கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (ஏகாம்பரம் இரத்தினேஸ்வரன்)

Page 1
EIGINI
சாமியே சரண்
அவர்கள் தம் இறைபதப்பே
穆 *)
!)
ழ்/ கருவிலைப் பிறப்பிடமாகவும், ெ
·||
T
 
 

னம் ஐயப்பா
காழும்பை வதிவிடமாகவும் கொண்ட ம் இரத்தினேஸ்வரன் று குறித்து வெளியிடப்படும் | L7al/
2002

Page 2

நீத்தாரை நினைவு கூரும் வண்ணம் நினைவுச் சின்னம் நிறுவுதல் பண்டைய காலம்தொட்டு நடைமுறையில் உள்ளது. நினைவாக கல்நடல், விழா எடுத்தல் போன்றவை ஒருபுறம், சுமை தாங்கி, ஆவுரோஞ்சுகல், சத்திரம் அமைத்தல் போன்ற சமூகநலன் கருதிய செயல் மறுபுறமாக முன்னர் அமைந்தன.
இக்காலத்தில் இச்செயல் நூல் வடிவம் பெற்றுள்ளது. கல்வெட்டு, சமரகவி என வெளியாகும் நினைவு மலர் காலவோட்டத்தில் மறைந்துவிடும். அதனால் பயன்படும் தோத்திரப் பாடல்கள், நீதி நூல்கள் அடங்கியதாக நினைவுமலர் வெளியாகியது.
காலத்தால் அழியாத ஒரு நூல் மக்களுக்குப் பயன்படும் வண்ணம் எமது குடும்பத் தலைவன் நினைவாக வெளியிட வேண்டும் என்று விரும்பினோம். திருவருள் கூட்ட முதலாம் திருமுறை வெளியாகின்றது. இம்மைக்கும் மறுமைக்கும் நன்மை பயப்பவை திருமுறைகள். அருளாளர் வாயசைக்க இறைவன் கூறியவையே திருமுறைப் பாடல்கள். இது "எனது உரை தனது உரையாக" என்ற சம்பந்தப் பிள்ளையார் திருவாக்காற் துணியப்படும்.
முதலாந்திருமுறையில் நட்டபாடை, தக்கராகம், பழந்தக்கராகம், தக்கேசி, குறிஞ்சி, வியாழக் குறிஞ்சி, மேகராகக் குறிஞ்சி, யாழ்முரி ஆகிய பண்களுக்கு 136 பதிகங்கள் அமைந்துள்ளன. இவ் அற்புதப் பதிகங்களை நாள்தோறும் ஓதி நன்மை பெறவேண்டும்.
நினைவாக வெளிவரும் நூல் நிறைவாக இருத்தல் வேண்டும் எனக் கருதி முதலாந்திருமுறை முழுமையாக வெளிவருகிறது. குறுகிய காலத்தில் காத்திரமான நூலினை அச்சிட்டுத்தந்த லகூழ்மி அச்சகத்தினருக்கும், ஆலோசனை வழங்கி நெறிப்படுத்திய பெரியோர்களுக்கும் எமது நன்றி!
B.P.G. 7, மங்கள வீதி,
மனிங்ரெளண் கொடர் இங்ங்ணம்
ரளண தொடரமாடி, G85 T(gibL-08. குடும்பத்தினர்

Page 3

fl-III DMI Liu
崔
அமர் திரு ஏகாம்பரம் இரத்தினேஸ்வரன்
மிறப்பு: இறப்பு: ெ 29-03-1950) a 1-08-2002
ஆண்டு விஷ" மாசிஅப ரத்திர யோதசிதான் மாண்பார் கருவில்ஏ காம்பரனார் - வேண்டுமகன் ரத்தினேனப்வ ரன்சோமன் ஏற்றமுறு தாள்சேர்ந்த நத்து பிரதோஷ நாள்.

Page 4

அமரர் திரு. ஏகாம்பரம் இரத்தினேஸ்வரன் அவர்கள்தம்
வாழ்க்கை வரலாறு
இலங்கைத் தீவின் தீவகம் என்று சொல்லப்படுகின்ற சுருவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஏகாம்பரம் இரத்தினேஸ்வரன். கொழும்பில் பிரபல வர்த்தர் ஏகாம்பரம் - இராசம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனாவார். அன்னார் தனது ஆரம்பக் கல்வியை சுருவில் றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையிலும், மேற்படிப்பை சிறிதுகாலம் யாழ்/ மத்தியகல்லூரியிலும் பின்னர் படிப்பை யாழ்/ இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பாடசாலையில் பயில்கின்ற காலத்திலேயே அமரர்தம் குடும்பம் சகல வளங்களுடனும் செல்வச் செழிப்புடனும் ஊரார் போற்றும் படியாக வாழ்ந்துவந்தது. சுருவில் ஊரிலே இருக்கின்ற ஐயனார் கோயில் அவர்களது குலதெய்வம். அதைவிட அவர்கள் காலத்திலே கரம்பன் ஞானபைரவர் கோயிலில் நடைபெறும் பைரவர் மடை காலங்களில் அமரர் தம் குடும்பத்தினரும் விஷேட பங்கெடுத்துக்கொள்வார்கள்.
அமரர் தனது பாடசாலைப் படிப்பை முடித்ததும் ஆரம்பத்தில் ஜெனரல் ரேடிங் ஏஜென்ஸியைத் தனியாக நடத்திவந்தார். பின்னர் தந்தையாரின் விருப்பத்திற்கிணங்க 1985இல் தந்தையாருடைய சகல தொழில் ஸ்தாபனங்களையும் தானே பொறுப்பேற்று நடாத்தி வந்தார்.
1979 ஆம் ஆண்டு இல்லற வாழ்க்கையில் நுழைவதற்காக அராலியைச் சேர்ந்த இராசதுரை மகேஸ்வரி தம்பதிகளின் ஏகபுத்திரியான ஸ்கந்தவதனாவை கரம்பற்றினார்.
அமரர் இந்தியாவிலுள்ள திருச்செந்தூர் முருகன் மேல் பற்றுக் கொண்டிருந்தார். அவர்மேல் வைத்த பற்றின் காரணமாக செந்தூரன்
(i)

Page 5
என்னும் புதல்வனைப் பெற்றெடுத்தார். இல்லறம் நல்லறமாக இனிதே வாழ்ந்துவந்தனர்.
வவுனியா அருள்மிகு பூரி அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் தேவஸ்தான திருப்பணிச் சபை உறுப்பினராக 1989 - 1996 காலப்பகுதிகளில் கடமைபுரிந்தார். மத்தியகுழு உறுப் பினர்களில் ஒருவராக 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டு கோவில் கும்பாபிஷேகத்தை 1996 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி சிறப்பாக நடாத்திவைத்தார். கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்வது என்பது யாருக்கும் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். அதைப்பற்றிச் சொல்பவர்கள் கோவிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தவர் கோடி புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுவர். ஏனெனில் அத்தகைய பேறு எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. அமரர் தனது இறுதிக்காலத்திலே பூரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் தேவஸ்தான இயக்குனர் சபை உறுப்பினராகவும், அருளகம் ஆதரவற்ற அனாதைச் சிறுவர்களைப் பாதுகாக்கும் இல்லத்தையும் நிர்வகித்து அதற்கு வேண்டிய பொருளுதவிகளையும் செய்து வந்தார். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். அதேபோல் ஆதரவற்ற சிறுவர்கள் இல்லத்தையும் நிர்வாகசபை உறுப்பினராக இருந்து நடாத்திவந்தார். அப்பேற்பட்டவர் எம்மையெல்லாம் விட்டு 2002ம் ஆண்டு மாசி மாதம் 17ம் நாள் (11-03-2002) பிரிந்துவிட்டார். "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பதற்கு இணங்க அவர் மாசி அபரத்திரயோதசி திதி அன்று இறைபதம் எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
 

MY APPA
Appa is kind
Appa is happy
Appa is fun
Appa is friendly
Appa is warm-hearted
Appa is honest
Appa is trustworthy
Appa is helpful
Appa is thoughtful
Appa is gentle
Appa is caring
Appa is loving
Appa was here,
Now Appa is there.
But I know Appa will always be with us in our hearts
Appa is always with us.
By: Sendurraan Ratneswaran
ଦ୍ଵି
(iii)

Page 6
* Music, when soft voices die,
Vibrates in the memory;
Odours, when sweet violets sicken,
Live within the sense they quicken.
Rose leaves, when the rose is dead,
Are heaped for the beloved's bed;
And so thy thoughts, when thou art gone,
Love itself shall slumber on.
- Written by: Shelly. -
Chosen by:
Bavan, Sendurraan & Aarani
 

MY PERIAPPA
Periappa was an active man who always made time for us. Periappa was a friend to many people. He was kind, funny,
loving, helpful and caring. He helped people who needed it. He found happiness in making others happy and he enjoyed
treating people.
It was sad that periappa had to have the illness, which
was slowly running him down. Despite this, he never complained
and fought the illness bravely.
I'm glad he spent the last month of his life with us. We will
treasure the month greatly.
Periappa's Life was short but he enjoyed it. He always
gave us gifts and took us to fun places. He would never refuse
anything we asked for - the word 'No' wasn't part of his
vocabulary.
Periappa was a good friend, uncle, employer, father and
brother to everyone and we will miss him. I pray for his happiness
but I know I won't ever forget periappa and he will be with us
always.
By: Bavan Sasikandarajah
(v)

Page 7
OUR LOWE – FOR IM IS BIG
Our love for him is big.
He was always so cheerful,
Caring, loving and thoughtful,
Our love for him is big.
He loved his son so much.
He would do anything,
For his son,
He loved his son so much.
له هکله
Periappa was fun, friendly and funny,
He was warm-hearted and kind too.
It is sad he died so soon.
You see, και λ
Our love for him is big.
I will remember my Periappa forever.
He and god shall always be right by my side.
Periappa is now in safe hands and will be in peace.
kovotvoXiao? мочоМ o By: Aarani Sasikandarajah
 

திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த
தேவாரப் பாடல்கள்
முதல் திருமுறை
136 பதிகங்கள் = 1469 பாடல்கள்

Page 8

தேவாரப் பாடல்கள்
முதல் தநிருமுறை
6ே பதிகங்கள் - 1469 பாடல்கள்

Page 9

சிவமயம் திருச்சிற்றம்பலம்
முதல் திருமுறை
1. திருப்பிரமபுரம் : பண் - நட்டபாடை
தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடி காடுடையசுட லைப்பொடியூசியென் னுள்ளங்கவர்கள்வன் ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவையூண்டு வற்றலோடுகல ஞப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழு தேத்தப் பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 2
நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
ஏர்பரந்தவின வெள்வள்ைசோரஎன் னுள்ளங்கவர்கள்வன் ஊர்பரந்தவுல கின்முதலாகிய ஒரூரிதுவென்னப் பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 3
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில் உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன் மண்மகிழ்ந்தஅர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பிற் பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மாணிவணன்றே. 4.
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்மிதுவென்னப் பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
மறைகலந்தஒலி பாடலோடாடல ராகிமழுவேந்தி இறைகலந்தவின வெள்வளைசோரஎன் னுள்ளங்கவர்கள்வன் கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப் பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 6

Page 10
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
0.
II.
I2.
3.
சடைமுயங்குபுன லன்னனலன்னெரி வீசிச்சதிர்வெய்த உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன் கடல்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம் பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. Z
வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன் துயரிலங்கும்முல கிற்பலஉஊழிகள் தோன்றும்பொழுதெல்லாம் பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 8
தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும் நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன் வாணுதல்செய்மக ளிர்முதலாகிய வையத்தவரேத்தப்
பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. 9
புத்தரோடுபொறி யில்சமனும்புறங் கூறநெறிநில்லா ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன் மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே. O
அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தலெளிதாமே.
திருச்சிற்றம்பலம்
2. திருப்புகலூர் : பண் - நட்டபாடை
குறிகலந்தஇசை பாடலினுனசை யாலிவ்வுலகெல்லாம் நெறிகலந்ததொரு நீர்மையணுயெரு தேறிப்பலிபேணி முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடமொய்ம்மலரின் பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புகலூரே
காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னுெருபாகம் மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரியாடை மிதிலங்கஅணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ்சோலைப் போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புகலூரே. 2

திருப்புகலூர் : பண் நட்டபாடை உ3
14.
5.
6.
7.
8.
19.
2O.
21.
பண்ணிலாவும்மறை பாடலினானிறை சேரும்வளையங்கைப்
பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழ லென்றுந்தொழு தேத்த உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிடமென்பர் மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழில் மல்கும்புகலூரே. 3
நீரின்மல்குசடை யன்விடையன்னடை யார்தம்மரண்மூன்றுஞ் சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தானுலகுய்யக் காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பர் ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புகலூரே. 4
செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல் பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணி வாரை மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப் பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ ருந்தும்புகலூரே. 5
கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில்கானில் குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிடமென்பர் விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந்தெங்கும் முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புகலூரே. 6
வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதிசூடி உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த வுகக்கும்மருள்தந்தெம் கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள்ளிடமென்பர் புள்ளையார்ந்தவய லின்விளைவால்வள மல்கும்புகலூரே. 7
தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடிதிண்டோள் தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள்செய்த மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிடமென்பர் பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புகலூரே. 8
நாகம்வைத்தமுடி யாண்டிகைதொழு தேத்தும்மடியார்கள் ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னெடு மாலுந்தொழுதேத்த ஏகம்வைத்தனரி யாய்மிகவோங்கிய எம்மானிடம்போலும் போகம்வைத்தபொழி லின்நிழலான்மது வாரும்புகலூரே. 9
செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொருளல்லாக் கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம்போலும் கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதிசெய்து மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புகலூரே. 20

Page 11
4 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
22. புற்றில்வாழுமர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்
கற்றுநல்லவவர் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ்மாலை பற்றியென்றும்மிசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.
திருச்சிற்றம்பலம்
0 (d : ) (d
3. திருவலிதாயம் : பண் - நட்டபாடை
23. பத்தரோடுபல ரும்பொலியம்மல ரங்கைப்புனல்தூவி
ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம் சித்தம்வைத்தஅடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
24 படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கனலேந்திக்
கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில் மேடையிலங்குபொழி லின்நிழல்வாய்மது வீசும்வலிதாயம்
அடையநின்றவடி யார்க்கடையாவினை அல்லற்றுயர்தானே. 2
25. ஐயனொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்
செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்திரு மாதோடுறைகோயில் வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம் உய்யும்வண்ணந்நினை மின்னினைந்தால்வினை திருந்தலமாமே. 3
26. ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்
புற்றில்நாகமரை யார்த்துழல்கின்றனம் பெம்மான்மடவாளோ "டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்
பற்றிவாழும்மது வேசரணுவது பாடும்மடியார்க்கே. 4.
27. புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய
அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும் மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும்வலிதாயஞ் சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.
28. ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்
*கானியன்றகரி யின்னுரிபோத்துழல் கள்வன்சடைதன்மேல்
வானியன்றபிறை வைத்தனம்மாதி மகிழும்வலிதாயம் தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே. 6

திருப்புகலியும் திருவிழிமிழலையும் : பண் - நட்டபாடை 5
29.
3.
32.
33.
34.
கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப் பெண்ணிறைந்தவொரு பால்மகிழ்வெய்தியபெம்மானுறைகோயில் மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத் துண்ணிறைந்த பெருமான்கழலேத்த நம்முண்மைக்கதியாமே. 7
கடலில்நஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி அடலிலங்கையரை யன்வலிசெற்றரு ளம்மானமர்கோயில் மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம் உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வள்ளத்துயர்போமே. 8
பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயில்மூன்றும் எரியனப்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும் எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே. 9
ஆசியாரமொழியாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல் வாசிதீரஅடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம் பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே. 10
வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத் தண்டவாணனடி யுள்குதலாலருள் மாலைத்தமிழாகக் கண்டல்வைகுகடற் காழியுள்ஞானசம் பந்தன்தமிழ்பத்துங் கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.
திருச்சிற்றம்பலம்
{ 0 X
4. திருப்புகலியும் திருவிழிமிழலையும் : பண் - நட்டபாடை வினாவுரை மைம்மரு பூங்குழற் கற்றைதுற்ற வாணுதல்
மான்விழி மங்கையோடும் பொய்ம்மொழி யாமறை யோர்களேத்தப் புகலி
நிலாவிய புண்ணியனே எம்மிறை யேயிமை யாதமுக்கண் ஈசனன்
நேசஇதென் கொல்சொல்லாய் மெய்ம்மொழி நான்மறை யோர்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே. 1

Page 12
6 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
35.
37.
38.
39.
கழல்மல்கு பந்தொடம் மானைமுற்றில் கற்றவர்
சிற்றிடைக் கன்னிமார்கள் பொழில்மல்கு கிள்ளையைச் சொற்பயிற்றும் புகலி
நிலாவிய புண்ணியனே எழில்மல ரோன்சிர மேந்தியுண்டோர் இன்புறு
செல்வமி தென்கொல்சொல்லாய் மிழலையுள் வேதிய ரேத்தி வாழ்த்த
விண்ணிழி கோயில்விரும்பியதே.
கன்னிய ராடல் கலந்துமிக்க கந்துக
வாடை கலந்துங்கப்
பொன்னியல் மாடம் நெருங்குசெல்வப் புகலி
நிலாவிய புண்ணியனே
இன்னிசை யாழ்மொழி யாளோர்பாகத் தெம்மிறை
யேயிது என்கொல்சொல்லாய் மின்னியல் நுண்ணிடை யார்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே.
நாகப ணந்திக ழல்குல்மல்கு நன்னுதல்
மான்விழி மங்கையோடும் பூகவ னம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலி
நிலாவிய புண்ணியனே ஏகபெ ருந்தகை யாயபெம்மான் எம்மிறை யேயிது என்கொல்சொல்லாய் மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே.
சந்தள றேறுத டங்கொள்கொங்கைத் தையலொ
டுந்தள ராதவாய்மைப்
புந்தியி னான்மறை யோர்களேத்தும் புகலி
நிலாவிய புண்ணியனே
எந்தமை யாளுடை யீசனம்மான் எம்மிறை
யேயிது என்கொல்சொல்லாய்
வெந்தவெண் நீறணி வார்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே.
சங்கொளி யிப்பி சுறாமகரந் தாங்கிநிரந்து
தரங்க மேன்மேற் பொங்கொலி நீர்சுமந் தோங்குசெம்மைப் புகலி
நிலாவிய புண்ணியனே

திருப்புகலியும் திருவிழிமிழலையும் : பண் நட்டிபாடை - 7
40.
4.
42.
43.
எங்கள்பி ராணிமை யோர்கள்பெம்மான் எம்மிறை
யேயிது என்கொல்சொல்லாய்
வெங்கதிர் தோய்பொழில் சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே. 6
காமனெ ரிப்பிழம் பாகநோக்கிக் காம்பன
தோளியொ டுங்கலந்து பூமரு நான்முகன் போல்வரேத்தப் புகலி
நிலாவிய புண்ணியனே ஈமவ னத்தெரி யாட்டுகந்த எம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் வீமரு தண்பொழில் சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே. ク
இலங்கையர் வேந்தெழில் வாய்த்ததிண்டோள் இற்றல
றவ்விர லொற்றியைந்து புலங்களைக் கட்டவர் போற்றஅந்தண் புகலி
நிலாவிய புண்ணியனே இலங்கெரி யேந்திநின் றெல்லியாடும் எம்மிறை
யேயிது என்கொல்சொல்லாய் விலங்கலொண் மாளிகை சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே. 8
செறிமுள ரித்தவி சேறியாறுஞ் செற்றதில்
வீற்றிருந் தானுமற்றைப் பொறியர வத்தணை யானுங்காணாப் புகலி
நிலாவிய புண்ணியனே எறிமழு வோடிள மான்கையின்றி யிருந்தபி ரானிது என்கொல்சொல்லாய் வெறிகமழ் பூம்பொழில் சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே. 9
பத்தர் கணம்பணிந் தேத்தவாய்த்த பான்மைய
தன்றியும் பல்சமனும் புத்தரும் நின்றலர் தூற்றஅந்தண் புகலி
நிலாவிய புண்ணியனே எத்தவத் தோர்க்குமி லக்காய்நின்ற எம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் வித்தகர் வாழ்பொழில் சூழ்மிழலை விண்ணிழி
கோயில் விரும்பியதே.

Page 13
8 a திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
44. விண்ணிழி கோயில் விரும்பிமேவும் வித்தக
மென்கொலி தென்றுசொல்லிப்
புண்ணிய னைப்புக லிந்நிலாவு பூங்கொடி
யோடிருந் தானைப்போற்றி
நண்ணிய கீர்த்தி நலங்கொள்கேள்வி நான்மறை
ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணியல் பாடல்வல் லார்களிந்தப் பாரொடு
விண்பரி பாலகரே.
திருச்சிற்றம்பலம்
5. கீழைத்திருக்காட்டுப்பள்ளி : பண் - நட்டபாடை
45. செய்யரு கேபுனல் பாயவோங்கிச் செங்கயல்
பாயச் சிலமலர்த்தேன்
கையரு கேகனி வாழையின்று கானலெல்
லாங்கமழ் காட்டுப்பள்ளிப்
பையரு கேயழல் வாயவைவாய்ப் பாம்பணை
யான்பணைத் தோளிபாகம்
மெய்யரு கேயுடை யானையுள்கி விண்டவர்
ஏறுவர் மேலுலகே.
46. திரைகளெல் லாமல ருஞ்சுமந்து செழுமணி
முத்தொடு பொன்வரன்றிக்
கரைகளெல் லாமணி சேர்ந்துரிஞ்சிக் காவிரி
கால்பொரு காட்டுப்பள்ளி
உரைகளெல் லாமுணர் வெய்திநல்ல வுத்தம
ராயுயர்ந் தாருலகில்
அரவமெல் லாமரை யார்த்தசெல்வர்க் காட்செய
அல்ல லறுக்கலாமே.
47. தோலுடை யான்வண்ணப் போர்வையினுன் சுண்ணவெண்
ணிறு துதைந்திலங்கு நூலுடை யானிமை யோர்பெருமான் நுண்ணறி
வால்வழி பாடுசெய்யுங்
காலுடை யான் கரி தாயகண்டன்
காதலிக்கப்படுங் காட்டுப்பள்ளி
மேலுடை யானிமை யாதமுக்கண் மின்னிடை
பாளொடும் வேண்டினானே.

கீழைத்திருக்காட்டுப்பள்ளி : பண் - நட்பாடை 9
48.
49.
s
சலசல சந்தகி லோடுமுந்திச் சந்தன மேகரை சார்த்தியெங்கும் பலபல வாய்த்தலை யார்த்துமண்டிப் பாய்ந்திழி
asmirə97rfhu"ü Lumittilassnifesörəhurrüasis கலகல நின்றதி ருங்கழலான் காதலிக்
கப்படுங் காட்டுப்பள்ளிச் சொலவல தொண்டர்க ளேத்தநின்ற சூலம்வல்
லான்கழல் சொல்லுவோமே. 4.
தளையவிழ் தண்ணிற நீலநெய்தல் தாமரை
செங்கழு நீருமெல்லாங் களையவி ழுங்குழ லார்கடியக் காதலிக்
கப்படுங் காட்டுப்பள்ளித் துளைபயி லுங்குழல் யாழ்முரலத் துன்னிய
இன்னிசை யாற்றுதைந்த அளைபயில் பாம்பரையார்த்த செல்வர்க் காட்செய
அல்ல லறுக்கலாமே.
முடிகையி னாற்றொடு மோட்டுழவர் முன்கைத்
தருக்கைக் கரும்பின்கட்டிக்
கடிகையி னாலெறி காட்டுப்பள்ளி காதல்செய்
தான்கரி தாயகண்டன்
பொடியணி மேனியி னானையுள்கிப் போதொடு
நீர்சுமந் தேத்திமுன்னின்று
அடிகையி னாற்றொழ வல்லதொண்டர் அருவினையைத்துரந்
தாட்செய் வாரே. 6
பிறையுடை யான்பெரி யோர்கள்பெம்மான் பெய்கழல் /*
நாடொறும் பேணியேத்த
மறையுடை யான்மழு வாளுடையான் வார்தரு
DroidsL-6i Sesaf(p6tyu
கறையுடை யான்கன லாடுகண்ணாற் காமனைக்
காய்ந்தவன் காட்டுப்பள்ளிக் குறையுடை யான்குறட் பூதச்செல்வன் குரைகழ
லேகைகள் கூப்பினோமே.

Page 14
*0 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
52. செற்றவர் தம்மர ணம்மவற்றைச் செவ்வழல்
வாயெரியூட்டி நின்றுங் கற்றவர் தாந்தொழு தேத்தநின்றான் காதலிக்
கப்படுங் காட்டுப்பள்ளி உற்றவர் தாமுணர் வெய்திநல்ல வும்பருள்
ளார்தொழு தேத்தநின்ற பெற்றம ரும்பெரு மானையல்லாற் பேசுவது
மற்றோர் பேச்சிலோமே. 8
53. ஒண்துவ ரார்துகி லாடைமெய்போர்த் துச்சிகொ
ளாமையுண் டேயுரைக்குங்
குண்டர்க ளோடரைக் கூறையில்லார் கூறுவ
தாங்குண மல்லகண்டீர்
அண்டம றையவன் மாலுங்காணா ஆதியி
னானுறை காட்டுப்பள்ளி
வண்டம ரும்மலர்க் கொன்றைமாலை வார்சடை
யான்கழல் வாழ்த்துவோமே. 9
54. பொன்னியல் தாமரை நீலநெய்தல் போதுகளாற்பொலி
வெய்து பொய்கைக்
கன்னியர் தாங்குடை காட்டுப்பள்ளிக் காதல
னைக்கடற் காழியர்கோன்
துன்னிய இன்னிசை யாற்றுதைந்து சொல்லிய
ஞானசம் பந்தனல்ல
தன்னிசை யாற்சொன்ன மாலைபத்துந் தாங்கவல்
லார்புகழ் தாங்குவாரே. ፲0
திருச்சிற்றம்பலம்
0 0 000
6. திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் :
பண் - நட்டபாடை
வினாவுரை
تیر 55. அங்கமும் வேதமும் ஒதுநாவர் அந்தணர்
நாளு மடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய் செங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்

திருமருகலும் திருச்செங்காட்டங்குடியும் : பண் நட்டபாடை உ11
56.,
57.
58.
59.
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே.
நெய்தவழ் மூவெரி காவலோம்பு நேர்புரி
நூன்மறை யாளரேத்த மைதவழ் மாட மலிந்தவீதி மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய் செய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் கைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே. 2
தோலொடு நூலிழை சேர்ந்தமார்பர் தொகுமறையோர்கள்
வளர்த்த செந்தீ மால்புகை போய்விம்மு மாடவீதி மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய் சேல்புல்கு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் கால்புல்கு பைங்கழ லார்க்கஆடுங் கணபதி
யீச்சரங் காமுறவே. 3
நாமரு கேள்வியர் வேள்வியோவா நான்மறை
யோர்வழி பாடுசெய்ய மாமரு வும்மணிக் கோயில்மேய மருகல் நிலாவிய மைந்தசொல்லாய் தேமரு பூம்பொழிற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் காமரு சீர்மகிழ்ந் தெல்லியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே. 4.
பாடல் முழவும் விழவுமோவாப் பன்மறை
யோரவர் தாம்பரவ மாட நெடுங்கொடி விண்தடவு மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய் சேடக மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் காடக மேயிட மாகஆடுங் கணபதி
யீச்சரங் காமுறவே.

Page 15
12 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
60.
6.
62.
63.
64.
புனையழ லோம்புகை பந்தணாளர் பொன்னடி
நாடொறும் போற்றிசைப்ப
மனைகெழு மாடம் மலிந்தவிதி மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய்
சினைகெழு தண்வயற் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்
கனைவளர் கூரெரி யேந்தியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே.
பூண்டங்கு மார்பி னிலங்கைவேந்தன் பொன்னெடுத்
தோள்வரை யாலடர்த்து மாண்டங்கு நூன்மறை யோர்பரவ மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய் சேண்டங்கு மாமலர்ச் சோலைசூழ்ந்த சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் காண்டங்கு தோள்பெயர்த் தெல்லியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே. -
அந்தமு மாதியும் நான்முகனு மரவணை
யானு மறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர் மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ் சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்
கந்த மகிற்புகை யேகமழுங் கணபதி
யீச்சரங் காமுறவே.
இலைமரு தேய்ழ காகநாளு மிடுதுவர்க்
காயொடு சுக்குத்தின்னும்
நிலையமண் தேரரை நீங்கிநின்று நீதரல்
லார்தொழும் LonrLDCuj56ü
மலைமகள் தோள்புணர் வாயருளாய் மாசில்செங்
காட்டங் குடியதனுள்
கலைமல்கு தோலுடுத் தெல்லியாடுங் கணபதி
யீச்சரங் காமுறவே.
நாலுங் குலைக்கமு கோங்குகாழி ஞானசம்
பந்தன் நலந்திகழும்
மாலின் மதிதவழ் மாடமோங்கு மருகலின்
மற்றதன் மேல்மொழிந்த
67

திருநள்ளரும் திருஆலவாயும் : பண் - நட்டயாடை 13
சேலுங் கயலுந் திளைத்தகண்ணார் சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள் சூலம்வல் லான்கழலேத்து பாடல் சொல்லவல்
லார்வி6ை யில்லையாமே. I
திருச்சிற்றம்பலம்
0 0 d d
7. திருநள்ளாறும் திருஆலவாயும் : பண் - நட்டயாடை
வினாவுரை
多
65. பாடக மெல்லடிப் பாவையோடும் படுபிணக்
காடிடம் பற்றிநின்று நாடக மாடுநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் சூடக முன்கை மடந்தைமார்கள் துணைவு
ரொடுந்தொழு தேத்திவாழ்த்த ஆடக மாட நெருங்குகூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. I
66. திங்களம் போதுஞ் செழும்புனலுஞ் செஞ்சடை
மாட்டயல் வைத்துகந்து
நங்கண் மகிழுநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய்
பொங்கிள மென்முலை யார்களோடும் புண்மயில்
ஆட நிலாமுளைக்கும்
அங்கழ கச்சுதை மாடக்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. 2
67. தண்ணறு மத்தமுங் கூவிளமும் வெண்டலை
மாலையுந்தாங்கி யார்க்கும்
நண்ண லரியநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய்
புண்ணிய வாணரும் மாதவரும் புகுந்துட
னேத்தப் புனையிழையார்
அண்ணலின் பாட லெடுக்குங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. − 3

Page 16
14 a
68.
69.
70.
Z.
72.
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
பூவினில் வாசம் புனலிற் பொற்புப்
புதுவிரைச் சாந்தினினாற்றத்தோடு
நாவினிற் பாடல்நள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய்
தேவர்கள் தானவர் சித்தர்விச்சாதரர்கணத்
தோடுஞ் சிறந்துபொங்கி
ஆவினி லைந்துகந் தாட்டுங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே.
செம்பொன்செய் மாலையும் வாசிகையுந் திருந்து
புகையுமவியும் பாட்டும் நம்பும் பெருமைநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் உம்பரு நாகரு லகந்தானு மொலிகடல்
சூழ்ந்த வுலகத்தோரும் அம்புத நால்களால் நீடுங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே.
பாகமுந் தேவியை வைத்துக்கொண்டு பைவிரி
துத்திப்பரிய பேழ்வாய் நாகமும் பூண்டநள் ளாறுடைய நம்பெரு மானிது என்கொல்சொல்லாய் போகமு நின்னை மனத்து வைத்துப்புண்ணியர்
நண்ணும் புணர்வுபூண்ட ஆகமு டையவர் சேருங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே.
கோவண ஆடையு நீறுப்பூச்சுங் கொடுமழு
ஏந்தலுஞ் செஞ்சடையும் நாவணப் பாட்டுநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் பூவண மேனி யிளையமாதர் பொன்னும்
மணியுங் கொழித்தெடுத்து ஆவண வீதியி லாடுங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே.
இலங்கை யிராவணன் வெற்பெடுக்க எழில்விர
லூன்றி யிசைவிரும்பி
நலங்கொளச் சேர்ந்தநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய்

திருநள்ளரும் திருஆலவாயும் : பண் - நட்டபாடை 15
73.
74.
Z5.
தே-2
புலன்களைச் செற்றுப் பொறியைநீக்கிப் புந்தியி
லுந்நினைச் சிந்தைசெய்யும்
அலங்கல்நல் லார்க ளமருங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. 8
பணியுடை மாலும் மலரினோனும் பன்றியும்
வென்றிப் பறவையாயும் நணுக லரியநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய் மணியொலி சங்கொலி யோடுமற்றை மாமுர
சின்னொலி யென்றுமோவா தணிகிளர் வேந்தர் புகுதுங்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. 9
தடுக்குடைக் கையருஞ் சாக்கியருஞ் சாதியில்
நீங்கிய வத்தவத்தர் நடுக்குற நின்றநள் ளாறுடைய நம்பெரு
மானிது என்கொல்சொல்லாய், எடுக்கும் விழவுந்நன் னாள்விழவு மிரும்பலி
யின்பினோ டெத்திசையும், அடுக்கும் பெருமைசேர் மாடக்கூடல் ஆலவா
யின்க ணமர்ந்தவாறே. Ό
அன்புடை யானை யரனைக்கூடல் ஆலவாய்
மேவிய தென்கொலென்று நன்பொனை நாதனை நள்ளாற்றானை நயம்புெறப்
போற்றி நலங்குலாவும் பொன்புடை சூழ்தரு மாடக்காழிப் பூசுரன்
ஞானசம் பந்தன்சொன்ன இன்புடைப் பாடல்கள் பத்தும்வல்லா ரிமையவ
ரேத்த இருப்பர்தாமே.
திருச்சிற்றம்பலம்
td (d. 00 0

Page 17
18°
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
76.
77.
78.
79.
80.
8. திருஆவூர்ப் பசுபதீச்சரம் : பண் - நட்டபாடை
புண்ணியர் பூதியர் பூதநாதர் புடைபடுவார்தம்
மனத்தார் திங்கட்
கண்ணிய ரென்றென்று காதலாளர் கைதொழு
தேத்த இருந்தவூராம்
விண்ணுயர் மாளிகை மாடவீதி விரைகமழ்
சோலைசு லாவியெங்கும்
பண்ணியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
முத்தியர் மூப்பில ராப்பினுள்ளார் முக்கணர்
தக்கன்றன் வேள்விசாடும்
அத்திய ரென்றென் றடியரேத்தும் ஐய
னணங்கொ டிருந்தவூராம்
தொத்திய லும்பொழில் மாடுவண்டு துதைந்தெங்குந்
தூமதுப் பாயக்கோயிற்
பத்திமைப் பாடல றாதஆவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
பொங்கி வரும்புனல் சென்னிவைத்தார் போம்வழி
வந்திழி வேற்றமானார்
இங்குயர் ஞானத்தர் வானோரேத்தும் இறையவ
ரென்றுமி ருந்தவூராம்
தெங்குயர் சோலைசே ராலைசாலி திளைக்கும்
விளைவயல் சேரும்பொய்கைப்
பங்கய மங்கை விரும்புமாவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
தேவியோர் கூறின ரேறதேறுஞ் செலவினர்
நல்குரவென்னை நீக்கும்
ஆவிய ரந்தண ரல்லல்தீர்க்கும் அப்பனா
ரங்கே யமர்ந்தவூராம்
பூவிய லும்பொழில் வாசம்வீசப் புரிகுழ
லார்சுவ டொற்றிமுற்றப்
பாவியல் பாடல றாதஆவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
இந்தணை யுஞ்சடை யார்விடையா ரிப்பிறப்
பென்னை யறுக்கவல்லார் வந்தணைந் தின்னிசை பாடுவார்பால் மன்னினர்

திருஆவூர்ப் பசுபதீச்சரம் : பண் நட்டப்ாடை 17
8.
82.
83.
84.
மன்னி யிருந்தவூராம் கொந்தணை யுங்குழ லார்விழவிற் கூட்ட
மிடையிடை சேரும்வீதிப் பந்தணை யும்விர லார்தமாவூர்ப் பசுபதி
uffergrub பாடுநாவே.
குற்ற மறுத்தார் குணத்தினுள்ளார் கும்பிடு
வார்தமக் கன்புசெய்வார்
ஒற்றை விடையினர் நெற்றிக்கண்ணா ருறைபதி
யாகுஞ் செறிகொள்மாடம்
சுற்றிய வாசலின் மாதர்விழாச் சொற்கவி
பாடநி தானம்நல்கப்
பற்றிய கையினர் வாழுமாவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
நிறுடை யார்நெடு மால்வணங்கு நிமிர்சடை
யார்நினை வார்தமுள்ளம் கூறுடை யாருடை கோவணத்தார் குவலய
மேத்த இருந்தவூராம் தாறுடை வாழையிற் கூழைமந்தி தகுகனி
யுண்டுமிண் டிட்டினத்தைப்
பாறிடப் பாய்ந்துப யிலுமாவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
வெண்டலை மாலை விரவிப்பூண்ட மெய்யுடை
யார்விற லாரரக்கன்
வண்டமர் பூமுடி செற்றுகந்த மைந்தரி
டம்வள மோங்கியெங்கும்
கண்டவர் சிந்தைக் கருத்தின்மிக்கார் கதியரு
ளென்றுகை யாரக்கூப்பிப்
பண்டலர் கொண்டு பயிலுமாவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே.
மாலு மயனும் வணங்கிநேட மற்றவ
ருக்கெரி யாகிநீண்ட சில மறிவரி தாகிநின்ற செம்மையி
னாரவர் சேருமூராம் கோல விழாவி னரங்கதேறிக் கொடியி.ை
மாதர்கள் மைந்தரோடும் பாலென வேமொழிந் தேத்துமாவூர்ப் பசுபதி
பீச்சரம் பாடுநாவே.

Page 18
18 a
86.
87.
88.
89.
90.
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
பின்னிய தாழ்சடை யார்பிதற்றும் பேதைய
ராஞ்சமண் சாக்கியர்கள் தன்னிய லும்முரை கொள்ளகில்லாச் சைவ
ரிடந்தள வேறுசோலைத் துன்னிய மாதரு மைந்தர்தாமுஞ் சுனையிடை
மூழ்கித் தொடர்ந்தசிந்தைப் பன்னிய பாடல் பயிலுமாவூர்ப் பசுபதி
யீச்சரம் பாடுநாவே. ፲0
எண்டிசை யாரும்வ ணங்கியேத்தும் எம்பெரு
மானையெழில்கொ ளாவூர்ப், பண்டுரி யார்சிலர் தொண்டர் போற்றும் பசுபதி
யீச்சரத் தாதிதன்மேல், கண்டல்கண் மிண்டிய கானற்காழிக் கவுணியன்
ஞானசம் பந்தன்சொன்ன, கொண்டினி தாவிசை பாடியாடிக் கூடும
வருடை யார்கள்வானே. 11
திருச்சிற்றம்பலம்
0 00
9. திருவேனுபுரம் : பண் - நட்டபாடை
வண்டார்குழ லரிவையொடு பிரியாவகை பாகம் பெண்டான்மிக வானான்பிறைச் சென்னிப்பெரு மானூர் தண்டாமரை மலராளுறை தவளந்நெடு மாடம் விண்டாங்குவ போலும்மிகு வேணுபுர மதுவே.
படைப்புந்நிலை யிறுதிப்பயன் பருமையொடு நேர்மை கிடைப்பல்கண முடையான்கிறி பூதப்படை யானுரர் புடைப்பாளையின் கமுகின்னொடு புன்னைமலர் நாற்றம் விடைத்தேவரு தென்றல்மிகு வேணுபுர மதுவே. 2
கடந்தாங்கிய கரியையவர் வெருவவுரி போர்த்துப் படந்தாங்கியப் அரவக்குழைப் பரமேட்டிதன் பழவூர் நடந்தாங்கிய நடையார்நல பவளத்துவர் வாய்மேல் விடந்தாங்கிய கண்ணார்பயில் வேணுபுர மதுவே.
தக்கன்றன சிரமொன்றினை யரிவித்தவன் றனக்கு மிக்கவ்வர மருள்செய்தனம் விண்ணோர்பெரு மானூர்

திருவண்ணாமலை : பண் நட்டயாடை 19
91.
92.
93.
94.
95.
96.
97.
பக்கம்பல மயிலாடிட மேகம்முழ வதிர மிக்கம்மது வண்டார்பொழில் வேணுபுர மதுவே. 4.
நானாவித வுருவாய்நமை யாள்வான்நனு காதார் வானார்திரி புரமூன்றெரி யுண்ணச்சிலை தொட்டான் தேனார்ந்தெழு கதலிக்கனி யுண்பான்திகழ் மந்தி மேனோக்கிநின் றிறங்கும்பொழில் வேணுபுர மதுவே.
மண்ணோர்களும் விண்ணோர்களும் வெருவிம்மிக அஞ்சக் கண்ணார்சல மூடிக்கட லோங்கவ்வுயர்ந் தானுரர் தண்ணார்நறுங் கமலம்மலர் சாயவ்விள வாளை விண்ணார்குதி கொள்ளும்வியன் வேணுபுர மதுவே. 67
மலையான்மக ளஞ்சவ்வரை யெடுத்தவ்வலி யரக்கன் தலைதோளவை நெரியச்சர ணுகிர்வைத்தவன் றன்னூர் கலையாறொடு சுருதித்தொகை கற்றோர்மிகு கூட்டம் விலையாயின சொற்றேர்தரு வேணுபுர மதுவே. 8
வயமுண்டவ மாலும்மடி காணாதல மாக்கும் பயனாகிய பிரமன்படு தலையேந்திய பரனூர் கயமேவிய சங்கந்தரு கழிவிட்டுயர் செந்நெல் வியன்மேவிவந் துறங்கும்பொழில் வேணுபுர மதுவே. 9
மாசேறிய வுடலாரமண் குழுக்கள்ளொடு தேரர் தேசேறிய பாதம்வணங் காமைத்தெரி யானுரர் துரசேறிய வல்குற்றுடி யிடையார்துணை முலையார் வீசேறிய புருவத்தவர் வேணுபுர மதுவே. 0.
வேதத்தொலி யானும்மிகு வேணுபுரந் தன்னைப் பாதத்தினின் மனம்வைத்தெழு பந்தன்தன பாடல்
ஏதத்தினை யில்லாவிவை பத்தும்மிசை வல்லார் ,ኑዕዩ கேதத்தினை யில்லார்சிவ கெதியைப்பெறு வாரே.
திருச்சிற்றம்பலம்
10. திருவண்ணாமலை : பண் - நட்டபாடை
உண்ணாமுலை யுமையாளொடு முடனாகிய வொருவன் பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும் அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ண மறுமே.

Page 19
20 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
98. தேமாங்கனி கடுவன்கொள விடுகொம்பொடு தீண்டித்
துரமாமழை துறுவன்மிசை சிறுநுண்டுளி சிதற ஆமாம்பிணை யணையும்பொழி லண்ணாமலை யண்ணல் பூமாங்கழல் புனைசேவடி நினைவார்வினை யிலரே.
99. பீலிம்மயில் பெடையோடுறை பொழில்சூழ்கழை முத்தம்
சூலிம்மணி தரைமேனிறை சொரியும்விரி சாரல் ஆலிம்மழை தவழும்பொழி லண்ணாமலை யண்ணல் காலன்வலி தொலைசேவடி தொழுவாரன புகழே.
100. உதிரும்மயி ரிடுவெண்டலை கலனாவுல கெல்லாம் எதிரும்பலி யுணலாகவு மெருதேறுவ தல்லால் முதிருஞ்சடை யிளவெண்பிறை முடிமேல்கொள அடிமேல் அதிருங்கழ லடிகட்கிட மண்ணாமலை யதுவே.
101. மரவஞ்சிலை தரளம்மிகு மணியுந்துவெள் ளருவி
அரவஞ்செய முரவம்படு மண்ணாமலை யண்ணல் உரவஞ்சடை யுலவும்புன லுடனாவது மோரிார் குரவங்கமழ் நறுமென்குழ லுமைபுல்குதல் குணமே.
102. பெருகும்புன லண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் பருகுந்தனை துணிவார்பொடி யணிவாரது பருகிக் கருகும்மிட நுடையார்கமழ் சடையார்கழல் பரவி உருகும்மனமுடையார்தமக் குறுநோயடை யாவே
103. கரிகாலன குடர்கொள்வன கழுகாடிய காட்டில்
நரியாடிய நகுவெண்டலை யுதையுண்டவை யுருள எரியாடிய இறைவர்க்கிட மினவண்டிசை முரல அரியாடிய கண்ணாளொடு மண்ணாமலை யதுவே.
104. ஒளிறுாபுலி யதளாடைய னுமையஞ்சுதல் பொருட்டால்
பிளிறுகுரல் மதவாரண வதனம்பிடித் துரித்து வெளிறுரபட விளையாடிய விகிர்தன்னிரா வணனை அளறுபட, அடர்த்தானிட மண்ணாமலை யதுவே.
105. விளவார்கனி படநூறிய கடல்வண்ணனும் வேதக்
கிளர்தாமரை மலர்மேலுறை கேடில்புக ழோனும் அளவாவண மழலாகிய அண்ணாமலை யண்ணல் தளராமுலை முறுவல்லுமை தலைவன்னடி சரணே.

திருவிழிமிழலை : பண் - நட்டயாடை 21
106. வேர்வந்துற மாசூர்தர வெயில்நின்றுழல் வாரும் மார்பம்புதை மலிசீவர மறையாவரு வாரும் ஆரம்பர்த முரைகொள்ளண்மின் அண்ணாமலை யண்ணல் கூர்வெண்மழுப் படையான்நல்ல கழல்சேர்வது குணமே. 10
107. வெம்புந்திய கதிரோனொளி விலகும்விரி சாரல்
அம்புந்திமூ வெயிலெய்தவ னண்ணாமலை யதனைக் கொம்புந்துவ குயிலாலுவ குளிர்காழியுள் ஞான சம்பந்தன தமிழ்வல்லவ ரடிபேணுதல் தவமே, II
திருச்சிற்றம்பலம்
1. திருவிழிமிழலை பண் - நட்டபாடை
108 சடையார்புன லுடையானொரு சரிகோவண முடையான் படையார்மழு வுடையான்பல பூதப்படை யுடையான் மடமான்விழி யுமைமாதிட முடையானெனை யுடையான் விடையார்கொடி யுடையானிடம் விழிம்மிழ லையே.
109. ஈறாய்முத லொன்றாயிரு பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு பூதம்மவை ஐந்தாய் ஆறார்சுவை யேழோசையொ டெட்டுத்திசை தானாய் வேறாயுட னானானிடம் விழிம்மிழ லையே. 2
10. வம்மின்னடி யீர்நாண்மல ரிட்டுத்தொழு துய்ய
உம்மன்பினொ டெம்மன்புசெய் தீசன்னுறை கோயில் மும்மென்றிசை முரல்வண்டுகள் கெண்டித்திசை யெங்கும் விம்மும்பொழில் சூழ்தண்வயல் விழிம்மிழ லையே. 3
11. பண்ணும்பத மேழும்பல வோசைத்தமி ழவையும்
உண்ணின்றதொர் சுவையும்முறு தாளத்தொலி பலவும் மண்ணும்புன லுயிரும்வரு காற்றுஞ்சுடர் மூன்றும் விண்ணும்முழு தானானிடம் விழிம்மிழ லையே. 4
12. ஆயாதன சமயம்பல அறியாதவ னெறியின்
தாயானவ னுயிர்கட்குமுன் றலையானவன் மறைமுத் தீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர் மேயானவ னுறையும்மிடம் விழிம்மிழ லையே.

Page 20
22 m
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
13.
114.
16.
7.
118.
9.
கல்லால்நிழற் கீழாயிடர் காவாயென வானேர் எல்லாமொரு தேராயயன் மறைபூட்டிநின் றுய்ப்ப வல்லாயெரி காற்றீர்க்கரி கோல்வாசுகி நாண்கல்
வில்லாலெயி லெய்தானிடம் விழிம்மிழ லையே. 6
கரத்தான்மலி சிரத்தான்கரி யுரித்தாயதொர் படத்தான் புரத்தார்பொடி படத்தன்னடி பணிமூவர்கட் கோவா வரத்தான்மிக அளித்தானிடம் வளர்புன்னைமுத் தரும்பி விரைத்தாதுபொன் மணியீன்றணி விழிம்மிழ லையே. ク
முன்னிற்பவ ரில்லாமுர ணரக்கன்வட கயிலை தன்னைப்பிடித் தெடுத்தான்முடி தடந்தோளிற வூன்றிப் பின்னைப்பணிந் தேத்தப்பெரு வாள்பேரொடுங் கொடுத்த மின்னிற்பொலி சடையானிடம் விழிம்மிழ லையே. 8
பண்டேழுல குண்டானவை கண்டானுமுன் னறியா ஒண்டீயுரு வானானுறை கோயில்நிறை பொய்கை வண்டாமரை மலர்மேல்மட அன்னம்நடை பயில வெண்டாமரை செந்தாதுதிர் விழிம்மிழ லையே. 9
மசங்கற்சமண் மண்டைக்கையர் குண்டக்குண மிலிகள் இசங்கும்பிறப் பறுத்தானிட மிருந்தேன்களித் திரைத்துப் பசும்பொற்கிளி களிமஞ்ஞைகள் ஒளிகொண்டெழு பகலோன் விசும்பைப்பொலி விக்கும்பொழில் விழிம்மிழ லையே. O
விழிம்மிழ லைம்மேவிய விகிர்தன்றனை விரைசேர்
காழிந்நகர்க் கலைஞானசம் பந்தன்தமிழ் பத்தும்
யாழின்னிசை வல்லார்சொலக் கேட்டாரவ ரெல்லாம்
ஊழின்மலி வினைபோயிட வுயர்வானடை வாரே. I
திருச்சிற்றம்பலம்
0 0 000
12. திருமுதுகுன்றம் : Li60). -- pri:LLIATGODL
மத்தாவரை நிறுவிக்கடல் கடைந்தவ்விட முண்ட தொத்தார்தரு மணிநீண்முடிச் சுடர்வண்ணன திடமாம் கொத்தார்மலர் குளிர்சந்தகி லொளிர்குங்குமங் கொண்டு முத்தாறுவந் தடிவீழ்தரு முதுகுன்றடை வோமே.

திருமுதுகுன்றம் : பண் - நட்டபாடை உ23
120. தழையார்வட வியவிதனில் தவமேபுரி சைவன்
இழையாரிடை மடவாளொடு மினிதாவுறை யிடமாம் மழைவானிடை முழவவ்வெழில் வளைவாளுகி ரெரிகண் முழைவாளரி குமிறும்முயர் முதுகுன்றடை வோமே. 2
121. விளையாததொர் பரிசில்வரு பசுபாசவே தனையொண்
தளையாயின தவிரவ்வருள் தலைவன்னது சார்பாம் களையார்தரு கதிராயிர முடையவ்வவ னோடு முளைமாமதி தவழும்முயர் முதுகுன்றடை வோமே. 3
122. சுரர்மாதவர் தொகுகின்னர ரவரோதொலை வில்லா
நரரானபன் முனிவர்தொழ விருந்தானிடம் நலமார் அரசார்வர வணிபொற்கல னவைகொண்டுபன் னாளும் முரசார்வரு மணமொய்ம்புடை முதுகுன்றடை வோமே. 4.
123. அறையார்கழ லந்தன்றனை யயில்மூவிலை யழகார் கறையார்நெடு வேலின்மிசை யேற்ருனிடங் கருதில் மறையாயின பலசொல்லியொண் மலர்சாந்தவை கொண்டு முறையான்மிகு முனிவர்தொழு முதுகுன்றடை வோமே.
124 ஏவார்சிலை யெயினன்னுரு வாகியெழில் விசயற்
கோவாதவின் னருள்செய்தவெம் மொருவற்கிட முலகில் சாவாதவர் பிறவாதவர் தவமேமிக வுடையார் மூவாதபன் முனிவர்தொழு முதுகுன்றடை வோமே. 6
125 தழல்சேர்தரு திருமேனியர் சசிசேர்சடை முடியர்
மழமால்விடை மிகவேறிய மறையோனுறை கோயில் விழவோடொலி மிகுமங்கையர் தகுமாடக சாலை முழவோடிசை நடமுன்செயு முதுகுன்றடை வோமே. Z
126 செதுவாய்மைகள் கருதிவ்வரை யெடுத்ததிற லரக்கன்
கதுவாய்கள்பத் தலறியிடக் கண்டானுறை கோயில் மதுவாயசெங் காந்தள்மலர் நிறையக்குறை வில்லா முதுவேய்கள்முத் துதிரும்பொழில் முதுகுன்றடை வோமே. 8
127. இயலாடிய பிரமன்னரி யிருவர்க்கறி வரிய
செயலாடிய தீயாருரு வாகியெழு செல்வன் புயலாடுவண் பொழில்சூழ்புனற் படப்பைத்தடத் தருகே முயலோடவெண் கயல்பாய்தரு முதுகுன்றடை வோமே. g

Page 21
4
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
28.
29.
30.
3.
32.
33.
34.
அருகரொடு புத்தரவ ரறியாவரன் மலையான் மருகன்வரு மிடபக்கொடி யுடையானிடம் மலரார் கருகுகுழல் மடவார்கடி குறிஞ்சியது பாடி முருகன்னது பெருமைபகர் முதுகுன்றடை வோமே. O
முகில்சேர்தரு முதுகுன்றுடை யானைம்மிகு தொல்சீர்ப் புகலிந்நகர் மறைஞானசம் பந்தன்னுரை செய்த நிகரில்லன தமிழ்மாலைக ளிசையோடிவை பத்தும் பகரும்மடி யவர்கட்கிடர் பாவம்மடை யாவே.
திருச்சிற்றம்பலம்
{d ed () (d
13. திருவியலூர் : பண் - நட்டபாடை
குரவங்கமழ் நறுமென்குழ லரிவையவள் வெருவப் பொருவெங்கரி படவென்றத னுரிவையுட லணிவோன் அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும் விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே.
ஏறார்தரு மொருவன்பல வுருவன்னிலை யானான் ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான் மாறார்புர மெரியச்சிலை வளைவித்தவன் மடவாள் வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 2
செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும் பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம் உம்மென்றெழு மருவித்திரள் வரைபற்றிட வுரைமேல் விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 3
அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில் மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம் கடையார்தர அகிலார்கழை முத்தந்நிரை சிந்தி
மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 4
எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க் கண்ணார்தரு முருவாகிய கடவுள்ளிட மெனலாம் விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே. t

திருக்கொடுங்குன்றம் : பண் - நட்டபாடை 25
135. வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
திசையுற்றவர் காணச்செரு மலைவானிலை யவனை அசையப்பொரு தசையாவண மவனுக்குயர் படைகள் விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 6
136. மானாரர வுடையானிர வுடையான் பகல்நட்டம்
ஊனார்தரு முயிரானுயர் விசையான்விளை பொருள்கள் தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம் மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. ク
137. பொருவாரெனக் கெதிராரெனப் பொருப்பையெடுத் தான்றன்
கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீண்முடி நெரிந்து சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின் விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 8
38. வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால்
அளம்பட்டறி வொண்ணாவகை யழலாகிய அண்ணல் உளம்பட்டெழு தழற்றுாணதன் நடுவேயொரு வுருவம் விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 9
139. தடுக்காலுடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
பிடக்கேயுரை செய்வாரொடு பேனார்நமர் பெரியோர் கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. O
140. விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன் துளங்கில்தமிழ் பரவித்தொழு மடியாரவ ரென்றும் விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே.
திருச்சிற்றம்பலம்
14. திருக்கொடுங்குன்றம் : பண் - நட்டபாடை
14. வானிற்பொலி வெய்தும்மழை மேகங்கிழித் தோடிக்
கூனற்பிறை சேருங்குளிர் சாரற்கொடுங் குன்றம் ஆணிற்பொலி வைந்தும்மமர்ந் தாடியுல கேத்தத் தேனிற்பொலி மொழியாளொடு மேயான்றிரு நகரே.

