கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை புவியியல் வளம், மக்கள்

Page 1


Page 2

இலங்கை
புவியியல் வளம், மக்கள்,
முதனூலாசிரியர்: எல்சி கே. குக்கு, F.R. G. S. இலண்டன் பல்கலைக்கழகப் புவியியல் அறிஞர்ப் பட்டம் பெற்றவர்
assr. (56) J35560Tib, M. A. (Lond), R. G. A., F. R. G. S. அவர்களால் திருத்தியும் புதுக்கியும் அமைக்கப்பட்ட “இலங்கைப் புவியியல்" எனும் நூலின் புதிய பதிப்பு
மிழாக்கம் :
)B. A. (Hons بهم الوزمنه.
படம்.ஜிஓர்க்கப்படம் வரைந்தவர் :
:&se:
வயிற்றுமன், A. R. C. A.
அரசகரும மொழித்திணைக்கள வெளியீட்டுப் பிரிவு.
இலங்கை அரசாங்க அச்சகத்திற் பதிப்பிக்கப்பட்டது.

Page 3
மகுமிலன் வரையறைக் கம்பனியின் அனுமதிபெற்று அரசகரும மொழித்திணைக்கள வெளியீட்டுப் பிரிவினரால் வெளியிடப்பட்டது.
உரிமை அரசினர்க்கே.
முதற் பதிப்பு 1959.

முதற் பதிப்பின் முகவுரை
1924-25 ஆம் ஆண்டில் இலங்கையிலுள்ள பெளத்த ஆங்கில பாடசாலை களைப் பற்றியும், இரு பெளத்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள் பற்றியும் ஆலோசனை கூறுமுகமாக நான் இலங்கைக்குச் சென்றிருந்தேன். ஆனந்தக் கல்லூரியின் தலைமையாசிரியராகக் கடமையாற்றிய திரு. பி. தி. எசு. குல ரத்தின என்னை வரவழைத்திருந்தார். அவரே எனக்கு இலங்கையைப் பற்றிய பல விடயங்களை அறிவுறுத்தி எனது இலங்கைச் சுற்றுப்பிரயாணத் துக்கான பல வசதிகளையுஞ் செய்து வைத்தார். மேலும், அந் நாட்டு மக்களின் சகல சாதியாரோடும் கலந்து உறவு கொள்ளும் வசதியையும் ஒழுங்கு செய்தார். இலங்கையில் நான் சென்ற இடமெல்லாம் என்னை நன்கு உபசரித்தார்கள். அத்னல் எனது இலங்கைப் பிராயணம் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. எனக்குப் பலவகையில் உதவி செய்தவர்களுக்கு நன்றி செலுத்த வேண் டியதென் கடமையாகும். ஆனல், அவர்களெல்லாருடைய பெயரையும் அட்டவணைப் படுத்திக் கூறுவது முடியாத காரியமாகும். பிபிலை இரட்ட மகாத்துமயாவுக்கும் அவருடைய மனைவியாருக்கும் விசேடமாக நான் கடமைப்பட்டுள்ளேன். திரு. கன்னங்கராவுக்கும் யாழ்ப்பாண வலிபர் சங்க அங்கத்தவர்கட்கும் எனது நன்றியுரித்தாகும். திரு. எம். ஈ. பர்ணுந்துவுக்கும் கடமைப்பட்டுள்ளேன். திரு. தி. இடபிளியு. தர்மபந்து என்னேடு இலங்கையின் பல குக்கிராமங்களுக்கு வந்துள்ளார். கதிர்காமத்தில் எனக்கு, பொலிசுத் தலைமை அதிபர் மிகுந்த ஆதரவளித்தார். கண்டியி லுள்ள தந்த தாதுக் காட்சி சம்பந்தமாக நான் பார்க்க வேண்டியவை யெல்லாம் பார்க்கவும், ஏனைப் புத்தகோவில்களிற் காண வேண்டியன வெல்லாங் காணவும் மனமுவந்து, வசதியளித்தவர்களெல்லோர்க்கும் கடப்பாடுடையேன். பல பாடசாவைகளைச் சேர்ந்த ஆசிரியர்களும் மாணுக்கரும் பல நீண்டகால நடைப் பிரயாணத்திலும், இளைப்பளிக்கும் பல மலை ஏற்றத் திலும் பங்கு பற்றினர். பலர் வீடுகளில் நான் நல்விருந்தாகத் தங்கி உப சாரம்பெற்றேன்.
கடலைப்பற்றியும், மீன் பிடித்தலைப் பற்றியும் பல அரிய ஆலோசனைகளை இலங்கை அரசாங்கக் கடலுயிர்நூல் வல்லுநரான கலாநிதி பியர்சன் உத வினர். இந்நூலை ஆயத்தஞ் செய்வதிலும் அவர் பெருந்துணை புரிந்தார். அவர்க்கு என் மனமார்ந்த நன்றி. காலநிலை பற்றிச் சில விடயங்களை அறிவித்த கொழும்பு வளிமண்டலவாராய்ச்சித் தாபனத்தைச் சேர்ந்த திரு பாம்போட்டு என்பவருக்கும் நன்றி. இலண்டன் பல்கலைக் கழகத்துப் பொருளாதாரத்துறையைச் சேர்ந்த கலாநிதி இடட்டிலித் தாம்பு, புவிச் சரிதவியல் சம்பந்தமான சில விவரங்களை யுதவிஞர். சமூக வாழ்க்கை சம் பந்தமாகவும் பழக்க வழக்கங்கள் சம்பந்தமாகவும் பல விவரங்களை கெளரவ திரு. இடபிளியு. ஏ. தி. சில்வா, திரு. குலரத்தின தம்பதிகள்

Page 4
iv
திரு. கினிகே, கலாநிதி அமிர்தலிங்கம் ஆகியோர் உதவினர். திரு. கினிகே எம். எ., படங்களில் வரும் பெயர்களை மொழி பெயர்த்துதவியதோடு தாம் ஆக்கிய நெல் வயற் படமொன்றையும், பிரசுரிப்பதற்கு உதவினர். மேலும், இந் நூலின் கையெழுத்துப் பிரதியை முற்ருகப் பார்வையிட்டார். இவர் களெல்லாருக்கும் என் நன்றி யுரித்தாகும். ஐல்வேது மாவட்டப் பாட சாலையைச் சேர்ந்த திரு. எபு. சி. ஐவிசு, எம்.ஏ., நூலைப் பார்வையிட்ட தோடமையாது அச்சுப் பிழைகளைத் திருத்தியும் பேருதவி புரிந்தார். நூலின் சிலபகுதிகளை எழுதுவதில் இந் நூலாசிரியர்க்குச் சில விசேட இன்னல்களுண்டாயின. வரலாற்றுப் புவியியல், சாதிகள், நாகரிகம் என்ற அத்தியாயங்களில் வாதத்துக்கிடமான விடயங்களைப் பற்றி நாம் கையாண்ட முறையை இலங்கையிலுள்ள எச்சாகியத்தாரும் ஆட்சேபிக்க மாட்டாரென எண்ணுகிறேன். படங்களிற் பெரும்பாலானவை நில அளவை யாளர் தலைமை அதிபதியின் அனுமதிப்படி அளவைப் பகுதியாரின் வெளியீடுகளிலிருந்தும், அரசாங்க நிர்வாக அறிக்கைகளிலிருந்தும், பிரதி பண்ணப் பட்டன. சில படங்களின் மூலத்தையே பயன் படுத்தியுள்ளேன்.
இந் நூலிற் சேர்க்கப்படவேண்டிய விடயங்களைப் பற்றிய ஆலோசனைகளும், நூலைப்பற்றிய கருத்துரைகளும் ஆசிரியரால் நன்றியுடன் எற்கப்படும்.
எல்சி கே. குக்கு. ஒகத்து, 1930.

இரண்டாம் பதிப்பின் முகவுரை
1931 ஆம் ஆண்டில் இந் நூல் முதற் பிரசுரிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை இலங்கையின் கிராமக் கைத்தொழில் முறையிற் பல மாற் றங்களுண்டாகிவிட்டன.
இரண்டாம் பதிப்பில், இம்மாற்றங்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டியது அவ சியமாயிற்று. இதனை பாரிசுப் பல்கலைக் கழகப் புவியியற் பகுதியைச் சேர்ந்த திரு. கா. குலரத்தினம், எம். எ. வியத்தகு முறையிற் செய்திருக் கிருர். இவர் இந் நூலாசிரியரோடு நல்ல பழக்க முடையவர். அன்றியும் இந் நூல் எழுதப்பட்ட காலந்துவங்கியே இந் நூலைப் பற்றிய வேலையில் ஆர்வமுடையவராயிருந்தார்.
இந் நூலாசிரியர் எழுதிய நூன்முகத்தில் இந் நூல் உயர் நிலைப்பள்ளி மாணுக்கர்க்குப் பயன் படுமாறே இயற்றப் பட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். தொடக்கத்தில் இந் நோக்கத்தோடே இந் நூலியற்றப்பட்டது. ஆனல், ஆாலை எழுதிச் செல்லச் செல்ல நோக்கம் விரிவடைந்தது. சமீபத்தில் இலங்கையிலுண்டான அரசியல் மாற்றங்களினல் இலங்கையைப் பற்றி அறி வதற்கு ஆவல் கொண்டோர் இந் நூலை வாசிப்பாராக. இங்கே இலங்கை யின் புவியியல் சம்பந்தமான உண்மைகள் நிறைய உண்டு. அத்துடன் இலங்கை மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் உள்ளப் பாங்கை யும், அறிந்து கொள்வதற்கும் இந் நூல் பெரிதுந் துணைபுரியும்.
ஈவா தி. குக்கு.

Page 5

பொருளடக்கம்
முகவுரை . . 8 நூன்முகம்
முதற் பகுதி-வரலாற்றுப் புவியியல்
புத்தியாயம்
இலங்கையைப்பற் றி வேற்றுநாட்டுப் பிரயாண நூல்களிற்காணுங் குறிப்புக்கள் இலங்கையின் பெயர்கள்
புராதன ஆசியப் பாதைகளோடு இலங்கைக்குள்ள தொடர்பு இலங்கையில் வெளிநாட்டுச் செல்வாக்கு » es . இக்காலப் பிரிவில் வியாபாரமும் வளர்ச்சியும் ஐரோப்பியர் ஆதிக்கத்தினலுண்டான வேறு விளைவுகள் o a
இரண்டாம் பகுதி-பெளதிகப் புவியியல்
இலங்கையைச் சுற்றியுள்ள கடலும் கரையும் . . இலங்கையின் அமைப்பு
மேற்பரப்புப் படிவுகள்
தரைத்தோற்றம் - இலங்கையின் காலநிலை-முன்னுரை இலங்கையின் காலநிலை-காற்றுக்கள் இலங்கையின் காலநிலை-மழைவீழ்ச்சி a இலங்கையின் காலநிலை-வெப்பநிலை இலங்கையின் உள்நாட்டு நீர்நிலைகள் o. இலங்கைத் தாவரம் −
விலங்குகள். .
மூன்றம் பகுதி-பொருளாதாரப் புவியியல்
செய்கைபண்ணப்படும் பயிர்கள் காட்டுவளம் பெருக்கல்
கணிப்பொருள்கள் உப்பு விளைவித்தலும் மீன்பிடித்தலும் கைத்தொழில், பொருள் உற்பத்தி, வியாபாரம்
நாலாம் பகுதி-மக்கட் புவியியல்
இலங்கையின் குடிசனச் செறிவு காலநிலையால் மனிதவாழ்க்கையில் நிகழும் விளைவுகள் இலங்கையிலுள்ள மக்கட் சாதியார் மக்கள் வாழிடங்களும் குடியிருப்புக்களும் வளர்ச்சியடைந்த முறை
ஐந்தாம் பகுதி-சுருக்கம்
இலங்கையின் இயற்கைப் பிரதேசங்கள் ಊQ-೧6ಠಾರ .. 0
. . iii
. ix
Labáth
17
20
34
48
53
76
90
... 100 ... 8
125 33 149 154
76 194
202
231 235 242
261 272 282 33
370 409

Page 6

நூன்முகம்
உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள மாணுக்கர்க்கும் ஆசிரியர்க்கும் பயன் படுமாறே இந் நூல் உரைக்கப்படுகிறது. இவர்களுக்கு இது வரை, ஆராய்ச்சி முறையில் இலங்கைப் புவியியலைப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்க வில்லை எனக் கொள்வோம். தாய் நாட்டுப் புவியியலை அடிப்படையாகக் கொண்டே என நாட்டுப் புவியியல்களைக் கற்பித்தல் வேண்டுமென்ற கொள்கை சில காலமாக வற்புறுத்தப்பட்டு வருகின்றது. பழகிய ஒரு பகுதியின் புவியியலை ஆராய்வதன் மூலம் புதிய புவியியற் போதனை முறைகளைத் திட்டம்ாக அறிந்து விட்டால் அவ்வறிவைக் கொண்டு, உலகின் மற்றைப் பாகங்களைப் பற்றிய புவியியலையும் எளிதில் அறியலாம். இதற்கு இன்றியமையாத பயிற்சியும், செய்திகளும் ஆசிரியர்க்கு எப்பொழுதுங் கிடைக்காத படியால் இலங்கையைப் பற்றிய வரையில் இக்குறையை நீக்குவதே இந் நூலாசிரிய ரின் நோக்கமாகும். இலங்கையின் கல்வி நிலையைப் பேணி வளர்ப்போர்க் குப் பயன் படுமென்ற நம்பிக்கையுடன் கீழ்க்காணும் யோசனைகளை இந் நூலைப் பயன் படுத்தும் ஆசிரியன்மார்க்கும், பொதுவாகப் புவியியற் போதனையிலீடுபடுவோர்க்கும் தருகின்றேன்.
முதலாவது: இந் நூலைப் பற்றிய குறிப்புக்கள்.
1. உயர் நிலைப் பள்ளியிற் பயிலும் சாதாரண மாணுக்கனுடைய தேவைக்கு மிக அதிகமான விடயங்கள் இந் நூலிலுண்டு. தேவையான பகுதிகளைத் தெரிந்து பயிற்ற வேண்டியது ஆசிரியர் கடமையாகும்.
2. செய்முறை அறிவைக் களத்தில் அனுபவவாயிலாகப் பெற்ருலன்றி இந் நூல் பயன்படாது. இதிற் கூறப்பட்ட விடயங்களை இயன்ற அளவுக்கு நேரே அவதானித்து அறிவது அவசியம். நூலிற் கூறியவை பிழையெனக் கண்டால் அவற்றைத் திருத்திக் கொள்ளல் வேண்டும். விவரங்களை அதிகம் கொண்டுள்ள நில அளவைப் படங்களை ஒத்துப் பார்த்தல் வேண்டும்.
3. படமின்றிக் கற்றல் ஆகாது.
4. புவியியல் கற்பதன் விரிந்தநோக்கம் என்ன?
நாட்டின் வளத்தை ஆராய்தல், அவற்றை எவ்வாறு விருத்தி செய்யலா மென்பதை அறிதல், தேசத்தின் இயற்கை அழகை அறிந்து நடத்தல், இவை தாம். இவற்றை மாணுக்கர் மனதிற் பதியச்செய்தல் வேண்டும். மற்றை நாடுகளுடன் தமது நாட்டை ஒப்பிட்டுப் பார்க்கவும், எவ்வெத் துறை யில் முன்னேற்றத்தை ஏற்படுத்தலாமென்பதைச் சிந்திக்கவும் அவர்கள் பழகல்வேண்டும்.

Page 7
, இலங்கைப் புவியியல்
5. தெரியாததைத் “தெரியாது’ என்று சொல்ல அஞ்சவேண்டாம். அறியாதவற்றை அறிந்துகொள்ள ஒரவா உண்டாதல் வேண்டும். அதற்கு நீங்களே உதாரணமாயிருத்தல் வேண்டும். தாமறியாதவிடயங்கள் எத்துணையிருக்கின்றன என்பதை மாணுக்கர் உணரத்தலைப்பட்டால் அறி யாதவற்றை எப்படி இலேசாக அறிந்து கொள்ளலாமென்பதையும் அவர் கள் தெரிந்து கொள்வர். பாடநூல்கள், துணைநூல்கள் என்பவற்றை விவேகமாகப் பயன்படுத்தும் முறையை அவர்கள் உங்களைப்பார்த்துப் பழகக் கூடியதாயிருத்தல் வேண்டும்.
இரண்டாவது: புவியியற் போதனை பற்றிய பொதுக்குறிப்புக்கள்.
1. அறிமுறைக் கல்வியாகவுமிருத்தல் கூடாது. தேவையான சமயங் களிற் செய்முறைப் பயிற்சிகள் அவசியம். “எட்டுச்சுரைக்காய் கறிக்குதவாது”.
2. சுவர்ப்படங்களை இயன்ற அளவு பயன்படுத்துக. கண்டங்களின் இயற் கைத் தோற்றத்தைக்காட்டும் படங்களைப் பயன்படுத்தும் பொழுது நல்ல படங்களையே உபயோகித்தல் வேண்டும்.
3. சிக்கலான படங்களைக் கருத்தின்றிப் பிரதிசெய்யும் வேலையில், பிர தானமாக இளம் மாணுக்கரை ஈடுபடுத்தல் கூடாது. 14 வயதுக்கு மேற் பட்ட மாணுக்கரே உலகப்படம் வரையும் தகுதி உடையவர். குறித்த ஒரு வயதுக் கூட்டத்தைச் சேர்ந்தவர்களால் வரைந்து கொள்ளமுடியாத சந்தர்ப் யத்திலன்றி படிவரைதாள்வைத்துப் படத்தைப் பிரதிபண்ண விடல்
Ha sig.
4. படமென்பது புவியியற்சுருக்கெழுத்தெனக் கருதப்படல்வேண்டும். மாணுக்கர் தமது பயிற்சிகளில் விளக்கப்படங்களை வரைந்து ஒவ்வொரு விளக்கப்படத்திலுங் குறித்த இரண்டொரு விடயங்களை மட்டுந் தெளிவாக விளக்கல் வேண்டும். அத்தகைய படங்கள் பரும்படியான வரைப்படங் களாயிருந்தாற்போதும்.
5. உண்மையான உபயோகத்துக்கல்லாமல் வீண் காட்சிக்காக வரையப் படும் படங்களுடைய புத்தகங்கள் பயனுடையனவல்ல. உங்கள் மானுக்கரைப் படம் வரை நிபுணராக்குவது உங்கள் நோக்கமன்று. உலகத்தைப்பற்றி மனதிற் சிந்தனை செய்யப் பழக்குவதே உங்கள் நோக்கம். படத்தையும் எழுத்துவேலையையும் மாணுக்கர் ஒரே புத்தகத்திற் கற்றல் வேண்டும். நீங் கள் கரும்பலகையில் வரைந்து காட்டும் பரும்படியான வரைப்படம், அல்லது விளக்கப்படம் முதலியவற்றை மாணுக்கர் உடனே தமது குறிப்புப் புத்தகங் களிற் கீறிவைக்குமாறு செய்தல் வேண்டும். அதேபோலப் பாடம் நடக்குங் காலத்தில் அவர்கள் குறிப்புக்களை உடனுக்குடன் எடுத்துக் கொள்ள இளமை யிலேயே பழக்கல்வேண்டும்.

நூன்முகம் ΣΚ
6. பொதுப்படையான கொள்கைகள், சிறுசிறு விவரங்களைக் காட்டிலும்
முக்கியமானவை. உதாரணமாக, கொழும்புக்கும் காலிக்குமிடையிலுள்ள
எல்லாப் புகையிரத நிலையங்களையும் மனப்பாடஞ் செய்வதிலும் அந்நிய
தேசங்களைப்பற்றிய பொதுப்படையான சில விடயங்களையறிந்து கொள்வது
பயனுடையது. சாதாரணமானக்கன் அறிந்திருக்கவேண்டிய சில ஊர்ப் பெயர்களைத் தெரிந்து கொள்வதும் உசிதமானதே.
7. படிக்கும் தேசங்களைப்பற்றிய படங்களைச் சேகரிக்க வேண்டியதுண்டு. இக்காலச் சஞ்சிகைகளிலும், படங்களோடு வெளிவரும் பத்திரிகைகளிலும் படங்களுண்டு. சிறுவரும் இளைஞரும் படங்களைப்பார்த்து நன்ருக விடயங்களை அறிந்துகொள்ளல் முடியும். இப்படங்களின் விளக்கம் முதலியன ஆங்கி லத்தில் எழுதியிருந்தாலும் அவற்றைத் தமிழிலும் சிங்களத்திலும் மொழி பெயர்த்து விடலாம். புவியியற் சஞ்சிகை (Geographical Magazine) என்ற பத்திரிகையை 91, சென்மாட்டின்சு ஒழுங்கை, இலண்டன், இடபிளியு. சி. 2. என்ற விலாசத்திலும், தேசியப்புவியியற் சஞ்சிகை (National Geographic Magazine) என்ற பத்திரிகையை ஐக்கிய அமெரிக்காவிலே உவாசிந்த லுள்ள தேசியப் புவியியற் சங்க அலுவலகத்திலும் பெறலாம்.
8. பாடசாலையிற் புவியியற்பாடம் போதிப்பதற்கெனப் புறம்பான ஓர் அறையிருத்தல் வேண்டும். இது இரவிற் பூட்டிவைக்கக் கூடியதாயிருத்தல் வேண்டும். அப்படியானல், புவியியற் போதனைக்குத் தேவையான உபகர ணங்களைச் சேர்த்து அவ்வறையில் வைத்துப் படிப்பித்தல் கூடும். பாடங்களை விளக்குவதற்கு உபகரணங்களிருந்தாற் பாடம் affiវិ யுள்ளதாயிருக்கும். தனியறையிருக்குமானல் மாணுக்கர் அங்கு பயிலும் பாடம் முக்கியமானதென எண்ணுவதுடன், பாடத்திற் பயன்படுத்தப் படும் உபகரணங்களைக் கவனமாகப் பாதுகாத்துக்கொள்ளவும் பழகு வார்கள். இது பொதுசன சேவைக்குப் பயன்படும் உயர்ந்த பண்பாகும்.
9. சுவர்ப்படங்களையும், துணை நூல்களையும் அடிக்கடி வெயிலிற்காக வைத்தல் வேண்டும். அவ்வாறு செய்வதனல் அவற்றை நீண்டகாலம் உய யோகித்தல் கூடும். இதனைச் செய்விக்க வேலையாட்களில்லாவிட்டால் மாணக் கரைக் கொண்டே செய்விக்க.
10. மற்றைத் தேசங்களைப் பற்றிய அறிவு அவசியம். ஆனதால் அத்த கைய பிற்புலக்காட்சியைப் பெறுவதற்குப் பல நூல்களை வாசித்தல் வேண்டும். அதற்குத் தேவையான நூல்கள் அவசியம். அவற்றைப்பெறு வதில் இடுக்கணிருந்தால் மனந்தளராது முயலல் வேண்டும். முயன்று நல்லதொரு நூல் நிலையத்தை யமைத்தல் வேண்டும்.

Page 8
xii இலங்கைப் புவியியல்
11. அறிவைத் தீட்டிக் கொள்ளல் வேண்டும். இற்றைநாள்வரை நடந்த ஆராய்ச்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளல் வேண்டும். இலங்கையைப் பற்றிய பல விடயங்கள் ஒவ்வொருவருடமும் அரசாங்க நிருவாக அறிக்கை களிற் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மலிவான விலையிற் பெற்றுக் 'கொள்ளலாம். இந்நூலிற்காணப்படும் செய்திகளிற் பெரும்பாலன இத் தகைய நிருவாக அறிக்கைகளிலிருந்தே திரட்டப்பட்டன. “இலங்கை ஆண்டுப் புத்தகம்’ என்ற நூல் புள்ளியியற்றலைவரால் தொகுக்கப்படுகிறது. அதில் உபயோகமான விடயச்சுருக்கங்களுண்டு. பிரித்தானியாவில் ஒவ்வொரு வார மும் பிரசுரிக்கப்படும் பாலர் பத்திரிகையில் (Children's Magazine) புவியி யல் சம்பந்தமான பல விடயங்கள் சுருக்கமாகத் தரப்படுகின்றன.

முதற பகுதி வரலாற்றுப் புவியியல்
முதற் பகுதி-முதலாம் அத்தியாயம் "இலங்கை'யைப் பற்றி வேற்று நாட்டுப் பிரயாண நூல்களிற் காணுங் குறிப்புக்கள். “இலங்கையைப்ப்ோன்ற அளவுள்ள தீவுகளில் அதைப்போற் சிறந்தது உலகில் வேறில்லே." (13 ஆம் நூற்றண்டிலிருந்த இத்தாலிய யாத்திரிகர் மாக்கோபோலோ)
*சிலோன்’ என்று வேற்று நாட்டவரால் வழங்கப்படும் இலங்கையின் வரலாற்றுப் புவியியலைப்பற்றிய மிக முக்கியமான ஒருவிடயம் யாதெனில் இத்தீவிலுள்ள சாதியாருட் பெரும்பான்மையினரான சிங்களர், தமது மொழியில் இதற்கு வழங்கியுள்ள பெயரை வெளி நாட்டவர் அறிந் திருந்ததில்லை என்பதே. பரந்துபட்ட இந்து சமுத்திரத்தைக் காலத்துக்குக் காலம் பலதேய மக்கள் கடந்து சென்றனர். அவர்களிற் பெரும்பாலோர் இலங்கைக்கும் வந்திருந்தனர். இவ்வாறு வந்த எண்ணற்ற பிர யாணிகளில் மிகச் சிலரே அதிற் பலகாலந்தங்கினர். பெரும்பாலானேர் அதை ஒரு தங்கும் இடமாகவே கொண்டனர். பழங்காலத்திற் கடலிற் பிரயாணஞ் செய்வது இடர் நிறைந்ததாய் இருந்தது. வளம் மிக்கதும் இனிய சுபாவமுள்ள மக்கள் வசிப்பதுமான இலங்கை இந்து சமுத்திரக் கடற்பாதையின் மத்தியில் அமைந்திருந்தமை கடவுளருளிய வரப்பிரசாத மென்றே அக்காலக் கடற் பிரயாணிகள் கருதினர். இங்கு வந்த பிர யாணிகள் இறங்கி இளேப்பாறவும், வியாபாரம் நடத்தவும் இலங்கை மக்கள் வசதியளித்தனர். பண்டைக் காலக் கடலோடிகள் உறுதியற்ற மரக்கலங்க ளில் நீண்டகாலம் பிரயாணஞ் செய்யவேண்டியிருந்தது; பல இன்னல் களுக்காளாக வேண்டியுமிருந்தது.

Page 9
2 இலங்கைப் புவியியல்
நாலாம் நூற்றண்டின் பிற்பகுதியில் இருந்த புகழ்பெற்ற சீனயாத்திரி கரான பாகியன் இலங்கையிலிருந்து கடல் வழியாகச் சுமாத்திராவுக்குச் சென்ற செய்தியைப் பற்றிக் கூறியிருக்கிறர். அடக்கமாக விவரிக்கும் வழக்க முடைய அவர் கூறுவதாவது:-
“பதின்மூன்று நாட்களாக இரவு பகல் ஒயாது புயல் வீசிக்கொண்டிருந்தது SLL S S 0LS S S L S SLSL S SS S LL S L S SL S SS SS SS SSL S S S S S S S S S S S L SLSL S SS இக்கடலிற் கடற் கொள்ளேக்காரர் உலாவுகிருர்கள். அவர்கள் கண்ணிலே தென்பட்டால் மரணம் நிச்சயம். கடல் எல்லையின்றிப் பரந்து கிடக்கின்றது. கிழக்கு எது, மேற்கு எது என்று தெரிந்து கொள்ளல் முடியாது. சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களேயும் அவதானித்தே கப்பலைத் திசையிற் செலுத்தலாம். மழையும் மப்பும் உள்ள காலங் களிற் கப்பல் குறித்த ஒரு நெறியிற் செல்லாது காற்றடிக்குந் திசையில் மறுகிச் செல்லும். இரவில் ஒன்றுந் தெரிவதில்லை. பெருந் திரைகள் எழுந்து ஒன்ருே டொன்று மோதி நெருப்புப்போல வெளிச்சத் தைக் கக்கும். பெரிய கடலாமைகளும், கடற்பல்லிகளும் எனக் கடல்வாழ் செந்துக்களுங் காணப்படும்.”
அக்காலத்துப் பிரயாணிகள் எல்லோரும் விடயங்களை மிகைபடக் கூறியே வந்த போதிலும் பாகியனுடைய விவரங்கள் ஏறக்குறைய உண்மையோடு பொருந்துவனவாகவேயிருக்கின்றன. பாகியனின் குறிப்புக்களே ஆராயு மிடத்து அக்காலத்தில் இலங்கையிலிருந்து சுமாத்திராவுக்குப் பிரயாணஞ் செய்வது மகிழ்ச்சிக்குரிய காரியமன்றென அறிந்து கொள்ளலாம். இன்று பிரயாணஞ் செய்வோர் “கடலில் மிதக்கும் விடுதிச்சாலை’ போன்ற நீராவிக் கப்பல்களில் இன்பமாகப் பாதுகாப்புடன் செல்கிறர்கள். எடினிலிருந்து அல்லது பினங்கிலிருந்து புறப்பட்டுக் கடலில் ஐந்து, அல்லது ஆறுநாட்கள் பிரயாணஞ் செய்தபின் “பூலோக சுவர்க்கம்’ என்றழைக்கப்படும், இலங்கை யின், தென்னை விளிம்படுத்த கரையை மகிழ்ச்சியோடு பார்க்கின்றனர்.
பிரயாணிகளின் செய்திக்குறிப்புக்களில் எல்லாம் இலங்கையைப்பற்றிய செய்தியுங் காணப்படுகிறது. உலகில் இந்தத் தீவைப் போலப் பிரயாணி களின் குறிப்பை வெறெந்தத் தீவும் பெற்றதில்லை யெனலாம். நிலக் கரிபெறுவதற்குக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரம்பாய்ச் சுகிறது. நகரைப் பார்த்துவிட்டு வருவோமென்று பிரயாணிகள் இறங்கி விடுகிறர்கள். சிலர் சுதேசிகள் 'வசிக்குமிடம் என வேற்று நாட்டவரால் வியந்து கூறப்படும் புறக்கோட்டைக்கு, இரிட்சோவிலேறிச் செல்லுகின் றனர். சிலர் மோட்டரில் எறிக் கல்கிசைக்குச் செல்கிறர்கள். வேறு சிலர் கண்டிக்குச்சென்று தலதா மாளிகையைப் பார்த்துவிட்டு வருகின்றனர். இது இன்று நேற்று உண்டான வழக்கமன்று. பழங்காலந் தொட்டே நடந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பிரயாணிகள் இலங்கைக்கு வருகிறர்கள். இலங்கையின் இயற்கையழகைப் பற்றியும்

வரலாற்றுப் புவியியல் 3
அங்கு காணும் நூதனமான காட்சிகளைப் பற்றியும் திரும்பத்திரும்ப ஒரே குறிப்புக்களையே எழுதுகிருர்கள். பழங்காலத்துக் குறிப்புக்கள்போல இவற்றிலும் கற்பனையிலுளறிய செய்திகள், அடிக்கடி காணப்படுகின்றன. பிரயாணிகள் பார்க்கும் இப்பகுதிகள் தவிர்ந்த இலங்கையின் எனப் பாகங்கள், வெளிநாட்டவர்க்கு ஏறக்குறைய மர்மமாகவேயிருக்கின்றன. இலங்கையைப் பற்றி வேற்று நாட்டவரில் மிகச் சிலரே ஆராய்ச்சி நடத்தி யிருக்கிறர்கள். இலங்கையின் மொழியைப் பயின்றவர் அவரினுஞ் சிலரேயாவர். ஆனல், இலங்கையர் பல வேற்றுநாட்டு மக்களுக்குத் தந் தேசத்தில் இடமளித்ததுமன்றி அவர்களுடைய மொழிகளையுங் கற்றர்கள். எனவே, இத்தீவின் மக்கள் தமது தேசத்துக்கு வழங்கிய இலங்கை யென்ற பெயரை வேற்றுநாட்டவர் அறியாதிருந்தமையும், காலத்துக்குக் காலம் அங்கு வந்து போன மக்கள் அதனை வெவ்வேறு பெயர் கொண்டழைத்த மையும் வியப்பல்ல.
மிகப்பழங்காலந் தொட்டே பல்வேறு தேசத்துப் பிரயாணிகள் இலங்கைக்கு வந்து போயிருக்கின்றனர். அவர்கள் எழுதிய குறிப்புக்களும் வருணனை களும் பல்திறப்படும். இலங்கையின் வரலாற்றுப் புவியியலைப்பற்றி எழுதும் பொழுது அச்செய்திகளைக் குறிப்பிடாவிட்டால் நூலுக்குச் சிறப்பின்று. இந்நூலை வாசிப்போர்க்கு, குறிப்பாக இலங்கை மக்களுக்குக் கீழே எடுத்துக் காட்டப்பட்டவை வியப்பூட்டக்கூடியவை யாயிருக்கலாம். இங்கே ஒவ்வோராசிரியரின் தன்மையையும் அவரவர் எவ்வெவ்வகையில் இலங்கையை நோக்குகிறர் என்பதையுங்காணக்கூடிய தாயிருக்கின்றது. எந்த நாட்டைச் சேர்ந்தவராயிருந்தாலென்ன, எந்தக் காலத்தைச் சேர்ந்தவராயிருந்தாலென்ன, யாத்திரிகர் உள்ளதை மிகைப்படுத் திக்கூறுஞ் சுபாவமுள்ளவர்கள். வியத்தகு பொருள்களையும், நூதனமான பழமைகளையுந் தேடிவந்த வேற்று நாட்டவர்க்கு நூதனமான கதைகளைச் சொல்லி அவர்களை நம்பவைத்து அதனலுண்டாகும் நகைச்சுவையில் சுதேசிகள் எவ்வாறு திளைத்தார்கள் என்ற இத்தகைய விடயங்களெல் லாம் இக்குறிப்புக்களிற் காணப்படுகின்றன. இவற்றிடையே மற்றெரு விடயமும் உண்டு; இலங்கையின் சரித்திரத்தில் அவ்வக்காலங்களில் அது எவ்வாறு காட்சியளித்த தென்பதைப் பற்றிய சில உண்மைச்செய்திகளுங் காணப்படுகின்றன.
1. கி. பி. முதலாம் நூற்றண்டிலிருந்த சோலினசு பொலிசித்தர் என்ற உரோமநாட்டவரின் குறிப்பு: இது இலத்தீன் மொழியிலுண்டு. இதை ஆதர் கோலிடிங்கு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1587 இல் வெளியிட்டார். இது அழகாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (பதினரும் நூற்றண்டில் வழங்கிய ஆங்கில எழுத்துப்படி இந்தமொழி பெயர்ப்பு இருப்பதால், இதை ஒரளவுக்கு இக்கால ஆங்கில எழுத்தில் மாற்றியுள்ளேம்.) “கடலிற் கப்பலோட்டிச் சென்று ஆராய்ந்து உண்மையை அறிவதற்கு முன்னர் தாபிரபனத்தீவு மற்றேர் உலகமென்றே மக்கள் கருதினர்.

Page 10
4 இலங்கைப் புவியியல்
s
அங்கே ‘அலறிக்கோ. சு என்பவர் வசிக்கிருர்களெனவும் எண்ணி யிருந்தனர். ஆனல், மக்கள் உள்ளத்தில் இந்த அறியாமையிருக்கக்
LULLD 1.
மாத்துறைக் கணித்தாகத் தென்னமரம் நிறைந்த கடற்கரை. கூடாதென மகா அலெச்சாந்தர் எண்ணினன்; முன்னர் சென்றடையாத தேசங்களுக்குந் தனது புகழைப்பரவச் ச்ெய்தான். மசிதோனியக் கடற்படைத் தலைவனுன ஒனேசிக்கிறீட்டசு இந்தத்தீவைத் தேடிக்கண்டுபிடித்து இதன்
 

வரலாற்றுப் புவியியe 5
பீரப்பைப் பற்றியும், இங்குள்ள பொருள்களைப்பரியும் ஜதன்நிலையைப் பற்றியும் நமக்கு அறிவித்தான். இதன் நீளம் எழாயிரம் பேலோன்; அகலம் ஐயாயிரம் பேலோன்; ஓராறு இதை இரண்டாகப் பிரிக்கிறது. ஒரு பகுதியில் வனவிலங்குகளும், இந்தியாவிலுள்ள யானைகளிலும் பெரிய யானைகளுமுண்டு. மற்றைப்பகுதியில் மக்கள்குடியிருக்கிறர்கள். . . . . . . . இது கிழக்குக்கும் மேற்குக்கு மிடையிலமைந்திருக்கிறது. கீழ்க்கடலில் ஆரம்பித்து இந்தியாவுக்கு அப்பாலும் நீண்டுகிடக்கிறது. இந்தியாவைச் சேர்ந்த பாரசீகத்திலிருந்து இத்தீவுக்கு வர 20 நாட்கள் கடற் பிரயாணஞ் செய்தல்வேண்டும். ஆனல், அவர்களுடைய வள்ளங்கள் நாணலினலும் கப்பல்கள் நைல்மரத்தினுலுஞ் செய்யப்பட்டதாற் பிரயாணம் அதிக நாளெடுத்தது. இப்போது நமது கப்பல்களில் எழுநாட்களிற் பிரயாணஞ் செய்து அத்தீவையடையலாம். இத்தீவுக்கும் இந்தியாவுக்கு மிடையில் ஆறுபாகம் ஆழமுள்ள கடலுண்டு ; ஆனல், சில இடங்களில் நங்கூர மிடக் கூடாத ஆழமுமுண்டு. கடலிற்பிரயாணஞ் செய்யும்பொழுது நட்சத்திரங்களைப் பார்த்துப் போதல் முடியாது. எழுமுனியுடுக்கூட்டத்தையோ (எழுடு} கார்த்திகை நட்சத்திரத்தையோ வானத்திற் காணமுடியாது. எட்டாம் நாள் துவக்கம் 16 ஆம் நாள்வரையுமே சந்திரனைக் காண்பர். மிகப்பெரியதும் பிரகாசமுள்ளதுமான தட்சிணதனுசு என்ற நட்சத்திரம் மட்டுங் காணப்படும். சூரியன் எப்பொழுதும் வலதுபக்கத்திற்றேன்றி இடதுபக்கத்தில் மறை கிறது. குறித்த இடத்துக்குப் போவதற்கு வானத்தில் அவதானித்துப் போகக் கூடிய தொன்றுங்கிடையாது. ஆனல், கரையை நோக்கிப் பறக்கும் பறவை களைப்பின்பற்றி நாமும் கரையை அடைகிறேம்.
இங்குள்ள மக்கள் அறையமைப்புள்ள சலவைக்கற்களை வெட்டி எடுக்கிறர் கள். நல்ல இனத்தைச் சேர்ந்த முத்துச்சிப்பிகளையும் எடுக்கிருர்கள். சிப்பிகளி லிருந்து முத்துப் பெறுகிறர்கள். சிப்பிகள் சிலகாலங்களிற் பணித்துளியை விரும்பி வாயைத்திறந்து கொண்டிருக்கும்; சந்திரன் அதிகமாகப்பனியைப் பொழிய அவை அதை உறிஞ்சி உட்கொள்ளுகின்றன. உண்டதன்மைக்கு ஏற்ற அளவு முத்துக்கள் உள்ளே உண்டாகின்றன. . . . . . . . . . . . . . .
சிப்பிகளுக்கு ஒருவகை அறிவுண்டு. . . . . . . . . . . . பகலில் சூடு அதிகமா யிருந்தால், முத்தின் பிரகாசம் சூட்டினல் மங்கி விடக்கூடிய தென்ற எண்ணத்தால் அவை கடற்றண்ணிரில் ஆழமாக அமிழ்ந்தி விடுகின்றன. முத்துக்குளிப்பவருக்கு அஞ்சி அவை கடலடியிலுள்ள பாறைகளிடை யிலும், சுருமீன்களிடையிலும் பதுங்கி ஒளித்துக் கொள்கின்றன. நீந்தும் பொழுது அவை கூட்டமாக நீந்தும்; கூட்டத்துக்குத் தலைமையாய் ஒன் றுண்டு. இது பிடிப்பட்டால், பிடிபடாமல் தப்பியோடியவையும் மறுபடிவந்து வலையிற் குதித்துவிடுகின்றன.
II. பாகியன்குறிப்பு: இவர் ஒரு சீன அறிஞர். நாலாம் நூற்றண்டின்
பிற்பகுதியிலும் ஐந்தாம் நூற்றண்டி னரம்பத்திலு மிருந்தவர். (மொழி பெயர்ப்பு : “இலெக்கி) ’

Page 11
6 М இலங்கைப் புவியியல்
கிழக்கிலிருந்து மேற்குவரை ஐம்பது யோசனை நீளமும் (யோசனை என்பது ஒருநாளில் மாடுகள் செல்லும் தூரம்) வடக்கிலிருந்து தெற்குவரை முப்பது யோசனை அகலமுமுள்ள ஒரு தீவில் இந்த இராச்சியம் அமைந்திருக்கிறது. இத்தீவின் வலப்பகுதியிலும் இடப்பகுதியிலும் ஏறக்குறைய 100 சிறு சிறு தீவுகள் காணப்படுகின்றன. இவை ஒன்றுக்கொன்று பத்து இருபது இலே தூரத்திலும் சில சமயம் 200 இலே துரத்திலு மமைந்திருக்கின்றன. இவை பெரிய தீவின் ஆட்சியின் கீழே அமைந்திருக்கின்றன. இங்கெல்லாம் பலவகையான இரத்தினக் கற்களும், முத்துக்களுமுண்டு. பத்துச்சதுர இலே பரப்புள்ள ஒரு தீவில் சுத்தமான சிறந்த முத்துக்கள் உண்டு. இங்கே அவற்றைக் காவல் செய்து பரிபாலிக்க அரசன் காவலாட்களை நியமித்திருக் கிறன். எடுக்கும் முத்துக்களில் பத்தில் மூன்று அரசனுக்கு வழங்கப்படல் வேண்டும்.
ஆதியில் இத்தீவில் மனிதர் வசிக்கவில்லை. இயக்கரும் நாகரும் வசித் தனர். பலதேசத்துவியாபாரிகளும் இவர்களோடு வியாபாரம் நடத்தினர். வியாபாரஞ் செய்யுஞ்சமயம் இயக்கர் வெளியே வரமாட்டார். விலையுயர்ந்த தமது பொருள்களே வெளியே வைத்து அவற்றின் விலையையுங் குறிப்பிட் டெழுதி வைப்பார்கள். வியாபாரிகள் விலையை வைத்துவிட்டுப் பொருள்களை எடுத்துச் செல்வர்.
இவ்வாறு வந்துபோன வியாபாரிகள் மூலம் இத்தீவின் அழகைக் கேள் விப்பட்டுப் பல தேசத்து மக்களும் இங்கே வந்து குவிந்தனர். அதன்பயனக ஏராளமான மக்கள் இங்கு குடியேறினர். அதனல் இது பெரிய இராச்சிய மாக வளர்ச்சியடைந்தது. இங்குள்ள காலநிலை மிதமாகவும், மக்களைக்கவரக் கூடியதாகவுமிருக்கிறது. கோடை, மாரி என்ற வித்தியாசமே கிடையாது. தாவர இனங்கள் என்றும் நன்றகத் தழைத்து வளர்கின்றன. மக்கள் நினைத்த நினைத்த காலங்களில் வேளாண்மை செய்கிறர்கள். அதற்கென ஒருபருவமில்லை.
பாகியன் சிறீபாதத்தைப் பற்றியும், அபயகிரிவிகாரையைப்பற்றியும், சயனிக்கும் புத்தபடிமத்தைப்பற்றியும், வெள்ளாசைப்பற்றியும் கூறு கிருர், சாய்ந்துநின்ற இவ்வரசமரத்தை நிமிர்த்தி முட்டுக்கொடுத்திருப்பதா யும், அம்முட்டைத்துளேத்துக்கொண்டு, ஒரு கிளைமுளேத்திருப்பதாயும் குறிப் பிட்டிருக்கிருர்,
அரசின்கீழமைந்த விகாதையைப்பற்றியும், தந்த தாது வைக்கப்பட்ட விகாரையைப்பற்றியும் மூன்றம்மாத முடிவில் அத்தந்த தாதுவை எழுந் தருளப்பண்ணி நடத்தும் விழாவைப் பற்றியும் கூறியிருக்கிருர், மிகிந் தலைக்கும் தருமகுத்தத்துக்கும் தாம்போனதைப்பற்றியும், நிர்வாண நிலைய யடைந்த ஒரு சிரமணரை அடக்கஞ்செய்த காட்சியைப்பற்றியும் அவர் குறிப்பிடுகிறர்.
அரசன் பிராமண புரோகிதரைக் கொண்டு செய்விக்கும் கழுவாயைப் பற்றிக் கூறுகிறர். நகரில் மக்கள் பத்தி சிரத்தையுடன் காணப்படு

வரலாற்றுப் புவியியல் T
கிறர்கள். இராச்சியத்தில் ஆட்சிநிறுவப்பட்ட பின்னர் பஞ்சமோ, புரட்சியோ, குழப்பமோ கிடையாது. பொருள்கள் எளிதிற் கிடைக்கின்றன. . . . . . . .
நகரில் அழகிய உயர்ந்த மாளிகைகளில் வைசிய முதியோரும் சபியன் தேசத்து வியாபாரிகளும் வசிக்கிருர்கள். வீதிகளும், வழிகளும் சுத்தமாகவும் செம்மையாகவு மிருக்கின்றன. நாற்சந்திகளில் தருமசாலைகளுண்டு. அங்கே மாதத்தில் எட்டாம் நாளிலும் பதினன்காம் பதினைந்தாம் நாட்களிலும் (போயதினங்களிலும்) தருமோபதேசம் நடக்கும். கம்பளங்களை விரித்து இடத்தை அலங்கரிப்பார்கள்; பிக்குக்கள் இருந்து உபதேசஞ் செய்வதற்கு மேடை அமைப்பார்கள்; பல இடங்களிலிருந்து பிக்குக்களும், பொது மக்களும் வந்து கூடுவர். இந்த இராச்சியத்திலே ஒருசேர அறுபதினயிரம் பிக்குக்களிருக்கிருர்களென்றும், பொதுப் பண்டகசாலையிலிருந்து இவர் களுக்கு உணவு வழங்கப்படுகிற தென்றும் மக்கள் கூறுவர். அரசன் நகரின் மற்றெரு பகுதியில் ஐயாயிரம் ஆருயிரம் பிக்குக்களுக்கு அன்ன மளிக்கிறன்.”
III. கொசுமாசு இண்டிக்கோப்புளூசு எழுதிய குறிப்பு : இவன் கி. பி. ஆருவது நூற்றண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்கன். சொபாத்திரசு என்ற கிரேக்க வியாபாரி சொன்ன விடயங்களைக் கொண்டே இவன் தனது குறிப்புக்களை எழுதியிருக்கலாம். எலென் பிறிச்சு என்பவர் இதனைமொழி பெயர்த்திருக்கிருர்,
“இது இந்து சமுத்திரத்திலுள்ள ஒருதீவு. இந்தியர் இதனைச் சீலத்தீவு எனவழங்குவர். ஆனல், கிரேக்கர் இதற்கு இட்ட பெயர் தாபிரபன என்பது. இங்கே பதுமராகம் கிடைக்கும். மிளகுவிளையும் தேசத்துக்கு அப்பால் இத் தீவு அமைந்திருக்கிறது. இதையடுத்துப் பல சிறிய தீவுகளிருக்கின்றன. அவை ஒன்றுக்கொன்று அண்மையிலேயே உள்ளன. இங்கே இனியநீரும் தென்னையுமுண்டு. . . . . . . . . . . . . இந்தியாவின் எல்லாப் பாகத்திலிருந்தும், பாரசீகத்திலிருந்தும், எதியோப்பியாவிலிருந்தும் (இது இன்று அபிசீனியா எனவழங்கும்) ஏராளமான கப்பல்கள் இங்குவருகின்றன. இதற்குக் காரணம் இது நடுமையத்திலமைந்திருப்பதே. இங்கிருந்தும் பல கப்பல்கள் வெளிநாடுகளுக் கனுப்பப்படுகின்றன. . . . . . . . . . . . . . .
இந்து சமுத்திரத்தின் மத்தியில் அமைந்ததும், பதுமராகத்துக்குப் பேர்போனதுமான இந்தச் சீலத்தீவுக்கு வெளியுலகத்து வியாபார நிலையங் களிலிருந்து பண்டங்கள் வந்து கொண்டிருப்பதுடன், இங்கிருந்தும் பொருள் களனுப்பப்படுகின்றமையால் இதுவும் ஒரு பெரியவியாபாரநிலையமா யமைந் துள்ளது. இத்தீவின் அரசன் யானைகளையுங் குதிரைகளையும் வாங்குகிறன். யானைகளே முழமிட்டு அளந்து அவற்றின் உயரத்துக்கு ஏற்றபடி விலை கொடுக் கப்படுகிறது. குதிரைகள் பாரசீகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இறக்குமதி செய்வோர் வரி கொடுக்க வேண்டிய அவசியமில்லை.”
IV. ஒன்பதாம் நூற்றண்டிலிருந்த ஒரராபியர் எழுதிய குறிப்பு: இவ ருடைய பெயர் தெரியவில்லை. இவர் அராபிய மொழியில் எழுதியதை

Page 12
8 இலங்கைப் புவியியல்
சே. தி. இரேணுட்டு என்ற பிரெஞ்சு அறிஞர் தமதுமொழியிற் பெயர்த்தா. அதிலிருந்து ஆங்கிலத்தில் இது மொழிபெயர்க்கப்பட்டது. s
“தொபிசாத்து என்ற தீவுக்கூட்டங்களிற் பெரிதாய்விளங்கும் செரண்டிப்புத் தீவு இந்தத்தீவுகளுக்கு அப்பால் ஆர்க்கண்டுக் கடலில் அமைந்திருக்கிறது. இது சுற்றிவரக் கடலாற் சூழப்பட்டிருக்கிறது. இதன்கரையிற் சிலவிடங்களில் முத்துக் குளிப்பார்கள். உண்ணுட்டிலே இாகுன்’ என்ற மலை உண்டு. இதன் உச்சிக்கு ஆதாம் எறினர் எனவும், இங்கே தனது பாதச் சுவட்டைப் பதித்தார் எனவுங் கூறப்படுகிறது. 70 முழநீழமுள்ள ஒருபாதச் சுவடே இங்கு காணப்படுகிறது. ஆதாம், மலையில் ஒருபாதத்தை வைத்து மற்றைப் பாதத்தைக் கடலில்வைத்து நின்றர் எனவுங் கூறுகிறர்கள். இம்மலையில், மாணிக்கம், வைடூரியம், செவ்வந்திக்கல் என்னும் விலையுயர்ந்த கற்களுண்டு. பரந்துள்ள இத்தீவில் ஈரரசர் ஆட்சிசெய்கின்றனர். அகில், தங்கம், இரத்தினம் என்பனவும், முத்தும் இங்கு கிடைக்கும். க0ைகளில் முத்துக்குளிக்கிறர்கள். எக்காளத்துக்குப் பதிலாக ஊதப்படும் சங்கும் கிடைக் கிறது. இதனை அவர்கள் மிகவும் மதிக்கின்றனர்.
செரண்டிப்புத்தீவில் அரசன் இறந்தால் அவனுடைய பிரேதத்தை, தலை கீழே தொங்கும் படியாகவும் மயிர் நிலத்தைத் தடவும் படியாகவும் தேரில் வளர்த்திவைத்பூ இழுத்துச் செல்லப், பின்னல் ஒரு பெண் கையில் விளக்கு மாற்றுடன், பிரேதத்தின் முகத்திற்படும் தூசியைத்துடைத்துக் கொண்டு பின்வருமாறு ஒப்பாரி சொல்லிச் செல்லுவாள். “நேற்றைவரை உங்கள் அரசனுய் ஆணை செய்த மன்னனைப்பாருங்கள். ஒ1 சனங்களே! அவனுடைய அதிகாரம் இன்று மறைந்து போய்விட்டது. உலகைத்துறந்து பிரேதமாய் விட்டான். நடுநிலை இயமன் அவனுடைய உயிரைக் கவர்ந்து விட்டான். வாழ்வை நம்பாதீர்”. இதைப்போலப் பலவாறு மூன்று நாட்கள் புலம்பியபின், பிரேதத்துக்குச் சந்தனம், கற்பூரம், மஞ்சள் என்பன சேர்த்துக் காப்பிட்டு, அதைத் தகனஞ் செய்வார்கள். சாம்பலை எங்குங் காற்றிலே தூவுவார்கள். பிரேதத்தைத் தகனஞ்செய்வது இந்தியத் தீவெங்குமுள்ளதொருவழக்க மாகும். இந்தியதீவுக் கூட்டங்களின் கடைசித் தீவே இந்தச் செரண்டிப்பு. அரசனுடைய சவத்தை எரிக்கும் பொழுது அவன் மனைவிமார் உடன் கட்டை எறுவது வழக்கம். ஆனல், அவர்கட்கு அது விருப்ப மில்லாவிட்டால் ஒரு வரும் அவர்களை நெருக்க மாட்டார்கள்.
V. சிருப்பைச் சேர்ந்த அபுசெய்யது அல்குசேன் குறிப்பு:இவன்ஒன்பதாவது நூற்றண்டைச் சேர்ந்தவன். அரபுமொழியில் எழுதினன். சே. தி. இரேனட்டு பிரெஞ்சுமொழியிற் பெயர்த்திருக்கிருர்.
“செரண்டிப்பு மலைகளிற் சிவப்பு, பச்சை, மஞ்சள் முதலிய பலநிறம் வாய்ந்த இரத்தினக் கற்களுண்டு. இவை சிலசமயங்களிற் குகைகளிலும், மலைமுழைஞ்சுகளிலுமிருந்து பாயும் வெள்ளத்தோடு கூடவருகின்றன. இவற்றை மக்கள் பொறுக்கி யெடுத்துக் கொள்ளாமற் பார்ப்பதற்கு அரசன் காவலரை நியமித்திருக்கிருன். சில சமயங்களில் இவை நிலச்

வரலாற்றுப் புவியியல் 9
#ர்ங்கங்களில் உலோகங்களைப் போலக் கிண்டி யெடுக்கப்படுகின்றன. சிலசம யம் இவை தாதுப்பொருள்களுடன் சேர்ந்து காணப்படுவதால் அவற்றை உடைத்தே கற்களையெடுக்கவேண்டியேற்படுகிறது.
மதத்துக்கும் அரசுக்கு மடிப்படையான சட்டங்களே அரசன் பிறப்பித்திருக் கிருன். அராபியரிடையே கதீதுகளைப்போல இங்கேயும் சாத்திரங்களையறிந்த பண்டிதர் சபைகளும், அறிவு நிரம்பிய சான்றேரும் உண்டு. இந்தியர் இச் சபைகளுக்குச் சென்று சமயப் பெரியார்களைப் பற்றியும், தருமத்தைப்பற் றியுங் கூறப்படுவனவற்றை எழுதிக்கொள்ளுகிறர்கள். மாற்றுத்தங்கத் தினற் செய்யப்பட்ட பெரிய படிமம் ஒன்று இங்கேயுண்டு. கடற்பிரயாணி களிடையே இதன் நிறையைப் பற்றி அபிப்பிராயபேதமுண்டு. இங்குள்ள தேவாலயங்களுக்கு எராளமான பணஞ் செலவு செய்யப்படுகிறது.
யூதர் இங்கே பெருந்தொகையினராகக் காணப்படுகின்றனர். தனவிகள் மனிக்கிசுகள்) என்ற பல சமயமக்கள் இங்கே காணப்படுகின்றனர். எல்லாச் சமயங்களுக்கும் அரசன் சலுகை வழங்கியிருக்கிருன். தீவின் அந்தத்தில் நீண்ட அகன்ற பள்ளத்தாக்குக்களுண்டு. அவை கடலோடு கலக்கின்றன. இங்கே பிரயாணிகள் இரண்டு மாதந்தங்குவர். செரண்டிப்பு இடைவெளி என்ற இடம் இயற்கையழகு வாய்ந்தது. அங்கே மரங்களும் செடிகளும் அழகாக வளர்ந்து பச்சைப்பசேலெனக் காட்சிதரும். தெளிந்த நீரும், தேறலும் உண்டு. சுகத்துக்கேற்ற காற்றும் வீசுகிறது. அதனல் அங்கே பிரயாணிகள் சிறிது காலம் அதிகமாகவே வசிப்பர். இந்தப்பள்ளத்தாக்கு ஆர்க்கண்டு என்ற கடலுடன் இணைகிறது. காட்சி மிகுந்த இன்பமளிப்பது. ஒரு திராம் பணம் கொடுத்தால் ஓர் ஆடு வாங்கலாம்; அவ்வளவு பணத் துக்குப் பலர் குடிக்கக்கூடிய அளவு மதுவைப் பெறலாம். இது தென்னை யிலிருந்து வடியும் கள்ளைக் கொதிக்கவைத்து அம்மரத்துத்தறியுடன் கலந்து செய்யப்படுகிறது.
இங்குள்ள மக்கள் பெரும்பாலும் சூதாட்டத்திலீடுபடுவர். சதுரங்கமும் கோழிச்சண்டையும் அவர்களுடைய முக்கியமான காலப்போக்காகும். இங் குள்ள சேவல்கள் மிகப் பெரியவை; அவற்றுக்கு விசேடமான போர் முள்ளுண்டு; மற்றைக் கோழிகளுக்கு இம்மாதிரி இல்லை. கோழிகளின் முள்ளிற் சிறு கத்தியைக் கட்டியே சண்டைக்கு விடுவர். சண்டையிற் பணய மாகப் பொன், வெள்ளி, நிலம்புலம், முதலியவற்றை வைத்து ஆடுவர். வென்ற கோழியின் சொந்தக் காரனே ஈற்றில் இப்பணயப் பொருள்களைப் பெறுவான். பெருந்தொகைப் பணத்தைப் பணயமாக வைத்து இவர்கள் சதுரங்கமாடுவார்கள். பணமில்லாதவர்களும் தீயொழுக்கமுடையோரும், எல்லாந்தோற்று வெறுமனே நிற்பவர்களும் ஈற்றிலே தமது விரலையே பணயமாக வைத்து ஆடுவர். ஆட்டம் நடந்துகொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் ஒரு பானையில் வாதுமையெண்ணெயோ, நல்லெண்ணெயோ கொதித்துக்கொண்டிருக்கும்; இங்கே ஒலிவெண்ணெய் கிடையாது. அருகே

Page 13
O இலங்கைப் புவியியல்
ஒரு கூரிய கைக்கோடரியுங் கிடக்கும். தோற்றவர் தமது விரலை ஒரு கல் லில் வைப்பார். வென்றவர் அதைக் கோடரியாலே தறித்து விடுவார். உடனே வெட்டுப்பட்ட கையை அவர் கொதிக்கும் எண்ணெயிற்றோய்த்துப் பொரிப்பார். அதனற் காயம் மாறிவிடும். அப்படியிருந்தும் சூதாட்டத்தை அவர்கள் விடுவதில்லை. மீண்டும் மீண்டும் சூதாடிச்சிலசமயம் எல்லாவிரல் களையுமிழப்பர்.”
V1. சுவாயுகுவாவின் குறிப்பு: இவர் சீனதேசத்துப் புகீன் நகரில் வெளி நாட்டு வியாபாரப் பரிசோதகராயிருந்தவர். பத்தாம் நூற்றண்டின் முடிவில் வாழ்ந்தவர். உரொக்கில், கேத்தர் ஆகியவர்களாற் சீனமொழியிலிருந்து பெயர்க்கப்பட்டது.
“இலான்வூலிலிருந்து கப்பலிற் புறப்பட்டு வரும்பொழுது அடிக்கடி மின்னல் ஒளி தோன்றுவதாற் சிலான் தேசம் சமீபித்துவிட்டதென்று உணரலாம்.
சிலான் அரசன் கறுப்புநிற முடையவன். மயிர் விரிந்து தொங்கும், அவன் தலையில் எவ்வித அணியுமில்லை. பல நிறம் பொருந்திய பருத்தித் துணியைச் சுற்றியுடுத்திருப்பான்; வேறு உடைகள் கிடையா. பொற்கயிற்றற் கட்டப்பட்ட சிவப்புத்தோலாலியன்ற பாதுகை அணிந்திருப்பான். யானை யிலோ, பல்லக்கிலோ பிரயாணஞ்செய்வான். பகல் முழுவதும் வெற்றிலை பாக்கும், முத்துச் சுண்ணும்புஞ் சாப்பிட்டபடியிருப்பான்.
அரசனுடைய மாளிகை வைடூரியம், நீலம், இரத்தினம் முதலிய விலை யுயர்ந்த இரத்தினங்களாலலங்கரிக்கப்பட்டிருக்கும். நிலத்தளமே இவ்வாறு அலங்கரிக்கப்பட்டிருக்கும். கிழக்கு அரண்மனை மேற்கு அரண்மனையென்று இரண்டு அரண்மனைகளுண்டு. ஒவ்வொன்றிடையும் பொன்னலான ஒவ் வொருமரமுண்டு. அடியும் கிளைகளும் எல்லாம் பொன்னலானவை. பூவும், பழமும், இலையும் பலநிற இரத்தினங்களாலானவை. இம்மரங்களி னடியிலே தங்கச் சிம்மாசனமுண்டு. இவை ஒளிபுகாத கண்ணுடித்திரை யுடையவை. முற்பகலிலே திருவோலக்கத்திலமரும்போது அரசன் கிழக்கு அரண்மனையிலும், பிற்பகலில் மேற்கு அரண்மனையிலுமிருப்பான். அரசன் அத்தாணி மண்டபத்தில் அமரும்போது சூரிய வெளிச்சத்தில் இரத்தினங் கள் மின்னும், கண்ணுடித்திரையிற் பொற்றருவும் அதிலுள்ள இரத்தினங் களும் ஒளி வீசும்; பார்ப்போர்க்கு அது உதய சூரியனின் தோற்றத்தை யளிக்கும்.
அரசன் வெற்றிலை மென்று உமிழும் எச்சிலைப் பெறத் தங்கப்பாத் திரமேந்திக்கொண்டு இருவர் நிற்பர். அந்த எச்சிலில் குங்குமப்பூ, கற்பூரம் முதலியவிலையுயர்ந்த பொருள்கள் கலந்திருக்கும். அதனல் அதைப்பெறும் சேவகர் திறைசேரிக்கு மாதமொன்றுக்கு ஒரு பொற்காசு கொடுத்தல் வேண்டும்.

வரலாற்றுப் புவியியல்
இரவில் ஒளிகொடுப்பதுந் தீயினல் எரியாததும், ஐந்து அங்குல விட்ட முள்ளதுமான் ஒர் இரத்தினக் கல்லு அரசன் கையிலுண்டு. அந்தக்கல் லினல் அரசன் தினமும் முகத்தைத்துடைத்துக் கொள்வான். அவனுக்குத் தொண்ணுரறு வயது செல்லினும் முகத்தில் இளமை காட்டும் குணம் அந்தக் கல்லுக்கு உண்டு. இவ்வூர் மக்கள் கறுப்பு நிறமுடையவர். உடம்பைச் சுற்றி ஒரு சாரத்தை யணிந்துகொள்வர். தலையிற்றலைப்பாகையோ பாதத்திற் பாதரட்சையோ அவர்களனிவதில்லை. கையினல் உணவையெடுத்துச் சாப்பிடுவர். வீட்டுப் பாத்திரங்கள் எல்லாஞ் செம்பினலானவை.
சிலான் என்ற இத்தீவில் சீ-லன்-தை என்றெரு மலையுண்டு. அந்த மலையினுச்சியில் எழடி நீளமுள்ள பெரிய பாதச்சுவடு காணப்படுகிறது. அதுபோன்ற ஒரு சுவடு அதிலிருந்து முந்நூறு இலீ தூரத்திலுள்ள கடல் நீரிலுங் காணப்படுகிறது. மலையில் வளரும் மரங்களெல்லாம்-சிறியனவும் பெரியனவும்-மலையுச்சியை நோக்கிப் பாதச்சுவட்டுக்கு வணக்கஞ் செலுத்து வேைபாற் சரிந்து நிற்கின்றன.
சி-லானில் வைடூரியம், ஒளியூடுருவுஞ் சிவப்புக் கண்ணுடி, கற்பூரம், நீலக் கல், சிவப்புக்கல் முதலியவுைண்டு. வலம், கறுவா, கரடுமுரடும் மிருதுத் தன்மையுமுள்ள வாசனைப்பொருள் என்பனவுமுண்டு. அந்நிய நாட்டு வியா பாரிகள் சந்தனம், இலவங்கம், கற்பூரம், பொன், வெள்ளி, பீங்கான், குதிரை, யானை, பட்டு என்னும் பொருள்களைக் கொடுத்துப் பண்டமாற்றுச் செய்வார்கள்.
வருடந்தோறும் இங்கிருந்து சன்-போசிக்குத் (சுமாத்திராவிலுள்ள பாலம் பாங்கு) திறையனுப்பப்படுகிறது.”
VI. யோன் த மரிக்கினெலியின் குறிப்பு : இவர் பதினன்காம் நூற் ருண்டின் ஆரம்பத்தில் யாத்திரை செய்தவர். (இலத்தீனிலிருந்து யூல் என்பவரால் பெயர்க்கப்பட்டது.)
“சுவர்க்கமென்பது உண்மையாக உலகத்தில் உண்டு. சமுத்திரத்தாற் சூழப்பட்டிருக்கிறது. கீழைத்திசையில், கொலம்பைன் இந்தியாவின் அக் கரையிற் செயிலான் மலைக்கு எதிரே இருக்கிறது.
செயிலானிலிருந்து சுவர்க்கத்துக்கு 40 இத்தாலியமைல் துரந்தானுண்டு. சுவர்க்கத்தில் உள்ள அணையிலிருந்து விழும் நீரின் ஒசை அங்கே கேட்கு மெனக் கூறுவர்.
அந்த உயர்மலையில், (சுவர்க்கத்திலுள்ள உயர்ந்த மலைக்கு அடுத்ததாக பூலோகத்தில் உள்ள உயர்ந்த மலை இதுவேயெனலாம்) சுவர்க்கம் இருப் பதாகச் சிலர் எண்ணுகின்றனர். அந்த மலையினுச்சி மிக உயரமுடையது; முகில் மறைப்பதனல் அதைக் காண்பது அரிது. ஆனல், நமது கண்ணிரைப் பார்த்து இரங்கிய கடவுள் ஒரு நாட்காலை சூரியன் உதிக்குமுன் அந்த உச்

Page 14
12 இலங்கைப் புவியியல்
சியைக் காட்டினர். நாம் நிறைந்த பிரகாசத்துடன் விளங்கும் அதனைக் கண்ணுற்றேம். இந்த மலையிலிருந்து இறங்கும் வழியிற் சமதரைய:ன பூமியுண்டு. அதுவும் மிக உயர்ந்த இடமே. அங்கே முதலில் ஆதாமின் பாதச்சுவடு காணப்படுகிறது. இரண்டாவது இடது கையை முழங்காலி லும், வலது கையை மேலே உயர்த்தி மேற்கை நோக்கிக் காட்டியுங்கொண்டு உட்கார்ந்திருக்கும் ஒரு படிவம் காணப்படுகிறது. கடைசியாக ஆதாம் தனது கையினற் கட்டிய வீடு காணப்படுகிறது.
இலங்கையிலுள்ள ஆதாமின் தோட்டத்தில் வாழைகளுண்டு. சுதேசிகள் இதனை அத்தி என்பார்கள். இது மரமன்று; தோட்டச் செடியென்றே கூறல் வேண்டும். இதன் அடிப்பாகம் ஒக்கு மரம் போலப் பெரியது. ஆனல், மிக மிருதுவானது. நல்ல பலசாலி தனது விரலால் அதன் அடிப் பாகத்தில் ஒரு துளை செய்து விடலாம். அத்துளையிலிருந்து நீர் வடியும். இவ் வாழைகளின் இலை மிக அழகானவை; நீளமானவை; அகலமானவை; மரகதம் போன்ற நிறமுடையவை. சாப்பாட்டு மேசையின் விரிப்பாக இதைப் பயன் படுத்துவர். ஆனல், ஒரு நேர உணவுக்கே அது உதவும். இலைகள் எறக் குறையப் பத்து எல் நீளமுடையன. வாழை, நுனியிற் குலைபோடும். ஒரு குலையில் 300 காய் வரை காய்க்கும். காயைச் சாப்பிடமுடியாது. வீட் டிற் சில நாள் வைத்திருந்தால் அவை பழுக்கும். பழுத்தபின் நல்ல சுவையும் மணமுமுள்ளனவாயிருக்கும். ஒரு பழம் ஒரு கையிலுள்ள பெரிய விரலின் அளவினதாய் இருக்கும்.
எங்கள் ஊர்களிற் காணுத பலவகையான மரங்களும் அற்புதமான கனிவகைகளும் இங்கேயுண்டு. உதாரணமாக 'நார்கில் (நாளிகேயம்) என்பதைக் கூறலாம். நார்கில் இந்தியத் தேங்காய். இம் மரத்தின் மேற்றேல் மிருதுவானது. இலைகள் பேரீந்தின் இலை போல அழகியவை. இந்த இலையினற் கடகங்களும், தானியமளக்கும் அளவைகளுஞ் செய்யப் படுகின்றன. மரம் வீட்டுவளைகட்கும், முகட்டு மரங்களுக்கும் உபயோகப்படு கின்றன. தென்னந் தும்பிலிருந்து கயிறு திரிக்கப்படுகிறது. சிரட்டையினற் கிண்ணமும் கும்பாக்களுஞ் செய்யப்படுகின்றன. இதனற் செய்யப்படும் அகப்பைகள் நஞ்சு கொல்லிகளாகுந் தன்மையுடையன. சிரட்டையை உடைத்தால் உள்ளே இரண்டு விரற் கனத்தில் தேங்காயுண்டு. அது சாப்பிடுவதற்கு வாதுமைபோல இனிமையுள்ளது. அது எரியக்கூடியது. அதிலிருந்து எண்ணெயும் சீனியுஞ் செய்யலாம். உள்ளேயிருக்கும் இள நீர் கறந்த பால் போல நுரைக்கும்; உவைன் போல இனிமையுடையது.
ஆமிரம் (மாமரம்) என்ற ஒரு வகைக்கனிமரமுண்டு. அதன் பழம் மிக உருசியும் மணமுமுள்ளது. அது பீச்சுப் பழத்தைப் போன்றது.
சக்கைப் பருகே (பலா) என்ற அற்புதமான ஒரு கனி மரமுண்டு. அது ஒக்கு மரம் போலப் பெரியது. அதன் காய் கிளைகளிலன்றி அடிமரத்திலேயே தோன்றும். பார்வைக்கு நூதனமாயிருக்கும். ஒரு

வரலாற்றுப் புவியியல் 13
பெரிய ஆட்டுக் குட்டியைப் போலவும், மூன்று வயதுக் குழந்தை போலவும் பருமனுடைய்து. அதன் தோல் பைன் பழம் போலக் கடினமானது. கோடரியால் வெட்டிப் பிளத்தல் வேண்டும். உள்ளே இனிய மணமுள்ள சுளையுண்டு. அது தேன்போலவும், இத்தாலிய மெலோன் போலவும் இனி மையுடையது. சுளைக்குள்ளேயிருக்கும் விதையைப் பொரித்துச் சாப்பிடலாம். அது மிக உருசியுள்ளது.
புத்த பிக்குக்கள் மாமிசம் சாப்பிடுவதில்லை. இடுப்புக்குமேலே அவர்கள் உடையின்றிக் காணப்படுவர். நல்ல ஒழுக்கமுடையவர்கள். அவர்களுடைய வீடுகள் ஓலையாற் கட்டப்பட்டன. அவற்றை விரலாலே தொளைக்கலாம். இவை காடுகளில் அங்கு மிங்குங் காணப்படுகின்றன. உள்ளே நிரம்பப் பொருள் உண்டு. ஆனலும் கள்ளர் பயம் சிறுதுமின்றி அவர்கள் சீவிக்கிருர்கள். வெளியூர்களிலிருந்து நாடோடிகள் வந்தாலன்றி அவர்களுக்குப் பயம் கிடையாது.
ஒரு பகலுக்குப் போதுமான உணவையே இவர்கள் வீட்டில் வைத்திருப் பர். நிலத்திலே நித்திரை செய்வார்; கையிலே தண்டு எந்திக் கொண்டு பாதரட்சையின்றி நடந்து திரிவர். நமது தேசத்திலுள்ள சமயச் சகோதரர் போல உடையணிந்திருப்பர். ஆனல், அவர்களுக்குத் தலையங்கியுண்டு. இவர்களுக்குத் தலையங்கி இல்லை. அத்துடன் நமது அப்போத்தலர்களைப் போல மடிப்புள்ள அங்கியொன்றைத் தோள் மேலணிந்திருப்பர். தினமும் காலையில் தமது உணவுக்காகப் பிச்சையெடுப்பதற்கு வரிசையாய்ச் செல்வர். இளவரசரும் எனையோரும் அவர்களையெதிர் சென்றழைத்து வணக்கம் புரிந்து அவர்கள் தேவைக்கேற்றபடி சோறு வழங்குவர். தேங்காய்ப் பாலும், வாழைப்பழமும் சேர்த்துச் சோற்றைச் சாப்பிடுவார்கள். இவை நான் கண்ணற் கண்டவை. அவர்கள் சங்கத்திற் சேர்ந்த ஒருவனைப் போல என்னையும் மதித்து உபசரித்தனர்.”
VIII. சொஞ்சு தி தென்னிபோட்டின் குறிப்பு: இவர் 17 ஆம் நூற் றண்டில் வாழ்ந்த ஒரு பிரெஞ்சு ஆசிரியர். “இங்கே நாம் கொழும்பு நகரைக் கண்டோம். இந்நகர் கடற் கரையில் சமதரையில் அழகாகக் கட்டப்பட்டிருக் கிறது. காட்சிக்கினிய மரங்கள் ஆங்காங்கு நகரை அலங்கரிக்கின்றன. பக்கத்தில் ஒரு பெரிய கோட்டையிருந்தது. துறைமுகத்தில் எட்டுக்கப்பல்கள் 85 Tool LILL607.
அரசனேடு தொடர்பு வைப்பதானல் மட்டக்களப்பிலிருந்து செல்வதே எளிது. அவனுடைய இராசதானி, தீவின் மத்தியில் அமைந்திருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து இரண்டு நாட் பிரயாணஞ் செய்தால் அதை அடைய லாம்; கொழும்பிலிருந்தும் இரண்டு நாளெடுக்கும்,
மட்டக்களப்புத் திசையில் கண்டியையடுத்து, நல்லதொரு கறுவாத்தோட்ட முண்டு. அது அரசனுக்கே சொந்தமானது. இடச்சுக்காரருக்கன்று, மேற்குப் பகுதியில் உலகத் தேவைக்கே அதிகமான அவ்வளவு கறுவா உண்டாகிறது.”

Page 15
14 இலங்கைப் புவியியல்
IX. சுவென் எடின் எழுதிய குறிப்பு: இவர் சுவீடினைச் சேர்ந்த புகழ் பெற்ற யாத்திரிகராவர். ‘துருவத்துக்குத் துருவம்’ என்ற் பெயருடன் இவர் எழுதிய நூல் 1908 ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்டது.
“நடுப்பகல் ஆனதும் அடிவானத்தில் இலங்கையின் கரைதென்படும். நெடுந் தூரத்திலே, திரைகள் கரையில் வந்து மோதுவதைக் காணலாம். கரையை நெருங்க நெருங்கக் கப்பல்களின் புகைக் குழாய்களும், தோணிக ளின் பாயும், பாய் மரங்களும் எராளமாகக் காட்சிதரும். தூரத்தே ஆசிய ஐரோப்பிய முறையிலும், கட்டப்பட்ட கட்டிடங்கள் காணப்படும். அதுவே இலங்கையின் தலை நகரான கொழும்பு ; ஐரோப்பாவுக்குந் தூரகீழைத் தேச நாடுகளுக்கு மிடையிற் போக்கு வரத்துச் செய்யும் கப்பல்களுக்கு இது மிக முக்கியமான துறை முகமாகும் . . . . சிங்களரும், இந்துக்களும், கப்பற் பாதைகளில் வந்து குவிந்து விடுவார்கள். பிரயாணிகளின் பொருள்களைத் துரக்குவதற்காகச் சத்த மிட்டுக் கொண்டு நெருங்குவர். உடம்பில் அதிகம் உடை அணிந்திருக்க மாட்டார்கள். ஒரு மேலங்கியோ, அரையில் ஒரு வெள்ளை வேட்டியோ அணிந்திருப்பர், தலையிற் சீப்பு அல்லது துணி அணிந் திருப்பர்.
கரைக்குச் சென்று நகரின் பிரதான வீதிகளையடைந்தால் செம்பு நிற முள்ள மக்களும், வண்டிகளும், திராம் வீதிகளும், அரை நிர்வாணமான மனிதரிழுக்கும் இரு சக்கரமுள்ள சிறிய இறிச்சோவண்டிகளுங் காணப் படும். நீண்டு வளர்ந்த தென்னைமரச் சோலைகளிடையே சுதேசிகளின் கு சைகளும், ஐரோப்பியரின் வீடுகளுங் காணப்படும்.”
X. கெய்செர்லிங்குப் பிரபுவின் குறிப்பு: இவர் எசுத்தோனியாவைச் சேர்ந்த ஒரு தத்துவ ஞானி. ‘ஒரு தத்துவ ஞானியின் தினக் குறிப்பு என்ற நூலில் 1914 ஆம் ஆண்டு எழுதியுள்ளார்.
“பெளத்தபிக்குக்களின் உயர்ந்த பண்பாடு என்னை வியப்படையச்செய்கிறது. அவர்கள் சாந்தமானவர்கள். விடயங்களை நன்கு அறியும் ஆற்றல் வாய்ந்த வர்கள்; தயாளசிந்தையுடையவர்கள்; அன்ருட நிகழ்ச்சிகளுக்குப் புறம் பாக நின்று விடயங்களை நோக்குஞ் சுபாவமுள்ளவர்கள். இருந்தும் புத்த சமயம் ஐரோப்பியர்க்கு ஏற்றசமயமன்று. ஆக்கச்சத்தியும், உள்பொருட்காட்சியு முடைய புத்தசமயம் சிங்களர் சமூகத்தை நெறிப் படுத்தியது போலச் சமயத்தின் ஆன்மார்த்த சம்பத்து மற்றைச் சம யங்களிலும் ஏற்றவாறு அமைதல் வேண்டும். உலகமே உள்பொருள் என்று கூறிக்கொண்டு, அமைதியின்றி எப்பொழுதும் ஒடி ஆடி அலைவ திலேயே நமது முழுச் சத்தியையுஞ் செலவுசெய்து வாழும் நாம், நமது சொந்த விடுதலைக்காக வாழ்வை நடத்த முயலுவோமானல் அது உடனே தடித்த தன்முனைப்பிலே எம்மையிட்டுச் சென்று விடும். இந்தவகையில் நிர்வாண நிலையடைய நாம் எத்தனித்தால், நமக்கு நாம் எவ்வளவு

முதற் பகுதி-இரண்டாம் அத்தியாயம்
இலங்கையின் பெயர்கள்
சிங்களர் சிலோனுக்குக் கொடுத்தபெயர் “லங்கா’. இதுவடசொல்; தமி பூழில் இது “ஈழம்” என்றும் “இலங்கை” என்றும் வழங்கும். “லங்கா" என்பது மிகப் பழையகாலத்திலிருந்தே வழங்கிவருகிறது. எறக்குறைய 3000 ஆண்டுக்கு முற்பட்ட செய்திகளைக் கூறுவதும், இலங்கையோடும் இந் தியாவோடும் தொடர்புடைய புராணக் கதைகளைக் கொண்டதுமான இராமா யனைத்தில் "லங்கா’ என்ற பெயர் காணப்படுகிறது. கி. மு. ஆறம் நூற். ருண்டில் விசயன் இலங்கைக்கு வந்தபொழுது, இங்குவசித்துவந்த ஆதிக் குடிகள், இலங்காபுரம் என்று தம் தலைநகரைக் குறிப்பிட்டதாய்த் தெரி கிறது. இராமாயணத்தில் வரும் முக்கியமான பாத்திரங்களான இராமன், இராவணன், சீதை ஆகிய பெயர்களோடு சம்பந்தப்பட்ட இடங்களும், மக்களும் இலங்கையிலுண்டு. உதாரணமாக இராமேகவரம் மகாராவணன் கோட்டை (பெரியபாசு), குடாராவணன் கோட்டை (சின்னபாசு), சீதாவாக்கை, சீதாகந்தை முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
கி. பி. ஆரும் நூற்றண்டின் துவக்கத்தில் மகாநாமன் என்ற புத்த பிக்கு இலங்கையின் சரித்திர மொன்றைத் தொகுத்தான். இது இந்தியப் புராதனச் செம்மொழிகளி லொன்றன பாளிமொழியில் எழுதப்பட்டது. சிங்கள மொழிக்கு ஆக்கம் உதவிய மொழிகளுள் பாளி சிறப்பானது. இச் சரித்திர நூலுக்கு மகாவமிசம் எனப்பெயர் வழங்கப்பட்டது. காலத்துக்குக் காலம் இம்மகாவமிச சரித்திரம் பல் வேறு ஆசிரியராலே தொடர்ந்து எழு தப்பட்டுவந்தது. புராதன சரித்திரங்களைப் போல இதிலும் உயர்வு நவிற்சி அதிகமுண்டு. இருந்தும், உலகில் உள்ள சரித்திர சம்பந்தமான சாதனங் களுள் இது மிகப்பயனுடையதும் மனதை மிகக் கவருந் தன்மையுடையது மாகும். இதிற் கொடுக்கப்பட்டுள்ள பழையகட்டிடங்களின் குறிப்புக்களைக் கொண்டு, இலங்கையிற் கிலமடைந்து கிடக்கும் பலபுராதன கட்டிடங்களைச் சுட்டியறிந்து கொள்ளக் கூடியதாயிருக்கிறது. பலநூற்றண்டுகளாக இச் சரித்திர வரலாற்றை மக்கள் மறந்திருந்தனர். ஆனல், இன்று சிங்கள மக் கள் அதன் சிறப்பை உணர்ந்து, அதில் அபிமானம் காட்டி வருகிறர்கள்.
கைகர் என்பவர் மகாவமிசத்தை மொழிபெயர்த்தார். அதிலிருந்து எடுத்துக் காட்டப்படும் இந்த மேற்கோள் விசேடமாக இடப்பெயர்களைப்பற்றியே குறிப்பிடுகிறது. பழைய பல சாதனங்களிற் காணப்படும் “தாபிரபன’ என்ற உரோமப் பெயர், கீழே காட்டியவாறு “ தம்பபண்ணை ’ என்ற சொல்லிலிருந்தே வந்திருக்க வேண்டும்.
17
3-J. N. B. 70576 (11157)

Page 16
8 இலங்கைப் புவியியல்
கி.மு. 543 வரையில் விசயன் தலைமையில் வந்தவர்கள் கப்பலேவிட்டு இறங்கிக் களைப்பினுற் கைகளை நிலத்தில் ஊன்றிக்கொண்டு கீழேயிருந் தனர். சிவப்புநிறமுள்ள மண் கையிலே படிந்தது. அதனல் அந்த இடத்தை “தம்பபண்ணை’ என்று கூறிக்கொண்டனர். அன்றியும் அந்தத் தீவுக்குமே தம்பபண்ணையென்ற பெயரை வழங்கினர். (கங்கைக் கரையிலுள்ளதொரு நாட்டையாண்ட) சிங்கபாகு என்ற மன்னன் (தனது மகனன விசயைே நாட்டைவிட்டுக் கலைத்துவிட்டான்) ஒரு சிங்கத்தைக் கொன்றபடியால் சிகளன் (சிங்களன்) எனப்பெயர் பெற்ருன். விசயனும் அவனுடைய தோழர்களும் நட்பின் கிழமையால் சிகளர் எனப்பெயர் பெற்றனர். (சிங் கள என்ற பெயர் பின்னர் சிங்களர் என மருவிற்று.)
‘விசயனுடைய அமைச்சர் அங்குமிங்குமாகக் கிராமங்களை உண்டாக்கினர். கடம்ப ஆற்றின் கரையில் அனுராதகமன் என்ற பெயருள்ள ஒருவனல் அனுராதகமம் அமைக்கப்பட்டது. (கடம்ப ஆறு இன்று மல்வத்து ஒயா எனவழங்கும்.) அனுராதகமத்துக்கு வடக்கே கம்பீரை யாற்றின் கரையில் உபத்திசகமம் என்ற ஊரை உபத்திசன் என்ற புரோகிதன் கட்டுவித்தான். மற்றும் மூன்று மந்திரிகள் உச்சைனி, ஊருவெலை, விசிதம் என்ற நகரங் களை அமைத்தனர். அனுராதபுரத்துக்குத் தெற்கே 24 கல் தொலைவில் இன் றுள்ள விசிதயுரமே அந்த விசிதம் எனக்கொள்ளப்படுகிறது. மகாதிட்ட மென்னும் மாதோட்டப் பெருந்துறையிற் பாண்டியவரசன் மகள் வந்திறங் கியதும், விசயன் தன்னேடிருந்த இயக்கியான குவேனியையும் அவள் குழந்தைகளையுந் துரத்திவிட்டான். அவளை இலங்காபுரத்தில் இயக்கர் கொன்றனர். அவளுடைய குழந்தைகள் சுமணசுடமலைக்கு ஒடினர் (சிவ ைெளிபாதமலை). இங்கே அவர்கள் மலைய நாட்டில் இருந்தனா. (திவின் மத்தியிலுள்ள மலைநாட்டுக்கு மலையநாடென அக்காலத்தவர் பெயரிட்டனர்.) இவர்களுடைய சந்ததியாரே புலிந்தர். புலிந்தர் நாகரிக மற்ற சாதியார். (வேடராயிருக்கலாம்). * புலிந்தர்’ ‘சப0ர்’ என்பன சங்கத்தில் ஒரு பொருட்சொற்கள். எனவே சபரருடைய கிராமம் சபரகமமாயிற்று.
“நராதிபஞன விசயன் தனது பழைய தீயொழுக்கங்களைக் கைவிட்டு, ந6) லொழுக்கம் பூண்டு தம்பபண்ைேல யென்னுந் தலைநகரிலிருந்து நீதிநெறி வழுவாது முப்பத்தெட்டுவருடம் இலங்கையை ஆண்டான். அமைதி எங்கும் நிலவிற்று.”
புராதன காலத்திலே தோன்றிய உலகப் படங்களிலும், இந்து சமுத்திரப்படங் களிலும், இலங்கை காணப்படுகிறது. இவ்வாறு தோன்றிய ஒரு படந் தான் கி.பி. இரண்டாம் நூற்றண்டிலே தொலமி என்ற எகித்திய அறிஞனல் வரையப்பட்டது. அவன் இந்தத்தீவுக்கு “தாழிாபன’ என்று பெயரிட்டான். இது உரோமர் மூலம் இவனுக்குக் கிடைத்த பெயர். உரோமர் கிறித்துவுக்கு முன்னர் பல நூற்றண்டாகத் தூரகிழக்கு நாடுகளுடன் வியாபாரம் நடத்தினர். கி.பி. முதலாம் நூற்றண்டிற் சீனரோடு தொடர்புபூண்டனர்.

வரலாற்றுப் புவியியல் 19
புராதன உலகப் படங்களில் அடிக்கடி காணப்படுவதும், செப்பமாகக்குறிக்கப் பட்டதுமான தேசம் இலங்கையைப்போன்று வேறென்றில்லை. இதைப் போல வேறு தேசங்களுக்கு வாய்ப்புக்கிடைக்கவில்லை. அதனுடைய விசா லத்தை அக்காலத்தவர் செப்பமாக மதிப்பிட்டுக் கொள்ளவில்லை. இரண் டாம் உருவப்படத்திற் காட்டிய உருவத்தைப் பார்த்தால் இக்கூற்றின் உண்மை புலனுகும். உரோமர் இலங்கைக்கு இட்ட மற்றெரு பெயர் “பலை சிமுண்டு.”
இந்துக்கள் இலங்கையைச் "சியலிதிபம்’ என்ற பெயரால் அழைத்தனர். இது வடமொழிச் சிங்களதுலீபம் என்ற பெயூரின் சிதைவாகும். அராபியர் சீயலிதீப மென்பதை “செரெந்திப்பு” என மாற்றி வழங்கினர். “செரெந் திப்பு” “செலெந்தீவு’ எனவும் வழங்கும். இந்த உருவம் பல மாற்றங் களுடன் பிரயாண நூல்களிற் காணப்படுகிறது. இலங்கை வாசிகள் கடலோ டிகளாக எக்காலத்திலுமிருந்ததில்லை. பழங்காலந் தொட்டே அராபியர் இலங்கையின் கரையோரங்களில் வந்து குடியேறி வியாபாரம் நடத்தினர். கண்டிநாட்டுச் சிங்களர் வெளியுலகத்தொடு சிறிதளவு தொடர்பே வைத் திருந்தனர். கரைநாட்டுச் சிங்களர் அராபிய வியாபாரிகளோடு தொடர் பின்றி வாழ்ந்தனர். ஏனெனில் அராபிய வியாபாரிகளின் சமயக் கோட் பாடுகள் முற்றும் மாறனவையாக விருந்தன. ஆதலின் இந்து வியாபாரி களோடு அராபிய வியாபாரிகள் அதிக தொடர்புடையவராயிருந்தனர். பருவக் காற்றைப் பின்பற்றி ஆபிரிக்கக் கரைக்குக் கப்பல்களை ஒட்டிச் செல்லும் பழக்கம் முதலில் அராபியருக்கும் பின்னர் இந்துக்களுக்கும் உண்டானதால் இவர்களிடையே இத்தொடர்பு ஏற்பட்டது. பின்னர் போர்த்துக்கேயரும், இடச் சுக்காரரும் அராபியர் மூலம் இலங்கையின் பெயர் சம்பந்தமான “சிலி யாவோ” “சீலன்’ என்னும் உருவங்களைப் பெற்றனா. ஆங்கிலேயரும் பிரான் சியரும் இச்சொல்லினை “சிலோன்,” “சிலான்’ என்று மாற்றி வழங் கினர். தமிழ் மக்கள் “இலங்கை’ என வழங்குவர். சீனர் “சி-லான்’ என வழங்கினர். “லங்கா’ என்ற பெயரை “லங்-யா’ எனத் திரித்தும் வழங்கினர். “சிங்கராச்சியம்’ என்பதன் மொழிபெயர்ப்பாக “சி-ரி-குவோ' எனவும் இத்தீவுக்குச் சீனர் பெயர் வழங்கினர். v
இலங்கை மக்களை ஆங்கிலர் “சிங்களர்” எனப் பெயரிட்டழைப்பர். சிங்கள மொழியில் சிங்களர் என்றல் “சிங்ககுலத்தவர்’ எனப்பொருள். சிலவேளை களில் இசசொல்லின் முதற்பகுதி சின்-கலீசு, சிங்கலிசு-என்று உருவ டையும். இச்சொல் ஆங்கிலேயர் வாயில் செப்பமாக உச்சரிக்கப்படாமற் போகலாம். இச்சிக்கலை விடுவிக்கவேண்டின் திருத்தமாக உச்சரிக்கப் பழகிக்கொள்க.

Page 17
முதற் பகுதி-மூன்ரும் அத்தியாயம்
புராதன ஆசியப் பாதைகளோடு இலங்கைக்குள்ள தொடர்பு
சீன மொழியில் உள்ள இலக்கியம் பரந்ததும் பழமையுடிையதுமாகும். அம்மொழியைப் பயில்வது கடினமாதலால் அந்நிய நாட்டவரிடையே அது பயிலப்படுவது மிகக்குறைவு. ஆசியாவின் வரலாற்றுப் புவியியலைப் பற்றிய பல செய்திகள் சீன இலக்கியத்திலுண்டு. ஆனல், சீன நூல்களில் மிகச்சிலவே ஐரோப்பிய மொழிகளில் இதுவரை பெயர்க்கப்பட்டுள்ளன. ஐரோப்பியரின் சரித்திரகாலம் தொடங்கியபொழுது சீனர் உயர்ந்த நாகரிக முடையவர்களாயிருந்தார்களென்பதும் மிகத்திறமைவாய்ந்த தரைப்பிர யாணிகளும், மாலுமிகளும் அவர்களிடையே காணப்பட்டனரென்பதும் அம்மொழிபெயர்ப்புக்களிலிருந்து தெரிகிறது. அவர்கள் செய்த தீரச் செயல்கள் உலக சரித்திரத்தில் உயர்ந்த இடத்தை வகிக்கின்றன.
சீனருடைய கடல் வியாபாரப் பாதையில் இலங்கையுந் தொடர்பு பெற்றி ருக்கிறது. ஆனல், இலங்கைக்குஞ் சீனவுக்குமுள்ள தொடர்புகளைச் செப்ப மாக அறிந்துகொள்வதானற் புராதன காலத்தில், ஐரோப்பிய நாடுகளுடன் ஆசியதேசங்கள் எத்தகைய தொடர்பு பூண்டிருந்தன வென்பதை அறிவது அவசியமாகும்.
முதலில் ஆசியாவுக்கூடாகத் தரைப்பாதைகள் அமைக்கப்பட்டன. சரித்திர கால ஆரம்பத்திலிருந்தே இப்பாதைகளை நாம் காணக்கூடிய தாயிருக்கிறது. புதிய கற்காலத்து மனிதனல் ஆக்கப்பட்டதெனச் சரித்திர அறிஞர் கருதும் கிரேக்க முறையிலமைந்த சிலபொருள்கள் கிரேக்கநாட்டுக்கு மிக்கதுரத்தி லுள்ள மொங்கோலிய நாட்டிற் கண்டெடுக்கப்பட்டன. கி. மு. பத்தாம் நூற்றண்டிற் சபேயர் என்ற மிகப்பழைய சாதியார் இந்தியாவுடன் வியா பாரம் நடத்தினர்க ளெனவுங் கூறுப. இவை உய்த்துணரப்பட்ட செய்திகளே. சீனரைப் பற்றி ஆராயுமிடத்து அவர்களுடைய வியாபார நடவடிக்கைகளைப் பற்றிய திட்டமான சான்றுகள் உண்டு. உதாரணமாக கி. மு. 522 இல் அவர்கள் தமது கரையோரங்களே யடுத்தும் எல்லைகளே யடுத்துஞ் சுங்கச் சாவடிகளை அமைத்தனர் என்பதும், கி. மு. 140 இல் சீனக்கரைகளில், பிறநாட்டு வியாபாரிகளோடு வியாபாரஞ் செய்வதற்காகச் சந்தைகளை யமைத்தன ரென்பதும் வெளிப்படை. கி.மு. 160 உக்கும் 110 உக்குமிடையிற் சாங்கியென் என்ற சீனயாத்திரிகர் ஆசியாவின் கீழ்க்கோடியிலிருந்து பிரயாணஞ்செய்து மேற்கே துருக்கித்தானத்தையடைந்தார். சமீபகிழக்கு நாடுகளான பாரசீகம், அராபியா, சீரியா முதலியவற்றுக்கூடாக மத்திய தரைக்கடற் பிரதேசத்துக்குப் பண்டங்களை எடுத்துச் செல்லும் வியாபாரநிலைய மாகத் துருக்கித்தானம் கிறித்து பிறப்பதற்கு முன் பல நூற்றண்டாக விளங்கி
20

வரலாற்றுப் புவியியல் 21
வந்தது. வியாபார நோக்கமாகவும் இராணுவ நோக்கமாகவும் “பதம்” பார்க் குந் தூதரைச் சீனர் கசுப்பியன்கடற் பிரதேசங்களுக்கனுப்பி வந்தனர். அவ்வாறே கடல் மார்க்கமாகக் கிழக்கிந்திய தீவுகளுக்கும் அனுப்பினர்.
LLo 2.
அனுராதபுரத்திலுள்ள திசவாவியின் ஒரு பகுதி.
சிங்களர் தமது நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு அதிகம் பிரயானஞ் செய்யாதபோதும் தமது நாட்டுக்கு வந்த அந்நிய நாட்டு வியாபாரிகளுக்குப் புகலிட மளித்தனர். விசயன் (கி. மு. 543-505) இலங்கைக்குவந்து தனது பழைய தியொழுக்கங்களே விடுத்து இலங்கை முழுவதையும் சமாதானத் துடனும் நீதியோடும் 38 வருடம் தம்பபண்ணையிலிருந்து ஆட்சி நடத்திய காலந்தொட்டுச் சிங்களர் நாகரிகமுற்றவராகவே காணப்படுகின்றனர். விசயன் இந்து-கங்கைச்சமவெளிப் பிரதேசத்திலிருந்து வந்தான். அப்பகுதி ஒரளவு நாகரிகமுற்ற பிரதேசம். ஆனல், கடலுக்கு மிக்கதுரத்தில் உள்நாட்டி லிருந்ததால் அப்பகுதி மக்களிடம் , கடலோடும் இயல்பூக்கமிருக்கவில்லை. நாட்டிலே நீர்ப்பாசனத்துக் கேற்ற குளங்கள் விரைவிற் கட்டப்பட்டன.

Page 18
22 இலங்கைப் புவியியல்
படிமுறைப் பயிர்ச்செய்கைஇ தனை அமைப்பதற்கு மிகுந்த திறமைவேண்டும்) விருத்தி செய்யப்பட்டது. அத்துடன் சமயத்துறையில் உயர்நிலையிலுள்ள புத்தசமயம் நாட்டில் நிலைகொண்டது. பெளத்தத்தில் மிகவுயர்ந்த பிரிவைச் சார்ந்த கொள்கைகள் நாட்டில் வேரூன்றி வளர்ந்தன. இதைப் பற்றியசெய்தி வெளிநாடுகளிடையே பரவிற்று. கி. மு. 484-404 இலிருந்த வரும் சின்ன ஆசியாவிற் குடியேறி வாழ்ந்தவரும், மற்றைத் தேசங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வந்தவருமான எரடோற்றசு என்னுங் கிரேக்க ஆசிரியர் இலங்கையைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்தார். ஒனெசிக் கிறீற்றசு என்ற உரோம அறிஞர் கி.மு. 330 இல் தாபிரபனவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிருர், சீனர் இலங்கையைப் பற்றி எக்காலத்தில் அறிந்தி ருந்தனரென்பது தெரியவில்லை. மத்திய கிழக்கைச் சேர்ந்தவர் இலங் கையைப் பற்றி அறிவதற்குப் பல காலங்களுக்கு முன்னரே சீனர் அதையறிந்திருத்தல் வேண்டும். ஏனெனில் அவர்கள் இலங்கைக்கு வந்த நோக்கம் வேறு. சமயங்களைப் பற்றியுந் தத்துவங்களைப்பற்றியும் ஆராய்வதில் சீனர் எப்பொழுதும் ஆர்வமுடையவராயிருந்தனர். மற்றைத்தேசங்களி லிருந்து கற்கக்கூடியவற்றைக் கற்பதில் அவர்கள் ஊக்கமுடையவரா யிருந்தனர். மத்திய ஆசியாவுக்குச் சாதுக்கள் தியான யோகத்தின் பொருட் டுச்சென்றுவந்த காலத்திற் புத்தசமயத்தைப் பற்றிக் கேள்விப்பட்டனர்; உடனே அதை அறிந்து வருமாறு இந்தியாவுக்கும் இலங்கைக்குந் தூது வரையனுப்பினர். புத்த சமயம் தமது சமயத்திலும் எத்துணையோபடி உயர்ந்ததென அறிந்ததும் அவர்கள் அதைத்தழுவினர். சரித்திரத்திற் காணப்படும் மிக்க அற்புதமான தேசயாத்திரைகள் புத்தசமயாபிமானி களாற் செய்யப்பட்டதே. இவர்கள் சீனவிலிருந்து இந்தியாவுக்கும், இலங்கைக்கும் வந்து சென்றனர். சமய அறிவின் பொருட்டே இவ்வியாத்திரைகள் செய்யப்பட்டன. இச்சமயதூதுக்கள் எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டன வென்பதைத் திட்டமாக ஒருவரும் அறிந்து கொள்ள வில்லை. அவர்கள் வழியிற்கண்ட தேசங்களைப் பற்றி எழுதி வைத்துச் சென்ற குறிப்புக்களுஞ் சுருக்கமானவையே. அதனற் புவியியலறிஞர் அவற்றல் அதிக பயன் பெறமுடியாதிருக்கின்றனர். அவர்களுடைய நோக்கம் சமய அறிவைப் பெறுவதே. எனவே, அவர் தாம் பெற்ற சமய அனுபவங்களையும், தரிசித்த கோயில்களையும், குருமாரையும் பற்றியே குறிப்பிட்டனர். கி. பி. 65 இல் எழுதப்பட்ட ஒரு சாசனத்திற் சீனச் சக்கர

வரலாற்றுப் புவியியல்
வாப்பிக்கற்//ை அனுரதபுரீம் கறபாறை
அர்ச்சு அன்னர்மாள் 7ெ/00ழ்வை தம்புல்பே
ம்பகேனி O தமபதனயா ரைடி லுத்துநூவரை கழனியா
சிவறெளிபாதமலே
கதிர்காமம் திசமகாழுழை
LI L Io 3.
இலங்கையின் தலையாய புனித தலங்கள். மடு, அர்ச்சு. அன்னம்மாள் என்னுங்
கிறித்தவ தலங்கள் தவிர்ந்த எனைத்தலங்கள் மிகப் பழமையானவை.
23

Page 19
24 இலங்கைப் புவியியல்
வர்த்தி, இந்தியாவுக்கு ஒரு தனிப்பட்டதுதை அனுப்பியமையும், அவர்கள் இரண்டு வருடத்தில், சில ஆசாரியர்களைத் தம்மோடழைத்துக் கொண்டு சீனவுக்குத் திரும்பியமையுங் குறிக்கப்பட்டுள்ளன. அந்தக்காலந் தொட்டுப் பத்து நூற்றண்டாக இத்தகைய தூதுக்கள் அடிக்கடி நிகழ்ந்தன. புத்த பிக்குக்கள் மத்திய ஆசியாவில் ஆங்காங்கு ஆச்சிரமங்களை யமைத்தனர். யப்பான், சீன ஆகிய தேசங்களிலும், இந்தியா, பேமா, இலங்கையாகிய தேசங்களிலுமுள்ள பெளத்த அறிஞர்கள் திபேத்து மூலம் அடிக்கடி ஒருவரையொருவர் சென்று சந்தித்து வந்தமையுண்டு. யாவா, பசிபிக்குத் தீவுகள் ஆகிய தேசங்களுக்கும் புத்த சமயம் பரவிற்று. மத்திய அமெரிக் காவுக்கும் அது பரவியிருக்கலாமென எண்ண இடமுண்டு. ஆசியாவின் பல தேசங்களோடும் போக்குவரத்துத் தொடர்புகளை உண்டாக்குவதிற் புத்த சமயம் பெரும் பங்கெடுத்து வந்திருக்கிறது. ஆசியசரித்திரத்தின் இந்த அமிசத்தை ஐரோப்பியர் அதிகம் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வியாபாரம் பரவிய முறையையே பெரிதுங் கவனத்துக்கெடுத்தனர். சுத்தமான புத்த சமயக் கொள்கைகட்கு இலங்கையே தாயகமாயிற்று; அவற்றை இலங்கை பாதுகாத்தும் வந்தது. அதனல் இங்கே பல சமயத்துர்துவர் வந்தனர்; பல இடங்கள் புனிதத் தலங்களாயின; அதனல் ஆசியாவின் பல பகுதிகளி லிருந்தும் பெளத்தத் தொண்டர்கள் இங்கு வந்தனர். உலகின் மற்றைப் பாகங்களிலிருந்தும் பிரயாணிகள் வந்தனர். (படம் 3 ஐப் பார்க்க)
வியாபாரத்தினிமித்தம் வெளிநாடுகட்குச் செல்லத் தூண்டப்படாத சிங்க ளர் யாத்திரையின் பொருட்டு இந்தியாவிலுள்ள பெளத்த தலங்களுக்குப் பிரயாணஞ்செய்தனர். நீண்ட துர யாத்திரைகள் செய்வது ஆசிய மக்க ளிடத்துக் காணப்படும் ஒரியல்பாகும். வேற்றுநாட்டவர் நினைப்பது போலன்றித் துரதேசங்களைப் பற்றிய அறிவு அவர்களிடம் அதிகங் காணப் படும்; அன்றுமப்படியே; இன்றுமப்படியே; தாம் தரிசித்த இடங்களைப் பற்றிய குறிப்புக்களை எழுதி வைக்க வேண்டுமென்று பலர் கருதவில்லை. ஆனல், செவியாருகப் பல விடயங்களைப் பரப்பிவந்தனர். யாத்திரிகர் பெரும்பாலும் பாதசாரிகளாகவே பிரயாணத்தைச் செய்தபடியால், தாம் சென்ற மார்க்கங்களைப் பற்றிய அந்தரங்கமான செய்திகளை யெல்லாம் அறிந்தனர். கிறித்து ஆண்டின் ஆரம்பத்தில் அறியப்பட்ட அவ்விடயங்கள் இன்றும் உண்மையாகவே காணப்படுகின்றன. மத்திய ஆசியாவிலுள்ள ஆச்சிரமங்களே இன்றும் பண்பாட்டை அஞ்சல்செய்து வருகின்றன. இவ்வாச் சிரமங்களில்லாவிட்டால், மத்திய ஆசியாவின் ஒதுக்கிடங்களில் ஐரோப்பியர் நடத்திய ஆராய்ச்சி யாத்திரைகளை, விசேடமாகச் சீனுவின் திபேத்து எல்லை யிலுள்ள ஆதி மக்களின் பிரதேசங்களில் நடத்திய யாத்திரைகளைச் செய்ய முடியாத நிலைமை உண்டாயிருக்கும். எவறெச மலைச்சிகர யாத்திரை செய்த பிரித்தானியக் குழுவுக்கு உரோம்புக்கு ஆச்சிரமத்துப் பிக்குக்கள் செய்த தொண்டுகளின் பயணுக அந்த ஆச்சிரமம் ஐரோப்பாவிற் பெரும் புகழீட்டியிருக்கிறது.

