கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (பொன். பாலசுந்தரம்)

Page 1
ful ե:1:1:
 


Page 2

τΊΩίτυ υ 600Th
எங்கள் குலதீபமே! வையத்து வாழ்வாங்கு வாழ்ந்தீர்! இன்றோ வானுறையுந் தெய்வமானிர், எம் இதய தெய்வமே! எமக்கு நீர் தூண்டாமணி விளக்கன்றோ! மண்ணில் நல்ல வண்ணம் நாம் வாழ வழி அமைத்தீர் ஆறாத் துயரில் அடியோமை அமிழ்த்திவிட்டு வீறு நடைபோட்டு வானநாடைத்ததேனோ? வான்கருணை எம்மை நேராக வந்தருள மங்கை மணாளனை மண்டியிடவா சென்றீர்
அன்புருவே! பண்பின் சிகரமே! பாலா! எனப் பாரோர் அழைப்பதெல்லாம் பால்மணம் மாறாப் பருவம் நும்மில் நிலைத்துளதால் அல்லவா! எம் அகத்தின் நிறைவே உம் ஒசை ஒலி எல்லாம் எம் கிண்கிணி நாதமே நீர் போற்றும் திருமுறைப் பாக்கள் சிலவற்றை நும் நினைவில் சமர்ப்பணஞ் செய்கின்றோம்.
மனைவி மக்கள். மருமக்கள் பேரப்பிள்ளைகள் 18 1/5, W. A. Silva Mawatha, Colombo-06. O1-09-1997
2
i
ம்--------- u u u ulhu -

Page 3


Page 4

உரும்பராய் கிழக்கு அமரர் பொன்னம்பலம் பாலசுந்தரம்
அன்னை மடி.1204:1931I)ஆண்டவன் அடி0208.1937)
திதி நிர்ணய வெண்பா ஈசுரவாண் டாடிமதி எண்ணபர பக்கமதில் பேசுஞ் சதுர்த்தசிநற் பேறுபெற்றான் - தேசுரும்பை பொன்னம் பலஞ்சேய் புகழ்பால சுந்தரனார் தன்னறுபத் தைந்தாவ தாண்டு!

Page 5

8 N அமரததுவமடைந்த திரு. பொன்னம்பலம் பாலசுந்தரம் அவர்கள்
LeLeeS eeeeeSeeeeeeeS LeeeeeeSeLeLeeLSLeMeSLLeeSeeeeSeeeSeeeeeSeLeeSeeeeSeeeeeSeLeeSLeLez eSezeMeSLeMeLSeLSLeLSeeSSLeeeLeLeeS eSeSeMeS eeL LeLeeLSeLeLzS
திருக்கோயில்கள் நிறைந்துள்ளமையின் எமது தீவு திருஈழநாடு என்னும் புகழைத்தன்வயங்கொண்டுள்ளது.
தேவர்ாங்கள் பாடப்பெற்ற திருக்கேதீஸ்வரம், திருக்கோணேஸ்வரம் ஆகியனவும், திருப்புகழ் பாடலுற்ற கதிர்காமமும் இவற்றுள் அடங்குவன். ஈழவள நாட்டின் சிகரமாய் அமைவது யாழ்ப்பாணம். யாழ்ப்பாணத்து ஊர்களுள் உயர்ந்தோங்குவது உரும்பராய். வீரம், கல்வி, செல்வம் ஆகியனவையின் நிறைவால் புகழ்பூத்த மக்கட் குழாம் பாரம்பரியமாய் வாழ்ந்துவரும் ஊர் உரும்பராய். இவ்வூரில், அடிமை, குடிமைகளாலும், ஆண்மை கண்ணி யங்களாலும் நிறைந்த பரம்பரையே சிங்கை மாப்பாண முதலி பரம்பரை. இப்பரம்பரையில் முருகுடையார், மகன் நாகமுத்து மகன் முருகேசுவுக்கும், வினாயகர் மகள் சின்னப்பிள்ளைக்கும் மங்கலமான மனைமாட்சியின் நன்கலமாய் அமைந்த நன்மக்கட்பேறு ஒன்பதின்மராய் அமைந்தது. ஒன்பதாவது மகவாய் உதித்தவரே அமரர் பாலசுந்தரத்தின் தந்தையாகிய அமரர் பொன்னம்பலம் ஆவர். முருகேசரின் முதல் மனைவியாகிய வள்ளிப்பிள் ளைக்கும் இருமக்கள் இருந்தமையின், இக்குடும்பம் பெருங்குடும்பமாயும் பெருமையுற்ற குடும்பமாயுந் திகழ்ந் தது. தனக்கு மூத்தோர் பத்துப்பேரால் அரவணைக்கப் பெற்றுச் செல்வமாய் பாராட்டப்பட்டவர் பெரும்பேறுபெற்ற பொன்னம்பலனார்.
முருகுடையார் பரம்பரையினர் சைவநெறி வழுவா ஒழுங்கினர் தாமாகவே தமது நிலத்தில் எழுபத்து இரண்டு
பரப்பை வழங்கி உரும்பராயில் ஞானவைரவர் ஆலயம்
ص 1 ܠܐ

Page 6
அமைத்து நித்திய நைமித்திய கருமங்கள் ... நிறைவுற வழியும் வகுத்தனர். ஆலய பூசகர் பரம்பரையும் ஒன்று அமைத்தனர். அப்பூசகர் பரம்பரை இன்றும் நிறைவுடன் ஆலயப்பணியில் ஈடுகொண்டுள்ளனர். முருகுடையார் வழித்தோன்றல்களே இன்றும் நூறுவரு டத்திற்குமேலாக கும்பாபிஷேக நினைவில் வருடாவருடம் சங்காபிஷேகம் நடத்திவருகின்றனர்.திரு.பொன்னம்பலம் அவர்கள் தவறாது உதயகாலப் பூசைக்கும், சாயங்கால பூசைக்குஞ் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தது மன்றி அவ்வேளைகளில் திருமுறை ஒதுவதும் இவர் பழக்கமாகும். திருவெம்பாவைக் காலத்துல் தவறாது ஆலயத்தில் திருவெம்பாவை பாடுவதும் இவரைச் சார்ந்ததே. பொன்னம்பலம் அவர்கள் வியாபாரத்துறை யிலும் விவசாயத்துறையிலும் உயர்ந்திருந்தார். பொன்னம்பலம் அவர்கள் குப்பிளானைச் சேர்ந்த உயர்குல வேளாளராம் வேலுப்பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் உதித்த் சின்னத்தங்கம் என்னுந் தங்கமயிலை மணமுடித்தார். பர்த்தாவுக்கேற்ற பதிவிரதையாய் சின்னத்தங்கம் வாழ்ந்தார். “பெற்றாற் பெறிற்பெறுவர் பெண்டிற் பெருஞ் சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு" என்ற பொய்யா மொழிக்கேற்ப எய்திய கணவனையே தெய்வமாகக் கொண் டொழுகிப் பெரியோரின் நன்மதிப்பைப் பெற்றவர் தலைவன் தாளில் தலைப்பட்ட சின்னத்தங்கம் அம்மையர். “மனைவிக்கு விளக்கம் மடவாள் மடவாள் தனக்குத் தகைசால் புதல்வர்” என நான்மணிக் கடிகையிற் கூறப்பட்டவாங்கு, மனை மாட்சியின் நன்கலனாக அறிவறிந்த நன்மக்கள் அறுவரைப் பெற்றெடுத்தனர் பொன்னம்பலம் தம்பதியினர். மூன்று ஆண்களை முன் வராகவும் மூன்று பெண்களை இளையோராகவும் முறையே ஈன்ற ஞான்று இரண்டாவது ஆண்மகவாக உதித்தவரே அமரர் பாலசுந்தரமாவர். அக்காலத்து ஞானவைரவ சுவாமிகோயில் குருக்களாய்
أص 2 ܥܐ

இருந்த சைவாகம வித்தகர் பொன். கந்தையாக் குருக்களின் அரவணைப்பாலும் வழிகாட்டலாலும் நெறி தவறா நீர்மையில் பொன்னம்பலங் குடும்பம் திகழ்ந்தது.
அமரர் பாலசுந்தரம் உரும்பராய் சந்திரோதய வித்தியாசாலை, உரும்பராய் இந்துக்கல்லூரி ஆகிய வற்றிற் கல்வி பயின்றார். கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் சிறப்புறப் பயின்று சாதனைகள் ஈட்டினார். கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையின்பின் உத்தியோகத்தி னைநாடி கொழும்புநகர் வாசியானார். தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றிற் கடமைபுரிந்த பாலசுந்தரம் அவர்கள் பின்னர் அரசாங்கக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தில் பணியேற்றார். கொழும்பில் இருந்தகாலை விவேகானந்த வித்தியாலயத்தில் துணை அதிபராகவும் பின்னர் அதிபராகவும் உயர்ந்த திரு. வ. நடராசா அவர்களின் நட்பைப் பெற்றார். இதனால் விவேகானந்தாசபையிலும், விவேகானந்த வித்தியாலயத் திலும் பெருந் தொண்டாற்றினார்.
இவருடன் நண்பர்களாய் இருந்து பல பணிகளில் உழைத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள், இ. தவராசா, செ. பேரானந்தம் ஆகியோராவர். கலைப்பற்று மிக்க பாலசுந்தரம் அவர்கள் கொட்டாஞ்சேனைக் கலைக்கழகத் தின் ஆரம்ப உறுப்பினருமாவர். தமது குலதெய்வமாம் ஞானவைரவரிலும், நல்லூர்க்கந்தனிலும் ஈடிலாப் பக்தி பூண்டவர். தந்தையைப்போல் ஆலய வழிபாடு தவறாது நடத்துந் தனையர்
1964ல் ஈச்சமோட்டையைச் சேர்ந்த வைத்தியநாதர் பொன்னம்மா தம்பதிகளின் ஏக புத்திரியாம் புனிதவதி யாரை வதுவை புரிந்து இல்லறமாாம் நல்லறத்தில் இனிது உறைநாளில் பிறோம்ராஜ், சாந்தராஜ், பிரேமலதா. மஞ்சுளா, தனராஜ் ஆகிய நன்மக்களை ஈன்று உவத்தனர். தம்மிலும் தம்மக்கள் அறிவுடையாராதல் வேண்டும் என்னும்
لم 3 ܥܠܐ

Page 7
நோக்கில் இவர்கட்கு உயர்கல்வி ஊட்டினர் பெற்றோர். இளையார் இருவர் தாய் தந்தையருடன் இருக்கும் நிலையில் மூத்த மூவரும் வெளிநாட்டில் மேல் பதவி வகித்துக் குடும்பம் உயர வழிசமைத்தனர். பிரேம்ராஜ், ஜெயவதியை மணந்து பார்த்திபன் காண்டீபன் ஆகிய இருபேரமக்களை அமரர் பாலசுந்தரத்திற்கு ஈந்தனர். சாந்தராஜ் சுகந்தியை மணந்து பாலசுந்தரத்திற்கு ஒர் மருமகளை வழங்கினார். பிரேமலதா உறவுமுறை மணாளனாக ஜெயச்செல்வன் என்ற நல்லாரை ஏற்று ஈன்றது ஆதர்ஜா என்னும் பேத்தியை. மஞ்சுளாவும் தனராஜ்சும் தாயின் பராமரிப்பில் தாய்க்கு ஆதரவாக வாழ்கின்றனர். பெறத்தக்க யாவற்றையும் இப்பூவுலக வாழ்விலே குறைவின்றிப் பெற்று இன்புற்ற பாலசுந்தரம் அவர்கள் 1997 ஆகஸ்ட் மாதம் இரண்டாந்தேதி தமது 66வது வயதில் மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகை அடைந்தார். அன்னாரின் தர்மபத்தினி புனிதவதியா ருக்கும் பிள்ளைகள் மருமக்கட்கும் பேரப்பிள்ளைகட்கும் உம்முடன் நாமுந் துயருறுகிறோம் என ஆறுதல் கூறுவதுடன் அமரரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திப்பதும் நம் கடனாகின்றது.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
அன்புள்ளங்கள்

திருச்சிற்றம்பலம் 6.TuëöİT GIGLIOTähäh வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழ பான்மை தருசெய்யதமிழ் பார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்றுவிழி நால்வாய் ஆனைமுகனைப் பரவியஞ்சலி செய்கிற்பாம்.
Lsjöf LJTONUTLib
surgh அப்பர் - திருத்தாண்டகம் (6ம் திருமுறை)
பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன் பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன் விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனும் தோன்றக் கண்டேன் மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்டவாறே.
திருவாசகம் மாணிக்கவாசகர் - கண்டபத்து (எட்டாந்திருமுறை) தில்லையில் அருளியது (நிருத்த தரிசனம்) கொச்சக்கக் கலிப்பா
வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறிதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டென் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.
لـ s ܥܐ

Page 8
gluelenaf IIT ད།།
சேந்தனார் - (ஒன்பதாந் திருமுறை) திருவீழிமிழலை பண்-பஞ்சமம்
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றஎம் சிவனைத்
திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளம்
குளிரஎன் கண்குளிர்ந்தனவே.
திருப்பல்லானர்டு சேந்தனார் - (ஒன்பதாந் திருமுறை) கோயில் பண்-பஞ்சமம்
மன்னுகதில்லை! வள்ர்கநம்
பக்தர்கள்! வஞ்சகர் போய்அகல பொன்னின்செய் மண்டத்துள்ளே புகுந்து
புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்
அடியோ முக்கருள் புரிந்து பின்னைப்பிறவு யறுக்க நெறிதந்த
பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.
ിളിgതL LIത് சேக்கிழார் சுவாமிகள் - காரைக்காலம்மையார் புராணம்
(12ம் திருமுறை) இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்றார், “பிறவாமை வேண்டும்; மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும், மறவாமை வேண்டும்; இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவா! நீஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க" என்றார்.
திருச்சிற்றம்பலம் பஞ்ச புராணம் முற்றும்
> - 6 4ے

ܐ r- քlմենվճք
அருணகிரிநாதர்
இறவாமற் பிறவாமல் எனையாள் சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
ITTTTTTTTTT
ஞானபைரவர்
சாதாரணமாக எல்லா இடங்களிலும் காணப்படும் கடவுளாவார். இவரை நாம் விநாயகரை வணங்குவது போல் தரிசனத்துக்கு இலகுவாக்குகிறோம். முழு முதற் கடவுளாகிய சிவபெருமான் உலகத்துக்குக் கர்த்தா என்று பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பூரீலழரீ ஆறுமுகநாவலர் அவர்கள் கூறியது மன்றி அவருடைய திருக்குமாரர்களுள் வைரவக் கடவுளும் ஒன்றென்றார்.
நினைவுமாய் மறப்புமாகி நினைவினுக்கு எட்டா தொன்றாய் அனைத்துமாய் நின்று அருமறைக் கொழுந் தாய் உள்ளவர். கடுக்கையாங் கண்ணியோடு புனிற்று வெண்திங்கள் புனைந்த செஞ்சடை, அரவணிந்த அங்கம், புரமூன்றெரித்த புன் முறுவல் இவ்வாறாய சிவன் அடியார்களுக்கு அனுக்கிரகஞ் செய்யவும் துஷ்டரை நிக்கிரகஞ் செய்யவும் எடுத்த மூர்த்தங்களுள் பைரவக் கடவுளுமொருவராவர்.
இறைவனை அருவத்திருமேனி, அருவுருவத் திருமேனி, உருவத்திருமேனி என மூவகையினுள் அடக்கலாம். நாதம், விந்து, சக்தி, சிவம் என்பன அருவத் திருமேனியுள் அடங்கும். சிவலிங்கம் அருவுருவத்
ص ܥܐ

Page 9
திருமேனி. உருவத்திருமேனி போகவடிவம், கோரவடிவம், யோக வடிவம் என மூன்றாகும். இவற்றுள் சிவன் கோரவடிவமுடையவராய் ஆன்மாக்களுள் துஷ்டரை நிக்கிரகஞ் செய்து சிஷ்ட பரிபாலனஞ் செய்பவராய் உள்ளவரே நம் பைரவக்கடவுள்.
காசி காண்டம் பைரவரின் பெயரை எடுத்தரு ளுகிறது. “காண்டலோடு மலர்க் கிழவனுள்ள மதனிற் கனல் கொழுத்தி தூண்டு முனிவு பிடித்துந்த வெனது புருவத்துணை நாப்பண் நீண்ட சடையினொடும் புதல்வனவையோ நீயென்ன மூண்ட வெகுளி பைரவனை முக்கட் கனியாண்டளித்ததுவே" ஒரு சமயம் பிரமாவுக்கு மயக்கம் காரணமாக அகந்தையுண்டாகவே அவரின் அறியாமையைப் போக்குவதற்கு பைரவ மூர்த்தம் உண்டானது.
பைரவர் பொதுவாக நீலமேனியும், சிலம்பொலிக்கும் திருவடியும், பாம்புகள் பொருந்திய திரு அரையும், தலைமாலைகள் புரளுந் திரு மார்பும், சூலம் மழு, பாசம், உடுக்கு இவைகள் ஏந்திய திருக்கரங்களும், மூன்று கண்களும், பெரிய கோரப் பற்கள் இரண்டும், சிவந்த சடையும், கோபச் சிரிப்பும், உக்கிர வடிவமுங் கொண்டவர். சர்வ சங்கார காலத்தில் பிரமா, விஷ்ணு முதலிய தேவர்களின் தலைகளைக் கொய்து புவனங்களை ஒடுக்கியவர். இக் காரணத்தினாலே கால பைரவர் என அழைக்கப்படுகின்றார். பைரவ மூர்த்தத்தில் காலபைரவர், கற்பாந்த பைரவர், சங்கார பைரவர், உன்மத்த பைரவர், உக்கிர பைரவர், கண்ட பைரவர், ஞானபைரவர் என்பன காரணங்கருதியே வந்தமைந்தன.
திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்:
தன்னடியார்க் கருள்புரிந்த தகவு தோன்றுஞ்
சதுர் முகனைத் தலையரிந்த தன்மை தோன்றும்
மின்னனைய நுண்ணிடையாள் பாகந் தோன்றும்
s لے

r வேழத்தி னுரிலிரும்பிப் போர்த்த றோன்றும் துன்னிய செஞ் சடை மேலோர் புனலும் மாம்பும் தூயமா மதியுடனே வைத்த தோன்றும் பொன்னனைய திருமேனி பொலிந்து தோன்றும்
பொழிறிகளும் பூவணத் தெம் புனிதனார்க்கே.
சதுர்முகனைத் தலையரிந்த தன்மை, வேழத்தினுரி விரும்பிப் போர்த்தமை என்பன பைரவக் கடவுளால் செய்யப்பட்டன என்பன திருமுறைகளிலும் காணலாம்.
* காவற் கடவுளாகக் கிராமங்கள் தோறும் சிறந்து விளங்கும் பைரவப் பெருமானின் பெருங்கருணையைப் போற்றி நிற்கிறோம். காசிபைரவப் பெருமானின் தனித்து ஆளுந் திருத்தலமாக விளங்குகின்றது. பிள்ளையாரைப் போல பைரவப் பெருமானும், வேம்பு, ஆல், மா, அரசு முதலிய மரங்களிலும் சூலாயுதத்தை அறிகுறியாக வைத்து வனங்கப்படுபவர்.
பைரவ உபாசனை வீரம், ஞானம், தைரியம் போன்ற பாக்கியங்களை அறிக்க வல்லது. நல்லியல்புகளும் தர்மமும் நலிந்து அறியாமை ஆகிய இருள் கவ்விவரும் நாட்களில் மீண்டும் புத்தொளியும் புதுவாழ்வும் பெற வடுகநாதனை வணங்கவேண்டியது அவசியமாகும்.
நன்றி "பைரவ மான்மியம்”
இரா. மயில்வாகனம்
తగ్గి
لـ لكل ما

Page 10
ད།
அருள் தரும் பைரவர்
- ஜானகி கிருஷ்ணன்
இறைவன் ஐந்து முகங்களுடன் பல அருளைக் காட்டியிருக்கின்றான். ஸத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற மூர்த்திபேதங்களில் பைரவரும் ஒருவர்.
சிவாம்சமான பைரவ மூர்த்தி உலகம் எங்கும் வியாபித்து இருப்பவர். நிர்வாண ரூபம், மூன்று கண்கள், சர்ப்ப ஆபரணம், குண்டலம், சிரசில் மாலை, கட்கம். சூலம், கபாலம், உடுக்கை, கோரப்பல், நாய் வாகனம், இவரே பைரவர்.
"சுவானத்வஜாய வித்மஹே
சூலஹஸ்தாய தீமஹி தந்நோ: பைரவ: ப்ரசோதயாத்”
என்ற பைரவ காயத்ரி மந்திரத்தை ஆசாரத்துடன் தகுந்த குருநாதர் மூலம் உபதேசம் பெற்று பைரவ உபாஸனையில் ஈடுபடலாம். வாக்தேவியின் அருளுடன் கூடிய இவர் கேட்பதைத் தரும் இயல்புடையவர்.
நமது ஆலயங்களில் பைரவருக்குத் தனிச் சன்னிதி உண்டு. உதயகால பூஜை தொடங்கு முன்னும் இரவு அர்த்தஜாம பூஜைக்கு பின்னும் பைரவரை பூஜை செய்து, கோயில் காவலை பைரவரிடம் ஒப்படைப்பது வழக்கம்.
பைரவர் காவல் தெய்வம். பைரவாஷ்டகம், பைரவ அஷ்டோத்திரம், கால பைரவாஷ்டகம் இவைகள் நித்திய பாராயணத்திற்கு ஏற்றவை. பைரவரை அஷ்டபைரவர் என்று நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை காலபைரவர், கல்பாந்த பைரவர், கபால பைரவர், க்ரோதந் பைரவர், ஸம்ஹார பைரவர், உந்மத்த பைரவர், சண்ட பைரவர், உக்ர பைரவர் ஆகியவை.
الص - נש) - ܬ

r- திருவண்ணாமலை, பட்டீஸ் வரம் முதலிய
ஆலயங்களில் பைரவரின் சிற்பம் மிகவும் அழகானது.
காசியில் உள்ள கால பைரவர் சன்னதி பிரசித்தி பெற்றது. காசிக்குச் சென்றவர்கள் இரவு கால பைரவர் பூஜை பார்க்காமல் திரும்புவதில்லை. கால பைரவர் காசி நகரத்தின் சேனாதிபதி. காசியில் இறந்தவர்களுக்கு யமபயம் கிடையாது. தண்டனை கொடுக்க யமனுக்கு அதிகாரமும் கிடையாது. காலனின் அதிகாரம் பைரவருக்கு கிடைத்ததால் கால பைரவர் என்று அழைக்கப்படுகிறார்.
சீர்காழியில் பைரவருக்கு வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் அபிஷேகம். கூரையிலுள்ள பைரவரின் நேர்ப் பார்வையில், கீழே உள்ள பலிபீடத்திற்கு அபிஷேகம் பால், பஞ்சா மிர்தம், தயிர் எல்லா வாசனைத் திரவியங்களுடன் அபிஷேகம் பார்க்க ஆயிரம் கண்கள் வேண்டும்.
உத்சவருக்கு முத்துச் சட்டநாதர் என்று பெயர். பலிபீடத்திற்கு அபிஷேக ஆராதனை முடிந்த பிறகு படியேறி மேலே சட்ட நாதருக்குப் புனுக்குச் சட்டம் சாற்றி வடை மாலை சாற்றுவார்கள்.
இந்த ஆலயத்தில் நவக்கிரஹ தேவதைகள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நிற்பது அதிசயமாகும். ஈஸ்வரனும், ஈஸ்வரியும் பெரிய திருமேனியுடன் புன்னகை பூத்த திருமுகத்துடன் வீற்றிருப்பதும் இந்த ஆலயத்தில் காணலாம். மற்றும் அஷ்ட பைரவர்களும், பிரதிஷ்டை செய்து ஒரே சமயத்தில் பார்க்கக் கிடைப்பதும் தோணியப்பர் ஆலயத்தின் பெருமைக்கு ஒரு சான்று.
காலத்திற்கு அதிபதியான கால பைரவரை வழிபட்டால், மனோதைரியமும், சாந்தியும் கிட்டும் என்பதில் ஐயமில்லை.
- நன்றி- அம்மன் தரிசனம் 26 மார்ச் 1997
أص 11 -ܥܬ

Page 11
காசியிலுள்ள கால பைரவரைக் குறித்து றுந் சங்கராச்சாரியர் அருளிச்செய்த ஸ்தோத்திரம்
தேவராஜ ஸேவ்யமாந பாவநாங்க்ரி பங்கஜம் வ்யாள யக்ஞஸ9த்ர மிந்துசேகரம் க்ருபாகரம் நாரதாதி யோகிப்பருந்த வந்திதம் திகம்பரம் காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே.
பாநுகோடி பாஸ்வரம் பவாப்தி தாரகம்பரம் நீலகண்ட மீப்ஸிதார்த தாயம் த்ரிலோசநம் காலகால மம்புஜாகூஜி மகூ$சூல மகூ$ரம் காசிகாபுராதிநாத காலபைரம் பஜே.
சூலமடங்க பாச தண்டபாணி மாதிகாரணம் ச்யாம காய மாதி தேவமகூyரம் நிராமயம் பீப விக்ரமம் ப்ரபும் விசித்திர தாண்டவப்ரியம் காசிகாபுராதிநாத காலபைரம் பஜே.
புத்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம் பக்தவத்ஸலம் சிவம் ஸமஸ்தலோக விக்ரஹம் நிக்வணந் மநோக்ளு ஹேம கிங்கி லஸத்கடிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
தர்மஸேது பாலகம் த்வதர்ம மார்க நாசகம் கர்மபாச மோசகம் ஸ செர்மதாயகம் விபும்
ஸவர்ணவர்ண சேஷபாசசோபிதாங் கமண்டலம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
ரத்நபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம் நித்யமசி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜநம் ம்ருத்யுதர்ப நாசநம் கராளதம்ஷடிர மோகூyணம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே.
12
 

அட்டஹாஸ பிந்த பத்மஜாண்டகோச ஸந்ததிம் திருஷ்டி பாதநஷ்ட பாபஜாலமுக்ர சாஸநம் அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகந்தரம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. 7
பூதஸங்க நாயகம் விசாலகீர்த்தி தாயகம் காசிகாஸ்தலோக புண்யபாய சோதகம் விஷம் நீதிமார்க் கோவிதம் புராதநம் ஜகத்பதிம் காசிகாபுராதிநாத காலபைரவம் பஜே. 8
காலபைரவாஷ்டகம் படந்தி யே மநோஹரம்பீ ஞானமுக்தி ஸாதநம் விசித்ர புண்யவர்தநம் சோகமோஹ தைந்யலோப கோபதாப நாசநம் தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரிஸந்நிதிம் த்ருவம்.9
பூரீ கால பைரவாஷ்டகம் ஸம்பூரணம்
பைரவக்கடவுள் நாமாவளி
பைரவ சுவாமி அடியேம் வல்லினை
வல்விரைந் தோடவே அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய் அருள்வாய்
ஆனந்தம் தந்தருள்வாய் அருள்வாய் பரசிவ நிந்தை செய்பிரமாவையும் தலைபாரம் அறுப்பவரே பக்தர்களுக்குயர் சித்தியளித்தருள்
பண்பொடு செய்பவரே செந்தொடை யுடையீர் முறுவல் படையீர்
செய்திகள் சூலம் கையில் கொண்டு பைரவ சுவாமி அடியேம் வல்வினை
வல்விரைந் தோடவே அருள்வாய் அருள்வாய் சம்ப சதாசிவ சாம்ப சதாசிவ
சாம்ப சதாசிவ சாம்பசிவா.
13 -ܠܐ

Page 12
r ஞானபைரவசுவாமி பேரில் பாடிய
திருவூஞ்சற் பாக்கள்
அண்டசரா சரவதிப ஆதி நாத
ஆண்கண நாதனருந் துணைவ சோதி கொண்டவிதா தாசிரங்கொய் கொற்றா தேவ
கோதைபத்ர காளிமண வாளா வெம்மை அண்டுபிணி யொழிக்குமத்தா கழகம் பல்லா
லயமதியா வணமருவு முரும்பை யூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
வண்டுமலர் நறவுகொண்டு கீதம் பாட
மாவருக்கை கமுகுதென்னை வயங்கு வாழைத் தண்டலைசூழக்கோங்கு பன்னீர் வெட்சி
சண்பகம்வா சங்கமழச் சங்கு பேரி அண்டமதிர் தரவார்ப்பத் தேவ மாதர்
ஆடநட மடியர்பணி யுரும்பை யூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
பண்குலவு முடைமாலை விடுத்த காயா
பணிகார வடைமாலை தரித்த தூயா அண்டுமடி யவர்பிணிதீர் தாள்ச காயா
அழகுபல குலவுரும்பை யூரினோர்பால் கண்டலம்போ தைப்புளின மென்றெ னரிக்கா
கம்பதுங்கிச் சிறையொதுக்குங் காட்சி மேய துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்,
أص 14 ܥܠ

rー
சண்டகபா லஞ்சூலம் ரக்த நேத்ரம்
தடியுமனற் சடையுரநிர் வாணங் காணக் கண்டனக்கே ரண்டுபத்ர காளி யோடு கரியநா யேறிநடம் புரிந்து பூத ஒண்கணஞ்சூழக்காவற் கடவுளான
உத்தமநித் தியநாதா உரும்பை யூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
விண்டலமா ரிரவிமதி தம்ப மாக
விகிர்தனித பிரணவமே விட்ட மாக பண்குலவு பலகலைகள் கயிற தாகப்
பனியுமுயர் நான்மறையே பலகை யாக திண்டிறலார் சுரமாதர் வடந்தொட் டாட்டத்
தேசுதவழ் சோலை திகழ் உரும்பையூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
தண்டமிழ்வா ணர்கள்குழச்சங் கம்பேரி
தவில் துடிபுல் லாங்குழல் யாழ்சத்தமீறக் கொண்டல்பணி காட்டமயி லதுகண் டாடக்
கூதிர்க்கா லத்தடியர் குரவை காட்ட சண்டனைனப் பஞ்சவா லாத்தித் தீபந்
தயங்கியொளி தனைக் காட்ட உரும்பையூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
எண்டிசையு மிருந்தடியார் கிருபா வள்ள
லென்றுனது சந்நிதியைத் தேடி வந்து கொண்டபிணித் துயர்கூறிக் கண்ணிர் மல்க குறைநீக்கி யரள்புரியுங் குமர நாதா தொண்டிரைவா ரியிற்சேக்கை புரியாற் றாருந்
திருமாற்கும் மருமகனே உரும்பை யூரில் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
1s 4ے

Page 13
அண்டர்பணி யும்பரனே ஆடீரூஞ்சல்
அமலபுர முடையவரே ஆடீரூஞ்சல் பண்டுமறை துதிபதியே ஆடீரூஞ்சல்
பற்றுமைங்கைப் பரற்கிளையோய் ஆடீரூஞ்சல்
கொண்டல்வணன் மருகவனே ஆடீரூஞ்சல் பிரமனொரு சிரமரிந்தோய் ஆடீரூஞ்சல்
துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்.
தண்குமுத மலர்ப்பாதா ஆடீரூஞ்சல்
தனிதமுடு வற்படையா ஆடீரூஞ்சல் வண்குலவு பரஞ்சுரரே ஆடீரூஞ்சல்
மறைபுகழுந் திறலுடையாய் ஆடீரூஞ்சல் திண்டிறற்கு லப்படையா ஆடீரூஞ்சல் தீரபத்ர காளியன்பா ஆடீரூஞ்சல் துண்டியுறை வடுகேசா ஆடீரூஞ்சல்
சுவாமிவயிரவதுரையே ஆடீரூஞ்சல்,
உருத்திரநன் மணியோடு நீறும் வாழி
உலகெங்கும் வீரசைவ மோங்கி வாழி திருத்திகழுஞ் சிவனடியார் சேர்ந்து வாழி
தேவரனை பாவலரும் சிறந்து வாழி மருத்தனைய மழைபெய்து மண்ணும் வாழி மாவுரும்பை வாழ்மக்கள் மன்னி வாழி கருத்தீருந் துண்டியுறை கவினுந் தேவன் காரிவயிரவரூஞ்சல் வாழி வாழி.
ܓܰ %
16
N

ஞானபைரவசுவாமி பேரில் பாடிய பாடல் எச்சரிக்கை
தேனார் வடை மாலா புனை தேவா எச்ச ரீக்கை செய்யா ரழற் சடையா சூலப் படையா எச்ச ரீக்கை
போதா மலர்ப் பாதா பூத நாதா எச்ச ரீக்கை புகழார் துண்டிப் பதிவாயுறை புனிதா எச்ச ரீக்கை
கரசூ லக பால கர கந்தா எச்ச ரீக்கை கதியார் துண்டிப் பதியார் கிர்பைக் கடலே எச்ச ரீக்கை
நித்தா பத்தர் அத்தா வன்பர் தத்தா எச்ச ரீக்கை நின்பால் வரு மன்பர்க் கருள் நிமலா எச்ச ரீக்கை
அடியார் பிணி கெடவே யருள் அமலா எச்ச ரீக்கை ஆனா நிரு வானா செக மானா யெச்ச ரீக்கை
துதியார் துண்டிப் பதிகால் பழஞ் சுடரே எச்ச ரீக்கை தூயா கனி வாயா என்ச காயா எச்ச ரீக்கை
அத்தா மல முத்தா பல சித்தா எச்ச ரீக்கை அழகார் துண்டிப் பதி மேவிய ஐயா எச்ச ரீக்கை
11.சா வடு கேசா துண்டி வாசா எச்ச ரீக்கை
1மையாள் பரம் பொருளே யருள் இறையே எச்ச ரீக்கை.