Page 22
26 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
142.
143.
144.
45.
146.
147.
148.
149.
மயில்புல்குதண் பெடையோடுட னாடும்வளர் சாரல்
குயிலின்னிசை பாடுங்குளிர் சோலைக்கொடுங் குன்றம் அயில்வேல்மலி நெடுவெஞ்சுட ரனலேந்திநின் றாடி
எயில்முன்பட எய்தானவன் மேயவ்வெழில் நகரே. 2
மிளிரும்மணி பைம்பொன்னொடு விரைமாமல ருந்திக் குளிரும்புனல் பாயுங்குளிர் சாரற்கொடுங் குன்றம் கிளர்கங்கையொ டிளவெண்மதி கெழுவுஞ்சடை தன்மேல் வளர்கொன்றையு மதமத்தமும் வைத்தான்வள நகரே. 3.
பருமாமத கரியோடரி யிரியும்விரி சாரல் குருமாமணி பொன்னோடிழி யருவிக்கொடுங் குன்றம் பொருமாவெயில் வரைவிற்றரு கணையிற்பொடி செய்த பெருமானவ னுமையாளொடும் மேவும்பெரு நகரே 4.
மேகத்திடி குரல்வந்தெழ வெருவிவ்வரை யிழியும் கூகைக்குல மோடித்திரி சாரற்கொடுங் குன்றம் நாகத்தொடு மிளவெண்பிறை சூடிந்நல மங்கை பாகத்தவ னிமையோர்தொழ மேவும்பழ நகரே.
கைம்மாமத கரியின்னின மிடியின்குர லதிரக் கொய்ம்மாமலர்ச் சோலைபுக மண்டுங்கொடுங் குன்றம் அம்மானென வுள்கித்தொழு வார்கட்கருள் செய்யும் பெம்மாணவ னிமையோர்தொழ மேவும்பெரு நகரே. 6
மரவத்தொடு மணமாதவி மெளவல்லது விண்ட குரவத்தொடு விரவும்பொழில் சூழ்தண்கொடுங் குன்றம் அரவத்தொடு மிளவெண்பிறை விரவும்மலர்க் கொன்றை நிரவச்சடை முடிமேலுடன் வைத்தானெடு நகரே. 7
முட்டாமுது கரியின்னின முதுவேய்களை முனிந்து குட்டாச்சுனை யவைமண்டிநின் றாடுங்கொடுங் குன்றம் ஒட்டாவரக் கன்றன்முடி யொருபஃதவை யுடனே பிட்டானவ னுமையாளொடு மேவும்பெருநகரே. 59
அறையும்மரி குரலோசையை யஞ்சியடு மானை குறையும்மன மாகிம்முழை வைகுங்கொடுங் குன்றம் மறையும்மவை யுடையானென நெடியானென விவர்கள் இறையும்மறி, வொண்ணாதவன் மேயவ்வெழில் நகரே. 9

திருநெய்த்தானம் : பண் - நட்டபாடை உ27
50.
51.
I52.
55.
ss.
மத்தக்களி றாளில்வர வஞ்சிம்மலை தன்னைக் குத்திப்பெரு முழைதன்னிடை வைகுங்கொடுங் குன்றம் புத்தரொடு பொல்லாமனச் சமணர்புறங் கூறப் பத்தர்க்கருள் செய்தானவன் மேயபழ நகரே. 0.
கூனற்பிறை சடைமேல்மிக வுடையான்கொடுங் குன்றைக் கானற்கமு மலமாநகர்த் தலைவன்னல கவுணி ஞானத்துயர் சம்பந்தன நலங்கொள்தமிழ் வல்லார் ஊனத்தொடு துயர்தீர்ந்துல கேத்தும்மெழி லோரே.
திருச்சிற்றம்பலம்
15. திருநெய்த்தானம் : பண் - நட்டபாடை
மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடிய கேடில்கரி யுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிட நெய்த்தானமெ ணிரே.
பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் பிறையும்புன லரவும்படு சடையெம்பெரு மானூர் அறையும்புனல் வருகாவிரி யலைசேர்வட கரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ ணிரே. 2
. பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான்
வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான் தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன் நேயாடிய பெருமானிட நெய்த்தானமெ ணிரே. 3
சுடுநீறணி யண்ணற்சுடர் சூலம்மன லேந்தி நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம் கடுவாளிள வரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான் நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ ணிரே. 4.
நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப் பகராவரு புனல்காவிரி பரவிப்பணிந் தேத்தும் நிகரான்மண லிடுதண்கரை நிகழ்வாயநெய்த் தான நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே. め

Page 23
28 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
57.
58.
59.
60.
6.
162.
விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும் உடையார்நறு மாலைசடை யுடையாரவர் மேய புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்ந்தநெய்த் தானம் அடையாதவரென்றும்ம மருகலம்மடை யாரே. 6
நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத் தழலானவ னனலங்கையி லேந்தியழ காய கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித்
தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே. Z
அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் இறையாரமு னெடுத்தானிரு பதுதோளிற வூன்றி நிறையார்புனல் நெய்த்தானன்நல் நிகழ்சேவடி பரவக் கறையார்கதிர் வாளிந்தவர் கழலேத்துதல் கதியே. 8
கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம் காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும் ஞாலம்புக முடியாருட லுறுநோய்நலி யாவே. 9
மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர்
புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின்
நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும் சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே. O
தலமல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் நிலமல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில் பலமல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார் சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே. I
திருச்சிற்றம்பலம்
{d 0 () (d. 8
16. திருப்புள்ளமங்கை திருஆலந்துறை : பண் - நட்டபாடை
63.
பாலுந்துறு திரளாயின பரமன்பிர மன்றான் போலுந்திற லவர்வாழ்தரு பொழில்சூழ்புள மங்கைக் காலன்திற லறச்சாடிய கடவுள்ளிடங் கருதில் ஆலந்துறை தொழுவார்தமை யடையாவினை தானே.

64.
65.
66.
67.
68.
69.
70,
7.
திருப்புள்ளமங்கை திருஆலந்துறை : பண் - நட்பாடை 29
மலையான்மகள் கணவன்மலி கடல்சூழ்தரு தன்மைப் புலையாயின களைவானிடம் பொழில்சூழ்புள மங்கைக் கலையால்மலி மறையோரவர் கருதித்தொழு தேத்த அலையார்புனல் வருகாவிரி யாலந்துறை யதுவே. * 2
கறையார்மிடறுடையான்கமழ் கொன்றைச்சடை முடிமேல் பொறையார்தரு கங்கைப்புன லுடையான்புள மங்கைச் சிறையார்தரு களிவண்டறை பொழில்சூழ் திருவாலந் துறையானவ னறையார்கழல் தொழுமின்துதி செய்தே. 3.
தணியார்மதி யரவின்னொடு வைத்தானிடம் மொய்த்தெம் பணியாயவன் னடியார்தொழு தேத்தும்புள மங்கை மணியார்தரு கனகம்மவை வயிரத்திர ளோடும் அணியார்மண லனைகாவிரி யாலந்துறை யதுவே.
மெய்த்தன்னுறும் வினைதீர்வகை தொழுமின் செழுமலரின் கொத்தின்னொடு சந்தாரகில் கொணர்காவிரிக் கரைமேல் பொத்தின்னிடை யாந்தைபல பாடும்புள மங்கை அத்தன்னமை யாள்வானிட மாலந்துறை யதுவே.
மன்னானவன் னுலகிற்கொரு மழையானவன் பிழையில் பொன்னானவன் முதலானவன் பொழில்சூழ்புள மங்கை என்னானவ னிசையானவ ணிளஞாயிறின் சோதி அன்னானவ னுறையும்மிட மாலந்துறை யதுவே. 6
முடியார்தரு சடைமேல்முளை யிளவெண்மதி சூடிப் பொடியாடிய திருமேனியர் பொழில்சூழ்புள மங்கைக் கடியார்மலர் புனல்கொண்டுதன் கழலேதொழு தேத்தும் அடியார்தமக் கினியானிட மாலந்துறை யதுவே. 7
இலங்கைமனன் முடிதோளிற எழிலார்திரு விரலால் விலங்கல்லிடை யடர்த்தானிடம் வேதம்பயின் றேத்திப் புலன்கள்தமை வென்றார்புக ழவர்வாழ்புற மங்கை அலங்கல்மலி சடையானிட மாலந்துறை யதுவே. 8
செறியார்தரு வெள்ளைத்திரு நீற்றின்திரு முண்டப் பொறியார்தரு புரிநூல்வரை மார்பன்புள மங்கை வெறியார்தரு கமலத்தயன் மாலுந்தனை நாடி அறியாவகை நின்றானிட மாலந்துறை யதுவே. 9

Page 24
30 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
172. நீதியறி யாதாரமண் கையரொடு மண்டைப்
போதியவ ரோதும்முரை கொள்ளார்புள மங்கை ஆதியவர் கோயில்திரு வாலந்துறை தொழுமின் சாதிம்மிகு வானோர்தொழு தன்மைபெற லாமே.
173. பொந்தின்னிடைத் தேனூறிய பொழில்சூழ்புள மங்கை
அந்தண்புனல் வருகாவிரி யாலந்துறை யரனைக் கந்தம்மலி கமழ்காழியுட் கலைஞானசம் பந்தன் சந்தம்மலி பாடல்சொலி யாடத்தவ மாமே. I
திருச்சிற்றம்பலம்
17. திருஇடும்பாவனம் : பண் - நட்டபாடை
74. மனமார்தரு மடவாரொடு மகிழ்மைந்தர்கள் மலர்தூய்த்
தனமார்தரு சங்கக்கடல் வங்கத்திர ஞந்திச் சினமார்தரு திறல்வாளெயிற் றரக்கன்மிகு குன்றில் இனமாதவ ரிறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே.
175. மலையார்தரு மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி நிலையார்தரு நிமலன்வலி நிலவும்புக ழொளிசேர் கலையார்தரு புலவோரவர் காவல்மிகு குன்றில் இலையார்தரு பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே. 2
76. சீலம்மிகு சித்தத்தவர் சிந்தித்தெழு மெந்தை
ஞாலம்மிகு கடல்சூழ்தரு முலகத்தவர் நலமார் கோலம்மிகு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் ஏலங்கமழ் பொழில்சூழ்தரு மிடும்பாவன மிதுவே. 8
177 பொழிலார்தரு குலைவாழைக ளெழிலார்திகழ் போழ்தில்
தொழிலான்மிகு தொண்டரவர் தொழுதாடிய முன்றில் குழலார்தரு மலர்மென்முலை மடவார்மிகு குன்றில் எழிலார்தரு மிறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே. 4
178. பந்தார்விர லுமையாளொரு பங்காகங்கை முடிமேல்
செந்தாமரை மலர்மல்கிய செழுநீர்வயற் கரைமேல் கொந்தார்மலர் புன்னைமகிழ் குரவங்கமழ் குன்றில் எந்தாயென விருந்தானிட மிடும்பாவன மிதுவே.

திருநின்றியூர் : பண் - நட்டபாடை 31
179. நெறிநீர்மையர் நீள்வானவர் நினையுந்நினை வாகி
அறிநீர்மையி லெய்தும்மவர்க் கறியும்மறி வருளிக் குறிநீர்மையர் குணமார்தரு மணமார்தரு குன்றில் எறிநீர்வயல் புடைசூழ்தரு மிடும்பாவன மிதுவே.
180. நீறேறிய திருமேனியர் நிலவும்முல கெல்லாம்
பாறேறிய படுவெண்டலை கையிற்பலி வாங்காக் கூறேறிய மடவாளொரு பாகம்மகிழ் வெய்தி ஏறேறிய இறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே. 7
181 தேரார்தரு திகழ்வாளெயிற் றரக்கன்சிவன் மலையை
ஒராதெடுத் தார்த்தான்முடி யொருபஃதவை நெரித்துக் கூரார்தரு கொலைவாளொடு குணநாமமுங் கொடுத்த ஏரார்தரு மிறைவர்க்கிட மிடும்பாவன மிதுவே. 8
182. பொருளார்தரு மறையோர்புகழ் விருத்தர்பொலி மலிசீர்த்
தெருளார்தரு சிந்தையொடு சந்தம்மலர் பலதுாய் மருளார்தரு மாயன்னயன் காணார்மய லெய்த இருளார்தரு கண்டர்க்கிட மிடும்பாவன மிதுவே. 9
183. தடுக்கையுட னிடுக்கித்தலை பறித்துச்சமண் நடப்பார்
உடுக்கைபல துவர்க்கூறைக ளுடம்பிட்டுழல் வாரும் மடுக்கண்மலர் வயல்சேர்செந்நெல் மலிநீர்மலர்க் கரைமேல் இடுக்கண்பல களைவானிட மிடும்பாவன மிதுவே.
184. கொடியார்நெடு மாடக்குன்ற ரூரிற்கரைக் கோல இடியார்கட லடிவீழ்தரு மிடும்பாவனத் திறையை அடியாயுமந் தணர்காழியு ளணிஞானசம் பந்தன் படியாற்சொன்ன பாடல்சொலப் பறையும்வினை தானே. 11
திருச்சிற்றம்பலம்
0 00 00
18. திருநின்றியூர் : பண் - நட்டபாடை
185. சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும் நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்னிலை யோர்க்கே.
தே-3

Page 25
32 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
86.
187.
188.
89.
ig0.
191.
192.
193.
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில் நச்சம்மிடறுடையார்நறுங் கொன்றைநயந் தாளும் பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 2
பறையின்ன்ொலி சங்கின்னொலி பாங்காரவு மார அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில் உறையும்மிறை யல்லதென துள்ளம் முணராதே. 3
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத் தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில் ஆண்டகழல் தொழிலல்லது அறியாரவ ரறிவே. 4
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும் நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில் அழலின்வல னங்கையது ஏந்தியன லாடுங் கழலின்னொலி யாடும்புரி கடவுள்களை கண்ணே. 5
முரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம் சாரன்மதி யதனெடுடன் சலவஞ்சடை வைத்த
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
ஊரன்கழ லல்லாதென துள்ளமுண ராதே. 6
பற்றியொரு தலைகையினி லேந்திப்பலி தேரும் பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார் சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும் நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்னிலை யாரே. 78
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரின்னிலை யாரெஞ் செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 9
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை அறிவில்சம னாதருரை கேட்டும்மய ராதே நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றி யூரில் மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. ፲0
E

திருக்கழுமலம் : திருவிராகம். பண் - நட்டயாடை 33
94.
99.
196.
፲97.
198.
99.
200.
கரைபொரு திரையொலி கெழுமிய கழுமல மமர்கன லுருவினன்
குன்றம்மது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி பூரை நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன் குன்றாத்தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே.
திருச்சிற்றம்பலம்
0 000 d
19. திருக்கழுமலம் : திருவிராகம். பண் - நட்டபாடை
பிறையணி படர்சடை முடியிடை பெருகிய புனலுடை பவனிறை இறையணி வளையிணை முலையவ ளிணைவன தெழிலுடை யிடவகை கறையணிபொழினிறைவயலணிகழுமலமமர்கனலுருவினன் நறையணிமலர்நறுவிரைபுல்குநலமலிகழல்தொழன்மருவுமே. 1
பிணிபடு கடல்பிற விகளற லெளிதுள ததுபெரு கியதிரை அணிபடு கழுமல மினிதம ரனலுரு வினனவிர் சட்ைமிசை தணிபடு கதிர்வள ரிளமதி புனைவனை யுமைதலை வனைநிற மணிபடு கறைமிடறனைநல மலிகழ லிணைதொழன் மருவுமே. 2
வரியுறு புலியத ஞடையினன் வளர்பறை பொளிகிளர் கதிர்பொதி
விரியுறு சடைவிரை புரைபொழில் விழவொலி மலிகழு மலமமர்
எரியுறு நிறஇறை வனதடி யிரவொடு பகல்பர வுவர்தம தெரியுறு வினைசெறி கதிர்முனை யிருள்கெட தனிநினை வெட்துமதே 3
வினைகெட மனநினை வதுமுடி கெனினனி தொழுதெழு குலமதி புனைகொடி யிடைபொருள் தருபடு களிறின துரிபுதை புடலினன் மனைகுட வயிறுடை யணசில வருகுறள் படையுடை பவன்மலி கனைகட லடைகழு மலமமர் கதிர்மதி யினனதிர் கழல்களே. 4
தலைமதி புனல்விட அரவிவை தலைமைய தொருசடை யிடையுடன் நிலைமரு வவொரிட மருளின னிழன்மழு வினொடழல் கணையினன் மலைமரு வியசிலை தனின்மதி லெரியுண மனமரு வினனல கலைமரு வியபுற வணிதரு கழுமல மினிதமர் தலைவனே. 5
வரைபொரு திழியரு விகள்பல பருகொரு கடல்வரி மணலிடை
அரைபொரு புலியத ஞடையின னடியிணை தொழவரு வினையெனும் உரைபொடி படவுறு துயர்கெட வுயருல கெய்தலொரு தலைமையே. 8

Page 26
34
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
201.
202.
முதிருறு கதிர்வள ரிளமதி சடையனை நறநிறை தலைதனில் உதிருறு மயிர்பிணை தவிர்தசை யுடைபுலி யதளிடை யிருள்கடி கதிருறு சுடரொளி கெழுமிய கழுமல மமர்மழு மலிபடை அதிருறு கழலடி களதடி தொழுமறி வலதறி வறியமே. Z
கடலென நிறநெடு முடியவ னடுதிறல் தெறவடி சரணென அடல்நிறை படையரு எளியபுக ழரவரை யினனணி கிளர்பிறை
விடநிறை மிடறுடை யவன்விரி சடையவன் விடையுடை பவனுமை
203.
Α
204.
205.
206.
207.
உடனுறை பதிகள்தன் மறுகுடை யுயர்கழு மலவியன் நகரதே. 8
கொழுமல ருறைபதி யுடையவ னெடியவ னெனவிவர் களுமவன் விழுமையை யளவறி கிலரிறை விரைபுணர் பொழிலனி விழவமர் கழுமல மமர்கன லுருவின னடியிணை தொழுமவ ரருவினை எழுமையு மிலநில வகைதனி லெளிதிமை யவர்விய லுலகமே. 9
அமைவன துவரிமு கியது.கி லணியுடை யினரம ணுருவர்கள் சமையமு மொருபொரு ளெனுமவை சலநெறி பனஅற வுரைகளும் இமையவர் தொழுகழு மலமம ரிறைவன தடிபர வுவர்தமை நமையல வினைநல னடைதலி லுயர்நெறி நனிநணு குவர்களே. 10
பெருகிய தமிழ்விர கினன்மலி பெயரவ னுறைபினர் திரைபொடு கருகிய நிறவிரி கடலடை கழுமல முறைவிட மெனநனி பெருகிய சிவனடி பரவிய பிணைமொழி யனவொரு பதுமுடன் மருவிய மனமுடை யவர்மதி யுடையவர் விதியுடை யவர்களே. 11
திருச்சிற்றம்பலம்
20. திருவிழிமிழலை : திருவிராகம். பண் - நட்டபாடை
தடநில வியமலை நிறுவியொர் தழலுமிழ் தருபட அரவுகொ டடலசு ரரொடம ரர்களலை கடல்கடை வுழியெழு மிகுசின விடமடை தருமிடறுடையவன் விடைமிசை வருமவ னுறைபதி
திடமலி தருமறை முறையுணர் மறையவர் நிறைதிரு மிழலையே. 1
தரையொடு திவிதல நலிதரு தகுதிற லுறுசல தரன்து வரையன தலைவிசை யொடுவரு திகிரியை அரிபெற அருளினன்
உரைமலி தருசுர நதிமதி பொதிசடை யவனுறை பதிமிகு
திரைமலி கடல்மண லணிதரு பெறுதிடர் வளர்திரு மிழலையே. 2

6Ugarsígaunano : SagańlyTransuh. Lair - Lurun o 35
208.
209.
20,
21.
22.
23.
24.
25.
மலைமகள் தனையிகழ் வதுசெய்த மதியறு சிறுமண வனதுயர் தலையினெ டழலுருவனகர மறமுனி வுசெய்தவ னுற்ைபதி கலைநில வியபுல வர்களிடர் களைதரு கொடைபயில் பவர்மிகு
சிலைமலி மதிள்புடை தழுவிய திகழ்பொழில் வளர்திரு மிழலையே. 3
மருவலர் புரமெரி யினின்மடி தரவொரு கணைசெல நிறுவிய பெருவலி யினனல மலிதரு கரனுர மிகுபின மமர்வன இருளிடை யடையுற வொடுநட விசையுறு பரணினி துறைபதி தெருவினில் வருபெரு விழவொலி மலித்ர வளர்திரு மிழலையே. 4
அணிபெறு வடமர நிழலினி லமர்வொடு மடியிணை. யிருவர்கள் பணிதர அறநெறி மறையொடு மருளிய பரனுறை விடமொளி மணிபொரு வருமர் கததில மலிபுன லணைதரு வயலணி திணிபொழில் தருமண மதுருக ரறுபத முரல்திரு மிழலையே. 5
வசையறு வலிவன சரவுரு வதுகொடு நினைவரு தவமுயல் விசையன திறன்மலை மகளறி வுறுதிற லமர்மிடல் கொடுசெய்து அசைவில படையருள் புரிதரு மவனுறை பதியது மிகுதரு திசையினின் மலர்குல வியசெறி பொழின்மலி தருதிரு மிழலையே. 6
நலமலி தருமறை மொழியொடு நதியுறு புனல்புகை பொளிமுதல்
மலரவை கொடுவழி படுதிறன் மறையவனுயிரது கொளவரு
சலமலி தருமற லிதனுயிர் கெடவுதை செய்தவ னுறைபதி திலகமி தெனவுல குகள்புகழ் தருபொழி லணிதிரு மிழலையே. 7
அரனுறை தருகயி லையைநிலை குலைவது செய்ததச முகனது கரமிரு பதுநெரி தரவிர னிறுவிய கழலடி யுடையவன் வரன்முறை யுலகவை தருமலர் வளர்மறை யவன்வழி வழுவிய சிரமது கொடுபவி திரிதரு சிவனுறை பதிதிரு மிழலையே. 8
அயனொடு மெழிலமர் மலர்மகள் மகிழ்கண னளவிட லொழியவொர் பயமுறு வகைதழ னிகழ்வதொர் படியுரு வதுவர வரன்முறை சயசய வெனுமிகு துதிசெய வெளியுரு வியவவ னுறைபதி செயநில வியமதில் மதியது தவழ்தர வுயர்திரு மிழலையே. 9
இகழுரு வொளுபறி தலைகொடு மிழிதொழில் மலிசமண் விரகின்ர் திகழ்துவ ருடையுடல் பொதிபவர் கெடவடி யவர்மிக வருளிய புகழுடை யிறையுறை பதிபுன லணிகடல் புடைதழு வியபுவி திகழ்சுரர் தருநிகர் கொடையினர் செறிவொடு திகழ்திருமி ழலையே. 10

Page 27
36 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
216.
27.
28.
29.
220.
சினமலி கரியுரி செய்தசிவ னுறைதரு திருமி ழலையைமிகு
தனமனர் சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை யொருபதும் மனமகிழ் வொடுபயில் பவரெழின் மலர்மகள் கலைமகள் சயமகள்
இனமலி புகழ்மக ளிசைதர விருநில னிடையினி தமர்வரே. 11
திருச்சிற்றம்பலம்
0 0 000
21. திருச்சிவபுரம் : திருவிராகம். பண் - நட்டயாடை
புவம்வளி கனல்புனல் புவிகலை யுரைமறை திரிகுண மமர்நெறி திவமலி தருசுரர் முதலியர் திகழ்தரு முயிரவை யவைதம
பவமலி தொழிலது நினைவொடு பதுமநன் மலரது மருவிய சிவனது சிவபுர நினைபவர் செழுநில னினில்நிலை பெருவரே. 1
மலைபல வளர்தரு புவியிடை மறைதரு வழிமலி மனிதர்கள் நிலைமலி சுரர்முத லுலகுகள் நிலைபெறு வகைநினை வொடுமிகும் அலைகடல் நடுவறிதுயிலம ரரியுரு வியல்பர னுறைபதி சிலைமலி மதில்சிவ புரநினை பவர்திரு மகளொடு திகழ்வரே. 2
பழுதில கடல்புடை தழுவிய படிமுத லியவுல குகள்மலி குழுவிய சுரர்பிறர் மனிதர்கள் குலமலி தருமுயி ரவையவை முழுவது மழிவகை நினைவொடு முதலுரு வியல்பர முறைபதி செழுமணி யணிசிவ புரநகர் தொழுமவர் புகழ்மிகு முலகிலே 3
நறைமலி தருமள றொடுமுகை நகுமலர் புகைமிகு வளரொளி நிறைபுனல் கொடுதனை நினைவொடு நியதமும் வழிபடு மடிபவர் குறைவில பதமணை தரவருள் குணமுடை யிறையுறை வனபதி சிறைபுன லமர்சிவ புரமது நினைபவர் செயமகள் தலைவரே. 4
22. சினமலி யறுபகை மிகுபொறி சிதைதரு வகைவளி நிறுவிய
மனனுணர் வொடுமலர் மிசையெழு தருபொருள் நியதமு முணர்பவர்
தனதெழி லுருவது கொடுவடை தகுபர னுறைவது நகர்மதிள் கனமரு வியசிவ புரநினை பவர்கலை மகள்தர நிகழ்வரே. 5
222. சுருதிகள் பலநல முதல்கலை துகளறு வகைபயில் வொடுமிகு
உருவிய லுலகவை புகழ்தர வழியொழு குமெயுறு பொறியொழி அருதவ முயல்பவர் தனதடி யடைவகை நினைபர னுறையபதி " திருவளர் சிவபுர நினைபவர் திகழ்குல னிலனிடை நிகழுமே. 6

திருமறைக்காடு : திருவிராகம், பண் - நட்டயாடை 37
223.
224.
கதமிகு கருவுரு வொடுபுகி ரிடவட வரைகண கணவென மதமிகு நெடுமுக னமர்வளை மதிதிக ழெயிறதனுதிமிசை இதமமர் புவியது நிறுவிய எழிலரி வழிபட வருள்செய்த பதமுடை யவனமர் சிவபுர நினைபவர் நிலவுவர் படியிலே, 7
அசைவுறு தவமுயல் வினிலய னருளினில் வருவலி கொடுசிவன் இசைகயி லையையெழு தருவகை யிருபது கரமவை நிறுவிய நிசிசரன் முடியுடை தரவொரு விரல்பணி கொளுமவ னுறைபதி
திசைமலி சிவபுர நினைபவர் செழுநில னினில்நிகழ்வுடையரே.
225.
226.
227.
228.
229.
அடல்மலி படையரி யயனொடு மறிவரி யதொரழல் மலிதரு சுடருரு வொடுநிகழ் தரவவர் வெருவொடுதுதியது செயவெதிர் விடமலி களதுத லமர்கண துடையுரு வெளிபடு மவன்நகர் திடமலி பொழிலெழில் சிவபுர நினைபவர் வழிபுவி திகழுமே. 9
குணமறி வுகள்நிலை யிலபொரு ஞரைமரு வியபொருள் களுமில திணமெனு மவரொடு செதுமதி மிகுசம ணருமலி தமதுகை உணலுடை யவருணர் வருபர னுறைதரு பதியுல கினில்நல கணமரு வியசிவ புரநினைபவரெழி லுருவுடை யவர்களே. 10
திகழ்சிவ புரநகர் மருவிய சிவனடி யிணைபணி சிரபுர நகரிறை தமிழ்விர கனதுரை நலமலி யொருபதும் நவில்பவர் நிகழ்குல நிலநிறை திருவுரு நிகளில கொடைமிகு சயமகள்
புகழ்புவி வளர்வழி யடிமையின் மிகைபுணர் தரநல மிகுவரே.
திருச்சிற்றம்பலம்
22. திருமறைக்காடு : திருவிராகம். பண் - நட்டபாடை
சிலைதனை நடுவிடை நிறுவியொர்சினமலி யரவதுகொடுதிவி தலமலி சுரரசு ரர்களொலி சலசல கடல்கடை வுழிமிகு கொலைமலி விடமெழஅவருடல் குலைதரவதுருகர் பவனெழில் மலைமலி மதில்புடை தழுவியமறைவன மமர்தரு பரமனே. 1
கரமுத லியஅவ யவமவை கடுவிட வரவது கொடுவரு
' வரன்முறை யணிதரு மவனடல் வலிமிகு புலியத ரூடையினன்
இரவலர் துயர்கெடு வகைநினை யிமையவர் புரமெழில் பெறவளர்
மரநிகர் கொடைமணி தர்கள்பயில் மறைவன மமர்தரு பரமனே. 2

Page 28
38 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
230. இழைவளர் தருமுலை மலைமக ளினிதுறை தருமெழிலுருவினன்
முழையினின் மிகுதுயி லுறுமரி முசிவொடு மெழமுள ரிபொடெழு கழைநுகர் தருகரி யிரிதரு கயிலையின் மலிபவ னிருளுறும் மழைதவழ் தருபொழில் நிலவிய மறைவன மமர்தரு பரமனே. 3
23. நலமிகு திருவித பூழியின்மலர் நகுதலை யொடுகன கியின்முகை
பலசுர நதிபட அரவொடு மதிபொதி சடைமுடி யினன்மிகு தலநில வியமனி தர்களொடு தவமுயல் தருமுனி வர்கள்தம மலமறு வகைமன நினைதரு மறைவன மமர்தரு பரமனே. 4
232. கதிமலி களிறது பிளிறிட வுரிசெய்த அதிகுண னுயர்பசு
பதியதன் மிசைவரு பசுபதி பலகலை யவைமுறை முறையுணர் விதியறி தருநெறி யமர்முனி கணனெடு மிகுதவ முயல்தரு மதிநிபு ணர்கள்வழி படவளர் மறைவன மமர்தரு பரமனே. 5
238. கறைமலி திரிசிகை படையடல் கனல்மழு வெழுதரவெறிமறி முறைமுறை யொலிதமருகமுடை தலைமுகிழ் மலிகணி வடமுகம் உறைதரு கரனுல கினிலுய ரொளிபெறு வகைநினை வொடுமலர் மறையவன் மறைவழி வழிபடு மறைவன மமர்தரு பரமனே. 67
234. இருநில னதுடன லிடைமடி தரவெரி புகவெரி யதுமிகு
பெருவளி யினிலவி தரவளி கெடவிய னிடைமுழு வதுகெட இருவர்க ளுடல்பொறை யொடுதிரி யெழிலுரு வுடையவ னினமலர் மருவிய அறுபத மிசைமுரல் மறைவன மமர்தரு பரமனே. 7
235. சனம்வெரு வுறவரு தசமுக ைெருபது முடியொடு மிருபது
கனமரு வியபுய நெரிவகை கழலடி யிலொர்விர னிறுவினன் இனமலி கணநிசி சரன்மகிழ்வுறவருள் செய்தகருணையனென் மனமகிழ் வொடுமறை முறையுணர் மறைவன மமர்தரு பரமனே. 8
236. அனிமலர் மகள்தலை மகனய னறிவரி யதொர்பரி சினிலெரி
திணிதரு திரளுரு வளர்தர அவர்வெரு வுறலொடு துதிசெய்து பணியுற வெளியுரு வியபர னவனுரை மலிகடல் திரளெழும் மணிவள ரொளிவெயில் மிகுதரு மறைவன மமர்தரு பரமனே9
237. இயல்வழி தரவிது செலவுற இனமயி லிறகுறு தழையொடு
செயல்மரு வியசிறு கடமுடி யடைகையர் தலைபறி செய்துதவம் முயல்பவர் துவர்பட முடல்பொதி பவரறி வருபர னவனணி வயலினில் வளைவள மருவிய மறைவன மமர்தரு பரமனே. 10

திருக்கோலக்கா : பண் - தக்கராகம் 39
238.
239.
240.
24.
242.
243.
244.
வசையறு மலர்மகள் நிலவிய மறைவன மமர்பர மனைநினை பசையொடு மிகுகலை பலபயில் புலவர்கள் புகழ்வழி வளர்தரு இசையமர் கழுமல நகரிறை தமிழ்விர கனதுரை யியல்வல இசைமலி தமிழொரு பதும்வல வவருல கினிலெழில் பெறுவரே. 11
திருச்சிற்றம்பலம்
0 0 000
23. திருக்கோலக்கா : பண் - தக்கராகம்
மடையில் வாளை பாய மாதரார் குடையும் பொய்கைக் கோலக் காவுளான் சடையும் பிறையுஞ் சாம்பற் பூச்சுங்கீழ் உடையுங் கொண்ட வுருவ மென்கொலோ,
பெண்டான் பாக மாகப் பிறைச்சென்னி கொண்டான் கோலக் காவு கோயிலாக் கண்டான் பாதங் கையாற் கூப்பவே உண்டான் நஞ்சை யுலக முய்யவே. 2
பூணற் பொறிகொ ளரவம் புன்சடை கோணற் பிறையன் குழகன் கோலக்கா மாணப் பாடி மறைவல் லானையே பேணப் பறையும் பிணிக ளானவே. 3
தழுக்கொள் பாவந் தளர வேண்டுவீர் மழுக்கொள் செல்வன் மறிசே ரங்கையான் குழுக்கொள் பூதப் படையான் கோலக்கா இழுக்கா வண்ண மேத்தி வாழ்மினே. 4
Du floorrrit Finruu6iv omrGigsstrř LuntasLDmr எயிலார் சாய எரித்த எந்தைதன் குயிலார் சோலைக் கோலக் காவையே பயிலா நிற்கப் பறையும் பாவமே, 5
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர் கடிகொள் கொன்றை கலந்த சென்னியான் கொடிகொள் விழவார் கோலக் காவுளெம் அடிகள் பாத மடைந்து வாழ்மினே. 6

Page 29
40 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
245.
246.
247.
248.
249.
250.
251.
நிழலார் சோலை நீல வண்டினங் குழலார் பண்செய் கோலக் காவுளான் கழலால் மொய்த்த பாதங் கைகளால் தொழலார் பக்கல் துயர மில்லையே.
எறியார் கடல்சூ பூழிலங்கைக் கோன்றனை முறியார் தடக்கை யடர்த்த மூர்த்திதன் குறியார் பண்செய் கோலக் காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
நாற்ற மலர்மே லயனு நாகத்தில் ஆற்ற லணைமே லவனுங் காண்கிலாக் கூற்ற முதைத்த குழகன் கோலக்கா ஏற்ருன் பாத மேத்தி வாழ்மினே.
பெற்ற மாசு பிறக்குஞ் சமணரும் உற்ற துவர்தோ யுருவி லாளருங் குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவப் பறையும் பாவமே.
நலங்கொள் காழி ஞான சம்பந்தன் குலங்கொள் கோலக் காவு ளானையே வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார் உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.
திருச்சிற்றம்பலம்
{ 0 84) ()
24. சீகாழி : பண் - தக்கராகம்
பூவார் கொன்றைப் புரிபுன் சடையீசா காவா யெனநின் றேத்துங் காழியார் மேவார் புரமூன் றட்டா ரவர்போலாம் பாவா ரின்சொற் பயிலும் பரமரே.
எந்தை யென்றங் கிமையோர் புகுந்தீண்டிக் கந்த மாலை கொடுசேர் காழியார் வெந்த நீற்றர் விமல ரவர்போலாம் அந்தி நட்ட மாடும் மடிகளே.

சீகாழி : பண் - தக்கராகம் உ41
252 தேனை வென்ற மொழியா ளொருபாகங்
கான மான்கைக் கொண்ட காழியார் வான மோங்கு கோயி லவர்போலாம் ஆன வின்ப மாடும் மடிகளே.
253. மாணா வென்றிக் காலன் மடியவே
காணா மாணிக் களித்த காழியார் நானார் வாளி தொட்டாரவர்போலாம் பேணார் புரங்க ளட்ட பெருமானே.
254. மாடே ஒத மெறிய வயற்செந்நெற்
காடே நிச்சங் கீனுங் காழியார் வாடா மலராள் பங்க ரவர்போலாம் ஏடார் புரமூன் றெரித்த இறைவரே.
255 கொங்கு செருந்தி கொன்றை ம்லர்கூடக்
கங்கை புனைந்த சடையார் காழியார் அங்க ணரவ மாட்டு மவர்போலாஞ் செங்க ணரக்கர் புரத்தை யெரித்தாரே. 6
256. கொல்லை விடைமுன் பூதங் குனித்தாடுங்
கல்ல வடத்தை யுகப்பார் காழியார் அல்ல விடத்து நடந்தா ரவர்போலாம் பல்ல விடத்தும் பயிலும் பரமரே.
257 எடுத்த அரக்கன் தெரிய விரலூன்றிக்
கடுத்து முரிய அடர்த்தார் காழியார் எடுத்த பாடற் கிரங்கு மவர்போலாம் பொடிக்கொள் நீறு பூகம் புனிதரே. 8
258. ஆற்றலுடைய அரியும் பிரமனுந்
தோற்றங் காணா வென்றிக் காழியார் ஏற்ற மேறங் கேறு மவல்போலாங் கூற்ற மறுகக் குமைத்த குழகரே. 9
259. பெருக்கப் பிதற்றுஞ் சமணர் சாக்கியர்
கரக்கு முரையை விட்டார் காழியார் இருக்கின் மலிந்த இறைவ ரவர்போலாம் அருப்பின் முலையாள் பங்கத் தையரே.

Page 30
  

Page 31
44 a
274.
275.
276.
277.
278.
279.
280.
28.
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
பாங்கு நல்ல வரிவண் டிசைபாடத் தேங்கொள் கொன்றை திளைக்குந் திருப்புத்தூர் ஓங்கு கோயிலுறைவா ரவர்போலும் தாங்கு திங்கள் தவழ்புன் சடையாரே. 3
நாற விண்ட நறுமா மலர்கல்வித் தேறல் வண்டு திளைக்குந் திருப்புத்துரர் ஊறல் வாழ்க்கை யுடையா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே. 4.
இசைவி ளங்கு மெழில்சூழ்ந் தியல்பாகத்
திசைவி ளங்கும் பொழில்சூழ் திருப்புத்தூர்ப்
பசைவி ளங்கப் படித்தா ரவர்போலும் வசைவி ளங்கும் வடிசேர் நுதலாரே. s
வெண்ணி றத்த விரையோ டலருந்தித் தெண்ணி றத்த புனல்பாய் திருப்புத்தூர் ஒண்ணி றத்த ஒளியா ரவர்போலும் வெண்ணி றத்த விடைசேர் கொடியாரே. 6
நெய்த லாம்பல் கழுநீர் மலர்ந்தெங்கும் செய்கண் மல்கு சிவனர் திருப்புத்தூர்த் தையல் பாக மகிழ்ந்தா ரவர்போலும் மையுள் நஞ்ச மருவு மிடற்ருரே. 7
கருக்க மெல்லாங் கமழும் பொழிற்சோலைத் திருக்கொள் செம்மை விழவார் திருப்புத்துரர் இருக்க வல்ல இறைவ ரவர்போலும் அரக்க னெல்க விரலா லடர்த்தாரே. 8
மருவி யெங்கும் வளரும் மடமஞ்ஞை தெருவு தோறுந் திளைக்குந் திருப்புத்தூர்ப் பெருகி வாழும் பெருமா னவன்போலும் பிரமன் மாலு மறியாப் பெரியோனே. 9
கூறை போர்க்குந் தொழிலா ரமண்கூறல் தேறல் வேண்டா தெளிமின் திருப்புத்தூர் ஆறு நான்கு மமர்ந்தா ரவர்போலும் ஏறு கொண்ட கொடியெம் மிறையாரே.

திருப்புன்கூர்: பண் - தக்கராகம் 45
282.
283.
284.
285.
286.
287.
288.
நல்ல கேள்வி ஞான சம்பந்தன் செல்வர் சேட ருறையுந் திருப்புத்தூர்ச் சொல்லல் பாடல் வல்லார் தமக்கென்றும் அல்லல் தீரு மவல மடையாவே.
திருச்சிற்றம்பலம்
27. திருப்புன்கூர் : பண் - தக்கராகம்
முந்தி நின்ற வினைக ளவைபோகச் சிந்தி நெஞ்சே சிவனர் திருப்புன்கூர் அந்த மில்லா வடிக ளவர்போலும் கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
மூவ ராய முதல்வர் முறையாலே தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர் ஆவ ரென்னு மடிக ளவர்போலும் ஏவி னல்லா ரெயில்மூன் றெரித்தாரே.
பங்க யங்கண் மலரும் பழனத்துச் செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க் கங்கை தங்கு சடையா ரவர்போலும் எங்க ளுச்சி யுறையும் மிறையாரே.
கரையு லாவு கதிர்மா மணிமுத்தம் திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர் உரையி னல்ல பெருமா னவர்போலும் விரையி னல்ல மலர்ச்சே வடியாரே.
பவள வண்ணப் பரிசார் திருமேனி திகழும் வுண்ண முறையுந் திருப்புன்கூர் அழக ரென்னு மடிக ளவர்போலும் புகழ நின்ற புரிபுன் சடையாரே.
தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல் திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப் போருந்தி நின்ற அடிக ளவர்போலும் விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.
I

Page 32
46 sh
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
289.
290.
291.
292.
2.93.
2.94.
295.
பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும் தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர் ஆர நின்ற அடிக ளவர்போலும் கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.
மலை யதனா ருடைய மதில்மூன்றும் சிலை யதனா லெரித்தார் திருப்புன்கூர்த் தலை வர்வல்ல அரக்கன் தருக்கினை மலை யதனா லடர்த்து மகிழ்ந்தாரே.
நாட வல்ல மலரான் மாலுமாய்த் தேட நின்ரு ருறையுந் திருப்புன்கூர் ஆட வல்ல அடிக ளவர்போலும் பாட லாடல் பயிலும் பரமரே.
குண்டு முற்றிக் கூறை யின்றியே பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல் வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க் கண்டு தொழுமின் கபாலி வேடமே.
மாட மல்கு மதில்சூழ் காழிமன் சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர் நாட வல்ல ஞான சம்பந்தன் பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
திருச்சிற்றம்பலம்
80 000
28. திருச்சோற்றுத்துறை : பண் - தக்கராகம்
செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம் துப்ப னென்னா தருளே துணையாக ஒப்ப ரொப்பர் பெருமா னொளிவெண்ணிற் றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
பாலு நெய்யுந் தயிரும் பயின்ருடித் தோலு நூலுந் துதைந்த வரைமார்பர் மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
10

திருச்சோற்றுத்துறை : பண் - தக்கராகம் 47
296. செய்யர் செய்ய சடையர் விடையூர்வர் கைகொள் வேலர் கழலர் கரிகாடர் தைய லாளொர் பாக மாயனம் ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே. 别
297 பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளிர் துணிகொள் போரார் துளங்கு மழுவாளர் மணிகொள் கண்டர் மேய வார்பொழில் அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 4
298. பிறையு மரவும் புனலுஞ் சடைவைத்து
மறையு மோதி மயான மிடமாக உறையுஞ் செல்வ முடையார் காவிரி
அறையுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே. 5
299. துடிக ளோடு முழவம் விம்மவே
பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப் படிகொள் பாணி பாடல் பயின்ருடும் அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே. 6
300. சாடிக் காலன் மாளத் தலைமாலை
சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம் பாடி யாடிப் பரவு வாருள்ளத் தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே. Z
30. பெண்ணோர் பாக முடையார் பிறைச்சென்னிக்
கண்ணோர் பாகங் கலந்த நுதலினர் எண்ணா தரக்க னெடுக்க வூன்றிய அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே. 8
302. தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
அழலா யோங்கி யருள்கள் செய்தவன் விழவார் மறுகில் விதியால் மிக்களம் எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே. 9
308. கோது சாற்றித் திரிவா ரமண்குண்டர்
ஒது’மோத்தை யுணரா தெழுநெஞ்சே நீதி நின்று நினைவார் வேடமாம்
ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே. ፲0
தே-4

Page 33
48 - திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
304. அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
சிந்தை செய்ம்மி னடியா ராயினிர் சந்தம் பரவு ஞான சம்பந்தன் வந்த வாறே புனைதல் வழிபாடே.
திருச்சிற்றம்பலம்
29. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் - தக்கராகம்
305. ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல் சீரு லாவு மறையோர் நறையூரில் சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே,
306 காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
ஒடு கங்கை யொளிர்புன் சடைதாழ வீடு மாக மறையோர் நறையூரில் நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே
307 கல்வி யாளர் கனகம் அழல்மேனி
புல்கு கங்கை புரிபுன் சடையானூர் மல்கு திங்கட் பொழில்சூழ் நறையூரில் செல்வர் சித்திச் சரஞ்சென் றடைநெஞ்சே.
308. நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
ஆட வல்ல அடிக ளிடமாகும் பாடல் வண்டு பயிலு நறையூரில் சேடர் சித்திச் சரமே தெளிநெஞ்சே,
309 உம்ப ராலு முலகின் னவராலும்
தம்பெ ருமை யளத்தற் கரியானூர் நண்பு லாவு மறையோர் நறையூரில் செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே,
30. கூரு லாவு படையான் விடையேறி
போரு லாவு மழுவா னனலாடி பேரு லாவு பெருமான் நறையூரில் சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.

திருப்புகலி : பண் - தக்கராகம் உ49
31 அன்றி நின்ற அவுணர் புரமெய்த
வென்றி வில்லி விமலன் விரும்புமூர் மன்றில் வாச மணமார் நறையூரில் சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
32. அரக்க னாண்மை யழிய வரைதன்னால்
நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர் பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரில் திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே, 9
313. ஆழி யானு மலரி னுறைவானும்
ஊழி நாடி யுணரார் திரிந்துமேல் குழு நேட வெரியா மொருவன்சீர் நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே. 9
34. மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
கையி லுண்டு கழறு முரைகொள்ளேல் உய்ய வேண்டி லிறைவன் நறையூரில் செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
315. மெய்த்து லாவு மறையோர் நறையூரில் சித்தன் சித்தீச் சரத்தை யுயர்காழி அத்தன் பாத மணிஞா னசம்பந்தன் பத்தும் பாடப் பறையும் பாவமே,
திருச்சிற்றம்பலம்
30. திருப்புகலி : பண் - தக்கராகம்
36. விதியாய்விளை வாய்விளை வின்பய னுகிக்
கொதியாவரு கூற்றை யுதைத்தவர் சேரும் பதியாவது பங்கய நின்றல ரத்தேன் பொதியார்பொழில் சூழ்புக லிந்நகர் தானே.
37. ஒன்னார்புர மூன்று மெரித்த ஒருவன்
மின்னாரிடை யாளொடுங் கூடிய வேடந் தன்னாலுறை வாவது தண்கடல் சூழ்ந்த பொன்னார்வயற் பூம்புக லிந்நகர் தானே. 2

Page 34
50 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
38.
39.
320.
321.
322,
323.
324.
325.
வலியன்மதி செஞ்சடை வைத்தம ணாளன் புலியின் னதள் கொண்டரை யார்த்தபு னிதன் மலியும்பதி மாமறை யோர்நிறைந் தீண்டிப் பொலியும்புனற் பூம்புக லிந்நகர் தானே.
கயலார்தடங் கண்ணி யொடும்மெரு தேறி அயலார்கடை யிற்பலி கொண்டவ ழகன் இயலாலுறை யும்மிட மெண்டிசை யோர்க்கும் புயலார்கடற் பூம்புக லிந்நகர் தானே.
காதார்கன பொற்குழை தோடதி லங்கத் தாதார்மலர் தண்சடை யேறமு டித்து நாதானுறை யும்மிட மாவது நாளும் போதார்பொழிற் பூம்புக லிந்நகர் தானே.
வலமார்படை மான்மழு வேந்திய மைந்தன் கலமார்கடல் நஞ்சமு துண்டக ருத்தன் குலமார்பதி கொன்றைகள் பொன்சொரி யத்தேன் புலமார்வயற் பூம்புக லிந்நகர் தானே.
கறுத்தான்கன லால்மதில் மூன்றையும் வேவச் செறுத்தான்திக முங்கடல் நஞ்சமு தாக அறுத்தானயன் தன்சிர மைந்திலு மொன்றைப் பொறுத்தானிடம் பூம்புக லிந்நகர் தானே.
தொழிலால்மிகு தொண்டர்கள் தோத்திரஞ் சொல்ல எழிலார்வரை யாலன்ற ரக்கனைச் செற்ற கழலானுறை யும்மிடங் கண்டல்கள் மிண்டிப் பொழிலால்மலி பூம்புக லிந்நகர் தானே.
மாண்டார்சுட லைப்பொடி பூசிம யானத் தீண்டாநட மாடிய வேந்தன்றன் மேனி நீண்டானிரு வர்க்கெரி யாயர வாரம் பூண்டானகர் பூம்புக லிந்நகர் தானே.
உடையார்துகில் போர்த்துழல் வார்சமண் கையர் அடையாதன சொல்லுவ ராதர்க ளோத்தைக் கிடையாதவன் தன்நகர் நன்மலி பூகம் புடையார்தரு பூம்புக லிந்நகர் தானே.
10

திருக்குரங்கனில்முட்டம் : பண் - தக்கராகம் உ51
326.
327.
328.
329.
இரைக்கும்புனல் செஞ்சடை வைத்தளம் மான்றன் புரைக்கும்பொழிற் பூம்புக லிந்நகர் தன்மேல் உரைக்குந்தமிழ் ஞானசம் பந்தனொண் மாலை வரைக்குந்தொழில் வல்லவர் நல்லவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
31. திருக்குரங்கனில்முட்டம் : பண் - தக்கராகம்
விழுநீர்மழு வாட்படை யண்ணல் விளங்கும் கழுநீர்குவ ளைம்மல ரக்கயல் பாயும் கொழுநீர்வயல் சூழ்ந்தகு ரங்கணில் முட்டம் தொழுநீர்மையர் தீதுறு துன்ப மிலரே. 1
விடைசேர்கொடி யண்ணல் விளங்குயர் மாடக் கடைசேர்கரு மென்குளத் தோங்கிய காட்டில் குடையார்புனல் மல்குகு ரங்கணில் முட்டம் உடையானெனை யாளுடை யெந்தை பிரானே. 2
சூலப்படை யான்விடை யான்சுடு நீற்றான்
காலன்றனை ஆருயிர் வவ்விய காலன்
கோலப்பொழில் சூழ்ந்தகு ரங்கணில் முட்டத்
330.
33.
332.
தேலங்கமழ் புன்சடை யெந்தை பிரானே. " ご。
வாடாவிரி கொன்றைவ லத்தொரு காதில் தோடார்குழை யானல பாலன நோக்கிக் கூடாதன செய்தகு ரங்கணில் முட்டம் ஆடாவரு வாரவ ரன்புடை யாரே. 4
இறையார்வளை யாளையொர் பாகத்த டக்கிக் கறையார்மிடற் றான்கரி கீறிய கையான் as குறையார்மதி சூடிகு ரங்கணில் முட்டத்
துறைவானெமை யாளுடை யொண்சுட ரானே.
பலவும்பய னுள்ளன பற்றுமொ ழிந்தோம் கலவம்மயில் காமுறு பேடையொ டாடிக் குலவும்பொழில் சூழ்ந்தகு ரங்கணில் முட்டம் நிலவும்பெரு மானடி நித்த நினைந்தே. 6

Page 35
52 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
333.
334.
335.
336.
3.37.
338.
339.
மாடார்மலர்க் கொன்றைவ ளர்சடை வைத்துத் தோடார்குழை தானொரு காதி லிலங்கக் கூடார்மதி லெய்துகு ரங்கணில் முட்டத் தாடாரர வம்மரை யார்த்தமர் வானே.
மையார்நிற மேனிய ரக்கர்தங் கோனை உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த கொய்யார்மலர் சூடிகு ரங்கணில் முட்டம் கையாற்றொழு வார்வினை காண்ட லரிதே.
வெறியார்மலர்த் தாமரை யானொடு மாலும் அறியாதசைந் தேத்தவோ ராரழ லாகும் குறியால்நிமிர்ந் தான்றன்கு ரங்கணில் முட்டம் நெறியாற்றொழு வார்வினை நிற்ககி லாவே.
கழுவார்துவ ராடைக லந்துமெய் போர்க்கும் வழுவாச்சமண் சாக்கியர் வாக்கவை கொள்ளேல் குழுமின்சடை யண்ணல்கு ரங்கணில் முட்டத் தெழில்வெண்பிறை யானடி சேர்வ தியல்பே.
கல்லார்மதிற் காழியுள் ஞானசம் பந்தன் . கொல்லார்மழு வேந்திகு ரங்கணில் முட்டம் சொல்லார்தமிழ் மாலைசெ விக்கினி தாக வல்லார்க்கெளி தாம்பிற வாவகை வீடே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
32. திருஇடைமருதூர் : பண் - தக்கராகம்
ஒடேகல னுண்பது மூரிடு பிச்சை காடேயிட மாவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையுந் தானு மகிழ்ந் தீடாவுறை கின்ற இடைமரு தீதோ.
தடங்கொண்டதொர் தாமரைப் பொன்முடி தன்மேல் குடங்கொண்டடி யார்குளிர் நீர்சுமந் தாட்டப் படங்கொண்டதொர் பாம்பரை யார்த்த பரமன் இடங்கொண்டிருந் தான்ற னிடைமரு தீதோ.

திருஇடைமருதூர் : பண் - தக்கராகம் 53
340.
341.
342.
343.
344.
345.
346.
347.
வெண்கோவணங் கொண்டொரு வெண்டலை யேந்தி அங்கோல்வளை யாளையொர் பாக மமர்ந்து பொங்காவரு காவிரிக் கோலக் கரைமேல் எங்கோனுறை கின்ற இடைமரு தீதோ.
அந்தம்மறி யாதஅ ருங்கல முந்திக் கந்தங்கமழ் காவிரிக் கோலக் கரைமேல் வெந்தபொடி பூசிய் வேத முதல்வன் எந்தையுறை கின்ற இடைமரு தீதோ.
வாசங்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே தேசம்புகுந் தீண்டியொர் செம்மை யுடைத்தாய்ப் பூசம்புகுந் தாடிப் பொலிந்தழ காய ஈசனுறை கின்ற இடைமரு தீதோ.
வன்புற்றிள நாக மசைத்தழ காக என்பிற்பல மாலையும் பூண்டெரு தேறி அன்பிற்பிரி யாதவ ளோடு முடனாய் இன்புற்றிருந் தான்ற னிடைமரு தீதோ.
தேக்குந்திமி லும்பல வுஞ்சுமந்துந்திப் போக்கிப்புறம் பூச லடிப்ப வருமால் ஆர்க்குந்திரைக் காவிரிக் கோலக் கரைமேல் ஏற்கவிருந் தான்ற னிடைமரு தீதோ.
பூவார்குழ லாரகில் கொண்டு புகைப்ப ஒவாதடி யாரடி யுள்குளிர்ந் தேத்த ஆவாவரக் கன்றனை யாற்ற லழித்த ஏவார்சிலை யான்ற னிடைமரு தீதோ.
முற்றாததொர் பால்மதி சூடு முதல்வன் நற்றாமரை யானொடு மால்நயந் தேத்தப் பாற்றோளியுந் தானும் பொலிந்தழ காக எற்றேயுறை கின்ற இடைமரு தீதோ.
சிறுதேரருஞ் சில்சம ணும்புறங் கூற நெறியேபல பத்தர்கள் கைதொழு தேத்த
வெறியாவரு காவிரிக் கோலக் கரைமேல்
எறியார்மழு வாள னிடைமரு தீதோ.
iè8.
O

Page 36
54 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
348.
349.
350.
35.
352.
353.
354.
கண்ணார்கமழ் காழியுள் ஞானசம் பந்தன் எண்ணார்புக ழெந்தை யிடைமரு தின்மேல் பண்ணோடிசை பாடிய பத்தும்வல் லார்கள் விண்ணோருல கத்தினில் வீற்றிருப் பாரே.
திருச்சிற்றம்பலம்
33. திருஅன்பிலாலந்துறை : பண் - தக்கராகம்
கணைநிடெரி மாலர வம்வரை வில்லா இணையாவெயில் மூன்று மெரித்த இறைவர் பிணைமாமயி லுங்குயில் சேர்மட வன்னம் அணையும்பொழி லன்பிலா லந்துறை யாரே.
சடையார்சது ரன்முதி ராமதி குடி விடையார்கொடி யொன்றுடை யெந்தை விமலன் கிடையாரொலி யோத்தர வத்திசை கிள்ளை அடையார்பொழி லன்பிலா லந்துறை யாரே. 2
ஊரும்மர வஞ்சடை மேலுற வைத்துப் பாரும்பலி கொண்டொலி பாடும் பரமர் நீருண்கய லும்வயல் வாளை வரால்ோ டாரும்புன லன்பிலா லந்துறை யாரே. 3
பிறையும்மர வும்முற வைத்த முடிமேல் நறையுண்டெழு வன்னியு மன்னு சடையார் மறையும்பல வேதிய ரோத ஒலிசென் றறையும்புன லன்பிலா லந்துறை யாரே. 4.
நீடும்புனற் கங்கையுந் தங்க முடிமேற் கூடும்மலை யாளொரு பாக மமர்ந்தார் மாடும்முழ வம்மதி ரம்மட மாதர் ஆடும்பதி யன்பிலா லந்துறை யாரே.
நீறார்திரு மேனிய ரூனமி லார்பால் ஊறார்சுவை யாகிய வும்பர் பெருமான் வேறாரகி லும்மிகு சந்தன முந்தி ஆறார்வய லன்பிலா லந்துறை யாரே. 6

சீகாழி : பண் - தக்கராகம் 55
355.
356。
357.
358.
359.
360.
361.
செடியார்தலை யிற்பலி கொண்டினி துண்ட படியார்பர மன்பர மேட்டிதன் சீரைக் கடியார்மல ரும்புனல் தூவிநின் றேத்தும் அடியார்தொழு மன்பிலா லந்துறை யாரே. Z
விடத்தார் திகழும்மிட றன்நட மாடி படத்தாரர வம்விர வுஞ்சடை யாதி கொடித்தேரிலங் கைக்குலக் கோன்வரை யார அடர்த்தாரரு ளன்பிலா லந்துறை யாரே. 8
வணங்கிம்மலர் மேலய னுந்நெடு மாலும் பிணங்கியறி கின்றிலர் மற்றும் பெருமை சுணங்கும்முகத் தம்முலை யாளொரு பாகம் அணங்குந்திக ழன்பிலா லந்துறை யாரே. 9
தறியார் துகில் போர்த்துழல் வார்சமண் கையர் நெறியாவுண ராநிலை கேடினர் நித்தல் வெறியார்மலர் கொண்டடி வீழு மவரை அறிவாரவ ரன்பிலா லந்துறை யாரே. O
அரவார்புன லன்பிலா லந்துறை தன்மேல் கரவாதவர் காழியுள் ஞானசம் பந்தன் பரவார்தமிழ் பத்திசை பாடவல் லார்போய் விரவாகுவர் வானிடை வீடெளி தாமே. 11
திருச்சிற்றம்பலம்
0 0
34. சீகாழி : பண் - தக்கராகம்
அடலே றமருங் கொடியண்ணல் மடலார் குழலா ளொடுமன்னுங்
கடலார் புடைசூழ் தருகாழி தொடர்வா ரவர்தூ நெறியாரே.
திரையார் புனல்கு டியசெல்வன் வரையார் மகளோ டுமகிழ்ந்தான்
கரையார் புனல்சூழ் தருகாழி நிரையார் மலர்தூ வுமினின்றே. 2

Page 37
6ே திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
362, இடியார் குரலேறுடையெந்தை
துடியா ரிடையா ளொடுதுன்னுங் கடியார் பொழில்சூழ் தருகாழி அடியா ரறியா ரவலம்மே.
363. ஒளியார் விடமுண் டவொருவன்
அளியார் குழல்மங் கையொடன்பாய்க் களியார் பொழில்சூழ் தருகாழி எளிதா மதுகண் டவரின்பே.
364. பணியார் மலரார் தருபாதன்
முனிதா னுமையோ டுமுயங்கிக் கனியார் பொழில்சூழ் தருகாழி இனிதா மதுகண் டவரீடே.
365. கொலையார் தருகூற் றமுதைத்து
மலையான் மகளோ டுமகிழ்ந்தான் கலையார் தொழுதேத் தியகாழி தலையாற் றொழுவார் தலையாரே.
366. திருவார் சிலையா லெயிலெய்து
உருவா ருமையோ டுடனானான் கருவார் பொழில்சூழ் தருகாழி மருவா தவர்வான் மருவாரே.
367 அரக்கன் வலியொல் கவடர்த்து
வரைக்கும் மக்ளோ டுமகிழ்ந்தான் சுரக்கும் புனல்சூழ் தருகாழி நிரக்கும் மலர்தூ வுநினைந்தே.
368. இருவர்க் கெரியா கிநிமிர்ந்தான்
உருவிற் பெரியா ளொடுசேருங் கருநற் பரவை கமழ்காழி மருவப் பிரியும் வினைமாய்ந்தே.
369. சமண்சாக் கியர்தா மலர்தூற்ற
அமைந்தா னுமையோ டுடனன்பாய்க் கமழ்ந்தார் பொழில்சூழ் தருகாழி சுமந்தார் மலர்தூ வுதல்தொண்டே.