வரலாற்றுப் புவியியல் 25
மூன்று பெரிய சீன யாத்திரிகர் தாம் செய்த பிரயாணங்களைப் பற்றிய குறிப்புக்களை எழுதிவைத்துள்ளனர். இவர்களுட் பாகியன் நாலாம் நூற் ருண்டின் பிற்பகுதியில், அல்லது ஐந்தாம் நூற்றண்டின் முற்பகுதியி லிருந்தவர். சுன்-யன் என்பவர் ஆரும் நூற்றண்டினரம்பத்திலிருந்தவர். குவான் சியங்கு எழாம் நூற்றண்டின் நடுக்கூற்றிலிருந்தவர். இவர்கள் மத்திய ஆசியாவினூடாக இந்தியாவுக்குப் பிரயாணஞ் செய்தனர். அதனல் உலகிற் பெரிய யாத்திரை செய்தவர்களின் பெயர்களோடு இம்மூவரும் ஒரு சேரவைத்து எண்ணப்படத்தக்கவர். பாகியன் இலங்கைக்கு வந்து இங்கே இரண்டு வருடந் தங்கியிருந்தவராதலால் அவருடைய தீரச்செயல்களை விரிவாக அறிதல் பயனுடையதாகும். எல்லாவகையாலும் இவர் குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் பிறந்த திகதி தெரியவில்லை. சின் வமிசம் ஆட்சிநடத்திய காலத்திற்ருன் இது நிகழ்ந்திருக்கிற தென்பது திட்டம். நாலாம் நூற் ருண்டின் இறுதியிலோ ஐந்தாம் நூற்ருண்டின் ஆரம்பத்திலோ இவர் தமது அற்புதமான யாத்திரையை ஆரம்பித்தார். இவர் வடக்குச் சீனத் திலுள்ள சான்சி என்னுமிடத்தைச் சேர்ந்தவர். மிக்க இளம்வயதிலேயே புத்த பிக்குவானர். சீனமொழியிற் புத்தசமயத்தைப் பற்றிய நூல்களில் லாததையறிந்தார். நிரந்தரமான இலக்கியம் இல்லாதபடியாற் புத்த சமயம் அழிந்து விடக் கூடுமென எண்ணி இந்தியாவுக்குப் பிரயாணமானர். அங்கே திரிபிடகத்தையும் வேறு பல நூல்களையும் மூலத்திற் பிரதி செயூது பின்னர் அவற்றைச் சீன மொழியிற் பெயர்க்க விரும்பினர். இதற்கு அவர் பாளி சங்கதமாகிய மொழிகளைப் பயில வேண்டியிருந்தது. எனெனில், புத்தருடைய போதனைகள் அம்மொழிகளிலேயே எழுதப் பட்டி ருந்தன. ஆதலின் 15 வருடம் பிரயாணஞ் செய்தார். வரும் பொழுது மத்திய ஆசியா வழியாக வந்தார். போகும் பொழுது சுமாத்திரா வழியாகக் கடல் கடந்து சென்றர். இவருடைய பிரயாணக் குறிப்புக்களில் இடப் பெயர்கள் புராதன பெயர்களாகவோ சீனப் பெயர்களாகவோ இருக் கக் காணலாம். ஆனல், இவருடைய குறிப்புக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க விரும்பிய இலெக்கே, கைலிசு என்னும் ஆங்கில அறிஞர் இருவர் அவ்விடப் பெயர்களை இன்று அடையாளங் கண்டறிந்து விட்டனர். இவர்கள் ஆக்கிய பாகியனின் பிரயாணப் பாதையும், அவர் தரிசித்த முக்கியமான இடங்களும் அவற்றின் இக்காலப் பெயர்களுங் கீழேயுள்ள படத்திலுண்டு.
பாகியனின் பிரயாணங்கள் என்ற நூலிலிருந்து, எடுக்கப்பட்ட பின் வருஞ் சுருக்கங்கள் அவருடைய பிரயாணத்தின் சில தன்மைகளைக் காட்டக் கூடியனவாயிருக்கின்றன. இவை இலெக்கியின் மொழி பெயர்ப்பி லிருந்து எடுக்கப்பட்டன.
* சாங்கானிலிருந்து பாகியன் புறப்பட்டபின்னர் மத்திய இந்தியாவையடைய
அவருக்கு ஆறு வருடங்கள் சென்றன. அங்கே அவர் ஆறு வருடத்துக்கு அதிகமான காலந் தங்கினர். திரும்பிவரும்பொழுது சின்-செளவையடை
r

Page 20
26 இலங்கைப் புவியியல்
வதற்கு மூன்று வருடம் எடுத்தது. ஏறக்குறைய முப்பது தேசங்களே அவர் பார்த்தார். மேற்கேயுள்ள மணல் நிறைந்த பாலைநிலத்திலிருந்து இந்தியாவரை புத்த பிக்குக்களின் உயர்ந்த ந்டத்தையும் வாழ்க்கையில் மாற்றத்தையுண்டு பண்ணக் கூடிய புத்த மதத்தின் செல்வாக்கும் சொல்லால் விளக்கமுடியாதவை. அவற்றைப் பற்றி நமது தேசிகன்மார் முற்றக அறிய வில்லையே என்ற எண்ணத்தால் தனது வறிய நிலைமையை
p
፵uJSrዏ fി இரகத்தா?ஆற்றுவடிநி
% Z## tl)&edis
Լյլճի
'ಕ
LILb 4.
பாகியன் சென்ற பாதை (அளவுத் திட்டம்: ஒரங்குலத்திற்கு அண்ணளவாக 1000 மைல்)
யும், கடலிற் திரும்பிப் பிரயாணஞ் செய்யும் பொழுது தனக்குண்டாகக் கூடிய இன்னல்களையும் அவர் சிந்தித்தார். மும் மூர்த்திகளின் பயங்கரமான சத்தி அவருக்குத் துணையாகவும் பாதுகாப்பாகவுமிருந்தது. எனவே தகுதி வாய்ந்தவர், தாம் கேட்டதையுஞ் சொன்னதையும் வாசித்தறியும் பொருட்டுத் தனது அனுபவங்களை எழுதிவைத்தார்.”
 

வரலாற்றுப் புவியியல் 27
'தாரிம் வடி நிலத்தின் ஒரு பகுதியான உலொப்பு நோர் பாலைநிலத்தைத்
தாண்டிய பொழுது’ ‘துட்டதேவதைகளும், வெப்பமான காற்றுக்களும் நிறைந்த அப்பாலைநிலத்தைத் தாண்ட துன் குவாங்கு ஆச்சிரமத்தின் தலைவரான இலேகாவோ பல உபகரணங்களையுதவினர். .ே இப்பாலை நிலத்துத் துட்டதேவதைகளையும், வெப்பக்காற்றையுஞ் சந்திப்போர் மீண்டு உயிரோடு போகமாட்டார். காற்றில் ஒரு பறவையைக் காணமுடியாது; நிலத்தில் ஒரு மிருகங்கூடத் தென்படமாட்டாது. எந்தத் திசையை நோக் கிச் செல்லலாமென்று சுற்றும் முற்றும் பார்த்தால், எங்கே போவதென்று தோன்றது. மனலிற் கிடக்கும் இறந்தவர் எலும்புகள்தாம் ஒரளவு திசையைக் காட்டும் ’ எனக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் வடமேற்கு எல்லையைத் தாண்டிய பொழுது பின்வருமாறு குறிப்பிட்டார்:- . . .
“எல்லைப் புறத்து மலைகள் குளிர்காலத்திலும் கோடைகாலத்திலும் எப் பொழுதும் பணி மூடியபடியேயிருக்கும். அம் மலைகளில் நஞ்சைக்கக்கும் பொல்லாத பாம்புகளுண்டு. அவற்றிற்குக் கோபமுண்டானல் நச்சுக் காற்றை வெளியே உமிழ்ந்து, பனியையும், மண்ணையும், பருக்கைக் கற்களையும் வாரிப்பொழியும். இந்த இன்னல்களுக்கு ஆளானேரிற் பத்தாயிரத்தில் ஒருவரேனும் உயிர் பிழைக்கமாட்டார்.”
வழியிலுள்ள பெளத்த விகாரங்களில் வதியும் விகாராதிபதிகளோடு பாகியன் சங்கத மொழியிற் பேசி விடயங்களை அறிந்து கொண்டார். பாடலிபுரத்திற் பாகியன் மூன்ருண்டாக வடமொழி பயின்ருர். புத்த சமய நூல்களைப் பயில்வதற்கு இது அவருக்கு அவசியமாயிற்று. பாடலிபுரத்தில் விநயபிடக நூல்கள் பலவற்றைப் பிரதி செய்தார். பெளத்த சமயத்துப் பெரு நூல்கள் பல இலங்கையிலிருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கே செல்வதற்கு அவர் உறுதி கொண்டார். கி.மு. முதலாம் நூற்ருண்டிலேயே இலங்கையி லுள்ள அலுவிகாரத்தில் திரிபிடக நூல் எழுத்திற் பொறிக்கப்பட்டது. கங் கைக் கரையிலுள்ள காயா உட்பட்ட பல விகாரங்களைப் பார்வையிட்டபின் பாகியன் ஒரு தோணியிற் கங்கை முகத்திலிருந்து புறப்பட்டு இலங்கைக்கு வந்தார். இங்கே அவர் தங்கிய 3 வருடங்களிற் பெரும் பகுதியை அனுராத புரத்துக்கடுத்த பகுதிகளிற் செலவு செய்து எட்டுச் சுவடியிலிருந்த திரிபிட கத்தையும் வேறு பல நூல்களையும் பிரதி செய்தார். இந் நூல்களிற் பல இன்று முண்டு; உலகிலுள்ள மிக முக்கியமான புராதன சாசனங்களுள் அவை சிலவெனக் கூறலாம். பாகியன் இலங்கையைப் பற்றி எழுதிய குறிப் புக்கள் எலவே தரப்பட்டன. சுமாத்திராவுக்குச் சென்ற சில வியாபாரிகளு டன் அவர் புறப்பட்டுத் தொண்ணுறு நாட்களில் யாவாவையடைந்தனர். அங்கே வேறு சில வியாபாரிக்ள் அவரைக் கந்தொனுக்குக் கூட்டிச் செல்ல உடன் பட்டனர். சுழல் காற்று நிறைந்த கடல்களிற் பிரயாணஞ் செய்யும் போது பெரும் புயலில் அகப்பட்டுத் துன்பமடைந்த பின்னர் வழி தப்பிச் சென்றனர். ஈற்றில் உணவின்றிவாடிய நிலையில் சாந்தங்குக்கலைய

Page 21
28 இலங்கைப் புவியியல்
யடைந்தனர். பாகியன் தனது மற்றைப் பொருள்களை எறிந்து விட வேண்டியிருந்தபோதிலும் கையெழுத்துப் பிரதிகளைக் கண்ணுங் கருத்து மாகப் பாதுகாத்தார். வட சீனத்திலுள்ள சின்விகாரத்தில் இவர் தமது 88 ஆவது வயதில் இயற்கையெய்தினர்.
படம் 5.
அலுவிகாரை, கி.மு. முதல் நூற்றண்டில் திரிபிடகம் வரிவடிவில் எழுந்த இடம்.
 

வரலாற்றுப் புவியியல் 29
இக்காலத் தேசயாத்திரிகர்களின் தீரத்தைப் பற்றி நாம் அதிசயமடை கிருேம். ஆனல், பாகியன் அக்காலத்திற் செய்த யாத்திரைக்கு இவை ஒப்பாகா. மூன்றே மூன்று தோழருடன் பாகியன் முன்பின் அறியாத தேசங்களைப் பார்க்கப் புறப்பட்டார். வழியில் அம் மூவரும் இறந்து விட பன்னிராயிரம், பதினையாயிரம் லிமல் பிரயாணத்தைத் தனியாகவே ஒப்பேற்றி னர்! இன்றைய யாத்திரிகர்கள் தமக்குத் தேவையான புட்டி உணவுகளையும், அடுப்புக்களையும், நீர் வடிகளையும், வாகனங்களையும் எடுத்துச் செல்வர். கம்பியில்லாத் தந்தி மூலம் எங்கிருந்தாலும் மற்றை இடங்களுக்குச் செய்திகளை அனுப்புவர். அதனல் இவர்களுடைய யாத்திரை உல்லாச யாத் திரை போன்றது. ஆனல், பாகியன் மத்திய ஆசியாவின் காலநிலைத் தன் மைகளைத் தெரியார். தனது மூட்டை முடிச்சுக்களைத் தானே தூக்கிச் சென் றுமிருப்பார். அத்துடன் வழியிற் பெரும் பகுதியை நடந்து தீர்க்க வேண் டியுமிருந்திருக்கும். உணவுக்கு யாசித்திருப்பார். பல பகல் உண்ண உணவோ குடிக்க நீரோ இன்றித் தவித்திருப்பார். கொடுமையுள்ள நாகரிகமற்ற சாதியார் பலரைச் சந்தித்திருக்கலாம். அவர்கள் அவரைக் கொள்ளையடித் துத் தொந்தரவு செய்துமிருக்கலாம். ஆசியாவின் துரப் பகுதிகளைப் பற்றி யும், மக்கள் நிலையைப் பற்றியும் அக்காலத்துப் பழக்கத்திலிருந்த பாதை களைப் பற்றியும் பல விடயங்களைக் கூறுவதால், பாகியனின் பிரயாணக் குறிப் புக்கள் மிகவும் பயனுடையன எனலாம்.
சீனவிலுள்ள ஒரு நண்பருக்குப் பாகியன், பின்வருமாறு கூறினர்:-
“நான் பட்ட இன்னல்களை நினைக்கும்போது என்னையறியாமலே நெஞ்சு துடிக்கிறது. உடம்பு வியர்க்கிறது. எனது இலட்சியத்தை நான் ஒரு போதும் மறக்கவில்லை; நோக்கத்தை நேர்மையோடு நிறைவேற்ற எண்ணி அதி லேயே எப்பொழுதுங் கருத்தூன்றியிருந்தேன்; அதனல் நான் கால் நடை யாகச் சென்றபொழுதோ, வாகனத்திற் சென்றபொழுதோ எனக்கு உண். டான துன்பங்களில் என் உடம்புக்கு வரும் இன்னல்களைச் சிறிதும் பொருட் படுத்தவில்லை. உயிர்தப்ப முடியாதெனக் கண்ட சமயங்களில் எனது இலட் சியத்தின் ஒரு சிறு பகுதியையாவது நிறைவேற்ற எண்ணி, என் உயிரையே தியாகஞ் செய்ய ஆயத்தமாயிருந்தேன்.” ;
அந் நண்பன் இப் பெரியாரைப் பற்றி உணர்ச்சியூட்டக்கூடிய பின் வருங் குறிப்பையெழுதியிருக்கிறர்: “எந்த யுகத்திலும் இவரைப் போன்ற ஒரு பெருமகனைக் காண்பது அரிது. புத்த தருமம் கீழ்த்திசை நாடுகளிற் பரவிய காலந் தொட்டுத், தருமத்தில் அதிராத நம்பிக்கை கொண்டு தன்னுயிரையே தியாகஞ் செய்ய முற்பட்ட பாகியனைப் போன்ற பெரு, மக்கள் யாரும் இருக்கவில்லை.” -

Page 22
30 இலங்கைப் புவியியல்
“உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ, நேர்மை மனதிற் கொண்டு மூயன்ருல் எவ்வகையிடையூறுகளையுங் கடக்கலாம். திடசங்கற்பமுள்ளவர் கள் எந்தப் பெரிய கருமங்களையுஞ் செய்து முடிப்பார். எண்ணியதை எண் ணியபடி நிறைவேற்றுவோர், உலகோர் பெரிதென நினைப்பதைத்துறந்து விடுவர். உலகோர் சாதாரணமாக மறந்து விடுங் கருமங்களைப் பெரிதெனக் கொள்வர்.”
பாகியன் சமய ஆராய்ச்சியிற் பெரிதுமீடுபட்டாரன்றிப் புவியியற் கலையி லார்வங் கொள்ளவில்லை. அது புவியியலறிஞர் செய்த புண்ணியக் குறைவே.
புராதன சிங்களர் நீண்டதேசயாத்திரை செய்ததாகச் சரித்திரத்தில் நாம் கேள்விப்பட்டது குறைவு. இலங்கைக்கு வந்த அந்நிய நாட்டுப்பிரயாணிகள் மூலமாக அவர்கள் விரும்பியவிடங்களை யெல்லாங் கேட்டறிந்தனர். இயற் கை யரண்கள் பல சீனரைத்தடை செய்தபடியால் அவர்கள் வெளியுலகத் தோடு தொடர்பற்றிருந்தனர். அன்றியும், வெளியூர்களுக்கு யாத்திரை செய்யவேண்டுமென அவர்களுக்கிருந்த உற்சாகம் சிங்களருக்கு இருக்க வில்லை. ஆதியிற் சீனர் இயற்கைத் தடைகளால் ஒதுக்கப்பட்டிருந்ததாலே தாம் ஓரினத்தவர் மட்டுமே உலகில் வசிக்கும் மனிதரினத்தவரென எண்ணியிருந்தனர். கி. பி. 72 இல் அன்னியசு புளோக்காமசு என்ற உரோம நாட்டுத்தூதர் ஒருவர் இலங்கைக்கு வந்தனரென்றும், அவரை இலங்கை மக்களன்போடு வரவேற்றன ரென்றும், அவருடைய வேண்டு தலின் படி இலங்கையிலிருந்து நாலு தூதுவர் உரோமநாட்டுக்குச் சென் றனரென்றும், உரோம மக்கள் அவர்களைப்பற்றிப் பெரிதுங் கரிசனையுற்றர்க ளென்றும், கூறப்படுகிறது. அவர்கள் சீரெசு என்ற பட்டுவியாபாரிகளைப்பற்றி யுந் தாம் அவருடன் செய்யும் வியாபாரத்தைப் பற்றியுங் கூறினர். சீனரை அக்காலத்திற் பட்டு வியாபாரிகளென்றே அழைத்தனர். இதற்குச் சிறிது காலத்துக்குப்பின் கி. பி. 98 இல் தா-திசின் என்ற சாதியாரைப்பற்றி அறிந்துவர ஒரு துதரை அனுப்பினர். உரோமரை அவர்கள் அக்காலத் தில் தா-தசின் என்றே வழங்கினர். அத்துதன் இந்தியாவிலுள்ள கூர்ச் சரத்தை யடைந்தான். அங்கிருந்து கப்பலிற் புறப்பட்டான். கப்பல் கடலில் உடைந்துபோயிற்று. பின்னர் துருக்கித்தானத்துக்கூடாக நடத்திய வியா பாரத்தின் மூலம் அவர்கள் உரோமரோடு தொடர்பு கொண்டனர். பின்னர் மகா அலெச்சாந்தர் வடமேற்கு இந்தியா வரை சென்று நாடுகளை வெற்றி கொண்டபின்னர் இத்தொடர்புக்ள் வலுப்பெற்றன.
பாலைநிலங்களில் நட்சத்திரங்களின் துணைகொண்டு அராபியர் திசையறி ந்து பிரயாணம் செய்வது வழக்கம். அவ்வழக்கத்தைக் கொண்டே அவர்கள் பெருங்கடலிலும் பிரயாணஞ் செய்யத்தலைப்பட்டனர். அதனல் இவர்களே பெருங்கடலிற் பிரயாணஞ் செய்ய முற்பட்ட முதற் சாதியாரெனக் கூறக் கூடியதாயிருக்கிறது. தென்மேற்குப் பருவக்காற்றும், வடகிழக்குப் பருவக்

வரலாற்றுப் புவியியல் 3.
காற்றுந் தமது பாய்க்கப்பல்களுக்குப் பெருந்துணையா யிருக்குமென்பதை அவர்கள் அறிந்தனர். எனவே பாரசீக இந்தியக் கரைகளை யடுத்து இலங் கைக்குச் செல்லும் முறையைக் கைவிட்டனர். இக்காற்றுக்களின் உபயோ கத்தை அவர்கள் எப்பொழுது அறிந்தனரோ தெரியவில்லை. அராபியர் கண்ட இம்முறையைப் பயன்படுத்திக் கடற்பிரயாணஞ்செய்த முதல் உரோம வாசியின் பெயர் சரித்திரத்திற் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கி. பி. 47 அள விற், குளோடியசு அரசன் ஆட்சியில், கிப்பாலுசு என்னும் ஒரு மாலுமி, இந்துசமுத்திரத்திற் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மாறி மாறி வீசுங் காற்றை அவதானித்து அக்காற்றின் துணைகொண்டு பிரயாணஞ் செய்ய எண்ணி, அராபியக் கரையிலிருந்து புறப்பட்டான். புறப்பட்டு முன்றிையாத நீண்டகடலிலே தைரியமாகச் சென்றன். கப்பல் காற்றினலுந்தப்பட்டு மலை யாளக் கரையிலுள்ளதும் இன்று மங்களூர் என வழங்கப் படுவது மான முசிறித்துறையை அடைந்தான். வியாபாரம் பாய்க் கப்பல்கள் மூலம் நடைபெற்றதால் இந்துசமுத்திரத்தில் ஒரு பிரயாண வியாபாரப் பண்டசாலையாக இரண்டு இடங்கள் அமைந்தன. ஒன்று மலையாளக்கரை, மற்றையது இலங்கை. இவற்றுக்கிடையே போட்டியுண்டானது. தூரகிழக் குக்குச் செல்லும் பாதையில் நேரடியாக இலங்கையமைந்திருந்தது. எளி திற் சென்றன.டயக் கூடிய தாழ்பூமியும், தேவைக்கதிகமான உணவு உற் பத்தியும் அங்கேயுண்டு. அங்குள்ள சனங்கள் வியாபாரிகளை வரவேற்று அவர்கள் வசிக்க அனுமதியுமளித்தனர். மலையாளக்கரையும் கப்பல் கள் இயல்பாகவே சென்று தங்கக்கூடிய வசதியுள்ளதாயிருந்தது. சனங் கள் முரட்டுத்தன முள்ளவர்களாயிருந்த போதிலும், மங்களூர், கள்ளிக் கோட்டை, கோவை ஆகிய துறைகளிற் கப்பல் தங்குவதற்குப் போதிய உரி மையிருந்துவந்தது. மேற்குமலைத் தொடர் நீண்ட மதில்போலிருப்பதால், கரையிலிருந்து உள்ளூருக்குச் செல்வது கடினமாயிருந்தது. அப்படியிருந் தும் இத்துறைகள் வியாபாரப் பண்டசாலைகளாயிருப்பதற்குள்ள உரிமை பலமுள்ளதாகவே காணப்பட்டது. நீலகிரிக்கும் எலமலைக்குமிடையாகத் தக்க ணத்துக்குச் செல்ல வசதியளிக்கும் பாலைக்காட்டுக் கணவாய்க்குச் சமீபத்திற் கள்ளிக்கோட்டையமைந்திருப்பதால் அத்துறைமுகத்துக்குள்ள உரிமையும் பலமுள்ளதாயிருந்தது. வசுக்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வந்த திலிருந்து மலையாளக் கரையோடு போத்துக்கேயருக்கிருந்த நீண்ட தொடர்பு ஆரம்பித்தது. இதன்பயனக, காலப் போக்கில் இந்து சமுத்திரத் தில் ஆதிக்கஞ் செலுத்த விரும்பிய பல ஐரோப்பிய சாதியாருக்கிடையில் உண்டான சண்டைக்குக் கள்ளிக் கோட்டை களமாயிற்று.
பாகியன் வியாபாரக் கப்பலிலே தாயகந்திரும்பிய செய்தியிலிருந்து, நாலாம் நூற்றண்டிலேயே சீனர் இலங்கையுடன் வியாபாரத் தொடர்பு பூண்டிருந்தனரென்பது தெரியவருகிறது. சீனர் அராபியருடன் பண்ட மாற் றுச் செய்தனர். அராபியர் மெல்ல மெல்ல ஆசியாவின் தென்கரைப்பகுதி

Page 23
32 இலங்கைப் புவியியல்
களிற் சுமாத்திரா வரை, தமது குடியிருப்புக்களை உண்டாக்கினர். கி. பி. எழாம் நூற்றண்டு வரை அவர்கள் கந்தொனை யடைந்தனர். இந்த அராபிய வியாபாரிகளே “ மூர் ’ என்னுஞ் சோனகர். இவர்களுடைய வழித்தோன்றல்கள் இலங்கையிற் பெருந் தொகையாயிருக்கின்றனர். இலங்கையின் வியாபாரச் சமூகத்தவருள் இவர்கள் சிறந்து விளங்குகின்ற னர். இவர்கள் கையிலேயே இலங்கையின் இரத்தின வியாபாரம் இருக் இறது. இவர்கள் கரையோரங்களிற் காணப்படுவர். இலங்கையின் பிரதான வீதிகளிலும் கடைகளை வைத்திருக்கிருர்கள். காங்கேசன்துறை போன்ற சிறிய துறைமுகங்களில் இவர்களுடைய அழகிய வியாபாரத தோணிகள் நிற்பதைக்காணலாம். சிங்களரோடு சேராது இவர்கள் தனிச் சமூகமாய் வாழ்க்கை நடத்துவதை இன்றுங்காணலாம்.
அராபியரின் முக்கியமான வியாபாரத் தலங்கள் கழக்குச் செங்கடற்கரை யையடுத்ததும் கடகக்கோட்டிற்கு அண்மையிலுள்ளதுமான பெரணிசும் (இஃது இன்று கைவிடப்பட்டிருக்கிறது) இலங்கையிலுள்ள காலித்துறையும் சுமாத்திராவிலுள்ள பலெம்பாங்குமாகும். பின்னர் மேலை நாடுகளிலிருந்து சுமாத்திராவுக்குஞ் சிங்கப்பூருக்கும் கப்பல்கள் வரத்தொடங்கின. இலங் கை வரை சென்று வியாபாரம் நடத்தச் சீனர் விரும்பாது மலாயாவில் வியாபாரம் நடத்தவந்த அராபியரோடு தமது வியாபாரத்தை நடத்தினர். இலங்கையில் இன்று சீனரைக் காண்பது அரிது. ஆனல், தென்கிழக்கு ஆசி யாவிலுள்ள மிகப்பெரிய வியாபார நிலையமான சிங்கப்பூரில் உள்ளவர் களில் அரைப்பங்கினர் சீனர். இலங்கையிற் சோனகரிருப்பது போலச் சிங் கப்பூரில் வியாபாரத்துறையில் அவர்கள் விளங்குகிருர்கள்.
எழாம் நூற்றண்டில் மத்திய கிழக்கில் முசிலிம் ஆதிக்கம் வலுப்பெற் றது. அதனற் சீனவிலிருந்து துருக்கித்தானம் வழியாகவந்த வியாபார மார்க்கம் சிறிது சிறிதாகப் புழக்கங் குன்றியது. தாத்தாரியர் அப் புழக்கத் தைப் பெருப்பிக்க முயன்றனர். ஆனல், 14 ஆம் நூற்றண்டில் அவர்களும் இசுலாம் மதத்தைத் தழுவியபடியால், அந்த வியாபாரப்பாதை முற் ருகக் கைவிடப்பட்டது. பின்னர் பலகாலமாக ஆசியாவுக்கூடாகச் செல்லும் இந்த நிலப்பாதை கைவிடப்பட்டிருந்தது. விமானப்பாதைகளும் இருப்புப் பாதைகளும் அபிவிருத்தியடைவதன் பயனக இப்போது இப்பாதை மறுபடி யும் புழக்க முடையதாக வருகிறது. கொந்தாந்தினேப்பிளிலிருந்து பாரசீகக்குடாக்கடலுக்கும், மொசுக்கோவிலிருந்து கோக்கண்டுக்கும், அங் கிருந்து குவெற்ற மூலம் இந்தியாவுக்குஞ் செல்லும் இருப்புப் பாதை களின் பயனக வியாபாரிகளும் பிரயாணிகளும் நடமாடுகிறர்கள். இரசியர் துருக்கித்தானத்திலிருந்து வடசைபீரியாவுக்கு ஓர் இருப்புப் பாதை அமைத் திருக்கிறர்கள். பாத்தாது, பாரசீகக்கரை, கராச்சி, இரங்கூன் ஆகிய இடங் களைத் தொட்டுச் செல்லும் ஒரு விமானப்பாதையை 1926 இல் சேர் அலன் கொபுகாம் ஆரம்பித்து வைத்தார்.

வரலாற்றுப் புவியியல் 33
ஆசியாவின் தரைப்பாதைகள் புழக்கங் குன்றினதாலும், துருக்கித்தானத் தின் முக்கியம் குன்றியதாலும், கீழத்திசை நாடுகட்குச் செல்வோர் கடற் பாதையைப் பயன்படுத்தினர். அதன் பயனக இலங்கை முக்கியமடைந் தது. ஒன்பதாவது நூற்றண்டிற் சிலகாலம் கள்ளிக்கோட்டையும் திரு வாங்கூரும் முக்கியம் பெற்றன. அதனுல் இலங்கையின் தலைமை பாதிக் கப்பட்டது. பின்னர், இவ்விரு பகுதிக்குமிடையில் வியாபாரம் எழுந்தும், விழுந்தும் மாற்றமடைந்தது. பின்னர், சீனர் மலாய்நாட்டுடன் மட்டும் நின்றுவிட்டனர். 15 ஆம் நூற்றண்டில் வரத்துவங்கிய ஐரோப்பிய வியா பாரிகட்கு அவர்கள் இடங்கொடுத்துவிட்டு ஒதுங்கிக்கொண்டனர். இதுவரை அராபியர் மேலைத்தேச வர்த்தகருக்கும் கீழைத்தேச வர்த்தகருக்குந் தரகராக நின்றனர். இப்பொழுது ஐரோப்பியர் கீழைநாடுகளில் நேரடி யான வியாபாரஞ் செய்ததன்பயனல் இந்தியா, பேமா, இலங்கை, மலா யாவின் பகுதிகள், கிழக்கிந்திய தீவுகள், பிரெஞ்சு இந்தோசீனம் ஆகிய தேசங்களைக் கைப்பற்றினர். இலங்கையோடு சீனத்துக்குக் கடைசியாக உள்ள தொடர்பு கி. பி. 1045 இல் இருந்தது. அப்பொழுது ஒரு சீனத்தளபதி இலங்கையிலுள்ள பெளத்த தலங்களைத்தரிசித்தார். இலங்கையின் அர சியல் நிலைமை அப்பொழுது கொந்தளிப்புடையதாயிருந்தபடியால் இத் தளபதி உயிரோடு தப்பிச்சென்றமையே பெரியகாரியமாயிற்று. மூன்று வரு டங்கழித்து அவர் மறுபடியும் இலங்கைக்குவந்து, தனக்கு ஊறுவிளைத் தவர் மீது பழிவாங்கு முகமாக அரசனையும் அரசியையும் பரிவாரங்களிற் பலரையுஞ் சிறைப்படுத்திச் சீன வுக்குக் கொண்டுசென்ருர். சீனச் சக்கரவர்த்தி சிறைப்பட்ட அரசனின் வமிசத்திலுள்ள அறிவாளியொருவ னுக்கே பட்டங்கட்ட வேண்டுமென்ற வாக்குறுதியைப் பெற்றுக்கொண்டு அவர்களைத் திருப்பியனுப்பி விட்டான். இவ்வாறு பட்டத்துக்கு வந்தவனே இலங்கையின் சிறந்த அரசருள் ஒருவனை ஆறம்பராக்கிரமபாகு, சீன யாத்திரையில் அரசனும் அரசியும் புதிய பல கருத்துக்களைத் தெரிந்து
கொண்டனர்.

Page 24
முதற் பகுதி-நாலாம் அத்தியாயம் இலங்கையில் வெளிநாட்டுச் செல்வாக்கு
வெளிநாட்டவரோடு இலங்கையர் அடிக்கடி தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டியிருந்ததால் அவர்கள், அந்நிய மொழிகளைப் பயில்வதில் அதிக கவனஞ் செலுத்தினர். பதினைந்தாம் நூற்றண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற பெரும் புலவரான சிறீ இராகுலர், தன்மொழியைவிட வேறு ஆறுமொழி களை அறிந்திருந்ததாகக் கேள்விப் படுகிறேம். இன்று ப்லர் தமிழ், சிங் களம், ஆங்கிலம் என்பவற்றை எழுதவும் வாசிக்கவுந் தெரிந்திருக்கிறர்கள். அது முடியாதபோது இம்மூன்று மொழிகளையும் பேசவாவது பழகியிருக் கின்றர்கள். இத்துடன் அவர்கள் பாளி, சங்கதம் ஆகிய மொழிகளிலும் பழக்கமுடையவராய்க் காணப்படுகின்றர்கள். ஐரோப்பாவிற் பிரயாணஞ் செய்வோர் சில ஐரோப்பிய மொழிகளையும் பழகுகிறர்கள். வேற்று நாட்டவரோடு அடிக்கடி தொடர்பு எற்படுவதால், இலங்கையர் இந்தியரிலும் அந்நியரோடு சேர்ந்துபழகும் பண்பையும் வைதீக மனப்பான்மையைக் குறைக்கும் இயல்பையும் உடையவராயிருக்கின்றனர். இங்கே சாதிக்கட்டுப் பாடு இந்தியாவைக்காட்டிலுங் குறைவு. வேற்று நாட்டவர் அடிக்கடி வந்து நடமாடும் வியாபாரப் பாதைகளிலுள்ள தீவாந்தர வாசிகள் அந்நியர்பழக்க வழக்கங்களுக்கு இடங்கொடுத்து நடப்பவராயிருப்பர். கண்டங்களில் உள்ளூர் களில் வசிப்போரிடம் இவ்வியல்பு குறைவு. இந்தியாவில் முன்னேற்றத் துக்குத் தடையாயிருக்கும் இடர்கள் இலங்கையில் இல்லை. பல சாதிகளும், பலதரத் தகுதிகளுமுள்ள ஒரு தேசத்தில் உண்டாகும் சமூகக் கட்டுக்களை நீக்குவதற்கு எற்பட்ட சாதிப்பாகுபாடு, கல்வியறிவு பரவுவதால் அவசிய மற்றதாகிவிட்டது. அது இலங்கையில் இந்தியாவுக்கு நெடுங்காலத்துக்கு முன்னரே உருக்குலையத்துவங்கிவிட்டது. பழைய சேவைமானியமுறை யமைப்பும், சாதிப்பூசலும் இங்கே இலேசாக மாற்றமடைந்து வருகின்றன. இம்மாற்றங்கள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன. வெளிநாட்டவர் இதனை உணர்ந்துகொள்ள முடியாதவகையில் இம்மாற்றங்கள் விரைவாய் உண்டாகின்றன. இக்கால இலங்கையர் இயற்கையால் உழவுத்தொழிற் சார்புடையவராயிருந்தபோதிலும், வெளியூர்ப் பிரயாண்ங்களால் இவர் களுடைய தன்மை பெரிதும் மாற்றமடைந்து வருகிறது. கடலோடிக ளாகவோ, வியாபாரிகளாகவோ, ம்ாலுமிகளாகவோ தொழில் நடத்த இவர் களுக்கு நாட்டமில்லை. இவர்கள் மூதாதையருக்கும் இந்நாட்டமிருக்கவில்லை. ஆணுல், கல்வியின் பொருட்டு இவர்கள் வெளிநாடுகட்குச் செல்லுகிறர்கள். கடந்த நூறுவருடமாக இத்தகைய வெளியூர்ப் பிரயாணம் இலங்கையின் வளர்ச்சிக்குப் பெரிதுந்துணை புரிந்தது. இதன் பலாபலன் இப்பொழுதுதான் தெரியவருகிறது.
34

வரலாற்றுப் புவியியல் 35.
அந்நியர் தொடர்பினுல் இலங்கை முற்றக நன்மையடைந்ததென்றே: முற்றகத் தீமையடைந்ததென்றே கூற முடியாது. இந்து சமுத்திரத்தில் வியாபாரத்துக்கு வாய்ப்பான இடத்திலமைந்த இலங்கைமீது மிண்டுமனத் தவரான அந்நிய வியாபாரச்சாதியார் ஆசை கொண்டனர். சரித்திரகாலந் தொட்டே பலரும் அதன் மீது படையெடுத்துச் சூறையாடினர். சிங்கள நாகரிகத்தின் முக்கியமான தன்மைகள் விளக்கம் பெற்றமை உண்மையில் அதிசயிக்கத்தக்கதே. அகிம்சையே மேலான தருமம் என்று போதித்த புத்தசமயத்தின் அன்புருவான சமய அடிப்படையில் வாழ்ந்தவர் சிங்களர்.
LI LD 6 g,
இந்து ஆலயம்.
அவர்கள் தமது அடிப்படைக் கொள்கையைக் கைவிட்டுப் போர்புரிய வேண் டிய நிலைமையுண்டானது. எதிரிகளைக் கலைக்கவோ அவர்களோடு நின்று போர் செய்யவோ வேண்டிய நிலைமை இவர்கள் சரித்திரத்திலுண்டானது. இலட்சியம் ஒரு புறமும், உண்மைச் சம்பவங்கள் மற்றெருபுறமுமாக இவர்கள் இவற்றுக்கிடையே பிணங்கித் தமது கருமங்களே யாற்றவேண்டி யிருந்தது. அதுவே இவர்கள் நீண்ட சரித்திரத்திற் காணப்படும் முக்கிய வரலாறு. படையெடுத்த ஒவ்வோரந்நிய சாதியாரும், தமது பண் பாட்டின் சின்னங்களைப் பதித்துச் சென்றனர். அதனற் சிங்களர் பண்

Page 25
36 இலங்கைப் புவியியல்
பாட்டில் எது அகநாட்டது எது புறநாட்டது என்று பிரித்தறிய முடியாதபடி வாழ்வின் பல துறைகளில் அந்நிய நாகரிகம் வேற்றுமையின்றிக் கலந்து விட்டது.
ஆதியிலிருந்தே தமிழரும், மலையாளத்தவரும் இலங்கைக்கு வரத்துவங் கினர். அவர்கள் போர் முறையில் மட்டுந் தொடர்புவைத்துக் கொள்ள வில்லை. இலங்கையின் புராதன சரித்திரத்திலே தமிழர் படையெடுப்புப் பேசப்படுகிறது. குளங்கள் நிறைந்த பகுதிகளைச் சனங்கள் விட்டு வெளியேறி யமைக்கு ஒரளவு தமிழருங் காரணமாயிருந்தனர். இடையிடையே எற்பட்டு வந்த வறட்சியுமிதற்குக் காரணமாயிருக்கலாம். 1505 இல், தான் இலங் கைக்கு வந்தபொழுது, குளங்களழிந்திருந்ததாகவும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாகவும், வர்த்தீமா என்ற இத்தாலிய யாத்திரிகர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணக் குடா நாட்டிலே தமிழர் நிரந்தரமாகக் குடியேறினர். அவர்களின் விசேட குண நலங் களினல் யாழ்ப்பாணம் பிற்காலத்தில் புகழ் பெற்ற ஒரு பகுதியாக விளங்கிற்று. இயற்கைவளம் மிகக் குறைந்த இப்பகுதியைத் திருத்திப் பண்படுத்தி வாழ்ந்த முறையின் பயனக யாழ்ப்பாணத்தமிழர் உலகி லேயே சிறந்த ஒரு சமூகத்தவராகக் கருதப்படுகின்றனர். அத்துடன் தமிழ்ச்சாதியாரோடு சமாதானமான முறையில் எப்பொழுதும் தொடர் பிருந்தேவந்தது. சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவிற் பெண்ணெடுத் தார்கள். அவர்கள் சைவசமயத்தைச் சேர்ந்தவராயிருந்தபடியால், அவ் வரசர்கள் தாம் வழிபாடு செய்யும் புத்தகோயில்களிற்றமது அரசியர்க் கும் சைவக்கோயில்களேயமைத்தனர். இதைச் சிலர் நூதனமான வழக்க மெனக் கருதக்கூடும். ஆனல், புத்தசமயம் மற்றைச்சமயங்கள் விடயத்தில் சகிப்புத்தன்மை காட்டுமாறு போதிக்கிறது. சிங்கள மக்கள் இந்தக்கொள் கையிலேயே வளர்ந்தவர்கள். அன்றியும் இந்து சமயத்திலிருந்தே புத்த சமயம் கிளைத்தது. அதனுல் இவ்விரு சமயங்களிடையிலும் முரண்பாடு உண்டாகவில்லை. பழைய புத்த கோவில்களிலெல்லாம் இந்துக்கடவுளர்க்குப் படிமம் அமைக்கப்பட்டோ, இந்து முறையில் அலங்கார உருவங்களமைக்கப பட்டோ, இருந்தன. அலுவிகாரையிலிருப்பதுபோலச் சில சமயம் புத்த கோவில்களில் இந்து வழிபாட்டுக்குரிய சிறுகோவில்களமைந்திருக்கும். தேவிநுவரையில் புத்தகோவிலுக்குப்பக்கத்திற் புறம்பான இந்து ஆலய முண்டு. காலத்துக்குக் காலமுண்டான இந்து சமயப் புனருத்தாரணத்தின் பயனக இது எற்பட்டிருக்கலாம். புத்தசமயங் குன்றியகாலங்களிற் பழைய சமயங்கள் தலையெடுப்பதையுங் காணலாம்.
தமிழரும், மலையாளிகளும் இலங்கைக்குத் தொழிலாளராக வந்தமை யால் அவர்களுடைய செல்வாக்கு இத்தீவில் வலுப்பெற்றது. காலநிலைச் சூழ்நிலைக்காரணத்தாலோ, வேறு காரணங்களினலோ சிங்களர் சில வகை யான தொழில்கலைச்செய்ய விரும்பாது விட்டனர். உதாரணமாகக் கடற்

வரலாற்றுப் புவியியல் 7
ருெழிலை எடுத்துக்கொள்வோம். இலங்கையின் கரையையடுத்த பரதவர் சமூகத்திலே'தமிழர் மலையாளிகள் கலப்பு அதிகமுண்டு. சிங்கள அரசர்கள் இவர்களைக் கடற்றெழில் செய்யவும், கப்பல் செலுத்தவும் அழைத்துக்
படம் 6 ஆ.
கழனியிலுள்ள இராசமகாவிகாரை.

Page 26
38 இலங்கைப் புவியியல்
குடியேற்றினர். இரிச்சோ இழுக்குந் தொழிலாளிகள் எல்லோருந் தமிழரே. எவ்வளவு வறுமைப்பட்ட சிங்களவனைலும் இரிச்சோ இழுத்துப் பிழைக்க மாட்டான். பின்னர், ஐரோப்பியர் நடத்திவந்த தேயிலைத்தோட்டங்களிலும் இறப்பர்த் தோட்டங்களிலும் வேலைசெய்வதற்குத் தமிழ்த்தொழிலாளரே அமர்த்தப்பட்டனர். சிங்களர் நிலமுடையவர்களாயிருந்தும் இந்தத் தொழிலில் அதிகமாக ஈடுபடவில்லை. தென்னிந்தியாவிலுள்ள தமிழ்த் தொழிலாளர் தோட்டவேலைகளுக்காகப் பெருந்தொகையாகச் சமீபகாலத் தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். 1946 இல் எடுக்கப்பட்ட குடிமதிப்பின்படி இலங்கையின் குடித்தொகையில் இந்தியத் தொழி லாளர் 102 சதவீதத்தினராக மதிப்பிடப்பட்டுவது. இவர்கள் வருகை யால் இலங்கையில், விசேடமாக மலைநாட்டில், புதுவிதமான கிரா மங்கள் தோன்றின. உடை உணவு விடயங்களில் தமிழருடைய போக்குக் கேற்ற கடைகள் திறக்கப்பட்டன. இந்துக்கோவில்களும் பாடசாலைகளும் தோன்றின. இதற்கு உதாரணமாக மசுக்கேலியாவைக்குறிப்பிடலாம்.
ஐரோப்பியர் இலங்கைக்கு வந்ததன் பயனுகவே சிங்களருடைய பண்பாடு பெரிதும் மாற்றமடைந்து உருத்தெரியாத நிலைமைக்கு வரக்கூடியதா யிருந்தது. இந்தியர் பண்பாடு இலங்கைப் பண்பாட்டுடன் தொடர்புடையதா யிருந்தது. ஐரோப்பியர் புதிய கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் புகுத்தினர். அவற்றை உலகமெங்கும் புகுத்திவிடவேண்டுமென்றே அவர் கள் விரும்பினர். 1498 இல் வசுக்கோடகாமா கள்ளிக்கோட்டைக்கு வந்த திலிருந்து மேற்கு ஐரோப்பிய நடுகள் தங்குதடையின்றி ஆசியாவுக்கு வரத்துவங்கின. இதுவரை ஐரோப்பியருக்கும் ஆசிய வாசிகளுக்குமிடையில் பாத்தியரும், பினிசியரும், துருக்கியரும், பாரசீகரும், சீரியரும், அராபியரும், யூதரும், ஆமீனியரும், எகித்தியரும், வியாபாரத் தரகராயமைந்து நல்ல ஆதா யம் பெற்றனர். நன்னம்பிக்கை முனைமார்க்கமாக இந்தியாவுக்குச் செல்லும் பாதை ஆரம்பிக்கப்பட்டதும், ஐரோப்பியர் இத்தரகரின் உதவியின்றி நேரடி யாகவே வியாபாரம் நடத்தினர். சோனகர் கீழ்த்திசை நாடுகளில் எற்படுத்திய வியாபாரத் தலங்களைப்போல ஐரோப்பியரும் ஏற்படுத்தவேண்டியிருந்தது. இந்தப்பாதையில் வியாபாரம் நடத்துவதற்காக ஐரோப்பிய சாதியார் ஒருவர் பின் ஒருவராக விரைந்துவந்தனர். 1506 இல் போத்துக்கேயர் இலங்கைக்கு வந்தனர். இரண்டு வருடத்தின் பின்னர் மலாக்காவையடைந்தனர். 1617 இல் சீனவை யடைந்தனர். மற்றைத்திசையில் யாத்திரைசெய்த மகலன் பிலிப்பைன் தீவுகளைக் கண்டுபிடித்தான். 1529 இல் முதலாவது பிரெஞ் சுவள்ளம் சுமாத்திராவை யடைந்தது. 1576 இல் புரோபிசர் இந்தியா வுக்கு வந்தார். 1589 இல் ஒர் ஆங்கில வியாபாரி இலங்கையை அடைந்தான். சரித்திரக் குறிப்புக்களில் ஆங்கில வியாபாரியின் வருகையே முதல்வருகை யாகக் காணப்படுகிறது. சிறிது காலத்தின் பின்னர் இடச்சுக்காரர் சில வியாபாரக் கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்பினர். 1601 இல் சிங்கப்பூரில் இடச்சு வியாபாரநிலைய மொன்று நிறுவப்பட்டது. பின்னர் இடச்சுக்காரர்

வரலாற்றுப் புவியியல் 39
கந்தொனையடைந்தனர். இதற்கு ஒருவருடத்துக்கு முன்னர் பிரித் தானியர் பிரிட்டிசுக் கிழக்கிந்தியக் கம்பனியை எற்படுத்தினர். இக்கம்பனி பின்னர் இந்தியாவின் அரசியல் நிலைமையை நிச்சயிப்பதிற் பெரும்பங்கெடுத் துக் கொண்டது. பதினரும் நூற்றண்டின் பின்னர் இலங்கையும் இந்தியா வும், முரண்பட்ட ஐரோப்பிய வியாபாரச் சமூகங்களின் போட்டிக்கும் பூசலுக்கும் களமாயமைந்தன. அவை இன்று வரை தொடர்ந்து விட்டன. வியாபாரிகளைப் பின்றெடர்ந்து சமயகுருமார் வந்துசேர்ந்தார்கள். இவர்கள் முசிலிங்களைப் போலவே சமயப் பூசலை ஆசியாவின் பலநாடுகளில் விதைத் தனர். ஐரோப்பியவியாபாரிகளும், சமயகுருமாரும், தமது நாகரிகத்தைப் பரப்புவதிலே தோளோடு தோள்சேர்ந்து தொழில் புரிந்தனர். இலங்கையின்
ulun 7.
திசமகாருமைக் கணித்தாயுள்ள பாழடைந்த குளம்.
கரைப் பகுதிகளை அடிப்படுத்தியதும் போத்துக்கேயர் தமது சமய குருமார்களை இலங்கைக்குக் கொண்டு வந்தனர். 1518 உக்குப் பின்னர் உரோமன் கத்தோலிக்கக் குருமார் பெருந்தொகையாக இலங்கைக்கு வந்து, இங்குநில விய “புறச்சமயத்தை’ அழிப்பதில் அரசாங்கத்துக்கு உதவி புரிந்தனர். அவ்வாறு செய்து தமது பண்பாட்டைப் பரப்பினர். இலங்கையிற் போத்துக் கேயரும், பின்னர் இடச்சுக்காரரும், பின்னர் பிரித்தானியரும், அடுத்தடுத்து நிகழ்த்திய செயல்களைப்பற்றிச் சரித்திரநூல்களில் வாசித்தறிக. முக்கிய மான சிலபுவியியற் செய்திகளை விதந்துரைத்திடல் ஈண்டைக்கமையும்.

Page 27
40 இலங்கைப் புவியியல்
போத்துக்கேயர் கரைப்பகுதிகளை முற்றயடிப்படுத்தியமையால், இந்து சமுத்திரத்திற் கண்னேட்டஞ் செலுத்த இலங்கை சிறந்ததொரு படிக்கல் போல அமைந்தது. நெடுங்கடலிலே தலைசிறந்த மாலுமிகளாய் விளங்கிய போத்துக்கேயர் வசம் உலகவியாபாரம் படிப்படியாக வந்து சேர்ந்தது. பின்னர் அவர்களிடமிருந்து மேற்கு ஐரோப்பிய சாதியார் வசம் சென்றது. இலங்கையைப் போன்ற பாதுகாப்பான இடம் அவர்களுக்கு வேறெங்குங் கிடைக்க வில்லை. பருவக் காற்றுக்கு அவர்கள் மலையாளக்கரையில் ஒதுங்கக் கூடிய வசதியிருந்தும், மேலும் பாதுகாப்பை விரும்பினபடியால் இலங்கை யைச் சரணடைந்தனர். ஐரோப்பிய வியாபாரிகளாற் பயமொன்றுமில்லை யென்றெண்ணிய சிங்களர் போத்துக்கேயருக்குக் கொழும்பில் வியாபார நிலையத்தை நிறுவ வசதியளித்தனர். இந்தச் சந்தர்ப்பத்தை போத்துக்கேயர் பயன்படுத்திக் கொண்டு, ஒரு கோட்டையைக் கட்டி அங்குள்ள வியாபாரி களைக் காப்பாற்ற இராணுவத்தையும் அமைத்தனர். சிங்களர் தம்மெதிரி களுக் கெதிராக அவ்வப்போது இடச்சுக்காரரையும் பிரித்தானியரையும் துணைவேண்டிய பொழுது, பாலுக்குக் காவலாகப் பூனைணயத் துணை வேண்டி னர் என்பதை அறியவில்லை. எந்த ஆக்கிரமிப்பை அவர்கள் எதிர்த்தார்களோ அதே ஆக்கிரமிப்பு மனப்பான்மை துணைக்குவந்தவரிடமுமிருந்த தென்பதை அவர்களறிந்திருக்கவில்லை. துணைக்குவந்த ஒவ்வொருவரும், சிங்களர் பண் பாட்டை யழித்துத் தமது பண்பாட்டைப் பரப்பவே முயன்றனர். இலங்கையின் செல்வங்களிற்றமது பங்கையும் பெற்றுக் கொள்வதில் ஆர்வங்கொண்ட பேராசைமிக்க அந்நியப் படைகளின் முன்னேற்றத்தின் காரணமாக நாட்டின் சிறந்த நீர்ப்பாசன வசதிகளைக் கொண்ட குளங்கள் கடைசியாகக் கைவிடப்பட்டன. சிறிது சிறிதாக மக்கள் மலைநாட்டுக்குக் கலைக்கப்பட்டனர். அவர்கள் தாழ் பூமியையடுத்த ஈரலிப்புள்ள, சுகக்குறைவான பகுதிகளைத் தஞ்சமடைந்தார். அவர்களுடைய மணவுறுதி குலைந்தது. அடிக்கடி சனங்கள் புலம்பெயர்ந்ததாலும், பயிர்களNந்ததாலும், வீடுவாசல் அழிந்ததாலும் முன்னேற்றமென்ற மரத்தின் மூலவேர் அறுந்தது. கோவில்கள் தரைமட்டமாயின. நகரங்களும், சரித்திரப் பெருமை வாய்ந்த கட்டடங்களும் கிலமடைந்தன ; மக்களுடைய நம்பிக்கை அதிர்ந்தது. கில மடைந்த முக்கியமான நகரங்களை 9 ஆம் படத்திற்காண்க. 17 ஆம் நூற் ருண்டளவில் புத்த சமயம் நிலைகுலைந்தது. புத்த பிக்கு ஒருவன் அரசி யொருத்தியை மணந்து கொண்டு, அவளுடைய மூத்தமகனக் கொலை செய்து தானே அரசனுன்ை. நிவுைகுன்றிய இக்காலத்தில் உரோமன் கத்தோ லிக்கக் குருமாரும், வினேக் கிறித்தவக்குருமாரும், தம் சமயத்தை அறியாத வரையும், உத்தியோகத்துக்காசைப்பட்டவரையும் மதம் மாற்றினர். போத்துக்கேயர் காலத்திலும், இடச்சுக்காரர் காலத்திலும் பிரித்தானிய ஆட்சியின் ஆரம்ப காலத்திலும், கிறித்துசமயத்தைச் சேராதவர்க்கு உத்தி யோகங் கொடுக்கப்படவில்லை. கிற ததவக்குருமார் அரசாங்கத்தாருக்குப் பக்கபலமாயிருந்தனர். மக்களைத் தம் மதத்திற் சேர்த்துக்கொள்வதற்காக

வரலாற்றுப் புவியியல் 4.
குண்டசால்
O-9/2/G5 (J/760Té5L60L
திசமகாருமை
I/ISAOA)
Lub 8.
மகாவமிசத்திற் காட்டியுள்ள முதன்மையான அழிந்த நகரங்களும் பண்டைத் தெருக்களும் சீதவாக்கை இக்கால அவிசாவலைக்கு அணித்தாகவுளது. இக்காலப் பாதைகள் பட்டினங் களோடு மேற் குறித்தவற்றை ஒப்பிடுக.

Page 28
42 இலங்கைப் புவியியல்
அவர்களிற் சிலர் தகாதமுறைகளைக் கையாண்டனர்; சிறுவரை அவர் தாய்தந்தையரிடமிருந்து பிரித்தெடுத்துச் சென்று, பலவக்ையான உலக ஆசைகளைக் காட்டி அவர்களை மதம்மாறச் செய்தனர். சிலகுருமார் அறிவும் பண்பும் வாய்ந்தவர்கள். இவர்கள் மக்களோடு பழகி வைத்திய உதவிகளை அவர்களுக்கு வழங்கி வாழ்க்கைக்கு அவசியமான பல நற்கருமங்களைச் செய்தனர். அவை இன்றும் நிலவுகின்றன. மக்களின் நண்பர்களாகவும் அவர்கள் விளங்கினர். பலசிறந்த கல்விச்சாலைகளையமைத்த னர். இலங்கையின் உண்மையான பண்பாட்டுக்கு உறுதுணையாக இவை அமைந்தன.
பதிருைம், பதினேழாம், பதினெட்டாம் நூற்றண்டுகள் சிங்களர்க்கு இன்னல்மிகுந்த காலமாகும். குளிர்மிகுந்த வடபுலத்திலிருந்து வந்த ஆண்மைமிக்க ஐரோப்பிய சாதியாரோடு போரில் எதிர்நிற்க அவர்களால் முடியவில்லை. அதனல் உயிரைக்காப்பாற்றுவதற்காகப் பலதந்திரங்களைச் செய்து பார்த்தனர். அரசரும், மக்களும் தந்திரத்தால் உயிர்வாழ வேண்டி யேற்பட்டது. இடச்சுக்காரரிலும் போத்துக்கேயர் மிகுந்த இன்னல் விளைத்தனர். இதற்குக்காரணம் அவர்கள் அரசியலாட்சியுடன் வியாபாரத் தையும் சமயப்பிரசாரத்தையும் இணைத்துக்கொண்டமையே. இலங்கையைக் கத்தோலிக்க நாடாக்குவதே இவர்களுடைய முக்கிய நோக்கமாயிருந் தது. இதற்காக இவர்கள் எல்லா முயற்சிகளையுஞ் செய்துபார்த்தனர். இலங்கையிற் சனங்கள் அதிகம் புழங்காத மூலைகளிற் போய்ப்பார்த் தால் இவ்வுண்மைவிளங்கும். ஆங்காங்கு பல பெரிய கத்தோலிக்க தேவாலயங்கள் இன்று அநேகமாகத் தேடுவாரற்றநிலையிலிருப்பதைக் காணலாம். இடச்சுக்காரர் வியாபாரத்தைப் பெரு நோக்காகக் கொண்டனர். இவர்களிற் பலர் இலங்கையிலேயே குடியேறி மக்களுடன் கலந்துவிட்டனர். இவர்களைப் பறங்கியரென்று இன்று கூறுவர். இவர்களின் செல்வாக்குப் பலமுள்ளதாயிருந்தது. சமீபகாலம்வரை இவர்கள் இடச்சுமொழியைப் பேசினர். பிரித்தானியரும் முக்கியமாக வியாபாரிகளே. மற்றைச் சாதி யாரைப்போல இவர்கள் அவ்வளவு கொடுமை யிழைக்கவில்லை. முதலாவது இடச்சுத் தேசாதிபதி 1640 இல் பதவிவகித்தார். பிரித்தானியராட்சி 1796 இல் ஆரம்பமாயிற்று. இத்தனை நூற்றண்டாக நிகழ்ந்த குழப்பத் தினல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி தடைப்பட்டது. அதஞல் மக்கள் தம் நாட்டின் அபிவிருத்தியிற் பற்றில்லாது அயர்ந்து விட்டனர். இந்த அயர்ச்சி யிலிருந்து அவர்கள் இன்னுந் திருத்தமாக விழித்துக் கொள்ளவில்லை.
பிரித்தானியர் தமது ஆட்சியை நிலை நிறுத்தியவுடன் நாட்டின் கருமங் களைச் சீர்ப்படுத்த முயன்றனர். போத்துக்கேயராட்சியிலும், இடச்சுக்கார ராட்சியிலும், போரும் கொள்ளையும், பொல்லாத சுரண்டலும் நடை பெற்றன. ஆக்கவேலைகளுக்கு அப்பொழுது வாய்ப்புண்டாகவில்லை. பிரித்தானியர் சகிப்புத்தன்மையுள்ள சில முறைகளைக் கையாண்டனர். 1815 இல் கண்டியிராச்சியத்தைக் கைப்பற்றி இலங்கை முழுவதையும்

வரலாறறுப் புவியியல்
பிகிததிரட்டை\
S/
இராசரட்டை
அனுராதபுரம்
பொலழிவை
o u JITLJL J671 6QJIT
குருளுறக்கல் e தமபதேனியா கஜன்டி
: மாயாடடைநம்பக
தீதவாகனக் 'உறுகுனுரட்ை
o (C&S/TL om
படம் 9.
பண்டை மாகாணங்களும் தலைநகரங்களும்.
- - - - பிளாசேயின் வரலாற்று நூற்படி மாயரட்டையின் எல்லே.
- - --கொட்டிரிந்தனின் வரலாற்று நூற்படி மாயரட்டையின் எல்லை
4$

Page 29
44 இலங்கைப் புவியியல்
அடிப்படுத்திய பின்னர், அம்முறைகளை அனுசரித்தனர். 1833 இல் இலங்கையின் முதற் சட்டநிரூபணசபை அமைக்கப்பட்டது. "அவ்வாண்டி லேயே இலங்கை புதிய நிருவாகப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. அதற்கு முன்னர் இத்தீவு இராசரட்டை, மாயரட்டை, உருகுணே என மூன்று உறுதியற்ற எல்லைகளையுடைய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இராச ரட்டைக்கு மற்றெருபெயர் பிகித்திரட்டை (9 ஆம் படம் பார்க்க). இப்பெரும் பிரிவுகள் பழைய கிராம அமைப்பைப் பின்பற்றி, கோறளை, பற்று என்ற உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. பிரித்தானியர் நாட்டை மேல் மாகாணம், கீழ்மாகாணம், தென்மாகாணம், வடமாகாணம், மத்தியமாகாணமென ஐந்து மாகாணங்களாகப் பிரித்தனர். ஒவ்வொரு மாகாணத்துக்கும் அதிபதியாக ஒவ்வொரு பிரித்தானிய அரசமுகவர் இருந்தார். 9462 ருக்கு இலங்கைக் கிராம அதிகாரிகள் துணை புரிந்தனர். அவர்களோடு வேறும் பல பிரித்தானிய உத்தியோகத்தர் உதவிபுரிந்தனர். நாட்டின் உள்ளூர்ப் பகுதிகளைப் பிரித்தானிய அரசியலார் அறிந்தபின்னர், மத்தியமாகாணத்தை 1844 இல் வடமேல்மாகாணம் எனவும், 1886 இல், வடமத்தியமாகாணம் ஊவாமாகாணம் எனவும் பிரித்தனர். சப்பிரகமூவா மாகாணம் 1889 இல் அமைக்கப்பட்டது. இவ்வாறு இன்றைய இலங்கை இந்த ஒன்பது மாகாணங்களையுங் கொண்டதாயிருக்கிறது. (10 ஆம் படத்தைப் பார்க்க). இவைதாம் இக்கால நிருவாகப் பிரிவுகள். இவை மாவட்டங் களாகவும் பழைய கிராமப்பிரிவை அனுசரித்துச் சிறிய சிறிய பிரிவுகளான கோறளை, பற்று என்பனவாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. பிரித்தானியரின் வியாபாரக் கடற் பிரயாணச்சார்புகளுக் கனுசரணையாகப் பிரதான வியாபார நிலையமாயிருந்த கொழும்பு தலை நகராக்கப்பட்டது. இந் நகரில் ஐரோப்பிய வாசிகளின் தொகை அதிகரித்தது. அவர்களுக்கெனப் புறம்பானதொரு பாகமிருந்தது. ஒன்பதாம் படத்தைப் பார்க்க. அங்கே சிங்கள அரசராற் காலத்துக்குக் காலம் இராசதானியாகக் கொண்ட நகரங்கள் குறிக்கப் பட்டிருக்கின்றன. கண்டியைத்தவிர எனப் பழைய இராசதானிகள் கைவிடப்பட்டோ கிலமடைந்தோ உள்ளன. யாப்பகூவா, தம்பதெனியா, சீதவாக்கை ஆகிய நகரங்கள் முற்றய் மறைந்து விட்டன. பழம் பெருங் கட்டிடங்கள் கிலமடைந்து காணப்படும். பழைய பொலனறுவை இன்று மறுபடியும் சீர்திருத்தப்படுகிறது. அதன் சமீபத்திற் கெட்டுப் போய்க் கிடந்த குளங்கள் திருத்தப் படுகின்றன. புதிய குடியேற்றத் திட்டங்களமைக்கப்பட்டு வருகின்றன. பழங்காலத்திற் பெரிய நெற்களஞ்சிய மாய் விளங்கிய, புகழ்பெற்ற இந் நகர், மறுபடியும் அதன் பழைய பெருமையை விரைவில் அடைந்துவிடும். மற்றை நகரங்களிருந்த இடங்களில் இன்றும் சிறிய பட்டினங்களுண்டு. அரசாங்கம் அனுரதபுரியின் புராதன கட்டிடங்களைப் பாதுகாக்கும் முயற்சியிலிடுபட்டதன் விளைவாக அனுரதபுரியும் மறுபடி சீர்திருந்தி வருகிறது. பழைய நகரங்கள் கிலமடைந்து கிடப்பதைக் கண்ட இலங்கை அரசாங்கம், புதை பொருளாராய்ச்சிப் பகுதியென ஒரு

வரலாற்றுப் புவியியல்
გეი 8
2 "مما
a ay Գյ யாழ்ப் ೫. முல்:ைத்தி
மாவட்டர்- ததவு
\&முல்லைத்தீவு ou Lūin/7/76øø7 la ܛܠܠܸܒ -- . o . . 9-س--س------سسسسس: மன்னர் மண்குறர் )17فلمات اله மாவட்டிழ்
/’dôf62/6ofu//T
O
திருத்தேர்ர7மவே
வ்டமத்திய Tor V* 4-அனுராத ւյjլն Z/762/Z-Aگے۔ v அனுராதபுரமாவட்டம் கற்பிட்டி புத்தன் மாவkடம் ԼՈրժ5/T600TՈ 8 புததள4 - கீழ் ۔ ۔ ۔ مہ سمر 2- (tO6) மட்டக்கிப்
மட்டக்களப்பு
\ G502(a)é562 o மாவடடம ש//4%
Փ600 A/foly Yo
நீர்கெ ավ--՜ * 0/(ó//600Tlე
СШ0я) (ѣ79яv 6) I மாவட்டம் -7 6) 6as/G/i/o A/5/ 6/1/77 حس * fffLffബീff
077 (bson - Z/707Aée 287(6).JITI ITEST600TLD
. . . Wid 2ழத்துட்டை அம்பவாங்கொஷ் தெனர் மந்ானம் இம்பாந்தோட்டை
乏aリ
AZ7/72// eo 历/况》 ال A0 தங் s வுெவகாமம த்ெதுறை | ட டர்
so 8
uLuc 10.
இலங்கையின் அரசியற் படம் : இக்கால மாகாணங்களேயும் மாவட்டங்களையும் பிரதான
பட்டினங்களேயும் காட்டுவது,

Page 30
46 இலங்கைப் புவியியல்
பகுதியை அமைத்துப் பழைய நகரங்களைப்பற்றி ஆராய்ச்சி செயது, கில மடைந்தவற்றைப் புதுப்பித்துப் பாதுகாக்க முயற்சி செய்தீது, புராதன நாகரிகத்தின் சின்னங்கள் பல அடிக்கடி கிண்டியெடுக்கப்படுகின்றன. இக்கால இலங்கையரின் மூதாதைகள் பண்டைக் காலத்தில் எய்தியநாகரிகச் சிறப்பை அவை எடுத்துக் காட்டுகின்றன.
பிரித்தானியர் இலங்கையின் பல பாகங்களிலும் சிறந்த வீதிகளேயமைத் தனர். பின்னர் இருப்புப் பாதைகளை அமைத்தனர். நாளடைவில் தந்தி முதலிய ஏனைச் செய்திப் போக்குவரத்துச் சாதனங்களும் விருத்தி செய்யப் பட்டன. ஆங்கிலேயர் பண விடயங்களிலே திறமையுடையவர். நாட்டின் பண நிலையை உறுதியாக்கினர். மக்களின் பொருள் வளத்தைப் பெருக்க முயற்சி செய்தனர். நிலை பேருன சமாதானமும், எதிரிகள் தொல்லையு மின்றி நாடு வளமுற்றது. பிரித்தானியர் இலங்கைக்குச் செய்த நன்மை களுள் இதுவே முக்கியமானது. உலகில் யுத்தம் நிலவும்வரை வியாபாரத் துக்கு மிக வாய்ப்பான இடத்தில் அமைந்துள்ள இலங்கையை வல்லரசுகள் கைப்பற்ற விரும்புவது இயல்பே. உலகில் இதுவரை மிகச் சிறந்த கடற் பல மும், இராணுவ பலமுமுள்ள சாதி பிரித்தானியராதலால் அவர்களுடைய இராச்சியங்களே மற்றை வல்லரசுகள் தாக்க முற்படவில்லை. எனவே, கடந்த ஒரு நூற்றண்டில் இலங்கை பொருளாதாரத் துறையில் நன்கு முன்னேறி யிருக்கிறது. பிரித்தானியராட்சிக் காலத்திற் குடி சனத் தொகையும் பெருகியுள்ளது. 1871 இல் எடுத்த முதற் குடி மதிப்பிலும் இன்று இரண்டு மடங்குக்கு அது அதிகரித்திருக்கிறது. இருபதாம் நூற்றண்டிலேயே சனப் பெருக்கம் மிகத் துரிதமாக உண்டாயிருக்கிறது. 1833 இல் 15 இலட் சம் பெறுமதியான எற்றுமதியும், 3.75 இலட்சம் பெறுமதியான இறக்கு மதியும் நடைபெற்றன. இன்று அவை வருடமொன்றுக்கு 5000 இலட்சத் துக்கு அதிகமாயிருக்கின்றன.
இலங்கையில் பிரித்தானியர் புறம்பான ஒரு சாதியினராகத தம்மைக் கருதிக் கொண்டனர். அதனல் சுதேசவாசிகளோடு அவர்கள் அதிகம் கலந்து பழகவில்லை. இருந்தும், தனிப்பட்ட வகையிற் சாதிகளிடையே பொதுவாக நல்ல தொடர்பிருந்து வந்தது. முதலிற் பித்தானியர் அடி மைப் படுத்தப்பட்ட சுதேசிகளுக்கு அரசாங்கத்தில் அதிக இடங்கொடுக்க வில்லை. இதை இலங்கையர் வெறுத்தனர். இதுவும் இது போன்ற வேறு பல காரணங்களும், இலங்கையரிடையே ஒற்றுமையை உண்டாக்கின. அதல்ை அவர்கள் ஒருமித்து நின்று அரசாங்கத்தின் செய்கைகளையெல்லாம் கண்டித்தேைரயன்றி நாட்டின் நலத்தைப் பெருக்குவதற்கு அதனேடு

வரலாற்றுப் புவியியல் 47
ஒத்துழைக்கவில்லை. ஆதியிற் பிரித்தானியர் இராணுவத்துக்குப் பெருந் தொகையைச் செலவு செய்தனர். பிரித்தானிய உத்தியோகத்தருக்கும் பிரித்தானியத் தோட்டத் துரைமாரின் நலன்களைக் கவனிப்பதற்கும் பெருந் தொகை செலவு செய்யப்பட்டது. இவை ஆரம்பத்தில் அதிருத்தியையுண் டாக்கின. பின்னர் பிரித்தானிய ஆட்சியாளர் அனுபவம் பெறப்பெற இந்தக் குறைகள் படிப்படியாக நீங்கின. நைசீரியாவிற் கைக்கொண்ட ஆட்சி முறைகளாலுண்டான பெரு வெற்றிகளால் நல்ல அனுபவத்தைப் பெற்றனர். இந்தக் குடியேற்ற நாடு, சமீபத்திலேயே அபிவிருத்தி செய்யப் பட்டபோதிலும், ஆரம்பத்தில் இங்கே திறமைவாய்ந்த ஆட்சியாளர் விளங்கி னர், இலங்கைக்கு இன்று பூரண சுயாட்சி வழங்கப் பட்டிருக்கிறது. இலங்கையரே தமது நாட்டின் நன்மைக்குப் பொறுப்புடையவராக்கப்பட்டனர். இதஞல் அவர்கள் தேச வளர்ச்சியில் ஊக்கம் கொள்ளுவர். கைவிட்ட விளே நிலங்களேத் திருத்தல் போன்ற தேச நன்மைக்கேதுவான புனர் நிர்மாணத் திட்டங்களிலும் கைத்தொழில் வியாபார விருத்தியிலும் மக்கள் ஒத்துழைக்
கக் கூடிய நிலைமை ஏற்படும்.

Page 31
முதற் பகுதி-ஐந்தாம் அத்தியாயம் இக்காலப் பிரிவில் வியாபாரமும் வளர்ச்சியும்
1869 இல் சுயசுக் கால்வாய் பூர்த்தியாக்கப் பட்டதும் வெளிநாட்டு வியாபார வளர்ச்சியின் கடைசிக் கட்டம் ஆரம்பமாயிற்று. இதனல் மத்திய ஆசியாவின் வியாபாரம் மறுபடி சீர்திருத்தப்பட்டதோடு, வியாபாரப் பாதை கள், மேலும் இலங்கையை மையமாகக் கொண்டு விரிந்தன. பிரித்தானியக் கைத்தொழில்களுக்கு அவுத்திரேலியா பெருந்தொகையான மூலப் பொருள் களை அனுப்ப ஆரம்பித்தது. அதனல், தூரகிழக்கு நாடுகளுக்கும், அவுத்திரேலியாவுக்குஞ் செல்லும் பாதைகள் பிரியுமிடத்திற் கொழும்பு இடம் வகிக்க வேண்டியேற்பட்டது. எனவே, அதன் சிறப்புப் பன் மடங்கு அதிகரித்தது. கப்பல்கள் மிகப் பெரிதாகக் கட்டப்பட்டன. அதனல், காலித் துறைமுகம் அவற்றுக்கு எற்றதாயிருக்கவில்லை. வற்றுப்பெறுக்கற்ற வண்டல் படிந்த இலங்கைப் பொங்குமுகங்கள் கப்பல்கள் தங்குவதற்கு வசதியற்றன வாயிருந்தபடியால், 1871 இல் கொழும்பிற் செயற்கைத் துறைமுகமொன்று நிறுவத் திட்டமிடப்பட்டது. அது 1885 இல் நிறைவேற்றப்பட்டது.
நன்னம்பிக்கை முனை மார்க்கமாக 1825 இல் முதலாவது நீராவிக் கப்பல் இந்தியாவை அடைந்தது. கல்கத்தாவையடைய அக்கப்பல் 113 நாளெடுத்தது. 62 நாட்கள் மட்டுமே கப்பலை நீராவி மூலம் ஒட்டமுடிந்தது. கப்பலில் நிறைய நிலக்கரி எற்றப்பட்டிருந்தது. சில சமயம் அந்தப் பாரத்தினல் அது கடலில் அமிழ்ந்திவிடுமோவெனவும் அஞ்சப்பட்டது. அக் கப்பல் கொழும்பையுந் தொட்டுச்சென்றதோ இல்லையோ, கூறமுடியவில்லை. 1869இல் நீராவிக் கப்பல்களின் அமைப்பு மிகவுஞ் சீர்திருத்தமடைந்தது. அந்திர சைற்று என்னும் அனல்மிகுநிலக்கரி கண்டு பிடிக்கப்பட்டது. இந் நிலக் கரியில் அனற்சத்தி அதிகமாகக் காணப்பட்டதால் நிலக்கரி அதிகஞ் செலவு செய்யவேண்டிய பிரச்சினை தீர்ந்தது. பிரித்தானியரைப் போன்ற பிரதான வியாபாரச் சமூகத்தவர்க்கு நிலக்கரி நிலையங்களைக் கடற்பாதை களில் ஆங்காங்கு அமைக்கவேண்டிய அவசியமுண்டாயிற்று. நீண்ட கடற் பாதைகளில் இரு பாதைகள் பிரியும் சநதிகள் மிகவும் முக்கியம் பெற்றன. நீராவிக் கப்பல்கள் கடல் வணிகத்துறையிற் புதியதொரு திருப்பத்தை உண் டாக்கின. அது இலங்கையின் செல்வ விருத்திக்குப் பெரிதுந் துணைபுரிந்தது. பழங்காலத்தில் இரத்தினக் கல்லும், வாசனைத் திரவியங்களுமே இலங்கை யிலிருந்து எற்றுமதி செய்யப்பட்டன. இவை போகப் பொருள்கள். உருவத் தாற் சிறியனவாயிருந்தாலும், விலை மதிப்பாற் பெரியவை. இப்பொழுது புதிய கப்பல்களின் உதவியாற் பெருந் தொகையான பொருள்களை அதிக இன்னலின்றி ஏற்றிச் செல்லக் கூடியதாயிருந்தது. புகழ் பெற்ற “தேக்கிளிப்பர்’ போன்ற பெரிய கப்பல்கள், பெருந் தொகையான தேயிலை
48

வரலாற்றுப் புவியியல் 49
கோப்பி, சீனி முதலிய பொருள்களை எற்றிச் சென்றன. இதனுல் ஐரோப்பிய தேசத்தவரெல்லாரும் அவற்றில் விருப்புக்கொண்டனர். இலங்கையிற் பிரித் தானியராட்சிக் காலத் துவக்கத்திலிருந்த தேசாதிபதிகள், இங்கிலாந்தில் விற்பனையாகக் கூடிய பொருள்களை இங்கே உற்பத்தி செய்யத் தூண்டி வந்தனர். பல விவசாயப் பரீட்சைகள் செய்து பார்க்கப்பட்டன. விசேடமாக, சாய வேர், சீனி, கோப்பி என்பவற்றை உற்பத்தி செய்வதற்கு முயற்சிகளெடுக்கப் பட்டன. கோப்பிச் செய்கையிற் பெருவெற்றி காணப்பட்டது. 1824 இல் முதலாவது கோப்பித் தோட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 1845 வரையில் எல்லாரும் கோப்பித் தோட்டங்களை உண்டாக்க ஆரவாரித்தனர். மூலதன முள்ள பல ஆங்கில முதலாளிகளும், சிங்களப் பணக்காரரும் மலை நாட் டிற் காடுகளை வெட்டிக் கோப்பித் தோட்டங்களை உண்டாக்கினர். 1882 இல், கோப்பிச் செய்கை உச்சநிலையையடைந்தது. இதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோப்பிச் செடியில் ஒரு வகைப் பூச்சி விழுந்து, சிறிது சிறிதாகப் பரவி, எல்லாத் தோடங்களையுமழித்து விட்டது. சில வருடங்களிற் கோப்பி உற்பத்தி முற்றக இல்லாமற்போகவே தோட்டங்கள் பற்றரை யாகமாறின. கண்டி மாவட்டத்தில் இத்தகைய புற்றரையை இன்றுங்க்ாணலாம். சிங் கோன, தேயிலை, இறப்பர்போன்ற பயிர்களும் விளைவிக்கப்பட்டன. சிங் கோன அவ்வளவு பலனைக்கொடுக்கவில்லை. ஆனல், தேயிலையும் இறப்பரும் சிறிது சிறிதாகப்பெருகி, மற்றைப் பயிர்களிலும் நல்லபலனையளித்தன. சமீபகாலங்களிலே தேயிலையும், இறப்பரும் மிகவதிகமாக உற்பத்தி செய்யப் பட்டன. அதனல், இலங்கை சமுத்திரத்தைத் தாண்டுவதற்கு உபயோக மான படிக்கல்லுப்போல மட்டும் அமையவில்லை. அதன் முதன்மை முன்னையிலும் பன்மடங்கு அதிகரித்தது. இவ்வியாபாரவிருத்தியால் உள்ளூர் நகரங்கள் விசாலிக்கப்பட்டன. துறைமுகங்களும், உள்ளூரிலுள்ள பொருள் சேகரிக்கும் பட்டினங்களும் பெருத்தன. அடுத்துள்ளபடத்தில் ஐரோப்பி யருடைய வியாபார நடவடிக்கைகளால் அபிவிருத்தியடைந்த நகரங்கள் காட்டப்பட்டுள்ளன.
பணஞ் சம்பாதிக்கலாமென்ற ஆசையினல் நெல் முதலிய உணவுப்பொரு ளுற்பத்தியிலிடுபட்டிருந்த விவசாயிகள் தோட்டத்திலே தொழிலாளிகளா ஞர்கள். இலங்கையில், தேவைக்கதிகமாக விளைவிக்கக்கூடியதாகவிருந்தும் நெல் இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இலங் கையின் தேவைக்கு அவசியமான தொகையில் மூன்றிலொருபகுதியே இங்கு விளைவிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கட்டரிசியில், இலங் கைக் கமக்காரர் உபயோகிக்கும் ஊரரிசியைப் போல உணவுச் சத்துக்கிடை யாது. அது வழக்கமாகத் தீட்டியஅரிசியாகவே இருக்கும். தீட்டரிசியால் பெரி - பெரி என்ற நோயுண்டாகிறது. மலாயாவில் தீட்டரிசியைச் சனங்கள் சாப்பிடுவதால் இந்நோய் மிகவும் அதிகரித்துள்ளது. உணவுப் பொருள்களை உற்பத்திசெய்யும் விடயத்தில் ஒவ்வொரு தேசமும் தனது பூமியைத்திருத்தி அவற்றை விளைவிப்பதே பொருத்தமானது. இன்று இலங்கையின் பரப்பில்
4-J. N. B 70576 (11157).

Page 32
50
இலங்கைப் புவியியல்
யாழ்பாணம்
திருக்கோணமலை
ல்லாந்தர் இ ழ்,
மட்டக்களடபு குருறக்கல்
O கண்டி கொழும்பு நாஜலப்பிட்யூ
நுவரெலி 9 அத்தள் பைனிடாரவன்)
Uib .
போத்துக்கேயர், இடச்சுக்காரர், பிரித்தானியர் என்போரால் விருத்தியாக்கப்பட்ட
பட்டினங்களும் பெருப்பிக்கப்பட்ட பட்டினங்களும்.
 
 
 
 
 

வரலாற்றுப் புவியியல் 5.
ஏறக்குறைய ஐந்திலொருபகுதியே விளைவிக்கப்படுகிறது. இங்கிலாந்து கைத்தொழிற் புரட்சியினல் எவ்வாறு பயனடைந்ததோ அவ்வாறே இலங் கையும் இன்று தேயிலை இறப்பர் உற்பத்தியால் இடையிடையே இலா பத்தையடைந்து வருகிறது. இவ்வாறு கிடைத்த மேலதிகப்பணத்தினல், பல கல்விச்சாலைகள் அமைக்கப்பட்டன. அத்துடன் பணம்படைத்த வகுப்பினர் கடந்த நாற்பது வருடமாக வெளிநாடுகளுக்குப் பெருந்தொகையாகச் சென்று கல்விபயின்றனர். இதனல் நாட்டின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது. உயரவே மக்கள் விஞ்ஞானமுறைப் பயிர்ச்செய்கையிற் கருத்துன்றினர்.
அரசாங்கம் பழைய குளங்களைத் திருத்திவருகிறது. சமீபகாலத்திற் பல பெரியகுளங்களையும் சிறியகுளங்களை யுந் திருத்தியுள்ளது. சனங்களும் நெற் செய்கையை அதிகம் விரும்பாது, தேயிலை இறப்பர், தேங்காய் போன்ற பொருள்களை விற்று இலேசாக வாழ்க் கை நடத்துகின்றனர். விவசாயவிருத் தி யில் இலங்கையரும் கவனஞ் செலுத்திவருகிறர்கள். உதாரணமாக யாழ்ப்பாணத் தமிழர் இரணைமடுக் குளத்தைத்திருத்தி நெற் செய்கையி லீடுபட்டிருக்கின்றனர். பணம்படைத்த சில இலங்கையர் அனுரதபுரத்தில் நெற்காணிகளை வாங்கி நெற் செய்கை யிலிடுபட்டிருக்கின்றனர். அதற்காகப்
1J LüD 12. - - -
பழையகுளங்கள் புதுப்பிக்கப்பட்டன. இலங்கையில் மலேரியா பரம்பியுள்ள
மாவட்டங்கள். (இவை குறுக்கு வரி காட்டுச்சுரத்தினலுண்ட ான இன்னல்
களாற் சட்டப்பட்டுள.) கள் இன்று குறைந்துவிட்டன. பன்னி
ரண்டாம் இலக்கப்படத்தில் மலேரி
யாப் பகுதிகள் காட்டப்பட்டிருக்கின்றன. 58 ஆம் படத்தில், குளங்கள்
உள்ள பிரதேசங்களைக்காணலாம். இவ்விருபடங்களையும் ஒப்புநோக்கினல்,
குளமுள்ள இடங்களிலேதான் மலேரியா உண்டென்பதை அறிந்து கொள்ளலாம்.
காட்டுச் சுரம் படிப்படியாக ஒழிந்துவிட்டால், மக்கள் அப்பகுதிகளிலே தமது முயற்சிகளைப் பெருக்கிக் கொள்வர். முன்னர் பயிரிடப்பட்டுப் பின் கைவிடப்பட்டுக் காடுபடர்ந்த நிலங்களிற்றன் மலேரியா நுளம்பு அதிகமாகக் காணப்படுகிறது. ஆதியில் இப்பகுதிகளில் காட்டுச்சுரமிருந்ததோவெனத்

Page 33
52 இலங்கைப் புவியியல்
திட்டமாகக் கூற முடியாது. இக்குளங்களை யடுத்து மக்கள் குடியிருந்தன ரென்றும், வாழ்க்கை நடத்தினரென்றும் சரித்திரங் கூறுகிறபடியால் இன்றுள்ள நிலையில் அக்காலமக்கள் அப்பகுதிகளிற் பெருந்தொகையாக வாழ்ந்து கமஞ்செய்து குடிபெருக்க முடிந்திருக்குமோவென எண்ண இட முண்டு. காட்டுச்சுரம் இலங்கைக்குச் சொந்தமான நோயா, அல்லது முற் காலத்தில் வியாபாரிகளாற் கொண்டுவந்து புகுத்தப்பட்டதாவென்பது ஐயத்துக்கிடமானவிடயம். ஆனல், காட்டுச் சுரத்தைப்பற்றிப் பழைய நூல் களிற் பேசப்படுகிறது. அப்பழைய நூல்களை எனப்பழைய நூல்களோடு ஒப்பிடும்பொழுது அவை அவ்வளவு பழையனவு மன்று. இடைவெப்பவலயங் களிலுமே, சதுப்பு நிலங்களிற் காட்டுச்சுரம் இருந்தது. சமீபகாலங்களில் அது ஒழிக்கப்பட்டது. உரோமப்பேரரசு வீழ்ச்சியுற்றகாலத்தில் இத்தாலியில் இச் சுரம் பெரிதும் பரவியிருந்தது. வெளிநாடுகளிலிருந்த இராணுவத்துக்கு ஆட்கள் தேவைப்பட்டபடியால் கமக்காரர்களைச் சேர்த்து அனுப்பினர். அதனுற் பயிர்ச்செய்கை கைவிடப்பட்டது. கோடையில் நீர்தேங்கி நிற்கும் இடங்களில் நுளம்புகள் பெருகின. இந்த நிலைமையே இலங்கையிலு மேற்பட்டிருக்கலாம். விவசாயிகள் போர்த்தொழிலில் ஈடுபட்டு வறண்ட பிரதேச்ங்களிலுள்ள வயல் களைச் செய்கை பண்ணுது விட்டிருத்தல் வேண்டும். அந்நியர் படையெடுப்புக் காலங்களில் மலேரியா பெருகியிருத்தல் வேண்டும். கடந்த நூற்றண்டின் நடுப்பகுதி வரை இலங்கையின் குடித்தொகை படிப்படியாகக் குறைந்து வந்ததெனக் கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தப் போதிய புள்ளி விவரங்க ளில்லாவிட்டாலும் இது உண்மையாகவே காணப்படுகிறது. போரிற் பலர் மாண் டிருக்க வேண்டும். நோயினுலும் பலர் இறந்தனர். காட்டுக்காய்ச்சல் மக்களைப் பலவீனப் படுத்திற்று; சிசு மரணம் அதிகரித்திருக்கவேண்டும். பலக்குறை வினல் மக்கள் வேறுநோய்களுக்கு இலேசாக இரையாயினர். அயன மண் டலப்பிரதேசங்களில், மலேரியாத்தடையும், கொளுக்கிப்புளுத் தடையும் அரசாங்கங்களைப் பொறுத்த பெரிய பிரச்சினைகளாகும். இக்காரணத்தினற் ருன் இலங்கை யாங்கணும் அரசாங்கம் இலவசமருந்தளித்து இலவசச்சி கிச்சையுதவப் பல வைத்தியசாலைகளையும், மருந்துச்சாலைகளையும் நிறுவி யுள்ளது. நோயைத் தடுக்கும் முயற்சியிற் சுகாதாரசேவை பல துறைப்படத் தொழிலாற்றுகிறது. முதலில் இந் நோய்களைத் தடுத்தல்வேண்டும். அப் பொழுதுதான் நாட்டின் விவசாய விருத்தியிலும், கைத்தொழில் வளத் தைப் பெருக்குவதிலும் மக்கள் முழு உற்சாகத்துடன் பூரணமாக ஈடுபட (1ԲւգԱվւն.

முதற் பகுதி-ஆரும் அத்தியாயம்
ஐரோப்பியர் ஆதிக்கத்தினுலுண்டான வேறு விளைவுகள்
இந்தியாவுக்கு எண்ணச் சுதந்திரம் வழங்குவதற்காக விற்றேரியா மகா ராணியார் ஒரு சாசனத்தைப் பிறப்பித்தார். இலங்கையில், பிரித்தானியரின் ஆட்சிக்கால ஆரம்பத்தில் அதையும் பொருட்படுத்தாமல் ஆட்சியாளர் மற் றைச் சமயத்தவர்க்குக் கொடுமைபுரிந்தனர். தமது சமயமே உயர்ந்த சமய மென்றும், மற்றைச் சமயங்கள் தாழ்ந்தவையென்றும், தம் சமயத்தைத் திணிப்பதாற் சனங்களுக்கு பெரிய நன்மை உண்டாகுமென்றும் அவர்கள் மனமார நம்பினர். சமயத் துன்புறுத்தல் எப்படியும் அடியோடு ஒழிந்தது. இக்கொள்கையானது எதிர்பார்த்த பலனைக்கொடுக்கவில்லை. சனங்களிற் பெரும்பான்மையோர் தமது உண்மையான கொள்கைகளை மாற்ற விரும்ப வில்லை. ஆனல், பெரும்பான்மையோர் வெளியிற் பாசாங்கு செய்து பிரித் தானிய ஆட்சியாளரைத் திருத்திப் படுத்தினர். அதனுற் பொதுவாழ்வில் நேர்மையில்லாமற் போயிற்று. இது மிக்க சமீபகாலம்வரை இலங்கைச் சமு தாயவாழ்வில் நிலவிற்று. இதல்ை நாட்டின் பொருளாதார வாழ்வு பாதிக் கப்பட்டது. ஆட்சிக்குழு சனங்களின் வாக்கினலே தெரிந்தெடுக்கப்பட்டதன்று. அதனல் மக்களின் உண்மையான கருத்துக்களை அறியவோ, அவர்களின் ஒத்துழைப்பை எப்பொழுதும் பெறவோ முடியவில்லை. இலங்கை மக்களும் எப்பொழுதும் மற்றையவர்களைச் சார்ந்தே வாழ்க்கை நடத்தினர். சொந்த முயற்சியாலே தமக்குத் துணைபுரிய முடியாதவரானர். இந்த இடையூறுகள் நீங்கியதும் நாடு முன்னேற்றப் பாதையில் விரைவாகச்சென்றது. கரையோரப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் அந்நிய சாதியாருக்கு அடி மைப்பட்டுப் பலகால மிருந்தபடியாலும், மலைநாட்டவரைப் போல வைதீக மனப்பான்மையுடையவராயிராத படியாலும், ஐரோப்பிய கருத்துக்களும் எண்ணப் போக்குக்களும் அவர்களை இலேசாகக் கவர்ந்தன. கண்டிராச்சியத்திலுள்ளவர்கள் கரைப் பிரதேசத்தவர்களைப் போலன்றி மேலுஞ் சிலகாலம் தமது பண்பாட்டிற் பெரும்பகுதியை அழியவிடாது பாது காத்துவைத்திருந்தனர். கண்டிச் சட்டத்தை அவர்கள் மாற்றது நிரந்தர மாக்கிக்கொண்டனர். கரைப்பிரதேசங்களில் உரோமன்-இடச்சுச் சட்டமே வழக்கத்திற்கு வந்தது. தமிழரும், முசிலிங்களும், கரைப்பிரதேசங்களிற் குடியேறிய மலையாளிகளும் சமயச் சார்பான சில சலுகைகளைப் பெற்றனர். கரைப்பிரதேசச் சிங்களர் அந்நிய சட்டத்தை அப்படியே எற்றுக்கொண்டனர். புதிய கருத்துக்களையுஞ் சட்டங்களையும் புகுத்தியதாற் சமூகத்திலுண்டான மாற்றங்கள் சிக்கலானவை. அவற்றைப் பற்றிப் புவியியல் சம்பந்தமான ஒரு நூலிற் கூறுவது ஏற்புடைத்தன்று. ஆனல், சரித்திரத்துக்கும் புவியிய லுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இலங்கையின் பொருளாதாரப் புவி
53

Page 34
54 இலங்கைப் புவியியல்
யியல் பற்றியோ, மானிடப் புவியியல் பற்றியோ பயில்வதற்கு இச்சரித்திரச் செய்திகள் பின்புலமாக அமையவேண்டும். மற்றைச் சாதிய்ாரை அடக்கி யாளவேண்டுமென ஐரோப்பியர் பலகாலமாய் விரும்பினர். கால கதியில் அந்த ஆசை படிப்படியாகக் குறைந்தது. தென்னமெரிக்காவில் இசுப்பானியர் ‘கொடுமை மன்றத்தை நிறுவி அதன் சட்டத்துக் கடங்காத வர்களைக் கொன்றெழித்தனர். ஐரோப்பியரும் இலங்கையில் ஆரம்பத்தில் அத்தகைய கொடுமைகளைப் பின்பற்றினர். ஆனல், இக்கொடுங்கோன்மை பல பகல் நிற்கவில்லை. அதனுல் நாகரிகமான வேறு முறைகள் கையாளப் பட்டன. குடியேற்றக் கொள்கையிற்றிளைத்த ஐரோப்பிய சாதியார் கடைசி யாகச் சமாதானமாக உள்நுழையும் முறையைக் கையாண்டனர். அதன் பயனய் வெற்றிகொள்ளப்பட்ட மக்களுக்கு நேரடியாக நன்மை தரும் வியாபாரம், கல்வி, வைத்தியம் முதலிய துறைகளிற் சேவை செய் தனர். கருத்துக்களைப் பரப்புவதற்கு இது சிறந்த வழியாகக் காணப்பட்டது. சிறு தேசங்கள் உலகப் பண்பாட்டுக்குப் புரிந்த தொண்டுகளை ஐரோப்பியர் சமீபகாலத்தில் உணரத்தலைப்பட்டனர். எல்லாச் சாதியாரையும் ஒரேவித மான அச்சிற் போட்டுவிட்டாலும் உலக ஒற்றுமை எற்பட்டுவிட மாட்டாதென் பதை விரிந்த அறிவின் பயனுய் அவர்களுணர்ந்தனர். சர்வதேசச் சங்கத்தை நிறுவுதற்குப் பெரும் பங்கெடுத்துக் கொண்டவர்கள் ஐரோப்பியரே. அவர் கள் பலமற்ற சிறிய தேசங்களின் நலவுரிமைகளைப் பாதுகாப்பதன் மூலம் உலக சமாதானத்துக்கு உழைத்தனர். சனங்கள் ஒருவரோடொருவர் நட்புரிமை பாராட்ட விரும்பினல் வேற்றுமைகளிடையே ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டுமென உலகுக்கெடுத்துக் காட்டியுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை (ஐ.நா.ச.) என்ற புதியதொரு தாபனம் சர்வதேச சங்கத்துக்குப் பதிலாக அமைக்கப்பட்டது. சர்வதேச சங்கம் செய்துவந்த தொண்டுகளை இப்போது ஐ.நா. சபை செய்கிறது. சிறுதேசமக்களின் தரத்தை உயர்த்த எல்லா முயற்சிகளுஞ் செய்யப்பட்டு வருகின்றன.
ஐரோப்பியப் பண்பாட்டின் பயனுக இலங்கை மக்களின் அன்ருட வாழ்வில் பல முக்கியமான மாறுதல்களுண்டாயின. சமயம், கல்வி, குடும்பவாழ்க்கை, மொழி, கலை, வைத்தியம் என்ற பல துறைகளில் மாற்றங்களுண்டாயின.
எசமானரோடு இணங்குவதே நல்ல கொள்கையென எண்ணிப் போத்துக் கேயரிடத்தும் இடச்சுக்காரரிடத்தும் உத்தியோகம் புரிய விரும்பினுேர், தாம் கிறித்தவர் எனப் பாசாங்கு செய்தனர். புறச்சமயத்தவர்க்கு அந்தக் காலத்தில் எவ்வித அரசாங்க பதவியுங் கொடுக்கப்படவில்லை. எவ்வளவு சிறிய உத்தியோகமா யிருந்தாலும் கிறித்தவருக்கே வழங்கப்பட்டது. ஞான முழுக்குப் பெறவும், கிறித்தவத் தேவாலயங்களுக்குச் செல்ல அனுமதி பெறவுமே மக்கள் தேவாலயங்களை யணுகினர். தமது அந்தரங்கக் கொள் கைகளை மாற்ற அவர்கள் விரும்பவில்லை. ஞானமுழுக்குப் பெற்றவுடன் அவர்களுக்குப் புதியதொரு கிறித்தவப் பெயர் வழங்கப்பட்டது. நீண்ட

வரலாற்றுப் புவியியல் 55
சிங்களப் பெயர்களையும் தமிழ்ப் பெயர்களையும் அந்நிய உத்தியோகத்தர் உச்சரிக்கத் தயங்கினர். இப் புதுப்பெயர்கள் அவர்களுடைய வாயில் இலேசாக நுழைந்தன. இன்றும் நம் சமூகத்திற் காணப்படும் போத்துக்கேயப் பெயர் களும், இடச்சுப்பெயர்களும், ஆங்கிலப் பெயர்களும் இவ்வாறே உண்டாயின.
ஆங்கிலராட்சியில் இவ்வாறு பெயர் மாற்றவேண்டிய கட்டாய மிருக்கவில்லை.
ஆளுல்ை, எசமானரைத் திருத்திப்படுத்துவதற்காகச் சிலர் தமது பெயரை
மாற்றி வழங்கினர். பலகிராமங்களில் போத்துக்கேயப் பெயர்களான
த சில்வா (இடச்சில் த இசில்வா), பெரேரா, பர்ணுந்து, பீரிசு என்பன பழக்
கத்தில் வந்தன. பின்னர் இப்பெயர்கள் பரம்பரை பரம்பரையாக வழங்கப்
பட்டு இன்று பெரிய மயக்கத்துக் கேதுவா யிருக்கின்றன. ஆங்கிலம் பயின்ற
வர்கள் பாடசாலைகளிற் றம் பயின்ற அந்நிய இலக்கியங்களில் வரும் பெயர்
களைத் தமது பிள்ளைகளுக்கு வழங்கினர். சமீப காலத்தில் குடும்பத்தினர்
தமது பு/நாட்டுப்பெயர்களை முற்றகக் களைந்து விட்டுத் தனிச் சிங்களப் பெய
ரைக் கொடுக்கத் துவங்கி யுள்ளனர். வேறுசிலர் சில பெயர்களை எடுத்து விட்டுச் சுதேசிப் பெயர்களைச் சேர்த்து வருகின்றனர். உதாரணமாக யோன்
த சில்வா என்ற பெயருள்ளவர் யோன் த சில்வா விக்கிரம சிங்கா எனப்
பெயர் பெறுகிறர். அவருடைய பிள்ளைகளுக்கு முதற்பெயராகச் சந்திரா,
சீதா, தீசன் என்ற பெயர்கள் வழங்கப்படுகின்றன.
கிறித்தவ சமயத்தின் உண்மையான செல்வாக்கை மதிப்பிடுவது இலகு வான காரியமன்று. பிற்காலத்திற் கிறித்தவ சமயக் கருத்துக்கள் அவ்வள வாகப் பரவவில்லை. இருந்தும், மறைமுகமான பல சிந்தனைச் செறிவுகளை உண்டாக்கியிருக்கலாம். ஏனெனில் இலங்கையின் பிரதான தலைவர்கள் பலர் கிறித்தவப் பாடசாலைகளிலேயே கல்வி பயின்றிருக்கிருர்கள்.
கிறித்தவக் குருமாரின் செல்வாக்குக் கல்வித்துறையிலேயே மிக அதிக மாகக் காணப்படுகிறது. இலங்கைமீது பலமுறை அந்நியர் படையெடுத் ததன் பயனகப் புத்த விகாரங்களிலிருந்துவந்த பிரிவேனப் பாடசாலைகள் நிலைகுலைந்தன. அதனல், கிறித்தவக் குருமார் ஆரம்பித்த பாடசாலைகளை மக்கள் ஆதரித்தனர். ஐரோப்பிய முறைக் கல்வியே பயிற்றப்பட்டது. துவக்கத்தில் மாணுக்கர் ஐரோப்பியப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றினர். உடை, நடை, மொழி, சமயம் என்பன எல்லாம் எசமானரைப் பின்பற்றியே கைக்கொள்ளப்பட்டன. முக்கியமான சில கல்லூரிகளை ஆங்கிலேயர் நிறு வினர். அங்கே ஆங்கில சரித்திரம், ஆங்கில இலக்கியம், ஆங்கிலப் புவியியல், ஆங்கில நாட்டுத் தாவரவியல் என யாவும் எசமானருடைய தேச சம்பந்தமான கல்வியே பயிற்றப்பட்டு வந்தது. இலங்கையைப் பற்றிய கல்வி அமையவில்லை. போதனை மொழி ஆங்கிலமாகவிருந்தது. இலங் கையின் தேசமொழிகள் பயிலப்படவில்லை. வீட்டு வாழ்வோடு எவ்வித சம்பந்தமுமற்ற கல்வியே பயிலப்பட்டதனுல் அக்கல்வி சமூக வாழ் வைப் பாதிக்கவில்லை. பிள்ளைகளுக்கும் பெற்றேருக்கும் தொடர்பில்

Page 35
56 இலங்கைப் புவியியல்
லாமற் போனது. மாணவர் தமது தாய்மொழியை மறந்தனர். தமது மொழியிலே தம்முதியோருடன் பேசமுடியாதவராயினர். கல்வி, அறிவோடு மட்டும் தொடர்புடையதெனவும் அதனலே அன்றட வாழ்வுக்கு எவ்வித பயனுமில்லை யெனவுமெண்ணினர். இக்கல்வி வீட்டு வாழ்க்கையின் தரத்தை உயர்த்தத் தவறியது. முற்போக்கைத் தடை செய்தது. விவேகமும் நூற்பயிற்சியும் பெற்ற ஒரு படித்த கூட்டத்தினர் உருவாக்கப்பட்டனர். அவர்கள் பிறநாட்டவர்போல அந்நிய நாட்டு விடயங் களிற் பற்றுடையவராய் விளங்கினர். உதாரணமாகத் தாவரவியல் பயின்றவர்கள் ஆங்கிலத் தாவரவியல் நுால்களைத் தலைகீழாக மனனஞ் செய்திருந்தனர். தம்முடைய தேசத்தில் வளரும் மரங்களைப்பற்றிச் சிறிது மறியாதவராய் இலங்கைக்காட்டுப் பகுதியினருக்கோ அதையொத்த வேறு பகுதியினருக்கோ பயனற்றவராயிருந்தனர். தம்மூதாதையரின் தொழில் முறைகளை வெறுத்தனர். சமீபகாலத்திற் கல்விமுறையிற் பலமாற்றங்கள் செய்யப்பட்டதன் விளைவாகச் சுயமொழிகளும், இலங்கைச் சரித்திரம், புவியியல் முதலியனவும் பாடத்திட்டத்திற் சேர்க்கப்பட்டுள்ளன. இம்மாற் றங்களின் பயனக மிகக் குறுகிய காலத்துள் பெருமளவுக்கு முன்னேற்ற முண்டாயிருக்கிறது. எல்லாருக்கும் கட்டாயக் கல்வி வழங்கச் சட்டமியற்றப் பட்டிருக்கிறது. சுயமொழிப் பள்ளிக்கூடங்கள் நடத்த வசதிகளமைக்கப் பட்டுள்ளன. தேசியக் கல்வியூட்டும் நோக்கத்தோடு மத்திய பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாற்றங்களின் பயனக மக்களின் நிலைமை எங் கும் மாற்றமடைந்துளது. வெளிநாடுகளிலுள்ள ஆங்கிலப் பல்கலைக்கழகங் களுக்கு ஆராய்ச்சி செய்யும் நோக்கமாகப் போகும் மாணவர் இலங்கை சம்பந்தமான விடயங்கள் பற்றி ஆராய்ச்சி செய்யத் தூண்டப்படுகின்றனர். ஐரோப்பியருடைய நடையுடை பாவனைகளைக் கண்மூடித்தனமாகப் பின் பற்றி வாழ்க்கை நடத்திய “காற்சட்டைத்துரை”மாரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இருந்தும், இன்றுள்ள கல்விமுறை ஆங்கிலேயரின் கல்விமுறையைப் பின் பற்றியே அமைக்கப்பட்டது. ஆங்கிலக்கல்லிக் கொள்கைகளே ஆதாரமாகக் கொண்டுள்ளது. ஐரோப்பாவிற் கல்வி மறுமலர்ச்சி யுண்டானபோது ஆங்கி லக்கல்விமுறை எவ்வாறு இத்தாலியக் கொள்கைகளினற் பாதிக்கப் பட்டதோ அவ்வாறே இலங்கைக்கல்வி முறையும், ஆங்கிலக் கல்விக் கருத்துக் களால் இன்று பாதிக்கப்பட்டிருக்கிறது. நெடுநாட் பழகிய பின்னர் ஒரு வேளை அந்நியப் பண்பாடு பயனுதவலாம். ஆனல், இடைக்காலத்தில் அது பல இன்னல்களை யுண்டாக்கும்.