Page 14
r- N முரீ காலபைரவர் தோத்திரம்
அப்பர் தேவாரம்
விரித்தபல் கதிர்கொள் கதிர்கொள் சூலம் வெடிபடுதமருகங்கை தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை அஞ்சக் கண்டு ஒண்திரு மணிவாய் விள்ளச் சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வனாரே. 1
பெரியபுராணம்
அஞ்சு வான்கரத் தாறிழி மதத்தோர்
ஆனை நிற்கவும் அரையிருட் டிரியும் மஞ்சு நீள்வது போலுமா மேனி
மலர்ப்ப தங்களில் வண்சிலம் பொலிப்ப நஞ்சு பில்கெயிற் றரவவெற் றரையின்
நாம மூன்றிலைப் படையுடைப் பிள்ளை எஞ்ச லின்றிமுன் திரியவும் குன்றம்
எறிந்த வேலவன் காக்கவும் இசையும். 2
கந்தபுராணம்
பரமனை மதித்திடாப் பங்க யாசனன் ஒருதலை கிள்ளியே யொழிந்த வானவர் குருதியு மகந்தையுங் கொண்டு தண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம். 3
காஞ்சிப்புராணம்
எளியரை வலியர் வாட்டின் வலியரை யிருநீர் வைப்பின்
அளியறத் தெய்வம் வாட்டு மெனுமுரைக் கமைய வன்றே தெளியுமா வலியைச் சென்றோற் செகுத்துரிக் கவயம் போர்த்த வளியுளர் கச்சி காவல் வைரவர்க் கன்பு செய்வோம். 4
لص 1s ܥܐ

திருவானைக்காப்புராணம்
உலக மளித்தல சுதந்திரமன்
றுவன முயர்த்தோற் கெனவவன்சே யிலகு முருவம் பொடித்தவன்பா
லெழுந்து படைப்புஞ் சுதந்திரமன் றலர்மெல் லனையாற் கெனவவனை
யரங்கத் திசைமா முகனாக்கிப் பலரும் வெருவப் பொழிநெய்த்தோர்ப்
பயிக்கம் புகுந்தோன் பதம்பணிவாம். 5
காசிரகசியம்
தளம்பொலி மலரோ னாதி வானவர் தாழ்ந்து போற்ற உளம்பொலி காசி மேவும் உயிர்கள் செய் பாவ மெல்லாங் களம் பொலி யாது தண்டங் கண்டற வொழித்து முத்தி வளம்பொலி வகைசெய் கால வைரவற் கன்பு செய்வாம். 6
திருகுடந்தைப்புராணம்
எழுவகைத் தாதுங் கூடி னியங்கிடு முயிரொன் றேனு
நழுவிடி னியங்கா வென்று நவிறலை வெளிசெய் தாங்கு முழுவலி நெடியோனாதி மொய்த்தவானவர்மெய் நெய்த்தோர் வழுவறக் கபாலத் தேற்ற வடுகனை வணங்கி வாழ்வோம். 7
Ne Se
శSS

Page 15
கதிர்காமத் திருப்புகழ்
நல்லூர்க் கந்தன் மீதும், கதிர்காமக் கந்தன் மீதும் ஈடிலா அன்பு பூண்டவர் அமரர் பொன் பாலசுந்தரம். இதனாலேயே கதிர்காமக் கந்தன் மீது பாடப்பெற்ற திருப்புகழ் அனைத்தையுந் திரட்டி அவர் நினைவில்
சமர்ப்பிப்பது கடமையாகின்றது.
விநாயகர் துதி
கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுக னடிபேணிக் கற்றிடு மடியவர் புத்தி லுறைபவ
கற்பக எனவினை கடிதேகும் மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய் மதயானை மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.
அகரமு மாகி அதிபனு மாகி
அதிகமு மாகி அகமாகி அயனென வாகி அரியென வாகி
அரனென வாகி அவர்மேலாய்
இகரமு மாகி எவைகளு மாகி
ل 20 ܥܐ
 

இனிமையு மாகி வருவோனே ག།
இருநில மீதில் எளியனும் வாழ
எனதுமு னோடி வரவேணும் மகபதி யாகி மருவும்வ லாலி
மகிழ்களி கூரும் வடிவோனே வனமுறை வேட னருளிய பூஜை
மகிழ்கதிர் காம முடையோனே செககண சேகு தகுதிமி தோதி
திமியென ஆடு மயிலோனே திருமலிவான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு பெருமாளே. (1)
அடைபடாது நாடோறும் இடைவிடாது போம்வாயு அடைய மீளில் வீடாகும் எனநாடி அருள்பெறாவ னாசார கரும யோகி யாகாமல் அவனி மீதி லோயாது தடுமாறும் உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாச காதீத طبيا وا|9ی)Šـا உருகி ஆரி யாசார பரம யோகி யாமாறுன்
உபய பாத ராசீகம் அருள்வாயே வடப ராரை மாமேரு கிரியெ டாந டாமோது
மகர வாரி யோரேழும் அமுதாக மகுட வாள ராநோ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயி ரமுநோவக் கடையு மாதி கோபாலன் மருக தீர வேல்வீர
கதிருகாம மூதூரில் உறைவோனே கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேரு வேதேவர் பெருமாளே. (2)
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
அடைவில் ஞாளி கோமாளி அறமீயா அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்
لمــ 21 ܠܐ

Page 16
r அருளி லாத தோடோய மருளாகிப் N
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசு
பருவ மேக மேதாரு எனயாதும் பரிவு றாத மாபாதர் வரிசை பாடி ஒயாத
பரிசில் தேடி மாயாத படிபாராய் இலகு வேலை நீள்வாடை எரிகொள் வேலை மாசூரி லெறியும் வேலை மாறாத திறல்வீரா இமய மாது பாகீரதிநதி பால காசார
லிறைவி கான மால்வேடர் கதைபாகா கலக வாரி போல்மோதி வடவை ஆறு சூழ்சீத
கதிர காம மூதூரில் இளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான
கருணை மேருவே தேவர் பெருமாளே. (3)
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகி பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே. (4)
உடுக்கத் துகில்வேணு நீள்பசி
யவிக்கக் கனபானம் வேணுநல் ஒளிக்குப் புனலாடை வேணுமெய் யுறுநோயை
ஒழிக்கப் பரிகாரம் வேணுமுள் இருக்கச் சிறுநாரி வேணுமொர்
படுக்கத் தனிவீடு வேணுமிவ் வகையாவுங் கிடைத்துக் க்ருஹவாசி யாகிய
மயக்கக் கடலாடி நீடிய கிளைக்குப் பரிபால னாயுயி ரவமேபோம்
க்ருபைச்சித் தமுஞான போதமு மழைத்துத் தரவேணு மூழ்பவ
கிரிக்குட் சுழல்வேனை யாளுவதொருநாளே குடக்குச் சிலதூதர் தேடுக
أص 22 ܥܠ

r வடக்குச் சிலதூதர் நாடுக N குணக்குச் சிலதூதர் தேடுக வெனமேவிக்
குறிப்பிற் குறிகாணு மாருதி யினித்தெற் கொருதூது போவது
குறிப்பிற் குறிபோன போதிலும் வரலாமோ அடிக்குத் திரகார ராகிய
வரக்கர்க் கிளையாத தீரனு மலைக்கப் புறமேவி மாதுறு வனமேசென்
றருட்பொற் றிருவாழி மோதிர மளித்துற் றவர்மேல் மனோகர
மளித்துக் கதிர்காம மேவிய பெருமாளே. (5)
எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தானி னைப்பை இருபோதும் இதய வாரி திக்கு ஞறவாகி
எனது ளேசி றக்க அருள்வாயே கதிர காம வெற்பி லுறைவோனே
கனக மேரு ஒத்த புயவீரா மதுர வாணி உற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே. (6)
கடகட வருவிகள் தபவரி அதிர்கதிர்
காமத் தரங்க மலைவீரா கனகத நகருலி புணரித குணகுக
காமத் தனஞ்சம் LuG360TITL வடசிக ரகிரித விடுபட நடமிடு
மாவிற் புகுங்கந் தவழாது வழிவழி தமரென வழிபடு கிலனென
வாவிக் கினம்பொன் றிடுமோதான் |டவியிருடியபி நவகும ரியடிமை
பயயப் பனஞ்சென் றயர்வோனே
அயிலவ சபரிசெய் கவிபுகல் தருகவி
\ 23 أص

Page 17
யாளப் புயங்கொண் டருள்வோனே இடமொரு மரகத மயிலிசை வடிவுள
ஏழைக் கிடங்கண் டவர் வாழ்வே இதமொழி பகரினு மதமொழி பகரினு
மேழைக் கிரங்கும் பெருமாளே. (7)
கலையிலே மைக்கண் விழியிலே பெற்ற
குருதிநேரிட்ட விதழ்மானார்
குழையிலே தெற்று நடையிலே நெய்கொள்
குழலிலே பற்கள் தனிலேமா
முலையிலே அற்ப இடையிலே பத்ம
முழுநிலா வட்ட முகமீதே | முதுகிலே சுட்டி நுதலிலே இக்கு
மொழியிலே சிக்கி விடலாமோ தலைவனே முத்தி முதல்வனேதுப்டர்
இகலனே நித்தம் இளையோனோ சதுரனே பித்தர் புதல்வனிே மெச்சு
சரவணா செச்சை முருகோனே உலகனே மிக்க கதிருகா மத்தில்
ஒருவனே விஷ்ணு மருகோனே ஒயிலனே பச்சை மயிலனே சித்ர
உருவனே பத்தர் பெருமாளே. (8)
கனிதருங் கொக்குக் கட்செவி வெற்பும்
பழநியுந் தெற்குச் சற்குரு வெற்புங் கதிரையுஞ் சொற்குட் பட்ட திருச்செந் திலும்வேலும் கனவிலுஞ் செப்பத் தப்பு மெனைச்சங்
கடவுடம் புக்குத் தக்கவ னைத்துங் களவுகொண் டிட்டுக் கற்பனை யிற்கண் சுழழ்வேனைப் புனிதனம் பைக்குக் கைத்தல ரத்னம்
பழையகங் கைக்குற் றப்புது முத்தம் புவியிலன் றைக்கற் றெய்ப்பவர் வைப்பென் றுருகாவெப் பொழுதும்வந் திக்கைக் கற்ற எனைப்பின்
لے 24 ܠܐ

N
பிழையுடன் பட்டுப் பத்தருள் வைக்கும் பொறையையென் செப்பிச் செப்புவ தொப்பொன்றுளதோதான் அனனியம் பெற்றற் றற்றொரு பற்றுந்
தெளிதருஞ் சித்தர்க் குத்தெளி சிற்கொந் தமலைதென் கச்சிப் பிச்சிமலர்க்கொந் தளபாரை அறவிநுண் பச்சைப் பொற்கொடி கற்கண்
டமுதினுந் தித்திக் கப்படு சொகொம் பகிலவண் டத்துற் பத்திசெய் முத்தின் பொலமேரு தனிவடம் ப்ொற்புப் பெற்றமு லைக்குன்
றிணைசுமந் தெய்க்கப் பட்ட நுசுப்பின் தருணிசங் குற்றுத் தத்துதி ரைக்கம் பையினுாடே தவமுயன் றப்பொற் புப்படி கைக்கொண்
டறமிரண் டெட்டெட் டெட்டும்வ ளர்க்கும் தலைவியங்கர்க்குச் சத்ய முரைக்கும் பெருமாளே. (9)
குடலிடை தீதுற் றிடையிடை பீறிக்
குலவிய தோலத் தியினுாடே குருதியிலேசுக் கிலமது கூடிக்
குவலயம் வானப் பெரிகாலாய் உடலெழு மாயப் பிறவியி லாவித்
துறுபிணி நோயுற் றுழலாதே உரையடி யேனுக் கொளிமிகு நீபத்
துனதிரு தாளைத் தரவேணும் கடலிடை சூரப் படைபொடி யாகக்
கருதல ரோடப் பொரும்வேலா கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத் தமிழ்நாடா
சடையினர் நாடப் படர்மலை யோடித்
தணிவிளை யாடித் திரிவோனே தனிமட மானைப் பரிவுட னாரத்
தழுவும்வி நோதப் பெருமாளே. (10)
2s) أص

Page 18
N
குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி
கணவசர வணநிருதர் கலா பிறைச்சடையர் குருவெனந லுரையுதவு மியலா எணத்தினமும் உருகாதே குயில்மொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்
தெருவிலன வரதமன மெனவே நடப்பர்நகை கொளுமவர்களுடைமை மன முடனே பறிப்பவர்கள் அனைவோரும் தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்
முலையிலுறு துகில்சரிய நடுவீதிநிற்பவர்கள் தனமலியர் மனமுறிய நழுவா உழப்பியர்கண் வலையாலே சதிசெய்தவ ருளமகிழ அணைமீ துருக்கியர்கள்
வசமொழுகி அவரடிமை எனமா தரிட்டதொழில் தனிலுழலு மசடனையு னடியே வயத்தவருள் தருவாயே சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு
தொருநொடியிலவர்கள் படைகெடவே லெடுத்தவனி தனில்தருததர் சிரமுருள ரணதுள் படுத்திவிடு செருமீதே தவனமொடு மலகைநட மிடவீர பத்திரர்கள்
அதிரநிண மொடுகுருதி குடிகாளி கொக்கரிசெய் தசையுணவுதனின் மகிழவிடுபேய் நிரைத்திரள்கள் பலகோடி திமிதமிட நரிகொடிகள் கழுவா டரத்தவெறி
வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு திமிரதின கரவமரர் பதிவாழ்வுபெற்றுலவு முருகோனே திருமருவு புயனயனொ டயிரா வதச்குரிசில்
அடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர் சிவசமய அறுமுகவ திருவேரகத்திலுறை பெருமாளே. (1)
கொந்துத் தருகுழ லிருளோ புயலோ
வித்தைத் திருநுதல் சிலையோ பிறையோ
கொஞ்சிப் பயில்மொழி அமுதோ கனியோ விழிவேலோ கொங்கைக் குடமிரு கரியோ கிரியோ
வஞ்சிக் கொடியிடை துடியோ பிடியோ கொங்குற் றுயரல்குலரவோ ரதமோ எனுமாதர் திந்தித் திமிதிமி திமிதா திமிதோ
தந்தித் திரிகிட கிடதா எனவே
4ے )26 ܥܐ

r
ܥܐ
சிந்தைத் தயவுகள் புரிவே னுனையே
வெந்திப் புடன்வரு மவுணே சனையே
விஞ்சைக் குடையவர் தொழவே வருவாய்
தொந்திக் கணபதி மகிழ்சோ தரனே
சொம்பிற் பலவள முதிர்சோ லைகள்குழ்
கோமள வெற்பினை ஒத்ததனத்தியர்
கோகில நற்புற வத்தொடு குக்குட
தூமம லர்ப்பளி மெத்தைப டுப்பவர்
தூசுநெகிழ்த்தரை சுற்றியு டுப்பவர்
மாமர மொத்துவ ரிக்குள்நெருக்கிய
மாமலை யிற்பழ நிப்பதி யிற்றணி
சிந்திப் படிபயில் நடமா டியபா أييوس بنوعية
வந்தித் தருள்தரு மிருசே வடியே சிந்தித் திடமிகு மறையா கியசீர் அருள்வாயே
துண்டித் திடுமொரு கதிர்வே லுடையாய்
வென்றிக் கொருமலை எனவாழ் மலையே தவவாழ்வே
கஞ்சத் தயனுடன் அமரே சனுமே விந்தைப் பணிவிடை புரிபோ தவர்மேல் அருள்கூர்வாய்
செங்கட் கருமுகில் மருகா குகனே சொந்தக் குறமகள் கணவா திறல்சேர் கதிர்காமா
இஞ்சித் திருமதில் புடைசூழருள்சேர் துங்கப் பழநியில் முருகா இமையோர் பெருமாளே. (12)
காமனை ஒப்பவர் சித்தம யக்கிகள் கோவையிதழ்கனி நித்தமும் விற்பவர் மயில்காடை
ஆரணி யப்புள்வ கைக்குரல் கற்றவர் கோலவி ழிக்கடை இட்டும ருட்டிகள் விரகாலே
யாரையு மெத்திம னைக்குள ழைப்பவர் சோலைவனக்கிளி ஒத்தமொழிச்சியர் நெறிகூடா
காசுப றிக்கம றித்துமு யக்கிகள் தோதக வித்தைபடித்துந டிப்பவர் உறவாமோ
சூரனை வெட்டிநி ணக்குட லைக்கொடி வாரண மெச்சவ ளரித்தவ யிற்குக் கதிர்காம
மாகிரி யிற்றணி கைக்கிரி யிற்பர
27 الصـ

Page 19
மாகிரி யிற்றிரை நித்தில முற்றருள் அலைவாயில் ஏமவெ யிற்பல வெற்பினி னற்பதி
னாலுல கத்தினிலுற்றுறு பத்தர்கள் ஏதுநினைத்தது மெச்சிய எளித்தருள் இளையோனே ஏரக வெற்பெனு மற்புத மிக்கசு வாமிம லைப்பதி மெச்சிய சித்தவி
ராஜத லக்ஷண உத்தமி பெற்றருள் பெருமாளே. (13)
சமரமுக வேலொத்த விழிபுரள வாரிட்ட
தனமசைய வீதிக்குள் மயில்போலுலாவியே சரியைக்கிரியை யோகத்தின் வழிவருக்கு பாசுத்தர்
தமையுணர ராகத்தின் வசமாகமேவியே உமதடியு னாருக்கு மனுமரண மாயைக்கு
முரியவர்ம காதத்தை எனுமாயமாதரார் ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு
முனதருள்க்ரு பாசித்தம் அருள்கூரவேணுமே இமகிரிகு மாரத்தி அநுபவைப ராசத்தி
எழுதரிய காயத்ரி உமையாள்குமாரனே எயினர்மட மானுக்கு மடலெழுதி மோகித்து
இதனருகு சேவிக்கு முருகாவிசாகனே அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு
மதிகவித சாமர்த்ய கவிராஜராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த
அரியகதிர் காமத்தில் உரியாபிராமனே. (14)
சரத்தே உதித்தா யுரத்தே குதித்தே
சமர்த்தா எதிர்த்தே வருசூரைக் சரிபோ னமட்டே விடுத்தா யடுத்தாய்
தகர்த்தா யுடற்றான் இருகூறாச்
சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய்
செகுத்தாய் பலத்தார் விருதாகச்
சிறைச்சே வல்பெற்றாய் வலக்கா ரமுற்றாய்
திருத்தா யரைத்தாள் அருள்வாயே
أص 2s ܥܠܐ

-ܥܐ
புரத்தார் வரத்தார் சரச்சே கரத்தார்
பொரத்தா னெதிர்த்தே வருபோது
பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார்
பொரித்தார் நுதற்பார் வையிலேபின்
கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார்
கருத்தார் மருத்தூர் மதனாரைக் கரிக்கோ லமிட்டார் கணுக்கா னமுத்தே
கதிர்க்கா மமுற்றார் முருகோனே. (15) சரியையா ளர்க்குமக் கிரியையா ளர்க்குநற்
சகல யோகர்க் குமெட் டரிதாய சமயபே தத்தினுக் கணுகோணா மெய்ப்பொருட் டருபரா சத்தியுட் சிவமாகித் துரியமே லற்புதப் பரமஞானத்தினிற்
சுடர் வியா பித்த நற் பதிநீடு
துகளில் சா யுச்சியக் கதியையீ றற்ற சொற்
சுக சொரூபத்தை யுற் றடைவேனோ புரிசை சூழ் செய்ப்பதிக் குரியசா மர்த்தியப்
புருஷவீ ரத்துவிக் ரமசூரன் புரள வேல் தொட்டகைக் குமரமேன் மைத்திருப்
புகழையோ தற்கெனக் கருள்வோனே கரியயூகத் திரட்பலவீன்மீதிற்களைக்
கனிகள்பீ றிப் புசித் தமராடிக் கதலி சூழ் தெற்றிசைப் பயிலுமீழத்தினிற்
கதிரகா மக்கிரிப் பெருமாளே. (16)
திருமகளு லாவு மிருபுயமுராரி
திருமருகநாமப் பெருமாள்காண் செக தலமும் வானு மிகுதிபெறு பாடல்
தெரிதருகு மாரப் பெருமாள்காண் மருவு மடியார்கள் மனதில்விளை யாடு
மரகதம யூரப் பெருமாள்காண் மணிதரளம் வீசி அணியருவி சூழ
மருவுகதிர் காமப் பெருமாள்காண்
29

Page 20
N
அருவரைகள் நீறு படவசுரர் மாள
அமர் பொருத வீரப் பெருமாள்காண் அறுகு பிறைவாரி விரவு சடையீசர்
அருள் செய்குரு நாதப் பெருமாள்காண் இருவினையி லாத திருவினைவி டாத
இமையவர்கு லேசப் பெருமாள்காண் இலுகுசிலை வேடர் கொடியினதி பார
இருதனவி நோதப் பெருமாளே. (17)
பாரவித முத்தப்ப eரபுள கப்பொற்ப
யோதரநெருக்குற்ற இடையாலே பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்ப
பாணவிழி யிற்பொத்தி விடுமாதர் காரணிகு ழற்கற்றை மேல்மகர மொப்பித்த
காதில்முக வட்டத்தில் அதிமோக காமுகன கப்பட்ட ஆசையைம றப்பித்த
கால்களைம றக்கைக்கும் வருமோதான் தேரிரவி உடகிப்பு காமுதுபு ரத்திற்றெ
சாசிரனை மர்த்தித்த அரிமாயன் சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரி
கோணசயி லத்துக்ர கதிர்காம வீரபுன வெற்பிக்க லாபியெயி னச்சிக்கு
மேகலையி டைக்கொத்தின் இருதாளின் வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றை
வேல்களில கப்பட்ட பெருமாளே. (18)
புரைபடுஞ் செற்றக் குற்றம னத்தன் தவமிலன் சுத்தச் சத்யஅ சத்யன் புகலிலன் சுற்றச் செத்தையுள் நிற்குந் துரிசானன்
பொறையிலன் கொத்துத் தத்வவி கற்பஞ்
சகலமும் பற்றிப் பற்றற நிற்கும் பொருளுடன் பற்றுச் சற்றுமில் வெற்றன் கொடியேனின்
கரயறுஞ் சித்ரச் சொற்றமிழ் கற்குங்
கலையிலன் கட்டைப் புத்தியன் முட்டன்
لے )30( ܥܐ

N
கதியிலன் செச்சைப் பொற்புய வெற்புங் கதிர்வேலும் கதிரையுஞ் சக்ரப் பொற்றையு மற்றும்
பதிகளும் பொற்புக் கச்சியு முற்றுங் கனவிலுஞ் சித்தத்திற்கருதிக்கொண் டடைவேனோ குரை தருஞ் சுற்றுச் சத்தச முத்ரங்
கதறிவெந் துட்கக் கட்புர துட்டன் குலமடங் கக்கெட் டொட்டொழியச்சென் றொருநேமிக் குவடொதுங் கச்சொர்க் கத்தரி டுக்கங் கெடுநடுங் கத்திக் கிற்கிரி வர்க்கங் குலிசதுங் கக்கைக் கொற்றவனத்தங் குடியேறத் தரைவிசும் பைக்கிட் டித்தஇருக்கன்
சதுர்முகன் சிட்சைப் பட்டொழி யச்சந் ததமுவந் திக்கப் பெற்றவர் தத்தம் பகையோடத் தகையதண் டைப்பொற் சித்ரவி சித்ரந்
தருசதங் கைக்கொத் தொத்துமு ழக்குஞ் சரணகஞ் சத்திற் பொற்கழல் கட்டும் பெருமாளே. (19)
பொங்குங் கொடிய கூற்றணு
நஞ்சும் பொதுவில் நோக்கிய பொங்கும் புதிய நேத்திர வலைவீசிப் பொன்கண் டிளகு கூத்திகள்
புன்கண் கலவி வேட்டுயிர் புண்கொண் டுருகி யாட்படு மயல்தீரக் கொங்கின் புசக கோத்திரி
பங்கங் களையு மாய்க்குடி கொங்கின் குவளை பூக்கிற கிரிசோன குன்றங் கதிரை பூப்பர
முன்துன் றமரர் போற்றிய குற்றம் பிறவும் வாழ்த்துவ தொருநாளே எங்கும் பகர மாய்க்கெடி
விஞ்சும் பகழி வீக்கிய வெஞ்சண் டதனு வேட்டுவர் சரணார விந்தம் பணிய வாய்த்தரு
31) لـ

Page 21
ளந்தண் புவன நோற்பவை
மென்குங் குமசூ யாத்திரி பிரியாதே எங்கும் கலுழி யார்த்தெழ
எங்குஞ் சுருதி கூப்பிட
எங்குங் குருவி ஒச்சிய திருமானை என்றென் றவச மாய்த்தொழு
தென்றும் புதிய கூட்டமொ
டென்றும் பொழுது போக்கிய பெருமாளே. (20)
மறவறா வெற்றி மலர்தொடா விற்கை
வலிசெயா நிற்கு மதனாலும் மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட
மதிசுடா நிற்கு மதனாலும் இருகணால் முத்த முதிரயா மத்தி
னிரவினால் நித்த மெலியாதே இடருறா மெத்த மயல்கொளா நிற்கு
மிவளைவாழ் விக்க வரவேணும் கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி
கலவிசுடர் சித்ர LD60ofluort furt கனகமா னிக்க வடிவனே மிக்க
கதிரகா மத்தில் உறைவோனே முருகனே பத்த ரருகனே முத்தி
முதல்வனே பச்சை மயில்வீரா முடுகிமே லிட்ட கொடியசூழ் கெட்டு
முறியவேல் தொட்ட பெருமாளே. (21)
மருவு லாவிடு மோதிகு லைப்பவர்
சமர வேலெனு நீடுவிழிச்சியர் மனதி லேகப டுருப ரத்தையர் அதிகேள்வர்
மதன னோடறழ் பூசலி டைச்சிய
ரிளைஞராருயிர் தாவுமு லைச்சியர் மதுர மாமொழி பேசுகுணத்தியர் தெருமீதே
32 ص

சருவி யாரையும் வாவென ழைப்பவர் N
பொருளி லேவெகு ஆசைபரப்பிகள் சகல தோதக மாயைப டிப்பரை அணுகாதே சலச மேவிய பாதநினைத்துமு
னருணை நாடதி லோதுதி ருப்புகழ் தணிய வோகையி லோத எனக்கருள் புரிவாயே அரிய கானக மேவுருகு றத்தித
னிதணி லேசில நாறும னத்துட னடவிதோறுமெ வாழியல் பத்தினி மணவாளா அசரர் வீடுகள் நூறுபொ டிப்பட
உழவர் சாக்ர மோடியொ எரித்திட அமரர் நாடுபொன் மாரிமி குத்திட நினைவோனே திருவின் மாநகர் வீறு திருப்பழ
நியினி லேகர மாரூர் திருத்தணி திசையினான் மறை தேடருணைப்பதி யலைவாயில் திகழ்மெய் கூடலில் சோலை மலைபதி
கதிரு காமசிராமலை கச்சியில் திருவையாறுடன் மேவுதலத்துறை பெருமாளே. (22)
மாதர் வசமாயுற் றுழல்வாரும்
மாதவமெ ணாமற் றிரிவாரும் தீதிகல வோதிப் பணியாரும்
தீநரக மீதிற் றிகழ்வாரே நாதவொளியே நற் குணசீலா
நாரி யிருவோரைப் புணர்வேலா சோதி சிவஞானக் குமரோசா
தோமில் கதிர் காமப் பெருமாளே. (23)
முதிரு மார வார வெற்றி முரச மாக நீளு மிக்கு
முனியு மார வார முற்ற கடலாலே
முடிவிலா ததோர் வடக்கில் எரியு மால மார் பிடத்து
முழுகி ஏறி மேலெறிக்கு நிலவாலே
வெதிரை யாயர் வாயில் வைத்து மதுரராக நீடிசைக்கும் விழை விலாத தாயாருக்கு மமியாதே
الصـ 33 ܠܐ

Page 22
ளைவு மோக போக முற்றி அளவிலாத காதலுற்ற
விரக மாற நீயளைக்க வரவேணும் கதிரகாம மாநகர்க்கு ளெதிரலாத வேல்தரித்த
கடவுளேக லாப சித்ர மயில்வீரா கயலுலாம் விலோச னத்தி களப மார்ப யோத ரத்தி
ககன மேவு வாளொருத்தி D66666 அதிர வீசியாடும் வெற்றி விடையிலேறு மீசர்கற்க
அரிய ஞான வாசகத்தை அருள்வோனே அகில லோக மீது சுற்றி அசுரலோக நீறெழுப்பி அமரர் லோகம் வாழவைத்த பெருமாளே. (24)
வருபவர்களோலை கொண்டு நமனுடைய தூதரென்று
மபிபிடியதாக நின்று தொடர் போது மயலதுபொ லாத வம்பன் விரகடைய னாகு மென்று
வசை களுடனே தொடர்ந்து அடைவார்கள் கருவியதனாலெறிந்து சதைகள்தனை யேயரிந்து
கரிய புனலே சொரிந்து விடவேதான் கழுமுனையிலேயி ரேன்று விடுமெனும வேளைகண்டு
கடுகிவர வேணு மென்றன் முனமேதான் பரகிரியு யாவு செந்தி மலையினுடனே யிடும்பன்
பழனிதனிலே யிருந்த − குமரேசா பதிகள் பல ஆயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற
பதமடியர் காணவந்த கதிர்காமா அரவு பிறையூளை தும்பை விலுவமொரு தூர்வை கொன்றை
அணிவர் சடையாளர் தந்த முருகோனே அரகர சிவாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர் தமை ஆளவந்த பெருமாளே. (25)
垒 لسفيا
"
ܥܐ
34l
أص

@_
சிவ சிவ திருச்செந்திலாண்டவன் துணை
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவாசகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர் . ஒளவையார்
திருவாசகமும் திருக்கோவையாரும் சமய, குரவர் நால்வருள் ஒருவராகிய மணிவாசகப் பெருமானால் அருளிச் செய்யப்பெற்றவை. இவ்விரு நூல்களும் திருமுறைகள் பன்னிரண்டினுள் எட்டாம் திருமுறையைச் சார்ந்தவை. கருங்கல் மனத்தையும் கரைந்துருகச் செய்யும் திருவாசகம், பக்தியையும் முக்தியையும் அளிக்கவல்லது. அதைப் போன்றே திருக்கோவையாரும் ஞானம் அளிக்க வல்ல ஒர் அருள் நூலாகும். இந்நூலை மக்கள், திருச்சிற்றம்பலக் கோவையார் எனவும் வழங்குவர். இறைவனே மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தைத் தம் திருக்கையால் எழுதினர் என்றும், "பாவை பாடிய வாயால் கோவை பாடுக” என இறைவன் அருளியமையால், மாணிக்கவாசகர் திருக்கோவையாரைப் பாடி அருளினர் 61ன்றும், இதனையும் இறைவனே எழுதிச் சிற்றம்பலம் உடையான் எனக் கையெழுத்திட்டு மறைந்தனன் 61ன்றும். இவ்விரண்டு நூல்களுக்கும் பொருள் யாதென்று வினவ மணிவாசகர் நடராசப் பெருமானையே சுட்டிக் 1.ாட்டினார். இதனை நம் குமரகுருபர சுவாமிகள் ',ாம்பாடிய சிதம்பரமும்மணிக்கோவை 23 ஆம் செய்யுளில்,
“பைந்தமிழ் நவின்ற செந்நாப் புலவன் ஐந்திணை யுறுப்பில் நாற்பொருள் பயக்கும்
ل s ܥܠܐ

Page 23
காமஞ் சான்ற ஞானப் பனுவற்குப் N
பொருளெனக் காட்டிய ஒருபெருஞ் செல்வ” என்று அருளியுள்ளார்.
மறையவர் வேதம் என்றும், சிவயோகியர் ஆகமம் என்றும் காமுகர் இன்பநூல் என்றும், அளவை நூலவர் எண்ணுரல் என்றும், தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்றும் இந்நூலைப் பற்றிக் கூறுவர். இந் நூலினது சிறப்பை நன்கு விளக்கும். திருக்கோவையார் தமிழின் கண் உள்ள ஏனைய அகத்திணை நூல்களைப் போலாது அருளியல் செறிந்த அகத்திணை நூலாகவும், மலவிருள் அற்ற ஞான நிகழ்ச்சிகளை உணர்த்தும் நூலாகவும் விளங்குகிறது. இதனை "அருள்வயிற் சிறந்த அகத்திணை மருங்கின் இருளறு நிகழ்ச்சி இவையென மொழிப்” என அதிகார வரலாறு பாடல் வலியுறுத்துவதால் உணரலாம். இந்நூல் பேரின்பச் சார்பானது என்பதும் இந் நூற் குப் பாட்டுடைத் தலைவன் தில் லைச் சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமானே என்பதும் மற்றைய கோவை நூல்களுக்கு இல்லாத பெருமையாகும். தமிழில் உள்ள பழமையான கோவைப் பிரபந்தங்களுள் இதுவும் ஒன்று. இந்நூல் 400 துறைகளைக் கொண்டது. “ஆய்ந்த கலித்துறைதான் நானுாறு அகப்பொருள் மேல் வாய்ந்த நற்கோவையாம்” என வச்சணந்திமாலை உணர்த்துகிறது. எனவே கோவைக்கு நானூறு என்ற வரையறை ஏற்பட்டது திருக்கோவையாரை ஒட்டியே யாகும் என்று அறிஞர்கள் கருதுவர்.
இந்நூலைப் பலரும் படித்து இன்புறவேண்டும் என்பது அமரர் பால சுந்தரத்தின் தந்தையார் அமரர் பொன்னம்பலத்தின் பேரவா. இது நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அமரர் பாலசுந்தரத்தின் அவாவாகும். எனவே இந் நினைவு மலரில் அதுவும் இடம்பெறுகின்றது.
శశ
لصـ ་]36[ ܠܐ

r N
an as
திருச்செந்திலாண்டவன் துணை
திருக்கோவையார் என வழங்கும் lifefligobeisaintenshuun
8.Ibăéfbpbusolb
மூலம்
விநாயக வணக்கம் எண்ணிறைந்த தில்லை எழுகோ புரந்திகழக் கண்ணிறைந்து நின்றருளுங் கற்பகமே! - நண்ணியசீர்த் தேனுாறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற நானுாறும் என்மனத்தே நல்கு.
நூற் சிறப்பு ஆரணங் காணென்பர் அந்தணர்: யோகியர் ஆகமத்தின் காரணங் காணென்பர்; காமுகர் காமநன்னூலதென்பர்: ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்; சீரணங் காயசிற் றம்பலக் கேவையைச் செப்பிடினே
1. இயற்கைப் புணர்ச்சி
1. காட்சி திருவளர் தாமரை சீர்வளர் காவிக ளிசர்தில்லைக் குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண் டோங்கு மருவளர் மாலையொர் வல்லியினொல்கியனநடைவாய்ந்தெய்வ துருவளர் காமன்றன் வென்றிக் கொடிபோன் றொளிர்கின்றதே. 1 மதிவாணுதல் வளர்வஞ்சியைக் கதிர்வேலவன் கண்ணுற்றது.
أص )37 ܥܐ

