கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சப்ததீவு

Page 1

|× |× |×o ::::: ,-
- :

Page 2
-
3 வகைகளும்
Gr மருந்து வகைகளும்
விற்பனைக்குண்டு
Animal, Poultry Foods
& Forage
SR. WJAYA STORES
65, Wolfendhal Street,
COLOMBO - 11 Phone: 32751
மில்
விஜெயா மில் '
171 ஏக்கித்த ருேட்,
வத்தளே.

ஆசிரியர் ச. சதாசிவம் சேவியர்
19Ꮓ9

Page 3
æss --- திரு. அ. லெ. தம்பிஐயா
/l.m AasGBu raA uqdh) urTAdb asübGCI6of லிமிடெப், கொழும்பு
அவர்களின்
ஆசியுரை
* தீவகன்" வெளியிடும் சப்த தீவு அவரின் பலவருட அயராத ஆவலின் பூர்த்தியே! தாயகத்தின் ,LLLS0SSLS LSLSLSSSSSSLSSL மேல் அவர் கொண்ட தாகமும் - .. .. - ܫ ܀ -ܓ தணியாத பற்றும், பாசமும், தேசிய அபிமானமும் ஒன்று கூடி வெளிவரும் இம்மலரின் பெயரினுலும் அவரின் புனைபெய ரிஞலும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. பின்தங் கிய தன் தாயகத்தை மட்டுமன்று, அயல்தீவகங்களையும் விழிப் புறச் செய்ய உணர்ச்சிவசமான வசனநடைகளையும் அறிஞர்கள், பெரியோர்களின் பொன்மொழிகளையும், வீரமொழிகளையும் எடுத் துக்காட்டி யிருக்கும் திறமையே ஒரு தனிப்பெரும் பெருமை யாகும். எந்தநாட்டு மக்களுக்கும் விசேஷமாய் தீவகங்களுக் கும் சப்ததீவு, நல்லொளி காட்டும் சிறந்த வழிகாட்டியாய் அமை வது மன்றி, அவரவர் தாயகத்தின் நல்வளர்ச்சிக்கும் முன்குேடி யாய் விளங்கும் என்பது எனது முடிவு. பலவழிகளாலும், பல முன்னேற்றங்களினுலும் பின்தங்கியுள்ள தீவகங்கள் வருங்கா லம் நல்ல முன்னேற்றத்தையடைய வேண்டும் என நல்லாசி கூறுகிறேன். தீவகனின் தீரமிக்க கன்னிப்படைப்பான சப்த தீவிற்கு என்றும் என் நல்லாசிகளையும் கூறுகின்றேன்.
கொழும்பு, அ. லெ. தம்பிஐயா 12-978.
米 ck 米
ஊர்காவற்றுறைத் தொகுதியில் முன்னை நா 0ாராளுமன்ற உறுப்பினர், தேவையறிந்து சேவைபுரிந்து பண்ணை புங்குடுதீவு வாணர் பாலங்கள் அமைத்த தொண்டர், ஈழத்திள் பெரும் தொழிலதிபர்களின் முன் வரிசையிலே திகழும் போதிபர், பலநிறுவனங்களின் புகழ்வாய்ந்த உரிமையுாளர், இயக்குநர், ஆயிரக்கணக்கான திவகமக்களின் வறுமைப் பிணி தீர்த்த வள்ளல்,
 

உலகு புகழ் சட்டமாமேதை, உடல் பொருளாவி தமிழினத்திற்காய் அர்ப்பணித்த தன்மானத்தலைவன் கற்பனை கடந்த அற்புதச் சொற் பெருக்காளர்
அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்கள்
ஆசிச்செய்தி
என் உள்ளம் கொள்வே கொண்ட இளைஞனின் துணிவு
'அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு” என்று நம் முன்ஞேர் சொன்ன முதுமொழிக்கு ஒப்ப அன்றும் இன்றும் வாழ்ந்து காட்டும் மக்களை ஈன்றெடுத்த தாயகமே தீவகம்.
அஞ்சா நெஞ்சமும், அறிவுத் திறனும், ஆற்றலும், விவே கம் செறிந்த வீரமும், அன்புக்குப் பணியும் கொள்கையும் தாயக அபிமானமும், தன்மானம் காக்கும் பண்பும், உழைப்பில் வாக்கமும் தீவகமக்களிடத்திலே அபரிமிதமாய்க் காணலாம்.

Page 4
iv
தீவக மக்களுக்குச் சகலவசதிகளும் குறைவறக் கிடைக் குமானுல் சகல துறைகளிலுமே முன் இடம் வகிப்பார்கள். விருந் தோம்பும் பண்பும், விழி நிறைந்த கண்களுடன் வழி அனுப்பும் பண்பும் தீவகத்திலேயே காணமுடியும்.
"இருபத்தைந்து வருடங்கட்கு முன்னர் மறக்கமுடியாத நிகழ்ச்சியில் என் உள்ளத்தைக் கொள்ள கொண்ட இளைஞனே சதாசிவம் சேவியர். அன்று தொட்டு இன்றுவரை தாயிகத்துக் காகவும், தன் இன மத மொழிக்காவும், தன்னேயே அர்ப்பணிக் கக் கூடிய முறையில் துணிந்து பணியாற்றிய பல சந்தர்ப்பங் களையும், 1956ல் என்னுடன் கூடவே கொழும்புக் காலிமுகத் திடலில் நின்று உற்சாகமாய் உழைத்ததையும் என்னை விட்டுப் பிரிந்து செக்கடித் தெருவிலே அவர் பட்ட சித்திரவதையையும் என்னுல் மறக்கவே முடியாது. அதிலும் அவர் துணிவு போற் றத் தக்கதே. நேர்மையும், துணிவும், சுறுசுறுப்பும், புன்னகை யும், தியாக சிந்தையும், ஊர் அபிமானமும் இவருடன் கூடப் பிறந்த கொடையெனலாம்.
இப்படியான சற்குண உத்தம குணம் உள்ள இவர் தீவ கத்தைப் பற்றிய கட்டுரைகள் அடங்கிய “சப்ததீவு” மலரை வெளியிட அருகதை உடையவரே. . -
'தீவகன்” என்ற புனைப் பெயரே தாயக அபிமானம் கொண்டவர் என்பதை 'சப்ததீவு" மக்கள் எளிதிலே அறிய
முடியும்.
இம்மலர் தீவக மக்களின் வருங்கால நல்வளர்ச்சிக்கு ஒளி யாய் விளங்கும் என நல்லாசி கூறி வாழ்த்துகின்றேன்.

6/1 ரொறிங்ரன் இடம்
கொழும்பு, 7.
ஆசியுரை
தாய்ப் பற்றுப் போலவே தாயகப் பற்றும் இரத்தத்துடன் இரண்டறக் கலந்தது. இருந்தும் இப்பற்றுக்கு எல்லோரும் தம்மை அர்பணிப்பதும் இல்லை, அடிமையாவதும் இல்லை மிகச் சிலரே அடிமையாகின்றனர்.
தாயகப் பற்று உள்ள தியாகிகளாலேயே தாயகம் தலை நிமிர முடியும். ஒளி பெற்று மிளிர முடியும், அந்தத் தியாகிகள் வரிசை யில் “சப்ததீவு” ஆசிரியர் "தீவகன்” (சதாசிவம் சேவியர்) தனக்கென ஒரு தன்ரி இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதை எண்ணிப் பெருமை பாராட்ட வேண்டியவராய் உள்ளேன்.
தீவகத்தையே தாயகமாகக் கொண்டவன் என்ற பெருமை யும், பின்தங்கிய தாயகமாய் இருந்தும் நான் வகிக்கும் நிலைக்கு என்னை என் தாயகம் உருவாக்கியதே என்ற பெருமையும் மகிழ்ச்சியும் எனக்குண்டு
அல்லாமலும் தீவகங்களிலேயே முதன் முதலாகத் தோன்றிய ஊர்காவற்றுறை சென்ற் அந்தோனியார் கல்லூரியையும் அதன் பழைய மாணவன் என்ற பெருமையையும் எண்ணும் போது என் உள்ளம் சொல்லொண்ணு மகிழ்ச்சி அடைகின்றது.
அன்றியும் ஊர்காவற்றுறை சென்ற் அந்தோனியார் கல்லூரி, வேலணை மத்திய கல்லூரி இவற்றல் உருவாக்கப்பட்ட அநேக மக்கள். இன்று இலங்கையில் மட்டுமல்ல உலகின் பல பாகங் களிலும், பல துறைகளிலும் முன் இடம் வகிப்பது போற்று தற்குரியதே. இப் பெருமை இவ் இரு கல்லூரிகளையுமே சாரும்

Page 5
vi
இவற்றைப் போல் பல கல்லூரிகள் தீவகங்களில் ’தோன்ற வேண்டும் என்பதே என் பேராவலும், பிரார்த்தனையுமாகும்.
இந்நூல் ஆசிரியர் ‘தீவகன்” நீண்டகாலம் அறிமுக மாணவர் என்ற முறையில் இளமையிலேயே தாயைப்பிரிந்து, தாயகத்தைப் பிரிந்து, தாய் மதத்தைப் பிரிந்தும் கூட தாயக அபிமானத்தால் பல நன்மைகளை இழந்து அடிமையாகி இவ் அரிய நூலைத் தொகுத்து வெளி விடத்துணிந்தமை பாராட்டுக் குரியதே.
அன்றியும் இந் நூலிலே மணம் பரப்பும் பல கட்டுரை களும், கவிதைகளும், தாயக மக்களை மட்டுமல்லாது தாயகத்தை நேசிக்கும் சகல மக்களையும் கவரக் கூடிய தன்மையில் அமைந் துள்ளது ஓர் தனிச் சிறப்பாகும். இதை உருவாக்க உதவிய சகல மக்களும் போற்றப்படவேண்டியவர்களே.
இந்நூலால் தாயக மக்களாகிய 'சப்ததீவு" மக்களையே ஒன்று கூட்டி அவர்களின் இரத்த நரம்புகளிலே தாயகப்பற்றை யும். அபிமானத்தையும் தனக்குள்ளது போல் ஏற்றி உள்ளமை யும். இவரின் நற் பண்புகளும், நல் எண்ணங்களும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. இந் நூலின் வழியாக அவரின் தாயக தாகம் தெளிவாகப் புலப்படுவதையும் காண முடிகிறது.
இதுவரை காலம் எம் தீவகங்களைப் பற்றி எவரும் வெளி விடத்துணிவு கொள்ளாத இந் நூலை இவர் வெளிவிட்டமை பாராட்டுக்குரியதே. வருங்காலம் இது போன்று பல அரிய நூல்கள் வெளிவர இந் நூல் ஓர் சிறந்த வழிகாட்டியாய் அமைந்துள்ளது என்பதே எனது முடிவாகும்.
சதாசிவம் அவர்கள் சதா தமது வாழ்வில் நற்பணிகள் புரிந்து
தியாகமும், நேர்மையும் நிறைந்த நல் வாழ்வு வாழ என்றும்
இறை அருள் பொலிக என வாழ்த்தி நல்லாசி கூறி நிற்கின் றேன்.
S. சர்வானந்தா

மு. கருளுகிற ❖ሣ99« -ሣቻመ
Gorsaw neu i sef sus Lod assas
availar
25・6・1972
an Buffa4 G-7 (smund so o Aus Zeqë sdp scq scs áfa * soð Guaums zTLTT LLTT LMLLLLSSSL0TaTTETTLL MLMLLLLL
Bal Adunaî99
ou o , o Tupara o . سه ه org. | valuatourrdp, "ourday' status is na de ud Gao
பகுதிகளிலும் வாழ்ம் தமிழரீதம் உள்ளம்களில் பெருஞ்சிறப்புப் பெறவும், எழுதிகளிலும் வாழுந் தமிழரிடையே உள்ள SAðgano è 9gatou fricarfab 0 lasă asajutod சிறக்கவும் தங்கள் முயற்சி பயன்பட வேண்டுக் sig, ேெத தன் முயற்சி வெற்றி பெற வேய்ரும் என்றும் மனமார காந்தில் பாராட்டுகிறேன்.
Ada Yin vuaa 4Aa Auostaea.
سبی
de • • • •sf Auds.
69, A. Ganas oss. Gerepi .

Page 6
எனது வாழ்த்து
.தங்கள் அன்பான ܝ
f. ds. 5s GDLJUIT J. P. தலைவர். கிராமசபை-நயினுதீவு.
இலங்கையில் இரண்டு தலங்கள் மட்டுமே பல இன சமய மக்களையும் ஒன்றுசேர்க்கும் தலங்களாக விளங்குகின்றன. தெற்கில் கதிர்காமம் வடக்கில் நயினுதீவு. இதுவரை பல பெரியார்கள் இத்தலத்தைப் பற்றிப் பல புத்தகங்கள் வெளி யிட்டிருக்கிறர்கள். ஆனல் அவை யாவும் நயினையில் அமைந் துள்ள தலங்களை மட்டும் குறிப்பன. ஆளுல் தாங்கள் கொண் டுள்ள இம்முயற்சி நயினையின் தலங்களுடன் நயினையின் கலை, கலாச்சாரம், பொருளாதாரம் என்பவற்றையும் கூறுவதாக உள் ளது. இது மிகவும் பாராட்டுக்குரியதாகும். பலர் நயினைத்தலச் சிறப்பினை அறிந்துள்ளார்களேயன்றி பிற சிறப்புகளை அறிந் திலர் அவற்றினைத் தங்கள் நூல் வாயிலாகப் பலர் அறியச் சந் தர்ப்பம் கிடைப்பது எனதுார் மக்களுக்குப் பெருமையையும் மற்றைய மக்கட்கு பெரும் பேற்றையும் அளிக்க வல்லதாக அமைகின்றது. அது மட்டுமன்றி அயல் தீவகங்கள் பெருமை யையும் கூறப் புகுதல் தீவுப்பகுதி மக்கட்கே பெருமை அளிப்பதாகும். தங்களின் இவ்வளரும் சேவைக்குத் தீவுப்பகுதி மக்களே நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளார்கள். எனவே தங் களின் இம் முயற்சி சிறப்புற்று ஓங்க எனது ஊர் மக்கள் சார் பில் என் பூரண நல்லாசிகள் கூறிட அம்பிகையை வழுத்து கின்றேன்"
வணக்கம்
 

அ. த. அம்பலம் ஜே பி, அக்கிராசனர், disprubs Gou.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடமேற்கில் எழு தீவுகள் உண்டு. நெடுந்தீவு, புங்குடுதீவு, நயினுதீவு, அனலைதீவு, எழுவ தீவு, லைடன்தீவு, காரைதீவு என்பன அடங்கும். இவற்றில் பல தனிச்சிறப்புக்களுண்டு. மணிமேகலை, இராமாயணம் முதலான நூல்களிலும் இவை இடம்பெற்றுள்ளன. போர்த்துக்கீசர், ஒல்லாந்தர். பிரிட்டிஷார் இத்தீவுகளை நன்கு அறிந்துள்ளனர். பல மேன்மைகளையுடைய தீவுகளின் வரலாற்றை நாட்டுப் பற்றுக்கொண்ட நண்பர் திரு. ச. சதாசிவம் (சேவியர்) அவர்கள் எழுதத்துணிந்தது பற்றி மிகவும் சந்தோஷப்படுகிறேன். நெடுந்தீவு சம்பந்தப்பட்ட கட்டுரை வழங்கும்படி என்னிடம் கேட்டிருந்தார். பலவேலைகளின் நிமித்தம் அதைக் கொடுத்துதவ அவகாசம் இல்லாததால் இன்னும் ஓர் அன்பர் மூலமாக அதை அவர் பெற்று அக்குறையை நிவர்த்தி செய்து நெடுந்தீவு சம்பந்தமாக நன்கு ஆராய்ந்து உண்மை புலப்படுத்தப் பட்டிருக்கு மென நம்புகிறேன். இவரது வரலாறு ஆயிரம் வருடங்களுக்குப் பிறகும் பயன்படக்கூடியதாக இருக்குமென்ற தமிபிக்கை எனக்குண்டு. இதற்கு ஆசி வழங்குவதிற் பெருமைப் படுகிறேன். இவரது நற்பணி மிகவும் சிறந்தமுறையில் பயன் பட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
agUTDétreptu, நடுந்தீவு, ls 374.
வாழ்க தீவகம் ararfs தமிழினம்;

Page 7
460sfig GD
இன்று எம் வாழ்வு வளம்பெற வேண்டுமே! அதற்காக எமக்கு அறிவுரை நல்கவேண்டியவர் யார்? தாயகத்தாகம் நிறைந்த LTTLLTTTTTT LLLT TLLLLLTTS LLTL T L C T T LLL LLT TL LTTTTLTL நிறைந்த என் அன்புக்கினியவர் நண்பர் ‘தீவகன்" (சதாசிவம் சேவியர்) தன் சிந்தனே முழுவதையும் சப்த தீவுகளிலும் செலுத்தி யுள்ளார். வாழ்வாங்கு வாழத்தக்க வழிவகைகளை தர்க்கரீதியில் எடுத்துரைத்துள்ளார். இன்றையநாளில் நாம் பாரம்பரியத்தில் பழகிய பல்வேறு சமீபிரதாயங்களையும் விட்டொழிப்பதில் திண்டாடுவோம். ஆனல் துணிந்து செயற்படுங்கள். எம் தீவகம் பொன் கொழித்த பூமியாக விளங்கவே செய்யும்.
நான் இரண்டாண்டுகாலம் சப்ததீவுகளிலும் கடமையாற்றிய பொழுதே கண்ணுரக் கண் டே ன் , தீவகத்தவரின் சிறந்த சிந்தனையை தீவகத்தினர் வளம் காட்டாத இயற்கையை வெல்லத்துணிந்து சென்றனர் எவ்விடத்தும். ஆங்காங்கே வர்த் தகராய், அறிவுத்திலக்ங்களாய், அரசாங்கச் செம்மல்களாய்த் திகழ்கின்றனர். ஆளுல் அவர்கள் தம் தாயகத்தின்பால் அன்பு கொள்ளாமல் இல்லை. அவர்களுக்கு மேலும் தெம்பூட்டி இயற் கையையும் வென்று செல்வம் கொழித்த பூமியாய், அறிவு நிறைந்த இடமாய் விளங்கவேண்டும் என்றே தாயகத் தாகம் நிறைந்த அன்பர் உணர்ச்சிவசப்பட்டு அனைவருக்கும் ஊசி மருந்தென இந்நூலினை ஆக்கியளித்துள்ளார். அன்ஞரை ஒத் தவர் பலர் முன்னின்று உழைக்க வேண்டும். சப்ததீவுகளுமே ஓரிரு ஆண்டுகளில் கட்டாயம் மேலும் முன்னேற்றம் காணவே செய்யும் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.
92, ருெட்ரிக்கோ பிளேஸ், al. 5ly TSA கொழும்புக 15 வட்டாரக் கல்வி அதிகாரி 3-978.

என்னுரை
நீறுபூத்த நெருப்பாய், நெடுநாட் குடியிருப்பாய் உறங்கிக் கிடந்தது என் விருப்பு அந்த மன ஆசையின் மணியோசையே இந்தச் சிறுமலர். தாங்கமுடியாத வறுமை, தவிர்க்கமுடியாத சோதனைகள், உதவியேயற்ற தனிமை, அரைகுறைப் படிப்பு அற்ப அறிவு, அனுபவக் குறைவு அடிக்கடி பயணம். கொழும் பில் பத்தாண்டுகளுக் கொருமுறை பதட்டம், பரிதவிப்பு இத் தனையும் சேர்ந்து என் இதயத்தையே கசக்கிப் பிழிந்தது கவலை. இருந்தும் இவற்றையெல்லாம் உடைத்தெறிந்தது ஒரு தாகம். அதுதான் தாயகத்தின் மீது நான்கொண்ட தணியாத மோகம்.
மின்மினி போல் உள்ளத்தில் மின்னிய என்தாகம் சுடர் விட்டொளிரும் தீபமாக மூன்டேரியத் தூண்டுகோலாகியது ஒருசோக நிகழ்ச்சி. அஃது உலகறிந்த உண்மைக் கதை. இதோ கேளுங்கள்.
1958-ஆம் ஆண்டு கொழும்பு மாநகர் அல்லோலகல்லோ லப்பட்டது. குருவளியிற் சிக்கிச் சுழலும் துரும்பு போல தமிழ்மக்கள் நிலைகுலைந்து, நிம்மதி இழந்து, நினைவுமே இழந்து கதியிழந்து கண்ணிர் உகுத்துத் தாயகம்போகும் வழிவகை இழந்து தவியாய்த் தவித்தனர். நினைத்தாலே நெஞ்சு வெடிக் கும் துயரமது.
"கொந்தளிக்கும் ஆழியில் ஓர் ஒடம் கோரக்கூச்சலிடும் புலிக்காட்டில் ஒரு மான்குட்டி வெந்தவியும் சுவாலையிலோர் வீட்டில் வெய்ய விஷ நாகக் கொடுவாயில் தவளைக் குஞ்சுபோல அஞ்சிப்பயந்து அங்கலாய்த்தனர் தமிழ் மக்கள்". ܀
இந்நிலயிலே திரு. ஏ. எல். தம்பிஐயா அவர்களது FFarr யற்ற பெரு முயற்சியாலும் தயாளகுணத்தின நிறைவாலும்

Page 8
- xii
கப்பல் கம்பெனிகளெல்லாம் கதியிழந்த தமிழ் மக்களைக் கடல் மார்க்கமாகத் தாயகம் சேர்க்க உடன்பட்டன. ஆளுல், கடல் மார்க்கப் பாதை இல்லையே என்ற பிரச்சினை எழுந்தது. அப் பொழுது மறைந்த மாபெரும் சட்டமேதை திரு. ஜீ. ஜீ. பொன்னம்பலம் சட்டத்தைக் காட்டிப் பாதை திறந்தார். கதி யிழந்த தமிழ் மக்கள் காங்கேசன்துறைக் கரை சேர்க்கப்பட்ட னர். அந்தத் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியவர்களில் அடி யேனும் ஒருவன். கடைசியாகப் புறப்பட்ட "மல்லிகா” என்ற கப்பலிற் சென்றேன். அந்தக் கப்பலிற் சென்ற இருநாளும் எப்போ என் தாயகத்தைக் காண்பேனுே என்று ஏங்கிய ஏக் கத்தின் பெருந் தாக்கமே தாயகத்தாகமாய் என்னுள்ளத்திற் சுரந்து ஊற்றெடுக்க ஆரம்பித்தது. அறிவிற் குறைந்தவன் நான் அனுபவச்சுவடுகளையும் கண்டறியாதவன். எழுத்தறிவுச் செல்வத்திலும் ஏழை. இருந்தும் இதயக்குமுறலின் வேதனை தாங்க இயலாத காரணத்தால் எழுதத் துணிந்தேன். அறிஞர் உலகும், இளைஞர் உலகும் என் தாயகத்தின் உறவினர் உலகும் ஆதரவு நல்கி அரவணைக்கும் என்ற அசையாத நம்பிக்கைத் திடனும் எனக்குண்டு. எல்லோர் கரங்களிலும், அதிலும் தீவ கத்தார் கரங்களிலும், அதிலும் விசேஷமாய் என் தாயகத்தா ரின் தங்கக்கரங்களிலும் தப்பாமல் தவருமல் இம்மலர் தவழ்ந்து மணம்பரப்புமென்ற திடநம்பிக்கையுமுண்டு. என்னுடைய சிறு முயற்சியால் அரும்பிய இச்சிறுமலர் வருங்காலத்தின் தீவக சந்ததியினரின் உணர்ச்சிமிக்க விழிப்புக்கு ஒளி பரப்பிட ஒரு தூண்டாமணி விளக்காய் ஒளிரும் என்பது என் நம்பிக்கை.
குழந்தையின் குதலைமொழியிற் குறைகாண்பாருமுனரோ?
வணக்கம் !
“Sssorsos au Tas io” ச. சதாசிவம் சேவியர்
புங்குடுதீவு 3 w
"எந்த நாட்டில் ஏழை தன் கீழ்நிலையிலிருந்து விடுபடு: கின்ருளுே அந்த நாடு உலகிலே தலைநிமிர்த்து ஒப்பற்ற நாடாய்த் திகழும்". . . . .

※ ※
※
கரப் பேரலைகளைக் கொண்ட காரிருள் நீலக் கருங்கடலால் சூழப்பட்டதும்,பலவளங்களும் வசதிகளும் குறை வாய் ப் பெற்றதும், நிலவளம் நீர்வளம் அறவே அற்றதும், யாழ்நகரின் தொடர்பினை அற்றதும் அன் றிருந்து இன்றுவரை யாருமற்ற அணுதையாய் அரவணைப்பார் யாருமின்றித் தன்கையே தனக் குதவியென்ற தாரக மந்திரத் திற்கமைய, நீரில் மூழ்கியவன் நீந்திக் கரையேறத் தா விப் பிடிக்கத் தவியாய்த் தவிப்பது மாய்த் தத்தளிக்கும் நித்திலங் களாகிய எம் தாயகமே சப்த
தீவு.
வங்கக் கடலின் பொங்கும் பேரலைகளின் பொறுமைக்கு அரணுய், ஒன்று க் கொன்று தொடர்பற்று அங்குமிங்குமாய் அணிவகுத்து ஒளிவீசிப் பார்ப் போர் மனதைப் பரவசப்படுத் தும் சப்ததீவில் இயற்கை எழிற் காட் சியோ கண்கொள்ளாக் காட்சியாகும்.
லைடன்தீவு,
தீவு, எழுவைதீவு, காரைதீவு
※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※※
சப்ததீவு
۔۔۔۔۔۔ ۔۔۔ ※※※※※※※※※※※※激激米※※※※淹※“@a田命”※※濂
புங்குடுதீவு, நெடுந்தீவு, நயினுதீவு, அனலை
※ ※
ஆகிய ஏழு தீவுகளையும் ஒன் றிணைத்ததே சப்ததீவு. கால முன்னேற்றத்தினுலும் மாற்றத் தினுலும் மறுமலர்ச்சியாலும் காரைதீவு யாழ் ந கரு டன் தொடர்புகொண்டு காரைநக ராய் மாறிப் பல வசதிகளையும் பெறும் பாக்கியம் பெற்ற அதிர்ஷ்ட தீவகமாய் ஆகிக் கொண்டது.
சப்ததீவிலே ஆதியில் தோன்றிய கட்டடங்களும், கோட்டைகளும், கடற்கோட்
டைகளும் ஒல்லாந்து தேசக் குதிரைகள் மேயும் புல்வெளி களும் அ வை களு க் கென அமைக்கப்பட்ட நீர்த்தொட்டி களும், நீரோடைகளும், ஆழ மான பாதாளக் கிணறுகளும் கல்லால் அடுக்கிய அற்புத வேலிகளும், ஆங்காங்கு வழங் கப்படும் பெயர்களும் ஒல்லாந் தரின் ஆட்சியை இன்றும் நினை வுறுத்துவனவாய் உள்ளன.
மேலும், வங்கக் கடலையும், வாய் திறந்து மூடாத பேய் அலைகளையும், பொருட்படுத் தாது, பகல் இரவு பாராது அணி வகுத்துத் தோணி எல்லாம் மீன்பிடிக்கச் செல்லும் கண் கொள்ளாக் காட் சி யை யும், கண் உறங்க விண் மறையும்

Page 9
2
கதிரவனின் கதிரொளியையும் அதன் இரம்மியமான காட்சி யையும் சப்த தீவிலேயன்றி ஈழ வள நாட்டிலே எங்குமே காண Oyb9- (Lu ATg5I.
அன்றியும், காலத்திற்குக் காலம் தேசாந்திரம் செல்லும் ஒருவகைப் பறவைக் கூட்டம் அராபியா, ரஷ்யா, சைபீரியா, போன்ற வானுலக சஞ்சரிப் பாளர் தேசங்களிலிருந்து இச் சப்த தீவுகளை நாடிவந்து தேன் நிலவைக் கழித்துத் திரும்புவ
தானுல் வருங்காலச் சுற்றுலா
வாசிகள் சப்ததீவை முற்று கையிடாதிருக்க முடியுமா?
அல்லாமலும், மணிமேகலை ܗܝ யின் மங்காப்புகழ்பெற்ற மணி பல்லவம், அங்கே எழுந்தருளி அடியார்க்கு அருள்கொடுக்கும் நாகபூசணியம்மை சிலப்பதி
காரத்தில் பேர்பெற்ற கண்ணகை
மற்றும் அம்பாள் கோவில்களும் ஆதியில் தோன்றிய சிவன், பிள்ளையார், முருகன் கோயில் களும் அண்மையில் தோன்றிய சவேரியார், அந்தோனியார், மாதா கோயில்களும் பாஞ் சாலைகளும் பள்ளிவாசல்களும் -- அன்றிருந்து இன்றுவரை பெரும் யாத்திரைத்தலங்களாய் Hழ்பெற்று வருகின்றன.இவை மட்டுமா? கொடுங்கடலை ஊட அறுத்து இயற்கையை வெல்ல அமைக்கப்பட்ட கடற் பாலங்
6 gp560
சப்த
களையும் வீதிகளையும் பனை, தென்னை பசுஞ் சோலைகளும் Lu TL FT5 fS6õT Luruh Lur Godaš கடலையும் பாடியாடிக் கூடிக் குலாவும் பறவைக் கூட்டங்
களையும், சிறு பற்றைக் காடு
களையும், வள மற்ற வயல் தோப்பு வாவிகளையும், உவர் så GJAT RMD 85 &T u lið, e 6MT ô நொந்து வாட்ாத விவசாய வீரர்களையும், துரவு கிண்டி நீர் இறைக்கும் தோட்டங்களையும், தாக நீர் தேடித் தள்ளாடும் ந  ைட யி லே தவித்தலையும் தாய்க்குலத்தையும், க ர ல் மைலுக்கொன்ருகக் காட்சி தரும் கல்விக்கூடங்களையும், தென்றற் காற்றையும், தேன் சொட்டும் செந்தமிழையும், தெவிட்டாத தீஞ்சுவை உண வையும் சப்ததீவிலே இன்றும் காணலாம்; என்றும் காண லாம். எனவேதான் தீவகத்தார் இயற்கையை வெல்லும் செயற் கையாகச் செழுமையை நாடித் தேசாந்திரம் சென்றேனும் திர வியந்தேடி நாளும் பொழுதும் n போடுகின்ருர்கள். தாயகத்தைத் தலைநிமிர்ந்த ஒளி நிறைந்த தாயகமாய் ஆக்கி வருகின்றர்கள். மேற்கொன் டும் அறியத் துடிக்கும் அரிய சகோதரர்களே! இ ன் னு ம் உள்ளே செல்லுங்கள். இது வரை நாவிலேபட்டது நுனிக் கரும்பு. இனி அடிக்கரும்பு.

தீவு 3
ஏழு தீவின்.
(வித்துவான் கவிஞர் ச. அடிைக்கலமுத்து"
கருமைபெறு கடல்நீரும் நீலவானும்
கைகோத்துத் திரிகின்ற களிப்புநாடு பெருமைபெறு வடகடலில் முத்தைத்தேடிப்
பெண்களின்வாய் வாசலிலே முத்தைக்காணும் அருமையுறு நிகழ்ச்சியுள அமலநாடு
அக்கால இலக்கியத்தில் அமையுநாடு திருவளிக்கும் கற்பகமாம் பனைகள் தெங்கைத்
திசைதோறும் பார்த்துநகுஞ் சிறப்பு நாடே.
மாணிக்கத் தீவாளாம் இலங்கைமாதா
வல்லபஞ்சேர் பாரத தேவிக் கென்று காணிக்கைப் பொருளாக நீட்டிக் காட்டும்
கற்பகப்பூந் தட்டமோ? கனியோ? இன்ப வாணியெனும் கங்கைநதி உருட்டி வந்து
வங்கத்துக் கடல்விட்ட சங்கு முத்தோ? காணுகின்ற பாலாடை கட்டிக் கொண்டு
கடுந்தவஞ் செய் கன்னியரோ? காண்பீர் மாதோ.
கருணையுள மாந்தரிலே நெஞ்சைக் கண்டேன்
காடடர்ந்த முல்லையிலே சிரிப்பைக் கண்டேன் திருநிறையுங் கற்பகத்திற் கொடையைக் கண்டேன்
செங்கமலத் தாள் வழியே முகத்தைக் கண்டேன் அருமருந்துக் கொடிகளிலே தாய்மை கண்டேன்
ஆரமுதுக் கிளிகளிலே மொழியைக் கேட்டேன் ஒருபோதும் ஓயாத அலைகள் வந்து ܚ
ஓராரோ தாலாட்டைப் பாடக் கேட்டேன்.
தூதுவளை குறிஞ்சா பொன் முசிட்டை கொவ்வை துயர்தீர்க்கும் ஒடியற்கூழ் பிட்டு உண்டு ஒதுகின்ற சுகங்கண்டு வாழ்ந்த மக்கள்
உறை விடமே! ஒளவையார் அருளிச் செய்த நீதிநெறி போலினிக்கும் உரைகள் சொல்வார்
நெஞ்சினிலே அறம் வளர்க்கும் நேயநாடே! வேத நெறி மாமுனிவர் கருணை பாயும் - மெய்யடிகள் படிந்திருக்கும் மேன்மை நாடே!.

Page 10
“நயினைத்தலச் சிறப்பு”
-- நாக. குமாரசூரியர்
நீர் வளமும், நில வளமும் நிறையப் பெற்று இயற்கை அன்னையின் எழில்மிகு தோற்றத்தால் சீரும், சிறப்பும் பெற்று விளங்குவது நயினுதீவு. நயினுதீவு, இயற்கை வளம் நிறைந்த இலங்கா துவீபத்தின் வடபால் யாழ்ப்பாணக் குடாநாட்டை அடுத்துள்ள சப்த தீவுகளுக்கு நடுநாயகமாக அமைந்துள்ளது. நயினுதீவு ஏறக்குறைய நான்கு மைல் சுற்றளவுள்ளது. கடுகு சிறிதெனினும் காரம் பெரிதென்ற முது மொழிக் கிணங்க நயிஞதீவு அளவாற் சிறயதெனினும், தொல் புகழாற்றல் சிறந்த தீவாக விளங்குகின்றது. சரித்திர காலத்திற்கு முன் தொட்டே பல சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டு வந்த பெரும் புகழுடையது நயினுதீவு. இத்தலத்திற்கு நாகதீவு, நயினுர்தீவு. நாகநயினுர்தீவு, மணி பல்லவத்தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் எனப் பல பெயர்கள் உள்ளன. இதன் பழைய பெயர் நாகதீபம். பகவான் புத்தர் நயினுதீவைத் தரிசித்த காலத்திலுள்ள பெயரும் நாகதீபமாக இருந்தது. இக் காரணத்தாற்றன் இன்றும் பெளத்தர்கள் நாகதீபம் என்றே அழைக்கின்றனர். மணிமேகலாத் தெய்வம் விஜயம் செய்த போது இதன் பெயர் மணிபல்லவமாக இருந்திருக்கின்றது. அது மட்டுமல்லாது சக்திபீடங்கள் அறுபத்து நான்கினுள் இது ஒன்றே இலங்கையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. நான்கு பக்கமும் கடலாற் சூழப்பட்ட இடமாக இருப்பதால், பண்டைய தமிழ் மக்கள் கடலையும், கடல் சார்ந்த இடத்தையும் நெய்தல் எனப் பெயரிட்டு இலக்கியத்திற் புகழை எவ்வாறு பெற்றுக் கொண்டனரோ அவ்வாறு அன்புள்ளங் கொண்ட இப்பகுதி மக்கள் வாழ்வது கண்டு எவரும் பெருமித மடையாதிருக்க Gypig-turg.
தென்னுட்டிற் கற்புக் கரசியாம் கண்ணகி வாழ்ந்த காலத் தில், தீவுப்பகுதிகளை ‘வெடியரசன்" என்னும் அரசன் ஆண்டு வந்தான். பூரீ கிருஷ்ணமூர்த்தியினுடைய வலது தொடையில் உதித்த பிள்ளைதான் குகனென்றும், அவனுக்கு வெடியரசன் என்னும் பட்டத்தையும், " நீலகேசி " என்னும் பெண்ணையும் விவாகம் செய்து கொடுத்து, சகோதரர் நால்வரையும் சிருஷ்

தீவு s
டித்துக் கொடுத்து, நாகநகரை அரசாளும்படி வைத்தார். காகுந்தி புதல்வனுன மீகாமன் சோழவரசன் கட்டளைப்படி, மரநாய்கன் என்னும் வணிகேசன் மகள் கண்ணகியின் பாதச் சிலம்பு செய்தற் குகந்த நாகரத்தினம் வாங்க நயினுதீவை நோக்கி வந்தான். நயினுதீவு அப்போது வெடியரசன் ஆளு கைக்குட்பட்டிருந்தது. வெடியரசன் நெடுந்தீவிற் கோட்டை யமைத்துத் தீவுப்பகுதியை ஆண்டு வந்தான். வெடியரசன் மாலுமி மீகாமனைக் கரையிலிறங்காதபடி தடுத்து, அவன் வரவை வெடியரசனுக்கு அறிவிக்கிருன். வெடியரசன் மீகாமனை அழைக்கின்றன். மீகாமன் நாகரத்தினத்தைக் கேட்க, வெடியர சன் மீகாமனைப் போருக்கழைக்கிருன், மீகாமன் வெடியரசனைச் சிறை செய்கின்றன். இதனுல் நீலகேசி, தன் மைத்துனன் வீர நாராயணன் என்பவனுக்குச் செய்தி சொல்லியனுப்புகிருள். அவன் தன் சேனைகளுடன் வந்து மீகாமனுடன் போர்புரிகிருன். மீகாமனை வீரநாராயணன் வெட்டுகிருன். மீகாமன் குற்றுயிராய் விழும் போது " கண்ணகையே " என்று கதறுகிருன். கலை முனிவரின் அருளால் மீகாமன் உயிர் பெற்றெழுகிருன். கலை முனிவர் வேலாயுதம் ஒன்றை மீகாமனுக்குக் கொடுக்க, மீகா மன் அதனுல் வீரநாராயணனை மடியச் செய்கிருன். பின்னர் வெடியரசன் சகோதரர்கள் தத்தம் சேனைகளுடன் மீகாமனு டன் போர் செய்கிருர்கள். மீகாமன் தோற்றுப் போகிருன். மீகாமனை வெடியரசன் முன் கொண்டுபோய் விடுகின்றனர். மீகாமன் கண்ணகைக்கு நாகரத்தினம் வாங்க, சோழவரசனுல் அனுப்பப்பட்ட தூதுவனேயன்றி, போர் புரிய வந்தவனல்லன். அவனை ஒன்றும் செய்யாமல் நாகரத்தினத்தைக் கொடுத்து விடுங்கள் என வெடியரசன் கட்டளையிடுகின்றன். மீகாமன் நாகரத்தினத்தைப் பெற்றுக் கொண்டு சோழ நாடு செல் கிருன். - -
மணிபல் ல வ த் தி ல் சிறந்த துறைமுகமிருந்தமையால் மேனுட்டு வணிகரும், தமிழக வணிகரும் தங்கள் பிரயாணத் தின் போது இத்தீவினைத் தரிசித்தார்கள். தமிழ் நாட்டிலிருந்து வாணிகத்தின் பொருட்டு மரக்கலம் ஒட்டிச் சென்ற தமிழ் வணிகர் இடைவழியிலே மணிபல்லவத் துறைமுகத்தில் தங்கிச் செல்வது வழக்கம் 'கம்பளச் செட்டி" என்பவன் கடலிற் சென்று வாணிகம் செய்து திரும்பி வரும் வழியில் மணிபல்லவத்தில் தங்கினுர் என்றும், சாவக நாட்டரசன் புத்தரின் பாதபீடிகையை வணங்க மரக்கலமேறி மணிபல்லவம் வந்தானென்றும் மணி மேகலை கூறுகின்றது. மணிமேகலா தெய்வம் இந்திரன் ஏவலால் தீவுகளைப் பாது காத்துக் கொண்டிருந்தது என ஒரு கதை

