பர்கள் நெடுந்தீவு மக்களின் பிரயாணங்கள் தடைப்பட்ட நேரங்களில் தங்கவசதிகள் அளித்து உதவியுமுள்ளனர். காரைநகர் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளிலும் சிறந்த சேவையாற்றி வருகிறார்கள். கனடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன உரிமையாளரான திரு. கந்தையா சிவசோதி (இளையபாரதி), டாக்டர் திரு. ஆதிகணபதி போன்றோர் கனடாவிலும், பல சேவைகள் ஆற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். பிரயாணக் கஷ்டங்கள் நிறைந்த அக் காலத்தில் மக்களின் பிரயாண வசதிகளுக்கு உதவியாயிருந்த ஊர்காவற்றுறைப் பட்டினத்தையும் காரைநகர் பேரூந்துத் துறையையும் நெடுந்தீவு மக்களால் என்றும் மறக்கமுடியாது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 101

Page 67
எழுவைதீவு
இத்தீவானது யாழ்ப்பாண நகரின் தென்மேற்குத்திசையில் அனலைதீவிற்கு அண்மையில் அமைந்துள்ளது. ஊர்காவற்றுறை யிலிருந்து மூன்றுமைல் துாரத்திலுள்ளது. ஆரம்பகாலத்தில் எழுச்செடிகள் நிறைந்த குடியேற்றமற்ற தீவாகவேயிருந்தது. இத்தீவில் எழுச்செடிகள் நிறைந்து காணப்பட்டதால் எழுவைதீவு எனப் பெயர்வந்ததாகக் கூறுவர். இத்தீவானது இந்தியாவிலிருந்து ஊர்காவற்றுறை நோக்கி வருபவர்களுக்கு கிழக்குத் திசையில் முதல் தெரிவதால் இதற்கு எழுவைதீவென்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். ஒலி லாந்தர் காலத்தில் அனலைதீவிலிருந்தே மக்கள் முதலில் வந்து குடியேறியதாகக் கூறப்படுகிறது. முதலில் இங்கு குடியேறிய மக்கள் அனைவரும் சைவசமயத்தினரென்றும் பின்னரே மீன்பிடித்தொழிலுக்காக வெளியூர்களிலிருந்து சில கத்தோலிக்க குடும்பங்கள் வந்து குடியேறினரென்றும் கூறப்படுகிறது. இங்கு மணல் செறிந்து காணப்படுவதோடு பனைமரங்கள் பரவலாகத் தீவெங்கும் செறிந்து காணப்படுகின்றன.
இங்குள்ள தென்பகுதி இறங்கு துறையில் ஒரு தொம்மையப்பர் தேவாலயமும், துறைமுகத்திலிருந்து கால் மைல்துாரத்தில் முத்தன் காடு என்ற இடத்தில் ஒரு முருகன் ஆலயமும் இருக்கின்றன. இவ்வாலயத்தை ஈழத்துத் திருச்செந்துாரென அழைப்பர். இங்கு ஒரு கிராமசபையும் அமைக்கப்பட்டுள்ளது. வைத்தியவசதிகள் மற்றும் அரச கருமங்களுக்காக ஊர்காவற்றுறைப் பட்டினத்திற்கே மக்கள் செல்லுகின்றார்கள். தென்பகுதியிலுள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையும், வடக்கேயுள்ள மக்கள் பனம் கைத்தொழிலையுமே முற்காலத்தில் பிரதான தொழிலாகக் கொண்டிருந்தனர். இங்குள்ள மக்களில் பலர் படித்துப் பல உத்தியோக வாய்ப்புக்களையும் பெற்றுள்ளனர். இச்சிறியதீவிலிருந்தும் பல குடும்பங்கள் குடியேற்றத் திட்டங்களுக்கும் உள்ளுர் யுத்தம் காரணமாக வெளி நாடுகளுக்கும் இடம் பெயர்ந்துள்ளனர். தனிநாயக முதலி காலத்தில் நெடுந்தீவிலிருந்து அனலைதீவில் குடியேறிய பரம்பரை மக்களில் சிலரே எழுவைதீவின் ஆரம்பக் குடிகள் எனவும் கூறப்படுகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் メ 102

மண்டைதீவு
யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு மிக அண்மையிலுள்ள தீவு மண்டைதீவாகும். இது சப்ததீவுகளுக்கெல்லாம் தலையான தீவாக அமைந்திருப்பதனால் இதற்கு மண்டைதீவு என்ற பெயர் வந்ததெனக் கூறுகிறார்கள். இங்குள்ள மக்கள் சிறந்த விவசாயிகளாகவும், வர்த்தகர்களாகவும் விளங்குகிறார்கள். 1960ம் ஆண்டு பண்ணைப்பாலம் திறக்கப்படும்வரை பிரயாண வசதிகள் குறைந்த ஒரு தீவாகவேயிருந்தது. பண்ணைப் பாலம் திறந்த பின்னர் இத்தீவு மக்கள் யாழ்ப்பாணத்துடனும் ஏனைய லைடன்தீவு, புங்குடுதீவு ஆகியவற்றுடனும் தரைவழியாகப் பேரூந்துகள் மூலம் போக்குவரத்து செய்ய வசதிகள் ஏற்பட்டன. இதனால் தீவின் கல்வி, தொழில் என்பவற்றில் அதிக வளர்ச்சி ஏற்பட்டன. இங்கு ஒரு கத்தோலிக்க தேவாலயமும், ஒரு புரட்டஸ்தாந்து தேவாலயமும், நான்கு பிரதான இந்து ஆலயங்களுமுள்ளன. இத்தீவின் கரையோரங்களிலுள்ள மக்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள்.
இங்கு மிசனறியினரால் ஆரம்பிக்கப்பட்ட கிறீஸ்தவ பாடசாலையொன்றும், கத்தோலிக்க பாடசாலை ஒன்றும் இருப்பதோடு, சைவ வித்தியாலயமொன்றும் 1912ம் ஆண்டளவில் ஒரு வைசப் பெரியாரால் ஸ்தாபிக் கப்பட்டிருந்தது. அப்பாடசாலையே இன்று மண்டைதீவு மகாவித்தியாலயம் ஆக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களுக்கும், நெடுந்தீவு மக்களுக்குமிடையில் முற் காலங்களில் வர்த்தகத் தொடர்புகளிருந்துள்ளன. பல வர்த்தகர்கள் நெடுந்தீவிற்கு வந்து வண்டில் மாடுகளை வாங்கிச் சென்றுள்ளதோடு, தங்கள் தோட்டங்களுக்குத் தேவையான மாட்டெரு, இலைகுழைகளை வத்தைகளில் ஏற்றிச் சென்றுள்ளார்கள். இங்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஓர் அஞ்சல் உப வானொலி நிலையமொன்றையும் நடாத்திவருகிறது. இங்குள்ள மக்களில் பலர் குடியேற்றத் திட்டங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றமையாலும் உள்நாட்டு யுத்தம் காரணமாகப் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குச் சென்றமையாலும் மக்கள்தொகை இன்று
மிகவும் குறைந்து காணப்படுகிறது. நெடுந்தீவு மக்களும் வரலாறும் 103

Page 68
இங்குள்ள மக்களும் கல்வி, வர்த்தகம் என்பவற்றில் சிறந்து விளங்குவதோடு அரச வேலைவாயப் ப் புக் களையும் பெற்றுள்ளார்கள். இவர்களின் மத்தியில் பல சமயப் பெரியார்களுமிருந்துள்ளார்கள். இத்தீவு பிரசித்திபெற்ற யோகியான கடையிற்சுவாமியாரால் ஆசீர்வதிக்கப்பட்ட தீவாகும்.
நெடுந்தீவும் அயல்தீவுகளும்
f
সে... |
-;ဖိုးfrဇာ၊ားx† ・ ع. . . لكنه ليتك (على جانOT c ^خسّلم ::::::
&icis DS) #ಣ್ಣ
Q? நயினாதீவு
| எநிருந்தீவு
سمح حلا
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 104
 
 
 
 

நெடுந்தீவும்
கச்சதீவும்
நெடுந் தீவின் மேற்குக் கரையிலிருந்து ஏறத்தாள பன்னிரெண்டு மைல் தொலைவில் உள்ள சின்னஞ்சிறு தீவு கச்சதீவு. தென்இந்தியாவின் இராமேஸ் வரத்துக்கும்,நெடுந்தீவுக்கும் நடுவே காணப்படும் இத்தீவு மூன்று முதல் நான்கு மைல் துாரத்திற்கு இடைப்பட்ட சுற்றளவு கொண்டது. கடற் கரையை அடுத்து மணல் நிலமும் கற் பாறைகளுமே காணப்படுவதால் இதைச் சுற்றிவர அதிகம் சிரமப்பட வேண்டிய தில்லை. இதன் நடுப் பகுதி பற்றைகளையும் சிறு மரங்க ளையும் கொடிளையும் உடையது
ஆதிகாலத்தில் இத்தீவில் தேவ குருவான வியாழ பகவானின் மகனும், அசுர குருவான சுக்கிரனின் மகள் தேவயானியும் காதலித்து வாழ்ந்ததாக ஒரு கதையுண்டு. தேவ குருவின் மகனுக்குக் கசன் என்ற பெயராகையால் அவன் பெயரால் இத்தீவு கச்சதீவு என வழங்கப்படுவதாக ஒரு வரலாறு உண்டு. இன்னுமொரு வரலாறு இலங்கையில் இராம, இராவண யுத்தத்தின் போது இராவணனின் மகனான இந்திரஜித்தினால் ஏவப்பட்ட நாக பாசத்தால் இராமரின் படைவீரரில் அநேகர் அறிவிழந்து மயங்கி மரணமடைந்தவர்கள் போல் கிடந்ததாகவும், அப்பொழுது இராமபிரான் அனுமானிடம் இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள சஞ்சீவி மலைக்குச் சென்று இறந்தவர்களையும் எழுப்பவல்லதான சஞ்சீவி மூலிகையை கொண்டு வருமாறு பணித்தார் எனவும் சஞ்சீவி மலைக்குச் சென்ற அனுமான்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 105

Page 69
சஞ்சீவி மூலிகை எப்படிப்பட்டதென்று அறியாமையால் விசுவரூபமெடுத்துச் சஞ்சீவிமலையை அடியோடு பெயர்த்துத்தன் தோழில் வைத்து ஆகாய மார்க்கமாகக் கடலைக் கடந்து வந்தார் என்றும் கூறப்படுகின்றது. அவர் கொண்டு வந்த மலையில் இருந்து நெடுந்தீவின் மேல் வரும்போது கொட்டிய மண்ணினாலே நெடுந் தீவில் எராளமான மூலிகைகள் காணப்படுவதாகவும், அதே போன்று அம்மலையிலிருந்து ஒடிந்து வீழ்ந்த ஒரு சிறிய பகுதியே கச்சதீவு என்றும்,அங்கும் மூலிகைகள் காணப் படுவதாகவும் கூறப்படுகிறது. அனுமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்துத் தன் தோழில் வைத்து ஆகாயமார்க்கமாகக் கொண்டு வரும் பொழுது அவனது கச்சையிலிருந்து கொட்டிய மண்ணினாலேயே இத்தீவு தோன்றியதென்றும், அதனாலேயே இத்தீவிற்குக் கச்சை தீவென்ற பெயர் வந்ததெனவும் சிலர் கூறுகிறார்கள். மன்னார்த் தீவைக் கடந்து இலங்கையின் வடமேற்குக் கரையை அடைந்த போது அவர் களைப்பினால் தள்ளாடினார் என்றும் அப்போது மலையில் இருந்து மண் கொட்டிய இடம் தள்ளடி எனப் பெயர் பெற்றதாகவும் கூறப்படுகின்றது. மன்னார் நிலப்பிரதேசத்தின் மேற்குக் கரையில் உள்ள தள்ளாடியும் நெடுந்தீவைப் போன்று அநேக மூலிகைகள் நிறைந்த இடமாகவே உள்ளது. இந்தச் சம்பவத்தையிட்டு நெடுந்தீவு நெடுந்தொம்பு திரு. இரா. சுப்பிரமணியம் புலவர் அவர்கள் (தலைமையாசிரியராகப் பணியாற்றியவர்)
மருத்து மாமலை தன்னையெடுத்தே மாருதி பிற ஆழியிற் சேர்க்க நிருத்தர் காணா அமுத சஞ்சீவி நிலவும் நாடு நெடுந்திரு நாடே
என்று பாடியுள்ளார்.
இந்திய விடுதலைக்காக மகாத்மா காந்தி ஆற்றிய
சேவையைப் புகழும் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் மகாத்மா காந்தியின் செயலை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 106

கொடிய வெம் நாக பாசமதகற்ற மூலிகை கொணாந்தவ னென்கோ
என சஞ்சீவி கொணர்ந்த அனுமானை நிகர்த்தவர் மகாத்மா காந்தியும் எனப் புகழுகின்றார்.
இலங்கையை ஆண்ட ஆங்கில அரசினர், இலங்கையின் விதானைமார் பிரிவுகளைப் பிரித்தபொழுது நெடுந்தீவின் மேற்குக்குறிச்சியை இலங்கையின் முதலாவது கிராமவிதானைப் பிரிவாக வகுத்தனர். கச்சதீவையும் நெடுந்தீவு மேற்குக் கிராம விதானைப் பிரிவுக்கு உட்பட்டதாகவே கணித்தனர். நெடுந்தீவைப் போலவே கச்சதீவும் பொற்சீந்தில் முதலான ஏராளமான மூலிகைகளைத் தன்னகத்தே கொண்ட தீவாகும். நெடுந்தீவு மேற்கைச் சேர்ந்த பலர் கச்சதீவுக் காணிகளுக்கு உறுதி வைத்திருந்ததாகவும் கர்ண பரம்பரைக் கதைகள் உண்டு. போர்த்துக்கீசர் நெடுந்தீவைக் கைப்பற்றியபோது கச்சதீவையும் கைப்பற்றினர். கச்சதீவு அந்தோனியார் கோயிலும் நெடுந்தீவுக் கத்தோலிக்கர்களாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்துள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த திரு.வை. ஞானப்பிரகாசமும் அவருடைய மகன் திரு. அந்தோனிப்பிள்ளையும் நெடுங்காலமாகக் கச்சதீவு அந்தோனியார் கோவிலின் மூப்பர்களாகப் பணியாற்றி உள்ளனர். அந்தோனியார் கோவிற் திருநாளுக்காக நெடுந்தீவில் இருந்து ஏராளமான மக்கள் கச்சதீவுக்கு வருவார்கள். இந்தியா விலிருந்தும் ஏராளமானோர் கச்சதீவுக்கு வருவார்கள். இலங்கைப் பொருட்களும், இந்தியப் பொருட்களும் அங்கு நிறைந்து பெரிய சந்தையைப் போல் தோன்றும். பணத்திற்கு மாத்திரமல்லாமல் பண்டமாற்று வியாபாரங்களும் அங்கு நிறைய நடைபெறுவதுண்டு. கச்சதீவு, நெடுந்தீவு கத்தோலிக்க மக்களுக்கு ஒரு வழிபாட்டுத் தலமாக விளங்குவதோடு இலங்கையில் வாழும் பல ஊர் மக்களுக்கும் தென் இந்திய மக்களுக்கும் ஒரு வழிபாட்டுத்தலமாகவும் உல்லாசமான பொழுது போக்கு வியாபாரத் தளமாகவும் விளங்குகின்றது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் , ? 107

Page 70
இயல் 11 நெடுந்தீவுப் பெரியார்கள்
நெடுந்தீவை மன்னர்களும், அந்நியர்களான போத்துக்கீசர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆகியோரும் ஆட்சிசெய்த காலங்களில் அங்கு பல பெரியார்களும், அறிஞர்களும், தலைவர்களும் வாழ்ந்தார்களெனினும் அவர்களின் வரலாறு பற்றிய பதிவுகள் எதையும் பெறமுடியவில்லை. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் வாழ்ந்த தீவகத்தின் வளர்ச்சிக்காக சேவை செய்த சில பெரியார்கள் பற்றிய விபரங்களையே பெறமுடிகிறது. இந்த வரிசையில் அங்கு வாழ்ந்த பெரியார்களிற் பலர் சமயத்திற்கும், தமிழுக்கும், கல்விக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளனர். இவர்களில் இந்து, கத்தோலிக்க, அமெரிக் கமிசன் சமயகுருமார்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பண்டிதர்கள், பாவலர்கள், அரசியல்வாதிகள், அரசாங்க உத்தியோகத்தர்களெனப் பலரும் அடங்குவர். இவர்களில் யாழ்பாணக்குடாநாட்டின் பண்டத்தரிப்பு என்னும் இடத்திலிருந்து வந்து,நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபராகப் பதினெட்டு வருடகாலமாகச் சிறந்த கல்விச் சேவையாற்றி அமரரான அதிபர் திரு.சி.வி.எட்வேட் நவரட்னசிங்கம் அவர்களை நெடுந்தீவு மக்கள் என்றும் மறக்க முடியாது. அதேபோன்று தம் வாழ் நாளெல்லாம் நெடுந்தீவிலிருந்து அம்மண்ணுக்காய், மக்களுக்காகப் பெரும் சேவைகளை ஆற்றிய பெரியார் விதானையார் திரு.சு.நாகேந்திரர் அவர்களும் எம்மக்களின் மனங்களில் என்றும் நிலைத்து நிற்பவராவார். இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், முதல் இலங்கைப் பாராளுமன்றத் தனி சபாநாயகருமான சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களும் நெடுந்தீவின் வம்சாவழியைச் சேர்ந்தவரே. இலங்கையின் முதல் பெண்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 108

கிராமசபைத் தலைவி என்ற பெருமையைப் பெற்றவரும் நெடுந்தீவு பெற்றெடுத்த செல்லம்மா நாகேந்திரர் என்ற பெண்மணியே. நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டு உலகெலாம் தமிழ் பரப்பிய பேரறிஞர் தனிநாயக அடிகளாரும் நம் மண்ணின் பெருமையை உலகறியச் செய்த பெருமகனாவார். நெடுந்தீவில் நிலைகொண்டுள்ள இரு சமயங்களுள் ஒன்றான சைவம் ஒளிவிளங்கக் கனடாவில் சேவையாற்றிவரும் கனடாத் துர்க்கையம்மன் கோவில் பிரதம குருக்களும், கனடா இந்துமதபீடத் தலைவருமான சிவபூரி கணேஸ் சுவாமி தியாகராசாக் குருக்கள் அவர்களும், தற்பொழுது இலங்கை மன்னார் மாவட்டத்தின் ஆயராகவிருந்து கொண்டு கத்தோலிக்க சமய இறைபணிகளும், தமிழ்ப்பணியும், சமூகப்பணிகளும் எவரும் வியக்கும் வண்ணம் ஆற்றிவரும் ஆயர் பேரருட்திரு இராயோசப் அடிகளார் அவர்களும் நெடுந்தீவு பெற்றெடுத்த பெருமக்களே. இலண்டன் மாநகர் சென்று ஓடாதிருந்த ஆகாய விமானத்தைப் புனரமைத்து நம் தீவிற்குப் பெருமை தேடித்தந்த திரு. என்.குணரட்ணம் என்னும் பொறியியலாளரும் நெடுந்தீவு பெற்றெடுத்த பெருமகனே.வடக்குக் கிழக்கு மாகாணக் கத்தோலிக்க மத கன்னியாஸ்திரிகளின் தலைவியாய் அரும்பணி யாற்றி கத்தோலிக்க உலகில் அழியாப் புகழிட்டிய அருட்சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம் அவர்களும் நெடுந் தீவன் னை பெற்ற பெரு மகளே. ரொறன்ரோப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரியும் அருட்தந்தை அடைக்கலமுத்து ஜோசப் சந்திரகாந்தன் அவர்களும் நெடுந்தீவு அமுது பெற்ற மணிச்சுடரே. மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒருவரான பண்டிதர் நா. கந்தையா, கவிமணி. திரு.க.த.ஞானப்பிரகாசம், புலவர்மணி அடைக்கலமுத்து (புலவர்மணி அமுது) அவர்களும் நெடுந்தீவு அன்னை பெற்றெடுத்த முத்துக்களே.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 109

Page 71
சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் இலங்கைப் பாராளுமன்றத்தின் முதலாவது 8FLu (Tb [Tuuébñi
நெடுந்தீவிலிருந்து வேலணையில் குடியேறி அங்கிருந்து அராலியில் குடியேறிய நெடுந்தீவின் வம்சாவழியைச் சேர்ந்தவரே சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமியாவார். இவர் இலங்கை அரசாங்க சபைக்குத் தலைவராகவிருந்தவர். தீவுப்பகுதி மக்களினால் அரசாங்க சபைப் பிரதிநிதியாகத் தெரிவு செய்யப்பட்டவர். இலங்கைப் பாராளுமன்றத் திணி முதலாவது சபா நாயகராகவிருந்தவர். நெடுந்தீவிற்கு வருகின்ற வேளை களிலெல்லாம் தமது'உறவினரான கணபதிப்பிள்ளை உடையாரின் வீட்டிலேயே தங்குவார். உடையாரின் மனைவியான நாகமுத்துவை, அக்கா என்றே அழைப்பார். ஒரு முறை உடைச்சியின் உபசரிப்பில் மிக மகிழ்ந்த இவர், தான் ஆடாவிட்டாலும் தன் தசையாடும் என்ற பழமொழியைச் சொல்லி மகிழ்ந்தார். நெடுந்தீவு மேற்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையை, சைவ வித்தியா விருத்திச் சங்கம் பொறுப்பேற்கக் காலதாமதம் ஆனதால் சைவ அபிமானிகள் பலரும் கவலை கொண்டிருந்த வேளையில, அதை உடனடியாகப் பொறுப்பேற்க வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தவரும் இவரே. 1947ல் உடையார் தம்பதிகளின் மருமகனான சு. நாதேந்திரரின் அழைப்பையேற்று கல்வி அமைச்சர் கன்னங்கராவையும் தன்னுடன் அழைத்து வந்து அப்போதைய மாவட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.சோமசேகரம் அவர்களின் உதவியுடன் காரைப் பள்ளம் என்ற காணியில் உடனடியாக கனிட்ட வித்தியாலயத்தை கையேற்கச் செய்தார். இவ் வித் தியாலயமே பின்னர் மகாவித்தியாலயமாக வளர்ச்சி பெற்றது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 110

பெரியார் திரு.சு. நாகேந்திரர் ஜே.பி அவர்கள் ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்
உலகிலே பல மனிதர் கள் தோன்றுகின்றார்கள், மறை கிறார்கள். ஒரு சிலரே மறைந்த பின்னும் மக்களின் மனதிலே வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் வாழ்ந்த காலத்தில் தமக்காக மட்டுமன்றி ஏனைய மக்களின் நலன்களுக்காகவும் சேவை களைச் செய்துள்ளார்கள் என்பதேயாகும். இந்த வரிசையில் நம் தீவத்திலே பிறந்து தமது இறுதிக் காலம் வரை மக்களோடு மக்களாக நம் தீவகத்திலேயே வாழ்ந்து நம் தீவகமக்களின் நன்மைக்காகப் பல சேவைகளைச் செய்த பெரியார் திரு. சுப்பிரமணியம் நாகேந்திரர் ஜே.பி. (கொடிவேலி விதானையார்) அவர்கள் என்றும் நம்மக்களால் நினைவு கூரப்பட வேண்டியவராவார். இவர் இளமையிலிருந்தே மொழிப்பற்றும், சமயப்பற்றும், நாட்டுப் பற்றும் உடையவராகவே வாழ்ந்து வந்துள்ளார். கிராம சபையைத் தெரிவு செய்யும் உரிமை மக்களுக்கு வழங்கப்பட்டபின் முதல் முறையாகவும், இரண்டாம் முறையாகவும் மக்கள் இவரையே நெடுந்தீவுக் கிராமசபைத் தலைவராகத் தெரிவு செய்தனர். இவர் ஆரம்பத்தில் இரு தடவைகள் கிராமசபைத் தலைவராகவும் பின்னர் பல ஆண்டுகள் விதானையாராகவும் கடமையாற்றினார். இவர் இளைப்பாறிய பின்னரும் ஒருமுறை கிராமசபைத் தலைவராகப் பணியாற்றினார். இவர் இரண்டாம் முறை கிராமசபைத் தலைவராகப் பதவி வகித்த காலத்தில் சேர்ஜோண் கொத்தலாவலை அவர்கள் இலங்கையின் போக்குவரத்து அமைச்சராகவிருந்தார். அக்காலத்திலேயே சில்வஸ்பிறே என்னும் இயந்திரப் படகு நெடுந்தீவு மக்களின்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 111