Page 24
rー N
2. ջքաIւն போதோ விசும்போ புனலோ பணிக ளதுபதியோ யாதோ வறிகுவ தேது மரிதி யமன்விடுத்த தூதோ வணங்கன்றுணையோ விணையிலிதொல்லைத்தில்லை மாதோ மடமயி லோவென நின்றவர் வாழ்வதியே. 2 தெரியவரியதோர் தெய்வமென்ன அருவரை நாடன் ஐயுற்றது.
3. தெளிதல் பாயும் விடையரன் றில்லையன் னாள்படைக் கண்ணிமைக்குந் தோயு நிலத்தடி தூமலர் வாடுந் துயரமெய்தி ஆயு மனனே யணங்கல்ல ளம்மா முலைசுமந்து தேயு மருங்குற் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே. 3 அணங்கல்லளென் றயில் வேலவன் குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது.
4. bանւ
அகல்கின்ற வல்குற் றடமது கொங்கை யவையவநீ புகல்கின்ற தென்னைநெஞ் சுண்டே யிடையடை யார்புரங்கள் இகல்குன்றவில்லிற்செற்றோன்றில்லை யீசனெம் மானெதிர்ந்த பகல்குன்றப் பல்லுகுத் தோன்பழ னம்மணன் பல்வளைக்கே. 4 வண்டமர் புரிகுழ லொண்டிடொடி மடந்தையை நயந்த அண்ணல் வியந்துள் ளியது.
5. உட்கோள் அணியு மகிழ்துமென் னாவியு மாயவன் றில்லைச்சிந்தா மணியும்ப ராரறி யாமறை யோனடி வாழ்த்தலரிற் பிணியு மதற்கு மருந்தும் பிறழப் பிறழமின்னும் பணியும் புரைமருங் குற்பெருந் தோளி படைக்கண்களே. 5 இறைதிருக் கரத்து மறிமா னோக்கி யுள்ளக் கருத்து வள்ள லறிந்தது.
الصـ 3s ܥܐ

r 6. தெய்வத்தை மகிழ்தல்
வளைபயில் கீழ்கட னின்றிட மேல்கடல் வான்நுகத்தின் துளைவழி நேர்கழி கோத்தெனத்தில்லைத் தொல் லோன்கயிலைக் கிளைவயின் நீக்கியிக் கெண்டையங் கண்ணியைக் கொண்டுதந்த விளைவையல் லால்விய வேன்நயவேன்தெய்வ மிக்கனவே. 6 அன்ன மென்னடை அரிவையைத் தந்த மன்னிருந் தெய்வத்தை மகிழ்ந்து ரைத்தது.
7. புணர்ச்சி துணிதல் ஏழுடையான்பொழி லெட்டுடை யான்புய மென்னைமுன்னாள் ஊழுடை யான்புலி யூரன்ன பொன்னிவ் வுயர் பொழில்வாய்ச் சூழுடை யாயத்தை நீக்கும் விதிதுணை யாமனனே யாழுடை யார்மணங் காணணங் காய்வந் தகப்பட்டதே.7 கொவ்வைச் செவ்வாய்க் கொடியிடைப் பேதையைத் தெய்வப் புணர்ச்சி செம்மல் துணிந்தது.
8. கலவியுரைத்தல் சொற்பா லமுதிவள் யான்சுவை யென்னத் துணிந்திங்ங்னே நற்பால் வினைத்தெய்வந் தந்தின்று நாணிவளாம் பகுதிப் பொற்பா ரறிவார் புலியூர்ப் புனிதன் பொதியில் வெற்பிற் கற்பா வியவரை வாய்க்கடி தோட்ட களவகத்தே. 8 கொலைவேலவன் கொடியிடையோடு கலவியின்பங் கட்டுரைத்தது.
9. இருவயினொத்தல் உணர்ந்தார்க் குணர்வரியோன்றில்லைச் சிற்றம்பலத்தொருத்தன் குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடியிடை தோள் புணர்ந்தாற் புணருந் தொறும்பெரும் போகம்பின் னும்புதிதாய் மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே. 9 ஆராவின்பத் தன்புமீதூர வார ரர்முலையை மகிழ்ந்துரைத்தது.
لے )39( -ܠܐ

Page 25
N
10. கிளவிவேட்டல் அளவியை யார்க்கு மறிவரியோன்றில்லை யம்பலம்போல் வளவிய வான்கொங்கை வாட்டடங் கண்ணுதல் மாமதியின் பிளவியல் மின்னிடை பேரமை தோளிது பெற்றியென்றாற் கிளவியை யென்றோ வினிக்கிள்ளை யார்வாயிற் கேட்கின்றதே. 10 அன்னமன்னவ ளவயவங்கண்டு
மென்மொழிகேட்க விருப்புற்றது.
11. நலம்புனைந்துரைத்தல் கூம்பலங் கைதலத் தன்பரென் பூடுரு கக்குனிக்கும் பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின் தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள் தீங்கனி வாய்கமழும் ஆம்பலம் போதுள வோஅளிகாள்நும் அகன்பணையே. 11 பொங்கிழையைப் புனைநலம்புகழ்ந் தங்கதிர்வேலோன் அயர்வுநீங்கியது.
12. பிரிவுணர்த்தல் சிந்தா மணிதெண் கடலமிர் தந்தில்லை யாணருளால் வந்தா லிகழப் படுமே மடமான் விழிமயிலே அந்தா மரையன்ன மேநின்னை யானகன் றாற்றுவனோ சிந்தா குலமுற்றென்னோவென்னை வாட்டந்திருத்துவதே. 12 பணிவளரல்குலைப் பயிர்ப்புறுத்திப் பிணிமலர்த்தாரோன் பிரிவுணர்த்தியது.
13. பருவரலறிதல் கோங்கிற் பொலியரும் பேய்கொங்கை பங்கன் குறுகலருர் தீங்கிற் புகச்செற்ற கொற்றவன் சிற்றம் பலமனையாள் நீங்கிற் புணர்வரி தென்றோ நெடிதிங்ங் னேயிருந்தால் ஆங்கிற் பழியா மெனவோ அறியே னயர்கின்றதே. 13 பிரிவுணர்ந்த பெண்கொடிதன் பருவரவின் பரிசு நினைந்தது.
أص 40 ܠܐ

N
r 14. அருட்குணமுரைத்தல்
தேவரிற் பெற்றநஞ் செல்வக் கடிவடி வார்திருவே யாவரிற் பெற்றினி யார்சிதைப் பாரிமை யாதமுக்கண் மூவரிற் பெற்றவர் சிற்றம் பலமணி மொய்பொழில்வாய்ப் பூவரிற் பெற்ற குழலியென் வாடிப் புலம்புவதே. 14 கூட்டிய தெய்வத் தின்ன ருட்குணம் வாட்ட மின்மை வள்ள லுரைத்தது.
15. இடமணித்துக் கூறி வற்புறுத்தல் வருங்குன்ற மொன்றுரித்தோன்றில்லையம்பல வன்மலயத் திருங்குன்ற வாணரிளங்கொடி யேயிட ரெய்தலெம்மூர்க் பருங்குன்ற மாளிகை நுண்கள பத்தொளி பாயநும்மூர்க் கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுக மேய்க்குங் கணங்குழையே. 15 மடவரலை வற்புறுத்தி இடமணித் தென் றவணியம்பியது.
16. ஆடிடத்துய்த்தல் தெளிவளர் வான்சிலை செங்கனி வெண்முத்தந் திங்களின் வாய்ந் தளிவளர் வல்லியன் னாய்முன்னிய யாடுபின் யானளவா ஒளிவளர் தில்லை யொருவன் கயிலை யுகுபெருந்தேன் துளிவளர் சாரற் கரந்துங்ங் னேவந்து தோன்றுவனே. 16 வன்புறையின் வற்புறுத்தி அன்புறுமொழியை யருககன்றது.
17. அருமையறிதல் புணர்ப்போன் நிலனும் விசும்பும் பொருப்புந்தன் பூங்கழலின் துணர்ப்போ தெனக்கணியாக்குந்தொல் லோன்தில்லைச் சூழ்பொழில்வாய் இணர்ப்போ தணிகுழலேழைதன் னிர்மையிந் நீர்மையென்றாற் புணர்ப்போ கனவோ பிறிதோ அறியேன் புகுந்ததுவே. 17 சுற்றமு மிடனுஞ் சூழலு நோக்கி மற்றவ ளருமை மன்ன னறிந்தது.
لم 41 ܥܐ

Page 26
18. பாங்கியையறிதல் உயிரொன் றுளமுமொன் றொன்றே சிறப்பிவட் கென்னொ டென்னப் பயில்கின்ற சென்று செவியுற நீள் படைக் கண்கள் விண்வாய்ச் செயிரொன்று முப்புரஞ்செற்றவன் தில்லைச்சிற் றம்பலத்துப் பயில்கின்ற கூத்த னருளென லாகும் பணிமொழிக்கே. 8 கடல்புரை யாயத்துக் காதற் றோழியை
மடவரல் காட்ட மன்னனறிந்தது.
2. பாங்கற் கூட்டம்
1. பாங்கனை நினைதல் பூங்கனை யாாம்புனற் றென்புலி யூர்புரிந் தம்பலத்துள் ஆங்கெனை யாண்டுகொண் டாடும் பிராண்டித் தாமரைக்கே பாங்கனையானன்ன பண்பனைக் கண்டிப் பரிசுரைத்தால் ஈங்கெனை யார்தடுப் பார்மடப்பாவையை யெய்துதற்கே, 19 எய்துதற் கருமை யேழையிற் றோன்றப் பையு ளுற்றவன் பாங்கனை நினைந்தது.
2. பாங்கன் வினாதல் சிறைவான் புனற்றில்லைச் சிற்றம் பலத்துமென் சிந்தையுள்ளும் உறைவானுயர்மதிற் கூடலின் ஆய்ந்தவொண் டீந்தமிழின் துறைவாய் நுழைந்தனை யோவன்றி யேழிசைச் சூழல்புக்கோ இறைவா தடவரைத் தோட்கென்கொ லாம்புகுந் தெய்தியதே. 20 கலிகெழு திரள் தோள் மெலிவது கண்ட இன்னுயிர்ப் பாங்கன் மன்னனை வினாயது.
3. உற்றதுரத்தைல் கோம்பிக் கொதுங்கிமே யாமஞ்ஞை குஞ்சரங் கோளிழைக்கும் பாம்பைப் பிடித்துப் படங்கிழித் தாங்கப் பணைமுலைக்கே தேம்பற்றுடியிடை மான்மட நோக்கிதில் லைச்சிவன்றாள் ஆம்பொற் றடமலர் சூடுமென் னாற்ற லகற்றியதே. 21 மற்றவன் வினவ, உற்ற துரைத்தது.
صـ r 42 ܥܠ .

r- e. 4. கழறியுரைத்தல்
உளமாம் வகைநம்மையுய்யவந்தாண்டுசென்றும்பருய்யக் களமாம் விடமமிர்தாக்கியதில்லைத்தொல் லோன்கயிலை வளமாம் பொதும்பரின் வஞ்சித்து நின்றொர்வஞ் சிம்மருங்குல் இளமான் விழித்ததென் றோஇன் றெம் மண்ண லிரங்கியதே. 22 வெற்பனைத்தன் மெய்ப்பாங்கன் கற்பனையிற் கழறியது.
5. கழற்றெதிர் மறுத்தல் சேணிற் பொலிசெம்பொன் மாளிகைத்தில்லைச்சிற் றம்பலத்து மாணிக்கக் கூத்தன் வடவான கயிலை மயிலைமன்னும் பூணிற்பொலிகொங்கையாவியையோவியப்பொற்கொழுந்தைக் காணிற் கழறலை கண்டிலை மென்றோட் கரும்பினையே. 23 ஆங்குயி ரன்ன பாங்கன் கழற வளந்தரு வெற்ப னுளந்தளர்ந் துரத்தைது.
6. கவன்றுரைத்தல் விலங்கலைக்கால்விண்டு மேன்மேலிடவிண்ணுமண்ணுமுந்நீர்க் கலங்கலைச்சென்றஅன்றுங்கலங்காய்கமழ் கொன்றைதுன்றும் அலங்கலைச் சூழ்ந்தசிற் றம்பலத் தானரு எரில்லவர்றோல் துலங்கலைச் சென்றிதென் னோவள்ளலுள்ளந் துயர்கின்றதே. 24 கொலைக்களிற் றண்ணல் குறைநயந் துரைப்பக் கலக்கஞ்செய் பாங்கன் கவன்று ரைத்தது.
7. வலியழி வுரைத்தல் தலைப்படு சால்பினுக் குந்தள ரேன்சித்தம் பித்தனென்று மலைத்தறி வாரில்லை யாரையுந் தேற்றுவ னெத்துணையுங் கலைச்சிறு திங்கள் மிலைத்தசிற் றம்பல வன்கயிலை மலைச்சிறு மான்விழி யாலழி வற்று மயங்கினனே, 25 நிறைபொறை தேற்றம் நீதியொடு சால்பு மறியுறு நோக்கிற்கு வாடினே னென்றது.
لصـ 43 ܥܐ .

Page 27
8. விதியொடு வெறுத்தல் ད། நல்வினை யும்நயந் தந்தின்று வந்து நடுங்குமின்மேற் கொல்வினை வல்லன கோங்கரும் பாமென்று பாங்கன்சொல்ல வில்வினை மேருவில் வைத்தவன் தில்லை தொழாரின்வெள்கித் தொல்வினை யாற்றுயரும்மென தாருயிர் துப்புறவே. 26 கல்விமிகு பாங்கன் கழற வெள்கிச் செல்வமிகு சிலம்பன் தெரிந்து செப்பியது.
9. பாங்கனொந்துரைத்தல் ஆலத்தி னாலமிர் தாக்கிய கோன்தில்லை யம்பலம்போற் கோலத்தினாள்பொருட்டாக வமிர்தங் குணங்கெடினுங் காலத்தி னான்மாழை மாறினும் மாறாக் கவிகைநின்பொற் சீலத்தை நீயும் நினையா தொழிவதென் தீவினையே. 27 இன்னுயிர்ப் பாங்கன் ஏழையைச் சுட்டி நின்னது தன்மை நினைந்திலை யென்றது.
10. இயலிடங்கேட்டல் நின்னுடை நீர்மையும் நீயுமிவ் வாறு நினைத்தெருட்டும் என்னுடைய நீர்மையிதென்னென்பதேதில்லை யேர்கொண்முக் மன்னுடை மால்வரை யோமல ரோவிசும் போசிலம்பா கண் என்னிடம் யாதியல் நின்னையின் னேசெய்த ஈர்ங்கொடிக்கே, 28 கழும லெய்திய காதற் றோழன் செழுமலை நாடனைத் தெரிந்து வினாயது.
11. இயலிடங்கsறல் விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாம்மிழற்று மொழியாற் கிளியாம் முதுவானவர்தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன் கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே. 29 அழுங்க லெய்திய ஆருயிர்ப் பாங்கற்குச் செழுங்கதிர் வேலோன் தெரிந்து செப்பியது.
لے )4( ܠܐ

12. வற்புறுத்தல் ー]
குயிலைச் சிலம்படிக் கொம்பினைத்தில்லையெங் கூத்தபிரான் கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய் மயிலைச் சிலம்பகண்டி யான்போய் வருவன்வண் பூங்கொடிகள் பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே. 30 பெயர்ந்துரைத்த பெருவரைநாடனை வயங்கெமுபுகழோன் வற்புறுத்தியது.
13. குறிவழிச் சேறல் கொடுங்கால் குலவரை யேழேழ் பொழிலெழில் குன்றுமன்று நடுங்கா தவனை நடுங்க நுடங்க நடுவுடைய விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை யீசன்வெற்பில் தடங்கார் தருபெரு வான் பொழில் நீழலந் தண்புனத்தே. 31 அறைகழ லண்ணல் அருளின வழியே நிறையுடைப் பாங்கன் நினைவோடு சென்றது.
14. குறிவழிக்காண்டல் வடிக்க ணவை வஞ்சி யஞ்சும் இடையிது வாய்பவளந் துடிக்கின்ற வாவெற்பன் சொற்பரிசேயான் றொடர்ந்துவிடா அடிச்சந்த மாமல ரண்ணல்விண்ணோர்வணங் கம்பலம்போற் படிச்சந் தமுமிது வேவிவ ளே அப் பணிமொழியே. 32 குளிர்வரை நாடன் குறிவழிச் சென்று தளிர்புரை மெல்லடித் தலையலைக் கண்டது.
15. தலைவனை வியந்துரைத்தல் குவளைக் களத்தம் பலவன் குரைகழல் போற் கமலத் தவளைப் பயங்கர மாகநின் றாண்ட அவயவத்தின் இவளைக் கண்டிங்குநின்றங்குவந்தத்துணையும்பகர்ந்த கவளக் களிற்றண்ண லேதிண்ணி யானிக் கடலிடத்தே. 33 நயந்தவுருவும் நலனுங்கண்டு வியந்தவனையே மிகுத்துரைத்தது.
لـ 4s ܥܐ

Page 28
N
16. கண்டமை கூறல் பணந்தா ழரவரைச் சிற்றம் பலவர்பைம் பொற்கயிலைப் புணர்ந்தாங் ககன்ற பொருகரி யுன்னிப் புனத்தயலே மணந்தாழ் பொழிற்கண் வடிக்கண் பரப்பிமடப்பிடிவாய் நிணந்தாழ் சுடரிலை வேலகண் டேனொன்று நின்றதுவே. 34 புடிமிசை வைத்துப் பேதையது நிலைமை அடுதிற லண்ணற் கறிய வுரைத்தது.
17. செவ்வி செப்பல் கயலுள வேகம லத்தலர்மீது கணிபவளத் தயலுள வேமுத்த மொத்த நிரையரன் அம்பலத்தின் இயலுள வேயிணைச் செப்புவெற் பாநின தீர்ங்கொடிமேற் புயலுள வேமலர் சூழ்ந்திருள் தூங்கிப் புரள்வனவே. 35 அற்புதன் கைலை மற்பொலி சிலம்பற் கவ்வுருக் கண்டவன் செவ்வி செப்பியது.
18. அவ்விடத்தேகல் எயிற்குல மூன்றிருந் தீயெய்த வெய்தவன் தில்லையொத்துக் குயிற்குலங் கொண்டு தொண்டைக்கனி வாய்க்குளிர் முத்தநிரைத் தயிற்குல வேல்கம லத்திற் கிடத்தி அனநடக்கும் மயிற்குலங் கண்டதுண் டேலது வென்னுடை மன்னுயிரே. 36 அரிவையதுநிலைமை யறிந்தவனுரைப்ப எரிகதிர்வேலோ னேகியது.
19. மின்னிடை மெலிதல் ஆவியன் னாய்கவ லேல்அக லேமென் றளித்தொளித்த ஆவியன் னார்மிக் கவாவின ராய்க் கெழு மற்கழிவுற் றாவியன்னார்மன்னியாடிடஞ்சேர்வர்கொலம்பலத்தெம் ஆவியன் னான்பயி லுங்கயி லாயத் தருவரையே. 37 மன்னைன நினைந்து, மின்னிடை மெலிந்தது.
لصـ )46( ܠܐ

И- N
20. பொலில்கண்டு மகிழ்தல் காம்பினை யாற்களி மாமயி லாற்கதிர் மாமணியால் வாம்பிணையால்வல்லியொல்குதலான்மன்னுமம்பலவன் பாம்பிணை யாக்குழை கொண்டோன் கயிலைப் பயில்புனமுந் தேம்பிணை வார்குழ லாளெனத் தோன்றுமென் சிந்தனைக்கே. 38 மணங்கமழ் பொழிலின் வடிவுகண் டணங்கெனநினைந் தயர்வுநீங்கியது.
21. உயிரெனவியத்தல் நேயத்ததாய்நென்னவென்னைப்புணர்ந்து நெஞ்சம் நெகப்போய் ஆயத்த தாயமிழ் தாயணங் காயர னம்பலம்போல் தேயத்த தாயென்றன் சிந்தைய தாய்த்தெரி யிற்பெரிது மாயத்த தாகி யிதோவந்து நின்றதென் மன்னுயிரே. 39 வெறியுறுபொழிலின் வியன்பொதும்பரின் நெறியுறுகுழலி நிலைமைகண்டது.
22. தளர்வகன்றுரைத்தல் தாதிவர் போதுகொய் யார்தைய லாரங்கை கூப்பநின்று சோதி வரிப்பந் தடியார் சுனைப்புன லாடல்செய்யார் போதிவர் கற்பக நாடுபுல் லென்னத்தம் பொன்னடிப்பாய் யாதிவர் மாதவம் அம்பலத் தான்மலை யெய்துதற்கே. 40 பனிமதிநுதலியைப் பைம்பொழிலிடைத் தனிநிலைகண்டு தளர்வகன்றுரைத்தது.
23. மொழிபெறவருந்தல் காவிநின் றேர்தரு கண்டவர்வண் தில்லைக்கண்ணார்கமலத் தேவியென் றேயையஞ் சென்றதன் றேயரி யச்சிறிது மாவியன் றன்னமென் னோக்கிநின் வாய்திற வாவிடினென் ஆவியன் றேயமிர் தேயணங் கேயின் றழிகின்றதே. 41 கூடற் கரிதென வாடி யுரைத்தது.
لصـ 47 ܥܐ

Page 29
N
24. நாணிக்கண் புதைத்தல் அகலிடந் தாவிய வானோ னறிந்திறைஞ் சம்பலத்தின் இகலிடந் தாவிடை யீசற் றொழாரினின் னற்கிடமாய் உகலிடந்தான்சென்றெனதுயிர் நையா வகையொதுங்கப் புகலிடந் தாபொழில் வாயெழில் வாய்தரு பூங்கொடியே. 42 ஆயிடைத் தனிநின் றாற்றா தழிந்து வேயுடைத் தோளியோர் மென்கொடி மறைந்தது.
25. கண்புதைக்க வருந்தல் தாழச்செய்தார்முடி தன்னடிக் கீழ்வைத் தவரைவிண்ணோர் சூழச்செய் தானம் பலங்கை தொழாரினுள் ளந்துளங்கப் போழச்செய்யாமல்வை வேற்கண் புதைத்துப்பொன்னேயென்னைநீ வாழச்செய் தாய்சுற்று முற்றும் புகைநின்னை வாணுதலே. 43 வேற்றருங் கண்ணிணை மிளிர்வன வன்றுநின் கூற்றரு மேனியே கூற்றெனக் கென்றது.
26. நாண்விடவருந்தல்
குருநாண் மலர்ப்பொழில் சூழ்தில்லைக் கூத்தனை யேத்தலர்போல் வருநாள் பிறவற்க வாழியரோ மற்றென் கண்மணிபோன் றொருநாள் பிரியா துயிரிற் பழகி யுடன்வளர்ந்த அருநா ணளிய வழல்சேர் மெழுகொத் தழிகின்றதே. 44 ஆங்ங் னம்கண் டாற்றா ளாகி
நீங்கின நாணொடு நேரிழை நின்றது.
27. மருங்கணைதல் கோலத் தனிக்கொம்ப ரும்பர்புக் க.தே குறைப்பவர்தஞ் சீலத் தனகொங்கை தேற்றகிலேஞ்சிவன் தில்லையன்னாள் நூலொத்த நேரிடை நொய்ம்மையெண் ணாதுநுண் தேன்நனையால் சாசத் தகாதுகண் டீர்வண்டு காள்கொண்டை சார்வதுவே. 45 ஒளிதிகழ்வார்குழல் அளிகுலம்விலக்கிக்
கருங்களிற்றண்ணல் மாங்கணைந்தது.

N
/ 28. இன்றியமையாமை கூறல்
நீங்கரும் பொற்கழற் சிற்றம் பலவர் நெடுவிசும்பும் வாங்கிருந்தெண்கடல் வையமுமெய்தினும் யான்மறவேன் தீங்கரும் பும்மமிழ் துஞ்செழுந் தேனும் பொதிந்து செப்புங் கோங்கரும் புந்தொலைத் தென்னையு மாட்கொண்ட கொங்கைகளே. 46 வென்றிவேலவன் மெல்லியல்தனக் கின்றியமையாமை யெடுத்துரைத்தது.
29. ஆயத்துய்த்தல் சூளாமணியும்பர்க் காயவன் சூழ்பொழிற் றில்லையன்னாய்க் காளா யொழிந்ததென் னாருயிர் ஆரமிழ் தேயணங்கே தோளா மணியே பிணையே பலசொல்லி யென்னைதுன்னும் நாளார் மலர்ப்பொழில் வாயெழி லாயம் நணுகுகவே. 47 தேங்கமழ் சிலம்பன், பாங்கிற் கூட்டியது.
30. நின்று வருந்தல் பொய்யுடை யார்க்கரன் போலக லும்மகன் றாற்புணரின் மைய்யுடை யார்க்கவன் அம்பலம் போல மிகநணுகும் மையுடை வாட்கண் மணியுடைப் பூண்முலை வாணுதல்வாள் பையுடை வாளர வத்தல்குல் காக்கும்பைம் பூம்புனமே. 48 பாங்கிற் கூட்டிப் பதிவயிற் பெயர்வோன் நீங்கற் கருமை நின்று நினைந்தது.
3. இடந்தலைப்பாரு
1. பொழிலிடைச் சேறல் என்னறிவால்வந்ததன்றிது முன்னும் இன்னும்முயன்றால் மன்னெறி தந்த திருந்தன்று தெய்வம்வருந்தல் நெஞ்சே மின்னெறி செஞ்சடைக் கூத்தப் பிரான்வியன் தில்லைமுந்நீர் பொன்னெறி யார்துறைவாய்ச் சென்று மின்றோய்பொழிலிடத்தே. 49 அரிக் கண்ணியை யாடிடத் தெரிசென் றெய்துவ னெனநினைந் தேந்தல் சென்றது.
لـ 49 -ܥܐ

Page 30
Y
4. மதியுடம்பருத்தல்
1. பாங்கியிடைச்சேறல் எளிதன் றினிக்கனி வாய்வல்லி புல்ல லெழின்மதிக்கீற் றொளிசென்ற செஞ்சடைக் கூத்தப் பிரானையுன் னாரினென்கண் தெளிசென்ற வேற்கண் வருவித்த செல்லலெல் லாந்தெளிவித் தளிசென்ற பூங்குழற் றோழிக்கு வாழி யறிவிப்பனே. 50 கரந்துறை கிளவியிற் காதற் றோழியை இரந்து குறை யுறுவலென் றேந்தல் சென்றது.
2. குறையுறத் துணிதல் குவளைக் கருங்கட் கொடியே ரிடையிக் கொடிகடைக்கண் உவளைத் தனதுயிரென்றது தன்னோ டுவமையில்லா தவளைத்தன் பால்வைத்த சிற்றம் பலத்தா னருளிலர்போல் துவளத் தலைவந்த இன்னலின் னேயினிச் சொல்லுவேன். 51 ஓரிடத்தவரை யொருங்குகண்டுதன் பேரிடர்பெருந்தகை பேசத்துணிந்தது.
3. வேழம்வினாதல் இருங்களி யாயின் றியானிறு மாப்பஇன் பம்பணிவோர் மருங்களி யாவன லாடவல்லோன்றில்லை யான்மலையிங் கொருங்களி யார்ப்பவுமிழ்மும் மதத்திரு கோட்டொருநீள் கருங்களி யார்மத யானையுண் டோவரக் கண்டதுவே. 52 ஏழையரிருவரு மிகுந்தசெவ்வியுள் வேழம்வினா அய் வெற்பன்சென்றது.
4. கலைமான்வினாதல் கருங்கண் ணனையறி யாமைநின்றோன்றில்லைக் கார்ப்பொழில்வாய் வருங்கண் ணனையவண் டாடும் வளரிள வல்லியன்னீர் இருங்கண்ணனைய கணைபொரு புண்புணரில்புனத்தின் மருங்கண் ணையதுண் டோவந்த தீங்கொரு வான்கலையே. 53 சிலைமா னண்ணல், கலைமான் வினாயது.
لـ so ܥܠ

r- 5. வழிவினாதல் N
சிலம்பணி கொண்டசேஞ் சீறடி பங்கன்றன் சீரடியார் குலம்பணி கொள்ள வெனைக்கொடுத்தோன் கொண்டுதானணியுங் கலம்பணி கொண்டிடம் அம்பலங் கொண்டவன் கார்க்கயிலைச் சிலம்பணி கொண்டநுஞ் சீறுர்க் குரைமின்கள்சென்னெறியே, 54 கலைமான் வினாய கருத்து வேறறியர் மலைமானண்ணல் வழிவினாயது.
6. பதிவினாதல் ஒருங்கட மூவெயி லொற்றைக் கணைகொள்சிற் றம்பலவன் கருங்கடம் மூன்றுகு நால்வாய்க் கரியுரித் தோன்கயிலை இருங்கடம் மூடும் பொழிலெழிற்கொம்பரன் னிர்களின்னே வருங்கடம் மூர்பகர்ந் தாற்பழி யோவிங்கு வாழ்பவர்க்கே. 55 பதியோடு பிறவினாய் மொழிபல மொழிந்து
மதியுடம் படுக்க மன்னன் வலிந்தது.
7. பெயர் வினாதல் தாரென்ன வோங்குஞ் சடைமுடி மேற்றணித் திங்கள்வைத்த காரென்ன வாருங் கறைமிடற் றம்பல வன்கயிலை ஊரென்ன வென்னவும் வாய்திற வீரொழி வீர்பழியேற் பேரென்ன வோவுரை யீர்விரை யீர்ங்குழற் பேதையரே. 56 பேரமைத் தோளியர், பேர்வி னாயது.
8. மொழிபெறாதுகூறல் இதர முடைய நடமாட டுடையவ ரெம்டுயைர் வரத முடைய வணிதில்லை யன்னவ ரிப்புணர்த்தார் விரத முடையர் விருந்தொடு பேச்சின்மை மீட்டதன்றேற் சரத முடையர் மணிவாய் திறக்கிற் சலக்கென்பவே. 57 தேமொழியவர் வாய்மொழிபெறாது மட்டவிழ்தாரோர் கட்டுரைத்தது.
لم s1 ܠܐ

Page 31
r- 9. கருத்தறிவித்தல் N
வின்னிற வாணுதல் வேனிறக் கண்மெல் லியலைமல்லல் தன்னிற மொன்றிலிருத்திநின்றோன்றன தம்பலம்போல் மின்னிற நுண்ணிடைப் பேரெழில்வெண்ணகைப் பைந்தொடியீர் பொன்னிற வல்குலுக் காமோ மணிநிறப் பூந்தழையே. 58 உரைத்த துரையாது, கருத்தறி வித்தது.
10. இடைவினாதல் கலைக்கீ ழகலல்குற் பாரம தாரங்கண் ணார்ந்திலங்கு முலைக்கீழ்ச் சிறிதின்றிநிற்றன்முற்றாதன் றிலங்கையர்கோன் மலைக்கீழ் விழச்செற்ற சிற்றம் பலவர்வண் பூங்கயிலைச் சிலைக்கீழ்க் கணையன்ன கண்ணீர் எதுநூங்கள் சிற்றிடையே. 59
வழிபதி பிறவினாய், மொழிபல மொழிந்தது.
5. இருவரு முள்வழி அவன் வரவுணர்தல்
1. ஐயுறுதல்
பல்லிலனாகப் பகலைவென்றோன்தில்லை பாடலர்போல் எல்லிலன் நாகத்தொ டேனம் வினாயவன் யாவன்கொலாம் வில்லிலன் நாகத் தழைகையில் வேட்டைகொண் டாட்ட மெய்யோர் சொல்லில னாகற்ற வாகட வானிச் சுனைப்புனமே. 60 அடற்கதிர் வேலோன் றொடர்ச்சி நோக்கித் தையற் பாங்கி ஐய முற்றது.
2. அறிவுநாடல் ஆழமன் னோவுடைத் திவ்வையர் வார்த்தை யணங்கன்நைந்து வீழமுன் னோக்கிய வம்பலத் தான்வெற்பி னிப்புனத்தே வேழமூன்னாய்க்கலையாய்ப்பிற வாய்ப்பின்னும் மென்றழையாய் மாழைமென் னோக்கி யிடையாய்க் கழிந்தது வந்துவந்தே, 61 வெற்பன் வினாய சொற்பத நோக்கி நெறிகுழற் பாங்கி யறிவு நாடியது.
لصـ 52 ܥܠ

O. - 6. jpങ്ങIIഖങ്ങTേ
1. வாட்டம் வினாதல் நிருத்தம் பயின்றவன் சிற்றம் பலத்துநெற் றித்தனிக்கண் ஒருத்தன் பயிலுங் கயிலை மலையி னுயர்குடுமித் திருத்தம் பயிலுஞ் சுணைகுடைந்தாடிச் சிலம்பெதிர்கூய் வருத்தம் பயின்றுகொல் லோவல்லி மெல்லியல் வாடியதே. 62 மின்னிடை மடந்தை தன்னியல் நோக்கி வீங்கு மென்முலைப் பாங்கி பகர்ந்து,
7. குறையுறவுணர்தல்
1. குறையுற்றுநிற்றல் மடுக்கோ கடலின் விடுதிமிலன்றி மறிதிரைமீன் படுக்கோ பணிலம் பலகுளிக் கோபரன் தில்லைமுன்றிற் கொடுக்கோ வளைமற்று நும்மையர்க் காயகுற்றேவல்செய்கோ தொடுக்கோ பணியீ ரணியீர் மலர்நுஞ் சுரிகுழற்கே. 63 கறையுற்ற வேலவன், குறை யுற்றது.
2. அவன் குறிப்பறிதல் அளியமண்ணும்மொன்றுடைத்தண்ணலெண்ணரன் தில்லையன்னாள் கிளியைமன் னுங்கடி யச்செல்ல நிற்பிற் கிளரளகத் தளியமர்ந் தேறின் வறிதே யிருப்பிற் பளிங்கடுத்த ஒளியமர்ந்தாங்கொன்று போன்றொன்று தோன்று மொளிமுகத்தே. 64 பொற்றொடித்தோளிதன் சிற்றிடைப்பாங்கி வெறிப்பூஞ்சிலம்பன் குறிப்பறிந்தது.
3. அவள் குறிப்பறிதல் பிழைகொண் டொருவிக் கெடாதன்பு செய்யிற் பிறவியென்னும் முழைகொண் டொருவின்செல்லாமைநின்றம்பலத்தாடு முன்னோன் உழைகொண் டொருங்கிரு நோக்கம் பயின்றனம் மொண்ணுதல்மாந் தழைகொண் டொருவனென்னாமுன்ன முள்ளந் தழைத்திடுமே. 65 ஆங்கவள் குறிப்புப், பாங்கி பகர்ந்தது.
4ے s ܠܐ

Page 32
4. இருவர் நினைவு மொருவழி யணர்தல் மெய்யே யிவற்கில்லை வேட்டையின் மேன்மன மீட்டிவளும் பொய்யே புனத்தினை காப்ப திறைபுலி யூரனையாள் மையேர் குவளைக்கண் வண்டினம் வாழுஞ்செந் தாமரைவாய் எய்யே மெனினுங் குடைந்தின்பத தேனுண் டெழிறருமே. 66 அன்புறுநோக் காங்கறிந், தின்புறுதோழி யெண்ணியது.
8. நாணநாட்டம்
1. பிறைதொழுகென்றல் மைவார் கருங்கண்ணி செங்கரங் கூப்பு மறந்துமற்றப் பொய்வா னவரிற் புகாதுதன் பொற்கழற் கேயடியேன் உய்வான் புகவொளிர் தில்லைநின்றோன்சடைமேலதொத்துச் செவ்வானடைந்த பசுங்கதிர் வெள்ளைச் சிறுபிறைக்கே. 67 பிறைதொழு கென்று பேதை மாதரை நறுநுதற் பாங்கி நாண நாட்டியது.
2. வேறுபடுத்துக் கூறல் அக்கின்ற வாமணி சேர்கண்டன் அம்பல வன்மலயத் திக்குன்ற வாணர் கொழுந்திச் செழுந்தண் புனமுடையாள் அக்குன்ற வாறமர்ந் தாடச்சென் றாளங்க மவ்வவையே ஒக்கின்ற வாரணங் கேயிணங் காகு முனக்கவளே. 68 வேய்வளைத்தோளியை வேறுபாடுகண் டாய்வளைத்தோழி யணங்கென்றது.
3. சுனையாஉளடல் கூறி நகைத்தல் செந்நிற மேனிவெண் ணிறணி வோன்தில்லை யம்பலம்போல் அந்நிற மேனிநின் கொங்கையி லங்கழி குங்குமமும் மைந்நிற வார்குழல் மாலையும் தாதும் வளாய்மதஞ்சேர் இந்நிற முப்பெறின் யானுங் குடைவ னிருஞ்சுனையே. 69 மாணநாட்டிய வார்குழற் பேதைணய நாணநாட்டி நகைசெய்தது.
لـ s4 ܠܐ

