கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (க. வேலாயுதபிள்ளை)

Page 1
s
யாழ்ப்பாணம்
சைவ வேளான
முருகுடைய முருகேசு கந்தையா
வைத்திய க. வேலா!
அவர்களின் சிவட
Iங்னைவி
25 - 11
 

W!!ሸïï
y Gryg i RAFile:Aifft R
LEGO.
ண் குலதிலகர் ார் பீட்டன்
அவர்களின் மகன்
பகலாநிதி புத பிள்ளை
தப்பேறு குறித்த
LOGUÏT
- 1997.

Page 2

சிவமயம்
சமர்ப்பணம்
எங்குல தீபமே அன்பின் பண்பின் சிகரமே வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தே வானுறை தெய்வத்துள் நீருறைந்தீர் நும்ஓசை ஒலி எல்லாம் எமக்கினிமையாய் அன்பரவணைப்பே அரணாய்த் திடமுற்றோம் நீர் அரண்ணைப்பே பேரரண் என்று போனிரோ.
காலனவன் கைதொட்டவேளை மாந்தரை வீணவன் செய்கை என மீட்ட மருத்துவரே மருத்துவம் வீணென்றிங்கு கைத்துரக்காய் காலனுக்கு ஆனதென்ன.
மண்ணில் நல்லவண்ணம் வாழ வழி தந்தீர் எண்ணி மாளாத்துயர் தந்து வானுகந்தீர் பாரினர் வேண்ட பதவி பல கொண்டீர் விண்ணவரும் வேண்டினரோ தலைமைநாடி விண்ணேகிச் சென்றதும் அப்பணிக்கோ.
நித்தம் தேவர்க்கு ஆரம் சூட்டும் ஞானசிரோன்மணியே உம் நினைவாய் ஆரம் சூட்டுகிறோம் இந்நாளே அர்ப்பணம் இறைக்கானிர்; உம் நினைவின் மலரை
சமர்ப்பணம் நுமக்காக்கினேம் யாமே.
དེ༽

Page 3


Page 4

፵፰ -
| || ||
உரும்பராய் தெற்கு
அமரர் கந்தையா வேலாயுதபிள்ளை
ரன் : ; பிள் ஆண் பின் அடி பயில்
...try, 2.9)
திதி நினைவு வெண்பா
H: 1 ஃ: 1 ட்பசியில் எண் 1 பக்கதில் ஆாபல் 'ே+1 தசித்திதியின் -நேசமுறுப் வேட் புடன் 11 விக்,கஃாப் எழுபத ஃபுடன்
= - -

Page 5

سے سے
சிவமயம்
அமரத்துவமண்டஅள்கள் ந. ஞானசிரோன்மணி விைத்தியகலாநிதி திரு. கந்தையா வேலா
வாழ்க்கை வரலாறு
8 s:
திருக்கோயில்கள் நிறையப் பெற்ற எமது தாய்நாடாம் இலங்கை கடவுள் மாமுனிவரினால் “திரு ஈழநாடு” என வர்ணனை செய்யப்பட்டதன் மூலம் பெருமைபெற்றது. எமது அழகிய ஈழமணித் திருநாட்டில் சைவமும் தமிழும் செழித்தோங்கியே வந்திருக்கிருக்கின்றது. பிரசித்திபெற்ற சிவாலயங்களையும் அம்மன் கோயில்களையும் விநாயகர், முருகன் முதலான தெய்வங்களுக்கான ஆலயங்களையும் மற்றும் பல்வேறு திருக்கோயில்களையும் காணக்கூடியதாக உள்ளது. இத்தகைய பெருமைபெற்ற இலங்கை மாதாவின் சிகரமாக அமைவது யாழ்ப்பாணம்.
யாழ்ப்பாணத்து சிறப்புமிகு ஊர்களுள் உயர்ந்தோங்கும் ஊர் உரும்பிராய் கல்வி, செல்வம், வீரம் என்பவற்றால் பொலிந்துள்ளது. இவ்வூரின் கண்ணியமும் சிறப்பும் மிக்க பரம்பரையே சிங்கைமாப்பானமுதலி பரம்பரை இப்பரம்பரையில் உதித்தவர் முருக உடையார். அவர் மகள் நாகமுத்து. நாகமுத்து அவர்களின் மகன் முருகேசு ஆவார். உரும்பிராயின் புகழ்புத்த இன்னுமொரு பரம்பரையில் தோன்றிய விநாயகர் மகள் சின்னப்பிள்ளை, முருகேசு அவர்கள் விநாயகர் மகள் சின்னபிள்ளை அவர்களை இல்லாளாகப் பெற்றார். இவர்களிருவருக்கும் உதித்த ஒன்பதின்மருள் எட்டாந்தோன்றல் கந்தையா அவர்கள். திரு கந்தையா அவர்கள் நெருங்கிய உறவினரும் உரும்பிராயின் பெருமையும் சிறப்பும் மிக்க பரம்பரையைச் சேர்ந்தவர்கள் சின்னக்குட்டி, அவர்களும் அவர் மனைவி செல்லமும் ஆவார். இவர்களுக்கு இரண்டாவது மகளாக உதித்த அன்னம்மா என்பவரை திரு. கந்தையா அவர்கள் மனைவியாகப் பெற்றார். இல்லறமே நல்லறம் என இன்புற்று வாழ்ந்தனர். இவர்களின் முதல் குழந்தையே அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள். அடுத்த குழந்தையே தவராணி ஆவார்.
அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் தமது ஆரம்பக்கல்வியை உரும்பிராய் சந்திரோதய வித்தியாசாலையிலும் பின்பு உரும்பிராய் இந்துக் கல்லூரியிலும் பயின்றார். பின்பு பல்கலைக்கழக புகுமுகப்பர்ட்சைக்காக யாழ் இந்துக்கல்லூரியில் தனது உயர்கல்வியைத் தொடர்ந்து குறிப்பிடப்பட்ட காலமாகிய இரு வருடங்கள் முடியும் முன்னரே விஷேட பரீட்சையொன்றில்சித்திபெற்று அதன்மூலம்யாழ் இந்துக்கல்லூரிக்கு பெரும் புகழைத்தேடிக்கொடுத்து முதலாவது மாணவனாகத் திகழ்ந்தார். அதைத்

Page 6
தொடர்ந்து கொழும்பு மருத்துவக்கல்லூரியில் தனது மருத்துவப்படிப்பை மேற்கொண்டு 1955ம் ஆண்டு வைத்தியத்துறையில் பட்டம் பெற்றார்.
உரும்பிராயில் கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் ழரீஞானவைரவப்பெருமானைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள்முருக உடையார் பரம்பரையினர். இறைபணி செய்து வருவதையும் சமூகத் தொண்டாற்றுவதையுமே தமது வாழ்வின் தலையாய கடமையாகக் கொண்டவர்கள் இவர்கள். இவ்வழித்தோன்றலில் வந்த அமரர் வேலாயுதபிள்ளை அவர்களது சேவையைத் தானும் தொடர்ந்தார். அவர் மற்றோர் கருமத்தை தன்பணி எனக்கொள்வதால் எல்லோரும் தம் கருமங்களுக்கு முதல்வராக அவரை மதித்து அமைத்து தலைமைப்பதவி வழங்கினர். இதனால் பதவி மீது துளியும் நாட்டமில்லாதவரை நாடி வந்தன பொறுப்பான பதவிகள்.
அமரர் வேலாயுதப்பிள்ளை அவர்களினால் முதன்முதலாக ஆரம்பிக்கப்பட்டது “ஈழத்து திருநெறி தமிழ்மன்றம்" ஆகும். இம்மன்றத்தின் உபதலைவராக செயற்பட்டு அம்மன்றத்தை திறம்படநடாத்த ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கி வழி நடத்தினார். அகில இலங்கை இந்துமாமன்றத்தின் உபதலைவராகவும், தமிழ்சங்கத்தின் உபகாப்பளராகவும், இலங்கை ஞானசம்பந்தர் இல்லத்தின் காப்பாளராகவும், கொழும்பு விவேகானந்தா சபையின் தலைராகவும், இலங்கை இந்து வித்தியா விருத்தி சபையின் தலைவராகவும், இலங்கை இராதாகிருஷ்ன கோயில் அபிவிருத்திச் சபையின் தலைவராகவும் மற்றும் சைவசித்தாந்த கோயில் உறுப்பினராகவும் இருந்து அச்சங்கங்கள் சிறப்பாக செயற்பட வழிவகுத்துள்ளார்.
இத்துடன் இவர் செய்த சமூகட்பணிகளும் எண்ணிலடங்காதவை. கொழும்பு வாழ் தமிழர் பணிக்குழு தலைவராகவும், இலங்கை தமிழ்ச் சங்கத்தின் உபகாப்பாளராகவும், யாழ் இந்துக்கல்லூரியின் பழையமானவர் சங்கப் போஷகராகவும், கொழும்பு(பம்பலப்பிட்டி) இந்துக் கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்க நலன் விரும்பி உறுப்பினராகவும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவராகவும், இராமனாதன் இந்துக்கல்லூரி உபபோஷகராகவும், T R. R. O ஆளுனர் சபை உறுப்பினராகவும் சமூகப்பணிகள் திறம்பட செயற்பட பேருதவி வழங்கினார். இவரது அனைத்து இறைபணிகளையும், சமூகப்பணிகளையும் சிறப்பிக்கும் முகமாக அன்னாருக்கு 1993-ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சின் அனுசரணையுடன் “ஞானசிரோன்மணி" எனும் பட்டம், அருள் மிகு திரு. கிருபானந்தவாரியார் அவர்களினால் கொழும்பு இராமகிருஷ்ண மண்டபத்தில் வழங்கப்பட்டது.
இவர் 1955 ஆம் ஆண்டு வைத்தியப்பட்டப்படிப்பை பூர்த்தி செய்து 1956 ஆம் ஆண்டுகாலி அரசினர் வைத்தியசாலையில் தனது வைத்திய சேவையை ஆரம்பித்து,

1964-ல் கொழும்பு கண் வைத்தியசாலையில் பணியாற்றினார். மென்மேலும் தனது பதவியில் உயர்வுபெற்று 1968 ஆம் ஆண்டில்"Torontoபல்கலைக்கழகத்தில் (Canada) வைத்திய நுண்ணுயிரியல் துறையிலும் Liverpool பல்கலைக்கழகத்தில் (England) சமூக சுகாதார நலத்துறையிலும் Diploma பட்டத்தை பெற்றார். பின்னர் தொற்று நோய் வைத்தியசாலை அங்கொடையிலும் Lady Ridgeway ஞாபகார்த்த சிறுவர் வைத்தியசாலையிலும் சமூக சுகாதார நல நுண்ணுயிரியல் துறையில் ஆலோசனை வழங்கும் நிபுணராகப் பணியாற்றினார். இவ்வாறு அரசாங்க சேவையில் பணியாற்றிய காலத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) அழைப்பை ஏற்று பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவுகளை வழங்கினார். 1983 ஆம் ஆண்டில் அரசாங்க சேவையிலிருந்து ஒய்வுபெற்ற வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்கள், 1994 ஆம் ஆண்டுவரை வடகொழும்பு மருத்துவக்கல்லூரியில் நுண்ணுரியியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றினார். இக்காலத்தில் யாழ்ப்பான பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றினார். இவர் தனது கடைசிக்காலம் வரை பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காக அரும்பாடுபட்டார். இவரது வைத்திய சேவையும் சமூகசேவையை அடிப்படையாகக் கொண்டே அமைந்தது.
அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் உரும்பிராய் உயர்குலத்தைச் சேர்ந்த விஸ்வநாதர்முருகேசபிள்ளைக்கும் சின்னப்பு பொன்னம்மா அவர்களுக்கும் ஏற்பட்ட இல்லற இணைப்பில் தோன்றிய பத்மனேஸ்வரியை 1965 ஆம் ஆண்டு மணந்து சுதாமதி, அமரநாதன், (வைத்தியர்)ழரீசைலேந்திரன், முரளிதரன், கோபிமனோகரன், கணேசானந்தன் எனும் ஆறு நன்மக்களைப் பெற்றார். இவரது அன்புச்சகோதரி தவராணி சீனிவாசகம் மகேந்திரன் அவர்களை மணந்து தூநகை,பண்மொழி என்ற இரு செல்வங்களைப்பெற்றார்.
அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் சமயபக்தியும் கொள்கையில் உறுதியும் குன்றாத நேர்மையும் சொல்லுரமும் உடையவர். கொடையும் தயையும் பிறவிக்குணமாய் உற்றவர். வாய்மையும் அன்பும் என்றும் அவரைவிட்டு அகலாது. அவர் தயவில் மேன்மையற்றோர் பலர்.
இவர் தனது முப்பத்தியிரண்டு வருட இல்லற இணைப்பைவிட்டு, ஈசுர வருஷம் ஐப்பசி மாதம் அபரபக்க ஏகாதசியும் மக நட்சத்திரமும் கூடிய (26-10-97) ஞாயிற்றுக்கிழமை விண்ணகம் சேர்ந்தார். இவரின் ஆன்மா சாந்தி அடைவதாகுக.
'பிறவிப் பெருங்கடல்நீந்துவர்நீந்தார்இறைவனடி சேராதார்" ஓம் சாந்திசாந்த சாந்தி
வழித்தோன்றல்கள். இணைந்தோர்.

Page 7
RAMAKRISHNAMESSION (Ceylon) 40, Ramakrishna Road, Wellawatta, Colombo - 6.
இரங்கல் செய்தி
வைத்தியகலாநிதி க.வேலாயுதபிள்ளை அவர்களது திடீர் மறைவு அனைவருக்கும் பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. அவரது மறைவு தமிழ் மக்கள் அனைவருக்குமே ஓர் பேரிழப்பாகும்.
எளிய தோற்றமும், மென்மையான பேச்சும் உடையவர் அவர். அவர் ஒரு சிறந்த கல்விமான். ஆனாலும் சிறிதும் கர்வமில்லாதவர். வயதில் மூத்தவர், இருந்தும் அனைவரிடமும் எளிதில் பழகக் கூடியவர். ஒரு பொறுப்புள்ள குடும்பத்தலைவர் அவர். அதே சமயத்தில் சமூகத் தொண்டுகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது சமயப் பற்று மிகவும் ஆழமானது.
கொழும்பு விவேகானந்த ச்பை, அகில இலங்கை இந்து மாமன்றம், கொழும்பு தமிழ்ச்சங்கம் போன்ற பல அமைப்புகளில் முக்கிய பொறுப்புக்களை வகித்துசேவையாற்றி வந்த அவர் ராமகிருஷ்ண மிஷன் பணிகளுக்கும் தனது முழு ஆதரவை நல்கி வந்தார். மிஷனின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்து கொள்வார் அவர்.
1993 ஆம் ஆண்டு நடைபெற்ற சுவாமி விவேகானந்தரது சிக்காகோ சொற்பொழிவுநூற்றாண்டு விழாவிலும், இந்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் இலங்கை விஜய நூற்றாண்டு விழாவிலும் அவர் ஆற்றிய பங்கைப் பாராட்டாமல் இருக்க முடியாது. பூரீ ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் மற்றும் பூரீ சாரதாதேவியார் மீது அவருக்கு அளவற்ற பக்தியும், ஈடுபாடும் இருந்தது. எங்கெல்லாம் நல்ல காரியங்கள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் அவரைக் காணலாம். உயர்ந்த பண்பும் பரந்த உள்ளமும் கொண்ட அவரது மறைவு ஈடுசெய்ய முடியாதது. மிகுந்த பொறுப்புள்ள தலைவராகப் பல நல்ல காரியங்களை ஆற்றிவந்த அவருக்கு, தமிழ்ச்சமூகம் என்றென்றைக்கும் கடமைப்பட்டது.
அவரது பிரிவால் வாடும்அவரது குடும்பத்தார். உற்றார், உறவினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
திரு. வேலாயுதப்பிள்ளை அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனமாரப் பிரார்த்திக்கிறோம்.
சுவாமி ஆத்மகனாநந்தா

坐_ சம்மாங்கோட்டார் பூரீமாணிக்க விநாயகர் கோவில் பிரதம குருக்கள் சிவாச்சார்யமணி சிவபரீபா.சிற்சபேசக் குருக்கள் அவர்களின்
அஞ்சலி
அமரர் க. வேலாயுதபிள்ளை
அமரர் க.வேலாயுதபிள்ளை அவர்கள் சம்மாங்கோட்டார் மாணிக்க விநாயகர் பக்தன். அவர் இக்கோயிலில் பல்லாண்டு காலமாக விநாயக சஷ்டி அபிடேகத்தைச் செய்யும் பாக்கியம் பெற்றுள்ளார். அத்துடன் திருவெம்பா காலத்தில் திருவெம்பா பாடல்களையும் சில சமயத்தில் பஞ்சபுராணம் ஒதுவதையும் தமது முக்கிய கடமையாகக் கொண்டவர்.
இதனால் நானும் இக்கோயில் தர்ம கர்த்தாக்களும் இவருடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்கும் உரியவராக விளங்கினார்.
இவருடைய சமய அறிவு, ஆற்றல், அடக்கம், சாந்தம் முதலிய குணாதிசயங்களையும் தனக்கென வாழாமல் பிறருக்காக வாழ்ந்த பெருந்தன்மையையும் எவராலும் போற்றாமலிருக்க முடியாது.
இதனால் அன்றோ எல்லா சமய சமூகஸ்தாபனங்களின் தலைமைப் பதவியை அன்றிப் பொறுப்புள்ள உயர் பதவிகளையும் ஏற்க வேண்டுமென்று எல்லோரும் விரும்பினார்கள்.
தனக்கென வாழாத்தன்மையுடையவரான சான்றோர்கள் சிலர் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரே காரணத்தால் தான் இந்த உலகம் அழியாமல் நிலை பெற்றிருக்கின்றது என்ற உண்மையை இங்குநினைகூரல் மிகவும் நன்று.
இவர் வாழ்க்கை நெறி எல்லாருக்கும் ஒரு வழிகாட்டியாக அமையும் என்பதில் ஐயம் இல்லை.
அவர் ஆத்மா சாந்தியடைய எம் பெருமான் மாணிக்க விநாயகரைப் பிரார்த்தனை செய்வோமாக.

Page 8
竺_
சிவமயம்
திருக்கேதீஸ்வரம் திருவாசகம் பூனிமத் சபாரத்தினம் சுவாமிகள் தொண்டர் சபை.
திடீர் என்று அணைந்த தீப ஒளி டாக்டர் க. வேலாயுதபிள்ளை அவர்கள்
தமிழர் நலனுக்காக தமிழர் நடவடிக்கைக் குழு தலைவராகப்பணியாற்றி சமாதானம் நிலவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
கல்வி அபிவிருத்திச் சங்கத்தலைவராக இருந்துதமிழர் கல்விக்காவும், பம்பலப்பிட்டி இரத்மலானை இந்துக் கல்லூரிகளின் முன்னேற்றத்திற்காகவும் அயராது உழைத்தார்.
விவேகானந்தசபை தலைவராகவும், இந்து மாமன்றத்தின் உபதலைவராகவும் பதவி வகித்து தமிழ் மக்களுக்கும், சைவுத்திற்கும் ஈடுசெய்ய முடியாத சேவைகள் ஆற்றினார்.
நாயன்மார்கள், ஞானிகள், அருளாளர்கள், சுவாமிகள், பக்தர்கள், அடியார்கள், அன்பர்களை மதித்துப் போற்றினார். ጎ
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார், மாணிக்கவாசக சுவாமிகள், மெய்கண்ட தேவநாயனார், சிவயோகசுவாமிகள், திருவாசகம் சபாரத்தினம் சுவாமிகள் இவர்களின் திருவடி வழிபாடு செய்வதற்காக பம்பலப்பிட்டி, சரஸ்வதி மண்டபத்தை கொடுத்து உதவினார்.
இப்படி அவரின் சேவைகள் சொல்லி முடியாதவை.
அன்பர் பணியிலே இன்பம் காணும் க. வேலாயுதபிள்ளை ஐயா அவர்கள் அறநெஞ்சினர் அன்புறு சிந்தையர், அகந்தையகற்றிய அற்புதபுனிதர், பக்தியுடைமை, பண்புடைமை, பணிவுடைமை என்பன இவரது முதுசொம்- இவர் இன்ப நிலையினர், எல்லோருக்கும் வாய்க்காத நற்பெரும்பேறுகள் பெற்றவர். நாம் இவற்றை மதித்துப் போற்றி வணங்குகிறோம்.
இறையடி சேர்ந்த டாக்டர் அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பூரீ
கெளரியம்பாள் சமேத திருக்கேதீஸ்வரப் பெருமானை அடிபணிந்து நிற்கின்றோம்.
த. துரைராசா,
செயலாளர்.

