கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழர் வரலாறு

Page 1
இலக்கிய வித்தர் 6/62D /5/70-627
 


Page 2
ஆசிரியர் பற்றி.
சாமிமலை சிங்காரவத்தையில் சிவகங்கையைச் சேர்ந்த வீரம்மா மதுரை மேலுரைச்சேர்ந்த கருப்பையாகணக்குப் பிள்ளை தம்பதியினருக்கு 9 -5-1944 ல் மகனாகப் பிறந்த நல்லையா, சாரல் நாடன் என்ற பெயரிலேயே எழுத்துலகில் பிரபல்யம் பெற்றார். இவருடன் பிறந்த ஐவரும் சகோதரிகள்.
தன் ஆரம்பக் கல்வியை அப்கொட், மின்னா தோட்டப் பாடசாலையிலும் , கனிஷ்ட சிரேஷ்ட, பல்கலைக்கழகப் புகுமுகம் வரையிலான கல்வியை ஹட்டன், ஹைலேண்ட்ஸ் கல்லூரி யிலும் பயின்றார்.
ஒராண்டுக்காலம் கண்டி, அசோகா ஹாஸ்டலில் பணிபுரிந்துவிட்டு, சாமி மலை குயில்வத்தையில் தேயிலைத் தொழிற்சாலை அதிகாரியாகத் தொழில் பயின்று, பூண்டுலோயா டன்சினேன் , புசல்லாவை நியூபீக்கொக்,கொட்டகலை டிரேய்டன், பத்தனை கெலிவத்தை ஆகிய தோட்டங்களில் முப்பத்தைந்து ஆண்டுகள்தலைமை தேயிலைத்தொழிற் சாலை அதிகாரியாகக் கடமையாற்றி 2000ம் ஆண்டு ஒய்வுபெற்றார்.
பணிபுரிந்த காலத்தில் தோட்ட சேவையாளர் காங்கிரஸ் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளராக நான்கு ஆண்டுகள் கடமை புரிந்தார்.
(c5?. 9). Uô`)


Page 3

மலையகத் தமிழர் வரலாறு
சாரல்நாடன்
சாரல் வெளியீட்டகம் கொட்டகலை
a
گھر

Page 4
Publication N} =ll
Tife
Author
CopyRight
Fir Posisier
Page,
Philiyhéry
Prirlfry
Pri:
BMW M)
Malayaga Thanila Waralaroo
Sıral Nadin
Saralaga T1
Kotagala
Autho T
Nyember 2000)
xvi + 228
Säral Publislers, No 7, Rosita Shopping Complex, Kotagala
Unie Arts (Pyt) Ltd. 48. Bloellendhal Road, ColombK - 13.
R. 3'-
955 - 8589 - 11 - X

s
எனக்கு வரலாறு கற்பித்த பி. ஏ. செபஸ்தியன் அவர்களின் நினைவுக்கு இந்நூல் சமர்ப்பணம்

Page 5

مور92C2لرعي
நூலில் இடம்பெற்றிருக்கும் படங்கள்
હૈં
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
பக்கம்
9Cs
ب- 17
31 -
33 -
34 マ
53 -
57 -
94 -
95 -
ܚܗ 96
40 -
145 -
204 -
215 -
218 -
219 -
கண்டி மன்னரும், மகாராணியும்
மெட்ராஸ் பிரசிடென்சியில் சிலோன் லேபர் கமிஷன் அமைந்த இடங்கள்
ரயில்வே பாதை அமைக்கும் இந்திய தொழிலாளர்கள் ரயில்வே பாதை பணியில் இந்திய தொழிலாளர்கள்
முதல் ரயில் பயணம்
ஜேம்ஸ்டெயிலர், ஜோர்ஜ்பேர்ட், ஹென்றி விகம்
1940ல் கொழுந்து ஏற்றிச்செல்லல்/வேட்டைப் பிரியர்
கோப்பி, கொக்கோ, தேயிலை பறிக்கும் பெண்கள்
முன்னாள் சட்டசபை உறுப்பினர்கள் சிலர்
முதலாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கு வழங்கப்பட்ட சின்னங்கள்
முதலாவது நாடாளுமன்றத்தில்
மலையகப் பிரதிநிதிகளும், செனட்டர்களும்
வீராசாமி-வேலாயுதன் கடைசிக்கடிதம்
தற்காலிகக் குழு
நடைமுறையிலிருந்த 'டின் டிக்கெட்டும், தோட்டங்கள் உற்பத்தியை சந்தைப்படுத்த பயன்படுத்திய அடையாளங்களும்
அமரர் பெரி. சுந்தரம்
அமரர் அப்துல் அஸிஸ் &
அமரர் வீ.கே.வெள்ளையன்
-(Gre
i.

Page 6
உள்ளுறை
1.
. நிலவரி, ரயத்துவாரிமுறை, பஞ்சம், தமிழர்கள் கடல் கடத்தல்
2. மலையகத் தமிழரின் அரசியல் அனுபவங்கள்
3. நாடற்றோர் பிரச்சனை
4. மறக்க முடியாத நிகழ்வுகள்
5. மலையக மக்கள் சமூகம்
6. தோட்டப்புறக் கல்வி, வீடுகள், காணிகள்
7. மாறிவரும் நிலமைகள்
8. மலையக மக்களின் வளர்ச்சிப் படிகளில்
9. முடிவுரை
10. Bibliography
- 1
ー55
-127
-137
-159
-167
-97
215-۔
-221
-223

என்னுரை
இராமாயணமே இலங்கைக்கும் மலையகத்துக்குமிடையில் கிடைக்கும் மிகத் தொன்மையான ஆதாரம். ஹரி வில்லியம்ஸ் எழுதிய இலங்கை நூலின்படி கி. மு. 2386ல் தான் இராமர் இலங்கையை வென்றார். பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் பிறகே, இன்று மலைநாட்டின் அழகுக் காட்சிகளில் ஒன்றாய்த் திகழும் படிக்கட்டு விவசாயம் தோன்றி வளர்ந்தது. இந்த விவசாயமுறை மூவாயிரம் அடி உயரத்திற்கு மேற்பட்ட மலைச்சரிவுக்கு ஏற்றதானதல்ல. எனவே, ஆங்கிலேயர் காலம் வரை மூவாயிரம் அடிக்கு மேல் உயர்ந்த மலைகளில் குடியேற்றம் இருக்கவில்லை.
இராவணன் சிறந்த சிவபக்தன் என்று இராமாயணம் கூறுகிறது. அவனது காலத்தில் இலங்கையில் சிவனாலயங்கள் இருந்தன. அவன் தான் செல்லுமிடமெங்கும் சிவலிங்க மொன்றை எடுத்துச் சென்று முறைப்படி பூசித்து வந்தானென்றும், நூற்றெட்டு நாமங்களால் அர்சித்தானென்றும், அதனை வழிபட்ட பின் எடுத்த கருமங்கள் யாவினும் வெற்றி பெற்றானெனவும் இராமாயணத்தின் மூலமே அறிகிறோம். பெளத்தம் இலங்கைக்கு வருவதற்கு முன்பே இலங்கையில் இந்து சமயம் வளர்ச்சி பெற்றிருந்தது என்பதற்கு மகாவம்சமே ஆதாரமாக அமைகிறது. துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன் கதிர்காமத்தைப் புனருத்தானம்
செய்ததையும் மகாவம்சத்தின் மூலமே நாமறிகிறோம்.
மகாவம்சத்தின் மூலம் இந்த நாட்டில் இந்து சமயம் இருந்தது என்பதையும், கதிர்காமத்தின் இருப்பையும் அறிகிற நம்மால், அதற்குப் பின்னால் சென்று கதிர்காமம் எப்போது ప్స్
சிவனொளிபாதம் எப்போது இலங்கை மக்களால் வணக்கஸ்தலமாக
CS ஆரம்பிக்கப்பட்டது என்பதைக் கூற முடியாதிருக்கிறது.
u(Gra V-6)

Page 7
હૈં
rSCs کوچی(Cمون
பத்தொன்பதாம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்த இந்திய
இந்துக்களின் வெளிநாட்டுக் குடியேற்ற முயற்சியின் வரலாறு சுவை மிகுந்ததாக, பண்பாட்டைப் பரப்பும் நோக்கில் அமைந்து, பாலித்தீவு, யாவா, சுமாத்திரா, போர்னியோ, இலங்கை முதலிய இடங்களில், இந்தியக் கலையின் வரலாற்றோடு இணைந்துள்ளது. இலங்கை வந்த இந்திய வம்சாவளியினரின் பொருளாதாரக் குடியேற்றம் இதற்கு
மாறானது.
வம்சாவளியினரைப் பற்றியும் இதே நிலைமைதான். பண்டைக்கால
இந்தியாவில் ஏழ்மையில் உழலும் மாந்தர்களை எதற்காக இலங்கைக்கு வரச் செய்ய வேண்டும்? கல்வியில் உயர்ந்த, பயிற்றுவித்த தொழிலாளர்களாயிருந்தால் அவர்களின் வருகை இலங்கைக்கு மேலதிகமான பயனைத் தந்திருக்கும், என்று எண்ணும் சிங்களவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இந்திய நாகரிகம் முதன் முதல் இலங்கையில் தான் பரவியது என்பதை ஏற்றுக் கொள்பவர்கள், இந்திய வம்சாவளியினரின் வருகையையும் அதே கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும். இலங்கையின் வடபகுதியில் வாழ்ந்த சைவ இந்து தமிழர்களிலிருந்து வேறுபட்ட தென்னிந்தியர்களாகவே இவர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். நாளாவட்டத்தில் உடல் உழைப்புத் தொழிலாளர்களாக இவர்கள் இனம் காட்டப்பட்டனர்.
இலங்கையைக் கைப்பற்றிய ஆங்கிலேயருக்கு இந்நாட்டில் பெற்ற வருமானம் ஆட்சிச் செலவுக்கும், படைச் செலவுக்கும் போதாது இருந்தமை பெருங் கவலையைத் தந்தது. மலைநாட்டின் மரகதப் பசுமை அவர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏராளமான பொருட் செலவில் எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில் தென்னிந்தியாவிலிருந்து தமிழர்களைக் கொண்டுவந்தனர். மழையையும் மலையையும் கண்டஞ்சாது, பயிர்களைத் தமது உயிர்களாய் காத்து வளர்த்த தமிழ் உழைப்பாளிகளால் தான் இலங்கையின் பொருள் வளம் பெருகியது.
இந்த கடின உழைப்பால் பெற்ற பணத்தால் தான், இலங்கையில்
நல்ல பாதைகளும், புகையிரதங்களும், மருத்துவ சாலைகளும்,
} துறைமுகங்களும், வங்கிகளும், வணிக மனைகளும், பிற தொழில்களும்
i.

9Cs موG2لادعي
હૈં பெருகின. காலனித்துவ ஆட்சி மறையத் தொடங்கியதிலிருந்து இந்த உண்மையையும் இலங்கையர்கள் மறக்கத் தொடங்கினர். சுதந்திரம்
புதிதில் தான் இழைத்த ஒர் அரசியல் தவற்றினை இன்று
ஐம்பத்தைந்து ஆண்டுகளின் பின்னால் பிரஜாவுரிமை திருத்த மசோதா ஒன்றைக் கொண்டு வந்து இலங்கை நாடாளுமன்றம் திருத்திக் கொண்டிருக்கிறது.
1948 இல் இவர்களுக்கெதிரான கருத்துக் கொண்ட வட பகுதி அரசியல் வாதிகள் இப்போது இல்லை. ஐம்பதாண்டுக் காலம் இவர்களை அரசியல் அனாதைகளாக்கியதன் பலாபலன்களை இன்று பலரும் உணர்ந்துள்ளனர்.
‘எங்கள் உழைப்பினால் தான் தங்கம் விளைகிறது, ஆனால் தங்கத்தை நாங்கள் வாழ்க்கையில் கண்டதில்லை' என்றுமொரிஸியஸ் நாட்டு இந்திய வம்சாவளி கவிஞன் விசுவாமித்திர கங்கா அசுதோஸ் பாடுகிறான்.
கோப்பி அரையுண்டு, நொறுக்குண்டு, வறுக்கப்படுகின்றன. உழைத்து
வாடி வதங்கிப்போன என் கறுப்பு நிறத்தைப்போல, அறுவடைக்குக் காத்திருக்கும் கோப்பி விதைகள் சாறாகி நீரில் வடிவதோ என் குருதி நிறத்தில்' என்று மனம் வெதும்பி பாடுகிறான் அங்கோலா நாட்டுக் கவிஞன் அன்தோனியா ஜசின்ரோ.
தமது நாட்டை விட்டு பிழைக்க வழிதேடி பிற நாடு சென்ற எல்லா மக்களும் இப்படித் துன்பத்தை அநுபவித்தார்கள்தாம். ஆனால் இலங்கையில்போல ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஒதுக்கி, ஒடுக்கப்பட்ட வரலாறு வேறெங்கும் நடக்கவில்லை.
அர்ச்சிக்கப்பட்டனர். இவைகளையெல்லாம் தாங்கிக் கொண்டு இவர்கள்
હૈં இந்த கால இடைவெளியில் இந்த மக்கள் பல பெயர்களால்
தம்மைத் தாமே மலையகத் தமிழர் என்று அழைத்துக் கொண்டனர்.
i. g
& g
Χί

Page 8
கடல் கடந்து இலங்கை வந்த நமது மூதாதையர் அநுபவித்த இன்னல்களை இன்னும் சரித்திரப் பூர்வமாக நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. டச்சுமொழியில் உள்ள ஆதாரங்களை அகழ்ந்தெடுப்பதன் மூலம் இது சாத்தியமாகலாம். நமது காலத்தில் இவ்வரலாற்றை எழுத நாம் முனையாதிருப்பது, வரலாற்றை மறக்கவும், மறைக்கவும், திரிவுபடுத்தவும் உதவிய குற்றத்துக்குக் கொப்பானது.
நம்மைப்பற்றி ஆங்கிலத்தில் பல நூல்கள் வீழுதப்பட்டுள்ளன. அவைகளை விலை கொடுத்து வாங்கிப் படித்தாலும் நம்மால் நமது வரலாற்றை அவைகளில் காண முடிவதில்லை. அவைகள் ஒரு குறித்த நோக்கத்துக்காக எழுதப்படுகின்றன. எழுதியவர்களின் பட்டப்படிப்பின் ஒரு கல்வித் தேவையை பூர்த்தி செய்வதற்காக அவைகள் எழுதப்படுகின்றன. பட்டம், பணச்சன்மானம், பதவி உயர்வு என்று எழுதியவர்களுக்கு கிடைப்பதால், அதை எழுதியவர்கள் இதய கத்தியோடு மேலதிக தேடுதல்களை மேற்கொள்வதில்லை. ஜி. ஏ. ஞானமுத்து 1977ல் எழுதிய “இலங்கை இந்தியர்களும் கல்வியும்” என்ற நூலைத் தொட்டெழுதாது மலையகக் கல்வி ஆய்வுகள் இன்றும் மேற்கொள்ளப்படுவதில்லை என்ற உண்மை இதை வெளிக்காட்டும்.
மலைநாட்டுத் தியாகிகளில் தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சிகளில் பலியானவர்களே அதிகம். அவர்களில் ஒருவரின் படத்தையோ, பிறந்த திகதியையோ எந்த தொழிற்சங்கத்திலும் பெற முடியாதிருப்பது மிகப் பெரிய அவலம். வாய்மொழிமூலம் வரலாற்றை இளந்தலைமுறையினருக்கு வழங்கலாம் என்றிருந்த நிலைமை இன்று மாறிவருகிறது; வரலாற்று நிகழ்வுகளை அறிந்த முதியவர்களையும் இப்போது காண்பதரிதாகிறது. எழுத்தின் மூலமாக அவைகளை ஆவணப்படுத்தும் ஒரு பாரிய பணி நம்முன் காத்துக்கிடக்கிறது. இன உணர்வும் தேசியமும் ஒரு குறுகிய வட்டத்துக்குள் அடைபட்டு கிடக்கும் நமது காலக் கட்டத்தில் நமது வரலாற்றை நாம் அறிந்திருத்தல் அவசியம்.
i.
& g
xii

5 மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை நம்முடைய வரலாற்றை & எழுத முனைந்ததுண்டு. அவருக்குப் பிறகு பல்கலைக்கழக படிப்பைப்
பெறும் பாக்கியம் பலருக்கு கிடைத்திருக்கிறது. அவர்களின் கவனம்
வெவ்வேறு திசைகளில் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்து விட்டன. அவர்களில் ஒருவராவது சமூக உணர்வுடன் இப்பணியினை முன்னெடுத்திருக்கலாம். அப்படிச் செய்யாதது கவலைக்குரியது. கடந்த ஐம்பதாண்டுகளாக நம் சமூகத்தில் இந்தக் குறை நிலவுகிறது. இதை நன்குணர்ந்தவர்களில் ஒருவர் பேராசிரியர் கா. சிவத்தம்பி “ உமது சமூகத்தைச் சார்ந்த படிப்பாளிகளிடம் நான் நம்பிக்கை இழந்து போனேன். அவர்கள் எதையும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. உம்மைப் போன்றவர்கள் தான் எதையேனும் செய்ய வேண்டும்” என்று ஒரு முறை என்னிடம் கூறினார்.
மலையகத் தமிழர் வரலாறு என்ற இந் நூலினை, இத்துறையில் புலமைப் பெறாத நான்; சாதாரண வாசகனும் புத்தகத்தைப் படித்து முடித்ததும் வரலாற்றறிவினைப் பெற்றிடல் வேண்டும் என்ற நோக்கிலேயே எழுதியுள்ளேன். வரலாற்றைச் சரியாக இனம் கண்டு ஒர் ஆரம்பத்தை நமக்கு அளித்தவர் கோதண்டராம நடேசய்யர். அவரிறந்த ஒரு நான் காண்டு இடைவெளிக்குப்பின்னர் அதைத் தொடர்ந்தவர் தொண்டமான். இன்று நாம் இலங்கைத் தீவில் நமது மொழி, கலை, கலாசாரம் என்று கூறிக் கொள்வதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.
வரலாற்றை உருவாக்குபவர்கள் மனிதர்கள், வரலாறு மனிதர்களை உருவாக்குகிறது. இந்த பிரசித்தமான கருத்தோட்டங்கள் நமக்குப் புதியவை அல்ல. நமது வரலாற்றை நாம்தான் உருவாக்கினோம். கடலை கலத்தில் கடந்த முதல் மனிதன் ஆரம்பித்த வரலாறு இன்னும் தொடர்கிறது. பொருளாதார இடைஞ்சல்கள், அரசியல் நெருக்கடிகள்,
கலாசார மேவுதல்கள், இன நெருக்குதல்கள், மொழி மேலாண்மைகள், வர்க்க முரண்பாடுகள் என்று பல விதமான குறுக்கீடுகளையும் மேலறுத்து
g நமது வரலாறு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது; வரவேண்டும். g
ഭGr t-60GN
xiii

Page 9
N-9C.s- گههDGEسومn
s
s }
நமது முன்னோர்களின் பல குணாம்சங்களை ஆங்கிலேயர்கள்
தமது நூல்களில் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
நெளிந்தோடும் நீர் வீழ்ச்சியில் அடிபட்டு, அறுபதடி பள்ளத்தில் வீழ்ந்து கிடந்த தமது துரையை , தேடி கண்டு பிடித்து உயிர்பிச்சைக் கொடுத்தவர்கள் மலையகத் தமிழர்கள்,
புதிதாக தோட்டத்தை வாங்கியவர்கள் தன்னையும், தனது சேவையையும் புறக்கணித்துவிட்ட நன்றி மறந்த செயலால் கவலையில் உயிர் துறந்த தமது துரையை, தமது தோள்களில் சுமந்து பலமைல்கள் நடந்து சென்றவர்கள் மலையகத் தமிழர்கள்.
தமது அதிகார உச்சத்தில் இருந்து கொண்டு “ஈழம் வேண்டுமா, முட்டை வேண்டுமா” என்று வன் செயலுக்குட்பட்ட இரத்தினபுரியில் கேட்ட பொழுது தமக்கு தொழில் வேண்டும் என்றவர்கள் மலையகத்
தமிழர்கள்.
குட்டக்குட்ட குனிந்து வாழ்வது தவறு என்றுணர்ந்து, தலை
நிமிரத் தொடங்கி தலவாக் கொல்லையில் ஒரு வரலாற்றை உருவாக்கி தாக்குவதே தற்பாதுகாப்புக்கான ஒரே வழி என்று தம் தலைவர்களை கூற வைத்தவர்கள் மலையகத்தமிழர்கள்.
நமது மூதாதையர்கள் காட்டு வழியாக நடந்து வரும் வழியில் பசியாறுவதற்கு கஞ்சி தயாரித்தனர். மூன்று கற்களை அருகிலிருந்த மரவேரில் வைத்து அடுப்பு மூட்டினர். பானையில் சூடேறியது தான் தாமதம் அடுப்பு கற்கள் அசைந்து கொடுத்தன. பானைகள் அடுப்பில் உடைந்து வீழ்ந்தன. வேரென அவர்கள் எண்ணியது உண்மையில் ஒரு மலைப்பாம்பு, மக்கள் அலறி ஒடித்தப்பினர். இப்படி கூறும் பாட்டிமார்கள் தான் நமது ஆதார நூல்கள்; நமது சமூகத்தில் குறிப்புகளை எழுதி சேகரித்து வைக்கும்பழக்கம் அறவே இல்லை.
s
è
ș
Χίν

5
கொட்டகலை ഭ്" -60GN
9Cs- سور92C2لرعي
நாடாளுமன்றத்தில் ஐம்பதாண்டுகளுக்கு முன் நடந்த கதைகளை
நாம் உழைப்பாளர் சமூகத்தினர் தாம்; உழைப்பதற்கு மாத்திரம் நாம் என்று விதி ஒன்றும் கிடையாது. நமது விதியை நாமே தீர்மானிப்போம்.
பிறர் கூறுகையில் நமது பிரதிநிதிகள் பதில் கூறமுடியாது விழிக்கிறார்கள்.
கல்லூரி நாட்களில் எனக்கு வரலாறு கற்பித்தவர்களில் தலையாயவர் திரு பி. ஏ. செபஸ்டியன். அந்நாட்களிலேயே பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியராக அவர் தம் மாணாக்கர்களுக்குக் கற்பித்துக் கொடுப்பதை ஒரு தவமாகவே செய்து வந்தார். அவருக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எம்மைப் பற்றி ஏராளமான வரலாற்றுத் தகவல்கள் பல புத்தகங்களில் மறைந்து கிடக்கின்றன. நான் படித்து அறிந்து கொண்டவைகள் எவருக்கும் பயன்படாது போய்விடுமோ என்று நான் பயந்து கொண்டிருந்த போதுதான் மத்திய மாகாண கல்வி அமைச்சர் மாண்புமிகு வேலுசாமி இராதாகிருஷ்ணன் மலையகத் தமிழர் வரலாறு எழுதும் பணியை என்னிடம் ஒப்புவித்தார்கள். எழுதுவதற்கான தூண்டுதலாக அது அமைந்தது. அவருக்கு என் இதயம் நிரம்பிய நன்றிகள்.
இந்நூலை கணினி வடிவில் அமைக்கும் பணியில் சிரமம் பாராது அயராது உழைத்த திருமதி பிரிந்தாவுக்கும், யுனி ஆர்ட்ஸ் நிர்வாக அதிபர் திரு. பொ. விமலேந்திரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
மிகுந்த அன்புடன் சாரல் நாடன் 3f - 10-2003
FtTravesLió 60 ரொசிட்டா வீடமைப்புத்திட்டம்
i.
&
XV

Page 10

LiLSLALSLSLSL ALLiLS LMLSL ASALSLALSLAMJLSLiLSSLALLMLMLSLSLiLLLSLLLLJSLSLAJSqiLSLSJLSLLLLL LSLSLLLSLSLLLJLSLSLSLSLSLiLSLSLL SJSSLSJLSLLLLLLLAJSLiLSAJSLSLAJSLAJSLLJLSLLLLS
நிலவரி
LLLSLAMLSSLLLLSLLASLSLLLLLSLLLLSLLASLLALLMLLLLLLLLJSLLSLLALLSSLAJSLMLLMASLLiLAJSSLLLLLJLLLLSLLAJSLLiLLLiLLLALJSLAJLSLSLAMLiLMLMSLLJJSSLiiLS
இந்திய காலனி யில் விவசாயிகளிடமிருந்து திரட்டப்பட்ட நிலவரியே பிரித்தானியரின் பிரதான வருவாயாக அமைந்திருந்தது. அவர்கள் வங்காளத்தில் புகுத்திய சாசுவத நிலவரி ஏற்பாடு, தென்னிந்தியாவில் புகுத்திய ரயத்துவாரிமுறை, வட இந்தியாவில் புகுத்திய மெளஜாவாரி முறை, அல்லது பஞ்சாபில் புகுத்திய பஞ்சாயத்து முறை முதலிய எல்லா நிலவரி முறைகளிலும் காலனி அரசு தனது பிரதான வருவாயைப் பெற்றுக் கொண்டது. அரைப் பட்டினி வாழ்க்கை நடத்திய விவசாயியிடம், வேளாண்மையை மேம்படுத்துவதற்கான சாதனங்கள் இருக்கவில்லை. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பரம்பரைபரம்பரையாக வந்த ஏர்பூட்டி விவசாயம் செய்வதுதான். நிலப்பிரபுத்துவக்கால இந்தியாவில் வரிவசூலிப்பு முறைகள் ஏர்பூட்டி விவசாயம் செய்வதற்கேற்ப தளர்வுடையதாக நிலைமைக்கேற்ப இயற்கைச் சீரழிவுக்காலத்தில் குறைத்தும் சில வேளைகளில் முற்றாகவே இல்லாதொழித்தும் இருந்தது. காலணி ஆட்சியிலோ வரி நிலையாக ஒரே விதத்தில் அமைந்திருந்தது. வரி வசூலிப்பதே அதிகாரிகளின் ஒரே காரியமாய் இருந்தது. காலனிக் கால இந்தியாவில், நிலப்பிரபுத்துவக் கால இந்தியாவிலிருந்ததை விட விவசாயிகளின் நிலைமை மோசமாகிவிட்டிருந்தது. ஆனால் விவசாயிகள் அளவு கடந்த வறுமைக்கு உள்ளாகிவிட்டபோது, அவர்களிடமிருந்து நிலவரி செலுத்துமளவுக்கு போதிய தொகைகள் வசூலிக்க ஜமீன்தார்களுக்கு முடியாது போயிற்று. இதனால் வரிபாக்கி செலுத்தப்படாததற்காக ஜமீன்தார்களின் பண்ணைகள் வலுவில் ஏலம்
போடுவதென்பது பொது நிகழ்ச்சியாக ஆகிவிட்டது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் ஏஜெண்டுகளும், நீதிமன்ற அலுவலர்களும் செல்வாக்குள்ள வட்டித் தொழிலாளர்களுமான இந்தியர்கள் இவ்விதம் ஏலத்துக்கு
வரும் நிலங்களை மலிவான விலைக்கு வாங்கினார்கள்.
மலையகத்தமிழரின்வரலாறு 1

Page 11
ரயத்து வாரிமுறை
“ரயத்து வாரிமுறைப்படி பிரித்தானியர் ஜமீன்தார்களை விடுத்து மிராசுதார்களையும் சிலவக்ையான விவசாயிகளையும் நில உடமையாளர்களாக ஒப்புக் கொண்டார்கள். இந்த விவசாயிகள் மிராசுதார்களின் உரிமைகளைப் பெற்றிருக்காவிட்டாலும் நேராக அரசாங்கத்துக்கு நிலவரி செலுத்திவந்தார்கள். ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பே சில இடங்களில் மிராசுதார்களில் சிலர் நிலப்பிரபுத்துவ மேற்குடியினராக உயர்ந்தார்கள். சில இடங்களில் ஒரு கிராமம் முழுவதும் ஒரு மிராசுதாரின் ஆதிக்கத்தில் வந்துவிட்டது. அவன் கிராமத்திலிருந்து நிலவரியை முதலில் அரசாங்கத்துக்காகவும் பின்னர் தனது சொந்தப் பயன்பாட்டுக்காகவும் வசூலித்தான். இதன்மூலமே அவன் சிறு நிலபிரபு ஆனான். அவனுடைய நிலம் ஆங்கிலேயர்களால் தனியார் நிலவுடமை ஆக்கப்பட்டது. கிராமத்தின் வறிய, முழு உரிமை இல்லாத வட்டத்தினர் (“வெளியிலிருந்து வந்த” குடியானவர்களில் பெரும் பகுதியினர் அடிமைகள், தீண்டத்தகாத வகுப்புக்களைச் சேர்ந்த கம்மியர்கள் ஆகியோர்) முன்பு தங்கள் பொறுப்புக்களைச் சரிவர நிறைவேற்றி, தங்கள் நிலப்பகுதிகளுக்கு உரிய வாடகையை சமுதாயத்தலைமைக் குழுவுக்குச் செலுத்தி வந்த வரையில் அவர்களை நிலத்திலிருந்து வெளியேற்ற முடியாது இருந்தது. இப்போதோ, பெரும்பாலான இடங்களில் அவர்கள் நிலத்தின் மீது தங்கள் உரிமையை இழந்து, உரிமையற்ற பாட்டக்குத்தகைக் காரர்கள் ஆகிவிட்டார்கள். இவர்களது நிலப்பகுதிகளின் குத்தகைப் பணத்தை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தவும் அவர்களை விரும்பிய போது நிலத்திலிருந்து வெளியேற்றவும் முடிந்தது” என்று “19ம் நூற்றாண்டின் முற்பாதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி’ என்ற கட்டுரையில் கே. ஏ. அன்தோனவா குறிப்பிடுகிறார்
இவ்விதம் கிராம சமுதாயத்திற்குச் சொந்தமாயிருந்த மேய்ச்சல் தரைகளும் தரிசு நிலங்களும் ரயத்து வாரி முறையின்படி அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டன. தங்கள் கால் நடைகளை இலவசமாக மேய்க்கவும்,அடுப்புஎரிப்பதற்குப்புதர்களை வெட்டிச் சேகரிக்கவும் இருந்த வாய்ப்பை விவசாயிகள் இழந்து விட்டார்கள்.
2 மலையகத்தமிழரின்வரலாறு

பஞ்சம்
ஆங்கில ஆட்சியின் பயனாக முதலில் பழைய நிலபிரபுத்துவ வம்சங்கள் வீழ்ந்தன, நிலபிரபுக்களின் படைகளும் பெரும் பெரும் எண்ணிக்கையிலான பரிசனங்களும், பணியாட்களும் கலைக்கப்பட்டார்கள். இந்தியாவின் நிலபிரபுத்துவ வட்டாரத்தினர் பல நூற்றாண்டுகளாகப் பழகி இருந்த வாழ்க்கை முறை முழுவதும் மாறி விட்டது. போரினாலும், சீரழிவினாலும் ஆங்கிலேயர் வருவதற்கு முன்பு கட்டப்பட்ட பாசனக்கால்வாய்த் தொகுப்பு பாழடைந்ததாலும் தென் இந்தியாவில் மொத்த உழவு நிலபரப்பு குறைந்தது. சென்னை மாகாணத்தைச் சுற்றிச் சுதந்திர இந்திய அரசுகள் இருந்தன. தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்த கம்மியர்கள் அவற்றுக்கு ஒடித்தப்பிக் கொண்டனர். அடிமைகள் தங்களின் வாழ்வை எண்ணிப்பார்க்கவே அஞ்சினர். சிறுவிவசாயிகளின் பண்ணைகளிலிருந்து விளைச்சல் முழுவதையும் பிடுங்கிக் கொண்டனர். அதற்கான விலைகள் மிகவும் குறைவாக இருந்தபடியால், விவசாயிகளால் தங்கள் கடன்களைத் தீர்க்க ஒருபோதும் முடியாதிருந்தது. பெற்றோர் பட்ட கடன்களைத் தீர்க்க பிள்ளைகள் உழைக்க வேண்டி இருந்தது. ஒவ்வொரு பண்ணை முதலாளியும் தலை வெட்டிகள் கும்பல்களை வைத்திருந்தான். இந்தக் கொலைகாரர்கள் விவசாயிகளைக் கவனித்து, அவர்கள் தப்பி ஓடாதவாறு இழுத்து வந்தார்கள். இந்த நிலமையில் நாட்டின் பல்வேறு பிரதேசங்களில் ஏழுமுறை பஞ்சம் ஏற்பட்டுப் பதினைந்து லட்சம் உயிர்களைக் கொள்ளை கொண்டது.
1578-1685 வரை ஏழாண்டுகள் நீடித்த பஞ்சம் தாதுவருடப் பஞ்சம் என்பது. இது குறித்து ஜே. எஸ். கான்ட்லர் என்பார் எழுதியுள்ளார்,
புலிகளும் மனித கூட்டத்தில் நடமாடின. ஆடுமாடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 100 பேர்கள் உள்ளக் கூட்டத்தில் ஒரு புலி புகுந்து ஒருவரைத் தாக்கித் தூக்கிச் சென்று விடும். ஒர் ஊரில் ஒரு சில நாட்களுக்குள் எண்ணற்ற ஆடுமாடுகள் கொல்லப்பட்டதுமல்லாமல் எழுபது மனிதர்களும் மறைந்துவிட்டனர். பீதியால் கலங்கிய மக்கள்
மலையகத்தமிழரின்வரலாறு r 3

Page 12
இரவில் தம் வீட்டைச் சுற்றி நெருப்பு வளர்த்துக் கொண்டே தூங்கினர். இரவில் வெளியூர்ப்பயணம் செல்வதில்லை. புலிகள் ஓநாய்கள் அச்சமற்று திரிந்தன. வெட்டுக்கிளிகள் பயிர்களை மொட்டையடித்தன. நாடு முழுக்க நச்சுப் பூச்சிகள் பரவின. இறந்துவிட்டவர்களின் சடலங்கள் புதைக்கப்படாமல், ஆற்றின்கரைகளிலே எறிந்து காணப்பட்டன.”
பஞ்சத்தால் பரதவித்தவர்கள் கடல்தாண்டிய அண்டை நாட்டில் சுபீட்சம் மிகுந்த வாழ்வு இருக்கிறது என்பதை அங்கு போய்வந்தவர்கள் வாழும் வாழ்க்கையைக் கண்டபின்னர் நம்பினார்கள். தமது குடும்பத்தின் பெண்பிள்ளைகளை வீட்டிலேயே விட்டு விட்டு தாமொருவராவது கடல் கடந்து சென்று இலங்கையில் பிழைப்பதற்கேதேனும் வழி இருக்கிறதா என்பதை பார்த்து வர விரும்பினார்கள். ஆண்களை மாத்திரமே கொண்டமுதல் கூட்டத்தினர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தார்கள். அவர்கள் கடலைக் கடப்பதற்கு பாவித்தது கட்டுமரத்தையும், பன்றிபடகுகளையுமே, அதைச் செலுத்திவந்தவர்கள் இந்திய முஸ்லிம்கள்! இலங்கைக் கரைக்கு வந்தவர்கள், கண்டிச் சீமைக்கு தமது பயணத்தைத் தொடர்ந்தனர். கண்டிச் சீமை கடற்கரையிலிருந்து இருநூறு மைலுக்கப்பால் உள்ளதுTரம், இடையில் அமைந்ததெல்லாம் வனாந்திரம்.
தூத்துக்குடி தட்டப்பாறையிலிருந்து வந்த கோஷ்டியினர் கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் இறங்கி மாரை, ராகமயில் தங்கி காலி , குருநாகல், கேகாலைப் பகுதிகளுக்குப் போனார்கள்.
தலைமன்னார் மன்னாருக்கு வந்த கோஷ்டியினர் பேசாலை வழியாக மாத்தளை, கண்டிக்கு போனார்கள். மாத்தளை மாவட்டத்திலும் கோப்பித் தோட்டங்கள் திறக்கப்பட்டன. மாத்தளையிலும் கண்டியிலும் இவர்கள் தங்கிய இடங்களில் கோவில்களை அமைத்து, கும்பிட்டு புதிய இடத்தில் தங்களின் வாழ்வு சிறக்க மாரியம்மனின் துணையை நாடினர். வில்வமரத்துக்கடியில் ஒரு கல்லை நட்டு வைத்துத் தொடங்கிய இந்த மாரியம்மன் ஆலயம் முதலில் மக்கள் தங்கிப் போகும் இடமாக ஒர் அம்பலமாக இருந்தது. ஆயிரக்கணக்கில் வருபவர்கள் அந்த இடத்தில் தங்கி, தங்கள் இதய தெய்வமான மாரியம்மனை வழிபட்டு பிரிந்தது, நாளாவட்டத்தில் அங்கே ஒரு குடில் தோன்றக் காரணம். இவ்வாறாக ஆரம்பிக்கப்பட்ட மாத்தளை மாரியம்மன் கோவில் 1850 வாக்கில் திரு. சுப்பாபிள்ளை அவர்களால் கோவிலாக கட்டப்பட்டது என்று பதிவுகள் கூறுகின்றன. தமிழகக் கரையிலிருந்து பயங்கரப் படகுகள் மூலம் கடலைக் கடந்து கொடிய கானகங்களுக்கிடையே கால்நடையாய் உயிர் தப்பியதற்காக நன்றி கூறும்
4 மலையகத்தமிழரின்வரலாறு

முதல் தெய்வம் பூரீ முத்துமாரியம்மன். மாரியம்மன் ஆலயங்கள் மாத்தளையில் 27, கண்டியில் 57, நுவரெலியாவில் 197, பதுளையில் 36, மொனராகலையில் 7 என்று அமைந்திருக்கின்றன. கண்டி ராசாக்கள் காலத்திலேயே சிறப்புற்று விளங்கிய கட்டுக்கல்ல பிள்ளையார் கோவிலும் ஆயிரக்கணக்கில் வந்த தொழிலாளர்கள் காலத்தில் மக்கள் கூடுமிடமாகி பிரசித்தம் பெற்றது. வந்த சிறு தொகையினரைக் கொண்டே முதல் கோப்பித் தோட்டம் கண்டியில் திறக்கப்பட்டது. இன்னும் சற்று அதிகமாகத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். அவர்களில் இருவரை அவர்களின் ஊருக்குச் சென்று ஐம்பது பேருடன், கூடுமானால் குடும்பமாக அழைத்து வரும்படி பார்ன்ஸ் கூறினார். அவர்கள் சென்று அழைத்து வந்தனர். அப்படி அழைத்து வந்த கூட்டத்தில் அதிகமான ஆண்களே இருந்தனர். ஆரம்பகாலங்களில் அவர்களது ஜிவியம் சொல்லொணாக் கொடுமைகளுக்குள்ளான ஒன்று. வாந்திபேதியும், பெரியம்மையும் பெருந்தொகையில் காணப்பட்டது. இந்த வியாதிகளுடன் போராடியவர்கள் தோட்டங்களுக்குச் செல்லும் கரடுமுரடான பாதைகளிலேயே சாகவிடப்பட்டனர். மற்றவர்களை இந்த நோய்கள் விரைவாகத் தொற்றக் கூடும் என்ற பயமே இதற்குக் காரணமாகவிருந்தது.
கோப்பிக் காலத்தில் இந்திய தொழிலாளர்கள் நிலையாக இங்கு வசிக்கவில்லை. கோப்பி பயிரிடவும், பராமரிக்கவும் தேவையான தொழிலாளர்களைத் தவிர்த்து மற்றவர்கள் வருவதும் போவதுமாகவே இங்கு இருந்தார்கள். இலங்கையில் கோப்பிச் சேகரிப்புக் காலத்தில் இந்தியாவில் வயல் வேலைகள் ஓய்ந்து போயிருக்கும். ஆகஸ்ட், செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் இந்தியாவுக்கு போய் வந்தனர்.
நீராவிக்கப்பல் இந்தியாவிலிருந்து கடலைக்கடக்க பாவிக்கப்பட்டது
1833ல், அப்படி முதன்முறையாகக் கடலில் வந்த நீராவிக்கப்பல் ரோயல் வில்லியம் (இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரயாணவசதிகள்)
டச்சுக்காரர்கள் இலங்கையைக் கைப்பற்றிய காலத்தில் அங்கு ஏற்கனவே கறுவா, ஏலம் பயிரிடப்பட்டிருந்தன. நெற்பயிர்ச் செய்கையில் ஈடுபடும் சிங்களவர்கள் கோப்பிச் செடியையும் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு வந்தனர்.
“உத்தம கொம்பனிக்கு மிகவும் தேவையாக இந்த இலங்கையிலேயுண்டு பண்ணின கோப்பிமரங்களைப் பிடுங்குண்டு பாழாய்ப் போகாதபடிக்கு 1721ம் ஆண்டு ஆவணி முதற் திகதியிலேயிந்தக் கோப்பியுண்டாக்குதலைக் கொண்டு பிரசித்தமாக்கின. கட்டளைப் பத்திரம்.”
மலையகத்தமிழரின்வரலாறு 5

Page 13
“தங்கள் தங்கள் தோட்டங்களிலாவது, தங்கள் கீழாகயிருக்கிறவர்களின் தோட்டங்களிலாவது, இதற்கு மேல் வாரவருக்குக் கையளிக்கப்போற நிலங்களிலேயாவது, மற்றுந் தோட்டங்களிலேயாவது உண்டாயிருக்கிற கோப்பிமரங்களை பெரிதானாலும் சிறிதானாலும் யாதொரு சம்பவிப்பானாலே பட்டுப் போறதைத் தவிரப் பிடுங்கினாலுந் தறித்தானாலுங் கொப்புக்களைப் பாழாக்கப்படாது.
(ஞானமுத்து விக்டர் பிலேந்திரன் எழுதிய இலங்கையில் தமிழ் கத்தோலிக்க இலக்கிய மரபு என்ற ஆங்கில நூலின் 127ம் பக்கம்)
“டச்சுக்காரர்களுக்கும் கண்டி மன்னருக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட 1766 வருடத்திய ஒப்பந்தத்தில், கம்பனிக்கு 1 ராத்தல் கோப்பி5 சதத்துக்கு விற்கப்படல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.” (இ. ரெயிமர்ஸ் எழுதிய டச்சு கண்டி ஒப்பந்தம் 1766 ஆங்கில கட்டுரை)
“ஆங்கிலேயர் கண்டியை கைப்பற்றிய காலமான 1815ல் ஆலயங்களுக்கருகேயும், அரண்மனை தோட்டங்களிலும் மகாவலி கங்கைக் கரைகளிலும், அருகேயிருந்த ஹங்குரகட்டே என்னுமிடத்திலும் கோப்பி வளர்ந்திருப்பதைக் கண்டார்கள். சிங்களவர்கள் கோப்பி இலைகளை கறி தயாரிக்கவும், அதன் மென்மையான மலர்களை ஆலயங்களில் தெய்வங்களுக்கு அர்ப்பணிக்கவுமே பயன்படுத்தினர்” (ஐ. எச். வெண்டன் டிரைசன் எழுதிய இலங்கையில் கோப்பி பயிர்ச் செய்கையின் வரலாறு என்ற ஆங்கில கட்டுரை)
இருந்தாலும் ஜாவாவில் பரந்த அளவில் கோப்பி உற்பத்தி செய்யப்படுவதால், சிரமப்பட்டு அதே பயிர்ச் செய்கையை இலங்கையில் தொடர்வதற்கு டச்சுக்காரர்கள் அக்கறை காட்டவில்லை, டச்சுக்காரர்களிடமிருந்து முதலில் 1796ல் கரையோர மாகாணங்களையும் 1815ல் சிங்களவர்களிடமிருந்து கண்டியையும் கைப்பற்றி முழு இலங்கையையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்த ஆங்கிலேயர் ஆட்சியில் தான் கோப்பி பயிர்ச்செய்கை மிகப் பிரமாண்டமான உற்பத்தியைக் கண்டது. 1796ல் கரையோர மாகாணங்களைக் கைப்பற்றிய ஆங்கில்ேயர் 1802ஆம் ஆண்டு இலங்கையை பிரிட்டிஷ் காலனித்துவ நாடாகப் பிரகடனப்படுத்தினர். 1822ம் ஆண்டு வரையிலும், அதாவது முழு இலங்கையையும் தமதாட்சியின் கீழ் கொண்டு வந்த ஏழாண்டுகளின் பின்னர், ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உள்ள அதிகாரங்களையெல்லாம் ஆங்கில அரசே எடுத்துக் கொண்டது. ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் (1822 வரையிலும்) அதுவே இலங்கையையும்
6 மலையகத்தமிழரின்வரலாறு

இந்தியாவையும் நிர்வகித்தது. ஆங்கிலேயர் இலங்கையைக் கைப்பற்றிய பின்னர் கரும்பு, பருத்தி, இண்டிக்கோ ஆகிய பயிர் செய்கைகளை முன்னெடுக்க பலமுயற்சிகள் மேற்கொண்டனர். சிறப்பாக கரும்பு பயிர்ச்செய்கை மூயார்ட் தலைமையில் களுத்துறையில் பெரும் அளவிலும், ஜோர்ஜ்பேர்ட், கேனல்பேர்ட் என்ற சகோதரர்கள் தலைமையில் தும்பறையிலும், ஜோர்ஜ் விண்டர் தலைமையில் பத்தேகமையிலும் மேற்கொள்ளப்பட்டன. வில்லியம் ரெய்ட் தலைமையில் 1200 ஏக்கரில் பதுளையில் கரும்பு பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்பட்டது. சேமுவெல் நோர்த்வேயின் தலைமையில் கன்னொறுவாவில் கரும்பு தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட வரிவிதிப்புக்கள் அனுசரணையாக இருந்திருந்தால் இலங்கையில் கரும்புத் தோட்டங்களே மிகுந்திருக்கும் என்று சேர் கொலின் கெம்பள் என்ற ஆங்கிலேய தேசாதிபதி (1841 - 1847) குறிப்பிட்டுள்ளார்.
வில்லியம் ஒர் என்ற ஆங்கில சிவில் சேர்வன்ட் மன்னாரில் (வடமாகாணம்) 1802 இல் பருத்தி உற்பத்தி செய்ததையும் வைட்ஹவுஸ் சகோதரர்கள் கிழக்கு மாகாணத்தில் பருத்தி உற்பத்தி மேற்கொண்டதையும் ரொபர்ட் நொக்ஸ் தான் கைதியாக கண்டி மன்னனால் இருபது வருடங்கள் சிறை வைக்கப்பட்டிருந்த (1660- 1679) காலத்தில் மத்திய மாகாணத்தில் பருத்தி நூல்களை வியாபாரம் செய்ததையும் கவனிக்கும் போது பரந்த அளவில் வட, கீழ், மத்திய மாகாணங்களில் பருத்தி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதை அறிந்து கொள்ள முடியும். இண்டிக்கோ என்ற சாயத் தொழில் உற்பத்தியிலும் டிரன்செல் என்பவர் தங்காலையில் (தென்மாகாணம்) ஈடுபட்டு, வெற்றிகண்டு, ஆளுநராக இருந்த சேர்எட்வாட் பார்ன்ஸ்ஸால் (1824- 1831) ஆதரிக்கப் பெற்றிருக்கிறார். ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ்ஸுக்கு கோப்பிப் பயிர்ச் செய்கையில் இருந்த தனிப்பட்ட ஈடுபாட்டால், சிலேவ் ஐலண்ட்டில் (கறுவாத் தோட்டம்) இருந்த, ரோயல் பொட்டணிக்கல் கார்டனை பேராதனைக்கு மாற்றினார். விஞ்ஞான பூர்வமான உதவிகளையும் அறிவுரைகளையும் அது தந்து கொண்டிருந்தது. கன்னொருவாவில் அமைந்த எட்வர்ட் பார்ன்ஸுக்கு சொந்தமாயிருந்த கோப்பித்தோட்டத்தில் பயிர் செய்கைமேற் கொள்ளப்பட்டது.தனது ஆட்சியிலிருந்த பல்வேறு அரசாங்க உத்தியோகத்தர்களையும் தோட்டங்களை திறந்து கோப்பிப் பயிர்ச்செய்கையில் ஈடுபட வைத்தார். எட்வர்ட் பார்ன்ஸ் காலத்திலேயே இந்திய தோட்டத் தொழிலாளர்கள் 150 பேர் வரவழைக்கப்பட்டனர். தோட்டங்களை திறந்தவர்களில் பெரும்பாலானோர் கிழக்கிந்திய கம்பெனியில் அது நாள் வரை உத்தியோகஸ்தர்களாயிருந்தவர்கள்; கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் தன் பிடியை வைத்திருந்த காலத்தில் அங்கு
மலையகத்தமிழரின்வரலாறு

Page 14
கடமையாற்றியவர்கள். இந்தியாவையும், இந்தியத் தொழிலாளர்களையும் அறிந்து வைத்திருந்தவர்கள். அங்கு நிலவுகிற வறுமை பட்டினி பஞ்சம் என்பவற்றை நேரில் பார்த்தவர்கள்.
இலங்கையில் தோட்டங்களைத் திறந்தவர்கள் தோட்டங்களில் உழைப்பதற்கு ஆட்களைத் தேடினார்கள். கண்டிச் சிங்களவர்கள் கிராமமும் வயலும் வீடும் என்றிருந்தார்கள். மேலதிகமாக எதையும் தேட வேண்டிய நிலையில் அவர்கள் இல்லை. கரையோர சிங்களவர்கள், கண்டிக்கு புதிதாக வந்தவர்களென்றபடியால், அவர்களின் வரவும், வசிப்பிடமும் “மேலதிக செலவாக ”அமைந்தது. கண்டியில் இருந்த மக்களின் மொத்த தொகையே லட்சத்துக்கு குறைவானதே.
இந்திய மண்ணிலிருந்து தொழிலாளர்களை கொண்டு வருவதற்கே ஆங்கிலேயர்கள் விரும்பினர்.
K. K. K. K. K.
8 மலையகத்தமிழரின்வரலாறு

தமிழர்கள் கடல் கடத்தல்
18ம் நூற்றாண்டின் ஆரம்பகாலந்தொட்டே தமிழர்கள் கண்டியில் வாழத் தொடங்கிவிட்டனர். 1706ல் கண்டியிலிருந்து மதுரைக்குச் சென்ற தூதுக் குழுவில் சிதம்பரநாத், அடையப்பன் என்ற இரண்டு தமிழர்கள், கண்டியில் வாழ்ந்த பிரமுகர்கள், இடம் பெற்றிருந்ததை கூறும் குறிப்புக்கள் காணப்படுகின்றன. அவர்கள் யாழ்ப்பாணத்துக்குச் சென்று, அங்கிருந்து டச்சுக்கப்பலில் மதுரைக்குப் போனதாக அறிகிறோம். டச்சு ஆளுநரான டாக்டர். இமாஸ்விலேம் பால்க் (1765 - 1783) காலத்தில் பத்தாயிரம். தமிழ் தொழிலாளர்கள் கறுவாப்பட்டை தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது சினமன்ஸ் கார்டனில் அமைந்திருந்த ரோயல் பொட்டணிக்கல் கார்டனே பின்னர் ஆங்கில ஆட்சியில் சேர் எட்வர்ட் பார்ன்ஸ் காலத்தில் பேராதனைக்கு மாற்றப்பட்டது.
இலங்கை தலைமன்னாருக்கும் இந்திய தனுஷ்கோடிக்கும் இடைப்பட்ட கடல் இடைவெளி வெறும் இருபத்திரண்டு மைல்களே. சிறுகட்டுத்தோணி மூலம் கடக்கக் கூடிய தூரமே அது. நீரில் தத்தளித்தவன் கையில் அகப்படும் துரும்பையும் பிடித்துக் கொள்வான் என்பார்கள். தென்னிந்திய தமிழர்கள் தோணி மூலம் இலங்கைக்கு வந்தனர்.
ஆளுநர் நோர்த் (1798-1805) ஆண்டுக்கு 30,000 பவுண்ட் செலவழித்து தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களைக் கொண்டு வந்தார் என்பதை இலங்கையில் பிரித்தானிய ஆளுநர்கள் என்ற தனது புத்தகத்தில் அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் மற்றும் சிவில் நிர்மாண வேலைகளின் நிமித்தம் கொண்டு வரப்பட்ட இவர்களே முதலில் வந்த தென்னிந்தியர்கள். பயணியர் ரோட் கோப்ஸ் என்றழைக்கப்பட்டனர். இதையடுத்து 1818ம் ஆண்டு இலங்கையில் எழுந்த கிளர்ச்சியை அடக்குவதற்கென்றும் ஐந்தாயிரம் தென்னிந்தியர்கள் கொண்டு வரப்பட்டனர். இத்தென்னிந்தியர்களில் தமிழர்களும் நிறையவே இருந்தனர். அவர்களில் தொழில் நுட்பம் மிகுந்தவர்கள் அதிகமாக இருந்தனர். பாதைகள் திறக்கவும், பாலங்கள் கட்டவும், குளங்கள் கட்டவும் ரயில்வேத் திணைக்கா
மலையகத்தமிழரின்வரலாறு 9

Page 15
வேலைகளை மேற்கொள்ளவும் அவர்கள் பயன்பட்டனர் என்பதை சேர் எட்வர்ட் ஜேக்சனால் எழுதப்பட்ட அறிக்கையிலிருந்து அறிய முடிகிறது. அவர்களின் பணியினால்தான் கொழும்பு-கண்டி, கண்டி-திருகோணமலை, கொழும்பு-காலி, பாதைகள் அமைக்கப்பட்டன, கம்பளை, கட்டுகஸ்தோட்டை, களுத்துறை பாலங்கள்
கட்டப்பட்டன.
ஆளுநர் நோர்த் தம் கீழ் தொழில்புரியும் உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் குறைவாக இருந்ததால் அதை சரிக்கட்டுவதற்கு ஏதுவாக அவர்களைத் தோட்டங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கி இருந்தார், வியாபாரத்தில் ஈடுபடவும் அனுமதித்தார். ஆளுநர் எட்வர்ட் பார்ன்ஸ் இலங்கைக்கு 1819ல் வந்தார். கம்பளைக்கருகில் சின்னபிட்டிய என்ற கோப்பிதோட்டத்தை ஜோர்ஜ் பேர்ட் என்பவர் திறந்தார். ஆளுநரின் ஆதரவு ஜோர்ஜ்பேர்ட்டுக்கு நிறைய கிடைத்தது. ஆளுநரின் சொந்த தோட்டம் ஒன்றும் ராசா தோட்டம் என்று கன்னொறுவையில் அமைந்தது. இம்புல் பிட்டியிலும், குண்டசாலையிலும் மேலும் தோட்டங்களை ஜோர்ஜ் பேர்ட் திறந்தார். ஜோர்ஜ் பேர்ட்டின் கீழ் கண்டக்டராக வேலைபார்த்தவர் திருகோணமலையைச் சேர்ந்தவர், தன் எஜமானின் விருப்பத்திற்கமைய அவர் திருகோணமலைக்குச் சென்று, அங்கிருந்து தென்னிந்தியாவுக்கு போய் 14 பேரோடு வந்ததாக பெர்குஸன் குறிப்பிடுகிறார். ஆனால் இலங்கையில் ஆளுநர் பதவியை ஏற்பதற்கு முன்னர் இந்தியாவில் தலைமைக் கமாண்டராக பதவி வகித்தவர் எட்வர்ட் பார்ன்ஸ். இந்தியாவின் பொருளாதார நிலைமையை, மக்களின் நிர்க்கதியான நிலைமையை அறிந்திருந்தார். அவருடைய தோட்டத்தில் தமிழ் தொழிலாளர்கள் இருந்தனர் என்ற தகவல்கள் மாத்திரமே கிடைக்கப் பெறுகின்றன. ஆளுநர் தோட்டங்களைத் திறப்பதற்கு நிறைய எதிர்ப்புகளிருந்தபடியால் அவைகளின் தகவல்கள் வெளியே கசியாதபடி பேணப்பட்டன.
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு பலமார்க்கங்கள் இருந்தன. கடலை தோணிகள், படகுகள் மூலம் ஆரம்பகாலங்களில் கடந்து வந்தனர். தென்னிந்தியாவில் ஆற்றுப்பாய்ச்சல் இல்லாத வறண்ட நிலப்பகுதிகள் பல உண்டு. திருநெல்வேலி, இராமநாதபுரம், மதுரை முதலிய மாவட்டங்களில் தொழிலுக்குத் தகுதியற்ற நிலவெளிகள் மிகுதியாக உள்ளன. அப்பகுதி மக்கள் அரும்பாடுபட்டு உழைத்தே வாழ வேண்டும். அக்காரணத்தால் அம்மக்கள் உடலும் உள்ளமும் உறுதி மிக்கவர் ஆவர். இலங்கை தோட்டப்பகுதிக்கு வந்தவர்கள் இந்த நிலப்பகுதியைச் சார்ந்தவர்களே அதிகம்.
10 மலையகத்தமிழரின்வரலாறு

கட்டுமரம், தோணி, படகு, வள்ளம், வத்தை, ஒடம், பரிசில், மிதவை, சம்மான், கப்பல், கலம், நாவாய், புனை, திமில், அம்பி, வங்கம் என்று நீரில் செல்லும் ஊர்திகளைப் பற்றி பல சொற்கள் தமிழில் உள்ளன. நீண்டகாலமாகவே நீரில் பயணம் செய்வதற்கு தமிழர்கள் பழகியிருந்தார்கள் என்பதை இச் சொற்களே காட்டுகின்றன. ஐந்து அல்லது ஆறு மரத்துண்டுகளைக் கயிற்றால் கட்டி உண்டாக்கப்படும் மிதவை கட்டுமரம். தமிழர்களின் கட்டுமரம் கட்டும் கலை உலகப் புகழ் பெற்றது. கட்டுமரான்’ என்ற ஆங்கிலச் சொற்பிரயோகம் இதனால் எழுந்ததே. தோணி என்பது சரக்கு ஏற்றிச் செல்லும் பெரிய அளவிலான படகை குறிக்கும்.
அயல் நாடுகளுக்குச் சென்ற தமிழர்களை இருவகையினராக அடையாளம் காட்டலாம். பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்றவர்கள், பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப்பின்பு சென்றவர்கள் என்பது இலகுவான அடையாளமாகும்.
நாமிந்த நூலில் பேசுகிற தமிழர்கள் பதினெட்டாம் நூற்றாண்டுகளுக்குப் பின்பு இலங்கைக்குச் சென்றவர்கள். இவர்கள் இவ்விதம் இலங்கைக்கு சென்றதைப் போலவே, மற்ற மொழி பேசும் தென்னிந்தியர்களும், வட இந்தியர்களும் இலங்கைக்குச் சென்றனர். தென் ஆபிரிக்கா, பீஜித் தீவு, மொரிசியஸ் போன்ற தூர நாடுகளுக்கும் கடல் கடந்து சென்றனர்.
அயல் நாடுகளில் இந்தியக் குடியேற்றம் அரசாங்கத்தின் வாயிலாக நிகழ்ந்ததன்று, அதனை வணிகம் நடத்திய மக்கள் பலர் தம் ஊதியத்தைக் கருதியே அந்தந்த நாடுகளுக்குச் சென்றனர். அவர்களைத் தொடர்ந்து எளிய மக்கள் பலர் பலவகைத் தொழில் செய்யப் போயினர்” என்கிறார் டாக்டர் கே.கே.பிள்ளை தன்னுடைய தென்னிந்திய வரலாறு' என்ற நூலில்,
இலங்கைக்கு இந்தியர்களின் குடியேற்றம் கட்டுமரத்திலும், படகுகளிலும் தோணியிலுமே ஆரம்பித்து நடத்தப்பட்டன. தோட்டங்களுக்கு ஆட்கள் கட்டப்பட்ட ஆதி நாட்களில் படகுகள் மூலமே தொழிலாளர்கள் கொண்டுவரப்பட்டார்கள். பன்றி படகுகள் என்றறியப்பட்ட அவைகளை ஒட்டுபவர்களாக முகம்மதியர்களே இருந்திருக்கின்றார்கள். அதன்பிறகே நீராவிக்கப்பல்கள் மூலம் வரத் தொடங்கினார்கள். வந்தவர்கள் இலங்கையின் கரையோரத்தில் ஓரிடத்தில் குடியேறினார்கள். சிலர் யாழ்ப்பாணத்துக்கு வந்தார்கள், சிலர் திருகோணமலைக்கு வந்தார்கள். மற்றும் சிலர் களுத்துறைக்கு வந்தார்கள். சிலர் தலைமன்னாருக்கு
மலையகத்தமிழரின்வரலாறு

Page 16
வந்தார்கள். அங்கிருந்து நோர்த் மாத்தளைக்கு கூட்டம் கூட்டமாக நடக்க ஆரம்பித்தார்கள். பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய தோட்டங்களுக்கு அங்கிருந்து பிரிந்து செல்ல ஆரம்பித்தார்கள்.
படகுகள் மூலம் இவர்கள் வந்த நாட்கள் பயங்கரமானவைகள். ஆடுமாடுகளைப் போல் படகுகளில் ஏற்றி இவர்களைக் கொண்டு வருபவர்கள் கரையெட்டிய தூரத்தில் தண்ணிரில் இவர்களை இறக்கி விடுவார்கள். அதிலிருந்து தொடங்கும் அவர்களின் நடைடயணம். இலங்கைக்கு வர தோணி ஏறியவர்களில் நூற்றுக்கு பதினைந்து சதவீதம் படகுகள் கவிழ்ந்து இறந்தனர். புயல் காற்றுக்கு தப்பிய தோணிகளில் வந்தவர்கள் மன்னார் அரிப்பு கொழும்பு, நீர் கொழும்பு கரையோரங்களில் இறக்கப்பட்டனர். வழியில் நடக்க முடியாதவர்களை பத்துமைல், பதினைந்து மைல் தூக்கி களைத்தவர்கள், அதற்கு மேலும் தூக்கிச் செல்வது முடியாது என்ற நிலைக்கு வந்த போது, நடுகாட்டில் மிருகங்களின் கடாட்சத்திற்கு அவர்களைப் போட்டு விட்டு நடையைக் கட்டினார்கள். இந்த துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளானவர்கள் கையை நீட்டி கதறி அழுவார்கள். ஒரு சிரட்டையில் தண்ணிரும், இலையில் கொஞ்சம் சாப்பாடும் வைத்து விட்டு, “நாங்கள் போகிறோம், உனக்கு விதி எப்படியோ அப்படியே நடக்கும். உயிர் பிழைத்திருந்து பின்னால் வரும் கூட்டத்தினர் உன்னை கொண்டு வந்தால் நீ அதிர்ஷ்டக்காரன்” என்று உள்ளம் குமுறி அழுத கண்ணிருடன் சுற்றத்தினர் புறப்படுவார்கள். “காட்டு வழியே நடந்து வந்தபோது, பாதையின் இரு மருங்கிலும், அம்பலத்துக் கருகிலும், புளியமரங்களும், வேப்பமரங்களும் தோப்பாக அடர்ந்து வளர்ந்திருந்தன. தனக்கு முன்னரேயே இலட்சக்கணக்கில் அந்த வழியில் நடந்து சென்ற மனிதர்களுக்கு அவை சாட்சியமளித்தன. சில சமயங்களில் ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் காடுகளைக் கடந்தார்கள். சில சமயங்களில் சதுப்பு நிலங்களில் முழங்கால் அளவு தண்ணிரில் நடக்க வேண்டியிருந்தது” என்று எழுதுகிறார் இலங்கையில் இருந்த பிரித்தானிய அதிகாரி ஒருவர். தலைமன்னாரிலிருந்து அவர்கள் செல்லும் தோட்டங்கள் வரைக்கும் கரடுமுரடான காட்டுப்பாதைகளும், ஒத்துவராத மாறுபட்ட சுவாத்திய நிலைகளும் தொடர்ந்தன. 19ம் நூற்றாண்டின் முடிவுவரைக்கும் தலைமன்னாரில் இறங்கி 148 மைல்கள் நடக்கவும், மன்னாரில் இறங்கி 131 மைல்கள் நடக்கவும் வேண்டி இருந்தது. படகில் புதிதாக குழந்தைகள் பிறந்திருக்கின்றன, பலர் இறந்திருக்கின்றனர். இறப்பும் பிறப்பும் தண்ணிரில் நடந்திருக்கின்றன.
அவர்கள் நடந்து செல்லும் பாதையில் மொத்தமாக 20 வாடி வீடுகள் தலைமன்னார், மன்னார், பேசாலை, ஒயடபண்ணை, தள்ளாடி, உயிலங்குளம், கொம்புராச்சக்குளம், புளியடிஇறக்கம், பெரிய காடு, செட்டிக்குளம், மாங்குளம்,
2 மலையகத்தமிழரின்வரலாறு

மதவாச்சி, ரம்பாவா, மிகிந்தலை , திரப்பானை, மரதங்கடவல, எலகமுவ, டம்புள்ள, நாலந்த, மாத்தளை என்ற இடங்களில் அமைந்திருந்தன. (துரைமார்சங்க நூற்றாண்டுமலர்) 5 மைலுக்கும் 15 மைலுக்குமிடைப்பட்ட தூரத்தில் அந்த வாடிகள் அமைக்கப்பட்டிருந்தன. வந்த தொழிலாளர்கள் உடல் நலத்தைப் பற்றிப் பயம் தான்.
1830 ல் இங்கிலாந்தில் அடிமை ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. ஆனால் இது இங்கிலாந்துக்குப் பொருந்தலாம். இந்தியச் சூழ்நிலைக்குப் பொருந்தாது, இந்தியச் சூழ்நிலையில் விவசாயத்துக்கு அடிமைத் தொழிலாளர்கள் இருப்பதவசியம் என்று பண்ணையாளர்கள் முரண்டுபிடித்தனர். ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகிகள் அடிமை ஒழிப்பை இந்தியாவில் தள்ளிப்போட்டு, 1843ம் ஆண்டு நடைமுறைப்படுத்தினர். இந்த அடிமை விடுதலைச் சட்டத்தின்படி,
1. அடிமைகளை வைத்திருக்கும் உரிமை சட்டப் பாதுகாப்பை இழந்தது. 2. வரிபாக்கிக்காக அடிமைகளை விற்பதற்கு தடை ஏற்படுத்தப்பட்டது 3. அடிமைகளுக்கும் சட்ட உரிமைகள் கொடுபட்டன.
எனவே 1843ம் ஆண்டு வரை, இந்தியாவில் நடைமுறையிலிருந்த, சட்டத்துக்குட்பட்ட விதத்தில் “அடிமை இந்தியர்களே” இலங்கைக்கு வந்தனர். அவர்கள் இந்தியாவைவிட்டு வெளிநாடுகளுக்குக் குடியேறுவதற்கான காரணங்களை,
வேதி செல்லம் தனது தமிழக வரலாறும் பண்பாடும்' என்ற நூலில் பின்வருமாறு அட்டவணைப்படுத்துகிறார்.
1. சாதிக் கொடுமைகளும் சமுதாயத் துன்புறுத்தல்களும்
2. வறுமை, பட்டினி, பஞ்சம் இவை எளியோருடன் உறவாடி நிலை
கொண்டமை.
3. பொருளாதாரத் துன்புறுத்தல்கள், கட்டாயத் தண்டங்கள்
4. வட்டிக் கடைக்காரர்களின் கொடுமை. (கடன் பத்திரத்தை நில
அடிமைப்பத்திரமாக மாற்றும் வாய்ப்பிருந்ததால் கடன்பட்டோர் உடைமைகளை இழந்து அடிமைகளாயினர். அல்லது வெளிநாடுகளை நோக்கினர்.)
கிழக்கிந்தியக் கம்பெனி ஆதரவு காட்டி, வெளிநாட்டுக் கூலி வேலைக்கு ஊக்கமளித்தது. இலங்கை, பர்மா, இந்தோனேசியா, பிரிட்டிஷ்கயானா, தெற்கு ஆபிரிக்கா, மொரிசியஸ், மேற்கிந்தியத் தீவுகள் முதலிய இடங்களில் தோட்டத்
மலையகத்தமிழரின்வரலாறு 3

Page 17
தொழில்கள் விரிவடைந்தன. கூலித் தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல ஊக்கப்படுத்தப்பட்டனர். அந்தச் சமயத்தில் இந்தியாவும், இலங்கையும் கிழக்கிந்தியக் கம்பெனியினரின் ஆட்சியின் கீழிருந்ததால், வெகு இலகுவில் தொழிலாளர்களைக் கடல் கடந்து இலங்கைக்கு அனுப்ப முடிந்தது.
பஞ்சத்திலும், பசியிலும், கடன் தொல்லையிலும், வறுமையின் கோரத்திலும் சிக்கித்தவித்து சீரழிந்துக் கிடந்த இந்திய விவசாயிகளின் கண்முன்னே தோட்டக் காட்டைப் பற்றிய சித்திரம் அழகுறச் சித்தரிக்கப்பட்டது. இலங்கைத் தோட்ட வாழ்க்கையில் பாலும் தேனும் வடிவதாக அவன் நம்பிக்கை வைக்குமளவுக்கு ஏமாற்றப்பட்டான். முதன்முதலில் இலங்கை அரசாங்கத்தினதும், தோட்டச் சொந்தக்காரர்களினதும் வாக்குறுதிகளை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்தார்கள். இங்கே நுணுக்கமாக விளங்கிக் கொள்ள வேண்டியதென்னவென்றால், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உத்தரவாதம் வழங்கியவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினர், இலங்கை தோட்டச் சொந்தக்காரர்களின் சார்பில் உத்தரவாதம் வழங்கியவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியினர், இலங்கையில் கோப்பித் தோட்டங்களைத் திறந்தவர்கள் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி உத்தியோகத்தர்கள். தீனி கிடைக்கின்றதென்றால் எலிக்கு பொறியா புற்றா என்று வேறுபாடு தெரியவா போகிறது! ஆரம்பத்தில் மலைப்பிரதேசங்களில் கோப்பித் தோட்டங்களைத் திறந்தவர்கள் ராணுவ வீரர்களாகவும் கடலோடிகளாகவுமே இருந்தார்கள். ஸ்கொட்லாந்து பண்ணைகளை வாடகைக்கு பெற்ற பண்ணையாளர்களும் கணிசமானவர்கள் இருந்தனர்.
1600ம் ஆண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு இந்தியாவில் வியாபாரம் செய்யும் உரிமையை எலிசபெத் மகாராணி வழங்கினார். அதற்கு இரண்டாண்டுகளின் பின்னால் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது. இவ்விரண்டு கிழக்கிந்தியக் கம்பெனிகளும் முதலில் வியாபாரத்துக்கெனவே ஆரம்பிக்கப்பட்டன. அடிக்கடி அவர்களிடையே சண்டைகள் மூண்டன. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் அதிக கவனம் காட்டத் தொடங்கியது. 1639 - 1640 இல் சோழ மண்டலக் கரையில் நாகபட்டினத்தை மையமாக்கி வட்டார மன்னன் ஒருவனிடமிருந்து ஆங்கிலேயர்கள் ஓரிடத்தை விலை கொடுத்து வாங்கி, செயிண்ட் ஜோர்ஜ் கோட்டையையும், துறைமுகத்தையும் நிறுவினார்கள். மதராஸ் என்று அழைக்கப்பட்ட இத்துறைமுகம் இப்போது சென்னை என்று அழைக்கப்படுகிறது. சென்னைத் துறைமுகம் கட்டப்பட்டது 1862ம் ஆண்டு தான்.
இலங்கையைக் கைப்பற்றி ஆண்ட பிரித்தானியர் காலத்தை (1796 -1948) ஐந்து பகுதிகளாக பிரிப்பதில் திருப்தி காண்கிறார்,'சொர்க்கத்தின் மலைகள் என்ற
4 மலையகத்தமிழரின்வரலாறு

தன் நூலில் எஸ். என். பிரெக்கென்ரிட்ஜ்
1796 - 1833 கிழக்கிந்திய கம்பெனியினதும், இராணுவ கவர்னர்களினதும் கீழ்
இலங்கை,
1833 - 1872 ஆளுநரின் செல்வாக்குக்குட்பட்ட சட்டநிரூபண சபையின் கீழ்
இலங்கை.
1872 - 1915 துரைமார்களின் செல்வாக்குக்குட்பட்ட சட்டநிரூபண சபையின் கீழ்
இலங்கை.
1915 -1931 துரைமார்களினதும், வகுப்புவாரி பிரதிநிதிகளினதும்
செல்வாக்குக்குட்பட்ட சட்ட நிரூபணசபையின் கீழ் இலங்கை.
1931-1948 டொமீனியன் அந்தஸ்துக்குட்பட்ட இலங்கை.
1796ம் ஆண்டு இலங்கையின் கரையோரங்களைப் பிடித்த ஆங்கிலேயர், இந்தியாவிலிருந்து இருமொழி அறிந்த துபாஷிகளை கொண்டு வந்து வரிகளைச் சேகரித்தனர். இங்கு வந்த துபாஷிகள் இந்தியர்கள். அவர்கள் வரி சேகரிப்பதில் கையாண்டமுறைகளும், புதிது புதிதாக வரிகளை அறிமுகப்படுத்தியமையும் மக்களிடையே எதிர்ப்பைக் கிளப்பிவிட்டன.
முதன்முதலாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட தென்னிந்திய தொழிலாளர்கள் பயணியர் ரோட் கோப்ஸ் - ஆரம்ப பாதை படைவீரர்கள் என்றறியப்பட்டனர். கெப்டன் ரொபர்ட் பெர்சிவல் என்பவரால் கொண்டு வரப்பட்ட அந்த படையிலிருந்த பலர் கோப்பித் தோட்டங்களுக்குச் செல்ல அநுமதிக்கப்பட்டனர்.
இந்தியத் தொழிலாளர்களை இலங்கையில் வேலைக்கமர்த்துவதில் மிகப் பெரிய வசதியை ஆங்கிலேயத்துரைமார்கள் கண்டார்கள். தமக்கு அன்னியமான நிலப்பரப்பில், அன்னியமான சூழ்நிலையில், தொழில் செய்யும் நிலைக்கு ஆளானவர்களை முடிந்த அளவுக்கு கசக்கிப்பிழியலாம். அவர்களிடமிருந்து எதிர்ப்பு இலகுவில் கிளம்புவதில்லை. இலங்கை மண்ணுக்கு அந்நியமான இரண்டு மண்ணிலிருந்து தொழிலாளர்கள் வந்திருக்கின்றனர். சீனாவிலிருந்து சேர் தோமஸ் மெயிட்லாந்து காலத்தில் (1805 -1811) 100 சீனர்கள் வரவழைக்கப்பட்டனர். காலியைச் சுற்றிய பகுதிகளில் குடியேற்றப்பட்டனர். தோட்டக்காரர்களாக ஐரோப்பியர்களால் அவர்கள் வேலைக்கமர்த்தப்பட்டனர். அதன் பின்னர் 1863ல் இலங்கையில் அளவுக்கதிகமானத் தொழிலாளர்களுக்கான தேவை ஏற்பட்டபோதும் சீனர்களை தோட்ட வேலைக்கு அழைப்பது குறித்து துரைமார் சங்கத்தினர் கூடி கதைத்தனர். ஆஸ்திரேலியாவில் சீனர்களுடன் தொழில் செய்து அநுபவம்
மலையகத்தமிழரின்வரலாறு 15

Page 18
பெற்றிருந்த ஸி. எஸ்.ஹேய் என்பவர் முற்றாக அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். முடிவில் சங்கத்தின் காரியதரிசி வில்லியம் லீக் ஹாங்கொங் அதிகாரிகளுடன் கடிதம் எழுதி இந்த யோசனைக்கு அநுமதியைப் பெறுகிறார். ஆனால் தோமஸ் ரஸ்ட் என்பவரின் யோசனையைப் பெற்றதன் பின்னால் ஹாங்கொங் அதிகாரிகள் சீனர்களைத் தொழிலாளர்களாக இலங்கை வர் அநுமதிக்கவில்லை, அரும்பிலேயே அந்த எண்ணம் முறியடிக்கப்பட்டது. டைம்ஸ் ஒஃவ் சிலோன் (1864) பத்திரிகையும் இந்த யோசனையை முற்று முழுதாக எதிர்த்தது. கடைசியில் தென்னிந்தியர்களை தொடர்ந்தும் அழைப்பது என்பது அதிகாரிகளாலும், பத்திரிகைகளாலும், ஆட்சியினராலும் ஒரு மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இலங்கையின் உள்ளூர்வாசிகளான சிங்களவரைப் பற்றிய தம் முறவில் எப்போதும் கவனமாக இருந்த ஆங்கிலேய துரைமார்கள் தென்னிந்திய தொழிலாளர்களை பூரணமாக நம்பினர். அத்தொழிலாளிகளின் கீழ்ப்படிதலை அவர்கள் மிகவும் விரும்பினர். சிங்களவர்களை சோம்பேறிகள் என்று கூறுகிற கருத்து, அவர்களின் தென்னிந்தியர்களைத் தொழிலாளர்களாக சேர்க்கும் விருப்பத்தை தங்கு தடையின்றி வளர்த்துக் கொள்வதற்கு உதவிற்று.
இலங்கையில் தோட்டங்கள் துவங்கிய காலத்தில் இந்தியாவைப் போன்று இலங்கையின் இன வாழ்விலும், பழமை பொருளாதார நிலைகளிலும் வீழ்ச்சி எதுவும் ஏற்படவில்லை. எனவேதான், சிங்கள விவசாயிகள் தோட்டங்களுக்கு தொழில்தேடி வரவேண்டிய நிலைமை ஏற்படவில்லை. அவர்களை நிர்ப்பந்தப்படுத்த இந்த நாட்டில் இந்தியாவைப்போன்று பஞ்சமோ, வறுமையோ ஏற்படவில்லை. சிங்கள விவசாயிகள் இலங்கையிலே சோம்பேறிகள் என்றும் வேலை செய்வதில் சிறிதளவும் அவர்களுக்கு நாட்டமில்லையென்று கூறுவது பிழையானதாகும்.
"இலங்கை சுவாத்தியம் மிகவும் ஆரோக்கியமானது. நாலு மரங்களை நட்டு தென்னோலைகளை வேய்ந்து கொண்டால் வீட்டுப் பிரச்சினை முடிந்து விட்டது; நான்கு பலா மரங்களை நட்டுக் கொண்டால் கறி பிரச்சினை முடிந்துவிட்டது; நான்கு மாவள்ளிச் செடியை நட்டுக் கொண்டால் உணவு பிரச்சினை முடிந்து விட்டது. இலங்கையில் வாழுவதற்கு ஒருவன் கடுமையாக உழைக்க வேண்டியதில்லை” (இலங்கையில் தோட்டத்துரையாக பணியாற்றி விட்டு ஆஸ்திரேலியாவில் குடியேறிய லெமேழியர் என்ற ஆங்கிலேயர் நூலாசிரியருக்கு எழுதிய கடிதம்)
Its மனயகத்தமிழரின்iபரம்பறு

கடுமையாக உழைப்பதற்கு, கொட்டும் பணியையும் கொளுத்தும் வெய்யினலயும் லட்சியம் செய்யாது உழைப்பதற்கு ஆரம்பகாலத்தில் தென்னிந்தியர்கள் தான் உதவியாயிருந்திருக்கிறார்கள். காலப்போக்கில் இந்தப் பிடிவாதத்தில் மாற்றம் ஏற்பட்டது. இன்று பல பகுதிகளில் சிங்கள மக்கள் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். அதோடு, இன்னும் பல தொழில்களில் அவர்கள் இன்று சம்பளத்திற்கு வேலை செய்கிறார்கள்; அரசியல் செல்வாக்கால் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் தோட்டத்தில் சம்பளம் பெறும் உத்தியோகத்தர்களாக இருக்கிறார்கள். இதை அவர்கள் அக்காலத்தைப் போன்று இன்று கேவலமாகக் கருதுவதில்லை.
இந்தியாவுக்குத் திரும்பிய தொழிலாளர்கள் இலங்கையின் கஷ்டசீவியத்தை அங்குள்ளவர்களுக்கு கூறினர். அதன் காரணமாக அவர்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. தமிழர்களின் குணாம்சமே "பொறுக்கும் வரை பொறுத்திருந்து விட்டு, முடியாத நிலைமையில் வாய்மூடி மெளனமாக இந்தியா திரும்பும்' நிலைமையிலேயே இருந்தது என்றெழுதுகிறார் எமர்சன் டென்னன்ட் அவர்களின் மோசமான நிலைமையைக் கருத்தில் கொண்டு 1841ம் ஆண்டு "எசமான் - வேலையாள் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. அப்படி ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டதையோ, அது தரும் சட்டப்பாதுகாப்பையோ கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் அறிந்திருக்கவில்லை. "இந்தியாவுக்குத் திரும்பும் தொழிலாளி ஆகக் கூடினால் மற்ற இந்தியர்களை இங்குள்ள நிலைமையைக் கூறி அவர்களை இங்கு வாாது தடுக்கலாம்” என்று டென்னன்ட் கூறுகிறார். இந்த பரிதாபகரமான நிலைமை பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க இருந்து வந்துள்ளது.
பூண்டி கடைசி மன்னர்
äæíy கடைசி ा
ஜெனரல் பிரேஸர் - 1813ல் கலவரத்தை அடக்குவதற்கு கையாண்ட முறைகளால் சீட்டா - சிறுத்தைப்புலி - என்றே மக்களால் அழைக்கப்பட்டார். சீட்டா பின்னர் கண்டிச்சுற்று வட்டாரத்தில் பல கோப்பித் தோட்டங்களுக்கு சொந்தக் காரராளார். பிரேஸர் லொட்ஜ் என்று கண்டியில் கானக்கிடைப்பது இவரால்
மலையகத்தமிழரின் வரலாறு 7

Page 19
கட்டப்பட்டு, இவர் வாழ்ந்த வீடாகும். இவரது கல்லறை கண்டி ‘காரிஸன்’ சமாதியில் இருக்கிறது. நூற்று அறுபத்தி மூன்று இராணுவ வீரர்களை இவ்விதம் நினைவு கூர்வதற்கு இடமளித்த ஆங்கிலேயர்கள், தாம் நிர்வகித்த தோட்டங்களில் தமது பெரியகங்காணிகளுக்கு அதேவிதத்தில் கல்லறை கட்டுவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுத்தனர். தோட்டங்களில் பாதை ஓரங்களில் இன்றும் அக்கல்லறைகளைக் காணலாம். மற்ற உத்தியோகஸ்தர்களுக்கோ, தொழிலாளர்களுக்கோ இவ்விதம் நினைவு ஸ்தூபிக்கப்பட்ட கல்லறைகள் கட்டப்படுவதில்லை. டொனமூர் ஆணைக்குழு சம்பந்தமான விவாதத்தில் பங்கேற்கும்போது கோதண்டராம நடேசய்யர் இவ்விதம் அமைக்கப்பட்ட ஒரு கங்காணியின் கல்லறை களுத்துறையில் கட்டப்பட்டிருப்பதைப் பற்றி குறிப்பிடுகிறார். மற்ற தொழிலாளிகளின் நிலைமையில் அவ்விதம் கூறுவதற்கில்லை. “புழுதிப்படுக்கையில், புதைந்த என் மக்களைப் போற்றும் இரங்கற், புகல்மொழி இல்லை” என்று மக்கள் கவிமணி வெதும்பி பாடுவதற்கொப்பதான் அவர்கள் நிலைமை இருந்தது.
கொடிய வன விலங்குகள் நிறைந்த அடர்ந்த வனப் பிரதேசங்களை அழித்துக் காசுப் பயிர்களை நட்டும், மனித குடியேற்றங்களை ஏற்படுத்தியும் ஆங்கிலேயத் துரைமார்கள் முன்னின்றபோது அவர்களின் பக்கத்துணையாக நின்று உழைத்தவர்கள் இத்தொழிலாளர்கள் தாம். அவர்களின் அயராத உழைப்பில் உருவானதுதான்மலை நாட்டின் மரகதப் பசுமை அவர்கள் மரணித்தபோது, அவர்கள் உழைத்த அதே நிலத்தில் குழிதோண்டி புதைத்தார்கள். அவர்களின் உடலைத் தின்ற கோப்பிச் செடிகள் செழித்து வளர்ந்தன. தாமிறந்தபின்னரும் தம்முடல் இவ்விதம் செடிகளுக்கு உரமாவதை அவர்கள் விரும்பினார்கள். றம்பொடை பள்ளத்தாக்கில் இவ்விதம் யானையின் எலும்புகளைக் கோப்பிச் செடிகளுக்கு எருவாகப் போட்டுவைப்பதைப் பற்றி டென்னன்ட் குறிப்பிட்டுள்ளார். தேயிலைச் செடிகள் நாட்டப்பட்ட பின்னரும் இந்த நிலையில் மாற்றம் ஏற்படவில்லை. இருபதாம் நூற்றாண்டில்தான் இந்தநிலைமையில் சிறிது மாற்றம் தெரிகிறது. மயானபூமி என்று நிலத்தை ஒதுக்கி, இறப்பவர்களைக் கெளரவத்துடன் அடக்கம் செய்வதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள்.
'மலபார் கூலிகளிடையே பரவும் தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிவகைகள்” என்ற பெயரில் தனிக் கட்டுரை நூல் ஒன்றை டாக்டர், கிறிஸ்தோபர் எலியட் என்பார் 1837ம் ஆண்டு வெளியிட்டார். தென்னிந்தியத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு, பெருந்தொகையினராக, காட்டு வழியில் நடந்து வருவதனால் அவர்கள் மூலம் பரவக்கூடிய வியாதிகளான பெரியம்மை,
18 மலையகத்தமிழரின்வரலாறு