N
4. புணர்ச்சியுரைத்தல் பருங்கண் கவர்கொலை வேழப் படையோன் படப்படர்தீத் தருங்கண் ணுதற்றில்லை யம்பலத் தோன்தடமால்வரை வாய்க் கருங்கண் சிவப்பக் கனிவாய் விளர்ப்பக்கண்ணாரளிபின் வருங்கண் மலைமலர் சூட்டவற்றோமற்றவவ் வான்சுனையே. 70 மணக்குறி நோக்கிப், புணர்ச்சி யுரைத்தது.
5. மதியுடம்படுதல் காகத் திருமண்ணிற் கொன்றே மணிகலந் தாங்கிருவர் ஆகத்து ளோருயிர் கண்டனம் யாமின்றி யாவையுமாம் ஏகத்தொருவ னிரும்பொழி லம்பல வன்மலையில் தோகைக்குந் தோன்றற்கு மொன்றாய் வருமின்பத் துன்பங்களே. 71 அயில்வேற் கண்ணியொ டாடவன்றனக் குயிரொன்றென மயிலியற் றோழி மதியுடம் பட்டது.
9. நருங்க நாட்டம் ஆவா விருவரறிய அடிதில்லை யம்பலத்து மூவாயிரவர் வணங்கநின்றோனையுன்னாரின்முன்னித் தீவா யுழுவை கிழித்ததந் தோசிறி தேபிழைப்பித் தாவா மணிவேல் பணிகொண்ட வாறின்றொ ராண்டகையே. 72 துடங்கிடைப் பாங்கி, நடுங்கநாடியது.
10. மடற்றிறம்
1. ஆற்றாதுரைத்தல் பொருளா வெனைப்புகுந்தாண்டு புரந்தரன் மாலயன்பால் இருளா யிருக்கு மொளிநின்ற சிற்றம் பலமெனலாஞ் சுருளார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் துடியிடையீர் அருளா தொழியி னொழியா தழியுமென் னாருயிரே. 73 மல்லற்றிரள் வரைத்தோளவன் சொல்லாற்றாது சொல்லியது.
لم ss ܥܐ

Page 33
காய்சின வேலன்ன மின்னியல் கண்ணின் வலைகலந்து வீசின போதுள்ள மீனிழந்தார்வியன் தென்புலியூர் ஈசன சாந்தும் எருக்கு மணிந்தோர் கிழிபிடித்துப் பாய்சின மாவென ஏறுவர் சீறுார்ப் பனைமடலே. 74
2. உலகின்மேல் வைத்துரைத்தல் ད།
புலவேலண்ணல் புனைமடலேற் றுலகின்றமேல்வைத் துய்த்துரைத்தது.
3. தன்துணியுரைத்தல் விண்ணை மடங்க விரிநிர் பரந்துவெற் புக்கரப்ப | மண்ணை மடங்க வருமொரு காலத்து மன்னிநிற்கும்
அண்ணல் மடங்க லதளம் பலவ னருளில போற் பெண்ணை மடன்மிசை யான்வரப் பண்ணிற்றொர் பெண் கொடியே. 75 மாணவேலவன் மடன்மாமிசை யானு மேறுவ னென்னவுரைத்தது.
4. மடலேறும் வகையுரைத்தல் கழிகின்ற வென்னையும் நின்றநின் கார்மயில் தன்னையும்யான் கிழியொன்ற நாடியெழுதிக்கைக்கொண்டென் பிறவிகெட்டின் றழிகின்ற தாக்கிய தாளம் பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல்நுஞ் சீறுார்த் தெருவிடைப் போதுவனே. 76 அடல்வேலவ னழிவுற்று மடலேறும் வகையுரைத்தது.
5. அருளாலரிதென விலக்கல் நடனாம் வணங்குந்தொல்லோனெல்லைநான்முகன் மாலறியாக் கடனாம் உருவத்தரன்தில்லை மல்லற்கண்ணார்ந்தபெண்ணை உடனாம் பெடையொடொண் சேவலும் முட்டையுங் கட்டழித்து மடனாம் புனைதரின் யார்கண்ண தோமன்ன இன்னருளே. 77 அடல்வேலண்ண லருளுடைமையின் மடலேற்றுனக் கரிதென்றது.
الص 56 ܥܐ

Y
அடிச்சந்த மால்கண் டிலாதன காட்டிவந் தாண்டுகொண்டென்
6. மொழிநடை யெழுதலரிதென விலக்கல்
முடிச்சந்த மாமல ராக்குமுன் னோன்புலி யூர்புரையுங் கடிச்சந்த யாழ்கற்ற மென்மொழிக் கன்னியனநடைக்குப் படிச்சந்த மாக்கும் படமுள வோநும் பரிசகத்தே. 78 அவயவ மரிதின் அண்ணல் தீட்டினும் இவையிவை தீட்ட லியலா தென்றது.
7. அவயவமெழுத லரிதென விலக்கல் யாழுமெழுதி யெழின்முத்தெழுதி யிருளின்மெய்பூச் சூழு மெழுதியொர் தொண்யுைந் தீட்டியென் தொல்பிறவி ஏழு மெழுதா வகைசிதைத் தோன்புலி யூரிளமாம் போழுமெழுதிற்றொர் கொம்பருண்டேற் கொண்டு போதுகவே. 79 அவயவ மானவை, யிவையிவை யென்றது.
8. உடம்படாது விலக்கல் ஊர்வா யொழிவாயுய பெண்ணைத்திண்மடல் நின்குறிப்புச் சீர்வாய் சிலம்ப திருத்த இருந்தில மீசர்தில்லைக் கார்வாய்குழலிக்குன்னாதர வோதிக்கற்பித்துக்கண்டால் ஆர்வாய் தரினறி வார்பின்னைச் செய்க அறிந்தனவே. 8O அடுபடையண்ண லழிதுயரொழிகென மடநடைத்தோழி மடல்விலக்கியது.
9. உடம்பட்டு விலக்கல் பைந்நா னரவன் படுகடல் வாய்ப்படு நஞ்சமுதாம் மைந்நாண் மணிகண்டன் மன்னும் புலியூர் மணந்தபொன்னிம் மொய்ந்நாண் முதுதிரை வாயானழுந்தினு மென்னின்முன்னும் இந்நாளிதுமது வார்குழ லாட்கென்கணின்னருளே. 81 அரவரு நுண்ணிடைக் குரவருகூந்தலென் னுள்ளக் கருத்து விள்ளாளென்றது.
st أص

Page 34
11. குறைநயப்புக் கூறல்
1. குறிப்பறிதல் தாதேய்மலர்க்குஞ்சியஞ்சிறை வண்டுதண்டேன்பருகித் தேதே யெனுந்தில்லை யோன்சே யெனச்சின வேலோருவர் மாதே புனத்திடை வாளா வருவர்வந்தியாதுஞ்சொல்லார் யாதே செயத்தக் கதுமது வார்குழ லேந்திழையே. 82 நறைவளர் கோதையைக் குறைநயப் பித்தற் குள்ளறி குற்ற வொள்ளிழை யுரைத்தது.
2. மென்மொழியாற் கூறல் வரிசேர் தடங்கண்ணி மம்மர்கைம் மிக்சென்ன மாயங்கொலோ எரிசேர் தளிரன்ன மேனியன் ஈர்ந்தழை யன்புலியூர்ப் புரிசேர்சடையோன்புதல்வன் கொல்பூங்கனை வேள்கோலென்னத் தெரியே முரையான் பிரியா னொருவனித் தேம்புனமே. 83 ஒளிருறு வேலவன் றளர்வுறு கின்றமை இன்மொழி யவட்கு மென்மொழி மொழிந்தது.
3. விரவிக்கூறல் நீகண் டனையெனின் வாழலை நேரிழை யம்பலத்தான் சேய்கண்டனையன்சென்றாங்கோரலவன்றன் சீர்ப்பெடையின் வாய்வண் டனையதொர் நாவற் கனிநணரி நல்கக்கண்டு பேய்கண் டனையதொன் றாகிநின்றானப் பெருந்தகையே. 84 வன்மொழியின்மனம் மெலிவதஞ்சி மென்மொழிவிரவி மிகுத்துரைத்தது.
4. அறியாள் போறல் சங்கத் தருமுத்தி யாம்பெற வான்கழி தான்கெழுமிப் பொங்கும் புனற்கங்கை தாங்கிப் பொலிகலிப் பாறுலவு துங்க மலிதலை யேந்தலி னேந்திழை தொல்லைப்பன்மா வங்கம் மலிகலி நீர்தில்லை வானவன் நேர்வருமே. 85 அறியாள் போன்று, குறியாள் கூறியது.
الص )58( ܠܐ

Y
r 5. வஞ்சித்துரைத்தல்
புரங்கடந் தானடி காண்பான் புவிவிண்டு புக்கறியா திரங்கிடெந்தாயென்றிரப்பத்தன்னிரடிக்கென்னிரண்டு கரங்கடந் தானொன்று காட்டமற் றாங்கதுங் காட்டிடென்று வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே. 86 நெஞ்சம் நெகிழ்வகை வஞ்சித் திவையிவை செஞ்சடை யோன்புகழ் வஞ்சிக் குரைத்தது.
6. புலந்து கூறல் உள்ளப் படுவன வுள்ளி யுரைத்தக் கவர்க்குரைத்து மெள்ளப் படிறு துணிதுணி யேலிது வேண்டுவல்யான் கள்ளப் படிறர்க் கருளா அரன்தில்லை காணலர்போற் கொள்ளப்படாது மறப்ப தறிவிலென் கூற்றுக்களே. 87 திருந்தியசொல்லிற் செவ்விபெறாது வருந்தியசொல்லின் வகுத்துரைத்தது.
7. வன்மொழியாற் கூறல் மேவியந் தோலுடுக் குந்தில்லை யான்பொடி மெய்யிற்கையில் ஒவியந் தோன்றுங் கிழிநின் னெழிலென் றுரையுளதால் தூவியந்தோகையன் னாயென்ன பாவஞ்சொல்லாடல் செய்யான் பாவியந் தோபனை மாமட லேறக்கொல் பாவித்ததே. 88 கடலுல கறியக் கமழுலந் துறைவன் மடலே றும்மென வன்மொழி மொழிந்தது.
8. மனத்தோடு நேர்தல் பொன்னார் சடையோன் புலியூர் புகழா ரெனப்புரிநோய் என்னாலறிவில்லை யானொன்றுரைக்கிலன் வந்தயலார் சொன்னாரெனுமித் துரிசுதுன்னாமைத்துணைமணனே என்னாழ்துயர்வல்லையேற்சொல்லு நீர்மை இனியவவர்க்கே. 89 அடல்வேலவ னாற்றானெனக் கடலமிழ்தன்னவள் காணலுற்றது.
الص so -ܠܐ

Page 35
r N 12. (83FLI6oDL
1. தழைகொண்டுசேறல் தேமென் கிளவிதன் பங்கத் திறையுறை தில்லையன்னிர் பூமென் தழையுமப் போதுங்கொள் வீர்தமியேன்புலம்ப ஆமென் றருங்கொடும் பாடுகள் செய்துநூங் கண்மலராங் காமன் கணைகொண் டலைகொள்ள வோமுற்றக் கற்றதுவே. 90 காய்ம்மலர்க்குழலி குறைநயந்தபின் கையுறையோடு காளை சென்றது.
2. சந்தனத்தழை தகாதென்ற மறுத்தல் ஆரத் தழையராப் பூண்டம் பலத்ன லாடியன்பர்க் காரத் தழையன் பருளிநின் றோன்சென்ற மாமலயத் தாரத் தழையண்ணல் தந்தாலிவையவ ளல்குற்கண்டால் ஆரத் தழைகொடு வந்தா ரெனரும் ஐயுறவே. 91 பிறைநுதற் பேதையைக் குறைநயப்பித்தபின் வாட்படை யண்ணலைச் சேட்படுத்தது.
3. நிலத்தின்மை கூறிமறுத்தல் முன்றகர்த்தெல்லா விமையோரையும்பின்னைத்தக்கன்முத்தீச் சென்றகத்தில்லா வகைசிதைத் தோன்றிருந் தமபலவன் குன்றகத்தில்லாத் தழையண் ணறந்தாற் கொடிச்சியருக் கின்றகத் தில்லாப் பழிவந்து மூடுமென் றெள்குதுமே. 92 கொங்கலர் தாரோய் கொணாந்த கொய்தழை எங்குலத் தாருக்கேலா தென்றது.
4. நினைவறிவுகூறி மறுத்தல் யாழார் மொழிமங்கை பங்கத் திறைவன் எறிதிரைநீர் ஏழா யெழுபொழி லாயிருந் தோன்நின்ற தில்லையன்ன சூழார் குழலெழிற்றொண்டைச்செவ்வாய்நவ்விசொல்லறிந்தால் தழா தெதிர்வந்து கோடுஞ் சிலம்ப தருந்தழையே. 93 மைதழைக் கண்ணி மணமறிந் தல்லது கொய்தழை தந்தாற் கொள்ளே மென்றது.
60 4ے

5. படைத்து மொழியான் மறுத்தல் ད། எழில்வா யிளவஞ்சி யும்விரும் பும்மற் றிறைகுறையுண் டழல்வா யவிரொளி யம்பலத் தாடுமஞ் சோதியந்தீங் குழல்வாய் மொழிமங்கை பங்கன்குற்றாலத்துக் கோலப்பிண்டிப் பொழில்வாய் தடவரை வாயல்ல தில்லையிப் பூந்தழையே. 94 அருந்தழை மேன்மேற் பெருந்தகை கொணரப் படைத்து மொழி கிளவியிற் றடுத்தவண் மொழிந்தது.
6. நானுரைத்து மறுத்தல் உறுங்கண்ணி வந்த கணையுர வோன்பொடி யாயொடுங்கத் தெறுங்கண்ணி வந்தசிற் றம்பல வன்மலைச் சிற்றிலின்ாய் நறுங்கண்ணி சூட்டினும் நாணுமென் வாணுதல் நாகத்தொண்பூங் குறுங்கண்ணி வேய்ந்திள மந்திகள் நாணுமிக் குன்றிடத்தே 95 வாணுதற் பேதையை, நாணுத லுரைத்தது.
7. இசையாமை கூறி மறுத்தல் நறமனை வேங்கையின் பூப்பயில் பாறையை நாகநண்ணி மறமனை வேங்கை யெனநனி யஞ்சுமஞ் சார்சிலம்பா குறமனை வேங்கைச் சுணங்கொ டணங்கலர் கூட்டுபவோ நிறமனை வேங்கை யதளம் பலவன் நெடுவரையே. 96
வசைதீர் குலத்திற் கிசையா தென்றது.
8. செவ்வியிலளென்று மறுத்தல் கற்றில கண்டன்னம் மென்னடை கண்மலர் நோக்கருளப் பெற்றில மென்பினை பேச்சுப்பெறாகிள்னை பிள்ளையின்றொன் றுற்றில ஞற்ற தறிந்தில ளாகத் தொளிமிளிரும் புற்றில வாளர வன்புலி யூரன்ன பூங்கொடியே. 97 நவ்வி நோக்கி, செவ்வியில ளென்றது.
9. காப்புடைத்தென்று மறுத்தல் முனிதரு மன்னையு மென்றயர் சாலவும் மூர்க்கரின்னே தனிதரு மிந்நிலத் தனறைய குன்றமுந் தாழ்சடைமேற் பனிதரு திங்க ளனியம் பலவர் பகைசெகுக்குங் குனிதரு திண்சிலைக் கோடுசென்றான்சுடர்க் கொற்றவனே. 98 காப்புடைத்தென்று, சேட்படுத்தது.
لم 61 ܥܐ

Page 36
r- 10. நீயே கூறென்று மறுத்தல் அந்தியின் வாயெழிலம்பலத்தெம்பரன் அம்பொன்வெற்பிற் பந்தியின் வாய்ப்பல வின்சுளை பைந்தே னொடுங்கடுவன் மந்தியின் வாய்க்கொடுத் தோம்புஞ் சிலம்ப மனங்கனிய முந்தியின் வாய்மொழி நீயே மொழிசென்றம் மொய்குழற்கே, 99 அஞ்சு தும்பெரும் பஞ்சின்மெல்லடியைக் கூறுவநீயே கூறுகென்றது.
11. குலமுறை கூறிமறுத்தல் தெங்கம் பழங்கமு கின்குலை சாடிக் கதலிசெற்றுக் கொங்கம் பழனத் தொளிர்குளிர் நாட்டினை நீயுமைகூர் பங்கம் பலவன் பரங்குன்றிற் குன்றன்ன மாபதைப்பச் சிங்கந் திரிதரு சீறுார்ச் சிறுமியெந் தேமொழியே. 100 தொழுகுலத்தீர் சொற்காகேம் இழிகுலத்தே மெனவுரைத்தது.
12. நகையாடி மறுத்தல் சிலையொன்று வாணுதல் பங்கன்சிற் றம்பல வன்கயிலை மலையொன்று மாமுகத் தெம்மையர் எய்கணை மண்குளிக்குங் கலையொன்று வெங்கணையோடு கடுகிட்ட தென்னிற்கெட்டேன் கொலையென்று திண்ணிய வாறையர் கையிற்கொடுஞ்சிலையே. 101 வாட்டழை யெகிராது சேட்படுத் தற்கு மென்னகைத்தோழி யின்னகை செய்தது.
13. இரக்கத்தோடு மறுத்தல் மைத்தழை யாநின்ற மாமிடற் றம்பல வன்கழற்கே மெய்த்தழையான்நின்ற வம்பினர் போல விதிர்விதிர்த்துக் கைத்தழையேந்திக் கடமா வினாய்க்கையில் வில்லின்றியே பித்தழை யாநிற்ப ராலென்ன பாவம் பெரியவரே. 102 கையுறை யெதிராது காதற் றோழி யைய நீபெரி தயர்த்தனை யென்றது.
أص 62 ܥܠܐ

Y- 14. சிறப்பின்மை கூறிமறுத்தல் N
அக்கும் அரவும் அணிமணிக் கூத்தன்சிற் றம்பலமே ஒக்கு மிவள தொளிருரு வஞ்சிமஞ் சார்சிலம்பா கொக்குஞ்சுனையுங் குளிர்தளிருங்கொழும்போதுகளும் இக்குன்றி லென்றும் மலர்ந்தறி யாத வியல்பினவே. 103 மாந்தளிரும் மலர்நீலமும் ஏந்தலிம்மலை யில்லையென்றது.
15. இளமை கூறி மறுத்தல் உருகுதலைச்சென்ற வுள்ளத்தும் அம்பலத்தும்மொளியே பெருகு தலைச்சென்று நின்றோன் பெருந்துறைப் பிள்ளைகள்ளார் முருகு தலைச்சென்ற கூழை முடியா முலைபொடியா ஒருகு தலைச்சின் மழலைக்கென் னோவைய வோதுவதே. 104 முளையெயிற் றரிவை, விளைவில ளென்றது.
16. மறைத்தமை கூறி நகைத்துரைத்தல் பண்டா லியலு மிலைவளர் பாலகன் பார்கிழித்துத் தொண்டாலியலுஞ்சுடர்க்கழலோன்தொல்லைத்தில்லையின்வாய் வண்டா லியலும் வளர்பூந் துறைவ மறைக்கினென்னைக் கண்டா லியலுங் கடனில்லை கொல்லோ கருதியதே. 05 என்னை மறைத்தபின் எண்ணியதரிதென நன்னுதல்தோழிநகை செய்தது.
17. நகை கண்டு மகிழ்தல் மத்தகஞ் சேர்தனி நோக்கினன் வாக்கிறந் தூறமுதே ஒத்தகஞ் சேர்ந்தென்னை யுய்யநின்றோன்தில்லை யொத்திலங்கு முத்தகஞ் சேர்மென் னகைப்பெருந் தோளி முகமதியின் வித்தகஞ் சேர்மெல்லென் நோக்கமன் றோஎன் விழுத்துணையே. 106 இன்னகைத் தோழி மென்னகை கண்டு வண்ணக் கதிர்வே லண்ண லுரைத்தது.
لـ 63 ܠܐ

Page 37
18. அறியாள் போன்று நினைவு கேட்டல் விண்ணிறந்தார்நிலம் விண்டவ ரென்றுமிக் காரிருவர் கண்ணிறந்தார்தில்லையம்பலத்தார்கழுக்குன்றினின்று தண்ணறுந்தாதிவர் சந்தனச் சோலைப்பந்தாடுகின்றார் எண்ணிறந் தாரவர் யார்கண்ண தோமன்ன நின்னருளே. 107 வேந்தன் சொன்ன மாந்தளிர் மேனியை வெறியார் கோதை யறியே னென்றது.
19. அவயவங்கடிறல் குவவினகொங்கைகுரும்பைகுழல்கொன்றைகொவ்வை செவ்வாய் கவவின வாணகை வெண்முத்தங் கண்மலர் செங்கழுநீர் தவவினை தீர்ப்பவன் தாழ்பொழிற் சிற்றம் பலமனையாட் குவவின நாண்மதி போன்றொளிர் கின்ற தொளிமுகமே. 108 அவயவ மவளுக், கிவையிவை யென்றது.
20. கண்ணயந் துரைத்தல் ஈசற் கியான்வைத்த வன்பினகன்றவன் வாங்கியவென் பாசத்திற்காரென்றவன்தில்லையின்னொளிபோன்றவன்தோள் பூசத் திருநீ றெனவெளுத் தாங்கவன் பூங்கழல்யாம் பேசத் திருவார்த்தை யிற்பெரு நீளம் பெருங்கண்களே. 109 கண்ணினை பிறழ்வன, வண்ண முரைத்தது.
21. தழை யெதிர்தல் தோலாக் கரிவென்றதற்குந்துவள்விற்கு மில்லின்தொன்மைக் கேலாப் பரிசுள வேயன்றி யேலேம் இருஞ்சிலம்ப மாலார்க் கரிய மலர்க்கழ லம்பல வன்மலையிற் கோலாப் பிரசமன் னாட்கைய நீதந்த கொய்தழையே. 110 அகன்றவிடத் தாற்றாமைகண்டு கவன்றதோழி கையுறையெதிர்ந்தது.
لے )64 ܠܐ

7- 22. குறிப்பறிதல் N
கழைகாண் டலுஞ்சுளியுங்களி யாணையன் னான்கரத்தில் தழைகாண் டலும்பொய் தழைப்பமுன் காண்பனின் றம்பலத்தான் உழைகாண்டலும்நினைப்பாகுமென்நோக்கிமன் நோக்கங்கண்டால் இழைகாண் பணைமுலை யாயறியேன்சொல்லும் ஈடவற்கே. 111 தழையெதிரா தொழிவதற்கோர் சொல்லறியேனெனப் பல்வளைக்குரைத்தது.
23. குறிப்பறிந்து கூறல் தவளத்த நீறணியுந்தடந் தோளண்ணல் தன்னொருபால் அவளத்த னாம்மகனாந்தில்லை யானன் றுரித்தன்ன கவளத்த யானை கடிந்தார் கரத்தகண் ணார்தழையுந் துவளத் தகுவன வோசுரும் பார்குழல் தூமொழியே. 112 ஏழைக் கிருந்தழை, தோழிகொண் டுரைத்தது.
24. வகுத்துரைத்தல் ஏறும் பழிதழை யேற்பின்மற் றேலா விடின்மடன்மா ஏறு மவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள் ஏறு மான்மன்னும் ஈங்கோய் மலைநம் மிரும்புனம்காய்ந் தேறு மலைத்தொலைத் தாற்கென்னை யாஞ்செய்வதேந்திழையே. 113 கடித்தழை கொணர்ந்த காதற்றோழி மடக்கொடிமாதர்க்கு வகுத்துரைத்தது.
25. தழையேற்பித்தன் தெவ்வரைமெய்யெரி காய்சிலையாண்டென்னையாண்டுகொண்ட செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை அவ்வரை மேலன்றி யில்லைகண் டாயுள்ள வாறருளான் இவ்வரை மேற்சிலம் பன்னெளி திற்றந்த ஈர்ந்தழையே. 114 கருங்குழன் மடந்தைக் கரும்பெறற் றோழி இருந்தழை கொள்கென விரும்பிக் கொடுத்தது.
لم 6s ܥܠܐ

Page 38
N
26. தழைவிருப்புரைத்தல் பாசத் தளையறுத் தாண்டுகொண்டோன்தில்லை யம்பலஞ்சூழ் தேசத் தனசெம்மல் நீதந்தனசென்றியான் கொடுத்தேன் பேசிற் பெருகுஞ் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப் பூசிற் றிலளன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே. 115 விருப்பவள் தோழி, பொருப்பற் குரைத்தது.
13. பகற்குறி
1. குறியிடங் கூறல் வானுழைவாளம்பலத்தரன் குன்றென்று வட்கிவெய்யோன் தயனுழையாவிரு ளாய்ப்புற நாப்பண்வண் தாரகைபோல் தேனுழை நாக மலர்ந்து திகழ்பளிங் கான்மதியோன் கானுழை வாழ்வுபெற்றாங்கெழில் காட்டுமொர்கார்ப்பொழலே. 116 வாடிடத் தண்ணல் வண்தழை யெதிர்ந்தவள் ஆடிடத் தின்னியல் பறிய வுரைத்தது.
2. ஆடிடம் படர்தல் புயல்வள ரூசல்முன் ஆடிப்பொன் னேயின்னைப் போய்ப் அயல்வளர் குன்றில்நின்றேற்றும் அருவி திருவுருவிற் பொலியும் கயல்வளர் வாட்கண்ணி போதரு காதரந் தீர்த்தருளுந் தயல்வளர் மேனிய னம்பலத் தான் வரைத் தண்புனத்தே. 117 வண்தழை யெதிர்ந்த வொண்டொடிப் பாங்கி நீடமைத் தோளியொ டாடிடம் படர்ந்தது.
3. குறியிடத்துக்கொண்டு சேறல் தினைவளங் காத்துச் சிலம்பெதிர் கூஉய்ச்சிற்றின் முற்றிழைத்துச் சுனைவளம் பாய்ந்து துணைமலர் கொய்து தொழுதெழுவார் வினைவளம் நீறெழ நீறணி யம்பல வன்றன்வெற்பிற் புனைவளர் கொம்பரன் னாயன்ன காண்டும் புனமயிலே. 118 அணிவளராடிடத் தாயவெள்ள மணிவளர் கொங்கையை மருங்ககன்றது.
لا 66 ܥܐ

И- 4. இடத்துய்த்து நீங்கல் N நரல்வே யினநின தோட்குடைந்துக்கநன் முத்தஞ்சிந்திப் பரல்வேயறையுறைக்கும்பஞ்சடிப்பரன் தில்லையன்னாய் வரல்வேய் தருவனிங் கேநிலுங் கேசென்றுன் வார்குழற்கீர்ங் குரல்வே யளிமுரல் கொங்கார் தடமலர் கொண்டுவந்தே, 19 மடத்தகை மாதரை இடத்தகத் துய்த்து நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.
5. உவந்துரைத்தல் படமா சுணப்பள்ளியிக்குவ டாக்கியப் பங்கயக்கண நெடுமா லெனவென்னை நீநினைந் தோநெஞ்சத் தாமரையே இடமா விருக்கலுற்றோதில்லை நின்றவன் ஈர்ங்கயிலை வடமார் முலைமட வாய்வந்து வைகிற்றிவ் வார்பொழிற்கே. 120 களிமயிற்சாயலை யொருசிறைக்கண்ட
ஒளிமலர்த்தாரோ னுவந்துரைத்தது.
6. மருங்கணைதல் தொத்தீன் மலர்ப்பொழில் தில்லைத் தொல்லோனரு ளென்னமுன்னி முத்தீன் குவளைமென் காந்தளின் மூடித்தன் ஏரளப்பாள் ஒத்தீர்ங் கொடியி னொதுங்குகின் றாள்மருங் குல்நெருங்கப் பித்தீர் பணைமுலை காளென்னுக்கின்னும் பெருக்கின்றதே. 121 வாணுதல் அரிவை நாணுதல் கண்ட கோதை வேலவன் ஆதர வுரைத்தது.
7. பாங்கியறிவுரைத்தல் அளிநீடளகத்தின் அட்டிய தாதும் அணியணியும் ஒளிநீள் சுரிகுழற் சூழ்ந்தவொண் மாலையுந் தண்நறவுண் களிரீயெனச்செய்தவன்கடற்றில்லையன்னாய்கலங்கல் தெளிநீ யனையபொன் னேபன்னு கோலந் திருநுதலே. 122 நெறிகுழற் பாங்கி, அறிவறி வித்தது.
لـ 67 ܥܠ

Page 39
8. உண்மகிழந்துரைத்தல் ר செழுநீர் மதிக்கண்ணிச் சிற்றம் பலவன் திருக்கழலே கெழுநீர் மையிற்சென்று கிண்கிணி வாய்க்கொள்ளுங் கள்ளகத்த கழுநீர் மலரிவள் யானதன் கண்மருவிப்பிரியாக் கொழுநீர் நறப்பரு கும்பெரு நீர்மை யளிகுலமே. 123 தண்மலர்க் கோதையை உண்மகிழ்ந் துரைத்தது.
9. ஆயத்துய்த்தல் கொழுந்தாரகைமுகை கொண்டலம் பாசடை விண்மடுவில் எழுந்தார் மதிக்கம லம்மெழில் தந்தென இப்பிறப்பில் அழுந்தா வகையெனை ஆண்டவன் சிற்றம் பலமனையாய் செழுந்தா தவிழ் பொழி லயாத்துச் சேர்க திருத்தகவே. 124 கணைகடலன்ன கார்மயிற்கணத்துப் புனைமடமானைப் புகவிட்டது.
10. தோழிவந்து கூடல் பொன்னனை யான்தில்லைப் பொங்கர வம்புன் சடைமிடைந்த மின்னனை யானருள் மேவலர் போன்மெல் விரல் வருந்த மென்னனை யாய்மறி யேபறி யேல்வெறி யார்மலர்கள் இன்னணயான்கொணர்ந்தேன் மணந்தாழ்குழற் கேய்வனவே. 125 நெறியுறு குழலியை நின்றிடத் துய்த்துப் பிறைநுதற் பாங்கி பெயர்ந்தவட் குரைத்தது.
11. ஆடிடம்புகுதல் அறுகால்நிறைமலரைம்பால் நிறையணிந்தேன் அணியார் துறுகான் மலர்த்தொத்துத் தோகைதொல் லாயமெல்லப்புகுக சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின் உறுகால் பிறர்க்கரியோன்புலியூரென்ன வொண்ணுதலே. 126 தணிவிளை யாடிய தாழ்குழற் றோழி பனிமதி நுதலியோ டாடிடம் படர்ந்தது.
الصـ ] 68 [ ܥܠܐ

Y- N
12. தணிகண்டுரைத்தல் தழங்கு மருவியெஞ் சீறுார் பெரும இதுமதுவுங் கிழங்கு மருந்தி இருந்தெம்மொ டின்று கிளர்ந்துகுன்றர் முழங்குங் குரவை இரவிற்கண் டேகுக முத்தன்முத்தி வழங்கும் பிரானெரி யாடிதென் தில்லை மணிநகர்க்கே. 127 வேயொத்த தோளியை ஆயத் துய்த்துக் குனிசிலை யண்ணலைத் தணிகண் டுரைத்தது.
13. பருவங்கூறி வரவு விலக்கல் தள்ளி மணிசந்த முந்தித் தறுகட் கரிமருப்புத் தெள்ளி நறவந் திசைதிசை பாயும் மலைச்சிலம்பா வெள்ளி மலையன்ன மால்விடை யோன்புலியூர்விளங்கும் வள்ளி மருங்குல் வருத்துவ போன்ற வனமுலையே. 128 மாந்தளிர் மேனியை வரைந்தெய்தா
14. வரைவுடமபடாதுமிகுத்துக்கூறல் மாடஞ்செய் பொன்னக ரும்நிகரில்லையிம் மாதர்க்கென்னப் பீடஞ்செய் தாமரை யோன்பெற்ற பிள்ளையை யுள்ளலரைக் கீடஞ்செய் தென்பிறப் புக்கெடத்தில்லைநின் றோன்கயிலைக் கூடஞ்செய் சாரற் கொடிச்சியென்றோநின்று கூறுவதே. 129 வரைவுகடாய வாணுதற்றோழிக்கு விரைமலர்த்தாரோன் மிகுத்துரைத்தது.
15. உண்மைகறி வரைவுகடாதல் வேய்தந்தவெண்முத்தஞ் சிந்துபைங்கார்வரை மீன்பரப்பிச் சேய்தந்த வானக மானுஞ் சிலம்பதன் சேவடிக்கே ஆய்தந்த அன்புதந்தாட்கொண்ட அம்பல வன்மலையில் தாய்தந்தை காணவ ரேனலெங் காவலித் தாழ்வரையே. 130 கல்வரைநாடன் இல்லது ரைப்ப ஆங்கவளுண்மை பாங்கிபகர்ந்தது.
الص ܥܐ

Page 40
N
16. வருத்தங்கூறி வரைவுகடாதல் மன்னுந் திருவருந்தும்வரை யாவிடின் நீர்வரைவென் றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதி ரும்பரெலாம் பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தாள் பொன்னங் கழல்வழுத்தார்புல னென்னப் புலம்புவனே. 31 கனங்குழை முகத்தவன் மனங்குழை வுணர்த்தி நிரைவளைத் தோளி வரைவு கடாயது.
17. தாயச்சங்கூறிவரைவுகடாதல் பனித்துண்டஞ் சூடும் படர்சடை அம்பல வன்னுலகந் தனித்துண் டவன்தொழுந் தாளோன் கயிலைப் பயில்சிலம்பா கணித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப் பாரிப்புக் கண்டழிவுற் றினிக்கண்டிலம்பற்றுச் சிற்றிடைக் கென்றஞ்சுமெம்மனையே. 32 மடத்தகை மாதர்க் கடுப்பன அறியா வேற்கண் பாங்கி ஏற்க வுரைத்தது.
18. இற்செறி வறிவித்து வரைவுகடாதல் ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும் வேய்விளையாடும்வெற் பாவுற்று நோக்கியெம் மெல்லியலைப் போய்விளையாடலென றாளன்னை அம்பலத் தான் புரத்தில் தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே. 133 விற்செறி நுதலியை, இற்செறி வுரைத்தது.
19. தமர்நினை வுரைத்து வரைவுகடாதல் சுற்றுஞ் சடைக்கற்றைச் சிற்றம் பலவற் றொழாதுதொல்சீர் கற்று மறியல ரிற்சிலம் பாவிடை நைவதுகண் டெற்றுந் திரையின் னமிந்தையினித்தம் ரிற்செறிப்பார் மற்றுஞ் சிலபல சீறுார் பகர்பெரு வார்த்தைகளே. 134 விற்செறி நுதலியை இற்செறி விப்பரென் றொளிவே லவற்கு வெளியே யுரைத்தது.
70 لـ

r 20. எதிர்கோள் கூறி வரைவுகடாதல் ད། வழியும் அதுவன்னை யென்னின் மகிழும்வந் தெந்தையும்நின் மொழியின் வழிநிற்குஞ் சுற்றமுன் னேவய மம்பலத்துக் குழியும்ப ரேத்துமெங் கூத்தன்குற் றாலமுற் றும்மறியக் கெழயும்ம வேபணைத் தோள் லவென்னோ கிளக்கின்றதே. 135 ஏந்திழைத்தோழி ஏந்தலைமுன்னிக் கடியாமாறு நொடிகென்றது.
21. ஏறுகோள் கூறிவரைவுகடாதல் படையார் கருங்கண்ணி வண்ணப் பயோதரப் பாரமும்நுண் இடையார் மெலிவுங்கண்டண் டர்களிர்முல்லை வேலியெம்மூர் விடையார் மருப்புத் திருத்திவிட் டார்வியன் தென்புலியூர் உடையார் கடவி வருவது போலு முருவினதே. 136 என்னையர்துணி வின்ன தென்றது.
22. அயலுரையுரைத்து வரைவு கடாதல் உருப்பனை அன்னகைக்கு குன்றொன்றுரித்துர வூரெரித்த நெருப்பனையம்பலத்தாதியையும்பர்சென்றேத்திநிற்குந் திருப்பனையூரணையாளைப்பொன்னாளைப் புனைதல்செப்பிப் பொருப்பனை முன்னின்றென் னோவினை யேன்யான் புகல்வதுவே. 137 கயல்புரை கண்ணியை, அயலுரை யுரைத்தது.
23. தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல் மாதிடங்கொண்டம் பலத்துநின்றோன்வடவான்கயிலைப் போதிடங்கொண்டபொன்வேங்கைதினைப்புணங்கொய்கவென்று தாதிடங் கொண்டு பொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே. 138 ஏனல் விளையாட் டினியில் லையென மாணற்றொழி மடந்தைக் குரைத்தது.
لم 71 ܥܐ