அமரர் வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை
C1)
(2)
(3)
நினைவஞ்சலி
மின்னாமல் முழங்காமல் வீழ்ந்தவிடி போலே, “வேலாயுத வைத்தியநற் கலாநிதியாம் மேலோன், மண்ணகத்துத் துன்பியல்சேர் வாழ்வுதனை நீத்து, மாதேவன் திருவடிக்கீழ் மகிழ்ந்திருக்கப் போனார்” என்ற செய்தி வந்தெமது இதயமதைத் தாக்க, எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியெண்ணி நெஞ்சம் புண்ணாகிப் போனதுவே என்பதன்றி, வேறு போக்கெதுவும் காணாத புன்னமநிலை யுற்றோம்!
உரும்பராய் தெற்கூரில் வேள்குலத்தோ ரான உத்தமநற் கந்தையா அன்னம்மா சோடி, திருவருளாற் பெற்றமகன் வேலாயுதபிள்ளை, செந்தமிழும் ஆங்கிலமும் இந்துவிலே கற்று பெருமிதமாய்க் கொழும்புப்பல் கழகமதிற் சேர்ந்து, பிரமாத சித்திபெற்று, விரிவுரைகள் செய்யும் அருங்கடமை வடகொழும்பு யாழ்ப்பாணத் தாற்றி, அனைவருக்கும் நல்வாழ்வை அறிமுகஞ்செய் தீரே!
வைத்தியநற் கலாநிதியாம் பட்டமது பெற்ற மாண்பினர்க்கோர் நல்லெடுத்துக் காட்டாக வாழ்ந்தீர், சித்தமதில் நற்பணிகள் செய்வது வாம் எண்ணம் செறிந்திருந்த தாலென்றும் நோய்த்தடுப்புச் செய்யும் உத்திகளைப் பொதுமக்கட்கு ணர்த்தியதி னோடு உற்சாக வார்த்தைசொல்லிச் சுகப்படுத்தி னிர்கள், வித்தகநல் விளக்காக யாவருக்குஞ் சேவை விருப்புடனே செய்துவந்த அருமையை யார்மறுப்பார்!

Page 9
(4)
(5)
கொழும்புவிவே காநந்த சபைத்தலைவ ராயும், கொழும் புரத் மலானையிந்துக் காப்பாள ராயும், செந்தமிழ் பணிக்குழுவின் நாயகமும் ஆகிச் செயல்புரிந்த நின்பெருமை செப்பிமுடி யாது; அழுங்குப்பிடிப் போரவலம் அகற்றுதற் காக, அரசுதிம்புத் தீர்வதனை மீளாய்வு காண அழுத்தியுரைத் தெப்பயனுங் காணாத சோர்வும் அகம் நெருடிக் கொண்டிருக்க, அகன்றீரோ? மாயம்!
பத்மனேஸ்வரிப் பாரி, தவராணித் தங்கை, பல்கலை தேர் நன்மக்கள், பாசமிகு சுற்றம், உத்தம நல் லறிஞருடன், அயலாரும் ஏங்கி உளம் பொருமித்தவித்திடவே உம்பருல குற்றீர்; வித்தகநல் மேதகையை, வேலாயுத மேலோய், விண்ணுலக விருந்த்ாகிப் பேரின்ப சாந்தி, உத்திடவே சிவன் கருணை தனைவேண்டு கின்றோம்; உங்களான்ம வருட்பார்வை குடும்பமதைக் காக்க!
ஆக்கம் - க. இ. சரவணமுத்து ( சாரதா)

அமரரின் மாணவன் ஒருவனின் அஞ்சலி
வைத்தியகலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்கள் காலமாகி விட்டார் என்ற செய்தி கிடைத்தது. என் மனதில் ஒர் அதிர்ச்சி, பிரிவுத்துயர். சில மணிநேரங்களின் பின் சிந்தித்து பார்த்தேன். ஆம், அவர் இறக்கவில்லை. அவருடன் பழகிய, எல்லோர் மனங்களிலும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
அவர் அறுபதுகளில் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைத்தியராக பணியாற்ற வந்தபோது எங்கள் குடும்பத்தின் ஓர் மிகச் சிறந்த நண்பரானார். அவர் தனது பதவி அந்தஸ்து என்பவற்றிற்கு அப்பால் ஏனைய மனிதர்களுடன் மிகச் சிறந்த உறவு நிலையைப் பேணி மனிதத்திற்கு மதிப்பளித்து வந்தார். எங்கள் குடும்பத்தினருடன் மட்டுமல்ல. நாம் வாழ்ந்த சுற்றத்துடனும், அவருடைய நோயாளிகளுடனும் இப்பேற்பட்ட நெருங்கிய உறவு நிலையையே பேணிவந்தார். இன்னும் கூட சாவகச்சேரியில் டாக்டரை தெரிந்தவர்கள் அவரின் சிறந்த பண்புகளை மறக்கவில்லை. எங்களுடைய வீட்டில் சொல்வார்கள். பளைபோன்ற தூர கிராமங்களிலிருந்து வரும் நோயாளிகள் டாக்டரை தேடிவந்து அவரை சந்தித்து சிகிச்சை பெற்று செல்ல நேரம் போனாலும் காத்து இருப்பார்களாம். அவர் கொழும்பில் வசித்த காலங்களில் கூட யாழ்ப்பாண மருத்துவக் கல்லூரிக்கு கடமையின் நிமித்தம் வரும்போது சாவகச்சேரியில் தனக்கு தெரிந்த எல்லோரைப்பற்றியும் விசாரிப்பார். விசாரிக்கும் பொழுது ஒவ்வொருவரிலும் உள்ள நல்ல குணங்களையே எடுத்துக் கூறுவார்.
நான் யாழ்ப்பாணம் மருத்துவக் கல்லூரியில் படிக்கும்போது அவரின் ஒரு மாணவனாக இருக்கும் வாய்ய்பு கிடைத்தது. அவர் ஒரு சுமுகமான ஆசிரிய மாணவ உறவைப் பேணிவந்தார். எல்லா மாணவர்களும் அவரின் நண்பர்கள் மாதிரி. விரிவுரை முடிந்து மண்டபத்திலிருந்து வெளியேறும் போது முடிந்தவரை எல்லா மாணவர்களையும் சந்தித்து தோளில் தட்டி கதைத்து விட்டே செல்வார்.
மிக நெருக்கடியான சூழல் யாழ்ப்பாணத்தில் நிலவிவந்த போது கொழும்பிலிருந்து வந்து விரிவுரைகள், செய்முறை பயிற்சிகள், பரீட்சைகள் எல்லாவற்றையும் உரிய நேரத்தில் செய்தார். அண்மை காலங்களில் யாழ். பல்கலைக்கழகத்தில் ஆய்வு கூடங்கள் சேதமடைந்திருந்தபோதும், தேவையான நுண்ணுயிரியல் செய்முறை பொருட்களை கொழும்பிலிருந்து எடுத்து சென்று தனது கடமையை செவ்வனே செய்து முடித்தார்.

Page 10
நுண்ணுயிரியல் பரீட்சை முடிந்த பின்பு மாணவர்களை சந்தித்து அவர்களுடைய பெறுபேறுகளைப் பற்றி அவர் கலந்துரையாடுவதுண்டு. மாணவர்கள் ஒன்று அல்லது இரண்டு புள்ளிகளால் அதிதிறமைச்சித்தியை பெறமுடியாது போகும்போது மிகவும் கவலைப்படுவார்.
இப்படியாக அவர் எல்லா நிறுவனங்களிலும் அமைதியாக ஆடம்பரமற்ற முறையில் தான் வாழ்ந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இறுதிவரை உழைத்து வந்தார். எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும் தன்னுடைய சமூகத்தின் உரிமைக்காக நேர்மயாக உறுதியாக குரல் கொடுத்து வந்தார். இந்த சந்தர்ப்பங்களில் தன்னைப் பற்றியோதன்னுடைய குடும்பத்தை பற்றியோ அவர் சிந்தித்ததில்லை. தமிழர்களுடைய தனித்துவத்தை, பண்பாட்டை மிகவும் உறுதியாக காத்து வந்தார்.
என்னுடைய வாழ்க்கை காலத்தில் நான் கண்ட சிறந்த சில மனிதர்களில் வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளையும் ஒருவர் என்றால் அது மிகையாகாது. அவர் நேர்மை, அன்பு, கடமை, உணர்வு, மனஉறுதி, அமைதியான சேவை போன்ற சிறந்த அம்சங்களை தனது வாழ்க்கையில் அமைத்து வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து இறைவனடி சேர்ந்து விட்டார். அவருடைய வாழ்க்கை முறை அவரை மனதார நேசித்தவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாக ஒர் ஒளிச் சுடராக மிளிர்ந்து கொண்டே இருக்கும். குறிப்பாக நாம் வாழும் சமூகத்தின் அரசியல்வாதிகளின் மனதில் வைத்திய கலாநிதி க. வேலாயுதபிள்ளை அவர்களின் வாழ்க்கை முறை ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகின்றேன்.
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்”
சுந்தரலிங்கம் பிறேமகிருஷ்ணா சாவகச்சேரி வடக்கு, சாவகச்சேரி.

s
சிவமயம்
அமரத்துவம் எய்திய கலாநிதி கந்தையா வேலாயுதபிள்ளை.
அமரத்துவம் எய்திய கலாநிதி கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் மூத்த உப தலைவராகப் பல ஆண்டு காலம் பதவி வகித்துள்ளார். அன்னார் தலைவரும் பிரதித்தலைவரும் இல்லாத சமயங்களில் பல தடவைகள் முகாமைத்துவ பேரவைக் கூட்டங்களுக்கும் நிறைவேற்றுக் குழுக்கூட்டங்களுக்கும் மூத்த உப தலைவர் என்ற முறையில் தலைமை தாங்கிக் கூட்டங்களைச் சிறப்பாக நடாத்தியுள்ளார்.
கலாநிதி அவர்கள் எமது மாமன்றத்தின் தலைமையகக் கட்டிடம் பூர்த்தியாவதற்குத் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தில் இம்மாமன்றப் பிரதிநிதியாகச் சென்ற சில ஆண்டுகளாகப் பணிபுரிந்துள்ளார். இவர் எமது மாமன்றத்தின் பல உபகுழுக்களில் அங்கத்துவம் வகித்து மிகவும் அக்கறையுடன் சேவையாற்றிய உத்தமராவார். சமூகநலன் குழுவிற்குத் தலைமை தாங்கிப் பல சமூக சேவைகளை ஆற்றுவதற்கு அஸ்திவாரம் இட்டு, முக்கியமாக இரத்மலானை இந்துக் கல்லூரி வளாகத்தில் ஏழைப் பிள்ளைகளுக்கும், அநாதைப் பிள்ளைகளுக்கும் ஒரு விடுதி அமைப்பதற்கு அரும்பாடுபட்டு அவ்விடுதி வேலைகள் பூர்த்தியாகு முன் எம் எல்லோரையும் விட்டு இறையடி சேர்ந்தமை மிகவும் வேதனைக்குரியது. அமரர் வேலாயுதபிள்ளை அவர்கள் பல ஆண்டு காலமாக கொழும்பு விவேகானந்தசபையின் தலைவராகப் பலரும் மெச்சும் வண்ணம் கடமையாற்றி சுவாமி விவேகானந்தஜியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்ட வைபவங்களை முன்னின்று திறம்பட நடாத்தியவராவார். சுவாமிஜி அவர்களின் இலங்கை விஜயத்தின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டஒழுங்குகள் யாவற்றையும் இறுதி மூச்சுவரை ஒழுங்கு செய்வதற்கு அரும் பாடுபட்ட இவர் விவேகானந்தசபையின் பல சமய விழாக்களை முன்நின்று நடாத்தியுள்ளார்.
கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்கள் இந்து வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராகச் சென்ற சில மாதங்களாக கடமையாற்றியுள்ளார். அவர் இத்தலைமைப் பதவியை ஏற்பதற்கு முன் இச்சங்கத்தின் செயலாளராகப் பலகாலம் பதவி வகித்து செய்த பணிகள் பல இவருடைய சேவை மனப்பான்மைக்குச் சான்றுபகரும்.

Page 11
இரத்மலானை இந்துக் கல்லூரியும், பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியும் ஆரம்பமாவதற்கு இந்து வித்தியா விருத்திச் சங்கம் பாடுபட்டது நாமெல்லோரும் அறிந்த விடயமாகும். பாடசாலைகளை அரசாங்கம் எடுத்த பின்பும் இவ்விரு பாடசாலைகளின் அபிவிருத்திக்காகக் கலாநிதி அவர்கள் மிகவும் சிரத்தையுடன் பாடுபட்டுள்ளார், முக்கியமாக 1983ஆம் ஆண்டு இனக்கலவரத்தை அடுத்து இரத்மலானை இந்துக் கல்லூரியை மீண்டும் இயங்க வைத்த பெருமை அமரர் வேலாயுதபிள்ளை அவர்களையே சாரும்.
மேலும் (TR. R.O) தமிழர் புனர்வாழ்வு நிவாரணக் கழகத்தின் ஆளுநராக இலங்கை வாழ் தமிழ் மக்களுக்குப் பணி புரிந்த இவர் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் பணிக்குழு தலைவராகவும் தமிழர் முன்னேற்றக் கழகத்தின் உப தலைவராகவும் இந்து பிரஜைகள் குழு உறுப்பினராகவும் அகதிகளின் பிரச்சனையையும் தமிழ் மக்களின் துன்பங்களையும் உலகறிய வைத்து அவர்களின் துயர்துடைக்க அல்லும் பகலும் உழைத்த ஓர் உத்தமராவர்.
கலாநிதி அவர்கள் இலவசமாக பல ஏழைமக்களுக்கு வைத்திய சிகிச்சை அளித்த பெரும் வள்ளலாவார். உடல் நலம் குன்றியிருந்த வேளையிலும் தமது சிரமத்தைப் பாராது யாழ்பல்கலைக்கழக வைத்திய பீடமாணவர்களுக்கு விரிவுரையாற்றுவதற்குக் கொழும்பிலிருந்து காலத்திற்குக் காலம் யாழ்ப்பாணம் சென்று பணியாற்றியமை இவர் எமது பிள்ளைகளின் கல்வியிலும் முன்னேற்றத்திலும் எவ்வளவு அக்கறை கொண்டுள்ளார் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றது.
சுருங்கக் கூறின் கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்கள் ஓர் உத்தமரான சைவப் பெரியாராகத் திகழ்ந்து சைவத்திற்கும் எமது இனத்திற்கும் அளப்பரிய தொண்டுகளை யாவரும் மெச்சும் வண்ணம் தனது கடைசி மூச்சுவரை ஆற்றி வந்துள்ளார். அன்னாரின் பிரிவு இந்நாட்டின் இந்து மக்களுக்கும், தமிழ் இனத்திற்கும் ஓர் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவர் விட்டுச் சென்ற வெற்றிடத்தை ஒருவராலும் நிரப்ப முடியாது.
எல்லோருக்கும் இனியவராகவும், எந்நேரமும் பிறருக்கு உதவும் உத்தமராகவும், சமய நெறிமுறை தவறாதவராகவும் ஒரு சிறந்த குடும்பத்தலைவராகவும், தமிழ் மக்களின் தொண்டராகவும் வாழ்ந்த பெரியார் கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்களின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக.
வி. கயிலாசபிள்ளை
தலைவர், அகிலஇலங்கை இந்து மாமன்றம்

芝、
சிவமயம்
பிரார்த்தித்து அஞ்சலிக்கிறோம்.
செயற்கரிய நற்பணிகளினால் நல்லோர் பலர் மனதில் குடியிருப்பவர் அமரர் வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்கள்.
இனியன பேசி இனியன ஆற்றி இனியன நினைத்து எல்லார்க்கும் இனியவராய் விளங்கியவர் அமரர் வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்கள். ஆனால் இன்று அவர் எம்மை விட்டுத் தூரப் போய்விட்டார். இனி அவருடைய திருமுகத்தைக் காண முடியாது. திருவார்த்தைகளைக் கேட்க முடியாது. ஆனால் அன்னாரின் தன்னலங் கருதாச் செயல்களை நன்றாக நினைவு கூரமுடியும்.
கொழும்பு விவேகானந்த சபையிலும் அகில இலங்கை இந்துமாமன்றத்திலும்
அன்னார் ஆற்றிய பணிகள் என்றும் நின்று நிலவக் கூடியவை. மற்றும் கல்வி சார் நிறுவனங்களிலும் பல்கலைக்கழகங்களிலும் அன்னாரின் நுட்பமான விரிவுரைகளைப் பயன் படுத்தியோர் பாக்கிய சாலிகளே. இந்த ஆண்டின் ஆரம்பத்திலே அன்னாரோடு நேரில் பேசி மகிழக் கூடிய வாய்ப்பினை சுன்னாகம் இராமநாதன் கல்லூரியிலே பெற்றேன். இதனை இன்றைக்கும் பெரும் பேறாகவே கருதுகிறேன். அன்னாரின் மறைவையொட்டி பகவத் கீதை வாக்குகளை நினைவுக்கு எடுப்பது மிகவும் பொருத்தமாகும்.
இவன் பிறப்பதும் இல்லை
இவன் ஒரு முறை இருந்து பின்னர்
இல்லாது போவதுமில்லை
இவன் பிறப்பற்றவன்! அனவரதன்!
சாசு வதன் !பழையோன்!
உடம்பு அழியுமேயன்றி
இவன் அழிய மாட்டான்.”
வைத்திய கலாநிதி வேலாயுதபிள்ளை அவர்களுக்கு மேற்படி வாக்கியங்கள் சாலப் பொருந்துவனவாகும்.
எனவே அமரத்துவம் அடைந்த அன்னாரின் நற் சேவைகளைப் போற்றி அஞ்சலிப்பதொன்றே எம்போன்றார் கடனாகும்.
தங்கம்மா அப்பாக்குட்டி தலைவர் துர்க்காதேவி தேவஸ்தானம் தெல்லிப்பழை,

Page 12
திருச்சற்றம்பலம்
விநாயகர் வணக்கம் வானுலகும் மன்னுலகும் வாழ மறைவாழப்
பான்மை தருசெய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய்
ஆனைமுகனைப் பரவியஞ்சலி செய்கிற்பாம்
திருமுறைத் திரட்டு முதலாம் திருமுறை புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
யறிவழிந்திட்டைம் மேலுந்தி அலமந்த போதாக அஞ்சேலென்
றருள் செய்வான் அமருங் கோயில் வலம்வந்த மடலூர்கள் நடமாட
முழவதிரமழையென் றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில்பார்க்கும் திருவையாறே
இரண்டாம் திருமுறை பாடல் வீணையர் பலபல சரிதையர்
எருதுகைத் தரு நட்டம் ஆடல் பேணுவ ரமரர்கள்
w வேண்டநஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈடமாவது இருங்கடற் கரையினி
லெழில் திகழ் மா தோட்டம் கேடிலாதகேதீச்சரந் தொழுதெழக்
கெடுமிடர் வினைதானே
முன்றாம் திருமுறை சந்தமாரகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினிலுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவன் காளத்தி
எந்தையாரினையடியென்மனத்துள்ளவே

நான்காம் திருமுறை சலம்பூ வொடுது பமறந் தறியேன்
தமிழோ டிசைபா டன்மறந்தறியேன் நலந்தீங்கினுமுன் னைமறந் தறியேன்
உன்னா மமென்னா வின்மறந்தறியேன் உலந்தார் தலையிற் பலிகொண் டுழல்வாய்
உடலுள்ளுறுசூலைதவிர்த் தருளாய் அலந்தே னடியே னதிகைக் கெடில
வீரட் டானத் துறையம் மானே
ஐந்தாம் திருமுறை விண்ணு ளார்தொழுதேத்தும் விளக்கினை
மண்ணு ளார்வினை தீர்க்கு மருந்தினைப் பண்ணு ளார்பயிலுந்திருக் கோளிலி
அண்ணலாரடியே தொழுதுய்ம்மினே
ஆறாம் திருமுறை அரியானை யந்தனர்தஞ் சிந்தை யானை
யருமறையினகத்தானையணுவை யார்க்குந் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கடங் கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனைகடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப்புலியூரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.
ஏழாம் திருமுறை
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை
போகமும் திருவும் புணர்ப்பானை பின்னை என் பிழையைப் பொறுப்பானை
பிழை எலாம் தவிரப் பணிப்பானை இன்ன தன்மையன் என்று அறிய ஒண்ணா
எம்மானை, எளிவந்த பிரானை அன்னம் வைகும் வயல் பழனத்து அணி
ஆருரானை மறக்கலும் ஆமே.

Page 13
எட்டாம் திருமுறை அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையேயாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவ திணியே.
ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பா ஒளிவளர் விளக்கேயுலப்பிலா வொன்றே
யுணர்வுசூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர்பளிங்கின்றிரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந் தேனே அளிவள ருள்ளத் தானந்தக் கனியே யம்பல மாடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கட லீந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தனர் வாழ்கின்ற சிற்றம்
பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பத்தாம் திருமுறை நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவவென்னு நாமத்தைச் சிந்தையுளேற்றப் பவமது தீரும் பரிசும் தற்றால்
அவமதி திரும் அறும்பிறப்பன்றோ.