திருவிழிமிழலை : பண் - தக்கராகம் 8 57
370.
37.
372.
373.
374.
375.
376.
நலமா கியஞா னசம்பந்தன் கலமார் கடல்சூழ் தருகாழி நிலையா கநினைந் தவர்பாடல் வலரா னவர்வா னடைவாரே.
திருச்சிற்றம்பல்ம்
{) () () () (d
35. திருவிழிமிழலை : பண் - தக்கராகம் "
அரையார் விரிகோ வன gotநரையார் விடையூர் திநயந்தான் விரையார் பொழில்வீழிம்மிழலை
உரையா லுணர்வா ருயர்வாரே.
புனைதல் புரிபுன் சடைதன்மேல் கணைதல் லொருகங் கைகரந்தான் வினையில் லவர்வீழிம்மிழலை நினைவில் லவர்நெஞ் சமுநெஞ்சே,
அழவல் லவரா டியும்பாடி எழவல் லவரெந் தையடிமேல் விழவல் லவர்வீழிம்மிழலை தொழவல் லவர்நல் லவர்தொண்டே
உரவம் புரிபுன் சடைதன்மேல் அரவம் மரையார்த் தவழகன் விரவும் பொழில்வீழிம்மிழலை பரவும் மடியா ரடியாரே.
கரிதா கியநஞ் சணிகண்டன் வரிதா கியவண் டறைகொன்றை விரிதார் பொழில்வீழிம்மிழலை
உரிதா நினைவா ருயர்வாரே.
சடையார் பிறையான் சரிபூதப் படையான் கொடிமே லதொர்பைங்கண் விடையா னுறைவீ Nம்மிழலை அடைவா ரடியா ரவர்தாமே.

Page 38
58 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
377.
378.
379.
380.
38.
382.
383.
செறியார் கழலுஞ் சிலம்பார்க்க நெறியார் குழலா ளொடுநின்றான் வெறியார் பொழில்வீ Nம்மிழலை அறிவா ரவலம் மறியாரே.
உளையா வலியொல் கவரக்கன் வளையா விரலூன் றியமைந்தன் விளையார் வயல்வீழிம்மிழலை
அளையா வருவா ரடியாரே. 8
மருள்செய் திருவர் மயலாக அருள்செய் தவனா ரழலாகி வெருள்செய் தவன்வீ பூழிம்மிழலை
தெருள்செய் தவர்தீ வினைதேய்வே. 9
துளங்குந் நெறியா ரவர்தொன்மை வளங்கொள் ளன்மின்புல் லமண்தேரை விளங்கும் பொழில்வீழிம்மிழலை உளங்கொள் பவர்தம் வினையோய்வே. IO
நளிர்கா ழியுள்ஞா னசம்பந்தன்
குளிரார் சடையா னடிகூற
மிளிரார் பொழில்வீ Nம்மிழலை கிளர்பா டல்வல்லார்க் கிலைகேடே. II
திருச்சிற்றம்பலம்
d () d
36. திருவையாறு : பண் - தக்கராகம்
கலையார் மதியோ டுரநீரும்
நிலையார் சடையா ரிடமாகும் மலையா ரமுமா மணிசந்தோ டலையார் புனல்சே ருமையாறே. 1.
மதியொன் றியகொன் றைவடத்தன் மதியொன் றவுதைத் தவர்வாழ்வும் மதியின் னொடுசேர் கொடிமாடம் மதியம் பயில்கின் றவையாறே. s 2

திருவையாறு : பண் - தக்கராகம் * 59
384.
385.
386.
387.
388.
389.
390
39.
கொக்கின் னிறகின் னொடுவன்னி புக்க சடையார்க் கிடமாகும் திக்கின் னிசைதே வர்வணங்கும் அக்கின் னரையா ரதையாறே. 3
சிறைகொண் டபுரம் மவைசிந்தக் கறைகொண் டவர்கா தல்செய்கோயில் மறைகொண் டநல்வா னவர்தம்மில் : அறையும் மொலிசே ருமையாறே. 4.
உமையா ளொருபா கமதாகச் சமைவா ரவர்சார் விடமாகும் அமையா ருடல்சோர் தரமுத்தம்
அமையா வருமந் தணையாறே あ
தலையின் தொடைமா லையணிந்து கலைகொண் டதொர்கை யினர்சேர்வாம் நிலைகொண் டமனத் தவர்நித்த்ம் மலர்கொண் டுவணங் குமையாறே. 6
வரமொன் றியமா மலரோன்றன் சிரமொன் றையறுத் தவர்சேர்வாம் வரைநின் றிழிவார் தருபொன்னி அரவங் கொடுசே ருமையாறே. ク
வரையொன் றதெடுத் தவரக்கன் சிரமங் கநெரித் தவர்சேர்வாம் விரையின் மலர்மே தகுபொன்னித் திரைதன் னொடுசே ருமையாறே. 8
சங்கக் கயனும் மறியாமைப் பொங்குஞ் சுடரா னவர்கோயில் கொங்கிற் பொலியும் புனல்கொண்டு
அங்கிக் கெதிர்காட் டுமையாறே. 9
துவரா டையர்தோ லுடையார்கள் கவர்வாய் மொழிகா தல்செய்யாதே தவரா சர்கள்தா மரையானோ
டவர்தா மணையந் தணையாறே. O

Page 39
60 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
392.
393.
394.
395.
396.
397.
398.
399.
கலையார் கலிக்கா ழியர்மன்னன் நலமார் தருஞா னசம்பந்தன் அலையார் புனல்கு முமையாற்றைச் சொலுமா லைவல்லார் துயர்வீடே.
திருச்சிற்றம்பலம்
37. திருப்பனையூர் : பண் - தக்கராகம்
அரவச் சடைமேல் மதிமத்தம் விரவிப் பொலிகின் றவனுாராம் நிரவிப் பலதொண் டர்கள்நாளும் பரவிப் பொலியும் பனையூரே.
எண்ணொன் றிநினைந் தவர்தம்பால் உண்ணின் றுமகிழ்ந் தவனூராம் கண்ணின் றெழுசோ லையில்வண்டு பண்ணின் றொலிசெய் பனையூரே. 2
அலரும் மெறிசெஞ் சடைதன்மேல்
மலரும் பிறையொன் றுடையானூர் சிலரென் றுமிருந் தடிபேணப்
பலரும் பரவும் பனையூரே. 3
இடியார் கடல்நஞ் சமுதுண்டு பொடியா டியமே ணியினானூர் அடியார் தொழமன் னவரேத்தப் படியார் பணியும் பனையூரே. 4.
அறையார் கழல்மே லரவாட இறையார் பலிதேர்ந் தவனூராம் பொறையார் மிகுசீர் விழமல்கப் பறையா ரொலிசெய் பனையூரே.
அணியார் தொழவல் லவரேத்த மணியார் மிடறொன் றுடையானூர் தணியார் மலர்கொண் டிருபோதும் பணிவார் பயிலும் பனையூரே. 6
அடையா தவர்மூ வெயில்சீறும் விடையான் விறலார் கரியின்தோல்

400.
40.
402.
403.
404.
405.
406.
திருமயிலாடுதுறை : பண் - தக்கராகம் 61
உடையா னவனென் பலபூதப் படையா னவனுார் பனையூரே. Z
இலகும் முடிப்த் துடையானை அலல்கண் டருள்செய் தவெம்மண்ணல் உலகில் லுயிர்நீர் நிலமற்றும்
பலகண் டவனுTர் பனையூரே. 8
வரமுன் னிமகிழ்ந் தெழுவீர்காள் சிரமுன் னடிதா ழவணங்கும்
பிரமன் னொடுமா லறியாத
பரமன் னுறையும் பனையூரே. 9
அழிவல் லமண ரொடுதேரர் மொழிவல் லனசொல் லியபோதும் இழிவில் லதொர்செம் மையினானூர் பழியில் லவர்சேர் பனையூரே. O
பாரார் விடையான் பனையூர்மேல் சீரார் தமிழ்ஞா னசம்பந்தன் ஆரா தசொன்மா லைகள்பத்தும் " ஊரூர் நினைவா ருயர்வாரே.
திருச்சிற்றம்பலம்
38. திருமயிலாடுதுறை : பண் - தக்கராகம்
கரவின் றிநன்மா மலர்கொண்டே இரவும் பகலுந் தொழுவார்கள் சிரமொன் றியசெஞ் சடையான்வாழ் வரமா மயிலா டுதுறையே.
உரவெங் கரியின் னுரிபோர்த்த பரமன் னுறையும் பதியென்பர் குரவஞ் சுரபுன் னையும்வன்னி மருவும் மயிலா டுதுறையே.
ஊனத் திருள்நீங் கிடவேண்டில் ஞானப் பொருள்கொண் டடிபேணும் தேனொத் தினியா னமருஞ்சேர் வானம் மயிலா டுதுறையே.

Page 40
62 m
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
SLLSMSMMSLLLSL LSL LSL TSS SS SSLSSSMSMMMSM MMSSSSSS LSL LSSLLSMSSSLSSLLSSLLSS LMSMSMSMSMS MSLLLLSLSSLLSLSLLSLSLLMSSSLSLSSSSS MS SMMS LSM MS MTSLLSSLSSSSSSMLMTSLLSSLSLLSSLLSSLLSSLLSLL SSLLSSLLSSLLSSLLSSLSLSLSSLSLSSLSLSSLSLSSLLS
407.
408.
409.
40.
4.
அஞ்சொண் புலனும் மவைசெற்ற மஞ்சன் மயிலா டுதுறையை நெஞ்சொன் றிநினைந் தெழுவார்மேல் துஞ்சும் பிணியா யினதானே.
தணியார் மதிசெஞ் சடையான்றன் அணியார்ந் தவருக் கருளென்றும் பிணியா யினதிர்த் தருள்செய்யும் மணியான் மயிலா டுதுறையே.
தொண்ட ரிசைபா டியுங்கூடிக் கண்டு துதிசெய் பவனூராம் பண்டும் பலவே தியரோத வண்டார் மயிலா டுதுறையே.
அணங்கோ டொருபா கமமர்ந்து இணங்கி யருள்செய் தவனுாராம் நுணங்கும் புரிநூ லர்கள்கூடி வணங்கும் மயிலா டுதுறையே.
சிரங்கை யினிலேந் தியிரந்த பரங்கொள் பரமேட் டிவரையால்
அரங்கல் வரக்கன் வலிசெற்ற
412.
வரங்கொள் மயிலா டுதுறையே.
ஞாலத் தைநுகர்ந் தவன்தானும் கோலத் தயனும் மறியாத சீலத் தவனூர் சிலர்கூடி
மாலைத் தீர்மயிலா டுதுறையே.
413.
414.
நின்றுண் சமனும் நெடுந்தேரர் ஒன்றும் மறியா மையுயர்ந்த வென்றி யருளா னவனுாராம் மன்றன் மயிலா டுதுறையே.
நயர்கா ழியுள்ஞானசம்பந்தன் மயல்தீர் மயிலா டுதுறைமேல் செயலா லுரைசெய் தனபத்தும் உயர்வா மிவையுற் றுணர்வார்க்கே.
திருச்சிற்றம்பலம் இதுவே மாயூரம். (மாயவரம்)
KI) (K) 4) (» «)
O
II

45.
46.
417.
418.
419.
420.
421.
422.
தே-5
திருவேட்களம் : பண் - தக்காரம் . 63
39. திருவேட்களம் : பண் - தக்கராகம்
அந்தமு மாதியுமாகிய வண்ண லாரழலங்கை யமர்ந்திலங்க மந்தமுழவ மியம்ப மலைமகள் காணநின் றாடிச் சந்தமிலங்கு நகுதலை கங்கை தண்மதி யம்மயலேததும்ப வெந்தவெண்ணிறு மெய்பூசும் வேட்களநன் னகராரே.
சடைதனைத் தாழ்தலு மேறமுடித்துச் சங்கவெண்தோடு சரிந்திலங்கப் புடைதனிற் பாரிடஞ்சூழப் போதருமா றிவர் போல்வார் உடைதனில் நால்விரற் கோவணவாடை புண்டதுமூரிடு பிச்சைவெள்ளை விடைதனை யூர்திநயந்தார் வேட்கள நன்னகராரே. 2
பூதமும் பல்கண மும்புடைசூழப் பூமியும்விண்ணு முடன்பொருந்தச் சீதமும்வெம்மையு மாகிச் சீரொடுநின்ற வெஞ் செல்வர் ஒதமுங்கானலுஞ் சூழ்தருவேலை உள்ளங் கலந்திசை யாலெழுந்த வேதமும் வேள்வியு மோவாவேட்கள நன்னகராரே. 3
அரைபுல்குமைந்தலை பாடலரவம் அமைபவெண் கோவணத் தோடசைத்து வரைபுல் குமார்பி லொராமை வாங்கிய னிந்தவர்தாந் திரைபுல்கு தெண்கடல் தண்கழியோதந் தேனலங்கானலில் வண்டுபண்செய்ய விரைபுல்கு பைம்பொழில்சூழ்ந்த வேட்கள நன்னகராரே. 4
பண்ணுறுவண்டறை கொன்றையலங்கல் பால்புரைநீறு வெண்நூல்கிடந்த
பெண்ணுறு மார்பினர்பேணார் மும்மதி லெய்த பெருமான்
கண்ணுறுநெற்றி கலந்தவெண்திங்கட் கண்ணியர்விண்ணவர் கைதொழு
தேத்தும் வெண்ணிறமால் விடையண்ணல் வேட்கள நன்னகராரே. 5
கறிவளர்குன்ற மெடுத்தவன் காதற் கண்கவரைங்கணை யோனுடலம் பொறிவள ராரழலுண்ணப் பொங்கிய பூத புராணர் மறிவளரங்கையர் மங்கையொர்பங்கர் மைஞ்ஞற மானுரி தோலுடையாடை வெறிவளர்கொன்றையந் தாரார் வேட்கள நன்னகராரே. 6
மண்பொடிக் கொண்டெரித் தோர்சுடலை மாமலைவேந்தன் மகள் மகிழ நுண்பொடிச் சேரநின்றாடி நொய்யன செய்ய லுகந்தார் கண்பொடிவெண்டலை யோடுகையேந்திக் காலனைக் காலாற் கடிந்துகந்தார் வெண்பொடிச் சேர்திருமார்பர் வேட்கள நன்னகராரே. 7
ஆழ்தரு மால்கடல் நஞ்சினையுண்டா ரமுதமம ரர்க்கருளிச் சூழ்தருபாம் பரையார்த்துச் சூல்மோ டொண் மழுவேந்தித்
தாழ்தருபுன் சடையொன்றினை வாங்கித் தண்மதியம்மய லேததும்ப
வீழ்தருகங்கை கரந்தார் வேட்கள நன்னகராரே. 8

Page 41
84 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
423.
, 424.
425,
426.
427.
428.
429.
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனுந் திசைமேலளந்த கருவரை யேந்திய மாலுங் கைதொழ நின்றதுமல்லால்
அருவரை யொல்க வெடுத்தவரக்க னாடெழிற்றோள்க ளாழத்தழுந்த
வெருவுறவூன்றிய பெம்மான் வேட்கள நன்னகராரே. 9
அத்தமண் தோய்துவ ராரமண்குண்டர் பாதுமல்லாவுரை பேபுரைத்துப் பொய்த்தவம் பேசுவதல்லாற் புறனுரையா தொன்றுங் கொள்ளேன் முத்தன வெண்முறு வல்லுமையஞ்ச மூரிவல்லானையி னிருரிபோர்த்த வித்தகர்வேத முதல்வர் வேட்கள நன்னகராரே. O
விண்ணியன்மாடம் விளங்கொளிவீதி வெண்கொடி பெங்கும் விரிந்திலங்க நண்ணிய சீர்வளர்காழி நற்றமிழ் ஞானசம் பந்தன் பெண்ணினல் லாளொரு பாகமமர்ந்து பேணிபவேட்கள மேல்மொழிந்த பண்ணியல்பாடல் வல்லார்கள் பழியொடு பாவமிலாரே. 11
திருச்சிற்றம்பலம்
0 0 000
40. திருவாழ்கொளிபுத்தூர் : பண் - தக்கராகம்
பொடியுடைமார்பினர் போர்விடையேறிப் பூதகணம் புடைசூழக் கொடியுடையூர்திரிந் தையங் கொண்டுபலபல கூறி வடிவுடைவாணெடுங் கண்ணுமைபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்க் கடிகமழ் மாமலரிட்டுக் கறைமிடற்றாண்டி காண்போம்.
அரைகெழுகோவண வாடையின்மேலோ ராடரவம் மசைத்தையம்
புரைகெழுவெண்டலை யேந்திப் போர்விடை யேறிப்புகழ
வரைகெழுமங்கைய தாகமொர்பாக மாயவன் வாழ்கொளிபுத்தூர்
விரைகமழ் மாமலர்தூவி விரிசடையானடி சேர்வோம். 2
பூணெடுநாக மசைத்தனலாடிப் புன்தலையங்கையி லேந்தி ஊணிடுபிச்சையூ ரைய முண்டியென்று பலகூறி வானெடுங்கண்ணுமை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர் தாணெடுமாமல ரிட்டுத் தலைவனதeநிழல் சார்வோம். 3
தாரிடுகொன்றையொர் வெண்மதிகங்கை தாழ்சடை மேலவைசூடி ஊரிடுபிச்சைகொள் செல்வ முண்டியென்று பலகூறி வாரிடுமென்முலை மாதொருபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
காரிடுமாமலர் தூவிக் கறைமிடற்றாண்டி காண்போம். 4.

திருவாழ்கொளிபுத்தூர் : பண் - தக்காரம் 65
430.
43.
432.
4.33.
434.
435.
கனமலர்க்கொன்றை யலங்கலிலங்கக் காதிலொர் வெண்குழையோடு புனமலர்மாலை புனைந்தூர் புகுதியென்றே பலசுறி வனமுலைமாமலை மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்
இனமல ரேய்ந்தனதுரவி யெம்பெருமானடி சேர்வோம். 5
அளைவளர்நாக மசைத்தனலாடி யலர்மிசையந்தண னுச்சிக் களைதலையிற்பலி கொள்ளுங் கருத்தனே கள்வனேயென்னா வளையொலிமுன்கை மடந்தையொர்பாக மாயவன் வாழ்கொளிபுத்தார்த் தளையவிழ் மாமலர்தூவித் தலைவனதாளிணை சார்வோம். 6
அடர்செவிவேழத்தி னிருரிபோர்த்து வழிதலையங்கையி லேந்தி உடலிடுபிச்சையோ டைய முண்டியென்று பலகூறி மடனெடுமாமலர்க் கண்ணியொர்பாக மாபவன்வாழ்கொளி புத்தூர்த் தடமலராயின தூவித் தலைவனதாள்நிழல் சார்வோம். 7
உயர்வரையொல்க வெடுத்தவரக்க னொளிர்கடகக்கை யடர்த்து அயலிடுபிச்சையோ டைய மார்தலையென்றடி போற்றி வயல்விரிநீல நெடுங்கணிபாக மாயவன்வாழ்கொளி புத்தூர்ச் சயவிரிமாமலர் தூவித் தாழ்சடையானடி சார்வோம். 8
கரியவன்நான்முகன் கைதொழுதேத்தக் காணலுஞ்சாரலு மாகா எரியுருவாகியூ ரைய மிடுபவியுண்ணியென் றேத்தி
வரியரவல்குல் மடந்தையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர் விரிமலராயின தூவி விகிர்தன சேவடி சேர்வோம். 9
குண்டமணர்துவர்க் கூறைகண்மெய்யிற் கொள்கையினார் புறங்கூற வெண்டலையிற்பலி கொண்டல் விரும்பினையென்று விளம்பி வண்டமர்பூங்குழல் மங்கையொர்பாக மாயவன்வாழ்கொளி புத்தூர்த்
தொண்டர்கள் மாமலர்தூவத் தோன்றிநின்றானடி சேர்வோம். 10
436.
கல்லுயர்மாக்கட னின்றுமுழங்குங் கரைபொரு காழியமூதூர் நல்லுயர்நான்மறை நாவின் நற்றமிழ் ஞானசம்பந்தன் வல்லுயர்சூலமும் வெண்மழுவாளும் வல்லவன்வாழ்கொளி புத்தூர்ச் சொல்லியபாடல்கள் வல்லார் துயர்கெடுதல்லெளி தாமே, 11
திருச்சிற்றம்பலம்
0 0 000

Page 42
66 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
41. திருப்பாம்புரம் : பண் - தக்கராகம்
437. சீரணிதிகழ்திரு மார்பில்வெண்ணுாலர் திரிபுரமெரிசெய்த செல்வர்
வாரணிவனமுலை மங்கையோர்பங்கர் மான்மறியேந்திய மைந்தர் காரணிமணிதிகழ் மிடறுடையண்ணல் கண்ணுதல் விண்ணவரேத்தும் பாரணிதிகழ்தரு நான்மறையாளர் பாம்புர நன்னகராரே. 1
438. கொக்கிறகோடு கூவிளமத்தங் கொன்றையொ டெருக்கணிசடையர்
அக்கினொடாமை பூண்டழகாக அனலதுஆடுமெம் மடிகள் மிக்கநல்வேத வேள்வியுளெங்கும் விண்ணவர் விரைமலர்தூவப் பக்கம்பல்பூதம் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே. 2
439. துன்னலினாடை யுடுத்ததன்மேலோர் குறைநல்லரவது சுற்றிப்
பின்னுவார்சடைகள் தாழவிட்டாடிப் பித்தராய்த்திரியுமெம் பெருமான் மன்னுமாமலர்கள் தூவிடநாளும் மாலையாட்டியுந் தாமும், பன்னுநான்மறைகள் பாடிடவருவார் பாம்புர நன்னகராரே. 3
40. துஞ்சுநாள்துறந்து தோற்றமுமில்லாச் சுடர்விடுசோதியெம் பெருமான் நஞ்சுசேர்கண்ட முடையவென்நாதர் நள்ளிருள்நடஞ்செயுந் நம்பர் மஞ்சுதோய்சோலை மாமயிலாட மாடமாளிகைதன்மே லேறிப் பஞ்சுசேர்மெல்லடிப் பாவையர்பயிலும் பாம்புர நன்னகராரே. 4
44. நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து கதியதுவாகக் காளிமுன்காணக்கானிடைநடஞ்செய்த கருத்தர் விதியதுவழுவா வேதியர்வேள்வி செய்தவரோத்தொலி யோவாப் பதியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே. s
442. ஒதிநன்குணர்வார்க் குனர்வுடையொருவ ரொளிதிகழுருவஞ்சே ரொருவர் மாதினையிடமா வைத்தளம்வள்ளல் மான்மறியேந்திய மைந்தர் ஆதிநீயருளென் றமரர்கள் பணிய அலைகடல்கடையவன் றெழுந்த பாதிவெண் பிறைசடைவைத்தனம்பரமர் பாம்புர நன்னகராரே. 6
43. மாலினுக்கன்று சக்ரமீந்து மலரவற்கொருமுக மொழித்து
ஆலின்கீழறமோர் நால்வருக்கருளி யணலதுஆடுமுெம் மடிகள் காலனைக்காய்ந்து தங்கழலடியாற் காமனைப் பொடிபடநோக்கிப் பாலனுக்கருள்கள் செய்தவெம்மடிகள் பாம்புர நன்னகராரே. 7
444. விடைத்தவல்லரக்கன் வெற்பினையெடுக்க மெல்லிய திருவிரலூன்றி
அடர்த்தவன்றனக்கன் றருள்செய்தவடிக ளனலதுஆடுமெம் மண்ணல் மடக்கொடியவர்கள் வருபுனலாட வந்திழியரிசிலின் கரைமேல் படப்பையிற்கொணர்ந்து பருமணிசிதறும் பாம்புர நன்னகராரே. 8

திருப்பேனுபெருந்துறை : பண் - தக்காரம் 87
445.
446.
447.
448.
449.
கடிபடுகமலத் தயனொடுமாலுங் காதலோடடிமுடி தேடச்
செடிபடுவினைகள் தீர்த்தருள்செய்யுந் தீவணரெம்முடைச் செல்வர் முடியுடையமரர் முனிகணத்தவர்கள் முறைமுறையடிபணிந் தேத்தப் படியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே. 9
குண்டர்சாக்கியருங் குணமிலாதாருங் குற்றுவிட்டுடுக்கையர் தாமுங் கண்டவாறுரைத்துக் கால்நிமிர்த்துண்ணுங் கைபர்தாமுள்ளவா றறியார் வண்டுசேர்குழலி மலைமகள் நடுங்க வாரணமுரிசெய்து போர்த்தார்
பண்டுநாஞ்செய்த பாவங்கள்தீர்ப்பார் பாம்புர நன்னகராரே, 10
பார்மலிந்தோங்கிப் பருமதில்சூழ்ந்த பாம்புர நன்னகராரைக்
கார்மலிந்தழகார் கழனிசூழ்மாடக் கழுமலமுதுபதிக் கவுணி
நார்மலிந்தோங்கு நான்மறைஞான சம்பந்தன்செந்தமிழ் வல்லார்
சீர்மலிந்தழகார் செல்வமதோங்கிச் சிவனடிநண்ணுவர் தாமே.
திருச்சிற்றம்பலம்
80
42. திருப்பேனுபெருந்துறை : பண் - தக்கராகம்
பைம்மாநாகம் பன்மலர்கொன்றை பன்றிவெண்கொம்பொன்று பூண்டு
செம்மாந்தையம் பெய்கென்றுசொல்லிச் செய்தொழில்பேணியோர் செல்வர் அம்மானோக்கிய யந்தளிர்மேனி யரிவையோர்பாக மமர்ந்த பெம்மானல்கிய தொல்புகழாளர் பேணு பெருந்துறையாரே. 1
மூவருமாகி யிருவருமாகி முதல்வனுமாய்நின்ற மூர்த்தி பாவங்கள்தீர்தர நல்வினைநல்கிப் பல்கணம்நின்று பணியச் சாவமதாகிய மால்வரைகொண்டு தண்மதிள்மூன்று மெரித்த
தேவர்கள்தேவ ரெம்பெருமானார் தீதில் பெருந்துறையாரே. 2
450.
45.
செய்பூங்கொன்றை கூவிளமாலை சென்னியுட்சேர்புனல் சேர்த்திக் கொய்பூங்கோதை மாதுமைபாகங் கூடியோர்பீடுடை வேடர் கைபோனான்ற கனிகுலைவாழை காய்குலையிற்கமு கீனப் பெய்பூம்பாளை பாய்ந்திழிதேறல் பில்கு பெருந்துறையாரே. 3
நிலனொடுவானு நீரொடுதீயும் வாயுவுமாகியோ ரைந்து புலனொடுவென்று பொய்ம்மைகள்தீர்ந்த புண்ணியர்வெண்பொடிப் பூசி நலனொடுதீங்குந் தானலதின்றி நன்கெழுசிந்தைய ராகி மலனொடுமாசு மில்லவர்வாழு மல்கு பெருந்துறையாரே. 4

Page 43
68 a
452.
453.
454.
455.
456.
457
458,
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
பணிவாயுள்ள நன்கெழுநாவின் பத்தர்கள்பத்திமை செய்யத் துணியார்தங்க ளுள்ளமிலாத சுமடர்கள்சோதிப் பரியார் அணியார்நீல மாகியகண்ட ராரிசிலுரிஞ்சு கரைமேல் மணிவாய்நீலம் வாய்கமழ்தேறல் மல்கு பெருந்துறையாரே. 5
எண்ணார்தங்கள் மும்மதிள்வேவ ஏவலங்காட்டிய எந்தை விண்ணோர்சாரத் தன்னருள்செய்த வித்தகர்வேத முதல்வர் பண்ணார்பாட லாடலருத பசுபதியீசனேர் பாகம் பெண்ணாணாய வார்சடையண்ணல் பேணு பெருந்துறையாரே. 6
விழையாருள்ளம் நன்கெழுநாவில் வினைகெடவேதமா றங்கம் பிழையாவண்ணம் பண்ணியவாற்ருற் பெரியோரேத்தும் பெருமான் தழையார்மாவின் தாழ்கணியுந்தித் தண்ணரிசில்புடை சூழ்ந்து குழையார்சோலை மென்னடையன்னங் கூடு பெருந்துறைபாரே. 7
பொன்னங்காால் வெண்திரைசூழ்ந்த பொருகடல்வேலி பிலங்கை மன்னனொல்க மால்வரையூன்றி மாமுரணாகமுந்தோளும், முன்ன வைவாட்டிப் பின்னருள்செய்த மூவிலைவேலுடை மூர்த்தி அன்னங்கன்னிப் பேடையொடாடி யணவு பெருந்துறைபாரே. 6
புள்வாய்போழ்ந்து மாநிலங்கீண்ட பொருகடல்வண்ணனும் பூவின் உள்வாயல்லி மேலுறைவானு முணர்வரியானுமை கேள்வன் முள்வாய்தாளின் தாமரைமொட்டின் முகமலரக்கயல் பாயக் கள்வாய்நீலங் கண்மலரேய்க்குங் காமர் பெருந்துறையாரே. 9
குண்டுந்தேருங் கூறைகளைந்துங் கூப்பிலர்செப்பில ராகி மிண்டும்மிண்டர் மிண்டவைகண்டு மிண்டுசெயாது விரும்பும் தண்டும்பாம்பும் வெண்டலைசூலந் தாங்கியதேவர் தலைவர் வண்டுந்தேனும் வாழ்பொழிற்சோலை மல்கு பெருந்துறைபாரே.0
கடையார்மாட நன்கெழுவீதிக் கழுமலலுரன் கலந்து நடையாரின்சொல் ஞானசம்பந்தன் நல்லபெருந்துறை மேய படையார்குலம் வல்லவன்பாதம் பரவியபத்திவை வல்லார் உடையாராகி யுள்ளமுமொன்றி யுலகினில்மன்னுவர் தாமே. 1
திருச்சிற்றம்பலம்
0 0 (d. 4 ()

திருக்கற்குடி. பண் - தக்காரம் 69
459。
460.
46.
462.
463.
464.
465,
466.
தோளமர் வன்தலை குன்றத் தொல்விர லூன்று துணைவர்
43. திருக்கற்குடி : பண் - தக்கராகம்
வடந்திகழ் மென்முலை யாளைப் பாகம தாக மதித்துத் தடந்திரை சேர்புனல் மாதைத் தாழ்சடை வைத்த சதுரர் இடந்திகழ் முப்புரி நூலர் துன்பமொ டின்பம தெல்லாம் கடந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
அங்கமொ ராறுடை வேள்வியான அருமறை நான்கும் பங்கமில் பாடலோ டாடல் பாணி பயின்ற படிறர் சங்கம தார்குற மாதர் தங்கையில் மைந்தர்கள் தாவிக் கங்குலின் மாமதி பற்றுங் கற்குடி மாமலை யாரே.
நீரக லந்தரு சென்னி நீடிய மத்தமும் வைத்துத் தாரகை யின்னொளி சூழ்ந்த தண்மதி சூடிய சைவர் போரக லந்தரு வேடர் புனத்திடை யிட்ட விறகில் காரகி லின்புகை விம்முங் கற்குடி மாமலை யாரே.
ஒருங்களி நீயிறை வாவென்றும்பர்க ளோல மிடக்கண் டிருங்கள மார விடத்தை யின்னமு துண்ணிய ஈச்சர் மருங்களி யார்பிடி வாயில் வாழ்வெதி ரின்முளை வாரிக் கருங்களி யானை கொடுக்குங் கற்குடி மாமலை யாரே.
போர்மலி திண்சிலை கொண்டு பூதக ணம்புடை சூழப் பார்மலி வேடுரு வாகிப் பண்டொரு வர்க்கருள் செய்தார்
ஏர்மலி கேழல் கிளைத்த இன்னொளி மாமணி யெங்கும்
கார்மலி வேடர் குவிக்குங் கற்குடி மாமலை யாரே.
உலந்தவ ரென்ப தணிந்தே வூரிடு பிச்சைய ராகி விலங்கல்வில் வெங்கன லாலே மூவெயில் வேவ முனிந்தார் நலந்தரு சிந்தைய ராகி நாமலி மாலையி னாலே கலந்தவர் காதலில் வாழுங் கற்குடி மாமலை யாரே.
மானிட மார்தரு கையர் மாமழு வாரும் வலத்தார் ஊனிடை யார்தலை யோட்டி லுண்கலனாக வுகந்தார் தேனிடை யார்தரு சந்தின் திண்சிறை யால்தினை வித்திக் கானிடை வேடர் விளைக்குங் கற்குடி மாமலை யாரே.
வாளமர் வீர நினைந்த இராவணன் மாமலை யின்கீழ்த்
தாளமர் வேய்தலை பற்றித் தாழ்கரி விட்ட விசைபோய்க் காளம தார்முகில் கீறுங் கற்குடி மாமலை யாரே.
6
ク

Page 44
70 .
திருருானசம்பந்தர் - முதல் திருமுறை
467.
468.
479.
470.
471.
472.
473.
தண்டமர் தாமரை யானுந் தாவியிம் மண்ணை யளந்து கொண்டவ னும்பறி வொண்ணாக் கொள்கையர் வெள்விடை பூர்வர் வண்டிசை யாயின பாட நீடிய வார்பொழில் நீழல் கண்டமர் மாமயி லாடுங் கற்குடி மாமலை யாரே. 9
மூத்துவ ராடையி னாரும் மூசு கடுப்பொடி யாரும் நாத்துவர் பொய்ம்மொழி யார்கள் நயமில ராமதி வைத்தார் ஏத்துயர் பத்தர்கள் சித்த ரிறைஞ்ச அவரிட ரெல்லாங் காத்தவர் காமரு சோலைக் கற்குடி மாமலை யாரே.
காமரு வார்பொழில் சூழுங் கற்குடி மாமலை யாரை நாமரு வண்புகழ்க் காழி நலந்திகழ் ஞானசம் பந்தன் பாமரு செந்தமிழ் மாலை பத்திவை பாடவல் லார்கள் பூமலி வானவ ரோடும் பொன்னுல கிற்பொலி வாரே. I
திருச்சிற்றம்பலம்
44. திருப்பாச்சிலாச்சிராமம் : பண் - தக்கராகம்
துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர் அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ இவர்மாண்பே
கலைபுனைமானுரி தோலுடையாடை கனல்சுட ராலிவர்கண்கள் தலையணிசென்னியர் தாரணிமார்பர் தம்மடிகள் விரிவரென்ன அலைபுனல் பூம்பொழில் சூழ்ந்தமர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
இலைபுனைவேலரோ ஏழையைவாட இடர்செய்வதோ இவரீடே. 2
வெஞ்சுடராடுவர் துஞ்சிருள்மாலை வேண்டுவர்பூண்பது வெண்னூல் நஞ்சடைகண்டர் நெஞ்சிடமாக நண்ணுவர் நம்மைநயந்து மஞ்சடைமாளிகை சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற செஞ்சுடர்வண்ணரோ பைந்தொடிவாடச் சிதைசெய்வதோ இவர்சீரே.3
கனமலர்க்கொன்றை அலங்கலிலங்கக் கனல்தரு தூமதிக்கண்ணி புனமலர்மாலை யணிந்தழகாய புநிதர்கொ லாமிவரென்ன வனமலிவண்பொழில் சூழ்தருபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற, மனமலிமைந்தரோ மங்கையைவாட மயல்செய்வதோ இவர்மாண்பே. 4

திருப்பாச்சிலாச்சிராமம் : பண் - தக்காரம் 71
474.
47。
476.
477.
478.
479.
480.
மாந்தர்தம்பால்நறு நெய்மகிழ்ந்தாடி வளர்சடை மேற்புனல்வைத்து மோந்தைமுழாக்குழல் தாளமொர்வீணை முதிரவோர்வாய் மூரிபாடி ஆந்தைவிழிச்சிறு பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற சாந்தணிமார்பரோ தையலைவாடச் சதுர்செய்வதோ இவர்சார்வே.5
நிறுநெய்பூசி நிறைசடைதாழ நெற்றிக்கண் ணாலுற்றுநோக்கி ஆறதுசூடி ஆடரவாட்டி யைவிரற் கோவணவாடை பார்தருமேனியர் பூதத்தர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற ஏறதுவேறிய ரேழையைவாட இடர்செய்வதோ இவரிடே 6
பொங்கிளநாகமொ ரேகவடத்தோ டாமைவெண் ணுரல்புனைகொன்றை கொங்கிளமாலை புனைந்தழகாய குழகர்கொலாமிவரென்ன அங்கிளமங்கையோர் பங்கினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற சங்கொளிவண்ணரோ தாழ்குழல்வாடச் சதிர்செய்வதோ இவர்சார்வே.7
ஏவலத்தால்விச யற்கருள்செய்து இராவண னையீடழித்து மூவரிலும்முத லாய்நடுவாய மூர்த்தியை யன்றிமொழியாள் யாவர்களும்பர வும்மெழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற தேவர்கள் தேவரோ சேயிழைவாடச் சிதைசெய்வதோ இவர்சார்வே, 8
மேலதுநான்முக னெய்தியதில்லை கீழது சேவடிதன்னை நீலதுவண்ணனு மெய்தியதில்லை யெனவிவர் நின்றதுமல்லால் ஆலதுமாமதி தோய்பொழிற்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற பாலதுவண்ணரோ பைந்தொடிவாடப் பழிசெய்வதோ இவர்பண்பே. 9
நாணொடுகூடிய சாயினரேனும் நகுவ ரவரிருபோதும் ஊணொடுகூடிய வுட்குநகையா லுரைகளவைகொள வேண்டா ஆணொடுபெண்வடி வாயினர்பாச்சி லாச்சிரா மத்துறைகின்ற பூணொடுமார்பரோ பூங்கொடிவாடப் புனைசெய்வதோ இவர்பொற்பே.
O
அகமலியன்பொடு தொண்டர்வணங்க ஆச்சிரா மத்துறைகின்ற
புகைமலிமாலை புனைந்தழகாய புனிதர்கொ லாமிவரென்ன
நகைமலிதண்பொழில் சூழ்தருகாழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
தகைமலிதண்டமிழ் கொண்டிவையேத்தச் சாரகி லாவினைதானே. 11
திருச்சிற்றம்பலம்
0 0 d 0 (0.

Page 45
72 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
48.
482.
483.
484.
485.
486.
487.
488.
45. திருஆலங்காடு : பண் - தக்கராகம்
துஞ்சவருவாருந் தொழுவிப்பாரும் வழுவிப்போய் நெஞ்சம்புகுந்தென்னை நினைவிப்பாரும் முன்ைநட்பாய் வஞ்சப்படுத்தொருத்தி வாணாள்கொள்ளும் வகைகேட் டஞ்சும்பழையனுர் ராலங்காட்டெம் மடிகளே.
கேடும்பிறவியு மாக்கினாருங் கேடிலா வீடுமாநெறி விளம்பினாரெம் விகிர்தனார் காடுஞ்சுடலையுங் கைக்கொண்டெல்லிற் கணப்பேயோ டாடும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
கந்தங்கமழ்கொன்றைக் கண்ணிசூடி கனலாடி வெந்தபொடி நீற்றை விளங்கப்பூசும் விகிர்தனார் கொந்தண்பொழிற்சோலை யரவிற்றோன்றிக் கோடல்பூத் தந்தண்பழையனுர் ராலங்காட்டெம் மடிகளே.
பாலமதிசென்னி படரச்சூடிப் பழியோராக் காலனுயிர்செற்ற காலனாய கருத்தனார் கோலம்பொழிற்சோலைப் பெடையோடாடி மடமஞ்ஞை ஆலும்பழையனுர் ராலங்காட்டெம் மடிகளே.
ஈர்க்கும்புனல்சூடி யிளவெண்டிங்கள் முதிரவே பார்க்குமரவம்பூண் டாடிவேடம் பயின்ருரும்
கார்க்கொள் கொடிமுல்லை குருந்தமேறிக் கருந்தேன்மொய்த்
தார்க்கும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
பறையுஞ்சிறுகுழலும் யாழும்பூதம் பயிற்றவே மறையும்பலபாடி மயானத்துறையும் மைந்தனார் பிறையும்பெரும்புனல்சேர் சடையினாரும் பேடைவண் டறையும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
நுணங்குமறைபாடி யாடிவேடம் பயின்றாரும் இணங்குமலைமகளோ டிருகூறொன்றா யிசைந்தாரும் வணங்குஞ்சிறுத்தொண்டர் வைகலேத்தும் வாழ்த்துங்கேட் டணங்கும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
கணையும்வரிசிலையு மெரியுங்கூடிக் கவர்ந்துண்ண இணையிலெயின்மூன்று மெரித்திட்டாரெம் மிறைவனார் பிணையுஞ்சிறுமறியுங் கலையுமெல்லாங் கங்குல்சேர்ந் தணையும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
5

திருஅதிகைவிரட்டாளம் : பண் - தக்காரம் உ73
489.
490.
49.
492.
493,
494.
495.
கவிழமலைதளரக் கடகக்கையா லெடுத்தான்தோள் பவழநுனைவிரலாற் பையலுன்றிப் பரிந்தாரும் தவழுங்கொடிமுல்லை புறவஞ்சேர நறவம்பூத் தவிழும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
பகலுமிரவுஞ்சேர் பண்பினாரும் நண்போரா திகலுமிருவர்க்கு மெரியாய்த்தோன்றி நிமிர்ந்தாரும் புகலும்வழிபாடு வல்லார்க்கென்றுந் தீயபோய் அகலும்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
போழம்பலபேசிப் போதுசாற்றித் திரிவாரும்
வேழம்வருமளவும் வெயிலேதுற்றித் திரிவாருங் கேழல்விணைபோகக் கேட்பிப்பாருங் கேடிலா ஆழ்வர்பழையனூ ராலங்காட்டெம் மடிகளே.
சாந்தங்கமழ்மறுகிற் சண்பைஞான சம்பந்தன் ஆந்தண்பழையனுர் ராலங்காட்டெம் மடிகளை வேந்தனருளாலே விரித்தபாட லிவைவல்லார் சேர்ந்தஇடமெல்லாந் தீர்த்தமாகச் சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
46. திருஅதிகைவிரட்டானம் : பண் - தக்கராகம்
குண்டைக் குறட்பூதங் குழும அனலேந்திக் கெண்டைப் பிறழ்தெண்ணிர்க் கெடில வடபக்கம் வண்டு மருள்பாட வளர்பொன் விரிகொன்றை விண்ட தொடையலா னாடும்வீரட் டானத்தே.
அரும்புங் குரும்பையு மலைத்த மென்கொங்கைக் கரும்பின் மொழியாளோ டுடன்கை யணல்வீசிச் சுரும்புண் விரிகொன்றைச் சுடர்பொற் சடைதாழ விரும்பு மதிகையு ளாடும்வீரட் டானத்தே.
ஆட லழல்நாக மரைக்கிட் டசைத்தாடப் பாடல் மறைவல்லான் படுதம் பலிபெயர்வான் மாட முகட்டின்மேல் மதிதோய் அதிகையுள் வேடம் பலவல்லா னாடும்வீரட் டானத்தே.
O

Page 46
74 a
496.
497.
498.
499.
კ500.
50.
502.
503.
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
எண்ணா ரெயிலெய்தா னிறைவ னனலேந்தி மண்ணார் முழவதிர முதிரா மதிசூடிப் பண்ணார்மறைபாடப் பரம னதிகையுள் விண்ணோர் பரவநின் றாடும்வீரட் டானத்தே. 4
கரிபுன் புறமாய கழிந்தா ரிடுகாட்டில் திருநின் றொருகையால் திருவா மதிகையுள் எரியேந் தியபெருமா னெரிபுன் சடைதாழ விரியும் புனல்சூடி யாடும்வீரட் டானத்தே.
துளங்குஞ் சுடரங்கைத் துதைய விளையாடி இளங்கொம் பனசாய லுமையோ டிசைபாடி வளங்கொள் புனல்சூழ்ந்த வயலா ரதிகையுள் விளங்கும் பிறைசூடி யாடும்வீரட் டானத்தே. 6
பாதம் பலரேத்தப் பரமன் பரமேட்டி பூதம் புடைசூழப் புலித்தோ லுடையாகக் கீத முமைபாடக் கெடில வடபக்கம் வேத முதல்வனின் றாடும்வீரட் டானத்தே. ク
கல்லார் வரையரக்கன் தடந்தோள் கவின்வாட ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள் பல்லார் பகுவாய நகுவெண் தலைசூடி வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே. 8
நெடியான் நான்முகனு நிமிர்ந்தானைக் காண்கிலார் பொடியாடு மார்பானைப் புரிநூ லுடையானைக் கடியார் கழுநீலம் மலரும் மதிகையுள் வெடியார் தலையேந்தி யாடும்வீரட் டானத்தே. 9
அரையோ டலர்பிண்டி மருவிக் குண்டிகை சுரையோ டுடனேந்தி யுடைவிட் டுழல்வார்கள் உரையோ டுரையொவ்வா துமையோ டுடனாகி
விரைதோ யலர்தாரா னடும்வீரட் டானத்தே. O
ஞாழல் கமழ்காழி யுள்ஞான சம்பந்தன் வேழம் பொருதெண்ணி ரதிகைவிரட் டானத்துச் சூழுங் கழலானைச் சொன்ன தமிழ்மாலை வாழுந் துணையாக நினைவார் வினையிலரே. II.
திருச்சிற்றம்பலம்
( 4

திருச்சிரபுரம் : பண் - பழந்தக்காரம் - 75
47. திருச்சிரபுரம் : பண் - பழந்தக்கராகம்
504. பல்லடைந்த வெண்டலையிற் பலிகொள்வதன்றியும்போய்
வில்லடைந்த புருவநல்லாள் மேனியில் வைத்தலென்னே சொல்லடைந்த தொல்மறையோ டங்கங்க லைகளெல்லாஞ் செல்லடைந்த செல்வர்வாழுஞ் சிரபுர மேயவனே. 1
505. கொல்லைமுல்லை நகையினளோர் கூறது வன்றியும்போய் அல்லல்வாழ்க்கைப் பலிகொண்டுண்ணு மாதர வென்னைகொலாஞ் சொல்லநீண்ட பெருமையாளர் தொல்கலை கற்றுவல்லார் செல்லநீண்ட செல்வமல்கு சிரபுர மேயவனே. 2
506. நீரடைந்த சடையின்மேலோர் நிகழ்மதி யன்றியும்போய்
ஊரடைந்த ஏறதேறி யுண்பலி கொள்வதென்னே காரடைந்த சோலைசூழ்ந்து காமரம் வண்டிசைப்பச் சீரடைந்த செல்வமோங்கு சிரபுர மேயவனே. 3
507 கையடைந்த மானினோடு காரர வன்றியும்போய்
மெய்யடைந்த வேட்கையோடு மெல்லியல் வைத்தலென்னே கையடைந்த களைகளாகச் செங்கழு நீர்மலர்கள் செய்யடைந்த வயல்கள் சூழ்ந்த சிரபுர மேயவனே. 4
508. புரமெரித்த பெற்றியோடும் போர்மத யானைதன்னைக்
கரம்ெடுத்துத் தோலுரித்த காரண மாவதென்னே மரமுரித்த தோலுடுத்த மாதவர் தேவரோடுஞ் சிரமெடுத்த கைகள்கூப்புஞ் சிரபுர மேயவனே.
509. கண்ணுமூன்று முடையதன்றிக் கையினில் வெண்மழுவும்
பண்ணுமூன்று வீணையோடு பாம்புடன் வைத்தலென்னே எண்ணுமூன்று கனலுமோம்பி யெழுமையும் விழுமியராய்த் திண்ணமூன்று வேள்வியாளர் சிரபுர மேயவனே. 6
50. குறைபடாத வேட்கையோடு கோல்வளையா ளொருபாற்
பொறைபடாத இன்பமோடு புணர்தரு மெய்ம்மையென்னே இறைபடாத மென்முலையார் மாளிகை மேலிருந்து சிறைபடாத பாடலோங்கு சிரபுர மேயவனே. Z
511 மலையெடுத்த வாளரக்க னஞ்சவொ ருவிரலால்
நிலையெடுத்த கொள்கையானே நின்மல னேநினைவார் துலையெடுத்த சொற்பயில்வார் மேதகு வீதிதோறுஞ் சிலையெடுத்த தோளினானே சிரபுர மேயவனே. 8

Page 47
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
52.
58.
514.
55.
516.
57.
58.
மாலினோடு மலரினானும் வந்தவர் காணாது சாலுமஞ்சப் பண்ணிநீண்ட தத்துவ மேயதென்னே நாலுவேத மோதலார்கள் நந்துணை யென்றிறைஞ்சச் சேலுமேயுங் கழனிசூழ்ந்த சிரபுர மேயவனே. 9
புத்தரோடு சமணர்சொற்கள் புறனுரை யென்றிருக்கும் பத்தர்வந்து பணியவைத்த பான்மைய தென்னைகொலாம் 0 - t ه أئمة
மத்தயானை யுரியும்போர்த்து மங்கையொ டும்முடனே சித்தர்வந்து பணியுஞ்செல்வச் சிரபுர மேயவனே. 0.
தெங்குநீண்ட சோலைசூழ்ந்த சிரபுர மேயவனை அங்கநீண்ட மறைகள்வல்ல அணிகொள்சம் பந்தனுரை பங்கநீங்கப் பாடவல்ல பத்தர்கள் பாரிதன்மேற் சங்கமோடு நீடிவாழ்வர் தன்மையி னாலவரே.
திருச்சிற்றம்பலம்
· · · · ·
48. திருச்சேய்ஞலூர் : பண் - பழந்தக்கராகம்
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை ஆலடைந்த நீழல்மேவி யருமறை சொன்னதென்னே சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
நீறடைந்த மேனியின்கண் நேரிழை யாளொருபால் கூறடைந்த கொள்கையன்றிக் கோல வளர்சடைமேல் ஆறடைந்த திங்கள்குடி யரவ மணிந்ததென்னே சேறடைந்ததண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே. 2
ஊனடைந்த வெண்தலையி னோடுப லிதிரிந்து கானடைந்த பேய்களோடு பூதங்க லந்துடனே மானடைந்த நோக்கிகாண மகிழ்ந்தெரி பாடலென்னே தேனடைந்த சோலைமல்கு சேய்ஞலூர் மேயவனே. 3
வீணடைந்த மும்மதிலும் வில்மலை யாஅரவின் நாணடைந்த வெஞ்சரத்தால் நல்லெரி யூட்டலென்னே பாணடைந்த வண்டுபாடும் பைம்பொழில் சூழ்ந்தழகார் சேணடைந்த மாடமல்கு சேய்ஞலூர் மேயவனே.

திருச்சேய்ஞலூர் : பண் - பழந்தக்காரம் 77
519.
520.
52.
522.
523.
524.
525.
பேயடைந்த காடிடமாப் பேணுவ தன்றியும்போய் வேயடைந்த தோளியஞ்ச வேழ முரித்ததென்னே வாயடைந்த நான்மறையா றங்கமோ டைவேள்வித் தீயடைந்த செங்கையாளர் சேய்ஞலூர் மேயவனே.
காடடைந்த ஏனமொன்றின் காரண மாகிவந்து வேடடைந்த வேடனாகி விசயனொ டெய்ததென்னே கோடடைந்த மால்களிற்றுக் கோச்செங்க ணாற்கருள்செய் சேடடைந்த செல்வர்வாழுஞ் சேய்ஞலூர் மேயவனே. 6
பீரடைந்த பாலதாட்டப் பேணாத வன்தாதை வேரடைந்து பாய்ந்ததாளை வேர்த்தடிந் தான்றனக்குத் தாரடைந்த மாலைசூட்டித் தலைமைவ குத்ததென்னே சீரடைந்த கோயில்மல்கு சேய்ஞலூர் மேயவனே. Z
மாவடைந்த தேரரக்கன் வலிதொலை வித்தவன்றன் நாவடைந்த பாடல்கேட்டு நயந்தருள் செய்ததென்னே பூவடைந்த நான்முகன்போற்பூசுரர் போற்றிசெய்யும் சேவடைந்த வூர்தியானே சேய்ஞலூர் மேயவனே. 8
காரடைந்த வண்ணனோடு கனகம னையானும் பாரிடந்தும் விண்பறந்தும் பாதமு டிகாணார் சீரடைந்து வந்துபோற்றச் சென்றருள் செய்ததென்னே தேரடைந்த மாமறுகிற் சேய்ஞலூர் மேயவனே. 9
மாசடைந்த மேனியாரும் மனந்திரி யாதகஞ்சி நேசடைந்த வூணினாரும் நேசமி லாததென்னே வீசடைந்த தோகையாட விரைகம மும்பொழில்வாய்த் தேசடைந்த வண்டுபாடுஞ் சேய்ஞலூர் மேயவனே. #ი
சேயடைந்த சேய்ஞலூரிற் செல்வன சீர்பரவித் தோயடைந்த வண்வயல்சூழ் தோணிபு ரத்தலைவன் சாயடைந்த ஞானமல்கு சம்பந்த னின்னுரைகள் வாயடைந்து பாடவல்லார் வானுல காள்பவரே. I
திருச்சிற்றம்பலம்
0 0 000

Page 48
78 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
526.
527.
528.
529.
530.
53.
532.
533.
49. திருநள்ளாறு : பண் - பழந்தக்கராகம்
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும்பொன் னகலம் பாகமார்த்த பைங்கண்வெள்ளேற் றண்ணல்பர மேட்டி ஆகமார்த்த தோலுடையன் கோவணஆ டையின்மேல் நாகமார்த்த நம்பெருமான் மேயதுநள் ளாறே. I
தோடுடைய காதுடையன் தோலுடையன் தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர்பா லுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான் மேயதுநள் ளாறே. 2
ஆன்முறையா லாற்றவெண்ணி றாடியணி யிழையோர் பான்முறையால் வைத்தபாதம் பத்தர்பணிந் தேத்த மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும்பற் றியகை நான்மறையான் நம்பெருமான் மேயதுநள் ளாறே. 3
புல்கவல்ல வார்சடைமேற் பூம்புனல் பெய்தயலே மல்கவல்ல கொன்றைமாலை மதியோடுடன் சூடிப் பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாதநிழற் சேர நல்கவல்ல நம்பெருமான் மேயதுநள் ளாறே. 4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொளிள மதியம் ஆறுதாங்குஞ் சென்னிமேலோ ராடரவஞ் சூடி நீறுதாங்கி நூல்கிடந்த மார்பினிரை கொன்றை நாறுதாங்கு நம்பெருமான் மேயதுநள் ளாறே.
திங்களுச்சி மேல்விளங்குந் தேவனிமை யோர்கள் எங்களுச்சி யெம்மிறைவ னென்றடியே யிறைஞ்சத் தங்களுச்சி யால்வணங்குந் தன்னடியார் கட்கெல்லாம் நங்களுச்சி நம்பெருமான் மேயதுநள் ளாறே. 6
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொண்முழ வதிர அஞ்சிடத்தோ ராடல்பாடல் பேணுவதன்றி யும்போய்ச் செஞ்சடைக்கோர் திங்கள்குடித் திகழ்தருகண் டத்துள்ளே நஞ்சடைத்த நம்பெருமான் மேயதுநள் ளாறே. Z சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத்தீ யம்பினுல்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணி றாடுவதன் றியும்போய்ச் பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதியஞ் சூடி
நட்டமாடு நம்பெருமான் மேயதுநள் ளாறே. 8

திருவலிவலம் : பண் - பழந்தக்காரம் 79
534.
535.
536.
537.
538,
539.
540.
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுடனே யொடுக்கி அண்ணலாகா வண்ணனிழ லாரழல்போ லுருவம் எண்ணலாகா வுள்வினையென் றெள்கவலித் திருவர் நண்ணலாகா நம்பெருமான் மேயதுநள் ளாறே. 9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர்குண மிலிகள் பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி யந்நெறிசெல் லன்மின் மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதிளும் முடனே நாசஞ்செய்த நம்பெருமான் மேயதுநள் ளாறே.
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கியதாழ் சடையன்” நண்புநல்லார் மல்குகாழி ஞானசம்பந் தன்நல்ல பண்புநள்ளா றேத்துபாடல் பத்துமிவை வல்லார் உண்புநீங்கி வானவரோ டுலகிலுறை வாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
50. திருவலிவலம் : பண் - பழந்தக்கராகம்
ஒல்லையாறி யுள்ளமொன்றிக் கள்ளமொழிந்துவெய்ய சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி நல்லவாறே யுன்றனாம நாவில்நவின் றேத்த வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே.
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற்றே வரெல்லாம் பயங்களாலே பற்றிநின்பாற் சித்தந்தெளி கின்றிலர் தயங்குசோதீ சாமவேதா காமனைக்காய்ந் தவனே மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.
2
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப்பெருங் கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனைநோய் நலியக் கண்டுகண்டே யுன்றனாமங் காதலிக்கின்ற துள்ளம் வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே. 3
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனையைத் துறந்து செய்யரானுர் சிந்தையானே தேவர்குலக் கொழுந்தே நைவனாயே னுன்றன்நாமம் நாளுந்நவிற் றுகின்றேன். வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.