Page 11
6 dFus
கூறுகின்றது. கோவலன் குலத்தவன் ஒருவன் இத்தெய்வம் பாதுகாத்த நன்றிக்காகத் தன் புதல்விக்கு மணிமேகலையென்று
பெயரிட்டான். இந்த மணிமேகலையை மணிபல்லவம் கொண்டு
சென்ருரென மணி மேகலை கூறுகின்றது, இக்காரணங்களா லேயே இத்தீவு மணிபல்லவமெனப் பெயர் பெற்றிருக்கலாம்.
மாநாய்கன் என்னும் வணிகர் நயினுப்பட்டர் அல்லது நாயனுர்ப்பட்டர் என்பவரை நாகபூஷணி அம்மன் ஆலய அர்ச்சகராக நியமித்திருந்தாரென்பது ஐதிகம். எனவே அவர் வாழ்ந்த தீவு நாகநயினுர்தீவு அல்லது நாகநயினுதீவு என்ற ழைக்கப்படுகின்றது. நாகர் என்ற சாதியினர் தாம் வழிபட்டு வந்த தெய்வத்தை நாகநயினுர், நாகதம்பிரான் எனப் போற்றி யிருத்தல் கூடும் என்ருலும் தெய்வம் கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் தலம் நாகநயினுர்தீவு, நயிஞதிவு எனவும் பெயர் பெற்றிருக்கலாம். மேற்குறிப்பிட்டனவற்றை விட இன் அம் பலகதைகள் நயினுதீவின் வரலாற்றைப் பற்றிச் சான்று பகருகின்றன.
நயினுதீவில் புராதனப் பெருமையும், பக்திப் பெருக்கமும் வாய்ந்த நாகேஸ்வரி ஆலயத்தைவிட வேறு பழைய கோயில் களுமுண்டு. இத்தீவின் தென்புறத்திற் காணப்படும் காளி கோயில், யூரீ வீரகத்தி விநாயகர் கோயில் என்பன மிகவும் தொன்மை வாய்ந்தன. இவற்றைவிட இன்னும் பல கோயில் களும் நயினுதீவின் பெருமையை எடுத்துக் காட்டிக் கொண் டிருக்கின்றன. நயினுதீவு, நாற்றிசையும் ஆட்சிபுரியும், அகில லோக நாயகியான அம்பாள் எழுந்தருளியிருக்கும் பெருமை யுடையது. பாணினைந்தூட்டும் தாயினும் சாலப் பரிந்து திரு வருள் பாலித்தும், பிறவூர்களில் வசிப்பவர்களுக்குச் சொப் பனத்தில் தோன்றித் தம்மை வந்து தரிசிக்கும்படி உணர்த்தி யும், பல அற்புதங்களைப் புரிந்து கொண்டும் நயினையம்பதியில் வீற்றிருக்கின்ருள் நாகபூஷணி. இப்புனித ஆலயம் சரித்திர காலத்திற்கு அப்பாற்பட்ட நாக வழிபாட்டை எடுத்துக்காட்டும் சின்னமாக அமைந்துள்ளது. இலங்கையில் இப்புனித ஆலயத் தைப் போன்ற தொன்மை வாய்ந்த ஆலயம் வேறென்றில்லை யெனலாம். ஆண்டு தோறும் ஆனி மாதத்தில் வருடாந்த உற்சவம் வெகு சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. உற்சவ காலங்களில் நயினுதீவில் பக்தி வெள்ளம் கரைபுரண்டோடும். பிரயாணக் கஷ்டங்களையும் பொருட்படுத்தாது அம்பாள் மேற் கொண்ட ஆராத கருணையினுல் திரள் திரளாகக் கூடு வார்கள் அடியார்கள். ஸ்தலத்தின் தொன்மைக்கும், மகிமைக்

தீவு འ7
கும் ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட வானளாவிய அலங்காரத் தேரின் மீது அம்பாள் காட்சி கொடுக்கும் மாட்சியைக் கண் டாற் கல் நெஞ்சும் கசிந்துருகத்தான் செய்யும். இவ்வலங்காரச் சித்திர வேலைப் பாடுகளமைந்த தேர் 1,25000/- ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தைப் பற்றிய வரலாறு கள் யாவும் இத்தேரிற் பொறிக்கப்பட்டுள்ளன.
அன்னதான சபை
"நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர். நிதி குறைந்தவர் காசுகள் தாரீர், அதுவுமற்றவர் வாய்ச் சொல்லருளிர், என்ற முதுமொழிக்கிணங்க, நயினுதீவு பூரீ நாகபூஷணி அம்மன் ஆலய உற்சவ காலங்களில் வருகின்ற பல்லாயிரக் கணக்கான அடியார்களது உணவுக் கஷ்டத்தைக் கடந்த 10 ஆண்டுகளாக நீக்கி வந்திருக்கின்ருர்கள் நயினுதீவு அன்னதான சபையினர். வர்களது சேவை அளப்பரியது. “நயினுதீவு பூரீ நாகபூஷணி அம்மன் யாத்திரிகர்கள் அன்னதான சபை" என்ற நாமத்து ன் செயற்பட்டு வருகின்றர்கள். இவர்களது பெருமுயற்சியால் நிரந்தரமான அன்னதான மண்டபம் ஒன்று 75000/= ரூபா சலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. " அமுதசுரபி" என்ற ாமத்துடன், புதுப் பொலிவுடன் காட்சியளித்துக் கொண்டி ருக்கின்றது. -
பெளத்த விகாரை
நயினுதீவில் ஒரு பெளத்த விகாரை இருந்தது என்று கருத டமுண்டு. இவ்விகாரை இருந்த இடத்துக் கருகில் ஒரு பாய்கை இருந்ததாகவும், அதுவே " கோமுகி ’ எனப்பட்ட ாகவும் கூறுவர். இப்பொழுது புது மெருகுடன், பெளத்த விகாரை புதுப்பிக்கப்பட்டு விளங்குகின்றது. நயினுதீவு பெளத் ர்களின் யாத்திரைத் தலமாகவும் இருந்து வருகின்றது. "
கிராம சபை
பல வளங்கள் நிரம்பப் பெற்றதும், சரித்திரப் பிரசித்தி கிாய்ந்ததுமான நயினதீவு ஒன்பது அங்கத்தவர்களைக் கொண்ட கிராம சபையின் நிர்வாகத்தின் கீழ் நடைபெற்று வருகின்றது. சமூகத் தொண்டரும், செயல் வீரருமான திரு வாளர் சி. க. தம்பையா, ஜே. பி. அவர்கள் கிராம சபையின் தலைவராகக் கடமையாற்றி, நாட்டுக்கு நற்பணி புரிந்து வரு கின்றர். அழகும் செல்வமும் குவிந்திருக்கும் ஒருநாடு இன்

Page 12
8 சப்த
பத்திலும், குதூகலத்திலும் தரணியில் தன்னிறைவு காண்பது இயற்கை. அதே இயற்கை வளங்களைத் தன்னகத்தே கொண் டிருக்கும் நயினுதீவு அங்கு வாழும் மக்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் உதவி புரிகின்றது. நயினுதீவின் பொருளாதா ரத்தில் இன்று அதிமுக்கிய இடத்தை வகிப்பன கமத் தொழிலும், மீன்பிடித் தொழிலுமாகும். இக்கிராமமக்கள் ஏற்றத் தாழ்வு மனப்பர்ன்மையின்றி ஒன்றுபட்டு ஒரு தாய் மக்களென வாழும் உண்மை வாழ்வு, காண்பவர் நெஞ்சை விட்டு என்றுமே அகலாது. ஒன்றே குலம், ஒருவனே தேவன், ஆண்டவன் படைப் பில் அனைவரும் சமம், என்ற மணிமொழிகளை உள்ளத்திற்கு உரமாக்கி, உயர்வு தாழ்வின்றி, ஏழை, பணக்காரன் என்ற குறுகிய மனுேபாவங்கள் நீங்கி, தூய்மை நிறை நெஞ்சினராக நயினை மக்கள் வாழ்கின்றனர். மதத்தாலும், தொழிலாலும் வேறுபட்ட எண்ணிக்கை கொண்ட மக்கள் வாழ்கின் ருர்கள். சைவத்தையும், தமிழையும் உன்னத நிலைக்குக் கொண்டுவரும் சைவ நன்மக்கள் பெருந் தொகையாக வாழ்கின்றர்கள். 5000 பேர் வரை குடிசனத் தொகையுள்ள நயினுதீவில் மூன்று பாட சாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று மகாவித்தியாலயமாகக் கல்வித்துறைக்குப் பெருமை காட்டி நிற்கின்றது. மூன்று வித் தியாலயங்களிலும் 1025-க்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்விகற் கின்றனர். 38 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர்.
அறிவுத் தென்றலை நயினைக்குத் தவழ்ந்து வரச் செய்து, அதன் சுகந்த மணத்தை அனைவரும் நுகர்ந்து இன்புற்று மகிழவென்றே நற்பணிகள் புரிந்துவரும் நீலையங்களாகச் சன சமூக நிலையங்கள், கிராம முன்னேற்றச் சங்கங்கள். கல்வி நிலையங்கள் கலா மன்றம், முத்தமிழ் மன்றம், இலக்கிய மன் றம் என்பன சிறந்து விளங்குகின்றன. கலை கலாச்சாரத் துறைகளிலும் நயினுதீவு ஏனைய நாடுகளுடன் போட்டிபோடு மளவிற்கு முன்னணியில் நிற்கின்றது. 1963-ம் ஆண்டு நயினு தீவு இளைஞர்களால் ‘மணிபல்லவக் கலாமன்றம்’ ஆரம்பிக் கப்பட்டது. இம்மன்றம் நாடகத்துறை மட்டுமன்றி இலக்கியத் துறையிலும் சேவையாற்றத் தொடங்கியது. நயினுதீவின் பழம் பெருமைகளைச் சுட்டிக்காட்டி, ஊர் மக்களிடையே புத்துணர்ச் சியை ஏற்படுத்தியது. இலக்கிய ஆர்வத்தை மக்களிடையே ஊக்குவிக்கும் பொருட்டு 1969-ம் ஆண்டு நயினை முத்தமிழ்ச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு அரிய தமிழ்ப் பணியைச் செய்து வரு கின்றது. இதன் வளர்ச்சி இயல், இசை, நாடகம் முதலிய துறை களை ஒட்டியதாகவே இருக்கின்றது. இம்மன்றம் தனது சொந்த முயற்சியால் தனக்கென்றேர் திரைச் சீலையையும், ஒரு சீனையும்

தீவு 9
வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சங்கம் சரித்திர, சமூக கைச்சுவை நாடகங்களை மேடையேற்றியுள்ளது. “சத்தியத்தின் வெற்றி, பாதுகா பட்டாபிஷேகம்,நெற்றிக் கண்ணைக் காட்டினு மீ” ஆகிய புராண நாடகங்களை மேடையேற்றிச் சிறப்படைந் து. 1968-ம் ஆண்டு செம்மணத்தம்புலம் வாலிபர் மன்றம் உதயமாகியது. இதுவும் பல நாடகங்களை மேடையேற்றியும்,
லக்கியப் பணி செய்தும் வருகின்றது. പേ
கடல்வளமும், நிலவளமும் நிறைந்த நயினுதீவில், நவீன முறையில் அமைக்கப்பட்ட ஒரு சந்தை உள்ளது. இச்சந்தை யானது மக்கள், பொருள்களை வாங்கவும், விற்கவும் ஏதுவாக அமைந்துள்ளது. மக்கள் தங்கள் அன்ருட தேவைக்கு வேண் ய உணவுப் பொருள்களையும், ஏனைய பொருள்களையும் இலகு வாகப் பெறுவதற்கு வசதியளிக்கின்றது நயினுதீவு பலநோக்கக் ட்டுறவுச்சங்கம். இதனைவிடத் தனிப்பட்ட வியாபாரிகளும் வியாபாரம் செய்கின்றர்கள். இங்குள்ள வைத்தியநிலையம் விசால மாக்கப்பட்டுப் போதிய மருத்துவ வசதிகளுடன் இயங்கி வரு ன்றது. வைத்திய அதிபர், உதவி வைத்திய அதிபர் ஆகிய குவ்ர் கடமையாற்றுகின்ருர்கள். நீர்வளம் நிரம்பப் பெற்ற யினுதீவு மக்கள் குழாய் மூலமாக நன்னீரைப் பெறுகின் ருர்கள். த்துடன் இக் குழாய் நீர் விநியோகத் திட்டம் சிறந்த றையில் விஸ்தரிக்கப்படவுள்ளது. 7
“நயினுதீவுச் சாமியார்” என்றழைக்கப்படுகின்ற ‘முத்துக் மாரசுவாமியார்’ நயினுதீவில் பிறந்தார். சுவாமியார் அவர்கள் துறவுக் கோலம் பூண்டு, பிரம்மச்சாரியாக வாழ்ந்து வந்த டியால், நயினுதீவுக்கு மட்டுமன்றி சைவத-லகம் முழுவதிற்கும் ரியவராவார். 1949-ம் ஆண்டு சுவாமியார் இறைவனடி சேர்ந் ார். சுவாமியார் அவர்களுக்கு இங்கு சமாதி அமைக்கப் ட்டுச் சிறந்த முறையில் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது. வரைவிட நயினுதீவிற் புலவர்கள் பலர் தோன்றி, தங்கள் கழை நிலைநாட்டிப் போயிருக்கின்றர்கள். அவர்களுள் கவிக் யில், புலவசிகாமணி என அழைக்கப்படுபவர் நாகமணிப் லவராவார். இவர் நயினை நாகேஸ்வரியைப் பற்றி அழகுறப் பாடியுள்ளார். வேறு பாடல்களும் பாடியுள்ளார். அத்துடன் அரியபல நூல்களும் இவரால் இயற்றப்பட்டன. இவர் இயற்கை புடன் இரண்டறக் க ல ந் த  ைம நயினுதீவுக்குப் பெ ரும் ழப்பாகும். இவரது வழியைப் பின்பற்றி, திரு. வே கந்தவனம்
3

Page 13
O சப்த
நயினைக் கவி ஆ. இராமுப்பிள்ளை, நயினைநாதன் நாக - சண் முகநாதபிள்ளை, பி. எஸ். ஸி. ஆகியோர் நயினுதீவுக்குப் பெரு மையைத் தேடிக் கொடுக்கின்றர்கள்.
நயினுதீவில் 'மாதர் இயக்கம்" ஸ்தாபிக்கப்பட்டுப் பல துறைகளிலும் பணியாற்றிவருகின்றது. இங்கு “நெசவு நிலை யம்” சிறந்த முறையிற் சேவை செய்து வருகின்றது. நயின தீவில் வாழ்பவர்கள் அநேகர் கொழும்பு போன்ற நகரங்களில் வியாபாரத்துறையில் ஈடுபட்டுள்ளார்கள். பலர் அர சாங் க உத்தியோகங்களிற் சேவையாற்றுகின் ருர்கள். டாக்டர், என்ஜினி யர், சேவையர் போன்ற உயர்ந்த உத்தியோகம் வகிப்பவர்களும் உளர். நயினுதீவின் விளையாட்டுத்துறை என்றும் மங்காத புக ழுடனும், குன்ருத ஆர்வத்துடனும், தனிப்பெரும் சிறப்புடன் செயற்பட்டு வருகின்றது. குறிப்பாக விநாயகர் விளையாட்டுக் கழகம் கடந்த வருடங்களில் ஏகப்பட்ட பெரும் வெற்றிகளையும் பெற்றுள்ளது.
தற்தவம் மிக்க நயினுதீவு மக்கள், மேஞட்டு நாகரிக அலை களால் எற்றுண்டு போகாது, சைவத்தையும், தமிழையும் பேணி வளர்த்து வந்துள்ளார்கள். வளர்த்து வருகின்ருர்கள். இனி மேலும் வளர்த்துக் கொண்டேயிருப்பார்கள் என்பதில் வியப்
கரடியைக் கம்பளி மூடை என்று பற்றிப் பிடித்தவன் வாழ்க்கையே, பணத்தை இறைவன் என்று பற்றியவன் வாழ்க்கையும்.
sk * vn t
தான் உண்டு தன் மனைவி மக்கள் உண்டு என்று சமூ கத்தையே எண்ணுமற் பணம் தேடியவன், தனக்கும் சமூகத்தில் மதிப்புண்டு, மரியாதையுண்டு என்று மனப் பால் குடிப்பவனுகவே இருப்பான். .

1
66 சப்ததீவு”
(கவிஞர் சக்தி அ. மால, ஐயா)
முன்னுள் பெருங்குடி தமிழ்க்குடி உலகின்
மூத்ததாய் வாழ்ந்ததும் “மூநாடு" அதுவே பின்னுள் குமரி நாடெனப் பூத்துப் பின் பொங்கு கடலுக் கிரை என ஆயது; என்னே கொடுமையே! இயற்கை நியதியே!
இவ்வுல கெந் தமிழினத் தலைவிதியே இந்நாள் எஞ்சிய இலங்கையின் வடக்கில்
இலங்கிடு சப்ததீவுகள் தமிழினப் பொன் மனத் தவத்தாற் புகழ் மிகப் பரவிப்
புலவர் தம் போற்றலாற் புனிதமே பெற்றன.
நெடுந்தீவு நெடுந்தீவு என்னும் பெயரினைக் கொண்ட
நிலவெளி ஒல்லாந்தர் கோட்டைத் தளமாய்க் கிடந்ததற்கறிந்திடக் கன்மதிற் சுவர் பல கூறிடும் தமிழினம் தன்னரசிழந்தமை தடந்தொறும் பரிகளும், பசுக்களும், காளையும் தத்தமதிட்டம்போல் மேய்வதும் காட்சியாம் கொடுங்கடலூ டலால் நிலநீர் உவரியைக்
கோப்பதாற் புகுமனை குடிகொளல் அருமை நெடுங்கடலோடி வலைவிரித்துயர்ந்த
மீனவர் குடிபல புழங்குதல் காண்பாம்.
செழித்துச் சிறந்த தீவிது முன்னர்
செந்நெற் கழனி, தென்னை, பனைகள்
கொழித்து நிலவ, உழவர், புலவோர்
குவலயம் போற்றும் அறவோர் வல்லோர்
விழித்திருவெனவே தமிழ்மொழி யின்பம் மேவிடவையம் துணிந்ததுமுண்டு

Page 14
12
மொழித்தவன் "தனிநாயக" அடிகள்
மூவுலகுந் தமிழ் முழங்கிடச் செய்வோன்
எழிற்றிறம் பூண்டதும் நெடுந்திவதனின் நித்திலமாகப் பிறந்ததாலன்றே?
சைவம், கிறித்துவம், சாற்று மாலயங்கள்
சகல கலைபயில் கல்விக்கூடங்கள்
மெய்ப்பிணியகற்றிடும் மூலிகை வகைகள்
மிகுந்து இயற்கை மண மிளிர் சுகத்தில்
செய்தொழில் கமத்தாற் சிறந்திடும் உழைப்பால்
சிந்தையுள் எல்லாம் சுதந்திரப் பசுமை தெய்வத் துணையுடன் திரண்டு பொங்குதல் போல்
திருவும் பொலிவும் புதுமையிற் றழைக்கும் ஐயனர் வெடி அரசனுர்க் கோட்டையும்
அமைந்த நெடுந்தீவோர் அற்புதப்பூமி.
புங்குடுதீவு கல்விநிலையங்களும் கலைக்கூடங்களும்
கற்பகத் திருவெனும் அற்புதம் பூக்கும் நெல்வயல்களும், வழங்கிடுகோபுர
நெடுவேல் முருகன் ஆலயங்களும்
நல்லுறவூட்டும் கிறித்தாலயமும்
பாதிரிக் கோயிலும் பண்புண்குடிகளும் செல்வங்கொழிக்கும் வணிகரும் கற்றேர்
சீர்மிகச் சேர்க்கும் செந்தமிழ் உறவும் வல்லுநர் கணிக்கும் வளமுடைதீவு
வறுமைநேசயில்லாப் புங்குடுதீவு.
புங்குடுதீவிற் பிறந்தவர் மண்ணின்
பெருமைக்குரிய பேராற்றலாற் பூத்தோர்
சங்கத்தமிழ்மொழி வளர்த்த"எந்தழேர்
சார்ந்த இத்தீவிலும் தளர்வதுமேது? எங்கள் உழைப்பினில், எங்கள் உணர்வினில்
இந்தப் புங்கையூர் இனிதே மலர்ந்தது. தங்கத் தமிழரின் தனிப்பெருந்தகைதனைத்
தாரணிக்கோதியே தனக்கென வாழாச் சிங்கம் சதாசிவம் சேவியர் பிறந்த
சுதந்திரப் பூமியும் புங்குடுதீவாம்.

18463 13
வாணர் பாலம் புங்கையூர் மேவும்
வளமைச் செழிப்புக் குறுது ணையாகும் காணும் இடங்களில் அனைத்திலும் செல்வம்
கருணைமழை எனப் பொழிவதைக் காண்மின் பாணர் புலவோர் பகுத்தறிவாளர்
பண்புசேர் அறிஞர் பல்கிடுந்தீவாம் வீனருக்கிங்கே ஏதிடம் உழவால்
விற்பனராஞேர் வழங்கிடு விருந்து பூணவிற்ருேம்பிப் புலர்ந்திடு மகிழ்ச்சிப் புதுமையில் வளர்வதே புங்குடுதீவு.
நயினுதீவு நஞ்சை புஞ்சை நல்வளமிகுந்த
நயினைத் தீவின் நல்லெழில் சொல்வேன் செஞ்சொல் மிக்கதாம் சரித்திர வல்லுநர் செப்பிய மணி பல்லவம் இதுவாம் தஞ்சமென்ருேருக்கருள் தந்தாளும்
தாயுமை நாகபூஷணி யம்மை கொஞ்சிமகிழ் நயினைத் தீவிதும் யாத்திரைக்
கோபுரத் தலமாம் குவலய மீது அஞ்சேல் என்றே அபயம் அருளும்
அன்னை நாகம்மை அழகொளிர் நயினை.
தத்துவஞானி இராமச்சந்திரஞர்
தனயர் சுந்தரலிங்கமும் நாட்டின் உத்தமப் பொலிசு தலைவஞம் அவர்தம் உடன்பிறப்பே பரராஜசேகரன் h இத்தரைமீது கண்ணுெளி தரும் இனியன்
இவர்குலம் பிறந்ததும் இத்தலம் கண்டீர் சத்தியசீலராம் இவர் தந்தையின் பெருமைச்
சாற்றிடும் சான்ருேர் என்பதும் சிறப்பு எத்திசை எங்கணும் இவர் குடி போன்று
எத்தனை குடிதமைத் தந்ததாம் நயினை.
கற்றேர் கலைஞர் கற்புடை மாந்தர்
கனிவுடன் வாழும் கற்பக நயினை
நற்றவமதத்தார் பலரும் தத்தம்
நன்னெறி வழங்கு தலமிது நயினை
கொற்றவை நாகபூஷணி மாதா
w

Page 15
4.
F's
குணக்கடல் துறைதனை யுடையதாம் நயினை
பற்றும் பரிவும் பாசமும் பகரும்
பண்டிதர் அறிஞர் பரவிடும் நயினை
வற்றிடாது வளர் செந்தமிழ்ப் பண்பை
வழி வழி வழங்கி வளர்ந்திடு நயினையே.
அனலதீவு நீர்வளம் நிலவளம் நிறைந்ததாம் அனலை
நெல்வயல், புகையிலை நிறைந்ததாம் அனலை சீர்மிகுந்திடு சைவ கோயில்கள் மேவும்
சிறப்பும் கல்விக்கூடமும் வணிகர் நேர்மையும், மீனவர் கட்டுமரங்களும்
நிறைந்த துறையினை நெடுங்கரை கொண்ட ஊர் இது அனலை உழவர்கள் சூழ்ந்து
உண்டிக் குணவு உபசரித்தளிக்கும் பேர் மிகப்பெற்ற அனலைத் தீவின்
பெருமை தமிழர் பெருமையாம் கேண்மின்.
எழுவைதீவு சின்னஞ்சிறிய தீவிதாம் எழுவை
செந்திரு வேலன் கோவிலும் கிறித்து மன்னவன் ஆலய மாட்சியும் தாங்கும்
மலர்ந்தது எழுவை மண்ணிலிப்போது தன்னிலையுயரும் வகை யிதாற் கமமே
தானிருந்திடினும் குடிசனக் குறைவு முன்னிருந்தது போலில் லையால் வளர்ச்சி
முற்றும் நிறைந்திடக் காண்பது மரிது இந்நிலை நீங்கிட மார்க்கமும் கண்டால்
எழுவையும் சிறந்து எழுந்திடுங் கண்டீர்.
லேடன்தீவு
ஊர்காவற்றுறை, கரம்பன், சுருவில்
உற்றநற் புளியங்கூடல் நாரந்தனை பேர்மிகு சரவணை, வேலணை மண்கும்பான்
பெருமை சொல் மண்டைத்தீவல் லைப் பிட்டி `சேர்ந்ததே லைடன் தீவெனும் நிலமாம்
சீர்மிக்கான் பூதத்தம்பி தென் மன்னன்

தீவு 15
போர் அரண் கடல்கோட்டைகள் இன்றும்
பொலிவுடன் விளங்குதல் புகழ்ந்திடல் இனிது
நேர்மையும் சிறப்பும் நிறைந்ததாம் லைடன்
நிலத்தின் பெருமை நினைப்பதும் நிறைவாம்.
கரமீபள் ஈன்ற கருணையின் வள்ளல்
கனிதரு தொழில்பல கண்ட நற்றலைவன் நிரம்பிய வளத்தால் நித்தமும் தீவார்
நெஞ்சம் நிமிர்ந்த நிலைதனைக் கண்டோம், வரம் என வந்த அல்பிரட் லைனல்
வள்ளலாம் தம்பிஐயனின் கொடையர்ல் உரம் மிகக் கொண்டது தமிழினம் மற்றும் உண்மைசேர் நீதித் தலைவளும் எங்கள் மரபினை வழுவிடாச் சர்வானந்த
மன்னனைத் தந்ததும் கரம்பணும் கண்டீர்.
கல்வியுந் தொழிலும், கமமும், கழனிக்
கதிர்மணி வளர்ச்சியும் கால்நடை வளர்ப்பும் வல்லுநர் உயர்ந்த பதவிகள் கொண்ட
வசதிகளுடையோர் வாழ்விடமாகச் செல்வம் கொழித்துச் சிறந்திடும் பூமி சிந்தனையாளரின் சுந்தரப் பூமி, பல்கலை, வாணிபம், பட்டினச் சூழல், பாதுகாவலர் நிலையமும் நீதி சொல்லுவோர் மன்றமும் துறைமுகங்களும்
சேர்ந்து சிறந்ததாம் லைடன் நற்றிவு.
எத்தனை எத்தனை சிறப்புகளுடைய
என்னருந்தமிழ்மண் சப்த தீவாகிப் புத்தமுதாகத் தமிழ்தனைக் காத்துப்
புவியிற் சிறந்து விளங்கிடல் பெரிதே சத்தியம் எமது தாயகத்தமிழ் மண்
சர்வசுதந்திரத் தேசமாய் விரைவில் எத்திசை எங்கணும் வெற்றியே ஈட்டி
இனிய சுதந்திரத் தீபமும் ஏற்றி நித்தம் பல்லாண்டு நீடெழிலுடனே
நிலைத்திட வாழ்த்து நிதம்மொழிந்திடுவோம்.

Page 16
16 சப்த
நெடுந்தீவு|
சு. கணபதிப்பிள்ளை துறைமுகச்சரக்குக் கூட்டுத்தாபனம், கொழும்பு ۔۔۔۔۔۔
இலங்கையின் வடபகுதியில் அமைந்துள்ள தீவகங்களில் ܫ
லைடன் தீவுக்கு அடுத்து நெடுந்தீவே பெரியதீவாகும். இத்தீவு நெடுந்தூரத்திலிருப்பதால் நெடுந்தீவு எனப் பெயர் வழங்கலா யிற்று. அன்றியும் இத்தீவு அபிஷேகத்தீவு, தயிர்த்தீவு, பால் தீவு என முன்னர் அழைக்கப்பட்டு வந்தது. நெடுந்தீவு மந்தை வளர்ப்பிற் சிறந்து விளங்கியதாகவும் அங்கிருந்து அபிஷேகம் செய்வதற்காகப் பால், தயிர், பூவகைகள் இராமேஸ்வரத்திற்கு நாவாய் மூலம் அனுப்பப்பட்டதாகவும் ஆகவே, அதன் காரண மாக மேற்கூறிய பெயர்கள் வழங்கி வந்ததாகவும் அறியக் கிடக்கின்றது. நெடுந் தீவு ஒல்லாந்தர் வருகைக்குப் பின் டெல்வ்ட் (Delt) என்ற பெயர் வழங்கலாயிற்று. இத்தீவு 35 சதுரமைல்கள் சுற்றளவாகும். யாழ்ப்பாணத்தை விட இந்தியா விற்குக் கிட்ட அமைந்துள்ளது. இதஞற் பண்டைய மக்கள் இந்தியாவுடனே தான் தம் வர்த்தகத் தொடர்புகளை ஏற்படுத்தி இருந்தனர். இங்குள்ள வயோதிபர்கள் யாழ்ப்பாணம் போவதா யிருந்தாலும் பட்டணம் போவதாகவே கூறுவார்கள். காரணம் நம் மூதாதையர் அக்காலம் நாகபட்டணம் போய் வந்துள்ள தாற் பட்டணம் என்ற பெயர்ச் சொற்பிரயோகம் பேச்சுவழக்கில்
வந்துள்ளது.
மண்வள அமைப்பு
இது முருகைக்கற்கள், சுண்ணக்கற்கள், கலந்த மண்வள அமைப்புள்ள நிலப்பரப்புடையது. நெடுந்தீவின் கிழக்குப்பகுதி முருகைக் கற்கள் கலந்த மண்வளமாகையால் தென்னைச் செய் கைக்கு ஏற்ற இடமாகும். மேற்குப்பகுதி சுண்ணக்கல் கலந்த மண்வள அமைப்புள்ளதாற் சிறிதளவு விவசாயம் செய்யக்கூடிய தாகவுள்ளது. வரகு, சாமை, மொண்டி, பயறு, உழுந்து போன்ற சிறுதானிய வகை தீவடங்கலாகச் செய்யக்கூடிய நில அமைப்புள்ளது.

D. தீவு 17
பண்டைய ஆட்சிநிலை
இத்தீவகத்தில் வெடியரசன் வீகாமன் என்னும் குறுநில மன்னர்கள் இந்தியச் சோழப் பேரசர் காலத்தில் ஆட்சி செய்து
கேற்ற தளமாகக் கணிக்கப்பட்டு வந்துள்ளது. இம்மன்னர்கள் ஆட்சி செய்த நினைவுச்சின்னங்கள் இடிந்து மண் மேடாகவும் இடிந்து தகர்ந்தும் ஓரளவு நல்ல நிலையிலும் உள் ள து மா ன கோட்டைகள் இன்றும் இருக்கின்றன. அகழ்வு ஆராய்ச்சி செய்வதன் மூலம் வேறு பல உண்மைகளும் வெளிப்படலாம். பெரியதுறை என்ற துறைமுகமூலம் தமிழகத்துடன் வணிகம் நடைபெற்று வந்துள்ளது. ஒல்லாந்தர் கால ஆட்சியின் சின்ன மாகக் குயிந்தா என்ற இடத்திலிருக்கும் கலங்கரை விளக்கம் குதிரை லாயங்கள், குதிரைகள் குளிப்பாட்டும் தொட்டில்கள் ஆயிரக்கணக்கான குதிரைகள் இன்றும் காட்சியளிக்கின்றன.
கர்ணபரம்பரைக் கதைகள்
சாராப்பிட்டி என்ற இடத்திற் பல கிணறுகள் இருக்கின் ன. அவைகள் பூதங்களால் தோண்டப்பட்டதாகக் கர்ண பரம் பரைக் கதைகள் கூறுகின்றன. கிணறுகள் தோண்டப்பட்ட இடங்கள் கோளான் கற்பார்கள் உள்ள இடமாகும். இக்கிணறு கள் தோண்டுவதாயிருந்தால் இராட்சத மெஷின் கொண்டே தாண்டவேண்டும். அந்தக் காலத்தில் அப்படிப்பட்ட மெஷின் இருந்திருக்க முடியாது. ஆகவே பூதம் போன்ற வலிவுள்ள மனி தர்கள் வாழ்ந்திருக்கலாம் என ஊகிக்க இடமுண்டு.
இங்கு மருத்துவ மூலிகைகள் ஏராளம் இருக்கின்றன. அணு
ஒரு பகுதி நெடுந்தீவில் தவறி விழுந்ததாகவும் கூறப்படுகின் றது. வைத்தியத்தொழிலிற் புதழ் பெற்ற யாழ்ப்பாண மன்னன் "வைத்தியராசசிங்கன் என்ற பெயர் கொண்ட செகராசசேகரன் நெடுந்தீவை "மருத்துவ மாமலைவனம்" எனக்குறிப்பிட்டதாக யாழ்ப்பாண வைபவமாலை என்ற நூலிற் கூறப்படுகின்றது. இம்மூலிகைளின் மகிமையாலேதான் இங்குள்ள மக்கள் நீண்ட சுகசரீர திட ஆயுளுடன் வாழ்வதாகக் கூறப்படுகிறது.
4.

Page 17
18 சப்த
குடியேற்றமும் குடிபெயர்ச்சியும்
நெடுந்தீவின் குடியேற்றம் தனிநாயகமுதலி குடும்பமும் அவர்களின் பரிவாரங்களுமே மூலவர்கள் எனக்கருதப்படுகின் றனர். புங்குடுதீவு, அனலைதீவு, முதலிய இடங்களில் வசிப் போர் அநேகர் இவ்வழித்தோன்றல்களே. நெடுந்தீவில் வருமா னம் வீழ்ச்சியடைந்து வருவதாற் கால் நூற்றண்டு காலமாக மக்கள் குடி பெயர்ந்து கிளிநொச்சி, மாங்குளம், வவுனியா, மன்னுர், செட்டிகுளம் முதலிய பகுதிகளில் ஏராளமாகக் குடி யேறி வாழ்ந்து வருகிருர்கள். நெடுந்தீவைத் தாயகமாகக் கொண்ட மக்கள் எங்கிருந்தாலும் தாயகப்பற்றும், பாசமும் அவற்றிற்கும் மேலாகத் தாயக அபிமானமும் கொண்டவர்களா கவே வசிக்கின்ருர்கள். w
காரியாலயங்களும் இன்னும் பிறவும்
நெடுந்தீவு ஊர்காவற்றுறைத் தொகுதிக்குள் அடங்கும். தனிக் காரியாதிகாரிப் பிரிவாக மூன்று கிராம சேவகர்களைக் கொண்டுள்ளது. கிராம சபை அலுவலகம், கிராமக்கோடு, காவல் நிலையம், தபால் தந்தி நிலையம், ஆஸ்பத்திரி முதலியன இருக்கின்றன. மந்தமான பஸ்போக்குவரத்துமுண்டு. மாவலித் துறை என்ற அதுறைமுகமும் சிறுபாதுகாப்பான துறைமுகமா கும். இங்கு 13 பாடசாலையும் அவற்றில் 1500-க்கு மேற்பட்ட ஆண் பெண் பிள்ளைகளும் கல்வி பயில்கின்றனர். இவர்கட்கு ஏறக்குறைய 58 ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். சைவசமய கிறிஸ்தவ சமயக் கோவில்களும் இருக்கின்றன. இங்குள்ள மக்கள் விருந்தோம்பலிற் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளார் கள். எவ்வளவு ஏழையாஞலும் வருவோரை உபசரித்து உண வளிக்காமல் உண்ணும் வழக்கம் இங்கு கிடையாது. கொடுங் கடல் நடுவே உள்ளமையால் அன்றுபோல் இன்றும் பரிவிரக் கம் கொண்டவர்களாகவே வாழ்கின்றனர்.
சுற்றுலா
சுற்றுலா வருவோருக்கு நெடுந்தீவு சிறந்த இடமாகும். பண்டைய மன்னர்களின் கோட்டைகள், குதிரைகள், ஒல்லாந் தர் காலக் குதிரை லாயங்கள், பூதங்கள் தோண்டியதாகச் சொல்லப்படும் கிணறுகள் குயிந்தாளில் உள்ள கலங்கரை விளக்கம் இலங்கை எங்குமில்லாத வேலிகட்டும் முறை (கல்லு களால் எதுவித சேதமுமில்லாமல் அடுக்கிய பகிறுகள்) வெட்டுக்

தீவு 19
கழி, வெல்லைக்கழி, பேக்கழி, இராம தொப்புக்கழி, என்னும் ரோடைகள் ஆடு, மாடுகள், குதிரைகள், உள்ளூர், வெளியூர் பட்சி இனங்கள் நிறைந்த குட்டைக்காடுகள் சைபீரியா முதலிய டங்களிலிருந்து வந்து கீதமிடும் கூழக்கடா போன்ற பறவை யினங்கள், இலங்கையில் ஏனைய பகுதிகளிலிருந்து தொழில் செய்யும் மீனவர்கள் வாடியமைத்து மலைமலையாகக் கொண்டு வந்து குவிக்கும் மீன் இனங்கள் இவற்றையெல்லாம் கண்டு களிக்கலாம். மணற்கிணறுகள் என்ற இடத்தில், நூற்றுக்கணக் ான நீராடும் ஆடவர் அரிவையர் கூட்டம், பக்கத்துக் கடலில் மீன்வள்ளங்களும் கட்டுமரங்களும் அணியணியாகச் செல்லும் கண்கொள்ளாக் காட்சி, அருகில் வீகாமன்கோட்டையின் ம்ே பீரத் தோற்றம், சூரிய உதய அஸ்தமனக் காட்சி, தென்றலில் னிய கிளுகிளுப்பு எல்லாம் சேர்ந்து சுற்றுலா வருவோரைக் வருவதாக உள்ளன. வடமாகாணத்திலிருக்கும் தீவுக்கூட்டங் ளிலே தனியொரு நாட்டைப் பார்ப்பது போன்ற பிரேமை ဗြုံးမှီ ஏற்பட்டே தீரும். எனவே வருங்காலம் சுற்றுலா
ருவோர்க்கு நெடுந்தீவு ஒரு பிரபல்யமான சுற்றுலாத்தள மாக விளங்கும்.
எதை வேண்டுமானலும் வெறுக்கட்டும். ஆனல் தன் தாயகத்தை வெறுப்பிவன் மனிதனல்லன்.
菁 米 岑
தன் தாயகத்தை மனமார நேசிக்கும் ஒருவன் அதே போல் பிறர் தாயகத்தையும் அவரவர் நேசிக்க அனுமதிப்பான்.
宗 景Y
எந்த நாட்டில் ஏழை தன் கீழ்நிலையிலிருந்து உயருகிறனே அந்த நாடு தலை நிமிர்ந்த நாடா கிறது. தாய்நாட்டை அழிக்கும் விஷக் காற்று வெளியிலிருந்து மாத்திரம் வருவதில்லை. உள்ளே யிருந்தும் வருவதுண்டு.