பதினொராம் திருமுறை காலனையும் வென்றோம் கடுநரகங்கைகழன்றோம்
மேலை யிருவினையும் வேரறுத்தோம் - கோல அரனார் அவிந்தழில வெந்தியம் பெய்தான் சரனார விந்தங்கள் சார்ந்து
பன்னிரண்டாம் திருமுறை சொல்லுவது அறியேன் வாழி!
தோற்றிய தோற்றம் போற்றி வல்லைவந்து அருளி என்னை
வழித்தொண்டு கொண்டாய் போற்றி எல்லைஇல் இன்ப வெள்ளம்
எனக்கு அருள் செய்தாய் போற்றி தில்லை அம்பலத்துள் ஆடும்
சேவடி போற்றி! என்ன
திருச்சிற்றம்பலம்
திருப்புகழ் கைத்தல நிறைகனி அப்பமொ டவல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவ
கற்பகமென வினை கடிதேகும் மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமிபுதல்வனை
மட்டவிழ் மலர் கொடு பணிவேனே முத்தமிழடைவினைமுற்படு கிரிதனில்
முற்பட எழதிய முதல்வோனே முப்புரமெரி செய்த அச்சிவனுறைரதம் அச்சது பொடி செய்த அதிதிரா அத்துயரதுகொடு சுப்பிரமணி படும் அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளொடு அச்சிறு முருகனை
அக் கன மன மருள் பெருமாளே.
தருச்சிற்றம்பலம்

Page 14
9. பதினொராந்
திருச்சிற்றம்பலம்
பதினொராந் திருமுறை திருவாலவாயுடையார் அருளிச் செய்த திருமுகப் பாசுரம்
செந்தமிழ்ப் பாண்டி நாடாகிய திருவாலவாயில் திருக்கோயில் கொண்டிருக்குஞ் சிவபெருமான் திருவாலவாயுடையார். இவர் சங்கப் புலவர்களுடன் ஒரு புலவராக அமர்ந்திருந்து தமிழாராய்ந்தார். இப்பெருமான் இப்பாடலையன்றி இறையனார் களவியல் என்னும் அறுபது சூத்திரங்கள் கொண்ட அகப் பொருள் இலக்கண நூலையும் இயற்றியிருக்கிறார். மற்றும் தருமியென்னும் அந்தனண் பொருட்டுக், "கொங்குதேர் வாழ்க்கை” என்னும் பாடலை இயற்றினார். நக்கீரர் எதிர்த்தபொழுது அவரை இகழ்ந்து "அங்கங்குலைய அரிவாளில்” என்னும் பாடலை இயற்றியதாகவுங் கூறுவர். இப்பாடல் தம்முடைய அடியவராகிய பாணபத்திரருக்குப் பொருள் வழங்குமாறு சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதியதாகும்.
திருச்சிற்றம்பலம்
மதிமலி புரிசை மாடக் கூடல் பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற கன்னம் பயில்பொழில் ஆல வாயில் மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம் பருவக் கொண்மூப்படியெனப் பாவலர்க் குரிமையின் உரிமையின் உதவி யொளி திகழ் குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க பண்பா லியாழ்பயில் பாண பத்திரன் தன்போல் என்பால் அன்பன் தன்பாற் காண்பது கருதிப் போந்தனன் மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே.
திருச்சிற்றம்பலம்

திருமுறை காரைக்காலம்மையார்
அருளிச் செய்த
அற்புதத் திருவந்தாதி
மெய்யறிவு கைவரப்பெற்ற காரைக்காலம்மையார் முதன் முதலாகப் பாடியருளியது இவ்வற்புதத் திருவந்தாதியே என்பர். அற்புதத் திருவந்தாதி புதுமையான போக்குடையது. இவ்வந்தாதியின் சிறப்பினை நோக்கியே சான்றோர் இவ்வந்தாதிக்கு அற்புதத் திருவந்தாதி என்று பெயர் கொடுத்துள்ளனர். இவ்வந்தாதி ஒதுவதற்கு இனிமையும் எளிமையும் உடையது. அறிதற்கரிய சிவஞானத்தின் இயல்பைத் தெளிவாக விளக்குவது. மெய்யன்போடு ஒதுவோர் உள்ளத்தை இவ்வந்தாதி உருக்கும் இயல்புடையது. அம்மையார் தாம்பெற்ற திருவருள் மெய்யறிவினைத் தன்மை நிலையில் வைத்து உலகத்தார்க்கு அறிவுறுத்தும் பாடல்களும் சிவபிரானுடைய அருட்கோலங்களையும் திருவருட் செயல்களையும் எண்ணிச் சிவபிரானை முன்னிலைப்படுத்தி அழைத்து உரையாடி மகிழும் பாடல்களும் அனைவருக்கும் இன்பத்தையளிப்பன.
திருச்சிற்றம்பலம்
1. பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும் மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்
2. இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும் படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில் என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க் கன்பறா தென்னஞ் சவர்க்கு.
3. அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவதல்லாற் - பவர்ச்சடைமேற் பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க் காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்.
4. ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேளாமை - நீளாகம் செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம் எம்மையாட் கொண்ட இறை.

Page 15
O.
11.
12.
பதினொராந்
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே எந்தாய் என விரங்கும் எங்கள் மேல் வெந்துயரம் வந்தால் அதுமாற்று வான்.
வானத்தான் என்பாரும் என்கமற்றும்பர்கோன் தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான் முன்னஞ்சத் தாலிருண்ட மெய்யொளிசேர் கண்டத்தான் என்நெஞ்சத் தானென்பன் யான்.
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானேயக் கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணிற்ற அம்மானுக் காளாயி னேன்.
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன் ஆயினேன் அஃதன்றே யாமாறு - தூய புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான் அனற்கங்கை ஏற்றா னருள்.
அருளே உலகெலாம் ஆள்விப்பதீசன் அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும் எப்பொருளு மாவ தெனக்கு
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும் மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக் கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன் உண்டே எனக்கரிய தொன்று.
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன் ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண் கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர் அங்கையாற் காளாம் அது.
அதுவே பிரானாமா றாட்கொள்ளுமாறும் அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே பனிக்கணங்கு கண்ணியா ரொண்ணுதலின் மேலோர் தனிக்கணங்கு வைத்தார் தகவு.

திருமுறை
13.
4.
15.
16。
17.
18。
9.
20.
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப் புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர ஊர்ந்திடுமா நாகம் ஒரு நாள் மலைமகளைச் சார்ந்திடுமே லேபாவந் தான்.
தானே தனிநெஞ்சந் தன்னையுயக் கொள்வான் தானே பெருஞ்சேமஞ் செய்யுமால் - தானேயோர் பூணாகத் தாற்பொலிந்து பொங்கழல்சேர் நஞ்சுமிழும் நீணாகத் தானை நினைந்து.
நினைந்திருந்து வானவர்கள் நீள்மலராற் பாதம் புனைந்தும் அடிபொருந்த மாட்டார் - நினைந்திருந்து மின்செய்வான் செஞ்சடையாய் வேதியனே என்கின்றேற் கென்செய்வான் கொல்லோ இனி.
இனியோ நாம் உய்ந்தோம் இறைவன் அருள்சேர்ந்தோம் இனியோர் இடரில்லோம் நெஞ்சே - இனியோர் வினைக்கடலை யாக்குவிக்கும் மீளாப் பிறவிக் கனைக்கடலை நீந்தினோம் காண்.
காண்பார்க்குங் காணலாந் தன்மையனே கைதொழுது காண்பார்க்குங் காணலாங் காதலாற் - காண்பார்க்குச்
சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக் காதியாய் நின்ற அரன்.
அரனென்கோ நான்முகன் என்கோ அரிய பரனென்கோ பண்புணர மாட்டேன் - முரணழிய தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றானை யானவனை எம்மானை இன்று.
இன்று நமக்கெளிதே மாலுக்கும் நான்முகற்கும்
அன்றும் அளப்பரியன் ஆனானை - என்னுமோர்
மூவா மதியானை மூவே ழுலகங்கள் ஆவானைக் காணும் அறிவு.
அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம்
அப்பொருளுந் தானே அவன்.

Page 16
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
பதினொரா ந்
அவனே இருசுடர்தீ ஆகாசம் ஆவான் அவனே புவிபுனல்காற் றாவான் - அவனே இயமான னாய்அட்ட மூர்த்யுமாய் ஞான மயனாகி நின்றானும் வந்து.
வந்திதனைக் கொள்வதே யொக்குமிவ் வாளரவின்
சிந்தை யதுதெரிந்து காண்மினோ - வந்தோர் இராநீர் இருண்டனைய கண்டத்தீர் எங்கள் பிரானீரும் சென்னிப் பிறை.
பிறையும் புனலும் அனலரவுஞ் சூடும் இறைவர் எமக்கிரங்கா ரேனுங் - கறைமிடற்ற எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே எந்தையா உள்ள மிது.
இதுவன்றிே ஈசன் திருவுருவம் ஆமா றிதுவன்றே என்றனக்கோர் சேமம் - இதுவன்றே மின்னுஞ் சுடருருவாய் மீண்டாயென் சிந்தனைக்கே இன்னுஞ் சுழல்கின்ற திங்கு.
இங்கிருந்து சொல்லுவதென் எம்பெருமான் எண்ணாதே எங்கும் பலிதிரியும் எத்திறமும் - பொங்கிரவில் ஈமவனத் தாடுவதும் என்னுக்கென் றாராய்வோம் நாமவனைக் காணலுற்ற ஞான்று.
ஞான்ற குழற்சடைகள் பொன்வரைபோல் மின்னுவன போன்ற கறைமிடற்றான் பொன்மார்பின் - ஞான்றெங்கும் மிக்கயலே தோன்ற விளங்கி மிளிருமே அக்கயலே வைத்த அரவு:
அரவமொன் றாகத்து நீ நயந்து பூணேல் பரவித் தொழுதிரந்தோம் பன்னாள் - முரணழிய ஒன்னாதார் மூவெயிலும் ஒரம்பால் எய்தானே பொன்னாரம் மற்றொன்று பூண்.
பூணாக வொன்று புனைந்தொன்று பொங்கதளின் நாணாக மேல்மிளிர நன்கமைத்துக் - கோள்நாகம் பொன்முடிமேற் சூடுவது மெல்லாம் பொறியிலியேற் கென்முடிவதாக விவர்.

திருமுறை
29.
30.
3.
32.
33.
34.
35.
36.
இவரைப் பொருளுணர மாட்டாதார் எல்லாம் இவரை யிகழ்வதே கண்டீர் - இவர்தமது பூக்கோல மேனிப் பொடியூசி என்பணிந்த பேய்க்கோலங் கண்டார் பிறர்.
பிறரறிய லாகாப் பெருமையருந் தாமே பிறரறியும் பேரணர்வுந் தாமே - பிறருடைய என்பே அணிந்திரவில் தீயாடும் எம்மானார் வன்பேயும் தாமும் மகிழ்ந்து.
மகிழ்தி மடநெஞ்சே மானுடரில் நீயும் திகழ்தி பெருஞ்சேமஞ் சேர்ந்தாய் - இகழாதே யாரென்பே யேனும் அணிந்துழல்வார்க் காட்பட்ட பேரன்பே இன்னும் பெருக்கு
பெருகொளிய செஞ்சடைமேற் பிள்ளைப் பிறையின் ஒருகதிரே போந்தொழுகிற் றொக்கும் - தெரியின் முதற்கண்ணான் முப்புரங்கள் அன்றெரித்தான்மூவா நுதற்கண்ணான் தன்மார்பின் நூல்
நூலறிவு பேசி நுழைவிலா தார்திரிக நீல மணிமிடற்றான் நீர்மையே - மேலுலந்த தெக்கோலத் தெவ்வுருவாய் எத்தவங்கள் செய்வார்க்கும் அக்கோலத் தவ்வுருவே ஆம்.
ஆமா றறியாவே வல்வினைகள் அந்தரத்தே நாமாளென் றேத்தார் நகர்மூன்றும் - வேமா றொருகனையாற் செற்றானை உள்ளத்தால் உள்ளி அருகணையா தாரை யடும்.
அடுங்கண்டாய் வெண்மதியென் றஞ்சி இருள்போந் திடங்கொண் டிருக்கின்ற தொக்கும் - படங்கொள் அணிமிடற்ற பேழ்வாய் அரவசைத்தான் கோல மணிமிடற்றின் உள்ள மறு.
மறுவடைய கண்டத்தீர் வார்சடைமேல் நாகம் தெறுமென்று தேய்ந்துழலும் ஆ! ஆ! - உறுவான் தளரt தோடுமேல் தானதனை அஞ்சி வளருமோ பிள்ளை மதி.

Page 17
37.
38.
39.
40.
41.
42.
43.
44.
பதினொராந்
மதியா அடலவுணர் மாமதில் மூன்றட்ட மதியார் வளர்சடையினானை - மதியாலே என்பாக்கை யாலிகழா தேத்துவரேல் இவ்வுலகில் என்பாக்கை யாய்ப்பிறவார் ஈண்டு.
ஈண்டொளிசேர் வானத் தெழுமதியை வாளரவந் தீண்டச் சிறுகியதே போலாதே - பூண்டதோர் தாரேறு பாம்புடையான் மார்பில் தழைந்திலங்கு கூரேறு காரேனக் கொம்பு
கொம்பினையோர் பாகத்துக் கொண்ட குழகன் தன் அம்பவள மேனி அதுமுன்னஞ் - செம்பொன் அணிவரையே போலும் பொடியணிந்தால் வெள்ளி மணிவரையே போலும் மறித்து
மறித்து மடநெஞ்சே வாயாலுஞ் சொல்லிக் குறித்துத் தொழுதொண்டர் பாதங் - குறித்தொருவர் கொள்ளாத திங்கட் குறுங்கண்ணி கொண்டார்மாட் டுள்ளாதார் கூட்டம் ஒருவு
ஒருபால் உலகளந்த மாலவனாம் மற்றை ஒருபால் உமையவளாம் என்றால் - இருபாலும் நின்னுருவ மாக நிறந்தெரிய மாட்டோமால் நின்னுருவோ மின்னுருவோ நேர்ந்து.
நேர்ந்தரவங் கொள்ளச் சிறுகிற்றோ நீயதனை ஈர்ந்தளவே கொண்டிசைய வைத்தாயோ - பேர்ந்து வளங்குழவித் தாய்வளர மாட்டாதோ என்னோ இளங்குழவித் திங்க ளிது.
திங்க ளிதுசூடிச் சில்பலிக்கென் றுார்திரியேல் எங்கள் பெருமானே என்றிரந்து - பொங்கொளிய வானோர் விலக்காரேல் யாம்விலக்க வல்லமே தானே யறிவான் தனக்கு. w
தனக்கே அடியனாய்த் தன்னடைந்து வாழும் எனக்கே அருளாவா றென்கொல் - மனக்கினிய சீராளன் கங்கை மணவாளன் செம்மேனிப் பேராளன் வானோர் பிரான்.

திருமுறை
45.
46.
47.
48.
49.
50.
51.
52.
பிரானவனை நோக்கும் பெருநெறியே பேணிப் பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவனை எங்குற்றான் என்பீர்கள் என்போல்வார் சிந்தையினும் இங்குற்றான் காண்பார்க் கெளிது.
எளிய திதுவன்றே ஏழைகாள் யாதும் அளியீர் அறிவிலிர் ஆ ஆ- ஒளிகொள்மிடற் றெந்தையராப் பூண்டுழலும் எம்மானை உள்நினைந்த சிந்தையராய் வாழுந் திறம்.
திறத்தான் மடநெஞ்சே சென்றடைவதல்லால் பெறத்தானும் ஆதியோ பேதாய் - நிறத்த இருவடிக்கண் ஏழைக் கொருபாகம் ஈந்தான் திருவடிக்கட் சேருந் திரு.
திருமார்பில் ஏனச் செழுமருப்பைப் பார்க்கும் பெருமான் பிறைக்கொழுந்தை நோக்கும் - ஒருநாள் இதுமதியென் றொன்றாக இன்றளவுந் தேரா ததுமதியொன் றில்லா அரா.
அராவி வளைத்தனைய அங்குழவித் திங்கள் விராவு கதிர்விரிய ஒடி - விராவுதலால் பொன்னோடு வெள்ளிப் புரிபுரிந்தாற் போலாவே தன்னோடே யொப்பான் சடை.
சடைமேலக் கொன்றை தருகனிகள் போந்து புடைமேவித் தாழ்ந்தனவே போலும் - முடிமேல் வலப்பாலக் கோலமதி வைத்தான்றன் பங்கின் குலப்பாவை நீலக் குழல்.
குழலார் சிறுபுறத்துக் கோல்வளையைப் பாகத் தெழிலாக வைத்தேக வேண்டா - கழலார்ப்பப் பேரிரவில் ஈமப் பெருங்காட்டிற் பேயோடும் ஆரழல்வாய் நீயாடும் அங்கு.
அங்கண் முழுமதியஞ் செக்கர் அகல்வானத் தெங்கும் இனிதெழுந்தால் ஒவ்வாதே - செங்கண் திருமாலைப் பங்குடையான் செஞ்சடைமேல் வைத்த சிரமாலை தோன்றுவதோர் சீர்.

Page 18
53.
54.
55.
56.
57.
58.
59.
60.
பதினொராந்
சீரார்ந்த கொன்றை மலர் தழைப்பச் சேனுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - போர்ந்த நாண்பாம்பு கொண்சைத்த நம்மீசன் பொன்முடிதான் காண்பார்க்குச் செவ்வேயோர் கார்.
காருருவக் கண்டத்தெங் கண்ணுதலே எங்கொளித்தாய் ஒருருவாய் நின்னோ டுழிதருவான் - நீருருவ மேகத்தாற் செய்தனைய மேனியான் நின்னுடைய பாகத்தான் காணாமே பண்டு.
பண்டமரர் அஞ்சப் படுகடலின் நஞ்சுண்டு கண்டங் கறுத்ததுவும் அன்றியே - உண்டு பணியுறுவார் செஞ்சடைமேற் பால்மதியின் உள்ளே மணிமறுவாய்த் தோன்றும் வடு.
வடுவன் றெனக்கருதி நீமதித்தி யாயில் சுடுவெண் பொடிநிறத்தாய் சொல்லாய் - படுவெண் புலாற்றலையின் உள்ளூண் புறம்பேசக் கேட்போம் நிலாத்தலையிற் சூடுவாய் நீ.
நீயுலக மெல்லாம் இரப்பினும் நின்னுடைய தீய அரவொழியச் செல்கண்டாய் - தூய மடவரலார் வந்து பலியிடார் அஞ்சி விடவரவம் மேலாட மிக்கு
மிக்க முழங்கெரியும் வீங்கிய பொங்கிருளும் ஒக்க வுடனிருந்தால் ஒவ்வாதே - செக்கர்போல் ஆகத்தான் செஞ்சடையும் ஆங்கவன் தன் பொன்னுருவில் பாகத்தாள் பூங்குழலும் பண்பு.
பண்புணர மாட்டேன் நான் நீயே பணித்துக்காண் கண்புணரும் நெற்றிக் கறைக்கண்டா - பெண்புணரும் அவ்வுருவோ மாலுருவோ ஆனேற்றாய் நீறணிவ தெவ்வுருவோ நின்னுருவ மேல்.
மேலாய மேகங்கள் கூடியோர் பொன்விலங்கல்
போலாம் ஒளி புதைத்தால் ஒவ்வாதே - மாலாய கைம்மா மதக்களிற்றுக் காருரிவை போர்த்தபோ தம்மான் திருமேனி அன்று.

திருமுறை
61.
62.
63.
64.
65.
66.
67.
68.
அன்றுந் திருவுருவங் காணாதே ஆட்பட்டேன் இன்றுந் திருவுருவங் காண்கிலேன் - என்றுந்தான் எவ்அருவோ னும்பிரான் என்பார்கட் கென்னுரைக்கேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது.
ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகும் ஏதாகா தேதொக்கும் என்பதனை யாரறிவார் - பூதப்பால் வில்வேட னாகி விசயனோ டேற்றநாள் வல்வேட னான வடிவு.
வடிவுடைய செங்கதிர்க்கு மாறாய்ப் பகலே நெடிதுலவி நின்றெறிக்குங் கொல்லோ - கடியுலவு
சொன்முடிவொன் றில்லாத சோதியாய் சொல்லாயால்
நின்முடிமேல் திங்கள் நிலா.
நிலாவிலங்கு வெண்மதியை நேடிக்கொள் வான்போல் உலாவி உழிதருமா கொல்லோ - நிலாவிருந்து
செக்கரவ் வானமே ஒக்குந் திருமுடிக்கே
புக்கரவங் காலையே போன்று.
காலையே போன்றிலங்கும் மேனி கடும்பகலின் வேலையே போன்றிலங்கும் வெண்ணிறு - மாலையின் தாங்குருவே போலுஞ் சடைக்கற்றை மற்றவற்கு வீங்கிருளே போலும் மிடறு.
மிடற்றில் விடமுடையீர் உம்மிடற்றை நக்கி மிடற்றில் விடங்கொண்ட வாறே - மிடற்றகத்து மைத்தாம் இருள்போலும் வண்ணங் கரிதாலே பைத்தாடும் நும்மார்பிற் பாம்பு.
பாம்பும் மதியும் மடமானும் பாய்புலியுந் தாம்பயின்று தாழருவி தூங்குதலால் - ஆம்பொன் உருவடிவில் ஒங்கொளிசேர் கண்ணுதலான் கோலத் திருவடியின் மேய சிலம்பு.
சிலம்படியாள் ஊடலைத் தான் தவிர்ப்பான் வேண்டிச் சிலம்படிமேற் செவ்வரத்தஞ் சேர்த்தி - நலம்பெற் றெதிராய செக்கரினும் இக்கோலஞ் செய்தான் முதிரா மதியான் முடி.