Page 49
80 sh
54.
542.
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவனுன் திறமே தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப் பணிய நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளுநினைந் தடியேன் வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார்மூ வெயிலும் எரியவெய்தா யெம்பெருமா னென்றிமையோர் பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
543.
544.
545.
546.
547.
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே. 6
தாயுநீயே தநதைநீயே சங்கரனே யடியேன் ஆயுநின்பா லன்புசெய்வா னாதரிக்கின் றதுள்ளம் ஆயமாய காயந்தன்னு ளைவர்நின்றொன் றலொட்டார் மாயமேயென் றஞ்சுகின்றன்ே வலிவல மேயவனே. Z
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனிரா வணனைத் தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிரலா லடர்த்த வாரொடுங்குங் கொங்கைபங்கா வலிவல மேயவனே. 8
ஆதியாய நான்முகனு மாலுமறி வரிய சோதியானே நீதியில்லேன் சொல்லுவனின் திறமே ஒதிநாளு முன்னையேத்து மென்னைவினை யவலம் வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே. 9
பொதியிலானே பூவணத்தாய் பொன்திகழுங் கயிலைப் பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவிடா தவனே விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கியரென் றிவர்கள் மதியிலாதா ரென்செய்வாரோ வலிவல மேயவனே. 10
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவலமே யவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம்பந் தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத்தோர் விரும்பும்
மன்னுசோதி யீசனோடே மன்னியிருப் பாரே.
திருச்சிற்றம்பலம்
d is 0 (0)
இ-குே

548.
549.
550.
551.
552.
553.
554.
555.
திருச்சோபுரம் : பண்- பழந்தக்கராகம் 61
51. திருச்சோபுரம் : பண் - பழந்தக்கராகம் வெங்கணானை யீருரிவை போர்த்துவிளங் குமொழி மங்கைபாகம் வைத்துகந்த மாண்பதுஎன் னைகொலாம் கங்கையோடு திங்கள்குடிக் கடிகமழுங் கொன்றைத் தொங்கலானே தூயநீற்றாய் சோபுரமே யவனே. s
விடையமர்ந்து வெண்மழுவொன் றேந்திவிரிந் திலங்கு சடையொடுங்கத் தண்புணலைத் தாங்கியதென் னைகொலாம் கடையுயர்ந்த மும்மதிலுங் காய்ந்தணலுள் ளழுந்தத் தொடைநெகிழ்ந்த வெஞ்சிலையாய் சோபுரமே யவனே. 2
தீயராய வல்லரக்கர் செந்தழலுள் ளழுந்தச் சாயவெய்து வானவரைத் தாங்கியதென் னைகொலாம் பாயும்வெள்ளை ஏற்றையேறிப் பாய்புலித்தோ லுடுத்த தூயவெள்ளை நீற்றினானே சோபுரமே யவனே.
பல்லிலோடு கையிலேந்திப் பல்கடையும் பலிதேர்ந் தல்லல்வாழ்க்கை மேலதான ஆதரவென் னைகொலாம் வில்லைவென்ற நுண்புருவ வெல்நெடுங்கண் ணியோடுந் தொல்லையூழி யாகிநின்றாய் சோபுரமே யவனே. 4
நாற்றமிக்க கொன்றைதுன்று செஞ்சடைமேல் மதியம் ஏற்றமாக வைத்துகந்த காரணமென் னைகொ6ாம் ஊற்றமிக்க காலன்றன்னை யொல்கவுதைத் அருளித் தோற்றமீறு மாகிநின்றாய் சோபுரமே யவனே. 5
கொன்னவின்ற மூவிலைவேற் கூர்மழுவாட் படையன் பொன்னைவென்ற கொன்றைமாலை சூடும்பொற்பென் னைகொலாம் அன்னமன்ன மென்னடையாள் பாகமமர்ந் தரைசேர் துன்னவண்ண ஆடையினாய் சோபுரமே யவனே. 6
குற்றமின்மை யுன்மைநியென் றுன்னடியார் பணிவார் கற்றகேள்வி ஞானமான காரணமென் னைகொலாம் வற்றலாமை வாளரவம் பூண்டயன்வெண் டலையில் துற்றலான கொள்கையானே சோபுரமே யவனே. Z
விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர் குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம் இலங்கைமன்னு வாளவுணர் கோணையெழில் விரலால் துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே. 8

Page 50
82 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
556.
557.
558.
559.
S60.
შ561
562.
விடங்கொள்நாக மால்வரையைச் சுற்றிவிரி திரைநீர் கடைந்தநஞ்சை யுண்டுகந்த காரணமென் னைகொலாம் இடந்துமண்ணை யுண்டமாலு மின்மலர்மே லயனுந் தொடர்ந்துமுன்னங் காணமாட்டாச் சோபுரமே யவனே. 9
புத்தரோடு புன்சமணர் பொய்யுரையே யுரைத்துப் பித்தராகக் கண்டுகந்த பெற்றிமையென் னைகொலாம் மத்தயானை யீருரிவை போர்த்துவளர் சடைமேல்
துத்திநாகஞ் சூடினானே சோபுரமே யவனே. 0
சோலைமிக்க தண்வயல்சூழ் சோபுரமே யவனைச் சீலமிக்க தொல்புகழார் சிரபுரக்கோன் நலத்தால் ஞாலமிக்க தண்டமிழால் ஞானசம்பந் தன்சொன்ன கோலமிக்க மாலைவல்லார் கூடுவர்வா னுலகே.
திருச்சிற்றம்பலம்
4- 8 d is 4d
52. திருநெடுங்களம் : பண் - பழந்தக்கராகம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே யென்றுனைப்பே சினல்லால் குறையுடையார் குற்றமோராய் கொள்கையினா லுயர்ந்த நிறையுடையா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
கனைத்தெழுந்த வெண்திரைசூழ் கடலிடைநஞ் சுதன்னைத் தினைத்தனையா மிடற்றில்வைத்த திருந்தியதே வநின்னை மனத்தகத்தோர் பாடலாடல் பேணியிராப் பகலும் நினைத்தெழுவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 2
நின்னடியே வழிபடுவான் நிமலாநினைக் கருத என்னடியா னுயிரைவவ்வே லென்றடற்கூற் றுதைத்த பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும் நின்னடியா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 3
மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய் அலைபுரிந்த கங்கைதங்கு மவிர்சடையா ரூரா தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவநின்ருள் நிழற்கீழ் நிலைபுரிந்தா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.

திருநெடுங்களம் : பண் - பழந்தக்கராகம் 83
563.
பாங்கினல்லார் படிமஞ்செய்வார் பாரிடமும் பலிசேர்
தூங்கிநல்லார் பாடலோடு தொழுகழலே வணங்கித்
ጋO4.
კ565.
ტ66.
კ567..
568.
569.
தாங்கிநில்லா அன்பினோடுந் தலைவநின்றாள் நிழற்கீழ் நீங்கிநில்லா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே.
விருத்தனாகிப் பாலனாகி வேதமோர்நான் குணர்ந்து கருத்தனாகிக் கங்கையாளைக் கமழ்சடைமேற் கரந்தாய் அருத்தனாய ஆதிதேவ னடியிணையே பரவும் நிருத்தர்கீத ரிடர்களையாய் நெடுங்களமே யவனே, 6
கூறுகொண்டாய் மூன்றுமொன்றாக் கூட்டியோர்வெங் கணையால் மாறுகொண்டார் புரமெரித்த மன்னவனே கொடிமேல் ஏறுகொண்டாய் சாந்தமீதென் றெம்பெருமா னணிந்த நீறுகொண்டா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. M
குன்றினுச்சி மேல்விளங்குங் கொடிமதில்சூ Nலங்கை அன்றிநின்ற வரக்கர்கோனை யருவரைக்கீழடர்த்தாய் என்றுநல்ல வாய்மொழியா லேத்தியிராப் பகலும் நின்றுநைவா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 8
வேழவெண்கொம் பொசித்தமாலும் விளங்கியநான் முகனும் சூழவெங்கு நேடஆங்கோர் சோதியுளா கிநின்ருய் கேழல்வெண்கொம் பணிந்தபெம்மான் கேடிலாப்பொன் னடியின் நீழல்வாழ்வா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 9
வெஞ்சொற்றஞ்சொல் லாக்கிநின்ற வேடமில்லாச் சமனும் தஞ்சமில்லாச் சாக்கியருந் தத்துவமொன் றறியார் துஞ்சலில்லா வாய்மொழியால் தோத்திரநின் னடியே நெஞ்சில்வைப்பா ரிடர்களையாய் நெடுங்களமே யவனே. 10
நீடவல்ல வார்சடையான் மேயநெடுங் களத்தைச் சேடர்வாழு மாமறுகிற் சிரபுரக்கோன் நலத்தால் நாடவல்ல பனுவன்மாலை ஞானசம்பந் தன்சொன்ன பாடல்பத்தும் பாடவல்லார் பாவம் பறையுமே.
திருச்சிற்றம்பலம்
80 O A1a

Page 51
84 sh
திருஞானசம்பந்தா - முதல் திருமுறை
570.
571.
572.
、573.
あ74.
575.
576.
577.
53. திருமுதுகுன்றம் : பண் - பழந்தக்கராகம்
தேவராயு மசுரராயுஞ் சித்தர்செழு மறைசேர் நாவராயு நண்ணுபாரும் விண்ணெரிகால் நீரும் மேவராய விரைமலரோன் செங்கண்மா லிசனென்னும் மூவராய முதலொருவன் மேயதுமு துகுன்றே.
பற்றுமாகி வானுளோர்க்குப் பல்கதிரோன் மதிபார் எற்றுநீர்தீக் காலுமேலை விண்ணியமா னனோடு மற்றுமாதோர் பல்லுயிராய் மாலயனும் மறைகள் முற்றுமாகி வேறுமானான் மேயதுமு துகுன்றே. 2
வாரிமாகம் வைகுதிங்கள் வாளரவஞ் சூடி நாரிபாகம் நயந்துபூமேல் நான்முகன்றன் தலையில் சீரிதாகப் பலிகொள்செல்வன் செற்றலுந்தோன் றியதோர் மூரிநாகத் துரிவைபோர்த்தான் மேயதுமு துகுன்றே. 3
பாடுவாருக் கருளுமெந்தை பனிமுதுபெள வமுந்நீர் நீடுபாரு முழுதுமோடி யண்டர்நிலை கெடலும் நாடுதானு மூடுமோடி ஞாலமுநான் முகனும் ஊடுகாண மூடும்வெள்ளத் துயர்ந்ததுமுதுகுன்றே. 4.
வழங்குதிங்கள் வன்னிமத்த மாசுணமி சணவிச் செழுங்கல்வேந்தன் செல்விகாணத் தேவர்திசை வணங்கத் தழங்கு மொந்தை தக்கைமிக்க பேய்க்கணம்பூ தஞ்சூழ முழங்குசெந்தீ யேந்தியாடி மேயதுமு துகுன்றே. 5
சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைத்தைம் புலனும் அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமுதுகுன்றே. 6ፓ
மயங்குமாயம் வல்லராகி வானினெடு நீரும் இயங்குவோருக் கிறைவணுய இராவணன்தோள் நெரித்த புயங்கராக் மாநடத்தன் புணர்முலைமாதுமையாள் முயங்குமார்பன் முனிவரேத்த மேயதுமு துகுன்றே. 8
ஞாலமுண்ட மாலுமற்றை நான்முகனு மறியாக் கோலமண்டர் சிந்தைகொள்ளா ராயினுங்கொய் மலரால் ஏலஇண்டை கட்டிநாம மிசையனப்போ துமேத்தும் மூலமுண்ட நீற்றர்வாயான் மேயதுமு துகுன்றே. 9

திருவோத்துர் : பண் - பழந்தக்கராகம் 85
578.
579.
580.
58.
582.
583.
584.
உறிகொள்கையர் சீவரத்த ருண்டுழல்மிண் டர்சொல்லை நெறிகளென்ன நினைவுறாதே நித்தலுங்கை தொழுமின் மறிகொள்கையன் வங்கமுந்நீர்ப் பொங்குவிடத் தையுண்ட முறிகொள்மேனி மங்கைபங்கன் மேயதுமுதுகுன்றே. O
மொய்த்துவானோர், பல்கணங்கள் வணங்குமுதுகுன்றைப் பித்தர்வேடம் பெருமையென்னும் பிரமபுரத்தலைவன்.
竇 睿 會,會 壹 ”壶 窗 穷 资 曹
திருச்சிற்றம்பலம்
0 0 (d. 00
54. திருவோத்தூர் : பண் - பழந்தக்கராகம்
பூத்தேர்ந் தாயன கொண்டுநின் பொன்னடி ஏத்தா தாரில்லை யெண்ணுங்கால் ஒத்தூர் மேய வொளிமழு வாளங்கைக் கூத்தீ ரும்ம குணங்களே.
இடையீர் போகா இளமுலை யாளையோர்
புடையீ ரேபுள்ளி மானுரி
உடையீ ரேயும்மை யேத்துது மோத்தூர்ச் சடையீ ரேயும தாளே. 2
உள்வேர் போல நொடிமையி னார்திறம் கொள்வீ ரல்குலோர் கோவணம் ஒள்வா ழைக்கனி தேன்சொரி யோத்தூர்க் கள்வீ ரேயும காதலே. s
தோட்டீ ரேதுத்தி யைந்தலை நாகத்தை ஆட்டீ ரேயடி யார்வினை ஒட்டீ ரேயும்மை யேத்துது மோத்துரர் நாட்டீ ரேயருள் நல்குமே. 4.
குழையார் காதீர் கொடுமழு வாட்படை உழையாள் வீர்திரு வோத்தூர் பிழையா வண்ணங்கள் பாடிநின் றாடுவார் அழையா மேயருள் நல்குமே. s

Page 52
88 ம திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
585.
586.
587.
588.
589.
590.
59.
மிக்கார் வந்து விரும்பிப் பலியிடத் தக்கார் தம்மக்க ளிரென் றுட்கா தாருள ரோதிரு வோத்தூர் நக்கீ ரேயருள் நல்குமே.
தாதார் கொன்றை தயங்கு முடியுடை நாதா என்று நலம்புகழ்ந் தோதா தாருள ரோதிரு வோத்தூர் ஆதீ ரேயருள் நல்குமே.
என்றா னிம்மலை யென்ற அரக்கனை வென்றார் போலும் விரலினால் ஒன்றார் மும்மதி லெய்தவ னோத்துரர் என்றார் மேல்வினை யேகுமே.
நன்றா நான்மறை யானொடு மாலுமாய்ச் சென்றார் போலுந்தி சையெலாம் ஒன்றா யொள்ளெரி யாய்மிக வோத்தூர் நின்றீ ரேயுமை நேடியே.
கார மண்கலிங் கத்துவ ராடையர் தேரர் சொல்லவை தேறன்மின் ஒரம் பாலெயி லெய்தவ னோத்தூர்ச் சீர வன்கழல் சேர்மினே.
குரும்பை யாண்பனை யீன்குலை யோத்தூர் அரும்பு கொன்றை யடிகளைப் பெரும்பு கலியுள் ஞானசம்பந் தன்சொல் விரும் புவார்வினை வீடே.
திருச்சிற்றம்பலம்
800 00
55. திருமாற்பேறு : பண் - பழந்தக்கராகம் ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே.
O
11

திருமாற்பேறு : பண் - பழந்தக்கராகம் 87
592.
593.
594.
595.
தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை அடைவா ராமடி கள்ளென மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே றுடையீ ரேயுமை யுள்கியே.
பையா ரும்மர வங்கொடு வாட்டிய கையா னென்று வணங்குவர் மையார் நஞ்சுண்டு மாற்பேற்றி ருக்கின்ற ஐயா நின்னடி யார்களே.
சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று
நீல மார்கண்ட நின்னையே.
மாறி லாமணி யேயென்று வானவர் ஏற வேமிக ஏத்துவர்
கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின்
596.
597.
598.
5.99.
நீற னேயென்று நின்னையே.
உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் பரவா தாரில்லை நாள்களும் திரையார் பாலியின் தென்கரை மாற்பேற் றரையா னேயருள் நல்கிடே −
அரச விரிக்கும் மரக்க னவன்றனை உரைகெ டுத்தவ னொல்கிட வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப் பரவி டக்கெடும் பாவமே,
இருவர் தேவருந் தேடித்தி ரிந்தினி ஒருவ ராலறி வொண்ணிலன் மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப் பரவு வார்வினை பாறுமே.
தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் நீசர் தம்முரை கொள்ளெலும் தேச மல்கிய தென்திரு மாற்பேற்றின் ஈச னென்றெடுத் தேத்துமே.
67

Page 53
88 m
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
600.
60.
602.
603.
எண்ணார் வந்தெ னெழில்கொண்டார்
604.
605.
606.
மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னு மாற்பேற் றடிகளை மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல் பன்ன வேவினை பாறுமே.
திருச்சிற்றம்பலம்
0 0 × 0 (0.
56. திருப்பாற்றுறை : பண் - பழந்தக்கராகம்
காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே.
நல்லா ரும்மவர் தீய ரெனப்படும் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழு மீசரே.
விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர்
பண்ணார் வண்டினம் பாடல்செய் பர்ற்றுறை உள்நாள் நாளும் முறைவரே. 3
பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவி னல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே. 4
மாகந் தோய்மதி சூடி மகிழ்ந்தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணு முடையவர் பாற்றுறை நாகம் பூண்ட் நயவரே. あ
போது பொன்திகழ் கொன்றை புனைமுடி
நாதர் வந்தென் நலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே. 6

திருவேற்காடு : பண் - பழந்தக்கராகம் 89
607.
608.
609.
60.
6.
62.
63.
வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுை ஆடல் நாக மசைத்தாரே. Z
வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தெ னெழில்கொண்டார் பவ்வ நஞ்சபை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே.
ஏன மன்னமு மாணவ ருக்கெரி ஆன வண்ணத்தெ மண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே. 9
வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தெ னன்னலம் வெளவினார்
பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை
மைந்தர் தாமோர் மணாளரே.
பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய
பத்து நூறு பெயரனைப் பத்தன் ஞானசம் பந்தன தின்தமிழ் பத்தும் பாடிப் பரவுமே.
திருச்சிற்றம்பலம்
0.000
57. திருவேற்காடு : பண் - பழந்தக்கராகம்
ஒள்ளி துள்ளக் கதிக்கா மிவனொளி வெள்ளி யானுறை வேற்காடு உள்ளி யாருயர்ந் தாரில் வுலகினில் தெள்ளி யாரவர் தேவரே.
ஆடல் நாக மசைத்தள வில்லதோர் வேடங் கொண்டவன் வேற்காடு பாடி யும்பணிந் தாரில் வுலகினில்
சேட ராகிய செல்வரே. 2

Page 54
90 in
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
614.
65.
616.
67.
68.
619.
620.
62.
பூதம் பாடப் புறங்காட் டிடையாடி வேத வித்தகன் வேற்காடு போதுஞ் சாந்தும் புகையுங் கொடுத்தவர்க் கேத மெய்துத லில்லையே. 3
ஆழ்க டலெனக் கங்கை கரந்தவன் வீழ்ச டையினன் வேற்காடு தாழ்வு டைமணத் தாற்பணிந் தேத்திடப் பாழ்ப டும்மவர் பாவமே, 4.
காட்டி னாலு மயர்த்திடக் காலனை வீட்டி னானுறை வேற்காடு பாட்டி னாற்பணிந் தேத்திட வல்லவர் ஒட்டினார்வினை ஒல்லையே. 5
தோலி னாலுடை மேவவல் லான்சுடர்
வேலி னாலுறை வேற்காடு நூலி னாற்பணிந் தேத்திட வல்லவர்
மாலினார்வினை மாயுமே. 6
மல்லல் மும்மதில் மாய்தர எய்ததோர் வில்லி னானுறை வேற்காடு சொல்ல வல்ல சுருங்கா மனத்தவர் செல்ல வல்லவர் தீர்க்கமே. 2
மூரல் வெண்மதி சூடு முடியுடை வீரன் மேவிய வேற்காடு வார மாய்வழி பாடுநி னைந்தவர் சேர்வர் செய்கழல் திண்ணமே. 8
பரக்கி னார்படு வெண்டலை யிற்பலி விரக்கி னானுறை வேற்காட்டூர் அரக்க னாண்மை யடரப்பட் டானிறை
நெருக்கி னரனை நினைமினே. 9
மாறி லாமல ரானொடு மாலவன்
வேற லானுறை வேற்காடு ஈறி லாமொழி யேமொழி யாவெழில் கூறி னார்க்கில்லை குற்றமே. O

திருக்கரவிரம் : பண் - பழந்தக்கராகம் உ91
622 விண்ட மாம்பொழில் சூழ்திரு வேற்காடு
கண்டு நம்பன் கழல்பேணிச் சண்பை ஞானசம் பந்தன செந்தமிழ் கொண்டு பாடக் குணமாமே. 11
திருச்சிற்றம்பலம்
0 0 000
58. திருக்கரவீரம் : பண் - பழந்தக்கராகம்
623. அரியு நம்வினை யுள்ளன ஆசற
வரிகொள் மாமணி போற்கண்டங் களிய வன்திக முங்கர வீரத்தெம் பெரிய வன்கழல் பேணவே.
624. தங்கு மோவினை தாழ்சடை மேலவன்
திங்க ளோடுடன் சூடிய கங்கை யான்திக முங்கர வீரத்தெஞ் சங்க ரன்கழல் சாரவே. 2
625 ஏதம் வந்தடை யாவினி நல்லன
பூதம் பல்படை யாக்கிய காத லான்திக முங்கர வீரத்தெம் நாதன் பாதம் நணுகவே. 3
626 பறையு நம்வினை யுள்ளன பாழ்பட மறையு மாமணி போற்கண்டம் கறைய வன்திக முங்கர வீரத்தெம் இறைய வன்கழ லேத்தவே. 会
627. பண்ணி னார்மறை பாடல னாடலன்
விண்ணி னார்மதி லெய்தமுக் கண்ணி னானுறை யுங்கர வீரத்தை நண்ணு வார்வினை நாசமே.
628. நிழலி னார்மதி சூடிய நீள்சடை
அழலி னாரண லேந்திய கழலி னாருறை யுங்கர வீரத்தைத் தொழவல் லார்க்கில்லை துக்கமே. 6

Page 55
92 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
629.
630.
63.
632.
633.
634.
635.
வண்டர் மும்மதில் மாய்தர வெய்தவன் அண்ட னாரழல் போலொளிர் கண்ட னாருறை யுங்கர வீரத்துத் தொண்டர் மேற்றுயர் தூரமே.
புனலி லங்கையர் கோன்முடி பத்திறச் சினவ லாண்மை செகுத்தவன் கனல வன்னுறை கின்றக ரவீரம் எனவல் லார்க்கிட ரில்லையே.
வெள்ளத் தாமரை யானொடு மாலுமாய்த் தெள்ளத் தீத்திர ளாகிய கள்ளத் தானுறை யுங்கர வீரத்தை உள்ளத் தான்வினை ஒயுமே.
செடிய மண்ணொடு சீவரத் தாரவர் கொடிய வெவ்வுரை கொள்ளேன்மின் கடிய வன்னுறை கின்ற கரவிரத் தடிய வர்க்கில்லை யல்லலே.
வீடி லான்விளங் குங்கர வீரத்தெஞ் சேடன் மேற்கசி வாற்றமிழ் நாடு ஞானசம் பந்தன சொல்லிவை பாடு வார்க்கில்லை பாவமே,
திருச்சிற்றம்பலம்
0'0 000
59. திருத்துங்கானைமாடம் : பண் - பழந்தக்கராகம்
ஒடுங்கும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய
வாழ்க்கை யொழியத்தவம்
அடங்கும் மிடங்கருதி நின்றிரெல்லா மடிக
ளடிநிழற்கீழாளாம்வண்ணம்
கிடங்கும் மதிலுஞ் சுலாவியெங்குங் கெழுமனைகள்
தோறு மறையின்னுெலி
தொடங்குங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே.
பிணிநீர சாதல் பிறத்தலிவை பிரியப்
பிரியாத பேரின்பத்தோ டணிநீர மேலுல கமெய்தலுறி லறிமின்
III

திருத்துங்கானைமாடம் : பண் - பழந்தக்கராகம் 93
குறைவில்லை ஆனேறுடை மணிநீல கண்ட முடையபிரான் மலைமக
ளுந்தானு மகிழ்ந்துவாழும், துணிநீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே. 2
636. சாநாளும் வாழ்நாளுந் தோற்றமிவை சலிப்பாய
வாழ்க்கை யொழியத்தவம்
ஆமா றறியா தலமந்துநீ ரயர்ந்துங்
குறைவில்லை ஆனேறுடைப்
பூமாணலங்க விலங்கு கொன்றை புனல்பொதிந்த
புன்சடையி னானுறையும்
தூமாண் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே. се
637. ஊன்றும் பிணிபிறவி கேடென்றிவை யுடைத்தாய
வாழ்க்கை யொழியத்தவம்
மான்று மனங்கருதி நின்றீரெல்லா மனந்திரிந்து
மண்ணில் மயங்காதுநீர்
மூன்று மதிலெய்த மூவாச்சிலை முதல்வர்க்
கிடம்போலு முகில்தோய்கொடி
தோன்றுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே. 4
638. மயல்தீர்மை யில்லாத தோற்றம்மிவை மரணத்தொ
டொத்தழியு மாறாதலால்
வியல்தீர மேலுக மெய்தலுறின் மிக்கொன்றும்
வேண்டா விமலனிடம்
உயர்தீர வோங்கிய நாமங்களா லோவாது
நாளு மடிபரவல்செய்
துயர்தீர் கடந்தைத் தடங்கோயில்சேர்தூங்கானை
மாடந் தொழுமின்களே.
639. பன்னீர்மை குன்றிச் செவிகேட்பிலா படல்நோக்
கிற்கண் பவளந்நிற நன்னீர்மை குன்றித் திரைதோலொடு நரைதோன்றுங்
காலம் நமக்காதல்முன் பொன்னிர்மை துன்றப் புறந்தோன்றுநற் புனல்பொ
திந்தபுன் சடையினானுறையும் தொன்னிர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே. 6
i

Page 56
94 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
640. இறையூண் துகளோ டிடுக்கணெய்தி யிழிப்பாய
வாழ்க்கை யொழியத்தவம்
நிறையூ னெறிகருதி நின்றீரெல்லாம் நீள்கழ
லேநாளு நினைமின்சென்னிப்
பிறைகு ழலங்க லிலங்குகொன்றை பிணையும்
பெரும்ான் பிரியாதநீர்த்
துறைசூழ் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே.
64. பல்வீழ்ந்து நாத்தளர்ந்து மெய்யில்வாடிப் பழிப்பாய
வாழ்க்கை யொழியத்தவம்
இல்சூ பூழிடங்கருதி நின்றீரெல்லா மிறையே
பிரியா தெழுந்துபோதும்
கல்சூழரக்கன் கதறச் செய்தான் காதலியுந்
தானுங் கருதிவாழும்
தொல்சீர்க் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே.
642. நோயும் பிணியு மருந்துயரமு நுகருடைய
வாழ்க்கை யொழியத்தவம்
வாயு மனங்கருதி நின்றிரெல்லா மலர்மிசைய
நான்முகனும் மண்ணும்விண்ணும்
தாய அடியளந்தான் காணமாட்டாத் தலைவர்க்
கிடம்போலுந் தண்சோலைவிண்
தோயுங் கடந்தைத் தடங்கோயில்சேர் தூங்கானை
மாடந் தொழுமின்களே.
643. பகடூர் பசிநலிய நோய்வருதலாற் பழிப்பாய
வாழ்க்கை யொழியத்தவம்
முகடூர் மயிர்கடிந்த செய்கையாரு மூடுதுவ
ராடையரு நாடிச்சொன்ன
திக்டீர்ந்த பொய்ம்மொழிகள் தேறவேண்டா திருந்திழையுந்
தானும் பொருந்திவாழுந்
துகடீர் கடந்தைத் தடங்கோயில்சேர் அாங்கானை
மாடந் தொழுமின்களே.
644. மண்ணார் முழவதிரும் மாடவீதி வயற்காழி
ஞானசம் பந்தன்நல்ல பெண்ணா கடத்துப் பெருங்கோயில்சேர் பிறையுரிஞ்சுந்
தூங்கானை மாடமேயான்,

திருத்தோணிபுரம் : பண் - பழந்தக்கராகம் உ95
கண்ணார் கழல்பரவு பாடல்பத்துங் கருத்துணரக்
கற்ருருங் கேட்டாரும்போய்
விண்ணோ ருலகத்து மேவிவாழும் விதியதுவே
யாகும் வினைமாயுமே.
* திருச்சிற்றம்பலம்
0 0008
60. திருத்தோணிபுரம் : பண் - பழந்தக்கராகம் 645 வண்டரங்கப் புனற்கமல மதுமாந்திப் பெடையினொடும்
ஒண்டரங்க இசைபாடு மளியரசே ஒளிமதியத் துண்டரங்கப் பூண்மார்பர் திருத்தோணி புரத்துறையும் பண்டரங்கர்க் கென்நிலைமை பரிந்தொருகாற் பகராயே.
646. எறிகறவங் கழிகான விளங்குருகே என்பயலை
அறிவுறா தொழிவதுவு மருவினையேன் பயனன்றே செறிசிறார் பதமோதுந் திருத்தோணி புரத்துறையும் வெறிநிறார் மலர்க்கண்ணி வேதியர்க்கு விளம்பாயே. 2
647. பண்பழனக் கோட்டகத்து வாட்டமிலாச் செஞ்சூட்டுக்
கண்பகத்தின் வாரணமே கடுவினையே னுறுபயலை செண்பகஞ்சேர் பொழில்புடைசூழ் திருத்தோணிபுரத்துறையும் பண்பனுக்கென் பரிசுரைத்தாற் பழியாமோ மொழியாயே. 3
648. காண்டகைய செங்காலொண் கழிநாராய் காதலாற்
பூண்டகைய முலைமெலிந்து பொன்பயந்தா ளென்றுவளர் சேண்டகைய மணிமாடத் திருத்தோணி புரத்துறையும் ஆண்டகையாற் கின்றேசென் றடியறிய வுணர்த்தாயே. 会
649. பாராரே யெனையொருகால் தொழுகின்றேன் பாங்கமைந்த
காராருஞ் செழுநிறத்துப் பவளக்காற் கபோதகங்காள் தேராரு நெடுவிதித் திருத்தோணி புரத்துறையும் நீராருஞ் சடையாருக் கென்நிலைமை நிகழ்த்தீரே. あ
650. சேற்றெழுந்த மலர்க்கமலச் செஞ்சாலிக் கதிர்வீச
வீற்றிருந்த அன்னங்காள் விண்ணோடு மண்மறைகள் தோற்றுவித்த திருத்தோணி புரத்தீசன் துளங்காத கூற்றுதைத்த திருவடியே கூடுமா கூறிரே. 6

Page 57
96 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
651 முன்றில்வாய் மடற்பெண்ணைக் குரம்பைவாழ் முயங்குசிறை
அன்றில்காள் பிரிவுறுநோ யறியாதீர் மிகவல்லீர் தென்றலார் புகுந்துலவுந் திருத்தோணி புரத்துறையுங் கொன்றைவார் சடையார்க்கென் கூர்பயலை கூறிரே. ク
652. பானாறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி
ஏனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குயிலே தேனாரும் பொழில்புடைசூழ் திருத்தோணி புரத்தமரர் கோனாரை யென்னிடத்தே வரவொருகாற் கூவாயே. 8
653, நற்பதங்கள் மிகஅறிவாய் நானுன்னை வேண்டுகின்றேன்
பொற்பமைந்த வாயலகிற் பூவைநல்லாய் போற்றுகின்றேன் சொற்பதஞ்சேர் மறையாளர் திருத்தோணி புரத்துறையும் விற்பொலிதோள் விகிர்தனுக்கென் மெய்ப்பயலை விளம்பாயே, 9
654. சிறையாரு மடக்கிளியே யிங்கேவா தேனொடுபால்
முறையாலே யுணத்தருவன் மொய்பவளத் தொடுதரளந் துறைய்ாருங் கடற்றோணி புரத்தீசன் றுளங்குமிளம் பிறையாளன் திருநாம மெனக்கொருகாற் பேசாயே. O
655. போர்மிகுத்த வயற்றோணி புரத்துறையும் புரிசடையெங்
கார்மிகுத்த கறைக்கண்டத் திறையவனை வண்கமலத் தார்மிகுத்த வரைமார்பன் சம்பந்த னுரைசெய்த சீர்மிகுத்த தமிழ்வல்லார் சிவலோகஞ் சேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
800 80
61. திருச்செங்காட்டங்குடி : பண் - பழந்தக்கராகம்
656. நறைகொண்ட மலர்தூவி விரையளிப்ப நாடோறும்
முறைகொண்டு நின்றடியார் முட்டாமே பணிசெய்யச் சிறைகொண்ட வண்டறையுஞ் செங்காட்டங் குடியதனுள் கறைகொண்ட கண்டத்தான் கணபதிச் சாத்தானே.
657. வாரேற்ற பறையொலியுங் சங்கொலியும் வந்தியம்ப ஊரேற்ற செல்வத்தோ டோங்கியசீர் விழவோவாச் சீரேற்ற முடைத்தாய செங்காட்டங் குடியதனுள் காரேற்ற கொன்றையான் கணபதீச் சரத்தானே.

திருச்செங்காட்டங்குடி : பண் - பழந்தக்கராகம் 97
658,
659.
660.
661.
662.
663.
664.
665.
வரந்தையான் சோபுரத்தான் மந்திரத்தான் தந்திரத்தான் கிரந்தையான் கோவணத்தான் கிண்கிணியான் கையதோர் சிரந்தையான் செங்காட்டங் குடியான்செஞ் சடைசேருங் கரந்தையான் வெண்ணிற்முன் கணபதீச் சரத்தானே.” 3
தொங்கலுங் கமழ்சாந்து மகிற்புகையுந் தொண்டர்கொண் டங்கையால் தொழுதேத்த அருச்சுனற்கன் றருள்செய்தான் செங்கயல்பாய் வயலுடுத்த செங்காட்டங் குடியதனுள் கங்கைசேர் வார்சடையான் கணபதீச் சரத்தானே. 4.
பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி நூலினால் மணமாலை கொணர்ந்தடியார் புரிந்தேத்தச் சேலினார் வயல்புடைசூழ் செங்காட்டங் குடியதனுள் காலினாற் கூற்றுதைத்தான் கணபதீச் சரத்தானே. 5
நுண்ணியான் மிகப்பெரியான் ஓவுளார் வாயுளான் தண்ணியான் வெய்யானந் தலைமேலான் மனத்துளான் திண்ணியான் செங்காட்டங் குடியான்செஞ் சடைமதியக் கண்ணியான் கண்ணுதலான் கணபதீச் சரத்தானே.
மையினார் மலர்நெடுங்கண் மலைமகளோர் பாகமாம் மெய்யினான் பையரவ மரைக்கசைத்தான் மீன்பிறழ்ச் செய்யினார் தண்கழனிச் செங்காட்டங் குடியதனுள் ண்கயினார் கூரெரியான் கணபதீச் சரத்தானே. 7
தோடுடையான் குழையுடையா னரக்கன்றன் றோளடர்த்த பீடுடையான் போர்விடையான் பெண்பாக மிகப்பெரியான் சேடுடையான் செங்காட்டங் குடியுடையான் சேர்ந்தாடுங் காடுடையா னாடுடையான் கணபதிச் சரத்தானே. 8
ஆனூரா வுழிதருவா னன்றிருவர் தேர்ந்துணரா வானூரான் வையகத்தான் வாழ்த்துவார் மனத்துளான் தேனுாரான் செங்காட்டங் குடியான்சிற் றம்பலத்தான் க்ானூரான் கழுமலத்தான் கணபதீச் சரத்தானே. 9
செடிநுகருஞ் சமணர்களுஞ் சீவரத்த சாக்கியரும் படிநுகரா தயருழப்பார்க் கருளாத பண்பினான் பொடிநுகருஞ் சிறுத்தொண்டர்க்கருள்செய்யும் பொருட்ட்ாகக் கடிநராய் வீற்றிருந்தான் கணபதீச் சரத்தானே. O

Page 58
98 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
666.
667.
668.
669.
670.
67.
672.
கறையிலங்கு மலர்க்குவளை கண்காட்டக் கடிபொழிலின் நறையிலங்கு வயற்காழித் தமிழ்ஞான சம்பந்தன் சிறையிலங்கு புனற்படப்பைச் செங்காட்டங் குடிசேர்த்தும் மறையிலங்கு தமிழ்வல்லார் வானுலகத் திருப்பாரே. Il
திருச்சிற்றம்பலம்
62. திருக்கோளிலி : பண் - பழந்தக்கராகம் *
நாளாய போகாமே நஞ்சணியுங் கண்டனுக்கே ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே யரன்நாமம் கேளாய்நங் கிளைகிளைக்குங் கேடுபடாத் திறமருளிக்
கோளாய நீக்குமவன் கோளிலியெம் பெருமானே.
ஆடரவத் தழகாமை அணிகேழற் கொம்பார்த்த தோடரவத் தொருகாதன் துணைமலர்நற் சேவடிக்கே பாடரவத் திசைபயின்று பணிந்தெழுவார் தம்மனத்தில் கோடரவந் தீர்க்குமவன் கோளிலியெம் பெருமானே. 2
நன்றுநகு நாண்மலரால் நல்லிருக்கு மந்திரங்கொண் டொன்றிவழி பாடுசெயலுற்றவன்ற னோங்குயிர்மேல் கன்றிவரு காலனுயிர் கண்டவனுக் கன்றளித்தான் கொன்றைமலர் பொன்றிகழுங் கோளிலியெம் பெருமானே. 3
வந்தமண லாலிலிங்க மண்ணியின்கட் பாலாட்டும் சிந்தைசெய்வோன் தன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத் தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக் கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. 4
வஞ்சமனத் தஞ்சொடுக்கி வைகலும்நற் பூசனையால் நஞ்சமுது செய்தருளு நம்பியென வேநினையும் பஞ்சவரிற் பார்த்தனுக்குப் பாசுபத மீந்துகந்தான் கொஞ்சுகிளிமஞ்சணவுங் கோளிலியெம் பெருமானே. '5
தாவியவ னுடனிருந்துங் காணாத தற்பரணை ஆவிதனி லஞ்சொடுக்கி யங்கணனென் றாதரிக்கும் நாவியல்சீர் நமிநந்தி யடிகளுக்கு நல்குமவன் கோவியலும் பூவெழுகோற் கோளிலியெம் பெருமர்னே. 6

திருப்பிரமபுரம் : பல்பெயர்ப்பத்து. பண் - தக்கேசி 99
673,
674.
675.
676.
கன்னவிலு மால்வரையான் கார்திகழு மாமிடற்றான் சொன்னவிலு மாமறையான் தோத்திரஞ்செய் வாயினுளான் மின்னவிலுஞ் செஞ்சடையான் வெண்பொடியா னங்கையினில் கொன்னவிலுஞ் சூலத்தான் கோளிலியெம் பெருமானே. Z
அந்தரத்தில் தேரூரு மரக்கன்மலை யன்றெடுப்பச் சுந்தரத்தன் திருவிரலா லூன்றவவ னுடல்நெரிந்து மந்திரத்த மறைபாட வாளவனுக் கீந்தானும் கொந்தரத்த மதிச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 9.
நாணமுடை வேதியனு நாரணனு நண்ணவொணாத் தாணுவெனை யாளுடையான் றன்னடியார்க் கன்புடைமை பாணனிசை பத்திமையாற் பாடுதம் பரிந்தளித்தான் கோணலிளம் பிறைச்சென்னிக் கோளிலியெம் பெருமானே. 9
தடுக்கமருஞ் சமணரொடு தர்க்கசாத் திரத்தவர்சொல்
இடுக்கண்வரு மொழிகேளா தீசனையே ஏத்துமின்கள்
677.
678,
679.
நடுக்கமிலா அமருலகந் நண்ணலுமா மண்ணல்கழல் கொடுக்ககிலா வரங்கொடுக்குங் கோளிலியெம் பெருமானே.0
நம்பனைநல் லடியார்க ணாமுடைமா டென்றிருக்கும் கொம்பனையாள் பாகனெழிற் கோளிலியெம் பெருமானை வம்பமருந் தண்காழிச் சம்பந்தன் வண்டமிழ்கொண் டின்பமர வல்லார்க ளெய்துவர்க ளிசனையே.
திருச்சிற்றம்பலம்
d () ( 0 (d
63. திருப்பிரமபுரம் : பல்பெயர்ப்பத்து . பண் - தக்கேசி எரியார்மழுவொன் றேந்தியங்கை யிடுதலையேகலனா .పద வரியார்வளையா ரையம்வவ்வாய் மாநலம்வவ்வுதியே சரியாநாவின் வேதகீதன் தாமரை நான்முகத்தன் பெரியான்பிரமன் பேணியாண்ட பிரமபுரத்தானே.
பெயலார்சடைக்கோர் திங்கள்குடிப் பெய்பலிக்கென்றயலே கயலார்தடங்க ணஞ்சொனல்லார் கண்டுயில்வவ்வுதியே இயலானடாவி யின்பமெய்தி யிந்திரனாள்மண்மேல் வியலார்முரச மோங்குசெம்மை வேணுபுரத்தானே. 2

Page 59
1OO
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
680.
68.
682.
683.
684.
நகலார்தலையும் வெண்பிறையு நளிர்சடைமாட்டபலே பகலாப்பலிதேர்ந் தையம்வவ்வாய் பாய்கலைவவ்வுதியே அகலாதுறையு மாநிலத்தி லயலின் மையாலமரர் புகலால்மலிந்த பூம்புகலி மேவியபுண்ணியனே. 3.
சங்கோடிலங்கத் தோடுபெய்து காதிலொர் தாழ்குழையன் அங்கோல்வளையா ரையம்வவ்வா யானலம்வவ்வுதியே செங்கோனடாவிப் பல்லுயிர்க்குஞ் செய்வினைமெய்தெரிய வெங்கோத்தருமன் மேவியாண்ட வெங்குருமேயவனே. 4.
தணிநீர்மதியஞ் சூடிநீடு தாங்கியதாழ்சடையன் பிணிநீர்மடவா ரையம்வவ்வாய் பெய்கலைவவ்வுதியே அணிநீருலக மாகியெங்கு மாழ்கடலாலழுங்கத் துணிநீர்பணியத் தான்மிதந்த தோணிபுரத்தானே.
கவர்பூம்புனலுந் தண்மதியுங் கமழ்சடைமாட்டயலே அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம்வவ்வுதியே அவர்பூணரையர்க் காதியாய்அவள்தன் மன்னனான்மண்மேல் தவர்பூம்பதிக ளெங்குமெங்குந் தங்குதராயவனே. 6
முலையாழ்கெழும மொந்தைகொட்ட முன்கடைமாட்டபலே
நிலையாய்ப்பலிதேர்ந் தையம்வவ்வாய் நீநலம்வவ்வுதியே
685.
686.
687.
தலையாய்க்கிடந்திவ் வையமெல்லாந் தன்னதோராணைநடாய்ச் சிலையால்மலிந்த சீர்ச்சிலம்பன் சிரபுரமேயவனே. 7.
எருதேகொணர்கென் றேறியங்கை யிடுதலையேகலனாக் கருதேர்மடவா ரையம்வவ்வாய் கண்டுயில்வவ்வுதியே ஒருதேர்கடாவி யாரமரு ளொருபதுதோள்தொலையப்
பொருதேர்வலவன் மேவியாண்ட புறவமர் புண்ணியனே. 8
துவர்சேர்கலிங்கப் போர்வையாருந் தூய்மையிலாச்சமனுங் கவர்செய்துழலக் கண்டவண்ணங் காரிகைவார்குழலார் அவர்பூம்பலியோ டையம்வவ்வா யானலம்வவ்வுதியே தவர்செய்நெடுவேற் சண்டனாளச் சண்பையமர்ந்தவனே. 9
நிழலால்மலிந்த கொன்றைசூடி நீறுமெய்பூசிநல்ல குழலார்மடவா ரையம்வவ்வாய் கோல்வளைவவ்வுதியே அழலாயுலகங் கவ்வைதீர ஐந்தலைநீண்முடிய கழனாகரையன் காவலாகக் காழியமர்ந்தவனே. O

திருப்பூவணம் : பண் - தக்கேசி 101
688.
689.
690.
691.
692.
693.
694.
கட்டார்துழாயன் தாமரையா னென்றிவர்.காண்பரிய சிட்டார்பலிதேர்ந் தையம்வவ்வாய் செய்கலைவவ்வுதியே நட்டார்நடுவே நந்தனாள நல்வினையாலுயர்ந்த கொட்டாறுடுத்த தண்வயல்சூழ் கொச்சையமர்ந்தவனே.
கடையார்கொடிநன் மாடவீதிக் கழுமிலவூர்க்கவுணி நடையார்பனுவல் மாலையாக ஞானசம்பந்தன்நல்ல படையார்மழுவன் மேல்மொழிந்த பல்பெயர்ப்பத்தும்வல்லார்க் கடையாவினைகளுலகில்நாளு மமருலகாள்பவரே.
திருச்சிற்றம்பலம்
0 0 () 00
64. திருப்பூவணம் : பண் - தக்கேசி
அறையார்புனலு மாமலரு மாடரவார்சடைமேல் குறையார்மதியஞ் சூடிமாதோர் கூறுடையானிடமாம் முறையார்முடிசேர் தென்னர்சேரர் சோழர்கள்தாம்வணங்கும் திறையாரொளிசேர் செம்மையோங்குந் தென்திருப்பூவணமே.
மருuைrர்மதில்முன் றொன்றவெய்து மாமலையான்மடந்தை ஒருபால்பாக மாகச்செய்த வும்பர்பிரான்வனூர் கருவார்சாலி யாலைமல்கிக் கழல்மன்னர்காத்தளித்த திருவால்மலிந்த சேடர்வாழுந் தென்திருப்பூவணமே. 2
போரார்மதமா வுரிவைபோர்த்துப் பொடியணிமேனியனாய்க் காரார்கடலின் நஞ்சமுண்ட கண்ணுதல்விண்ணவனூர்
பாரார்வைகைப் புனல்வாய்பரப்பிப் பன்மணிபொன்கொழித்துச் சீரார்வாரி சேரநின்ற தென்திருப்பூவணமே. 3
கடியாரலங்கற் கொன்றைசூடிக் காதிலொர்வார்குழையன் கொடியார்வெள்ளை யேறுகந்த கோவணவன்னிடமாம் படியார்கூடி நீடியோங்கும் பல்புகழாற்பரவச் செடியார்வைகை சூழநின்ற தென்திருப்பூவணமே. 4
கூரார்வாளி சிலையிற்கோத்துக் கொடிமதில்கூட்டழித்த போரார்வில்லி மெல்லியலாளோர் பால்மகிழ்ந்தானிடமாம் ஆராஅன்பில் தென்னர்சேரர் சோழர்கள் போற்றிசைப்பத் தேரார்வீதி மாடநீடுந் தென்திருப்பூவணமே.

Page 60
102
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
695.
696.
697.
698.
699.
ZOO.
701.
நன்றுதீதென் றொன்றிலாத நான்மறையோன்கழலே சென்றுபேணி யேத்தநின்ற தேவர்பிரானிடமாம் குன்றிலொன்றி யோங்கமல்கு குளிர்பொழில்சூழ்மலர்மேல் தென்றலொன்றி முன்றிலாருந் தென்திருப்பூவணமே. 6
பைவாயரவ மரையிற்சாத்திப் பாரிடம்போற்றிசைப்ப மெய்வாய்மேனி நிறுாபூசி ஏறுகந்தானிடமாம் கைவாழ்வளையார் மைந்தரோடுங் கலவியினால்நெருங்கிச் செய்வார்தொழிலின் பாடலோவாத் தென்திருப்பூவணமே. 7
மாடவீதி மன்னிலங்கை மன்னனைமாண்பழித்துக் கூடவென்றி வாள்கொடுத்தாள் கொள்கையினார்க்கிடமாம் பாடலோடு மாடலோங்கிப் பன்மணிபொன்கொழித்து ஒடநீரால் வைகைசூழு முயர்திருப்பூவணமே. 8
பொய்யாவேத நாவினானும் பூமகள்காதலனும் கையாற்றொழுது கழல்கள் போற்றக் கனலெரியானவனூர் மையார்பொழிலின் வண்டுபாட வைகைமணிகொழித்துச் செய்யார்கமலந் தேனரும்புந் தென்திருப்பூவணமே. 9
அலையார்புணலை நீத்தவருந் தேரருமன்புசெய்யா நிலையாவண்ண மாயம்வைத்த நின்மலன் தன்னிடமாம் மலைபோற்றுன்னி வென்றியோங்கு மாளிகைசூழ்ந்தயலே சிலையார்புரிசை பரிசுபண்ணுந் தென்திருப்பூவணமே.
திண்ணார்புரிசை மாடமோங்குந் தென்திருப்பூவணத்துப் பெண்ணார்மேனி யெம்மிறையைப் பேரியலின்தமிழால் நண்ணாருட்கக் காழிமல்கு ஞானசம்பந்தன்செர்ன்ன பண்ணார்பாடல் பத்தும்வல்லார் பயில்வதுவானிடையே. 11
திருச்சிற்றம்பலம்
0 0000
65. காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லவனிச்சரம்
பண்-தக்கேசி & ,
அடையார்தம் புரங்கள்மூன்று மாரழலிலழுந்த விடையார்மேனி யராய்ச்சிறும் வித்தகர்மேயவிடங் கடையார்மாட நீடியெங்குங் கங்குல்புறந்தடவப் படையர் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனிச்சரமே.

காவிரிப்பூம்பட்டினத்துத் திருப்பல்லவனிச்சரம் : பண் - தக்கேசி 103
702.
703,
704.
705.
706,
707.
708.
709.
எண்ணாரெயில்கள் மூன்றுளுசிறு மெந்தைபிராணிமையோர் கண்ணாயுலகங் காக்கநின்ற கண்ணுதனண்ணுமிடம் மண்ணார்சோலைக் கோலவண்டு வைகலுந்தேனருந்திப் பண்ணார்செய்யும் பட்டினத்துப் பல்லவனிச்சரமே. - 2
மங்கையங்கோர் பாகமாக வாணிலவார்சடைமேற் கங்கையங்கே வாழவைத்த கள்வனிருந்தவிடம் பொங்கயஞ்சேர் புணரியோத மீதுயர்பொய்கையின்மேற் பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனிச்சரமே.
தாரார்கொன்றை பொன்றயங்கச் சாத்தியமார்பகலம் நீரார்நீறு சாந்தம்வைத்த நின்மலன்மன்னுமிடம் போரார்வேற்கண் மாதர்மைந்தர் புக்கிசைபாடலினாற் பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனிச்சரமே.
மைசேர்கண்ட ரண்டவாணர் வானவருந்துதிப்ப மெய்சேர்பொடிய ரடியாரேத்த மேவியிருந்தவிடங் கைசேர்வளையார் விழைவினோடு காதன்மையாற்கழலே பைசேரரவா ரல்குலார்சேர் பல்லவனீச்சரமே.
குழலினோசை வீணைமொத்தை கொட்டமுழவதிரக் கழலினோசை யார்க்கஆடுங் கடவுளிருந்தவிடஞ் சுழியிலாருங் கடலிலோதந் தெண்டிரைமொண்டெறியப் பழியிலார்கள் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.
வெந்தலாய வேந்தன்வேள்வி வேரறச்சாடிவிண்ணோர் வந்தெலாமுன் பேணநின்ற மைந்தன்மகிழ்ந்தஇடம் மந்தலாய மல்லிகையும் புன்னைவளர்குரவின் பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனிச்சரமே.
தேரரக்கன் மால்வரையைத் தெற்றியெடுக்கவவன் தாரரக்குந் திண்முடிக ரூன்றியசங்கரனூர் காரரக்குங் கடல்கிளர்ந்த காலமெலாமுணரப் பாரரக்கம் பயில்புகளிற் பல்லவனீச்சரமே.
அங்கமாறும் வேதநான்கு மோதுமயன்நெடுமால் தங்கணாலும் நேடநின்ற சங்கரன்றங்குமிடம் வங்கமாரு முத்தமிப்பி வார்கடலூடலைப்பப் பங்கமில்லார் பயில்புகாரிற் பல்லவனீச்சரமே.

Page 61
104 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
ፖ፲0.
7I1.
7፲2.
7ዚ3.
74.
75.
Z6.
உண்டுடுக்கை யின்றியேநின்றுார்நகவேதிரிவார் கண்டுடுக்கை மெய்யிற்போர்த்தார் கண்டறியாதவிடந் தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்பயில்வார் பண்டிடுக்கண் தீரநல்கும் பல்லவனீச்சரமே.
பத்தரேத்தும் பட்டினத்துப் பல்லவனிச்சரத்தெம் அத்தன்றன்னை யணிகொள்காழி ஞானசம்பந்தன்சொல் சித்தஞ்சேரச் செப்புமாந்தர் தீவினைநோயிலராய் ஒத்தமைந்த வும்பர்வானி லுயர்வினொடோங்குவரே.
திருச்சிற்றம்பலம்
0 000 to
66. திருச்சண்பைநகர் : பண் - தக்கேசி
பங்கமேறு மதிசேர்சடையார் விடையார்பலவேதம்
அங்கமாறு மறைநான்கவையு மானார்மீனாரும் வங்கமேவு கடல்வாழ்பரதர் மனைக்கேநூனைமூக்கின் சங்கமேறி முத்தமீனுஞ் சண்பைநகராரே.
சூதகஞ்சேர் கொங்கையாளோர் பங்கர்சுடர்க்கமலப் போதகஞ்சேர் புண்ணியனார் பூதகணநாதர் மேதகஞ்சேர் மேகமந்தண் சோலையில்விண்ணார்ந்த சாதகஞ்சேர் பாளைநீர்சேர் சண்பைநகராரே.
மகரத்தாடு கெடியோனுடலம் பொடிசெய்தவனுடைய நிகரொப்பில்லாத் தேவிக்கருள்செய் நீலகண்டனார் பகரத்தாரா வன்னம்பகன்றில் பாதம்பணிந்தேத்தத் தகரப்புன்னை தாழைப்பொழில்சேர் சண்பைநகராரே.
மொய்வல்லசுரர் தேவர்கடைந்த முழுநஞ்சதுவுண்ட தெய்வர்செய்ய வுருவர்கரிய கண்டர்திகழ்சுத்திக் கையர்கட்டங்கத்தர்களியி னுரியர்காதலாற் சைவர்பாக பதர்கள்வணங்குஞ் சண்பைநகராரே.
கலமார்கடலுள் விடமுண்டமரர்க் கமுதமருள்செய்த குலமார்கயிலைக் குன்றதுடைய கொல்லையெருதேறி நலமார்வெள்ளை நாளிகேரம் விரியாநறும்பாளை சலமார்கரியின் மருப்புக்காட்டுஞ் சண்பைநகராரே.