Page 18
20 சப்த
தீவகமே ...
SASASAAALLSSLSALSSSSTSLSSSqSTqSqqS
திரும்பிப் பார்.
M
தேவகன்”
தீவகமே! எம் அருமைத்தாயகமே உன்னை எழில் மிக்க தாயகமாகக் காணும் நாள் எந்நாளோ தாயே? என்றுதான் நீ குன்றுபோல் உயர்ந்து பெரும்கோபுரமாய் மிளிர்வாயோ? அன்றுதான் எமக்கு ஆறுதல். . -
ஆழிகுழி பேரலையின் ஓங்காரத்தொனிக்கே உறைவிடமாகி ஆதியிலிருந்தே பல சோதனைக்கும் வேதனைக்கும் ஆளாகி, மீள வழியற்று, வகையற்று, மீள்விப்பார் யாருமற்றுத் துடியாய்த் அடிக்கும் தாயகமே உன் அன்றைய நிலை என்ன? இன்றைய அவல நிலை என்ன? சிந்தனை செய்! திரும்பிப்பார்!!
"அலைகள் புரண்டு - நடனமிடும்
அழகும் திருவும் நடைபயிலும்
ačkoufair Gsrsůák am Gueibenýrůb
கண்கள் கவரும் திவகமே!”
அன்று, நீ கல்வியால் உயர்ந்த தீவகம், கமத்தொழில், கைத் தொழில், வர்த்தகத்தால் உயர்ந்த தீவகம். கால்நடை வளர்ப் பதால் உயர்ந்த தீவகம். பாலும் மோரும் பல்கிப் பெருகி வழிந் தோடிய தீவகம் திரைகடலோடியும் திரவியந் தேடுவோர் நிறைந்த தீவகம். அந்நியர் நாகரிக மோகத்திற்கு அடிமையா காத தீவகம். V−
“ஒன்றே குலம். ஒருவனே தேவன். நன்றே செய். அதை இன்றே செய்” என்ற அடிப்படையிலே நானிலம் போற்றும் ஒரே இன மக்களாய் ஒருவருக்கொருவர் உழைத்துக் கொடுத்து பகிர்ந்து பங்கிட்டு, வரும்படிக்கேற்ற நல்வாழ்வு வாழ்ந்து, சிரம தானமே மனித வாழ்வின் மகத்துவம் என உணர்ந்து ஒழுகி

தீவு 21
வளர்ந்த தீவகம். வைத்திய வசதி, பிரயாண வசதி, தபால் தந்தி வசதி இவற்ருலே பாதிக்கப்பட்ட தீவகம், தேடுவார் குறைவு. நாடுவார் அதைவிடக் குறைவு. தீவகத்தைத் தேடி அதை நாடி வந்தோர் விட்டுப் பிரிவதே அரிது. பிரிவிரக்கம் தாங்காது கண்ணிர் மல்கிய தீவகமே என்னருமைத் தாயகம்.
செழிப்பான தீவகம்
தண்ணிர் இருந்தது. நன்னீர் இருந்தது. நாடு செழித்தது. வீடு மலர்ந்தது. மக்கள் மகிழ்ந்தனர். தேவை குறைந்தது. சிங்காரத் தோப்பாகச் சீர்பெற்றிருந்தது. தாயே! அன்று கஞ்சி யில்லையே கந்தையில்லையே என்று ஏங்கினுயா? கையேந்தி நின்ருயா? கல்வியில்&லயே, கல்விச் சாலைகளில்லையே என்று ஏங்கிஞயா? கற்பித்தோர் நம்மவர். அன்றுள்ள கல்விச் சாலைகள் தாமே இன்றும் உண்டு. ஆலயமில்லையே, அறச்சாலைகளில் லையே என்று அங்கலாய்த்தாயா? தீவகம் கண்ட ஆலயமும் அன்னசத்திரமும் நம் ஈழ வள நாட்டிலே எங்குண்டு, எண்ணிப் LU Fryl
தேசசேவை
கடவுள் பக்தியால், கல்விமோகத்தால், கலை ஆர்வத்தால் கட்டிய கோவில்களைப் பார் அறிவூட்டிய கல்விச் சாலைகளைப் பார். தருமசிந்தனையால் தோன்றிய சத்திரங்களைப் பார். இவையெல்லாம் நம்மவர் செய்த தேச சேவையில்லையா? இன் றல்ல. நேற்றல்ல, எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரே நமி முன்னுேரால் தோன்றியவைதாமே இவை. இன்றுவரை உன் கண்முன்னே உள்ள பாதைகள், ருேட்டுக்கள், பாலங்கள் யாரால் தோன்றியவை? எம்மவர் சேவையால் அவர்கள் உடல், பொருள், ஆவி, உயிர்ப்பலிகளால் தோன்றியவைதாமே சிந் தனை செய். "திரும்பிப் பார்.
தாயகமே! வற்ருத ஜீவநதி வழிந்தோடா விட்டாலும், வற்ருத நீர்ச்சுனைகள் உனக்கு வளம் காட்டவில்லையா? நீ வளரவில்லையா? வாழவில்லையா? எம்மையெல்லாம் நீரூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்க்கவில்லையா? வழி காட்டவில்லையா? எம்மை யெல்லாம் ஆளாக்கவில்லையா? வானம் பார்த்த பூமியானலும் மக்கள் மானங்காத்த தாயகமே செந்நெல் விளையும் பொன்வயல். எல் லாம் உன்னை மறந்தனவா? இல்லை. அதை நீ மறந்தாயா? தாயே! வளமுள்ள வயல் தோப்பு வாவிகள் சொற்பம், ஆணுல்

Page 19
22 சப்த
உளம் நொந்து வாடாத வீரர்கள், துளிவானம் பொய்த்தாலும் துரவு கிண்டி நீர் அள்ளித் தோட்டஞ் செய்த சலியாத கமக் காரர் இருந்தார்களே அந்நாளில்.
சீரொடு வளர்த்த கால்நடையெல்லாம் செத்து மடிந்தனவா? இல்லை தின்று தொலைத்தனரா? அல்லது திருடிச் சென்றனரா? தேனுேடு செந்தமிழ் ஊட்டிய தீவகமே. செழித்து வளர்ந்த சிறுபயிர் எங்கே? சிறந்த மருந்து மூலிகை எங்கே? தேவை யில்லையா? அல்லது தேடுவாரில்லையா?
பன வளம்
வானுற ஓங்கிய ஜீவதரு வரும்படி தரவில்லையா? இற்றை வரை நீ வாழவில்லையா? எம்மையெல்லாம் வாழ்விக்கவில்லையா? எமக்கு வழி காட்டவில்லையா? நுங்கை ஊட்டி, தெம்பு காட்டி ஞய்? பாணியூட்டிப் பலசாலியாக்கிஞய். பதநீர் பருக்கி நோய் பல போக்கினுய். தடுக்கில் கிடத்தித் தாலாட்டிஞய். பிட்டென் றும், கூழென்றும், பளுட்டென்றும் தந்து பட்டணம் வரை படிக்க வைத்தாயே. உன்னை மறந்தோர் உருப் படு வாரா? அம்மா! பஞ்சம் வரினும் கலங்காதே மகனே! தஞ்சம் நானே என்று தலை நிமிர்ந்து வானுற ஓங்கிய கற்பகதருவாம் ஜீவ தருவை மறந்தாயா? இல்லை அழித்தொழித்தாயா? வீடுகட்ட மரமாய், கட்டிய வீட்டை வேய ஓலையாய், கட்டிறுக்கக் கயிருய் காவலுக்கு வேலியாய், அடுப்பெரிக்க விறகாய், உண்பதற்குப் பல உணவாய், பருகப் பதநீராய், படுத்துறங்கப் பாயாய், உட் காரத் தடுக்காய், உபயோகமான பல பெட்டிகளாய் மாவரிக்க அரிப்பெட்டியாய், பொருள் கொள்ள உமலாய், பாத்திரம் வைக்கத் திருவணியாய்ப் பலப்பல பன்னவேலையைத் தந்தாயே. தாயே! மறந்தாயே அவளை, இன்னும் பல உணவுகளாய், தக குய், கிழங்காய், ஒடியலாய், புழுக்கொடியலாய் அன்றல்ல, இன்றல்ல, என்றுமே தந்து துணை யிருந்து நம் துயர் போக்கும் கற்பகதரு வளரும் பொற்பதி தானே தீவகம். میر
கடல்வளம்
நாற்புறமும் கடல்சூழ்ந்த நாயகியே கடல்வளம் உன்னை இதுவரை காப்பாற்றவில்லையா? வருங்காலம் காப்பாற்ற மாட் டாதா? வரும்படிக்கேற்ற வழிவகை ஏதும் கண்டாயா? கரணத் துடித்தாயா? இரவுபகல் பாராது எறிவலை தோளேந்திச்சென்று மலிவான மச்சங்கள் தந்து, உணவூட்டியதை மறந்துவிட்டாயா? சங்கு, சிப்பி அக் கால ம் வங்காள மேற்றிஞயே. ஏனின்று

தீவு 23 மறந்தாய்" கடலட்டை, சுருச்செட்டை, கணவாய் ஒடு, இன்று வரை ஏற்றுமதியாகின்றதே எண்ணினுயா? எண்ணத் துடித் தாயா? ஏன் மறந்தாய்? சின்னருலும், சிங்கருலும், சிங்கப் பூர், சீனு தேசம் போகிறதே. உன் கடல்தானே இவற்றுக்குத் திறமான கடல். இன்றுவரை யார் செய்கின்ருர்? வெட்கமா? நாணமா? இல்லை விரும்பாத வேதனமா?
*அருணன் பொன்னுர் மணிவதனம் அடிவானத்துப் படிகையிலே
திரளும் தங்கக் குவியல்தனத்
தினமும் சொரியும் தீவகமே."
முத்தூரும் கடல்சூழ்ந்த முத்தமிழ் வித்தகர் நிறைந்த சிறப்பு மிக்க தரயகமே பெரும்பொருளையோ, பேரழகுப்பெண்ணையோ பட்டம்பதவிகளையோ, எ ன் ன்ை யோ, நான் நேசிப்பதைவிட மேலாக என்னைப் பெற்ற உன்னையே நேசிக்கிறேன். பெற்று வளர்த்த என் அருமைத்தாயை நேசிக்க முடியுமானுல், பேணிப் பாதுகாக்க முடியுமானுல் ஏன் என் தாயைப்பெற்று, அவளை வளர்த்த அருமைத் தாயகத்தை நேசிக்க முடியாது.
உண்டு உடுத்தி, ஓடிவிளையாடிய பூமி, ஆடிப்பாடி, படித்து மகிழ்ந்த பூமி. துள்ளிக்குதித்து, விழுந்து புரண்டு, துயர்நீங்க புழுதியளைந்த பூமி, மறப்பேணு உன்னை? துறப்பேணு என் தூய அன்னையை? தாயகமே என்மேல் ஒட்டிப்புரண்ட புழுதி உன் ஒப்புயர்வற்ற வாசனைத் துளி. நீ ஊட்டி வளர்த்த உவர் நீர் என்றுமே தெவிட்டாத தேன் துளி. ஆலிலை பிடித்து, மடியிலே இருத்தி அன்புடன் பருக்கிய கூழ், தேவர்கள் கடைந்த அமிழ் தம். தேன் சொட்டும் செந்தமிழ் பரப்பி, முத்தமிழ் வித்தை விதையாக எண்ணி, பாலரின் உளமேட்டில் விதைக்கின்ற வித் தகர் நிறைந்த எம் தாயகத்திலே, வள்ளுவன், கம்பன் வழிவந்த வல்லுனர் நிறைந்த தாயகத்திலே, கன்னித்தமிழின் கனிமொழி யாலே கண்ணுறங்க வைத்த தாயகத்திலே, பாலொடு வீரமும் கூடவே ஊட்டி வளர்த்த தாயகத்திலே, இன்று கல்விக்குப் பஞ் சமா? கலைக்குப் பஞ்சமா? இல்லை கல்விச்சாலைக்குப் பஞ்சமா? கனிமொழியால் கடவுளைக் காட்டிய கற்பகமே, உன் பொற்பதி தானே எமக்கு மாபெரும் திருப்பதி தாயே.
முத்துப் பதித்த வெண்பளிங்கில்
முகம்பார்த்தலரும் மணற்குன்றம்
எத்திக்கினிலும் தலைநிமிர
எழில்பெற்றுயரும் தீவகமே”

Page 20
24 சப்த
இன்றைய நில்
உன்னை மறந்து, உன்னை வெறுத் து, உன்னைப்பிரிந்து உன்னை விட்டே ஊரவர் போகின்ருர்கள். போய்க் கொண்டே இருக்கின்ருர்கள். ஏன்? ஏன் தாயிே? ஏன்? பணத்திற்காகவா? படிப்புக்காகவா? பாவையருக்காகவா? பாங்கான உ ல் லாச வாழ்விற்காகவா? பட்டினம் என்ற பெருமைக்காகவா? இல்லை யில்லை. பெற்ற தாயை, பிறந்த பொன்ஞட்டை, உற்ருர் உற வினரை விட்டுப்பிரிந்து வெளியூர் போகின்றர்கள், ஏன் போக வேண்டும்? -
நீர்வளமில்லை, நிலவளமில்லை, தொழில் வளமில்லை, வரும்படி இல்லை, வரும்படி காட்டுவாரும் இல்லை. வழி வகையுமில்லை. நீரில்லை. அதிலும் குடிநீர் அறவேயில்லை. பொருள் வளம் உண்டு, பேணுவார் இல்லை, பேணிக் காப்பாரும் இல்லை.
பாடசாலைகள் உண்டு. உபகரணங்கள் இல்லை. ஆசிரியர்கள் இல்லை. தளபாடமும் இல்லை.
வைத்தியசாலைகள் உண்டு. கடமையாற்றப் போதிய வைத் தியர்கள் இல்லை. மருந்தில்லை. மருந்து கட்டும் துணியில்லை. வைத்தியசாலை திறந்த வெளி, வாடைக்காற்று, கால்நடை நட மாட்டம், காவலாளி இல்லை. காவல் வேலியோ, சுற்றுமதிலோ இல்லை. ஆறி அமர்ந்திருந்து நேரம் போக்க நிழல் மரமில்லை துன்பம் நிறைந்த சூழ்நிலையிலே நோயாளர் இன்பம் காண முடியுமா? வெளியே தனிப்பட்ட வைத்தியசாலைகள் உண்டு. அவர்களுக்கு அனேக சன்மானங்கள் சலுகைகள் உண்டு. பொது வைத்தியசாலை புறக்கணிக்கப்பட்டமாதிரியே.
பிரயாணவசதி, பஸ்வண்டிகள் உண்டு. நேரப்படி நியமன பஸ் இல்லை. நேரசூசியும் இல்லை. ஒடும் பஸ்ஸிற்கும் திடீ. ரெனக் காக்காய் வலிப்பு. காத்துநிற்கும் மக்களுக்குக் கால் வலிப்பு. அது முடிந்து பஸ் எடுத்தால் வெளவால் பிடிப்பு. இத்தனைக்கும் காரணம் தேவை கூடிக்கொண்டது. தொல்லை களும் சோலிகளும் கூடிவிட்டன. அடிக்கடி பிரயாணம் கூடி விட்டது. வசதிகள் குறைந்து விட்டன. எனவேதான் போகின் ருர்கள் ஊரைவிட்டு. இதற்கு வழியுண்டா? வழி செய்வார் uur (5ClpoebTL-sr? - ی
கடல்நீர் புகுந்து, ஊர் உவர்நிலமாகி விட்டது. குளம், கேணி, கிணறெல்லாம் வற்றி வரண்டுவிட்டன. பயிர் பச்சை

~,
தீவு 25
புல்லெல்லாம் காய்ந்து கருகிவிட்டன. கால்நடையெல்லாம் இறந்தொழிகின்றன. நன்நீர் தேடி மக்கள் காலையில் ஓரிடமும் மாலையில் இன்னேரிடமும் அலைகின்றனர். எனவே தா ன் போகின்றர். ஊரைவிட்டே போகின்ருர் விருந்தினரை வருந்தி வரவேற்று உபசரித்து அவர் பிரிவையெண்ணிக் கலங்கிய கண்க ளுடன் வழியனுப்பிய தீவகமே! நீ காய்ந்து, வரண்டு, கருகிச் சாகும் ஆபத்தான கதைதான் மக்கள் ஊரைவிட்டே போகக் காரணம்?
நம்நாடு பெற்ற சுதந்திரம், நாம் பெற்ருேமா? இல்லை ம் நாடு பெற்ற சுகபோகம் பெற்ருேமா? இனியாவது பெறு வாமா? வதைகின்ருேம். வதைபடுகின்ருேம். வருந்துகின் ருேம், வருந்திக்கொண்டே வாழ்கின்ருேம். சிந்தித்தோமா? இல்லை சிந்திப்போமா?
இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டாலென்ன? ாடு நாடு தான். தீவு தீவே தான். ஈழம் ஒரு தீவு. அதிலே ாமும் ஒரு தீவு. தீவுகள் ஏழு. எல்லாம் சேர்ந்தால் “சப்த வு' தீவார் என்றல் சிந்திப்பார், இல்லாத நாடேயில்லை.
ஆதியில் அரக்கரென ஆரியரால் அவமதிக்கப்பட்ட அருந் தமிழர் வாழ்ந்ந நாடு, சிவபக்தன் இராவணன் அரசாண்ட ாடு. சீதை சிறையிருந்த நாடு. அனுமன் தூது வந்த நாடு. ராமன் பாதம் பதிந்த பொற்பதி. போதிமாதவன் புத்தனின் பாதனைகள் சிரமேற்கொண்ட நாடு. போர்த்துக்கேசர் ஒல் லாந்தர் அவர்கள் பின் ஆங்கிலேயர் அரசாண்ட நாடு. இன்று மதர்ம, தார்மீக அரசாங்கம், ஜனநாயக அரசாங்கம் மக்க மலர்ந்துள்ள நாடு, மண்டியிடுகின்ருேம். கெஞ்சி அலைகின்ருேம்.
தண்ணீருக்குக் கண்ணிர் வடிக்கும் தாயகமே, இன்றைய நிலையிலே எமக்குத் தண்ணிர் அவசியம். அதிலும் குடி நீர் த்தியாவசியம். எனவேதான் ஒன்றுபட்டு ஒரே அணியாய் ன்று ஒரே குரலில் கேட்போம். குழாய்நீர் வேண்டும். அதி ம் குடிநீர் அவசியம் வேண்டும். தீவகத்திற்குப் பாரிய ழாய்நீர்த் திட்டம் வேண்டும். அவசியம் வேண்டும். அவசர மாக வேண்டும்.
5

Page 21
26 சப்த
அரசாங்கத் திட்டங்கள், கிராம மட்டத்திலும் கீழ்மட்டமாய் மதிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டுள்ளோம். அரசினரால் ஆக்கப் பட்ட பல்வேறு திட்டங்கள், பலவிதமான அபிவிருத்தித் திட் டங்கள், உதவித் திட்டங்கள், பன்முகப்படுத்தப்பட்ட திட்டங் கள் இவற்றிலே’ எம் தீவகக் குடிநீர்த்திட்டத்திற்கு ஒருவிதத் திட்டமாவது உதவி செய்யாதா? அயல்நாடுகள் உ த வின. ஆசிய அபிவிருத்தி வங்கி உதவியது. ஐக்கிய நாடுகள் உதவின. உலகவங்கிகள் உதவின. எங்கள் தீவகக் குடிநீர்த்திட்டத்திற்கு இந்த நிதிகளிலே நிதி உதவ முடியாதா? பெற்றர்களா? இல்லை பெறத் தெண்டித்தார்களா? இனித்தானும் பெறுவார்களா? மக் கள் மன்றத்திலேயாவது முன்னேற்பாடாக மகஜர் கொடுத்தார் களா? இல்லை கொடுப்பார்களா?
வறிய நாடுகள், வளங்குன்றிய நாடுகள், வஞந்திர நாடுகள் சிறியநாடுகள், நீர்வளம் குன்றிய நாடுகள் எல்லாம் பலவித மான உதவிகளையும் பெறுகின்றன. எம் தீவகம் இவற்றையெல் லாம் உள்ளடக்கியதாய் இருக்கும் பொழுது ஏன் இப்படியான உதவிகளைப் பெற முடியாது? என வேதா ன் கேட்கின்ருேம். பாரிய குழாய் நீர்த்திட்டம் வேண்டும். பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலே பணம் வேண்டும்.
தார்மீக அரசே! பாரிய கொழும்புத் திட்டம், சுதந்திர வர்த்தக வலயத் திட்டம், கோட்டே இராசதானித் திட்டம், மகா வலி அபிவிருத்தித் திட்டம், விக்டோரியா நீர்த்தேக்கத் திட்டம். கொத்மலை, ரந்தெனியா, மொறக்காவேவ நீர்ப்பாசனத் திட்டங் களுடன் எங்கள் தீவகக் குழாய் நீர்த் திட்டத்தை உடனடி யாகவே இணைத்துச் செயற்படுத்துங்கள். தீவ க ம க் களின் துயரைத்தீருங்கள். தாங்க முடியாத, சகிக்கமுடியாத சோலை வனம், பாலைவனமாகும் அபாய கட்டத்திலே நின்று கேட்கின்
ருேம். எங்கள் குடிநீர்ப்பிரச்சினைக்கு வழி காட்டுங்கள். வழி தேடுங்கள்.
*திங்கள் பவனிவரும் இரவில்
திரைகள் தமிழின் இசைபாட
பொங்கும் பவளம் புன்னகையைப்
பொழியும் எங்கள் தீவகமே”
என் தாய் என்னைப் பெற்றெடுத்த பூமி, நான் புழுதி அளைந்து விளையாடிக் களித்த மண். பருவம் வரும்வரை உண்டு, உடுத்தி படித்து, ஓடிவிளையாடித் திரிந்த, உரிமையுள்ள நிலம் அந்த

தீவு . a 27
இனிய சுற்றடலை நினைக்கும்போதே நெஞ்சம் தேஞய் இனிக் கிறது. உடலின் மயிர்க்கால்கள் சிலிர்க்கின்றன. எனக்குள்ள இந்த உணர்ச்சி எந்தவொரு மனிதனுக்கும் புதிதன்று. புதிரு மன்று. வானளாவ உயர்ந்து ஓங்கிய மலைகள் இல்லை. வற்ருத
வயல்கள் இல்லை. நீர்வளமும், நிலவளமும் குன்றிய தீவகமே என் பிறந்தகம். எனவே எனக்குள்ள உணர்ச்சி என் தாயக மக்கள் அனைவருக்கும் உண்டு என்ற திடமனம் உண்டு.
தீவு என்ற பதம் பலருக்கு அநாகரிகமாக, வேப்பங்கனி போற் கசப்பாக, வெறுப்பாக இருக்கலாம். ஆளுல் தீவகங்க னின் மக்களாகிய எமக்கோ அவ்வார்த்தை தேஞக இனிக்கிறது. தேவாமிர்தமாகத் தித்திக்கின்றது.
திரைகடலோடித் திரவியந்தேடப் பிறந்த மண்ணைப் பிரிந்து பெற்ருேரைப் பிரிந்து உடன் பிறந்தாரை விட்டுப்பிரிந்து பல டங்களுக்கும் சென்று சோதனைமேற் சோதனையாக வேதனைப் ட்டு வாழ்ந்தாலும் ஊர்ப்பாசம் எங்கள் உதிரத்தின் ஒவ்வொரு று துளியிலும் ஊர்ந்து துடித்துக் கொண்டுதான் இருக்கின்றது. திர்காலத்தில் தீவகத்தார் தீவிரமாக முன்னேற்றப் பாதையில் வகுதூரம் புகழ்பரப்பிச் செல்லவேண்டும் என்பதே என் தணி ாத வேணவா. செல்வார்கள் என்பதும் என் அசையாத நம் க்கை. இருளின் பின்னே தான் ஒளி. ஒளி பிறந்துவிட்டது. ரகாசிக்கத் தொடங்கி விட்டது. மின்மினி மறைந்து மின்சா மி தீவகத்திலே ஒளிவிடத் தொடங்கிவிட்டது. “வனத்திலே சன்று மேய்ந்தாலும் தன்-இனத்தை நாடிவந்து ஒன்று கூடும் ாசமுள்ள பறவைக்கூட்டம் போன்ற என் தாயகநேயர்களே! சல்வச்சிருர்களே சிந்தியுங்கள் சிந்தியுங்கள். வருங்காலத் ன் வச்சிரத் தூண்களாகிய இளைஞர்களின் கரங்களிலே தான் ம் தீவகங்களின் சுபீட்சவாழ்வு தங்கியுள்ளது. அந்த இன்பக் னவு நனவாகும் நாளும் வெகுதூரத்தில் இல்லை.
விழித்தெழுங்கள். கட  ைம யிருந் தால் வீரராகலாம். பாறுமை இருந்தால் மனிதராகலாம். முயற்சியிருந்தால் முதல் ராகலாம். இளைஞர் திலகங்களே, எம் வீடு வாழ, சமுதாயம் யர, எமது தாயகம் சிறப்படைய, உங்கள் இரும்புக் கரங்களை றுதியாக்குங்கள். இதய நரம்புகளை இரும்பாக்குங்கள் வலு டையச் செய்யுங்கள். அன்பும், அருநலப் பண்பும் உங்கள் கடயங்களாக மிளிரட்டும். அறத்தின் அடிச்சுவட்டில் வீறு டை போட்டுச் சிங்கேறுகளாய்ப் புறப்படுங்கள். உள்ளத்தில்

Page 22
28 சப்த
தூய்மையும், உதட்டில் நேர்மையும், கானல் வெள்ளத்தையும் புறங்காண எதிர்நீச்சலிடும் தீரமும், உங்கள் ஒவ்வொருவரிட மும் குடிகொள்ள வேண்டுகின்றேன், வள்ளுவனைப் போன்ற அறிவும், வள்ளலார் போன்ற கருணையும், தெள்ளுதமிழ் தாயின் மங்கா இறைமையும், உங்களிடம் ஒளிவீச வாழ்த்துகிறேன். உங்கள் தங்கக் கரங்களை நம்பி, எதிர்காலத் தீவகம் காத்து நிற்கிறது, என்பதை நினைவில் இருத்துங்கள். நிமிர்ந்து செல்லுங்கள். 一、
உலகவரலாறு, உழைப்பின் உன்னதத்தால் உயர்ந்து, புக ழடைந்த பல சமுதாயங்கள் பாலையிற் சோலை கண்ட சரித்தி ரங்கள், பாழடைந்த காடுகள் அழிந்து பச்சைப்பசும் வயல்கள் பூத்த அதிசயங்கள், உங்களின் நடைபாதையின் வழிகாட்டும் ஒளிவிளக்காய்ப் பிரகாசிக்கும். மடிமீதமர்ந்து மழலைகேட்டு வந்து மகிழ்ச்சிப் பெருக்கில் வாழ்ந்த மண்மாதாவின் பற்று, ஊர்த் தாயின் பாசம், உங்கள் உள்ளங்களில் கொழுந்துவிட்டு ஓங்கி எரியட்டும். சின்னஞ்சிருர்களே. செல்வச்சிருர்களே. பள்ளிப் பாலகர்களே, சிறகுள்ள சிட்டுக்களாய்ச் சிந்தியுங்கள். தேன் சிந்தி மணம் பரப்பும் மலராய் ஒளி கொடுக்கும்  ைவ ர மா ய், ஓசையுள்ள மணியாய், நாதமுள்ள நரம்பாய், நாட்டுக்குதவ உங்கள் வருங்காலத்தைப் பயன்படுத்துங்கள்.
ஒரு கை தட்டினல் ஓசையுண்டாகுமா? ஒருமித்துப் புறப் படுங்கள். வெற்றியின் பாதை இன்பக் குறு வழியன்று. துன் பப் புதர் அடர்ந்த தூரவழி கல்லும் முள்ளும், காடும் மேடும் நிறைந்த கடின வழி. கரடுமுரடான வழி. அந்த நெடுவழியிலே உங்கள் நெற்றியின் வியர்வை முத்துக்களாற் பூமியைக் குளிப் பாட்டி நெஞ்சத்தின் அஞ்சா வலிமையினுல் இன்னல்கனைப் பொடியாக்கித்தியாகக் கொடியேந்திப் புறப்படுங்கள்.
சலியாது உழைப்போம். சாகும்வரை உழைப்போம். சாதி சமயப் பூசல்களாற் பிரியாது ஒன்றுபட்டுழைப்போம். புதிய தொரு சமுதாயம் உருவாகும் வரை உழைப்போம், என்ற திடமான முடிவு கொள்ளுங்கள்.
அந்நியரால் ஆளப்படுகின்ற அவலநிலையொழிந்து, நம்மை நாமே ஆளும் முதல்தர மக்களாகியும், நம் நாடோ அன்றி நாமோ முன்னேறியுள்ளோம் என்ற பெருமையும், மனவுறுதி யும் நமக்கில்லையே. சிந்தியுங்கள், நாடும் நாமும் முன்னேற வேண்டின், திடமான தேசப் பற்று, இடையருத முயற்சி, கடும்

தீவு − 29
உழைப்பு அதில் திறமை இவைகள் வேண்டும். அப்போதுதான் நாடும் வாழும், அதில் நாமும் வாழ்வோம். பிறரை வருத்தியோ, வருந்தச் செய்தோ உன் நாட்டுக்கு விருத்தியையோ, விடுதலை யையோ தேடாதே. அப்படியே உன் சுய நலங்காக்க உன்னை யும் உன்னவர் உயிரையும் பொருளையும் மானம் மரியாதையை யும் இழக்கச் செய்யாதே. ஈடு வைக்காதே. நாட்டிற்கு விடு தலை, நல்லவரால்தான் கிட்டும். ஒருபோதும் நயவஞ்சகர் களாலோ சுயநலமிகளாலோ, சோம்பேறிகளாலோ கிட்டாது, கிட்டவும் கூடாது. அல்லது படித்தவராலோ, பட்டம் பெற் ருேராலோ பண்டிதர்களாலோ கிட்டுமா? இல்லவே இல்லை. எனவே தான் என் இருங்கரங்கூப்பிச் சிரந்தாழ்த்தி வேண்டு கின்றேன். தாயக அபிமானம் கொண்டு தலை நிமிர்ந்து வாழுங் கள். அறிவுடையோராய் அணிதிரண்டு வாழுங்கள். வெற்றி யைக் குறிக்கோளாய்க்கொண்டு வேங்கையாய் மாறுங்கள். எம் தீவகம் முன்னேற நாம் அவசரமாகவும் அவசியமாகவும் எதிர் பார்க்கும் திட்டங்கள்.
1. பாரிய குழாய்நீர்த் திட்டம் வேண்டும். 2. மின்சாரம் தேவைப்படக்கூடிய சகல மக்களும் பகிர்ந்து
கொள்ள வழிசெய்யவேண்டும்.
3. துறைமுகங்களெல்லாம் திருத்தி அமைத்து உபயோகத்
துக்குத் திறக்கப்படல் வேண்டும்.
4. தீவகத்திற்கோர் மீன்பிடித் துறைமுகம் வேண்டும். 5. குறிகாட்டுவான் துறைமுகத்தில் மின்சாரம் உடனடியாக
(ზიu6ორr (8ub. 6. சகல பாடசாலைகளிலும் உள்ள குறைக்ள் pj56jiġġsu u Tas
வேண்டும். - Xa 7. பாடசாலைகளுக்குத் தனிப்பட்ட விளையாட்டு மைதானம்
வேண்டும்.
8. வைத்தியசாலைகளில் தற்சமயம் உள்ள குறைகளெல்
லாம் நிவர்த்தியாக்கப்படல் வேண்டும்.
9. தீவகங்களுக்குப் பொதுவாகச் சனம் மிகுதியாகவுள்ள மத்தியான இடத்திற் பலவசதிகள் கொண்ட வைத்திய சாலை அமைக்கப்படுதல் வேண்டும். 10. முதற்தரமான பிரயாணவசதி வேண்டும். முடியுமானுல் வேலணைத்துறை வரையும் புகையிரதப் போக்குவரத்து வேண்டும்,

Page 23
சப்த
11. தச்சுத்தொழில் பாடசாலை ஊருக்கு மத்தியான இடத்தில்
2.
13.
14.
15.
16.
17.
அவசரம் வேண்டும். w பாதைகள், பாலங்கள், ருேட்டுக்கள் அமைக்கவேண்டும் புதுப்பிக்கவேண்டும். பாதுகாக்கப்படல் வேண்டும். விவசாயத்திற்கும், கால்நடைக்கும் வேண்டிய அபி
விருத்தி வகைகளைக் கைக்கொள்ளவேண்டும்,
தீவகமக்களின் வர்த்தக, விருத்திக்கு வழிவகை செய்ய்
வேண்டும்.
தீவக மீன்பிடித்தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைக் காத சகல உதவிகளும், வசதிகளும் செய்துகொடுக்க
வேண்டும். அவர்களின் கீழ்நிலையை நீக்க என்னென்ன
வழிவகைகளைக் கைக்கொள்ள முடியுமோ அவற்றை யெல்லாம் அரசாங்கம் உடனடியாகச் செய்து தர வேண்டும்.
பல வருடங்களுக்கு முன்னரே வாக்குறுதி பண்ணியபடி புங்குடுதீவிற் காரியாதிகாரி கந்தோர் அமைக்கப்பட வேண்டும்.
குறிக்கப்பட்ட தீவுகளுக்குக் கிடைக்கும் பண உதவி களை அவற்றுக்கே செலவு செய்து கொடுக்கும்படியும் வேண்டுகின்ருேம்.
மேற்காட்டிய எமது தேவைகளையும், எமது தீவகத்திலுள்ள தீர்க்கமுடியாத குறைகளையும் வெகுகெதியில் நீக்கி எமக்கு விமோசனம் செய்து தருமாறு கேட்கின்ருேம்.
தாயகத்திற்காக வாழ்தல் விளையாட்டன்று, அஞ்சாமை நேர்மை, தியாகம் இந்த மூன்று பண்புகளையும் எப் போதும் பெற்றிருக்க வேண்டும்.
எம்நாட்டுக்காக எதையும் அழிக்கத் தயாராய் இருப்ப தன்று நாட்டுப்பற்று. எதையும் உண்டாக்கத் தயாராக இருப்பதுதான் உண்மையான நாட்டுப்பற்று.
本 拳 米

தீவு 31
லைடன் தீ சி அதிபர், திரு. சி. சிற்றம்பலம்
ஊர் காவற்றுறை
லைடன் தீவின் வடமேல் திசையில் வடக்கும் மேற்கும் கட லும், தெற்கும் கிழக்கும் கரம்பொனையும் எல்லையாகக்கொண்டு சப்த தீவுகளின் தலைநகராக விளங்குகின்றது. மேற்குத் திசையில் அமைந்துள்ள பருத்தியடைப்பும் இதன் பகுதிக் குள்ளடங்கும். இஃது இலங்கையின் வடக்கில் பிரதானமான ஓர் இயற்கைத் துறைமுகமாகும். இந்தியா, பர்மா முதலிய நாடுகளிலிருந்து வரும் வாணிபக் கப்பல்கள் தங்கிச் செல்லும் துறைமுகமாக விளங்கியதுடன், யாழ்ப்பாண இராச்சியத்தின் காவல்துறைமுகமாகவும் விளங்கியது. இங்கு நன்னீர் கிடை யாது. அயலில் ஊருண்டி என்ற நன்னீர்க் கிராமம் உண்டு. ஊருண்டிக்குச் சென்று நன்னிர் எடுத்து வந்தனர். அக்காலத் தில் இங்கு நன்னீர்த் தேக்கங்கள் இருந்திருக்க வேண்டும், இந் நன்னீர்க் கேணிகள் உண்பதற்கு நீர் வழங்கிய  ைம ய ர ல் ஊருண்டி என்ற பெயர் பெறலாயிற்று. இந்நன்னீர்க் கேணிகள் நாளடைவிற் சிதைந்து போயிருக்கவேண்டும். ஆயினும் இக் குறிச்சியில் இன்றும் நன் னிர் பெறக்கூடியதாயிருக்கின்றது. ஊரைக் காவல் செய்யும் ஊர்காவற்றுறை என்றும் ஊருக்கு உண்ணும் நீர் வழங்கியமையால் ஊருண்டி எனக் கொள்வதே ஏற்புடையதாகும். இப்பகுதி நாரந்தனை மாராட்சி மன்றத்திற் பிரிக்கப்பட்டு பட்டினசபையின் ஆட்சியின் கீழ் விடப்பட்டுள் ளது.
துறைமுகத்துக்குத் தென்மேற்குத்திசையில் ஊருண்டிக்குச் செல்லும் வீதியிற் கடற்கரையோரமாக ஒல்லாந்தராற் கட்டப் பட்ட கோட்டை ஒன்று அழிந்து சிதைந்த நிலையிற் காணப் படுகின்றது. இக்கோட்டையை வெடியரசன் கட்டியதாகவும் கூறப்படுகின்றது. இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படும் சிறந்த காளைமாடுகள், ஆடுகள் என்பவற்றை இக் கோட்டையின் பக்கத்தில் அடைத்து வைத்துப் பராமரித்தனர். இப்பொழுதும் அவ்விடம் மாட்டுக் காலை என அழைக்கப்படுகின்றது. இங்கி ருந்து, சங்கு இந்தியாவுக்கு மிகுதியாக ஏற்றுமதி செய்யப்பட் ட அது. இதனுல் தீவுப்பகுதி மக்கள் நல்ல வருவாய் பெறக்கூடி

Page 24
32 aFl'hos
யதாக இருந்தது. பலதீவுகளிலும் எடுக்கப்படும் சங்குகள் இங்கு கொண்டுவரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டது. சங்குக ளைச் சேகரித்து வைக்கப்பட்ட இடம் சங்குமால் என இன்றும் அழைக்கப்படுகிறது. இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் சங்கு ஏற்றுமதி செய்தல் கைவிடப்பட்டது. தொற்று நோயா ளர்களைப் பராமரிப்பதற்கென ஒரு வைத்திய சாலையும் இந்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்தது. ஆயினும் இன்று அதன் சுவர்களை மாத்திரம் காணக் கூடியதாக உள்ளது. பொன்ஞலை வரதராசாப் பெருமாள் கோயிலை இடித்து, அதன் கல்லைக் கைத் தாங்கலாகக் கொண்டு வந்து துறைமுகக் கடலிலுள்ள கடற் கோட்டையை ஒல்லாந்தர் கட்டினர். ஹக்மன்கில் என்ற ஒல் லாந்த தளபதி கட்டியபடியால் இதற்கு ஹக்மன்கில் என்ற பெயர் வழங்குகின்றது.
இங்கு விவசாய நிலம் இல்லை. ஊருண்டியில் சிறு பகுதியில் தோட்டச்செய்கை நடைபெறுகின்றது. ஒன்றரைமைல் நீளமும் முக்கால் மைல் அகலமும், மூன்று மைல் சுற்றளவும் கொண்டது. பட்டினத்தைச் சுற்றி மக்கள் நெருக்கமாக வசிக்கின்றனர். புனித அந்தோனியார் கல்லூரி இங்குள்ள மக்களின் கல்வி வளர்ச்சிக்கு உதவுகின்றது. 512-க்கும் மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற்கும் இப்பாடசாலையில் 20 ஆசிரியர்கள் 660) UT 5L6GODD யாற்றுகின்றனர். கரம்பொனைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் யாழ்ப்பாணப் பிஷப்பாக இருந்தவருமான வண. எமிலியானுஸ் பிள்ளை அவர்களின் பெயரில் தொழில் நுட்பக்கல்லூரியொன்று நிறுவப்பட்டுள்ளது , இங்குள்ளவர்கள் சிறந்த கடலோடிகளாக விளங்கினர். தற்பொழுது அரசாங்க சேவையைப் பெரிதும் நாடுகின்றனர். படித்த பல இளைஞர்கள் பிறநாட்டுக் கப்பல் களில் மாலுமிகளாகச் சேர்ந்துள்ளனர். இலங்கை வங்கி, மக் கள் வங்கி, கிராமிய வங்கி என்பன திறக்கப்பட்டு விவசாயி களுக்கும் வர்த்தகர்களுக்கும் உறுதுணையாக விளங்குகின்றன. இங்குள்ள அரசாங்கக் காரியாலயங்கள் பொதுத்தாபனங்களுக்கு நிரந்தரமான சொந்தக் காரியாலயங்கள் இல்லை. இவையாவும் தனியாரின் வாடகை வீடுகளிலேயே இயங்குகின்றன,
கடல்வாணிபம் வீழ்ச்சியடைந்தமையாலும் சப்ததீவு மக்கள் இத்துறைமுகத்தைக் கைவிட்டமையினுலும் இதன் வளர்ச்சி தடைப்படலாயிற்று. தற்பொழுது கரையூர், பாசையூர், மயி லிட்டி முதலிய இடங்களிலுள்ள மீனவர்கள் இத்துறைமுகத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். பழம்பெருமை வாய்ந்த இப்பட்டினத்தின் அபிவிருத்தி பல ஆண்டுகாலமாக கவனிக்

தீவு 33
கப்படாதிருக்கின்றது. அரசாங்கத்தினதும் இப்பகுதி தேசிய பேரவைஊடறுப்பினரதும் அசிரத்தையே இதற்குக்காரணமாகும் சகல அரசாங்கக் காரியாலயங்களுக்கும் நிரந்தர சொந்தக் கட்டடம் உடனடியாகக் கட்டப்படவேண்டும். சிதைந்துபோயி ருக்கும் வாடிவீட்டை புனர் நிர்மாணம் செய்வதோடு உல்லாசப் பிரயாணிகளைக் கவரக்கூடியதாகப் பட்டினத்தை விரிவு படுத்தி அழகுறச் செய்யவேண்டும். வடபகுதியில் சிறந்த மீன்பிடித் துறைமுகமாக அபிவிருத்தி செய்வதோடு மீன் பிடிப்படகுகள் கட்டுவதற்கும் அவற்றைத் திருத்துவதற்குமான ஒரு நவீன தொழிற்சாலை அமைக்கப்படவேண்டும். இங்குள்ள மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இதற்கென பாரிய குழாய் நீர்த்திட்டம் உருவாக்கப்படவேண்டும். பொதுமக்க ளும் இவற்றில் அக்கறை காட்டிகுல் நகரம் வெகு விரைவிற் சிறந்து விளங்கும்.
பழைய வியாபார ஸ்தலங்களும் காவல் நிலையம், நீதி ஸ்தலம், சங்கக் காரியாலயம் முதலியனவும் உண்டு. மீன், மரக்கறி மற்றும் மக்களின் தேவைகள் எல்லாம் பூர்த்தி பண் ணக்கூடிய வகையிற் சந்தையும் உண்டு. வருங்காலம் ஊர்காவற்
றுறை ஒரு சிறந்த துறைமுகமாய்ப் பட்டினமாய்ச் சிறந்து விளங்கும். N
வேலணை
கிழக்கு மண்கும்பானையும், மேற்கு சரவணை புளியங்கூடல் சுருவிலையும், வடக்கும் தெற்கும் கடலையும்-எல்லையாகவுடையது இக்கிராமம். எனினும், வடக்கில் ஊர்காவற்றுறை யாழ்ப்பாணம் வீதிக்குட்பட்ட தென்பகுதிக்குள்ளேயே மக்கள் வாழ்கின்றனர். வீதிக்கு வடபுறம் பரந்த வெளியாய் மேய்ச்சல் தரையாக உள் ளது. வேலணை கிராமாட்சி மன்ற ஆட்சியிலிருந்து நாரந்தனை கிராமாட்சி மன்றம் பிரிவதற்கு முன்னர் இது ஒரு சிறுகிராம மாகவே இருந்தது, 1952-இல் இவ்விரு கிராமாட்சி மன்றங்களின் எல்லைகள் வகுக்கப்பட்ட பொழுது சோளாவத்தை. பள்ளம்புலம் ஆகிய சரவணை கிழக்கும், புளியங்கூடல், சுருவில் ஆகிய கிராமங் களின் கிழக்குப்பகுதியும் வேலணையுடன் சேர்க்கப்பட்டன. வேலன் என்ற பிரதானியின் அதிகாரத்துக்குட்பட்டிருந்தமை யால் வேலணையென்று பெயர் உண்டாயிற்று என்று கூறுவர். முரு கப் பெருமாளின் கைவேல் வந்து அணைந்த இடமாகையால்
6