வரலாற்றுப் புவியியல் 57
வீடுகளிற், பிரதானமாக செல்வருடைய வீடுகளிற் பல ஐரோப்பிய தட்டு முட்டுச் சாமான்கள் இன்று புழக்கத்திலிருக்கின்றன. அவைகளுள், கரண்டி, கத்தி, முள்ளு, கோப்பை, சோசர், பீங்கான், வட்டில் முதலியன முக்கியமானவை. இவை ஐரோப்பிய சித்திரமுறையிற் செய்யப்பட்டு பிரித் தானிய வியாபாரிகளால் இறக்குமதி செய்யப்படுகின்றன. வலதுகையினல் சோற்றையுங் கறியையுஞ் சாப்பிடும் பழைய வழக்கத்தைச் சில மக்கள் கைவிட்டு, ஐரோப்பியரைப் பின்பற்றி முள்ளினுலும் கரண்டியிஞலுஞ் சாப்பிடுகிறர்கள். பள்ளிக் கூடங்கள் போன்ற பெரிய தாபனங்களில், கையைக் கழுவிக் கொள்வதற்குப் பாத்திரங்களிலே தண்ணிர் நிரப்பிவைப் பது கடினமாயிருப்பதால், இந்தமுறை ஒருவேளை எற்றதாயிருக்கலாம். ஆனல், கறியையுஞ் சோற்றையும் நன்றகச் சேர்த்துச் சாப்பிடுவதற்குக் கரண்டிமுள்ளு எற்றவையன்று. சிங்களர் வீடுகளிற் படுப்பதற்குப் பாய் தலையணையைப் பயன்படுத்துவர். இன்று ஐரோப்பிய முறையிலமைக்கப் பட்ட கட்டில்கள் காணப்படுகின்றன. இவையெல்லாம் செல்வர் வீட்டிலேயே உண்டு; அவர்கள் மின்விசிறிகளையும், பங்காக்களையும், ஐரோப்பியரால் அவசியமெனக் கொள்ளப்பட்ட வேறு போகப்பொருள்களையும் உபயோ கிப்பர்.
நாகரிகமான கிறித்தவரணியும் உடையெனக் கொள்ளப்பட்ட ஐரோப்பிய உடையை, சிங்களருள், விசேடமாக உயர் வகுப்பினர் பலகாலமாகப் பின் பற்றிவந்தனர். இவர்களே சிவில் சேவைப் பதவிகளை ஒரு காலத்தில் வகிப் போமென எதிர்பார்த்திருந்தவர்கள். இவ்வுடையே நீதி மன்றங்களிலும், புகையிரதப்பகுதி, பொலிசுப்பகுதிகளை உள்ளிட்ட அரசாங்கப் பகுதிகளிலும் பெருவழக்காயிருக்கிறது. வீட்டிலும் சுதந்திரமான இக்காலச் சூழ்நிலை யிலும் சுதேச உடை அணியப்பட்டுவருகிறது. ஒரு காலத்தில் ஐரோப்பியரின் உடைகள், பிரதானமாகப் பெண்களிடையே நிலவிய நாகரிக உடைகள் இலங்கைக் காலநிலைக்கு முற்றும் மாறன.வையாகக் கருதப்பட்டன. ஆனல், இன்று அவ்வுடை நிலைமைக் கேற்றவாறு மாற்றிக் கொள்ளக்கூடியதாயும், சுகாதாரத்துக் கேற்றதாயுமமைந்திருக்கிறது. அதனல் அவ்வுடையைச் சனங்கள் அதிகம் ஆட்சேபிக்கவில்லை. சிலதொழில்களுக்கு ஐபோப்பிய உடை வசதியுள்ளதாகக் காணப்படும். உதாரணமாக ஆடவர் விளையாடும் போதும் வேறு சிலதொழில்கள் புரியும்போதும் சாரம் கட்டுவதிலும் காற் சட்டையணிவது வசதியுடைய தாயிருக்கும். இலங்கையிலுள்ள உடைகளுள் எவை உண்மையான சிங்களத் தேசியஉடையென்று நிச்சயிப்பது இலகு வன்று. ஏனெனிற் பல சாதியாரின் உடைகளும் கலந்து விட்டன. உடுக்கும்

Page 36
58 இலங்கைப் புவியியல்
துணியொன்றே ஆடவர்க்கும் மகளிர்க்கும் பொதுவான தேசிய உடை போற்றெரிகிறது. பெண்கள் இப்போது அணியும் வெள்ளை உள்ளங்கி போத்துக்கேயராற் புகுத்தப்பட்ட உடை போற்றெரிகிறது. ஆடவர் அணியும் சேட்டு, கோட்டு முதலிய அங்கிகளில் இடச்சு, போத்துக்கேயர், பிரித்தானியர் அமிசங்கள் கலந்துள்ளன. பெண்கள் சேலையணியாது நீண்ட சட்டையை அணியும் முறை இடச்சுக்காரராற் புகுத்தப்பட்டது. அது இன்றும் வயது சென்றவர்களிடம் காணப்படுகிறது. பெண்கள் சேலை அணியும் பழக்கம் இந்தியப் பண்பாட்டைச் சேர்ந்தது. இலங்கையிலும் அது பெண்களிடை பெரு வழக்காய் இருக்கிறது. பொதுப்படையாகப் பார்க்குமிடத்துப் பெண்களின் ஆடைவிடயத்தில் அதிக மாற்ற மேற்படவில்லை. இங்கிலாந்தில் மணமகள் முகத்தை மறைத்துப் போடும் திரை இலங்கையிலும் பலராலும் உபயோகிக் கப்படுகிறது. காலுக்குச் செருப்பு அணிவதை விட்டுப் பலர் ஐரோப்பிய சப்பாத்துக்களை அணிகிறர்கள். கொழுக்கிப்புழு பாதத்துள்ள புண்கள் மூலமாக வயிற்றையடைகிறதென்ற உண்மை பலரும் அறிந்திருப் பதால் பாதரட்சையின்றித்திரியும் மக்களின் தொகை குறைந்து விட்டது. வெப்பமான காலநிலையுள்ள இந்நாட்டில் கால்மேசு அணிவது பயனற்ற தாகும். இருந்தும் பணக்கார வகுப்பினர் அணிந்து வருகிறர்கள்.
மொழியிலும் பலவகையான மாற்றங்களுண்டாயின. அதிக காலத்துக்கு முன்னரே அந்நிய நாட்டவர் சேர்க்கையால் பல மூலாதாரமான மாற்றங் களுண்டாயின. அன்ருடப்பேச்சு மொழியில் அந்நியரோடு இலகுவாகப் பேசித் தங்கருத்தைத் தெரிவிப்பதற்காகச் சிங்களர் வேற்றுமை உருபு களையும், காலங்காட்டும் இடைநிலை முதலிய வற்றையுங் கைவிட்டனர். அதனுல் இலக்கிய மொழிக்கும் பேச்சுமொழிக்கு மிடையே மிக்க வித்தியா சங்கள் காணப்படுகின்றன. பல ஐரோப்பிய சாதியாருந் தம்மொழிச் சொற் கள் பலவற்றைச் சிங்களத்திற் புகுத்திவிட்டனர். இவைபெரும்பாலும் அவ்வச்சாதியார் உபயோகித்த பொருள்களின் பெயராகும். அத்துடன் இக்கால விஞ்ஞான சாதனங்களோடு தொடர்புள்ள பல கலைச் சொற்களும் வந்து சேர்ந்து விட்டன. மோட்டர்க்கார், புகைவண்டி, கம்பியில்லாத் தந்தி, கப்பற்படுத்தல், முதலியவற்றையும் பொது விஞ்ஞானச் சார்புள்ள சொற்களையுங் குறிப்பிடலாம். சிங்களம் ஒலிப்பு முறைசார்ந்த மொழி; அதிற் பலவகைப்பட்ட எழுத்தொலிகளுண்டு. அதனல், சிங்களத்தில் அந்நியமொழிச் சொற்களை ஒலிபெயர்த்தெழுதுதல் சுலபம். அதில் இல்லாத எழுத்தொலி எபு “F” என்ற உரோமன் எழுத் தாகும். இந்த எழுத்தைப் பின்னர்ே ஆங்கிலரும் என ஐரோப்பிய சாதியாரும் கடன்பெற்றனர். முதலில் இது உரோமன் மொழியிலேயே

வரலாற்றுப் புவியியல் 59
இருந்தது. இவ்வாறு ஒலிபெயர்த்தெழுதிய சொற்களே ‘அர்த்தாப்பல்” “பாண்’ ‘ரெல்வே” என்பன உருளைக் கிழங்குக்கு இடச்சு மொழியி லுள்ள “அாததாப்பல்’, அப்பத்துக்கு போத்துக்கேய மொழியில் உள்ள பாண், இருப்புப் பாதைக்கு ஆங்கிலத்திலுள்ள “ரெல்வே” ஆகிய சொற்கள் சிங்களத்தில் ஒலிபெயர்த்தெழுதப்பட்டன.
இலங்கையில் வழங்கும் ஆங்கில வழக்கும் மிகுந்த மாற்றமடைந்த வழக்கே. பிரெஞ்சு மொழியிற் சிறியகடைக்கு “புட்டிக்கு’ எனப்பெயருண்டு; அலுமாரி இடச்சுச்சொல்லு , இவை இலங்கையில் வழங்கும் ஆங்கிலத்திற் கலந்துவிட்டன. ஆங்கிலச் சொற்களுக்கு ஒப்பாகச் சிங்களத்திற் காணப்படுஞ் சொற்களெல்லாம் ஆங்கிலத்திலிருந்தே வந்தன வென்று கூறிவிடமுயாது. “உவாடர்’ (சிங்களம் “வதுர”) போன்றபல முக்கியமான சொற்களிடையே ஒப்புமைகாணப்படுவதற்குக் காரணம் சிங்களமும் ஆங்கிலமும் சிலசொற் களைச் சங்கதத்திலிருந்து பெற்றிருந்தமையே. இந்தியப் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு சாதியாரும் ஆங்கிலத்தைப்பொது மொழியாகப் பயன் படுத்தி வருகிறர்கள். அன்றியும் அதிலுள்ள இலக்கிய வளத்தினலது ஏறக்குறைய எல்லா எண்ணத்துறையிலும் பெரிதும் செல்வாக்குப் பெற்றி ருக்கிறது.
பழைய ஆயுள்வேத வைத்திய முறைக்குப் பதிலாக ஆங்கிலவைத்திய முறை புகுந்து கொண்டது. படிப்பு வாசனையற்றவர்களிடையே பெரிதும் போற்றப் பட்டு வந்ததும் பலகாலமாகப் பழக்கத்திலிருந்ததுமான ஆயுள் வேதவைத் தியமுறையை முற்ருகக் கைவிட வேண்டுமென்ற கொள்கையும் ஆரம் பத்திலிருந்தது. இதற்குக் காரணம், அரசாங்கம், ஆங்கில வைத்திய முறை யைக் கற்குமாறு மாணுக்கரை இங்கிலாந்துக்கு அனுப்பி வந்தமையே. இங்கிலாந்தில் ஆயுள்வேத முறையைப் பயிற்றுங் கல்லூரிகள் கிடையா. அன்றியும் ஆயுள்வேத வைத்திய முறையைப் பாதுகாக்க ஒரு தாபனமு மிருக்கவில்லை. ஆயுள்வேத வைத்தியர்கள் அதிகம் படித்தமக்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்காமையும் ஒரளவு பழைய வாகட முறையைக்
கையாண்டமையும் இது கைவிடப்பட்டதற்குக் காரணமாகும்.
கடந்த நூற்றண்டில் மக்கள் பொதுவாக அந்நிய தேசக் கலைகளிலும், பழக்க வழக்கங்களிலுமே சிரத்தை யுடையவராயிருந்தனர். சுதேசப் பண்பாடு கலை, சிற்பம், மொழி, இலக்கியம், வைத்தியம் என்பவற்றில் அவர்கள் அக்கறை கொள்ளவில்லை. சமீபகாலமாக ஆங்கில வைத்தியம் பயின்ற வைத்தியர்கள் ஆயுள்வேத முறைகளை ஆராய்ந்தனர். மற்றை முறைகளைப்

Page 37
60 இலங்கைப் புவியியல்
போலவே ஆயுள்வேத முறையிலும் பல நன்மையான விடயங்களுண்டு. மக்களின் நன்மைக் கேதுவான அறிவுத்துறைகளைக் கைவிடுதல் பொருத்த முடையதன்று.
பதினேழாம், பதினெட்டாம், பத்தொன்பதாம் நூற்றண்டுகளிற் சிங்கள மனச்சிற்பமும் கலைகளும் மறைந்தன. இடச்சுக்காரர் தமது கட்டடக்கலையைத் தென்னுப்பிரிக்காவிற் புகுத்தியமைபோல இலங்கையிலும் புகுத்தினர். வாயில் முகப்பும் மத்தியில் முற்றமும் உள்ள வீடுகளை அவர்கள் இலங்கை யிலும் கட்டினர். தாங்கள் தலைநகராகக் கொண்ட பட்டினங்களில்
படம் 13.
பழைய சிங்களச் சிற்பவடிவமைப்பைக் காட்டும் கட்டிடம் , அங்குராக்கட்டையிலுள்ளது.
இடச்சுக்காரர், தமது முறையிற் சில கட்டிடங்களைக் கட்டினர்கள். இவற்றுட் சில கல்லாலமைந்த வீடுகளாகும். காலியிலும் யாழ்ப்பாணத்திலுமுள்ள கோட்டைகளும் இவ்வகையைச் சேர்ந்தவையே. ஆங்கில முறையிலும் பல கட்டிடங்களை ஆங்கிலேயர் கட்டினர். சமீப காலத்தில், சிங்களச் சிற்பமுறையிற் கட்டப்பட்ட கட்டிடங்கள் மிகச்சிலவே. ஆனல், இப்பொழுது சிங்களச் சிற்பக் கலையைப் புனருத்தாரணஞ் செய்யும் இயக்கமொன்று தோன்றியிருக்கிறது. இது நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய அமிசமாக விளங்கக்கூடும்.
 

வரலாற்றுப் புவியியல் 6.
ஐரோப்பிய தேசங்களோடு அதிக தொடர்பு பூண்ட ஆசிய நாடுகளுள் இலங்கையே முதலாக நிற்கிறது. அதனல் இலங்கையின் வரலாற்றுப் புவி யியலையறிவது அவசியமாகும். மேலைப் பண்பாடும் கீழைப் பண்பாடும் ஒருபோதும் ஒன்றுசேரா என்ற கொள்கை பல காலமாக நிலவிவருகிறது.
وو
“கிழக்கும் மேற்குமொன்று சேராவே, கிழக்கது கிழக்கே மேற்கது மேற்கே என்று உருடியாட்டுக் கிப்பிளின் என்னும் ஆங்கிலப் புலவர் பாடிவிட்டார். ஆனல், இலங்கை யென்ற இச்சிறுதீவில் அவை ஒன்று சேர்ந்து விட்டன. ஒருவர் பண்பாட்டிலிருந்து மற்றையவர் பலவிடயங்களை அறிந்துகொள்ள லாமென்பது கடைசியாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. மானிடத் துறையி லும் பொருளாதாரத் துறையிலும் இலங்கையின் வருங்கால அபிவிருத்தி ஆராய்ச்சியாளர்க்கு விசேட கவர்ச்சியுடையதாகும். இலங்கையிலுள்ள பல்வேறுசாதியாரின் தொடர்பு, அரசியற் போட்டியையும் வியாபாரப்போட்டி யையுமே உண்டாக்குமானல் நிலைபேறன பயனுண்டாகாது. இலங்கையில் வெவ்வேறு பண்பாடுகளிலுமுள்ள நல்ல தன்மைகளொன்றுகூடுமானல் புராதன ஆசிய சரித்திரத்தில் அது வகித்த முக்கியமான இடத்தை மறுபடி யும் பெறுமென்பதில் ஐயமில்லை.

Page 38
இரண்டாம் பகுதி பெளதிகப் புவியியல்
இரண்டாம் பகுதி-முதலாம் அத்தியாயம் இலங்கையைச் சுற்றியுள்ள கடலும் கரையும்
மீன் பண்ணை சம்பந்தமாகச் சமீப காலத்தில் ஆராய்ச்சி நடத்திய அரசாங்கக் கடலுயிரினவியற் பகுதியார், வற்றுப்பெருக்கு, நீரோட்டம், முதலிய கடல் நிலை பற்றிப் பல தகவல்களைச் சேகரித்துள்ளனர். பிரித்தா னிய அரசாங்கத்தின் கடற்படைப் பகுதியும் இந்து சமுத்திரம் பற்றிய சில பொது ஆராய்ச்சிகளை நடத்தியிருக்கிறது. இலங்கையைச் சூழ்ந்த கடலைப் பற்றிய தகவல்களை அறிவதற்கு மேற் கூறிய பகுதிகள் வெளியிட்ட அறிக் கைகளே பெரிதுந் துணைபுரிகின்றன.
இந்திய உப கண்டத்திலிருந்து பிரிந்த ஒரு பகுதியே இலங்கை, கரையி லிருந்து ஐந்து மைல் துவக்கம் 25 மைல் வரை விரிந்து தெற்காகவும் கிழக்காவும் திடீரென முடிவுறும் ஒரு சிறிய கண்ட மேடையில் அது அமைந்திருக்கிறது. இவ்வாறு எறத்தாழ 12 மைல் துரத்தில் திடீரென உண்டாகும் பள்ளம் 200 அடியிலிருந்து 6000 அடிவரைக்கும், அதற்கு மேலும் இந்து சமுத்திர மட்டத்தையனுசரித்து வீழ்ச்சியடைகிறது. வடக்கிலும் வடமேற் கிலும் இந்தக்கண்ட மேடையில் இரண்டு மேடுகளுண்டு. இவை இந்திய உப கண்டத்துடன் தொடர்பு பெறுகின்றன. இதில் முதலாவது மேடு ஆதாம் பாலம் எனவழங்கப்படும். இது 22 மைல் நீளமுள்ள குறுகிய பாறைத்தொடர். இங்கு கடல் ஆழமற்றிருக்கிறது. ஆங்காங்கு சிறு சிறு தீவுகள் தலையை நீட்டுகின்றன. இவற்றில் ஒரு தீவே குருசடைத் தீவு. இத் பாம்பன் தீவில், குட்டிக் கல்முனைக்கு நேராகத் தெற்கேயுள்ளது. விஞ்ஞான முறையாக விடயங்களை அவதானிப்பதற்கு இத்தீவு மிக வாய்ப்பான இடமாகும்.
ஆதாம் பாலத்துக் கடல் மிக ஆழமற்றதாயிருப்பதாலே தோணிகள்
அதிற் செல்ல முடியாது. அதனல், கொழும்பிலிருந்து சென்னைக்குச்
செல்லும் கப்பல்கள் தீவின் கிழக்குக் கரையாகத் திரும்பியே' செல்ல
வேண்டும். இந்திய இருப்புப் பாதையின் முடிவுக் கோடியான தனுக்
கோடிக்கும் இலங்கை இருப்புப் பாதையின் அந்தமான தலைமன்னருக்கு
மிடையிற் பிரயா 0ணிகளை ஏற்றிச் செல்லக் கப்பல் உண்டு. தலைமன்னர்
S2

பெளதிகப் புவியியல் 63
மன்னர்த் தீவின் கோடியிலுள்ளது. இது இலங்கையின் நிலப் பரப்பிலிருந்து ஒரு குறுகிய கால்வாயினுற் பிரிக்கப் பட்டிருக்கிறது. இக் குறுகிய கால்வாய்க்கு மேலாகப் போடப்பட்டுள்ள பாலத்தின் மீதே தலைமன்னர் செல்லும் புகை
தீ தலைமஸ்ஜர் சடைத்திலு K முத் சிசிப்பிசூெட்
மண்குற75குடர ܔܪܓ '
திருக்கோணம&ல் தம்பலகாமஏரி
கர்ைடமேடையின் விளிம்பு(அண்ணாவாக) சிN பற்பல முருகைக்கற்பார்கள் :
* கட்டைகள் ገ0 go
Lid 14. இந்தியாவின் ஒரு பகுதியாய் விளங்கும் இலங்கை. கண்டமேடை வடக்கு நோக்கி இந்தியக் கரையையடுத்து விரிகிறது. அரசாங்கக் கடலுயிரியலறிஞரின் அறிக்கையின்படி முருகைக் கற்றழைவு, பீதுருக் கடலடித்தள மேடை, உவட்சுக் கடலடித்தள மேடை, முத்துக் கடலடித்தள மேடை என்பன. படம் சிறிய அளவினதாயிருப்பதால் முருகைக் கற்றழைவு பெரிதாகக் காட்டப்பட்டிருக்கிறது.
வண்டிபோகிறது. அத்துடன் தெருவொன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தெருவும் புகையிரதப் பாதையும் மன்னர்த் தீவையடையும் இடத் திலேயே மன்னர்ப் பட்டினமமைந்திருக்கிறது. இப் பாதைகள் போடப்

Page 39
64 இலங்கைப் புவியியல்
பட்டதன் விளைவாகவே இந் நகரம் வளர்ச்சியடைந்தது. இலங்கைத் தலை நிலத்தில் பழைய துறைமுகமான மாதோட்டம் உண்டு. அது இன்று மாந்தையென வழங்கப்படுகிறது. மன்னர் வளர்ச்சியடைந்ததனல் மாந்தை கைவிடப்பட்டது.
மன்னர்த் தீவுக்கும் குதிரைமலை முனைக்குமிடையிலுள்ள புகழ் பெற்ற முத்துப்பார் மேற் கூறிய பாறைத் தொடரையடுத்துள்ள கண்ட மேடையின் உயர்ந்த பகுதியாகும். மற்றேர் உயர்பகுதி கடலில் முற்றக அமிழ்ந்தி விட்டது. அது யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்கிலிருந்து இந்தியாவி லுள்ள கலிமீர் முனைவரை பரந்திருக்கிறது. இதன் மிக உயர்ந்த பகுதி பீதுருக் கடற்றளமேடையாகும். இவ்விருபாறைத் தொடர்களுக்குமிடையி லுள்ள ஆழமற்ற கடலே பாக்குத்தொடுகடல். ஆதாம் பாலத்துக்குத் தெற்கே கடலானது மன்னர்க் குடாவில் விரைவாக ஆழ்ந்து செல்கிறது. இக் கடலின் பத்திலொன்பது பகுதி ஒரு மைலுக்கு மேலாக ஆழமுடையது. இக் குடாக்கடலுக்கு மேற்கே உவட்சுக் கடலடித்தளமேடை என்ற மற் ருெரு மேட்டுப் பகுதியுண்டு. இது இந்திய உப கண்டத்தின் விரிவாகும். கண்டமேடையின் ஏனைப் பகுதிகளை திரு. எ. எச்சு. மல்பாசு என்பவர் “இலங்கையின் கரைசார்ந்த கடலுயிரியலாராய்ச்சி” என்ற நூலிற் பின் வருமாறு விளக்குகிறர். “இது ஒடுக்கமான நீர்க் கீழ்ப்பாறை , 10 துவக் கம் 20 மைல் அகலமுடையது. 100 பாகைக்கோடு என்று சொல்லப்படும் கோட்டையொட்டிச் செங்குத்தாகப் பலநூறடி விழுக்காட்டுடன் சரிகிறது. இம்மேடை பாறை மயமாகவுள்ளது. இடையிடையே முதிரைக் கற்களும், பலநிறமும் உருவமும் அளவுமுள்ள கடற் பஞ்சும், காணப்படுகின்றன. இவை சில இடங்களில் நெருக்கமாகக் காடுபோல் வளர்ந்திருப்பதால் ஆழத்தில் உணவுதேடும் பலவகை மீன்களுக்கும் இவ்விடம் நல்ல வேட்டைப் புலமாகும்.”
மட்டக்களப்புக்கும் கொழும்புக்குமிடையிலுள்ள தென்பாகம் விசேடமாகக் கரடுமுரடாயிருக்கிறது. இங்கே கரடுமுரடான முருகைக் கற்களும், கூரான பாறைகளுமுண்டு. மாணிக்க கங்கை கடலோடு கலக்கும் இடத்திற்குச் சமீபத்தில் கடலுக்குமேலே இவ்வாறு இரண்டு கூரிய பாறைமுனைகள் காணப் படுகின்றன. இவை சின்ன பாசு, பெரிய பாசு எனவும் சிங்களத்தில், குடா ராவண கொட்டுவ, மகாராவண கொட்டுவ, எனவும் வழங்கும். (அ) திருக்கோணமலை, (ஆ) மட்டக்களப்பு, (இ) பாணந்துறை ஆகிய மூன்று இடங்களில் 100 பாகம் ஆழக்கோடு முறிந்து கரையை அணுகுகின்றது.
இலங்கையின் கரையில் மூன்றிலொரு பாகம் அசாதாரணமாய் ஆழமான கடலை யடுத்திருப்பதாற்றன் இலங்க்ையில் வற்றுப் பெருக்குக் கிடையாது. நெடுங்கடலின் சாதாரண வற்றுப் பெருக்குஅலை மூன்று, அல்லது நாலு அடி உயரத்துக்குமேற் கிளம்புவதில்லை. மிகப் பெரிய கண்ட மேடைகளி

பெளதிகப் புவியியல் 65
லமைந்த ஆற்றுப் பொங்குமுகங்களிற்ருன் மிக உயர்ந்த அலைகளைக் காணலாம், இத்தகைய குறுகிய ஒடைகளிலே நெடுங் கடலிலிருந்து திரண்டு வரும் அலைகள் நீரைக் கொண்டு வந்து குவிக்கின்றன. பிரித்தானிய தீவுகளிலும், மேற்கு ஐரோப்பிய நாடுகளிலுமுள்ள பொங்கு முகங்களில்
ULD 15. பின்னணியில், திரைகள் சுருளும் கோடு முருகைக் கற்பாறையைக் காட்டும்.
கற்பாறை கடல் மட்டத்துக்கு உயர்ந்திருக்கிறது. கரைக்கும் இப்பாறைகளுக்கு மிடையிற் சிறிய மீன்களுண்டு.
முருகைக்

Page 40
66 இலங்கைப் புவியியல்
அலைகள் உயரக்குவிவதைப் பற்றி அறிந்திருக்கும் புவியியல் மாணவர் இலங்கைப் பொங்கு முகங்களில் அவ்வாறில்லாதிருப்பதைக் கண்டு வியப் LIGIÕIG LULJG)fTLİn. W
இலங்கையாற்றுமுகங்களிலுள்ள நீர் மட்டம் மாற்றமடைவதில்லை. பிரித்தானிய ஆற்று முகங்களில் ஒவ்வோரிருபத்துநாலு மணி நேரத் திற்குள்ளும் நீர்மட்டம் இருபது, அல்லது முப்பது அடி மாறக்கூடும். இலங்கையைச் சுற்றியுள்ள கரையில், அலையில் வற்றுப் பெருக்குக் கிடையாது. கொழும்பு, காலி, திருக்கோணமலையாகிய துறைமுகங்களின் வற்றுப் பெருக் குக் குறிப்புக்களை இந்திய அரசாங்கம் நீண்ட காலமாகக் குறித்துவந்தது. அவை இந்தியத் துறைப்பட்டினங்களின் வற்றுப் பெருக்கு அட்டவணை' என்ற பெயருடன் பிரசுரிக்கப்பட்டுள. இலங்கையின் தென் கரைகளின் அன் ருட வற்றுப் பெருக்கு வீச்சு ஒரு சில அங்குலமேயாகும். ஒவ்வொரு சந்திர மாதத்திலும், சூரியனும் சந்திரனும் சேர உண்டாகும் இரண்டு உவாப் பெருக்குக்களிலும், (வீச்சுக் கூடிய காலங்களிவையே) மூன்று துறைமுகங் களிலுமுள்ள வீச்சு முறையே 26 அடியும், 23 அடியும் 21 அடியுமாகும். மிகப் பெரிய பெருக்கு 4 அடிக்குமேலில்லை. கங்கையாற்றில் 14 அடிப் பெருக்கும் 20 அடிப் பெருக்குமுண்டு. இலங்கைக் கரைகளிற் பெரும்பாலும் சமுத்திர நிலைமையே உண்டு. இலங்கைக் கரைகள், பிரித்தானிய கரைகளோடு ஒத்துப்பார்க்குமிடத்துப் பெரிய மாற்றங்களைக் காட்டும்.
ஆற்று முகங்களில் வற்றுப் பெருக்குஅலை புகுவதால், கப்பற் போக்கு வரத்துக்கு வாய்ப்புண்டாகிறது. ஏனெனில் அது துறைமுகத்தைத் துப்புரவு செய்கிறது. ஆற்று நீரில் வரும் வண்டல், கடலொடுகலக்கும் பொழுது அது அங்கே அடைந்து விடாமல் அப்புறப்படுத்தி விடுகின்றது. பெருக்கு அலையில்லாத காரணத்தால் இலங்கையிலுள்ள எந்தப் பெரிய ஆற்றுப் பொங்கு முகத்திலும் கப்பல்கள் செல்லமுடியா திருக்கிறது. மணல் மேடுகளும், சேற்றுத்திடல்களும் ஆற்று முகங்களையடைத்திருப்பதால் ஆற்று நீர் சங்கமப் பிரதேசத்திற் பரவி ஆழமற்ற கடனிரேரிகளையுண் டாக்குகின்றன. (115 ஆம் படம் பார்க்க). இலங்கையின் பெரிய ஆறு மகாவலி கங்கை. அது தேமிசு நதியிலும் அதிகம் சிறியதன்று. ஆனல், அதிற் பிரயாணஞ் செய்ய முடியாது. சில பகுதிகளில் மட்டும் மிகச் சிறிய படகுகளிற் செல்லலாம். கரையை யடுத்த கடனீரேரிகளில் மீன்பிடிக் கலாம். கால்வாய்களினற்றெடர்பு பெற்றவை, நெல் ஏற்றிச் செல்ல வாய்ப்பானவை. (உதாரணம் கொழும்பு- புத்தளம்). மற்றைப்படி இவற்றல் எவ்வித பயனுமில்லை. கரையெங்கும் மீன்பிடி வள்ளங்கள் நிற்பதற்குத் துறைகளுண்டு. வற்றுப்பெருக்கு அலைகளில்லாமையும் அவைக்கு Gәлтиїици Lusign.

பெளதிகப் புவியியல்
8፱ °
盖函 -منت .. ...- .-ig:Ejii :ང་ཚོས་ A. /AA 部邸 r - நி: 歉 7 o . 4P/6/25/070720/A
t سیست -- )g0
o6)Lysfu L/77 6" 6*
காவித்துறைமுகம் ====4 پسنگ.
d தொண்டிரா முனே ვ|/ ° SL5)LaST
படம் 16.
கரையோர உறுப்புக்களின் பெயர்களும் பருமட்டான தரைத் தோற்றப்படமும்,

Page 41
68 இலங்கைப் புவியியல்
பழங்காலத்தில், கடலில் நெடுந்துரம் சென்ற பாய்க்கப்பல்கள், இன்றைய சாதாரண வியாபாரக் கப்பல்களிலும் மிகச் சிறியவை. அவையுமே நமது ஆற்று முகங்களிற் பிரவேசிக்கவில்லை. மட்டக்களப்பு வரி, புத்தளம் எரியாகியவற்றிலும் இயற்கையாயமைந்த துறைமுகங்களிலும் நங்கூரமிட்டன. இலங்கையில் உள்ள இரண்டு நல்ல இயற்கைப் பாறைத் துறைமுகங்கள் காலியும் திருக்கோணமலையுமாகும். உலகத்திலே யுள்ள மிகச்சிறந்த இயற்கைத் துறைமுகங்களான அவுத்திரேலியாவிலுள்ள சிட்டினி, தென்னமெரிக்காவிலுள்ள இரையோ த சனிரோ, வடஅமெரிக்கா விலுள்ள சான்பிரான்சிசுக்கோ, என்பவற்றேடு ஒப்பானது திருக்கோண மலைத் துறைமுகம். அதன் இயற்கையழகைப் பற்றிப் பலயாததிரிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். துறை ஆழமானது ; இக்காலக் கப்பல்களைக் கொண்ட ஒரு பெரிய கப்பற் றெகுதியைக் கொள்ளக் கூடியது. இந்து சமுத்திரத்திலே தமது பிரதான கடற்படைத் தளமாகத் திருக்கோணமலையை அமைக்க வேண்டு மெனப் பிரித்தானியர் ஒரு காலத்திற் கருதியதுண்டு. ஆனல், அதன் பின் னணி நிலம் சனசஞ்சாரமற்ற காடாயிருப்பதாலும், கொழும்பைப் போன்ற ஒரு வளம் மிக்க நகருடன், ஒத்துநிற்கக் கூடிய ஒரு நகரைத் திருக்கோண மலையில் அமைப்பது முடியாத காரியமாயிற்று. கொழும்பின் பின்னணி நிலம் வளம் மிகுந்திருப்பதால் வியாபாரம் முழுவதும் அதை நாடியே சென் றது. சமீப காலத்தில், திருக்கோணமலை நன்கு அபிவிருத்தியடைந்துள்ளது. அதற்குக் காரணம் மோட்டர் வாகனங்கள் மூலமாகவும் புகைவண்டி மூல மாகவும் கொழும்பு அதனுடன் இலேசாகப் போக்குவரத்து நடத்தக் கூடியதாயிருப்பதே. கடற்படைத் தளமென்றவகையில் அது இன்று வளர்ச்சி யடைந்து விட்டது. எண்ணெய்த் தாங்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிரித்தானியப் பேரரசின் கிழக்கிந்தியக் கடற்படைத் தலைமைக்காரியாலய மாக அது விளங்குகிறது. நீராவிக் கப்பல் வருமுன்னர் அந்நிய தேசந் துக் கப்பல்கள் காலித் துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சின. இது திருக்கோண மலையிலும் மிகச்சிறிய துறைமுகமாயிருந்த போதிலும், அராபியாவிலி ருந்து தூர கிழக்கு நாடுகட்குச் செல்லும் கப்பல்களின் பாதையில் அமைந் திருப்பதே இதற்குக் காரணமாகும். பாய்க்கப்பல்கள் தங்குவதற்கு அது உவந்த துறைமுகமாகும். அழகிய வட்ட வடிவான முகமும் ஒடுக்கமான வாயும், ஆழமான நீரும், 10,000 தொன் நிறையுள்ள கப்பல்கள் இப்பொ ழுது செல்லக்கூடிய வசதியு முள்ளது. துறையும் பட்டினமும் பழைய சரித் திரத் தொடர்புடையன. பதினேழாம் நூற்றண்டின் முதற் பாதியில் அது எந்த நிலையிலிருந்ததோ அதேநிலையில் இன்றுங் காட்சியளிக்கிறது. பெரும் படியான மாற்றங்களொன்று முண்டாகவில்லை. அன்று இடச்சுக்காரர் கட்டியெழுப்பிய கண்கவர் வனப்புள்ள கோட்டையே இன்றும் அப்பகுதி யின் இயற்கைக் காட்சியில் ஒரு முக்கிய அமிசமாக விளங்குகிறது. காலிக்கு அருகே அக்காலத்தில் கறுவாத் தோட்டங்களிருந்தன. வெளியூர் வியாபா ரத்துக்குத் தேவையான கறுவா இத்தோட்டங்களிலிருந்து கிடைத்தது.

பெளதிகப் புவியியல் 69
இன்று இதுறைமுகம் நிறையப் பாய்க்கப்பல்கள் நிற்கும்போதுள்ள காட்சி, பழங்காலத்துத் துறைமுகந் தந்த காட்சியையே ஒத்திருக்கும். சாமான் கப்பல்கள் காலித்துறை முகத்தில் வந்து நங்கூரம் பாய்ச்சுவதானல் தற்போதுள்ள துறைமுகம் ஆழமாக வெட்டப்பட வேண்டும்; இந்த யோசனை சமீபகாலத்திற் கூறப்பட்டது. கொழும்பிலுள்ள இடநெருக்கடியை நீக்கு வதற்காக இந்தயோசனை மேற்கொள்ளப்படலாம். வட இலங்கையில் நல்ல துறைகள் இல்லை. அங்கே நீர் ஆழமற்றதாக விருப்பதோடு முருகைக்கல்லின் அமைப்பினற் கடற்கரையும் ஏறக்குறைய வளைவு நெளிவின்றியே இருக்கிறது.
Lulo 17.
கொழும்புத் துறைமுகத்தின் ஒரு பகுதி.
வடகிழக்குப் பருவக்காற்று வீசுங்காலத்தில் வடகோடியில் புயல்களுண்டாகின் றன. இன்று காங்கேசன்துறையில் கரையிலிருந்து ஒருமைலுக்குள் சிறிய கப்பல்கள் வந்துநிற்கின்றன. இங்கே ஒரு துறைமுகத்தைக் கட்டுவதற்கு முயற்சிகள் நடைபெற்றன. ஆனற் புயற்காலங்களில் கட்டுவேலை சிதைந்து போகிறது. எனவே ஊர்காவற்றுறைக்குப் போகமுடியாத பெரியகப்பல்கள் காங்கேசந்துறைக்கு வெளியே வந்து, நங்கூரம் பாய்ச்சுகின்றன. அவை

Page 42
70 இலங்கைப் புவியியல்
எற்றி வரும் பொருள்கள் சிறிய வள்ளங்கள் மூலம் கரையிலுள்ள பண்ட சாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சற்றுப் பெரிய கப்பலகள் யாழ்ப் பாணத் துறைக்குச் செல்லமாட்டா. அதன் அயலிலுள்ள வேலணைத்தீவின் துறைமுகமான ஊர்காவற்றுறையே யாழ்ப்பாணத்துக்குத் துறைமுகமா யமைந்துளது. வேலணைக்கும் காரைதீவுக்கும் யாழ்ப்பாணத்துக்கு மிடையில் ஒரு பெரிய நிலஞ்சூழ்ந்த நீர்ப்பரப்புண்டு. இதற்கூடாகச் சிறியதொரு கால் வாய் தீவுகளைச் சார்ந்து அமைந்துள்ளது. இங்கே சிறிய பாய்க்கப்பல்களே வரமுடியும். யாழ்ப்பாணத்திலிருந்து 14 மைல் எல்லைக்குள் நீராவிக் கப்பல்கள் வரமுடியாது.
கொழும்புத் துறைமுகம் செயற்கைத் துறைமுகமே. (17 ஆம் படம் பார்க்க). இது கரையிலுள்ள ஒரு சிறுகுடாவில், அதிக பணச்செலவிற் கட்டப்பட்டது. இது கேந்திரத் தானத்திலிருந்த படியால், துறைமுகமாகக் கொள்ளப்பட்டதே யன்றி, கப்பல்கள் வந்து தங்குவதற்கு வசதியுள்ளமையாற் கொள்ளப் பட்டதன்று. முதன்முதலிற் கொழும்புத் துறைமுகத்தை விருத்திசெய்த போத்துக்கேயர், மேற்குக் கரையின் நடுப்பாகத்தில் ஒரு கோட்டையை அமைக்க விரும்பினர். அங்கிருந்துகொண்டு கோட்டை இராச்சியத்திலுள்ள சிங்கள அரசரைத்தாக்கவும், உள்ளூர்ப் பாதைகள் மீது அதிகாரஞ் செலுத்தவும் விரும்பினர். அடுத்துள்ள களனி கங்கையின் முகத்துவாரம் எற்றதா யிருக்கவில்லை. அங்கே மணல்மேடுகள் அடிக்கடி மாறுமியல்பையுடையன வாயிருந்தன. அத்துடன் முருகைக்கல் வளர்ந்து ஆற்றின் முகத்துவாரத்தை அடைத்தது. (112ஆம் படம் பார்க்க). இன்றைய கொழும்புத் துறைமுகத்தை 1873 ஆம் ஆண்டு கட்டத்துவங்கினர். 1912 இல் அது கட்டிமுடிக்கப்பட்டது. அதன் பரப்பு 643 ஏக்கராகும். பெருந்தொகையான கப்பல்களுக்கு அங்கே நிற்க வசதியுண்டு. ஆனல் ஓயாமல் வந்துகொண்டிருக்கும் சிறிய கப்பல்களுக்கு அங்கே எப்பொழுதும் வசதி கிடையாது. வற்றுப் பெருக்கு அதிகமில்லாத படியால், நீர்மட்டம் ஒரே நிலையிலிருக்கும்; எனவே கப்பல்கள், வேறுசில துறைமுகங்களில் பெருக்கை எதிர்பார்த்து நிற்பது போல இங்கே நில்லா. எந்நேரமும் துறையிற் பிரவேசிக்க முடியும். கொழும்புத் துறைமுகத்திலுள்ள ஒரு பெருங்குறை, துறை மேடையை யடுத்து ஆழமான கடல் இல்லாதிருப்பதாகும். அதனல், கப்பல்கள் தங்குமிடங்களிலிருந்து பொருள்களை இறக்கிச் சிறிய வள்ளங்களிலேற்றிக் கரைக்குக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். இதல்ை அதிக பணச் செலவாகிறது. ஆனல், இக்குறையை நீக்கவும் வேறு நவீன துறைமுக வசதிகளை யுண்டாக்கவுந் திட்டங்கள் உருவாகி வருகின்றன.

பெளதிகப் புவியியல் 7.
الصر
/ ペー須| கீப்ருவக் /,
‘Ai H &
பருவ்க்காற்றுக் காலம் ஒவ்வொன்றன் நடுக்கூற்றிலும், இலங்கைக் கணித்தாகவுள்ள சமுத்திர வோட்டங்களின் போக்கைக் காட்டும் பருமட்டான வெளியுருவப் படங்கள். (கலாநிதி பியேசனின் வழிவந்தவை)

Page 43
72 இலங்கைப் புவியியல்
இந்து சமுத்திரத்திலுள்ள நீரோட்டங்களைப் பற்றி அறிய விரும்பும் மாண வர் புவியியல் பற்றிய பொது நூலொன்றை வாசித்தல் வேண்டும். அதன் பின்னர் இங்கு தரப்படும் இலங்கை சம்பந்தமான குறிப்புக்களை வாசிக்கலாம். இந்து சமுத்திரத்திலே மத்திய கோட்டுக்கு வடக்கே, ஆறுமாதத்துக் கொரு முறை, பருவக்காற்றை அனுசரித்து நீரோட்டம் மாறிக்கொண்டு வரும். அதனுல் இலங்கையைச் சூழ்ந்த கடலில் மாச்சு மாதந் துவங்கிச் செத்தெம் பர் வரை கடல் நீரானது தென்பேடற்கிலிருந்து வடகிழக்குக்கு நகருகிறது. செத்தெம்பர் துவக்கம் மாச்சுமாதம் வரை அத்திசைக்கு எதிராக நகருகிறது. மேலுள்ள படங்களில் இலங்கையை யடுத்துள்ள நீரோட்டங்களின் தன்மை காட்டப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு பருவக்காற்றுக் காலத்தின் மத்தியிலு முள்ள நீரோட்டத்தின் தன்மைகள் காட்டப்பட்டுள்ளன. இந்தியாவிலும் இலங்கை தெற்கே புடைத்திருப்பதால் நீரோட்டங்களில் அதிக திருப்பம் உண்டாகிறது. ஆதாம் பாலத்துக்கும், பீதுருக்கடலடித்தள மேடைக்கு மிடையி லுள்ள கண்டமேடை, மன்னர்க் குடாக்கடலுக்கும், வங்காள விரிகுடாவுக்கு மிடையிலுள்ள நீரோட்டத் தொடர்ச்சியை அறுத்து விடுகிறது. தென்மேற் குப் பருவக்காற்றின் போது மன்னர்க் குடாக்கடற் பக்கமாக உந்தப்படும் நீர் மறுபடி திரும்பிக் கரையோரமாக வடிந்து விடுகிறது. அவ்வாறு ஒழுகும் நீர் சிறிது சிறிதாகத் தீவின் தென்கோடியைச் சுற்றி வடிகிறது. தென் மேற்கிலிருந்து ஒடும் நீரின் வேகத்தினுற் இப்பகுதியிற் பலமான கடலரிப் புண்டாகிறது. இக்கடலரிப்புத் தென்மேற்குப் பருவக் காற்றுக்கு எதிராக வுள்ள இப்பகுதியிலேயே அதிகமுண்டு. மற்றைப்பகுதிகளில் அவ்வளவு அதிகமாயில்லை. வடகிழக்குப் பருவக் காற்று அவ்வளவு பலமுள்ளதன்று; அதன் வேகத்தினுல் நீரானது கிழக்கிலிருந்து இலங்கையின் தென்பகுதியை வட்டமிட்டு மன்னர்க் குடாக்கடலையடைகிறது. இந்தக் கடற்கரை நீரோட்டங்கள் கரையை யடுத்துச் செல்லும் சிறிய தோணிகளின் போக்கைப் பெரிதும் பாதிக்கின்றன. அன்றியும் கொழும்புத் துறைமுகத்தையடையும் பெரிய கப்பல்களின் போக்கையும் அதனைவிட்டு நீங்கும் பெரிய கப்பல்களின் போக் கையும் பாதிக்கின்றன.
இலங்கைக் கரையை யடுத்த கடல்நீரில் உப்புத்தன்மை குறைவு. அதுவும் ஆற்றுச் சங்கமங்களில், பெரிய மழை பெய்த பின்னர் உப்புத் தன்மை கிடையாது. துணிகளைக் கழுவக்கூடிய அளவுக்கு அந்நீர் உப்பின்றிக் காணப் படுகிறது. ஆழ்கடலிலுள்ள நீரில் உப்புத்தன்மை அதிகமுண்டு. மன்னர்க் குடாக் கடலில் பருவங்களுக் கேற்றவாறு கடலின் உப்புத் தன்மை மாறுபடு கின்றது. தென்மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் உப்புத் தன்மை 1000 இல் 355 பகுதியேயுண்டு. வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் அது 33 விகிதமாகக் குறைகிறது.

பெளதிகப் புவியியல் 7ვ:
கரையைத் த வறண்ட பிரதேசங்களிலுள்ள கடல் நீரேரிகளில் நீரானது வற்றி உப்பாக விளைகிறது. இது மிகப் பழங்காலந் தொட்டே யிருந்து வருகிறது. 42 ஆம் படத்தில் மழைவீழ்ச்சி காட்டப்பட்டிருக்கிறது. அதில் உப்பு விளையக்கூடிய பாகங்களைக் காணலாம். 50 அங்குலச் சமமழை வீழ்ச்சிக் கோட்டினல் ஒதுக்கப்பட்ட வறண்ட கரைப் பிரதேசங்களே இவை. தீவின் கிழக்குக்கரையில் 50 அங்குலத்துக்கும் 75 அங்குலத்துக்கு மிடையி லுள்ள பகுதிகளும் உப்பு விளைவதற்கு ஒரளவு எற்றவை. இங்கே நீண்ட வறட்சிக்காலமுண்டு. எனவே மூன்று வகையான உப்பளங்களைக் காணலாம்.
(அ) புத்தளத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கு மிடையிலுள்ளவை. இவற்றில் முக்கியமானவை புத்தளம் உப்பளம்; புத்தள ஏரிக்கரையையடுத்த பாலா வியிலுள்ள அரசாங்க உப்பளம்; ஆனையிறவிலுள்ள அரசாங்க உப்பளம்; யாழ்ப்பாணக்குடா நாட்டின் வடக்கேயுள்ள உப்பளங்கள்; இவற்றில் முக்கிய மானது யாழ்ப்பாணத்துக்கு நாலு மைல் தூரத்திலுள்ள சிவியாதெருவி லுள்ளது.
(ஆ) தங்காலைக்கும் பொத்துவிலுக்குமிடையிலுள்ளவை. இவற்றில் முக்கியமானவை அம்பாந்தோட்டையிலுள்ளவை.
(இ) திருக்கோணமலையையடுத்து வடகிழக்கிலுள்ளவை. இவற்றுள் முக் கியமானது திருக்கோணமலைக்கு 8 மைல் துரத்திலுள்ள நிலாவெளியி லுள்ளது. (ஆ) உம் (இ) உம் அரசாங்கத்தின் பரிபாலனத்திலுள்ளவை.
இவ்வுப்பளங்களெல்லாம் கடலோடு நேரடியான தொடர்புடையவையல்ல. சில இடங்களிற் கடல் நீரானது வருடத்திற் சில மாதங்களில் இவ்வுப்பளங் களிற் பிரவேசிக்கின்றது. மற்றை இடங்களில் மழை நீரினல், கடற்கரை மணலில் உள்ள உவர்ப்புத்தன்மை கரைந்து பின்னர் உப்பாகவிளைகின்றது. உதாரணமாக ஆனையிறவுக்குச் சமீபத்தில், யாழ்ப்பாணக் கடலேரியைச் சுற்றி மைற்கணக்காக உவர்மணலுண்டு; கோடைகாலத்தில் இம்மணலில் உப்பானது வெண்மையாக மின்னிக் கொண்டிருக்கும். இங்கே சில பூண்டு களேத்தவிர வேறென்றும் முளைக்க மாட்டாது.
குறுகிய கண்ட மேடையில் உள்ள ஆழமற்ற நீரில் பலவகையான கடற். செந்துக்களுண்டு. இவற்றுள் மிகமுக்கியமானது முருகைக்கற் செந்து. இது இழுது மீனைப்போன்ற ஒரு வகைச் செந்து. ' கடல்நீரிலிருந்து சுண்ணும்பைப் பிரித்து அற்புதமான பல வடிவங்களில் முருகைக் கற்களே யுண்டாக்கும்; இவ்வாறு முருகைப் பல்லடியத்தின லாக்கப்பட்ட முருகைக்கற் பார்த் தொடரிடையே பலவகையான மீன்களும் வினைச் சிறிய கடற்செந்துக்

Page 44
இலங்கைப் புவியியல்
፲4
*ųooņluorisro uolgaeg -ius, uogąsufiqiho *6I q.-ın
配—)-青►鲁
~阁斗—乡t !
 
 
 

பெளதிகப் புவியியல் 75
களும் வாசஞ் செய்கின்றன. இக்கற்பார்த்தொடருக்கும் கடற்கரைக்குமிடை யிலுள்ள அன்மதியான கடல் நீரில் வேறு பல கடற் செந்துக்களும் வசிக் கின்றன. இருல், நண்டு முதலியனவும் சிப்பிவகைகளும், முத்துச்சிப்பி களும் இங்கேயுண்டு. உணவுக்கேற்ற பலவகை மீன்களும் வாழுகின்றன. அழகிய நிறங்களைக் கொண்ட பல மீனினங்களை இலங்கைக் கடனீரிற் காண லாம். இவற்றிற் சில உணவுக்கேற்றவையல்ல. கடல் நத்தை, கடல் வெள்ளரி, கடற்பஞ்சு, முதலியன கரைப்பகுதியில் அதிகம். கடற்பஞ்சு இப்பொழுது எவ்விதத்திலாவது பயன்படுத்தப்படுகிறதில்லை. மற்றெரு நூதனமான செந்து மிகச்சிறிதாய் இரவில் ஒளிவிட்டுக்கொண்டிருக்கும் *நொட்டிலுக்கா’ என்னும் இரவொளி” யாகும். இது நீர்மேல் பெருந் தொகையாக நீந்திக் கொண்டிருக்கும்; சந்திர ஒளி மறையும் நேரங்களில் இதைக் காணலாம். முருகைக் கற்பாறைகளுக்கு வெளியே அரக்குளா போன்ற பெரியமின்கள் ஆழ்கடலிலுண்டு; முற்காலத்திலே கரையையடுத்து மகர மீன் காணப்பட்டது. இப்பொழுது அது குறைவு.

Page 45
இரண்டாம் பகுதி-இரண்டாம் அத்தியாயம் இலங்கையின் அமைப்பு
இலங்கை இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதி. இந்தியாவின் பகுதியெனும் பொழுது தெற்குமேட்டுநிலமாகிய தக்கனத்தின் ஒரு பகுதியெனவே கருதல் வேண்டும். ஆசியப் பெருநிலப்பரப்பிலிருந்து தெற்கே புடைத்து நிற்குந் தக்கணம் ஒரு காலத்தில் அதனேடு சேராது தனித்திருந்தது. இம் மேட்டு நிலத்தின் பெரும்பாகம், பழைய பளிங்குருப் பாறையினலானது; இது உலகி லேயே மிகப்பழைய நிலப்பரப்பாகும். உலகின் புவிச்சரிதகாலத்தினுரம்ப நாட் தொட்டு இன்றுவரை மடிப்புக்கோ மற்றும் மாற்றங்கட்கோ உட்படாது திடமாக நிற்கும் புவிப்பரப்புக்களில் இஃதொன்றகும். அந்தப் புராதன காலத்தில் புவியோட்டு மேற்பரப்பாயிருந்த பாறைகள் பூமியின் அசை விஞலும், எரிமலைச் சத்திகளினுலும், திருகுப்பட்டும், கிழிந்தும், நொறுங் கியும், சுருங்கியும் முன்னுள்ள தமது உருவத்தில் பெரிதும் மாற்றம் பெற்றுப், பளிங்குருப்பாறையாக இன்று காட்சியளிக்கின்றன. இம்மாற்றம், மிகப்பழையகாலமானதும், கேம்பிரியாவுக்கு முந்திய, தொல்காலமெனக் கூறப்படுவதுமான காலத்திலேயே உண்டானது. அக்காலந் துவங்கியே தக்கணமும், இலங்கையின் மத்திய பகுதியும், கண்டத்திணிவின் ஒரு பகுதியாக இருந்து வந்தன. ஒரங்களைச்சுற்றிக் கடல்களும் சமுத்திரங்களு மிருந்தன. பூமிப் பரப்பில் பெரிய ஏரிகளும், கடனீரேரிகளுங் காணப்பட்டன. ஆனல், இப்பகுதியின் முழுப்பகுதியும் கடல் மட்டத்துக்குக் கீழ் எப்பொழு தாவது இருந்ததாகக் கூறமுடியாது.” (கலாநிதி எல். இடட்டிலித் தாம்பு)
இப்பழைய மேட்டுநிலத்திற்கு வடக்கே இந்து-கங்கைச் சமவெளியிலும் ஒரளவு இமாலயச் சிகரங்களிலும், கடற்றளத்தில் மட்டுமே உண்டாகக்கூடிய பல பாறைப்படைகளைக் காண்கிறேம். இந்து சமுத்திரத்தை யடுத்த நிலத் தின் மேற்பரப்புக்கள் ஒரு காலத்தில், இன்று இருப்பதற்கு முற்றும் மாறன வையாயிருந்தன வென்று புவிச்சரிதவியலறிஞர் அறுதியிட்டுக் கூறியுள்ள னர். பழங்காலத்தில் இரண்டு பெரிய கண்டங்களிருந்தனவென்றும் அதி லொன்று ஆசியாவின் வடக்கே அங்காரா நதியை நடுவாகக் கொண்டு இருந்ததென்றும், அது அங்காராலந்து எனவழங்கப்பட்ட தென்றும் கூறுப. மற்றையது இன்று இந்து சமுத்திரமமைந்துள்ள கடற்பரப்பில் ஆபிரிக்கா, அராபியா, தகக்ணம், இலங்கை, மேற்கு அவுத்திரேலயா ஆகிய நாடுகளை யும் இந்து சமுத்திரத்தையடுத்த எனை நாடுகளையுங் கொண்டிருந்ததெனவுங் கூறுப. இந்தியாவிலுள்ள கொண்டுவானுப் பிரதேசத்தை யொட்டி அந்தக் கண்டம் கொண்டுவானுலந்தெனப் பெயர் வழங்கப்பெற்றது. இவ்விரு
76

பெளதிகப் புவியியல் 77
ಹಷ್ರ: ஒரு கடலிருந்ததெனவும், அது பெரிதும் மடிப் புற்று ஈற்றில் இமயம் என்ற பெரிய மலைத்தொடராக மாறிற்றெனவுங் கூறுப. பலகோடி வருடங்களுக்குப்பின்னர் கொண்டுவானலந்து என்ற பெரிய கண்டம் சிறிது சிறிதாக வெடித்து, அசைந்து, கடலரிப்பினலும், எனை மண்ணரிப்புக்களினுலும் சிதைந்துபோக, அதன் சில பாகங்களே இன்று எஞ்சியுள்ளன. புவிச்சரிதக்காலத்தில் மிக அண்மையான காலம் வரை இலங்கை தக்கணத்தோடு இணைந்திருந்ததெனலாம். இந்தியாவி லிருந்து இலங்கை பிரிந்த சம்பவத்தைப் பற்றி இதிகாசங்கள் குறிப்பிடு கின்றன. ஆணுல், அதை முற்றும் உண்மையான சம்பவமாகக் கொள்ளக் கூடாது. தமிழர் சரித்திரத்தின்படி இது கி.மு. 2387 இல் இராவணன் மறைந்த பின்னர் நிகழ்ந்ததாகக் கூறுப. மேற்கரை கடலினற் கொள் ளப்பட்டதாக மகாவமிசத்திற் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இது பலகால மாக நிகழ்ந்துவந்த நிலப்படிவினலுண்டாயிருக்கலாம். இத்தகைய நிலப் படிவு ஒன்று கி.மு. 504 இல் பாண்டுவாசன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த தாகவும், மற்றென்று கி.மு. 306 இல் தேவானும்பிய தீசன் காலத்தில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. பிந்திய கடல்கோளேப்பற்றி விவரமாகக் கூறப்படுகிறது. இக்கடல்கோளினல் கழனியையடுத்து 50 மைல் பரப்புள்ள நிலம் அழிந்ததெனவும், அதன்பயணுக மீன்பிடிகாரர் வசித்த 900 கிராமங் களும், முத்துக்குளிப்போர் வசித்த 400 கிராமங்களும் பாழாயின வென்றுந் தெரிகிறது. இக்கிராமங்களின் எண்ணிக்கைகள் நம்பிக்கையற்றனவாக விருந்தபோதிலும், கடல்கோள் நிகழ்ந்தமை உண்மையே. வட இலங்கை யின் வடகோடிக்குச் சிறிது துரத்திலுள்ளதும், சோழமண்டலக் கரையி லுள்ளதுமான மகாபலிபுர மென்ற ஒர் ஊர் கடலில் மூழ்கியதாகப் பரம் பரையாய் வந்த செய்திகளுண்டு.
தென்மேற்குப் பருவக் காற்றிலுைண்டாகும் வேகமான நீரோட்டத்தின் பயனுய் அதிகமாகப் பாதிக்கப்படும் தென்மேற்குக் கரையில், அண்மையில் கடலானது படிப்படியாக நிலத்தை யரித்து வருகிறது. 1921 ஆம் ஆண்டில் இக்கடுவைக்கு வடக்கே ஒரு பெரிய நிலப்பரப்பைக் கடல்கொண்டது. அங்கே உயர்ந்த ஒரு பாறையிலமைந்த வீடு நீரினுற் சூழப்பட்டுக் கரையிலிருந்து பிரிக்கப்பட்டு சிறியதொரு தீவாக அமைந்தது. பல வருடங்களுக்குப் பின் நீரிலமிழ்ந்திய மரங்களின் பட்ட கட்டைகளைக் காணக்கூடியதா யிருந்தது. இலங்கைத் தீவானது பல யுகங்களாகக் கடலிற் படிந்து கொண்டே வந்தபோதிலும், உயர்ந்து வந்த காலங்களுமுண்டு. கரையைச் சுற்றி இப்போதுள்ள கடல் மட்டத்துக்கு மிக உயரத்தில் முருகைக்கற்களின் படிவும், சுண்ணும்புக் கற்களின் படிவுங் காணப்படுவதே இதற்குப் போதிய சான்றகும். முருகைப் பல்லடியம் நீரின் கீழேதான் வசிக்கும்; எனவே இப்போதுள்ள கடல் மட்டத்துக்குமேல் முப்பது அடி துவக்கம் அறுபது அடி வரையுள்ள உயரத்தில் முருகைக்கற்பார் காணப்படுமானல், நிலம் உயர்ந்த படியாற்றன் அது தோன்றியிருக்க வேண்டுமென முடிவுசெய்யலாம்.

Page 46
78 இலங்கைப் புவியியல்
இக்கடுவையில் முன்கூறிய பிரதேசத்தில் இவ்வாறு தோன்றிழ/முருகைக் கற்பாரைக் காணலாம். இப்பார் முழுவதும் புல்பூண்டுகளால் முற்றுய் மூடப் பட்டிருக்கிறது. ஆனல், இன்று அப்பகுதியில் மக்கள் இப்பாரை வெட்டிச் சுண்ணமாகச் சுட்டுக் கட்டடவேலைக்குச் சாந்தாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வெட்டிய குழிகளில் நீர் தேங்கி நிற்பதால் தென்மேற்குக் கரையில் ஆங்காங்குச் சிறுசிறு எரிகளாய் இவை காட்சியளிக்கின்றன. தேங்கிய
LILúð 20.
கடல் பிரித்த நிலப்பரப்பின் ஒரு பகுதி.
நீரில் மலேரியாக்கொசு நன்றகப் பெருகி, மக்களின் ஆரோக்கியத்துக்குப் பங்கமுண்டாக்குமாதலால், இப்பார்களைத் தோண்டும் விடயத்தில் அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டிலும், வடக்குச் சமவெளியின் சில பகுதிகளி லும், தென் மேற்கிற் காணப்படும் முருகைக்கற் பார்களைக் காட்டிலும் மிகப் பழைய கற்பார்களை ஏராளமாகக் காணலாம். இக் கற்பாரின் கீழே, மயோசின் காலத்தைச் சேர்ந்த அடையற் சுண்ணக்கல் உண்டு. அது நிலத்தில்
 

பெளதிகப் புவியியல் 79
சற்றுத் சூரம் ஆழமாக அமைந்துள்ளது. இது முருகைக் கற்பாரினலாகா தது; கடற செந்துக்களின் ஒட்டினலானது. யாழ்ப்பாணக் குடா நாட்டின் அடிப்படையாகச் சுண்ணும்புக்கல் அமைந்துள்ளது. இது வடமேற்குக் கரை யாக வெகு தூரம் பரந்துள்ளது. இந் நிலப் பகுதி முற்றக ஆராயப் படவில்லை. புத்தளத்துக்கு வடக்கே சற்றுத் தூரத்திலிருந்து யானைஇறவுக் குத் தெற்கே, முல்லைத் தீவுவரை மெல்லிய படையாகப் பரந்துள்ளது. தீவின் தென்கரையோரமாகவும், ஒரு குறுகிய சுண்ணும்புக் கற்படையுண்டு. இது சாதாரண முருகைக் கற்பாரினலமைந்ததன்று. நிலம் சிறிது காலம் கீழேபடிவடைந்த வகையினல் இது உண்டாயிருத்தல் வேண்டும். இதை அம்பாந்தோட்டையிற் காணலாம். எனவே, இலங்கையின் கடல் மட்டம் புவிச் சரிதகாலத்திற் பல மாற்றங்களைப் பெற்றிருக்கிறதென்பது தெளிவு.
ஆற்றுப் பள்ளத் தாக்குக்கள் உண்டான முறையை ஆராய்வதாலும் நிலப்படிவைப் பற்றிய சில சான்றுகளைப் பெறலாம். ஆனல், இவ்வாராய்ச்சி முறையானது விளங்கிக் கொள்வதற்குக் கடினமானதாகும். இவ்விடயம் விவரமாக ஆராயப்பட வேண்டிய தொன்றகும். உயர்நிலை மாணவரின் நன்மையைக் கருதி இவ்விடயத்தைப் பற்றி இங்கு சுருக்கமாகக் குறிப்பிடு கிருேம். மலை நாட்டிலுள்ள ஆற்றுப் பள்ளத்தாக்குக்களிற் பல, ஒரு குறித்த எல்லை வரை ஒழுங்காக அரிக்கப்பட்டிருக்கின்றன. அதல்ை அவை ஆழ மாகிவிட்டன. முதலில், விசாலமான திறந்த பள்ளத்தாக்குண்டாகிறது. அதை ஆறு அரித்து ஆழமாக்குகிறது. இகற்குக் காரணம், நிலப்படிவெனவே கொள்ளல் வேண்டும். நிலம் படிவ கால் ஆற்றின் கீழ்ப் பகுதி குறுகுகிறது. அதனுல் உற்பத்தித் தானத்திலிருந்து ஆற்றின் முகம் வரையுள்ள சாய்வு விகிதம் கூடுகிறது. கூடவே, நீரோட்டம் வேக மடைகிறது. அதனல்
மண்ணரிப்பும் அதிகரிக்கிறது. ஆறு இவ்வாறு பள்ளித்தாக்கை யரித்து மிக்க ஆழமாக்கி விடு கிறது. 22 ஆம் படத்தில் மகா வலிகங்கையின் உபநதியொன் றின் பள்ளத்தாக்குக் காணப்படு கிறது. தொப்பிதோட்டத்தி லுள்ள தியூக்கின் நோசு என்ற குன்றில் எறி நின்று பார்த்தால்
Lulio 21.
மசுக்கேலியா ஒயாப் பள்ளத்தாக்கின் பகுதியைக்
காட்டும் விளககப்படம். புள்ளிக்கோடு, பழைய மகாவலி கங்கையின் ஒரு பெரும்
பள்ளத்தாக்கின நில மட்டத்தைக் காட்டுகிறது. அம் பாகமும், பல உபநதிகளின்
புக் குறி புதிய பள்ளத்தாக்கைக் காட்டுகிறது. பள்ளத்தாக்குக்களுந் தென்
படும்.
இலங்கையின் கற்பாரிற் பெரும்பகுதி மிகப் பழைய கருங்கற் பாறை களைக் கொண்டுள்ளது. கருங்கல் பலவகையான பளிங்குக் கற்களின் திரண்ட

Page 47
80 இலங்கைப் புவியியல்
சேர்க்கையாகும். படிகச் சேர்க்கை பல விகிதத்திலுண்டு. மிகச் சிக்கலான இத் தொல்யுகக் கற்பாறைகள் அடிப்படையில், பளிங்குப் படைப்பாறையைக் கொண்டலுை. மத்திய இலங்கையிலும், வட கிழக்கிலும் இவ்வடிப்படைப் பாறை உருமாறிய வண்டற் படிவினல், மூடப்பட்டிருக்கும். இவ்வண்டற் படிவு, படிகப்பார், பளிங்குருச் சுண்ணக்கல், மணியுருப்பார், முதலிய வற்றினலானது. இவ்வகையான கற் பாறைகள் யாவும கொண்டலைற்றுத் தொகுதி என வழங்கும். பென்சிற்கரி, மைக்கா, இரத்தினக்கல் போன்ற பொருளாதாரம் சம்பந்தமான கணிப்பொருள்கள் இந்தப் பாறைகளிடையே காணப்படுகின்றன. ஆதியில், பூமியின் மேற்படை எவ்வாறிருந்த தென்று தெரியவில்லை. ஆனல், மிகப் பழைய பாறையெல்லாம் பெரிதும் மடிந்து, நிலைதிரிந்து, பலவிதமான பளிங்குருவுள்ள கணிப்பொருள்களின லான பாறைத் தொடராகவோ, படைகொண்ட கீற்றுப் பாறைத் தொடராக வோ காணப்படுகின்றன. பளிங்கடுக்குப்பாறையே சாதாரணமாகக் காணப் படுவது. சிறிய மணியுருவமைப்புடையவை தகட்டுப் பாறைகளெனப்படும். பளிங்குருச் சுண்ணப்பாறைகளிற் சிலவும் இவ்வினத்தைச் சேர்ந்தவையே. இவற்றேடு, சில சமயம், புவியோட்டின் வெப்பமான கீழ்ப்பகுதிகளிலிருந்து வெளிவரும் தீப்பாறைகளுங் கலந்திருக்கின்றன. இத்தகைய தீப்பாறைக்கு ஒருதாரணம் கருங்கல். இத் தீப்பாறை பின்னர் இறுகும். அதற்கு முன்னர் அயலேயுள்ள பாறைகளைச் சுட்டு உருமாற்றிவிடும். 22 ஆம் படத்திலுள்ள வெட்டு முகத்தைப் பார்க்க. அங்கே படை படையாயுள்ள கோடுகள் மேலுங்கீழு மாகவளேந்து செல்வதைப் பார்க்கலாம். இவற்றிலிருந்து இப்பாறைகள் எவ் வளவு தூரம் மாற்றமடைந்தும், முறுக்குப் பட்டுமிருக்கின்றன என்பதை அறியலாம். பல கற்குழிகளையும், இருப்புப் பாதை போடுவதற்கு அமைந்த பாறைக் குடைவுகளையும் மாணுக்கர் பார்வையிடல் வேண்டும். அங்கே எத்தனை வகையான கணிப்பொருள்களுண்டென்பதையும் பாறைப் படை களின் தன்மை, எத்தகையதென்பதையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். தீவின் பல பகுதிகளிற் பல வகையான அமைப்புக்களிருப்பதை அவர்கள் distaOOTLIT.
கருங்கல், பளிங்கடுக்குப்பாறை என்பன எந்தப் பகுதியின் புவியியற்றன்மை யையும் மாற்றும் திறமுடையன. உதாரணமாக ஒரு பகுதியின் நில அமைப்பு, நீர் ஒட்டம், மண், கணிப்பொருள் என்பன மாற்றமடைகின்றன. புவியோட்டின்மேலுள்ள எனைப் பாறைகளின் கீழே பளிங்குப் படைப்பாறை யுண்டு. பல இடங்களில் அது வ்ண்டற் பாறைகளான மணற் கற்பாறை களினலும், சுண்ணும்புக் கற்பாறைகளினலும் மூடப்பட்டிருப்பதால், அதை மேற்பரப்பிற் காணமுடியாது பூமியை ஆழமாகக் குடையும் பொழுதே காணலாம். கொண்டுவானலந்தின் எஞ்சிய பகுதிகளின் மேற்பரப்பிலேயே இப்பளிங்குப் படைப் பாறைகள் காணப்படுகின்றன. இப் பாறைகள் தென்னமெரிக்காவிலுள்ள, கயான மேட்டுப் பகுதிகளிலும் பிறேசிலிலுங் காணப்படுகின்றன. முன் கூறிய பகுதிகளுக்கும், இலங்கைக்கும் அநேக

பெளதிகப் புவியியல் 8.
ஒற்றுமைகளுண்டு. ஏனெனில் இவற்றின் காலநிலையும், தாவர வளர்ச்சியும் ஒத்திருக்ஃறன. பினிலாந்திலும், கந்தினேவியாவிலும், அங்காராலந்தின் மத்தியபாகத்திலும் இப் பாறைகள் அதிகமுண்டு. கலாநிதி தோசன் அத மிசு என்பவர் 1929 ஆம் ஆண்டில் கனடாவின் ஆராய்ச்சிச் சஞ்சிகை என்ற பத்திரிகையில் இலங்கையின் புவியியல் பற்றி அரியதொரு கட்டுரை வெளி யிட்டார். அதில் இலங்கைப் பாறைகள் அமைப்பில் “கனடாப்பரிசை” எனச் சாதாரணமாக வழங்கப்படும் அட்சன் குடாவையடுத்த பகுதிகளிலுள்ள பாறை
ఖడ్గాణాళ్లు"గొ88్య 16:Y?'':''; རྒྱང་ཐང་ལ་ཀྱ་དང་སྐྱ་སུཊ་ ༡ ཙ་ར་བ་ཎ་ལྟར་ཨ་ཨ་
ulüb 22.
பளிங்குருப்பாறையில் படைகொள்ளுந் தன்மை,
களோடு ஒத்திருக்கின்றன என்று கூறுகிறர். ஆனல், மேற்பரப்பின் தன்மை காலநிலை வேற்றுமையால் பெரிதும் வித்தியாசப்படுகிறது.
இலங்கையின் பளிங்குருப்பாறைகள் படை படையாக அடுக்கின போன்றிருக் கும்; இதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. பெரியபாறைகளை ஒன் றன் மேலொன்றகப் படை படையாய் அடுக்கிவைத்தது போன்ற காட்சியை இப்பாறைகளிற் காணலாம். செங்குத்தாகவும் சில "வெடிப்புக்களை இப்படை யிற் காணலாம். இந்த அமிசம், நீரோட்டத்தையும் நில அமைப்பையும் பெரி 5-J. N. B. 70576 (11157) -

Page 48
82 இலங்கைப் புவியியல்
தும் பாதிக்கின்றது. இது பின்னலாராயப்படும். மலைநாட்டின் பல பகுதிகளில் இவ்வமைப்பைக் காணலாம். இரம்பொடைக்கணவாய் இந்த அAசத்தையும் இது போன்ற வேறு அமிசங்களையும் ஆராய்வதற்கு ஏற்றதொரு நிலமாகும்.
ulio 23.
பளிங்குருப்பாறையில் படைபடையாகவுள்ள அடுக்கின் தோற்றம். இது தொப்பிதோட்டத்துக்கு அண்மையிலுள்ள ஒரு கற்குழி ; இக்கல்லு தெருவமைக்கப் பயன்படுகிறது. இங்கே செங்குத்தாகவுள்ள மூட்டுக்களையுங் காணலாம். 24 ஆம், 25 ஆம் படங்களோடு ஒப்பிடுக.
 

பெளதிகப் புவியியல் 83
இலங்கையிலுள்ள பளிங்குப் படைப்பாறை ஆதியிற் பெரிதும் குழப்ப மடைந்ததென்பதைக் காட்டப் புவியியலறிஞர் போதிய சான்றுகளைத் தருவர். கணிப்பொருள்களிற் பல, அப்படியான குழப்பங்களின் பயனகவே உண்டா கின்றன. உதாரணமாக அழகிய செம்மணியைக் கூறலாம். அவை பெரிதும் காணப்படுகின்றன. பாறைகள் பெரும்பாலும் வெடிப்புற்று மடிந்திருக் கின்றன. எனவே, படைகள் சமமட்டமாகவில்லை. பல சந்தர்ப்பங்களில் சரிவுகள் செங்குத்தாயிருக்கின்றன. அதனல், பெரிய பாறைத்துண்டுகள் உடைந்துவிழவே பெரியகுத்துமலைகள் எஞ்சிநிற்கின்றன. சரிவான படைகள் மேற்பரப்பைத் தொடும்பொழுது நீண்டபாறைத் தொடர்கள் அடிக்கடி உண்டாகின்றன. (24 ஆம் படம் பார்க்க). பாறைகளின் அமைப்பைப்பற்றி கலாநிதி தோசன் அதமிசு கூறுவதாவது ; “பொதுவாகக் கூறுமிடத்து மேற்குப் பகுதியிலுள்ள பளிங்குப் படைப்பாறை கிழக்கு நோக்கித் தாழ் கிறது. கிழக்கிலுள்ளவை மேற்கு நோக்கித் தாழ்கின்றன.
*ረ›ጇ కన్కీ
LuLlo 24.
இரம்பொடைக் கணவாயின் ஒரு பகுதியைக் காட்டும் விளக்கப் படம். படை படையாகவுள்ள பளிங்குருப்பாறையிற் பிளவுண்டானதால் எற்பட்ட கணவாய்.
இலங்கை முழுவதுமே கீழ்மடிப்புள்ள பெரிய ஒரமைப்பைக் கொண்டுள் ளது. அம்மடிப்பின் அச்சு நீளத்திற்கு வடக்குத் தெற்காகப் பரந்துள் ளது. கண்டி, நுவரெலி ஆகிய நகரங்களையடுத்து, இந்த அச்சு சற்றுத்துரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. *
இக்கீழ்மடிப்பு, தீவின் தென்பகுதி எங்கும் வடக்கு நோக்கி உள்ளே அமிழ்ந்தி விடுவதால் அங்கு அது முறிவில்லாது காணப்படுகிறது. ஆனல், வடக்கே பளிங்குப் படைப்பாறையின் கிடையானது, புடைக்காலப்படிவினல் மூடப்பட்ட தாழ்பூமியில் அமிழ்ந்துவதற்குமுன், எக்காளம் போன்ற ஒரு வடிவில் விரிந்து கிடக்கிறது. இலங்கையின் அமைப்பை நிருணயிக்கின்ற இத் தொல்காலப் பாறையின் கீழ்மடிப்பு வடக்கேயுள்ள மயோசீன் பாறையில் மூழ்கி மறைந்துபோகிறது. ”

Page 49
84 இலங்கைப் புவியியல்
இதைவிட வேறு பல சிறிய மடிப்புக்களுமுண்டு. தென்மாகணேத்தின் எல்லையை யடுத்துள்ள சமாந்தரமான சப்பிரகமுவாப் பாறைத்தொடரின் முன் பகுதி தாழ்ந்த மேல்மடிப்பை யுடையதாயிருக்கிறது. பெரிய மடிப்பின் அச் சைக்கொண்டுள்ள மலைநாட்டில் வேறு பல சிறிய மடிப்புக்கள் சமாந்தர மாகக் காணப்படுகின்றன. இவற்றுளொன்று இரம்பொடைக் கணவாய் அமைந்துள்ள நடுவே வெட்டப்பட்ட மேல்மடிப்பாகும்.
பளிங்குப் படைப் பாறையோடு சமாந்தரமாகப் பளிங்குருச் சுண்ணக்கற் பாறைகள் பல காணப்படுகின்றன. இவை 200 யார் அகலந் துவங்கிக் கால் மைல் அகலம் வரை பரந்திருக்கின்றன. பளிங்குப்படைப் பாறை உள்ள திசையையடுத்தே இவையும் சரிந்துள்ளன. இவை முற்றக ஆராயப்பட வில்லை. ஆனல், நீண்டதுரம்வரை இவை கண்டுபிடிக்கப்பட்டு மூன்று பகுதியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
(1) இவற்றுள் மிக விசாலமான பகுதி புத்தளத்துக்குக் கிழக்கே ஆரம் பித்துக் கேகாலைக்குச் செல்லுகிறது. பின்னர் அது மலை நாட்டைச் சுற்றிச் சிவனெஸ்பாத மலை முன்னர் விரிந்து பின் தெற்கேயுள்ள பீட பூமியைச் சூழ்ந்து வருகிறது. (31 ஆம் படம் பார்க்க). பின்னர் பலாங்கொடை, வெள்ளவாயா, பசறை, வதுளை ஆகிய இடங்களைக் கடந்துகொண்டு வதுளேஒயா மகாவலிகங்கை என்பவற்றின் பள்ளத்தாக்குக்களைத் தாண்டித் திருக் கோணமலைக்குச் செல்லுகிறது.
(2) இரண்டாவது படை மிகிந்தலைக்குச் சமீபத்தில் ஆரம்பித்து மாத்தளைப் பள்ளத்தாக்கையனுசரித்து நேராகத் தெற்கே சென்று, பெரிய கீழ்மடிப்பின் அச்சை யடுத்து வத்தகாமம், அங்குரங்கட்டையாகிய இடங்களுக்குச் செல்கிறது. அங்ரெங்கட்டையிலிருந்து ஒரு சிறு கிளை கண்டி, பேராதனையாகிய இடங் களுக்குச் செல்கிறது.
(3) இறக்குவானை மலைநாட்டுக்குப் பின்னல் சில படைகள் அமைந்துள்ளன. இவற்றில் முக்கியமானது இரத்தினபுரியிலாரம்பித்து, அம்பாந்தோட்டையை நோக்கி வளேந்து செல்கிறது.
இந்தப்படைகளிலிருந்து எடுக்கும் சுண்ணும்புப் பாறை சுண்ணும்பு செய்ய உபயோகப்படுகிறது. சுண்ணும்புக் கற்பாறைகள் கண்டி, மாத்தளை, வதுளை யாகிய இடங்களில் அதிகமுண்டு. .
மாணுக்கர் இவ்விடயங்களை நேரிற் பார்த்து அறிவது அவசியமென்பதை ஈண்டு பெரிதும் வற்புறுத்துகிறேம். இந்தக் கற்பாறைகளே இலேசாகச் சென்று பார்க்கமுடியும். மேலும் இவை பல வியப்பான விடயங்களையும் அடக்கியுள்ளன. சில சமயங்களில் சுண்ணும்புக் கல்லானது நீரினுற் கழுவுண்டு பள்ளத் தாக்கை அடைந்து விடுவதால் அதைத் தேடிக் கண்டு கொள்வது கடினமாயிருக்கும். சுண்ணும்புக் கற்பாறைகளில் குகைகளிருப்பது வழக்கம். அது போல இங்கேயும் குகைகளுண்டு.

பெளதிகப் புவியியல் 85
இலங்கையில் உண்மையான எரிமலைவாய்கள் கிடையா. ஆனல், புவியசைவுக் காலத்திலே எற்பட்ட வெடிப்புக்களுக்கூடாகவும் துவாரங்களுக் கூடாகவும் உருகிய பாறைக்குழம்பு வெளியேவந்து மேற்பரப்பை அடைவதன் முன் உறைந்து தடித்து விட்டது. இவ்வாறுண்டான பாறை தீப்பாறை எனப்படும். இது பெரியமேசை போலப் பளிங்குப் படைப் பாறைகளின் அடுக்குக்களுக் கிடையே காணப்படும். இலங்கையிற் காணப்படும் தீப்பாறை வகையில் முக்கிய
LILLD 25.
கடுகண்ணுவைக் கணவாய்.
nானது “ சாணுெக்கைற்று’ எனப்படும் ஒருவகைக் கருங்கல்லாகும். இது கருங்கல் வகையைச் சேர்ந்தாலும் பலவிதமான கணிப்பொருள்களின் சேர்க்கையுடையது. படிகம், களிக்கல், மைக்கா என்பன ஒரளவு சமமாகச் சேர்ந்துண்டானதே. சாணுெக்கைற்றில் மைக்காவுக்குப் பதிலாக வேறு கணிப்பொருள்கள் சேர்ந்திருக்கின்றன. பளிங்குப் படைப் பாறைபோலத் சீப்பாறை படை கொள்வதில்லை. கருங்கல்போலவே சாணுெக்கைற்றும் பல இனத்தையுடையது; அதனுற் பல பெயர்களைப் பெறும். அது சிறுமணிச்
சேர்க்கையாலமைந்தது. சாதாரணமான பளிங்குரு வில்லாது ஒழுங்கற்ற

Page 50
86 இலங்கைப் புவியியல்
சிறுமணிகள் இணைவதால் அமைந்தது. பைரொட்சின்கிரனுலேற்று எனப்படும் மணியுருச் சேர்க்கையாலுண்டான கருநிறமுள்ள கல்லே தெரு அமைப்பதற்கு வாய்ப்பான கல்லாகக் கொள்ளப்படுகிறது. மூன்று பிரதேசங்களில் சாணுெக் கைற்றுப்பாறைகள் அதிகமுண்டு. அவை வருமாறு :
(1) கழனி ஆற்று முகத்திலிருந்து அம்பெடசை, உருவன்வலை, மொறட்டுவை ஆகிய இடங்கள் வரை பரந்துள்ள பகுதி. இது கொழும்புக்குப் பின்னல் அமைந்துள்ளது.
(2) மீதுருமலைத் தொடர், உயர்சமவெளி, மலை நாட்டின் தெற்குச்சுவர் என்பவற்றையடக்கிய பகுதி (31 ஆம் படம் பார்க்க).
(3) இறக்குவான மலை நாட்டின் மத்திய பகுதி.
சாணுெக்கைற்று, நாட்டின் அமைப்பை மாற்றக் கூடிய அளவுக்கு பளிங்கடுக் குப் பாறையிலிருந்து வித்தியாசப் படவில்லை. தீவின் மிக்கவீறமைந்த அமைப் பான மலைநாட்டுத் தெற்குச் சுவர் சாணுெக்கைற்றிஞலானதே. (33 (அ) ஆம் 33 (ஆ) ஆம் படங்களைப் பார்க்க).
ஆணிப்பொருள் கள் : பழைய பளிங்குருப் பாறைகளில் கணிப்பொருள்கள் அதிகமுண்டு. விசேடமாக விலையுயர்ந்த உலோகங்கள் காணப்படுகின்றன. இவை ஒரு குறிப்பிட்ட முறையிற் காணப்படாது, கண்டபடி கிடக்கின்றன். இப்பொழுது இலங்கையில் கணிப்பொருள்கள் மட்டாகவேயுள்ளன. பல நூற்றண்டாக இங்கு நாகரிகமுள்ள மக்கள் வாழ்ந்து வந்தபடியால் கணிப் பொருள்களில் இலேசாகக் கிடைக்கக் கூடியவை பலகாலத்துக்கு முன் அகழ்ந்து எடுக்கப்பட்டு விட்டன. மகாவமிசக் குறிப்புக்களைக் கொண்டு ஆராயு மிடத்துப் புராதன அரசர்கள் இலங்கையிலிருந்தே பொன், வெள்ளி போன்ற உலோகங்களேப் பெற்றனர் என்பது தெரிகிறது. இந்த உலோகங்களே இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். Ts
(1) மலைவெடிப்புக்களிலும் தாதுப்படுக்கைகளிலும் காணப்படுவது.
(2) பாறைகளின் எனப் பொருள்களோடு சேர்ந்து காணப்படுவது.
பென்சிற்கரி: தாதுப்படுக்கைகளிலும், மலை வெடிப்புக்களிலும் காணப் படும் முக்கியமான கணிப்பொருள் இதுவே. முக்கியமான பென்சிற்கரிச் சுரங் கங்கள் தாழ்பூமியின் தென்மேற்கில், அதாவது மத்திய மாகாணத்து மேற் பகுதியிலும், மேல்மாகாணத்திலும், தென் மாகாணத்திலும், இவற்றேடு சார்ந்த மலைநாட்டின் ஒரத்திலுங் காணப்படுகின்றன. சிலஇடங்களில் இது பெ ரிய கட்டியாகக் காணப்படும். வேறு சில இடங்களில் நூதனமான படலங்களாய்

பெளதிகப் புவியியல் 87
அழகிய பூக்களின் வடிவத்தில் வட்டமான அகழிகளிற் காணப்படுகின்றன. பென்விற்கரி பிரதானமாகப் பென்சில் செய்ய உதவுகிறது. இரும்பினுற் செய்யப் பட்ட அடுப்புத்தட்டு முதலியவற்றை மினுக்குதற்கு மினுக்குக் குழம்பாகவும், இயந்திரங்களுக்கு உராய்வு நீக்கும் மாவாகவும் இது பயன்படுகிறது. சமீபகாலத்திற் ப்ல நாடுகளிலும் உருக்குத்தொழில் பெருகிவருவதால், இரும்பை வைத்து உருக்குவதற்குரிய புடங்களை அமைக்க பென்சிற்கரி மிகவும் உபயோகமாகின்றது.
மைக்கா: இலங்கையிலுள்ள தாதுப் படுக்கைகளில் ஏராளமாகக் காணப் படும் மற்றெரு பொருள் மைக்கா. இது படிக உருவிற் கிடைக்கும். படிகங்களை உடைத்தால் அவை அழகிய கண்ணுடித்தகடுபோல வெடிக்கும். அவற்றை உருக்கும் அடுப்புக்குப் பல கணியாகப் பயன்படுத்தலாம். சாதாரணக் கண்ணுடியிலும் இவை சூட்டைத் தாங்கும் இயல்புடையன. இவை பென் சிற்கரிபோலவே நன்றகச் சூடுதாங்கக்கூடியவை. மைக்கா கறுப்பு, வெள்ளை, மஞ்சள் என்ற மூன்று நிறத்திற் காணப்படுகிறது. மஞ்சண்மைக்கா இலங்கையில் மிக அதிகம். இந்தியாவிலிருப்பதுபோல் பெரிய சுரங்கங்களை வெட்டி மைக்காவை எடுப்பதற்கேற்ற ஏராளமான தாதுப்படுக்கை இலங்கை யில் இல்லை. கம்பியில்லாத் தந்திக்கு இந்தக் கணிப்பொருள் பயன்படு வதால் சமீபகாலத்தில் மைக்கா உற்பத்தித் தொழில் கண்டிக்கு அண்மையில் முன்னேற்றமடைந்துள்ளது.
இலங்கையில் 1903 இல் கண்டுபிடிக்கப்பட்ட அருமையான கணிப்பொருள் தோரியனைற்று என்பதாகும். இதுவுந் தாதுப் படுக்கையிலுள்ளதே. வெள் ளொளிர்வு வாயுவிளக்கு வலை செய்ய இது உபயோகிக்கப்படுகிறது. இது கிளர் மின் வீசும் இயல்புடையது. முதன் முதல் இந்தக் கணிப்பொருள் ஆற்று மணலிடையும் மலைநாட்டுப் பாறைகள் அரிப்புண்டு போவதாலுண் டாகும் கரியமணலிலுமே கண்டு பிடிக்கப்பட்டது. இது மலைநாட்டுப் பக்கத் திற்றன் உண்டு; அப்பகுதியில் தாவரஞ் செழித்து வளர்ந்திருப்பதால் பாறைகளை ஆராய்ந்து கொள்வது மிகக் கடினமாகும்.
பளிங்குருப்பாறைகளிடையே இரும்பு கட்டியாகக் காணப்படுகிறது. பாறை களி ை"யே (சூரிய வெப்பமும் நீரும் சேர்ந்து உண்டாக்கும் மாற்றத்தினுல் இரும்பு கனத்க பெரியதுண்டங்களாகவுங் காணப்படுகின்றது. இவ்வாறுண் டாகும் இரும்பை எடுப்பதற்கான முயற்சிகள் அதிகம் நடைபெறவில்லை. அவைபற்றி ஆராயும் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. பின்வரும் பகுதிகளில் இரும்பு காணப்படுகிறது: (அ) களுத்துறை தொடங்கி பத்தேகடிை.

Page 51
88 இலங்கைப் புவியியல்
வரை. (ஆ) எகலியகொடை தொடங்கி காவத்தைவரை, (இ) /ாத்தறை தொடங்கி அக்குரசை வரை. இவ்விடங்களில் 60 இலட்சம் தொன் நிறை யுள்ள இரும்பு இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.
இலங்கையின் முக்கியமான படிகக்கணிப்பொருள் இரத்தினக்கல். பழங் காலந்தொட்டே இரத்தின வியாபாரம் இலங்கையில் நடைபெற்று வந்தி ருக்கிறதென்பதை முதலாம் அத்தியாயத்திற் கண்டோம் (முதலத்தியாயம், வாலாற்றுப் புவியியல்). முற்காலத்திற் காணப்பட்ட தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், வேறுபடிகப் பொருள்களோடு கலந்தே காணப் பட்டன. அடித்தளப் பாறையில் இரத்தினக் கற்களைக் கண்டுபிடித்தமையும் அவற்றை எடுப்பதற்கு வேலை செய்தமையும் சமீபகாலத்திலுண்டான முயற்சிகளே. முன்னர் இதைஎவரும் கண்டுபிடிக்கவில்லை. கண்டி மாத்தறை யாகிய பகுதிகளில், நீலமணிக்கல், பெரில், போன்ற கற்களுண்டு. பாறைகள் சிதைந்து போகும் பொழுது உண்டாகும் பொருள்களிலிருந்து அவை விளைகின்றன. ஆற்றினல் அவை அடிபட்டுத் தாழ்பூமிகளுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. மேற்பரப்புப் படிவுகள் என்ற அத்தியாயத்தில் இதைப் பற்றி மேலும் குறிப்பிடுவோம்.
கருமணல்: 75 வீதம் இல்மனைற்றும் 25 வீதம் சேக்கன், உரூத்தைல், காணற்று, மொனசைற்று முதலியனவுங் கலந்துள்ள கருமணல் புல்மோட்டை யிலும், (35 இலட்சம் தொன்) திருக்கோவில் போன்ற கரைப் பகுதிகளிற் குறைவாகவுங் காணப்படுகின்றது. உயர்ந்த தரப் பூச்சு, தைத்தேனியக் கலப்புலோகம் முதலியவை செய்வதற்கு இல்மனேற்று உபயோகப்படுகிறது. தென்மேற்குக் கரையிலும், மேற்குக் கரையிலுமுள்ள மணலில் மொனசைற்று அதிகங் கலந்திருக்கிறது. இது இந்துருவை, குதிரை மலையாகிய இடங்களிற் காணப்படுகிறது.
இத்தீவின் அமைப்பைப்பற்றிய ஒரு பொதுப்படத்தை இப்பொழுது சித்தி ரிப்போம். இது 25,332 சதுர மைல் விசாலமுள்ள பெரிய பளிங்குருப்பாறைத் திணிவாகும். இங்கிலாந்தோடு ஒப்பிடும் பொழுது இது எறக் குறைய அரைப்பருமனுகும். பாறையின் அமைப்புப் பலபகுதிகளிற் பலவாறு வித்தி யாசப்பட்டபோதிலும், பொதுவாக ஒரே தன்மையுள்ள பெளதிக உறுப்புக் களுடையதாயிருக்கிறது. மலைநாடு, தாழ்பூமி என உயரத்தால் வித்தியாசப் பட்ட இரண்டு தனிப்பட்ட பகுதிகளைக் காணலாம். மலைநாடு, தீவின் ஐந்தி லொரு பகுதியாகும். அது தீவின் தெற்கே விசாலமான பகுதியை உள்ள டக்கியிருக்கிறது. தீவின் உருவம் முத்தின் உருவத்துக்கோ, மாங்காயின்

பெளதிகப் புவியியல் 89
உருவத்துக்கோ ஒத்ததாயிருக்கிறது. இது “இந்தியாவின் புருவத்தில் விளங் கும் முத்து’ எனவும் வழங்கும். தாழ்பூமியின் மேற்பரப்பு உயர்வு தாழ்வு டையதாய் மிருதுவாய்க் காட்சியளிக்கிறது. ஒரு பிரமாண்டமான கோட்டை யின் மதில்போலத் தீவின் விசாலமான பகுதிகளில் மலைத்திணிவு அமைந் திருக்கின்றது. மலைகளும், உருவத்தில் வட்டமாயமைந்துள்ளன. சிவனெளி பாதமலை உயர்ந்து கூர்ங்கோணமாய்க் காட்சியளிக்கிறது. தீவின் விளிம் புகளைச் சுற்றிப் பல சுண்ணும்புக்கற்படைகளும், முருகைக்கற்படைகளும், மணற்குன்றுகளுமுண்டு. அவற்றிடையே கடற்றளப்படிவுகளின் அறிகுறிகள் காணப்படுகின்றன. பெருநிலப்பரப்பிலிருந்து இலங்கை பிரியுமுன்னர் கடல் நீரினலுண்டான வண்டற் படிவே இவை. இப்படிவுகள் குறுகிய பிரதேசத் திலேயே இருப்பதால் தீவின் புவியியலை இவை பாதிக்கவில்லை. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதையடுத்த தீவுகளிலும், வடமேற்குக் கரையிலுமே தனிப் பட்ட இயற்கைப் பிரதேசமாகக் கணிக்கக்கூடிய அளவுக்கு படிவுப்பிரதேசம் பரந்து அமைந்துள்ளது.