திருப்பழனம் : பண் - தக்கேசி 105
ZZ.
78.
7均.
220.
72.
አ22.
723.
மாகரஞ்சே ரத்தியின்தோல் போர்த்துமெய்ம்மாலான சூகரஞ்சே ரெயிறுபூண்ட சோதியன்மேதக்க ஆகரஞ்சே ரிப்பிமுத்தை யந்தண்வயலுக்கே சாகரஞ்சேர் திரைகளுந்துஞ் சண்பைநகராரே.
இருளைப்புரையு நிறத்திலரக்கன் றனையீடழிவித்து அருளைச்செய்யு மம்மான்னேரா ரந்தண்கந்தத்தின் மருளைச்சுரும்பு பாடியளக்கர் வரையார்திரைக்கையால் தரளத்தோடு பவளமீனுஞ் சண்பைநகராரே.
மண்டான்முழுது முண்டமாலு மலர்மிசைமேலயனும் எண்டானறியா வண்ணநின்ற இறைவன்மறையோதி தண்டார்குவளைக் கள்ளருந்தித் தாமரைத்தாதின்மேற்
பண்டான்கொண்டு வண்டுபாடுஞ் சண்பைநகராரே.
போதியாரும் பிண்டியாரும் புகழலசொன்னுலும் நீதியாகக் கொண்டங்கருளு நிமலனிருநான்கின் மாதிசித்தர் மாமறையின் மன்னியதொன்னூலர் சாதிகீத வர்த்தமானர் சண்பைநகராரே.
வந்தியோடு பூசையல்லாப் போழ்தின்மறைபேசிச் சந்திபோதிற் சமாதிசெய்யுஞ் சண்பைநகர்மேய அந்திவண்ணன் தன்னையழகார் ஞானசம்பந்தன்சொற் சிந்தைசெய்து பாடவல்லார் சிவகதிசேர்வாரே.
திருச்சிற்றம்பலம்
0 (0 : 0
67. திருப்பழனம் : பண். - தக்கேசி
வேதமோதி வெண்ணுரல்பூண்டு வெள்ளையெருதேறிப் பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார் நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையு முடையார்காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால் எண்ணாதுதைத்த எந்தைபெருமா னிமவான்மகளோடும் பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.
67

Page 62
106
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
724.
725.
726.
727.
728.
729.
730.
73.
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய் உறையுமயான மிடமாவுடையா ருலகர்தலைமகன் அறையுமலர்கொண் டடியார்பரவி யாடல்பாடல்செய் பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே. 3
உரமன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில் இரவிற்பூதம் பாடஆடி யெழிலாரலர்மேலைப் பிரமன்றலையி னறவமேற்ற பெம்மானெமையாளும் பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே. 4
குலவெஞ்சிலையான் மதில்முன்றெரித்த கொல்லேறுடைபண்ணல் கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டெதிருந்திப் பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.
வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவினொலியோவா மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார் ஈளைப்படுகி லிலையார்தெங்கிற் குலையார்வாழையின் பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே. 6
பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி செய்யார்கரிய மிடற்ருர்வெண்ணுரல் சேர்ந்தஅகலத்தார் கைாயாடலினார் புனலான்மல்கு சடைமேற்பிறையோடும் பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே. 7
மஞ்சோங்குயர முடையான்மலையை மாறாயெடுத்தான்தோள் அஞ்சோடஞ்சு மாறுநான்கு மடரவூன்றினார் நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும் பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே. 8
கடியார்கொன்றைச் சுரும்பின்மாலை கமழ்புன்சடையார்விண் முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே. 9
கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை உண்டாங்கவர்க ளுரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே. O

திருக்கயிலாயம் : பண் - தக்கேசி 107
782.
733.
734.
735.
736.
737.
738,
வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள் நாவுய்த்தனைய திறலால்மிக்க ஞானசம்பந்தன் பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.
திருச்சிற்றம்பலம்
800 (d. 8
68. திருக்கயிலாயம் : பண் - தக்கேசி
பொடிகொளுருவர் புலியினதளர் புரிநூல்திகழ்மார்பில் கடிகொள்கொன்றை கலந்தநீற்றர் கறைசேர்கண்டத்தர் இடியகுரலா லிரியுமடங்கல் தொடங்குமுனைச்சாரல் கடியவிடைமேற் கொடியொன்றுடையார் கயிலைமலையாரே.
புரிகொள்சடையா ரடியர்க்கெளியார் கிளிசேர்மொழிமங்கை தெரியவுருவில் வைத்துகந்த தேவர்பெருமானார் பரியகளிற்றை யரவுவிழுங்கி மழுங்கஇருள்கூர்ந்த கரியமிடற்றர் செய்யமேனிக் கயிலைமலையாரே. 2
மாவினுரிவை மங்கைவெருவ மூடிமுடிதன்மேல் மேவுமதியு நதியும்வைத்த இறைவர்கழலுன்னும் தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன்முகவன்சேர் காவும்பொழிலுங் கடுங்கற்சுணைகுழ் கயிலைமலையாரே. 3
முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர்மதனன்றன் தென்னிருருவ மழியத்திருக்கண் சிவந்தநுதலினார் மன்னிர்மடுவும் படுகல்லறையி னுழுவைசினங்கொண்டு கன்னிர்வரைமே லிரைமுன்தேடுங் கயிலைமலையாரே. M
ஒன்றும்பலவு மாயவேடத் தொருவர்கழல்சேர்வார் நன்றுநினைந்து நாடற்குரியார் கூடித்திரண்டெங்கும் தென்றியிருளில் திகைத்தகரிதண் சாரல்நெறியோடிக் கன்றும்பிடியு மடிவாரஞ்சேர் கயிலைமலையாரே.
தாதார்கொன்றை தயங்குமுடியர் முயங்குமடவாளைப் போதார்பாக மாகவைத்த புனிதர்பனிமல்கும் மூதாருலகின் முனிவருடனா யறநான்கருள்செய்த காதார்குழைய வேதத்திரளர் கயிலைமலையாரே. 67

Page 63
108
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
739.
740.
741.
742.
43.
744.
743.
தொடுத்தார்புரமூன் றெரியச்சிலைமே லெரியொண்பகழியார்
எடுத்தான்திரள்தோள் முடிகள்பத்து மிடியவிரல்வைத்தார்
கொடுத்தார்படைகள் கொண்டாராளாக் குறுகிவருங்கூற்றைக் கடுத்தாங்கவனைக் கழலாலுதைத்தார் கயிலைமலையாரே. 8
ஊணாப்பலிகொண் டுலகிலேற்றா ரிலகுமணிநாகம் பூணாணார மாகப்பூண்டார் புகழுமிருவர்தாம் பேணாவோடி நேடஎங்கும் பிறங்குமெரியாகிக் காணாவண்ண முயர்ந்தார்போலுங் கயிலைமலையாரே.
விருதுபகரும் வெஞ்சொற்சமணர் வஞ்சச்சாக்கியர்
9
பொருதுபகரு மொழியைக்கொள்ளார் புகழ்வார்க்கணியராய் எருதொன்றுகைத்திங் கிடுவார்தம்பா லிரந்துண்டிகழ்வார்கள்
கருதும்வண்ண முடையார்போலுங் கயிலைமலையாரே.
போரார்கடலிற் புனல்சூழ்காழிப் புகழார்சம்பந்தன்
காரார்மேகங் குடிகொள்சாரற் கயிலைமலையார்மேல்
தேராவுரைத்த செஞ்சொன்மாலை செப்புமடியார்மேல்
வாராபிணிகள் வானோருலகின் மருவுமனத்தாரே.
திருச்சிற்றம்பலம்
0 - 08 0
69. திருவண்ணாமலை : பண் - தக்கேசி
பூவார்மலர்கொண் டடியார்தொழுவார் புகழ்வார்வானோர்கள் மூவார்புரங்க ளெரித்தவன்று மூவர்க்கருள்செய்தார்
தூமாமழைநின் றதிரவெருவித் தொறுவின்னிரையோடும் ஆமாம்பிணைவந் தணையுஞ்சார லண்ணாமலையாரே.
மஞ்சைப்போழ்ந்த மதியஞ்சூடும் வானோர்பெருமானார். நஞ்சைக்கண்டத் தடக்குமதுவும் நன்மைப்பொருள்போலும் வெஞ்சொற்பேசும் வேடர்மடவா ரிதணமதுவேறி அஞ்சொற்கில்க ளாயோவென்னு மண்ணாமலையாரே.
ஞானத்திரளாய் நின்றபெருமான் நல்லஅடியார்மேல் ஊனத்திரளை நீக்குமதுவு முண்மைப்பொருள்போலும் ஏனத்திரளோ டினமான்கரடி யிழியுமிரவின்கண் ஆனைத்திரள்வந் தணையுஞ்சார லண்ணாமலையாரே.
s

திருவண்ணாமலை : பண் - தக்கேசி 3 109
746. இழைத்தஇடையா ளுமையாள்பங்க ரிமையோர்பெருமானார்
தழைத்தசடையார் விடையொன்றேறித் தரியார்புரமெய்தார் பிழைத்தபிடியைக் காணாதோடிப் பெருங்கைமதவேழம் அழைத்துத்திரிந்தங் குறங்குஞ்சார லண்ணாமலையாரே. 4
747. உருவிற்றிகழு முமையாள்பங்க ரிமையோர்பெருமானார்
செருவில்லொருகால் வளையவூன்றிச் செந்தீயெழுவித்தார் பருவிற்குறவர் புனத்திற்குவித்த பருமாமணிமுத்தம் அருவித்திரளோ டிழியுஞ்சார லண்ணாமலையாரே.
748. எனைத்தோரூழி யடியாரேத்த இமையோர்பெருமானார்
நினைத்துத்தொழுவார் பாவந்தீர்க்கும் நிமலருறைகோயில் கனைத்தமேதி காணாதாயன் கைம்மேற்குழலூத அனைத்துஞ்சென்று திரளுஞ்சார லண்ணாமலையாரே. 6
749. வந்தித்திருக்கு மடியார்தங்கள் வரமேல்வினையோடு பந்தித்திருந்த பாவந்தீர்க்கும் பரமனுறைகோயில் முந்தியெழுந்த முழவினோசை முதுகல்வரைகள்மேல் அந்திப்பிறைவந் தணையுஞ்சார லண்ணாமலையாரே. 7
750. மறந்தான்கருதி வலியைநினைந்து மாறாயெடுத்தான்றோள்
நிறந்தான்முரிய நெரியவூன்றி நிறையவருள்செய்தார் திறந்தான்காட்டி யருளாயென்று தேவரவர்வேண்ட அறந்தான்காட்டி யருளிச்செய்தா ரண்ணாமலையாரே. 8
751 தேடிக்காணார் திருமால்பிரமன் தேவர்பெருமானை
மூடியோங்கி முதுவேயுகுத்த முத்தம்பலகொண்டு கூடிக்குறவர் மடவார்குவித்துக் கொள்ளவம்மினென் றாடிப்பாடி யளக்குஞ்சார லண்ணாமலையாரே. 9
752. தட்டையிடுக்கித் தலையைப்பறித்துச் சமணேநின்றுண்ணும்
பிட்டர்சொல்லுக் கொள்ளவேண்டா பேணித்தொழுமின்கள் வட்டமுலையா ஞமையாள்பங்கர் மன்னியுறைகோயில் அட்டமாளித் திரள்வந்தணையு மண்ணாமலையாரே. 0
753. அல்லாடரவ மியங்குஞ்சார லண்ணாமலையாரை நல்லார்பரவப் படுவான்காழி ஞானசம்பந்தன் சொல்லான்மலிந்த பாடலான பத்துமிவைகற்று வல்லாரெல்லாம் வானோர்வணங்க மன்னிவாழ்வாரே. II
திருச்சிற்றம்பலம்
0 000 8

Page 64
110 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
754.
755.
756.
757.
758.
759.
760.
761.
70. திருஈங்கோய்மலை : பண் - தக்கேசி
வானத்துயர்தண் மதிதோய்சடைமேல் மத்தமலர்சூடித் தேனொத்தனமென் மொழிமான்விழியாள் தேவிபாகமாக் கானத்திரவி லெரிகொண்டாடுங் கடவுளுலகேத்த ஏனத்திரள்வந் திழியுஞ்சார லீங்கோய்மலையாரே.
சூலப்படையொன் றேந்தியிரவிற் சுடுகாடிடமாகக் கோலச்சடைகள் தாழக்குழல்யாழ் மொந்தைகொட்டவே பாலொத்தனைய மொழியாள்காண ஆடும்பரமனர் ஏலத்தொடுநல் லிலவங்கமழு மீங்கோய்மலையாரே. 2
கண்கொள்நுதலார் கறைகொள்மிடற்றார் கரியினுரிதோலார் விண்கொள்மதிசேர் சடையார்விடையார் கொடியார்வெண்ணிறு பெண்கொள்திருமார் பதனிற்பூசும் பெம்மானெமையாள்வார் எண்குமரியுந் திரியுஞ்சார லீங்கோய்மலையாரே. 3 در ز
மறையின்னிசையார் நெறிமென்கூந்தல் மலையான்மகளோடும் குறைவெண்பிறையும் புனலுந்நிலவுங் குளிர்புன்சடைதாழப் பறையுங்குழலுங் கழலுமார்ப்பப் படுகாட்டெரியாடும் இறைவர்சிறைவண் டறைபூஞ்சார லீங்கோய்மலையாரே. 4
நொந்தசுடலைப் பொடிநீறணிவார் நுதல்சேர்கண்ணினார் கந்தமலர்கள் பலவுந்நிலவு கமழ்புன்சடைதாழப் பந்தண்விரலாள் பாகமாகப் படுகாட்டெரியாடும் எந்தம்மடிகள் கடிகொள்சார லீங்கோய்மலையாரே. 5
நீறாரகல முடையார்நிரையார் கொன்றையரவோடும் ஆறார்சடையா ரயில்வெங்கணையா லவுணர்புரமூன்றும் சீறாவெரிசெய் தேவர்பெருமான் செங்கணடல்வெள்ளை ஏறார்கொடியா ருமையாளோடு மீங்கோய்மலையாரே. 6
வினையாயினதிர்த் தருளேபுரியும் விகிர்தன்விரிகொன்றை நனையார்முடிமேல் மதியஞ்சூடும் நம்பர்நலமல்கு தனையார்கமல மலர்மேலுறைவான் தலையோடனலேந்தும் எனையாளுடையா னுமையாளோடு மீங்கோய்மலையாரே. 7
பரக்கும்பெருமை இலங்கையென்னும் பதியிற்பொலிவாய அரக்கர்க்கிறைவன் முடியுந்தோளு மணியார்விரல்தன்னால் நெருக்கியடர்த்து நிமலாபோற்றி யென்றுநின்றேத்த இரக்கம்புரிந்தா ருமையாளோடு மீங்கோய்மலையாரே. 8

திரு fåréfbčervni : user - gdCasdf o ff1
762.
763.
764.
265。
766.
767.
Z68.
وم
தே-8
வரியார்புலியி னுரிதோலுடையான் மலையான்மகளோடும் பிரியாதுடனா யாடல்பேணும் பெம்மான்றிருமேனி அரியோடயனு மறியாவண்ண மளவில்பெருமையோ டெரியாய்நிமிர்ந்த எங்கள்பெருமா னிங்கோய்ம்லையாரே. 9
பிண்டியேன்று பெயராநிற்கும் பிணங்குசமணரும் மண்டைகலனாக் கொண்டுதிரியும் மதியில்தேரரும் உண்டிவயிறா ருரைகள்கொள்ளா துமையோடுடனாகி இண்டைச்சடையா னிமையோர்பெருமா னீங்கோய்மலையாரே, 10
விழவாரொலியு முழவுமோவா வேணுபுரந்தன்னுள் அழலார்வண்ணத் தடிகளஞள்சே ரணிகொள்சம்பந்தன் எழிலார்சுனையும் பொழிலும்புடைசூ Nங்கோய்மலையீசன் கழல்சேர்பாடல் பத்தும்வல்லார் கவலைகளைவாரே. në ll
திருச்சிற்றம்பலம்
0 ) (8 - 0
71. திருநறையூர்ச்சித்தீச்சரம் : பண் - தக்கேசி
பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர் மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையின்மகிழ்வெய்திச் சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
*.
பொங்கார்சடையர் புனலரனலர் பூதம்பாடவே தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக் கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச் செங்காலனமும் பெடையுஞ்சேருஞ் சித்தீச்சரத்தாரே. 2
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் பொடிகொள்நுாலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக் கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 8
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிருமொருகாதர் பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகம் சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே. 会

Page 65
112
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
769.
770.
771.
Z72.
773.
774.
775.
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே தேரார்வீதி முழவார்விழவி னொலியுந்திசைசெல்லச் சீரார்கோலம் பொலியுநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
s
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை தூண்டுசுடர் பொன்னாளிகொள் மேனிப்பவளத்தெழிலார்வந்
தீண்டுமாட மெழிலார்சோலை யிலங்குகோபுரந் தீண்டுமதியந் திகழுநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குழலார்சடையர் கொக்கின்றகர் கோலநிறமத்தம் தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கிளர் எழிலார்நாகம் புலியினுடைமே லிசைத்துவிடையேறிக் கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
கரையார்கடல்சூ ழிலங்கைமன்னன் கயிலைமலைதன்னை வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார் F திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நெடியான்பிரமன் தேடிக்காணார் நினைப்பார்மனத்தராய் அடியாரவரு மருமாமறையு மண்டத்தமரரும் முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்னச் செடியார்செந்நெல் திகழுநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நின்றுண்சமண ரிருந்துண்தேரர் நீண்டபோர்வையார் ஒன்றுமுணரா ஊமர்வாயி லுரைகேட்டுழல்வீர்காள் கண்றுண்பயப்பா லுண்ணமுலையிற் கபாலமயல்பொழியச் செண்றுண்டார்ந்து சேருநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூச்சுரபுன்னை செயிலார்பொய்கை சேருநறையூர்ச் சித்தீச்சரத்தாரை மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன் பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.
திருச்சிற்றம்பலம்
0 0. Ky 0 &
6
9
O

திருக்குடந்தைக்காரோணம் : பண் - தக்கேசி 2 13
776.
777.
778.
779.
780.
28.
782.
783.
72. திருக்குடந்தைக்காரோணம் : பண் - தக்கேசி
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை நீரார்கங்கை திங்கள்குடி நெற்றியொற்றைக்கண் கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கில் காரார்கண்டத் தெண்டோளெந்தை காரோணத்தாரே.
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும் படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக் கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங் கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே. 2
மலையார்மங்கை பங்கரங்கை யனலர்மடலாரும் குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கில் முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார் கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே. 3
போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாரும் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கில் மாதார்மங்கை பாகமாக மனைகள்கலிதேர்வார் காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே. 4.
பூவார்பொய்கை யலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாம் தேவார்சிந்தை யந்தணாளர் சீராலடிபோற்றக் கூவார்குயில்க ளாலும்மயில்க ளின்சொற்கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே. 5
மூப்பூர்நவிய நெதியார்விதியாய் முன்னேயனல்வாளி கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில் தீர்ப்பாருடலி லடுநோயவலம் வினைகள்நலியாமைக் காப்பார்கால னடையாவண்ணங் காரோணத்தாரே. 6
ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை மானார்தோலார் புலியினுடையார் கரியின்னுரிபோர்வை தேனார்மொழியார் திளைத்தங்காடி திகழுங்குடமூக்கில் கானார்நட்ட முடையார்செல்வக் காரோணத்தாரே. Z
வரையார்திரள்தோள் மதவாளரக்க னெடுப்பமலைசேரும் விரையார்பாத நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும் உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாரும் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே. 8

Page 66
14
784.
785.
786.
787.
788.
789.
790.
* திருஞானசம்பந்தர் வின் முதல் திருமுறை
கரியமாலுஞ் செய்யபூமே லயனுங்கழறிப்போய் அரியவண்டந் தேடிப்புக்கு மளக்கவொண்கிலார் தெரியஅரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கில் கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே. 9.
நாணாரமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ் சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக் கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே. 10
கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் திருவார்செல்வ மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன் உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
திருச்சிற்றம்பலம்
KQ « «» )
73. திருக்கானூர் : பண் - தக்கேசி
வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுணங்கொன்றைத் தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார் கானூர்மேய கண்ணார்நெற்றி யானூர்செல்வரே.
நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர் ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலாரப் போந்தமென்சொ லின்பம்பயந்த மைந்தரவர்போலாங் காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்ருரே. 2
சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார் இறையார்வந்தெ னில்புகுந்தென் னெழில்நலமுங்கொண்டார் கறையார்சோலைக் கானூர்மேய பிறையார் சடையாரே. 3.
விண்ணார்திங்கட் கண்ணிவெள்ளை மாலையதுசூடித் தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ எண்ணாவந்தெ னில்புகுந்தங் கெவ்வநோய்செய்தான் கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே. 4

திருக்கானூர் : பண் - தக்கேசி ம் 15
Z9.
792.
793.
794.
795.
796.
797.
தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து ஊர்கள்தோறு மையமேற்றென் னுள்வெந்நோய்செய்தார் கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே. 纥
முளிவெள்ளெலும்பு நீறுநூலு மூழ்குமார்பராய் எளிவந்தார்போ லையமென்றே னில்லேபுகுந்துள்ளத் தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில் களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே. 6
மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரி நூலர் தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே. Z
தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல முழவமொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே. 8
அந்தமாதி யயனுமாலு மார்க்குமறிவரியான் சிந்தையுள்ளு நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான் வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான் கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே. 9
ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலையூண் டாமோர்கள்வர் வெள்ளல்போல உள்வெந்நோய்செய்தார் ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ் சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே. 10
கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப் பழுதில்ஞான சம்பந்தன்சொற்பத்தும்பாடியே தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின், றழுதுநக்கு மன்புசெய்வா ரல்ல லறுப்பாரே.
திருச்சிற்றம்பலம்
400 000

Page 67
116 a
798.
799.
800.
801.
802.
803.
804.
805.
திருருானசம்பந்தர் - முதல் திருமுறை
74. திருப்புறவம் : பண் - தக்கேசி
நறவதிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தாற் சுறவஞ்செறிவண் கொடியோனுடலம்பொடியாவிழிசெய்தான் புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த இறைவனறவ னிமையோரேத்த உமையோடிருந்தானே.
உரவன்புலியி னுரிதோலாடை யுடைமேற்படநாகம் விரவிவிரிபூங் கச்சாஅசைத்த விகிர்தனுகிர்தன்னாற் பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக இரவும்பகலு மிமையோரேத்த உமையோடிருந்தானே. .2
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி எந்தம்பெருமா னிமையோரேத்த உமையோடிருந்தானே. 3.
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் கணையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றை புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக எனையாளுடையா னிமையோரேத்த உமையோடிருந்தானே. 4
செங்கணரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்டிங்களுந்
தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக எங்கும்பரவி யிமையோரேத்த உமையோடிருந்தானே.
பின்னுசடைகள் தாழக்கேழ லெயிறுபிறழப்போய் அன்னநடையார் மனைகள்தோறு மழகாற்பலிதேர்ந்து புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக என்னையுடையா னிமையோரேத்த உமையோடிருந்தானே. 6
உண்ணற்கரிய நஞ்சயுைண் டொருதோழந்தேவர் விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல் பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே. Z
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றான் திண்டோளுடலு முடியுநெரிய்ச் சிறிதேயூன்றிய புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக எண்டோளுடையா னிமையோரேத்த உமையோடிருந்தானே.8

திருவெங்குரு : பண் - குறிஞ்சி 17
806.
807.
808.
809.
80.
நெடியான்நீள்தா மரைமேலயனு நேடிக்காண்கில்லாப் படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற் பொடியார்போல முடையான்கடல்சூழ் புறவம்பதியாக இடியார்முழவா ரிமையோரேத்த உமையோடிருந்தானே.
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் கோலும்மொழிக ளொழியக்குழுவுந் தழலுமெழில்வானும் போலும்வடிவு முடையான்கடல்சூழ் புறவம்பதியாக ஏலும்வகையா லிமையோரேத்த உமையோடிருந்தானே.
பொன்னர்மாட நீடுஞ்செல்வப் புறவம்பதியாக மின்னாரிடையா ஞமையாளோடு மிருந்தவிமலனைத் தன்னார்வஞ்செய் தமிழின்விரக லுரைத்ததமிழ்மாலை பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
திருச்சிற்றம்பலம்
0 00 000
75. திருவெங்குரு : பண் - குறிஞ்சி
காலைநன்மாமலர் கொண்டடிபரவிக்
கைதொழுமாணியைக் கறுத்தவெங்காலன் ஒலமதிடமுன் னுயிரொடுமாள s வுதைத்தவனுமையவள் விருப்பனெம்பெருமான் மாலைவந்தணுக ஒதம்வந்துலவி
மறிதிரைசங்கொடு பவளமுனுந்தி, வேலைவந்தணையுங் சோலைகள்குழ்ந்த
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பெண்ணினைப்பாக மமர்ந்துசெஞ்சடைமேற்
பிறையொடுமரவினை யணிந்தழகாகப் பண்ணினைப்பாடி யாடிமுன்பலிகொள் பரமரெம்மடிகளார் பரிசுகள்பேணி மண்ணினைமூடி வான்முகடேறி
மறிதிரைகடல்முகந் தெடுப்பமற்றுயர்ந்து விண்ணளவோங்கி வந்திழிகோயில்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
9

Page 68
118
* திருஞானசம்பந்தர் முதல் திருமுறை
8.
82.
83.
814.
85.
ஓரியல்பில்லா வுருவமதாகி
யொண்டிறல்வேடன துருவதுகொண்டு காரிகைகாணத் தனஞ்சயன்றன்னைக்
கறுத்தவற்களித்துடன் காதல்செய்பெருமான் நேரிசையாக அறுபதமுரன்று
நிரைமலர்த்த்ாதுக்கள் மூசவிண்டுதிர்ந்து வேரிகளெங்கும் விம்மியசோலை
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
வண்டணைகொன்றை வன்னியுமத்த
மருவியகூவிள மெருக்கொடுமிக்க கொண்டணிசடையர் விடையினர்பூதங்
கொடுகாட்டிகுட முழாக்கூடியுமுழவப் பண்டிகழ்வாகப் பாடியொர்வேதம்
பயில்வர்முன்பாய்புனற் கங்கையைச்சடைமேல், வெண்பிறைசூடி யுமையவளோடும்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
சடையினர்மேனி நீறதுயூசித்
தக்கைகொள்பொக்கண மிட்டுடனாகக் கடைதொறும்வந்து பலியதுகொண்டு
கண்டவர்மனமவை கவர்ந்தழகாகப் படையதுவேந்திப் பங்கயக்கண்ணி
யுமையவள்பாகமு மமர்ந்தருள்செய்து விடையொடுபூதஞ் சூழ்தரச்சென்று
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
கரைபொருகடலில் திரையதுமோதக்
கங்குல்வந்தேறிய சங்கமுமிப்பி
உரையுடைமுத்த மணலிடைவைகி
ஓங்குவானிருளறத் துரப்பவெண்டிசையும்
புரைமலிவேதம் போற்றுபூசுரர்கள்
புரிந்தவர்நலங்கொளா குதியினில்நிறைந்த
விரைமலிதுரபம் விசும்பினைமறைக்கும் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
வல்லிநுண்ணிடையா ளுமையவள்தன்னை மறுகிடவருமத களிற்றினைமயங்க
ஒல்லையிற்பிடித்தங் குரித்தவள்வெருவல்
கெடுத்தவர்விரிபொழில் மிகுதிருவாலில்
நல்லறமுரைத்து ஞானமோடிருப்ப

திருவெங்குரு : பண் - குறிஞ்சி 19
86.
87.
88.
89.
நலிந்திடலுற்று வந்தவக்கருப்பு வில்லியைப்பொடிபட விழித்தவர்விரும்பி
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே,
பாங்கிலாவரக்கன் கயிலையன்றெடுப்பப்
பலதலைமுடியொடு தோளவைதெரிய, ஓங்கியவிரலா லூன்றியன்றவற்கே
ஒளிதிகழ்வாளது கொடுத்தழகாய, கோங்கொடுசெருந்தி கூவிளமத்தங்
கொன்றையுங்குலாவிய செஞ்சடைச்செல்வர், வேங்கைபொன்மலரார் விரைதருகோயில்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
ஆறுடைச்சடையெம் மடிகளைக்காண
அரியொடுபிரமனு மளப்பதற்காகிச் சேறிடைத்திகழ்வா னத்திடைபுக்குஞ்
செலவறத்தவிர்ந்தன ரெழிலுடைத்திகழ்வெண் நிறுடைக்கோல மேனியர்நெற்றிக்
கண்ணினர்விண்ணவர் கைதொழுதேத்த வேறெமையாள விரம்பியவிகிர்தர்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பாடுடைக்குண்டர் சாக்கியர்சமணர்
பயில்தருமறவுரை விட்டழகாக ஏடுடைமலராள் பொருட்டுவன்தக்கன்
எல்லையில் வேள்வியைத் தகர்த்தருள்செய்து காடிடைக்கடிநாய் கலந்துடன்சூழக்
கண்டவர்வெருவுற விளித்துவெய்தாய வேடுடைக்கோலம் விரும்பியவிகிர்தர்
வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே. O
விண்ணியல்விமானம் விரும்பியபெருமான் வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரை
நண்ணியநூலன் ஞானசம்பந்தன்
நவின்றஇவ்வாய்மொழி நலமிகுபத்தும்
பண்ணியல்பாகப் பத்திமையாலே
பாடியுமாடியும் பயிலவல்லார்கள்
விண்ணவர் விமானங் கொடுவரஏறி
வியனுலகாண்டுவீற் றிருப்பவர்தாமே,
திருச்சிற்றம்பலம்
0 0 (d

Page 69
12O
* திருருானசம்பந்தர் - முதல் திருமுறை
820.
82.
822.
823.
824.
76. திருஇலம்பையங்கோட்டுர் : பண் - குறிஞ்சி
மலையினார்பருப்பதந் துருத்திமாற்பேறு
மாசிலாச்சீர்மறைக் காடுநெய்த்தானம் நிலையினானெனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறியநிமலன் கலையினார்மடப்பிணை துணையொடுந்துயிலக் கானலம்பெடைபுல்கிக் கணமயிலாலும் இலையினார்பைம்பொழி லிலம்பையங்கோட்டு
ரிருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
திருமலர்க்கொன்றையான் நின்றியூர்மேயான்
தேவர்கள்தலைமகன் திருக்கழிப்பாலை நிருமலனெனதுரை தனதுரையாக
நீறணிந்தேறுகந் தேறியநிமலன் கருமலர்க்கமழ்சுனை நீள்மலர்க்குவளை
கதிர்முலையிளையவர் மதிமுகத்துலவும் இருமலர்த்தண்பொய்கை இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
பாலனாம்விருத்தனாம் பசுபதிதானாம்
பண்டுவெங்கூற்றுதைத் தடியவர்க்கருளும் காலனாமெனதுரை தனதுரையாகக்
கனலெரியங்கையி லேந்தியகடவுள் நீலமாமலர்ச்சுனை வண்டுபண்செய்ய
நீர்மலர்க்குவளைகள் தாதுவிண்டோங்கும் ஏலநாறும்பொழி விலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
உளங்கொள்வாருச்சியார் கச்சியேகம்பன்
ஒற்றியூருறையுமண் ணாமலையண்ணல் விளம்புவானெனதுரை தனதுரையாக
வெள்ளநீர்விரிசடைத் தாங்கியவிமலன் குளம்புறக்கலைதுள மலைகளுஞ்சிலம்பக்
கொழுங்கொடியெழுந் தெங்குங்கூவிளங்கொள்ள இளம்பிறைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே.
தேனுமாயமதுமாய்த் தெய்வமுந்தானாய்த்
தீயொடுநீருடன் வாயுவாந்தெரியில், வானுமாமெனதுரை தனதுரையாக

திருஇலம்பையங்கோட்டுர் : பண் - குறிஞ்சி 121
வரியராஅரைக்கசைத் துழிதருமைந்தன் கானமான்வெருவுறக் கருவிரலூகங்
கடுவனோடுகளுமூர் கற்கடுஞ்சாரல் ஏனமானுழிதரு மிலம்பையுங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 5
825. மண்முலாமடியவர்க் கருள்புரிகின்ற
வகையலாற்பலிதிரிந்துண் பிலான்மற்றோர்
தனமிலானெனதுரை தனதுரையாகத்
தாழ்சடையிளமதி தாங்கியதலைவன்
புனமெலாமருவிக ளிருவிசேர்முத்தம்
பொன்னொடுமணிகொழித் தீண்டிவந்தெங்கும்
இனமெலாமடைகரை இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 6
826. நீருளான்தீயுளா னந்தரத்துள்ளான்
நினைப்பவர்மனத்துளான் நித்தமாஏத்தும் ஊருளானெனதுரை தனதுரையாக
ஒற்றைவெள்ளேறுகந் தேறியவொருவன் பாருளார்பாடலோ டாடலறாத
பண்முரன்றஞ்சிறை வண்டினம்பாடும் ஏருளார்பைம்பொழி லிலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 7
燃
827 வேருலாமாழ்கடல் வருதிரையிலங்கை
வேந்தனதடக்கைக ளடர்த்தவனுலகில்
ஆருலாமெனதுரை தனதுரையாக
ஆகமோரரவணிந் துழிதருமண்ணல்
வாருலாநல்லன மாக்களுஞ்சார
வாரணமுழிதரு மல்லங்கானல்
ஏருலாம்பொழிலனி இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 8
828. கிளர்மழைதாங்கினான் நான்முகமுடையோன்
கீழடிமேல்முடி தேர்ந்தளக்கில்லா உளமழையெனதுரை தனதுரையாக
வொள்ளழலங்கையி லேந்தியவொருவன் வளமழையெனக்கழை வளர்துளிசோர மாசுணமுழிதரு மணியணிமாலை இளமழைதவழ்பொழி லிலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 9

Page 70
122 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
829.
830.
உரிஞ்சனகூறைகள் உடம்பினராகி
உழிதருசமணருஞ் சாக்கியப்பேய்கள் பெருஞ்செல்வனெனதுரை தனதுரையாகப்
பெய்பலிக்கென்றுழல் பெரியவர்பெருமான் கருஞ்சுனைமுல்லைநன் பொன்னடைவேங்கை
களிமுகவண்டொடு தேனினமுரலும் இருஞ்சுனைமல்கிய இலம்பையங்கோட்டூர்
இருக்கையாப்பேணியென் னெழில்கொள்வதியல்பே. 10
கந்தனைமலிகனை கடலொலியோதங்
கானலங்கழிவளர் கழுமலமென்னும்
நந்தியாருறைபதி நான்மறைநாவன்
நற்றமிழ்கின்றுணை ஞானசம்பந்தன்
எந்தையார்வளநக ரிலம்பையங்கோட்டூர்
831.
832.
இசையொடுகூடிய பத்தும்வல்லார்போய் வெந்துயர்கெடுகிட விண்ணவரோடும்
வீடுபெற்றிம்மையின் வீடெளிதாமே. 11
திருச்சிற்றம்பலம்
8 (d d
77. திருஅச்சிறுபாக்கம் : பண் - குறிஞ்சி
பொன்றிரண்டன்ன புரிசடைபுரளப்
பொருகடற்பவளமொ டழல்நிறம்புரையக் குன்றிரண்டன்ன தோளுடையகலங் Y
குலாயவெண்ணுரலொடு கொழும்பொடியணிவர் மின்றிரண்டன்ன நுண்ணிடையரிவை
மெல்லியலாளையோர் பாகமாப்பேணி அன்றிரண்டுருவ மாயவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. s
தேனினுமினியர் பாலனநீற்றர்
தீங்கரும்பனையர்தந் திருவடிதொழுவார், ஊன்நயந்துருக உவகைகள்தருவா
ருச்சிமேலுறைபவ ரொன்றலாதுரரார், வானகமிறந்து வையகம்வணங்க
வயங்கொளநிற்பதோர் வடிவினையுடையார், ஆனையினுரிவை போர்த்தவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.

திருஅச்சிறுபாக்கம் : பண் - குறிஞ்சி 123
833. காரிருளுருவ மால்வரையுரையக்
களிற்றினதுரிவைகொண் டரிவைமேலோடி நீருருமகளை நிமிர்சடைத்தாங்கி
நீறணிந்தேறுகந் தேறியநிமலர் பேரருளாளர் பிறவியிற்சேரார்
பிணியிலர்கேடிலர் பேய்க்கணஞ்சூழ ஆரிருண்மாலை யாடுமெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 3
834 மைம்மலர்க்கோதை மார்பினரெனவு
மலைமகளவளொடு மருவினரெனவுஞ்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ்
சென்னிமேலுடையரெஞ் சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத்
தமிழ்ச்சொலும்வடசொலுந் தாள்நிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 4
835. விண்ணுலாமதியஞ் சூடினரெனவும்
விரிசடையுள்ளது வெள்ளநீரெனவும்
பண்ணுலாமறைகள் பாடினரெனவும்
பலபுகழல்லதுபழியிலரெனவும்
எண்ணலாகாத இமையவர்நாளு
மேத்தரவங்களோ டெழில்பெறநின்ற
அண்ணலானூர்தி யேறுமெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
836. நீடிருஞ்சடைமே லிளம்பிறைதுளங்க
நிழல்திகழ்மழுவொடு நீறுமெய்பூசித் தோடொருகாதினிற் பெய்துவெய்தாய
சுடலையிலாடுவர் தோலுடையாகக் காடரங்காக் கங்குலும்பகலுங்
கழுதொடுபாரிடங் கைதொழுதேத்த ஆடரவாட ஆடுமெம்மடிகள் 总 அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 6

Page 71
射24
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
837.
838.
SJS.
840.
841.
ஏறுமொன்றேறி நீறுமெய்பூசி
இளங்கிளையரிவையொ டொருங்குடனாகிக் கூறுமொன்றருளிக் கொன்றையந்தாருங்
குளிரிளமதியமுங் கூவிளமலரும் நாறுமல்லிகையு மெருக்கொடுமுருக்கு
மகிழிளவன்னியு மிவைநலம்பகர ஆறுமொர்சடைமே லணிந்தவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே.
கச்சுமொள்வாளுங் கட்டியவுடையர்
கதிர்முடிசுடர்விடக் கவரியுங்குடையும் பிச்சமும்பிறவும் பெண்ணணங்காய்
பிறைநுதலவர்தமைப் பெரியவர்பேணப் பச்சமும்வலியுங் கருதியஅரக்கன்
பருவரையெடுத்ததிண் டோள்களையடர்வித் தச்முமருளுங் கொடுத்தவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. 8
நோற்றலாரேனும் வேட்டலாரேனும்
நுகர்புகர்சாந்தமொ டேந்தியமாலைக்
கூற்றலாரேனு மின்னவாறென்று
மெய்தலாகாதாதொ ரியல்பினையுடையார்
தோற்றலார்மாலு நான்முகமுடைய
தோன்றலுமடியொடு முடியுறத்தங்க்ள்
ஆற்றலாற்காணா ராயவெம்மடிகள் m
அச்சிறுபாக்கமதாட்சிகொண்டாரே. 9
வாதுசெய்சமனுஞ் சாக்கியப்பேய்கள்
நல்வினைநீக்கிய வல்வினையாளர் ஒதியுங்கேட்டு முணர்வினையிலாதா
ருள்கலாகாததோ ரியல்பினையுடையார் வேதமும்வேத நெறிகளுமாகி
விமலவேடத்தொடு கமலமாமதிபோல் ஆதியுறுமீது மாயவெம்மடிகள்
அச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே. O
மைச்செறிகுவளை தவளைவாய்நிறைய
மதுமலர்ப்பொய்கையிற் புதுமலர்கிழியப் பச்சிறவெறிவயல் வெறிகமழ்காழிப்

திருஇடைச்சுரம் : பண் - குறிஞ்சி 125
842.
843.
844.
பதியவரத்திபதி கவுணியர்பெருமான் கைச்சிறுமறியவன் கழலலாற்பேணாக்
கருத்துடைஞானசம் பந்தனதமிழ்கொண் டச்சிறுபாக்கத் தடிகளையேத்து
மன்புடையடியவ ரருவினையிலரே.
திருச்சிற்றம்பலம்
KO) K) () () ()
78. திருஇடைச்சுரம் : பண் - குறிஞ்சி
வரிவளரவிரொளி யரவரைதாழ
வார்சடைமுடிமிசை வளர்மதிசூடிக் கரிவளர்தருகழல் கால்வலனேந்திக்
கனலெரியாடுவர் கர்டரங்காக விரிவளர்தருபொழி லிளமயிலால
வெண்ணிறத்தருவிகள் திண்ணெனவீழும் எரிவளரினமணி புனமணிசாரார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
ஆற்றையுமேற்றதோ ரவிர்சடையுடைய
ரழகினையருளுவர் குழகலதறியார் கூற்றுயிர்செகுப்பதோர் கொடுமையையுடையர் நடுவிருளாடுவர் கொன்றையந்தாரார் சேற்றயல்மிளிர்வன கயலிளவாளை
செருச்செயவோர்ப்பன செம்முகமந்தி ஏற்றையொடுழிதரு மெழில்திகழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே. 2
கானமுஞ்சுடலையுங் கற்படுநிலனுங் காதலர்தீதிலர் கனல்மழுவாளர் வானமுநிலமையு மிருமையுமானார்
வணங்கவுமிணங்கவும் வாழ்த்தவும்படுவார் நானமும்புகையொளி விரையொடுகமழ
நளிர்பொழிலிளமஞ்ஞை மன்னியபாங்கர் ஏனமும்பிணையலு மெழில்திகழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே. 3

Page 72
128 ம திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
845.
846.
847.
848.
849.
கடமணிமார்பினர் கடல்தனிலுறைவார்
காதலர்தீதிலர் கனல்மழுவாளர் விடமணிமிடறினர் மிளிர்வதோரரவர்
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர் வடமுலையயலன கருங்குருந்தேறி
வாழையின்தீங்கனி வார்ந்துதேனட்டும் இடமுலையரிவைய ரெழில்திகழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
கார்கொண்டகடிகமழ் விரிமலர்க்கொன்றைக்
கண்ணியர்வளர்மதி கதிர்விடக்கங்கை நீர்கொண்டசடையினர் விடையுயர்கொடியர்
நிழல்திகழ்மழுவின ரழல்திகழ்நிறத்தர் சீர்கொண்டமென்சிறை வண்டுபண்செய்யும்
செழும்புனலனையன செங்குலைவாழை ஏர்கொண்டபலவினொ டெழில்திகழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
தோடணிகுழையினர் சுண்ணவெண்ணிற்றர்
சுடலையினாடுவர் தோலுடையாகப் பீடுயர்செய்ததோர் பெருமையையுடையர்
பேயுடனாடுவர் பெரியவர்பெருமான் கோடல்களொழுகுவ முழுகுவதும்பி
குரவமுமரவமு மன்னியபாங்கர் ஏடவிழ்புதுமலர் கடிகமழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
கழல்மல்குகாலினர் வேலினர்றுாலர்
கவர்தலையரவொடு கண்டியும்பூண்பர் அழல்மல்குமெரியொடு மணிமழுவேந்தி
யாடுவர்பாடுவ ராரணங்குடையர் பொழில்மல்குநீடிய அரவமுமரவ
மன்னியகவட்டிடைப் புணர்குயிலாலும் எழில்மல்கு சோலையில் வண்டிசைபாடு
மிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
தேங்கமழ்கொன்றையந் திருமலர்புனைவார்
திகழ்தருசடைமிசைத் திங்களுஞ்சூடி

850.
851.
852.
- Cys-9
திருஇடைச்சுரம் : பண் - குறிஞ்சி - 127
வீந்தவர்சுடலைவெண் ணிறுமெய்பூசி
வேறுமோர்சரிதையர் வேடமுமுடையர்
சாந்தமுமகிலொடு முகில்பொதிந்தலம்பித் தவழ்கண்மணியொடு மிகுபளிங்கிடறி
ஏந்துவெள்ளருவிக ளெழில்திகழ்சார
லிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
பலஇலமிடுபவி கையிலொன்றேற்பர்
பலபுகழல்லது பழியிலர்தாமும் தலையிலங்கவிரொளி நெடுமுடியரக்கன்
தடக்கைகளடர்த்ததோர் தன்மையையுடையர் மலையிலங்கருவிகள் மணமுழவதிர
மழைதவழிளமஞ்ஞை மல்கியசாரல் இலைஇலவங்கமு மேலமுங்கமழு
மிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
பெருமைகள்தருக்கியோர் பேதுறுகின்ற
பெருங்கடல்வண்ணனும் பிரமனுமோரா அருமையரடிநிழல் பரவிநின்றேத்து
மன்புடையடியவர்க் கணியருமாவர் கருமைகொள்வடிவொடு சுனைவளர்குவளைக்
கயலினம்வயலிள வாளைகளிரிய, எருமைகள்படிதர இளஅனமாலு
மிடைச்சுரமேவிய இவர்வணமென்னே.
மடைச்சுரமறிவன வாளையுங்கயலும்
மருவியவயல்தனில் வருபுனற்காழிச் சடைச்சுரத்துறைவதோர் பிறையுடையண்ணல் சரிதைகள்பரவிநின்றுருகுசம்பந்தன் புடைச்சுரத்தருவரைப் பூக்கமழ்சாரற்
புணர்மடநடையவர் புடையிடையார்ந்த இடைச்சுரமேத்திய இசையொடுபாடலிவை சொலவல்லவர் பிணியிலர்தாமே.
w
திருச்சிற்றம்பலம்
0 0000
0

Page 73
128 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
853.
854.
855.
856.
857.
79. திருக்கழுமலம் : பண் - குறிஞ்சி அயிலுறுபடையினர் விடையினர்முடிமே
லரவமும்மதியமும் விரவியஅழகர்
மயிலுறுசாயல வனமுலையொருபால்
மகிழ்பவர்வானிடை முகில்புல்குமிடறர் பயில்வுறுசரிதைய ரெருதுகந்தேறிப்
பாடியுமாடியும் பலிகொள்வர்வலிசேர் கயிலையும்பொதியிலு மிடமெனவுடையார்
கழுமலநினையநம் வினைகரிசறுமே.
கொண்டலுநீலமும் புரைதிருமிடறர் r
கொடுமுடியுறைபவர் படுதலைக்கையர் பண்டலரயன்சிர மரிந்தவர்பொருந்தும்
படர்சடையடிகளார் பதியதனயலே வண்டலும்வங்கமுஞ் சங்கமுஞ்சுறவும்
மறிகடல்திரைகொணர்ந் தெற்றியகரைமேற் கண்டலுங்கைதையும் நெய்தலுங்குலவும்
கழுமலநினையநம் வினைகரிசறுமே.
எண்ணிடையொன்றினர் இரண்டினருருவ
மெரியிடைமூன்றினர் நான்மறையாளர் மண்ணிடைஐந்தின ராறினரங்கம்
வகுத்தனரேழிசை யெட்டிருங்கலைசேர் பண்ணிடையொன்பது முணர்ந்தவர்பத்தர்
பாடிநின்றடிதொழ மதனனைவெகுண்ட கண்ணிடைக்கனலினர் கருதியகோயில்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 3
எரியொருகரத்தின ரிமையவர்க்கிறைவ ரேறுகந்தேறுவர் நீறுமெய்பூசித் திரிதருமியல்பின ரயலவர்புரங்கள்
தீயெழவிழித்தனர் வேய்புரைதோளி வரி தருகண்ணிணை மடவரலஞ்ச
மஞ்சுறநிமிர்ந்ததோர் வடிவொடும்வந்த கரியுரிமருவிய அடிகளுக்கிடமாங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 4
ஊரெதிர்ந்திடுபவி தலைகலனாக
வுண்பவர்விண்பொலிந் திலங்கியவுருவர் பாரெதிர்ந்தடிதொழ விரைதருமார்பிற்
ܧܼܛܗܼܲ8

திருகழுமலம்: பண் - குறிஞ்சி 129
படஅரவாமையக் கணிந்தவர்க்கிடமாம் நீரெதிர்ந்திழிமணி நித்திலமுத்தம்
நிரைசுரிசங்கமொ டொண்மணிவரன்றிக் காரெதிர்ந்தோதம்வன் றிரைகரைக்கெற்றுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே.
858. முன்னுயிர்த் தோற்றமு மிறுதியுமாகி
முடியுடையமரர்க ளடிபணிந்தேத்தப்
பின்னியசடைமிசைப் பிறைநிறைவித்த
பேரருளாளனார் பேணியகோயில்
பொன்னியல்நறுமலர் புனலொடுதுரபஞ் சாந்தமுமேந்திய கையினராகிக்
கன்னியர் நாள்தோறும் வேடமேபரவுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 6
859. கொலைக்கணித்தாவரு கூற்றுதைசெய்தார்
குரைகழல்பணிந்தவர்க் கருளியபொருளின்
நிலைக்கணித்தாவர நினையவல்லார்தந்
நெடுந்துயர்தவிர்த்தனந் நிமலருக்கிடமாம்
மலைக்கணித்தாவர வன்றிரைமுரல
மதுவிரிபுன்னைகள் முத்தெனஅரும்பக்
கலைக்கணங்கானலின் நீழலில்வாழுங்
கழுமலநினையநம் வினைகளிசறுமே.
860. புயம்பலவுடையதென் னிலங்கையர்வேந்தன்
பொருவரையெடுத்தவன் பொன்முடிதிண்டோள்
பயம்பலபடஅடர்த் தருளியபெருமான்
பரிவொடுமினிதுறை கோயிலதாகும்
வியன்பலவிண்ணினும் மண்ணினுமெங்கும் வேறுவேறுகங்களிற் பெயருளதென்னக்
கயம்பலபடக்கடற் றிரைகரைக்கெற்றுங்
கழுமலநினையநம் வினைகரிசறுமே. 8
86. விலங்கலொன்றேந்திவன் மழைதடுத்தோனும் வெறிகமழ்தாமரை யோனுமென்றிவர்தம் பலங்களால்நேடியு மறிவரிதாய
பரிசினன்மருவிநின் றினிதுறைகோயில் மலங்கிவன்றிரைவரை யெனப்பரந்தெங்கும் மறிகடலோங்கிவெள் எரிப்பியுஞ்சுமந்து கலங்கடன்சரக்கொடு நிரக்கவந்தேறுங்
கழுமலநினயநம்வினைகரிசறுமே. 9

Page 74
130
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
862.
863.
864.
865.
866.
867.
ஆம்பலதவமுயன் றறவுரைசொல்லு
மறிவிலாச்சமணருந் தேரருங்கணிசேர் நோம்பலதவமறி யாதவர்நொடிந்த
மூதுரைகொள்கிலா முதல்வர்தம்மேனிச் சாம்பலும்பூசி வெண்டலைகலனாகத்
தையலாரிடுபவி வையகத்தேற்றுக் காம்பனதோளியொ டினிதுறைகோயில்
கழுமலம்நினையநம் வினைகரிசறுமே.
கலிகெழுபாரிடை யூரெனவுளதாங்
கழுமலம்விரும்பிய கோயில்கொண்டவர்மேல் வலிகெழுமனமிக வைத்தவன்மறைசேர்
வருங்கலைஞானசம் பந்தனதமிழின் ஒலிகெழுமாலையென்றுரைசெய்தபத்து
முண்மையினால்நினைந் தேத்தவல்லார்மேல் மெலிகெழுதுயரடை யாவினைசிந்தும்
விண்ணவராற்றலின் மிகப்பெறுவாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
80. கோயில் : பண் - குறிஞ்சி
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கள் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே,
பறப்பைப் படுத்தெங்கும் பசுவேட் டெரியோம்புஞ்
சிறப்பர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய பிறப்பில் பெருமானைப் பின்றாழ் சடையானை
மறப்பி லார்கண்டீர் மையல் தீர்வாரே.
மையா ரொண்கண்ணார் மாட நீெடுவீதிக் கையாற் பந்தோச்சுங் கழிசூழ் தில்லையுள் பொய்யா மறைபாடல் புரிந்தா னுலகேத்தச் செய்யா னுறைகோயில் சிற்றம் பலந்தானே.
நிறைவெண் கொடிமாட நெற்றி நேர்தீண்டப் பிறைவந் திறைதாக்கும் பேரம் பலந்தில்லைச்
ni

* கோயில் : பண் - குறிஞ்சி 6 131
868,
869.
870.
87.
872.
873.
874.
சிறைவண் டறையோவாச் சிற்றம் பலமேய இறைவன் கழலேத்து மின்ப மின்பமே.
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச் செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
வருமாந் தளிர்மேனி மாதோர் பாகமாந் திருமாந் தில்லையுட் சிற்றம் பலமேய கருமா னுரியாடைக் கறைசேர் கண்டத்தெம் பெருமான் கழலல்லாற் பேணா துள்ளமே.
அலையார் புனல்சூடி யாகத் தொருபாக மலையான் மகளோடு மகிழ்ந்தா னுலகேத்தச்
சிலையா லெயிலெய்தான் சிற்றம் பலந்தன்னைத்
தலையால் வணங்குவார் தலையா னார்களே.
கூர்வா ளரக்கன்றன் வலியைக் குறைவித்துச் சீரா லேமல்கு சிற்றம் பலமேய நீரார் சடையானை நித்த லேத்துவார் தீரா நோயெல்லாந் தீர்தல் திண்ணமே.
கோணா கணையானுங் குளிர்தா மரையானுங்
காணார் கழலேத்தக் கனலாய் ஓங்கினான் சேணார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேத்த மாணா நோயெல்லாம் வாளா மாயுமே.
பட்டைத் துவராடைப் படிமங் கொண்டாடும்
முட்டைக் கட்டுரை மொழிவ கேளாதே சிட்டர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய நட்டப் பெருமானை நாளுந் தொழுவோமே.
ஞாலத் துயர்காழி ஞான சம்பந்தன் சீலத் தார்கொள்கைச் சிற்றம் பலமேய சூலப் படையானைச் சொன்ன தமிழ்மாலை கோலத் தாற்பாட வல்லார் நல்லாரே.
திருச்சிற்றம்பலம்
d() { {
O
ш

Page 75
132
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
875.
876.
877.
878.
879.
880.
88.
81. சீகாழி : பண் - குறிஞ்சி
நல்லார் தீமேவுந் தொழிலார் நால்வேதஞ் சொல்லார் கேண்மையார் சுடர்பொற் கழலேத்த வில்லாற் புரஞ்செற்றான் மேவும் பதிபோலுங் கல்லார் மதில்சூழ்ந்த காழிந் நகர்தானே.
துளிவண் டேன்பாயு மிதழி தூமத்தந் தெளிவெண் திங்கள்மா சுணநீர் திகழ்சென்னி ஒளிவெண் டலைமாலை யுகந்தா னுார்போலுங் களிவண் டியாழ்செய்யுங் காழிந் நகர்தானே.
ஆலக் கோலத்தின் நஞ்சுண் டமுதத்தைச் சாலத் தேவர்க்கீந் தளித்தான் தன்மையால் பாலற் காய்நன்றும் பரிந்து பாதத்தால் காலற் காய்ந்தானூர் காழிந் நகர்தானே.
இரவில் திரிவோர்கட் கிறைதோ ளிணைபத்தும் நிரவிக் கரவாளை நேர்ந்தா னிடம்போலும் பரவித் திரிவோர்க்கும் பால்நீ றணிவோர்க்குங் கரவில் தடக்கையார் காழிந் நகர்தானே.
மாலும் பிரமனு மறியா மாட்சியான் தோலும் புரிநூலும் துதைந்த வரைமார்பன் ஏலும் பதிபோலு மிரந்தோர்க் கெந்நாளுங் காலம் பகராதார் காழிந் நகர்தானே.
தங்கை யிடவுண்பார் தாழ்சி வரத்தார்கள் பெங்கை யுணராதே பேணித் தொழுமின்கள் மங்கை யொருபாக மகிழ்ந்தான் மலர்ச்சென்னிக் கங்கை தரித்தானூர் காழிந் நகர்தானே.
வாசங் கமழ்காழி மதிசெஞ் சடைவைத்த ஈசன் நகர்தன்னை யிணையில் சம்பந்தன்
பேசுந் தமிழ்வல்லோர் பெருநீ ருலகத்துப் பாசந் தனையற்றுப் பழியில் புகழாரே.
திருச்சிற்றம்பலம்
d > 0

திருவிழிமிழலை : பண் - குறிஞ்சி 133
82. திருவிழிமிழலை : பண் - குறிஞ்சி 882, இரும்பொன் மலைவில்லா எரியம் பாநாணில் திரிந்தபுரமூன்றுஞ் செற்றா னுறைகோயில் தெரிந்த அடியார்கள் சென்ற திசைதோறும் விரும்பி யெதிர்கொள்வார் வீழி மிழலையே.
883. வாதைப் படுகின்ற வானோர் துயர்தீர
ஒதக் கடல்நஞ்சை யுண்டா னுறைகோயில் கீதத் திசையோடுங் கேள்விக் கிடையோடும் வேதத் தொலியோவா வீழி மிழலையே. 2
884. பயிலும் மறையாளன் தலையிற் பலிகொண்டு
துயிலும் பொழுதாடுஞ் சோதி யுறைகோயில் மயிலும் மடமானும் மதியும் மிளவேயும் வெயிலும் போல்மாதர் வீழி மிழலையே. 3
885, இரவன் பகலோனு மெச்சத் திமையோரை
நிரவிட் டருள்செய்த நிமலன் னுறைகோயில் குரவஞ் சுரபுன்னை குளிர்கோங் கிளவேங்கை விரவும் பொழிலந்தண் வீழி மிழலையே. 4
886. கண்ணிற் கனலாலே காமன் பொடியாகப்
பெண்ணுக் கருள்செய்த பெருமா னுறைகோயில் மண்ணிற் பெருவேள்வி வளர்தீப் புகைநாளும் விண்ணிற் புயல்காட்டும் வீழி மிழலையே.
887 மாலா யிரங்கொண்டு மலர்க்கண் ணிடஆழி ஏலா வலயத்தோ டீந்தா னுறைகோயில் சேலா கியபொய்கைச் செழுநீர்க் கமலங்கள் மேலா லெரிகாட்டும் வீழி மிழலையே. 6
888. மதியால் வழிபட்டான் வாணாள் கொடுபோவான்
கொதியா வருகூற்றைக் குமைத்தா னுறைகோயில் நெதியான் மிகுசெல்வர் நித்த நியமங்கள் விதியால் நிற்கின்றார் வீழி மிழலையே. Z
889, எடுத்தான் தருக்கினை யிழித்தான் விரனூன்றிக்
கொடுத்தான் வாளாளாக் கொண்டா னுறைகோயில் படித்தார் மறைவேள்வி பயின்றார் பாவத்தை விடுத்தார் மிகவாழும் வீழி மிழலையே. 8

Page 76
134
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
890.
891.
892.
893.
894.
895.
896.
897.
கிடந்தா னிருந்தானுங் கீழ்மேற் காணாது தொடர்ந்தாங் கவரேத்தச் சுடரா யவன்கோயில் படந்தாங் கரவல்குற் பவளத் துவர்வாய்மேல் விடந்தாங் கியகண்ணார் வீழி மிழலையே. 9
சிக்கார் துவராடைச் சிறுதட் டுடையாரும் நக்காங் கலர்தூற்றுந் நம்பா னுறைகோயில் தக்கார் மறைவேள்வித் தலையா யுலகுக்கு மிக்கா ரவர்வாழும் வீழி மிழலையே. O
மேனின் றிழிகோயில் வீழி மிழலையுள் ஏனத் தெயிற்றாணை யெழிலார் பொழிற்காழி ஞானத் துயர்கின்ற நலங்கொள் சம்பந்தன் வாய்மைத் திவைசொல்ல வல்லோர் நல்லோரே. l
திருச்சிற்றம்பலம்
0 0 0 ) 0
83. திருஅம்பர்மாகாளம் : பண் - குறிஞ்சி அடையார் புரமூன்று மணல்வாய் விழவெய்து மடையார் புனலம்பர் மாகா ளம்மேய விடையார் கொடியெந்தை வெள்ளைப் பிறைகுடும் சடையான் கழலேத்தச் சாரா வினைதானே.
தேனார் மதமத்தந் திங்கள் புனல்சூடி வானார் பொழிலம்பர் மாகா ளம்மேய ஊனார் தலைதன்னிற் பலிகொண் டுழல்வாழ்க்கை ஆனான் கழலேத்த அல்ல லடையாவே. 2
திரையார் புனலோடு செல்வ மதிசூடி விரையார் பொழிலம்பர் மாகா ளம்மேய நரையார் விடையூரு நம்பான் கழல்நாளும் உரையா தவர்கண்மே லொழியா வூனம்மே. 3
கொந்தண் பொழிற்சோலைக் கோல வரிவண்டு மந்தம் மலியம்பர் மாகா ளம்மேய கந்தங் கமழ்கொன்றை கமழ்புன் சடைவைத்த எந்தை கழலேத்த இடர்வந் தடையாவே. 4.
அணியார் மலைமங்கை யாகம் பாகமாய் மணியார் புனலம்பர் மாகா ளம்மேய

திருநாகைக்காரோணம் : பண் - குறிஞ்சி 135
துணியா ருடையினான் துதைபொற் கழல்நாளும் பணியா தவர்தம்மேற் பறையா பாவம்மே.
898. பண்டாழ் கடல்நஞ்சை யுண்டு களிமாந்தி
வண்டார் பொழிலம்பர் மாகா ளம்மேய விண்டார் புரம்வேவ மேருச் சிலையாகக் கொண்டான் கழலேத்தக் குறுகா குற்றம்மே. ö
899. மிளிரும் மரவோடு வெள்ளைப் பிறைசூடி
வளரும் பொழிலம்பர் மாகா ளம்மேய கிளருஞ் சடையண்ணல் கேடில் கழலேத்தத் தளரும் முறுநோய்கள் சாருந் தவந்தானே.
900, கொலையார் மழுவோடு கோலச் சிலையேந்தி
மலையார் புனலம்பர் மாகா ளம்மேய இலையார் திரிசூலப் படையான் கழல்நாளும் நிலையா நினைவார்மேல் நில்லா வினைதானே.
901 சிறையார் வரிவண்டு தேனுண் டிசைபாட
மறையார் நிறையம்பர் மாகா ளம்மேய நறையார் மலரானும் மாலுங் காண்பொண்ணா இறையான் கழலேத்த எய்தும் மின்பம்மே. 9
902. மாசூர் வடின்னார் மண்டை யுணல்கொள்வார்
கூசா துரைக்குஞ்சொற் கொள்கை குணமல்ல வாசார் பொழிலம்பர் மாகா ளம்மேய ஈசா என்பார்கட் கில்லை யிடர்தானே.
903. வெருநீர் கொளவோங்கும் வேணு புரந்தன்னுள்
திருமா மறைஞான சம்பந்தன சேணார் பெருமான் மலியம்பர் மாகா ளம்பேணி உருகா வுரைசெய்வா ருயர்வா னடைவாரே.
திருச்சிற்றம்பலம்
td ( (d d f
84. திருநாகைக்காரோணம் : பண் - குறிஞ்சி
904. புனையும் விரிகொன்றைக் கடவுள் புனல்பாய
நனையுஞ் சடைமேலோர் நகுவெண் டலைசூடி வினையில் லடியார்கள் விதியால் வழிபட்டுக் கனையுங் கடல்நாகைக் காரோ னத்தானே.