Page 19
69.
70.
7.
72.
73.
74.
75.
76.
பதினொராந்
முடிமேற் கொடுமதியான் முக்கணான் நல்ல அடிமேற் கொடுமதியோங் கூற்றைப் - படிமேற் குனியவல மாமடிமை கொண்டாடப் பெற்றோம் இனியவலம் உண்டோ எமக்கு
எமக்கிதுவோ பேராசை என்றுந் தவிரா தெமக்கொருநாள் காட்டுதியோ எந்தாய் - அமைக்கவே போந்தெரிபாய்ந் தன்ன புரிசடையாய் பொங்கிவிரல் ஏந்தெரிபாய்ந்தாடும் இடம்.
இடப்பால வானத் தெழுமதியை நீயோர்
மடப்பாவை தன்னருகே வைத்தால் - இடப்பாகங்
கொண்டாள் மலைப்பாவை கூறொன்றுங் கண்டிலங்காண் கண்டாயே முக்கண்ணாய் கண்.
கண்டெந்தை என்றிறைஞ்சிக் கைப்பணியான் செய்யேனேல் அண்டம் பெறினும் அதுவேண்டேன் - துண்டஞ்சேர் விண்ணாளுந் திங்களாய் மிக்குலகம் ஏழினுக்குங் கண்ணாளா ஈதென் கருத்து.
கருத்தினால் நீகருதிற் றெல்லாம் உடனே
திருத்தலாஞ் சிக்கென நான் சொன்னேன் - பருத்தரங்க
வெள்ளநீரேற்றான் அடிக்கமலம் நீ விரும்பி உள்ளமே எப்போதும் ஒது.
ஓத நெடுங்கடல்கள் எத்தனையும் உய்த்தட்ட ஏது நிறைந்ததில்லை என்பரால் - பேதையர்கள் எண்ணா திடும்பலியால் என்னோ நிறைந்தவா கண்ணார் கபாலக் கலம்.
கலங்கு புனற்கங்கை யூடால லாலும் இலங்கு மதியியங்க லாலும் - நலங்கொள் பரிசுடையான் நீள் முடிமேற் பாம்பியங்க லாலும் விரிசடையாங் காணில் விசும்பு,
விசும்பில் விதியுடைய விண்ணோர் பணிந்து பசும்பொன் மணிமகுடந் தேய்ப்ப - முசிந்தெங்கும் எந்தாய் தழும்பேறியேபாவம் பொல்லாவாம் அந்தா மரைபோல் அடி.

திருமுறை
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
அடிபேரிற் பாதாளம் பேரும் அடிகள் முடிபேரின் மாமுகடு பேருங் - கடகம் மறிந்தாடு கைபேரில் வான்திசைகள் பேரும் அறிந்தாடும் ஆற்றா தரங்கு
அரங்கமாப் பேய்க்காடடில் ஆடுவான் வாளா இரங்குமோ எவ்வுயிர்க்கும் ஏழாய் - இரங்குமேல் என்னாக வையான் தான் எவ்வுலகம் ஈந்தளியான் பன்னாள் இரந்தாற் பணிந்து.
பணிந்தும் படர்சடையான் பாதங்கள் போதால் அணிந்தும் அணிந்தவரை ஏத்தத் - துணிந்தென்றும் எந்தையார்க் காட்செய்யப் பெற்ற இதுகொலோ சிந்தையார்க் குள்ள செருக்கு.
செருக்கினால் வெற்பெடுத்த எத்தனையோ திண்தோள் அரக்கனையும் முன்னின் றடர்த்த - திருத்தக்க மாலயனுங் காணா தரற்றி மகிழ்ந்தேத்தக் காலனையும் வென்றுதைத்த கால்.
காலனையும் வென்றோம் கடுநரகம் கைகழன்றோம் மேலை இருவினையும் வேரறுத்தோம் - கோல் அரணார் அவிந்தழிய வெந்தீயம் பெய்தான் சரணாரவிந்தங்கள் சார்ந்து.
சார்ந்தார்க்குப் பொற்கொழுந்தே ஒத்திலங்கிச் சாராது பேர்ந்தார்க்குத் தீக்கொடியின் பெற்றியதாம் - தேர்ந்துணரில் தாழ்சுடரோன் செங்கதிருஞ் சாயுந் தழல்வண்ணன் வீழ்சடையே என்றுரைக்கும் மின்.
மின்போலுஞ் செஞ்சடையான் மாலோடும் ஈண்டிசைந்தால் என்போலுங் காண்பார்கட் கென்றிரேல் - தன்போலும் பொற்குன்றும் நீல மணிக்குன்றுந் தாமுடனே நிற்கின்ற போலும் நெடிது.
நெடிதாய பொங்கெரியுந் தண்மதியும் நேரே
கடிதாங் கடுஞ்சுடரும் போலும் - கொடிதாக விண்டார்கள் மும்மதிலும் வெந்தீ யினிலழியக்
கண்டாலும் முக்கணாங் கண்.

Page 20
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
பதினொராந்
கண்ணாரக் கண்டுமென் கையாரக் கூப்பியும் எண்ணார எண்ணத்தால் எண்ணியும் - விண்ணோன் எரியாடி என்றென்றும் இன்புறுவன் கொல்லோ பெரியானைக் காணப் பெறின்.
பெறினும் பிறிதியாதும் வேண்டேம் நமக்கீ துறினும் உறாதொழியு மேனுஞ் - சிறிதுணர்த்தி மற்றொருகண் நெற்றிமேல் வைத்தான்றன் பேயாய நற்கணத்திலொன்றாய நாம்.
நாமாலை சூடியும் நம்மீசன் பொன்னடிக்கே பூமாலை கொண்டு புனைந்தன்பாய் - நாமோர் அறிவினையே பற்றினால் ஏற்றே தடுமே ஏறிவினையே என்னும் இருள்.
இருளின் உருவென்கோ மாமேக மென்கோ மருளின் மணிநீலம் என்கோ - அருளெமக்கு நன்றுடையாய் செஞ்சடைமேல் நக்கிலங்கு வெண்மதியம் ஒன்றுடையாய் கண்டத் தொளி.
ஒளிவி லிவன்மதனை ஒண்பொடியா நோக்கித் தெளிவுள்ள சிந்தையினிற் சேர்வாய் - ஒளிநஞ்சம் உண்டவா யஃதிருப்ப வுன்னுடைய கண்டமிருள் கொண்டவா றென்னிதனைக் கூறு.
கூறெமக்கீ தெந்தாய் குயிர்சடையை மீதழித்திட் டேற மிகப்பெருகின் என்செய்தி - சீறி விழித்துTரும் வாளரவும் வெண்மதியும் ஈர்த்துத் தெழித்தோடுங் கங்கைத் திரை.
திரைமருவு செஞ்சடையான் சேவடிக்கே ஆளாய் உரைமருவி யாமுணர்ந்தோங் கண்டீர் - தெரிமினோ இம்மைக்கும் அம்மைக்கு மெல்லாம் அமைந்தோமே எம்மைப் புறனுரைப்ப தென்
என்னை உடையானும் ஏகமாய் நின்றானுந் தன்னை அறியாத தன்மையனும் - பொன்னைச் சுருளாகச் செய்தனைய தூச்சடையான் வானோர்க்
கருளாக வைத்த அவன்.

திருமுறை
93.
94.
95.
96.
97.
98.
99.
100.
101.
அவன் கண்டாய் வானோர் பிரானாவான் என்றும்
அவன் கண்டாய் அம்பவள வண்ணன் - அவன் கண்டாய்
மைத்தமர்ந்த கண்டத்தான் மற்றவன்பால் நன்னெஞ்சே மெய்த்தமர்ந்தன் பாய் நீ விரும்பு.
விருப்பினால் நீபிரிய கில்லாயோ வேறா இருப்பிடமற்றில்லையோ என்னோ - பொருப்பன்மகள் மஞ்சுபோல் மால்விடையாய் நிற்பிரிந்து வேறிருக்க அஞ்சுமோ சொல்லாய் அவள்.
அவளோர் குலமங்கை பாகத் தகலாள் இவளோர் சலமகளும் ஈதே - தவளநீ றென்பணிவீர் என்றும் பிரிந்தறியீர் ஈங்கிவருள் அன்பணியார் சொல்லுமினிங் கார்.
ஆர்வல்லார் காண அரனவனை அன்பென்னும் போர்வை யதனாலே போர்த்தமைத்துச் - சீர்வல்ல தாயத்தால் நாமுந் தனிநெஞ்சினுள்ளடைத்து மாயத்தால் வைத்தோம் மறைத்து.
மறைத்லுகம் ஏழினிலும் வைத்தாயோ அன்றேல்
உறைப்போடும் உன்கைக்கொண் டாயோ - நிறைத்திட்
டுளைந்தெழுந்து நீயெரிப்ப மூவுலகும் உள்புக்
களைந்தெழுந்த செந்தீயழல்.
அழலாட அங்கை சிவந்ததோ அங்கை அழகால் அழல்சிவந்த வாறோ - கழலாடப் பேயோடு கானிற் பிறங்க அனலேந்தித் தீயாடு வாயிதனைச் செப்பு.
செப்பேந்திள முலையாள் காணவோ தீப்படுகாட் டப்பேய்க் கணமவைதாங் காணவோ - செப்பெனக்கொன் றாகத்தான் அங்காந் தணலுமிழும் ஐவாய நாகத்தா யாடுன் நடம்.
நடக்கிற் படிநடுங்கும் நோக்கில் திசைவேம் இடிக்கின் உலகனைத்தும் ஏங்கும் - அடுக்கல் பொருமேறோ ஆனேறோ பொன்னொப்பாய் நின்னே றுருமேறோ ஒன்றா உரை.
உரையினால் இம்மாலை அந்தாதி வெண்பாக் கரைவினாற் காரைக்காற் பேய்சொல் - பரவுவார் ஆராத அன்பினோ டண்ணலைச்சென் றேத்துவார் ரோத காதல் பிறந்து.
திருச்சிற்றம்பலம்

Page 21
笠_ பதினொராந் திருச்சிற்றம்பலம் சேரமான் பெருமான் நாயனார் அருளிச் செய்த திருக்கைலாய ஞான உலா
அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவராக விளங்கும் கழறிற்றறிவார் என்னும் மறுபெயருடைய சேரமான் பெருமாள் நாயனார் கல்வியறிவிலும் அதன் பயனாகிய சிவபக்தியிலுஞ் சிறந்து விளங்கினார். இதனால் தான் திருவாலவாயுடைய சிவபெருமானும் இவருக்குத் திருமுகம் எழுதியருளினார்.
சேரமான் பெருமாள் திருக்கைலைக்குச் செல்லும் வழியில் இவ்வுலாவை மிகுவிரைவாகப் பாடியருளினார். இதனால் இவர் மிகுவிரைவாகச் செய்யுள் இயற்றக்கூடிய ஆசுகவி யென்பது பெறப்படுகின்றது. இவரை அருணகிரிநாதரும் தம்முடைய திருப்புகழில், 'ஆதியந்தவுலா ஆசுபாடிய சேரர்' என்று ஆசுகவியாகவே குறிப்பிட்டுள்ளார். R
உலா என்பது தமிழில் உள்ள தொண்ணுாற்றாறு வகை நூல்களுள் ஒன்றாகும். சேரமான் பெருமாளுக்கு முன்னர் யாரும் உலா நூல் பாடியிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் இவரே முதன்முதலாக உலாநூல் பாடியவராகச் சான்றோர்களாற் கொள்ளப்பெறுகிறார். இவ்வுலா முதல்முதலாக எழுந்தது என்னுங் காரணம் பற்றியே இதற்கு 'ஆதி உலா என்றும் பெயர் வழங்குகிறது.
சேரமான் பெருமாள் திருக்குறளைக் கற்றுத் தேர்ந்தவரென்பது திருக்குறளை இவ்வுலாவில் எடுத்தாண்டிருப்பதால் பெறப்படும். சேரமான் பெருமாள் சிவவெருமான் திருமுன் அடைந்ததும் தாம் உலாப்பாடி யிருப்பதாகவும் அதனைக் கேட்டருள வேண்டும் என்றும் இறைவனிடம் விண்ணப்பித்தார். இறைவனுங் கூறுமாறு கட்டளையிடச் சிவபிரான் திருமுன்னே உலா அரங்கேற்றஞ் செய்யப்பட்டது.
சிவபெருமான் திருக்கைலையில் எழுந்தருளியிருக்கின்றார். தேவர்கள் இறைவனைக் காணவேண்டுமென்று பேரார்வங்கொண்டு திருக்கோயிலின்முன் சென்று நின்று வேண்டிக் கொள்ளுகிறார்கள். வேண்டுகோளுக் கிரங்கிய சிவபெருமான் ஒருநாள் தம்மையழகு செய்துகொண்டு வசுக்கள் போற்றி செய்யவும், முனிவர்கள் வாழ்த்துரை கூறவும், பன்னிரு கதிரவர்கள் பல்லாண்டு பாடவும், நாரதர் யாழ் வாசிக்கவும், மற்றும் பலவகையான சிறப்புக்களோடு திருவுலாப் புறப்பட்டார்.

திருமுறை
சிவபெருமான் திருவுலாப் புறப்பட்ட தெரு இனிய மொழிகளைப் பேசுந் தன்மையினராகிய பெண்களின் பேராரவாரத்தையுடையதாயிற்று. எழுவகைப் பருவ மாதர்களும் அப்பெருமானைக் கண்டு காதல் கொள்ளுகின்றனர்.
இறைவனைத் தலைவனாகவும் அவனருளை விரும்பிய மன்னுயிர்களை அத் தலைவன்பாற் காதல்கொண்டு மயங்கிய பெண்களாகவும் வைத்துப் பாடப்பெற்றது இத்திருக்கயிலாய ஞானஉலா.
இந்நூலினால் சிவபிரானுடைய முழுமுதல் தன்மையை சேரமான் பெருமாள் விளக்கிய திறம் அறிந்து இன்புறத்தக்கதாகும்.
இத் திருவுலாவே திருச்சிற்றம்பலக் கோவையார் போன்று செந்தமிழின்கண் முதன்முதல் தோன்றிய திருவுலா என எல்லாரானும் சிறப்பித்துச் சொல்லப்படும். மேலும் கைலைக்கண் அரங்கேற்றப்பட்ட இத்திருவுலா ஆங்குள்ள மாசாத்தனார் வாயிலாகத் திருப்பிடவூர்க்கு வந்து தமிழ்நாட்டில் உலவுவதாயிற்று. "சேரர் காவல்” (கஉ. வெள்ளரனை - ருஉ) எனத் தொடங்கும் திருப்பாட்டானுணரலாம்.
திருச்சிற்றம்பலம்
திருமாலும் நான்முகனுந் தேர்ந்துணரா தன்றங் கருமால் உற வழலாய் நின்ற - பெருமான்
பிறவாதே தோன்றினான் காணாதே காண்பான் துறவாதே யாக்கை துறந்தான்-முறைமையால்
ஆழாதே ஆழ்ந்தான் அகலா தகலியான் ஊழா லுயராதே ஓங்கினான்-சூழொளி நூல்
ஒதா துணர்ந்தான் நுணுகாது நுண்ணியான் யாதுமனுகா தணுகியான்-ஆதி
அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான் அரனாய் அழிப்பவனுந் தானே-பரனாய
தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான் மேவிய வாறே விதித்தமைத்தான்-ஒவாதே
எவ்வுருவில் யாரொருவர் உள்குவா ருள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான்-எவ்வுருவும்

Page 22
பதினொராந்
தாணேயாய் நின்றளிப்பான் தன்னிற் பிறிதுருவம் ஏனோர்க்குங் காண்பரிய எம்பெருமான்-ஆனாத
சீரார் சிவலோதந் தன்னுள் சிவபுரத்தில் ஏரார் திருக்கோயில் உள்ளிருப்ப-ஆராய்ந்து
செங்கண் அமரர் புறங்கடைக்கட் சென்றீண்டி எங்கட்குக் காட்சியருள் என்றிரப்ப-அங்கொருநாள்
பூமங்கை பொய்தீர் தரணி புகழ்மங்கை நாமங்கை யென்றிவர்கள் நன்கமைத்த-சேமங்கொள்
ஞானக் கொழுந்து நகராசன் தன்மடந்தை தேன்மொய்த்த குஞ்சியின்மேற் சித்திரிப்ப-ஊனமில்சீர்
நந்தா வனமலரும் மந்தா கினித்தடஞ்சேர் செந்தா மரைமலர் நூறாயிரத்தால்-நொந்தா
வயந்தன் தொடுத்மைத்த வாசிகை சூட்டி நயந்திகழும் நல்லுறுப்புக் கூட்டிப்-பயன்கொள்
குலமகளிர் செய்த கொழுஞ்சாந்தங் கொண்டு நலமலிய ஆகந் தழீஇக்-கலைமலிந்த
கற்பக மீன்ற கமழ்பட்டினையுடுத்துப் பொற்கழல்கள் கால்மேற் பொலிவித்து-விற்பகரும்
சூளாமணிசேர் முடிகவித்துச் சுட்டிசேர் வாளார் நுதற்பட்டம் மன்னுவித்துத்-தோளா
மணிமகர குண்டலங்கள் காதுக் கணிந்தாங் கணிவயிரக் கண்டிகை பொன்னாண்-பணிபெரிய
ஆர மவைபூண் டணிதிக முஞ்சன்ன வீரந் திருமார்பில் வில்லிலக-எருடைய
எண்டோட்கும் கேயூரம் பெய்துதர பந்தனமும் கண்டோர் மனமகிழக் கட்டுறீஇக்-கொண்டு
கடிசூத் திரம்புனைந்து கங்கணங்கைப் பெய்து வடிவுடைய கோலம் புனைந்தாங்-கடிநிலைமேல்
நந்திமா காளர் கடைகழிந்த போழ்தத்து வந்து வசுக்கள் இருக்குரைப்ப-அந்தமில்சீர்

திருமுறை
எண்ணருங் கீர்த்தி யெழுவர் இருடிகளும் அண்ணல்மேல்ஆசிகள் தாமுணர்த்த-ஒண்ணிறத்த
பன்னிருவர் ஆதித்தர் பல்லாண் டெடுத்திசைப்ப மன்னும் மகதியன்யாழ் வாசிப்பப்-பொன்னியலும்
அங்கி கமழ் தூபம் ஏந்த யமன்வந்து மங்கல வாசகத்தால் வாழ்த்துரைப்பச்-செங்கண்
நிருதி முதலோர் நிழற்கலன்கள் எந்த வருணன் மணிக்கலசந் தாங்கத்-தெருவெலாம்
வாயு நனிவிளக்க மாமழை நீர்தெளிப்பத் தூயசீர்ச் சோமன் குடையெடுப்ப-மேவியசிர்
ஈசானன் வந்தடைப்பை கைக்கொள்ள அச்சுனிகள் வாயார்ந்த மந்திரத்தால் வாழ்த்துரைப்பத்-தூய
உருத்திரர்கள் தோத்திரங்கள் சொல்லக் குபேரன் திருத்தகு மாநிதியஞ் சிந்தக்-கருத்தமைந்த
கங்கா நதியமுனை உள்ளுறுத்த தீர்த்தங்கள் பொங்கு கவரி புடையிரட்டத்-தங்கிய
பைந்நாகம் எட்டும் சுடரெடுப்பப் பைந்தறுகண் கைந்நாகம் எட்டும் கழல்வணங்க - மெய்ந்நாக
மேகம் விதானமாய் மின்னெலாஞ் சூழ்கொடியாய் மேகத் துருமு முரசறையப்-போகஞ்சேர் தும்புரு நாரதர்கள் பாடத் தொடர்ந்தெங்கும் கொம்புருவ நுண்ணிடையார் கூத்தாட - எம்பெருமான்
விண்ணோர் பணிய உயர்ந்த விளங்கொளிசேர் வெண்ணார் மழவிடையை மேல்கொண்டாங்-கெண்ணார்
கருத்துடைய பாரிடங்கள் காப்பொத்துச் செய்யத் திருக்கடைகள் ஏழ்கழிந்த போதில்-செருக்குடைய
சேனா பதிமயில்மேல் முன்செல்ல யானைமேல் ஆனாப்போர் இந்திரன் பின்பரட-ஆனாத
அன்னத்தே யேறி அயன்வலப்பால் கைபோதக் கன்னவிலுந் திண்டோட் கருடன்மேல்-மன்னிய