சின்னம்மை, கொலை அம்மை - காலரா , சடையம்மை- மண்ணாங்கட்டி, என்பவைகள் குறித்து இலங்கையில் வியாபித்திருந்த பயத்தை போக்குவதற்காக எழுதப்பட்ட அந்நூலில் “தமிழ்க் கூலிகள் தங்கள் மணிக்கட்டைச் சுற்றி துட்டு நாணயத்தைக் கட்டி, கடவுளுக்கு நேர்ந்து கொள்ளுவர்” என்று எழுதியிருக்கிறார். இந்தப்பழக்கம் மாத்தளை மாரியம்மன் கோயிலில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்திய கூலிகள் நிறைந்த அளவில் கிடைப்பாராயினர். சிவனொளிப்பாதமலை அடுக்குகளில் அதுவரை பயிரிடப்படாத மேட்டுநிலங்களில் கோப்பி பயிரிடப்பட்டன. மேஜர் தோமஸ் ஸ்கின்னர் என்ற பெயர் கோப்பிச் செய்கையில் பிரசித்தமானது. இவர் திறந்த தோட்டங்களை மக்கள் மேஜர் தோட்டம் என்றே அழைத்தனர். 1840களில் லட்சக்கணக்கான காட்டு நிலம் இந்தப் பகுதியில் சுத்தம் செய்யப்பட்டு கோப்பி பயிர்ச் செய்யப்பட்டது. மேஜர் ஒரு வேட்டைப் பிரியரும் கூட பதினாறு வயதில் இவர் இலங்கைக்கு வந்தார். இவரது சரிதத்தை எழுதியவர்கள் இவர் ஐந்தாயிரம் யானைகளை சுட்டிருப்பதாகக் கூறுகிறார்கள். யானையை மதிப்போடு பார்க்கும் சிங்களவர்கள் இதனால் இவரைக் கண்டு மருண்டதாகவும் கூறப்படுகிறது. கடைசியில் இவர் மின்னலால் தாக்குண்டு இறந்தார். இவரது கல்லறையும் மின்னலால் தாக்குண்டு வெடித்தது. இயற்கையின் சக்தி மகத்தானது தான்.
1852ம் ஆண்டளவில் கோப்பித் தோட்டங்களில் தம் உழைப்புக்கு எந்தவிதமான பணமும் பெறாத கூலிகள், தம் கைநிறைய கோப்பிக் கொட்டைகளை கொண்டு வந்து முஸ்லீம் கடைகளிலும் செட்டி கடைகளிலும் கொடுத்து, பண்ட மாற்றம் செய்தனர். திரும்பி இந்தியாவுக்குச் செல்வதற்கான பணமோ, உணவாகக் கொள்வதற்கு அரிசியோ அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் விளையும் கோப்பிக்கு இருந்த செல்வாக்கு குறையத் தொடங்கியிருந்தது. பிறேசில் (போர்த்துக்கேய), ஜாவா ( டச்சு) , மார்ட்டினிக்கு (பிரெஞ்சு) என்ற இடங்களில் கொடி கட்டிப் பறந்த இலங்கை கோப்பி தன் செல்வாக்கை இழந்தது. கோப்பி தோட்ட துரைமார்கள் தம் தொழிலாளர்களின் பசியை போக்கும் வழியறியாது விழி பிதுங்கினர். வழியில் பயணம் செய்யும் கருத்தை வண்டி பாதுகாப்பாகச் செல்லுமா என்றறிவதற்காக, பாதையில் காணப்பட்ட குழிகளை தம் கையிலிருந்த நீண்ட தடியால் ஆழம் பார்க்க வேண்டியிருந்தது. பாதைகள் குண்டும் குழியுமாக சீர் கெட்டது.
சுதேசிய மக்களிடமிருந்து பாதை, மாட்டு வண்டி, துப்பாக்கி, நாய், படகு என்று கண்டதற்கெல்லாம் வரி கேட்கும் பழக்கம் உண்டாயிற்று. வாழ்க்கை பெருஞ்சுமையாக இருந்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 19

Page 20
கண்டியின் கடைசி மன்னன் காலத்தில் (1815), சம்பளம் பெறாது போர்த்தொழில் செய்யும் தமிழர்கள் - சொந்த நிலத்தில் உழைத்தவர்கள், ஊவா திசாவையில் 32 பேரும், சப்பிரகமூவா திசாவையில் 14 பேரும், நுவரதிசாவையில் 36 பேரும் இருந்தனர் என்று தென்னக்கூன் விமலானந்த கூறுகிறார். இன்றும் கூட கண்டி, பதுளை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய நகரங்களே மலைநாட்டுத் தமிழர்கள் அதிகமாக வாழுகிற பகுதிகளாக விளங்குகின்றன.
1848ம் ஆண்டு சிங்களவர்கள் ஆங்கில ஆட்சிக்கு எதிராகக் கிளம்பினார்கள். இந்தக் கிளர்ச்சியை வரலாறு பதிவு செய்துள்ளது. மலையகத் தமிழர்கள் தோட்டத்தில் தனித்து வாழ்ந்த காரணத்தால் துரைமார்களைக் காப்பதற்காக அவர்கள் கோடரியும், கத்தியையும் எடுத்துக் கொண்டு ஆயிரக் கணக்கில் இறங்கியிருக்கிறார்கள். தோட்டத்துரைமார்கள் சிலர் தோட்டத்தை விட்டே போய் விட்டனர். தோட்டத்தைச் சிலர் சொந்தமாக்கிக் கொண்டனர்.
1848 இல் இடம் பெற்ற கலகம் இந்த நிலைமைக்கு ஒரு காரணமாக இருந்தது. புரான் அப்பு டம்புள்ளையச் சேர்ந்தவர். தனக்கு தெய்வ ஆசி இருப்பதாக கூறி மக்களை நம்பவைத்து அவர் இக்கலகத்தை நடாத்தினார். இக்கலகத்தின் போது வாரியப்பொல தோட்டம் தாக்குதலுக்குள்ளானது. தோட்டத்துரையின் கையையும் காலையும் சேர்த்து கட்டி வைத்து விட்டு பங்களாவை கொள்ளை யடித்தனர். அவர் பாவித்த பல்லக்கு வண்டி உடைக்கப்பட்டது. டம்புள்ளை தென்னிந்தியர்களின் இலங்கை வருவதற்கான மாத்தளை வழி யில் குறிப்பிட்டு கூறத்தகுந்த ஒரிடம். அங்கு ஒர் அம்பலத்தைக் கட்டி, அப்பாதையை பாவிப்பவர்கள் தாம் போகும் போதும் வரும்போதும் தங்கி போவதற்கு வழி சமைத்திருந்தனர். புரான் அப்புவின் கலக முயற்சிகள் செல்வாக்குப் பெற்றதால் இந்தியாவுக்கு மாத்தளை வழி' யாக திரும்பிச் சென்றவர்களின் தங்க ஆபரணங்கள் தம்புள்ளையில் கொள்ளையிடப்பட்டன என்கிறார் 'சொர்க்கத்தின் மலைகள் நூலாசிரியர். ஆனால் இவைகளெல்லாம் அந்த ஏழைத் தொழிலாளர்களை பயமுறுத்துவதற்குப் போதுமானதாக இருக்கவில்லை. அவர்கள் வாரியப் பொல்லைத் தோட்டத்தை காத்து நின்றனர். டம்புள்ளைக் கருகில் இன்று சிதைந்த இந்துக் கோயில்களையே காணுகின்றோம்.
கோப்பித் தோட்டங்கள் திறந்ததோடு ஒர் இடைமட்டச் சமுதாயம் இலங்கையில் உருவானது. கோப்பித் தோட்டத்து துரைமார்கள், கோப்பித் தோட்டத்து கிளாக்கர்மார்கள், கண்டக்டர்கள், என்று அவர்கள் அழைக்கப்பட்டனர். தோட்டத்துக்கு புதிதாக துரைமார்கள் தேவைப்பட்டனர். அவர்கள் தனியனாக
2O மலையகத்தமிழரின்வரலாறு

இருந்தனர். பங்களாக்களுக்கு ஆயாக்கள் தேவைப்பட்டனர். கிராமத்து அழகிய நங்கைகள் அதில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் தங்குவதற்கென தனிவீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. இன்றும் பல இடங்களில், தோட்ட எல்லைகளில் தனிப்பட்டவர்களுக்குச் சொந்தமான வீடுகள் பலவற்றைக் காணலாம். அவைகள் இப்படி எழுந்தனவே. 1859க்கு பிற்பட்ட கோப்பி வாழ்க்கையைப் பற்றிய தி பிட்டர் பெரி என்ற ஆங்கில நாவலில் கிறிஸ்டின் வில்சன் இது குறித்து நன்கு விளக்குகிறார்.
1851 ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில்தான் ஜேம்ஸ் டெயிலர் இலங்கைக்கு வருகிறார். அவரது குடும்பமும் வ றுமையின் கோரப்பிடியில் சிக்குண்டதுதான். 100 பவுண் கொடுப்பனவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுத்தான் அவரும் இலங்கைக்கு வந்திருக்கிறார். அவரது ஒப்பந்தக் கடிதத்தில் “ஜோர்ஜ் பேர்டின் இலங்கை கண்டி தோட்டத்தில் மூன்று வருடம் வேலை செய்வதற்கு ஒப்புதல் தெரிவித்து. தனது பயணச் செலவையும் , பயணத்தின் போது தன் பொருட்டுச் செலவிடப்பட்டதை தனக்குக் கொடுபடும் சம்பளத்தில் பிடித்துக் கொள்வதற்கும் அவர் ஒத்துக் கொண்டுள்ளதும்”தெளிவாக குறிப்பிட்டிருக்கிறது. ஆக, தமிழர்கள் என்றில்லை. துரைமார்களாகச் செயற்பட்ட ஆங்கிலேயர்களும், தொழில் ஒப்பந்த அடிப்படையில் தான் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் படிப்பு என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கு அதிகமாக ஒன்றுமில்லை. தன் வீட்டு விராந்தையில் தேயிலைத் தூளைப் பரப்பி பரிசோதனைகள் நடத்தவும், மண் அடுப்பொன்றின் துணையுடன் தேயிலைக் கொழுந்தினை உலர்த்தி, அம்மியால் அதனை அரைத்து எடுத்து, நூலினால் பின்னிய சல்லடையைப் பாவித்து சலித்தெடுத்து தூள் தயாரிப்பில் அவர் ஈடுபட்டதையும் இன்னும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.
ஜேம்ஸ் டெயிலரின் குருவாக அவருடன் இருந்தவர் முத்துமணி என்ற தொழிலாளி. முத்துமணியே அவரது நம்பிக்கைக்குரிய தோழனாக இருந்ததை அவரே கூறியுள்ளார்.
1869ல் மடுல்சீமைப் பகுதியில் ஆரம்பமான நோய் ஒரு வருடத்துக்குள் மலைநாடு முழுவதும் பரவி 1870 ல் கோப்பி பயிர்ச் செய்கையை முற்றாக அழித்தது கண்டு மனமொடிந்து போன தொழிலாளர்களும், துரைமார்களும் செய்வதறியாது திகைத்தனர். இலங்கையில் அப்போதிருந்த 1700 துரைமார்களில் 400 துரைமார்கள் இலங்கையை விட்டுச் சென்று விட்டனர். வடஆஸ்திரேலியா, பிஜி, போர்னியோ, கலிபோர்னியோ, மலேயா, பர்மா என்று அவர்கள் வளத்தை தேடிச் சென்றனர் என்றெழுதுகிறார் பெர்குவசன். அவ்விதம் செல்லமுடியாத தொழிலாளர்கள் செத்து
மலையகத்தமிழரின்வரலாறு 2

Page 21
மாய்ந்தனர். சிலர் ரயில்வே பாதைகள் அமைக்கும் வேலையில் சேர்ந்து உழைத்தனர். 1861ல் ரயில்வேப் பாதைகள் அமைக்கும் பணிகள் இலங்கையில் தொடங்கிவிட்டன.
“மொரீஸியஸ்ஸில் முப்பது தொழிலாளர்களை வைத்திருக்கும் துரை ஆசுபத்திரி ஒன்றை வைத்திருக்கும்படி கேட்கப்படுகிறார். இலங்கையில் கோப்பித் தோட்டத்தில் 500 தொழிலாளிகட்கு ஒரு வைத்தியரும் இல்லாத நிலைமை இருக்கிறது” என்று இந்த மக்களின் நிலைமை குறித்து ஆசுபத்திரிகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் கூறுகிறார். ஆனால் துரைமார் சங்கத்தைச் சார்ந்த ஆர். பி. டிலெர் வட்டார வைத்தியர்களுக்கான தாம் எழுதிய கடிதத்தில், (செசனல் பேப்பர் 1872) 10 வருஷங்களுக்கு இந்தியாவுக்குப் போகாது இங்கேயே இருப்பவர்கள் நல்ல உடல் கட்டோடு இருக்கிறார்கள் என்றெழுதுகிறார். அதாவது 1860களிலேயே இலங்கையில் நிரந்தரமாக சில இந்தியர்கள் வாழத் தொடங்கிவிட்டார்கள் என்பதை இவரது கூற்றிலிருந்து கவனிக்கலாம்.
“இந்தியக் கூலிகளைப் பற்றி இந்திய அரசாங்கம் கவலைப்படுவதில்லை. இலங்கைத் துரைமார்கள் தாம் அவர்களை பாம்பனிலிருந்து கடல் மார்க்கமாக அழைத்து வருகிறார்கள். சுகமில்லாது போனால் பரியாரியிடமும், பூசாரியிடமும் இல்லாது போனால் கடவுள் கதிரேசனிடமும் கறுப்பன்னசாமியிடமும் முறையிடுவதோடு அவர்கள் அமைந்து விடுகிறார்கள்” என்றும் கூறியிருக்கிறார்.
“இப்படித் தங்கியவர்கள் மூன்றில் ஒரு பகுதியினர்” என்று சட்ட நிரூபண சபையில் கூறி இருக்கிறார். ஜே. எல். சாண்ட் என்பவர்.
“சென்னை பிரசிடென்ஸி” காலத்திலிருந்தே இலங்கைக்கு இந்தியத் தமிழர்கள் வந்திருந்தாலும், அவ்விதம் வருவதை ஒழுங்குபடுத்தி, கட்டுப்படுத்துவதற்கு, 1904 ம் ஆண்டிலிருந்தே ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த ஆண்டுதான் "சிலோன் லேபர் கொமிஷன்' என்ற அமைப்பு துரைமார்கள் சங்கத்தின் ஓர் அமைப்பாகத் திருச்சினாப்பள்ளியிலிருந்து இயங்கத் தொடங்கியது.
நூறாண்டு காலம் வரலாறு எழுதப்படாமலும், வரலாற்றில் இருட்டடிப்புச் செய்வதற்கும் இது வழி வகுத்தது.
பெரிய கங்காணியின் சாதுர்யம் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. பதுளை ஸ்பிரிங்வேலிக்கு விஜயம் மேற்கொண்ட தோட்ட உரிமையாளர், தோட்டத்துரைக்கு வழங்கப்பட்ட வசதிகளில் பத்து சத விகிதத்தையே பாவித்துக்
22 மலையகத்தமிழரின்வரலாறு

கொண்டு, தானும் வாழாது, தன் தோட்டத்தையும் வீணடித்துக் கொண்டிருந்த தன்னுடைய துரையின் போக்கில் அதிருப்தி கொண்டார். தனது தோட்டத்துக்கு தமிழ் மொழி நன்கு தெரிந்தவரே தேவை என்று விளம்பரம் செய்து ஒரு தமிழரை நியமித்தார். அடுத்த ஆண்டு விஜயம் மேற்கொண்ட வேளை தனது தோட்டத்தில் நூறு ஆட்களே இருக்கும்போது செக்ரோலில் இருநூறு பெயர்களிருப்பதைக் கண்டு திகைத்துப் போனார். உடனடியாக தமிழ் தெரிந்த ஒரு ஆங்கிலேயத் துரையை நியமித்தார் என்பதே கதை. வரம்பற்ற அதிகாரம் கிடைக்கிற வேளையில்கங்காணி எவ்விதம் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறான் என்பதை இது காட்டுகிறது.
1880 ல் நடைமுறைக்கு வந்தது துண்டு முறை. தோட்டங்களில் நிலைமை மோசமாக, கங்காணி ஒரு துரையை விட்டு விலகி, இன்னொரு துரையிடம் வேலைக்குச் செல்லலாம். அவர் தோட்டத்துக்கு தரவேண்டிய தொகை, அல்லது தோட்டம் அவருக்குக் கொடுக்க வேண்டிய தொகை அதில் எழுதப்பட்டிருக்கும். இது தொழிலாளரை கங்காணியுடன் பிணைத்திருந்ததால் இந்தமுறை 1921ம் ஆண்டு நீக்கப்பட்டது. அதற்கு ஏதுவாக கங்காணி பிரட்டில் இடம் பெற்றிருக்கும் பெயர்கள். தோட்டப் பிரட்டுக்கு மாற்றப்பட்டன. இவ்விதம் செய்வதற்கு, துரைபிரட்டு தோட்டப் பிரட்டாக மாற்றப்படுவதற்கு மக்களிடையே கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. துண்டுமுறை ஒழிக்கப்பட்டதால், தொழிலாளர்களின் கடன்களும் இல்லாது ஒழிக்கப்பட்டன.
தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதலே, தொழிலாளர்களுக்கு வேண்டிய உணவு வகைகளை தோட்டத்தில் கொண்டு வந்து கொடுப்பதன் மூலம், தொழிலாளர்களை தனித்து வாழப் பழக்கியிருந்தனர். 1920 ல் இந்தியக் கூலிகளுக்கு 1 புசல் அரிசியும் தோட்டத்தில் வேலை செய்யும் சிங்களவருக்கு % புசல் அரிசியும் கொடுபட்டது என்று 1920ம் ஆண்டுக்கான சிலோன் செசனல் பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1923ல் இந்தியக் குடியேற்றச் சட்டமும் 1927ல் சம்பள நிர்ணயமும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட முன்னேற்றகரமான சட்டங்களாகும். முன்பு போல் நினைத்தவிதத்தில் அவர்களுக்கான கூலியை மாற்றிக் கொள்ளவோ கூலியைக் கொடுபடாது நிறுத்துவதற்கோ முடியாது போனது.
1808ல் தென்னகத்தில் பஞ்சம் ஏற்பட்டு முழு அழிவேற்பட்டது, என்பதையும் மீண்டும் 1865 - 1880 காலப் பகுதியில் கோரபஞ்சம் ஏற்பட்டு தென்னகத்து மக்கள் பரதவித்ததை,
மலையகத்தமிழரின்வரலாறு 23

Page 22
மதுரை மாவட்ட அறிக்கை ஜே. எச். நெல்சன் 1868ல் எழுதியது,
எஃவ், ஏ. நிக்கல்சன் 1887ல் எழுதியது, ஏ. ஜே. ஸ்டூவர்ட் 1879ல் எழுதியது,
கோயம்புத்தூர் மாவட்ட அறிக்கை
திருநெல்வேலி மாவட்ட அறிக்கை
திருச்சினாப்பள்ளி மாவட்ட அறிக்கை - லூயிஸ் மோர் 1878ல் எழுதியது, செங்கல்பட்டு மாவட்ட அறிக்கை - ஸி. எஸ். குரூக் 1879ல் எழுதியது, வடஆற்காடு மாவட்ட அறிக்கை - ஏ. எஃவ், கோக்ஸ் 1882ல் எழுதியது.
என்பவைகள் நமக்கு ஆவணப்படுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக கிழக்கிந்தியக் கம்பெனியின் புகழ் பெற்று விளங்கிய டபிள்யூ தாக்கரேயை
மேற்கோள் காட்டி, சாரதா ராஜூ எழுதிய நூலில் 1801ல் மெட்ராஸ் பிரசிடென்சியில் நிலவிய பொருளாதார நிலைமைகள் குறிக்கப்படுகின்றன.
இந்தக் காலப் பகுதியில் ஆண்டொன்றுக்கு இலங்கைக் கரையை வந்தடைந்த கலங்களைப் பற்றிச் சிலோன் புளு புக் - 1864 கீழ்க்காணும் தகவல்களைத் தருகிறது.
பிரிட்டிஸ் இந்தியாவிலிருந்து 2079 கலங்கள் வந்தன. பிரஞ்ச் இந்தியாவிலிருந்து 175 கலங்கள் வந்தன.
இவைகளில் இந்தியக் கூலிகளே வந்துள்ளனர். 1868ல் ஆதிலெட்சுமி என்ற கலத்தில் வந்த 120 பேர்களும் கடலில் வீழ்ந்து மாண்டு போயினர். இப்படி வெளியில் வராத கதைகளே ஏராளம், ஏனெனில் அப்போது இப்போதுள்ள வசதிகள் எதுவுமே இல்லை. கொழும்புத் துறைமுகமும் கட்டி முடிக்கப்படாத நிலையிலேயே இருந்தது.
மதுரையில் தற்காலிகக் கலெக்டராக இருந்தவரின் குறிப்புகளின் படி “1877ல் அங்கிருந்த கிராமங்கள் எல்லாம் நாசமாகிவிட்டன. மக்கள் வேர்களைப் பறித்து சுத்தம் செய்து உண்டார்கள். இரண்டு நாட்கள் நீரில் ஊறவைத்து மூன்று நான்குமுறை கழுவிவிட்டு சாப்பிட வேண்டும். அவ்விதம் உண்ட பலர் மரணித்துப் போனார்கள்.” திருநெல்வேலி கலெக்டர் ஏ.ஜே. ஸ்டுவேர்ட்டும், வட ஆற்காட்டு கலெக்டர் வைட் சைட்டும் இதேவிதமாகவே குறிப்பிட்டுள்ளார்கள். பஞ்சம் குறித்து விசாரணை செய்த சபையினரிடம் சாட்சி கூறிய மற்றொருவர் எச். ஈ. மெக்குவேல் - மதுரையில் கலெக்டராக இருந்தவர். அவர் கூறுகிறார். “தென் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆற்று வெள்ளம் போல மக்கள் சென்றனர், குறிப்பாக ராமநாதபுரத்து மாவட்டத்திலிருந்து ஏராளமானவர்கள் சென்றனர். நல்ல
24 மலையகத்தமிழரின்வரலாறு

உழைக்கும் ஆண்பிள்ளைகள் மூன்றில் ஒரு பகுதியினர் இப்படிச் சென்றதாக கணக்கிடப்படுகிறது. சில குடும்பங்களில் ஒரு ஆணும், ஸ்திரிகளும், பிள்ளைகளும் தவிர மற்றைய எல்லாப் பேரும் குடிபெயர்ந்துள்ளார்கள்”
சபையின் நடவடிக்கைகளின்படி 3.12.1892ல் கீழ்க்காணும் குறிப்புகள் காணப்படுகின்றன. “19ம் நூற்றாண்டின் கடைசியிலும் மக்கள் கொட்டிக்கிழங்கு - வரண்ட கிணற்றடியில் தோண்டினால் கிடைக்கும், உண்டே உயிர் வாழ்கின்றனர். மாட்டுத் தீவனமான இலுப்பைப்பூ கொரக்காப்பள்ளி விதைகள், புல்லுகளின் பூக்கள் ஆகியவைகளும் அவர்களின் உணவாக அமைந்தன”
1866ல் ஏற்பட்ட பஞ்சத்தில் தமிழ்நாட்டில் மாத்திரம் இரண்டு லட்சம் பேர் மாண்டனர் என்கிறார் டெலியெல் என்பவர் என்று தமிழர்களின் சமுதாய வரலாறு என்ற தன்னுடைய நூலில் (பக்.199) பி. சுப்பிரமணியம் குறிப்பிடுகிறார்.
1885ல் சென்னை அருங்காட்சி பொறுப்பாளராகப் பதவி ஏற்ற எட்கர் தர்ஸ்டன் எத்னோ கிராபிக் நோட்ஸ் இன் சவுத் இண்டியா' என்ற புத்தகத்தில் தென்னிந்தியாவில் நடைமுறையிலிருந்த சில பழக்கங்களை, சித்திரவதைகள்’ என்று தலைப்பிட்டு வெளியிட்டுள்ளார். ‘ஒருவனைச் சேற்றில் கழுத்தளவு புதைத்திராவிட்டால் அவனிடமிருந்து என்னால் வரிவாங்கியிருக்க முடியாது, என்று கூறியதோடு சிலரை ஏற்றம் இறைக்கும் மூங்கிலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் முக்க வேண்டி வந்த பிறகே குற்றவாளிகளைப் பற்றிய தகவலைப் பெற முடிந்ததாக கூறும் தாசில்தாரர்'இயற்கை கடன்களைக் கழிக்க விடாமலும், சமைக்க தண்ணீர் எடுத்து வரமுடியாமலும், அவனது கால் நடைகளை மேய்ச்சலுக்குச் செல்ல விடாது அவனுடன் வீட்டிலேயே அடைத்து வைத்தும் சித்திரவதை பண்ணியதாக” கூறியுள்ளார்.
ஜோன்சனின் ஆங்கில அகராதியில் சித்திரவதைக்கு வலிக்கும் படியாகத் தண்டனை தந்து உண்மையையும் பணத்தையும் வெளிக் கொணரச் சென்னையில் பரவலாகக் கையாளப்படும் தண்டனைமுறை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதே இத்தண்டனையில் பயங்கரத்தை வெளிப்படுத்த போதுமானது.
ஒருபுறம் பஞ்சம், மறுபுறம் மேல்சாதியினரின் சித்திரவதைகள். பாக்குவெட்டியில் அகப்பட்ட பாக்கைப் போல மக்கள் பரிதவித்தனர். பஞ்சம் இந்திய மக்களைப் பலி எடுத்தது. ஆனந்த மடம் நூலில் அதனாசிரியர் எழுதுகிறார்.
மலையகத்தமிழரின்வரலாறு 25

Page 23
“முதலில் மக்கள் பிச்சை எடுக்கத் துவங்கினர். ஆனால் பரிதாபம், பிச்சை போட யார் உள்ளனர்? தங்கள் ஆடு மாடுகளை ஏன் நிலத்தைக் கூட தவிட்டு விலைக்கு விற்றனர். தங்கள் பெண் குழந்தைகளை மனைவிகளை விற்றனர். ஆனால் அய்யகோ மகனை, மகளை, மனைவியை வாங்கக் கூட வக்கற்ற நிலை கவ்விப்பிடித்தது.கிழங்குகளைத் தின்றனர். காட்டு மனிதர்களைப் போல் எலிகளை, பூனைகளை, கிடைத்தவற்றை தின்றனர். ஆயிரக்கணக்கில் மக்கள் இறந்தனர்”
1896 ல் சென்னைக்கு வந்த காந்தி பதினான்கு நாட்கள் தங்கினார். கடல் கடந்த நாடுகளில் இந்தியர்கள் படும் அவலத்தை தனது பிரசங்கங்களில் குறிப்பிட்டார். ஆபிரிக்காவில் தன்னுடன் 88 தமிழர்கள் சிறை புகுந்தனர் என்பதையும் 28 தமிழர்கள் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர் என்பதையும் எடுத்துக்கூறி இந்தியர்களைக் கூலிகளாக அனுப்புவதை ஊக்குவிக்கக்கூடாது என்று கூறினார்.
1894 அக்டோபர் 22ம் தேதி 'தி டைம்ஸ் ஒஃப் நேடால்” என்ற ஆங்கில சஞ்சிகை “இராமசாமி” என்ற தலைப்பில் ஓர் ஆசிரிய தலையங்கம் எழுதியிருந்தது. 1893 செப்டெம்பர் மாதத்தில் டிரான்ஸ்வெல் அட்வேர்டைசர் கூலிகள் பற்றி கடித விவாதத்தை நடாத்தியது. குடியேற்ற சட்டத்தின் கீழ் தென்னாபிரிக்காவுக்கு வந்த உழைப்பாளர்களைக் குறிப்பதற்கே கூலி என்ற அராபிய வார்த்தை வழக்கத்தில் உள்ளது. இந்தியாவில் அசாமில் உள்ள கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யும் மக்களையே கூலி என்றழைப்பர். ஆனால் இங்குள்ள இந்தியர்களைக் குறிப்பதற்கு அச்சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்களெல்லாரும் கூலிகள் அல்ல. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மதராஸ் மாகாணத்திலிருந்து வந்தவர்கள் அவர்கள். அவர்களின் கரம்பட்டு ஆபிரிக்காவில் செல்வம் கொழிக்கிறது’ என்ற காந்தியடிகளின் கடிதம் செப்டெம்பர் 5ம் தேதி வெளியானது. “டின்டிக்கெட் காலத்தில் ஐரோப்பியர்கள் படித்த இலங்கையரையும், கூலிகளாகவே கருதினார்கள். கால்சட்டை அணியும் கூலிகளாகவே நடத்தினார்கள்” என்று 1954ல் பிரதமர் கொத்தலாவலை பேசுகிறார். (இலங்கையும் கொத்தலாவலையும் - பக் 223)
காந்தியின் பேச்சால் கவரப்பட்டு பலர் இந்தியர்கள் கடல் கடப்பதை எதிர்த்தனர். 2.2.1907 ல் திருவல்லிக் கேணியில் ஒரு பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பாரதியாரின் கரும்புத்தோட்டத்திலே கவிதை பாடப்பட்டது. இந்த மானமற்ற பிழைப்பு இன்னும் எத்தனை காலம் பிழைக்க வேண்டுமென்று? இந்தியா கட்டுரை எழுதியது (8.12.1906). கடல்கடந்த இந்தியர்கள் குறித்த தலையங்கங்கள் சுதேசமித்திரனில் வந்தன.
26 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டத்தி லிந்தியர் பாடு- சொல்லத் துக்கமும் வெட்கமுமிக்கதோர் கேடு என்று பாஸ்கரதாஸும் காபி ரப்பர் தேயிலைக் கரும்புத்
தோட்டத்திலே நம் இந்தியரை
கூலி என்று பேர் கொடுத்து ஐயையோ செய்யுகின்றார் கொடுமைதனை' என்று சாரங்கபாணியும் காசாசைப் பேய் பிடித்த மட்டிக் கங்காணியார் சிறுமங்கையாரைக் கெட் நேசத்திற்கே இழுத்துச் செய்யும் நிர்ப்பந்தம் தான் மனம் ஒப்பந்தகுந்ததோ என்று சுந்தரவாத்தியாரும்
நாடக மேடைகளில் முழங்கினர்.
“கொற்றவனோ இங்கில்லை இங்கிலாந்தில் குளிர்பணியில் அவன் காதோ கேளாக்காது மற்றிங்கு இருப்பவரோ கூலிக்காரர் மன்னவர்க்கு வால்பிடிக்கும் மண்டூகக் கூட்டம்”
என்று எஸ். டி. சுந்தரமும்
நானோர் தொழிலாளி - ஒரு நாய்க்குறும் சுகமேனும் வாய்க்கும் வழியில்லை
என்று ப. ஜீவானந்தமும்
எழுதிய பாடல்களை, டி. கே. சண்முகம் போன்றவர்கள் தங்கள் நாடகங்கள் மூலம் தந்தனர். ஆபிரிக்காவில் நீக்ரோ ஆண்கள் நீண்ட நாட்கள் ஒரு முதலாளியின் கீழ் தங்களை ஆட்படுத்திக் கொள்ள விரும்பாததால், இந்தியக் கவர்ண்மென்டை அணுத்ெ தங்களுக்குத் தொழிலாளர்களை கொடுத்து உதவ வேண்டுமெனக் கேட்டனர். கவர்ண்மென்டார் அவர்கள் வேண்டுகோளுக்கிணங்கிடவே ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து நேடாலுக்கு முதன்முதலில் 1860 ம் வருடம் நவம்பர் மாதம் 16ம் தேதி வந்து சேர்ந்தனர் என்று மகாத்மாகாந்தி தான் எழுதிய தென்னாபிரிக்கா சத்தியாக்கிரகம் என்ற நூலில் (பக்.275) குறிப்பிடுகின்றார். மேலும் அவர் எழுதும் போது”. என்னுடைய அபிப்பிராயத்தில் இந்தியா கவர்ண்மென்டார் செய்தது சரியல்ல. இந்தியாவிலிருந்த பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் தெரிந்தோ தெரியாமலோ, நேடாலிலிருக்கும் அவர்கள் சகோதரர்கள் பேரில் அதிக அனுதாபம் காட்டினார்கள். . . . . ஆனால், ஒர் அன்னிய நாட்டுக்குச் சென்றிருக்கும் இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்குக் குறைகள் ஏற்பட்டால் அவைகள் எங்ங்ணம்
மலையகத்தமிழரின்வரலாறு 27

Page 24
நிவர்த்தி செய்வது என்ற விஷயத்துக்கு போதுமான கவனிப்பு அளிக்கப்படவில்லை. . நேடாலுக்குப் போன தொழிலாளர்கள் அவர்கள் அங்கிருக்கும் காலத்தில் அடிமைகளாவார்கள் என்பதை அவர்கள் உணரவில்லை. ஆனால் அவர்கள் அதை அவசியம் உணர்ந்திருக்கவேண்டும். . . . . இத்தொழிலாளர்கள் நிலைமை நன்றாக தெரிந்திருந்த காலம்சென்ற ஸர். ஸி. வி. ஹன்டர் இச்சம்பவத்தில் ஒரு அருமையான வார்த்தையை உபயோகித்தார். நேடாலிலிருக்கும் இந்தியத் தொழிலாளர்களைப்பற்றி எழுதும்போது அவர்கள் நிலைமை அரை அடிமை வாழ்க்கையெனக் குறிப்பிட்டார். மற்றொரு சமயம் ஒரு கடிதத்தில் அவர்கள் வாழ்வை அடிமை வாழ்வை ஒட்டியதென விவாதித்தார். அந்நாட்டின் முக்கிய ஐரோப்பியரான காலஞ்சென்ற ஹாரி எஸ்கோம்பு என்பவர் நேடாலில் ஒரு கமிஷன் முன்பு சாட்சியம் கொடுக்கும்போது அவ்விதமே அபிப்பிராயப்பட்டார். . . . . இத்துரதிர்ஷ்ட மக்களுக்குள் குலஸ்திரீ அல்லது வேசி என்ற வித்தியாசம் இல்லாமற் போனது என்பவைகளைப் பற்றிச் சொல்லுவதற்கு இங்கு இடமில்லை.” (பக்: 277) இலங்கையிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுக்க தமிழர்களின் வாழ்க்கை தென் ஆபிரிக்க வாழ்க்கைக் கொப்பாகத்தானிருந்தது.
தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு 1915ல் திரும்பிய மகாத்மா காந்தி அதற்கடுத்தாண்டு லட்சுமணபுரியில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் இந்தியர்களை கூலிகளாக வெளிநாடுகளுக்கு அனுப்பக்கூடாது என்று தீர்மானம் பண்ண வைத்தார். அதற்குப் பிறகே இந்திய காலனித்துவ அரசாங்கம் இம்மக்களைப் பற்றி கவனம் செலுத்தத் தொடங்கியது. இந்திய தேசிய தலைவர்கள் கடல் கடந்த தம் தேசத்தவரைப் பற்றி கவலையும் கரிசனையும் காட்டத் தொடங்கினர். கோபாலகிருஷ்ண கோகலே, பூரீநிவாச சாஸ்திரி, ஜவகர்லால் நேரு, எச்.என்.குஞ்சுறு, ஆசாரிய கிரிபாளினி, ராம் மனோகர் லோஹியா, போன்றவர்கள்
அம்மக்களின் நலவுரிமைப் பேணுவதில் கவனம் காட்டத் தொடங்கினர்.
1927 ல் அவரே இலங்கைக்கு பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தைப்பற்றிய ஒரு நூலை “இலங்கையில் காந்திஜியுடன்” என்று
மகாதேவ தேசாய் எழுதி உள்ளார்.
காந்திஜி இங்கு பல கூட்டங்களில் பேசினார்.
28 மலையகத்தமிழரின்வரலாறு

“உங்களைக் காப்பாற்ற ஒரு ராமர் தேவை. ராமர் வருவார் உங்களிடையே பலம் மிகுந்த ஒரு யூனியன் தேவை”
16-11-1927 கொழும்பில்
“பெருந்தோட்டங்கள் உள்ளூராட்சி நிர்வாகத்துக்குள் வராதது எனக்கு கவலை அளிக்கிறது.”
18-11-1927- கண்டியில்
“தொழிலாளி என்ற நினைப்பு உங்களுக்கு வெறுப்பை
ஏற்படுத்தக்கூடாது; பிறர் வெறுப்பு அடையும் விதத்தில்
நீங்கள் நடவாதீர்கள்; உழைப்பு தெய்வீகமானது”
20-1-1927- நுவரெலியாவில்
என்று அவரது பேச்சை அட்டவணைப் போட்டு ஆவணப்படுத்தியுள்ளார். கொழும்பில் ரெட்டியார் சங்கத்தில் பேசும் பொழுது “இந்த அழகிய தீவில் உங்கள் வாழ்க்கையை மேற்கொண்டிருக்கும் நீங்கள், நீரில் சீனி கலப்பதைப்போல மக்களுடன் கலக்கவேண்டும். கோப்பை நிறைய உள்ள நீர், சீனியைத் தன்னுள் கலக்கவிட்டு ததும்பி வழியாமல் இருக்கிறது” என்று பேசினார்.
மகாத்மாகாந்தி 1927 ல் இலங்கை வந்த பொழுது, ஆபிரிக்காவில் சத்யாக்கிரகத்தை நடத்தி தமது செயல்பாடுகளை முன்னெடுத்து செயற்படுவதில் சாதனைகள் புரிந்திருந்தார். இலங்கையில் நிலவிய இந்திய வெறுப்புணர்வை' புரிந்து கொள்ள அவரால் வெகு இலகுவில் முடிந்திருக்கும் பின்னர் 1939 ல் அவரது நேரடி தலையீட்ட்ை இலங்கை மக்கள் கேட்டபொழுது அவர் தனது பிரதிநிதியாக ஜவகர்லால் நேருவை அனுப்பி வைத்தார். அவராலும் இங்குள்ளவர்களின் அடாப்பிடித்தனத்தை குறைக்க முடியவில்லை. 55 ஆண்டுகள், வரலாற்றில் பல கசப்பான பாடங்களுக்குப் பிறகுதான், 2003 ல் இலங்கை தன் சுய அறிவைப் பெறும் சூழல் உருவாகியிருக்கிறது.
1869ல் சுயஸ்கால்வாய் திறக்கப்பட்டது. மேற்கு நாட்டிலிருந்து கிழக்கு நாடுகளுக்கு பிரயாணம் செய்வதற்கு செளகரியம் ஏற்பட்டது. ஆங்கிலத் துரைமார்களுடன், அவர்களது மனைவியரும் வரத்தொடங்கினர். அதுவரையிலும்
மலையகத்தமிழரின்வரலாறு 29

Page 25
இங்கிருந்த வெள்ளையர்கள் தமது இச்சைகளுக்கு தமக்கு கீழ் தொழில்புரிந்த சிங்கள, தமிழ் பெண்களையே பயன்படுத்தியுள்ளனர். ஜேம்ஸ் டெயிலர் போன்ற கட்டுப்பாடானவர்களும் அவர்களிடையே இல்லாமல் இல்லை. பொதுவாக இதனாலேயே ஆரம்ப காலங்களில் இவர்களிடையே பாலியல் குறித்து தாராள மனப்பான்மை நிலவியது. இனம் விட்டு இனம் கலந்து அவர்கள் மணவாழ்க்கையை மேற்கொண்டிருக்கின்றனர்.
கலப்புத் திருமனங்கள்
1983 1893 1910 93) 1E 1935
சிங்களர் தமிழர் 35 39 4: 9B g구 9B ஐரோப்பியர் சிங்களவர் 2 2 H ஐரோப்பிய தமிழர் 3.
ஆதாரம் = இலங்கை நிர்வாக அறிக்கை
= டைம்ஸ் சிலோன் கிறீன் புக்
எனினும் தாம் இலங்கையிலிருக்கும் காலம் முழுவதும் தம்முடன் தொடர்பு வைத்திருந்த பெண்களை மறவாமல் அவர்களுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொடுத்துவிட்டு, சீமைக்குப் போகும்போது, அவர்களுக்கு கிடைத்த பிள்ளைகளை மாத்திரம் எடுத்துக் கொண்டு போனவர்களே அநேகர்.
ஸ்கொட்லாந்துகாரர் ஒருவருக்கு அவ்விதம் தோட்டத்து கொழுந்தெடுக்கும் மாரியாயி என்ற பெண்ணிடம் ஏற்பட்ட உறவையும், அதனால் கிடைத்த பாலு, ராமு என்ற கோடன் தோட்டத்து தொழிலாளிகளையும் பற்றி டாக்டர் என். எஸ். நடேசன் எழுதிய வாழும் சுவடுகள் நூலில் காணலாம்.
1873ல் மருதப்பன் கங்காணியின் மூலம் தான் கருப்பைய்யா (தொண்டமானின் தந்தை) இலங்கைக்கு வருகிறார். ஒப்பந்த கூலிமுறைக்காக, காத்திருக்கும் நிலையில் தமிழகத்து விவசாயிகள் இருக்கவில்லை. இந்தியாவும் இலங்கையும் மிக அருகில் இருந்த காரணத்தால் ஐம்பது கிராமத்தவர்களைக் கூட்டிக் கொண்டு அவரால் இலகுவில் படகேறி இலங்கை வரமுடிகிறது. அவர் தொண்டியிலிருந்து பாம்பனுக்கு படகில் சென்று, அங்கிருந்து மண்டபத்துக்கு நடந்து சென்று, மண்டபத்திலிருந்து படகில் பேசாலைக்கு சென்று 25சதம் படகுக்காரனுக்கு கொடுத்துள்ளார். நடந்து கம்பளைக்கு வந்துள்ளார். அதே நேரத்தில் வசதியுள்ள முருகையா வியாபாரி மதுரையிலிருந்து ரயிலேறி
மலையகத்தமிழரின்வரலாறு

தூத்துக்குடிபோய், நீராவிக் கப்பலில் கொழும்பை அடைந்து, அங்கிருந்து கம்பளைக்கு ரயிலேறுகிறார். 1873ல் கம்பளைக்கு ரயில் ஓடியது. கம்பளைக்கு மருதப்பன் கங்காணியின் நடைப்பயணம் 10 நாள் நீடித்தது. வழியில் மாத்தளைக் கோயிலிலும், கண்டி பிள்ளையார் கோயிலிலும் தங்கியிருந்தார். வழியில் சுகவீனமுற்ற பெண்ணொருத்தியை 16 கிலோமீட்டர் தூக்கி வந்துள்ளார். யானைக் கூட்டம் துரத்தியுள்ளது.
1866 ஆகஸ்ட் 30ந் தேதி அருள்வாக்கி அப்துல் காதர் பிறந்தார். அவரது தந்தை ஆதாம்பிள்ளை ராவுத்தர் இந்தியாவில் திருப்புத்தூரைச் சேர்ந்தவர். கண்டிக்கு அருகே உள்ள தெல்தோட்டையில் கோப்பிப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டவர்.
1896ல் இலங்கைக்கு இந்தியர்கள் வருவது கீழ்க்காணும் வழிகளில் அமைந்தது.
CYLN LPOL COMEMiss AGENCIES. c.
N
閻鼎
R
憧
மாயசத்தமிழரின்வரலாறு

Page 26
முதலாவது வழி : பாம்பனிலிருந்து மன்னார் வரைக்கும். அரசாங்கம் நீராவிக் கப்பல் வசதி அமைத்துக் கொடுத்திருந்தது.1 ரூபா கட்டணம் அறவிடப்பட்டது. வடபாதை வழியிலிருந்து மாத்தளை வரைக்கும் நடைவழி பயணம்.
இரண்டாவது வழி : தூத்துக் குடியிலிருந்து கொழும்பு வரைக்கும். ரூ 4 கட்டணம், இதை தோட்டத் தொழிலாளிகள் அதிகமாக விரும்பியதில்லை,1 ரூபா செலவழித்துவிட்டு மற்ற தூரத்தை நடந்து செல்வதற்கு துணிந்தனர்.
மூன்றாவது வழி தொண்டியிலிருந்து கொழும்பு வரைக்கும்.
கொழும்பில் ராகமையில் 'குவாாண்டைன் கேம்ப்'ஒன்று 1911ம் ஆண்டுவரை நடாத்தப்பட்டது.
தென்னிந்தியர்கள் இலங்கைக்கு போட்டி போட்டுக் கொண்டு வந்தனர். ஆனால் அப்படி வருபவர்களை, வரப்பண்ணுவதற்கு இந்தியாவில் பணம் கொடுப்பவர்கள் தேவைப்பட்டனர். அதற்கென அமைந்த முறைதான்'டின்டிக் கெட் முறை' என்றழைக்கப்பட்டது. 1898ல் சட்ட நிரூபணசபை அங்கத்தவராகவும், கவர்ண்மென்ட் ஏஜண்டாகவுமிருந்த எஃப். ஆர். எல்விஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இதன்படி தட்டப்பாறையில் கூடும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும். டின்டிக்கெட்டில்-டிஸ்டிரிக்ட் எண், தோட்ட எண், தொழிலாளி எண் குறிக்கப்பட்டிருக்கும். நூறு டிக்கெட்டுகள் இரண்டு ரூபா ஐம்பது சதம் என்ற முறையில் அரசாங்க கச்சேரியில் பெற்றுக் கொள்ள முடியும், இந்த டிக்கெட்டுக்களை பெற்றுக்கொள்ளும் தொழிலாளர்கள் இந்த டிக்கெட்டுக்களைப் பயன்படுத்தி பிரயாணம் செய்யலாம். ஒருவழியில் இதுவும் அடிமைமுறை போன்றதே.
மேலும் 1904ஆம் ஆண்டு மேற்குறித்த முறையை நடைமுறைப் படுத்துவதற்கு, மெட்ராஸ் பிரிஸிடன்சியின் ஒப்புதலுடன், நோர்மன் ரூவ் செல் என்பவர் திருச்சினாப்பள்ளியில் அமர்த்தப்பட்டார்.
திருச்சினாப்பள்ளி, தென்னிந்தியாவில், தஞ்சாவூர், ஈரோடு, ரயில் வண்டிகளை இணைக்கும் சந்தியாக இருந்ததால் அந்த இடமே ஏற்கப்பட்டது. ஆத்தூர், மாயாவரம், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் ஏஜென்சிகள் அமைக்கப்பட்டன.
3. மனலயகத்தமிழரின்வரலாறு

அதன் படி 0) இலங்கையிலுள்ளவர்கள் தானே இந்தியா சென்று
ஆட்கட்டலாம். )ே இந்தியாவிலுள்ள ஒருவர் மூலம் ஆட்கட்டலாம். )ே இலங்கையிலுள்ள தமது பிரதிநிதிமூலம் இந்தியாவில்
ஆட்கட்டி அவர்களை பிரதிநிதியுடன் இலங்கைக்கு கொண்டுவரலாம்.
மூன்றாவது முறையே செழித்து வளர்ந்தது 'கங்காணி' முறையாக அறியப்பட்டது. இந்தியாவுக்கு செல்லும் கங்காணி, குடி செல்ல விரும்புபவர்களுடன் கதைத்து, பெரும்பாலும் தமது கிராமத்தவர்களை அழைத்துவந்தார். இந்திய கிராமச்சூழலில், அதன் பழக்க வழக்கங்களுடன், சாதி கலாசாரங்களுடன் இலங்கையில் அவர்கள் குடியேறினார்கள். இருபதாம் நூற்றாண்டில் குடியேறியவர்கள் இப்படி வந்தவர்களே.
இரண்டாவது முறையில் முன்பின் தெரியாத ஒர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக பதியப்பட்டு, இலங்கைக்கு அனுப்பப்படுவதும் நடப்பதுண்டு. இந்தியாவில் அவனுக்கு செலுத்திய கடன்பணம், பிரயானச் செலவு, ஆகியவைகளையெல்லாம் குறித்தெழுதப்படும் துண்டு பின் துண்டு முறையொன்றை ஏற்படுத்தியது. ஒவ்வொரு தொழிலாளியின் உணவு தேவைப்பரிகாரம் செய்யப்படும் போது விசேஷ கவனம் செலுத்தப்பட்டது. அவனது
சாதி கவனிக்கப்பட்டது. 37 சாதிகளை சேர்ந்தவர்கள் இப்படி இலங்கைக்கு வந்திருக்கிறார்கள்.
ரயில்வே பாதை அமைக்கும் தொழிலாளர்கள்
ாயகத்தமிழரின்வரலாறு

Page 27
ரயில் பாதை பனியில் தொழிலாளர்கள்
இப்படி இலங்கைக்குப் போகிறவர்கள் திரும்பவும் தென்னிந்திய கிராமங்களுக்கு விவசாயப் பயிர் அறுவடைகாலத்தில் திரும்பி விடுவார்கள். என்பதால் , இந்த முறையை அவர்கள் உற்சாகப்படுத்தினார்கள்.
இலங்கையில் தலைவரி' என்று அழைக்கப்படும் ஒன்று நடைமுறையிலிருந்தது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடின்றி அது நடைமுறைப்படுத்தப்பட்டது. வேறு வரிகள் எதுவும் அறவிடப்படாத நிலையில் தலைவரி கட்டுவதை பணக்காரர்கள் ஆதரித்தனர். அது ஏழை எளியவர்களைத் தான் பாதித்தது. இந்த வரியிலிருந்து விலக்கப்பட்டவர்கள் பெளத்த குருமார்களும், இந்தியக் கூலிகளும் தான்.
சமூக சீர்திருத்தத்தில் கவனம் காட்டிய அருணாசலம் 'சிலோன் வேக்கர்ஸ் வெல்வேர் லீக்' என்ற அமைப்பை உருவாக்கினார். அந்த அமைப்புக்கு அவர் தலைவராகவும்,பெரியண்ணன் சுந்தரம் செயலாளராகவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். 25 - 6 -1919 ல் அந்த அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன் அழைப்பில் செப்டெம்பர் 1921ல் இலங்கைக்கு வந்த ரெவரண்ட் ஆன்ட்ரூஸ் கொழும்பு டவர் ஹாலில் ஒரு கூட்டத்தில் பேசினார். அதே ஆண்டு இலங்கைக்கு வந்த, இங்கிலாந்து பார்விமென்ட் உறுப்பினர் ஒருவர், இங்கிலாந்து கொமன் சபையில் பேசும் போது "இலங்கையில் அரை அடிமைகளாக இருக்கும் இந்தியக் கூலிகள்
34 மலையகத்தமிழரின்வரலாறு
 

விஷயமாக இந்தியாவில் ஆன்ட்ரூஸும் , இலங்கையில் அருணாசலமும் செய்யும் பணிகளைக்” குறிப்பிடுகிறார்.
1837ம் வருடம் முதல் 1899ம் வருடம் வரை - பாம்பன் - மன்னார் வழியாக
இந்திய தோட்டத் தொழிலாளர்கள் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் இலங்கைக்கு
வர அநுமதிக்கப்பட்டார்கள். இவர்கள் மன்னாளில் இறங்கி 148 மைல் தூரத்துக்கு
அப்பாலுள்ள பன்னாமத்துக்கு வழிநெடுக (1752ம் ஆண்டு கண்டி அரசனைச் சந்திக்க வந்த ஆங்கிலேயத் தூதுவரான ஜோன் பைபஸ் தன் குறிப்பில் பன்னாமம்
என்றே குறித்துள்ளார்) வியாதிகளைப் பரவச் செய்து கொண்டே போய்ச்
சேர்ந்தார்கள். 1842ம் வருடம் முதல் இலங்கையில் காலரா, அம்மை போன்ற
கொடிய வியாதிகள் பரவி, பல்லாயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள்.
1896ம் ஆண்டில் தென்னிந்தியாவில் காலராவும் பம்பாயில் பிளேக்கும்
பரவியிருந்த படியால், அந்த நோய்கள் இலங்கையில் பரவாதபடி தடுக்க என்ன செய்ய வேண்டுமென்பதைப் பற்றி யோசனை கூற அப்பொழுது இலங்கையில் கவர்னராயிருந்த ஸர். வெஸ்டர் ரிட்ஜ்வே என்பவர் "பிளேக் கமிட்டி" என்று ஒரு
கமிட்டியை நியமித்தார். சட்ட திட்டங்கள் சில செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் சிபார்சுப்படி 1897 தட்டப்பாறையில் கேம்ப் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தாலும் 1899 -1911வரை தூத்துக்குடி பாதை மாத்திரமே பாவனையிலிருந்தது. 1911-1914 இடையில் தட்டப்பாறை மீண்டும் துவங்கப்பட்டது.
மண்டபம் முகாம்
1917ல் தான் இது கட்டப்பட்டது. இந்தியாவில் பரவத்தொடங்கிய கொடிய தொற்று நோய்களான கொள்ளை, காலரா, பெரியம்மை முதலியவை இலங்கைக்குப் பரவாது தடுப்பதற்கு, மண்டபம் முகாமில் பிரயாணிகள் தடுத்து வைத்து சோதித்து அனுப்பப்பட்டனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 35

Page 28
மண்டபம் முகாம் இரண்டு பகுதியாக இயங்கியது.
1. தோட்டத் தொழிலாளிகளுக்கான மண்டபம். இதில் இருபத்தைந்து
வார்ட்கள் இருந்தன. மொத்தம் 150 பேருக்கு தங்கும் வசதி 2. பயணிகளுக்கான மண்டபம். பதினெட்டு வார்ட்கள் இருந்தன. மூன்று பிரிவுகளாக இயங்கின. ஒரு பிரிவில் ஆறு வார்ட்கள் இருந்தன. அ. பிராமணர்கள் தங்குவதற்கு ஆ. முஸ்லீம்கள் தங்குவதற்கு இ. இந்துக்கள் தங்குவதற்கு
PF。 பணம் கட்டித்தங்கும் இடமும் ஒன்றிருந்தது.
மண்டபம் முகாமில் தங்கி வந்தவர்கள்.
தோட்டத் தொழிலாளர்கள் பயணிகள்
1917 46,267 46,881 1918 44,010 41,431 伯19 1,12,195 53,360 1920 45,912 57,809 1921 25,344 52,132 1922 78,106 47,740 1923 90,289 42,240 1924 1,53,989 53,106 1925 125,585 60,663
ஆதாரம் மண்டபம் முகாம் அறிக்கை
1929 க்கும் 1950 க்கும் இடைப்பட்ட காலத்து அரசியலைப்பற்றி அறிந்து கொள்வதற்கு, மைக்கல் ரொபர்ட்ஸ் தொகுத்தளித்த இலங்கை தேசிய காங்கிரஸ்ஸின் ஆவணங்கள் உதவியாயிருக்கின்றன.
இலங்கை வாழ் இந்தியர்களின் பிரச்சனையில் ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபதுக்கு பிறகு இலங்கையில் சிலர் கவனம் காட்டத் தொடங்கினர். இலங்கை
36 மலையகத்தமிழரின்வரலாறு

வாழ் இந்தியர்களின் வாக்குரிமையே அவர்களின் பிரதான கவனமாக இருந்தது. லுடவைக் கூறுமாப்போல, இந்தியர்களின் வருகையை இலங்கையில் ஊக்குவித்தவர்கள் பிரித்தானியர்களே. அவர்களே இலங்கையை விட்டு போவதற்கு முன் இந்தியர்களினாற் ஏற்பட்ட பிரச்சனையைத் தீர்த்து விட்டிருக்க வேண்டும். ஆனால் இதில் எந்தவித அக்கறையும் அவர்கள் காட்டவில்லை. அதனால் தான் “இந்திய தமிழருக்கு ழரீலங்காவில் இழைக்கப்பட்ட துரோகம்” என்ற நூலில் (1984) “இவர்களை இந்தியா கைவிட்டு விட்டது. இங்கிலாந்து மறந்து விட்டது; இலங்கை துரோகமிழைத்து விட்டது” என்று இர. சிவலிங்கம் சாடுகிறார்.
“வட்டிக்கு நிதி கொடுப்போர், கூவி விற்போர், இந்தியர்களே, நாடார். இந்திய முஸ்லீம்கள், மலையாளிகள், மேமன்கள் இலங்கையினரின் ஜிவிதத்தையே உறிஞ்சி எடுக்கின்றனர். அவர்களுக்கு குடும்பப்பாரம், சமூகக் கட்டுப்பாடுகள் இல்லை. காலை 5 மணிக்கு எழுந்து இரவு 12 மணிவரை அவர்களால் உழைக்க முடியும். அப்படி உழைப்பதற்கு இலங்கையர்களால் முடிவதில்லை. முன்பு செட்டியார்கள் செய்ததை இப்போது மேமன் இந்தியர்கள் செய்கின்றனர். முதலில்லா தொழிலை ஆரம்பித்துச் செய்கின்றனர். ஏராளமான சீன வியாபாரிகளும் இருக்கின்றனர். இவர்கள் இந்தியாவின் கஷ்டப்பிரதேசங்களிலிருந்து வந்தபடியால் கஷ்ட ஜீவனத்துக்கு ஒத்து விடுகிறார்கள். மலையாளிகள் கிளார்க், உபாத்தியாயர், தையற்காரர், வெயிட்டர்ஸ், பியூன், காவற்காரர், மோட்டார், ரிப்பேர்காரன், அக்கவுண்டன்ட் ஆகிய வேலைகளில் அமர்த்தப்படுகிறார்கள். உள்ளூர்க் கிராமத்தில் கல்லிறக்கவும், காவற் புரியவும், கடைதிறக்கவும் அவர்கள் முயற்சித்து வெற்றி பெற்றுவிடுகிறார்கள். காசை கடனாகக் கொடுத்து தவணைமுறையில் மீளப் பெறுவதற்கு ஆஃப் கானியஸ்தர்களும் (பாய்), பாலுச்சீனரும் பழகிப் போனார்கள். அவர்கள் முன்னூறு வீதம் வட்டி வாங்குகிறார்கள். நகரத்தில் அறுபது சதவிகிதத்தினர் அவர்களிடம் கடன்பட்டவர்களே. ஆனால் நகரசுத்திகளும், வாசற் கூட்டிகளும் நமக்கு தேவை” என்பதே டி. எஸ். சேனநாயக்காவின் பேச்சாக இருந்தது. “பிரதான வீதியில் 150க்கு 118 இலங்கையரல்லாதோர் கடை வைத்துள்ளனர் இரண்டாம் குறுக்கு தெருவில் 194க்கு 180 இலங்கையரல்லாதோர் கடை வைத்துள்ளனர். மலைநாட்டு நகர்ப்புறங்களில் 102 கடைகளில் 41%
வீதம் இலங்கையரல்லாதோருக்கே சொந்தமாக இருக்கிறது” என்று ஆனந்தாக்
மலையகத்தமிழரின்வரலாறு 37

Page 29
கல்லூரியில் நடந்த கூட்டத்தில் அவர் பேசினார். சீனர்கள் புடவை வியாபாரிகளாக, தன்னுயரத்தில் அரைவாசிக்கு சமமான புடவைக் கட்டை தூக்கிக் கொண்டு
அலைவதை பற்றி அசூயையோடு குறிப்பிடுகிறார்.
எமது இனத்தின் தொட்டிலல்லவா இந்தியா' என்று கேட்கும் ஜே. ஆ ஜெயவர்தனா இந்தியாவும் இலங்கையும் அந்நிய ஆட்சிக்குட்பட்ட பின்னர், நம்மிரு நாட்டுக்கும் சிலதடைகள் ஏற்பட்டிருந்தன. விஜயனின் காலத்திலிருந்து 600 மன்னர்களும் , பிரபுத்துவ வம்சத்தினரும் இந்தியாவிலிருந்து மணப் பெண்களை தெரிந்தெடுத்ததை நாம் மறந்து விட்டோம். சித்துார் இளவரசிகளை இலங்கையின் மன்னர்கள் விரும்பி மணந்தனர். (1977, 2802) இலங்கை இந்தியாவில் ஒரு மாகாணமாக இருக்கலாம் (1977, 2803) என்று கூறுகிறார். 22-05-1946 அவர் ஜவஹர்லால் நேருவுக்கு எழுதிய கடிதத்தில் சுபாஷ் சந்திரபோஸை சந்தித்த போது அவர் இலங்கையரை சுரண்டும் இந்தியர்களை நாடு கடத்துவதாகக் கூறியதை எடுத்துக் காட்டி “இலங்கை இந்தியக் காங்கிரஸ் பொது வேலை நிறுத்தத்தைக் குறித்துக் கதைப்பது, இலங்கையின் எதிர்காலத்தைத் தகர்க்கும் செயல்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தாக் கல்லூரியில் 14-02-1941 அன்று நடந்த குடிவந்தவர்களின்
பிரச்சனையைப் பற்றிய கூட்டத்தில் பேசிய டாக்டர் ஆர். சரவணமுத்து,
“ இந்தியாவில் சுதந்திர அரசாங்கம் அமைந்திருக்குமானால் இந்தப் பிரச்சினை இவ்வளவுக்கு சிக்கலாகியிருக்காது. தமது இரு நாடுகளும் சுதந்திரம் அடைந்த இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் இப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்” என நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த நம்பிக்கை கைக்கூடாத கனவாகிப் போனது. இலங்கையில் இந்தியத் தமிழர்களின் வரலாறு, “தோல்விகளின் வரலாறாகி விட்டது என்று, 1920 - 1983
0 邮 。2》 காலப்பகுதி வரலாற்றை பார்த்தவர்கள் சொன்னார்கள்.
1840 லிருந்து இவர்களின் கூலியைக் கொடுப்பதில் ஒரு இழுபறி நிலைமை இருந்திருக்கிறது. இவர்களுக்கான கூலியை வருடத்தில் மூன்று முறை கொடுப்பதென்பதை தோட்டத்துரைமார்கள் வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்
38 மலையகத்தமிழரின்வரலாறு

அவர்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களை அவர்களிடமே வைத்துக் கொள்வதற்கு
இந்தமுறை உதவியாயிருக்கிறது என்பதை இன்றும் காணலாம்.
(தினகரன் செய்திப்படி (14 - 7- 2003) கண்டி மாவட்டத்திலும், மாத்தளை மாவட்டத்திலும் தொழிலாளர்களுக்குச் சம்பளம் கொடுபடாது இழுத்தடிக்கப்படுகிறது என்பதையும் அரசாங்கம் தலையிட்டு திறைச்சேரியிலிருந்து பணம் கொடுத்து உதவியிருக்கிறது என்பதையும் காணக்கிடைக்கிறது)
அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட கூலி முழுவதும் அவர்களிடம் காசாக கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கான உணவு வகைகளை தோட்டத்திற்கு கொண்டு வந்து கொடுக்கும் பொறுப்பை தோட்டத்துரையே ஏற்றுக் கொண்டார். நிர்ணயிக்கப்பட்ட அளவில் அரிசி கொடுபட்டது. 1844 வரையிலும் அவர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசப் பிரயாணத்தையே மேற்கொண்டனர். தொழிலாளர்களின் சம்பளம் பத்தாம் தேதிக்கு முன் செலுத்தப்படல் வேண்டும், அவ்விதம் செலுத்தாத தொழில் கொடுப்போர் மீது வழக்குத் தொடரலாம். என்ற 1889 ல் சட்டம் இதுவரை எந்தத் தோட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டதாக அறிய முடியவில்லை.
தோட்டத் தொழிலாளியின் உணவு என்ன அறுசுவை உண்டியா? சோறு,
ரசம், பருப்பு அல்லது ரொட்டியும் தேங்காய் சம்பலும் , பிளேன்டீயும் தான்.
இந்தியத் தொழிலாளர்களின் மரணம் அதிகரிப்பது அளவுக்கதிகமான போது காலனித்துவ அரசாங்கம், மாவட்ட ஆஸ்பத்திரிகளின் மரணவிகிதாசாரத்தை அறியும் பொருட்டு ஒரு கமிஷனை நியமித்தது. 1893ல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில், இருபது ஆண்டுகள் தோட்டப்புறங்களில் தொழில் பார்த்து அனுபவம் பெற்ற டாக்டர் கிறிவின் கூறுகிறார் "தோட்டப்புறங்களில் நடக்கும் மரணச்சம்பவங்களின் அதிகரிப்புக்குக் காரணம் அவர்களிடையே உள்ள பழக்க வழக்கங்களே. காலை ஐந்து மணிக்கு எழுந்து மாலை ஆறுமணிவரைக்கும் தொழில் செய்யும் தோட்டத் தொழிலாளி இடையில் உணவு கொள்வது இல்லை. கங்காணி மார்களுக்கோ, காலை ஒன்பது மணி
மலையகத்தமிழரின்வரலாறு 39

Page 30
சாப்பாடு கட்டாயத் தேவை” நீண்ட நேரம் 13 மணிநேரம் உணவு எதுவுமின்றி வேலை செய்வது இந்தியத் தொழிலாளியின் தலைவிதியாக இருந்திருக்கிறது. டாக்டர் கிறிவினின் சாட்சியம் தொடர்கிறது. “நோய்வாய்ப்பட்ட தொழிலாளி வீட்டிலிருக்க முடியாது. அவன் வேலைக்குச் சென்றால்தான் அவனுக்கு அரிசி கிடைக்கும் அரிசியைப் பெறுவதற்காக அவன் வேலைக்குச் சென்றாக வேண்டும். 30 சதம் நாட்கூலிச் சம்பளம் பெறுவதற்காக சுகயினடத்துடன் வேலைக்குச் செல்லும் அவன் மரணத்தைச் சந்திக்கிறான். இவ்விதம் நேரும் மரணம் வழியில் நடந்தால், மரணச்சடங்கு எதுவுமில்லாமல் அவனைப் புதைத்துவிட்டு, அவனது இடத்துக்கு இன்னுமொரு புது ஆள் பதிந்து விட முடிகிறது”
இந்த பரிதாபகரமான நிலைமை தான் தோட்டத் தொழிலாளியை வீட்டு வைத்தியத்தில் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. “தோட்டத்திலே யாராவது ஒருவர் நோய்வாய்ப்பட்டால் தோட்ட டிஸ்பென்சரின் உதவியை விடக் கோடங்கியின் உதவியே மேலெனக் கருதப்படுகிறது. இதற்குத் தொழிலாளர்களின் அறியாமை ஒரு காரணம் என்றாலும், தோட்டத்திலுள்ள டிஸ்பென்சரின் அபகீர்த்தியே முக்கியமான காரணம்” என்று ஸி. வி. வேலுப்பிள்ளை தன் 'கோடங்கி
கட்டுரையில் எழுதுகிறார்.
1841ல் ஆங்கிலேய ஆட்சியில் முதலாவது கட்டளைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இலங்கையில் குடியேறிய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட சட்டம் குறித்து “இப்படி ஒரு சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது என்பதையோ, அதன்மூலம் உள்ளூர் நீதிபதிகளின் உதவியைப் பெறமுடியும் என்பதையோ, உரிமைக்காக போராடமுடியும் என்பதையோ, அறியும் அளவுக்கு அவனுக்கு கல்வி, கேள்விகளில் நாட்டம் இருந்ததில்லை” என்றெழுதுகிறார் எமர்சன் டெண்ணன்ட்
1848ல் இலங்கையில் சுதந்திரக் கிளர்ச்சியால் ஏற்பட்ட கலவரங்களை அடக்குவதில் அதிக கவனம் செலுத்திய ஆங்கிலேயர், தோட்டங்களில் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதிலும் கவனம் காட்டினர். கண்டியில் கூடி துரைமார் சங்கம் என்ற அமைப்பை ஏற்படுத்தினர். 17-2-1854ல் துரைமார் சங்கம் அமைக்கப்பட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியில் கப்டன் உத்தியோகம் பார்த்த கெப்டன் கெயித் ஜொலி அதன் முதல் தலைவரானார். அதிகாரத்துடனும், ஒருங்கிணைக்கப்பட்ட
40 மலையகத்தமிழரின்வரலாறு

சக்தியோடும் அவர்கள் இலங்கையின் ஆட்சியில் செல்வாக்கு செலுத்த முடிந்தது. அவர்களின் முதல் கவனம் பாதைகள் அமைப்பதில் சென்றது. அப்போது இலங்கையில் பொருட்களை இடம் விட்டு இடம் எடுத்துச் செல்வதற்கு மாட்டு வண்டி பாவனை தான் இருந்தது. தோட்டங்களில் உற்பத்தியாகும் கோப்பிக் கொட்டைகளை கொழும்புக்கு எடுத்துச் செல்லவும், அங்கிருந்து அரிசி, மாவு போன்ற உணவு தானியங்களைத் தோட்டங்களுக்கு எடுத்து வரவும் மாட்டு வண்டிகளே பாவிக்கப்பட்டன. இந்த மாட்டு வண்டி பயணம் ஆபத்து நிறைந்ததாகவும், பாதுகாப்பற்றதாகவும் இருந்தது. இந்த மாட்டு வண்டிகளில் கொள்ளையடித்த இலங்கையின் புகழ் பெற்ற ரொபின்ஹட் என்றழைக்கப்பட்ட சரதியல் (1832 -1864) சரித்திரம் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கடைசியாக சரதியல் பிடிபட்டது பாதையோரத்தில் அமைந்த அம்பலத்து வீட்டில்தான். இந்திய பெண் நல்லம்மா என்ற பெண்ணின் பெயர் இது குறித்து பிரஸ்தாபிக்கப்படுகிறது. கண்டி , கம்பளை, ஒத்தக்கடை (கினிகத்தேனையின் பழைய பெயர்) சந்தியில் கருப்பாயி, மீனாட்சி, ராமாயி என்ற பேர்போன பெண்கள் சோற்றுக் கடை போட்டிருந்தது குறித்து ஸி. வி. வேலுப்பிள்ளை நாடற்றவன் கதையில் குறிப்பிடுகிறார்.
சரக்குகளை அனுப்புவதற்கு ரயில்வேயின் துணையை நாடுவதில் ஆங்கிலேயத் துரைமார்கள் அதிக விருப்பம் காட்டினர். கோப்பி அறுவடை முடிந்ததும் தமிழ்நாட்டுக்கு திரும்பிவிடும் பழக்கத்தில் இருந்த தொழிலாளர்களை ரயில்வே பாதைகள் அமைப்பதில் பயன்படுத்தினர். மேலும் ஆட்களை தமிழ் நாட்டிலிருந்து கொண்டு வந்தனர். அவர்களை பயணியர் லேபர் போர்ஸ்’ என்றழைத்தனர். அவர்கள் தங்கிய லயங்கள் பயணியர் லயின்ஸ், பதநீர் லயம், கேங்ஸ் லயின்ஸ், காங்கிய லயம் என்றழைக்கப்பட்டன. ஆரம்பத்தில் முழுக்க முழுக்க தமிழர்களைக் கொண்டிருந்த இந்த லயங்கள் இன்றும் கண்டி, கடுகண்ணாவ, கம்பளை, நாவலப்பிட்டி, நானு ஓய, நுவரெலியா, கந்தப்பொளை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன. அவைகளில் வாழுபவர்கள் இப்போது
சிங்களவர்களாக இருக்கிறார்கள்.
1867ல் கண்டியோடும் 1874ல் நாவலப்பிட்டியாவோடும் 1886ல் மாத்தளை யோடும் 1885ல் நானு ஓயாவோடும் 1894ல் பண்டாரவளையோடும் கொழும்பு ரயில் பாதை இணைக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னரே 1905ல்
மலையகத்தமிழரின்வரலாறு 4 l

Page 31
யாழ்ப்பாணத்தோடு இணைக்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் ரயில் பாதையை அமைத்தது மலைநாட்டு உற்பத்திகளை கொழும்புக்கு எடுத்து செல்வதற்கே என்பது இதனால் உறுதி செய்யப்படுகிறது. வடக்கே காங்கேசன் துறையிலிருந்து தெற்கே மாத்தறை வரைக்கும் ரயில் பாதையால் செல்ல முடியும் என்ற நிலையையும், ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புவழியாக எட்டியாந்தோட்டைக்கும், இரத்தினபுரிக்கும் செல்வதற்கும், பொல்காவலையிலிருந்து பேராதனைச் சென்று ஒரு வழியாக மாத்தளைக்கும், மறுவழியாக ஹல்கிறணோயா வரைக்கும், நானு ஒயாவில் பிரிந்து பண்டாரவளைக்கு செல்வதற்கு தென்னக ரயில்வேச் சேவை மூலமும் ஏற்பாடுகள் செய்ததன் மூலம், மலை நாட்டில் எந்த ஒரு புகையிரத வண்டி நிலையத்திலிருந்தும் இந்தியாவின் வேறொரு புகையிரத வண்டி நிலையத்துக்குச் செல்லலாம் என்ற நிலைமையை அவர்கள் உருவாக்கினார்கள். படிப்பறிவில் குறைந்திருந்த தமிழர்கள் தாம் இலங்கையில் வேலை செய்யும் நகரத்திலிருந்து தமிழகத்தில் தாம் வாழும் ஊருக்குச் செல்வதற்கு இப்படி உருவாக்கி கொடுத்த ரயில் வழிப்பயணத்தை பெரிதும் பயன்படுத்தி பலன் பெற்றார்கள்.
செங்கல்பட்டு டிஸ்ட்ரிக்கில் சைதாப்பேட்டை தாலூகா 13 ஸ்டேசன்கள் செங்கல்பட்டு தாலூகா 8 ஸ்டேசன்கள்
வட ஆற்காடு டிஸ்ட்ரிக்கில் காஞ்சிபுரம் தாலூகா 5 ஸ்டேசன்கள் அரக்கோணம் தாலூகா 3 ஸ்டேசன்கள்
தென் ஆற்காடு டிஸ்ட்ரிக்கில் கூடலூர் தாலூகா 12 ஸ்டேசன்கள் சிதம்பரம் தாலூகா 5 ஸ்டேசன்கள் விழுப்புரம் தாலூகா 11 ஸ்டேசன்கள் திருக்கோயிலும் தாலூகா 4 ஸ்டேசன்கள் திண்டிவனம் தாலூகா 4 ஸ்டேசன்கள் விருத்தாசலம் தாலூகா 3 ஸ்டேசன்கள் மதுராந்தகம் தாலூகா 6 ஸ்டேசன்கள் திருவண்ணாமலை தாலூகா 4 ஸ்டேசன்கள் போலூர் தாலூகா 4 ஸ்டேசன்கள் ஆரணி தாலூகா 1 ஸ்டேசன்
42 மலையகத்தமிழரின்வரலாறு

தஞ்சாவூர் டிஸ்ட்ரிக்கில்
திருச்சினாப்பள்ளி டிஸ்ட்ரிக்கில்
மதுரை டிஸ்ட்ரிக்கில்
ராமநாதபுரம் டிஸ்ட்ரிக்கில்
திருநெல்வேலி டிஸ்ட்ரிக்கில்
வேலூர் தாலூகா குடியாத்தம் தாலூகா திருப்பத்தூர் தாலூகா
கும்பகோணம் தாலூகா பாபநாசம் தாலூகா தஞ்சாவூர் தாலூகா மன்னார்குடி தாலூகா
8
4
9
6
திருத்துரைப்பூண்டு தாலூகா 15
நாகப்பட்டணம் தாலூகா பட்டுக்கோட்டை தாலூகா சீர்காழி தாலூகா மாயவரம் தாலூகா நன்னிலம் தாலூகா
திருச்சினாப்பள்ளி தாலூகா குளத்தலை தாலூகா கரூர் தாலூகா லால்குடி தாலூகா
திண்டுக்கல் தாலூகா நிலக்கோட்டை தாலூகா
மதுரை தாலூகா திருமங்கலம் தாலூகா
சிவகெங்கை தாலூகா பூரீவல்லிப் புத்தூர் தாலூகா ராமநாதபுரம் தாலூகா
கோவில்பட்டி தாலூகா பூரீவைகுண்டம் தாலூகா திருநெல்வேலி தாலூகா அம்பாசமுத்திரம் தாலூகா
怡
10
4.
14
5
20
15
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
5 ஸ்டேசன்கள்
2
6
25
10
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
கயம்தமிழரின்வரலாறு
43

Page 32
சேலம் டிஸ்ட்ரிக்கில்
கோயம்பத்தூர் டிஸ்ட்ரிக்கில்
10 டிஸ்ட்ரிக்கில்
சங்கரநயினார்கோவில் தாலூகா 2
தென்காசி தாலூகா திருச்செந்தூர் தாலூகா
ஊத்தங்கரை தாலூகா ஓமலூர் தாலூகா சேலம் தாலூகா திருச்சங்கோடு தாலூகா ஓசூர் தாலுகா, தர்மபுரி தாலூகா கிருஷ்ணகிரி தாலூகா
ஈரோடு தாலூகா பல்ப்ேடம் தாலுகா கோயம்புத்தூர் தாலூகா அவரோசி தாலூகா பொள்ளாச்சி தாலூகா
B
8
ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள்
ஸ்டேசள்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசள்கள் ஸ்டேசன்கள்
ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள் ஸ்டேசன்கள்
ஸ்டேசள்கள்
ஸ்டேசன்கள்
முதல் ரயில் பயணம்
மலையகத்தமிழரின் வரலாறு
 

கங்காணி முறை
இலங்கையில் எட்வர்ட் பார்ன்ஸ்ஸிடன் (1819) ஜோர்ஜ் பேர்ட்டுடன் (1824) கங்காளிமுறை நடைமுறைக்கு வந்தது. பார்ன்ஸ்ஸின் தோட்டத்தில் துரையாக இருந்தவர் வில்லியம் நோர்த்வே என்பவர். கருப்புத் தோட்டம் திறப்பதற்கென்றுதான் அவர் முதலில் இலங்கை வந்தார். சுங்காணிமார்கள் இந்தியாவில் விவசாயிகளின் கடனை முழுவதாக அடைப்பதற்கு உதவினார்கள். இந்தியாவிலிருந்து கடல்கடக்கத் துணிந்த ஒவ்வொரு இந்தியனும் இந்த முறையினால் கங்காணிக்கு கடனாளியாகவே இலங்கைக்கு குடியேறினான். கங்காணிகள் "அரிசியும், பிற தின்பண்டங்களும்" வழங்கி, அவர்கள் தோட்டத்துக்குப் பாதுகாப்பாக வருவதற்கு வழி வகுத்தார்கள். கூடிய வரையில், கங்காணிகள் தாம் முன்னளித்த பணத்தை (இது தோட்டத்துரைமார்கள் கங்காணிகளுக்கு முன்னளித்தது) தொழிலாளர்களை கொண்டு திரும்பப் பெறுவதற்கே முயன்றனர். அப்படி பெற்று முடியுமட்டும் அத்தொழிலாளர்கள் அக்கங்காணியின் கீழேயே பெயர் பதிந்து வேலை செய்ய வேண்டும். தொழிலாளர்களின் சர்வதேவைகளையும் நிவர்த்திக்கும் வாய்ப்பும்,
வல்லமையும் கொண்டவராக, கங்காணிகள் தோட்டத்தில் விளங்கினர்.
தென்னக விவசாயிகள் 'கங்காணியின் கீழ் வேலை செய்யும் முறைக்குப் பழகி இருந்தார்கள். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆள் கட்டிவரும் உரிமைப் பெற்றவர்கள் கங்காணி என்று அழைக்கப்பட்டார்கள். இந்தகங்கானிபெரும்பாலும் தோட்டச் சொந்தக்காரருக்கோ அன்றேல் தோட்டத்துரைக்கோ நன்கு அறிமுகமானவனாகவே இருந்தான். எட்வர்ட் பார்ன்ஸும், ஜோர்ஜ் பேட்டும் தமக்கு அறிமுகமானவர்களையே கங்காணிகளாக அமர்த்தினார்கள்.
இந்தியச் சட்டப்படி ஏற்கனவே தொழிலாளியாகக் கடமையாற்றிய ஒருவனே,
அதிலும் தான் யாருக்கு ஆள் சேர்க்கிறானோ அதே துரையின் கீழ் கடமையாற்றிய ஒருவனே கங்காணியாகும் உரிமை உடையவனாகின்றான். தமக்குத் தெரிந்த
மaலயகத்தமிழரின்வரலாறு 5

Page 33
கங்காணிகளிடம் பணத்தை முன் பணமாகக் கொடுப்பதற்குத் துரைமார்கள் தயாராக இருந்தார்கள். அப்படி கொடுக்கப்படும் முற்பணத்தை மோசம் செய்யும் கங்காணிகளும் இருந்தனர். அப்படிப்பட்டவர்களை இந்தியாவில் கைது செய்ய வேண்டிவந்தது. அப்படிப்பட்ட நிலைமையில் தன்னை உட்படுத்திக் கொள்ள விரும்பாத தோட்டச் சொந்தக்காரர்கள் தமது சொந்த ஏஜன்ட்களையே ஆட் சேர்க்கும் கங்காணியாக இந்தியாவுக்கு அனுப்பினர். நாட்கள் செல்லச் செல்ல தொழிலாளர்கள் தேவை அதிகரித்தது. தொழிலாளர்கள் தாங்களாகவே நூறு பேர் வரையில் சேர்ந்து, தம்முள் ஒருவரை கங்காணியாகத் தெரிவு செய்து கொண்டு குடியகன்றனர். பெரும்பாலும் அவர்கள் இந்தியாவில் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்களாக, உறவினர்களாக இருந்தார்கள். ஒரே தோட்டத்தில் குடியேறினார்கள். அப்படி தெரிவான கங்காணியே அவர்களின் எல்லாமுமாகச் செயற்பட்டார். தங்களின் வாழ்வைப் பேணிப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பையும்
கங்காணியிடமே கொடுத்து விட்டார்கள்.
கங்காணி என்றழைக்கப்பட்டவர் தொழிலாளிக்குத் தந்தை ஸ்தானத்தில் இருந்தார். அவர்கள் நெற்றிவேர்வை நிலத்தில் சிந்த உழைக்கும் பணத்தை அவரே வாங்கினார். அதைத் தொழிலாளர்கள் விரும்பினர். தன்னுடைய கங்காணியிடம் தன்னுடைய சம்பளம் பாதுகாப்பாக இருக்கும் என்று மனப்பூர்வமாக அந்த ஏழை உழைப்பாளி நம்பினான். அந்த நம்பிக்கையைப் பெரும்பாலும் அவர்கள் கட்டிக் காத்தனர். கங்காணி என்ற ஆலமரம் விருட்சமாக வளரத் தொடங்கியது. உழைக்கும் மக்களின் ஒட்டு மொத்தமான - அதிகார பூர்வமான தலைவன் நிலையிலிருந்த கங்காணி - தோட்டத்துரையை அதிகாரம் பண்ணுமளவுக்குச் சக்தி படைத்தவராக உயர்ந்தார். அவருக்குத் தோட்டத்தில் மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டது. மாதச் சம்பளம் என்பது ஒரு அடையாளமாகவே கொடுபட்டது. அப்படிச் சம்பளம் பெறுவதென்பது ஒரு கெளரவம். மேலதிகமாக, வேலைக்கு வரும் அவரது தொழிலாளிகள் ஒவ்வொருவருக்கும், நாளைக்கு இரண்டு சத வீதம் தலைவரிகொடுக்கப்பட்டது. நூறு தொழிலாளர்கள் ஒரு கங்காணியிடமிருந்தால் இரண்டு ரூபாய் அவருக்கு தலைவரி பணமாக ஒரு நாளைக்குச் சேரும். இது நிரந்தரமாக அவருக்குத் தோட்டத்தில் சட்டபூர்வமாகக் கொடுக்கப்பட்டது. அதுவுமல்லாமல் அவ்விதம் வேலைக்குவரும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் நான்கு சதவீதம் 'பென்ஷ் பணம் வசூலிக்கப்பட்டு அதுவும் கங்காணிக்கே கொடுபட்டது.
46 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டச் சமூகத்தில் மிகப் பெரிய அந்தஸ்து கங்காணிக்கு இருந்தது. தொழிலாளர்களை நிர்வகிப்பதற்கு ஆங்கிலேயத் துரைமார்கள் செல்வாக்கும் வலிமையும் மிகுந்த கங்காணியையே நம்பினர். அவர்களில் சிலர் தொழிற்சங்கம் அமைத்து, அரசியல் தலைவர்களாகவும் உருவானார்கள்; வெகு பலர் பட்டணங்களில்
கடைதிறந்து பெரும் வணிகரானார்கள்; பணம்திரட்டும் நோக்குடன் ஒரு சிலர்
தோட்டங்களையே விலைக்கு வாங்கித் தோட்டச் சொந்தக்காரரானார்கள்.
தொழிலாளர்களைத் திரட்டுவதற்குக் கொடுக்கப்படும் முற்பணம கோஸ்ட் அலவன்ஸ்' என்று கணக்குப் புத்தகத்தில் பதியப்பட்டது. கோப்பித் தோட்டங்கள் திறக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் தோட்டத்தில் நிரந்தரத் தொழிலாளர்களாகப் பெருந் தொகையினர் தேவைப்படவில்லை. கோப்பி அறுவடை செய்யும் காலத்திலேயே அவர்களுக்குத் தேவையிருந்தது. எனவே அறுவடை செய்வதற்கென்று இலங்கைக்கு வருபவர்கள் திரும்பித் தங்கள் கிராமத்துக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபடுவதற்கான வசதி இருந்தது. மீண்டும் அடுத்த வருட அறுவடைக்கு அவர்கள் தேவைப்பட்டார்கள். அப்படி வரும்போது அவர்கள் பழைய ஆள்' என்று w கணக்கிடப்பட்டார்கள். முதன் முறையாக அந்தக் குழுவில் இடம்பெற்றவர்கள் புது ஆள்’ என்று குறிப்பிடப்பட்டார்கள். இந்தப் பாகுபாடுகள் குடியகழ்வுக் கணக்கெடுப்புகளுக்கும், அரசாங்க நிர்வாகச் செளகரியங்களுக்கும் அவசியமாகக் கருதப்பட்டுத் தோட்டநிர்வாகத்தினரால் மிகவும் நிதானமாகப் பேணப்பட்டன. இந்த இரண்டு சொற்களும் ஆங்கிலத்தில் அட்டவணைத் தலைப்புக்களாகவே,"இலங்கை நிர்வாக அறிக்கை” களில் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். அந்த அறிக்கையும் 1867ம் ஆண்டுக்குப் பிறகே தொகுக்கப்பட்டது.
சரியான வரலாற்று ஆதாரங்களை ஆரம்ப காலத்திலிருந்து பெறுவதற்குச் சிரமப்பட வேண்டி இருக்கிறது. ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதும் பலரும், தங்கள் தேவைக்கேற்ப தகவல்களைத் திரித்தும், கூட்டியும், குறைத்தும் எழுதுவதற்கு இது வழி சமைத்துவிட்டிருக்கிறது. தோட்டத்துரைமார்கள் சங்கம் தரும் உத்தியோகப்
பூர்வமான தகவல்களே, இப்போதும் நாம் பெறக்கூடிய தகவல்களாக இருக்கின்றன.
மலையகத்தமிழரின்வரலாறு 47

Page 34
ஜோர்ஜ் பேர்ட் ஹென்றி விகம்
1824ம் ஆண்டு ஜோர்ஜ்பேர்டும், 1866ம் ஆண்டு ஜேம்ஸ்டெயிலரும் 1875ம் ஆண்டு ஹென்றிவிகமும், முறையே கோப்பி, தேயிலை, ரப்பர் தோட்டங்களைத் திறந்தவர்கள் என்று அறியக் கிடக்கிறது. வாழ்க்கையில் புலம் பெயர்கிற நிகழ்ச்சிகள் தனிமனித குடும்ப சேர்க்கையில் ஒரு தேர்வு உரிமையாக அமைகின்றன. ஆனால் பொருளாதார குடியேற்றங்கள் அவ்வாறு அமைவதில்லை என்பதை பல குடியேற்றங்கள் மெய்ப்பிக்கின்றன.
பிரான்சில் குடியேறிய போர்த்துக்கேயர்களது குடியேற்றம் நூறாண்டு கடந்த பின்னரும் ஆண்களே அதிக எண்ணிக்கையிலிருப்பதைக் காளாலாம்.
ஆண்கள் பெண்கள்
1868 - 377 母蜗
E - 18 12
E9 - O 'W Š ‰ቕ፡ 2.
եitii - 1ց 11 E[]", Ք[]:
11 - 7 () : 3[]፥ጁ
|E21 - 193ք, 구 ፰8ዳጁ
| 1 - 1 -} 653. 33.
141 - 15[]] Ճ5 է: 353
1951 - 1ցB[] Ei{ነ ናጁ ፈ1ü “፳;
ஆதாரர் கேரோஜின் பிரேட்டதின்
திரள் நாங்கள் ஏற்கனAேgசரஅது R.ோர் - 1982
பHலயகத்தமிழரின்வரலாறு
 