Page 77
1sé
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
'ss 3.3
905.
906.
907.
908.
909.
90.
9II.
92.
பெண்ணா ணெனநின்ற பெம்மான் பிறைச்சென்னி அண்ணா மலைநாட னாரூ ருறையம்மான் மண்ணார் முழவோவா மாடந் நெடுவீதிக் கண்ணார் கடல்நாகைக் காரோ னத்தானே.
பாரோர் தொழவிண்ணோர் பணியம் மதில்ரூமுன்றும் ஆரா ரழலூட்டி யடியார்க் கருள்செய்தான் தேரார் விழவோவாச் செல்வன் திரைசூழ்ந்த காரார் கடல்நாகைக் காரோ னத்தானே.
மொழிசூழ் மறைபாடி முதிருஞ் சடைதன்மேல் அழிசூழ் புனலேற்ற அண்ணல் லணியாய பழிசூழ் விலராய பத்தர் பணிந்தேத்தக் கழிசூழ் கடல்நாகைக் காரோ ணத்தானே.
ஆணும் பெண்ணுமாய் அடியார்க் கருள்நல்கிச் சேணின் றவர்க்கின்னஞ் சிந்தை செயவல்லான் பேணி வழிபாடு பிரியா தெழுந்தொண்டர் காணுங் கடல்நாகைக் காரோ ணத்தானே.
ஏனத் தெயிறோடும் மரவ மெய்பூண்டு வானத் திளந்திங்கள் வளருஞ் சடையண்ணல் ஞானத் துரைவல்லார் நாளும் பணிந்தேத்தக் கானற் கடல்நாகைக் காரோ ணத்தானே.
அரையா ரழல்நாக மக்கோ டசைத்திட்டு விரையார் வரைமார்பின் வெண்ணி றணியண்ணல் வரையார் வனபோல வளரும் வங்கங்கள் கரையார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
வலங்கொள் புகழ்பேணி வரையா லுயர்திண்டோள் இலங்கைக் கிறைவாட அடர்த்தங் கருள்செய்தான் பலங்கொள் புகழ்மண்ணிற் பத்தர் பணிந்தேத்தக் கலங்கொள் கடல்நாகைக் காரோ ணத்தானே.
திருமா லடிவீழத் திசைநான் முகனேத்தப் பெருமா னெனநின்ற பெம்மான் பிறைச்சென்னிச் செருமால் விடையூருஞ் செல்வன் திரைசூழ்ந்த கருமால் கடல்நாகைக் காரோ ணத்தானே.

திருநல்லம் : பண் - குறிஞ்சி 137
93.
94.
95.
96.
97.
98.
99.
நல்லா ரறஞ்சொல்லப் பொல்லார் புறங்கூற அல்லா ரலர்தூற்ற அடியார்க் கருள்செய்வான் பல்லார் தலைமாலை யணிவான் பணிந்தேத்தக் கல்லார் கடல்நாகைக் காரோ ணத்தானே.
கரையார் கடல்நாகைக் காரோ ணம்மேய
நரையார் விடையானை நவிலுஞ் சம்பந்தன் உரையார் தமிழ்மாலை பாடும் மவரெல்லாம் கரையா வுருவாகிக் கலிவா னடைவாரே.
திருச்சிற்றம்பலம்
0 0000
85. திருநல்லம் : பண் - குறிஞ்சி கல்லால் நிழல்மேய கறைசேர் கண்டாவென் றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த வில்லா லரண்மூன்றும் வெந்து விழவெய்த நல்லான் நமையாள்வான் நல்ல நகரானே.
தக்கன் பெருவேள்வி தன்னி லமரரைத் துக்கம் பலசெய்து சுடற்பொற் சடைதாழக் கொக்கின் னிறகோடு குளிர்வெண் பிறைசூடும் நக்கன் நமையாள்வான் நல்ல நகரானே.
அந்தி மதியோடு மரவச் சடைதாழ முந்தி பனலேந்தி முதுகாட் டெரியாடி சித்தித் தெழவல்லார் தீரா வினைதீர்க்கும் நத்தி நமையாள்வான்நல்ல நகரானே. 3
குளிரும் மதிசூடிக் கொன்றைச் சடைதாழ மிளிரும் மரவோடு வெண்ணுரர் திகழ்மார்பில் தளிருந் திகழ்மேனித் தையல் பாகமாய் நளிரும் வயல்சூழ்ந்த நல்ல நகரானே. 4
மணியார் திகழ்கண்டம் முடையான் மலர்மல்கு பிணிவார் சடையெந்தை பெருமான் கழல்பேணித் துணிவார் மலர்கொண்டு தொண்டர் தொழுதேத்த நணியான் நமையாள்வான் நல்ல நகரானே.

Page 78
138
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
920.
92.
வாசம் மலர்மல்கு மலையான் மகளோடும்
பூசுஞ் சுடுநீறு புனைந்தான் விரிகொன்றை
ஈசன் னெனவுள்கி யெழுவார் வினைகட்கு
நாசன் நமையாள்வான் நல்ல நகரானே.
அங்கோல் வளைமங்கை காண அனலேந்திக் கொங்கார் நறுங்கொன்றை சூடிக் குழகாக வெங்கா டிடமாக வெந்தீ விளையாடும்
நங்கோன் நமையாள்வான் நல்ல நகரானே.
922.
923.
924.
925.
926.
பெண்ணார் திருமேனிப் பெருமான் பிறைமல்கு கண்ணார் நுதலினான் கயிலை கருத்தினால் எண்ணா தெடுத்தானை யிறையே விரலூன்றி நண்ணார் புரமெய்தான் நல்ல நகரானே.
நாகத் தணையானும் நளிர்மா மலரானும் போகத் தியல்பினாற் பொலிய அழகாகும் ஆகத் தவளோடு மமர்ந்தங் கழகாரும் நாகம் மரையார்த்தான் நல்ல நகரானே.
குறியில் சமணோடு குண்டர் வண்தேரர் அறிவில் லுரைகேட்டங் கவமே கழியாதே பொறிகொள் ளரவார்த்தான் பொல்லா வினைதீர்க்கும் நறைகொள் பொழில்சூழ்ந்த நல்ல நகரானே.
நலமார் மறையோர்வாழ் நல்ல நகர்மேய கொலைசேர் மழுவானைக் கொச்சை யமர்ந்தோங்கு தலமார் தமிழ்ஞான சம்பந் தன்சொன்ன கலைக ளிவைவல்லார் கவலை கழிவாரே.
திருச்சிற்றம்பலம்
0 00 00
86. திருநல்லூர் : பண் - குறிஞ்சி கொட்டும் பறைசீராற் குழும அனலேந்தி நட்டம் பயின்றாடு நல்லூர்ப் பெருமானை
முட்டின் றிருபோது முனியா தெழுந்தன்பு பட்ட மனத்தார்க ளறியார் பாவமே.
11

திருநல்லூர் : பண் - குறிஞ்சி உ139
927 ஏறி லெருதேறு மெழிலா யிழையோடும் வேறும் முடனுமாம் விகிர்த ரவரென்ன நாறும் மலர்ப்பொய்கை நல்லூர்ப் பெருமானைக் கூறும் மடியார்கட் கடையா குற்றமே. 2
928, சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதாழ
ஒடுண் கலனாக வூரூ ரிடுபிச்சை நாடுந் நெறியானை நல்லூர்ப் பெருமானைப் பாடும் மடியார்கட் கடையா பாவமே, ; 3
929. நீத்த நெறியானை நீங்காத் தவத்தானை
நாத்த நெறியானை நல்லூர்ப் பெருமானைக் காத்த நெறியானைக் கைகூப் பித்தொழு தேத்து மடியார்கட் கில்லை யிடர்தானே. 4.
930. ஆகத் துமைகேள்வ னரவச் சடைதாழ
நாகம் மசைத்தானை நல்லூர்ப் பெருமானைத் தாகம் புகுந்தண்மித் தாள்கள் தொழுந்தொண்டர் போகம் மனத்தராய்ப் புகழத் திரிவாரே.
931 கொல்லுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச
நல்ல நெறியானை நல்லூர்ப் பெருமானைச் செல்லு நெறியானைச் சேர்ந்தா ரிடர்தீரச் சொல்லு மடியார்க ளறியார் துக்கமே. 6
932. எங்கள் பெருமானை யிமையோர் தொழுதேத்தும்
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவில்லாத் தங்கை தலைக்கேற்றி யாளென் றடிநீழல் தங்கு மனத்தார்கள் தடுமாற் றறுப்பாரே. 7
933. காம னெழில்வாட்டிக் கடல்சூ Nலங்கைக்கோன்
நாம மிறுத்தானை நல்லூர்ப் பெருமானை ஏம மனத்தாரா யிகழா தெழுந்தொண்டர் தீப மனத்தார்க ளறியார் தீயவே. 8
934. வண்ண மலரானும் வைய மளந்தானும்
நண்ண லரியானை நல்லூர்ப் பெருமானைத் தண்ண மலர்தூவித் தாள்கள் தொழுதேத்த எண்ணு மடியார்கட் கில்லை யிடுக்கணே. y

Page 79
140
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
935.
936.
937.
938.
939.
940.
941.
பிச்சக் குடைநிழற் சமணர் சாக்கியர் நிச்ச மலர்தூற்ற நின்ற பெருமானை நச்சு மிடற்றானை நல்லூர்ப் பெருமானை எச்சு மடியார்கட் கில்லை யிடர்தானே.
தண்ணம் புனற்காழி ஞான சம்பந்தன் நண்ணும் புனல்வேலி நல்லூர்ப் பெருமானை வண்ணம் புனைமாலை வைக லேத்துவார்
விண்ணுந் நிலனுமாய் விளங்கும் புகழாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
87. திருவடுகூர் : பண் - குறிஞ்சி
சுடுக. ரெரிமாலை யணிவர் சுடர்வேலர் கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர் கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார் வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே.
பாலுந் நறுநெய்யுந் தயிரும் பயின்றாடி ஏலுஞ் சுடுநீறு மென்பு மொளிமல்கக் கோலம் பொழிற்சோலைக் கூடி மடஅன்னம் ஆலும் வடுகூரி லாடும் மடிகளே.
சூடு மிளந்திங்கட் சுடர்பொற் சடைதன்மேல் ஒடுங் களியானை யுரிபோர்த் துமையஞ்ச ஏடு மலர்மோந்தங் கெழிலார் வரிவண்டு பாடும் வடுகூரி லாடும் மடிகளே
துவரும் புரிசையுந் துதைந்த மணிமாடம் கவர வெரியோட்டிக் கடிய மதிலெய்தார் கவரு மணிகொல்லைக் கடிய முலைநல்லார் பவரும் வடுகூரிலாடும் மடிகளே. துணியா ருடையாடை துன்னி யரைதன்மேல் தணியா அழல்நாகந் தரியா வகைவைத்தார் பணியா ரடியார்கள் பலரும் பயின்றேத்த அணியார் வடுகூரி லாடும் மடிகளே.

திருஆப்பனூர் : பண் - குறிஞ்சி 141
942.
943.
944.
945.
946.
947
948.
தளருங் கொடியன்னாள் தன்னோ டுடனாகிக் கிளரு மரவார்த்துக் கிளரு முடிமேலோர் வளரும் பிறைசூடி வரிவண் டிசைபாட ஒளிரும் வடுகூரி லாடும் மடிகளே.
நெடியர் சிறிதாய நிரம்பா மதிசூடும்
முடியர் விடையூர்வர் கொடியர் மொழிகொள்ளார்
கடிய தொழிற்காலன் மடிய வுதைகொண்ட அடியர் வடுகூரி லாடும் மடிகளே.
பிறையு நெடுநீரும் பிரியா முடியினார் மறையும் பலபாடி மயானத் துறைவாரும் பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங் கறையும் வடுகூரி லாடும் மடிகளே.
சந்தம் மலர்வேய்ந்த சடையின் னிடைவிம்மு கந்தம் மிகுதிங்கட் சிந்து கதிர்மாலை வந்து நயந்தெம்மை நன்று மருள்செய்வார் அந்தண் வடுகூரி லாடும் மடிகளே. '
திருமா லடிவீழத் திசைநான் முகனாய பெருமா னுணர்கில்லாப் பெருமான் நெடுமுடிசேர் செருமால் விடையூருஞ் செம்மான் திசைவில்லா அருமா வடுகூரி லாடும் மடிகளே.
படிநோன் பவையாவர் பழியில் புகழான கடிநா னிகழ்சோலை கமழும் வடுகூரைப் படியா னசிந்தை மொழியார் சம்பந்தன் அடிஞா னம்வல்லா ரடிசேர் வார்களே.
திருச்சிற்றம்பலம்
0 0 1 00
88. திருஆப்பனூர் : பண் - குறிஞ்சி
முற்றுஞ் சடைமுடிமேல் முதிரா இளம்பிறையன் ஒற்றைப் படவரவ மதுகொண் டரைக்கணிந்தான்
செற்றமில் சீரானைத் திருவாப்ப னுாரானைப்
பற்று மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
O
I

Page 80
142
உதிருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
949. குரவங் கமழ்குழலாள் குடிகொண்டு நின்றுவிண்ணோர்
விரவுந் திருமேனி விளங்கும் வளையெயிற்றின்
அரவ மணிந்தானை யணியாப்ப னுாரானைப் பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
950.
951.
952.
953.
954.
: 955.
956.
முருகு விரிகுழலார் மனங்கொ ளநங்கனைமுன் பெரிது முனிந்துகந்தான் பெருமான் பெருங்காட்டின் அரவ மணிந்தானை யணியாப்ப னுாரானைப் பரவு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
பிணியும் பிறப்பறுப்பான் பெருமான் பெருங்காட்டில்
துணியி னுடைதாழச் சுடரேந்தி யாடுவான் அணியும் புனலானை யணியாப்ப னுாரானைப் பணியு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
தகர மணியருவித் தடமால் வரைசிலையா நகர மொருமூன்றும் நலங்குன்ற வென்றுகந்தான் அகர முதலானை யணியாப்ப னுாரானைப் பகரு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
ஒடுந் திரிபுரங்க ளுடனே யுலந்தவியக் காட திடமாகக் கனல்கொண்டு நின்றிரவில் ஆடுந் தொழிலானை யணியாப்ப னுாரானைப் பாடு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
இயலும் விடையேறி யெரிகொள் மழுவீசிக்
கயலி னிணைக்கண்ணா ளொருபாற் கலந்தாட
இயலு மிசையானை யெழிலாப்ப னுTரானைப் பயிலு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
கருக்கு மணிமிடறன் கதநாகக் கச்சையினான் உருக்கு மடியவரை யொளிவெண் பிறைசூடி அரக்கன் றிறலழித்தா னணியாப்ப னுாரானைப் பருக்கு மனமுடையார் வினைபற் றறுப்பாரே.
கண்ணன் கடிக்கமல மலர்மே லினிதுறையும் அண்ணற் களப்பரிதாய் நின்றங் கடியார்மேல் எண்ணில் வினைகளைவா னெழிலாப்ப னுாரானைப் பண்ணின் னிசைபகர்வார் வினைபற் றறுப்பாரே.

திருஎருக்கத்தம்புலியூர் : பண் - குறிஞ்சி 143
957.
958.
959.
960.
செய்ய கலிங்கத்தார் சிறுதட் டுடையார்கள் பொய்யர் புறங்கூறப் புரிந்த வடியாரை ஜய மகற்றுவா னணியாப்ப னுTரானைப் பைய நினைந்தெழுவார் வினைபற்றறுப்பாரே. O
அந்தண் புனல்வைகை யணியாப்ப னுார்மேய சந்த மலர்க்கொன்றை சடைமே லுடையானை நந்தி யடிபரவும் நலஞான சம்பந்தன் சந்த மிவைவல்லார் தடுமாற் றறுப்பாரே.
திருச்சிற்றம்பலம்
0 000
89. திருஎருக்கத்தம்புலியூர் : பண் - குறிஞ்சி
படையார் தருபூதப் பகடா ருரிபோர்வை உடையா னுமையோடு முடனா யிடுகங்கைக் சடையா னெருக்கத்தம் புலியூர்த் தகுகோயில் விடையா னடியேத்த மேவா வினைதானே.
இலையார் தருகுலப் படையெம் பெருமானாய் நிலையார் மதில்முன்று நீறாய் விழவெய்த சிலையா னெருக்கத்தம் புலியூர்த் திகழ்கோயில்
கலையா னடியேத்தக் கருதா வினைதானே. 2
96.
962.
963.
தே-10
விண்ணோர் பெருமானே விகிர்தா விடையூர்தீ பெண்ணா ணலியாகும் பித்தா பிறைசூடீ எண்ணா ரெருக்கத்தம் புலியூ ருறைகின்ற அண்ணா வெனவல்லார்க் கடையா வினைதானே. 3
அரையார் தருநாக மணிவா னலர்மாலை விரையார் தருகொன்றை யுடையான் விடையேறி வரையா னெருக்கத்தம் புலியூர் மகிழ்கின்ற திரையார் சடையானைச் சேரத் திருவாமே. 4
வீறார் முலையாளைப் பாக மிகவைத்துச் சீறா வருகாலன் சினத்தை யழிவித்தான் ஏறா னெருக்கத்தம் புலியூ ரிறையானை வேறா நினைவாரை விரும்பா வினைதானே. 5

Page 81
144 திருஞானச்ம்பந்தர் - முதல் திருமுறை
964. நகுவெண் டலையேந்தி நானாவிதம் பாடிப்
புகுவா னயம்பெய்யப் புலித்தோல் பியற்கிட்டுத் தகுவா னெருக்கத்தம் புலியூர்த் தகைந்தங்கே தொகுவான் கழலேத்தத் தொடரா வினைதானே. 67
965 ஆவா வெனவரக்க னலற வடர்த்திட்டுத்
தேவா வெனவருளார் செல்வங் கொடுத்திட்ட கோவே யெருக்கத்தம் புலியூர் மிகுகோயில் தேவே யெனஅல்லல் தீர்தல் திடமாமே. 8
966. மறையான் நெடுமால்காண் பரியான் மழுவேந்தி
நிறையா மதிசூடி நிகழ்முத் தின்றொத்தே இறையா னெருக்கத்தம் புலியூ ரிடங்கொண்ட கறையார் மிடற்றானைக் கருதக் கெடும்வினையே. 9
967 புத்த ரருகர்தம் பொய்கள் புறம்போக்கிச்
சுத்தி தரித்துறையுஞ் சோதி யுமையோடும் நித்த னெருக்கத்தம் புலியூர் நிகழ்வாய அத்த னறவன்றன் னடியே யடைவோமே. O
968 ஏரா ரெருக்கத்தம் புலியூ ருறைவானைச்
சீரார் திகழ்காழித் திருவார் சம்பந்தன் ஆரா வருந்தமிழ் மாலை யிவைவல்லார் பாரா ரவரேத்தப் பதிவா னுறைவாரே.
திருச்சிற்றம்பலம்
0 () d d
90. திருப்பிரமபுரம் : திருவிருக்குக்குறள். பண் - குறிஞ்சி 969. அரனை யுள்குவீர், பிரம னுாருளெம் %.' :
பரனையே மனம், பரவி யுய்ம்மினே. 970 காண வுள்குவீர், வேணு நற்புரத்
தாணு வின்கழல், பேணி யுய்ம்மினே. 2 971 நாத னென்பிர்காள், காத லொண்புகல்
ஆதி பாதமே ஓதி யுய்ம்மினே. 3
972 அங்க மாதுசேர், பங்க மாயவன்
வெங்குரு மன்னும், எங்க ளிசனே. 4.

திருஆரூர் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி 145
973. வாணி லாச்சடைத், தோணி வண்புரத்
தாணி நற்பொனைக், காணு மின்களே. ó
974. பாந்த ளார்சடைப், பூந்த ராய்மன்னும்
ஏந்து கொங்கையாள், வேந்த னென்பரே. 6
975. கரிய கண்டனைச், சிரபு ரத்துளெம்
அரசை நாள்தொறும், பரவி யுய்ம்மினே.
976, நறவ மார்பொழிற், புறவ நற்பதி
இறைவன் நர்மமே, மறவல் நெஞ்சமே,
977, தென்றி லரக்கனைக், குன்றிற் சண்பைமன்
அன்று நெரித்தவா, நின்று நினைமினே. 9
978, அயனு மாலுமாய், முயலுங் காழியான்
பெயல்வை யெய்திநின், றியலு முள்ளமே.
979 தேர ரமணரைச், சேர்வில் கொச்சைமன்
நேரில் கழல்நினைந், தோரு முள்ளமே.
980. தொழும னத்தவர், கழும லத்துறை
பழுதில் சம்பந்தன், மொழிகள் பத்துமே. 2
திருச்சிற்றம்பலம்
4 - d .
91. திருஆரூர் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி 981 சித்தந் தெளிவீர்காள், அத்த னாரூரைப்
பத்தி மலர்தூவமுத்தி யாகுமே. Η
982 பிறவி யறுப்பீர்காள், அறவ னாரூரை
மறவா தேத்துமின், துறவி யாகுமே. 2
983. துன்பந்துடைப்பீர்காள், அன்ப னணியாரூர்
நன்பொன் மலர்தூவ, இன்ப மாகுமே. 3.
984. உய்ய லுறுவீர்காள் ஐய னாரூரைக்
கையி னாற்றொழ, நையும் வினைதானே. 4.
985 பிண்ட மறுப்பீர்காள், அண்ட னாரூரைக்
கண்டு மலர்தூவ, விண்டு வினைபோமே. あ

Page 82
148 - திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
986. u Tay மறுப்பீர்கள், ஈச னணியாரூர்
வாச மலர்தூவ, நேச மாகுமே. 6
987 வெய்ய வினைதீர, ஐய னணியாரூர்
செய்ய மலர்தூவ, வைய முமதாமே. 7
988. அரக்க னாண்மையை, நெருக்கி னானாரூர்
கரத்தி னாற்றொழத், திருத்த மாகுமே. 8 .
989. துள்ளு மிருவர்க்கும், வள்ள லாரூரை 3. உள்ளு மவர்தம்மேல், விள்ளும் வினைதானே 9
990. கடுக்கொள் சீவரை, அடக்கி னானாரூர்
எடுத்து வாழ்த்துவார், விடுப்பர் வேட்கையே. O
991 சீரூர் சம்பந்தன், ஆரூ ரைச்சொன்ன
பாரூர் பாடலார், பேரா ரின்பமே.
திருச்சிற்றம்பலம்
92. திருவிழிமிழலை திருவிருக்குக்குறள், பண்- குறிஞ்சி 992 வாசி தீரவே, காசு நல்குவீர்
மாசின் மிழலையீர், ஏச லில்லையே.
993, இறைவ ராயினிர், மறைகொள் மிழலையீர்
கறைகொள் காசினை, முறைமை நல்குமே. 2
994. செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர்
பைகொ ளரவினிர், உய்ய நல்குமே. 3.
995. நீறு பூசினிர், ஏற தேறினிர்
கூறு மிழலையீர், பேறு மருளுமே. 4
996. காமன் வேவவோர், தூமக் கண்ணினிர்
நாம மிழலையீர், சேம நல்குமே.
997 பிணிகொள் சடையினிர், மணிகொள் மிடறினிர்
அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே. 6
998. மங்கை பங்கினிர், துங்க மிழலையீர்
கங்கை முடியினிர், சங்கை தவிர்மினே. 列

திருமுதுகுன்றம் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி - 47
999. அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினிர்
பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே. 8
1000. அயனு மாலுமாய், முயலு முடியினிர்
இயலு மிழலையீர், பயனு மருளுமே.
100. பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார்
வெறிகொள் மிழலையீர், பிறிவ தரியதே. KO
002. காழி மாநகர், வாழி சம்பந்தன்
விழி மிழலைமேல், தாழு மொழிகளே. I
திருச்சிற்றம்பலம்
0 0 000
93. திருமுதுகுன்றம் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி
1003 நின்று மலர்தூவி, இன்று முதுகுன்றை நன்று மேத்துவீர்க், கென்று மின்பமே.
1004 அத்தன் முதுகுன்றைப், பத்தி யாகிநீர்
நித்த மேத்துவீர்க், குய்த்தல் செல்வமே
1005. ஐயன் முதுகுன்றைப், பொய்கள் கெடநின்று
கைகள் கூப்புவீர், வைய முமதாமே. 3
006, ஈசன் முதுகுன்றை, நேச மாகிநீர்
வாச மலர்தூவப், பாச வினைபோமே. 4
1007 மணியார் முதுகுன்றைப், பணிவா ரவர்கண்டீர்
பிணியா யினகெட்டுத், தணிவா ருலகிலே. 5
1008. மொய்யார் முதுகுன்றில், ஜயா வெனவல்லார்
பொய்யா ரிரவோர்க்குச், செய்யா ளணியாளே. 6
009. விடையான் முதுகுன்றை, இடையா தேத்துவார்
L6OL-ff யினகுழ, உடையா ருலகமே. .Z
100. பத்துத் தலையோனைக், கத்த விரலூன்றும்
அத்தன் முதுகுன்றை, மொய்த்துப் பணிமினே. 8
101. இருவ ரறியாத, ஒருவன் முதுகுன்றை
உருகி நினைவார்கள், பெருகி நிகழ்வோரே. 9

Page 83
148 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1012. தேர ரமணரும், சேரும் வகையில்லான்
நேரின் முதுகுன்றை, நீர்நின் றுள்குமே.
1013 நின்று முதுகுன்றை, நன்று சம்பந்தன்
ஒன்று முரைவல்லார், என்று முயர்வாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
94. திருஆலவாய் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி
1014. நீல மாமிடற், றால வாயிலான்
பால தாயினார், ஞால மாள்வரே.
*015. ஞால மேழுமாம், ஆல வாயிலார்
சில மேசொலிர், காலன் வீடவே.
106. ஆல நீழலார், ஆல வாயிலார்
கால காலனார், பால தாமினே.
107. அந்த மில்புகழ், எந்தை யாலவாய்
பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.
108. ஆட லேற்றினான், கூட லாலவாய்
பாடி யேமனம், நாடி வாழ்மினே.
019. அண்ண லாலவாய், நண்ணி னான்றனை
எண்ணி யேதொழத், திண்ண மின்பமே.
1020. அம்பொ னாலவாய், நம்ப னார்கழல் நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
1021. அரக்க னார்வலி, நெருக்க னாலவாய்
உரைக்கு முள்ளத்தார்க், கிரக்க முண்மையே.
022 அருவ னாலவாய், மருவி னான்றனை
இருவ ரேத்தநின், றுருவ மோங்குமே.
1023. ஆர நாகமாம், சீர னாலவாய்த்
தேர மண்செற்ற, வீர னென்பரே.
ww....

திருஇடைமருதூர் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி உ149
1024 அடிக ளாலவாய்ப், படிகொள் சம்பந்தன்
முடிவி லின்தமிழ் செடிகள் நீக்குமே.
திருச்சிற்றம்பலம்
0 0 (d
95. திருஇடைமருதூர் : திருவிருக்குக்குறள், பண் - குறிஞ்சி
1025. தோடொர் காதினன், பாடு மறையினன்
காடு பேணிநின், றாடு மருதனே.
1026 கருதார் புரமெய்வர், எருதே யினிதூர்வர்
மருதே யிடமாகும், விருதாம் வினைதீர்ப்பே.
1027 எண்ணு மடியார்கள், அண்ணல் மருதரைப்
பண்ணின் மொழிசொல்ல, விண்ணுந் தமதாமே.
1028.விரியார் சடைமேனி, எரியார் மருதரைத்
தரியா தேத்துவார், பெரியா ருலகிலே.
1029. பந்த விடையேறும், எந்தை மருதரைச் சிந்தை செய்பவர், புந்தி நல்லரே.
1030. கழலுஞ் சிலம்பார்க்கும், எழிலார் மருதரைத்
தொழலே பேணுவார்க், குழலும் வினைபோமே.
103. பிறையார் சடையண்ணல், மறையார் மருதரைத்
நிறையால் நினைபவர், குறையா ரின்பமே.
032. எடுத்தான் புயந்தன்னை, அடுத்தார் மருதரைத்
தொடுத்தார் மலர்சூட்ட, விடுத்தார் வேட்கையே.
1033. இருவர்க் கெரியாய, உருவ மருதரைப்
பரவி யேத்துவார், மருவி வாழ்வரே.
1034. நின்றுண் சமண்தேரர், என்று மருதரை
அன்றி யுரைசொல்ல, நன்று மொழியாரே.
1035. கருது சம்பந்தன், மருத ரடிபாடிப்
பெரிதுந் தமிழ்சொல்லப், பொருத வினைபோமே.
திருச்சிற்றம்பலம்
. 0 80 (d
4.
' II

Page 84
150 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
96. திருஅன்னியூர் : திருவிருக்குக்குறள். பண் - குறிஞ்சி
1036. மன்னி யூரிறை, சென்னி யார்பிறை
அன்னி யூரமர், மன்னு சோதியே.
1037. பழகுந் தொண்டர்வம், அழக னன்னியூர்க் குழகன் சேவடி, தொழுது வாழ்மினே.
1038. நீதி பேணுவீர், ஆதி யன்னியூர்ச் சோதி நாமமே, ஒதி யுய்ம்மினே.
1039. பத்த ராயினிர், அத்த ரன்னியூர்ச்
சித்தர் தாள்தொழ, முத்த ராவரே.
1040. நிறைவு வேண்டுவீர், அறவ னன்னியூர் மறையு ளான்கழற், குறவு செய்ம்மினே
1041 இன்பம் வேண்டுவீர், அன்ப னன்னியூர்
நன்பொ னென்னுமின், உம்ப ராகவே.
042. அந்த ணாளர்தம், தந்தை யன்னியூர்
எந்தை யேயெனப், பந்த நீங்குமே.
1043. தூர்த்த னைச்செற்ற, தீர்த்த னன்னியூர்
ஆத்த மாஅடைந், தேத்தி வாழ்மினே.
104. இருவர் நாடிய, அரவ னன்னியூர்
பரவு வார்விண்ணுக், கொருவ ராவரே.
1045. குண்டர் தேரருக், கண்ட னன்னியூர்த்
தொண்டு ளார்வினை, விண்டு போகுமே.
046. பூந்த ராய்ப்பந்தன் ஆய்ந்த பாடலால்
வேந்த னன்னியூர், சேர்ந்து வாழ்மினே.
திருச்சிற்றம்பலம்
97. திருப்புறவம் : பண் - தக்கேசி
1047 எய்யாவென்றித் தானவரூர்மூன் றெரிசெய்த
மையார்கண்டன் மாதுமைவைகுந் திருமேனிச்
செய்யான்வெண்ணி றணிவான்றிகழ்பொற் பதிபோலும்
பொய்யாநாவி னந்தணர்வாழும் புறவம்மே.
10

திருப்புறவம் : பண் - தக்கேசி 151
1048. மாதொருபாலும் மாலொருபாலும் மகிழ்கின்ற
நாதனென்றேத்து நம்பரன்வைகுந் நகர்போலும் மாதவிமேய வண்டிசைபாட மயிலாடப்
போதலர்செம்பொன் புன்னைகொடுக்கும் புறவம்மே
1049. வற்றாநதியும் மதியும்பொதியுங் சடைமேலே புற்றாடரவின் படமாடவுமிப் புவனிக்கோர் பற்றாயிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொற்றாமரையின் பொய்கைநிலாவும் புறவம்மே.
1050.துன்னார்புரமும் பிரமன்சிரமுந் துணிசெய்து
மின்னார்சடைமே லரவும்மதியும் விளையாடப் பன்னாளிடுமின் பலியென்றடைவார் பதிபோலும் பொன்னார்புரிநூ லந்தணர்வாழும் புறவம்மே.
105. தேவாஅரனே சரணென்றிமையோர் திசைதோறுங்
காவாயென்று வந்தடையக்கார் விடமுண்டு பாவார்மறையும் பயில்வோருறையும் பதிபோலும் பூவார்கோலச் சோலைசுலாவும் புறவம்மே.
1052. கற்றறிவெய்திக் காமன்முன்னாகும் முகவெல்லாம்
அற்றரனேநின் னடிசரணென்னு மடியோர்க்குப் பற்றதுவாய பாசுபதன்சேர் பதியென்பர் பொற்றிகழ்மாடத் தொளிகள்நிலாவும் புறவம்மே.
1058. எண்டிசையோரஞ் சிடுவகைகார்சேர் வரையென்னக் கொண்டெழுகோல முகில்போற்பெரிய கரிதன்னைப்
பண்டுரிசெய்தோன் பாவனைசெய்யும் பதியென்பர்
புண்டரிகத்தோன் போன்மறையோர்சேர் புறவம்மே.
1054. பரக்குந்தொல்சீர்த் தேவர்கள்சேனைப் பெளவத்தைத்
துரக்குஞ்செந்தீப் போலமர்செய்யுந் தொழில்மேவும் அரக்கன்திண்டோ ளழிவித்தானக் காலத்திற் புரக்கும்வேந்தன் சேர்தருமூதூர் புறவம்மே.
1055. மீத்திகழண்டந் தந்தயனோடு மிகுமாலும்
மூர்த்தியைநாடிக் காணவொணாது முயல்விட்டாங் கேத்தவெளிப்பா டெய்தியவன்ற னிடமென்பர் பூத்திகழ்சோலைத் தென்றலுலாவும் புறவம்மே.
84

Page 85
152 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1056. வையகதீர்தீ வாயுவும்விண்ணும் முதலானான்
மெய்யலதேர ருண்டிலையென்றே நின்றேதங் கையினிலுண்போர் காணவொணாதான் நகரென்பர் பொய்யகமில்லாப் பூசுரர்வாழும் புறவம்மே.
1057. பொன்னியல்மாடப் புரிசைநிலாவும் புறவத்து
மன்னியஈசன் சேவடிநாளும் பணிகின்ற தன்னியல்பில்லாச் சண்பையர்கோன்சீர்ச் சம்பந்தன் இன்னிசையீரைந் தேத்தவல்லோர்கட் கிடர்போமே.
திருச்சிற்றம்பலம்
0 40 000
98. திருச்சிராப்பள்ளி : பண் - குறிஞ்சி 1058. நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளே
றொன்றுடையானை யுமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறளன்னுள்ளங் குளிரும்மே.
1059, கைம்மகவேந்திக் கடுவனொடுடிக் கழைபாய்வான்
செம்முகமந்தி கருவரையேறுஞ் சிராப்பள்ளி வெம்முகவேழத் தீருரிபோர்த்த விகிர்தாநீ டைம்முகநாகம் மதியுடன்வைத்தல் பழியன்றே.
1060. மந்தம்முழவம் மழலைததும்ப வரைநீழல்
செந்தண்புனமுஞ் சுனையுஞ்சூழ்ந்த சிராப்பள்ளிச் சந்தம்மலர்கள் சடைமேலுடையார் விடையூரும் எந்தம்மடிக ளடியார்க்கல்ல லில்லையே.
106. துறைமல்குசாரற் சுனைமல்குநீலத் திடைவைகிச்
சிறைமல்குவண்டுந் தும்பியும்பாடுஞ் சிராப்பள்ளிக் கறைமல்குகண்டன் கனலெரியாடுங் கடவுள்ளெம் பிறைமல்குசென்னி யுடையவனெங்கள் பெருமானே.
1062. கொலைவரையாத கொள்கையர்தங்கள் மதில்முன்றும் சிலைவரையாகச் செற்றனரேனுஞ் சிராப்பள்ளித் தலைவரைநாளுந் தலைவரல்லாமை யுரைப்பீர்காள் நிலவரைநீல முண்டதும்வெள்ளை நிறமாமே.

menms
திருக்குற்றாலம் : பண் - குறிஞ்சி 153
1063.
1064.
065.
O66.
O67.
O68.
i069.
வெய்யதண்சாரல் விரிநிறவேங்கைத் தண்போது செய்யபொன்சேருஞ் சிராப்பள்ளிமேய செல்வனார்
தையலொர்பாக மகிழ்வர்நஞ்சுண்பர் தலையோட்டில்
ஐயமுங்கொள்வ ராரிவர்செய்கை யறிவாரே.
வேயுயர்சாரற் கருவிரலூகம் விளையாடும் சேயுயர்கோயிற் சிராப்பள்ளிமேய செல்வனார் பேயுயர்கொள்ளி கைவிளக்காகப் பெருமானார்
தீயுகந்தாடல் திருக்குறிப்பாயிற் றாகாதே.
மலைமல்குதோளன் வலிகெடவூன்றி மலரோன்றன் தலைகலனாகப் பலிதிரிந்துண்பர் பழியோரார் சொலவலவேதஞ் சொலவலகீதஞ் சொல்லுங்கால் சிலவலபோலுஞ் சிராப்பள்ளிச்சேடர் செய்கையே.
அரப்பளியானு மலருறைவானு மறியாமைக் கரப்புள்ளிநாடிக் கண்டிலரேனுங் கல்சூழ்ந்த சிரப்பள்ளிமேய வார்சடைச்செல்வர் மனைதோறும் இரப்புள்ளிரும்மை யேதிலர்கண்டார் லிகழாரே.
நாணாதுடைநீத் தோர்களுங்கஞ்சி நாட்காலை ஊணாப்பகலுண் டோதுவோர்க ளுரைக்குஞ்சொல் பேணாதுறுசீர் பெறுதுமென்பீரெம் பெருமானார் சேனார்கோயில் சிராப்பள்ளிசென்று சேர்மினே.
தேனயம்பாடுஞ் சிராப்பள்ளியானைத் திரைசூழ்ந்த
கானல்சங்கேறுங் கழுமலலுரிற் கவுணியன்
ஞானசம்பந்தன் நலமிகுபாட லிவைவல்லார்
வானசம்பந்தத் தவரொடுமன்னி வாழ்வாரே.
திருச்சிற்றம்பலம்
0 000 0
99. திருக்குற்றாலம் : பண் - குறிஞ்சி
வம்பார்குன்றந் நீடுயர்சாரல் வளர்வேங்கைக்
கொம்பார்சோலைக் கோலவண்டியாழ்செய் குற்றாலம்
அம்பால்நெய்யோ டாடலமர்ந்தா னலர்கொன்றை நம்பான்மேய நன்னகர்போலுங் நமரங்காள்.
0.
I

Page 86
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1070. பொடிகள்பூசித் தொண்டர்பின்செல்லப் புகழ்விம்மக்
கொடிகளோடுந் நாள்விழமல்கு குற்றாலம் கடிகொள்கொன்றை கூவிளமாலை காதல்செய் அடிகள்மேய நன்னகர்போலும் மடியீர்காள்.
107. செல்வமல்கு செண்பகம்வேங்கை சென்றேறிக்
கொல்லைமுல்லை மெல்லரும்பினுங் குற்றாலம் வில்லினொல்க மும்மதிலெய்து வினைபோக நல்குநம்பான் நன்னகர்போலுந் நமரங்காள்.
1072. பக்கம்வாழைப் பாய்கனியோடு பலவின்றேன்
கொக்கின்கோட்டுப் பைங்கனிதுரங்குங் குற்றாலம் அக்கும்பாம்பு மாமையும்பூண்டோ ரனலேந்தும் நக்கன்மேய நன்னகர்போலுந் நமரங்காள்.
1073. மலையார்சாரல் மகவுடன்வந்த மடமந்தி
குலையார்வாழைத் தீங்கனிமாந்துங் குற்றாலம் இலையார்குல மேந்தியகையா னெயிலெய்த சிலையான்மேய நன்னகர்போலுஞ் சிறுதொண்டீர்.
1074. மைம்மாநீலக் கண்ணியர்சாரல் மணிவாரிக்
கொய்ம்மாவேன லுண்கிளியோப்புங் குற்றாலம் கைம்மாவேழத் தீருரிபோர்த்த கடவுள்ளெம் பெம்மான்மேய நன்னகர்போலும் பெரியீர்காள்.
1075. நீலநெய்தல் தண்சுணைகுழ்ந்த நீள்சோலைக்
கோலமஞ்ஞை பேடையொடாடுங் குற்றாலம் காலன்றன்னைக் காலாற்காய்ந்த கடவுள்ளெம் சூலபாணி நன்னகர்போலுந் தொழுவீர்காள்.
1076. போதும்பொன்னு முந்தியருவி புடைசூழக்
கூதன்மாரி நுண்டுளிதுரங்குங் குற்றாலம் மூதூரிலங்கை முட்டியகோனை மிறைசெய்த நாதன்மேய நன்னகர்போலுந் நமரங்காள்.
1077. அரவின்வாயின் முள்ளெயிறேய்ப்ப அரும்பீன்று குரவம்பாவை முருகமர்சோலைக் குற்றாலம் பிரமன்னோடு மாலறியாத பெருமையெம் பரமன்மேய நன்னகர்போலும் பணிவீர்காள்.

திருப்பரங்குன்றம் : பண் - குறிஞ்சி 6 155
1076. பெருந்தண்சாரல் வாழ்சிறைவண்டு பெடைபுல்கிக்
குருந்தம்மேறிச் செவ்வழிபாடுங் குற்றாலம் இருந்துண்தேரும் நின்றுண்சமனு மெடுத்தார்ப்ப அருந்தண்மேய நன்னகர்போலு மடியிர்காள். O
1079. மாடவீதி வருபுனற்காழி யார்மன்னன்
கோடலின்று கொழுமுனைகூம்புங் குற்றாலம் நாடவல்ல நற்றமிழ்ஞான சம்பந்தன் பாடல்பத்தும் பாடநம்பாவம் பறையுமே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
100. திருப்பரங்குன்றம் : பண் - குறிஞ்சி 1080, நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலனந்திச் சுடரெரியேந்திச் சுடுகானில் ஆடலனஞ்சொ லணியிழையாளை யொருபாகம் " பாடலன்மேய தன்னகர்போலும் பரங்குன்றே.
08. அங்கமொராறும் மருமறைதான்கும் மருள்செய்து
பொங்குவெண்ணுரலும் பொடியணிமார்பிற் பொலிவித்துத்
திங்களும்பாம்புத் திகழ்சடைவைத்தோர் தேன்மொழி
* பங்கினன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே. s
1082.நீரிடங்கொண்ட நிமிர்சடைதன்மேல் திரைகொன்றை
சீரிடங்கொண்ட எம்மிறைபோலுஞ் சேய்தாய ஒருடம்புள்ளே யுமையொருபாக முடனாகிப்
பாரிடம்பாட இனிதுறைகோயில் பரங்குன்றே. 3
1083 வளர்பூங்கோங்க மாதவியோடு மல்லிகைக்
குளிர்பூஞ்சாரல் வண்டறைசோலைப் பரங்குன்றம் தளிர்போல்மேனித் தையல்நல்லாளோ டொருபாகம் தளிர்பூங்கொன்றை சூடினன்மேய நகர்தானே. 4
1084. பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியஈசன் தொன்மறை பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.

Page 87
156 *
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
085.
கடைநெடுமாடக் கடியரண்மூன்றுங் கனல்மூழ்கத் தொடைநவில்கின்ற வில்லினனந்திச் சுடுகானில் புடைநவில்பூதம் பாடநின்றாடும் பொருகுலப்
படைநவில்வான்றன் நன்னகர்போலும் பரங்குன்றே. 6
1086.
1087.
1088.
1089.
090.
ካ091
அயிலுடைவேலோ ரனல்புல்குகையி னம்பொன்றால் எயில்படவெய்த எம்மிறைமேய இடம்போலும் மயில்பெடைபுல்கி மாநடமாடும் வளர்சோலைப் பயில்பெடைவண்டு பாடலறாத பரங்குன்றே. Z
மைத்தகுமேனி வாளரக்கன்றன் மகுடங்கள் பத்தினதிண்டேட்ா ளிருபதுஞ்செற்றான் பரங்குன்றைச் சித்தமதொன்றிச் செய்கழலுன்னிச் சிவனென்று நித்தலுமேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 8
முந்தியில்வையந் தாவியமாலு மொய்யொளி உந்தியில்வந்திங் கருமறையீந்த வுரவோனும்: சிந்தையினாலுந் தெரிவ்ரிதாகித் திகழ்சோதி பந்தியலங்கை மங்கையொர்பங்கன் பரங்குன்றே. 9
குண்டாய்முற்றுந் திரிவார்கூறை மெய்போர்த்து மிண்டாய்மிண்டர் பேசியபேச்சு மெய்யல்ல பண்டால்நீழல் மேவியஈசன் பரங்குன்றைத் தொண்டாயேத்தத் தொல்வினைநம்மேல் நில்லாவே. 10
தடமலிபொய்கைச் சண்பைமன்ஞான சம்பந்தன்
படமலிநாக மரைக்கசைத்தான்றன் பரங்குன்றைத்
தொடைமலிபாடல் பத்தும்வல்லார்தந் துயர்போகி
விடமலிகண்ட னருள்பெறுந்தன்மை மிக்கோரே. I
திருச்சிற்றம்பலம்
0 0 (0 × 0
101. திருக்கண்ணார்கோயில் : பண் - குறிஞ்சி
தண்ணார்திங்கட் பொங்கரவந்தாழ் புனல்சூடிப் பெண்ணாணாய பேரருளாளன். பிரியாத
கண்ணார்கோயில் கைதொழுவோர்கட் கிடர்பாவம்
நண்ணாவாகுந் நல்வினையாய நணுகும்மே.

திருக்கண்ணார்கோயில் : பண் - குறிஞ்சி ம் 157
1092.
093.
1094.
1095.
096.
0.97.
1098.
099.
கந்தமர்சந்துங் காரகிலுந்தண் கதிர்முத்தும் வந்தமர்தெண்ணிர் மண்ணிவளஞ்சேர் வயல்மண்டிக் கொந்தலர்சோலைக் கோகிலமாடக் குளிர்வண்டு செந்திசைபாடுஞ் சீர்திகழ்கண்ணார் கோயிலே. 2
பல்லியல்பாணிப் பாரிடமேத்தப் படுகானின் எல்லிநடஞ்செய் யீசனெம்மான்றன் னிடமென்பர் கொல்லையின்முல்லை மல்லிகைமெளவற் கொடிபின்னிக் கல்லியலிஞ்சி மஞ்சமர்கண்ணார் கோயிலே, 3
தருவளர்கானந் தங்கியதுங்கப் பெருவேழம் மருவளர்கோதை யஞ்சவுரித்து மறைநால்வர்க் குருவளரால நீழலமர்ந்தீங் குரைசெய்தார் கருவளர்கண்ணார் கோயிலடைந்தோர் கற்றோரே. 4.
மறுமானுருவாய் மற்றிணையின்றி வானோரைச் செறுமாவலிபாற் சென்றுலகெல்லா மளவிட்ட குறுமானுருவன் தற்குறியாகக் கொண்டாடுங் கறுமாகண்டன் மேயதுகண்ணார் கோயிலே,
விண்ணவருக்காய் வேலையுள்நஞ்சம் விருப்பாக உண்ணவனைத்தே வர்க்கமுதீந்தெவ் வுலகிற்குங் கண்ணவனைக்கண் ணார்திகழ்கோயிற் கனிதன்னை நண்ணவல்லோர்கட் கில்லைநமன்பால் நடலையே: 6
முன்னொருகாலத் திந்திரனுற்ற முனிசாபம் பின்னொருநாளவ் விண்ணவரேத்தப் பெயர்வெய்தித் தன்னருளாற்கண் ணாயிரமீந்தோன் சார்பென்பர் கன்னியர்நாளுந் துன்னமர்கண்ணார் கோயிலே. ク
பெருக்கெண்ணாத பேதையரக்கன் வரைக்கிழால் நெருக்குண்ணாத்தன் நீள்கழல்நெஞ்சில் நினைந்தேத்த முருக்குண்ணாதோர் மொய்கதிர்வாள்தேர் முன்னிந்த திருக்கண்ணாரென் பார்சிவலோகஞ் சேர்வாரே. 8
செங்கமலப்போ திற்றிகழ்செல்வன் திருமாலும்.
அங்கமலக்கண் ணோக்கரும்வண்ணத் தழலானான்
தங்கமலக்கண் ணார்திகழ்கோயில் தமதுள்ளம் அங்கமலத்தோ டேத்திடஅண்டத் தமர்வாரே. 9

Page 88
158 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1100.
101.
102.
103.
104.
105.
'106.
தாஹிடுபெண்ணைத் தட்டுடையாருந் தாமுண்ணுஞ் சோறுடையார்சொல் தேறன்மின்வெண்ணுரல்சேர்மார்பன் ஏறுடையன்பர னென்பணிவானிள் சடைமேலோர் ஆறுடையண்ணல் சேர்வதுகண்ணார் கோயிலே. O
காமருகண்ணார் கோயிலுளானைக் கடல்சூழ்ந்த பூமருசோலைப் பொன்னியல்ம்ாடப் புகலிக்கோன் நாமருதொன்மைத் தன்மையுள்ஞான சம்பந்தன் பாமருபாடல் பத்தும்வல்லார்மேற் பழிபோமே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
102. சீகாழி : பண் - குறிஞ்சி
உரவார்கலையின் கவிதைப்புலவர்க் கொருநாளுங் கரவாவண்கைக் கற்றவர்சேருங் கலிக்காழி அரவாரரையா வவுணர்புரமூன் றெரிசெய்த சரவாளன்பார் தத்துவஞானத் தலையாரே.
மொய்சேர்வண்டுண் மும்மதநால்வாய் முரண்வேழக் கைபோல்வாழை காய்குலையீனுங் கலிக்காழி மைசேர்கண்டத் தெண்டோள்முக்கண் மறையோனே ஐயாவென்பார்க் கல்லல்களான அடையாவே. .. 2
இளகக்கமலத் தீன்களியங்குங் கழிகுழக் களகப்புரிசைக் கவினார்சாருங் கலிக்காழி அளகத்திருநன் னுதலிபங்கா அரனேயென்
றுளகப்பாடு மடியார்க்குறுநோ யடையாவே.
எண்ணார்முத்த மீன்றுமரகதம் போற்காய்த்துக் கண்ணார்கமுக பவளம்பழுக்குங் கலிக்காழிப் பெண்ணோர்பாகா பித்தாபிரானே யென்பார்க்கு நண்ணாவினைகள் நாடொறுமின்பந் நணுகும்மே.
மழையார்சாரற் செம்புனல்வந்தங் கடிவருடத் கழையார்கரும்பு கண்வளர்சோலைக் கலிக்காழி உழையார்கரவா வுமையாள்கணவா வொளிர்சங்கக் குழையாஎன்று. கூறவல்லார்கள் குணவோரே. 5

திருக்கழுக்குன்றம் : பண் - குறிஞ்சி 159
OZ.
108.
109.
10.
III.
III2.
13.
தே-11
குறியார்திர்ைகள் வரைகள்நின்றுங் கோட்டர்று கறியார்கழிசம் பிரசங்கொடுக்குங் கலிக்காழி வெறியார்கொன்றைச் சடையாவிடையா என்பாரை அறியாவினைக ளருநோய்பாவம் மடையாவே. 67
உலங்கொள்சங்கத் தார்கலியோதத் துதையுண்டு கலங்கள்வந்து கார்வயலேறுங் கலிக்காழி இலங்கைமன்னன் றன்னையிடர்கண் டருள்செய்த சலங்கொள்சென்னி மன்னாஎன்னத் தவமாமே 8
ஆவிக்கமலத் தன்னமியங்குங் கழிசூழக் காவிக்கண்ணார் மங்கலமோவாக் கலிக்காழிப் பூவிற்றோன்றும் புத்தேளொடுமா லவன்றானும் மேவிப்பரவு மரசேயென்ன வினைபோமே. 9
மலையார்மாட நீடுயரிஞ்சி மஞ்சாருங் கலையார்மதியஞ் சேர்தருமந்தன் கலிக்காழித் தலைவாசமணர் சாக்கியர்க்கென்று மறிவொண்ணா நிலையாயென்னத் தொல்வினையாய நில்லாவே.
வடிகொள்வாவிச் செங்கழுநீரிற் கொங்காடிக் கடிகொடேன்றன் முன்றினில்வைகுங் கலிக்காழி அடிகள்தம்மை யந்தமில்ஞான சம்பந்தன் படிகொள்பாடல் வல்லவர்தம்மேற் பழிபோமே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
103. திருக்கழுக்குன்றம் : பண் - குறிஞ்சி
தோடுடையானொரு காதிற்றுாய குழைதாழ ஏடுடையான் றலைகலனாக இரந்துண்ணும் நாடுடையான் நள்ளிருளேம நடமாடுங் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே.
கேணவல்லான் கேழல்வெண்கொம்பு குறளாமை பூணவல்லான் புரிசடைமேலொர் புனல்கொன்றை பேணவல்லான் பெண்மகள்தன்னை யொருபாகம் காணவல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 2

Page 89
160 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
14. தேனகத்தார் வண்டதுவுண்ட திகழ்கொன்றை
தானகத்தார் தண்மதிசூடித் தலைமேலோர் வானகத்தார் வையகத்தார்கள் தொழுதேத்தும் கானகத்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 3
15. துணையல்செய்தான் தூயவண்டியாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல்செய்தான் பெண்ணினல்லாளை யொருபாகம் இணையல்செய்யா விலங்கெயில்மூன்று மெரியுண்ணக் கணையல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. A
16. பையுடைய பாம்பொடுநீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறைசூடி விரிகொன்றை மையுடைய மாமிடற்றண்ணல் மறிசேர்ந்த கையுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 5
17. வெள்ளமெல்லாம் விரிசடைமேலோர் விரிகொன்றை
கொள்ளவல்லான் குரைகழலேத்துஞ் சிறுத்தொண்டர் உள்ளமெல்லா முள்கிநின்றாங்கே யுடனாடுங் கள்ளம்வல்லான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 6.7
18. ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை யருவரையின்
நோதல்செய்தான் நொடிவரையின்கண் விரலூன்றிப் பேர்தல்செய்தான் பெண்மகள்தன்னோ டொருபாகம் காதல்செய்தான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 8
1119. இடந்தபெம்மா னேனமதாயு மனமாயும்
தொடர்ந்தபெம்மான் தூமதிசூடி வரையார்தம் மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக் காலனைக் கடந்தபெம்மான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 9
120. தேயநின்றான் திரிபுரங்கங்கை சடைமேலே
பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த வுலகெல்லாம் சாயநின்றான் வன்சமண்குண்டர் சாக்கீயர் காயநின்றான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. O
12. கண்ணுதலான் காதல்செய்கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை பண்ணியல்பாற் பாடியபத்து மிவைவல்லார் புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே. ld
திருச்சிற்றம்பலம்
0 0 000
aBچسr*

திருப்புகலி : பண் - வியாழக்குறிஞ்சி உ161
104. திருப்புகலி : பண் - வியாழக்குறிஞ்சி
122. ஆடலரவசைத்தானருமாமறை தான்விரித்தான்கொண்றை
சூடிய செஞ்சடையான் சுடுகா டமர்ந்தபிரான் ஏடவிழ் மாமலையா ளொருபாக மமர்ந்தடியா ரேத்த ஆடிய எம்மிறையூர் புகலிப் பதியாமே. 1
1123 ஏல மலிகுழலா ரிசைபாடி யெழுந்தருளாற் சென்று
சோலை மலிசுனையிற் குடைந்தாடித் துதிசெய்ய ஆலை மலிபுகைபோ யண்டர்வானத்தை மூடிநின்று நல்ல மாலை யதுசெய்யும் புகலிப் பதியாமே. 2
124. ஆறணி செஞ்சடையா னழகார்புர மூன்றுமன்று வேவ நீறணி யாகவைத்த நிமிர்புன்சடை யெம்மிறைவன். பாறணி வெண்டலையிற் பகலேபலி யென்றுவந்து நின்ற வேறணி கோலத்தினான் விரும்பும் புகலியதே. 3
125. வெள்ள மதுசடைமேற் கரந்தான் விரவார்புரங்கள் மூன்றுங்
கொள்ள எரிமடுத்தான் குறைவின்றி யுறைகோயில் அள்ளல் விளைகழனி யழகார்விரைத் தாமரைமேலன்னம் புள்ளினம் வைகியெழும் புகலிப் பதிதானே. 4.
126 சூடு மதிச்சடைமேற் சுரும்பார்மலர்க் கொன்றைதுன்றநட்டம்
ஆடு மமரர்பிரா னழகாருமை யோடுமுடன் வேடு படநடந்த விகிர்தன் குணம்பரவித் தொண்டர்
பாட இனிதுறையும் புகலிப் பதியாமே. -
127 மைந்தணி சோலையின்வாய் மதுப்பாய்வரி வண்டினங்கள்வந்து
நந்திசை பாடநடம் பயில்கின்ற நம்பனிடம் அந்திசெய் மந்திரத்தா லடியார்கள் பரவியெழ விரும்பும் புந்திசெய் நான்மறையோர் புகலிப் பதிதானே. 6
128. மங்கையோர் கூறுகந்த மழுவாளன் வார்சடைமேற் றிங்கள்
கங்கை தனைக்கரந்த கறைக்கண்டன் கருதுமிடஞ் செங்கயல் வார்கழனி திகழும் புகலிதனைச் சென்றுதம் அங்கையி னாற்றொழுவா ரவல மறியாரே. Z
1129. வல்லிய நுண்ணிடையா ஞமையாள் விருப்பனவனன்னும்
நல்லிட மென்றறியா னலியும் விறலரக்கன்
பல்லொடு தோள்நெரிய விரலூன்றிப் பாடலுமே கைவாள் ஒல்லை யருள்புரிந்தா னுறையும் புகலியதே. 8

Page 90
162 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1130.
1131.
1132.
133.
134.
1135.
II36.
தாதலர் தாமரைமே லயனுந் திருமாலுந் தேடி ஒதியுங் காண்பரிய வுமைகோ னுறையுமிடம் மாதவி வான்வகுள மலர்ந்தெங்கும் விரைதோய வாய்ந்த போதலர் சோலைகள்குழ் புகலிப் பதிதானே. 9
வெந்துவர் மேனியினார் விரிகோவண நீத்தார் சொல்லும் அந்தர ஞானமெல்லா மவையோர் பொருளென்னேல் வந்தெதி ரும்புரமூன் றெரித்தா னுறைகோயில் வாய்ந்த புந்தியி னார்பயிலும் புகலிப் பதிதானே.
வேதமோர் கீதமுணர் வாணர்தொழுதேத்த மிகுவாசப் போதனைப் போல்மறையோர் பயிலும் புகலிதன்னுள் நாதனை ஞானமிகு சம்பந்தன் தமிழ்மாலை நாவில் ஒதவல் லாருலகி லுறுநோய் களைவாரே. I
w திருச்சிற்றம்பலம்
0 0 000
105. திருஆரூர் : பண் - வியாழக்குறிஞ்சி
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள் சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக் கூடலர் மூவெயிலும் மெரியுண்ணக் கூரெரிகொண் டெல்லி ஆடல னாதிரைய னாரூ ரமர்ந்தானே.
சோலையில் வண்டினங்கள் சுரும்போ டிசைமுரலச் சூழ்ந்த ஆலையின் வெம்புகைபோய் முகில்தோயு மாரூரில் பாலொடு நெய்தயிரும் பயின்றாடும் பரமேட்டி பாதம்
காலையு மாலையும்போய்ப் பணிதல் கருமமே. 2
உள்ளமோ ரிச்சையினா லுகந்தேத்தித் தொழுமின் தொண்டீர்மெய்யே கள்ள மொழிந்திடுமின் கரவா திருபொழுதும் வெள்ளமோர் வார்சடைமேற் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய அள்ள லகன்கழனி யாரூ ரடைவோமே. 3
வெந்துறு வெண்மழுவாட் படையான் மணிமிடற்றானரையின் ஐந்தலை யாடரவ மசைத்தா னணியாரூர்ப் பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் னடிபரவப் பாவம், நைந்தறும் வந்தனையு நாடொறும் நல்லனவே. 4

திருவணறல் : பண் - வியாழக்குறிஞ்சி 6 183
37.
வீடு பிறப்பெளிதா மதனை வினவுதிரேல் வெய்ய காடிட மாகநின்று கனலேந்திக் கைவிசி
ஆடு மவிர்சடையா னவன்மேய ஆரூரைச் சென்று
138.
139.
1140.
14.
1142.
143.
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே. 5
கங்கையோர் வார்சடைமேற் கரந்தான் கிளிமழலைக் கேடில் மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும் அங்கையி னானடியே பரவி யவன்மேய ஆரூரர் தங்கையினாற் றொழுவார் தடுமாற் றுப்பாரே. 6
நீறணி மேனியனாய் நிரம்பா மதிசூடி நீண்ட ஆறணி வார்சடையா னாரூ ரினிதமர்ந்தான் சேறணி மாமலர்மேற் பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியானவனெம் பெருமானே. 78
வல்லியந் தோலுடையான் வளர்திங்கட் கண்ணியினான் வாய்த்த நல்லிய னான்முகத்தோன் தலையின் னறவேற்றான் அல்லியங் கோதைதன்னை யாகத் தமர்ந்தருளி ஆரூர்ப் புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே. 9
செந்துவ ராடையினா ருடைவிட்டு நின்றுழல்வார் சொன்ன இந்திர ஞாலமொழிந் தின்புற வேண்டுதிரேல் அந்தர மூவெயிலும் அரணம் மெரியூட்டி ஆரூர்த் தந்திர மாவுடையா னவனெந் தலைமையனே. O
நல்ல புனற்புகலித் தமிழ்ஞான சம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூ ரமர்ந்தானை
வல்லதோ ரிச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல்வல்லார் துன்பந் துடைப்பாரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
106. திருவணறல் : பண் - வியாழக்குறிஞ்சி
மாறில வுணரரணம் மவைமாயவோர் வெங்கணையா லன்று
நீறெழ வெய்தவெங்கள் நிமல னிடம்வினவில் தேறலி ரும்பொழிலுந் திகழ்செங்கயல் பாய்வயலுஞ் சூழ்ந்த
ஊறல மர்ந்தபிரா னொலியார்கழ லுள்குதுமே.