Page 52
இரண்டாம் பகுதி-மூன்ரும் அத்தியாயம் மேற்பரப்புப் படிவுகள்
இலங்கையின் மேற்பரப்பை மூடியுள்ள மென்மையான மேற்படிவு, பெரும்பாலும் பளிங்குருப்பாறைகள் உடைந்து கரைந்து போவதினுலுண் டானதே. இது இரண்டுவகையிலுண்டாகிறது:
(1) பொதுவான வானிலையழிவாலும் மண் அரிப்பாலு முண்டாவது; உதாரணம்; மழை, ஆறு என்பன கழுவல், கடலின் தாக்கம்.
(2) பாறைகளின் சேர்க்கைப் பொருள்களில் உண்டாகும் இரசாயன மாற்றங்கள்.
இலங்கையில் அதிகவெப்பமும், ஈரலிப்புமிருப்பதால் அவற்றின் சேர்க்கை யாலுண்டாகும் இரசாயன மாற்றம் மிக மூலாதாரமானதும், முக்கியம் வாய்ந்ததுமாகும். மண்ணரிப்பால் உண்டாகும் பொருள்களை ஓரிடத்தி லிருந்து மற்றேரிடத்துக்கு அப்புறப்படுத்தும் முயற்சி, முதலாவது கூறப் பட்ட சாதனங்களாலுண்டாகிறது. இவ்வாறு அப்புறப் படுத்தப்பட்டுவரும் படிவுகள் கொண்டுசென்றமண் எனப்படும்.
இரசாயன மாற்றத்தால் மண் எவ்வாறு பூமியின் மேற்பரப்பிற் குவிகிற தென்பதை அறிவதற்கு, பளிங்குருப்பாறைகளின் அமைப்பை விவரமாக அறிய வேண்டியது அவசியமாகும். தெருக்களுக்குப் போடுங் கற்களின் குவியலிலிருந்து சில மாதிரிக்கற்களைச் சேகரிப்பதோடு மானக்கர், கருங்கற். பாறைகளைப் பரிசோதனைமுறையிற் பார்வையிடுவதும் நன்று. கருங்கற் பாறையை இரண்டு வகுப்பாகப் பிரிக்கலாம். ஒன்று மென்னிறமுள்ள கணிப்பொருள்களையுடையது; மற்றையது தடிப்பான நிறமுள்ள கீனிப் பொருள்களையுடையது. இந்நிற வித்தியாசங்களுக்குக் காரணம், படிகம் என்ற கணிப்பொருளின் சேர்க்கை விகிதமாகும். இது எவ்வளவு விகிதத்திற் சேர்ந்திருக்கிறதோ அதனைப் பொறுத்துப் பாறையின் நிறமும் பேதப்படும். புவியோட்டு அமைப்பில் படிகம் பெரும்பங்கெடுத்துக் கொள்ளுகிறது. படிகத்தை இலேசாக இனங்கண்டு கொள்ளலாம். அதுவும் பெரிய பளிங் காகத் தோற்றமளிக்கும் பொழுது கண்டு கொள்வது இலேசு. அது கண்ணுடித் தோற்றமும் மிகக் கடினமான தன்மையு முடையதாயிருக்கும். சுத்தமான படிகப்பாறை கண்ணுடிபோலத் தெளிவாகவும், கூரான ஒரத்தையுடையதாகவும், கண்ணுடியையுங் கீறக்கூடிய அத்துணை வைர முடையதாகவுமிருக்கும். (இது “பாறைப்பளிங்கு” எனவழங்கும்). ஆதி மனிதனைப் பற்றிய நூல்களில் அவன் தீக்கல்லினலான ஆயுதங்களைப் பயன்படுத்தினனெனக் காண்கிறேம். தீக்கல் படிகத்தைப்போன்ற இரசாயன அமைப்புள்ளது. ஆனல், அதன் வடிவில் வித்திய"ச முண்டு. இலங்கையில்
90

பெளதிகப் புவியியல் 9.
தீக்கல் கிடையாது. அதனுல் இலங்கையில் வாழ்ந்த ஆதிமனிதர் படிகக் கல்லைக்ெேகாண்டு அவ்விதமான ஆயுதங்களைச் செய்தனர். இத்தகைய பல ஆயுதங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அவற்றைக் கொழும்பு அரும் பொருட்காட்சிச் சாலையிற்காணலாம். சாதாரணமாகப் படிகப்பாறை ஏறக் குறைய அழுக்குடையதாகவே காணப்படுகிறது. அதனல், கல்லின் தோற்றம் இருண்ட மங்கலாயிருக்கும். சில சமயங்களில் அழகிய பலநிறத்தோற்றங் களையுங் காணலாம். செவ்வந்திக்கல், வைடூரியம், குருவிந்தம், வெண்மஞ் சட்கல், படிகம், செம்படிகம், என்பனவெல்லாம் இலங்கையிற் காணப்படும் படிகங்கள். இவை மணிகளாக வெட்டப்படுகின்றன. படிகத்தின் ஒரு முக்கிய மானகுணம், அது சிதைவடைவதோ இரசாயனக் காரணங்களால் மாற்ற மாவைதோ கிடையாது; பலயுகங்களாக நிலத்தில் அப்படியே கிடக்கும். அதனைச் சிறுசிறு மணிகளாக உடைக்கலாம். அம்மணிகள் மணலோடு சேரும். ஆனல், அவற்றின் அமைப்பில் மாற்றம் எற்படாது. மென்னிற முள்ள மணலில் படிகமணி பெரிது முண்டு. பளிங்குப்பாறையில் மாறுபடா நிலைமையிலுள்ள வேறு கணிப்பொருள்களுமுண்டு. அவற்றிலொன்று மைக்கா. இது சிறிய படைகளாகக் காணப்படும். மணலில் உள்ள கருமணி கள், கரியமைக்காவும், வேறு கருநிறமுடைய கணிப்பொருள்களுஞ் சேர்ந்தவையாகும். படிகத்திலும் கெட்டியானது கொரண்டம். இதுமணலில் அரிதாகவே உளது. இக்கல் சிவப்பாகவும், நீலமாகவும் நிறம்பெறும் ழுெது, மாணிக்கமாகவும் நீலமணிக்கல்லாகவும் பெயர் பெறுகிறது. இலங்கையிலுள்ள இரத்தினக்கற்களுள் சிவப்பும் நீலமுமே மிக முக்கிய
ᎥᏝhᎱᎢ6ᎦᎢ6Ꮱ0Ꭷ ! .
எல்லாப்பளிங்குருப் பாறைகளிலும் களிக்கல் என்னும் மிகச்சிக்கலான அமைப்புடையகனிப்பொருள் அளவிற்கூடியோ குறைந்தோ காணப்படுகிறது. இது தூய நிலையில், வெண்மை நிறமுடையது. ஆனல், படிகத்தைப் போலன்றி, விரைவிற் சேதமுற்று இரசாயன மாறுபாடடையுந் தன்மை யுனுடியது. தூய்மையற்ற பல பொருள்கள் சேர்வதனல் இது பல நிறங்களைப் பெறுகிறது. எனவே இது பெரும்பாலும் நிறமுள்ள பொருளா கவே காணப்படுகிறது. கருங்கல், பளிங்குப்படைப் பாறைக்கல் என்பவற்றிற்கு இக்களிக்கல்லே முதன்மையான நிறத்தைக் கொடுக்கிறது. இவ்விருவகைக் கற்களிலும் இஃது அதிகம் சேர்ந்திருக்கிறது. இலங்கை போன்ற வெப்பமும், ஈரலிப்புமுள்ள தேசங்களில் களிக்கல் மிக இலேசாக வெடித்து விடுகிறது. பின்னர், மென்மையாகிக் களியாகிறது. இதனைப் பாறையிலிருந்து இலே சாகக் கழுவி விடலாம். இதன்காரணமாகப் பாறையிலுள்ள கடினமான பொருள்கள் இளகி விடுகின்றன. பாறைகளின் மேற்பரப்புக்கள் பல வற்றை ஆராய்ந்தால் இது நன்கு தெரியவரும். புதிதாக வெட்டப்பட்ட ஒரு பாறையின் வெட்டு முகத்தை ஆராய்ந்தால், முதலில்பாறையாயுள்ள கல்லுப் பின்னர் வெடித்து மணலும் களியுங் கலந்து காணப்படும். இதுவே மண்ணின் முக்கிய பகுதியாகும். சில சந்தர்ப்பங்களில், களிக்கல் வெள்ளைக்களியாக

Page 53
92 இலங்கைப் புவியியல்
மாறிவிடுகிறது. இதற்குச் “சீனக்களி” அல்லது வெண்களி யென்றுபெயர். இதுவே கோப்பை முதலிய பாண்டங்கள் செய்ய உதவுகிறது. ஒரே இடத்திற் களிக்கல் அதிக அளவாகக் காணப்பட்டால் மட்டுமே இதை அகழ்ந்தெடுத் துப் பயன்படுத்தல் எளிதாகும். மட்பாண்ட வேலையை அங்கே மேற் கொள்ளலாம். இலங்கையில் எராளமாக வெண்களியுண்டு. கொழும்பிலி ருந்து சற்றுத் தூரததிலுள்ள பொறலசுகமத்தில் ஏறக்குறைய ஒரு கோடி தொன் நிறையுள்ள வெண்களியிருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. ஈரலிப்புப் பிரதேசங்களில் உள்ள தாழ்நிலங்களிலும் வெண்களியுண்டு. வெண்களியை ஏற்றுமதி செய்வதால் நல்ல வியாபாரம் நடாத்தலாம். உள்ளூர்த் தேவைக்கு மேற்பட்ட அதிகமான அளவு வெண்களி இலங்கையிற் காணப்படுகிறது. இங்குள்ள ஒரு வகையான களிக்கல் மிகச் சுத்தமான நிலையில் உருக்குலேயக் தொடங்கும் பொழுது, ஆரம்பத்தில் வெண்களிப் படைகள் உண்டாகும்; அப்படைகளில் ஒளி ஊடுருவிச் செல்லும்; அதனல் அந்தக் களிக்கல் ஓரளவான ஒளி கசியுந் தன்மையைப் பெறும். அதன் மிகத் திண்ணிய பகுதியை வெட்டி வட்டவடிவாக்கி அழுத்தஞ் செய்தால் அது சூரிய ஒளியில் மின்னும். இறுகிய நீர்த்துளி மின்னுவது போலக்காட்சி யளிக்கும். இது நிலாமணிக்கல்லென வழங்கும். அம்பலாங்கொடைக்கு அண்மையிலுள்ள மித்தியாகொடையிலுள்ள பழைய நிலாமணிக் கற்குழி களிலும் அடுத்துள்ள பிரதேசங்களிலும், நாம் மேலே கூறியவற்றை இலேசாகக் கண்டுகொள்ளலாம்.
அயனமண்டலப் பிரதேசத்தில் உள்ள பளிங்குருப்பாறைகளின் மேற்பரப் புப் படிவு, இடைவெப்ப வலயப் படிவிலும் மிக வித்தியாசமுடையது. அதுவும் வெப்பமும் ஈரலிப்புமுள்ள காலநிலைப் பகுதிகளில் இப்படிவு பெரிதும் வித்தியாச முடையதாயிருக்கும். பன்முறையும் சூரிய வெப்பத்தி ஞல் நிலத்தின் மேற்பரப்புச் சூடாகிப் பின்னர் பெருமழையில் நனைவத ஞல், சிக்கலான பல இரசாயன மாற்றங்களுண்டாகின்றன. அதனல் நிலத் தில் 40, அல்லது 50 அடிக்குக் கீழேயும் பெரிய மாற்றங்களுண்டாகி விடுகின்றன. இம்மாற்றங்களின் தன்மை, பயன் என்பன பல வகைப் பட்டன. அதனல் அவை முற்றக இன்னும் ஆராயப்படவில்லை. உதாரண மாக, சில சமயம் ஒருலோகம் இருந்த இடத்தில் மற்றேருலோகம் தோன்றும். இது மேற்பரப்பிலோ முழுப்பாறையிலோ உண்டாகலாம். அதனல் அப்பாறை முழுவதுமே முற்றக மாற்றமடையும். மாற்றம் அடைவதற்கு முன்னிருந்த பாறைக்கும், மாற்றமடைந்த பின்னுள்ள பாறைக்கும் எவ்வாறு தொடர்பு உண்டென ஐயப்படவேண்டிய நிலைமை உண்டாகலாம். மலைநாட்டிற் காணப் படும் இரும்புத்தாதுப் பொருளைப்பற்றிக் (இரும்பொட்சைட்டான எமத் தைற்று) குறிப்பிட்டுள்ளோம். இது எவ்வாறுண்டானது ? ஒருலோகம் இருந்த இடத்தில் மற்ருேரு லோகம் உண்டானதாற்றன் இது எற்பட்டிருத் தல் வேண்டும். இந்தச் சிக்கலான இரசாயன மாற்றத்தினலுண்டான பொருள் இலங்கையில் “கபுக்கு’ என வழங்கும். புவிச்சரிதவியலறிஞன்

பெளதிகப் புவியியல் 93
இதனை (இலத்தரைற்று) “செம்பூரான்கல்’ என வழங்குவா. செவ்வகத்
திண்மீாக வெட்டி வேகவைக்கும் “செங்கல்’ எனப்பொருள்படும் இலத்தீன்
சொல்லடியாகவே இச்சொல் பிறந்திருக்கிறது. அயன மண்டலத்துக்கு வெளியேயுள்ள பிரதேசங்களில் இத்தகைய கல்லுக்கிடையாது. வெப்பமும் ஈரலிப்புமுள்ள காலநிலையில் பளிங்குருப்பாறை மாற்றமடைவதனல் உண்டாகிறது. கட்டட வேலைக்கு உபயோகிக்கப்படும் செம்பூரான் கல் நிலத்தின் அடிப் பாறையானது பெரிதும் மாற்றமடைவதால் உண்டாவது. இது மண்வெட்டியினல் வெட்டக்கூடிய கெட் டியான களியாகும். காற்றிற் கிடந்தால் இது இறுகும். இதன் பிரதானமான நிறம் கடுஞ்சிவப்பு ; ஆனல், புதிதாக வெட்டப்பட்ட வெட்டுமுகங்கள் நீலம்,
பச்சை, செம்மஞ்சள், கபிலம், மஞ்சள், என்ற பல நிறங்கலந்ததாகக் காணப்படும். கடற் பஞ்சு போலத்துளைகளுடையதாயிருக்கும். அதனுல் இது சாதாரணக் களிபோலல்லாது நீர் ஊடுருவுந் தன்மையுடையதாயிருக் கும். மழை காலம் கோடைகால மென்று திட்டமான பருவப் பாகுபாடுள்ள வெப்பம் மிகுந்தநாடுகளிற்றன் செம்பூரான்கல் உண்டாகும். மழை
காலத்தில், மழை நீர் பாறைகளுக்கூடே கசிந்து அங்குள்ள கணிப்பொருள்
களைக் கரைக்கிறது. கோடைகாலத்தில் மேற்பரப்புப் படிவுகள் காயவே
நீரோடு கரைந்த பொருள்கள் படிகின்றன. இவ்வாறு படியும் வண்டல்
களில் ஒன்று இரும்பொட்சைட்டாகும். இதுவே செம்பூரான்கல்லுக்குச்
சிவப்பு நிறத்தை யூட்டுகிறது. அத்துடன் கடற்பஞ்சிலுள்ள துளைகிள் போன்ற துவாரங்களை யுண்டாக்குவதும் இதுவே. தண்ணீரிற் கரையாத
படிகம் போன்ற கணிப்பொருள்கள் இடைவெளிகளே நிரப்பி விடுகின்றன.
(கலாநிதி எல்.இ. தாம்பு). இலங்கையின் எல்லாப்பாகத்திலும் திட்டமான ஒரு கோடைப் பருவமில்லை. எனினும் பகலில் சூரிய வெப்பமும், மழையும்
மாறிமாறியுண்டாகுந் தன்மையுள்ள இடங்களிற் கோடைகாலப் பலாபலன்
களுண்டாகின்றன.
நீர்கொழும்புக்கு வடக்கேயுள்ள மகாஒயாவிலிருந்து மாத்தறையை யடுத்த நில்வளகங்கை வரையுள்ள தீவின் தென்மேற்கையடுத்த தாழ் பூமியில் உண்மைச் செம்பூரான் கல்லுக் கிடைக்கிறது. மேற்படிவுகள் மெது வாகக் கழுவிச்செல்லக்கூடியதும், ஈரலிப்பான காலநிலையுமுள்ள தட்டை யான பாறைப்பீடங்களிற்ருன் இக்கல் விளைகிறது. இப்பிரதேசத்தின் எல்லை களில், மழைவீழ்ச்சி குன்றிச் செல்வதற்கமைய மேற்பரப்புப் படிவுகள் மாற்றமடைகின்றன. செம்பூரான் கற்றன்மையுள்ள பலவகைப்பட்ட செம்மண் இலங்கையின் பல பாகங்களிலுமுண்டு. அவற்றின் தன்மையும் அமைப்பும் பலவகைப்படும். வறண்டபகுதிகளிலே திண்மையான களி கிடைப்பது அருமை. அதற்குப்பதிலாகச் செந்நிறமுங் கபில நிறமுமுள்ள சொரியல்மணல் பொதுவாகக் காணப்படும். மலைப்பகுதிகளிலும் மேற்படிவு பலவகைப்படும். இது மழை வீழ்ச்சிக்குறைவினுலுண்டாவதன்று. வெடித்துச் சிதையும் நிலப்பொருள்களை மழை நீர் விரைவாகக் கழுவிச் செல்வதே இதற்குக்

Page 54
94 இலங்கைப் புவியியல்
காரணமாகும். மேற்படிவுகள் பலவற்றை வெட்டி ஒத்துப் பார்த்து ஆராய வேண்டியது மாணுக்கர் கடமையாகும். மேலேயிருந்து நிலத்தைக் கீழே ஆழமாக வெட்டும் பொழுது மூலப்பாறையிலிருந்து செம்பூரான்கல் வரையுண்டாகும் மாற்றங்களை இலேசாகக் கவனிக்கலாம். மாறியபொருள் களில் படைகொள்ளும் வரிகளைக்காணலாம். புகைவண்டியிற் பிரயாணஞ் செய்யும்பொழுது பல வெட்டுமுகங்களைக் காணலாம். உதாரணமாகக் கொழும்பிலிருந்து காலிக்கோ கண்டிக்கோ செல்லும்பாதையை எடுத்துக் கொள்ளலாம். கண்டிப்பாதையில் தாழ்பூமிமண்வகைகள் மலைநாட்டு மண்வகைகளாக மாறும் முறைகளைக் கவனிக்கலாம்.
எந்தப்பாறையிலிருந்து செம்பூரான் கல்லுண்டாகிறதோ அதையொட்டி அக்கல்லின் அமைப்பில் ஏதாவதொரு கணிப்பொருள் மற்றைக் கணிப் பொருள்களிலும் அதிகமாகக் கலந்திருப்பதைக் காணலாம். ஆனல், பெரும்பாலும் இரும்பும் அலுமினியமும் அதிகஞ் சேர்ந்திருப்பது இயற்கை. எனவே இந்தக் கணிப்பொருள்களின் சேர்க்கையைக் கொண்டே கற்களைப் பாகுபடுத்த வேண்டும். புராதன காலத்தில் சிங்களர் இரும்புகலந்த மண் ணையே உருக்குவதற்கு உபயோகித்தனர். முப்பது வருடங்களுக்கு முன்-ம் சில கிராமங்களில் இரும்பு உருக்கி எடுக்கும் ஆலைகள் இருந்து வந்தன. ஐரோப்பா விலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் மலிவான இரும்பு இறக்குமதி செய்யப் பட்டதன் காரணமாக உள்ளூர் இரும்புருக்குந் தொழில் அழிந்தது. பலாங் கொடையிலிருந்த கடைசி இரும்பு ஆலை 1904 ஆம் ஆண்டிற் கைவிடப்பட்டது. அலுமினியம் அதிகம் கலந்த செம்பூரான்கல்லை போட்சைற்று என்பர். போட்சைற்றில் அலுமினியம் அதிகமுண்டு. அயன வலயத்திலுள்ள செம் பூரான் கல்லில் இது அதிகம் காணப்படுகிறது. பிரிட்டிசுக்கயானவில் இக்கல்லு அதிகம் உண்டு. இலங்கையில் இது காணப்படுமிடங்கள் செவ்வனே இதுவரை ஆராயப்படவில்லை. மிக்கவிரைவில் இவ்வாராய்ச்சி நடைபெறுமென்றெதிர் பார்க்கலாம். ஏனெனில் அலுமினியம் இன்று உலக உபயோகத்துக்கு அதிகம் தேவைப்படுகிறது. இது கண்டுபிடிக்கப்பட்டால் நீர்வீழ்ச்சி மின்சார அபிவிருத்திக்கு ஒரு தூண்டுதலாகும். தாதுப் பொருள்களிலிலிருந்து அலுமினியத்தைப் பிரித்தெடுப்பதற்கு மின்சாரசத்தி பயன்படுத்தப்படுகிறது.
இலங்கையின் பிரதானமான அரிப்பு மண் வண்டல்’ எனப்படும். இது ஒடும் நீரினல் அரித்துச் செல்லப்படுவது. தாழ்பூமியில் ஆற்றின் வேகம் குறைவாயிருப்பதால், அதிக வண்டல் இப்பிரதேசத்திலேயே படிகிறது. ஆற்றையடுத்துள்ள நிலத்தில் எப்பொழுதும் வண்டலுண்டு. அதனல் அது வெள்ளச்சமவெளி யெனப்படும். மலைநாடுகளில் வெள்ளச் சமவெளி குறுகிய தாயிருக்கும். ஆனல், தாழ்பூமியில், உதாரணமாக மகாவலிகங்கை முகத்தை யடுத்த பிரதேசத்தில் சில காலங்களில் உண்டாகும் பெருவெள்ளம் காரண மாக வெள்ளச்சமவெளியின் பரப்பு அதிகமாயிருக்கும். 54 ஆம் படத்தில், வெள்ளப் பிரதேசங்கள் குறிக்கப்பட்டுள்ளன. அங்கே பெரிய ஆறுகளையடுத்த

பெளதிகப் புவியியல் 95
வெள்ளச் சமவெளிகளின் பரப்பு குறிக்கப்பட்டுள்ளது. அதைக் கொண்டு அவ்வவ்விடங்களில் உள்ள வண்டற் படிவையும் அறிந்து கொள்ளலாம். ஆறுபாயும் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும், அரிப்புவண்டலுண்டென்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ளல் வேண்டும். நெற்சாகுபடிக்கு இந்த வண்டல் நிலமே பயன்படுத்தப் படுகிறது. விசேடமாக ஆற்றையடுத்துள்ள பகுதிகள் இதற்கு வாய்ப்பானவை. நெல்விளையும் பகுதிகளைப் பற்றிய விவரமான படத்தைப் பார்த்தால், செழிப்பான வண்டற்படிவுகள் எங்கெங்கேயுண்டென் பதை அறியலாம். 67 ஆம் படத்தைப் பள். க்க.
வண்டற்படிவானது சாதாரணமாகச் சரளைமண்ணில் வேறனது. அது கறுப்பு நிறமுடையது. அழுகிய இலைகுழைகளின் சேர்க்கையினலேயே இந்த நிறமுண்டாகிறது. இது மண்ணுக்கு நல்ல செழிப்பைக் கொடுக்கிறது.
எல்ல இடைவெளியிலிருந்து தென்கிழக்காகத் தாழ்பூமியைப் பார்க்கும்பொழுது தெரியும் காட்சி (31ஆம் படம் பார்க்க).
அயன மண்டலத்திலுள்ள சரளை மண் எப்பொழுதுமே பசளை குறைவானது. நிலங்களின் விளைவு வெப்பத்திலும், ஈரலிப்பிலுமே தங்கியிருக்கிறதன்றி மண்ணின் தன்மையிற்றங்கியிருக்கவில்லை. வெப்பமும் ஈரலிப்புமுள்ள கால நிலையில் தென்னையைப்போலப் பல தாவரங்களும் நன்ருக வளருகின்றன. நிலத்தின் தன்மையில் வளர்ச்சி தங்கவில்லை. தென்னையானது சில சமயங்களில், கடல் எற்றிய பசளேயற்ற மணல் மேடுகளிலும் சில அங்குலக் கனமுள்ள மண்பொருந்திய பாறைகளிலும் வளர்வதைக்காணலாம். புரா தன மக்கள் நெற்செய்கைக்கு வண்டல் படிந்த நிலங்களைத் தெரிந்தெடுத்து அங்கே விவசாயம் நடத்தினர். இலங்கையிலுள்ள மிகச்செழிப்பான பிரதேசங்களிவையெனவே கூறலாம்.

Page 55
96 இலங்கைப் புவியியல்
தாழ்பூமியிலுள்ள பளிங்குருப்பாறையின் மேற்பரப்பு ஒப்புரவற்றிதாயிருக் கும். மேற்பரப்பில் வண்டல் படியாத படியால் அது குறுங்குன்றுத்தொடர் போற் காட்சியளிக்கும். இவற்றுட்சில மிகஉயரமுடையனவாகக்காணப்படும். ஆனல், இக்குன்றுகள் நாளடைவிற் சிறிது சிறிதாக மூடப்பட்டு விட்டதனுல் மேற்பரப்பிற் பெரும்பகுதி சமதளமாகக் காணப்படுகிறது. ஆனல், குன்று களின் உச்சி மட்டுமே சிறிது மேலேகாணப்படும். மலைநாட்டை அணுக அணுக
Li LD 27.
மலைநாட்டில் ஒரு காட்சி,
இவை உயர்ந்து எடுப்பாய்க் காணப்படும். பளிங்குப்படைப் பாறைக்குச் சொந்த மானவளைந்த வெளித்தேர்ற்றம் பொதுவாகக் காணப்படுவதால் இவை எறத் தாழ ஒரு சீரானவையாயிருக்கும். இவற்றில் பெரும்பாலுந் தாவரம் வளர் வதில்லை. ஒரு பெரியமிருகத்தின் முதுகுப் புறம் போல இவை காட்சியளிக்கும்.
 

பெளதிகப் புவியியல் 97
குருனக்கலிலுள்ள யானை மலை பிரசித்தமடைந்துள்ள போதிலும், அதைப் போன்ற பல குன்றுகள் நாட்டின் பல பாகங்களிலுங் காணப்படுகின்றன. தாழ்பூமியிற் சில இடங்களில் பாறைகள் ஒன்று சேர்ந்து திரண்டு நிற்கும் பொழுது அவை கட்டிடங்கள் போலக் காட்சி தருகின்றன. வடமத்திய மாகா ண்த்திலுள்ள சிகிரியாக்குன்றும், ஊவாமாகாணத்திலுள்ள உவெசு மினித்தர் பாறைகளும் இந்த வகையைச் சேர்ந்தவை. தாழ்பூமியில் பெரிதாக நிலத்தை வெட்டிப்பார்த்தால் பழிங்குப்பாறை மேடும் பள்ளமுமாக அமைந் திருப்பதைக் காணலாம்.
இலங்கையெங்கும் காணப்படும் மேற்படிவுகளில் வெண்களி நீங்கலாக வேறுசில விசேட வகையைச் சேர்ந்த களிகளையுங் காணலாம். இவற்றில் முக்கியமானது மட்பாண்டஞ் செய்யுங் களியும், செம்பூரான்கல் வகையைச் சேராத செங்கற்களியுமாகும். இக்களிகள் பெரும்பாலும், வண்டற் படிவு களிற் காணப்படுகின்றன. சட்டிபானைகள், கூசாக்கள் முதலிய அன்றன்றைத் தேவைக்குப் பயன்படும் பொருள்களைச் செய்ய உதவும் களிமண்ணுனது இலங்கையின் பல பாகங்களிலுங் காணப்படுகிறது. செங்கல்லுக்கான களி மலை நாட்டிலேயே காணப்படுகிறது. கண்டிக்கும் பதுளைக்கும் அருகாமையில் செங்கல் சுடுந் தொழில் பழங் காலந்தொட்டே நடை பெற்று வருகிறது.
வண்டற் படிவுகளிற் காணப்படும் இரத்தினங்களைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். மலை நாட்டின் தென் மேற்குப் பகுதியிலுள்ள பளிங் குருப்பாறைகளில் இரத்தினம் அதிகம் உண்டு. மலைகளிலிருந்து அரித்து வரும் மிருதுவான வண்டற் படிவுகளிலேயே இவையுண்டு. இரத்தினபுரி என்ற சொல்லே இரத்தினம் நிறைந்த நகரமென்று பொருள்படும். இங்கே பிரதானமாக இரத்தினம் வெட்டி எடுக்கப்படுகிறது. ஆற்றுப்பள்ளத் தாக்கில் ஆங்காங்கு, ஏற்ற இடங்களில் வெட்டுவதற்குத் தொழிலாளர் ஒரிடமிருந்து மற்றேரிடம் செல்வர். இன்று பிரதான இரத்தினச் சுரங்கங்கள் பெல்மதுளைப் பிரதேசத்திலேயே காணப்படுகின்றன.
வடக்கேயுள்ள சுண்ணும்புக்கற் பிரதேசத்தில் உள்ள மேற்படிவுகள், மற்றைப் பகுதிகளிலுள்ள படிவுகளிலும் முற்றும் வித்தியாசமானவை. கீழ் மண் சுண்ணும்புக்கல் ஆகும். அது நீரூடுருவிச் செல்லக்கூடியது. மழைநீர் மேற்பரப்பில் விழுந்ததும் நிலத்துள் ஊறி பூமியின் அடியில் தேங்கி நிற்கும். இதனல் மண் மிக இலேசானதாகவும், மற்றை இடங்களி லுள்ள மண்ணிலும் முற்றும் வித்தியாசமுள்ளதாகவுங் காணப்படும். மண்ணின் நிறம் தங்கம் கலந்த கபிலமாகும்; சில இடங்களிற் சிறியளவு சிவப்பும் கலந்திருக்கும். வெள்ளேச் சுண்ணும்புக்களியை மூடியிருந்தாலும், அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்று சொல்லக் கூடியதாகக் கா ைப் படும். அது பசளேயற்றதெனக் கூறல் முடியாது. தண்ணிர் தேவையான அளவுக்குச் செயற்கை முறையாலேனும் பாய்ச்சப்பட்டால் அது பசளையுடைய

Page 56
98 இலங்கைப் புவியியல்
தாயிருக்கும். கடல் மோதுதலினல் உணடாகும் மணல் குடாநாடெங்கும் காற்றல் வீசப்பட்டுக் காணப்படும். யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதனை யடுத்துள்ள பகுதிகளிலும் உள்ள மண் உவர்ப்புத் தன்மையுடையது. கடல் நீர் நிறைந்த குடாக் கடல்களின் ஓரங்களில் நீர் வற்றிப் போகும் போது இவ்வுவர்ப்புப் பரவுகிறது. எனவே இம் மண் ஒன்றுக்கும் உதவாது.
கரையை அடுத்த பிரதேசங்களில் காற்ருல் வீசப்பட்ட மணல் உண்டு. இது பெரும்பாலும் உள்நாட்டில் 10 மைல் வரை பரந்திருக்கும். மற்றைப் படிவுகளை யெல்லாம் இம்மணற்படிவு மகுறத்துவிடும். இப் பகுதிகளில் பனை தென்னை என்பன வளரும். சில இடங்களில் கரையையடுத்து மணல் மேடு களும் வரம்புகளுமுண்டு. இவற்றில் பல கோடி தொன் நிறையுள்ள கண்ணுடி மணலுண்டு. பருத்தித்துறைப் பகுதிகளில் இது விசேடமாகக் காணப்படுகிறது. இவற்றை எற்றுமதி செய்யலாம்.
நீர்கொழும்பு எரிக்குத் தெற்கேயுள்ள முத்துராசவெலைச் சதுப்பு நிலத்தில் 5 கோடி தொன்னுக்கு அதிகமான முற்ருத நிலக்கரியுண்டு. இதில் 50-60 சதவீதம் எரிபொருளுண்டு. இவ்வாறே களனிப்பள்ளத்தாக்கின் கீழ்ப் பாகத் திலும் முற்ற நிலக்கரியைக் காணலாம். இலங்கையின் மலைப்பகுதிகளில் மழை பெரும் பாட்டமாகப் பெய்யும்; வருடச்சராசரி அதிகமில்லாவிட்டாலும், பாட்டமாகப் பெய்யும் பொழுது பெரிய வேகத்துடன் பெய்யும். எனவே, குன்றின் சாய்வுகளிலுள்ள இயற்கைக் காடுகளை அகற்றும் பொழுது மிகவும் கவனமாயிருத்தல் வேண்டும். இக்காடுகள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. நீரின் சுற்றேட்டத்தைத் தடுத்து திடீர் வெள்ளமுண்டாகாமற் காப்பாற்று கின்றன. குன்றுச் சாய்விலுள்ள மண்காய்ந்து விரைவாக அரிப்புண்டு போகா மற் காப்பாற்றுகின்றன. அதனல், மண்னனது பல அங்குலக் கனத்துக்கு அங்கு தங்கக் கூடியதாயிருக்கும். தேயிலைத் தோட்டங்களிலும் இறப்பர்த் தோட்டங்களிலும் சொரியலான சிவப்பு மண் பல அடி ஆழத்துக்கு உண்டு. இது இப்பயிர்களின் வளர்ச்சிக்கு மிக வாய்ப்பானதாகும். முதலில் மலைகளிற் காடுகளை வெட்டும் பொழுது இம் மண் பல அடி ஆழத்திற் காணப்பட்டாலும் நாளடைவில் மண்ணரிப்புண்டாகிறது. இதைத் தடுப்பதற் குத் தக்க நடவடிக்கைகளெடுத்தல் வேண்டும். குன்றினுச்சியில் மரங்கள் வளரக் கூடியவாறு சில பகுதிகளை ஒதுக்கிவிடல் வேண்டும். வெள்ளம் மண்ணை அதிகம் அரித்துக் கொண்டு போகாத வகையிற் கால்வாய்களை வெட்டி விடல் வேண்டும். தேயிலைச் செடிகளுக்கிடையில் “கிறெவில்லியா” போன்ற மரங்களை வளர்த்தல் வேண்டும். மண்ணரிப்பைத் தடை செய்யும் “விக்கின’ போன்ற கொடிகளையும் பயிர் செய்தல் வேண்டும். இறப்பர்த் தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும், மேற்பரப்பு மண்ணிலுள்ள களைகளைக்களைந்து வெறுந்தரையாக விடுவது ஆபத்தானது. அதனல், மண் விரைவில் வறண்டு காற்றேடு அரிப்புண்டுபோவதற்கு எதுவாகும். களையை

பெளதிகப் புவியியல் 99
முற்ருக ஒழிப்பத்னல் மண்ணிற்குத் தேவையான அழுகியபொருள் கிடை யாமற் பேர்கும். இக் காரணங்களால் மலைச்சாய்வுகளே வெளியாக்கும் விடயம் மிகவும் விழிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்ருகும். அரசாங்கம் இவற்றில் அதிக கவனஞ் செலுத்தல் வேண்டும்.
மண்ணின் அமைப்பை உருவாக்கும் முக்கியமான பொருள்கள்: அடித் தளப்பாறை, காலநிலை, மேற் பரப்பின் தன்மை, தாவரம், என்பன வாகும். இங்கு கூறப்பட்டவை ஒன்றேடொன்று சேர்ந்து மாற்றங்களை ஏற் படுத்துவதால் பின்வருமாறு சில மண்ணினங்கள் அமைகின்றன:
(அ) ஈரலிப்புப் பிரதேசத்திலுள்ள செம்பூரான் கல்லும் ஈரக்களியும். இவை மத்திய பாகத்திலும் தென் மேற்குக் கோடியிலுமுண்டு.
(ஆ) வறண்ட பிரதேசத்துச் செங்களி. (இ) ஊவாவின் பத்தனைப் புற்றரைகளிலுள்ள பசளே சேர்ந்த மண்பகுதிகள்; சப்பிரகமூவாவின் கிடைப் பள்ளத்தாக்கைச் சேர்ந்த இலைச்செடி நிலங்கள் ; தென்மேற்குக் கடனிரேரிகளையடுத்த முற்ற நிலக்கரி சேர்ந்த நிலங்கள்.
(ஈ) யாழ்ப்பாணம் அடையற் சுண்ணும்புக்கல், செம்மண், சாம் பனிறக்களி முதலியனவும் இவை போன்ற வேறு சுண்ணும்பு மண்ணும்.
(உ) வண்டன் மண்ணும் கடற்கரை மணலும்.

Page 57
இரண்டாம் பகுதி-நாலாம் அத்தியாயம்
தரைத் தோற்றம் ஒரு நாட்டின் தரைத் தோற்றம் அதன் புவியியலமைப்போடு பெரிதுந் தொடர்புடையது. இலங்கையின் தரைத் தோற்றம் பற்றிய குறிப்புக்கள் பல இலங்கையின் அமைப்பு, மேற்பரப்புப்படிவு என்ற தலைப்புக்களின் கீழ் இடம் பெற்றுவிட்டன. இலங்கையின் இயற்கைத் தோற்றத்தைப்பற்றி ஒரு பொதுவான கருத்தை இதுவரை மாணுக்கர் கொண்டிருத்தல் வேண் டும். அப்பெரும் போக்கான கருத்தின் விவரங்களை இனி ஆராய்வாம்.
தரைத்தோற்றத்தைப் பொறுத்தவரையில் இலங்கை தெளிவான இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. தீவின் சீ பகுதி தாழ்பூமியைக் கொண்டதாகும். எஞ்சிய பகுதி மலைநாடாகும். 28 ஆம் படத்தில் இலங்கையின் தரைத்தோற்றம் காணப்படுகிறது. இது உயரத்தை மட்டும் அடிப் படையாகக் கொண்டு நாட்டை மூன்று பகுதியாகப் பிரித்துச் காட்டுகிறது. அப் பகுதிகள் முறையே தாழ்பூமி, மேனிலம், உயர்நிலம் என்பன. பொதுவாகக் கூறுமிடத்து கரையும் கரைசார்ந்த பூமியுமாய் 300 அடி உயரத்துக்குட்பட்ட பூமியே தாழ் பூமி. இப்பிரதேசத்தில் குன்றுகள் கிடையா. முந்திய அத்தி யாயத்திற் கூறிய தன்மையுடையது. இப்பகுதியிலுள்ள பள்ளங்கள் மென் மையான வண்டல் படிந்து சமதளமாய்க் காட்சியளிக்கின்றன. சில பழைய குன்றுகள் வண்டற்படிவினல் மூடப்பட்டு எஞ்சிய சிகரங்கள் மட்டும் நீட்டிக் கொண்டு நிற்கின்றன. (26 ஆம் 27 ஆம் படங்களைப் பார்க்க). படுத்துக்கிடக்கும் ஒரு மிருகத்தின் அகன்ற முதுகுபோலக் காட்சியளிக்கும் இப்பாறைகளின் உச்சியில் எறிநின்று பார்த்தால், தாழ்பூமிப்பரப்பு கீழே பரந்து கிடப்பதைக் காணலாம். இத்தகைய பாறையுச்சிகளில் பெளத்த கோவில்கள் கட்டப் பட்டிருக்கின்றன. இவற்றிற் சில, குறிப்பிடத்தக்க உயரமுடையன. உதாரணமாக, கதிர்காமக் குன்று 1395 அடி உயரமுள்ளது. வடினகலை 2413 அடி உயரமுடையது. இது உவெசுமினித்தர் அபேப் பாறைக்குச் சமீபத்தி லுள்ளது. கந்தளாய்க் குளத்துக்கும் திருக்கோணமலைத்தெருவுக்குமிடை யிலுள்ள சங்கிலிமாலைக் குன்று 1343 அடி உயரமுள்ளது. புத்தளத்துக்குத் தென்கிழக்கிலுள்ள பரமகந்தை 534 அடி உயரமுள்ளது.
300 அடிக்கும் 1200 அடிக்குமிடையிலுள்ள பகுதியே மேனிலமாகும்.
இப்பிரதேசம் பலதன்மையுடையது. பலவித உயர்ச்சிகளையுடைய நில
அமைப்புக்கொண்டது. இவ்வுயர் நிலங்களுக்கிடையே தனிச் சிறுகுன்று
களைக்காணலாம்; முப்பனைக்குச் சமீபத்திலுள்ளது 3648 அடி உயரமுள்ள
மரக்கலகந்தை. தம்புல்லைக்கு நேர்வடக்கே 20 கல் தொலைவிலுள்ளது
2520 அடி உயரமுள்ள இரிதிகலை. தம்புல்லைப்பாறை 1146 அடி உயர் 100

மாத்துரிை ↓
I Ltd 28. தரைத் தோற்றமும் பாதைகளும். முக்கிய தெருக்கள் மெல்லிய கரிய கோட்டாலும், இருப்புப் பாதைகள் முறிவுற்ற கோட்டாலும் காட்டப்பட்டுள. இருப்புப் பாதையின் மொத்த அளவு 951 மைல். கல்லோயாவுக்கும் மட்டக்களப்புக்கு மிடையில் இருப்புப் பாதை புழக்கத்திற்கு வந்து விட்டது. மாத்துறையிலிருந்து அம்பாந்தோட்டைவரை இருப்புப்பாதை இன்னும் நீட்டப்பட வில்லை. இலங்கையின் மிகக் கூடிய நீளம் 270 மைல், மிகக் கூடிய அகலம் 140 மைல்.

Page 58
102 இலங்கைப் புவியியல்
முடையது. சிகிரியா 1144 அடி உயரமுள்ளது. இவற்றைவிடச் இதிரியி லிருந்தோ தம்புல்லையிலிருந்தோ பார்த்தால் சில நீண்ட் பாறைத் தொடர்களையும் காணலாம்.
உயர்நிலமென்பது 1200 அடி சமவுயரக்கோட்டுக்குட்பட்ட பிரதேசமாகும். இது மிகத்திணிவான உயர்ந்த நிலப்பரப்பு; ஒரத்திலிருந்து செங்குத்தாக உயர்கிறது. மேட்டுநிலத்தன்மையையுடையது. இப்பிரதேசத்தைப் பெரிய இயற்கையரண் என உவமித்தார்கள். அத்தகைய இயற்கையரணுகவே இது அமைந்துள்ளதென்பதை இலங்கைச் சரித்திரச் சம்பவங்கள் வலியுறுத்தும். தாழ்பூமியைப் பகைவர் கைப்பற்றிய காலங்களிலெல்லாம் அங்குள்ள மக்கள் குடிபெயர்ந்து சென்று மலைநாட்டிற் தற்காலிகமாக வசித்து வந்தனர். மலை நாட்டினர் தாழ்பூமிப்பிரதேசத்தில் வசிப்பவர்களோடு எவ்வித தொடர்பு மற்றவர்களாயிருந்தபடியால், அவர்கள் தமக்கென விசேடமாயுள்ள தனிப் பண்புள்ளவராய் விளங்கினர். பிரிட்டிசுச் சேனைக்கு அடிபணிந்த கடைசிப் பகுதி, மலைநாடே. இப்பகுதி மக்கள், வலிமையும் சுதந்திரப்பிரியமு முடைய வர்கள். தனிப்பட்ட போக்குடையவர்கள்; அதனல், தமது சட்டங்களையும், பழக்கவழக்கங்களையும் நிலைநாட்ட வாதாடி வெற்றி பெற்றனர். பிரித்தா னியர் மலைநாட்டைக் கைப்பற்றியதால் இந்தத்தனிப்பண்பு பங்கமடைய வில்லை. மலைநாடு, தாழ்பூமியிலிருநது அசாதாரணமானமுறையிற் பிரிந்து கிடப்பதனல் உண்டான விளைவுகளை மாணவர் ஆராய்ந்தறிய லிரும்பினுல் மலைநாட்டின் ஓரங்களிற் சுற்றிப்பார்க்கவேண்டும். அப்பொழுது மலைநாடு எத்தகைய பெரிய அணைசுவரினற் சூழப்பட்டிருக்கிறதென்பதை உணர்வர்.
அமைப்பு என்ற பகுதியிற் சுட்டிக் காட்டியவாறு மலை நாட்டை இரண்டு பிரிவாகப்பிரிக்கலாம். இவற்றி லொன்று பெரியது ; மற்றையது சிறியது. முதற்பிரிவு பிரதான திணிவு. மற்றையது சப்பிரகமூவாப்பாறைத்தொடர். முதலிற் சிறு பகுதியை ஆராய்வாம். சிவனெளிபாதமலைக்குச் சமீபமா யுள்ள கிழக்குப்பகுதி நீங்கலான சப்பிரகமூவாமாகாணம் தனிப்பட்ட ஒர் இயற்கைப்பகுதியாகும் ; இது தன்னைச் சுற்றியுள்ள மற்றைப்பகுதி களிலும் வேருனது. தனக்கே சொந்தமான பல தனிப்பண்புகளைக் கொண்டிருக்கிறது. இங்கே அசாதாரனமானவையும் சமாந்தரமான வையும் தென்கிழக்கிலிருந்து வடமேற்காகச் செல்பவையுமான பாறைத் தொடர்களுண்டு. இதனுடைய தென்கோடியில் 3000 அடிக்குமேல் உயர முள்ள உறுதியான நிலத்திணிவுண்டு. இது 4465 அடி உயரமுள்ள கொங் கலை மலையுச்சியிற் போய்முடிகிறது. இதனையே இறக்குவானே மலைப் பிரதேசமென வழங்குவர். இதற்குமுன்னல் தாழ்ந்த சிகரங்களையும், இடை யிடையே முறிவுகளையு முடைய பாறைத்தொடருண்டு. இவற்றினிடையே கண்ணைப்பறிக்கக்கூடிய கினிதுமைச்சிகரம் தோன்றுகிறது. ஆங்கிலேயர் இச் சிகரத்துக்கு “கேக்கொக்கு’ என்ற பெயரைவழங்கினர். வயலில் சூடுவைத்

பெளதிகப் புவியியல் 103.
தாற்போல’இக்குன்று தோற்றுவதால் அப்பொருள்கொண்ட இப்பெயரை இதற்கு அவர்கள் வழங்கினர். பாறைத் தொடர்களிற் பெரும்பாலானவை 1500 அடிக்கு மேல் உயரவில்லை. பெரிதாயுள்ள குக்குலுகலை 2300 அடி.
0 கட்டைகள் 2.
- see
Lulio 29.
தாழ்பூமிச் சமதரையிலிருந்து மேலோங்கி நிற்கும் கதிர்காமக்குன்றின் சமஉயரக் கோடும் எனச் சிறிய குன்றுகளின் சமஉயரக் கோடும்.

Page 59
04 இலங்கைப் புவியியல்
உயரமானது. இது வடகோடியில் காலுகங்கைக் கரையையடுத்துள்ளது. ஆறு களும் குறுகியபள்ளத்தாக்கை அனுசரித்துப் பாறைத்தொடர்களுக்குச் சமாந் தரமாகச் செல்லுகின்றன. அங்குமிங்குஞ் சில இடங்களில் பாறைகளுக்குக் குறுக்கேயுஞ் செல்லுகின்றன. இவற்றிற் பல வடகோடியில் ஒன்று சேர்ந்து காலுகங்கையாகப் பரிணமிக்கின்றன. இறக்குவான மலை நாட்டிலிருந்து பல ஆறுகள் தெற்கு நோக்கிப்பாய்கின்றன. இவை வளவைகங்கை, நில்
Lu L. Lib 30.
தலாவைப் பிரதேசத்து ஒரு பகுதியின் சமஉயரக் கோட்டுப் படம். கிழக்குப் பீடபூமியில் செங்குத் தான சில குன்றுகளோடு சேர்ந்த தொடரலேநிலம்.
வளகங்கை, சின் கங்கை என்பன்வாகும். சப்பிரகமூவா மாகாணத்தின் பெரும்பகுதி ஈரக்காடாயிருக்கிறது. அங்கே காட்டை வெட்டி நிலத்தைச் செய்கைபண்ண ஒரு வரும் முயற்சி செய்யவில்லை.
மலை நாட்டின் பெரும்பகுதி உயரமான பல மேனிலங்களையும் பாறைத் தொடர்களையும் குன்றுத்தொகுதிகளையும் கொண்டுள்ளது. தெற்கிலும் தென்கிழக்கிலும் 1000 அடி உயரமுள்ள செங்குத்தான படி போன்ற பீட
 

பெளதிகப் புவியியல் 05
S)
-ԷՑ
ԷS-j-b5་། ལ་ s s 戯当 'S 8ழாத்த S. S 母 き
அலுத்துதுவரை
67ւմ-ամf
#
சிவைெளிபந்தமpே>\/
கி ബി
இலங்கை மலேநீாட்டைப்பற்றிய
UsT(5LITCb
lo 31.

Page 60
106 இலங்கைப் புவியியல்
.ダ
பூமியமைந்திருக்கிறது. வெள்ளவாயாவுக்குச் சமீபத்திலும் அம்புத்தளேக்கு முன்பும் இதன் அகலம் சில மைலாகக் குறுகிவிடுகிறது. ஆனல், இதனை இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம். ஒன்று கிழக்குப் பீடபூமி , மற்றையது தெற்குப் பீடபூமி.
கிழக்குப்பீடபூமியிலிருந்து உலுணுகலைப்பாறைத்தொடர் எழுகிறது. தெற்குப்பீடபூமி கண்ணைக் கவரும் இயற்கை யமைப்புடையது. தெற்கு மலை நாட்டின் முறிவற்ற நீண்ட சுவர்முன் இது அமைந்திருக்கிறது. தெற்கு மலைப்பிரதேசமானது இதிலிருந்து செங்குத்தாகமேலே 5000 அடிவரை உயர்ந்து 50 மைலுக்கு மேற்பரந்திருக்கிறது. இதிலுள்ள குறிப்பிடத்தக்க இடைவெளிகளாவன அப்புத் தளை இடைவெளியும், எல்ல இடைவெளியுமா கும். அப்புத்தளை இடைவெளியே தாழ்பூமியிலிருந்து வண்டிகள்மேலே எறக்கூடிய சரிவு வாய்ந்தது. ஒன்பது சிகரமுள்ள 6679 அடி உயரமான நமுனகுல மலையிலிருந்து இந்தச் சுவரானது மேற்குக்கோடியிலுள்ள 7360 அடி உயரமான சிவனெளிபாத மலைவரை பரந்து செல்கிறது. இது பெரும் பாலும் இங்கு எற்பட்ட புவிவெடிப்பினலேயே உண்டாகியிருக்க வேண்டும். இலங்கையிலுள்ள மிக உன்னதமான இயற்கைத் தோற்றமாயமைந்துள்ளது. 32 ஆம் படம் மலைநாட்டுச் சுவரின் தென்கிழக்குப் பகுதியின் சமயஉயரக் கோட்டுப்படத்தைக் காட்டுகிறது. 31 ஆம் படத்தில் இதன் அமைவை இடங் களின் பெயரைக் கொண்டு அறியலாம். படத்தின் தென்கிழக்கு எல்லையில் சமமான கிரிந்தி ஒயாப்பள்ளத்தாக்கைக் காணலாம். தாழ்பூமியின் தொடக் கத்தை இது குறிக்கிறது. ஆற்றையடுத்துள்ள வயல் நிலங்களை 33 ஆ, எனும் படத்திற் காண்க. இப்படம் வெல்லவாயாவுக்கு அண்மையில் தியத் தலாவைத் திசையை நோக்கி நின்று எடுக்கப்பட்டது. படத்தின் தென் பகுதியில் தெற்குப்பீட பூமியின் ஒரு பகுதி தெரிகிறது. 33 அ எனும் படத்தில் தெற்குப் பீடபூமியின் விளக்கப்படம் காணப்படுகிறது. பீடபூமியின் மத்தி யிலிருந்து கிழக்கு நோக்கி அலுதுமுல்லைத் திசையாக வரையப்பட்டுள்ளது. இப்பகுதி உயர்ந்துந் தாழ்ந்துஞ் செல்வதையும் இடையிடையே ஆற்றுப் பள்ளத்தாக்குக்களிருப்பதையுங் காணலாம். கொசுலாந்தைக்குச் சமீபத்தில் நிலமானது செங்குத்தாக 3000 அடிக்கு உயருகிறது; இரண்டுமைல் தூரத்தில் இந்த உயர்ச்சியுண்டாகிறது. படத்தின் பின்னணியில் இது காட்டப்படுகிறது. கிழக்கிலிருந்து மேற்கே செல்லும் பெருஞ்சுவரானது செங்கோணத்தில் வடக்கே திரும்புகிறது. அதன் பயணுகக் கோணப் பிரதேசத்திற் சிறிது விரிந்து காணப்படுகிறது. இரண்டு பெரிய வெடிப்புக்கள் சுவரை வெட்டு கின்றன. இவை 1, 2 என்ற இலக்கமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 1 ஆம் இலக்க மிடப்பட்டது எல்ல இடைவெளி. இலங்கையிலுள்ள சிறந்த இயற்கை யுறுப்புக்களிலொன்று; 26 ஆம் படத்தில் விளக்கப்பட வடிவில் இது காட்டப் பட்டிருக்கிறது. இப்பள்ளம் மிக ஆழமானது. போக்குவரத்துக்கு அபாய மானது. வறுவதற்கும் மிகக்கடினமானது. ஒரு சிறிய அடிப்பாதையே இதனுடாகச் செல்கிறது. அப்புத்தளே இடைவெளி இதைப்போலச் செம்மை

பெளதிகப் புவியியல் 107
院、 کی؟ کسی
一缸mw55
الا
uLo 32.
மலைப்பிரதேசத்தின் தென்கிழக்கு மூலைப்பகுதி, ஊவா வடி நிலத்தின் ஒரு பகுதி, தெற்குப் பீட பூமி ஆகியவற்றின் சமஉயரக் கோட்டுப்படம். இப்படத்துக்குப் படைநிற முறைப்படி நிறந்தீட்டுக. இவ்வாறு செய்வதால் முக்கியமான நிலவமைப்பைக் காட்டக்கூடியதாயிருக்கும். 1 = எல்ல இடைவெளி (படம் 26 பார்க்க); 2 = அப்புத்தளே இடைவெளி. 33 (அ) எனும் படத்தையும். 33 (ஆ) எனும் படத்தையும் ஒப்பு நோக்குக.

Page 61
108 இலங்கைப் புவியியல்
யாக வெட்டுப்படவில்லை. 2 என்ற இலக்கம் பொறிக்கப்பட்ட இடத்தில் சுவரின் உயர்ந்த பகுதி 500 அடி ஆழத்துக்கு வெட்டுப்பட்டிருக்கிறது. அதற்குக் கீழே செங்குத்தான சுவரில் மட்டும் நெளிவு உண்டு. ஊவா வடிநிலத்திலிருந்து இந்த இடைவெளியூடாக இறங்கும் தெருவானது தெற்குப் பீடபூமிக்கூடாக இரத்தினபுரிக்குச் செல்லும். இடைவெளியில் இறங்கும் பகுதியில் அமைக் கப்பட்ட தெருப்பகுதியின் அமைப்பு இலங்கையின் எந்திரவியன் முறைகளில் மிகத்திறமை வாய்ந்த தெனலாம். பெரிய சுவருக்குப் பின்னல் நிலமானது ஊவாவடிநிலத்தை நோக்கி மெதுவாகச் சரிகிறது. இங்கே வட்டமான குன்றுகளும் திறந்த பள்ளத்தாக்குக்களுங் காணப்படுகின்றன. (கொசுலாந் தைக் கூடாக வடக்குத் தெற்காகவும், எல்ல இடை வெளிக்கூடாகக் கிழக்கு மேற்காகவும் படங்கள் அமைத்துப் பார்க்க). தெற்குப் பீடபூமியை ஊடறுத்துச்
ம&லப்பகுதியினர் - ܐ - -- ܘ தற்குட் பீடபூமி
படம் 33 (அ). அலுதுமுல்லைக்குச் சமீபத்திலுள்ள ஒரு குன்றில் நின்று கிழக்கு நோக்கிப் பார்த்தால் காணும் தெற்குப் பீடபூமியின் காட்சி. 32 ஆம் படத்தையும் 33 (ஆ) எனும் படத்தையும் ஒப்புநோக்குக.
செல்லும் தெருக்களிலிருந்து பார்த்தால் மிகச்சிறந்த இயற்கைத்தோற்றங் களைக் காணலாம். கதிர்காமத்துக்குச் செல்லும் யாத்திரிகளிற் பலர் இந்த வழியாகவே செல்வர். இரத்தினபுரி, பலாங்கொடை, கொசுலாந்தை, வெள்ளவாயா ஆகிய ஊர்களின் வழியாக வந்து சிவனெளிபாத மலையை யடுத்துச் செல்வதையே விரும்புவர். பலாங்கொடையில் நின்று பார்த்தால், ஆகாயத்தில் முகில்களில்லாதிருக்குங் காலத்தில் இறக்குவானை மலைப்பிர தேசத்தையும், சப்பிரகமூவா மலைத்தொடர்களையும் காணலாம். இந்தத் தெருவை யடுத்து மலைச்சுவர்கள் காணப்படும். ஆங்காங்கு ஒடும் அருவிகள் ஆழமான பள்ளங்களிற் போய் வீழ்வதைக் காணலாம்; சில இடங்களிற்
 
 
 

பெளதிகப் புவியியல் 109
ܥܒ݂===ܓܔ܂ காடுகளும், தேயிலைத் தோட்டங்களுமுண்டு. பீடபூமியில் அடர்ந்த பெரிய காடுகளுண்டு. சில இடங்களில் பீடபூமியிலுள்ள வெளிகளின் மூலம் பார்த்தால் தாழ்பூமிக் காடுகளைக் காணலாம்.
மலைநாட்டில் ஒருவர் பிரவேசித்ததும், திக்குத்திசைதெரியாமல் மயங்க வேண்டியேற்படும். நாட்டின் முழுத்தோற்றத்தையும் கருத்திற் கொள்வது கடினமான காரியமாகிறது. 31 ஆம் படத்தைக் கொண்டு மலைநாட்டின் முழுத் தோற்றத்தை ஒருவாறு மனதிற் பதித்துக்கொள்ளலாம். ஒரங்குலப் படத்திற் காணும் விவரங்களைக் கொண்டு சரியான அழகிய படிமங்களை அளவைக் கந்தோரும், கொழும்பு நூதனசாலையும் ஆக்கிவைத்திருக்கின்றன. விளக்கப்படத்தை வைத்துக் கொண்டு இந்தப்படிமங்களைப் பார்த்துப் படிக்கு மாறு மாணவர்க்கு அறிவுறுத்துகிறேம்.
படம் 33 (ஆ).
மலை நாட்டுச் சுவரின் தென் மேற்கு மூலையும் தெற்குப் பீடபூமியின் ஒரு பகுதியும். 32 ஆம் {!டத்தையும் 33 (அ) எனும் படத்தையும் ஒப்புநோக்குக. மலைநாட்டிலே குன்றுகளின் நிரை முறிவற்ற நீண்ட சுவர் போலக்காட்சி யளிப்பதைக் காணலாம். ஆனல், அச்சுவர்களை ஊடறுத்துச் செல்லும் பல இடைவெளிகளுண்டு; முக்கியமாக மகாவலிகங்கையும் கழனிகங்கையும் இத் தகைய இடைவெளிகளையுண்டாக்கி அவற்றலுண்டான பள்ளத்தாக்குக்களின் மூலம் பாய்ந்து செல்கின்றன; இவை இலங்கையின் முக்கியமான இரு

Page 62
10 இலங்கைப் புவியியல்
நதிகளாகும்; இவ்விரு நதிகளையும், உள் நாட்டு வடிகால்களாகவமைந்த பல அருவிகள் வந்து தொடுகின்றன. இவ்விளக்கப்படத்தை ஆராய்ந்தால், அலுத்து நுவரையும், சீதாவாக்கையும் (இக்காலத்தில் அவிசாவளேயென வழங்கும் நகர்) பழைய சரித்திரத்தில் எவ்வாறு கேந்திரத் தானங்களா யமைந்திருந்தன என்பதை அறியலாம். வடக்கிலிருந்து மாத்தளைப் பள்ளத் தாக்கினூடாகத் தங்குதடையின்றி வரலாம். பின்னர் கண்டி மேட்டுநிலத்தை யும், அப்பள்ளத்தாக்கையுங் குறுக்கிட்டு ஒரு பாறைத் தொடர் அமைந்திருக்
0009
ര\ ○エ
நக்கிளிசுச்சிகரத்தின் சமவுயரக்கோட்டுப்படம். ஒரு மைலுக்கு ஓரங்குலம் அளவுத்திட்டம்.
LuLtib 34.
கிறது. இந்தப் பள்ளத்தாக்கைத் தாண்டி மேலே செல்லும் தெரு எப் பொழுதும் முக்கியம் வாய்ந்ததாகவேயிருந்து வருகிறது. பழங்காலச் சரித் திரத்திலும் இது முக்கிய இடம் வகித்தது. புராதன மக்கள் வடக்குப் பகுதியிலேயே குடியேறியிருந்தார்கள். ஆபத்தான சமயங்களில் அவர்கள்
 

பெளதிகப் புவியியல்
கெறாட்டிற்கு ஒடி ஒதுங்கினர். ‘கண்டி’ என்ற சொல் ‘கந்த என்ற சிங்களச் சொல்லின் திரிபாகும். அதுவே மலை நாட்டின் முக்கிய மான நகரமாய்ப் பல காலம் விளங்கிற்று. இதற்குக் காரணம் மாத்தளைப் பள்ளத்தாக்குடன் இதற்குள்ள தொடர்போடு மலை நாட்டின் இரு முக்கிய வாயில்களான மகாவெலிகங்கைப் பள்ளத்தாக்கையும், கடுகண்ணுவைக் கணவாயையும் தன்னதிகாரத்திற் கொண்டுள்ளமையே. கடுகண்ணுவை கொழும்புப் பாதையிலிருப்பதோடு, மலை நாட்டின் மீது படையெடுக்கும் சேனைகளுக்கு வாய்ப்பான இடமாகவுமிருந்து வந்தது.
கம்பளேயும் சிறிது காலம் மலை நாட்டின் தலை நகராயிருந்தது. கண்டிக்கு எவ்வித அனுகூலங்களிருந்தனவோ ஏறக்குறைய அவ்வித அனுகூலங்கள் கம்பளைக்கு மிருந்தன. ஆனல், அது மக்கள் குடியேறிய வட பகுதிக்குச் சேய்மை யிலிருந்தது. மேலும் கழனிப் பள்ளத்தாக்குக்கு வாசல் போன்ற கினிகத்தேனைக் கணவயோடும், புகுதற்கரிய மீதுருமலைத் தொடருக்கும் ஊவாவடிநிலத்துக்கு மிட்டுச்செல்லும் இரம்பொடைக் க0ை:வாயோடும், அது தொடர்பு பெற்றிருந்தது. இத் தொடர்பு, கம்பளைக்கு மேலதிகமான அனு கூலமாயிற்று. மலை நாட்டின் உருவ அமைப்பைத் தெளிவாக மாணுக்கர் அறிந்து கொள்ளும் முறையில் அதனைப் பிரித்துக் கூறுவது கடினம். அது சிக்கலான அமைப்பைக் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். விளக்கப்படத்தைக் குறிப்புணர்த்துவதாகக் கொண்டு இடங்களை நேரிற் பார்வையிட்டு விவரங்களையறிந்து கொள்ளல் வேண்டும். 3000 அடிக்கும், 7000 அடிக்குமிடையில் பலவகை உயரமுள்ள 150 உக்கு மேற்பட்ட மலை களுண்டு. 7000 அடிக்கும் 8200 அடிக்கு மிடைப்பட்ட உயரமுள்ள 12 சிகரங்களுண்டு. மிக உயர்ந்த சிகரம் மீதுருதாலகல என்பது. இதன் உயரம் 8292 அடி. மிக உயர்ந்த சிகரமானலும், வீறுள்ள தன்று; 6000 அடி உயரமுள்ள மேட்டுநிலத்திலிருந்து இது ஈராயிர மடியே உயர்ந்து காணப் படுகிறது. ஆங்கிலப் புவியியல் நூல்களில் இதற்கு “பீதுரு’ என்ற பெயரும் “பீத்ரோதாலகல’ என்ற பெயருமுண்டு. மற்றைப் பெரிய சிகரங்கள் இந்தச் சிகரத்துக்குச் சமீபத்திலோ, தெற்குமலைச் சுவரையடுத்தோ அமைந் துள்ளன. சிவைெளிபாதம் நீங்கலாக மற்றைப் பெரிய மலைகளாவன கிரிகல்பொத்தை (1857 அடி), தோட்டப்பளை (7741 அடி) என்பன. இவற்றை ஒகியாவுக்கு அண்மையில் தெருவிலிருந்தோ, புகைவண்டியிலி ருந்தோ பார்க்கலாம். இவற்றிலும் உயரத்தாற் குறைந்த சில மலைச் சிகரங் களுமுண்டு. மலை நாட்டுக்கு வருவோர்இவற்றைக் கவனியாதிருக்க முடியாது. உதாரணமாக நக்கிளிசு மலைத்தொகுதியைக் கூறலாம்; கை முளியைப் போலி ருப்பதால் இதற்கு ஆங்கிலத்தில் இப்பெயர் கொடுக்கப்பட்டது. இதன் மிக உயர்ந்த சிகரம் 6000 அடிக்கு மேற்பட்டுள்ளது. கறுத்து இருண்டு நிற்கும் அளகல்லை மலை மற்றென்று, கண்டிக்குச் செல்லும் இருப்புப் பாகை

Page 63
2 இலங்கைப் புவியியல்
--محصے மலை நாட்டிற்பிரவேசித்ததும் இந்தப் பாறையைக் கான்ாரணுெ வைக் கணவாயை யடுத்தது, பெரியதொரு புத்தகம் வைத்தாற் போலக் காட்சியளிப்பது பைபிள் பாறை. இது பளிங்கடுக்குப்பாறை யொன்றின் உடைந்து போனபகுதியாகும். நாவலப்பிட்டியையடுத்த மலைத் தொகுதியைச் சேர்ந்த உயர்ந்தசிகரம் தொலசுப்பாகை. நுவரெலிக்குச் செல்வோர் கக்கலை மலையடுக்கத்தைப் பார்க்கலாம். இது செங்குத்தான பாறைத்திணிவு.
lulub 35.
நக்கிளிசுத்தொகுதியின் ஒரு பகுதி.
தனித்தன்மையுள்ள பல மேட்டுநிலங்களின் பெயர்கள் உயரக்கிரமப்படி கீழே தரப்பட்டிருக்கின்றன. இம் மேட்டுநிலங்கள் சமதளமான நிலப்பப்ப்பை அதிகமாகக் கொண்டுள்ளன. இவை வருமாறு:-
(அ) பீதுருவுக்கும் கிரிகல்பொத்தைக்குமிடையில் உயர்ந்த சமவெளிகள் பலவுண்டு. இவை பல இடங்களிற் பல பெயர் பெறும், கோட்டன் சமவெளி யென்றும், மூன்சமவெளி யென்றும், வில்சன் சமவெளி யென்றும், நுவரெலிச் சமவெளி யென்றும் பெயர் பெறுகின்றன. இவற்றிற் சில 7000 அடி உயரமுடையன.
 

பெளதிகப் புவியியல் 13
<ھ ح
(ஆர்தோப்பிதோட்டமேட்டுநிலம்: இது பலமுறிவுகளைக் கொண்டுள்ளது. இதனுடைய சராசரி உயரம் 3000 அடிக்கும் 4000 அடிக்குமுட்பட்டது. சப்பிரக மூவாப் பாறைத்தொடர்களைப்போலச் சமாந்தரமான பல தொடர்களையும் ஆற்றுத் தொகுதியையுங் கொண்டுள்ளது. இச்சமாந்தரத் தொடர்களிடை உண்டான அருவிகள் ஒன்று சேர்ந்தே மகாவலிகங்கையாக மாறுகின்றன. தொப்பிதோட்டத்துக்குச் சமீபத்திலுள்ள தியூக்கினேசு என்னுமிடத்தில் நின்று பார்த்தால் இப் பகுதியைக் குறிக்கும் நல்லதொரு காட்சியைக் a5TočбT60пшD.
(இ) ஊவா வடிநிலம்: இதன் சராசரி உயரம் 3000 அடி. கவர்ச்சி மிக்க உருவ அமைப்புள்ளது. மூன்று பக்கமும் முறிவில்லாத சுவரினற் சூழப்பட்டது. வடக்கில் வதுளை ஒயா, உமா ஒயா என்ற இரு பெரிய அருவி களால் வெட்டப்பட்டது. வடிநில நீரையெல்லாம் இவ் வருவிகள் சேகரித் துக் கொண்டு ஆழமான பள்ளத்தாக்குக்கள் மூலம் ஒடி மகாவலி கங்கையை அடைகின்றன. கிழக்கே, பெரிய மெய்க்காவல் போல ஒன்பது சிகரமுள்ள அற்புதமான நமுனகுல மலை அமைந்துள்ளது. அதன் சாய்வில் நின்று ஊவா வடி நிலத்தை நன்கு காணலாம். புகை வண்டியில் பட்டிப் பளேக்கும் அப்புத்தளேக்குமிடையிற் செல்லும் போதும் இத்தகைய காட்சியைப் பெறலாம். இலங்கையிலுள்ள மிக விசேடமான ஒரு பகுதி ஊவா வடி நிலம். பத்தனைப் புல் வெளிகளே இங்கு உண்டு; காடுகள்கிடையா. வடி நிலத்தின் மத்திய குன்றுகள் ஊவாப் பசும்புற் குன்றுகளென வழங்கும். இங்கிலாந்திலும் (தவுன்சு) இத்தகைய பசும்புற் குன்றுகளிருப்பதால் இதற் கும் “பசும்டற் குன்றுகள்’ என்ற பெயரை ஆங்கிலேயா வழங்கினர். இவற்றின் தோற்றம் கவர்ச்சிகரமானது. பசும்புற் கம்பளம் போர்த்த குன்றுகளையும், நில நெளிவுகளையுங்கொண்டு காட்சியளிக்கும். 32 ஆம் படத்தில் சிறியகுன்றுகள் காட்டப்படவில்லை. அவை மிகப்பல; 500 அடி இடைவெளி கொண்ட சம உயரக் கோடுகட்கு இடையில் ஆங்காங்கு இக் குன்றுகள் உயர்ந்து தலையெடுத்துள்ளன.
(ஈ) கண்டிமேட்டுநிலம்: இது இடைமுறிந்ததும் முன்னையதிலும் தெளிவு குறைந்ததுமான பகுதி. ஆனல், இதற்கு ஒரு மத்தியத் தன்மை உண்டு. இதன் சராசரி உயரம் 2000 அடிக்கும் மூவாயிரம் அடிக்குமுட்பட்டது. கொப்பி தோட்ட மேட்டுநிலம் போலவே சிகரங்களும் பாறைத்தொடர்களும் இங்கு உண்டு. கண்டி எரிக்குமேலேயுள்ள அந்தனை என்ற பிரசித்தி, வாய்ந்த சிகரத்தில் எறிப்பார்த்தால் கண்டி மேட்டுநிலம் முழுவதும் தோன் றும். மேற்கிலும், தெற்கிலும் மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கு அமைந்துள், ளது. கிழக்கே தும்பறைப் பள்ளத்தாக்கு என்ற திறந்த பெருவெளியுண்டு.
மலைநாட்டில் எப்பொழுதுமே போக்குவரத்துக் கடினமாயிருக்கும்; பழைய காலத்தில் இன்றுள்ள வீதிகள் நடைபாதைகளாயிருந்தன. இன்றும்
பலபகுதிகளில் அதே நடைபாதைகளே காணப்படுகின்றன. வேறுசில
8-J. N. B. 70576 (1157)

Page 64
14 இலங்கைப் புவியியல்
گامبیا ... جیمی»، " " இடங்களிற் பாதையே கிடையாது. மலைநாட்டுக்குவரும் வீாயில்க%ப்பற்றி முன்னரே குறிப்பிட்டுள்ளோம். பிரிட்டிசு ஆட்சிக்காலந் தொட்டு இப்பகுதி யிற் சிறந்த தெருக்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. மலைநாட்டுக்கு வாயி லாயமைந்த பல கணவாய்களையும் இணைத்தமையோடமையாது, பற்பல பகுதிகளையும் இந்தத் தெருக்களொன்றே டொன்று இணைத்தன. பிரதான தெருவானது மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கை யனுசரித்துக் கண்டியி லிருந்து தொப்பிதோட்டத்துக்குச் செல்கிறது. பின்னர் உயர் சமவெளி
Lübo 36.
ஊவாத் தவுன்சின் (குன்றுகள்) ஒரு பகுதி. பதிந்த வட்டமான சிறுகுன்றுகளைக் கவனிக்க.
களுக்கூடாகச் சென்று தொப்பிதோட்ட மேட்டுநிலத்தை ஊவா வடிநிலத் துடன் இணைக்கிறது. இரம்பொடைக் கணவாயையடுத்து வெட்டப்பட்ட தெரு மிக அற்புதமான எந்திரக்கலைத் திறனைக் காட்டுகிறது. மலைநாட்டில் மக்கள் நடமாடவும், பொருள்களை எடுத்துச் செல்லவும் உபயோகிக்கப்பட்ட புராதன பாதைகளிருந்தன. அவற்றுடன் யாத்திரைப் பாதைகளாயமைந்த வழிகளும் மிகமுக்கியம் வாய்ந்தன. புத்தர் பெருமானின் சரித்திரத்தோடு தொடர்புபட்ட சிவனெளிபாத மலைக்குப் பல நூற்றண்டாகவே மக்கள்
 

பெளதிகப் புவியியல் 115
W.
పాస్క్రిస్ట్-బిడత வந்தம்பர். ஆசியாக் கண்டத்திலேயே இது முக்கியமான தொரு யாத்திரைத் தலமாயிருந்து வந்தது. இம்மலையினுச்சிக்குச்செல்ல அக்காலத்திற் பயன்படுத்தப்பட்ட பாதைகள் இன்றும் பயன்படுகின்றன. மகாவலிகங்கையாற்றைத் தொடர்ந்து அதன் உற்பத்தித் தானத்துக்குச் சமீபமாகச் செல்வதே இலேசான பாதை. இப்பாதையில் இடையே தொப்பி தோட்ட மேட்டுநிலத்தைச் சேர்ந்த சமாந்தரப் பாறைத்தொடர்களைக் கடந்து மசுக்கேலியாவுக்குச் செல்லல் வேண்டும். பின்னர் மலைச் சிகரத்தை அதன் கிழக்குப் பக்கத்தால் அணுகலாம். மிகக் கடினமான பாதை துன்பம் நிறைந்த மேற்குத்திசைப் பாதையாகும். இது தாழ்பூமியிலிருந்து இரத்தினபுரி வழி யாகச் செல்கிறது. மலைநாட்டின் வெளிச்சுவரைத் தாண்டி மழை மிகப்பெறும் காடுகளைக்கடந்து செல்லல் வேண்டும். சிகரத்திலுள்ள பாதச்சுவடானது மணி தருடைய பாதம் போன்ற ஒரு நெளிவாகும்; இது பாறையில் 4 அடி நீளம் பரந்திருப்பதால் இராட்சதனுடைய பாதச்சுவடெனவே கருதலாம். இம்மலைச் சிகரத்தோடு பெளத்தமதக் கதைகள் மட்டும் சம்பந்தப்படவில்லை. இந்தியாவிலுள்ள பெரிய பெரிய சமயங்களெல்லாந் தொடர்பு பெற்றிருக் கின்றன. அதற்குரிய காரணம் பழமையில் மறைந்துவிட்டது. இதன் சமயத் தொடர்பு ஒரு புறமாக, இதன் அழகிய தோற்றம் கண்டோரெல்லாருடைய கருத்தையும் பிணிக்குந்தன்மையுடையது. அலுப்பிசு மலையிலுள்ள மாற்றர் கோன் என்ற சிகரம் இதற்கு ஒப்பானது. பல யாத்திரிகர்கள் இதன் சிறப் பைப்பற்றி வாயாரப் புகழ்ந்திருக்கிறர்கள். யோண்டி மறினேலி என்ற இத்தாலியப் பாதிரி, இதன் சாய்வில் சுவர்க்கமே காணப்படலாமெனக் குறிப் பிட்டார். அவர்மேலுங் கூறியிருப்பதாவது : “இம்மலையின் சிகரம் மிக உயர்ந்தது. மழைமுகில்களினல் பெரும்பாலும் மூடப்பட்டிருப்பதால், அதனைக் காண்பது அருமை.’ இலங்கை மீது பேரன்புபூண்டவரும், உதயத் தில் உண்டாகும் இம்மலைச் சிகரத்தின் சாயலை நன்கு படம் பிடித்துள்ள வருமான என்றிகேவு என்பவர் பின்வருமாறு குறிப்பிட்டார்: "அடிக்கடி இப்பகுதியில் உண்டாகும் வளிமண்டல நிலைமைகளால் சிவனெளிபாதச் சிகரத்தின் நிழல் என்று சொல்லப்படும் நூதனமான தோற்றம் உண்டா கிறது. இதனைக் காலை உதயத்தில் மலைச்சிகரத்திலிருந்து பார்க்கலாம். முதலில் ஒளிகுன்றிய கதிர்கள் கிளம்பிக் கீழேயுள்ள வெண்பனிப்படலத் தைக் காட்டும். பின்னர் ஒளி கூடக்கூட மலையின் பெரிய நிழல் கிளம்பும். தூரத்தே தெரியும் கூம்பகம் போலச் சில வினடிகளுக்கு அது நிற்கிறது. பின்னர் அடிவானத்தில் ஒளிக்கதிர் விரிய விரிய, சாயல் உருவத்திற் பெருத்துப்பெருத்து எங்களை நோக்கி ஒரு திரை போல நகர்ந்து வருகிறது. தூரத்தேயுள்ள மலைக்காடுகளையும் சமவெளிகளையும் அத்திரையூடே தெளி வாய்க்காண்கிருேம் ; பின்னர் அந் நிழல் மலையோடு ஒன்றி ஒருகணத்தில் மறைந்து விடுகிறது.

Page 65
I6 இலங்கைப் புவியியல்
ILuno 37.
சிவனுெளிபாதமலை உச்சியின் தோற்றம்.
 

பெளதிகப் புவியியல் 117
ܓܕ"
பஈரூபிளிங்க்கதைகளினல் மக்கள் மலைகள் மீது மூடப்பத்தி செலுத்தி வந்திருக்கீருர்கள். அத்தகைய மலைகளுள், நமது சகருடிகளான இத்துணை மக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சிவனெளிபாதமலை போன்ற மலை உலகில் வேறில்லையென்று கூறுவதை எவரும் மறுக்க tբուլ -ITri. இம்மலையின் தோற்றமே பல புராதன சமயங்களின் புராணக்கதைகளிற் புதைந்து கிடக்கிறது. இதையிட்டு அநேக ஆராய்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பல ஊகங்களுஞ் செய்யப்பட்டிருக்கின்றன.
சிகரத்திலுள்ள இராட்சத மனிதனின் பாதச்சுவடு போன்ற சுவட்டை அடிப்படையாகக்கொண்டே இந்தக்கதைகளெல்லாமெழுந்தன. கெளத மரின் பாதச்சுவடு இஃதெனப் பெளத்தர் இதைப் போற்றுவர் ; சைவர் இது சிவபெருமானின் திருவடிச்சுவடென வணங்குவர் ; இசுலாமியர் யூதசரித் திரத்தைப் பின்பற்றி இச்சுவடு ஆதாமின் சுவடெனக் கூறுவர். இவ்வாறு மூன்று பெரிய சமயங்களைச் சேர்ந்த 800,000,000 மக்கள் ஒருவரோடொரு வர் போட்டியிட்டுக்கொண்டு இம்மலையில் வணக்கஞ் செலுத்துவர். கூட்டங் கூட்டமாக யாத்திரிகர் இப்பெரிய மலைக்கூம்பில் எறும்பொழுது பத்தி பரவசராய் சுவர்க்க யாத்திரை செய்பவர் போன்ற உணர்ச்சியைப் பெறுவர். ஆசியாவின் எல்லாப்பாகங்களிலுமிருந்து யாத்திரிகர் வருடாவருடம் வந்து ஈண்டுகின்றனர். கரடுமுரடானதும் செங்குத் தானதுமான இம்மலைச் சிகரத்தில் இன்னல்களையும் பொருட்படுத்தாது எறுகின்றனர். எல்லாம் தமது ஆன்மலாபத்தைக் கருதியே ’.
கெளரவ எமேசன் தெனெந்து என்பவர் பின்வருமாறு எழுதினர் : “நிலம் கடல் ஆகிய யாவற்றையும் தடையின்றி இங்குநின்று பார்க்கலாம். வடக்கிலும் கிழக்கிலும் பார்த்தால் கண்டியிராச்சியத்தின் உயர்ந்தகுன்றுகள் தெரியும்; மேற்கு நோக்கினல் உயர்ந்தும் தாழ்ந்துஞ் செல்லும் சமவெளி கள்; வெள்ளிக்கயிற்றினல் இழைக்கப்பட்டன போல ஆறுகளின் தோற்றம் ; தூரத்திலுள்ள சூரிய கிரணங்கள் கடலிற்படும்போதுண்டாகும் பளபளப்பு இந்து சமுத்திர எல்லையைக் காட்டும்.”

Page 66
இரண்டாம் பகுதி-ஐந்தாம் அத்தியாயம் இலங்கையின் காலநிலை முன்னுரை
இலங்கையின் காலநிலையை அவதானிப்பதற்கு அதன் பல பாகங்களி லும் அரசாங்கம் ஆராய்ச்சிநிலையங்களை அமைத்திருக்கிறது. இவ்வேலை ன்றக்குறைய 75 வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு, இன்று படிப் படியாக வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது. இன்று இலங்கையில் 16ஆராய்ச்சி நிலையங்களுண்டு. அவற்றுள் பெரியது கொழும்பிலுள்ள வளிமண்டல ஆராய்ச்சிநிலையம். இங்கே நாடோறும், மழைவீழ்ச்சி, வெப்பநிலை, அமுக்கம், ஈரப்பதன், காற்றேட்டம் என்பன அவதானித்துப் பதியப்படுகின்றன. இது அரசாங்கத்தால் நடத்தப்படும் தாபனம். மேலும், நாட்டின் பல பாகங்களில், பிரதானமாகத் தோட்டங்களில் உள்ள 350 பேர்வரை மழைவீழ்ச்சியை அவதானித்து குறிப்பைக் கொழும்பு வளிமண்டல ஆராய்ச்சி யதிபதிக்கு அனுப்புகின்றனர். முற்கூறிய 16 ஆராய்ச்சி நிலையங் களும் அடுத்தபக்கத்திலுள்ள 38 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கின்றன. எல்லா ஆராய்ச்சிக் குறிப்புக்களையும் மேற்கூறிய அதிகாரி தொகுத்து வருடந்தோறும் ஒரறிக்கையாக வெளியிடுவார். இவ்வாறு சேகரிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்புக்களை இவர் படித்து இலங்கை சம்பந்தமான மழை வீழ்ச்சிப்படத்தையும் வெப்பநிலைப்படத்தையும் அமைக்க உதவுவார். அத்துடன் இலங்கையின் வளிமண்டலத்தில் நாளுக்குநாள் என்ன நடக்கிற தென்பதைப்பற்றித் தீர்க்கமான முடிவுகாணவும் உதவுவார். இவரும் இவரது அதிகாரிகளும் கண்டமுடிபுகளைக் காலத்துக்குக் காலம் அறிக்கை மூலம் வெளியிடுவர். அவ்வறிக்கைகளில் தாம் அவதானித்த தோற்றப்பாடு களுக்குரிய காரணங்களையும் வெளியிடுவர். இப்பகுதியினர் வெளியிடும் வருடாந்த அறிக்கையை மாணக்கர் படிக்கவேண்டும். அத்துடன் பின்வரும் சஞ்சிகைகளும் மிக முக்கியமானவை:
1. அறிக்கை இல 3. இலங்கையின் மழைவீழ்ச்சி சம்பந்தமானது; இதில் வருடத்தில் ஒவ்வொரு மாதமும் நிகழும் மழைவீழ்ச்சியின் சராசரி யைக் காட்டும் படங்கள் உள்ளன.
2. அறிக்கை இல. 4. இதில் இலங்கைமீதுள்ள காற்றேட்டத்தின் பொதுப் படையான தன்மையும் நாளுக்குநாள் மழை பெய்யும் நேரமும் காட்டப்பட் டுள்ளன.
3. இலங்கை விஞ்ஞானச் சஞ்சிகை. பிரிவு (இ), தொகுதி 1, பகுதி 1. “இலங்கையில் குருவளி இயக்கங்கள்;” மூன்றம்பகுதி, “மேற்கு இலங்கை யின் காலநிலைபற்றிய குறிப்புக்கள்’.
18

பெளதிகப் புவியியல்
I9
னம் இலங்கை
பிரதான் வழிமண்டல அவதான N உயரம் அடியில்.
*திருக்கோனம&ல
99'
o sig/tail/Tuli
ஆதபுர
க்களம் புதது?
மட்டக்களப்பு
26' ஐநனகல்
6ണു
g4. *
2分5あご介リ、559 ஜரழுமபு திெயூத்தலாவை
«ፉ!/2ò ” இத்தினபுரி
அம்ெபாந்தோட்டை
64' காலி)
3.
லேயந்கள்.
Luo 38.

Page 67
120 இலங்கைப் புவியியல்
که به محاسبه سیم هجمه مسببی புதிய அறிக்கைகளெல்லாம் இப்பொழுது “இலங்கை விஞ்ஞானச் ச்ஞ்சிகை
யின்’ (இ) பிரிவில் பிரசுரிக்கப்படுகின்றன.
பல்வருடங்களாகப் பதிந்துவைத்த காலநிலைக்குறிப்புக்கள் மிகவும் பயனு டையன. இலங்கையிலுள்ள வளிமண்டல அவதான நிலையங்களுள் அநேகமானவை சமீபகாலத்தனவாயிருந்த போதிலும், 60 வருடங்களுக்கு முன்னிருந்து பதியப்பட்டுவந்த காலநிலைக் குறிப்புக்களும், விசேடமாக மழை வீழ்ச்சிக்குறிப்புக்களும், உண்டு. ஆசியாவின் எனை நாடுகளை ஒப் பிட்டுப் பார்க்கும்போது, இத்துறையில் இலங்கை முற்போக்கடைந்துள்ளது.
காலநிலை ஆராய்ச்சி இலேசான விடயமன்று. எனெனிற் சாதாரணமாக மக்கள் முன்கூட்டியே கொண்டுள்ள கருத்துக்களை அடிப்படையாக வைத்துக் கொண்டே ஆராயத்துவங்குவர்; நேரேகண்ட அனுபவங்களைக் கொண்டு ஆராய்வதில்லை. தாம் வசிக்கும் மாவட்டத்தின் காலநிலை பற்றியும் அடிக்கடி அவர்கள் பிழை போவதுண்டு. உதாரணமாகக் கொழும்புக்குச் சமீபத்தில் வசிப்போர் தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் மத்திய பகுதியிலேயே மிகக்கூடிய மழைபெய்கிறதென நினைக்கிருர்கள். ஆனல், பழைய குறிப்புக்களை ஆராயும்போது இம்மாதிரி நிலைமை எப்பொழுதாவது இருந்ததாகத் தெரியவில்லை. மே மாதத்திலும் ஒற்றேபர் மாதத்திலுமே கொழும்பில் அதிக மழைபெய்கிறது. மாணக்கர் அரசாங்க அறிக்கைகளை ஆராய்வாரானல் உண்மையான நிலையைத் தாமே அறிந்துகொள்வர். உண்மையிற் கண்ட விடயங்களை வைத்து முடிவு செய்யும் முறையே இந்த அத்தியாயத்திற் பின்பற்றப்படுகிறது. இலங்கைபோன்ற ஒருவிவசாய நாட்டுக் குக் காலநிலையைப் பற்றி ஆராயும் ஆராய்ச்சி மிக முக்கியமானது. நடந்த சம்பவங்களை அறிவதற்கு மட்டுமன்றி இனிமேல் உண்டாகக்கூடிய நிலைமை களை எலவே அறியவும் அதன் பயனுய்த் தோட்டக்காரர் முன்னேற்பாடுகள் செய்து தமது தொழிலை விருத்தி செய்யவும் இது உதவும்.
தன்சொந்த நாட்டைப் பற்றிய காலநிலை சம்பந்தமான பல விடயங்கள் சருவசாதாரணமானவை. அதனல் அவற்றை விவரிப்பது இத்தேசவாசிக் குக் கடினமாயிருக்கும். வேறு காலநிலையுள்ள தேசங்களிலிருந்து ஒருவர் இந்த நாட்டுக்கு வந்தால் அவர் மனதில் விசேடமாகப் படும் விடயங் களைக் கொண்டு இந்நாட்டுக் காலநிலைபற்றிய முக்கியமான செய்திகளை அறிந்து விடலாம். சில முக்கியமான செய்திகள் பின்வருமாறு:-
1. இலங்கை எப்பொழுதும் வெப்பமுடையதாயிருக்கும். எந்தப்பகுதி யாவது உண்மையிற் குளிருள்ள பகுதியெனக்கூறமுடியாது. வெப்பநிலையில் அதிகமாற்றம் இருப்பதில்லை; பகலிலாவது இரவிலாவது, வருடத்திலெந்தக் காலத்திலாவது இத்தகைய வித்தியாசத்தைக் காணமுடியாது.
2. காற்று எப்பொழுதும் ஈரலிப்புடையதாயிருக்கும். வறண்டபிரதேசங் களிற்கூடக் காற்று ஈரலிப்பாயே யிருக்கும்.

பெளதிகப் புவியியல் 2.
3. கற்றுக்குன்றவு; விசேடமாகத் தாழ்பூமியிற் குறைவு. நல்லமழை வீழ்ச்சியுள்ள நாட்களிற் காலநிலை அமைதியாயிருக்கும்.
4. மழைபெரிய பாட்டமாகப் பெய்வதுண்டு. பெய்யும்பொழுது மழைநீர் நேராகவந்து விழும்.
5. இடிமுழக்கமும் மின்னலும் அடிக்கடி நிகழும். (இங்கிலாந்தின் பலபகுதிகளிற் சில சமயம் ஒரு வருடத்துக்குமேற்பட்ட காலத்திலும் இடி மின்னற்புயலில்லாதிருக்கும்.) W
6. நண்பகலில் முகிற்கூட்டங்கள் திரளும். பிற்பகல் வேளைகளில் மழை யுண்டு. இரவில் ஆகாயம் மறைப்பற்றிருப்பது வழக்கம். மலையுச்சி யிலிருந்து சுற்றியுள்ள பிரதேசங்களைப் பார்ப்பதானல், காலை 11 மணி துவக்கம் பிற்பகல் 5 மணிவரை மலையிலேறிப்பார்க்க முயல்வதுவிண். மந்தாரமாயிருந்தாலும் தாழ்பூமி மேற்பரப்பிற் பூமிக்குச் சமீபமாக மூடுபனியோ புகாரோ தோன்றுவது அருமை.
7. இடைவெப்ப வலயத்திலுள்ள இளவேனில், கோடை, இலையுதிர் காலம், குளிர்காலம் போன்ற திட்டமான பருவகாலங்கள் கிடையா.
இங்குகூறியவற்றை ஆதாரமாகக் கொண்டு இலங்கையின் காலநிலையை விவரமாக இனி ஆராய்வோம்:
அகலக்கோட்டினுலுண்டான விளைவுகள்
அமைதிவலயம், அல்லது மத்திய கோட்டமைதி வலயம் என்று பொது வாகக் கூறப்படும் வலயத்தின் வட ஒரத்தில் இலங்கை அமைந்திருக்கிறது. அமைதிவலயம் மத்திய கோட்டில் அமைந்து 10 பாகை வடக்கும் தெற்கும் பரந்துகிடக்கிறது. காலி வடக்கே போகையிலுண்டு; யாழ்ப்பாணம் வடக்கே 94 பாகையிலுண்டு. இந்தவலயத்தில் ஞாயிற்றுக்கதிர் நேரே பூமியிற் படுகிறது. அதனற் குறித்த ஒரு பகுதியை நேராகச் சூரிய வெப்பம் தாக்குகிறது. சூரி யன் உச்சியில் வரும்பொழுது குறித்த ஒரிடத்தில் அதன் கதிர்களிற் கூடிய தொகை நேராக வீசப்படுவதாலும், வருடத்தில் இரண்டு முறை இந்த நிலைமை உண்டாவதாலும் சூரிய வெப்பம் மிக அதிகமாகக் காணப் படும். நண்பகலில் அடிவானத்திலிருந்து 57 பாகைக்குக் குறையச் சூரியன் எப்பொழுதாவது தோற்றுவதில்லை. மாரிச் சூரிய கணநிலையில் சூரியன் நண்பகல் நேரத்தில் 23 பாகை தெற்கேயுள்ள மகரக் கோட்டில் நிற்கும் பொழுது, யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் அதன் நிலையை 39 ஆம் படம் காட்டுகிறது. அப்பொழுது சூரியன் உச்சியிலிருந்து எறத் தாழ 9 + 23 =33 பாகையில் யாழ்ப்பாணத்திற் காணப்படும். அதாவது 90° - 33° = 57° பாகை அடிவானத்திலிருந்து மேலே காணப்படும். நண்பகலில் எப்பொழுதாவது சூரியன் இதற்குக் கீழே காணப்பட

Page 68
122 இலங்கைப் புவியியல்
மாட்டாது. இதனை இதற்கு வடக்கேயுள்ள தேசங்களுக்குரிய இலக்கங் களோடு ஒப்பிடுக. உதாரணமாக இலண்டன் நகரமுள்ள அகலக் கோட்டில் நடுக்குளிர் காலத்தில் நண்பகல் வேளையில் சூரியன் 15 பாகை உயரத் திலே தெரியும்.
எப்பிரில் மாதம் 8 ஆம் திகதியிலும், செத்தெம்பர் மாதம் 5 ஆம் திகதி யிலும் சூரியன் கொழும்பு நகரில் நேர் உச்சியில் நண்பகல் நேரத்திற் காணப்படும். இவ்விரு தேதிகட்கு முன்னும் பின்னும் பல காலம் சூரிய னுடைய கதிர்கள் ஏறக்குறையச் செங்குத்தாகவே பூமியை அடைகின்றன.
2)/L l(qp2607
ானத்தில் ஆதி _கடகக்கோe_ ulfi፱ሠይ
8 யாழ்ப்பாணத்தின் அகலக்கோடு 9症
oko T ~ ~ || 234 l சமவிராக்கால ஞாயிற்றுக் கதிர்கள் 4༡2494/6/25/7༩༣། ། ། ། ། a S/ 33"
N. N. ལ། ། <-- - - - -ہے ۔۔۔ - - - - - -
iv#fffଓ ` ܓܕ T ~ €
h 42 r~ >>
〉 ། ്ఎక్కి n
~ • శిశ్కి -
حہ ”تبر میریخ62رہ﴿قبخح
ra
يحد
யாழ்பபாணத்தில் நண்பகற்ஆரியன்
படம் 39.
இலங்கையிற் கால நிலையைப் பெரிதும் பாதிக்கும் ஒரு காரணி பெற்ற வெயிலின் * செறிவாகும். இது வளர்ச்சியைத் துரிதப்படுத்தும். அத்துடன் மனிதவாழ்க்கையையும் பெரிதும் பாதிக்கும். இத்தேச மக்கள் இதைச் சகிப்பதிற் பழக்கம் பெற்றுள்ளனர். எனவே தாம்நினைத்தவாறு அவர்கள் வெயிலிற் பழகலாம். ஆனல், வட அகலக் கோடுகளில் வசிப்போர் இலங் கைக்குவந்தால் வெயிலிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்ளல் வேண்டும். நண்பகல் வெயில் சில மணிநேரத்தில் ஆங்கிலேயரின் தோலை எரித்துவிடும். மேலும், தலையையும் கழுத்தையும் பாதுகாவாது விட்டால் ஞாயிற்றடிப்பு வியாதியுண்டாகும். நிலமானது தொடர்ந்து இத்தகைய வெயி
* பெற்றவெயில் = சூரியனிலிருந்து வரும் கதிரின் ஒளி, வெப்பம், இரசாயன வியக்க முள்ள கதிர்கள் முதலியவற்றின் மொத்தச்சத்தி.
 
 
 

பெளதிகப் புவியியல் 123
லுக்குப் பலகாலம் இலக்காகுமானல் மத்திய கோட்டுப் பிரதேசங்கள் உயிர் வாழ்வதற்ாகத் தகுதியற்றனவாய்விடும். ஆனல், இங்கே பகற்பொழுது முஃoைபுப் பிரதேசத்திற் கோடைகாலத்திலிருப்பது போல நீண்டிருப்பதில்லை.
கொழும்பிலே மிக நீணட பகற்காலம் யூன் 22 இல் நிகழ்கிறது. அது திசெம்பர் 22 ஆந் திகதியில் நிகழும் மிகக்குறுகிய பகல்நேரத்திலும் 48 நிமிடமே நீடித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இக்கால எல்லை 68 நிமிடமாக ம்ை காலியில் 42 நிமிடமாகவு மிருக்கும். உயர்ந்த அகலக்கோட்டிலுள்ள கேசங்களிற் கோடைகாலத்திற் பகல் நீண்டிருப்பதாற் பரவிக்காணப்படும் பெற்றவெயிலை ஓரளவு ஈடுசெய்கின்றது. இலண்டனிற் பகல், இலங்கையி ஆலுள்ள சராசரிப் பகல் நேரத்திலும் ஒன்றரை மடங்கு நீண்டது. பகலில்,
அதிக வெப்பமான நேரத்தில் உண்டாகும் மேகக் கூட்டங்களினல் அவ் வெப்ப மானது தணிக்கப்படுகிறது. அதனுற் காற்றில் வெப்பச் சத்தி பாய்வது
குறைந்து நிலத்தை அதிகம் பாதுகாக்கும். உலகில் மிகவும் வெப்பமான பிரதேசம் மத்திய கோட்டைச் சார்ந்த பகுதியெனவே பொதுவாகக் கருதப் படலாம். ஆனல், அது தவறு. வேறு சில காரணங்களால், மத்திய கோட்டைச் சார்ந்த பிரதேசம் ஈரலிப்புடையதாகக் காணப்படும். வறண்ட பகுதிகளிற்றன் மிகக் கூடிய வெப்பமும் அதிக ஒளியுங் காணப்படுகின்றன;
இங்கே கதிர்வீச்சு விரைவில் நடைபெறுகிறது. மத்தியகோட்டுப் பிரதேசங் களிற் பருவகால மாற்றங்கள் சிறியவாகவும், பகல், இரவு என்பன சமமாகவு மிருப்பதற்குரிய காரணங்கள் பொதுப் புவியியல் நூல்களில் நன்கு விளக்கப் பட்டிருக்கின்றன. இவற்றைப் பற்றிய சுருக்கத்தை ஈண்டு குறிப்பிட்டாலே போதும். பூமியின் அச்சு ஞாயிற்று வீதிக்குச் (ஞாயிற்றைச் சுற்றும் பூமியின் சுழற்சித்தளத்துக்கு) செங்கோணமாய் அமைந்தால் உலகிற் பருவ வேற்று மைகளிரா. எங்கும் இரவும் பகலுஞ் சமமாயிருக்கும். ஆனல், அஃது அப்படி யன்று; 23 பாகை சரிந்தேயிருக்கும். மத்திய கோட்டில் மட்டும் செங்கோண மாயிருக்கும் ; அதாவது பூமி ஞாயிற்று வீதியை வெட்டும் இடத்தில் அவ்வா றுண்டு; அஃது எப்பொழுதும் மத்திய கோடு அமைந்துள்ள தளத்துக்கூடாக வேயிருக்கும். இத்தளத்தில் எந்த ஒரு கோட்டைச் சார்ந்தும் தளம்புதல் ofற்படுவதில்லை. பூமி சுழலும் போது மத்திய கோட்டிலுள்ள ஒவ்வொரு புள்ளியும் ஒரு நாளில் ஏதாவதொரு நேரத்தில் இக் கோட்டை யடைகின்றது. இது வருடம் முழுவதும் - பூமிக்கும் சூரியனுக்கு முள்ள தொடர்பு எவ்வா றிருப்பினும்-நடைபெற்றுக் கொண்டேயிருக்கும். இந்தக்கோடு பூமியை அதன் மிகப்பெரிய சுற்றளவில் இரண்டு பாதியாக வெட்டுகிறது. குறித்த ஒரு நேரத்தில் ஒரு பாதி ஒளியுடையதாகவும் மற்றைப் பாதி இருளுடையதாகவு மிருக்கும். மத்தியகோட்டிலிருந்து முனைவுகளைநோக்கிச் செல்லும் பொழுது
பருவ மாற்றங்கள் பெரியவாகின்றன. மேலும், இராப் பகலின் சார்பு நோ நீளம் குறுக்கமென்பiைoம் வேறுபடுகின்றன. இவை ஒரு குறித்த கணத்

Page 69
124 இலங்கைப் புவியியல்
தில் ஒளியைப் பெறுகின்ற ஒவ்வோர் அகலக் கோட்டுப் பிரதேசத்தின் விகி தத்தையும் பொறுத்திருக்கும். மத்திய கோட்டுக்குப் பத்துப் பாகை வடக் கேயும் தெற்கேயுமுள்ள பிரதேசங்களிற் பருவமாற்றங்கள், குளிர் வலயங் களோடும் இடைவெப்ப வலயங்களோடும் ஒப்பிடும் பொழுது மிகச்சிறியவாகத் தோற்றுகின்றன. இதனல், பொதுவாக மத்திய் கோட்டுப் பிரதேசத்தில் பருவங்களேயில்லை யெனக் கூறுவது வழக்கம். அவ்வாறே அவ்விரண்டு அகலக்கோடுகட்கு முட்பட்ட பகுதிகளில் இரவும் பகலும் சிறிது மாற்றமே யடைதலால் அவை சமம் எனக் கூறலும் பொருந்தும்.
இலங்கையின் காலநிலை அது அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தது.
இக்காலநிலை மற்றைத் தேசங்களிலிருந்து வித்தியாசப் படுவதற்கு அது மத்திய கோட்டை யடுத்திருப்பதே காரணமாகும்.