 

கோப்பித் தோட்டத்தைத் திறந்த ஆங்கிலேயர்கள், கோடரிக்கப்போடு தம்பின்னால் ஆட்களைத் திரட்டிக் கொண்டு காடுகளை அழித்தார்கள். இலங்கையின் தென் மத்திய பகுதிகளில் காடுகள் அழிந்து புதிய உருவம் பெற்றன. ஆரம்பத்தில் துரைமாரும், தொழிலாளர்களும் ஒன்றாக இணைந்தே காடழிப்பதில் ஈடுபட்டனர். காடுகளை வெட்டி அழிப்பதில் தொழிலாளிகவனம் காட்டுகையில் அவனைக் காடுகளில் காணக்கிடைக்கும் புலி, பானை, சிறுத்தை, நரி, கரடி முதலிய கொடிய மிருகங்களிடமிருந்தும், பாம்பு போன்ற விஷ ஜந்துகளிடமிருந்தும் காக்க வேண்டிய பொறுப்பு துரைக்கு இருந்தது. ஆரம்பத் தோட்டத்துரைமார்கள் பெரும் வேட்டைப் பிரியர்களாக இருந்துள்ளார்கள். அவர்களின் ஆதரவில் வளர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் வேட்டைக்கு அவர்களுக்கு உதவியாக இருந்தார்கள். பல நெருக்கடியான சமயங்களில் அவர்களின் சமயோசித புத்திபால் உயிர்பிழைத்துவந்ததை அவர்கள் எழுதி வைத்திருக்கிறார்கள். 1971ல் இலங்கை அரசாங்கம், தான் முகங்கொடுக்க நேர்ந்த துப்பாக்கி ஏந்திய கிளர்ச்சிக்குப் பின்னரே, தோட்டங்களில் தமிழர்கள் அவ்விதம்துப்பாக்கிவைத்திருப்பதை சட்டநடவடிக்கை மூலம் தடைசெய்தது.
1940ல் மாட்டு வண்டியில் கொழுந்து 1940 இல் வேட்டைப் பிரியரான
ஏற்றிச் செல்லல் தோட்டத் தமிழர்
தோட்ட உத்தியோகஸ்தர்களின் வீட்டுச் சுவர்களில் அலங்காரமாகக் காணப்படும், மான் கொம்புகளும், யானைத் தந்தங்களும் அந்த நாட்களின் ஞாபகச் சின்னங்களே, மின்சாரம் இல்லாத அந்நாட்களில், இரவு நேரங்களில் தம் மத்தியில் தீ கொளுத்தி எரிய விடுவதன் மூலம், தம்மில் சிலர் நித்திரை விழித்து காவல் செய்ததன் மூலம் அவர்கள் உயிர் வாழ்ந்து, தோட்டங்களில் வேலை செய்தனர். அப்படி இருந்தும் மனிதர்களையும் அவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகளையும் துடித்துச் சென்று பக்கத்துக் காடுகளில் அவர்களின் எலும்புக் கூடுகள்
காணப்பட்ட கதைகள் ஏராளமாக இருக்கின்றன. தோட்டத்துரைமார்கள்
மலையகத்தமிழரின்வரலாறு 4 }

Page 35
தங்குவதற்கென ஆரம்பத்தில் இந்தக் காடுகளில் அமைக்கப்பட்டவை காட்டு
மரங்களாலும், மண்ணாலும் ஆன குடில்களே ஆகும்.
தும்பாறை, அம்பேகமுவ, கொத்மலை, புசல்லாவை என்ற இந்தக் காட்டுப் பகுதிகளில், மன அர்ப்பணிப்போடு தொழிலாளர்களோடு சேர்ந்து உழைத்த ஆங்கிலேயர்களுக்கு மத்தியில், அந்தக் கடினப் பிரதேசங்களைத் தாண்டி, பிதுருதலாகல மலைக்கு அப்பால் ஊவாவில் தோட்டங்களைத் திறக்கவும் சிலர் முன் வந்தனர். அவர்களுடன் சென்ற மக்கள் கூட்டம் அதுநாள் வரை மனிதக் காலடி படாது கிடந்த வனப்பிரதேசத்தில் கடுமையாக உழைத்தது, மலைப்பிரதேசத்துக் கன்னிநிலம் அவர்களின் கரம்பட்டதால் பூத்துக்குலுங்கிற்று.
இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். வரும் வழியில் காட்டில் செத்துக் கிடக்கும் மிருகங்களின் அழுகிய இறைச்சியை, பசி தாளாமல் அவர்கள் உணவாக உண்டனர். இந்த மாமிச உணவு சட்டப்படி கண்டியர்களுக்குச் சொந்தமானது. அதனால் அவர்களிடையே கலவரம் மூண்டது என்று எழுதுகிறார். எம்.ஏ. டி. அப்புஹாமி தன்னுடைய “பிரித்தானியருக்கு எதிரான கண்டியர்களின் கடைசி நிலைப்பாடு” என்ற நூலில், அதனால் ஆட்சியினரிடம் கோரிக்கைவிடுத்து, பாதைகள் ஒரத்தில் அம்பலம்கட்டியும், கிணறுகள் தோண்டியும் கொடுக்கப்பட்டது என்கிறார். (1995 : 255)
இலங்கைக்கு வந்தவர்கள்
ஆண்கள் பெண்கள் | குழந்தைகள் மொத்தம்
1839 2432 188 99 2719
1840 3326 307 181 3814
1841 4523 363 164 5050 1842 9025 279 166 9470 1843 6298 162 248 6708 1844 74840 廿181 724 76745
1845 72526 698 77 73401
低346 4.1863 330 125 42318
50 மலையகத்தமிழரின்வரலாறு

இந்தியாவுக்குப் போனவர்கள்
1839
1840
841
1842
1843
1844
1845
1846
1956
3464
4243
1069
18977
38337
24623
13836
161
256
274
345
694
825
145
48
85
153
117
228
482
535
36
23
2202
3873
4634
11264
20153
39697
24804
13904
மரணம், பதியப்படாத பயணம் என்பவைகளுக்கூடாகவும், மேற்குறித்த
விவரங்கள் 1845க்குப் பிறகு இங்கு வாழத் தொடங்குவதைக் காண்பிக்கிறது.
ஆரம்பத்தில் இலங்கை வந்தவர்களில் மிகச் சிறு தொகையானவர்கள் இலங்கையிலேயே தங்கினார்கள். பத்தசத விகிதத்தினர் தங்கினார்கள். 90
சதவிகிதத்தினர் ம்பிச் சென்றார்கள். தொடர்ர் டைபெற்றது. தவிகிதத்தினர் திரு 如 து தொடாநது ந 凹0@
1839 கால கட்டத்தில் பெண்களும்,
தகுந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை.
குழந்தைகளும் வரத் தொடங்கினார்கள். பெண்கள் ரவிக்கை அணியும் வழக்கம் 1859க்குப் பிறகே இலங்கையில் பரவத் தொடங்கியது. அடுத்த ஏழு ஆண்டுகள் அந்த நிலைமையில் - பெண்கள் குறைவாக வரும் நிலைமையில் எந்தவிதமான குறிப்பிட்டுக் கூறத்
ஆண்டு ஆண் பெண் பிள்ளைகள் மொத்தம்
1839 2432 188 99 2719
1840 3326 307 甘81 3814
1842 9025 279 166 9470
1844 74840 957 724 76521
1846 41862 330 125 42317
ஆதாரம் :21-04-1847திகதிய ஆளுநரின்தீர்வேடு
மலையகத்தமிழரின்வரலாறு
51

Page 36
இவ்விதம் வந்தவர்கள் கடுமையாக வருந்தி உழைப்பதைக் கண்டதோட்ட உரிமையாளர்கள் அவர்கள் மேலும் மேலும் வந்து குடியேறுவதை ஊக்குவித்தனர். வருபவர்களை குடும்பத்தோடு வரும்படித் தூண்டினர். தோட்ட உரிமையாளர்கள் தாம் திறந்த தோட்டத்துக்கு தமக்குப் பழக்கமான, தமது நாட்டிலுள்ள ஒரு பெயனர வைத்து அழைப்பராயினர்; இந்தியாவிலிருந்து இத்தோட்டங்களில் கூலி வேலை செய்வதற்கு வந்தவர்கள் தயக்குப் பரிச்சயமான ஒரு பெயரைச் சொல்லி அழைப்பராயினர். இரண்டு பெயர்களாலும் அக்குடியிருப்பு அறியப்படலாயிற்று. கீழ்க்காணும் அட்டவனையில் இதைக் காணலாம். இதில் தோட்டத்து ஏஜண்ட் என்று குறிக்கப்பட்டால் அந்த தோட்டத்தைப் பொறுப்பாக இருந்து கவனித்தவர்கள் என்பதையும் அவர்களே பின்னாட்களில் பெரிய கங்காணியாக அறியப்பட்டார்கள் என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆரம்ப காலத் தோட்டங்கலெல்லாம்
கண்டியிலும் அதன் சுற்று வட்டத்திலுமே அமைந்துள்ளன.
இடம் ஆங்கிலப் தமிழ்ப் தோட்டத்து
பெயர் பெயர் ஏஜண்ட்
புசல்லாவை கண்னொருவ ராசா தோட்டம் பார்ன்ஸ்
மவுண்ட் டெம்பில் டொக்டர் புதுதோட்டம் பார்ன்ஸ்
கண்டி மொறகலை முருங்கால தோட்டம் | ராமசாமி
கேகாலை (läTTLILIntit கந்தசாமி
தும்பறை பள்ளகலை அண்ணாமலை தும்பறை தூனாமடோடுவ இருசனம் கங்காணி மடுசினம ககவத்தை கெசவத்தை சப்பாடி கண்டெக்டர் பூண்டுலேயா மாவோசாவ மனளிக்கவத்தை எம். லெப்பை தம்பி
ஆதாரம் 185 தோட்ட ஆண்டுக் குறிப்பு:
5. மாவடசந் தமிழரின் வரலாறு

-
20 ம் நூற்றாண்டின் 19 ம் நூற்றாண்டின் 19ம் நூற்றாண்டின் கொழுந்தாபும் தோட்டப் கோக்கோ சேகரிக்கும் கோப்பி பறிக்கும் பெண் தோட்டப் பெண் தோட்டப் பெண்
1862க்குப் பிற்பட்ட காலப்பகுதியில் குடிவந்தவர்களின் எண்ணிக்கையைக் கவனித்தால், ஆண்கள் 78 வீதம், பெண்கள் 18 வீதம், குழந்தைகள் 4 வீதம் என்றிருப்பதைக் கவனிக்கலாம். பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியும்போது, இலங்கையின் வாழ்வு முறைபற்றியும், இங்கு வாழ்வதற்கேற்பான சூழல் பற்றியும், இந்தியாவில் உள்ளவர்களுக்கு நன்கு தெரிந்திருந்தன. கோப்பியின் முதல் இருபதாண்டு காலத்தில் இலங்கைக்கு வந்த இந்தியர்களின் தொகை பத்து லட்சத்துக்கு மேலாகும். அவர்களில் இருபத்தைந்து சதவிகிதத்தினர் - அதாவது இரண்டரை லட்ச மனிதர்கள், இலங்கை மண்ணிற்கே இரையாகிப் போயுள்ளனர் என்கிறார் ஏ. எம். பெர்குயிசன்.
1839க்கும் 1884க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் இலங்கைக்கு வந்த இந்திய வம்சாவளியினரின் மூன்றில் ஒரு பகுதியினர் இலங்கையிலேயே தங்கி விட்டனர் என்பதை எடுத்துக் கூறியுள்ளார் ஜே.எட். சாண்ட் என்ற துரைமார்களைச் சட்ட நிரூபண சபையில் பிரதிநிதித்துவம் பண்ணியவர். இந்திய மக்களின் வருகை, இலங்கையில் உள்ள பெருந்தோட்டத்துப் பொருளாதார நிலையின் செழிப்புத் தன்மைக்கேற்ப கூடியும், பெருந்தோட்டத்துப் பொருளாதார நிலையின் மந்தத் தன்மைக்கேற்பக் குறைந்தும் கானப்படுவதையும் கவனிக்கலாம். உதாரணமாக, கோப்பிப் பயிர்ச் செய்கை நோயுற்று, அழிவுற்றக் காலப் பகுதியை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலப்பகுதியிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடிவருவோரின் தொகை முற்றாக இல்லாமல் போகவில்லை. மாறாக, இக்காலப்பகுதியில் இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் போனோரின் தொகை
அதிகரித்திருந்தது. இது மீண்டும் அதிகரித்த எண்ணிக்கையில் மீண்டும் தொடர
ஆரம்பித்தது இங்கு தேயிலை பயிரிடப்பட்ட காலத்திலேயே.
பணியகத்தமிழரின்வரலாறு 53

Page 37
தேயிலைப் பயிர்ச் செய்கைக்கு, கோப்பி பயிர்ச் செய்கைக்கு மாறாக ஆண்டு முழுக்கத் தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். தேயிலை கொய்வதற்குப் பெண்களையும், பிள்ளைகளையும் பயன்படுத்தக் கூடிய நிலைமை உருவானது. குடும்பம் குடும்பமாக குடியேறுபவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். அப்படி வந்தவர்கள் சமூகமாக இங்கேயே வாழத் தலைப்பட்டனர். அவர்கள் சமூகமாக இங்கேயே வாழத் தலைப்பட்டதும், அவர்களுக்கான கல்வி தேவைகளும், சமூகத் தேவைகளும் அதிகரித்தன. அவைகளைச் செய்வதில் திறமை மிகுந்திருந்த யாழ்ப்பாணத் தமிழர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தன. இலங்கையில் தொடர்ந்து வசித்த இந்தியர்களில் கணிசமானவர்களும் தங்களை இலங்கையராக இனம் காட்டத் தொடங்கினர்.
தோட்ட மக்களின் சனத்தொகை.
1921 1931 1946
இலங்கைத் தமிழர்கள் 2716 5541 53339 இந்தியத் தமிழர்கள் 49394.4 6925.40 665853 இந்திய முஸ்லீம்கள் 4214 4214 4258
ஆதாரம் இலங்கை குடிசன மதிப்பீட்டறிக்கைகள்
குறிப்பாக 1946ல் இலங்கை தமிழர்கள் என்ற பிரிவில் அடங்கியவர்களில் பலர் உண்மையில் இந்தியர்களே.
இந்தியர்கள் இலங்கையில் மேற் கொண்ட தொழில்கள்
துறைமுகத் தொழிலாளர் 6160 புகையிரதப் பகுதி 1831 பொறியியல் திணைக்களத் தொழிலாளர் 244 ரிக்ஷா இழுப்பவர் 2793 கள் இறக்குவோர் 2734 தோட்டி தொழில் 5923 பயிற்சி பெற்ற புகையிரதத் தொழிலாளர் 1651 பயிற்சி பெற்ற துறைமுகத் தொழிலாளர் 349 பொருட்கள் தயாரிப்போர் 82.79
- தச்சர், பொற்கொல்லர், தையற்காரர், நெசவாளர்
சேவைகள் செய்வோர்
- சலவைத் தொழில், முடிதிருத்துந் தொழில்,
வீட்டு வேலையாட்கள் 2124
நடிகர்கள், இசைக்கலைஞர்கள் 1386 ஆதாரம் : (பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எடுத்தாண்ட என். கே. சர்க்காரின் புள்ளி விபரங்கள்)
54 மலையகத்தமிழரின்வரலாறு

மலையகத் தமிழரின் அரசியல் அனுபவங்கள்
LiiLLLSLLLLLSLiLSSLAALLiLMLSLiLSL0SLSLLLLLAALLLLLASLSLiLLLiLMLSSLiLSL0LLLSLLLLLLLiiLMLLLLSSSLLLSLLiLLLLLLLiLSSLAMLMJLLiLSSLALJLLSLLiLLLLLiiLLLiLSSLASLLLiLMLLLSLMLMMSiLSSA
10லையகத் தமிழரின் அரசியல் அநுபவங்களை ஐந்து கால கட்டங்களாகப் பிரித்து அடக்கலாம்.
முதலாவது 1820 -1919 க்குட்பட்ட நேரடி பிரிட்டிஷ் ஆளுகைக்குட்பட்ட காலம். இரண்டாவது 1921-1947க்குட்பட்ட உள்ளூர் ஆட்சிக்காகப் பரிசோதனைமேற்பட்ட காலம்.
1. சட்ட நிரூபண காலம் 1920 -- 1930
2. அரசாங்க சபைக் காலம் 1930 - 1947
மூன்றாவது 1948 - 1977 சோல்பரி அரசியற் திட்டம் சிறிமாவோ அரசியற் திட்டம் நான்காவது 1978 - 1986 ஜயவர்த்தனா அரசியற் திட்டம் ஐந்தாவது 1986க்குப் பின் பிரேமதாசயுகம்,
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தவர்களுக்கென ஓர் அரசியல் பங்கேற்பும் இல்லை. இந்த காலத்தில் இலங்கைக்கு வந்த இந்தியர்கள் சுதந்திரமாக இயங்கிய ஆட்காட்டிகள் மூலமே வந்தனர். மற்ற பிரித்தானிய காலணி நாடுகளுக்குக் கொண்டு வரப்பட்டதைப்போல, ஒப்பந்தக் கூலிகளாக இவர்கள் கொண்டு வரப்படவில்லை. 1904ம் ஆண்டுதான் இப்படி வருகிற இந்தியக் கூலிகளைப் பற்றிக் கவனம் செலுத்தினர். திருச்சிராப்பள்ளியில் லேபர் கமிஷன் அமைக்கப்பட்டது. கோஸ்ட் ஏஜன்சியின் வரவேற்புக் காரியாலயங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இரண்டாவது கால கட்டமான 1921க்குப் பிறகு, தென்னிந்தியாவில் எழுச்சி பெற்ற தேசிய இயக்கமும், இலங்கையின் அரசியல் தலைவர்களும் இந்தக் குடியேற்றத்தை மனிதாபிமானத்தோடு நோக்கினர். துண்டுமுறை ஒழிப்புச் சட்டம் 1921ல் நடைமுறைக்கு வருமெனக் கூறப்பட்டது. அது இந்த மக்களின் நெடிய வரலாற்றில் குறிப்பிட்டுக் கூறத்தகுந்த விடயம். பொன்னம்பலம் அருணாசலத்துக்கு
மலையகத்தமிழரின்வரலாறு 55

Page 38
இந்து சமூகம் நன்றி பாராட்ட வேண்டும். துண்டு முறை ஒழிக்கப்பட்டதோடு கங்காணிபாரின் ஆட்சி ஆட்டம் காணத் தொடங்கியது. இந்நிலைமையில் இந்த மக்களை ஒதுக்கப்பட முடியாத கூட்டத்தினராக ஆட்சியாளர் எண்ண ஆரம்பித்தனர். அவர்களது பிரச்சினையும் உரிய முறையில் அணுகப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்களுக்கென்று ஒரு பிரதி நிதித்துவம் தேவை என்று உனர்ந்தனர்.
அவ்விதம் இலங்கை வாழ் இந்தியர்க்கென முதலாவது சட்ட நிரூபண சபைக்கு நியமிக்கப்பட்டவர் ஈ. ஜி. ஆதாம் அலி என்பவராவர். கவர்னம் சேர் வில்லியம் ஹென்றி மேனிங்ஸ் என்பவரால் இந்த நியமனம் 07.06.1921ல் செய்யப்பட்டது. போரா சமுகத்தைச் சார்ந்தவர் அவர் "இலங்கை சனத் தொகையில் ஆறில் ஒரு பங்கினர் இந்திய மக்கள் இவர்களுக்கென ஆகக் குறைந்தது நான்கு அங்கத்தினராவது இருக்க வேண்டும் என்று அவரது பேச்சு. 1.12.1921 ஹன்சாட்டில் கானாக்கிடைக்கிறது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இலங்கை ஏற்றுமதி வர்த்தகம் குடும்ப அடிப்படையில் ஏழு போரா நிறுவனங்களிடமிருந்தது. அதில் ஒருவர்தான் ஆதாம் அவி. இந்நிறுவனங்கள் இந்தியா, ஆபிரிக்கா, தூரகிழக்குப் போன்றவற்றுடன் வர்த்தகத் தொடர்புகள் உள்ள வணிக இளவரசர்களாக இருந்தனர். அவர்கள் இந்தியாவுடனும், மாலைதீவு வேறு கிட்டிய தீவுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட்ட சொந்த நாவாய்களை வைத்திருந்ததோடு, ஏராளமான நிதி மூலங்களையும், கடன் வசதிகளையும் பெற்றிருந்தனர். அவர்கள் அரிசி, சீனி, மா, மண்ணெண்ணெய் ஆகியவற்றையும் வேறுபல உற்பத்திப் பொருட்களையும் ஏற்றுமதி செய்து வந்தனர். இந்தப் பின்னணிதான் ஆதாம் அலிக்கு முதல் இந்தியப் பிரதிநிதியாகச் சட்ட நிரூபன சபைக்கு நியமனமாகும் தகுதியைக் கொடுத்தது. அவரது பெயரால் ஆதாம் அலி ஒழுங்கை வெள்ளவத்தையில் இன்னுமிருக்கிறது. 27.09.1924ல் அடுத்து நடந்த தேர்தலில் பலரும் ஈடுபாடு காட்டினர். சட்டநிரூபண சபையில் இருவருக்கு இடம் ஒதுக்கித் தரப்பட்டது. கொழும்பில் இயங்கிய சங்கப் பிரமுகர்கள் இக்னேலியஸ் சேவியர் பெரைராவும், மொகமட்சுல்தானும் தெரிவாகினர். மொகமட் சுல்தான் மரணமடைபவே நடந்த இடைத் தேர்தலில் 08.12.1925 ல் கோதண்டராம நடேசய்யர் தெரிவானர். அவரது பிரசன்னம் சட்டசபையில் தோட்டத் தொழிலாளியின் குரலை ஓங்கி ஒலித்தது. அன்று ஒலிக்கத் தொடங்கிய குரல் இடையில் (1931-1935) ஐந்தாண்டுகள் தவிர 1947 அவர் மரணமடையும் வரை சட்ட சபையில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
5 {፥ மலையகத்தமிழரின்வரலாறு

ஈ.ஜி.ஆதாம் அலி கோ. நடேசய்யர் ஐ எக்ஸ் பெனாரா எஸ். பி. வைத்திலிங்கம்
சட்ட நிரூபண சபையில் இந்திய வம்சாவளியினர்.
1924ல் தேர்தலில் கலந்து கொள்வதற்கு - இந்தியப் பிரதிநிதியாகத் தெரிந்தெடுக்கப்படுபவர் இந்தியாவிலேயே பிறந்திருக்க வேண்டுமென்ற கோதாவில் இலங்கையில் பிறந்த பெரிசுந்தாத்துக்கு அநுமதி வழங்க மறுத்து ஆர்.என். தாயின் என்ற தேர்தல் அதிகாரி தீர்ப்பு வழங்கினார். டிரிபியூன் என்ற ஏட்டில் (18.04.1924) முழு விபரம் கொடுக்கப்பட்டுள்ளது. நேரு இலங்கைக்கு வந்து இங்குள்ள சிங்களத் தலைவர்களின் கடின போக்கை கண்டு 1939ல் அவர்களின் வருகையை முற்றாகத் தடைசெய்தார். மொரிஷியஸ், மேற்கிந்தியத் தீவுகளில் இந்த ஒப்பந்தக் கூலிகளை"ப் பற்றி போராட்டங்கள் நிகழ்ந்திருக்கின்றனவென்றாலும், இலங்கையில் குடியேறிய "ஆட்கட்டிகள்' கொண்டு வந்த கூலிகளைப் பற்றி குறிப்பிட்டு கூறத்தக்க போராட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. பிரித்தானியர்கள் ஆட்சி பூத்துக் குலுங்கிய அந்த நாட்களில் வெறும் தட்டு முட்டுகளாக - மிருகங்களைப் போல, எண்ணிக்கையில் கணிக்கப்பட்ட "டின் டிக்கெட்டுகளாக" கொண்டு வரப்பட்டார்கள். அவர்களின் நாமாவளிகளைக் கூடி அறிந்து கொள்ளும் அவசியம் எவருக்கும் ஏற்படவில்லை. இரண்டாவது காலகட்டத்தில் இவர்கள் எண்ணிக்கையின் தொகைகருதி அரசியல் அரங்குக்குள் ஈர்க்கப்பட்டனர். 19ம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து சட்ட நிரூபண சபை இலங்கையிலிருந்தாலும் அது அதிக எண்ணிக்கையில் பிரிட்டிஷாரையே கொண்டிருந்தது. முதலில் பிரிட்டின் ஆட்சியினரால் நியமிக்கப்பட்டும், பின்னால் வகுப்புவாரியாக தேர்தலில் தெரிந்தெடுக்கப்பட்டும் "இந்தியர்கள் இச்சபையில்' பிரதிநிதித்துவப்
படுத்தப்பட்டனர்.
மலையகத்தமிழரின் வரலாறு 5.

Page 39
1931ல் நடந்த பொதுத் தேர்தலில் இரண்டு தெரிந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் ஒரு நியமன உறுப்பினருமாக மூவர் - பெரி. சுந்தரம், எஸ். பி. வைத்தியலிங்கம், திவரான்பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா தெரிந்தெடுக்கப்பட்டனர். இதில் தெரிவான பெரி. சுந்தரம் தொழில் மந்திரியாக நியமிக்கப்பட்டது “ஒரு தற்செயல் நிகழ்ச்சியே” என்கிறார் எஸ். தொண்டமான் தன்னுடைய கட்டுரை ஒன்றில் (காங்கிரஸ் இயக்கத்தின் உத்தியோகப்பூர்வ ஆங்கில இதழ். 1990ம் வருடம் பெப்ரவரி / மார்ச் இதழ்), 1939ல் இலங்கை வந்த ஜவகர்லால் நேரு, இந்தியாவுக்கு திரும்பியவுடன் இந்தியர்கள் இலங்கைக்கு வருவதற்கு தடைவிதித்தார். இந்தியா திரும்புவதற்கு முன்னர் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள், ஹர்த்தால்கள், வேலைநிறுத்தங்கள், தியாகங்கள், இந்தியக் கூலிகளி’டையே சுயமரியாதை உணர்வை எழுப்பி இலங்கையை தாயகமாகக் கருத வைத்தது.
1931 - 1947
டொனமூர் ஆணைக்குழு இலங்கையருக்குச் சர்வ சனவாக்குரிமையை அறிமுகப்படுத்தியது. அரசாங்க சபை அதன் சிபார்சில் உருவானதே "பெண்கள் வாக்குரிமை என்பது நாறிப் போன தத்துவம்’ என்று கூறிய பொன்னம்பலம் இராமநாதன் “பெண்களின் முழு வாழ்க்கையும் அவர்களது கவனமும் வீட்டிலேயே இருக்க வேண்டும். அதற்கப்பாலான ஒரு உலகமும் அவர்களுக்கு இல்லை. வீட்டுப் பொறுப்பிற்கப்பால் அவர்கள் செல்வதற்கு இடம் கொடுக்க வேண்டாம்” என்று வாதிடுபவராகவே இருந்தார்.
1927ல் லேடி டயஸ் பண்டாரநாயக்காவின் தலைமையில் அமைக்கப்பட்ட “இலங்கை வாழ் மகளிர் வாக்குரிமைச் சங்கம்’ தமிழ்ப் பெண்கள் பலரை அங்கத்தவர்களாகக் கொண்டிருந்தது. ‘காந்தி சங்கம்' என்ற அமைப்பின் பிரமுகரான சத்யவாகீஸ்வரய்யர் என்ற வக்கீலும் நல்லம்மா என்ற பெண் வைத்தியரும் இச்சங்கத்தின் மூலம் பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடினர்.
நடேசய்யரும் அவரது மனைவியர் மீனாட்சியம்மையாரும் அதே நிலைப்பாட்டில் செயல் புரிந்து வந்த தம்பதியினராவர்.
டொனமூர் ஆணைக்குழுவினரின் சிபார்சுகள் அய்யருக்கு அதிருப்தியையே கொடுத்தன.
58 மலையகத்தமிழரின்வரலாறு

“டுனமோர் இந்தியரை டூ-நோ-மோர் இந்தியராகச் செய்து விட்டார். இந்தியரை ஒதுக்கிக் கொண்டார். இலங்கையில் சிறுபான்மையோர்களில் பெரும்பான்மையோராகிய இந்தியர்களுக்குக் கால்களும் கைகளும் விலங்கிடப்பட்டது போன்ற அடிமைத்தனமே மிஞ்சும்” என்று தான் நடத்திய தேசபக்தன் பத்திரிகையில் எழுதினார். டொனமூர் சிபார்சுக்கெதிரான கருத்துக்களைக் கொண்டிருந்த நடேசய்யர், அச்சிபார்ரிசின்படி 1931ல் அமைந்த அரசாங்க சபைக்கான தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பைக் கடைசி நேரத்தில் பறி கொடுத்தார். “தருகிறேன், தருகிறேன்” என்று கூறிய பெரிய கங்காணி கடைசி நேரத்தில் தலைமறைவாகி விட்டதனால், டெபாசிட்பணம் கட்டுவதற்கு நடேசய்யரால் முடியவில்லை.
அரசாங்க சபை 7.7.1931ல் கூடிய பொழுது, இந்திய மக்களைப் பிரிதிநிதித்துவம் பண்ணும் வாய்ப்பைப் பெற்றவர்களாகக் கீழ்க் காணும் பிரமுகர்கள்
பிரசன்னமாகியிருந்தார்கள்.
பண்டாரவளை - ஏ. பெலோஸ், கோர்டன் தலவாக் கொல்லை - சிதம்பரம்பிள்ளை வைத்திலிங்கம் ஹட்டன் - பெரியண்ணன் சுந்தரம்
இவர்களுடன் நியமன அங்கத்தவராகத் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைராவும் வீற்றிருந்தார். முதலாவது அரசாங்க சபையிலே பெரிய சுந்தரம் தொழில் மந்திரியாக நியமனம் பெற்றார். 1931ம் ஆண்டு நடைமுறைக்கு வந்த டொனமூர் ஆணைக்குழுவினரின் சீர்திருத்தம் சுமார் 100 வருடங்களின் பின் இலங்கை அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தியது.
சர்வ சன வாக்குரிமை, பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம், அரசாங்க சபை, நிர்வாகக்குழு முறை, மந்திரிசபை என்பனவற்றைக் குறிப்பிடலாம். அரசாங்க சபையில் சர்வ சன வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் 50 பேர் இடம்பெற்றார்கள். முதன் முதலாக மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசாங்க சபையை டொனமூர் ஆணைக்குழு ஏற்படுத்தியது.
நிதி, நீதி, வெளிநாட்டு விவகாரம், பாதுகாப்பு போன்றவற்றைத் தவிர்ந்த ஏனைய உள்நாட்டு விடயங்கள் தொடர்பாக சட்டமூலங்களைக் கொண்டு வரும் அதிகாரம் மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது. அரசாங்க சபையிலிருந்து 7 நிர்வாகக் குழுக்கள் உருவாக்கப்பட்டன.
மலையகத்தமிழரின்வரலாறு 59

Page 40
1931ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 100,000 தோட்டத் தொழிலாளர்கள் வாக்களித்துள்ளனர். ஹட்டன் தொகுதியில் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டவர் பெரி. சுந்தரம். கண்டி, நெல்லிமலைத் தோட்டத்து பெரிய கங்காணி பெரியண்ணன் என்பவரின் மகன் சுந்தரம். லண்டன் சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்று வந்தவர். இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினரில் மிகப் பெரிய படிப்பு படித்தவர்.
இதற்கு முன்னர் அரசியலில் ஆர்வம் காட்டி சட்ட நிரூபண சபையில் போட்டியிட முடியாது போனவர். 1931 மே 4ம் தேதி தொடங்கி 1935 டிசம்பர் 7ம் தேதிவரை கைத்தொழில் வர்த்தக அமைச்சராகக் கடமையாற்றியுள்ளார்.
இந்தத் தேர்தலில் தலவாக்கொல்லையிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர் எஸ். பி. வைத்திலிங்கம் என்றறியப்பட்ட சிதம்பரம்பிள்ளை வைத்திலிங்கமாவார். இவருக்குச் சொந்தமாகத் தேயிலைத் தோட்டமிருந்தது.
தேர்தலில் இவருக்கெதிராக நின்றவர்களில் டி. இ. ஹமில்டன் என்ற தோட்டத்துரையும் பி. கே. வேலுச்சாமி என்ற இலங்கை சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவரும் குறிப்பிடத்தக்கவர்கள்.
3975 அதிகப்படியான வாக்குகளால் தேர்தலில் தெரிவானார் எஸ். பி. வைத்திலிங்கம். இவர் 1936ல் நடைபெற்ற இரண்டாவது சட்ட சபைத்தேர்தலிலும் அதே தலவாக்கொல்லைத் தேர்தல் தொகுதியில் நின்று 8078 அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவராவர்.
அரசாங்க சபைக்கான தேர்தலில் நமது கவனத்தைக் கவரும் ஏனைய பிரமுகர்கள் நுவரெலியாத் தொகுதியில் போட்டியிட்டவர்கள்.
நுவரெலியாத் தொகுதியில் ஏ. ஈ. குணசிங்காவின் தொழில் கட்சியின் சார்பில் போட்டியிட்டவர் ஜே. டி. ரட்ணம் என்பவராவர். டொக்டர் ஜேம்ஸ் தேவசாசன் ரட்ணம் என்ற முழுப் பெயர் கொண்ட இவர் நுவரெலியா பகுதியில் வாழ்ந்து நகர்ப்புறத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றவர் செல்வந்தர்.
முதலாம், இரண்டாம் அரசாங்க சபைத் தேர்தல்களில் போட்டியிட்ட இவர் 1943ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் 12,652 வாக்குகளைப் பெற்று இரண்டாவதாக வந்தார். இவருடன் போட்டியிட்ட ஏனைய மூன்று வேட்பாளர்களும் சிங்களவர்கள்.
60 மலையகத்தமிழரின்வரலாறு

1936ல் நடந்த இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தலில் மிகவும் கவனத்தை ஈர்ந்த தொகுதி ஹட்டனாகும். அங்கு போட்டியிட்டவர்கள் லட்சுமி இராஜரட்ணமும் திரு. கோதண்டராம நடேசைய்யருமாவர்.
கண்டியில் முப்பது வருடங்களுக்கு மேலாக வாழ்ந்து அங்கு பேரும் புகழும் பெற்ற வக்கீல் ஸி. எஸ். இராஜரட்ணம் அவர்களது பாரியார் தேர்தலில் நின்றார். இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டங்களில் மிகவும் மரியாதைக்குரியவராக நடத்தப் பெற்ற இராஜரட்ணம் அவர்கள் “இலங்கையின் கடைசி மன்னன் விக்ரமராஜசிங்கவின் ராஜதானியைச் சேர்ந்தவர்” என்றே அறியப்பட்டவர்.இவரது மனைவியார் லஷ்மி இராஜரட்ணம் - இந்திய வம்சாவளிப் பெண்ணாவர். ஈற்றில் 16,324 வாக்குகளைப் பெற்று - தன்னை எதிர்த்த லஷ்மி ராஜரட்ணத்தைவிட 12,689 அதிகப்படியான வாக்குகளைப் பெற்று நடேசய்யர் வெற்றியடைந்தார்.
அந்த தேர்தலில் 145, 000 தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தனர்.
1941ல் 225,000 தொழிலாளர்கள் வாக்களிக்கும் உரிமை பெற்றிருந்தனர். எனினும் இர்ண்டாம் உலக யுத்த பீதியினால் தேர்தல் நடைபெறவில்லை.
1936 அரசாங்கசபை 1947ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரை நீடித்தது.
நடேசய்யருக்கும், வைத்திலிங்கத்துக்கும் பதினொரு நீண்ட ஆண்டுகள் அரசாங்க சபை உறுப்பினராக இருக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
பின்னால் இரண்டாவது அரசாங்க சபையிலே பதில் தொழில் மந்திரியாக இரண்டரை மாதங்கள் பெரைரா கடமையாற்றி இருக்கிறார். அய்யர் முதல் அரசாங்க சபையில் இடம்பெறாமல் போனது மலையக மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரியதோர் இழப்பு என்பதை சம்பவங்கள் விளக்குகின்றன. பொதுத்தேர்தல்களில் நின்று வெற்றி பெறும் வாய்ப்பும் தோட்டப்பகுதிகளில் மாத்திரமே இருக்கிறது என்பதை உணர்ந்திருந்த அய்யர், தோட்ட மக்களிடையே தனது நிலையை பலப்படுத்தலானார். வளர்ந்து வரும் இந்திய துவேசத்திற்கு எதிராக குணசிங்காவின் எதிர்ப்பை முறியடிக்க இதுவே வழியெனத் தீர்மானமாக முடிவெடுத்தார்.
இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம், அகில இலங்கை இந்திய தோட்டத்தொழிலாளர் சம்மேளனம் என்ற இரண்டு அமைப்புக்களை அவர்
மலையகத்தமிழரின்வரலாறு 6

Page 41
தோற்றுவித்து தோட்டப்பகுதிகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசித்த இந்தியர்களின் நலனை முதலாவதன் மூலமும், தோட்டத் தொழிலாளர்களின் நலனை இரண்டாவதன் மூலமும் பேண ஆரம்பித்தார்.
தொழிலாளர் சம்மேளனம்
இலங்கையில் தொடர்ந்து வசித்த பத்தாவது ஆண்டில், இந்தியர்கள் இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக, குடியேற ஆரம்பித்த 103வது ஆண்டில், தொடர்ந்து ஆறாண்டுகள் (1925-1931) இந்நாட்டின் அதி உயர்ந்த மன்றத்தில் இந்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து, இவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தனது இதயபூர்வமான கருத்துக்களை எவ்வித நிர்த்தாட்சண்யமுமின்றி வெளியிட்டு மகிழ்வு எய்திய நடேசய்யரால்; கெளரவப்பிரதிநிதியாக நாடு முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒருவரால்; செயலாற்றாமல் வாளாவிருக்க முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
அய்யர் எரிமலைக்கு ஒப்பானவர். குமுறாமல் இருப்பது அவருக்குப் பழக்கமில்லாத ஒன்று!
கொழும்பு நகரில் வளர்ந்து வந்த குணசிங்க வழிபாடும் - சிங்கள உணர்வும்-இந்தியதுவேஷமும் - அய்யரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டின. தான் நம்பியிருந்ததோட்டப் பெரிய கங்காணிகளும் தான் எதிர்பார்த்த அளவுக்கு எழுந்து நடக்காததை உணர்ந்தார் அய்யர்.
தனது பலம் தோட்டத்து மக்களை மையமாகக் கொண்டு வளரவேண்டிய அவசியத்தை உணர்ந்தார். தோட்டத்து மக்கள் ஏழைத்தொழிலாளர்கள்; மிகவும் எளிமையானவர்கள்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர்கள்; தமது எஜமானர்களுக்காக உலகத்தின் எல்லைக்கே செல்லத் தயங்காதவர்கள். இலங்கை அரசாங்கத்தின் காருண்யமற்ற, அறிவில்லாத, பிடிவாதம் மிகுந்த, தரமில்லாத செய்கையால் தோட்டத் துரைமார்களையே சர்வமும் என்று நம்பிவாழ வேண்டியவர்களானார்கள்.
என்பதை உணர்ந்த அய்யர் உடனடியாக தமத இருப்பிடத்தை தொப்பித் தோட்டத்துக்கு மாற்றினார். இன்று ஹட்டன் என்ற பெயரில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் அறியக்கிடக்கும் நகரம் தொப்பித்தோட்டம் என்ற பெயரிலேயே முப்பதுகளில் தமிழில் குறிப்பிடப்பட்டது.
62 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டத் தொழிலாளர்களிடையே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் ஆரம்பகாலந்தொட்டு நன்கு அறிமுகமான மூன்று நகரங்களில் தொப்பிதோட்டமும் ஒன்றாகும். இன்றைய ஹட்டன் இந்து மகாசபையின் அடிவாரத்திற்கருகில் தான் 1930 களில் அய்யர் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டார். ஐந்து ஆண்டுகள் சட்டநிரூபண சபையில் ஆங்கிலத்தில் முழங்கிபழகிய அய்யர் தோட்டத்துச் சனங்களை, ஊமையராய் உறங்கிக்கிடக்கும் மக்களை தட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் நேரடியாக ஈடுபட ஆரம்பித்தார்.
அவருக்குப் பக்கப்பலமாக நின்றவர் அவரது துணைவி மீனாட்சி அம்மையார் ஆவார். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்று பாடிய சுப்பிரமணிய பாரதியார் மரணமான 1921 ம் ஆண்டு, தனக்கு முன் பின் அறிமுகமில்லாத மணிலாலுக்காக - இந்தியன் என்ற உணர்வோடு ஒட்டி உறவாடி - அதன் நிமித்தம் ஆங்கில சாம்ராஜ்யத்தோடு முட்டிமோதவும் துணிந்தவராக இலங்கையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தவர் நடேசய்யர் ஆவார். அய்யர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்டிருந்த பற்றும் மதிப்பும் அளப்பரியன. சிறப்பாக பெண்ணுரிமைப் பற்றிய பாரதியாரின் கருத்துக்களைச் செயலாக்கி மகிழ்ந்தவர் அய்யர் ஆவார். “மானஞ்சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்’ என்று நம்பி “கைகள் கோத்துக் களித்து நின்றாடிய பெருமகன் அய்யராவார்.
மலைகளைச் சாடவும், காற்றிலேறியவ் விண்ணையுஞ் சாடவும், அனலை விழுங்கும் ஆண்மையைத் தரவும்”அய்யருக்குத் துணைவியாயிருந்தவர் மீனாட்சி அம்மையாரே ஆவார்.
அய்யர் அவர்களுடன் இணைந்து அம்மையார் பொது மேடைகளிலும், பஸ்தரிப்பு நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச்சந்தை நிலையங்களிலும் தோன்றவாரம்பித்தார்.
பேச்சாலும், பாட்டாலும் மக்களைக் கவர்ந்து வசப்படுத்தும் பெரும்பணியில் அய்யருக்குச் சமதையாக அம்மையாரும் விளங்கியது அய்யருக்குக் கிடைத்த மிகப் பெரியதொரு பங்களிப்பு நிதியமாகும்.
அய்யர் சங்கநாதம் புரிவார். அம்மையார் இசையாய் பொழிவார். அம்மையார் பேசி முடிக்கும் முன்னர் அய்யர் கூடியிருக்கும் கூட்டத்தினரின் நாடி பிடித்து முடித்திருப்பார். மகுடிக்கு அமையும் நாகமாய் மக்கள் அய்யரிடம் ஆட்பட ஆரம்பித்தனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 63

Page 42
உழைப்பதற்கென்றே பிறந்துள்ளதாக நினைத்து - “கூடைதலைமேலே, குடிவாழ்க்கை நடுரோட்டிலே’ என்று விதியை நொந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்; "கேள்வி கேட்பது எங்களுக்கு உரிய வேலை இல்ல்ை, உழைத்து ஓய்ந்து, மாள்வது என்பதே எங்களின் தொழில்’
என்று நம்பவும், தங்களது கல்லறைகளில் வாசகங்களாகப் பொறித்துக் கொள்வதில் திருப்திகாணவும் பழகிப்போன இந்தியவம்சாவளி தொழிலாளர்கள் சிலிர்த்துப்போயினர். தோட்டத்துரைமார்களின் வெள்ளைநிறத்தைக் கண்டு வெளிறிப் போனவர்கள், தங்கநிறத்தில் தமிழ்ப்பேசும் அய்யரையும் அவரது மனைவியையும் கண்டு வீறு பெற்றனர்.
“கம்பளி மூன்று ரூபாய், கருப்பு கம்பளி மூன்று ரூபாய், “வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்”
என்று தங்களின் கணக்கு விபரங்களை தங்களின் பெரிய கங்காணிமார்களிடம் கேட்டுப் பழகியவர்கள்;
தனது பற்றுச்சீட்டை வாங்கிக்கொண்டு, தனது மனைவியைத் தோட்டத்திலேயே விட்டு வருவதை வாழ்க்கை அமைப்பு என்று ஏற்றுக்கொண்டார்கள்.
பட்டப்பகலிலே சட்டிப்பானைகளை தூக்கி எறிந்து, தப்படித்து விரட்டப்பட்ட சண்டாளத் தனத்தைச் சகித்துக் கொண்டவர்கள்.
தோட்டத்தில் கெடுபிடி அதிகமாகின்றது என்ற அச்சத்தில் ஓடிவிடத் துணிகையில் அகப்பட்டு குதிரைக்காலில் பிணைக்கப்பட்டு குருதி வெளிவரும் வரையில் தரையில் இழுத்தடிக்கப்படுவதை எதிர்க்கத் துணியாதவர்கள். தன்னையே சர்வமும் என்று நம்பிவந்த தனது மனைவியை பெண்டாள முனைந்த பெரியகங்காணியையும், தோட்டத்துரையையும் தடுத்துநிறுத்த வலுவின்றி பைத்தியக் காரனாகக் கணிக்கப்பட்டு அங்கொடையில் அனுமதிக்கப் படுவதைச் சகித்துக் கொண்டவர்கள்.
தங்கள் அனுபவத்திலேயே இதுவரைக் கண்டிராத புதிய காட்சியை நேரில்
64 மலையகத்தமிழரின்வரலாறு

கண்டார்கள். அவர்களால் அதை அத்தனை இலகுவில் நம்பமுடியவில்லை. “இந்தத் தோட்டத்திற்குச் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள். சுப்பிரண்டன்ட் துரையின் கையொப்பம் இல்லாமல் உள்ளே பிரவேசிப்பவர்கள் கோர்ட் மூலமாகத் தண்டனைக் குள்ளாவார்கள்.”
என்று தோட்டத்து எல்லையில் நுழைவாயிலில் அறிவிப்புப் பலகையில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் நூறாண்டுகளுக்கும் மேலாக நாகரீக காற்றைத் தங்களுக்குக் கொண்டு வராமலும், தங்களின் விம்மி அழும் வாழ்க்கையை வெளியில் கொண்டுச் செல்லாமலும் தடுத்து நிறுத்தியிருப்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த அம்மக்கள் ஒரு புதிய அனுபவத்திற்கு உள்ளானார்கள்.
குடைபிடிக்காதே! செருப்புப் போடாதே வெள்ளை வேஷ்டி கட்டி வெளியில் வராதே! பத்திரிகை படிக்காதே!
என்ற குரல்களை மாத்திரமே கேட்டுப் பழகியவர்களுக்கு -
பாட்டாளித் தோழனே பயப்படாதே தலைநிமிர்ந்து வெளியில் வா! இந்தா இந்த நோட்டிசைப்படி கள்ளக்கணக்கெழுத கங்காணிகளுக்கு இடம் கொடாதே குட்டிச்சாக்கில் சம்பளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை அரைப்பெயர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் லிவு உண்டு, அதைப்பயமின்றிக் கேள்! உன்னை மிரட்டும் வீணருக்குப் பயந்து உரிமையை விட்டுக்கொடாதே என்ற குரல்கள் புதுத் தெம்பை தந்தன!
அய்யருக்கு ஆரம்பத்தில் போய் வந்தது போல் தோட்டங்களுக்குள் சென்று வருவதில் சிரமம் ஏற்படத் தொடங்கியது. அய்யருக்கு எதிராக ஆங்கிலேயத் துரைமார்கள் மாத்திரமல்ல, பெரிய கங்காணிகளும், நகர முதலாளிமார்களும் செயற்படத் தொடங்கினர். இந்தக் காலப்பகுதியில் 153 இந்தியர்கள் தோட்டச் சொந்தக்காரர்களாகவும் இருந்தனர். இவர்கள் அனைவருமே நடேசய்யரின் நடவடிக்கைகளை எதிர்த்துச் செயற்பட முனைந்தனர்.
பெரிய கங்காணிகளுக்கு எதிராக அய்யர் போர்க்குரல் எழுப்பத் தொடங்கியதன் பிறகே, இந்த நிலைமை தீவிரம் பெற்றது. “தொழிலாளர்களிடம் சார்பு உள்ளவர்கள் தோட்டங்களுக்குள் போய் வருவதைத் தடுக்க துரைமார்கள் பிரியப்படுவதில்லை நேரில் கண்டாலும் கண்டதுபோல் காட்டிக் கொள்வதில்லை. ஆனால் தொப்பிப்போட்ட கருப்புத்துரைமார்களோ துள்ளிக்குதிக்கத்
மலையகத்தமிழரின்வரலாறு 65

Page 43
தலைப்பட்டிருக்கிறார்கள். ஏன்? அவர்கள் எஜமான் கீழுள்ள அடிமை மிருகங்கள். ஒரு தோட்டத்திற்கு நமது ஆசிரியர் அடிக்கடி போய் வருவதுண்டு. அது விஷயமாய் துரையும் யாதொன்றும் சொல்லியது கிடையாது. ஆனால் கருப்புத்துரை கம்மாயிருக்கவில்லை, ஆசிரியர் போகும் வீட்டுக்காரரைக் கூப்பிட்டு கண்டித்திருக்கிறார். பயமுறுத்தியிருக்கிறார். “யார் வந்தாலும் பரவாயில்லை நடேசய்யர் வரக்கூடாது என்று கூறி இருக்கிறார்.” என்று தனது பத்திரிகையில் எழுதிய அய்யர் -
“தோட்டத்திற்குள் எம்மை வரக்கூடாது என ஒருவரும் நேரில் சொல்ல எண்ணத்துணியார்கள். ஆனால் தங்கள் அடிமைகளான கங்காணிமார்களையும், உத்தியோகஸ்தர்களையும், இவ்வேலைக்கு ஏவி விட்டிருக்கிறார்கள். எவ்விதப்பலன் எமது சுற்றுப் பயணத்தால் ஏற்பட்டது என்று கவனிப்போம். சென்ற ஒருமாத காலத்திற்குள்ளாக அரைப்பெயர் போடுவது அடியோடு நின்றுவிட்டது. மற்ற குறைகளும் நீங்கவேண்டுமானால் தொழிலாளர்களுக்குக் கல்விகொடுக்க வேண்டும். அக்காரியத்தை எவ்விதம் செய்யக்கூடும்? சட்டப் புஸ்தகம் வாங்கித் தொழிலாளர் வசம் போகாமல் பல கங்காணிமார்கள் செய்து வைத்திருக்கிறார்கள். என்ன செய்யலாம்? தொழிலாளர்கள் கண் விழித்தாலன்றி பிறரிடமிருந்து நன்மை கிடைத்துவிடும் என்று எண்ண வேண்டாம். புத்தகங்கள் மூலமும், துண்டுப் பிரசுரங்கள் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் புத்துணர்ச்சியை உண்டாக்க வேண்டும். கங்காணிமார்களை தற்சமயம் நம்பி நிற்க முடியாது. அவர்கள் நிலைமையே தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆகவே இவ்வித பிரசார வேலையை பொது ஜனங்கள் கூடிய சீக்கிரம் ஏற்று நடத்த முன்வர வேண்டும்.”
என்று 1929 ல் சட்டசபை அங்கத்தவர் என்ற பதவி தனது போர்க்குணத்துக்கு ஒரு பிரதான கவசமாக பாவிக்கப்படக் கூடியது என்பதை உணர்ந்திருந்த நேரத்தில் - எழுதியிருந்தார்.
தொழிலாளரும் - சம்மேளனமும்
1931ல் தானே அவைகளைச் செயல்படுத்த வேண்டியவரானார். சகோதரத்துவம், சுயமுயற்சி, சிக்கனம் என்ற குணங்களைத் தொழிலாளர்களிடம் பரப்பவும், குடி, சூது, கடன் என்ற பழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அய்யர் அமைத்த அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் முயற்சித்தது.
66 மலையகத்தமிழரின்வரலாறு

கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு கூட்டுறவு சங்கங்களும், கடனுதவி சங்கங்களும், ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி தொழிலாளர்களின் கல்வி அறிவை அபிவிருத்தி செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் அரசியல் நிலையைச் சிறப்பானதாக்கவும் தொழிலாளர் சம்மேளனம் இலட்சியம் கொண்டிருந்தது.
தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், வயோதிப தொழிலாளருக்கு உதவிப்பணம் பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளிலும் சம்மேளனம் கவனம் செலுத்தியது.
ஆக, தொழில் சம்பந்தமானதாக மாத்திரமல்லாமல், சமுதாயப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாகவும் தனது தொழிற்சங்க முயற்சியை நடேசய்யர் திட்டமிட்டு ஆரம்பித்தார் என்பதை உணர்ந்து கொள்ளமுடியும், தொழிற்சங்கம் தொழிலாளர்களின் அன்றாட பிரச்சனைகளை மாத்திரம் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை என்ற கருத்து ஒலிக்கும் இன்றைய காலகட்டத்தில் - ஐம்பதாண்டுகளுக்கு முன்னரேயே அதைச் செயல் வடிவில் காட்ட ஆரம்பித்த நடேசய்யரின் அறிவும், புத்திக் கூர்மையும் நினைக்கும் போதே பிரமிப்பூட்டுகிறது. தோட்டங்களில் குழுக்களாக அமைந்து இயங்கிய தொழிலாளர்கள், நடேசய்யருடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்தால் பழிவாங்கப்பட்டார்கள். தோட்டங் களுக்குள்ளும், வெளியிலும் கூட்டம் நடாத்துவதற்கு மைதானமோ, கட்டடமோ கிடைக்காதவிதத்தில் தோட்ட நிர்வாகத்தினரும், நகர முதலாளிகளும் நடேசய்யருக்கு விரோதமாகச் செயல்பட்டனர். எந்த நேரத்திலும் அவருக்கு உயிராபத்து ஏற்படக் கூடிய நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசு கைத்துப்பாக்கி வைத்திருக்க அவருக்கு அனுமதி வழங்கியது.
“நடேசய்யர் தங்கிய சுற்றுப்புறத் தோட்டங்களில் நிர்வாகம் தொழிலாளருக்கு அரிசியை நிறுத்தியது. நீர் விநியோகத்தைக் கூட தடை செய்தது” என்று சட்டத்தரணி வேர்ணன் குணசேகரா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகின்றார்.
குணசேகரா நடேசய்யருக்காக தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் 1940 களில் பங்கெடுத்துக் கொண்டவர். 1942 ல் ஏழு அம்சத்திட்டம் கைச்சாத்திடப்பட்ட போது சம்மேளனத்தின் சார்பில் அய்யரும், இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பில் ஜி. எஸ். மேத்தாவும், சமசமாஜக் கட்சியின் சார்பில் வேர்ணன் குணசேகராவும் கையெழுத்திட்டனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 67

Page 44
ஆரம்பகாலந்தொட்டே விசாலித்துச் செயல்படும் வாய்ப்பு அய்யர் ஆரம்பித்தத் தொழிற்சங்கத்துக்கு இருக்கவில்லை. அவர் தொழிற்சங்கம் ஆரம்பித்த கால நிலவரம் அவ்விதம். பொருளாதார மந்தம் நிலவிய காலப்பகுதி அது ஆயிரக்கணக்கான தொழிலாளருக்கு வேலையில்லாமல் போனது. நாளுக்கு நாள் தொழிலாளர்களின் வருமானம் குறையத் தொடங்கியது. அவர்களின் ஊதியம் குறைக்கப்படலாயிற்று. கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில், சங்கத்தில் சேர்ந்து உழைக்கவும், சமர்புரிந்து பணியாற்றவும் நெஞ்சுரம் எத்தனை பேரிடம் தொடர்ந்திருக்க முடியும்?
1929 க்கும் 1932 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அரசாங்கப் புள்ளிவிபரப்படி 84,000 இந்தியர்கள் தங்கள் தொழிலை இழந்து நின்றனர். சேர் குலோட் கொரியா தலைமையில் அமைந்த ஆணைக்குழு ஒரு லட்சம் தொழிலாளர்கள் இந்தியா திரும்பியதாக குறிப்பிட்டது. மேலும் அனுமதியின்றி தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்குள் போக முடியாது என்றும், அப்படி போனது சட்டத்தை மீறியச் செயலாகும் என்றும் கருதப்பட்டது. எனவே அய்யரின் சங்கப்பணிகள் கட்டுப்பாட்டுக்குள் அமைய வேண்டியதாயிற்று. பெட்டிசன் எழுதுவதையும், பிட்நோட்டீஸ் அடிப்பதையும், கூட்டங்கள் போடுவதையும் தனது நடவடிக்கைகளுக்கான யுக்திகளாக அய்யர் வெற்றிகரமாகக் கையாளத் தொடங்கினார்.
1922 லிருந்தே இந்த மக்களைத் தங்களின் புகார்களை பெட்டிசன் உருவில் இந்திய ஏஜெண்டுக்கு எழுதவைத்தவர் அய்யராவார். முதன் முதலாக இந்திய ஏஜெண்டாக வந்த எஸ். ரெங்கநாதன் நடேசய்யருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்தார். அவருடைய முகவரியைக் கொடுத்து அவரோடு தொடர்புகொள்ளும் வழிமுறைகளையும் வெளியிட்டு போதாதற்கு சில மாதிரி முறைப்பாடுகளையும் தனது தேசபக்தன் பத்திரிகையில் வெளியிட்டு தோட்டத்து மக்களைத் தூண்டுவித்திருந்தவர் அய்யரே ஆவார். இப்போது நேரடியாக பெட்டிசன்களை தன்னுடைய சங்கத்துக்கு அனுப்பச் செய்து அதன் மூலம் அவர்களின் சார்பாக பேசும் உரிமையைச் சங்கத்துக்குப் பெற்றுவிடும்
தந்திரோபாயத்தை அய்யர் கையாண்டார்.
இந்தக் காலப்பகுதியில் ஆண்டுக்கு 5000 பெட்டிசன்கள் அளவில் தான் பெற்றதாக இந்திய ஏஜெண்ட் குறிப்பிடுகின்றார்.
68 மலையகத்தமிழரின்வரலாறு

இவ்வித முறைப்பாடுகள் மூலம் தோட்டமக்களின் துயரங்கள் வெளிப்படும் அதிகரிப்பு ஏற்பட்டதற்கு அய்யரின் சங்கமே பொறுப்பு” என்றும் குறிப்பிடுகின்றார்.
மற்றும் தோட்டத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்ட காரணத்தால் தோட்டத்துக்கருகில் இருக்கும் நகர்ப்புறத்தில் கூட்டங்கள் போடுவார். தோட்டத்துக்குச் சொந்தமில்லாத பொது வழிகளில் தனது காரை நிறுத்தி, காரில் இருந்த வண்ணமே மக்களோடு பேசத் தொடங்குவார்.
திறந்தகாரை மேடைபோல் பாவித்து அதிலிருந்து நடேசய்யர் அவர்களும், அவரது மனைவி மீனாட்சி அம்மையும் பேசும்போது தொழிலாளர்கள் புத்துணர்வு பெற்றார்கள். நடமாடும் தொழிற்சங்கத்தின் பிரசன்னத்தைப் பெறவேண்டி தொழிலாளர்கள் நகர்ப்புறங்களில் கூடும் தினத்தன்று தோட்டங்களில் வேலை நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டது. சந்தாமுறை இல்லாத அந்நாட்களில் தொழிற்சங்கம் நடாத்துவது எத்தனைச் சிரமமானது. தொழிலாளர்கள் தரும் உதவியிலேயே சங்கம் நடைபெறவேண்டியிருந்தது. அய்யரின் கார் கூட்டம் முடிந்து போகும்போது, தொழிலாளர்கள் அன்பளித்த காய்கறிகளால் நிரம்பிவழிந்த நாட்களுமுண்டு.
இவ்விதம் இருந்த தடைகளையெல்லாம் மீறிக்கொண்டு அய்யரின் சங்கம் மலைநாட்டு தோட்டப்புறங்களில் பரவ ஆரம்பித்தது. 1931 மே மாதத்தில் அட்டன் நகரில் கூடிய அவரது கூட்டத்தில் 5000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சம்பளக்குறைப்புக் குறித்து அவர்கள் கண்டனத் தீர்மானத்தை மேற்கொண்டனர். அடுத்த ஜூன் மாதத்தில் கண்டியில் நடைபெற்ற ம்ாபெரும் கூட்டத்தில் தொழிலாளர்கள் தன்னுடைய சங்கத்தின் மூலமே இந்திய ஏஜெண்டோடும், தோட்டத்துரையோடும் தொடர்புகொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும் குறித்து தனது பிரசுரத்தை அவர்களிடம் ஆயிரக்கணக்கில் விநியோகித்தார். இவைகளால் கவர்ந்திழுக்கப்பட்ட வி.பி. நாதன் கண்டிக்கிளைக்குத் தலைவராயிருந்து செயற்பட்டார். இந்த ஆண்டில் நாதனோடு இணைந்த நடேசய்யர் இண்டியன்
எஸ்டேட் லேபரர் என்ற ஆங்கில பத்திரிகையையும் நடத்தினார்.
மலையகத்தமிழரின்வரலாறு 69

Page 45
கண்டியில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அய்யருக்கெதிராகச் செயல்படுபவர்கள் தீவிரமானார்கள். சங்கத் தொழிலாளர்களை கீழ்படியாமைக்குத் தூண்டும் அய்யரின் நடத்தை கண்டிக்கப்படக்கூடியது என்று காரணம் காட்டி கூட்டங்கள் போடுவதற்கு இடம் தருவதில்லை என்று கண்டி நகரசபை ஒரு தீர்மானம் கொண்டுவந்தது.
இதை அடியொட்டி மலைநாட்டு நகர்ப்புறங்கள் எங்கும் கூட்டம் நடாத்தும் அனுமதி அய்யருக்கு மறுக்கப்பட்டது. வளர்ந்துவரும் அபாயத்தை உணர்ந்த தோட்டச் சொந்தக்காரர்கள் முழுமூச்சோடு அய்யர் ஆரம்பித்த சங்கத்தை அழிக்க நினைத்தனர்.
தங்கள் அங்கத்தவர்களை அய்யரின் சங்கத்திலிருந்து வரும் கடிதங்களுக்கு எந்தவிதமான பதிலும் தராமல் மெளனம் சாதிக்கும்படி துரைமார் சம்மேளனம் அறிவுறுத்தியது. மேலும் துரைமார்களைப்பற்றிய முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட துரைமார்களின் பார்வைக்கு அனுப்பப்படல் வேண்டும் என்று லேபர் கண்ட்ரோலரிடம் கோரி, அதில்
துரைமார்கள் வெற்றியும் கண்டனர்.
இந்திய ஏஜெண்டாக பதவி ஏற்ற கே. பி. எஸ். மேனன் இடம் பெட்டிசன்களை பெரிதுபடுத்தாது உதாசீனப்படுத்தும்படியும் கேட்டுக் கொண்டனர். நீதவான்களிடம் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்ப மனுக்கள் கூட துரைமார்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டு நீதி வெறும் கேலிக்கூத்து ஆக்கப்பட்ட சம்பவங்களை அய்யர் வன்மையாகச் சாடினார். இலங்கையில் அச்சமயம் தங்களை மிகவும் வலுவுள்ளதாக வளர்த்து ஓர் அமைப்புக்குள் செயல்பட்ட முதலாளிவர்க்கத்தினராக தோட்டத்துரைமார் விளங்கினர். போதாதற்கு பிரித்தாளும் சூழ்ச்சியில் பேர்போன பரம்பரையினர் அய்யருக்கும், பெரிய கங்காணிமார்களுக்கும் எற்பட்டுள்ள விரிசலை மேலும் பெரிதாக்கி கடும்பகையாக
வளர்த்தெடுத்தனர்.
அய்யர் பிராமண வகுப்பைச் சார்ந்தவர், தென்னிந்தியாவில் பார்ப்பானியர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் நிலையில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் தஞ்சம் புகுந்திருக்கும் சுயநலவாதி என்று கூறி வகுப்புத்துவேசத்தை எழுப்பினர்.
70 மலையகத்தமிழரின்வரலாறு

“மதத்தின் பேரால் முப்பது கோடி மக்களை ஏமாற்றி பாழ்படுத்தி வாழும் குலத்தில் பிறந்த அய்யருக்கு இலங்கையில் ஏழரைலட்சம் மக்களை ஏமாற்றுவது சிரமமா? என்று தேர்தல் காலத்துச் சாதிப்பிரிவினை மீண்டும் உயிர்த்தெழுவதற்கு அய்யருக்குப் போட்டிச்சங்கமாக இந்தியர் சங்கம் மீண்டும் உயிர்பெற உதவினர். தோட்டங்கள் தோறும் அச்சடிக்கப்பட்டச் சுற்றறிக்கைகளை அய்யருக்கு எதிராக விநியோகித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக அதே ஆண்டில் (1931) ஊழியன் என்ற பெயரில் தமிழ்வார ஏடு ஒன்றை ஆரம்பித்து நடாத்துவதற்கு வேண்டிய நிதி உதவியைத் துரைமார்கள் செய்தனர். நடேசய்யரைத் தாக்குவதென்பதே ஊழியனின் வேல்ையாய் இருந்தது. 1931 நவம்பரில் “நடேசய்யர் சிறைக்கு அனுப்பப்பட வேண்டியவர்” என்றும், “வெகுவிரைவில் துரை ஒருவரின் பராக்கிரமத்தால் அய்யரின் வாய் அடைக்கப்பட்டுவிடும்” என்றும் எழுதிய ஊழியன் “டிசம்பரில் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட வேண்டியவர்” என்றும் எழுதியது, தோட்ட உத்தியோகத்தர் சங்கம் தன் பங்குக்கு “தோட்டத்துரைமாரே நமது தெய்வம், அவர்களை அடிபணிந்து வாழ்வதே வாழ்க்கை. நமது அங்கத்தவர்கள் நடேசய்யரோடு எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது”
என்று தீர்மானம் நிறைவேற்றியது.
நடேசய்யரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றாக கூட்டுறவு சங்கங்களைத் திறக்கவும் துரைமார்கள் ஆரம்பித்தனர். அவ்விதம் திறக்கப்பட்ட இம்புல் பிட்டியதோட்டக் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்ட
தினத்தில்
“நடேசய்யரின் தொழிற்சங்க கருத்துக்கள் பிளேக் நோயைப் போல வெறுத்தொதுக்கப்பட வேண்டியது” என்று பகிரங்கமாகவே துரைமார்
சங்கத்தலைவர் பேசினார்.
பழுத்த மரத்தில் தான் கல்லெறிவிழும் என்பதைப்போல அய்யர் ஆரம்பித்தச் சம்மேளனம் சத்திமிகுந்ததாக ஆகிவருவதைக் காணச்சகிக்காத நிலையிலேயே இத்தனை எதிர்ப்பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கணிப்பது நியாயமானது. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை மேலும் சீர்குலைய கூடாது என்பது அய்யரின்
கவலையாயிருந்தது.
மலையகத்தமிழரின் வரலாறு 7

Page 46
சம்பளக் குறைப்பு மேலும் மேலும் அதிகரிப்பதை அய்யர் அவதானித்தார். “அமைதியாக இருப்பது போல் தோற்றம் தரும் தோட்டநிலவரம் தொழிலாளர்கள் திருப்தியாக இருப்பதாக காட்டுகிறது என்று கருதுவது
தவறு
என்று எச்சரித்து,
“மேலும் சம்பளக் குறைப்புக்கு எத்தனம் செய்வது வெடிமருந்து குவியல் மேலமர்ந்து மெழுகுவர்த்தியில் சுருட்டுப்பற்ற வைப்பது போன்ற செயல்”
என்று கருத்துத் தெரிவித்தார்.
சம்பளக் குறைப்புக்கெதிராக சம்மேளனத்தின் மூலம் பலபகுதிகளிலும்
தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கத்
தொடங்கினார்.
இலங்கை அரசாங்கம் குறைவான சம்பளத்தில் வேலை செய்ய விரும்பாத
இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லலாம் என்ற நிபந்தனைக்கு ஒப்புதல் தெரிவித்துச் சம்பளக் குறைப்புக்குச் சம்மதித்தனர்.
அய்யர் இதை ஒரு சக்திமிகுந்த ஆயுதமாகப் பாவிக்க நினைத்தார். இந்தியத் தொழிலாளர்களை ஒருசேர இந்தியாவுக்குப் போக தூண்டினார். ஹட்டன் ரயில்வே நிலையத்தில் பல்லாயிரக்கணக்கில் கூடிய இந்தியத் தொழிலாளர்கள் ரயில்வே திணைக்களத்தை நிலைகுலையச் செய்தனர். அரசாங்கம் மிரண்டது! துரைமார்கள் துவண்டு போயினர்! ஆங்கில
ஆட்சியும், இந்திய அரசாங்கமும் திகைத்துப் போயின
எனினும் அய்யரின் இம்முயற்சி, தேவைக்கதிகமான தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்த காரணத்தால் உரிய பயனளிக்காது விட்டது. ஆண்டாண்டு காலமாக அய்யர் வாதாடி வந்த இந்தியர்களின் வருகையை அளவோடு நிறுத்தி வைத்திருந்தால் அய்யரின் இந்தியா திரும்பும் பயமுறுத்தல் இலங்கைத் தீவில் இந்தியர்களின் வரலாற்றை சிறப்பான முறையில் எழுத உதவியிருக்கும்.
72
மலையகத்தமிழரின்வரலாறு

அய்யரின் முயற்சி கைகூடாமல் போனமைக்கு தோட்டத் துரைமார்களின் பலமும், மனோபாவமும் மற்றொரு காரணமாகும். அவர்கள் நகர்ப்புற முதலாளிகளைப் போன்று தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பவர்களாக்வும், தொழிற்சங்கப் பணிகளை சகித்துக் கொள்பவர்களாகவும் இல்லாதவர்கள். 1933 லிருந்து இலங்கையில் அய்யரின் வாழ்க்கை நாட்டைச் சுற்றிச் சுற்றித்திரிவதிலேயே கழிந்தது.
பிரயாண வசதியும், தபால் தொடர்பு வசதியும் குறைந்த அந்தக் காலப்பகுதியில் இப்படிச் செயலாற்றுவதற்கு எத்தகு நெஞ்சுரமும், கொள்கைபிடிப்பும் ஒரு மனிதரிடம் இருந்திருக்க வேண்டும்?
“கொழும்பில் நடக்கும் அரசாங்கசபை கூட்டம் குறித்து அட்டனிலிருக்கும் தனக்குப் பிந்தியே தெரியவருகிறது. இதனால் சில சமயங்களில் நிர்வாகக் கூட்டங்களைத் தவறவிட்டிருக்கிறேன்”
என்றும், "நான் சொல்வது உங்களுக்கு விளங்காது இந்த நாட்டில் உங்களுக்கு அனுபவம் போதாது, புத்தளத்தில் ஒரு நாளும், காலியில் இன்னொரு நாளும், இன்னுமோரிடத்தில் இன்னொரு நாளும் என்றிருந்தால் எப்படி? தோட்டத்துரைமார்களையும் நிலச் சொந்தக்காரர்களையும் சந்தித்து ரிப்போர்ட் எழுதி இங்கு வந்து சட்டம் பண்ணுகிறீர்கள்” என்றும்,
“தோட்டங்களுக்குப் போய் பிரட்டுக்களத்திலிருந்து இலங்கையில் பிறந்தவர்களைக் கணக்கெடுத்திருக்கிறேன்” என்றும் சட்ட சபையில் அய்யர் முழங்கியிருக்கிறார்.
மலையகத் தோட்டப்புறங்களுக்கும், கொழும்பு நகருக்கும் உள்ள மனிதத் தொடர்புகளும் குறைவே. மலைநாட்டில் லின்டுல என்ற நகரிலிருந்து பிலிப் என்பவர் எழுதிய பத்திரிகை கட்டுரைக்குப் பதில் தரும்போது, “பிலிப் வசிப்பது லின்டுல என்றவிடம், அது வெளிநாடு, நாம் வசிப்பது கொழும்பு இலங்கையின் தலைநகரம்” என்று சங்கக் காரியதரிசி ஒருவர் பதில் தந்திருப்பதைப் பார்க்கும்போது நடேசய்யர் கொழும்பிலமர்ந்து கொண்டு பத்திரிகைகளில் அறிக்கை வெளியிடும் இந்தியத் தலைவர்களில் ஒருவராக இல்லாதிருப்பதை எளிதில் அறிந்துகொள்ளலாம்.
மலையகத்தமிழரின்வரலாறு 73

Page 47
மக்களிடம் சென்று, அவர்களுடன் வாழ்ந்து, அவர்களிடமிருப்பதை வைத்து ஆரம்பித்து அவர்களுடனேயே திட்டம் வகுத்து, அவர்களையும் தனது திட்டத்துக்கு வளர்த்தெடுப்பதும் வளைத்தெடுப்பதும் எல்லோருக்கும் எளிதில் கைவராது. அதில் கைவந்தவர்கள் வரலாற்றில் இடம்பெறும் தலைவர்களாக
உருவாகிறார்கள்.
கோதண்டராம நடேசய்யர் நிச்சயமாக அவர்களில் ஒருவர். ஊமை ஜனங்காாக, எழும்பிநின்று போராடும் வலுவற்றிருந்த குடியேற்றக் கூலிகளாக - நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாம் தவிப்பதை வெளியில் சொல்லும் விஷயஞானம் இல்லாதவர்களாக அடிமை நிலையில் உறங்கிக்கிடந்த கோப்பிக்காட்டான்களையும் தோட்டக்காட்டான்களையும், விழிப்புற்று, எழுந்து நிற்க செய்தவர் அய்யரே ஆவார்.
அவரது வழிகாட்டலில் தான் அவர்கள் பேசத் தொடங்கினர். அவர் அவர்களுக்காகப் பேசவேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டதன் விளைவு -
1936ல் நடந்த அரசாங்கசபைத் தேர்தலில் அவர்பெற்ற மகத்தான வெற்றியாகும். முதலாவது அரசாங்கசபைத் தேர்தலில் அவருக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணிய பெரியசுந்தரம், இரண்டாவது தேர்தலில் அட்டனில் போட்டியிடும் முன்னுரிமையை அய்யருக்கு அளித்துவிட்டு ஒதுங்கும் நிலை உருவாகியிருந்தது.
முதல் அரசாங்கசபையில் அமைச்சராகப் பதவி வகித்த ஒருவரை - தோட்டத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வெளிவந்த இலங்கையிலுள்ள ஒரே ஒரு இந்திய வம்சாவளித் தமிழரை தஞ்சாவூரில் பிறந்து அக்கவுண்டன்ட் ஆக தொழில் கல்வி பயின்ற பிராமணர் ஒருவர் - பார்ப்பானிய வெறுப்பு வேர் கொள்ளத் தொடங்கிய நேரத்தில் எதிர்த்து நிற்பது - அதுவும் தேர்தலில், தற்கொலைக்கொப்பான முயற்சியாகும். ஆனால் -
அந்த முயற்சியை அய்யர் வெற்றிகரமானதாக்கிக் காட்டினார்
பெரி. சுந்தரம் தொழில், கைத்தொழில், வர்த்தக மந்திரியாக இருந்த நேரத்தில் அன்னி பெசண்ட் அம்மையாரையும் லோகமான்ய திலகரையும் இலங்கையில் வரவேற்று வெள்ளையர்க்கெதிராக மக்களிடையே சுதந்திரக் கனலைப் பரப்ப முன்னின்று உழைத்தார்; தொழிலாளர்களின் நட்டஈட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இலங்கை வங்கியைத் தோற்றுவிப்பதற்கான
74 மலையகத்தமிழரின்வரலாறு

பணியைத் தொடங்கியிருந்தார். இலங்கைத் தென்னைச் சபையைத் தோற்றுவித்தார். புள்ளிவிவரக்குழுவை அறிமுகப்படுத்தினார். இருந்தும் வெளியில் மக்களோடு உறவாடி அய்யர் ஆற்றிய பணிகளே வெற்றிபெற்றன. பெரி சுந்தரத்துக்கு ஆதரவாக ஏராளமான பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டன. அரசாங்கத்தாரும், தோட்டத்துரைமார்களும், தோட்ட உத்தியோகஸ்தர்களும் பெரிய கங்காணிமார்களும் களத்திலிறங்கி பணியாற்றினர்.
டிக்கோயா, தரவளை மைதானத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் வீரகேசரி ஆசிரியர் வ. ரா கலந்துகொண்டார். பாரதியாரின் புகழ்மிகுந்த சீடரான இவர் அய்யருக்கு எதிராகவே இத்தேர்தலில் பணியாற்றினார். இருந்தும் என்ன?
பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டிருந்த அழிவு அய்யருக்கு உதவிற்று. தொழிலாளரின் சம்பளம் 54 சதத்திலிருந்து 41 சதமாகக் குறைக்கப்பட்டதை அய்யர் நினைவுப்படுத்தினார். அது ஒரு தொழிலாளியின் வருமானத்தில 24 சதவீத சம்பள வெட்டாகும். தெருவோரத்தில் தொழிலாளர்கள் பிச்சையெடுப்பதையும், பிணமாய்க் கிடந்ததையும் எடுத்துச் சொல்லி சம்பளக் குறைப்புக்கும் ஆட்குறைப்புக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் பெரிசுந்தரமே என்று பிரச்சாரம் புரிந்த அய்யர் “குறைந்த பட்ச சம்பளத்தை மேலும் குறைக்கும் மனிதரை தூக்கி எறி” என்று கேட்டுக்கொண்டதை மக்கள் ஆதரிக்கவேண்டியிருந்தது.
“சமீபத்தில் ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்தில் என் மீது கற்கள் வீசப்பட்டன. சுயமரியாதையை இழக்காமல் ஹட்டனில் காடைத்தனத்தை எதிர்த்து நிற்பது மிகவும் கஷ்டம்” என்று கருதிய அமைச்சர் பெரிசுந்தரம் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிட்டார். இரண்டாவது அரசாங்க சபையிலிருந்த மொத்த அங்கத்தவர்கள் தொகை 61 ஆகும். 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 8 பேர் நியமனம் பெற்றவர்கள். 3 பேர் அரசாங்க அலுவலர்கள். தேர்தலில் வெற்றிபெற்ற 9 தமிழர்களில் நடேசய்யரும் ஒருவராவார்.
நடேசய்யரின் அரசியல்சபை பிரவேசம் ஐரோப்பியத் துரைமார்களுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது.
முதலாவது அரசாங்கசபைத் தேர்தலின் போது தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத் துரைமார்களுக்கு ஆதரவாகவே இயங்கினர். துரைமார்களின் விருப்பப்படியே வாக்கும் அளித்தனர். இரண்டாவது அரசாங்கசபைத் தேர்தலிலும் அவர்கள் இந்த முறையிலேயே வாக்களிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்த்ததில் வியப்பொன்றுமில்லை.
மலையகத்தமிழரின்வரலாறு 75

Page 48
“இத்தேர்தலின் போதே மக்கள் தமது பிரதிநிதிகளைத் தேர்தலின் மூலம் தெரிந்தெடுக்கும் புது வாய்ப்பினைப் பெற்றனர். இதனால் முதலாவதாக உபயோகிக்கும் போது இயல்பாக மனிதர்களிடையே ஏற்படுகின்ற கிளர்வுணர்வு வாக்காளர் களிடையேயும் தலைதூக்கி நின்றது. சுவரொட்டி விளம்பரங்கள் மூலமும், வாக்களிக்கும் முறை அவர்களுக்கு விளங்கப்படுத்தப் பட்டிருந்தாலும், பிதற்றிக்கொண்டும், பேதலித்த நிலையிலும் இருந்த வாக்காளர்களைப் பார்த்தபோது அவர்களுக்கு விளக்கம் தரக்கூடிய ஒரு பேச்சை நான் நடத்த வேண்டுவது உசிதம் என்றுணர்ந்தேன். இரகசிய வாக்களிப்பின் மூலம் நடைபெற்ற வாக்களிப்பு என்றாலும், தேர்தல் நிலையம் அமைந்திருந்த பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் காணக் கிடைத்த காட்சியின் மூலம் கோர்டனின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டுவிட்டது என்பதை
அறிய முடிந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிறத்திலேயே சேலைகளையும், சட்டைகளையும், சாரங்களையும் அணிந்த மனித வெள்ளம் மைதானத்தில் நிறைந்து வழிந்தது.”
என்று பதுளை மாவட்ட நீதிபதி கூறும் அளவுக்கு ரோம்ப்டன் தோட்டத்துரையான ஏ. ஃபெலோஸ் கோர்டனின் வெற்றிக்கு ஆதரவளித்த தொழிலாளர்கள் இரண்டாவது தேர்தலில் அதே தோட்டத்துரையை ஒதுக்கிவைத்துவிட்டு டேனியல் டயஸ் குணசேகரா என்பவரைத் தெரிந்தெடுத்தனர்.
இவைகளால் அச்சமுற்ற ஆங்கிலேயத்துரைமார்கள் தொழிலாளர்கள் வாக்காளர் இடாப்பில் இடம்பெறாது செய்வதில் தீவிர கவனம் காட்டத் தொடங்கினர். பல தில்லுமுல்லுகளின் மூலம் இப்படி ஆரம்பித்த இவர்களின் மோசடி செயல்களினால் தொழிலாளர்களின் வாக்குரிமை வீணாக்கப்படக்கூடாது என்று கூறி சட்டச் செயலாளரின் கவனத்தை ஈர்த்து பிலிப் குணவர்தனா அரசாங்க சபையில் பேசவேண்டிய அவசியம் கூட நேர்ந்தது.
‘துரைமார்களுக்காக பொலிசார் மலைநாட்டில் எதையும் செய்வார்கள். ஏனென்றால் துரைமார்களில் பெரும்பாலோர் சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டிருப்பதே' என்று காரணம் காட்டுகிறார்.
“நோர்வூட்டைச் சேர்ந்த தோட்டத்தில் உள்ள சிலர் கண்டக்டருக்கு எதிரான பெட்டிசன் கொடுக்க நினைத்தார்கள். தில்லுமுல்லின்றி பெட்டிசன் துரைக்குப் போய்ச் சேரவேண்டுமானால் பெட்டிசன் அவரது கையிலேயே
76 மலையகத்தமிழரின்வரலாறு

சேர்ப்பிக்கப்படல் வேண்டும் என்று தீர்மானித்தார்கள். துரையின் கார் பாதையில் வேகமாக வருவதைக் கண்டு ஓடோடி வந்தார்கள். அந்தக்காரில் வந்து கொண்டிருந்தவர்கள் துரையும் கண்டக்டருமே முன்னால் நின்ற தொழிலாளர்களைப் பார்த்து காரிலிருந்த கண்டக்டர் துரையிடம் சொன்னார், “இப்படி நின்று மறித்தால் மற்றவர்கள் உங்களைத் தாக்குவதற்கு உதவியாயிருக்கும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக” ஆத்திரமடைந்த துரை பொலிசுக்குச்சொல்லி அவர்களைச் சிறைப்படுத்தினார். தேர்தலில் தனக்கு உழைத்தவர்களில் ஒருவனும் அதிலிருப்பதை அறிந்த அய்யர், நடவடிக்கையிலிறங்கினார். துரையும், கண்டக்டரும் உஷாரானார்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று கூறி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். தோட்டத்திலிருக்கும் தன் பிள்ளைகளையும், மனைவியையும் ஆதரிக்கும்படி அவன் அங்கிருந்து அய்யருக்கு கடிதம் எழுதியிருக்கின்றான் என்று கூறிய அய்யர், இது குறித்து கெளரவ அமைச்சரிடம் தான் கதைத்ததாகவும், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஏன் இவ்விதம் 450 இந்தியர்கள் இருக்கிறார்கள் என்று அவர் தன்னைத் திருப்பிக் கேட்டதாகவும்" வெளிப்படுத்துகிறார்.
இன்னொரு தோட்டத்தில் கங்காணி தன் மனைவியோடு தகாத முறையில் நடந்துகொள்வதைக் கண்டித்த ஒரு தொழிலாளி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டான் என்கிறார் அய்யர். இவைகளையெல்லாம் பிரேஸ்கேர்டில் சம்பவத்தோடு தொடர்பில்லாதது என்பதை ஒர் அங்கத்தவர் அடிக்கடி குறுக்கிட்டுச் சொல்ல முனைகிறார். பிரேஸ்கேர்டில் மீது சாட்டப்பட்டிருக்கும் குற்றம் தெளிவில்லாதிருப்பதால் அய்யர் பேசுவதைக் தடுக்க தன்னால் முடியாது என்று பிரதி சபாநாயகர் பதில் அளிக்கவே உற்சாகமுற்ற அய்யர் மேலும் தொடர்கிறார்.
பாரதியார் புத்தகத்தைக் கையில் வைத்திருந்ததற்காக ஒருவர் நாடு கடத்தப்பட்டதை எடுத்துச்சொல்லி, பாரதியாரின் பெயரை இலங்கை ஹன்சார்டில் முதன் முதலில் இடம்பெற வைத்தப் பெருமையையும் அய்யர் தட்டிக்கொள்கிறார்.
மூன்று. துரைமார்கள் பொலிசாரின் உதவியோடு ஒருமாத காலமாக அட்டனில் முயற்சிகள் மேற்கொண்டு பொய் வழக்கில் சம்பந்தப்படுத்தித் தன்னை நாடுகடத்த முயற்சித்ததையும் பின்கதவு வழியாக காரியமாற்றும் துரைமார் சம்மேளனம் தனக்கு இதில் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்ததையும் பலரறிய பகிரங்கப்படுத்துகிறார்.
மலையகத்தமிழரின்வரலாறு 77

Page 49
1947ம் ஆண்டுவரை தேர்தல்களில் கட்சிகளின் நியமனப் பிரதிநிதிகளாக அங்கத்தவர்கள் போட்டியிடவில்லை. தனிமனிதர்களே தேர்தல்களில் நின்றார்கள்.
சேர். அண்ட்ரூஸ் கோல்கட் என்ற தேசாதிபதி குறிப்பிட்டாற் போல “இலங்கையில் ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்குத்தானே தலைவனாவான். கட்சி திட்டங்களோ, கொள்கைகளோ, கடப்பாடுகளோ அவனை கட்டுப்படுத்துவதற்கில்லை”
கடவுளின் அவதாரங்கள் தாங்கள் என்று அரசியல்வாதிகள் தங்களை கருதும் அளவுக்கு தனிமனிதர் செல்வாக்கில் - ஆட்சி புரிவோரை எதிர்த்துப்பேச முடியாத நிலையில் ஆங்கில மொழியில் பேசி மக்களை வெறுமனே வேடிக்கைப்பார்க்க வைத்த தனிமனிதர் ஆளுமையில் - இலங்கையின் நாடாளுமன்ற சரித்திரம் இருந்த ஆரம்பநிலையில் நடேசய்யரின் நாடாளுமன்ற பிரவேசம் இருந்தது.
ஆரம்பத்தில் ஆறாண்டுகள் (1925 - 1931) சட்டநிரூபண சபையிலும், அடுத்ததாக பதினொரு ஆண்டுகள் (1936 - 1947 ) அரசாங்க சபையிலும், இந்தியவம்சாவளித் தமிழரையும், தோட்டத் தொழிலாளரையும் பிரதிநிதித்துவம் பண்ணிய அய்யரைக் கட்டுப்படுத்தும் திட்டங்களும், கொள்கைகளும், கடப்பாடுகளும் இருந்தன. இந்திய வம்சாவளியினரின் நல்வாழ்வு என்ற ஒன்றே அது மணிலால், பிரேஸ்கேர்டில் என்ற இருவரின் நாடுகடத்தும் பிரச்சனையைக் கூட அந்நோக்கத்திலேயே அய்யர் பயன்படுத்தினார்.
“திருமதி கமலாதேவியும், அய்யரும், பிரேஸ்கேர்டிலும் அட்டனில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டனர். 5000 பேர்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் நடேசய்யர்பால் தோட்டத்து மக்கள் காட்டிய மரியாதை, கூடியிருந்தவர்களின் பேச்சும் நடத்தையும், அய்யர்பால் அவர்களுக்கு இருந்த குருட்டு நம்பிக்கையை வெளிப்படுத்தின. அய்யர் கூறிய எதையும் செய்வதற்கு அவர்கள் தயாராயிருந்தனர். கூட்ட முடிவில் திருமதி கமலா தேவியைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளாத மக்கள் நடேசய்யரைப்பற்றியே கதைக்கத் தொடங்கினர்.”
“நடேசய்யர் எல்லாத் தோட்டங்களிலும் தன்னுடைய ஏஜெண்ட்களை வைத்திருந்தார் என்பது தெளிவு கூட்டங்கள் போடுவதற்கு “நோட்டீஸ்” அடிக்கவேண்டிய தேவை அவருக்கில்லை. வாய்சொல் மூலம்
78 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டத்துக்குத் தோட்டம் செய்தி அனுப்பும் தூது முறையிலேயே அவருக்கு அதைச் சாதிக்க முடிந்தது.”
என்று பொலிஸ் அந்தரங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்திய வம்சாவளியினர் பெருந்தோட்டக் குடியேற்றத்தை ஆரம்பித்த ஐந்தாவது ஆண்டிலேயே இலங்கை சட்டநிரூபண சபையும் இயங்க ஆரம்பித்தது. பெருந்தோட்டப் பிரச்சினைகள் குறித்து ஆரம்பகாலந்தொட்டே இச்சபையில் பேசப்பட்டு வந்திருக்கிறது. அவைகள் பயிர்ச்செய்கைப் பற்றியும், பராமரிப்புக் குறித்தும் அமைந்திருந்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசி ஒன்றரை தசாப்தங்களில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட மக்களையும், அவர்களின் ஊதியத்தையும் குறித்து, பெருந்தோட்டப் பிரதிநிதியாக இருந்த ஆங்கிலேயர் ஜே.எல்.சாண்ட், தேசாதிபதி சேர் ஜோன் டக்லஸ் போன்றவர்கள் பேசத்தொடங்கினர். இலங்கையர்களான பொன்னம்பலம் அருணாசலம், பொன்னம்பலம் இராமநாதன் ஆகியோரும் குரல் எழுப்பினர்.
பெருந்தோட்ட மக்களை குடியேற்றக் கூலிகள் என்று நினைத்து, பரிதாபத்துக்குரியவர்கள் என்று அனுதாபமும், அசுசூயையும் கலந்த பார்வையில் தெறித்து விழுந்த கருத்துக்களையே அவைகளில் கேட்கலாம். நடேசய்யரின் குரல் ஒலிக்க ஆரம்பித்த பிறகுதான் அது பெருந்தோட்ட மக்களின் குரலாக இருந்தது; அதுவரை அது கூலிகளின் குரலாய் காட்டில் ஒலித்த கானகக் குரலாய் அமைந்திருந்தது. அய்யரின் ராஜ நடையையும், சிம்மக்குரலையும் அடுத்தச் சில ஆண்டுகள் இந்நாடு கண்டது! அதனால் தூக்கம் கலைந்த தோட்டத்து மக்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர். தோட்ட ஜனங்களை மையமாக அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் அய்யரின் அரசியல் பணிகளும், இலக்கியப் பணிகளும் பின்னடையத் தொடங்கின. இந்நாட்டில் சக்தி மிகுந்த ஒர் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை அய்யரால் உருவாக்க முடியாது போயிற்று. இடதுசாரி கட்சிகளும், இலங்கை-இந்தியன் காங்கிரஸும் (இன்றைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் / ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) மெல்ல மெல்ல தோட்டத் தொழிலாளர்களின் இதயத்தில் இடம் பிடிக்க ஆரம்பித்தன.
உலகமெல்லாம் விசாலித்துப்பரவிய பிரித்தானிய சாம்ராஜ்யத்துக்குஉடல் உழைப்பை மிகுவதாக நல்கியவர்கள் ஆப்பிரிக்கர், சீன்ர், இந்தியர் என்ற மூன்று தேசத்தவர்களேயாவர்.
மலையகத்தமிழரின்வரலாறு 79

Page 50
சமீபகாலம் வரை இந்தியர்கள் அனைவரும் கடல் கடந்து குடியேறிய நாடுகளில் கூலிகள் என்றே கருதப்பட்டனர். உத்தியோகத்தர்கள், உடல் உழைப்பாளிகள் என்ற பாகுபாடின்றி கூலி என்ற அடைமொழி அவர்களைக் குறிப்பதற்கு பாவிக்கப்பட்டது.
ஆப்பிரிக்காவில் மகாத்மாகாந்தி கூலி பாரிஸ்டர் என்றே அழைக்கப்பட்டார். இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்கள் கூலி கப்பல்கள் என்றே குறிக்கப்பட்டன. இலங்கையில் இவர்கள் குடியேற்றக் கூலிகள் என்றே குறிப்பிடப்பட்டனர். தோட்டத்து மக்கள் குடியிருந்த வசிப்பிடங்கள் கூலி லயன்கள் என்றும், அவர்களுக்குக் கொடுபடும் சம்பளம் கூலிச் சம்பளம் என்றுமே குறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர்களுக்குத் தமிழ்படிக்க உதவுவதற்காக வெளியிடப்பட்ட புத்தகம் “கூலித்தமிழ்” என்ற தலைப்பிலேயே வெளியானது.
இம்மக்களிடையே மதத் தொண்டு செய்ய 1854ல் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்தவ சபை 1927 வரை தமிழ் கூலி மிஷன் என்றே அழைக்கப்பட்டது.
எந்தச் சூழ்நிலையையும் அனுசரித்துப் போகும் கடின உழைப்பாளர்கள் இந்தியர்கள். அடிமைத்தனம் என்று கருதும் அளவுக்கு அவர்களுக்கிருந்த கீழ்ப்படியும் குணத்தை மாத்திரமே ஆங்கிலேயர் பயன்படுத்திக் கொண்டனர். மற்றும்படி அவர்களின் நற்பண்புகளை விரும்பவும், பேணவும், மதிக்கவும் பின் தங்கினார்கள். உண்மையில் அவர்களின் நற்குணங்களை ஆங்கிலேயர்கள் பொறாமையோடு நோக்கினர். இந்தியர்களின் நற்பண்புகள் மீது ஐரோப்பியர்களுக்கு ஏற்பட்ட பொறாமையாலேயே அரசியல் பழிவாங்கலைத் தோற்றுவித்தார்கள்,
என ஆங்கில அரசாங்க அதிகாரி ஒருவர் மகாத்மாகாந்தியிடம் நேரிடையாகவே கூறியுள்ளார்.
1833ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது. ஆப்பிரிக்கர்கள் அதற்கு பிறகு கூலிகளாகச் செல்வது குறைந்தது. இவ்வேளையிலேயே இலங்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட ஆரம்பித்தனர்.
80 மலையகத்தமிழரின்வரலாறு

சீனர்களையும், ஆப்பிரிக்கர்களையும் இங்கு கொண்டுவர யோசனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இறுதியில் இந்தியர்கள் அதிலும் தென்னிந்தியர்களைத் தொழிலாளர்களாக வரநேர்ந்தது. இந்தியர் குடியேற்றம் சுதேச மக்களின் வெறுப்புக்குக் காரணமாயிற்று. அக்குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கியதிலிருந்து அவ்வெறுப்பு பகையாக உருவாகத் தொடங்கி, சங்கிலித் தொடராக நீண்டு வளர்ந்த வண்ணமிருப்பதைக் காணலாம். இன்னும் இந்தியர்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் இதுவே நிலைமை.
இலங்கையில் சுதேச குடிகளான சிங்களவர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்த இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைத் தமிழராலும் அரவணைக்கப்படவில்லை என்பதை பொன். இராமநாதன், எஸ். மகாதேவா, ஸி. சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம் முதலானோரின் நாடாளுமன்ற உரைகள் பலமுறை வெளிப்படுத்தியிருக்கின்றன. “கண்டியர்களை இந்தியர்கள் கீழிருந்தும், ஐரோப்பியர்கள் மேலிருந்தும் நசுக்குகிறார்கள்.” ,
என்று அரசாங்க சபையிலே இவர்கள் பேசினார்கள். இவர்களில் இருவர் அமைச்சர்களாயிருக்கும்போதுதான் இத்தொழிலாளர்களின் குடியுரிமைப் பறித் தெடுக்கப்பட்டது.
வெறும் தொழிலை மாத்திரம் எதிர்பார்த்து இம்மக்கள் இங்கு குடியேறவில்லை. நூற்றைம்பது மைல் கடலிலும் (தூத்துக்குடி - கொழும்பு) இருநூறு மைல் தரையிலும் (மன்னார் - குடியேறிய தோட்டம்) இயற்கையின் கோரத்தாண்டவத்தையும் கொடிய வனவிலங்குகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது இம்மக்கள் இலங்கைக்கு வந்தார்களென்றால், வளமான வாழ்வை அவர்கள் எதிர்பார்த்ததே காரணம்.
அவர்களுக்கு அதற்கான உத்தரவாதம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த உத்தரவாதம் தனிமனிதரால் கொடுபடவில்லை. அரசாங்கத்தால் கொடுக்கப்
பட்டிருந்தது.
தொழில் கமிஷனரின் அறிக்கைகளையும், தேசாதிபதி அண்ட்ரூ கொல்கேட்டின் கூற்றுக்களையும் மேற்கோள்காட்டி இந்த நிலைப்பாடு வாதாடப்பட்டது. 1927ல் இலங்கையில் குடியேறும் மக்களுக்கு சமஉரிமை, சட்ட உரிமை கொடுக்கப்பட்டு நாட்டில் சமமானவர்களாக அவர்களும் கருதப்படுவார்கள் என்று துண்டுப்பிரசுரங்கள்
மலையகத்சமிழரின்வரலாறு 8.