Page 41
24. பகல்வரல் விலக்கி வரைவுகடாதல் N வடிவார் வயற்றில்லை யோன்மலயத்துநின்றும்வருதேன் கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார் நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன் தடிவார் தினையெமர் காவேம் பெருமஇத் தண்புனமே. 139 அகல்வரை நாடனைப், பகல்வர லென்றது.
25. தினையொடு வெறுத்து வரைவுகடாதல் நினைவித்துத் தன்னையென் நெஞ்சத்திருந்தம் பலத்துநின்று புனைவித்த ஈசன் பொதியின் மலைப்பொருப் பன்விருப்பில் தினைவித்திக் காத்துச் சிறந்துநின்றேமுக்குச் சென்றுசென்று வினைவித்திக் காத்து விளைவுண்டதாகி விளைந்ததுவே. 140 தண்புனத்தோடு தளர்வுற்றுப் பண்புனை மொழிப் பாங்கிபகர்ந்தது.
26. வேங்கையோடு வெறுத்து வரைவுகடாதல் கனைகடற் செய்தநஞ் சுண்டுகண் டார்க்கம் பலத்தமிழ்தாய் வினைகெடச் செய்தவன் விண்தோய் கயிலை மயிலனையாய் நனைகெடச் செய்தன மாயின் நமைக்கெடச் செய்திடுவான் தினைகெடச் செய்திடு மாறுமுண் டோஇத் திருக்கணியே. 141 நீங்குகவினி நெடுந்தகையென வேங்கைமேல் வைத்து விளம்பியது.
27. இரக்கமற்றுவரைவுகடாதல் வழுவா இயலெம் மலையர் விதைப்பமற் றியாம்வளர்த்த கொழுவார் தினையின் குழாங்களெல் லாமெங் குழாம்வணங்குஞ் செழுவார் கழற்றில்லைச் சிற்றம் பலவரைச் சென்றுநின்று தொழுவார் வினைநிற்கிலேநிற்பதாவதித் தொல்புனத்தே. 142 செழுமலை நாடற்குக், கழுமலுற் றிரங்கியது.
4ے )72( ܥܠ

r- N
28. கொய்தமை கூறி வரைவுகடாதல் பொருப்பர்க் கியாமொன்று மாட்டோம் புகலப் புகலெமக்காம் விருப்பர்க் கியாவர்க்கு மேலர்க்கு மேல்வரு மூரெரித்த நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக் கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற தின்றிக் கடிப்புணமே, 143 நீடிரும்புனத்தினி யாடேமென்று வரைவுதோன்ற வுரை செய்தது.
29. பிரிவருமைகூறி வரைவுகடாதல் பரிவுசெய்தாண்டம் பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் அருவிசெய் தாழ்புணத் தைவனங் கொய்யவு மிவ்வனத்தே பிரிவுசெய்தாலரி தேகொள்க பேயொடு மென்னும் பெற்றி இருவிசெய் தாளி எரிருந்தின்று காட்டு மிளங்கிளியே. 144 மறைப்புறக் கிளவியிற் சிறைப்புறத் துரைத்தது.
30. மயிலொடு கூறி வரைவுகடாதல் கணியார் கருத்தின்று முற்றிற் றியாஞ் சென்றுங் கார்ப்புணமே மணியார் பொழில்காண் மறத்திர்கண் டீர்மன்ன மம்பலத்தோன் அணியார் கயிலை மயில்காள் அயில்வே லொருவர்வந்தால் துணியா தனது துணிந்தாரென்னு நீர்மைகள் சொல்லுமினே. 145 நீங்கரும் புனம்விடு நீள் பெருந் துயரம் பாங்கி பகர்ந்து பருவர லுற்றது.
31. வறும்புனங்கண்டு வருந்தல் பொதுவினிற்றீர்த்தென்னையாண்டோன்புலியூரரன்பொருப்பே இதுவெனி லென்னின் றிருக்கின்ற வாறெம் மிரும்பொழிலே எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புணமே. 146 மென்புனம்விடுத்து மெல்லியல்செல்ல மின்பொலிவேலோன் மெலிவுற்றது.
لے s ܠܐ

Page 42
r 32. பதிநோக்கிவருந்தல் N
ஆனந்த மார்கட லாடுசிற் றம்பல மன்னபொன்னின் தேனுந்து மாமலைச் சீறு ரிதுசெய்ய லாவதில்லை வானுந்து மாமதி வேணடி அழுமழப் போலுமன்னோ நானுந் தளர்ந்தனன் நீயும் தளர்ந்தனை நன்னெஞ்சமே. 147 மதிநுத லரிவை பதிபுக லரிதென மதிநணரி கலங்கிப் பதிமிக வாடியது.
14. இரவுக்குறி
1. இரவுக்குறி வேண்டல் மருந்துநம் மல்லற் பிறவிப் பிணிக்கம் பலத்தமிர்தாய் இருந்தனர் குன்றினின் றேங்கும் அருவிசென் றேர்திகழப் பொருந்தின மேகம் புதைந்திருள் தூங்கும் புனையிறும்பின் விருந்தினன் யானுங்கள் சீறு ரதனுக்கு வெள்வளையே. 148 நள்ளிருட் குறியை வள்ளல் நினைந்து வீங்கு மென்முலைப் பாங்கிக்குரைத்தது.
2. வழியருமை கூறிமறுத்தல் விசும்பினுக்கேணி நெறியன்ன சின்னெறி மேன் மழைதூங் கசும்பினிற் றுன்னி அளைநுழைந்தாலொக்கும் ஐயமெய்யே இசும்பினிற் சிந்தைக்கு மேறற் கரிதெழி லம்பலத்துப் பசும்பனிக் கோடு மிலைந்தான் மலயத்தெம் வாழ்பதியே. 149 இரவர லேந்தல் கருதி யுரைப்பப் பருவரற் பாங்கி யருமை யுரைத்தது.
3. நின்று தெஞ்சுடைதல் மாற்றே னெனவந்த காலனை யோல மிட அடர்த்த கோற்றேன் குளிர்தில்லைக்கூத்தன் கொடுங்குன்றின் நீள்குடுமி மேற்றேன் விரும்பு முடவனைப் போல மெலியுநெஞ்சே ஆற்றே னரிய அரிவைக்கு நீவைத்த அன்பினுக்கே. 150 பாங்கிவிலங்கப் பருவரைநாடன் நீங்கிவிலங்காது நெஞ்சுடைந்தது.
لم 74 ܥܐ.

4. இரவுக்குறி நேர்தல் கூளி நிரைக்கநின் றம்பலத் தாடி குரைகழற்கீழ்த் தூளி நிறைத்த சுடர்முடி யோயிவள் தோள்நசையால் ஆளி நிரைத்தட லானைகள் தேரு மிரவில்வந்து மீளி யுரைத்தி வினையேனுரைப்பதென் மெல்லியற்கே. 151 தடவரைநாடன் தளர்வுதீர மடநடைப்பாங்கி வகுத்துரைத்தது.
5. உட்கோள்வினாதல் வரையன் றொருகா லிருகால் வளைய நிமிர்த்துவட்கார் நிரையன் றழலெழ வெய்துநின் றோன்தில்லை யன்னநின்னூர் விரையென்ன மென்னிழலென்ன வெறியுறுதாதிவர்போ துரையென்ன வோசிலம்பாநலம் பாவி யொளிர்வனவே. 152 நெறிவிலக் குற்றவ னுறுதுயர் நோக்கி யாங்கொரு சூழல் பாங்கி பகர்ந்தது.
6. உட்கொண்டு வினாதல் செம்மல ராயிரந் தூய்க்கரு மால்திருக் கண்ணணியும் மொய்ம்மல ரீர்ங்கழ லம்பலத் தோன்மன்னு தென்மலயத் தெம்மலர் சூடிநின் றெச்சாந் தணிந்தென்ன நன்னிழல்வாய் அம்மலர் வாட்கண்நல் லாயெல்லி வாய்நும ராடுவதே. 153 தன்னை வினவத் தானவள் குறிப்பறிந் தென்னை நின்னாட் டியலணி யென்றது.
7. குறியிடங்கூறல் பனைவளர் கைம்மாப் படாத்தம் பலத்தரன் பாதம்விண்ணோர் புனைவளர் சாரற் பொதியி மலைப்பொலி சந்தணிந்து சுனைவளர் காவிகள் சூடிப்பைந் தோகை துயில்பயிலுஞ் சினைவளர்வேங்கைகள் யாங்கணிறாடுஞ்செழும்பொழிலே,154 இரவுக் குறியிவ ணென்று பாங்கி அரவக் கழலவற் கறிய வுரைத்தது.
أصـ 7s ܥ

Page 43
8. இரவுக்குறி யேற்பித்தல் N மலவன் குரம்பையை மாற்றியம் மால்முதல் வான க்கப்பாற் செலவன்பர்க்கோக்குஞ்சிவன்தில்லைக் காணவிற்குர்ப்பெடையோ டலவன் பயில்வது கண்டஞர் கூர்ந்தயில் வேலுரவோன் செலவந்தி வாய்க்கண் டனனென்ன தாங்கொன்மன்சேர்துயிலே. 155 அரவக்கழலவ னாற்றானென
இரவுக்குறி யேற்பித்தது.
9. இரவரவுரைத்தல்
மோட்டாங்கதிர்முலைப்பங்குடைத்தில்லைமுன்னோன்கழற்கே கோட்டந் தருநங் குருமுடி வெற்பன் மழைகுழுமி நாட்டம் புதைத்தன்ன நள்ளிருள் நாகம் நடுங்கச்சிங்கம் வேட்டந் திரிசரி வாய்வரு வான்சொல்லு மெல்லியலே. 156 குரவருகுழலிக் கிரவரவுரைத்தது.
t
10. ஏதங்கூறி மறுத்தல்
செழுங்கார் முழுவதிர் சிற்றம் பலத்துப் பெருந்திருமால் கொழுங்கான் மலரிடக் கூத்தயர் வோன்கழ லேத்தலர்போல் முழங்கா ரரிமுரண் வாரண வேட்டைசெய் மொய்யிருள்வாய் வழங்கா அதரின் வழங்கென்று மோவின்றெம் வள்ளலையே. 157 இழுக்கம்பெரி திரவரினென அழுக்கமெய்தி யரிவையுரைத்தது.
11. குறைநேர்தல் ஒங்கு மொருவிட முண்டம் பலத்தும்ப ருய்யவன்று தாங்கு மொருவன் தடவரை வாய்த்தழங்கும்மருவி வீங்குஞ் சுனைப்புனல் வீழ்ந்தன் றழுங்கப் பிடித்தெடுத்து வாங்கு மவர்க்கறியேன்சிறியேன்சொல்லும் வாசகமே. 158 அலைவேலண்ணல் நிலைமைகேட்டு கொலை வேற்கண்ணி குறைநயந்தது.
h 76 4ے

r A d N 12. குறைநேர்ந்தமை கூறல் ஏனற் பசுங்கதி ரென்றுாழ்க் கழிய எழிலியுன்னிக் கானக் குறவர்கள் கம்பலை செய்யும்வம் பார்சிலம்பா யானிற்றை யாமத்து நின்னருள் மேல்நிற்க லுற்றுச் சென்றேன் தேனக்க கொன்றையன் தில்லை யுறார்செல்லுஞ் செல்லல்களே. 159 குறைநயந்தனள் நெறிகுழலியென எறிவேலண்ணற் கறியவுரைத்தது.
13. வரவுணர்ந்துரைத்தல் முன்னு மொருவ ரிரும்பொழில் மூன்றற்கு முற்றுமிற்றாற் பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள் போல் துன்னுமொரின்பமென்றோகைதந்தோகைக்குச் சொல்லுவபோல் மன்னு மரவத்த வாய்த்துயில் பேரும் மயிலினமே. 60 வளமயிலெடுப்ப இளமயிற்பாங்கி செருவேலண்ணல் வரவுரைத்தது.
14. தாய்துயிலறிதல் கூடார் அரண்நெரி கூடக் கொடுஞ்சிலை கொண்ட அண்டன் சேடார் மதின்மல்லற்றில்லையன்னாய்சிறுகட்பெருவெண் கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத் தோடார் மதுமலர் நாகத்தை நூக்கும்நஞ் சூழ்பொழிற்கே. 161 ஊசன்மிசைவைத் தொள்ளமளியில் தாயதுதுயில் தானறிந்தது.
15. துயிலெடுத்துச்சேறல் விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த மண்ணுக்கு நாப்பண் நயந்துதென்தில்லைநின்றோன்மிடற்றின் வண்ணக் குவளை மலர்கின் றனசின வாண்மிளிர்நின் கண்ணொக்கு மேற்கண்டு காண்வண்டு வாழுங் கருங்குழலே. 162 தாய்துயிலறிந் தாய்தருபவள் மெல்லியற்குச் சொல்லியது.
أص 77 ܥܐ .

Page 44
16. இடத்துய்த்து நீங்கல் N நந்தீ வரமென்னு நாரணன் நாண்மலர்க் கண்ணிற்கொ.,கந் தந்தீ வரன்புலியூரனை யாய்தடங் கண்கடந்த இந்தீ வரமிவை காணின் இருள்சேர் குழற்கெழில்சேர் சந்தீ வரமுறி யும்வெறி வீயுந் தருகுவனே. 163 மைத்தடங் கண்ணியை யுய்த்திடத் தொருபால் நீங்க லுற்ற பாங்கி பகர்ந்தது.
17. தளர்வகன் றுரைத்தல் காமரை வென்றகண் ணோன்தில்லைப் பல்கதி ரோனடைத்த தாமரை யில்லின் இதழ்க்கத வந்திறந் தோதமியே பாமரை மேகலை பற்றிச் சிலம்பொதுக் கிப்பையவே நாமரை யாமத்தென் னோவந்து வைகி நயந்ததுவே. 164 வடுவகி ரனைய வரிநெடுங் கண்ணியைத் தடுவரி யன்பொடு தளர்வகன் றுரைத்தது.
18. மருங்கணைதல் அகிலின் புகைவிம்மி ஆய்மலர் வேய்ந்தஞ் சனமெழுதத் தகிலுந் தனிவடம் பூட்டத் தகாள்சங் கரன்புலியூர் இகலு மவரிற் றளருமித் தேம்ப லிடைஞெமியப் புகிலு மிக இங்ங் னேயிறு மாக்கும் புணர்முலையே. 165 அன்புமிகுதியி னளவளாயவளைப் பொன்புனைவேலோன் புகழ்ந்துரைத்தது.
19. முகங்கண்டு மகிழ்தல் அழுந்தேன் நரகத்தியானென்றிருப்பவந்தாண்டுகொண்ட செழுந்தேன் திகழ் பொழிற் றில்லைப் புறவிற் செறுவகத்த கொழுந்தேன் மலர்வாய்க் குமுதமிவள்யான் குரூஉச்சுடர்கொண் டெழுந்தாங் கதுமலர்த் தும்முயர் வானத்திளமதியே. 166 முகையவிழ்குழலி முகமதிகண்டு திகழ்வேல் அண்ணல் மகிழ்வுற்றது.
4ے )78[ ܠܐ

И” 20. பள்ளியிடத்துய்த்தல் N
சுரும்புறு நீலங் கொய்யல் தமிநின்று துயில்பயின்மோ அரும்பெறற் றோழியொடாயத்து நாப்பணமரரொன்னார் இரும்புற மாமதில் பொன்னிஞ்சி வெள்ளிப் புரிசையன்றோர் துரும்புறச் செற்றகொற்றத்தெம் பிரான்தில்லைச் சூழ்பொழிற்கே. 167 பிரிவது கருதிய பெருவரை நாடன் ஒள்ளிழைப் பாங்கியொடு பள்ளிகொள் கென்றது.
21. வரவு விலக்கல் நற்பகற் சோமன் எரிதரு நாட்டத்தன் தில்லையன்ன விற்பகைத் தோங்கும் புருவத் திவளின் மெய்யேயெளிதே வெற்பகச் சோலையின் வேய்வளர் தீச்சென்று விண்ணினின்ற கற்பகச் சோலை கதுவுங்கல் நாடஇக் கல்லதரே. 168 தெய்வமன் னாளைத் திருந்தமளி சேர்த்தி மைவரை நாடனை வரவுவிலக் கியது.
22. ஆற்றாதுரைத்தல் பைவா யரவரை அம்பலத் தெம்பரன் பைங்கயிலைச் செவ்வாய்க் கருங்கட் பெரும்பணைத் தோட்சிற் றிடைக்கொடியை மொய்வார் கமலத்து முற்றிழையின்றென்முன்னைத்தவத்தால் இவ்வாறிருக்குமென் றேநிற்ப தென்றுமென் இன்னுயிரே. 169 வரைவு கடாய வாணுதற் றோழிக் கருவரை நாடன் ஆற்றா துரைத்தது.
23. இரக்கங்கூறி வரைவு கடாதல் பைவா யரவும் மறியும் மழுவும் பயின்மலர்க்கை மொய்வார் சடைமுடி முன்னவன் தில்லையின் முன்னினக்காற் செவ்வாய்கருவயிர்ச் சேர்த்திச் சிறியாள் பெருமலர்க்கண் மைவார் குவளை விடும்மன்ன நீண்முத்த மாலைகளே. 170 அதிர்கழலவன் அகன்றவழி யெதிர்வதறியா திரங்கியுரைத்தது.
لـ )79 ܥܐ

Page 45
アー །།
24. நிலவு வெளிப்பட வருந்தல் நாகந் தொழவெழில் அம்பலம் நண்ணி நடம்நவில்வோன் நாக மிதுமதி யேமதி யேநவில் வேற்கையெங்கள் நாகம் வரவெதிர் நாங்கெள்ளும் நள்ளிருள் வாய்நறவார் நாகம் மலிபொழில் வாயெழில் வாய்த்தநின் நாயகமே. 171 தனிவே லவற்குத் தந்தளர் வறியப் பனிமதி விளக்கம் பாங்கி பகர்ந்தது.
25. அல்லகுறி யறிவித்தல் மின்னங் கலருஞ் சடைமுடி யோன்வியன் தில்லையன்னாய் என்னங் கலமர லெய்திய தோவெழின் முத்தந்தொத்திப் பொன்னங்கலர்புன்னைச் சேக்கையின் வாய்ப்புலம் புற்றுமுற்றும் அன்னம் புலரு மளவுந் துயிலா தழுங்கினவே. 172 வல்லி யன்னவ ளல்ல குறிப்பொடு V அறைப்புனற் றுறைவற்குச் சிறைப்புறத் துரைத்தது.
26. கடலிடை வைத்துத் துயரறிவித்தல் சோத்துன் னடியமென்றோரைக் குழுமித்தொல் வானவர் சூழ்ந் தேத்தும் படிநிற்ப வன்தில்லையன்னா ளிவள்துவள ஆர்த்துன் ணமிழ்துந் திருவும் மதியும் இழந்தவம்நீ பேர்த்து மிரைப்பொழி யாய்பழி நோக்காய் பெருங்கடலே. 173 எறிகடல் மேல்வதை திரவருதுயரம் அறைகழலவற் கறியவுரைத்தது.
27. காம மிக்க கழிபடர் கிளவி மாதுற்ற மேனி வரையுற்ற வில்லிதில் லைநகர்சூழ் போதுற்ற பூம்பொழில் காள்கழி காளெழிற் புள்ளினங்காள் ஏதுற் றழிதியென் னிர்மன்னு மீர்ந்துறை வர்க்கிவளோ தீதுற்ற தென்னுக்கென் னிரிது வோநன்மை செப்புமினே. 174 தாமமிக்க தாழ்குழலேழை காமமிக்க கழிபடர்கிளவி
4ے ] 80 [ ܠܐ

N
28. காப்புச் சிறைமிக்க கையறுகிளவி இன்றை வார்பொழிற் றில்லை நகரிறை சீர்விழவிற் பன்னிற மாலைத் தொகைபக லாம்பல் விளக்கிருளின் துன்னற வுய்க்குமில் லோருந் துயிலில் துறைவர்மிக்க கொன்னிற வேலொடு வந்திடின் ஞாளி குரைதருமே. 175 மெய்யுறு காவலிற் கையறு கிளவி.
29. ஆறுபார்த்துற்ற வச்சக்கிளவி தாருறுகொன்றையன் தில்லைச் சடைமூடியோன்கயிலை நீருறு கான்யா றளவில் நீந்திவந்தால்நினது போருறு வேல்வயப் பொங்குரும் அஞ்சுக மஞ்சிவருஞ் சூநறு சோலையின் வாய்வரற் பாற்றன்று தூங்கிருளே. 176 நூறு வார்குழ னவ்வி நோக்கி ஆறுபார்த் துற்ற அச்சக் கிளவி
30. தன்னுட்கையா றெய்திடுகிளவி விண்டலை யாவர்க்கும் வேந்தர்வண் தில்லைமெல் லங்கழிசூழ் கண்டலை யேகரி யாக்கன்னிப் புன்னைக் கலந்தகள்வர் கண்டிலையேவரக்கங்குலெல்லாம்மங்குல் வாய்விளக்கும் மண்டல மேபணி யாய்தமி யேற்கொரு வாசகமே. 177 மின்னுப் புரையும் அந்நுண் மருங்குல் தன்னுட் கையா றெய்திடு கிளவி,
31. நிலைகண்டுரைத்தல் பற்றொன்றிலார்பற்றுந்தில்லைப்பரன்பரங்குன்றினின்ற புற்றொன்றரவன் புதல்வனென நீ புகுந்து நின்றால் மற்றுன்று மாமல ரிட்டுன்னை வாழ்த்திவந்திக்கலன்றி மற்றொன்று சிந்திப்பரேல்வல்ல ளோமங்கை வாழ்வகையே. 178 நின்னினழிந்தனள் மின்னிடைமாதென வரைவுதோன்ற வுரைசெய்தது.
أص )81 ܠܐ

Page 46
32. இரவுறு துயரங் கடலொடு சேர்த்தல் ད། பூங்கணை வேளைப் பொடியாய் வீழவிழித் தோன்புலியூர் ஓங்கணை மேவிப் புரண்டு விழுந்தெழுந் தோலமிட்டுத் தீங்கணைந் தோரல்லுந் தேறாய் கலங்கிச் செறிகடலே ஆங்கணைந்தார்நின்னை யும்முள ரோசென் றகன்றவரே.179 எறிவேற்கண்ணி யிரவருதுயரஞ் செறிகடலிடைச் சேர்த்தியுரைத்தது.
33. அலரறிவுறுத்தல் அலரா யிரந்தந்து வந்தித்து மாலா யிரங்கரத்தால் அலரார் கழல்வழி பாடுசெய் தாற்கள வில்லொளிகள் அலரா விருக்கும் படைகொடுத் தோன்தில்லையானருள்போன் றலராய் விளைகின்ற தம்பல்கைம் மிக்கைய மெய்யருளே. 18O அலைவேலண்ணன் மனமகிழருள் பலராலறியப் பட்டதென்றது.
15. ஒருவழித்தணத்தல்
1. அகன்றணைவு கூறல் புகழும் பழியும் பெருக்கிற் பெருகும் பெருகிநின்று நிகழும் நிகழா நிகழ்த்தினல் லாலிது நீநினைப்பின் அகழும் மதிலும் அணிதில்லை யோனடிப்போதுசென்னித் திகழு மவர்செல்லல் போலில்லை யாம்பழி சின்மொழிக்கே. 181 வழிவேறு படமன்னும், பழிவேறு படுமென்றது.
2. கடலொடு வரவுகேட்டல் ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில் மீன்பரப்பிச் சீரம் பரத்திற்றிகழ்ந்தொளிதோன்றுந்துறைவர்சென்றார் போரும் பரிச புகன்றன ரோபுலியூர்ப் புனிதன் சீரம்பர் சுற்றி யெற்றிச் சிறந்தார்க்குஞ் செறிகடலே. 182 மணந்தவர் ஒருவழித் தணந்ததற் கிரங்கி மறிதிரை சேரும் எறிகடற் கியம்பியது.
أص 82 ܥܐ

3. கடலொடுபுலத்தல் பாணிகர் வண்டினம் பாடப்பைம் பொன்றருவெண்கிழிதஞ் சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச் சேர்ப்பர்திங்கள் வாணிகர் வெள்வளை கொண்டகன் றார்திறம் வாய்திறவாய் பூணிகர் வாளர வன்புலியூர்சுற்றும் போர்க்கடலே. 183 செறிவளைச் சின்மொழி எறிகடற் கியம்பியது.
4. அன்னமோடாய்தல் பகன்தா மரைக்கண் கெடக்கடந் தோன்புலியூர்ப்பழனத் தகன்தா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து முகன்தாழ் குழைச்செம்பொன் முத்தணிபுன்னையின் னும்முரையா தகன்றாரகன்றே யொழிவர்கொல் லோநம் மகன்றுறையே. 84 மின்னிடை மடந்தை, யன்னமோ டாய்ந்தது.
5. தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல் உள்ள முருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவனாட் கொள்ளு மவரிலொர் கூட்டந்தந்தான்குனிக்கும்புலியூர் விள்ளும் பரிசுசென்றார்வியன் தேர்வழி தூரற்கண்டாய் புள்ளுந் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. 185 மீன்றோய் துறைவர் மீளு மளவு மான்றேர் வழியை யழியே லென்றது.
6. கூடலிழைத்தல் ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித் தாழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென் றாழிதிருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே. 186 நீடலந் துறையிற், கூடல் இழைத்தது.
لص )83 ܥܐ

Page 47
-N
7. சுடரொடுபுலம்பல் கார்த்தரங் கந்திரை தோணி சுறாக்கடல் மீன் எறிவோர் போர்த்தரங்கந்துறை மானுந்ததுறைவர்தம் போக்குமிக்க தீர்த்தரங்கன்தில்லைப்பல்பூம்பொழிற்செப்பும் வஞ்சின்மும் ஆர்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு மாறென்கொ லாழ்சுடரே. 187 குணகட லெழுசுடர் குடகடற் குளிப்ப மணமலி சூழலி மனம்புலம்பியது.
8. பொழுதுகண்டு மயங்கல் பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற் றற்றவர்க்குப் புகலோன் புகுநர்க்குப் போக்கிரி யோனெவரும்புகலத் தகலோன் பயில்தில்லைப் பைம்பொழிற் சேக்கைகள் நோக்கினவால் அகலோங் கிருங்கழி வாய்க்கொழுமீனுண்ட, அன்னங்களே. 188 மயல்தரு மாலை வருவது கண்டு கயல்தரு கண்ணி கவலையுற்றது.
9. பறவையொடு வருந்தல் பொன்னும் மணியும் பவளமும் போன்று பொலிந்திலங்கி மின்னுஞ் சடையோன் புலியூர் விரவாதவரினுள் நோய் இன்னு மறிகில வாலென்னை பாவம் இருங்கழிவாய் மன்னும் பலவே மகிழ்ந்திரை தேரும்வண் டானங்களே. 189 செறிபிணி கைம்மிகச் சிற்றிடைப் பேதை பறவைமேல் வைத்துப் பையுளெய் தியது.
10. பங்கயத்தோடுபரிவுற்றுரைத்தல் கருங்கழிகாதற்பைங்கானலில் தில்லையெங் கண்டர்விண்டார் ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந் தருங்கழி காதம் அவலு மென் றுழென் றலந்துகண்ணிர் வருங்கழ் காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. 190 முருகவிழ் கான, லொடுபரி வுற்றது.
4ے 84 ܠܐ

Y~ ーマ
11. அன்னமோடழிதல் மூவல்கழிஇய அருண்முத லோன் தில்லைச் செல்வன் முந்நீர் நாவல்தழி இயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச் சேவல் தழிஇச்சென்று தான்துஞ்சும் யான்துயி லாச்செயிரெங் காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே. 191 இன்னகையவ ளிரவரு துயரம் அன்னத்தோ டழிந்துரைத்தது.
12. வரவுணர்ந்துரைத்தல் நில்லா வளைநெஞ்சம் நெக்குரு கும்நெடுங் கண்துயிலக் கல்லா கதிர்முத்தங் காற்று மெனக்கட் டுரைக்கதில்லைத் தொல்லோனருள்களில் லாரிற்சென்றார்சென்றசெல்லல்கண்டாய் எல்லார் மதியே யிதுநின்னை யான்இன் றிரக்கின்றதே. 192 சென்றவர் வரவுணர்ந்து நின்றவர் நிலைமை சிறப்புடைப் பாங்கி சிறைப்புறத் துரைத்தது.
13. வருத்தமிகுதிகூறல் வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த் தளருந் தடவரைத் தண்சிலம் பாதன சங்கமெங்கும் விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின் றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்னவொண்ணுதலே. 193 நீங்கி யனைந்தவற்குப் பாங்கி பகர்ந்தது.
16. உடன்போக்கு
1. பருவங்கூறல் ஒராக மிரண்டெழி லாயொளிர் வோன்தில்லையொன்ணுதலங் கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின் பராகஞ் சிதர்ந்த பயோதர மிப்பரி சேபணைத்த இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெம ரெண்ணுவதே. 194 உருவது கண்டவள் அருமை யுரைத்தது.
أص 8s ܥܐ

Page 48
ད།
மணியக் கணியும் அரன்நஞ்ச மஞ்சி மறுகி விண்ணோர் பணியக் கருணை தரும்பரன் தில்லையன் னாள்திறத்துத் துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன் அணியக் கருதுகின் றார்பலர் மேன்மே லயலவரே. 195 படைத்து மொழி கிளவியிற் பணிமொழிப் பாங்கி அடற்கதிர் வேலோற் கறிய வுரைத்தது.
2. மகட்பேச்சுரைத்தல்
3. பொன்னணிவுரைத்தல் பாப்பணி யோன்தில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற் காப்பணிந்தார்பொன் னணிவா ரினிக்கமழ் பூந்துறைவ கோப்பணிவான் றோய்கொடி முன்றில் நின்றிவை ஏர்குழுமி மாப்பணி லங்கள் முழுங்கத் தழங்கும் மணமுரசே. 196 பலபரி சினாலும் மலர்நெடுங் கண்ணியை நன்னுதற் பாங்கி பொன்னணிவ ரென்றது.
4. அருவிலையுரைத்தல் எலும்பா லணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர் நலம்பா வியமுற்றும் நல்கினுங் கல்வரை நாடரம்ம சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார் கலம்பா வியமுலை யின்விலை யென்நீ கருதுவதே. 197 பேதைய ரறிவு பேதைமை யுடைத்தென ஆதரத் தோழி அருவிலை யுரைத்தது.
5. அருமைகேட்டழிதல் விசும்புற்ற திங்கட் கழும்மழப் போன்றினி விம்மி விம்மி அசும்புற்ற கண்ணோட டலறாய் கிடந்தரன் தில்லையன்னாள் குயம்புற் றரவிடை கூரெயிற் றுாறல் குழல் மொழியின் நயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. 198 பெருமைநாட் டத்தவள், அருமைகேட் டழிந்தது. v
4ے ܫ ss' - ܥܐ

TSLSS SESLS S L S LS S L N 6. தளர்வறிந்துரைத்தல் மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங் கைதையங்காணலைநோக்கிக்கண்ணிர்கொண்டெங்கண்டர்தில்லைப் பொய்தயங்குந்நுண் மருங்குல்நல் லாரையெல்லாம்புல்லினாள் பைதயங் கும்மர வம்புரை யம்மல்குற் பைந்தொடியே. 199 தண்டுறைவன் தறர்வறிந்து கொண்டுநீங்கெனக் குறித்துரைத்தது.
7. குறிப்புரைத்தது. மாவைவந்தாண்டமென்மோக்கிதன் பங்கர்வண்தில்லைமல்லற் கோவைவந் தாண்டசெவ்வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன் பூவைதந்தாள்பொன்னம் பந்துதந்தாளென்னைப்புல்லிக் கொண்டு பாவைதந்தாள் பைங் கிளியளித்தாளின்றென்பைந்தொடியே. 200 நறைக்குழலி, குறிப்புரைத்தது.
8. அருமையுரைத்தல் மெல்லியல் கொங்கைபெரியமின் நேரிடை மெல்லடிபூக் கல்லியல் வெம்மைக் கடங்கடுந் தீக்கற்றுகானமெல்லாஞ் சொல்லிய சீர்ச்சுடர்த்திங்களங்கண்ணித்தொல் லோன்புலியூர் அல்லியங் கோதைநல் லாயெல்லை சேய்த்தெம் அகல்நகரே. 201 கானின் கடுமையும் மானியம் மென்மையும் பதியின் சேட்சியும் இதுவென வுரைத்தது.
9. ஆதரங்கூறல் பிணையுங் கலையும்வன் பேய்த்தேரினைப்பெரு நீர்நசையால் அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் ஐயமெய்யே இணையும் அளவுமில் லாஇறை யோனுறை தில்லைத்தண்பூம் பணையுந் தடமுமன் றேநின்னொ டேகினெம் பைந்தொடிக்கே. 202 அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும் நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது.
ha- 87) 1.