Page 25
34 சப்த
வேலணையாயிற்று என்று வேறுசிலர் கூறுவர். ஒல்லாந்தர் ஊர் காவற்றுறையைக் கைப்பற்றிய பின்னர் தமதாட்சியை நிலை நிறுத்துவான்வேண்டி வங்காளவடிச் சந்தியிலிருந்து கால்மைல் தொலைவில் ஒரு கோபுரத்தைக்கட்டிக் கடல்வழியாக வரும் அந்நி யரின் வருகையைக் கண்காணித்து வந்தனர். இக்கோபுரத்தின் சிதைவை இன்றும் காணலாம். சுமார் நான்குமைல் நீளமும், மூன்றுமைல் அகலமுங்கொண்ட இக்கிராமத்தில் 578 குடும்பத் தினரும் 4788 வாக்காளரும் உள்ளனர்.
புங்குடுதீவு, வேலணை பால இணைப்புக்கு முன்னரும் புங் குடுதீவு, நயினுதீவு, நெடுந்தீவு மக்கள் யாழ்ப்பாணம் செல்வ தற்கு வேலணையைப் பிரதான இறங்கு துறையாகப் பாவித்தனர். ஆங்கிலேயர் ஆட்சி சுமார் 1900 ஆண்டளவில் அராலியைச் சேர்ந்த முத்தையா என்பவர் தீவுப்பகுதி மணியக்காரராக நியமிக்கப்பட்டார். இவர் அராலியிலிருந்து வந்து வேலணை யில் தங்கி தமது அலுவல்களைக் கவனித்தார். அக்காலத்தில் அராலித்துறை தீவுப்பகுதி மக்களுக்குப் பிரதான போக்குவரத் துத் துறையாக விளங்கியது. போக்குவரத்து வசதி குறைந்த அக்காலத்தில் அராலியில் இருந்து வேலணைக்கு வந்து தமது அலுவல்களைக் கவனிப்பது இ வருக்குச் சுலபமாயிருந்தது" எனவே இவர் தமது அலுவலகத்தை வேலணையில் நிறுவினுர், அத்துடன் ஆங்கில துரைத்தனத்தார் வந்து தங்கிச் செல்வதற் கென வாடிவிடும் இங்கு அமைக்கப்பட்டது. இதிலிருந் து வேலணை முக்கிய இடத்தைப் பெற லா யிற் று. இவரை த் தொடர்ந்து இவரது மகன் சோமசுந்தரம் மணியக்காரராஞர். இவர் வேலணையில் நிரந்தரமாகக் குடி யேறிஞர். மற்றும் சேர். வை. துரைசுவாமி, மருதையினர் சட்டம்பி ஆகியோரும் வேலணையின் வளர்ச்சியிற் கண்ணுங் கருத்துமாயிருந்தனர். இதனுல் ஏனைய தீவு களின் வளர்ச்சி தடைப்படலாயிற்று. 1945ஆம் ஆண்டு அரசாங்கம் தீவுப்பகுதியில் மத்திய மகாவித் தியாலயமொன்றினைப் புங்குடுதீவில் அமைக்க முன்வந்தது. ஆயினும் வேலணையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர் களின் சூழ்ச்சியினுல் வேலணையிலேயே அக்கல்விக்கூட' அமைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அத பர் பிரிவு தீவுப்பகுதி வடக்கு, தீவுப்பகுதி தெற்கு எனப் பிரிக்கப்பட்டுத் தீவுப்பகுதி தெற்கு உதவி அரசாங்க அதிபர் காரியாலயத்தையும் புங்குடுதீவில் நிறுவப்பட வேண் டு மென்று கோரிக்கை எழுந்தபோதிலும் த ற் போதைய

தீவு 35
பாராளுமன்ற உறுப்பினரின் செல்வாக்கினல் இக்காரியால யம் வேலணையில் நிறுவப்பட்டது. ஊர்காவற்றுறைக் கல்வி வட்டாரம் இருபிரிவாக்கப்பட்ட பொழுதும் ஊர்காவற்றுறை கல்வி வட்டாரம் என்ற பெயரை மாற்றி வேலணைக் கல்வி வட்டாரம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனுலும் மற்றைய தீவகங்களின் வளர்ச்சி தடைப்படலாயிற்று.
அக்காலத்தில் புத்திரங்கொண்டார் உடையாராக இருந் தார். இவர் பெருங்குளத்தின் கீழ்க் கரையில் மாதன் என்பவ ருடைய காணியில் ஓர் அம்மன் ஆலயத்தை உருவாக்கிஞர். இவரின் பின் உடையாராக வந்த இவர் மகன் இராமலிங்க உடை யார் காலத்தில் இவ்வாலயம் பெரிதும் வளர்ச்சியடைந்ததென் பர். மேலும், மாதன் என்பவருடைய காணியில் அம்மன் சிலை யொன்று காணப்பட்டதென்றும், அவ்விடத்தில் சிறுகொட்டி லமைத்து வழிபட்டு வந்தாரென்றும்,இவ்வாறு இருக்கும்பொழுது புங்குடுதீவைச் சேர்ந்த கதிர்காமு என்ற துறவியாரின் கனவில் அம்மன் தோன்றித் தனக்கு ஆலயம் அமைக்கும்படி கூறியதா கவும் அதன்படி அவர் வேலணைக்கு வந்து கோயில் கட்டினர் என்றும் அக்கோயிலே பெருங்குளத்து முத்துமாரி அம்மன் கோயிலென்ற பெயருடன் பிரசித்தி பெற்று விளங்கு கி ன் ற தென்றும் வேறுசிலர் கூறுகின்றனர். இக்கோயிலின் அயலில் செல்லப்பா சுவாமியார் நால்வர்மடம் என்ற பெயரில் மடம் ஒன்றினை அமைத்துச் சைவமதத்தினை வளர்த்து வருகின்றர். குறும்புப்பிட்டி என்ற இடத்திற் புத்தகோயிற் ஒன்று இருந்து அழிந்துள்ளதாக அறியக்கிடக்கின்றது. இப்பொழுது இந்த இடத்தில் ஓர் வைரவர் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கிராமத்தின் தென்கிழக்கில் வெள்ளைக் கடற்கரை என்ற இடம் உண்டு. இவ்விடத்தின் அயலில் உள்ள சா ட் டி யில் போர்த்துக்கேயர் 16ஆம் நூற்றண்டில் ஒரு கோட்டையைக் கட்டி னர். இக்கோட்டை வளவில் மாதா சிலையொன்றினை வைத்து வழிபட்டு வந்தனர். பின்னர் கண்ணுடிச்சாமியார் என அறியப் பட்ட பேதுருகே பெற்றங்கோர் என்பவராற் சிறு கோ யில் கட்டப்பட்டது. ஒல்லாந்தர் போர்த்துக்கேயர் கோட்டையைக் கப்பற்றி அழித்தபொழுது மாதா சிலையைக் கிணற்றுள் போட்டு ட்டு ஓடினர். பின்னர் 200 ஆண்டுகளுக்கு முன் அழிந்து போன கோட்டையின் முன் சிறிய கோயிலொன்றைக் கட்டி \னர். 1789இல் வளர்ச்சியடைந்த இக் கோயில் 1850-இல் தீக்கிரை யாயிற்று. 1928இல் வரை அந்தோனி குரவரின் பெருமுயற்சி

Page 26
36 dr's
யால் இன்றைய சிந்தாத்திரை மாதா கோயில் கட்டப்பட்டது. இது இன்று கத்தோலிக்க சமயத்தவரின் பிரதான வணக்கத்
56ao|iaoTs e 6r 6Tg).
சாட்டி கோயிலுக்குக் கிழக்கில் இரு முஸ்லிம் பள்ளி வாசல்கள் இருக்கின்றன. தற்பொழுது ஒரு முஸ்லிம் பாடசாலை யும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மிகச்சிறிய அளவில் முஸ்லீம் மக்கள் இங்கு வசிக்கின்றனர். யாழ்ப்பாணத்து முஸ்லீம் மக்கள் இப்பள்ளிகளுக்கு யாத்திரை செய்து தொழுகை நடாத்து கின்றனர்.
போர்த்துக்கேயர் வெள்ளைக் கடற்கரையில் வந்திறங்கிய காலத்தில் அவ்விடத்தில் பிரசித்தி பெற்ற சைவசமயத்தவரின் அம்மன் ஆலயம் ஒன்று இருந்தது. போர்த்துக்கேயர் இவ் வாலயத்தை இடித்த பொழுது அங்குள்ளோர் அம்மன் சிலையை எடுத்துச் சென்றனர். அதன் பின்னரே போர்த்துக்கேயர் அங்கு தமது கோட்டையைக் கட்டினர் என்பர். இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட அம்மன் சிலைதான் நாரந்தனை தான் தோன்றி அம்மன் அல்லது பெருங்குளம் முத்துமாரி அம்மன் என ஊகிக்கக் கூடியதாக இருக்கின்றது.
1873இல் மிசனரிமார் வங்களாவடியில் காரியாலயம் கட்ட காணி வாங்கினர். பின்னர் 1914 ஆம் ஆண்டில் வங்களா வடிச் சந்தியில் கோயிலும் பள்ளிக்கூடமும் கட்டினர். இதற்கு 50 யார் தூரத்தில் 1925இல் விஜயரத்தினம் என்பவரின் முயற்சி யால் சைவப்பாடசாலை ஒன்று நிறுவப்பட்டு யாழ்ப்பாணம் சைவவித்தியாவிருத்திச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வேலணை மேற்கில் கந்தப்பர் என்பவரால் ஒரு சைவப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலை கந்தப்பர் வித்தியாசாலை என அழைக்கப்பட்டுவந்ததெனினும் இன்று இது சைவப்பிரகாச வித்தியாசாலை என்ற பெயருடன் விளங்குகின்றது. இப்பாட சாலையில்தான் மத்திய மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு இன்று அதன் அயலில் தனியானதோர் கல்விக் கூடமாக விளங்குகின்றது. இதற்கு மேல் திசையில் சுருவில் வீதியில் நடராசா வித்தியாசாலை உண்டு. வேலணை வடக்கில் ஆத்தி சூடி என்ற ஆரம்பப்பாடசாலையும் தெற்குக் கடற்கரையை யடுத்து ஐயனர் வித்தியாசாலையும் பெருங்குளத்தில் ஒரு மகா வித்தியாலயமும் செட்டி புலத்தில் ஒர் ஆரம்பப் பாடசாலையும் இருக்கின்றன. இப்பாடசரலைகள் முன்னர் யாழ்ப்பாணம் கல்வி வட்டாரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன.

தீவு 37
இங்கு விவசாயமே பெருமளவில் செய்யப்படுகின்றதா யினும் தோட்டச்செய்கையிலேயே அதிக கவன செலுத்தப் படுகின்றது. வேலணைத் துறைமுகம் மீன்பிடித்தொழிலுக்கு மிகவும் விசேடமுடையது. சாட்டிக் கடற்கரை சுகவாசஸ் தலத்திற்குச் சிறந்த இடமாகும். இங்கிருந்துதான் புங்குடு தீவு ஊர்காவற்றுறைப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக் கப் படுகின்றது. இன்று வங்க்ளாவடி துரிதமாக வளர்ச்சி யடைந்து வருகிறது. கிராமிய குடிநீர்த் திட்டத்தின் கீழ் குழாய் நீர் விநியோக வலைகள் முடிவுறும் தறுவாயிலிருக் கின்றது. இக்கிராமத்தினைப் பிறப்பிடமாகக் கொண்டவர் தேசியப் பேரவை உறுப்பினராக இருக்கும்வரை இதன் வளர்ச் சியைச் சொல்லவும் வேண்டுமா?
W
கரம்பொன்
லைடன் தீவின் மேற்கில் வடக்கு, தெற்கு, மேற்கு திசை களில் கடலையும், வடமேற்கில் ஊர்காவற்றுறை பருத்தி படைப்பையும், கிழக்கில் நாரந்தனையையும் எல்லையாகக் கொண்டது கரம்பொன் கிராமம். கதிரன் என்ற பிரதானியின் அதிகாரத்துள் இருந்தமையால் கரம்பன் என்ற பெயர் வந்த தென்று ஒருசிலர் கூறுவர். புராதன காலந்தொடக்கம் முருக வழிபாடு இருந்து வந்துள்ளது. பழந் தமிழர் தாம் வாழ்ந்த இடங்களுக்குத் தமது வழிபடு கடவுளின் பெயரை இட்டு வழங்கி வந்துள்ளனர். இதற்கமைவாக முருகப்பெருமானின் பெயர் களுள் ஒன்ருகிய கடம்பன் என்ற பெயரைத் தாம் வாழ்ந்த கிராமத்திற்குச் சூட்டி மகிழ்ந்தனர். நாளடைவில் கடம்பன் என்பது கரம்பன் என மருவி வழங்கப்படுவதாயிற்று. மேலும் பன்னிரு கரங்களை உடையவன் முருகன். அப்பெயராலே கரம்பன் என வழங்கிய இன்று கரம்பொன் என அழைக்கப்படு கின்றது எனவும் கூறுவர்.
ஊர்காவற்றுறை சிறந்த துறைமுகமாக விளங்கியபோதும் அனலைதீவு, நயினுதீவு, எழுவைதீவு, நெடுந்தீவு ஆகிய தீவு களிலிருந்து வருபவர்கள் கரம்பொன் மேற்கில் அமைந்திருக் கும் கண்ணகை அம்மன் ஆலயத்திற்கருகில் அமைந்துள்ள இறங்குதுறையில் வந்திறங்கி ஒரு பகுதியினர் அராலித்துறை முகம் வழியாகவும், ஒருசிலர் காரைநகர் வழியாகவும் யாழ்ப்

Page 27
38 ar'5
பாணத்திற்குப் போக்குவரவு செய்தனர். இவர்கள் தங்கிச் செல்வதற்கென இறங்குதுறையிலும் கரம்பொன் மேற்கிலும், கிழக்கிலும் மடங்கள் தாபிக்கப்பட்டன. ஊர்காவற்றுறை அறை முகம் மூலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யாத்திரை செய் வோர் தங்கிச் செல்வதற்கென 'மங்களவார மடம்” என்ற பெயரில் ஒரு மடம் தாபிக்கப்பட்டது. இம்மடங்கள் யாவும் யாத்திரிகர்களுக்கும் பிரயாணிகளுக்கும் உண்டியும் உறையுளும் கொடுத்துதவியதுடன் சைவசமயப் போதனைகளும் கடவுள் வழிபாடும் ஆற்றிவந்தன. நாளடைவில் மேற்கு கிழக்கு மடங் களில் முருகனின் வேல் தாபிக்கப்பட்டு முருகவழிபாடு நடை பெறலாயிற்று. இவ்வாறு முருகவழிபாடு ஆரப்பிக்கப்பட்ட இம்மடங்கள் காலகதியில் முருகன் ஆலயங்களாக மாற்ற மடைந்து இன்று பிரசித்தி பெற்ற ஆலயங்களாகத் திகழ் கின்றன. ஆயினும் இன்றும் ஊர்மக்கள் இவ்வாலயங்களே மேற்கு மடம், கிழக்கு மடம் என்றே அழைத்து வருகின்றனர். இறங்குதுறையில் அமைந்தமடம் அதன் சுவடு தெரியாமலே அழிந்துவிட்டது. 'மங்களவார மடம்" ஒன்று மட்டும் மடம் என்ற பெயருடன் அழிந்துபோகும் நிலையில் ஊசலாடிக்கொண் டிருக்கின்றது. இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் கடல் வாணிபம் செய்த இந்தியச் செட்டியார் ஊர்காவற்றுறைத் துறைமுகத்தில் சாக்குகளை இறக்கி வாணிபம் செய்த காலத்தில் தாம் தங்கிச் செல்வதற்காக இம்மடத்தைத் தாபித்ததாகச் சொல்வர். யாழ்ப்பாணக் குடாநாட்டின் பலபாகங்களிலும் eJogo T6T LIDAT 6UT காணிகள் இந்த மடத்துக்குச் சொந்தமாக உள்ளது. 1848 ஆம் ஆண்டு சிதம்பரச்சுப்பையச் செட்டியார் என்பவர் பல காணிகளை மட க் மசாதனம் செய்துள் ளார் என குத் தர் لی 5ژن
மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கண்ணகை அம்மன் ஆலயம் மிகப் பழைமையானது. இவ்வாலயம் சுமார் இரண் டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறுவர். இப்பகுதி யிற் கத்தோலிக்க மதம் பரவிய காலத்திற் கத்தோலிக்கரால் இவ்வாலயம் சிறைப்பிடிக்கப்பட்டுப் பின்னர் சிறு ஆலயமாக உருப்பெற்றது, ஆங்கிலேயர் ஆட்சியின் ஆரம்பக் காலத்தில் இங்கு கொள்ளைநோய் ஏற்பட்டது. அப்பொழுது யாழ்ப் பாணத்திலிருந்த ஆங்கில அரசாங்க ஏஜண்டு இவ்வாலயத்தை இடித்து விடும்படி கட்டளையிட்டாளும். இதனை அறிந்த ஊர் மக்கள் கோயிலை இடித்தால் நோய் தீவிரமாகப் பரவி ஊர் மக்களைப் பலிகொண்டுவிடுமென்றும் அம்மனுக்குச் சாந்தி செய்து வழிபடின் நோய் அகன்றுவிடுமென்றும் கூறிக் கோயிலை

தீவு • 39
இடிக்கவிடாது தடுத்தனர் என்றும், ஒருவார காலத்துள் நோய் முற்ருக நீங்காதுவிட்டாற் கோயிலை இடித்துவிடுவதாகக் கூறிச் சென்றனெனவும், ஊர்மக்கள் அம்மனுக்குப் பூசை வழிபாடு செய்தபடியால் அவன் கொடுத்த காலக்கெடுவுக்குள் நோய் நீங்கியதாகவும் அதன் காரணமாகவே கோயிலை இடிக்காது விட்டானெனவும் கூறப்படுகின்றது அதன்பின்னர் இவ்வாலயம் கவனிப்பாரற்றுச் சிதைவடையலாயிற்று. சிதைவுற்றிருந்த இவ் வாலயத்தை திரு ச. சங்கரசிவசம்பு என்பவர் சைவப்பெரு மக்களின் உதவியுடன் புனருத்தாரணம் செய்வித்துள்ளார். இவ்வாலயத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நவராத்திரி காலத்தில் பூரீமகாமேருயந்திர பூசை 5டைபெறுவது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.
நாரந்தனை ஊராட்சிமன்றத்தின் ஆட்சிக் குட் பட்ட சிரமம் அறுநூற்று எண்பத்துமூன்று குடியிருப்பாளர்களை ம் நாலாயிரம் வாக்காளரையும் கொண்டது. இக்கிராமம் இரண்டரைமைல் நீளமும், இரண்டு மைல் அகலமும், ஆறுமைல் சுற்றளவும் கொண்டது. விவசாயமே இங்குள்ள மக்களின் பிரதான தொழிலாகும். சிலர் அரசாங்கச் சேவையிலும் வியா பாரத்திலும் ஈடுபட்டுள்ளனர். போதியளவு விவசாய நிலங்கள் இருந்தபோதிலும் தோட்டப் பயிர்ச்செய்கையிலேயே அதிக ஆர்வங்காட்டுகின்றனர். பண வருவாயினைக் கொடுக்கும் மிளகாய், வெங்காயம், புகையிலை முதலிய தோட்டப் பயிர் களையே விரும்பி உற்பத்தி செய்கின்றனர். தோட்டச் செய்கை யைப் போன்று நெற்பயிர்ச் செய்கையில் அதிக ஆர்வங்காட் டப்படுவதில்லை.
எழுத வாசிக்கத் தெரியாதவர்கள் இங்கு இல்லையென்றே சொல்லலாம். சைவமும் தமிழும் வளர்ப்பான் வேண்டி மேலைக் கரம்பொனில் மகாதேவசுவாமிகள் பிடி அரிசி சேகரித்து சண்முகநாத வித்தியாசாலை என்ற பெயருடன் ஒரு பாட சாலையைத் தாபித்தார். இப்பாடசாலையில் அனலைதீவு எழுவை தீவு முதலிய இடங்களிலிருந்து பல மாணவர்கள் வந்து கல்வி கற்றுச் சிரேட்ட பாடசாலைத் தராதரப் பத்திர வகுப்பு வரை கல்வி கற்றுத் தேர்ச்சி அடைந்துள்ளனர். இன்று இப்பாட சாலை மகாவித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டு பன்னிரண் டாம் வகுப்புவரை விஞ்ஞானக் கல்வி போதிக்கப்படுகின்றது. இப்பாடசாலையில் 370-க்கு மேற்பட்ட மாணவர்கள் பயில்கின் றனர். 15 ஆசிரியர்கள் பயிற்றுகின்றனர். கீழைக் கரம்பொனில் ஓர் ஆரம்பப்பாடசாலை இருக்கின்றது. ஊர்காவற்றுறை

Page 28
40 சப்த
அரசினர் வைத்தியசாலையும், உதவி அரசாங்க அதிபர் காரி யாலயமும் கிழக்குப் பகுதியிலே அமைந்துள்ளன. கரம்பன் சிறிய புஷ்ப மகாவித்தியாலயம் எனப் பெண்களுக்கான ஓர் உயர்ந்த பாடசாலையும் இப்பகுதியில் இருக்கின்றது. இப் பெண்கள் பாடசாலையில் 400.க்கு மேற்பட்ட பெண்களும் 100-க்கு மேற்பட்ட ஆண்களும் படிக்கின்றனர். ஓர் ஆணும் 16 பெண் ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர். இக்கிராமத் தில் இரு கிராம முன்னேற்றச் சங்கங்கள் இருந்தபோதிலும் நல்லமுறையில் இயங்கிக் கிராமத்திற்குப் பணிபுரிவதாக இல்லை.
படித்துப் பட்டம் பெற்று அரசசேவையிலீடுபட்டவர்களும் பெரும் வியாபாரிகளாக உள்ளவர்களும் தாம் பிறந்த கிரா மத்தை விட்டு நகர்ப் புறங்களுக்குச் சென்று குடியேறுகின் றனர். இதனுல் இவர்களது சேவை கிராமத்திற்குக் கிடைப்ப தில்லை. பொருளிட்டுவதில் அக்கறை காட்டும் அதே வேளையிற் கலைச் செல்வங்களைப் பேணவோ வளர்க்கவோ காட்டுவதில்லை. பணப் பயிர் உற்பத்தியில் ஈடுபாடு கொண்டு உணவு உற்பத் தியில் நாட்டம் செலுத்தாத காரணத்தால் பெரும்பாலான வயல் நிலங்கள் குளங்களாக மாற்றப்பட்டுவிட்டன. மேலும் இந்நிலை நீடிக்காது தடைசெய்யப்படவேண்டும். பொது நூல் நிலையமோ, வாசிகசாலையோ இல்லாதது பெருங்குறையாக உள்ளது. இக்குறையினைப் போக்குவதற்கு ஊராட்சி மன்றம் நடவடிக்கை எடுத்தலவசியம். இக்கிராமத்தின் வடக்குப் பகுதி யில் மிஷனரிமார் ஆங்கிலக் கல்லூரியொன்று நிறுவமுன் வந்த போதும் மதம் மாற்றம் செய்துவிடுவார்களென்று தடைசெய்த படியால் வட்டுக்கோட்டையில் அக்கல்லூரியைத் தாபித்தனர். அக்கல்லூரி இன்று பல்கலைக்கழக வளாகமாக மிளிர்கின்றது. இவ்வாறே சீநோர் தாபனத்தாரைத் தொழிற்சாலை அமைக்க விடாது காரைநகருக்கு அனுப்பிவைத்தனர். இவ்விரண்டும் இப் பகுதியில் அமைந்திருப்பின் கிராமத்தின் முன்னேற்றங் கருதி இவ்வாருண தவறுகளை விடமாட்டார்களென நம்புவோமாக.
நாரந்தனை லைடன்தீவில் வடக்கும் தெற்கும் கடலையும் கிழக்கில் சரவணை யையும் மேற்கில் கரம்பொனையும் எல்லையாகக் கொண்டது நாரந் தனைக் கிராமம், நாராயணன் என்ற பிரதானியின் ஆட்சிக் குட்பட்டிருந்தமையால் நாரந்தனை என்ற பெயர் உண்டாயிற்று என்பர். முல்லைநிலத் தெய்வமாகிய திருமால் வந்து அணைந்த அதாவது சேர்ந்த இடம் ஆகையால் திருமாலின் பெயராகிய

தீவு 4 ܗܝ.
நாராயணன் அணைந்த இடம் நாரந்தனை என வழங்கலாயிற்று என்று வேறு சிலர் கூறுவர். இதற்கு எடுத்துக்காட்டாக இக் கிராமத்தின் வடதிசையிற் கடற்கரைக்கு அண்மையில் 1951 ம் ஆண்டு கல்லு எடுப்பதற்காக வெடி வைத்தபொழுது கற்பாரு டன் சேர்ந்து அழகிய அம்மன் சிலையும் முதலாம் இராசஇராச
சோழன் காலத்துத் தங்கநாணயங்களும் தங்க நகைகளும் கொண்ட பெட்டி ஒன்று வெளிவந்துள்ளது. இதனை அறிந்த இவ் வூர்ச் சைவப்பெருங் குடிமக்கள் சிலை வெளிப்பட்ட இடத்தில் ஆலயம் அமைத்து அம்மன் சிலையைப் பிரதிட்டை செய்துள்ள
னர். இவ்வாலயம் தான்தோன்றி மனேன்மணி ஆலயம் என்ற பெயருடன் சிறந்து விளங்குகின்றது. இவ்வாலயத்தைச் சூழவரப் புதிதாக ஒரு குடியேற்றம் அமைந்துள்ளது. தங்க நாணயங் களை யாழ்ப்பாணம் தொல்பொருட் காட்சிச்சாலையில் இன்றும் 丐町@Ta)厅山b。
கரம்பொனிற் கல்விக்கூடம் அமைக்க முன்வந்த பாதிரி மார் தம்முயற்சி தடைப்பட்ட காரணத்தால் இக்கிராமத்தில், நிலம்பெற்றுக் கல்விச்சாலை அமைக்க நடுகல் நட்டபொழுது இங் கும் அவர்களது முயற்சி தோல்வியுற வட்டுக்கோட்டைக்குச் சென்று யாழ்ப்பாணக் கல்லூரியைத் தாபித்தனர். இக்கிராமத் தின் மத்தியிற் கத்தோலிக்க மதத்தாபனத்தினர் ஆண்களுக்கும் பெண்களுக்குமே இரு பாடசாலைகளை அருகருகே தாபித்து நடாத்திவந்தனர். 1944ஆம் ஆண்டு வரையும் சப்ததீவுகளுக்கும் பரீட்சை நிலையமாக க் கல்வித்திணைக்களம் இப் பெண் பாட சாலையை அனுமதித்துள்ளது. உதவிநன்கொடை பெறும் பாட sorbus8m SpSoräsb ರಾಹತ್ತಿಲ್ವಹಿಲ್ಟರ್್ಲೆಟ್ಟಿ 1974ம் ஆண்டில் இரு பாடசாலைகளும் ஒன்ருக இணைக்கப்பட்டுக் கனிட்ட உயர்தர பாடசாலையாக இயங்கி வருகின்றது. சைவப்பிள்ளைகளுக்கென யாழ்ப்பாணம் சைவவித்தியா விருத்திச்சங்கம் திரு. சி. தில்லை நாதர் என்பவரின் உதவியுடன் ஒரு சைவப் பாடசாலையை நிறு வினர். திரு. தில்லைநாதன் அவர்கள் சிலகாலம் இப்பாடசாலையின் உதவி முகாமையாளராக இருந்துள்ளார். இன்று இப்பாடசாலை கனிட்ட உயர்தரப் பாடசாலையாக மிளிர்கிறது. இப்பாடசாலை களில் ஏறக்குறைய 600க்கு மேற்பட்ட பிள்ளைகள் கல்வி கற் கின்ருர்கள். இவர்களுக்கு 26 ஆசிரியர்கள் கடமையாற்றுகின் றனர். ی
இக்கிராமம் இரண்டுமைல் நீளமும் ஒன்றரை மைல் அகலமும்
ஐந்து மைல் சுற்றளவும் உடையது. ஐஞ்ஞாற்று எழுபது
7 -

Page 29
42 சப்த
குடியிருப்பாளர்களையும் மூவாயிரத்து அறுநூறு வாக்காளர்க ளையும் கொண்டது. ஊராட்சிமன்ற அலுவலகம் இக்கிராமத்தின் மத்தியில் அமைந்துள்ளது. முப்பது ஆண்டு காலமாக இக் கிராமத்தில் இயங்கிவந்த அரசினர் கால்நடை மருத்துவ நிலையம் ஆகியவற்றைத் தேசியப் பேரவை உறுப்பினர் வேல ணைக்கு இடம்பெயர்த்துள்ளார். தான் பிறந்த கிராமமாகிய வேலணையிலேயே சகல அரசாங்க நிலையங்களும் ஒன்று சூழ அமைய வேண்டும் என்ற பேராவல் கொண்டு செய்வதாகவே இன்று மறு கிராம மக்கள் கருத வேண்டியுள்ளது. தீவகங் கள் சிறப்படைய வேண்டுமானல் ஆங்காங்கே அரசாங்க நிலையங்கள் அமைவதே சாலச் சிறந்தது.
நாட்டுப்பற்று, மொழிப்பற்று இவைகளைத் தவிர மனிதனை உணர்வுகொள்ளச் செய்யும் பொருளோ பற்றே வேறில்லை.
k 米 善
உள்நாட்டின் நல் வளத்தைக் கண்டால்தான் வெளிநாட்டிற்
டிகழ்நிலைக்கும். அப்படி இல்லாத புகழ் காகிதத்தில் எழுதிய சருக்கரைதான்.
* 缘
தாயகத்திற்கு விடுதலை வேண்டுமா? துப்பாக்கி எடுக்காதே.
மக்களுக்கு அறிவு என்னும் கண்ணுெளியைக் கொடு. விடுதலை யைத் தாளுகத் தேடிக் கொள்வார்கள்.

தீவு 43
அல்ல்ச்பீட்டி
M/~~Ym MMNMNMNMMNMM.
சி. இரத்தினசபாபதி, "சிவவாசம்"
அஞ்சல் அதிபர் அல்லைப்பிட்டி
* கிராம ராஜ்யமே ராமராஜ்ய2 என்று எடுத்தியம்பிய அண்ணல் காந்தியடிகள் இந்தியா நாட்டின் இதயத்தினைக் காணவேண்டுமானல், கிராமங்களுக்குச் சென்றுதான் பார்வை யிடவேண்டுமென்று கிரர்மங்களின் மேன்மையை எடுத்துக் காட்டினுர், அத்தகைய பெருமைக்குரிய கிராமங்களின் அங்க மாக அல்லைப்பிட்டிக் கிராமம் உள்ளது. கல்விச் சாலைகளும் கோயில்களும் மருவி, அகலாத வீதிகளையுடை யாழ்ப்பாண நன் நகரத்தின் தென்பால் அண்டி நிற்கும் பண்ணைக்கடலின் ஊடு செல்லும் 4 மைல் நீளமான வீதியைக் கடந்து கடற்கரை ஓர மாக மேற்கு நோக்கித் திரும்பி தென்மேற்கு மூலையில் தென் படுகின்றது. இலங்கையின் எழில்மிகு கிராமங்களின் வரிசை யிலோ அல்லது வரலாற்றுப் பெருமையிலோ அன்றேல் நிகழ் காலத்துக்குரிய நாகரிக முதிர்ச்சியிலோ சிறப்பான இடத்தை பிடித்ததன்று. குறைந்த பட்சம் அல்லைப்பிட்டி என்னும் ஊர்ப் பெயர் கூட ஈழமெங்கும் யாவரும் அறிந்ததொன்றில்லை. ஏறக் குறைய இரண்டு மைல் கிழக்குமேற்காக நீளமும் ஒன்றரை மைல் வடக்குத் தெற்குமாக அகலமும் கொண்ட சதுரவடிவை அண்மித்த பரப்பளவைக் கொண்டு வடக்குப் பண்ணைக் கடலி ஞலும் தெற்கே ஆழ்கடலினுலும் கிழக்கே அயற் கிராமமாகிய மண்டைதீவைத் துண்டிக்கும் பருவக் கடலினலும் சூழப்பட்டு மேற்கே மண்கும்பான் என்னும் கிராமமும் அல்லைப்பிட்டி கிராம சபை எல்லைக்குள் அடங்கும். பெருமளவிற்கு மண்மேடுகளைக் கொண்ட மண்கும்பான் கிராமம் வடகீழ்த் தென் கடற்கரை யோரங்களில் சுமார் நூற்றைம்பது யார் தூரத்திற்கான வண் டல்மண் கலந்த உவர்நீர்த் தரைகளையும், அது தவிர்ந்த ஏனைய பகுதிகளனைத்தும் ஆங்காங்கே பெரிய, சிறிய மணற்பரப்பு களையும் சமதரை மேடுகளையும் இடையிடை அவற்றினூடு செப்பஞ் செய்யப்பட்ட வயல்வெளிகளையும் கிழக்குக் கரையின் பிரதானமாகவும் மற்ற இடங்களிற் கலப்புற்றும் தோட்ட நிலங் களையும் உடையதாய் விளங்கும். சிறிய குக்கிராமமாகிய அல்லைப்பிட்டி குறுகிய மக்களையே எண்ணிக்கையாகக் கொண் டது. ஏறக்குறைய 1400 மக்களைக் கொண்டதாகவும் 850 வாக் காளர்களைக் கொண்டதாகவும் சமீப காலம்வரை உள்ளது. 5 வட்டாரங்களையடக்கிய கிராமச்சபை பிரதேசத்தில் மூன்று வட்டாரங்கள் அல்லைப்பிட்டியாகவும் இரண்டு வட்டாரங்கள்

Page 30
44 arus
மண்கும்பாளுகவும் அமையப்பெற்றுள்ளன. கடல் அலைகள் கரையோரமாகவுள்ள மணற்பிட்டிகள் மீது மோதுவது போலும் அல்லைப்பிட்டி எனப்பெயர் கொண்டது, எனக்கூறுவர். இக் கருத்தை மறுதலித்து அல்லிக்கொடி படர்ந்து பரவியிருந்தமை யால், அல்லிப்பிட்டி என்றிருந்ததாகவும் நாமம் மருவக் காலக் கெதியில் அல்லைப்பிட்டியாகியதாகவும் கூறுவர். என்னதான் மண்மலையான பெரும் மணற்பிட்டிகள் இருந்தபோதும் தற் போதைய மணல் ஏற்றுமதியாளரிஞல் அவை யாவும் அழிந்து சாதாரண நிலப் பிரதேசத்தை உடையனவாயின. 3 பகுதி சைவமக்களையும் பகுதி கத்தோலிக்க மக்களையும் கொண்ட தாய் எதுவித சாதிசமய இனமத வேற்றுமைகள் இன்றி மக்கள் வாழுகின்றனர். சைவர்கள் அனைவரும் வேளாண்மையிலும் கத்தோலிக்க மக்கள் அதிகமாய் மீன்பிடித் தொழிலிலும் ஈடு படுகின்றனர்.
அத்துடன் விவசாயமும் சிறுசிறு கால்நடை வளர்ப்பும் சிறு தோட்டச் செய்கைகளும் இவர்களது தொழில், எத்தொழிலா லும் நல்ல முன்னேற்றத்தை இவர்கள் காணமுடியாது. புகை -யிலை காசுப்பயிராகவும் மிளகாய் வெங்காயம் பயறு தக்காளி உப-உணவுப் பொருள்களாகவும் பயிரிடுகின்றனர். இதுவரை இவ்வூர் மக்கள் அரசாங்கத்திலும் சரி தனியார் நிறுவனங்களி லும் சரி உயர்ந்த பதவிகளை வகித்தது குறைவு. தற்சமயம் அரசாங்க உத்தியோகத்தில் ஓரளவு முன்னேற்றமாக வந்து கொண்டிருக்கின்றர்கள். இங்கு பரா சக்தி வித்தியாசாலை, உருேமன் கத்தோலிக்க பாடசாலை என இரண்டு பாடசாலைகள் உண்டு. அல்லைப்பிட்டி மண்கும்பான் பாடசாலைகள் ஊர்காவற் றுறைக் கல்வி வட்டாரத்துக்குள் அமையாதது குறிப்பிடத் தக் கதே. அல்லைப்பிட்டி, வரலாற்றுப் பெருமை மிக்க ஓர் இட மாகப் புதைபொருள் ஆராய்ச்சிமூலம் பண்டைய கலைச்செல் வங்களாகவும் காட்சிப் பொருள்களாகவும் அண்மையில் வெளிப் படத் தொடங்கியுள்ளன. வடபிரதேச அகழ்வு ஆராய்ச்சியா ளர்கள் சந்தர்ப்பவசமாக மேற்கொண்ட ஆய்வுகளினல் இலங் கையின் எப்பாகத்திலும் காணக் கிடைக்காத பல்வேறு வேலைப் பாடு கொண்ட சீன மட்பாண்டங்களையும் கிறீஸ்துவுக்குப் பின் 10ம் நூற்ருண்டுக்குரியதெனக் கருதப்படும் கலையம்சம் பொருந் திய பண்டங்களையும் சோழர் காலச் சிற்பக்கலையம்சம் கொண்ட பஞ்சமணிகளையும் கண்டுபிடித்துளளனர். கிழக்குக்கரையோர மாகவுள்ள ஒல்லாந்தர் காலத்து முருகைக்கற்களால் கட்டப் பட்ட பாரிய மாதா கோவில் இன்று சிதைவுற்று இருக்கின்றது. அதன் சுற்ருடலில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் எண்ணியுள்ள

தீவு 45 -
னர். இக்கோயிலின் அகன்ற பரப்பளவும் அதன் கிழக் குப் புறமாக 15 அடி அகலமுள்ள கடினமான களிமண்ணினுல் ஆக்கப்பட்ட வீதியொன்றும் கடற்கரையை நோக்கிச் செல் வதைக் காணலாம். அன்றியும் கடலின் ஆழமான பகுதி ஆறு என அழைக்கப்படுவதால் ஒல்லாந்தர் காலத்தில் இப்பகுதி ஒரு பிரபல்யமான துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். இப்பிர தேசத்தில் வழங்கப் பெறும் கப்பலடி பறங்கிவயல் முக்கிராம் பிட்டி என்னும் பெயர்கள் இவற்றை வலியுறுத்துகின்றன. இன்னும் மண்டைதீவு, மண்கும்பான். அல்லைப்பிட்டி ஆகிய முக் கிராமங்களுக்கும் அல்லைப்பிட்டியே கோயில் பற்ருக விளங்குகிறது. 50 வருடங்களுக்கு முன்பு இங்கு பழைய காலத்திய பொன் நாணயங்களும் குஜராத்திப் பவுண்களும் முத்துமாலைகளும் கிடைத்துள்ளமை பழையகாலம் தொட்டே கடல் மார்க்கமான வெளிநாட்டுத் தொடர்பு உண்டென்பதை உறுதிப்படுத்துகின்றது. இங்குள்ள பெண்மணிகளுக்கு பனை யோலையின் பன்னவேலையே குடிசைக் கைத் தொழிலாக முதலிடத்தை வகிக்கின்றது. ஓரளவுக்குத் தென்னை மரமும் அதிகமாக நல்லபயனைக் கொடுக்கின்றது. பழைய கலைகளில் நாட்டமுடைய பலர் இன்றும் கலையார்வம் உள்ளவர்களாய் வாழ்கின்றனர். நாட்டுக்கூத்து, தென்மோடி வடமோடி நாடகங்கள் நொண்டிநாடகம் பூதத்தம்பி நாடகம் முதலிய வற்றை இக்கால இளைஞர்களும் நடத்தி வருகின்றனர். நவீன முறைக்கேற்ற விதத்தில் படைப்புகளை ஆங்காங்கே அளித்துப் புத்துணர்ச்சியூட்டி வருகின்றனர். இலைமறை, காய்மறையாய் ஒருசில கவிஞர்களும் ஒளிந்து கிடக்கின்றர்கள், அவர்களுள் கவிஞர் பா. சத்தியசீலன் சிறுவர் கவிகளிலும் வானெலிப் பாடல்கள் மூலமும் பெயர்பெற்றவர். மற்றெரு கவிஞர் திரு. க. வா. ஆறுமுகம் அவர்கள் , தமது தமிழ் எழுச்சிப் பாடல்களின் மூலமும் பகுத்தறிவும் பாடல்களின் மூலமும் பண்பட்ட நாடகங்களை இளைஞருக்கு ஆக்கிக் கொடுத்து எழுச்சி மிக்க இளைஞர் சமுதாயமொன்றை உருவாக்கிய பெருமைக்குரியவர். அவரது பாடல்களில் ஒன்று"க
தமிழ் போல இனிதான மொழி ஏதம்மா? . அதை அழியாமல் நிலையாக வழிதேடம்மா இனிதான மொழிகற்றேர் இறவாரம்மா - அதன் பொருளான குறள் வாழ்வோர் பிறவாரம்மா. இவ்விதமே பின்தங்கிய அல்லைப்பிட்டி நகரம் வருங்காலத்தில் எழுச்சி மிக்க இளைஞர்களால் திறமானதொரு தாயகமாக உருவாக்கப்படும்.