Page 51
வெளியிடப்பட்டதாக நடேசய்யர் அரசாங்கசபையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இந்தியர்கள் குடியேற ஆரம்பித்ததிலிருந்து, எந்த ஆண்டையும் விட 1927ல் தான் அதிகமான குடியேற்றம் நடைபெற்றது.
புகைப்படங்களைக் காட்டியும் சலனப்படங்களைக் காண்பித்தும் இலங்கை மலைநாட்டின் இயற்கை அழகை தென்னிந்தியர்களுக்குக் காட்டியதோடு, இவ்வித உத்தரவாதங்களையும் கொடுத்து அவர்களை பல்லாயிரக்கணக்கில் கொண்டுவந்து குவிக்கலானார்கள்.
ஆண்கள் மலைவேலையும், பெண்கள் கொழுந்தெடுக்கவும், பிள்ளைகள் உதவி செய்யவும் என்று குடும்பம் முழுக்கத் தொழில் செய்யும் வாய்ப்பிருந்தது.
மலேயா, பர்மா, ஆகிய தூரதேசங்களைவிட அண்மையிலிருந்த இலங்கைக்குக் குடும்பத்தோடு வருவதில் அவர்களுக்கு வசதியிருந்தது. மேலும் அந்நாடுகளில் விளைந்த றப்பரும், கரும்பும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் கொடுக்கவில்லை. உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இலங்கையில் குடியேறிய இம்மக்கள் சலியாது உழைத்தனர். ஒய்வின்றி உழைத்தனர். சிந்திப்பதற்கு நேரமின்றி உழைத்தனர்.
மலைகளில் பசுமை தோன்றியது, இந்த மக்களின் உழைப்பால் தான்! மலைக்குன்றுகளுக்கூடாக சுரங்கம் அமைந்தது. இவர்களின் உழைப்பினால் தான்! நெளிந்தோடும் பாதைகளும், நீண்டு வளைந்த தண்டவாளங்களும் அமைக்க முடிந்தது இந்த மக்களால்தான்!
அவர்களின் உழைக்கும் சக்தியைக்கண்டு ஆட்சியாளர்கள் பூரித்துப்போனார்கள். உணவு உற்பத்தியில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மேலும் இந்நாட்டில் வளம் ஏற்படுத்த முடியும் என நினைத்து ஆயிரம் பவுண் நிதி ஒதுக்கினார்கள். அவர்களை கந்தளாய் வாவி பகுதியில் குடியேற்ற முயற்சிகளும் மேற்கொண்டனர்.
தோட்டத்துரைமார்கள் இம்முயற்சியை எதிர்த்தார்கள். 1856ல் ஆட்சியாளர் அந்த முயற்சியை கைவிட நேர்ந்தது. தோட்டத்துரைமார்கள் இலங்கையில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியவர்கள். அமெரிக்க ஜனாதிபதிதான் உலகிலேயே அதிக அதிகாரங்களைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அதிகாரங்களைப்
82 மலையகத்தமிழரின்வரலாறு

பொறுத்தமட்டில் அவரைவிட துரைமார்கள் அதிகம் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதை மலைநாட்டின் வரலாற்றில் பல கறைபடிந்த சம்பவங்கள் வெளிப் படுத்துகின்றன.
துரைமார்களின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு யாரும் நிம்மதியாக இலங்கையில் வாழ்ந்ததில்லை. நாட்டின் அதி உயர்ந்த பதவியிலிருந்த தேசாதிபதிகளுக்கே இந்நிலைமை ஏற்பட்டிருக்கிறது. தனது தேசாதிபதி பதவியைத் தொடர விரும்பிய கோர்டன் தொழிலாளருக்குச் சார்பாக வெளியிட்ட தனது குறிப்புக்களையே மாற்ற நேர்ந்தது. ம்ொரிஷஸ் தீவில் தான் ஊக்குவித்த கிறிஸ்தவ பாதிரிமார்களின் இந்தியன் நலன் பேணும் காரியங்களை அண்டர்சன் தனது பதவி காலத்தில் இலங்கையில் செய்யமுடியாது போய்விட்டது. தோட்டக் கூலிகளின் நிலை வெட்கப்படக் கூடியது என்று கிரே பிரபுக்கு எழுதிய தனது குறிப்புக்கள் அவசரத்தில் எழுதப்பட்டவை என்று டொரிங்டன் பிறகு ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்க வேண்டியிருந்தது.
வில்லியம் போய்ட் என்ற ஆரம்பகால தோட்டத்துரை “கூலிகளை மிருகத்தனமாகவும், அவமானப்படுத்தியும் தனது நண்பர்கள் நடந்து கொண்டனர்”
என்கிறார். கண்டியில் கடமையாற்றிய நீதவான்,
“கூலிகள் அறிவற்றும், சட்டங்களைத் தெரிந்து கொள்ளாமலும் இருந்தமையால் துரைமாருக்கு இலகுவில் இரையானார்கள்.” என்கிறார்.
வழக்குகளில் தொழிலாளர்களைச் சம்பந்தப்படுத்தி விடுவதோடு மாத்திரமல்ல, அவ்வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் போது, நீதிமன்றத்துக்கு துரைமார்கள் இலேசில் வருவதில்லை. வழக்குகளின் தொகை அதிகரிக்க தொடங்கவே, வழக்குகளின் தீர்ப்பை சாட்சிகள் வருகிறார்களா இல்லையா என்பதை பொருட்படுத்தாது ஒரு நீதவான் பதுளையில் தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தார். அந்த நீதவான் துரைமார்களின் நேரடி பகைவரானார். அவரைப்பற்றி மேல்மட்டத்தில் புகார் செய்யப்பட்டது.
மலையகத்தமிழரின்வரலாறு 83

Page 52
ஆங்கிலேயர் ஆட்சியில் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் மனிதாபிமான நோக்கில் செய்ய முயன்ற சீர்திருத்தங்கள் செய்யமுடியாமலேயே போய்விட்டதையும், மாறாக தோட்ட நிர்வாகத்தில் நேரடி தொடர்பு கொண்டிருந்த துரைமார்களும், தோட்டச் சொந்தக்காரர்களும் விரும்பிய சீர்திருத்தங்கள் உடனுக்குடன் செய்து முடிக்கப்பட்டன என்பதையும் விளங்கிக்கொள்வதில் சிரமம் இல்லை. அத்தகு சீர்திருத்தங்கள் சுயநலத்தோடு செய்யப்பட்டன. இந்தியத் தொழிலாளர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு வரவேண்டும் என்பதற்காக, குறைந்த வேதனத்தில் பெறப்படும் அவர்களின் உழைப்பு இடையில் தடைபட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவைகள் செய்யப்பட்டன. பயன்கருதி மேற்கொள்ளப்பட்ட அச்சீர்திருத்தங்கள் ஒரு வரம்புக்குள்ளாகவே இருந்தன.
அவர்களை வெறும் உழைக்கும் யந்திரங்களாக தொடர்ந்து பராமரிப்பதற்கான ஏதுவானவைகளாக மாத்திரமே அவைகள் கருதப்படக்கூடியவை.
இயந்திரசாதனங்களாலும், பழக்கப்பட்ட மிருகங்களாலும் பெறப்படுகின்ற உழைப்புக்கு இவைகளைவிட மேலதிகமான பராமரிப்புச் செலவு ஏற்பட்டிருக்கும். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கை விவசாய சங்கம் கூட இந்தியத் தொழிலாளர்களின் பயணமுறைகளிலும், தேக ஆரோக்கியத்திலும் மாற்றம் தேவை என்று தான் வலியுறுத்தியது.
அந்த மக்களின் நல்வாழ்விலோ, அபிவிருத்தியிலோ கவனம் காட்டப்படவில்லை. அந்த மக்களுக்கும் அதுகுறித்து அவ்வளவு கரிசனமிருந்ததில்லை. அதற்கான தூண்டுதல் வெளியில் இருந்துதான் வரவேண்டியிருந்தது.
கிறிஸ்தவ மதப்பணிபுரியும் இரண்டு தென்னிந்திய மத குரவர்கள் முதலில் தோட்டம்வாழ் இந்தியவம்சாவளியினருடன் தொடர்புகொள்ள முயற்சித்தனர். 1846ல் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்விகண்டது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியர் நடந்துகொண்டதைப்போல இலங்கை மலைப்பிரதேசங்களில் தோட்டத்துரைமார்கள் நடந்துகொண்டனர். தோட்டத் தொழிலாளர்களிடையே வெளியார் பணியாற்றுவதை அவர்கள் வன்மையாக
எதிர்த்தனர்.
84 மலையகத்தமிழரின்வரலாறு

சர்வ வல்லமைபெற்ற துரைமார்களின் தான்தோன்றித் தனத்துக்கு எதிராகவும், நலிந்து, மெலிந்து, சக்தியிழந்துபோன பரிதாப நிலையிலிருந்த தொழிலாளருக்காகவும், முதன் முதலாக இந்திய அரசாங்கம் பேசவேண்டிய நிலைமை ஒன்று உருவானது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சில தொழிலாளர்கள் இங்கிருந்து மலேயாவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர். 1880 ல் இது நடந்தது. இது மிகவும் தவறான செயல் என்றும், 1846ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இந்தியா எடுத்துக்காட்டியது.
இந்திய வம்சாவளி மக்களிடையே இது நம்பிக்கையூட்டியிருக்க வேண்டும். தங்களை இந்தியா வாழவைக்காவிட்டாலும், முழுவதாக கைவிட்டுவிடவில்லை என்று அவர்கள் உணரத்தலைப்பட்டார்கள்.
அந்த உணர்வில் தங்களைப் பற்றி எண்ணத்தலைப்பட்டார்கள். அவர்களின் அந்த எண்ணத்துக்கு வடிவம் கொடுத்தார்கள். அது வழக்காக உருவெடுத்தது. இந்த நாட்டில் குடியேறியதொழிலாளர்கள் தங்களது எஜமானருக்கு எதிராக தங்களது சம்பளம் மாதக்கணக்கில் பாக்கியிருப்பதை எதிர்த்து வழக்குப் போட்டார்கள்! இதை சில கங்காணிகளே முன்னின்று செய்தனர். கூட்டாகத் தொழிலாளர்கள் செயற்பட முடியாதென்றும், வேண்டுமானால் தனித்தனியாக அவ்வாறு வழக்குப் போடுவதற்கே சட்டம் இடம் கொடுக்கிறதென்றும் அந்த ஆரம்ப முயற்சியும் முறியடிக்கப்பட்டது. எனினும் தோட்ட மக்கள் துயிலெழ ஆரம்பித்துவிட்டனர் என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்தியது. தொழிலாளர்களின் ஊதியம் இருபத்தைந்து மாதங்களாகக் கொடுபடாமலிருந்த சம்பவங்களும் இதனால் வெளிக்கொணரப்பட்டன. அதன் எதிர் விளைவுகள் உருப்பெற ஆரம்பித்தன.
1889ல் இது சம்பந்தமாகச் சட்டம் உருவாக்கப்பட்டது. கிழமையில் ஆறுநாள் வேலை கொடுக்கப்படல் வேண்டும் என்றும், அவர்களின் ஊதியம் அறுபது நாளுக்குள் கொடுக்கப்படல் வேண்டுமென்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதுவே இந்தியத் தொழிலாளர் நலம்பேணும் முதல் சட்டமாகும். இதற்கு பிறகு 19ம் நூற்றாண்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதையும் காணோம். மாறாக துரைமார்களும், தோட்டச் சொந்தக்காரர்களும், கங்காணிகளும் ஒன்றாய் சேர்ந்து நின்று தோட்டப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தொழிலாளர்களின் குரல் வெளியில் கேட்காதவாறு அடக்கி ஆட்சிபுரிந்ததை காண்கிறோம்.
மலையகத்தமிழரின்வரலாறு 85

Page 53
சட்டங்கள் மாத்திரம் சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதில்லை. அவை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். நடைமுறைப் படுத்தப்படாத சட்டங்கள் - இந்தியத் தொழிலாளர்களுக் கென்றே இயற்றுவிக்கப்பட்டவைகள் - நிறைய இருக்கின்றன. இவைகளை அமுல்படுத்தி ஆகவேண்டும் என்ற வலியுறுத்துவார் யாரும் இல்லை. இப்படிச் சட்டங்கள் இருப்பதை தெரிந்து கொள்ளும் விஷயஞானமும், கல்வியறிவும் அந்த மக்களுக்கு இல்லை. அதை அறிந்து வைத்திருந்தவர்கள் செயலாற்ற முன்வரவில்லை. தோட்ட மக்களின் துயில் நீடித்தது. மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை நெறி தேசத்தை வசீகரித்து நம்பிக்கையை மலரச் செய்தது. அது எங்கும் பரவியது. பற்றி பரவியது; அதைக் கண்டதும் பழைய சீர்கேடு ஒடி மறைந்தது.
தேசிய உணர்வில் பற்றிபடர்ந்த தீ நாலாப்பக்கங்களிலும் வெடித்துச் சிதறியது. அப்படிச் சிதறிவிழுந்த தீப்பொறிகளில் ஒன்றே நடேசய்யர் உருவில் இலங்கையில் பற்ற ஆரம்பித்தது.
இந்திய தேசிய எழுச்சியால் சிங்களத் தலைவர்களும் விழிப்புற்றனர். அரசியல், சமூகப்பிரச்சனைகளைப் பற்றி ஆய்வுக்குழு அமைத்தும் செயல்படத் தொடங்கினர். டி. எஸ். சேனநாயக்கா, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா போன்றோர் ஒன்றாக உட்கார்ந்து பணியாற்றினர். யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் பிறந்தது.
நடேசய்யர் வெறும் தேசிய உணர்வால் மாத்திரம் உந்தப்பட்டவரில்லை. ஆசையும், அபிலாசையும் மிகுந்தவர்; தீரமும், தெளிந்த ஞானமும் நிறைந்தவர்; செயலாற்றும் திறம் படைத்தவர். அவரது சட்டசபை பிரவேசமே அதை மெய்ப்பிக்கும்.
செயற்பாடுகளிலேயே அவர் நம்பிக்கை வைத்திருந்தார். இலங்கையில் அதிதீவிரவாதிகளாகக் கருதப்பட்ட அரசியல்வாதிகளுடன் இணைந்தது அதனாலேயே ; குணசிங்காவுடன் இணைந்ததும் அதனாலேயே, சிட்டிசன் பத்திரிகையில் சேர்ந்ததும், தேச பக்தன் பத்திரிகையை ஆரம்பித்ததும், தனது குறிக்கோள்களை அடையவேண்டியே. பொலிஸ் அறிக்கைகளின்படி அய்யர் ஒர் அரசியல் கிளர்ச்சிக்காரர். இலங்கை தேசிய காங்கிரசிலிருந்த தீவிர அரசியல்வாதிகளுடன் அவருக்கு இணைப்பிருந்தது. வேல்ஸ் இளவரசர் வருகையை இந்தியாவில் காங்கிரஸ் பகிஷ்கரித்தபோது, இலங்கையில் தனது
86 மலையகத்தமிழரின்வரலாறு

தேசநேசன் பத்திரிகையில் நடேசய்யர் எழுதிய கட்டுரை அவருக்கெதிரான பொலிஸ் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. 1925ல் அய்யரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் நடவடிக்கைகளும் பொலிசாருக்கு ஆத்திர மூட்டின. அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தனர். பிரிட்டிஸாரே எச்சரிக்கை என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில்
"சாம்ராஜ்யம் ஆட்டம் காணுகிறது, அழிவு ஏற்படுவது நிச்சயம்” என்று எழுதினார். இக்கட்டுரையைப்பற்றி குடியேற்றச் செயலாளர்க்கு அனுப்பிய அறிக்கையில்
“இலங்கைத் தீவில் இந்த அளவுக்குத் தேசத் துரோகம் பண்ணியது வேறுயாரும் இல்லை”
என்று குறிப்பிட்ட பொலிசார் அவருக்கெதிராக தேசத்துரோக குற்றச்சாட்டைப் பயன்படுத்த முயற்சி செய்தனர். அதற்கு ஒத்துக்கொள்ளாத குடியேற்றச் செயலாளர்
அய்யரின் நடவடிக்கைகளை மேலும் கண்காணிக்கும்படி பொலிசாருக்கு அறிவுறுத்தினார். மணிலாலுடன் மட்டுமல்ல, அவுஸ்திரேலியா, மலேயா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள தீவிரவாதிகளுடன் எல்லாம் அய்யர் தொடர்பு கொண்டிருந்ததாக பொலிசார் குறிப்பிட்டிருக்கின்றனர்.
இந்தியாவில் அவருக்கெதிராக தொடர்புகள் குறித்து கண்காணிக்கும்படி இந்தியப் பொலிசார் கேட்கப்பட்டனர்.
தேவையான விபரங்களைத் தேடிபெறும் பணிக்கு பொலிசாரையே அன்று சகலரும் நம்பியிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பலவற்றை விருப்பு வெறுப்புக்கேற்ப சேர்த்தும், தவிர்த்தும் அறிக்கைகள் அனுப்புவது உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை! அய்யர் விடயத்தில் நாடுகடத்தப்பட்ட டாக்டர் மணிலாலுடன் அவருக்கு இருந்த தொடர்பு மறைக்கப்படக்கூடியதல்ல
ஏடன்னிலிருந்து இந்தியர்களைப்பற்றி அவர் தொடர்ந்து எழுதினார். தனது தேசபக்தனில் அதை மொழி பெயர்த்து அய்யர் பல இதழ்களில் வெளியிட்டிருந்தார். தோட்டத் துரைமார்களின் ராஜ்யம் பற்றி ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் எழுதிய நூல் நெருப்பைக் கக்கியது.
மலையகத்தமிழரின்வரலாறு 87

Page 54
தோட்டச் சொந்தக் காரர்களும், பெரிய கங்காணிமார்களும் தொழிலாளர்களை உறிஞ்சுகின்ற அக்கிரமங்கள் அதில் வெளியிடப்பட்டன. அந்த இருசாராரும் அப்புத்தகத்தை நூற்றுக்கணக்கில் வாங்கி தீயிட்டுக் கொளுத்தினர். இந்திய அரசாங்கமும், பிரித்தானிய ஆட்சியும் இச்செயலால் திடுக்குற்றதாக சி.வேலுப்பிள்ளை தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
சட்டசபை அங்கத்தவர் என்ற பதவி அய்யரின் போர்க்குணத்திற்கு ஒரு பிரதான கவசமாக இருந்தது. அதை அய்யர் நன்குணிர்ந்திருந்தார். மற்றவர்கள் சட்டசபை உறுப்பினர் பதவியை ஒரு வசதியாக நினைத்தார்கள். அய்யரவர்களோ அதை ஒரு வாய்ப்பாக நினைத்துச் செயல் ஆற்றினார். சட்டநிரூபண சபையில் எந்த விதத்திலேனும் இடம்பெற வேண்டுமென்று துடித்தவர்களில் ஒருவராக அய்யரைக் கணிக்க முடியாது.
1923ல் களனிவேலி இந்தியர் சங்கம் என்ற அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளார்க்கர்களையும், மலை உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய இச்சங்கம், தொழிலாளர்களுக்கு வாராந்தச் சம்பளம் கொடுக்கப்படல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது. சட்டநிரூபணசபையில் அங்கத்துவம் பெறுவதற்கே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது என இது குறித்து இந்திய குடியேற்ற அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களைப்பற்றி வெறுமனே குரல் எழுப்புபவர்களாக எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர். இந்தியத் தலைவர்கள் இலங்கைக்கு வந்தபோது தங்களைத் தலைவர்களாகக் காட்டிக்கொள்வதோடும், இந்தியாவுக்குத் தங்களை தலைவர் பதவியில் இருத்தி தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்குவதோடும் அமைந்துவிடும் அவர்களின் ஆசை மக்களின் நலன் பேணும் ஆர்வமாக பெருக்ககெடுத்ததில்லை.
தொழிலாள மக்கள் தோட்டங்களில் இருந்தார்கள்; துயருற்ற அடிமை நிலையிலே இருந்தார்கள். அவர்களைப்பற்றி பேசுபவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். படிக்காத பாமரத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் உருவாகவில்லை. தொழிலாளர்களிடம் அத்தகு நினைப்பை உருவாக்கும் முயற்சியிலும் அவர்கள் முனையவில்லை.
88 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டங்களுக்குள் செல்வது அத்துமீறல் எனக் கருதப்பட்டு சிறைவாசம் செல்லும் நிலையும் இருந்தது.
இப்படி ஒரு சம்பவத்தின் போது தோட்டத்துக்குள் சென்று கூட்டம் போட்ட ஒருவர் இரண்டுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். அவர் செய்துகொண்ட மேன்முறையீட்டிலும் அவர் குற்றவாளியாகவே காணப்பட்டார். தொழிலாளிகள் இருப்பது லயக்காம்பிராக்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு அவை மாளிகைகளே அவைகளுக்குரித்தான துரைமார்களின் அனுமதியின்றி அங்கே போகமுடியாது. தோட்டத்துக்கு அருகேயும், ஆலயத்திலும், ஆலயத்துக்கருகிலும் கூடிப்பேச முடியாது”
என்று செப்பல்டன் தோட்ட வழக்கில் ஹட்டன் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
ஜனாப் அஸிஸ் இதே விதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்றார். கீழ்க் கோர்ட்டிலும், உயர் நீதிமன்றத்திலும் அவருக்கெதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு உயர் நீதிமன்றத்திலும் வலிந்துரைக்கப்பட்டது. பிரிவிகவுன்சிலில் தான் அவர் வெற்றி அடைந்தார். இத்தீர்ப்பு 1967ல் கொடுக்கப்பட்டது.
இந்தப் பின்னணியில் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டங்களுக்குள் செல்வதற்கு எத்தகு தைரியம் இருந்திருக்கவேண்டும்? தொழிலாளர்களைக் கண்டு, கதைத்து, கலந்தாலோசித்து செயல்படுவதற்கு எந்தளவுக்கு கொள்கையில் தீவிரம் இருந்திருக்கவேண்டும் நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு நளினம் இருந்திருக்கவேண்டும்.
அய்யரை சிறையில் அடைக்கவும், உயிரை எடுக்கவும், நாடுகடத்தவும் எத்தனை பேர்கள் காத்துக்கிடந்தனர்.
சட்டசபையின் கெளரவ உறுப்பினர் என்ற கவசத்தைப் பாவித்து அய்யர் எதிரிகள் தன்னை வெற்றிக்கொள்ளாது காத்துக் கொண்டார்.
சட்டசபையின் அவரது பேச்சுக்கள் கருத்துப் பொதிந்தவைகளாக இருந்தன; இந்திய வம்சாவளியினரின் இதயக் குமுறல்களாக ஒலித்தன. இலங்கை மண்ணில் ஒன்றி வாழத் துடிக்கும் ஜிவன்களின் குரலாக அவர் மிளிர்ந்தார்.
மலையகத்தமிழரின்வரலாறு 89

Page 55
கேட்பாரைப் பிணிக்கும் விதத்தில் அவரது ஆங்கில பேச்சு அமைந்திருப்பதை ஹன்சார்டின் பல பக்கங்களில் காணலாம். 1931 இந்த வாய்ப்பு அவரைவிட்டு நழுவிப்போனது. அதற்கு காரணமாயிருந்தவர்களை அவர் தன் வாழ்நாள் முழுக்க மறக்கவில்லை. மீண்டும் 1936ல் அந்த வாய்ப்பைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஹட்டன் அவருக்கு மிகவும் பிடித்த நகரம். அங்குதான் அவரது சட்டசபை பிரவேசத்துக்கு ஒத்துழைக்காத அகில இலங்கை பெரிய கங்காணிமார் சங்கம் தனது தலைமையகத்தை வைத்திருந்தது. அதே நகரில், அத்தலைமையகம் அமைந்த இடத்திற்கு அண்மையிலேயே தானம் இயங்கத் தொடங்கினார்.
தோட்டத் தொழிலாளர்களிடம் குடிகொண்ட கடன் பழக்கமும், அறியாமையும், குறுகிய பழக்க வழக்கமும், குடிபழக்கமும் திருத்தப்படல் வேண்டும் என்று விரும்பினார். நாட்டின் செல்வத்துக்கு உழைத்த அவர்கள் தொழுநோயாளர்களைப் போல பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப் பட்டிருந்தனர். இந்நிலையிலிருந்து இவர்களை மீட்பதென்றால் இவர்களை முதலில் விஷயஞானம் உடையவர்களாக்க
வேண்டும் என்பதை அய்யர் உணர்ந்தார்.
விஷயஞனாம் என்றால் என்ன?
தனக்கு நோயிருக்கின்றது என்பதை நோயாளி உணரவேண்டும். தன்னால் முடியாதென்பதை இயலாதவன் உணரவேண்டும். தான் உறிஞ்சப்படுவதை அபாக்கியசாலி உணரவேண்டும். தன்னால் முடியும் என்பதை பலசாலி உணரவேண்டும். மனித வாழ்க்கையில் இவை அத்தனையும் இயல்பாய் அமைந்து விடுவதில்லை. அப்படி அமைவதும் சாத்தியமில்லை.
மனித வரலாறே இதுதான். இதற்கு மலைநாடு மாத்திரம் எப்படி விதிவிலக்காக முடியும்? ஊமை ஜனங்களாகப் பரிதவிக்கும் இம்மக்களை எழும்பிநின்று பேசவைக்கவேண்டும் என்று நடேசய்யர் விரும்பினார். அம்மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பிறர் காணவைக்கவேண்டும் என்று அவர்
ஆசைப்பட்டார்.
9. மலையகத்தமிழரின்வரலாறு

பேசுகின்ற மனிதனின் தேவை எல்லோரும் அறிந்ததே, பேசாதவனின் தேவை, பேச முடியாதவனின் தேவை, பேச விரும்பாதவனின் தேவை, என்ற தேவைகள் அவசியமாகும் போது - அறியப்பட்டேயாக வேண்டும்.
அதை எல்லாராலும் செய்யமுடியாது.
இறைவன் இதைச் செய்ததாக இதிகாசம் கூறுகிறது. இந்த நூற்றாண்டிலும் இதை சிலர் செய்து வரலாற்றுச் சிறப்பு எய்தியிருக்கின்றனர். அய்யரும் அவர்களில் ஒருவர் என்பதை எழுந்து நின்று - எதிர்த்து நின்று பேசவாரம்பித்த இந்தியத் தோட்டத் தொழிலாளியின் சரித்திரம் கூறி நிற்கிறது.
இந்த வேளையில் தான் தேயிலை விலை குறைந்துவிட்டதென காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டன. அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது; ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். மாதம் முழுக்க வேலைசெய்த நாட்களிலேயே தொழிலாளியால் வயிறாற உணவு பெறமுடியாத நிலையென்றால், இப்போது கேட்கவா வேண்டும்?
தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிச்சையெடுக்கும் நிலைக்குள்ளானார்கள். தோட்டத்து எல்லையிலும், தெருவோரத்திலும் சிலர் பிணமாகக் கிடந்தனர். அய்யரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. தனது சம்மேளனத்தின் மூலம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
குமுறப்போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச்செல்லப் படுகின்றது என்றெச்சரித்தார். அமைச்சர் பதவியிலிருந்த பெரிசுந்தரம் பரிதாபகரமான நிலைக்குள்ளானார். அமைச்சரவை யின் தீர்ப்புக்கு எதிராகச் செயல்பட அவரால் எப்படி முடியும்?
மேலும் சம்பளக் குறைப்பு நடந்தது. விருப்பமில்லாதவர்கள் வேலையிலிருந்து விலகி இந்தியா செல்லலாம் என்ற விளக்கம் வேறு. அய்யருக்கு இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா? ஒரேயடியாய் இந்தியா போவதற்கு என்று ஆயிரக்கணக்கில் அவர் மக்களைக் கூட்டிச் செய்த ஆர்ப்பாட்டம் அமைச்சர் பெரி. சுந்தரத்தை அடுத்த தேர்தலின் போது அசைத்துவிடும் அளவுக்குப் பெரிதாயிருந்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 91

Page 56
ஏற்கனவே போர்க்களம் சென்ற அனுபவம், எதிரிகளின் கொட்டத்தை அடக்கச் சந்தர்ப்பம் தேடி நின்ற மனோபாவம். கிடைக்கும் வாய்ப்பை
அய்யரைப்போல பாவிக்க யாரால் முடியும்?
தோட்டமக்களை Liu Tri யாரெல்லாம் பிரதிநிதித்துவம் பண்ணியிருக்கிறார்கள்? தோட்டத்துரைமார்கள்; தோட்டச் சொந்தக்காரர்கள், இனத்தாலும், மதத்தாலும் தொடர்பேயில்லாத வியாபாரப் பிரமுகர்கள். இவர்களிலிருந்துதான் வேறுபட்டவன் என்பதைக் காட்டவேண்டுமானால், தோட்டப் பொருளாதாரத்தைப் பற்றி பேசாமல், தோட்டமக்களைப்பற்றி பேசவேண்டும்
என்பதை ஏற்கனவே அய்யர் திட்டமிட்டு வைத்திருந்தார்.
தனது பணி தோட்டத்து மக்களின் சமுதாய அமைப்பை மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக அய்யர் விரும்பினார். சமுதாய அமைப்பு மாறுவதற்கு இடைஞ்சலாக இருப்பது பெரியகங்காணியின் பதவிகுட்பட்ட தோட்ட அமைப்பும் அதனைப் பிணைத்துவைக்கும் பற்றுச்சீட்டும் என்பதை அய்யர் ஏற்கனவே ஆராய்ந்து வைத்திருந்தார். போதாதற்கு அவர் பெரியகங்காணிகளின் மேல் பகையுணர்வும் கொண்டிருந்தது அவரது செயல் வேகத்தை அதிகரிக்க உதவியது.
"நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்" (குறள் 948)
என்ற வள்ளுவர் வாக்குக்கமைய அவர் தோட்டமக்களின் நோயைக் குணப்படுத்தும் செயலை ஆரம்பித்தார். ஏற்கனவே - அய்யர், தோட்டப்புறங்களில் சிரமப்பட்டு உருவாக்கிய பலரை இழந்திருக்கிறார். அவர்களில் பலர் தொழிலை இழந்திருக்கிறார்கள்; மேலும் பலர் தோட்டத்தைவிட்டு விரட்டி அடிக்கப் பட்டிருக்கிறார்கள்; சிலர் பைத்தியக்காரப்பட்டம் சூட்டப்பட்டு அங்கொடையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்; வேறு சிலர், ஊருக்குப்போகும் ஆசையில் இங்கிருந்து ஒரேயடியாக ஏமாற்றி அனுப்பப்பட்டார்கள்.
இந்தியாவுக்குப் போனவர்களில் சிலரை மீண்டும் இலங்கையில்
பார்ப்பதற்கு சில துரைமார்கள் விரும்பவில்லை.
92 மலையகத்தமிழரின்வரலாறு

ஒருமுறை இங்கிருந்து போனவர்கள் ஒட்டுமொத்தமாக வராமல் தடுக்க முடியாதா என்று துரைமார்கள் ஆதங்கப்பட்டார்கள் என்று துரைமார் சங்க செயலாளராக இருந்த ஆர்தர். டப்ளியூ. எல். மேர்னர் கூறுகிறார்.
துரைமார்களின் ஆதங்கத்துக்குக் காரணம், தொழிலாளி நிமிர்ந்து நின்று கேள்வி கேட்க ஆரம்பித்தது தான். ஆகவே விரும்பத்தகாதவன் என்று பட்டம் சூட்டி அவனை துரை ஒதுக்க ஆரம்பித்தார்.
அவருக்கு வழிவகைகள் சுட்றி அவருக்குத் துணையாய் நின்றவர்கள் பெரிய கங்காணிமார்களேயாகும். அவர்களை அழித்தொழிக்கும் முயற்சியில் அய்யர் ஈடுபட்டது தனிப்பட்ட குரோதத்தால் என்று அவர்கள் பல முறைப்பாடுகள் செய்தனர்.
அந்த முறைப்பாடுகள் பத்திரிகைகளில் அறிக்கையாக, துரைமார் சம்மேளனத்துக்கு மனுவாக, சட்டமன்றத்தின் உரையாக,
சங்கக்கூட்டங்களில் தீர்மானமாக வெளியிடப்பட்டன.
தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் சம்மேளனம் ஆரம்பித்ததற்காக நான் யாரிடமும் மன்னிப்பு பெறவேண்டிய அவசியமில்லை. ஒரு நூற்றாண்டுக்காலம் துன்பத்தில் ஆழ்ந்த தொழிலாளி தன் கையே தனக்குதவி என்பதை உணர ஆரம்பித்து விட்டான். தான் விரும்புகிற விதத்தில் தனக்கு உதவுவதற்கு யாருமில்லை என்பதை அவனது சோகம் இழைந்தோடும் நீண்ட வரலாறு கூறிய வண்ணம் இருக்கிறது. என்று முழங்கிய அய்யர் சோக வரலாற்றை மாற்ற முனைந்தார்.
தொழிலாளிகளை அவர் சுத்தமாக உடுக்கச் செய்தார்; செருப்பு போடும்படி கேட்டார்; கோட் அணியச் சொன்னார்; தலைப்பாகை கட்டச் சொன்னார்; கையிலே பிரம்பு எடுத்துக் கம்பீரமாக நிமிர்ந்து நடக்கச் சொன்னார்!
தொழிலாளி விழித்தான்! இவையெல்லாம் கங்காணியின் அடையாளங்கள்; கங்காணிகள் மாத்திரமே இவ்விதம் உடுத்தலாம். வேறுயாரும் அப்படி இருக்க முனைவது எப்படி சாத்தியமாகும்? என்று அவன் விழித்தான்.
மலையகத்தமிழரின்வரலாறு 93

Page 57
94 - 1952
1947 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் 95 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்தேர்தல் 1947 ஆகஸ்ட் 29லிருந்து செப்டம்பர் மாதம் 20 தேதிவரையில் கீழ்க்காணும் 19 நாட்கள் நடைபெற்றது. ஆகஸ்ட் 23, 25, 26, 27, 2E, 30 la ILILIi 1, 4, 5, 8, 9, 10, 11, 13, 15, 15, 17, 18, 20.
இத்தேர்தலில்தான் போட்டியிடும் அங்கத்தினர்களுக்கு சின்னங்கள் கொடுபட்டன. இதற்கு முன் நடந்த சட்ட நிரூபண சபைத் தேர்தல், அரசாங்க சபைத் தேர்தல்களில் போட்டியிடும் அபேட்சகர்களுக்கு 'வர்னம்கொடுக்கப்பட்டது. உதாரணமாக மூவர் போட்டியிடும்போது அவர்கள் மூவருக்கும் மூன்று வெவ்வேறு வர்ணங்கள் அடையாளமாகக் கொடுபட்டன. பச்சை, சிவப்பு நீலம் என்ற வர்ணங்களிடப்பட்ட மூன்று பெட்டிகள் வைக்கப்பட்டன. தேர்தலில் எாக்களிப்பவர்கள் தாம் விரும்பிய வர்ணப் பெட்டிகளில் வாக்களிக்க வேண்டும்.
இந்த முறை நீக்கப்பட்டு சின்னங்கள் மூலம் வாக்களிக்கும்முறை படிப்பறிவில் குறைந்த தொழிலாளர்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைக்கப்பட்டன. தான் விரும்பிய சின்னத்துக்கு எதிரே X புள்ள டியிட வேண்டியதே ஒருவர் செய்ய வேண்டியது.
 

1947ல் நடந்த தேர்தலுக்கு 24 சின்னங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
யாளன், எக, துவிச்சக்கரவண்டி வீடு, வண்ணத்துப்பூச்சி, சாவி, மூக்குக் கண்ணாடி, குருவி, சில்லு, நட்சத்திரம், தராசு, குடை மோட்டார் வண்டி, தேநீர் கோப்பை, கடிகாரம், விளக்கு, நாற்காவி, மரம், அன்னாசிப் பழம், மேசை, மப்ர், விமானம், கண், கரண்டி என்ற 24 சின்னங்களுள் தேர்தலில் போட்டியிடும் அபேட்சகர்கள் தனக்கு விருப்பமான சின்னத்தைத் தெரிந்தெடுக்கும் உரிமை கொடுக்கப்பட்டது. அதன் பிரகாரம் நடந்த 1947 தேர்தலில் முக்கிய கட்சிகளென அறியப்பட்டவை 1948ல் அமைக்கப்பட்ட யு.என்.பி, 1947ல் அமைக்கப்பட்ட போல்ஸ்விக் லெனினிஸ்ட் கட்சி, 1939ல் அமைக்கப்பட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ், 1943ல் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, 1935ல் அமைக்கப்பட்ட எங்கா சமசமாஜக் கட்சி, 1944ல் அமைக்கப்பட்ட அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்பவைகளாகும்.
இவைகளுக்கு முறையே டி. எஸ். சேனநாயகா, கொல்வின், ஆர். டி. சில்வா, *ம். சுப்பையா, டாக்டர் எஸ். ஏ. விக்ாமசிங்கா, டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம் என்போரின் பெயர்கள் பொறுப்பாளர்களாக பதியப்பட்டிருந்தன.
தேர்தலில் போட்டியிட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ் சார்பில் கீழ்க்காணும் அறுவர் தெரிந்தெடுக்கப்பட்டனர்.
பதுளை - எஸ். எம். சுப்பையா 27, 121 வாக்குகள் கொட்டகலை - கே. குமாரவேலு 6,722 வாக்குகள் நாவலப்பிட்டி - கே. இராஜலிங்கம் 7, 993 வாக்குகள் நுவரெலியா - வி. ஈ. கே. ஆர். எஸ். தொண்டமான் 9,386 வாக்குகள் தலவாக்கொல்லை- சி. வி. வேலுப்பிள்ளை 10, 645 வாக்குகள் மஸ்கெலியா - ஜி. ஆர். மோத்தா 9,086 வாக்குகள்.
மலையகத்தமிழரின்வரலாறு

Page 58
ஜி. ஆர் மோத்தா எல்.வி. ஜெயசேனா எஸ், நடேசன் பெரி. சுந்தரம்
செனட்டர் சோட்டர் lTETTILrf
ஹப்புத்தளையில் உள் கட்சி பூசலால் இலங்கை இந்தியன் காங்கிரஸ்
பிரதிநிதி வெல்ல முடியவில்லை.
சுயேட்சை பிரதிநிதியாக தேர்தலில் நின்று, அளுத்நுவர தொகுதியில்
வெற்றிபெற்ற தேசிகர் இராமானுஜம் தேர்தலுக்குப் பின்னர் இலங்கை இந்தியன்
காங்கிரஸ்ஸோடு சேர்ந்து இயங்கினார். அவர் பெற்ற வாக்குகள் 2772, தேசிகர்
ராமானுஜத்தைத் தமிழ் தொகுதிகளில் போட்டியிட இலங்கை இந்திய காங்கிரஸ்
தெரிந்தெடுக்கவில்லை, அளுத்துவர தொகுதியில் 3000 தமிழ் வாக்குகளிருந்தன.
அவரது தேர்தல் கட்டுப்பனத்தை தொண்டமானே கட்டினார்.
மஸ்கெலிய தொகுதியில் 11-3 -1950ல் இடைத் தேர்தல் நடந்தது.
ஜி. ஆர். மோத்தா மானமானதால் அங்கு புதிய பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்ய
வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஜி. ஆர். ராஜப்பிரியர் என்பவரும் அப்துல் அஸீஸ்
என்பவரும் போட்டியிட்டனர். அளபீஸ் 11,343 வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார்.
பண்டாரவளைத் தொகுதியில் எந்த ஒரு கட்சியினரும் தேர்தலில்
நிற்கவில்லை. அங்கு போட்டியிட்ட மூவரும் சுயேட்சை அபேட்சகர்களாகவே
நின்றனர். உள்ளூரில் பிரசித்தம் பெற்ற சட்ட வல்லுநரான கே. வி. நடராஜா 5092
வாக்குகளைப் பெற்றுத் தெரிவானார். அவரை எதிர்த்த எம். பி. பாபா என்பவரும்,
கே. பி. எச். அதிகாரதிலக என்பவரும் சிங்களவர்கள் என்பது குறிப்பிடத் தகுந்தது.
LIIn ELNIJzij தமிழரின் வரலாறு
 

இத்தேர்தலில் 2,25,000 இந்திய வம்சாவளியினர் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். தேர்தலில் வென்ற எட்டுப் பேரும் மொத்தமாகப் பெற்ற வாக்குகள் 78,817 ஆகும். இது இந்திய வாக்குகளின் மூன்றில் ஒரு சதவீதமாகும். மூன்றில் இரண்டு பங்கான 14,5183 வாக்குகள் இடது சாரியினருக்கே
அளிக்கப்பட்டன.
1947 தேர்தலின் முடிபு இலங்கை ஆட்சியினரைக் கிலி கொள்ள வைத்தது.
இலங்கை இந்தியன் காங்கிரஸ்ஸில் மொத்தமாக ஏழுபேர் வெற்றியடைந்திருந்தனர். சுயேட்சை உறுப்பினர் அளுத்துவர பிரதிநிதி தன்னை இலங்கை இந்தியன் காங்கிரஸ்ஸாருடன் இனம் காட்டிக் கொண்டார். இந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்கு மந்திரி சபையில் இடம் கிடைக்க இருக்கிறது என்று தமிழ்ப் பத்திரிகைகள் ஹேஸ்யம் கூறியிருந்தன. இடது சாரி போக்குடைவர்களென அடையாளங் காட்டப்பட்டவர்களுடன் இ. இ. கா. உறுப்பினர்களும் சேர்த்தே கணிக்கப்பட்டனர்.
இந்தப் போக்கை இதே விதத்தில் வளர விடுவதிலிருக்கும் ஆபத்தை டி. எஸ். சேனநாயக்கா உணர்ந்திருந்தார்.
பெற்றிகரமாக ஒரு சிங்கள மந்திரிசபையை அவர் 1938 அரசாங்க சபைக் காலத்தில் அமைந்திருந்தார். எனவே, இப்போதைய அரசியல் வளர்ச்சியை இனம் கண்டு கொள்ள அவரால் முடிந்தது.
அவரது ஆழ் மனதில் இலங்கை இந்தியன் காங்கிரஸ்' எயின் வளர்ச்சி பூதாசுரமாய் எழுந்தது. அது வளர்ந்த விதத்தையும், அதன் வளர்ச்சியையும் அவர் சற்றே கவனித்துப் பார்த்தார்.
இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் தசாப்தம் வரையிலும் தென்னிந்தியாவிலிருந்து இங்கு கொண்டு வரப்பட்ட மக்கள் கூட்டத்தினர், பூகோள ரீதியாக மலைப் பிரதேசங்களில் அரசியல் பொருளாதார உரிமையற்றவர்களாக ஒதுக்கப்பட்ட நிலையிலிருந்ததால், இலங்கையில் அவர்களைப் பற்றிய கவனம் குறைவாகவே இருந்தது. 1915ல் இலங்கையில் ஏற்பட்ட சிங்கள முஸ்லீம் கலவரத்தின்போது சிறையிலடைக்கப்பட்ட சிங்களத் தலைவர்கள் பிரிட்டிஸ் இராணுவத்திலிருந்த இந்தியச் சிப்பாய்களால் நையப்புடைக்கப்பட்டனர்.
மலையகத்தமிழரின்வரலாறு דת

Page 59
இது அவர்களின் மனசில் இந்திய வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது. 1920ம் ஆண்டுக் காலப்பகுதியில் அரசியல் சட்டத்தில் சீர்திருத்தங்கள் கொண்டுவர ஆலோசனைகள் மேற்கொண்டபோது, இந்தியத் தொழிலாளர்களுக்கும் அரசியல் உரிமை வழங்க வேண்டுமென்று அபிப்பிராயங்கள் எழுந்தபோதே இவர்களுக்கு விரோதமான கருத்துக்களும் வளர ஆரம்பித்தன.
இந்தியர்களுக்கு அரசியலில் இடம் கொடுப்பதற்குச் சிங்கள முதலாளித்துவ வாதிகள் இம்மியும் விரும்பவில்லை. இவர்களுக்கு வாக்குரிமை போன்ற உரிமைகள் வழங்கப்பட்டால் பலதேர்தல் தொகுதிகளில் சிங்களவர்கள் சிறுபான்மை இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவார்கள் என்று சிங்களத் தலைவர்கள் சிலர் அஞ்சினர். இந்தியர்களின் விழிப்புணர்ச்சியை முதன் முதலாக 7.1.1922ல் மருதானை டவர் ஹோலில் இடம்பெற்ற மாபெரும் இந்தியர்களின் பொதுக் கூட்டத்தில் காணமுடிந்தது.
டாக்டர் மணிலால் என்ற இந்திய கம்யூனிஸ்ட் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டார். அதை எதிர்த்து நடாத்திய கூட்டம் பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.30 மணி வரையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் டி. எஸ். சேனநாயக்காவும் ஒருவர்.
லாரி முத்துக்கிருஷ்ணா என்ற இந்தியர் சங்கத்தின் தலைவர் தலைமையில் நடந்த அந்தக் கூட்டமே இலங்கை வாழ் இந்தியர்கள் பொதுக் கூட்டம் ஒன்றில் நிறைந்த அளவில் கூடிய கூட்டம். அதன்பின்னர் அப்படி ஒரு பொதுக் காரணத்தை முன் வைத்து இந்தியர்கள் இலங்கைத் தீவில் ஒரு ஹர்த்தாலையே மேற்கொண்டனர்.
12.02.1946ல் நடைபெற்ற அந்த 'ஹர்த்தால் அரசியல் காரணத்தால் இடம் பெற்றது.
“ஹர்த்தாலை'இந்திய சமூகங்கள் மட்டுமே அல்லாமல், இலங்கையிலுள்ள சகல இடதுசாரிக் கட்சியினரும் ஒரு முகமாக அனுஷ்டித்தார்கள், தவிர ஜனநாயக தர்மத்தில் பற்றுள்ளங் கொண்டவர்களும் அநுதாபம் காட்டினர். தோட்டங்களிலும் மற்றும் பல இடங்களிலுமுள்ள சிங்களச் சகோதரர்களும் ஹர்த்தாலில் கலந்து கொண்டு ஆதரித்தார்கள். பல மட்டங்களில் 'ஹர்த்தால் அதன் பாதிப்பை வெளிப்படுத்தியது. சோல்பரி ஆணைக் குழுவின் சிபார்சுகளை எதிர்த்து
98 மலையகத்தமிழரின்வரலாறு

இந்தியர்கள் ஏகோபித்து ஒரு முகமாய் செய்த 'ஹர்த்தால் அது. அதற்கு முன்பாக இந்தியர் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்த நாடெங்கும் 21.10.45 முதல் 28.10.45 வரை சோல்பரி அநீதக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
அரசியலை முன்னிறுத்தி நடைபெற்ற முதலாவது ஹர்த்தால் தொழில் தருவோரைக் கையாலாகாத நிலைக்குத் தள்ளியது. 'ஹர்த்தாலை அரசியல் நோக்கோடு பயன்படுத்தும் இன்னோர் நிகழ்வும் அதே ஆண்டில் நடைபெற்றது.
பிளாண்டர்ஸ் அசோசியேசன் ரிவ்யு தன்னுடைய இதழொன்றில் (பெப்ருவரி 1947) "125,000 தொழிலாளர்கள் கலந்து கொண்ட 27 நாட்கள் நீடித்த ஹர்த்தால், தொழிலோடு சம்பந்தப்படாத ஒன்றானதால், தலையிடுவாரின்றி தவிக்க நேர்ந்தது” என்று எழுதுகிறது. ஜூன் 12ம் தேதியிலிருந்து களனிவேலி, கேகாலை தோட்டங்களிலிருந்தும் 18ம் தேதியிலிருந்து டிக்கோயா பகுதி தோட்டங்களிலிருந்தும் இணைந்து கொண்ட இந்த 'ஹர்த்தால் ஜூலை 9ம் தேதி இந்திய தேசிய காங்கிரஸாரின் அறிவுறுத்தலுக்குப் பின்னர் விலக்கிக் கொள்ளப்பட்டது.
நேவ்ஸ்மேரி தோட்டத்தில் நடந்த காணி சுவீகரிப்பு’ சம்பந்தமான ஹர்த்தாலைப் பற்றிக் கூறுகையில் "அத்தோட்டத்தில் உள்ளவர்களுக்கு மாற்று வழி அமைத்துக் கொடுத்திருந்தால் இந்த ஹர்த்தாலை தடுத்திருக்கலாம் என்பதே துரைமார் சம்மேளத்தின் கருத்தாக இருந்தது. தலைமுறை தலைமுறையாக குடியிருந்த தோட்டத்தை ‘காணி அபிவிருத்தி' என்ற பெயரில், பகிர்ந்து உள்ளூர் சிங்களவர்களுக்குப் பகிர்ந்தளித்துவிட்டு அங்கிருந்த 365 பேருக்கு எதிராக அத்துமீறல் என்னும் கிரிமினல் குற்றச் சாட்டு சுமத்தப்பட்டு, கேகாலையில் ஒரு விசேட நீதி மன்றம் அமைக்கப்பட்டு விசாரணை செய்தது. விசாரணையில் தொழிலாளர்கள் குற்றவாளியாகக் கணிக்கப்பட்டு ஒவ்வொரு தொழிலாளியும் 1000 ரூபா அபராதமும் 3 மாதச் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டனர். உருளவள்ளித் தோட்டத் (நேவ்ஸ்மேரி) தொழிலாளர்களுக்கு நேர்ந்த கதிக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் விட்டால், இலங்கையில் ஏனைய தோட்டங்களில் வாழும் தொழிலாளர்களுக்கு இதே கதி ஏற்படலாம் என்று எண்ணிய இலங்கை இந்திய காங்கிரஸ் அவர்களுக்காக மேற் கொண்ட போராட்டம்தான். 25,000 தொழிலாளர்கள் கலந்து கொண்ட மேற்படி 'ஹர்த்தால்
மலையகத்தமிழரின்வரலாறு 99

Page 60
இலங்கை அரசு, தோட்டங்களில் ஏற்பட்டு வந்து எழுச்சியைக் கண்டு அசைந்து கொடுக்க வேண்டியதாயிற்று. இந்தச் சம்பவம் இலங்கை அரசாங்கத்தை மட்டுமன்றி, இந்திய அரசாங்கத்தையும், பிரிட்டிஷ் அரசாங்கத்தையும் கூட ஈர்த்தது. பிரிட்டிஷ் காமன்ஸ் சபையில் இந்த நிகழ்ச்சி பற்றி கேள்வியும் எழுப்பப்பட்டது.
அப்போது இந்திய அரசின் பிரதிநிதியாக எம். எஸ், அனே இங்கு இருந்தார், விவசாய அமைச்சரான டி. எஸ். சேனநாயக்கா விரைந்து சென்று அனேயுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டார். இருவரும் பிரிட்டிஷ் கவர்னராகக் கொழும்பில் இருந்த சேர். ஹென்றி மேஸன் மூர் என்பவருடன் பேசினார்கள்.
அதன் விளைவாக கவர்னரின் மன்னிப்பு அவர்களுக்குக் கொடுபட்டு அவர்கள் விடுதலையானார்கள். அந்த விடுதலையை அப்படியே ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத இ.இ.கா. அத்தொழிலாளர்களில் ஒருவரான செல்வநாயகத்தின் மீது இருந்த கிரிமினல் குற்றச்சாட்டும், தீர்ப்பும் சம்பந்தமாக பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உயர்ந்த நீதி மன்றமான பிரிவுக் கவுன்சிலுக்கு அப்பீல் செய்தது. பிரிட்டிஸ் பிரிவு கவுன்சிலின் தீர்ப்பு செல்வநாயகத்துக்குப் பாதகமாக முடிந்தது.
இந்த 'ஹர்த்தால் பின்னணியில் தற்போதைய தேர்தல் வெற்றியையும் வைத்துப் பார்க்கையில் இந்தியர்களின் வளர்ச்சி சிங்களவர்களின் வளர்ச்சியைத் தடை செய்வதாக இருக்கிறது என்பதை அவரால் உணர முடிந்தது.
குடியுரிமையும், வாக்குரிமையும் பறிக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக இலங்கையில் தொடர்ந்தும் இருக்கும் வண்ணம் என்றும், 'ஆங்கிலேய நிர்வாகத்திலிருந்து விடுவித்தெடுக்கும் அரசாங்கத்தை நாங்கள் இந்தியர்களிடம் ஒப்படைப்பதற்கு தயாரில்லை' என்றும் “மரம் அறுப்பவர்களாகவும், நீர் சுமப்பவர்களாகவும், இருப்பதற்கு இந்தியர்கள் ஒத்துக் கொள்ளும் போது அவர்களைப் பிரதிநிதித்துவம் வகிக்கும் அங்கத்தினர்களை நான் மரியாதையுடன் நோக்குவேன்’ என்றும் பின்னாள் அவரது கூற்றுக்களிலேயே அவரது செய்கையின் நியாயங்களை விளங்கிக் கொள்ள முடிகிறது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து இலங்கை இந்திய காங்கிரஸ் மேற்கொண்ட சத்யாக்கிரகம் இந்த மக்களின் சக்தியை வெளிப்படுத்திய இன்னோர் நிகழ்வாகும்.
1 OO மலையகத்தமிழரின்வரலாறு

ஜூன் 1950 இல் ஆரம்பிக்கப்பட்டு , நவம்பர் 1951 இல் முடிவுற்றது இச்சத்தியாக்கிரகப் போராட்டம் இப்போராட்டம் இலங்கையிலும் இந்தியாவிலும் பலதரப்பட்ட மனோ பாவங்களை ஏற்படுத்தி, மொத்தத்தில், இந்தியவம்சாவளி மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் வெளிப்படுத்திட உதவியது. இலங்கை அரசியல் வாதிகளிடையே அது மீண்டும் மாறா வடுவை எற்படுத்தியது.
1954 இல் இலங்கைக்கு வருகை தந்திருந்த பண்டிட் ஜவகர்லால் நேரு இந்த மக்களிடையே பேச விரும்பினார். அவரைப் பேசுவதற்கு ஒத்துக் கொள்ளச் செய்வதில் இலங்கை இந்திய காங்கிரஸ் வெற்றி கண்டிருந்தது. பெரி. சுந்தரம், எம். எஃவ், கானி, எஸ். ஆர். எம். வள்ளியப்பசெட்டியார், எம். சுப்பையா, ஸி. கே. குஞ்சிராமன், ஐ. எக்ஸ். பெரைரா, எஸ். வைத்திலிங்கம், ஏ. அஸிஸ், ஜோர்ஜ் ஆர். மோத்தா, கே. சத்யவாகேஸ்வர ஐயர், எம். யூ. கான், எஸ். ராஃவ் பாட்சா, எச். எம். தேசாய், ஏ. சுப்பையா என்ற பதினைந்து, இந்திய மக்களை அரசியல் சக்தியாக இலங்கையில் வளர்த்தெடுப்பதில் அக்கறை காட்டி ஒர் அறிக்கையில் ஒப்பம் இட்டனர்.
இலங்கை இந்தியா என்ற இரண்டு நாடுகளின் பூரண சுயராஜ்யத்துக்காக உழைக்கத் திடம் பூணுவதாகவும், இந்தியர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுத் தமது, சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வதாகவும் அதில் அவர்கள் கூறியிருந்தனர். அப்படித் தன்னால் ஏற்படுத்தித் தந்த இயக்கம் கடந்த 15 ஆண்டுகளில் அடைந்த வளர்ச்சியை அவதானித்த நேரு அவர்கள் மத்தியில் பேச விரும்பியதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.
17 மாதங்கள் நீடித்த சத்யாக்கிரகம்’ ஒன்றை பலத்த கண்டனங்களுக்கு மத்தியில் நடத்தியிருந்த இ. இ. காங்கிரசினர், அதன் பலாபலன்களைக் கண்டறிவதில் இன்னும் ஈடுபாட்டோடு விளங்குகிற நேரத்தில், தான் அவர்கள் மத்தியில் பேசுவது அவர்களின் மனோதைரியத்தை வளர்க்க உதவும் என்று நினைத்திருக்கலாம்.
ஆனால் அவருக்கு பேசுவதற்கு அனுமதி கொடுப்பதற்கு சேர். ஜோன். கொத்தலாவலை - டி. எஸ். சேனநாயக்கா - டட்லி சேனநாயக்கா என்ற வரிசையில் பிரதமராக இருந்தவர் மறுத்துவிட்டார். பாதுகாப்புக் காரணங்களுக்காக கம்பளையில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசுவதற்கு பண்டிட் நேரு அவர்களுக்கு அநுமதி மறுக்கப்பட்டு விட்டது. இதை பத்திரிகைகள் - BANONNEHRU என்ற தலைப்பில் - MAY- 1 - 1954-TRIBUNE செய்தியாக வெளியிட்டன.
AEOGuUijëj &lgflsin GJITburg 10

Page 61
இலங்கை அரசியல் தலைவர்களின் மனதில் நிலவிய கசப்புணர்வை இது காட்டுகிறது. மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சத்யாக்கிரகத்தை அடுத்து, இலங்கை இந்திய அரசியல் தலைவர்கள் பேச்சுவார்த்தை மேற்கொண்டு 13 - 2 - 54ல் நேரு - கொத்தலாவலை ஒப்பந்தம் என்றறியப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தனர்.
இந்நிகழ்வுகள் இந்தியர்களின் மனநிலையில் ஏற்படுத்திய கருத்துக்களையும் நிலையையும் பாதிப்பையும் உணர்த்தும் விதத்தில் அப்துல் அஸிஸ் உரை ஒன்றை நிகழ்த்தினார்.
அவரது உரை 27 - 2 - 54ல் நடைபெற்றது. பேராதனை சர்வகலாசாலை யூனியன் கூட்டத்தில் அஸிஸ் கலந்து கொண்டார். நாட்டில் நடந்து வருகிற அரசியல் மாற்றங்களையும், அது இந்திய வம்சாவளியினரை பாதிக்கும் விதத்தையும் பற்றி பேசிய அஸிஸ் நாங்கள் இந்தப் பிரச்சினையை வெற்றி காண்போம் என்று சூளுரைத்தார்.
இலங்கைப் பத்திரிகைகளில் குடியுரிமை சம்பந்தமாக இந்த மக்களின் கருத்துக்கள் பிரசுரமாகியிருக்கவில்லை. தேசியப் பத்திரிகைகள் என்று கூறுகிற அளவுக்கு கணிக்கப்படும் பத்திரிகைகள் இதில் கவனம் காட்டவில்லை.
இந்த நிலையில் 15 - 7 - 1952ல் டைம்ஸ் ஒஃவ் சிலோன்’ பத்திரிகை கருத்துமேடை ஒன்றை அமைத்துக் கொடுத்தது.
ரெவரன்ட் டபிள்யூ. எம். பி. ஜயதுங்கா, ரெவரன்ட் டி. எச். ரட்னாயகா, ரெவரன்ட் எரிக், எல். ரொபின்சன் என்ற மூவரும் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்தப் பாதிரிமார்கள், இலங்கையில் காணப்படும் அலட்சிய மனோபாவத்தை - இந்த முக்கிய அம்சத்தில் பங்கேற்று முடிவு காண விரும்பாத அலட்சிய மனோபாவத்தைக் கண்டித்தாலும், இவர்களின் சார்பாக நடத்தப்பட்ட சத்யாக்கிரகப் போாட்டத்தை ஒத்துக் கொள்ளவில்லை.
டி. வை. ரட் என்ற ஐரோப்பியர்களின் சார்பில் அரசாங்க சபையிலும், பின்னால் செனட் சபையிலும் நியமனம் பெற்றிருந்தவர் இதே விதத்தில் "பழிவாங்குதலையே பிரதான காரணமாகக் கொண்டிருந்தது" என்று கூறினாலும், "சத்யாக்கிரகப் போராட்டத்தை” ஆதரிக்கவில்லை.
102 மலையகத்தமிழரின்வரலாறு

இ. இ. கா. மேற்கொண்ட போராட்டம் குறித்து போதிய தெளிவான கருத்துக்கள் மக்களிடையே பரப்பப்படவில்லை, அங்கத்தினர்களிடையேயும் தலைவர்களிடையேயும் ஒருமித்தக் கருத்து இருக்கவில்லை.
சி. வி. வேலுப்பிள்ளை, கே. இராஜலிங்கம், அப்துல் அஸிஸ், எம். சோமசுந்தரம் போன்றோர் தீவிரமாக இருந்தனர் சத்யாக்கிரகத்தை முன்னெடுக்க வேண்டுமென்றனர்.
பெரி. சுந்தரம், எஸ். பி. வைத்திலிங்கம் என்ற தலைவர்களும், இந்தியன் வர்த்தகர் சங்கம், மேமன் சங்கம், தென்னிந்திய ஜவுளி வர்த்தகர் சங்கம், பரத சங்கம், முஸ்லீம்கள் சங்கம், இந்திய இலங்கை வர்த்தகர் சங்கம், நாட்டுக் கோட்டைச் செட்டியார் சங்கம், முஸ்லீம் பொருளாதார சங்கம், பார்ஸி அன் ஜுபின் சங்கம், குஜராத்தி இந்து மண்டல் என்ற சங்கங்களும் சத்யாக்கிரகத்துக்கு எதிராக இருந்தன. பகிஷ்காரத் தீர்மானத்தை உடன் வாபஸ் பெறுக’ என்று இலங்கை இந்திய லீக்கின் சார்பாக டி. ஜி. மணி பத்திரிகையில் அறிக்கை விட்டிருந்தார்.
இந்த அரசியல் அநீதியை எதிர்த்து உலகையே ஈர்க்கும் அற்புதமான போராட்டத்தையே நடத்தியிருக்கலாம் என்பது பலரது எண்ணம். மக்கள் கொதித்தார்கள்; குமுறினார்கள்; பாராளுமன்றத்துக்கு முன்னால் தீக்குளிக்கவும், சிரச்சேதம் செய்து கொள்ளவும் மக்கள் தயாராக இருந்தார்கள். ஆனால் வழி நடாத்தும் தலைமை இல்லாததால் அந்தப் போருக்குக் கல்லறை கட்டப்பட்டது.
1948ம் ஆண்டில் இலங்கைக் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. தமது பாட்டன், முப்பாட்டன் ஆகியோர் இலங்கையில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிக்க முடியாதவர்கள் நாடற்றவர்களானார்கள்.
இலங்கைத் தமிழர், சிங்களவர், இலங்கை முஸ்லீம்கள் ஆகியோருக்குப் பிரச்சினைகள் இருக்கவில்லை. இந்தியத் தமிழருக்கும் இந்திய முஸ்லீம்களுக்கும்தான் பிரச்சினைகள், அவர்கள்தான் நாடற்றவர்களானார்கள்.
இந்தச் சட்டத்தின் பாரதூரம் கருதி, அதன் எதிர்ப்பைக் குறைக்க வேண்டி மேலும் இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இந்தச் சட்டத்தின் மீது உரையாற்றும்போது முதன்முதலாக இந்தியத் தொழிலாளர்களைக் கண்டித்தமிழர் என்று அழைக்கவேண்டும் என்று தொண்டமான் கூறினார்.
மலையகத்தமிழரின்வரலாறு 103

Page 62
அதே தினத்தன்று நாடாளுமன்றத்தில் பேசிய எஸ். ஜே. வி. செல்வநாயகம் :
“பெருத்த எண்ணிக்கையில் ஒரு மக்கள் கூட்டத்தினர் ஒரு நாடுவிட்டு இன்னொரு நாட்டுக்குச் செல்வது வரலாற்றில் புதியதல்ல. திரும்பத்திரும்ப நடந்து வரும் இதனால் எழும் பிரச்சினையை நவீன முறையில் நாம் அணுகுதல் வேண்டும். மனித நீதிக்கேற்ற விதத்தில் நாம் நடந்து கொள்ளவேண்டும். அவ்விதம் நடந்து கொள்ளாவிட்டால் நாட்டில் சமுதாயங்களிடையே ஒரு விதமான பதட்ட நிலையை உருவாக்குகிறோம். கனம் பிரதமர் அவர்கள் ஒரு சமுதாயத்தை அழிக்க முயற்சிக்கிறார்” என்றார்.
சிறிமாவோ அரசியற் திட்டம் லட்சக்கணக்கானவர்களை இந்தியாவுக்கு மீண்டும் செல்லவைத்தது. 1946 - 1964 காலப் பகுதியில் இடதுசாரி கட்சிகளுடன் சார்ந்திருந்த இ. இ. கா. அப்படிச் சேர்ந்திருப்பதால் எவ்வித பலனையும் காணாது யூ என். பியுடன் சேர்ந்து அரசியல் லாபங்களை அடைந்தது என்றெழுதுகிறார் தொண்டமான். (மேலது இதழ்) 1954 - 1978 காலப்பகுதியில் சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகித்த காரணத்தால் இடையில் அவரை அதன் வருடாந்தக் கூட்டங்களில் பங்கேற்க முடியாது செய்வதற்கு கொப்பேகடுவ, சிறிமாவோ பண்டாரநாயக்கா போன்றோர் முனைந்தபோதும் மலையகத்துப் பிரச்சினைகளைச் சர்வதேச கண்ணோட்டத்துக்குக் கொண்டு வரமுடிந்தது.
1952 க்குப் பின்னர்
இரண்டாவது நாடாளுமன்றம் 2-6-1952 அமைக்கப்பட்டு 18.2.1956 வரை நீடித்தது. மூன்றாவது நாடாளுமன்றம் 12-4-58 லிருந்து 5-12-1959 வரை நீடித்தது. நான்காவது நாடாளுமன்றத்துக்கு மார்ச் 1960ல் நடந்த தேர்தல் நீடித்து நிற்காததால் ஜூலை 1980ல் நடந்த தேர்தலில் முதன்முறையாக பூரீமதி பண்டார நாயகாவின் ஆட்சிக்கு வழியேற்பட்டது. அந்த அரசாங்கம் டிசம்பர் 1964 வரை நீடித்தது. அதற்கடுத்த நாடாளுமன்றத் தேர்தல் மார்ச் 1965 லிருந்து 25,3,1970 வரை டட்லி சேனநாயகாவின் தலைமையில் நடந்தது.
இதில் இந்தியர்களின் அரசியல் குறித்து யூரீமா பண்டாரநாயக்காவின் ஆட்சியைக் குறிப்பிட வேண்டும். அவரது ஆட்சியில்தான் இலங்கை வாழ் இந்தியர்கள் சம்பந்தமான ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைப் பிரதமர் சிறிமாவோவும் இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியும் செய்து கொண்ட ஒப்பந்தம் - சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் என்ற பெயராலேயே அறியப்பட்டது.
104 மலையகத்தமிழரின்வரலாறு

1964ல் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தத்தால் 5,25,000 மலையகத் தமிழர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டுமென்றும் 300,000 மலையகத் தமிழருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்படும் என்றும் இணக்கம் காணப்பட்டது.
இந்த ஆட்சியில்தான் இலங்கை வாழ் இந்தியர்களின் தலைவராக இருந்த தொண்டமான் ஒரு நியமன உறுப்பினராக ஆக்கப்பட்டிருந்தார். அவரிடம் எவ்விதமாக கலந்தாலோசனையும் செய்யாது இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது என்பதைக் கவனத்தில் கொள்வது நலம்.
மேலும், இந்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது 30-10-64. அதற்கு முன்னரேயே 27-5-1964 ஜவகர்லால் நேரு மரணமடைந்திருந்தார். ஜவகர்லால் உயிருடன் இருக்கும்வரை இலங்கை - இந்தியர் பிரச்சனையில் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அமைந்திருந்தது. 1939லிருந்த இலங்கையுடன் நேரடித் தொடர்பு கொண்டிருந்த ஜவகர்லால் நேரு சிங்கள அரசியல்வாதிகள் கொண்டிருந்த தீவிரக் கண்ணோட்டத்தால் இலங்கையில் வாழுகிற இலட்சக்கணக்கான இந்தியர்களின் வாழ்வு - அரசியல் வாழ்வு பாதிக்கப்பட்டு வந்திருக்கின்றதென்பதை அறிந்திருந்தார். அதைச் சுமூகமாகத் தீர்ப்பதற்குத்தான் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காமல் போனதையும் அறிந்திருந்தார்.அந்த முயற்சியின் பயனாகத்தான், தம்முடைய நடவடிக்கைகளால் எந்த விதமானக் காத்திரமான மாறுதல்களையும் ஏற்படுத்த முடியவில்லை என்பதால்தான் 1939 - ஜூலை 25ல் இலங்கை வாழ் இந்தியர்கள் அனைவரையும் ஒரு குடை கீழ் திரட்டும் முயற்சியாக இலங்கை இந்திய காங்கிரஸ் அமைப்பை உருவாக்கிக் கொடுத்தார்.
அது சமயம் அவர் அந்த இயக்கத்தின் முதல் வேலையாக மலைநாட்டுத் தோட்டப் புறங்களில் டிஸ்ட்ரிக் கமிட்டிகள் தோற்றுவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். தோட்ட மக்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடல் வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதன்படி முதலாவது தோட்டக் கமிட்டி கம்பளையில் அமைந்தது. ஆகஸ்ட் 31-1939ல் அமைக்கப்பட்ட அந்தக் கமிட்டியில்தான் தொண்டமான் அறிமுகமானார்.
மலையகத்தமிழரின்வரலாறு 105

Page 63
3000 பேர்கள் கலந்து கொண்ட அந்தக் கமிட்டியின் பொதுக் கூட்டத்தில் கமிட்டி அங்கத்தவர்களாகத் தெரிவானவர்கள் வி. சாத்தப்பச் செட்டியார், என். கே. ஏ. சாயபு எஸ். சொக்கலிங்கம் செட்டியார், ஏ. ஆர். இராமநாதன் செட்டியார், எம். ராமசுப்ரமணியம், எஸ். எம். செரீப், எம். காந்தி சுப்பிரமணியம், கே. சி. சங்கரன், வி. ராமையா, கே. ராஜலிங்கம், வி. அம்மையப்பபிள்ளை, எம். ராமசாமி, சி. சைனலாப்தீன், ஏ. கே. ஏ. அமுது, கரு. ராமலிங்கம், ஏ. எம். ஏ. ஹபு ஹனிபா என்போராவர். ஆனால் பிற கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. சிறிதுகால தாமதத்திற்குப் பிறகே அவைகள் அமைக்கப்பட்டன. அவைகளைக் கணக்கிலெடுக்கையில் உடனடித் தீர்மானமோ, நடவடிக்கையோ எடுக்கத் தயாரில்லாத தலைவர்களின் செயல்களே இவர்களது பின்தங்குதலுக்கான பிரதானமான காரணமாகக் கொள்ளப்படல் வேண்டும்.
நீண்ட நெடுங்காலமாக இந்த மக்களை அரசியலிலும், தொழிற்சங்கத்திலும் பிரதிநிதித்துவம் பண்ணிய செளமிய மூர்த்தி தொண்டமான் தனது கட்டுரை ஒன்றில் (முகவுரை, இன்றைய மலையகக் கட்டுரைத் தொகுதி 1995) இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினர் பின் தங்கிப் போன வாழ்க்கைக்குப் பின்வரும் காரணங்களைக் கூறுகிறார்.
1. ஆரம்பத்தில் இவர்களிடையே ஒற்றுமை நிலவவில்லை. தனித்தனியாகச் செயல்பட்டார்கள். கூட்டு பலத்தின் உயர்வு இவர்களால் உணரப்படவில்லை.
2. தகுதி வாய்ந்த தலைமைத்துவம் இவர்களுக்கு அமையவில்லை. தலைவர் என்று வந்தவர்கள் தியாக உணர்ச்சி அற்றவர்களாகவும், சுயநலத்தையே நோக்கமாகக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.
3. அரசியல் அதிகாரங்களைத் தம் கையில் வைத்திருந்தவர்கள் இவர்களைப் புறக்கணித்தார்கள். பிரஜாவுரிமை, வாக்குரிமை போன்ற அடிப்படை மனித உரிமைகளைப் பறித்து அடக்கு முறை தர்பார் நடத்தி வந்தார்கள்.
மேலும் இரண்டு காரணங்கள் அவரால் சொல்லப்பட்டாலும் அவை தனிமனித மன எழுச்சிகள் சம்பந்தப்பட்டவைகள், சமுதாய அடிப்படையில் தொடர்ந்து ஒரு நூற்றைம்பது வருட காலத்துக்கு மேலாக ஒரு நாட்டில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்ற ஒரு சமூகத்தின் வளர்ச்சியை நிர்ணயிப்பதில் அவைகளுக்கான முக்கியத்துவம் அவ்வளவாக இல்லை.மேற்குறித்த காரணங்களில், முதலாவதாகக் கூறப்பட்ட காரணம்; உலகத்தில் எல்லாச் சமூகத்தினரிடமும் நிலவுகின்ற பொதுவான ஒன்றுதான்.
106 மலையகத்தமிழரின்வரலாறு

இரண்டாவதாகக் கூறப்பட்ட காரணம், உண்மையில் மலையக அரசியலைப் பூரணமாகத் தெரிந்து கொண்டதாக இல்லை. மலையக அரசியல் என்கின்றபோது, ‘ஒரு நாட்டிலிருந்து இன்னோர் நாட்டுக்குக் குடியேறிய மக்கள்; குடியேறிய நாட்டில் அரசியல் உரிமையைப் பெறுவது என்பது, இந் நடவடிக்கைகளில் தலைவர் என்று வந்தவர்கள் என்பதைவிட தலைவர் என்று குடியேறிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் தொண்டமான் கூறியதுபோல எல்லாக் காலங்களிலும் இருக்கவில்லை. தொண்டமான் தனது காலம் முழுக்க மிதவாதியான ஒருவர். அவரது மிதவாதக் கொள்கை மிகப்பிரபல்யமிக்க அரசியல்வாதிகளால் எல்லாக் காலங்களிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றது. தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள், ஒரு குறிப்பிட்ட காலத்தில் அல்லது நேரத்தில், மிதவாதக் கொள்கைகளை முன்னெடுப்பதற்குக் கூட உதவியிருக்கலாம். இந்திய அரசியல் தீவிரவாதக் கொள்கையால் ஏற்பட்டிருக்கும் நிகழ்ச்சிகள், சம்பவங்கள், மாற்றங்கள் என்று ஏராளமாகக் குறிப்பிடப்படுகின்றன. அந்த நிகழ்ச்சிகள், சம்பவங்கள், மாற்றங்கள் என்று அறியப்பட்டவைகளை, பின்வரும் தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதத்தில் ஆவணப் படுத்தப்பட்டிருக்கின்றன.
மலையகத்தின் ஆரம்ப கால முயற்சிகளைப் பற்றித் தெளிவான கருத்து நம்மிடையே இருப்பதாகத் தெரியவில்லை. அதன் பழைய தலைவர்கள், பழைய சங்கங்கள், என்பவைகளைப் பற்றிய 'அறிவு இருப்பதாகத் தெரியவில்லை. அவைகளை ஒரளவுக்கேனும் தெரிந்து கொள்வது அவசியமாகும்.
இன்று பெரிதாகக் கூறப்படுகிற இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆரம்பத்தில் அநுபவித்திருக்கும் கசப்பான அநுபவங்கள், அரசியல் முதிர்ச்சியற்றத் தன்மைகளைக் காட்டுகிற நிகழ்வுகள் என்று எத்தனையோ கூறமுடியும்.
ஏறக்குறைய பதினைந்து மாதங்களுக்கு, செயலிழந்த நிலையில் இ. இ. கா. இருந்தது. அதன் முதற்தலைவர் லெட்சுமணச் செட்டியார் உடல் நலக் குறைவைக் காரணம் காட்டி விலகிக் கொண்டார். அப்போது இந்திய விடுதலைப் போராட்டத்தையே மக்கள் அவ்தானித்து வந்தனர். எதற்கும் இந்தியாவையே எதிர்பார்த்தனர். இலங்கையர்க்கென்று அப்போது ஒரு தேசியக் கொடி இருக்கவில்லை. இலங்கையில் ஆங்கில நிர்வாகம் நடந்த வேளை. யூனியன் ஜாக்கே எங்கும் பறந்தது. இலங்கையின் சுதந்திரத்தை வளர்த்தெடுக்க நினைத்தவர்கள் தம்மை இலங்கைத் தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தில் இணைத்துக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கென்று ஒரு கொடி இருக்கவில்லை.
மலையகத்தமிழரின்வரலாறு 107