Page 49
r 10. இறந்துபாடுரைத்தல் ད། இங்கயலென்னி பணிக்கின்ற தேந்தல் இணைப்பதில்லாக் கங்கையஞ் செஞ்சடைக் கண்ணுத லண்ணல் கடிகொள் தில்லைப் பங்கயப் பாசடைப் பாய் தடம் நீயப் படர்தடத்துச் செங்கய லன்றே கருங்கயற் கண்ணித் திருநுதலே. 203 கார்த் தடமுங் கயலும் போன்றீர் வர்த்தட முலைய மன்னனு மென்றது.
11. கற்புநலனுரைத்தல் தாயிற் சிறந்தன்று நாண்தைய லாருக்கந்தாண்தகைசால் வேயிற் சிறந்தமென் றோளிதிண் கற்பின் விழுமிதன்றீங் கோயிற் சிறந்துசிற் றம்பலத் தாடும்எங் கூத்தப்பிரான் வாயிற் சிறந்த மதியிற் சிறந்த மதிநுதலே. 204 மொய்யொத்தவிடை போக்குத்துணிய வையத்திடை வழக்கரைத்தது.
12. துணிந்தமைகsறல் குறப்பாவை நின்குழல் வேங்கையம் போதொடு கோங்கம்விராய நறப்பா டலம்புனை வார்நினை வார்தம்பிரான் புலியூர் மறப்பான் அடுப்பதொர் தீவினை வந்திடிற் சென்றுசென்று பிறப்பான் அடுப்பினும் பின்னுந்துன் ணத்தகும் பெற்றியரே. 205 பொருகுவே லண்ணல் போக்குத் துணிந்தமை செருவேற் கண்ணிக்குச் சென்று செப்பியது.
13. துணிவொடுவினாவல் நிழற்றலை தீநெறி நீரில்லை கானகம் ஒரிகத்தும் அழற்றலை வெம்பரற் றென்பரென் னேதில்லை யம்பலத்தான் கழற்றலை வைத்துக்கைப் போதுகள் கூப்பக்கல் லாதவர்போற் குழற்றலைச் சொல்லிசெல்லக்குறிப் பாகும்நங் கொற்றவர்க்கே. 106 சிலம்பன் றுணிவொடு செல்சுரம் நினைந்து கலம்புனை கொம்பர் கலக்க முற்றது.
الص ss ܥܠ

N
14. போக்கறிவித்தல் காயமும் ஆவியும் நீங்கள்சிற் றம்பல வன்கயிலச் சீயமும் மாவும் வெரீ இவர லென்பல் செறிதிரைநீர்த் தேயமும் யாவும் பெறினுங் கொடார் நமர் இன்னசெப்பில் தோயமும் நாடுமில் லாச்சுரம் போக்குத் துணிவித்தவே, 207 பொருசுடர் வேலவன் போக்குத் துணிந்தமை அரிவைக் கவள் அறிய வுரைத்தது.
15. நாணிழந்து வருந்தல் மற்பாய் விடையோன் மகிழ்புலியூரென்னொடும்வளர்ந்த பொற்பார் திருநாண் பொருப்பர் விருப்புப் புகுந்துநூந்தக் கற்பார் கடுங்கால் கலக்கிப் பறித்தெறி யக்கழிக இற்பாற் பிறவற்க ஏழையர் வாழி எழுமையுமே. 2O8 கற்பு நாணினு முற்சிறந் தமையிற் சேண் நெறி செல்ல வாணுதல் துணிந்தது.
16. துணிவெடுத்துரைத்தல் கற்பஞ் சிவந்த கலந்தரன் ஆகம் கறுத்ததில்லை நம்பன் சிவநகர் நற்றளிர் கற்சுர மாகுநம்பா அம்பஞ்சி ஆவம் புகமிக நீண்டரி சிந்துகண்ணாள் செம்பஞ்சி யின்மிதிக் கிற்பதைக் கும்மலர்ச் சீறடிக்கே. 209 செல்வ மாதர் செல்லத் துணிந்தமை தொல்வரை நாடற்குத் தோழிசொல் லியது.
17. குறியிடங்கsறல் முன்னோன் மணிகண்ட மொத்தவன் அம்பலந் தம்முடிதாழ்த் துன்னா தவர்வினை போற்பரந் தோங்கும் எனதுயிரே அன்னாள் அரும்பெற லாவியன் னாய்அருளாசையினாற் பொன்னார் மணிமகிழ்ப் பூவிழ யாம்விழை பொங்கிருளே. 210 மன்னிய இருளில் துன்னிய குறியிற்
கோங்கிவர் கொங்கையை நீங்குகொண்ட டென்றது.
4ے )89 ܥܠܐ

Page 50
18. அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல் பணிச்சந் திரனொடு பாய்புனல் சூடும் பரன்புலியூர் அனிச்சந் திகழுமஞ் சீறடி யாவ அழல்பழுத்த கனிச்செந்திரளன்ன கற்கடம் போந்து கடக்குமென்றால் இனிச்சந்த மேகலையாட்கொன்கொ லாம்புகுந் தெய்துவதே, 21 நெறியுறு குழலியொடு நீங்கத் துணிந்த
உறுசுடர் வேலோன் உள்ளம் வாடியது.
19. கொண்டுசென்றுய்த்தல் வைவந்த வேலவர் சூழ்வரத் தேர்வரும் வள்ளலுள்ளந் தெய்வந் தருமிருள் தூங்கு முழுதுஞ் செழுமிடற்றின் மைவந்ல கோன்தில்லை வாழ்த்தார் மனத்தின் வழுத்தநர்போல் மொய்வந்த வாவி தெளியுந் துயிலுமிம் மூதெயிலே. 212 வண்டமர் குழலியைக், கண்டுகொள் கென்றது.
20. ஒம்படுத்துரைத்தல் பறந்திருந் தும்பர் பதைப்பப் படரும் புரங்கரட்பச் சிறத்தெரியாடிதென்தில்லையன்னாள்திறத்துச்சிலம்பா அறந்திருந் துன்னருளும்பிறி தாயின் அருமறையின் திறந்திரிந்தார்கலி யும்முற்றும் வற்றுமிச் சேணிலத்தே. 213 தேம்படு கோதையை, யோம்ப டுத்தது.
21. வழிப்படுத்துரைத்தல் ஈண்டொல்லை ஆயமும் ஒளவையும் நீங்கஇவ்வூர்க்கவ்வைதீர்த் தாண்டொல்லை கண்டிடக்கூடுக நும்மைஎம்மைப்பிடித்திண் தீர்த் றாண்டெல்லை தீர்இன்பந் தந்தவன் சிற்றம்பலம்நிலவு சேண்டில்லை நாநகர் வாய்ச்சென்று சேர்க திருத்தகவே. 214 மதிநுதலியை வழிப்படுத்துப் பதிவயிற் பெயரும் பாங்கிபகர்ந்தது.
لے )90 -ܥܠ

22. மெல்லக்கொண்டேகல் பேணத் திருத்திய சீறடி மெல்லச்செல் பேரரவம் பூணத் திருத்திய பொங்கொளி யோன்புலி யூர்புரையும் மாணத் திருத்திய வான்பதி சேரும் இருமருங்குங் காணத் திருத்திய போலும்மூன் னாமன்னு கானங்களே. 215 பஞ்சிமெல்லடிப் பணைத்தோளியை வெஞ்சுரத்திடை மெலிவகற்றியது.
23. அடலெடுத்துரைத்தல் கொடித்தேர் மறவர் குழாம்வெங் கரிநிரை கூடினென்கை வடிதே ரிலங்கெ.,கின் வாய்க்குத வாமன்னுமம்பலத்தோன் அடித்தேரலரென்ன அஞ்சுவன் நின்ஜய ரென்னின்மன்னுங் கடித்தேர் குழன்மங்கை கண்டிடிவ் விண்தோய் கணவரையே. 216 வரிசிலையவர் வருகுவரெனெப் புரிதரு குழலிக் கருளவனுரைத்தது.
24. அயர்வகற்றல் முன்னோ னருள்முன்னும் உன்னா வினையின் முனகர்துன்னும் இன்னாக் கடறிதிப் போழ்தே கடந்தின்று காண்டுஞ்சென்று பொன்னாரணிமணி மாளிகைத் தென்புலியூர்ப்புகழ்வார் தென்னா வெனஉடை யான்நட மாடுசிற் றம்பலமே. 217 இன்னல் வெங்கடத் தெறி வேலவன் அன்ன மன்னவள் அயர்வகற் றியது.
25. நெறிவிலக்கிக் கூறல் விடலையுற்றாரில்லை வெம்முனை வேடர் தமியைமென்பூ மடலையுற் றார்குழல் வாடினள் மன்னுசிற் றம்பலவர்க் கடலையுற் றாரின் எறிப்பொழிந்தாங்கருக் கன்சுருக்கிக் கடலையுற் றான்கடப் பாரில்லை இன்றிக் கடுஞ்சுரமே. 218 சுரத்திடைக் கண்டவர் சுடர்க்குழை மாதொடு சரத்தணி வில்லோய் தங்கு கென்றது.
لم )91 -ܥܐ

Page 51
அன்பனைத் தஞ்சொல்லி பின்செல்லும் ஆடவன் நீடவன்றன்
26. கண்டவர் மகிழ்தல் ད།
பின்பணைத் தோளி வருமிப் பெருசுரஞ் செல்வதன்று பொன்பணைத் தன்ன இறையுரை தில்லைப் பொலிமலர்மேல் நன்பணைத் தண்ணற வுண் அளி போன்றொளிர் நாடகமே. 219 மண்டழற் கடத்துக், கண்டவ ருரைத்தது.
27. 6) I 6óî6O) SITULI TL6ö கண்கடம் மாற்பயன் கொண்டனங் கண்டினிக் காரிகைநின் பண்கட மென்மொழி ஆரப் பருக வருகஇன்னே விண்கட நாயகன் தில்லையின் மெல்லியல் பங்கனெங்கோன் தண்கடம் பைத்தடம் போற்கடுங் காணகந் தண்ணெனவே. 220 வன்தழற் கடத்து வடிவே லண்ணல் மின்றங் கிடையொடு விளையா டியது.
28. நகரணிமை கூறல் மின்றங் கிடையொடு நீவியன் தில்லைச்சிற் றம்பலவர் குன்றங் கடந்துசென் றால்நின்று தோன்றுங் குருஉக்கமலந் துன்றங் கிடங்குந் துறைதுறை வள்ளைவெள்ளைநகையார் சென்றங் கடைதட மும்புடை சூழ்தரு சேண்நகரே. 221 வண்டமர் குழலியொடு, கண்டவ ருரைத்தது.
29. நகர்காட்டல் மின்போல் கொடிநெடு வானக் கடலுள் திரைவிரிப்பப் பொன்போல் புரிசை வடவரை காட்டப் பொலிபுலியூர் மன்போற் பிறையணி மாளிகை சூலத்த வாய்மடவாய் நின்போல் நடையன்னந் நுன்னிமுன் தோன்றும்நன் னீணகரே. 222 கொடுங்கடங் கடந்த குழைமுக மாதர்க்குத் தடங்கி டங்குசூழ் தன்னகர் காட்டியது.
ص 92 ܥܠ

N
30. பதிபரிசுரைத்தல் செய்குன் றுவைஇவை சீர்மலர் வாவி விசும்பியங்கி நைகின்ற திங்களெய்ப்பாறும் பொழிலவை ஞாங்கரெங்கும் பொய்குன்ற வேதிய ரோதிடம் உந்திடம் இந்திடமும் எய்குன்ற வார்சிலை யம்பல வற்கிடம் ஏந்திழையே. 223 கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து பண்ணிவர் மொழிக்குப் பதிபரி சுரைத்தது.
31. செவிலி தேடல் மயிலெனப் பேர்ந்திள வல்லியி னொல்கிமென் மான்விழித்துக் குயிலெனப் பேசுமெங் குட்டன்எங் குற்றதென் னெஞ்சகத்தே பயிலெனப் பேர்ந்தறி யாதவன் தில்லைப்பல் பூங்குழலாய் அயிலெனப் பேருங்கண் ணாயென் கொலாமின் றயர்கின்றதே. 224 கவலை யுற்ற காதற் றோழியைச் செவிலி யுற்றுத் தெரிந்து வினாயது.
32. அறத்தொடுநிற்றல் ஆளரிக் கும்மரி தாய்த்தில்லை யாவருக் கும்மெளிதாந் தாளர்இக் குன்றில்தன் பாவைக்கு மேவித் தழல்திகழ்வேற் கோளரிக் குந்நிக ரன்னா ரொருவர் குரூஉமலர்த்தார் வாளரிக் கண்ணிகொண் டாள்வண்ட லாயத்தெம் வாணுதலே. 225 சுடர்க்குழைப் பாங்கி படைத்து மொழி கிளவியிற் சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.
33. கற்புநிலைக்கிரங்கல் வடுத்தான் வகிர்மலர் கண்ணிக்குத் தக்கின்று தக்கன்முத்தீக் கெடுத்தான் கெடலில்தொல்லோன்தில்லைப்பன்மலர் கேழ்கிளர மடுத்தான் குடைந்தன் றழுங்க அழுங்கித் தழிஇமகிழ்வுற் றெடுத்தாற் கினியன வேயினி யாவன எம்மனைக்கே. 226 விற்புரை நுதலி கற்புநிலை கேட்டுக் கோடா யுள்ள நீடா யழுங்கியது.
لم )93 ܥܠ

Page 52
34. கவன்றுரைத்தல் N
முறுவல்அக் கால்தந்து வந்தென் முலைமுழு வித்தழுவிச் சிறுவலக் காரங்கள் செய்தவெல் லாம் முழுதுஞ்சிதையத் தெறுவலக் காலனைச் செற்றவன் சிற்றம் பலஞ்சிந்தியார் உறுவலக் காணகந் தான்படர் வானா மொழியிழையே. 227 அவள்நிலை நினைந்து, செவிலி கவன்றது.
35. அடிநினைந்திரங்கல் தாமே தமக்கொப்பு மற்றில் லவர்தில்லைத் தண்ணனிச்சப் பூமேல் மிதிக்கிற் பதைத்தடி பொங்கும்நங் காய்எரியுந் தீமேல் அயில்போற் செறிபரற் கானிற சிலம்படிபாய் ஆமே நடக்க அருவினை யேற்பெற்ற அம்மனைக்கே. 228 வெஞ்சுர மும்மவள் பஞ்சிமெல் லடியுஞ் செவிலி நினைத்து கவலை யுற்றது.
36. நற்றாய்க்குரைத்தல் தழுவினை கையிறை சோரின் தமியமென் றேதளர்வுற் றழுவினை செய்யுநை யாவஞ்சொற் பேதை யறிவுவிண்ணோர் குழுவினை உய்யநஞ்சுண்டம் பலத்துக் குனிக்கும்பிரான் செழுவின தாள்பணி யார்பிணி யாலுற்றுத் தேய்வித்ததே. 229 முகிழ்முலை மடந்தைக்கு முன்னிய தறியத் திகழ்மனைக் கிழத்திக்குக் செவிலி செப்பியது.
37. நற்றாய்வருந்தல் யாழியன் மென்மொழி வன்மனம் பேதையொரேதிலன்பின் தோழியைநீத்தென்னை முன்னே துறந்துதுன்னார்கண்முன்னே வாழியிம் மூதூர் மறுகச்சென் றாளன்று மால்வணங்க ஆழிதந் தானம் பலம்பணி யாரின் அருஞ்சுரமே. 230
கோடாய் கூற, நீடாய் வாடியது.
ص 94 ܥܠ

38. கிளிமொழிக்கிரங்கல் N கொன்னுனை வேல்அம்பலவற்றொழாரிற்குன்றங்கொடியோள் என்னணஞ் சென்றன ளென்னணஞ் சேரு மென அயரா என்னனை போயினள் யாண்டைய ளென்னைப் பருந்தடுமென் றென்னனை போக்கன்றிக் கிள்ளையென் னுள்ளத்தையிர்கின்றதே 231 மெய்த்தகை மாது வெஞ்சுரஞ் செல்லத் தத்தையை நோக்கித் தாய்புலம் பியது.
39. சுடரோடிரத்தல் பெற்றே னொடுங்கிள்ளை வாட முதுக்குறை பெற்றமிக்கு நற்றேன் மொழியழற் கான்நடந் தாள்முகம் நானணுகப் பெற்றேன் பிறவி பெறாமற்செய் தோன்தில்லைத் தேன்பிறங்கு மற்றேன் மலரின் மலர்த்திரந் தேன் சுடர் வானவனே. 232 வெஞ்சுரந் தணிக்கெனச் செஞ்சுட ரவற்கு வேயமர் தோளி தாயார் பராயது.
40. பருவநினைந்துகவறல் வைம்மலர் வாட்படை யூரற்குச் செய்யுங்குற்றேவல் மற்றென் மைம்மலர் வாட்கண்ணி வல்லள்கொல் லாந்தில்லையான்மலைவாய் மொய்ம்மலர்க் காந்தளைப் பாந்தளென் றெண்ணித்துண் ணென்றொளித்துக் கைம்மல ராற்கண் புதைத்துப் பதைக்குமெங் கார்மயிலே. 233 முற்றா முலைக்கு, நற்றாய் கவன்றது.
41. நாடத்துணிதல் வேயின தோளி மெலியல்விண்ணோர்த்தக்கன் வேள்வியின்வாய்ப் பாயின சீர்த்தியன் அம்பலத் தானைப் பழித்துமும்மைத் தீயின தாற்றல் சிரங்கண் ணிழிந்து திசைதிசைதாம் போயின எல்லையெல்லாம்புக்கு நாடுவன் பொன்னினையே. 234 கோடாய் மடந்தையை, நாடத் துணிந்தது.

Page 53
42. கொடிக்குறி பார்த்தல் N
பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் தில்லையன்ன மனங்கொளஞ் சாயலும் மன்னனும் இன்னே வரக்கரைந்தால் உணங்கலஞ் சாதுண்ண லாமொள் நிணப்பலியோக்குவல்மாக் குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே. 235 நன்றாய் நயந்து, சொற்புட் பராயது.
43. சோதிடங் கேட்டல் முன்னுங் கடுவிட முண்டதென் தில்லைமுன் னோனருளால் இன்னுங் கடியிக் கடிமனைக் கேமற் றியாமயர மன்னுங் கடிமலர்க் கூந்தலைத்தான்பெறுமாறுமுண்டேல் உன்னுங்கள் தீதின்றி யோதுங்கள் நான்மறை யுத்தமரே. 236 சித்தந் தளர்ந்து தேடுங் கோடாய் உய்த்துணர் வோரை உரைமி னென்றது.
44. சுவடு கண்டறிதல் தெள்வன் புனற்சென்னி யோன் அம்பலஞ்சிந்தி யாரினஞ்சேர் முள்வன் பரல்முரம் பத்தின்முன் செய்வினை யேனெடுத்த ஒள்வன் படைக்கண்ணி சீறடி யிங்கிவை யுங்குவையக் கள்வன் பகட்டுர வோனடி யென்று கருதுவனே. 237 சுவடுபடு கடத்து, செவிலிகண்டறிந்தது.
45. சுவடுகண்டிரங்கல் பாலொத்த நீற்றம் பலவன் கழல்பணி யார்பிணிவாய்க் கோலத் தவிசின் மிதிக்கிற் பதைத்தடி கொப்புன் கொள்ளும் வேலொத்த வெம்பரற்கானத்தின்றின்றொடர்விடலைபின்போங் காலொத் தனவினை யேன்பெற்ற மாணிழை கால்மலரே. 238 கடத்திடைக் காரிகை அடித்தலங்கண்டு மன்னருட் கோடா யின்னலெய் தியது.
ل[2] ܠܐ

0LS AJJEL SSS SSS N 46. வேட்டமாதரைக் கேட்டல் பேதைப் பருவம் பின்சென் றதுமுன்றி லெனைப்பிரிந்தால் ஊதைக் கலமரும் வல்லியொப் பாள்முத்தன் தில்லையன்னாள் ஏதிற் சுரத்தய லானொடின் றேகினள் கண்டனையே போதிற் பொலியுந் தொழிற்புலிப் பற்குரற் பொற்கொடியே. 239 மென்மலர் கொய்யும் வேட்ட மாதரைப்
பின்வரும் செவிலி பெற்றி வினாயது.
47. புறவொடுபுலத்தல் புயலன் றலர்சடை ஏற்றவன் தில்லைப் பொருப்பரசி பயலன் றனைப்பணி யாதவர் போல்மிகு பாவஞ்செய்தேன் கயலன் தமியன் அஞ்சொற்றுணை வெஞ்சுரம் மாதர்சென்றால் இயலன் றெனக்கிற் றிலைமற்று வாழி எழிற்புறவே. 240 காட்டுப் புறவொடு, வாட்ட முரைத்தது.
48. குரவொடு வருந்தல் பாயும் விடையோன் புலியூரணையவென் பாவைமுன்னே காயுங் கடத்திடை யாடிக் கடப்பவுங் கண்டுநின்று வாயுந் திறவாய் குழையெழில் வீசவண் டோலுறுத்த நீபும்நின் பாவைபும் நின்று நிலாவிடும் நீள்குரவே. 241 தேடிச் சென்ற செவிலித் தாயர் ஆடற் குரவொடு வாடி யுரைத்தது.
49. விரதியரை வினாவல் சுத்திய பொக்கணத் தென்பணி கட்டங்கஞ் சூழ்சடைவெண் பொத்திய கோலத்தி னிர்புலி யூரம் பலவர்க்குற்ற பத்தியர் போலப் பணைத்திறு மாந்த பயோதரத்தோர் பித்திதற் பின்வர முன்வரு மோவொர் பெருந்தகையே. 242 வழிவரு கின்ற மாவிர தியரை மொழிமின்க ளென்று முன்னி மொழிந்தது.
ہے۔ 97 - ܥܐ

Page 54
戸ー N
50. வேதியரை வினாவல் வெதிரேய்கரத்துமென் தோலேய் சுவல்வெள்ளை நூலிற்கொண்மூ அதிரேய் மறையினிவ்வாறுசெல் வீர்தில்லை அம்பலத்துக் கதிரேய் சடையோன் கரமான் எனவொரு மான்மயில்போல் எதிரே வருமே சுரமே வெறுப்பவொ ரேந்தலொடே. 243 மாதின்பின் வருஞ்செவிலி வேதியரை விரும்பிவினாவியது.
51. புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல் மீண்டா ரெனஉவந் தேன்கண்டு நும்மையிம் மேதகவே பூண்டா ரிரூவர்முன் போயின ரேபுலி யூரெணைநின் றாண்டான் அருவரை அளியன் னானைகண் டேனயலே தூண்டா விளக்கனை யாயென்னை யோஅன்னை சொல்லியதே. 244 புணர்ந்துடன் வரும் புரவலனொருபால் அணங்கமர் கோதையை யாராய்ந்தது.
52. வியந்துரைத்தல் பூங்கயி லாயப் பொருப்பன் திருப்புலி யூரதென்னத் தீங்கை இலாச்சிறியாள்நின்ற திவ்வியஞ் சென்றெதிர்ந்த வேங்கையின் வாயின் வியன்கைம் மடுத்துக் கிடந்தலற அங்கயி லாற்பணி கொண்டது திண்டிற லாண்டகையே. 245 வேங்கை பட்டதும் பூங்கொடி நிலையம் நாடா வருங் கோடாய் கூறியது.
53. இயைபெடுத்துரைத்தல் மின்றெத் திடுகழல் நூபுரம் வெள்ளைசெம் பட்டுமின்ன ஒன்றெத்திடவுடையாளொடொன்றாம்புலியூரனென்றே நன்றொத்தெழிலைத்தொழவுற்றனமென்னதோர்நன்மைதான் குன்றத் திடைக்கண் டனமன்னை நீசொன்ன கொள்கையரே. 246 சேயிழை யோடு செம்மல் போதர ஆயிழை பங்கனென் றயிர்த்தே மென்றது.
d- ] 98 [ ܥܠ

54. மீளவுரைத்தல்
மீள்வது செல்வதன் றன்னையில் வெங்கடத்தக்கடமாக் கீள்வது செய்த கிழவோ னொடுங்கிளர் கெண்டையன்ன நீள்வது செய்தகண் ணாளிந் நெடுஞ்சுரம் நீந்தியெம்மை ஆள்வது செய்தவன் தில்லையினெல்லை யணுகுவரே. 247 கடுங்கடங் கடந்தமை கைத்தாய்க் குரைத்து நடுங்கன்மின் மீண்டும் நடமி டென்றது.
55. உலகியல்புரைத்தல் சுரும்பிவர் சந்துந் தொடுகடல் முத்தும்வெண் சங்குமெங்கும் விரும்பினர் பாற்சென்று மெய்க்கணியாம்வியன் கங்கையென்னும் பெரும்புனல் சூடும் பிரான்சிவன் சிற்றம் பலமனைய கரும்பன மென்மொழி யாருமந் நீர்மையர் காணுநர்க்கே. 248 செவிலியது கவலை தீர மன்னிய உலகியன் முன்னியுரைத்தது.
56. அழுங்குதரய்க்குரைத்தல் ஆண்டி லெடுத்தவ ராமிவர் தாமவரல்குவர் போய்த் தீண்டிலெடுத்தவர் தீவினை தீர்ப்பவன் தில்லையின்வாய்த் தூண்டி லெடுத்தவ ரால்தெங்கொ டெற்றப் பழம்விழுந்து பாண்டி லெடுத்தபறாமரை கீழும் பழனங்களே. 249 செழும்பணை யணைந்தமை அழுங்குதாய்க் குரைத்தது.
17. வரைவு முருக்கம்
1. வருத்தமிகுதி கூறிவரைவுகடாதல் எழுங்குலை வாழையின் இன்கனிதின்றிளமந்தியந்தண செழுக்குலை வாழை நிழலில் துயில்சிலம் பாமுனைமேல் உழுங்கொலை வேல்திருச் சிற்றம் பலவரை உன்னலர்போல் அழுங்குலை வேலன்ன கண்ணிக்கென் னோநின்னருள்வகையே. 250 இரவுக் குறியிடத் தேந்திழைப் பாங்கி வரைவு வேண்டுதல் வரவு ரைத்தது.
لا. [ وو ]

Page 55
7
2. பெரும்பான்மைகூறி மறுத்தல் பரம்பயன் தன்னடி யேனுக்குப் பார்விசும் பூடுருவி வரம்பயன் மாலறி யாத்தில்லை வானவன் வானகஞ்சேர் அரம்பையர் தம்மிட மோ அன்றி வேழத்தி னென்புநட்ட குரம்பையர் தம்மிட மோஇடந் தோன்றுமிக் குன்றிடத்தே. 251 குலம்புரி கொம்பர்க்குச், சிலம்பன் செப்பியது.
3. உள்ளதுகூறி வரைவுகடாதல் சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருத்த தேனிழுமென் றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடில் உந்து மிடமிதெந்தை உறாவரை யுற்றார் குறவர்பெற்றாளுங் கொடிச்சிஉம்பர் பெறாவரு ளம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. 252 இன்மை யுரைத்த மன்ன னுக்கு மாழை நோக்கி தோழி யுரைத்தது.
4. ஏதங்கூறி யிரவரவுவிலக்கல் கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல் இடந்தொறும் பார்க்கும் இயவொரு நீயெழில் வேலின்வந்தால் படந்தொறுந் தீஅர வன்னம் பலம்பணி யாரினெம்மைத் தொடர்ந்தொறுந்துன்பென்பதே அன்ப நின்னருள் தோன்றுவதே. 253 இரவரூ துயரம் ஏந்துலுக் கெண்ணிப் பருவர லெய்திப் பாங்கி பகர்ந்தது.
5. பழிவரவுரைத்துப் பகல்வரவுவிலக்கல் களிறுற்ற செல்லல் களைவயிற் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப் பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ டொளிறுற்ற மேனியன் சிற்றம் பலம்நெஞ்சுறாதவர்போல் வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீ செய்யும் மெய்யருளே. 254 ஆங்ங்ணம் ஒழுகும் அடல்வே லண்ணலைப் பாங்கி ஐய பகல்வர லென்றது.
لـ 100 -ܥܐ

6. தொழுதிரந்து கூறல் ר கழிகட்டலைமலை வோன்புலியூர்கரு தாதவர்போல் குழிகட் களிறு வெரீஇ அரி யாளி குழிஇவழங்காக் கழிகட் டிரவின் வரல்கழல் கைதொழு தேயிரந்தேன் பொழிகட் புயலின் மயிலில் துவளு மிவள் பொருட்டே. 255 இரவரவின் ஏதமஞ்சிச் சுரிதருகுழற் றோழிசொல்லியது.
7. தாயறிவு கூறல் விண்ணுஞ் செலவறி யாவெறி யார்கழல் வீழ்சடைத்தீ வண்ணன் சிவன் தில்லை மல்லெழிற் கானல் அரையிரவில் அண்ணல் மணிநெடுந் தேர்வந்த துண்டா மெனச்சிறிது கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும் நோக்கினள் கார்மயிலே. 256 சிறைப்பு றத்துச் செம்மல் கேட்ப வெறிக்குழற் பாங்கி மெல்லியற் குரைத்தது.
8. மந்திமேல்வைத்து வரைவுகடாதல் வான்றோய் பொழிலெழின் மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்டாள்திரு நீள் முடிமேல் மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை யாளையும் மேனி வைத்தான் வான்றோய் மதில்தில்லை மாநகர் போலும் வரிவளையே. 257 வரிவளையை வரைவுகடாவி அரிவைதோழி உரைபகர்ந்தது.
9. காவன் மேல்வைத்துக்கண்டுயிலாமை கூறல் நறைக்கண் மலிக்கொன்றையோன்நின்றுநாடக மாடுதில்லைச் சிறைக்கண் மலிபுனற் சீர்நகர் காக்குஞ்செவ்வேலிளைஞர் பறைக்கண் படும்படுந் தோறும் படாமுலைப் பைந்தொடியாள் கறைக்கண் மலிகதிர் வேற்கண் படாது கலங்கினளே. 258 நகர்காவலின், மிகுகழிகாதல்,
لص )101 ܥܠ

Page 56
10. பகலுடம்பட்டாள்போன்றிரவரவு விலக்கல் கலரா யினர்நினை யாத்தில்லை அமபலத் தான்கழற்கன் பிலரா யினர்வினை போலிருள் தூங்கி முபங்கிமின்னிப் புலரா இரவும் மொழியா மழையும்புண் ணில்நுழைவேல் மலரா வரும்மருந்தும்மில்லை யோநும் வரையிடத்தே. 259 விரைதரு தாரோய், இரவர லென்றது.
11. இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலகல் இறவரை உம்பர்க் கடவுட் கராய்நின் றெழிலியுன்னிக் குறவரை ஆர்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள நிறவரை மேனியன் சிற்றம் பலம்நெஞ் சுறாதவர்போல் உறவரை மேகலை யாட்கல ராம்பக லுன்னருளே. 260 இகலடு வேலோய், பகல்வர லென்றது.
2. இரவும்பகலும் வரவு விலக்கம் சுழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத்தன்தொழும்பில் கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான் விழியா வரும்புரி மென்குழ லாள்திறத் தையமெய்யே பழியாம் பகல்வரில் நீயிர வேதும் பயனில்லையே. 261 இரவும் பகலும், வரவொழி கென்றது.
13. காலங் கூறி வரைவு கடாதல் மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன் எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா மெய்யா அரியதெனம்பலத் தான்மதியூர்கொள்வெற்றின் மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே, 262 முந்திய பொருளைச் சிந்தையில் வைத்து வரைதரு கிளவியில் தெரிய வுரைத்தது.
ل 102 ܥܐ

N
14. கூறுவிக்குற்றல் தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோவணங்க நாமா தரிக்க நடம்பயில் வோனை நண்ணாதவரின் வாமான் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல் கண்டால் தாமா அறிகில ராயினென் னாஞ்சொல்லுந் தன்மைகளே. 263 ஒத்த தொவ்வா துரைத்த தோழி கொத்தவிழ் கோதையாற் கூறுவிக் குற்றது.
15. செலவு நினைந்துரைத்தல் வல்சியி னெண்கு வளர்புற் றகழமல் கும்மிருள்வாய்ச் செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போற் கொல்கரி சீயங் குறுகா வகைபிடி தானிடைச்செல் கல்லத ரென்வந்த வாறென் பவர்ப்பெறிற் கார்மயிலே. 264 பாங்கி நெருங்கப் பணிமொழி மொழிந்து தேங்கமழ் சிலம்பற்குச் சிறைப்புறக் கிளவி.
16. பொலி வழிவுரைத்து வரைவுகடாதல் வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர் வேரிக் களிக்கம் விழுமலை நாட விரிதிரையின் நாரிக் களிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந் நீர்மையென் னெய்துவதே. 265 வரைவுவிரும்பு மன்னுயிர்ப்பாங்கி விரைதருகுழலி மெலிவுரைத்தது.
18. வரைபொருட்பிரிதல்
1. முலைவிலை கூறல் குறைவிற்குங்கல்விக்குஞ்செல்விற்கும் நின்குலத்திற்குவந்தோர் நிறைவிற்கும் வேதகு நீதிக்கும் ஏற்பின் அல் லால்நினையின் இறைவிற் குலாவரை யேந்திவண் தில்லையன் ஏழ்பொழிலும் உறைவிற்குலாநுத லாள்விலை யோமெய்ம்மை யோதுநகர்க்கே. 266 கொலை வேற் கண்ணிக்கு, விலையிலை யென்றது.
لص 103 ܠܐ

Page 57
r 2. வருமதுகsறி வரைவுடம்படுத்தல் N வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண் ணித்தில வாள்நகைக்குத் தொடுத்தன நீவித் தெய்தத் துணியென்னைத் தன்தொழும்பிற் படுத்தநன் நீள்கழ லீசர்சிற் றம்பலந் தாம்பணியார்க் கடுத்தன தாம்வரிற் பொல்லா திரவின்நின் னாரருளே. 267 தொடுத்தன விடுத்துத் தோகைதோளெய் திடுக்கண்பெரி திரவரினென்றது.
3. வரைபொருட்பிரிவையுரையெனக் கூறல் குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும் நிதிகொணர்ந்து மின்றங் கிடைநும் மையும்வந்து மேவுவன்அம்பலஞ்சேர் மன்றங் கிடைமரு தேகம்பம் வாஞ்சியம் அன்னபொன்னைச் சென்றங் கிடைகொண்டு வாடா வகைசெப்பு தேமொழியே. 268 ஆங்க வள்வயின் நீங்க லுற்றவன் இன்னுயிர்த் தோழிக்கு முன்னி மொழிந்தது.
4. நீயே கூறென்றல் கேழே வரையுமில் லோன்புலியூர்ப்பயில் கிள்ளையன்ன யாழேர் மொழியா எரிரவரி னும்பகற் சேறியென்று வாழே னெனவிரக் கும்வரிக் கண்ணியை நீவருட்டித் தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகு தனிவள்ளலே, 269 காய்கதிர்வேலோய் கணங்குழையவட்கு நீயேயுரை நின்செலவென்றது.
5. சொல்லாதேகல் வருட்டின் திகைக்கும் வசிக்கின் துளக்கின் துளங்கும் மனமகிழ்ந்து தெருட்டின் தெளியலஸ் செப்பும் வகையில்லை சீரருக்கண் குருட்டிற் புகச்செற்ற கோன்புலியூர்குறுகார்மனம்போன் றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங் னேசொல்லி யேகுவனே. 270 நிறைவளை வாட, உரையா தகன்றது.
لا 104 ܥܐ

6. பிரிந்தமை கூறல்
நல்லாய் நமக்குற்ற தென்னென்றுரைக்கேன் நமர்தொடுத்த வெல்லா நிதியு முடன்விடுப் பான்இமை யோரிறைஞ்சும் மல்லார் கழலழல் வண்ணர்வ்ண் தில்லை தொழார்களல்லாற் செல்லா அழற்கட மின்றுசென் றார்நம் சிறந்தவரே. 271 தேங்கமழ் குழலிக்குப், பாங்கி பகர்ந்தது.
7. நெஞ்சொடுகூறல் அருந்தும் விடமணியாம்மணி கண்டன்மற் றண்டர்க்கெல்லாம் மருந்து மமிர்தமுமாகுமுன்னேன்தில்லை வாழ்த்தும் வள்ளல் திருந்துங் கடன்நெறி செல்லுமிவ் வாறு சிதைக்கு மென்றால் வருந்தும் மடநெஞ்ச மேயென்ன யாமினி வாழ்வகையே. 272 கல்வரை நாடன் சொல்லா தகல
மின்னொளி மருங்குல் தன்னொளி தளர்ந்தது.
8. நெஞ்சொடுவருந்தவ் ஏர்ப்பின்னை தோள்முன் மணந்தவன் ஏத்த எழுல்திகழுஞ் சீர்ப்பொன்னை வென்றசெறிகழ லோன்தில்லைச் சூழ்பொழில்வாய்க் கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த மணலிற் கலந்தகன்றார் தேர்ப்பின்னைச் சென்றவென் நெஞ்சென் கொலாமின்றுசெய்கின்றதே. 273 வெற்பன் நீங்கப், பொற்பு வாடியது.
9. வருத்தங்கண்டரைத்தல் கானமர் குன்றர் செவியுற வாங்கு கணைதுணையா மானமர் நோக்கியர் கோக்கென மான்நல் தொடைமடக்கும் வானமர் வெற்பர்வண் தில்லையின் மன்னை வணங்கலர்போல் தேனமர் சொல்லிசெல் லார்செல்லல் செல்லல் திருநுதலே. 274 அழலுறுகோதையின் விழுமுறுபேதையை நீங்கலரொனப் பாங்கிபகர்ந்தது.
لم 105 -ܠ