Page 72
பிரயாணத்திற்காக வழங்கப்பட்டது. இவர் 1939ஆம் ஆண்டில் நெடுந்தீவு நடுக்குறிச்சி விதானையாராக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். நெடுந்தீவில் விதானையாராகக் கடமையாற்றிய காலத்தில் மக்களிடத்திலே ஏற்பட்ட சகல பிரச்சனைகளையும் சுமூகமாகத் தீர்த்து வைப்பதில் சமர்த்தராக விளங்கினார். இதனால் மக்கள் மனத்திலே நீங்காத இடத்தைப் பிடித்துக் கொண்டார். இவர் விதானையாராகப் பல வருடங்கள் சேவையாற்றி ஓய்வுபெற்றார். இவர் கிராமசபைத் தலைவராக இருந்த காலத்தில் நெடுந்தீவின் முன்னேற்றம் கருதிப் பல சேவைகளைச் செய்தார். இவரின் காலத்தில் பல ஒழுங்கைகள் வீதிகள் திருத்தி அமைக்கப்பட்டதோடு, பல பொதுக் கிணறுகள், கேணிகள் என்பனவும் வடிவமைக்கப்பட்டன. இவர் தமது இறுதிக்காலம் வரை சமாதான நீதிபதியாகவிருந்து மக்களுக்கு நல்ல சேவையாற்றினார். இவர் ஒரு சிறந்த சைவ சமயப் பக்தராவார். இவர், நெடுந்தீவு கிழக்கிலுள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தை, நிறுவிய சைவப் பெரியாரான கதிர்காமர் சின்னத்தம்பியின் வழித்தோன்றலான வர்த்தகள் சின்னர் இராமநாதன் அவர்களுடன் சேர்ந்து, இவ்வாலயத்தை அங்குள்ள சைவப் பெரியார்களின் ஆதரவுடன் புனருத்தாரணம் செய்து,1951ஆம் ஆண்டில் கும்பாபிசேகமும் செய்வித்து, அங்கு நித்திய பூசைகளும் திருவிழாக்களும் நடைபெற ஆவன செய்தார்.
இவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் விளங்கினார். இவர் 1947ம் ஆண்டில் ஊர்காவற்றுறைத் தொகுதிக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அல்பிரட் தம்பிஐயா அவர்களை ஆதரித்தார். அவர் வெற்றி பெற்றதும் அப்பாராளுமன்ற உறுப்பினரின் உதவியினால் பல இளைஞர்களுக்கு கொழும்புத்துறைமுகக் கூட்டுத்தாபனத்தில் வேலை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தார். இவர் நெடுந்தீவு மக்களினி, கல்விவளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டினார். நம்தீவக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக நெடுந்தீவில் ஒரு ஆங்கில பாடசாலை அமைய வேண்டியதன் அவசியம் பற்றி உள்ளுர் கல்வியாளர்களுடன் கலந்துரையாடினார். அப்பொழுது அரச கழக உறுப்பினராகவிருந்த சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களின் உதவியை நாடினார். இதன் பயனாக 1946ல் அரச கழக உறுப்பினரும் முன்னைநாள் சபாநாயகருமான சேர்.வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களையும்,
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 112

இலவசக் கல்வியின் தந்தையும் முன்னாள் கல்வி அமைச்சருமான கெளரவ சி.டபிள்யு.கன்னங்கரா அவர்களையும், நெடுந்தீவிற்கு வரவழைத்து ஆங்கில மொழிமூல கனிட்ட வித்தியாலயத்தை தொடக்கி வைக்க ஆவன செய்தார். இப்பாடசாலையே இன்றைய மகாவித்தியாலயமாக வளர்ச்சியடைந்துள்ளது. மகா வித்தியாலயம் அமைவதற்கேற்ற காணி உடனடியாகக் கிடைக் காத போது தமது சொந்தக் காணியையே தற் காலிகமாகக் கொடுத் துதவினார். தற்போதைய மகாவித்தியாலயம் அமைந்துள்ள நிரந்தரக் காணியைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் அரும் முயற்சிகள் செய்தார். நெடுந்தீவில் மகாவித்தியாலயம் அமையப் பெற்றதற்கான மூலர்த்தா இவரென்றால் மிகையாகாது. மகாவித்தியாலயங்கள் தீவுப் பகுதியில் அமைக் கப்பட்ட பொழுது நெடுந் தீவில் மகாவித்தியாலயம் அமைப்பதற்கு பிரயாண வசதிகள் கஷ்டமாக இருப்பதால் வெளியூர்களிலிருந்து ஆசிரியர்களை பெற்றுக் கொள்ள முடியாமல் இருக்குமென்ற காரணம் காட்டி வேலணை மகா வித்தியாலயத்தில் நெடுந்தீவு மாணவர்கள் வந்து படிக்கலாம் என்ற கருத்தைச் சிலர் முன்வைத்தனர். இக் கருத்தை வன்மையாக எதிர்த்த விதானையார் நெடுந்தீவிலுள்ள மாணவர்கள் வேலணை மகாவித்தியாலயத்திற்குச் சென்று கல்வி கற்பதற்கு வேண்டிய பிரயாண வசதிகள், தங்குமிட வசதிகள், பொருளாதார நிலமைகள் போன்றவற்றிலுள்ள கஷ்டங்கள் பற்றி மேலதிகாரிகளுக்கு எடுத்து விளக்கியதோடு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு நெடுந்தீவிலேயே மகாவித்தி யாலயம் அமைய வேண்டுமென்பதையும் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.
இப்பெரியாரின் இத்தகைய முயற்சி இல்லாதிருந்திருந்தால் நெடுந்தீவில் மகாவித்தியாலயம் அக்காலத்தில் அமைக்கப் பெறாமலிருந்திருக்கலாம். இவர் மகாவித்தியாலயம் அமைவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்ததோடு மட்டுமன்றி நெடுந்தீவு மாணவர் செய்த புண்ணிய பலனாக அங்கு முதல் அதிபராக வருகை தந்த அதிசிறந்த நிர்வாகியும், நல் ஆசானும், வழிகாட்டியும் , அக்கால மாணவர்களுக்கு ஒரு கலங்கரைவிளக்கம் போன்றவருமான திரு.எட்வேட்நவரட்னசிங்கம் அவர்களுக்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியதோடு, அங்கு ஆசிரியசேவை புரிய வந்த வெளியூர் ஆசிரியர்களுக்கான தங்குமிட வசதிகளையும் செய்துகொடுத்தார். இவர் நெடுந்தீவின்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 113

Page 73
மத்திய பகுதியில் சைவச்சிறார்கள் கல்வி கற்பதற்கான ஆரம்ப பாடசாலையில்லாத குறையை நீக்க, இலங்கையின் முதல் பெண் கிராம சபைத் தலைவியென்ற புகழைப்பெற்ற தமது மனைவியார் செல்லம்மாவின் பெயரில் ஒரு ஆரம்ப பாடசாலையை நிறுவிக் கொடுத்தார்.இவர் மூன்றாம் முறை கிராமசபைத் தலைவராகவிருந்த காலத்தில் சேர். ஜோன் கொத்தலாவலை அவர்களே இலங்கையின் பிரதமராக இருந்தார். இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாணக் கஷ்டங்களைப் பற்றி அப்போதைய தீவுப்பகுதி பாராளுமன்ற உறுப்பினரான திரு அல்பிறட் தம்பிஐயா அவர்களுக்கு எடுத்துக் கூறினார். பாராளுமன்ற உறுப்பினர் திரு. அல்பிறட் தம்பிஐயா அவர்களதும் கிராம சபைத் தலைவராக இருந்த இப் பெரியாரதும் வேண்டுகோளுக் கிணங்க, புதியதோர் வசதியான நூற்றைம்பது பேர் ஒரே முறையில் பிரயாணம் செய்யக்கூடியதும், நல்ல இருக்கை வசதிகளைக் கொண்டதும், வேகம் கூடியதுமான ஒரு மோட்டார் படகு இராஜேஸ்வரி என்னும் பெயருடன் நெடுந்தீவு மக்களின் பிரயாண வசதிக்காக அப்போதைய பிரதமர் சேர். ஜோன் கொத்தலாவலை அவர்களால் வழங்கப்பட்டது.
1954 இல் அப்படகு நெடுந்தீவிற்கு அனுப்பப்பட்டது. அதைக் கொண்டாடுவதற்காக தீவுப்பகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. அல்பிறட் தம்பிஐயா அவர்களும், அப்பொழுது பிரதமராக இருந்த சேர்.சேர் ஜோன் கொத்தலாவலை அவர்களும் உலங்கு வானூர்தியில் மாவிலித்துறைமுகத்தில் வந்து இறங்கினார்கள். அவர்களைத் திரு. சு. நாகேந்திரர் அவர்கள் சைக்கிள் சில்லுகள் பூட்டப்பட்ட உருண்டு செல்லும் பந்தல் அமைத்து, பச்சை வர்ணக் கொடிகளால் அதை அலங்கரித்து அப்பந்தலின் கீழ் பிரதமரையும், பாராளுமன்ற உறுப்பினரையும் மாவி லித்துறையிலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள கிராமசபை மண்டபம் வரை, பெருந்திரளான மக்கள் புடை சூழ அழைத்துச் சென்று ஒரு பெரிய வரவேற்பு விழாவை நடாத்தினார். இவரும் தீவக மக்களின் விருந்தோம்பல் பண்பிற்கேற்ப, விருந்தோம்பலில் சிறந்து விளங்கினார். வெளியூர்களிலிருந்து நெடுந்தீவிற்கு வரும் எந்த அரசியல் வாதிகளோ, சேவையாற்ற வரும் எந்த அரசாங்க உத்தியோகத்தரோ, இவரின் விருந்தோம்பலுக்கு இலக்காகாமல் இருக்க முடியாது. இவரை மக்கள் கொடிவேலி விதானையார் என்றே அன்பாக அழைப்பார்கள். வெளியூர்களிலுள்ள
நெடுந்தீவு மக்களும் வரலாறும் . . 114

மக்களுக்கும் கொடிவேலி விதானையார் என்றால் தான் தெரியும். இவரின் இப்பெயர் அவ்வளவிற்குப் பிறவூர் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்திருந்தது. வெளியூர் மக்கள் தமக்குத் தெரியாத நெடுந்தீவு மக்களைச் சந்தித்தால் முதலில் கேட்கும் கேள்வி கொடிவேலி விதானையாரைத் தெரியுமா? அவர் உங்களுக்குச் சொந்தமா? என்பதுதான். இதிலிருந்து அக்காலத்தில் வாழ்ந்த அநேக வெளியூர் மக்கள் விதானையாரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது. இவர் நெடுந்தீவில் பணியாற்றிய காலங்களில் எந்தவொரு சமய, சமூக வேறுபாடுகளுமின்றித் தமது பணிகளைச் செய்தார். இவரின் தன்னலமற்ற சேவை நெடுந்தீவு மக்களால் என்றும் மறக்கமுடியாததாகும்.
நெடுந்தீவு கிழக்கு சன சமூக நிலையம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 115

Page 74
பேரறிஞர் தவத்திரு வண.தனிநாயகம் அடிகளார்
என்னை நன்றாய் இறைவன் படைத்தனன் தன்னை நன்றாய்த் தமிழ் செய்யுமாறே
காலத்திற்குக் காலம் இலங்கையிலே தமிழ் வளர்க்கப் பெரியார்கள் பலர் தோன்றி யிருக்கிறார்கள். அப்பெரியார்கள் வரிசையிலே கத்தோலிக்கத் துறவியான வண. தனிநாயக அடிகளும் ஒருவர் ஆவ்ர். இவர் தரணியெங்கும் தமிழ் மணம் வீசவேண்டும. தமிழனின் கலை கலாச்சாரம் எங்கும் பரவ வேண்டும், எனப் பணியாற்றிய பேரறிஞராவார். அடிகளார் நெடுந்தீவில், தனிநாயக முதலி பரம்பரையில் வந்த நாகநாதன் கணபதிப்பிள்ளைக்கும், (கென்றி ஸ்ரனிஸ்லொஸ் - செசில் இராசம்மா) இராசம்மா தம்பதிகளுக்கும் மூத்த புதல் வனாக 1913ம் ஆண்டு ஆவணிமாதம் இரண்டாந் திகதி பிறந்தார். இவருக்குப் பெற்றோர் சேவியர் எனப் பெயரிட்டனர்.இவர் தான் நெடுந்தீவின் தனிநாயக முதலி பரம்பரையில் தோன்றியவர் என்பதை வெளிக்காட்டத் தமது பெயரை சேவியர் ஸ்ரனிஸ்லொஸ் தனிநாயகமென மாற்றினார். இவர் இளமையிலேயே கல்வி, கேள்விகளிற் சிறந்து விளங்கினார். இவர் முதலில் ஊர் காவற்றுறை புனித அந்தோனியார் பாடசாலையிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலுள்ள புனித பத்திரிசியார் கல்லுாரியிலும் கல்விகற்றார். இவர் தமது பதினைந்தாவது வயதிலே குரு மடத்தில் சேர்ந்து படித்துக்கொண்டிருக்கும் காலத்திலே புனித பத்திரிசியார் கல்லுாரியிலும் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1931ம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 116
 

ஆண்டு முதல் 1934ம் ஆண்டு வரை கொழும்பிலுள்ள புனித பெர்னாந்து குருத்துவக் கல்லுாரியில் மெய்யியல் பயின்றார். பின்னர் தென் இந்தியாவிலுள்ள குரு மடத்தில் சேர்ந்து படித்தார். அங்கிருந்து உயர் படிப்பிற்காக உரோமாபுரி சென்றார். 1934ஆம் ஆண்டு தொடக்கம் 1939 வரை உரோமாபுரியில் சமயக்கல்வி பயின்று பட்டம் பெற்றார். உரோமாபுரியில் கல்விகற்கும் காலத்தில் வீரமாமுனிவர் என்னும் கழகத்தை அமைத்து அந் நாட்டு வானொலி மூலம் தமிழ் மொழியை உலகெலாம் பரப்ப ஆவன செய்தார். பின்னர் குருப்பட்டம் தரித்து கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தில் குருவாகவும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றதும் தமிழை, தமிழ் மொழியின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டுமென்ற பேரார்வத்தால் அணி ணாமலைப் பல கலைக் கழகப் பேராசிரியர்களின் துணையோடு துாத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகத்தை அமைத்து அதில் சமய வேறுபாடின்றிச் சகலரையும் அங்கத்தவர்களாகச் சேர்த்தார். இக்கழகம் இன்றும் பல இலக்கியப் பணிகளை ஆற்றிவருகிறது. இவர் 1952ஆம் ஆண்டு முதல் 1961 வரை இலங்கைப் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இடைக்காலத்தில் 1955ஆம் ஆண்டு தொடக்கம் 1957 வரை இலண்டன் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறையில் ஆராய்ச்சி செய்து அறிஞர் பட்டம் பெற்றார். 1961ம் ஆண்டு முதல் 1969 வரை மலேசியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் உயர்நிலைப் பாடசாலையில் படிக்கும் காலங்களில் ஆங்கிலமொழியில் சிறந்த எழுத்தாளராக விளங்கினார். மூன்று ஆண்டுகளுக்குள் சூரியப்பிரகாசம் (Sun Shine) என்னும் பாடசாலை மலரில் 19 ஆங்கிலக் கட்டுரைகளை எழுதினார். இவற்றைப் பார்வையிட்ட ஆசிரியர்களே அவரின் திறமையைப் பார்த்து வியப்புற்றனர். இவர் துாத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகத்தை நிறுவியபொழுது உலகின் பல நாடுகளுக்கும் சென்று தமிழின் தொன்மை, பண்பாட்டுச் சிறப்புகள் என்பனவற்றை விளக்கி
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 117

Page 75
விரிவுரைகளை நிகழ்த்தினார். இவற்றின் மூலம் உலகெங்கும் தமிழ்த்துாது செல்லவும், தமிழ் இலக்கியக் கழகத்தின் நிதியைப் பெருக்கவும் வழியமைத்தார். உரோமில் பயின்ற காலத்தில் பலநாட்டு மாணவர்களுடனும் கொண்டிருந்த நட்புறவு இவரின் உலகப் பயணத்திற்குப் பேருதவியாக இருந்தது. இக்கழகத்தால் தமிழ்த்துாது, இயேசுநாதர் என்ற நூல்களை வெளியிட்டார். தமிழ்ப்பண்பாடு என்ற சஞ்சிகையை மூன்று மாதத்திற்கொருமுறை ஆங்கில மொழியில் வெளியிட்டு தமிழரின் பண்பாட்டை வெளிநாட்டவரும் அறியும்வண்ணம் செய்தார். இவர் எழுதிய ஒன்றே உலகம் என்ற நுாலில் தமது பயண அனுபவங்களை எழுதிப் பயண இலக்கியமாகப் பரிணமிக்கச் செய்தார். அடிகளார் தமது பயணத்தின்போது வெளிநாடுகளில் காணப்பட்ட தமிழ் விழுமியங்களைக் கண்ணுற்றார். அமெரிக்க நாட்டு காவாட் பல்கலைக்கழகத்தில் தம்பிரான் வணக்கம் இடம் பெற்றிருந்ததையும், பிரான்ஸ் நாட்டில் கிரிசித்தானி வணக்கம் இருந்ததையும், வத்திக்கான் நூல்நிலையத்தில் அடியார்களின் வரலாறு இருந்ததையும் கண்டார். இவற்றுள் தம்பிரான் வணக்கம் என்னும் நுால் 1577ஆம் ஆண்டு கொல்லத்திலும், கிரீசித்தியானி வணக்கம் என்னும் நூல் 1579ல் கொச்சியிலும் அச்சேற்றப்பட்டிருந்தன. அடியார்களின் வரலாறு என்னும் நூாலை பல ஆண்டுகளாக உரோமிலுள்ள வத்திக்கான் நூல்நிலையத்தில் காணக்கிடந்த பழந்தமிழ் நூல்களையெல்லாம் தோண்டித்துருவி ஆராய்ந்து கடுமையான முயற்சிக்குப் பின்னரே அடிகளார் கண்டுபிடித்தார். இந்நூல் கிறீஸ்தவப் புனிதர்களின் வரலாறு பற்றிக் கூறுகிறது. போர்த்துக்கல்லுக்கு இருமுறை சென்று தேடி காற்ரில்கா (Cartilha) என்னும் ஒரு நூலையும் கண்டுபிடித்தார். அந்தநூல் கிறீஸ்தவர்கள் தமிழகத்திற்கு வழங்கிவந்த மந்திரங்களையும், மன்றாட்டுக்களையும் கொண்டிருந்தது. இந்நூல் கண்டுபிடிக்கப் பட்டமையை அடிகளார் ஒரு பேறாகவே கருதினார். அங்கு புரொபென்சா அடிகளாரால் தொகுக்கப்பட்ட இன்னொரு நூலான தமிழ் போர்த்துக்கேய அகராதியையும் கண்டுபிடித்ததோடு அதைப் புகைப்படப் பிரதியாக்கிக் கொண்டுவந்து மலேசியப்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 118

பல்கலைக்கழகத்தில் இருந்து அச்சிட்டு வெளியிட்டார். தாய்லாந்துக்குச் சென்றிருந்தபோது அங்கு அரசர்கள் முடிசூட்டு விழாவின்போது திருவெம்பாவையின் முதலிரு பாக்களைப் பாடுவதையும், இந்தோனேசியத் தீவான சுமத்திராவில் குரோ பட்டக்கு என்னும் இனத்தவர்கள் சேர, சோழ, பாண்டியர்களின் பெயர்களை வைத்திருப்பதையும் கண்டார். வேறு பல நாடுகளில் அந்நாட்டுச் சிற்பங்களில் தமிழ் நாட்டுச் சிற்பங்களின் சாயலிருப்பதையும் கண்டார். 1965ம் ஆண்டில் திருக்குறளை மலாய மொழியிலும், சீன மொழியிலும் சக பேராசிரியர்களைக் கொண்டு மொழிபெயர்ப்பித்து, அணிந்துரை எழுதி வெளியிட்டார். இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய காலத்தில் பல ஆய்வுகளை நடத்தித் தமிழ் மொழிக்கு அருந்தொண்டாற்றினார்.
அடிகளார் பல மொழிகளைக் கற்ற விற்பன்னராகவிருந்தார். பன்னிரெண்டு மொழிகளில் அதிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவற்றுள் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், இத்தாலியம், ஸ்பானிஸ், பிரெஞ்ச் ஆகிய ஆறு மொழிகளில் அதிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். இவர் இத் தாலிக் குச் சென்ற பொழுது இத் தாலியிலும் , தென்அமெரிக்காவுக்குச் சென்றபொழுது ஸ்பானிஸ் மொழியிலும் உரையாற்றினார். இவர் இத்தாலிய நாட்டு நேப்பிள்ஸ் பல்கலைக்கழகத்தில் இத்தாலிய மொழியிலும், பிரான்ஸ் நாட்டில் பரீஸ் நகரத்திலுள்ள ஒரு கல்லுாரியில் பிரான்ஸ் மொழியிலும் சிறப்புப் பேராசிரியராகப் பாடங்களை நடாத்தியுள்ளார். இம்மொழிகளில் மட்டுமல்லாது ரஸ்யன், ஜேர்மன், கிரேக்கம், எபிரேயம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் பொருள்புரிந்து உரையாடக் கூடியவராக இருந்தார். ஒருமுறை அவர் தமிழ்மொழியின் இனிமைபற்றிக் கூறும்பொழுது பாரதி தமிழ், இந்தி, சமஸ்கிருதம், பிரெஞ்சு, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளைக் கற்றுவிட்டு தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று கூறினார். நானோ பன்னிரெண்டு மொழிகளைப் படித்துவிட்டுக் கூறுகிறேன் யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 119