Page 64
இந்தியாவின் கொடியையே இலங்கைத் தேசிய காங்கிரஸ் தனது கொடியாக ஏற்றுக் கொண்டிருந்தது.
இலங்கையர் என்ற எண்ணமே எல்லோர் மனத்திலும் வியாபித்திருந்தது. சிங்களவர், தமிழர் என்ற பாகுபாடு வலியுறுத்தப்படவில்லை. ‘மாமன்மார்களே, மைத்துனன்மார்களே’ என்று பொதுசனங்களை விளித்துத் தனது பேச்சை ஆரம்பிக்கும் தலைவர்களிருந்தார்கள். பி. எச். அலுவிகாரயின் அத்தகைய பேச்சை 18.6.41 வீரகேசரி பிரசுரித்திருந்தது. பெரி. சுந்தரம் தலைமை வகித்து, மாத்தளையில் நடந்த கூட்டம் ஒன்றில் “சிங்களப் பெண்களை நிறைந்த அளவுக்கு மணம் முடிக்கும்படி அவர் தமிழ் வாலிபர்களை வேண்டினார். மன்னர்கள் காலத்தில் இந்தியர்கள் வந்தனர். இலங்கையில் வாழும் நாமனைவரும் இந்தியர்களே' என்றும் அவர் பிரகடனம் செய்தார். இவரது முதல் மனைவி ஒர் ஆங்கிலேயப் பெண்மணி,
இந்தியத் தொழிலாளிகள் வாயில்லாப் பூச்சிகள்' என்று, தன் நகரசபைத் தொழிலாளியின் வழக்கொன்றில் சாட்சியமளித்த களுத்துறை நகரசபையின் தலைவர் சிறில்டி சொய்சா கூறியிருப்பதையும் பத்திரிகைச் செய்தியாக 12. 8. 41 வீரகேசரியில் பார்க்கலாம். இப்படி எவ்வித இனப்பாகுபாடும் குரோதமும் இன்றி வாழ்ந்த மக்களிடையேதான் படிப்படியாக இனக்குரோதம் விதைக்கப்பட்டது. இந்தக்குரோத உணர்வையும், வெறுப்புணர்ச்சியையும் தலைவர்களே சாதாரண மக்களிடையே பரப்பினர். தங்களது சுயலாபத்துக்காக இந்த உணர்வினை பரப்புவதற்கு அவர்கள் பெருமுயற்சி எடுத்தனர்.
சட்ட நிரூபண காலங்களிலும், அரசாங்க சபை காலங்களிலும் இம்மக்களிடையே வெறுப்புணர்ச்சி அதிகமாகக் காணப்படவில்லை. 1947 பிரதிநிதிகள் சபை தேர்தல் நடந்தபோது கூட இந்த உணர்ச்சிகள் அவ்வளவாக வளர்க்கப்படவில்லை. சிங்களவர்களை அதிகமாகக் கொண்ட அளுத்நுவர பிரதேசத்தில் தேசிகர் இராமானுஜம் என்ற இந்தியத் தமிழர் வெற்றி கண்டார். சிங்களவர்களை அதிகமாக வாக்காளர்களாகக் கொண்ட பண்டாரவளை பிரதேசத்தில் வி. நடராஜா என்ற வழக்கறிஞர் வெற்றி கண்டார். அவரை வழக்கறிஞராகவும், சமூகத் தொண்டராகவும், நியாயத்துக்காகக் குரல் கொடுப்பவராகவுமே மக்கள் கவனத்தில் கொண்டனர். அவருக்கெதிராக எந்தக் கட்சியும் வேறொரு அபேட்சகரை நிறுத்துவதற்குத் தயாராயில்லை. படித்த இந்தியர்கள் நிறைந்த எண்ணிக்கையில் கொழும்பில் வாழ்ந்தார்கள். இவர்கள்
108 மலையகத்தமிழரின்வரலாறு

அரசியல் உணர்வு மிகுந்தவர்களாகவும் இருந்தார்கள். பத்திரிகை வாசிப்பவர்களாகவும், பத்திரிகைக்கு எழுதுபவர்களாகவும் இருந்தார்கள்.
அண்டை நாடான இந்தியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் கிளர்ச்சி அவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை. குறிப்பாக மகாத்மாகாந்தியின் போதனைகளும் சாதனைகளும் அவர்களை வெகுவாகக் கவர்ந்தன. அரசியல் சிந்தனை மிகுந்த சிங்களத் தலைவர்களையும் இந்திய அரசியலும் அரசியல் தலைவர்களும் கவர்ந்தனர். தேசிய காங்கிரஸ் என்ற பெயரில் இந்திய காங்கிரஸ் போன்றே ஓர் அரசியல் இயக்கம் இலங்கையிலும் தோன்றியது.
1915ம் ஆண்டு வரையிலும் படித்த மத்தியதர வகுப்பினர் அரசியல் திருத்தம், கூட்டம், மாநாடு, விண்ணப்பம் என்றே தங்கள் கவனத்தைச் செலுத்தி வந்தனர். 1915ம் ஆண்டுக்குப் பின்னர் நேரடி நடவடிக்கைகளிலே கவனம் காட்டினர். 1915ம் ஆண்டில்தான் வன்முறை, விசாரணை, சிறைத் தண்டனை, தூக்குத் தண்டனை என்ற ரூபமெடுத்தது.
இலங்கையில் இயங்கிய பல அரசியல் குழுக்கள் ஒன்றிணைந்து டிசம்பர் 1919ல் இலங்கை தேசிய காங்கிரஸ்ஸை அமைத்திருந்தன. பொன்னம்பலம் இராமநாதன் அதன் முதல் தலைவராகத் தெரிவானார்.
படித்த இந்தியர்களும், இதில் சேர்ந்தனர் இந்தியர் சங்கம் என்பதன் பிரதிநிதியாக லாரிமுத்துக் கிருஷ்ணா, இலங்கை இந்தியர் சங்கத்தின் சார்பாக பெரிசுந்தரம், டேவிட், ஏ. எஸ். ஜோன், கண்டி தமிழ்ச் சங்கத்தின் சார்பாக சி. எஸ். இராஜரட்ணம் காந்தி சங்கத்தின் சார்பாக கே. நடேசய்யர், கே. சத்யவாகேஸ்வர அய்யர், டி. சாரநாதன், ஜே. பி. ஜோன், எச். நெல்லையா கண்டி மகா சபையின் சார்பாக ஜே. என். வேதாரணம் என்றெல்லாம் பலரும் கலந்து கொண்டு, இலங்கையின் அரசியலில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டியிருக்கின்றனர்.
இதற்கு ஆரம்பப்படியாக ஓராண்டுக்கு முன்னதாக 1919ல் இலங்கைத் தொழிலாளர் நலன்புரி லீக்கை ஆரம்பித்திருந்தனர். அருணாசலம் அதன் தலைவராகவும் பெரி சுந்தரம் அதன் செயலாளர் ஆகவும் இருந்தனர். அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த ரெவரண்ட் சி. எப். ஆண்ட்ரூஸ் இங்கிருக்கும் இந்தியத் தொழிலாளர்களின் நிலை குறித்து ஒரு கூட்டத்தில் பேசினார்.
மலையகத்தமிழரின்வரலாறு 109

Page 65
பொன்னம்பலம் அருணாசலம்தான் இந்த மக்களை அடிமை நிலையில் வைத்திருந்த துண்டுமுறையை ஒழிக்கவும், இந்தியத் தொழிலாளர்களின் நலன்குறித்துப் பேசவும் செய்த முதல் தமிழ்த் தலைவர். 1921 ஜூலை 14ம் தேதி பிரித்தானியா கொமன்ஸ் சபையில் பேசிய கேணல் வெட்ஜ்ஃவுட் இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். காலனி நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களையும், அங்குள்ள மக்களையும் பற்றி அடிக்கடி பிரித்தானியா கொமன்ஸ் சபையில் பேசப்படுவதுண்டு. இலங்கையைப் பற்றி குறிப்பிடும்போதுதான் கேனல் வெட்ஜ்ஃபுட் மேற்குறித்து பிரஸ்தாபித்திருக்கிறார் அடிமை நிலையில் இலங்கையில் காணப்படும் இந்த மக்களின் நலன் குறித்துப் பேசியவர்களில் இரண்டு பேரின் 'நாமத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், மற்றவர் இலங்கை அரசாங்க சேவகரான பொன்னம்பலம் அருணாசலம். ஆண்டுக்கு ஆண்டு, சங்கத்துக்குச் சங்கம், அவர் தொடர்ந்து இந்த மக்களுக்காகப் போராடியிருக்கிறார். இதன் நிமித்தமாகவே சக காலத்தில் அவர் சிலரால் விரும்பப் படாமலிருந்திருக்கிறார். கல்விமான், அடிமை முறையை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டியவர், அவரைப் பாராட்டுகிறேன்"
கிருவ் பிரபு அவருக்கு எழுதிய கடிதத்தில், 27.07.22 தேதியிட்டு பின்வருமாறு எழுதுகிறார். "உங்களின் நீண்ட உழைப்பு, இந்தியக் கூலிகளுக்குக் கடைசியில் விடுதலை வாங்கி கொடுத்திருக்கிறது. சாம்ராஜ்யத்தின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் அந்தக் கூலிகள் உங்களுக்கு நன்றி பாராட்டுவார்கள்.”
கட்டுப்பாடு, நம்பிக்கை, ஒற்றுமை என்ற உயரிய கொள்கைகளின் அடிப்படையில் கட்டி எழுப்பப்பட்ட தேசிய காங்கிரஸ் பரஸ்பர நம்பிக்கையில்லாமல் 1921ம் ஆண்டளவில் சிதறியது. தமிழ்ப்பிரமுகர்கள் பலரும் அதினின்றும் விலகினர். இந்தியப் பிரமுகர்கள் சிலரும் விலகினர். அவர்கள் தனித்தனியாக இயங்க ஆரம்பித்தனர்.
1939ல் நேரு இலங்கைக்கு வந்து மீண்டும் அவர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வந்தார். 1947 நாடாளுமன்றத் தேர்தலும் தேர்தலின் பின்னரும் 1952 தேர்தலும் மலையக மக்கள் வாழ்வில் ஒரு வேறான அநுபவங்களைத் தோற்றுவித்தன.
"ஆட்சிக்கு வந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இலங்கைக்கு இரத்தம் சிந்தாது சுதந்திரம் கொடுபட்டதென்று
10 மலையகத்தமிழரின்வரலாறு

கூறுகிறார்கள். இரத்தம் மட்டுமல்ல, ஆன்மா இல்லாத, உருவமில்லாத சுதந்திரம் என்று நான் கூறுகிறேன்”
என்ற வாசகங்கள் ஜோர்ஜ் ஆர் மோத்தாவுடையவை. 26.11.47 ல் இவ்விதம் அவர் பேசினார். மேலும் அவர்
“இந்த நாட்டிலே புரட்சி ஒன்று ஏற்படுமானால், அதைத் தொடக்கி வைக்கத் தலைவர்கள் யாரும் தேவைப்பட மாட்டார்கள். ஆட்சியாளர்களின் அகம்பாவ மனோபாவத்தால் மக்களே அப்படி ஒரு புரட்சின்யத் தோற்றுவிப்பார்கள்"
என்றும் கூறுகிறார்.
‘தோட்டங்களுக்குள் பிரவேசிக்க முடியாதது பற்றிக் குறிப்பிட்டுத் தோட்டங்களை அரசாங்கம் நவீன கிராமங்களாக்கினால்தான் தேர்தல் கூட்டங்களை எம்மால் நடத்த முடியும்
என்று பேசுகிறார் கே. குமாரவேலு அவர்கள் 09.12.47ல்
இதே தினத்தில் நாடாளுமன்றத்தில் தனது கன்னிப் பேச்சை நிகழ்த்திய சி. வி. வேலுப்பிள்ளை
"இடது சாரிக் குழுவினரைச் சார்ந்தவன் நான். இப்படிச் செய்வதற்கு நான் வெட்கப்படவில்லை. இந்த நாட்டின் மறுமலர்ச்சிக் குழுவினராகவும் அவர்களே இருக்கிறார்கள். இந்த நாட்டில்தான் பிறந்தேன். என் கண்கள் ஒளியைத் தரிசித்தது இந்தப் பூமியில்தான். இறுதியாக நான் கண்களை மூடுவதும் இந்த நிலமாகத்தானிருக்கும்"
என்று உறுதியுடன் கூறுகிறார்.
முதன் முறையாக நாடாளுமன்றப் பிரதிநிதிகளாகத் தெரிவானவர்கள் மலையகத்தவர்களின் எண்ணங்களை - விருப்பங்களை இவ்விதம்தான் பிரதிபலித்தார்கள். அம்மட்டோடு அல்ல, அப்படி நாடாளுமன்றத்துக்குத் தெரிவானால் “தோட்ட மக்களே, உங்களுக்குத் தலைவலி, காய்ச்சல் வந்தால் கூடப் பார்ப்பதற்கு இனி டி. எம். ஒக்கள் தான் வருவார்கள்’ என்று மேடைகளில் பேசியவர்களும் அவர்களேதான். அவர்களின் எதிர்பார்ப்புகளும், கனவுகளும் பொய்யாகிப் போயின. பொய்யாகிப் போவதற்கானச் சூழ்நிலை உருவாகியபோது,
மலையகத்தமிழரின்வரலாறு 11

Page 66
"நுவரெலியா அங்கத்தவர் (எஸ். தொண்டமான்) இதைவிட, கடுமையான வார்த்தைகளுக்கு உரித்தானவர்” என்று ஆரம்பித்து அவரது வகுப்பினர் இப்போதிருந்ததைவிட அதிகமான நசுக்குதலுக்கு உரித்தானவர்கள். அதை ஏற்பதற்கான இரத்தம் அவர்களுக்கு இருக்குமா, என்பது சந்தேகமே” என்று கூறிய ஜி. ஜி. பொன்னம்பலம் “அவரது அறியாமைக்காக வருந்த வேண்டியதில்லை”
என்று விஷம் கலந்த தொனியில் (23.6.1950) பேசினார். 1949 நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட மசோதாக்கள் ஓரின மக்களை வேரோடு அழிக்கிற மசோதாக்களாக உருவாவதற்கு, எவ்விதம் துணை போனார்களென்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றனவாக அவர்களின் பேச்சுக்கள் அமைந்திருந்தன. “தொண்டமான் இலங்கையை இணைத்து இந்தியாவின் ஒரு மாகாணமாக்கப்போகிறார்” என்றார் ஏ. இரத்னாயக்கா.
“வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு செய்ய மாட்டோம் என்று கூறி, ஆறேழு மாதங்களாகக் காத்திருந்தவர்கள், கடைசியில் அவசரம் அவசரமாக ஆயிரக் கணக்கில் ஒன்றாக விண்ணப்பித்தார்கள். இன்று பதிவு செய்த எண்ணிக்கை போதாது என்று கூறுகிறார்கள். இந்தச் சபையிலிருக்கும் அங்கத்தவர்கள் முறையாக நடந்து கொண்டிருப்பார்களேயானால் எங்களது பதிவு செய்தல் விரைவாக நடந்திருக்கும்" (28-6-1951) என்று டி. எஸ். சேனநாயக்கா பேசினார்.
அவரது பேச்சு அடிமனத்திலிருந்து, மறைக்க முடியாத உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கின்றது.
1954க்குப் பிறகு இலங்கை - இந்திய போக்குவரத்து தடுக்கப்பட்டதால், இந்தியா போய் வருவோரின் தொகையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டது. தேயிலைப் பயிர்ச் செய்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னால் படிப்படியாக இலங்கையைத் தாயகமாக எண்ணியோ எண்ணாமலோ இங்கேயே நிரந்தரமாக வாழ்வோரின் தொகை கூடியது. அதற்குப் பிறகு பிறந்தவர்கள் புதிய பரம்பரையினராக, புதிய சமூக சக்திகளாக விளங்கினர். ஒரே பொருளுற்பத்திக்குட்பட்ட, பரந்ததொரு பிரதேசத்தில் வாழ நேர்ந்தமையால் - தங்களைச் சிங்கள விவசாய மக்களிலிருந்தும், யாழ்ப்பாணத் தமிழர்களிடமிருந்தும் வித்தியாசப்படுத்திக் கொண்டனர். மொத்தத்தில், பொருளுற்பத்தியில் வித்தியாசப்பட்ட, மற்றப் பிரதேசங்களிலிருந்தும் தொடர்பற்ற பிரதேசம்,
112 மலையகத்தமிழரின்வரலாறு

அதற்குள்ளே கூடிச் செறிந்து வாழும் ஜனப்பரம்பல், தனித்த சமூக வாழ்க்கை முறை, மற்ற இனங்களுடன் இரண்டறக் கலந்து போகாத வாழ்க்கைமுறை, வட்டார மொழி இவற்றினால் இவர்கள் தனித்தேசிய இனமாகினர்.
இவர்களில் தமிழ் தோட்ட முதலாளிகளும், சிறுதோட்ட உற்பத்தியாளர்களும், வர்த்தகர்களும், தமிழகத்திற்குத் தொடர்ந்து போய் வருவோராகவே இருந்தனர். தங்களது திருமண உறவுகளையும் இதர கலாசார உறவுகளையும் தமிழகத்தில் உங்களது பூர்வக்கிரமத்துடன் வைத்திருந்தது மாத்திரமன்றி இங்கு தோட்டங்களிலும் வர்த்தகத்திலும் கிடைக்கும் மேலதிக வருமானத்தைத் தமிழ்கத்தில் வேறு தொழில்களில் மூலதனமாக இடவும் செய்தனர். இவர்களின் நோக்கம் இலங்கையிலும் தமிழகத்திலும் தமது செல்வநிலையை உயர்த்திக் கொள்வதே. இந்த நோக்கினால், இவர்கள் இரண்டு நாடுகளிலும் பிரஜைகளாக இருந்தனர்; அல்லது இரண்டு தேசியங்களினதும் மக்களாக ஆக்கிக் கொண்டிருந்தனர்.
1949ல் குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது அதுபற்றிய அக்கறை இல்லாமல், போராடாமல், தங்களை அரசியல் வாழ்வில் அதிக ஈடுபடாதவர்களாக வைத்துக் கொண்டனர்.
தங்களது மேலதிக வருமானத்தைத் தடை செய்யாத அரசாங்கத்தை ஆதரிக்கவும் செய்தனர். 1949 குடியுரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது இந்த வணிகர்களும், வாணிபர்களும்“தங்களுக்கு வாக்களிக்கும் உரிமையில்லாவிட்டால் காரியமில்லை, பிரஜாவுரிமையிருந்தால் போதும், அதுவுமில்லாவிட்டாலும் பரவாயில்லை, இந்தியாவுக்குப் போய் வருவதற்கு உரிமையிருந்தால் போதும்” என்று கூறினர்.
இந்த நழுவல் போக்கை பண்டிட் ஜவகர்லால் நேரு கண்டித்தார். பிறந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றார். இந்தியாஅல்லது இலங்கை என்ற இரண்டில் ஒன்றை தீர்மானிக்க வேண்டும் என்றார். இந்தியர்களாயுள்ளவர்கள் தமது இந்தியப் பிரஜை என்ற அந்தஸ்தை வைத்துக் கொள்ள விரும்பியமைக்கும் காரணம் இருந்தது. தமது இலவச பயண வசதியைப் பெரிதாக நினைத்தவர்கள், அவ்விதம் செய்தனர்.
தமது நீண்ட வாசஸ்தலமாக இலங்கையை நினைத்தவர்கள் இலங்கையைத் தாயகமாக நினைத்தார்கள், விண்ணப்பித்தார்கள். தொழிலாளர்களின் அரசியல் சிந்தனையை வளர்ப்பதில் பெரும்பங்கு வகித்தவர்கள்
மலையகத்தமிழரின்வரலாறு 113

Page 67
வியாபாரிகளே. தம் உழைப்புக்குப் பிறகு அவர்கள் காண்பதும் அதிக பொழுதைக் கழிப்பதும் வியாபாரிகளின் மத்தியிலேயே, இலங்கையில் வளர்ந்த இனக்குரோதம் இந்தியர்களுக்கெதிராக என்பதைவிட இந்திய வியாபாரிகளுக்கெதிரானதென்றே கூறவேண்டும்.
கொழும்பில் அவர்களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. பிறநகர்ப் புறங்களில் குறிப்பாக பழைய சாக்கு வாங்கும் தொழில் செய்தவர்கள் அவர்களே, சலூன் திறந்தவர்கள் அவர்களே, வெற்றிலை பாக்கு, சுருட்டு வியாபாரம் செய்தவர்கள் இலங்கைத் தமிழர்களே. இந்தக் " குரோதங்கள் இனவன்முறையின்போது அவர்களுக்கெதிராகத் திரும்பியது, அதில் சேர்த்து அடிபட்டவர்கள் தோட்டத் தொழிலாளர்கள். இலங்கைத் தமிழரினின்றும் இந்தியத் தமிழர்கள் தனித்துவமும் வேறுபாடும் கொண்டிருந்தாலும், சாதாரண சிங்களவர்களைப் பொறுத்த மட்டில் அவை பொருட்டாகத் தெரிவதில்லை; அவர்களது பார்வையில் இருவரும் தமிழ் பேசுபவர்கள் - எனவே, மொழியின் அடிப்படையில் பார்க்கையில் அவர்களிருவரும் தமிழர்களே, போதாதற்கு வெகு அருகில் அமைந்திருக்கும் தமிழகத்து தமிழர்களையும் உடன் வைத்துப்பார்க்கையில் அவன் அச்சமுறுவதற்கு இடம் ஏற்படுகிறது. இதை - இந்த அச்ச உணர்வை வளர்த்திடும் விதத்திலேயே, வியாபார அரசியல் இலங்கையில் அமைந்திருக்கிறது என்பது கவலைக்குரியது.
தேசியமயம் தோட்டத்துறையின் அமைப்பு முறையிலும் உற்பத்தி முறையிலும் மாற்றம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஒரு அதிசயம் நிகழவில்லை. எனவே அவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் உண்மையான முன்னேற்றத்தைக் காண வேண்டுமாயின் அதிகார முகாமைத்துவத்தைக் கொண்ட தோட்ட அமைப்பு முறையை மாற்றி தொழிலாளரும் நிர்வாகத்தில் பங்கு கொள்ளக் கூடிய ஒரு அமைப்பு முறையினை தோட்டத்துறையில் கொண்டு வருதல் வேண்டும். தொழிலிலிருந்து விடுபட்ட வீட்டு அமைப்பு முறையைக் கொண்டு வருவதன் மூலம் தோட்ட அதிகாரத்துடன் தொழிலாளர்களுக்குள்ள தங்குசார் உறவு முறையை நீக்க முடியும்.
இந்த மக்களின் வளர்ச்சியில் நாட்டம் கொண்டவர்கள் பலகாலமாகவே தொழிலிலிருந்து விடுபட்ட வீட்டு அமைப்பு முறையைக் கொண்டு வருவதற்கு முயற்சித்திருக்கின்றனர். ஆரம்ப முயற்சியாக, தோட்டத் தொழிலினின்று நின்ற
1 14 மலையகத்தமிழரின்வரலாறு

ஒரு தொழிலாளி அவன் வசித்த வீட்டைச் சொந்தம் கொண்டாடும் முயற்சிகள் நடந்தன. அந்த முயற்சியில் ஏழைத் தொழிலாளி அசுரபலம் மிகுந்த தோட்டத்துரையை எதிர்த்து நிற்க வேண்டியவனானான். எண்ணிறைந்த தொழில் நீதிமன்றங்களில் ஏறி இறங்கி இருக்கின்றான்; எத்தனையோ வேலை நிறுத்தங்களை இதன் பொருட்டு நடாத்திக் காட்டியிருக்கிறான்.
பெரியண்ணன் கங்காணியின் (16, Ceylon law weekly 15) ரெங்கசாமியின் (41,NewLaw Reports294) வழக்குகள் இதன் நிமித்தமே நடாத்தப்பட்டன். தொழில் நிறுத்தப்பட்டவுடன், தொழிலுக்காகக் கொடுபட்ட இலவச வீட்டு வசதியும் நிறுத்தப்படும் என்ற வழக்கியல் பழக்கத்தை இதனாலெல்லாம் நிறுத்த முடியவில்லை.
லயக் காம்பராவினருகில் தோட்டம் செய்யும் சிறுவிவசாய நிலம் கொடுக்கப்பட்டிருக்கும். அதை வைத்தாவது தோட்டத்தில் தொடர்ந்தும் இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தால் (61, New Law Reports) அதனிலும், அவன் தோல்வியையே கண்டான்.
தனக்குக் கொடுபட்டிருக்கும் லயக்காம்பிராவுக்குவாடகைக் கொடுத்துப் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டான். அதிலும் தோல்வியே கண்டான்.
இந்தத் தோல்விகளை தோல்விகளாக ஏற்க அவன் மனம் ஒத்துக் கொள்ளவில்லை. 1920 களிலிருந்து தொடர்ந்து போராடினான். எண்பதாண்டுகள் போராடினான். இலட்சியம் சுத்தமானது என்பதனால் மீண்டும் மீண்டும்
போராடினான்.
இன்று, இலங்கையில் தோட்டங்கள் தனியார் வயப்பட்டவைகள் தாம். எனினும், இலங்கையில் எங்குமிருக்கும் சட்டங்கள் இங்குமிருக்க வேண்டும் என அவன் போராடுகின்றான். இன்றும் சட்டம் இருக்கின்றது. இலவச வீட்டு வசதி அவனுக்கு நிறுத்தப்படுகிறது. அவன் குடும்பத்தார் தொடர்ந்தும் அதே வீட்டில் வசிக்கலாம், அவர்களும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்படும் வரையிலும்,
அது ஒரு மாற்றம் எனலாமா? அல்லது பெருமாற்றம் எனலாமா?
மலையகத்தமிழரின்வரலாறு 115

Page 68
மலையகம் நிச்சயமாக ஒரு மாற்றத்தில் தான் உயிர்வாழ்கிறது. தொண்டமான் சாதுர்யமான தலைவராக இருந்து 1977க்குப் பிறகு 1997 வரையிலும், மலைநாட்டில் அரசியல் ஆதிக்கம் செலுத்தினார். அவர் தலைமைத்துவத்தில் இயங்கிய இ. தொ. கா., அரசியல் முக்கியத்துவம் உள்ள பிரதேச சபைகளையும், மாகாண சபைகளையும் கைப்பற்றியது. நாட்டின் தலைவராக இருந்த ஜெயவர்த்தனாவும், பிரேமதாசாவும் அவருடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தனர். இலங்கைத் தீவில் வடபகுதி பிரிவினைவாதிகளுடன் தொடர்பு ஏற்பட்டு விடுமோ என்று பயம் நிலவிய வேளையில், அந்தப் பயத்தையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தின்ார்.
தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டிருந்ததால், தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் பொறுப்பு அரசாங்கத்திடமே இருந்தது. எனவே, தொழிலாளர்களின் பிரச்சனை அரசியல் பிரச்சனையாகவே இருந்தது. தோட்டப் பகுதிகளில் தன்னுடைய தொழிற்சங்கத்துக்கிருந்த முக்கியத்துவத்தை வைத்து அரசியல் லாபம் தேட தொண்டமானால் முடிந்தது.
ஏலவே நாம் கண்டபடி சுதந்திர இலங்கையின் முதல் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகிய இ. இ.கா. இடது சாரிக்கட்சியினருடன் தொடர்பு கொண்டிருந்தனர். 1960ன் நடுப்பகுதியில் இடதுசாரிக் கட்சியின் மொழிகுறித்த, குடிஉரிமை குறித்த கருத்துக்கள் மாறுபட்டதால் இ. தொ. கா: யு. என். பி. சார்பாகவே இருந்தது. 1965 தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய மக்களுக்குச் சலுகைகளைப் பெற அவரால் முடிந்தது. 1977க்குப் பிறகு அரசியல் சக்தியாக அவரால் உயர முடிந்தது.
மலையகத் தமிழர்களுக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் கலாசார, பண்பாட்டு அடிப்படையில் இருக்கின்றதென்பதை சிங்களவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்களைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டு பிரிவினரும் ஒன்றே - தமிழர்களே. எனவே, மலைநாடு ஒன்று தொண்டமான் தலைமையில் உருவாகும் என்ற பயம் அவர்களுக்கிருந்தது.
1956 மொழி உரிமைப் போராட்டம் யாழ்ப்பாண மக்களைக் கவர்ந்ததைப் போல மலைநாட்டாரைக் கவராமைக்கு அவர்களுக்கு அரசாங்கத் தொழில்
கிடைப்பதில்லை என்பதே உண்மை. பல்கலைக் கழக அனுமதி குறித்த
16 மலையகத்தமிழரின்வரலாறு

தரப்படுத்தல் கொள்கையிலும் அவர்கள் அதிக கவனம் காட்டாமைக்கு, பல்கலை அனுமதி பெறும் மாணவர்களின் தொகை அருகியிருந்தமையே காரணம்,
1992ல் தோட்டங்கள் மீண்டும் 23 தனியார் கம்பெனிகளிடம் கையளிக்கப்பட்டன. தொழிலாளர்களின் வாழ்க்கை தோட்டத்துப் பொருளாதாரத்தோடு பின்னிப் பிணைந்திருப்பதால், அரசாங்கம் தன்னை அந்தப் பிணைப்பிலிருந்து விடுவித்துக் கொண்டதால், மீண்டும் இருள் சூழ்ந்த நிலைக்குத்
தள்ளப்பட்டனர்.
1988ம் ஆண்டு 39 ஆம் இலக்கச் சிறப்பேற்பாட்டுச் சட்டத்தின்படி நீண்டகால இன ஒதுக்கல்களுக்கெல்லாம் முடிவு கட்டி இலங்கை வாழ் இந்திய வம்சாளி மக்கள் யாவரும் இலங்கை குடிகளே என உறுதிப்படுத்தப்பட்டது. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் மலையகத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்ஸே பலம்மிக்க ஸ்தாபனமாக இருந்து வருகிறது. அரசாங்கம் யூ என். பீ. அமைந்தாலென்ன எஸ். எல். எவ், பீ. அமைந்தாலென்ன, இரு கட்சியினருமே இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்ஸை ஆதரித்துச் செல்லவே விரும்புகின்றனர். மலையகத்தவர்களில் பெரும்பாலானோர் உடல் உழைப்பாளிகளாக இருப்பதால், தங்கள் தொழிலோடு சம்பந்தப்பட்ட தொழில் பிரச்சனைகளிலேயே அவர்கள் நாட்டம் செலுத்துகின்றனர். தொழிற்சங்கம் தோற்றுவித்தல், தொழிற்சங்கம் அமைத்தல், தொழிற்சங்க மாநாடு நடத்துதல் என்பதிலேயே அவர்களின் முழுக்கவனமும் அமைந்து விடுகிறது.
தோட்டங்கள் தேசிய மயமானதும் அரச கூட்டுத்தாபனம் தோட்டங்களின் ஏக முதலாளியானது. பல தொழிற்சங்கங்கள் அரசை ஆதரிக்க ஆரம்பித்தன. ஆட்சி நடத்தியோரே தொழிற் சங்கங்கள் நடத்த ஆரம்பித்தனர். மலையகத்தில் ஆரோக்யமான தொழிற்சங்கங்களுக்கு இடமில்லாது போனது. தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசியல் பேச ஆரம்பித்தனர். மலையகத்தில் அரசியல் அறிவும் அரசியல் ஈடுபாடும் குறைந்தே காணப்படுகிறது. தாம் சார்ந்த தொழிற் சங்கத்திலேயே அவர்கள் அரசியல் பயில்கின்றனர். மலையகத்தின் அரசியல்வாதிகளெல்லாம் தொழிற்சங்கப் பிரதிநிதிகளாக இருந்தவர்களே. துயரம் தோய்ந்த மக்களின் நாளாந்தப் பிரச்சனைகளில் கவனம் காட்டுவதற்கே அவர்களுக்கு நேரம் போதுமானதாக இல்லை. இந்நிலைமையில் இரண்டில் எதையுமே செவ்வையாகச் செய்ய முடியாத நிலைமை உருவாகிறது.
மலையகத்தமிழரின்வரலாறு 117

Page 69
1947ல் மலையகப் பிரதிநிதிகளாக வந்தவர்கள் “பெரிய கங்காணியின் பிள்ளைகள்' என்றால், siTSOTf வந்தவர்கள் எல்லாரும் தொழிற்சங்கவாதிகளாகவே இருந்துள்ளனர். சம்பளத்துக்குத் தொழிற்சங்கத்தில் பணிபுரிபவர்கள் தொழிற்சங்கங்களால் அரசியலுக்குத் தம் பிரதிநிதியாகத் தெரிந்தெடுக்கப் படுகின்றனர். நடைமுறை அரசியல்வாதியாக அவர்கள் உருமாறுகிறார்கள். இதுதான் இன்றைய நிலைமை. தொழிற்சங்கத்தின் கடமைகள் தொழிற்சங்கப் பிரச்சனைகள் மாத்திரமில்லை. கல்வி, கலாசாரம், சமூகம், இலக்கியம், அரசியல் வணிகம், சட்டம் என்று சமூகஞ் சார்ந்த பலதுறைகளிலும் பிரச்சனைகள் விரிந்து காணப்படுகின்றன.
அந்தந்தத் துறைகளில் பாண்டித்தியம் பெற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அத்துறைகளில் இணையற்ற வெற்றி காண்பவர்களைத் தம்மோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அவர்களிலிருந்து ஒரிருவரையேனும் தேசிய மட்ட ரீதியில் அரசியலுக்கு இழுத்து வரவேண்டும். புதிய கருத்துக்கள் உருவாகவும், புதிய சிந்தனைகள் மலரவும், புதிய தலைமகன் உருவாகவும் இதுதான் வழி.
நான்காவது காலகட்டத்தில் இலங்கை வாழ் இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற மந்திரி சபையில் தொண்டமான் இடம் பெறுகிறார். ஆட்சி மட்டத்தில் நடைபெறுகிற திட்டமிடல்களை மக்கள் மட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு பிரயாசைகள் மேற் கொள்கிறார். பிரயாசைக்கும் மேலாக வன்செயல்கள் இடம் பெற்றன.
ஐந்தாவது காலகட்டத்தில் பாராளுமன்றத்தின் ஒருமித்த நடவடிக்கையை எடுத்ததன் மூலம் இதைச் செய்ய முடிந்தது என்கிறார் தொண்டமான். இந்திய வம்சாவளியினரில் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்காத எல்லாரும் இலங்கைக் குடியுரிமைக்கு தகுதியானவர்கள் என்று அறிவுறத்தப்படுகிறது. பாராளுமன்றத்தில் கபினெட் அந்தஸ்துமிக்க அமைச்சராக தொண்டமானும் இராஜாங்க அமைச்சர்களாக பி. பி.தேவராஜும் எம். எஸ். செல்லச்சாமியும் வீற்றிருக்கின்றனர்.
“1923ல் மாதாந்த வருமானமாக ரூ. 10 சதம் 02ஐப் பெற்ற இந்தியக் கூலிகள்1990ல் நாளாந்த வருமானமாக ரூ. 23 சதம் 75ஐப் பெறுவது எவ்விதம் சாத்தியமானது என்பதை அறியமுயல்வது தொண்டமானின் சுயசரிதையின் ஆணிவேராகும் என்கிறார்.”ரால்ப் போல்ற்ஜின் அவரது “எனது வாழ்வும் காலமும்” என்ற சுயசரிதை நூலில்
18 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டத்தில் தொழில் புரியும் கூலிகளாக இந்தியர்களும் ஆங்கிலம் கற்று தோட்டத்தில் உத்தியோகம் பார்க்கும் (தோட்டத்துரை, பெரிய கிளாக்கர், பெரிய தொழிற்சாலை உத்தியோகத்தர், கண்டக்டர், தோட்ட வைத்திய அதிகாரிகள், தோட்டத்து ஆசிரியர்கள்) அதிகாரிகளாக யாழ்ப்பாணத் தமிழர்களும் இருந்தனர். “பிரவுன் சாகிப்” என்று ஆங்கிலத்தில் கூறப்பட்ட கறுப்பு துரைமார்களாகவே அவர்கள் மலைநாட்டில் அறிமுகமாகியிருந்தனர். தமிழ் எழுத்தாளர்களாக அறிமுகமாகியுள்ள சிலரும் வைத்திய அதிகாரிகளும் ஆசிரியர்களுமே. அவர்கள் சிறு தொகையினர் மற்றத்துறையில் பணிபுரிகின்ற ஏராளமான யாழ்ப்பாணத்தவர்கள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. தோட்டத்து ஆசிரியர்கள் மலைநாட்டிலிருந்து சிறுவர்களை தம்பகுதியில் வீட்டு வேலைக்கு எடுத்துச் செல்லும் ஏஜண்டுகளாகவும் இருந்திருக்கிறார்கள். மலைநாட்டு நகரங்களில் கடை விரித்து வெற்றிலை, புகையிலை, சுருட்டு வியாபாரம் செய்பவர்களும் யாழ்ப்பாணத்தவர்களே.
பிரஜாவுரிமை சட்டத்தின் நெருக்கடிகளைச் சந்தித்த மலைநாட்டவர்கள் தம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் ஜீ. ஜீ. பொன்னம்பலமும் அவர்களது யாழ்ப்பாணத்துமக்களுமே என்று நம்பினர். “யாரை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே’ என்பது பரவலான கூற்றாக இருந்தது. “சிங்களவனை நம்பினாலும் யாழ்ப்பாணத்தானை நம்பாதே’ என்பது அவர்களுக்கு கூறப்பட்ட அறிவுரையாக இருந்தது.
இதை மாற்றும் மார்க்கமாக எஸ். ஜே. வி. செல்வநாயகத்தின் தமிழரசுக் கட்சியும், அதன் நடவடிக்கைகளும் அவரால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க ஐடி.கே - இலங்கை தமிழரசு கழகம் என்ற பெயரில் மலைநாட்டினரால் ஆதரிக்கப்பட்டது. மொழியுரிமை போரில் தாமும் கலந்து கொள்ள வேண்டும் என்று இளைஞர்கள் தூண்டப்பட்டனர்.
30.03.58ல் பொகவந்தலாவை நகரில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு பேருந்து வண்டியில் தார் பூசப்பட்டு பஸ் அட்டனுக்கு திரும்பியது. கூட்டம் கூடியது. இவ்வளவு பெரிய கூட்டத்தைப் பார்த்திராத பொலிசார் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். ஏ. பிரான்சிஸ், எம்.ஐயாவுஎன்ற தொழிலாளிகள் மாண்டனர். ஆத்திரம் கொண்ட கூட்டம் வன்முறையில் ஈடுபட்டது. டெலிபோன் வயர்கள் வெட்டப்பட்டன. பாதைகளில் மரங்கள் வெட்டி மறிக்கப்பட்டன. (இந்த சம்பவத்துக்கு பிறகே
மலையகத்தமிழரின்வரலாறு 19

Page 70
கூடுமானவரைக்கும் பாதைக்கருகில் மரங்கள் நாட்டுவது தடைசெய்யப்பட்டது.) சிங்கள கடைகள் மூடப்பட்டு அவர்கள் அங்கிருந்து வெளியேறினர். தொண்டமான் டெலிபோன் மூலம் தொடர்பு கொள்ளப்பட்டு மலையகத்துக்கு அனுப்பப்பட்டார்.
“நான் காரில் ராசாத்தோட்டம்வரை சென்றேன். அதற்கப்பால் செல்லமுடியாதவாறு பாதைகளில் கற்களாலும் மரங்களாலும் தடையேற்படுத்தப்பட்டிருந்தன. பொகவந்தலாவைக்கு பதினொரு கிலோ மீட்டர் தூரமிருந்தது. அதை நடந்தே கடந்தேன். வழியில் சந்தித்த மக்களிடம் பாதையில் போட்டிருக்கும் தடைகளை அகற்றும்படி கேட்டு கொண்டேன். பொலிஸ்காரர்களை, அப்பகுதி தோட்டத் தலைவர்களுடனும், மாவட்டத் தலைவர்களுடனும், சிங்களவர்களுடனும் கண்டு கதைத்தேன். பதட்டம் தணிந்தது”
என்று கூறுகிற தொண்டமான், டெலிபோனில் தொடர்பு கொண்டு தன்னை நிலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி பிரதமர் பண்டார நாயக்கா கேட்டுக் கொண்டதையும், நிலைவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின்னர் “தொண்டா, உங்களைப் பார்த்து நான் பொறாமைப்படுகின்றேன். சிங்கள மக்களை இவ்விதம் என்னால் கட்டுப்படுத்த முடியுமாயிருந்தால் இந்த நாட்டில் கலவரம் தோன்றியிருக்காது” என்று கூறியதையும் தன் சுயசரிதையில் கூறியிருக்கிறார்.
மலைநாட்டுத் தமிழர்கள் உணர்ச்சி வசப்பட்டு செயலில் இறங்குவதை தவிர்த்துக் கொள்ளவேண்டும். வடகீழ் மக்களுக்கு நமது தார்மீகமான ஆதரவு இருக்க வேண்டும். அதே வேளை நமது நடவடிக்கைகளை சூழ் நிலையை அனுசரித்தே முன்னெடுக்க வேண்டும் என்பது மலையக இளைஞர்களுக்கு அவர் நல்கிய அறிவுரையாக இருந்தது. தோட்டப்பகுதிகளில் காங்கிரஸ்ஸுக்கு இருக்கும் செல்வாக்கை அரசாங்கத்திற்கு உணர்த்திய சம்பவம் அதுவாகும். அந்த சம்பவத்துக்குப் பிறகே 1960ல் செளமியமூர்த்தி தொண்டமான் நியமன அங்கத்தவராகிறார். 1960ல் நடந்த தேர்தலிலும் தோட்டத்து மக்கள் இடதுசாரி களையே ஆதரித்தனர்.
ஜனவரி 1961ல் அமுலாக்கப்பட்ட சிங்களமே நீதிமன்ற மொழியாக இருக்கும் என்ற கொள்கையை எதிர்த்து அதே மாதத்தில் சமஷ்டி கட்சி சத்தியாக்கிரகத்தை முன்னெடுத்தது. ஏப்ரல் 25ம் தேதி தோட்டப்பகுதி மக்களும்
120 மலையகத்தமிழரின்வரலாறு

சத்யாக்கிரகத்துக்கு ஆதரவாக சேர்வது என்று தீர்மானிக்கப்பட்டது. இ. தொ. காவும், சி. பி. டபிள்யூ. யூவும், இ. தி. மு, இணைந்து இந்த முடிவை எடுத்தனர். தனிப்பட்ட முறையில் தொண்டமான் பயமுறுத்தப்பட்டார். தோட்டங்களில் பணிசெய்வது அத்தியாவசியத் தேவையாக்கப்பட்டு இ. தொ. க வேலை நிறுத்தத்திலிருந்து பின் வாங்கியது. தோட்டத் தொழிற்சாலை கூரைகளின் மீது அவசரம் அவசரமாக ஆறுஅங்குலத்தில் தொழிற்சாலை எண்கள் பொறிக்கப்பட்டன. ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் வழங்கப்பட்டிருந்த உணவு உற்பத்திக்கான எண்களாக அவை இருந்தபோதும், அது அடிப்படையில் ஹெலிகாப்டரில் இருந்தே எந்தெந்த தோட்டங்கிளில் வேலை நடைபெறவில்லை என்பதை கண்டறிவதற்காக செய்யப்பட்ட முயற்சியாகும். தோட்டங்களில் வேலைநிறுத்தம் செய்வதை எண்ணி அரசாங்கம் எந்த அளவுக்கு கவலைப்பட்டது என்பதை இன்றும் ஆறுஅங்குல எண்கள் நினைவுபடுத்துகின்றன. இ. தொ. க. வேலை நிறுத்தத்திலிருந்து விலகியது. ஆட்சியாளருக்கு ஆறுதலளித்தது. அவசர காலம் சட்டம் பிரயோகிக்கப்பட்டு, சமஷ்டி கட்சி தலைவர்கள் சிறை வைக்கப்பட்டனர்.
நாட்டின் நிலவரம் சீரானதாக இல்லாமையால், லங்கா சமசமாஜக் கட்சியினருடன் இணைந்து சிறிலங்கா கட்சி ஆட்சி அமைத்தது. 1964ம் ஆண்டு மே மாதம் ஜவகர்லால் நேரு இறந்தார். பக்கத்து நாடான சீனா தனது ஆக்ரமிப்புக் கரத்தை பரப்ப இந்திய எல்லையில் போர் தொடுத்திருந்தது. லால் பகதூர் சாஸ்திரி இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்றிருந்தார். அதுதான் சரியான சமயம் என்று கருதிய சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரஜாவுரிமைப் பிரச்சினையைப் பேசி முடிவெடுக்க முனைந்தார். பிரச்சினையின் ஆழத்தையோ அது கொண்டிருக்கும் நூற்றைம்பது காலவரலாற்றையோ அல்லது இலங்கை தலைவர்களின் நம்பமுடியாத தன்மையையோ லால் பகதூர் சாஸ்திரி ஜவகர்லால் நேருவைப் போல அறிந்திருக்கவில்லை, மேலும் ஒரு பிரச்சினையைத் தீர்க்க தம்மிடம் வந்திருப்பவர் ஒரு பெண், அரசியலில் தன் கணவரை இழந்து நிற்பவர் அவருக்கு ஆதரவு நல்குவதற்காக கடைசி நேரத்தில் சாஸ்திரியால் மேற்கொள்ளப்பட்ட முடிவு என்கிறார் தென்கிழக்காசிய அரசியல் நிலவரம் பற்றிப் பல கட்டுரைகளை எழுதிய பேராசிரியர் சூரிய நாராயணன்.
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் 30.10.1964ல் கைசாத்திடப்பட்டது. அதன்படி 975,000 நாடற்ற மக்களில் இந்திய அரசாங்கம் 525,000 பேருக்கு தனது நாட்டுரிமை வழங்கவும் 300,000 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கவும்
மலையகத்தமிழரின்வரலாறு 2.

Page 71
ஒத்துக் கொண்டது. மிகுதி 150,000 பேரின் எதிர்காலம் பின்னால் பேசித் தீர்மானிப்பதென்றும், 15 வருடத்துக்குள் இது அமுல்படுத்தப்பட வேண்டும் என்று ஒத்துக் கொள்ளப்பட்டது. பாராளுமன்றத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் கட்சிகள் - சமஷ்டிக் கட்சியைத் தவிர்த்த ஏனைய கட்சிகள் இதை முழுவதாக ஆதரித்தன. இந்தியாவின் அதிமூத்த ராஜதந்திரியான ராஜாஜி இந்த ஒப்பந்தம் குறித்து தனது அதிருப்தியைத் தெரிவித்தார். இலங்கையில் தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தமது அதிருப்தியைத் தெரிவித்தன.
மே 1970 தேர்தலில் வென்ற கூட்டுமுன்னணி அரசாங்க காலத்தில் கலாநிதி என். எம். பெரேரா (நிதி அமைச்சர்) கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வா (தோட்டம், அமைப்புத் திட்டம்) பீட்டர் கெனமன் (வீடமைப்பு) என்ற இடது சாரித் தலைவர்களுக்கு மந்திரி பதவிகள் அளிக்கப்பட்டன. ஜனாப் அஸிஸ் நியமன அங்கத்தவராக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். துரைமார்களின் அனுமதி பெறாது தோட்டத்துக்குள் போவதற்கும் (1970), தோட்டத் தொழிலாளிகள் தொழில் நிறுத்தப்பட்டாலும் தொழில் மன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு கிடைக்கும் வரையிலும் தொடர்ந்தும் லயக்காம்பராக்களிலேயே இருப்பதற்கும் (1971) வழிசெய்யப்பட்டன. தோட்டத் தொழிலாளிகளின் நீண்ட வரலாறு இந்த இரண்டு உரிமைகளைப் பெறுவதற்காக நூற்றைம்பது வருட காலமாக நடத்திய போராட்டங்களைக் கொண்டது. இந்த இரண்டையும் சட்டபூர்வமாக பெற்றுத் தந்தது அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழி சமைத்தன என்று நம்பினர். அந்த நம்பிக்கையைச் சிதறடித்தது கொப்பே கடுவையின் செய்கைகள்.
மே 1972 இலங்கை குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டது. அரசியல் அமைப்புத் திட்டங்கள் மாற்றப்பட்டன. கொல்வின் ஆர். டி. சில்வா எஞ்சியிருந்த தமிழர்களின் நம்பிக்கையையும் குழிதோண்டிப் புதைத்துவிட்டார். ஏப்ரலில் விரக்தியுற்ற சிங்கள இளைஞர்கள் அரசாங்கத்துக்கெதிராக ஆயுதம் ஏந்தி போராடினர். நிலமையைச் சமாளிப்பதற்காக தோட்டங்களை தேசிய மயமாக்குவதென்ற முடிவை நடைமுறைப்படுத்தினர். நாவலப்பிட்டி, கண்டி, மாத்தளை பகுதி தமிழ் தோட்டங்கள் அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்தது. தமிழ் தோட்ட உத்தியோகஸ்தர்கள் பலர் நடுவீதிக்கு வந்தனர். ஆண்டுகாலமாக அநுபவித்த சுகத்தை நொடிப் பொழுதில் இழந்தனர். உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. தொழிலாளர்கள் தமது வாழ்நாள் முழுக்கத் தேடிய பித்தளை வெள்ளியிலான சட்டி
122 மலையகத்தமிழரின்வரலாறு

முட்டிகளை அடகு வைத்தனர். மைக்கல் கிளார்ட் தலைமையில் இலங்கை தோட்டப் புறங்களின் சீரழிந்த நிலைமைக்கு பிரித்தானியா டெலிவிசன்களில் காட்டப்பட்டு பிரச்சினையின் கோரத்தை அதிகமாக்கின. கிரனெடா டெலிவிசனில் காட்டப்பட்ட படங்கள் நிலமையை மேலும் மோசமாக்கியது. அவைகள் பிரித்தானியர்களின் மனச்சாட்சியைத் தட்டி விட்டன. இலங்கையிலும் அதுவரை தேசியமயம் என்று கூறி கொண்டிருந்தவர்களை காணிச் சீர்திருத்தச் சட்டத்தை (1975) கொண்டுவந்து தோட்டங்களை எடுக்கச் செய்தது இந்தச் சட்டத்தின் கீழ் 237, 592 ஏக்கர் தேயிலை, 194835 ஏக்கர் ரப்பர், 6406 ஏக்கர் தென்னை,79124 ஏக்கர் மற்றும் காசுப் பயிர்கள் விளையும் தோட்டங்கள் மொத்தமாக 417,957 ஏக்கர் அரசாங்கத்துக்குச் சொந்தமாயின.
அதன் உச்சக் கட்டமாக 1977ல் 7000 ஏக்கரை, நுவரெலியாவில் எடுக்கும் முயற்சியொன்றை அரசாங்கம் மேற் கொண்டது. அது மலையகத்திலே தேயிலைக் காணிகளை சுவீகரித்து சிங்கள மக்களைக் குடியேற்ற அரசாங்கம் எடுத்த நடவடிக்கையை தொழிலாளிகள் தொழிற் சங்க வேறுபாடுகளை மறந்து ஒன்று பட்டு எதிர்க்கவைத்தது.
24.05.77ல் தோட்டத் துரைமார்கள் சங்கம் கொழும்பில் ஓர் ஊர்வலத்தையே நடத்தினர். காணி சுவீகரிப்பை எதிர்த்து பத்து நாள் போராட்ட எதிர்ப்பை அலட்சியம் பண்ணி அரசாங்கம் மேற்கொண்ட காணி அளக்கும் நடவடிக்கையை எதிர்த்து டெவன் தோட்டத்தில் போராட்டம் வெடித்தது. சிவனு லெட்சுமனன் என்ற தொழிலாளி பலியானான்.
காணி சுவீகரிப்பு என்ற பெயரில் உருளைவள்ளித் தோட்டத்தில் தொடங்கப்பட்ட போராட்டம், கடைசிவரை ஒரு முடிவைக் காணாது போனதால் அது டெவன் தோட்டத்தில் சிவணு லெட்சுமணனை பலி எடுத்தது.
எல்லாத் தொழிற்சங்கங்களும் லெட்சுமணனின் சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டன. அமைச்சர் காமினி திசாநாயக்காவும் கலந்து கொண்டார். உண்மையில் இலங்கையில் இரண்டு பெரும்பான்மை இனத்தவரும் ஒரு சிறுபான்மை இனத்தவரும் என்ற எண்ணம், படிப்படியாக இலங்கை சிங்கள பெரும்பான்மை இனத்தவரும் தமிழ் சிறுபான்மை இனத்தவரும் என்று மாறத் தொடங்கி, ஆட்சிக்கு வரும் கட்சி இனவாதத்துடன் செயற்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது.
மலையகத்தமிழரின்வரலாறு 23

Page 72
ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தெட்டுக்குபிறகு மாகாணசபை பேச்சே மலையகத்தில் பிரசித்தம் பெற்றது. வரையறுக்கப்பட்ட ஒர் எல்லைக்குள் நடக்கும் தேர்தல் என்பதால், அப்பகுதிக்குள் வாழும் சிறுபான்மை இனத்தினர் ஒரே அணியாகத் திரண்டு அல்லது ஒரு கட்சியின் கீழ் அணிதிரண்டு போட்டியிடத்
தலைப்பட்டனர்.
1988 மாகாண சபைத் தேர்தலில் பன்னிரண்டு உறுப்பினர்களை வெற்றி பெற வைத்து அதில் மூன்று பேரை மாகாண சபை அமைச்சர்களாகக் கண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதற்குப் பின்னர் 1989 ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பயங்கரத் தோல்வியைக் கண்டது. எம். எஸ். செல்லச்சாமி ஒருவரே கொழும்பில் நின்று வெற்றி பெற்றார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்ஸின் டிக்கெட் கிடைக்காததால் பிரிந்து நங்கூரச் சின்னத்தில் பி. சந்திரசேகரம் போட்டியிட்டார். ஒற்றுமையாக தேர்தலை சந்தித்த நிலைமாறி புதிய கட்சிகள் மலைநாட்டில் தோன்றி போட்டியிட்டன. கொள்கை அடிப்படையில் அதிகம் வேறுபடாத - மலையக மக்களுக்கு விடிவு தேடுவது, என்ற அடிப்படையில் ஒன்றுபட்டு நிற்கிற கட்சிகள், தலைமைப் பதவிக்காக பிரிந்து செயற்படுவதனால் நேர்ந்த அபத்தம் இது.
“யூதர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் நடந்த வரலாற்றுக் கொடுமைகளைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்கள், இலங்கைவாழ் இந்தியர்களுக்கு நடந்த கொடுமையை அறியாது, அறிந்தாலும் அதுகுறித்து பேசாது இருக்கின்றனர்”
என்று போல் கெஸ்பர்ஸ் தன்னுடைய கட்டுரையில் (ஃபுரண்டியர் 10.9.1983) எழுதுகிறார். 1983 வன் செயல் மலைநாட்டுத் தமிழரை சிதைத்து சின்னா பின்னமாக்கியதைக் கண்டு அவலமுற்று எழுந்த எழுத்து அது. டாக்டர் வி. சூரியநாராயணன் தென்கிழக்கு படிப்புக்கு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பொறுப்பாக இருந்தவர். “இலங்கையில் வேண்டப்படாதவர்களாகவும், இந்தியாவில் வரவேற்கப்படாதவர்களாகவும் இருந்த இந்த அபாக்கியசாலிகள், இந்தியாவில் சிலமட்டங்களில் இலங்கைத் தமிழர் என்று - ஆண்டுக் கணக்கில் இலங்கையில் அவர்களுக்குக் கிடைக்காத பெயர் - அறியப்படுகிறார்கள்” என்பது அவரது கண்டுபிடிப்பு.
124 மலையகத்தமிழரின்வரலாறு

சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் 525,00 பேரும் அதற்கடுத்து செய்து கொள்ளப்பட்ட இந்திராகாந்தியுடனான ஒப்பந்தத்தின் மூலம் மேலும் 75,000 பேரும் ஆக ஆறுலட்சம் பேர்களை இந்திய குடிகளாக ஏற்பதென்றும், அந்த ஒப்பந்தங்களின் படியே மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் பேரையும், எழுபத்தைந்தாயிரம் பேரையும் என்று மொத்தம் நான்கு லட்சம் பேர்களை இலங்கை குடிகளாக ஏற்பதென்றும் முடிவ செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறையிலிருந்த காலத்திலேயே 1983 வன்முறை வந்து இலங்கையின் இயல்பு வாழ்க்கையை முறியடித்தது. எனினும் 1987ல் தமிழ் நாட்டு கொள்கை அறிக்கையின்படி 115,487 குடும்பத்தைச் சார்ந்த 4,59,000 டேர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிற இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் தலைவர் தமிழர் கூட்டணியின் மூன்று தலைவர்களில் ஒருவராக ஏற்றுக் Glan Tórst J.L-625ff. மற்றைய இரண்டு தலைவர்களும் ஜீ. ஜீ. பொன்னம்பலமும், எஸ் . ஜே. வி. செல்வநாயகமும் மரணமடைந்ததன் பின்னர் இவர் மாத்திரமே ஈழத் தமிழர்களின் ஒரே தலைவராக சகலமட்டத்திலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவர். ஈழப்பிரிவினைக்கும் தமக்கும் எவ்விதமான சம்பந்தமில்லை என்று இவர்கள் கூறினாலும், மலையகத்து இளைஞர்கள் சிலர் யாழ்ப்பாணத்து இயக்கங்களுடன் சேர்வதையோ, சிங்களவர்களின் மனதில் வளர்ந்துவரும் சந்தேகப் பேயை அகற்றுவதையோ, இ. தொ. காவால் செய்யமுடியாமற் போய்விட்டது. சந்தேகம், வெறுப்பாக வளர்ந்து கலவரமாக வெடித்து, மக்களைப் பலிவாங்கியது. ஆட்சியினர் அதற்கு தூபம் இட்டு
வளர்த்தனர்.
1983 வன்முறைக்குப் பலியான மலையகத் தமிழர் இருக்க இடமின்றி அகதிகளாக இந்தியாவுக்கு ஓடினர், இலங்கையின் வடபகுதிக்கு ஓடினர், இலங்கையின் கிழக்குப்பகுதிக்கு ஓடினர். இராணுவமும், பொலிஸும் கை கட்டிப் பார்த்துக் கொண்டிருக்கையில் நூற்றுக் கணக்கானவர்களை உயிர்பலி கொடுத்துவிட்டு தேடிய சொத்துக்களை கொள்ளையர்க்கு கொடுத்துவிட்டு, உயிரைப்பாதுகாத்துக் கொள்ள பக்கத்திலுள்ள ஆலயங்களுக்கு ஓடினர். மக்கள் திரள் மலையகத்து ஆலயங்களில் குவிந்திருந்தது. நிலைமையின் கடூரத்தை மனதிலெடுத்து தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்குமிடையில் கப்பல் சேவை
மலையகத்தமிழரின்வரலாறு 125

Page 73
1984ல் நிறுத்தப்பட்டது. அதற்கடுத்த ஆண்டு இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கை வருவது சாத்தியமானாலே, இந்திய வம்சாவளியினர் இந்தியாவுக்குச் செல்வது சாத்தியப்படும் என்று இந்தியா அறிவித்தது. பதினைந்து ஆண்டுகள் (1968 - 1983) செயலிழந்து கிடக்கிறது. இந்த நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கம், ஜனாதிபதித் தேர்தல், பெரும்பான்மை சிங்கள மக்களின் சிந்தையிலேற்பட்ட மாற்றம் எஞ்சியிருந்தவர்களை இலங்கையர்களாக,
ஏற்றுக்கொள்ளும் நிலைமையை உண்டு பண்ணியிருக்கிறது.
米米梁染染
126 மலையகத்தமிழரின்வரலாறு

LSLiLLLSLLLLSLLASLSLiLSLSLLLLLSSLALSLSALSLSSLLLLLLLiiLSSASSLASSSLLLLSLLASLSLLLLLSSASLiLSLSSiLSASLLLSLLLSAJSLqLSLAJSLiLSLAJLSiLSAS0SLSLALLSSLLLLLAALSSLiLAJSLLLLLAALLSSLSASSLiLAASLLLLSLLAASLLLLS
O நாடற்றோர் பிரச்சனை
STSLLAL0LLiLSLAJLSLMMLiiLSLLLqiLLLiLMLiiLMLSSLiLMLLiLSLAMLSLLMLLLAJSLL AMSLLLSMLLAJJSiLSLAALLLLSLLMSSiLMAiLLLLLiiLLLLLLLiiLAJSLLLLJLLLLLLSJLiLJLLiLS
1983 வன் செயலுக்குப் பின்னர் சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தினை செயற்படுத்துவதில் பாரதூரமான முரண்பாடுகள் ஏற்பட்டன. அவைகளைக் களையவும், இலங்கையில் இருக்கிற இந்தியர்களின் நலனைக் காப்பதாக கூறிக்கொண்டு இலங்கையின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்கவும் வேண்டி இலங்கையிலுள்ள நாடற்றோர் என்று கருதப்பட்ட 94,000 பேருக்கும் குடியுரிமை வழங்குவதென இலங்கை அரசாங்கம் தீர்மானித்தது.
பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கினர் இதற்கு ஆதரவு நல்க வேண்டுமென்று கூறி பிரதமர் ஆர். பிரேமதாசா அன்று பேசியது, 1948ல் டி. எஸ் சேனநாயக்காவின் கூற்றுக்களை மறுப்பதற்கு இலங்கை இந்திய பிரதிநிதிகள் தேடிநின்ற வார்த்தைகளாலானது. அவரின் பேச்சில்,
இம் மசோதாவினால் இந்நாட்டினைப் பீடித்துள்ள ஒரு பெரிய புண் குணமாகி விடும். இப்புண் குணமாக நாமெல்லோரும் உதவ வேண்டும். அதில் சீழ் பிடித்து ஈக்கள் மொய்க்க நாம் அனுமதிக்கக் கூடாது. புண்களை மொய்த்து உயிர் வாழ்கின்ற ஈக்களும் இருக்கின்றன. இவ்வீக்கள் புண் குணமாக விடாது. அதே போன்று அரசியல் புண்களை தமது சொந்த அரசியல் இலாபத்துக்காக குணமாக விடாது தம்மால் முடிந்தவரை தடுக்கின்ற மக்களும் இருக்கின்றனர்.
தேசாபிமானம் என்பது பூரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஏகபோகம் எனக் காட்ட ஒரு பலவீனமான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது என்பதனையிட்டு நான் வேதனைப்படுகின்றேன். 94 ஆயிரம் மக்களும் அவர்களது இயற்கைப் பெருக்கமும் இந்திய வம்சாவளியினர் என்பது உண்மையே. வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்பு கவர்ச்சியான சம்பளம், நல்ல சீதோஷ்ண நிலைமை ஆகிய எக்காரணத்தைக் கொண்டோ அவர்கள் இந்நாட்டை விட்டு இந்தியா செல்ல விரும்பவில்லை என்றால் நாம் வேறு என்ன தான் செய்வது?
மலையகத்தமிழரின்வரலாறு 127

Page 74
1964 ஆம் ஆண்டு சிறிமாசாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் திருமதி பண்டாரநாயக்கா 3 இலட்சம் பேருக்கு குடி உரிமை வழங்க இணங்கிய போது சிலர் அவரைக் கண்டனஞ் செய்தனர். கடந்த காலத்தினை அவர் விரைவில் மறந்து விட்டதற்காக நான் வருந்துகிறேன்.
சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தை யு. என். பி எதிர்க்கவில்லை என்பதனை சபையில் நினைவுபடுத்த விரும்புகிறேன். நாம் இதனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாக ஏற்றோம். நாம் இதனை ஒரு தேசியப் பிரச்சினையாக கருதினோம். “இப்பிரச்சினை இருந்து கொண்டிருக்கும் வரை இந்தியா எமது உள்நாட்டு விவகாரங்களில், தமது இந்திய வம்சாவளி மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற சாக்கில் தலையிட்டுக் கொண்டே இருக்கும்’ என்பதனை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இம்மக்கள் சந்ததி சந்ததியாக இந்நாட்டில் வாழ்ந்துவருபவர்கள் என்பதனைக் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்கள் இன்னொரு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்களுக்குப் போக்கிடம் கிடையாது. இந்தியாவில் தாம் எந்தக் கிராமத்தில் இருந்து வந்தோம் என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. நாம் அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்குள்ள காரணங்களில் மிக முக்கியமானது அவர்கள் இந்நாட்டின் ஐக்கியத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஆதரிப்பவர்கள் என்பதாகும். சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் வாழும் அவர்கள் சிங்கள மக்களுடன் ஒற்றுமையாக வாழ்கின்றனர். ஆனபடியால், இப்புண்ணுக்கான அடிப்படைக் காரணத்தினை நாம் கண்டுபிடிக்க வேண்டும். சர்வ கட்சி மாநாட்டின் மூலம், பல்வேறு தரப்பட்ட பொதுசன அபிப்பிராயத்தினையும் நாம் பெற்றோம். நாடற்றவர் பிரச்சினையில், சர்வகட்சி மாநாட்டின் பிரதிநிதிகள் தலைவர்களுக்கான கமிட்டியின் தலைவர் என்ற வகையில் மாட்சிமைதங்கிய ஜனாதிபதி பின்கண்டவாறு கூறினார் என்பதனை நினைவில் கொள்ளலாம்.
நாடற்ற மக்களின் பிரச்சினை சம்பந்தப்பட்ட தீர்மான விடயத்தில் மகாசங்கம் பின்வருமாறு கூறியிருந்தது. தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொள்ளும் ஒரு பிரிவு மக்களை நாம் கொண்டிருத்தல் இயலாது. சிறிமா சாஸ்திரி ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போல் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட
28 மலையகத்தமிழரின்வரலாறு

வேண்டியவர்களை அனுப்புவதன் மூலமும், எஞ்சியோருக்கு குடியுரிமை வழங்குவதன் மூலமும் இதனை இலகுவாகத் தீர்த்துக் கொள்ளலாம். எண்ணிக்கை சிறிது கூடுதலாக இருந்தாலும், இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணும் பொருட்டு குடியுரிமை வழங்குவதற்கு சபை எதிரானதல்ல என்பதனை
மகாசங்கம் பிரகடனப்படுத்துகின்றது.
மகா சங்கத்தின்இக்கொள்கைக்கு கிறிஸ்தவ ஸ்தாபனம், இந்து ஸ்தாபனம், (விஸ்வ இந்து பரிஷ்ஷத்), இ.தொ.கா, ஜ.தொ.கா, லங்கா சமசமாஜக் கட்சி ஆகியவை ஆதரவளித்தன. இந்தியாவுக்குச் செல்லவிரும்பும் இந்திய வம்சாவளியினர் அவ்வாறு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் எனவும், ஏனையோருக்கு, ஏனைய பிரஜைகளுடன் சமத்துவமான அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தது”
1986 ஜனவரி 20 ஆம் திகதி டெயிலி நியூஸ்' பத்திரிகையில் வெளிவந்த கம்பஹா, ரத்னாவளி பாலிகா வித்தியாலயத்தில் மாட்சிமை தங்கிய ஜனாதிபதியவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். “அமரர் டி. எஸ். சேனநாயக்கா ஒரு குடியுரிமை மசோதாவை சமர்பித்தார். இலங்கைப் பிரஜை என்பவர் யார் என்பதை முதன் முதலாக தீர்மானிக்க வேண்டியர்வகளானார்கள். அப்போது பல இலட்சம் இந்தியர்கள் இருந்தார்கள். சிலர், வேறுபல அத்தாட்சிகளுடன் தமது பெற்றோரும், அவர் தம் பெற்றோரும் இலங்கையில் பிறந்தார்கள் என்பதனை நிரூபிக்க முடிந்ததினால் குடியுரிமை பெற்றார்கள். ஏனைய இந்தியப் பிரஜைகளைப்பற்றித் தீர்மானிக்க வேண்டியிருந்த தினால், அம் மசோதா கொண்டுவரப்பட்டது. அதன் மூலம் பத்து இலட்சம் நாடற்ற மக்கள் அம்மசோதாவின் கீழ் இந்தியப் பிரஜையா அல்லது இலங்கைப் பிரஜையா என பதிவு செய்யப்படவேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
பெற்றோரில்லாத ஒரு பிள்ளை என்னிடம் தரப்படுமானால் நான் என்ன செய்வேன்? கடலில் எறிவேனா? மண்ணில் புதைப்பேனா? எரிப்பேனா? அல்லது கொல்வேனா? நான் அதனை வளர்த்தெடுக்க வேண்டும். மனிதாபிமானம் இருக்க வேண்டும். எனவே நாம் இந்திய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி அம்மக்களில் அரைவாசிப்பேரை ஏற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டோம்.
மலையகத்தமிழரின்வரலாறு 129

Page 75
அதுதான் முடிவு. அதில் என்ன தவறு? இந்த இலட்சம் பேரை இந்தியா ஏற்க மறுத்தால் அல்லது வேறு எந்த நாடாவது ஏற்க மறுத்தால் அவர்களை நாம் கடவுள்களுக்கு பலி கொடுக்க போகின்றோமா? எந்த அரசு பதவியில் இருந்தாலும் அவர்கள் இந்நாட்டில் இருப்பார்கள். அவர்களுக்கு உணவு கொடுக்காமல், வேலை வழங்காமல், குடியுரிமை கொடுக்காமல் வைத்திருக்க முடியுமா? அவர்களை நாமே பயங்கரவாதிகளின் வலைக்குத் துரத்துவதாகாதா? யார் என்ன சொன்னாலும் இம்முடிவு மாற்றப்பட முடியாதது. அவ்வாறு செய்வது மனிதாபிமானம் ஆகாது. இம்மாதிரியான உணர்வுடன்தான் எமது அரசு இப்பிரச்சினையை
அணுகுகிறது.
இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியினரின் சரித்திரத்தை ஒரு கணம் பார்ப்போம். இந்தியர் பல்வேறு நாடுகளிலும் சென்று வாழ்வது சமீபத்தைய நிகழ்ச்சியல்ல. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் இருந்து வீதியமைப்பு புகையிரதப்பாதை அமைப்பு மற்றும் பொது வேலைகள், கோப்பித் தோட்ட அபிவிருத்திக்காக அன்றைய காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்தியத் தொழிலாளர்களை இலங்கைக்குத் தருவித்தார்கள். குறைந்த ஊதியத்துக்கு தொழில்புரியக்கூடிய தொழிலாளர்கள் இலங்கையில் அப்போது இல்லாதிருந்ததே இதற்குக் காரணமாகும்.
இலங்கை சுதந்திரம் பெற்றபின் கொண்டுவரப்பட்ட முதலாவது சட்டம் இலங்கைக் குடியுரிமை மசோதாவாகும். இச்சட்டத்தின் கீழ் ஆக பத்தாயிரம் இந்தியத் தொழிலாளர்களே குடியுரிமை பெற முடிந்தது. இருப்பினும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு இம்மக்கள் தமது பங்களிப்பினை வழங்கியுள்ள காரணத்தினால் இலங்கையைத் தாயகமாகக் கொண்டோருக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டுமென
தீர்மானிக்கப்பட்டது.
1949 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தானிய (குடியுரிமைச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பித்த எட்டு இலட்சம் பேரில் 134,320 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் குடியுரிமை
130 மலையகத்தமிழரின்வரலாறு

பெறாதவர்கள் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டுமென இலங்கை அரசும் இந்திய அரசும் பேச்சுவார்த்தையில் இறங்கி இருந்தன. அப்போது நாடற்றவர் பிரச்சினை இருக்கவில்லை.
ஆனால் 1952 ஆம் ஆண்டு இலங்கையில் இந்தியத் தூதுவராக இருந்த திரு. சி. சி தேசாய், ஒரு சித்தாந்தத்தினைக் கொண்டு வந்தார். அதாவது இந்தத் தொழிலாளர்கள் இந்திய தேசிய மக்கள் அல்லவென்றும் அவர்கள் இந்தியாவிற்குச் செல்வதானால் இந்தியப் பாஸ்போர்ட் பெறவேண்டும் எனவும், அல்லது எமது பிரயாண அத்தாட்சிப் பத்திரத்துடன் இந்தியா சென்று, இலிங்கைக்குத் திரும்புபவர்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இவ்விடயமாக பின்னர் திரு. டட்லி சேனநாயக்க, திரு. நேருவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் ஒன்றும் நடக்கவில்லை. பின்னர் 1954 ல் சேர்.ஜோன் கொத்தலாவலை திரு. நேருவுடன் இரு தடவை பேச்சுவார்த்தை நடத்தினார்.
இவ்வொப்பந்தத்தின் கீழ் 54 ஆயிரம் தோட்டத் தொழிலாளர்கள் இந்தியப் பிரஜாவுரிமை பெற்று இந்தியாவுக்குச் சென்றார்கள். இந்திய பாகிஸ்தானிய சட்டத்தின்கீழ் இலங்கை குடியுரிமை வழங்குவதை 1963 ல் பூரணப்படுத்தியது. தற்போதைய பிரச்சினை 1964 ஆம் ஆண்டுக்குப் பின் ஆரம்பித்தது. அதற்குக் காரணம், நாடற்றவர் பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததுதான்.
1964 ல் மேற்கொள்ளப்பட்ட சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் 3 இலட்சம் பேருக்குக் குடியுரிமை வழங்கப்படவேண்டும் எனவும், 525,000 பேர் அவர்களுடைய இயற்கைப் பெருக்கத்துடன் இந்தியாவுக்குத் திருப்பியனுப்பப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இவ்வொப்பந்தத்தின் மிக முக்கிய அம்சம் சுய விருப்பத்தில் அமைந்த நாடுமீளல் ஆகும். ஆனால் 6 இலட்சம்பேரில் 506,000 பேர் மட்டுமே இந்தியா செல்ல விரும்பினர். ஆகவே 94,000 பேர் பின் தங்கிவிட்டனர். இவர்கள் இந்தியாவுக்குப் போக விரும்பாமல், இலங்கையினைத் தாயகமாகக் கொள்ள விரும்பியவர்களாவர்.
அரசாங்கம் பிரார்த்தனைக்குத் தலைவணங்கி 94 ஆயிரம் பேருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது என்று திருமதி பண்டார நாயக்கா ஒர் அறிக்கையை சமீபத்தில் விடுத்துள்ளார். ஆணைக்குப் பணிவதனை விட பிரார்த்தனைக்குப் பணிவது நல்லது அல்லவா? என நான் அவரைக்கேட்க விரும்புகிறேன்.
மலையகத்தமிழரின்வரலாறு 131

Page 76
பதினைந்து வருட காலத்தில் இவ்வொப்பந்தத்தினை செயற்படுத்துவது எனவும், பிரதி வருடமும் 35 ஆயிரம்பேர் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. நாடு மீளுவோர் தமது சேமலாப நிதி, ஓய்வூதியப் பணம் உட்பட எல்லா ஆஸ்திகளையும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்தியாவுக்கு 7 பேர் சென்றால், 4 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், இரண்டும் சமமாக நடைபெறவேண்டுமென ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது. 1974 ஆம் ஆண்டு சிறிமா இந்திரா ஒப்பந்தப்படி எஞ்சியுள்ள 150,000 பேரில் 75 ஆயிரம் பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும், 75 ஆயிரம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்படவேண்டும் எனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
இரு ஒப்பந்தத்தின் கீழும் 975,000 பேரில் 375,000 பேருக்கு இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட்டது. 6 இலட்சம் பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பப்பட்டனர். இந்த 975,000 பேருக்கு 1964 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் திகதிக்குப் பின் பிறக்கும் பிள்ளைகள் அவர்களுடைய பெற்றோரைப் பின்பற்றி இந்தியக் குடியுரிமையோ இலங்கைக் குடியுரிமையோ பெறவேண்டும். இந்த 94 ஆயிரம் பேருக்கும் குடியுரிமை வழங்கத் தேவையில்லை எனக் கூறப்பட்டது. இம்மக்களுக்கு அவர்களது அடிப்படை மனித உரிமையை எப்போதும் மறுப்பதா? இவர்கள் இலங்கைக் குடியுரிமைக்கு மனுச்செய்தவர்கள். இவர்களை நாம் அவர்களது விருப்பத்துக்கு எதிராக இந்தியாவுக்கு அனுப்ப இயலாது. ஆகவே இவர்களுக்கு நாம் குடியுரிமை வழங்குகின்றோம்.
திருமதி பண்டாரநாயக்காவின் கணவர் அமரர் திரு. எஸ். டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா இதனை ஒரு மனிதாபிமானப் பிரச்சினையாகவே நோக்கினார். இம்மாதிரி ஒரு சந்தர்ப்பத்தில் 1954 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்றத்தில் பேசுகையில்
"நாம் அவர்களை பெல்சென் முகாமுக்குள் தள்ளி விட முடியாது. கடலுக்குள் தள்ளிவிடமுடியாது. அல்லது நஞ்சூட்ட முடியாது. இம்மாதிரி ஒரு பிரச்சினையில் ஒரு பொறுப்புள்ள நாடு நடந்து கொள்ளக்கூடிய முறை இதுவல்ல” என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்பிரச்சினையைச்
132 மலையகத்தமிழரின்வரலாறு

சமாதானமாகத் தீர்ப்பதினால் பல நன்மைகள் உள்ளன. ஒருவகையில் எம்மைப் பீடித்துள்ள புற்றுநோயைப் பல தசாப்தங்களாக எம்மைப் பயமுறுத்தும் நிழலை பல காலமாக சீழ் பிடித்துள்ள ஒரு புண்ணைக் குணமாக்குகிறோம். அதேவேளை நாடற்றவர் எனக் கூறப்படும் மக்களால்
எமக்கு நன்மை கிடைக்கும்.” என்று குறிப்பிட்டார்.
இன்று வரலாற்றில் இச்சம்பவங்களைப் பார்க்கின்றபொழுது, நாற்பதாண்டு காலம் இந்த ஏழை உழைப்பாளர்களை இலங்கையின் வரலாற்றிலிருந்து ஒதுக்குவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளும், ஒடுக்குவதற்கு எடுத்துக் கொண்ட அரசியல் செயற்பாடுகளும், ஈற்றில் உண்மைக்கு தலை
வணங்கியுள்ளதைக் காணலாம்.
1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்திய போராட்டத்தை அடுத்து, தாம் பெற்று வந்த வாழ்க்கைச் செலவு புள்ளிக்கான அலவன்சையும் இழந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைக்கப்பட்டு இறப்பர் தோட்டத் தொழிலாளர்கள், 1998 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்திய ஒன்பது நாள் போராட்டத்தில், தமது சம்பளம் 95 ரூபாவுடன் நிறுத்தப்பட்ட பரிதாபத்துக் குள்ளாயினர். உண்மையில் இந்த வேலை நிறுத்தங்கள் நடைபெற உள்ள மாகாணசபைத் தேர்தலை மனதிலிருத்தி நடத்தப்பட்டவைகள் என்பதை தொழிலாளர்கள் கண்டு கொண்டனர்.வேலைக்குத் திரும்பும்படி தொழிற்சங்கங்கள் கூறிய பின்னரும், ஹட்டன், நுவரெலியா, தலவாக்கொல்லை ஆகிய இடங்களில் குறித்த சில தொழிற்சங்கங்களின் தலைவர்களின் கொடும்பாவிகள்
எரிக்கப்பட்டன.
ஜனாதிபதி பதவிக்கு டி. பி. விஜேதுங்க வந்ததன் பிறகு, மலையக மக்களின் முக்கியத்துவம் குறைத்து கணிப்பிடப்பட்டது. மரங்களை பின்னிப்பிணைந்திருக்கும் செடிகொடிகளைப் போன்றவர்கள்’ என்று கூறி, அவரால் உதாசீனப்படுத்தப்பட்டனர். கண்டிச் சிங்களவரான டிக்கிரிபண்டா விஜயதுங்காவின் துடுக்குத்தனம் மிகுந்த பேச்சுக்கு, தகுந்த பாடத்தை தேர்தலில் படித்துக் கொண்டார். தேர்தலில் வெற்றியைத் தேடித்தரும் வாக்கு வங்கியாக மலையகத் தமிழர் இருந்தனர். தோட்டங்களை மீளவும் தனியார் மயமாக்கிட முனைந்த போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒன்றே அந்த முயற்சிக்கு ஆதரவு கொடுத்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 133

Page 77
1935 டிசம்பர் 18 ல், லங்கா சமசமாஜ கட்சி தோன்றியது. கலாநிதி கொல்வின் ஆர். டி. சில்வீா அதன் தலைவராக இருந்தார். அடுத்தாண்டு நடைபெற்ற அரசாங்க சபைக்கான பொதுத் தேர்தலில் அந்த அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்குபேர் போட்டியிட்டனர். வெற்றிவாய்ப்பு கலாநிதி என். எம். பெரேராவுக்கும் பிலிப் குணவர்தனாவுக்குமே கிடைத்தது. தேர்தல் இலகுவானதாக இல்லை. ஐரோப்பிய துரைமார்களையும் உள்ளூர் தோட்டச் சொந்தக்காரர்களையும் எதிர்த்து போட்டியிட வேண்டி இருந்தது. ரப்பர் தோட்டங்கள் நிறைந்த ருவான்வெலைத் தேர்தல் தொகுதியிலிருந்து என். எம் பெரேரா வெற்றி அடைந்தார். இது குறித்து அவர் ஆற்றிய சட்டசபை பேச்சொன்றில் (1939) “தோட்டத்துரைமார் ஒருவர்கூட எனக்கு ஆதரவளிக்கவில்லை. தோட்டங்களுக்குள் செல்வதற்கு எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தோட்டத் தொழிலாளர்கள் எனக்கெதிரானவருக்கு வாக்களிக்கும்படி வற்புறுத்தப்பட்டார்கள். இந்தியர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக நான் பிரச்சாரம் செய்தேன்” என்கிறார். தேர்தலில் அறுபத்தி மூன்று சதவிகித வாக்குகளைப் பெற்று பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 15, 275. வெற்றி பெற்றார். இதே தேர்தலில் அட்டனில் போட்டியிட்ட நடேசய்யர் ஐம்பத்திரெண்டு சதவிகித வாக்குகளைப் பெற்று; பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 16,324 வெற்றி பெற்றார். இதே தேர்தலில் தலவாக்கொல்லையில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் அறுபத்து நான்கு சதவிகித வாக்குகளைப் பெற்று, பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 15, 896 வெற்றி பெற்றார்.
அரசாங்க சபையில் நடந்த விவாதங்களிலும், அரசாங்க சபைக்கு வெளியேயும் நடேசய்யரின் பேச்சுக்கள், சமசமாஜக் கட்சியினருடையவைப் போலவே அமைந்திருந்தன. அந்த ஆண்டு நவம்பரில் தொடங்கி, 1938 மே மாதம் வரை நீடித்திருந்த பதினாறு மாதங்களும் இலங்கை தோட்டபுறங்களில் நடைபெற்ற பல சம்பவங்களில் அவர்களின் ஒருமித்த கருத்துக்கள் வெளிப்பட்டன. நல்ல உதாரணம் பிரேஸ்கேர்டில் சம்பவம். “பிரேஸ்கேர்டில், இங்கிருக்கும் போது, என்னுடைய தோட்ட சனங்களுடன் சுறுசுறுப்பாக இயங்கினார்” என்று, துணை பொலிஸ் அதிகாரியாக இருந்த பி. என். பேங்ஸ் என்பவருக்கு, தோட்டத்துரை தோமஸ் தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்.
ரேலுகாஸ் தோட்டம், மடுகலையில் இருக்கிறது. வத்தேகம புகையிரத நிலையத்திலிருந்து 10 மைல் தூரத்தில் உள்ளது. இந்த தோட்டத்தில் சின்ன துரைய்ாக தொழில் பயில வந்தவர்தான் மார்க் அந்தனி லெஸ்டர் பிரேஸ் கேர்டில், ஆஸ்திரேலியாவில் குடியேறிய ஆங்கிலேயர். அவர் இலங்கைக்கு வருவதற்கும்
134 மலையகத்தமிழரின்வரலாறு

“இலங்கை வளமுள்ள நாடு” என்று கூறப்பட்டதுதான் காரணம். அவரது வருகையும், இலங்கையில் அவர் தங்கியிருந்த நாட்களும் சொற்பமானவைகளாக இருந்தாலும், இந்திய தொழிலாளர்களால் மறக்க முடியாத நிகழ்வுகளின் தொகுப்பாக அமைந்துவிட்டிருக்கின்றன.
மடுகெல, நெல்லுமலை, பத்தேகம, அல்லாடி, கலபொட, மேரிலாண்ட், வரகாலேண்ட் என்ற பெரும்பாலான தோட்டங்கள் சென்ற நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழர்களிடம் வயப்பட்டிருந்தன. கே.எம். காளியப்பாபிள்ளைக்குச் சொந்தமான லெபனான் குரூப், ஆர்.எம்.ஏ.ஆர். சோமசுந்தரம்பிள்ளைக்குச் சொந்தமான நக்கில்ஸ் குரூப், ஜே. நாராயணனுக்குச் சொந்தமான கட்டலூயா, எஸ். எஸ். சப்பானிபிள்ளைக்குச் சொந்தமான மேரிலேண்ட் குரூப், பி. கிருஷ்ணசாமி ரெட்டியாருக்குச் சொந்தமான வரகாலேண்ட், பி. சிதம்பாபிள்ளைக்குச் சொந்தமான கலபொட குரூப் இந்தப் பகுதியில் தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட பின்னணியில் வேலை பழகிய பிரேஸ்கேர்டில், தன்னுடைய தோட்டத்தில் நடந்த சம்பவங்கள், தொழிலாளர்கள் நடத்தப்பட்டவிதம், அவர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட முறை ஆகியவைகளில் வெறுப்படைகிறார். தான் ஆஸ்திரேலியாவில் கற்று தேர்ந்த கம்யூனிச முறைக்கு முற்றிலும் வேறான காட்சிகளை தோட்டப்புறங்களில் காணுகிறார். தொழிலாளர்கள் அவருடன் தோழமையுடன் பழகுவதைக் கண்ட தோட்டத்துரை தோமஸ் ஆத்திரங் கொண்டு, ஐந்து தொழிலாளர்களைத் தண்டிப்பதற்காக அவர்களுக்கு தோட்டத்திலிருந்து நோட்டிஸ் கொடுக்கிறார். கோப்பித் தோட்டத்தில் ஆழ வேரூன்றியிருந்த இந்த இராணுவத் தர்பாருக்கு தேயிலைத் தோட்டத்தில் இடம் இல்லை என்று சொல்லுமாப் போல, ஐம்பது தொழிலாளர்கள் தாமாகவே தோட்டத்தை விட்டு விலகிக் கொள்கின்றனர். தோமஸ் திடுக்கிடுகிறார். ஏனைய, தொழிலாளர்கள் வேலையில் தாமதம் காட்டுகின்றனர்; கவ்வாத்துப்பண்ணுவதற்கு அவர்கள் மறுக்கின்றனர்; வாய்துடுக்காக பதில் தருகின்றனர்.
பிரேஸ்கேர்டிலை இந்த நாட்டைவிட்டு அனுப்புவதில் தோமஸ் இறுதியாக வெற்றி அடைந்தாலும், அவரெழுப்பிய உரிமைத்தீ அவர்களிடையே படிப்படியாக பற்றிப்படர்வதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. பிரேஸ் கேர்டில் தோட்டம் விட்டு வந்த பின்னர் சமசமாஜக் கட்சி தலைவர்களுடனும், நடேசய்யருடனும் இணைந்து செயல்பட்டார். அவர்களது சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று பணியாற்றினார். அதே ஆண்டு, திருமதி கமலாதேவி சாட்டோபாத்யாயர் இலங்கைக்கு விஜயம் செய்து மலைநாட்டில் பல கூட்டங்களில் உரையாற்றினார். உணர்ச்சி மிகுந்த பேச்சாளியான அவரது பேச்சில் மக்கள் கட்டுண்டு போயினர். நாவலப்பிட்டியில் அவரது பேச்சைக் கேட்டு பிரேஸ் கேர்டில் கிளர்ந்து எழுந்தார்.
மலையகத்தமிழரின்வரலாறு 135