Page 31
With the Best Compliments from
General Merchants
&
Commission Agents
V. Somasuntharam & Co.
- 234, Keyzer Street,
Colombo 11.
Phone: 26462
O O
அன்பளிப்பு
V. சோமசுந்தரம் & கோ. மொத்த வியாபாரியும் கொமிசன் ஏஜண்டும்
234, கெயிசர் வீதி, கொழும்பு 11.
தொலைபேசி: 26462

VY7
மண்டைதீவு திரு. க. கைலாசபிர்லின்வர்சன்
(சமாதான நீதிவின்)
மண்டைதீவு யாழ்ப்பாணத் தீபகற்பத்திலுள்ள சப்த தீவு கட்கும் தலையாய தீவாக அமைந்திருப்பதஞல் மண்டைதீவு என்ற காரணப் பெயர் வழங்கப்பட்டு வருகிறது.
மண்டை - தீவு: தலைத் தீவு: தலையாய தீவு
இத்தீவில் ஏறக் குறைய 3500பேர் வசிக்கிருர்கள். தற்பொழுது சிலகாலமாக இப்பகுதி மக்கள் குடியேற்றத் திட்டங்களுக்கு குடிபெயர்ந்து செல்வதன் காரணமாகச் சனத்தொகை அதிகரிப் பின்றி இருந்த அளவிலேயே சில வருடங்களாக இருக்கின்றது,
மண்டைதீவில் ஏறக்குறைய 150 வருட காலத்தின் முன் அமெரிக்க மிஷனறி பாதிரிமார் வந்து கலாசாலையொன்றை உண்டாக்க இத்தீவிற் சொற்ப காலமிருந்து ஆலோசித்தனர். அந்த நாள்களில் உள்ள சமயப் பித்தர்கள் அமெரிக்க மிஷனறி பாதிரிமாரைத் துன்புறுத்தி நிஷ்டூரம் செய்யத் தொடங்கியதஞல் அவர்கள் வட்டுக்கோட்டை சென்று ஆங்கு கலாசாலை ஸ்தா பித்து அதுவே தற்பொழுது யாழ்ப்பாணக் கல்லூரியாக விளங்குகின்றது. அவர்கள் அதனை இங்கு ஸ்தாபிதம் செய் திருந்தால் மண்டைதீவின் சரித்திரமே எப்பொழுதோ மாறி யிருக்கும். அதன்பின்னர் 100 ஆண்டுகள் வரையில் இங்கிலாந் தில் உள்ள திருச்சபை மிஷனறி பாதிரிமார் மண்ட்ைதீவு ழக்கில் ஒரு கோவிலையும், மண்டைதீவு மத்தியில் ஒரு பாட ாலையையும் அமைத்துக் கல்வி விருத்தி செய்தனர். ஆனல் வர்களுடைய சமயத்தில் மிக மிகச் சொற்பமானவர்கள் சேர்ந் ருந்தார்கள். அக்குடும்பங்கள் தற்பொழுது மண்டைதீவில் இருந்து வெளியேறிவிட்டன. கிட்டத்தட்ட 1912-ம் ஆண்டு ரையிற் செந்தமிழ்ப் பிரகாச வித்தியாசாலையென ஒரு சைவப் பாடசாலையை அந்நாளில் மண்டைதீவில் அர்ச்சகராகவிருந்த

Page 32
48 F's
பிரம்மபூரீ அகிலேஸ்வரசர்மா மூலகாரணராகவிருந்து ஸ்தா பித்தார். அவருக்குப் பெருந் துணையாயும் பொருளுதவி செய்தும் உதவியவர் மண்டைதீவு சுப்பிரமணியர் கணபதிப் பிள்ளை என்பவராகும். தற்போது இப்பாடசாலை மண்டைதீவு மகா வித்தியாலயமாக விளங்குகின்றது. இது வேலணை கல்வி வட்டாரத்துக்குள் அமைந்துள்ளது.
மண்டைதீவில் நான்கு பிரதானமான சைவ ஆலயங்கள் வழிபாட்டுக்குரிய இடங்களாக விளங்கி வருகின்றன. கத்தோ லிக்க சமயத்தவருக்கு வழிபாட்டிடமாக கத்தோலிக்க தேவா லயமொன்றும் அந்நாட்தொடக்கம் இருந்து வருகின்றது. கத்தோலிக்க பிள்ளைகள் கல்வி பயிலத்தக்கதாகத் தேவாலயத் துக்கு அணித்தாய் ஒரு பாடசாலையும் இயங்கி வருகின்றது.
மண்டைதீவில் நெல் வயல்களும் மேட்டு நிலப் பயிராய்ப் புகையிலையும் சிறு தானியங்களும் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. மண்டைதீவில் உற்பத்தியாகும் தானிய வகைகள் காய்கறி கீரை வகைகள் சுவையானவையாகவும் இருக்கின்றன.
1932-ம் ஆண்டில் மண்டைதீவு, அல்லைப்பிட்டி, மண்கும்பான் 蠶 கிராமங்களை அங்கமாகக் கொண்ட அல்லைப்பிட்டிக் ராமசபை பொது சனங்களால் தெரிவு செய்யப்பட்டு தலைமை வகித்து வந்த கிராமச் சங்கம் உள்ளூரில் பல வசதிகளைச் செய்து வந்திருக்கின்றது. 1932-ம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக 32 ஆண்டுகளாக அல்லைப்பிட்டிக் கிராம சபைக்கு அக்கிராசனராக மண்டைதீவு சுப்பிரமணியர் கணபதிப் பிள்ளையின் மகன் கைலாசபிள்ளை கடமையாற்றி வந்தார். 1969-ம் ஆண்டு அல்லைப்பிட்டிக் கிராமப் பிரதேசம் அல்லைப் பிட்டி மண்டைதீவு கிராம சபைகளாகப் பிரிக்கப்பட்ட பொழு தும் இவரே மண்டைதீவு கிராமசபைத் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுக் கடமையாற்றி வருகின்ருர்,
தேடுவாரற்று ஒரு தீவாகக் கிடந்த மண்டைதீவு 1960.ம் ஆண்டு ஐப்பசி மாதம் முதலாம் திகதி பண்ணைப் பாலம் நிறைவேற்றப்பட்டதும் போக்குவரத்து வசதிகளும் அரசாங் கத்தால் கையேற்கப்பட்ட இ. போ. சபையின் பேரூர்திகள் யாழ்ப்பாணத்தையும் தீவுப்பகுதிகளில் லைடன், புங்குடுதீவு, மண்டைதீவு ஆகியவற்றைத் தொடுத்து போக்குவரத்துச் சேவை பெருப்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திற்கு மிக அண்மையில் இருக்கும் இம்மண்டைதீவில் அரசினர் தகவல்

தீவு 49
ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஓர் அஞ்சல் உப வானெலி நிலை யத்தை மண்டைதீவின் வட கிழக்குப் பகுதியில் உருவாக்கி நல்ல சேவையாற்றுகின்றனர்.
மண்டைதீவு ஒரு பிரசித்திபெற்ற யோகியால் ஆசீர்வதிக் கப்பட்ட பூமியாகும். இற்றைக்கு ஏறக்குறைய 90 வருடமளவில் கடையிற்சுவாமி என அழைக்கப்படும் ஒரு பெரியார் மண்டை தீவிற்கு அடிக்கடி வந்து தங்கிச் சென்றுள்ளார். அவர் உப யோகித்த கட்டில், தலையணை போன்றவைகளும், அவர் வசித்த கொட்டிலும் இன்றும் காணக்கூடியதாகப் பேணப்பட்டு வரு கின்றது. வருடா வருடம் இப்பெருமகனின் தினத்தில் குரு பூசையும் நடைபெற்று வருகின்றது.
மண்டைதீவு மக்கள் கலை, கல்வி. கலாச்சாரம், சமயப்பற் றுள்ளவர்களாய்த் தேசாபிமானம் கொண்டவர்களாய் உழைப்பில் ஊக்கம் உற்சாகம் கொண்டவர்களாய் பல்லோராலும் போற் றப்பட்டு வருகின்றனர். தோட்டச்செய்கையில் திறமைமிக்கவ ராயும் அனேகமாஞேர் வர்த்தகர்களாகவும் விளங்குகின்றனர். கொழும்பு, இரத்தின்புரி, தரணியக்கலை, நீர்கொழும்பு போன்ற இடங்களிற் புகையிலை வியாபாரத்திலும் அதிகமானுேர் ஈடு பட்டுள்ளனர். கரையோர மக்கள் மீன்பிடித்தலையே பிரதான தொழிலாகக் கைக்கொண்டுள்ளனர். தபால் நிலையம், சனசமூக நிலையம் நூல்நிலையம் இவற்ருல் மக்கள் நல்ல பயனடைகின் றனர். -
தாய்நாட்டின் சுதந்திரத்தை முழுமையாகப் பெருமலே தாங்கள் சுதந்திர மக்களென்று நினைப்பவர்களை விட, அடிமை யாகக் கிடக்கும் மக்களிடம் ஆயிரம் மடங்கு வீரம் விளையும்,
米 米上 米
எவனுெருவனுடைய பேச்சும் செயலும் மக்கள் அடிமைத்
தனத்தைப் போக்குகின்றனவோ அவனே அத்தாய்த் திரு நாட்டின் தலைவன்.
8

Page 33
அன்பளிப்பு
ஆ. வே. கணபதிப்பிள்ளை
& சகோதரர்
சுருட்டு, புகையிலை வியாபாரி 111, ரு கதிரேசன் வீதி,
கொழும்பு-13.

நாம் இனிக்கும் நாடு ‘‘عqupgلق"”
வாயடங்கித் தூங்காத அலைகள் என்றும் மகிழ்ச்சியுடன் தாலாட்டும் வண்ணத்தீவு நோயடங்கும் தீங்காற்றில் வாழ்ந்தமக்கள் நூருண்டு வரலாற்றைக் கண்டதீவு தீயடங்குஞ் செந்தமிழில் தொட்டிலாட்டும் சேயிழையார் தாயினமாய் வாழுந்தீவு நேயமுடன் ஈழத்தாய் கழுத்திற்ருலி நித்திலமாய் விளங்குநெடுந் தீவு நாடே.
பொற்சீந்திற் கொடிபடரும் புதுமைநாடு புகழேந்தி கூத்தரெனும் புலவர் நானச் சொற்சேர்க்கும் பாவலர்கள் வாழும் நாடு தொல்புகழின் சரித்திரங்கள் சுமக்கும் நாடு நற்பசுக்கள் பால்கொடுக்க மனைகளெல்லாம் நறுநெய்யில் நீந்திவரும் நல்லநாடு அற்புதமாய் வெடியரசன் கோட்டைகட்டி அந்நாளில் ஆட்சிசெய்த அமுதுநாடே.
நீண்டபெரும் பசும்போர்வை நிலத்தை மூட நிமிர்ந்தபரிக் குலம் நடத்தும் ஒட்டப்போட்டி மூண்டபெரும் அன்பாலே பார்த்துப்பார்த்து முயலோடு ஆனிரைகள் பாயும் நாடு வேண்டுகின்ற மூலிகைகள் வளருநாடு விருந்தினரை வருந்தியழைக் கின்றநாடு அாண்டாத மணிவிளக்காய்க் கலைப்பீடங்கள் சுடர்விட்டே ஒளிசெய்யும் தொன்மைநாடே.
ஊணுறக்க மில்லாமல் மகவைப்பேணி உடல் தளர்ந்தும் மக்களையே உயிராய்க்காத்துப் பேணுகின்ற தாய்மார்கள் பிறந்தநாடு பரிவிரக்கம் மிகஉருகிப் பெருகும்நாடு மாணிக்கத் தீவாளாம் ஈழமாதா மணிக்கரத்தில் முத்தேந்திப் பரதநாட்டின் காணிக்கைப் பொருளாகக் கொடுத்தவேளை கைதவறிக் கடல் வீழ்ந்த கதையின் நாடே (நெடுந்தீவு ருேமான் கத்தோலிக்க பாடசாலையின் தொண்ணுா ருவது ஆண்டுவிழா மலரிலிருந்து பெறப்பட்டது) -நன்றி

Page 34
52 சப்த
Ο M. K. Kod
*****ふふふるぐ*々る・る・る・く・ふる・る・ふふふふふるるふふぐふふふふふるふふ&
***
O o eX (X- «Х• (x-
Х• O OKO 4 sa-aa9a9a9a9 0 0 0 0. ALS LS LLS SLLS SLLS S LLLeLSS SLLLSSSLLLSLLLLLSLLLLS LSLS LSSLLS 惠_曼 O
****************●*** &ふ**************
தீவகன்
என்னருமைத் தாயகமே! தாயகத்தின் வருங்காலச் செல்வச் சிருர்களே! உங்களின் அரிய சிந்தனைக்கும் தீர்க்கமான முடி வுக்கும் என் அன்பான பணிவான வேண்டுகோள். அநேக வருடங்களாக என் நெஞ்சிலே மண்டிக்கிடந்து மனதை உறுத்
திய ஒருசில வேதனைகளை உங்களுக்கு வெளிக்காட்டி நமக்கும்
நம் தாயகத்திற்கும் அதன் மூலமாய் நம் தமிழர் சமுதாயத் திற்கும், ஏன்? சைவசமயத்திற்குமே ஓரளவு விடுதலையை விமோ சனத்தைத் தேடமுடியும் என்ற திடநம்பிக்கையும், விசுவாசமும் கொண்டு வெளிக்காட்ட முன்வந்தேன். முறையாளுல், அது சரியானுற் கைக்கொண்டு நம் தாயகமானது தலைநிமிர்ந்த தாயூதமாக ஒளிர உழையுங்கள், தவருனல் மன்னித்து என்னை மறநீதுவிடுங்கள்.
புங்குடுதீவு மக்களாகிய நாம் எல்லோரும் ஒன்றுபட்ட ஒரு தாயின் ஒரே இன மக்கள். இம்முடிவுடன் நான் இவ்வேண்டு கோளை விடுக்கின்றேன். எம் தாய் ஒரு சின்னஞ்சிறு தீவாள். சிறப்பான தீவாள். இவளுடைய அருமைக் குழந்தைகளாகிய 22,000 மக்களாகிய நாம் இவளைத் தலைசிறந்த சீர்பூத்த சிங்காரியாய், செல்வச்சிறுமியாய், புன்னகை பொங்கும் பொலி வினளாய் ஆக்க முடியும், ஆக்குவோம் என்ற திடமான முடிவும் எனக்குண்டு. ஏதோ என்னையே அறியாமல் என் இளமை முதல் என் நெஞ்சிற் குடிகொண்ட தாயக தாகம் இன்று உங்கள் எல்லோரையும் பகிரங்கமாகவே கேட்கத் தூண்டியது. எனவே தான் கேட்கின்றேன்.
நம்மைவிட நமது மூதாதையர் அறிவு, ஆற்றல், அனுபவம் வலிமை முதலியவற்ருல் பன்மடங்கு சிறந்தவர்களாய் இருந்த போதிலும் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் நாம் வாழும் காலத்திற்கும் எவ்வளவோ வித்தியாசங்களுண்டு. அவர்கள் வாழ்ந்த காலம் நாகரிகத்தால், கல்வியால், ஆராய்ச்சியால் நவீன சாதனங்களாற் பின் தங்கிய நிலையில் இருந்தார்கள்

தீவு 53
நமது காலத்தில் உள்ள கல்வி வசதி ஆராய்ச்சித் திறமை நவீன சாதனம் இதுபோன்ற பல்வேறு வசதிகள் அவர்களுக்கு இருந்ததில்லை. எனவே அக்கால நிலைமைக்குத் தக்கதாகச் சிறந்த தாக வாழ்க்கைக்கென வகுத்துக் கொண்ட ஒரு சில தேசீய, சமூக, சமய, கலாச்சார கொள்கைகளை இன்றைய நமது சமு தாயத்தாலும் இனிவரும் சமுதாயத்தாலும் கைக்கொண்டு வழி நடத்த முடியாமற் சொல்லொணுத்துயர் அடைய நேரிடும். இதை நாமே கண்ணெதிரே காண முடிகின்றது. கண்டு கொண்டே வருகின்ருேம். இருந்தும் அநேகமானேர் இவற்றை வெளிக்காட்டி விடுதலையை, விமோசனத்தை அடைய விரும்பியும் வழிவகை தேட முடியாமலும் ஒரு வித அச்சம் பயம் வெட்கம் அவநம்பிக்கை, நமக்கேன் என்ற ஒருவித அலட்சியமனப்பான் மையினுல் பாதிக்கப்பட்டும் மேலும் கஷ்டத்தையடைகின்றர்கள். வெளிக்காட்டிஞல் சமூகம் நம்மைக் கேவலமாய் ஏளனமாய் எடைபோடுமே என்ற எண்ணமும் வெளிக்காட்ட முடியாமல் தடையாய் உள்ளது. இவ்வெண்ணங்கள் எனக்கும் இல்லாம லில்லை. இருந்தாலும் நான் வாழப்போகும் காலம் இன்றே இன்னுஞ் சொற்பநாளோ. ஆணுல் வாழவேண்டிய சமுதாயம் சந்ததிசந்ததியாக இன்னும் ஆயிரம் பதினுயிரம் ஆண்டுகள் வாழவேண்டியுள்ளது. எனவேதான் வெளிக்காட்ட எண்ணி வெளிவிடுகின்றேன். துணிவே துணை என்ற முடிவினில் அதுவே நம் துயர்துடைக்கும் கருவி என்ற நம்பிக்கையில் வெளிவிடு கின்றேன். நம் மூதாதையர் நமக்காக நிலைநாட்டித் தந்த நல்லவைகளும் இல்லாமலில்லை. அவற்றையெல்லாம் சிரமேற் கொண்டு நாம் பின்பற்ற வேண்டும். செயற்படுத்தவேண்டும். சிந்தையிற் கொண்டு போற்றிப் பாதுகாக்கவேண்டும். அதே வேளை அவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் அன்றைய வசதிகளுக் கும் தகுந்த முறையில் வகுத்துச் சென்றவை நல்லவையானல் இன்றைய உலகிலே உலகின் தீடீர்மாற்றத்திலே, சமுதாயங்களின் மறுமலர்ச்சியிலே, சமயங்களின் வளர்ச்சியிலே, அறிவு ஆராய்ச் சித் திறனிலே நம் சமுதாயம் நம் மூதாதையர் விட்டுச் சென்ற நல்ல கொள்கைகளைத்தானும் கைக்கொண்டு வாழ முடியுமா? வாழலாமா? வாழத்தான் வேண்டுமா ? என்பதை உன்னிப்பாக உற்றுணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளோம்.
உலகிலே தோன்றிய முதற்குடி மூத்தகுடி என்றெல்லாம் பெருமை பாராட்டுகின்ருேம். இருக்கலாம், அப்படியானல் டெலிவிஷன், ருெக்கெட் சந்திர மண்டல ஆராய்ச்சிகளையும், டியூப் குழந்தைகளையும் கண்டுபிடித்த கண்டுபிடிக்கத் துடியாய்தி

Page 35
54 சப்த
துடிக்கின்ற அறிவு, ஆற்றல், அனுபவம், ஆராய்ச்சித்திறமை, பொருளாதார வலிமை இவற்றல் முன்னிடம் வகிக்கும், வகிக்க வழிவகை காணத்துடிக்கும் அயல்நாடுகளுடன், மற்றைய சமு தாயங்களுடன் மறுசமயங்களுடன் நம் தாயகத்தை, நம் சமு தாயத்தை நம் இந்து சமயத்தைச் சீர்தூக்கிப் பாருங்கள் உண்மை புலப்படும். உலகநிலைமை நன்ருகப் புரியும். அவர் களுக்கும் நமக்கும் வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி வித்தியாசமுண்டு, என்பதே என் முடிவு. அப்படியானுல் வரப் போகும் எம் சமுதாயம் இந்த உலகுக்கு எப்படி ஈடுடுகொக்க முடியும்? கொடுப்பார்களா? என்பதைக் கருணையுள்ளத்தோடு சிந்தியுங்கள்.
கோயில்களும் திருவிழாக்களும் தாயக ம்ே புங்குடுதீவைப் பொறுத்தவரை நித்தியபூசை நடைபெற்றுவரும் 15 கோயில்களும் பல சிறு வைரவர் கோயில் களும் ஐயனுர் கோயில்களும், கன்னிமார் கோயில்களும் உண்டு. எம் மூதாதையர் எமக்கெனத் தே டி வைத் த செல்வங்கள் கோ யி ல் களும் பாடசாலைகளும் தாம். பெருமைக்குரியதே. கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம். ஆலயந் தொழு வது சாலவும் நன்று. என்றபடி எம் மூதாதையர் அக்காலத்தி லேயே இறைவணக்கத்திலும் கல்வியிலும் எவ்வளவு திடவைராக் கிய நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள் என்பதற்கு இவையெல் லாம் நமக்கு எடுத்துக் காட்டாக உள்ளன. ஆனல் அக்காலத் தில் அவர்கள் கோயில்களில் தினமும் பூசை பிரார்த்தனையை நியமம் தவறது ஒழுங்குமுறையாகச் செய்தார்கள், வணங்கினர் கள். வருடத்தில் வரும் திருநாள்களை, திருவிழாக்களை சீராய்ச் சிறப்பாய்ப் பயபக்தியாய்ச் செய்தார்கள். செய்வித்தார்கள் வீண் ஆடம்பரங்களையும் வேடிக்கைகளையும் செய்யாமல் செய்ய முடியாமலும் இருந்தார்கள். அதிலும் அக்காலம் காட்சிகள் குறைவான காலம். ஆனல் கோயில்களில் பாரதமும் பண்ணும் கேட் கும். கம்பராமாயணமும் கருத்துரைகளும் கேட்கும். பொங்கலும் பிரார்த்தனையும் எங்கும் நிறைந்திருக்கும். இன்று ஆண்டவன் சந்நிதி என்ற முறையில் அக்கம்பக்கத்தைச் சுற்றிப் பாருங்கள். தூர்ந்து கிடக்கும் குளமும், சுற்றுமதிலும் சுவர்க ளும், தூண்களும் நீர் அள்ளி 'அபிஷேகம் செய்யும் கிணறும் மனதை வருத்தாமல் இருக்கா, கோயிற் கூ  ைர யையும் உடைந்த தீராந்திகளையும், கோயில் வீதிகளையும் அவைகள் இருக்கும் அலங்கோலக் காட்சிகளையும் சிறிதே சிந்தியுங்கள். ஒருசில கோயில்கள் 50 வருடங்களுக்கும் மேலாகச் சீர்திருத்த

தீவு 55 மில்லாமல் இருப்பதைக் காண்பீர்கள். கோயில் அர்ச்சகரை அவரின் குடிமனையை அவர் குடும்பம் படும் துயர் துன்பத் தைப் பாருங்கள். தூய்மையாய் இருக்கவேண்டிய அவர்களின் உடையைப் பாருங்கள். வருங்கால அர்ச்சகர்களாக வரவேண் டிய அவர்களின் குழந்தைகளைப் பாருங்கள். அவர்களுக்குப் போதிய வருவாய் இல்லாமையால் இந்நிலைக்கு ஆளாகி இருக் கின்றர்கள். இவற்றையெல்லாம் சிறிதேனும் சிந்திக்காமல் நாம் வருடத்தில் வரும் திருவிழாவை எவ்வளவு ஆடம்பரமாய், ஏட் டிக்குப் போட்டியாய், இடாம்பீகமாகக் செலவு செய்து விடிய விடியத் திருவிழா செய்கின்ருேம். நாம் கண்ட பலன்தான் என்ன? கோயில்கள் பலனடைந்தனவா? குருக்கள்மார், அவர் களின் குடும்பத்தார் பலனடைந்தனரா? இல்லை நம் தாயகமா வது ஏதும்பலன் கண்டதா? எனவே தான் கேட்கின்றேன்.
தாயகமே! ஒரு கோயிலிற் பத்து நாள் திருவிழா வீதம் 15 கோயில்களில் 150 நாட் திருவிழாவுக்கும் ஒரு திருவிழா வுக்கு ஆகக்குறைந்தது 1000 ரூபா ஆடம்பரமான அநாவசிய மான தேவையற்ற வீணுன செலவானுல் 150 திருவிழாவுக்கும் எத்தனை இலட்ச ரூபாய் நம் சமுதாயத்தை விட்டு நம் தாயகத்தை விட்டு நம் வீட்டை விட்டு வீணே வெளியேறுகிறது. இந்த ரூபாய் நம்நாட்டுக்கு எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? எவ்வளவு எல்லாம் கஷ்டமான, கவலையான, கடூரமான பிரயாசை களால் நம்மவர் இவற்றைச் சம்பாதித்துக் கொண்டுவந்தன ரோ? சிறிதே சிந்தியுங்கள் அன்பர்களே! ஒரு வருடத் திருவிழா விற்கு ஒன்றரை இலட்ச ரூபாய் வீதம் 50 வருடங்களின் திருவிழாவுக்கு நம்நாட்டை விட்டுப் போகும் ரூபாயைக் கணக் குப் பாருங்கள். இவை ஆடம்பரமான வீண் செலவில்லையா? இதைவிட அணுவசியமாகக் கூடச்செலவாகும் இலட்சோபலட் ஷ ரூபாவையும் எண்ணிப்பாருங்கள்.
இன்று நம் தாயகத்திற்கு அவசிய தேவைகள் குடிநீர், முதல்தரமான வைத்தியசாலை, உள்ள வைத்தியசாலைக்கு வேலிகள் சுற்றுமதில்கள் நோயாளர் படுக்கக் கட்டில்கள், படுக் *கைகள், முதல்தரமான பாடசாலை, வேண்டிய உபகரணங்கள் ளபாடங்கள், பாலகர்கள் விளையாட நல்ல விளையாட்டு மைதா னம், அறிவூட்டும் நூல் நிலையம், வரவேற்பு மண்டபம், கைத் தொழில் பாடசாலை, தொழிற்சாலைகள் இவற்றிற்கு செலவு செய்யலாமல்லவா, கேவலம். தாயகம் தேய்ந்து வறண்டு பரலை னத்துக்கு ஒப்பாக இருக்கின்றது. இதனுல்தான் தாய் கிண்

Page 36
56 Fis
ணிப் பிச்சை எடுக்கின்ருள். மகன் கும்பகோணத்திலே கோதானம் செய்கிருன். என்ற பழமொழியை நமக்காக நம் மூதாதையர் அன்றே சொல்லிச் சென்ருர்கள். இக்குறைகளை யெல்லாம் நாம் செலவழிக்கும் திருவிழாப் பணங்களைக் கொண்டு எம் தாயகத்தைச் சிறப்பிக்க முடியாதா? தாயை அலங்கரிக்க முடியாதா? என்னருமைத் தாயகமே! சகோதரர்களே ஒரு கோடி ரூபாய் நம் உள்ளூரிலேயே பணமாகப் புழங்குமாயின் குடிசையெல்லாம் பெரும் கோபுரமாகும். மச்சுவீடெல்லாம் மாளி கையாகும், கல்விச் சாலைகளெல்லாம் கலைப்புதையல்களாகும். ஊர் செழித்து மாபெரும் நந்தவனமாகும். உல்லாசபுரியாகும். எனவேதான் என் தாயகத்தைக் கேட்கின்றேன். என் தாய்க் குலத்தைக் கேட்கின்றேன். என் அன்பான வருங்கால செல் வச் சிறர்களைக் கேட்கின்றேன். சிந்தியுங்கள்! ஆடம்பரத் திருவிழா நமக்கு அவசியந்தான ?
காலமாற்றத்தையும், கஷ்டமான காலத்தையும், ஏற்படும் லாபநட்டத்தையும், நம் வருங்கால மக்கள் அனுபவிக்கப்போகும் கஷ்டங்களையும், மறுசமய சமூகங்களின் வளர்ச்சியையும், நம் சமய சமுதாய வீழ்ச்சியையும், மனதிற்கொண்டு கேட்கின்றேன். ஒவ்வொரு கோயிலிலும் வருடத்தின் ஒருநாளான அத்தெய்வத் திற்கு உகந்த நாளான திருநாளில் திறமான பெருவிழாவாகக் கொண்டாடி எல்லோரும் பங்குபற்றிப் பெருமையுறச் செய்தால் என்ன? 15 கோயில்களிலும் 15 நாள் கொண்டாடமுடியும். இதைவிட 150 திருவிழாவுக்கும் நாம் செலவழித்த இலட்ச ரூபாவை வங்கியிற் போட்டு வருவோமானுல் நாளடைவில் அவ் வங்கியாற் கிடைக்கும் வட்டிவருமானத்தைக் கொண்டே கோயில் களையும் குருக்கள் மார் குடும்பங்களையும் மட்டுமல்ல, ஊரின் தேவைகளையுமே பூர்த்தி பண்ணிச் சிறப்பாக்க முடியும். எனவே சிறிதே சிந்தியுங்கள். ஆடம்பரத் திருவிழா அவசியமா? அன்னை யின் சிறப்பு அவசியமா? தாயகம் சிறந்தால் சகலமுமே சிறக் கும். | --ܓܝ -ع
கல்தோன்றி மண்தோன்ருக் காலத்திலே முன்தோன்றி மூத்தகுடி' என்றும் ‘தென்னுடுடைய சிவனே போற்றி எந்நாட் டவர்க்கும் இறைவா போற்றி” என்றும் "முப்பத்து முக்கோடி தேவர் எத்தனையோ ஆயிரம் முனிவர்கள், ரிஷிகள்’ என்றும் வருணிக்கக் கற்றுக்கொண்ட நாம் ஆறு கோடி தமிழராய் அங்கலாய்க்கின்ருேம். ஏன் ? ஏன்? நடைமுறைக்கு ஒவ்வாத நாகரிகத்திற்கேற்காத மற்றவர் மதிக்காத, கணிக்காத,வேண்டா வெறுப்பான அருவருப்பான நடைமுறைகளையும், கிரியைகளை

தீவு 57
யும் கைக்கொள்வதாலும், பின்பற்றுவதாலும் சீரழிந்தோம். சின்னுபின்னப்பட்டோம். பின்தங்கினுேம், பேடிகளாகிளுேம் எனவேதான் கேட்கிறேன். தாயகமே சிந்தனைசெய். முன் தோன்றிய புதிய சமயங்களையெல்லாம் தோற்றுவித்த சமயம் சைவசமயந்தானே இன்று ஏன் இந்நிலைக்கு ஆளானது? யாராலும் வளர்க்கப்படாத பணம்கொடுத்து வாங்காத சமய மாய் இருந்தும் அரசு போல் அறுகுபோல் தழைத்து வளர வேண்டிய சமயம், நம்மவர் நடைமுறையால் காலத்திற் கேற் காத கிரியைகளாற் பின்தங்கியுள்ளது. நிற்க, நாம் தினமும் இறைவனுக்குப் பூசை பிரார்த்தனை செய்கின்ருேம். இதை நாம் ஒழுங்காகவும் முறையாகவும் நியமம் தவருமல் நேரப்படியும் செய்யவேண்டும். நாமும் முடிந்த வரை அவற்றிற் கலந்து கொள்ளவேண்டும். நமக்கு யாரும் கட்டுப்பாடு வைக்கவில்லை. ஆண்டவன் அன்பையும் அருளையும் பெற்று அவன் திருப் பாதத்தைப்பற்றி நமக்குள்ள பிறவிப் பெருங்கடலை நீந்தி அவன் பாதாரவிந்தத்தைப் பற்றிப் பிடிக்கவேண்டும் என்றே பிரார்த் திக்கிருேம். இறைவனை எண்ணி அவளுக வடித்த விக்கிரகத்தை பன்னிராலும்,தண்ணிராலும், இளநீராலும், பாலாலும் தயிராலும் மோராலும், பழச்சாறுகளாலும், தேனுலும் நெய்யாலும் புஷ்பங் களாலும் அபிஷேகம் செய்கின்ருேம். சந்தனத்தாலும் விபூதி யாலும் இன்னும் பலப்பல. சொல்லொணு மருந்து நீராலும் வாசனைத் திரவியங்களாலும் அபிஷேகம் செய்கின்ருேம். ஏன்? இறைவனுற் படைக்கப்பட்ட யாவுமே மக்களாகிய நாங்கள் அணு பவிக்க எங்களுக்காக அவனுல் ஆக்கப்பட்டவையே. ஆனல் அவற்றினையெல்லாம் எனக்குப் படையுங்கள் என்று என்ருவஅ "எங்காவது எவரிடத்திலாவது இறைவன் கேட்டதுண்டா? கிடை யவே கிடையாது. பின் நாம் ஏன் இதைச் செய்யவேண்டும்? இறைவனுக்கு நாம் செய்யக்கூடிய பிரதியுபகாரமாகவும் மேற் கொண்டும் இவற்றையெல்லாம் எமக்கு குறைவறத் தந்து எம்மை யெல்லாம் இரட்சித்து ஆட்கொள்ளவேண்டும் என்பதற்காகவுமே செய்கின்ருேம், பரவாயில்லை. உள்ளவர்கள் திறமாகவும் இல்லா தவர்கள் உள்ளதைக் கொண்டு தம் உள்ளம் திருப்திப்படக் கூடிய முறையிலும் திறமாகவே செய்கின்றனர். இறைவனுக்கு இவ்விரண்டும் சமமே. இருந்தும், இதற்காகவே சிவன் தனக் கென மகிழ்ச்சியான இடமாய் மயானத்தையும், மா லை யாய் எரிந்த மண்டையோட்டையும், ஆபரணங்களாய் அரவங்களையும் உடம்பிலே பூச எரிந்த சாம்பலையும், பூவாக எருக்கலம்பூவை யும் விரும்பியேற்று திரு நட னம் செய்கின்றன்: எமக்காக மேலானவற்றையெல்லாம் படைத்துத் தனக்காக ஏன் இவற்றை யெல்லாம் தெரிந்துகொண்டான். மகனே! பக்தா! நீ என்னை
9

Page 37
58 er 5
வணங்க எதுவித சிரமமோ, செலவோ உனக்கு வேண்டாம். என்னை நினைத்து நீ ஓர் அடி வருவாயானல் உன்னை நோக்கி நான் பத்தடி வருவேன். இதுவே அவன் அருளிய தத்துவம் சிந்தியுங்கள். செயலாற்றுங்கள்.
விவாகத்தால் முடங்கும் விண் திரவியம்
சகோதரர்களே! நமது ஊரில் விவாகப்பேச்சுத் தொடங்கி ஞல் எத்தனையோ சம்பிரதாயங்களைக் கைக்கொண்டு நடப்பார் கள் நடக்கவும் வேண்டும். நடந்தேயாகவேண்டும். பல தடவை நடந்துகொண்டே இருக்கும். ஆனல், உபசாரங்கள் விருந் தோம்பல்கள் இவை எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களி ஆலும் எல்லோரிடத்திலும் நடப்பதுதான் நடக்கட்டும். பரவா யில்லை. ஆனல், நம்மவருடைய மரபிலே சமுதாயத்திலே சமயத் திலே நடைபெறுவதை மட்டும் சிந்தையிற் கொள்ளுங்கள். வெறுப்பு, வேதனை அருவருப்பு, எல்லாமே உண்டாகும். ஆயி ரம் குறைகுற்றங்கள் பிழைகள் எல்லாம் கண்டு கடந்த பின் ஒருவாறு முற்றகும். ஆகினுல், சாதாரணமாக மாதமொன்று ஐந்நூறு ரூபாய் வருமானமுள்ள மணமகன் குறைந்தது 10 பவுண் எடையுள்ள (இன்றைய மதிப்பு கூலியுடன் பத்தாயிரம்) தாலிக்கொடியுடனும் இரண்டாயிரம் ரூபா வரை பெறுமதியான கூறையுடனும் பெண்வீட்டுக்குப்போய் ஒப்படைத்துப் பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொள்ளுகின் ருர். அதே சமயம் பெண்ணும் காணி, வீடு, பொருள் இவற்றைவிட ஏறக்குறைய பத்தாயிரம் ரூபா மதிப்புள்ள நகையுடனேயே சரணடைகின்ருர். (சாதா ரணமான குடும்பங்களில்) இதே சமயம் பெண்ணுடைய உடம் பிலே ஏறக்குறைய ரூபாய் 22,000 உடைமையாயும் உடையாயும் உள்ளதைச் சபையோர் காணமுடியும். கண்டு களிப்பும் அடை வர். இதைவிட, அன்றைய பொழுது இருவீட்டிலும் இருந்த அநாவசிய மாலைகளும் தோரணங்களும் மணவறைகளும் சிக ரங்களும் மேளதாளங்களும் வாணவேடிக்கைகளும் மற்றுஞ் சில அநாவசியக் காட்சிகளும் எத்தனை ஆயிரம் இரு வீட்டாராலும் வீண்செலவு செய்யப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள். இது அவரவர் விருப்பமாய் இருக்கலாம். இருந்தாலும் கூறை இரண்டொரு கிழமையாற் பெட்டியிற் கண்ணுறங்கப் போய் விடும், திரும்ப அயலில் தொலையில் அல்லது காசி வீட்டில் விநாசி வீட்டில் கல்யாண வீடென்ருற் கண்சிமிட்டும். காட்சி காட்டும். மறுபடி உறங்கிப் போகும். 20,000 ரூபாய் நகை உடம்பிலும் பெட்டியிலும் வசதிக் குறைவானவராணுல் வட்டிக் கடையிலும் மாறிமாறி ஏறி இறங்கும்.