Page 58
10. வழியொழுகிவற்புறுத்தல்
மதுமலர்ச் சோலையும் வாய்மையும் அன்பும் மருவிவெங்கான் கதுமெனப் போக்கும் நிதியின் அருக்குமுன் னிக்கலுழந்தால் நொதுமலர் நோக்கமொர் மூன்றுடையோன்தில்லை தோக்கலர் போல் இதுமலர்ப் பாவைக்கென் னோவந்த வாறென்ப ரேந்திழையே. 275 சூழிருங் கூந்தலைத், தோழி தெருட்டியது.
11. வன்புறையெதிரழிந்திரங்கல் வந்தாய் பவரையில் லாமயில் முட்டை இளையமந்தி பந்தா டிரும்பொழிற் பல்வரை நாடன்பண் போஇனிதே கொந்தார் நறுங்கொன்றைக் கூத்தன்தென் தில்லை தொழார் குழும்போற் சிந்தா குலமுற்றுப் பற்றின்றி நையுந் திருவினர்க்கே. 276 வன்கறை வேலோன் வரைவு நீட வன்புறை யழிந்தவள் மனமழுங் கியது.
R
12. வாய்மை கூறி வருத்தந் தணித்தல் மொயென்பதேஇழை கொண்டவன்ெனைத்தன் பொய்கழற்காட் செய்யென்பதே செய்தவள் தில்லைச் சூழ்கடற் சேர்ப்பர் சொல்லும் பொய்யென்ப தேகருத் தாயிற் புரிகுழற் பொற்றொடியாய் மெய்யென்ப தேதுமற் றில்லைகொ லாமிவ் வியலிடத்தே. 277 வேற்றடங் கண்ணியை, அற்று வித்தது.
13. தேறாதுபுலம்பல் மன்செய்த முன்னாள் மொழிவழியே அன்ன வாய்மைகண்டும் என்செய்த நெஞ்சும் நிறையும்நில் லாவென தின்னுயுரும் பொன்செய்த மேனியன் றில்லையுறாரிற் பொறையரிதாம் முன்செய்த தீங்குகொல் காலத்து நீர்மைகொல்மொய் குழலே. 278 தீதறுகண்ணி தேந்றத்தேறாது போதுறுகுழலி புலம்பியது.
ل 106 ܥܠ

r 14. காலமறைத்துரைத்தல் N
கருந்தினை யோம்பக் கடவுட் பராவி நமர்கலிப்பச் சொரிந்தன கொண்முச் சுரந்ததன் பேரருளால்தொழும்பிற் பரிந்தெனை யாண்டசிற்றம்பலத்தான்பரங்குன்றிற்றுன்றி விரிந்தன காந்தள் வெருவரல் காரென வெள்வளையே. 279 காந்தள் கருவுறக் கடவுண் மழைக்கென்
றேந்திழைப் பாங்கி இனிதியம் பியது.
15. தூதுவரவுரைத்தல் வென்றவர் முப்புரஞ்சிற்றம் பலத்துள்நின்றாடும்வெள்ளிக் குன்றவர் குன்றா அருள்தரக் கூடினர் நம்மகன்று சென்றவர் தூதுகொல் லோஇருந் தேமையுஞ் செல்லல்செப்பா நின்றவர் தூதுகொல் லோவந்து தோன்றும் நிரைவளையே. 280 ஆங்கொரு தூதுவரப், பாங்கி கண் டுரைத்து.
16. தூது கண்டழுங்கல் வருவன செல்வன தூதுகள் ஏதில வான்புலியூர் ஒருவன தன்பரின் இன்பக் கலவிகள் உள்ளுருகத் தருவன செய்தென தாவிகொண் டேகியென் நெஞ்சிற்றம்மை இருவின காதல ரேதுசெய் வானின் றிருக்கின்றதே.281 அயலுற்ற தூதுவரக், கயஜிற்றகண்ணி மயலுற்றது.
17. மெலிவுகண்டு செவிலி கூறல் வேயின மென்தோள் மெலிந்தொளி வாடி விழிபிறிதாய்ப் பாயின மேகலை பண்டையள் அல்லள் பவளச்செல்வி ஆயின ஈசன் இதரர்க் கமரன்சிற் றம்பலத்தான் சேயின தாட்சியிற் பட்டன ளாம்இத் திருந்திழையே. 282 வண்டமர் புரிகுழ லொண்டொடி மெலிய
வாடா நின்ற கோடாய் கூறியது.
لم۔ 107 ܠܐ

Page 59
18. கட்டுவைப்பித்தல் N கணங்குற்ற கொங்கைகள் சூதுற்றிலசொல் தெளிவுற்றில குணங்குற்றங் கொள்ளும் பருவமு றாள்குறு காவசுரர் நிணங்குற்ற வேற்சிவன் சிற்றம் பலநெஞ சுறாதவர்போல் அணங்குற்ற நோயறிவுற்றுரையாடுமின் அன்னையரே. 283 மால்கொண்ட கட்டுக், கால் கொண்டது.
19. கலக்கமுற்று நிற்றல் மாட்டியன் றேயெம் வயிற்பெரு நாணினி மாக்குடிமா சூட்டியன் றேநிற்ப தோடிய வாறிவ ஞள்ளமெல்லாங் காட்டியன் றேநின்ற தில்லைத்தொல் லோனைக்கல் கல்லாதவர்போல் வாட்டியன் றேர்குழ லார்மொழி யாதன வாய்திறந்தே. 284 தெய்வத்தில் தெரியுமென எவ்வத்தின் மெலிவுற்றது.
20. கட்டுவித்திகூறல் குயிலிதன் றேயென்ன லாஞ்சொல்லி கூறன்சிற் றம்பத்தான் இயலிதன் றேயென்ன லாகா இறைவிறற் சேய்கடவும் மயிலிதன் றேகொடி வாரணங் காண்கவன் சூர்தடிந்த அயலிதன் றேயிதன் றேநெல்லிற் றோன்று மவன்வடிவே, 285 கட்டு வித்தி, விட்டு ரைத்தது.
21. வேலனையழைத்தல் வேலன் புகுந்து வெறியா டுகவெண் மறியறுக்க காலன் புகுந்தவி யக்கழல் வைத்தெழில் தில்லைநின்ற மேலன் புகுந்தென்கண் நின்றா னிருந்தவெண் காடனைய பாலன் புகுந்திப் பரிசினின் நிற்பித்த பண்பினுக்கே. 286 வெறியாடிய வேலணைக்கூஉய்
தெறியார்குழலி தாயர்நன்றது.
- - ܠܐ

r 22. இன்னலெய்தல் N
அயர்ந்தும் வெறிமறி ஆவி செகுத்தும் விளர்ப்பயலார் பெயர்ந்தும் ஒழியா விடினென்னை பேசுவ பேர்ந்திருவர் உயர்ந்தும் பணிந்தும் உணரான தம்பலம் உன்னலரின் துயர்ந்தும் பிறிதி னொழியினென் அதுந் துறைவனுக்கே, 287 ஆடிய வெறியிற் கூடுவ தறியாது நன்னறுங் கோதை இன்ன லெய்தியது.
23. வெறிவிலங்குவிற்க நினைதல் சென்றார் திருந்திய செல்லல்நின்றார்கள் சிதைப்பரென்றார் நன்றா வழகிதன் றேயிறை தில்லை தொழாரின் நைந்தும் ஒன்றாமிவட்கு மொழிதல்கில்லேன்மொழியாதுமுய்யேன் குன்றார் துறைவர்க் குறுவேன் உரைப்பனிக் கூர்மறையே. 288 அயறரு வெறியின்மயறரு மென விலக்க லுற்ற குலக்கொடி நினைந்தது.
25. அறத்தொடு நிற்றலையுரைத்தல் யாயுந் தெறுக அயவல வேசுக ஊர்நதக நீயும்முனிக நிகழ்ந்தது கூறுவது லென்னுடைய வாயும் மனமும் பிரியா இறைதில்லை வாழ்த்துநர்போல் தூயன் நினக்குக் கடுஞ்சூள் தருவன் சுடர்க்குழையே. 289 வெறித்தலை வெரீஇ வெரூவரு தோழிக் கறத்தொடு நின்ற அயிழை யுரைத்தது.
25. அறத்தொடுநிற்றல் வண்டலுற்றேமெங்கண் வந்தொரு தோன்றல் வரிவளையீர் உண்டலுற்றேமென்று நின்றதொர் போழ்துடை யான்புலியூர்க் கொண்டலுற்றேறுங் கடல்வர எம்முயிர் கொண்டுதந்து கண்டலுற்றே நின்ற சேரிச்சென் றானொர் கழலவனே. 290 செய்த வெறியி னெய்துவ தறியாது நிறந்தொடித் தோழிக் கறத்தொடு நின்றது.
لے 109 ܥܐ

Page 60
r ' ' () is e N 26. ஐயந்திரக்கூறல் குடிக்கலர் கூறினுங் கூறா வியன்தில்லைக் கூத்தனதாள் முடிக்கல ராக்குமொய் பூந்தறை வற்கு முரிபுருவ வடிக்கலர் வேற்கண்ணி வந்தன சென்றுநம் யாயறியும் படிக்கல ராமிவை யென்நாம் மறைக்கம் பரிசுகளே. 291 விலங்குதல் விரும்பு மேதகு தோழி அலங்கற் குழலிக் கறிய வுரைத்தது.
27. வெறிவிலக்கல் விதியுடை யாருண்க வேரி விலக்கலம் அம்பலத்துப் பதியுடை யான்பரங் குன்றினிற் பாய்புனல் யாமொபகக் கதியுடை யான்கதிர் தோள்நிற்க வேறு கருதுநின்னின் மதியுடை யார்தெய்வ மேயில்லை கொல்இனி வையத்தே. 292 அறத்தொடுநின்ற திறந்தினிற்பாங்கி வெறிவிலக்கிப் பிறிதுரைத்தது.
28. செவிலிக்குத் தோழி யறக்தொடுநிற்றல் மனக்களி யாய்இன் றியான்மகிழ் தூங்கத்தன் வார்கழல்கள் எனக்களி யாய்நிற்கும் அம்பலத் தோன் இருந் தண்கயிலைச் சினக்களி யானை கடிந்தா ரொருவர் செவ் வாய்ப்பசிய புனக்கிளி யாங்கடி யும்வரைச் சாரற் பொருப்பிடத்தே. 293 சிறப்புடைச் செவிலிக் கறத்தொடு நின்றது.
29. நற்றாய்க்குச் செவிலியறத் தொடுநிற்றல் இளையா எளிவளையென் சொல்லிப் பரவுது மீரெயிறு முளையா அளவின் முதுக்குறைந் தாள்முடி சாய்த்திமையோர் வளையா வழுத்தா வருதிருச் சிற்றம் பலத்துமன்னன் திளையா வரும்அரு விக்கயி லைப்பயில் செல்வியையே. 294 கற்பினின் வழாமை நிற்பித் தெடுத்தோள் குலக்கொடி தாயர்க் கறத்தொடு நின்றது.
لـ 110 ܥܐ

30. தேர்வரவுகூறல் கள்ளினம் ஆர்த்துண்ணும் வன்கொன்றை யோன்தில்லைக் கார்க்கடல்வாய்ப் புள்ளின மார்ப்பப் பொருதிரை யார்ப்பப் புலவர்கடம் வள்ளின மார்ப்ப மதுகர மார்ப்ப வலம்புரியின் வெள்ளின மார்ப்ப வரும்பெருந் தேரின்று மெல்லியலே. 295 மணிநெடுந் தேரோன் அணிதினின் வருமென யாழியன் மொழிக்குத் தொழி சொல்லியது.
31. மனமுரசுகேட்டு மகிழ்ந்துரைத்தல் பூரண பொற்குடம் வைக்க மணிமுத்தம் பொன்பொதிந்த தோரணம் நீடுக தூரியம் ஆழ்க்கதொன் மாலயற்குங் காரணன் ஏரணி கண்ணுத லோன்கடல் தில்லையன்ன வாரண வும்முலை மன்றலென் றேங்கும் மணமுரசே. 296 நிலங்காவலர் நீண்மணத்தின் நலங்கண்டவர் நயந்துரைத்தது.
32. ஐயுற்றுக் கலங்கல் அடற்களி யாவர்க்கு மன்பர்க் களிப்பவன் துன்பவின்பம் படக்களி யாவண் டறைபொழிற் றில்லைப் பரமன் வெற்பிற் கடக்களி யானை கடிந்தவர்க் கோவன்றி நின்றவர்க்கோ விடக்களி யாம்நம் விழுநகரார்க்கும் வியன்முரசே, 297 நல்லவர்முரசுமற் றல்லவர்முரசெனத் தெரிவரிதென அரிவைகலங்கியது.
33. நிதிவரவு கூறாநிற்றல் என்கடைக் கண்ணினும் யான்பிற வேத்தா வகையிரங்கித் தன்கடைக் கண்வைத்த தண்தில்லைச் சங்கரன் தாழ்கயிலைக் கொன்கடைக்கண்தரும் யானை கடிந்தார் கொணர்ந்திறுத்தார் முன்கடைக் கண்ணிது காண்வந்து தோன்றும் முழுநிதியே. 298 மகிழ்தரு மனத்தொடு வண்புகழ்த் தோழி திகழ்நிதி மடந்தைக்குத் தெரிய வுரைத்தது.
ص 111 ܥܐ

Page 61
-N
19. மணஞ்சிறப்புரைத்தல்
1. மனமுரசுகூறல் பிரசந் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார் முரசந் திகழு முருகியம் நீங்கும் எவர்க்குமுன்னாம் அரசம் பலத்துநின் றாடும் பிரானருள் பெற்றவரிற் புரைசந்த மேகலை யாய்துயர் தீரப் புகுந்துநின்றே. 299 வரைவுதோன்ற மகிழ்வுறுதோழி நிரைவளைக்கு நின்றுரைத்தது.
2. மகிழ்ந்துரைத்தல் இருந்துதியென்வயிற்கொண்டவன் யான்எப்பொழுதுமுன்னும் மருந்து திசைமுகன் மாற்கரியோன்தில்லை வாழ்த்தினர்போல் இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால் அருந்துதி காணுமளவுஞ் சிலம்பன் ஆரந்தழையே. 300 மன்னிய கடியிற் பொன்னறுங் கோதையை நன்னுதற் றோழி தன்னின் மகிழ்ந்தது.
3. வழிபாடுகறல் சீரியல் ஆவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையாற் காரியல் வாட்கண்ணி எண்ணக லார்கம லங்கலந்த வேரியுஞ் சந்தும் வியல்தந் தெனக்கற்பின் நிற்பரன்னே காரியல் கண்டர்வண் தில்லை வணங்குமெங் காவலரே. 301 மணமனை காண வந்தசெவி லிக்குத் துணைமலர்க் குழலி தோழி சொல்லியது.
4. வாழ்க்கைநலங்கூறல் தொண்டின மேவுஞ் சுடர்க்கழ லோன்தில்லைத் தொல் நகரிற் கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென் தண்டின மேவுதிண் தோளவன் யானவள் தற்பணிவோள் வண்டின மேவுங் குழலா ளயல்மன்னும் இவ்வயலே. 302 மணமனைச் சென்று மகிழ்தரு செவிலி அணிமனைக் கிழத்திக் கதன்சிறப் புரைத்தது.
ص 112 ܠܐ

N
5. காதல் கட்டுரைத்தல் பொட்டணி யான்நுதல் போயிறும் பொய்போலிடையெனப்பூண் இட்டணி யான்தவி சின்மல ரன்றி மதிப்பக்கொடான் மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக் கட்டணி வார்சடை யோன்தில்லை போலிதன் காதலனே. 303
சோதி வேலவன், காதல்கட்டு டுரைத்தது.
6. கற்பறிவித்தல் தெய்வம் பணிகழ லோன்தில்லைச் சிற்றம் பலம் அணையாள் தெய்வம் பணிந்தறி யாள் என்று நின்று திறைவழங்காத் தெய்வம் பணியச்சென்றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான் பெளவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. 304
விற்பொலி நுதலி, கற்பறி வித்தது.
7. கற்புப்பயப்புரைத்தல் சிற்பந் திகழ்தரு திண்மதில் தில்லைச்சிற் றம்பலத்துப் பொற்பந்தியன்ன சடையவன் பூவணம் அன்னபொன்னின் கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும் இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவ னிர்ங்களிறே. 305 கற்புப் பயந்த, அற்புத முரைத்தது.
8. மருவுதலுரைத்தல் மன்னவன் தெம்முனை மேற்செல்லு மாயினும் மாலரியே றன்னவன் தேர்புறத் தல்கல்செல் லாது வரகுணனாந் தென்னவனேத்துசிற்றம்பலந்தான்மற்றைத் தேவர்க்கெல்லாம் முன்னவன் மூவலன் னாளுமற் றோர்தெய்வ முன்னலளே. 306
இருவர் காதலும், மருவுத லுரைத்தது.
لا 113 ܥܐ

Page 62
9. கலவியின் பங்கsறல் N ஆனந்த வெள்ளத்தழுந்துமொர் ஆருயிர் ஈருருக்கொண் டானந்த வெள்ளத்திடைத்திளைத் தாலொக்கும் அம்பலஞ்சேர் ஆனந்த வெள்ளத் தறைகழ லோனருள் பெற்றவரின் ஆனந்த வெள்ளம்வற் றாதுமுற் றாதிவ் வணிநலமே. 307 நன்னுதல் மடந்தை தன்னலங் கண்டு மகிழ்தூாங் குளத்தோ டிகுளை கூறியது.
20. ஒதற்பிரிவு
1. கல்விநலங்கூறல் சீரள வில்லாத் திகழ்தரு கல்விச்செம் பொன்வரையின் ஆரள வில்லா அளவுசென் றாரம் பலத்துள்நின்ற ஒரள வில்லா ஒருவன் இருங்கழ லுன்னினர்போல் ஏரள வில்லா அளவின ராகுவ ரேந்திழையே. 3O8 கல்விக் ககல்வர் செல்வத் தவரெனச்
செறிகுழற் பாங்கிக் கறிவறி வித்தது.
2. பிரிவுநினைவுரைத்தல் வீதலுற்றார்தலை மாலையன் தில்லைமிக் கோன்கழற்கே காதலுற் றார்நன்மை கல்விசெல் வீதரு மென்பதுகொண் டோதலுற்றாருற் றுணர்தலுற்றார்செல்லல் மல்லழற்காண் போதலுற் றார்நின் புணர்முலை யுற்ற புரவலரே. 3O9 கல்விக் ககல்வர் செல்வத் தவரெனப் பூங்குழல் மடந்தைக்குப் பாங்கி பகர்ந்தது.
3. கலக்கம்கண்டுரைத்தல் கற்பா மதிற்றில்லைச் சிற்றம் பலமது காதல்செய்த விற்பா விலங்கலெங் கோனை விரும்பலர் போலஅன்பர் சொற்பா விரும்பின ரென்னமெல் லோதி செவிப்புறத்துக் கொற்பா இலங்கிலை வேல்குளித் தாங்குக் குறுகியதே. 310 ஒதற் ககல்வர் மேதக் வெரெனப் பூங்கொடி கலக்கம் பாங்கிகண் டுரைத்தது.
الص い。 f 114 ܥܠܐ

4. வாய்மொழி கூறித்தலைமகள் வருந்தல் ད། பிரியா மையுமுயி ரொன்றா வதும்பிரி யிற்பெரிதுந் தரியா மையுமொருங்கேநின்று சாற்றினர் தையல் மெய்யிற் பிரியாமை செயதுநின் றோன்தில்லைப் பேரிய லூரரன்ன புரியா மையுமிது வேயினி யென்னாம் புகல்வதுவே. 31 தீதறு கல்விக்குச் செல்வன் செல்லுமெனப் போதுறு குழலி புலம்பியது.
1. பிரிவறிவித்தல் மூப்பான் இளையவன் முன்னவன் பின்னவன் முப்புரங்கள் வீப்பான் வியன்தில்லை யானரு ளால்விரி நீருலகங் காப்பான் பிரியக் கருதுகின்றார்நமர் கார்க்கயற்கட் பூப்பால் நலமொழி ரும்புரி தாழ்குழற் பூங்கொடியே. 312 இருநிலங் காவற் கேகுவர் நமரெனப் பொருசுடர் வேலோன் போக்கறி வித்தது.
2. பிரிவுகேட்டிரங்கல் சிறுகட்பெருங்கைத்திண் கோட்டுக்குழைசெவிச் செம்முகமாத் தெறுகட் டழியமுன் னுய்யச்செய் தோர்கருப் புச்சிலையோன் உறுகட் டழலுடை யோனுறை யம்பலம் உன்னலரின் துறுகட் புரிகுழ லாயிது வோவின்று சூழ்கின்றதே. 313 மன்னவன் பிரிவு நன்னுத லறிந்து பழங்கண் எய்தி அழுங்கல் கென்றது.
22. பகைதனிவினைப் பிரிவு
1. பிரிவுகூறல் மிகைதனித் தற்கரி தாமிரு வேந்தர்வெம் போர்மிடைந்த பகைதணித் தற்குப் படர்தலுற் றார்நமர் பல்பிறவித் தொகைதனித்தற்கென்னையாண்டுகொண்டோன் தில்லைச் சூழ்பொழில்வாய் முகைதனித் தற்கரி தாம்புரி தாழ்தரு மொய்குழலே.314 துன்னுபகை தணிப்ப மன்னவன் பிரிவு நன்னறங் கோதைக்கு முன்னி மொழிந்தது.
لم 115 -ܥܐ

Page 63
2. வருத்தந்தணித்தல் நெருப்புறு வெண்ணெயும் நீருறும் உப்பு மெனஇங்ங்னே பொருப்புறு தோகை புலம்புறல் பொய்யன்பர் போக்குமிக்க யிருப்புறுவோரைவிண்ணோரின் மிகுத்துநண் ணார்கழியத் திருப்புறு சூலத்தி னோன்தில்லை போலுந் திருநுதலே. 315 மணிப்பூண் மன்னவன் தணப்பதில்லை அஞ்சல் பொய்யென வஞ்சியைத் தணித்தது.
23. வேந்தற்குற்றுழிப் பிரிவு
1. பிரிந்தமைகsறல் போது குலாய புனைமுடி வேந்தர்தம் போர்முனைமேல் மாது கலாயமென் னோக்கிசென்றார்நமர் வண்புலியூர்க் காது குலாய குழையெழி லோனைக் கருதலர்போல் ஏதுகொ லாய்விளை கின்றதின் றொன்னா ரிடுமதிலே. 316 விறல்வேந்தர் வெம்முனைக்கண் திறல்வேந்தர் செல்வரென்றது.
2. பிரிவாற்றாமை கார்மிசைவைத்தல் பொன்னி வளைத்த புனல்சூழ் நிலவிப் பொலிபுலியூர் வன்னி வளைத்த வளர்சடை யோனை வணங்கலர்போல் துன்னி வளைத்தநந் தோன்றற்குப் பாசறைத் தோன்றுங்கொலோ மின்னி வளைத்து விரிநீர் கவரும் வியன்முகிலே. 317 வேந்தற்குற்றுN விறலோன்பிரிய ஏந்திழைபாங்கிக் கெடுத்துரைத்தது.
3. வானோக்கி வருந்தல் கோலித் திகழ்சிற கொன்றி னெடுக்கிப் பெடைக்குருகு பாலித் திரும்பணி பார்ப்பொடு சேவல் பயிலிரவின் மாலித் தனையறி யாமறை யோனுறை யம்பலமே போலித் திருநுத லாட்கென்ன தாங்கொலென் போதரவே.318 மானோக்கி வடிவுநினைந்தோன்
116 لم
வானோக்கி வருந்தியது.

7- N
4. கூதிர்கண்டகவறல்
கருப்பினம் மேவும் பொழிற்றில்லை மன்னன்கண் ணாரருளால் விருப்பினம் மேவச்சென்றார்க்குஞ்சென்றால்குங்கொல் வீழ்பணிவாய் நெருப்பினம் மேய்நெடு மாலெழில் தோன்றச்சென் றாங்குநின்ற பொருப்பின மேறித் தமியரைப் பார்க்கும் புயலினமே. 319 இருங்கூதிர் எதிர்வுகண்டு கருங்குழலி கவலையுற்றது.
5. முன்பனிக்கு நொந்துரைத்தல் சுற்றின வீழ்பனி தூங்கத் துவண்டு துயர்கவென்று பெற்றவளேயெனைப் பெற்றாள் பெடைசிற கானொடுக்கிப் புற்றில வாளர வன்தில்லைப் புள்ளுந்தம் பிள்ளைதழி இ மற்றினஞ் சூழ்ந்து துயிலப் பெறுமிம் மயங்கிருளே. 320 ஆன்றபணிக் காற்றாதமிழ்ந் தீன்றவளை ஏழைநொந்தது.
6. பின்பணிநினைந்திரங்கல் புரமன் றயரப் பொருப்புவில் லேந்திப்புத் தேளிர்நாப்பண் சிரமன் றயனைச்செற் றோன்தில்லைச் சிற்றம் பலமனையாள் பரமன் றிரும்பணி பாரித்த வாபரந் தெங்கும்வையஞ் சரமன்றி வான்தரு மேலொக்கும் மிக்க தமியருக்கே.321 இரும் பணியின் எதிர்வு கண்டு சுரும்பிவர் குழலி துயரம் நினைந்தது.
7. இளவேனில்கண்டின்னலெய்தல் வாழும் படியொன்றுங் கண்டிலம் வாழியிம் மாம்பொழில்தேன் சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டையங்கனிவாய் யாழின் மொழிமங்கை பங்கன்சிற்றம்பலம் ஆதரியாக் கூழின் மலிமனம் போன்றிரு ளாநின்ற கோகிலமே. 322 இன்னிள வேனில் முன்னுவது கண்டு மென்னகைப் பேதை இன்னலெய் தியது.
4ے 117 ܥܐ

Page 64
L0LS S LLS S S LS SLLLL S S LLL N 8. பருவங்காடடிவறபுறுததல
பூண்பதென் றேகொண்ட பாம்பன் புலியூரரனமிடற்றின் மாண்பதென் றேயென வானின் மலரும் மணந்தவர்தேர் காண்பதன்றேயின்றுநாளையிங் கேவரக் கார்மலர்த்தேன் பாண்பதன் தேர்குழ லாயெழில் வாய்த்த பனிமுகிலே. 323 கார்வருமெனக் கலங்குமாதரைத் தேர்வருமெனத் தெளிவித்தது.
9. பருவமன்றென்றுகூறல் தெளிதரல் காரெனச் சீரனஞ் சிற்றம் பலத்தடியேன் களிதரக் கார்மிடற் றோன்நடமாடக்கண் ணார்முழவந் துளிதரற் காரென ஆர்த்தன ஆர்ப்பத்தொக் குன்குழல்போன் றளிதரக் காந்தளும் பாந்தளைப் பாரித் தலர்ந்தனவே. 324 காரெனக் கலங்கும் ஏரெழிற் கண்ணிக்கு இன்றுணைத் தோழி யன்றென்று மறுத்தது.
10. மறுத்துக்கூறல் தேன்றிக் கிலங்கு கழலழல் வண்ணன்சிற் றம்பலத்தெங் கோன்றிக்கிலங்குதிண்டோட்கொண்டற் கண்டன் குழையெழில்நாண் போன்றிக் கடிமலர்க் காந்தளும் போந்தவன் கையனல்போல் தோன்றிக் கடிமலரும்பொய்ம்மை யோமெய்யிற் றோன்றுவதே. 325 பருவமன்றென்று பாங்கிபகர மருவமர்கோதை மறுத்துரைத்தது.
11. தேர்வரவுகூறல் திருமா லறியாச் செறிகழல் தில்லைச்சிற் றம்பலத்தெங் கருமால் விடையுடை யோன்கண்டம் போற்கொண்ட லெண்டிசையும் வருமா லுடன்மன் பொருந்தல் திருந்த மணந்தவர்தேர் பொருமா லயிற்கண்நல் லாயின்று தோன்றுநம் பொன்னகர்க்கே. 326 பூங்கொடி மருளப், பாங்கி தெருட்டியது.
لص 118 ܥܠ

12. வினைமுற்றிநினைதல் N புயலோங் கலச்சடை ஏற்றவன் சிற்றம் பலம்புகழும் மயலோங்கிருங்களி யானை வரகுணன் வெற்பின்வைத்த கயலோங் கிருஞ்சிலை கொண்டுமன் கோமமுங் காட்டிவருஞ் செயலோங் கெயிலெரி செய்தபின் இன்றோர் திருமுகமே.327 பாசறை முற்றிப் படைப்போர் வேந்தன் மாசறு பூண்முலை மதிமுகம் நினைந்தது.
13. நிலைமைநினைந்துகsறல் சிறப்பிற் றிகழ்சிவன் சிற்றம் பலஞ்சென்று சேர்ந்தவர்தம் பிறப்பிற் றுனைந்து பெருகுக தேர்பிறங் கும்மொளியார் நிறப்பொற் புரிசை மறுகினில் துன்னி மடநடைப்புள் இறப்பிற் றுயின்றுமுற் றத்திரை தேரும் எழில்நகர்க்கே. 328 பொற்றெடி நிலைமை மற்றவன் நினைந்து திருந்து தேர்ப் பாகற்கு வருந்துபு புகன்றது.
14. முகிலொடுகsறல் அருந்தேரழிந்தனம் ஆலமென் றோல மிடுமிமையோர் மருந்தேரணியம் பலத்தோன் மலர்த்தாள் வணங்கலர்போல் திருந்தே ரழிந்து பழங்கண் தருஞ்செல்வி சீர்நகர்க்கென் வருந்தே ரிதன்முன் வழங்கேல் முழங்கேல் வளமுகிலே. 329 முனைவற் குற்றுN வினைமுற்றி வருவோன் கழும லெய்திச் செய்முகிற் குரைத்தது.
15. வரவெடுத்துரைத்தல் பணிவார் குழையெழிலோன்தில்லைச் சிற்றம் பலமனைய மணிவார் குழல்மட மாதே பொலிகநம் மன்னர்முன்னாப் பணிவார் திறையும் பகைத்தவர் சின்னமுங் கொண்டுவண்தேர் அணிவார் முரசினொ டாலிக்கும் மாவோ டணுகினரே. 330 வினை முற்றிய வேந்தன் வரவு புனையிழைத் தோழி பொற்றொடிக் குரைத்தது.
ha 119 لم

Page 65
16. மறவாமைகsறல் கருங்குவளைக்கடி மாமலர் முத்தங் கலந்திலங்க நெருங்கு வளைக்கிள்ளை நீங்கிற் றிலள்நின்று நான்முகனோ டொருங்கு வளைக்கரத் தானுணராதவன் தில்லையொப்பாய் மருங்கு வளைத்துமன் பாசறை நீடிய வைகலுமே. 331 பாசறை முற்றிப் பைந்தொடியோ டிருந்து மாசறு தோழிக்கு வள்ள லுரைத்தது.
24. பொருள்வயிற்பிரிவு
1. வாட்டங்கsறல் முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னான் முடியுமெனப் பனிவருங் கண்பர மன்திருச் சிற்றம் பலமனையாய் துனிவரு நீர்மையி தென்னென்று தூநீர் தெளித்தளிப்ப நனிவரு நாளிது வோவென்று வந்திக்கும் நன்னுதலே. 332 பிரிவு கேட்ட வரிவை வாட்டம் நீங்க லுற்றவன் பாங்கிக் குரைத்தது.
2. பிரிவுநினைவுரைத்தல் வறியா ரிருமை யறியா ரெனமன்னும் மாநிதிக்கு நெறியா ரருஞ்சுரஞ் செல்லலுற் றார்நமர் நீண்டிருவர் அறியா வளவுநின் றோன்தில்லைச் சிற்றம் பலமனைய செறிவார் கருங்குழல் வெண்ணகைச் செவ்வாய்த் திருநுதலே. 333 பொருள்வயிற் பிரியும் பொருவே லவனெனச் சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
3. அற்றாது புலம்பல் சிறுவா ளுகிருற் றுறாமுன்னஞ் சின்னப் படுங்குவளைக் கெறிவாள் கழித்தனள் தோழி எழுதிற் கரப்பதற்கே அறிவாள் ஒழிகுவ தஞ்சனம் அம்பல வர்ப்பணியார் குறிவாழ் நெறிசெல்வ ரன்பரென் றம்ம கொடியவளே. 334 பொருள்தரப் பிரியும் அருள்தரு பவனெனப் பாங்கி பகரப் பூங்கொடி புலம்பியது.
لم 120 ܠܐ

r
வானக் கடிமதில் தில்லையெங் கூத்தனை ஏத்தலர்போற்
4. ஆற்றாமைகறல் ད།
காணக் கடஞ்செல்வர் காதல ரென்னக் கதிர்முலைகள் மானக் கனகந் தருமலர்க் கண்கள்முத் தம்வளர்க்குந் தேனக்க தார்மன்னனென்னோ இனிச்சென்று தேர்பொருளே. 335 ஏழை யழுங்கத் தோழி சொல்லியது.
5. திணைபெயர்த்துரைத்தல் சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத் திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த அருடரு மின்சொற்களத்தனையும்மறந்தத்தஞ்சென்றோ பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. 336 துணைவன் பிரியத் தூயருறு மனத்தொடு திணைபெயர்த் திட்டுத் தேமொழி மொழிந்தது.
6. பொருத்தமறிந்துரைத்தல் மூவர்நின் றேத்த முதல்வன் ஆடமுப் பத்துமும்மைத் தேவர்சென்றேத்துஞ்சிவன்நில்லையம்பலஞ்சீர்வழுத்தாப் பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான் போவர்நங் காதல ரென்நாம் உரைப்பது பூங்கொடியே. 337 பொருள்வயிற் பிரிவோன் பொருத்த நினைந்து சுருளுறு குழலிக்குத் தோழி சொல்லியது.
7. பிரிந்தமை கூறல் தென்மாத் திசைவசைதீதரத் தில்லைச்சிற் றம்பலத்துள் என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும் பொன்மாப் புரிசைப் பொழில்திருப் பூவனம் அன்னபொன்னே வன்மாக் கறிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. 338 எதிர்நின்று பிரியிற் கதிரநீ வாடுதற் குணர்த்தா தகன்றான் மணித்தேரோ னென்றது.
121 لم