Page 78
தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத அவர் மேடையேறிபேசினார். அவரது பேச்சை நடேசய்யரின் மருமகன் டி. சாரநாதன் தமிழ்படுத்தினார். அவரை கூட்டத்தினருக்கு அறிமுகம் செய்து வைத்த என். எம். பெரேரா, ஒரு வெள்ளையர் - உங்களுக்காக கண்ணிர் வடிக்கும் தோழர் என்று கூறினார்.
“தோழர்களே, திருமதி. கமலாதேவி ஏழை சனங்களாகிய நீங்கள் எவ்வாறெல்லாம் இரக்கமற்ற முறையில் உறிஞ்சப்படுகிறீர்கள் என்பதை எடுத்துக்காட்டினார். அங்கிருக்கும் வெள்ளை மலைகளைப் பாருங்கள். (தன் கைகளால் தோட்டபங்களாக்கள் அமைந்த திசையைக் காட்டிக் கொண்டு) அங்கிருக்கும் வெள்ளை பங்களாக்களைப் பாருங்கள். அங்கு வெள்ளையர்கள் டாம்பீகமாக வாழுகிறார்கள். உங்கள் இரத்தத்தை உறிஞ்சி குடிக்கிறார்கள்; பிறர் உடலில் உயிர் வாழும் புல்லுருவிகள் போன்றவர்கள். துரைமார்களின் ரகசியங்களை நானறிவேன். அவர்களின் தோட்டம் ஒன்றில் நான் வேலை செய்திருக்கிறேன். இந்த நாட்டின் செல்வவளத்தைக் கேள்விபட்டுத்தான் நானிங்கு வந்தேன். இந்நாடு செல்வ வளமிக்கதுதான். இச்செல்வமெல்லாம் என் நாட்டவர்களின் - வெள்ளைக்காரர்களின் சட்டைப்பைக்குள் போகிறது. ஏழைத் தொழிலாளர்களின் உயிரை நசுக்குவதற்கென்றே அவர்கள் இங்கு வந்திருக்கிறார்கள். தொழிலாளிகளுக்கு அரிசியைப் பகிர்ந்தளிப்பதாகச் சொல்லியே அவர்கள் அதிக ஆதாயம் தேடுகிறார்கள். அரிசிக்கணக்கில் ஆதாயம் காட்டிய ஒரு தோட்டத்தை நானறிவேன். எல்லா வசதிகளையும் அவர்கள் அனுபவிக்கிறார்கள். உங்களுக்கு உணவில்லை; நீங்கள் பட்டினி கிடக்கிறீர்கள். ஆனால் அவர்கள் தங்களின் குடிவகைச் செலவுக்கு அந்த ஆதாயத்தை பாவிக்கிறார்கள். அப்படி அவர்கள் செய்யும் செலவு நூறு குடும்பங்களைப் பட்டினியிலிருந்து காக்க ஆகும் செலவு. நீங்கள் ஒன்பது மணிநேரம்தான் வேலை செய்ய வேண்டும். ஆனால் தோட்டங்களில் உங்களை பன்னிரண்டு மணிநேரம் வேலை வாங்குகிறார்கள். அப்படி மேலதிகமாக செய்யும் 3 மணி நேரத்துக்கு உங்களுக்கு கூலி கொடுக்கப்படுவதில்லை. இது போன்ற ஏராளமான சட்டத்துக்கு புறம்பான செயல்களை அவர்கள் செய்கிறார்கள். அவர்களைக் கண்டு அஞ்சாதீர்கள்; ‘துரைமார்களைக் கண்டு பயப்படாதீர்கள்” என்ற அந்த இளம் வெள்ளைக்காரத் துரையின் ஆக்ரோஷமிகுந்த பேச்சைக் கேட்ட தொழிலாளர்கள் “சாமி! எங்கள் சாமி 1 என்று மலைகளில் எதிரொலிக்க குரலெழுப்பினர். 'நான் திரும்பவும் இலங்கைக்கு வருவேன். தொழிலாளர்கள் மத்தியில் வாழ்வேன். என்று அவர் சொன்னது நடக்கவில்லை. இந்த சம்பவங்களை அவர் வாயிலாகவே லண்டனில் கேள்விப்பட்டு தன்னுடைய “டு லீவ்ஸ் அன்ட் எ பட்” டின் கதாநாயகனை உருவாக்கினார் முல்க்ராஜ் ஆனந், அவரது ஆங்கிலநாவல் 1939ல், முதலில் லண்டனில் வெளியானது.
136 மலையகத்தமிழரின்வரலாறு

TLASLSSLSLSSLSLSSLMLLLLLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLSLASLLASLSLSLSLSLSLSLS
மறக்க முடியாத நிகழ்வுகள்
TSSiLSSLAJLSLSALSiLSLSASSiLS AASiLSSLALSLSSiLSSASSiLSAALLSSLSAJSiLS AAALSLiLS AJSiLSLSAJASLiLSS ASSiLSALSSiLS AJSiLSALSiLSAJSLSALSLiLSSAJLSiLSAJSLiLS AAALSiLS AJASSiLA ASiLSSASSSiLSSYJSLiLS
1939ன் கடைசி தசாப்தத்திலிருந்து தொழில்புரியும் இடத்தில் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். சம்பள உயர்வு கோரியும், தோட்ட
உத்தியோகத்தர்களை மாற்றும்படியும் கிளர்ச்சிகள் செய்தனர்.
10 - 01 -1940 ல் முல்லோயாவில் கோவிந்தன் சுடப்பட்டு இறந்தான். அவன் சுடப்பட்ட பின்னணியை விளக்கி சமசமாஜக்கட்சியினர் போர்க்கோலம் பூண்டனர். கலாநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா இறந்த கோவிந்தனின் மனைவிக்காக அற்புதமாக வாதாடினார். நாட்டின் பல தோட்டங்களில் வன்செயல்கள் தலை எடுத்தன. அதே ஆண்டு மே மாதம் பன்னிரண்டாம் தேதி பதுளையில் ஒரு பொது கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டம் போடுவதற்கு பதுளை நீதவானிடமிருந்து தடையுத்தரவு ஒன்றை வாங்கி பொலிசார் வைத்திருந்தனர். தடையையும் மீறி என். எம். பெரேரா கூட்டத்தில் பேசினார். திரண்டிருந்த மக்கள் ஆவேசப்பட்டனர். வெவஸ தோட்டத்து போராட்டம் சூடு பிடித்தது. தோட்டத்துக்கு வந்த பொலிசாரிடமிருந்து ஆயுதங்களை தொழிலாளர்கள் பறித்தெடுத்தனர். தோட்டத்துரை தோட்டத்தினின்றும் உயிர் பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டார். இடதுசாரி இயக்கம் தோட்டங்களில் ஏற்படுத்திய இந்த நிலைமையை சமாளிக்க முடியாத ஆங்கில ஆட்சியினர், துரைமார் சங்கத்தின் அழுத்தத்தால் மேமாதம் தலைவர்களை சிறையில் அடைத்தனர். அவர்கள் கடைசியில் - இருபத்து மூன்று மாதங்களின் பின்னர் 8-12-1942ல் சிறையையுடைத்துத் தப்பி, இந்தியாவுக்குச் சென்று தலைமறைவாயிருந்தனர். தலைமறைவுக்காலத்தில் கோவிந்தன் என்ற பெயரிலேயே கொல்வின் ஆர்.டி.சில்வா உலாவினார் என்பது, சுடப்பட்ட தொழிலாளிக்கு அவர் தந்த மரியாதையாகும். ரமணி என்ற பெயரில் பெரேரா
உலாவினார்.
மலையகத்தமிழரின்வரலாறு 137

Page 79
1940 ஜனவரி 10 முல்லோயா போராட்டம் நடந்தது. 1940 ஏப்ரல் எழுநூறு அளவில் திரண்டிருந்த தொழி லாளர்கள் கூடி தங்கள் துரையின் (ரம்பொடை தோட்டம்) மீது கல்லெறிந்தனர். மே இரண்டு கோஷ்டி மோதலில் நேஸ்ல தோட்டத்தில் ஐந்து தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். நீட்வூட் தோட்டத்தில் பொலிஸ் தாக்கப்பட்டனர். வெவல்றென தோட்டத்தில் 40 தோட்டத் தொழிலாளர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டனர். உடரதலயில் கங்காணி தாக்கப்பட்டு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார்.
வெவால்ஸ் தோட்டத்தில் GLIsr sólefTs தாக்கப்பட்டனர். தோட்டத்துரை பாதுகாப்புக்காக வெளியேற்றப்பட்டார். சென். அன்ரூஸ் தோட்டத்தில் துரை தாக்கப்பட்டார். அவரின் இருகைகளிலும் பலத்த காயம், 3 மாதங்களுக்கு மேல் வேலைநிறுத்தம் நீடித்தது.
இந்த 9 சம்பவங்களையும் அட்டவணைப்படுத்திய தோட்டத்துரைமார் சங்கத் தலைவர் 8-6-1940ல் ஆங்கில ஆட்சியில் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், வளர்ந்து வரும் அமைதியின்மை குறித்து எச்சரித்தார்.
15-7-1940, தொழில் அமைச்சில் கூடி "ஏழம்சத்திட்டம்’ ஒன்றை வகுத்தனர். தோட்டங்களில் யூனியன் அமைக்கும் பணிகளில் தொழிலாளர்களுக்கு உரிமை அளித்து, அவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசிக்கும் முடிவு எட்டப்பட்டது. இலங்கை இந்திய காங்கிரஸ், அகில இலங்கை இந்திய தொழிலாளர் யூனியன், அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியன் அதில் கைச்சாத்திட்டனர். ஆனால் தோட்டத் துரைமார்கள் 'ஏழு அம்சத்திட்டம் தமக்குக் கிடைத்த வெற்றி என மிதப்பாக நடக்கத் தொடங்கினர். இலங்கை இந்தியன் காங்கிரஸ் தனது ஆண்டறிக்கையில் (1941) “தோட்டத்துரைமாருக்கு வேலை நிறுத்த நடவடிக்கையிலிருந்த முழு பாதுகாப்பையும் அளிக்கும் இத்திட்டம், தொழிற்சங்க நடவடிக்கையை முற்றாக ஸ்தம்பிக்க வைத்துவிட்டது என்கிறது.
138 ഥഞുpിഗ്ലിrഖണ്ഡസ്ത്ര

இலங்கையின் பல தோட்டங்களில் வீசிய போராட்டக் கருத்துக்கள், புரட்சிகர சிந்தனைகள் ‘கந்தளா தோட்டத்திலும் வீசியது. லங்கா சமசமாஜக் கட்சியின் கீழ் அமைக்கப்பட்டிருந்த 'அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் கிளையொன்று ஆயிரத்து தொளாயிரத்து நாற்பதாம் ஆண்டு பெப்ரவரி மாதம் அத்தோட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தோட்ட நிர்வாகத்துடன் சேர்ந்திருக்கும் பெரியகங்காணி, கணக்குப்பிள்ளை, அவர்கள் தயவில் வாழும் சில தொழிலாளர்கள் என்று சிலரைத் தவிர மற்றெல்லாத் தொழிலாளர்களும் அச்சங்கத்தில் சேர்ந்தனர். பெரிய கங்காணி பிரட்டிலிருந்து தோட்டப்பிரட்டுக்கு அவர்களனைவரும் மாறியிருந்தனர். தோட்டத்தில் இதனால் பதற்றம் நிலவியது. சங்கம் சேர்த்த தொழிலாளர்கள் நிர்வாகத்தால் இனம் கண்டு பழிவாங்கப்பட்டனர். பெரிய கங்காணி பிடியிலிருந்து விலகி சுதந்திரக் காற்றை சுவாசித்த தோட்டக் கூலிகள் தொழிலாளர்களாக சுதந்திரமாக நடமாடத் தொடங்கினர்.
இந்த மாற்றத்தைத் துரைமார்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த மாற்றத்தை தொழிலாளர்கள் தமக்களிக்கப்பட்ட எல்லையற்ற சுதந்திரமாக விளங்கி கொண்டனர். அரசியல்வாதிகள் தொழிலாளர்களை பயன்படுத்தி தாங்கள் உயர்ந்தனர். தொழிலாளர்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டனர்” என்று, வால்டர் தல்கொடபிட்டியா, முன்னாள் அஸைஸ் கொமிஷனர், அன்றைய நிலைமையைப் பற்றி கூறுகிறார்.
தாங்கள் ஒவ்வொருத்தராக பழிவாங்கப்படுவதைக் கண்ட தொழிலாளர்களின் தோட்டத் தலைவர்கள் சிலர் ஈற்றில் தங்கள் தோட்டத்து துரையை, ஓரிரவில் நடுச்சாமத்தில் அவர் தன் பங்களாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது, தடிகளாலும், கம்புகளாலும்,இரும்புக்கம்பிகளாலும் அடித்தே கொல்லுகின்றனர். அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்களாகச் சந்தேகிக்கப்பட்டு ஏழு பேருக்கெதிராக ஒன்பது மாதங்கள் வழக்கு நடந்தது. ஈற்றில் இரு தொழிலாளிகள் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு தூக்கிலிடப்பட்டனர். 1942 பெப்ரவரி 27, 28 ம் தேதிகளில் போகம்பரைச் சிறையில் தூக்கிலிடப்பட்ட வீராசாமியும், வேலாயுதனும் அவ்விதம், தங்கள் உயிரை பலிகொடுத்த - தாம் வரித்துக் கொண்ட கொள்கைக்காக உயிர்ப்பலி கொடுத்த தொழிலாளர்களாய் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவர்கள். கொலைக்கு சதி திட்டம் தீட்டப்படுகையிலேயே
“கடைசியில் கொலை கண்டுபிடிக்கப்பட்டால் நாங்கள் அதற்கான பழியை ஏற்றுக் கொள்வோம் என்று அவர்கள் கூறுவதும், வழக்கு விசாரணையின் போது “தாம் சுற்றவாளிகள்”
மலையகத்தமிழரின்வரலாறு 139

Page 80
என்று தொடர்ந்து கூறுவதும், கடைசியில் தூக்குக்குபோகும் கடைசி நாளான இருபத்தாறாம் தேதி ஒரு கடிதத்தின் மூலம்,
"உலகில் ஏனைய சகோதரர்களுக்கு வாழ்த்துக் கூறுவதும், தங்கள் சங்கம் கடவுள் செயலால் முன்னேற்றம், அடைய வேண்டும் என்று விரும்புவதும்"
அவர்கள் தங்கள் உயிருக்கு தரும் விலையை உணர்ந்திருந்தனர் என்பதைக்
காட்டுகிறது.
*ன் நீர் FL3, LI KL ليتسايتك ಫಿ! - familio. rليrakة وه ډيسمتی سمجھـ م. ##ẻ r:& ? + & To? හී. يتال Firs. *** # డిం ఇదT". 1_
ಶಿಸ್ಟಿಕ್: ہم بی بیڑتے - سه تیم تلاش سع- ගී’’ .. Fi- “二芷 of di ru |
ل=سال 3 آیات بلئیے تو اسمبETiF;"
*7-リZ" 纥 : s
Alter Li ཚང་། གཡུ་ Fir - ysy'' 는 తా 'కాడ േ: دي؟ -+ $ 년 لی" و " هت
8.72 །
. et. * - ki 滋笠 菇笠 菲 毗 T. டிடிஆக் أعلا
#?Ž: ಶಿವ್ಲಿ'ನ್ತಿ ' * * .j. 筠、 "...' . . . リ s நீ " ", LL.J.S. يع السيع νυή تا از جای آمیخته
بقعه نمود اما با تی به خانم ""
ఛాl try 之霸 အိ်မှီဖွံ့`` 懿 . حمله ]Fتي **
கி"ே "ஃ:ஈர அர்.
ஆரம்பத்தில் சமசமாஜக் கட்சிப்பணிகளில் உழைப்பதற்கு, இந்தியக் கம்யூனிஸ்ட்கட்சி இலங்கை தோட்டத்தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்வதற்கு சில தமிழ் தெரிந்த ஊழியர்களை அனுப்பி உதவியது, ஆனால் அந்த
மலையகத்தமிழரின் வரலாறு
 

காலப்பகுதியில் வெளியான நூற்றுக்கு மேற்பட்ட வேலைநிறுத்தம் சம்பந்தமான எல்லா அறிக்கைகளும், உடனுக்குடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு பொலிஸ் கோப்பில் சேர்க்கப்பட்டன. முல்லோயா கோவிந்தன் சம்பந்தமாக ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு 4 மாத இடைவெளிக்குப்பிறகு, சுரவீர என்ற பொலிஸ்காரன் கோவிந்தனை. கொன்ற ஒரு கொலையாளி என்று கூறப்பட்டது. ஆனால் அந்த பொலிஸ்காரருக்கு எதிராகவோ, பொய்சாட்சி சொன்ன மற்ற பொலிஸ்காரருக் கெதிராகவோ ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மாறாக சுரவீர என்ற அந்த பொலிஸ்காரருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்தன. கந்தளா தோட்டத்து துரை க்ொலை வழக்கிலும் பொலிஸ்காரர்கள் பதவி உயர்வுபெற்றனர். முல்லோயா கோவிந்தன் சம்பந்தப்பட்ட மட்டில் அது ஏற்படுத்திய அரசியல் நெருக்கடி குறிப்பிடத்தக்கது. ஆளுநரின் ஆதரவு இருந்ததால், பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல், மந்திரிசபையின் உத்தரவை கிரிமினல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதைத் தள்ளிப்போட வேண்டும் என்று உதாசீனபடுத்தியதால், தன் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதற்கு டி.எஸ். சேன்நாயகா முன் வந்தார். அது பின் சமரசமாக முடிவெடுக்கப்பட்டது. (நிர்வாகத் திறமை கொண்ட ஆளுநர் மந்திரிசபை முடிவுகளை கனம் பண்ண வேண்டும் என்பது, 2003 ஆண்டு ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா காலத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.)
இலங்கையர் மயமாக்கல் ஆரம்பத்தில் அரச சேவையில் உருவாகியது. பின்னர் தோட்டத்துறையைத் தவிர்ந்த ஏனைய துறைகளுக்கும் அது கொண்டு செல்லப்பட்டது. அதை அடைவதற்காக பல சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
1. காணிச் சீர்திருத்தச் சட்டம் ფlau 19 — 1935 2. கிராமச் சபை மசோதா சட்டம் - 1938 3. மீன்பிடிச் சட்டம் இல 24- 1940 4. பேருந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம் இல 47 - 1942
முதலாவதுச் சட்டப்படி, நிலமற்ற விவசாயிகளுக்கும் மத்தியதர வகுப்பினருக்கும் முடிக்குரிய காணியை பகிர்ந்தளிக்கவும், அதில் இந்தியர்களுக்கு இடம் அளிப்பதில்லையெனவும் முடிவு செய்யப்பட்டது. இரண்டாவது சட்டப்படி கிராமப்புற தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை தோட்டத் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்டது. தோட்டங்களில் சிங்களவர்கள் தொழிலாளர்களாகப் பதிவுச் செய்யப்பட்டிருப்பது குறைவானதாக இருந்தமையால் அவர்களையும் சேர்த்தே இச்சட்டம் அமுலாக்கப்பட்டது.
மலையகத்தமிழரின் வரலாறு 国1

Page 81
மூன்றாவது சட்டப்படி, இலங்கைக் கடலில் மீன்பிடிக்க இலங்கையர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் அனுமதிபெற விண்ணப்பிக்க வேண்டும். நான்காவது சட்டப்படி, பேருந்து அனுமதிக்கு விண்ணப்பிக்கும் கம்பெனி 85 வீதமான பங்குகள் இலங்கையருக்கே இருக்க வேண்டும். பேருந்து சேவைக்கு விண்ணப்பிக்கும்போது முன்னுரிமை இலங்கையருக்கே
கொடுக்கப்படவேண்டும் என்றது.
இந்த நான்கு சட்டங்களும் இலங்கை வாழ் இந்தியர்களைப் பெரிதும் பாதித்தது. மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்தியர்கள் பாதிக்கப்பட்டனர். பேருந்துகளை சொந்தமாக நடாத்தி வந்த இந்தியர்கள் தொழில் புரிவதினின்றும் தடுக்கப்பட்டனர். தேசாய் தலைமையில் இயங்கிய இலங்கை - இந்தியர் சங்கமும் வள்ளியப்பா செட்டியார் தலைமையில் இயங்கிய இந்திய சேவா சங்கமும் முன்னின்று காலிமுகத்திடலில் கூட்டங்கள் போட்டு அதை எதிர்த்தனர். முயற்சி பலனளிக்காததால் இந்தியாவிலிருந்த மகாத்மாகாந்தியைத் தலையிடக் கோரினர். அவரது தூதுவராக ஜவகர்லால் நேரு இலங்கை வந்தார்.
இலங்கை அரசாங்கம் தன் கொள்கையைப் பிடிவாதமாகப் பின்பற்றியது 1939ல் நேரு வருவதற்கு முந்தைய மாதங்களில் 2500 இந்தியத் தொழிலாளர்களை ஒரே அடியாக நிறுத்தி இருந்தது. நேருவின் சாணக்கியம் ஒன்றும் கைகூடவில்லை. இலங்கை சிங்கள மந்திரிசபை அவரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுக்கவில்லை. மனம் நொந்த நேரு இலங்கை வாழ் இந்தியர்களை ஓரணியில் திரட்டி அவர்களுக்கென்று ஒரு ஸ்தாபனத்தைத் தோற்றுவித்தார். அதுவே இலங்கை இந்திய காங்கிரஸ் என்ற நாமந்தாங்கிய இயக்கம், 25 ஜூலை 1939ம் ஆண்டு தொடங்கப்பட்ட அந்த இயக்கத்துக்கு தலைவராக வி. ஆர். எம். லெட்சுமணன் செட்டியாரும் இணைச் செயலாளர்களாக ஏ.அஸிஸும், எச். எம். தேசாயும், பொருளாளராக டி.எம். வோராவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். இந்தியா திரும்பிய ஜவகர்லால் நேரு, திரும்பிய வேகத்திலேயே மூன்று நாள் இடைவெளியில் பம்பாயிலிருந்து ஒர் அறிக்கையை வெளியிட்டிருந்தார்.
“எனது இலங்கை விஜயம் நல்ல நோக்கத்தின்பால் அமைந்தது. ஆனால் பிரச்சினைகள் ஒன்றும் தீர்க்கப்படவில்லை. நிலைமைகளை
நாம் கவனமாக அவதானிக்க வேண்டும். இந்தியா தனது குடிமக்களை,
142 மலையகத்தமிழரின்வரலாறு

அவர்களின் நலவுரிமைக்கும், கெளரவத்துக்கும் பாதுகாப்பு கிடைக்காதவரையிலும் வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்காது. வகுப்புவாதத்தை நோக்காகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாகவும் இயற்றப்பட்ட இலங்கை சட்டங்கள், ஒரு சாராருக்கு எதிரான சட்டங்கள்”, அவரது அறிக்கை அகில இந்திய தேசிய காங்கிரஸ்ஸுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
வர்தாவில் 10-8-1939 ல் அ.இ.தே.கா கூடியது.
“இலங்கைக்குப் போன லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தம் கடின உழைப்பால் அந்த நாட்டில் வளம் சேர்த்தனர். அவர்களில் பலர் இலங்கையிலேயே குடியேறி வாழ்கின்றனர். அவர்களின் தாய்நாடு இலங்கைதான். அவர்களைப் போல அதிக காலம் வாழாத இந்தியர்களும், தம் கடின உழைப்பால் நீதியானதும், மேலானதுமான ஒரு நடவடிக்கையையே எதிர்பார்க்கின்றனர். இன்று ஏற்பட்டிருக்கும் நிலைக்கு அவர்கள் ஒரு வழியிலும் பொறுப்பில்லை. இந்த நிலைமையில் அபிவிருத்தி ஏற்படாத வரைக்கும், இலங்கைக்கு இந்தியாவிலிருந்து பயிற்றப்படாத தொழிலாளர்களை அனுப்புவதில்லை. அதற்கென இந்திய மண்ணில் செயல்படும் மண்டபம் கேம்ப் உடனடியாக
மூடப்படல் வேண்டும்.”
என்று தீர்மானித்தது. 1-8-1939ல் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு தொழிலாளர்கள் வருவதைத் தடைச் செய்தது.
கொழும்பில் இந்தியருக்கெதிரான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கை மந்திரிசபையினரின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் முகமாக பலநடவடிக்கைகள் செய்யப்பட்டன. கிரண்ட்பாஸ், ஆமர் ஸ்டீரிட், ஜிந்துபிட்டிய நகரங்களில் இந்தியர்கடைகளை பகிஷ்கரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களுக்கெதிரான அறிக்கைகளும், நோட்டீஸ்களும், கொழும்பில்
ஒட்டப்பட்டன.
தெரிந்தெடுக்கப்பட்ட உத்தியோகத்தர்களில் எவரும் தோட்டத் தொழிலாளியின் துயரத்தை அறிந்திருக்கவில்லை. லெட்சுமண செட்டியார் உடல்
நலக்குறைவை காரணம் காட்டி சில மாதங்களில் விலகினார். அவரிடத்துக்கு
மலையகத்தமிழரின்வரலாறு 143

Page 82
தெரிவான பெரிசுந்தரமும் உடல் நலக்குறைவை காரணம் காட்டி விலகினார்.
1.
2
3.
இந்தியாவின் "பூரண சுயராஜ்யத்துக்கு" உழைத்தல்,
. இலங்கையின் "பூரண சுயராஜ்யத்துக்கு" உழைத்தல்.
இலங்கை வாழ் இந்தியரின் நலவுரிமையைப் பேணலும், பாதுகாத்தலும்
. இலங்கை இந்தியாவின் உறவை வளர்த்தலும், பொது கொள்கைக்காக
உழைத்தலும்,
மேற்படி நான்கு குறிக்கோஞ்டன் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியக்
காங்கிரஸ்,
தனது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில்
இடையூறுகளைச் சந்திக்குமானால் அகில இலங்கை தேசிய காங்கிரஸ் கமிட்டியின்
ஆலோசனைப்படி செயற்படலாம் என்றும் ஒத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் நடாத்தி
உத்தியோகத்தர்கள் தெரிவாகும் வரைக்கும் கீழ்வருவோர் தற்காலிக குழு
அங்கத்தினர்களாக நியமிக்கப்பட்டனர்.
தற்காலிகக் குழு
1 திவான் பகதூர். ஐ. எக்ஸ் பெனா 11. திரு. வி. கே. குஞ்சிராமன் 2. திரு. எஃவ், தாதாப்பாய் 12. திரு. ஜி. மாயவதாரம்
3. திரு. எம். யூ கான் 13. திரு. ஏ. எஸ். ஏ. சாமி 4. திரு. எஸ்.ஆர்.எம். வள்ளியப்ப செட்டியார் 14. திரு. பி. டி. தானுபிள்ளை 5. திரு. எம். சுப்பையா 15. திரு. கே. சத்யவாகேஸ்வர ஐயர்
6. திரு. பிம்சிடங்கர்ஸி 16. திரு. எஸ். வைத்திலிங்கம் 7. திரு. எம். எஃவ் காணி 17. திரு. கே. நடேசய்யர்
8. திரு. டி. ஜி. மணிநாடர் 18. திரு. பெரி சுந்தரம் 9. திரு.ஜி.ஆர். மோத்தா 19. திரு.பி எஸ்.கே. வி பல்லக்கு
லெப்பே
10.திரு. எம். ஸி. ராஜு 20.திரு. ஆர். எம். எஸ்.சண்முகம்
21. திரு. எச். சந்திரம்
14

இடமிருந்து வளம் : முன்பரிசை:பெரிகந்தரம், தேசாய், சத்யமூர்த்தி, வெட்சுமணன் செட்டியார், கிரி, பாய்,அணபீஸ் இரண்டார்வரிசைகானிசண்முகம் மணிநாடார், பல்லக்கு லெப்டைடாேதா, இங்குரிஸ், கான், ஆர்தரம் ஆஃ8r. சாமி, மாயாதாரம், பேரைரா, வோரா, வைத்திலிங்கம்,
இந்தக் குழு 5-9-1940 வரை செயற்பட்டது. அதற்கடுத்த ஓராண்டுக்குள், தன8வர் பதவியிலிருந்து லெட்சுமண செட்டியார் உடல்நலக்குறைவினால் விலகிக் கொண்டு பெரிசுந்தரம் தலைவரானார். அவரது தலைமைப் பதவியில் அவர் பிரச்சினையை அணுகும் முறையில் விலகிநின்ற அளtஸ், அதையே காரணமாகக் கூறி, எஸ். சோமசுந்தரத்திற்கு தன் பதவியை விட்டு கொடுத்தார்.
1949ம் மாநாடு அட்டன் சரோஜினி' நகரில் நடைபெற்றது. அந்த மாநாடு நடைபெறும் வேளையில் கே.ராஜலிங்கம் இலங்கை இந்தியன் காங்கிரஸ்ஸின் தலைவராயிருந்தார். அவர் தன் தலைமையுரையில் மகாத்மா காந்தியின் கருத்துக்களையும் மகாகவி ரவீந்தரநாத்தின் கருத்துக்களையும் எடுத்துக் கூறி, இலங்கை வாழ் இந்தியர்கள் பிரஜாவுரிமை சட்டத்தால் எவ்விதம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் - முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான் என்று நெஞ்சுருக பேசினார். அவர் தன் பேச்சில்:
"இருபதாண்டுகளாக நாணிந்த மக்களோடு இணைந்து போராடுவது, மற்றவர்களைப் போல நாமும் ஒரு சமுதாயமாக கருதப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.தோட்டத் தொழிலாளியை தோட்டத் தொழிலாளியாகவே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது பெரிய பாவகரமானது. பிரஜாவுரிமை சட்டத்தை ஏற்று விண்ணப்பிக்கப் போகிறோமா, அல்லது முற்றாக அதை எதிர்த்து நின்று அதற்கு திருத்தம் கோரப் போகிறோமா”
மலையகத்தமிழரின் வரலாறு

Page 83
என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டுமென்று கூறினார். இலங்கையின் சட்டத்தினை ஏற்பதில்லையென முடிவெடுத்து, எவரும் விண்ணப்பிக்கப் போவதில்லையென்று மாநாட்டில் தீர்மானமானது. 22-4-1949 ல் அவ்விதம் முடிவு செய்யப்பட்டது.
முதலாவது மாநாடு கம்பளையில், இரண்டாவது மாநாடு கண்டியில்,
1943 மூன்றாவது மாநாடு பதுளையில், இந்தியாவிலிருந்து சந்தானம் வந்தார். அவரைப் பேசக்கூடாதென“தடுத்தனர் பொலிஸார். மீறி பேசிய அஸிஸ் மீது வழக்குத் தொடரப்பட்டது. கைதான அஸிஸ் 2000 ரூபா செலுத்திப் பிணையில் வந்தார்.
1944 நான்காவது மாநாடு அட்டனில், இந்தியாவிலிருந்து ராஜாஜி வந்தார். சீனியும் பாலும் போல சிங்களவரும் தமிழரும் வாழவேண்டுமென” அறிவுரை தந்தார்.
1945 கொழும்பில் மாநாடு, தொழிலாளிகளின் சம்பளம் 58 சதமாக உயர்த்தப்பட்டது. 1946 நுவரெலியாவில் மாநாடு. சோல்பரி கமிஷனின் வெள்ளையறிக்கையை அநீதியானதென கூறி ஹர்த்தால் செய்தனர். 1947 நாவலப்பிட்டியாவில் 1948 இரத்தினபுரியில் 1949 அட்டனில், 1950 மாத்தளையில், 1951வத்துகாமத்தில் 1952 பதுளையில் 1953 நாவலப்பிட்டியாவில் 1954 கம்பளையில்.
(இம்மாநாடுகளில் எழுப்பும் ஆட்சேபனைகளை அதிகாரவர்க்கம்
அரசியலில் பயன்படுத்தி சூறையாடி வந்துள்ளனர்.)
இரண்டாவது மகாயுத்தம் முடிந்து தோட்டங்களுக்கு துரைமார்கள் வந்திருந்தனர். துரைமார்களை எதிர்த்து பல இடங்களிலும் போராட்டங்கள் நடக்கத் தொடங்கிய நேரத்தில் தான், தோட்டத்தை, அரசாங்கம் எடுத்து விவசாயிகட்கு பிரித்துக் கொடுத்து பரீட்சித்து பார்ப்பது என்று உருளை வள்ளியைத் தொடக்கி வைத்தனர். “பொருளாதார உயர்வுக்காகப் போராட வேண்டிய தொழிலாளர்கள் அதைவிடுத்து தங்களை நோட்டீஸினின்றும் காப்பாற்றிக் கொள்ளும் மாற்று போராட்டத்தில் ஈடுபடவேண்டி வந்தது.” என்று ‘தோட்டத் தொழிலாளர் வீரப்போராட்டம் எழுதிய பி.ஆர். பெரியசாமி குறிப்பிடுகின்றார். (1957:17)
46 மலையகத்தமிழரின்வரலாறு

‘தோட்டத்தை சிங்கள விவசாயிகட்கு பிரித்துக் கொடுக்கத்தான் போகிறோம். நீங்கள் தோட்டத்தை விட்டுப் போகத்தான் வேண்டும் என்றனர் மந்திரிகள். முடியாது என்றனர் உழைப்பாளிகள். வீட்டுக்கு வீடு பொலிஸ் காவல், லயத்துக்கு லயம் முள்வேலி, கக்கூசுக்குப் போகவும் கட்டுப்பாடு, தண்ணிர் எடுக்கவும் தடை, விறகு பொறுக்கக்கூடாது. வீதிக்குப் போய் உணவுப் பொருள் வாங்கிவரக்கூடாது. அரிசி, மா, கொடார்கள். வழக்குக்கு மேல் வழக்கு, தொல்லைக்கு மேல் தொல்லை, ஆள வந்தோரே இவ்விதத் தீது புரிந்தனர். இந்த அநீதியை அகிலத்திற்கு தெரியபடுத்துவான் வேண்டி, கழனிவேலிப் பகுதியிலும், அட்டன் பகுதியிலும் எண்பதாயிரத்துக்கு அதிகமானோர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். (1957:18) என்று பி. ஆர். பெரியசாமி எழுதுகிறார்.
டி. கே. சுவாமி நாதன் - “இண்டியன் எமிகிரண்ட்” என்ற ஆங்கிலப்பத்திரிகைக்கு ஆசிரியராக இருப்பவர், இண்டியன் கொலோனியல் சொஸைட்டி' யின் அமைப்பாளர், 1916 ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். அவர் இந்தியர்கள் இலங்கைக்கு தோட்டத் தொழிலாளர்களாக வருவதை எதிர்ப்பவர். கொழும்பில் ஏற்பாடாகியிருந்த கூட்டத்தில் அவரை சபையினருக்கு அறிமுகம் செய்து உரை நிகழ்த்தியவர் பொன்னம்பலம் அருணாசலம் ஆவார். பொன்னம்பலம் அருணாசலம்தான் இந்திய வம்சத்தினருக்கு முதலாவது குரல் கொடுத்த அரசியல்வாதி ஆவார்.
“கல்வி அறிவில்லாத, அறியாமையின் இருளில் தவிக்கும் இந்த ஏழை, தனக்கெதிரானச் சட்டங்களையோ, ஆட்கட்டிகளின் தீச்செயல்களையோ, வேலை கொடுப்போரின் கொடுமைகளையோ எதிர்க்கும் சக்தியற்றவன்”
என்று இவர்களைப் பற்றிய இவரது படப்பிடிப்பு கவனத்துக்குரியது.
சமூக நடவடிக்கைகளுக்காக - சமூகத்தில் சுகாதாரம், மருத்துவ உதவி, முதலுதவி சிகிச்சை, என்று கவனம் காட்டிக் கொண்டிருந்த, தான் அமைத்த “சிலோன் சோஷியல் சேர்விஸ் லீக்” என்ற அமைப்பின் மூலம் 'கொலனியல் செகரட்டரிக்கு எழுதிய கடிதத்தில் பொன். அருணாசலம் இந்த மக்களைப் பற்றிய தன் கரிசனையைக் காட்டத் தொடங்கினார். அப்போதிருந்த சட்டம் - ஒப்பந்த உடைப்புச் சட்டம், வேலைக்கு வராத தொழிலாளியை கிறிமினல் குற்றவாளியாகக் கண்டது. “திங்கட்கிழமை வேலைக்கு வராதவர்களைச் செவ்வாய்கிழமை
சிறைக்கு அனுப்பி வைத்ததன் மூலம் தனது தோட்டத்தில் இராணுவக்
மலையகத்தமிழரின்வரலாறு 147

Page 84
கட்டுப்பாட்டைத் தோற்றுவித்து வெற்றி கண்டதாக” வெள்ளைக்காரத் துரைமார்கள் பெருமையாகக் கூறிகொண்டனர். இதில் என்ன வேடிக்கை என்றால், அவ்விதம் தண்டிக்கப்பட்டவர்கள் மீண்டும் அதே துரையிடம் வேலை செய்ய பணிக்கப்பட்டதுதான். 1912ம் ஆண்டு 160 பேரும், 1913ம் ஆண்டு 1462 பேரும் இவ்விதம் தண்டிக்கப்பட்டுள்ளதாக சட்டதுறை அலுவலகம் கூறுகிறது. மீண்டும் அவ்விதம் பழைய துரையிடம் போய் வேலை செய்ய மறுக்கும் பெண்களுக்கு கடூழியச் சிறைவாசம் விதிக்கப்பட்டது; சம்பளக்குறைவு என்று கூறும் ஆண்களுக்கு கீழ்ப்படியாமை குற்றத்துக்காக சிறைவாசம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து பொன். அருணாசலம் தன் 'சிலோன் சோஷியல் சேர்விஸ் லீக் மூலம் எழுதிய கடிதம் ஆங்கில ஆட்சியினருக்கு சினத்தை ஏற்படுத்தியது. துரைமார்கள் தமது தோட்டத்தில் இராணுவ கட்டுப்பாட்டின் மீது நம்பிக்கை வைப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். தகுந்த சம்பளத்தையும், தாராள குணத்தையும் பேணல் வேண்டும்” என்று பதிலுக்கு கடிதம் எழுதி, தன்னுடைய லீக்கின் மூலம் அந்த சட்டத்துக்கெதிரான போராட்டத்தைத் தொடர்ந்தார். அரசாங்கத்துக்கும், இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அது குறித்து எழுதினார். “காட்டு மிராண்டித்தனமானதும், கொடுமை மிகுந்ததும், நாகரிக நடைமுறைக்கு ஒவ்வாததுமான இச்சட்டங்கள் ஏற்புடையதல்ல” என்று அவர் மேற் கொண்ட நடவடிக்கைகளால் 1922ல் கடைசியாக அச்சட்டம் ஒதுக்கிக் கொள்ளப்பட்டது. சமூகநலத்தைப் பேணுவதை விட்டு சமூக சீர்திருத்தம் பற்றி லீக் பேச ஆரம்பிப்பது ஒரு தவறான முன்னுதாரணம் என்று கூறி “சேர்விஸ் லீக்”கின் எழுதிய கடிதத்தொனியில் அது குற்றம் கண்டது. லண்டனிலிருந்த ஆங்கில உத்தியோகத்தர்களை விட இலங்கையிலிருந்த ஆங்கிலேயர்களே அதிகமாக முரண்டு பிடித்தனர். இலங்கையின் சார்பில் பதிலிறுத்த அட்டோனி ஜெனரல் சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் அளிக்கும் தண்டனையை ஒரே அடியாக இல்லாமல் செய்யக் கூடாதென்றும், அது தோட்டத்தில் ஒழுங்கின்மையைத் தோற்றுவிக்குமென்றும், தோட்டசமூகத்தில் பெண்களும் ஆண்களைப்போல
குழப்பம் விளைவிக்கும் தகுதியை உடையவள்” என்று கூறினார்.
இலங்கை வாழ் மலையகத் தமிழருக்கு இலங்கை பாராளுமன்றத்தில் இடமில்லாமற் போனது மாத்திரமல்ல, இடதுசாரிகளின் பிரதிநிதித்துவமும், பதினெட்டிலிருந்து பதின்மூன்றாக குறைந்தது. முதலாவது பாராளுமன்றம் ஏப்ரல் 8ல் கலைப்பட்டது. ஏப்ரல் 28ல் தொடங்கிய சத்தியாக்கிரகம் பாராளுமன்றம் இரண்டாம் தேர்தல் நடந்து முடிந்த பின்னால் செப்டெம்பர் 16 ல் முடிந்தது. தேர்தல்
48 மலையகத்தமிழரின்வரலாறு

நடைபெற்ற தேதி 1952 மே 24, 26, 28, 30 என 4 நாட்கள் மொத்தம் 142 நாட்கள் நீடித்தது. எதிர்ப்பை சமாளிப்பதற்கு எஸ். பி. வைத்திலிங்கம் நியமன அங்கத்தவராக்கப்பட்டார். இந்த எஸ். பி. வைத்திலிங்கம் அரசாங்க சபை காலத்தில் தலவாக்கொல்லை பிரதிநிதியாக இருந்தவர். சத்யாக்கிரகம் குறித்து காங்கிரஸ் அங்கத்தவர்களிடையே ஒருமித்தக் கருத்து இருக்கவில்லையென்பதை மாத்திரமல்ல, எஸ். பி. வைத்திலிங்கம். நியமன அங்கத்துவ பதவியை ஏற்றது மக்களிடையே ஒரு நம்பிக்கையின்மை தோற்றுவித்தது. எஸ். பி. வைத்திலிங்கம் தனிபட்ட முறையில் டட்லி சேனநாயக்கா குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தவர். சத்யாக்கிரகம் நடைபெற்ற முதல் மூன்று நாட்களும் இலங்கையின் பத்திரிகைகளில் சத்யாக்கிரகத்தைப்பற்றி ஒரு செய்தியும் வெளிவரவில்லை. திட்டமிட்டு இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அதன்பிறகு சத்தியாகிரகத்தை விரும்பாத இந்திய வியாபாரிகளிடமிருந்து அவர்களின் சங்கத்தின் பெயரால் அறிக்கைகள்
விடப்பட்டன.
'கொங்கிரஸ் நியூஸ்' என்ற ஆங்கில ஏட்டின் மூலம் வெளி உலகுக்கு உண்மைத் தகவல்களை தர காங்கிரஸ் தலைமைப்பீடம் முடிவெடுத்தது. சத்யாக்கிரகம் ஆரம்பமாகி ஒரு கிழமைக்குப் பின்னர் 5-5-1952 லிருந்து தொடர்ந்து 35 வாரங்களுக்கு 16-1-1953 அது வெளிவந்தது. சத்யாகிரக சம்பவங்கள் அதில் பதிவாகி இருக்கின்றது. அஸிஸ், தொண்டைமான், வேலுப்பிள்ளை, ராஜலிங்கம் என்று பிரபலமான காங்கிரஸ் தலைவர்கள் மாத்திரமன்றி, அபயக்கோன் என்ற முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவரும் சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு பதின்மூன்று மணிநேரம் உண்ணாவிரதம் இருந்ததும் பதிவாகி உள்ளது.
1948 ம் ஆண்டின் பிரஜாவுரிமைச் சட்டத்தையும் 1949 ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தினையும் செல்லுபடியாகாதவை எனத் தீர்மானிக்குமாறு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்தது. இந்த இரண்டு சட்டங்களும் இலங்கை வாழ் இந்தியருக்கு பாராபட்சம் காட்டுகிறது எனக்கூறி இவைகளை செல்லுபடியற்றதாக்கவென கேகாலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு இலங்கை இந்தியன் காங்கிரஸ்ஸுக்கு சார்பாக முடிவானது. அந்த முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்த இலங்கை அரசாங்கம் மேல் நீதிமன்றத்தில் விண்ணப்பித்து கேகாலை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரான தீர்ப்பொன்றை பெற்றது. அத்தீர்ப்பை எதிர்த்து பிரிவு கவுன்ஸிலுக்கு இலங்கை
மலையகத்தமிழரின்வரலாறு 149

Page 85
இந்தியன் காங்கிரஸ் விண்ணப்பித்தது. அந்த மன்றத்தில் அரசாங்கத்தின் செயலுக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது. அதன் விளைவாக இச்சட்டங்களின் சட்ட
உரிமை நிலை நாட்டப்பட்டது.
1953 ஆகஸ்ட்டில் ரேஷன் அரிசி விலையுயர்வை எதிர்த்து இலங்கை முழுவதும் நடந்த ஹர்த்தாலில் இ. இ. கா. பங்கேற்கவில்லை.
நேரு - கொத்தலாவெல பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தன. அந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் டி. ஆர். பி சலுகையை ரத்துச் செய்தது. இலங்கையரல்லாதோர் தொழில்பெற மறுப்பு தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்தின் பேரில் மக்களை கள்ளத்தோணிகள் என சந்தேகித்து 'சிலேவ் ஐலண்டில் சிறைவைத்தது. இலங்கையில் வேலை செய்கிற தோட்டத் தொழிலாளிகள், தாம் இந்தியர்கள் என்பதை முதலில் நிரூபிக்க வேண்டி இருந்தது. இந்தியாவுடன் தொடர்புகள் எதுவுமே இல்லாதவர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு இலங்கை குடியுரிமை வழங்கப்படவில்லை. அவர்கள் இந்தியாவுக்கு எப்படி விண்ணப்பிப்பது? இந்தியா அவர்களை எப்படி ஏற்றுக்கொள்ளும், நாடற்றவர் நிலை உருவானது, இந்த ஒப்பந்தத்தின்போது சி. சி. றோய் (இந்தியத் தூதுவர்), சேர் ஒலிவர் குணதிலக்கா (கவர்னர்), சேர் ஜோன் கொத்தலாவலை (பிரதமர்) ஆகியோர், நேருவின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை. அவர்களுக்கு தனியான வாக்காளர் ஜாபிதா தயாரிக்கும் கொத்தலாவலையின் எண்ணம், அடுத்துவரும் தேர்தலில் வென்ற எஸ். டபிள்யூ ஆர். டி. பண்டாரநாயக்காவால் புறந்தள்ளப்பட்டது. நூலின் ஊசியில் நுழையும் ஒட்டகமென, பல பிரயத்தனங்களுக்கு பின்னால் வாக்களிக்கும் தகுதியைப் பெற்ற அவர்களை என் தனித்துக் காட்டவேண்டும். “அவர்களை அது இரண்டாந்தர பிரஜையாக்கிவிடும்.” நாடற்ற நிலைக்கு இவர்களே தள்ளப்பட்டனர்.
“தங்களுடைய விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படாததை எதிர்த்து நீதிமன்றம் சென்றவர்களில் - நூற்றுக்கு எண்பத்திரண்டு பேருக்கு சார்பாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் எடுத்தால் - இது இவர்களுக்கு எதிரான சட்டம் என்பதை புரிந்து கொள்ள முடியும்” என்று ஒரு இந்திய ராஜதந்திரி கூறினார்.
150 மலையகத்தமிழரின்வரலாறு

பிரஜாவுரிமைச் சட்டத்தை எதிர்த்து பத்திரிகைகளிலும், மேடையிலும், கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இளம் வயதினர் அவைகளால் கவரப்பட்டனர். இச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதியில் , இந்தியாவில் அவர்களுக்கு செய்யப்பட்டிருக்கும் புனர்வாழ்வு நடவடிக்கைகளை எடுத்துக்கூறும் அறிவுறுத்தல்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடிக்கப்பட்டு அவர்களிடையே வழங்கப்பட்டன. அவைகளின் பொய் மெய்கள் சில வருடங்களிலேயே இலங்கை பத்திரிகைகளில் கட்டுரைகளாக வெளிவரலாயின. இந்தியாவுக்கு போனவர்கள், இலங்கையில் உள்ளவர்களுக்கு எழுதிய கடிதங்கள், இங்குள்ளவர்களைத் தயக்கங் காட்டச் செய்தன.
1947 ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றவர்களில் குணசிங்காவும் அடங்குவார். லேபர் பார்ட்டியை 1928 ல் ஆரம்பித்து, தொடர்ந்து நடந்த தேர்தல்களில் வென்று, 1947 ல் நடந்த தேர்தலில் அவர் வெற்றிபெற்றதும் கவனிக்கத்தக்க ஒன்றுதான். நடந்த தேர்தலில் (1947) நேரடி போட்டியில் ஏ. ஈ. குணசிங்காவுடன் போட்டியிட்டுத் தோல்வியுற்றாலும், அதற்கு பின்னர் மத்திய கொழும்பில் நடந்த தேர்தல் போட்டிகளில் 1952ல், (32346 - 19843) 12503 அதிகபடியான வாக்குகளாலும், 1956ல், (45296 - 16678) 28618 அதிகபடியான வாக்குகளாலும், அவருடன் நடந்த நேரடி போட்டியில் பீட்டர் கெனமன் வெற்றிபெற்று, ஏ. ஈ. குணசிங்காவின் கோட்பாடுகளுக்கு இடமில்லையென்பதை நிரூபித்தார். அத்தோடு மட்டுமல்லாது, மார்ச் 1960, ஜூலை 1960, 1965, 1970, 1977 களில் நடந்த பொதுத் தேர்தல்களில் அதே தொகுதியில் நின்று சாதனைப் புரிந்துள்ளார். மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் தோல்வியுற்றதோடு (9086 - 918) இரண்டுமாத இடைவெளியில் மரணமடைந்ததால் கோ. நடேசய்யருக்கு, ஜி. ஆர். மோத்தாவுடனோ, அப்துல் அஸிஸுடனோ போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஒரு சோகம்; அப்துல் அஸிஸுக்கோ, அவரது சகபாடிகளுக்கோ போட்டியிடுவதற்கோ, போட்டியிட்டாலும் வெற்றி பெறுவதற்கோ வாய்ப்புகள் மூடப்பட்டன. இந்த முடிபுகளை வைத்துப் பார்க்கையில், 1947 தேர்தலுக்குப்பின்னர், தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிடும் உரிமைகளைத் தோட்டத் தமிழர்களுக்கு இல்லாது செய்தவர்களின் "சதித்திட்டம்” புரிந்து கொள்ளப்படவேண்டியதொன்றாகும்.
“1938 - 39 - 40 ம் வருடங்களில், தற்போது அரசாங்க மந்திரியாயிருக்கும் குணசிங்காவும், அவரது சகபாடிகளும் இங்கு வசிக்கும் இந்தியர்கள் நீர்கொழும்பு, கண்டி போன்ற பகுதிகளில் சிங்களவர்களின்
ഥഞുpിgിrഖണ്ഡസ്ത്ര 151

Page 86
காணிகளை வாங்கி வருகின்றனர் என்று துவேஷக் கூச்சல்களை கிளப்பி விட்டனர். பிரதமர் சேனநாயகாவும், பண்டாரநாயகா முதலிய மந்திரிகளும் 1940ம் வருடம் புதுடெல்லியில் இலங்கை இந்தியர் பிரச்சினை சம்பந்தமாக கலந்து கொண்ட மகாநாட்டில், இந்தியர்கள் சிங்களவரின் காணிகளை வாங்கி விடுகின்றனர் என்றே குற்றஞ்சுமத்தி அங்கலாய்த்தனர்” என்று கூறுகிற 9-3-1952 தேதியிட்ட இ.இ.கா. பதுளை ஜில்லாக் கமிட்டியின் பொதுக் காரியதரிசி ஏ. கே. கந்தசுவாமி வெளியிட்டுள்ள பதினோராவது ஆண்டு நிர்வாக அறிக்கையில்”
1) இலங்கை பிரஜாவுரிமைப் பெறுவதற்கு, இங்குள்ள இந்தியர்கள்
வெளிநாட்டில் காணிகள் வாங்கியிருக்கக் கூடாது.
2) காணியோ, வீடோ அல்லது வேறு சொத்துக்களோ வாங்காதவர்களாக
இருக்க வேண்டும். என்று கருதுபவர்கள்,
3) வீடோ வேறு சொத்துக்களோ இலங்கையில் இல்லையென்று காரணம் காட்டி அநேகருக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டிருப்பதேன்? என்று ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட கேள்வியை எழுப்பியது. தனது நிலைப்பாட்டுக்குச் சாதகமாக, 1941 செஷன்ஸ் பேப்பரை எடுத்துக் காட்டியது.
ஊவா மாகாணம் சம்பந்தப்பட்ட வரையில் பிரஜா உரிமை பதிவு சம்பந்தமான புள்ளிவிபரங்களை கீழ்வருமாறு அது தருகிறது.
母 ل w S 宙 "لج Sܡ * s l s | - སྡེlllཎྜི་རྩི་ 翡|翡|翡|翡|翡|翡 鹃 囊|翡|溪|逮黑|墨黑|溪翼 རྗེསྡུརྩེ་ 怪兽 接器 蟹蟹 ミ "|リぎ | ミ態 |ミミ業 ja | * |* |* |* |* |
9
111,57432,708 237 147 O 216 32,531
152 மலையகத்தமிழரின்வரலாறு

237 மனுக்களை ஏற்று, விசாரணை பண்ணி, குடியுரிமையளிப்பதற்கு 23 மாதகாலம் சென்றிருக்கிறது.
இலங்கை பூராவிலும் இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மனுக்களை இந்தியர்கள் சமர்ப்பித்துள்ளனர். இவைகளைப் பரிசீலனைக்கு எடுத்து, பிரஜாவுரிமை அளிப்பதை, காலந்தாழ்த்தி செய்வார்களாகையால், அடுத்த பார்லிமெண்டு பொதுத் தேர்தலில் இந்தியர் எவரும் கலந்து கொள்ளவோ, ஒட்டளிக்கவோ இடமில்லை. இதுவே சேனநாயகா அரசாங்கத்தின் உண்மை
நோக்கம் என்பது வ்ெளிப்படை.
சில ஆண்டுகளுக்கு முன் டொனமூர் அரசியல் திட்டத்தின் கீழ் வயது வந்த இந்தியர் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்த வாக்குரிமை படிப்படியாகப் பறிக்கப்பட்டு தற்சமயம் “ஆடு கிடந்த இடத்தில் மயிர் கூட இல்லை” என்ற நிலைமைக்கு வந்துவிட்டது. பிரஜாவுரிமை மனுக்கள் விசாரிக்கப்படாமலேயே இருக்கும் போது, பிரஜாவுரிமை வழங்கப்பட்ட சர்ட்டிபிக்கேட்டுக்கள் வேண்டுமெனக் கேட்பது விசித்திரத்திலும் விசித்திரமாகத் தோன்றுகிறதல்லவா?’ என்று கூறப்பட்டிருக்கிறது.
தற்காலிக வதிகை அனுமதி பெற்ற - டெம்பரரி ரெசிடன்ட் பேர்மிட் - பெற்றவர்களை டி.ஆர்.பி காரர்கள் என்று அழைப்பதுண்டு. பல புகழ்மிக்க எழுத்தாளர்கள், கலைஞர்கள், பேச்சாளர்கள் ஐம்பதுகளின் இறுதியில் இலங்கையை விட்டு போனதற்கு காரணம் அவர்களுக்கு தற்காலிக வதிகை அனுமதி மறுக்கப்பட்டதே.
தற்காலிக வதிகை அனுமதிக்கு மனுச் செய்தவர்கள் 1944ம் வருடம் முதல் 1949 ம் ஆண்டுவரை இலங்கையில் தொடர்ந்து வசித்ததாக அத்தாட்சிகள் சமர்ப்பிக்க வேண்டி இருந்தது. இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் தங்கியிருப்பவர்கள் அத்தாட்சியாக எதனை காட்ட முடியும்? அறிமுகமானவர்களின் கடிதங்கள்; வக்கீல், ஜே.பி, கம்பெனி முதலாளிகள், வர்த்தகர்கள் போன்றோரின் கடிதங்கள்; டி.ஆர்.ஓ, ஆராச்சி ஆகியோரின் கடிதங்கள் என்று எவையும் முடிவான அத்தாட்சிகளாக ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை; கணக்குப்புத்தகங்கள், ஆடிட்டரின் கடிதங்கள், பட்டியல், விலை ஜாப்தா, பில்கள்
முதலியவைகளுக்கும் அதே கதிதான்;ஹவுஸ் ஹோல்டர்லிஸ்டுகள் சமர்ப்பித்தால்
மலையகத்தமிழரின்வரலாறு 153

Page 87
அனுமதி வழங்கினார்கள்; அப்படி லிஸ்டுகளை ஐந்து வருடங்களுக்கும் தொடர்ந்து பெற எல்லாராலும் முடியாது போயிற்று. வருமானவரி செலுத்திய ரசீது உண்டா என்பார்கள் - அந்த அளவுக்கு வருமானம் பெற்றவர்களா இவர்கள்? மேலும், சென்ற வருடங்களில் மனுதார் பெயருக்கு வந்த கடிதங்களின் தபால் கந்தோரின் முத்திரையுடன் கூடிய கடிதஉறைகள் வேண்டுமென்பார்கள். 1949 ம் வருடத்தில் சட்டம் இயற்றப்பட்டது. அது அமுலுக்கு வந்தது அடுத்த 1950 ம் வருடத்தில். ஆனால் இந்தச் சட்டத்தின் கீழ் நியமிக்கப்படும் அதிகாரி இம்மாதிரி கேட்பார்களென்று, நாலைந்து வருடங்களுக்கு முன் கூட்டியே தெரிந்திருந்து குப்பை கூளங்களை எல்லாம் பதனப்படுத்தி வைத்திருக்க இவர்கள் என்ன ஜோசியர்களா? (இக்கால கட்டத்து சிரமத்தை எச். நெல்லையா எழுதிய நாவல்களில்
காணலாம்.)
இலங்கையில் நடைமுறைக்கு வந்த மானிங் அரசியல் திட்டம் (1921), டொனமூர் அரசியல் திட்டம் (1931), சோல்பரி அரசியல் திட்டம் (1947), இலங்கைக் குடியரசின் அரசியல் திட்டம் (1972), இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியல் திட்டம் (1978) என்பவைகளுள், சுதந்திர இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னைய இரண்டு அரசியல் திட்டங்களும் தமிழர்களின் உணர்வுகளை மதிக்காது செய்யப்பட்ட திட்டங்களாகும். கடைசியாக செய்யப்பட்ட திட்டம் இலங்கை குடிமக்களின் பதிவு செய்யப்பட்ட பிரஜை, மரபுவழி வந்த பிரஜை என்ற வித்தியாசங்களை இல்லாதொழிக்கிறது என்று கூறப்பட்டாலும் உண்மையில் பதிவு செய்யப்பட்ட பிரஜைகளை நித்திய அபாயத்துக்குள் வைத்திருக்கும் சட்டவாசகங்களைக் கொண்டதாகும். “ஐந்தாண்டுகள் தொடர்ச்சியாக வெளிநாடுகளில் தங்கியிருந்தால், அவன் நாட்டுரிமையை இழக்க வேண்டிவரும்” என்றும் “நடத்தை இந்த நாட்டுக்கு தீங்குபயப்பதாக மந்திரியால் கருதப்பட்டால் அவன் நாட்டுரிமையை இழக்க வேண்டிவரும்” என்றும் கூறியிருக்கும் வாசகங்கள் மலையகத்தில் (பதியப்பட்ட பிரஜாவுரிமைப் பெறுபவர்கள்) உண்டாகும் எழுச்சியை தடைசெய்வதல்லால் வேறென்னவாக இருக்க முடியும்? 1948 லிருந்து இலங்கை வாழ் இந்தியர்கள் ஐந்தாண்டு தொடர்ந்து இலங்கையிலிருப்பவர்களுக்கு இலங்கை குடியுரிமைக் கோருவதன் நியாயத்தைப் புரிந்து கொள்ளாதவர்களால் செய்யப்பட்ட
அரசியல் சட்டங்கள் வேறெப்படி அமைய முடியும்?
154 மலையகத்தமிழரின்வரலாறு

1947ம் ஆண்டு பொதுத் தேர்தல்
சனத்தொகை சனத்தொகை இனம் விகிதாசாரப்படி விகிதாசாரப்படி
கிடைக்கும் ஆசனங்கள் கிடைத்த ஆசனங்கள்
கரையோரச்சிங்களவர் 41 68 கண்டிச் சிங்களவர் 25
இலங்கைத் தமிழர் 12 长3 இந்தியத் தமிழர் 10 7 முஸ்லிம்கள் 6 6 மற்றையோர்
95 95
1960ம் ஆண்டு மார்ச் பொதுத் தேர்தல்
சனத்தொகை சனத்தொகை இனம் விகிதாசாரப்படி விகிதாசாரப்படி
கிடைக்கும் ஆசனங்கள் கிடைத்த ஆசனங்கள்
சிங்களவர் 106 123 இலங்கைத் தமிழர் 17 18 இந்தியத் தமிழர் 18 O முஸ்லிம்கள் 10 9 ஏனையோர் O
151 151
1947ல் தேர்தலில் எதிர்பார்த்த 10 எண்ணிக்கையைப் பெறாவிட்டாலும் அதற்கடுத்து வரும் தேர்தல்களில் மலைநாட்டு மக்களின் குடியுரிமைப் பிரச்சனையைக் காரணம் காட்டி, அவர்களுக்குரிய 18 எண்ணிக்கையினரையும்
சிங்களவர்களே பெற்றுவந்தனர்.
மலையகத்தமிழரின்வரலாறு
155

Page 88
1977ம் ஆண்டு தேர்தலில் தான் ஒரு பிரதிநிதியைத் தெரிந்தெடுக்க மலையக மக்களுக்கு முடிந்தது.
பெயர் 1970ம் பொதுத் தேர்தலில்
பெற்ற வாக்குகள்
சி. வி. வேலுப்பிள்ளை 170
பெயர் 1977ம் பொதுத் தேர்தலில்
பெற்ற வாக்குகள்
எஸ். தொண்டமான் 35743 அப்துல் அஸிஸ் 3026 டி. அய்யாத்துரை 916 ரொபர்ட் பெரேரா 604
நவரெலியா தேர்தல் தொகுதி
இது மூன்று அங்கத்துவர் தொகுதியாக 1977ல் விளங்கியது. தமிழ் வாக்காளர்கள் நிறைய இருப்பதால் மிகுந்த நம்பிக்கையுடன் தொண்டமான் இங்கு போட்டியிட்டார். தேர்தல் முடிவு அவருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. மூன்றாவது அங்கத்தவராகவே அவரால் வெற்றிபெற முடிந்தது. காமினி திசாநாயக்கா 65,903 வாக்குகளைப் பெற்று முதலாவது அங்கத்தவராகவும் அநுராபண்டாரநாயக்கா 48,776 வாக்குகளைப் பெற்று இரண்டாவது அங்கத்தவராகவும் தொண்டமான் 35,743 வாக்குகளைப் பெற்று மூன்றாவது அங்கத்தவராகவும் வந்தனர். அத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதியாகவே போட்டியிட்டார். “இவ்விதம் நிகழ்ந்தமைக்கு இந்தியாவிலுள்ள காந்திய இயக்கத்தின் பேரால் ஒரு வாக்கை காமினி திசாநாயக்காவுக்கு வழங்குங்கள் என்ற எமாற்றுப்பிரச்சாரமே காரணம்” என்று தொண்டமான்
தனது சுயசரிதை நூலில் கூறுகிறார். (தேயிலையும் அரசியலும் : 290)
156 மலையகத்தமிழரின்வரலாறு

காணிச் சீர்திருத்த மசோதாவினால் டெல்டா, சொய்சி, சங்குவாரி, டெவன் தோட்டங்களில் ஏற்பட்ட மக்கள் அவலங்களின் போது, அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கப்போவது யூ. என் பியினரே என்று காமினி திசாநாயக்காவின் கூற்றினால் பல தோட்டத் தொழிலாளர்கள் யூ. என். பியினராகவே மாறி இருந்தனர் என்றும் காரணம் கூறப்படுகிறது. எஸ். நடேசன் எழுதிய (மலைநாட்டு தமிழர் வரலாறு : 254)
இத்தேர்தலில் இடதுசாரி கட்சியினர் முற்றாக இருந்த இடம் தெரியாமல் அகற்றப்பட்டனர். தமிழ் கூட்டணியின் தலைவர், தம்கட்சி பதினெட்டு இடங்களைக் கைப்பற்றியதால், எதிர்கட்சித் தலைவராக உயர்ந்தார். இந்த இரண்டு அதி தீவிர நிலமைகளும் மக்கள் மனதில் ஓர் அச்சம் கலந்த எதிர்பார்ப்பை உண்டுபண்ணின. நாட்டில் கலவரம் உண்டாயிற்று. கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டன, கத்திகளும் வாள்களும் கொண்டு மக்கள் தாக்கப்பட்டனர் காடையர்கள் கூட்டாகச் சேர்ந்து கற்பழிப்புகளில் ஈடுபட்டனர். பொலிஸார் இவைகளைப் பார்த்துக் கொண்டு வாளாவிருந்தனர். கண்டி, மாத்தளை, வெகுவாகப் பாதிக்கப்பட்ட நகரங்கள் ஏழாயிரம் அகதிகள் மாத்தளை மாரியம்மன் கோவிலில் வைக்கப்பட்டிருந்தனர்.
“இனக்கலவரம் தோன்றிய பொழுது இந்திய வம்சாவளியினரின் நிலை சிக்கல் நிறைந்ததாகவே இருந்தது. பெருந்தோட்டங்களுள் “உறைநிலை வாழ்க்கை முறையில்” வாழுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள், இருந்த இடங்கள் அழிக்கப்பெற்று அகதிகளாக்கப்பட்ட பொழுதும் தாம் அதுவரை வாழ்ந்த வாழிட எல்லைகளுக்கு அப்பால் செல்லமுடியவில்லை” என்று கார்த்திக்கேசு சிவத்தம்பி கூறுவது (எல்லை தாண்டாத அகதிகள் நாவலுக்கான முன்னுரை 1-2 கவனிக்கத் தகுந்தது.
1977 தேர்தலில் வென்று மந்திரி சபையிடம் பெற்ற செளமியமூர்த்தி தொண்டமான், மூன்றாண்டுகள் கூட்டாதிருந்த காங்கிரஸ்சின் வருடாந்த மாநாட்டைக் கூட்டினார். 9,10,11 மார்ச் 1979ம் திகதிகளில் பதுளையில் நடந்த மாநாட்டுக்கு ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனாவையும் மந்திரி சபை உறுப்பினர்களையும் அழைத்திருந்தார். மலையகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தத்தின் தோற்றுவாயாக அமைந்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 157

Page 89
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோட்டம் விட்டு ஓடிவந்த தொழிலாளியை தேடி கைது செய்து வழக்குப் போட்டு மீண்டும் அதே தோட்டத்துக்கு அனுப்பிய அதே நிலமைதானே இருந்த வீடுகள் அழிக்கப்பட்டு அகதிகளானவர்கள், மீண்டும் அங்கேயே மீளமர்த்தப்படும் நிலை இன்றும் நிலவுகின்றது. நூற்றியெண்பது வருட காலத்தில் இந்த சமூகத்தில் ஏற்பட்ட மாற்றம் இவ்வளவுதானா?
1981ல் இரத்னபுரி, பலாங்கொடை, ஹப்புத்தளை என்று தலைவிரித்தாடிய பயங்கரம் ஆயிரக்கணக்கான மக்களைப் பாதித்தது. நாட்டின் தலைவர்கள் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளைப் பார்வையிட்டனர். இப்பகுதியில் யூ என். பி. பிரமுகர்கள் அதன் பின்னணியில் இருந்திருப்பது தெரிந்தது. தமிழ் நாட்டைச் சேர்ந்த எஸ். தனபதி என்பவர் கதிர்காமத்துக்கு யாத்திரை வந்தவர் கொல்லப்பட்டார். மக்களின் உணர்வுகள் தூண்டப்பட்டன. தமிழக மக்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். இரண்டாண்டுகளின் பின் யாழ்ப்பாணத்தில் பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டதன் எதிரொலியாக மீண்டும் கலவரம் ஏற்பட்டது. சொல்லிமாளாத துயரங்களுக்கு மக்கள்
உட்படுத்தப்பட்டனர்.
梁梁梁梁米
58 மலையகத்தமிழரின்வரலாறு

TSiLJSLMLLLLSLLLSLLLJLSLLiLMJSLMLSLMSSLAJSLSLMJSLMLSSLLLLLAALLLLLAJSSLSLMJSLALLLAJSLLLLSLLAJLSSLMLLLSSLAMLLSLJLSLLJSSLLLLLJ0LLLLLSLALJLLLSLLSJSLLS
மலையக மக்கள் சமூகம்
LLSLLSLLSJSLLSLLLSLAJLLLSLSSLSLSSLASJSSLSJLSLLLLLSLLLSLLiLSLSASJSSLSLSJSLiLAMSSLiLSLSAJLSLSLSLSLSLiLALSLSLSLMLLLLSSSLALLSLLLLSLLAJLSLiLJLSLALSLSLSLSLSLSLiLASJLSLSLAL0LSLiLSSLALiLSLSJLSLLLSM
இன்றைய காலகட்டத்தில் இலங்கை ஒரு பல்லினத்துவ நாடு என்று பலரும் ஏற்றுக் கொள்கின்றனர். எனினும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் அழுத்தங்கள் கருதி தொடர்ந்தும் சிங்கள இனம், பெளத்தமதம் என்பனவற்றுக்கு முதலிடம் வழங்கப்பட்டே வருகின்றது. இதனால் இலங்கையில் வாழ்கின்ற பல்லினத்தவர்களான சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர் மற்றும் ஏனைய சிறுபான்மை இனத்தவரிடையே தொடர்ந்தும் இன முரண்பாடுகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இதன் ஒரு பாரிய விளைவே இன்றைய இனப்பிச்சினையாகும். இதேவேளையில் மக்கள் மத்தியில் பல்வேறு சமூக, பொருளாதார, கல்வி, கலாசாரப் பிரச்சினைகளும் பல்கிப் பெருகிப்போய்விட்டன.
மலையக சமூகம் இன்று எல்லா விதத்திலும் பின்தள்ளப்பட்டு அரசியல், பொருளாதாரம், சமூகம், கலை, கலாசாரம் முதலானவற்றிலும் மற்றும் ஏனைய காரணிகளிலும் வளர்ச்சி குன்றியுள்ளது என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. எதிர்காலத்தில் இச்சமூகத்தினை மேற் சொன்னபடி சகலவிதத்திலும் முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டியதன் பாரிய பொறுப்பு இச்சமூகத்தின் சகல அங்கத்தவர்களின் தோளின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இச்சமூகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் முதலானோர் மீது இப்பொறுப்பு மிக அதிகமாக உள்ளது.
சமூகங்கள் தத்தமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான கதவுகள் அடைபட்டுள்ள நிலையில் முரண்பாடுகளையும், எதிர்ப்புக்களையும் சவால்களையுமே எதிர்நோக்குகின்றன. இத்தகைய முரண்பாடான சூழ்நிலையில் மலையக பெருந்தோட்டத் தொழில் துறையை பொருளாதார மூலமாகக் கொண்ட இந்திய வம்சாவளித் தமிழரின் நிலைப்பாடு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இச்சமூகத்தின் அரசியல் தலைமைகளின் செயற்பாடுகள் இச்சமூகத்தின் உண்மையான தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாக அமையவில்லை. எனவே இச்சமூகம் தொடர்ந்தும் பின் தங்கிய சமூகமாக இருந்து வருகின்றது.
மலையகத்தமிழரின்வரலாறு 159

Page 90
இதற்கு முக்கிய காரணம் இச்சமூகத்தின் அரசியல் தலைமைகளுக்கும், இச்சமூகத்தின் கல்விமான்கள், படித்தோர், அறிவுஜீவிகள், தொழில்சார் நிபுணர்கள் முதலானோருக்கும் மத்தியில் நிலவும் இடைவெளியாகும் என்பது வெளிப்படை, இதன் காரணமாக இவர்களின் வளம் இச்சமூகத்துக்கு கிடைக்காமல் மறுக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்ந்தும் இச்சமூகத்தின் நலன் மீது வெறுமனே அக்கறை செலுத்தும் பார்வையாளர்களாக மட்டுமே இருந்து வருகின்றனர். இவர்களது முழுமையான ஆற்றலை மலையகச் சமூகத்தின் எதிர்கால அபிவிருத்தி கருதி பயன்படுத்த வேண்டியதன் அவசியம் இப்போது தோன்றியுள்ளது.
மலையக மக்கள் சமூகம் என்னும் போது காலனித்துவ காலத்திலும் மற்றும் பல்வேறு காலப்பகுதிகளிலும் இந்தியாவின் தென்பகுதிகளில் இருந்து புலம் பெயர்ந்து இலங்கையின் பலபாகங்களிலும் வாழ்ந்து வருபவர்களும், குறிப்பாக மலையக பெருந்தோட்டங்களில் செறிந்து வாழ்பவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் என்று பொருள் கொள்ளலாம். இவர்களது சனத்தொகை இன்று தோராயமாக 12 இலட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
1970களின் தொடக்கத்தில் சுமார் 85 சத வீதமான மலையக மக்கள் தோட்டத்துறையை சார்ந்தவர்களாய் திகழ்ந்தனர். தற்போது குறைந்த பட்சம் 40 சத வீதமான மலையக மக்கள் தோட்டத்துறை சாராத பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 70களில் மேற்கொள்ளப்பட்ட காணி - சுவீகரிப்பு காணி சீர்திருத்த நடவடிக்கைகள் காரணமாக பெருந்தோட்ட காணி பரப்பு சுருங்கியமை, திறந்த பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் (1977ன் பின்பு) வர்த்தகத்துறையில் கணிசமான தொகையினர் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டமை. 70களின் பின்னர் படித்த அணி ஒன்று உருவானமை 83 வன்செயலின் பின்னர் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் பாதுகாப்பு கருதி சொந்த பிரதேசங்களுக்கு இடமாற்றம் பெற்று சென்றமையால் ஏற்பட்ட வெற்றிடங்கள் மலையக படித்த இளைஞர்களால் நிரப்பப்பட்டமை, புதிதாக உருவாகி வரும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கும், பொலீஸ், சமுர்த்தி உத்தியோகத்தர் கிராம சேவகர் பதவிகளுக்கும் மலையக படித்த இளைஞர்கள் சேர்த்துக் கொள்ளப்படுதல். தோட்டங்கள் தனியார் மயப்படுத்தப்பட்டதன் பின்னர் தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகளுக்கு அதுவரை இருந்த வேலை உத்தரவாதம் தோட்டத்துறையில் இல்லாமற் போனமை, நவீன மயப்படுத்தப்படாத தோட்டத்துறையில் தொழிலாளராக வேலை செய்வது
160 மலையகத்தமிழரின்வரலாறு

காலத்திற்கொவ்வாத ஒன்றாக புதிய தலைமுறையினரால் கருதப்படுதல் ஆகிய காரணிகள் இம்மாற்றத்தில் பெரிதும் செல்வாக்கு செலுத்துகின்றன.
இதனால் கடை சிப்பந்திகள், தோட்டத்துறை சாராத உதிரி தொழிலாளர் அரசாங்க உத்தியோகத்தர் தனியார் துறையிலும் தொழிற்சங்கங்களிலும் அரசு சாரா நிறுவனங்களிலும் உத்தியோகம் புரிவோர், சிறு வணிகர் நடுத்தர வர்த்தகர்கள் மரக்கறி விவசாயத்தில் ஈடுபடுவோர், சாரதிகள் என புதிய அணியினர் உருவாகியுள்ளனர். இப்புதிய வர்க்க சக்திகளின் மாற்றம் மலையக சமூகத்தின் தன்மையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. அத்தகு இரு பிரதான மாற்றங்கள் வருமாறு.
1 முன்னர் நிறுவனப்படுத்தப்பட்ட சமூகமாகத் திகழ்ந்த மலையக சமூகம் தற்போது நிறுவனப்படுத்தப்படாத சமூக சக்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சமூகமாக மாறிவருகிறது.
2. பாமரத்தன்மை கொண்ட பாட்டாளி வர்க்க அம்சம் மேலோங்கியிருந்த மலையக சமூகம் தற்போது சிறு முதலாளித்துவ தன்மை கொண்டதாக ஆகிவருகிறது.
48 முதல் 77 வரை அரசியல் பொது நீரோட்டத்திலிருந்து அந்நியப்பட்டிருந்த மலையக சமூகம் 77ல் தொண்டமானின் பாராளுமன்ற பிரவேசத்தோடு மீண்டும் அரசியலில் பிரவேசித்தது. 87ல் இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தத்தின் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபை தேர்தல்கள் வெகுஜன ஈடுபாட்டை மேலும் விரிவாக்கியது. அனைத்திற்கும் மேலாக 87ல் வாக்குரிமை மீண்டும் வழங்கப்பட்டமையும் 916) உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடவும் வாக்களிக்கவும் வாய்ப்பு கிடைத்தமையாலும் தேர்தல் அரசியல் வெகுஜன தன்மை பெற்றது. அதுவரை சலுகைப்பெற்ற அணியினரின் ஏகபோகமாகத் திகழ்ந்த அரசியலில் சராசரி மனிதர்களும் பங்கு கொண்டு, போட்டியிட்டு அதில் குணாம்ச மாற்றத்தைக்கொண்டு வந்தனர். ஆனால் விகிதாசார தேர்தல்முறை ஒரு விதத்தில் இவ் வெகுஜன தன்மையைக் கட்டுப்படுத்தியது. இம்முறை வசதிபடைத்தவர்களுக்கும் கட்சிகளுக்கும் சாதகமான ஒன்றாக அமைந்துள்ளது. இல்லையேல் அரசியலில் வெகுஜன தன்மை இன்னும் அதிகரித்திருக்கும்.
மலையகத்தமிழரின்வரலாறு 161

Page 91
தேர்தல்களில் வெகுஜனங்களின் பங்கேற்பு அதிகரிப்பதன் எதிர்மறை விளைவுகள் இரண்டும் எம் சமூகத்தின் மீது பாரிய தாக்கங்களைக் கொண்டு வந்துள்ளன. முதலாவதாக இதுவரை தொழிற்சங்கங்கள் செலுத்தி வந்த ஏகபோக ஆதிக்கம் ஆட்டம் கண்டுள்ள அதேவேளை அரசியல்வாதிகளின் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. அடுத்ததாக அரசியல் பிளவுகளோடு தொழிற்சங்க பிளவுகளும் அதிகரித்து வருகின்றன.
மலையக சமூகத்தின் பரம்பல் 70களின் பின்னர் பாரிய
மாற்றத்திற்குள்ளாகியுள்ளது. இதனால் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பிராந்தியத்திற்கு பிராந்தியம் வேறுபடுகிறது. நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரமே வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அதனால் இம்மாவட்டம் சில தனி இயல்புகளைக் கொண்டிருக்கிறது. பதுளை மாவட்டம் வேறு சில குணாம்சங்களைக் கொண்டிருக்கிறது. கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்கள் வேறுபட்ட பல சூழ்நிலைகளைக் கொண்டிருக்கின்றன. காலி, மாத்தறை, களுத்துறை மாவட்டங்களில் வாழும் மலையகத் தமிழர் முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்கின்றனர். கொழும்பு மாவட்டத்தில் வாழும் மலையக தமிழரது நிலைமை வேறுவிதமாக உள்ளது. வடக்கு கிழக்கில் வாழும் இவர்களின் நிலைமை இவற்றிற்கு முற்றிலும் வேறுபட்டது.
ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் பல அமைப்புகள் தோன்றுவது வரலாற்று ரீதியில் தவிர்க்க இயலாத போக்காகும். இதற்கு வெளிநாட்டு உதாரணங்கள் தேவையில்லை. சிங்கள மக்களின் அண்மை கால வரலாறே போதும். 1918ல் உருவான இலங்கை தேசிய காங்கிரஸ் 1946ல் ஐ.தே.கட்சியாக மாறியபோதும் அது 1956ல் பண்டாரநாயக்கா தனது பூரீ லங்கா சுதந்திர கட்சியை அமைத்து ஆட்சிக்கு வரும் வரை சனத்தொகையில் 4 சதவீதமான படித்த செல்வந்த, மேல் - மத்தியதர வர்க்கத்தை மாத்திரமே பிரதிநிதித்துவப்படுத்தியது. திரு. பண்டாரநாயக்கா ஐ.தே.கட்சிக்கு எதிராக சிங்கள வெகுஜனங்களை தனது கட்சியில் அணிதிரட்டிய பின்னரே ஐ. தே.கட்சி தன்னை மாற்றிக் கொண்டது. 70களில் ஜே. ஆரின் தலைமையில் பல்வேறு வர்க்க அணியினரையும் உள்வாங்கக் கூடிய விதத்தில் அக்கட்சி புனருத்தாபனம் செய்யப்பட்டது. எனினும் இவ்விரு பிரதான கட்சிகளாலும் திருப்திபடுத்த
162
மலையகத்தமிழரின்வரலாறு

முடியாமற் போன ஒரு வர்க்க அணியினர் ஜே. வி. பியாக உருவாவதை தவிர்க்க முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கட்சி ஏகபோகம் செலுத்திய நிலைமை மாறிப் பல கட்சிகளும் பல்வேறு அமைப்புக்களும் தோன்றியுள்ளன.
இலங்கையில் மாத்திரமல்ல பாராளுமன்ற ஜனநாயகம் நிலவுகின்ற சகல நாடுகளிலும் குறைந்தபட்சம் இரு பிரதான கட்சிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. பாராளுமன்ற ஜனநாயகத்தின் ஒர் அம்சமாக அது மாறிவிட்டது.
“மலையக மக்கள் மத்தியிலிருந்தும் பல்வேறு அமைப்புகள் பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு காரணங்களால் பல்வேறு சக்திகளால் உருவாவதை இனி தவிர்க்க முடியாது. ஆனால் இந்த பிரிவுகள் பிளவுகளாக மாறி, முரண்பாடுகள் பகைமையுடைவையாக வளருமானால் மலையக சமூகம் தனது பேரம் பேசும் பலத்தை இழந்து பலவீனப்பட்டு சிதைந்து, சின்னாபின்னப்பட்டு போகும். நாம் ஆளப்படும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்த பெருந்தேசியவாத கட்சிகள்அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பிரிந்து பிரயத்தனங்களை மேற்கொள்ள முடியும் ஆனால் நாம் எமது கூட்டு பலத்தின் மூலம் தான் எதையும் பேரம் பேச முடியும்” என்கிறார் பி. ஏ.
காதா.
நடேச ஐயர் காலத்தில் 1931 முதல் 1948 வரை அவரது ஒரு தொழிற்சங்கம் மாத்திரமே மலையகத்தில் இயங்கியது. 1938ல் ல. ச. ச. கட்சி மலையகத்தில் மற்றொரு தொ. சங்கத்தை அமைத்தது. இருவருக்குமிடையே சித்தாந்த வேற்றுமை மாத்திரமே நிலவியது. பொதுப் பிரச்சினைகளில் இரு சாராரும் ஒன்றுபட்டு செயற்பட்டனர். உதாரணமாக பிரேஸ் கேர்டில் விவகாரத்தில் (1937) இரு தரப்பினரும் ஓரணியில் நின்று குரலெழுப்பினர். 1939ல் இலங்கை இந்திய காங்கிரஸ் அமைக்கப்பட்டது. 1940ல் முல்லோயா விவகாரத்தில் இருதரப்பினரும் செயற்பட்டனர். (பி.கு) நடேச ஐயரை தோற்கடிப்பதில் இலங்கை இந்திய காங்கிரஸ் 1947ல் தனது முழு பலத்தையும் பிரயோகித்தது. 1940 ஜனவரி 10ந் திகதி முல்லோயா தோட்டத் தொழிலாளி கோவிந்தன் சுடப்பட்ட சம்பவம் மற்றொரு சிறந்த உதாரணமாகும், ல.ச.ச கட்சியால் மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டத்திற்கு இ. இ. காங்கிரஸ் பூரண
மலையகத்தமிழரின்வரலாறு 163