Page 76
போல் இனிதாவது எங்கும் காணோம இது எனது அனுபவவாயிலாகக் கூறுகிறேன் என்றார். இவ்வாறு பன்னிரெண்டு மொழிகளைக் கற்ற அடிகளார் இவ்வளவு செழுமையான, வளமான, தமிழ்மொழி உலகில் அறியப்படாதிருக்கிறதே, இந்தியாவின் எந்த நுாலைப்பார்த்தாலும் அது வட எல்லையுடன் நின்றுவிடுகிறதே தவிர தெற்கில் உள்ளோரின் மொழி கலாச்சாரங்களைப் பற்றி எதுவுமே கூறுவதில்லையே, இதனால் தெற்கிலுள்ள மக்களின் கலை கலாச்சாரங்களை வெளிநாட்டார் அறிய வாய்ப்பே இல்லாதிருக்கிறதே எனக் கவலைகொண்டார். இந்நிலையைப் போக்கவேண்டும் என்று எண்ணிய அடிகளார் தமது உலகப் பயணத்தைத் தொடர்ந்தார். இரண்டாண்டு காலம் அமெரிக்க ஐக்கிய நாடுகள், தென்அமெரிக்க நாடுகள், ஜப்பான் ஆகிய பல நாடுகளுக்கு விஜயம் செய்தார். அங்கெல்லாம் தமிழ் மொழியின் பெருமையை மற்றவர்களும் அறியத்தக்கதாக பல விரிவுரைகளை நிகழ்த் தனார். அவர் தமது விரிவுரைகளிலெல்லாம் ஒன்றே உலகம் என்ற கருத்தையே அதிகம் வலியுறுத்தினார். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று கூறிய தமிழ்ப் புலவன் கணியன்பூங்குன்றனாரின் கருத்தையே அடிகளாரும் எடுத்துக் காட்டாகக் கூறுவார். அதுமட்டுமன்றித் தான் கொண்டுசென்ற நூல்களையெல்லாம் வடமொழித் துறைகளிருந்த பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் கொடுத்து, இவற்றில் பழமையான நாடு, பழமையான மொழி, பழமையான நாகரீகம் பற்றி இருக்கிறது. இவை உங்களின் ஆராய்ச்சிகளுக்கெல்லாம் பயன்படும் படித்துப்பாருங்கள் என்று கூறினார். சங்க கால இலக்கியங்களிலெல்லாம் சமுதாயப் பொறை நிறைந் திருப்பதையும், அவை ஒருவராலன்றிப் பல புலவர்களால் பாடப்பட்டிருப்பதையும் சுட்டிக்காட்டினார். சமயப்பொறை தமிழில் காணப்படுவது போல் வேறு எம்மொழியிலும் இல்லை யென்பதையும் விளக்கினார். அளவிலும், சுவையிலும் தமிழ்ப் பாடல்களில் உள்ளதைப்போல் பிற இலக்கியங்களில் காணமுடியாதென்பதையும், தமிழ் இலக்கியத்தில் பக்திமொழி கையாளப்பட்டுள்ள சிறப்பையும் அவை தேவாரம், திருவாசகம், திருப்புகழ், பரிபாடல் என்பவற்றில்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 120

பரிணமித்துள்ளமை பற்றியும் எடுத்துக்கூறினார். இவருக்கு மாணிக்கவாசக சுவாமிகளின் திருவாசகத்தில் அதிக பற்றும், ஈடுபாடும் இருந்தது. தமிழில் காணப்படும் நீதிநூல் தொகுதிகள், நீதிமொழிகள் என்பன அடிகளாரின் மனதில் ஆழப்பதிந்ததோடு சங்ககாலத்தில் காணப்பட்ட நீதி, நேர்மை, உண்மை, வீரம், இரக்கம், அன்பு ஆகிய நல்ல இயல்புகளையும் பாராட்டினார். தமிழரின் தன்மையைக் காட்டுவதற்கு யாம் இரப்பவை பொருளும், பொன்னும், போகமுமல்ல. அருளும் அன்பும் அறனும் இம்மூன்றும் என்னும் பரிபாடல் வரிகளைச் சான்றாகக் காட்டுவார் அடிகளார்.
கிரேக்க இலக்கியத்திற்கும், தமிழ் இலக்கியத்திற்கும் உள்ள தொடர்புகளை அடிகளார் ஒப்பாய்வு செய்தார். கிரேக்க இலக்கியத்தில் அவலச்சுவை மிகுதியாக இருப்பதைப்போலவே சங்ககால இலக்கியங்களிலும் அவலச்சுவை இருப்பதை அடிகளார் வலியுறுத்தினார். இலக்கியத் திறனாய்வாளர்களும் அவலச் சுவை மிகுதியாகவுள்ள இலக் கரியங்களே சுவைமிக்கதெனக் கூறினார்கள். அடிகளாரின் கட்டு ரைகளிலெல்லாம் சங்ககால இலக்கியங்களையே பெரிதாகக் கொண்டுள்ளதைக் காணலாம். அவர் பலதரப்பட்ட ஆய்வுகளைச் செய்துள்ளார். பழங்காலத் தமிழ் வாணிபம் பற்றியும், கடாரம் எங்கேயுள்ளதென்பது பற்றியும், மொரிசியஸ் போன்ற பிரெஞ்சுக் குடியிருப்புக் களில் தமிழர் குடியேறியமை பற்றியும் ஆராய்ச்சிகளைச் செய்துள்ளார். அடிகளார் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றின்மூலம் தமிழ்மொழி பற்றியும், தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரங்கள் பற்றியும் உலகத்திலுள்ள ஏனைய மக்களும் அறிய வாய்ப்புக்கள் ஏற்பட்டன. அவர் எழுதிய நூல்களாவன:
உரோமில், சமயவியல் முனைவர் பட்டத்திற்காக எழுதிய Carthaginian Clergy என்னும் வரலாற்று ஆராய்ச்சி நூல், தமது 6Tib.65 u'll gigslis85Tab 61(p5u Nature in ancient Tamil Poetry என்னும் இலக்கிய ஆராய்ச்சி நூல் என்பன மிகச் சிறப்பு வாய்ந்தவை. சங்க இலக்கியத்தைப் பற்றி தனிநாயகம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 121

Page 77
அடிகளார் எழுதிய ஆராய்ச்சி நூலைப்போல உயர்ந்த நூலை நான் இதுவரை கண்டதில்லையென செக்கோசெலவாக்கியா நாட்டுப் பிராக் பல்கலைக்கழகத் திராவிடவியல்துறைத் தலைவரும் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் இணைச் செயலாளருமாகப் பணியாற்றிய கமில் சுவலபில் என்னும் அறிஞர் பாராட்டி எழுதியுள்ளார். இன்னும் தமிழ்ப் பண்பாடு-நேற்றும், 96örgylb, b|T60)6Tub Educational thoughts in ancient Tamil Literature, Indian Thought and Roman Stoicism, Aspects of Tamil Humanism blfbiggs, 966(3 D 6)35 b, Reference guide to Tamil Studies, Tamil Studies Abroad, Tamil culture and Civilization, உலக ஒழுக்கவியலில் திருக்குறள் எனப் பல நூல்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதியுள்ளார். Saigoi Tamil Culture, Journal of Tamil Studies, Liturgical Arts, Ceylon journal of Historical and Social Studies, Journal of the National Education Society, International Review of the History of the Education 6166th U6 BTG) பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் அடிகளார் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றுடன் மட்டுமன்றி அடிகளார் தமிழ்ப்பண்பாடு என்னும் ஆங்கில இதழை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்றினார். இதற்கான எண்ணம் உலகச் சுற்றுப் பிரயாணத்தின்போது தமிழைப் பற்றி தமிழ்ப் பண்பாட்டைப் பற்றி வெளியுலகிலுள்ளோர் எதுவுமறியாதிருந்ததைக் கண்ட அடிகளார் இந்தியா திரும்பியதும் இப்படியான ஒரு ஆங்கில இதழ் மூலம் வெளிநாட்டவர்கள் தமிழ்மொழியைப் பற்றியும், தமிழ்ப் பண்பாட்டையும் அறியச் செய்யவேண்டுமென எண்ணியே இவ்விதழைத் தொடங்கினார். தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் ஆங்கில இதழை வெளியிட்டார். தமிழ்நாட்டறிஞர்களும், வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களும் பல ஆய்வுரைக் கட்டுரைகளை எழுதினர். இதன்மூலம் பல தமிழறிஞர்கள் அறிமுகமானதோடு பலரின் பாராட்டையும் இவ்விதழ் பெற்றது. ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களின் நூலகங்களில் இவ்விதழ் இடம் பெற்றது. இந்தியவியல் என்றால் வடமொழித்துறைதான் என்று மயங்கியிருந்த பல மேனாட்டு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 122

அறிஞர்களும் உண்மையறிந்து தெளிவு பெற்றனர். இதனால் விரைவிலேயே தனிநாயக அடிகள் உலகறிந்த தமிழ்ப் பேரறிஞரானார்.
அடிகளார் தான் ஒரு இலங்கைத் தமிழர் என்பதை என்றுமே மறக்கவில்லை. இலங்கையில் தமிழர் மொழிப் பிரச்சனை கடுமையாகவிருந்த வேளையில் மனித நேயத்தோடும், மனித உணர்வோடும் பிரச்சனை பற்றிச் சிந்தித்தார். அக்காலத்தில் பெல்சியம், கனடா போன்ற நாடுகளில் இரட்டை மொழிப் பிரயோகம் இருப்பதையும் அது இலங்கையிலும் சாத்தியப்படுமா என்றும் சிந்தித்தார். இச்சிந்தனையின் வெளிப்பாடாக மொழியும் சுதந்திரமும் என்னும் நூாலை வெளியிட்டார். அப்பொழுதிருந்த பிரதமர் கெளரவ எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயகாவுடன் இதுபற்றிக் கலந்துரையாடினார். இதுபயனளிக்காது போகவே தமிழர்களின் அரசியல் அறப்போராட்டங்களில் தீவிரமாக நேரடியாகக் கலந்து கொண்டார். இவ்வேளையில் அடிகளார் மலேசியப் பல்கலைக்கழகத்தில் இந்தியத்துறைப் பேராசிரியராக நியமனம் பெற்றார். அங்குள்ள நண்பர்களைச் சேர்த்துக் கொண்டு, உலகத் தமிழ் மகாநாடு நடாத்த வழிதேடினார். இவரது இம்முயற்சிக்கு கல்வி முன்னேற்றச் சங்கமும் நிதி உதவி வழங்க முன்வந்தது. அடிகளாரின் தமிழ் மாநாடு கூட்டவேண்டுமென்ற நீண்டநாள் ஆவல் நிறைவேறியது. இதன் பயனாக 1966ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ந் திகதி தொடக்கம் 23ந் திகதிவரை 22 நாடுகளிலிருந்து வருகை தந்திருந்த 140 பிரதிநிதிகளுடன் மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் தமிழ் மகாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழின் பெருமை உலகெலாம் ஒலித்தது.
இதைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம், நான்காம் உலகத் தமிழாராட்சி மகாநாடுகள் முறையே 1968ல் சென்னையிலும், 1970ல் பாரிசிலும், 1974ல் யாழ்ப்பாணத்திலும் நடாத்தி வைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை தமிழாராய்சி மகாநாட்டை நடாத்த வேண்டுமென அடிகளார் கேட்டுக்கொண்டார். ஐந்தாவது தமிழாராய்சி மகாநாடு மதுரையில் நடப்பதற்கு முன்னரே அடிகளார் 1980ம் ஆண்டு புரட்டாதி மாதழ்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 123

Page 78
முதலாம் நாளில் இறைபதம் எய்தினார். தமிழாராய்ச்சி என்பது மொழியாராய்ச்சி என்பதாக மட்டும் அமைந்துவிடாமல் தமிழர் தம் வாழ்க்கைத் துறைகளையெல்லாம் ஆராயவேண்டுமென அடிகளார் விரும்பினார். இன்று அவர் விருப்பம் நிறைவேறி வருகிறது. இவரின் பெருமைமிக்க தமிழ்த் தொண்டுகளைக் கெளரவித்து மதுரையில் கூடிய ஐந்தாவது தமிழாராய்ச்சி மகாநாட்டின்போது அப்போதைய தமிழ்நாட்டின் கல்விமந்திரி கெளரவ அரங்கநாயகம் அவர்கள் திருவள்ளுவர், ஒளவை, பாரதி, வரிசையில் அடிகளாருக்கும் சிலை திறந்து வைத்து பெருமைப்படுத்தினார். அவர் பிறந்த தாயகமான நெடுந்தீவிலும் தனிநாயக அடிகளாருக்குச் சிலை நாட்டி, அம்மக்களால் வெகு சிறப்பாக விழாவெடுக்கப்பட்டது. தமிழ்வளர்த்த பெரியோர் வரிசையில் இடம்பெற்ற அடிகளார் நெடுந்தீவுத் தாய் பெற்றெடுத்த உலகப் பேரறிஞராவார். .
நெடுந்தீவிலுள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் - 124
 

திரு.சி.வி.எட்வேட் நவரட்னசிங்கம்
அவர்கள் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் முதல் அதிபர்
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகற்கு
நெடுந் தீவு மகாவித்தி யாலய முதல் அதிபர் அமரர். திரு.சி.வி. எட்வேட் நவரட்னசிங்கம் அவர்கள் நெடுந் தீவு மக்கள் மனதல் என்றும் நீங்கா இடம்பெற்றவர். மாணவர்கள் மத் தரியில் ஒரு கல விப் புரட்சியையே ஏற்படுத்திய பெருந்தகை. இவர் 1946ம் ஆண்டு இலவசக் கல்வித்திட்டத்தின் கீழ் ஆங்கில மொழிமூல அரசினர் கனிட்ட வித்தியாலயம் ஆரம் பிக்கப்பட்ட பொழுது, அதன் முதல் அதிபராக அரசினரால் நியமனம் பெற்று நெடுந்தீவிற்கு வந்தார். இவரின் வருகை நெடுந்தீவு மாணவர்களுக்கும், மக்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. நெடுந்தீவின் பிரயாணக் கஷ்டங்களை எண்ணி எவரும் நெடுந்தீவிற்கு வருவதற்குப் பயந்த காலத்தில். திரு. நவரட்னசிங்கம் அவர்கள் மிகுந்த மனத்துணிவோடும், என்னால் எதுவும் முடியும் என்ற ஓர்மத்தோடும் கனிட்டவித்தியாலயத்தின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்.
இவர் பதவியேற்ற பொழுது வித்தியாலயத்திற்கென நிரந்தரக் காணியோ, கட்டிடங்களோவிருக்கவில்லை, அப்போதைய விதானையார் திரு. சு.நாகேந்திரர் அவர்களால் தற்காலிகமாக வழங்கப் பட்டிருந்த காணியில் கட்டப்பட்ட சிறிய ஒலைக் கொட்டிலில் அமைந்த பாடசாலையிலே தனது கல்விச் சேவையை ஆரம்பித்தார். இருபத்தி மூன்று மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் ஆரம்பத்தில் இருந்தார்கள். அதிபரின் நிர்வாகத் திறமையையும், அவரின் சேவை மனப்பான்மையையும்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 125

Page 79
கண்ட பெற்றோர் மற்றைய பாடசாலைகளில் மேல் வகுப்புக்களில் படித்துக் கொண்டிருந்த தம் பிள்ளைகளை இங்கு கொண்டு வந்து சேர்த்தனர். அதிபர் அவர்களின் அயராத முயற்சியினாலும் கல்விப் பகுதியினருடன் கொண்டிருந்த நல்ல தொடர்புகளினாலும் பாடசாலைக்கான நிரந்தரக் காணி பெறப்பட்டதோடு, புதிய கட்டிடங்களும் பெறப்பட்டன. மாணவர்களின் தொகை அதிகரித்ததோடு வெளியூர்களிலிருந்தும் மாணவர்கள் வந்து கல்வி கற்றார்கள் . 1950ல் பாடசாலையின் தரம் மகாவித்தியாலயமாக உயர்ந்தது. விசேட பாடங்களுக்கான ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டார்கள். விஞ்ஞானம், கணிதம், விவசாயம், மரவேலை, நெசவு ஆகிய பாடங்களுடன் கவின்கலைப் பாடங்களான சங்கீதம், சித்திரம்,நடனம் ஆகிய பாடங்களும் கற்பிக்கப்பட்டன. மாணவர்கள் பொதுப் பரீட்சைகளிலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். இப் பாடசாலையில் இவருடைய காலத்தில் கல்வி பயின்று வெளியேறிய மாணவர்களில் அநேகர் சிரேட்ட தராதரப் பத்திரத்துடன் ஆசிரிய பயிற்சிக்கலாசாலைகளுக்கு ஆசிரிய பயிற்சிக்காகத் தெரிவாகினர். பலர் அரசாங்க லிகிதர்களாகவும், கிராம சேவையாளர்களாகவும், விவசாய உத்தியோகத்தர் களாகவும் வேலை வாய்ப்புக்களைப் பெற்றனர். மாணவர்கள் சிலர் தமது உயர்கல்வியை யாழ்ப்பாணத்திலுள்ள கல்லுாரிகளில் தொடர்ந்து மேற்கொண்டு இலங்கைப் பல்கலைக்கழகங்களில் தமது பட்டதாரிப் படிப்புக்களை முடித்தனர். இவர் ஒரு றோமன் கத்தோலிக்கராகவிருந்த பொழுதிலும் ஏனைய மதங்களையும் மதிக்கும் சமரச நோக்குடன் செயற்பட்டார். வித்தியாலயத்தில் சைவசமய விழாக்களைச் செய்ய உந்துதலாகவும் உறுதுணையாகவும் இருந்தார். வெள்ளிக்கிழமை தோறும் மாணவர்கள் ஆசிரியர்களுடன் அயலிலுள்ள விநாயகர் ஆலயத்திற்குச் சென்று கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபட ஊக்குவித்தார். வித்தியாலயத்துள்ளும் சைவ மாணவர்க்கும் ,கத்தோலிக்க மாணவர்க்கும் தனித்தனி பிரார்த்தனை மண்டபங்களை அமைத்துக் கொடுத்தார். முயல், கிளி, புறா, மயில் என்பவற்றையும் வளர்த்து, மரங்களையும் பாடசாலையின் சூழல்களில் நாட்டிப் பாடசாலைச் சுற்றுப்புறத்தை ஒரு கண்கவர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 126

சோலையாக மாற்றினார். சில மாணவர்கள் அதிபரின் வழிகாட்டலுடன் இந்தியாவிற்குச் சென்று பட்டதாரிப் படிப்பை மேற் கொண் டனர். இவரின் வழிகாட்டலினால் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற பல மாணவர்கள் பொறியியலாளர்களாகவும், வைத்தியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் தேர்ச்சி பெற்றனர். இவரின் மாணவர்களில் பலர் உயர்ந்த கல்விச் சேவை நிர்வாக உத்தி யோகத்தர்களாகவும் பணியாற்றினர். இவர் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் மட்டுமன்றி அவர்களின் ஒழுக்கத்திலும் கண்ணும் கருத்துமாகவிருந்து தவறான வழிகளிற் சென்ற மாணவர்களைத் திருதி தி நல வழிப் படுத் தனார். ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காகத் தனது பணத்தில் புத் தகங்கள், உடைகள் வாங்கிக் கொடுத்தார்.
நெடுந்தீவு மக்களின் பொருளாதார வளத்தைப் பெருக்கும் நோக்கமாக அங்கு பெறப்படும் பனைாக்கை மூலப்பொருளாகக் கொண்டு செய்யக்கூடிய வெங்காயக் கூடு பின்னும் கைத் தொழிலைத் தமது செலவில, அதில் பயிற்சி பெற்ற ஆசிரியரை நெடுந்தீவிற்கு வரவழைத்து சில மாணவர்களுக்குப் பயிற்சி கொடுத்தார். இத்தொழில் மூலம் பல கஷ்டப்பட்ட மாணவர்களும், பெற்றோரும் பயனடைந்தனர். இவர் மாணவர்களுக்கு ஒரு நல்ல ஆசிரியராகவும், பாடசாலைக்கு ஒரு சிறந்த நிர்வாகியாகவும், பெற்றோருக்கும் மாணவருக்கும் ஒரு சிறந்த ஆலோசகராகவும், வழிகாட்டியாகவுமிருந்தார். இவரின் சேவைக்காலம் நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கு ஒரு பொற்காலமாகும். ஒவ்வொரு ஆணின் முன்னேற்றத்திற்குப் பின்னும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவார்கள். இவரின் தன்னலமற்ற சேவைக்குப்பின் துணையாக விருந்து, பிரயாணக் கஷடங்கள் நிறைந்த அக்காலத்தில் பதினெட்டு வருடங்கள் நெடுந்தீவு மக்களுக்குச் சிறந்த கல்விச் சேவையாற்றப் பொறுமையுடன் துணைபுரிந்த திருமதி நவரட்னசிங்கம் அவர்களையும், நம்மக்களை நேசிக்கும் அவர் தம் பிள்ளைகள் டாக்டர்.என். மனோகரன், திருமதி மனுவெலா சிங்கராயர் குடும்பத்தினரையும் நெடுந்தீவு மக்களால் என்றும் மறக்கமுடியாது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் , 127 י

Page 80
சகோதரர்கள் சிவபூரீ நா.தியாகராசாக்குருக்கள் சிவபூரீ நா.இரத்தினசாமிக்குருக்கள்
சிவழறி
சைவமும் தமிழும் இரு கண்களெ நாதியாகராஜாக்குருக்கள்
னப் போற்றப்படும் நெடுந்தீவாம் பசுத் தீவில் காலத்திற்குக் காலம் பல அறிஞர்களும் சமயாச்சாரியார்களும் தோன்றிச் சைவத்தையும் தமிழையும் வளர்த்து வந்துள்ளார்கள். இந்த வரிசையில் அன்னியர் ஆட்சிக் காலத்திலும் சைவத்தைப் போற்றி அழியவிடாது பாதுகாத்த பெருமை யில் அங்கு வாழ்ந்த சமயாச்சா ரியர்களான குருக்கள்மார்களுக்கும் பெரும் பங்குண்டு. இவர்கள் தமது ஆசாரங்களைத் திறம்பட அனுசரித்ததோடு மக்களோடு மக்களாக இணைந்து வாழ்ந்து, சைவத்தின் பெருமைகளையும், இந்து தர்மங்களையும் நிலை நாட்டினார்கள். இவர்களில் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த தியாகராசாக் குருக்கள், இரத்தினசாமிக் குருக்கள் ஆகிய இரு சகோதரர்களும் மிகவும் போற்றுதற்குரியவர்களாவர். இவர்கள் நெடுந்தீவிலுள்ள ஆலயங்களில் நித்திய பூசைகளையும் திருவிழாக்களையும் சமய அனுட்டானங்களையும் வெகு சிறப்பாக நடாத்திவந்தனர். இவர்களால் செய்யப்பட்ட பூசைகளும், அர்ச்சனைகளும் அவர்களின் எளிமையான வாழ்க்கை முறைகளும், மக்களைப் பெரிதும் கவர்ந்தன. இவர்கள் தெய்வங்களுக்குச் செய்யும் பூசைகளைக் கண்ணாரக் காண்பதும் அவர்களின் கைகளால் விபூதி வாங்கிப் பூசுவதும் மக்களுக்கு மிகுந்த ஆத்மதிருப்தியைக் கொடுத்தன. இவர்களிடம் விபூதி வாங்கிப் பூசிவிட்டு எக்காரியத்தைத் தொடங்கினாலும் அவை சித்தியாகும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. இவர்கள் மக்களிடம் எதையும் கேட்டுப் பெற்றதில்லை. வீடுகளில் நடக்கும் சமயக்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 128
 