இரண்டாம் பகுதி-ஆரும் அத்தியாயம்
காற் றுக்கள்
மத்திய கோட்டிலுள்ள அமைதிப் பிரதேசத்தில் இந்தியப் பருவக் காற் ருெழுங்கின் எல்லையில் இலங்கை அமைந்திருக்கிறது. அதனல், அவ்வ: மைதிப்பிரதேசம் இலங்கையின் காலநிலையைப் பெரிதும் பாதிக்கிறது. மற்றையது வருடத்திற் சில பருவங்களில், அதன் கால நிலையைப் பெரிதும் மாற்றுகிறது. பருவக் காற்றின் முக்கிய நிலை சம்பந்தமாகப் பெருவழக் காயிருந்து வரும் கருத்துக்கள் மிகவும் பிழையானவை. எனவ்ே, மாணவர் அக் கருத்துக்களைக் கைவிட்டுத் தாமாகவே அவதானிக்குஞ் செய்திகளை ஆராய்ந்து முடிவுக்கு வருமாறு கேட்கப்படுகின்றனர். இலங்கைக்கு வரும் அயல் நாட்டவர் மனத்தில் இலங்கையின் காலநிலை பற்றிப் பதியக் கூடிய, அமிசம் பருவக் காற்று என்பது ஒருதலை. அன்த முன்னர் நிரைப்படுத்திய காலநிலைத் தோற்றங்களின் அட்டவணையிற் சேர்த்துக் கொள்ளானம் சிலருக்கு அதிசயத்தைக் கொடுக்கலாம். ஆனல், வேற்று அகலக்கோடுகளி லிருந்து இங்கு வரும் யாத்திரிகரை உண்மையிற் கவர்க்கூடிய அமிசம் இங்கு நிலவும் அமைதியேயன்றி வீசும் காற்றுக்களல்ல. வளிமண்டல வியக் கத்தின் திசை பற்றியும், பலம் பற்றியும் பலகாலமாகச் செய்யப்பட்ட குறிப் புக்களைக்கொண்டு பின்வரும் உண்மைகளை நிலை நாட்டக்கூடியதாயிருக்கிறது.
1. பொதுவாகக் கூறுமிடத்துக் காற்றுக்களை விட அமைதியே அதிக முண்டு; அமைதி மண்டலத்துக்கு வெளியேயுள்ள நாடுகளிலும் இங்கே அமைதி அடிக்கடி உண்டாவதைக் காணலாம்.
2. இலங்கைக்குக் குறுக்கே செல்லும் அமுக்கச் சாய்வு விகிதம் பெரும் பாலும் சிறிதாகவே காணப்படுகின்றது. மிகவும் அருமையாகவே அது அதிகரிக்கும். ஒரிடத்துக்கும் மற்றேரிடத்துக்குமிடையில் அமுக்கத்திலுண், டாகும் மாற்ற விகிதமே அமுக்கச் சாய்வு விகிதமாகும். காற்றின் வேகம், இச் சாய்வு விகிதத்திலேயே தங்கியிருக்கிறது. திருக்கோணமலையிலுள்ள அமுக்கம், கொழும்பிலுள்ள அமுக்கத்திலும் ' குறைவாயிருந், தால் திருக்கோணமலையை நோக்கிப் பெரிய காற்று வீசும். ஆனல், அவ் வாறுண்டாகும் வித்தியாசம் சிறிதாயிருந்தால், காற்றின் இயக்கமும் சிறிதாகவேயிருக்கும். வடக்கேயுள்ள அகலக்கோட்டுப் பிரதேசங்களிற் சம அமுக்கக் கோட்டையனுசரித்தே காற்று வீசும். இலங்கையிற் சம அமுக்கக்) கோட்டுக்குச் செங்கோணமாயே காற்று வீசுகிறது. இலங்கையில் அமுக்கச் சாய்வு குறைவாயிருப்பதாற் சருவதேசத் திட்டப்படி கணக்கிடப்பட்டுள்ள (மணிக்கு 40 மைல் செல்லும்) “காற்றுவேகம்” இங்கே அருமையாகவே
125

Page 70
26 இலங்கைப் புவியியல்
3. வேகமான காற்று வீச்சு இங்கே இடைக்கிடையுண்டு. அதுவும் தாழ் பூ யில் மிக்க அருமையெனலாம். அது காற்றின் மேற்படைகளிலேயே நிகழ்கின் றது. எனவே மலை நாட்டின் பாறைத்தொடர்களிடையே இதனைக் காணலாம். (ஒஇயா இடைவெளியில், இங்கிலாந்திலுமே இல்லாத வேகம் பதியப்பட்டுள் ளது. ஆனல், இது புற நடையானது)
இலங்கையிற் பிரதானமாக உயர்ந்த குன்றுகளின் ஓரங்களிலும் கடற்கரை களிலுமே காற்று வீசுவது தோன்றும். உயர்ந்த குன்றுகளில் வீசும்காற்று பருவக் காற்றுக்களோடு சம்பந்தப்பட்டது. கடற் கரைக் காற்றுச் சாதாரண மாக வெப்ப வலய நாடுகளிற் காணப்படும் நிலக்கடற் காற்றுக்களினேட்ட மாகும். இது பலமாகச் சில சமயம் வீசும். தாழ் பூமியிற் கடற்கரைக் காற்று உள் நாட்டிற் சில மைல்களுக்கு வீசும். மற்றைப் பகுதிகளில் அமைதி நிலவும் பொழுது கடற்கரையையடுத்துப் பலமான காற்று வீசவுங் கூடும். நீரிலும் நிலத்திற் சூடேறுவது சுலபம். அது போலவே விரைவில் நிலங் குளிர்ந்து விடும். நீரைச் சூடாக்கும் ஓரளவு சூரியவெப்பம், நிலத்தை அதிலும் ஒன்றரை மடங்கு அதிகமாக வெப்பமாக்குகிறது. அதன் பயனக நீர்மேலுள்ள காற்றும் நிலத்தின் மேலுள்ள காற்றும் வேறுபடுகின்றன. எனவே, பகலில் நிலம் வெப்பமடைந்தவுடன் அதன் மேலுள்ள காற்றும் சூடாகி மேலெழுகின்றது. அந்த வெளியை நிரப்பக் கடல்மேலுள்ள குளிரான காற்று நிலத்தை நோக்கி வீசுகிறது. பகல் நேரத்திற் கடற்கரையையடுத்துக் கடற் காற்று வீசும். இதன் வேகம், நிலக்காற்றிற்கும் கடற்காற்றிற்குமுள்ள வெப்ப பேதத்திற்றங்கியுள்ளது. இரவில் இந்த முறைமாறுகிறது. நிலம் கடலிலும் விரைவாகக் குளிர்ந்து போகிறது. அதனல், கடலை நோக்கி நிலத்திலுள்ள காற்று வீசும். மத்திய வலயத்திலும் அயன மண்டலத்திலேயே நிலத்துக்கும் கடலுக்குமுள்ள வெப்பவித்தியாசங்கள் மிக அதிகம். எனவே, நிலக்காற்றும் கடற்காற்றும் அயன மண்டலத்திலேயே அதிகம் பலமாகக் காணப்படுகின்றன. கடற் க்ாற்றுத் தேக சுகத்துக்கு வாய்ப்பாயிருக்கிறபடியால் மக்கள் கரையோரமாக வீடுகள் கட்டியிருக்கிறர்கள். ஆனற் சில மாதங்களிற் காற்றுப் பலமாக வீசுவதாற் கடற் காற்றைத் தவிர்த்துத் தரைப்பக்கப் பலகணியைத் திறந்து வைப்பர். கடற்கரையெங்கும் குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. காட்டுப் பகுதிகளிலே இத்தகைய குடியிருப்புக் குறைவு. கரையையடுத்து மக்கள் குடியிருப்பதற்கு வேறு காரணங்களுமுண்டு; ஆனல், முக்கியமான ஒரு கார்ணம் இதுவே.
பருவக் காற்றுக்களைப் பற்றி ஆராயுமுன்னர், அமைதிநிலவுங் காலங்களில் இலங்கையில் என்ன நடைபெறுகிறதென்பதைப் பற்றி ஆராய்வாம். மற்றைத் திரவங்கள்ேேேபாலவே காற்றும் அடியிலிருந்து சூடாகிறது. பூமியின் மேற்பரப்போடு சேர்ந்த காற்று முதலிற் சூடாகிறது. அவ்வாறு குர்ேன் காற்று விரிகிறது; விரிந்து மேலே எழும்பொழுது அவ்வெற்றிடத்தை

பெளதிகப் புவியியல் 27
நிரப்பக் குளிரர்ன காற்றுப் புகும். ஞாயிற்றுக் கதிர்கள் பூமியினல் உட்கொள்ளப்பட்டு, காற்றின் அடிப்படையைச் சூடாக்கு முன் அவை அதனை அதிகம் பாதிப்பதில்லை. வலியகாற்றேட்டம் போன்ற குழப்பத்துக் கேதுவான காரணங்களில்லாவிடின், வளி மண்டலத்திற் காற்றேட்டம் மேலுங் கீழுமாகவே நடைபெறும். இவை மேற்காவுகைக் காற்றேட்ட மெனப்படும். சூடான நாட்களில் இக் காற்றேட்டம் அதிகமாயிருக்கும். எனவே, அமைதியான நாட்களிற் காற்றில் ஒட்டமில்லாதிருக்குமென்று கூற முடியாது. அக்காலங்களிலேயே காற்ருேட்டமதிகமாயிருக்கும். ஆனல், அத்தகைய காற்றசைவை நாம் நன்கு உணரமுடியாதிருப்போம். நமது தேகத்தோடு காற்றேட்டம் முட்டி ஒரு கோணத்தையாக்கும் பொழுது காற்று வீசுகிறதென நாம் கூறுகின்ருேம். கோணமாகாமல் நேர் கோடாகச் செல்லும் பொழுது காற்று நின்று விட்டதென எண்ணுகிறேம். சூரியன் உச்சமாகத் தோன்றும் பிரதேசங்களில் இத்தகைய மேற் காவுகைக் காற்றேட்டம் இயற்கையாகவுண்டு. எனவே, அமைதிவலயத்தில் இது நாடோ றும் நிகழும். இலங்கைக் காலநிலையைப் பாதிக்கும் அடிப்படை அமிசம், மேற்காவுகைக் காற்றேட்டமாகும்; இதைக் குழப்பக்கூடிய காரணங் களில்லாதவரை இக் காற்றேட்ட மெப்பொழுது முண்டு. இவ்வாறு குழப்ப முண்டாக்கும் ஒரு காரணம் இந்தியப் பிரதேசத்தில் நிகழும் பருவக் காற்றகும். இலங்கை இந்தியப் பிரதேசத்தின் வெளியோரத்தில் அமைந் திருக்கிறது.
சமீபகாலத்தில், இந்தியப் பிரதேசத்திற் பருவக் காற்றுக்களைப் பற்றிய முக்கியமான கால நிலைக் குறிப்புக்கள் பல சேகரிக்கப்பட்டன. இப் பிரதேசத் தில், வளிமண்டலத்தில் என்ன நிகழ்கிறதென்பதை நன்கு அறிந்து கொள் வதற்காக இவ்விவரங்களைச் சிறிது சிறிதாகத் தொகுத்து ஆராய்ந்து வரு கிறர்கள். இவற்றை முற்ருய் ஆராய்ந்து முடிபுகாணப் பல காலம் எடுக்கும். ஆனல், இந்திய வளிமண்டல ஆபாய்ச்சியாளர் சில முடிபுகளைச் செய்திருக் கிருர்கள். அவை சில சம்பவங்களை விளக்குகின்றன. கலாநிதி சி. சி. சிமிசன், சி.பி, எபு:ஆர்.எசு. அவர்கள் இலண்டனிலுள்ள அரசாங்க வளிமண்டலச் சங்கத்து மும்மாசவெளியீட்டில் “தென் மேற்குப் பருவக் காற்று” என்ற தலையங்கத்துடன் ஒரு கட்டுரையை 1921 ஆம் ஆண்டு யூலை மாத இதழில (தொகுதி 47, இல, 199) எழுதியிருக்கிருர். பருவக் காற்றேட்டத்தைப்பற்றிய புதிய கருத்துக்களின் சுருக்கத்தை அதிற் காணலாம். அது மரணுக்கர்க்கு மிகப் பயனுடைய கட்டுரையாகும். பருவக் காற்றைப் பற்றி விரிவான ஓர் ஆராய்ச்சி செய்வது இந் நூலின் நோக்கமன்று. இந்தியாவைப் பற்றி எழுதப்படும் நூலே அதற்கு எற்ற இடமாகும். ஆனல், இவ்விடயத்தைச் சரிவர ஆராய்ந்து கூறும் நூல்கள் இப்போது சிலவேயிருப்பதால், அவுற். றுள்ளும் இலங்கை சம்பந்தப்பட்ட வகையில் கூறுபவுை மிகக் குறைவாயிருப்ப தால், இவ்விடயத்தைப்பற்றிக் கூடிய குறிப்புக்களிங்கே கொடுக்கப்படுகின்றன.

Page 71
28 இலங்கைப் புவியியல்
பொதுப் புவியியலைப் பற்றிக் கூறும் நூல்களிற் பருவக் காற்றுச் சம்பந்த மாகக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளை வாசிக்குமாறு வாசகர் வேண்டப்படுகின் றனர். இத்தகைய நூல்களிற் கூறப்படும் எளிதான விளக்கம், மிகவும் பொதுப்படையானது. பெரும்படியான அடிப்படைக் கொள்கைகளே அங்கு விளக்கப்படுகின்றன. “மொன்சூன்,' என்ற சொல் அரபுச் சொல்லினடியாகப் பிறந்தது. இதன்பொருள் பருவக் காற்று என்பது. ‘இது தனிப்பட்ட ஒரு பெளதிகத்தன்மை காரணமாய் ஏற்படுவதன்று. வெப்பநிலை,
4% நிலம் ZாZ தார் ടില്ല ܓܠ
リ%
V) ー
தென் மேற்குப் பருவக்காற்றுக் காலத்திற் காற்றேட்டத் தொகுதிகளைக் காட்டும் படம்; மெல்லிய
அம்புக் குறி காற்றேட்டத்தைக் காட்டுகிறது. தடித்த கோடுகள் மலைத் தடுப்புக்கள். (கலாநிதி
சிமிசன் எழுதிய “ தென்மேற்குப் பருவக் காற்று ” என்ற நூலிலிருந்து பிரதி செய்யப்பட்டது.
அரசாங்க வளிமண்டல ஆராய்ச்சிச் சங்கத்தால் உதவப்பட்டது.)
காற்று அமுக்கம், ஈரப்பதன், கடல் நிலம் என்பவற்றின் புவியியல் சம்பந்தமான தொடர்பு, புவிச் சுழற்சி, மலைத் தொடர்களின் அமைப்பு என்ற இவற்றலுண்டாகும் நிலைமைகள் சேர்ந்தே எற்படுவது. இவற்றுட்கடையது மிகப் பிரதானமானது” என்று கலாநிதி சிமிசன் கூறு கிற்ர். குழப்பமுண்டாக்கும் காரணங்களில்லாவிடின், இந்தியா, வடகிழக்கு வியாபாரக் காற்றுப் பிரதேசமெனச் சாதாரணமாகக் கூறப்படும் காற்றுப் பிரதேசத்திலேயே அடங்கியிருக்கும். மழை காலத்தில் வீசும் வட கிழக்குப்

பெளதிகப் புவியியல் 129
பருவக் காற்றனது சாதாரணமாக வீசக் கூடிய இயற்கையான காற்றென்றே கருதுவோம். இதற்கு விளக்கம் பின்வருமாறு: நிலப்பரப்பானது விரைவிற் குளிர்ந்துகொண்டு வருவதால், அதன்மேற் பரவியுள்ள காற்றுக்கு அதிக அமுக்க மேற்படவே காற்றுக் கடலை நோக்கி வீசும். இந்தக் காற்று மத்திய கோட்டை நோக்கி வீசுவதால், எப்பொழுதும் வெப்பமுடையதாயிருக்கும்; அதனல் அதன் ஈரம் தாங்கும் தகுதி அதிகரிக்கும்; ஆதலின் வட கிழக்கு வியாபாரக் காற்றைப் போலவே இதுவும் நீரை உறிஞ்சி நிலத்தை வறட்டிக் கொண்டு செல்லும்; வியாபாரக் காற்றுக்கள் எப்பொழுதும், மழை யின்மையை உண்டாக்குவன. வட கிழக்குப் பருவக் காற்றும் இந்தியாவில் வறட்சியை உண்டாக்குகிறது. ஆனல், காற்றிலே ஈரம் நிறையவுண்டு. உயர்ந்த மலை குறுக்கிடுமானல் இக் காற்றுக்கள் இரண்டுமே மழை யைக் கொடுக்கும். எனவே, வட கிழக்குப் பருவக் காற்று இந்தியாவின் கிழக்கு மலைச் சாய்வுகளில் மழையைக் கொடுக்கிறது. இலங்கையிலும் மலை நாட்டு வட கிழக்கு ஓரங்களிற் சிறிது மழையைப் பெய்விக்கிறது. இப் பருவக் காற்று இலங்கையின் கால நிலையில் முக்கியமான அமிசமன்று. எனவே, இலங்கையின் சில பாகங்களில், விசேடமாகத் தெற்கிலும் மேற் கிலும் அதிக பயனை விளைப்பதில்லை. வடகரையிலும் கிழக்குக்கரையிலும், மலை நாட்டின் வட கிழக்குச் சாய்விலுமே பயன் விளைவிக்கிறது.
தென் மேற்குப் பருவக் காற்று இந்தியக் காலநிலையிற் பெரிய மாற்றங் களையுண்டாக்குவதுடன் அதன் பொருளாதார வாழ்க்கையிலும் முக்கிய மான விளைவுகளையுண்டாக்குகிறது. கோடைகாலத்தில் இந்திய நிலப்பரப்புப் பெரிதும் வெப்பமடைகிறது. அதனல் வடக்கிற் சிற்றமுக்கப் பிரதேச முண்டாகிறது. மிக வறட்சியுள்ள காற்றேட்டம் வளி மண்டலத்தின் மேற் படைகளில் நிகழ்வதாலும், அது ஈரான் மேட்டுநிலத்திலிருந்து வீசுவதாலும், சிற்றமுக்கப் பிரதேசத்தின் குவியம் வடமேற்கில் அமைகிறது. அதன் மத்தி தார்ப் பாலைநிலமாகும். யூலை மாதத்தில் இப்பகுதியில் உலகில் எங்கு மேயில்லாத சிற்றமுக்கப் பிரதேசம் உண்டாகிறது. இச் சிற்றமுக்கத்தை நாடி எல்லாத் திசையிலிருந்தும் காற்று வந்து குவிகிறது. இந்தியாவின் வடதிசையில் ஒரு பெட்டியின் மூன்று பக்கங்களைப் போல உலகிலேயே மிக உயர்ந்த மலைகள் சூழ்ந்திருக்கின்றன. மத்திய ஆசியாவிலிருந்து வரும் காற்ருேட்டத்தை இவை தடுத்து இந்தியாவுக்குத் தனியானதொரு காற் ாேட்டத்தை யுண்டாக்குகின்றன. இதனல், கோடைப் பருவக் காற்றனது இந்தியப் பிரதேசத்துக்கே தனியாக உரியதாகிவிடுகிறது. மலாயாத் தீபகற் பத்தைச் சேர்ந்த நீண்ட மலையடுக்குக்கள் தடுப்பதால் இக்காற்று இந்து சீனத்தைக் கூட அடைவதில்லை. அடுத்துள்ள விளக்கப்படத்திற் காட்டப்பட்ட வாறு தென் மேற்குப் பருவக் காற்றனது இந்தியாவின் எல்லாப் பகுதி களிலும் அத்திசையிலிருந்து வீசுவதில்லை. அது வடக்கே கீழ்த் திசையிலி ருந்தோ தென் கிழக்குத் திசையிலிருந்தோ வீசும். கோடை முதிர முதிர, தார்ப் பாலைநிலத்திற் சூடு அதிகரிக்கும். அதனல் அமுக்கம் குறையும்.

Page 72
130 இலங்கைப் புவியியல்
அமுக்கம் குறையக் குறையக் காற்றேட்ட ஒழுங்கு தெளிவடையும். கோடை முதிர முதிர ஒழுங்கு அதிகரிக்கும். பாதிக்கப்படும் பிரதேசமும் பெரிதாகும். தென்னிந்தியா மத்திய கோட்டுக்குச் சமீபத்திலிருக்கிறது. தென் அரைக் கோளத்திலிருந்து வரும் காற்றேட்டம் தடைப்படுகிறது. தென்கிழக்கு வியா
, ,
LILI b 41 மே மாதத்தில் இந்தியாவிலுண்டாகும் அமுக்கமும் காற்றேட்டமும், தடித்தகோடு= சம வமுக்கக்கோடு. (சம அமுக்கமுள்ள இடங்கள்). அம்புக்குறிகள் காற்றின் திசையைக் காட்டும். (அரசாங்க வளிமண்டலச் சங்கத்தினர் அனுமதிப்படி பிரதி செய்யப்பட்டது).
பாரக் காற்றனது மத்திய கோட்டுக்கு மேலே வடக்காகக் கொண்டு செல்லப் படுகிறது. இதுவே தென்மேற்குப்பருவக் காற்றெனப்பெயர்பெறுகிறது. இதற் கெல்லாம் சிலகாலஞ் செல்லும் ; யூன்மாத ஆரம்பத்திற்றன் இது திட்டமாக உருப்பெறுகிறது. யூன், யூலை, ஒகத்து மாதங்களில் இக்காற்றின் முக்கியமான தன்மைகள் உருப்பெற்றுவிடுகின்றன. கோடைக் கடைசியில் தார்ப் பாலை நிலத்தில் அமுக்கம் அதிகரிக்கிறது. பின்னர் அதன் வெளியெல்லைகளில் நிலைமை மாற்றமடையத் தொடங்கும். இலங்கை தென்மேற்குப் பருவக் காற்றுப் பிரதேசத்தின் எல்லையிலிருக்கிறது. அதனல் யூன், யூவை, ஒகத்து
 

பெளதிகப் புவியியல் 13.
மாதங்களில் முக்கியமாகப் பாதிக்கப்படுகிறது. ஆனல், தென்மேற்குப்பருவக் காற்று ஆரம்பமாகும் காலத்திலும், முடிவுறும் காலத்திலும், இலங்கையின் காலநிலை நிச்சயமற்றதாய் இருக்கிறது. தார்ப் பாலைநிலத்துக் குவியம் அப்ே வளவு தூரம் பரந்து இலங்கையைப் பாதிக்கமுடியாது. எப்பிரில் மாதத் திலும், யே மாதத்திலும் தென் சமுத்திரத்திலிருந்து ஈரலிப்பான காற்றை உள்ளே இழுப்பதற்கு முன்னர், கரையையடுத்த காற்றேட்டங்கள் திட்ட மானவையல்ல; (41 ஆம் படம் பார்க்க). அதனுற் கடலிலிருந்து காற்றுத் திட்டமாக நிலத்தை நோக்கி அசைவது நிச்சயமில்லை. இக்காலத்தில் இந்தியா வில் தென்கோடியைத்தவிர, மற்றை இடங்களில் மழைபெய்வதில்லை. எனவே நிலத்தில் வெப்பம் மிக அதிகரிக்கும். இவ்வெப்பம் தெற்கே சற்று நேரத்தோடு துவங்கிவிடுகிறது. இப்பகுதி, ஈரலிப்புடைமையாலும், மேற் காவுகை மழையுடைமையாலும் வெப்பம் அதிக மடைவதில்லை. வெப்பம் வடக்கு நோக்கிப் பரவுகிறது; வளிமண்டலத்தில் வெளிப்பு இருக்கிறபடியாற் கதிர்வீச்சு அதிகமாயிருக்கும் வறண்டபகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். எனவே, தார்ப் பாலைநிலம் மே மாதத்தில் அக்கினிக்குண்டம் போலி ருக்கும். அதிலிருந்துண்டாகும் வெப்பம் சுற்றியுள்ள நாடுகளை வெகு தூரம் பாதிக்கும். மழைதுவங்கியவுடன் வெப்பம் பெரிதுமடங்கிவிடும்.
இந்தக்கால நிலைத்திட்டத்தில் இலங்கையைப் பொருத்திப் பார்ப்பதனல், பெரும்படியாக ஒருவருடத்தை நான்கு பருவங்களாகப் பிரிக்கலாம். இரண்டு பருவங்களில் வழக்கமான மத்தியகோட்டுக் காலநிலை காணப்படும். மற்றை இரு பருவங்களிற் பருவக்காற்று நிலைமை உண்டாகும். இக்கடைசியிரு பருவங்களும் தெளிவாகப் பிரிக்கப்படக்கூடியவையல்ல. வருடம் தோறும் இவை சிறிது மாற்றமடையும். எனினும், பின்வரும் பிரிவைமனத்தில் இருத்திக்கொள்வது நன்று:-
அ. திசெம்பர் )
சனவரி வடகிழக்குப் பருவக்காற்றின் ஆட்சி.
பெப்புருவரி) ஆ. மாச்சு பருவக்காற்றுக் கிடைப்பட்ட காலம். மத் தியகோட்டுக் எப்பிரில் காலநிலைத் தன்மைகள் பெரும்பாலாக உண்டு. இந்திய Gио “வெப்பக் குவியம்” வெப்ப நிலையைப் பாதிக்கிறது. 9. и 16óї
பூலை தென்மேற்குப் பருவக்காற்றின் ஆட்சி. ليhئر gp b
ஈ. செத்தெம்பர் பருவக்காற்றுக் கிடைப்பட்ட காலம் ; ஒற்ருேபர் மத்தியகோட்டுக் கால நிலைத் நவெம்பர் தன்மைகள் ஓங்கிநிற்கும்.

Page 73
32 இலங்கைப் புவியியல்
காற்றேட்டங்களைப் பொறுத்தவரையில் இலங்கை தனிப்பட்டவொரு நிலை யிலிருக்கிறது. இந்த வகையில் இதனை வேறெத்தேசங்களோடும் ஒப்பிட்டுக் காட்டமுடியாது. ஆனல், சில கிழக்கிந்திய தீவுகளை ஒப்பிடலாம். பருவக் காற்று மாறும் பொழுது, பிரதானமாக அராபியக் கடலையடுத்து வளிமண்ட லத்தில் உண்டாகும் பெரிய குழப்பங்கள் இலங்கைவரை பரவுவதில்லை. சூரு வளிபோன்ற காற்றுக்குழப்பம் இலங்கையையும் பாதிக்கிறதென்று சமீபத்திற். செய்த ஆராய்ச்சியின் பயனுயறியக் கூடியதாகவிருக்கிறது. இவை இடை வெப்ப வலயத்திலுண்டாகும் சூறவளி போன்றவை. சிற்றமுக்கப்பிர தேசத்தையொட்டியெழும் காற்றினேட்டமாயுள்ளவை. நகர்ந்துகொண் டிருக்கும் இத்தகைய சிற்றமுக்க மையங்களுக்குத் தோற்றமெங்கே யென்பது இன்னுந் திருத்தமாக அறிந்து கொள்ளப்படவில்லை. இவை சுழிகளோடு சம்பந்தமுள்ளவையென்று கூறப்படுகிறது. ஓர் ஆற்றில் உண்டாகும் சுழி களோடு இவற்றை ஒப்பிடலாம். இவற்றுட் பெரும்பாலானவை ஒரேதிசையை நோக்கி அசைகின்றன. இந்து சமுத்திரத்திலுண்டாகும் சூறவளியும், இச்சுழிகளின் பெருந்தோற்றமென்றே கூறலாம். பெரிய ஆறுகளிற் சில் சமயமுண்டாகும் சுழிகளைக் கருத்திலிருத்தி விளங்கிக்கொள்ளலாம். இடை வெப்ப வலயத்திலுண்டாகும் சூறவளி போன்றவை வங்காள விரிகுடாவில் அடிக்கடியுண்டாகின்றன. இலங்கை இவற்றின் எல்லையிலிருப்பதால், இவற்றற் பாதிக்கப்படுகின்றது. இலங்கையில் அவதானித்த சம்பவங்களையும் இந்திய அவதான நிலையங்களின் அறிக்கைகளையும் ஒன்றுசேர்த்து ஆராயும் பொழுது இம்முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது. காற்றுக்களைப் பொறுத்த வரையில் அவை அவ்வளவு விளைவுகளையுண்டாக்குவதில்லை. ஆயின் சில சமயம் மென்மாருதத்தையும் வடகிழக்குப் பகுதிகளிற் சிலசமயம் பலமான வீச்சையுமுண்டாக்குகின்றன. மழை வீழ்ச்சிக்கும் இக்காற்றுக்கள் காரண மாயிருக்கின்றன. அக்காரணங்களைப் பின்னர்க் கவனிப்பாம்.
இலங்கைக் காற்றுக்களைப்பற்றி இதுவரை கூறினேம். ஒரு விடயத்தை மறுபடியும் வற்புறுத்த வேண்டியிருக்கிறது. அமைதியே இலங்கையின் காலநிலையை அதிகம் பாதிக்கிறதன்றி இக்காற்றுக்களல்ல. சிலகுறிப்பிட்ட பகுதிகள் மட்டும் இதற்கு விதிவிலக்காயுள்ளன.

இரண்டாம் பகுதி-ஏழாம் அத்தியாயம் இலங்கையின் மழைவீழ்ச்சி
பருவக்காற்றும் மலையுமே மழைவீழ்ச்சிக்குக் காரணமென்று அவற்றின் முக்கியத்தை மிகைபடுத்திக் கூறுவது சாதாரணப் புவியியல் நூல்களின் இயல்பாகும். இலங்கையில் மழைபெய்வதற்குக் காரணம், பருவக்காற்றுக் களும் மலைகளுமேயன்றி வேறில்லையென இலங்கையிற் பெரும்பாலோர் கருதுவதற்கு இதுவே நியாயமெனலாம். பருவக்காற்றுக் காலங்களின் நடுப்பகுதியிலேயே எங்கும் அதிகமழை பெய்கிறதெனவும் அவர்கள் எண்ணுகின்றனர். இப்பிழையான முடிபையேற்றுக் கொள்ளுவோர் பின் வரும் வினக்களை வினவிக்கொள்ளல் வேண்டும். அமைதியான நாட்கள் மிகவுள்ள காலங்களில், இலங்கையில், மலைப்பிரதேசத்துக்கு மிக்கதுரத்தி லுள்ள தாழ்பூமியில், அடிக்கடி மழைபெய்வது எதனுல்? இலங்கையில், 24 மணிநேரத்துட் பெய்த மிகக்கூடிய மழைவீழ்ச்சியானது, வடக்குச் சமவெளியில் முல்லைத்தீவுக்குச் சமீபத்திற் குறிக்கப்பட்டிருப்பதாக அவ தான நிலையப்பதிவுகளிற் காணக்கிடக்கின்றது. அதற்குக் காரணமென்ன? மழைவீழ்ச்சி சம்பந்தமாக ஆராய்ச்சி செய்வதானல், அவதான நிலையப் பதிவுகளை வைத்து ஆராயவேண்டும். கொழும்பு அவதான நிலைய அறிக்கை யில் வேண்டிய எவ்வருடத்து மழைவீழ்ச்சியும், எல்லா மாதச் சராசரியும், கடைசியாகக் கழிந்த மாதம் வரை குறிப்பிடப்பட்டிருக்கும். மாணக்கர் இந்த அறிக்கையில் ஒன்றைப் பெற்று அதை நன்கு கற்க வேண்டும் என்பதை இன்னும் உறுத்திக்கூற வேண்டியதில்லை.
மூன்று வகையில் மழை வீழ்ச்சியை ஆராயலாம்.
(1) புவியியல் தொடர்பான மழைப் பரம்பல் , (2) பருவகால மழைப் பரம்பல் ; (3) அதன் காரணங்கள். இவற்றை ஒவ்வொன்றக இனி ஆராய்வாம்.
(1) 42 ஆம் படத்தில் வருடச் சராசரி மழைவீழ்ச்சியின் பரம்பல் காட்டப் பட்டிருக்கிறது. நாள் மழைவீழ்ச்சிகளைப் பதிவுசெய்து ஒரு முழுவருடத்துப் பதிவுகளைக் கூட்டல் வேண்டும். பின்னர் ஒரு நிரையிலுள்ள பல வருடங்களின் சராசரியைக் காணவேண்டும். நீண்டகாலங்களுக்குரிய சராசரி காண்பதானுல் மிகப்பயe)டையதாகும். இலங்கையிற் பல மழைவீழ்ச்சிப் பதிவுகள் 20 வருடங்களுக்கு மேற்பட்டவை. வேறுபல 60 வருடங்கள்வரை பதிவுசெய்யப் பட்டுள்ளன. சமமழைவீழ்ச்சிக் கோடுகளே படத்திற் குறிக்கப்பட்ட எல்லைக்கு இடையே வரும் ஒரே சராசரி மழை வீழ்ச்சியையுடைய இடங்களை உள்ளடக்கிச் செல்கின்றன. இப்பிரிவுக் கோடுகள் தீவுக்குக் குறுக்கே மூலை விட்டம் 33

Page 74
C
|g. ܠܐܗ s
50
KM. W w W XVV ぐ@ ANM V N\\ V V JVKINN
vvv v,V V \ MYNYM 勾
'v : VN
\\
75
7.
ქ0
6 m > 2 oo" 6
75
படம் 42.
கொழும்பு வளிமண்டல அவதான நிலையத்து அறிக்கைப்படி 1926 ஆம் ஆண்டுவரையுள்ள வருடச் சராசரி மழை வீழ்ச்சி. கோடுகள் “ சமமழை வீழ்ச்சிக் கோடுகள் ” எனப்படும்.
 

பெளதிகப் புவியியல் 135
போல் தென்ம்ேற்கிலிருந்து வட கிழக்காக ஒடுவதைக் கவனிக்கலாம். மொத்தத்தில் இலங்கையில் நல்ல மழைவீழ்ச்சியுண்டு. தென்மேற்குத் தாழ்.மியிலும் மலைநாட்டின் ஓரங்களிலுமே அதிக மழை பெய்கிறது. ஒாங்களின் இருபுறத்திலும் மழைவீழ்ச்சி சிறிது சிறிதாகக் குறைந்து செல்லு:ம். 50 அங்குலத்துக்குக் கீழ்ப்பட்ட மிகக்குறைந்த மழைவீழ்ச்சி, சிலாபத்திலிருந்து யாழ்ப்பாணம் வரையும், தங்காலையிலிருந்து பொத்து வில்வரையுமுள்ள குறுகிய கரைப் பிரதேசத்திலேயேயுண்டு. மலை நாட்டிலும் மழைவீழ்ச்சி குறைவாயுள்ள இரண்டு பகுதிகளுண்டு. இவையிரண்டும் இயற்கையிலமைந்த பள்ளங்களாகும். முதலாவது கண்டிக்குச் சமீபத்தி லுள்ள மலிப்பிட்டியாப்பள்ளம். அப்பெயருள்ள கிராமம் அதன் மத்தியி லிருக்கிறது. இரண்டாவது ஊவா வடிநிலம். சிவனெளிபாதத்துக்கு அண் மையில் மலைநாட்டின் தென்மேற்குப் பக்கத்தில் உள்ள ஒரு சிறிய பகுதியி லேயே மிக அதிகம் மழைபெய்கிறது. இங்கேயுள்ள அவதான நிலையங்களிற் பெரும்பாலானவை வருடத்தில் 200 அங்குலத்துக்கு அதிகமான மழை வீழ்ச்சியைப் பதிவுசெய்கின்றன. 50 வருடங்களுக்கு அதிகமாகப் பதிவு செய்யப்பட்டு வரும் பதுப்பொளையிற் சராசரி மழைவீழ்ச்சி 218 அங்குலம் ஆகும். சிவனெளிபாதத்துக்கு முன்னலுள்ள காணேத் தோட்டத்திலும், வட்டவளைக்குச் சமீபத்திலுள்ள பிளாக்கு வாட்டர் தோட்டத்திலும் வருடத்திற் சராசரி 300 அங்குலத்துக்கு அதிகமுண்டு. ஆனல், இப்பதிவுகள் சில வருடங் களுக்கு மட்டுமேயுண்டு. இப்பகுதிகளிற் சில இடங்களில் 24 மணி நேரத் தில் அதிசயப்படக்கூடிய விதம் அதிகமழை பெய்திருக்கிறது. 24 மணி நேர மழைவீச்சிப் பதிவுகளைக் காட்டும் இங்குள்ள படத்தில் மிக அதிக பழையுள்ள இடம் மலைப்பிரதேசத்திலில்லை யென்பதும், அதற்கு வெகுதுரத்திலுள்ள தாழ்பூமியிலுண்டென்பதும் குறிப்பிடத்தக்கது. இலண்டனின் வருடச்சராசரி 25 அங்குலம். ஆனல், 1897 இல் மாங்குளத்துக் கண்மையிலுள்ள நெடுங் கேணியில் ஒரே ஒரு நாளில் இதுவும் (25) இதற்குமேல் 7 அங்குலமும் வீழ்ந்துள்ளது. இது அசாதாரணமான ஒரு வீழ்ச்சியென்பதுண்மையே; ஆனல், மழை உண்டாவதற்கு மலைகள் தேவையில்லை யென்பதை இது வற்புறுத்துகிறது. மிகக்குறைவான மழையுள்ள இடம், முத்துக்குளிப்புக் குப் பேர்போன மறிச்சுக்கட்டியாகும். இங்கே வருடத்திற் சராசரி 34 அங்குல (ழையேயுண்டு.
இடைவெப்ப வலய நாடுகளோடு இலங்கையின் மழைவீழ்ச்சிப் புள்ளிவிவ ாங்கள் ஒப்பு நிற்கக்கூடியவையல்ல. இலங்கை போன்ற ஒரு நாட்டின் மழை வீழ்ச்சிப்படத்தை ஆராயும் பொழுது இதனைக் கருத்தில் இருத்திக்கொள்ள வேண்டும். வெப்பமுள்ள பகுதிகளில் வீசும் காற்றில், அதிகநீராவியுண்டு. அது குளிரும் பொழுதும் அதிக நீரை வெளிப்படுத்தும். எனவே குளிரான அகலக்கோட்டுப் பிரதேசங்களிற் பெய்யும் ஒரு பாட்டம் மழையிலும் சூடான பிரதேசங்களிற் பெய்யும் ஒருபாட்டம் மழையில் அதிக நீர் உண்டு. சில மணி நேரத்தில், அல்லது ஒரு மணி நேரத்தில் ஒரங்குல மழை இலங்கையிற்

Page 75
24 மணிநேரத்தில்
8)தடிம்பரில் 2248" உய700ழ
༠ வீழ்ச்சிப்பதிவு
ہو۔ ۔ ۔ ۔ ۔نہ ص.....%
1917 திசம்பரில்31.78
※。 (52 வருடம்)
6622/25
2f
நெடுந்தெனி fasz de goaze
விழழ்த்ஐ /334 தி|செமL/2195 S. o (33 வருடர்) ? சென மாட்டிಕ್ಲಿಷ್ಗಳ್ಗಿ' V
/9/9 cダーó72/ 欲 24.78 அம்பழறைக் രീ
A r* Tor G " ! "192 திசிைம்பரில் 733 قلاقله 37) டதுப்பெர7ே (48 O/G25A -/o)
് ബffി 227 ಕ್ವಿಜ್ಜಿ”#
6)/ II ata7 . ዘሃ கெனில்வுேது 2793ஒற்றேர்பரில் 2065" (அல்வித்தோட்டிம்) (12)/(BLtd)
793 ஒற்றேடரில் 20.9"
(12வருடம்)
அடைப்புக்குறியில் ஜிழ்த /ബ/0/7 பதிவு
உன்7ை3ருடங்களிர் சிதாகை.
LuLúd 43.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 137
பெய்யுமானல் அது ஒரு பெரிய வீழ்ச்சியெனக் கருதப்படமாட்டாது.
இங்கிலாந்தில் இது நிகழ்வது அருமை. அப்படி நிகழுமானல் அது புதின மாகக் கருதப்பட்டுப் பத்திரிகைகளிற் பிரசுரிக்கப்படும். இலங்கையில் ஒவ்
வொரு பாட்டத்திலும், அதிக நீர்வீழ்ந்தாலும், சூரிய வெப்பம் அதிக மாயிருப்பதால், அதிற் பெரும் பகுதி நீராவியாகி மேலே கிளம்பிவிடுகிறது.
எனவே, இம்மழையின் பெரும்பகுதி, உயிரினங்களுக்குப் பயனற்றதாய் மறுபடியும் வளிமண்டலத்தோடு போய்ச் சேர்ந்துவிடுகிறது. இதனலேயே இலங்கையிற் காற்று ஈரப்பதன் அதிகமுடையதாகக் காணப்படுகிறது.
இலண்டனில் 25 அங்குல மழையிருந்தால், பயிர்கள் வாடாதிருக்கவும், நீர்ப்பாசனமின்றி விவசாயம் செய்யவும் போதுமானது. இடைவெப்பவலயத்
தேசங்களில் 20 அங்குலத்துக்குக் குறைவான மழையிருந்தாலுமே போது மானதாகும். இலங்கையில் இதனிரண்டுபங்கு மழைபெய்தாலும் போதாது.
நிலம் பாலைநிலமாக மாறிவிடும். 50 அங்குலத்துக்கு அதிகமாக மழை பெய்தாலும், அதிற்பெரும்பாகம் நீராவியாகமாறிவிடுவதால், விவசாயத்
துக்கு நீர்ப்பாசனம் தேவைப்படுகிறது. நீர்பாய்ச்சாமல் விவசாயஞ் செய்வ தானல் அந்தப்பகுதியில் 75 அங்குலத்துக்கு அதிகமான மழைபெய்ய வேண்டும். 75 அங்குலச் சமமழைக் கோடானது ஏறக்குறைய எல்லாக்குளங்' களையும் புறத்தே விட்டுச்செல்கிறது. பொதுவாகக் கூறுவதானல், ஒரிடத்தில் மாதம் ஒன்றுக்கு 4 அங்குலத்துக்குக் குறைவாக மழைபெய்யுமானல் அம்மழை இலங்கையிற் பயனற்றதாகி விடுகிறது. ஆனல், 150 அங்குல மழைஉள்ள இடமானல் வெள்ளத்தைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டு பிடிப்பது ஒரு பிரச்சினையாகும்.
(2) இதனேடு இணைக்கப்பட்ட படத்திற் பருவகால மழைவீழ்ச்சி காட்டப் பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் பல் வேறு மழை வீழ்ச் சித்தானங்களிலுள்ள பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டன. இது எவ்வாறு செய்யப்பட்ட தென்பதை அறிவதற்கு முதலிற் குறிப்பிட்ட சில மழை வீழ்ச்சி வரைப்படங்களை ஆராயவேண்டும். கீழே தரப்படும் புள்ளிவிவரங் களைக் கொண்டு அத்தகைய வொரு படத்தை ஆக்கிக் கொள்ளலாம்.
மாதச் சராசரி மழை வீழ்ச்சி ; சில நிலையங்களில் 1926 வரை பதிவு செய்யப்பட்டன
மாதங்கள் சன. பெப். மாச் எப். மே யூன் யூலை ஒக. செத், ஒற். நவெ. திசெ. கொழும்பு 845 1.97 4.72 7.99 338 8-25 (37. 325 6-38 13:09 71 538 அனுராதபுரி . . 401 1:51 2.79 667 3:36 132 1.28 1.73 3:03 970 10-67 877 வட்டவளை 558 224 7-27 9'69 2076 40.89 31.06 2868 27.91 22.85 1536 784. கண்டி a 5.8 221 400 666 569 9'45 7.49 5-76 6.02 1171 10:59 895.
திருக்கோணமலை 8.87 207 167 192 244 125 208 8-99 441 834 14:03 14:16,
சென் மாட்டின்
(இரங்கல்லை) 36-36 1139 9-61. 1148 5:32 539 4'42 356 5-90) 20:26 24:32 4260
வதுளை . . 9-66 2.95 4 53 7:30 4 59 224 1.97 3:19, 3 46 9-72 10:54 12:32
தாழ்பூமியிலுள்ள பல இடங்கள் கொழும்பைப் போலவேயிருக்கின்றன. சமவிராக் காலங்களில் மழைக்கோடு உயருகிறது. மேலே கூறிய பருவக், காற்றுக்களுக்கு இடைப்பட்ட காலமிதுவேயாகும். இரு பருவக்காற்றுக்களின்

Page 76
மாங்குளம்
சிஅனுராதபுரம்
குருகுறக்கல்:
. Wதிசென்\மாட்டின்சு +5 تظل الخططاً
ഖമീ7
வடடவ7ே
திேயத்தலாவை
"تلفا 1 للاطلاً
ހ.
7மைல்கள் 24 4. ബ==
Ulid 4. இலங்கையில் மழை வீழ்ச்சியின் பருவவேறுபாடு : பிரிக்கும் கோடுகள் அண்ணளவானவை, இவற்றுட் சில தன்மைகள் மாறும் இயல்பின. ஆதலின் வரைப்படங்கள் அந்தந்தப் பிரதே சத்தின் தன்மையைக் காட்டுவன. ச= சனவரி ; தி=திசெம்பர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 39
நடுக் கூறுகளில் ம்ழை வீழ்ச்சி குறைகிறது. இதனை “இரு பருவ’ மழை வீழ்ச்சியெனக் கூறலாம். தென் மேற்குத் தாழ்பூமியிலுள்ள பல நகரங் களைப் போலவே கொழும்பு, வடகிழக்கு நிலையங்களான அனுராதபுரம் முதலிய நகரங்களிலும் அதிக மழையைப் பெறுகிறது. இவ்விரு நகரங் களிலும், சம்பந்தப்பட்ட இரு பருவக்காற்றுக் காலங்களிலும், சிறிது பயனே கிடைக்கிறது.
வட்டவளை வரைப்படத்தைப் பார்த்தால் திடீரென்று யூன் மாதத்தில் மிக அதிக மழை வீழ்வதைக் கவனிக்கலாம். பின்னர் தென்மேற்குப் பரு வக்காற்றுக்காலம் முழுவதும் மழை அதிகமாகப் பெய்து கொண்டிருப் பதைக் கவனிக்கலாம். இதை ஒரு பருவ மழையெனக் கூறலாம். தென் மேற்குப் பருவக் காற்றினுல் மழையைப் பெறும் உயர்ந்த மலைப் பிரதேச நிலையங்களிலெல்லாம் இத்தகைய மழை வீழ்ச்சியைக் காணலாம். இங்கே 200 அங்குலத்துக் கதிகமான மழை யுண்டு.
கண்டிவரைப் படத்தில் எப்பிரில், யூன், ஒற்றேபர் ஆகிய மாதங்களில் மழை அதிகம் பெய்வதைக் காணலாம். இது முப்பருவ மழையுள்ள இடம். இத்தகைய இடங்கள் மலைநாட்டின் தென் மேற்குப் பகுதியில் உண்டு. இவை கொழும்பு, வட்டவளை என்னும் இரண்டு மாதிரி மழை வீழ்ச்சி களேயு மிணைத்துள்ளன. சமவிராக் காலங்களில் அதிகமழை பெறுவ துடன் பருவக்காற்றுக் காலத்தின் மத்தியிலும் மேலதிகமாக மழையைப் பெறும் தன்மை கொழும்பு மழை வீழ்ச்சி முறையை யொத்தது. கண்டியும் அந்த முறையைத் தழுவியது போலவே மழையைப் பெறுகிறது.
திருக்கோணமலையில் வட கிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் மட்டும் அதிக மழையுண்டு. மற்றைக் காலங்களில் மழை வீழ்ச்சி மிகக் குறைவு. இது “ஒரு பருவ மழை வீழ்ச்சி”. மன்னரிலிருந்து பொத்துவில்வரை வடக் கிலுங் கிழக்கிலுமுள்ள கடற்கரைப் பட்டினங்களில் இந்த வகையான மழையேயுண்டு.
இரங்கல்லை, வட்டவளையைப் போல ஒரு பருவத்தில் அதிக மழையைப் பெறுகிறது. இது மலைநாட்டின் வட கிழக்கு ஒரத்திலுள்ள இடங்களின் நிலைமையைக் காட்டும். வட கிழக்குப் பருவக்காற்றுக் காலத்திலேயே இங்கே. அதிக மழையுண்டு.
வதுளை எறக்குறையக் கண்டியைப் போன்றது. இங்கே வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்திலேயே அதிக மழை பெய்யும்; தென் மேற்குப் பருவகாலத்தில் அதிக மழை கிடையாது. இங்கு குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு இடமும், படத்தில் அது அமைந்திருக்கும் பகுதிகளின் தன்மையைப் பிரதிபலிக்கின்றது. இம்மாதிரிகள் ஒன்றிடைஒன்று கலந்து கொள்வது முண்டு. படத்திற் காட்டப்பட்டவை மேலே கூறிய மாதிரியை அடிப்படை

Page 77
140 இலங்கைப் புவியியல்
பாகக் கொண்டு வகுக்கப்பட்ட பெரும்படியான பிரிவுகளாகும். பருவமழை பெரிதும் வேறுபடுகிறது என்பதையும் அது பருவக் காற்றினலும் மேற்காவு கையோட்டத்தினலும் உண்டாகின்றது என்பதையும் மாணக்கர் கருத்திற் கொள்ளல் வேண்டும். . . ދ-&
இலங்கையில் வசியாதவர்கள் இலங்கை நல்ல மழையைப் பெறும் தேச மென்று கருதுவது இயல்பே. கொழும்பு கண்டி போன்ற நகரங்களைப் பார்வையிட்டபின், இந்த நாட்டிலே வறட்சி ஏற்படமாட்டாதென்ற முடிவுக்கு வருகிறர்கள். ஆனல், இலங்கையின் பாதிப் பங்குக்கு மேல் வறட்சியிஞல் அவதிப்படுகிறது. இத்தகைய பிரதேசம் 75 அங்குலச் சம மழைக் கோட் டுக்கு வெளியேயுள்ளது. இங்கே வருடத்திற் பல மாதங்களில் 4 அங்குல மழையுமே பெய்வதில்லை. இதனல், அம்மழையினல் ஒரு பயனுங் கிடைப்ப பதில்லை. வருடத்திற் பல மாதங்களில் இந்தப் பிரதேசத்திலுள்ள கிணறு கள் வறண்டிருக்கும். பல மைல்களுக் கப்பாலிருந்தே குடிப்பதற்குத் தண் ணிர் கொண்டுவர வேண்டியிருக்கும். குளங்குட்டைகளில் நீர் வற்றி வறண்டு, பல மாதங்கள் மலேரியாக் கொசுவேயில்லாமற்போகும் இவ் விடயங்களை அந்நியர் எளிதில் அறிந்து கொள்ளமாட்டார். அத்துடன் ஆறுகள் வறண்டு பல இடங்களில் நீரின்றிச் சிறியவாய்க்கால் போல ஒடும் ; ஆற்றில் மணற் படுக்கையைக் காணலாம் ; தென் மேற்குப் பருவக்காற்றுக் காலம் முழுவதிலும், மன்னரிலிருந்து பொத்துவில் வரையுள்ள கரை யோரப் பிரதேசங்களில் நல்ல வறட்சியுண்டாகும். வடக்குத் தாழ் பூமி யிலுள்ள மற்றை இடங்களில் இரண்டு வறட்சிக்காலங்களுண்டு ; ஒன்று அவற்றில் மிகக் கடுமையானது ; அதுவும் தென் மேற்குப் பருவக்காற்றுக் காலத்தின் நடுப்பகுதியிலுண்டாவது.
(3) இலங்கையிற் பருவ காலங்களில் உண்டாகும் மழையைப் பற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. இனி, அதன் காரணங்களைப் பற்றி அறிவது இலகுவாகும். காற்றுக்களைப் பற்றிக் கூறிய விடயங்களிலி ருந்தே சில காரணங்கள் தெளிவாகும். கொழும்பு அவதான நிலையத்தின் நாலாம் இலக்க அறிக்கையில் திரு. பாம்போட்டு என்பவர் சில பயனுள்ள வரிப்படங்களைப் பிரசுரித்திருக்கிறர். அவற்றை இங்கே பிரதி பண்ணியிருக் கிருேம். அவற்றைக் கீழே கொடுத்துள்ள விளக்கங்களோடு சேர்த்துக்கவன மாகப் படித்தல் வேண்டும். காற்றேட்டம் பற்றியுள்ள வரிப் படங்கள் ஒரளவு குறிப்பாலுணர்த்தவல்லன. இவை காற்றிலே காணப்படும் உண்மையான நிகழ்ச்சிகளைக் காட்டுவனவாகக் கொள்ளக் கூடாது. காற்றின் அசைவு மிகச் சிக்கலான விடயம். கணத்துக்குக் கணம் மாறுமியல்புடையது. ஆனல், பதிவு செய்யப்பட்ட சில விசேடமான காற்று அசைவுகளை எடுத்து விளக்குவாரானல் பயிற்சி பெற்ற ஓர் ஆராய்ச்சியாளர், நடைபெற்ற அச்சம்பவங்களைப் பற்றிய ஒரு கருத்தைப் பெற உதவிசெய்வார். காற்று என்ற பிரிவிற் கூறப்பட்ட நான்கு பருவங்களைப் பற்றியே இந்த வரிப்படங்கள் குறிப்பிடுகின்றன.

பெளதிகப் புவியியல் 14
லங்கை மீதுள்ள ::* ဂြိုနှီနီရှီ၊ சில.
1. பருவககாறறு முழுமையும் ஆளப்பட்டுளது (சூன், சூலை
மாதங்களிலுள்ளது போல்).
2. பருவக்காற்றுக் காலங்களுககிடைப்பட்ட காலமான மாச்சு.
ஏப்பிரல் பகலிலும் இரவிலுமுள்ள காற் றேட்டம் .ே மேற் காவுலக யோட்டம்- பின்னேர இடி, மின்னற், புயல்.
مچ%
முகிலுருவாதலும், /\ முதிவருவாதவழ்
ಹಾ ) r மழையும் )
-ܝܐ- ܚܚܚܚܚܚ--ܛܵܐܐܗ A ” سجدہ مستسنامہ ',' سجھیمس مصیسہ شمسی Al-A மெனதாற்று༡ Fས་མ འཁཁཁ་ཁ་ கடல் மென் கற்று
* மேற் காவுகையோட்டம் இரவும் வைகறையும்.
۔ ------ ه۔ ۔ ۔ > ------مه حسسستیس۔ چست۔ ہے۔
Ν ( ծjTա 6)յTWTն / தாய வாாம
தரை மென்காற்று --سہ۔ ----- پرست۔ Anկ (ԱՈւՄ:4ն:
படம் 45 (அ). (கொழும்பு வளிமண்டல அவதான நிலைய அத்தியட்சர் உதவியது.)

Page 78
42
இலங்கைப் புவியியல்
3. சில நிலைமாறும் மாதிரிகள்.
*காற்றுப்பக்கத்தில் ಸ್ತ್ರ್ಯಕ್ತೀಣಖಿ
பருவ காற்றிள் ாப்பப்படுதல்-குளிாவதால் ஆட்சி イト 44% பரும் - ட7 - பாலும்,மேற்காவுகை ஓட்டம. மேலும காறறககு ஒதுககான பத்கத்தில்- பிளரே இடி کس--------- ہو- بحس۔
\ மின்ளேற் புயலுக்குச் சர்தக்
*வலுக்குன்றிய பருவக் காற்றும் மேற் காவுகைக் காற்றேட்டங்
களும்- பகல்,
நீரோட்டமானது பின்னேரத்தில் .
மேறகாவுகை ஓட்டததை வறுL
படுத்தி அதள்ை உடைவுபடர்து
-->
f5C حـــــــــن سره يا
'... இடி மின்னாற் )
չյա/8). w
سسسسسسسسسسسسـهم عب
ܚܛܹ-ܚܣ
----ܚ-ܝܚk- -- ܪܚܝ
-- ി 22 (: ?
*வலுக்குன்றிய பருவக் காற்றும் மேற் காவுகைக் காற்றேட்டங்களும்
இரவும் அதிகாலையும். /
s 东 ஓரளவு தூய வாளம்
--
موسس---
سبھی حسسسسے --س---سسسسس#ž”
3) 五ggするAア
ஐ றருற usly
)
ர்ச்சியட்ைபதிகாஆ) மழை பெயகிறது qSLSSLSSS
படம் 45 (ஆ). (கொழும்பு வளிமண்டல அவதான நிலைய அத்தியட்சர் உதவியது.)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 143
“இலங்கையின் இயற்கையான காலநிலை அமைதியானது ; பருவக் காற்: றுக்கள் தற்காலிகமாக உண்டாகும் குழப்பங்கள்’ என்ற அடிப்படையிற்ருன் இந்நாட்டு மழை வீழ்ச்சிக்குரிய காரணங்களை ஆராயப் புகுதல்வேண்டும். இலங்கையிற் சாதாரணமாக உள்ள ஒரு நாளே உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அந் நாளில் உண்டாகும் நிகழ்ச்சிகளைக் கவனிப்போ h: அமைதி குடிகொண்டிருக்கும்; காற்றில் மிகச் சொற்பமான அசைே காணப்படும். விடிந்து சிறிது நேரத்திற் சூரியன் நன்றகப் பிரகாசிக்கும். வானம் நீலமயமாயிருக்கும்; முகில்கள் காணப்படமாட்டா. மலைச் சிகர மொன்றில் ஏறி நின்றல் நீண்ட தூரத்துக் காட்சிகள் தென்படும். பின்னர் சிறிது சிறிதாக வானத்திற் சிறிய வெண்முகிற் கூட்டங்களங்குமிங்கும் தெரியும்; இவை குறித்த ஒர் உயரத்தில் தோன்றி வெப்பம் அதிகரிக்க அதிகரிக்கக் கனத்திலும் உருவத்திலும் பெரியவாகும்; தாழ்பூமியிலேயே இவை அதிகமாகக் காணப்படும். குன்றினுச்சியிலிருந்து பார்க்கும் பொழுது ஒரு மெல்லிய திரை உண்டாவதையும், அது தாழ்பூமியைச் சிறிது மறைப்பதையுங் காணலாம். அத் திரையிலிருந்து முகிற்படலம் கிளம்புவதைக் காணலாம். காற்றுக் கீழும் மேலுஞ் செல்வதை மேலே யிருந்து காண்பது இலேசாயிருக்கும். முகிற் படலம் திரண்டு கொண்டு வரும் பொழுது தாழ் பூமி முற்ருக மறைந்து விடும். அங்கு மிங்கும் பெரிய கோபுரங்கள் போன்ற உருவங்கள் தென்படும். இவை மேல் கீழாக ஒடும் காற்றின் பயனுக உண்டாவன. சில வேளைகளில் முகிற் கூட்டங்களிடையே ஒரு வெளி காணப்படும். அதற்கூடாகச் சூரிய ஒளி ஊடுருவிக் கொண்டு வரும். வானத்தில் அது நீல வெளியாக விளங்கும். பிற்பகல் மூன்று, அல்லது நாலு மணியளவில் இத்தகைய நிகழ்ச்சி உச்ச நிலையையடையும். காற்றிற் குளிர்ச்சியுண்டாகும். பின்னர் ஒரளவில் நீராவி உறைநிலை யடையும். பெரிய முகிற் கூட்டங்கள் மேலே யெழும்பொழுது வளி மண்டலத்தில் மின் புயலுண்டாகும். மின்னல் முகிற் கூட்டங்களிடையே விளையாடி வெளிப்படுகிறது; இடி முழக்கம் அடிக்கடி கேட்கும். கடைசியாக மழை பெய்யத் துவங்கும். இது மாலையில் நிகழும் ; பெரும்பாலும் இம் மழை திடீரெனப் பெய்யும் ; வானத்திலிருந்து குழாயைத் திருப்பி விட்டது போல நேராக மழை பொழியும். முகிலில் உள்ள சிறு நீர்த் திவலைகள் விரைவாக ஒன்று சேர்ந்து நிலத்தில் மழையாக விழும். மழை, கால் மணி நேரத்திலிருந்து இரண்டு மூன்று மணி நேரம் வரை ஒயாமற் பெய்யும்; பெரும்பாலும் பிற்பகல் 4 மணி துவக்கம் 8 மணி வரை பெய்யும். சில சமயம் மழை பெய்யாவிட்டாலும் மின்னலும் இடி முழக்கமுமுண்டாகும். முகில்கள் கறுத்து மழை பெய்ய ஆரவாரஞ் செய்வது போலக் காணப்படும். இவ்விரு சந்தர்ப்பங்களிலும் காற்றுக் குளிர்ச்சியடைந்து கொண்டேயிருக்கும்; முகில்கள் சிறிது சிறிதாக மறை யும்; இரவு களங்கமற்றதாய்த் தெளிந்து விளங்கும். நிலவு நல்ல வெளிச் சங் கொடுக்கும். அந் நிலவில் இரவிற் பிரயாணஞ் செய்வது மிகச் சுலப

Page 79
l44 இலங்கைப் புவியியல்
மாகும். கோயில் விழாக்கள் இரவில் 8 மணிக்குப் பின் கொண்டாடப் படுவதற்கு இது ஒரு காரணமாகும். ஆதலினல், குளிர்ந்த இரவில் யாத் திரிகர்கள் இலேசாகக் கோவிலுக்குச் சென்று வருதல் முடியும். அமைதிப் பிரதேசத்திலுள்ள நாடுகளில் நாடோறும் இத்தகைய தன்மையே மாறி மாறி வரும். இம்மாதிரிப் பெய்யும் மழைக்கு மேற்காவுகை மழை யெனப் பெயருண்டு. மேற்காவுகைக் காற்றேட்டம் மேலேயெழுந்து குளிர்வதாலேயே இம் மழையுண்டாகிறது. இம் மழை சாதாரணமாகப் பின்னேரங்களிலேயே உண்டாவதால், இதற்குப் ‘பின்னேர மழை’ எனவும் பெயருண்டு. இடி முழக்கத்தோடு சேர்ந்து வருவதால் இதனை “உள்ளூர் இடி மின்னற் புயல்’ எனவும் வழங்குவர். இலங்கையிற் காற்றில்லாமல் மழை பெய்வது இயல் பென்பதை உண்மைப்படுத்துவனபோல் வீடுகள் பல திறந்த பக்கம் உடையன்வாய்க் கட்டப்பட்டிருக்கின்றன. இதனை நாம் ஊகித்தறிந்து கொள்ளலாம்.
மற்றைத் தேசங்களிலிருப்பதுபோல, காற்றனது மழையை அடிக்கடி வீட்டுக்குள் அள்ளி வீசுமாயிருந்தால் இம்மாதிரி வீடுகளமைக்கப்படமாட்டா. மலைநாட்டின் ஒவ்வொருபக்கத்திலும், உள்ளூர் மேற்காவுகைக் காற்றேட் டத்தைக் கடற்காற்றும், நிலக்காற்றும் பலப்படுத்துகின்றன. அதனல் பகலிற் காற்றேட்ட மதிகமாகவும், இரவிற் குறைவாகவுமிருக்கிறது. காற்றேட்டம் என்ற விளக்கப் படங்களில் இரண்டாம் பிரிவில் இக்காற்றேட்டம் விளக்கப் பட்டிருக்கிறது. தாழ்பூமியில் இத்தகைய மழை வீழ்ச்சியே அதிகம் உண்டு; சூரியன் உச்சநிலைக்கு வரும் பருவத்தையடுத்து இவ்விதமழை அதிகரிக்கிறது. இதனுற் கொழும்பிலுள்ளது போல வருடத்தில் அதிக மழை பொழியும் இரண்டு பருவங்களுள்ள நிலையுண்டாகிறது. பருவகாலங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் இத்தகைய மழை பெய்ய முற்படுகிறது. ஆஞல், இம்மழை வருடத்தில் எந்தக்காலத்திலும், இலங்கையின் எந்தப்பகுதி யிலும் பெய்யலாம். கொழும்பு திருக்கோணமலை ஆகிய இடங்களில் மழைபெய்யும் நேரத்தை விளக்கப் படங்களின் துணை கொண்டு ஆராய்ந்து கவனமாகப் படித்தபின் கீழேகூறப்படும் விடயங்களை உற்றுநோக்கல் வேண்டும்.
வருடத்திற் சில காலங்களில் மேலே கூறிய நிலைமைகளைக் குழப்புஞ் சில காரணங்களை இப்பொழுது ஆராய்வாம். யூன், யூலை, ஒகத்து மாதங்களில் தென்மேற்குப் பருவக்காற்றுப் பலமடைந்து விடுகிறது. இலங்கையைப் பாதிக்கக்கூடிய அளவு முனைப்பைப் பெறுகிறது. மேற்காவுகைக் காற்றேட் டத்தைக் குழப்பி, 45 (அ) விளக்கப்படத்தில் முதற்பிரிவிற் காட்டிய ஒரு நிலையை உண்டாக்குகிறது. இக்காற்று மலைகளுக்கு மேலாக எழுந்து செல்ல முயலும் போது குளிர்ந்து முகிலாக மாறுகிறது. இம்முகிற் கூட்டங்கள் மலைப்பிரதேசத்தின் தென்மேற்குப் பகுதியிலுண்டாகின்றன. அவை மலையி னிடை வெளிகளுக் கூடாக விரைந்து கண்டி மேட்டுநிலத்தையும், தொப்பி

\oபளதகப புவயயல 145
G3 (Of alth SchöC5 TOTLOCAL AIf
( dNE BAHASACHU
தகோணமலை s န္တိက္ကို கொழும்பு 謎 திருக்கோணமலை # எஞ்சிய மு.ப.Tபி.ப క్టర్డ్ (ն). ա. մ. Ա காழும4 அமுக்கம, #40484's 4ಲೀ 44:56 48pxh4
சறுரி வடகிழக்குப்பருவக்காறறின் ஆட்சி. -్కర్డ్ఖత్ర ož #ಣ್ಯೀ
(விடியவில் ஆதிக மழை காற்றுக்கு ஒதுக்கான பக்கம் பிற்பகல் மழை.
4ழ =மேற்கூறியவாறு- ஆளுல் :து ஈராபபுக்குறைவு. மாச்சு -0/2"அல்லது வக்காற்றுவிளைவு (க3) - 0-4 lfst ll. 繳 கேக்
&fffffმCQL'oit — Ap.
ரப்பிரல் +010'அல்லது + 0-3 lóLuft.
மேற் $ காற்றேட்டம அதிகம, ಙ್ಗ#ಣ್ಣ'ನ್ತಿ?' பிற்பகல் மன்ழ
(/0 +0229.
+ 0.7լի, լյր:
தென்மேற்குப் பருவக் காற்றின் ಟ್ಲಿ, ே ಕ್ಲೈಜ್ಡ
lugif SSSS SSS LS S SLLSS SLL
D தெர்gழற்குப் பருவக்காற்றின் பூரண -2.6in. . . . . . . . င္ကိုႏွစ္ထိ{
ಙ್ಗ : ஆ għ,தா
னம்ாகப்பிற்பகல் மழ்ை.
sity 48 நன்பகல் 48 நள்ளிவு காஜ48 நன்பகல் 48 நள்ளிரவு
படம் 46 அ. (கொழும்பு வளிமண்டல அவதான நிலைய அத்தியட்சர் உதவியது)
மி. பா. = மில்லிப்பார் ; பாரமானிகளுக்கு இப்பொழுது வழங்கும் அமுக்க அலகு. 1,000 மி.பா.அண்ணளவாக 29-5" இரசம்.
--J. N. B 70576 (11157)

Page 80
146 இலங்கைப் புவியியல்
கொழும்பிலும் திருக்கோணமலேயிலும் மழை பெய்யும் நேரங்கள்
as Castraits தி: ಟ್ಟಿಹಿ கொழுபு སྐྱེ་ திருக்கோணமலை தீ 慈 .u'tി.i క్షేక్ష ം.l, tി.u. சிக்ாழும்பு அமுக்க స్టాక్షి
கா% 4 8 நண்புதல் 48 நாளிரவு$$காலை 48 நள்பகல் 48 நள்ளிரவு
யூ)ே - 6 - అ புருவக்கற்றிள் புரண +0.092"அல்லது - கழஆர காத 3. Itfit, 4. பக்கம் #»
ー2
- O - கதது - 6 - +ர்.087அல்லது -4- +30 மி.பா. - 2 –
O m-سس செத்தம். --8- --0:075அல்லது - r --26 it. UIT. 6
ஒற்றேபர் -8- +ర్కిత -6- +/,5 lf.uf வீழ்ச்சிவிகிதம் குறைவு-பிற்பகல்
திகரித் % 徽动 ീബ്ന
- -
நவெம்பர் + 0.04'-(്യ + 6.5 lിL്
லுடகிழக்தட பநவக் ஆகுறி இருபக்கத்திலும் எல்லரி 2ழ் மழை ஆழ்ட4ய அமுக்கம் ரதானமா கக் கிழக்கில்.
திசம்பர் -0-0f7'-യ്ക്കൂ, - 0, 6 idi, i ti? 4 ಘೀ - **#*#¥:
காக 48 நாள்பகல் 48 ಸಃ” காஃ:4சு நாபதசி 48 நள்ளிரடி
படம் 46 ஆ. (கொழும்பு வளிமண்டல அவதான நிலைய அத்தியட்சர் உதவியது.)
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 47
தோட்ட மேட்டுநிலத்தையு மடைகின்றன. இக்காலப்பகுதியில் சிவனெளிபாத மலைக்கு எறமுடியாது. வேறெந்த மலையிலும் மேலே வெகுதூரஞ் செல்வது அருமை. ஏனெனிற் கனத்த முகிற்கூட்டங்கள் வழியை மறைக்கும். பருவக் காற்று வலிமை பெறப்பெறக் காற்றேட்டம் கிளம்பும்; மலைநாட்டிலிருந்து சிறிது தூரத்துக்குப் பரவும்; அதன்பயணுகக் காற்றுக் குளிர்வதால் தென் மேற்குத் தாழ்பூமியில் மேலதிகமாக மழை பொழியும். இம்மாதிரி மேலதிக மழை பெய்யாத பகுதிகளில் வறட்சியுண்டாகிறது. புத்தளம், அம்பாந் தோட்டை இத்தகைய வறட்சியுள்ள இடங்களாகும். தென்மேற்குப் பருவக் காற்று புத்தளத்தின் மீது வீசாமல் இந்தியா ஒருபுறத்திற்றடை செய்கிறது. தென்மேற்குப் பருவக்காற்றின் முழுப்பயனையும் பெறும் இடங்களுக்கு ஓர் உதாரணம் வட்டவளே. கண்டி, தொப்பிதோட்டம் போன்ற இடங்களும் இப்பருவத்தில் மேலதிகமான மழையைப் பெறுகின்றன. விளக்கப்படத்தின் மூன்றம் பிரிவில், பருவக் காற்றுப் பலமற்றுள்ள காலத்தில், பருவக் காற்றுக்கும் மேற்காவுகைக் காற்றுக்குமிடையி லுள்ள பிணக்கிஞலுண்டாகும் பெறுபேறுகள் சில காட்டப்பட்டுள்ளன. சில சமயங்களில் பருவக்காற்று மேற்காவுகைக் காற்றைக் குழப்ப முடியாமல் மேலாகச் சென்று விடுகிறது. வேறு சில சமயத்தில் காற்றுப் பக்கத்திலே மட்டும் மேற்காவுகைக் காற்றைக் குழப்பக்கூடியபலம் பெறுகிறது. மழை வீழ்ச்சியில் இவற்றல் உண்டாகும் விளைவுகள் விளக்கப்படங்களிற் காட்டப் பட்டிருக்கின்றன.
தென் மேற்குப் பருவக் காற்றிலும் வட கிழக்குப் பருவக் காற்று மிகவும் வலிமைகுறைந்தது. எனவே அதன் விளைவுகளைத் தெளிவாக அறிவது கடினமாகும். மலைநாட்டின் வட கிழக்கு ஒரத்தில் ஒரேவித விளைவுகளையே உண்டாக்குகிறது. அதிக மழைபெறும் பிரதேசத்தை மகாவலிகங்கைப் பள்ளத்தாக்கு இரண்டாக வெட்டிவிடுகிறது. இப்பருவக்காற்றுக் காலத் திலேயே, வங்காள விரிகுடாவில் சூறவளியுண்டாகிறது. இதனுல் பெருமழை பெய்வது இயல்பு; பெரிய காற்றுப்படலம் குளிர்ந்து வரும் பொழுது அதிகங் குளிருள்ள காற்றேட்டம் அதன் கீழ் வீசுகிறபடியாலே இப்பெருமழை உண் டாகிறது. இம் மழைக்கும் தரைத்தோற்றத்திற்கும் எவ்வித சம்பந்தமு மில்லை. இது வடகிழக்குக் கரையோரப் பகுதிகளை அதிகம் பாதிப்பதால், வட கிழக்குப் பருவக்காற்றேடு தொடர்பு படுத்தப்படும் மழையின் பெரும் பகுதி இதஞல் உண்டாவதாயிருக்கலாம். இந்த வகையான மழை வீழ்ச்சி பற்றிய ஆராய்ச்சி இன்னும் முற்றகவில்லை. இவ்விடயம் பற்றிய ஆராய்ச்சியின் முதற்சுருக்கம் திரு. பாம்போட்டு எழுதிய “இலங்கையிற் சூறவளி இயக் கம்’ என்ற கட்டுரையிலுண்டு. மன்னரிலிருந்து பொத்துவில் வரையுள்ள கரைப் பிரதேசங்கள் பருவக் காற்றுக் காலத்தில் ஒரே உச்ச மழை பெறுகின்றன. ஆளுல்ை வடக்கேயுள்ள ஏனைய இடங்கள் சமவிராக் காலங் களில் இருமுறை உச்ச மழைபெறுகின்றன. இதற்குரிய காரணத்தை விளக்குவது இலேசான காரியமன்று. வட கிழக்குக் கரை சம்பந்தமான நிலை

Page 81
48 இலங்கைப் புவியியல்
மைகள் சூருவளி இயக்கத்தினுல் சிக்கலாகின்றன. இவ்வியக்கம் வடக்கே மேலும் அடிக்கடி நிகழ்கிறது. எதிர்த்தடக் காற்றுப் பிரதேசத்தில் மத்திய கோட்டுப் பிரதேசத்திலும் அதிகமாக இத்தகைய இயக்கங்கள் அடிக்கடி நிக ழும். இவ்வியக்கங்கள் “குருவளி’ யெனவும், “அமுக்க விறக்க” மெனவும் வழங்கும். அராபியக் கடலில் பருவக் காற்று மாறுங்காலங்களிலுண்டாகும் குருவளிப் புயல் வேறு, இந்தச் சூறவளிவேறு. ஒரு வேளை இவையே அந்த உருவைப் பெற்று அதிக மழையை உண்டாக்கிவருகின்றனவோ வெனலாம். ஆனல், காலநிலை சம்பந்தமான ஆராய்ச்சியில் இவை வேறு வேருகப் பிரித்தே ஆராயப்படுகின்றன. இலங்கையில் பெரும் புயலோடு சேர்ந்துவரும் சூறவளி நிகழ்வதில்லை; ஆனல், வட கிழக்குப் பருவக்காற்றுக் காலத்தில் இடையிடையே அமுக்கவிறக்க முண்டாகும். இது வளிமண்டலத்திலுண்டா கும் குழப்பத்தாலுண்டாவது. வளிமண்டலத்தில் உண்டாகும் ஒழுங்கற்ற இயக்கமே இதற்குக் காரணம். இது ஒரு வகையான சுழியோட்டத்தாலுண்டா கலாம்; அதாவது, சூடான காற்றேட்டத்தின்கீழே குளிர்ந்த காற்றேட்டஞ் செல்வதாலுண்டாகலாம். இதற்குக் காரணம் முற்றகக் கண்டுபிடிக்கப்பட வில்லை. மேற்கூறிய சுழியோட்டங் காரணமாகச் சுழியின்மத்தியோடு தொடர் புள்ள சிற்றமுக்கப் பிரதேசம் ஒன்றுண்டாகிறது. இதனுல் சூடான காற் ருேட்டம் மேலெழுந்து குளிர்ச்சியடையும் பொழுது முகிற் கூட்டங்களுண்டா கின்றன. அவை பெரிய மழையைப்பெய்யலாம். இந்த மழை மேற்காவுகை மழையைப்போலல்லாது மெதுவாக ஆரம்பித்துத் துறிக்கொள்ளும், பகலில், அல்லது இரவில் இது உண்டாகலாம் ; நாட்டின் தரையுயர்ச்சி வேற்றுமை கட்கும் இதற்குந்தொடர்பில்லை. சிற்றமுக்கத்தின் மையம் மிகக்குறைவான அமுக்கமுடையதாயும் அதைச்சுற்றி அமுக்கச் சாய்வுவிகிதம் அதிகப ாயு மிருந்தால் அவ்விறக்கம் “ஆழமான” இறக்கமெனப்படும். அப்பொழுது காற்றுப் பலமாகவும், கடுங்காற்றின் வேகத்தையுடையதாகவுமிருக்கும். இதனை இலங்கையில் புயல் எனக் கூறுவர். மழையும் கடுமழையாயிருக் கும். இக்குழப்பங்களின் விட்டம் பல நூறு மைலாகும். அதனுல் இலங்கை யில் இவற்றின் ஒரு பகுதியே தோற்றமளிக்கும். வடக்குத் தாழ் பூமியின் வானிலையை இவை பாதிக்கலாம். இலங்கையின் தெற்குப் பகுதியையும் ஒரு நாள் தொடக்கம் ஒரு வாரம் வரை சிறிது பாதிக்கலாம். அநேகமாக எற்படக்கூடிய ஒரு விளைவு என்னவெனில் தீவின் குறுக்கே நூதனமான ஒரு பாட்டம் மழைபெய்யும் ; இதற்கும் தீவுக்கும் எவ்வித தொடர்புமிருப் பதாகத் தென்படுவதில்லை.

இரண்டாம் பகுதி-எட்டாம் அத்தியாயம்
வெப்பநிலை
அகலக்கோடு என்ற விடயம் பற்றிய பிரிவில் இலங்கையின் வெப்பநிலை சம்பந்தமாகவுஞ் சில குறிப்புக்களைக் கூறினேம். இலங்கைத்தீவு மத்திய கோட்டுக்கு அணிமையிலிருப்பதால் அது வெப்பமுடையதாயிருக்குமென் பதற்குச் சிலகாரணங்களைக் கூறினேம். இம்மத்திய கோட்டுப் பிரதேசத்தில் பெற்ற வெயில் அதிகமிருந்தாலும் இங்கே மிகக்கூடிய வெப்பநிலையுண்டா வதில்லை. இங்கு எப்பொழுதும் ஈரலிப்புண்டு. வறட்சியுள்ள பிரதேசங் களிலேயே மிக வதிகமான வெப்பமுண்டு. உதாரணமாக இந்தியாவிலுள்ள தார்ப் பாலைநிலத்தை எடுத்துக் கொள்ளலாம். இங்கே நிழலில் 90 ப. பாகைச் சராசரி வெப்பநிலையுள்ள சில இடங்களுண்டு. இது மத்திய கோட்டுக்கு 20° மேலேயுள்ள அகலக்கோட்டிலிருந்த போதிலும் இங்குள்ள வெப்பம் இலங்கையிலுமே கிடையாது. காற்றுத் தெளிவாகவும் வறட்சி யாகவுமிருந்தால் கதிர்வீச்சு விரைவாகவிருக்கும். அதனுல் காற்று விரைவாக வெப்பமடையவும் விரைவாகக் குளிர்ச்சியடையவுங் கூடியதா யிருக்கும். முகிற் கூட்டங்கள் கதிர்வீச்சைத் தடுக்கின்றன. அதனல் பூமி யின் பரப்புச் சூரியனுடைய கதிர்களின் நேரடியான தாக்குதலைப் பெரு வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது. அத்துடன் அம்முகில்களுக்குக் கீழே யுள்ள காற்றிற் பொருந்திய வெப்பத்தையும் அமர்த்தி அடக்கிக்கொள்ளு கின்றன. அதனல் இலங்கையைப் போன்ற மந்தாரமுள்ள தேசத்தில், அதுவும் வெப்பமதிகமுள்ள வேளையில் முகில்கள் அதிகம் பரவி விடுவதால், வெப்பநிலை பெருமளவுக்குச் சமப்படுத்தப்படுகிறது. இலங்கையில் வெப்ப நிலை எங்குஞ் சமமாயிருப்பதற்கு இஃதொன்று மட்டும் காரணமன்று. கடலும் ஒரு காரணமாகும். இலங்கையின் எந்தப்பகுதியாவது கடற்கரை யிலிருந்து 50 மைலுக்கு அதிகமான தூரத்திலிருப்பதில்லை. நிலத்திலும் கடலானது சூடாவதற்கும் குளிர்வதற்கும் அதிக நேரம் எடுக்கும். அதனல் பகல் நேரத்திற் கடலானது நிலத்தைக் குளிரவைத்தும் இரவில் வெப்ப முடையதாக்கியும் காலநிலையைப் பாதிக்கிறது. கடலுக்கு வெகுதூரத்தி லுள்ள இடங்களில் 24 மணிநேரத்தில் வெப்ப வீச்சு அதிகமாகும். இச்சம வெப்பநிலைத்தன்மை மத்திய கோட்டிலுள்ள தீவுகளெல்லாவற்றுக்கும் பொதுவாகும். இவ்வெப்பம் ஏறக்குறைய 80 ப. பாகை ஆகும். இலங் கையில் 24 மணிநேரத்தில் வெப்பவீச்சு 5 ப. பாகைக்குக் கூடுவது அருமை. பகல் வெப்பநிலைக்கும் இரவு வெப்பநிலைக்கும் அதிக வேற்றுமை காணப்படுவதில்லை. கடற்கரையடுத்த இடங்களிலும், கடலுக்குச் சிறிது துரத்தில் உள்ளூரையடுத்துள்ள இடங்களிலும் வீச்சு மிகச் சொற்பம். காலி, மாத்தறை, தங்காலை போன்ற தெற்குச் சமுத்திரத்தையடுத்த இடங்களில்
49

Page 82
50 இலங்கைப் புவியியல்
இது மிகச் சொற்பம்; வருட முழுவதும் இவ்விடங்களின் வெப்ப வீச்சு 7 ப. பாகை ஆகும். இத்தகைய காலநிலையைச் சமுத்திரக் காலநிலை என்ப.
வருட முழுவதற்கும் உள்ள சராசரி வெப்பத்தைக் காட்டும் படம், அதிக பயனைக்கொடாது. ஏனெனில் இத்தகைய படத்தில் நாளுக்குநாள், அல்லது பருவத்துக்குப் பருவம் உண்டாகும் மாற்றங்களை அறிந்து கொள்ளமுடியாது. கண்டங்களின் மத்தியிலுள்ள பிரதேசங்களிலும் இடைவெப்ப வலயத்திலுள்ள பிரதேசங்களிலும் பருவத்துக்குப் பருவம் உண்டாகும் மாற்றங்கள் மிக அதிகம். எனவே இம்மாற்றங்களை யறிவதற்கு இத்தகைய படங்கள் உதவமாட்டா. உதாரணமாக ஓரிடத்தில் நண்பகல் வெப்பம் 90 ப. பாகை ஆகவும் இரவில் வெப்பநிலையின் கீழ் எல்லை 40 ப. பாகை ஆகவுமிருக்குமானல் நாட்சராசரி 65 ப. பாகை எனக் கூறுவது பொருந்தாது. இத்தகைய வெப்பநிலையுள்ள ஓரிடம், அதாவது 65 ப. பாகை வெப்பமுள்ள இடம், குளிர்மையும் மகிழ்ச்சியுந் தரக்கூடிய இடமென நாம் பிழையாகக் கருதக்கூடும். ஆண்டு வெப்ப நிலையின் ஏற்றத் தாழ்வைப்பொறுத்த வரையிலும் இதேநிலைமை உண்டாகிறது. சமவெப்ப முள்ள இலங்கைபோன்ற தேசங்களின் சமவெப்பக் கோட்டுப் படங்களே மானுக்கர்க்குப் பயனுடையன. ஏனெனில் அவற்றிற் காட்டப்பட்டுள்ள வருடச் சராசரியானது வெப்ப நிலையைத் திருத்தமாகக் காட்டும். இங்கு கொடுக்கப் பட்டுள்ள வெப்பநிலைப் படம், வருடச் சராசரியைக் காட்டுவதுடன் பகலிலும் இர விலும் சாதாரணமாக நிலவும் வெப்பத்தையும், வருட முழுவதும் நிலவும் வெப்பத்தையுங் காட்டுகிறது. தாழ்பூமியெங்கும் அநேகமாக 80 ப. பாகை வெப்ப நிலையேயுண்டு. இவற்றிலும் அதிக வெப்பநிலையுள்ளவை பெரும் பாலும் வடக்கிலும் கிழக்கிலும் உள்ளன. இவை நீண்டகாலம் பயன்குன்றிய மழைபெய்யும் பகுதிகளாகும். உயரத்தை அனுசரித்து வெப்பம் குறைகிறது. எனவே மலைநாட்டில் சமவெப்பக்கோடுகள் வட்டம் வட்டமாயமைந்திருப் பதைக்காணலாம். இலங்கையில் மிக உயர்ந்த அவதானநிலையமும் மக்கள் வாழும் மிகஉயர்ந்த இடமுமான நுவரெலியாவில் (6188 அடி) வெப்பநிலை எப்பொழுதும் 60 ப. பாகையை அடுத்திருக்கிறது. ஒவ்வொரு 300 அடிஉயரத் துக்கும் வெப்பநிலை Iப. பாகை அலகாகக் குறையுமென்பது எல்லாத்தேசங் களுக்கும் பொதுவான ஒரு விதியாகும். இந்த வெப்பநிலையளவுகள் நிழலில் எடுக்கப்பட்டன. சூரியவெப்பத்தில் இவை இவற்றிலும் மிக அதிகமாயிருக் கலாம். ஒவ்வொரு மாதத்துக்குந் தனித்தனி எடுக்கப்பட்ட நிழல்வெப்பச் சராசரி 85 ப. பாகைக்கு அதிகரிப்பது அருமை. இதுவும் மிகச்சூடான பருவத்திலாகும். மே மாதத்தில் திருக்கோணமலையின் வெப்பம் சராசரி 86 ப. பாகை ஆகும். எப்பிரிலிலும் யூனிலும் 85 ப. பாகைக்குக் கூட வாகும். எப்பிரில் மே மாதங்களில் மன்னரிலும், யாழ்ப்பாணத்திலும் வெப்பம் 85 ப. பாகைக்கு அதிகமாக இருக்கும். யூனில் மட்டக்களப்பிலும் அப்படியே. வெப்பம் 85 ப. பாகைக்குக் கூடினல் மக்கள் சற்றுத்துன்பப் படுவர். 80 ப. பாகைக்குக் கிட்டவானல் அவர்கள் சுகமாக வேலைசெய்வர்.

கடல்மட்ட வெப்பநிலக்கு
மாற்றதஉண்ழையான WS வெப்பநிலைகள்.
படம் 47.
வருடச் சராசரி வெப்பநிலையைக் காட்டும் சமவெப்பக் கோட்டுப்படம்.

Page 83
152 இலங்கைப் புவியியல்
ஒரு மாதத்தின் சராசரி வெப்பம் 85 ப. பாகையானல், சில நாட்களில் வெப்பநிலை இதனிலும் அதிகமாயிருக்கலாமென்பது தெளிவு. சில சமயங் களில் 100 ப. பாகை வெப்பநிலையிருந்ததாகப் பதிவுண்டு. ஆனல், இது அருமை. வருடத்தின் மிக அதிகமான பகல் வெப்பநிலையைப்பற்றி அவதானநிலைய அறிக்கைகூறும். 1890 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் திகதி திருக்கோணமலையில் 1037 ப. பாகை வெப்பநிலை (நிழலில்) பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே இலங்கையில் நிகழ்ந்த மிகக் கூடிய வெப்ப நிலையாகும். உயர் வெபபநிலை பெரும்பாலும் திருக்கோணமலையிலே பெறப்படும். சாதாரணமாக வருடச்சராசரி 100 ப. பாகைக்கு அதிகமா வதில்லை; உதாரணமாக 1925 இல் மட்டக்களப்பில் 996 ப. பாகை பதிவு செய்யப்பட்டது.
LullüD 48. விளக்கப்படத்தின் கீழ்ப்பாகமானது ஒரு குன்றினையும் ஒரு சமவெளியின் பகுதியினையும் காட்டு கிறது. தடித்த கோடுகள், தாழ்நிலத்தின்மீதும் குன்றின் உச்சிமீதும் செங்குத்தாகவிருக்க, மெல்லிய கோடுகள் மேற்பரப்பிற்கு எக்கோணத்திலாயினுமிருக்க, கரியசமாந்தரக் கோடுகள் சமதூரச் சூரியக் கதிர்களேக் காட்டுவதாகக் கொள்க. விளக்கப்படத்தின் வெவ்வேறு பகுதிகளில், குறித்த ஒரு பரப்பிலுள்ள கதிர்களின் எண்ணிக்கையை ஒப்பிடுக.
உயர்ந்த மலைப்பகுதிகளிலும் குறைவான வெப்பநிலை காணப்படுவதில்லை. குளிர் என்ப தென்னவென இலங்கை வாசிகளுக்குத் தெரியாது. அந்நிய நாடுகளுக்குப் போனலன்றி இலங்கையிலதை அனுபவிக்கமுடியாது. மழைப் னி இலங்கையிலில்லை; உறைபனி மிக அருமை. நுவரெலியாவின் வருடச் சராசரி வெப்பநிலை 553 ப. பாகை ஆகும். இங்கேதான் வெப்ப நிலைவீச்சு அதிகமுண்டு; வருடச்சராசரி வீச்சு 174 ப. பாகை ஆகும். (கொழும்பில் அது 123 ப. பாகையும் காலியில் 74 ப. பாகையும் ஆகும்.) வெப்பமானியில் உறைநிலைக்குக்கீழே வெப்பநிலை தாழ்ந்து செல்வதைக்
 

பெளதிகப் புவியியல் 153
காட்டும் அவதானநிலையம் நுவரெலியா ஒன்றே. 1914 இல் வெப்பமானியில் 271 ப. பாகை பதிவு செய்யப்பட்டது; இது 5 பாகை உறைபனியாகும். இலங்கையிற் பதிவுசெய்யப்பட்டுள்ள மிகக்குறைந்த வெப்பம் இஃது ஒன்றே. வருடத்தில் மிகக்கூடிய வேறுபாடான 469 ப. பாகை இங்கேதான் காணப் பட்டது. இடைவெப்ப வலயத்துக்காலநிலை நுவரெலியாவிலுண்டெனஅடிக் கடி கூறப்பட்டு வருவது உண்மையில் தவறு. இவ்விரு பகுதிகளும் தம்முள் பல வகையில் வேற்றுமையுடையன. தாழ்பூமியிலும் நுவரெலியில் வெப்ப நிலை குறைவாயிருந்தாலும் அங்கு செல்லும் ஒர் ஆங்கிலேயன் ஞாயிற்றடிப்பு நோயாற் பீடிக்கப்படலாம். ஆனல், தன்னுடைய தேசத்தில் வெப்பம் மிக அதிகமாயிருந்தாலன்றி அவன் அவ்வாறு பீடிக்கப்பட மாட்டான். இதற்குக் காரணம் இலங்கையில் சூரியனின்கதிர் பெருஞ்சாய்வுக்கோணத்தில் வீழ்வதேயாகும்; அதனல் ஓர் இடத்தில் உக்கிரமாக வெப்பத்தை உண்டாக்குகின்றது; வெப்பநிலை அதிகமாயில்லாவிட்டாலும் செறிவான கதிர் வீச்சினல் பழக்கமில்லாத வேற்று நாட்டுமக்களுக்கு நரம்புத் தொகுதியில் தாக்குதலுண்டாகலாம். தாழ்பூமியிலிருந்து அங்குள்ள ஈரலிப்பான வெப்பத் தினல் துன்பமடையும் ஒர் ஐரோப்பியன் நுவரெலியா சென்று விடுமுறை கழிப்பதனல் உண்டாகும் பயன் அதிகமன்று ; அதற்குப் பதிலாக அவன் வெயிற்காய்வு குறைவாயுள்ள அகலக்கோட்டுப் பிரதேசங்களில் வசிப்பான னல் அதிக நன்மையடைவான்.
சமதளமான பூமியில் விழும் சூரியகிரணங்கள் மலேச்சாய்வில் விழும் கிரணங்களிலும் வேறன கோணத்தில் வந்துவிழுகின்றன. எனவே சமதரை நிலத்தில் பெற்றவெயில் அதிகமாயிருக்கும்; மலைச்சாய்வில் அது குறைவு. உச்சிக்குநேரே அல்லது செங்குத்தான கோணத்தில் சூரியன் நிற்குமானல் அதன் கதிர்கள் நேரே பூமியைச் சேரும். எனவே தாழ் பூமியில் அவை குறித்த ஒருபகுதியில் நேராகவும் மலைநாட்டில் வியாபித்தும் விழுகின்றன. ஆதலால், நண்பகலில் வருடத்தின் பெரும்பகுதியில் இலங்கை மலைச்சாய்வுகள், தாழ்பூமியிலும் குளிர்ச்சியுடையன வாயிருக்கும். ஐரோப்பிய தோட்டமுதலாளிகள் மலைச்சாய்வில் தமது வீடுகளைக் கட்டவிரும்பு வதும் இதனுற்றன். மலையுச்சியில் வீடுகட்டுவது சிங்களருக்கு ஏற்காத ஒரு விடயமாகும். இடைவெப்ப வலயத்தில் நண்பகலில் சூரியனின் கதிர்கள் நேராகப் பூமியில் விழாது மிகச்சாய்வாகவே விழும் ; சூரியனை எதிர்நோக்கி யுள்ள மலைச்சாய்வில் இதற்கு நேர்மாறன நிலையுண்டு; சூரியனுக்கு நேர்முகமாயில்லாத மலைச்சாய்வில் வெயிற்காய்வு மிகச்சொற்பமாக விருக் கும். 48 ஆம் விளக்கப்படம் இதனை எடுத்துக் காட்டும்.
சில நிலையங்களின் மாதச் சராசரி வெப்பநிலை. (பரனேற்று அளவிற் கொடுக்கப்பட்டுள்ளது)
மாதங்கள் சன. பெப். மார். எப். மே யூன் யூலை ஒக. செத், ஒற். நவ. திசெ. கொழும்பு ... 790 798 814 826 826 8-6 81-0 81-1 810 80-3 96 790 திருக்கோணமலை 787 80.4 826 852 862 85.6 852 848 846 826 800 78-8 கண்டி • • 74•5 76-0 78•8 79-0 78•7 78-6 , 75 ̇8 75-8 75•8 75•8 7õ•4 ፲4*5 அதுவரெலியா 57.4 57.5 59-1 605 618 600 590 59.5 59-4 59-6 592 57.9

Page 84
இரண்டாம் பகுதி-ஒன்பதாம் அத்தியாயம் இலங்கையின் உள் நாட்டு நீர் நிலைகள்
மழையாக நிலத்தில் விழும் நீர் ஓடிப்பரந்து ஆறக உருவெடுக்கிறது. நீரில் ஒரு பகுதி நிலத்தில் ஊறிப் பாறைகளிடையே தேங்கி நிற்கிறது. கீழேயுள்ள பாறையைப் பொறுத்தே, பூமியின் மேற் பரப்பிற்றங்கும் நீரின் விகிதம் நிச்சயிக்கப்படுகிறது. சில பகுதிகளில் கீழே சுண்ணும்புக் கல்லிருப்பதால் மேலே விழும் நீர் முழுவதும் சுண்ணும்பைக் கரைத்துக் கொண்டு நிலத்துக்கு அடியிற் போய்த் தங்கிவிடுகிறது. சில இடங்களில் நீர் ஊடுருவிச் செல்ல முடியாத திண்மையான கருங்கற் பாறைகளுண்டு. அத்தகைய பகுதிகளில் மேலே பெய்யும் நீரானது மேற்பரப்பிலேயே நிலை யாக நின்று விடுகிறது. பாறைகளின் தன்மைக்கேற்றவாறே நீரானது வடி கிறது. குறிப்பிட்ட ஒரு பிரதேசத்திலுள்ள ஆறுகளின் தொகையும் தன் மையும் முக்கியமாக அப்பகுதியிலுள்ள (1) பாறைகளின் தன்மையையே பொறுத்துள்ளன. மற்றுமிரு காரணங்கள் முக்கியமானவை. (2) மழை வீழ்ச்சி. (3) நீராவியாக மாறுந்தன்மை. இலங்கையில் நிலக் கீழ் நீரையும் நிலத்து மேல் நீரையும் இம் மூன்று அமிசங்களும் எவ்வாறு பாதிக்கின்றன வென்பதை ஆராய்வாம்.
இத்தீவின் பெரும் பகுதி பாரிய படிகக் கற்பாறைகளாலானது. அதனல் தண்ணிர் உள்ளே கசியமாட்டாது. ஆனல், அப்பாறைகள் படைபடையாயும் பொருத்துக்களையுடையனவாயும் அமைந்துள்ளன. இவற்றில் தண்ணிர் படிவது கடினமானலும், வெடிப்புக்கள் மூலம் அது ஒடித் தேங்கும். தாழி பூமியில் செம்பூரான் கற்கள் உண்டு. அவை அதிகமான தண்ணிரை உறிஞ் சிக் கொள்ளும். இந்தக் களி திண்மையுடையதாய், துளையற்றதாயிருந்தால் நீரானது மேலே தேங்கி நிற்கும். அதனல் தாழ்பூமி முழுவதும் சதுப்பு நில மாயமைந்திருக்கும். ஆனல், செம்பூரான் கல்லுத் துளையுடைதாயிருப்பதால் எல்லா நீரும்தடையின்றி ஒடிக் கொள்கின்றது. அதனல் இலங்கையில் ஏறக் குறைய எல்லா இடங்களிலும் கீழே நீரூற்று உண்டு. மலை நாட்டில் நீர் பெரும்பாலும் ஊற்றுக்களிலிருந்து கிடைக்கிறது. இவை பாறைப் படையில் நில மட்டத்தோடு தோன்றும் வெடிப்புக்கள் மூலம் வெளிவருகின்றன. அதற்கு உதாரணமாகக் கீழேயுள்ள 49 ஆம் படத்தைப் பார்க்க. ܗ܂
படத்திலே 'உ' அடையாளமிடப்பட்ட இடங்களில் எங்கேனும் ஒரூற்றுத்
தோன்றலாம். பயறையிலுள்ள வெடிப்புக்களுக் கூடாக நீரோட்டமுண்டா
கிறது. இப்பாறைகள் ஒரே படையாயிருப்பதில்லை. பல அடுக்காக இருக்கும்; 154

பெளதிகப் புவியியல் 155
கட்டடத்தில் செங்கல்லடுக்கியது போலப் பல பிரிவுகள் ஒன்றேடொன்று பொருந்தியிருக்கும். ஒரு படையிலேயே பல பிரிவுகள் ஒன்றேடொன்று இணைந்திருக்கும். எனவே, ம?ல நாட்டில் ஊறதுங்களிருப்பது வியப்பன்று
Lo 49. பளிங்குருப்பாறையில் நீரூற்றுக்களின் நிலையை விளக்கும் படம். உ அடையாள
மிடப்பட்ட தானங்களில் நீர் வெளிப்படும்.
கிணறுகளைக் காண்பதருமை. வண்டல் நிறையப் படிந்துள்ள பள்ளத்தாக்குக் களில் கிணறுகள் வெட்டுவது எளிது. ஆனல், பாறையூற்றுக்களில் நீரை இலேசாகப் பெற முடியுமாதலால் ஒருவரும் கிணறு வெட்டுவதில்லை.
தாழ் பூமியில் செம்பூரான் கல் மூடிய பிரதேசங்களில் கிணறு வழக் கத்திலுண்டு. இக் கல்லிலுள்ள துளைகள் மூலமும், மணல் மூலமும் ஒடும் நீர் கடைசியாகப் போய்ப் படிகப் பாறைகளிற்றங்குகிறது. இப்பாறைகள் சில
á) - d.
} ܠܐܛܛܟܠ ܐܬܵܛܢ
கி-கிணறு, கிச=செம்பூராள்களி, ப=பளிங்குப்பாறை.
ULio 50.
தாழ்ந்த பிரதேசத்திற் கிணறுகளின் நிலையை விளக்கும் படம். சமயம் சரிந்து நிலத்து மேற் பரப்பில் நீட்டிக் கொண்டு நிற்கும் பொழுது
அவற்றிற்றங்கிய நீர் வெளிப்பட்டுப் பாயும். மற்றைப் படி அந்த நீரானது பாறை மீது தேங்கி நிற்கும். மேற்பரப்பிலுள்ள மண்படிவுகளில் நீர்

Page 85
56 இலங்கைப் புவியியல்
下エア「ーー・ーー
நன்றக ஊறி விட்டால் அது மேலே .ெ w
நிலம் சதுப்பு நிலமாகிவிடும். தாசர் தங்கி நிற்கும். அத்தகைய
50 ஆம் படம் விளக்கிக் காட்' " பூபயிலுள்ள கிணற்றின் தன்மையை
(ہاbام ” حدrر
:ே லவிடங்களில் வெப்பநீரூற்று உண்டு. திருக்கோணமலைக்குச்
நோய்க? ள்ேள கன்னியாவிற் காணப்படுவன பிரசித்தமானவை. இவை | fl:୩୭, "ର୍ଥ தீர்க்கும் தன்மை வாய்ந்தனவென்று புகழ் பெற்றுள்ளன. நீஜி' யிலும், கிழக்கு மாகாணததைச சேர்ந்த மகா ஓயாவிலும் சில வெந்
"முற்றுக்களுண்டு. இவ்வூற்றுக்களுக்கு அயலே உள்ள பகுதிகள் “வெந் நீாப் பிபிலை’ என்ற பொருள்படச் சிங்களத்தில் வழங்குகின்றன. இவற்றின் தோற்றத்துக்குக் காரணம் தெரியவில்லை. எரிமலையோடு சம் பந்தப்பட்ட ஒரு தோற்றப்பாடே இது. இவ் விடங்களில் நிலம் ஆழமாக வெடித்திருக்கும். யப்பானில் இவ்வாறுண்டு; முன்னைநாளரசாங்கத்தின் கணிப்பொருளியலறிஞராயிருந்த கலாநிதி குமாரசுவாமி, இவ்வூற்றுக் களைப் பற்றி விளக்கியுள்ளார். நீரானது மலை நாட்டிலிருந்து பாறை வெடிப்புக்கள் மூலம் ஒடித் தாழ்ந்த பூமிக்குப் பாய்ந்து பின்னர் மேற் பரப்பில் வெளிவருகிறதென அவர் கண்டார். இவ்வூற்றுக்களிற் பல வகை யான உலோக உப்புக்கள் கரைந்திருக்கின்றன. பிபிலையில் இரட்டமகாத்து மயாவின் (மணியகாரன்) தோட்டத்திலுள்ள வெந்நீரூற்றில் இரும்பு சேர்ந்த உப்புக்களதிகமுண்டு; அவை இரவிலும் பகலிலே கூடிய குளிராக விருக்கும்.
படிகப்பாறையுள்ள பகுதிகளில் நிலத்துக்குக் கீழே ஒடும் நீர் அவ்வளவு அதிகமென்று கூற முடியாது. மலை நாட்டில் விழும் மழை நீரிற் பெரும் பகுதி நிலத்தின் மேற்பரப்பிற் பாய்ந்து விரைவாய் இழிந்து விடுகின்றது. பாறை நெளிவுகள் மார்க்கமாகவும், பள்ளங்கள் வழியாகவும் அது ஒடி விடுகின்றது. பாறை அடுக்குக்கள் ஒன்றின் மேலொன்று முறிந்து கிடக்கும் பொழுது பள்ளத்தாக்குக்களுண்டாகின்றன. இவை “கிடைப்பள்ளத்தாக்குக்” களெனப்படும். இவற்றின் அமைப்பை 51 ஆம் படத்திற் பார்க்க. சில பகுதிகளில் ஆற்றுப் பள்ளத்தாக்குக்கள் சமாந்தரமாகக் கிடப்பதற்கு இதுவே காரணமாகும். உதாரணமாக தொப்பிதோட்ட மேட்டு நிலத்தில் உள்ள கழனி உப நதிகளையும் மகாவலி கங்கை உப நதிகளையும் ன்டுத்துக் கொள்ளலாம்.
தாழ் பூமிகளில் கழுவு நீர் அதிகமன்று. ஏனெனில் செம்பூரான் கல்லும் அதைப் போன்ற களிப்படிவுகளும், நீரை அதிகமாக உறிஞ்சிவிடுகின்றன. மேலும் படிகப்பாறைப் பரப்பில் உள்ள பல பள்ளங்* களிலும் நீர் தேங்கிவிடுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் அதை யடுத்த தீவுகளிலும் வேறு நிலைமையுண்டு. இப் பகுதிகளில் நீர் நன்ற கக் கசிந்து செல்லக் கூடிய தடிப்பான சுண்ணும்புக் கல்லுண்டு. அதற் கூடாக நீரானது விரைவிற் கீழே கசிந்து மேற்பரப்பில் தங்காமற் போய்விடுகிறது.