Page 92
ஒத்துழைப்பு நல்கியது. ஜி. ஜி. பொன்னம்பலத்தை கமிஷன் விசாரணையின்போது தனது சார்பில் ஏற்பாடு செய்தது. இ.இ காங்கிரஸைச் சேர்ந்த திரு. சோமசுந்தரம் வகித்த பாத்திரம் இதில் முக்கியமானது. கொல்லப்பட்ட கோவிந்தனின் குடும்பத்தை அத்தோட்டத்துரை தொல்லைப்படுத்தி சாட்சியத்தை திசை திருப்பும் அபாயத்தை தவிர்ப்பதற்காக அக்குடும்பத்தை இரகசியமாக தோட்டத்தை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான ஓரிடத்தில் மறைத்து வைத்து விசாரணையின் வெற்றிக்கு அவரே வலிக்கோலினார்.
1941ல் புஸ்ஸல்லாவ - ஸ்டெலன் பர்க் தோட்டத்துரை போப் தோட்ட தொழிலாளரால் அடித்துக் கொல்லப்பட்டார். இவ்வழக்கின் தீர்ப்பின்படி வேலாயுதம், வீராசாமி, என்ற இரு தொழிலாளர்கள் 1942ல் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் ல.ச.ச.க யின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது ல.ச.ச.கட்சி தடை செய்யப்பட்டிருந்தது. அதன் தலைவர்கள் பலர் சிறையிலிருந்தனர். இவ்வழக்கை தொடர்ந்து நடத்த ல.ச.ச.கயின் தொழிற்சங்கத்திடம் பணபலம் இருக்கவில்லை. அப்போது சங்க வேறபாடு பாராமல் தனிப்பட்ட முறையிலே திரு. தொண்டமான் நிதி உதவி
நல்கினார்.
1948ல் இலங்கை சுதந்திரமடையும் போது மூன்று தொழிற்சங்கங்களே மலையகத்தில் இருந்தன. அவையாவன ல. ச. ச. கட்சியின் அகில இலங்கை தோட்ட தொழிலாளர் யூனியன் இ.இ.காங்கிரஸ், தொழிலாளர் யூனியன் (இன்றைய இ.தொ.கா.) இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் யூனியன் இவை சித்தாந்த ரீதியில் மாத்திரமே தனித்தனி அமைப்புக்களாக செயற்பட்டன. மற்றபடி சுதந்திர போராட்டத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் பொது ஐக்கியத்துடன் செயற்பட்டன என்பது உண்மைதான். ஆனால் ஒரு தொழிலாளி மற்றொரு சங்கத்தை சேர்ந்த தொழிலாளியை தொழிற்சங்க போட்டியால் வெட்டி கொலை செய்யும் அளவுக்கு சங்க போட்டிகள் அப்போது மோசமடையவில்லை. பொது ஐக்கியம் மேலோங்கி இருந்தது. நடேச ஐயரை இ. இ. காங்கிரஸ் சார்பில் போட்டியிட வைப்பதற்கான முயற்சிகள் கூட மேற்கொள்ளப்பட்டன.
64
மலையகத்தமிழரின்வரலாறு

ஆனால் 1956ல் இந்த நிலைமை மாறியது முதற்தடவையாக இ. தொ. கா. ஜ.தொ.கா. பிளவு தோட்ட தொழிலாளரை ஒருவரோடொருவர் மோதவிட்டது. ஒருவர் உயிரை மற்றவர் பறிக்க செய்தது. அதன் பின்னரே ஒரு தொ. சங்கம் நடத்தும் போராட்டத்தை இன்னொரு தொ. சங்கம் முறியடிப்பதற்கு நிர்வாகத்திற்கு துணைபோகும் போக்கு உருவானது. தோட்ட நிர்வாகம் இம் முரண்பாட்டை நன்கு பயன்படுத்திக்கொண்டது. இதன் உச்சக் கட்டத்தை 1966ல் நடைபெற்ற 17.50 பஞ்சப்படி போராட்டத்தின் போது காணக்கூடியதாய் இருந்தது. அரசு இம் முரண்பாட்டை சாதுர்யமாக பயன்படுத்திக்கொண்டது. இதனால் இப்போராட்டம் தோல்வி அடைந்ததுடன் மலையக தொழிற்சங்க இயக்கம்
பெரும் பின்னடைவைக் கண்டது.
இப்போராட்டத்தினை அடுத்து வழங்கப்பட்ட செக் - ஒப் சலுகையினால் தோட்டம் தோட்டமாகச் சென்று சங்க சந்தாப் பணத்தை அறவிடும் நிலைமை மாறியது. தோட்ட தொழிலாளரின் சம்பள ஏட்டில் சங்க சந்தாவைக் கழித்து நிர்வாகமே சங்க காரியாலயங்களுக்கு அனுப்பி வைத்தது. இதனால் மலையகத்தில் தொழிற்சங்கங்கள் பல்கி பெருகின. 1967க்கும் 1969க்கும் இடைப்பட்ட இரு வருடங்களுக்குள் 20 புதிய மலையக தொழிற்சங்கங்கள் உருவாகின இலங்கையில் 7பேர் இருந்தால் ஒரு தொழிற்சங்கத்தை தோற்றுவிக்க முடியும் என்ற நியதியிருப்பதால், இப்படி தொழிற்சங்கங்கள் தோன்றின. தொழிற்சங்கப் பணி என்பது வெகு பலருக்கு வெறும் தொழிலாகிப் போனது. மலையக தொழிற்சங்க
போராட்டங்கள் சங்கப் பிளவுகள் காரணமாக தோல்வியுற்றன.
இந்நிலைமையை ஐக்கிய முன்னணிகள் அமைப்பதன் மூலமே மாற்ற முடியும் என்பதை அனுபவரீதியாக உணர்ந்த தொழிலாளர் தாமாகவே தோட்ட மட்டத்தில் கூட்டு கமிட்டிகளை அமைத்து போராட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்கத் தொடங்கினர். பின்னர் பிராந்திய மட்டத்தில் முதலில் ஹட்டனிலும் பின்னர் பதுளையிலும் பல தொழிற் சங்கங்கள் ஒன்று கூடி கூட்டு கமிட்டிகளை உருவாக்கின. இதன் வளர்ச்சி கட்டமாக தொழிற்சங்க கூட்டு கமிட்டி உருவானது. அது பல
குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும் இரு மகத்தான வரலாற்று
மலையகத்தமிழரின்வரலாறு 165

Page 93
பணிகளை அது ஆற்றியுள்ளது. ஒன்று மாற்று கருத்துக்களை கொண்டிருக்கும் வெவ்வேறு தொழிற்சங்கங்கள் ஒன்று கூடி தீர்மானமெடுக்கும் ஒரே மையமாக அது திகழ்கிறது. இரண்டு தொழிற்சங்க பிளவுகள் பொதுவான வேலைநிறுத்தங்களை பாதிக்காமல் சங்கங்களுக்கிடையிலான உறவை சமநிலைப் படுத்தி பல வேலை
நிறுத்தங்களின் வெற்றிக்கு வழிகோலியுள்ளது.
இன்று அரசியல் பிளவுகள் எம்மிடையே முன்னொரு போதும் இல்லாதளவு அதிகரித்து பல்வேறு அமைப்புகள் தோன்றியுள்ள்ன. எனவே எமது பேரம் பேசும் பலம் சிதறிவிடாமல் பாதுகாக்கப்படுவதற்கும் எமது முரண்பாடுகளைப் பயன்படுத்தி அரசு எமது கோரிக்கைகளையும் போராட்டங்களையும் முறியடிப்பதை தவிர்ப்பதற்காகவும் பொதுவான கோரிக்கைகளை கூட்டுப் பலத்தால் வெற்றி பெறச் செய்வதற்கும் அதே வகையிலான அரசியல் கூட்டமைப்பு ஒன்று இப்போது தேவைப்படுகிறது. வரலாற்றிலிருந்து பாடங்களை நாம் படித்துக் கொள்ள வேண்டும்.
୫ ୫ ୫ ୫ ୫
66

LLSLiLSSLASLSLLLLSLLALSLALLSSLSLSSLSLSSLSASJLSLSLALSLASJLSLSLAJSLSLAJSLSLALSLSLSLSASJLSLALSLALSLSLSLALSSLLLLSLLAJSLSLASLLASLSLLLSLJSLSAJSLiLSLALLSAJSSLSLASLSAJSSLiiLS
தோட்டப்புறக் கல்வி
SLLLSASLSLSL AAALLLLSLLLLSLLAASLLLLSLLLLLSLLLLLSSASLSSLSLASLSLALLSSLSLSAMSLSALSLSLSLMLSSLALSLSSLASLSLLLLLSSLALSLSLALSLSLALSLSLSLAJLSSLSSLAMLSLSLALLSSLSLSLSLSJSLALLSLLSL0SLLSLALSLiLSLASJLSLLLLLS
Uப்டிஸ்ட்ஸ் மதத்தினர் தான் இலங்கைவாழ் இந்தியர்களின் கல்வியைப்
பற்றி முதலில் அக்கறை காட்டியதாக அறியக்கிடைக்கிறது. ரெவரன்ட் ஸி. டோசன் இதில் முன்னின்றார். 1842ம் ஆண்டு கண்டிப்பகுதியில் ஒரு பாடசாலையை நிறுவினார். குண்டசாலை ஜோர்ஜ் பேர்டும், லிண்டுலை ஏ. எம். பெர்குசன்னும்
தங்களின் கீழ்வேலை செய்தவர்களின் பிள்ளைகளின் கல்வியைப் பற்றி கரிசனை
காட்டியுள்ளனர். பப்டிஸ்ட் மதத்தினர் கண்டியில் செய்த கல்வி பணிகள் கண்டியில்
உள்ள சிங்கள மக்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டன. 1848 புரட்சியின் போது அவர்களுடன் சேர்ந்து தமிழ் கல்விப்பணி புரிந்த டி. கார்னியர் என்றவர்
சிறைவைக்கப்பட்டார். ஆளுநர் டொரிங்டன் (1847 -1850) காலத்தில் அவர்களின்
பணிகள் பின்னடைவு கண்டன. தமிழ் சேர்ச் மிஷன் என்று இன்றறியப்படுகிற
தமிழ்க் கூலி மிஷன் 1854ல் அமைக்கப்பட்டு, கூலிகளின் எழுத்தறிவை
வளர்ப்பதில் அதிக கவனத்தைக் காட்டியது. புசல்லாவை ஹெல்பொடையைச் சேர்ந்த இரண்டு துரைமார்கள், மதத்துறவிகளாகி தொழிலாளர்களிடையே
பணியாற்றினர். கிறிஸ்தவ மதபோதனைகள் தொழிலாளர்களிடையே
செய்யப்பட்டாலும் அவர்களில் பலர் இந்து மதத்தின் செல்வாக்கை
விடமுடியாதிருந்ததையும், இந்து மதத்தின் வருடாந்த கொண்டாட்டங்களில்
மகிழ்ச்சியுடன் கலந்து கொள்வதையும் காணலாம்.
பெரியகங்காணிகள் திண்ணைப்பள்ளிகளை தோட்டங்களில் ஆரம்பித்து
எழுதுவதற்கும், வாசிப்பதற்கும், பிள்ளைகளுக்கு படித்துக் கொடுத்திருக்கின்றனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 167

Page 94
・活 பகுதி இடப்பெயர் ஆசிரியர் s 劃
궁 ·守y G邵 墅|拳
5. क உடுநுவர வெவல்கடை எஸ். சேகு மொஹிதீன் 28 Y Y யடிநுவர கன்னொருவ பொன்னம்பலம் 18 Y y தும்பறை கீழ் கம்பளை பங்கு தந்தை 32 Y w ́ தும்பறை புசல்லாவை பங்குதந்தை 28 Y ۷ தும்பறை "புசல்லாவை பங்குதந்தை 5 y
பாடசாலை புத்தகங்கள் சேர்ச் மிஷனால் வழங்கப்பட்டன. ஆதாரம் : 1864 வருடத்தைய அரசாங்க நிர்வாக அறிக்கை : பக்கம் 425
தோட்டப்புறங்களில் துரைமார்களின் ஆதரவையும், கங்காணிகளின் ஆதரவையும் பெற்றுதான் தோட்டப் பாடசாலைகள் அமைக்கப்பட்டன. அவைகளில் படிப்பிப்பதற்கென்று ஆரம்பத்தில் திருநெல்வேலி கிறிஸ்தவர்கள் கொண்டுவரப்பட்டனர். பின்னர் யாழ்ப்பாணத்தவர்களை சேர்த்துக் கொண்டனர். 1864ம் ஆண்டு அவ்விதம் படித்து, அறிவு பெற்றார்கள். தோட்டத்து வேலைகளை - கண்டக்டர், டீமேக்கர், கிளாக்கர் செய்வதற்கும் ஆசிரியர்கள், மதபோதகர்கள், பணிகளை செய்வதற்கும் திறமை பெற்றிருந்தார்கள் என்று ஜி. ஏ. ஞானமுத்து எழுதுகிறார்.
கல்விக்கான உந்துசக்தி, அங்குள்ள மக்களின் கலை, மொழி, சமூகத்தேவையிலிருந்தும், அவர்களிடையே பணிபுரிந்த மிஷனரிமார்களின் சமய அபிலாசைகளிலிருந்தும் வந்தது.
கங்காணிமார் நடத்திய இரவுப் பாடசாலைகள், அவர்களுடைய கட்டுப்பாட்டதிகாரத்தை தொடர்வதற்கும், தொழிலாளர்களின் வாரிசாக இன்னொரு தலைமுறை எழுத வாசிக்கத் தெரிந்தவர்களாக இருப்பதற்கும் வழிவகுத்தன. தமது பிள்ளைகளை இதற்கும் மேலாக இந்தியாவுக்கு அனுப்பி படிக்கவைக்கவும், நகர்ப்புறங்களில் சேர்ந்து ஆங்கிலக்கல்வி பெறவும் செய்தனர்.
தொழிலாளர்கள் மத்தியிலே இதற்கு ஆதரவு நல்கிய தோட்டத்துரைமார்கள், அடிப்படையில் தேவாலயங்களுக்குச் செல்லும் கிறிஸ்தவர்களாக இருந்தார்கள். தோட்ட நிர்வாகம் தமது பணிகளுக்கு இடையூறாக
168 மலையகத்தமிழரின்வரலாறு

இருப்பதாகக் கருதியவர்கள், தமது மனைவிமார்களின் மூலம் அதற்கு ஆதரவாக இருந்துள்ளனர்.
இந்த இருசாராரும் தொழிலாளர்களிடையே மிகப் பெரிய கல்வி விருத்தியை எதிர்பார்க்கவில்லை. கல்வி மூலம் ஒழுக்கத்தை எதிர்பார்த்திருந்தனர். அப்படி கொடுபடும் ஒழுக்கக்கல்வி தொழிலாளர்களை கொண்டு நடாத்துவதற்கு வழி சமைக்கும் என்று நம்பினர். இதையும் மீறி திறன் காட்டிய தொழிலாள வாரிசுகளை தம்முடனேயே வைத்து, ஆங்கிலக் கல்வி அளித்து, மதப்போதகர்களாக உருவாக்கியதும் உண்டு
தோட்டப் பாடசாலைகளிலும், நகர்ப்புற பாடசாலைகளிலும் தென்னிந்தியப் பாட புத்தகங்களும், அதையொற்றி இயற்றப்பட்ட வடபரிபாலன சபையினரின் புத்தகங்களும் பரவலாக பாவிக்கப்பட்டன. இச்சபை 1888ல் அமைக்கப்பட்டது. ஆண், பெண் என்ற இரு சாராரும் இணைந்து படிப்பதற்கு வழி செய்யப்பட்டிருந்தது.
மெதடிஸ்ட் சபையினர், ரோமன் கத்தோலிக்கச் சபையினர் புரட்டஸ்தாந்து சபையினர், அங்கிலிகன் சபையினர், லுதர்ன் சபையினர், செவன்த் டே அட்வென்டிஸ்ட் சபையினர் என்ற கிறிஸ்தவ மதத்தின் பல பிரிவைச் சார்ந்தவர்களும் தம்தம் பங்கிற்கு தோட்டப் பகுதிகளில் பள்ளிகளமைத்து பணியாற்றியுள்ளனர். அரசாங்க உத்தியோகத்தர்கள், உபாத்தியாயர்கள், சமூகத்தில் உயர் நிலையிலுள்ளவர்கள், வணிகர்கள் ஆகியோர்களின் உதவியுடன் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் நாவலப்பிட்டிய கதிரேசன் கல்லூரி, புசல்லாவை சரஸ்வதி வித்தியாலயம், பூண்டுலோயா கந்தசுவாமி கல்லூரி, பதுளை சரஸ்வதி வித்தியாலயம், மாத்தளை பாக்கியவித்தியாலயம் என்று பல கல்வி நிலையங்களை அமைத்தனர். சுவாமி விபுலானந்தர் கண்டி சீனியர் ஸ்கூல் அமைப்பதற்கு உதவினார். இவ்விதம் அமையப் பெற்ற இந்தப் பாடசாலைகளில் ஆரம்ப பாடங்களைப் பெற்றவர்கள் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும், தெல்லிப்பளை மகாஜன கல்லூரியிலும், யாழ்ப்பாண இந்துக் கல்லூரிகளிலும் படிப்பைத் தொடர்வதற்கு வழிகள் காணப்பட்டன.
1904 ஆம் ஆண்டு முதல் தோட்ட மக்களின் கல்விகுறித்து கவனம் காட்டப்பட்டது. அக்காலத்தில் தென்னக்கும்பர, ஸ்பிரிங்வேலி என்ற தோட்டங்களில் அரசாங்க பாடசாலைகள் இருந்தன.
மலையகத்தமிழரின்வரலாறு 169

Page 95
விபரம் 1904 1905
தோட்டங்களின் எண்ணிக்கை 1320 மாதிரிக்கு எடுக்கப்பட்ட தோட்டங்கள் 725 898 அரசாங்க பாடசாலைகளின் எண்ணிக்கை 2 2 துரைமார்களால் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 5 ши மிஷனரிப் பாடசாலைகளின் எண்ணிக்கை 36 58 தோட்டப் பாடசாலைகளின் எண்ணிக்கை 43 60 பள்ளிக்கூடம் செல்லக்கூடிய பையன்கள் 21, 098 23,690 பள்ளிக்கூடம் சொல்லக்கூடிய பெண்கள் 22,510 பள்ளிக்கூடம் செல்லக்கூடிய மொ.மாணவர்கள் re 46,200 பள்ளிக்கூடத்துக்கு சமூகமளிக்கும் ஆண்கள் 1598 பள்ளிக்கூடத்துக்கு சமூகமளிக்கும் பெண்கள் 167 பள்ளிக்கூடத்துக்கு சமூகமளிக்கும் மாணவர்கள் 1765
ஆதாரம் - எஸ்.எம். பரோஸ் அறிக்கை: 1905
ஸி. நவரட்ணாவினால் 1997- 9-26-27 தேதிகளில் சமர்ப்பிக்கப்பட்ட சமூக அபிவிருத்தி அமைச்சின் மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைத் தொகுதி.
தமிழ் கூலி மிஷனால் 1854 முதல் 15 தோட்டப் பாடசாலைகள் நடாத்தப்பட்டன. 1907ம் ஆண்டு துரைமார் சங்கத்தலைவராக இருந்த கிங்ஸ்மோர்டின் ஆலோசனை ஏற்கப்பட்டு சட்ட நிரூபண சபையில் கல்வி தோட்டங்களில் கட்டாயமாக்கப்பட்டது.
1924ல் பிறந்த கந்தையா 1939 ல் பிறந்த மீனாட்சி 1931ல் பிறந்த இராமசாமி 1939ல் பிறந்த கேசரியம்மா என்பவர்களை 1992ல் நேர்கண்டு, லைன் பாடசாலைகள் அக்காலப்பகுதியில் எவ்விதம் இயங்கின என்பதை எடுத்துக் கூறும் அஞ்சலா டபிள்யூ லிட்டில் அம்மையார் “லைன் பாடசாலைகள், இரவு பாடசாலைகள் என்பனவெல்லாம் பிரமாதமாக சேவையாற்றின என்று கருத முடியாது.” என்கிறார். “ஒரு காலகட்டத்தில் தமக்குரிய எல்லைக்குள் அவைகள் இயங்கின. அதிலும் குறிப்பாக மிஷனரி பாடசாலைகள், தோட்டங்களுக்குள் அந்நியர் புகமுடியாதென்ற கட்டுப்பாட்டுக்குள் என்னத்தைச் செய்திருக்க முடியும்” என்கிறார். தோட்டப்பகுதியில் கல்வி வளர்ச்சியை ஐந்து கட்டங்களாக அவர் காண்கிறார்.
170 மலையகத்தமிழரின்வரலாறு

1840 - 1869 : லயத்துப் பள்ளிக்கூடங்களும், மிஷனரிப்
பாடசாலைகளும் உருவான காலம்.
1869-1900 மேற்குறித்த பாடசாலைகளின் மெதுவான
வளர்ச்சிக் காலம்.
தோட்டப் பாடசாலைகள் அதிகளவு தோன்றியக் : 1948 ܚܝ 1900
காலம்.
1948- 1977 தோட்டப் பாடசாலைகள் உறுதி பெற்ற காலம்.
1977- 1992 பாடசாலைகளை அரசு பொறுப்பேற்ற காலம்.
19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மட்டுமே தோட்டங்களில் தோட்ட நிர்வாகிகளால் ஒரு சில பாடசாலைகள் திறக்கப்பட்டன. அரைச்சுவர் எழுப்பிய கொட்டில்களில், அற்ப சொற்ப தளபாடங்களுடன், அந்தபாடசாலைகள் திறக்கப்பட்டன. கல்வித் தராதரமும், தகுதியும் அற்றவர்களே ஆசிரியர்களாகவும் சேர்க்கப்பட்டனர். மாணவர்களுக்கு கல்வி புகட்டுவதற்காக பாடசாலை திறக்கப்படவில்லை என்பது புலனாகியது. தோட்டங்களிலுள்ள குழந்தைகளால் அங்குள்ள பயிர்களுக்கோ அல்லது தோட்டச் சொத்துக்களுக்கோ சேதம் உண்டாவதை தடுப்பதற்கே இந்தப் பாடசாலைகள் நிறுவப்பட்டன என்ற உண்மை நோக்கம் நிதர்சமானது. இதே நிலை தொடர்ந்து இந்த நூற்றாண்டின் முற்பகுதிவரை அதாவது, எழுத்து, வாசிப்பு, கணிதம் ஆகிய பாடபோதனைகளை புகட்டும் ஆரம்பக்கல்விக்கான உதவி நன்கொடைத் திட்டம் புகுத்தப்படும்வரை நீடித்தது.
1939ம் வருடம் கட்டளைச் சட்டத்தின் மூலம் தோட்டப் பிள்ளைகளுக்கு கல்வி வசதி செய்து கொடுப்பதை தோட்டத்துரைமார்களின் கடமையாகக் கூறிய அரசாங்கம் 1947ம் வருடம் ஒரு திருத்தத்தின் மூலம் தோட்டங்களில் ஒதுக்கப்பட்டுள்ள கட்டிடங்களில் அரசாங்கப் பாடசாலைகளை நடத்துவதற்கு வித்தியாபதிக்கு அநுமதி வழங்கியது. அதன்படி 35 தோட்டப் பாடசாலைகளை வித்தியாபதி ஏற்று நடாத்தினர். காலம் செல்லச் செல்ல அந்த முறையும், தோட்ட அதிகாரிகள் பாடசாலைக் கட்டிடங்களைத் தரும் முறையும் விடுபட்டுப் போயின. (இது குறித்த சித்தரிப்பை விளங்கிக் கொள்வதற்கு தெளிவத்தை ஜோசப் , ஜுன் 1977ல் மல்லிகையில் எழுதிய சோதனை என்ற சிறுகதையும், நூரளை சண்முகநாதன் மல்லிகையில் எழுதிய பெரியசாமி பி. ஏ. ஆகிவிட்டான் என்ற சிறுகதையும் உதவுகின்றன.)
மலையகத்தமிழரின்வரலாறு 17

Page 96
“அறிவும் அநுபவமும் உள்ள பொறுப்பு வாய்ந்த அரசியல் வாதிகள் கூட தோட்டப்பாடசாலைகளைப் பற்றி பிரஸ்தாபித்துள்ளனர். அனாதைப் பாடசாலைகள், என்றும் நாட்டுக்கே பெருத்த அவமானம் என்றும் தோட்டப் பாடசாலைகளை அவர்கள் வர்ணித்துள்ளனர். ஒரு நாளைக்கு இரண்டரை மணி நேரமே பாடசாலை நடைபெறுகிறது. பெரும்பாலான ஆசிரியர்கள் போதியளவு தராதரம் பெறாதவர்களாகவே இருக்கிறார்கள். ஒரு சிறு தொகையே சம்பளமாக அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. இவர்களில் சிலர் தோட்டக் காரியங்களில் பகுதி நேர வேலை செய்து தமது வருவாயை தேட வேண்டியிருக்கிறது. இதனால் இவர்கள் தமது ஆசிரிய தொழிலை இரண்டாவது தொழிலாகவே கருத வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது. மாணவர்கள் முதலில் மணலில் எழுதிப் பழகுகிறார்கள். பின்னர் 'சிலேட்டில் எழுதிப் பழகுவதுடன் அவர்களின் படிப்பு முடிவடைகிறது.”
மாணவர்களின் வகுப்பேற்றத் தரத்தையும், வித்தியாபதி சமர்ப்பிக்கும் அறிக்கையும் அடிப்படையாக வைத்தே தோட்டப் பாடசாலைக்கு நன்கொடை வழங்கப்படுகிறது. இந்த முறை கடைப்பிடிக்கப்படுவதன் ஒரே நோக்கம் ஆசிரியர்கள் அதிக கவனமெடுத்து நல்லமுறையில் மாணவர்களை படிப்பிக்க வேண்டும் என்பதே. ஆனால், இது செயலில் எவ்வளவோ துஷ்பிரயோகங்களுக்கு வழிவகுக்கிறது. வருடாந்த சோதனை நடக்கும் காலத்தில் மட்டும் மாணவர்கள் வீடு வீடாகச் சென்று அழைக்கப்படுகிறார்கள். அப்பொழுதுதான் அவர்களுக்கு புத்தகங்களும் சிலேட்டுகளும் விநியோகிக்கப்படுகின்றன. மாணவர்களின் வகுப்பேற்றம் கூட வித்தியாபதி பாடசாலைக்கு விஜயம் செய்ய அவகாசம் கிடைக்கும் வரை மாதக் கணக்காக நிறுத்தி வைக்கப்படுகின்றன.
“தோட்டப் பாடசாலைகளின் அபிவிருத்தியை அரசியல் குரோதத்தை முன்வைத்து நோக்காது முழுக்க முழுக்க கல்வி சம்பந்தப்பட்ட விஷயமாகக் கருதும்படி நாம் கல்விக் கமிஷனைக் கேட்டுக் கொள்கிறோம்”
(இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தேசிய கல்விக் கமிஷனுக்கு சமர்ப்பித்த மகஜர்)
நாற்பதுகளிலும் அதற்கு முன்னும் எமது இளைஞர்கள் பெற்ற கல்வி தோட்டங்களில் வேலை பெறும் காரணத்திற்காக மாத்திரமே. அவர்களுள் பெரும்பாலானோர் தலைமைக் கங்காணியினதும், தோட்ட ஊழியர்களினதும் பிள்ளைகளே. அரசாங்கத்திலும், தனியார் துறையிலும் ஏதோ வாய்ப்பினால் இடம் பெற்ற கல்வியறிவு, பெற்ற இளைஞர், தம்மை யார் என்று இனம் காட்டிக் கொள்ள
172 மலையகத்தமிழரின்வரலாறு

விரும்பவில்லை' (ஸி.வி.வேலுப்பிள்ளை செய்தியில் 1965/5/9ல் எழுதிய கட்டுரை)”
தோட்டப் பாடசாலையில் பெற்ற படிப்பு ஒருவனைத் தமிழை முழுவதாக பிழையற வாசிக்க விடுவதாயில்லையென்றால், நகர்ப்புற பாடசாலைகளில் பெற்ற படிப்பு அவனை சமுதாயத்தினின்றும் அன்னியப்படுத்த உதவியது.
தேசிய கல்விக் கமிஷனுக்கு மகஜர் கொடுத்ததோடு மட்டும் அமையாது. 26-8-1961ம் தேதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கமிஷன் முன்னிலையில் சாட்சியமளித்தது.
தோட்டப் பாடசாலைகள் சம்பந்தமாகக் கமிஷன் தெரிவித்த சிபார்சுகளால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கமிஷனின் இரு அங்கத்தவர்களான எஸ். நடேசன், எஸ். எச். பேரின்பநாயகம் என்ற இருவரைத் தவிர மற்றவர்கள் இனவாதியாக இருந்தனர். கல்வியைப் பெறுவதற்காக நீண்ட போராட்டம் தேவையாயிருந்தது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக் காலப்பகுதி முழுவதிலும் கல்வி மிஷனரிமார்களின் கையில் இருந்தது. இலங்கையில் இலவசக் கல்வியின் தந்தை என்று கூறப்படும் சி. டபிள்யூ. கன்னங்கரா இலங்கை சுதந்திரம் பெறுந்தறுவாயில் கல்விக் கொள்கையை நெறிபடுத்தினார். ஆனால் எவ்விதமான விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் 1961ல் தனியாரால் ஆரம்பிக்கப்படும் புதிய பாடசாலைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. கல்வி மீது அரசாங்கம் பூரண கட்டுப்பாட்டைச் செலுத்தியது. தோட்டச் சமுதாயம் இதன் பயன்களை அநுபவிப்பதற்கானச் சூழல் 1975க்குப் பிறகே தோன்றியது. தோட்டப்பாடசாலைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும் என்று கிளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1977ல் 404 தோட்டப் பாடசாலைகள் அரசாங்கத்தால் எடுக்கப்பட்டன. 1980ல் மேலும் 366 தோட்டப் பாடசாலைகள் எடுக்கப்பட்டன. அவைகள் அரசாங்கப் பாடசாலைகளாக் கப்பட்டவுடன், தோட்டத்துரைமார் தோட்டப் பாடசாலைகளுடன் உண்டான எல்லாவித தொடர்புகளையும் அறுத்துக் கொண்டனர். உரிய கட்டடங்கள், விளையாட்டு மைதானங்கள், முழுநேர ஆசிரியர்கள் இல்லாத பாடசாலைகள் இதன் காரணத்தால் திரிசங்கு நிலைக்கு ஆளாயின. தோட்டப்பகுதியில் பாடசாலைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்கள் நியமன பாராளுமன்ற உறுப்பினராயிருந்த அப்துல் அஸிஸ் மூலமும் , மஸ்கெலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஆரியதிலகா மூலமும், இக்குரலை தான் சார்ந்து நின்ற இளைஞர்
மலையகத்தமிழரின்வரலாறு 173

Page 97
முன்னணி தலைவர் இர. சிவலிங்கம் மூலமும் செயல்படுத்தவிழைந்தனர். ஆயின் 1977ல் கபினெட் அந்தஸ்தைப் பெற்ற தொண்டமான், அமைச்சரான சில ஆண்டுகளின் பின்னால் கல்வியில் கவனம் செலுத்த தொடங்கி அரசாங்க பணத்தை தோட்டங்களின் கல்விக்குச் செலவிட்ட பின்னரே இங்கு பாரிய மாறுதல்கள் தெரிந்தன.
தோட்டப்பகுதியைச் சார்ந்த இளைஞர், யுவதிகள், ஆசிரியர்களாக பரிணமித்தார்கள். 1980களில் அறிமுகம் செய்யப்பட்ட விசேட ஆசிரியத் திட்டங்கள் இதற்கு உதவின. பிராந்திய அலுவலகங்களிலும், தேசிய கல்வி அமைச்சிலும் பல தோட்ட இளைஞர்கள் அதிகாரிகளாக கடமையாற்றத் தொடங்கியுள்ளனர்.
மாகாணசபை அமைக்கப்பட்டதன் பின்னால், மாகாண கல்வியமைச்சை தம் பொறுப்பில் வைத்துக் கொள்வதை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வலியுறுத்தி வந்திருக்கிறது. மத்திய மாகாணத்தில் அதைத் தொடர்ந்தும் அமுல்படுத்தி வந்திருக்கிறது.
பாடசாலைகளுக்கு இரண்டு ஏக்கர் காணி கொடுப்பது அரசாங்கத்தின் கொள்கையாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தாலும் கண்டிப் பகுதியில் இப்படி நிலம் கொடுப்பதை ஜனவசம நிர்வாகம் மறுத்தது. இதை எதிர்த்து தொண்டமான் எழுதிய கடிதத்துக்குப்பிறகே அப்போது தோட்டத் தொழில் அமைச்சராக இருந்த ரஞ்சன் விஜேரட்ண எல்லாத் தோட்டங்களுக்கும் 2 ஏக்கர் நிலத்தை இலவசமாக கொடுக்க வேண்டும் என்று 25-07-1990ல் கடிதம் எழுதினார். கல்வி அபிவிருத்திக்கு தொண்டமானின் கபினட் அந்தஸ்துடனான அமைச்சு பெரிதும் பங்களித்துள்ளது என்பதை அவரது எதிரிகளே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
1970களில் தொண்டமானுடன் கருத்து மாறுபாடு கொண்டு இயங்கிய இர. சிவலிங்கம் 1998களில் அவருடன் இணைந்து கல்வி ஆலோசகராக இயங்க தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகள்
இலங்கைப் பெருந்தோட்டங்களில் அமைக்கப்பட்ட வீடுகள்
நிர்வாகத்தினரால் நிர்மாணிக்கப்பட வேண்டியனவாக இருந்தமைக்கு காரணங்கள்
உள்ளன.
174 மலையகத்தமிழரின்வரலாறு

1)
2)
3)
4)
5)
கோப்பிச் செய்கைக் காலத்தில் இருந்தே தென்னிந்தியத் தொழிலாளர்கள் இலங்கையில் நிரந்தரமாக வாழாது, அடிக்கடி இந்தியாவுக்குச் சென்று வந்தனர். தொழிலாளர்கள் வாழ்வதற்கு வீடுகள் அமைத்துக் கொடுக்காவிடில், அவர்கள் அத் தோட்டங்களில் வேலை செய்யத் தயங்கினர்.
தோட்டங்களிலேயே தொழிலாளர்களை நிரந்தரமாகத் தங்கச் செய்வதனால் நிர்வாகம் இலகுவானதுடன், உற்பத்தியையும் அதிகரிக்கச் செய்யக்கூடியதாக இருந்தது. கிராமங்களில் வாழ மறுத்ததென்னிந்தியத் தொழிலாளர்களிடமிருந்து உரியநேரத்திற்குக் கடமைகளைச் செய்விக்கக் கூடியதாக இருந்ததுடன் பல பிரிவுகளை உள்ளடக்கியிருந்த பெரிய தோட்டங்களில் தொழிலாளர்கள் நடந்து செல்ல வேண்டிய தூரங்களைக் குறைக்கக் கூடியதாகவும் இருந்தது.
தேயிலை, ரப்பர் ஆகிய பயிர்கள் இலங்கைத் தோட்டங்களில் அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், குறைந்த தொழிலாளர்களைக் கொண்டு அதி கூடியளவு வேலைகளை மிகக் குறைந்த செலவில் நாளாந்தம் செய்விக்க வேண்டியிருந்த காரணத்தால், நிரந்தரக் குடியிருப்புக்களைத் தோட்டங்களிலேயே அமைக்க வேண்டியிருந்தது. இவ்வாறு நிரந்தரக் குடியிருப்புக்களைத் தோட்டங்களில் அமைக்கும் போது, தொழிலாளர்களது அபிலாசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியேற்பட்டது.
தொழிலாளர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்ட காலங்களில் தோட்டத் தொழிலாளர்கள் மிகச் சிறந்த தோட்டங்களில் வேலை செய்ய விரும்பினர். மிகச் சிறந்த தோட்டங்களில் வீட்டு வசதிகள் சிறப்பாக இருந்தமை தொழிலாளர்களைக் கவர்ந்தது. வீட்டு வசதிகள் நன்றாக இல்லாத போது தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்குவதற்குத் தயங்கினர் என்பது இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
தோட்டத் தொழிலாளர்களது உடல்நலம் பேணப்பட வேண்டுமாயின் ஒரே சீரான குடியிருப்புக்களை அமைக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து இலங்கை அரசாங்கம் 1912 ஆம் ஆண்டில் 10 ஆம் இலக்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தினை இயற்றியதுடன் இச் சட்டத்தின் பிரகாரம் தோட்ட உரிமையாளர்கள் வீடுகளை அமைக்க வேண்டுமென நிர்ப்பந்தித்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 175

Page 98
மேற்கூறப்பட்ட காரணங்களினால் இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்தியவம்சாவளியினரது வீட்டுரிமை, 1981 ஆம் ஆண்டு வரை நிர்வாகத்தினருக்கே நூறு சதவீதமும் சொந்தமானதாக விளங்கிற்று. தோட்ட வீடுகளில் வசித்தவர்களுக்கு அவ்வீடுகள் சொந்தமாக வேண்டுமெனத் தொழிற்சங்கங்கள் நீண்ட காலமாக அரசாங்கங்களை வலியுறுத்திய போதும், அவ்வீடுகள் அவர்களுக்குச் சொந்தமாகவில்லை.
கோப்பிக் காலத்தில் இருந்த பெருந்தோட்டங்களில் வாழும் இந்திய வம்சாவளியினரின் செய் தொழில்களுக்கேற்ப அவர்களது தொழில் அந்தஸ்தும் குடியிருக்கும் வீட்டின் வகைகளும் நிர்ணயிக்கப்பட்டன. தொழில் அடுக்கமைப்புக்கேற்ப அந்தஸ்துத் தீர்மானிக்கப்பட்டு, உயர் அந்தஸ்திலுள்ள முகாமையாளர்கள் அல்லது தோட்டத் துரைகளுக்குப் பங்களா எனப்படும் பெரிய தனி வீடுகளும் தோட்ட உத்தியோகத்தர்களுக்குக் குவாட்டர்ஸ்' எனப்படும், குடிமனைகளும், தொழிலாளர்களுக்கு ‘லயங்களும் நவீன குடிசை வகை வீடுகளும் குடியிருப்பதற்கு வழங்கப்பட்டன.
பெரிய துரைமாருக்கும் சின்னத் துரைமாருக்கும் ஐரோப்பிய பாணியில் அமைந்த பெரிய பங்களா' வகை வீடுகள் வழங்கப்படும். பங்களா’க்கள் பல அறைகளைக் கொண்டவையாகவும், நிரந்தரக் கட்டிடங்களாகவும் பல ஆண்டுகளுக்கு நீடித்து நிலைக்கக் கூடிய சுவர்கள்,கூரைகள், யன்னல்கள், கதவுகள் கொண்டவையாகவும், மின் சக்தி வசதியுடையனவாகவும், தனியான மலசலகூடங்கள் உடையனவாகவும், மேலும் க்காதார வசதிகள் உடையனவாகவும், பெரிய வீட்டுத் தோட்டமுடையனவாகவும் விளங்குவதோடு, பெரும்பாலும் குன்றுகளில் அல்லது உயரமான மலையுச்சிப் பகுதியில் அமைந்தது, தோட்டத்தினைப் பார்வையிடக் கூடியதும், குழாய் நீர் கிடைக்கக் கூடியதுமான இடத்தில் அமைந்திருக்கும். முக்கியமாக உயர்நிலப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட பங்களாக்கள் பருவ காலங்களுக்கேற்பத் தட்ப வெப்ப நிலைமைகளைப் பேணக் கூடியனவாக அமைக்கப்பட்டன.
தோட்டத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உத்தியோகத்தர்களின் குடிமனைகள் குவாட்டர்ஸ்’ அமைக்கப்பட்டன. வெளிக்கள உத்தியோகத்தர்கள், தொழிற்சாலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் என மூன்று வகையான உத்தியோகத்தர்கள் ஒரு தோட்டத்தில் கடமை புரிவர். உத்தியோகத்தர்களது குடிமனைகள், பெரும்பாலும் அவர்கள் வேலை புரியும் இடத்திற்கு மிக அண்மையில் அமைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக
176 மலையகத்தமிழரின்வரலாறு

தொழிற்சாலையின் உயர் உத்தியோகத்தர் எனக் கருதப்படும் தொழிற்சாலை உத்தியோகத்தர்களின் குடிமனைகள் தொழிற்சாலைக்கு மிக அண்மையில் அமைந்திருப்பதனால் அவர்கள் இரவும் பகலும் தொழிற்சாலையினைக் கண்காணிக்கக் கூடியதாக இருக்கும். பெரிய துரைமார்களின் பங்களாக்களில், அல்லது பங்களாவுக்கு மிக அண்மையாகத் தோட்ட அலுவலகம் அமைந்திருப்பதோடு அலுவலக உத்தியோகத்தர்களது குடிமனைகளும் அமைந்திருக்கும். தோட்ட உத்தியோகத்தர்களது தொழில், அந்தஸ்து, சேவையாற்றிய காலம் குடும்ப அங்கத்தினர்களது எண்ணிக்கை தோட்டத் துரைக்கும் உத்தியோகத்தருக்கு மிடையேயுள்ள உறவு என்னும் பல காரணிகளுக்கேற்ப, உத்தியோகத்தர்களது குடிமனைகள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இக் குடிமனைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டனவாகவும், தொழிலாளர்களது இருப்பிடங்களை விட வசதிகள் அதிகமுள்ளனவாகவும்
காணப்பட்டன.
தோட்டத்தில் தொழிலாளர்கள் தங்குவதற்கென கோப்பிக் காலத்தில் நிரையான குடிசைகள் அமைக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களின் வதிவிடங்கள் பலவும் தற்காலிகமானவையாக விளங்கின. அவை களிமண், தடிகள்,வைக்கோல் அல்லது புல் என்பனவற்றைக் கொண்டு நிரையாக அமைக்கப்பட்டன. பெண்களும் குழந்தைகளும் பெருமளவில் இலங்கைக்கு வருமுன்னர் ஒவ்வொரு குடிசை அறையிலும் பக்கத்துக்கு நான்கு வீதம், நான்கு பக்கங்களிலும் அட்டாலை போன்று தட்டுக்கள் தரையிலிருந்து முகடுவரை அமைக்கப்பட்டு, சராசரியாகப் பதினாறு ஆண்கள் ஓர் அறையில் படுத்துறங்க வேண்டி இருந்தது. குடும்பமாக வாழாததால் இவ்வாறு செய்யக் கூடியதாக இருந்தது. தொழிலாளர்கள் குடும்பமாகத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கியதும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனி வாழிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டியேற்பட்டது. பெரிய தோட்டங்கள் பிரிவுகளாக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் தொழிலாளர்களுக்கு இருப்பிட வசதிகள் வேலைத்தலத்திற்கு அண்மையில் அமையக்கூடிய விதத்தில் செய்து கொடுக்கப்பட்டன. அதனால், தொழிலாளர்களது நடைத்தூரம் குறைந்ததுடன், சாதிப் பாகுபாட்டினைப் பேணக் கூடியதாகவும், ஒரளவு பாதுகாப்புடையனவாகவும் தொழிலாளர்களது பாரம்பரியப் பழக்த வழக்கங்களை அனுசரிக்கக் கூடியதாகவும்
அவை அமைந்தன.
மலையகத்தமிழரின்வரலாறு 177

Page 99
1877ஆம் ஆண்டில் லயங்கள் நீண்ட கட்டிடங்களாக அமைந்திருந்தன.
தோட்டத் தொழிலாளர்களின் சுகாதாரத்திற்கு கேடு விளைவித்தமையாலும் தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிட வசதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தித் தொழிலாளர்களை இலங்கையில் நிரந்தரமாகத் தங்கச் செய்வதற்காகவும், 1912ஆம் ஆண்டில் பத்தாம் இலக்க நோய்கள் (தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டம் இயற்றப்பட்டது. இச் சட்டத்தில் எடுத்துக் காட்டப்பட்ட பிரமாணங்கள், விதிகளுக்கு ஏற்பவே தோட்டங்களில் லயங்களை நிர்மாணிக்க வேண்டியிருந்தது. இதனால், ஒரேசீரான இருப்பிட வசதிகள் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
தொழிலாளர்களின் லயங்கள் ஈரத்தன்மையற்ற உயரமான இடங்களில் இயலுமானளவு சாய்வுகளின் கிழக்குப் புறமாக, குடிநீர் கிடைக்கத்தக்க இடங்களைச் சார்ந்து அமைக்கப்படல் வேண்டும். மலேரியா நோய் பரவியுள்ள மாவட்டங்களில் அமைக்கப்படும் லயங்கள், சதுப்பு நிலங்கள், அல்லது சேற்று நிலங்களிலிருந்து குறைந்தது 457 மீற்றர் தொலைவிலும், வெள்ளப்பெருக்கு ஏற்படாத இடத்திலும் அமைக்கப்படல் வேண்டும். நீர்நிலைக் கரைகளிலிருந்து மூன்று மீற்றருக்குள் இருப்பின் அவற்றில் நீர்க்கசிவு ஏற்படாதவாறு தடுத்தல் அவசியம், லயங்களைச் சுற்றி நாலாபக்கமும் குறைந்தது ஆறு மீற்றர் இடைவெளி இருப்பதோடு இரு லயங்கள் ஒன்றையொன்று நோக்கியவாறு இருப்பின் அவற்றிடையே 12:1மீற்றர் இடைவெளி இருத்தல் வேண்டும். ஒரு லயத்தின் அருகில் பிறிதொரு லயம் கட்டப்படுவதாயின் மூன்று மீற்றருக்குள் குறைந்தளவு இடைவெளி இரண்டுக்கும் இருத்தல் வேண்டும். இத் திறந்த வெளிகளில் மிருகங்கள் வளர்ப்பதற்கெனக் கட்டிடங்கள் கட்டப்படக் கூடாது, மிருகங்களை வளர்ப்பதாயின் லயங்களிலிருந்து 229 மீற்றருக்கு அப்பால் வளர்க்கப்பட வேண்டும் என்னும் விதிகளுக்கேற்ப லயங்களைக் கட்ட வேண்டியிருந்தது.
ஒரு நிரையில் அறைகள் கட்டப்பட்டவை ஒற்றை லயம் எனவும், முன் பின்னாக இரு நிரைகளில் கட்டப்பட்ட அறைகளைக் கொண்டவை இணை லயம் எனவும் அழைக்கப்படுகின்றன. நான்கு வருடங்களுக்கு மேல் குடியிருக்கக் கூடியதாக அமைககப்பட்டவை நிரந்தர லயங்கள் எனவும் நான்கு வருடங்களுக்கு மேல் குடியிருக்க முடியாதவை தற்காலிக லயங்கள் எனவும் அழைக்கப்பட்டன. தற்காலிக லயங்களது கூரைகள் கிடுகு, அல்லது புல்லினால் வேயப்பட்டும், சுவர்கள்
களிமண் கொண்டும் கட்டப்பட்டன.
178 மலையகத்தமிழரின்வரலாறு

இலங்கை சுதந்திரமடைந்ததன் பின்னர் பெருந்தோட்டங்களில் இரண்டு குடும்பங்கள் மாத்திரம் அருகருகே ஒரே கூரையின் கீழ் வாழ்வதற்காக இரண்டு அல்லது நான்கு அறைகளையும், தனியான விறாந்தை, சமையலறை, மலசலகூடம் என்பனவற்றையும் கொண்ட குடிசை வகை வீடுகள் அமைக்கப்பட்டன. இவை லயங்களைப் போலல்லாது நிர்மாணிப்பதற்கு அதிக செலவினை ஏற்படுத்தியதால் மிகக் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டன. ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆண்டில் பெருந்தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளியினரில் 16.33 சதவீதமான குடித்தனங்களும், உயர்நிலப் பிரதேசத்தில் 21.66 சதவீதமான குடித்தனங்களும் இடைநிலைப் பிரதேசத்திலும் தாழ்நிலப் பிரதேசத்திலும் முறையே 7.77, 10.0 சதவீதமான குடித்தனங்களும் குடிசை வகை வீடுகளில் வசிக்கக் கூடியதாக இருந்தது. பல்வேறு தொழில்களைப் புரிந்தோர் இவ்வகை வீட்டில் வாழ்ந்த போதும், இவ் வகை வீட்டில் வசித்தோரில் 69 சதவீதமான பிரதான குடியிருப்பாளர் வெளிக்களத் தொழிலாளர்களாக அல்லது தொழிற்சாலைத் தொழிலாளர்களாக
இருந்தனர்.
குடிசை வகை வீடுகளைக் கட்டுவதற்குப் போதிய நிதி வசதிகளற்ற சில தோட்டங்களிலும், மிகப் பழமையான லயங்கள் உள்ள தோட்டங்களிலும் குடிசை வகை வீடுகளைப் போலத் தோற்றமளிக்கும் மாற்றப்பட்ட இணைலயங்கள் அமைக்கப்பட்டன. நிரையாக உள்ள அறைகளில் சிலவற்றை முற்றாக இடித்து, வீடுகளுக்கிடையே இடைவெளியொன்று ஏற்படத்தக்கதாக இவ்வீடுகள் அமைக்கப்பட்டதோடு கூரை, யன்னல், அறைகள் என்பனவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. 1981ஆம் ஆண்டில் தோட்டங்களில் வாழ்ந்த இந்திய வம்சாவளிக் குடித்தனங்களில் 3சதவீதமானவர்களே இத்தகைய வீடுகளில்
வாழ்ந்தனர்.
தற்காலிக வீடுகளில் மிகக் குறைந்தளவு இந்திய வம்சாவளியினரே வாழ்ந்தனர். மூன்று பிரதேசங்களிலும் 133 சதவீதமான குடித்தனங்களும் உயர் நிலப் பிரதேசத்திலும் இடைநிலப் பிரதேசத்திலும் முறையே 11, 222 சதவீதமான குடித்தனங்களும் மாத்திரமே இவ்வகையான வீடுகளில் வசித்தனர். வீட்டு வசதிகள் குறைவாகவுள்ள தோட்டங்களில் மாத்திரமே தற்காலிக வீடுகள காணப்பட்டன. பெரும்பாலும் இவ்வாறான வீடுகள் மிகவும் மோசமான
நிலையிலுள்ள மிகப்பழமையான லயங்களாக விளங்கின. முற்றாக இடித்துத் தள்ள
மலையகத்தமிழரின்வரலாறு 179

Page 100
வேண்டிய நிலையில் உள்ள வீடுகளில் தற்காலிகமாக வாழ வழிவகுக்கப்பட்டவையாக இவை திகழ்ந்தன. புதிய வீடுகள் கட்டப்பட்டதும், அல்லது நல்ல நிலையிலுள்ள வீடுகளில் வாழக் கூடிய நிலையேற்பட்டதும் தற்காலிக வீடுகள் இடிக்கப்பட்டுத் தரைமட்டமாக்கப்படுவது வழக்கமாகும்.
இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த வீடுகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை 1920 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டவையாகும். இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் தோட்டங்கள் தேசிய மயமாக்கப்படும் என்ற அச்சம் நிலவியதால் வீட்டு வசதிகளில் கவனம் காட்டப்படவில்லை.தோட்டங்களில் தொழில் புரியாவிட்டாலும் தோட்டங்களில் தமது வீடு இருக்க வேண்டும் என்ற எண்ணம் பலரிடையே நிலவுகிறது. 1958, 1977, 1981, 1983 என்று தொடர்ச்சியாக நடைபெற்ற வன் செயல்கள் இந்த எண்ணம் இவர்களிடையே எழுவதற்கு காரணமாக அமைந்தன. கொலையுண்டும், பொருட்களை பறி கொடுத்தும்,சொத்துக்களை இழந்தும், இவர்கள் பட்ட துன்பங்கள் கணக்கிலடங்கா. தோட்டங்களில் பெருகி வரும் வேலையில்லாத் திண்டாட்டத்தால், தொழில் தேடி இவர்கள் நாட்டின் பல நகர்ப்புறங்களுக்குச் சென்றாலும், இரைதேடி அலையும் பறவைகள் இரவில் தம் கூடுகளுக்குத் திரும்புவதைப் போல, வார இறுதியில் அல்லது வருட விடுமுறையில் இவர்கள் வருவதற்கு இருக்கும் இடம் தோட்டத்தில் உள்ள வீடுகளே, தோட்டத்தில் உள்ள லயக்காம்பராக்களே தோட்டங்களில் இன்று லயக்காம்பராக்கள் மின்சார வசதிகளுடன், தொலைபேசித் தொடர்புகளுடன், தொலைக் காட்சி வசதிகளுடன் அமைந்திருந்தாலும், இந்த வசதிகளைப் பற்றி கனவிலும் நினைக்க முடியாத ஏழ்மையிலும், பரிதாபநிலையிலும் இன்னும் தொண்ணுாறு விதமானவர்கள் இருக்கிறார்கள்.
வரலாற்றில் வஞ்சிக்கப்பட்ட இந்த சமூகத்தினரிடையே சொந்த வீடு வைத்திருப்போரின் எண்ணிக்கை 10.2% என்று மத்திய வங்கி அறிக்கை கூறுகிறது.
தோட்டத்துறை ஆரம்பிக்கப்பட்ட நாட்களில் இருந்தே வேலை செய்யும் குடும்பங்களின் குடும்பத்தலைவர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டால் அல்லது விலகிக் கொண்டால் அல்லது ஒய்வு பெற்றால் அத்துடன் அக்குடும்பத்தில் யாரேனும் தோட்டத்தில் வேலை செய்யாவிட்டால் அக் குடும்பம் தோட்டத்தை விட்டு வெளியேறும். இந்த நித்திய வட்டத்திலிருந்து நிரந்தரமாக வெளியேறும் வழியில்லாத தொழிலாளர் குடும்பத்தில் ஒரிருவரை கல்வி வசதிபெற்று கரையேற்றி விடுவதும் மற்றவர்கள் அதே தோட்டக் காம்பராக்களில் இருந்து தொடர்ந்தும் தொழில் செய்வதும் நடைமுறையில் உள்ளது.
180 மலையகத்தமிழரின்வரலாறு

எழுபதுகளில் தொழிற் சங்கங்கள் எடுத்த நடவடிக்கைகளாலும், அரசாங்கம் மேற்கொண்டு வரும் வீடமைப்புத் திட்டங்களாலும் இன்று இது அவ்வளவு கடுமையாக பின்பற்றப்படுவதில்லை. தோட்டங்களில் அதிகரித்து வரும் வேலையில்லாத்திண்டாட்டங்களால் மத்திய கிழக்குக்குச் சென்று வரும் பழக்கம் தோட்ட மக்களிடையேயும் பரவிவருகிறது. லயக்காம்பராக்களை நிர்வாகம் பறிப்பதற்கானச் சூழலைத் தவிர்த்துக் கொள்வதற்காக - தொடர்ந்து மூன்று மாதங்கள் தொழில் செய்யாமலிருந்தால் ஒரு தொழிலாளி வீட்டுரிமையை இழக்கின்றான் - ஒருநாள் தோட்டத்தில் பெயர் போட்டால் போதும், என்ற நிலையை உருவாக்கிக் கொண்டு, பல குடும்பங்கள் இன்று உயிர்வாழ்கின்றன. கெலிவத்தை தோட்டத்தில் வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் இல்லாது, பக்கத்து தோட்டத்தில் இருந்து தொழிலாளர்களை தினந்தோறும் தோட்டத்து லொறியை அனுப்பி கொண்டு வரும் நிலவரம் தோன்றியுள்ளது.
தோட்ட ஆலயங்களுக்கும், நிறையவே செலவு செய்யும் வழக்கத்தை இத்தொழிலாளர்களிடையே காணலாம். தாமிருக்கும் லயக்காம்பிராக்களில், எந்தவிதமான அபிவிருத்திகளையோ, கட்டடச்சீர்த்திருத்தங்களையோ அவர்களால் செய்ய முடியாது என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் அவைகள் இன்று பெரும்பாலானவர்களால் உதாசீனப்படுத்தப்பட்டுவருகின்றன. லயக் காம்பிராக்களில் இட வசதி குறைவாக இருக்குமிடங்களில் மேலதிகமான அறைகள் கட்டப்படுகின்றன. வீட்டுக்கு வெளியே , உள்ள இடங்களில் அவை பொதுவாகக் கட்டப்படுகின்றன. அவைகளைக் கட்டுவதற்கு தோட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவ்விதம் முன் அனுமதி பெறவில்லையென்று காரணம் காட்டி, அவ்விதம் புதிதாக தம் சொந்தச் செலவில் கட்டியவர்களின் வீடுகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன. அவ்வீடுகளைக் கட்டியவர்கள் தொழில் செய்வதினின்றும் தடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நோட்டிஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது மிகவும் அநாகரிகமானச் செயல் என்பதை எடுத்துக் காட்டி, தொழிற்சங்கங்கள் செய்த எதிர்ப்பினால் வீடமைப்புத்திட்டங்கள் இன்று தோட்டங்களில் அமுல்படுத்தப்படுகின்றன.
தோட்டத்துறையுள்ள எல்லா நாடுகளிலும் இம்மாதிரியான லயக்காம்பராக்கள் இருந்தமையால் 1958ம் ஆண்டு உலக தொழிலாளர் ஸ்தாபனம் அவர்களின் வாழ்விடங்கள் குறித்த பிரகடனம் ஒன்றைச் செய்தது. அதற்கமைய தோட்ட உரிமையாளர்கள் தொழிலாளர்களின் வீடுகளைக் கட்ட பணிக்கப்பட்டனர். அப்போது தோட்டங்கள் வெள்ளையர்களிடமிருந்தது. இத்தோட்டங்கள் 1972ல்
மலையகத்தமிழரின்வரலாறு 181

Page 101
தேசிய மயமாக்கப்பட்டன. இன்று தோட்டங்களில் உள்ள தொழிலாளியின் வீடுகள், 1920ல் வெள்ளையரால் கட்டப்பட்ட நீண்ட லயக்காம்பராவா இருந்தாலென்ன, 1950க்குப் பிறகு கட்டப்பட்ட இரட்டை வீடாக இருந்தாலென்ன, 1978க்குப் பிறகு ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் கட்டப்பட்ட இரு இணை வீடுகாளயிருந்தாலென்ன எல்லாமே தோட்ட நிர்வாகத்தினரின் நேரடி மேற்பார்வைக்கு உட்பட்டவைகள் தான். ஆனால் , அவைகளை தம் சொந்தச் செலவில் பாதுகாக்க வேண்டிய நிலைமைக்கு தொழிலாளிகள் உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். தாமிருக்கும் வீட்டுக்குச் சொந்தம் கொண்டாட வேண்டியவர்கள் தொழிலாளிகள். தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சு ஒன்று ஏற்படுத்தப்பட்ட, பல புதிய திட்டங்கள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொழிலாளிகளின் வாழ்வில் ஒளி வீசக்கூடிய மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
கிழமைக்கு இரு முறையாவது லயங்களின் சுற்றுப்புறங்களைப் பார்வையிட தோட்டத்து மருத்துவர்கள் 1912ம் ஆண்டிலிருந்து பணிக்கப்பட்டனர். நாள்தோறும் லயங்களின் சுற்றுப்புறத்தையும், நீர்வழிந்தோடும் கான்களையும் சுத்தம் செய்வதற்காக 'வாசக் கூட்டிகள் நியமிக்கப்பட்டனர். வாசக்கூட்டிகள் மாதம் முழுக்க நாள் தோறும் தொழில் செய்யப் பணிக்கப்பட்டனர். அதைவிட தோட்டங்களில் இடம் பெறும் மரணவீடுகளில் தப்படிக்கவும், அவ்வாறு நிகழும் மரணங்களை மற்றவர்களுக்கு போய், கேதம் சொல்வதற்கும், அவர்களின் சேவையே பிரதானமாகக் கருதப்பட்டது.
தோட்டங்களில் தொழிலாளர்களின் முடி சீர்திருத்தப்பணிகளுக்காக முடிதிருத்துபவர்கள் அமர்த்தப்பட்டனர், துணிமணிகளைத் துவைப் பதற்குடோபிக்கள் அமர்த்தப்பட்டனர். இவர்களது பணியின் முக்கியத்துவம் கருதி தோட்டங்களில் பல்லாண்டுகளாக அமுலில் இருந்த எசமான் - வேலையாட்கள் சட்டத்திலிருந்து இந்த இரு சாராரும் விலக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிட்டு கூறப்பட வேண்டிய ஒர் உண்மையாகும். 1865ல் அமுலுக்கு வந்த எசமான் வேலையாட்கள் சட்டத்தின் கீழ் ஆசாரிமாரும், தப்படிப் போரும் விலக்கப்பட்டிருந்தனர் என்பதும், ஆக இந்நான்கு தொழிலும் தோட்டத் தொழிலுடன் நேரடி தொடர்பு கொண்டிருக்காவிட்டாலும், அவர்களது கூட்டு சமுதாய வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானதாக கருதப்பட்டது.
தோட்டங்களில் ஏற்பட்டு வரும் மாறுதல்கள் இந்த கிராமிய பழக்கவழக்கங்களைத் தோட்டப்புறத்தில் இன்று இல்லாது செய்து வருகின்றன.
182 மலையகத்தமிழரின்வரலாறு

காணிகள்
1796ல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட மதராஸ் சிவில் சேர்வண்ட்’கள் திறமையற்றவர்களாகவும், கிடைப்பதை சுருட்டிக் கொள்பவர்களாகவும் இருந்ததாக தன்னுடைய நூலில் ஏ. பி. எச். சந்தேரட்ன குறிப்பிடுகிறார். அவர்களின் நடத்தைகள் குழப்பங்களைக் கூட்டுவதாக இருந்தமையால், காலனித்துவ செயலாளர் அவர்களைத் திருப்பி அழைத்துக் கொண்டு 1798 ல் பிரட்ரிக் நோர்த்தை இலங்கை தேசாதிபதியாக நியமித்தார். அவர் கரையோர மாகாணங்களை எட்டு பிரிவுகளாக்கிவரிகளைச் சேகரித்தார். ஆனால், தன் கீழுள்ளவர்களை சேகரித்த வரிகளைக் கையாட விட்டிருந்தார் என்பதை அவருக்குப்பின் வந்த சேர். தோமஸ் மெயிட்லாந்து (1805-181) கண்டுபிடித்தார். மெயிட்லாந்து பகிரங்க சேவையில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள், சிங்களம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தினார். அதை அடுத்து ரொபர்ட் பிரவுன்றிக் காலம் (1812-1820) கண்டிய யுத்தத்திலேயே அவரது காலம் செலவழிந்தது. எட்வர்ட் பார்ன்ஸ் காலத்தில் (1824-1831) தமிழிலும் ஆங்கிலத்திலும், அறிவு பெறுபவர்களுக்குதான் பதவி உயர்வு தரப்படும் என்று கூறப்பட்டது. 1833 வரை பிரித்தானியர்களே நிர்வாக அலுவல்களைக் கவனித்தனர். அவர்களால் 1840ல் முடிக்குரிய காணிகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அச்சட்டத்தின்படி
“ஒருவர் தனது உபயோகத்திலுள்ள காணிகள் தவிர்ந்த ஒன்றோ, அதற்கு மேற்பட்ட காணிகளையோ வைத்திருந்தால் அவை அவருக்குச் சொந்தமாக மாட்டா”
மேற்படி சட்டத்தின்மூலம் ஏராளமான நிலங்களை பிரிட்டிஷார் கைப்பற்றிக் கொண்டனர். 1897ல் 'முடிக்குரிய காணிகள் ஒழுங்கமைப்புச் சட்டம் ஒன்றை அறிமுகம் செய்தனர். அச்சட்டத்தின் படி
“காணியற்ற மக்களுக்கு உணவு உற்பத்தியின் பொருட்டு நிலப்பங்கீடு செய்தல்” என்று
கூறப்பட்டது. அதன்படி தோட்டத்தொழிலாளர்களும் தமது வீட்டுக்கருகில் உள்ள நிலங்களில் உணவு உற்பத்தியிலிடுபட்டனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 183

Page 102
இச்சட்டங்களில் திருப்தியுறாத உள்ளூர் அரசியற்றலைவர்களின் வலியுறுத்தலால் 1927ல் மேற்படி சட்டங்களை ஆராயக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதன் சிபார்சின்படி 1935ம் ஆண்டு காணி அபிவிருத்தித் திட்டம்
சட்டமாக்கப்பட்டது.
காணி அபிவிருத்திச் சட்டம் முடிக்குரிய காணிகளைப் பங்கிடும் போது அதனை இலங்கையருக்கே பங்கிடப்பட வேண்டும் எனக்கூறியது. இங்கு இலங்கையர் என்ற பதத்திற்குள் யார் அடக்கப்படுவார்கள் என்பது 1927 இல் உருவாக்கப்பட்ட நில ஆணைக்குழுவின் சிபாரிசுகளுக்கேற்ப முடிவானது. நில ஆணைக்குழுவின் சிபார்சுகளின் படி இலங்கையர் என்ற பதத்திற்குள் சிங்களவர்கள், இலங்கைத் தமிழர், பறங்கியர், இலங்கை முஸ்லீம்கள், இலங்கை மலாயர் சமூகத்தவர் இலங்கையை தாயகமாகக் கொண்ட ஐரோப்பியர் என்பவர்களே
அடக்கப்பட்டனர்.
இந்திய வம்சாவளியினர் அடக்கப்படவில்லை. இதனால் 1939-1947க்கு இடைப்பட்டட காலங்களில் மலையகப் பகுதிகளில் கிராமிய விரிவாக்கத் திட்டங்கள் என்ற பெயரில் 148,562 ஏக்கர் காணிகள் குடியானவர், மத்தியவகுப்பினர் என்போர் மத்தியில் பங்கிடப்பட்ட போது இந்திய வம்சாவளியினராகிய மலையகத் தமிழ் மக்கள் அதில் சேர்க்கப்படவில்லை. மறுபுறத்தில் தோட்டங்களை கிராமங்களாக மாற்றுகின்ற போது கூட அங்கு குடியிருந்த இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு நடுத்தெருவில் விடப்பட்டனர். 1949 இல் இடம்பெற்ற உருளை வள்ளித் தோட்டச் சம்பவம் இதற்கு சிறந்த உதாரணமாகும். அங்கிருந்த இறப்பர் தோட்டத்தை சிங்கள மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தார்களே தவிர அங்கு வாழ்ந்த இந்திய வம்சாவளியினருக்கு பெயருக்காவது சிறிய நிலமாயினும் கொடுக்கப்படவில்லை.
இரண்டாவது சட்டமாகிய மீன்பிடிச் சட்டத்தின் இலக்கும் இந்திய வம்சாவளியினரை மீன்பிடித் தொழிலிலிருந்து தடுப்பதாகவே இருந்தது.
மூன்றாவது சட்டமாகிய பேரூந்து சேவை அனுமதிப்பத்திரச் சட்டம் பேரூந்துச் சேவையை நடாத்துவதில் இலங்கையருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறியது.
184 மலையகத்தமிழரின்வரலாறு

இச்சட்டங்கள் அக்காலத்தில் எழுச்சியடைந்த இலங்கையர் மயமாக்கம் என்ற கொள்கையின் பிரதிபலிப்பாகவே இருந்தது. உண்மையில் இலங்கையர் மயமாக்கம் என்பதன் மறைமுக கருத்து இலங்கையிலுள்ள அனைத்து வளங்களின் கிடைப்பனவில் இருந்து இந்திய வம்சாவளியினரை அப்புறப்படுத்துவதேயாகும். இதே காலப்பகுதியில் அரசாங்க ஊழியர்களைப் பொறுத்தும் இலங்கையர் மயமாக்கம் கொள்கை பலமாகப் பின்பற்றப்பட்டது. புதிதாக ஊழியர்களைச் சேர்க்கும் போது இந்திய வம்சாவளியினர் புறக்கணிக்கப்பட்டதுமல்லாமல்
ஏற்கனவே கடமையாற்றியவர்களும் பலவந்தமாக நிறுத்தப்பட்டனர்.
இவற்றைவிட 1937ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் சட்டமும் இந்திய வம்சாவளியினருக்கு எதிராக இருந்தது. டொனமூர் திட்டகாலத்தில் எஸ். டபிள்யூ ஆர்.டி. பண்டாரநாயக்கா உள்ளூராட்சி அமைச்சராக இருந்தபோது இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தின்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இந்திய வம்சாவளியினருக்கு மறுக்கப்பட்டது. ஆரம்பத்தில் தோட்டத்துறைகளில் இருக்கும் ஐரோப்பியருக்கும் இவ்வுரிமை மறுக்கப்பட்டாலும் பின்னர் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய வம்சாவளியினருக்கு தொடர்ச்சியாக மறுக்கப்பட்டே வந்தது. இவர்களுக்கு உள்ளூராட்சி மட்டத்தில் உரிமை கொடுப்பதானது அவர்களது அரசியல் ஸ்திரத்தை பலப்படுத்திவிடும் என்பதே இதற்கு காரணமாக அமைந்தது.
சட்டசபையில் இவர்களுக்கான வாக்குரிமையும் 1940 இல் மட்டுப்படுத்தப்பட்டது. இவர்களை வாக்காளர்களாக பதிவதற்கு இறுக்கமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமையாலேயே இம் மட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் 1931இல் 225,000 ஆக இருந்த இந்திய வாக்காளர் தொகை 1936இல் 168,000ஆக குறைந்தது. அதே வேளை ஏனையவர்களில் வாக்காளர் தொகை 1931 இல் 10,50,000 இலிருந்து 1940 இல் 26,35,000 ஆக அதிகரித்திருந்தது.
டொனமூர் அரசியல் திட்டத்தில் சிறுபான்மையோரைப் பாதித்த மூன்றாவது அம்சம் நிர்வாகக் குழு ஆட்சி முறையாகும். இதுவும் தேசவாரிப் பிரதிநிதித்துவ முறையிலிருந்து தோற்றம் பெற்ற ஒன்றாகும். இம் முறையின்படி சட்டசபையான அரசாங்க சபையின் உறுப்பினர்களில் மூன்று அரசாங்க உத்தியோகத்தர்களையும் தவிர ஏனைய 58 உறுப்பினர்களும் ஏழு குழுக்கள்ாக பிரிக்கப்பட்டனர். இக்குழுக்களிடம் கல்வி, சுகாதாரம், விவசாயம், உள்ளூராட்சி, உள்நாட்டு தொழில், போக்குவரத்து ஆகிய ஏழு துறைகள் ஒப்படைக்கப்பட்டன.
மலையகத்தமிழரின்வரலாறு 185

Page 103
குழு உறுப்பினர்களே குழுக்களின் தலைவர்களை தெரிவு செய்வர். இவர்களே அத்துறைகளின் மந்திரிகளாக விளங்கினர். குழுக்களில் பெரும்பான்மையாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே இருந்தனர். இதனால் சிறுபான்மை இனத்தவர் குழுக்களின் தலைவராக அதாவது மந்திரியாக வரவேண்டுமாயின் பெரும்பான்மை இனத்தவரின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. 1931இல் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தமையால் சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த பெரி-சுந்தரம், மாக்கான் மாக்கார் என்போர் தொழில் மந்திரியாகவும் போக்குவரத்து மந்திரியாகவும் வர முடிந்தது. ஆனால் 1936இல் மந்திரிசபை அமைக்கப்பட்டபோது பெரும்பான்மை இனத்தவர்கள் ஆதரவு தெரிவிக்காமையினால் ஒரு சிறுபான்மையினராவது மந்திரியாக தெரிவு செய்யப்படவில்லை. அம்மந்திரிசபை தனிச் சிங்கள மந்திரிசபையாகவே இருந்தது.
1948 ல் பிரஜாவுரிமைச் சட்டமும் 1949 ல் இந்திய பாகிஸ்தானிய வதிவாளர் சட்டமும் 1949 ல் பாராளுமன்றத் தேர்தல் சீர்திருத்தச் சட்டமும்
உடன் வைத்துப்பார்க்கப்படல் வேண்டும். 1948 சட்டத்தின் மூலம் குடியுரிமைப் பெறுபவர்கள் 1949 சட்டத்தின் மூலம் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெறுகின்றனர். இரண்டும் இந்தியவம்சாவளியினருக்கு எதிரானவைகள். இலங்கையில் பிறப்புச்சாட்சிப் பத்திரம் பெறும் முறைமை 1898ன் பின்னரே அறிமுகப்படுத்தப்பட்டது. 1948 சட்டத்தின்படி 50 வயதுக்கு மேற்பட்ட இந்தியர்கள் குடியுரிமை பெறும் தகுதியை இழக்கின்றனர்.
குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் தொழிலாளர்கள் சேகரித்துத் தரவேண்டிய குடும்ப விவரங்கள் சிக்கல் மிகுந்தவையாகவும், குழப்பமானவையாகவும் இருந்தன. மிகக் குறைந்த வாழ்க்கை மட்டத்தில் எதுவித கல்வியறிவுமின்றியிருந்த தோட்டத் தொழிலாளர்கள் இதனால் குடியுரிமை கோரும் ஆற்றல் பெற்றிருக்கவில்லை. இது விஷயத்தில் அவர்களுக்குதவ அரசாங்கம் எதுவும் செய்யவில்லை. குடியுரிமை விண்ணப்பத்தை விசாரிக்கச் சென்ற யாழ்ப்பாண உத்தியோகஸ்தர்கள் மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டிருப்பதை சச்சி எழுதிய வீரகேசரி கட்டுரைகளில் காண முடியும். (மலை முகடுகளுக்குள் - 1998)
186 மலையகத்தமிழரின்வரலாறு

இந்த சட்டங்களை எதிர்த்து சிறுபான்மை இனமான இலங்கைத்தமிழர்களும், வர்க்க ரீதியான தொழிலாளர் வர்க்கமும் எதிர்ப்புக்களைத் தெரிவிக்கவில்லை. தெரிவிக்கப்பட்ட எதிர்ப்புக்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியனவாக இருக்கவில்லை. சிறுபான்மை இனத்தவரான இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்களுள் சிலர் அரசாங்கத்துடன் இணைந்து சட்டங்களை ஆதரித்திருந்தனர். 1948ம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து மூன்று இலங்கைத் தமிழரும் 1949ம் ஆண்டின் இந்திய பாகிஸ்தானிய வதிவாளர் சட்டத்தை ஆதரித்து ஆறு இலங்கைத் தமிழரும் வாக்களித்திருந்தனர். மேற்கூறியவற்றை பார்க்குமிடத்து இலங்கைத்தமிழரும், இலங்கைவாழ் இந்தியத் தமிழரும் சமூகம், கலாசாரம், வாழ்க்கைத்தரம், கல்வி போன்றவற்றால்
பிரிந்திருந்ததை கவனிக்கமுடியும். இதனாற்தான்
“இலங்கைத் தமிழரை இலங்கையிலிருந்த இந்தியத் தமிழருடன் இணைப்பதைவிட, நாட்டின் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்களவருடன் ஒன்று சேர்ப்பதற்கான காரணங்களும் சக்திகளும் கூடியளவு பலம் பொருந்தியவையாகக் காணப்பட்டன. அதனாலேயே ஓரினம் என்றவகையில், இந்திய வம்சாவளியினர் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழரைப் பொறுத்தவரை தம்மைப் பெரிதும் அலட்டிக் கொள்ளக்கூடிய ஒரு பிரச்சினையாகத் தென்படவில்லையெனலாம்” என்று வி.நித்தியானந்தம் எழுதுகிறார். (இலங்கை அரசியற் பொருளாதாரம்)
(Le: 90)
ஐக்கிய தேசியக் கட்சி அதன் தொடக்கக் காலமுதலே இடதுசாரிகளுக்கு எதிரானதாக இருந்துவந்துள்ளது. சமசமாஜக்கட்சியினர் சமயங்களுக்கு எதிரானவர்கள் என்பதை தேர்தலில் அவர்கள் பலமுறை வற்புறுத்தி வந்தனர். அவர்களுக்கு ஆதரவாக இயங்குபவர்களை அக்கட்சியால் ஜீரணிக்கமுடியவில்லை.
இலங்கை வாழ் இந்தியர்களின் எண்ணிக்கைப்பலம் பயமூட்டுவதாக
இருந்தது. இலங்கையில் அவர்கள் சிங்களவருக்கு அடுத்த இனமாக இருந்தனர்.
மலையகத்தமிழரின்வரலாறு 187

Page 104
இலங்கையில் தென்னிந்தியர் சனத்தொகை
ஆண்டு முழு இலங்கையில் தோட்டத் விகிதாசாரம்
இந்திய தொழிலாள சனத்தொகை இந்தியர் தொகை
1944 649,000 441,491 68.0 1945 647,000 447,221 69.1 1946 693,000 454,914 65.6 1947 721,000 487,075 67.5 1948 742,000 457,551 61.6
ஆதாரம்: எஸ்யூ, கொடிக்கார (1965)
தோட்டத்தொழிலாளிகள் இலங்கையில் தொடர்ந்துமிருத்தல் அவசியம். அவைகளைக் குறைக்க நினைக்கும் எந்த முயற்சியும் இலங்கை பொருளாதாரத்தை பாதிக்கும். அவர்களிடையே மேலெழுகின்ற ஒரு மத்தியதரவர்க்க வளர்ச்சியைத் தடைசெய்வது பயனளிக்கும். அவர்களின் அரசியல் பலத்தை இல்லாதடிப்பதன் மூலம் இதைச் சாதிக்க நினைப்பது.
“பெருந்தோட்டங்களில் வேலை செய்வதற்கென்றே விசேடமாகத் தருவிக்கப்பட்ட ஒரு கூட்டத்தினர். அவர்கள் ஏனைய தொழில் நடவடிக்கைகளில் வெற்றிகரமாகச் செயற்படுவதற்குரிய சந்தர்ப்பம் வெகு குறைவாகவே காணப்பட்டது. அவர்களுடைய மிகக்குறைந்த வாழ்க்கைத்தரம், கல்வி அறிவின்மை, அந்நியத்தன்மை போன்றவை அதற்கான முக்கிய பங்கு வகித்தன” என்கிறார் வி.நித்தியானந்தம் தன்னுடைய இலங்கை அரசியற் பொருளாதாரம் நூலில் பக்கம் 79.
உருளவள்ளி போராட்டத்தின் போது ஒருநாள் பொது ஹர்த்தாலில் ஈடுபட்டதைப் போல 1945ல் சோல்பரி அறிக்கை மீதும் தமது அதிருப்தியை வெளியிட இலங்கை இந்திய காங்கிரஸ் தவறவில்லை. அந்த இரண்டு நடவடிக்கைகளின் போதும், இவர்கள் தனித்து நின்றே போராட வேண்டி இருந்தது.
இதுவரையிலும் கிடைத்த ஆதாரங்களை வைத்துப்பார்க்கையில் ஜனமித்ரன்' என்ற பத்திரிகையே, இந்தியர்கள் இலங்கையில் நடாத்திய முதல் தமிழ்ப்பத்திரிகை எனலாம். இதன் நிர்வாக ஆசிரியராக இருந்தவர் லாரிமுத்துக்
188 மலையகத்தமிழரின்வரலாறு

கிருஷ்ணா என்பவர். இவர் 1901ம் ஆண்டு 'பொலிடெக்னிக்’ ஒன்றை கொழும்பில் நிறுவி நடத்தியவர். இந்தியர் சங்கத்தின் தலைவராகக் கடமையாற்றியவர். அவர்களைப் பிரதிநிதித்துவம் பண்ணி 1922ல் இந்தியா சிம்லா நகரில் நடந்த விசாரணைகளில் பங்கேற்றவர். இந்தியர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு வரவேண்டும் என்ற கொள்கையுடையவர். அந்த விசாரணையில் தான் அவருக்கு எதிரான கருத்தாக, கூலிகளாக இந்தியர்கள் இலங்கை வரக்கூடாது என்ற கருத்தை கோ. நடேசய்யர் முன்மொழிந்து, அதன் பயனாக, தேசநேசன்' பத்திரிகையை விட்டு விலக நேர்ந்தது. லாரிமுத்துக் கிருஷ்ணாவும் இந்தியத் தலைவர் என்ற ஸ்தானத்தை இழந்தார்.
நிராதரவும், இல்லாமையும், பாதகமும், அறியாமையும் இந்திய தொழிலாளர்களை ஆட்கொண்டிருந்த சூழ்நிலையில், காலனித்துவ அரசு இலங்கையில் நிலைகொண்டிருந்த சூழலையும் கணக்கிலெடுத்துப் பார்த்தால், நீதி, விடுதலை, உரிமைகள் பற்றிய சிந்தனைகளை குறிப்பிடத்தக்க அளவில் ஜனமித்ரன்' என்ற தினசரி தன் ஜீவிய காலமான மூன்றாண்டுகளில் (1918-1920) வளர்த்திருக்கிறது. தோட்டங்களில் நடக்கும் சாவு, கொலை ஆகியவைகளை ஆதார பூர்வமாக வெளியிட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மாத்தளைப் பகுதி தோட்டமொன்றில் சுப்பன் என்ற இந்தியக்கூலி, 4 கூலிகள் பிடித்துக் கொண்டிருக்க, சுப்பிரண்டன்ட்டால் பன்னிரண்டு முறை கசையடிக்கு உள்ளான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தச் செய்தியை இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஹிந்து பத்திரிகை 8-12-1918ல் சட்டந்தெரியாத தோட்டத் துரைமார்கள் கூலிகளை மானபங்கம் செய்கிறார்கள்’ என்று மறுபிரசுரம் செய்திருந்தது. கைப்புக்கலத் தோட்டத்தில், கூலி ஒருவன் விறகுதேடப் போன இடத்தில் மயக்கமுற்று வீழ்ந்து இறந்ததை 1-10-1919ல் ‘உணவில்லாமை' என்ற தலைப்பில் செய்தியாக போட்டிருந்தது. நோர்த் பூண்டலோயா தோட்டத்தில், ஆமணக்கு எண்ணெய்க்கு பதிலாக, கற்பூர எண்ணெய்க் கொடுத்து கறுப்பன் என்ற கூலியின் மரணத்துக்கு காரணமான அஸிஸ்டென்ட் சுப்பிரண்டன்ட் ஐம்பது ரூபா அபராதம் செலுத்தியது போன்ற செய்திகளை உதாரணமாகப் பார்க்கலாம்.
ஜனமித்திரன் பத்திரிகை இன்றைய தினகரன்’ அளவில் ஐந்து பக்கங்களில் இன்றைக்கு எண்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடர்ந்து மூன்றாண்டுகள் வந்திருக்கின்றது என்பதே ஒரு சரித்திர முக்கியத்துவம் மிகுந்த நிகழ்ச்சிதான். அதில் வெளி வந்திருக்கும் ஆசிரிய தலையங்கங்கள் சில குறிப்பிடத்தக்கன.
மலையகத்தமிழரின்வரலாறு 189

Page 105
இந்தியர்களின் நலவுரிமைகள் (23.1.1919 - திகதியிட்ட ஜனமித்ரன்)
இந்தியர்கள் இலங்கைப் பிரதேசத்தில் ஏறக்குறைய ஏழுலட்சம் பேரிருக்கிறார்கள். மொத்த ஜனத்தொகையில் ஆறில் ஒரு பாகமாவர். இவர்களுக்கென ஓர் பிரதிநிதி சட்டசபையிலில்லை, ஸ்தல சபையிலும் சுமார் ஏழாயிரம் பேர் ஐரோப்பியர் அங்கிருந்து வருகின்றனர். சட்டசபையில் ஒர் பிரதிநிதி இவர்கள் பொருட்டிருந்து வருகின்றனர். இது தவிர ஐரோப்பிய வர்த்தக சங்கம், தோட்டச்சங்கம் இவைகளுக்கென்று தனித்தனி பிரதிநிதிகளிலிருந்து வருகின்றனர். வேறு வேறு வகுக்கப்பட்டிருப்பினும் பிரதிநிதிகள் மூவரும் ஐரோப்பியரே. இது நீங்கலாக பறங்கியர் சுமார் இருபத்தேழாயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்காக ஒர் பிரதிநிதி அனுமதிக்கப்பட்டிருந்து வருகிறார். குறைந்த ஜனத்தொகையினராகிய இவர்களின் நலவுரிமைகளைப் பாதுகாப்பதற்கெனப் பிரத்தியேக ஸ்தாபனங்கள் ஏற்பட்டிருக்கின்ற பொழுது ஏழு லட்சம் ஜனத்தொகையினராகிய இந்தியர்களுக்கு அவ்வித உரிமை ஒன்றும் இல்லையெனின் பரிதாபத்துக்குரியதென்பதில் ஆட்சேபமெவருக்குண்டு?
இவ்விடத்தில் இந்தியன் அசோசியேஷன் என்றும் இலங்கை இந்திய சங்கமென்றும் இருக்கும் இரு சபைகளினால் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், “எனவே இந்தியர்கள் உயிரும் உணர்ச்சியும் உடையவர்களென்பதனைக் காட்டத் தலைப்படும்பொழுது ஏழு லட்சம் இந்தியர்களின் நலவுரிமைகளும் பாதுகாப்பதற்கு வழியேற்படக்கூடுமென்பதை இந்தியர்கள் தங்கள் இதயத்தில் இருத்திக் கவனிப்பார்களாக
கூலியாட்கள் நிலைமை (2-4-1919 திகதியிட்ட ஜனமத்ரன்)
காலமெல்லாம் கஷ்டத்தை அனுபவித்து ஜன்மதேசம் போக வேண்டுமென்றாலும் கூலியாள் சட்டம் குறுக்கே நிற்கிறது. சட்டத்தை அனுசரித்துப் போகிறதாயிருப்பினும் தகராறுகள் பல குறுக்கிடுகின்றன. கொஞ்சம் சுபாவத்தைக் காட்ட ஆரம்பித்தால் அடியும் குத்துந்தான் ஆதாயமாகிவிடும். அடிக்கும் குத்துக்கும் தப்பித்துக் கொள்ள முயற்சித்தால் காவல் தண்டனைக்குட்பட வைத்துவிடுவார்கள்.
இலங்கைத் தீவின் செல்வ வளத்துக்கு மூலமாயிருந்துகொண்டிருக்கும்
மலைத்தொடர்களுக்குச் செல்வோம். அங்கே தேயிலைப் பயிர்களை விருத்தி செய்து முறையே முதலாளிக்கும், நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் செல்வத்தை
190 மலையகத்தமிழரின்வரலாறு

வழங்கக்கூடியவர்கள் என்ன நிலையிலிருந்து வருகின்றார்கள் என்பதனை கவனிப்போமாயின் கண்களில் நீர் பெருகாமற்போகா. அவர்கள் தேசத்தை விட்டுப் புறப்பட எண்ணிய தினமுதல் தென்னிலங்கையிலிருந்து திரும்பிப் போகின்றவரை அவர்கள் அநேக கஷ்டங்களை சமாளித்துக்கொண்டு போக வேண்டியவர்களாயிருக்கின்றார்கள். அங்கே சேகரித்துக் கொடுக்கும் தரகரின் கபடோபதோமோ வாய்விட்டுச் சொல்ல முடியாது. கங்காணியாரின் தயாளச்சிந்தனையோ அளவிட வேண்டியதில்லை. கண்டக்டர்களின் அதிகாரமோ கணக்கிட வேண்டியதில்லை. சின்ன துரையின் சீரழிவோ செப்பவேண்டியதில்லை. பெரிய துரையின் கம்பீரமோ பேச வேண்டியதில்லை.
இலங்கை இந்திய அசோசியேஷன் (17.7.1919 திகதியிடப்பட்ட ஜனமித்திரன்)
இலங்கை இந்திய அசோசியேஷன் என்னும் பெயரோடு இக்கொழும்பு மாநகரின் கண் ஒர் கூட்டம் இருந்து வருகின்றதென்பது நாங்கள் அறிந்த விஷயம். இதில் மெம்பராயிருப்பவர்கள் இந்தியர்களே. இதனுடைய நோக்கம் இலங்கையிலிருக்கும் இந்தியர்களின் நலவுரிமைகளைப் பாதுகாப்பதாகும். இச்சபையின் சிரேஷ்ட உரிமையையும், சிரேஷ்ட சிரத்தையையும் பாராட்டி வரக்கூடியவர்கள், படித்தவர்களும் பாரிய வர்த்தகருமாவர். இந்தியர்களின் விஷயத்தில் ஜனங்கள் எதிர்பார்க்கிற அளவு மேற்படி சபையின் மூலமாக நன்மைகள் ஏற்படவில்லை என்பது வாஸ்தவம்.
இலங்கை அரசியலில் நாட்டம் கொண்டிருந்த லாரி முத்துக்கிருஷ்ணா தம்மைப் போலவே அரசியல் ஆர்வமும், ஆங்கில புலமையும், தீவிர போக்கும் கொண்டிருந்த நடேசய்யரை ஆசிரியராகக் கொண்டு தேசநேசன் என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்.
இந்தியர்கள் என்றால் படித்தவர்களும், கொழும்பு வாழ் வர்த்தகருமாவர் என்ற நிலைப்பாட்டில் நடேசய்யருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள் பஞ்சைகளாய் துன்பப்பட்டு மடிந்து சாவதை அவர் நேரில் கண்டு வந்திருக்கிறார். அடிப்படையில் கருத்து வேறுபாடு கொண்டதால், அவர்களிடையே பிளவு ஏற்பட்டது. இந்தப்பிளவு “சிரிம்லா” சாட்சியத்தில் விரிவடைந்தது. தேயிலைத் தோட்டங்களின் கொத்தடிமைகளாக அவர்கள் நசிவதாக நடேசய்யரும் அவர்களது வாழ்க்கை தென்னிந்திய வாழ்க்கையை விட
மலையகத்தமிழரின்வரலாறு 191