Page 91
164 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
144 மத்த மதக்கரியை மலையான்மக ளஞ்சவன்று கையால்
மெத்த வுரித்தவெங்கள் விமலன் விரும்புமிடம் தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர் நீலநாளுந் நயனம் ஒத்தல ருங்கழனித் திருவூறலை யுள்குதுமே. 2
145. ஏன மருப்பினொடு மெழிலாமையும் பூண்டழகார் நன்றும்
கானமர் மான்மறிக்கைக் கடவுள் கருதுமிடம் - வான மதிதடவும் வளர்சோலைகள் சூழ்ந்தழகார் நம்மை ஊன மறுத்தபிரான்புரிந்தான் திருவூறலை யுள்குதுமே, 3
1146. நெய்யணி மூவிலைவேல் நிறைவெண்மழு வும்மணலு மன்று
கையணி கொள்கையினான் கடவுள் விரிடம்வினவில் மையணி கண்மடவார் பலர்வந் திறைஞ்சமன்னி நம்மை உய்யும் வகைபுரிந்தான் திருவூறலை யுள்குதுமே. 4
147 எண்டிசை யோர்மகிழ எழில்மாலையும் போனகமும் பண்டு
சண்டி தொழஅளித்தா னவன்தாழு மிடம்வினவில் கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கை கள்குழ்ந்து தஞ்சை உண்டபி ராண்மருந் திருவூறலை யுள்குதுமே.
148. கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந் தெய்துதலுங்கலங்கி
மறுக்குறு மாணிக்கருள மகிழ்ந்தா னிடம்வினவில் செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு மெய்யுந்தெரிய அன் ஒறுத்தருள் செய்தபிரான் திருவூறலை யுள்குதுமே. a 8
149. நீரின் மிசைத்துயின்றோன் நிறைநான் முகனும் மறியாதன்று
தேரும் வகைநிமிர்ந்தா னவன்சேரு மிடம்வினவில் பாரின் மிசையடியார் பலர்வந் திறைஞ்சமகிழ்ந் தாகம் ஊரு மரவசைத்தான் திருவூறலை யுள்குதுமே. 9
1150. பொன்னியல் சீவரத்தார் புளித்தட்டையர் மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா வீசனிடம் வினவில் தென்னென வண்டினங்கள் செறியார்பொழில் சூழ்ந்தழகார் தன்னை உன்ன வினைகெடுப்பான்திருவூறலை யுள்குதுமே, 0.
151 கோட லிரும்புறவிற் கொடிமாடக் கொச்சையர்மன் மெச்ச
ஒடு புனற்சடைமேற் கரந்தான் றிருவூறல் நாட லரும்புகழான் மிகுஞானசம் பந்தன்சொன்ன நல்ல பாடல்கள் பத்தும்வல்லார் பரலோகத் திருப்பாரே. s திருச்சிற்றம்பலம்
0 0 () ( 0

திருக்கொடிமாடச்செங்குன்றூர் : பண் - வியாழக்குறிஞ்சி 185
107. திருக்கொடிமாடச்செங்குன்றுார் : பண் - வியாழக்குறிஞ்சி
52.
வெந்தவெண் ணிறணிந்து விரிநூல் திகழ்மார்பி னல்ல பந்தண வும்விரலா ளொருபாகம மர்ந்தருளிக் கொந்தண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார் நின்ற
அந்தண னைத்தொழுவா ரவல மறுப்பாரே.
53.
154.
அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம் மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக் குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார் நின்ற தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. 2
பாலன நீறுபுனை திகழ்மார்பிற் பல்வளைக்கை நல்ல ஏல மலர்க்குழலா ளொருபாக மமர்ந்தருளிக் கோல மலர்ப்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார்மல்கும்
நீலநன் மாமிடற்றான் கழலேத்தல் நீதியே. 3
155.
156.
7.
158.
159.
வாருறு கொங்கைநல்ல மடவாள் திகழ்மார்பில் நண்ணும் காருறு கொன்றையொடுங் கதநாகம் பூண்டருளிச் சீருறு மந்தணர்வாழ் கொடிமாடச் செங்குன்றுார் நின்ற நீருறு செஞ்சடையான் கழலேத்தல் நீதியே. 4
பொன்றிக ழாமையொடு புரிநூல் திகழ்மார்பில் நல்ல பன்றியின் கொம்பணிந்து பணைத்தோளியோர் பாகமாகக் குன்றன மாளிகைசூழ் கொடிமாடச் செங்குன்றுார் வானில் மின்றிகழ் செஞ்சடையான் கழலேத்தல் மெய்ப்பொருளே. 5
ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி தாங்கிய கங்கையொடு மதியஞ் சன்டக்கணிந்து கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார் வாய்ந்த பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே. 6
நீடலர் கொன்றையொடு நிமிர்புன் சடைதாழ வெள்ளை வாட லுடைதலையிற் பலிகொள்ளும் வாழ்க்கையனாய்க் கோடல் வளம்புறவிற் கொடிமாடச் செங்குன்றுார் நின்ற சேடன தாழ்தொழுவார் வினையாய தேயுமே. 。7
மத்தநன் மாமலரும் மதியும்வளர் கொன்றையுடன் துன்று தர் தொத்தலர் செஞ்சடைமேல் துதைய வுடன்சூடிக் கொத்தலர் தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார் மே தத்துவ னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே. ... 8

Page 92
f66 *
திருருானசம்பந்தர் - முதல் திருமுறை
60.
II6.
II62.
I63.
is 4.
65.
66.
செம்பொனின் மேனியனாம் பிரமன்றிரு மாலுந்தேட நின்ற அம்பவ ளத்திரள்போ லொளியாய ஆதிபிரான் கொம்பண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றுார் மேய நம்பன தாள்தொழுவார் வினையாய நாசமே. 9
போதியர் பிண்டியரென் றிவர்கள் புறங்கூறும் பொய்ந்நூல் ஒதிய கட்டுரைகேட் டுழல்வீர் வரிக்குயில்கள் கோதிய தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற வேதிய னைத்தொழநும் வினையான வீடுமே. 0.
அலைமலி தண்புனல்சூழ்ந் தழகார்புகலிந்நகர் பேணும் தலைமக னாகிநின்ற தமிழ்ஞான சம்பந்தன் கொலைமலி மூவிலையான் கொடிமாடச் செங்குன்று ரேத்தும் நலமலி பாடல்வல்லார் வினையான நாசமே.
திருச்சிற்றம்பலம்
108. திருப்பாதாளிச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி
மின்னியல் செஞ்சடைமேல் விளங்கும்மதி மத்தமொடு நல்ல பொன்னியல் கொன்றையினான் புனல்சூடிப் பொற்பமரும் அன்ன மனநடையா ளொருபாகத் தமர்ந்தருளி நாளும் பன்னிய பாடலினா னுறைகோயில் பாதாளே.
நீடலர் கொன்றையொடு நிரம்பா மதிசூடி வெள்ளைத் தோடமர் காதில்நல்ல குழையான் சுடுநீற்றான் ஆடர வம்பெருக அனலேந்திக் கைவீசி வேதம் பாடலி னாலினியா னுறைகோயில் பாதாளே. 2
நாகமும் வான்மதியுந் நலமல்கு செஞ்சடையான் சாமம் போகநல் வில்வரையாற் புரமூன் றெரித்துகந்தான் தோகைநன் மாமயில்போல் வளர்சாயல் துரமொழியைக கூடப்
பாகமும் வைத்துகந்தா னுறைகோயில் பாதாளே. . . 3
அங்கமு நான்மறையு மருள்செய் தழகார்ந்த அஞ்சொல் மங்கையோர் கூறுடையான் மறையோ னுறைகோயில் செங்கயல் நின்றுகளுஞ் செறுவில் திகழ்கின்ற சோதிப் பங்கய நின்றலரும் வயல்சூழ்ந்த பாதாளே. 4.

திருப்பாதாளிச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி 3 187
167.
பேய்பல வுந்நிலவப் பெருங்காடரங் காகவுன்னி நின்று தீயொடு மான்மறியும் மழுவுந் திகழ்வித்துத்
தேய்பிறை யும்மரவும் பொலிகொன்றைச் சடைதன்மேற் சேரப்
1168.
பாய்புன லும்முடையா னுறைகோயில் பாதாளே.
கண்ணமர் நெற்றியினான் கமழ்கொன்றைச் சடைதன்மேல் நின்றும் விண்ணியல் மாமதியும் முடன்வைத் தவன்விரும்பும்
பெண்ணமர் மேனியினான் பெருங்கா டரங்காக ஆடும்
169.
70.
7.
72.
1173.
பண்ணியல் பாடலினா னுறைகோயில் பாதாளே. 6
விண்டலர் மத்தமொடு மிளிரும்மிள நாகம்வன் னிதிகழ் வண்டலர் கொன்றைநகு மதிபுல்கு வார்சடையான் விண்டவர் தம்புரமூன் றெரிசெய்துரை வேதநான் கும்மவை பண்டிசை பாடலினா னுறைகோயில் பாதாளே. 7
மல்கிய நுண்ணிடையா ஞமைநங்கை மறுகஅன்றுகையால் தொல்லை மலையெடுத்த அரக்கன்றலை தோள்நெரித்தான் கொல்லை விடையுகந்தான் குளிர்திங்கள் சடைக்க ணCந்தோன் பல்லிசை பாடலினா னுறைகோயில் பாதாளே. 8
தாமரை மேலயனும் மரியுந்தம தாள்வினைாயல் தேடிக் காமனை வீடுவித்தான் கழல்காண்பில ராயகன்றார் பூமரு வுங்குழலா ளுமைநங்கை பொருந்தியிட்ட நல்ல பாமரு வுங்குணத்தா னுறைகோயில் பாதாளே. 9
காலையி லுண்பவருஞ் சமண்கையருங் கட்டுரை விட்டன் றால விட நுகர்ந்தா னவன்றன்னடி யேபரவி மாலையில் வண்டினங்கள் மதுவுண் டிசைமுரல வாய்த்த பாலையாழ்ப் பாட்டுகந்தா னுறைகோயில் பாதாளே.
பன்மலர் வைகுபொழில் புடைசூழ்ந்த பாதாளைச் சேரப் பொன்னியன் மாடமல்கு புகலிந்நகர் மன்னன் தன்னொளி மிக்குயர்ந்த தமிழ்ஞான சம்பந்தன் சொன்ன இன்னிசை பத்தும்வல்லா ரெழில்வானத் திருப்பாரே. l
திருச்சிற்றம்பலம்
0 0 000

Page 93
168 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
109. திருச்சிரபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி
174. வாருறு வனமுலை மங்கைபங்கன் நீருறு சடைமுடி நிமலனிடங் காருறு கடிபொழில் சூழ்ந்தழகார் சீருறு வளவயற் சிரபுரமே. 1.
175. அங்கமொ டருமன்ற யருள்புரிந்தான்
திங்களொ டரவணி திகழ்முடியன் மங்கையொ டினிதுறை வளநகரஞ் செங்கயல் மிளிர்வயற் சிரபுரமே 2.
176. பரிந்தவன் பன்முடி யமரர்க்காகித்
திரிந்தவர் புரமவை தீயின்வேவ வரிந்தவெஞ் சிலைபிடித் தடுசரத்தைத் தெரிந்தவன் வளநகர் சிரபுரமே. 3
177. நீறணி மேனியன் நீள்மதியோ
டாறணி சடையின னணியிழையோர் கூறணிந் திணிதுறை குளிர்நகரஞ் சேறணி வளவயற் சிரபுரமே. 4
178. அருந்திற லவுணர்க ளரணழியச்
சரந்துரந் தெரிசெய்த சங்கரனுரர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்திய புறவணி சிரபுரமே. ر- ッ
179. கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன் கொலையவன் கொடிமதில் கூட்டழித்த சிலையவன் வளநகர் சிரபுரமே. 6
180. வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடம்யில் பெடைபயிலுந் தேனமர் பொழிலனி சிரபுரமே. 7
181. மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள் இறுத்தவ னிருஞ்சினக் காலனைமுன் செறுத்தவன் வளநகர் சிரபுரமே. 9

திருஇடைமருதூர் " பண் - வியாழக்குறிஞ்சி 189
82. வண்ணநன் மலருறை மறையவனுங்
கண்ணனுங் கழல்தொழக் கனலுருவாய் விண்ணுற வோங்கிய விமலனிடந் திண்ணநன் மதிலனி சிரபுரமே. 9
183. வெற்றரை யுழல்பவர் விரிதுகிலார் கற்றில ரறவுரை புறனுரைக்கப் பற்றலர் திரிபுர மூன்றும்வேவச் செற்றவன் வளநகர் சிரபுரமே.
1134. அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப் பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார் திருவொடு புகழ்மல்கு தேசினரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
10. திருஇடைமருதூர் : பண் - வியாழக்குறிஞ்சி 185. மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான் அருந்தவ முனிவரொ டால்நீழற்கீழ் இருந்தவன் வளதக ரிடைமருதே.
186. தோற்றவன் கேடவன் துணைமுலையாள் கூற்றவன் கொல்புலித் தோலசைத்த நீற்றவன் நிறைபுனல் நீள்சடைமேல் ஏற்றவன் வளநக ரிடைமருதே. 2
187. படையுடை மழுவினன் பால்வெண்ணிற்றன்
நடைநவி லேற்றினன் ஞாலமெல்லாம் உடைதலை யிடுபவி கொண்டுழல்வான் இடைமரு திணிதுறை யெம்மிறையே. 3
188. பணைமுலை யுமையொரு பங்கனென்னார்
துணைமதிள் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக் கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற இணையிலி வளநக ரிடைமருதே 4.

Page 94
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1189.
1190.
1191.
192.
II93.
1194.
II95.
பொழிலவன் புயலவன் புயலியக்குந் தொழிலவன் துயரவன் துயரகற்றுங் கழலவன் கரியுரி போர்த்துகந்த எழிலவன் வளநக ரிடைமருதே.
நிறையவன் புனலொடு மதியும்வைத்த பொறையவன் புகழவன் புகழநின்ற மறையவன் மறிகடல் நஞ்சையுண்ட இறையவன் வளநக ரிடைமருதே.
நனிவளர் மதியொடு நாகம்வைத்த பனிமலர்க் கொன்றையம் படர்சடையன் முனிவரொ டமரர்கள் முறைவணங்க
இனிதுறை வளநக ரிடைமருதே.
தருக்கின அரக்கன தாளுந்தோளும் நெரித்தவன் நெடுங்கைமா மதகரியன்
றுரித்தவ னொன்னலர் புரங்கள்மூன்றும்
எரித்தவன் வளநக ரிடைமருதே.
பெரியவன் பெண்ணினொ டாணுமானான் வரியர வணைமறி கடல்துயின்ற கரியவ னலரவன் காண்பரிய எரியவன் வளநக ரிடைமருதே.
சிந்தையில் சமணொடு தேரர்சொன்ன புந்தியி லுரையவை பொருள்கொளாதே அந்தண ரோத்தினோ டரவமோவா எந்தைதன் வளநக ரிடைமருதே.
இலைமலி பொழிலிடை மருதிறையை நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன பலமிகு தமிழிவை பத்தும்வல்லார் உலகுறு புகழினோ டோங்குவரே.
திருச்சிற்றம்பலம்
8 d 4 × 4

திருக்கடைமுடி : பண் - வியாழக்குறிஞ்சி 171
11. திருக்கடைமுடி : பண் - வியாழக்குறிஞ்சி 196 அருத்தனை யறவனை யமுதனைநீர்
விருத்தனைப் பாலனை வினவுதிரேல் ஒருத்தனை யல்லதிங் குலகமேத்தும் கருத்தவன் வளநகர் கடைமுடியே.
197 திரைபொரு திருமுடி திங்கள்விம்மும அரைபொரு புலியத ளடிகளிடம் திரையொடு நுரைபொரு தெண்சுனைநீர் கரைபொரு வளநகர் கடைமுடியே, 2
198. ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணிற்றனைத் தொழுதிறைஞ்சி ஏலநன் மலரொடு விரைகமழும் காலன வளநகர் கடைமுடியே. 3
199. கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார் மையணி மிடறுடை மறையவனூர் பையணி யரவொடு மான்மழுவாள் கையணி பவனிடங் கடைமுடியே. 4
1200 மறையவ னுலகவன் மாயமவன்
பிறையவன் புனலவ னனலுமவன் இறையவ னெனவுல கேத்துங்கண்டம் கறையவன் வளநகர் கடைமுடியே. ' ' '
120 படவர வேரல்குற் பல்வளைக்கை
மடவர லாளையொர் பாகம்வைத்துக் குடதிசை மதியது சூடுசென்னிக் கடவுள்தன் வளநகர் கடைமுடியே. 6
1202. பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ லடிகளிடம் கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர் கடிபுல்கு வளநகர் கடைமுடியே. Z
1203. நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும் ஆதர வருள்செய்த அடிகளவர் காதல்செய் வளநகர் கடைமுடியே. 8

Page 95
172 - திருஞானசம்பந்தர் -முதல் திருமுறை
1204 அடிமுடி காண்கில ரோரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச் சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம் கடைமுடி யதனயல் காவிரியே.
1205. மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த கண்ணுதல் வளநகர் கடைமுடியே.
1206. பொன்திகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன இன்தமி பூழிவைசொல இன்பமாமே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
12. திருச்சிவபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி
1207 இன்குர லிசைகெழும் யாழ்முரலத்
தன்கர மருவிய சதுரன்நகர் பொன்கரை பொருபழங் காவிரியின் தென்கரை மருவிய சிவபுரமே.
1208. அன்றடற் காலனைப் பாலனுக்காய்ப் பொன்றிட வுதைசெய்த புனிதன்நகர் வென்றிகொ ளெயிற்றுவெண் பன்றிமுன்னாள் சென்றடி வீழ்தரு சிவபுரமே.
1209. மலைமகள் மறுகிட மதகரியைக்
"கொலைமல்க வுரிசெய்த குழகன்நகர் அலைமல்கு மரிசிலி னதனயலே சிலைமல்கு மதிளணி சிவபுரமே.
1210 மண்புன லண்லொடு மாருதமும்
விண்புனை மருவிய விகிர்தன்நகர் பண்புனை குரல்வழி வண்டுகிண்டிச் செண்பக மலர்பொழிற் சிவபுரமே.
121. வீறுநன் குடையவள் மேனிபாகம்
கூறுநன் குடையவன் குளிர்நகர்தான்

திருவல்லம் : பண் - வியாழக்குறிஞ்சி 173
22.
23.
1214.
25.
126.
27.
1218.
நாறுநன் குரவிரி வண்டுகிண்டித் தேறலுண் டெழுதரு சிவபுரமே.
மாறெதிர் வருதிரி புரமெரித்து நீறது வாக்கிய நிமலன்நகர் நாறுடை நடுபவ ருழவரொடும் " சேறுடை வயலனி சிவபுரமே.
ஆவிலைந் தமர்ந்தவ னரிவையொடு மேவிதன் கிருந்ததொர் வியன்நகர்தான் பூவில்வண் டமர்தரு பொய்கையன்னச் சேவல்தன் பெடைபுல்கு சிவபுரமே.
எழில்மலை யெடுத்தவல் லிராவணன்றன் முழுவலி யடக்கிய முதல்வன்நகர் விழவினி லெடுத்தவெண் கொடிமிடைந்து செழுமுகி லடுக்கும்வண் சிவபுரமே.
சங்கள வியகையன் சதுர்முகனும் அங்கள வறிவரி யவன்நகர்தான் கங்குலும் பறவைகள் கமுகுதொறும் செங்கனி நுகர்தரு சிவபுரமே.
மண்டையிற் குண்டிகை மாசுதரும் மிண்டரை விலக்கிய விமலன்நகர் பண்டமர் தருபழங்காவிரியின் தெண்டிரை பொருதெழு சிவபுரமே.
சிவனுறை தருசிவ புரநகரைக் கவுணியர் குலபதி காழியர்கோன் தவமல்கு தமிழிவை சொல்லவல்லார் நவமொடு சிவகதி நண்ணுவரே.
திருச்சிற்றம்பலம்
80 000
13. திருவல்லம் : பண் - வியாழக்குறிஞ்சி
எரித்தவன் முப்புர மெரியின் மூழ்கத் தரித்தவன் கங்கையைத் தாழ்சடைமேல் விரித்தவன் வேதங்கள் வேறுவேறு தெரித்தவ னுறைவிடந் திருவல்லமே.
II

Page 96
174 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1219. தாயவ னுலகுக்குத் தன்னொப்பிலாத்
தூயவன் தூமதி சூடியெல்லாம் ஆயவ னமரர்க்கும் முனிவர்கட்கும் சேயவ னுறைவிடந் திருவல்லமே.
1220. பார்த்தவன் காமனைப் பண்பழியப்
போர்த்தவன் போதகத் தின்னுரிவை ஆர்த்தவன் நான்முகன் தலையையன்று சேர்த்தவ னுறைவிடந் திருவல்லமே.
1221 கொய்தவம் மலரடி கூடுவார்தம்
மைதவழ் திருமகள் வணங்கவைத்துப் பெய்தவன் பெருமழை யுலகமுய்யச் செய்தவ னுறைவிடந் திருவல்லமே.
1222. சார்ந்தவர்க் கின்பங்கள் தழைக்கும்வண்ணம்
நேர்ந்தவன் நேரிழை யோடுங்கூடித் தேர்ந்தவர் தேடுவார் தேடச்செய்தே சேர்ந்தவ னுறைவிடந் திருவல்லமே,
1223. பதைத்தெழு காலனைப் பாதமொன்றால்
உதைத்தெழு மாமுனிக் குண்மைநின்று விதிர்த்தெழு தக்கன்றன் வேள்வியன்று சிதைத்தவ னுறைவிடந் திருவல்லமே.
2ே24. இகழ்ந்தரு வரையினை யெடுக்கலுற்றாங்
ககழ்ந்தவல் லரக்கனை யடர்த்தபாதம் நிகழ்ந்தவர் நேடுவார் நேடச்செய்தே திகழ்ந்தவ னுறைவிடந் திருவல்லமே.
1225. பெரியவன் சிறியவர் சிந்தைசெய்ய
அரியவ னருமறை யங்கமானான் கரியவன் நான்முகன் காணவொண்ணாத் தெரியவன் வளநகர் திருவல்லமே,
1226. அன்றிய அமணர்கள் சாக்கியர்கள்
குன்றிய அறவுரை கூறாவண்ணம் வென்றவன் புலனைந்தும் விளங்களங்கும் சென்றவ னுறைவிடந் திருவல்லமே.
67
10

திருமாற்பேறு : பண் - வியாழக்குறிஞ்சி 175
1227. கற்றவர் திருவல்லங் கண்டுசென்று நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன குற்றமில் செந்தமிழ் கூறவல்லார் பற்றுவ ரீசன்பொற் பாதங்களே. I
திருச்சிற்றம்பலம்
0 0 000
14. திருமாற்பேறு : பண் - வியாழக்குறிஞ்சி
1228. குருந்தவன் குருகவன் கூர்மையவன்
பெருந்தகை பெண்ணவ னாணுமவன் கருந்தட மலர்க்கண்ணி காதல்செய்யும் மருந்தவன் வளநகர் மாற்பேறே. 1
1229. பாறணி வெண்டலை கையிலேந்தி
வேறணி பலிகொளும் வேட்கையனாய் நீறணிந் துமையொரு பாகம்வைத்த மாறிலி வளநகர் மாற்பேறே. 2
1230. கருவுடை யாருல கங்கள் வேவச்
செருவிடை யேறியுஞ் சென்றுநின் றுருவுடை யாளுமை யாளுந்தானும் மருவிய வளநகர் மாற்பேறே. 3
1231 தலையவன் தலையணி மாலைபூண்டு
கொலைநவில் கூற்றினைக் கொன் றுகந்தான் கலைநவின் றான்கயி லாய மென்னும் மலையவன் வளநகர் மாற்பேறே. 4
132 துறையவன் தொழிலவன் தொல்லுயிர்க்கும்
பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன் கறையணி மிடற்றண்ணல் காலற்செற்ற மறையவன் வளநகர் மாற்பேறே. 5
1233. பெண்ணினல் லாளையொர் பாகம்வைத்துக் கண்ணினாற் காமனைக் காய்ந்தவன்றன் விண்ணவர் தானவர் முனிவரொடு மண்ணவர் வணங்குநன் மாற்பேறே. Z
தே-12

Page 97
176 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1234. தீதிலா மலையெடுத் தவ்வரக்கன் நீதியால் வேதகீ தங்கள்பாட ஆதியா னாகிய அண்ணலெங்கள் மாதிதன் வளநகர் மாற்பேறே. 8
1235. செய்யதண் டாமரைக் கண்ணனொடும்
கொய்யணி நறுமலர் மேலயனும் ஐயனன் சேவடி யதனையுள்க மையல்செய் வளநகர் மாற்பேறே. 9
1236. குளித்துணா அமணர்குண் டாக்கரென்றும்
களித்துநன் கழலடி காணலுற்றார் முளைத்தவெண் மதியினொ டரவஞ்சென்னி வளைத்தவன் வளநகர் மாற்பேறே. O
1237 அந்தமில் ஞானசம் பந்தன்நல்ல
செந்திசை பாடல்செய் மாற்பேற்றைச் சந்தமின் றமிழ்கள்கொண் டேத்தவல்லார் எந்தைதன் கழலடி யெய்துவரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
15. திருஇராமனதிச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி 1238. சங்கொளிர் முன்கையர் தம்மிடையே
அங்கிடு பலிகொளு மவன்கோபப் பொங்கர வாடலோன் புவனியோங்க எங்கும ணிராமன தீச்சரமே. 1.
1239. சந்தநன் மலரணி தாழ்சடையன் தந்தம தத்தவன் றாதையோதான் அந்தமில் பர்டலோ னழகனல்ல எந்தவ னிராமன தீச்சரமே. 2
1240. தழைமயி லேறவன் றாதையோதான்
மழைபொழி சடையவன் மன்னுகாதில் குழையது இலங்கிய கோலமார்பின் இழையவ னிராமன தீச்சரம்ே. 3.
St

திருஇராமனதிச்சரம் : பண் - வியாழக்குறிஞ்சி 8 177
1241. சத்தியு ளாதியோர் தையல்பங்கன்
முத்திய தாகிய மூர்த்தியோதான் அத்திய கையினி லழகுசூலம் வைத்தவ னிராமன தீச்சரமே
1242. தாழ்ந்தகு ழற்சடை முடியதன்மேல்
தோய்ந்த இளம்பிறை துளங்குசென்னிப் பாய்ந்தகங் கையொடு படவரவம் ஏய்ந்தவ னிராமன தீச்சரமே.
1243. சரிகுழ லிலங்கிய தையல்காணும்
பெரியவன் காளிதன் பெரியகூத்தை அரியவ னாடலோ னங்கையேந்தும் எரியவ னிராமண தீச்சரமே.
1244. மாறிலா மாதொரு பங்கன்மேனி
நீறது வாடலோ னிள்சடைமேல்
ஆறது சூடுவா னழகன்விடை ஏறவ னிராமன தீச்சரமே.
1245. தடவரை யரக்கனைத் தலைநெரித்தோன்
படவர வாட்டிய படர்சடையன் நடமது வாடலா னான்மறைக்கும் இடமவ னிராமண தீச்சரமே.
1246. தனமணி தையல்தன் பாகன்றன்னை
அனமணி யயனணி முடியுங்காணான் பண்மணி அரவரி பாதங்காணான் இனமணி யிராமன தீச்சரமே.
1247 தறிபோலாஞ் சமணர்சாக் கியர்சொற்கொளேல்
அறிவோரா னாமம றிந்துரைமின் மறிகையோன் றன்முடி மணியார்கங்கை எறிபவ னிராமன தீச்சரமே.
1248. தேன்மலர்க் கொன்றையோன் .
முந்தமக் கூனமன்றே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
I

Page 98
178 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
திருநீலகண்டம்
16. பொது : பண் - வியாழக்குறிஞ்சி
249. அவ்வினைக் கிவ்வினை யாமென்று சொல்லு மஃதறிவீர்
உய்வினை நாடா திருப்பது முந்தமக் கூனமன்றே கைவினை செய்தெம் பிரான்கழல் போற்றுதும் நாமடியோம் செய்வினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 1
1250. காவினை யிட்டுங் குளம்பல தொட்டுங் கனிமனத்தால் ஏவினை யாலெயில் மூன்றெரித் தீரென் றிருபொழுதும் பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாமடியோம் தீவினை வந்தெமைத் தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 2
1251 முலைத்தட மூழ்கிய போகங்களுமற் றெவையு மெல்லாம் விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர் இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர் சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 3
1252. விண்ணுல காள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
புண்ணிய ரென்றிரு போதுந் தொழப்படும் புண்ணியரே கண்ணிமை யாதன மூன்றுடை யீருங் கழலடைந்தோம் திண்ணிய தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 4
1258. மற்றிணை யில்லா மலைதிரண் டன்னதிண் டோளுடையீர் கிற்றெமை யாட்கொண்டு கேளா தொழிவதுந் தன்மைகொல்லோ சொற்றுணை வாழ்க்கை துறந்துந் திருவடி யேயடைந்தோம் செற்றெமைத் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1254மறக்கு மனத்தினை மாற்றியெம் மாவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் றிருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம் பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம் சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 6.
1255. கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்துங் கழலடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை யேத்துது நாமடியோம் செருவி லரக்கனைச் சீரி லடர்த்தருள் செய்தவரே திருவிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 8

திருப்பிரமபுரம் : மொழிமாற்று. பண் - வியாழக்குறிஞ்சி 179
1256 நாற்ற மலர்மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து தோற்ற முடைய அடியு முடியுந் தொடர்வரியீர் தோற்றினுந் தோற்றுந் தொழுது வணங்குதும் நாமடியோம் சீற்றம தாம்வினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம். 9
1257. சாக்கியப் பட்டுஞ் சமணுரு வாகி யுடையொழிந்தும்
பாக்கிய மின்றி யிருதலைப் போகமும் பற்றும்விட்டார் பூக்கமழ் கொன்றைப் புரிசடை யீரடி போற்றுகின்றோம் தீக்குழித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்.
1258. பிறந்த பிறவியிற் பேணியெஞ் செல்வன் கழலடைவான் இறந்த பிறவியுண் டாகி லிமையவர் கோனடிக்கண் திறம்பயில் ஞானசம் பந்தன செந்தமிழ் பத்தும்வல்லார் நிறைந்த வுலகினில் வானவர் கோனெனடுங் கூடுவரே. II
திருச்சிற்றம்பலம்
0 000
17. திருப்பிரமபுரம் : மொழிமாற்று. பண் - வியாழக்குறிஞ்சி
1259. காட தணிகலங் காரர வம்பதி காலதனில்
தோட தனிகுவர் சுந்தரக் காதினிற் றுாற்சிலம்பர் வேட தணிவர் விசயற் குருவம் வில்லுங்கொடுப்பர் பீட தணிமணி மாடப் பிரம புரத்தாரே.
1260. கற்றைச் சடையது கங்கண முன்கையிற் றிங்கள்கங்கை
பற்றித்து முப்புரம் பார்படைத் தோன்றலை சுட்டதுபண் டெற்றித்துப் பாம்பை யணிந்தது கூற்றை யெழில்விளங்கும் வெற்றிச் சிலைமதில் வேணு புரத்தெங்கள் வேதியரே. 2
126. கூவிளங் கையது பேரி சடைமுடிக் கூட்டத்தது
தூவிளங் கும்பொடிப் பூண்டது பூசிற்றுத் துத்திநாகம் ஏவிளங் குந்நுத லாளையும் பாகமு ரித்தனரின் பூவிளஞ் சோலைப் புகலியுள் மேவிய புண்ணியரே. 3
1262. உரித்தது பாம்பை யுடல்மிசை யிட்டதோ ரொண்களிற்றை
எரித்ததொ ராமையை யின்புறப் பூண்டது முப்புரத்தைச் செருத்தது சூலத்தை யேந்திற்றுத்தக்கனை வேள்விபன்னூல் விரித்தவர் வாழ்தரு வெங்குரு வில்வீற் றிருந்தவரே. 4.

Page 99
180 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1263.
கொட்டுவ ரக்கரை யார்ப்பது தக்கை குறுந்தாளன விட்டுவர் பூதங் கலப்பில ரின்புக ழென்புலவின்
மட்டுவ ருந்தழல் சூடுவர் மத்தமு மேந்துவர்வான்
264.
1265.
1266.
1267.
i268.
1269.
270.
தொட்டுவ ருங்கொடித் தோணி புரத்துறை சுந்தரரே.
சாத்துவர் பாசங் தடக்கையி லேந்துவர் கோவணந்தங் கூத்தவர் கச்சுக் குலவிநின் றாடுவர் கொக்கிறகும் பேர்த்தவர் பல்படை பேயவை சூடுவர் பேரெழிலார் பூத்தவர் கைதொழு பூந்தராய் மேவிய புண்ணியரே. 6
காலது கங்கை கற்றைச் சடையுள்ளாற் கழற்சிலம்பு மாலது வேந்தல் மழுவது பாகம் வளர்கொழுங்கோட் டாலது வூர்வ ரடலேற் றிருப்ப ரணிமணிநீர்ச் சேலது கண்ணியொர் பங்கர் சிரபுர மேயவரே. ク
நெருப்புரு வெள்விடை மேனிய ரேறுவர் நெற்றியின்கண் மருப்புறு வன்கண்ணர் தாதையைக் காட்டுவர் மாமுருகன் விருப்புறு பாம்புக்கு மெய்த்தந்தை யார்விறல் மாதவர்வாழ் பொருப்புறு மாளிகைத் தென்புற வத்தணி புண்ணியரே. 8
இலங்கைத் தலைவனை யேந்திற் றிறுத்த திரலையின்னாள் கலங்கிய கூற்றுயிர் பெற்றது மாணி குமைபெற்றது கலங்கிளர் மொந்தையி னாடுவர் கொட்டுவர் காட்டகத்துச் சலங்கிளர் வாழ்வயற் சண்பையுள் மேவிய தத்துவரே. 9
அடியிணை கண்டிலன் தாமரை யோன்மால் முடிகண்டிலன் கொடியணி யும்புலி யேறுகந் தேறுவர் தோலுடுப்பர் பிடியணி யுந்நடை யாள்வெற் பிருப்பதோர் கூறுடையர் கடியணி யும்பொழிற் காழியுள் மேய கறைக்கண்டரே. :0
கையது வெண்குழை காதது சூல மமணர்புத்தர் எய்துவர் தம்மை யடியவ ரெய்தாரோ ரேனக்கொம்பு மெய்திகழ் கோவணம் பூண்ப துடுப்பது மேதகைய கொய்தலர் பூம்பொழிற் கொச்சையுள் மேவிய கொற்றவரே. 11
கல்லுயர் கழுமல விஞ்சியுள் மேவிய கடவுள்தன்னை
நல்லுரை ஞானசம் பந்தன்ஞா நத்தமிழ் நன்குணரச்
சொல்லிடல் கேட்டல்வல் லோர்தொல்லை வானவர் தங்களொடுஞ்
செல்குவர் சீரரு எளாற்பெற லாஞ்சிவ லோகமதே. 12
திருச்சிற்றம்பலம்
0 0 800

திருப்பருப்பதம் : பண் - வியாழக்குறிஞ்சி 181
18. திருப்பருப்பதம் : பண் - வியாழக்குறிஞ்சி
1271. சுடுமணி யுமிழ்நாகஞ் சூழ்தர வரைக்கசைத்தான்
இடுமணி யெழிலானை யேறல னெருதேறி விடமணி மிடருடையான் மேவிய நெடுங்கோட்டுப் படுமணி விடுசுடரார் பருப்பதம் பரவுதுமே.
1272, நோய்புல்கு தோல்திரைய நரைவரு நுகருடம்பில் நீபுல்கு தோற்றமெல்லா நினையுள்கு மடநெஞ்சே வாய்புல்கு தோத்திரத்தால் வலஞ்செய்து தலைவணங்கிப் பாய்புலித் தோலுடையான் பருப்பதம் பரவுதுமே. 2
1273.துணியுறு துயர்தீரத் தோன்றியோர் நல்வினையால் இனியுறு பயனாத லிரண்டுற மனம்வையேல் கனியுறு மரமேறிக் கருமுசுக் கழையுகளும் பனியுறு கதிர்மதியான் பருப்பதம் பரவுதுமே, 3
1274. கொங்கணி நறுங்கொன்றைத் தொங்கலன் குளிர்சடையான்
எங்கள்நோ யகலநின்றா னெனவரு ஸ்ரீசனிடம் ஐங்கணை வரிசிலையா னநங்கனை யழகழித்த பைங்கண்வெள் ளேறுடையான் பருப்பதம் பரவுதுமே. 4.
1275. துறைபல சுனைமூழ்கித் தூமலர் சுமந்தோடி
மறையொலி வாய்மொழியால் வானவர் மகிழ்ந்தேத்தச் சிரையொலி கிளிபயிலுங் தேனின மொலியோவாப் பறைபடு விளங்கருவிப் பருப்பதம் பரவுதுமே. 5
1276. சீர்கெழு சிறப்போவாச் செய்தவ நெறிவேண்டில் ஏர்கெழு மடநெஞ்சே யிரண்டுற மனம்வையேல் கார்கெழு நறுங்கொன்றைக் கடவுள திடம்வகையால் பார்கெழு புகழோவாப் பருப்பதம் பரவுதுமே. 6
1277 புடைபுல்கு படர்கமலம் புகையொடு விரைகமழத் தொடைபுல்கு நறுமாலை திருமுடி மிசையேற விடைபுல்கு கொடியேந்தி வெந்தவெண் ணிறணிவான் படைபுல்கு மழுவாளன் பருப்பதம் பரவுதுமே. 7
1278. நினைப்பெனு நெடுங்கிணற்றை நின்றுநின் றயராதே
மனத்தினை வலித்தொழிந்தே னவலம்வந் தடையாமைக் கனைத்தெழு திரள்கங்கை கமழ்சடைக் கரந்தான்றன் பனைத்திரள் பாயருவிப் பருப்பதம் பரவுதுமே, 8

Page 100
182 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1279. மருவிய வல்வினைநோ யவலம்வந் தடையாமல்
திருவுரு வமர்ந்தானுந் திசைமுக முடையானும் இருவரு மறியாமை யெழுந்ததோ ரெரிநடுவே 'ኑ- பருவரை யுறநிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே. 9
1280. சடங்கொண்ட சாத்திரத்தார் சாக்கியர் சமண்குண்டர்
மடங்கொண்ட விரும்பியராய் மயங்கியோர்பேய்த்தேர்ப்பின் குடங்கொண்டு நீர்க்குச்செல்வார் போதுமின் குஞ்சரத்தின் படங்கொண்ட போர்வையினான் பருப்பதம் பரவுதுமே, 10
1281 வெண்செநெல் விளைகழனி விழவொலி கழுமலத்தான்
பண்செலப் பலபாட லிசைமுரல் பருப்பதத்தை நன்சொலி னாற்பரவு ஞானசம் பந்தன்நல்ல - ஒண்சொலி னிவைமாலை யுருவெணத் தவமாமே. II
திருச்சிற்றம்பலம்
40 000
19. திருக்கள்ளில் : பண் - வியாழக்குறிஞ்சி
1282. முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமே லுயர்வெய்த லொரு தலையே.
1283 ஆடலான் பாடலா னரவங்கள் பூண்டான் ஒடலாற் கலனில்லா னுறை பதியால் காடலாற் கருதாத கள்ளில் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே. 2
1284. எண்ணார்மும் மதிலெய்த விமையாமுக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி கண்ணார்நீ றணிமார்பன் கள்ளில் மேயான் பெண்ணாணாம் பெருமானெம் பிஞளு எனே. 3
1285 பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நன்றபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த, கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே. 4

திருக்கள்ளில் : பண் - வியாழக்குறிஞ்சி 183
1286 விரையாலு மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் அரையார்வெண் கோவணத்த வண்ணல் தானே. s
1287 நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான் கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் மலனாய தீர்த்தெய்து மாதவத் தோர்க்கே. 6
1288. பொடியார்மெய் பூசினும் புறவின் நறவம்
குடியாவூர் திரியுனுங் கூப்பி டினும் கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான் அடியார்பண் பிகழ்வார்க ளாதர் களே. 7
1289. திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே. 8
1290. வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானு முள்ளு தற்கங் கரியானு மறியாத கள்ளில் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே. 9
1291 ஆச்சியப் பேய்களேர் டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே. 10
1292.திகைநான்கும் புகழ்காழிச் செல்வ மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் புகழோடும் பேரின்பம் புகுது மன்றே. 11
திருச்சிற்றம்பலம்
did dd {

Page 101
184 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
120.திருவையாறு திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி
1293. பணிந்தவ ரருவினை பற்றறுத் தருள்செயத்
துணிந்தவன் றோலொடு நூல்துதை மார்பினில் பிணிந்தவ னரவொடு பேரெழி லாமைகொண் டணிந்தவன் வளநக ரந்த ணையாறே.
1294. கீர்த்திமிக் கவனகர் கிளரொளி யுடனடப்
பார்த்தவன் பனிமதி படர்சடை வைத்துப் போர்த்தவன் கரியுரி புலியத ளரவரை ஆர்த்தவன் வளநக ரந்த ணையாறே.
1295 வரிந்தவெஞ் சிலைபிடித் தவுணர்தம் வளநகர்
எரிந்தற வெய்தவ னெழில்திகழ் மலர்மேல் இருந்தவன் சிரமது இமையவர் குறைகொள அரிந்தவன் வளநக ரந்த ணையாறே.
1296. வாய்ந்தவல் லவுணர்தம் வளநக ரெரியிடை மாய்ந்தற வெய்தவன் வளர்பிறை விரிபுனல் தோய்ந்தெழு சடையினன் றொன்மறை யாறங்கம் ஆய்ந்தவன் வளநக ரந்த ணையாறே.
1297 வானமர் மதிபுல்கு சடையிடை யரவொடு
தேனமர் கொன்றையன் திகழ்தரு மார்பினன் மானன மென்விழி மங்கையொர் பாகமும் ஆனவன் வளநக ரந்த ணையாறே.
1298 முன்பனை முனிவரோ டமரர்கள் தொழுதெழும் இன்பனை யிணையில விறைவனை யெழில்திகழ் என்பொனை யேதமில் வேதியர் தாந்தொழும் அன்பன வளநக ரந்த ணையாறே.
1299. வன்றிற லவுணர்தம் வளநக ரெரியிடை
வெந்தற வெய்தவன் விளங்கிய மார்பினில் பந்தமர் மெல்விரல் பாகம தாகிதன் அந்தமில் வளநக ரந்த ணையாறே.
1300. விடைத்தவல் லரக்கனல் வெற்பினை யெடுத்தலும்
அடித்தலத் தாலிறை யூன்றிமற் றவனது முடித்தலை தோளவை நெரிதர முறைமுறை அடர்த்தவன் வளநக ரந்த ணையாறே.

திருஇடைமருதூர் : திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி 185
1901 விண்ணவர் தம்மொடு வெங்கதி ரோனல்
எண்ணிலி தேவர்க ளிந்திரன் வழிபடக் கண்ணனும் பிரமனுங் காண்பரி தாகிய அண்ணல்தன் வளநக ரந்த ணையாறே. W 9
1802. மருளுடை மனத்துவன் சமணர்கள் மாசறா
இருளுடை யிணைத்துவர்ப் போர்வையி னார்களும் தெருளுடை மனத்தவர் தேறுமின் திண்ணமா அருளுடை யடிகள்த மந்த ணையாறே.
1803. நலமலி ஞானசம் பந்தன தின்றமிழ்
அலைமலி புனல்மல்கு மந்தணை யாற்றினைக் கலைமலி தமிழிவை கற்றுவல் லார்மிக நலமலி புகழ்மிகு நன்மையர் தாமே. 11
திருச்சிற்றம்பலம்
0 00 0 }
121. திருஇடைமருதூர் : திருவிராகம், பண் - வியாழக்குறிஞ்சி
1304. நடைமரு திரிபுர மெரியுண நகைசெய்த
படைமரு தழலெழ மழுவல பகவன் புடைமரு திளமுகில் வளமமர் பொதுளிய བར་ இடைமரு தடையநம் மிடர்கெட லெளிதே. 1
1805. மழைநுழை மதியமொ டழிதலை மடமஞ்ஞை
கழைநுழை புனல்பெய்த கமழ்சடை முடியன் குழைநுழை திகழ்செவி யழகொடு மிளிர்வதொர் இழைநுழை புரியண லிடமிடை மருதே. 2
1906. அருமைய னெளிமைய னழல்விட மிடறினன்
கருமையி னொளிபெறு கமழ்சடை முடியன் பெருமையன் சிறுமையன்பிணைபெணொ. டொருமையின் இருமையு முடையண லிடமிடை மருதே. 3
1307. பொரிபடு முதுகுற முளிகளி புடைபுல்கு
நரிவளர் சுடலையுள் நடமென நவில்வோன் வரிவளர் குளிர்மதி யொளிபெற மிளிர்வதொர் எரிவளர் சடையண லிடமிடை மருதே. 4

Page 102
186 - திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
3O8.
309.
30.
I31.
1312.
1813.
34.
வருநல மயிலன மடநடை மலைமகள்
பெருநில முலையிணை பிணைசெய்த பெருமான்
செருநல மதிலெய்த சிவனுறை செழுநகர் இருநல புகழ்மல்கு மிடமிடை மருதே.
கலையுடை விரிதுகில் கமழ்குழ லகில்புகை
மலையுடை மடமகள் தனையிட முடையோன்
விலையுடை யணிகல னிலனென மழுவினோ டிலையுடை படையவ னிடமிடை மருதே.
வளமென வளர்வன வரிமுரல் பறவைகள் இளமண லணைகரை யிசைசெயு மிடைமரு துளமென நினைபவ ரொலிகழ லிணையடி
குளமண லுறமூழ்கி வழிபடல் குணமே.
மறையவ னுலகவன் மதியவன் மதிபுல்கு துறையவ னெனவல வடியவர் துயரிலர் கறையவன் மிடறது கனல்செய்த கமழ்சடை இறையவ னுறைதரு மிடமிடை மருதே.
மருதிடை நடவிய மணிவணர் பிரமரும் இருதுடை யகலமொ டிகலின ரினதெனக் கருதிட லரியதொ ருருவொடு பெரியதொர் எருதுடை யடிகள்த மிடமிடை மருதே.
துவருறு விரிதுகி லுடையரு மமணரும் அவருறு சிறுசொலை நயவன்மி னிடுமணல் கவருறு புனலிடை மருதுகை தொழுதெழும் அவருறு வினைகெட லணுகுதல் குணமே.
தடமலி புகலியர் தமிழ்கெழு விரகினன் இடமலி பொழிலிடை மருதினை யிசைசெய்த படமலி தமிழிவை பரவவல் லவர்வினை கெடமலி புகழொடு கிளரொளி யினரே.
திருச்சிற்றம்பலய
0 00 00

திருஇடைமருதூர் : திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி 187
122. திருஇடைமருதூர் : திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி
1815 விரிதரு புலியுரி விரவிய அரையினர்
திரிதரு மெயிலவை புனைகணை யினிலெய்த எரிதரு சடையின ரிடைமரு தடைவுனல் புரிதரு மனனவர் புகழ்மிக வுளதே.
1316. மறிதிரை படுகடல் விடமடை மிடறினர்
எறிதிரை கரைபொரு மிடைமரு தெனுமவர் செறிதிரை நரையொடு செலவில ருலகினில் பிறிதிரை’பெறுமுடல் பெறுகுவ தரிதே. 2
1317 சலசல சொரிபுனல் சடையினர் மலைமகள்
நிலவிய வுடலினர் நிறைமறை மொழியினர் இலரென விடுபவி யவரிடை மருதினை வலமிட வுடல்நலி விலதுள வினையே. 3
1818, விடையினர் வெளியதொர் தலைகல னெனநனி கடைகடை தொறுபலி யிடுகென முடுகுவர் இடைவிட லரியவரிடைமரு தெனுநகர் உடையவ ரடியிணை தொழுவதெம் முயர்வே. 4
1819. உரையரு முருவின ருணர்வரு வகையினர்
அரைபொரு புலியத ஞடையின ரதன்மிசை இரைமரு மரவின ரிடைமரு தெனவுளம் உரைகள துடையவர் புகழ்மிக வுளதே.
1320. ஒழுகிய புனல்மதி யரவமொ டுறைதரும்
அழகிய முடியுடை யடிகள தறைகழல் எழிலின ருறையிடை மருதினை மலர்கொடு தொழுதல்செய் தெழுமவர் துயருற லிலரே. 6
1321 கலைமலி விரலினர் கடியதொர் மழுவொடும் நிலையினர் சலமக ஞலவிய சடையினர் மலைமகள் முலையிணை மருவிய வடிவினர் இலைமலி படையவ ரிடமிடை மருதே. 7
1322. செருவடை யிலவல செயல்செயத் திறலொடும்
அருவரை யினிலொரு பதுமுடி நெரிதர இருவகை விரனிறி யவரிடை மருதது பரவுவ ரருவினை யொருவுதல் பெரிதே. 8

Page 103
188 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1323. அரியொடு மலரவ னெனவிவ ரடிமுடி
தெரிவகை யரியவர் திருவடி தொழுதெழ
எரிதரு முருவர்த மிடைமரு தடைவுறல் புரிதரு மணனவர் புகழ்மிக வுளதே.
1324. குடைமயி லினதழை மருவிய வுருவினர்
உடைமரு துவரினர் பலசொல வுறவிலை அடைமரு திருவினர் தொழுதெழு கழலவர் இடைமரு தெனமணம் நினைவது மெழிலே.
1325 பொருகட லடைதகு புகலியர் தமிழொடு
விரகினன் விரிதரு பொழிலிடை மருதினைப் பரவிய வொருபது பயிலவல் லவரிடர் விரவிலர் வினையொடு வியனுல குறவே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
123. திருவலிவலம் : திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி
1826. பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை யெதிர்விழி யுமையவள் மேவிய திருவுரு வுடையவன் விரைமலர் மாவியல் பொழில்வலி வலமுறை யறையே.
1327. இட்டம தமர்பொடி யிசைதலி னசைபெறு
பட்டவிர் பவளநன் மணியென அணிபெறு விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர் மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே. 2
1328. உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி கருமணி நிகர்கள முடையவன் மிடைதகு மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.
1329 அனல்நிகர் சடையழ லவியுற வெனவரு
புனல்நிக்ழ் வதுமதி நனைபொறி யரவமும் எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.