தீவு w 59
அன்பர்களே! என்னருமைச் சகோதரர்களே! தாய்க்குலமே! சிறிதே சிந்தியுங்கள். கணவனுக்கு வரும்படி குறைவு. மனை விக்கு அடிக்கடி பிரசவம். குழந்தைகள், அவர்களின் நோய் துன்பம். போசாக்கின்மை, உடுப்பு, படிப்பு, உறவினர். நன்மை தீமை இவற்றிற்கெல்லாம் கனவனின் உழைப்பால் வரும் வருமானமும், ஏதோ வளவில் உள்ள தென்னை, பனை வரும்படியும், ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடையால் வரும் அற்ப சொற்ப வருமானமுமே ஈடு கொடுக்கவேண்டும். பிற வரும்படி எதுவும் இல்லாமற் கணவனின் வரும்படியிஞலேயே கஷ்டப்பட்டு வாழ்க்கை நடத்தும் குடும்பங்களும் உண்டு. இல் லாமலில்லை. இதே நேரம் 20,000 ரூபாய் நகையில் அரைவாசியை ரூபாயாக வைத்துப் பாருங்கள். அது சாதாரணமாக உழைப் பவன் கையிலிருந்தால் தினம் எவ்வளவு சம்பாதிக்க முடியும். ாதம் எவ்வளவாகும்? அது வருடம் எவ்வளவாகும்? ஏறக் றைய 50 வருடங்களுக்கு அரசாங்க வட்டிப்படி எத்தனை இலட்ச ரூபாய் நமக்குள்ள நிகர வருமானத்தை இழக்கின்ருேம், என்பதைச் சிறிதே சிந்தியுங்கள். தம் பிள்ளைகளின் பிள்ளைகளுக் ம் தேடி வைக்கக்கூடிய அருந்திரவியத்தைத் தேடாது விணே அழித்த பாவத்திற்கு, இன்றைய நாமே பாத்திரவாளியாகின் ரும். நம் மூதாதையர் செய்த பாவச் செயலால் நாம் இந் லைக்கு ஆளானுேம். ஆனல் அறிவு, ஆராய்ச்சி முதிர்ந்த ாலத்திலுள்ள நாம், ஏன் இப்படியான பாவநிலைக்கு நம் சமு ாயத்தை ஆளாக்கவேண்டும்? அது மட்டுமன்று, வருங்காலம் ம் சமுதாயத்தால் எப்படித் தலை நிமிர்ந்து வாழ முடியுமென் தை எண்ணிப்பாருங்கள். கேவலம்! இதனுலேயே உலகில் தமி ர் சமுதாயம் தாழ்வடைந்தது. சீரழிந்தது. சக்கிலியர் என்ற ழிவான பெயருக்கும் ஆளானது. அன்பர்களே! வீணே உறங் கிய கொடியும் கூறையும் 50 வருடத்தில் ஒருபிடி அரிசியைத் நானும் அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்திருக்குமா? இனி மேற்ருனும் கொடுக்குமா? உலகிலுள்ள சமுதாயத்திலே முதல் நரமான சமுதாயமாய் பொருளாதாரமிக்க சமுதாயமாய் ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டிய சமுதாயம், இவ்விழி நிலைக்கு ஆளானது இவ்வறியாமையாலும் ஆடம்பர அணிகல மோகத் தினுலுமே. உலகிலுள்ள 6 கோடி தமிழர்களில் 1 கோடி தமிழ ரிடம் 10,000 ரூபாய் நகையாகவும் கூறையாகவும் தூங்கினுல் எத்தனை கோடானுகோடி ரூபாய் வருமானம் இழந்துபோகின் றது நம் தமிழர் சமுதாயம் என்பதை எண்ணிப்பாருங்கள். எமது தாயகத்திலே மட்டும் எண்ணிப்பாருங்கள். மனைவிய ரிடத்திலே நகைகளும் கூறையும் வரிசைக் கிரமமாக இருக்கும். வடக்கயிறு போன்ற கொடியும் இருக்கும். ஆனல், அதே வீட்

Page 38
60 -75
டுக் கணவன் கல்லுடைப்பான்; காடுவெட்டுவான்; மரந்தறிப் பான்; கஷ்டப்படுவான்; நெற்றியில் வியர்வை நிலத்திலே சிந்த உச்சிவெயில் உள்ளங்கால் சுடப் பசியுடனும் பட்டினியுடனும் வாடி வதங்கி வதைபடுவான். இவை மட்டுமா? அவன் தூராகி துரும்பாகி தோலும் வற்றித் துவண்டு, ஆடும் எலும்புக் கூடு மாவான். அறிவான குழந்தைகள், கல்வி கற்கக் கூடிய குழந் தைகள், தந்தையின் வருவாய்க் குறைவால் போசாக்கின்றியும் படிப்பைத் தொடர முடியாமலும் பட்டம் பதவி பெறமுடியாம லும் பரிதவிக்கிருர்கள். சந்திகளிலும் சத்திரங்களிலும் வீண் பொழுதே போக்குகின்றர்கள். எனவேதான் கேட்கின்றேன். தாயகமே! அநாவசிய ஆடம்பரச் செலவு அவசியமா? நம் சமு தாய மறுமலர்ச்சி அவசியமா? முடங்கிக் கிடக்கும் மூலதனம் பணமாக உலாவத் தொடங்கிளுல் உருளத் தொடங்கினுல் நம் மவர் நிலை என்ன? நம் சமுதாய உயர்வென்ன? தாயக ஒளி என்ன? மதிப்பிடலாமா? வருணிக்கலாமா? பணமாக உலாவி னுல் அதுவும் பலனேடு உலாவினுல் அதிலும் பாதுகாப்பாக வங்கிகளிலே இருந்தால் கஷ்டமா? கவலையா? நட்டமா? இல்லவே யில்லை. அதால் வரும் வட்டி வரும்படி நம்மைச் சீராக்கி வைக் கும். கணவன் திடசரீர சுகசீவியாய் உல்லாசமாகவே உழைப் பான். தனயன் கவலையே இல்லாமற் கல்வியைக் கற்பான். வீடு சிறக்கும். நாடு சிறக்கும். சமுதாயம் விடுதலை பெற்றுச் சிறப்பாய் அமையும் ஊற்றுள்ள நன்னீர்க் கிணறுபோல் நம் முதல், நாளும் பொழுதும் வளர்ந்துகொண்டே வரும். இவற் றிற்காகவே மேல்நாடுகளில் வழிவகை காட்டவேண்டி வங்கிகள் தோன்றின. தோன்றிக்கொண்டே இருக்கின்றன. நம் தாய கத்திலும் தோன்றும் நாள் வெகுதூரத்தில் இல்லை. தோன்றி யும் விட்டது. உலகின் மறு சமுதாயரெல்லாம் இவ்வித சேமிப் பாலேயே பலனடைந்தனர். கோடீஸ்வரராகினர். குபேர நாடா கினர். பலம்பெற்ருேராய்ப் பலனடைந்தனர். பாராளும் வல்லுந ராயினர். நம் சமுதாய்ம் இவற்றை இழந்து என்றும் ஏழை யாய், கோழையாய், எடுப்பார் கைப் பிள்ளையாய் இரந்துண்ண வழிகோலினுேம். வளம் குன்றிய நாடென்றும் வறிய நாடென் றும் அடிமைப்பட்டோம். பொருளாதாரமே ஒரு நாட்டின் பிர தான முதுகெலும்பு, எனவேதான் கேட்கின்றேன். தாயகத் திற்குச் சேமிப்பு அவசியமா? இடாம்பீகச் செலவும் அநாவசி யச் செலவும் அவசியமா? சேமிப்பு அவசியமானல் சேமியுங்கள் வங்கியிலே, சிங்காரத் தோப்பாகச் சீர்பெற்றுவளரும் தீவகங்கள்.
சீதனம்
உல்லாச நடையும், ஒய்யார வாழ்வும் ஓங்காரத்தொனியும்
கொண்ட காளையாய்ப் பட்டம்பெற்றுப்பதவிகள் பெற்றபின் கட்

தீவு A. 61 டுக்கடங்காத காசாசை கொண்டு சீதனம் கேட்டுத் தேசாந்திரம் போய் இறக்கும்வரையிலும் தீவானென்றும் தீவாள்கள் வீடென் றும் நாமம் கேட்டு, நாணித்தலை குனிந்து வாழும் என் அருமைச் சகோதரனே சீதனம் பெரிதா? உன் தாயகம் சமுதாயம் பெரிதா? எண்ணிஞயா? இதுவரை யாருக்கும் எடுத்தியம்பி ஞயா? ஒட்டை உடைசற் பாத்திரங்களைத் தேய்த்து மினுக்கி ஈயம் பூசிச் செப்படி வித்தை காட்டும் சீதனம் பெரிதா? கந் தையாஞலும் கசக்கிக் கட்டிக் கூழானுலும் குளித்துக் குடித்து ஏழையாளுறும் கோழையாகாமல், கல்லாஞலும் கணவன் புல் லாஞலும் புருஷன் என்று போற்றி, கணவனே என்து கண் கண்ட தெய்வம் என்று நாளும் பொழுதும் நா னித் தலை குனிந்து பேணிக் காத்துப் பணிவிடைசெய்யும் உன் தாயகச் சமுதாயம் பெரிதா? நீ தேடிய சீதனம் பெரிதா? தேணுேடு தினையும், தெவிட்டாத தெள்ளமுதும், தீஞ்சுவைத் தீந்தமிழும் தீவிலே இருக்க, பாணும், பணிசும் பலகாரக் கடையும் பட்டன வாழ்க்கையும் பெரிதென எண்ணிச் சீதனமே பெரிதென மதித்து தேசாந்திரம் சென்ருயே? சிந்தித்தாயா? பட்ட துயரனைத்தும் பெட்டிப்பாம்பாய், பேசாமடந்தையாய், கட்டிக்காத்து, கால மெல்லாம் கண்ணிர் விட்டு வாழ்க்கை நடத்தும் தேசிய சகோத ரமே! சிந்தித்தாயா? சீதனம் பெரிதா? இல்லை உன் தாயக சமுதாயம் பெரிதா? ஏழையாய்ப் பிறந்த நீ எல்லாம் பெற்ற பின் ஏழையை வாழ்விக்க இயல்பில்லை. துணிவில்லை. இரக் கம் சிறிதும் இல்லை. தாயக அன்பில்லை. அபிமானம் இல்லை. தன்னினம் என்ற தனிப்பெருமை இல்லை. தாயை மறந்தாய், தாயகத்தை மறந்தாய். சீதனமே பெரிதென தே சா ந் திர ம் சென் (mய். சுட்ட காளையாய் அ lub մն. ல் 蠶 శో. ஆதனமும் ஆபூஜ்கு சேர் கையே சிறந்தவள் என்று மஞ்சள் நூல் போட்டவன் இன்று கஞ்சிக்கலைகிருஞ? கந்தைக்கலைகின் ருஞ? இல்லை அஞ்சித் திரி கின்ருனு? அல்லது கெஞ்சித் திரிகின்றன? கண்டாயா? இனி மேலாவது காண்பாயா?"சீதனத்தை நாடித் தேசாந்திரம் செல் லும் செம்மல்களே சிந்தையே மகிழாத சீதனமே வேதனமான வேதனை என்பதைச் சிந்தியுங்கள். தாயகத்தை நேசியுங்கள். ஏழைத் தங்கைமாரைக் கைதூக்குங்கள்.
சீதனம் கொடுக்கும் செம்மல்களே! வேதனம் வந்த விதங் களை எண்ணுங்கள். ஆதனம் வாங்கிய மர்மங்களை எண்ணுங்கள். மாப்பிள்ளைக்குச் சீதனம், மாமனுக்கு இளும், சகோதரிக்கு செலவு, புருேக்கருக்கு கூலி. எல்லாம் கொடுத்து வாழவைத் தாலும். ஊரிலே கிராமத்திலே அயலிலே நூற்றுக்காணக்கான ஏழைகள் உண்டாம். இத்தேடிய, திரட்டிய செல்வமே உங்கள் வீட்டுச் சீதனம் ஏளனமான சீதனத்தை எண்ணினல் எளிதிலே கேவலம் புலப்படும். எனவே சீதனத்தை, ஒழியுங்கள்.

Page 39
62 சப்த
0L0LLLLL0000L00L000LLL0L0LLLLL0
0. பொன்கை நகர்
செல்வி த. ஆறுமுகம் ஜயந்திபுரம்-கிளிநொச்சி TSYYL0L0LLL LL0L LLLLLLLLaLzLLLLLLLY
நாடாக இருக்கலாம். காடாக இருக்கலாம். மலையாக இருக் கலாம். பள்ளமாக இருக்கலாம். அந்தந்த இடத்தில் வாழும் ஆண்மக்கள் எவ்வளவுக்கெவ்வளவு நல்லவர்களாக இருக்கின் ருர்களோ அவ்வளவுக்கவ்வனவு நீயும் நல்லை. வாழ்வாயாக நில மகளே என மக்கள் வாழும் நானிலத்தை விழித்துப் பாடினர் ஒளவையார். நீங்களும் அதனை ஒருமுறை பாருங்கள். (நாடாக ஒன்ருே காடாக ஒன்ருே, அவலாக ஒன்ருே, மிசையாக ஒன்றே எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்ல வாழியர் நிலனே)" இச்செய்யுட் கருத்தை அடியிட்டு நம்முன்ஞேர்கள் வாழ்ந்தார் கள். அன்ஞரின் செயற்கருஞ் செயல்களைப் பாராட்டிய நண் பர்களும் பெரியோர்களும் நமது தாயகத்திற்கும் அன்புடனிட்ட பெயர் தான் பொன்கை நகர். எல்லா நல்ல கருமங்களுக்கும் முன்னின்று உடல், பொருள், ஆவி அனைத்தினலும் தொண்டு புரியும் பெருங்குணம் படைத்த உத்தமர் வாழும் நற்பதியை நல்லோர் நற்பெயரால் அழைப்பது இயல்புதானே. “பெருமை யும் சிறுமையும் தான் தர வருமே" என்பது அனுபவ மொழி யல்லவா?
வல்லிபுரக் கோயிலை அடுத்துள்ள பகுதியிற் புதைபொருள் ஆராய்ச்சியின் பொழுது கிடைத்த ஒரு சாசனத்தில் கி. மு. 300 வரையில் புங்குடுதீவு மக்கள் சிறப்புடன் வாழ்ந்தமை பொறிக்கப்பட்டுள்ளது. கி. மு. 300-ல் பாலிநகர்ச் சிவாலயம் சிறப்புடன் விளங்கியதாகவும், அதற்கு அணிசெய்வதான வாவி பாலியாற்றை மறுத்துக் கட்டியதெனவுங், கூறுப்பட்டுள்ளது. இதனை இலங்கை அரசாங்கம் கமத்தொழிற் றிணைக்களம் வெளியிட்ட “கமத்தொழிற் பண்டைக்காலநிலை” தொகுப்பு 2-ல் காணலாம். பண்டைக்காலப் பலி நகரே இன்று வவுனிக்குளம்
 
 
 

ëay 63
என வழங்கப்படும், தமிழர் குடியேற்றத்திட்டமாகும். பாலி வனவியே தற்போது வவுனிக்குளம் என வழங்கப்படுகின்றது. வவுனிக்குளத்தை நிரப்பும் ஆறு, இப்பொழுதும் பாலியாறு ஏனவே வழங்கப்படுகின்றது. "இற்றைக்கு 2,300 ஆண்டுகளுக்கு முன் வடபகுதித் தமிழ்மக்கள் அரசோச்சிக் குடியமர்ந்து வாழ்ந் தமைக்குப் பொன்கைநகர் பற்றியும் பாலிநகர் சிவாலயம் பாலி யாறு பற்றியும் பேசப்படும் ஏடுகள் சான்று பகர்கின்றன.
அன்றியும் அனுராதபுரியைத் தலைநகராக வைத்து ஈழம் முழுமையும் ஒரு குடைக் கீழ் ஆண்ட எல்லாள மன்னன் காலத்தில் மருந்து மூலிகைகள் நிறைந்த பழம்பெரும்பதியாகப் புங்கைநகர் இருந்தமைக்குச் சரித்திரச் சான்றுகள் உள்ளன. தொடும்தோறும் நன்னீர் சுரக்கும் இயற்கைவளமும், நெய்தலும் மருதமும் கலந்த நிலவளமுங் கூடிய ஊரைதீவைப் பிறப்பிட மாகக் கொண்ட வரகவி முத்துக்குமாரப் புலவர் 1815-ம் ஆண் டளவில் நயினை நாகராசேஸ்வரியம்பாளுக்குப் பத்துப் பதிகமும் பாடியவர். தமது தாயகத்தின் தென்பால் அமைந்த கண்ணகை அம்பாளுக்கும் பத்தும் பதிகமும் பாடினுர், அக்கவிதைகளின் இறுதிதோறும் “கன்னலொடு செந்நெல்விளை” பொங்கைநகர் “தன்னிலுறை கண்ணகைப் பெண்ணரசியே’’ என வாழ்த்தி வணங்கியுள்ளார். கண்ணகை அம்பாள் கோவிலின் தென்மாக் கடலில் மேற்புறமாக ஒளிரும் நீலக்கடற்பிரதேசம் நம் முன் ஞேரால் “குளத்துவான்” எனப் பெயரிட்டு அழைக்கப்பட்டது. இது பண்டைக்காலத்தில் ஒரு துறைமுகமாக விளங்கியிருந்தது இந்தியர், அரேபியர் முதலான பிற நாட்டினர் ஈழத்துக்கு இந்தத்துறைமுக மூலம் வந்து போயினர். ஊர்காவற்றுறையில் ஒரு காலம் நங்கூரமிட்டு ஒதுங்கிய மரக்கலங்கள் வடகீழ்ப் பருவக் காற்றுக் காலத்தில் எம் தாயகத்துத் தென்மாக் கடற் “குளத்து வானில்” நங்கூரமிட்டனர்.
நடுவுத்துருத்தி குறிகாட்டுவான் புளியடித்துறை, கழுதைப் பிட்டி இவைகளும் பண்டைய இயற்கைத்துறைமுகங்களாக அமைந்திருந்தன. அக்காலத்தில். வடமேற்குப் புறமாக எமது தாயகத்தின் வாயில்கள் இருந்தன. மக்கள் தமது தேவைகளை இந்திய வர்த்தக மூலம் அனுபவித்தனர்.
சேதுக்கரை, கச்சதீவு, நெடுனைநகர் இவற்றைத் தொட்டுக் கொண்டு குளத்துவானுக்கு வந்த மரக்கலங்கள் மண்டைதீவின் கிழக்குப்புறமாக அலுப்பாந்தி, கொழும்புத்துறை இவற்றைத் தொட்டுக் க்ொண்டு பூநகரித்துறையில் நங்கூரமிட்டன. இந்தக்

Page 40
64 சப்த
கடற்பாதை சேதுக்கரையிலிருந்து பூநகரி வரும் வரையிலும் பூநகரியிலிருந்து சேதுக்கரை செல்லும் வரையும் ஒவ்வோர் இடங்களையும் வெறுங்கண்ணுற்பார்க்கக்கூடியதாகவும், போக்கு வரவு செய்யும் பண்டைய மக்களுக்குப் பாதுகாப்புள்ளதாகவும் இருந்தது. இந்தியாவின் கொடுங்கோலாட்சி நடந்தபோதும் ஈழத்தில் அத்தகைய ஆட்சி நடந்தபோதும் இருபகுதி மக்களும் அவ்வப்போது பாதுகாப்பான இடங்களுக்குக் குடிபெயர்ந்து வாழ்ந்து வந்தனர்.
போர்த்துக்கீசர், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் பெருங் கொடுங்கோல் தாண்டவமாடியது. எந்த வழியிலும் மக்களுக்கு அரசு உதவவில்லை. தமது பொருளாதாரத்திலேயே மக்கள் வாழவேண்டியிருந்தது. அதுவொரு சர்வோதய வாழ்வாக அமைந்திருந்தது. அன்னியருடைய ஆட்சிக்காலத்தில் அவர் களின் பிடியிலிருந்து தமது கன்னியர்களையும், பெண்களையும் பாதுகாக்க வேண்டிய அவலநிலை தமிழ்மக்களுக்கு ஏற்பட்டி ருந்தது. அதனுல் தீவகங்களில் நால்சார் வீடுகளமைத்து வீட் டினுள் முற்றத்திலே வடகீழ்ப்புறமாகக் கிணறுகளும் தோண்டி உள்ளறைகளிலும், உள் விருந்தைகளிலும் பெண்களும் உணவுக் களஞ்சியங்களுமிருக்க வீட்டின் புறச் சுற்ருடலில் வீட்டுக்கார ரும், ஏவலாளராகிய ஆண்களும் வாழ்ந்தனர். புறநோக்காக ஆராய்ந்தால் ஒவ்வொரு நாற்சார் வீடுகளும் ஒவ்வொரு குறு நில மன்னரின் கோட்டைகள் போலிருந்தன. இவ்விதமான வீடுகளை இன்றும் தீவகங்களிற் காணலாம்.
இலங்கையின் சுதந்திரத்திற்காகக் கடைசி வரை போராடிய கடைசிக் கண்டியரசன் ராஜசிங்கன் ஆங்கிலேயருடன் கடுஞ் சமர் செய்தான். அவனது சுதேசியப்படையின் ஒரு பிரிவுக் குத் தலைமை வகித்தவர் பொன்கை நகரில் வீராமலையைப் பிறப் பிடமாகக் கொண்டவர். மன்னனும் படைகளும் ஆங்கிலேய ரின் நவீன ஆயுதப் படைகளையுடைய படைக்கு எதிர் நிற்க முடியாத நிலையில் ராஜசிங்கன் தனது வீரர்களை ஆயுதங்களு டன் தத்தம் வதிவிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிட்ட்ான். அதனையேற்றுத் தனது துப்பாக்கியுடன் பிறந்தகம் வந்தவரை மக்கள் "அதுப்பாக்கியர்” என அன்புடன் அழைத்தனர். அவர் நயினை நகரில் தமது தருமபத்தினியை மணந்துகொண்டு அங்கேயே வாழ்வு நடத்தினர். அன்னுரின் வழி வந்தவரே இன்றைய மகான்களுக்கும் மகாஞகவும் அளப்பரிய சோதிட ராகவும் ஆத்மஜோதி ஆங்கில இதழாசிரியராகவும் ஆத்ம ஞானியாகவும் விளங்கிய பெரியார் க. இராமச்சந்திரர் அவர்

தீவு 65
களாவார். அவரின் அரிய புத்திரர்களில் ஒருவரும் தென்கிழக் காசியாவிலேயே திறமை மிக்க கண்வைத்தியரும் உலகிலேயே போற்றப்படக் கூடிய திறமையான கண்வைத்தியராகவும் பெயர்பெற்று வரும் டக்டர் பரராஜசிங்கமும் இலங்கையின் உதவிப் பொலீஸ் மா அதிபராகிய திரு. சுந்தரலிங்கமும் ஆகிய வர்களே அவரின் வழித்தோன்றல்களாவர்.
தனித்தமிழ் கைவந்தயோகி மறைமலை அடிகளாரின் தாயா ரும், தவத்திரு யோகர்சுவாமிகளின் தந்தையாரும் பொன்கை நகர் ஈன்ற புனிதர்களே. இந்நகர நங்கையர் தாம் மண்ந்து கொண்ட நம்பியருடன் தாயகம் துறந்து ஈழத்தின் தென் பகுதிகளிலும் இந்தியா, மலேயா முதலிய இடங்களிலும் மேல் நாடுகளிலும் கூடச்சென்று சிறப்புடன் வாழ்கின்றனர். சென்ற இடமெல்லாம் தமிழ்ப் பண்பும் சமயாசாரமும் பொங்கி வழியும் குணசீலர்களாகவும் தமது மக்களைக் கலாச்சார சீலர்களாக வளர்க்கும் நன் நோக்குடையவர்களாகவும் விளங்குகின்றனர். வாழ்க தமிழ் வளர்க பொன்கைநகர் !!
அருள் வேறு. பொருள் வேறு. பொருளைச் சம்பாதித்தவன் 1 அப்பொருளைக் கொண்டு தான் உலகில் எதையும் சாதிக்க வேண்டும். அருள் உடையவனுல் உலகில் எதையுமே இலேசிற் / சாதிக்கமுடியும்.
奉 兴 水 sk
கண்ணுக்கும் எட்டாத மின் அலைகள் உலகமெங்கும் பரந்து செல்லுகின்றன. ஆளுல், செய்தி கேட்க முறுக்கிவிடப் பட்ட வாஞெலிப் பெட்டிதான் அவ்வலையைப் பற்றிப்பிடிக்கிறது. அதுபோலவே இறைவன் கருணையும் எங்கும் பரந்து செல்லு கிறது. பக்குவப்பட்ட ஆன்மாவினுல் மட்டுமே அவன்கருணையைப் பற்றிப் பிடிக்கமுடியும்.
و أحد .. ع .
fTE . — 4
O

Page 41
66 சப்த
இதீவகம் என்ருல் ஏளனமேன்?
திரு. எஸ். ரி. மூர்த்தி, கரம்பொன். 赵
பூகற்பவியலின்படி நாற்புறமும் கடலாற்குழப்பட்ட தரையே தீவு என்றழைக்கப்படுகின்றது. தீவுக்கும் அதனை அடுத்துள்ள பட்டினத்திற்கும் நேரடிப்போக்குவரத்து வசதிகள் இல்லாதிருப் பதாலும், தீவகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கல்லூரிகள் இல்லாதிருப்பதனுலும் அங்கு வசிப்பவர்கள் ஏனையோர்களை விடப் பின்தங்கியவர்களாக இருக்கலாம். அதனுல் ஏ னை யோ ர து ஏளனத்திற்கு அவர்கள் ஆளாகி வந்துள்ளனர். இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணத்திற்கு மேற்கே லைடன்தீவு என்றழைக்கப்படும். நீண்ட விசாலமான, தீவு ஒன்று உண்டு. இத்தீவு ஊர்காவற்றுறைப் பட்டினத்தையும், சுருவில், கரம்பொன் நாரந்தனை, சரவணை, புளியங்கடல், வேலணை, அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண் டை தீவு ஆகிய கிராம ங் களை யும் உள்ளடக்கியுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து லைடன்தீவுக்குக் காரைதீவுக் கூடாக வும் பண்ணைக்கூடாகவும் கடல்மார்க்கமாகவே செல்லவேண்டும். தரைமார்க்கமாகச் செல்லமுடியாதிருந்த அக் கால ங் களில் யாழ்ப்பாணத்திலிருந்து லைடன்தீவுக்கு நேரடிப் பஸ்போக்கு வரத்து இருக்கவில்லை. ஆணுல் பரவைக் கடலான பண்ணைக் கடலினூடாக வீதி போடப்பட்டதன் பின்னர், நேரடி பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டு லைடன் தீவிற் பல்வேறு அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்து, வேலணையில் இருந்து புங்குடுதீவுக்கு வாகன பாலமும் அமைக்கப்பட்டது. இதனுல் தீவகத்தினர் வெளியுலகுடன் தொடர்புகொண்டு பட்டினத்தவர் களுக்குத் தீவகத்தினர் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துக் காட்டும் வகையில் அவர்கள் பல்வேறு துறைகளிலும் ஈடுபட்டுத் துரித முன்னேற்றம் அடைந்ததோடு தமக்கென உலக அரங்கினிலே தனியானதோர் இடத்தையும் வகித்துக்கொண்டனர் இருந்தாலும் ஏனையோர் தீவகத்தினரைப் பற்றிய தமது முன்னைய மதிப்பீட்டினை இன்றுவரை மாற்றிக்

தீவு 67
கொள்ளத் தயங்குகின்றனர். பின்வரும் சில உதாரணபுருஷர் களைப் பற்றித் தெரிந்துகொண்டால் அவர்களுக்குத் தீவகத்தின் தற்போதைய நிலை உள்ளங்கை நெல்லிக்கனியாகப் புலப்படும்.
அகில உலகிற்குமே ஒரு தனிநாயகமாகத் திகழும் வணக் கத்திற்குரிய தனிநாயகம் அடிகளார் தீவகத்தைச் சேர்ந்தவர். லைடன் தீவினைச் சுற்றிக் காரைதீவு (தற்போது காரைநகர்) எழு வைதீவு, அனலைதீவு, நயினுதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு ஆகிய சப்ததீவுகள் உள்ளன. இவற்றிலொன்ருன நெடுந்தீவே வண. தனிநாயகம் அடிகளாரின் தாயகமாகும். சங்கங்கள் அமைத்து வளர்க்கப்பட்ட தமிழின் வளர்ச்சி குன்றி வரும்வேளையிலே தமிழ்மொழியின் தொன்மை வரலாற்றை ஆராய்ந்து அறிந்து அதன் புகழை மீண்டும் அகிலமெல்லாம் பரவச்செய்யும் வகையில், அனைத்துலக தமிழாராய்ச்சி மகாநாட்டிற்கு வித்திட்ட பெருமை தவத்திரு தனிநாயகம் அடிகளாரையே சாரும்.
கல்விமான்களென்றும் பேரறிவாளர் என்றுமி போற்றப்பட்ட ஏனைய நவ நாகரிக நாடுகளைச் சேர்ந்த பெருமக்களால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இந்த அரும்பெருஞ் சாதனையை நிலைநாட்டிய ஒரு நாயகத்தினை ஈன்ற பெருமையால் தீவகம் பெருமையடைகின்றது. தானுெரு தீவான் என்று கூறிக் கொள்வதிற் சிறிதளவும் தயங்காத அடிகளார் தமது வாழ்க்கைச் சரித்திரத்தினை “கட்டுமரத்திலிருந்து விமானம் வரை" என்ற நூல் மூலம் விளக்கியுள்ளார்.
மதத்துறையிலும் தீவகம் தனியோர் முத்திரையைப் பதித் துக் கொண்டுள்ளது. இலங்கையில் மாத்திரமன்று. இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் புகழ்பெற்ற பிரதிஷ்டாபூஷணம், பிரம்மபூரீ ஐ. கைலாசநாதக் குருக்களும் நயினுதீவு நற்புத்திரர் எனக் கூறுவதில் சைவ உலகமே பெருமைப்படுகிறது. யாழ்மறை மாவட்ட கத்தோலிக்க மக்களால் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்ட முன்னுள் யாழ் ஆயரான அதி, வண. எமலியானுஸ்பிள்ளையும் வண. சகோ. பிதா பீட்டர்பிள்ளையும் தற்போதைய யாழ் ஆயர் அதி. வண. தியோகுப்பிள்ளையும் லைடன் தீவிலுள்ள கரம்பொனின் தவப்புதல்வர்களே. மருத்துவத் துறைக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இரு சகோதரர்களை ஈன்றுதவிய பெருமையும் நயிஞதீவுக்கு உண்டு. கண் சிகிச்சை யில் நிபுணரான டாக்டர். ராமச்சந்திரா பரராசசேகரம். இலங்கை உதவிப் பொலீஸ் மா அதிபர் திரு. ராமச்சந்திர சுந்தரலிங்கம் ஆகியோரே அச்சகோதரர்களாவர்.

Page 42
68 சப்த
நீதித்துறையினை நோக்கின் இன்று கரம்பொன்னைச் சேர்ந்த ஒருவர் விடிவெள்ளியாகப் பிரகாசிக்கின்றர். உயர் நீதிமன்ற நீதியரசராகவும் ஜனதிபதி ஆணைக்குழுவின் நீதியர சராகவும் பணிபுரியும் திரு. சுப்பையா சர்வானந்தாவே அவராவார்.
ஒலிபரப்புத்துறையினை எடுத்துக்கொண்டாலுங்கூட இலங்கை வானெலி, சென்னை வானெலி, லண்டன் பீ. பீ. சி தமிழோசை ஆகியவற்றில் அரும்பெருஞ்சாதனைகளை நிலைநாட்டிய சிறந்த ஒலிபரப்பாளரும், எழுத்தாளருமான திரு. சோ. சிவபாதசுந்தரம் கரம்பொன்னைச் சார்ந்தவர். இலங்கையிலுள்ள நவீன புகையிரத நிலையங்களுள், யாழ்ப்பாண புகையிரத நிலையமே குறிப்பிடத் தக்கதொன்ருகும். இதனை நவீன வசதியுள்ளதாகவும் அழகாக வும் திட்டமிட்டு அமைத்த பெருமைக்குரிய பொறியியலாளர் திரு. என். ஏ. வைத்திலிங்கம். இவர் புங்குடுதீவின் புதல்வரா வார். இன்று இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மணிலா அசாங்கங்களுக்கு அரும்பெரும் ஆலோசகராவும் பணிபுரிகின் (19.
"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற வாக்கியத்திற் கமைய அந்நாளிலேயே பாரிய வத்தைகளைச் சொந்தமாக வைத்திருந்து, பிறநாடுகளுக்கு உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்தும், பிறநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் பெரும் வள்ளலாய் வாழ்ந்தவர் கரம்பனைச்சேர்ந்த தம்பிஐயா. அவர் செய்துவந்த வாணிபத்தினை அவரது மகஞன திரு. அல்பேர்ட் லைனல் தம்பிஐயாவும் தொடர்ந்து செய்தார். அத்துடன் கொழும்புத்துறைமுகத்தில் கப்பல் போக்குவரத்துச் சபை யொன்றினையும் ஏற்படுத்தி (காக்கபோட் டிஸ்பாட்ச்கம்பனி லிமிடெட்) அதன் மூலம் தமது தொழிலை விரிவுபடுத்தினுர், இச்சபையில் சப்ததீவு இளைஞர்கள் அநேகருக்கு அவர் அதிகளவு வேலைவாய்ப்பும் வழங்கினர். அவருடைய பாராளுமன்றச் சேவைக் காலத்திலேயே தீவகங்கள் பல முன்னேற்றத்தைக் கண்டன. அவரால் ஆம்பிக்கப்பட்ட அச்சபையே இன்று துறைமுகச்சரக்குக் கூட்டுத்தாபனமாக மிளிர்கின்றது.
வர்த்தகத்துறையினை எடுத்துக்கொண்டாலும் தீவுப்பகுதி யினரே இன்று முன்னணியில் இருக்கின்றனர். அதன்மூலம் சம்பாதிக்கும் பணத்தினைக்கொண்டு, அரிய பல தாயகத் தொண்டுகளையும் சமூகசேவைகளையும் ஆற்றிவருகின்றனர். இவர்களுடைய அரும்பெருஞ்சேவைகளிஞலேயே இன்று தீவகம்

தீவு 69
சிறப்போங்கி வருகிறது. எனவே தீவகம் அன்றிருந்த நிலையில் இன்றில்லை. பட்டினப்பகுதியுடன் சரிநகர் சமமாக தலைநிமிர்ந்து நிற்கும் அளவிற்கு அது துரித வளர்ச்சியடைந்து வருகின்றது.
தெய்வத்தை எதிர்த்துச் செல்வம் தேடிாதே. தெய்வத்தை நம்பிச் செல்வத்தைச் சேர்,
苯 光禄 *
தெய்வம் இல்லை என்று செய்யத் தகாத தவறுகளைச் செய்து செல்வம் தேடுவோர், செல்வமே தெய்வம் என்று உறுதி கொண்டவரே, -
se 弹
செல்வத்தாற் சகல செல்வாக்கையும் தேடலாம் என்று எவன் செல்வம் தேடுகின்றணுே அவனே செய்யத்தகாத தவறுகள் செய்து செல்வம் தேடுபவன். -
弟 始 。光
அன்பு, நீதி கருணை, சமாதானம், சமத்துவம் இவற்றலேயே தீர்மானத்தையும் இன்பத்தையும் அடையமுடியும்.
焰 % 熔
தெய்வத்தைத் திடமாய் நம்பு, செல்வம் வரும் ஆளுல் செல்வத்தைத் திடமாய் நம்பு; தெய்வம் வராது.

Page 43
70 சப்த
அனலை வு திரு. க. இளையதம்பி அதிபர்,
tuII/art. SỷTừ, ei, #8 o. Lum Lamởủ
محی
میی
செந்தமிழர் தலைநகராம் யாழ்ப்பாணத்துக்கு அணியென இலங்கும் தீவுக்கூட்டங்களில் அனலைதீவும் ஒன்ருகும். கடல் குமுறி எழும் நேரங்களில், தீவகம் அலைகளால் அழிவுரு வண் னம், நா ற் புற மும் இயற்கையாகவே கற்பாறைகள் அணை போன்று அமைந்த காரணத்தால் இத் தீவிற்கு “அணை - அலை தீவு” என்னும் பெயர் ஏற்பட்டது. அதுவே நாளடைவில் அணைலதீவு, அணலதீவு, அனலைதீவு என வழிமுறையாக மருவி வருகின்றது எனக் கூறப்படுகின்றது. ஒல்லாந்தர் இலங்கையை யாண்ட காலத்தில் இங்கு வந்ததாகவும், தமது தேசத்திலுள்ள ‘அனலர் டாம்" என்னுமிடத்தைப் போன்று தோற்றமளித்த இத்தீவிற்கும் அதே நாமத்தைச் சூட்டியிருக்கலா மென்றும் கரு அதுவாருளர். ஊர்காவற்றுறையிலிருந்து, ஏழு கடல் மைல் குாரத் தில் அமைந்திருக்கும் இத்தீவு, மூன்றரை மைல் நீளமும் ஒன் றரை மைல் அகலமும் கொண்டு வடக்குத் தெற்காக நீண்டு கிடக்கின்றது.
வருடமுற்றும் வற்ருத நன்னீர் வளமும், பற்பல நன்மண் வகைகளைக் கொண்ட நிலவளமும் மிக்க இத்தீவில் பெரும்பான் மையோர் கமக்காரர்களே; சிறுபான்மையோர் வர்த்தகம், அரச பணி, மீன்பிடி இவற்றில் ஈடுபட்டுவருகின்ருர்கள். ஆயினும் காலமாற்றங் காரணமாக இன்று இளைஞர்கள் பலர் வெளிநாடு களிற் கல்வி, தொழில் நிமித்தம் சென்றுகொண்டிருக்கிருர்கள், நாடறிந்த பல தொழிலதிபர்களையும் வர்த்தகர்களையும் கொண்ட இவ்வூரினிலே, ஐயாயிரம் வரையிலான குடிசனங்களும், இரண் டாயிரத்திற்கு அதிகமான வாக்காளர்களும் வாழ்கின்றர்கள். அனேகமான குடும்பங்கள் நடுத்தரக் குடும்பநிலையைக் கொண்
66, -
எக்காலந் தொடக்கம் இங்கு மக்கள் வாழ்கின்றனர் என வரலாற்று ரீதியாகக் கூற முடியவில்லை. ஆயினும் இவ்வூருக்கு புங்குடுதீவு - இறுப்பிட்டி வழியாகவே குடியேற்றம் ஆரம்பமா கியது என வாய்வழிக் கதைகள் மூலம் அறியக்கிடக்கின்றது. ஒரு காலத்தில் இறுப்பிட்டிக்கும் அனலைதீவிற்கும் இடையி

தீவு 71.
லுள்ள கடல், தூர்ந்து தரைபோல் காட்சியளித்த தென்றும்; இறுப்பிட்டி மக்களின் கால்நடைகள் அவ்வழியே இவ்வூருக்கு மேய்ச்சலுக்கு வந்து போனதாகவும், அவற்றின் கொம்புகளி லும் கால்களிலும் இருந்த மண்ணின் செழிப்புக் கண்டு மக்கள் குடிபெயர்ந்து வந்து எழுமங்கை நாச்சியார் கோவிலடியில் குடியேறிஞர்கள் எனவும் தெரிகின்றது. இது குமரிக்கண்டத் தைக் கடல் கொள்ளுமுன் நிகழ்ந்திருக்க வேண்டும். இன்றும் அனலைதீவு - இறுப்பிட்டி மக்களுக்குமிடையே இருக்கும் நெரு
கிய தொடர்பு இவ்விடத்தில் நினைவுகூரத்தக்கது.
ஆதிகாலத்திற் பல்வகைத் தானியங்களையும் விளைவித்து விவசாய வளம் பெருக்கிய இத்தீவில், அதற்கெனப் பற்பல குளங் ஊர்பூராகவும் பரந்து அமைந்து கிடக்கின்றன. ஒன்றுட னுென்று கால்வாய்கள் மூலம் இணைக்கப்பட்ட இக்குளங்கள் ன்னும் வற்ருத நீர்வளம் கொண்டு காணப்படுகின்றன. நெற் பயிர் முதல், பலகைத் தானியங்களையும் பணப்பயிரான புகை பிலையையும் இவ்வூர்க் கமக்காரர் விளைவிக்கின்றனர். அண் மக் காலமிருந்து மிளகாய், வெங்காயம் போன்ற உபடிண வப் பொருட் பெருக்கத்திலும் கவனம் செலுத்துகின்றனர். னை, தென்னை வளமிக்க இவ்வூரினிலே அவற்றின் நேரடிப் பயன்களையும்; அவற்றை மூலப்பொருள்களாகக் கொண்டு பலவித பிரயோசனங்களையும் மக்கள் நன்கு பயன்படுத்து
ருர்கள். கில்வி
ஆரம்பத்திற் சிலர் குரு - சீட முறையில் இவ்வூரினிலும் வெளியிடங்களிலும் கல்வி கற்ற போதிலும், அனைவரும் கல்வி பெறும் வாய்ப்பு இருக்கவில்லை. இற்றைக்கு நூறு வருடங்க ளுக்கு முன்னர் திரு. குழந்தை உபாத்தியாயர் என்பவர் தமது சொந்தச் செலவில் ஒரு கொட்டிலமைத்துக் கல்வி போதித்து
வந்தார். அக்கால கட்டத்தில் திரு. முத்து உபாத்தியாயர் அமெரிக்க மிசனரிமாரின் உதவியுடன் ஒரு மிசன்
ாடசாலையைத் தாபித்து கல்வி போதித்து வந்தார். வேற்று தப் பாடசாலை ஊரில் அமைவதை விரும்பாத சூழ்நிலையால் இப்பாடசாலை அழிய நேரிட, 1890-ம் ஆண்டளவில் சதாசிவம் வித்தியாசாலை என்னும் சைவப் பாடசாலையை திரு. சின்னப்பா உபாத்தியாயரும் மற்றும் ஊர்ப் பெரியோர்களும் ஆரம்பித் ார்கள். ஆரம்ப காலத்தில் ஊதியமின்றிக் கல்வி போதித்து ந்தனராயினும் சில காலங்களின் பின் அரசாங்க நன்

Page 44
72 சப்த
கொடையைப் பெற்று நன்கு பாடசாலையை இயக்கினர். அனலை தீவின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்ட சகலரும் இப்பாட சாலைக்குத் தமதுஉழைப்பையும் உதவியையும் வழங்கி வளர்க்கத் தலைப்பட்டனர். சுமார் இரு தலைமுறையைச் சேர்ந்த பெரி யோர்கள் பலரின், பலன் கருதாப் பணிகளினுலேயே இன்று நூற்றண்டுகளை அடைந்துவரும் சதாசிவம் மகாவித்தியாலயம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனலாம். VN
1934-1937 ஆண்டளவில் இப்பாடசாலை இரு மொழிட் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது. தீவுப் பகுதியிலேயே முதல் இருமொழிப் பாடசாலை இதுவென்றே கூறவேண்டும். இன்று இப்பாடசாலையில் 400க்கு மேற்பட்ட பிள்ளைகள் படிக் கின்றர்கள். 13 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றர்கள். இதைத் தொடர்ந்து, அனலைதீவின் வடக்கில், வடலூர் அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயமும், தெற்கில், தெற்கு அரசினர் தமிழ்க் கலவன் வித்தியாலயமும் 1944-1948 கால கட்டத்தில் திரு. சேர். வை. துரைச்சாமி அவர்கள் முயற்சியால் அரசினரால் ஆரம்பிக்கப்பட்டன. இவ்விரு பாடசாலைகளிலும் 380 மாணவர் கள் படிக்கின்றனர். அவர்கட்கு 10 ஆசிரியர்கள் கடமையாற்று கின்றனர். இன்று, இம்மூன்று பாடசாலைகளும் கல்விப் பணி யிலே சிறந்து வளர்ந்து வருகின்றன. எங்கும் உள்ள ஆசிரியர் பற்ருக்குறை காரணமாக இப்பாடசாலைகளுக்கும் இன்று கல்வித் தரத்தில் பாதிக்கப்பட்டிருந்தாலும், இத்தீவைக் கஷ்டப் பிரதேசம் என அரசாங்கம் கணித்திருப்பதால், மாற்றுத் திட்டங்கள் மூலம் ஆசிரியர்களை அனுப்பிவைத்தாற் கல்விப் பணியில் அனலைதீவு முன்னிற்கும் என்பதுறுதி.
சமயநில
இக்கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அனைவரும் சைவ சமயிகளேயாம் பன்னெடுங் காலமாகத் தனிச் சைவம் தழைத் தோங்கப் பெறுகின்றது. இவ்வூரினிலே வேற்று மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இங்கு இல்லை. அனைத்து ஆலயங்களும் சைவாலயங்களே. காலத்தால் முற்பட்ட பல ஆலயங்களையும் காலமறியாமல் தான் தோன்றியாக ஆரம்பித்த ஆலயங்களையும் புதிய பல ஆலயங்களையும் இங்கு காணலாம். புலியேத்தி என்னும் பெயர் மருவிப் புளியேத்தியாகி இன்று புளியந்தீவு என வழங்கி வரும் தீவு, அனலைதீவின் தெற்குப் புறத்தில் இருக்கின்றது. இங்கு பரந்த காட்டின் மத்தியில் அமைந்த தென்னஞ் சோலையின் நடுவே, நாகேஸ்வரன் தான் தோன்றீஸ்

தீவு 73
வரராக அமைந்திருக்கின்றர். நயினதீவு, நாகேஸ்வரி ஆலயத் அதுடன் பற்பல வழிகளிலும் தொடர்புகள் பல கொண்ட இவ் வாலயம், பதஞ்சலி, வியாக்கிரகபாதர் போன்ற முனிவர்கள் வழிபட்ட தலமென்பது ஐதீகம், புளியந்தீவிற் காணப்படும் இரு பெரிய காலடிச் சுவடுகள், யாதென ஆராய்தல் பற்பல விதங்களிலும் நன்மையானதாகும்.
அரசன்புலத்தில் அமர்ந்திருக்கும் ஊடு முருகமூர்த்தி ஆலயம் ஊரிலுள்ள ஆலயங்களுட் காலத்தில் முற்பட்டதென்பர். இவ்வாறே, பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம், வடக்கு இராஜ இராஜேஸ்வரி ஆலயம், எழுமங்கை நாச்சியார் கோவில், தெற்கு முருகமூர்த்தி கோயில், வடலிக்குளம் ஞான வைரவர் ஆலயம் என்பனவும் ஆண்டுகள் பலகண்ட அதிசய மனேக முற்ற ஆலயங்களாகும். ஆயினும், அகில இலங்கை யிலும் புகழ்பெற்ற ஆலயமாகக் கருதப்பெறுவது அனலைதீவு அரிஹரபுத்திர ஐயனர் ஆலயமாகும். பதினுெராம் நூற்றண்டின் முற்பகுதியில் அமைக்கப்பெற்ற இவ்வாலயமானது இறையரு ளால் ஏற்பட்ட ஆலயமாகும். கடலின்கண் கண்டெடுக்கப் பெற்ற பெட்டியொன்றில் இருந்த பூரணை புட்கலை அம்பாள் களுடன் கூடிய ஐயனுர் விக்கிரகம் அடியவர்களாற் கடலி லிருந்து மீட்கப்பெற்று ஊரினுட் கொண்டுவரும்போது, கூளா மரங்கொண்ட நயினுர் குளம் என்னும் கழனியில் இறைவன் கோயில்கொண்டருளினுர், அன்றிலிருந்து கொட்டிலாகத் தொடங்கிய இவ்வாலயம் இன்று ஆகம் முறை பற்றி அமைக்கப் பெற்ற கோயிலாக உருப்பெற்றுள்ளது எனலாம். வைரக் கற் றிருப்பணி நிறைவேற்றப்பட்ட இவ்வாலயத்தில் ஆடி மாதத்தில் பூர்வபக்க ஷஷ்டித் திதி தொடக்கம் பூரணை வரை பத்து நாள்கள் கொடியேற்றித் திருவிழாக்கள் நடைபெறும். இது போன்றே பொங்கல் விசேட அபிடேகங்கள் முதலியன சித்திரை மாதத்து முதல் திங்கட்கிழமையில் நடைபெறும், இவை நாட றிந்த இவ்வாலய விசேட தினங்களாகும்.
தற்சமயம் கிலமடைந்த பழைய சித்திரத் தேருக்கு மாற்றி டாகப் புதியசித்திரத்தேர் இந்தியச்சிற்பாசாரிகளின் உதவியுடன் அமைக்கப்பெற்று வருகின்றது. மரத்தினிற் சிறந்த சிற்பங் களின் உதவியுடன் ஐயனுர் வரலாறு, அனலைதீவில் ஐயனுர் ஆலயம் அமைந்த வரலாறு இவைகளை உள்ளடக்கி இத்தேர் ஒரு கலைக்களஞ்சியமாகப் பல இலட்ச ரூபாய்கள் செலவில் அமைக்கப்பெற்று வருகின்றது.
1.