Page 23
பதினொராந்
மாலிடப்பாற் செல்ல மலரார் கணைஐந்து மேலிடப்பால் மென்கருப்பு வில்லிடப்பால்-ஏல்வுடைய சங்கணையும் முன்கைத் தடமுலையார் மேலெய்வான் கொங்கணையும் பூவாளி கோத்தமைத்த-ஜங்கணையான் காமன் கொடிப்படைமுன் போதக் கதக்காரி வாமன் புரவிமேல் வந்தணைய-நாமஞ்சேர் வேழ முகத்து விநாயகனை உள்ளுறுத்துச் சூழ்வளைக்கைத் தொண்டைவாய்க் கெண்டையொண்கண்-தாழ் கூந்தல்
மங்கை எழுவருஞ் சூழ மடநீலி சிங்க அடலேற்றின் மேற்செல்லத்-தங்கிய விச்சா தரர்இயக்கர் கின்னரர் கிம்புருடர் அச்சாரணர் அரக்க ரோடகரர்-எச்சார்வும்
சல்லரி தாளந் தகுணிதத் தத்தளகம் கல்லலகு கல்ல வடம்மொந்தை-நல்லிலயத் தட்டழி சங்கஞ் சலஞ்சலந் தண்ணுமை கட்டழியாப் பேரி கரதாளம்-கொட்டும் குடமுழவங் கொக்கரை வீணை குழல்யாழ் இடமாந் தடாரி படகம்-இடவிய மத்தளந் துந்துபி வாய்ந்த முருடிவற்றால் எத்திசை தோறும் எழுந்தியம்ப- ஒத்துடனே மங்கலம் பாடுவார் வந்திறைஞ்ச மல்லரும் கிங்கரரும் எங்குங் கிலுகிலுப்பத்-தங்கிய ஆறாம் இருதுவும் யோகும் அருந்தவமும் மாறாத முத்திரையும் மந்திரமும்-ஈறார்ந்த காலங்கள் மூன்றுங் கணமுங் குணங்களும் வால கிலியரும் வந்தீண்டி-மேலை இமையோர் பெருமானே போற்றி யெழில்சேர் உமையாள் மணவாளா போற்றி-எமையாளும்
தீயாடி போற்றி சிவனே அடிபோற்றி ஈசனே எந்தாய் இறைபோற்றி-தூயசீர்ச்
சங்கரனே போற்றி சடாமகுடத் தாய்போற்றி பொங்கரவா பொன்னங் கழல்போற்றி-அங்கொருநாள்

திருமுறை
ஆய விழுப்போர் அருச்சுனன் ஆற்றற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி-தூய
மலைமேலாய் போற்றி மயானத்தாய் வானோர் தலைமேலாய் போற்றிதாள் போற்றி-நிலைபோற்றி போற்றியெனப் பூமாரி பெய்து புலன்கலங்க நாற்றிசையும் எங்கும் நலம்பெருக-ஏற்றுக் கொடியும் பதாகையும் கொற்றக் குடையும் வடிவுடைய தொங்கலுஞ் சூழக்-கடிகமழும்
பூமாண் கருங்குழலார் உள்ளம் புதிதுண்பான் வாமான ஈசன் வரும்போழ்திற்-சேமேலே
குழாங்கள்
வாமான யீசன் மறுவில்சீர் வானவர்தம் கோமான் படைமுழக்கங் கேட்டலுமே-தூமாண்பில் வானநீர் தாங்கி மறையோம்பி வான்பிறையோ டுனமில் சூலம் உடையவாய்-ஈனமிலா வெள்ளை யணிதலால் வேழத் துரிபோர்த்த வள்ளலே போலும் வடிவுடைய-ஒள்ளிய
மாட நடுவில் மலரார் அமளியே கூடிய போர்க்கள மாக்குறித்துக்-கேடில் சிலம்பு பறையாகச் சேயரிக்கண் அம்பா விலங்கு கொடும்புருவம் வில்லா-நலந் திகழும் கூழைபின் தாழ வளை ஆர்ப்பக் கைபோந்து கேழ்கிளரும் அல்குலாந் தேருந்திச்-சூழொளிய கொங்கைமாப் பொங்கக் கொழுநர் மனங்கவர அங்கம் பொருதசைந்த ஆயிழையார்-செங்கேழற் பொற்கலசத் துள்ளால் மணிநீர் முகஞ்சேர்த்தி நற்பெருங் கோலம் மிகப்புனைந்து-பொற்புடைய
பேதை முதலாகப் பேரிளம்பெண் ஈறாக
மாதரவர் சேர மகிழ்ந்தீண்டிச்-சோதிசேர்
சூரிகையுஞ் சூட்டுஞ் சுளைகையுஞ் சுட்டிகையும் வாளிகையும் பொற்றோடும் மின்விலக-மாளிகையின்

Page 24
பதினொராந்
மேலேறி நின்று தொழுவார் துயர்கொண்டு மாலேறி நின்று மயங்குவார்-நூலேறு
தாமமே தந்து சடாதாரி நல்கானேல் யாமமேல் எம்மை அடுமென்பார்-காமவேள்
ஆமென்பார் அன்றென்பார் ஐயுறுவார் கையெறிவார் தாம்முன்னை நாணோடு சங்கிழப்பார்-பூமன்னும்
பொன்னரி மாலையைப் பூண்பாரப் பூண்கொண்டு துன்னரி மாலையாச் சூடுவார்-முன்னம்
ஒரு கண் எழுதிவிட் டொன்றெழுதா தோடித் தெருவம் புகுவார் திகைப்பார்-அருகிருந்த
கண்ணாடி மேற்பஞ்சு பெய்வார் கிளியென்று பண்ணாடிச் சொற்பந்துக் குற்றுரைப்பார்-அண்ணல்மேற்
கண்ணென்னும் மாசாலங் கோலிக் கருங்குழலார் திண்ண நிறைத்தாழ் திறந்திட்டார்-ஒண்ணிறத்த
பேதை
பேதைப் பருவம் பிழையாதாள் வெண்மணலால்
தூதைச் சிறுசோ றடுதொழிலாள்-தீதில்
இடையாலும் எக்கழுத்த மாட்டாள்-நலஞ்சேர் உடையாலும் உள்ளுருக்க கில்லாள்-நடையாலும்
கெளவைநோய் காளையரைச் செய்யாள் கதிர்முலைகள் எவ்வநோய் செய்யுந் தொழில்பூணாள்-செவ்வனேர்
நோக்கிலும் நோய்நோக்கம் நோக்காள் தன் செவ்வரயின் வாக்கும் பிறர்மனத்தை வஞ்சியாள்-பூக்குழலும்
பாடவந் தோன்ற முடியாள் இளவேய்த்தோள் ஆடவர் தம்மை அயர்வுசெய்யாள்-நாடொறும்
ஒன்றுரைத் தொன்றுன்னி ஒன்றுசெய் தொன்றின்கண் சென்ற மனத்தினளாஞ் சேயிழையாள்-நன்றாகத்
தாலி கழுத்தணிந்து சந்தனத்தால் மெய்பூசி நீல அறுவை விரித்துடுத்துக்-கோலஞ்சேர்

, , psihop
பந்தரிற் பாவைகொண்டாடுமிப் பாவைக்குத்
தந்தையார் என்றெருத்தி தான்வினவ-அந்தமில்சீர்
ஈசன் எரியாடி என்ன அவனையோர் காய்சின மால்விடைமேற் கண்ணுற்றுத்-தாய்சொன்ன
இக்கணக்கு நோக்காள் இவள்போல்வாள் காமன் நூல் நற்கணக்கின் மேற்சிறிதே நாட்செய்தாள்-பொற்புடைய
பெதும்பை
பேரொளிசேர் காட்சிப் பெதும்பைப் பிராயத்தான் காரொளிசேர் மஞ்ஞைக் கவினியலாள்-சீரொளிய
தாமரை ஒன்றின் இரண்டு குழையிரண்டு காமருவு கெண்டையோர் செந்தொண்டை-தூமருவு
முத்த முரிவெஞ் சிலைசுட்டி செம்பவளம் வைத்தது போலும் மதிமுகத்தாள்-ஒத்தமைந்த
கங்கணஞ் சேர்ந்திலங்கு கையாள்-கதிர்மணியின்
கிங்கிணி சேர்ந்த திருந்தடியாள்-ஒண்கேழல்
அந்துகில் சூழ்ந்தசைந்த அல்குலாள் ஆய்பொதியிற் சந்தனந்தோய்ந்த தடந்தோளாள்-வந்து
திடரிட்ட திண்வரைக்கண் செய்த முலையாள் கடல்பட்ட இன்னமுதம் அன்னாள்-மடல்பட்ட
மாலை வளாய குழலாள் மணம்நாறு சோலை யிளங்கிளிபோல் தூமொழியாள்-சாலவும்
ஞ்ைசனை செய்து மனங்கவரும் வாட்கண்ணுக் கஞ்சனத்தை யிட்டங் கழகாக்கி-எஞ்சா
மணியாரம்பூண்டாழி மெல்விரலிற் சேர்த்தி அணியார் வளைதோள் மேல் மின்ன-மணியார்த்த
தூவெண் மணற்கொண்டு தோழியருந் தானுமாய்க்
காமனுருவம் வரவெழுதிக்-காமன்
கருப்புச் சிலையும் மலரம்புந்தேரும் ஒருப்பட்டுடனெழுதும் போழ்தில்-விருப்பூரும்

Page 25
பதினொராந்
தேனமருங் கொன்றையந்தார்த் தீர்த்தன் சிவலோகன் வானமால் ஏற்றின்மேல் வந்தணையத்-தானமர
நன்றறிவார் சொன்ன நலந்தோற்று நாண்தோற்று நின்றறிவு தோற்று நிறைதோற்று-நன்றாகக்
கைவண்டுங் கண்வண்டும் ஒடக் கலைஒட நெய்விண்ட பூங்குழலாள் நின்றொழிந்தாள்-மொய்கொண்ட
மங்கை
மங்கை யிடங்கடவா மாண்பினாள் வானிழிந்த கங்கைச் சுழியனைய உந்தியாள்-தங்கிய
அங்கை கமலம் அடிகமலம் மான்நோக்கி கொங்கை கமலம் முகங்கமலம்-பொங்கெழிலார்
இட்டிடையும் வஞ்சி இரும்பணைத்தோள் வேயெழிலார் பட்டுடைய அல்குலுந் தேர்த்தட்டு-மட்டுவிரி
கூந்தல் அறல்பவளம் செய்யவாய் அவ்வாயில் ஏய்ந்த மணிமுறுவல் இன்முத்தம்-வாய்ந்தசிர்
வண்டு வளாய வளர்வா சிகைசூட்டிக் கண்டி கழுத்திற் கவின்சேர்த்திக்-குண்டலங்கள்
காதுக் கணிந்து கனமே கலைதிருத்தித் தீதில் செழுங்கோலஞ் சித்திரித்து-மாதராள்
பொற்கூட்டிற் பூவையை வாங்கி அதனோடும் சொற்கோட்டி கொண்டிருந்த ஏல்வைக்கண்-நற்கோட்டு
வெள்ளி விலங்கல்மேல் வீற்றிருந்த ஞாயிறுபோல் ஒள்ளிய மால்விடையை மேல்கொண்டு-தெள்ளியநீர்
தாழுஞ் சடையான் சடாமகுடந் தோன்றுதலும் வாழுமே மம்மர் மனத்தளாய்ச்-சூழொளியான்
தார்நோக்குந் தன்தாரும் நோக்கும் அவனுடைய ஏர்நோக்கும் தன்ன தெழில்நோக்கும்-பேரருளான்
தோள்நோக்குந் தன்தோளும் நோக்கும் அவன்மார்பின் நீள் நோக்கம் வைத்து நெடிதுயிர்த்து-நாண்நோக்கா

திருமுறை
துள்ளம் உருக ஒழியாத வேட்கையாம் வெள்ளத் திடையழுந்தி வெய்துயிர்த்தாள்-ஒள்ளிய
மடந்தை
தீந்தமிழின் தெய்வ வடிவாள் திருந்தியசீர் வாய்ந்த மடந்தைப் பிராயத்தாள்-ஏய்ந்தசிர்
ஈசன் சிலையும் எழில்வான் பவளமும் சேய்வலங்கை வேலுந் திரள்முத்தும்-பாசிலைய
வஞ்சியும் வேயும் வளர் தாமரைமொட்டும் மஞ்சில்வரு மாமதிபோல் மண்டலமும்-எஞ்சாப்
புருவமுஞ் செவ்வாயும் கண்ணு மெயிறும் உருவ நுசுப்பும்மென் தோளும்-மருவினிய
கொங்கையும் வாண்முகமு மாக்கொண்டாள் கோலஞ்சேர் பங்கயப் போதனைய சேவடியாள்-ஒண்கேழல்
வாழைத்தண் டன்ன குறங்கினாள் வாய்ந்தசிர் ஆரிதேர்த் தட்டனைய அல்குலாள்-ஊழித்
திருமதியம் மற்றொன்றாம் என்று முகத்தை உருவுடைய நாண்மீன்சூழ்ந்தாற்போற்-பெருகொளிய
முத்தாரங் கண்டத் தணிந்தாள் அணிகலங்கள் மொய்த்தார வாரம் மிகப்பெருகி-வித்தகத்தால்
கள்ளுங் கடாமுங் கலவையுங் கைபோந்திட் டுள்ளும் புறமுஞ் செறிவமைத்துத்-தெள்வொளிய
காளிங்கஞ் சோதி கிடப்பத் தொடுத்தமைத்த தாளிம்பத் தாமம் நுதல்சேர்த்தித்-தோளெங்கும்
தண்ணறுஞ் சந்தனங்கொண் டப்பிச் சதிர்சாந்தை வண்ணம் பெறமிசையே மட்டித்தாங்-கொண்ணுதலாள்
தன்னமர் தோழியர்கள் சூழத் தவிசேறிப் பின்னுமோர் காமரம் யாழமைத்து-மன்னும்
விடவண்ணக் கண்டத்து வேதியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதீண்-டடல்வல்ல

Page 26
பதினொராந்
வேல்வல்லான் வில்லல்லான் மெல்லியன்மேல் இட்ட மடல்வண்ணம் பாடும் பொழுதீண்-டடல்வல்ல வேல்வல்லான் வில்வல்லான் மெல்லியலார்க் கெஞ்ஞான்றும் மால்வல்லான் ஊர்கின்ற மால்விடையின்-கோல
மணியேறு கேட்டாங்கு நோக்குவாள் சால அணியேறு தோளானைக் கண்டாங்-கணியார்ந்த
கோட்டி ஒழிய எழுந்து குழைமுகத்தைக் கோட்டி நுதல்சிவப்ப வாய்துலக்கி-நாட்டார்கள்
எல்லாருங் கண்டார் எனக்கடவுள் இங்காயம் நல்லாய் படுமேற் படுமென்று-மெல்லவே
செல்ல லுறுஞ்சரணங் கம்பிக்குந் தன்னுறுநோய் சொல்லலுறுஞ் சொல்லி உடைசெறிக்கும்-நல்லாகம் காண லுறுங்கண்கள் நீர்மல்கும் காண்பார்முன் நாண லுறும்நெஞ்சம் ஒட்டாது-பூணாகம்
புல்லலுறும் அண்ணல்கை வாரானென் றிவ்வகையே அல்ல லுறுமழுந்தும் ஆழ்துயரால்-மெல்லியலாள்
தன்னுருவம் பூங்கொன்றைத் தார்கொள்ளத் தான்கொன்றைப் பொன்னுருவங் கொண்டு புலம்புற்றாள்-பின்னொருத்தி
அரிவை
செங்கேழல் தாமரைபோல் சீறடியாள் தீதிலா அங்கேழ் அரிவைப் பிராயத்தாள்-ஒண்கேழல்
திங்களுந் தாரகையும் வில்லுஞ் செழும்புயலும் தங்கொளிசேர் செவ்வாயும் உண்மையாற்-பொங்கொளிசேர் மின்னார்வான் காட்டும் முகவொளியாள் மெய்ம்மையே தன்னாவார் இல்லாத் தகைமையாள்-எந்நாளும் "இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பென்னும்-சொல்லாலே அல்குற்கு மேகலையைச் சூழ்ந்தாள் அணிமுலைமேல் மல்கிய சாந்தொடு பூண்புனைந்து-நல்கூர் இடையிடையே உள்ளுருகக் கண்டாள் எழிலார் நடைபெடை அன்னத்தை வென்றாள்-அடியிணைமேற்

திருமுறை
பாடகங் கொண்டு பரிசமைத்தாள் பன்மணிசேர் சூடகம் முன்கை தொடர்வித்தாள்-கேடில்சீர்ப்
பொன்னரி மாலை தலைக்கணிந்து பூண்கொண்டு மன்னுங் கழுத்தை மகிழ்வித்தாள்-பொன்னனாள்
இன்னிசை வீணையை வாங்கி இமையவர்தம் அண்ணல்மேல் தானிட்ட ஆசையால்-முன்னமே
பாடல் தொடங்கும் பொழுதிற் பரஞ்சோதி கேடிலா மால்விடைமேல் தோன்றுதலும்-கூடிய
இன்னிசையும் இப்பிறப்பும் பேணும் இருந்தமிழும் மன்னிய வீணையுங் கைவிட்டுப்-பொன்னனையீர்
இன்றன்றே காண்ப தெழில் நலங்கொள்ளேனேல் நன்றன்றே பெண்மை நமக்கென்று-சென்றவன் தன்
ஒண்களபம் ஆடும் ஒளிவாள்முகத்திரண்டு கண்களபம் ஆடுவபோற் கட்டுரைத்தும்-ஒண்கேழற்
கூந்தல் அவிழ்க்கும் முடிக்குங் கலைதிருத்தும் சாந்தந் திமிரும் முலையார்க்கும்-பூந்துகிலைச்
சூழும் அவிழ்க்குந் தொழுமழும் சோர்துயருற் றாழும் அழுந்தும் அயாவுயிர்க்கும்-சூழொளிய
அங்கை வளைதொழுது காத்தாள் கலைகாவாள் நங்கை யிவளும் நலந்தோற்றாள்-அங்கொருத்தி
தெரிவை
ஆரா அமுதம் அவயவம் பெற்றனைய சீரார் தெரிவைப் பிராயத்தாள்-ஒரா
மருளோசை இன்மழலை வாய்ச்சொலா வென்றும் இருள் தீர் புலரியே ஒப்பாள்-அருளாலே
வெப்பம் இளையவர்கட் காக்குதலால் உச்சியோ
டொப்பமையக் கொள்ளும் உருவத்தாள்-வெப்பந்தீர்ந்
தந்தளிர்போற் சேவடியும் அங்கையுஞ் செம்மையால் அந்திவான் காட்டும் அழகினாள்-அந்தமில்
சீரார் முகம்மதியம் ஆதலாற் சேயிழையாள் ஏரார் இரவின் எழில்கொண்டாள்-சீராரும்

Page 27
பதினொராந்
கண்ணார் பயோ தரமும் நுண்ணிடையும் உண்மையால் தண்ணிளங் காரின் சவிகொண்டாள்-வண்ணஞ்சேர்
மாந்தளிர் மேனி முருக்கிதழ்வாய் ஆதலால் வாய்ந்த இளவேனில் வண்மையாள்-மாந்தர் அறிவுடையீர் நின்மின்கள் அல்லார்போ மென்று பறையறைவ போலுஞ் சிலம்பு-முறைமையால்
சீரார் திருந்தடிமேற் சேர்த்தினாள் தேரல்குல் ஒரா தகலல் உறாதென்று-சீராலே
அந்துகிலும் மேகலையும் சூழ்ந்தாள் அணிமுலைகள் மைந்தர் மனங்கவரும் என்பதனால்-முந்துறவே பூங்கச்சி னாலடையப் பூட்டுறீஇப் பொற்றொடியால் காம்பொத்த தோளிணையைக் காப்பேவி-வாய்ந்தசிர் நற்கழுத்தை நல்லாரத் தால்மறைத்து காதுக்கு விற்பகருங் குண்டலங்கள் மேவுவித்து-மைப்பகரும் காவியங் கண்ணைக் கதந்தணிப்பாள் போலத்தன் தாவிய அஞ்சனத்தை முன்னூட்டி-யாவரையும் ஆகுலம் ஆக்கும் அழகினா ளன்னமும் கோகிலமும் போலுங் குணத்தினாள்-ஆகிப் பலகருதிக் கட்டிக் கரியவாய்க் கோடி அலர்சுமந்து கூழைய ஆகிக்-கலைகரந் துள்யாதும் இன்றிப் புறங்கமழ்ந்து கீழ் தாழ்ந்து கள்ளாவி நாறுங் கருங்குழலாள்-தெள்ளொளிய செங்கழுநீர்ப் பட்டுடுத்துச் செங்குங் குமம்எழுதி அங்கழுநீர்த் தாமம் நுதல்சேர்த்திப்-போங்கெழிலார் பொற்கவற்றின் வெள்ளிப் பலகை மணிச்சூது நற்கமைய நாட்டிப் பொரும்பொழுதில்-விற்பகிரும் தோளான் நிலைபேறு தோற்றங்கே டாய்நின்ற தாளான் சடாமகுடந் தோன்றுதலும்-கேளாய நானார் நடக்க நலத்தார்க் கிடையில்லை ஏணார் ஒழிக எழிலொழிக-பேணும்
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் ஏணார் ஒழிக எழிலொழிக-பேணும்