கிரியைகளைச் செவி வனே செய்து அவர்கள் கொடுப்பனவற்றையே தானமாக ஏற்று மகிழ்ந்து மக்களைத் திருப்திப்படுத்தும் மாண்பு உடையோராய் வாழ்ந்தனர். இவர்களில் மூத்தவரான சிவழறி தியாகராசாக் குருக்கள் ஆலயங்களைப் பரிபாலிப்பதிலும், புனர் அமைப்பதிலும் புதிய மண்டபங்களை அமைப்பதிலும் பரிபாலன சபையாருக்கு ஊக்கமும் ஒத்துழைப்பும் தந்தார். மேற்குப் பிள்ளையார் ஆலய உள்வீதி உயர் மண்டபத்தை சிவபூரி தியாகராசாக்குருக்கள் அடியார்களிடம் நிதி சேர்த்து அமைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தியாகராசாக்குருக்கள் விக்கிரகங்ளை அலங்கரிப்பதில் மிகவும் புகழ் பெற்றவர். இவர் நெடுந்தீவிலுள்ள கரமத்தை முருகன் ஆலயம், நெழுவினி விநாயகர் ஆலயம் ஆகியவற்றின் பிரதம குருவாகவும் பணியாற்றினார். இவரின் திறமையை அறிந்த யாழ்குடாநாட்டின் பல ஆலய நிர்வாகிகள் தங்கள் ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறும் காலங்களில் விக்கிரகங்களை அலங்காரம் செய்வதற்காக இவரை அழைத்துச் செல்வர்.
அந்தணர் என்போர் அறவோர் மற்றெவிவுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுகலான்
என்னும் திருவள்ளுவரின் குறளுக்கேற்ப வாழ்ந்த இப்பெரியாரின் மூத்த புதல்வனே ரொறன்ரோ பூரீ துர்க்கா ஆலயத்தின் ஸ்தாபகரும் பிரதம குருக்களும் ஆவார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 129

Page 81
சிவபூர் தியாகராசா
கணேஸ்சுவாமி குருக்கள் பேரருள்மிகு பூரீதுர்க்கா அம்பாள் ஆலய ஸ்தாபகர், பிரதம குருக்கள், கனடா இந்துமதபீடத்
தலைவர்
நெடுந் தீவு மேற் கைப் பிறப்பிடமாகக் கொண்ட சிவழறி. தியாகராசாக் குருக்களினதும், அவரது பாரியார் சுந்தரம்மாவினதும் மூத்த புதல்வரே கணேஸ் சுவாமிக் குருக்களாவார். இவர் , இலங்கை யிலும் இந்தியாவிலும் ஆகமங்க ளைத் திறம்படக் கற்றுக் குருக்கள் பட்டம் பெற்றார். இவர் இன்று கனடாவிலுள்ள இந்துமத பீடத்தின் தலைவராகவும்,ரொறன்ரோ பூரீ துர்க்கா அம்பாள் ஆலயத்தின் பிரதமகுருக்களாகவும் பணியாற்றுகிறார். இவரது திருப்பணி செய்யும் சிந்தையால் ரொறன்ரோ நகரிலே ஒரு பிரமாண்டமான கோவிலைத் துர்க்கை அம்பாளுக்காக ஸ்தாபித்து 2001ம் ஆண்டில் முப்பத்துமூன்று ஒமகுண்ட மகா கும்பாபிஷேகத்தை நடாத்திப், புலம்பெயர்ந்த நாடாகிய கனடாநாட்டில் வாழுகின்ற சைவப் பெருமக்கள் அம்பாளின் பேரருளைப் பெற வழி செய்தார். புலம்பெயர்ந்த நாடொன்றில் முதல் முதலாகக் கோடி அருச்சனை செய்து, அம்பாளின் திருவருள் இவ்வாலயத்தில் பன்மடங்கு பிரதிபலிக்கவும், பல்லாயிரக்கணக்கான மக்கள் அதனைக் கண்டு களிக்கவும் வழிவகுத்தார். அதுமட்டுமன்றிச் சைவமும் தமிழும் வளர்த்த அறுபத்திமூன்று நாயன்மார்களுக்கு விழாவெடுத்து அவர்களுக்குத் தனித்தனி மாடங்கள் அமைத்து, அவர்களின் விக்கிரகங்களைச் சைவப்பெருமக்களின் ஆதரவுடன் பிரதிஷ்டை
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 130
 

செய்து வைத்துள்ளார். இவை மட்டுமன்றி அம்பாளுக்கான தங்கமுலாம் பூசப்பட்ட கொடிக்கம்பம் நாட்டி, அம்பாளுக்கான இருபத்தைந்து நாட்களைக் கொண்ட திருவிழாவைத் தொடக்கி வைத்துள்ளார். இவற்றின் மூலம் கனடா வாழ் சைவப் பெருமக்கள் அம்பாளின் திருவருளையும், நாயன்மார்களின் குருவருளையும் ஒருங்கே பெற வழிவகுத்துள்ளார்.
முற்றும் உலோகத்தாலான சித்திரத் தேர் ஒன்றை ஆகம விதிப்படி கைதேர்ந்த சிற்பாசிரியர்களைக் கொண்டு இந்தியாவில் செய்வித்து இறக்குமதி செய்தார்.இத் தேர்,தேர்த் திருவிழாவிற்கு முதல் நாளே அவசரம்,அவசரமாக வந்து சேர்ந்தமைக்கான அம்பாளின் திருவருளையும் ,குருக்கள் அவர்களின் செயற்றிறனையும் பலரும் வியந்து பாராட்டினர், ஆலயம் உள்ளத்தைப் பறிக்கும் கலைக் கோவிலாக இருக்கிறது. பல்வகைச் சமய நிகழ்ச்சிகளையும் திறம்படச் செய்து கொண்டிருக்கும் குருக்கள் அவர்களின் சமயப் பணி பாராட் டுக் குரியதோடு, அவரின் திறமைகளையும் , சேவைகளையும் பார்த்து நெடுந்தீவன்னை பெருமிதமடைகிறாள்.
கனடா, ரொறன்ரோ Uதுர்க்காதேவி அம்பாள் தேவஸ்தானம்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 131

Page 82
ஆயர். பேரருட்தந்தை இராயப்பு யோசப் அடிகளார்
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஆயர். பேரருட்தந்தை இராயப்பு யோசெப் அடிகளார் அவர்கள், இறை சேவைக்காகத் தம் மை பல ஆணி டுகளாக அர்ப்பணித்து அருஞ்சேவையாற்றி வருகிறார். இவர் யாழ்ப்பாணத்தில் பல தேவாலயங்களின் பங்குத் தந்தையாகப் பணியாற்றியவர். இவர் ஆயராகப் பதவி பெற்று. மன்னார்
மாவட்டத் தல கடந்த பல ஆண்டுகளாக இறை சேவைப் பெரும் பணியாற்றி வருகிறார். இவரது இறை பணியோடு பல சமூகப் பணிகளும் செய்துவருவதை இலங்கைவாழ் கத்தோலிக்க மக்கள் மட்டுமன்றி ஏனைய மத மக்களும் நன்கறிவர். மடுத்திருப்பதியிலிருந்து படையினர் அகற்றப்படவேண்டுமென ஆணித்தரமான குரலில் வாதித்தவர். நாட்டின் சமாதான முன்னெடுப்புக்களுக்காக பலமுறை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆயர்களுடன் சேர்ந்து இலங்கையின் தென்பகுதி, வடபகுதி அரசியல்வாதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினார். மன்னார் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் படையினரால் தாக்கப்பட்ட பொழுதெல்லாம் எவருக்கும் அஞ்சாது குரல் கொடுத்து படையினர்மீது நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். இவர் கத்தோலிக்க சமயத்திற்கு மட்டுமன்றித் தமிழினத்தின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல சேவைகளை ஆற்றி வருவதைப் பார்த்து எம்மினமே பெருமைப்படுகிறது. இவரும் நெடுந்தீவன்னை பெற்ற பெருமகனே.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 132
 

பேராசிரியர். கலாநிதி அருட்தந்தை அமுது ஜோசப் சந்திரகாந்தன்
இவர் நெடுந் தீவைச் சேர்ந்த புலவர் மாமணி அடைக் கலமுத்து (அமுது) அவர்களின் புதல்வராவார். இவர் இறை சேவைக்குத் தன் னை அர்ப் பணித் து
கிறீஸ்தவ கோட்பாடுகளில் கலாநிதிப் பட்டம் பெற்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத் தரில் கிறிஸ் தவ, ஸ்லாமியத் துறைகளை நிறுவி
அதன் தலைவராகவும் ,
இணைப் பேராசிரியராகவும் பதினேழு ஆண்டுகள் பணியாற்றினார். இவர் மொன்றியலில் உள்ள புனித கோர்டியா பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஒட்டாவாப் பல்கலைக்கழகத்திலும் தற்போது ரொறன்ரோப் பல்கலைக்கழகத்திலும் இறையியல் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல சமூகசேவைகளில் ஈடுபட்டு வருவதோடு மக்களின் ஆன்மீக உணர்வுகளுக்கும், தேவைகளுக்கும் வேண்டியபடி கிறிஸ்தவ சமயப் பணிகளையும் நடாத்தி வருகிறார். இவர் பத்திற்கு மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியுள்ளார். பல ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் பல்லின மக்கள் வாழும் ஸ்காபரோவில் உள்ள புனித லோறன்ஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் ஓய்வு நாட்களில் பல்லின மக்களுக்கான ஆராதனையை நடாத்தி வருகிறார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 133

Page 83
அருட்.சகோதரி புஸ்பம் ஞானப்பிரகாசம்
இவர் நெடுந்தீவைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் ஆசிரியரின் புதல்வியாவார். இவர் தம்மை இறைபணிக்காக அர்ப்பணித்து கத்தோலிக்க மதத்தின் கன்னியாஸ்திரிகளின் வடக்கு, கிழக்கு மாகாணத் தலைவியாக இருந்து பல ஆணி டுகள் சேவையாற்றினார். இவரது அளப்பரிய சேவைகளால் இவர் கத்தோலிக்க உலகில் அழியாப் புகழைப் பெற்றவராவார்.
திருமதி. செல்லம்மா நாகேந்திரர்
இவர் விதானையார் திரு. சு. நாகேந்திரர் அவர்களின் மனைவியாராவார். இலங்கையின் முதல் பெண் கிராமசபைத் தலைவி என்ற புகழைப் பெற்றவர். நெடுந்தீவின் கிராமசபைத் தலைவியாக இரணி டு முறை மக்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். இவருடைய பெயரில் நெடுந்தீவு மத்தியில் ஒரு ஆரம்ப பாடசாலையும் உள்ளது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 134
 

இயல் 12
தீவகம் தந்த பண்டிதர்களும் பாவலர்களும் பண்டிதர்.நா.கந்தையா
இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றவர். இவர் நெடுந்தீவில் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப் பட்ட பொழுது முதலில் அங்கு சேவையாற்ற நியமனம் பெற்று வந்த தமிழ்ப்பண்டிதரும், பயிற்றப்பட்ட தமிழாசிரியருமாவார். இவர் அதிபர் திரு.சி.வி.நவரட்னசிங்கம் அவர்களின் அளப்பரிய கல்விச் சேவைக்குப் பக்கபலமாக நின்று உதவி புரிந்தவர். மாணவர்களின் வழிகாட்டியாகவும், நல் ஆலோசகராகவும் பணியாற் றியவர். இவர் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக மாலை நேரங்களிலும் ஓய்வு நாட்களிலும் வகுப்புகளை நடாத்தி மாணவர்கள் கல்விப் பொதுத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற வழி வகுத்தவர். மாணவர்களைச் சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும் வருவதற்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்தவர். இவர் யாழ். பரமேஸ்வராக் கல்லூரியை பல்கலைக்கழகம் ஆக்குவதற்காக யாழ் முத்துத் தம்பி வித்தியாலயத்துடன் இணைத்தபோது, முத்துத்தம்பி வித்தியாலயத்தின் பதில் அதிபராகவிருந்து இப்பெரும் பொறுப்புக்களை ஏற்றுப் பணிபுரிந்தவர். ஆரம்பத்தில் சிறிதுகாலம் ஈழகேசரிப் பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தவர். யாழ் முத்துத்தம்பி மகாவித்தியாலயம்,யாழ் ஆனைப்பந்தி மெதடிஸ்த வித்தியாலயம் ஆகியவற்றிலும் அதிபராகப் பணியாற்றினார். மாத்தறை, திக்குவல்லை, நெடுங்கேணி, முல்லைத்தீவு, முரசுமோட்டை முதலிய இடங்களிலும் சேவையாற்றினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார். இவரின் சேவை என்றும் நெடுந்தீவு மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 135

Page 84
புலவர் மாமணி வித்துவான் அடைக் கலமுத்து
இவர் ஒரு சிறந்த கவிஞராவார். இவர் அழகு தமிழில் ஆக்கிய முத்து க்களான கவிதைகள் பல.
அவையெல்லாம் மக்கள் படிக்குந் தோறும் தேன்சுவை சொட்டும் கவிதைகளாகும். இவர் பல கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி யுள்ளதோடு பல கவிதை நூல்களையும் எழுதியுள்ளார். இவர், நெஞ்சே நினை, இவ்வழிச் சென்ற இனிய மனிதன், காக்கும் கரங்கள், அன்பின் கங்கை அன்னை திரேசா, மடுமாதா
காவியம், அன்னம்மாள் ஆலயவரலாறு அமுதுவின் கவிதைகள் என்னும் கவிதை நூல்களை எழுதி வெளியிட்டு உள்ளார். இவரின் கவிதைகளின் சிறப்பைப் பாராட்டிப் பல பெரியார்களும், சங்கங்களும் இவருக்குப் பல பட்டங்களை அளித்துப் பெருமைப்படுத்தியுள்ளனர். இவருக்கு அளிக்கப்பட்ட, பட்டங்களாவன: சொல்லின் செல்வர், புலவர்மாமணி, முப்பணி வேந்தன், பாவேந்தன், தமிழ்க் கங்கை, செந்தமிழ்த் தென்றல், கவியரசர், மதுரகவிபுலவர் மணி என்பனவாகும். புலவர் அமுது என்ற பெயரில் இவர் ஒரு உலகறிந்த கவிஞராவார். இவரின் கவிதை நுால்களில் தான் பிறந்த தாயகமாம் நெடுந்தீவின் சிறப்பைப் பற்றி பல கவிதைகளைப் பாடியிருப்பது இவரின் தாயகப் பற்றை எடுத்துக்காட்டுகிறது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 136
 

கவிமாமணி பண்டிதர் க.த. ஞானப்பிரகாசம்
இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாசாலையின் அதிபராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் ஓர் சிறந்த கவிஞராவார். இவரின் தீந்தமிழ்க் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படத்தக்கன. இவர் தமது கவிதைகளுக்கும் , கட்டுரைகளுக்கும், பல பரிசில் களையும் பாராட்டுக்களையும் பெற்றிருந்தார். இவரினி கவிதைகளுக்கு இலங்கையில் சாகித்தியப் பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் இவரின் கவிதைகளுக்கு பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத் தக்கவையாகும். இவரின் திறமையைப் பற்றி ஒரு கவிஞர் பின்வருமாறு பாராட்டியுள்ளார்.
முக்கனியின் சாறெடுத்துத் தீங்கவிதை செய்வான் மொழியரசி கண் சிமிட்ட வழி நீளம் திரிவான் தக்கோரின் அரங்கினிலே சொல் விருந்து வைப்பான் சங்கத்தின் தமிழ் வடித்துச் செங்கரும்பில் தோய்த்துஎக்காலும் எழுத்திற்கு உயிர் கொடுத்து வைப்பான் இளநங்கைபோற் சிரித்து இதயத்தைத் தொடுவான் இக்காலப் புலவர்களின் திலகமென வாழும்
எம் ஞானப்பிரகாசம் நெடுந்தீவு பெற்ற கவி மாமணியே
- இவரும் நெடுந்தீவு அன்னை பெற்ற கவிஞராவார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 137

Page 85
அதிபர் திரு.இரா.சுப்பிரமணியம்
இவர் ஒரு சிறந்த வரகவியாவார். இவர் நெடுந்தொம்பு இராமநாத வித்தியாசாலையின் அதிபராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். நெடுந்தீவின் கிராமசபைத் தலைவராகவும் சேவை புரிந்தவர். பொதுச் சேவைகளிலும் அதிகம் ஈடுபாடுடையவர் எந்த ஒரு விடயத்தைப் பற்றியும் உடனடியாகவே பாட்டை இயற்றிப் பாடும் திறமையுடையவர். அப்பாடல்களிலெல்லாம் ஆழ்ந்த புலமையும் சிறந்த கருத்துக்களும் காணப்படும். இதனால் இவரை வரகவியென்றே பலர் பாராட்டியுள்ளார்கள். இவர் ஆங்கில மொழியிலும் நல்ல திறமையுடையவராகவிருந்தார்.
அதிபர் பண்டிதர்.தி.கணபதிப்பிள்ளை
இவர் நெடுந் தவு கிழக்குச் சுப் பிரமணிய வித்தியாசாலையில் பல ஆண்டுகள் அதிபராகப் பணியாற்றியவர். இவர் சைவ சமய ஆச்சாரங்களைச் சிறப்பாகப் பின்பற்றி வாழ்ந்தவர். மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சிகளிலெல்லாம் சைவ சமய ஆசாரங்களைச் சிறப்பாக நடாத்த மக்களின் வழிகாட்டியாகச் செயற்பட்டவர். தமிழ் இலக்கண பாடம் கற்பிப்பதில் ஒரு சிறந்த ஆசானாக விளங்கியவர். இவரிடம் இலக்கணம் கற்ற பலமாணவர்கள் தமிழில் சிறந்த புலமையைப் பெற்றிருந்ததோடு சில மாணவர்கள் பண்டிதர்களாகவும் பட்டம் பெற்றனர்.
பண்டிதர். யோ.க.ஆசிநாதன்
இவர் நெடுந்தீவைச் சேர்ந்தவர். ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்டகாலம் சேவையாற்றியவர். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் அதிபராகவும் சிறிது காலம் பணியாற்றினார். இவர் கவிதைகள் கட்டுரைகள், எழுதுவதில் சிறந்து விளங்கியதோடு, சிறந்த பேச்சாளருமாவார். தீவகத்தின் வளர்ச்சியிலும் அதிக அக்கறையுடையவராகவிருந்தார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 138

அதிபர். பண்டிதர்.ஆ.சுப்பிரமணியம்
இவர் ஓர் சிறந்த முருக பக்தர். நெடுந்தீவு மேற்குச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், பின்னர் மங்கையற்கரசி வித்தியாசாலையின் அதிபராகவும் கடமையாற்றினார். இவர் கந்தப் புராணத்திற்குப் பயன் சொல்வதில் ஈடு இணையற்று விளங்கினார்.இவரிடம் கற்ற பல மாணவர்கள் இவரின் கற்பித்தல் திறனை இன்றும் வியந்து பாராட்டுகினறனர். இவர் கரமத்தைக் கந்தன் பெயரில் தலபுராணத்தையும், நெழுவினி விநாயகர் பெயரில் ஊஞ்சல் பாட்டையும் பாடியவர். நெடுந்தீவு மக்களால் செல்லத்துரை மாஸ்டர் என அன்பாக அழைக்கப்பட்டார்.
அதிபர். பண்டிதர் சு.பசுபதி
இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றவர்.புத்தளம் மாவட்டத்தில் முந்தல் என்ற இடத்திலுள்ள சைவ வித்தியா விருத்திச் சங்கப் பாடசாலையில் பல வருடம் அதிபராகப் பணியாற்றியவர்.பொதுச் சேவைகளிலும் அதிக ஈடுபாடுடையவர். இவர் நெடுந்தீவு மேற்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையில் அதிபராகக் கடமையாற்றினார். இவர் சைவசமய வளர்ச்சியில் அதிக அக் கறையுள்ளவர். ஆலயங்களில் மாணவர்களைக் கொண்டு சென்று பசனைகள் செய்து மாணவர்கள் மத்தியில் சமய பக்தியைவளரச் செயல் ஆற்றினார். இவர் நெடுந்தீவு மேற்கு நெழுவினி விநாயகர் ஆலய ஸ்தல புராணத்தைப் பாடிக் கொடுத்தவருமாவார். கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதிலும் சிறந்து விளங்கினார்.
அதிபர்.திரு.சி.கார்த்திகேசு
இவர் பல ஆண்டுகள் பதுளை மாவட்டத்தில் ஆசிரியராகப் பணி புரிந்தவர். நெடுந்தீவு மேற்கு பாரதி வித்தியாசாலையின் அதிபராகப் பணியாற்றியவர். இவர்
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 139

Page 86
நெடுந்தீவுக் கிராமசபையின் அங்கத்தவராகவும், வேறு பல சங்கங்களிலும் தலைவராகவும் சேவையாற்றினார். மாணவர்களின் கலை, கலாச்சார வளர்ச்சிகளிலும் அதிக ஊக்கம் காட்டினார். இவர் ஓர் சிறந்த சமூக சேவையாளருமாவார்.
அதிபர்.திரு.கா.நாகலிங்கம்
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும் உருத்திரபுரத்தை வதிவிடமாகவும் கொண்டவர். இவர் கிளிநொச்சி மாவட்டதிலும் இரத்தினபுரி ,கண்டி ஆகிய மாவட்டங்களிலும் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றினார். கிளி நொச்சி மாவட்டத்திலுள்ள இந்து மகாவித்தியாலயம், உருத்திரபுரம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக நீண்ட காலம் சேவையாற்றினார். இவர் சைவ சமயப்பற்றும் மொழிப்பற்றும் மிகுந்தவர். சிவநகர் விநாயகர் ஆலயம், உருத்திரபுரம் சிவனாலயம் என்பவற்றின் புனருத்தாரண வேலைகளில் அவ்வூர் சைவசமயப் பெரியார்களுடன் சேர்ந்து முன்னின்று உழைத்தவர். அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததோடு அக்கிராமத்தின் முன்னேற்றத்தில் அதிக பங்கு கொண்டு செயற்பட்டவர். இவர் கரச்சிக் கிராம சபையின் தலைவராகப் பணியாற்றியவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளராவார்.
அதிபர்.திரு.ஜே.கொன்ஸ்ரன்ரைன்
இவர் மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவர். இவர் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், பின்னர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் கனிஷ்ட பிரிவு அதிபராகவும் சேவையாற்றினார். இவரின் சேவைக்காலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகப் பல சேவைகளைச் செய்தார். இவர் சிறந்த பேச்சாளராகவும், கவிதைகள் இயற்றுவதில் சிறந்த ஆற்றல் உடையவராகவும் விளங்கினார். “நான் ஒரு காற்றாடி எங்கு செல்வேன்” என இவர் எழுதிய கவிதை பலராலும் பாராட்டப்பட்டது. இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளரும் ஆவார். நெடுந்தீவு மக்களும் வரலாறுழ், 140