Page 66
r 8. இரவுறுதுயரத்திற்கிரங்கியுரைத்தல்
ஆழியொன் றீரடி யும்மிலன் பாகன்முக் கட்டில்லையோன் ஊழியொன் றாதன நான்குமைம் பூதமும் ஆறெடுங்கம் ஏழியன் றாழ்கடலும்மெண் டிசையுந் திரிந்திளைத்து வாழியன் றோஅருக் கன்பெருந் தேர்வந்து வைகுவதே. 339 அயில்தரு கண்ணியைப் பயில்தரு மிரவினுள் தாங்குவ தரிதெனப் பாங்கி பகர்ந்தது.
9. இகழ்ச்சி நினைந்தழிதல் பிரியா ரென இகழ்ந் தேன்முன்னம் யான்பின்னை எற்பிரியின தரியா ளென இகழ்ந்தார்மன்னர்தாந்தக்கன் வேள்விமிக்க எரியா ரெழிலழிக் கும்எழி லம்பலத் தோனெவர்க்கும் அரியா னருளிலர் போலன்ன என்னை யழிவித்தவே. 340 உணர்த்தாது பிரிந்தாரென மணித்தாழ்குழலி வாடியது.
10. உருவுவெளிப்பட்டு நிற்றல் சேணுந் திகழ்பதிற் சிற்றம் பலவன்தெண் ணிர்க்கடல்நஞ் சூனுந் திருத்துமொருவன் திருத்தும் உலகினெல்லாங் கானுந் திசைதொறுங் கார்க்கய லுஞ்செங் கனியொடுபைம் பூணும் புணர்முலையுங்கொண்டு தோன்றுமொர் பூங்கொடியே. 341 பொகுள்வயிற் பிரிந்த ஒளியுறுவேலவன் ஓங்கழற் கடத்துப் பூங்கொடியை நினைந்தது.
11. நெஞ்சொடுநோதல் பொன்னணியீட்டிய ஒட்டரும் நெஞ்சமிப் பொங்குவெங்கா னின்னணி நிற்குமி தென்னென்பதேஇமை யோரிறைஞ்சும் மன்னணி தில்லை வளநக ரன்னஅன் னந்நடையாள் மின்னணி நுண்ணிடைக் கோபொருட் கோநீ விரைகின்றதே. 342 வல்லழற் கடத்து மெல்லியலை நினைந்து வெஞ்சுடர் வேலோன் செஞ்சொடு நொந்தது.
الص 122 ܥܠ

r
நாய்வயினுள்ள குணமுமில் லேனைநற் றெண்டுகொண்ட தீவயின் மேனியன் சிற்றம் பலமன்ன சின்மொழியைப் பேய்வயினும்மரி தாகும் பிரிவெளி தாக்குவித்துச்
12. நெஞ்சொடுபுலத்தல் ר
சேய்வயிற் போந்தநெஞ் சேயஞ்சத் தக்கதுன் சிக்கனவே. 343 அழற்கடத் தழுக்கமிக்கு நிழற்கதிர்வேலோன் நீடுவாடியது.
13. நெஞ்சொடுமறுத்தல் தீமே வியநிருத் தன்திருச் சிற்றம் பலம்அனைய பூமே வியபொன்னை விட்டுப்பொன் தேடியிப்பொங்குவெங்கான் நாமே நடக்க வொழிந்தனம் யாம்நெஞ்சம் வஞ்சியன்ன வாமே கலையைவிட் டோபொருள் தேர்ந்தெம்மை வாழ்விப்பதே. 344 நீனெறி சென்ற நாறிணர்த் தாரோன் சேனெறி யஞ்சி மீனெறி சென்றது.
14. நாளெண்ணிவருந்தல் தெண்ணி ரணிசிவன் சிற்றம் பலஞ்சிந்தி யாதவரிற் பண்ணிர் மொழியிவளைப்பையுள் எய்தப் பணித்தடங்க ணுண்ணிர் உகவொளி வாடிட நீடுசென்றார்சென்றநாள் எண்ணிர் மையின்நில னுங்குழி யும்விர லிட்டறவே. 345 சென்றவர் திறத்து நின்றுநணி வாடுஞ் சூழிருங் கூந்தற்குத் தோழிநணரி வாடியது.
15. ஏறுவரவுகண்டிரங்கிரையுத்தல் சுற்றம் பலமின்மை காட்டித்தன் தொல்கழல் தந்ததொல்லோன் சிற்றம் பலமனை யாய்பர மன்றுதிண் கோட்டின் வண்ணப் புற்றங்குதர்ந்துநன் னாகொடும் பொன்னார் மணிபுலம்பக் கொற்றம் மருவுகொல் லேறுசெல் றாநின்ற கூர்ஞ்செக்கரே. 346 நீடியபொன்னின் நெஞ்சம் நெகிழ்ந்து வாடியவன் வரவுற்றது.
ص 123 ܥܠܐ

Page 67
N
16. பருவங்கண்டிரங்சல் கண்ணுழை யாதுவிண் மேகங் கலந்து கணமயில்தொக் கெண்ணுழை யாத்தழை கோலிநிற் றாலு மினமலர்வாய் மண்ணுழையாவும் அறிதில்லை மன்னனதின்னருள் போற் பண்ணுழை யாமொழி யாளென்ன ளாங்கொல்மன் பாவியற்கே. 347 மன்னிய பருவ முன்னிய செலவின் இன்ன லெய்தி மன்னனே கியது.
17. முகிலெடு கூறல் அற்படு காட்டில்நின் றாடிசிற் றம்பலத் தான்மிடற்றின் மூற்படு நீள்முகி லென்னின் முன்னேல்முதுவோர் குழுமி விற்படு வாணுத லாள்செல்லல் தீர்ப்பான் விரைமலர்தூய் நெற்படு வான்பலி செய்தய ராநிற்கும் நீள்நகர்க்கே. 348 எனைப்பல துயரமோ டேகா நின்றவன் துணைக்கா ரதற்குத் துணிந்து சொல் லியது.
18. தேர்வரவு கூறல் பாவியை வெல்லும் பரிசில்லை யேமுகில் பாவையஞ்சீர் ஆவியை வெல்லக் கறுக்கின்ற போழ்தத்தி னம்பலத்துக் காவியை வெல்லும் மிடற்றோ னருறிற் கதுமெனப்போய் மேவிய மாநிதி யோடன்பர் தேர்வந்து மேவினதே. 349 வேந்தன் பொருளொடு விரும்பி வருமென ஏந்திழைப் பாங்கி இனிதியம்பியது.
19. இளையரெதிர்கோடல் யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலத் தானமைத்த ஊழின் வலியதொன் றென்னை ஒளிமே கலையுகளும் வீழும் வரிவளை மெல்லியல் ஆவிசெல் லாதமுன்னே சூழுந் தொகுநிதி யோடன்பர் தேர்வந்து தோன்றியதே. 350 செறிகழலவன் திருநகர்புகுதர எறிவேல் இளைஞர் எதிர்கொண்டது.
لص 124 本 ܠܐ

r- 20. உண்மகிழ்ந்துரைத்தல்
மயின்மன்னுசாயலிம்மானைப்பிரிந்து பொருள்வளர்ப்பான் வெயின்மன்னு வெஞ்சுரஞ் சென்றதெல்லாம்பிடையோன் புலியூர்க் குயின்மன்னு சொல்லிமென் கொங்கையென் அங்கத்திடைக்குளிப்பத் துயின்மன்னு பூவணை மேலணை யாமுன் துவஞற்றதே. 351 பெருநிதியோடு திருமனை புகுந்தவன் வளமனைக் கிழத்தியோ டுளமகிழ்ந் துரைத்தது.
20. பரத்தையிற் பிரிவு
1. கண்டவர் கூறல் உடுத்தணி வாளர வன்தில்லை யூரன் வரவொருங்கே எடுத்தணி கையே நினவளை யார்ப்ப இளமயிலேர் கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம் படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. 352 உரத்தகு வேலோன் பரத்தையிற் பிரியத் திண்டேர் வீதியிற் கண்டோ ருதைத்தது.
2. பொறையுவந்துரைத்தல் சுரும்புறு கொன்றையன் தொல்புலியூர்சுருங்கும்பருங்குற் பெரும்பொறை யாட்டியை யென் இன்று பேசுவ பேரொலிநீர்க் கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மயியும் அரும்பொறை யாகுமென் னாவியுந் தேய்வுற்றழிகின்றதே. 353 கள்ளவிழ்க்கோதையைக் காதற்றோழி உள்ளவிழ் பொறைகண் டுவந்துரைத்தது.
3. பொதுப்படக் கூறிவாடியபங்கல் அப்புற்ற சென்னியன் தில்லை யுறாரி னவர் உறுநோய் ஒப்புற் றெழில்நல முரன் கவரஉள்ளும்புறம்பும் வெப்புற்று வெய்துயிர்ப் புற்றுத்தம் மெல்லணை யேதுணையாச் செப்புற்ற கொங்கையர் யாவர்கொ லாருயிர் தேய்பவரே. 354 போற்றிக ழரவன் மற்றிகழ் தில்லைப் பிரிந்த பூரனோ டிருந்துவா டியது.
صـ 125 ܥܐ

Page 68
N
4. கனவிழந்துரைத்தல் தேவா சுரரிறைஞ் சுங்கழ லோன்தில்லை சேரலர்போல் ஆவா கனவும் இழந்தேன் நனவென் றமளியின்மேற் பூவார் அகலம்வந் தூரன் தரப்புலம் பாய்நலம்பாய் பாவாய் தழுவிற் றிலேன்விழத் தேனரும் பாவியனே. 355 சினவிற் றடக்கைத் தும்புன லூரனைக் கனவிற் கண்ட காரிகை யுரைத்தது.
5. விளக்கொடுவெறுத்தல் செய்ம்முக நீல மலர்தில்லைச் சிற்றம் பலத்தரற்குக் கைம்முகங் கூம்பக் கழல்பணி யாரிற் கலந்தவர்க்குப் பொய்ம்முகங் காட்டிக் கரத்தல் பொருத்தமன் றென்றில்லையே நெய்ம்முக மாந்தி இருள்முகங் கீழும் நெடுஞ்சுடரே. 356 பஞ்சணைத் துயின்ற பஞ்சின் மெல்லடி அன்பனோடபங்கிச் செஞ்சுடர்க் குரைத்தது.
6. வாரம்பகர்ந்து வாயின் மறுத்துரைத்தல் பூங்குவளைப் பொலி மாலையும் ஊரன்பொற் றோளிணையும் ஆங்கு வளைத்துவைத் தாரேனுங் கொள்கநள்ளார் அரணந் தீங்குவளைத்தவில் லோன்தில்லைச் சிற்றம்பலத்தயல்வாய் ஓங்கு வளைக்கரத் தாக்கடுத் தோமன் உறவரையே. 357 வார்புன லூரன் ஏர்திகழ் தோள்வயிற் கார்புரை குழலி வாரம் பகர்ந்தது.
7. பள்ளியிடத்துாடல் தவஞ்செய்திலாதவெந்தீவினை யேம்புன்மைத்தன்மைக்கெள்ளா தெவஞ்செய்துநின்றினியின்றுனை நோவதென் அத்தன்முத்தன் சிவன்செய்த சீரரு ளார்தில்லை யூரநின் சேயிழையார் தவஞ்செய்த புல்லங்கள் மாட்டேந் தொடல்விடு நற்கலையே.358 பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை ஆடவன் றன்னோ டூ டி யுரைத்தது.
أص 126 ܥܠܐ

8. செவ்வணிவிடுக்க வில்லோர்கூறல் ད། தணியுறப் பொங்குமிக் கொங்கைகள் தாங்கித் தளர்மரூங்குல் பிணியுறப் பேதைசென் றின்றெய்து மால்அர வும்பிறையும் அணிபுறக் கொண்டவன் தில்லைத் தொல்லாயநல் லார்கண் முன்னே பணியுறத் தோன்றும் நுடங்கிடையார்கள் பயின்மனைக்கே. 359 பாற்செலு மொழியார் மேற்செல விரும்பல் பொல்லா தென்னை இல்லோர் புகன்றது.
9. அயலறிவுரைத்தவளழுக்கமெய்தல் இரவணை யும்மதி யேர்நுத லார்நுதிக் கோலஞ்செய்து குரவணை யுங்குழல் இங்கிவ ளால்இக் குநியறிவித் தரவணை யுஞ்சடை யோன்தில்லை யூரனை யாங்கொருத்தி தரவணை யும்பரி சாயின வாறுநந்தன்மைகளே. 360 உலகிய லறியச் செலவிட லுற்ற விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.
10. செவ்வணிகண்டவாயிலவர் கூறல் சிவந்தபொன் மேனி மணிதிருச் சிற்றம் பலமுடையான் சிவந்தஅம் தாளணி யூரற் குலகிய லாறுரைப்பான் சிவந்தபைம் போதுமஞ் செம்மலர்ப் பட்டுங்கட் டார்முலைமேற் சிவந்தஅம் சாந்தமுந் தோன்றின வந்து திருமனைக்கே. 361 மணிக்குழை பூப்பியல் உணர்த்த வந்த ஆயிழையைக் கண்ட வாயிலவர் உரைத்தது.
11. மனைபுகல்கண்ட வாயிலவர்கடிறல் குராப்பயில் கூழை யிவளின்மிக் கம்பலத் தான்குழையாம் அராப்பயில் நுண்ணிடை யாரடங் காரெவ ரேயினிப்பண் டிராப்பகல் நின்றுணங்கீர்ங்கடையித்துணைப்போழ்திற்சென்று கராப்பயிந் பூம்புன லூரன் புகுமிக் கடிமனைக்கே. 362 கடனறிந் தூரன் கடிமனை புகுதர வாய்ந்த வாயி லவராய்ந் துரைத்தது.
أص 127 ܠܐ

Page 69
И
12. முகமலர்ச்சிகsறல் வந்தான் வயலணி யூர னெனச்சின வாள்மலர்க்கண் செந்தா மரைசெவ்வி சென்றசிற் றம்பல வன்னருளான் முந்தா யினவியன் நோக்கெதிர் நோக்க முகமடுவிற் பைந்தாட் குவளைகள் பூத்திருள் சூழ்ந்து பயின்றனவே. 363 பூம்புன லூரன் புகமுகம் மலர்ந்த தேப்புனை கோதை திறம்பிற ருரைத்தது.
13. காலநிகழ்வுரைத்தல் வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற்
|
செல்லிகைப் போதின் எரியுடை யோன்தில்லை அம்பலஞ்சூழ மல்லிகைப்போதின் வெண்சங்கம்வண்டுதவிண் தோய்பிறையோ டெல்லிகைப் போதியல் வேல்வயலூரற் கெதிர்கொண்டதே. 364 இகழ்வ தெவன்கொல் நிகழ்வதிவ் வாறெனச் செழுமலர்க் கோதை உழையர் உரைத்தது.
14. எய்தலெடுத்துரைத்தல் புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக் கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக்கதிர்கொண் முத்தம் நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன் றுலவிய லாத்தனஞ் சென்றெய்த லாயில் வூரனுக்கே. 365 சீரிய லுலகிற் றிகழ்தரக் கூடி வார்புன லூரன் மகிழ் வுற்றது.
15. கலவிகருதிப்புலத்தல் செவ்வாய் துடிப்பக் கருங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம் மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள் வெவ்வாயுயிர்ப்பொடு விம்மிக்கலுழ்ந்து புலந்துநைந்தாள் இவ்வா றருள்பிறர்க் காகு மெனநினைந்தின்னகையே. 366 மன்னிய வுலகில் துன்னிய அன்பொடு கலவி கருதிப் புலவி யெய்தியது.
الص 128 ܠܐ

16. குறிப்பறிந்துபுலந்தமைகூறல் N மலரைப் பொறாவடி மானுந் தமியள்மன் னன்ஒருவன் பலரைப் போறாதென்றிழிந்துநின்றாள்பள்ளி காமனெய்த அலரைப் பொறாதன் றழல்விழித்தோனம்பலம்வணங்காக் கலரைப் பொறாச் சிறி யாளென்னை கொல்லோ கருதியதே. 367 குறிப்பினிற் குறிப்பு நெறிப்பட நோக்கி மலர் நெருங் கண்ணி புலவி யுற்றது.
17. வாயிலவர் வாழ்த்தல் வில்லைப் பொலிநுதல் வேற்பொலி கண்ணி மெலிவறிந்து வல்லைப் பொலிவொடு வந்தமை யான்நின்று வான்வழுத்துந் தில்லைப் பொலிசிவன் சிற்றம் பலஞ்சிந்தை செய்பவரின் மல்லைப் பொலியவயலூரன்மெய் யேதக்க வாய்மையனே. 368 தலைமகனது தகவுடைமை
நிலைதகுவாயில் நின்றோருரைத்தது.
18. புனல்வரவுரைத்தல் சூன்முதிர்துள்ளு நடைப்படைக்கிற்றுணைச் சேவல்செய்வான் தேன்முதிர் வேழத்தின் மென்பூக்குதர்செம்மலூரன்திண்டோள் மான்முதிர் நோக்கின்நல் லார்மகிழத்தில்லையானருளே போன்முதிர் பொய்கையிற் பாய்ந்தது வாய்ந்த புதுப்புணலே. 369 புனலா டுகவெனப் புனைந்து கொண்டு மனைபுகுந் தவளை வையமுரைத்தது.
19. தேர்வரவு கண்டுமகிழ்ந்துகூறல் சேயே யெனமன்னு தீம்புனலூரன்தின் டோளணைகள் தோயிர் புணர்தவந்தொன்மைசெய்தீர்சுடர்கின்றகொலந் தீயே யெனமன்னு சிற்றம் பலவர்தில் லைந்நகர்வாய் வீயே யென அடி யீர்நெடுந் தோவந்து மேவினதே. 370 பயின்மணித தேர்செலப் பரத்தையா சேரிக் கயன்மணிக் கண்ணியர் கட்டுரைத்தது.
الصـ 129 ܥܠܐ

Page 70
அமரங் கையரென வந்து விழாப்புகும் அவ்வவர்வான்
20. புனல்விளையாட்டிற்றம் முளுரைத்தல்
அமரங் கையரென வந்தணு கும்மவ ளன்றுகிராற் சிரமங் கயனைசெற் றோன்தில்லைச் சிற்றம் பலம்வழுத்தாப் புரமங் கையரின்நை யாதைய காத்தும்நம் பொற்பரையே. 371 தீம்புனல் வாயிற் சேயிழை வருமெனக் காம்பன தோளியா கலந்து கட்டுரைத்தது.
21. தன்னைவியந்துரைத்தல் கனலூர் கணைதுணையூர்கெடச்செற்றிசற்றம்பலத்தெம் அனலூர் சடையோ னருள் பெற்றவரின் அமரப்புல்லும் மினலூர் நகையவர் தம்பா லருள்விலக் காவிடின்யான் புனலூ ரனைப்பிரி யம்புனலூர்கணப் பூங்கொடியே. 372 அரத்தத் துவர்வாய்ப் பரத்தைத் தலைவி முனிவு தோன்ற நணிபுகன்றது.
22. நகைத்துரைத்தல் இறுமாப்பொழியுமன்றேன்தங்கை தோன்றினென்னெங்கையங்கைச் சிறுமான் தரித்தசிற் றம்பலத் தான்தில்லை யூரன்திண்டோள் பெறுமாத் தொடுந்தனை பேரணுக் குப்பெற்ற பெற்றியினோ டிறுமாப் பொழிய இறுமாப் பொழிந்த இணைமுலையே. 373 வேந்தன் பிரிய ஏந்திழை மடந்தை பரத்தையை நோக்கி விரிந்து ரைத்தது.
23. நாணுதல்கண்டுமிகுத்துரைத்தல் வேயாது செப்பின் அடைத்துத் தமிவைகும் வீயினன்ன தீயாடி சிற்றம்பலமனை யாள்தில்லை யூரனுக்கின் றேயாப் பழியென நாணியென் கண்ணிங் னேமறை தாள் யாயா மியல்பிவள் கற்புநற் பால வியல்புகளே. 374 மன்னவன் பிரிய நன்மலைக் கிழத்தியை நாணுதல் கண்ட வாணுத லுரைத்தது.
لـ 130 ܥܐ

24. பாணன் வரவுரைத்தல் ר விறலியும் பாணனும் வேந்தற்குத் தில்லை யிறையமைத்த திறலியல் யாழ்கொண்டு வந்துநின்றார்சென்றிராத்திசைபோம் பறலியல் வாவல் பகலுறை மாமரம் போலுமன்னோ அறலியல் கூழைநல் லாய்தமியோமை யறிந்திலரே. 375 இகல்வே லவனகல் வறியாப் பாணனைப் பூங்குழல் மாதர்க்குப் பாங்கி பகர்ந்தது.
25. தோழியியற்பழித்தல் திக்கின் இலங்குதிண்டோளிறைதில்லைச்சிற்றம்பலத்துக் கொக்கின் இறக தணிந்துநின் றாடிதென் கூடலன்ன அக்கின் நகையிவள் நைய அயல்வயின் நல்குதலால் தக்கின் றிருந்திலன் நின்றசெவ் வேலெந் தனிவள்ளலே. 376 தலைமகனைத் தகவிலனெனச் சிலைநுதற்பாங்கி தீங்கு செப்பியது.
26. உழையரியற்பழித்தல் அன்புடை நெஞ்சத் திவள்பே துறஅம் பலத்தடியார் என்பிடை வந்தமிழ் தூறநின் றாடி யிருஞ்சுழியல் தன்பெடை நையத் தகவழிந் தன்னஞ்சலஞ் சலத்தின் வன்பெடை மேல்துயி லும்வயலூரன் வரம்பிலனே. 377 அரத்தவேல் அண்ணல் பரத்தையிற் பிரியக் குழைமுகத் தவளுக் குழைய ருரைத்தது.
27. இயற்படமொழிதல் அஞ்சார் புரஞ்செற்ற சிற்றம் பலவர்அந் தண்கயிலை மஞ்சார் புனத்தன்று மாந்ழை யேந்திவந் தாரவரென் நெஞ்சார் விலக்கினும் நீங்கார் நனவு கணவுமுண்டேற் பஞ்சா ரமளிப் பிரிதலுண் டோவெம் பயோதரமே. 378 வரிசிலை யூரன் பரிசு பழித்த உழையர் கேட்ப எழில்நகை யுரைத்தது.
لمــ 131 -ܥܠ

Page 71
-N
28. நினைந்து வியந்துரைத்தல் தெள்ளம் புனற்கங்கை தங்குஞ்சடையன்சிற்றம்பலத்தான் கள்ளம் புகுநெஞ்சர் காணா இறையுறை காழியன்னாள் உள்ளம் புகுமொரு காற்பிரி யாதுள்ளி யுள்ளுதொறும் பள்ளம் புகும்புனல் போன்றகத் தேவரும் பான்மையளே. 379 மெல்லியற் பரத்தையை விரும்பி மேவினோன் அல்லியங் கோதையை அகனமர்ந் துரைத்தது.
29. வாயிலபெறாதுமகன்திறம்நினைதல் தேன்வண்டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும் வான்வண்டுறைதருவாய்மையன் மன்னுகுதலையின்வா யான்வண் டுறதரு மாலமு தன்னவன் வந்தணையான் நான்வண்டுறைதரு கொங்கைஎவ்வாறுகொணண்ணுவதே. 380 பொற்றெடி மாதர் நற்கடை குறுகி நீடிய வாயிலின் வாடினன் பொழிந்தது.
30. வாயிற்கண்நின்று தோழிக்குரைத்தல் கயல்வந்த கண்ணியா கண்ணிணையால்மிகு காதரத்தால் மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாம தியின் அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலம் நிலவு புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே. 381 பெருந்தகை வாயில் பெறாது நின்று அருந்தகைப் பாக்கிக் கறிய வுரைத்தது.
31. வாயில்வேண்டத்தோழிகறல் கூற்றாயினசின ஆளியெண் ணிர்கண்கள் கோளிழித்தாற் போற்றான் செறியிருட் பொக்கமெண் ணிர்கன் றகன்றபுனிற் றிற்றா வெனநீர் வருவது பண்டின்றெம் மீசர்தில்லைத் தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிர்அத் தேர்மிசையே. 382 வைவேல் அண்ணல் வாயில் வேண்டப் பையர வல்குற் பாங்கி பகர்ந்தது.
لم 132 ܠܐ

N
வியந்தலை நீர்வையம் மெய்யேயிறைஞ்சவிண்டோய்குடைக்கீழ்
32. தோழிவாயில் வேண்டல்
வயந்தலை கூர்ந்தொன்றும் வாய்திற வார்வந்த வாளரக்கன் புயந்தலை தீரப் புலியூர் அரனிருக்கும்பொருப்பிற் கயந்தலை யானை கடிந்த விருந்தினர் கார்மயிலே. 383 வாயில் பெறாது மன்னவ னிற்ப ஆயிழை யவட்குத் தோழி சொல்லியது.
33. மனையவர்மகிழ்தல் தேவியங் கண்திகழ் மேனியன் சிற்றம் பலத்தெழும் ஒவியங் கண்டன்ன வொண்ணுதலாள்தனக்கோகையுய்ப்பான் மேவியங் கண்டனை யோவந்தனனென வெய்துயிர்த்துக் காவியங் கண்கழு நீர்ச்செவ்வி வெளவுதல் கற்றனவே. 384 கன்னி மனோக்கி கனன்றுநோக்க மன்னியமனையவர் மகிழ்ந்துரைத்தது.
34. வாயின் மறுத்துரைத்தல் உடைமணி கட்டிச் சிறுதே ருருட்டி யுலார்தருமிந் நடைமணியைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா விடைமணி கண்டவர்வண் தில்லைமென் தோகையன் னார்கண் முன்னங் கடைமணி வாள்நகை யாயின்று கண்டனர் காதலரே. 385 மடவரற்றோழி வாயில்வேண்ட அடல்வேலவனா ரருளுரைத்தது.
35. பாணனொடுவெகளுதல் மைகொண்ட கண்டர் வயல்கொண்டதில்லைமல் கூரர்நின்வாய் மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர் வைகொண்டவுசிகொல்சேரியின் விற்றெம்இல் வண்ணவண்ண பொய்கொண்டு நிற்கலுற்றோபுலை ஆத்தின்னி போந்ததுவே. 386 மன்னியாழ்ப்பாணன் வாயில் வேண்ட மின்னிடைமடந்தை வெகுண்டுரைத்தது.
لے 133 ܠܐ

Page 72
r 36. பாணல்புலந்துரைத்தல் ད། கொல்லாண்டிலங்கு மழுப்படையோன்குளிர் தில்லையன்னாய் வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக் கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே. 387 கருமலர்க்கண்ணி கனன்றுகட்டுரைப்ப புரியாழ்ப்பாணன் புறப்பட்டது.
37. விருந்தொடுசெல்லத்துணிந்தமைகூறல் மத்தக் கரியுரி யோன்தில்லை யூரன் வரவெனலுந் தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேல்மிளிர்ந்து முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னங் கித்தக் கருங்குவளைச் செவ்வியோடிக் கெழுமினவே. 388 பல்வளை பரிசு கண்டு, இல்லோர் இயம்பியது.
38. ஊடல்தணிவித்தல் கிவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த தவலங் கிலாச்சிவன் தில்லையன்னாய்தழு விம்முழுவிச் சுவலங் கிருந்தநந் தோன்றல் துணையெனத் தோன்றுதலால் அவலங் களைந்து பணிசெயற் பாலை யரசனுக்கே. 389 தோன்றலைத் துணையொடு தோழி கண்டு வான்றகை மடந்தையை வருத்தந் தணிந்தது.
39. அனைந்தவழியூடல் சேறான் திகழ்வயற் சிற்றம் பலவர் தில்லைநகர்வாய் வேறான் திகழ்கண்இணையார் வெகுள்வர்மெய்ப பாலன்செய்த பாறான் திகழும் பரிசினம் மேரும் படிறுவவேங் காறான் தொடல்தொடரேல்விடு திண்டலெங்கைத்தலமே. 390 தெளிபுன லூரன் சென்றணைந் தவழி ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.
صـ 134 ܥܐ

40. புனலாட்டுவித்தமைகsறிப்புலத்தல் ད། செந்தார் நறுங்கொன்றைச் சிற்றம் பலவர்தில் லைநகரோர் பந்தார் விரலியைப் பாய்புன லாட்டிமன் பாவியெற்கு வந்தார் பரிசுமன் றாய்நிற்கு மாறென் வளமனையிற் கொத்தார் தடந்தோள் விடங்கால் அயிற்படைக் கொற்றவரே. 391 ஆங்கதனுக் கழுக்கமெய்தி வீங்குமென்முலை விட்டுரைத்தது.
41. கலவிகருதிப்புலத்தல் மின்றுன் னியசெஞ்சடைவெண் மதியன் விதியுடையோர் சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்தென் னம்பொதியில் நன்றுஞ் சிறியவரில்லெம தில்லம்நல் லூரமன்னோ இன்றுன் திருவருளித்துணை சாலுமன்னெங்களுக்கே. 392 கலவல ரல்குல் தலைமகன் றன்னொடு கலவிகருதிப் புலவிபு கன்றது.
42. மிகுத்துரைத்துடல் செழுமிய மாளிகைச் சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக் கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர் விழுமிய அல்லகொல் லோ இன்னவாறு விரும்புவதே. 393 நாடும் ஊரும் இல்லுஞ் சுட்டி ஆடற் பூங்கொடி ஊடி யுரைத்தது.
43. ஊடல்நீடவாடியுரைத்தல் திருந்தேன் உயநின்ற சிற்றம் பலவர்தென் னம்பொதியில் இருந்தேன் உயவந்திணைமலர்க்கண்ணின் இன் நோக்கருளிப் பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித் தாண்டநம் பெண்ணமிழ்தம் வருந்தே லதுவன் றிதுவோ வருவதொர் வஞ்சனையே. 394 வாடா ஆடல், நீடா வாடியது.
l 135 أص

Page 73
r 44. துனியொழிந்துரைத்தல் N
இயன்மன்னும் அனபுதந்தார்க்கெனா நிலைமை யோரிறைஞ்சுஞ் செயன்மன்னுஞ் சீர்க்கழற் சிற்றம் பலவர்தென் னம்பொதியிற் புயன்மன்னு குன்றிற் பொருவேல் துணையாப்பொம் மென்னிருள்வாய் அயன்மன்னும் யானை துரந்தரி தேரும் அதரகத்தே.395 தகுதியினூரன் மிகுபதநோக்கிப் பணிமலர்க்கோதை துனியொழிந்தது.
45. புதல்வன்மேல்வைத்தும்புலவிதீர்தல் கதிர்த்த நகைமன்னுஞ் சிற்றவ்வை மார்களைக் கண்பிழைப்பித் தெதிர்தெங்கு நின்றெப் பரிசளித் தானிமை யோரிறைஞ்சும் மதுத்தங் கியகொன்றை யார்சடை யீசர்வண் தில்லைநல்லார் பொதுத்தம்ப லங்கொணர்ந்தோபுதல்வா எம்மைப்பூசிப்பதே. 396 புதல்வனது திறம்புகன்று | மதரிக்கண்ணி வாட்ந்தவிர்ந்தது.
46. கலவியிடத்துTடல் சிலைமலி வாணுத லெங்கைய தாக மெனச்செழும்பூண் மலைமலிமார்பினுதைப்பத்தந்தான்றலை மன்னர்தில்லை உடமலி வேற்படை யூரனிற் கள்வரில் என்னவுன்னிக் கலைமலி காரிகை கண்முத்த மாலை கலுழந்தனவே. 397 சீறடிக் குடைந்த நாறிணர்த் தாரவன் தன்மை கண்டு பின்னுந் தளர்ந்தது.
47. முன்னிகழ்வுரைத்துடறிர்தல் ஆறுார் சடைமுடி அம்பலத் தண்டரண் டம்பெறினும் மாறுார் மழவிடை யாய்கண் டிலம்வண் கதிர்வெதுப்பு நீறுார் கொடுநெறிசென்றிச் செறிமென் முலைநெருங்கச் சீறுார் மறையதளிற்றங்கு கங்குற் சிறுதுயிலே. 398 முன்னிகழ்ந்தது நன்னுதற்குரைத்து மன்னுடனலூரன் மகிழ்வுற்றது.
الصـ 136 ܠܐ

N
48. பரத்தையைக்கண்டமை கூறிப்புலத்தல் ஐயுறு வாற்நம் அகன்கடைக் கண்டுவண் டேருருட்டும் மையுறு வாட்கண் மழவைத் தழுவமற்றுன்மகனே மெய்யுறு வாம் இதுன் னில்லே வருகென வெள்ளிச்சென்றாள் கையுறு மான்மறி யோன் புலியூரன்ன காரிகையே. 399 பரத்தையைக் கண்ட பவளவாய் மாதர் அரத்த நெடுவேல் அண்ணற் குரைத்தது.
49. ஊதியமெடுத்துரைத்துஉளடல்தீர்த்தல் காரணி கற்பகங் கற்றவர் நற்றுணை பாணரொக்கல் சீரணிசிந்தா மணியணி தில்லைச் சிவனடிக்குத் தாரணி கொன்றையன் தக்கோர் தஞ்சங்க நிதிவிதிசேர் ஊருணி உற்றவர்க் கூரன்மற் றியாவர்க்கும் ஊதியமே. 400 இரும்பரிசில் ஏற்றவர்க்கருளி விரும்பினர்மகிழ மேவுதலுரைத்தது.
திருச்சிற்றம்பலம் திருக்கோவையார் முற்றிற்று.

Page 74
A------------------R
நன்றி நவிலல்
எமது குலவிளக்கு
அமரர் பொன். பாலசுந்தரம் அவர்கள் நோயுற்ற ஞான்று உதவி நல்கியும், அன்னார் அமரத்துவம் எய்திய ஞான்று அன்னாரின் ஈமக்கிரியைகளிற் பங்குகொண்டும் எமக்கு ஆறுதல் கூறித் தேறுதல் வழங்கியும் அனுதாபந் தெரிவித்தும் ஏனைய வழிகளில் உதவி நல்கியும், அந்தியேட்டி சபிண்டீகரணக் கிரியைகளிற் பங்கேற்றும் எமக்குத் துணைநின்றோர்
அனைவருக்கும் எமது உள்ளாந்த நன்றிகள்.
இங்ங்ணம்
மனைவி, மக்கள். மருமக்கள். பேரப்பிள்ளைகள்.
لمحے
− \
 


Page 75
சிங்கைமாப்பாண முதலி
முருகுடையார்
நாகமுத்து
முருகேசு (ஈத்தர்)
--
வள்ளிப்பிள்ளை
Π - 1. T
வேலுப்பிள்ளை தங்கம்மா பொன்னு அன்னம் நாகமுத்து அப்பாப்பி
+ -- + மண்டலிவர் செல்வர் முருகேசு
வைத்தியநாதர் + பொன்னம்மா
ரத்தினசபாபதி நாகராசா புனிதவதி சிவநாதன் அருள்நாதன்
பாலசுந்த
H
பிறேம்றாஜ் சாந்தறாஜ் t
十 --
யெஜவதனி சுகந்தி ஜெ
பார்த்திபன்
காண்டீபன்

)EFITE
வேலுப்பிள்ளை
சின்னப்பிள்ளை s
m வள்ளியம்மை I சுப்பிரமணியம் ஆச்சிக்குட்டி சின்னம்மா கந்தையா பொன்னம்பலம் சின்னத்தங்கம்
+
வேலுப்பிள்ளை
பொன்னம்பலம் + சின்னத்தங்கம்
தளையசிங்கம் பாலசுந்தரம் அரியநாயகம் ராசலட்சுமி பாலலட்சுமி சறோஜினிதேவி
ரம் + புனிதவதி
I HHH றேமலதா மஞ்சுளா தனறாஜ்
-- யச்செல்வன்
ஆதர்ஷா ,

Page 76
靛
憎 f
蠱 』
 

蠱 煎
敷、 リ。