திருமுறை
குலத்தார் அகன்றிடுக குற்றத்தார் வம்மின் நலத்தீர் நினைமினீர் என்று-சொலற்கரிய
தேவாதி தேவன் சிவனாயில் தேன்கொன்றைப் பூவா ரலங்கல் அருளாது-போவானேல்
கண்டால் அறிவன் எனச்சொல்லிக் கைசோர்ந்து வண்டார்பூங் கோதை வளந்தோற்றாள் - ஒண்டாய
பேரிளம் பெண்
பெண்ணரசாய்த் தோன்றிய பேரிளம் பெண்மையாள் பண்ணமரும் இன்சொற் பணிமொழியாள் மண்ணின்மேல் கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே வுளவென்று-பண்டையோர் கட்டுரையை மேம்படுத்தாள் கண்ணாடி மண்டலம்போல் விட்டிலங்கு நல்லுகிர்சேர் மெல்விரலாள்-கட்டரவம் அஞ்சப் பரந்தகன்ற அல்குலாள் ஆய்நலத்த வஞ்சிக் கொடி நுடங்கும் நுண்ணிடையாள் எஞ்சாத
பொற்செப் பிரண்டு முகடு மணியழுத்தி வைத்தன போல வளர்ந்தேந்தி - ஒத்துச்
சுணங்கும் திதலையுஞ் சூழ்போந்து கண்டார்க் கணங்கும் அமுதமுமாய்த் தோன்றி-இணங்கொத்த
கொங்கையாள் கோலங்கட் கெல்லாமோர் கோலமாம் நங்கையாள் நாகிளவேய்த் தோளினாள் - அங்கையாற்
காந்தட் குலம்பழித்தாள் காமவேள் காதலாள் சாந்தம் இலங்கும் அகலத்தாள்-வாய்ந்துடனே
எய்ந்து குவிந்து திரண்டு மறிந்திருபால் தேய்ந்து துடித்த செழும்பவளம் - காய்ந்திலங்கி
முத்தமுந் தேனும் பொதிந்து முனிவரையும் சித்தந் திறைகொள்ளுந் செவ்வாயாள் - ஒத்து
வரிகிடந் தஞ்சனம் ஆடி மணிகள் உருவம் நடுவுடைய வாகிப் - பெருகிய
தகண்ணங் கயலுஞ் சலஞ்சலமுந் தோன்றுதலால் வண்ணங் கடலனைய வாட்கண்ணாள் - ஒண்ணிறத்த

Page 28
பதினொராந்
குண்டலஞ்சேர் காதினாள் கோலக் குளிர்மதிய மண்டலமே போலும் மதிமுகத்தாள் - வண்டலம்ப
யோசனை நாறு குழலாள் ஒளிநுதல்மேல் வாசிகை கொண்டு வடிவமைத்தாள் - மாசில்சீர்ப்
பாதாதி கேசம் பழிப்பிலாள் பாங்கமைந்த சீதாரி கொண்டு தன் மெய்புகைத்தாள் - மாதார்ந்த
பண்கவருஞ் சொல்லார்பல் லாண்டேத்தப் பாயொளிசேர் வெண்கவரி வெள்ளத் திடையிலிருந்து-ஒண்கேழற்
கண்ணவனை அல்லாது காணா செவியவன தெண்ணருஞ்சீர் அல்ல திசைகொள்ளா-அண்ணல்
கழலடி அல்லது கைதொழா அஃதான் றழலங்கைக் கொண்டான்மாட்டன்பென்-றெழிலுடைய வெண்பா விரித்துரைக்கும் போழ்தில் விளங்கொளிசேர் கண்பாவு நெற்றிக் கறைக்கண்டன்-விண்பால்
அரியரணஞ் செற்றாங் கலையுனலும் பாம்பும் புரிசடைமேல் வைத்த புராணன்-எரியிரவில்
ஆடும் இறைவன் அமரர்குழாம் தற்சூழ மாட மறுகில் வரக்கண்டு-கேடில்சீர்
வண்ணச் சிலம்படி மாதரார் தாமுண்ட கண்ணெச்சில் எம்மையே ஊட்டுவான்-அண்ணலே
வந்தாய் வளைகவர்ந்தாய் மாலும் அருந்துயரும் தந்தாய் இதுவோ தகவென்று-நொந்தாள்போற்
கட்டுரைத்துக் கைசோர்ந்தகமுருகி மெய்வெளுத்து மட்டிவரும் பூங்கோதை மால்கொண்டாள்-கொட்டிமைசேர்
பண்ணாரும் இன்சொற் பணைப்பெருந்தோட் செந்துவர் வாய்ப் பெண்ணார வாரம் பெரிதன்றே-விண்ணோங்கி
மஞ்சடையும் நீள்குடுமி வாள்நிலை வீற்றிருந்த செஞ்சடையான் போந்த தெரு.
பெண்ணிர்மை காமின் பெருந்தோள் இணைகாமின் உண்ணிர்மை மேகலையும் உள்படுமின் - தெண்ணிரக்
காரேறு கொன்றையந்தார்க் காவாலி கட்டங்கன் ஊரேறு போந்த துலா.
திருச்சிற்றம்பலம்.

திருமுறை
நக்கீரதேவ நாயனார் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை
திருச்சிற்றம்பலம்
(ஆற்றுப்படை என்பதன் பொருள் வழிப்படுத்துதல் என்பதாகும். திருமுருகாற்றுப்படை என்னும் இந்நூல் திருமுருகனுடைய திருவருளைப் பெற்றான் ஒருவன் பெறாதானாகிய ஒருவனை அக்கடவுளிடத்தே ஆற்றுப்படுத்துவதாகப் பாடப்பட்டதாகும். இதன் கண் முதலில் முருகப் பெருமானுடைய தலைமைத் தன்மையின் சிறப்பினைக் கூறிப் பிறகு அப்பெருமானுடைய திருவுருவச் சிறப்பும், அப்பெருமானை வழிபட்டுத் தேவமகளிர் ஆடுஞ் சிறப்பினையும் திருப்பரங்குன்றத்துப் பெருமையும், பிறகு திருச்சீரலைவாயின் கண் வீற்றிருக்கும் அம் முருகப்பெருமானுடைய ஆறுமுகங்களும் பன்னிரண்டு கைகளும் அமைந்திருப்பதை விரிக்கும் வகையால் அவர் இயற்றும் ஐந்தொழிற் சிறப்பும், திருவாவினன் குடியின்கண் அப்பெருமானைக் கண்டு வழிபடற்கு முனிவர் தேவர் முதலியோர் வந்து சேருங் காட்சியும், திருவேரகத்தின் கண் இரு பிறப்பாளர் முருகப்பெருமானைப் போற்றுஞ் சிறப்பும் குன்றுகள் தோறும் முருகப் பெருமானுக்கு வேல்மகன் ஆடும் வெறியாட்டும் பிறசெய்திகளும் அழகுற விரித்தோதப்பட்டுள்ளன.)
திருச்சிற்றம்பலம்
திருப்பரங்குன்றம்
உலகம் உவக்க வலனேர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு ஒவற இமைக்குஞ் சேண் விளங் கவிரொளி உறுநர்த் தாங்கிய மதனுடை நோன்தாள் செறுநர்த் தேய்த்த செல்உறழ் தடக்கை மறுவில் கற்பின் வாணுதல் கணவன் கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை வாள்போ விசும்பின் வள்உறை சிதறித் தலைப்பெயல் தலைஇய தண்ணறுங் கானத் திருள்படப் பொதுளிய பரா அரை மரா அத் துருள் பூந் தண்டார் புரளும் மார்பினன் மால்வரை நிவந்த சேணுயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண்செஞ்சீறடிக்

Page 29
தி
G
பதினொராந்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோள் கோபத் தன்ன தோயரப் பூந்துகில் பல்காசு நிரைத்த சில்காழ் அல்குல் கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம்புனை அவிரிழைச் சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணையீர் ஒதிச் செங்கால் வெட்சிச் சீறிதழ் இடையிடுபு பைந்தாள் குவளைத் தூவிதழ் கிள்ளித் தெய்வ உத்தியொடு வலம்புரி வயின்வைத்துத் திலகம் தைஇய தேங்கமழ் திருநுதல் மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் துவர முடித்த துகளறு முச்சிப் பெருந்தண் சண்பகம் செரீஇக் கருந்தகட் டுளைப்பூ மருதின் ஒள்ளினர் அட்டிக் கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும் பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண்காது நிறைந்த பிண்டி ஒண்தளிர் நுண்பூண் ஆகம் திளைப்பத் திண்காழ் நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை தேங்கமழ் மருதினர் கடுப்பக் கோங்கின் குவிமுகிழ் இளமுலைக் கொட்டி விரிமலர் வேங்கை நுண்தா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் றேத்திப் பலருடன் சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச் சூரர மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன்பயில் அடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள் பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார்முதிர் பனிக்கடல் கலங்கஉள் புக்குச் சூர் முதல் தடிந்த சுடரிலை நெடுவே லுலறிய கதுப்பின் பிறழ்பல் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கண் சூர்த்த நோக்கின் கழல்கண் கூகையொடு கடும்பாம்பு தூங்கப் பெருமுலைஅலைக்கும் காதின் பிணர்மோட்

திருமுறை
டுருகெழு செலவின் அஞ்சுவரு பேய்மகள் குருதி ஆடிய கூருகிர்க் கொடுவிரல் கண்தொட்டு உண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்தொடித் தடக்கையின் ஏந்தி வெருவர வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபேர் யாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல்வலம் அடங்கக் கவிழினர் மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும் செலவுநீ நயந்தனை ஆயின் பலவுடன் நன்னர் நெஞ்சத்து இன்நசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே செருப்புகன்று எடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயில் திருவீற்றிருந்த தீ துதீர் நியமத்து மாடமலி மறுகில் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி எல்படக் கண்போல் மலர்ந்த காமர் சுனைமலர் அம்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும் குன்றமர்ந்துறைதலும் உரியன்; அதா அன்று,
திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுஆழ் வரிநுதல்
வாடா மாலை ஓடையொடு துயல்வரப்
படுமணி இரட்டும் மருங்கின் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரும் மொய்ம்பின் கால்கிளர்ந் தன்ன வேழம் மேல்கொண் டைவேறு உருலின் செய்வினை முற்றிய
பொடு வி · ማ .”..wr| ፳ሖ ms ,f` . .۱

Page 30
பதினொராந்
மின் உறழ் இமைப்பில் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண் விளங்கியற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தாவில் கொள்கைத் தம்தொழில் முடிமார் மனன்நேர் பெழுதரு வாள்நிற முகனே மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம் ஒருமுகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே ஒருமுகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசைவிளக்கும்மே ஒருமுகம் செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே ஒருமுகம் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே ஆங்குஅம் மூவிரு முகனும் முறைநவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பில் செம்பொறி வாங்கிய மொய்ம்பில் சுடர்விடுபு வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள் விண்செலல் மரபின் ஐயர்க் கேந்தியது ஒருகை உக்கம் சேர்த்தியது ஒருகை நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயது ஒருகை அங்குசம் கடாவ ஒருகை இருகை ஐயிரு வட்டமொடு எஃகுவலம் திரிப்ப ஒருகை மார்பொடு விளங்க ஒருகை தாரொடு பொலிய ஒருகை கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒருகை பாடின் படுமணி இரட்ட ஒருகை நீல்நிற விசும்பின் மலிதுளி பொழிய ஒருகை வான் அர மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ் வயிரெழுந் திசைப்ப வால்வளை நரல உரம்தலைக் கொண்ட உருமிடி முரசமொடு

பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ விசும்பா றாக விரைசெலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பே; அதா அன்று,
திருவாவினன்குடி
சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால்நரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன்கெடு மார்பின் என்பெழுந்து இயங்கும் யாக்கையர் நன்பகல் பலவுடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம்வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடுஞ்சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனியில் காட்சி முனிவர் முன்புகப் புகைமுகந் தன்ன மாசில் தூவுடை முகைவாய் அவிழ்ந்த தகைசூழ் ஆகத்துச் செவிநேர்பு வைத்த செய்வுறு திவவின் நல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின் மென்மொழி மேவலர் இன்னரம் புளர நோயின் றியன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்தொறும் பொன்னுரை கடுக்குந் திதலையர் இன்னகைப் பருமம் தாங்கிய பணிந்தேந்தல்குல் மாசில் மகளிரொடு மறுவின்றி விளங்கக் கடுவோ டொடுங்கிய தூம்புடை வாலெயிற் றழலென உயிர்க்கும் அஞ்சுவரு கடுந்திறல் பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு வலவயின் உயரிய பலர்புகழ் திணிதோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக்கண் மூவெயில் முருக்கிய முரண்மிகு செல்வனும் நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல்

Page 31
பதினொராத்
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத் தீரிரண் டேந்திய மருப்பின் எழில்நடைத் தாழ்பெருந் தடக்கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக்கிளர் செல்வனும் நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்றுபுரி கொள்கைப் பலர்புகழ் மூவருந் தலைவர் ஆக ஏமுறு ஞாலம் தன்னில் தோன்றித் தாமரை பயந்த தாவில் ஊழி நான்முக ஒருவற் சுட்டிக் காண்வரப் பகலில் தோன்றும் இகலில் காட்சி நால்வே றியற்கைப் பதினொரு மூவரொ டொன்பதிற் றிரட்டி உயர்நிலை பெறீஇயர் மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு வளிகிளர்ந் தன்ன செலவினர் வளியிடைத் தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட உருமிடித் தன்ன குரலினர் விழுமிய உறுகுறை மருங்கில்தம் பெருமுறை கொண்மார் அந்தரக் கொட்பினர் வந்துடன் காணத் தாவில் கொள்கை மடந்தையொடு சில்நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்; அதா அன்று.
திருவேரகம்
இருமூன் றெய்திய இயல்பினின் வழா அ திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி அறுநான் கிரட்டி இளமை நல்லியாண் டாறினிற் கழிப்பிய அறன்நவில் கொள்கை மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத் திருபிறப்பாளர் பொழுதநிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந் தாறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியல் மருங்கின் நலிலப்பாடி விரையுறு நறுமலர் எந்திப் பெரிதுவந் தேரகத் துறைதலும் உரியன்; அதாஅன்று,

திருமுறை
குன்றுதோறாடல்
பைங்கொடி நறைக்காய் இடையிடுபு வேலன் அம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூதாளந் தொடுத்த கண்ணியன் நறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பின் கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர் நீடமை விளைந்த தேக்கள் தேறல் குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச் சிறுபறைக் குரவை அயர விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலையுடை நறும்பூச் செங்கால் மராஅத்த வாலினர்இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ. மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ்வரைச் செயலைத் தண்தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும்பல் இயத்தன் தகரன் மஞ்ஞையன் புகரில் சேவலம் கொடியன் நெடியன் தொடியணி தோளன் நரம்பார்த் தன்ன இன்குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன்நேர்பு துகிலினன் முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்தோள் பல்பினை தழீஇத் தலைத்தந்து குன்றுதோ றாடலும் நின்றதன் பண்பே, அதா அன்று.
பழமுதிர்ச்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும் ஆர்வலர் எத்த மேவரு நிலையினும்

Page 32
பதினொராந்
வேலன் தைஇய வெறி அயர் களனும் காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறுங் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினும் மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐதுரைத்துக் குடந்தம் பட்டு கொழுமலர் சிதறி முரண்கொள் உருவின் இரண்டுடன் உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி மதவலி நிலைஇய மாத்தாள் கொழுவிடைக் குருதியொடு விரைஇய தூவெள் அரிசி சில்பலிச் செய்து பல்பிரப்பு இரீஇச் சிறுபசு பஞ்சளொடு நறுவிரை தெளித்துப் பெருந்தண் கணவீரம் நறுந்தண் மாலை துணையற அறுத்துத் தூங்க நாற்றி நளிமலைச் சிலம்பின் நன்னகர் வாழ்த்தி நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியோடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியன்நகர் ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண் டுறைதலும் அறிந்த வாறே ஆண்டாண் டாயினும் ஆகக் காண்தக முந்துநீ கண்டுழிமுகனமர்ந் தேத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி நெடும்பெரும் சிமையத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறமர் செல்வ ஆல்கெழு கடவுட் புதல்வ மால்வரை மலைமகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ

திருமுறை
இழையணி சிறப்பிற் பழையோள் குழவி வானோர் வணங்குவில் தானைத் தலைவ மாலை மார்ப நூலறி புலவ செருவில் ஒருவ பொருவிறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல்கெழு தடக்கைச் சால்பெரும் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ பலர்புகழ் நன்மொழிப் புலவர் எறே அரும்பெறல் மரபிற் பெரும்பெயர் முருக நசையுநர்க் கார்த்தும் இசைபேர் ஆள அலந்தோர்க் களிக்கும் பொலம்பூண் சேஎய் மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உருகெழு நெடுவேள் பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி போர்மிகு பொருந குரிசில் எனப்பல யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது நின் அளந்தறிதல் மன்னுயிர்க் கருமையின் நின்னடி உள்ளி வந்தனன் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமை யோய்எனக் குறித்தது மொழியா அளவையில் குறித்துடன் வேறுபல் உருவில் குறும்பல் கூளியர் சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி அளியன் தானே முதுவாய் இரவலன் வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென இனியவும் நல்லவும் நனிபல ஏத்தித் தெய்வம் சான்ற திறல்விளங் குருவின் வான்தோய் நிவப்பின் தான்வந் தெய்தி அணங்குசால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன் மணங்கமழ் தெய்வத் திளநலம் காட்டி அஞ்சல் ஒம்புமதி அறிவல்நின் வரவுஎன அன்புடை நன்மொழி அளைஇ விளிவுஇன் றிருள்நிற முந்நீர் வளைஇய உலகத் தொருநீ பாகித் தோன்ற விழுமிய பெறலரும் பரிசில் நல்குமதி பலவுடன்

Page 33
பதினொராந்
வேறுபல் துகிலின் நுடங்கி அகில்சுமந் தாரம் முழுமுதல் உருட்டி வேரல் பூவுடை அலங்குசினை புலம்ப வேர்கீண்டு விண்பொரு நெடுவரைப் பரிதியில் தொடுத்த தண்கமழ் அலர்இறால் சிதைய நன்பல ஆசினி முதுகளை கலாவ மீமிசை நாக நறுமலர் உதிர ஊகமொடு மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுதல் இரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று நன்பொன் மணிநிறம் கிளரப் பொன்கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக்குலை உதிரத் தாக்கிக் கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற மடநடை மஞ்ஞை பலவுடன் வெf இக்
கோழி வயப்பென்ட இரியக் கேழலொ டிரும்பனை வெளிற்றின் புன்சாய் அன்ன குரூஉமயிர் யாக்கைக் குடாஅடி உளியம் பெருங்கல் விடர் அளைச் செறியக் கருங்கோட் டாமா நல்ஏறு சிலைப்பச் சேண்நின் றிழுமென இழிதரும் அருவிப் பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
நேரிசைவெண்பா
குன்றம் எறிந்தாய் குரைகடலில் சூர் தடிந்தாய் புன் தலைய பூதப் பொருபடையாய்-என்றும் இளையாய் அழகியாய் ஏறுTர்ந்தான் ஏறே உளையாய்என் உள்ளத் தறை.
குன்றம் எறிந்ததுவும் குன்றப்போர் செய்ததுவும் அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும்-இன்றென்னைக் கைவிடா நின்றதுவும் கற்பொதும்பில் காத்ததுவும் மெய்விடா வீரன்கை வேல்.
வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட தீரவேல் செவ்வேள் திருக்கைவேல்-வாரி குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும் துளைத்தவேல் உண்டே துணை.