அதிபர் திரு.ஆ.சோமசுந்தரம்
இவர் ஒரு முருக பக்தர். இவர் வாழ்த்துப் பாக்கள், கவிதைகள், கல வெட்டுக் கள் பாடுவதில் நல ல திறமையுடையவர். இவர் ஓர் சமூகத் தொண்டருமாவார். இவர் ஸ்கந்தபுரம் முருகன் பெயரில் ஸ்தல புராணம் பாடிக் கொடுத்துள்ளார். சைவ சமயக் கலாச்சாரங்களைப் பேணி வாழ்ந்து வருபவர்.
அதிபர் திரு.நா.அமிர்தரட்னராஜா
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவரும், சிறந்த கவிஞரும் எழுத்தாளருமாவார். நாட்டுப்பற்றும் மொழிப் பற்றும் மிக்கவர். ஆரம்ப காலங்களில் அரசியலிலும் அதிக ஈடுபாடு கொண்டு தீவிரமாகச் செயற்பட்டவர். நெடுந்தீவின் வளர்சியிலும், மக்களின் முன்னேற்றத்திலும் அதிக அக்கறையுடையவர். இவர் பல முற்போக்கான கருத்துக்களைக் கொண்ட கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். வாழ்த்துப்பாக்கள், கல்வெட்டுக்கள் பாடுவதிலும் நல்ல திறமையுடையவர். இவர் ஓர் சிறந்த சோதிடருமாவார். கனடா சைவ நெறிக் கழகத்தின் ஆலோகராகவும் செயற்பட்டு வருகிறார்.
இயல் 13 கவிஞர்களும், எழுத்தாளர்களும்
திரு. வ.ஐ.சண்முகம்பிள்ளை ஜெயபாலன்
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாக் கொண்டவர். இவர் ஒரு சிறந்தகவிஞரும், எழுத்தாளரும், சிறந்த ஆய்வாளருமாவார்.
இவர் இலங்கையில் இருக்கும் போது ஒடுக்கப்பட்டவர்களுக்கான போராட்டங்களில் பங்கு கொண்டவர். இவர் சேரன், சோலைக்கிளி போன்ற பல கவிதைகளை எழுதியுள்ளார். இவர் எழுதிய நெடுந்தீவு ஆச்சி என்னும் உணர்ச்சி பூர்வமான கவிதை இவர் நெடுந்தீவு மக்களும் வரலாறும் 141

Page 87
தனது தாயகமாம் நெடுந்தீவின் மேல் கொண்ட பற்றை வெளிப்படுத்துவதாகும். இவரின் கவிதைகள் இலங்கை, இந்தியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் பல அறிஞர்களின் பராட்டுக்களைப் பெற்றுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளங்கலைப் பாடத்திட்டத்தில் இவரின் கவிதை நுாலும் இடம் பெற்றுள்ளதென்பது குறிப்பிடத் தக்கது.
அமரர்.திரு.குமாரசாமி வினாயகமூர்த்தி
இவர் ஓர் சிறந்த சமூகச் சிந்தனையாளர்.சிறந்த எழுத்தாளர். இவரின் கட்டுரைகள் கவிதைகள் பல முன்னணிச் சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. இவரின் கட்டுரைகள், கவிதைகள் யாவும் மக்களைச் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கக்கூடிய சிறந்த முற்போக்குச் சிந்தனைகளையுடையவை. இவர் தேடகம், காலம், முகம் தேடும் மனிதர்கள் என்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் பணியாற்றினார்.
திரு. மாரிமுத்து சித்திவினாயகம்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், ஓர் சிறந்த கவிஞரும் ஆவார். இவரின் கவிதைகள் அதி உயர்ந்த கவிஞர்களின் கவிதைகளுக்கு ஒப்பானவை. இவரின் கவிதைகள் பல முற்போக்கான கருத்துக்களையும், சமூகமாற்றத்திற்கான நல்ல சிந்தனைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவரின் கவிதைகள் பல கனடாவிலுள்ள பத் திரிகைகளிலும் சஞ சிகைகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. கனடாவில் பல கவி அரங்குகளிலும் தனது கவிதைகளின் சிறப்பை வெளிபடுத்தி பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 142

திரு. ஐயம்பிள்ளை சண்முகநாதன்
ஆசிரியர்
இவர் இலங்கையில் பல ஆண்டுகளாக சமூகக்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர். கனடாவில் தமிழர்குரல் வானொலியில் சில காலம் ஒலிபரப்பாளராகப் பணிபுரிந்தவர். கனடா ஈழமுரசு பத்திரிகையின் துணைஆசிரியராகவும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினராகவும், போஷகராகவும் பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும், சமூக சேவையாளருமாவார்.
திரு.சுப. கணபதிப்பிள்ளை - லிகிதர்
இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும், பேச்சாளருமாவார். இவர் கொழும்பில் இலங்கைத் துறைமுக சரக் குக் கூட்டுத்தாபனத்திலும் பின்னர் இலங்கைத் துறைமுக அதிகாரசபையிலும் லிகிதராக நீண்ட காலம் பணியாற்றியவர். நெடுந்தீவின் முன்னேற்றங்களில் அதிக அக்கறையுடன் பணியாற்றிவர். நெடுந்தீவில் சமூக முன்னேற்றச் சங்கமொன்றை ஆரம்பித்து அதன்மூலம், குறிகாட்டுவான் துறைமுகம், பிரயாண வசதிகளென்பன பற்றிய விடயங்களில் தம்மாலான பங்களிப்பைச் செய்தவர். சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்.
திரு.சொக்கலிங்கம் இராமநாதன்
கிராம சபைப் பணியாளர்
இவர் நெடுந்தீவின் கிராமசபையில் 30 வருடங்களுக்கு மேலாக பணியாளராகச் சேவை செய்தவர். இவருக்கு கவிதைகள் பாடுவதிலும் சிறந்த ஆற்றல் உண்டு. இவர் நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் பெயரில் ஆலமாவனச் சிந்து என்னும் பாடற் தொகுப்பைப் பாடியுள்ளார். இவர் கனடாவிலுள்ள நெடுந்தீவைச் சேர்ந்த சைவப் பெருமக்கள் சிலரின் ஆதரவுடன் 2002ம் ஆண்டு ஆனி மாதம் நெடுந்தீவிற்குச் சென்று அங்குள்ள ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தினைப் புனர்நிர்மாணம் செய்து, அவ்வாலயத்தின் கும்பாபிஷேகத்தையும் வெகு சிறப்பாகச் செய்துள்ளார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 143

Page 88
திரு.வை.இராசேஸ்வரன்
இவர் ஓர் சிறந்த எழுத்தாளர். அறிவுப்பொழில் என்னும் சஞ்சிகையை வெளியிட்டு நடாத்தியவர். கனடா-நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவர். இவரே ஆரம்பகாலத் தலைவராகவும் பணியாற்றினார். இவர் இலங்கையிலிருக்கும் பொழுது சர்வதேசக் கூட்டுறவு மலரின் ஆசிரியராகவிருந்து மலரை வெளியிட்டு வந்தார். இவர் அறிவுப் பொழில் கல்வி நிலையத்தை நிறுவி முதியோருக்கான வகுப்புக்களை நடாத்தினார். இவர் இந்து நாகரிகத் துறை வினா- விடை நுால் ஒன்றையும் எழுதி வெளியிட்டார். சமூக சேவைகளிலும் சிறந்த ஈடுபாடுடையவர். மிசிசாகாவிலுள்ள யாழ். கூட்டுறவு இல்ல தலைவராகப் பணியாற்றினார்.
செல்வி பிரதீபா தில்லைநாதன்
இவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கவிஞருமாவார். இவர் பிரான்சிலிருந்து வெளிவரும் உயிர் நிழல் என்னும் பத்திரிகையிலும், இலண்டனிலிருந்து வெளிவரும் ஆண்டுச் சஞ்சிகை ஒன்றிலும் பல சிறுகதைகளையும், கவிதைகளையும் எழுதிவருகிறார். இவர் பலரின் பாராட்டுக்களையும் பெற்ற எழுத்தாளராவார். இளைய தலைமுறையில் சிறப்பாக வளர்ந்துவரும் இவர் எதிர்காலத்தில் ஒரு சிறந்த கவிஞராகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
திரு. இரா.தணிகாசலம்
இவர் ஒரு சிறந்த சிறுகதை எழுத்தாளர். இவர் நம் தீவகத்தைப் பிறப்பிடமாகக் கொள்ளாவிடினும் தாரத்தை நம் தீவகத்திலிருந்து பெற்றவர். இவரின் சிறுகதை ஆக்கத்திற்கு உறுதுணையாக நின்று ஊக்கமும் ஆக்கமும் அளித்து வருபவர் அவரின் துணைவியாரான திருமதி கண்ணம்மா தணிகாசலம் அவர்களே. இவரின் சிறு கதைகள் மிகவும் தரமானவை. இவர் அண்மையில் வெளியிட்ட சிறுகதைத் தொகுதிகள், ஒரு ரோஜாவின்காதலி, முள்ளில்லாத ரோஜாக்கள் என்னும் நூல்களாகும். இவர் ஓர் சிறந்த நாடக ஆசிரியருமாவார். நெடுந்தீவு மக்களும் வரலாறும் 144

கவிஞர்கள்,எழுத்தாளர்கள் வரிசையில்.
இன்று புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாடுகளான நோர்வே, ஜேர்மனி, பிரித்தானியா, சுவிஸ் போன்ற நாடுகளிலும், நம் நாட்டுக் கவிஞர்களும், கலைஞர்களும் வாழ்ந்து தம் கலைகளைப் பரப்பிவருவது தெரிந்ததே. குறிப்பாகச் சிறந்த கவிஞரான திரு.ச.ஜெயபாலன், திரு.சாள்ஸ் குணநாயகம், திரு.ம. அமரசிங்கம், திரு.ந. சசிந்திரன், திருமதி. எஸ். கெளசலாதேவி, திரு.ஆ.வை. லோகநாதன், திரு.கி.பி. அரவிந்தன் ஆகியோரைக் குறிப்பிடலாம். இன்று கனடாவிலும், நம் தீவகமான நெடுந்தீவிலும் பல இளங்கவிஞர்களும், எழுத்தாளர்களும் உருவாகி வருவதைக் கண்டு நாம் பெருமகிழ்ச்சி அடைவதோடு, அவர்களுக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
இன்று கனடாவில் வளர்ந்துவரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள் வரிசையில சிறுகதை, கவிதை, எழுத்தாளர்களான திரு.ஆ. குகன், திரு. கணபதிப்பிள்ளை துரை, திரு.எஸ். சுந்தரம், திரு.க. மோகன்திரு.சு.விவேகானந்தன், திரு.மு. பரமேஸ்வரநாதன் போன்றோரையும், நாடகத்துறையில் வளர்ச்சி பெற்றுவரும் திரு.ஜெயரட்ணம் திலீப்குமார், திரு.கந்தையா விக்னேஸ்வரன், திரு. மதியாபரணம் மோகனராஸ், செல்வி சத்தியா தில்லைநாதன் ஆகியோரையும் உதாரணமாகக் கூறலாம். இன்று எம் சமூகத்தில் எத்தனையோ இளந்துளிர்களான பாடகர்களும், நடனக் கலைஞர்களும், வாத்தியக் கருவிகளைச் சிறப்பாக மீட்டுவோரும் வளர்ந்துகொண்டு வருகிறார்கள். இவர்களின் முன்னேற்றத்திற்கு பெற்றோர் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கலை யைக் கணி டிப் பாகக் கறி க ஊக்குவிக்கவேண்டும். சங்கீதம், நடனம், மிருதங்கம், வீணை போன்ற கலைகளைக் கற்பதன் மூலம் பிள்ளைகளிடையே நல்ல கலாச்சாரப் பண்புகளை வளர்ப்பதோடு நல்ல மனப்பாங்குகளையும் ஏற்படுத்தலாம். ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கு எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் மிகவும் இன்றியமையாதவர்களாவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 145

Page 89
இயல் 14 பல்துறை அரச சேவையாளர்கள் இலங்கைக் கல்வி நிர்வாக சேவையாளர்கள் Sri Lankan Education
Administrative Service Officers
திரு. சின்னையா இராசநாயகம்
கல்வி அதிகாரி Bsc. SL.E.A.S. Education Officer
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஸ்ரான்லிக் கல்லூரியில் சில ஆண்டுகள் ஆசிரியராகச் சேவையாற்றினார். பின்னர் முல்லைத் தீவு மாவட்டத்திலுள்ள வித்தியானந் தாக் கல்லூரியிலும், வேலணை மத்திய மகாவித்தியாலயத்திலும் அதிபராகக் கடமையாற்றினார். அதற்குப் பின்னர் பல ஆண்டுகள் சாவகச்சேரிக் கல்வி வட்டாரத்திலும், யாழ்ப்பாணக் கல்வி வட்டாரத்திலும், கல்வி அதிகாரியாகக் கடமையாற்றினார். நெடுந்தீவிலிருந்து முதலில் கல்வி நிர்வாக சேவைக்குத் தெரிவானவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.இராமநாதர் சின்னத்தம்பி பிரதிக்கல்விப்பணிப்பாளர் B.A., SL.E.A.S, Deputy. Director of Education
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவராவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் உதவி ஆசிரியராகவும், அதிபராகவும், பின்னர் நெடுந்தீவுப் பாடசாலைகளுக்கான கொத்தணி அதிபராகவும் பணியாற்றினார். இவர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மத்திய மகாவித்தியாலயத்தில் அதிபராகச் சில ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் நெடுந்தீவுப் பிரதேசப் நெடுந்தீவு மக்களும் வரலாறும் 146

பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் கடமையாற்றினார். இவர் நெடுந்தீவுக் கிராமசபையின் விசேட ஆணையாளராகவும் சில ஆண்டுகள் சேவையாற்றினார். தற்பொழுது அகில இலங்கைச் சமாதான நீதவானாகவும் சேவையாற்றி வருவதோடு, நெடுந்தீவு கிழக்கு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத் தர்மகர்த்தா சபையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
திரு. சுந்தரம்பிள்ளை நடராசா ஆசிரிய கலாசாலை அதிபர் M.A.P.G.D.E, SL.E.A.S, Emeritus Principal
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவராவார். இவர் கிழக்கு மாகாணத்திலுள்ள பற்றிமா கல்லூரியில் பல ஆண்டுகள் ஆசிரியராகக் கடமையாற்றினார். பின்னர் யாழ்மாவட்டத்திலுள்ள ஏழாலை மகாவித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றினார். இவர் கொழும்புத்துறை, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் விரிவுரை யாளராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். அதன் பின்னர் பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் அதிபராகக் கடமையாற்றினார்.
திரு.சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர் B.A -Dip in Edu, SL.E.A.S, Deputy Director of Education
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவராவார். இவர் இறக்குவானை சென்யோணி ஸ் மகாவித்தியாலயம், நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாசாலை, கிளிநொச்சி மகா வித்தியாலயம், நெடுந்தீவு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் நயினாதீவு கணேஷா கனிஷ்ட மகாவித்தியாலயத்திலும், உருத்திரபுர மகாவித்தியாலயத்திலும் அதிபராகப் பணியாற்றினார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 147

Page 90
முதல் முதலாக நடைபெற்ற இலங்கைக் கல்வி நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் தெரிவான முதலாவது தீவக ஆசிரியர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கது. பின்னர் 1975 ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டுவரை பண்டாரவளை கல்வி மாவட்டத்தில் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டு முதல் 1988ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாணக் கல்வி மாவட்டத்திலுள்ள நல்லூர் கல்வி வட்டாரத்தின் கல்வி அதிகாரியாகப் பணியாற்றினார். இவர் மானிப்பாய் இராமநாதன் கல்லூரியிலமைக்கப்பட்ட வலயக் கல்விக் காரியாலயத்தில் நிர்வாகத்திற்குப் பொறுப்பான கல்வியதிகாரியாக 1988-1989 வரை கடமையாற்றியதோடு 1988ஆம் ஆண்டிலிருந்து பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பதவி உயர்வும் பெற்றிருந்தார். கனடாவிலும் 1993 ஆம் ஆண்டுமுதல் 2000ஆம் ஆண்டுவரை ரொறன்ரோ கல்விச் சபையின் கீழ் ஆசிரியராகக் கடமையாற்றினார்.பாக்டேல் கல்லூரபாக்டேல் ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் பெற்றார் ஆசிரியர் சங்க உப தலைவராகவும, சென் யோசப் வைத்தியசாலையில் தொண்டராகவும் சேவையாற்றியதுடன்,கனடா இலங்கைப் பட்டதாரிகள் சங்கத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.
திரு.பி.எம்.ஜே.அன்ரனி பிரதிக்கல்வி அதிகாரி BSc, Education Officer
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் நீண்டகாலமாக விஞ்ஞானபாட ஆசிரியராகப் பணியாற்றினார். இவரது சேவைக்காலத்தில் பல மாணவர்கள் விஞ்ஞான பாடத்தில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். யாழ் மாவட்டத்திலுள்ள பாடசாலைகளிலும் அதிபராகப் பணியாற்றினார். பின்னர் நெடுந்தீவுப் பாடசாலைகளின் கொத்தணி அதிபராகவும், பிரதிக் கல்வி அதிகாரியாகவும் சேவையாற்றினார. பொதுப் பணிகளிலும் அதிக ஈடுபாடுடையவரென்பதும் குறிப்பிடத் தக்கது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 148

கலைஞர்கள் நாட்டியக்கலைஞர் வேலாயுதம் வேலானந்தன் Specialist in Dance
நெடுந்தீவு பெற்ற நாட்டியக் கலைஞர், வேலாயுதம் வேலானந்தன் அகில இலங்கையின் புகழ் பெற்ற ஒரு நாட்டியக் கலைஞராவார். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவராவார். இவர் மகாவித்தியாலயத்தில் இலங்கையின் புகழ் பெற்ற நடன ஆசிரியரான திரு. எஸ் சுப்பையா ஆசிரியரிடம் நடனம் கற்றுப் பின்னர் இந்தியா சென்று நடனக்கலையில் சிறந்த வித்துவான்களிடம் நடனம் பயின்று நடன வல்லுனர் ஆனார்.பின்னர் இலங்கையில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும், யாழ் மாவட்டப் பாடசாலைகளிலும் நடன ஆசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் கோப்பாய், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலைகளில் நடன விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் வடக்குக் கிழக்கு மாகாணசபைக் கல்வியமைச்சில் கவின் கலைகளுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றினார். இவர் தனது கலைத்திறனை ஐரோப்பிய நாடுகளிலும், கனடா உட்பட வட அமெரிக்க நாடுகளிலும் காண்பித்துப் பலரினதும் பாராட்டுக்களைப் பெற்றவர். இவரின் கலைத்திறனைப் பாராட்டி இலங்கையில் 2002ஆம் ஆண்டில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சங்கீத பூஷணம் வேலுப்பிள்ளை சுந்தரலிங்கம் Specialist in Music
இவர் நெடுந்தீவு பெற்ற சங்கீதக் கலைஞராவார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் சங்கீத வித்துவான் வானொலி புகழ் திரு.பாலசிங்கம்,திரு.கதிரவேலு ஆகியோரிடம் முறையாகச் சங்கீதம் கற்றுப் பின்னர் இந்தியா சென்று சங்கீத விற்பன்னர்களிடம் சங்கீதத்தைச் சிறப்பாகக் கற்றுச் சங்கீத பூஷணம் பட்டம் பெற்றார். இலங்கையில் யாழ்ப்பாணப் பாடசாலைகளிலும், நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும் சங்கீத ஆசிரியராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் ஒரு சிறந்த சங்கீத வித்துவான் ஆவார். நெடுந்தீவு மக்களும் வரலாறும் 149

Page 91
விரிவுரையாளர்கள்
திரு. அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை M.A முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்
Lecturer - Jaffna University
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவராவார்.இவர் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் பல வருடங்கள் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாகப் புவியியல் துறைச் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றினார். இவர் ஓர் சிறந்த எழுத்தாளராவார். கனடா ஈழமுரசுப் பத்திரிகையில் சில காலம் துணையாசிரியராகப் பணியாற்றினார். நாட்டுப் பற்றும் மொழிப்பற்றும் மிக்கவர். இவர் கனடாவிலுள்ள பல சங்கங்களில் நிர்வாக உறுப் பினராகவும் , செயலாளராகவும் சேவையாற்றியுள்ளார். இவர் ஒரு சிறந்த சமூகசேவை யாளருமாவார்.
கலாநிதி எஸ். கனகரட்னம் M.A,Phd சிரேஷ்ட விரிவுரையாளர் Lecturer-Peradeniya University
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கொழும்புப் பல்கலைக் கழகப் பட்டதாரியான இவர், முதலில் வித்தியாலங்காரப் பல்கலைக் கழகத்தில் இந்து நாகரீகத்துறை விரிவுரையாளராகவும்,பின்னர் 1975ஆம் ஆண்டிலிருந்து பேராதனைப் பல்கலைக் கழகத்தில் இந்து நாகரீகத் துறை விரிவுரையாளராகவும் பணியாற்றி வருகிறார்.
திரு.ஞானப்பிரகாசம் செபஸ்ரியாம்பிள்ளை M.A சிரேஷ்ட விரிவுரையாளர் Lecturer-Jaffna University இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அண்ணாமலைப் பல்கலைக்கழக சமூகவியல் பட்டதாரியான இவர் மட்டக்களப்புப் பல்கலைக்கழகத்திலும்,யாழ்ப்பர்ணப்பல்கலைக் கழகத்திலும் சமூகவியல் விரிவுரையாளராகப் பணியாற்றிவருகிறார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 150

திரு.கந்தையா வினாயகமூர்த்தி M.SC சிரேஷ்ட விரிவுரையாளர் Lecturer-Jaffna University
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கணித விரிவுரையாளராகப் பணியாற்றியவர். பின்னர் தென் ஆபிரிக்கா சென்று அங்கும் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
திரு.மு.மருதலிங்கம் M.A சிரேஷ்ட விரிவுரையாளர் Lecturer-Teacher's College, Jaffna
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் உருத்திரபுரம் மகாவித்தியாலயம், யாழ். ஸ்ரான்லி கல்லூரி ஆகியவற்றில் நீண்ட காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் முன்னர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசா லையிலும், தற்பொழுது ஆசிரியர் கல்லூரியிலும் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். இவர் பல சமூகப்பணிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்.
ஆங்கிலேயர் கால பழமை வாய்ந்த புறாக் கூடு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 151,

Page 92
திருமதி. புஸ்பம் அன்ரனி B.Sc , அதிபர்
நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞான ஆசிரியராகப‘பணியாற்றினார். பின்னர் மகாவித்தியாலயத்தின் அதிபராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் விஞ்ஞான பாட ஆசிரியராகவிருந்த காலத்தில் பல மாணவர்கள் விஞ்ஞான பாடங்களில் நல்ல பெறுபேறுகளைப் பெற்றனர். குடா நாட்டிற்கும் நெடுந்தீவிற்கும், உள்நாட்டு யுத்தம் காரணமாகத் தொடர்புகள் துண்டிக்கப் பட்டிருந்த காலத்தில் மகாவித்தியாலயத்தின் அதிபராகவிருந்து சிறந்த சேவைகளையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். திரு.சி.பேரம்பலம் B,Com, அதிபர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவராவார்.இவர் கொக்குவில் இந்துக்கல்லூரியில் பல வருடங்களாக வர்த்தக பாட ஆசிரியராகப் பணியாற்றினார். கொக்குவில் இந்துக் கல்லூரியில் சேவையாற்றிய காலத்தில் மாணவர்களின் ஒழுங்கிற்கு இவரே பொறுப்பாசிரியராக அதிபரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.பின்னர் இணுவில் மகா விதி தியாலயத் திலும் , அதன் பின் னர் புங் குடுதீவு மகாவித்தியாலயத்திலும் அதிபராகப் பணியாற்றினார். திரு.சுப்பிரமணியம் திருநாவுக்கரசு , ஆசிரியர் Ag.Trained
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவரும், முன்னாள் விவசாய ஆசிரியரும், கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளருமாவார். இவர் நெடுந் தீவில் ஆசிரியராகக் கடமையாற்றிய காலத்தில், நிழல் மரங்களை நாட்டியதோடு, வாசிகசாலை, சிறுவர் பாடசாலை என்பவற்றை அமைத்தும், மாணவர்களுக்கான இலவச பிரத்தியேக வகுப்புக் களை நடாத்தியும் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடையச் சிறந்த பணியாற்றினார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் w 152