U Lo 51 .
படைப்பாறைகளில் கிடைப்பள்ளத்தாக்குக்கள் உண்டாகுமாற்றை இவ்விளக்கப்படம் காட்டு கிறது. R அடையாளமிட்ட தானங்களில், பள்ளத்தாக்குக்களின் வழியே ஆறுகள் பாயும் சிற்றறென்று கிடைப்பள்ளத்தாக்கின் வழியே பாய்வதை ஒளிப்படம் காட்டுகின்றது.

Page 86
58 இலங்கைப் புவியியல்
“காசுத்து’ப் பூமியென வழங்கும் நிலப் பகுதியின் முக்கியமான தன்மை களேயிங்கே காணலாம். “காசுத்து” அல்லது “காசோ’ என்ற நிலப் பகுதி எத்திரியாட்டிக்குக் கடலுக்கு வடக்கே இத்தாலியிலுள்ளதொருபிரதேசமா கும். சுண்ணும்புக் கற்பிரதேசத்தின் பல் வேறு தன்மைகளை ஆராய்வதற்கு இந்த நிலம் வாய்ப்புடையதாகும். சுண்ணும்புக்கல் அதிக மூட்டுக் களையும் நுண்டுளேகளையும் கொண்டது. இலேசான அமிலம் அதில் நன்கு பற்றும்; எலுமிச்சம் பழச் சாருே, வின்னரியோ அதைக் கரைத்து விடும்; மழை நீரில் ஒரளவு அமிலத்தன்மையுண்டு; அதனுல் அது நிலத்திற் கசிந்தவுடன் கல்லுச் சற்றே கரையும்; அதனலேயே கீழேயுள்ள சுண்ணும்புக் கல்லுத் துளையுடையதாய்க் காணப்படுகிறது. எனவே, எல்லா நீரும் நிலத்துக் குள்ளே செறிந்து இக் கற்களிற் படிந்து துவாரங்கள் வழியே ஒடி அவற்றைப் பெரிதாக்குகின்றது. குகைகளும், தரைக் கீழ் நீரூற்றும் இங்கு அதிகமாகச்
உண்டு. நிலம் ஒரளவு சரிவாயிருந்தால் அந்தப் பகுதி பாலைநிலம் போல வறட்சியுடையதாகிவிடும். காசுத்துப் பிரதேசத்தில் இவ்வண்ணமே நடை பெறுகிறது. மழை நீர் விரைவில் நிலத்திலுP வேறு இடங்களில் பீறிட்டு வெளியே வருகிறது. யாழ்ப்பாணக் குடா நாடு மிகவும் சம தரையாகவும் தாழ்பூமியாகவுமிருக்கிறது. சுண்ணும்புக் கற்படையும் சம தளமாகவேயிருக் கிறதென எண்ண வேண்டியிருக்கிறது. அன்றியும் அது கடலுக்குள்ளும் பரந்திருப்பதால் கடல் நீரும் நீரோட்டத்திற் கலந்து நல்ல நீரிலும் உப்பைக் கலந்து விடுகிறது. எனவே இப் பகுதியிலுள்ள கிணறுகள் சில தனித் தன்மைகளைக் காட்டுகின்றன. புத்துருக்குச் சமீபத்தில், ஆழங்காண முடியாத ஒரு கிணறுண்டு. வற்றுப் பெருக்குக் கிணறு மொன்றுண்டு. கடலுக்கு வெகு தூரத்திலுள்ள சில கிணறுகளில் நீர் உப்பாயிருப்பதையுங் காணலாம். கீரிமலை போன்ற வேறு இடங்களில் கடற்கரையையடுத்து நன்னீரூற்றுக்களுண்டு ; இவை கடலோடு சம்பந்தப்படாத துவாரங்களின் வழியாக வருகின்றன. நெடுந்தீவு போன்ற சுண்ணும்புக் கற்றிவுகளில் நிலைமை மிக மோசமாயிருக்கிறது. அங்கே நல்ல நீர் இல்லை. அதனல் விவசாயஞ் செய்வது கடினம். குடிப்பதற்குமே நீரில்லாதபடியாற் சனங்கள் இள நீரையும் கள்ளையும் அருந்துவர். இலங்கையின் ஏனைப் பகுதிகளில் கடற்கரையையடுத்திருக்கும் கிணறுகள் பொதுவாக உவர்நீருடையனவாகவே யிருக்கும். ஏனெனில் அவை உவர் நிறைந்த கடல்மணலுக் கூடாக வெட்டப் பட்டவை. கரையை யடுத்து வசிப்போர் குடி நீரை உள்ளூரிலிருந்தே பெற வேண்டும். ஆனல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இது எப்பொழுதும் அவசிய மில்லை. எனெனில் சுண்ணும்புக் கற்பாறை கடல் மட்டத்துக்கிருக்கிறது. மழை அதிகமுண்டு ; நீர் மட்டமும் வறண்டுபோன மேற்பரப்பை யடுத்தே யுள்ளது. சில இடங்களிற் சுண்ணும்புப் பாறை கடல்மட்டத்துக்குக் கீழேயுண்டு; இங்கே மேற்பரப்பை நீர் மூடிவிடுகிறது. அதனுல் உள்ளூர் ஏரிகளுண்டாகின்றன. இந்த வரிகளில் உவர்ப்புப் பல படியாயிருக்கும். வறண்ட காலங்களில் நீராவி அதிகமாகக் கிளம்பும் ; அதனுல் எரிகளையடுத்துள்ள நிலங்களில் உப்பு

பெளதிகப் புவியியல் 59
உண்டாகும். ஆதலின் இப்பகுதிகளில் உப்பு விளைவித்தல் நெடுங்காலமாகவே முக்கிய தொழிலாயிருந்து வருகிறது. சுண்ணும்புக் கற்பாறைப் பகுதிகளில் உள்ள நீரோட்ட வமைப்பு மிகக் கவர்ச்சிகரமானது. இதனை அனுபவ வாயிலாக ஆராயப்புகும் மாணவர்க்கு நல்ல பலன் உண்டாகும்.
படிகச் சுண்ணக்கற் படைகளையுடைய மலைநாட்டுப் பகுதிகளில் இந்த அமிசங்கள் சில வற்றைக் காணலாம். ஆனல், அங்குள்ள சுண்ணக்கற் பாறைகள் அமைப்பிலும், இணைவிலும் மாறுபட்டன. இங்குள்ள மண், சுற்றியுள்ள பாறைகளிலுள்ள மண்ணிலும் வறட்சியுள்ளது. மேலும், இங்கு ஆறுகள் அதிகமில்லை. ஓரளுவி பளிங்கடுக்குப்பாறை மேற்பாய்ந்து வந்து சுண்ணக்கற் பாறையை அடைந்ததும் நிலத்தின் கீழ் மறைந்து விடுகிறது, அல்லது கீழேயுள்ள சுண்ணக்கற் படை நீரிற்கரைந்து சிதைந்துபோய் அரிப் புண்டு பள்ளத் தாக்காக மாறுகிறது. மலைநாட்டிற் காணப்படும் வியப்பூட் டும் இப்பகுதிகளை மேலும் ஆராய வேண்டியதவசியமாகும்.
நல்லபருகு நீரை நிறையப் பெறுவதே நாகரிக மடைந்த மக்களுக்குள்ள முக்கியமான பிரச்சினைகளு ளொன்ருகும். “நீரின்றமையாதுலகு”. நீரின் தன்மையும் நிறைவும் மக்களுடைய வாழ்வைப் பாதிப்பது போல வேறென் றும் பாதிப்பதில்லை. இவ்வருமையான நீர்வளம், தேசத்துக்குத் தேசம் வித்தியாசப்படும். பாலைநிலத்தில் மழையைக் காணுது வாழ்க்கை நடத்தும் நாடோடிகள் நீரைப் பொன்போலப் போற்றுவர். குடிக்கப் போதிய நீர் கிடைத்து விட்டாலே அதைப் பெரிய பாக்கியமாக அவர்கள் கருதுவர். தேகத் தைக் கழுவிக்கொள்வதைப் போக போக்கிய சுகமாகவே அவர்கள் கருதுவர். அசாம் போன்ற சில தேசங்களில் அளவுக்கு மேலதிகமாக நீருண்டு. ஆனல், இந்தியாவின் வட மேற்கில் “பஞ்சப் பூமி’ யென்ற பிரதேசங் களுண்டு. அங்கே மழை வீழ்ச்சி நிச்சய மற்றதாயிருப்பதால் வாழ்க்கை எப்பொழுதும் இன்னல் நிறைந்திருக்கும்.
இலங்கையில் இத்தகைய தீவிர நிலைகளில்லை. 200 அங்குலத்துக்கதிக மான மழையைப்பெறும் பகுதி ஒன்றே ஒன்று இலங்கையிலுண்டு. (மழை வீழ்ச்சிப் படத்தை நோக்குக). மித மிஞ்சிய நீர்வள மிருப்பதால் இங்கே வாழ்க்கை மிகவும் கடுமையான தாயிருக்கிறது. இங்கே பல காலமாக மக்கள் வசித்ததே கிடையாது. அப்படியே தொடர்ந்து இப்பிரதேசம் மனித வாச மற்றதாயிருந்திருக்கும். ஆனல், தேயிலை, இறப்பர் போன்ற பயிர்கள் இங்கே செழித்து வளருமெனக் காணப்பட்டதால் அந்நிலையுண்டாகவில்லை. இருந்தும், இதன் பெரும்பகுதி இன்றும் அயன மண்டலக் காடுகளால், நிறைந்திருக்கிறது. இங்கே குடிப்பதற்கும், விவசாயஞ் செய்வதற்கும் மித மிஞ்சிய தண்ணீர் கிடைக்கிறது. வெள்ளத்தை வடியச் செய்வதே இங்கு பெரிய பிரச்சினை. வீடுவாசல், பொருள்பண்டம், சீலை துணி முதலிய வற்றை உலர்ந்த நிலையில் வைத்திருப்பதே கடினமான காரியமாகும். காற்று வெப்பமுள்ளதாகவும், ஈரலிப்புள்ளதாகவுமிருப்பதால் பல வகை

Page 87
60 இலங்கைப் புவியியல்
யான பூஞ்சணம் விரைவாகப்பிடித்து விடுகிறது. அதனல் துணி, தோற் பொருள் முதலியன சேதமடைகின்றன. படிகப் பாறைகளிருப்பதால் மழை நீர் பூமியின் மேற்பரப்பிலேயே நிலத்திற் கசியாது ஓடிவிடுகிறது. ஊற்றுக் களும், ஆறுகளும் அதிகம் காணப்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். நீர் நன்றகக் கசியக்கூடிய சுண்ணக்கற் பாறைபோன்ற பாறைகளை இப் பகுதியுடையதாயிருக்குமானல் மழைநீர் விரைவில் நிலத்தில் ஊறி மறைந்துவிடும். இவ்வளவு மழை பெய்தபோதிலும், மக்களின் தேவைக்குப் போதிய நீர் கிடைக்காமற் போகலாம். மேலும், இங்கே மந் தாரமதிகம் ; மற்றைப்பகுதிகளிலும் இங்கு முகில்கள் திரண்டுவானத்தை மூடியிருக்கும். அடிக்கடி காற்று மேலே கிளம்பி நீராக மாறுவதல்லாமல், நீராவியாக மாறுவதில்லை. அதனுல் பூமியின் மேற்பரப்பிலுள்ள நீர், மற் றைப்பகுதிகளைப்போல வற்றுவதற்குச் சூரிய வெப்பம் போதாது. 75 அங் குலச் சம மழைக் கோட்டுக்குட்பட்ட பகுதிகளிலெல்லாம் அதிக மழையோ மிதமிஞ்சிய மழையோ உண்டு (52 ஆம் படம் பார்க்க).
மற்றைக்கோடியில் நீர்ப் பஞ்சமுள்ள இரண்டு பிரதேசங்களையுங் காண் கின்றேம். அவை புத்தளமும் அம்பாந்தோட்டையுமாகும். (மழை வீழ்ச்சிப் படத்தை நோக்குக). இலங்கையின் மற்றெல்லாப் பாகங்களேயும் விட, இங்கே மழை குறைவு. வளிமண்டலம் வறண்டும், வானத்தில் முகிற்படலத் தொடர்பற்றும் காணப்படுகிறது. இதனல் வெயிற் காய்வைத் தடுப்பதற்கான வேறு காரணங்களுமில்லை. எனவே, நீராவியாதல் விரைவில் நடைபெறு கிறது. படிகப்பாறைகளில் விழும் நீர் மேற்பரப்பிலேயே தங்கிக் கொள்வதால் அதுவும் வெயிலில் வறண்டுபோகிறது. எனவே, இடைவெப்ப மண்டலத்தில் (இலண்டனில் 25" மழையே பெய்கிறது) போதுமானதாகக் கருதப்படும் 50 அங்குல மழை இங்கே மனிதவாழ்வுக்குப் போதாதிருக்கிறது. அதனல் செயற்கை முறையில் நீரைத் தேக்கிவைக்க வேண்டியது அவசியமாகிறது. அத்துடன் விவசாயஞ் செய்வதும் மிகக் கடினமாகிறது. கமக்காரர்க்கு இப்பகுதி கள் வாய்ப்பானவையன்று. மேலும் நிலம் உவர்ப்புத் தன்மையடைகிறது. நீர் ஆவியாக மாறியபின் அதிற் கலந்துள்ள உப்பு அப்படியேபடிந்து விடுகிறது. அது விவசாயிக்குப்பிரதிகூலமாயமைகிறது. உவர்ப்புச்சற்றே சேர்ந்த மண் ணில் வளரக்கூடிய முக்கியமான வொருபயிர், பருத்தி. அம்பாந்தோட்டை மாவட்டத்தில் இப்போது பரீட்சார்த்தமாக இப்பயிர் செய்கை பண்ணப்படுகிறது.
நீர்வளம் நிறைந்துள்ள பகுதிகளிற் காணும் தண்ணீரை நீர்ப்பாசன முறைகளால் பாய்ச்சி விடமுடியுமானல் தீவு முழுவதன் தேவைக்கும் போதுமான தண்ணிர் இலங்கையிலுண்டு ; அதற்குரிய சாதனங்களை இலங் கையில் அமைப்பது சாத்தியமே.
75 .9) ங்குலத்துக்குக் குறைவான மழைவீழ்ச்சி பெறும் பகுதிகளில் வருடத் திற் பெரும்பகுதியில், மிதமிஞ்சிய நீராவியாதலினல் நீர்ப்பஞ்சமுண்டா கின்றது. பூமியின் மேற்பரப்பு மிகவும் வறட்சியடைகிறது. கிணறுகள்

எப்பொழுதும் நிறை
106010460TC)
Ilo 52.

Page 88
162 இலங்கைப் புவியியல்
வற்றி விடுகின்றன; மக்கள் நெடுந்துரஞ் சென்று குடிதண்ணிரைப் பெற வேண்டிய நிலைமையுண்டாகிறது. அழுக்கடைந்த தண்ணிரில் கிருமிகள் உண்டாகின்றன. அதனல் நெருப்புக் காய்ச்சல் (தைபோயிட்டுக்காய்ச்சல்) போன்ற நோய்களுண்டாகின்றன. நீரைச் சுத்தமாக்கிக் குடிக்கத்தெரியா திருக்கும் வறிய மக்கள் அழுக்கு நீரையே குடிக்க வேண்டியவராகின்றனர். முள்ளியவளை (முல்லைத் தீவுப்பகுதி), ஒட்டிசுட்டான், மாங்குளமாகிய பகுதிகளில் வசிக்கும் கிராம வாசிகள், அழுக்கடைந்த நீரை ஏழ்மை நிமித்தமோ, அறியாமை காரணமாகவோ குடித்து நோயைத் தேடிக் கொள்ளுகின்றனர். கிணற்றிற் சில சமயம் மீன்கள் வாழமாட்டா. நீர் அழுக்கடைந்து விட்டதென்பதற்கு அதுவே அறிகுறியாகும்.
சன நெருக்கடியுள்ள பகுதியினூடாகப் பாயும் ஆற்றின் நீரைக்குடிப்பது ஆபத்தானது; எனெனில் பலவிதமான அழுக்குக்கள் ஆற்று நீரிற் சேரக் கூடும். ஊற்றுநீர் ஓரளவு சுத்தமானதே; ஏனெனில் அது பாறைகளுக் கூடாகப் பாய்ந்து செல்வதனல் அதன்மூலம் வடிகட்டப்படுகிறது. அதில் கிருமிகள் அழுக்குக்கள் சேர்வது குறைவு. மேல் மாகாணத்திலும் வடமேல் மாகாணத்திலும் உள்ள கிணறுகள் ஆழமற்றவை. இப்பகுதிகளிற் சன நெருக்கமுமதிகம். எனவே, கிணற்று நீர் அழுக்கடைவது இயல்பு. அத னல் நெருப்புக் காய்ச்சல் உண்டாவதும் சகசம். சன நெருக்கமுள்ள சீன வின் சில பகுதிகளிலும், எகித்திலும், பெல்சியத்தாழ்பூமியிலும், இலண் டன் வடிநிலத்திலும், இந்தப் பிரச்சினையெழுந்தது. குடிசனம் பெருகப் பெருக இத்தகைய ஆபத்துக்களும் வளரும். பெல்சியத் தாழ்பூமிகளில் மக்கள் பலகாலமாக நீருக்குப் பதிலாக 'பீர்' என்ற மதுவைக் குடித்து வந்தனர். கழுவுதற்கு மட்டுமே நீர் உபயோகிக்கப்பட்டு வந்தது.
பத்தொன்பதாம் நூற்றண்டிரைம்பத்தில் இலண்டன் மாவட்டத்தி லுள்ள மக்கள், தேமிசு நதி அழுக்கடைந்து நெருப்புக்காய்ச்சல் உண்டாகக் கூடிய நிலைமை யேற்பட்டதால் பெரிதுந் துன்பமடைந்தனர். எனவே வேறு வழிகளில் தண்ணிரைப் பெறுவதற்கு முயன்றனர். இலங்கையிலும் இந்த நிலைமை விரைவாக வளர்ந்து வருகிறது. நெருப்புக்காய்ச்சலைத் தடுப் பதற்கு மற்றை நாடுகளில் என்னென்ன நடவடிக்கைகளெடுக்கப்பட்டு வரு கின்றனவென்பதை இலங்கை மாணவர் ஆராய்வது பயனுடையதாகும். பெருந்தொகையான மக்கள் வசிக்கும் இடங்களில் நல்ல பருகு நீரைப் பெற் றுக் கொடுக்கக்கூடிய முறைகளை அவர்கள் ஆராயவேண்டும். இந்த நிலைமை யில் மூன்று வழிகளைப் பின்பற்றல்ாம்.
(1) சன நெருக்கம் குறைந்த மலைப்பிரதேசங்களிலிருந்து நீரைக்கட்டுக் கால்வாய் மூலம் கொண்டுவருதல். பல பெரிய பிரிட்டிசுப் பட்டினங்களில் இவ்வாறு செய்யப்படுகிறது. பெல்சியத்தில் இம்முறை பெரும்படியாக அபிவிருத்தி செய்யப்படுகிறது. இலங்கையிலும், சில பட்டினங்களில் வசிப் போர் உள்ளூராட்சி முறையைப் பலப்படுத்தி நிர்வாகம் நடத்தினல் இது

பெளதிகப் புவியியல் 163
சாத்தியமாகும். சிவனெளிபாதப் பிரதேசத்தில் சனச்செறிவு குறைவு; அங்கே தேவைக்கதிகமான நீருண்டு. சன நெருக்கமுள்ள பாணந்துறைப் பட்டினம் அங்கிருந்து 40 மைல் தூரத்திலேயே இருக்கிறது. எனவே அங்கி ருந்து ஒரு கட்டுக் கால்வாயை அமைத்தால் பாணந்துறைக்குத் தேவையான தண்ணிரைக் கொண்டுவந்து விடலாம். இன்று கொழும்புக்கு மட்டுமே வெகு தூரத்திலிருந்து தண்ணிர் குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. ஆனல், மற்றைச் சிறிய நகரங்களுக்கும் குழாய் மூலம் நீர் கொடுக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. அவை விரைவில் நிறைவேறுமென எதிர்பார்க்கலாம்.
(2) ஆழமான ஆட்டீசியக் கிணறுகளை வெட்டுதல்; இம்முறை இலண்டன் மாவட்டத்தில் நடைமுறையிலிருக்கிறது. இதன் பிரகாரம் பூமியின் மேற் பரப்பின் கீழேயுள்ள பாறைகளைத்துளைத்து வேறு பாறைப்பிரதேசங்களி லிருந்து நிலக்கீழ் ஊற்றக வரும் நீரைப்பெறுதல்; இது இலங்கையிற் சாத்தியமாகாது; எனெனில், பலவிதப்பாறைப் படைகள் இலங்கையிலில்லை. அன்றியும் படிகப்பாறை நிலத்துக்குக்கீழே மிக ஆழத்துக்குச் செல்லுகிறது.
(3) நெருப்புக்காய்ச்சலைத் தடைசெய்யும் முறைகளைக் கைக்கொள்ளுதல். ஐம்பது வருடங்களுக்கு முன்னர் மேற்கு ஐரோப்பாவிலுள்ள பிரபல வைத்தியர்கள் சிலர் நெருப்புக்காய்ச்சலைப் பற்றி ஆராய்ச்சி நடத்தினர்கள். இவர்களுள் பிரான்சைச் சேர்ந்த உலூயிபாச்சரும் இங்கிலாந்தைச் சேர்ந்த இலித்தர் பிரபுவும் இருந்தனர். இவர்கள் கண்டுபிடித்தவைகளின் பயனகப் பல நாடுகளில் நெருப்புக்காய்ச்சல் ஒழிக்கப்பட்டது. அழுக்கடைந்த நீரிலும், பாலிலும் இவர்கள், பூதக்கண்ணுடி மூலம் சிறிய கிருமிகளை அடிக்கடி அவதானித்தனர். அதே கிருமிகள் நெருப்புக் காய்ச்சலுள்ளவர்க ளுடம்பிலுங் காணப்பட்டன. எனவே நீரையும் பாலையும் சுத்தமாக வழங்குவதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை யெடுத்தாலன்றி இவ் வியாதியைப் போக்க முடியாதென அவர்கள் கூறினர். அத்துடன் பொது மக்களுக்கும் இவ்விடயங்களைப் பத்திரிகைகள்மூலம் அறிவிக்கவேண்டுமென வும் வற்புறுத்தினர். இவ்விடயங்கள் பிரிட்டனில் பிரசாரஞ் செய்யப்பட்டது போல உலகில் வேறெந்த நாட்டிலும் பிரசாரஞ் செய்யப்படவில்லை. இப் போது பிரிட்டனில் நெருப்புக்காய்ச்சல் மிக அருமை. ஆனல், அது ஒரு காலத்தில் இன்று இலங்கையிலிருப்பது போலச் சருவசாதாரணமாக இருந்துவந்தது.
மற்றை நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்பொழுது இலங்கையின் மரண விகிதம் அதிகம். குறிப்பாகச் சிலபகுதிகளில் அது மிக அதிகம்; அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நெருப்புக்காய்ச்சல். எனவே வாலிபராயுள்ளவர்கள் இலங்கையின் நீர் வழங்கல் முறையை ஆராய்ந்து கற்கவேண்டியதவசியமாகிறது. அதற்கு இலங்கையின் புவியியற்றன்மைகளை யெல்லாம் கருத்தில் வைத்து ஆராயவேண்டும்.

Page 89
LILD 53.
குடித்தொகையின் மரணவிகிதம் : ஆயிரத்துக்கு இத்தனை என்பதைப் பருமட்டாகக் காட்டும் படம். மரணத்தின் காரணங்கள் மிகச் சிக்கலானவை. தைபோயிட்டுக் காய்ச்சல் இவற்றுள்
முக்கியமானது. கருஞ்சாயை - 1000 இற்கு 60 இன் மேல் நெருங்கியகோடு = 1000 இற்கு 40-60 அகன்றகோடு : , ,, 20-40 வெளிப்பான இடம் = , , 20 இன் கீழ்
 

பெள4'ட் புவியியல் 5.
s இலங்கையில் ஏராளமான ஆறுகளுண் மேலும், கணக்கற்ற் சிற்d
களும் , குவிகளும் காணப்படுகின்றன. விவரமான ஒரு படத்தைப் பார், தால் இ: னே புலனகும். இலங்கையில் ஆறுகள் இல்லாத பகுதிகள் பி ை ாலிப்பு ” ப7 களில் இவை அதிகம்; இதற்கு մItյ3ÕÙT{5}
கள்ேக .ற ^" ம்,
(1) படிகப்பாலறகள6 புகிா) கசிவற்றதன்மை; இதருல் மழை நீரிற் பெரும் பகுதி வெளியே பாய்கின்றது.
(2) தீவின் பெரும் பாகத்திலும் நல்ல மழைவீழ்ச்சி, பிரதானமாக மலை நாட்டின் ஒரங்களிற் பெய்யும் மழை; இங்கேயே பெரும்பாலான ஆறுகள் உற்பத்தியாகின்றன.
ஆறுகள் தொகையிற் பல வாயினும், உருவத்திற் சிறியவை. ஒர் ஆறு மட்டும், 200 மைலுக்கு அதிகமான நீளமுடையது. அது மகாவலிகங்கை எனப்படும். 60 மைலுக்குமேல் நீளமுள்ள பல ஆறுகளுமிருக்கின்றன. மகாவலிகங்கை (206 மைல்) தேமிசுநதியிலும் (225 மைல்) நீளத்திற் சிறிது குறைந்தது ; கங்கையாற்றின் பங்கு நீளமுள்ளது. முக்கியமான 16 ஆறுகளின் பெயர்களையும் அவற்றின் நீளத்தையும் கீழேகாண்க:-
6ᏡᏞᏝᎶᎧ 600Lp6) மகாவலி கங்கை 206 மாணிக்ககங்கை 8. அருவி ஆறு 104 மகா ஒயா 78 கலா ஒயா 97 கிரிந்தி ஒயா 73 யான் ஒயா 94 களுகங்கை 70 கழனிகங்கை 90 சின் கங்கை 70 தெதுரு ஒயா 87 குமுக்கன் ஒயா 70 மதுறு ஒயா 86 மீ ஒயா 67 வ'ைவைகங்கை 83 கல்லோயா 62
கங்கை, ஒயா என்பன ஆற்றைக்குறிக்கச் சிங்களத்தில் வழங்குஞ்சொற்கள். சிறிய ஆற்றுக்கு ஓயாவும் பெரிய ஆற்றுக்குக் கங்கையும் வழங்கப்படு கின்றன. “ஆறு’ என்பது தமிழில் வழங்குஞ் சொல்லாகும்.
இலங்கை ஆறுகள் உருவத்தாற் சிறியனவாயிருந்தாலும், அழகாற் சிறந்தவை. மலை நாட்டிலே சில ஆழமான மலை இடுக்குக்கள் வழியாகப் பாய்ந்து ஒடும்பொழுது அப்பிரதேசத்தின் இயற்கை கோலாகலமானது. தாழ்பூமியில் தாலமரங்கள் ஆற்றின் விளிம்பையடுத்துள்ளமையால் ஏற்படும் சாந்தமும் ஆனந்தமும் இக்காட்சியோடு போட்டியிடத்தக்கன, ஆற்று முகப் பில் கடனிரேரிகள் அமைந்துள்ளன. அயனமண்டலத்தியற்கை அழகை விரும்புவோருக்கெல்லாம் இலங்கை நதிகள் மனேகரமான இன்பத்தை நல்குவன. இந்நதிகள் முற்காலத்தில் முதலைகளுக்கிருப்பிட மாயிருந்தன. அதனுல் குழந்தைகள் அந்நதிகளைக் கண்டு அஞ்சினர். ஒடத்திற் செல்

Page 90
ந்தக்தோட்டுக்கு வுெளி Pಙ್ಗ ஆறுகளின்
:லுெள்ளம் ஏற்படக்கூடிய
பிரதேசம் p
N S xyதிரிண்டி ஒயா , சின் கங்கைY& ஒர்வளவை கங்கை go ~) s on 24 TGT நில்வள கினிக் ΕΕ. Η -- ダリ
Lŭto 54.
இலங்கையின் ஆறுகள். (படம் சிறிதாதலால் வெள்ளப்பெருக்குடைய இடங்கள் விசாலித்துக்
காட்டப்பட்டுள்ளன.
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 67
வோரும் அபாயத்துக்குப் பயப்படவேண்டியிருந்தது. இன்று இந்ந திகளில் முதலைகள் அருமை. சிங்களச் சிறுவர், வலைஞராகவாழ விரும் பினலன்றி, இங்கே நீந்த அனுமதிக்கப்படமாட்டார்கள். ஆற்றேரத்தில், ஆபத்தில்லாததென அனுமதிக்கப்பட்ட இடங்களிற்ருன் அவர்கள் குளிக்கக் கூடும். தீவின் வடக்கிலும் கிழக்கிலுமுள்ள ஆறுகளில் முதலைகளுண்டு. இது இயற்கையே. சன நெருக்கமுள்ள இடங்களில் இன்றும் அவை சில சமயம் தென்படுகின்றன. உதாரணமாக 1925 இல் இக்கடுவை ஆற்றில் ஒரு பெரிய முதலைதோன்றி அங்கு குளித்து நின்ற ஒரு பெண்னைக் கொன்றது.
L. Lo 55.
பாணந்துறைப் பொங்குமுகம். பின்னணியிலே கப்பல்கள் வெளியேற ஒரு சிறு இடைவெளியை மட்டும் விட்டு வாயிலை அடைக்கும் மணற்றடையைக் காண்க. பாணந்துறை பிரதான மீன் பிடிமையமாதலால், பொங்குமுகத்தில் வள்ளங்கள் பொதுவாகக் காணப்படும்.
இலங்கை ஆறுகள் பிரயாணஞ் செய்வதற்கு உதவமாட்டா. மலைநாட்டில் அவை மிக வேகமாகவும், தாழ்பூமியில் மந்தமாகவுமிருக்கின்றன. மலை நாட்டிற்பாயும் பொழுது இந்நதிகள் பாறைகளைப் பெயர்த்து நிலத்தை அரித்துக்கொண்டுவந்து தாழ்பூமியில் மெதுவாக ஒடும்பொழுது அவற்றைப் பரவி விடுகின்றன. சமதளமான பூமியில் இவை பரந்து மெதுவாக

Page 91
I68 இலங்கைப் புவியியல்
ஒடுகின்றன. அப்பொழுது மணல் மேடுகளையும், மிருதுவான சேற்றையும் உண்டாக்குகின்றன. கீழ்ப்பாகத்தில் அவை பல கிளைகளாகப் பிரிந்து (54 ஆம் படத்திலுள்ள மகாவலிகங்கையின் கீழ்ப்பாகத்தை நோக்குக) பாயும். ஈற்றில், பெரிய எரிகளைப் போலப் பரந்துபாயும். அவை ஆழமற்றவைாயும் பெரியகப்பல்கள் போக முடியாதனவாயுமிருக்கும். இலங்கைக்கரையில் குறிப்பிடத்தக்க வறறுப் பெருக்கு இல்லாதபடியாலேயே இவ்வேரிகள் உண்டாகின்றனவென்றும், அதனல் ஆற்றுப்பொங்கு முகம் கடற்றிரையால் துப்புரவாக்கப் படுவதில்லை யென்றும் ஏற்கெனவே குறிப்பிட்டோம். அக்காரணத்தால் மணல்மேடும் சேற்று மேடும் ஆற்றின் முகத்துவாரத்துக்குக் குறுக்கேயுண்டாகின்றன. (55 ஆம் படம் பார்க்க). இவை ஆற்று நீரைத் தடைசெய்து கரைக்குப்பின்னுற் பாவச் செய்கின்றன. அதனுல் இவ்வேரிகளுண்டாகின்றன. இவற்றிற் பல மிக விசாலமானவை. மீன் பிடிப்பதற்கு இவை எற்றவை. ஆனல், பல இடங்களில் விசேடமாகக் கிழக்குக் கரையில் பொத்துவிலுக்கும் திருக்கோணமலைக்கு மிடையில் இவை போக்குவரத்துக்குப் பெருந்தடையாயமைந்துள்ளன. ஆற்றில் வெள்ளம் பெருகும் காலங்களில் இவை பெருந்தடையாகின்றன.
உயர்ந்த வெப்பநிலையுள்ள பிரதேசங்களில் திடீரென்று பெரிய பாட்டமாக மழைபெய்யும். இலண்டனில் வருடம் முழுவதும் பெய்யும் மழை, இலங்கையில் ஒருநாளேயிற் பெய்து விடுமென முன்னரே சுட்டிக் காட்டினேம். அத்தகைய பகுதிகளிலுள்ள ஆறுகளில் திடீரென வெள்ளம் உண்டா கும். அதனல் மக்கள் அவற்றை யடுத்து வீடு கட்டுவதில்லை இலங்கை யில் எங்கும் இந்நிலையுண்டு. ஆனல், தகுந்த பாதுகாப்புக்களெடுக்கப் பட்டால் இந்நதிப்பிரவாகங்களைக் கட்டுப்படுத்தி நிலத்தை அபிவிருத்தி செய்யலாம். நதிப்பெருக்கால் பாரதூரமான தடை உண்டாகக்கூடிய பகுதிகள் இலங்கையில் அதிகமில்லையென்றே சொல்ல வேண்டும். வெள்ளம் இலேசாகப் பாயக்கூடியமுறையில் பாலங்களைப் பெரிதாகவும் உயரமாகவுமமைக்க வேண்டும். மகாவலிகங்கையின் கீழ்ப்பாகத்திலும் கழனிகங்கையின் கீழ்பாகத்திலுமே மிக மோசமான வெள்ளப் பெருக்கு உண்டாகிறது. வெள்ளநீர் பாய்ந்தோடுவதற்குப் பல வகையான வடிகாற் றிட்டங்களமைக்கப்பட்டிருந்த போதிலும், கொழும்பைச் சேர்ந்த தாழ்ந்த பிரதேசங்கள் அடிக்கடி வெஸ்ளத்தினற் பெருஞ் சேதமடைகின்றன. கழனியின் மேற்பாகத்திலும் களுகங்கையின் மேற்பாகத்திலும் பல தெருக்கள் மழைக்காலத்தில் போக்கு வரத்துக்கு நிச்சயமற்றனவாயிருக்கின் றன. மகாவலிகங்கை கடலோடு கலக்குமுன்னர் பல கிளைகளாகப் பிரிகிறது. திருக்கோணமலையிலிருந்து கரையோரமாகத் தெற்கே அடிக்கடி வெள்ளம் பெருகுவதுண்டு. அதனல் மட்டக்களப்புக்குச் செல்லும் பாதைகள் போக்கு வரவுக்குத் தகுதியற்றனவாகி விடுகின்றன.

பெளதிகப் புவியியல் 169
சில சமயங்களில் இந்நதிகளிற் பல, முற்ருக வறண்டு போய்க் கிடப்பதை யுங் காணலாம். தென்மேற்குப் பருவக்காற்றினல் உண்டாகும் மழை ஸ்ட்ழச்சியின் பயனக மலைநாட்டின் தென்பாரிசத்திலும், மேற்பாரிசத்திலும் அதிக நீரைப் பெறும் நதிகள் ஓரளவு ஒழுங்கான நீரோட்டத்தையுடையன வாயிருக்கினறன. அதேகாலத்தில் வடக்குத்தாழ்பூமியிலும் கிழக்குத்தாழ் பூமியிலும் நதிகள் பெரிதும் நீர்வற்றிவிடுகின்றன. இந்நதிகள் வடகிழக்குப் பருவக் காற்றுக் காலத்திலே பெருக்கெடுக்கின்றன. கதிர்காமத் திருவிழாக்
LIL b 56.
கழனி ஆற்றின் மீதுள்ள விற்றேறியாப் பாலம்.
காலத்தில், மாணிக்க கங்கையில் சனங்கள் நடந்து செல்லக்கூடிய அளவு தண்ணிர்தானிருக்கும். உற்பத்தித்தானத்தில் மழைபெய்தால் அது இரைச்சலோடு புரண்டு ஒடும்.
52 ஆம் படத்திற் காணப்படும் கறுப்புமை தீட்டப்பட்ட பகுதிகளிலுள்ள ஆற்றிற் பெரும்பாலானவை, யூன் மாதந் துவங்கி செத்தெம்பர் வரை நீர் வற்றிக்காணப்படும். ஆற்றின் மணற்றளத்திற் சிறிதுநீர் மெதுவாகஅசைந்து

Page 92
70 இலங்கைப் புவியியல்
செல்லும். இக் காலப் பகுதியில் காடுகளிற் பிரயாணஞ் செய்வது மிக எளிது. வறட்சியால் மலேரியாக் கொசுக்கள் முற்றய மறைந்து விடும்; கால நிலை வறட்சியுடையதாய், உடலுக்கு வலிமையூட்டுவதாய்க் காணப்படும்.
வறட்சியைத் தடுப்பதற்காகப் பண்டைய மக்களிங்கே அற்புதமான பல குளங்களைக் கட்டினர். அதனுல் அவர்கள் இப் பகுதிகளில் உயிர் வாழக் கூடியதாயிருந்தது. சிங்களத்தில் இவை வெவ' என்று வழங்கும். இலங்கையின் புகழுக்குரிய சிறந்த அமிசங்களிலொன்று இக் குளங்கள். இவை ஆற்று ஒழுங்கைப் பெரிதும் மாற்றி விட்டன. துர்ந்து அழிந்து போன குளங்களையும், சமீபகாலத்திற் பயன் படுத்தப்பட்ட குளங்களையும் விவரமாகக் காட்டும் ஒருங்குல அளவைப் படங்களை ஆராய்ந்தால் இவற்றின் திருத்தமான ஒழுங்கை அறிந்து கொள்ளலாம். இக் குளங்கள் பல தன்மைவாய்ந்தன. ஒரு விவசாயிக்குப் பயன்படும் சிறிய குளம் தொட்டு ஒரு முழுக்கிராமத்துக்கே நீர்பாய்ச்ச உதவும் பலசதுரமைற் பரப்புள்ள பெரிய பல எரிவரை காணப்படு கின்றன. வறட்சிப் பிரதேசத்தில் ஒவ்வோர் ஆறும் அதன் உப நதிகளும் பயன்படுத்தப்பட்டன. அதனுல் ஒர் ஆற்றேடு சம்பந்தப்பட்ட குளங்களெல் லாம் தொடுக்கப்பட்டிருந்தன. பள்ளத்தாக்குக்குக் குறுக்கே மண்ணுற் பெரிய அணைகள் கட்டப்பட்டன. அவை மிகச் சாதுரியமாகக் கட்டப்பட்ட படியால், பூமியின் இயற்கை யமைப்புப் போல அவை காட்சியளித்தன. எனவே குளமும் இயற்கைக்குளமாகத் தோற்றமளித்தது. இலங்கையில் இயற்கைக் குளங்களருமை. கண்டிக் குளமும் நுவரெலியாக் குளமும் செயற்கைக் குளங்களே. இதனேடுள்ள விளக்கப் படத்திலே மாணிக்க கங்கை யின் மேற்பகுதியிற் காணப்படும் கைவிடப்பட்ட குளங்கள் வரையப் பட்டிருக் கின்றன. இது ஓரங்குலப் படத்திலிருந்து பிரதி பண்ணப்பட்டது. குளங்களைப் பற்றிய ஒரு பொதுவான காட்சியை இதிலிருந்து பெறலாம். சில பெரிய ஆறுகளை யொட்டி ஆயிரக் கணக்கான குளங்களைக் காணலாம். எல்லா மாகப் பன்னீராயிரத்துக்கு மேலிருக்கலாம். பெரிய அளவைப் ப்டங்களில் உள்ள குளங்களின் தொகையை இங்குள்ள விளக்கப்படத்திலிருந்து கணித் துக் கொள்ளலாம். நாலாம் பாகம் நாலாமத்தியாயத்தில் நாச்சியார்தீவுக் குளத்தின் படமும், விளக்கப்படமுங் கொடுக்கப்பட்டுள்ளன.
பிரயாணஞ் செய்வதற்கு இலங்கை நதிகள் வசதியற்றனவாயிருந்த போதிலும், மீன் பிடிப்பதற்கு நல்ல வாய்ப்பானவை. கிராம வாசிகள் தமது உபயோகத்துக்காக எராளமான் மீனை உள்ளூர் நீர் நிலைகளிலிருந்து பெறுகிறர்கள். இவை வியாபாரத்துக்கு அனுப்பப்படுவதில்லை. மலை நாட் டில் ஆற்று நீர் வீழ்ச்சிகள் பல உண்டு ; அவற்றிலிருந்து மின்சத்தி உற்பத்தி செய்யலாம். அதற்கான திட்டங்களை அதிகாரிகள் இப்பொழுது ஆராய்ந்து வருகின்றனர். நவீன விஞ்ஞான ஆராய்ச்சியின் பயனய மக் களுக்குக் கிடைத்த மகத்தான பெருங்கொடை மின்சத்தியாகும்.

LiL to 57.
மாணிக்ககங்கையின் மேற்பாகங்களிற் கைவிடப்பட்ட குளங்கள்.

Page 93
172 இலங்கைப் புவியியல்
இதஞல் மக்கள் தமக்குத் தேவையான நேரத்தில் மலிவான முறையில் வெளிச்சத்தைப் பெறக் கூடியதாயிருக்கிறது. மின்சத்தியினல் சமையல் செய்யலாம் ; வெப்பம் மிகுந்த நாடுகளில் வீடுகளிலே காற்றையுண்டாக்க மின்விசிறிகளைப் பயன் படுத்தலாம். பெரிய தொழிற் சாலைகளிலுள்ள எந்திரங்களை இயக்க இச் சத்தியை உபயோகிக்கலாம். நிலக்கரியையோ நீராவியையோ உபயோகிப்பதால் புகையும், வெப்பமும், தூசும் உண்டாகும். மின் சத்தியை உபயோகிப்பதஞல் அவை கிடையா. சுவிற்சலாந்து, நோவே, சுவீடின், யப்பான், ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த நியூ இங்கிலாந்து ஆகிய மலை நாடுகளில் உள்ள நீர் வீழ்ச்சிகள் சமீபகாலத்திற் பயன் படுத் தப்பட்டுள்ளன. இந் நாடுகளில் ஏழைகளின் சிறிய குடிசைகளும் மின் வெளிச்சத்தைப் பெறுகின்றன. இலங்கையில் தேவைக்கு அதிகமாக நீர் வீழ்ச்சிகளிருக்கின்றன. (59 ஆம் படம் பார்க்க). இவ் விடயத்தை அரசாங்கம் சில காலமாகவே ஆலோசனை செய்து வந்தது. சிவனெளிபாதத்தில் உற்பத்தி யாகும் கழனி கங்கையின் மேற் பாகத்திலுள்ள இரண்டு உப நதிகளில் உண்டாகும் நீர் வீழ்ச்சிகளைப் பயன்படுத்த ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இவ்வுப நதிகளிலொன்று கெகல்கமுவ ஒயா; மற்றையது மசுக்கெலியா ஒயா, சிவனுெளிபாதத்துக்குச் சமீபத்திலுள்ள 6000 அடி உயரமுள்ள மேட்டுநிலத்தில் இவை உற்பத்தியாகிச் சமாந்தரமான பள்ளத்தாக்கையடுத் துப்பாய்கின்றன. பின்னர், மலை நாட்டின் ஒரத்தையடைந்ததும் 400 அடி கீழே விழுகின்றன. விழுந்து கழனி கங்கையாக மாறுகின்றன. மலை நாட் டின் ஒரத்தையடைந்ததும் அழகான நீர் வீழச்சியாய் அமைகின்றன. முன்னையது அப0 ன் வீழ்ச்சியெனவும் பின்னையது இலட்சபான வீழ்ச்சி யெனவும் பெயர் பெறும். நீர் மின்சாரத் திட்டத்துக்கு இவ் வீழ்ச்சிகளே மிக வாய்ப்பானவை. இவ்வுப நதிகளின் மேற் பாகங்களில் அணைகளைக் கட்டி அவற்றைத் தடுத்து நீரைத் தேங்கச் செய்யவேண்டும் ; பின்னர் அவற்றிலி ருந்து நீரோட்டத்தை ஒழுங்கு செய்யவேண்டும். வீழ்ச்சிகளுக்கு மேலே அமைந்த அணையிற் பெரிய கால்வாய்களைக் கட்டி அவற்றின் மூலம் இருநதி களின் நீரையும் ஒரு பெரிய தேக்கத்திற் சேர விடல் வேண்டும். அதுவே மின் சத்தியை உற்பத்தி செய்யும் நிலையமாகும். அங்கிருந்து கம்பிகள் மூலம் மின் சத்தி எல்லா இடங்களுக்கும் அனுப்பப்படும். கொழும்புக்கு அத்தகைய நிலை யத்திலிருந்து, மிக மலிவாக மின் சத்தியை வழங்கலாம். இதுவே அரசாங்க ஆலோசகர்களான நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த திட்டமாகும். இதன் பயணுகப் புகை வண்டிகள் மின்சத்தி மூலம் இயங்கக் கூடியனவாயிருக்கும். அதனுற் புகை, துசி எனபன இல்லாமல், இப்போதிருப்பதிலும் வேக மாக அவை செல்லக் கூடியனவாயிருக்கும். மின்சத்தி உபயோகத்துக்கு வந்தாற் புகை வண்டிகளுக்காக நிலக்கரியை வெளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியதில்லை. அவற்றை மறுபடி மலை நாடுகளுக்கு ஏற்றிச் செல்ல வேண்டியதுமில்லை. இதனல் எவ்வளவோ பணம் மிச்ச மாகும். தேயிலையைக் காயவைக்கவும் மின்சத்தியை உபயோகிக்கலாம். அத்

-run
w m
- - - -
6 0 w a
as a
o o > 8oo |::狂
- or a sea a - a - a
«7 • ~A a» «Ya8 • • • • � = ^>
a u « 4
« » » » » » » » « - o » « - o
a w us 1 w a 4 a. s. s. e as un p * m a s a e a a 4 as a s r. s.
A P 4 8 a 4 s h as
A A es o *
- - - - - -
- - -
o was
4 • A 8
e e e a s A e o o 4 a. s. a 8 O o 0 y 9 a o e o , a s s e b a s p as ed
: . . . . . . . . . a · w *ー・ O # 8 ' ' ' O dU a a e s p a s a e ao * " 50 - f00
. . p n a 6 e o a e a O O * * * • • • • • ‘ “ ” “| 》, , • v A a s p w a 6 N O ()
• . . . . . . . . . . . . . . ) » Ab .
|
op 6 0 A. o as a B s
v o W is a - Ο s & 8 6 אי או * P A
p - . . . . . . s s a di « s. w • w . . . . . n - e " ' " ' 4 a s r. v . e s h 8 A . . . . . . . a - - - . . . . . . . . . O سسسسسسسسسسا--- ge o * 8 de F e o « is a d - e s - - - - - e - a o s a v u - s
ܫܚ - ܚܫ - o 8 p. 8
o a s a 4 w p a * * a d as e ao » ab O
• • s A 8 vo v e a q 0 a w a s a . . . . s e a t t . . . . . . . . . . . . . v a • b a s p 8 a 0 O ܀ * ܘ • ܀ .. .. .. .. .. . . . . . . . . . to s e o a a e a p q o a . . . . . . e s Y » W II) W e un en 8 * W A τότε τα τεί - . . se » O
s s d r AV 4 4 7 4* 4 6 ao e a b eo o o a s
t ~ 4 m 1 . . . . . . . . . . . . . . e. f P 0 a v. - * * * * s * • • • • . . . us » ao e o w as a d
s r. A A o a
e 8 O As p 4 P. W a w & W r v. A A4 «V Alb «t 8 a P - v P - o 0 V 8 to 4) V
• • • • • • •v** • • • •cr ! : : es e A O
e e. O O. d. KO) O O
O to es p e o of O O o 'o e e S s
( ) is e O de 8 P & O e
o 0 es ) ab 8 KM O O e A é o p 9 O O do O e 9 S dS 9
a M 4 g o g 8 O d O s s e 46 47 e ao s P
y P 48 49 ) 8 A ab gy 6 69 e p to e e e o o s as o o • محمبر
e * es V aoo * a o s a s e y P. o 0 o s P
.4 بیست بیسبتاً ふ disliá)Las 67
LLD 58.
வழக்கிலுள்ளனவும் வழக்கொழிந்தனவுமாகிய நீர்த்தேக்கங்களின் சார்பெண்ணிக்கை யைக் காட்டும் படம் , ஒரங்குலநிலவளவைப் படத்தாள்களில் இது காட்டப்பட்டுளது.

Page 94
I74 இலங்கைப் புவியியல்
துடன் நாட்டுக்குப் பயன்படும் பல கைத்தொழில்களையும் உண்டாக்கலாம். மின் சத்தியைப் பயன் படுத்தத் தொடங்கிய நாடுகள், அதனுற் பல நன்மையை யடைந்துள்ளன. இலங்கையும் இவ்வகையில் வருங்காலத்தில் முன்னேறுமென்பதற்கையமில்லை.
} s 28
தட்டைகள்
ಬ್ಲಿ?' 6.
விற்றேரியாAநீஜிழ்ச்சி
487ഖഴ്സി)-£99
குருந்துத்யா நிர்வீழ்ச்சி ཐོན་ இரம்பொை நீர்வீழ்ச்
\^ಣಿ uானாவில் நிர்வீழ்ச்சி
安y
6్ళ
ప్లా துதுதுவது நிர்வீழ்
Lo 59. மலை நாட்டிலுள்ள முக்கிய நீர் வீழ்ச்சிகள்.
1920 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இலட்சப்பான நீர் மின்சாரத்திட்டம் இப்பொழுது நடை முறைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது. 25,000 கிலோ வுவாற்றுச் சத்தியைத்தரக் கூடிய முதலாவது கட்டம் 1950 இல் முடியுமென எதிர்பார்க்கப்பட்டது.
மலைநாட்டிலே மிக அற்புதமான அழகுடைய நீர்வீழ்ச்சிகளுண்டு. நன்கு அறியப்பட்ட நீர் வீழ்ச்சிகளின் பெயரும் அவையுள்ள இடங்களும் மேலுள்ள விளக்கப்படத்திற் காட்டப்பட்டுள்ளன. இவற்றுள் மிக அழகு
 
 
 
 
 
 

பெளதிகப் புவியியல் 175
வாய்ந்தது தியலுமை நீர் வீழ்ச்சி. இது அப்புத்தளை இடை வெளிக்குச் சமீபத் தில் மலைநாட்டுச் சுவர் மீது பாய்ந்து, காற்றினற் சிதறப்பட்டுக் கீழே விழு கிறது. அதனுலேயே இது “துசு வீழ்ச்சி” எனப் பொருள்படும் “தியலுமை’ என்ற சிங்களப்பெயர் உடையது.
இலங்கையில் இயற்கையாயமைந்த நீர் வழிகள் அதிகமுண்டு. அதனல் வெட்டுக் கால்வாய்களுக்கு அதிக அவசியமில்லை. சில ஆறுகளில் அமைந்த போக்கு வரத்தைத் திருத்துவதற்குபட்டும், கால்வாய் தேவைப்படும். தற் போதுள்ள வெட்டுக் கால்வாய்களிற் பல, இடச்சுக் காரரால் வெட்டப்பட்டன. அவர்கள் தங்கள் தேசத்திலுள்ள கால்வாய் முறைகளையே இலங்கைக்கும் கொண்டுவந்து புகுத்தினர். இவ்வெட்டுக் கால்வாய்களிற் பல, மேற்குக் கரையையடுத்துள்ளன. இவை வெள்ளநீரை அப்புறப்படுத்துவதற்காகவோ, நீர் நிலைகளைத்தொடுத்துப் போக்குவரத்துச் செய்வதற்காகவோ அமைந் தன. கொழும்பிலுள்ளவை வெள்ளத்தை வெளியேற்ற எற்பட்டவை. புத்தளம் வரியையும் நீர்கொழும்பு வரியையும் தொடுத்து அவற்றைக் கழனி ஆற்றின் முகத்துவாரத்தோடு சேர்க்கும் கால்வாய்கள் போக்குவரத் துக்காக வற்பட்டவை. இவ்வாறு போக்குவரத்துக்கான கால்வாய்களின் நீளம் 153 மைலாகும். கால்வாய்களின் அட்டவணை கீழே தரப்படுகிறது.
கால்வாயின் பெயர் நீளம் (மைல்) தோப்பிலிருந்து ஆண்டியப்பனை எரிவரை 42 யாழ்ப்பாண எரி - ஒடக் கால்வாய் 40.75 ஆண்டியப்பன எரியிலருந்து புத்தளம் வரை 8 கொழும்பிலிருந்து பொல்கொடை வரை 6 கொழும்பிலிருந்து பமுனுகமை வரை 9 பழைய கெந்தலைக் கால்வாய் 7.20 பொல்கொடையிலிருந்து கலப்பொத்தை வரை 7 நீர்கொழும்பிலிருந்து கம்மல் வரை 5 யா-எலேக் கால்வாய் 3 நச்சிக்களி உப்பளம் வரை 2 தல்பிட்டியா வெள்ளம்வெளியேற்றும் கால்வாய் 182
கிரிலப்பனேக் கால்வாய் 125

Page 95
இரண்டாம் பகுதி-பத்தாம் அத்தியாயம் இலங்கைத் தாவரம்
ஐரோப்பா, ஆபிரிக்கா, அவுத்திரேலியா ஆகிய கண்டங்களிலுள்ள தாவர மாதிரிகளைக் காட்டிலும் முற்றும் வேறன சில தாவர மாதிரிகளையுடைய ஆசிய தாவரப்பிரதேசத்தில் இலங்கையுஞ் சேர்க்கப்பட்டிருக்கிறது. தந் தேசத்துத்தாவர மாதிரிகளை நன்கறிந்துள்ள ஐரோப்பியர் ஒருவர் இலங் கைக்கு வந்தால் இலங்கையிற் செய்கை பண்ணப்படும் சில முக்கிய மான பயிர்களை விட வேறு எந்தத் தாவரத்தையும் அறிந்து சொல்ல முடி யாதவராயிருப்பார். ஐரோப்பாவிற் சாதாரணமாக வளரும் பல தாவர மாதிரிகள் இலங்கையிற் காணக் கிடையா. அஃதன்றி இங்கு ஆசியாவுக்கே சொந்தமான சில தாவர மாதிரிகள் அவற்றுக்குப் பதிலாகக் காணப்படு வதை யுணரலாம். இலங்கையில் வளருந் தாவரம் தென்னிந்திய வகை களோடு பெரிதும் ஒத்திருக்கின்றது. முக்கியமாய் அங்கே வளருந் தாவரங் களிங்குமுண்டு. ஆனல், இந்தியாவிற் காணப்படாத சில மாதிரிகளும் இலங்கையிலுண்டு. முதற் கூறப்பட்ட ஒற்றுமையைக் கொண்டு இலங்கை ஒரு காலத்தில் இந்திய உபகண்டத்தின் ஒரு பகுதியாயிருந்த தென்பதை அறியலாம் ; இரண்டாவது கூறிய வேற்றுமையிலிருந்து புதிய தாவர மாதிரிகள் தோன்றி வளர்ந்து இனமாக விருத்தியடைவதற்குப் பல்லாயிரமாண்டுகள் தேவைப்படுமென்ற காரணத்தால் இலங்கை இந்தி யாவிலிருந்து மிக மிகப் பழங்காலத்திலேயே பிரிந்திருக்க வேண்டுமென் பது தெளிவாகிறது.
தாவரவளர்ச்சி பின்வரும் நாலுகாரணிகளில் தங்கியிருக்கிறது.
(1) மண்
(2) மழை வீழ்ச்சி
(3) வெப்பநிலை
(4) ஒளியின் தன்மை
இலங்கையில் மழை வீழ்ச்சியைவிட, மற்றைவிடயங்களில் இடத்துக் கிடம் அதிக வித்தியாசங் கிடையாது. எனவே குறித்த பகுதிகளின் தாவரத் தன்மை மழை வீழ்ச்சியையே பெரிதும் பொறுத்திருக்கிறது. படிக அடிப்படையிற் கீழ்மண் அமைந்திருப்பதால் எங்கும் ஒரேவிதமான மண் உண்டாகுந் தன்மையுண்டு. படிகத் திணிவின் அமைப்பிலுள்ள மாறுதல்களிற்ை சில வேற்றுமைக ளுண்டாகலாம். ஆனல், மண்ணில் உள்ள முக்கியமான வித்தியாசங்களுக்குக் காரணமாயிருப்பது தண்ணிராகும். ஏனெனில் நிலத் தின் கீழ் நடைபெறும் பலவகையான இரசாயன மாற்றங்கள், அங்குள்ள தண்ணிரைப் பொறுத்தே வேறுபடுகின்றன ; அவ்வேறுபாட்டை
76

5/7G, È சிறுகாரும் புதரும் lெ
༄ག་ o பத்தண்ட Nமுதனமையான நெல 2. ΓΓ te V தெயி2) 、A|雷 இறப்பர் :ே |
--l -
- 牵、
- 韦晖 I 블 一 |\|| IT A
ਔ --ས་ 一言三言出巴 ۔|HE----- --- يتعمد"-سببسببسـض سـ
്.'lിട്ട് تتــــــــــــسك ستة
8-J. N. B. 70576 (11157)
LILüp 60. இலங்கையின் தாவரம்.

Page 96
78 இல்ங்கைப் புவியியல்
அனுசரித்தே மண்ணின் தன்மையும் வேறுபடுகிறது. எனவே இது மழை
வீழ்ச்சியைப் பொறுத்தது. பொதுவாகப் பார்க்குமிடத்து, இலங்கையி லுள்ள பல்வேறு வகைப்பட்ட தாவரப்பிரதேசங்களை அறிந்து கொள்ளத்
திறவுகோலாயிருப்பது மழை வீழ்ச்சிப் படமாகும்.
இலங்கையின் ஐந்தில் நாலு பங்குப் பிரதேசம் செய்கை பண்ணப்படா திருந்த போதிலும் இலங்கையின் ஆதி இயற்கைத் தாவர வகை இங்கு மிகச் சில இடங்களிலேயே காணப்படுகிறது. கி.மு. ஆருவது நூற்றண்டில் விசயன் இலங்கைக்கு வந்த காலந் தொட்டும், அதற்கு முன்னரும், இலங் கையின் பெரும் பகுதி செய்கை பண்ணப்பட்டே வந்தது. ஓரிடத்திலிருந்து மற்றேரிடத்துக்கு மக்கள் புலம்பெயர்ந்து வந்தபடியால் ஒருகால் பண்படுத் தப்பட்ட நிலங்கள் மறுபடி காடடர்ந்து பாழாயின. எனவே, ஆதித்தாவ ரங்களைக் கொண்டு இன்றும் விளங்கும் பகுதிகள் செங்குத்தான மலைச்சரிவு களேயாகும். இன்று தாழ்பூமியிற் காடடர்ந்து கிடக்கும் நிலங்கள் ஒரு காலததிற் கழனிகளாக விளங்கின வென்பதற்குப் போதிய சான்றுகளுண்டு. செய்கை பண்ணப்படாது கிடக்கும் பகுதிகளில் உள்ள தாவரவகை, புராதன விவசாயிகள் அவற்றைக் கைவிட்ட காலப்பகுதியில் ஏற்பட்டவையாகும். எவ் வளவு காலத்துக்கு அவை தரிசு நிலங்களாகக் கிடந்தனவோ அக்கால அளவைக்கொண்டே அங்குள்ள தாவர மாதிரிகளின் வளர்ச்சியைக் கவனிக்கவேண்டும். உதாரணமாகச் சில காலத்துக்கு முன்னர் கைவிடப்பட்ட கோப்பித்தோட்டங்கள் இன்று பெரும்பாலும் தருப்பையும் புல்லும்மண்டிச் சில சிறிய மரங்களையுடைய வெளியாகக் கிடக்கின்றன. செய்கை பண்ணப்பட்ட பூமியில் வடிகால் வசதிகள் ஏற்பட்டிருக்கும். அதனல் மேற்பரப்பு ஓரளவு வறண்டிருக்கும் ; அவ்வாறு வறண்ட மேற்பரப்பிற் பெரிய மரங்கள் வளர்ந்து விருத்தியடையப் பலகாலம் பிடிக்கும். ஆனல், ஆயிர வருடங் களுக்கு மேலாகக் கைவிடப்பட்ட பழைய குளங்களுக்கு அணிமையிலுள்ள சில நிலங்களில் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.
இலங்கையின் இயற்கைத் தாவர அமைப்பில் மரங்களே முக்கியமாகக் கானப்படுகின்றன. மழை காரணமாக இவை அளவாலும், தொகையாலும், மாதிரியாலும் வித்தியாசப்படுகின்றன. சில மரங்கள் பூமியின் உயரத்தை யனுசரித்து வித்தியாசப்படும். 150 அங்குலச் சராசரிக்கு மேற்பட்ட மழை பெய்யும் பகுதிகளிற பயிர்பச்சை செழிப்பாக வளர்கின்றன. இதுவே உண்மை யான மத்தியகோட்டுக்காடு ; இதற்கு ஈரக்காடென்றும் பெயர். அமேசன் வடிநிலங்களிலும் கொங்கோ வடிநிலங்களிலும் இத்தகைய காடே உண்டு. இந்த மாதிரிக் காட்டிலேயே மிக உயர்ந்த மரங்களுண்டு; எப்பொழுதும் இது ஈரலிப்பாயிருக்கும்; இங்கு அட்டைகள் மிக அதிகம்; அடர்த்தியான கொடிகள் மரக் கிளேகளிற் படர்ந்து விழுதிரை பேர்லக் கீழே நீண்டுதொங்கும். இலைச் செடிகள் இங்கு அடிக்கடி காணப்படும். பல பூச்செடியினமுமுண்டு. நீர்க் கரைகளையடுத்துப் பலவின மூங்கில் வளரும். வேறுபல தால மரங்களுஞ்

பெளதிகப் புவியியல் 179
செடிகளுமுண்டு. வெளித்தோற்றத்தளவிற் காடெல்லாமொன்றுபோற் றெரியும் ; ஆனல், தரையின் உயரத்தை அனுசரித்து மரவினங்கள் மாறு படும். பூச்செடியினம் உயர்ந்த மலைச்சாய்வுகளிலேயே உண்டு ; சருவ சாதாரணமாகக் காணப்படும் மரவகை உயர்ந்தும், பரந்தும் உள்ளன. அவை சிறிய, கரிய, என்றும் பச்சையான இலைகளை உடையனவாயிருக்கும். 37 ஆம்
Lo 61.
கிரிண்டி ஓயாவின் கரைகளை அடுத்த காடு.

Page 97
80 இலங்கைப் புவியியல்
படத்தில், மேலேநின்று பார்க்கும்போது தெரியும் சிவைெரிேபாத "லச் சாய்விலுள்ள காட்டின் தன்மை, காட்டப்பட்டுள்ளது. காட்டின் விளிம்பு'
அடிக்கடி சிவப்பாய்த் தெரிவதை அவதானிக்கலாம். அது பச்சைநிறமுடைய
தாயிருத்தலைக் காண்பது மிக அருமை. இச்சிவப்புமயம, பொருள் கிளை , களின் நுனியிலுள்ள ஆலேத்துளிர்கள், ஞாயிறறு: கதிர்களாலுட்ைகும் இரசாயனச் செயல்களில்லி ந்து தப்புவதற்காகக் கொண்டு நிறப்பொரு
வாாகும். நுனியிலிருந்: ஒ:டிவரை கீழே, இநத சிவப்பு நிறத்தைக் காணலாம். இ பெரும்பாலான அயனமண்டலச் டிகளிற கானைட்.ம். இவை பெருக்க பெருகப் பச்சை நிறமுண்டாகும். அநேக மரங்கள் வருடம் முழுவதும் துளிர்த்தபடியே யிருக்கும். சில, காலத்துக்குக்காலம் இலையுதிர்ப் 'துமுண்டு. மரங்கள் மிக உயரமானவை. கீழே பலவகைச் செடிகள் கிளைத் திருக்கும்; அதனுல் இக்காடுகளிற் பாதை அமைத்துக்கொள்வது சுரங்கம் வெட்டிக்கொள்வது போலவேயிருக்கும். இதற்கு உதாரணமாக, சப்பிரக மூவாக்காடுகளையும், சிவனெளிபாதச சாரல்களையுங் கொள்ளலாம். தென் மேற்குப் பருவக்காற்றினுற் பாதிக்கப்படும் பகுதியிலேயே மிகச் செழிப்பான காடுகளுண்டு. இது மலைநாட்டின் தென்மேற்கு ஒரமாகும் ; இத்தகைய காடுகள் இந்தியாவிலுள்ள ஈரமான பருவக்காற்றுக் காலநிலைக் காடுகளேப் போன்றவை. மலைநாட்டில் வடகிழக்குத்திசையாகப் போகும்பொழுது, 150 அங்குல மழைக்கோட்டுக்கு வெளியேயுள்ள மழைபெறும் மலைச்சாரல்கள் பலவற்றில் இத்தகைய காடுகளைக் காணலாம். வறட்சியுள்ள பகுதியைச் சார்ந்த ஈரமான ஆற்றுப் பள்ளத்தாக்குக்களை யனுசரித்தும் இக்காடுகள் உண்டு. இலங்கையிற் கன்னிக்காடுகளிருக்குமானல் இந்த ஈரலிப்பு வலயத்தி லேயே காணலாம்.
இங்கு தரப்பட்டுள்ள தாவரப்படத்திற் காடுகள் வகைப்படுத்தப்படவில்லை. இறப்பர், தேயிலை ஆகிய பயிர்கள் வளர்ப்பதற்கு வெட்டப்பட்ட பிரதேசங் களிலேயே உண்மையான ஈரக்காடுகள் உண்டு. படம் பெரிதும் எளிதாக்கப்பட்ட படியால், சில காடுகள் உள்ள இடங்களில் தேயிலை இறப்பர்த் தோட்டங்கள் காட்டப்பட்டிருக்கலாம். இக்காலத்தில் இக்காடுகள் அதிகமாக வெட்டியழிக்கப் பட்டுத் தேயிலை, இறப்பர் பயிராக்கப்படுகின்றன. ஏனெனில் இப்பயிர் களுக்கு இக்காட்டுப் பிரதேசங்களே வாய்ப்பான பூமியாகக் காணப்பட்டன. இம் மலைநாட்டுக் காடுகளில் வியாபாரத்துக்கு வாய்ப்பான நல்ல மரங்களி ருக்கலாம். ஆனல், இக்காடுகளிற் சென்று ஆராய்வது கடினமாதலால் இவ்விடயம் இன்னுஞ் சரிவரக் கவனிக்கப்படவில்லை. தாழ்பூமிக்காடுகளைப் போல இவற்றின் பயனை முற்ருயறிந்து கொள்ளும் வாய்ப்பு உண்டாக வில்லே.
படத்திலே “காடு, சிறுகாடு, புதர்’ எனக்குறிக்கப்பட்டுள்ள பகுதிகளிற் பல வகையான மரங்களுண்டு; இவை மழைவீழ்ச்சியைப் பொறுத்தும், வெட்டப்பட்ட காலத்திலிருந்து வளரும்வரை உள்ளகாலத்தைப் பொறுத்தும் வித்தியாசப்படுகின்றன. தனிப்பட்ட மாதிரிகளாக இவற்றைப் பாகுபடுத்துவது

பெளதிகட் புவியியல் 181
சுலபமன்று; ஏனெனில் ஒரு மாதிரி மற்றெருமாதிரியுடன் மெதுவாகக் கலந்து மறைகிறது. ஈரக்காடு ஒருபுறத்து இருக்க அதற்கு எதிராக வறண்டசிறுகடும், முட்புதரு முண் 50 அங்குல மழைக் கோட்டுக்குட்பட்ட அம்பாந்தோட்டை, புத்தமை, வடகோடியில் யாழ்ப்பாணக் குடாநாட்டை யடுத்த பிரதேசமாகிய இடங்களில் இ றக் காணலாம். இங்கே மரங் ள் மிக மெலிவாகவும், ஐதாகவும், குறைவா6 இலையுடையனவாகவுட, முல் ரூடைய67 வாகவுமிருக் கும். வங்களுட் பல 6: -சியைத் தாங்கக் கூடியவாறு தம் ைநெறிப்படுத்தி
Lld 62.
புதர் நிலம் அல்லது வறண்ட அடர்காடு.
யுள்ளன. வறண்ட காட்டிலுள்ள சாதாரணமான ஒரு மரம், மிகப்பெரிய முட்களையும், அழகிய வெண் சிவப்பு, அல்லது மஞ்சள் மலர்களையும் மிகக் குறைவான இலைகளையுமுடைய கருவேல மரமாகும். வருடத்திற் பெரும் பகுதியில் இம்மரத்தின் நிறம் கபிலங்கலந்த பச்சையாயிருக்கும். இலைகளும் தண்டுகளும் வெள்ளிநிறங்காட்டும். வறட்சி மிக்க பகுதிகளில் நாகதாளியும், கள்ளியும் உண்டு. நாகதாளிபோன்ற சில கொடிகளுமுண்டு. வறட்சியான காலநிலைக்கேற்பத் தமது வளர்ச்சியை இசைவுபடுத்திக் கொள்ளும் செடி களைப் பற்றிய ஆராய்ச்சி சிறப்பானது. அத்தகைய ஆராய்ச்சிக்கு இவ்விடங்கள்

Page 98
182 இலங்கைப் புவியியல்
வாய்ப்பானவை. யாழ்ப்பாணக்குடாநாட்டின் வறண்ட சுண்ணும்புக் கற்பிரதேசத்தில், பயிர்ச்செய்கைக்குத் தகுதியற்ற மிக வறட்சியுள்ள பகுதி
L ItL ID 63.
யாழ்ப்பாணச் சுண்ணும்புக்கற் பூமியில் வடலி, பனை என்பன.
களில் ஒரு விசேடமான தாவர மாதிரியுண்டு; இது ஆராய்ச்சியாளர்க்குச் சிந்தனையைத் தூண்டக்கூடிய தாவரமாகும். இலைகள் மூலமாக நடைபெறும்
 

பெளதிகப் புவியியல் 183
ஆவியுயிர்ப்பு என்ற செயலைத் தடுப்பதற்குத் தாவரங்கள் முயல்கின்றன. அப்பொழுது சிலமுக்கியமான உபாயங்களை யனுசரிக்கின்றன. இலைப்பரப்பைக் குறைத்தல்; வேலமரஇனத்தைச்சேர்ந்த பல செடிகளுக்கு இலையே கிடையாது. இலையிலுள்ள துவாரங்களே மயிர்கள்மூலம் காப்பாற்றுதல், நரைத்த பச்சை இலைப்பரப்பில் இம்மயிர்களிருக்குமானல், இவை பெரும்பாலும் வெள்ளை நிறமுடையனவாய், தாவரங்களை வெள்ளிநிறமாகத் தோற்றச்செய்யும். மிக ஆழமாக அமைந்துள்ள தண்டுகளில் துளைகள் மறைந்திருத்தல்; (நாகதாளிபோன்ற கொடிகளிலுண்டு) ; தண்ணிரைத் தேக்கிவைக்கும் தன்மை ; (கள்ளிச்செடியை நோக்குக); சூரியனுக்கு நேர்குத்தாக இலைகள மைதல் ; வேலமர இனத்தைச் சேர்ந்த செடிகளில் இது அதிக முண்டு; இந்த ஒழுங்கினற் சூரியனின் கதிர்கள் இலைகளில் நேராக விழுவதில்லை. இலைகளின் ஓரங்களே கதிர்களை நோக்கிக் கிடப்பதால் வெயிற்காய்வு குறை வாயிருக்கும்.
50 அங்குலச் சமமழைவீழ்ச்சிக் கோட்டுக்கும் 75 அங்குலச் சமமழை வீழ்ச்சிக் கோட்டுக்குமிடையேயுள்ள மட்டான மழைவீழ்ச்சியைப் பெறும் பிரதேசங் களிலுள்ள தாவரங்களிற் பல வறட்சிக்குத் தம்மை இசைவுபடுத்திக் கொள்ளுகின்றன. ஏனெனில், இப்பகுதியில் இரு சமவிராக் காலங்களுக்கு மிடைப்பட்ட பருவத்தில் மழைவீழ்ச்சி குறைகிறது. ஆவியாகல் மிக அதிகமாக நடைபெறுகிறது; அதஞ்றல், மழை வீழ்ச்சி பயனற்றதாகிறது. நிலம் மிக வறட்சியடைகிறது; கிணறுகள் பெரும்பாலும் வற்றுகின்றன ; இலையுதிர் காலத்தில் இடைவெப்ப வலயக் காடுகளிலுள்ள தன்மை இங்கும் நிலவும். சிறிய செடிகள் பல அழிந்து போகும்; பயிர் பச்சையெல்லாம் வாடி வதங்கிக் கிடப்பதைக் காணலாம். தென்மேற்குப் பருவக்காற்றுக் காலத்தில் மழையானது தென்மேற்கு மலைச்சாய்வில் முக்கியமாகப் பெய்வதால் வட கிழக்கிலுள்ள காடுகள் வறட்சியடைகின்றன. அதனல் மலேரியாக் கொசு முற்றக மறைந்து விடுகிறது; ஆஞல், மழையுள்ள காலங்களில் அவை மறுபடியுந் தோன்றி விடுகின்றன.
அம்பாந்தோட்டையிலும், புத்தளத்திலும், ஆனையிறவிலுமுள்ள உப்பளங் களுக்குச் சமீபத்தில் மரங்கள் மிகச்சிறியனவாயிருக்கும். உவர்நிலமாதலால் தாவரங்களதிகம் வளர்வதில்லை. இங்கே, குறிப்பாக ஒரு சில தாவரங்களைக் காணலாம். ஆடுமாடுகள் மேய்வதற்கு இங்கே சிறு மேய்ச்சல் நிலங்களுண்டு. அவற்றிற் சிறிய புற்களுண்டு; உவர்ப்பு அதிகமுள்ள இடங்களில் அங்கு மிங்கும் முட்புதர்கள் காணப்படுகின்றன. ஒரு சிறிய பிரதேசத்துட் பல வகையான செடிகள் இங்கே வளர்வதால் வறட்சியால் தாவரங்கள் பாதிக்கப்

Page 99
184 இலங்கைப் புவியியல்
படுவதை ஆராய்வதற்கு இலங்கை அரிய சந்தப்பங்களை யுதவுகிறது. உதாரணமாக அம்பாந்தோட்டைக்கும் சப்பிரகமூவா மலைப்பிரதேசத்துக்கு மிடைப்பட்ட முப்பது நாற்பது மைல்களுக்கிடையில் மேலேகூறப்பட்ட பல வினத்தாவரங்களுங் காணப்படுகின்றன. அவ்வாறே குருனக்கலிலிருந்து புகைவண்டியில் பாழ்ப்பாணஞ் செல்லும்பொழுது காடுகளில் சிறிது சிறிதாக மாற்றங்கள் புலப்படுகின்றன. வறண்டகாட்டுக்கும் ஈரக்காட்டுக்கு மிடைப்பட்ட பகுதிகளில் மிக முக்கியமான மரங்கள் காணப்படுகின்றன. முதி ைர, கருங் காலி, நதுன், பா?ல போன்ற மரங்கள் இங்குண்டு. எல்லாவிதமான அன்ருட வேலைகளுக்கும் பயன்படும் மரம் பலாமரம். அது தீவின் தென்மேற்கி லுள்ள ஈரலிப்பான தாழ்பூமிகளில் நன்கு வளரும். முக்கனிகளிலொன் ருன பலாக்கனி இலங்கையின் பிரதான உணவுப்பொருள்களிலொன்று; ஈரப்பலாவைப் போலப் பலாமரமும் தோட்டங்களில் வைத்து வளர்க்கப் படுவதால் அதன்தன்மை விருத்தியடைந்துள்ளது. தென்மாகாணத்திலும் தென்மேற்கு மாகாணத்திலும் உள்ள பலாத்தோட்டங்களிற் சில விசேடமான பலாவினங்களைக் காணலாம். பலாவிலை ஆடுகளுக்கு உவப்பான உணவாகும். மலைநாட்டு மரங்களுள் கிரவில்லா, முள்முருக்கு போன்ற இலேசான இலை யதிகமுள்ள செடிகள் தேயிலைச் செடிகளுக்கு நிழல் தருவதற்காகத் தோட் டங்களில் நாட்டப்படுகின்றன. இலங்கைக்காடுகளில் மரவளமுண்டன்றி வேறு பொருளாதார வளங்கள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை.
வடக்கிலும் கிழக்கிலும் சாதாரணமாகக் காணப்படும் பனைமரத்தோடு தென்னையும் இலங்கைத் தால வகைகளுள் முக்கியமானது. இவை எதேச்சையாக வளர்வதில்லை. மிகப் பழங்காலந் தொட்டே மனிதர் இவற்றைப் பயிர்செய்து வந்தார்கள். இவற்றுக்கு அதிக பராமரிப்புத் தேவை யில்லாவிட்டாலும் மனிதருடைய கண்காணிப்பு அவசியம். கடற் காற்றுள்ள மணற் பாங்கான பூமியிலேயே இவை நன்குவளரும். கரையிலிருந்து அதிகதுரம் உள்ளாகக் கிடக்கும் பிரதேசங்களில் இவை அருமை. பனைக்கு யாழ்ப்பாணமே பேர் போனது; இருந்தாலும், இன்று தேங்காயின் வியாபா ரப் பயன் கருதித் தென்னை ஓரளவு அங்கே வளர்க்கப்படுகிறது. யாழ்ப் பாணக் குடா நாட்டின் கிழக்குப் பகுதிகளில் இன்று பெரிய தென்னந் தோட்டங்களுண்டு. இலங்கையில் வளரும் இறப்பர் அமேசன் காடுகளி லிருந்து கொண்டு வரப்பட்டது. அது இலங்கைக்குரிய பயிரன்று. இலங்கை யின் ஈரக் காட்டுப் பிரதேசத்தில் இறப்பர்ப் பால் எடுக்கப்படுகிறது. ஆனல், பாரா இறப்பரிலும் இப்பால் அளவிலும் தரத்திலும் குறைந்தது. மற்றெரு குறிப்பிடத்தக்க மரம் ஆல் ஆகும்; அது ஈரலிப்பான தாழ் பூமிகளில் அங்குமிங்குங் காணப்படுகிறது. ஆனற் பெருந் தொகையாக வளர்வதில்லை. கிளைகளிலிருந்து விழுது விட்டு ஆலமரம் வளருமானல் அது ஒரு சிறிய காடு போலக் காட்சி தரும்.

பெளதிகப் புவியியல் 85
இலங்கையின் காடுகளிற் பல வகையான செடிகளுண்டு; அவற்றுட் பெரம்பாலானவை ஆராய்ச்சி செய்யப்படவில்லை; வகைப் படுத்தப்படவு மில்லை. இலங்கையின் தாவரவினத்தைப் பற்றித் தொகை வகை விரியால் ஆராய்ந்து எழுதபபட்ட நூல் “இலங்கைத் தாவரவினம்’ என்பது. இதன் ஆசிரியர் திரைமன் என்பவர். இதன் பிரதி ஒன்று கொழும்பு நூதன சாலை யிலுள்ளது. தேவையானேர் அங்கு சென்று ஆராய்ச்சி நடத்தலாம். ஆனல், இஃது ஒர் ஆரம்பநூலே. இத்துறையில் மேலும் ஆராய்ச்சி நடத்த வேண்டியிருக்கிறது. காட்டிலுள்ள சிறு செடிகளைப் பல வன விலங்குகள் உணவாகக் கொள்கின்றன. ஆனல் அவற்றின் பெயர் மிகச் சிலருக்கே தெரியும். ஆயுள்வேத வைத்தியர்களுக்கு ஒரு வேளை இம் மூலிகைகளின் பெயர்கள் தெரியலாம். ஏனெனில் அவர் தமக்குத் தேவையான மூலிகை களைக் காட்டிலிருந்தே பிடுங்கிக் கொள்கின்றனர். அவர்கள் அம் மூலிகை களுக்குச் சொந்தத்திற் பெயருமிட்டு வைத்திருக்கிறர்கள். இலங்கைக்கே சொந்தமான தாவரங்களிற் பெரும்பாலானவை 3000 அடிக்குக் கீழ்ப்பட்ட ஈரலிப்புள்ள தாழ் பூமியிலேயே காணப்படுவனவாய்த் தெரிகிறது.
பல வருடங்களாக முயன்று மாகாணம் மாகாணமாய்த் தனிப்பட அமைத்த இலங்கைத் தாவரப் படங்களின் துணை கொண்டே இவ்வத்தியா யத்திற் &ss 't ti || ' (BGTG7 தாவரப் l Lt f) அமைக்கப்பட்டது. அவையும் பல வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட படங்களாகும். “காடு”, “சிறுகாடும் புதரும்’ என்ற பாகுபாட்டை அப்படங்களை ஆக்கிய அளவையாளர் எவ்வாறு செய்தனர் என்பது தெரியவில்லை. மரங்களின் வளர்ச்சியையுஞ் செறிவையுங் கொண்டே அவை ஒரளவு வகைப்படுத்தப் பட்டனவென்று கருத இடமுண்டு. கரிந்து சீரின்றிக்கிடக்குந் தன்மையைக் கண்டே “ சிறுகாடும் புதர்களும் ” வகைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே, இத்தாவரப் படம் இலங்கையின் தாவர மாதிரிகளைக் காட்டும் பெரும் படியான படமாகக் கொள்ளல் வேண்டும். நிலத்தின் பெரும் பகுதியில் ஒருகுறிப்பிட்ட பயிர் செய்கைபண்ணப் பட்டிருந்தால், இயற்கைத்தாவரச் செறிவு காட்டப்பட்டிராது. முன்னர் இப் பகுதி காடாகவோ, சிறுகாடாகவோ இருந்திருத்தல் வேண்டும். s
இன்று காடுமண்டிக் கிடக்கும் பகுதிகளிற் பெரும் பாகம் முன்னே கழனிகளாக இருந்தனவென்று எலவே குறிப்பிட்டோம். குளங்களையடுத்த நெல் விளை வயல்கள் நீங்கலாக மற்றெரு பெரும் பகுதி ("சேனைச் செய்கை”) புன்செய் நிலமாகச் சிறு சிறு காலங்களுக்கமைந்தன. காட்டு நிலங்களே வெட்டித் துப்புரவு செய்து அதைப் புன்செய் யாக்குவார்கள். பின்னர் சிறிது காலஞ் செல்ல அதனைக் கைவிட்டு விட்டு வேறு காடு களையழித்துப் புன்செய் யாக்குவர். இதுவே "சேனைச் செய்கை’ எனப் படும். இது மிகப் புராதனமானதொரு விவசாய முறை. நாகரிக மடையாத மக்கள் கூட்டத்தவரின பயே இத்தகைய விவசாயம் நடை

Page 100
86 இலங்கைப் புவியியல்
பெற்று வந்தது. சில இடங்களில் கிராம வாசிகள் தமது உணவுப் பொருள்களைப் பெருக்கிக் கொள்வதற்காக அயலேயுள்ள காடுகளை வெட்டிச் சேனைச் செய்கை நடத்துவர். இவ்வாறு சேனைச் செய்கைக் கென்று சில கிராமங்களையடுத்த காடுகளை அரசாங்கம் ஒதுக்கி வந்திருக்கிறது. அங்கே சேனைச் செய்கை நடத்தக் கிராம வாசிகள் உரிமை பெற்றிருந்தனர். ஆனல், கிராம வாசிகள் சில சமயம் இந்த உரிமையைக் கோராமல் விட்ட படியால், ஆட்சியுரிமையிழந்தனர். அரசாங்கமும் அத்தகைய நிலங்களைத் தேயிலை இறப்பர்த் தோட்டங்களுக்காக உதவி வந்தது. இதனற் சில கிராமங்களின் பொருளாதார நிலை குன்றிப் போயிற்று. ஆனல், தீவின் குக் கிராமங்களில் வசிக்கும் சாதாரணமான “ சேனைப் பயிர் * செய்வோர் அரசாங்கத் தலையீடின்றிச் சேனைச் செய்கைக்குக் காடுகளைப் பயன் படுத்து கின்றனர். சில இடங்களில் வன விலங்குகளைப் பாதுகாப்பதற்காகச் சில பகுதிகள் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற் பெரியவை புத்தளத்தையடுத்த வில்பத்து, திசமகாராமையை யடுத்த யாளை, பொலனறு வைக்கு வடக்கேயுள்ள வேட்டையொதுக்குநிலம் என்பனவாகும். சேனைப் பயிர் செய்வோர் காட்டின் ஒரு பகுதியை முதலில் தீயிட்டு எரிப்பர். பின்னர் அந் நிலத்தைத் துப்புறவு செய்து, மிகப் பழைய காலத்து விவ சாயச் சாதனங்களைக் கொண்டு நிலத்தைப் பண்படுத்திச் சாமை, தினை, சோளம், எள்ளுப் போன்ற தானியங்களை விதைப்பர்; பூசினி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களுஞ் செய்வர். மிகச் சாதாரணமான தானியம் குரக்கன்; இது நன்றக வளரும்; ஆனல், உணவுச் சத்து அதிகமில்லாதது. இலேசாக உணவை விளைவிப்பதே புன்செய் நிலஞ் செய்வோரின் நோக்க மாகும். பயிர் வளருங் காலத்தில் அதனைக் கவனிக்க வேண்டியதில்லை. வன விலங்குகள் அவற்றைச் சேதப்படுத்தாமற் பார்த்துக் கொள்வதே பெரிய வேலை. காட்டு யானைகள் ஒருமுறை அங்கு வருமானல் ஓரிரவிலேயே எல்லாம் நாசமாகி விடும். காட்டுப் பன்றிகள் மூக்கினல் நிலத்தைக் கிண்டி எல்லாவற்றையும் விரைவில் நிர்மூலமாக்கிவிடும். அதனல் விவசாயிகள் மரக்கிளைகளில் அட்டாளை கட்டி அதிலிருந்து இரவில் காவல் செய்வர். சில பழைய தகரங்களைக் கயிற்றிற் கட்டித் தொங்கவிடுவர். அடிக்கடி மிருகங்களை வெருட்டுவதற்காக அத் தகரங்களையிழுத்துச் சத்தஞ் செய்வர். கயிற்றிலே கட்டிய தகரங்கள் கயிறு இழுபடும்போது ஒன்றேடொன்று முட்டுப் பட்டுச் சத்தம் போடும். சில சமயங்கள்ல் மேளங்களையும், இசைக்கருவிகளையும் இதற்காகப் பயன்படுத்துவர். தீயில் வெந்த சாம்பல் பரவிய புதிய மண் ணில் பயிர்கள் நன்றகச் செழித்து வளரும். அதனல், ஒரு வருடத்திற் பலதரமும் பயிர்கள் விளைவிக்கப்படலாம். ஒரே சேனையில் பலமுறை பயிர் செய்ய முடியாதாகையால் சிறிது காலத்தின் பின்னர், விவசாயிகள் அதைக் கைவிட்டு வேறு இடங்களைப் பார்த்துப் போவார்கள். இவ்வாறே பல

பெளதிகப் புவியியல் 187
நூற்றண்டாகத் தாழ் பூமிக் காடுகளின் வளர்ச்சி தடைப்பட்டு வந்திருக் கிறது. இச் சேனைப் பிரதேசங்கள் அவ்வளவு விசாலமுடையனவன்று;
i
བ༔
*
шLto 64.
கைவிடப்பட்ட சேனைநிலம்.
அதனல் அவை தாவரப் படத்திற் காட்டப்படவில்லை. தாழ் பூமிக் காடு களிடையே அவை அங்கு மிங்குமாகக் காணப்படுகின்றன. ,

Page 101
88 இலங்கைப் புவியியல்
மற்றை நிலங்களோடு ஒப்பிட்டுப்பார்க்குமிடத்து இலங்கைப் புல்வெளிகள் குறைவாகவும் சில விசேடமான பகுதிகளிற் காணப்படுவனவாகவுமே யிருக்கின்றன. இவற்றில் விசேடமாக இர6ாடு வகையுண்டு.
(1) மரமில் பத் தனப் வளி. - .ن Y
{2) இடையிடை'ே மரமுள தபாலை புல்வெளி
பத்தனை நிலம் மலைந டிலேயே கான" படு. மீபத்தில் துப்புரவு செய் யப்படட கட்டுப் பகுதியில் முளேத்த முதற் புல்வளர்ச்சியையே இவை காட்டு கின்றன. கோப்பித்தோட்டங்கள் கைவிடப்படடதன் பயணுகவும் பல பல்வெளிகள் உண்டாயின. கண்டியையடுத்து இத்தகைய புல்வெளிகள் சில வற்றைக் காணலாம். விசேடமாக, ஊவா வடிநிலத்திலுள்ளவை நிரந்தரமான புல்வெளிகளாகும். தியத்தலாவைக்கும் நுவரெலியாவுக்கு மிடையிலுள்ள எலுக்குச் சமவெளியும், கோட்டன் சமவெளியும் பத்தனைப் புல்வெளிகளே. தாவரப்படத்தில் ஊவா வடி நிலம் முழுவதும் தேயிலைத் தோட்டமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தேயிலைப் பயிர் செய்வதற்கென ஏராளமான பத்தனை நிலங்கள் துப்புரவு செய்யப்பட்ட போதிலும், இன்னும் பல பகுதிகளில் பத்தனைப் புல்வெளியுண்டு. ஊவாவடி நிலம் 3000 அடிக்கு மேலான பகுதி; அது நாற்பக்கமும் மலைத் தொட0ாற் சூழப்பட்ட பள்ள மாகும். இந்தப் பள்ளத்தில் மழை வீழ்ச்சி குறைவென்பதை முன்னரே சுட்டிக் காட்டியுள்ளோம். சராசரி 75 அங்குலத்துக்குக் குறைவான மழையே இங்கு வீழ்கிறது. தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் மழை, மலை நாட்டின் தென் மேற்கு மலைச்சாய்வுகளிற் பெய்யும்பொழுது இப்பகுதியில் அதிக வறட்சியுண்டு. காற்றில் சாரீரப்பதனும் இங்கே மற்றெப்பாகங் களிலும் குறைவாகவே யிருக்கிறது. அதனல் அடி மண் வறண்டு தாவர வளர்ச்சியைத் தடைசெய்கிறது. குறிப்பிட்ட சில மரங்கள் இங்கே வளருமென் பதற்குச் சான்று இங்குள்ள தேயிலைத்தோட்டங்களின் செழிப்பேயாகும். ‘தரைத்தோற்றம்’ என்ற அத்தியாயத்தில் ஊவாவடி நிலத்தின் காண் டகு வனப்பைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளேம். மென்மையான சிறிய புல் வெல் வெற்றுக் கம்பளம் போர்த்தாற் போலக் குன்றின் மேற்பரப்பை மூடியிருக் கும். பண்டாரவளையிலிருந்தோ, அதைச் சுற்றியுள்ள குன்றுகளிலிருந்தோ ஊவாவின் பத்தனைப் புல்வெளிகளைப் பார்க்கலாம். இப் புல்வெளிகளை இது வரை எவரும் நன்கு பயன்படுத்தவில்லை. புல்லுச் சற்றே முரட்டுத் தன்மை யுடையதாயிருந்தாலும் மாடு மேய்வதற்கு எற்றதே. மாட்டுப் பண்ணைக்கு இலங்கை ஏற்ற இடமல்லாதபடியால் இத்தொழில் அதிகம் விருத்திசெய்யப் படவில்லை. தியத்தலாவையையடுத்த சமவெளி வறண்ட மேற்பரப் புடைய தாயும், ஒரளவு குளிருடையதாயும், வனவிலங்கால் ஆபத்தில்லாததாயு மிருந்ததால், பல காலமாகவே இராணுவப் பாசறைகளுக்கு வாய்ப்பான இடமாயிருக்கின்றது.

பெளதிகப் புவியியல் 189
தவாவைப் பிரதேசமும் ஊவா மாகாணத்திலே தானுண்டு. அது சற்றே க்காக 1ள தாழ் பூமியிலுள்ளது. பிபிலைகுக் கிழக்கிலும் தென் கிழக்கிலும் கல்லோய தியில் மே, "கத் ை'டுத்துள்ள தாழ்வான குன்று மிடையிலும் க் .ொடர்கள் -யிலுந் தலாவையின் பெரும் பகுதி காணப்படுகிறது. புவயியல் நூல் வில் 'ச: *னு’ என்று ச mப்படும் பல்வெளியே “ தலாவை ” யாகும். ட்ரிங்கள் க்கு மிங்குமாயுள். புல் வெளிக்கு ஆபிரிக்காவில் சவன்.ஏ என்ற பெயருண்டு. பிரித்த oரியாவில்
LLD 65.
பிபிலைக்கு அண்மையில் தலாவை, அல்லது சவன்ன நிலம்.
உள்ள செயற்கைச் சோலை நிலங்களுக்கு இவை ஒப்பாயிருப்பதால் சில ஆங் கிலப் புவியியலாசிரியர்கள் இத்தகைய நிலத்தை “சோலை நிலம் ” என வழங்குவர். இங்கிலாந்துக்குச் செல்லும் இலங்கை மாணவர் இவ்வொப்பு மையை நேரே கண்டால் வியப்படைவர். இவ்வகை நிலம் ஊவாவில் அமை வதற்குரிய காரணங்களே விளக்குவது சுலபமன்று. இந்தியாவில் தக்கிண பூமியில் இது சாதாரணமாகக் காணப்படும். ஆணுல், இலங்கையில் அருமை.