திருவலிவலம் : திருவிராகம், பண் - வியாழக்குறிஞ்சி 189
1830 பிடியத னுருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
1831. தரைமுத லுலகினி லுயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து நரைதிரை கெடுதகை யதுஅரு ஸ்ரினனெழில் வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே. 6
1332. நலிதரு தரைவர நடைவரு மிடையவர் பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு பலிகொள வருபவ னெழில்மிகு தொழில்வளர் வலிவரு மதில்வலி வலமுறை யிறையே. ク
1833. இரவண னிருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர வவன்முடி பொடிசெய்து இரவண மமர்பெய ரருளின னகநெதி இரவண நிகர்வலி வலமுறை யிறையே. 8
1834 தேனமர் தருமல ரணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நில மகழரி யடிமுடி தானனை யாவுரு வுடையவன் மிடைகொடி வானனை மதில்வலி வலமுறை யிறையே. 9
1885, இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையி லுணலுடை யவர்களு நினைவது தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன் மலைமலி மதில்வலி வலமுறை யிறையே. 0.
1336 மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை தன்னியல் கலைவல தமிழ்விர கனதுறை *உன்னிய வொருபது முயர்பொருள் தருமே.
திருச்சிற்றம்பலம்
8 0 0 0 Ö

Page 104
190 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
124. திருவிழிமிழலை திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி
1337 அலர்மகள் மலிதர அவனியில் நிகழ்பவர்
மலர்மலி குழலுமை தனையிட மகிழ்பவர் நலமலி யுருவுடை யவர்நகர் மிகுபுகழ் நிலமலி மிழலையை நினையவ லவரே.
1338. இருநில மிதன்மிசை யெழில்பெறு முருவினர்
கருமலி தருமிகு புவிமுத லுலகினில் இருளறு மதியின ரிமையவர் தொழுதெழு நிருபமன் மிழலையை நினையவ லவரே. 2
1339. கலைமகள் தலைமக னரிவனென வருபவர்
அலைமலி தருபுன லரவொடு நகுதலை இலைமலி யிதழியு மிசைதரு சடையினர் நிலைமலி மிழலையை நினையவ லவரே. 3
1340. மாடமர் சனமகிழ் தருமன முடையவர்
காடமர் கழுதுக ளவைமுழ வொடுமிசை பாடலின் நவில்பவர் மிகுதரு முலகினில் நீடமர் மிழலையை நினையவ லவரே.
134. புகழ்மகள் துணையினர் புரிகுழ லுமைதனை
இகழ்வுசெய தவனுடை யெழின்மறை வழிவளர் முகமது சிதைதர முனிவுசெய் தவன்மிகு நிகழ்தரு மிழலையை நினையவ லவரே. 5
1342. அன்றின ரரியென வருபவ ரரிதினில்
ஒன்றிய திரிபுர மொருநொடி யினிலெரி சென்றுகொள் வகைசிறு முறுவல்கொ டொளிபெற நின்றவன் மிழலையை நினையவ லவரே.
1343. கரம்பயில் கொடையினர் கடிமல ரயனதொர் சிரம்பயில் வறவெறி சிவனுறை செழுநகர் வரம்பயில் கலைபல மறைமுறை யறநெறி நிரம்பினர் மிழலையை நினையவ லவரே.
1344. ஒருக்கிய வுணர்வினொ டொளிநெறி செலுமவர்
அரக்கனன் மணிமுடி யொருபது மிருபது கரக்கன நெரிதர மலரடி விரல்கொடு நெருக்கினன் மிழலையை நினையவ லவரே. 3

திருச்சிவபுரம் : திருவிராகம், பண் - வியாழக்குறிஞ்சி 191
1945 அடியவர் குழுமிட அவனியில் நிகழ்பவர்
கடிமல ரயனரி கருதரு வகைதழல் வடிவுரு வியல்பினொ டுலகுகள் நிறைதரு நெடியவன் மிழலையை நினையவ லவரே. 9
1846. மன்மத னெனவொளி பெறுமவர் மருதமர்
வன்மலர் துவருடை யவர்களு மதியிலர் துன்மதி யமணர்கள் தொடர்வரு மிகுபுகழ் நின்மலன் மிழலையை நினையவ லவரே. 0
1947 நித்திலன் மிழலையை நிகரிலி புகலியுள்
வித்தக மறைமலி தமிழ்விர கனமொழி பத்தியில் வருவன பத்திவை பயில்வொடு கற்றுவல் லவருல கினிலடி யவரே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
125. திருச்சிவபுரம் : திருவிராகம். பண் - வியாழக்குறிஞ்சி 1848. கலைமலி யகலல்கு லரிவைத னுருவினன்
முலைமலி தருதிரு வுருவம துடையவன் சிலைமலி மதில்பொதி சிவபுர நகர்தொழ இலைநவி வினையிரு மையுமிடர் கெடுமே.
1849, படரொளி சடையினன் விடையினன் மதிலவை
சுடரெரி கொளுவிய சிவனவ னுறைபதி திடலிடு புனல்வயல் சிவபுர மடையநம்
இடர்கெடு முயர்கதி பெறுவது திடனே. 2
1850. வரைதிரி தரவர வகடழ லெழவரு
நுரைதரு கடல்விட நுகர்பவ னெழில்திகழ் திரைபொரு புனலரி சிலதடை சிவபுரம் உரைதரு மடியவ ருயர்கதி யினரே. 3
1351. துணிபுடை யவர்சுடு பொடியின ருடலடு
பிணியடை விலர்பிற வியுமற விசிறுவர் தணிவுடை யவர்பயில் சிவபுர மருவிய மணிமிட றணதடி யிணைதொழு மவரே. 4
தே-13

Page 105
192 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
352.
1353.
1354.
1355.
1356.
357.
1358.
மறையவன் மதியவன் மலையவன் நிலையவன் நிறையவ னுமையவள் மகிழ்நட நவில்பவன் இறையவ னிமையவர் பணிகொடு சிவபுரம் உறைவென வுடையவ னெமையுடை யவனே.
முதிர்சடை யிளமதி நதிபுனல் பதிவுசெய் ததிர்கழ லொலிசெய வருநட நவில்பவன்
எதிர்பவர் புரமெய்த இணையிலி யணைபதி சதிர்பெறு முளமுடையவர்சிவ புரமே.
வடிவுடை மலைமகள் சலமக ஞடனமர் பொடிபடு முழையதள் பொலிதிரு வுருவினன் செடிபடு பலிதிரி சிவனுறை சிவபுரம் அடைதகு மடியவ ரருவினை யிலரே.
கரமிரு பதுமுடி யொருபது முடையவன் உரநெரி தரவரை யடர்வுசெய் தவனுறை பரனென அடியவர் பணிதரு சிவபுர நகரது புகுதல்நம் முயர்கதி யதுவே.
அன்றிய லுருவுகொ ளரியய னெனுமவர் சென்றள விடலரி யவனுறை சிவபுரம் என்றிரு பொழுதுமுன் வழிபடு மவர்துயர் ஒன்றிலர் புகழொடு முடையரில் வுலகே.
புத்தரொ டமணர்க ளறவுரை புறவுரை வித்தக மொழிகில விடையுடை யடிகள்தம் இத்தவ முயல்வுறி லிறைவன சிவபுரம் மெய்த்தக வழிபடல் விழுமிய குணமே.
புந்தியர் மறைநவில் புகலிமன் ஞானசம் பந்தன தமிழ்கொடு சிவபுர நகருறை எந்தையை புறைசெய்த விசைமொழி பவர்வினை சிந்திமு னுறவுயர் கதிபெறு வர்களே.
திருச்சிற்றம்பலம்
0 00 00
10
III
E-st

திருக்கழுமலம் : திருத்தாளச்சதி. பண் - வியாழக்குறிஞ்சி 193
126. திருக்கழுமலம் : திருத்தாளச்சதி. பண் - வியாழக்குறிஞ்சி
3.59.
360.
1361.
1362.
பந்தத்தால் வந்தெப்பால் பயின்றுநின்ற வும்பரப்
பாலேசேர்வா யேனோர்கான் பயில்கண முநிவர்களுஞ் சிந்தித்தே வந்திப்பச் சிலம்பின்மங்கை தன்னொடுஞ்
சேர்வார்நாள்நாள் நீள்கயிலைத் திகழ்தரு பரிசதெலாஞ் சந்தித்தே யிந்தப்பார் சனங்கள்நின்று தங்கணாற்
றாமேகாணா வாழ்வாரத் தகவுசெய் தவனதிடங் கந்தத்தா லெண்டிக்குங் கமழ்ந்திலங்கு சந்தனக்
காடார்பூவார் சீர்மேவுங் கழுமல வளநகரே.
பிச்சைக்கே யிச்சித்துப் பிசைந்தணிந்த வெண்பொடிப் பீடார்ரீடார் மாடாரும் பிறைநுத லரிவையொடும் உச்சத்தா னச்சிப்போல் தொடர்ந்தடர்ந்த வெங்கணே றுாராவூரா நீள்வீதிப் பயில்வொடு மொலிசெயிசை வச்சத்தா னச்சுச்சேர் வடங்கொள்கொங்கை மங்கைமார்
வாராநேரே மாலாகும் வசிவல வவனதிடங் கச்சத்தான் மெச்சிப்பூக் கலந்திலங்கு வண்டினங்
காரார்காரார் நீள்சோலைக் கழுமல வளநகரே 2
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்திலங்கு மத்தையின்
சேரேசேரே நீராகச் செறிதரு சுரநதியோ டங்கைச்சேர் வின்றிக்கே யடைந்துடைந்த வெண்டலைப்
பாலேமேலே மாலேயப் படர்வுறு மவனிறகும் பொங்கப்பேர் நஞ்சைச்சேர் புயங்கமங்கள் கொன்றையின்
போதார்தாரே தாமேவிப் புரிதரு சடையனிடங் கங்கைக்கே யும்பொற்பார்ப லந்துவந்த பொன்னியின்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. 3
அண்டத்தா லெண்டிக்கு மமைந்தடங்கு மண்டலத் தாறேவேறே வானாள்வா ரவரவ ரிடமதெலாம் மண்டிப்போய் வென்றிப்போர் மலைந்தலைந்த வும்பரு
மாறேலாதார் தாமேவும் வலிமிகு புரமெரிய முண்டத்தே வெந்திட்டே முடிந்திடிந்த இஞ்சிசூழ் மூவாமூதூர் மூதூரா முனிவுசெய் தவனதிடங் கண்டிட்டே செஞ்சொற்சேர் கவின்சிறந்த மந்திரக்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே. 4

Page 106
194 a
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1363. திக்கிற்றே வற்றற்றே திகழ்ந்திலங்கு மண்டலச்
1364.
365.
366.
1367.
சீறார்வீறார் போரார்தா ரகனுட லவனெதிரே புக்கிட்டே வெட்டிட்டே புகைந்தெழுந்த சண்டத்தீப் போலேயூநீர் தீகான்மீப் புணர்தரு முயிர்கள்திறஞ் சொக்கத்தே நிர்த்தத்தே தொடர்ந்தமங்கை செங்கதத்
தோடேயாமே மாலோகத் துயர்களை பவனதிடங் கைக்கப்பேர் யுக்கத்தே கனன்றுமிண்டு தண்டலைக் காடேயோடா வூரேசேர் கழுமல வளநகரே.
செற்றிட்டே வெற்றிச்சேர் திகழ்ந்ததும்பி மொய்ம்புறுஞ் சேரேவாரா நீள்கோதைத் தெரியிழை பிடியதுவாய் ஒற்றைச்சேர் முற்றற்கொம் புடைத்தடக்கை முக்கண்மிக்
கோவாதேபாய் மாதானத் துறுபுகர் முகவிறையைப் பெற்றிட்டே மற்றிப்பார் பெருத்துமிக்க துக்கமும்
பேராநோய்தா மேயாமைப் பிரிவுசெய் தவனதிடங் கற்றிட்டே யெட்டெட்டுக் கலைத்துறைக் கரைச்செலக்
காணாதாரே சேராமெய்க் கழுமல வளநகரே.
பத்திப்பேர் வித்திட்டே பரந்தஐம் புலன்கள்வாய்ப்
பாலேபோகா மேகாவாப் பகையறும் கைநினையா முத்திக்கே விக்கத்தே முடிக்குமுக்கு ணங்கள்வாய்
மூடாவூடா நாலந்தக் கரணமு மொருநெறியாய்ச் சித்திக்கே யுய்த்திட்டுத் திகழ்ந்தமெய்ப் பரம்பொருள்
சேர்வார்தாமே தானாகச் செயுமவ னுறையுமிடங் கத்திட்டோர் சட்டங்கங் கலந்திலங்கு நற்பொருள்
காலேயோவா தார்மேவுங் கழுமல வளநகரே.
செம்பைச்சே ரிஞ்சிச்சூழ் செறிந்திலங்கு பைம்பொழிற்
சேரேவாரா வாரீசத் திரையெறி நகரிறைவன் இம்பர்க்கே தஞ்செய்திட் டிருந்தரன் பயின்றவெற்
பேரார்பூநே ரோர்பாதத் தெழில்விர லவணிறுவிட் டம்பொற்பூண் வென்றித்தோ ளNந்துவந்த னஞ்செய்தாற்
காரார்துர்வாள் வாணாளன் றருள்புரி பவனதிடங் கம்பத்தார் தும்பித்திண் கவுட்சொரிந்த மும்மதக்
காரார்சேறார் மாவீதிக் கழுமல வளநகரே.
பன்றிக்கோ லங்கொண்டிப் படித்தடம் பயின்றிடப்
பானாமால் தானாமேயப் பறவையி னுருவுகொள
ஒன்றிட்டே யம்புச்சே ருயர்ந்தபங் கயத்தவ
னோதானோதா னஃதுணரா துருவின தடிமுடியுஞ்

திருப்பிரமபுரம் : ஏகபாதம். பண் - வியாழக்குறிஞ்சி 195
சென்றிட்டே வந்திப்பத் திருக்களங்கொள் பைங்கணின்
றேசால்வேறோ ராகாரந் தெரிவுசெய் தவனதிடங்
கன்றுக்கே முன்றிற்கே கலந்திலந் நிறைக்கவுங்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே. : 9
1868. தட்டிட்டே முட்டிக்கைத் தடுக்கிடுக்கி நின்றுணாத்
தாமேபேணா தேநாளுஞ் சமணொடு முழல்பவரும்
இட்டத்தா லத்தந்தா னிதன்றதென்று நின்றவர்க்
கேயாமேவா யேதுச்சொ லிலைமலி மருதம்பூப்
புட்டத்தே யட்டிட்டுப் புதைக்குமெய்க்கொள் புத்தரும்
போல்வார்தாமோ ராமேபோய்ப் புணர்வுசெய்தவனதிடங்
கட்டிக்கால் வெட்டித்தீங்க ரும்புதந்த பைம்புனற்
காலேவாரா மேலேபாய் கழுமல வளநகரே.
1869. கஞ்சத்தே னுண்டிட்டே களித்துவண்டு சண்பகக்
கானேதேனே போராருங் கழுமல நகரிறையைத்
தஞ்சைச்சார் சண்பைக்கோன் சமைத்தநற் கலைத்துறை
தாமேபோல்வார் தேனேரார் தமிழ்விர கனமொழிகள்
எஞ்சத்தேய் வின்றிக்கே யிமைத்திசைத்த மைத்தகொண் டேழேயேழே நாலேமூன் றியலிசை யிசையில்பா
வஞ்சத்தேய் வின்றிக்கே மனங்கொளப் பயிற்றுவோர்
மார்பேசேர்வாள் வானோர்சீர் மதிநுதல் மடவரலே. 11
திருச்சிற்றம்பலம்
0 000
127. திருப்பிரமபுரம் ஏகபாதம். பண் - வியாழக்குறிஞ்சி 1870 பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்.
1871 விண்டலர் பொழிலனி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலனி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலனி வேணு புரத்தரன் விண்டலர் பொழிலனி வேணு புரத்தரன். 2
1872. புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே
புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே புண்ட ரிகத்தவன் மேவிய புகலியே. 3

Page 107
196 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1373.
374.
375.
376.
1377.
1378.
1379.
1380.
விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன் விளங்கொளி திகழ்தரு வெங்குரு மேவினன்.
சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன் சுடர்மணி மாளிகைத் தோணி புரத்தவன்.
பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி பூசுரர் சேர்பூந்த ராயவன் பொன்னடி,
செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில் செருக்குவாய்ப் புடையான் சிரபுர மென்னில்
பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன் பொன்னடி மாதவர் சேர்புற வத்தவன்.
தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான் தசமுக னெரிதர வூன்று சண்பையான்.
காழி யாணய னுள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே காழி யாணய ஒள்ளவா காண்பரே காழி யானய னுள்ளவா காண்பரே.
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே.
0.

திருப்பிரமபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி - 197
38.
1382.
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை. 2
திருச்சிற்றம்பலம்
0 0 d 40
128. திருப்பிரமபுரம் : பண் - வியாழக்குறிஞ்சி
திருவெழுகூற்றிருக்கை
ஒருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதலம் ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை இருவரோ டொருவ னாகி நின்றனை
ஓரால் நீழ லுன்கழ லிரண்டும் முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை இருநதி அரவமோ டொருமதி சூடினை ஒருதா ளிரயின் மூவிலைச் சூலம் አ0
நாற்கால் மான்மறி ஐந்தலை யரவம் ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத் திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக் s
கொன்று தலத்துறை அவுணரை யறுத்தனை ஐம்புலன் நாலாம் அந்தக் கரணம் முக்குண மிருவளி யொருங்கிய வானோர் ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி ஐவகை வேள்வி.
அமைத்தா றங்க முதலெழுத் தோதி வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்

Page 108
198 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
383.
பிரமபுரம் பேணினை அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை பாணிமூ வுலகும் புதையமேல் மிதந்த் தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி வாய்ந்த பூந்தர்ா யேய்ந்தனை 30
வரபுர மென்றுணர் சிரபுரத் துறைந்தனை ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன் விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை முந்நீர்த் துயின்றோன் நான்முக னறியாப் பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும் ஊழியு முணராக் காழி யமர்ந்தனை எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை ஆறு பதமு மைந்தமர் கல்வியும் மறைமுதல் நான்கும் 40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை இருமையின் ஒருமையும் ஒருமையின் பெருமையும் மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45
அனைய தன்மையை யாதலின் நின்னை நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே
திருச்சிற்றம்பலம்
0 0 000
29. திருக்கழுமலம் : பண் -மேகராகக்குறிஞ்சி
சேவுயருந் திண்கொடியான் திருவடியே
சரணென்று சிறந்தஅன்பால்
நாவியலு மங்கையொடு நான்முகன்றான் வழிபட்ட நலங்கொள் கோயில்
வாவிதொறும் வண்கமல முகங்காட்டச்

திருக்கழுமலம் : பண் - மேகராகக்குறிஞ்சி 199
செங்குமுதம் வாய்கள்காட்டக் காவியிருங் கருங்குவளை கருநெய்தல் கண்காட்டுங் கழுமலமே.
1884, பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடுடைய
மலைச்செல்வி பிரியாமேனி
அருந்தகைய சுண்ணவெண்ணி றலங்களித்தான்
அமரர்தொழ அமருங்கோயில்
தருந்தடக்கை முத்தழலோர் மனைகள்தொறும்
இறைவனது தன்மைபாடிக்
கருந்தடங்கண் ண்ார்கழல்பந் தம்மானைப்
பாட்டயருங் கழுமலமே. 2
1385. அலங்கல்மலி வானவருந் தானவரும்
அலைகடலைக் கடையப்பூதங்
கலங்கனழு கடுவிடமுண் டிருண்டமணி கண்டத்தோன் கருதுங்கோயில்
விலங்கலமர் புயன்மறந்து மீன்சனிபுக்கு
ஊன்சலிக்குங் காலந்தானுங்
கலங்கலிலா மனப்பெருவண் கையுடைய
மெய்யர்வாழ் கழுமலமே. 3.
1886, பாரிதனை நலிந்தமரர் பயமெய்தச்
சயமெய்தும் பரிசுவெம்மைப்
போரிசையும் புரமூன்றும் பொன்றவொரு
சிலைவளைத்தோன் பொருந்துங்கோயில்
வாரிசைமென் முலைமடவார் மாளிகையின்
சூளிகைமேல் மகப்பாராட்டக்
காரிசையும் விசும்பியங்குங் கணங்கேட்டு
மகிழ்வெய்துங் கழுமலமே. 4.
1887, ஊர்கின்ற அரவமொளி விடுதிங்களொடு
வன்னி மத்தமன்னும்
நீர்நின்ற கங்கைநகு வெண்டலைசேர் செஞ்சடையான் நிகழுங்கோயில்
ஏர்தங்கி மலர்நிலவி யிசைவெள்ளி
மலையென்ன நிலவிநின்ற
கார்வண்டின் கணங்களாற் கவின்பெருகு
சுதைமாடக் கழுமலமே. 5

Page 109
200 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1388.
389.
390.
39.
392.
தருஞ்சரதந் தந்தருளென் றடிநினைந்து தழலணைந்து தவங்கள்செய்த பெருஞ்சதுரர் பெயலர்க்கும் பீடார்தோழமை
அளித்த பெருமான்கோயில் அரிந்தவய லரவிந்தம் மதுவுகுப்ப
அதுகுடித்துக் களித்துவாளை கருஞ்சகடம் இளகவளர் கரும்பிரிய
அகம்பாயுங் கழுமலமே.
புவிமுதலைம் பூதமாய்ப் புலனைந்தாய்
நிலனைந்தாய்க் கரணநான்காய் அவையவைசேர் பயனுருவா யல்லவுருவாய்
நின்றா னமருங்கோயில் தவமுயல்வோர் மலர்பறிப்பத் தாழவிடு
கொம்புதைப்பக் கொக்கின்காய்கள் கவனெறிகற் போற்சுனையிற் கரைசேரப்
புள்ளிரியுங் கழுமலமே.
அடல்வந்த வானவரை யழித்துலகு
தெழித்துழலும் அரக்கர்கோமான் மிடல்வந்த இருபதுதோள் நெரியவிரற்
பணிகொண்டோன் மேவுங்கோயில் நடவந்த வுழவரிது நடவொணா
வகைபரலாய்த் தென்றுதுன்று கடல்வந்த சங்கீன்ற முத்துவயற்
கரைகுவிக்குங் கழுமலமே.
பூமகள்தன் கோணயனும் புள்ளினொடு
கேழலுரு வாகிப்புக்கிட் டாமளவுஞ் சென்றுமுடி யடிகானா
வகைநின்றா னமருங்கோயில் பாமருவுங் கலைப்புலவோர் பன்மலர்கள்
கொண்டணிந்து பரிசினாலே காமனைகள் பூரித்துக் களிகூர்ந்து நின்றேத்துங் கழுமலமே.
குணமின்றிப் புத்தர்களும் பொய்த்தவத்தை
மெய்த்தவமாய் நின்றுகையில்
உணல்மருவுஞ் சமணர்களு முணராத
வகைநின்றா னுறையுங்கோயில்

திருவையாறு : பண் - மேகராகக்குறிஞ்சி 2 201
மணமருவும் வதுவையொலி விழவினொலி
இவையிசைய மண்மேற்றேவர்
கணமருவு மறையினொலி கீழ்ப்படுக்க
மேற்படுக்குங் கழுமலமே.
1893. கற்றவர்கள் பணிந்தேத்துங் கழுமலத்து
ஈசன்றன் கழல்மேல்நல்லோர்
நற்றுணையாம் பெருந்தன்மை ஞானசம்
பந்தன்றான் நயந்துசொன்ன
சொற்றுணையோ ரைந்தினொடைந் திவைவல்லார்
தூமலராள் துணைவராகி
முற்றுலக மதுஆண்டு முக்கணான்
அடிசேர முயல்கின்றாரே.
திருச்சிற்றம்பலம்
0 000 O
130. திருவையாறு : பண் -மேகராகக்குறிஞ்சி
1894 புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட் டைம்மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்று
அருள் செய்வா னமருங்கோயில் வலம்வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்குந் திருவையாறே.
1395 விடலேறு படநாக மரைக்கசைத்து
வெற்பரையன் பாவையோடும் அடலேறொன் றதுவேறி யஞ்சொலீர்
பலியென்னு மடிகள்கோயில் கடலேறித் திரைமோதிக் காவிரியின்
உடன்வந்து கங்குல்வைகித் திடலேறிச் சுரிசங்கஞ் செழுமுத்தம்
ஈன்றலைக்குந் திருவையாறே.

Page 110
202 ம் திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1396. stélsnerir suýlevrru losoevum 6mir
கானப்பே ராளர்மங்கை பங்காளர் திரிசூலப் படையாளர் t விடையாளர் பயிலுங்கோயில்
கொங்காளப் பொழில்நுழைந்து கூர்வாயால்
இறகுலர்த்திக் கூதனிங்கிச் செங்கானல் வெண்குருகு பைங்காணல்
இரைதேருந் திருவையாறே.
1997 ஊன்பாயு முடைதலைகொண் டூரூரின்
பலிக்குழல்வா ருமையாள்பங்கர்
தான்பாயும் விடையேறுஞ் சங்கரனார்
தழலுருவர் தங்குங்கோயில்
மான்பாய வயலருகே மரமேறி
மந்திபாய் மடுக்கள்தோறும்
தேன்பாய மீன்பாயச் செழுங்கமல
மொட்டலருந் திருவையாறே.
1898. நீரோடு கூவிளமும் நிலாமதியும்
வெள்ளெருக்கும் நிறைந்த கொன்றைத்
தாரோடு தண்கரந்தை சடைக்கணிந்த தத்துவனார் தங்குங்கோயில்
காரோடி விசும்பளந்து கடிநாறும்
பொழிலணைந்த கமழ்தார்வீதித்
தேரோடு மரங்கேறிச் சேயிழையார்
நடம்பயிலுந் திருவையாறே.
1399. வேந்தாகி விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும்
நெறிகாட்டும் விகிர்தனாகிப்
பூந்தாம நறுங்கொன்றை சடைக்கணிந்த புண்ணியனார் நண்ணுங் கோயில்
காந்தார மிசையமைத்துக் காரிகையார்
பண்பாடக் கவினார்வீதித்
தேந்தாமென் றரங்கேறிச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
1400. நின்றுலா நெடுவிசும்பி னெருக்கிவரு
புரமூன்றும் நீள்வாயம்பு சென்றுலாம் படிதொட்ட சிலையாளி
மலையாளி சேருங்கோயில்,

திருவையாறு: பண் - மேகராகக்குறிஞ்சி ம் 203
40.
1402.
1403.
1404.
குன்றெலாங் குயில்கூவக் கொழும்பிரச
மலர்பாய்ந்து வாசமல்கு
தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு
கண்வளருந் திருவையாறே. 7
அஞ்சாதே கயிலாய மலையெடுத்த
அரக்கர்கோன் தலைகள்பத்தும் மஞ்சாடு தோள்நெறிய அடர்த்தவனுக்கு
அருள்புரிந்த மைந்தர்கோயில் இஞ்சாய லிளந்தெங்கின் பழம்வீழ
இளமேதி யிரிந்தங்கோடிச் செஞ்சாலிக் கதிருழக்கிச் செழுங்கமல வயல்படியுந் திருவையாறே.
மேலோடி விசும்பணவி வியன்நிலத்தை
மிகஅகழ்ந்து மிக்குநாடும்
மாலோடு நான்முகனு மறியாத
வகைநின்றான் மன்னுங்கோயில்
கோலோடக் கோல்வளையார் கூத்தாடக்
குவிமுலையார் முகத்தினின்று
சேலோடச் சிலையாடச் சேயிழையார்
நடமாடுந் திருவையாறே.
குண்டாடு குற்றுடுக்கைச் சமணரொடு
சாக்கியருங் குணமொன்றில்லா மிண்டாடு மிண்டருரை கேளாதே ஆளாமின் மேவித்தொண்டீர் எண்டோளர் முக்கண்ண ரெம்மீசர்
இறைவரினி தமருங்கோயில் செண்டாடு புனற்பொன்னிச் செழுமணிகள்
வந்தலைக்குந் திருவையாறே. 10
அன்னமலி பொழில்புடைசூ ழையாற்றெம்
பெருமானை யந்தண்காழி
மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான
சம்பந்தன் மருவுபாடல்
இன்னிசையா லிவைபத்து மிசையுங்கால்
ஈசனடி யேத்துவார்கள்
தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்று
எய்துவார் தாழாதன்றே. I
திருச்சிற்றம்பலம்

Page 111
204
1405.
1406.
407.
1408.
1409.
* திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
131. திருமுதுகுன்றம் : பண் - மேகராகக்குறிஞ்சி
மெய்த்தாறு சுவையுமே பூழிசையுமெண் குணங்களும் விரும்புநால்வே தத்தாலு மறிவொண்ணா நடைதெளியப்
பளிங்கேபோ லரிவைபாகம் ஒத்தாறு சமயங்கட் கொருதலைவன்
கருதுமூ ருலவுதெண்ணிர் முத்தாறு வெதிருதிர நித்திலம்
வாரிக்கொழிக்கும் முதுகுன்றமே.
வேரிமிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன்மேவு போரின்மிகு பொறையளந்து பாசுபதம் புரிந்தளித்த புராணர்கோயில் காரின்மலி கடிபொழில்கள் கனிகள்பல
மலருதிர்த்துக் கயமுயங்கி மூரிவளங் கிளர்தென்றல் திருமுன்றிற்
புகுந்துலவும் முதுகுன்றமே.
தக்கனது பெருவேள்விச் சந்திரன்
இந்திரனெச்ச னருக்கனங்கி மிக்கவிதா தாவினொடும் விதிவழியே
தண்டித்த விமலர்கோயில் கொக்கினிய கொழும்வருக்கை கதலிகமுகு
உயர்தெங்கின் குவைகொள்சோலை முக்கனியின் சாறொழுகிச் சேறுலரா நீள்வயல்சூழ் முதுகுன்றமே.
வெம்மைமிகு புரவாணர் மிகைசெய்ய
விறலழிந்து விண்ணுளோர்கள் செம்மலரோ னிந்திரன்மால் சென்றிரப்பத்
தேவர்களே தேரதாக மைம்மருவு மேருவிலு மாசுணநாணரி
எரிகால் வiாளியாக மும்மதிலும் நொடியளவிற் பொடிசெய்த
முதல்வனிடம் முதுகுன்றமே.
இழைமேவு கலையல்கு லேந்திழையாள் ஒருபாலா யொருபாலெள்கா
துழைமேவு முரியுடுத்த வொருவனிருப்

திருமுதுகுன்றம் : பண் - மேகராகக்குறிஞ்சி 205
1410.
1411.
1412.
143.
பிடமென்ப ரும்பரோங்கு கழைமேவு மடமந்தி மழைகண்டு
மகவினொடும் புகவொண்கல்லின் முழைமேவும் மால்யானை யிரைதேரும்
வளர்சாரல் முதுகுன்றமே. 5
நகையார்வெண் டலைமாலை முடிக்கனிந்த
நாதனிட நன்முத்தாறு வகையாரும் வரைப்பண்டங் கொண்டிரண்டு
கரையருகு மறியமோதித் தகையாரும் வரம்பிடறிச் சாலிகழு நீர்குவளை சாயப்பாய்ந்து முகையார்செந் தாமரைகள் முகமலர
வயல்தழுவு முதுகுன்றமே. 6
அறங்கிளரும் நால்வேத மாலின்கீழ் இருந்தருளி யமரர்வேண்ட நிறங்கிளர்செந் தாமரையோன் சிரமைந்தி
னொன்றறுத்த நிமலர்கோயில் திறங்கொள்மணித் தரளங்கள் வரத்திரண்டங்கு
எழிற்குறவர் சிறுமிபார்கள் முறங்களினாற் கொழித்துமணி செலவிலக்கி
முத்துலைப்பெய் ( துகுன்றமே.
கதிரொளிய நெடுமு பத் துடையகடல்
இலங்கையர்கோன் கண்ணும்வாயும் பிதிரொளிய கனல்பிறங்கப் பெருங்கயிலை மலையைநிலை பெயர்த்தஞான்று மதிலளகைக் கிறைமுரல மலரடியொன்
றுான்றிமறை பாடஆங்கே முதிரொளிய சுடர்நெடுவாள் முன்னிந்தான்
வாய்ந்தபதி முதுகுன்றமே. 8
பூவார்பொற் றவிசின்மிசை யிருந்தவனும்
பூந்துழாய் புனைந்தமாலும் ஒவாது கழுகேன மாயுயர்ந்தாழ்ந்து உறநாடி யுண்மைகாணாத் தேவாருந் திருவுருவன் சேருமலை செழுநிலத்தை மூடவந்த மூவாத முழங்கொலிநீர் கீழ்தாழ
மேலுயர்ந்த முதுகுன்றமே. 9

Page 112
206
திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1414.
1415.
146.
47.
மேனியிற்சி வரத்தாரும் விரிதரு
தட்டுடையாரும் விரவலாகா ஊணிகளா யுள்ளார்சொற் கொள்ளாது
முள்ளுணர்ந்தங் குய்மின்தொண்டீர் ஞானிகளா யுள்ளார்கள் நான்மறையை முழுதுணர்ந்தைம் புலன்கள்செற்று மோனிகளாய் முனிச்செல்வர் தனித்திருந்து
தவம்புரியும் முதுகுன்றமே.
முழங்கொலிநீர் முத்தாறு வலஞ்செய்யு முதுகுன்றத்திறையை மூவாப் பழங்கிழமைப் பன்னிருபேர் படைத்துடைய
கழுமலமே பதியாக்கொண்டு தழங்கெரிமூன் றோம்புதொழில் தமிழ்ஞான
சம்பந்தன் சமைத்தபாடல் வழங்குமிசை கூடும்வகை பாடுமவர்
நீடுலக மாள்வர்தாமே.
திருச்சிற்றம்பலம்
0 0 000
132. திருவிழிமிழலை : பண் - மேகராகக்குறிஞ்சி'
ஏரிசையும் வடவாலின் கீழிருந்தங்
கீரிருவர்க் கிரங்கிநின்று நேரியநான் மறைப்பொருளை யுரைத்தொளிசேர்
நெறியளித்தோன் நின்றகோயில் பாரிசையும் பண்டிதர்கள் பன்னாளும்
பயின்றோது மோசைகேட்டு வேரிமலி பொழிற்கிள்ளை வேதங்கள்
பொருட்சொல்லும் மிழலையாமே.
பொறியரவ மதுசுற்றிப் பொருப்பேமது.
ஆகப்புத் தேளிர்கூடி மறிகடலைக் கடைந்திட்ட விடமுண்ட
கண்டத்தோன் மன்னுங்கோயில் செறியிதழ்த்தா மரைத்தவிசில் திகழ்ந்தோங்கு
மிலைக்குடைக்கீழ்ச் செய்யார்செந்நெல் வெறிகதிர்ச்சா மரையிரட்ட இளவன்னம்
வீற்றிருக்கும் மிழலையாமே.

திருவிழிமிழலை : பண் - மேகராகக்குறிஞ்சி 207
1418. எழுந்துலகை நலிந்துழலு மவுணர்கள்தம்
புரமூன்று மெழிற்கணாடி
உழுந்துருளு மளவையினொள் ளெரிகொளவெஞ்
சிலைவளைத்தோ னுறையுங்கோயில
கொழுந்தரளம் நகைகாட்டக் கோகநதம்
முகங்காட்டக் குதித்துநீர்மேல்
விழுந்தகயல் விழிகாட்ட விற்பவளம்
வாய்காட்டும் மிழலையாமே. 3
14:19, உரைசேரு மெண்பத்து நான்குநூறு
ஆயிரமாம் யோனிபேதம் நிரைசேரப் படைத்தவற்றி னுயிர்க்குயிராய்
அங்கங்கே நின்றான்கோயில் வரைசேரும் முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட சிரைசேர்பொன் னிதழிதர மென்காந்தள்
கையேற்கும் மிழலையாமே. 4.
1420 காணுமா றரியபெரு மானாகிக்
காலமாய்க் குணங்கள்மூன்றாய்ப்
பேணுமூன்றுருவாகிப் பேருலகம்
படைத்தளிக்கும் பெருமான்கோயில்
தாணுவாய் நின்றபர தத்துவனை உத்தமனை யிறைஞ்சீரென்று
வேணுவார் கொடிவிண்ணோர் தமைவிளிப்ப
போலோங்கு மிழலையாமே. 5
1421 அகனமர்ந்த அன்பினரா யறுபகைசெற்று
ஐம்புலனு மடக்கிஞானம்
புகலுடையோர் தம்முள்ளப் புண்டரிகத்து
உள்ளிருக்கும் புராணர்கோயில்
தகவுடைநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்கு
அந்திகழச் சலசத்தீயுள்
மிகவுடைய புன்குமலர்ப் பொரியட்ட
மணஞ்செய்யும் மிழலையாமே. 6
தே-14

Page 113
208 * திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
星422,
1423.
424.
1425.
1426.
ஆறாடு சடைமுடிய னனலாடு
மலர்க்கையன் இமயப்பாவை கூறாடு திருவுருவன் கூத்தாடுங்
குணமுடையோன் குளிருங்கோயில் சேறாடு செங்கழுநீர்த் தாதாடி
மதுவுண்டு சிவந்தவண்டு வேறாய வுருவாகிச் செவ்வழிநற் பண்பாடும் மிழலையாமே.
கருப்பமிகு முடலடர்த்துக் காலூன்றிக்
கைமறித்துக் கயிலையென்னும் பொருப்பெடுக்க லுறுமரக்கன் பொன்முடிதோள்
நெரித்தவிரற் புனிதர்கோயில் தருப்பமிகு சலந்தரன்ற னுடல்தடிந்த சக்கரத்தை வேண்டியீண்டு விருப்பொடுமால் வழிபாடு செய்யவிழி விமானஞ்சேர் மிழலையாமே.
செந்தளிர்மா மலரோனுந் திருமாலும்
ஏனமோ டன்னமாகி அந்தமடி காணாதே யவரேத்த
வெளிப்பட்டோ னமருங்கோயில் புந்தியினால் மறைவழியே புற்பரப்பி
நெய்சமிதை கையிற்கொண்டு வெந்தழலின் வேட்டுலகின் மிகஅளிப்போர்
சேருமூர் மிழலையாமே.
எண்ணிறந்த அமணர்களு மிழிதொழில்சேர்
சாக்கியரும் என்றுந்தன்னை நண்ணரிய வகைமயக்கித் தன்னடியார்க்கு
அருள்புரியும் நாதன்கோயில் பண்ணமரும் மென்மொழியார் பாலகரைப்
பாராட்டு மோசைகேட்டு விண்ணவர்கள் வியப்பெய்தி விமானத்தோடும்
இழியு மிழலையாமே.
மின்னியலும் மணிமாட மிடைவீழி மிழலையான் விரையார்பாதம் சென்னிமிசைக் கொண்டொழுகுஞ் சிரபுரக்கோன்
ܘܕܚtܬܝ

திருக்கச்சியேகம்பம் : பண் - மேகராகக்குறிஞ்சி ன் 209
427.
1428.
1429.
செழுமறைகள் பயிலுநாவன் பன்னியசீர் மிகுஞான சம்பந்தன்
பரிந்துரைத்த பத்துமேத்தி இன்னிசையாற் பாடவல்லா ரிருநிலத்தில்
ஈசனெனு மியல்பினோரே.
திருச்சிற்றம்பலம்
K» KM K) () ()
133. திருக்கச்சியேகம்பம் : பண் - மேகராகக்குறிஞ்சி
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக் கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள் அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி எந்தை மேவிய ஏகம்பந் தொழுதேத்த இடர்கெடுமே.
வரந்திகழு மவுணர் மாநகர்மூன்றுடன்மாய்ந் தவியச் சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயஇடம் குருந்த மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவம் திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ்சேர இடர்கெடுமே. 2
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து
பெண்ணமர்ந் தெரியாடல் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம்
1430.
1431.
1432.
விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள் திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர இடர்கெடுமே. 3
தோலுநாலுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணிறணிந்து காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம் மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள் ஏலநாறிய சோலைகு ழேகம்ப மேத்த இடர்கெடுமே. 84
தோடனிம் மலர்க்கொன்றை சேர்சடைத் துரமதியம்புனைந்து பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துட னாடல்புரி சேடர்சேர் கலிக்கச்சி யேகம்பஞ் சேர இடர்கெடுமே.
சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய்து ஆகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள் ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த இடர்கெடுமே. 6.Z

Page 114
210 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1433.
1434.
1435.
1436.
437.
1438.
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து நாணிடத் திணில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந் தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்து மிறுத்தவனூர் சேணுலாம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர இடர்கெடுமே. 8
பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான் அரவஞ் சேர்சடை யந்தன னணங்கினொ டமருமிடம் கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள் மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வல்வினை மாய்த்தறுமே. 9
குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும் மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின் விண்டவர் புரமூன்றும் வெங்கணை யொன்றினா லவியக் கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண இடர்கெடுமே.
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்ப மேயவனைக் காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள் பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார் சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.
திருச்சிற்றம்பலம்
{ 0
134. திருப்பறியலுர்வீரட்டம் : பண் - மேகராகக்குறிஞ்சி
கருத்தன் கடவுள் கனலேந் தியாடும் நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்த முடையார் திருப்பறி யலூரில் விருத்த னெனத்தகும் வீரட்டத் தானே.
மருந்த னமுதன் மயானத்துள் மைந்தன் பெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான் திருந்து மறையோர் திருப்பறி யலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே. 2
1439.
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன் விளிந்தா னடங்க வீந்தெய்தச் செற்றான் தெளிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே. "3

திருப்பறியலூர்வீரட்டம் : பண் - ே க்குறிஞ்சி
a 21
1440. பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன் சிறப்பா டுடையார் திருப்பறி யலூரில் விறற்பா ரிடஞ்சூழ வீரட்டத் தானே.
1441. கரிந்தா ரிடுகாட்டி லாடுங்க பாலி
புரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும் தெரிந்தார் மறையோர் திருப்பறி யலூரில் விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
442. அரவுற்ற நாணா அனலம்ப தாகச்
செருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான் தெருவிற் கொடிசூழ் திருப்பறி யலூரில் வெருவுற் றவர்தொழும் வீரட்டத் தானே.
1443. நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையா ரரவ மழகா அசைத்தான் திரையார் புனல்சூழ் திருப்பறி யலூரில் விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.
144 வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்
இளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம் திளைக்கும் படுகர்த் திருப்பறி யலூரில் விளைக்கும் வயல்சூழ்ந்த வீரட்டத் தானே.
445 வளங்கொள் மலர்மே லயன்ஒத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான் இளங்கொம் பனாளோ டிணைந்தும் பிணைந்தும் விளங்குந் திருப்பறியல் வீரட்டத் தானே.
1446. சடையன் பிறையன் சமண்சாக் கியரோ
டடையன் பிலாதா னடியார் பெருமான் உடையன் புலியி னுரிதோ லரைமேல் விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.
1447, நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்
வெறிநீர்த் திருப்பறியல் வீரட்டத் தானைப் பொறிரீ டரவன் புனைபாடல் வல்லார்க் கறுநீ டவல மறும்பிறப் புத்தானே.
திருச்சிற்றம்பலம்
KM KY K » »
10
ا** نہ۔ عہ۔

Page 115
212 உதிருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
135. திருப்பராய்த்துறை : பண் - மேகராகக்குறிஞ்சி
1448. நீறுசேர்வதொர் மேனியர்நேரிழை கூறுசேர்வதொர் கோலமாய்ப் பாறுசேர்தலைக் கையர்பராய்த்துறை ஆறசேர்சடை அண்ணலே.
1449. கந்தமாமலர்க் கொன்றைகமழ்சடை
வந்தபூம்புனல் வைத்தவர் பைந்தண்மாதவி சூழ்ந்தபராய்த்துறை அந்தமில்ல அடிகளே.
1450. வேதர்வேதமெல் லாமுறையால்விரித்
தோதநின்ற வொருவனார் பாதிபெண்ணுரு வாவர்பராய்த்துறை ஆதியாய அடிகளே.
1451 தோலுந்தம்மரை யாடைசுடர்விடு
நூலுந்தாமணி மார்பினர் பாலுநெய்பயின் றாடுபராய்த்துறை ஆலநீழ லடிகளே.
1452. விரவிநிறுமெய் பூசுவர்மேனிமேல்
இரவில்நின்றெரி யாடுவர் பரவினாரவர் வேதம்பராய்த்துறை அர்வமார்த்த அடிகளே.
1453. மறையுமோதுவர் மான்மறிக்கையினர்
கறைகொள்கண்ட முடையவர் பறையுஞ்சங்கு மொலிசெய்பாராய்த்துறை அறையநின்ற அடிகளே.
1454. விடையுமேறுவர் வெண்பொடிப்பூசுவர்
சடையிற்கங்கை தரித்தவர் படைகொள்வெண்மழு வாளர்பராய்த்துறை அடையநின்ற அடிகளே.
1455. தருக்கின்மிக்க தசக்கிரிவன்றனை
நெருக்கினார்விர லொன்றினால் பருக்கினாரவர் போலும்பராய்த்துறை அரக்கன்றன்னை அடிகளே.

திருத்தருமபுரம் : பண் - யாழ்முரி 213
1456. நாற்றமாமல ரானொடுமாலுமாய்த்
தோற்றமும்மறி யாதவர் பாற்றினார்வினை யானபராய்த்துறை ஆற்றல்மிக்க அடிகளே. 9
1457. திருவிலிச்சில தேரமனாதர்கள்
உருவிலாவுரை கொள்ளேலும் பருவிலாலெயி லெய்துபராய்த்துறை. மருவினான்றனை வாழ்த்துமே. O
14:58, செல்வமல்கிய செல்வர்பராய்த்துறைச்
செல்வர்மேற்சிதை யாதன செல்வன்ஞானசம் பந்தனசெந்தமிழ் செல்வமாமிவை செப்பவே. II
திருச்சிற்றம்பலம்
0 0 000
136. திருத்தருமபுரம் : பண் - யாழ்முரி
1459. மாதர்ம டப்பிடியும் மட அன்னமு மன்னதோர்
நடை யுடைம் மலை மகள் துணையென மகிழ்வர்
பூதஇ னப்படைநின் றிசை பாடவு மாடுவர்
அவர் படர் சடைந் நெடு முடியதொர் புனலர்
வேதமொ டேழிசைபா டுவ ராழ்கடல் வெண்டிரை
யிரைந் நுரை கரை பொரு துவிம்மிநின் றயலே
தாதவிழ் புன்னைதயங் கும லர்ச்சிறை வண்டறை
யெழில் பொழில் குயில் பயில் தருமபு ரம்பதியே.
1460. பொங்குந டைப்புகலில் விடை யாமவர் ஊர்திவெண்
பொடி யணி தடங் கொள்மார் புயூணநூல் புரள
மங்குலி டைத்தவழும் மதி சூடுவ ராடுவர்
வளங் கிளர் புன லர வம்வைகிய சடையர்
சங்குக டற்றிரையா லுதை யுண்டுச ரிந்திரிந்
தொசிந் தசைந் துசே ரும்வெண்மணற் குவைமேல்
தங்குக திர்ம்மணிநித் தில மெல்லிரு ளொல்கநின்
றிலங் கொளிந் நலங் கெழில் தருமபு ரம்பதியே. 2

Page 116
214 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1461 விண்ணுறு மால்வரைபோல் விடை யேறுவ ராறுகு
டுவர் விரி சுரி யொளி கொள்தோடு நின்றிலங்கக்
கண்ணுற நின்றொளிருங் கதிர் வெண்மதிக் கண்ணியர்
கழிந் தவ ரிழிந் திடும் முடைதலை கலனாப்
பெண்ணுற நின்றவர்தம் முரு வம்மயன் மால்தொழவு
வரி வையைப் பிணைந் திணைந் தணைந்ததும் பிரியார்
தண்ணிதழ் முல்லையொடெண் ணிதழ் மெளவல்ம ருங்கலர்
கருங் கழிந் நெருங் குநல் தருமபு ரம்பதியே. 3
1462. வாருறு மென்முலைநன் னுத லேழையொ டாடுவர்
வளங் கிளர் விளங் குதிங் கள்வைகிய சடையர்
காருற நின்றலரும் மலர்க் கொன்றையங் கண்ணியர்
கடுவ் விடை கொடி வெடி கொள்காடுறை பதியர்
பாருற விண்ணுலகம் பர வப்படு வோரவர்
படு தலைப் பலி கொளல் பரிபவந் நினையார்
தாருறு நல்லரவம் மலர் துன்னிய தாதுதிர்
தழை பொழில் மழைந் நுழை தருமபு ரம்பதியே. 4
1463. நேரும வர்க்குணரப் புகி லில்லைநெடுஞ்சடைக்
கடும் புனல் படர்ந் திடம் படுவ்வதொர் நிலையர்
பேரும வர்க்கெனையா யிர முன்னைப்பி றப்பிறப்
பிலா தவ ருடல் தடர்த் தபெற்றியா ரறிவார்
ஆரம வர்க்கழல்வா யதொர் நாகம ழஃகுறவ்
வெழுஃகொழும் மலர்கொள்பொன் னிதழிநல் லலங்கல்
தாரம வர்க்கிமவான் மக ரூர்வது போர்விடை
கடி படு செடி பொழில் தருமபு ரம்பதியே. 5
1464. கூழையங் கோதைகுலா யவள் தம்பினை புல்கமல்
குமென் முலைப் பொறி கொள்பொற் கொடியிடைத் துவர்வாய்
மாழையொண் கண்மடவா ளையொர் பாகம கிழ்ந்தவர் வலம் மலி படை விடை கொடிகொடும் மழுவ்வாள்
யாழையும் மேள்கிடவே ழிசை வண்டுமு ரன்றினந் துவன் றிமென் சிறஃ கறை யுறந்நறல்வி ரியுந்நல்
தாழையு ஞாழலுந்நீ டிய கானலி னஸ்ளலி
சைபுள் விரினந் துயில் பயில் தருமபு ரம்பதியே.

திருத்தருமபுரம் : பண் - யாழ்முரி 215
1465. தேமரு வார்குழலன் னந டைப்பெடை மான்விழித்
திருந் திழை பொருந்துமே ணிசெங்கதிர் விரியத் தூமரு செஞ்சடையில் துதை வெண்மதி துன்றுகொன் றைதொல் புனல் சிரங் கரந் துரித்ததோ லுடையர்
-
கடல் லடை கழி யிழி யமுண்டகத் தயலே தாமரை சேர்குவளைப் படு கிற்கமு நீர்மலர்
வெறி கமழ் செறிவ் வயல் தருமபு ரம்பதியே. Z
1466. தூவண நீறகலம் பொலி யவ்விரை புல்கமல்
குமென் மலர் வரை புரை திரள்புயம் மணிவர்
கோவண மும்முழையின் னத ஞம்முடை யாடையர் கொலைம் மலி படை யொர்கு லமேந்திய குழகர்
பாவண மாவலறத் தலை பத்துடை யவ்வரக்
கனவ் வலி யொர்கள் வைசெய் தருள்புரி தலைவர்
தாவண ஏறுடையெம் மடி கட்கிடம் வன்தடங்
கடல் லிடுந் தசிங் கரைத் தருமபு ரம்பதியே. 8
1467 வார்மலி மென்முலைமா தொரு பாகம தாகுவர்
வளங் கிளர் மதி யர வம்வைகிய சடையர்
கூர்மலி சூலமும்வெண் மழு வும்மவர் வெல்படை குனி சிலை தனிம் மலை யதேந்திய குழகர்
ஆர்மலி யாழிகொள்செல் வனு மல்லிகொள் தாமரைம்
மிசை யவன் னடிம் முடி யளவுதா மறியார்
தார்மலி கொன்றையலங் கலு கந்தவர் தங்கிடந்
தடங் கடல் லிடுந் திரைத் தருமபு ரம்பதியே. 9
1468. புத்தர்கள் தத்துவர்மொய்த் துறி புல்கிய கையர்பொய்ம்
மொழிந் தழி வில்பெற் றியுற் றநற்றவர் புலவோர்
பத்தர்க ளத்தவமெய்ப் பய னாகவு கந்தவர்
நிகழ்ந் தவர் சிவந் தவர் சுடலைப்பொடி யணிவர்
முத்தன வெண்ணகையொண் மலை மாதுமை பொன்னணி புணர்ம் முலை யிணை துணை யணைவதும் பிரியார்
தத்தரு வித்திருளுந் திய மால்கட லோதம்வந்
தடர்ந் திடுந் தடம் பொழில் தருமபு ரம்பதியே. O

Page 117
216 திருஞானசம்பந்தர் - முதல் திருமுறை
1469. பொன்னெடு நன்மணிமா ஸ்ரிகை சூழ்விழ வம்மலி
பொரூஉ புனல் திரூஉ வமர் புகல்லியென் றுலகில்
தன்னொடு நேர்பிறவில் பதி ஞானசம் பந்தனஃ
துசெந் தமிழ்த் தசிங் கடல் தரும புரம்பதியைப்
பின்னெடு வார்சடையிற் பிறை யும்மர வும்முடை
யவன் பிணை துணை கழல் கள்பேணுத லுரியார்
இன்னெடு நன்னுலகெய் துவ ரெய்திய போகமும் உறு வர்கள் ஸ்டர் பிணி துயரணைஷ் விலரே.
திருச்சிற்றம்பலம்
හී හී හී ගිහි
முதல் திருமுறை முற்றிற்று.

............ اf தில் 'நன்றி நவிலல்'
is as
4.
e
W 87 V8 '' . . . . . . . . ."
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
எமது இதயத்தெய்வத்தின் பிரிவுச்செய்திகேட்டு உள்ளூ ரிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகைதந்து இறுதிச் சடங் கில் கலந்துகொண்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும்,
வெளிநாடுகளிலிருந்து அனுதாபச் செய்தி அனுப்பியோருக்கும், மலர் வளையங்கள் வைத்தும் மலர்மாலை சாத்தியும் அஞ்சலி செலுத்திய இனிய நெஞ்சங்களுக்கும், தமிழ்நாட்டிலிருந்து மலர் களைக் கொண்டுவந்த நண்பருக்கும், பலவகைகளில் உதவி செய்து எமது குடும்பத் தலைவரின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று ஆறுதல் கூறிய நண்பர்கள், உறவினர்களுக்கும், சபிண்டீகரண நிகழ்விலும் அமரரின் ஆத்ம சாந்திக்காக நடைபெற்ற பிரார்த் தனையிலும் பங்குகொண்ட யாவருக்கும், இவ்ஞாபகார்த்த மலரைச் சிறந்த முறையில் உருவாக்க உதவிய பெரியவர்களுக்கும் எமது
நன்றியைக் கூறுகின்றோம்.
நன்றி! நன்றி! நன்றி!
இங்ங்ணம்
B.P.G. 7, Maning Town H/s, குடும்பத்தினர்
Mangala Road, Narahenpittiya, Colombo-08.

Page 118


Page 119
ரி
உருத்திராட்சம் அ
ஏகமுக உருத்திராட்சம்: சிவஸ்ரூபம் - தரிசித்தால்ே பிரம்மஹத்தி முதலான கிடைக்குமிடம்: பசுபதிநாத் - சிவபெபு
அல்ல) கிடைக்கும்.
இரண்டு முகம் அர்த்தநாரீஸ்வர ஸ்வ. நீக்கும். சகல மனோரதங்கள். நல் மோட்சமும், எல்லா வைபவங்களையு
மூன்று முகம்: அக்னி ஸ்வருபம் - தன் துறத்தி பாவத்தைப் போக்கும். மூன்று அணிவதால் நிவர்த்தி ஆகும்.
நான்கு முகம்: பிரம்ம ஸ்வரூபம் - தன வாய்ந்தது. அணிபவர் ஞானத்தில் சி அளிக்கும். வலது கை அல்லது தனி பிரம்மச்சாரிக்கான பலனை அடைகி
ஐந்து முகம் காலாக்கினி உருத்திர ே கஷ்டங்கள் மனதை வாட்டாது. சகல
ஆறு முகம் சுப்ரமண்ய ஸ்வரூபம் - பாவங்களையும் போக்கும். கல்வி, கே
ஏழுமுகம்:குபேர ஸ்வரூபம் - இதனை, சமூகத்தில் கெளரவத்திற்கு பாத்திர புண்ணிய புருகதர்கள் அணிய வேண்டி
எட்டு முகம்: கணேச ஸ்வரூபம் - ஆ பொய் பேசிய பாவத்தில் இருந்து முக் ஒன்பது முகம் துர்க்கை ஸ்வரூபம் அல் ஸ்வரூபம் - எம பயத்தைப் போக்கும். பத்துமுகம் நாராயண ஸ்வரூபம். சகதி சர்வ துஷ்ட கிரகங்களை சாந்திப் ப( பயங்களைப் போக்கும். பதினொருமுகம் ஏகாதசஉருத்திர சுத்தம் விருத்தியாகும். சகலரையும் அணிந்தால் அஸ்வமேத யாக பலன் 5 பன்னிரெண்டு முகம்:இது விஷ்ணுசிெ விலகும். இரண்டு லோகங்களிலும் தரித்திரம் விலகும். தனவான் ஆவார் பதின்மூன்று முகம்: கார்த்திகேயர் ெ பூர்த்தி செய்யும், சித்திகள் அளிக்கும் குழந்தை பாக்கியம் உண்டாகும். ரச பதினான்குமுகம்:ஆஞ்சநேயர்ஸ்வரு
சகல கீழ்டங்கள், பாவங்கள். நோய்க
LLLLLL S SLSL EE aaLaLLLLSSS0a0S Y aLSLLLLLLSL LLLLLLLLS
 

LLI
ணிவதன் பயன்கள்
அணிபவர் பக்தியும் முக்தியும் அடைவர். தோஷங்கள் நீங்கும். கிடைப்பது அரிது. நமான் சந்நிதியில் தரிசிப்பதற்கு மட்டும்
ܒܩܨ.
ரூபம் - கோவதம் முதலிய தோஷங்கள் லெண்ணங்களையும் நிறைவேற்றும், ம் அளிக்கும்.
ாமும், கல்வியும் விருத்தியடையும். ஸ்திரி நாட்களுக்கு மேற்பட்ட ஜ்வரங்கள் இதை
ம். நல்ல ஆரோக்கியம் அளிக்கும். சிறப்பு நந்து விளங்குவார். மனதிற்கு ஆனந்தம் லயில் அணிய வேண்டும். அணிவதால்
ញETT.
ஸ்வரூபம் - பக்தியும் முக்தியும் அளிக்கும்.
பாவங்களையும் போக்கும்.
சகல சுகங்களையும் அளிக்கும். சகல ஸ்வி, ஞானம் விருத்தியாகும்.
அணிவதால் தனப்பிராப்தி, ஆரோக்கியம், மாகிறார். வியாபாரம் தொழில் விருத்தி, +jقللا# யுள் வளரும். கிங் தி அளிக்கும்.
:து பைரவர் சகல பாவங்களையும் போக்கும்.
காரியங்க்ளையும் சித்தி உண்டாக்கும். டுத்தும். பிசாசு, வேதாள ராட்சன், பாம்பு
ஸ்வரூபம் - இதை அணிவதால் எப்போதும் வெல்லும் திறமை ஏற்படும். சிரசில் கிடைக்கும்.
ாரூபம் - சிரசில் அணிந்தால் சர்வரோகம் சுகம் கிடைக்கும். இதை அணிவதால்
சாரூபம் - சகல நல்ல எண்ணங்களையும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கட்குக் வாதத்தில் தேர்ச்சி பெறுவர். பம்-ஈஸ்வரன் நேத்திரத்தில் தோன்றியது. ளையும் நீக்கும்.
I nel re: 44545.451 at: 33usss.T.