திருமதி. சேதுப்பிள்ளை வரதராசா B.A ஆசிரியை
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவியாவார். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் கல்வி கற்று இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ.பட்டம் பெற்ற முதல் மகாவித்தியாலய மாணவியாவார். நெடுந் தீவு மகாவித்தியாலயத்தில் சில காலம் ஆசிரியையாகக் கடமையாற்றிய பின்னர் நீண்டகாலமாக ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணியாற்றினார்.
விவசாய, நில அளவைப்பகுதி முன்னாள் உத்தியோகத்தர்களும், கணக்காளர்களும்
5(b. 855605uJIT 6)lyg5JITSIT B.Sc.(Hons)Ag.,Msc.Ag, விவசாயப் பிரதிப் பணிப்பாளர் Deputy Director of Agriculture
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தனது கல்வியை முடித்த பின்னர், பேராதனை விவசாயக் கல்லூரியில் தனது விவசாயப் பயிற்சியை முடித்து, விவசாயப் போதனாசிரியராகச் சில காலம் பணியாற்றினார். பின்னர் விஞ்ஞானப் பட்டதாரிப் படிப்பை முடித்து விவசாயத் திணைக்களத்தில் பணியாற்றியதோடு, வடக்குக் கிழக்கு மாகாணப் பிரதி விவசாயப் பணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்று, கிளிநொச்சி, திருகோணமலை, வுவனியா ஆகிய மாவட்டங்களிலும் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவர் கனடாவிலும் விவசாயத்துறையிலேயே சில ஆண்டுகள் 'பணிபுரிந்தார். இவர் கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின்
தலைவராகவும் பணியாற்றினார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 153

Page 93
திரு.எஸ்.ஆர். பசுபதி கணக்காளர்
Accountant
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இலங்கையில் கொழும்பில் நீண்ட காலமாக பிரதம கணக்காளராக பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று லண்டனில் பல ஆண்டுகளாக கணக்கியல் சம்பந்தமான துறைகளில் பணியாற்றினார். இவர் பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
திரு.நா. மருதையினார் கணக்காளர் Accountant
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். இவர் இங்கிலாந்து சென்று அங்கேயே தமது கணக்காளர் பட்டத்தைப்பெற்று நீண்டகாலமாக இலண்டன் மா நகரிலேயே பட்டயக் கணக்காளராகச் சேவையாற்றி வருகிறார்.
திரு.சு.திருநாவுக்கரசு நில அளவையாளர்
Surveyor
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் தமது கல்வியை யாழ் இந்துக் கல்லூரியில் பெற்றார்.இவர் நில அளவையாளராக மகாவலித் திட்டம், வளவை திட்டங்களில் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நைஜீரியா சென்று அங்கும் நில அளவைப் பகுதியிலேயே சேவை செய்தார். கனடாவிலும் நில அளவைப் பகுதியில் சில காலம் பணியாற்றினார். தற்பொழுது காப்புறுதிக் கூட்டுத்தாபன நிதிச் சேவை முகவராகப் பணியாற்றிவருகிறார். இவர் சமூகப் பணிகளிலும் ஈடுபாடுடையவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 154

திரு.சு.மார்க்கண்டு நில அளவையாளர் Surveyor
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவர் . நில அளவையாளராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் நில அளவையாளர் பயிற்சிக் கல்லூரியில் போதனா ஆசிரியராகவும் பணியாற்றினார். அதன்பின்னர் சவூதி அரேபியாவிற்குச் சென்று அங்கும் நில அளவைப் பகுதியில் நீண்ட காலமாகப் பணியாற்றினார். நாட்டுப்பற்றும், மொழிப்பற்றும் மிக்கவர். சமூகப்பணிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்.
திரு.இரா.சண்முகம் நிலஅளவைத் திணைக்கள மேலதிகாரி Superintendent of Surveyors
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவர். இவர் நில அளவையாளராகப் பொல்ல நறுவை மாவட்டத்திலும், அனுராதபுர மாவட்டத்திலும் பல ஆண்டுகள் சேவையாற்றினார் பின்னர் நில அளவைப் பகுதி மேலதிகாரியாகப் பல ஆண்டுகள் பணியாற்றினார். இவர் சவூதி அரேபியாவிலும் நில அளவைப் பகுதியில் பல ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
திரு.சுவாமிநாதர் முருகேசு உடற்பயிற்சிப் போதனாசிரியர் P.T.I., Sports Officer இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ் இந்துக்கல்லூரியில் தமது கல்வியைப் பெற்றவர். இவர் உடற்பயிற்சிப் போதனா ஆசிரியராகப் பல ஆண்டுகள் யாழ்ப்பாணத்திலும் நெடுந்தீவிலும் கடமையாற்றியவர். இவரின் சேவைக்காலத்தில் நெடுந்தீவு மகாவித்தியாலய மாணவர்கள் உதைபந்தாட்டம், கர பந்தாட்டம் ஆகியவற்றில் சிறந்து
நெடுந்தீவு மக்களும் வரலாறும் : 155

Page 94
விளங்கினார்கள். இவர் யாழ்மாவட்டப் பாடசாலைகளுடனும் தீவுப்பகுதிப் பாடசாலை மாணவர்களுடனும் சினேகபூர்வமான போட்டிகளிலும், நேரடிப் போட்டிகளிலும் மாணவர்களை விளையாடச் செய்து பல வெற்றிகளை மாணவர்கள் பெறக் காரணமாகவிருந்தார். மாணவர்களுக்கான உடற் பயிற்சிகள், விளையாட்டுக்கள் என்பவற்றிலும் மாணவர்களுக்குச் சிறந்த பயிற்சிகள் அளித்தார். இவர் நெடுந்தீவு மக்களின் பிரயாண சேவைகள் தடைப்பட்டிருக்கும் காலங்களிலெல்லாம் தமது சொந்த மோட்டார்ப் படகைச் சேவையிலீடு படுத்தி மக்களின் பிரயாணக் கஸ்டத்தைப் போக்க உதவினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார். பி.ரி மாஸ்டர் என மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
திரு.இராமநாதர் மயில்வாகனம் TA தொழில் நுட்ப உதவிய்ாளர்
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். பின்னர் தொழில்நுட்ப அதிகாரியாகப் பதவி பெற்று மகாவலி நீர்பாசனத்திட்டம், வளவை நீர்பாசனத் திட்டம் போன்றவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன் பின்னர் யாழ் காங்கேசன் துறை சீமென்ற் தொழிற்சாலையிலும் சில ஆண்டுகள் பணியாற்றினார். சீமென்ற் கூட்டுத்தாபனத்தாலேயே உயர்திறன் கல்வி பெறுவதற்காக நைஜீரியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அங்கு பொறியியலாளர் தரத்திலான வேலைகளைச் செய்தார். பின்னர் கனடா வந்து தொழில்நுட்பத்துறை சம்பந்தமான வேலைகளிலேயே ஈடுபட்டுள்ளார்.
g5(5. Syst (3 JibLuguibb.A.Hon. Income Tax Officer வருமானவரி உத்தியோகத்தர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். வருமான வரி உத்தியோகத்தராக கொழும்பிலும், பின்னர் யாழ்ப்பாணத்திலும் சேவையாற்றினார். இவர் கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் பொருளாளராகவும் பணியாற்றினார்.சமூக சேவைகளிலும் ஈடுபாடுடையவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 156

திரு.சுப்பிரமணியம் நடராசா - லிகிதர்
Clerk இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். இவர் மன்னார் மாவட்டத்தில் நீண்ட காலமாக லிகிதராகச் சேவையாற்றினார். கனடா நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளராவார்.
அரசியலாளர்கள் Politicians
திரு. கணபதிப்பிள்ளை தில்லைநாதன் PostMaster, Ex.M.P (முன்நாள் பாராளுமன்ற உறுப்பினர்)
இவர் நெடுந்தீவைப் பிறப்படமாகவும் வன்னி மாவட்டத்தை வதிவிடமாகவும் கொண்டவர். இவர் இளமையிலிருந்தே அரசியலில் அதிக ஈடுபாடுடையவர். பல ஆண்டுகள் தபால் அதிபராகச் சேவையாற்றியவர். வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார்.
திரு.சோமசுந்தரம் சேனாதிராசா அதிபர் Principal
இவர் நெடுந் தீவைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வதிவிடமாகவும் கொண்டவர். இவர் பல ஆண்டுகள் ஆசிரியராகவும் , அத பராகவும் பணியாறி றரினார் . தீவகத்தின் முன்னேற்றங்களில் அதிக அக் கறையுடன் செயலாற்றியவர். 1960ல் நடை பெற்ற இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் ஊர்காவற்றுறைத் தொகுதியில் சுயேச்சை அங்கத்தவராகப் போட்டியிட்ட முதலாவது நெடுந்தீவு மகனாவார். இவர் சமூகப் பணிகளிலும் அதிக ஈடுபாடுடையவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 157

Page 95
திரு. லோகன் கணபதி B.A.Hon. Insurance Consultant
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். ஒரு பொருளியல் பட்டதாரி. அரசியலில் இளமையிலிருந்தே மிகவும் ஆர்வமுடையவர். இலங்கையிலும் பல முற்போக்கான விடயங்களுக்காகப் பல போராட்டங்களை முன்னின்று நடாத்தியவர். கனடாவில் காப்புறுதி நிதிச் சேவை (Logan Insurance & Financial Service Inc. Corp) 666 golf நிறுவனத்தை நடாத்தி வருபவர். இவர்பல்லின மக்கள் வாழும் ab60TLT66) (Trustee of Education) 856)63g g5JLDEgg, T சபைக்கான தேர்தலில் முதல் முதலாகப் போட்டியிட்ட தமிழ் அங்கத்தவராவார். ஈழம் என்னும் பத்திரிகையை நடாத்தி வருபவர். பல பொதுச் சேவைகளிலும் முன்னின்று உழைத்து வருபவர். இவர் ஒரு அரசியல் பிரமுகரும் , சிறந்த சமூக சேவையாளருமாவார். * -জলি
திரு.கந்தையா கனகரத்தினம் BSC,Teacheர்
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வேலணை மத்திய மகாவித்தியாலயத்தில் தமது உயர் கல்வியைப் பெற்றார். இவர் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி ஆசிரியர். இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் பல ஆண்டுகள் விஞ்ஞான பாட ஆசிரியராகப் பணியாற்றினார். இவர் அரசியலிலும் அதிக ஈடுபாடுடையவர். 1977ஆம் ஆண்டு நடை பெற்ற இலங்கைப் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பொது உடமைக் கட்சியின் அங்கத்தவராக ஊர்காவற்றுறைத் தொகுதியில் போட்டியிட்டார்.
வைத்தியர்கள் Doctors
நெடுந்தீவைச் சேர்ந்த பலர் வைத்தியக் கலாநிதிப் பட்டம் பெற்று இன்று இலங்கை, இந்தியா, இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் வைத்தியர்களாகச் சேவையாற்றி வருகிறார்களென்பது குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 158

வைத்தியக் கலாநிதி K.E. சந்திரபால் விசேட வைத்திய நிபுணர் Specialist Doctor
நெடுந் தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக்கல்லூரியில் தமது கல்வியை முடித்துப் பின்னர் வைத்தியக் கலாநிதிப் பட்டம் பெற்றார். இவர் சில ஆண்டுகள் மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையில் டாக்டராகப் பணியாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று வைத்தியத் துறையில் விசேட நிபுணத்துவம் பெற்று இலங்கை வந்து அச்சுவேலியில் தனியார் வைத்தியசாலை ஒன்றை நிறுவி பல வைத்தியர்களைக் கொண்டதாக நோயாளிகளுக்குச் சிறந்த சேவைகளையாற்றி வந்தார். பின்னர் நாட்டின் உள்நாட்டு யுத்தம் காரணமாக மீண்டும் இங்கிலாந்து சென்று அங்கு வைத்திய நிபுணராகப் பணியாற்றி வருகிறார். இவரே நெடுந்தீவின் முதல் டாக்டர் என்னும் பெருமைக்கும் உரியவராவார்.
வைத்தியக் கலாநிதி சோ. கேதீஸ்வரம்பிள்ளை M.B.B.S Doctor
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் மாணவராவார். இவர் தனது விஞ்ஞானக் கல்வியை நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் முடித்தபின் கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் தமது வைத்தியக் கலாநிதிப் பட்டத்தைப் பெற்றார். பின்னர் இலங்கையின் தென்மகாணத்திலும், வவுனியாவிலும் உள்ள வைத்திய சாலைகளில் டாக்டராகப் பணியாற்றினார். இவர் சில ஆண்டுகள் நெடுந்தீவு வைத்தியசாலையிலும் சேவையாற்றினார். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் விஞ்ஞானக் கல்விகற்று முதலில் டாக்டராகப் பட்டம்பெற்றவர் இவரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 159

Page 96
திரு.கோவிந்தபிள்ளை நடராசா B.Vsc கால்நடை வைத்தியர் Veterinary Surgeon
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும், பின்னர் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வி கற்றவர். கால்நடைகளுக்கான வைத்தியத்துறையில் பட்டம் பெற்று, நீண்ட காலமாக நுவரேலியா மாவட்டத்தில் சேவையாற்றினார்.பின்னர் வடமாகாணப் பால்ச்சபையின் பிராந்திய முகாமையாளராகப் பணியாற்றினார். தற்பொழுது கனடாவில் வீடு வாங்கல்,விற்றல் முகவராக (Home Life Metro Realty Inc) 6T6digob bo61601 gig56) u600fu IITB3 வருகிறார். இந்நிறுவனம் இவரின் சிறந்த சேவைக்காகத் தொடர்ந்து நான்கு வருடங்களாகத் தங்கப் பதக்கம் விருதாக வளங்கிக் கெளரவித்து வருகிறது.இவர் கனடா விவசாயக் கழகத்தின் தலைவராகவும் பணியாற்றியதோடு தற்பொழுது ஸ்கந்தவரோதயாக் கல்லூரியின் பழையமாணவர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.
பொறியியலாளர்கள் góGb.616öl. G600IJl' 60Ilb Msc,C.Eng,MRAES,SLAF(Ret) பொறியியலாளர்
(Ret) Engineer
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தமது கல்வியை ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் பெற்றார். தமது படிப்பை முடித்த பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியலாளராகப் பட்டம் பெற்றார். இவர் ஆரம்பத்தில் இலங்கை விமானப் படையில் பொறியியலாளராகச் சேவையாற்றினார். பின்னர் இலங்கை விமானக் கூட்டுத்தாபனத்தில் பொறியியலாளராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இலங்கைக் கும் பிரித் தானியாவுக் கும் இடையில் சேவையிலிடுபட்டிருந்த விமானம் ஒன்று பழுதடைந்திருந்த
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 160

பொழுது அதைத் திருத்துவதற்காக இலங்கையரசும், இங்கிலாந்தரசும் பல பொறியியலாளர்களை அணுகியபொழுதும் அவர்களால் அதைத் திருத்தமுடியவில்லை. அத்துடன் அதைத் திருத்துவதானால் பெருந் தொகையான பணம் செலவாகுமெனவும் கூறினர். திரு.குணரட்னம் அவர்கள் தாமே முன்வந்து அவ்விமானத்தைக் குறைந்த செலவில் திருத்தி ஓடவைத்தார். இதற்காக இங்கிலாந்தரசும், இலங்கையரசும் அவரைப் பாராட்டிக் கெளரவித்தன.
g5(b. Liðil gó G600IJL60Ib Msc,C.Eng பொறியியலாளர்
Engineer
நெடுந் தீவைப் பிறப்பிடமாகக் கொணி ட இவர் மகாவித்தியபாலயத்தின் ஆரம்பகால மாணவராவார். இவர் தமது படிப்பை மகாவித்தியாலயத்தில் முடித்த பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு கல்விகற்றுப் பொறியியலாளரானார். பின்னர் அங்கேயே நீண்ட காலமாகப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்.இவரே மகாவித்தியாலய மாண வர்களில் முதல்முதலாகப் பொறியியலாளராகத் தேர்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. (இவர்களை விட வேறும் சிலர் பொறியியலாளராகப் பணியாற்றி வருகிறார்களென்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.) சட்டத்தரணிகள் Lawyers
திரு க.வெற்றிவேல் L.L.B சட்டத்தரணி
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர்களில் ஒருவர்.பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் தமது சட்டத்துறைக் கல்வியை முடித்துச் சட்டத்தரணியானார். சில ஆண்டுகள் சட்டத்தரணியாக கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் சேவையாற்றினார். பின்னர் இங்கிலாந்து சென்று அங்கு பிரபல சட்டத்தரணியாகச் சேவையாற்றி வருகிறார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 161

Page 97
திரு. சேவியர் ரஞ்சன் L.L.B சட்டத்தரணி
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.நெடுந்தீவு மகாவித்தியாலயத்தில் தமது கல்வியை முடித்த பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் தனது சட்டத்துறைக் கல்வியை முடித்துச் சட்டத்தரணியானார். அங்கு சில காலம் சிரேஷ்ட சட்டத்தரணிகளின் கீழ்ச் சேவையாற்றினார். உள்நாட்டு யுத்தம் காரணமாகக் கனடாவில் வாழ்ந்து வருகிறார்.
திரு.வை.சுவாமிநாதன் B.A.Hons தொழில் அதிகாரி - Labour Officer
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவராவார். இவர் இலங்கையில் யாழ்ப்பாணம், வவுனியா, கற்றன் ஆகிய பகுதிகளில் தொழில் அதிகாரியாக நீண்டகாலம் பணியாற்றினார். பின்னர் திருகோணமலையில் தொழில் ஆணை யாளராக சில ஆண்டுகள் பணியாற்றினார். இவர் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு உடையவர்.
திரு.சு.கோபாலசிங்கம் S.K பண்டகசாலைப் பொறுப்பதிகாரி Store Keeper
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர். இவர் வவுனியா மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையில் பல ஆண்டுகளாக பண்டகசாலைப் பொறுப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் நெடுந் தீவில் பண்டகசாலைப் பொறுப்பாளராக பணியாற்றியதோடு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பல சமூகப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 162

திரு.இ.கந்தையா உணவுற்பத்தி மேற்பார்வையாளர் FPO
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவர் இவர் நெடுந்தீவிலும் கிளிநொச்சி மாவட்டத்திலும் உணவு உற்பத்தி மேற்பார்வையாளராக சேவையாற்றினார். நெடுந்தீவின் முன்னேற்றங்களில் அதிக அக்கறையுடையவர். இவர் நெடுந்தீவு மேற்கு நெழுவினி விநாயகர் ஆலயத்தின் பரிபாலன சபையின் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். பல சங்கங்களிலும் ஈடுபாடுடையவர். பல சமூகப் பணிகளிலும் முன்னின்று உழைத்து வருகிறார்.
திரு.சி.தில்லையம்பலம் உணவுற்பத்தி மேற்பார்வையாளர் F.P.O
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவர். இவர் நெடுந் தீவு மகாவித்தியாலயத்தின் பாதுகாவலராகச் சில ஆண்டுகள் சேவையாற்றினார். பின்னர் உணவுற்பத்தி மேற்பார்வையாளராக கிளிநொச்சியிலும், நெடுந்தீவிலும் பணியாற்றினார். இவர் நெடுந்தீவு மேற்குக் கரமத்தை முருகன் ஆலயத்தின் பரிபாலன சபைத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார். இவர் பல சமூக சேவைகளிலும் முன்னின்று செயல்பட்டு வருகிறார்.
திரு.வே.மதியாபரணம் பாதுகாவலர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்ப கால மாணவராவார். பல வருடங்களாக மகாவித்தியாலயத்தின் பாதுகாவலராகச் சேவையாற்றினார். இவர் நாடகத் துறையிலும் அதிக ஈடுபாடு உடையவர். இவர் ஒரு ஆயுள் வேத வைத்தியரும் ஆவார். இவர் குதிரைகள் கட்டுவதிலும் குதிரைச் சவாரி செய்வதிலும் குதிரைகளுக்கான பயிற்சி கொடுப்பதிலும் மிகவும் திறமையுடையவராக விளங்கினார். ...۱ :
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 163

Page 98
இயல் 15 நெடுந்தீவில் சேவையாற்றிய முன்னாள் பாடசாலை அதிபர்கள் திரு.ஆ. கந்தையா - அதிபர்
இவர் நெடுந் தவு மேற்குச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பல ஆண்டுகளாக அதிபராகப் பணிபுரிந்தவர். சைவ வித்தியாவிருத்திச் சங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்க முன்பே மகேஸ்வரி வித்தியாசாலை என்ற பெயரில் தனது சொந்தக் காணியில் பாடசாலையை கட்டிப், பல ஆண்டுகள் தானே அதிபராகவிருந்து அப்பாடசாலையில் இலவசமாகக் கல்விச்சேவையாற்றியவர், பின்னர் அப்பாடசாலையைச் சைவ வித்தியாவிருத்திச் சங்கம் பொறுப்பேற்று நடாத்திவந்தது. அக்காலத்திலும் இவரே அதிபராகக் கடமையாற்றினார். சமயத்திலும் தமிழ் மொழியிலும் மிகவும் பற்றுடையவர். மிகவும் கண்டிப்பானவர். இவருடைய காலத்திலும் சைவப்பிரகாச வித்தியாசாலையின் கல்வியில் ஒரு மறுமலர்ச்சி ஏற்பட்டிருந்தது.
திரு.எஸ். சின்னப்புநாயகம் - அதிபர்
இவர் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். நெடுந்தீவு மத்தியிலுள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பல வருடங்களாக அதிபராகச் சேவையாற்றினார். இவரின் காலத்தில் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பல சைவ மாணவர்களும் கல்வி கற்றனர். நெடுந்தீவு கிழக்கிலும், மத்தியிலும் உள்ள பல மாணவர்கள் இப்பாடசாலையில் தமது சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தி பெற்ற பின்னர் ஆசிரியர்களாகவும் . அரசாங்க உத்தியோகத்தர்களாகவும் வேலை வாய்ப்புக்களைப் பெற்றனர். இவருடைய சேவைக்காலம் இப்பாடசாலையின் பொற்காலமாகும். இவரின் சேவையும் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 164

திரு.வே. சின்னையா - அதிபர்
இவர் நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாசாலையின் அதிபராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவரது சேவைக் காலத்தில் சுப்பிரமணிய வித்தியாசாலையின் கல்விவளர்ச்சி சிறந்து விளங்கியது. இவர் மிகவும் கண்ணியமும் கட்டுப்பாடும் உடையவர். சமூக முன்னேற்றத்திலும், தீவகத்தின் கல்வி வளர்ச்சியிலும் அதிக அக்கறை காட்டினார். பொதுச்சேவைகளிலும் ஈடுபாடுடையவராக விளங்கினார்.
திரு.க. இராமநாதன் - அதிபர்
நெடுந் தீவு மத்தியிலுள்ள அமெரிக்கன் மிசன் பாடசாலையில் பல ஆண்டுகள் அதிபராகக் கடமையாற்றியவர். இவரின் காலத்தில் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் பல மாணவர்கள் சித்தியடைந்தனர். மாணவரின் கல்வி வளர்ச்சிக்காகச் சிறந்த சேவையாற்றியவர். நேர ஒழுங்கில் மிகவும் கண்டிப்பானவர். இவர் ஏழைப் பிள்ளைகளுக்காகத் தமது பணத்தில் புத்தகங்கள், உபகரணங்கள் வாங்கிக் கொடுத்து அவர்கள் கல்வியைத் தொடர உதவியவர். இவர் தனது இறுதிக் காலம் வரை மரணவிசாரணை அதிகாரியாகக் கடமையாற்றினார். மக்களுக்குப் பல வழிகளில் உதவியவர். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளருமாவார். இவர் மக்களால் கொறனர் என அன்பாக அழைக்கப்பட்டார்.
திரு.எஸ். ஞானப்பிரகாசம் - அதிபர்
இவள் நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பல ஆண்டுகளாக ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றினார். இவர் சவேரியார் கோவில் றோமன் கத்தோலிக்க பாடசாலையின் அதிபராகவும் பல ஆண்டுகள் சேவையாற்றினார். அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்க முன்னர் நெடுந்தீவு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவர்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் . . . M 165