Page 102
90 இலங்கைப் புவியியல்
உலகிலுள்ள சவன்னப் பிரதேசங்கள் ப்ெரும்பாலும் கோடை மழையும், நீண்ட வறட்சியுமுள்ள பகுதிகளிற் றனுண்டு; ஆறுமாத மழையும் ஆறுமாத வறட்சியும் நிறைந்த வெப்பமுமுள்ள பிரதேசங்களிலேயே இவ்வகை நில முண்டு. ஆறுமாதந் தொடர்பாக வறட்சியுள்ள பகுதி இலங்கையிலில்லை ; புள்ளி விவரங்களை ஆராய்ந்தால் ஒவ்வொரு மாதமும் எல்லாப் பகுதியிலும் ஒரளவு மழையேனும் பெய்வதைக் காணலாம். ஆனல், இம் மழையிற் பெரும் பகுதி விரைவில் நீராவியாக மாறி விடுவதால் பயனற்றதாகிறது. அதனல், வறட்சி நிலையே பல மாதங்களுக்கு நீடித்திருக்கிற தென்பதை ஞாபகத்தில் வைக்க வேண்டும். அடிமண் எப்பொழுதும் ஈரலிப்பாயில்லாத நிலத்தில் மரங்கள் வளர்வதருமை. ஆனல், மிகக் குறைவான ஈரலிப்போடு வளரக்கூடியனவும், வருடந்தோறும் தீயினுற் கொளுத்தப்பட்டாலும் நிலைத் திருக்கக்கூடியனவுமான சில வகை மரமுண்டு. சவன்னப் பிரதேசத்தின் முக்கியமான தன்மைகளிலொன்று வறண்ட காலத்தில் அங்குண்டாகும் தீ. இத்தீ பரவினுற் பயிர் பச்சையெல்லாம் எரிந்து விடும். பயிர்பச்சைகள் சூரிய வெப்பத்தினற் கரிந்து சருகாய் வருங்காலத்தில், மத்தியான வெயில் சில சமயம் தீயை உண்டாக்கலாம். மெல்லிய ஒரு காற்று அத்தீயை எங்கும் பரவச்செய்து விடலாம். தலாவைப்பகுதியில் வளரும் மரங்கள் எவையேனும் அதிக பயனுடை யன போற்றெரியவில்லை. அதனல் அவற்றின் பெயரே வழக்கி லில்லை. சாதாரண வழக்கிலுள்ளவை வேலமர இனத்தையும், பூச் செடி இனத்தையுஞ் சேர்ந்தவையே; பத்தனை ஒக்குமாமும் இவற்றுளடங்கும். புல்லும் நீண்டதாயும் முரடானதாயு மிருக்கும்; சாதாரண பத்தனைப் புல்லி லும் முற்றும் வேறனது. இது மூன்று அல்லது நாலடி உயரத்துக்கு வளரும். மான, இலுக்கென்ற இனங்களே நன்ருக அறியப்பட்டவை. மானப் புல்லிலிருந்து புல்லெண்ணெய் கிடைக்கிறது. இது மருந்துக்கு உபயோக மானது. மலேரியாக் கொசுவைத் தடுப்பதற்கும் பயன் படுத்தப்படுகிறது. மலைநாட்டின் வெளிச்சுவரை நோக்கிக் கிடக்கும் குன்றுகள் பாறைத்தொடர் கள் ஆகியவற்றின் உட்புறத்தைச்சார்ந்து, அதாவது கரைக்கு முதுகு காட்டிக் கிடக்கும் பக்கத்தைக் சார்த்து, தலாவைப் புல்வெளியுண்டு. இச்சரிவுகளில் மழைகுறைவு. கரையை நோக்கிக் கிடக்கும் சாய்வுகளில் வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்தில் மழைபெய்யும். எனவே, வருடம் முழுவதும் அடிமண்ணை ஈரலிப்பாக வைத்திருப்பதற்குப் போதுமான மழை இங்கே பெய்வதில்லை. மலைநாட்டின் தென் மேற்கு எல்லையில் மழை அதிகம் பெய்யுங்காலங்களில் இங்கே வறட்சியுண்டாகி அதனல் தீயுண்டாகிறதெனக் கொள்ளலாம். எனவே, இந் நிலப்பகுதி ஆராய்ச்சி செய்வோருக்கு நற்பயனைத் தரவல்லது. இங்குள்ள தன்மைகளை மேலும் ஆராய்வது பயனுடையதாகும். இங்கு தரப்பட்ட விளக்கம் ஒருத்தேசக் கருத்தே ஆகும். முடிவான கருத்தன்று. இப்பகுதியில் மழை வீழ்ச்சியைப் பதிவுசெய்யும் நிலையங்களுங் குறைவு. அதனல், திட்டமான புள்ளி விவரங்கள் கிடைக்கும் வரை

பெளதிகப் புவியியல் 19.
மேலெதையுங் கூறமுடியாது. சில காலத்துக்கு முன்னர் இப்பகுதியில் மக்கள் முன்யோசனையின்றிக் காட்டையழித்தன் விளைவாகவே பத்தனை, தலாவை ஆகிய நிலப்பகுதிகள் உண்டாயிருக்க வேண்டுமென்பதும் கருத்திற் பதித்தற்குரியது.
திட்டமான குளிர்காலமில்லாத நிலப்பகுதிகளில் தாவரங்கள் ஓய்வுபெறு வதில்லை. வடக்கேயுள்ள குளிர்ப் பிரதேசங்களில் ஒய்வுக் காலத்துக்கு முன் னல், மரங்கள் இலைகளையுதிர்த்துவிடும். பின்னர், வெப்பமான காலத்தில் மறுபடியும் துளிர்க்கும். இலங்கையில், தாவர வகைகள் ஒய்வுபெறுவதற்குத் திட்டமான ஒரு பருவங்கிடையாது. துளிர்ப்பதற்கும் திட்டமான பருவமில்லை. எப்பிரில் துவக்கம் யூன்மாதம் வரையில் தாவரங்கள் பொதுவாகப் பூத்துக் காய்த்துக் கனியுதவும். ஆணுல், அது எல்லாத் தாவரங்களுக்கும் பொதுவான காலமன்று. அதனல், அவை தாம் தாம் விரும்பியவாறே விரும்பிய காலத்தில் இத்தொழில்களில் ஈடுபடும். ஒரே இனத்தைச் சேர்ந்த தாவரங் கள் வெவ்வேறு பருவங்களில் இம்முயற்சிகளில் ஈடுபடுவதையுங் காணலாம். இறப்பர் மரம் வருடந்தோறும் இலையுதிர்க்கிறது. சனவரி துவங்கி மாச்சு மாதம் வரை பெரும்பாலும் இது நடைபெறுகிறது. புதிய இலைகள் விரை வாகத்துளிர்க்கின்றன. ஆனல், ஒரே தோட்டத்தில் சில மரங்கள் இலை யுதிர்ப்பதையும், இலை துளிர்ப்பதையும் வேறுசில முற்றிய இலைகளைப் பெறு வதையுங் காணலாம். என்றும் பச்சையான மரங்களிற் பல, படிப்படியாகவே இலையுதிர்த்துத்துளிர்க்கும். அதனுல் இந்நிகழ்ச்சி வருடம் முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருக்கும். எனவே இலங்கையின் எல்லாப் பாகத் திலும் எப்பொழுதும் பயிர் பச்சையைக் காணலாம்; ஆனல், வறட்சியுள்ள பகுதிகளில் மட்டும் இதைக்காண முடியாது. பெருந்தொகையான தாவர மாதிரிகளுக்குப் பூக்குங்காலமெனத் திட்டமான ஒரு காலமில்லை. மத்திய அகலக் கோட்டுப் பகுதிகளில் ஒர் இனமரங்கள் ஒரேகாலத்தில் பூப்பதுபோன்ற காட்சியை இங்கே காணமுடியாது. நோவே, கொத்துலாந்து போன்ற தேசங்களில் ஒகத்து மாதப் பிற்பாதியில் செவ்வூதா நிறம் பரந்த தரிசு நிலக்காட்சியைக் காணலாம். இலங்கையில் அத்தகைய காட்சியைக்கான முடியாது. செவ்வேலமும், மஞ்சள் வேலமும், செம்மயிர்க்கொன்றையுமே பெருமளவில் இங்கு காணக்கூடிய பூக்களாகும். செழிப்பான குழைகளின் தோற்றமே அந்நியர் ஒருவருக்கு இந்நாட்டில் அதிக வியப்பையளிப்பது ; பூக்களன்று.
சதுப்புநிலத் தாவரமும், நீர்த்தாவரங்களும் புறம்பான ஒரு தாவரப் பிர தேசத்துக்குச் சேர்ந்தவையன்று. எறக்குறைய இலங்கை முழுவதிலுமே இவற் றைக் காணலாம். அடிப்பாறைகள் நீருட்புகாத தன்மையுடையனவாயிருப்ப தாலும், அதிக மழை பெய்வதாலும், இலங்கையிற் பல அருவிகளும்நீரோ.ை களுமுண்டு. நீர் தேங்கிநிற்கும் நீர் நிலைகளில் வளரும் தாவரங்கள், ஒடும் நீருள்ள பிரதேசத்தில் வளருந் தாவரங்களிலும் வித்தியாசமா(வ.)வ. நீர் முற்றும் கசிய முடியாத களிமண் பொட்டுப் பொட்டாயுள்ள பள்ளங்.பிற்

Page 103
192 இலங்கைப் புவியியல்
சதுப்புத்தன்மையுண்டு; அங்கே சில நூதனமான தாவரவகைகள் கானப் படுகின்றன. அவற்றிற் பல இலங்கையிலுமுண்டு. அம்பலாங்கொடைக்குத் தென் கிழககிலுள்ள மித்தியாகொடைக்கு அணிமையில் சந்திரவட்டக் கற்பார்க் குழிகளுக்குச் சமீபத்தில் உள்ள சதுப்பு நிலம் இ,ே சாக அடையக் கூடியது. இங்கே உயிர்ச் செந்துக்களையுண்ணும் பலவகையான தாவர மாதிரிகளுண்டு; பூமியில் அவற்றுக்குத் தேவையான நைதரசனுள்ள உண வில்லாவிட்டால், செந்துக்களைப் பலவகையான சூழச்சிகளால் அகப்படுத்திச் சாப்பிடுகின்றன. இத்தாவர வகைகளுள் வியப்பைக் கொடுக்கக்கூடியது நெபெந்திசு என்னும் கலசச்செடி. மாணவர் இதனை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இதைவிடச் சிறிய பல தாவரங்களுமுண்டு; சண்டியூ என்ற இனத்தைச் சேர்ந்த மிகச்சிறியதொரு தாவரமு மிவற்றுளுண்டு. இவை செந்துக்களைக் கவரும் முறை சாதாரணமான எந்தத் தாவர நூலிலும் காணப்படும்.
கடற்கரையடுத்த சதுப்புக்களிலும், பெரிய ஆறுகளின் கழிமுகத்தை யடுத் தும் எரிகளையடுத்தும் உள்ள சதுப்பு நிலங்களிலும், ஈரலிப்பான பகுதி களில் நீர்த்தாழை மரங்களுண்டு. இவை நிறைந்த சதுப்புநிலங்கள், மேலே கூறப்பட்ட சதுப்பு நிலங்களைப் போன்றவை. இங்குள்ள தாவரங்களும் அவற்றைப் போலவே நூதனமானவை. சேற்றுக்கும், நீர்மட்டத்துக்கு மேற்றபடி மட்டத்திலிருந்து செங்குத்தாகச் சேற்றுக்குள் வேர்விடு வனவும் சுவாசவேர்களையுடையனவுமான பலவகை நீர்த்தாழைகளுண்டு. இவ்வேர்கள் பிணைந்து பாம்புபோல உருவுடையனவாய், மங்கலான ஒளியிற் பார்க்கும்பொழுது பயத்தையுண்டாக்கக் கூடியனவாயிருக்கும். எதிர்பாராத வாறு ஒரு முதலை தனது பற்களைக் காட்டிக்கொண்டு நீர்மேல் முகத்தை நிமிர்த்துவதால், உண்டாகும் பயங்கரக் காட்சி ஆச்சரியமானதாகும். நீர் மட்டத்துக்கேற்றபடி, தமது நிலைமையை மாற்றிக் கொள்ளும் வேறுபல தாவரங்களும் நீரிற் காணப்படும். ஆனல் இவற்றிற் பல நீரில் மறைந்தே கிடக்கும். கிழக்குக் கரையில் பொத்துவிலுக்கும் திருக்கோணமலைக்கு மிடையிற்ருன் நீர்த்தாழை நிறைந்த சதுப்பு நிலங்களிற் சிறந்தவற்றைக் காணலாம். மணல் நிறைந்த கரைகளிற் சாதாரணமாக வளரும் தாழை நிலத்துக்கு மேலே வேர்களைப் பரப்பிக்கொண்டு, சில நீர்த்தாழைகளைப் போல் வளர்ந்திருப்பதைக் காணலாம்.
ஆழமற்ற நீர் நிலைகளிற் பலவகையான நீர்ச் செடிகளுண்டு. ഥീ நாடுகளில் அவை ஆற்றுப் பள்ளத்தாக்குக்களிலேயே காணப்படும். தாழ் பூமியில் நதிகள் பரந்து விரிந்து சிலசமயம் கரைகளே மீறி ஒடுவதால் கடற் கரையையடுத்துப் பெரிய எரிகள் உண்டாகின்றன. இத்தாழ்பூமி நதிகள்

பெளதிகப் புவியியல் 93.
"ந்த சதுப்பு நிலங்களையுண்டாக்குகின்றன. இந்நிலங்களில் எண்ணற்ற கயான நீர்ச்செடிகளுண்டு இவற்றில் உள்ள விசேடமான ஒரு தன்மை பற்றின் இலைகள் செழிப்பாக விருப்பதே. சில இலைகள் மிகப் பெரியன பாயிருக்கும். பலவகையான நாணலும், நீராம்பல் முதலியனவு மிவற் றிடையுண்டு. S.
இலங்கையிலுள்ள நீர்ச்செடிகளுள் தாமரையே மிகச் சிறந்தது; தாமரைக் குளம் பார்ப்பதற்கு அழகுடையதாயிருக்கும். இலங்கையின் இயற்கைக் காட்சிகளுள் இதுவுமொன்றென யாத்திரிகர் குறிப்பிடுவதுண்டு. பிரகாசமான கதிரவன், அயனமண்டலச் சந்திரன் என்பன மனேரம்மியமான ஒளியழகை உண்டாக்குகின்றன. இயற்கையழகின் திறத்தை நயப்போர் நிலவிற் காணும் தாமரைக்குளத்தின் காட்சியானது உலகத்து மிக உன்னதமான இயற்கைக் காட்சிகளுளொன்றெனப் பாராட்டுவர். அழகிய வட்டமான இலைகளையும், கெம்பீரமான சிவப்பு மலர்களையும் கொண்டு நீர்மேல் நிமிர்ந்து நிற்கும் தாமரையை இந்திய மக்கள் எல்லையற்ற பரம்பொருளைக் குறிக்குஞ் சின்னமாகக் கொண்டது வியப்பன்று.

Page 104
இரண்டாம் பகுதி-பதினொாம் அத்தியாயம் விலங்குகள்
இலங்கை, சரித்திரகாலந்தொட்டே வனவிலங்குகட்குப் பெயர்பெற்ற தேசமாகும்; அந்தவகையில் அதன் புகழ் உலகமெங்கும் பரவியிருந்தது. மிகப் பழங்காலத்தில் இலங்கை முழுவதும் காடாயிருந்தது போலும். அங்கே யானைகளும், குரங்குகளும், சிறுத்தைகளும், எருமைகளும், பலவிதமான் களும், காட்டுப்பன்றிகளும், முதலைகளும், பாம்புகளுமே வசித்து வந்திருக்க வேண்டும். மனிதனுடைய அதிகாரம் அதிகரிக்க அதிகரிக்க, வனவிலங்கு களின் ஆதிக்கம் படிப்படியாகக் குறைந்து விட்டது. மிருகங்களின் தொகையே குன்றிக்குன்றிக் கடைசியிற் சில சாதாரணமான விலங்கினங்களுமே அருகியும் மறைந்தும்போய் விட்டன. தாவரத்தைப் போலவே மிருகத்தைப் பொறுத்தவரையிலும் தென்னிந்திய இனங்கள் இலங்கையிற் காணப்படுகின்றன. இலங்கை மான், என்று சொல்லப்படும் மானினம் ஒன்றும், பொலங்கா என்றழைக்கப்படும் மலைப் பாம்புமே இலங்கைக்குச் சொந்தமானவை. இந்தியாவின் சில பகுதிகளிற் காணப்படும் புலி, கழுதைப் புலி, நரி, ஒநாய் போன்ற மிருகங்கள் இலங்கையிற் காணக்கிடையா. பறவை கள், செந்துக்களாகியவற்றைப் பொறுத்தவரையிலும் இது பொருந்தும். மத்திய கோட்டுக்குச் சமீபத்திலுள்ள வெப்பமும் ஈரலிப்புமுள்ள எல்லா அயனமண்டலக்காடுகளிலும், பறவை, ஊர்வன, நீர்நிலச்செந்து, சிறு செந்து என்ற இனங்கள் சிறப்பாகக் காணப்படுகின்றன.
சிறு செந்துக்கள் பெருகுவதற்கு இந்தக் காலநிலை மிகவாய்ப்பானது. எப்பொழுதும் வெப்பமிருக்கிறபடியால், வருடம் பன்னிரண்டு மாதமும் முட்டையிட்டுக் குஞ்சுபொரிக்கக் கூடியதாயிருக்கும். பல செந்துக்கள் ஈரலிப்பான இடத்திலும் நீர்மேலும் முட்டைகளையிடுகின்றன. இடைவெப்ப வலயத்திலுள்ளனவற்றிலும் 100 மடங்கு அதிகமான செந்துக்களும், அவற்றுட் பல இனங்களும் இங்கேயுண்டு. விசேடமாக எறும்பு, வண்டு, மூட்டை, வண்ணுத்திப்பூச்சி என்பன இலங்கையில் அதிகம். வண்ணுத்திப் பூச்சியிற் பல இனங்கள் உள. சில அசாதாரணமான உருவமும், அழகு முடையன. எறும்புகளிற் பல உருவமும் நிறமுமுடையன இலங்கையின் எல்லாப் பாகத்திலும் காணப்படுகின்றன. இவை மற்றைச் செந்துக்களையும், இறந்துபோன சிறிய உயிரினங்களையும் உண்டு இடத்தைச் சுத்தி செய்வதோடு, வீடுகளிற் சிந்திச் சிதறிப்போன மிச்சங்களையுமுண்டு இவ்
194

பெளதிகப் புவியியல் 195
வேலையைச் சிறப்பாகச் செய்கின்றன. தீவின் காட்டுப் பகுதிகளில் பல சாதி எறும்புகளுண்டு. அவை சில சமயம் பதினைந்து அல்லது இருபது அடி உயரமுள்ள எறும்புப் புற்றுக்களைக் (கறையான்) கட்டியெழுப்புகின்றன. இவை நிலத்தோற்றத்தில் குறிப்பிடத்தக்க அமிசமாகக் காட்சியளிப்பன. மரத்தையரிக்கும் கறையான் வீடுவாசல்களையுங் கட்டிடங்களையும் சேதஞ்செய் கின்றது. தேக்கு, கருங்காலி போன்றமரங்களை அது துளைக்கமாட்டாது. மற்றைப்படி கட்டிடங்களையோ தளவாடங்களையோ மிச்சம் வைக்கமாட்டாது. பழைய கட்டிடங்களிலுள்ள மரவேலைகளின்று அழிந்தமைக்கு இதுவே காரணமென்பதில் ஐயமில்லை. இடைவெப்ப வலயத்திலே, இரண்டாயிரம் வருடங்கட்கு மேற்பட்டகாலத்திலிருந்து பற்பல நூற்றண்டுகளிற்செய்யப்பட்ட மரப்பொருள்கள் பாதுகாக்கப்பட்டு வருவதை இன்றுங் காணலாம். இலங் கையில் நூறுவருடத்துக்கு முன்செய்யப்பட்ட மரப்பொருள்களைக் காண் பதே அருமை. ஈரக்காட்டிற் காணப்படும் அட்டைகளிற் சில இலங்கைக்கே சொந்தமானவை. இடைவெப்ப வலயத்திலும் இங்கேயே அவைமிக அதிக மாகக் காணப்படுகின்றன. அங்கே அவை தண்ணிரில் மட்டும் சாதாரணமாகக்
காணப்படும்.
மனிதரிடையிலும் வீட்டு மிருகங்களிடையிலும் நோயைப்பரப்புவதிலும், பயிர்களை அழிப்பதிலும், இலங்கையில், கிருமிகள் மிகப்பெரிய பங்கெடுத்து வருகின்றன. அதனல் அரசாங்கம் அவற்றைப்பற்றி ஆராயக் கிருமியாராய்ச்சி யாளர் என்னும் விசேட உத்தியோகத்தர்களை நியமித்துள்ளது. அனுேபிலிசு என்ற இனத்தைச் சேர்ந்த கொசுக்கள் மலேரியாக்கிருமிகளை எடுத்துச்சென்று மலேரியாநோயை மக்களிடையே பரப்புகின்றன. முடங்குகாய்ச்சல் மற்றெரு விதமான கிருமியாற் பரப்பப்படுகிறது. அரசாங்கம் மலேரியா நிபுணர் என்ற விசேட உத்தியோகத்தர் ஒருவரையும் நியமித்துள்ளது. இக் கொசுக்களைப்பற்றி ஆராய்வதும் அவற்றைத் தடைசெய்யும் முறைகளைக் கூறு வதுமே இந்நிபுணரின் கடமைகளாகும். எலியைப் பற்றிக்கொண்டு வாழும் ஒரு தெள்ளின்மூலம் வாந்திபேதிக் கிருமிகள் பரப்பப்படுகின்றன. இந்நோய் பரவும் காலங்களில் மக்களின் நடமாட்டத்தைத் தடைசெய்வதினுலும், எலி களை அழித்து விடுவதினுலும் இவ்வியாதி இலங்கையில் இல்லாமற் செய்யப் பட்டது. திறந்த புண்ணில் இலையான் விழுவதால் பறங்கி வியாதி தொற்று கிறது. வேறு பல தொற்று நோய்களையும் இலையான் பரப்புகிறது. விசேட மரகக் குழந்தைகட்குண்டாகும் கழிச்சல் நோய், மலத்தில் ஊரும் இலையான், உணவிலும், ஆதரவற்ற குழந்தைகளிலும் ஊர்வதால் இந்நோய் பரவுகிறது. சாக்கடைகளில் உள்ள இலையான் பாலை அசுத்தப்புழஒழ்க்குங்கிரிப்புக்

Page 105
196 இலங்கைப் புவியியல்
r-~ ~ Murrvrah"
காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புண்டாகிறது. மூடிவைக்கப்படாத இறைச்சி யில் இலையான் விழுந்தால், அதை உணவுக்குப் பொருந்தாத 1"ைபில் அசுத்தப் படுத்திவிடும். இடைவெபட வலயத்தில் இலையானின் உபதf வம் கோடைகாலத்திற்ானுண்டு. ஏனெனில் மாரியில் அவை இறந்: . .aز அல்லது மாரிகழயும் வரை அடங்கிக்கிடக்கும். வெப்பமான தேசங்களில் செந்துக்களால் உண்ட்ாகும் ஆபத்து அதிகம். V . . . . . "
இடைவெப்பவலயத்தில் குளிர் உண்டாகுங் காலத்தில் அங்கிருந்து கிளம்பித் தெற்கே வந்து சேரும் பறவைகளே இங்கு அநேகம் காணப்படுகின்றன. இலங்கைப் பறவைகளைப்பற்றி அறிவதற்கு நல்லநூல், இடபிளியூ. ஈ. உவெயிட்டு, எம். எ; எபு. சற்று. எசு. எழுதிய நூலே ஆகும். வடக்கே குளிருண் டாகும்காலத்தில் ஏறத்தாழ 120 பறவை இனம் இலங்கைக்கு வருகிறது. இவை தீவின் வடபகுதியில் அநேகமாகத் தங்குகின்றன. அங்கே இவை கூடு கட்டுவதில்லை. நாரை (Peregrine Falcon) போன்ற இந்தியப் பறவைகள் இங்கே கூடுகட்டி வாழ்கின்றன. சைபீரியாவிலிருந்து வரும் அதேசாதிப் பறவைகள் கூடுகட்டாது சிறிது காலத்துக்கே இங்கு தங்குகின்றன. வறண்ட பிரதேசங்களில் நிலத்தில் வாழும் பறவைகளதிகம். ஈரலிப்பான பகுதிகளில் அவை மரத்திலும் செடிகளிலும் வாழுகின்றன. பாடும் பறவைகள் மொத்தத் திற் குறைவே. ஆயினும் கிலுமொலுத்துச் சத்தமிடுவன இடைவெப்ப வலயத் திலும் இங்கே அதிகம் உண்டு. குயில், ஆந்தை, பருந்து, கழுகு, காட்டுத்தாரா என்பன இடைவெப்ப வலயத்திற் சாதாரணமாகக் காணப்படும் பறவை யினங்களேச் சேர்ந்தி வை. காகம் அத்தகைய ஒர் இனத்தைச் சேர்ந்தது. அது இலங்கையில மிக அதிகம். ஆசியா, ஆபிரிக்கா ஆகிய வெப்பப் பிற தேசங்களில் காகம் அதிகம் ; காகம் தந்திரமான பறவையானலும், அழுக் குக்களையுண்டு வீடுவாசலைச் சுத்தமாக்குவதில் எறும்பைப்போன்றது. வீட்டுப் பக்கங்களில் அழுகிய பொருள்களையும், உணவுப் பதார்த்தங்களையும் காகம் விட்டுவையாது. “சத்த சகோதரிகள்’ என வழங்கும் பறவைகள் இலங்கைப் பட்சிகளில் மிகச் சிறந்தவை. இப் பறவைகள் எழு சேர்ந்த கூட்டமாகவே எப் பொழுதுஞ் செல்லும். இதில் ஒரு பறவையை ஓரிடத்திற் கண்டால் சமீபத்தில் மற்றை ஆறையும் எப்படியுங் காணலாம். இந்த எழும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவை போல ஒன்றேடொன்று தொடர்பு வைத்துக் கொண்டேயிருக்கும். உலகில் இத்தகைய பறவையினம் மிக அருமை. காக்கைகளைப் போலவே இவை கூட்டங் கூட்டமாகச் செல்லும். ஆளுற்ை காகங்கள் எழு எழாகப் பிரிந்து ஒரு கூட்டத்திற் செல்வதில்லை. சிறிய பறவைகளுள் (humming bird) 260) Tuyuh Luyp6O)GOJ LÁlla, அழகிய நிறமுள்ள சிறகுகளை

பெளதிகப் புவியியல் 197
யுடையது. பெரிய பறவைகளுள் மயில் உலகிலேயே மிக அழகான பறவை புளுளொன்று. இது இலங்கைப் பறவைகளுளொன்றகும். சமீப காலத்தில் டயி "ஸ்ன தொகை குறைந்து விட்டது.
உ வனவற்றுள் மரங்களில் வசிப்பனவற்றைப் பற்றிக் குறிப்பிட வேண் டிய சில வி பங்களுண்டு. பல அழகிய மரப் பல்லிகள் காணப்படுகின்றன. அவை தா ருக்கும் பரத்தின் பட்டையினது நிறத்தையோ இலையினது நிறத்தையே பொருந்தியனவாயிருக்கும். பச்சோந்தி, பல்லிபோன்ற ஒரு செந்து. அது சூழ்நிலைக் கேற்றவாறு தனது நிறத்தை மாற்றிக் கொள்ளும். வீட்டுப் பல்லி இலங்கைக்குச் சொந்தமானது. எல்லாருக்கும் பழக்கமானது. சிநேகபாவமுள்ளது. பாம்பு, முதலை யென்பன தொகையாற் குறைந்து கொண்டே வருகின்றன. கடந்த 50 வருடங்களாக அவற்றிற் பல அழிக்கப் பட்டு விட்டன. பாம்புக்ளுள் புடையன் பொல்லாதது. அது கடித்தால் மனிதர் தப்ப மாட்டார்கள். அதன் தலை உடம்பிலும் விசாலமானது. மற்றைப் பாம்புகளின் தலையிலும் இது அகலமுள்ளது. உடம்பு ஐந்தடி துவக்கம் எட்டடி வரை நீண்டது; தலை ஏறக்குறைய ஒரடிவிட்டமுள்ளது.
வீட்டுக் கூரைகளில் ஆனந்தமாக விளையாடித் திரியும் அணில் ஐரோப்பிய தேசங்களிலுள்ள அணிலிலும் மிக வேறுபாடுடையது. மேனுட்டணில் பய முள்ளது; மனிதரண்டைசெல்லாது; இலங்கை அணில் மிகவும் சாதுவானது. மேனுட்டு அணிலிலும் இலங்கை அணில் சிறியதானலும், அவற்றைப் போலச் சடையான வாலின்றித் தட்டையாகி விசாலமான வாலுடையது. மேலும், இவற்றின் நரை நிறம் ஒரு தனித் தன்மையைக் கொடுக்கின்றது. குரங்குகளில் ஐந்து வகையுண்டு. பெரிய நகரங்களையடுத்து இவை இப் பொழுது உறைவதில்லை. குரங்குகளின் தொகை இன்னுங் குறையவில்லை. மனிதர் வசிக்கும் வீடுகளையடுத்தே இவை வசித்த போதிலும் அணிலைப் போல இவை மனிதரோடு நட்புக் கொள்வதில்லை. வெளவால் அதிக முண்டு; இதிற் பெரிய இனம் “பறக்கும் நரி” எனப்படும். இது மரங்களில் வசிக்கும்.
கடந்த 50 வருடங்களில் இலங்கையின் வன விலங்குகளின் தொகை, பெரிதுங் குறைந்து விட்டது. இவற்றின் நிலைமையைக் கண்ட அரசாங்கத் திற்கு வன விலங்குப் பாதுகாப்புக்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியமுண்டானது. காட்டு மிருகங்களைச் சுடுதல் பற்றி விரிவான சில சட்டங்கள் ஆக்கப்பட்டன. முதலை, நல்லபாம்பு, சிறுத்தை, மதங் கொண்ட யானை போன்ற ஆபத்தான மிருகங்களை மட்டும் எக்காலத்திலும் சுடலாம்.

Page 106
98 இலங்கைப் புவியியல்
மற்றை மிருகங்களை இனப் பெருக்குக் கால மொழிந்த சில குறிக்கப்பட்ட பருவங்களிலேயே சுடலாம். இலங்கையின் விலங்கு வகைகளிலொன்ருக நெடுங்காலம் கருதப்பட்டு வந்த காட்டு யானை இப்பொழுது குறைந்து கொண்டு வருகிறது. இவ் விலங்கினத்தைப் பாதுகாப்பதற்காக மிகக் கடுமையான சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளன. காட்டு வேலைக்கு யானை மிக உபயோகமானது; அதைப் பிடித்து வளர்ப்பதால் அதன் இனப் பெருக்கம் திருத்திகரமாக நடக்கமாட்டாது. மரங்களை இழுக்கவோ, மற்றைப் பார வேலைகளைச் செய்யவோ யானையைப் போலச் சிறந்த மிருகம் உலகில் வேறில்லை. சாதாரணமாகச் சப்பிரகமுவாக் காட்டிற்றன் சிறந்த யானை களைப்பிடிக்கலாம். ஆனல், அவை வருடம் முழுவதும் ஒரேயிடத்திலிருப்ப தில்லை. வெகு தூரம் சுற்றிவருவது யானைகளின் இயற்கையாகும். சில வருடங்களுக்கொருமுறை சப்பிரகமுவா மாகாணத்தில் யானையகப்படுத்தும் முயற்சி நடைபெறும்.
வீட்டு மிருகங்களை வளர்ப்பதற்கு இலங்கை எற்ற இடமன்றென முன்னரே குறிப்பிட்டுள்ளோம். கோழிகளே இலங்கையிற் காட்டுக் கோழி யைப் போலக் காணப்படுகின்றன. ஐரோப்பாவில் கோழியிடும் முட்டை யிலும் ஏறக்குறைய அரைப் பங்கு சிறிதான முட்டையையே இலங்கைக் கோழிகளிடுகின்றன. விஞ்ஞான முறைகளைப் பயன் படுத்திக் கோழிகளை ஐரோப்பாவில் வளர்ப்பதால் அவை உருவத்தாலும், பயனுலும் சிறப் புற்றிருக்கின்றன. பெரும்பாலோர் தாவர உணவு உண்பவராயிருப்பதால், இலங்கையிலே வீடுகளில் முட்டை அதிகம் உபயோகிக்கப்படுவதில்லை. தீவிர கொள்கைகளையுடைய பெளத்தர்கள் முட்டை சாப்பிடமாட்டார்கள். வேறு சில நாடுகளில் மக்கள் முட்டையை நன்கு பயன் படுத்துவது போல இலங்கை மக்கள் அதிகம் பயன் படுத்துவதில்லை. ஆனற் கொழும்பிலும், ஐரோப்பியர் அதிகமாக வசிக்கும் என இடங்களிலும் முட்டை அதிகம் தேவைப்படும். கிராமவாசிகள், பெரும்பாலும் யாழ்ப்பாணக் குடாநாட்டி லுள்ளவர்கள், முட்டையை அவ்விடங்களுக்கு அனுப்பி நல்ல வியாபாரஞ் செய்கிருர்கள்.
எந்த விதமான மிருகங்களானலும் அவற்றை வைத்து வளர்ப்பது கடினம். அதற்குக் காரணம்: ஒன்று, கால நிலை; மற்றையது கோமாரி போன்ற நோய்; இந் நோய்களினுல் வருடந்தோறும் ஏராளமான ஆடு மாடுகள் இறந்து போகின்றன. யானை, நீர் எருமை போன்ற இலங்கை மிருகங்கள் இதற்கு விதி விலக்காகும். இந் நோய்களைத் தடுப்பதற்கு

பெளதிகப் புவியியல் I99
அரசாங்கம் நடவடிக்கைகளையெடுத்து வருகிறது. இதனல் மிருகங்களின் வளர்ச்சி சிறப்படையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கால்நடைகளின் இனத் தைச் சிறக்கச் செய்வதற்கு இப்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. இலங்கையின் முக்கியமான மிருகங்கள் அவையே. இனமாற்றத் தாலும் விசேட உணவுகளினலும், ஐரோப்பியப் பசு, பெரிதும் விருத்தி யடைந்துள்ளது. அதனல், வருடத்தில் பெரும் பகுதியில் பால் கறக்கக்
IILid 66.
நெல் வயல்களில் நீர் எருமை.
கூடியதாயிருக்கிறது. குளிர் காலத்தில் பால் குறையும். இலங்கையில், கன்று பால் குடிக்கும் வரையும் பசுவானது பால் கறக்கும்; அதுவும் மிகக் குறைவாகவே கறக்கும். இலங்கைப் பசு உருவத்திற் சிறியதாயிருக் கும். அத்துடன் அதற்கு முதுகில் எரியுண்டு; ஐரோப்பிய பசுக்களுக்கு ஏரியில்லை. வெப்பமும் ஈரலிப்புமுள்ள நாடுகளிலெல்லாம் எருதுகளே வண்டியிழுக்கவும் பொதிசுமக்கவும் பயன்படுத்துகிறர்கள். அவை குதிரை களைப்போலச் சிறப்புடையனவல்ல ; எருது குதிரையைப்போல வேகமாகச் செல்லமாட்டாது, அதைப்போல அதிக பாரத்தைச் சுமக்கவும்மாட்டாது. வெப்பமும் ஈரலிப்புமுள்ள காலநிலையில் குதிரை சுகமாகச் சிவிக்கமாட்டாது. ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டகாலத்தின் ஆரம்பத்தில் குதி

Page 107
200 இலங்கைப் புவியியல்
ரைகளை இறக்குமதி செய்தனர். போக்கு வரத்துச் செய்வதற்குக் குதிரை யைப்போல விரைவான சாதனம் அந்தக்கால தில் இல்லை. ஆனல், குதிை களை வைத்துப் பராமரிப்பது அதிக செலவை யண்டுபண்ணியதால் அம்முயற்சி அதிகம் பலிக்கவில்லை. மிதிவண்டியும், மோட்டர் வண்டியும் வந்த :ன்னர் குதி: }ர அருமைய்ாகிவிட்து. சமீபகாலத்தி. இலங்கையிலே 125 இலட்சம் துவக்கம் 15 இலட்சம்வரை மாடுகளிருந்தன. இந்தியாவிலிருந்தும் வருடந்தோறும் இனப்பெருக்கத்திற்காகவும், இறைச்சிக்காகவும் ஒரு தொகை மாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இலங்கையிற் சிறிய மிருதுவான புல் இல்லாதபடியால் மிருகங்களுக்குப், பிரதானமாக, மாடுகளுக்கு உணவு கொடுப்பது பெரிய பிரச்சினையாகும். இலுக்கு, மான போன்ற முரட்டுப் புல்வகை எராளமாக உண்டு ; ஆனல், இவை மாட்டுக்கு உண வாகப் பயன்படமாட்டா. இடைவெப்ப வலயத் தில், பெரிய நிலப்பரப்பில் வளர்ந்திருக்கும் சிறிய புல்லை இலங்கையிற் காண்பது அருமை. கிடைக்கக் கூடிய உணவை எல்லாம் பயன்படுத்தி மாடுகளை வளர்க்கும் சிக்கன வாழ்க்கை யுடைய மக்கள் இருப்பதாற்றன் இலங்கையில் இவ்வளவு மாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் உள்ள மாடுகளின் தொகையில் மூன்றில் ஒரு பாகத்தளவு எருமை உண்டு. பால் கறக்கும் எருமை சாதாரணமாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. நீர் எருமையை இலங் கையின் ஈரலிப்புப் பிரதேசங்களில் வளர்ப்பது சுலபம். தினமும் அது பல மணி நேரம் தண்ணிருக்குள் நில்லாவிட்டால் நோயாற் பீடிக்கப்படும். பல மாதங் கள் வறட்சி காணப்படும் பிரதேசங்களில் இதனை வளர்ப்பது கடினம். இக் காலத்தில் இலங்கையின் பல விசாலமான பகுதிகளில் நெற் செய்கை கை விடப்படுவதால் எருமைகளை வளர்ப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்துவதில்லை. இவை வயலை உழவும் சூடு மிதிக்கவும் மிகவும் பயன் படும் மிருகங்களாகும். இலங்கையில் இப்பொழுதுள்ள எருமைகளின் தொகை யில் மூன்றிலொரு பகுதியளவு ஆடுகள் உண்டு. வறண்ட பிரதேசத்தில் இவற்றை வளர்ப்பது சுலபம். எனெனில் இவை புல்லில்லாமலும் சீவிக் கும். பலாக்குழை போன்ற குழைகள் இருந்தால் இவைக்குப் போதும். செம்மறியாடு குதிரையைப் போலவே வெப்பமான நாடுகளுக்குரிய மிருக மாகும். இலங்கையைப் போன்ற ஈரலிப்புள்ள தேசத்தில் அவை நன்கு விருத்தியடையமாட்டா. மலைநாட்டில் ஓரளவு செம்மறி ஆடுகள் உண்டு. ஆஞல், இந்தியாவில் இருந்து பெருந் தொகையான ஆட்டிறைச்சி இறக்கு மதி செய்யப்படுகின்றது. அவுத்திரேலியாவில் இருந்தும் குளிரேற்றிய பெட்டியில் அடைக்கப்பட்ட இறைச்சி இறக்குமதி செய்யப்படுகின்றது. இலங் கையில் உள்ள மக்கள் மாமிச உணவை அதிகம் விரும்பமாட்டார்கள்.

பெளதிகப் புவியியல் 20
ஐரோப்பிய சாதியாரே அதிகமாக அதை உண்பர். இந்தியாவைப் போலவே இலங்கையிலும் கல் நடை*ள் பெரும்பாலும் இழுவை விலங்குகளாகப் பயன் படுத்தப்படுகின்றன. ஆறல், ஐரோப்பாவில் அவ்வாறின்றிப் பெரும் பாலும் உணவிற்காகவே ஆடுமாடுகளே வளர்க்கிறர்கள். பால் நெய் போன்ற வற்றிற்கு இலங்கையில் அதி தேவையில்லை. ஐரோப்பாவில் அவை மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன. வெண்ணெயை இந்தியர் நெய் உண் டாக்குவதற்குப் பயன்படுட்துவர். ஆனல், இலங்கையில் நெய்க்குப் பதிலாக தேங்காய் எண்ணெயைப் பயன் படுத்துகின்றனர். தகரத்தில் அடைக்கப்பட்ட வெண்ணெய் பெருமளவிற்கு அவுத்திரேலியாவில் இருந்து (ஐரோப்பியக் குடிகளின் உபயோகத்திற்காக) இறக்குமதி செய்யப்படுகின்றது.

Page 108
மூன்ரும் பகுதி
பொருளாதாரப் புவியியல்
மூன்ரும் பகுதி-முதலாம் அத்தியாயம்
செய்கைபண்ணப்படும் பயிர்கள்
செய்கை பண்ணப்படும் பயிர்களே இருவகையாகப் பிரிக்கலாம்.
(1) சாதாரண உணவுப் பயிர்கள்; அத்துடன் தனது சொந்தத்தேவைக் காக ஒரு கமக்காரன் உறபத்தி செய்யும் பொருள்கள்.
(2) பணப்பயிர்; இப்பயிரால் வரும் விளைவுகளே வியாபாரம் செய்தாற் பணம் கிடைக்கும். கமக்காரனின் எனைத் தேவைகளுக்கு இப்பணம் பயன் படும். V
பழங்காலத்தில் விரைவாகச் செல்லக் கூடிய நவீன போக்குவரத்துச் சாதனங்கள் வருவதற்கு முன், மக்களிற் பெரும்பாலோர் தம் சொந்தத் தேவைகளைத் தாமே பூாத்தி செய்துகொள்ளக் கூடியவராய் இருந்தபடி யால் அவர்களுக்குப் பணந் தேவைப்படவில்லை. மனிதனுடைய தேவைகள் சொற்பமாய் இருந்தமையால் இலங்கையில் ஒருவருக்குத் தமது நிலத்தில் விளை யும் பொருள்களைக் கொண்டே குடும்பத்துக்கு உணவளிக்கவும் உடை உதவ வும் உறையுள் வழங்கவும் சாத்தியப்பட்டது. தந்தேவைக்கு அதிகமான பொருள்களையே பலர் பயிர் செய்யமுடியும். கடற்கரைப் பிரதேசங்களில் வசிப்போரிற் சிலர் வியாபாரிகளின் தேவைகளே நிறைவேற்றுவதில் விசேட பயிற்சி பெறலாம். இவர்களுக்கு அந்நிய தேசங்களுடன் வியாபாரம் நடத் தப் பணம் தேவைப்படும். இருந்தும், இவ் வியாபாரத்திற் பெரும் பகுதி யைப் பண்டமாற்று முறையில் நடத்தலாம். சில சமயம் இவ்வியாபாரிகளே நெற்காணிகளின் சொந்தக்காரராய் இருப்பர். அவற்றில் அவர்கள் தங் களுக்குத் தேவையான நெல்லை விளைவிப்பார்கள். சாதாரணமாகச் சீவனத் திற்குத் தேவைப்படும் பொருள்களில் எவற்றையேனும் தேவைக்கதிகமாக வைத்திருப்போர் அவற்றை மற்றையவர்களுக்குக் கொடுத்து உதவ எப் பொழுதும் ஆயத்தமாய் இருப்பார்கள். பல கிராமங்களில் இத்தகைய நிலைமை இன்று நிலவுகிறது. விவசாய வாழ்க்கை நடாத்தும் கிராம வாசிக்கு வெளி உலகத்தில் இருந்து தேவைப்படும் பொருள்கள் மிகக் குறைவு. உணவுக்குப் போதுமான பொருள் அதிகம் அவனிடம் இருந்தபோதிலும்
202

பொருளாதாரப் புவியியல் 203
கையிற்பணம் மிகக் குறைவாகவே இருக்கும். எதாவது ஒரு வகைத் தொழின் முறையில் விசேடபயிற்சி பெற்றுள்ள மக்கள் சமூகத் துக்குப் பணம் மிகவும் அவசியமாகிறது. அதுவும் நிலத்தைப் பண்படுத்தி உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபடாத சமூகத்தை யுடைய கைத்தொழில் நாடுகளில் இது மிக அவசியமாகிறது. உதாரணமாக ஒரு பொறியில் ஒரு பகுதிக்குத் தேவைப்படும் குறிப்பிட்ட தன்மை உள்ள ஒரு சிறிய முறுக்காணியை ஒருவன் நாள் முழுவதும் செய்வதில் ஈடுபட்டி ருப்பான். அவனுக்கு அந்த முறுக்காணியாற் சொந்தத்தில் எவ்வித பயனும் ஏற்படாதிருக்கலாம். ஆனல், அவன் தன்னுடைய வீட்டைக் கட்டவும் உடையை உதவவும் உணவுமுழுவதையும் வழங்கவும் சமுதாயத்தையே எதிர்பார்த்திருக்கிறன். இலங்கையில் இவ்வாறு வாழ்க்கை நடத்துவோர் தொகை மிகக்குறைவு. குடிமக்களிற் பெரும்பாலோர் தமது சொந்தநிலத்தில் ஒரளவு உணவையாவது உற்பத்தி செய்கிருர்கள். பழங்காலத்தில் தேவைக் கதிகமான உணவு உற்பத்தி செய்யப்பட்டபடியால், பிக்குக்கள், ஆசிரியர், வைத்தியர் என்போரின் தேவைகளைச் சமுதாயம் பூர்த்தி செய்தது. கைதொழில் நாடுகளிலானல் மேலே கூறிய தொழிற்கூட்டத்தினர் செய்யுந் தொண்டுக்குப் பதிலாகச் சம்பளம் கொடுக்கப்படும். ஆனல், இவர்கள், அவர்களின் தேவைக்கான உணவு, உடைமுதலியவற்றை உதவி, இருப்பதற்கு வீடுவாசல்களையுங் கட்டிக் கொடுத்தனர். எனவே இன்றும், முன்னிருந்தது போலவே கைப்பொருளற்ற பெருந்தொகையான பிக்குக்களைப் பராமரிக்கக் கூடியதாயிருக்கிறது. கிராமச் சனங்களே அவர்களுக்கு நாடோ றும் உணவளித்து வருகிருர்கள். கைத்தொழில் நாடுகளிலுள்ள குருக்கண் மாரானல் அவர்கள் கையிற் பொருளின்றிச் சீவியம் நடத்தமுடியாது. இலங்கை விவசாயி தனக்கு மிகத்தேவையான உணவுப் பொருள்களைத் தானே உற்பத்திசெய்தான். அதனல் அவன் தனது உணவைச் சேகரிததுக் கொள்ளும் ஒர் இயல்பூக்கத்தை விருத்தி செய்தான். பழங்காலத்திலே யிருந்த கறுவாத்தோட்டக்காரருங்கூடத் தம் கறுவா வியாபாரத்தால் எவ் வளவோ பொருள் சம்பாதிக்கக்கூடியவராயிருந்த போதிலும், நெல்விளைவிப்ப தற்கு ஒரளவு நெற்காணியையும் வைத்திருந்தனர். இவ்வழக்கம் இன்றும் நிலவுகிறது. குறைந்த சம்பளம் பெறுபவர்களும், தங்களுக்குத் தேவையான உணவுப்பொருளை ஒரளவு உற்பத்திசெய்துகொள்ள வசதியுடையவராயிருக் கின்றனர். அவர்களுடைய சம்பளம், கைத்தொழில் நாடுகளிற் குறைவான தாகவே கருதப்பட்டாலும், இங்கே அவர்கள் வறியவர்கள் என்ற நிலையில் வைத்து எண்ணப்படமாட்டார். பணப் பயிர்களைச் செய்கைபண்ணும் முறையை முற்ருகத் துவக்கிவிட்டவர்கள் ஐரோப்பியரே. சென்ற நூற்றண்டின் ஆரம்பத் தில் அது சருவசாதாரணமான தொழிலாய் வளர்ந்தது. கடந்த நூறு வருடங் களிற் பணப்பயிர் செய்கை பண்ணப்படும் பிரதேசம் படிப்படியாகப் பெருகி விட்டது. பணப்பயிர்களைச் செய்கை பண்ணுவதால் அணிமையில் பெருந்

Page 109
204 இலங்கைப் புவியியல்
தொகைப் பணம் கிடைத்த போதிலும் அவசியமான உணவுப் பொருள்களை உற்பத்தி செய்வதை முற்றக் சிறுத்திவி இலங்கையர் எப் பழுது. தயங்குவது இயல்பு.
இலங்கையின் பிரதான உணவு, பயிர்கள் நெல், தெனன, (வடக்கிற் பனே), வாழை, பலா, ஈரப்பல. மரவ வி வள்ளி என்பனபோன்ற கிழங்குவகை, மிளகாய், வெங்காயம், Աաց), அவரை, பழவகை, காய்கறிைெக என்பன வாகும்; தினை சாமை என்பன தீவின் கிழக்குப் பகுதியில், ஒரளவு செய்கை யண்ணப்படுகின்றன.
வாழைக்குப்பின் பப்பா, மா, எலுமிச்சை, தோடை என்பன முக்கிய மான பழவகைகளாகும். முற்காலதிற் சர்க்கரை, கித்துல் மரத்துப் பதனீரிலிருந்து செய்யப்பட்டது. தேனும் உபயோகிக்கப்பட்டது. கரும்புச் சீனி மலிவாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாற் கித்துற் கருப்பட்டியின் செல்வாக்குக் குறைந்துவிட்டது.
நெல்: உலகில் முதன்முதற் செய்கைபண்ணப்பட்டதானியங்களுள் நெல்லு மொன்று. அது ஆசியாக்கண்டத்துக்கே சொந்தமான தானியம். பின்னர் அது மற்றைக் கண்டங்களுட் சில பகுதிகளிற் புகுத்தப்பட்டது. அது எப் பொழுது பயிராக்கப்பட்டதென்பதைக்கூறமுடியாது.நெல்லிற் பலஇனமுண்டு; பெரும்படியாக அவற்றை இரண்டு பகுப்பாகப் பிரிக்கலாம்: ஒன்று மலை நெல்லு (அல்லது புன்செய் நெல்லு), மற்றையது ஈரநெல்லு. மலைநெல்லுக் குத் தண்ணிர் அதிகம் தேவையில்லை. நல்லமழை பெய்யக் கூடிய மலைப் பகுதிகளிற்றன் இது வழக்கமாக விளைவிக்கப்படுகிறது. “எல்வி’ எனவழங்கும் இந்நெல் வளமில்லாத நிலத்தில் அதிக மேற்பார்வை யின்றியே பயிராகும். காட்டை வெட்டி எரித்த நிலத்தில் இது விதைக்கப்படு கிறது. வளர்ந்துவரும்பொழுது பெரிய களைகளைமட்டும் அப்புறப்படுத்தி விட லாம். நல்ல பருவத்தில் விளேவு நன்றயிருக்கும். நீர்ப்பாசனத்துக்குத் தகுதி யற்ற தாழ்பூமிகளிலும் மலை நெல்லைப் பயிரிடலாம். உதாரணமாகத் தென் மாகாணத்தின் வறண்ட பகுதியைக் குறிப்பிடலாம். இப்பகுதியில் ஈர நெல்லு நனருக விளையாது. அதனுல், மலை நெல்லையே விதைக்க வேண்டும். இலங்கையில் மலை நெல்லு அதிகம் விளைவிக்கப்படுவதில்லை. ஈரநெல்லே எங்கும் விளைவிக்கப்படுகிறது.
ஈரநெல்லுக்குத் தண்ணீர் அதிகம் வேண்டும். நிலத்தில் தண்ணிர் நீண்டகாலத்துக்கு நிற்கவேண்டும். இது வண்டற் படிவுள்ள பள்ளத் தாக்கிலே அல்லது ஆற்று வடிநிலங்களிலேதான் முடியும். வெப்பமான தேசங்களில் எங்கும் பயிர்செய்யலாம் ; நிலம் பண்பட்டதாகவும், நீர்ப்பாசன வசதி யுடையதாகவு மிருத்தலவசியம். நெற்செய்கைக்கு அனுபவமும், சாமர்த்தி யமும் அதிகம் வேண்டும். உலகில் மிகத் திறமை வாய்ந்த விவசாயிகளுள் நெற்செய்கை செய்வோரும் சிலராவர். நெற்செய்கையோடு சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன வேலைகளுக்கு விவசாயிகளின் ஒத்துழைப்பும், பெரிய நிர்வாக

பொருளாதாரப் புவியியல் 205
ஒழுங்குகளும் அவசியம். நெல்விளையும் நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு ைெவ பெரிதும் துணைபுரிந்'. இலங்கையில் இடத்துக்கிடம் விளைவு முறை
ாறுபடும். மூன்று போகலிஃைே மிக அருமை, நல்லமழை வீழ்ச்சியுள்ள வருடங்களில், சில மயம், பெரிய குளங்களையடுத்து மூன்று போகவிளே -வுண்டு. ஒரேநிலத்தில் இரண்டு டோகவி வுகூட வழக்கமன்று. கட்டுக் கரைக்குளத்துக்குக் கீழேயுள்ள நிலங்களிலும், கட்டிமேடடுநிலத்திலும், தென்மேற்குத் தாழ்பூமியிலே வெள்ளம் பரவாத நிலங்கரிலும் இரண்டு போகவிளைவு ஒழுங்காக நடைபெறும். ஆசியாவிலுள்ள நெல்வயல்களிற்
காணப்படும் ஒருவிசேடமென்னவெனில் வெளிநாடுகளிலிருந்து அதிகம் செயற்கை உரத்தை இறக்குமதிசெய்து பயன்படுத்தாமையே. பலபகுதிகளில் தொடர்ந்து விவசாயஞ் செய்யப்பட்டபோதிலும், நெல்வயல்களில் வேறு பயிர்கள் செய்யப்படாத போதிலும், செயற்கையுரம் உபயோகிக்கப்படுவது அருமை. பலநூற்றண்டுகளாகப் பெற்ற அனுபவத்தின் பயனக வேறு துணை யின்றித் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய ஆசிய விவசாயி, ஊரிற் கிடைக்கக்கூடிய பசளையையெல்லாம் பயன்படுத்திக் கொள்ளப் பழகியுள்ளான்". இலங்கையில் நெற்செய்கை ஏனைத்தேசங்களிலும் குறை வாகவே இக்காலத்தில் இருந்துவருகிறது. பலநூற்றண்டுகளாக இலங்கையில் நிலவிய குழப்பங்களால் விளைந்த பின்னிடைவே இது வெனக்கூற வேண்டும். மக்கள் குளமுள்ள பகுதிகளைவிட்டு வேறு இடங்களுக்குச் சென்று குடியேற வேண்டிய நிலை உண்டானதால், அவர்கள் போனபோன இடங்களிற் புதிய நிலங்களைப் பண்படுத்த வேண்டிய நிர்ப்பந்த முண்டாயிற்று. இப்போது இந்நிலைமையிற் சிறிது அபிவிருத்தியுண்டாகியிருக்கிறது. அண்மையில் வெளி நாடுகளிலிருந்து செயற்கையுரம் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக விவசாயிகள் அரிவிற்கும் விதைப்பிற்கும் இடையே வளரும் களைகளையும், வைக்கோலையும் வயலிற் போட்டு அமுக்கி உழுது விடுவர்; இரண்டாவது முறை உழும்பொழுது இலை குழைகள் புதைக்கப்படுதல். சில இடங்களில் நிலத்துக்கு நைதரசன் உதவக்கூடிய பருப்புவகையைச் சார்ந்த செடிகள் விசேடமாகப் பயிர்செய்யப்படுகின்றன. அவற்றைப் பின்னர் நிலத்திற் போட்டு உழுது விடுவார்கள். இவ்வகைப் பசளே ‘பச்சைப் பசளே’ எனப்படும். தெரு, இருப்பப்பாதை என்பன உள்ள பகுதிகளில் எலும்புத்தூள், மீன் எச்சம் போன்ற செயற்கை உரங்கள் உபயோகிக்கப் படுகின்றன. இவ்வுரங்களிற் பொசுபேற்றுண்டு. அது நிலத்தைப் பண் படுத்தும். எத்துணை நூற்றண்டுகளாக அவை செய்கை பண்ணப்பட்டு வரு கின்றன என்பதனை நோக்குமிடத்து இந் நெல் வயல்களின் விளைவு அதிசயத் துக்கிடமானதாகும். சீனவிலேயே மிகப் பழைய நெல் வயல்களுண்டு. இங்கே கடந்த மூவாயிரம் வருடமாகச் செய்கை பண்ணப்பட்டு வரும் வயல்
* இந்தியா இவ்வகையிற் சீனவுக்கு இரண்டாவதாகவே கருதப்படும். இந்தியாவிலும் இலங்கையிலும் இயற்கை உரம் எராளமாக வீணக்கப்படுகிறது.

Page 110
206 இலங்கைப் புவியியல்
நிலங்களுண்டு. இவற்றுக்குச் செயற்கையுரத்தை மக்கள் அதிகமாகப் பயன் படுத்தியதில்லை. அமெரிக்காவிலுள்ள பிரேரீ நிலங்களோடு இவற்றை ஒத்துப் பார்த்தால் நிலைமை விளங்கும். அமெரிக்கப் பிரேரீ நிலங்களிற் கடந்த இருபது, முப்பது வருடங்களுள் நிலம் ஒய்ந்து விட்டது. அதனற் கோதுமை செய்வோர் வருடந்தோறும் எராளமான பணத்தைச் செலவு செய்து செயற்கை உரத்தை இறக்குமதி செய்கின்றனர். இயந்திர சாதனங்களையும், பெருநில விவசாய முறைகளையும் பயன்படுத்திச் சில விவசாயிகள் அமெரிக்காவில் எராளமான பணத்தைச் சம்பாதித்த போதிலும், காலப் போக்கில், தொழிலாளர்கள் மூலம், சொந்தப் பராமரிப் போடு செய்யும் வேளாண்மையே நல்ல பயனைக் கொடுக்கும். இலங்கை யிலும் நெற் செய்கைக்கு இயந்திர சாதனங்களைப் பயன் படுத்த வேண்டு மென்று பலர் எண்ணுகிறாகள். வேலையைக் குறைக்கும் இவ்வியந்திர சாதனங்களிற் பல, சிறு தொகையான நிலங்களுள்ளதும் சனச் செறி வதிகமானதுமான பிரதேசத்துக்கு எற்றவையல்ல; சனச் செறிவு குறை வானதும், அதிக நில முள்ளதுமான பகுதிக்கே அவை எற்புடையன. இலங்கை விவசாய முறைகளில் மாற்றஞ் செய்ய முடியாதென்பது நமது கருத்தன்று. கல்வி பரவப் பரவப் புதிய பல திருத்தங்களுண்டாகலாம்.
இலங்கையில் முன்மாரி, பின்மாரியென இரண்டு நெற் போகங்களுண்டு. முன்மாரி (மகா) விதைப்பு நிலப் பாங்குக்கு எற்றபடி ஒகத்து மாத முடிவி லிருந்து ஒற்றேபர் மாத இடைப்பகுதி வரை நடைபெறும். அரிவி, பெப்புருவரி மாச்சு மாதங்களில் வெட்டப்படும். பின்மாரி (யாள) விதைப்பு மாச்சு அல்லது எப்பிரில் மாதத்தில் நடைபெறும். அரிவி யூலை மாதத் துக்குஞ் செத்தெம்பர் மாதத்துக்கு மிடையில் நடைபெறும். சில சமயம் இவ்விரு போகங்களுக்கிடையிலும் இடைவிதைப்புண்டு. இது இடைப் (மத்திய) பயிர் எனப்படும்.
நெல்வகை பலவுண்டு; அவை விளைவாகச் செல்லுங் காலத்தை யொட்டிப் பாகுபாடு செய்யப்படுகின்றன. சில நெல், விளைய ஆறுமாத மெடுக்கும்; அவை பெருநெல், கட்டைநெல், வெள்ளே நெல் எனப் பலவகைப்படும். தனகலை, முருங்கன், பலவீபோன்ற நெல் வகை மூன்று மாதத்திலோ அதற்குக் குறைந்த காலத்திலோ விளைந்து விடும். நாலைந்து மாதங்களில் விளையக்கூடிய வேறு பல இன நெற்களுமுண்டு. ஒவ்வொரு பகுதியின் நிலப் பாங்கையு மனுசரித்தே விதை நெல்லுத் தெரிந்து விதைக்கப்படுகிறது. சில நெல்லினம் சில நிலங்களில் நன்ருக விளையும். 900,000 ஏக்கர் நன்செய்நிலம் இலங்கையிலுண்டு; வருடத்தில் இதன் விளைவு மொத்தம் 170 இலட்சம் புசலாகும். ஊருக்கூர் செய்கை முறை
1 அமெரிக்க விவசாயிகள் உரிய விகிதத்துக்கு அதிகமான விளைவைப் பெறவே முயற்சி செய்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொருளாத ாரப் புவியியல் 207
யில் அதிக வித்தியாசமுண்டு; மிகப் பெரிய வேறுபாடு நாற்றிடும் முறையிலே காணப்படும். சில இடங்களில் விதை நெல்லை நீரில் முளேக்க வைத்து முளையை விதைப்பார்கள்; சில இடங்களில் வயலில் வெள்ளத்தைக் கட்டி வைத்து, முளையை எங்கும் விதைப்பர்; சிலர் 4 வாரந் துவக்கம் 6 வாரம் வரை நெல்லைப் பயிராக்கிப் பின்னர் பிடுங்கி நாற்று நடுவர். நாற்றுக்கு விசேட பாத்திகள் அமைக்கப்படும். நாற்று நடும் பொழுது நிரையாகக் குறிப்பிட்ட இடைவெளி யிருக்கக்கூடியதாய் நடுவர். இம் முறை நல்ல பலனைக் கொடுக்கும். ஆனல், வேலையாட்கள் அதிகம் வேலை செய்ய வேண்டியேற்படும். அதுவும் நிச்சயமான தண்ணீர் வசதியிருக்கவேண்டும். முளை விதைப்பில், விதைத்து ஆறு கிழமை சென்றபின் களை பிடுங்கும் பொழுது பயிர்களையும் பிடுங்கி ஐதாக்கல் வேண்டும். இதனுற் களை அதி கரிப்பதுண்டு. மத்திய மாகாணத்திலும், கேகாலைப் பகுதிகளிலும் யாழ்ப் பாணத்திலுமே நாற்று நடுகை பிரதானமாகக் கைக்கொள்ளப்படுகிறது. நிலத்தைப் பண்படுத்தும் முறையிலும் வித்தியாசங்களுண்டு. பல இடங் களில் நிலத்தை உழுவர்; சில இடங்களில் எருமையை விட்டுச் சேற்று நிலத்தை உழக்கி வேண்டிய இசைவுக்கு மண்ணை ஆக்குவர். வயற் பாத்திகளில் நீரோடுவதற்கு வாய்க்கால் அமைப்பதிற் பலவித அலங்கார உருவங்களுண்டு; இவற்றிற் பல தனிப்பட்ட விசேட உருவ முடையன வாயிருக்கும்; தனிப்பட்டவர்களின் மனப் போக்குக்கு எற்றபடியே இவ் வுருவ அலங்காரங்கள் அமையும் ; இவற்றுக்குரிய காரணங்களே இன்று அறிய முடியாமலிருக்கிறது.
இலங்கையிற் பயிர் செய்வதற்கு அமைக்கப்படும் படிக் கட்டுக்கள் சிறந்த கைத்திறமை பெற்றுள்ளன. மலை நாடுகளில் அவை ஒடுக்கமான பள்ளத் தாக்குத் தளங்களில் அழகாகப் பொருந்துமாறு அமைக்கப்படுகின்றன; சரிவு குறைவான சமதளத் தாழ்பூமிகளிலும் அவற்றின் அமைப்பு விசேடமானது; தண்ணிர் தேங்கி நில்லாதவாறு இங்கே மிகத் திறமை யுடன் படிகள் கட்டப்படுகின்றன. ஒரு முறை படிகளமைக்கப்பட்டாலும், அவற்றைப் பழுது பார்த்து நல்ல நிலைமையில் வைப்பதற்கு அதிக கவன மும், விசேடத் திறமையுமுள்ள தொழிலாளரின் பராமரிப்புத்தேவை. நில நண்டுகள் துளைகளை யுண்டாக்கி நீரை ஒழுகச் செய்கின்றன; ஒடும் நீர் மண்ணை அரித்துச் சென்றுவிடுகிறது. இவற்றையெல்லாம் தருணங்களிற் பார்த்து ஒழுங்கு செய்ய வேண்டும் , யாழ்ப்பாணச் சுண்ணக்கற் பிரதேசத் தில் மேற்பரப்பில் அருவிகளில்லாதபடியாற் கையால் நீர் இறைக்க வேண்டியேற்படுகிறது. ஏனைப் பகுதிகளிலுள்ள முக்கியமான வயற் பிரதே சங்களில், படிக்கட்டுக்களில் நீரோடிக் கொண்டேயிருக்கச் செய்வர் ; நெல்லு முற்றுகின்ற பருவத்தில் தண்ணிரை வடியச் செய்து விடுவர்.

Page 111
208 இலங்கைப் புவியியல்
LLib 67.
நெல் விளையும் பகுதிகள் கரு நிறத்திற் காட்டப்பட்டுள்ளன; இப் படத்தை 60 ஆம்
படத்துடன் ஒப்பிடுக.
 

பொருளாதாரப் புவியியல் 209
75 அங்குலத்துக்கு அதிகமான மழை பெய்யும் பிரதேசங்களிலுள்ள ஆறுகளின் tோக்கை மாற்றுவதால் நீர்ப்பாசன வசதிகள் செய்யப்படுகின் :ன. 42 ஆப் படத்ளி "Luтfićѣä ஆறுகளின் வெள்ளச் சமபூமிகளின் கீழ்ப் கங்களிலேயே இ 0ாறு விசாலமான வயல் நிலங்களுண்டு. அங்கே ஆற்றிலிருந்து சமவெளியின் அந்தம்வரை கால்வாய்கள் 'வெட்டப்பட்டுள் ளன. 75 அங்குலத்துக்குக் குறைவான மழை வீழ்ச்சியுள்ள பிரதேசங் களில் வழக்கமாகக் குளங்களைக் காணலாம். குளங்களின் கழிமுகத்துக்குக் கீழே வயல் நிலங்கள் காணப்படும். (95 ஆம் படம் பார்க்க.) பாத்திகளுக் கூடாகச் சிறிய வாய்க்கால்களோடும். ஒவ்வொன்றும் 2000 எக்கர் பரப் புடைய 12 மிகப்பெரிய குளங்கள் இலங்கையிலுண்டு. அத்தனை வேறு பெரிய குளங்களும் காணப்படுகின்றன. 4600 சிறிய கிராமக் குளங் களுமுண்டு. மிகச்சிறிய குளங்களுட்பட மொத்தம் 12000 குளங் களிருக்கின்றன. இவற்றிற் பெரும்பாலானவற்றையடுத்துச் சிறிய நெல் வயல்களுண்டு. குளங்களைப் பயன்படுத்துவதற்கு எல்லாவகையிலும் முயற்சி செய்யப்படுகிறது. அரசாங்கமும் முன்னேற்றமான திட்டங்களை வகுத்து விவ சாயத்தை அபிவிருத்தி செய்து வருகிறது. வருங்கால நீர்ப்பாசனக் கொள் கையை விரிவாக்குவதற்கு அத்திவார மிடப்படுகிறது. நீர்ப்பாசன வேலை களுக்கென 150 இலட்சம் உருபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் அரைப்பங்கை இப்பொழுது பயன்படுத்துவதற்குத் திட்டங்கள் போடப்பட்டிருக்கின்றன. அத் திட்டங்களை நிறைவேற்றும் கட்டுவேலை முடிவடையும் நிலையில் உள்ளது. பின்வரும் திட்டங்களே அமைக்க இதற்குப் பொறுப்பாய் உள்ள பகுதி ஒப்பந்தஞ் செய்துள்ளது. இத்திட்டங்கள் முற்ருக நிறைவேறியதும் 50,000 எக்கர் நிலம் விவசாயஞ் செய்ய உபயோகிக்கப்படும். இந்நோக்கத்துடன் விவ் சாயப்பகுதி இன்று பின்வரும் திட்டங்களிற் கவனஞ் செலுத்திவருகிறது: மினிப்பே இடது கரைத்திட்டம், காகமை விசாலிப்பு, பராக்கிரமசமுத்திரம், எலகரா, மின்னேரி, கந்த எலக் குளம், பத்துமேடில்லை, சின்கங்கை, பொல் கொடை, கொழும்பு தெற்கு. யாழ்ப்பாணக் குடாநாட்டின் சனநெருக் கத்தைத் தவிர்ப்பதற்காகவே இரணைமடுக்குளம் புதுப்பிக்கப்பட்டது. 60 ஆம் படத்தில் நெல்விளையும் பெரியபகுதிகள் காட்டப்பட்டுள்ளன. 67 ஆம் படத்தைப் பார்த்தால் நெல்விளையாத பகுதியே இல்லையென்பது தெள் வாகும். " :
உணவுப்பயிர்களுள் நெல்லுக் கடுத்ததாக மதிக்கப்படுவது தென்ன. இது பணப்பயிராகவும் மாறிவிட்டது. எனவே இலங்கையின் தேவைக்கு மிக அதி கமான அளவு தெங்குப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது ; 900,000 எக் கர் தென்னந்தோட்டம் இலங்கையிலுண்டு.* இதில் ஒரு பகுதியே திட்ட
* 1928 இல் தெங்குப்பொருள்களால் 8 கோடி உருபாய் வருமானம் கிடைத்தது. கெர்ப்பற் வியாபாரத்தால் 3 கோடிக் கதிகமாகவும், எண்ணெய் தேங்காய் பிண்ணுக்கு என்பவற்றச் தனித்தனி 2 கோடி உருபாயுங்கிடைத்தது. 1945 இலும் 1946 இலும் வருமானம் 7 கோடி ህታff(ዳኝክዕ.
9- J. N. B 70576 (11157).

Page 112
20 இலங்கைப் புவியியல்
மான முறைப்படி செய்கை பண்ணப்படுகிறது. அதனுற் கூடிய விளைவு கிடைக் கிறது. மக்கள் தத்தம் தோட்டங்களில் தென்னை மரங்களை விரும்பியபடி வளர்க்கிருர்கள். அவற்றுக்கு அவ்வளவு கவனஞ் செலுத்தப் படுவதில்லை. பிரிட்டிசுப் பேரரசில் இலங்கையே தெங்குப் பொருள் ஏற்றுமதியில் முதலிடம் பெற்றது. மண் வாய்ப்பாயிருக்குமானல் தென்னை நல்ல பயனைக் கொடுக்கும். மற்றைப் பணப் பயிர்களைப் போலத் தென்னந்தோட்டங் களுக்கு அதிக தொழிலாளர் தேவையில்லை. நாலைந்து ஏக்கருக்கு ஒரு தொழிலாளிபோதும். தேயிலைத்தோட்டமானுல் ஒர் எக்கருக்குச் சராசரி ஒரு தொழிலாளி தேவை. இறப்பர்த் தோட்டத்துக்கு மூன்று தொழிலாளர் தேவை. வியாபாரத்துக்குத் தேங்காய் உற்பத்தி செய்யாத தென்னந் தோட்டக்காரர் தோட்டத்தைப் பராமரிப்பதில்லை. தேங்காய் பிடுங்குவதற்கு மட்டும் ஆட்களை எற்படுத்தித் தேங்காய் பறிப்பார்கள். கடலையடுத்தே தென்னேவளருகிறது. மணல் நிலத்தில் அது நன்கு வளரும். உயர்ந்த பூமி யில் அது வளராது; வளர்ந்தாலும் தேங்காய் சிறிதாயிருக்கும். 1500 அடி வரை உயரமுள்ள பூமியில் தென்னை நன்றகவளரும். வெகுதூரம் உள் ளூர்ப்டாங்காக உள்ள பூமிகளிலும் தென்னை வளரும். மாத்தளைப் பகுதியி லுமே அது செழித்து வளருகிறது. ஆனற் கரையையடுத்த பிரதேசங்களிற் ருன் தென்னை நல்ல பயனைக் கொடுக்கும். பனை பிரதானமாக யாழ்ப்பாணக் குடிர நாட்டுக்கே சொந்தமான மரம். ஆனல், அது வடக்கிலும் கிழக்கிலும் தென்னைக்குப் பதிலாகச் சில இடங்களில் வளருகிறது. சமீப காலத்திற் தென்னைப் பொருள்களுக்கு நல்லவிலை உண்டான காரணத்தால் தீவின் கிழக் குப்பகுதிகளில் தென்னந் தோட்டங்கள் அதிகமாகக் கிளம்பிவிட்டன. தென்னை நனகு வளரவேண்டுமானல் 50 அங்குலந்தொட்டு 90 அங்குலம் வரை டிழை பெய்யவேண்டும் ; அதுவும் வருடம் முழுவதும் பெய்யக் கூடிய தாயிருக்க வேண்டும். ஆனல் இந்த எல்லைக்கு வெளியிலும் தென்னை வள ரும். உதாரணமாக, வருடம் முழுவதும் மழை வீழ்ச்சிப் பரம்பல் போதாத யாழ்ப்பாணப் பகுதியை எடுத்துக் கொள்ளலாம்.
"மேல்மாகாணத்தையும் தென்மாகாணத்தையுஞ் சேர்ந்த கரையடுத்த பிரதேசங்களில் உள்ள தென்னை மரங்கள் சாராய உற்பத்திக்குத் தேவை யான கள்ளே இறக்குவதற்குப் பயன்படுகின்றன. ஊரவர் விருப்பப்படி கள்ளுக்கடைகளை மூடவேண்டுமென்ற இயக்கத்தின் பயனுக இந்தத் தொ ழில் பெரிதும் பாதிக்கப்படலாம். அரசாங்கத்தின் உத்தரவைப் பெற்றே கள்ளு இறக்கலாம் ; களுத்துறைப் பகுதியிற் சாராயம் வடிப்பதற்கு எட்டுப் பெரிய நிலையங்களுண்டு. ஒவ்வொன்றிலும் குறைந்தது 60,000. கலன் சாராயம் வருடந்தோறும் வடிக்கப்படுகிறது. தென்னை பணப்பயிராகவே செய்கை பண்ணப்படுகிறது; கொப்பரு, எண்ணெய் என்பன ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பலர் எண்ணெய் வடிப்பதில் ஈடுபடுவதில்லை. கொழும்பு, சிலாபம் முதலிய இடங்களிலுள்ள எண்ணெய் வடிக்கும் ஆலைகளுக் குத் தேங்காய் அனுப்பப்படுகின்றது. அங்கே அது எண்ணெயாக வடிக்கப்படு

பொருளாதாரப் புவியியல் 2.
கின்றது. வேறு சிலர் பழைய செக்கு முறையைப் பயன்படுத்துகின்றனர். பல நூற்றண்டுகளாக இம் முறையே இலங்கையில் அனுசரிக்கப்பட்டுவந் தது. எண்ணெய் எடாமலே பெருந்தொகையான கொப்பரு வெளியூர் களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெயிலிற் காயவைத்த கொப்பருவே எண்ணெய் அதிகமுள்ள சிறந்த கொப்பருவாகும். ஆயின் மழைக்காலத்திற் சிரட்டையை எரியவைத்து அதன் மேல் அடுப்பமைத்துக் கொப்பரு காய வைக்கப்படும். இடைவெப்ப வலய நாடுகளில் உள்ள கைத்தொழிற் றேசங் களில், இந்தநூற்றண்டில், கொப்பருவுக்குரிய தேவை மிகவும் அதிகரித்
LILID 68.
கொப்பருவிற்காகத் தேங்காய் காயவிடப்படுகிறது.
துள்ளது. இதற்குக்காரணம், கைத்தொழிற் புரட்சியின் பின்னர் இந்நாடு களின் குடித்தொகை மிக அதிகரித்துள்ளமையாகும்; அத்துடன் நெய்ப் பொருள்களைப் பெறுவதற்கு உபயோகப்பட்டுவந்த மிருகங்களும், மக்கள் பெருக்கத்துக் கேற்பப்பெருகி வாராமையும் மற்றெரு காரணமாகும். மேலும் இடை வெப்பவலய நாடுகளில் எண்ணெய் தரக்கூடிய தாவரங்களுங் குறைவு. அயனமண்டல நாடுகளில் அத்தகைய தாவரங்கள் அதிகம் ; அத ஞல் அந்நாடுகள் அயனமண்டல நாடுகளின் துணையை நாடின. தேங்கா

Page 113
22 இலங்கைப் புவியியல்
யெண்ணெயிலிருந்து மாசரின் (போலிவெண்ணெய்) என்ற உணவுப்பொருள் உண்டாக்கப்படுகிறது; வெண்ணெய்க்குப்பதிலாக இதனை அப்பத்தோடு சேர்த்து உண்ணலாம். அன்றியும் சமையல் செய்வதற்கும் இது பயன்படுத்தப்படு கிறது. சவர்க்காரம், தலைக்கு வைக்கும் எண்ணெய் முதலிய பொருள்கள் உற்பத்திசெய்வதற்கும் இது பயன்படும். தேங்காயெண்ணெய், கொப்பரு என்பவற்றைப் பிரதானமாகப் பிரித்தானியா இறக்குமதி செய்கிறது. ஒல்லாந் தும், தென்மாக்கும் பெருந்தொகையான தெங்குப் பொருளே இலங்கையி லிருந்து இறக்குமதி செய்கின்றன. பிண்ணுக்கு, மாடுகளுக் குணவாக உபயோகப்படுகிறது. சில சமயம் அது உரமாகவும் பயன்படுகிறது. பிண் ணுக்கும் இப்பொழுது எற்றுமதி செய்யப்படுகிறது. கொப்பருவை விடத் தேங்காயும் பெருந்தொகையாக ஏற்றுமதியாகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதிகமாகத் தேங்காயை வாங்குகின்றன. தேங்காய் வாங்கும் நாடுகளில் எகித்தும் முக்கியமானதாகும்.
சில தேசங்களில் உலர்த்திய தேங்காய்ப் பூவுக்கு அதிக தேவையுண்டு; தேங்காயைத் துருவி வெயிலில், அல்லது நெருப்பிற் காயவைத்துத் தேங் காய்ப்பூ ஆயத்தஞ் செய்யப்படுகிறது. அனலிற் காயவைக்கும்பொழுது இயந்திரம் உபயோகப்படுத்தப்படுகிறது. பல தென்னந் தோட்டங்களில் தேங்காய்ப்பூ உலர்த்துவதற்குச் சிறிய இயந்திரம் அமைத்திருப் பார்கள். ஆனற் பெரும்பாலான சிங்களத் தோட்டக்காரர் கையினல் தேங் காயைத் துருவி வெயிலிற் சிறு சிறு அளவாகக் காயவைப்பர். உலர்த்திய தேங்காய்ப்பூ, பெரிய பிரித்தானியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் எற்றுமதி செய்யப்படுகின்றது. பலவகையான கேக்கப்ப வகைகளும், இனிப் புப்பண்டங்களுஞ் செய்ய இது பயன்படுகிறது.
தென்னையிலிருந்து கருப்பட்டியும், வின்னரியுஞ் செய்யப்படுகின்றன. இவை வீட்டு உபயோகத்துக்குரியன; வற்றுமதி செய்யப்படுவனவல்ல. இக்கால வியாபார வளர்ச்சியின் பயனுகவே சீனி இலங்கைக்கு வந்து சேர்ந் தது. அதற்குமுன்னரெல்லாம் கருப்பட்டியையே மக்கள் உபயோகித்தனர், கருப்பட்டி சினியைப்போல அவ்வளவு தூய்மையானதன்று; ஆனல் அதனை மேலும் தூய்மைப்படுத்தினற் சீனியைப் பெறலாம். கருப்பட்டியைத் தூய்மை செய்து சீனி பெறுவதற்காக ஒரு தொழிற்சாலையை நிறுவ முயற்சி செய்யப்பட்டது. அது பின்னர் கைவிடப்பட்டது; இலங்கையில் இலாபந்தரும் தொழில்கள் வேறு காணப்பட்டதால் அது கைவிடப்பட்டது. தென்னம்பாளை யிலிருந்து வடியும் கள்ளை மூன்றுவகையிற் பயன்படுத்தலாம். கள்ளை வடியவிட்டு அப்படியே வைத்தால் “நொதி” எனப்படும் ஒருவகை நுண்ணிய சேதனப்பொருள் (இது கள்ளிலோ, காற்றிலோ காணப்படுவது) படிந்து, கள்ளிலேயுள்ள சீனியை மதுசாரமாகவும், காபனீரொட்சைட்டாகவும் பிரிக் கிறது. இவ்வாயு நுரைத்தெழுவதைக்கள்ளிற் காணலாம். இதுவே கள்ளு என்ற பெயரைப் பெறும்; ஆனல் கள்வடியும் முட்டியிற் சுண்ணும்பைச்

பொருளாதாரப் புவியியல் 213
சிறிது போட்டால் நொதி உண்டாக மாட்டாது; எனவே இதிலுள்ள சீனி மாற்றமடையாது. இதைக் கருப்பநீர் என்பர். இவ்வாறு கள்ளுச் சேர்ப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பெறவேண்டும். பனை, கித்துல் என்ற மரங் களிலுங் கள்ளுக் கட்டலாம். பனைக்குப் பெரும்பாலும் உத்தரவு எடுக்கப் படுவதில்லை. கித்துலுக்கும் தென்னைக்கும் எறக்குறைய ஒரே அளவினவா கவே உத்தரவுகள் பெறப்படுகின்றன. கருப்பநீரைக் காய்ச்சினற் சீனி படிகமாக உருவாகும். அது கருப்பட்டி யெனப்படும். கள்ளைக் காற்றுப்பட வைத்தபின்னர், பெரியபாத்திரங்களில் ஊற்றி அடைத்து ஆறுமாதம்வரை வைத்திருந்தால் வின்னரியுண்டாகும்.
தென்னந் தும்பிலிருந்து பலபொருள்களைச் செய்யலாம். எண்ணெய், கொப்பரு போன்ற பொருள்களின் வியாபாரம் நன்கு ஒழுங்கு செய்யப்பட் டுள்ளது; தும்புப்பொருள்களின் வியாபாரம் அவ்வளவு நன்றக ஒழுங்கு செய்யப்படவில்லை. தும்புப் பொருள் வேலை பெரும்பாலும் கிராமங்களிலே ஒய்வுநேரங்கள்ற் பெண்க்ளாற் செய்யப்படுகிறது. அவர்கள் வீடுகளிற் பாய், கயிறு முதலியவற்றைச் செய்வார்கள். மட்டையை நீரில் அழுகவிட்டால் சோற்றி உக்கிவிடும்; பின்னர் அதை எடுத்து அடித்துத் தும்பைப் புறம்பாக எடுக்கலாம். கொழும்பு மாவட்டத்திலும், நீர்கொழும்பு மாவட்டத்திலும் தும்பு ஆலைகளுண்டு. தும்பினல் துடைப்பம், கயிறு, வடம், பாய் என்பன செய்யலாம்; மெத்தைகளுக்கு உள்ளே இடவும் தும்பு பயன்படுகிறது. இவற்றிற் பெரும்பகுதி இலங்கையிலேயே உபயோகப்படுகிறது. சிலகாலங் களில் 3,000,000 உருபாயக்கு அதிகமான மதிப்புள்ள இப்பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மகாயுத்தத்துக்கு முன் னர் பெரிய பிரித்தானியா, யப்பான், சேர்மனி ஆகிய தேசங்களுக்கு இவை எற்றுமதி செய்யப்பட்டன.
தென்னையின் பயன்கள் பல; தென்னஞ் சிரட்டையிலிருந்து வீட்டுக்குப் பயன்படும் பல பொருள்களேச் செய்யலாம்; மரம் பலவகையிற் பயன்படுகிறது; ஓலையைக் கிடுகாகப் பின்னி வீடு வேயலாம் (90 ஆம் படம் பார்க்க). வருடத் தில் ஒரு மரத்திற் பன்னிரண்டு ஒலை பழுத்து விழும். இளநீர் குடிப்ப தற்கு நல்ல பானமாகும். செவ்விள நீர், குடிப்பதற்காகவே அமைந்துளது; அந்த இனத்தில் தேங்காய் அதிகமிராது. தேங்காய்ப்பால் கறிக்கு உதவும்: இந்தியப் பிரதேசத்திலன்றி வேறு நாடுகளில் தேங்காய்ப்பாலைக் கறிக்குப் பயன்படுத்தும் வழக்கம் இல்லை; இந்த வழக்கம் நம்மவரிடையே இருப் பதும் இடைவெப்பவலய நாட்டிலுள்ளவர்களுக்குத் தெரியாது.
னேயிலிருந்து சிறிய பனம்பழம் கிடைக்கிறது; கிராம வாழ்க்கையில்
தென்னை எத்தகைய பயனை உதவுகிறதோ அத்தகைய பயனைப் பனையுமுதவு கிறது.

Page 114
214 இலங்கைப் புவியியல்
வீட்டு உபயோகத்திற்காகப் பயிர்செய்யப்படும் பழவகை, காய்கறி வகை களில் வாழையைத்தவிர, மற்றெவையேனும் பயிர்செய்முறையினல் அபி விருத்தியடையவில்லை. காய்கறிவகைகள் ஏராளமாக உண்டு; உருளைக் கிழங்கு போன்ற இடைவெப்பவலயக் காய்கறிகள், இலங்கையிற் புகுத்தப் பட்டபடியாற் காய்கறியினங்களின் தொகை கூடிவிட்டது. வாழை மேனடு களில் “பனை” எனவழங்கப்படும். இது பெருந்தொகையாகப் பயிர் செய்யப்படுவதில்லை. ஏனெனில் இது எற்றுமதி செய்யப்படும் பொருளன்று. இலங்கையிற் பல இன வாழைகளுண்டு. இவற்றைப் பெரும்படியாக மூன்று வகையாய்ப் பிரிக்கலாம்: சுவையற்றன, இவை கறிக்கு மட்டுமே உதவும்; இனிப்பானவை, இவை பழமாய்ச் சாப்பிட உதவும், இலைக்காகப் பயிர் செய்யப்படுவன, இவற்றின் இலை உணவு பரிமாறிச் சாப்பிட உதவும், பெரிய பழங்களை யுதவும் வாழையினங்கள் இரம்புக்கனைக்கும் பொல்கா வலைக்குமிடையிற் காணப்படுகின்றன. பலா அடிமரத்திலிருந்து பெரிய காய்களை உதவும், வெளி நாட்டார் இதைப்பார்த்து அதிசயப்படுவர். இது மிகவும் பயனுள்ள மரம்; இதன் பழமுங் காயும் மக்களின் உணவாகப் பயன்படுகிறது. பலாவிலை ஆடுகளுக்கு நல்ல உணவாகும். மரம் பலவகை யான வீட்டுத்தளவாடங்களுக்கும் பயன்படும். இம்மரம் இடைவெப்ப வலய நாடுகளிற் கிடையாது. தெற்கு ஆசிய நாடுகளில் மட்டுமே இது காணப்படு கிறது. மிளகாய் உணவுப்பொருள்களில் முக்கியமானது. உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிரசித்தமானது. எனெனில் ஊறுகாய் போடுவதற்கு இது எங்கும் பயன்படுகிறது. இலக்கியத்தில் மாம்பழம் கூறப்படுவதால் இலங் கைக்கு வெளியிலும் அது பிரசித்தமானதாகும். சட்டினி மூலமாகவும் இதன் புகழ் பரவியுள்ளது. இந்தியாவில் இதைத் தகரங்களிலடைத்து வெளிநாடுகளுக்கு அனுப்புவர். கிழங்கு, எல்லாக் காலங்களிலும் இலே சாகப் பயிராவதால் ஏழையின் உணவாகிறது. அது எங்கும் காணப்படும்.
கமுகு இலங்கையிலுள்ள ஒரு விசேடமரமாகும். அது தோட்டமாக எங்கே னும் பயிர்செய்யப்படுவதில்லை. கேகாலையிற் சிலபகுதிகளில் மட்டும் கமுகுத் தோட்டமுண்டு. கமுக மரங்கள் அங்குமிங்குமாக அநேக இடங்களிலு மிருப்பதால் மொத்தமாக எவ்வளவு எக்கரில் கமுகுண்டென்பதைக் கணக் கிடுவது கடினம். நெல்விளையும் பூமியின் பகுதியிற் கமுகுண்டு எனலாம். கமுகிற் பலவகையுண்டு. 2500 அடிக்குக் கீழ்ப்பட்ட பூமியில் அதிக பராமரிப் பில்லாமலே இது நன்றக வளரும். பாக்கை வெற்றிலையோடு சாப்பிடு வார்கள். இவ்வழக்கம் எந்தக்காலத்திலிருந்து தொடங்கிய தென்பதை அறியமுடியவில்லை. சமீபகாலத்திற் கமுக மரங்களுள்ள இடத்திலே தென்னை யைப் பயிராக்கி வருகிருர்கள்; தெங்குப் பொருள்களை மேனடுகளுக் கனுப்பி விற்பனை செய்யலாமென்பதே அதற்குக் காரணமாகும். இலங் கையின் பாக்கிற் பெரும்பகுதியை வாங்கும் தென்னிந்தியாவிலும் இதே முறை கைக்கொள்ளப்பட்டு வருகிறது. 3,000,000 உருபாய்க்கு அதிகமாகப் பெறுமதியுள்ள பாக்கு எற்றுமதி செய்யப்படுகிறது. தென்னிந்தியாவிற்

பொருளாதாரப் புவியியல் 25
பாக்கு உற்பத்தி குறைந்திருப்பதால் இலங்கைப் பாக்கின் விலை அதிகரிக்கு மென எதிர்பார்க்கப்படுகிறது. கமுகு உற்பத்தியோடு வெற்றிலை உற்பத் திக்கும் தொடர்புண்டு. வெற்றிலை சிறு தோட்டங்களிலும், வீட்டுவளவு களிலும் பயிர் செய்யப்படுவதால், எவ்வளவு பரப்பில் இது பயிர் செய்யப் படுகிறதென்பதை மதிப்பிடுவது எளிதன்று. வேறு பயிர்களோடுதான் வெற் றிலையும் உற்பத்தி செய்யப்படுகிறது. வெற்றிலைக்கொடி தாலவிருட்சங்களைச் சுற்றியே படரும். வெற்றிலை எராளமாகக் கிடைக்கும்; ஆனல் அது வாடிப் போகக் கூடிய பொருளாதலால் அதனை ஏற்றுமதி செய்வதில்லை.
இலங்கையின் முக்கியமான பணப்பயிர்கள் தேயிலையும், இறப்பருமாகும். முக்கியமான பணப்பயிர்களும் அவைபயிராகும் நிலப்பரப்புக்களும் கீழே தரப்படுகின்றன:
Luí 1946 இல் உள்ள நிலப்பரப்பு தென்னை 920,253 நெல் 910,000 இறப்பர் 605,260 தேயிலை 549,886 கமுகு 69,000 பனை 50,000 சித்திரனெல்லாப்புல் 30,107 கொக்கோ 19,700 கறுவா 33,077 புகையிலை 2,656 ஏலம் 6,000 சேனை, காய்கறி, முதலியன 140,000
இவற்றுள், முதனன்குமே தொடர்ச்சியாக அதிக நிலப்பரப்பிற் பயிராக் கப்படுகின்றன. இவைபயிராகும் பெரும்பகுதிகள், 60 ஆம் படத்திற் காட்டப்பட்டுள்ளன. தென்னை நெல் என்பன பயிராகும் நிலப் பரப்பு அதிகமானுலும், தேயிலை, இறப்பர் என்பனவே அதிக வருவாயைக் கொடுக்கின்றன. ஏனெனில் அவை வெளிநாடுகளில் நல்ல விலைக்கு விற்கப்படுகின்றன. மற்றைப் பயிர்களோடு ஒப்பிடும்பொழுது கறுவா சிறிய நிலப்பரப்பிலேயே பயிர்செய்யப்பட்ட போதிலும், அது நல்ல இலாபத்தைத் தரும் பயிராகும். பணப் பயிர்களுள் முதலிடம் பெறுவது தேயிலை. கோப்பிச் செய்கை வீழ்ச்சியடைந்த பிற்பாடே தேயிலை சமீபகாலத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட தென்பதை முன்னரே குறிப்பிட்டுள்ளோம். ஆனல், அதன்செய்கை விரைவாகப் பரவிவிட்டது. அதனல் மற்றைப் பயிர்களிலும் அது அதிகவருமானத்தைக் கொடுக்கிறது. வேறு எப்பயிராவது 'வ்வளவு வருமானத்தைக் கொடுக்கவில்லை. தேயிலைத் தோட்டங்களிற் பல, ஆரோப்பியர் கையிலேயே இருக்கின்றன. இவர்கள் இலங்கையில் என்றும்

Page 115
216 இலங்கைப் புவியியல்
வசிப்பவர்களல்லர்; போதிய பணம் சம்பாதித்தவுடன் தத்தம் நாட்டுக்குச் செல்லும் நோக்கமுடையவர். அதனல் தேயிலைச் செய்கையின் பயன5 வரும் இலாபத்திற் பெரும்பகுதி இலங்கைக்கு வெளியே செல்லு கின்றது.
தேயிலைச்செடி கமெல்லியா இனத்தைச் சேர்ந்தது. அது சீனுவுக்குரிய செடி. 1883இல் கோப்பிச்செய்கை அழிந்துபோன காலத்திற்குச் சற்றுமுன்னர் இங்குகொண்டுவரப்பட்டது. இதற்கு முன்னர் பல காலமாகச் சீனர் தேயிலையை உற்பத்திசெய்து எற்றுமதிசெய்து வந்தனர். ஐரோப்பிய தேயிலை வியாபாரத்தோடு இலங்கைக்குத் தொடர்பு இருந்து வந்தது. இந்தியாவில் தேயிலைச்செடி பயிர் செய்யப்பட்டபொழுது நல்ல வெற்றி கண்டனர். அதனுல் அதை இலங்கையிலும் பயிர்செய்யவேண்டுமெனச் சிலர் விரும்பினர். தேசத்துக்குத் தேசம் கால நிலையிலுள்ள வித்தியாசங் களினல், தேயிலைச் செடியிலும் சில வித்தியாசங்களுண்டாயின. “இந்தியத் தேயிலை” “இலங்கைத்தேயிலை” யென்றும் “சீனத்தேயிலை” யென்றும் உலகம் கொண்டாடும் வேறுபாடு, அத்தேயிலைகளுக்குரியதன்று; இது சீனவில் தேயிலையை ஆயத்தஞ்செய்யும் முறையை யொட்டியே யெழுந்ததாகும். நன்றக நீர்வடிந்தோடும் மலைச்சாரல்களிலே தேயிலை நன்குசெழிக்கும். நல்ல மழை இதற்கு அனுகூலமாயிருக்கும்; ஆனல் வதுளைப் பகுதியில் இது நன்றக வளர்வதை ஆராயுமிடத்து, மழை குறைவானதும், நீண்ட வறட்சியுள்ளதுமான நிலங்களிலும் இது வளருமென்பதை உணரலாம். வறட்சிக்காலத்தில் இச்செடி தனது இலைப்பரப்பைச் சுருக்கிக் கொள்ளுகிறது. பின்னர் மழை நன்றகவும், செறிவாகவும் பெய்யும் பொழுது குழைபரப்பிச் செழிப்பாகவளரும். இக்காரணத்தைக் கொண்டே தேயிலைக்கு நல்ல மழை வேண்டுமெனக் கருதப்பட்டுவந்தது. இலங்கையிற் காணப்படும் இப்பரீட்சை களின் பயனகத் தேயிலைச் செடி நிலைமைக் கேற்றவாறு தன்னை அமைத்துக் கொள்கிறதென்பது தெளிவாகிறது. வறட்சியுள்ள ஊவா வடிநிலத்திலுங்கூட வருடத்தில் எக்காலத்திலும் பெய்யக்கூடிய மேற்காவுகை மழை பெய்வதால் தேயிலைச் செடிக்குப் பெரிய நன்மையுண்டாகிறது. வறட்சிக்குப் பின் மழை பெய்வதால் தேயிலை நன்றகக் கொழுந்து விடும்; இக்கொழுந்தே தேயிலை உற்பத்திக்கு அவசியம். தேயிலைத் தோட்டங்களிற் பெரும்பாலன 3000 அடிக்குமேலே காணப்படுகின்றன. அதற்குக் கீழும் தேயிலையைப் பயிர்செய்ய லாம். ஆனல் உயர்ந்த பூமியிற்ருன் நல்ல பலனுண்டாகும். அதனுல் எராள மான தரிசுநிலங்களும் காடுகளுந் தேயிலைத்தோட்டங்களாக்கப்பட்டன. தேயி வைத்தோட்டங்களில் 80 வீதம் கண்டி, நுவரெலியா, வதுளே ஆகியமாவட்டங் களிலே உண்டு (60 ஆம் படம் பார்க்க). தேயிலைச் செடியை வெட்டாமல் விட்டால் 20அடி உயரத்துக்குப்பருத்து வளரும். ஆனல் 18 மாதம் துவங்கி 4 வருடம் வரை அது இடையிடையே வெட்டப்படுகிறது. இதனுற் புதிய கிளைகள் தளிர்க்கின் றன. மூன்றடி உயரத்துக்குமேல் அது வளரவிடப்படமாட்டாது. தேயிலை விதை தேவையானல் மட்டும் செடியை வெட்டாமல் விடுவார்கள். இதில் வரு

பொருளாதாரப் புவியியல் 27
டம் முழுவதும் கொழுந்து ஒடிக்கலாம். ஆனல் எப்பிரில், மே மாதங்களிலே ப்ெரும்பாலும் அதிகமாகக் கொழுந்தொடிக்கப்படுகிறது. நிலப்பாங்கு தேயிலையின் இனம். நிலத்தின் உயரம், பண்பாடு, பசளேமுதலியவற்றை யனுசரித்துக் கொழுந்து விடுதலும் வித்தியாசப்படும். தேயிலைத் தோட்டங் களில் மண்ணரிப்பைத் தடுக்கும் முறைகளைப் பற்றி எலவே குறிப்பிட்டுள் ளோம். ஆதியில தோட்டங்களில், களையை முற்றக அப்புறப்படுத்தினர். வடிமுறை செப்பமாக இருந்தாலும், மழைநீர் மண்ணை அதிகம் அரித்து விடுகிற தென்பதை அனுபவவாயிலாகக் கண்டனர். மேலும், உக்கியஇலை குழைகள் செடியின் வளர்ச்கிக்கு அவசியமென்பதுங் காணப்பட்டது.
ULlo 69.
நுவரெலிக் கண்மையில் தேயிலைத் தோட்டம்.
எனவே, செடிகளுக்கிடையே முதலில், மண்ணைக் காப்பாற்றக்கூடிய வேருள்ள மரங்களை நடுவது நல்லதெனக் கண்டனர். இரண்டாவதாகப் பச்சைப் பசளை கருஞ் செடிகளை வளர்ப்பது நல்லதெனவும், அவற்றைப் பின்னர் மண்ணி லேயே வெட்டி மூடி விடுவது நல்லதெனவுங் கண்டனர். விரைவாக வளரும் அவரை வகையைச் சார்ந்த செடிகளே இதற்கு மிகப் பயனுடையன வென்றும் இவை மண்ணுக்கு நைதரசன் உணவைக் கொடுக்கின்றன வென்றுங் கண்டனர். இவ்வகையைச் சேர்ந்த பல செடிகளைப் பரீட்சித் துப்பார்த்து விக்கின என்ற செடியே உவந்ததெனவுங் கண்டனர். அதுவே இப்பொழுது சாதாரணமாக வளர்க்கப்பட்டுவருகிறது. இடையில் நாட்டப்

Page 116
218 இலங்கைப் புவியியல்
பட்டமரங்களின் இலைகளை வெட்டிப் பசளேயாக நிலத்திலே புதைத்து விடுவர். முள்முருக்க மரமானது தாழ்பூமித் தோட்டங்களிலும், வேலமினத்தைச் சேர்ந்த ஓரினமரம் உயர்பூமித் தோட்டங்களிலும் நடப்படுகின்றன. வறட்சி யான பகுதிகளிற் கிரெவிலியாவும், தெபுரோசியாவும் நடப்படுகின்றன.
ஒரு வருடத்தில் ஒரேக்கருக்கு 300 இறத்தல் துவக்கம் 1200 இருத்தல் வரை தேயிலை கிடைக்கும். இதனை அடைத்து ஏற்றுமதி செய்வதற்குத் தேவையான மரப்பெட்டிகள் யப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. வருடந்தோறும் 25 இலட்சம் மரப்பெட்டிகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. “இலங்கைக் கைந்நூல், 1922” என்ற பெயருடன் தேர்ை எழுதிய நூலி லிருந்து தேயிலை உற்பத்தி சம்பந்தமான பின்வரும் குறிப்பு எடுக்கப் பட்டது.
“தொழிற் சாலைக்குக் கொழுந்தைக் கொண்டுபோனதும் விசேடமாயமைக் கப்பட்ட பரண்களில் அது 18 மணி துவக்கம் 24 மணி வரை வாட விடப் படும் ; பின்னர் அது குறித்த சில நேரங்கட்குத் திரிகை இயந்திரங்களித் போட்டுத் திரிக்கப்படும். திரிந்த இலைகள் ஒன்ருகச் சேர்ந்து கும்பலா கிடக்கும்; இவற்றை மறுபடியும் இயந்திரத்திற் போட்டுப் பிரித்து முரடான இலைகள் அரிப்பெட்டி மூலம் புறம்பே ஒதுக்கப்படும்; இவ்வாறு இரண்டு மணி நேரம் திரிப்பதும் அரிப்பதுமாக வேலை நடைபெறும். பின்னர் அந்த இலை, மரத்தினலோ கண்ணுடியினலோ செய்த மேசை மீது, அல்லதி பாய் மீது பரப்பிப் புளிப்பேறும்படி விடப்படும். இரண்டு மணி நேரத்தில் அது செம்பு நிறத்தைப் பெறும். அத்துடன் விசேடமான ஒரு மணமுடி உண்டாகும். ஒரு பருவத்தில் (இது அனுபவத்திற் கண்டறிய வேண்டிய விடயம்) அந்த இலையை எடுத்து வறுக்கும் அல்லது காய்ச்சும் இயந்திரதீ திலிட்டு வறுப்பார்கள். சூடான காற்றினுல் அந்த இலை வறுபட்டு எளிதில் முறியக்கூடிய, கறுப்புத் தேயிலையாக மாறும். இதனைப் பின்னர் அரித்துத் தரப்படுத்துவர்; அவற்றின் ஒரு சீரான இனங்களைக் கொழும்பி லுள்ள தரகர், முகவர் ஆகியோரின் நிபுணர்க்குப் பதம் பார்க்க அனுப்பு வர். அவர்களின் அபிப்பிராயப்படி விலை மதிப்பிடப்படும். ஒவ்வோர் இனமும் புறம்பாகப் பெட்டிகளில் அடைக்கப்படும்; உள்ளே ஈயக் கடதாசி போட்டு அடைக்கப்படும்; ஒவ்வொரு பெட்டியிலும் ஏறக்குறைய 100 இருத் தல் தேயிலையிருக்கும். பின்னர், பெட்டிகள் ஒட்டி அடைக்கப்பட்டுத் தோட்டத்தின் பெயர் பொறிக்கப்பட்டு ஏற்றுமதிக்காகக் கொழும்புக்கு அனுப்பப்படும். இலங்கையிலுள்ள தேயிலையினங்கள் வருமாறு: புறேக்கின் ஒரேஞ்சுப் பெக்கோ, புருேக்கின் பெக்கோ, ஒரேஞ்சுப் பெக்கோ, பெக்கோ, பெக்கோ குச்சங்கு, தூசு, கொளியல்.

பொருளாதாரப் புவியியல் 29
பச்சைத் தேயிலை, கொழுந்தை வாடவைப்பதற்குப் பதிலாக ஆவியில் வேக வைத்து, முன் கூறியவாறு புளிக்கவையாமலே ஆயத்தம் செய்யப் படும். இது, யங் கைசன், கைசன் 1, 2, வெடி மருந்துச் சாயல், துசு என வகைப்படுத்தப்படும். பச்சைத் தேயிலையை இரசியாவிலும் அமெரிக்கா விலும் மக்கள், எலுமிச்சம் பழச் சாற்றுடனும், சீனியுடனுஞ் சேர்த்துக் குடிப்பார்கள்.
1946 இல் 280,000,000 இருத்தல் கறுப்புத் தேயிலை உற்பத்தி செய்யப் பட்டது. பச்சைத் தேயிலை சந்தையிற் காணப்படுவதில்லை. இலங்கைத் தேயிலையில் 70 வீதம் பிரித்தானியாவுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது.
தேயிலைச் செய்கை எவ்வளவு எக்கர் நிலத்தில் நடைபெறுகிறதோ அவ்வளவிற்குச் சிறிது அதிகமான எக்கர் நிலத்தில் இறப்பர் பயிராகிறது. நெல், தென்னை என்ற பயிர்கள் தனித் தனி எவ்வளவு எக்கர் நிலத்திற் சாகுபடி செய்யப்பட்டிருக்கின்றனவோ அந்நிலப் பரப்புக்கு அரைப்பங்குக் குச் சற்று அதிகமான நிலத்திலேயே தேயிலையும், இறப்பரும் பயிர் செய்யப்படுகின்றன. இறப்பர்ச் செய்கை தேயிலையிலும் அதிகமான நிலத் தைச் சுவீகரித்துள்ளபோதிலும், தேயிலை எற்றுமதியின் அரைப்பங்கு" வருமானமே இறப்பர் ஏற்றுமதியாற் கிடைக்கிறது. இறப்பர் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தியதன் பயணுகப் பல காலமாய் இறப்பரின் விலை, செயற்கையாக உயர்த்தி வைக்கப்பட்டது. இதனுற் பலர் நல்ல பணக்காரரானர்கள்; ஆனல், 1928 இல் இக் கட்டுப்பாடு நீக்கப்பட்டது.
வேப்பமும் ஈரலிப்புமான காலநிலையுள்ள நாடுகளில் வளரும் மீரங்களில் இறப்பர்ப்பாலைச் சேர்ந்த பொருள்கள் சாதாரணமாகக் காணப் ஸ்டுகின்றன. பல கொடிவகைகளிலும் மரங்களிலும் அவை கிடைக்கும். கொங்கோக் காட்டிலும், அமேசன் காட்டிலும் அத்தகைய தாவரங்களதிகம். ஐரோப்பியர் இறப்பரில் முதன் முதற் சிரத்தையெடுத்தபொழுது, இறப்பர்ப் பாலைத் தரக்கூடிய பலவகை மரங்களையும் சோதனை செய்து பார்த்தனர். அவற்றுள் அமேசன் வடிநிலத்திற் காணப்பட்ட ஒரு மரத்தைத் தெரிந் தெடுத்தனர். அதிலேதான் அதிக பால் வடிவதாகக் கண்டனர். இது பாரா இறப்பர் மரமெனப்படும். இதனையே செய்கை பண்ணுவதற்கு மிகப் பொருத்தமுள்ளதாகக் கொண்டனர். இம் மரம் தேச கால நிலைமைக் கேற்றவாறு தன்னை அமைத்துக் கொள்ளும். இறப்பர் மரம் வளரும் ஆபிரிக்கா, இந்தியா, மலாயா முதலிய நாடுகளில் எல்லாம் இந்த இனமே பயிர் செய்யப்படுகிறது. இந்திய அரசாங்கத்தின் உதவியினல் இம்மரம் இலங்கையில் 1876 இல் பயிர் செய்யப்பட்டது. கம்பகா (கெனறற்க்
*1946 இல், 2290 இலட்சம் உருபாய் பெறுமதியான 2270 இலட்சம் இருத்தல் இறப்பர் எற்றுமதி செய்யப்பட்டது. ஆனல் 2900 இலட்சம் இருத்தல் தேயிலை ஏற்றுமதி மூலம் 3790 இலட்சம் உருபாய் வருமானங் கிடைத்தது.