திருமுறை
இன்னம் ஒருகால் எனதிடும்பைக் குன்றுக்குக் கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம் பணிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட தனிவேலை வாங்கத் தகும்.
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன்-பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே.
அஞ்சு முகம்தோன்றில் ஆறு முகம்தோன்றும் வெஞ்ச மரந்தோன்றில் வேல்தோன்றும்-நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும் முருகாஎன்றோதுவார் முன்.
முருகனே செந்தில் முதல்வனே மாயோன் மருகனே ஈசன் மகனே - ஒருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.
காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா-பூக்கும் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்காய் இனி.
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான் தன் பாதம் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு-சுருங்காமல் ஆசையால் நெஞ்சே அணிமுருகாற்றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல்.
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாள் தோறும் சாற்றினால்-முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தான் நினைத்த எல்லாம் தரும்.
திருச்சிற்றம்பலம்

Page 34
பதினொராந்
நம்பியாண்டார் நம்பி
அருளிச்செய்த
திருத்தொண்டர் திருவந்தாதி
திருச்சிற்றம்பலம்
(திருவாரூரில் திருக்கோயில் கொண்டருளிய சிவபிரான் “தில்லைவாழந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று அடியெடுத்துக் கொடுக்கச் சுந்தரர் திருத்தொண்டத் தொகையைப்பாடி அடியார்களைப் போற்றினார். திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையாரின் திருவருளைப் பெற்ற நம்பியாண்டார் நம்பி மேற்படி பிள்ளையாரின் திருவருளால் திருத்தொண்டத் தொகையை விரித்து அத்தொகையை முதனூலாகக் கொண்டு இவ்வந்தாதியை வழிநூலாகப் பாடினார். சேக்கிழார் திருவாய் மலர்ந்தருளிய திருத்தொண்டர் புராணம் என்னும் பெரிய புராணத்திற்குப் பெரிதும் ஆதாரமாக விளங்குவது இவ்வந்தாதியே. இத் திருவந்தாதியின் கண் தனியடியார் அறு பதின்மரும் ஒன்பது திருக்கூட்டத்தாரும் ஆகிய திருத்தொண்டர்களுக்குரிய ஊர், நாடு, மரபு முதலியவைகளும் அவர்கள் மேற்கொண்டொழுகிய திருத்தொண்டின் நெறியும் அதனால் அவர்கள் பெற்ற பேறும் கூறப்பட்டுள்ளன. இவ்வந்தாதி எண்பத்தொன்பது கட்டளைக் கலித்துறைகளைக் கொண்டதாக விளங்குகிறது.)
திருச்சிற்றம்பலம்
. பொன்னி வடகரை சேர்நாரை யூரிற் புழைக்கைமுக மன்னனறுபத்து மூவர் பதிதேம் மரபுசெயல் பன்ன அத் தொண்டத் தொகைவகை பல்குமந்தாதிதனைச் சொன்ன மறைக்குல நம்பிபொற் பாதத் துணைதுணையே.
தில்லைவாழந்தணர்
2. செப்பத் தகுயுகழ்த் தில்லைப் பதியிற் செழுமறையோர்
ஒப்பப் புவனங்கள் மூன்றினு மும்பரினுாரெரித்த அப்பர்க் கமுதத் திருநடர்க் கந்திப் பிறையணிந்த துப்பர்க் குரிமைத் தொழில்புரிவோர் தமைச் சொல்லுதுமே.

திருமுறை
திருத்தொண்டர் திருவந்தாதி
திருநீலகண்ட நாயனார்
சொல்லச் சிவன் திருவானை தன் துரமொழி தோள் நசையை ஒல்லைத் துறந்துரு மூத்ததற் பின்னுமை கோனருளால் வில்லைப் புரைநுத லாளோ டிளமைபெற்றின்பமிக்கான் தில்லைத் திருநீல கண்டக் குயவனாம் செய்தவனே
இயற்பகை நாயனார்
செய்தவர் வேண்டிய தியாதுங் கொடுப்பச் சிவன் தவனாய்க் கைதவம் பேசிநின் காதலி யைத்தரு கென்றலுமே மை திகழ் கண்ணியை யீந்தவன் வாய்ந்த பெரும் புகழ்வந் தெய்திய காவிரிப் பூம்பட்டினத்து எரியற்பகையே.
ளையான் LOT Tua TsT
குடிமாற ந
இயலா விடைச் சென்ற மாதவற்கின்னமு தாவிதைத்த வயலார் முளைவித்து வாரி மணையலக் கால்வறுத்துச் செயலார் பயிர்விழுத் தீங்கறி யாக்கு மவன்செழுநீர்க் கயலா ரிளையான் குடியுடை மாறனெங் கற்பகமே.
மெய்ப்பொருள் நாயனார்
கற்றநன் மெய்த்தவன் போலொரு பொய்த்தவன் காய்சினத்தால் செற்றவன் தன்னை யவனைச் செறப்புக லுந்திருவாய் மற்றவன் தத்தா நமரே யெனச்சொல்லி வானுலகம் பெற்றவன் சேதிபன் மெய்ப்பொருளாமென்று பேசுவரே.
விறன்மிண்ட நாயனார்
பேசும் பெருமையவ் வாரூரனையும் பிரானவனாம் ஈசன் தனையும் புறகு தட் டென்றவனிசனுக்கே நேச னெனக்கும் பிரான்மனைக் கேபுக நீடுதென்றல் வீசும் பொழில் திருச் செங்குன்றம் மேய விறன்மிண்டனே.

Page 35
10.
11.
12.
பதினொராந்
நம்பியாண்டார் நம்பி
அமர்நீதி நாயனார்
மிண்டும் பொழில்பழையாறை யமர் நீதி வெண்பொடியின் முண்டந் தரித்த பிராற்கு நல்லூரின் முன் கோவணம்நேர் கொண்டிங் கருளென்று தன்பெருஞ் செல்வமுந் தன்னையுந்தன் துண்ட மதிநுத லாளையும் ஈந்த தொழிலினனே
சுந்தரமூர்த்தி நாயனார்
தொழுதும் வணங்கியும் மாலயன் தேடருஞ் சோதிசென்றாங் கெழுதுந் தமிழ்ப்பழ வாவணங் காட்டி யெனக்குன்குடி முழுது மடிமைவந்தாட்செயெனப்பெற்ற வன்முரல்தேன் ஒழுகு மலரின் நற் றாரெம்பி ரான் நம்பி யாரூரனே.
எறிபத்த நாயனார்
ஊர்மதில் மூன்றட்ட வுத்தமற் கென்றோ ருயர் தவத்தோன் தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர்பறித்த ஊர்மலை மேற்கொள்ளும் பாக ருடல்துணி யாக்குமவன் ஏர்மலி மாமதில் சூழ்கருவூரி லெறியத்தனே.
ஏனாதிநாத நாயனார்
பத்தனை யேனாதி நாதனைப் பார் நீ டெயினை தன்னுள் அத்தனைத் தன்னோ டமர்மலைந் தான்நெற்றி நீறுகண்டு கைத்தனி வாள் வீ டொழிந்தவன் கண்டிப்பு நின்றருளும் நித்தனை யீழக் குலதீப னென்பரிந் நீள் நிலத்தே.
கண்ணப்ப நாயனார்
நிலத்தில் திகழ் திருக் காளத்தி யார்திரு "நெற்றியின்மேல் நலத்தில் பொழிதரு கண்ணில் குருதிகண் டுள் நடுங்கி வலத்திற் கடுங்கணை யால் தன் மலர்க்கண் ணிடந்தப்பினான் குலத்திற் கிராதன் நங் கண்ணப்பனாமென்று கூறுவரே.

13.
14,
15.
16.
17.
திருத்தொண்டர் திருவந்தாதி
குங்குலியக்கலய நாயனார்
ஏய்ந்த கயிறுதன் கண்டத்திற் பூட்டி எழிற்பனந்தாட் சாய்ந்த சிவன் நிலைத் தானென்பர் காதலி தாலிகொடுத் தாய்ந்தநற் குங்குலி யங்கொண் டனற்புகை காலனை முன் காய்ந்த வரற்கிட்ட தென்கடவூரிற் கலயனையே.
மானக்கஞ்சாற நாயனார்
கலச முலைக்கன்னி காதற் புதல்வி கமழ்குழலை நலசெய் தவத்தன் பஞ்ச வடிக்கிவை நல்கெனலும் அலசு மெனக்கரு தாதவள் கூந்த லரிந்தளித்தான் மலைசெய் மதிற்கஞ்சை மானக்கஞ் சாறனெனும்வள்ளலே.
அரிவாட்டாய நாயனார்
வள்ளற் பிராற்கமு தேந்தி வருவோ னுகலுமிங்கே வெள்ளச் சடையா யமுதுசெய்யாவிடி லென்தலையைத் தள்ளத் தகுமென்று வாட்பூட் டியதடங் கையினன்காண் அள்ளற் பழனக் கணமங்கலத்தரி வாட்டாயனே.
ஆனாயநாயனார்
தாயவன் யாவுக்கும் தாழ்சடை மேல் தனித் திங்கள் வைத்த தூயவன் பாதம் தொடர்ந்து தொல் சீர்துளை யாற்பரவும் வேயவன் மேல்மழநாட்டு விரிபுனல் மங்கலக்கோன்
ஆயவனானாய னென்னை யுவந் தாண்டருளினனே.
சுந்தரமூர்த்தி நாயனார்
அருட்டுறை யத்தற் கடிமைப்பட் டேனினி யல்லனென்னும் பொருட்டுறை பாவதெள் னேயென்ன வல்லவன் பூங்குவளை இருட்டுறை நீர்வயல் நாவற் பதிக்கும் பிரானடைந்தோர் மருட்டுறை நீக்கி நல் வான்வழி காட்டிட வல்லவனே.

Page 36
18。
19.
20.
2.
22.
பதினொராந்
நம்பியாண்டார் நம்பி
மூர்த்தி நாயனார்
அவந்திரி குண்டம ணாவதின் மாள்வனென் றன்றாலவாய்ச் சிவன் திருமேனிக்குச் செஞ்சந் தனமாச் செழுமுழங்கை உவந்தொளிர் பாறையில் தேய்த்துல காண்டவொண் மூர்த்தி தன்னூர் நிவந்தபொன், மாட மதுரா புரியென்னும் நீள்பதியே.
முருக நாயனார்
பதிகந் திகழ்தரு பஞ்சாக் கரம்பயில் நாவினன் சீர் மதியஞ் சடையாற் கலர்தொட் டணிபவன் யான்மகிழ்ந்து துதியங் கழல்சண்பை நாதற்குத் தோழன்வன் றொண்டனம்பொன்
அதிகம் பெறும்புக லூர்மூரு கன்னெனும் அந்தணனே.
உருத்திர பசுபதி நாயனார்
அந்தாழ் புனல்தன்னி லல்லும் பகலும் நின்றாதரத்தால் உந்தாத வன்பொடு ருத்திரஞ் சொல்லிக் கருத்தமைந்த பைந்தா ருருத்ர பசுபதி தன்னற் பதிவயற்கே நந்தார் திருத்தலை யூரென்றுரைப்பரிந் நானிலத்தே.
திருநாளைப்போவார் நாயனார்
நாவார் புகழ்த்தில்லை யம்பலத் தானருள் பெற்று நாளைப் போவா னவனாம் புறத்திருத் தொண்டன் தன் புன்புலைபோய் மூவா யிரவர்கை கூப்ப முனியா யவன்பதி தான் மாவார்பொழில் திகழாதனூ ரென்பரிம் மண்டலத்தே.
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
மண்டும் புனற்சடை யான் தமர் தூசெற்றி வாட்டும் வகை விண்டு மழை முகில் வீடா தொழியின்யான் வீவனென்னா முண்டம் படர்பாறை முட்டு மெழிலார் திருக்குறிப்புத் தொண்டன் குலங்கச்சி யேகா லியர் தங்கள் தொல்குலமே.

திருமுறை
23.
24.
25
26.
27.
திருத்தொண்டர் திருவந்தாதி
சண்டேசுர நாயனார்
குலமே றியசெய்ஞலூரிற் குரிசில் குரைகடல்சூழ் தலமே றியவிறற் சண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும் வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமேல் நலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே
சுந்தரமூர்த்தி நாயனார்
நிதியார் துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றிடென்று துதியா வருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்காண் நதியார் புனல்வயல் நாவலர் கோனென்னும் நற்றவனே.
திருநாவுக்கரசு நாயனார்
நற்றவன் நல்லூர்ச் சிவன் திருப் பாதந்தன் சென்னிவைக்கப் பெற்றவன் மற்றிப் பிறப்பற வீரட்டர் பெய்கழற்றாள் உற்றவனுற்ற விடமடை யாரிட வொள்ள முதாத் துற்றவனாமூரில் நாவுக் கரசெனுந் தூமணியே.
மணியினை மாமறைக் காட்டு மருந்தினை வண்மொழியால் திணியன நீள்கத வந்திறப் பித்தன தெண்கடலில் பிணியன கல்மிதப் பித்தன சைவப் பெருநெறிக்கே அணியன நாவுக் கரையர் பிரான் தனகுந்தமிழே.
குலச்சிறை நாயனார்
அருந்தமிழாகரன் வாதி லமணைக் கழுநுதிமேல் இருந்தமிழ் நாட்டிடை யேற்றுவித் தோனெழிற் சங்கம்வைத்த பெருந்தமிழ் மீனவன் தன்னதி காரி பிரசமல்கு குருந்தவிழ் சாரல் மணமேற் குடிமன் குலச்சிறையே.

Page 37
28.
29.
30.
31.
32.
பதினொராந்
திருத்தொண்டர் திருவந்தாதி
பெருமிழலைக் குறும்ப நாயனார்
சிறைநன் புனல்திரு நாவலூ ராளி செழுங்கயிலைக் கிறைநன் கழல்நாளை யெய்து மிவனருள் போற்றவின்றே பிறைநன் முடிய னடியடை வேனென் றுடல்பிரிந்தான் நறைநன் மலர்த்தார் மிழலைக் குறும்ப னெனு நம்பியே.
காரைக்கால் அம்மையார்
நம்பன் திருமலை நான்மிதி யேனென்று தாளிரண்டும் உம்பர் மிசைத்தலை யால்நடந்தேற வுமை நகலும் செம்பொன் னுருவனெ னம்மை யெனப்பெற்றவள்செழுந்தேன் கொம்பி னுகுகாரைக் காலினின் மேய குலதனமே, (9-9)
அப்பூதியடிகள் நாயனார்
தனமா வதுதிரு நாவுக் கரசின் சரணமென்னா மனமார் புனற்பந்தர் வாழ்த்திவைத் தாங்கவன் வண்டமிழ்க்கே இனமாத் தனது பெயரிடப் பெற்றவ னெங்கள் பிரான் அனமார் வயல் தி.க ரூரினில் வேதிப5'தி: (உகூ)
திருநீலநக்க நாயனார்
பூதிப் புயத்தர் புயத்தில் சிலந்தி புகலுமஞ்சி ஊதித் துமிந்த மனைவியை நீப்பவுப் பாலவெல்லாம் பேதித் தெழுந்தன காணென்று பிஞ்ஞகன் காட்டுமவன் நீதித் திகழ்சாத்தை நீலநக் கன்னெனும் வேதியனே.
நமிநந்தியடிகள் நாயனார்
வேத மறிக்கரத் தாரூராற்கு விளக்கு நெய்யைத் தீது செறியமண் கையரட் டாவிடத் தெண்புனலால் ஏத முறுக வருகரென் றன்று விளக்கெரித்தான் நாதன் எழிலேமப் பேறு ரதிபன் நமிநந்தியே.

திருமுறை
33.
34.
35.
36.
37.
நம்பியாண்டார் நம்பி
சுந்தரமூர்த்தி நாயனார்
நந்திக்கும் நம்பெரு மாற்கு நல் லாரூரில் நாயகற்குப் பந்திப் பரியன செந்தமிழ் பாடிப் படர்புனலில் சிந்திப் பரியன சேவடி பெற்றவன் சேவடியே
வந்திப் பவன்பெயர் வன்றொண்ட னென்பரிவ் வையகத்தே.
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
வைய மகிழயாம் வாழ வமணர் வலிதொலைய ஐயன் பிரம புரத்தரற் கம்மென் குதலைச் செவ்வாய் 6) It மிழற்றும் பருவத்துப் பாடப் பருப்பதத்தின் தைய லருள்பெற்றனனென்பர் ஞானசம்பந்தனையே.
பந்தார் விரலியர் வேள்செங்கட் சோழன் முருகனல்ல சந்தா ரகலத்து நீலநக் கன்பெயர் தான்மொழிந்து
கொந்தார் சடையர் பதிகத்தி லிட்டடி யேன்கொடுத்த அந்தாதி கொண்ட பிரானருட் காழியர் கொற்றவனே.
ஏயர்கோன் கலிக்காம நாயனார்
கொற்றத் திறலெந்தை தந்தைதன் தந்தையெம் கூட்டமெல்லாம் தெற்றச் சடையாய் நினதடி யேந்திகழ் வன்றொண்டனே மற்றிப் பிணிதவிர்ப் பானென் றுடைவாள் உருவியந்நோய் செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே.
திருமூல நாயனார்
குடிமன்னு சாத்தனூர்க் கோக்குலம் மேய்ப்போன் குரம்பைபுக்கு முடிமன்னு கூனற் பிறையாளன் தன்னை முழுத்தமிழின் படிமன்னு வேதத்தின் சொற்படி பேபர விட்டெனுச்சி அடிமன்ன வைத்த பிரான்மூல னாகின்ற வங்கணனே.

Page 38
38.
39.
40.
41.
42.
திருத்தொண்டர் திருவந்தாதி
தண்டியடிகள் நாயனார்
கண்ணார் மணியொன்று மின்றிக் கயிறு பிடித்தரற்குத் தண்ணார் புனல் தடம் தொட்டலுந் தன்னை நகுமமணர் கண்ணாங் கிழிப்ப வமணர் கலக்கங்கண் டம்மலர்க்கண்
விண்ணா யகனிடைப் பெற்றவனாரூர் விறல் தண்டியே.
மூர்க்க நாயனார்
தண்டலை சூழ்திரு வேற்காட்டூர் மன்னன் தகுகவற்றால் கொண்டவல் லாயம்வன் சூதரை வென்றுமுன் கொண்டபொருள் முண்டநல் நீற்ற னடியுவர்க் கீபவன் முர்க்கனென்பர் நண்டலை நீரொண் குடந்தையில் மேவுநற் சூதனையே.
சோமாசிமாற நாயனார்
சூதப்பொழி லம்பரந்தணன் சோமாசி மாறனென்பான் வேதப் பொருளஞ் செழுத்தும் விளம்பியல் லால்மொழியான் நீதிப் பரன்மன்னு நித்த நியமன் பரவையென்னும் மாதுக்குக் காந்தன்வன் றொண்டன் தனக்கு மகிழ்துணையே.
சுந்தரமூர்த்தி நாயனார்
துணையுமளவுமில்லாதவன் தன்னருளே துணையாக் கணையுங் கதிர்நெடு வேலுங் கறுத்த கயலிணையும் பிணையும் நிகர்த்தகண் சங்கிலி பேரமைத் தோளிரண்டும் அணையு மவன் திரு வாரூர னாகின்ற அற்புதனே.
சாக்கிய நாயனார்
தகடன வாடையன் சாக்கியன் மாக்கல் தடவரையின் மகள் தனம் தாக்கக் குழைந்ததிண் டோளர்வண் கம்பர் செம்பொன் திகழ் தருமேனியில் செங்க லெறிந்து சிவபுரத்துப் புகழ் தரப் புக்கவ னுார் சங்க மங்கை புவனியிலே.

திருமுறை
43.
44.
45.
46.
47.
நம்பியாண்டார் நம்பி
சிறப்புலி நாயனார்
புவனியில் பூதியும் சாதன மும்பொலி வார்ந்துவந்த தவநிய மற்குச் சிறப்புச் செய் தத்துவ காரணனாம் அவனியில் கீர்த்தித்தெ னாக்கூ ரதிப னருமறையோன் சிவனிய மந்தலை நின்றதொல் சீர்நஞ் சிறப்புலியே.
சிறுத்தொண்ட நாயனார்
புலியின தளுடைப் புண்ணியற் கின்னமு தாத்தனதோர் ஒலியின் சதங்கைக் குதலைப் புதல்வ னுடல் துணித்துக் கலியின் வலிகெடுத் தோங்கும் புகழ்ச்சிறுத் தொண்டன் கண்டீர் மலியும் பொழிலொண்செங் காட்டங் குடியவர் மன்னவனே.
சேரமான் பெருமாள் நாயனார்
மன்னர் பிரானெதிர் வண்ணா னுடலுவ ரூறிநிறார் தன்னர் பிரான் தமர் போல வருதலுந் தான் வணங்க என்னர் பிரானடி வண்ணா னெனவடிச் சேரனென்னுந்
தென்னர் பிரான் கழறிற்றறி வானெனும் சேரலனே.
சேரற்குத் தென்னா வலர்பெரு மாற்குச் சிவனளித்த வீரக் கடகரி முன்புதன் பந்தி யிவுளிவைத்த வீரற்கு வென்றிக் கருப்பு வில் வீரனை வெற்றி கொண்ட சூரற் கெனதுள்ளம் நன்றுசெய் தாயின்று தொண்டுபட்டே.
கனநாத நாயனார்
தொண்டரை யாக்கியவரவர்க் கேற்ற தொழில்கள் செய்வித் தண்டர் தங் கோனக் கணத்துக்கு நாயகம் பெற்றவன் காண் கொண்டல் கொண் டேறிய மின்னுக்குக் கோல மடல்கள் தொறும் கண்டல்வெண் சோறளிக் குங்கடல் காழிக் கண நாதனே.