Page 99
திரு. த.திருச்செல்வம் - அதிபர்
இவர் ஒரு சிறந்த சமய பக்தர். கத்தோலிக்க வழிபாட்டு முறைகளிலும் சமயத்திலும் அதிக பற்றுடையவர். இவர் பல பாடசாலைகளில் ஆசிரியராகவும் அதிபராகவும் நீண்டகாலம் சேவையாற்றினார். சவேரியார் கோவில் பாடசாலையிலும் சில காலம் அதிபராகக் கடமையாற்றினார்.
திரு.எஸ்.சவரிமுத்து - அதிபர்
இவர் நெடுந்தீவு கத்தோலிக்க மாணவர்களின் கல்வி வளர்ச் சிக்காக அதிக சேவையாற்றினார் . இவர் ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காகத் தம்மாலான உதவிகளைச் செய்து அவர்களைக் கல்வி கற்க ஊக்கமளித்தார். இவரும் சவேரியார் கோவில் பாடசாலையிலும் சில காலம் அதிபராகக் கடமையாற்றினார். «r
திரு.ஆ.வைத்தியநாதர் - அதிபர்
இவர் ஆசிரியராகவும் அதிபராகவும் பல ஆண்டுகள் நெடுந் தீவில சேவையாற்றினார். பாடசாலையில மாணவர்களிடையே ஒழுக்கத்தையும் நல்ல பண்பாடுகளையும் வளர்ப்பதில் அதிக ஊக்கம் காட்டினார். பாடசாலை நேர ஒழுங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டவர். மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்னின்று உழைத்தவர்.
திரு.க.கணபதிப்பிள்ளை - அதிபர்
இவர் நெடுநீதிவு மேற்குச் சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகவும், அதிபராகவும் பல ஆண்டுகள் சேவை புரிந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் முன்னின்று உழைத்தவர். மாணவர்கள் மத்தியில் சமய பக்தியையும், சமய ஆசாரங்களையும் ஏற்படுத்துவதற்காகப் பல ஒழுங்குமுறைகளைப் பாடசாலையில் நடைமுறைப் படுத்தினார். சமூக சேவைகளிலும் அதிக ஈடுபாட்டுடன் உழைத்தவர். நெழுவினி விநாயகள் ஆலயத்தின் தர்மகர்த்தாவாகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 166

திரு.இ.வேலுப்பிள்ளை - அதிபர்
இவர் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றினார். நெடுந்தீவு மேற்குச் சைவப்பிரகாச வித்தியாசாலையின் அதிபராகப் பணியேற்றுச் சிறந்த சேவையாற்றினார். இவருடைய காலத்தில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் பல மாணவர்கள் ஐந்தாந்தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றார்கள். க.பொ.த.பத்திர வகுப்பிலும், பல மாணவர்கள் கல்விகற்றார்கள். முதல்முதலாக இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சாரணர் இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலைக்கான காரியாலய அறை, களஞ்சிய அறை என்பன கட்டப்பட்டன. பாடசாலையின் வளர்ச்சிக்காகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறந்த சேவையாற்றினார்.
திரு.நா.சங்கரப்பிள்ளை - அதிபர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். இவர் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், பின்னர் சவேரியார் கோவில் பாடசாலையிலும்,நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் அதிபராகக் கடமையாற்றினார். இவர் நெடுந்தீவுக் கூட்டுறவுச்சங்கத்தின் தலைவராகவும், நெடுந்தீவு மேற்கு நெழுவினி ஆலயப் பரிபாலன சபைத் தலைவராகவும் சேவையாற்றினார்.
திரு.எஸ்.குமாரவேலு - அதிபர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். நெடுந்தீவு மேற்கு பாரதி வித்தியாசாலை, சைவப்பிரகாச வித்தியாசாலை என்பவற்றில் அதிபராகக் கடமையாற்றினார். இவர் பாடசாலையின் வளர்ச்சிக்காகப் பல சேவைகளைச் செய்தார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 167

Page 100
திரு.ஜே.அந்தோனிப்பிள்ளை - அதிபர்
இவர் மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க ஆண்கள் பாடசாலையில் கடமையாற்றினார். பின்னர் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தர்மபுரம் மகாவித் தியாலயத்தில அதிபராகப் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் நாடகத்துறையில் சிறந்து விளங்கினார்.
வண.சகோ. ஜெயசீலி றொட்றிக்கோ அதிபர்
இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பெண்கள் கல்லுாரியில் அதிபராகக் கடமையாற்றினார். இவருடைய காலத்தில் இப்பாடசாலை கல்லுாரி அந்தஸ்தைப் பெற்றதோடு பல்கலைக்கழக புகுமுக (AL) வகுப்பும் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் பாடசாலைக்கான புதிய கட்டிடங்கள் இடம்பெற்றதோடு விளையாட்டு மைதானமும் புனரமைக்கப்பட்டது. இவரின் சிறந்த நிர்வாகமும், பெற்றோருடன் உள்ள நல்ல தொடர்புகளும் பாடசாலையின் கல்விவளர்ச்சிக்கு மேலும் மெருகூட்டின. இவர் ஏழைப்பிள்ளைகளின் கல்விக்காக பல உதவிகளைச் செய்தார்.
திரு.எஸ்.மரியாம்பிள்ளை - அதிபர்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவர். இவர் ஆசிரியராகவும், அதிபராகவும் நெடுந் தீவிலும், யாழ்ப்பாணத்திலும் பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளராவார்.
திருமதி. பார்வதிப்பிள்ள்ை இராமநாதன்
இவர் நெடுந்தீவு மகாவித்தியாலயத்தின் ஆரம்பகால மாணவியாவார். இவர் நெடுந்தீவிலும், யாழ்ப்பாணத்திலும் பல ஆண்டுகள் அதிபராகச் சேவையாற்ரினார். நெடுந்தீவு கிழக்கு மாதர் சங்கத்தின் தலைவியாகப் பணியாற்ரியவர். இவரின் சேவைக்காலத்தில் மாணவிகளுக்கு தையல், கைத்தொழில் என்பனவற்றில் பயிற்சி அளித்தார். இவர் ஒரு சிறந்த சமூக சேவகியாவார்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 168

நெடுந்தீவில் சேவையாற்றிய முன்னாள் பாடசாலை அதிபர்கள்
திரு.ஆ. கந்தையா திரு.வே. சின்னையா திரு.க.த. ஞானப்பிரகாசம் திரு.எஸ். திருச்செல்வம் திரு.எஸ். சவிரிமுத்து திரு.த. சின்னப்புநாயகம் திரு.கே.ரி. ஞானப்பிரகாசம் திரு.ஆ. சுப்பிரமணியம் திரு.இரா. சுப்பிரமணியம் திரு. க. கணபதிப்பிள்ளை திரு.யோசப் சின்னத்துரை திரு.எஸ். சின்னத்துரை பண்டிதர்.சு. பசுபதி திரு.க. இராமநாதன் திரு.ஆ வைத்தியநாதர் திரு.க. சோமசுந்தரம் திரு.இ. வேலுப்பிள்ளை திரு.க. இரத்தினராசா திரு.சோ. ஞானராசா
திரு.ஜே. அந்தோனிப்பிள்ளை
திரு.சி. கார்த்திகேசு திருஎஸ். சோமசுந்தரம் திரு.ஜே. கொன்ஸ்ரன்ரைன் திருமதி.மே. பசுபதி திருமதி.சி. குணசிங்கம் திருமதி.ஜெ, கனகரத்தினம் திரு.கே. அந்தோனிப்பிள்ளை திரு.ம. ஐயம்பிள்ளை திரு.நா. சங்கரப்பிள்ளை வண.சகோதரி ஜெயசீலி - றொட்றிகோ திரு.ஏ.அல்பிரட் திரு.எஸ்.மனுவெல்பிள்ளை திரு.ப. அந்தோனிப்பிள்ளை திரு.எம். கிறிஸ்ரோபர் திரு.சு. நடராசலிங்கம் செல்வி.க. இராசம்மா திரு.சு. குமாரவேல் திரு.கு. லிங்கநாயகம்
மகாவித்தியாலய அதிபர்கள் திரு.சி.வி. எட்வேட் நவரட்னசிங்கம்
திரு.க.யோ. ஆசிநாதன் திரு.நா. குருநாதி திரு.இரா. சின்னத்தம்பி
திருமதி.பி.எம்.ஜே. அன்ரனி
இவர்கள் அனைவரும் நெடுந் தீவு மக்களின் கல்வி வளர்ச்சிக்காக அரும்பணியாற்றினார்கள். இவர்களினதும்,
இவர்களுடன் சேர்ந்து சேவையாற்றிய உள்ளுர்,
வெளியூர்
ஆசிரியர்களதும் சேவை என்றும் நெடுந்தீவு மக்களின் மனங்களில் நிலைத்துநிற்கும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும்
169

Page 101
இயல் 16
நெடுந்தீவு பிரதேச நிர்வாக சேவையாளர்கள்
தனியான நிர்வாகப் பிரிவு
மணியகாரர்
நெடுந்தீவில் பிரித்தானியர் ஆட்சிக்கால ஆரம்பத்தில் மணியகாரர் நியமிக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் மானிப்பாயைச் சேர்ந்த ஜே.என். சந்திரசேகரம் முதலியார் என்பவள் பன்னிரெண்டு ஆண்டுகள் மணியகாரராக நெடுந்தீவில் சேவையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவருக்குப் பின்னர் நெடுந்தீவைச் சேர்ந்த பெருமையினார் என்பவர் மணியகாரராகச் சேவையாற்றியதாக அறியப்படுகிறது. இவரின் குடும்பத்தைச் சேர்ந்த நெடுந்தீவில் வாழுகின்ற ஒரு சாரார் தங்களை மணியகாரன் கூட்டம் எனச் சொல்லிக்கொள்ளுகிறார்கள்.
9 - 60 Lu J[Tft LDITft
நெடுந்தீவில் மணியகாரர்களுக்குக் கீழ் உடையார்மார் நியமிக்கப்பட்டிருந்தார்கள். நெடுந்தீவைச் சேர்ந்த திரு. வைத்தியநாதர் கணபதிப்பிள்ளை என்பவரும் பின்னர் அவரின் மகனான குமாரசாமி என்பவரும் உடையார்களாகச் சேவையாற்றினார்கள். பின்னர் உடையார்மார் நியமனங்கள் நடைபெறவில்லை என அறியப்படுகிறது.
உதவி அரசாங்க அதிபர்கள்
நெடுந்தீவு, அரசர்கள் ஆட்சிக்காலங்களில் மட்டுமன்றி, அன்னியர் ஆட்சிக்காலங்களிலும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இடமாகவே இருந்துவந்திருக்கிறது. அந்நியர் ஆட்சிக் காலத்திலும் அவர்கள் அங்கு தமது கோட்டைகளைக் கட்டி தனியான நிர்வாக அதிகாரிகளை நியமித்து நெடுந்தீவை ஒரு
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 170

தனி அலகாகவே வைத்து ஆட்சி செய்தனர். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் சுதந்திர இலங்கையிலும் நெடுந்தீவு ஒரு தனி அரசாங்க அதிபர் பிரிவாகவே இருந்து செயல்பட்டு வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த பின் தமிழர்களே உதவி அரசாங்க அதிபர்களாக நியமனம் பெற்று வருகிறார்கள். கடந்த காலங்களில் பின்வருவோர் உதவி அரசாங்க அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளார்கள். திரு.எஸ். ஆர்னோல்ட், திரு.ஜே. அந்தோனிப்பிள்ளை, திரு.எஸ். குணநாயகம், திரு.எஸ். பாலரட்ணம், திரு.எம். அமிர்தலிங்கம், திரு.ஏ.சி. செபநாயகம், திரு.ஆ. செந்தில்வடிவேல், திரு.ஏ. மகாலிங்கம், திரு.அ. நீக்கிலஸ், திரு.நா. இராமச்சந்திரன், திரு.யோ. செல்வநாயகம். இவர்களில் திரு.அ. நீக்கிலஸ், திருநா. இராமச்சந்திரன், திரு.யோ. செல்வநாயகம் ஆகியோர் நெடுந்தீவைச் சேர்ந்தவர்கள். நாட்டில் ஏற்பட்ட உள்நாட்டுப் போர்க்காலத்தில் பல பிரயாணக் கஷ்டங்கள், கெடுபிடிகளின் மத்தியில் இவர்கள் சிறப்பாகச் சேவையாற்றியுள்ளார்கள்.
இவர்களுக்கு முன் சேவையாற்றியவர்களில் திரு.ஆ. செந்தில்வடிவேல், இவர் வேலணையைச் சேர்ந்தவர். இவர் நெடுந்தீவு மக்களின் கலை, கலாச்சாரப் பண்பாட்டு வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளில் அதிக ஆர்வமாகச் செயல்பட்டவர். இவருடைய காலத்தில் திருக்குறள் மகாநாடு, மற்றும் பல இலக்கியக் கருத்தரங்குகள் சிறப்பாக நடைபெற்றதோடு பல சமூக முன்னேற்றத்திற்கான திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இவருக்குப் பின் செயல்பட்டவர்களில் திரு.நா. இராமச்சந்திரன் பல முன்னேற்றமான செயல்பாடுகளைச் செய்வதற்காக முயன்றபோதும் அப்போதிருந்த அரசியல் கருத்து வேறுபாடுகளினாலும், கெடுபிடிகளினாலும், உள்நாட்டு யுத்தங்கள் காரணமாகவும், அவர் தன் தாயகத் தீவிற்குச் செய்ய எண்ணிய அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்த முடியாமற் போயிற்று. எனினும் தன்னாலான பல சேவைகளைச் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெடுந்தீவைப் பொறுத்தவரையில் அங்கு
சேவையாற்றிய எல்லா உதவி அரசாங்க அதிபர்களும் மக்களின் தேவைகளையும், தீவகத்தின் வளர்ச்சியையும் கருத்தில்கொண்டு சிறந்த சேவையாற்றினார்களென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 171

Page 102
விதானைமார்
ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் நெடுந்தீவில் விதானைமுறை கொண்டுவரப்பட்டது. இதன்படி நெடுந்தீவை மேற்கு, மத்தி, கிழக்கென மூன்று விதானைமார் பிரிவாகப் பிரிக்கப்பட்டு மூன்று பிரிவுகளுக்கும் தனித்தனி விதானைமார்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களில் ஆரம்பத்தில் மேற்கில் திரு. எஸ்.இராமச்சந்திரரும், மத்தியில் திரு.சு. நாகேந்திரரும், கிழக்கில் திரு.கு. சுவாமிநாதரும் விதானைமார்களாக நியமிக்கப்பட்டனர். இவர்கள் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும், மக்களுக்கான நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும் நியமிக்கப்பட்டனர். இவர்கள் மக்களின் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைத்ததோடு மக்களுக்கு வேண்டிய நிவாரணப் பணிகளையும் சமூக, சமய வேறுபாடுகளின்றிச் சிறப்பாகச் செய்தனர். இவர்களைத் தொடர்ந்து பின்னர் முறையே மேற்கில் வல்லிபுரம் நடராசா, மத்தியில் திரு.நா. கணபதிப்பிள்ளை, பின்னர் திரு.நா. கந்தையா, கிழக்கில் திரு.சு.சேதுபதி அவர்களும் விதானைமார்களாகப் பணிபுரிந்தனர். இவர்களும் மக்களின் பிரச்சனைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைத்ததோடு மக்களின் நிவாரணப் பணிகளையும் சிறப்புறச் செய்தார்கள். இவர்கள் அரசியல் சார்பில்லாமலும், சமய,சமூக வேறுபாடுகளின்றியும் தமது கடமைகளைச் செய்தனர். இவர்கள் பல அரசியல் பிரச்சனைகள், பிரயாணக் கஸ்டங்கள் நிறைந்த காலத்திலும் தங்கள் சேவைகளைத் திறம்படச் செய்தனர்.
இவர்களைவிட திரு. இரத்தினசபாபதி, திரு. இராசகதிரவேல், திரு. பாலசிங்கம் முதலியோரும் முறையே அனலைதீவு, எழுவை தவு, புங் குடுதீவுகளிலிருந்து விதானைமார்களாக நியமனம் பெற்று வந்து நெடுந்தீவு மக்களுக்குச் சிறந்த சேவையாற்றினர். இவர்களின் சேவைக்காலத்தின் பின் விதானை என்ற பெயர் மாற்றப்பட்டு கிராமசேவகள் என்ற பெயரில் மக்களின் பாதுகாப்பு, நிவாரணம் போன்ற பணிகளைக் கவனிப்பதற்காக உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டனர்.
இன்று நெடுந்தீவு ஆறு கிராமசேவையாளர் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக ஆறு கிராமசேவையாளர்கள் சேவையாற்றி வருகிறார்கள். பின்வருவோர் கிராமசேவையாளர்களாக நியமனம் பெற்றுச் சிறப்பாகச் சேவையாற்றி வருகிறார்கள். திரு.கா. கோபாலபிள்ளை, திரு.எஸ். கதிரேசன், திருமதி.கே. சந்தானமேரி, திரு.கோ. நடராசா, திரு.ந. நடராசா.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 172

இயல் 17
நெடுந்தீவு கிராமசபை, பிரதேச சபைகளின் தலைவர்கள்
நெடுந் தீவின் கிராமசபை 15 வட்டாரங்களை உள்ளடக்கிய ஒரு சபையாகும். நெடுந்தீவின் மூன்று குறிச்சிகளும் தனித்தனியே ஐந்து வட்டாரங்களைக் கொண்டவையாகும். ஆங்கிலேயரின் ஆரம்ப ஆட்சிக்காலங்களில் கிராமசபைத் தலைவர்கள் அரசாங்கத்தினாலேயே நியமிக்கப்பட்டனர். முதலில் நெடுந்தீவு முழுவதற்கும் உடையாராகக் கடமையாற்றிய திரு. வைத்தியநாதர் கணபதிப்பிள்ளை அவர்களையே கிராமசபைத் தலைவராக அரசாங்கம் நியமித்தது. அதன் பின்னர் மக்களால் தெரிவு செயப்யப்பட்ட முதலாவது கிராம சபைத் தலைவர் திரு. சு. நாகேந்திரர் அவர்களாவார்.
அரச நியமனம்
திரு. வை. கணபதிப்பிள்ளை உடையார் 1932..... 1934 திரு. க. அப்புத்துரை 1935..... 1937
தேர்தல் மூலம் திரு. சு. நாகேந்திரர் 1938..... 1940 திருமதி. செல்லம்மா நாகேந்திரர் 1941..... 1943 திரு. இரா சுப்பிரமணியம் 1944.1945 திருமதி செல்லம்மா நாகேந்திரர் 1946..... 1948 திரு. சி. ஜேம்ஸ் 1949..... 1952 திரு. சு. நாகேந்திரர் திரு. ம. கணபதிப்பிள்ளை 1953.1956 திரு. க. சாமுவேல் குமாரசாமி 1957..... 1960 திரு. LD. கணபதிப்பிள்ளை 1961..... 1963 திரு. த. அம்பலம் 1964..... 1967 1968.....1974 பிரதேச சபை விசேட ஆணையாளர் ...1987 பிரதேச சபைத் தேர்தல்- பிரதேச சபை புலவர் அ.வெ.அரியநாயகம் 1998.....
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 173

Page 103
கிராமசபை, பிரதேச சபைத் தலைவர்கள் பற்றிய குறிப்புகள்
திரு.சு. நாகேந்திரர் - ஜே.பி
இவருடைய காலத்தில் கிராம அபிவிருத்திக்கான பல பணிகள் சிறப்பாக நடைபெற்றன. விசேடமாக மக்களின் பிரயாண வசதிகள் முன்னேற்றமடைந்தன. இவருடைய காலத்தில் இவரின் பெருமுயற்சிகளின் பயனாக சில்வஸ்பிறே, இராஜேஸ்வரி என்னும் மோட்டார்ப் படகுகள் சேவையிலிடுபடுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் அக்காலத்தில் ஓர் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரமுகராகவுமிருந்தார். இதன் பயனாக பல இளைஞர்கள் அக்காலத்தில் இலங்கைக் கப்பல் கூட்டுத்தாபனத்தில் வேலை வாய்ப்புக்களைப் பெற உதவினார்.
திருமதி. செல்லம்மா நாகேந்திரர்
இவரே இலங்கையின் முதலாவது பெண் கிராமசபைத் தலைவியாவார். இதனால் இவர் இலங்கையின் முதலாவது உள்ளுராட்சித் தலைவி என்ற புகழைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இவருடைய காலத்திலும் கிராமப் பொதுப்பணிகள் சிறப்பாக நடைபெற்றன.
திரு. இரா சுப்பிரமணியம்
இவர் ஒரு ஆசிரியர். இவர் ஒரு வருடம் மட்டுமே கிராம சபைத் தலைவராக இருந்துள்ளார். இவரின்
சேவைக்காலத்தில் தீவகத்தின் நீர்ப்பாசன வளங்கள் புனருத்தாரணம் செய்யப்பட்டன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 174

திரு.சு.ஜேம்ஸ் ஆசிரியர்
இவர் ஒரு ஆசிரியர். இவர் பல முன்னேற்றமான காரியங்களைச் செய்துள்ளார். இவரின் காலத்திலேயே கிராமசபைக்கான புதிய கட்டிடம் தற்போதுள்ள இடத்தில் கட்டப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கதாகும். இவரும் தமது பொதுப்பணிகளையும் திறம்படச் செய்துள்ளார்.
திரு.ம.கணபதிப்பிள்ளை
இவர் ஒரு சிறந்த சமூக சேவையாளர். தமிழரசுக் கட்சியுடன் சிறந்த தொடர்புடைய பிரமுகர். இவர் தமது பொதுப்பணிகளைச் செய்ததோடு, இலங்கைப் போக்குவரத்துச் சபை முதல்முதலாக நெடுந்தீவில் பேருந்துச் சேவையை ஆரம்பிக்க மூலகர்த்தாவாக இருந்து செயல்பட்டார். அத்துடன் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் பல இளைஞர்கள் சாரதிகளாகவும், நடத்துனர்களாகவும் தொழில் வாய்ப்பினைப் பெற வழிகாட்டியாகவுமிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திரு.த. அம்பலம் ஜே.பி.
இவரே கராம சபைத் தலைவர் களாக இது வரையிருந்தவர்களில் வயதில் குறைந்தவர். இவர் ஆரம்ப காலங்களில் தமிழ்க்காங்கிரஸ் பிரமுகராகச் செயல்பட்டார். இவருடைய காலத்தில் பல பொதுப்பணிகள் முன்னெ டுக்கப்பட்டன. விசேடமாக இவரின் காலத்திலேயே குழாய் நீர் விநியோகத்திட்டம் செயல்படுத்தப்பட்டதென்பதும், மக்களின் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, இவர் இப்பணியில் தீவிரமாகச் செயற்பட்டாரென்பதும் குறிப்பிடத்தக்கதாகும். தீவு மக்களுக்கான எரிபொருள் விநியோகத்திலும் இவரின் சேவை பாராட்டக்கூடியதாகும்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 175