Page 45
74 சப்த
1719-ம் ஆண்டளவில் ஒல்லாந்தர் இத்தீவின் கிழக்குக்
கடற்கரையில் ஒரு கற்கோட்டையும் பக்கத்தில் மாதாவுக்கு ஒரு கோயிலும் அமைத்தார்கள். ஆயினும் ஆங்கிலேயர் வருகை யுடன் இவ்வாலயமும் கோட்டையும் தரைமட்டமாக்கப்பட்டு மண்மேடாகி விட்டாலும், இன்னும் மக்களின் வாய்மொழிகளில் மாதா கோயிலில் அன்னை பராசக்தி ஆவாகனம் செய்யப்பட்டு வழிபாட்டியற்றப்பட்டு வருகின்ருள்.
நாட்டு வளர்ச்சிக்கு உழைத்த பெரியார்கள்
அனலைதீவின் வளர்ச்சி என்னும்போது பெரிதும் போற்றப் படுபவர்கள் எமது கல்விக்கு வழிகோலிய பெரியார்களேயாகும். டாக்டர் ஐ. சோமசேகரம், திரு. இராசரெத்தினம், திரு. சி. வேலுப்பிள்ளை, திரு. வே. அம்பலவாணர், திரு. ஐ. பொன்னம் பலம், திரு. ஆ. சுப்பிரமணியம், திரு. ஐ. சிவம், திரு. வி. செல்லப்பர், திருமதி. சி. கமலம்மா, திரு. ஐ. வைத்திலிங்கம்; ” திரு. சு. சிவபாதசுந்தரம் என இவர்களின் தொகை எண்ணி லடங்கா. ஊதிபமே பெருது கடமையாற்றிய பற்பல ஆசிரியப் பெருந்தகைகளும் கருத்தாயிருந்து கல்விக்கூடத்தை ஆக்கிய அனலைதீவுப் பெரியார்களும் இச்சமயத்திற் கருத்தில் எண்ணப் படவேண்டியவர்களாவர். இவர்கள் கல்விப் பணி மட்டுமன்றி கல்வியையும் சமய வாழ்க்கைக்கும் மக்களின் நெறிமுறை யான வாழ்க்கைக்கும் உழைப்புக்கும் பெரும் வழிகாட்டிகளாக இருந்தார்கள் என்பது வரலாருகும். .
தற்சமயத்திலும் இத்தகைய பெரியோர்கள் பலர் நாட்டு நலனில் அக்கறை செலுத்தி இயங்கி வருகின்றர்கள். இவர்கள் ஆலயங்களின் வளர்ச்சிக்கும், மக்களின் மகோன்னத வாழ்வுக்குமாகத் தம் மெய்வருத்தம் பாராது உழைத்து வருகின் ருர்கள். இவர்களைத் தவிரக் கிராமிய முன்னேற்றம் தன்னைக் கருத்திற் கொண்டு அனலைதீவு கிராம முன்னேற்றச் சங்கம், மாதர் சங்கம், முற்போக்கு வாலிபர் சங்கம், கொழும்பு வாலிபர் சங்கம், பிரயாணிகள் சங்கம் என்பன போன்ற அமைப்புகள் பெரும்பணியாற்றுகின்றன. இவ்வாறே மத்திய சனசமூக நிலை யம், தெற்குச் சனசமூக நிலையம், வடலூர்ச் சனசமூக நிலையம், மேற்குச் சனசமூக நிலையம், நாவலர் சனசமூக நிலையம் என்பன வும் தற்சமயம் அனலைதீவு சனசமூக நிலையங்களின் சமாசமும் கலை, கலாச்சார நடவடிக்கைகளிலும், மக்களின் கல்வி, விளை யாட்டு, சிரமதானம், பொதுவாழ்க்கை இவற்ருல் குணைசெய்து

தீவு 75
வருகின்றன. இவ்வாறே, ఈడి வாழ்க்கைக்கு உதவியாக முத்தமிழ்க் கலாமன்றமும் இயங்குகிறது.
பொது விடயங்கள்
அனலைதீவின் வடக்குப்பாகத்தில் பாறைகளின் மத்தியில் 1930-ம் ஆண்டளவில் நூறு அடி உயரமான சீமேந்துத் தூண் அரசினராற் கலங்கரைத் தூணுக அமைக்கப்பட்டுள்ளது" பருத்தித் தீவு என்னும் சிறு தீவு அனலைதீவிலிருந்து அரை மைல் தூரத்தில் வடக்கே அமைந்துள்ளது. அனலைதீவு, கிரா மாட்சி மன்றத்தினுல் நிருவகிக்கப்படும் ஒரு தீவாகும். ஏழு வட்டாரங்களைக் கொண்ட இவ் ஆட்சி மன்றம் 1914-ல் அமைக் கப்பட்டதாகும். கிராமசபைத் தலைவர்களாக இருந்து கிராம முன்னேற்றத்துக்கு உழைத்தவர்கள் பற்பலர். ஆரம்பத்தில் மருந்துச் சாலையாக ஆரம்பிக்கப்பட்ட மருத்துவ மனை இன்று பிரசவ வைத்திய வசதிகளுடன், படுக்கை வசதிகள் கொண்ட வார்ட், மின் வசதி என்பவற்றுடன் வைத்திய அதிகாரியையும் கொண்டு இலங்கி வருகின்றது. இதுபோன்றே கிராமாட்சி மன்றத்தினரால் நடாத்தப்படும் இலவச சித்த ஆயுர்வேத வைத்தியசாலையும் இங்கு உண்டு.
நேரடித் தொலைபேசி வசதிகளுடன் கூடிய தபால் நிலையம் தற்சமயம் அமைக்கப்பெற்றுள்ளது. W
கிடைக்கும் மூலவளங்களும் எதிர்காலமும் * பனை, தென்னை இவற்றின் பிரயோசனங்கள் வேண்டிய மட்டும் கிடைக்கும் இத்தீவில் அதனை முழு அளவிற் பயன் படுத்தாதது விசனத்துக்குரியது. வேலையற்ற பலருக்கு உரிய பயிற்சிகள் கொடுக்கும் நிலையங்கள் அமைந்தால், இவற்றைக் கொண்டு இன்று இங்கு குடிசைக் கைத்தொழிலாக நடைபெறும் கடகம், பாய், பெட்டி, சுளகு இழைக்கும் தொழிலை வளப்படுத்திச் சந்தைப்படுத்தலாம். பெண்களுக்கு உள்ளூர் நெசவு நிலையத்தில் உரிய வேதனம், ஊக்கம் தந்து வழிப்படுத்தினுல் - தையற் பயிற்சியில் ஈடுபடுத்தினுல் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைப்பதுடன் தின உழைப்புக்கு வழி செய்தவர்களாகவும் ஆவோம். w -
விவசாய உற்பத்திச் செலவு அதிகரித்துவிட்டது. இவ்வூரி னிலே, மின் வசதி ஏற்படுத்திக் கொடுத்தல் அவசர தேவை யாகும். இதனல் விவசாயச் செலவினங்கள் குறையும். உற்பத்தி

Page 46
76 சப்த
யுடன் உபதொழில்களும் வேறு கைத்தொழில் முயற்சிகளும் ஆரம்பிக்க உறுதுணையாக விருக்கும். அரசினர் கவனம் செலுத்த வேண்டிய விடயமிது. இளைஞர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிப் பதும் அவசியமான கருமமாகும். இங்கு கோழி, கால்நடை களான ஆடு, பசு, தேனி வளர்ப்புகளுக்கு ஏற்ற சூழ்நிலை, மண்வகையுண்டு. அரசு கடன்களை வழங்கி ஊக்கப்படுத்தல் இன்றியமையாதது.
இங்கு ஏராளமாக உற்பத்தியாகும் நாடறிந்த நல்லினப் புகையிலையுடன் நவீன முறைகளை வழிப்படுத்தி, விவசாய நட வடிக்கைகளை ஊக்கப்படுத்தல் வேண்டும். பண்ணை முறைகளி லும் கூட்டுறவுமுறைகளிலும், சிரமதானப் பணிகளிலும் ஆர் வத்தை வளரச்செய்தல் வேண்டும்.
அகில இலங்கையிலும் சப்ததீவுகளிலும் ஆன்மீகத்திலும் அமைதியிலும் புகழ்பெற்ற இத்தீவகத்திற்குச் சகல தரப்பிலிருந் தும் உதவிகள் கிடைத்தால் முன்மாதிரியான கிராமமாக மிளிரும் என்னும் நம்பிக்கை உண்டு.
ܫ
உலோபியிடத்திலே தான் பணம் குவியும், ஏனெனில், அவன் பெயருக்கும் புகழுக்கும் மட்டுமேதான் செலவு செய்வான்.
* . . 来 米 米 தன்மானம், தாயக அபிமானம் இல்லாமற் பணம் தேடியவன் சபை சந்தியில், தன்னையும் அபிமானியாகக் காட்டி நிற்பான். . ஊருக்கு ஒன்று தானும் செய்யாத உலோபி, பேருக்கு நூறு Castiansăr. w
米 。崇 来源 பத்திரிகையிற் படம் வருகிற தென்றல் உலோபி, நித்திரையி லும் பணங் கொடுப்பான்.

தீவு 77
எழுவைதீவு
- திரு. சி. சிற்றம்பலம் ஆசிரியர் அவர்கள்
யாழ்ப்பாண நகரின் தென்மேற்குத் திசையில் அலைகடல் நடுவண் இலங்குவது எழுவைதீவு. இத்தீவு ஊர்காவற்றுறைத் துறைமுகத்திற்கு வடமேற்றிசையில் மூன்றுமைல் தொலைவில் உள்ளது. எழுச்செடிகள் நிறைந்து குடிசனமற்ற காட்டுத் தீவாக ஆரம்பகாலத்திலிருந்தது. எழுச்செடிகள் நிறைந்த தீவாகையால் எழுவை தீவு என்ற காரணப் பெயர் உண்டா யிற்று என்பர். இந்தியாவிலிருந்து கடல்வழியாக ஊர்காவற் றுறைத்துறைமுகத்துக்கு வருபவர்களுக்கு முதற்கண் தெரிவது இத்தீவாகும். இது ஞாயிறு எழுந்திசையில் அவர்களுக்குத் தெரிந்தமையால் எழுவான்தீவு என அழைக்கப்பட்டு வந்து நாளடைவில் எழுவைதீவு ஆயிற்று எனலாம், இதற்கு எடுத் துக்காட்டாக ஞாயிறு உதிக்கும் திசையை எழுவான் கரை எனவும் மறையும் திசையைப் படுவான் கரை எனவும் மட்டக் களப்பு மக்கள் இ ன் றும் வழங் கி வருகின்றமையை உற்று நோக்கி உணரலாம். தீவின் மேற்குக் கடற்கரை பாரிய கற்கள் நிறைந்ததாயுங் கிழக்குக் கடற் கரை மணல் செறிந்ததாயுங் காணப்படுகின்றது.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில், அனலைதீவிலிருந்து மக்கள் இத்தீவில் வந்து குடியேறலாயினர். இக்குடியேற்றம் எப் பொழுது ஆரம்பமாகியது என்பதைச் சரியாக அறிய முடியா திருக்கின்றது. ஆரம்பத்தில் இங்கு குடியேறிய மக்கள் அனை வரும் இந்துசமயத்தினராவர் இவர்களைத் தொடர்ந்து இத் தீவுக்கு மீன்பிடித்தொழில் காரணமாக வந்த இரு கத்தோலிக்க மீன்பிடிக் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். இவர்கள் எங் கிருந்து வந்தனர் என்பது அறியமுடியவில்லை. இவர் களை :படுத்து மண்டைதீவு, மாதகல் ஆகிய இடங்களிலிருந்து கத் தோலிக்க மீனவர்கள் குடியேறினர். 1941ம் ஆண்டு இத்தீவில் 180 குடிகளும் 2000 வாக்காளரும் வாழ்ந்தனர். அரசினராற் கிளிநொச்சிப் பகுதியிற் குடியேற்றத் திட்டங்களை ஆரம்பித்த தும் இங்குள்ள மக்கள் குடியேற்றத்திட்டங்களுக்குப் புலம் பெயரலாயினர். இன்று 88 வீடுகள் மட்டுமே உண்டு. இவற் றில் 25 குடும்பத்தினர் சைவர்களாகும். ஏனையோர் கத்தோ லிக்க மதத்தினர். V− −

Page 47
78 சப்த
தீவின் தென்பகுதியில், இறங்குதுறையில், தொம்மையப்பர் தேவாலயம் அமைந்துள்ளது. இங்கு வரும் மக்களை இத்தேவா லயமே முதற்கண் இருகரம் நீட்டி வரவேற்கின்றது. 1925 இல் இத்தேவாலயத்திற் கத்தோலிக்க மக்களுக்கென ஒரு பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இப்பாடசாலையில் 35 பிள்ளைகள் படிக் கின்றர்கள். 2 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். இத் தேவாலயத்துக்கு வடக்கே துறைமுகத்திலிருந்து கால்மைல் தொலைவில் முத்தன்காடு என்ற இடத்தில் முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தை ஈழத்துத் திருச்செந்தார் என் அழைப்பர். பெண்துறவி ஒருவர் இத்திருத்தலத்தில் எழுந் தருளியுள்ள முருகப் பெருமானை வழிபட்டு வந்தார். இவரை சிவசிவா அம்மையார் என அழைப்பர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவ்வம்மையாரின் சமாதி தீவின் வடக்கே கடற் கரையில் அமைந்துள்ளது. முருகப் பெருமான் மீது பேரன்பு பூண்டவர் திரு. ஆ. சரவணமுத்து என்பவர். இவர் சிலகாலம் கொடிய நோயினுல் வருந்தினுர், தீராதநோய் தீர்த்தருளும் இப் பெருமான்மீது உயிர்வருக்கம், முருகரவங்காரம், முருகராசிரிய விருத்தம் பாடி நோய் நீங்கப்பெற்ருர். 1929இல் இப்பாடல்கள் நூலுருவம் பெற்றன. 1973ஆம் ஆண்டு சரவணையைப் பிறப் பிடமாகக் கொண்டவரும் கரம்பொன் கிழக்கில் வசிப்பவரு மாகிய பண்டிதர் திரு. ச. குமரேசையா அவர்கள் இம் முருகப் பெருமான் மீது திருவூஞ்சற் பதிகம் பாடியுள்ளார். இவ்வால யத்தின் மூலத்தானத்திற் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள வேலிற் பூசைமுடிவில் முருகன் பலவித வடிவங்களில் அடியார்களுக்குக் காட்சி கொடுத்து வருகின்றன். இவ்வற்புதக் காட்சியைக் காண்பதற்குக் குடாநாட்டின் பல பாகங்களிலுமிருந்து நூற்றுக் கணக்கான மக்கள் இன்று இத்தீவுக்கு வந்த வண்ணமாயிருக் கின்றனர். -
புரட்டஸ்த்தாந்து மிசனரிமார் வட்டுக்கோட்டையில் யாழ்ப் பாணக் கல்லூரியைத் தாபித்து 25 ஆண்டுகளின் பின்னர் இங்கு ஒரு பாடசாலையை ஆரம்பித்தனர். இப்பாடசாலையே இங்கு முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலையாகும். பின் னர் 1925 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணம் சைவவித்தியா விருத்திச் சபையினர் ஒரு பாடசாலையைத் தாபித்தனர். இப்பாடசாலை முருகவேள் வித்தியாசாலை என்ற பெயருடன் கனிட்ட வித்தி யாலயமாக விளங்குகின்றது. 60 பிள்ளைகள் வரை படிக்கின் றனர். 3 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றனர். 1960 இல் அர சாங்கம் தனியார் பாடசாலைகளைப் பொறுப்பேற்கும்வரை, மிச னரிமாரின் பாடசாலை இயங்கிவந்தது. அரசாங்கம் பாடசாலை

தீவு 79
களைப் பொறுப்பேற்றதும் இப்பாடசாலை மூட ப் பட் டு இப் பொழுது உபஅஞ்சல் நிலையமாக விளங்குகின்றது.
ஒன்றரை மைல் நீளமும் அரைமைல் அகலமும் கொண்ட இத்தீவு மணற்பாங்கான தரைத்தோற்றமுடையது. நிலம், மணல் செறிந்துள்ளமையால் வான்பயிராகிய பனை நன்கு செழித்து வளரக்கூடியதாக உள்ளது. இதனுல் ஆரம்பத்தில் இங்கு குடியேறிய மக்கள் புங்குடுதீவிலிருந்து பனை விதைகளைக் கொண்டுவந்து பனையை உற்பத்தி செய்தனர். பனைமரக்காடாக இன்று இத்தீவு காட்சியளிக்கின்றது. ஆரம்பத்தில் இத்தீவு அனலைதீவு கிராமாட்சி மன்றத்தினர் ஆட்சிக்குட்பட்டிருந்தது. 1952ஆம் ஆண்டு தனக்கென ஒரு கிராம்ாட்சி மன்றம் அமைத் துள்ளது. தீவின் தென்பகுதியில் வசிப்பவர்கள் கடற்ருெழிலில்
ஈடுபட்டுள்ளனர். வடபகுதியில் வாழ்பவர்கள் பனம்பொருள்
உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர். நார்க்கடகத்துக்கு இத்தீவு பெயர்பெற்றது. நடுப்பகுதியில், சிறிய அளவில் தோட்டப் பயிர்ச்செய்கை நடைபெறுகின்றது.
இங்கு பனை அபிவிருத்திச் சபை தாபிக்கப்பட்டு விஞ்ஞான ரீதியாகப்பனம்பொருள்களை உற்பத்திசெய்யின் மக்களின் பொரு ளாதார வளம் பெருகும். பனை நுங்கிலிருந்து ஜாம், இளம்கிழங் கிலிருந்து குழந்தைகளுக்கான பால்மா, பழஞ்சீனி, பனங்கற் காரம் போன்றவற்றையும் ஒலையிலிருந்து நல்ல தரமுள்ள கடகம், பெட்டி முதலியவற்றையும் உற்பத்திசெய்து, வெளிநாடு களுக்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியைச் சம்பாதிக் கலாம். மீன்பிடித் துறைமுகம் அமைத்து மீனவர்களுக்கு வசதி செய்தால் மீன். கருவாடு உற்பத்தியைப் பெருக்கலாம், கோழிப் பண்ணை, ஆட்டுப்பண்ணைகளை நடாத்துவதற்கும் மிகவும் சிறந்த இடம். இவ்வாருன தொழில் அபிவிரு த் தி களை ச் செய்து கொடுப்பின் இங்குள்ள மக்கள் பிறஇடங்களை நாடிச் செல்ல மாட்டார்கள். தொகுதிப் பிரதிநிதி கருணைஉள்ளம் கொண்டு
W கடைக்கண் வைப்பாராளுல் ஊரைவிட்டு வெளியேயோன குடும்பங்களும் திரும்பவும் வரக்கூடிய செழுமை உண் டாகும்.
துடியாய்த் துடித்து லயக் லபக் என்று பனம்தேடி வட்டிக்குக் கொடுத்தவன், ஒருசில மாதத்தால் முதலையும் இழந்து முட் LTSDTa Tür.

Page 48
80 சப்த
LLLLSSSLLMLLLLLLLLGLLLLLLLSLLLLLSGLLLLLLLSAieSeLLLAALLLLLLLASLLSSeSLLLLLSSJJASHHHS
மாணவமணிகளுக்கு. • தீவகன்”
LSLLLSLSLLLLLLLAeiSLLLLLLSLLLLSLSSSLLLLSLLSLLAAAAALLLLSLMMSLLqSLLSLLLLLSLLLLLSLLLSqLLLLLSLLLLSSSqqq
மாணவமணிகளே! கள்ளங்கபடமில்லாத தூய உள்ளங் கொண்ட உங்களுக்காக, உங்களின் வருங்கால நல்வாழ்வுக் காக, ஒரு சில நல்வார்த்தைகள். துள்ளிக்குதிக்கும் பள்ளிப் பருவமே மனித வாழ்க்கையின் மகத்துவமான, மாசுமறுவற்ற துன்பந் துயரமறியாத, தொடராத, உத்வேகமான, உற்சாகமான உல்லாசமான, உறவாடும் எல்லோரின் உள்ளத்தையும் கவரக் கூடிய, கொள்ளை கொள்ளக்கூடிய, கள்ளங்கபடமற்ற வெள்ளை யுள்ளங்கொண்ட, இன்பம் நிறைந்த இனிமையான காலம். இதை உங்களின் இதயத்தில் வைத்துத் திடமாக நம்பி நடவுங்கள்.
இக்காலத்தை நீங்கள் வீணே போக்கி அரசியல்வாதி களாலோ, கட்சியாளிர்களினலோ, கொள்கைவாதிகளாலோ, சுயநலமிகளாலோ, சுரண்டி வாழ்வோராலோ ஏமாற்றப்படாத வர்களாக, அடக்கம், அமைதி, நல்லொழுக்கம், கீழ்ப்படிவு குருவை, பெரியோரை பிதா மாதாவைக் கனம் பண்ணிப் போற்றி வாழ நல்லனவற்றைக் கைக்கொண்டு, நல்லறிவைத் தேடி, வருங் காலம் படிப்பால் உயர்ந்து, தாயகத்திற்கு நல்லவர்களாய் வல்லவர்களாய் ஒளிவீசிப் பிரகாசிக்க வேண்டும் என எதிர்பார்க் கிறேன். வீணரின் பின்னே சென்று நேரத்தைக் காலத்தை கழிப் பதும், வேதனை தரும் விபரீதமான வீணன செயல்களில் ஈடு படுவதும், வயதுக்கும் உங்கள் அறிவுக்கும் அப்பாற்பட்ட அடக்க ஒடுக்கமில்லாத அமைதியற்ற கருமங்களில் ஈடுபடுவதும் கூட்டங்கள் கும்மாளங்களிற் பங்குபற்றுவதும், பெற்ற தந்தை தாயாரும் மட்டுமன்றி, அறிவைத் தந்த குருவுக்கு மட்டுமன்றி பிறந்த தாயகத்திற்குமே அளப்பரிய கவலையையும் நஷ்டத் தையும் கொடுக்கும். இதைவிட, கூடுதலான கஷ்டத்தையும் நஷ்டத்தையும் கவலையையும் உங்கள் வாழ்நாள் பூராவுமே நீங்களும் அடைய நேரிடும். அன்றியும், நம்நாட்டில் வருங்கால வல்லவர்களும், நல்லவர்களும், அதிஷ்டமிருந்தால் நாடாளுபவர் களும் நீங்களே என்பதை நினைவில் இருத்துங்கள். இப்படியான உங்களுடைய பரிசுத்தமான பள்ளிப்பருவம் உங்களாற் பாழாக் கப்படாமலும், மற்ருேர்களாற் பாழ்படுத்தப்படாமலும் இருக்க வேண்டும் என்பதையும் நெஞ்சில் நினைவிலே இருத்துங்கள்.

தீவு 8.
இவற்றிற்கு மாருக நீங்கள் வளருவீர்களேயானுல் மணம் குன்றிச் சருகான மலராய், ஒளியிழந்து மதிப்பற்ற வைரமாய், ஒலி குன்றித் தேடுவாரற்ற மணியாய், நாதங்குன்றி நாடுவாரற்ற நரம்பாய், மலரில்லாத பாழடைந்த சோலையுரய், தேடுவாரற்ற திரவியமாய் ஆக்கப்பட்டு மற்ருேரால் இகழப்படுவீர்கள். எனவே மாணவமணிகளே மணம் பரப்பும் மலர்களே! கேளுங்கள். அன்பாயிருங்கள். அடக்கமாயிருங்கள். பண்புள்ள வர்களாயிருங்கள். பகுத்தறிவாளர்களாயிருங்கள். பரோபகாரி களாயிருங்கள். கருணையுள்ளங் கொண்டவர்களாக இருங்கள். என்றும் இன்பமாய் இருங்கள். இனிமையாய்ப் பேசுங்கள். மற்றேர் மனதைக் கவரப் பேசுங்கள். உங்கள் பேச்சு ஒவ் வொன்றும் மணியாயும் மலராயும் உதிரவேண்டும், இறைவனைத் தேடுங்கள். ஏழைக்கு இரங்குங்கள். பணி செய்யுங்கள். பணிந்து செய்யுங்கள்; ஆளுல், பலனை எதிர்பாராது செய்யுங்கள். பயந்து செய்யாதீர்கள். படித்து மகிழுங்கள். படிப்பிலே மகிழுங்கள் இரக்கம் காட்டுங்கள். ஏமாந்துபோகாதீர்கள். அன்பாய் நடவுங்கள். அடிமையாகாதீர்கள். சுத்தம் தூய்மை உள்ளோ ராய், உண்மை நேர்மையுள்ளோராய், ஊக்கம்` உற்சாகம் alsir ளோராய் வளருங்கள். சுறுசுறுப்பாய் இருங்கள். படபடப்பாய் இராதேயுங்கள். கொடையாளிகளாய் இருங்கள். ஒட்டாண்டி யாகாதீர்கள். இரப்போருக்குக் கொடுங்கள். இரக்காதீர்கள். நல்லவரை நேசியுங்கள்; அல்லாதவ்ரை வெறுக்காதீர்கள். காந்தி, நேரு, நேத்தாஜி, இராஜாஜி, கென்னடி, சாஞ்சிராணி, சருேஜினிதேவி, இவர்களைப் போன்ற தூய நல்ல தேசத் தலை வர்களின் சரித்திரங்களைப் படியுங்கள். இராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், நாவலர் போன்ற சமய அறிஞர் களின் புத்தகங்களைப் படியுங்கள். வள்ளுவன், கம்பன் இளங் கோவன், ஒளவையார் தந்த இன்னும் நல்ல நல்ல பாடப் புத்தகங்களைப் படியுங்கள். சமூக, சமய தேசீய வீரர்களா குங்கள். வருங்காலம் தாயகமான நம் தீவகம் உங்கள் எல்லோ ருடையவும் மாசுமறுவற்ற சேவையை எதிர்பார்த்து ஏங்கித் விக்கிறது. எனவே தீவகமெல்லாம் ஒவ்வொரு திருப்பதியா
ட்டும். இதுவே என் பணிவான வேண்டுகோள். ' ,
எவஞெருவன் இறைவனை நினைந்து ஒர் அடி முன் வைக் கின்றஞே, அவனை நோக்கி இறைவனே பத்தடி முன்னே இறங்கி வருவான். * : *
12

Page 49
82 சப்த
தீவகமே
தீண்டாமைக்குத் தீ வை உதவகன்
L0LLL0000000LzL00SzLL0zz0LLLLLLL0LLLLLLLLL0L0L00L0LLLL
'இந்துமதம் செத்துத் தொலைந்து போளுலும் போகட்டும்
தீண்டாமை உயிருடன் இருக்கக்கூடாது”
- மகாத்மாகாந்தியின் உபவாச அறிக்கை 1932.
தாழ்த்தப்பட்டவர்களென்றும், தீண்டாதவர்களென்றும், கீழ் சாதியினர் என்றும் கணிக்கப்பட்டு அடக்கி ஒடுக்கி விலக்கி வைக்கப்பட்ட தமிழ்மக்களின் ஏகபோக உரிமைக்குரல் இன்று எங்கும் எதிரொலிப்பதைக் காணலாம். அதேபோன்று தம்மை உயர்சாதி மக்களென்று பறைசாற்றி வந்தவர்களது பெயர்களும் அவர்களுடைய போலிவேஷங்களும் அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. வகுப்புணர்ச்சிகளிலே ஊறிக்கிடந்த ஒருசில பேர் வழிகள், தம்மைப் பெருந்துரைத்தனப் பிரதிநிதிகளாகப் பட்டை நாமம் தீட்டி விளம்பரங் காட்டிப் போற்றவைத்துப் போற்றப் பட்டு வந்தது அந்தக் காலம். ஆளுல் இப்பேர்ப்பட்ட பேர் வழிகளுக்கு இன்றும் தூபம் போட்டுத் தீபங்காட்டி உடுக்கை யடிக்க ஒரு சில பேடிகள் போலிகள் கைக்கூலிகள் முன்வந்து கொண்டே இருக்கிருர்கள். இது, இனி வருங்காலம் நிலைக்காது. நிலைக்கவும் கூடாது. சத்தியம் தவருத உத்தமர்கள் போற் காட்டி ஊரவர்களை ஏமாற்றி ஒரு சிலரின் கட்சியாளர்களாகவும் கைக்கூலிகளாகவும் வாழ்க்கை நடாத்தித் தொண்டர் தோழர் தியாகிகளாகி நாடாளும் நம்பூதிரிகளாய் இன்றும் நாட்டை ஏமாற்றும் ஜாலவித்தைக்காரர் சாதிமான்களாய்ச் சாதி இந்துக் களாய் வேஷம் போடுகின்ருர்கள். இனிமேலும் வருங்காலம் தீண்டத்தகாதவர்கள் என்று ஒரு சாதி எம் இந்துமதத்தில் தமிழர் சமுதாயத்தில் நம் தீவகத்தில் இருப்பார்களாகுல் அவர்கள் வெட்கப்படவோ துக்கப்படவோ வேதனைப்படவோ வேண்டியதில்லை. ஆலயம் வைத்துப் பூசைகள் செய்யும் ஒரு சில அர்ச்சகர் கூட்டங்களும் உயர்சாதிகளெனத் தம்மைத்தாமே மதிக்கும் இந்துக்களுமே வெட்கப்படவேண்டும். அவர்களே வேதனைப்பட்டு நாணித் தலைகுனியவேண்டும். இன்றைய நிலை யிலுள்ள சிறுபான்மைத் தமிழர் மத்தியில் உள்ள சகோதரர் களை உயர்சாதி இந்துக்கள் எனப்படுவோர் இனிமேலும் பிரித்து வைப்பார்களானல் கேவலம் நாளடைவில் தமிழர் சமுதாயமே

தீவு 83
உருக்குலைந்து தேய்ந்து சின்னபின்னமாகும் என்பதை நன். குணரட்டும். எனவே ஒடுக்கப்பட்டவர்களாகிய தங்கள் உடன் பிறந்த சகோதரர்களை வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் கை தூக்கி விட முன்வந்து தம்வாழ்வையே அர்ப்பணஞ் செய்து வரும் சீர்திருத்தக்காரர்களையும் அவர்களின் செய்கைகளையும் திறமைகளையும் பாராட்டாதிருக்க முடியாது.
தீண்டாமையை எதிர்த்துப் போரிடுகையில் மனிதவர்க் கத்தை அதிலும் ஜாதி இந்துக்களைப் பற்றிக்கொண்டுள்ள அசுத்தத்தை அழிக்கவே நான் முற்படுகிறேன். 6TLD.3} இயக்கத்திலும் எமது தருமத்திலும் இந்து சமூகத்திடமும் மனிதசுபாவத்திலும் உலகமக்களின் ஆதரவிலும் சர்க்கார் அனுதாபத்திலுங்கூட எனக்குப் பூரண நம்பிக்கையுண்டு. எனது கூக்குரல் ஆண்டவன் சந்நிதானத்தையுங்கூட அதிரச்செய்யும் என்றே எண்ணுகிறேன். - 20 - 9 - 1932, மகாத்மா காந்தி." مي
“தாழ்த்தப்பட்டவர்களாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தாழ்வு மனப்பான்மையுடன் வாழும் அரிய சகோதரர்களே! தலை நிமிர்ந்து வாழுங்கள். மதிப்புக்கு மதிப்பளியுங்கள். அன்புக்கு அடிபணியுங்கள். வெட்கப்படவோ துக்கப்படவோ வேதனைப் படவோ வேண்டியவர்கள் நீங்கள் இல்லை. மக்களுக்கு மக்கள் செய்யும் மகத்தான சேவைகளையே செய்கின்றீர்கள். தொடர்ந் தும் செய்யுங்கள். ஏன் மனங் கூச வேண்டும்? செய்யும் தொழிலே தெய்வம். திறமையே உங்கள் செல்வம். எனவே தொடருங்கள் உங்கள் பணியை. தன்தொழில் விட்டவன் சாதியில் கெட்டவன். தாழ்ந்த தொழில் என்று ஒன்று உலகில் இருந்ததில்லை இருக்கப் போவதுமில்லை. எ ல் லா ம் சமூகப் பணியே." مير
“தாழ்த்தப்பட்டவர்களும் அறியாத மூடர்களும் ஏழைகளும் எழுத்து வாசனையற்றவர்களும் தோட்டிகள் எனப்படுவோ ரும் உன் உடன் பிறந்த சகோதரர்கள். உன் இரத்தக் கலப்புள்ளவர்கள் என்பதை மறவாதே.” ክ
- சுவாமி விவேகானந்தர்
தீண்டாதார் தீண்டித்தரும் கள்ளுக் குடிக்கலாம். அவர்கள் தீண்டும் மச்ச மாமிசம் புசிக்கலாம். கிணற்று வேலை முதல் வீட்டுவேலை வரை மேசன் வேலை, கூலி வேலை, தச்சுவேலை, விவ சாய வேலைகள் எல்லாம் செய்விக்கலாம். அப்போ தீண்டாமை

Page 50
84 சப்த
யும் இல்லை. அவர் வேண்டாமையும் இல்லை. தன் தன் தேவை முடிந்தபின் தீண்டாமையென்றும் தீண்டாதாரென்றும் கீழ் சாதியென்றும் பேதமைகாட்டிப் பிறப்பிளுல் ஒன்றுபட்டவர்களை பிரித்து விலக்கி வைத்த சமுதாயம் தமிழர் சமுதாயம் மட்டுமே.
உயர்சாதிகளால், ஜாதிமான்களால் சாதிக்க முடியாத af(p தாயத் தேவைகள் அத்தனையும் செய்து முடிப்பவர்தாமா? தீண் டாதோரும் கீழ்சாதியினரும். s
'எனது ஒவ்வோர் எலும்பும் தசையும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காகவே ஆக்கப்பட்டிருக்கின்றது. A jë as ஏழை வாயில்லாச் சீவன்கள் வாழவேண்டியதற்காக என் உயிரையே தியாகஞ் செய்ய முகமலர்ச்சியோடு சாக நான் தயாராக இருக்கிறேன். என்னையும் தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவனுகவே எண்ணுகிறேன். தீண்டாமை என்னும் இக் கொடிய வழக்கத்தை ஒழித்துப்போட என்னிடமுள்ள சிறந்த வஸ்துவையும் நான் தியாகஞ்செய்யத் தயாராக இருக்கிறேன். ஆனல் என் உயிரைவிட உயர்ந்த சிறந்த வஸ்து என்னதான் இருக்கிறது? ஆதலால் தீண்டாமைப் பலிப்பீடத்தில் என்னையே அர்ப்பணிக்கின்றேன். பிறப்பி ஞல் நீங்கள் தீண்டத்தகாதவர்களாக இருக்கின்றீர்கள். என்னுடைய சுய இஷ்டத்தினுலேயே நானே என்னைத் தீண் டத் தகாதவளுகப் பாவித்துக் கொள்ளுகிற்ேன்."
- மகாத்மா காந்தி எனவே தீவகமே! வருங்காலம், சாதிப் பிரிவினையால் தீவ கம் சீரழியாமல் தலைநிமிர்ந்து வாழவேண்டுமாளுல் சாதிப் பிரி வினை என்னும் பிடிவாதம் வேண்டாம். தீண்டாமை வேண் டாம். உன்னினத்தை, உன் சமுதாயத்தை, உன் சகோதரர்களைத் தீண்டாதாராக்கினது போலத் தீண்டவும் கூடியவர்களாக ஆக் கிக்கொள்ளவும் உன்னையே நீ பண்படுத்திக்கொள். சாக்கடை நீர் என்பதற்காகச் சமுத்திரம் ஏற்காது விடுகிறதா? மாற்றன் தோட்டத்து மல்லிகை என்பதஞல் மணங்குன்றிப் போகிறதா? கிடையவே கிடையாது. ... ༨
*சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல் லல் பாவம்" உயிர்களிடத்தில் அன்பு வேண்டும். தெய்வம் உண்மையென்றுதானறிதல் வேண்டும். தீண்டாமையின் கொடு மையால் நம் சமுதாயம் பாழடையாமல் இனியாவது ஒன்று பட்டு உலகிலே ஒளிவிடக்கூடிய ஒரு சமுதாயமாய் நாம் இணைந் திட வேண்டுமென வேண்டுகின்றேன். . . '