Page 39
48.
49.
50.
51.
52.
பதினொராந்
திருத்தொண்டர் திருவந்தாதி
கூற்றுவ நாயனார்
நாதன் திருவடி யேமுடி யாகக் கவித்து நல்ல போதங் கருத்திற் பொறித்தமை யாலது கைகொடுப்ப ஒதந் தழுவிய ஞாலமெல் லாமொரு கோலின் வைத்தான் கோதை நெடுவேற் களப்பாள னாகிய கூற்றுவனே.
சுந்தரமூர்த்தி நாயனார்
கூற்றுக் கெவனோ புகல் திரு வாரூரன் பொன் முடிமேல் ஏற்றுத் தொடையலு மின்னடைக் காயு மிடுதருமக் கோற்றொத்து சுனனுங் கூன்போய்க் குருடனுங் கண்பெற்றமை சாற்றித் திரியும் பழமொழி யாமித் தரணியிலே.
பொய்யடிமை இல்லாத புலவர்
தரணியில் பொய்ம்மை இலாத்தமிழ்ச் சங்கம் அதில் கபிலர் பரணர் நக்கீரர் முதல் நாற்பத் தொன்பது பல்புலவோர் அருள் நமக் கீயுந் திருவால வாயரன் சேவடிக்கே பொருளமைத் தின்பக் கவிபல பாடும் புலவர்களே.
புகழ்ச்சோழ நாயனார்
புலமன் னியமன்னைச் சிங்கள நாடு பொடிபடுத்த, குலமன் னியபுகழ்க் கோகன நாதன் குலமுதலோன் நலமன் னியபுகழ்ச் சோழன தென்பர் நகுசுடர்வாள் வலமன் னியவெறி பத்தனுக் கீந்ததொர் வண்புகழே
நரசிங்க முனையரைய நாயனார்
புகழும் படியெம் பரமே தவர்க்கு நற் பொன்னிடுவோன் இகழும் படியோர் தவன்மட வார்புனை கோலமெங்கும் நிகழும் படிகண் டவனுக் கிரட்டிபொன் னிட்டவன் நீள் திகழு முடிநர சிங்க முனையர சன்திறமே.

திருமுறை
53.
54.
55.
56.
57.
அதிபத்த நாயனார்
திறமமர் மீன்படுக் கும்பொழு தாங்கொரு மீன் சிவற்கென் றுறவமர் மாகடற் கேவிடுவோனொரு நாட்கணக நிறமமர் மீன்பட நின்மலற் கென்று விட் டோன்கமலம் புறமமர் நாகை யதிபத்த னாகிய பொய்யிலியே.
கலிக்கம்ப நாயனார்
பொய்யைக் கடிந்துநம் புண்ணியர்க் காட்பட்டுத் தன்னடியான் சைவத் திவுரு வாய்வரத் தானவன் தாள்கழுவ வையத் தவர் முன்பு வெள்கி நீர் வாரா விடமனைவி கையைத் தடிந்தவன் பெண்ணா கடத்துக் கலிக்கம்பனே.
கலிய நாயனார்
கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கும் நல்கிய கண்ணுதலோன் உம்பர்க்கு நாதற் கொளிவிளக்கேற்றற் குடலிலனாய்க் கும்பத் தயிலம்விற் றுஞ் செக் குழன்றுங்கொள் கூலியினால் நம்பற் கெரித்த கலியொற்றி மாநகர்ச் சக்கிரியே.
சத்தி நாயனார்
கிரிவில் லவர் தம் மடியரைத் தன்முன்பு கீழ்மை சொன்ன திருவில் லவரையந் நாவரி வோன் திருந் தாரை வெல்லும் வரிவில் லவன்வயல் செங்கழு நீரின் மருவுதென்றல் தெருவில் விரைகமழுந்தென் வரிஞ்சைத் திகழ்சத்தியே.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார்
சத்தித் தடக்கைக் குமரன் நற் றாதைதன் தான மெல்லாம் முத்திப் பதமொரொர் வெண்பா மொழிந்து முடியரசா மத்திற்கு மும்மைநன் தாளரற் காயைபம் ஏற்றலென்னும் பத்திக் கடலை யடிகளா கின்றநம் பல்லவனே.

Page 40
58.
59.
60.
61.
62.
பதினொராந்
சுந்தரமூர்த்தி நாயனார்
பல்லவை செங்கதி ரோனைப் பறித்தவன் பாதம் புகழ் சொல்லவன் தென்புக லூரரன் பால்துய்ய செம்பொன்கொள்ள வல்லவன் நாட்டியத் தான்குடி மாணிக்க வண்ணனுக்கு நல்லவன் தன்பதி நாவலூ ராகின்ற நன்னகரே.
கணம்புல்ல நாயனார்
நன்னகராய விருக்குவேளூர்தனில் நல்குரவாய்ப் பொன்னக ராயநல் தில்லை புகுந்து புலிச்சரத்து மன்னவராய வரற்குநற் புல்லால் விளக்கெரித்தான் கன்னவில் தோளெந்தை தந்தை பிரானெம் கணம்புல்லனே.
காரி நாயனார்
புல்லன வாகா வகையுல கத்துப் புணர்ந்தனவும் சொல்லின வுந்நய மாக்கிச் சுடர் பொற் குவடுதனி வில்லனை வாழ்த்தி விளங்கும் கயிலைபுக் கானென்பரால் கல்லன மாமதில் சூழ்கடவூரினில் காரியையே.
நெடுமாற நாயனார்
கார்த்தண் முகிற்கைக் கடற்காழி பர்பெரு மாற்கெதிராய்
ஆர்த்த வமண ரழிந்தது கண்டுமற் றாங்கவரைக் கூர்த்த கழுவின் நுதிவைத்த பஞ்சவ னென்றுரைக்கும்
வார்த்தை யதுபண்டு நெல்வேலி யில்வென்ற மாறனுக்கே.
வாயிலார் நாயனார்
மாறா வருளரன் தன்னை மனவா லயத்திருத்தி ஆறா வறிவா மொளி விளக்கேற்றி யகமலர்வாம் வீறா மலரளித் தன்பெனும் மெய்யமிர் தங்கொடுத்தான் வீறார் மயிலையுள் வாயிலா னென்று விளம்புவரே.

திருமுறை
63.
64.
65.
66.
67.
முனையடுவார் நாயனார்
என்று விளம்புவர் நீடு ரதிபன் முனையடுவோன் என்று மமரு எாழிந்தவர்க் காக்கூலி யேற்றெநிந்து வென்று பெருஞ்செல்வ மெல்லாங் கனகநன் மேருவென்னுங் குன்று வளைத்த சிலையான் தமர்க்குக் கொடுத்தனனே.
சுந்தரமூர்த்தி நாயனார்
கொடுத்தான் முதலைகொள் பிள்ளைக் குயிரன்று புக்கொளியூர்த் தொடுத்தான் மதுர கவியவிநாசியை வேடர் சுற்றம் படுத்தான் திருமுருகன்பூண் டியினில் பராபாத்தேன் மடுத்தா னவனென்பர் வன்றொண்ட னாகின்ற மாதவனே.
கழற்சிங்க நாயனார்
மாதவத் தோர் தங்கள் வைப்பினுக் காரூர் மணிக்கு வைத்த போதினைத் தான்மோந்த தேவிதன் மூக்கை யரியப்பொற்கை காதிவைத் தன்றோ வரிவதென் றாங்கவள் கைதடிந்தான் நாதமொய்த் தார்வண்டு கிண்டுபைங் கோதைக் கழற்சிங்கனே.
இடங்கழி நாயனார்
சிங்கத் துருவனைச் செற்றவன் சிற்றம் பலமுகடு கொங்கிற் கணக மணிந்தவா தித்தன் குலமுதலோன் திங்கட் சடையர் தமரதென் செல்வ மெனப்பறைபோக் கெங்கட் கிறைவ னிருக்குவேளூர்ம னிடங்கழியே.
செருத்துணை நாயனார்
கழிநீள் கடல்நஞ் சயின்றார்க் கிருந்த கடிமலரை மொழிநீள் புகழ்க்கழற் சிங்கன் தன் தேவிமுன் மோத்தலுமே எழில்நீள் குமிழ்மலர் மூக்கரிந் தானென் றியம்புவரால் செழுநீர் மருகல்நன் னாட்டமர் தஞ்சைச் செருத்துணையே.

Page 41
68.
69.
70.
71.
72.
பதoனாராத்
புகழ்த்துணை நாயனார்
செருவிலி புத்தூர்ப் புகழ்த்துணை வையம் சிறுவிலைத்தா வுருவலி கெட்டுண வின்றி யுமைகோனை மஞ்சனஞ்செய் தருவதோர் போதுகை சோர்ந்து கலசம் விழத்தரியா தருவரை வில்லி யருளும் நிதியது பெற்றனனே.
கோட்புலி நாயனார்
பெற்ற முயர்த்தோன் விரையாக் கலிபிழைத் தோர் தமது சுற்ற மறுக்குந் தொழில் திரு நாட்டியத் தான்குடிக்கோன் குற்ற மறுக்கும் நங் கோட்புலி நாவற் குரிசிலருள் பெற்ற வருட்கட லென்றுல கேத்தும் பெருந்தகையே.
சுந்தரமூர்த்தி நாயனார்
தகுமகட் பேசினோன் வீயவே நூல்போன சங்கிலிபால் புகுமணக் காதலி னாலொற்றி யூருறை புண்ணியன் தன் மிகுமலர்ப் பாதம் பணிந்தருளாலிவ் வியனுலகம் நகும்வழக் கேநன்மை யாப்புணர்ந் தான் நாவலூரரசே,
பத்தராய்ப் பணிவார்கள்
அரசினை யாரூரமரர் பிரானை அடிபணிந்திட் டுரைசெய்த வாய்தடு மாறி யுரோம புளகம் வந்து கரசரணாதி யவயவங் கம்பித்துக் கண்ணருவி
சொரிதரு மங்கத்தினோர்பத்த ரென்று தொகுத்தவரே.
பரமனையே பாடுவார்
தொகுத்த வடமொழி தென்மொழி யாதொன்று தோன்றியதே மிகுத்த வியலிசை வல்ல வகையில்விண் தோயு நெற்றி வகுத்த மதில்தில்லை யம்பலத் தான்மலர்ப் பாதங்கள் மேல் உகுத்த மனத்தொடும் பாடவல் லோரென்பருத்தமரே.

திருமுறை
73.
74.
75.
76.
77.
சித்தத்தைச் சிவன்பாலே வைத்தார்
உத்தமத் தானத் தறம்பொருளின்ப மொடியெறிந்து வித்தகத் தானத் தொருவழிக் கொண்டு விளங்கச் சென்னி மத்தம்வைத் தான்திருப் பாத கமல மலரிணைக்கீழ்ச் சித்தம்வைத் தாரென்பர் வீடுபே றெய்திய செல்வர்களே.
திருவாரூர்ப் பிறந்தார்கள்
செல்வம் திகழ்திரு வாரூர் மதில்வட்டத் துட்பிறந்தார் செல்வன் திருக்கணத் துள்ளவரேயதனால்திகழச் செல்வம் பெருகுதென் னாரூர்ப் பிறந்தவர் சேவடியே செல்வ நெறியுறு வார்க்கணித் தாய செழுநெறியே.
முப்போதுந் திருமேனி தீண்டுவார்
நெறிவார் சடையரைத் தீண்டிமுப் போதும் நீ டாகமத்தின் அறிவால் வணங்கியர்ச் சிப்பவர் நம்மையு மாண்டமரர்க் கிறையாய்முக் கண்ணுமெண் தோளும் தரித்தீறில் செல்வத்தொடும் உறைவார் சிவபெரு மாற்குறை வாய வுலகினிலே,
முழுநீறு பூசிய முனிவர்
உலகு கலங்கினு மூழி திரியினு முள்ளொருகால் விலகுதலில்லா விதியது பெற்றநல் வித்தகர்காண் அலகில் பெருங்குணத் தாரூ ரமர்ந்த வரனடிக்கீழ் இலகுவெண் ணிறுதம் மேனிக் கணியு மிறைவர்களே.
அப்பாலும் அடிச்சார்ந்தார்
வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழால் பெருக்கு மதுரத் தொகையிற் பிறைசூடி பெய்கழற்கே ஒருக்கு மனத்தொடப் பாலடிச் சார்ந்தவரென்றுலகில் தெரிக்கு மவர் சிவன் பல்கணத் தோர்நஞ் செழுந்தவரே.

Page 42
78.
79.
80.
8.
82.
பதினொராந்
சுந்தரமூர்த்தி நாயனார்
செழுநீர் வயல்முது குன்றினில் செந்தமிழ் பாடிவெய்ய
மழுநீள் தடக்கையணிந்தபொன் னாங்குக்கொள்ளாதுவந்தப்
பொழில் நீடருதிரு வாரூரில் வாசியும் பொன்னுங் கொண்டோன் கெழுநீள் புகழ்த்திரு வாரூர னென்று நாம் கேட்பதுவே.
பூசலார் நாயனார்
பதுமநற் போதன்ன பாதத் தரற்கொரு கோயிலையான் கதுமெனச் செய்குவ தென்றுகொ லாமென்று கண்துயிலா ததுமணத் தேயெல்லி தோறும் நினைந்தருள் பெற்றதென்பர் புதுமணத் தென்றல் ೭ಖ್ಖT நின்ற வூர்தனிற் பூசலையே.
மங்கையர்க்கரசியார்
பூச லயில்தென்ன னார்க்கன லாகப் பொறாமையினால் வாச மலர்க்குழல் பாண்டிமா தேவியாம் மானிகண்டீர்
தேசம் விளங்கத் தமிழாகரர்க்கறி வித்தவரால்
நாசம் விளைத்தா ளருகந் தருக்குத்தென் னாட்டகத்தே
நேச நாயனார்
நாட்டமிட் டன்றரி வந்திப்ப வெல்படை நல்கினர்தந் தாட்டரிக் கப்பெற்றவனென்பர் சைவத் தவரரையில் கூட்டுமக் கப்படம் கோவணம் நெய்து கொடுத்துநன்மை ஈட்டுமக் காம்பீலிச் சாலிய நேசனை இம்மையிலே.
கோச்செங்கட் சோழ நாயனார்
மைவைத்த கண்டன் நெறியன்றி மற்றோர் நெறிகரு தாத் தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலந்தியாய்ப் பந்தர் செய்து சைவத் துருவெய்தி வந்து தரணி நீ டாலயங்கள் செய்வித்த வன் திருக் கோச்செங்க ணானென்னுஞ் செம்பியனே.

திருமுறை
83,
84.
85.
86.
87.
செம்பொ னணிந்துசிற் றம்பலத்தைச்சிவ லோகமெய்தி
நம்பன் கழற்கீழிருந்தோன் குலமுத லென்பர் நல்ல வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான்
நிம்ப நறுந்தொங்கல் கோச்செங்க ணானென்னும் நித்தனையே.
திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்
தனையொப் பருமெருக் கத்தம் புலியூர்த் தகும்புகழோன் நினையொப் பருந்திரு நீலகண் டப்பெரும் பாணனை நீள் சினையொப் பலர்பொழில் சண்பையர் கோன்செந் தமிழொடிசை புனையப் பரணருள் பெற்றவ னென்பரிப் பூதலத்தே.
சடைய நாயனார்
தலம்விளங் குந்திரு நாவலூர் தன்னில் சடையனென்னுங் குலம் விளங் கும்புகழோனை யுரைப்பர் குவலயத்தில் நலம்விளங் கும்படி நாம்விளங்கும்படி நற்றவத்தின் பலம்விளங் கும்படி யாரூ ரனைமுன் பயந்தமையே.
இசைஞானியார்
பயந்தாள் கறுவுடைச் செங்கண் வெள்ளைப்பொள்ளல் நீள்பனைக்கைக் கயந்தா னுகைத்தநற் காளையை யென்றுங் கபாலங்கைக்கொண் டயந்தான் புகுமரனாரூர்ப் புனித வரன் திருத்தாள் நயந்தாள் தனதுள்ளத் தென்று முரைப்பது ஞானியையே.
சுந்தரமூர்த்தி நாயனார்
ஞானவாரூரரைச் சேரரை யல்லது நாமறியோம் மாணவ வாக்கை யொடும்புக் கவரை வளரொளிப்பூண் வானவராலும் மருவற் கரிய வடகயிலைக்
கோனவன் கோயில் பெருந்தவத் தோர்தங்கள் கூட்டத்திலே,

Page 43
88.
89.
90.
பதினொராந் திருமுறை
திருத்தொண்டத்தொகையில் உள்ள தொகையடியார்கள் தனியடியார்கள்
கூட்டமொன் பானொ டறுபத்து மூன்று தனிப்பெயரா ஈட்டும் பெருந்தவத் தோரெழு பத்திரண் டாம்வினையை வாட்டுந் தவத்திருத் தொண்டத் தொகைபதினொன்றின்வகைப் பாட்டுந் திகழ்திரு நாவலூ ராளி பணித்தனனே.
திருத்தொண்டத் தொகைப் பதிகக் கவிகளின் முதற் குறிப்பு
பணித்தநல் தொண்டத் தொகைமுதல் தில்லை யிலைமலிந்த அணித்திகழ் மும்மை திருநின்ற வம்பறா வார்கொண்டசிர் இணைத்தநல் பொய்யடிமைகறைக் கண்டன் கடல்சூழ்ந்தபின் மணித்திகழ் சொற்பத்தர் மன்னிய சீர்மறை நாவனொடே.
நூற்பயன்
ஓடிடும் பஞ்சேந்திரிய மொடுக்கியென்னூழ்வினைகள்
வாடிடும் வண்ணம்நின் றெத்தவம் செய்தனன் வாணினுள்ளோர்
சூடிடுஞ் சீர்த்திருப் பாதத்தர் தொண்டத் தொகையினுள்ள சேடர்தஞ் செல்வப் பெரும்புகழந்தாதி செப்பிடவே.

பொது வாழ்வில் கலாநிதி வேலாயுதபிள்ளை கலந்து கொண்ட சில நிகழ்ச்சிகள்.
இந்துக் கல்லூரியில் Hunnedict நிறுவனத்தின் உதவியுடன் கொழும்பு (Iம்பலப்பிட்டி) TTT TTTL TLLT tLTHL Lttt Lt TETTTELLTMCtLEL LLLLLLLL திறந்து MMத்த சIத்தில்.

Page 44
சுவாமிஜி விவேகானந்தரின் விஜய நூற்றாண்டு விழாவையொட்டி விவேகானந்த சபை முன்றலில் சுவாமிஜி விவேகானந்தரின் சிலை நிறுவப்பட்ட சமயம் அன்றைய மாநகர முதல்வரை வரவேற்கிறார்.
《霍霍f。
3.
இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி விழா ஒன்றில் கலாநிதி
 
 

2சிவமயம்
நண்றி நவிலல்
உதவி வரைத்தன்று உதவி உதவி
メタ செயப்பட்டார் சால்பின் வரைத்து
எங்கள் குலதீபம் அமரர் கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் அமரத்துவம் எய்திய ஞான்று அவர்களின் ஈமக் கிரியை களில் பங்கு கொண்டு ஆறுதல் கூறித்தேறுதல் வழங்கியோர்க்கும், அனுதாபந் தெரிவித்தும், ஏனைய வழிகளில் உதவி நல்கி உடுக்கை இழந்திகேபோல் உதவி புரிந்த அனைவருக்கும் அந்தியேட்டி சபிண்டீகரண கிரிகைகளிற் பங்கேற்றும் எமக்குத்துணை நின்றோர் எல்லோருக்கும் எமது
உள்ளார்ந்த நன்றிகள்.
11. லில்லி வழி, இங்ங்னம் கொழும்பு - 6. மனைவி, மக்கள், 25.11.97. - சகோதரி.

Page 45


Page 46
6)Iidi
சிங்கைமாப்
(Lp(559
நாகழு முருகேசு
வள்ளிப்பிள்ளை
வேறுப்பிள்ளை தங்கம்மா பொன்னு அன்னம் நாகமு:
-- 十 十
மண்டலவர் செல்லர் முருகேசு
முருகேசபிள்ளை + பொன்னம்மா
நீரங்கநாதன் பத்மனேஸ்வரி மகேஸ்வரன் கோணேஸ்வரன்
வேலாயுதபிள்ளை + பத்மனேஸ்வரி
சுதா மதி மரநாதன் சைலேந்திரன் ரளிதரன் கோபிமனோகரன் கனே8
அமரநாத 以り முரளத

ாவழி
பாணமுதலி 60LLUFTi pத்து
(ஈத்தர்)
சின்ன
த்து அப்பாபிள்ளை சுப்பிரமணியம் ஆச்சிக்கு, கந்தையா பொன்னம்பலம்
+ வேலுப்பிள்ளை அன்னம்மா
கந்தையா + அன்னம்மா
வேலாயுதபிள்ளை தவராணி
-- மகேந்திரன்
தூனகை பண்மொழி
+ f நரேந்திரபாலன்
Fானந்தன்
நரேகா

Page 47


Page 48
Printed by Unic Arts

F'T) Lld. Jloihin 13.