Page 104
பிரதேச சபைத் தலைவர் புலவர் அ.அரியநாயகம் -ஜே.பி. யூ.எம்.
பிரதேசசபை அமைக்கப்பட்டபின் அதன் முதலாவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். இவர் ஒரு ஆசிரியர். இவரின் காலத்தில் பல பொதுப்பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன. இவரின் காலத்திலே தீவின் சில பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டது. தொலைபேசிச் சேவையும் கிராம சபைக்கும், கிழக்கு மேற்குப் பகுதிகளிலுள்ள பொது நிலையங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. நெடுந்தீவு மத்தியில் ஒரு கலாச்சார மணி டபமும், மாவிலித் துறைமுகத்திற்கண்மையில் பேரறிஞர் வண. தனிநாயக அடிகளாரின் சிலை ஒன்றும் இவரின் காலத்தில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களனைவரது சேவைகளும், ஏனைய கிராமசபை உறுப்பினர்களது ஒத்துழைப்பும் சேர்ந்தே எம் அழகான தீவகத்திற்கு மேலும் மெருகு ஊட்டின. இவர்களின் சேவைகளை எம்மக்கள் என்றும் நினைவுகூரக் கடமைப்பட்டவர்களாவர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள்
சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்கள் - வேலணை 1924.1947
திரு. ஏ. எல். தம்பிஐயா அவர்கள் - கரம்பன் 1947. 1956 திரு. வி. ஏ. கந்தையா அவர்கள் - வேலணை 1956.1963 திரு. வி. நவரத்தினம் அவர்கள் - கரம்பன் 1963.1970 பண்டிதர் கா. பொ. இரத்தினம் அவர்கள் - வேலணை 1970.1977 திரு. டக்ளஸ் தேவானந்தா அவர்கள் - யாழ்ப்பாணம்
இவர்கள் அனைவரும் எம் தீவக மக்களை நன்கு நேசித்ததோடு அவர்களின் கஷ்ரங்களைப் போக்கி தீவகத்தின் வளர்ச்சிக்காகக் காலத்திற்குக் காலம் தம்மாலான சேவைகளைச் செய்த பெருந்தகையாளர்களாவர். இவர்களின் சேவையை எம் தீவகம் என்றுமே மறக்காதென்பதை நினைவூட்டுகிறோம்.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 176

இயல் 18 நெடுந்தீவின் சுதேச வைத்தியர்கள்
விஞ்ஞான தொழில்நுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் நம் தீவகத்தில் எத்தனையோ சுதேச வைத்தியர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் மூலிகைகளைக் கொண்டு, மருந்துகள் தயாரித்துப் பெரிய நோய்களை எல்லாம் குணப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களின் திறமையான வைத்தியங்களினால் நெடுந்தீவு மக்கள் நோய்களினால் பாதிப்படையாது நீண்ட காலம் சுகத்துடன் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் பிற்காலங்களில் நெடுந்தீவில் வைத்தியர்களாகப் பணிபுரிந்த ஆயுள் வேத வைத்தியர்களான காத்திப் பரிகாரியார், சுப்பிரமணியம் பரிகாரியார், வேலுப்பிள்ளை பரிகாரியார், கிறகோரிப் பரிகாரியார், ஆறுமுகப்பரிகாரியார், நாகலிங்கம் பரிகாரியார், சின்னத்தம்பிப் பரிகாரியார், சின்னத்துரைப் பரிகாரியார் (ஆசிரியர்), பிலிப்பையா பரிகாரியார் ஆகியோர் மிகவும் சிறந்த சேவைகளையாற்றினார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
நெடுந்தீவின் அண்ணாவிமார்
நெடுந்தீவிலே பண்டைக்காலம் தொட்டு நாட்டுக்கூத்து இருந்து வந்திருக்கிறது. இதன் பொருட்டு அங்கே பல அணி ணாவிமார்களும் வாழ் நீ திருக் கிறார்கள் என அறியக்கிடக்கிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலே நெடுந்தீவில் ஆலயத் திருவிழாக்களிலும், பொது இடங்களிலும் நாட்டுக் கூத்து நடைபெற்று வந்துள்ளது. இவற்றில், காத்தவராயன் கூத்து, பாஞ்சாலிசபதமி, பஞ்சபாண்டவர் நாடகம், கண்ணகி கோவலன் நாடகம், ஞான செளந்தரி நாடகம் என்பன மக்களால் பெரிதும் பாராட்டப்பெற்றவை. இங்கு வேலுப்பிள்ளை, பெரியதம்பி, கிறகோரி, மரியாம்பிள்ளை, காத்தான் எனப் பல அண்ணாவிமார்களும் வாழ்ந்து பல நாட்டுக் கூத்துக்களை மேடையேற்றினார்கள். அவர்களது சேவையால் சமூகத்தில் நல்ல கலைச்செல்வங்கள் நிலைபெற்றன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 177

Page 105
Suj6) (Chapter) 19
Delft (Neduntheevu)
Delft, is an island,called Neduntheevu in Tamil. It is
located in the northern part of Sri Lanka in close proximity to the southern tip of India and covers an area of seven miles in length and five miles in width. Delft is the largestand the most beautiful island in the north .It has a population of about seven thousand people with six village headmen divisons and a seperate office of the Assistant Government Agent.
It is well known for its bright sunlight cool breeze, clean sandy beaches and wild horses. The eastern and western parts of the island are covered by many Palmyra and Coconut palms. Most of the south is covered with grasslands. The island is also known for a large number of small ponds,which get filled up during the rainy seasons and provide sanctuary to a wide range of different species of birds from other countries. Also,there are a number of medicinal herbs and vegetable plants, which are native to the bushy areas of the south. Tradition has it that, in the ancient days, the people of Delft regularly sent cow milk as offering to the Rameswaram temple in south India and due to this reason the Island was called “Pasu Theevu” or the Cow Island. Farming and fishing have continued to this day as the major occupations of most people. Most of the partitioning of lands are fenced by coral stones and the people of Delft mostly live in clustered families.
The people of Delft are a very religious,with the majority being Hindus and others Christians. There are fifteen temples and seven churches spread all over the island. The people are well known for their hospitality and have earned a name for themselves as very generous people from all visitors to the island.There is a full-fledged
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 178

and well equiped hospital and a post office in the centre of the island.
According to historical tradition and records,Delft was ruled by a Tamil King known as “Vedy Arasan' and there is a dilapidated fort standing in the west of the island, to have been built by this king. The Portuguese, the Duch and the British occupied and ruled Delft, before the independence of Sri Lanka (Ceylon) in 1947. There are a number of evidence of the active presence of these foreign rulers, including a ruined Portuguese fort and the Dutch horse stables in the west. There is also a Dutch fort in the centre and a big tower built and named by the Dutch as “Queen Tower” in the south east corner of the island, which came to be later called by the people as “Quintha'. In fact the name Delft itself was given by the Dutch Government.
The jetty of Delft is called “Maveli Jetty” which could well be described as the gate way for travels to and from the island. At present engine boats and big launches are in service. Delft had been known as a major trading centre for many centuries attracting foreign traders and invaders. It is believed that the descendants of Chola kings, headed by Thaninayagam Mudali from South India, first landed in Delft before the Chola conquest of the island of SriLanka. He and his descendants settled down in Delft and in various parts of Jaffna and other islands, leaving behind linguistic, cultural and other influences, which continue to this day.
There are thirteen schools in Delft including, one Mahavidyalayam and a ladies college, with classes up to Advanced level or Grade 12. The first principal of Mahavidyalayam (High school) Mr. Edward Navaratnasingam is remembered as an outstanding teacher, who contributed immensely for the development of the school and the educational advancements of the students. Also well remembered is Mrs.Nagenthirar, the village headman who helped in many ways to built a Mahavidyalayam in Delft and he built a primary school named Sellamma Vidyasalai at the centre. Most of the students of this school proceed to schools in Jaffna for higher studies or enter national Universities and Technical colleges in Jaffna and other parts of Sri Lanka. Thanks to the excellant primary
நெடுந்தீவு மக்களும் வரலாறும் V 179

Page 106
and secondary education, the children of Delft receive from the local schools, Delft has over the years produced a large number of teachers and educationists,public servants or Government servants, accountants, engineers, doctors, and other professionals who are working throughout Sri Lanka and in foreign countries.
Delft has also produced some well known educators and Tamil scholars. Among them is late Professor Rev. Father Thaninayagam Adigalar, the internationally acclaimed linguistic and literary scholar, who was the organizer and a founding member of the International Association for Tamil research.The continued respect this association receives from Tamil politicians, professionals, scholars and researchers all over the world, is a tribute to the vision and intellectual greatness of Adigalar. Among the well-known politicians produced by Delft is Sir Vaithilingam Duraisamy, the first Speaker of the Sri Lankan Parliament. -ar
Under the agriculural development and colonization schemes inaugurated by the then government in 1957. Many families from Delft were settled in Killinochchi, Vavunia, and Mannar districts. Although they settled down in their new homes as farmers, most of their children went on to pursue higher education and became professionals. Most of these professionals and ordinary families including people who were living in Delft, fled the country following the violence of 1983, and are now settled and doing well in Canada, England, Germany. France and in some Scandinavian Countries. Delft continue to depend on the Government, for all their daily requiment needs to be stressed. They are no more the happy people who were self sufficient. Currently they cannot travel any where as they wish since every thing, including their day-to-day travel and movements are controlled by the armed forces. There are insufficient medical supplies in hospitals and woe-fully inadequate facilities for students in schools. The people of Delft have suffered greatly, and every aspect of their daily life is disrupted. It is our duty to. help them. In the meantime, let us all pray for their safety and well being and for the restoration of peace and harmony in our native land.
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 18O

Chapter 20 Notes from Romantic Ceylon B
R.H. Bassett 1929
Who is Vediyarasan?
Vediyarasan was the King of Mukwars who left his name in Delft; he built a fort somewhere in the island, probably on the site subsequently used by the Portuguese for the same purpose, but certainly not at the place which popular tradition assigns to him, where the mound of earth and brick, surrounded by a litter of worked stones, marks the position of the Dagoba. He is said, too, to have been the original constructer of a canal which runs across Delft, connecting two large tanks. The canal is now only twenty feet wide, and very shallow; Vediyarasan may have been the first to dig the channel, but it as been certainly improved and repaired in comparatively recept years.
Romantic Ceylon by R.H. Bassett - 1929
Who is Thaninayagam Mudali?
The Tamil King sent one of his ministers, with his retinue, to look after Delft; this ministers name was Thaninayagam Mudali, and his retinue were the forefathers of the present inhabitants of the island. The peculiar conditions entailed by the close associations of all costs in this enforced exile resulted in relaxation of some of the usual caste prohibitions in various directions, evidence of which can be daily seen in the habits of the people and relations between the castes at the present day. All castes climb trees in order to procure their staple nourishment, Toddy a practice unthought of, except with horror, by Vellalas on the main land.
Romantic Ceylon -By R.H. Bassett - 1929 நெடுந்தீவு மக்களும் வரலாறும் 181

Page 107
Portuguese Fort in Delft
It is a very strongfortified two storied dwelling, covering an area about fifty yards square, with a double centre wall of immense thickness. This wall completely cuts the fort in half at ground-level, the only means of communication being on the first floor - a common precautionary measure in defensive structure of that period. As a result, it is a very complicated edifice, full of long narrow and little square rooms.
The stairs run in the double walls, and lead out on to what must have been a flat roof, judging from the marks of the rafter sockets in the masonry. In one corner is the dungeon, a small square room, with a floor below ground level, without any door, and having only one Small window about two feet square, leading into the interior of the fort.
Romantic Ceylon-By R.H. Bassett-1929
Longevity in Delft
Delft is noted for Longevity; one old lady actually reached the age of one hundred and sixty, while another, named Sinnachchi, lived to be hundred, and Kunchachchi, also of the weakest sex, was full of life and talk at one hundred and ten. Kunchachchi regarded the present generation as decadent, and not to be compared with the young people of her time. Sinachchi looked her age; she was shriveled and unable to rise from a squatting posture, but until within two years of the end of her life she went annually to Jaffna to see her relatives who lived there. The people put down their length of days to good milk, palmyra Odial, sea air, and innocence of heart. These seem to be excellent causes. Toddy one notices, is not included. It forms the staple diet of all the poorer classes, but whether it assists the length of life, or is the counteracting influence that presents everyone in Delft from living to be about two hundred, it is impossible to say.
Romantic Ceylon - By R.H. Bassett-1929
நெடுந்தீவு மக்களும் வரலாறும் 182

இயல் 21 நெடுந்தீவின் சோக சம்பவம்
1985ம் ஆண்டு நெடுந் தீவிலிருந்து புங் குடுதீவு குறிகட்டுவான் துறைமுகத்தை நோக்கி வந்து கொண்டிருந்த குமுதினிப் படகில் பிரயாணம் செய்து கொண்டிருந்த குழந்தைகள், வயோதிபர் உட்பட, அறுபத்தேழு தமிழ்ப்பொது மக்கள் அரசின் கடற்படையினரால் நடுக்கடலில் வைத்துக் கொடுரமாக வெட்டியும், குத்தியும் தாக்கப்பட்டனர். இவர்களில் குழந்தைகளும் பெண்களும் உட்பட முப்பத்திரெண்டு பேர் நடுக் கடலில் வைத்தே கொலை செய்யப்பட்டனர். வைத்தியசாலையில் ஏழு பேர் மரணமானார்கள். இவர்களில் கொந்தளிக்கும் கடலிலும் திறமையாகப் படகுகளை ஒட்டி, நெடுந்தீவு மக்களுக்கு அருஞ்சேவையாற்றிய படகோட்டிகளும் அவர்களது உதவியாளர்களும் அடங்குவர். இது நெடுந்தீவு மக்களால் என்றும் மறக்க முடியாத வரலாறு காணாத சோகமாகும். எம்மண்ணின் விடுதலைக்கு வித்தான இவர்களின்
ABBPT subbum un பிரார்த்திப்போமாக. ༢ ཆུ་མཛོ་ནི་འགའ་ -- -- .. . .- -- - ܀ܚܘ܀ -- ----- .. . . "
குமுதினிப்படகில் கொலையுண்டவர்களுக்கான நினைவுத் துாபி நெடுந்தீவு மக்களும் வரலாறும் 183

Page 108
ஆய்வுத்துணை நுால்கள்
அருட்திரு அமுதன் அடிகள்
உலகெலாம் தமிழ் முழக்கம் 1992 முதலியார் செ.இராசநாயகம்
யாழ்ப்பாணச் சரித்திரம் 1933 கலாநிதி இ.பாலசுந்தரம்
ஈழத்து இடப்பெயர் ஆய்வு 2002 திரு.க.வேலுப்பிள்ளை
யாழ்ப்பாண வைபவ கெளமுதி 1918
கலாநிதி சி.க.சிற்றம்பலம்
யாழ்ப்பாணம் தொன்மை வரலாறு 1993 திரு.டானியல் ஜோன் or
யாழ்ப்பாணச் சரித்திரம் 1878 திரு.ஆ.முத்துத்தம்பிப்பிள்ளை
யாழ்ப்பாணச் சரித்திரம் 1933
கலாநிதி குகபாலன்
தீவக வாழ்வும் வளமும் திரு.ச.சதாசிவம் ( சேவியர்)
சப்த தீவு 1999 ஆய்வுக் கட்டுரைகள் பண்டிதர் நா.கந்தையா அதிபர் சிரேஷ்ட விரிவுரையாளர் அ.கணபதிப்பிள்ளை பேராசிரியர் க.சிவசாமி
தகவல்கள் திரு.நா.அமிர்தரட்னராசா அதிபர்
திரு.ப.கதிரேசு கிராம சபை அங்கத்தவர் திரு.சொ.இராமநாதன் கிராம சபை பணியாளர்
நெடுந்தீவு மக்களும வரலாறும் 184

நெடுந்தீவில் காணப்படும்
குன்றிமணி
நெடுந்தீவு மக்களும் வரலாறும்
மூலிகைகள்
அகத்தி 31. தயிர்வள்ை அத்தி 32. நாயுருவி அலரி 33. பேய்ப்புடோல் அவுரி 34. நறுவிலி 9H[IBl() 35. உத்தமாகாணி ஆடுதின்னாப்பாலை 36. கோரை ஆமணக்கு 37. மணித்தக்காளி சிறுநெருஞ்சி 38. வாதமடக்கி பெருநெருஞ்சி 39. வாதநாராணி தேட்கொடுக்கி 40. தேங்காய்ப்பூக்கீரை . இக்கிரி 41. கற்பூரவள்ளி . இயங்கு 42. சாறணை . இத்தி 43. மருதோண்டி
ஈச்சை 44. ஓதி வட்டத்துத்தி 45. பவளமல்லி . எருக்கு 46. (8 JJ TLD'ọ கீழ்காய்நெல்லி 47. கருவேல் மாவிலங்கு 48. கற்றாளை பெருநெல்லி 49. சிற்றாமட்டி பிரண்டை 50. நீர்முள்ளி கொடிக்கள்ளி 51. தொய்யில்
52. வெண்ஊமத்தை பட்டிப்பூ 53. விடத்தல் பழம்பாசி 54. நஞ்சறுப்பான் கொவ்வை 55. LIᏭ6ifl காரை 56. பாவட்டை குப்பைமேனி 57. முசுட்டை குறிஞ்சா 58. துளசி சீந்தில் 59. புல்லாந்தி
60. காஞ்சாங்கோரை
185

Page 109
61.
62.
63. 54. 65:
66.
67.
68.
69.
70.
10.
தகரை துாதுவளை
வீழி முடக்கொத்தான் சிறுகுறிஞ்ச்ா. எலிச்செவியன் மிளகுகரணை வீணாலை ஒடுவெட்டி அல்லக்கிழக்கு
71.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
மொசுமொசுக்கை கடற்பசளி வட்டுக்கத்தரி முத்தாமணக்கு விஸ்ணுகிராந்தி கண்டங்கத்தரி செம்முள்ளி
DC595 பிரதமதண்டு தெவிட்டை
மருத்துவ மரங்கள்
DTg5!60)6TT எலுமிச்சை வில்வை நாவல் விளாத்தி 3F60ố tọ பேரீந்து பப்பாசி புளி வேம்பு
1 .
12.
கறிமுருங்கை ஆல மரம்
13. இலவம்பஞ்சு 14. கண்டாமரம்
15.
16.
17.
18.
6ᏂlᎢ6ᏈᎠᏑᏏ பொன் ஆவரசு பனம்கற்றாளை பூவரசு
19. கொன்றை 20. கருவேப்பிலை
இவை போன்ற பல மூலிகைகள் இங்கு காணப்படுகின்றன.
நெடுந்தீவு மக்களும் வரலாறும
186


Page 110
இந்நூறு புறுப்பிடமாகக் கெ சேரி நரிவிபக் கஷ்
கலாசாஷையிலும்
பயிற்சி பெற்றவள் சேவப்பிரகாச வி மகாவித்தியாலய Eger 5 LETI U LJE வரை நயினாதீவு மகாவித்தியாக்ஷ்பூ
|L இவர், யாழ்ப்பான பட்டத்தைப் பெற்ற L(LTTET'; } 1881ஆம் ஆண்டு நஷ்னூர் கல்வி ே |3 Bildšli dš Berij வசியக் கஷ்விக் ♔'#'ul' = u slgTLiErh Lisje" geLife Fu
BS sysstorå Ligås ஆண்டு தொடக்க t( ജൂീട് ല ஆங்களிலும் ஆகிய கல்லூரி, வெளிட் என்பவற்றில் 3, 1 சசித்திக்கான பா
கனடாவில் பதவிகளை வகித் L('[&t, | p('&?';് ജ്യ
LT LETT Luigi eliġi
கும்ேபநரே கிேே
t['g', gTള് நீங்ரது கட்டுரை கியுள்ாது, இவர் பாராட்டுக்கள் ே ELO ELIT, É: இந்நூல் இவரது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ாசிரியர் திரு.க.சிவநாயகமூர்த்தி அவர்கள் நெடுந்தீவைப் காண்டவர். நெடுந்தீவு மகாவித்தியாலயத்திலும், சாவகச் ஆாரியிலும் கஷ்விகற்றவர். நஜ்ஜார் ஆசிரியர் பயிற்சிக் பாதிரி ஆசிரிய பயிற்சிக் காசாதீயிலும் ஆசிரிய STTTTTeLL GLkkeB T MSMTTLuT L LL LOLLLSS MMYYTutt த்தியாசாலை, கிளிநொச்சி மகாவித்தியாலயம், நெடுந்தீவு b ஆகியவற்றில் ஆசிரியராக 1358 முதல் 1973ஆம்
TTMDMS LL LML D L0YLTeT TMLLLT TTT TTTY HLLLL கணேஷா கனிஷ்ட விந்தியாலயம், உருத்திரபுரம் b ஆகியவற்றில் அதிபராகப் பஐரியாற்றிரா,
TT LTleTLeeLekeT TMMkkLTL YeeOHLHLu OMS LL LTT TMeMMMMTL M ாப் பங்காலக் கழகத்தில் தனது கல்வி டிப்புசாமா நாள்.1975ஆம் ஆண்டு தொடக்கம் 283ஆம் ஆண்டுதுதர MTeTTMTMMMM LLTMS TTkSMMMMMLT LLM MTMTTHHeuMDS துொடக்கம் 1937ஆம் ஆண்டுவரை யாழ்ப்பாTம், பட்டாரக் கற்பி அதிகாரியாகப் பஈரியாற்றிதாய்,
பாரிேப்பாய் இராமநாதன் கல்லூரியிஸ் ஆரம்பிக்கப்பட்ட காரியாஜயத்தின் நிர்வாகத்திந்துப் பொறுப்பான கல்வி களியாற்றினார். இக்காலத்தில் BBBஆம் ஆண்டு LL LLLLTTT LLLTTLTT MMMLL TTT L T T LTTtO பழங்கப்பட்டிருந்தது.
ஆண்டில் கனடா வந்த இவர் ரொரன்ரோப் பல்கலைக்
மாச்சாரப் பாடநெறியிஸ் சித்திபெற்ார். 1833ஆம் ம் 2000கிம் ஆண்டுவரையும், பாக்டேல் ஆரம்ப பாட க்ரோறியா, ஆகிய பாடசாலைகளில், தமிழ், கணிதம்,
பாடங்களைக் கற்பித்தார்.சித்துடன் பாக்டோப்
ரொறன்ரோ கல்லூரி மத்திய தொழில்நட்பக் கல்லூரி 0, 1, 2, 0AG வகுப்பு மாணவருக்குத் தமிழ் திறமை L(് കീഴ്ക്,
SL LLLLLL TTTTS LLLT LMT Hu TTLMM LMMMH TM TOTT துவரும் இவர் நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்தின் உபதலுைவராகவும், மாவிரி வசந்தம் என்ற ஆண்டு ஆப்பு வெளியீட்டாளராகவும் இருந்துள்ளார். கனடாவில் வ நிறுவனங்களுடன் சேர்ந்தும்,தனியாகவும், YCLLMM LLLTTTS MLMMTMM TT MMGLTT CCLLGLLM தழும் பெற்றிருந்தார். நள் பP) பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளியா ஒரு சிறந்த பேச்சாளருமாவார். இவருக்குக் கிடைத்த வரது சேவைத்திறனையும், ஆற்றரையும் வெளிக்காட்டு
(്, ട്രൂ ( (b | () தாயகப்பற்றை வெளிக்கொணரும் சிறந்த ஒரு
at agalugi Titan at முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர்
யாழ்ப்பாண்ப்பங்காலக்கழகம் 嵩