தீவு 8
புங்குடுதீவுப் பேச்சு வழக்கிற் சில சொற்கள்
புலவர் ஈழத்துச் சிவானந்தன்
புங்குடுதீவு மக்களின் பேச்சுவழக்கி லுள்ள சில சொற்கள் பொருள் பொதிந்த
இவர்களுடைய உரையாடல்களில் வரும் உலகியல் வழக்கு வாக்கியங்கள் நவீன இலக்கியகாரர்களுக்கும் சொல்லாராய்ச்சி அறிஞர்களுக்கும் பெருவிருந்தாய் விளங்கக்கூடியன.
சொற்களைப்பார்ப்போம்:-
காரியங்கள் கைகூடுவதற்கு அதிஷ்டம் வேண்டுமென்பதற்கு *நிருபம்" வரவேண்டும் என்பர். அவசரக்காரரைப் பார்த்து *அத்தடிப்படுகிறயே" - 'அரிசி அள்ளிய காகம்மாதிரி நிற்கி றியே” என்று கூறுவர். பிறரிடம் ஏதும் பெறுவதை மரியாதைக் குறைவானது எனக் குறிக்க “சங்கேனம்’ என்று கூறுவர். பெரிய கஷ்டத்தை "இம்மிசை" என்பர். சற்றுத் தள்ளியிரு என்பதை " நழுக்கியிரு” என்ற சொல்லாற் குறிப்பிடுவர். அதிக ஆசையை "அம்புலோதி” என்று கூறுவர். கோபத்தில் ஒருவரைத் திட்டும்போது -“அடியறுந்து போவான்’-'போக் கறுந்து போவான்" - "கோதாரியில போவான்’ என்ற பதங் களை உபயோகிப்பர். ۔ ۔ ۔
மறதியை " அயத்துப்போனேன் " என்றும் - குப்பையைக் ‘கஞ்சல்” என்றும் குறிப்பர். கட்டுப்பாட்டுடன் கூடிய வேத னையா என்பதை " கட்டாய்க்கினையா?” என்று கேட்பர். இப் படிப் பலப்பல சொற்களைக் காட்டலாம். இடமின்மை தடங்க லாக இருப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

Page 51
86 - ar's
புங்குடுதீவு மக்களின் பேச்சுவழக்கினூடே அவர்களுடைய பழக்கத்தையும் பண்பாட்டையும் ஆராய்ந்து பார்ப்பது மிக வும் பயனுற்ற ஆய்வாகும்.
புலனெறி வழக்கிற் புலமைகள் புலப்படுத்தல் போலே உல கியல் வழக்கில் உள்ளங்கள் புலணுகும்.
புங்குடுதீவு மக்களின் உள்ளங்களில் உள்ள உணர்வலைகளிற் காணக்கூடிய இயல்பூக்கங்களை அவர்களுடைய பேச்சுவழக்கங் களையும் நடைமுறைகளையும் வைத்துக் கணித்தால் உறவுகொள்ள வும் கூடிவாழ்ந்து கொண்டாடி மகிழவும் அவர்களுக்குள்ள விருப்பங்கள் விளக்கங்களாகும்.
இறைவன் படைப்பில் எவன் அன்பு நேசம் பாராட்டுகின்றகுே அவன் இறைவனைத் தேடி அலைந்து வழிபடித்தேவையில்லை.
料 米 م%
இறைவனுற் படைக்கப்பட்டி உயிர்களை நேசி. இறைவனுல் நீ நேசிக்கப்படுவாய்,
# 米
மனிதர்களாகப் பிறந்துவிட்டால் மட்டும் போதாது மனிதர் களாக வாழவேண்டும். r
N

புங்குடுதீவு-இவன்
யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென் மேற்கே 18 மைல் தூரத் தில் உள்ளது புங்குடுதீவு. தமிழகத்தில் உள்ள பூங்குடிக் கிராம மக்கள் குடியேறியமையால் பூங்குடி என்றும் திருப்பூங்குடி என்றும்; அக்காலத்திலேயே செல்வம் கொழித்திருந்தமையால் பொன்கையூர் என்றும், புங்கை மரம் நிறைந்த காடாக இருந்த மையாற் புங்குடுதீவு என்றும் அழைக்கப்பட்டதாகப் பல கதைகள் உண்டு. w
கதைகள் எப்படியானுலும் நாற்புறமுங் கடல் சூழ்ந்து கிழக்குமேற்காக 5 மைல் நிலத்தையும் வடக்குத் தெற்காக 3 மைல் அகலத்தையும் கொண்டு அந்தர்படிபேஸ் "ப" வடிவம் கொண்டதாய் அமைந்துள்ளதே புங்குடுதீவு. சகல தீவுகளு டனும், யாழ் நகருடனும் பின்னிப் பிணைந்து தொடர்பினையும் உறவினையுங் கொண்ட தீவாய் உள்ளது.
ஏறக்குறைய 20000 மக்களை கெண்ட புங்குடுதீவு 10000-க்கும் மேற்பட்டவாக்காளரைக் கொண்டுள்ளது.
பன்னிரண்டு வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு கிராம சபையின் நிர்வாகத்தில் உள்ளது. அன்றியும் கிழக்கு, மத்தி, மேற்கு என மூன்று கிராம சேவகர்ப் பிரிவையுங் கொண் டுள்ளது.
கல்வி
இத்தீவின் சிறப்பைச் சுருக்கிக் கூறின். பன்னிரண்டு வட்டாரங்களையும் உள் அடக்கி 15 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் ஒன்று ஊரின் மத்தியில் மகாவித்தியாலயமாய் உள்ளது. பதினைந்து பாடசாலைகளிலும் 3500 க்கு மேற்பட்ட மாணவர் பயில்கின்றனர். 105 ஆசிரியர்கள் கடமையாற்று கின்றனர். புங்குடுதீவு மக்களின் கல்வி மோகத்திற்கும் ஆர்வத் திற்கும் எடுத்துக்காட்டாக 15 பாடசாலைகளும் 3500 மாண வரும் போதுமானதே. ஆளுல் மாணவரின் அறிவுப் பசிக்கு 105 ஆசிரியர்கள் போதுமா என்பதை அறிஞர் உலகும், அதிகாரி களும், அரசினரும், தேசிய மன்ற உறுப்பினரும் சிந்தித்தே யாகவேண்டும். அல்லாமலும் கல்வியே செல்வம் என்ற கருத்தினைக் கொண்ட மக்கள் கல்விக்காக யாழ்நகரை நாடிக்

Page 52
88 F's
கல்லூரிகளிலும் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்து தம்மக்களைச் சேர்த்துள்ளனர். 300 க்கு மேற்பட்ட குடும்பங்கள் தாயகத்தையே மறந்து யாழ்தகரையே வதிவிடமாய்க் கொண் டுள்ளனர்.
முன்னெருகாலம், இன்று வட்டுக்கோட்டையில் ஒளிகொடுக் கும் கல்லூரியும், வேலணை மகாவித்தியாலயமும் புங்குடுதீவுக்கு அத்திவாரமிட வந்ததையும், நாட்டுப்பற்றுள்ள நயவஞ்சகர் சிலர் ஒட்டித் துரத்தியதையும், ஆர்வம் உள்ள தாயக அபி மானம் உள்ள சிறுவர்கள் தந்தை தாயாரிடம் கேட்டறிதல் நன்று. ° ४ ५
அவை இரண்டும் புங்குடுதீவில் இடம்பெற்றிருக்குமால்ை இயற்கையில் முதல்தரமான கல்விமான்களையும், அறிஞர்களையும், பொறியியலாளர்களையும், டாக்டர்களையும், சட்ட மாமேதைகனை யும், பட்டயக்கணக்காளர்களையும், பல்லாயிரம் பட்டதாரிகளை uyuh உற்பத்தியாக்கி இருக்கும் என்பது திண்ணம்.
FDLüb
புங்குடுதீவில் இன்று எங்குமேயில்லாத வகையில் 15 க்கும். மேற்பட்ட சைவக் கோயில்களும் சிறு வைரவர், ஐயனுர், னிமார் கோயில்களும் ஒரு கத்தோலிக்கத் தேவாலயமும் ரு புரட்டஸ்தந்து மதப் பாதிரிக் கோவிலும் உண்டென்றல் புங்குடுதீவு மக்களின் கடவுள் நம்பிக்கையையும் சமயப் பற்றை றையும் எழுதியா தெரிய வேண்டும்?
பொதுநிலையங்கள்
1953 க்கு முன்னர் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டு, கீழ் நிலையிலே இருந்த இத்தீவு 1953 க்குப் பின்னரே கல்வி, சுகா தாரம், போக்குவரத்து தபால் தந்திச் சேவைகள் போன்ற பொதுத் தேவைகளைப் பெற்று அரையும் குறையுமாய் வளர்ந்து வருகின்றது இவற்றுள் இன்றைய நிஜலயிற் போக்குவரத்து வசதியும், தபால் தந்திச் சேவையுமே மக்களின் மனம் ஓரள வாவது மகிழ்ச்சியடைய திருப்தியடையக்கூடிய சேவையைச் செய்கின்றது A x
69Cl5 பஸ் வண்டியைக் காணமுடியாமல் அங்கலாய்த்த மக்கள் இன்று மணிக்கொரு ஸ் வண்டியையேனும் காணக் கூடியதாய்ப் பஸ் சேவை உள்ளது

தீவு 89
ஓர் அஞ்சலகமும் அதிபர் ஒருவரும் இரண்டு தபால் சேவகர் களும் சேவை செய்த அன்றைய புங்குடுதீவுக்கு இன்று ஒர் அஞ்சலகமும் ஐந்து உப அஞ்சலகங்களும் தொலைபேசியும், பல அதிபர்களும் பல சேவகர்களும் சேவை செய்யக்கூடுமாளுல் புங்குடுதீவின் வளர்ச்சி எவ்விதம் வீறுநடை போடுகின்ற தென்பதை எளிதிலே உணரமுடியும். இவையெல்லாம் அவ் வூரைத் தாயகமாகக் கொண்ட மக்களின் ஊக்கத்தாலும் இடை விடா உழைப்பாலும், தியாகத்தாலுமே வளர்ந்தன எனலாம். மக்கள் வங்கி, கிராமிய வங்கி, கூட்டுறவுப் பண்டசாலைகள், கோடு, கிராமக்கோடு, நூல் நிலையம், நெசவு நிலையம், சனசமூக நிலையங்களும் பல கழகங்களும் தோன்றி ஊரின் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்து வருகின்றன.
அண்மையில் தோன்றிய ஆயுர்வேத வைத்தியசாலையும் மக்களுக்கு அரும் சேவை செய்கின்றது.
செல்வமும் செந்தமிழும் தேன்மொழியுமாய் வளரும் புங்குடு தீவுக்கு இன்று மின்னுெளி மேலும் மெருகூட்டுகின்றது.
விளையாட்டு மைதானம்
ஊருக்கு மத்தியிற் சகலருக்கும் பொதுவாக ஒரு மைதானம் உண்டு, இதுவே ஊரினதும், மாணவர்களினதும் வளர்ச்சியை யும் விளையாட்டு ஊக்கத்தையும் கொடுக்கின்றது. மழை காலம் தண்ணிர் நிறைந்தும் சேறும் சுரியுமாகவும் கோடையிற் புழுதி யும், தூசியும் நிறைந்தும் காணப்படும். பற்ருக்குறைக்கு அருகில் கள்ளுக் கோப்பிறேசன் உண்டு. இதை இதுவரை கவனிப்பார் யாருமில்லை. கவனிக்க வேண்டியவர்களுடைய கடைக்கண் பார்வையும் இல்லை.
துறைமுகம்
பிரதான துறைமுகங்களாக மடத்துவெளி, குறிகாட்டுவான், கழுதைப்பிட்டி, புளியடி, குளத்துவான் எனப் பல அதுறை முகங்கள் அக்காலத்தில் இருந்தன. இன்ருே குறிகாட்டுவான், கழுதைப்பிட்டியே புழக்கத்தில் உள்ளன. மற்றவை மங்கி மறைந்து கொண்டே போகின்றன.
13

Page 53
90 síðas
விவசாயம்
ஆதியில் விவசாயம், கால்நடை வளர்ப்பாற் செழித்திருந்த தீவு இப்போ வர்த்தகம், உத்தியோகத்தால் வளர்ந்துகொண்டு வருகின்றது. ஆங்காங்கே வேளாண்மை, விவசாயச் செய்கைக்கு ஏற்ற நிலம் உண்டு. இருந்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே செய்கையில் ஈடுபட்டுள்ளனர். பிரயாசைக்கேற்ற பலனை அடைவது கஷ்டமாகவே உள்ளது. காரணம் ஊக்கக் குறைவு, உரக்குறைவு, நீர்க் குறைவு. இவை ஒன்றுபட்டு உற்சாக ஊக்கம் கொண்டால் பலன் அடைய முடியும்.
கடல் வளம் புங்குடுதீவு நாற்புறமும் மீன்பிடித்தலுக்கு மிகவும் திறமான கடலாய் அமைந்துள்ளது. வருடத்தின் எல்லாக் காலங்களிலும் மீன் பிடிக்கமுடியும். ஓரளவில் ஒதுக்கான குடாக்கடலாக அமைந்துள்ளபடியால் மீன்பிடிக்கு ஏற்ற சகல வசதிகளும் ஒருங்கே அமைந்துள்ளது.
மாரிகாலமாளுல் நூற்றுக்குமேற்பட்ட வள்ளங்களும் கட்டு மரங்களும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளும் மீன் பிடித்தல் கருவாடு பதனிடல், ஐஸ் இட்டுப் பெட்டிகளில் அடைத்தல் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் காட்சி கண்கொள் ளாக் காட்சியாகும். இத்தொழிலுக்காக நெடுந்தீவு, கரையூர், பாஷையூர், மயிலிட்டி, மாதகல் முதலிய இடத்தில் இருந்து தொழிலாளர் வந்து முகாமிட்டு இருப்பர்.
ஊருக்குள் ஓடைக் கடல், பரவைக் கடல், குடாக் கடல் அமைப்புள்ளபடியால் செயற்கை மீன், இருல் வளர்ப்புக்கு ஏற்ற வசதியும் உண்டு. s
ஆனல், இவ்வசதிகள் இருந்தும் உள்ளூர் மீன்பிடியாளரோ பாவனையாளரோ பயன் அடையமுடியாமல் இலவுகாத்த கிளி யாய் ஏங்கித்தவிக்கின்றனர். இவ்விருபாலார் ஏக்கத்தையும் உள்ளூர் மக்களாலும் கிராமசபையாலுமே நிவிர்த்தி செய்ய முடியும், செய்தே ஆகவேண்டும், வழிவகையும் a loor G.
வாணர் பால்ம் ,
இலங்கையிலேயே மிகப் பெரிதும் 3 மைல் நீளமும், உறுதியானதும் இதுவரை சிதைவுருததுமான இப்பாலத்தை

தீவு 91.
அமைக்க தன் உடல், பொருள், ஆவியையே அர்ப்பணித்து வெற்றிகண்ட பெரிய வாணரின் சேவையாலும் அண்ணனின் அபிமான சேவையே தன் அரும்பணி என மதித்து உறுதியான உலக சின்னம்போல் அமைத்த சின்ன வாணரின் சேவையாலும்
தாயக அபிமான வீரனைத் தோற்கடித்தாலும், அவன் நாமம்
துலங்கவேண்டிய உதவிகளை வென்றெடுத்துத் தன்காலத்
திலேயே திறந்து வைத்த பெருமையைத் தேடிக்கொண்ட அக்காலப் பாராளுமன்றப் பிரதிநிதி திரு. ஈ. உ. தம்பியையா அவர்களின் உழைப்பினுலும் உருவானதே * வாணர் பாலம் ”. இப்பாலம் 1353 ம் ஆண்டு திறக்கப்பட்ட பின்னரே புங்குடுதீவு சகல வளர்ச்சியாலும் வீறுநடைபோட்டு வருகின்றது.
இன்று இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து மக்கள் கார், பஸ், லொறிகள் மூலமாய்ப் புங்குடுதீவுக்கும், நயினுதீவு நெடுந்தீவுக்கும் வந்துபோக இப்பாலமே மூலகாரணமாய் உள்ளது. வாணர் மறைந்தாலும் வாணர் பாலம் மறையாது. வாணரை மக்கள் மறந்தாலும் பாலம் மறக்காது. காலமெல்லாம் புங்கை நகர்க் கதை சொல்லும் பாலத்தை அமைத்த வாண ருக்குச் சிலே செய்து நன்றிக்கடன் கழிக்கும் நாள் எந்நாளோ!
சென்ற இடமெல்லாம் சிறப்புடன் வாழும் தேசிய அபிமானம் மிக்க புங்குடுதீவு மக்கள் அயராத முயற்சியால் உயர்ச்சி அடைந்து தாயகத்தின் புகழைத் தரணியெல்லாம் பரப்புவார் களாக. -
தீவகம் சிறக்க நீர்வளம் வேண்டும் நீர்வளமும் நிலவளமும் குன்றியமையாற் பொருள்வளமும் குன்றிப் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிகாணுது வருந்தும் எம் தாய்க மக்களே! வருங்காலத்திலாவது நீர்வளம் பேண ஒரு சில வழிமுறைகளையாவது நாம் கைக்கொள்ள வேண்டியவர் ssarartfu e-efrGarm b
எமது தீவகங்கள் கடல் மட்டத்தில் இருந்து ஓரிரு அடிகள் மட்டுமே உயர்ந்துள்ளன. இதனுற் பெரும்பாலும் தீவகங்கள் உவர்நீருக்கு உறைவிடமாகவே உள்ளன. கடல் அரிப்பினுலும் கடல்நீர் உட்பிரவேசிப்பதாலும், மழைநீர் மண்ணையும் அரித் துக் கடலுட்சேருவதாலும், தீவகம் மண் வளர்ச்சி குன்றி உவர் நீர் செறிந்துள்ளதாய்க் கடல் மட்டத்திற்கே தேய்ந்து சொண் டு

Page 54
92 & 5
வருகின்றது. எனவே, வருங்காலம் எமது சமுதாயத்திற்கு இது மாபெரும் ஆபத்து என்பதை இன்றைய நாமே உணரக் கடமைப்பட்டுள்ளோம்.
ஆகவே நீர்வளம் பேணவேண்டுமானுல், நிச்சயமாகவே மண் வளம் பேண வேண்டும். மண்வளம் இருந்தால்தான் நீர்தேங்கி நிற்கும். நீர்தேங்கி நின்ருல்தான் மண் செழிப்பாய் ஈரலிப்பாய் இருக்கும். இவை இரண்டும் குறைவற இருந்தால்தான் மரம் செடிகளும், புல்பூண்டுகளும், தளிர்க்கும்; குளிர்மை தரும்.கால் நடைகளுக்கு உணவு கிடைக்கும். அவைகளால் நமக்குப் பலன் கிடைக்கும்; நாடு செழிக்கும்.
வருடத்திலே 40 தொடக்கம் 60 அங்குலம் வரை மழையைப் பெறும் தீவகங்கள் வருடம் பூராவும் வரட்சியுடனும், செழுமை குன்றியும் குடிநீர் இன்றியும் இருப்பதற்குக் காரணம் எமது அறியாமையும் அலட்சிய மனப்பாங்கும், த்ேசிய அபிமானக் குறைவும், வீண் விரயமும், தேவைக்கேற்ப பாவனை செய்யாமை யுமேயாம். வருடத்தில் 15 அங்குல மழைதானும் கிடைக்காத இஸ்ரவேல், அரேபியா, கலிபோனியா போன்ற சில பகுதிகள் நம் தாயகத்தைப் பார்க்கிலும் வரட்சிகுன்றிய நாடாக இருந் அதும் செழுமையுடன் இருப்பதற்குக் காரணம் அவர்கள் கடைப் பிடிக்கும் ஒருசில நல்ல வழிமுறைகளே.
எனவே நாம் கைக்கொள்ள வேண்டிய வழிகளாவன: வரு டத்தில் மழைகாலத்தில் முதல் மழை கிடைத்ததும் செலவையோ சிரமத்தையோ பாராது குளம், கேணி, துரவு, கிணறு முதலிய வற்றைத் துப்பரவு செய்துவிட வேண்டும். வயல்களைக் கொத்தி உழுது, வரம்புகளை உயரமாய்க்கட்டிவிடவேண்டும். முடிந்தவரை கட்டாந் தரைகளிலும் மேய்ச்சல் தரைகளிலும் நடைவரம்புகள் கட்டிவிடவேண்டும். குடிமனைகளாஞலும் தோட்டங்களானலும் சரி வேலிவரம்புகளை உயரமாகக் கட்டிவிடவேண்டும். தனவந்தர் களும் பணவசதியுள்ளோர்களும் தாயக அபிமானம் கொண் டாவது தம் காணிவரம்புகளை வீட்டுவேலிகளைக் கல்மதில் களாகக் கட்டி விட்டால் மிகவும் நன்மையாய் இருக்கும். இப்படிச் செய்வதால் நீர் தேங்கி நிலம் நன்ருக நீரைத் தன்னுள் தேக் கிக் கொள்ளும். மீதமான நீர் தானுக எங்கு போஞலும் பர வாயில்லை. தடைவரம்புகள் நீரைத் தாமதித்து ஓடச்செய்யும். வெள்ளம் பள்ளத்தை நாடுவதே இயற்கை, தேங்கிய நீர்போக மீதி கடலை நாடினுற் கவலையில்லை இரண்டொருநாள் கவலை

தீவு 93
கஷ்டத்திற்காக வீதிகளையும் வரம்புகளையும் வாய்க்கால்களை யும் வெட்டித்துறந்து, நீரைக் கடலுக்குள் விட்டால் வருடம் பூராவும் நீர் இன்றியும், குடிநீர் இன்றியும் அலைவதும் நாமே அழுவதும் நாமே,
மழை நீர் நிலத்திலே தேங்கினலன்றிக் குடிநீரை நாம் பெறமுடியாது. அன்றியும் தரை காய்ந்து வரண்டு போகுமா குல் கடல் நீரையே தரையுறிஞ்சித் தேக்கிக்கொள்ளும். இது போலவே தரையில் தேங்கிய நீரும் கடலுக்குப் போவதை மழை காலங்களிற் கடற்கரையோரங்களில் அவதானித்தாற் கண்டு கொள்ளமுடியும்.
அன்றியும் நீரைத் தேக்கக்கூடிய மரஞ்செடிகளையும், நிழல் மரங்களையும் வளர்ப்பதும் அவசியமாகும். இவ்விதமான வழி முறைகளால் நீரைப் பேணுவோமாயின்,தீவகங்களிலே நீருக்கோ குடிநீருக்கோ கஷ்டம் ஏற்படமாட்டாது. இவற்றைவிட இன்று நம் தீவகங்களிலே பல செயற்கை முறைகளால் தொட்டிகளில் நீரைத் தேக்குவதும் காணலாம். இப்படியான பலவழிகளினு லும் நீரைத் தேக்கிவருவோமானுல், பத்தோ பதினைந்துவருடங் களுக்குள் தீவகம் நீர்செறிந்த தாயகமாய் மாறும்.

Page 55
பொன் கொடுத்துப் பெற்ற புத்திரன்
ஒரு கலையகத்தே ஒன்ருய்ப் பயின்றேன் உண்மைக் குரைகல் உயிரன்பன் உடுக்கை இழந்தோன் கைபோலோடி
உதவத்துடிக்கும் பேரன்பன் பெருமை சிறுமை எதுவும் பாரான்
பெறுதற் கரியோன் சீராளன் பிறர்தஞ் சோகம் துயரந் தீர்க்கும்:
பிறவித் தருமன் திருவாளன்.
2 மானந்தன்னை உயிராய்க் காப்போன்
மாணிக்கம் போல் ஒளி கால்வோன் மாண்புறு பொன்கொடு தீவகம் பூத்தோன்
மாதுமை பாகன் சிவநாமன் தானம் பொழியும் மேகம் போல்வான்
தலைநிமிர்ந் தென்றும் வாழ் தமிழன். தாயகந் தன்னை வானிலும் மேலாய்த்
தலைமேற் கொள்ளுங் குலமைந்தன்.
3
எழில் தவழ் ஏழு தீவகந் தம்மை
இலங்கிட வைக்கும் இதயத்தால் எதிர் வருங்காலந் தீவக மக்கள்
எழுச்சியைக் காணுந் தாகத்தால் பொழி தமிழ்த் தேனின் மொழிதனில் வாசப் பூந்துணர் சூட்டிக் கடன் செய்தான் பொன் கொடு தீவாள் பொன்கொடுத்தன்ருே புத்திரன் இவனைப் பெற்றெடுத்தாள்.
4. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
அலைகடல் தமிழ்நிலம் வாழ்ந்திடவே ஆரம்ப நூலில் ஆவணகூறி
ஆக்கமும் ஊக்கமுந் தேக்கியவன் தாயகம் போற்றுஞ் சேய்மனத்தாளன்
சதாசிவன் என்றும் வாழ்ந்திடுக. தமிழென இனிமை அழகொடு இளமை
தனிப் புகழோடும் வாழியவே.
w
யாழ் - ஜெயம்.

i. சங்கத்தினல் மேற்கொள்ளப்பட்ட பேச்சுப்போட்டியில் முதலாம் இடங்களைப் பெற்று, திங்கப்பதக்கத்தைச் சுவீக ரித்துக் கொண்ட மாணவர்களுடன் வடமானில கல்வி அதிபதியும் மகாவித்தியாலய அதிபரும், மேற்படி சங்கக் காரியதரிசியும் காட்சி யளிக்கின்ருர்கள்.
4.

Page 56
நன்றியுரை
என் நன்றி கொன்ருர்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகர்க்கு திருக்குறள் வள்ளுவன் வகுத்த வழி வழியே வந்த மரபினர் தமிழர் அவ்வழி பற்றி வருபவனே நானும்
தினையளவு நன்றி செய்தாலும் அதனைப் பழையனவாக மதிப்பதுவே தமிழன் பண்பு இதற்கு நான் மட்டும் விதி விலக்கானவனல்ல. தினையளவு மன்று பனையளவுமன்று மலை யளவாக எனக்குப் பேருதவிகள் புரிந்து இந்நூல் வெளிவரு வதற்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து ஆதரவளித்து, அரும் பெரும் உதவிகள் புரிந்து நல்லாசிகள் தந்து நல்வழிகாட்டிய பெருமக்களுக்கு என் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி கனிந்த இத யத்தால் கூறும் நன்றி என்றுமே உரியதாகும்.
பொன்வைக்க வேண்டிய புனித இடத்தில் பூவைப்பதுபோல வெறும் வார்த்தைகளால் நன்றி கூறுகின்றேன் என்பதை என்னுல் உணரமுடிகின்றது, ஆயினும் என அறிந்த அன் புள்ளங்கள் அத்தனையும் என் இழகிய இதயத்திற் பெருகும் நன்றிப் பெருக்கை உணர்வார்கள் என்ற தளராத நம்பிக்கையும் எனக்குண்டு,
தனித்தனியாக ஒவ்வொருவரையும் பாராட்ட ஏடு இடம் தராது விட்டாலும் கூட என் இதய ஏட்டிலே மட்டுமல்ல “சப்ததீவு” ஏட்டிலே இடம் பெற்றும் பெருமலும் உள்ள அத்தனை பேருக்கும் என் பாராட்டு உரியதெ.
எனவே கட்டுரையாளர் கவிதையாளர். ஆசி வாழ்த்தளித்த அறிஞப் பெருமக்கள். விளம்பரம் தந்த வணிக வள்ளல்கள், ஆலோசனைகள் உதவி வழி காட்டிய அறிஞர்கள், அழகுற அச்சேற்றித் தந்த அச்சகத்தார். தோன்ருத் துணையாய் நின்று நூலின் ஆக்கத்துக்கு அருந்துணை, தந்த உத்தம அன்பர்கள் உயிர் நண்பர்கள் அனைவருக்கும் வாயார மனமார என் நன்றி யையும் வணக்கத்தையும் தெரிவித்து நிற்கின்றேன்,
எனது கன்னிப் படைப்பான இந்நூல் தாயக உணர்வைத் தொட்டு பிறந்த மண்ணின் பற்றையும் பாசத்தையும் ஓரள வாவது இதய நரம்புகளில் ஏற்றித் துடிக்கச் செய்ய உதவு மாஞல் அந்தப் பெருமைக்கு அடியேன் அருகதையற்றவன். எனக்குப் பல கோணங்களிலும் கை தந்த அன்பர்களுக்கும் பெரு மக்களுக்கும் அந்தப் பெருமை சாரும்.
வணக்கம்.

a.
Estd. :
1969
புங்குடுதீவு அபிவிருத்தி சமூக சேவா சங்கம் Pungudutivu Development Welfare Society No. 171, Sri Kathirasan Street, Colombo-ll
Pungudutivu (Drinking Wate)
Advisory Committee C. Loganathan Esqr.,
President: Consultancy and Finance and Development Ltd. (Former Director, Bank of Ceylon and Advisor, World Bank.) C. Arumugam Esqr. B Sc.,F.I.C E. Former Asst. Engineer of Irrigation and the Present Advisor of Irrigation of Sri Lanka. P. Mahendran Esqr., Engineer, Agriculture Developments (California).
Presinenti:
S. Duraisamy Esqr., Director - Duraisons, Colombo. Secretary: S Sathasivam (Xavier) Secy: Pungudutivu Development Welfare Society. \sst. Secretary: A. Thillainathan Esqr., Asst. Director Ministry of Planning & Development.
Treasurer:
A Thuraisamy Esqr , Director, Viyaya Trading Co. Committee; Dr. P. Poologasingham Lecturer, Colombo Campus) A Kandasamy Eaqr. Chemist: Ceylon Cold House. A. Shanmugalingam Esqr, B. A. C. Vairavanathan Esqr. V. Balakrishnan Esqr., T. S. T. P. T. & Co., Colombo.
g
மேற்படி சங்கம் தீவ கங்களினதும், விசேஷ மா க புங்குடுதீவினதும் res 6) அபிவிருத்திக்கும், குடி நீர்த் திட்டத்திற்கும் முன் நின்று ஊக்கத்துட அனும், உ று தி யு ட அணு ம்
உழைக்கும் ஒரே ஒரு சங்
கம் என்பதையும் குடிநீர்த் திட்ட ஆலோசகர்களாக திறமை மிக்கோர் சேவை யாற்றுகின் ருர்கள் என்ப தையும் 'சப்த தீவு’ மக்க ளுக்கு அறியத் தருவதில் பெருமையடைகின் ருேம்.
வெற்றிகள் பல கண்டு வீறுநடை போடும் ஒரே சங்கம்.

Page 57
‘எழுதீவும் புகழ் "இதழ்"
எண்டிசையும். திகழ்ந்து ஒளிகால இதயங்கனிந்த வாழ்த்துக்கள் இயம்புகின்றேன்
'தீவகன்" சேவை தியாக சேவை"
லியோன்
கப்பல் ஏஜன்ஸ் - மாலைதீவு

வீரம்புளி றேட்ஸ் கடல் வள அபிவிருத்தியாளர்களே!
மீன், கருவாடு, சிங்கருல், கடற்பாசி, கண
வாய் ஒடு, சங்கு, சிப்பி, மற்றும்
5L6D 5 JULI LI YLI If GTI ! வருடம் பூராவும் சகல வசதிகளுடன் தொழில் செய்யக்கூடியதும் வாடைக் காற் றுக் காலத்தில் முதற்தரமான தொழில் செய் யக்கூடியதுமான ஒதுங்கு குடாக் கடல் புங்குடுதீவு மேற்கு "வீரம்புளியடி’ துறை
முகமே.
இது ஒரு முதற்தரமான மீன்பிடி
துறைமுகம்.
விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.
C. நல்லதம்பி வீரம்புளி றேட்ஸ்”
வீரம்புளியடி புங்குடுதீவு-3

Page 58
*சப்ததீவு' தீவகத்தின் புகழைத் திசை எங்கும் பரப்ப
இதயங்கனிந்த வாழ்த்துக்கள் இயம்புகின்றேம்.
ANURA HOUSE
23. Bankshall Street,
COLOMBO - 11.

EXPORTERs, IMPORTERs, CARGO HANDLING & COMMISSION AGENTs.
18/1, "Sameeras Lane, Bankshall Street,
COLOMBO -11, Rep. of Sri Lanka.
Phome 35414 Cable: GEFEXPORT

Page 59
With the best compliments
of
Free lanka Industries ld.
P. O. BOX 4,
Minuwangoda Road,
JAELA.
Cable: “KALAS” Telphone: 419 & 265

அன்பளிப்பு:
நல்லூரான் றேடேர்ஸ்
மொத்த வியாபாரி
64, 4-ம் குறுக்குத் தெரு, - கொழும்பு - 11.

Page 60
அன்பளிப்பு
O வி. ஆா. எம. கோ. மொத்த வியாபாரியும் கொமிசன் ஏஜண்டும் 111, பழைய சோனக தெரு,
கொழும்பு - 12.
தொலைபேசி: 32188

With Best Compliments of
W
.S. T. P. T. & CO ."ך
IMDORTTERS GENERAL MERCHENTS
37, Dam Street, Colombo - 12.
Telegrams: “Coorkbootel” Telephone: 34157

Page 61
With the Best Compliments
from
Е.к. к. 8 со
84, New Moor Street COLOMBO - 12
T'phone: 36653

With the best Compliments of
N .
epen eas (éxport) 0eylonئى ب
P. O. BOX No. 1751
COLOMBO.
Sri Lanka.
29.307 Tel: 25655 Cable: SESEX
22576 Telex: 1254 -85040

Page 62
FOR QUALITY FRUIT PRODUCTS திறமான பழவகை உற்பத்திகள்
MANGO NECTAR (in Cans & Bottles) மாம்பழ இரசம் (0ாத்திரத்திலும் போத்தலிலும்) MANGO CORDIAL உற்சாக மூட்டு மாம்பழ மானம் MANGO SILICES IN SYRUP பழரச சாற்றில் ஊறிய மாங்கனித் துண்டுகள் PASSON CORDAL உற்சாக முட்டும் பஷன்ாழ பானம் PINEAPPLE SYRUP அன்ஞசிப் பழரசச் சாறு MANGO JAM
BoT ab O glyp urTib PINEAPPLE JAMI அன்னுசிப்பழ யாம் MIXED FRUIT JAM
ழை வகை யாம்
Comitací : MURUGAN INDUSTRIES LIMITED,
No. 6, Main Street, JAFFNA.
தொடர்பு கொள்ளவும்
முருகன் கைத்தொழில் நிறுவனம்
6, பிரதான வீதி, யாழ்ப்பாணம்

With Best Compliments From
Geetha Trading Company
Importers & General Merchants
4, DAM STREET,
COLOMBO - 12
With Best Compliments From
» (
I CO PALAN TR AD IN COMPANY
Importers Exporters & Dealers in Ceylon Produce,
Cooonut Oil, Poonac etc. 149, DAM STREET, COLOMBO. 12

Page 63
With the Best Compliments
of
LOGIARAJAHSDRES.
Importers, Wholesale & Retail Merchants 21 Old Moor Street, COLOMBO 12
T'grams: CHELVANs Phone: 32119
With Best Compliments of
LI NGAM TRADES
Importars, General Merchants
- & Commission Agents
Dealers in Ceylon Produce and Curry stuffs
No. 224, Keyzer Street,
COLOMBO - 11
Telephone: 23406

With Best Compliments From
Importers Exporters & General Merchants
94, Bankshall Street,
Colombo - 11

Page 64
With Best Compliments from
AMBIGA EUMARAN STORES
- Bealers in: ALUMNIUM, BRASS, ENAMELWARE
& OILMAN GOODS 234, Gasvorks Street, Colombo - 11.
T'Phone: 3460

உள்ளூர் உற்பத்தி உணவுப் பொருட்களுக்கு நம்
பிக்கை நாணியமான ஸ்தாபனம் கமிசன் அடிப் படையில் பொருள் கொடுக்க வேண்டுமா, நல்ல
பொருள் மலிவான விலையில் கொள்முதல் பண்ண
வேண்டுமா உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
SIVA SHANMUGA RAJAH
& CO
No. 45. FOURTH CROSS STREET
COLOMBO - 11
PHONE 36077

Page 65
எமது மனம் மகிழ்ந்த நல் ஆசிகள்
உதயம்ஸ் 01 1/1 பிரதான வீதி, கொழும்பு - 11.
தொல பேசி: 34696,
திலகம்ஸ்
188, பிரதான வீதி கொழும்பு - 11.
தொலை பேசி: 25388,
\n" பிரபல ஜவுளி மொத்த விற்பனையாளர்கள்

With Best Compliments of
V. N. THAMBIRAJAH & CO.
GENERAL IMPORT MERCHENTS
Delears in Petromax Spare Parts, Playing Cards Manufacturer,
& t Sundry Goods Etc.
26, New Moor Street,
COLOMBO - 12.

Page 66
With Best Compliments From
A. BASTIAMPILLAI
Wine Merchants Tobacconists & Groceries
280, Main Street,
Colombo - 11.
Telephone 29185
With Best Complimeuts From
JOSEPH STORES
42, St. John's Road,
Colombo - 11.
Phone: 24305, 25608

அன்பளிப்பு:
தீவகன் கண்டிராத பெருமுயற்சிக்கும்
தீவகத்தின் சகல நல்ல வளர்ச்சிக்கும்
எமது மனம் மகிழ்ந்த நல் ஆசிகள்
யுனைடெட் மேர்ஜன் லிமிடெட்,
71. பழைய சோனக தெரு,
கொழும்பு - 12.

Page 67
With the Best Compliments
from
SRINIVASANS CO. LTD. 102. Prince Street,
Colombo 11.

அன்பளிப்பு:
கருணு றேடிங் சென்ரர் இறக்குமதியாளரும் மொத்த வியாபாரியும்
- 29, LTD 66,
கொழும்பு - 12. தந்தி: "கருணை" தொலபேசி 35796

Page 68
அன்பனிப்பு
தாயகம் தல்நிமிர்ந்து ஒளிவீச
தயங்காது உழைப்போமாக
விஜயா றேடிங் கோ.
CLICp GioGI fio
69, ஆட்டுப்பட்டித் தெரு,
கொழும்பு - 13.
 

LLLLSSSLSLSLSLSLSLSLSLSLSLSLSLLSLSSLSLSSLSLSSLSLSSLSL
With the Best Compliments of
N LANGAM STORSS
Dealers in: Oilman Goods and Groceries
195, 5th Cross Street, Colombo - 11

Page 69
zia
LLSLSSLSSSLLLLSSSSS
With Best Compliments of
P. T. K. RATNAM & Co.
General Merchants
Dealers in: Sundry Goods, Stationery,
Empty Bottles Corks, Sealing wax, Brass, Copper, Leads, Metal Ete. 37, Dan Street,
Colombo - 12. Telegrams: “Ratnam” Telephone: 33461

தீவங்களின் வருங்கால அபிவிருத்திக்கு
தீவகனின் 'சப்ததீவு" உறுதுணையாகட்டும்.
Wholesale & Retail Dealers in:
City Cigars, Tea
CITY CGAR STORES
230, Bankshall Street,
COLOMBO - 11. Phone: 2482

Page 70
எமது வா
உள்ளுர் விக்ள பொருள்
சேகரிப்பாளருக்கும்
முன்னிடம் கொடுக்
莒
"ரதகம ፵
* வேண்டுவார் வேண்டுள்
நேரடியாகவே இறக்கு மான உணவுப் பொ
西1山Tā 母而凸山亭 மொத்தமாகவும் வுேம் பெற்றுச்
முதல்
ரத்கம ஸ்
64, 4- )
G' }, T (ugir
Q - ກີ່ ນີ້.
| ॥ Աւ

ழ்த்துக்கள்
உற்பத்திய விருக்கும் வியாபாரிகளுக்கும்
கும் முதல் தர பாகின
ஸ்தாபனம்
ஸ்டோர்ஸ்'
| 571 FFEn 1591 s. Elle off"
மீதி செய்யப்பட்ட திற ருட்களுக்கும் முதல் ச மான்களும் ,拿av°p山1á
壘 H(n சு எளும்
இடம்,
ஸ்டோர்ஸ்
றுக்குத் தெரு
3,
! ቇ] : ኃ ሀ†93
الة أو س = E + 1