Page 106
திருப்திகரமாக இருப்பதாக லாரிமுத்துகிருஷ்ணாவும் காட்ட முனைந்தனர். “போலித்தலைவர்கள்’ என்று ஆசிரியர் தலையங்கம் எழுதிய (20-12-1919) லாரிமுத்துக்கிருஷ்ணா தானும் அதேவித வாழ்க்கை வாழ்வதை மெய்ப்பித்தார். தேசநேசனை விட்டு நடேசய்யர் விலக நேர்ந்தது.
“தேசபக்தன்” என்ற வாரவெளியீட்டை துவக்கினார். இது ஒன்பது ஆண்டுகள் நடைபெற்றது. இதன் ஆசிரியராக நடேசய்யரே விளங்கினார். இவர் இந்தியாவிலிருக்கும்போதே பத்திரிகைகள் நடத்தி பழக்கப்பட்டவர். திரு.வி.கவின் எழுத்துக்கு அடிமையானவர். அவரது “தேசபக்தன்” ஏட்டால் கவரப்பட்டவர். அதேபெயரில் திரு. வி. கவின் ஆசி பெற்று தேசபக்தனை நடத்தினார்.
“நீண்ட காலந்தொடர்ந்து, நடைபெறாவிடினும் அவை அக்காலங்களில் உருவாகிய சிந்தனைப் பின்னணியை, வளர்ச்சிப் போக்கை, இலங்கையின் சமூக பொருளாதார, அரசியல் சூழ்நிலையை தெளிய வைக்கும் பிரதான தகவல் தேட்டச் சாதனங்களாக அமைகின்றன என்பதே சிவநேசச் செல்வனின் (இலங்கைத் தமிழ் தோற்றமும் வளர்ச்சியும்.)” (நான்காவது தமிழாராச்சி மாநாட்டு மலர் 1974) கருத்தாகும்.
இலங்கை லேபர் கமிஷன் (18.8.1919 திகதியிட்ட ஜனமித்ரன்)
இந்திய கூலிகள் இலங்கைத் தோட்டங்களில் கூலி ஜீவனஞ் செய்யத் தலைப்பட்ட நாள் முதல் அவர்கள் கஷ்டத்தையே அநுபவித்து வந்திருக்கிறார்களென்பது ஒப்ப முடிந்த விஷயம். காரணத்தை ஆலோசிப் போமானால் அவர்களின் நலவுரிமை, சுகாதாரம் முதலிய விஷயங்களில் தோட்டச் சொந்தக்காரரும் உத்தியோகத்தர்களும், பிறரும் அக்கறையற்றிருந்ததாகும். அவர்கள் தோட்டங்களில் நடத்தப்பட்டு வரும் முறைகளை பற்றி அடிக்கடி பத்திரிகை வாயிலாகவும், பிறவாயிலாகவும் அறிந்து வந்திருக்கின்றோம். அவைகளை மானுஷ்ய தர்மத்துக்கடுத்தவைகளாக கூற முடியாது. தோட்டங்களுக்குச் செல்வோர்கள் அநேகமாக அடிமைகளை போலவே கருதப்படுதலியல்பு இன்னும் சொல்வோமெனில் அவர்கள் தேயிலைத் தோட்டங்களிலுள்ள தேயிலை இயந்திரங்களாக எண்ணப்பட்டு வருகின்றனர். இயந்திரத்தை நினைத்தப்படி இயக்குவது போல அவர்களும் இயக்கப்படுகின்றனர். இயந்திரத்தை எடுத்துக்கொண்டால் அதன் மட்டில் இயக்குவோர் மாத்திரம் அதிகாரத்தைச் செலுத்த முடியும். நமது சகோதரர்களாகிய கூலியாட்களை எடுத்துக் கொள்வோமாயின் அவர்களை இயக்குவோர் ஒருவரல்ல. பலருளர்.
92 மலையகத்தமிழரின்வரலாறு

பெரியதுரை, சின்னத்துரை, கண்டக்டர், கணக்குப்பிள்ளை, கங்காணி முதலிய இவ்வகையறாக்களின் இஷ்டத்தை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். ஒருவன் இருவருக்கு ஊழியராய் இருக்க முடியாதென்பது அனுபவம். அப்படியிருக்க எழுத்து வாசனை தெரியாத கூலியாட்கள் ஒரு தொகையினரின் இஷ்டத்தையும், எண்ணத்தையும் எவ்வாறு பூர்த்தி செய்தலியலும்? அறிந்தோ அறியாமலோ குற்றங்கள் நேரிடலாம். அப்பொழுது சம்பவிப்பதென்ன? நினைத்தது சட்டம். நினைத்தது தண்டனை. இரங்குவாருமில்லை, இறைஞ்சுவாருமில்லை. துரை சித்தம் கணசித்தம் என்பது போல அனுபவித்து தீரவேண்டியதைத் தவிர வேறு கதியில்லை. அப்படியாயின் கூலியாட்களின் கதிகேவலம் இயந்திரத்திலும் பன்மடங்கு கீழென்பதைச் சொல்லவும் வேண்டுமோ? தோட்டக்காரர்களின் பொருளாதார அபிவிருத்திக்கு மூலச் சாதனங்களெனச் சொல்லக்கூடிய கூலியாட்கள், இவ்வாறு நிர்ப்பந்தப் படுவதிலிருந்தே அவர்கள் தோட்டத்து வாழ்க்கையை வெறுக்க நேரிடுகிறது. இறுதியாய் பொறுப்பின் பயனை அனுபவிக்க வேண்டியவர்கள் தோட்டக்காரர்களேயன்றி வேறொருவருமல்ல.
இப்பொழுது ஒரு சட்டம் அனுஷ்டானத்திலிருந்து வருகிறது. அச்சட்டமானது வேலைச் செய்யத் தவறியவர்களை கிரிமினல் ஹோதாவில் தண்டிக்க இடம் கொடுக்கிறது. இது மிகவும் உக்கிரமான முறை. இது நியாய வரம்புக்கு கட்டுப்படாதது. இச்சட்டத்தை ரத்துச் செய்யும் பொருட்டே இந்தியர்களும், பிறரும் கிளர்ச்சி செய்து வந்திருக்கின்றனர்.
ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் எங்ங்ணம் அப்பாலின் குணம் கெட்டு எதிரிடையான பலனைக் கொடுக்கக்கூடியதாயிருக்குமோ, அங்ங்ணமே கமிட்டியாரால் செய்யப்பட்டிருக்கும் பலவும், மேற்படி சட்டமென்னும் விஷத்தினால் கலப்புண்டு பிரயாசைக்கும், நம்பிக்கைக்கும் விரோதமான பலனைத் தருமென்பதுவே எமது அபிப்பிராயம்.
அந்த காலகட்டத்தில் வெளியான, 1910 ஜனமித்ரன், 1930 தினத்தபால், 1938 தொழிலாளி, 1939 ஈழகேசரி, தமிழகத்திலிருந்து வெளிவந்த சுதேசமித்திரன் ஆகிய ஏடுகளில் வெளியான வேறும்பல ஆசிரியத் தலையங்கங்களை நோக்கினால் - இருபதாண்டு காலங்களில் வெளியான, ஏழு பத்திரிகைகளிலிருந்து, பதினைந்து தலையங்கங்கள், மலையக மக்கள் சுய உணர்வு பெற ஆரம்பித்த காலமாக அந்த காலப்பகுதியை கொள்ளலாம் என நினைக்கத் தோன்றுகிறது.
மலையகத்தமிழரின்வரலாறு 193

Page 107
ஆசிரியத் தலையங்கம் பத்திரிகை வெளியான
திகதி
இந்தியர்களின் நலவுரிமைகள் ஜனமித்திரன் 23.1.1919
கூலியாட்களின் நிலைமை ஜனமித்திரன் 2.4.1919
இலங்கை இந்திய அசோஷியேஷன் ஜனமித்திரன் 17.7.1919
பற்றுச்சீட்டு தொலைய வேண்டும் ஜனமித்திரன் 31.8.1919
தொழிலாளர் இயக்கம் ஜனமித்திரன் 22.11.1919
ஸிலோனில் இந்தியத் தொழிலாளர் சுதேசமித்திரன் 25.8.1919
பெரியகங்காணி தேசபக்தன் 25.5.1929
இந்தியத் தொழிலாளித் துயர் தேசபக்தன் 22.8.1929
தொழிலாளர்களுடைய வீடுகள் தேசபக்தன் 18.6.1922
அந்த கூலியைக் கொன்று விடு சிட்டிஷன் 18.6.1922
இலங்கை சட்டசபை தேசபக்தன் 6.9.1922
ஸிம்லா விசாரணை தேசநேசன் 4.3.1930
இலங்கை இந்தியர் உரிமை தொழிலாளி 6.1.1938
இலங்கையும் இந்தியாவும் ஈழகேசரி 30.7.1939
நேருவின் யாத்திரைக்குப் பின் தேர்தல் தோட்டத்
தொழிலாளி O1, 6.1947
194 மலையகத்தமிழரின்வரலாறு

Is 函| SY C2 | S 彈 盔 a g S = ༅ ། El
ܒܝܕ 驛
s }
a 를 xm
寵將 용 총
5 | || | ܗܿ ] 중 | ||
|། |། མ་ 硕
.S الد. SN| 5ßHI | | 帝 o G语 三| 연 香邯 3ܣܘ o? I s | 劃 器 S 器 é g | 2 ||
لا؟ 2؟ | | 苇| 蹟| | ||
궁 劃 罰 || || བློ། ། 羅| 順
| || 드 爱| | 亂 3 : E H
| || . སྤྱི་ སྤྱི་ཟློ། ། | ii i 蠱 靈 疆圖 || ཧྥི་ 雪。聽冊 嗣 | 器 墨 畿
195 மலையகத்தமிழரின்வரலாறு

Page 108
oĝU109|G (5.909€ 'G66|| ựIIIII?)?|(? – † 66Ļ ļriqi-iŋɛtɔ ɖoooo!® soạụ1919 :ųısılığ? .
S S S S S Stgt — — — — — -zgg– – – – – – %8寸G96ƐZZ“ZZ080£tuotų911993)
9%9’019곤//Į“ZZƐ016 UH109ĢĢsố
%6'0į0ț7Z09‘t/t//} .寸9119091ĝrı
%8’001800t/'06ț7089Z LITŲ9íslo)russĩ
9%9'8Z99800’8||02ƐƐ1909@@ıldı
% o’8ZZ!‘Z8/t/ot/9/.../.90||fung999 S SS S SS S S S S*「*「*「
199Ų1998||R91009 UUTo09șUQQ910ņ919 199Ų1990.909 llo-IIIII 199Ų19430909116-IIIII
qif|1911@toŲ9 (9.5||Nortos@simra '+' TQ19 ĝ 1ņ9ų,99||1010091101qŲ90ųofi)ņifiŲIĘ Į TITULUI
S S S S S S S S S S S S S S S S S S S S
‘G66|| 119orgs-Tirolul (İTQT LIỆg) (qıfložņIII-a (H TQ19 ĝ) (googoo qosfè sfilmne, sig,
z – 1999cc9f9-II são
மலையகத்தமிழரின்வரலாறு
196

மாறிவரும் நிலைமைகள்
TLMLMLSMLALLSLLLLSLLALSLAJLSLMASLLMLSSLMLSSLSLMLMLSLS MLLAMLLMLSSSLLLLSLLAMLSLLLJLSLSLMLSSSLLLSLLLSLSLLLSLSLMLLSLMLSLSSLSLMMSLLLLLLSLMSLLMJSSLSSSM
ஹோட்டல் தப்ரபோனில் நடந்த துரைமார் சம்மேளனக் கூட்டத்தில் அதி மேன்மை தங்கிய ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனா தன் பேச்சின் போது“தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டது நாட்டில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவே. அதை நாம் நிறுத்தி இருக்க முடியாது. 1943 ல் அரசாங்க சபையில் இந்த யோசனையை நான் கூறியிருக்கிறேன். ஆனால் நான் இதைச் செய்திருந்தால் வேறு விதமாகச் செய்திருப்பேன். தோட்டங்களை விலை கொடுத்து வாங்கி அவர்களிடமே முகாமைத்துவம் பண்ண விட்டிருப்பேன். எது எப்படி இருப்பினும் இப்போது பிரச்சினைகளை வெல்வதற்கான வழிவகைகளை நாம் யோசிக்க வேண்டும். எனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் துரைமார்கள் சொல்ல வேண்டும், மயூரா தொழிற்சாலை நாளை மூடப்பட்டால் , 8000 ஆட்களும் கிராமத்துக்குப் போய் விடலாம். வேறு வேலைகளைத் தேடிக் கொள்ள முடியும். தோட்டமக்கள் அப்படியான நிலையில் இல்லை. தோட்டம் மூடப்பட்டால் அவர்களுக்கு போவதற்கு இடமில்லை. செய்வதற்கு தொழிலில்லை. இந்த நிலைமை ஆரோக்கியமானதல்ல. அவர்களுக்கு உள்ள பிரச்சினைகளுடன் ஒப்பிடுகையில் உங்களது பிரச்சினை ஒன்றும் அவ்வளவு பெரிதல்ல. எனக்கு அவர்கள் தான் பிரதானம். மீனாட்சியினதும் ராமசாமியினதும் நல்வாழ்வு முக்கியம். அவர்களது பார்வை என்னை நோக்கியே இருக்க வேண்டும். பகிரங்கமாக, இதை முதன்முறையாக கூறுகிறேன்.
(ஜனதா தோட்ட அபிவிருத்திச்சபை செய்திமடல் : 1982 ) அவரது நல்லெண்ணம் இந்த மக்களின் ஆண் பெண் சம சம்பளத்தைப் பெறுவதற்கு உதவியது.”
மலையகத் தமிழர் இலங்கைக்கு வந்து வாழத் தொடங்கிய பல்லாண்டுகளுக்குப் பின்னால் தான் அவர்களிடையே ஆண் பெண் என்ற பால்
பாகுபாடு நீக்கப்பட்டு, இரு தரத்தாருக்கும் சமசம்பளம் வழங்கப்பட்டது.
மலையகத்தமிழரின்வரலாறு 97

Page 109
1984ன் சம்பளச்சபைச்சட்டம் இலகுவாகப் பெறப்படவில்லை. நீண்ட நெடிய தொழிற்சங்க போராட்டங்கள் மூலமே அது பெறப்பட்டது.
1967ல் முதன் முறையாக தொழிலாளர்களுக்கும் முதலாளிமார்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்தானது. அக் கைச்சாத்திடல் மூலம்தான் (23-4-1967) தொழிலாளர்களின் தொழிற்சங்க சந்தா அவர்களின் சம்பளத்தில் பிடிபடுவதற்கு வழிசமைக்கப்பட்டது. தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கு இவை உதவின. இரவு நேரங்களில் தொழிலாளர்களைச் சந்தித்து, மலைகளில் லாந்தர் வெளிச்சத்தில் 'மினிட்’ புத்தகம் எழுதி, சந்தா சேர்க்கும் முறைமாறி, தொழிற்சங்கம் நடாத்துவது தம்முடைய சுய வருவாய் பெருக்கத்துக்கு என்ற நினைப்பை ஒரு சிலரிடையே ஏற்படுத்தியது. தொழிற்சங்கங்கள் பெருக ஆரம்பித்தன.
1972 முதல், தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வதில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. பிரார்த்தனை செய்வது என்று தொண்டமான் அதற்கு காரணம் கற்பித்தாலும் எட்டு மணிக்கு பிறகு தொழிலாளர்கள் வேலையை ஆரம்பித்தனர். காலைச் சூரியன் உதிக்கும் முன்னர் மலைக்குச் செல்லும் பழக்கம் மாற்றமடைந்தது. 1972 மே 22ல் இலங்கை குடியரசானதாக பிரகடனம் செய்வதைப்போல இந்த மாற்றத்தையும் பிரகடனம் செய்யலாம். பிரகடனம் எல்லாம் மக்களுக்கு எந்தநேரமும் பிரயோசனப்படுவதில்லை. மாத்தளைக்கு அணித்தாயுள்ள உக்குவள்ளைத் தோட்டம் (254 ஏக்கர்) 1972ல் காணிச் சீர்திருத்தக் குழுவால் கையேற்கப்பட்ட தோட்டங்களில் ஒன்றாகும். காணிச் சீர்த்திருத்தக் குழுவின் பல தோட்டங்களில் நடந்ததைப் போலவே அங்குள்ள தொழிலாளர்களும் நிர்க்கதிக்கு ஆளானார்கள். ஆனால் அதில் சில தொழிலாளர்கள் அங்கிருந்து போக மறுத்ததால், பல வருடங்களின் பின்னால் 36 வீடமைப்புக்கள் அமைக்கப்பட்டு ரஞ்சன் விஜயரட்னா பெருந்தோட்ட அமைச்சராக இருந்தபோது அது மக்களுக்கு கையளிக்கப்பட்டது. இந்தக் கையளிப்பை உதாசீனப்படுத்துமாப் போல 1999ல் மீண்டும் வர்த்தமானியில் அந்தப் பகுதியை இராணுவ பூமியாக பிரசுரம் செய்து, அவர்களின் இருப்பை இன்று கேள்விக்குறியாக்கி விட்டிருக்கின்றனர்.
1841ல் கொண்டு வரப்பட்ட நாடோடிகள் சட்டப்படி, 1996ல் மலைநாட்டுத் தமிழர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டனர். பிச்சைக்காரர்கள், திருடர்கள், தெருப் பொறுக்கிகள், விபச்சாரிகள் கைது செய்யப்படுவதைப் போல மலை நாட்டுத்
தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.
198 மலையகத்தமிழரின்வரலாறு

1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 9ம் தேதி இரத்னபுரி வேவல்வத்தையில் பொலிஸாரும், உள்ளூர் அரசியல்வாதிகளும் இணைந்து மேற்கொண்ட தாக்குதல்கள், இதுவரை தமிழுலகம் காணாத ஒன்று. இந்த அழிவுகளைப் பற்றி தமிழ்ப் பத்திரிகைகளில் தான் செய்திகள் வந்தன. 1983ல் தேசம் தழுவிய திட்டமிட்ட சம்பவம் போல, இரத்னபுரியில் நடாத்தப்பட்ட திட்டமிட்ட சம்பவம். தன் கூடப்பிறந்தவளின் மானத்தைக் காப்பதற்கு ஒர் ஆண்மகனுக்கு உரிமையில்லையா? அதன் விலை 226 லயக் காம்பராக்களா? இந்த நாட்டுக்கு வந்தது முதல் தாங்கள் சேர்த்திருந்த அத்தனையையும் - தங்கள் உயிரைத் தவிர, அழிக்கப்பட்டு விட்டதை அவர்களால் எப்படித் தாங்கிக் கொள்ள முடிகிறது?
இதனை விசாரித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்பது மாத்திரமல்ல, இந்தப் பின்னணியில்தான் செயற்பட மறுத்த “இந்திய வம்சாவளிப் பேரணி” அழிந்து போனது.
இது நடந்து ஒரு மாத இடை வெளியில் - 1998 ஒக்டோபரில் பசறையில் ஒரு பயங்கர நிலைமை தோன்றியது தோட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன.
தோட்டத்தில் நிலைமை பயங்கரமானதாக இருந்தது.
2000ம் ஆண்டு அக்டோபர் 25ம் திகதி பண்டாரவளை, பிந்துனுவெவ புனர்வாழ்வு முகாமில் இருந்த தமிழ் கைதிகள் ஒரு சிங்கள காடையர் கும்பலால் படு கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களும் ஹர்த்தாலும் இடம் பெற்றன.
நாட்டில் அமுலில் உள்ள அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் கொட்டகலை, வட்டகொடை, அட்டன், தலவாக்கலை முதலிய இடங்களில் அக்டோபர் 30ம் திகதியில் இருந்து வரையறுக்கப்பட்ட இரவுநேர ஊரடங்குச் சட்டம் அமுலுக்கு வந்ததோடு அது திங்கட்கிழமை முதல் காலை 11 மணி தொடக்கம் முழு அளவில் விஸ்தரிக்கப்பட்டது. முழு நுவரெலியா மாவட்டமும் ஊரடங்குச் சட்டத்தின் கீழ் வந்தது.
மலையகத்தமிழரின்வரலாறு 199

Page 110
அக்டோபர் 29ம், 30ம் திகதிகளில் பெருந்தெருக்களும் புகையிரதப் பாதைகளும் பயணத்துக்கு தடைசெய்யப்பட்டது. பொலிசாரினதும் ஆயுதப் படையினரதும் வாகனங்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டன.
பொலிசார் ஆர்ப்பாட்டங்களுக்கு தூபமிடுவதாக கூறி எதிர்க்கட்சி எம்.பி.யான பீ. சந்திரசேகரனை கைது செய்ததோடு இன்னும் 25 பேரையும் தடுப்புக் காவலில் வைத்தனர். 3 இலட்சத்துக்கும் அதிகமான தமிழ் பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் வாழும் தோட்டப் பகுதிகளில் பொதுஜன முன்னணி அரசாங்கமும் ஆயுதப் படைகளும் எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையுமிட்டு பதட்டம் கண்டுள்ளன.
பிந்துணுவெவை முகாம் படுகொலைகளுக்கு எதிரான இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் வவுனியாவிலும் திருகோணமலையிலும் இடம் பெற்றுள்ளன. தடுப்புக் காவல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழ், சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். ஆனால் கொட்டகலையிலும் அட்டனிலும் தலவாக்கலையிலும் பொலிசார் சிங்கள குண்டர்களுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டங்களை தகர்க்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இந்த ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள், உள்ளூர் காடையர்கள் அக்டோபர் 27ம் திகதி அட்டன் சந்தைப் புறமாக கட்டப்பட்டிருந்த பிந்துணுவெவை படுகொலைகளை கண்டனம் செய்யும் பதாகைகளை கிழித்து எறிந்ததோடு ஆரம்பமாகியது. தமிழ் தொழிலாளர்களும் இளைஞர்களும் அட்டன் நகரத்தை மட்டுமன்றி அயல் நகரங்களான நோர்வுட், மஸ்கெலியா, தலவாக்கலை, வட்டகொடை, சாமிமலை, பகுதிகளையும் கறுப்பு, வெள்ளை கொடிகளால் அலங்கரித்தனர். பிந்துணுவெவை முகாம் தாக்குதலில் பலியான சந்தனம் செல்வராஜாவின் சடலம் இறுதிச் சடங்குக்காக அயலில் உள்ள கொட்டகலைக்கு வருகின்றது என்ற செய்தி பரவியதும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
தோட்டத் தொழிலாளர்கள், சந்தனம் செல்வராஜாவின் கொட்டகலை மரணச் சடங்குக்கு பதாகைகளுடன் கோஷ்டியாக அணிவகுத்துச் செல்வதென தீர்மானம் செய்தனர். இந்தப் பதாகைகள் “தமிழர்களை படுகொலை செய்வதை நிறுத்து” “ நாம் பிந்துணுவெவையில் கொலையுண்டவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்” “கொலைகார அரசாங்கத்தை எதிர்ப்போம்” என்பவற்றை உள்ளடக்கி கொண்டிருந்தன.
200 மலையகத்தமிழரின்வரலாறு

ஆனால் பொலிசாரும் இராணுவத்தினரும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை தடுத்து நிறுத்தினர். அவர்கள் தொழிலாளர்களை தோட்டங்களுக்கு திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கலைந்து செல்லத் தொடங்குகையில் தெரு ஒரமாக உள்ள கட்டிடங்களின் பின்னால் ஒழிந்து கொண்டிருந்த காடையர்கள் கற்களை வீசினர். மரணச் சடங்கில் கலந்து கொள்ள முடிந்தவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில் தலவாக்கலைக்கு ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஆனால் அவர்கள் அங்ங்ணம் செல்லாமல் தடுக்கப்பட்டனர்.
மறுநாள் சந்திரசேகரன் தலவாக்கலையில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் குறுக்கு விசாரணைக்காக கொழும்புக்கு கொணரப்பட்டார். மக்களை ஊர்வலம் செல்லும்படியும் வன்முறையில் இறங்கும்படியும் தூண்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலையக மக்கள் முன்னணி தலைவர் சந்திரசேகரனை உடனடியாக விடுதலை செய்யும்படி கோரி நுவரெலியா, கந்தப்பொளை, இராகலை, அட்டன், தலவாக்கலை மற்றும் இடங்களை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். எவ்வாறெனினும் மலையக மக்கள் முன்னணியோ அவர்களை வேலைநிறுத்தத்தை கைவிடும்படி கோரி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
எந்த ஒரு பாரம்பரிய இலங்கை இடதுசாரிக் கட்சிகளும் சரி அல்லது தொழிற்சங்கங்களும் சரி தோட்டத் தொழிலாளர்கள் மீதான இத்தாக்குதலை கண்டனம் செய்யவில்லை. லங்கா சமசமாஜக் கட்சியும், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியும், ஆளும் கூட்டரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பதோடு அமைச்சர் பதவியும் வகிக்கின்றன. முக்கிய தோட்டத்துறை தொழிற்சங்கமான இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும், பொதுஜன முன்னணியில் ஒரு பங்காளர் இ. தொ.கா தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களை அமைதியாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.
அரசாங்கமும் பொலிசாரும் தோட்டத்துறை மாவட்டங்களில் உருவான அமைதியீனங்களுக்கு வடக்கிலும் கிழக்கிலும் தனிநாடு கோரி போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகளை குற்றம் சாட்டியுள்ளனர். பிரதி பொலிஸ் மா அதிபரான (மத்திய மாகாணம்) பத்ரி லியனகே ஜலன்ட் பத்திரிகைக்கு கருத்து தெரிவிக்கையில் தலவாக்கலை சம்பவங்கள் தொடர்பாக பலரை பொலிசார்
மலையகத்தமிழரின்வரலாறு 201

Page 111
தேடிவருவதாக குறிப்பிட்ட அவர் ஒரு சில தமிழீழ விடுதலை புலி சந்தேக நபர்கள் மக்களை தூண்டிவிட பிராந்தியத்தில் ஊடுருவிக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் ஊடுருவல் பற்றிய இக்குற்றச்சாட்டு பிந்துணுவெவை கைதிகளின் கொலைகளால் நியாயமான முறையில் தூண்டப்பட்ட பெருந்தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை உடைத்து எறிவதற்கு பொலிசுக்கும், இராணுவத்துக்கும் சிங்கள தீவிர வலதுசாரிகளுக்கும் இடையே இருந்து கொண்டுள்ள நெருக்கமான உறவை பூசி மெழுகுவதற்கான ஒரு அப்பட்டமான முயற்சியாகும்.
எனினும் 2003ல் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி பிந்துனுவெவ முகாம் படுகொலையில் சம்பந்தப்பட்ட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் மூவர் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் ஆவர். மூன்று ஆண்டு இடைவெளிக்குப் பின்னர் வந்திருக்கும் தீர்ப்பு மலையக மக்களின் எதிர்காலத்துக்கு நம்பிக்கை ஊட்டுவதாக இருக்கிறது.
தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதாக காரணம் காட்டி சம்பளம் உட்பட தொழிலாளர்களுக்குரிய சட்டப்பூர்வ கொடுப்பனவுகள் வழங்குவதில் இழுத்தடிப்புச் செய்யப்படுகிறது. தோட்டங்கள் உரிய பராமரிப்பின்றி காடாகிவருகின்றன.
1959ல் தேயிலை 570, 573 ஏக்கர் தோட்டங்களாக இருந்தது. 1978ல் தேயிலை 542, 212 ஏக்கர் தோட்டங்களாக இருந்தது.
1992ல் 23 தனியார் கம்பனிகளிடம் தோட்டங்கள் கையளிக்கப்பட்டன. மீதமிருக்கும் ஜனவசம மற்றும் அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழியங்கும் கண்டி, மாத்தளை மாவட்டங்களில் ஜனவசம அரச பெருந்தோட்டத் துறைகளுக்குச் சொந்தமான 43 தோட்டங்களில் தொழில் புரிகின்ற 12,000 க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குரிய தாகிவிட்டது. நிர்வாக சீர்கேட்டின் காரணமாக 1,310 ஹெக்டேயர் தேயிலைத் தோட்டங்கள் பற்றைக் காடாகி வருகின்றன. இத்தோட்டங்களில் தேயிலைக் காணிகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை; கவ்வாத்து வெட்டுதல், கிருமிநாசினி தெளித்தல், களைகளை அகற்றுதல் போன்ற எவ்வித வேலைகளும் மேற் கொள்ளப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாகச் சம்பளம் கொடுபடவில்லை என்று வீரகேசரி 20-07-2003 அன்று செய்தி வெளியிட்டிருக்கிறது.
202 மலையகத்தமிழரின்வரலாறு

தோட்டப்பகுதியில் 156 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இன்று அவைகளில் 57 சங்கங்கள் மலைநாட்டில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவைகளில் 4 சங்கங்கள் மாத்திரமே பத்தாயிரம் அங்கத்தினர்களுக்கு மேலாக உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்றன என்று தன் ஆய்வொன்றில் பி. ஏ. காதர் குறிப்பிடுகின்றார். தொழிலாளர்களின் ஒற்றுமை சீர்குலைய இடம் கொடுப்பது நல்லதல்ல. போராடத் தயாராக இருக்கும் தொழிலாளர்களுக்கு தலைமை கொடுக்க முன்வருபவர்களே இன்றைய தேவை.
பிரிட்டிஷ் இந்தியாவில் பிறந்த நடேசய்யர், அலீஸ், நாயர், பெரைரா, தொண்டமான் ஆகியவர்கள் இந்திய வம்சாவளி மக்களின் வாழ்க்கையில் பல அளப்பரிய பணிகளை ஆற்றி உள்ளனர். 31-10-99ம் ஆண்டு அமரரான தொண்டமான் ஒருவரே இந்தியாவில் பிறந்து, இந்த நாட்டில் கபினெட் அந்தஸ்துக்கு உயர்ந்த ஒரே மனிதர்.
அட்டவணை 3
1. நூறுக்கு ரூ. 2.50 என்ற விகிதத்தில் இவை உள்ளூர் கச்சேரியில் விற்கப்பட்டன. ஒவ்வொரு டிக்கெட்டிலும் தோட்டம் அமைந்திருக்கும் மாவட்டத்தை குறிக்கும் ஆங்கில எழுத்து காணப்படும். இரண்டு எண்கள் - ஒன்று ஆளுக்கடையாளம் இரண்டு தோட்டத்துக் கடையாளம்.
டிம்புள
டன்சினேன்
பதினேழாவது தொழிலாளி மாரிமுத்து கங்காணி
2. ஒவ்வொரு தோட்டத்தின் பெயரும் கச்சேரியில் பதியப்பட்டு ஒரு
தோட்டத்துக்கென்று ஒரு எண் ஒதுக்கப்பட்டது.
3. டின்டிக் கெட் வைத்திருக்கும் கூலிகள் அரசாங்க செலவில் பிரயாணம்
செய்ய அநுமதிக்கப்பட்டனர்.
4. டிக்கெட் வைத்திருக்கும் கூலிகள் இந்தியாவின் டிப்போக்களிலிருந்து - தட்டப்பாறை, அம்மா பட்டணம், தொண்டி, பாம்பன் - இலங்கை ராகமைக்கு
மலையகத்தமிழரின்வரலாறு 2O3

Page 112
அனுப்பப்பட்டு, அங்கிருந்து தோட்டங்களின் அருகிலிருந்த ரயில்வே ஸ்டேசனுக்கு அனுப்பப்பட்டார்கள்.
5. நானு ஓயா வரையுள்ள பகுதியில் அமைந்த தோட்டங்களுக்குச் செல்பவர்கள் காலை 8.23 கோச்வண்டியிலும் , அதற்கப்பால் உள்ள பகுதிக்கு செல்பவர்கள் இரவு தபால் கோச்வண்டியிலும் பயணம் செய்தார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்வதில்லை.
6. களனி வேனி பகுதித் தோட்டங்களுக்கு மருதானையில் காலை 7.30 மணி
130 மணிக்கு புறப்படும் கோச் வண்டியில் பயணம் செய்தார்கள்.
7. இவர்களுக்கு கொடுபடும் சம்பள விவரங்கள் அணா - பைசா முறையிலே கொடுபட்டது. இலங்கையும் இந்தியாவும் பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழிருந்ததால் இந்த அணா பைசா முறையே இலங்கையிலும் தொடர்ந்தது.
8. டி. டிம்புள்ள மாவட்டம் அதன் கீழுள்ள சில தோட்டங்கள்
டி.1 அப்போட்ஸ் போர்ட் டி.225 சீன் டி.4. அக்கரகந்த டி. 258 சென் ஜோன்ஸ் டி.12. பம்பரக் கொல்லை டி.270 ரப்பான் டி.16. போகாவத்தை டி.273 சென் லினார்ட்ஸ் டி. 41. எடின்பரோ டி.295 ஒஹியா
டி. 58 ஹென்போல்ட்
டி.217 டின்சினேன்
9. ஒவ்வொரு தோட்டத்துக்கும் ஆங்கிலத்தில் ஒரு பெயரும், தமிழில் வேறு
பெயரும் இருக்கிறது. டி என்ற எழுத்து டிம்புள்ள என்ற மாவட்டத்தைக்
குறிக்கும் ஆங்கில எழுத்து.
RHA
3 O. B. E. C coopoo6ALLA, ۵ طلا٪۸sه CHRYS ANTÉMUM f
தோட்டங்களில் தம் உற்பத்தியை சந்தைப்படுத்த பயன்படுத்திய அடையாளங்கள்.
204 மலையகத்தமிழரின்வரலாறு
 

qxwellines@s@ ışırse) :ụtsastoso6%(6).apítoglio mų9ĝo) ou się do@j -ầıúto quo:ļrtsteluss8161qsorgio saeng mgặsố quaeqksố qıflosjourse) 'yısıxomɛtɔ qxooluloos@s@ ışıne):ựvostosoA1164sogo quŋɔų işouksess? .-Zļ641þússiquismoscou, ou siglo(€) turpiųffēģipt? Zuaestrole):ựgúsır)) 1ņsıồs) tipus'ss:ļņotsusoZļ6įqsorție moș& \mớijųnsușose oostęksőj ņńsıçı 4@ęsỆặIỆ:ņośsuno8064qsorgie ļošínhwysfiloge) 0684qosio 1įoosotoo șũjusự ınsımaeos@0.gs Z/8į.qsorție (sgynhqŵượe) gotsusqrtsmožģqoysługog艾98亡ışśsự lọs og figlo ou siglosố sỆTrņogļu sfēış ÁGaerướĝaşkoç spissátó)ımrw.Insolisowąjos8881ņuoto-wasīrieg) "Turneysus 6) logsfē ர9டியவி199ụoğĝolim?)($$<ாமுலு"nயக்குĮmne, 1996ặĝosĝlo
YO LLLLLLLSKK LL0KLL KTTC0 L0L 0LLLLTr LT TTTLrLlY CrTLLLM TYYLLTTYYTT Lr LlT TKY LlMTYYK KLLLLLLYSLLLLL YTLMTT0 TTMT
+-109909109T-Jł@
205

Page 113
ņurus@IỆTro19:įrtsmotos@TTE qoaesivos supportae ļumérį00 TQmụsıļots quo įsū ‘apı9:ựsaguos Ugnologio șUsono09$1$3$ısĩULIMITĘs:ự00.000$ |nő (1099119mộg :įrodotos@saegs-a TỰ973) o sięIIT:ự00909% 1ņoumér)?)?) 19:ự00009ff IỆstos@s@suwur, Isiqopļoặeinss-s-Tuffs) IỆtos@rossmosura Isojoeņģeimssýz-fusés) IỆņos@r@sukasgrā 1ņoglossomosos-a-Tuffs, IỆtos@s)ņuxusgraląsųogļsselmoss-s-Tuffs, sortos@r@susoojrɛ ŋogoļģigimos?--Tlusão) íĜtos@s)ņIsossa 1ņoụoesffolytos@-a-Tuffs, IỆtos@s@suwajra lựseļģipinoff-a-Tufão
IỆstos@r@susoojs 1ņoyooɓolmos-a-Tuffs) tűıņogsìırısçısırotuşiţi,j
f@ītos@nosanaestodos įmoặing ilogejap@għirgsgynowogae@ Im199091991resos), įsięIFEĻrtotoooÃ
Įirus ssssssssigIsırmış, Įırılsių pourĝoći :ụ1191komple) șIgnotos@ ‘įınıs 191ŋƆŋsƏŋpo tų919 quo off, prodotos@ 11ĢIJig) :sfā’ tặ3 yısılasmøte) 11:10 smysop apriņwidsoo@osrotuoso q10@oso įsirų) ·lulollaomete)
qabellips@s@ ışınly|rows®
8Z6|| 8Z6į 8Z6||
tv&& Z6。 |86į 8Z6į ZŁ6į. 9€6|| 826은 G€6į. ƐZ6|| OZ6||
6LG%
8464
6LG는
8LG%
qsoție įITIŴoloog, số) Țoție sumérįop-10s. Ilieș) ș@ȚIFjodorą do@ qofsho \riĝosĝ Insīūō
Țsoț¢ssio qofsho týmtos@omosyn
Irtofi^o(\s]g
1909Ģģun
!stgīūō
0099111009@@
유역半
oirm solisisse) :
Imıxos) ogof qsoglo Ipossopsplitęsę-s-T_1s) OZ6ļūslę įmụpoljstvo
śrĻĻotsissi-gigiğio įs@1909&IỆso Țoție losắloginįırılsĩ quaequố ņIlog symýslists) gắsı
qosiossssss sig imos) yısır,filosoɛɑsɑɑo
206
மலையகத்தமிழரின்வரலாறு

'Is így leytgloiss:ļrtodo09.gắ
qofsąçoitos? 'No'stodo09@
1ņ9Ęısíol/si 'quo:ự00909@
fĒĢUTC) Tsots: įstomotnog;
1ņsố3ısı’érışı:ụoś9II15)
1ņorių fiolego? 119Ő: ystodolnog
qồIỆılưusố-éı:ự00909@
IỆặfi)10091919 tņ19īņ9:ļrtodou,9€.
*1991rmélidorol? -0,919'ls? :ụrto0909@
(199ĝóuspori||1091;%@iņ9 ·ļriodo09@
Įmo o 195Í 'Iseo):ự0090953
Q91009113) QU109Ų#0095í įrloĝoặ109Ġ asoqortolo) Gjiņosoff) isto qąsnę091;Iag@
ŲIIĜq9o uffollo fiqifi 1190)
IsoȚılın sous Nomrņots) ļrių įpusing)yosisir!)
·ışsốus-érısı:ļ10009)
ự009logo JV090909$ Inniuos@omų919-1ņ919:ųosoporus@ayo
·109 TITQ9șulusi@ 19911909 go ogųoorgıslosti tījugosĒĢ@goolitūŮago
ośrī5ņaortoloĵolotuos@rı oluş09ĢĢtīņ(sgęł@ Tiųņosoɛytų9Ưı'ıņg-Tissão
ganologio U1090909@ qsorgļņottospośros) 'quo 'srods09ĢIT,
ự009 loĝio U1090909@ tyulo (1,919 · 19090953
LogoTTu/ss/urung9II 4093):ựnodotos@
tự9ņ19ło qŷIỆņi@ :ļus udsmøte)
Įımér)?\)) IIIŲmŲ1919,9 quo ‘stās apı9:ļrtono09@
-fiņi@ ogys:ự00909%
fırsılıplılığı TỊ1944:ự00909ĢIT,
(Q&oqu§siĝoj:ự00909@
896|| A196|| Ɛ96|| 1964 096|| 6ț76|| Zț76ļ 0176|| 686į. 6€6|| 6864 9€6ļ
9€6||
9€6}.
Z86 į864
086|| 0€6į.
8Z6į
f009ÍTIÐ ÞÁÐI 909Ġ omogusul ự0091091ņofi) ự@ı909Ġ ormasusun qofio yısılassfirste) $39091țiao@ qsorție șițųJIĘ Įs@1909Ġ qsorție prīļņourto Rossiirtoqgoí (8)IIIȚÎasusun qofio įrī£91|[[$ $90,91g109@ qosio apiris), Usosolo sfiŲIĘ 1009119III mộgặui qsorgio simiĝosĝ 100911&olul migžņu. Țoț1910 ĝĝulo qu091901)!!\o ựlı91109Ųfilsētc) gặ-TJIIĘs) osgorglasố nơsolo qsorgio 199mųjųī£ 43091ğıms@
ņusự tựgȚIŲlırī£)ayo 1,9mgặsử
qy-Tapısīs ņrts 1009]]Un mặs@j
tņoglo Jugụ009 Jorģio UIQ30009@ qorqo qornis? siis 1,991999Tc)
qsorgio LT003) TỤĠ n(0.99 109ŘIÐUı gı91|massaoui 43091ğlao@j
Țoțieņņoosofiì mấĠ
207

Page 114
1ạonymụuan 与闾身圆9习np!9ImớruņņasrisisiIrmscootgou) ர பரேடி091998-ig)oÍ [ufi:i96L1:1:OL :Lu高道官3GD니arm적「原1909ĢĢImotos@oqpisரurநிஜ்ரி696||-||-8
·ųır.Tīru kuxplote) șśrīrsu) (gısâs(1909 ogsgjøs filoĝe) asooqglogojęIrodogolųotto-uc)tṛṣṇoĝĝaestos17263GL131었 monoplotos@imérurgie)hsım sigo Į109-Tum, ug (pusiutusŲowrie)omotusopiseoimérusoe)tựsiqøıņousųı89641守1었 |-Ilmu090091ņourse)AG6į-A-Gį quasTrwTs? qøısırası99īru)folkloợghụT: ‘Quos 19ośuraquoe)Z96广—Z-9和
·ųıms-Trụosopusęte) șIỆĝółGo (gloģfristas orglogsfilsēto Imiqoqelayout supasımp3@soooooÍsastosus@go996||
·ųır.Tırrı-lae qyıısırưsựsıne 10909@stuļsloại@onom-ıLoggygąs, quo[r](o996L19184 asoouslynıso1910 sqleusi62896L—亡—ZL “Ilino-TrwTso qouluku9uQoirae)“Titus ujo?) şırıųıgı1ņonu,soolpito08ƐG6||-||-/|
·ụıms-Triq-Nojfollosqøghq1@hulagro?) 1þLJÁDrue) 1ạompiĝotvoZtø61-4-1€. (gọęIỆ (gọęsfitsasoologe, soosĜņın)Imosốojo{įgulo II/1509 JiugulusZZሪt76l←-1-06 ĻIITrung (puslausựsırt) -TITŪ0 1100īģg) ‘ılmıstı99ņofi]1ņo@slysurog)ZZ0守6~L-9 ņģīņs újąjífi 1009 (Uıமுழுரிை யதி திதிரிபாடுĮmne)IỆmrts硕因硕
„poginus ĝemawon mựşımoğos, mosus,finī£ sipis sœuoqogħoĝaĥejo) -us susțira @@@riņ@lou) olioșiĝasoÍ 199ụlusųnĝosĝo nolleggs is o soloạs@méųęs Igogoșofi`e,
9-1999cc9/09-suf@
மலையகத்தமிழரின்வரலாறு
208

o yılı99 ung) qotnu 1909 Iso
[$stotoo qo'shaowoloffisiuose) yı,soğŌŌ) (6) Noni) -19
yısítūs; 6) sırı):
·ųıgosoț¢09h
!tml(0,9%){s} (!!!) suosQ9irto)
· ự109@stūō (), riņ:
·ųı99ĝojtű@ (), riņıę qo'ñoặuos? o(G)} sąşı
‘ulssýsī£) (6), rij-ig
·ņusstū$ (6):rısı-1,9 Q910-14, 11099,9 IĜộ TIẾ5)
|1109ĝoŭfŭso) (6) Iris-ię
09094??Irtoag@'nyoqto 1999.g)
411099op ongonogynori
~1009114Ag) TT9*:09114Ag)i 19
(Ú09 on '09090911430) și 1993
1909ĝosĝun lọolopīgs),
ųshı99Ụsố số · Normóijų9Ųnul
(1909'909(3)Uı “Noous 13)||1||19|33
1909ĢĢlui, srosīgsję
sols) usmę09ỗg) IỆrlogsjøofiri 1ņoUig slæg) sīrioso
Immosus@} Įgulo ļosfil@
|grupulusố ரடிரிாளி
Insuloję இன்டியா
ரயகிழ9பகிர்வி 1090091193)
முயஷய்கு 1ņosofio
8Z986į-Z-12
086||
6!//64-9-!!
0/61°6–ļ
0/61-Zļ–18
8964-0ļ– AZ
-Z96||-||-8
-† 961-9 - 8Z ~ ,ț7961–g– 8Z
qī£9 tūtījífi) luqo slui
ựrloofi) -nj 11@g) sốssfiurlo
уппо)
IỆmrtoஒeg
() )
மலையகத்தமிழரின்வரலாறு

Page 115
6 וויר ((י ו(3 ו "fן (י,
மலையகப் பிரதிநிதிகர்
ஈ.ஜி ஆதாம் அலி 1920 1924 سے எஸ். ஆர். மொகமட் சுல்தான் 1924 - 1924 திவான் பகதூர் இக்னேஸியஸ் சேவியர் பெரைரா 1924 - 1930 கோதண்டராம நடேசய்யர் 1924 - 1930
. 2l J Ꮴ 'Ꭲ Ꭶ,l Ꮠ, Ꭽ oᎩ)t ] 1931- 1935 ஹட்டன் பெரியண்ணன் சுந்தரம் தலவாக்கொல்லை. சிதம்பரம்பிள்ளை வைத்திபலிங்கம்
21 ] Ꭽ Ꭲ Ꮒ1 Ꮰ, Ꭽ oᏱ) 1 1 19 36 - 19 47 ஹட்டன் - கோதண்டராம நடேசய்யர் தலவாக்கொல்லை - சிதம்பரம்பிள்ளை வைத்தியலிங்கம்.
முதலாவது நாடாளுமன்றம் 1947 - 1951 பதுளை எஸ். எம். சுப்பையா கொட்டகலை கே. குமாரவேலு மஸ்கெலியா : சி. ஆர். மோத்தா/ அப்துல் அஸிஸ் நாவலப்பிட்டி : கே. இராசலிங்கம் நுவரெலியா வீ. F. கே. ஆர். எஸ். தொண்டமான் தலவாக்கொல்லை. சி.வி. வேலுப்பிள்ளை பண்டாரவளை : கே.வி. நடராஜா அளுத்துவர தேசிகர் ராமானுஜம் இலங்கை இந்திய காங்கிரஸ் செனட்டர் பெரி சுந்தரம்
செனட்டர் எஸ். நடேசன்
லங்கா சமசமாஜ செனட்டர் எல். பி. ஜயசேன
இரண்டாவது நாடாளுமன்றம் 1951 -1956 நியமன அங்கத்துவம் - சிதம்பரம்பிள்ளை வைத்தியலிங்கம்
மூன்றாவது நாடாளுமன்றம் 1956 - 1960 பிரதிநிதித்துவம் இல்லை.
, () மலையகத்தமிழரின்வரலாறு

நான்காவது நாடாளுமன்றம் 1960 மார்ச் பிரதிநிதித்துவம் இல்லை தொண்டமான் (நுவரெலியா )1940 வி. கே. வெள்ளையன் ( மஸ்கெலிய) 1349
அப்துல் அஸிஸ். (கொழும்பு) 4635
தேர்தலில் நின்று பெற்ற வாக்குகள்
ஐந்தாவது நாடாளுமன்றம் 1960 - 1965 நியமன அங்கத்துவம் w எஸ். தொண்டமான் செனட்டர் ஆர். ஜேசுதாசன்
ஆறாவது நாடாளுமன்றம் 1965 - 1970
நியமன அங்கத்துவம் o எஸ். தொண்டமான் நியமன அங்கத்துவம் வி. அண்ணாமலை செனட்டர் ஆர். ஜேசுதாசன்
ஏழாவது நாடாளுமன்றம் 1970 - 1977 நியமன அங்கத்துவம் அப்துல் அஸிஸ்
எட்டாவது நாடாளுமன்றம் 1977 - 1988 நுவரெலியா தொகுதி - எஸ். தொண்டமான்
ஒன்பதாவது நாடாளுமன்றம் 1988 - 1994
தேசியப் பட்டியல் எஸ். தொண்டமான்
பி. பி. தேவராஜ்
நுவரெலியா தொகுதி எம் . சிவலிங்கம் பதுளை தொகுதி dwp வீரன் சென்னன்
கொழும்பு தொகுதி எஸ். செல்லசாமி
பத்தாவது நாடாளுமன்றம் 1994 - 1999 ஐக்கிய தேசியக் கட்சி சின்னத்தில் போட்டியிட்ட
நுவரெலிய தொகுதி ஆறுமுகன் தொண்டமான் நுவரெலிய தொகுதி எம். சிவலிங்கம் நுவரெலிய தொகுதி எஸ். சதாசிவம் நுவரெலிய தொகுதி எஸ். ஜெகதீஸ்வரன்
மலையகத்தமிழரின்வரலாறு 21

Page 116
பதுளை தொகுதி வீரன் சென்னன் கண்டி தொகுதி எஸ். ராஜரட்ணம்
சுயேட்சை எஸ். சந்திரசேகரன்
பதினொன்றாவது நாடாளுமன்றம் 2000 ஐக்கிய தேசியக்கட்சி சின்னத்தில் போட்டியிட்ட
நுவரெலிய தொகுதி ஆறுமுகன் தொண்டமான் நுவரெலிய தொகுதி எம். சிவலிங்கம் நுவரெலிய தொகுதி al எஸ். சந்திரசேகரன்
கொழும்புத் தொகுதி மனோ கணேசன் பதுளை தொகுதி வி. வேலாயுதம் தேசியப்பட்டியலில் ஐ.தே.கட்சி al யோகராஜன் தேசியப்பட்டியலில் பொ. ஐ. மு வீ. புத்திரசிகாமணி தேசியப்பட்டியலில் பொ. ஐ. மு எஸ். சதாசிவம்
தேசியப்பட்டியலில் மக்கள் ஐக்கிய முன்னணி - ராமலிங்கம் சந்திரசேகரன்
1931 ம் ஆண்டு டொன மூர்த்திட்ட அமுலாக்கம் இலங்கை வாழ் இந்தியருக்கு தேர்தலில் பங்களிக்கும் உரிமையை அளித்திருந்தது. ஏறக்குறைய ஒரு லட்ச
இந்தியர்கள் வாக்களிப்பதற்கான உரிமையை பெற்றிருந்தனர் . 1936ம் ஆண்டு
தேர்தலில் இத்தொகை இன்னும் அதிகரித்தது.
1. கல்வி அல்லது சொத்து அல்லது வருமானத் தகைமை பெற்றிருக்க
வேண்டும்.
2. நிரந்தரக் குடியிருப்புப் பத்திரமொன்றின் வடிவில் ஐந்து வருடங்கள்
வகித்தமைக்கான ஆதாரம் காட்டப்பட வேண்டும்.
மேற்குறித்த, நிபந்தனைகளுக்கூடாகவும் ஒரு லட்சம் பேர் வாக்குரிமைப் பெற்று
வளர்ந்தனர்.
212 மலையகத்தமிழரின்வரலாறு

அரசாங்க சபைத் தேர்தல் வாக்காளர் தொகை
தேர்தல் தொகுதி 1931 1936
தலவாக்கொல்லை 18578 36427 அட்டன் 30409 38142 பதுளை 15764 44.276 பண்டாரவெளை 2162 44959 மாத்தளை 21725 42680 பலாங்கொடை 19322 584.82 நுவரெலியா 18837 38772
அரசாங்க சபைத் தேர்தலும்
போட்டியிட்ட அங்கத்தவர்கள் பெற்ற வாக்குகளும்
மலையகத்தமிழரின்வரலாறு
1931 1936 இடைத்தேர்தல்
பெரி. சுந்தரம் - அட்டன் போட்டியின்றிதெரிவு -- வி.சோமசுந்தரம் - பதுளை na 7299 கே. சத்யவாகேஸ்வர ஐயர் mm 528
-பண்டாரவளை கே. நடேசய்யர் - அட்டன் 16324 - ஸி.எஸ்.ராஜரட்ணம் - அட்டன் 3665 எஸ்.முத்தையா-மாத்தளை 109 டி.வேலுப்பிள்ளை - பலாங்கொடை 6501 a
ஏ.சுப்பையா - நுவரெலிய - 531 ஜே.டி.ரட்ணம்- நுவரெலிய 3806 2663 எம்.சுப்பையா - நுவரெலிய - 10664 எஸ்.ராமையா - நுவரெலிய 5127 - டிபிள்ளை - தலவாக்கலை 92 எஸ்பிவைத்தியலிங்கம்தலவாக்கலை 5898 15896 பிகேவேலுசாமி-தலவாக்கலை 628 -
23

Page 117
1931 தேர்தலில் அட்டனில் பெரி சுந்தரம் போட்டியின்றி தெரிவானார். போட்டியிடுவதற்கு பல முயற்சிகளை செய்தும். கடைசி நாளன்று அவருக்கு கட்டுப்பணம் கட்டுவதற்கு ஏற்பாடு செய்திருந்த பெரிய கங்காணி தலைமறைவாகி விட்டதால் நடேசய்யர் இத்தேர்தலில் போட்டி இடுவதனின்றும் தடுக்கப்பட்டார். இத்தேர்தலில் தலவாக்கலையில் எஸ்.பி. வைத்திலிங்கம் தெரிவானார். நுவரெலியாவில் போட்டியிட்ட நான்கு தமிழர்களும் தோல்வியைத் தழுவினர். ஜே. டி. ரட்னம் சென், சேவியர்ஸ் கல்லூரியில் பணியாற்றியவர் நுவரெலியாவில் செல்வாக்குடன் வாழ்ந்த தமிழர்.
1936 தேர்தலில் தலவாக்கலைத் தேர்தல் தொகுதியில் போட்டியிட விரும்பிய நடேசய்யருடன், அத்தொகுதியை தனக்கு விட்டுக் கொடுக்குமாறு ஓர் ஒப்பந்தம் செய்து கொண்டார் எஸ். பி. வைத்தியலிங்கம். அத்தொகுதியை அவருக்கு விட்டுக் கொடுப்பதற்கு ஒத்துக் கொண்ட நடேசய்யரின் தேர்தல் கட்டுப்பணத்தை 1936ல் எஸ். பி. வைத்தியலிங்கமே கட்டினார். எஸ்.பி. வைத்தியலிங்கத்துக்காக நடேசய்யர் தேர்தல் பிரச்சாரமும் செய்தார். திருமதி ஸி. எஸ்.ராஜரட்ணத்துக்கு பெரிய ஆதரவு இருக்குமாப்போல காட்டப்பட்டாலும் தேர்தல் முடிவின் போது அட்டனில் நடேசய்யரும், தலவாக்கலையில் எஸ். பி. வைத்தியலிங்கமும் வென்றனர்.
r 影 3:
고 1 மலையகத்தமிழரின்வரலாறு

SSLLLLLSSLLLLSLSSLSSLSSSLSLSSSLSSLLSLSSLSSYSLSSLSLSSLSLSSLLSSLLSSASLSSLSSYSLSSSLSSLSSLSSLSLSSLSLSSLSLSSLLSLSSSSSSLSSSSSSLSSLSLSSLSLS
மலையக மக்களின் வளர்ச்சிப் படிகளில்.
MSSLLSSYLSSLSLSSLSLSSSLSLS SLSLSSSLSSSYSSLLSSYSSLSLSLSLS SLSLSLSLSLSLSLSLSLSYLSLLLSLSLSSSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSLSSLLSSLLSSLLS
பெரி. சுந்தரம்
1948 ல் இலங்கை நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளிகள் குறித்து சமர்ப்பிக்கப்பட்டு சட்டங்களாக்கப்பட்ட போதும், அம்மசோதாக்கள் செனற் சபையில் எடுக்கப்பட்டபோது பெரிசுந்தரம் தெரிவித்த கருத்துக்கள் முக்கியமானவைகள். அது அவரது அரசியல் சட்ட மன்ற அனுபவங்களும் அறிவும் முதிர்ச்சியும் கொண்ட செனட்சபை விவாதங்களில் அவருக்குண்டான பரிணாமத்தையும் காட்டுகிறது.
23-07-1890 - 04-02-1957
ஆதிகாலந் தொட்டே குடிவரவு இலங்கையில் பிரச்சினைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டதில்லை. விஜயன் இங்கு குடிவந்து இந்த நாட்டை ஆண்டிருக்கிறான். வணிகர்கள் இங்கு குடிவந்து வியாபாரம் பண்ணியிருக்கிறார்கள். பலாத்காரமாக இங்கு கொண்டுவரப்பட்ட மக்கள் இந்நாட்டு மக்களோடு ஒன்று கலந்து விட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் நம்
2
5
மலையகத்தமிழரின்வரலாறு

Page 118
அழைப்பின் பேரில் இங்கு வந்து நம்மை ஆண்டிருக்கிறார்கள். ஒரு சிலரை நாம் விரும்பி நமது மன்னர்களின் மகிஷிகளாக்கி இருக்கிறோம். டொனமூர் ஆணைக்குழுவின் சிபாரிசுக்குப்பின்னரேயே குடியகல்வும்-குடிவரவும் சில பிரச்சினைகளை உண்டுபண்ணத் தொடங்கியுள்ளன. கண்டிய மன்னர் காலத்தில் சில குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. நீதிபதி டயஸ் அவர்கள் கண்டிமன்னர் காலத்தில் இலங்கையில் ஏற்பட்ட ஒரு பெரிய தமிழ், முஸ்லிம் குடியேற்றத்தைப்பற்றி ரொபட்சன் வழக்கில் குறிப்பிடுகிறார். ரொபட்சன் செனல் தீவுகளிலிருந்து கண்டியில் குடியேறி வாழ்ந்தவர்
“கண்டியில் சிங்களவர்கள் மாத்திரம் குடியிருக்கவில்லை. கண்டியைப் பொறுத்தமட்டில் கரையோரச்சிங்களவரும் அந்நியரே, என்று டயஸ்ஸின் தீர்ப்பையும், மகாவம்சத்தின் மொழிபெயர்ப்பையும் (டேர்னரின் மொழிபெயர்ப்பு பக். 17) எடுத்துக்காட்டி “கண்டியில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர் என்பதை வரலாற்றில் நாம் காணலாம். அநுராதபுரத்தில் ஒரு தமிழ் மன்னன் நாற்பது ஆண்டுகள் (சிலோன் கசேட்டர் பக் 11) வாழ்ந்து நுவரக்களவியா என்றறியப்பட்ட பகுதியை ஆண்டுள்ளான். கண்டியின் 1815ம் ஆண்டு பிரகடனமே இங்கு தமிழர்களின் இருப்பைக் கூறுவதற்கு போதுமானது. இந்தியாவிலிருந்து தமிழர்கள் தோட்டத் தொழிலாளிகளாக வந்த 1847ம் ஆண்டு (இந்தியா. எண்: 12) “நில அமைப்பு, வரலாறு, சமூக அமைப்பு ஆகியவற்றால் ஒன்றிணைந்த இலங்கையில் கிழக்கிந்திய கம்பெனியின் செல்வாக்கு குட்பட்டு” வருவதற்கு இந்தியா சட்டமியற்றியுள்ளது. 1911ல் குடிசனமதிப்பின் போது சேர் டென்கம் கூறியபடி ஏராளமான சிறைக் கைதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்; நெசவாளர்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்; குயவர்கள் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள்; தொழிலில் கைதேர்ந்த குறிப்பிட்ட சாதியினர் குடியேற்றப்பட்டிருக்கிறார்கள். சிங்களம் பேசுகிறவர்களாக மாறியிருக்கும் புத்தளம், நீர் கொழும்பு வாசிகளெல்லாம் தமிழர்களே. குருணாகல் மாவட்டத்தில் ஹிரியால ஹட்பட்டுவில் பகுதியில் திதெனிய பாலத்த எனும் இடத்தில் வாழும் சிங்களம் பேசும் கரவாசாதியினர் தென்னிந்தியாவிலிருந்து வந்த இந்து சமயத்தினரே. அவர்களிடம் தாலிகட்டும் பழக்கம் இன்னுமிருக்கிறது. 1867 புத்தளம் நிர்வாக அறிக்கை எழுதிய மெக்ரெட் தம்மை கண்டியர்கள் என்று கூறுகிற புத்தள
வாசிகள் உண்மையில் இந்தியர்களே என்று கூறுகிறார். கண்டி நுவரவேவ
216 மலையகத்தமிழரின்வரலாறு

தெப்பக்குளத்தில் இந்தியர்களின் நினைவுச்சின்னங்கள் இருப்பதை
கண்டியத்தலைவர்கள் என்னிடம் கூறியிருக்கின்றனர்.
1901 ல் 413,000 ஆக இருந்த இந்திய தொழிலாளர்கள் 1911 ல் 470,000 ஆகவும் 1927ல் 720,000 ஆகவும் பெருகினர். 26 ஆண்டுகளில் அவர்களின் சனத்தொகை 307,000 ஆல் அதிகரித்துள்ளது.
தேயிலை றப்பர் மொத்தம்
1910 385,000 204,000 589,000 ஏக்கர் 1927 460,000 405,000 865,000 ஏக்கர் அதிகரிப்பு : 75,000 201,000 276,000 ஏக்கர்
தேயிலை தோட்டத் தொழிலில் ஏக்கருக்கு ஒருவர் என்றும், ரப்பர் தோட்டத் தொழிலில் ஏக்கருக்கு இருவர் என்றும் தேவைப்படுகிறதைப் பார்த்தால், 17 ஆண்டுகளில் 477,000 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த புள்ளிவிபரங்கள் கேரி அவர்களால் - ஐரோப்பியர் உறுப்பினர் - சட்டசபையில் 2-11-1928 சமர்பிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தொழிலாளர்களின் வருகைக்கேற்ப பொருளாதாரம் வளர்ந்துள்ளது என்பதற்கு தேயிலை, ரப்பர் பயிர்ச்செய்கையின் அதிகரிப்பு காரணம் கூறுகிறது. 1948ல் இந்திய சனத்தொகை 6 லட்சம் என்கிறபோது, இந்தியர்கள் இந்நாட்டில் தொழில் புரிவதற்காகத்தான் வந்திருக்கிறார்கள் என்பது பெறப்படுகிறது.
ஜி. சி. எஸ் கொரியா அவர்கள் 1934ல் அரசாங்க சபையில் “நான் நிச்சயமாக சிங்களவர்கள் தொழிலாளியாக தேயிலை, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதை விரும்பவில்லை என்றும், டி. எஸ். சேனநாயக்கா அவர்கள், 1935ல் அரசாங்க சபையில் “தோட்டத் தொழிலில் சிங்களவர் நுழைந்தால் கிராமத்தையும், நாட்டையும் பற்றி கவலைப்படமாட்டார்கள்” என்றும் பேசியிருப்பதை கவனத்தில் கொண்டால் இலங்கையினருக்கு ரொட்டியை மாத்திரமல்ல, வைனையும், பழத்தையும் தேடித்தருபவர்கள் இந்திய தோட்டத் தொழிலாளர்களே.
மலையகத்தமிழரின்வரலாறு 217

Page 119
அப்துல் அஎபீஸ்
தொழிலாளர்களை போராட்ட வீரர்களாக்கிய பெருமைக்குரியவர் ஜனாப், அப்துல் அஸிஸ், இலங்கை இந்திய காங்கிரஸ் 1939ல் தோன்றியது முதல் இவரது சேவை மலையகத்தமிழருக்குக் கிடைத்தது.
O6-10-1912 - 29-)4-1990
சுதந்திர முதல் பாராளுமன்றத்தில் மஸ்கெலியாவில் நடந்த இடைத் தேர்தலில் வென்ற அப்துல் அளtஸ் வடஇந்தியாவில் போர்பந்தர் ஊரில் பிறந்தவர் வர்த்தகவியல் கல்வி பயின்று பி. கொம் பட்டதாரியானார். இ.தொ.கா. வின் இடதுசாரி போக்குக்கு இவரே பிரதான காரணகர்த்தாவாக இருந்தார். அந்த இயக்கத்திலிருந்து முதலில் பிரிந்து சென்று இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்தவரும் இவரே.
R IIEIul Krigsily flirt BLUtility
 

வி. கே. வெள்ளையன்
தொழிலாளிக்கும் தொழில் கொடுப்போருக்கும் இடையில் சினேகப்பூர்வமான, உறவு வளர்வதற்கு கூட்டு ஒப்பந்தங்கள் உதவி செய்கின்றன. தொழில் நீதிமன்றங்களில் தொழிலாளர்களின் சார்பில் ஆஜர்ஆகி, அவர்களின் வழக்குகளை வெற்றியடைய வைத்ததோடு மட்டுமமையாது, தமது வாதத் திறமையால் தொழில் மன்றத் தீர்ப்புகள் கூட்டு ஒப்பந்தத்தை மீறலாம் என்று காட்டியவர் வி. கே. வெள்ளையன்.
வி. கே. வெள்ாையன்
1978 - 1977
இலங்கையிலிருந்து சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியாவுக்கு குடிபெயர இருந்த ஆறுபேரின் வழக்கு இது. பதினைந்து வருடத்துக்கும் முப்பத்திமூன்று வருடத்துக்குமாக, வெவ்வேறுபட்ட சேவை காலம் அவர்களுடையது. ஐந்து வருடத்துக்கும் மேலாக ஒரே நபரிடம் தொழில் புரிந்தால் ஒருவர் சேவை காலப் பணம் பெறுவதற்கு தகுதியுடையவராகிறார் என்பது பொதுவிதி. அந்த விதிக்கமைய அவர்களின் வழக்கு அட்டன் தொழில் நீதிமன்றத்தில் பதிவாகி, 1970 மே மாதம் விசாரணைக்கெடுக்கப்பட்டது. தொழிலாளர்களின் சார்பில் வி. கே. வெள்ளையன் ஆஜராகி வாதிட்டார். அவர் தன் வாதத்தில்:-
“தொழிலாளர்களின் சார்பில் பல கூட்டு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. 1967ம் ஆண்டு அப்படி ஒர் ஒப்பந்தம் முதன்முறையாக இலங்கை தொழிலாளர் காங்கிாஸுக்கும் - தோட்டமுதலாளிமார் சம்மேளத்துக்குமிடையில் செய்யப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி ஆறு தொழிலாளர்கட்கும் சேவை காலப்பனம் தருவதற்கு சம்மேளனத்தினர் ஒப்புக் கொள்கின்றனர்.”
மகனலயகத்தமிழரின் வரலாறு

Page 120
“மொத்த சேவை காலப்பணத்திலிருந்து, முதலாளிமார்கள் கொடுத்திருக்கும் புரொவிடண்ட் பணத்தை கழிக்கும் முறை பொதுவாக இப்போது நடைமுறையிலிருந்தாலும், இது ஏற்றுக் கொள்ளப்படமுடியாத நியதியாகும். புரொவிடண்ட் பணம் என்பது வேறு, சேவை காலப்பணம் என்பது வேறு. இந்த இரண்டையும் பெறவதற்கு தொழிலாளிக்கு உரிமை உண்டு. தொடர்ந்து வேலை செய்யும் நல்ல உழைப்பாளி ஒருவனுக்கு புரொவிடண்ட் பணம் அதிகமாக இருக்கும். அதே காலப்பகுதியில் ஒழுங்காக வேலை செய்யாத, சோம்பேறியான தொழிலாளிக்கு புரொவிடண்ட் பணம் குறைவாக இருக்கும். சேவை காலப் பணம் கொடுப்பதற்கு இப்போது நடைமுறையிலிருக்கும் பழக்கத்திற்கியைய (சேவைகாலப்பணம் - புரொவிடண்ட்பணம்) சோம்பேறியானவனே பயனடைகிறான். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள், இந்தியாவுக்கு போவதற்கான பயண ஏற்பாட்டைச் செய்தவர்கள். இந்த வழக்கினால் ஆறு மாதமாக இலங்கையிலிருக்கிறார்கள். எனவே அதனையும் கருத்திலெடுத்து ஒரு தீர்மானத்தை எடுக்க” வேண்டினார். முதலாளிமார்களின் வக்கீல் “ஒப்பந்தப்படி தருவதற்கு மேலாக,தொழிலாளிகட்குச் சார்பாக அளிக்கும் தீர்ப்பு பிழையான முன்னுதாரணமாகிவிடும்” என்று பயமுறுத்தினார்.
தொழில் நீதிமன்றத்தலைவர் எஸ். தருமலிங்கம் இரண்டுவாதங்களையும் சீர்துக்கிப்பார்த்து வெள்ளையனின் வாதத்தில் உள்ள நியாயத்தைக் கண்டு கொண்டார். “நல்ல உழைப்பாளர்களைத்தான் நாடு வேண்டிநிற்கிறது. அவர்களுக்கு நியாயம் செய்யப்படுதல் வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தின்படி செயல்படுகிறபோது ஏற்படும் பிழைகளைத்திருத்துவதற்கு தொழில் நீதிமன்றங்கள் தயங்கக்கூடாது. இந்த கூட்டு ஒப்பந்தம் பல குறைபாடுகளைக் கொண்டது இதை ஏற்க முடியாது” என்று அவர் தீர்ப்பளித்தார்.
சம்மேளனம் இத்தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை மீள் விசாரணைக்கெடுத்தது. சத்யேந்திரா “இந்த கூட்டு ஒப்பந்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செய்தது; வெள்ளையன் தொழிலாளர் தேசிய சங்கத்தைச் சேர்ந்தவர்” என்றெல்லாம் கூறினார்.
சுப்ரீம் கோர்ட்டிலும் தொழில் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்றுகொள்ளப்பட்டது. அவர்களின் தீர்ப்பு 51 பக்கங்களிலானது. ஐந்து நீதிபதிகளைக் கொண்ட சுப்ரீம் கோர்ட் வழக்கை விசாரித்தது.
“தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சில சிந்தனைகள்” என்ற எஸ். ஆர். டி. சில்வா எழுதிய நூலில் வெள்ளையனின் வாதத்திறமை மெச்சப்பட்டிருக்கிறது.
220 மலையகத்தமிழரின்வரலாறு

UD2ഖബ്
க்ேகிய தேசிய முன்னணி 7-10-2003 ம் தேதி நாடற்றவர் சட்ட மூலப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்ததன் மூலம் மலைநாட்டு மக்களுக்கு எதிராகத் தமது 1948 பிரஜாவுரிமைச் சட்டம் செய்த அநீதிகளைத் திருத்திக் கொண்டிருக்கிறது. இந்த சட்டமூலம் எஞ்சியிருக்கிற1,68,141 பேருக்கு இலங்கைக் குடிமக்களாகும் தகுதியைத் தருகிறதென்றாலும், மொத்தத்தில் இலங்கையில் பிறந்து வாழுகிற அனைத்து இந்திய வம்சாவளியினரையும் மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக பாரதியாரின் பாடல்களை பாடுகின்றபொழுது இவர்களுக்கொரு குறை இருந்தது. இன்றோடு அந்தக் குறை தீர்ந்து விட்டது. இனி இவர்களாலும்
“எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன் முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை வந்தனை கூறி மனதிலிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ?”
என்று பாடமுடியும். 1908ல் இதைப் பாரதியார் பாடியபொழுது தமிழரெல்லாருக்கும் பொதுவான பாடலாக இது இருந்தது. 1948 வரையிலும் அப்படியே தானிருந்தது. ஆங்கிலேயர் ஆட்சியின் கீழ் சுதந்திர இந்தியாவையும், சுதந்திர இலங்கையையும் எண்ணிக் கனவுகள் கண்டவர்களுக்கு செயலூக்கம் தருகிற பாடலாக இது அமைந்தது. அதற்கு பின்னர் அந்த உரிமையை இந்த நாட்டு பிரஜாவுரிமைச் சட்டம் இவர்களில் இலட்சக்கணக்கானோரிடமிருந்து பிரித்து எடுத்து விட்டது. இன்று அந்த உரிமையை இந்த சமூகத்தவர்கள் எல்லாரும் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.
நாடாளுமன்றத்துக்கு வந்திருந்த 172 அங்கத்தினர்களும் இந்த சட்டமூலத்தை ஏகமனதாக அங்கீகரித்திருக்கிறார்கள் என்றாலும், சட்டமன்றத்துக்கு வருகை தராத 53 அங்கத்தினர்களும் இருக்கிறார்கள்
asuund sölgfler suvunuo 221

Page 121
என்பதை நாங்கள் மறக்கவில்லை. அந்த ஐம்பத்திமூவரும் எவ்விதம் வாக்களித்திருப்பினும் இந்திய வம்சாவளியினரின் முக்கியத்துவத்தை விரும்பாத இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடிகிறது.
வளர்ந்து வருகிற ‘இலங்கைத்துவத்தை வளர்க்கும் முறை இதுவல்ல என்பதையே நம்மால் இந்த வேளையில் சொல்ல முடிகிறது.
நாம் இலங்கையர்; நமது நாடு இலங்கை, நமது மொழி தமிழ்/ சிங்களம்.
கவிதையில் பிரகடனம் செய்த பாரதியாருக்கு முன் இருந்தது பதினெட்டு மொழிகள்; வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் நாம் பதினென்மர் என்று அவர் பிரகடனம் செய்தார். நம்மால் முடியாதா? நாம் இருமொழிப்பேசும் இலங்கையர்கள். கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகளாக, இலங்கைத் தீவிலே நாடற்றவர் என்ற பட்டம் சூட்டி நம்மில் பெரும்பான்மையினரை சமூக வாழ்வின் அனைத்து நடவடிக்கைகளிலும் ஒதுக்கிவைத்த கொடுமை நடந்தது.
ஆம், 1948 நவம்பர் 15ல் நாடற்றவரானோம். 2003 ஒக்டோபர் 07ல் அந்த இழி பெயர் எம்மிடமிருந்து அகற்றப்படுகிறது. இதை ஒரு பொது பிரகடனத்தின் மூலம் செய்திருந்தால் இலங்கையின் அரசியல் முதிர்ச்சியைப் பலரும் பாராட்டி இருப்பர்.
எமது உழைப்பினால் உயிர் பெற்ற இந்த மலையகம்; எங்கள் பரம்பரையின் இரத்தமும் சதையும் புதையுண்டதால் வளங்கண்ட மலையகம்; இதன் வளத்துக்காய் உழைப்போம்.
222 மலையகத் தமிழரின் வரலாறு

’LL6lI
'826 I
'866 I ‘966 s
'886 I '966 I “Zizó I '896 I
‘996|| ’LL61
‘L96 I of768 I
’9Z6|| ’0 I 6 I * [ 007 o £796 I * 876I
·oquo soɔ
o quo soɔ
'euger ‘uoņeH
Ápubx uequnGI
· o quo soɔ *oquo soɔ
oquo soɔ
o quoIoOE)
‘uopuoT
·oquo soɔ
o quo soɔ o quo soɔ oquo soɔ
os q[9Cs oquio soɔ
0ç6I/6Z6I ‘uosÁəOuỊ sɔŋŋoā IeuopæN
puessərồuoO seuoņeNuoỊKɔɔ əų. Jo shuounɔOGI ‘uoỊKɔɔ Jo uoņeỊoossv suɔmuela. Jo xooq pueH 'exsueI ĮJS Jo uoņspēJ L KIɛjɔųTI ɔŋoqueɔ əųL 'exsue“I sus us əIdoəā Iļue L Ánunoɔ dɑ ɔų. Jo KjoissH V oñepuo@I KJuəg ươngig 'supuesÐ ueɔŋV qinos 9ųJ.
·ɔsɛO Jəpun.W ɔdoa əųŁ
|-‘uoỊKɔɔ oņus uopejoļuluu] uo uosss!uuuuoo e Jo quodəYI ‘uos KəO JO SJOULIɔAop qsŋsug
'exubo Isus
us Jox{JOAA uoņequela uespuI əų, pue uoŋɛɔmpɛI (1961-1981) was uosÁəojo subok pəıpunH v |-|-‘pue^Auo 0£3 I UJOJH ‘uoỊKəƆ uỊ ɔsĻIdi ɔɲug ẩuņuelā 9ų jo suɔəuosas uoIKɔɔus suņuesa ɔųL Ke Aa II e XI nu ɔuuuuɔ a oso uos Kɔɔ əųJ. ‘os spelea Jo SIIs H əųJ. 'peou qw puɛ ɛypu I us quodsueu L 8z6I - 6 I 6 I ssəuẩuoɔ I euo!) e N uos K2O ɔųą Jo xooq pueH əų L
“Nossosyn osuɔqoxs 'sis '94 nųnuububuouelpuəHā.‘9 s
|-:SouesəpeN 'fysis
!
ubaouOGIųɔsupỊow og I
‘eusųë, ‘JooW (ZI!
op‘I’O'JossəIX ‘II
'preapāIIS ‘uossoer (OI! 'rv'HolstonInH (6|| ‘V’s) onųnuieueu98) ‘w’q nsəliog · LỊ
‘uqof ‘uosnốio:I 'T'H'peəqəųųAA pue "Oos" quos IIĘ ‘A ‘KJuəH ‘əAeQ Nos oặpsuuə’əəua ·
· ·T· No 193 euqeqq
ܩ ܐ ܢ ܐܐ ܐܶܢܽc
• G • H ‘A ‘S ’əxe KeuleJepue q : I
Mwanao. NamenwpMaierarongsNoArgangnum
XJH&IV>{{DOITISHISH
மலையகத் தமிழரின்
223

Page 122
9007 686 s 686 I
000Z 866 I
"Z86||
966 Í '#96|| ‘986 I
'#66I o L86 s '966 I ’6L6lI
of786|| "SL6I * [96 ]
Islae Ikusiĝu. husûsloe,
103091ņooey
Issosiţsoe)
' oquo soɔ ‘oquo [00
'sql3CI
' oquo soɔ ! Odsuu os o 3D
' oquIoIoɔ ' oquo soɔ
'sqlɔCI
‘oquo soɔ
‘KųɔĻIL
*O quIoIoɔ * OguIoIoƆ
sūıkests ymffiċj oversite& qısılığııııs@ırse) tømựsko otorskeŐj
Ipohqŵo școwoś6)īņs
oesodosəųGIpue ox{os JuMouq ‘bueixos^suS 9Ç6 I - Ig6I-uoỊKəƆ yo ɔungeissão Tolp us opeu səųɔəədS Jo uoŋɔələS V eỊeAesəļox put uosÁəƆ 'exsul?TI ĮJS [esuoIoOuį sɔŋŋo ɖɔļuụng ‘uosÁəƆ Jo uoŋesƏossy suɔJuelā ɔųL #c6I- †ç8I 'exsueT Į IS uỊ suɔx{JOAA uoņeguesas que soțulus uelpus ‘SOĻssoas puɛ ɛəL
sƏuuĻL pueəJĮI KW Lý6I- LOLI SIĘuue Loq) Jo Kuops!H IespoS
-LL6I-II6 I exsul?TI ĮJS Jo səInỊssãoI əų, o, suoŋɔɔIGI Jo KəAuns peɔŋsņeņS y 'exsueT ĮJS us sssue.LueĮpus Jo læÁɛŋəgəųL ‘uosÁəƆ yo səɔỊAJəS ɔIIqnɑ ɔų. Jo səsduuỊIÐ *XOO {{ 3\ON SJəļuesā
t9sqoftoomusojos» og ogąPous rogo uulos) 'ış909.99£sjø lỵ qoỹısımộộổi
§ ·ışŲpırıtış olqosoɛɛ, maes@ ‘ın eyɔɔ ɲɔŋŋorneșậsł@
ouooYeuuƏI, epueỊeuuIAA
‘S’əpā'ā'Doəuneleuue DIOINA
reis NoəųầusseuueDHoỊAA
CI-eunuəduunsəAA
:SoueuuepuolųL à ouesueueIqnS
op'H'SA'9"eAĻĀS ?TXI uueấusseAsS 'H':TV ouļeropues ‘XTH "progrəqỊn?I
ኽy6 osoɛ Tz3
ኼ6 ዄõ
’6%
‘87 'LZ '97
'97 '#77 '97 *ZZ
*IZ "OZ "6I '81||
மலையகத் தமிழரின் வரலாறு
224

இந்நூலாசிரியரின் பிறநூல்கள்
♦ 1. Un60)6nolulu&535 5Lôly prif - வரலாற்று குறிப்புகள்
9 2. சி. வி. சில சிந்தனைகள் - இலக்கிய நூல்
3. தேசபக்தன் கோ. நடேசய்யர் - வரலாற்று ஆய்வு
(தேசிய சாகித்திய மண்டலப் பரித)
4. பத்திரிகையாளர் நடேசய்யர் - மொழியியல் ஆய்வு
(தேசிய சாகித்திய மண்டலப் பரிசு)
5. மலையக இலக்கியம் - தோற்றமும் வளர்ச்சியும்
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு)
9 6. மலையக வாய் மொழி இலக்கியம் - கட்டுரைகள்
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு)
9 7. மலைக் கொழுந்தி - (சிறுகதைத் தொகுப்பு)
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு)
8. இன்னொரு நூற்றாண்டுக்காய் - கட்டுரை நூல்
9. மலையகம் வளர்த்த தமிழ் - (கட்டுரைத் தொகுப்பு)
9 10.பிணந்தின்னும் சாத்திரங்கள் - (குறுநாவல்கள்)
C 9 இக்குறியிட்ட பிரசுரங்கள் கைவசமில்லை )
விபரங்கட்கு சாரலகம்
60, 6777767. A list of lazolol. As still alli 6ls/rz Laséosv
الم. ܢܠ
மலையகத் தமிழரின் வரலாறு 225

Page 123
° 4777Giờ Go/6rrướ** t_4, cỡ g/7qỉ245677
01. விருட்சப் பதியங்கள்- தொகுப்பு: சுப்ராமைந்தன்
(49 கவிஞர்களின் தொகுதி)
2. மலையக இலக்கியம் - சாரல் நாடன்
(மத்தியமாகான சாகித்தியப் பரிசு பெற்றத)
93. மனுவியம் - சிறுகதைகள் - மல்லிகை சி. குமார்
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது)
94. ஒரு நாடும் மூன்று மனிதர்களும் - மொழிவரதன்
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது)
5. மலையக இலக்கிய தளங்கள் - சு. முரளிதரன்
(மத்திய மாகான சாகித்தியப் பரிசு பெற்றது)
96. பிணந்தின்னும் சாத்திரங்கள் - சாரல் நாடன்
(குறுநாவல்கள்)
97. வாழ்வற்ற வாழ்வு - நாவல் - சி.வி. வேலுப்பிள்ளை
(இலங்கை இலக்கியப் பேரவை பரிசு பெற்றத.)
8. வேரனுந்த மரங்கள்- குறுநாவல் - சிக்கன்ன ராஜ"
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு பெற்றத)
9. வரமும் வாழ்வும்-நாட்டாரியல் - சு. முரளிதரன்
(மத்திய மாகான சாகித்தியப் பரிசு பெற்றது)
10.தளிரே தங்க மலரே-சிறுவர் இலக்கியம் -மொழிவரதன்
(மத்திய மாகாண சாகித்தியப் பரிசு பெற்றது)
11. மலையகத் தமிழர் வரலாறு - சாரல் நாடன்
C 9 இக்குறியிட்ட பிரசுரங்கள் கைவசமில்லை
விபரங்கட்கு சாரல் வெளியிட்டகம்
7 ரெ7சிட்ட7 பல்கூட்டுச் சந்தை \ கொட்டகலை ار
226 மன்லையகத் தமிழரின் வரலாறு


Page 124

தேயிலை ஆராய்ச்சிநிலையமும், தேசிய தேயிலை முகாமைத்துவ நிறுவனமும், இணைந்து நடாத்திய தேர்வில் அகில இலங்கையிலும் முதலாவதாக வந்தார்.
யாழ் இளம் எழுத்தாளர் சங்கம் நடாத்திய ‘இலக்கியம் ஏன்?’ என்ற கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு, வீரகேசரி பத்திரிகை நடாத்திய மலைநாட்டுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு என்று தன் எழுத்துக்கு கனம் சேர்த்த இவர் எழுதிய ‘தேச பக்தன் நடேசய்யர்’ என்ற வரலாற்று நூ லுக்கு ம் , “ பத் திரிகை யாளர் நடேசய்யர்” என்ற ஆய்வு நூலுக்கும் தேசிய சாகித்திய மண்டலப் பரிசில் கிடைத்து இலக்கிய வித்தகர் பட்டமும் கிடைத்தது. மலையக இலக்கியம், மலையக வாய்மொழி இலக்கியம், மலைக் கொழுந்தி (சிறுகதைத் தொகுதி) ஆகிய நூல்களுக்கு மத்திய மாகாணச் சாகித்திய மண்டலப் பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன.
LANKA AND THE RAMAYANA என்ற சின்மயா மிஷன் வெளியிட்ட ஆய்வு நூலில் (1996) ‘மலையகத்தில் இராம வழிபாடு’ என்ற இவரது ஆங்கிலக் கட்டுரை வெளிவந்துள்ளது.
கொட்டகலை இலக்கிய வட்டம், மலையக கலை இலக்கியப் பேரவை ஆகியவைகளின் தலைவராக விளங்கும்
சாரல்நாடன், சாரல்வெளியீட்டகத்தின் உரிமையூா அகில இலங்கை தமிழ்ரீ தவானுமாவார்.

Page 125