Page 117
220 இலங்கைப் புவியியல்
கொடை) விலுள்ள பூந்தோட்டத்தில் ஒரு பகுதியில் இறப்பர்த் தோட்டம் அமைக்கப்பட்டது. அன்று ஆரம்பிக்கப்பட்ட தோட்டம் இன்றும் இருக், கிறது. இங்கேயுள்ள சில மரங்கள் மிகப் பெரியவாய் வளர்ந்து விட்டன. குறிப்பாக ஒரு மரம் பெரும்பயனைக் கொடுத்து நிற்கிறது. இம் மரங்கள் தெற்கு ஆசியாவிலுள்ள இறப்பர்த் தோட்டங்களுக்கு விதை உதவியுள்ளன. தேயிலை வளரும் பூமியிலும் உயரம் குறைந்த நிலத்தில் இறப்பர் வளரும். சாதாரணமாக 2000 அடிக்குக் குறைந்த உயரமுடைய பூமி போது மானது. மழை வருடம் முழுவதும் செறிவாகப் பெய்ய வேண்டும். 80 அங்குலத்துக்கு அதிகமான மழையுள்ள ஈரலிப்பான பிரதேசங்களிலே யே இது வளரும். முக்கியமான இறப்பர்த் தோட்டங்கள் கேகாலையிலும் களுத்துறையிலுமுண்டு இலங்கையின் இறப்பர் உற்பத்தியில் அரைப் பங்கு இப்பகுதிகளிலிருந்தே கிடைக்கின்றது. பயிர் செய்முறையிலும் பால் வெட்டும் முறையிலும் எற்பட்ட சீர்திருத்தங்களின் பயனுகச் சமீபகாலத்தில் அதிக இறப்பர்ப் பால் கிடைத்துள்ளது. மரத்திற் சிறிய வெட்டுக்கள் இடுதல், ஒரு வெட்டுக்கும் மறு வெட்டுக்குமிடைப்பட்ட காலத்தை நீடித்தல், அதாவது நாடோறும் வெட்டாமல் இரண்டு மூன்று நாட்களுக்குப் பின்னர் வெட்டுதல், ஒரேக்கரிற் கிடைக்கக் கூடிய பால் அதிகரித்தற்காக ஒட்டு இறப்பர் மரங்களை வளர்த்தல் முதலியனவே முக்கிய மான திருத்தங்களாகும். முன்னரெல்லாம் மரங்களை அடிக்கடி வெட்டு வதாற் பால் வற்றிப் போவதுண்டு; காலம் விட்டு வெட்டுவதால் மரங்கள், ஆரோக்கியமாக வளர்வதோடு நீண்ட காலம் பால் தரக் கூடியனவாயு மிருந்தன. முன்னெல்லாம் கெரிங்கு மீன் முள்ளுப் போலப் பல வுெட்டுக் கள் வெட்டப்பட்டன. இப்பொழுது மரத்தை வளைத்து அரைச் சுற்றளவுக் குக் குறைவாகவே வெட்டப்படுகிறது. மரம் ஆறு வழு வருடம் வளர்ந்த பின்னரே பால் வெட்டத் துவங்குவார்கள். பெப்புருவரி அல்லது மாச்சு மாதத்தில் மரங்களுக்கு ஒய்வு கொடுக்கப்படும்; அக் காலத்திலேயே மரங் களிற் பெரும்பாலானவை இலையுதிர்க்கும். கனத்த மழையினுற் பால் வெட்டுவது தடைப்படுகிறது. தென்மேற்குப் பருவக் காற்றினற் பாதிக்கப்படும் பகுதிகளிற்றன் அநேகமான இறப்பர்த் தோட்டங்களுண்டு. எனவே வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்திலேயே பால் அதிகம் கிடைக்கிறது. வருடத்தின் பின்றுை மாதங்களில் 60 வீதம் பால் பெறப் படுகிறது. இப்போது மலை நாட்டின் வறண்ட தென் பகுதிகளிலும், தென் கிழக்குப் பகுதிகளிலும் இறப்பர்த் தோட்டங்கள் அமைக்கப்படுகின்றன.
இறப்பரானது தேவைக்கேற்றவாறு இறப்பர்ப் பாலிலிருந்து இரு வகை யாக ஆக்கப்படும். பெரும்பாலான தோட்டங்களில் இறப்பர் செய்யும் தொழிற் சாஜலகளுண்டு. அங்கே சிக்கலான இயந்திர சாதனங்களுண்டு. இரு வகை இறப்பர்த் தயாரிப்புக்கும் முதலில் இறப்பர்ப் பாலை வடி கட்டித் தண்ணிரு டன் சேர்ப்பார்கள்; பின்னர் அதைச் சிறிய பாத்திரங்களில் ஊற்றி அசற்

பொருளாதாரப் புவியியல் 22.
றிக்கமிலத்தைக் கலப்பார்கள் (அசற்றிக்கமிலம் வின்னரியிலுள்ள திரவ மாகும்). இத்திரவம் பாலை உறையச் செய்கிறது. புகைத்த இறப்பர் செய்வ தானற் குறைவாகவே திரவம் சேர்க்கப்படும். அதனல், பால் உறைவதும் மெதுவாக நடைபெறும்.
எந்த அளவு இறப்பர்த்தகடுகள் தேவையோ அந்த அளவுள்ள பாண்டங் களில் இறப்பர்ப்பாலையும் அசற்றிக்கமிலத்தையும் ஊற்றித் திரள வைப் பார்கள். பின்னர் அதைப்பிசைந்து, உருட்டி நீரை வடித்து எந்திரத்தி லிடுவர். அது எந்திரத்தில் வைரமணிபோலப் பட்டைதீர்ந்த தகடுகளாக வெளிவரும்; பட்டையிடுவது இறப்பரை விரைவிற் காயச்செய்வதோடு, ஒன்றே டொன்று ஒட்டாமலுந் தடுக்கின்றது. இத்தகடுகளை ஒரறையிலே தூக்கிக் காயவைத்துப் புகைபோடுவர்; இது 7 நாள் துவக்கம் 14 நாள் வரை நடைபெறும். பின்னர் இந்த இறப்பர் எற்றுமதிக்குகந்ததாகிவிடும். “கிரேப்பு” இறப்பர் விரைவாகத் திரளும்; பின்னர், தண்ணிரைப் பிழிந்து விட்டு அதனை எந்திரத்திலிட்டுப் பின்னல் இறேந்தை போன்ற இழையாக வெட்டுவர். பின்னர் அவற்றை வெப்பக்காற்றிலிட்டுக் காய்ச்சி ஒன்ருத உருட்டிக் கம்பளக் கிரேப்பு இறப்பராகச் செய்வர். ஈரலிப்பு அதிகமில்லா விட்டால் 24 மணி நேரத்திற் கிரேப்புத் தகடுகளை வெட்டி விடலாம். புகைத் தகடுகளிலும் விரைவாக இவற்றை எற்றுமதிக்கு ஆயத்தம் செய்து விடலாம். இதற்குப் புகையூட்டுவது அவ்வளவு அவசியமன்று. ஆதியில் இறப்பரைப் பழைய முறையில் உற்பத்தி செய்தோர், மெதுவாகச் செல்லும் கப்பல்களில் அவற்றை எற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பவேண்டியிருந்தது. அவை போய்ச் சேரப் பல நாளெடுத்தமையால், இடையில், அவற்றிலுள்ள அசுத்த மான பாகங்களிற் பூஞ்சணம் பிடிப்பதைத் தடுப்பதற்காக, கிரேப்பு இறப்ப ருக்குப் புகையூட்டப்பட்டது. இப்பொழுது போக்குவரத்துத் துரிதமாயிருக் கிறபடியாலும், தொழிற் சாலைகளில் இறப்பர் செய்வதற்குச் சுத்தமான முறைகள் கையாளப்படுவதாலும், புகையூட்டுவது அவசியமற்றதாகிவிட்டது. கிரேப்பு இறப்பர் உற்பத்தி அதிகரித்துக் கொண்டு வருகிறது. இறப்பர்த் கைத்தொழிற் பொருள்களை உற்பத்தி செய்யும் நாடுகளில், புகையூட்டிய இறப்பர் மூலம் நல்ல பலனைப் பெறலாமென்ற எண்ணமு மிருந்துவருகிறது.
ஆதியில் இப்பொருளுக்கு இறப்பர் என்ற பெயர் வழங்கப்படவில்லை. அமேசன் பிரதேசத்திலிருந்து இதனை முதன்முதல் ஐரோப்பாவுக்குக் கொண்டுவந்தபொழுது “கா-உச்சு’ எனப்பெயர் வழங்கப்பட்டது. பிரெஞ்சுத் தேசத்தவராகிய இலாகொண்டமீன் என்னும் பிரதேச ஆர்ாய்ச்சியாளர் இதனை அமேசன் பிரதேசவாசிகளாகிய இந்தியரிடம் கண்டு, பிரெஞ்சு மொழியில் “கெளச் சொக்கு” என ஒலிபெயர்த்து எழுதினர். 1770 இல் பென்சில்கள் செய்வதற்கு உபயோகமாகும் பென்சிற் கரியாலாய எழுத்துக் களே இறப்பர் அழிப்பதைக் கண்ட ஆங்கில இரசாயனர் ஒருவர் அதற்கு "இறப்பர்” (அழிப்பது) என்ற பெயரைக் கொடுத்தார். இந்தப் பெயர் இப்

Page 118
222 இலங்கைப் புவியியல்
பொழுது பல மொழிகளிலும் புகுந்துவிட்டது. உலகில் மிகப்பயனுள்ள பொருள்களுள் இறப்பரும் ஒன்று. கடந்த நூறு வருடமாக இதன் பயன் வளர்ந்து கொண்டே வருகிறது. தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இறப்பர் பல மாற்றங்களடைந்த பின்னரே இறப்பர்ப் பொருள்களாகக் கடை களிற் காட்சியளிக்கின்றது. ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலுமுள்ள இறப்பர்த் தொழிற்சாலைகளில் இறப்பர் பல மாற்றங்களையடைகிறது. அவற் றுள் முக்கியமானது இறப்பருக்குக் கந்தகத்துளைக் கலப்பதே. பலவிகிதப் படி கந்தகம் சேர்க்கப்படும்; இதற்கு “வல்கனைற்றுச் செய்தல்’ என்று பெயர். இதனல் இறப்பர் விரியுந் தன்மையை மேலும் பெறுவதோடு தண்ணீர் கசியாதபடியும் இறுக்கமடையும். இறப்பருக்கு மேலும் அதிக டிாகக் கந்தகத்தைச் சேர்த்துப் பதப்படுத்தினல் அது இறுகிக் கடினமான கரிய பொருளாகும்; இது “எபனைற்று” அல்லது “வல்கனைற்று” எனப்பெயர் பெறும். இப்பொருளேக்கொண்டு ஊற்றுப் பேன, துடைப்பம், சீப்பு, ஒளிப் படப்பெட்டியின் உபகரணங்கள் முதலியவற்றைச் செய்யலாம். மோட்டர் வண்டிகளின் தயர்களுக்கும் இறப்பர் பயன்படுவதுடன், மக்கிந்தோசு, அழிகட்டை என்பனவற்றிற்கும் பயன்படுகின்றது. வெப்பம், மின்சத்தி o TGÖTL. 1607 இறப்பரை ஊடுருவிச் செல்லமாட்டா. அதனல் அதைக் கொண்டு பல முக்கியமான பொருள்களை ஆக்கலாம். மின்சார சாதனங் களையும், இயந்திரங்களையும் செய்கின்றனர். மின்சத்தி ஒடும் கம்பிகளை இறப்பரினல் மூடுகின்றனர். சத்திரவைத்தியத் துறையிலும் இறப்பர் மிகப் பயன்படுகிறது; எனெனில் அதிலுள்ள அழுக்கை இலகுவாகத் துப்புரவு செய்யவும் கிருமியையழிக்கவும் முடியும். கடந்த 30 வருடங்களுள் இறப்ப ருக்கு உண்டான பல்வேறுவகைப்பட்ட உபயோகங்களை அறியவேண்டுமானல், 1909 இல் இலங்கையில் 175 இலட்சம் இருத்தல் இறப்பர் ஏற்றுமதியான தையும் சமீப காலத்தில் 1750 இலட்சம் இறத்தலுக்கும் 2250 இலட்சம் இருத்தலுக்கு மிடையில் ஏற்றுமதியானதையுங் கொண்டு மதிப்பிடலாம். இலங்கை இறப்பர் பிரதானமாகப் பெரிய பிரித்தானியாவுக்கும் ஐக்கிய அமேரிக்காவுக்குமே ஏற்றுமதியாகின்றது. பெரிய பிரித்தானியா இறப்பர்ப் பொருள்களை உற்பத்தி செய்வதிலும், மோட்டர்க்கார் சம்பந்தமான பொருள் களே உற்பத்தி செய்வதிலும் விசேட திறமை பெற்றுள்ளது.
தேயிலை, இறப்பர், தென்னை என்ற பணப்பயிர்கள் முக்கியமானவை. அவற்றற் பெறும் வருமானமும் அதிகம்; எனவே, எனைப் பணப்பயிர் களிலும் அவற்றுக்கே அதிக செல்வாக்குண்டு. மற்றைப்பயிர்கள் செய்கை பண்ணப்படுவது குறைவு. மற்றைப் பயிர்களைக் கவனியாது இம்மூன்று

பொருளாதாரப் புவியியல் 223
பயிர்களையுமே மக்கள் அதிகம் விளைவிக்கின்றனர். சிற்றளவாகப் பயிர் செய்யப்படும் எனைப் பணப்பயிர்கள், சித்திரனெல்லாப்புல், கறுவா, கொக்கோ என்பனவாகும். * .
புல்லெண்ணெய் மானப் புல்லினத்தைச் சேர்ந்த ஒரு புல்லிலிருந்து பெறப்படுகிறது. 2000 அடிக்குக் கீழ்ப்பட்ட எந்தவகையான பூமியிலும் இப்புல் வளரும். வெப்பமும் ஈரலிப்பு முள்ள காலநிலையில் இது நன்கு செழித்து வளரும். தீவின் தென் மேற்குத் தாழ்பூமிகளிலும் பிரதான மாக மாத்துறை மாவட்டத்திலும் இது பயிர் செய்யப்படுகிறது. இப்புல்லைப் பயிர் செய்வது, ஒப்பு முறையிற் பார்த்தால் மிகச்சுலபமெனக் கூறலாம்.
புற்களைக் களையின்றிப் பாதுகாத்து விட்டாற் போதும். எட்டு மாதத்தில் அவற்றை முதன்முறையாக வெட்டி விடலாம். வருடத்தில் இரண்டுதரம் வெட்டலாம். ஒரேக்கருக்கு 40 இறத்தல் எண்ணெய் வடிக்கக்கூடிய புல்லைப் பெறலாம். புல்லை வேகவைத்தால் ஆவி கிளம்பும். அந்த ஆவி யைக் குளிரச் செய்தால் எண்ணெயுண்டாகும். வெளி நாடுகளில் இந்த எண்ணெயைச் சவர்க்காரம் செய்யவும் வாசனைத்திரவியங்கள் செய்யவும் பயன்படுத்துவர். இலங்கையிற் கொசுக்கடி, அட்டைக்கடி என்பவற்றைத் தடுக்க இது பயன்படுகிறது. இலங்கையின் உற்பத்தியில் அரைப்பங்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு எற்றுமதி செய்யப்படுகிறது. எஞ்சியதில் அரைப்பங்கு பிரித்தானியாவுக்கு அனுப்பப்படுகிறது. 15 இலட்சம் இருத்தல் எண்ணெய் எற்றுமதியாகிறது; உற்பத்தியில் வீழ்ச்சியோ எற்றமோ பலவருடங்களாகக் காணப்படவில்லை. V,
கறுவா மிகப்பழங்காலந்தொட்டே இலங்கையிலிருந்து எற்றுமதியாகிறது. உலகிலேயே மிகப்பழைய வியாபாரத்திலொன்று ஐரோப்பாவுடன் ஆசியா செய்துவந்த வாசனைச்சரக்கு வியாபாரமாகும். மேற்கு ஐரோப்பிய நாட்டினர் இலங்கையையும், கிழக்கிந்திய தீவுகளையும் முதன்முதலறியத் தொடங்கியபொழுது அவற்றை “வாசனைச்சரக்குத் தீவுகள்” எனவே குறிப்பிட்டனர். அப்பெயர் இக்காலம்வரை வழக்கிலிருந்து வரு கிறது. இன்றும் இத்தீவுகளில் வாசனைச் சரக்குக்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன என்ற எண்ணம், மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மக்க ளிடையே சாதாரணமாகப் பரவியுள்ளதைக் காணலாம். பழங்காலமக்கள் கறுவா, மிளகு போன்ற சாதாரண பொருள்களை என் அவ்வளவு இன்னற் பட்டுத்தேடி வாங்கினர்கள் என இத்தீவுகளிலுள்ள மக்கள் வியப்படைந் திருக்கலாம். இவ்வருமையான பொருள்களிற் சிலவற்றையாவது
* 1946 இல் கறுவா மூலம் 1 கோடி உருபாவுக்குமேல் வருமானமிருந்தது. கொக்கே தாழ 30 இலட்சம் உருபாயையும் புல்லெண்ணெய் 90 இல்ட்சம் உருபாய்ையும் "வரும்ான மாகக் கொண்டுவந்தன.

Page 119
224 இலங்கைப் புவியியல்
பெற்றுக் கொள்ள வேண்டுமென எல்லா ஆபத்துக்களையுஞ் சமாளித்துக் கொண்டு, நீண்ட பிரயாணங்களை அவர்கள் மேற்கொண்டனர். அவ்வாறு பெற்று வந்த வாசனைச் சரக்குக்களை நல்ல விலைக்கு விற்றனர். அது மிக வும் இலாபந்தரும் வியாபாரமாயமைந்தது. குளிர் காலத்தில் உண்பதற் கான உணவை ஐரோப்பியர் ஏலவே சேமித்து வைக்க வே'டியiருந்தது. “இடைக்காலத்தில்” உணவைப்பதங்கெடாது பாதுகாத்து வைத்த முறை மிகப் புராதன முறையாகக் காணப்பட்டது. இன்று உணவைப் பாதுகாப்பது எளிது; அதற்குப் பல நவீன முறைகளுண்டு; ஆனற் பழங் காலத்தில் மக்கள் சுவையற்றதும், அதிகம் காலப்பட்டதும், விரும்பியுண்ண முடியா ததுமான உணவை உட்கொண்டனர். அத்தகைய உணவுகளின் சுவை யற்ற தன்மையை மறைப்பதற்கும், அவற்றைப் பதப்படுத்திவைப்பதற்கும் வாசனைச் சரக்குக்கள் பெரிதும் பயன்பட்டன. பல கறிகளுக்குச் சுவை யூட்டுவதற்காக இன்றும் கறுவா உபயோகப்படுகிறது. கறுவா எண்ணெய் வைத்திய உபயோகங்களுக்கு அதிகம் தேவைப்படுகிறது. கறுவாச் செய்கை மிகவும் குறைந்து விட்டது. ஐரோப்பியராட்சிக் கால ஆரம்பத்தில், ஒவ் வொரு சாதியாரும், கறுவாத் தோட்டங்களே அரசாங்கப் பொறுப்பில் அமைத்து வியாபாரத்தை நடத்தினர். அதனல் நல்ல வருமானம் கிடைத் தது. இத் தோட்டங்களிற் பெரும்பாலன கொழும்பிலும் அதையடுத்தும் இருந்தன. நீர்கொழும்புவரை கறுவாத் தோட்டங்கள் காணப்பட்டன. கொழும்பிலே ‘கறுவாக்காடு' என வழங்கப்படும் பகுதி சிறிது காலத் துக்கு முன்னர் கறுவாத் தோட்டமாகவேயிருந்தது. ஈரலிப்புள்ள தாழ் பூமியிலேதான் கறுவா நன்கு வளரும். இப்பொழுது காலிக்கும் நீர் கொழும்புக்குமிடைப்பட்ட கரைப்பகுதிகளில் அது பயிராகிறது. சாதாரணமா கக் கறுவா 20, 30 அடி உயரத்துக்கு வளரும். ஆனற் பட்டை எடுப்பதற்காக வருடந்தோறும் மரத்தை வெட்டி விடுவார்கள். வெட்டிய பின்னர் அது நீண்ட நேரான கிளைகளை விடும். அக்கிளைகளிற் பூவும் காயுமுண்டானவுடன் பட்டையை இலேசாக உரிக்கலாம். எப்பிரில் மாதத்திற் காய் பழுக்கும்; மே மாதத்துக்கும் ஒற்றேபர் மாதத்துக்குமிடையிற் பட்டையை உரிப்பார்கள். பட்டை உரிப்பதற்கு விசேடமான திறமை வேண்டும். விசேட பயிற்சி பெற்ற தொழிலாளர் வட்டமான தடியினலே பட்டையை உரோஞ்சி நாலடி நீள முள்ள கறுவாக் கம்பிலுள்ள பட்டையை இரண்டு முறையில் வார்ந்து எடுத்து விடுவர். இப் பட்டைகளைப் புளிக்க விடுவர். பின்னர் வெளித் தோலை, எடுத்து விட்டு மேலும் புளிக்க விட்டுக் காயச் செய்வர். கறுவாப் ப்ட்டைத் துண்டுகள் பின்னர் ஒன்றேடொன்று செருகப்படும். செருகிக் குறுந்தடிகளாக்கப்பட்டுக் கட்டாகக் கட்டப்படும். பின்னர் அது எற்றுமதி செய்யப்படும். இலங்கையில் எஞ்சிய கறுவாத் துண்டுகளையும் கழிவுகளையும் சேர்த்துக் கறுவாத் தைலம் வடிப்பார்கள். ஆனல், வெளி நாடுகளில் இறக்குமதியான கறுவாவைக் கொண்டே இத் தைலஞ் செய்யப்படுகிறது.

பொருளாதாரப் புவியியல் 225
கறுவா பிரதானமாக ஐக்கிய அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதற்கடுக்கப் பெரிய பிரித்தானியா, பிரான்சு, பெல்சியம் ஆகிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன.
шLйо 70.
கறுவா உரித்தெடுக்கப்படுகிறது.
ரீyறு2) М) r. 9

Page 120
226 இலங்கைப் புவியியல்
கொக்கோச் செடியை முதன் முதலாக இலங்கையில் இறக்குமதி செய் தவர் இடச்சுக்காரர். 500அடி துவக்கம் 2000 அடிவரை உயரமுள்ள நிலத்தில் இந்தச் செடி நன்றக வளரும். இதற்கு அதிக மழைவீழ்ச்சி தேவை யில்லை (60 அங்குலந் துவக்கம் 80 அங்குலம் வரை போதுமானது). ஈரலிப்பானதும் சற்றே காற்றேட்டங் குறைவானதுமான வளிமண்டலம் இதன் வளர்ச்சிக்குமிக எற்புடையது. மலை நாட்டிலுள்ள ஒதுக்கமான பள் ளத்தாக்குக்கள் இதற்கு வாய்ப்புடையவாகும். இப்பொழுது கொக்கோ விளை யும் மிக முக்கியமான பகுதிகள் கண்டி, மாத்தளையாகிய மாவட்டங்களி லுண்டு; விசேடமாகத் தும்பறைப் பள்ளத்தாக்கைக் குறிப்பிடலாம். சிறிய கன்றுகள் விதைகளிலிருந்து முளைக்கும்; அவற்றுக்கு நிழல் வைக்க வேண் டிய தவசியம். மரம் வளர்ந்த பின்னரும் அதற்கு நிழல் வேண்டும். எனவே மரங்களுக்கிடையே தேவையான வெப்பத்தையும் காற்றையுமுதவக் கூடிய வகையில் நிழல் மரங்கள் நடப்படுகின்றன. இவ்வாறு நிழல் கொடுப்பதற்கு முள்முருக்க மரம் மிகப் பொருத்தமுடையதாகக் காணப்படுகிறது. கொக்கோ மரத்தை நட்டு ஏறக்குறைய ஐந்து வருடத்தில் அதன் அடிப்பாகங்களிற் காய்கள் காய்க்கும்; வருடம் முழுவதும் மரத்திற் காயும், பூவும் பிஞ்சும் காணப்படும். மே, யூன், யூலை மாதங்களிற் சொற்ப காய்களைப் பிடுங்குவர்; நவம்பர், திசெம்பர், சனவரி மாதங்களிலேயே அதிக விளைவுண்டு. நிலத் திற் களை பிடிக்கவிடாமற் பார்த்துக் கொள்வர்; காற்று மழை முதலிய வற்றற் பாதிக்கப்படும் மலைச் சாரல்களிற் கொக்கோ பயிராக்கப் படாத படியால் மழையினல், தேயிலை இறப்பர்த் தோட்டங்களிலுண்டாகக் கூடி யது போன்ற மண்ணரிப்புக்கு இங்கே அவ்வளவு இடமில்லை. கொக்கோக் காய்களைப் பறித்தபின் அவற்றை வெட்டி உள்ளே கிடக்கும் விதைகளை யும் மிருதுவான சதையையுமெடுத்துக் கொட்டில்களில், பெட்டியிலே புளிக்க வைப்பர். அப்பொழுது சதை நீராக மாறிப் பெட்டியினடியிலுள்ள துவாரங்களின் மூலம் வெளியே கழிந்து விடும். 12 மணி நேரத்தின் பின்னர் பருப்புக்களை இலேசாகக் கழுவி வேருெரு பெட்டியிற் போடுவர். 36 மணி நேரத்தின் பின், மறுபடியும் அவற்றைக் கழுவிப் பதஞ்செய்யு மிடத்துக்குக் கொண்டுபோவர். அவற்றைப் பின்னர் கயிற்றுப் பாயிற் பரவி வெயிலில் 5 துவக்கம் எழு, நாள்வரை காயவைப்பர். ஆனல், காய்களைப்பறிக்குங் காலம் மழை காலமாயிருப்பதாற் பருப்புக் களைக் காயப் போடுவது முடியாது; எனவே, பல தோட்டங்களில் அவற்றைக் காயவைக்க வெப்பு: அறைகளுண்டு. பருப்புக்களைக் கயிற்றுப் பாய்களிற் பரப்பி அறைண்* 110°ப, 120°ப வெப்ப நிலையில் வைத்திருப்பர். அதற்கான வெப்பக்காற்று, குழாய்கள் மூலம் செலுத்தப் படும்; அதன் பின்னர் விதைகஐேப்படுத்தி ஏற்றுமதி செய்வர்.
இலங்கையில் விளையும் சிறந்த தரமுள்ள கொக்கோவே உலகச் சந்தை
யில் விசேடமானதாகக் கருதப்படுகிறது. இது விலையுயர்ந்த இனிப்புப் பண் டங்கள் செய்ய உதவும். இலங்கையில் விளையும் கொக்கோ முழுவதும்

பொருளாதாரப் புவியியல் 227
இந்த விசேட இனத்தைச் சேர்ந்ததன்று. இலங்கைக் கொக்கோவை வாங்கும் பிரதான தேசங்கள் பெரிய பிரித்தானியாவும், ஐக்கிய அமெரிக் காவுமாகும். ஐக்கிய அமெரிக்கா வாங்கும் கொக்கோவிற் பெரும் பகுதி பிலிப்பைன் தீவுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கொக்கோப் பானத்துக்குரிய தூள் செய்யவும் சொக்கிளெற்றுச் செய்யவுமே கொக்கோப் பருப்பு விசேட மாக உபயோகப்படுகிறது. கொக்கோப் பருப்பிற் கொழுப்புப் பொருள் அதிக முண்டு; அது பெரும்பாலும் கொக்கோப் பானஞ் செய்வதற்கான தூள் செய்யப் பயன்படுகிறது. அதற்காக இந்தத் துள் தண்ணிரில் இலேசாகக் கரையக்கூடியதாகச் செய்வதற்கு அதனேடு வேறு பொருள்களையுஞ் சேர்ப்பர். கொக்கோக் கொழுப்பு மிகப் பயனுள்ளது. கொழுப்பினுற் சொக்க ளெற்றும் தைலங்களும், பற்பசையுஞ் செய்கின்றனர். பருப்பின் வெளித் (Á கால் நடைக்கு நல்ல உணவாகும். சொக்கிளெற்றுச் செய்வதற்குக் கொழுப்புடன் சீனியையும் வேறு பொருள்களையுஞ் சேர்ப்பர். இலங்கையிற் கொக்கோ விளைவதாலும், வியாபார மார்க்கத்தில் இலங்கை அமைந்திருப்ப தாலும், இங்கேயே கொக்கோப் பானத்தையும் சொக்கிளெற்றையும் என் செய்யக் கூடாதெனச் சிலர் கேட்கலாம். அத் துறையிற் பல முயற்சிகள் செய்யப்பட்டன. பேராதனைச் சொக்கிளெற்றுத் தொழிற்சாலை என்ற வாணிக நிலையமும் தாபிக்கப்பட்டது. ஆனல், போட்டிக்கு நிற்க அதனல் முடியவில்லை. பெரிய கைத்தொழில் நாடுகளோடு போட்டியிடுவது முடியாத காரியமாயிற்று. உலகத்துச் சொக்கிளெற்று உற்பத்தி ஐரோப்பா விலும் அமெரிக்காவிலுமுள்ள சில மிகப் பெரிய வணிகர் தாபனங்களின் கையிலேயிருக்கிறது. அவை அத் தொழிலில் தனி உரிமை கொண் டாடுகின்றன.
அவை சிறிய வணிகநிலையங்களைத் தலையெடுக்க விடாமலே தடுத்து வரு கின்றன. ஒன்றில் அவை தமது பொருளை மிக மலிவான விலைக்கு விற்று மற்றை வணிகநிலையங்களின் பொருளைப் பரவவிடாமற் செய்யும் ; அல்லது தமது பணச்செல்வாக்கைக் கொண்டு பெருந்தொகைப் பணத்தைக் கொடுத்து அந்நிலையங்களை விலைக்கு வாங்கிவிடும். எனவே இலங்கையிற் கொக்கோப் பொருள் உற்பத்தி தலையெடுக்கு மென்றெண்ணுவதற்கில்லை. ஒரு வேளை, அரசாங்கந் தலையிட்டுப் பாதுகாப்பளிக்கு மானல் அது வளர்ச்சியடையக் கூடும்.
புகையிலைச் செய்கை மற்றைப் பயிர்களோடு ஒப்பிடும் பொழுது சிறிதாக வேயுள்ளது. இருந்தும் அது சில மாவட்டங்களில் மிக முக்கியமான தொரு பணப்பயிராகும். அதுவும் யாழ்ப்பாணப் பகுதியில் விசேடமானது. இந்தி யாவுக்கு எற்றுமதி செய்யும் நோக்கமாக யாழ்ப்பாண மக்கள் புகையிலை யைப் பல காலமாகவே பயிர்செய்து வந்திருக்கின்றனர். இது அவர்களுடைய மிக முக்கியமான தொழிலில் ஒன்றகும். வடமத்திய மாகாணத்திலும், மத்திய மாகாணத்திலும் இது சிறிதளவாகப் பயிர் செய்யப்படுகிறது.

Page 121
228 இலங்கைப் புவியியல்
கண்டிக் கண்மையிலுள்ள தும்பறைப் பள்ளத்தாக்கிற் செய்கை பண்ணப் படும் புகையிலை குணத்திற் சிறந்ததாற் பிரசித்திபெற்றுள்ளது. சுருட்டுச் சுற்றுவதற்கு இந்த இலை மிக வாய்ப்பானது. திருக்கோணமலை, மட்டக் களப்பு ஆகிய பகுதிகளிலும் ஒரளவு புகையிலைச் செய்கையுண்டு.
புகையிலையிற் பல வகையுண்டு. உறைபனியில்லாத இடங்களில் இது நன் ருக வளரும். இது இலைப்பயிரானபடியால் மழை வீழ்ச்சியை யனுசரித்து இதனுடைய இனம் வித்தியாசப்படும். நீண்டவேரும், சிறிய இலைகளு முள்ள இனம் வறண்ட பிரதேசங்களுக் கேற்றது. ஈரலிப்புப் பிரதேசங் களுக்கு ஏற்ற புகையிலை குறுகியவேரும், நீண்ட இலைகளுமுடையதாயிருக் கும். வறண்ட பிரதேசங்களுக்கு எற்ற இனம் எது என்பதை யறிவதற்கு இலங்கையின் பல பாகங்களிலும், விசேடமாக யாழ்ப்பாணத்திலுள்ள அர சாங்க விவசாயத் தோட்டத்திலும், பரீட்சைகள் செய்யப்பட்டன. ஏனெனில் வறண்ட பிரதேசத்தைச் சேர்ந்த காடுகளிற் புகையிலையைச் செய்கைபண்ணு வது நல்லதென யோசனையிருந்து வருகிறது. யாழ்ப்பாணக் குடா நாட்டிற் புகையிலைச் செய்கை மிகுந்த திறமையுடன் நடத்தப்பட்டு வருகிறது. யாழ்ப் பாண மண் செழிப்பற்றதா யிருப்பதாலும் வருடத்திற் பெரும்பகுதி மிக வறட்சியுற்றிருப்பதாலும் மழைக்கால ஆரம்பத்திலேயே, விசேடமாக ஆயத்தஞ் செய்யப்பட்ட நாற்றுப்பாத்திகளில் விதையை விதைப்பார்கள். பின்னர் அவற்றில் உள்ள கன்றுகளைப் பிடுங்கி வயலில் நடுவார்கள். வட கிழக்குப் பருவக் காற்றுக் கால மழையிற் புகையிலை நன்குவளரும் ; பின் னர் திசெம்பர் மாதம் கழிந்தவுடன் நீர் பாய்ச்சவேண்டிய நிலைமையுண்டா கும். புகையிலைக்கு நீர் இறைப்பது கடினமான வேலை. பல வேலையாட்கள் தேவைப்படுவர் ; கிணற்றிலிருந்து நீரை இறைக்கவேண்டும் ; நீர் காலை யிலும் மாலையிலுமே பிரதானமாகப் பாய்ச்சப்படும். செடி நாலடி உயரத் துக்கு வளர்ந்ததும் அதனை வெட்டி ஒரு நாள்வரை வெயிலிற் காயவிடுவர். பின்னர் இலைகளைக் கணுவோடு ஒடித்துப் புகைக் குடிலிற் காயவிடுவர். இவ் வாறு இலை நொதித்த பின்னர் தென்னைமட்டை ஊமல் என்பவற்றைப் போட்டு இளந்தீமூட்டி அதன் மேல் அவற்றைத் தொங்கவிட்டுப் புகையூட்டுவர். பின்னர், அப் புகையிலையைக் கொண்டு சுருட்டுச் செய்வர். இச்சுருட்டே யாழ்ப்பாணச் சுருட்டென இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் பிரசித்தி பெற்றுள்ளது. வெற்றிலையோடு உண்ணுவதற்கு ஏற்ற புகையிலையைச் செடி யின் நுனியிலிருந்து வெட்டுவர். இவற்றுள்ளே சிறந்த இலையே உண்ணத் தெரியப்படும். இந்த இனப்புகையிலை முரடானதாகவும் சடைத்து வளரக் கூடியதாகவுமிருக்கும். இது யாழ்ப்பாணத்திற் சிற்சில பகுதிகளிலேயே நன்றக வளரும். அதனல் அப்பகுதிகள் அவ்வினத்தையே பயிர்செய்யும். யாழ்ப்பாண மக்களிற் பெரும்பாலோர் இப்புகையிலையைத் தென்னிந்

பொருளாதாரப் புவியியல் 229
தியாவுக்கு எற்றுமதி செய்து அதனல் வரும் ஊதியத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவர். ஒரு காலத்தில் யாழ்ப்பாணப் புகையிலையை மலையா ளம் வாங்க மறுத்தது. மேலை நாட்டவர் இந்தப் புகையிலையை அதிகம் விரும்பாதபடியால் வேறு வியாபார வசதியின்றி யாழ்ப்பாண மக்கள் துன் பப்பட்டனர். எனவே, மேனுட்டவர் விரும்பக் கூடிய புகையிலை வகைகளை யாழ்ப்பாணத்திற் செய்கைபண்ண முடியுமாவென அரசாங்கம் ஆராய்ச்சி நடத்திற்று. இதற் கிடையில் மலையாளச் சந்தை மறுபடியும் யாழ்ப்பாணப் புகையிலைக்கு இடங்கொடுத்த படியால், அரசாங்கம் பரீட்சைகள் மூலமாகத் தேர்ந்தெடுத்த புகையிலையின் செய்கையைத் துவங்குவதற்கு யாழ்ப்பாணத் திற் சந்தர்ப்படுமில்லாமற் போய்விட்டது. யாழ்ப்பாணப் புகையிலை இந்தியா விலும், மலாயாவிலும் பண்படுத்தாத் தனிப் புகையிலையாகவும் விற்பனை செய்யப்பட்டது; யாழ்ப்பாணச் சுருட்டு மாலை தீவுகளுக்கும் அனுப்பப்பட்டது. இவ்வாறு புகையிலை வியாபாரம் தென்னசிய நாடுகளுடன் மட்டுமே நடை பெற்றது. புகையிலை வெட்டிய பின்னர் உணவுப் பயிர்கள் செய்கை பண்ணப் படும் ; நல்ல பயனடைவதற்கு நிலத்தைச் செவ்வையாகப் பண்படுத்துவர். ஒரு வருடத்தில் ஒரு முறையே புகையிலை செய்கை பண்ணப்படும். மத்திய மாகாணச் செய்கை முறையும் வேறு ; பயிர்செய்யும் புகையிலையும் வேறு. இரண்டு வருடத்துக்குத் தொடர்ந்து ஒரே நிலத்திற் புகையிலை செய்யப்படு வதில்லை. ஒரு தரம் புகையிலை செய்தபின் அதையடுத்து வேறு பயிர்செய் யப்படும் ; பின்னர் பல வருடத்துக்கு நிலம் தரிசாக ஒய விடப்படும் ; அதன் பின்னர் மறுபடியும் புகையிலை பயிர் செய்யப்படும். புகையிலைச் செய்கை தமிழர் கையிலேயே பெரும்பாலு மிருக்கிறது. தேயிலை இறப்பர் போல ஏராள மான நிலத்திற் புகையிலே செய்யப்படவில்லை. அது பயிராக்கப்படும் நிலம் சொற்பமே.
கறுவாவுக்கு அடுத்தாற்போற் பெருந்தொகையாகப் பயிர் செய்யப்படும் வாசனைச் சரக்கு ஏலம். கறுவாத்தோட்ட நிலத்திலும் காற்பங்கு நிலத்தில் ஏலம் பயிர் செய்யப்படுகிறது. ஏலம் சிறியதொரு பூண்டுத்தாவரம். அது மர நிழலில் மூன்று நாலு அடி உயரத்துக்கு வளரும். சாதாரணமாக உயர் பூமியிலேயே வளரும் (2800 - 4000 அடி). 115 துவக்கம் 150 அங்குலம் வரை மழை இதற்குத் தேவை; இதில் இரண்டினமுண்டு. ஒரினம், நிலத்துக்கு மிக அண்மையிற் பூக்கும்; அந்த இனம் பயனற்றது. நிலத்துக்குச் சற்றுத் துரத்திற் பூக்கும் மைசூர் இனம் திருத்திகரமானது ; இதன் வளர்ச்சியும் செழிப்புடையதாகும். எலக் காய்களைப் பெண்களும் சிறுவரும் பிடுங்குவர் ; இதன் செய்கை சிறிய முதலாளிகள் கையிலேயே உள்ளது. சிலர் எலத்தை வெயிலிற் காயவைத்துப் பச்சை ஏலமாக ஏற்றுமதி செய்வர் ; மற்றை வகை வெளிறப் போட்டவகை. கந்தகப் புகையிற்போட்டு இதனை வெளிற

Page 122
230 இலங்கைப் புவியியல்
வைத்துப் பின்னர் காயவிட்டு முடிகளைக் கிள்ளிப் பதம் பண்ணுவர் ; காய் நன்றக வெளிறும் வரை புகையில் வைக்கப்படும். எலம் முழுக்காயாகவும் எற்றுமதி செய்யப்படும் ; காயை உடைத்து உள்ளேயிருக்கும் அரிசியை எடுத்துத் தூளாக அரைத்தும் எற்றுமதி செய்வர். மலைநாட்டில் மழை யதிக முள்ள பகுதிகளிற்றன் எலம் பயிராக்கப்படுகிறது. எலச் செய்கைக்கென விசேடமான ஒரு பிரதேசம் கிடையாது. மற்றைப் பயிர்களோடு இதுவும் சேர்த்துச் சிறிய அளவிற் பயிர் செய்யப்படும்.
இது போலவே சிறிய அளவில் விவசாயிகளால் வியாபாரத்தின் பொருட்டுப் பயிர் செய்யப்படும் வேறு பொருள்களுமுண்டு. இந்த இனத்தில் மிளகாய், பயறு என்பனவற்றைச் சேர்க்கலாம் ; இவை வெயிலிற் காயவைக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும். வீதிகளிலும், கடைகளிலும் சாதாரணமாக விற்கப்படும் கடலை பெரும்பாலும் இந்த ஊரிற் பயிர் செய்யப்படுவதே. இலவம் பஞ்சும் இலங்கையில் நன்றக விருத்தி செய்யப்படக் கூடிய வொரு பொருள். வறிய கமக்காரர் இலவமரத்தை வீட்டுத் தோட்டத்தில் வைத்துப் பயிர் செய்வது சுலபம். இலவமரம் நீண்டுவளரும் ; அதன் காயில் உள்ள மிருதுவான பட்டுப்போன்ற பஞ்சு பல தேசங்களில் வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படு கிறது; பறவைகளின் துவிச் சிறகுகளுக்குப் பதிலாக இலவம் பஞ்சை உப யோகிக்கிறர்கள்.

மூன்ரும் பகுதி-இரண்டாம் அத்தியாயம் காட்டுவளம் பெருக்கல்
இலங்கையின் நிலப்பரப்பில் அரைப்பங்குக்குமேற் காட்டுநிலமாயிருக்கிறது. அப்படியிருந்தும் மற்றையவற்றேடு ஒத்துப்பார்க்குமிடத்து இலங்கைக் காடு களின் பொருளாதார வளம் குறைவென்றே கூறவேண்டும். அரசாட்சி கை மாறிவந்ததாலும் பகைவர் படையெடுப்புக்களாலும் நாட்டில் உண்டான குழப்பங்களினுற் காட்டைப் பரிபாலிக்கும் வேலை பெரிதும் கைவிடப்பட்டது. சிங்கள அரசர் காலத்தில், அவர்கள் காட்டு வளத்தைப் பாதுகாக்க மிக்க முயற்சிகள் செய்தனர்; சேமக்காடுகளை ஒதுக்கி விட்டனர்; பயனுள்ள மரங்களை நாட்டி வளர்த்தனர். ஐரோப்பிய அரசுகள் இலங்கையை மாறிமாறி ஆண்ட காலங்களில் ஆட்சிப் பீடத்திலிருந்த அந்நியர், இலங்கையிலே, தாம் முன்னர் தங்கள் தேசத்திற் கண்டறியாத புதிய மரங்களையும் தாவரங் களையும் பரிபாலிக்கும் பிரச்சினையிலிடுபட்டனர். இப்புதிய தாவர இனங்களை ஆராய்ந்து அறிவதற்கு அவர்களுக்குப் பலகாலஞ் சென்றது. முதலில் அவர்கள் நாட்டின் ஆட்சியைத் தமது கையில் நிலையாகப் பெற்றுக் கொள் ளும் முயற்சியிலிடுபட்டனர். அது கைவரப்பெற்ற பின்னரே நிபுணர்களை எற் படுத்தி, வனபரிபாலன வேலையை நடத்த விரும்பினர். வியாபாரப் பொருள் களான கறுவா முதலியவற்றிலேயே அவர்கள் பெரிதுங் கவனஞ் செலுத் தினர். இலங்கைக் காடுகளிலிருந்து மரம் வெளியூருக்கு அதிகமாக ஏற்று மதி செய்யப்படாததால் அதில் அப்பொழுது ஒருவரும் கவனஞ் செலுத்தவில்லை. பிற்காலத்திலேயே அது கவனத்தைப் பெற்றது. காடுகள் பற்றி இலங்கையருக்கிருந்த அறிவும், நாட்டிலேற்பட்ட நீண்டகால அரசியற் குழப்பங்கள் காரணமாக மறைந்து போயிற்று. படையெடுப்புக் காரணமாக மக்கள் ஒரு பகுதியிலிருந்து வேறு பகுதிக்குப் புலம்பெயர்ந்தனர். “சேனை’ச் செய்கையென்ற புன்செய் முறையினலும், இடப்பெயர்வு உண் டானது. இக்காரணங்களால் நிலச்செய்கையும் மாற்றமடைந்தது. இலங்கை மக்கள் சிலவகையான மரங்களை வெட்டி விறகாகப் பயன்படுத்தினர். அரசி யற் குழப்பங்களிருந்துவந்த காலங்களில் இவ்வாறு மரங்கள் கண்டபடி வெட்டப்படுவதை அரசாங்கம் தடுத்துவைக்கவும் முடியாது போய்விட்டது. இக்காரணங்களால் நன்றகப் பருத்து வளர்ந்த பழைய மரங்கள் பல வற்றைக்கொண்டனவும், மர வியாபாரத்துக்கு ஏற்றனவுமான கன்னிக்காடுகள், இலங்கையில் இல்லை. அண்மையில் அமெரிக்காவில் இலங்
231

Page 123
232 இலங்கைப் புவியியல்
கையின் முதிர்ந்த முதிரை மரத்தாலாக்கப்பட்ட ஒட்டுப்பலகைக்கு அதிக தேவைய்ண்டாகியிருக்கிறது. ஆனல் அத்தேவையைப் பூர்த் திசெய்வதற்குப் போதுமான பெரிய மரங்களிலங்கையிலில்லை. வியாபாரத்துக்குப் பயன் படும் முறையில் இலங்கைக்காடுகளிலுள்ள மரங்களைப் பரிபாலிக்கவேண்டு மெனப் பிரித்தானியராட்சியில் அரசாங்கம் முயற்சி செய்து வந்தது; ஆனல் அண்மையில் வெளியான நிர்வாக அறிக்கைகளிற்கூட இலங்கைக் காட்டு
வளத்தைப் பற்றி அரசாங்கம் போதிய அளவு அறிந்துகொள்ள முடிய
படம் 71.
கோவின்னைக் கண்மையில் மீளவனமாக்கல்
வில்லையென்றும் அதனுல் அக்காடுகளை விருத்தி செய்ய நடவடிக்கை யெடுக்க முடியவில்லையென்றுங் காணப்பட்டது. இலங்கையிற் காணப்படும் மரங்களைப் பற்றியும், அவற்றை எவ்வகையிற் பயன்படுத்தலாமென்பதைப் பற்றியும், நன்றக அறிந்த நீண்ட அனுபவமுள்ளவர்களை முதலிலே தெரிந்து கொண்டுதான், வன வளத்தை விருத்தி செய்யும் முயற்சியி
 

பொருளாதாரப் புவியியல் 233.
லிறங்க வேண்டும். வழக்கமாகப் பயனுள்ள மரங்களைக் கிட்டிய காடுகளி லிருந்து பலகாலமாக மக்கள் வெட்டிப் பயன்படுத்தினரேயன்றி அவற்றின் சிறு மரங்களே மறுபடியும் அக்காடுகளில் உண்டாக்கும் முயற்சியிலவர்கள் ஈடுபடவில்லை.
முதன்முதற் புகைவண்டிகளோடத் தொடங்கிய பொழுது, இலங்கையில் நிலக்கரியில்லாதபடியால், மரங்கள் விறகாகப் பயன்படுத்தப்பட்டன. அண்மையில் வெளிநாடுகளிலிருந்து மலிவாக நிலக்கரியைப் பெறக்கூடிய தாயிருப்பதால், விறகுக்குப் பதிலாக நிலக்கரியே இப்பொழுது உபயோகிக் கப்பட்டுவருகிறது. நிலக்கரியில் வெப்பச்சத்தி அதிகமானபடியால் இது மிகப் பயனுடையதாகிறது. புகைவண்டிக்கு விறகு கொடுப்பதற்காக அரசாங்கம் மரக்காடுகளை வளர்த்து வந்தது. இப்பொழுது நிலைமை மாறி யிருப்பதால் அந்தக்காடுகளிற் பயனுள்ள வேற்று நாட்டுமரங்களை வளர்க் கவும் யோசனை செய்யப்பட்டு வருகிறது. வட அமெரிக்காவின் வெப்பமுள்ள பகுதிகளில் நன்கு வளரும் நல்ல மரமான உலோசனின் சைப்பிரசு மரத்தை வளர்க்கலாமெனவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இம்மரம். கனடாவிலுள்ள தக்கிளசுபேர் என்ற மரத்தைப் போன்றது. பெரிய சேமக் காடுகளையும் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இவற்றிற் சில வனவிலங்குகளின் புகலிடமாக இருக்கின்றன. ஆனல், வனவிலங்குகளோடு காட்டுமரங் களும் இங்கே பாதுகாக்கப்படுகின்றன. “காட்டு மரவளத்தையும், காட்டு வளத்தையும் பொறுத்தவரையில் இலங்கை வேறுநாடுகளிலே தங்கியிராத சுதந்திர நிலையை அடைய வேண்டுமென்பதே அரசாங்கத்தின் கொள்கை. கடந்த பத்து வருடத்துக்கு மேலாகச் செய்யப்பட்ட மரம் வளர்ப்புக்கலை சம்பந்தமான ஆராய்ச்சியின் பயனுய்ப், பயனுள்ள மரவினங்களைப் பற்றியும், வனபரிபாலனத்தைக் குறித்துப் பலபிரச்சினைகளைப் பற்றியும், பல பிரயோசன மான விடயங்கள் அறியப்பட்டன. மரம் வளர்ப்புப் பற்றிய மூலாதாரமான பல பொது விடயங்களும் அறியப்பட்டன. இலங்கையின் இடைவெப்பக்கால நிலைப் பிரதேசங்களிலும், ஈரலிப்புப்பிரதேசங்களிலு முள்ள உயர்ந்த காடு களிலும், என்றும் பச்சையாயுள்ள காடுகளிலும், ஈரலிப்புக்காடுகளிலும், பயனுள்ள மரவினங்களை இயல்பாகவே வளரச் செய்வதற்கு வழிவகை களென்னவென்பதை இவ்வாராய்ச்சி எடுத்துக் காட்டியுள்ளது. பல வகையான பயிர்ச்செய்கைகளில் நிர்வாக முறைகளையும், அமைப்பு முறை களையும் சிக்கனமாக எவ்வாறு செய்யலாமென்பதையும், நிர்வாக முறையை எவ்வாறு சீர்திருத்தலாமென்பதையும் எடுத்து விளக்கியுள்ளது.’ இலங் கையின் விசேடமான மரவகை பலா. அண்மையில் அதன் தொகை

Page 124
234 இலங்கைப் புவியியல்
குறைந்து வருகிறது. பலா பிரதானமாக ஈரலிப்புள்ள தாழ்பூமிகளிலேயே வளரும். கைவிடப்பட்ட புன்செய்நிலங்களிற் பலா மரங்களை அரசாங்கம் உண் டாக்கி வருகிறது. அவற்றின் பலாபலனைக் காலப் போக்கிலேதானறியலாம். இவ்வேலையிற் காட்டுப்பகுதியினர் சில காலமாக முயற்சி செய்து வந்துள்ள னர். காடுவளர்க்கும் முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேக்கு மரக்காடு கிழக்கு மாகாணத்தில் தோற்றமளிக்கத் துவங்கிவிட்டது. இலுக்குப்புல்லு முளையாதபடி தடுப்பதற்காகச் “சேனை’களில் முதன்முதலாக மூடுபயிர் செய்கை பண்ணப்படும். பின்னர் அப்பயிர் வளர்ந்து வந்ததும் தேக்கு மரம் நாட்டப்படும். விண்ணுங்கு, பாலை, தேக்கு என்பன பலகைக்கான மரங் கள்; இலங்கைக் காடுகளிற் பாலைமரம் மற்றை மரங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இருப்புப் பாதைகளுக்குப் போடும் பலகைகள் செய்வதற் குச் சமண்டலை மரம் பெரிதும் பயன்படும்; காடுகளில் அவை எதேச்சையாக வளர்கின்றன. கேகாலை மாவட்டத்திலே பலாத்தோட்டங்களுண்டு; இடை யிடையே பப்பா மரங்களும் உண்டு. இது பரீட்சார்த்தமாக நடப்பட்டு வருகிறது. யாழ்ப்பாணத்தில் விறகுக்கும் கட்டிடங்களுக்குந் தேவையான மரங்கள் கிழக்கு மாகாணத்திலிருந்து பெறப்படுகின்றன. அதனுல் இவ் விரு பகுதிகளுக்கு மிடையில் மரவியாபாரமுண்டு. புளி, கூழா, சடவாக்கு, தமன, விற்பானி என்ற மரங்கள் விறகுக்குப் பயன்படுகின்றன.

மூன்றும் பகுதி-மூன்றும் அத்தியாயம்
* கணிப்பொருள்கள்
இதுவரை இலங்கையிற் கண்டு பிடிக்கப்பட்ட கணிப் பொருள்கள், பய னலும், சிறப்பாலும், தாவரப் பொருள்களிலும் மிகக் குறைவான இடத் தையே வகிக்கின்றன. இலங்கை இரத்தின வியாபாரத்துக்குப் பெயர் போனது. அது உலகத்து வியாபாரங்களுள் மிகப் புராதனமானது. சரித்திரகாலவாரம்பத்திலிருந்தே இந்த வியாபாரமு மிருந்து வந்தது. புரா தன காலத்திலே இன்று உள்ளதைவிட அதிகமான இரத்தினங்கள் உலகில் இருந்தன போலும். இத்தனை நூற்றண்டாக இரத்தினக் கற்களே மக்கள் சேகரித்தபின்னர் இன்றும் அவை காணப்படுவது குறிப்பிடத் தக்க விடயமே. இன்று இரத்தினக் கற்களுள்ள முக்கிய படிவுகள் எங்கெங்கே 92 Golf என்பதைப் பற்றியும், 9{ 6ᏈᎤᎶᎣ ↑ எவ்வாறு காணப்படுகின்றன என்பதைப் பற்றியும் ஏலவே குறிப்பிட்டுள்ளோம். சுரங்கம் வெட்டி இரத்தினக்கல்லெடுக்கும் வேலையைச் சிங்களரே செய் கிருர்கள். அது சிறிய அளவிற் கூட்டு முறையிலேயே செய்யப்படு கிறது. இந்த வியாபாரம் முற்றகச் சோனகர் கையிலே இருக்கிறது. அவர்கள் இரத்தினங்களுக்குப் பட்டந் தீர்ந்து மெருகிட்டு வெளிநாடு களுக்கு அனுப்புவர். சிறந்த கற்கள் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக் கும் அனுப்பப்படுகின்றன. பெருந் தொகையான கற்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் விலையாகின்றன. இந்த வியாபாரம் ஒழுங்கான வரு மானத்தைக் கொடுக்கக் கூடியதன்று. கற்களைக் கண்டு எடுப்பது தற். செயலாக உண்டாகுஞ் சம்பவமாதலால் வியாபாரம் ஒழுங்கற்றது. வருட மொன்றிற்கு இரத்தின வியாபாரத்தாற் சராசரி 2,000,000 உருபாய் வரு மானமுண்டென்று அரசாங்கம் கணக்கிட்டிருக்கிறது. மிக முக்கியமான இரத்தினக்கற்கள் நீலமும், சிவப்புமாகும் ; மிகப் பழங்காலந் தொட்டே சிவப்புக் கல்லுப் புகழடைந்து வந்திருக்கிறது. இரத்தினபுரி மாவட்டத் திலுள்ள வண்டற் பரலிடையே இரத்தினச் சுரங்கங்கள் வெட்டப்படுகின்றன. படிகக் கற்பாறைகளிலிருந்தே இரத்தினங்கள் கிடைத்திருக்க வேண்டும் ; இலங்கையின் புவிச் சரிதவியலை முற்றக அறிந்த பின்னர், இரத்தினச் சுரங்கங்களின் இருப்பை அறிந்து அவற்றை வெட்டி வேலை செய்வது இலகுவா கும். சிவப்புக் கல்லும், மரகதமும் மாத்துறைக் கண்மையிலும், கண்டிக்கண் மையிலுமுள்ள பாறைகளிலுண்டென இப்பொழுது செய்த ஆராய்ச்சிகள் மூலம்தெரிகிறது.இத்தகைய ஆராய்ச்சியை நடத்துவதற்குநிலத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் ; அது இலேசான காரியமன்று ; பாறைகளை மூடி மிருது வான மேற்பரப்புப் படிவும், ஏராளமான பயிர்பச்சையுமிருப்பதால் அது மிகுந்த பணச் செலவைக் கொண்டுவரக் கூடியதாயிருக்கும். சில இடங்
235

Page 125
236 இலங்கைப் புவியியல்
களுக்குப் போய்ச் சேர்வதே மிகக் கடினம் ; அதனற் பரீட்சார்த்தமாகப் பாறைகளைக் குடைவதே மிகுந்த செலவையுண்டாக்கும். சில இடங்களில் வெறும்பாறைகள் மேற்பரப்பிற் புடைத்துத் தோன்றும். இலங்கையின் தாவரப் பொருள்கள் நல்ல இலாபத்தைக் கொடுக்குங் காலம் வரை, மக்கள்,
L L - Lib 72.
இரத் தினக் கல் கழுவி எடுக்கப்படுகிறது.
 

பொருளாதாரப் புவியியல் 237
நிச்சயமான பயனைத் தராத இரத்தினக் கற்றெழிலில் ஈடுபடமாட்டார்கள். சுரங்க வேலை சிறிய அளவிலே, பெரிய சாதனங்களின்றி நடைபெறும். இரத்தினம் கிடக்கும் பரற்கற்களேச் சேர்த்து ஒரு குவியலாக வைத்துச் சிறு சிறு பகுதிகளாகப் பிரித்து அரிப்பெட்டிகளிற் போட்டுக் கழுவுவர். இதைப்பரல் என்று சொன்னலும், இது களி போலவே தோன்றும்; இதிற் பெரும்பகுதியை இலேசாகக் கழுவித் தள்ளி விடலாம்.
பெரிய கற்கள் அரிப்பெட்டியின் அடியிலே தங்கும். இவற்றிடையே தான் இரத்தினக் கற்கள் காணப்படும். இவற்றைச் சோதித்துப் பார்த்து, இவற்றுள், பட்டந் தீரும் பொழுது மதிப்புப் பெறக்கூடிய கற்களைத் தெரிந்தெடுப்பதே மிகக் கடினமான வேலை. பார்த்தால் இவை கரடு முரடாகவும், கவர்ச்சியில்லாத தோற்றமுடையனவாகவுமிருக்கும். இவை தாம் கல் வெட்டுவோரால் அழகிய பளபளப்பான, மின்னுமிரத்தினங் களாக வெட்டப்பட்டனவோ என்று ஐயுற நேரிடும். கல்வெட்டுவது, விசேடத் திறமை பொருந்தியதொரு வேலையாகும். உலகிற் சில இடங் களிலேயே இத்தொழில் நடைபெறுகிறது. இலங்கையில் இரத்தினபுரி போன்ற இடங்களில் இது சிறிது நடைபெறுகிறது; இந்தியத் துறைகள் சிலவற்றிலும் இத்தொழில் நடத்தப்படுகிறது. ஐரோப்பாவில் இரத்தின வியாபாரத்துக்குப் பேர்போன இடங்கள் அந்துவேப்பும், அமித்தடாமும் ஆகும். பழங்காலந் தொட்டே கீழ்த்திசை நாட்டு இரத்தின வியாபாரத் தோடு இவை தொடர்பு பெற்றுள்ளன. W
நீலக் கல்லும், சிவப்பும் எப்பொழுதுமே வியாபாரச் சந்தையில் நல்ல விலையைப் பெறுவன. மற்றைக் கற்களின் விலை, வெளிநாடுகளிலுள்ள காலத்திற்கு ஏற்ற நிலையை யனுசரித்துப் பெரிதும் மாறுபடும். வைடூரி யம் என்ற நூதனமான இரத்தினத்திற்குத் தற்காலிகமாகப் பெரிய தேவை உண்டாகலாம். இது உலகின் ஏனைப் பாகங்களிற் கிடைப்பது அருமை. ஆசியாவில் அலங்காரக் கோலங்கள் அடிக்கடி வித்தியாசப் படுவதில்லை. இலங்கை, இந்தியா, பேமா ஆகிய தேசங்களில் வைரமும், நீலமும் எப்பொழுதும் முதலிடமே வகித்து வருகின்றன. ஆனல், ஐரோப் ப்பாவிலும் வட அமெரிக்காவிலும், இக்காலத்தில், இலங்கை மக்கள் இாத்தினபரணங்களையணிவது போல், அணிவதில்லை ; சில சமயம் நிறந் தீட்டிய மணிமாலைகளேயணிவது ஒரு நாகரிகமாகக் கருதப்படுகிறது. இம் மணிமாலையைப் பலவகைக் கற்களைக் கொண்டு செய்யலாம். М
படிகம் பெரும்பாலும் அழகிய பல நிறமுள்ளதாயிருக்கும் ; அல்லது கண்ணுடிபோலத் தெளிவாக இருக்கும். கண்ணுடிபோலிருக்கும்பொழுது இது பாறைப் பளிங்கு எனப்படும். இதனை ஒரளவு வைரம்போல ஒளி விடக்கூடியதாக வெட்டலாம். செவ்வந்திக்கல் ஒருவகைச் செவ்வூதாப் படிகமே ; வட்டக்குவைக்கல் கபிலமும் மஞ்சளுங் கலந்த நிறமுடையது.

Page 126
238 இலங்கைப் புவியியல்
மிக அழகான இளமஞ்சள் நிறமுள்ள படிகமும் உண்டு. மாத்துறை வைரமும் இது போன்றதே. ஆனல் இது வேறு பதார்த்தத் தாலமைந்தது. “ காபங்கிள்’ என்ற சிவப்புக் கல்லும், மாணிக்க வகையைச் சேர்ந்ததே. கறுவாக் கல்லும் அவ்வினத்தைச் சேர்ந்ததே. புட் பராகமும் பல நிறத்தில் இலங்கையிற் காணப்படுகிறது. காலத்துக்குக் காலம் அதன் தேவை பெரிதும் மாறுபடும். கண்ணுடியிலிருந்து போலிக் கற்களே ஐரோப்பாவிற் பரும்படியாகச் செய்கிறர்கள். இருபதாம் நூற் ருண்டிற் போலி இரத்தினக்கல் வியாபாரம், இயற்கை இரத்தினக்கல் வியாபாரத்துடன் கடுமையாகப் போட்டியிடுகிறது. ஐரோப்பாவிலும், அமெ ரிக்காவிலும் செயற்கை முத்தை ஆக்குகிறர்கள் ; இது இயற்கை முத் துடன் வியாபாரத்திற் போட்டியிடுகிறது.
இலங்கைச் சந்திர காந்தக்கல் பிரசித்தி வாய்ந்தது. அது உயர்ந்த விலைக்கு விற்கப்படவில்லை. சில சமயங்களில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இக் கல்லுக்குத் தேவையுண்டாகிறது. இந்தக் கல்லைச் சுரங்கத்திலிருந்தெடுக்கும் முறை முழுதும் வித்தியாசமானது. களிக்கல்லை முற்றக எடுத்து உடைத்து அவற்றுள் அரிவதற்குப் பொருத்தமான துண்டை எடுக்க வேண்டும். மற்றைக் கற்களைப்போல் முகம் வையாமல், இக்கல்லை வட்டமாக அழுத்தி விடவேண்டும். இந்தக் கல்லின் வியாபாரத் தால் வரும் வருமானம் மிகக் குறைவு. இன்று இந்தக் கல்லை வெட்டுஞ் சுரங்கங்கள் மிகக் குறைவு. முக்கியமானவொரு சுரங்கம் அம்பலாங் கொடைக்குச் சமீபத்திலுள்ள மித்தியாகொடையிலுண்டு.
பென்சிற்கரி (காரீயம்) பலகாலமாக இலங்கையின் மிக முக்கியமான கணிப் பொருள்களுளொன்ருயிருந்து வருகிறது. இருபதாம் நூற்றண்டில், உருக்குத் தொழிலுக்கு முக்கியமாக இதுமிகவுந் தேவைப்படுகிறது. இதன் பயன் விரைவாகப் பெருகிற்று. அதனுற் சிலர் பெருஞ் செல்வந் திரட்டினர். உற்பத்திப் பெருக்கத்தாலன்று ; விலையை உயர்த்தியதாலேயே வருவாய் அதிகரித்தது. பிரதானமாகக் கடந்த 1914-18 மகாயுத்தம் நடந்தபோது வெடிமருந்து செய்வதற்குப் பென்சிற்கரி அதிகந் தேவைப்பட்டது. 1916 ஆம் ஆண்டில் இலங்கையில் விளைந்த பென்சிற்கரி 220 இலட்சம் உருபாவுக்கு விற்கப்பட்டது. அடுத்த வருடமும் அதே தொகைக்கு விலைப் பட்டது. ஆனல், மகாயுத்தம் முடிவடையுந் தருணத்திற் பிரெஞ்சுக் காரர் மடகாசுக்காரிற் பூமியின் மேற்பரப்பிற் பென்சிற்கரிப் படிவிருப் பதைக் கண்டு அதைச் சேகரித்தனர். அதனல் இலங்கையிலும் அதிக மான பென்சிற்கரியை அவர்கள் உற்பத்திசெய்தனர். அது இலங்கைப் பென்சிற் கரியிலும் தரத்திற் குறைந்திருந்த போதும், இலங்கைப் பொரு ளிலும் மிகக் குறைவான விலைக்கு விற்கக் கூடியதாயிருந்தது. அதற் குக் காரணம் குறைந்த கூலியிற் றெழிலாளரைப் பெறக் கூடியதாயிருந் தமையே. இதன் பயனக 1918 ஆம் ஆண்டில் இலங்கையினுற்பத்தி

பொருளாதாரப் புவியியல் 239
1916 ஆம் ஆண்டினுற்பத்தியிலும் அரைப்பங்காயிற்று. வருமானம் 40 இலட்சமாக இறங்கிற்று. அன்று தொட்டு வருமானங் குறைந்துகொண்டே வந்தது. பென்சிற்கரி வியாபாரம் நல்ல நிலையிலிருந்த காலத்தில் விசேட பயிற்சி பெற்ற 15,000 தொழிலாளர் பென்சிற்கரிச் சுரங்கங்களில் வேலை செய்தனர். 1924 வரையில் இத்தொகை சில நூறகக் குறைந்து விட்டது. பிரித்தானியாவும் அமெரிக்காவுமே இலங்கையிலிருந்து இதனை அதிகமாக வாங்கினர். ஆனல், இப்பொழுது இவ்விரு நாடுகளையும் விட வேறு தேசங்களும் உருக்கு, இரும்புத் தொழில்களில் ஈடுபட்டிருக்கின்றன. எனவே, இலங்கைப் பென்சிற்கரியைவிற்பனை செய்வதற்குப் புதிய தேசங்களைக் கண்டு பிடிக்க வேண்டியது இன்றைய பிரச்சினையாகும். புதிய முறைகளைப் பயன்படுத்தி உற்பத்திச் செலவையுங் குறைப்ப தவசியமாகும். இரண் டாவது மகாயுத்த காலத்தில் (1939-45) பென்சிற்கரிக்கு அதிக தேவை யுண்டானது. 1942இல் 27,000 தொன் பென்சிற்கரி எற்றுமதி செய்யப்பட்டது. இதன் பயனுக 130 இலட்சம் உருபாய் வருமானம் கிடைத்தது. இதன் பின்னர் தேவை குறைந்து விட்டது. 1946 இல் 8000 தொன் பென்சிற்கரியே எற்றுமதி செய்யப்பட்டது. இதன் பயனக 35 இலட்சம் உருபாய் வருமானம் கிடைத்தது.
够
பூமியின் மேற்பரப்பிலேயே ஏராளமான பென்சிற்கரி முற்காலத்திற் கிடைத்தது. ஆனல் இதிற் பெரும்பகுதி எடுக்கப்பட்டுவிட்டது. இப்பொழுது பூமியில் மிக்க ஆழத்திற் சுரங்கம் வெட்டிப் பென்சிற்கரியெடுக்கிறர்கள். சில சுங்கங்கள் 500 துவக்கம் 1500 அடி ஆழமுள்ளவை. வெட்டியெடுக்கக்கூடிய கரிப் படுக்கை அங்குமிங்குமாகப் பரந்து கிடக்கிறது. பென்சிற்கரிச் சுரங்கங்கள் பின்வரும் மாவட்டங்களிலுண்டு:- கொழும்பு, களுத்துறை, கண்டி, காலி, குருளுக்கல், இரத்தினபுரி, ஊவாவின் சில பகுதிகள். சுரங்கத்தொழில் பெரும்பாலும் சிங்களர் கையிலேயே இருந்து வருகிறது. சிங்களப் பகுதிகளி லேயே சுரங்கங்களுண்டு. ஆங்கிலத் தோட்ட முதலாளிகள் சிலர் பென்சிற்கரிச் சுரங்கங்களை வாங்கியிருக்கிறர்கள். சாதாரணமாக இச் சுரங்கங்களிற் கையி ஞலேயே வேலை செய்யப்படுகிறது. இதனல் வேலை மெதுவாக fb60Lபெறுகிறது. செலவும் குறைவாகவேயிருக்கிறது. பெரிய சுரங்கங்களில் மின்சார வெளிச்சமும் இயந்திரமும் பொருத்தியிருக்கிறர்கள். அதனல் உற்பத்தி அதிகரிக்கிறது.
வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மற்றேர் இலங்கைக் கணிப் பொருள் மைக்கா, கம்பியில்லாத் தந்திச் சாதனங்களுக்கு இது பெரிதும் பயன்படுவதால், அண்மையிற் சொற்ப தொகையான மைக்கா வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இது மஞ்சள் மைக்கா. இதனை “ அம்பர் " மைக்காவெனவும் வழங்குவர். கண்டிக்குச் சமீபத்தில் இது பெரும்பாலும் கிடைக்கிறது.

Page 127
240 இலங்கைப் புவியியல்
தோரியம் என்னுமொரு கணிப்பொருள் வேறு பொருள்களோடு சேர்ந்து கூட்டுப் பொருளாகக் காணப்படுகிறது. இலங்கையிற் பல கூட்டுப் பொருள் களில் தோரியமுங் காணப்படுவதாகக் கணிபொருளாராய்ச்சியின் பயனுயறியப் பட்டது. தோரியம் மிக அபூர்வமர்ன கணிப்பொருள். வெள்ளொளிர்வு வாயுச் சுடர்வலைகள் செய்வதற்கு இந்த மூலகம் மற்றை நாடுகளிற் பயன்படுத்தப்படுகிறது. நிலக்கரி வாயுவை வெளிச்சமுண்டாக்குவதற் காக எரிக்கும் பொழுது கன்னரினுற் செய்த ஒரு சுடர் வலையை அச் சுவாலைக்கு மேலாக அமைத்தால் அது வெண்சுடர் விட்டு எரியும். அத்தகைய கன்னர்ச்சுடர் வலையைத் தோரியம் முதலிய மூலகங்களிற் ருேய்த்து எடுக்க வேண்டும். வாயு எரியும்பொழுது, வாயுவரும் கூர் நுனியை மூடியுள்ள இந்த வலை வெண்சுடரொளியைப் பரப்பி வெளிச் சத்தை அதிகம் பிரகாசமுடையதாகச் செய்யும். ஐரோப்பிய நாடுகளிற் சிலவற்றிலும், வட அமெரிக்க நாடுகளிற் சிலவற்றிலும், உலகின் வேறு சில பாகங்களிலும் இம்மாதிரி விளக்குக்கள் பெருவழக்காயிருந்தன. இப் பொழுது மின்சார வெளிச்சங்கள் எங்கும் நடைமுறையில் வந்திருப்பதால் இந்த “வாயுக்கவசங்களு’க்கு அதிக தேவையுண்டாவதில்லை. தோரியம் கடற்கரையை யடுத்துள்ள சில இடங்களில், விசேடமாக பெந்தோட்டைப் பகுதியில், மணலோடு கலந்து படிந்திருக்கிறது. இதை எடுத்துப் பயன் படுத்தும் முயற்சி அதிகம் நடைபெறவில்லை. அதனுல் இலங்கைக்கு வரக் கூடிய இலாபங் குறைந்து விட்டது.
இரேடியம் கிடைக்கக் கூடிய முக்கியமான தாதுப் பொருள் உரேனியம் என்னும் மூலகம். இது படிகப் பாறைகளிற் பெரும்பாலும் கிடைக்கும் ; வைத்தியத் துறையிலும், விஞ்ஞானத் துறையிலும் இரேடியம் இன்று பெரிதும் பயன்படுகிறபடியால் இதற்கு எங்கும் விலையுண்டு.
இலங்கையிலுள்ள ஏனைக் கணிப்பொருள்கள் இலங்கையின் தேவைக்கு மட்டுமே உகந்தவை. அவை ஏற்றுமதி செய்யப்படுவதில்லை. ‘இலங்கை யின் அமைப்பு, மேற்பரப்புப்படிவுகள்” என்ற அத்தியாயங்களில் இப்பொருள் களேப் பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். மட்பாண்டஞ் செய்ய உதவும் பல விதமான களிகளும், செங்கற்களும், ஒடுகள் செய்தற்கேற்ற களிகளும் உண்டு ; இவை ஆற்றுப் பள்ளத்தாக்குக்களில் அநேகமாகக் காணப்படும். முக்கியமான செங்கற் றெழில்களும் ஒட்டுத் தொழில்களும், கொழும்பு மாவட்டத்திலும் கண்டி மாவட்டத்திலுமுண்டு; இவை நெடுங்காலமாகவே தொழிற்றிறமைக்குப் பேர்போன தொழிற்சாலைகளாகும். களி פuJff Jbâ_פ2 யைக் கல்லளவுக்கு வெட்டிச் சூளையிட்டு வேக வைப்பார்கள். அவை வெந்த பின் சூரிய வெப்பத்திலும் காற்றிலும் பல காலம் கிடக்க விடுவார்கள். சிறப்பான கட்டட வேலைகளுக்கு இந்தச் செங்கற்கள் பயன்

பொருளாதாரப் புவியியல் 24
படுகின்றன. இவை இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் வற்றுமதி செய்யப்படுகின்றன. செம்பூரான் கல்லு (கபுக்கு) செங்கல்லு உருவத்தில் வெட்டப்படுகிறது. இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளிற் கட்டப்படும் பெரிய வீடுகளெல்லாம் இச் செம்பூரான் கல்லினலேயே கட்டப்படுகின்றன. சாந்து குழைப்பதற்கு வேண்டும் சுண்ணும்பு கடற்கரையை யடுத் துள்ள முருகைக்கற் படிவுகளிற் கிடைக்கிறது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் இது நிறையவுண்டு. தரங்குறைந்த சுண்ணும்பு வேண்டுமானல், மலை நாட்டிலுள்ள படிகச் சுண்ணப் பாறைகளிற் பெறலாம். தெருவுக்குப் போடுவதற்கான கல்லு, படிகப் பாறைகளில் எங்கும் கிடைக்கும். சிறந்த கட்டடக் கற்களையுமே எராளமாக இப் பாறைகளில் வெட்டி எடுக்கலாம்" ஆனல் இக்கல் ஓரளவுக்கே உபயோகிக்கப்படுகிறது ; முக்கியமான கட்டடங் களுக்குக் கல்லு இந்தியாவிலிருந்து இறக்குமதியாகிறது. உதாரணமாகக் கொத்சிக் கடையிலுள்ள பொன்ன்ம்பலவாணேசுவரர் கோயில் முற்றக இந்தியக் கருங்கல்லினலேயே கட்டப்பட்டுள்ளது. கல்லிலே சிற்பம் வெட்டு வதும் செதுக்குவதும், இந்தியச் சிற்பிகளாலேயே செய்யப்படுகின்றன. இவர்கள் பரம்பரையாக அவ்வேலையிற் பயிற்சி பெற்றவர்கள்; தென்னிந்தி யாவிலிருந்து இவ்வேலைக்காக விசேடமாய் இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டவர்கள்; கண்டியிலுள்ள தலதமாளிகை போன்ற கோவில் வேலை கள் இவர்களாலேயே செய்யப்படுகின்றன.
10-J. N. B 70576 (11157).

Page 128
மூன்றும் பகுதி-நாலாம் அத்தியாயம் உப்புவிளைவித்தலும் மீன்பிடித்தலும் இலங்கைக்குத் தேவையான உப்பு முழுவதும் அநேகமாக இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது. ஆறில் ஒரு பகுதிமட்டும் சென்னை மாகாணக் கரைப் பிரதேசத்திலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உப்பு உற்பத்தி இப்பொழுது பெருகிக்கொண்டு வருகிறது. இது அரசாங்கத்தின் ஏகபோக உரிமையாயிருக்கிறது. உற்பத்தி செய்யப்படும் உப்பு முழுவதையும் வாங் கும் உரிமையும், உற்பத்தி செய்யும் உரிமையும், விற்கும் உரிமையுடி அரசாங்கத்தின் கையிலேயே உண்டு. அதனல் வரும் இலாபம் அரசாங்க வருமானத்திற் சேர்க்கப்படுகிறது. 1919 ஆம் ஆண்டு வரை உப்பு உற் பத்தி ஒரே நிலையில் நடைபெறவில்லை ; விளைவு குறைந்தும் கூடியும்" வந்தது. உப்பின் தன்மையும் நன்றயிருக்கவில்லை ; அழுக்கு அதிகம் சேர்ந்ததாயிருந்தது. இதற்கு ஒரு காரணம், உப்பு விளையும் நிலங்களிற் பெரும்பாலானவை, பணக்காரர் கையிலிருந்தமையாகும் ; வாய்க்கால் என வழங்கப்படும் இந்நிலங்களை அவர்கள் சரியாகப் பரிபாலிப்பதுமில்லை, விளைவில் ஊக்கங்கொள்வதுமில்லை ; அவர்களுக்கு வேறு வருமானங் களிருந்தபடியால் உப்பளங்களைக் கவனியாது விட்டனர். அவற்றைத் தொழி லாளருக்குக் குத்தகையாகக் கொடுத்தனர். அரசாங்கம் தொழிலாளருக் குக் கொடுக்கும் பணத்தில் அரைப்பங்கை அவர்கள் குத்தகையாகப் பெற்றனர். பத்து வருடத்துக்கு முன்னர் உப்பு வியாபாரம் திருத்தியற்ற நிலைமையிலிருந்தபடியால், தனிப்பட்டவர்களின் உப்பளங்களில் உப்புச் சேகரித்து வைக்கும் முறையை மேற்பார்வை செய்வதென அரசாங்கம் 1919 இல் தீர்மானித்தது. மேலும் முடிக்குரிய நிலங்களில் உப்பளங்களை யுண்டாக்கவும், அவற்றை மேற்பார்வை செய்யவும், தொழிலாளரை நிரந் தரமாக எற்படுத்தி, உப்பு உற்பத்தியைக் குறையவிடாது செய்யவும் நினைத்தது. இலங்கைக்குத் தேவையான உப்பு முழுவதையும் இலங்கை யிலேயே உற்பத்திசெய்து விடலாமென அரசாங்க உத்தியோகத்தர் நிச்ச யித்தனர். 1945 இல் 800,000 அந்தர் உப்பு உற்பத்தி செய்யப்பட்டது ; இலங்கையின் தேவை அவ்வளவேயாகும். புத்தளத்திலேயே அதிக விளைவுண்டு ; அம்பாந்தோட்டை, பாலாவி, ஆனையிறவு ஆகிய இடங் களிலுள்ள அரசாங்க உப்பளங்கள் பெருப்பிக்கப்பட்டுத் திருத்தப்பட்டுள் ளன. தனிப்பட்டவர்களின் உப்பளங்களிலும் இங்கே உப்பைச் சுத்தமாகச் சேகரித்து வைக்கிருர்கள். உப்புச் செய்யும் பாத்திகளையும், சேகரித்து வைக்குமிடங்களையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாத தொழிலாளி களை வேலைக் கெடுக்காமலிருக்குமாறு அவர்களுற்பத்திசெய்யும் உப்பை வாங்காமல் விட்டனர். எனவே அவர்கள் அந்த உப்பை மலிவான
242

பொருளாதாரப் புவியியல் 243
விலைக்குச் சொந்தத்தில் விற்க வேண்டியேற்படும். மிகப் பெரிய உப்பளங் கள் அம்பாந்தோட்டையிலுண்டு. (73 ஆம் படத்தைப் பார்க்க). நிலத்தில் இயற்கிையாகவுள்ள பள்ளங்கள் இங்கேயுண்டு ; இவை இலேவயா என வழங்கும் ; இவ்வுப்பளங்களிற் சில 400 வக்கர் பரப்புடையன. இவற்’ றிற்பல கடலோடு தொடர்பில்லாதன. நீரானது அயலேயுள்ள நிலங்களி லுள்ள உப்பை உறிஞ்சிக் கொள்கிறது. வறட்சியுள்ள காலத்தில் நீர், வற்றியதும் உப்பளம் முழுவதும், பளபளப்பான வெண்பனிக்கட்டியால்
k. Lo 73.
அம்பாந்தோட்டிையிலுள்ள உப்பளம்.
மூடப்பட்ட நிலம் போன்று காட்சி யளிக்கும் இது பார்ப்பதற்கு நூதன. மாயிருக்கும். வெளி நாடுகளுக்குச் சென்று நிலத்தைப் பனிக்கட்டி மூடி யுள்ள காட்சியைக் காண வசதியில்லாத மாணவர், இந்த உப்பளங்களைச் சென்று பார்வையிடுவது நன்று. (73 ஆம் படத்தைப் பார்க்க). மாணவர் உப்பெடுக்கத் துவங்கும் காலத்திற் போவது நன்று.

Page 129
244. இலங்கைப் புவியியல்
இவ்வேலை சோனகத் தொழிலாளராலும் தமிழ்த் தொழிலாளராலுஞ் செய்யப்படும். 1927 ஆம் ஆண்டில் அரசாங்கம் 513,366 அந்தர் உப்பை 10 இலட்சவுருபாய்க்குச் சற்று அதிகமாக விலைகொடுத்து வாங்கிற்று. அம்பாந் தோட்டையிலும் ஆனையிறவிலுமே அதிக விளைவுண்டானது.
இலங்கையை அடுத்துள்ள கடலில் மீன்கள் அதிகம்; ஆனல், மீன் பிடிக்குந் தொழில் அதிகம் நடைபெறுவதில்லை. கரையை யடுத்த கிராமங் களிலுள்ள கடற்றெழிலாளர் 20 மைலுக்குள்ளே கிடக்கும் கடலில் தனிப்பட்ட முறையில் மீன்பிடிப்பார்கள். பிடித்த மீனைக் கரையில் வைத்தோ, கிராமச் சந்தையில் வைத்தோ விற்றுவிடுவர். சிறு பகுதி கிராமங்களுக்குச் செல்லும் ; பெரும் பகுதியை மீன் தரகர் எலத்தில் வாங்குவர் ; இவர்கள் இருப்புப் பாதையிலுள்ள சிறுசிறு கிராமங் களுக்குச் சென்று அங்கும் அகப்படும் மீனையெல்லாம் வாங்கிப் புகை வண்டிமூலம் கொழும்புக்கு அனுப்புவர். அங்கிருந்து அது உள்ளூருக் கும், மலைநாடுகளுக்கும் அனுப்பப்படும். புகைவண்டியோடு தொடர் பில்லாத கிராமங்களுக்கு மோட்டர் வாகனத் தொடர்புண்டு. இவ்வாறு திருக்கோணமலையிலிருந்து அனுராதபுரத்திற்கும், தங்காலையிலிருந்து மாத்துறைக்கும் மீன் அனுப்பப்படுகிறது. தீவின் தென் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் சிறப்பாக உரோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த சிங்கள மீன் பிடிகாரரால் மீன்பிடித் தொழில் நடத்தப்படுகிறது. இவர்கள் கொழும்புக்கும் நீர்கொழும்புக்குமிடையில் அதிகமாகக் காணப் படுவர். வடக்கிலும், கிழக்கிலும் சில சோனகரும், தமிழரும் இத்தொழி லில் ஈடுபட்டுள்ளனர். தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில், தென்மேற்குக் கடலிற் கொந்தளிப்பு அதிகமாயிருக்கும். அப்பொழுது சிறு வள்ளங்களைக் கடலிற் செலுத்த முடியாது ; எனவே, இப்பகுதியி லுள்ள மீன்பிடிகாரரிற் பெரும் பகுதியினர் முல்லைத்தீவுக்கும் மட்டக் களப்புக்குமிடையில் தற்காலிகமாகக் குடிலமைத்து மீன்பிடிப்பர். எனவே, மேற்குக் கரையில் மே துவங்கி நவம்பர் வரையும் தொழிலுண்டு. கிழக்குக் கரையில் திசெம்பர் துவக்கம் மே வரைக்குந் தொழிலுண்டு. இலங்கையிலுள்ள கடற்றெழிலாளர் நல்ல திறமையுடையவர். மீனைப் பிடிப்பதற்குப் பல வகையான முறைகளை அவர்கள் கையாள்வர். பல விதமான மீன்பிடி முறைகளுண்டு ; அவை இனத்திற்கினம் வித்தியாசப் படும் ; பிடிக்கும் மீனைப் பொறுத்தும் வித்தியாசமுண்டு ; சுற்றடலைப் பொறுத்தும் வித்தியாசப்படும். சிங்களர் பயன்படுத்துஞ் சாதனங்கள், தமிழருடைய சாதனங்களிலும் வித்தியாசமானவை. முக்கியமான சில மீன்பிடிமுறைகள் பின்வருமாறு :-
(அ) கரையிலிருந்து வலை வீசுதல். நீண்ட கயிற்றினல் வலையின் ஒரு தலைப்பைக் கரையிலே கட்டிவிட்டு மற்றைத் தலைப்பை ஒரு வள்ளத்திற் கட்டி வள்ளத்தைக் கடலில் விடவேண்டும். நீர் ஆழ மற்றதாக இருந்

பொருளாதாரப் புவியியல் 245
தால் வள்ளத்தை ஒரு பாறையிற் கட்டி விடலாம் ; அல்லது ஆட்கள் நீரில் நின்று பிடித்துக் கொள்ளலாம். மீன்பிடிகாரர் மீன்களின் ஒட் டத்தைக் கவனித்துப் பெரிய மீன்கூட்டம் வருவதையறிந்தால் வலையை வீசுவார்கள் ; இம்முறை கூனி இருல் போன்ற சிறிய மீன்கள் பிடிப்ப தற்கேயேற்றது. ஒகத்து மாதந் தொடங்கி எப்பிரில் வரை இச்சிறு மீன்களைப் பிடிக்கலாம். பாணந்துறைக்கடல்போன்ற தெளிவான கடலிற் முன் இவ்வாறு மீன்பிடிப்பது எளிது.
Lu Líb 74.
தேவிநுவரையில் மீன்பிடி வள்ளங்கள்
(ஆ) கட்டு மரங்களிலிருந்து வலை வீசுதல். கடற்கரையிலே மேற்பரங் பில் உள்ள சூடை போன்ற சிறு மீன்களைப் பிடிப்பதற்கே இந்த முறை யும் பயன்படும். ஏறக்குறைய 25 அடி நீளமுள்ள சில மரக் குற்றி ளைக் கயிற்றினல் ஒன்ருகக் கட்டிப் பாய்மரம் ஒன்றை அமைப்பர். அதிலே முக்கோண வடிவுள்ள பாயைப் பொருத்துவர்; குறுகிய சில வலைகள் கட்டுமரத்தில் இழுபட்டுக்கொண்டு போகக் கூடியதாகக் கொளுவப்

Page 130
246 இலங்கைப் புவியியல்
படும். கட்டுமரம் ஆழமற்ற நீரிற் செல்லும். இந்த முறை எங்கும் பயன்படுத்தப்படுகிறது. பிரதானமாக யாழ்ப்பாணப் பகுதியில், புறச்சட்ட வள்ளங்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படுகிறது.
(இ) புறச்சட்ட வள்ளங்களிலிருந்து தூண்டிலில் மீன் பிடித்தல். இது ஆழமான கடலில் நடத்தப்படுகிறது. சில சமயம் கரையிலிருந்து 20 மைல் துரத்தில், வள்ளங்கள் நிரையாகச் சென்று மீன்பிடிக்கும். அறக்குளா போன்ற இடைக்கடல் மீன்கள் பிடிப்பதற்கே இம்முறை பயன்படுத்தப்படு கிறது. புறச் சட்ட வள்ளங்கள் மனத்தைக் கவருந் தோற்றமுடையன; இலங்கைக்கே சொந்தமானவை. பலாமரத்துண்டத்தைக் கோதியே இவ் வள்ளஞ் செய்யப்படும்; வள்ளத்தின் ஒரு புறத்தே இரு கோல்களில் இணைக் கப்பட்ட ஒரு குற்றி பொருத்தப்பட்டிருக்கும். அது நீரில் வள்ளம் கவிழ்ந்து போகாதவாறு சமநிலையைக் காக்கும். இவ்வள்ளங்களைத் தண்டினுல் வலித்துச் 5ெ லுத்தலாம் ; அல்லது பாயை விரித்துக் காற்றிற் போகவிடலாம். அனுகூலமான காற்றிருக்குமானல் இவ் வள்ளங்கள் மிகுந்த வேகத்தோடு செல்லும். கிராம வாசிகள் கரையி லிருந்தோ ஆற்றின் சங்கமங்களில் நின்றே தூண்டிலால் மீன்பிடிப்பர்.
(ஈ) இருல், நண்டு, சிங்கிருல் என்பன கரையிலே, பல வகையான திறமைமிக்க சாதனங்கள்மூலம் பிடிக்கப்படுகின்றன. நண்டைப் பிடிக் கும் ஒருமுறை மிக உருசிகரமானது. பொழுதுபட்டதும், மீன்பிடிகாரர் கரையிலே செல்வர் ; பகலில் ஆழமான புற்றுக்களிலிருந்து விட்டு நண்டு கள் வெளியே வந்து நீரையடுத்துப் பாதுகாப்பாக உலாவும் ; மீன்பிடி காரர் கையிலே சூளுடன் சென்று நண்டைத் தேடிப்பார்ப்பர் ; பெரிய நண்டுகள் கண்ணிலே பட்டதும், அவற்றை மெதுவாக எடுத்து முதுகிற் ருெங்கும் பறியிலிட்டுக்கொண்டு போய்விடுவர்.
(உ) பொறிகள் பொதுவாக ஆற்று முகத்துவாரங்களில் அமைக்கப்படும் ; அவை மரக்கட்டைகளை ஆற்று அடித்தளத்தில் அறைந்து அமைக்கப்படும். மீன் ஆற்றேட்டத்துடனே அதற்கெதிராகவோ ஒடும்பொழுது பொறியின் வாயிலகப்படும்படி பொறிகள் அமைக்கப்படும். அப்பொறிகளிலகப்பட்டால் அது மறுபடி வெளியேறமாட்டாது.
(ஊ) மீன்பிடிக்கப்பல் கொண்டு அரசாங்க மீன்பிடிப் பகுதியினர் மீன் பிடித்தல்.
மீனக் கருவாடாக்கும் முறை இலங்கையில் மிக வழக்கமானதாயிருந்து வந்தது. ஆனல் அண்மையில் அத்தொழில் குறைந்துவிட்டது. இப் பொழுது அத்தொழில் இருப்புப் பாதையில்லாத இடங்களில் நடத்தப்படுகிறது; உதாரணமாகக் கிழக்குக் கரையிலும், சிலாபத்துக்கு வடக்கேயுள்ள மேற்குக் கரையிலும் அத்தொழிலுண்டு. மீன்பிடிகாரர். தாம் பிடிக்கும் மீன்களை உடனே விலைப்படுத்தக் கூடுமானல், கருவாடு

பொருளாதாரப் புவியியல் 247
ஆக்கமாட்டார். எனவே இலங்கையில் உபயோகிக்கப்படும் கருவாடு முழு வதும் இறக்குமதி செய்யப்பட்டதே. இறைச்சிக்குப் பதிலாகப் பலர் மீனையே விரும்புவதால், மீனுக்குத் தேவையதிகம் உண்டு. வெப்பமான கால நிலையுள்ள இத்தேசத்திற் புதிய மீனை உள்ளூர்களுக்கு எற்றியனுப்பு வது கடுமையானபீடியாலோ, மீனைக் கெடாமல் வைப்பது முடியாத 1.டியாலோ, கருவாட்டுக்கு அதிக தேவையுண்டாகிறது. மாலைதீவு மாசிக் கருவாடு அதிகம் உபயோகிக்கப்படுவதன் காரணமுமிதுவே. அது மிகக்
கடினமானது ; நெடு நாளேக்கு வைத்திருக்கக் கூடியது ; மிகவும் இலே சானமுறையில் உள்ளூருக்கு எற்றுமதி செய்யக்கூடியது ; சோற்றுணவுக் குக் கறியும், துவையலும் செய்வதற்கு அதனைப் பயன்படுத்தலாம். தென்னுசிய நாடுகளில் வசிக்கும் வறிய சனங்களுக்கு, மாசிக்கருவாடு ஒரு வரப்பிரசாதம் போன்றது. ஒரு வருடத்தில், மாசிக்கருவாட்டுக்கும் தென் னிந்தியக் கருவாட்டுக்கும் 15,000,000 உருபாய்க்கு மேல் இலங்கை செலவு செய்கிறது. இதை நோக்க, இலங்கையின் கருவாட்டுத் தொழிலையபிவிருத்தி செய்வதற்குப் போதிய வசதியுண்டென்பது தெளிவு. அரசாங்க நிபுணர்களின் திட்டப்படி இந்த மீனிற் பெரும் பகுதியை இலங்கைக் கடலிற் பிடிக்கலாம். பிடித்து இங்கேயே கருவாட்டை உற்பத்தி செய்யலாம். குளம், ஆறு என்பவற்றில் மீனைப் பிடிப்பதற்குப் போதிய வசதிகிடையாது. அதனுற் புதிய மீனப் பெறுவது பலருக்குக் கடினமாயிருக்கிறது. புகைவண்டிப் போக்குவரத்தும் அபிவிருத்தியடைந்தால், புதிய மீனுக்கு அதிக தேவை யுண்டாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இது கருவாட்டு உபயோகத்தை மாற்ற மாட்டாது. ஏனெனிற் கருவாடு வேறு விதத்திற் பயன்படுத்தப் படுகிறது. இறைச்சியிலும் கருவாடு அதிகமாகக் கறிசமைக்கப் பயன்படுத்தப் படும்.
இங்கு நடைபெறும் முத்துக்குளிப்பு மிகப் புராதன காலந் தொட்டே உலகப் புகழ் பெற்றதாகும். இங்கு இடைக்கும் முத்தும் மிகச் சிறப் புள்ளது. கடந்த இரண்டாயிரம் மூவாயிரமாண்டுகளாக (புது முறை கையா ளாது) ஒரே வகையில் இம்முத்துக்குளிப்பு நடைபெற்றுவருகிறது. பண்டு நடைபெற்ற ஆசியப் பொருள் வியாபாரத்தில் இலங்கை முத்துக்கு நல்ல மதிப்பு இருந்துவந்தது. சரித்திர நூல்களிலும் புவியியல் நூல்களிலும் இலங்கை முத்துக்குளிப்பைப்பற்றி அடிக்கடி கூறப்பட்டிருக்கிறது. முத்துச் சிப்பியில் முத்து உண்டாகும் விதம், இலங்கைக்கு வந்த பல யாத்திரிகரை யும், விஞ்ஞானிகளையும் பெரிதும் திணற வைத்து விட்டது. வரலாற்றுப் புவியியல் என்ற பகுதியில் முத்து உண்டாகும் விதத்தைப்பற்றிய மிக உருசிகரமான செய்தியொன்றைக் குறிப்பிட்டுள்ளோம். மிகப் பழங் காலந்தொட்டே, இடையிடையே முத்துச் சிப்பிகளில் முத்து விளையா திருப்பது மர்மமாக இருந்து வருகிறது. முத்துச் சிப்பியின் வெளி ஒட்டுக் கும், சதைக்கு மிடையிற் சேதனமான, அல்லது அசேதனமான அணுக்

Page 131
248 இலங்கைப் புவியியல்
கிடந்து உராய்ந்து கொள்ளுமானுல் அதைச் சுற்றி முத்து உண்டாகு மெனத் இ கால விஞ்ஞானிகள் விள பிருக்கின்றனர். ஆஞல், 17 வருடங்கள் வரை (உதாரணமாக 1908, 25) நீண்ட விளைவில்லாத கால மிருக்க வேண்டியதன் காரணம் ஆன்னும் புதிராகவேயிருக்கிறது. 1905 ஆம் ஆண்டில் 815 இலட் முத்துச் சிப்பிகள் எடுக்கப்பட்டன. இக்குளிப்பாற் கிடைத்த முத்துக்கள் 35 இலட்சம் உருபாய்க்கு விற்கப்பட்டன. இதுவே அண்மையில் நடந்த மிகப் பெரிய முத்துக் குளிப்பாகும். பழங் காலத்தில் முத்துக்குளிப்பு அரசன் கையிலிருந்தது; முத்துத் துறைகளை
Lilo 75.
முத்துச் சிப்பிகள் கரைக்குக் கொண்டுவரப்படுகின்றன
-96) 16ծT ஆட்களேயனுப்பி அடிக்கடி பரீட்சித்துப்பார்ப்பான் ; முத்துக்குளிப் போர்க்கு அவனே அனுமதி கொடுப்பான். பின்னர் இந்த உரிமையை இலங்கை அரசாங்கம் எடுத்துக்க்ொண்டது. இதனல் வரும் இலாபத்தை யும் அரசவருமானத்திற் சேர்த்துக்கொண்டது. அரசாங்கக் கடற்றெழிற் பகுதியினர் வருடத்துக்கு இரண்டுமுறை இலங்கை முத்துத் துறைகளைப் பரீட்சைசெய்து, அவற்றை அபிவிருத்தி செய்வதற்கான வழிவகைகளைக் கண்டு பிடிக்க ஆராய்ச்சிகளைச் செய்வர். எடுக்கும் முத்துச்சிப்பியில் மூன்றிலொரு பகுதி முத்துக்குளிப்போருக்கும் அவர்களுடைய சார்பினர்
 

பொருளாத்ாரப் புவியியல் 249
களுக்குஞ் செல்லும் ; எஞ்சிய குதியை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். மன்னருக்கும் புத்தளத்துக்கு, டயில் முத்துத் துறை அமைந்துள்ள பகுதியை 14 ஆம் படத்திற் “க, நீர் மட்டத்திலிருந்து 5 பாகம் துவக்:th 9 பாகம் வரை கடலடி பாறைகளிடையே முத்துச் சிப்பிகள் க14001ப்படும். முத்துக் குளிப்பு நடந்துவதற்கு எற்ற அளவு முத்து உண் டென அதிகாரிகள் நினைத்தால் உடனே முத்துக்குளிப்போருக்கு ஏலவே அறிவிப்பார்கள்; முத்துக் குளிப்பு பருவக்காற்றுக்களுக்கு இடைப்பட்ட கால மாகிய பெப்புருவரி-ஏப்பிரில் மாதங்களுக்கிடையில் வழக்கமாக நடைபெறும். முத்துக் குளிக்க வரும் தொழிலாளிகள் தங்குவதற்கு மறிச்சுக்கட்டியில் அர சாங்கம் விடுதிகளையமைத்து எனை வசதிகளையுஞ் செய்யும். 1925 இல் நடைபெற்ற முத்துக்குளிப்பில் 15,000 பேர் பங்குபற்றினர். இவர்களிற் பெரும்பாலோர் சில நாட்களே தங்குவர். அவர்களுள் 2,000 முத்துக் குளிப்போர் இருந்தார்கள். இவர்களிற் பெரும்பாலோர் தென்னிந்தியத் தமிழர். கீழைக் கரையிலிருந்து வந்தோர் 1153 பேர். பாரசீகக்குடாக் கடற் பிரதேசத்திலிருந்து வந்த 315 பேருக்கு மேற்பட்ட அராபியர் இருந் தனர். இலங்கையைச் சேர்ந்தவர்கள் 173 பேர் ; இவர்கள் யாழ்ப்பாணத்தி லிருந்தும் கொழும்பிலிருந்தும் வந்தவராவர். 37 நாள்களாக முத்துக் குளிப்பு நடைபெற்றது. 16,000,000 சிப்பிகள் எடுக்கப்பட்டன. அரசாங் கத்துக்குச் சேரவேண்டிய பங்கு, எறத்தாழ 5 இலட்சம் உருபாயை வருமான மாகக் கொண்டுவந்தது. முத்துக்குளிப்பு நடைபெறும் பொழுது விடுதி களிற் சனங்களின் நடமாட்டமதிகமுண்டு ; கடைகள் ஆங்காங்குக் காணப்படும் ; அயலேயுள்ள குளங்களிலிருந்து குடிதண்ணிர் கொண்டு வந்து சுத்தமாக்கி வைத்திருப்பார்கள் ; சிப்பிகள் குவியல் குவியலாகக் குவிக்கப்பட்டு எலத்தில் விற்கப்படும் ; முத்து 6ாந்தச் சிப்பியிலிருக்கு பென்பது எவரும் அறியமுடியாத விடயமாதலாற் சிப்பிகளை வாங்கும் முயற்சி ஒரு பெரிய சூதாட்டமாகவேயிருக்கும். பிரதானமாகச் சோனகரே இவ்வியாபாரத்திலீடுபடுவர்.
வெறும் இருவகைச் சிப்பிகள் இலங்கைக் கடல்களிலுண்டு. ஒன்று உணவுக்கேற்றது ; அது ஆற்று முகத்துவாரங்களிற் பெரும்பாலும் காணப் படும். ஐரோப்பியர் இதைப் பெரிதும் விரும்பியுண்பர். சிங்களர் இதை உணவுக்கு எடுத்துக்கொள்ளமாட்டார். மற்றையது “சன்னற்கண்ணுடிச் ரிப்பி " எனப்படும் ; ஏனெனில் இச்சிப்பியினேட்டிலிருந்து சிறிய சன்னற் கண்முடிைகள் செய்யப்படுகின்றன. இலங்கையில் இல்லாவிட்டாலும் வெளி நாடுகளில் இது செய்யப்படுகிறது. திருக்கோணமலைத் துறைமுகத்தை யடுத் துள்ள ஆழமற்ற தம்பலகாமக் குடாவில் இந்தச் சிப்பிகள் அதிகம் உண்டு. இன்னியாச் சோனகரே இச்சிப்பிகளைக் குளித்தெடுப்பர். இச்சிப்பி யிலுள்ள முத்துக்கள் உருவத்தில் ஒழுங்கற்றவை ; சாதாரண முத்துக் களேப் போல ஒளியுடையனவல்ல. மலிவான நகைகள் செய்ய இம்

Page 132
250 இலங்கைப் புவியியல்
முத்து இலங்கையில் உபயோகிக்கப்படுகிறது; இம்முத்தை அரைத்து மருந், துக்குப் பயன்படுத்துவர். வெற்றிலையோடு சாப்பிடவும் உபயோகிக்கப்படு கிறது. வரலாற்றுப் புவியியல் என்ற அத்தியாயத்தில் மேற்கோளா கக் காட்டிய பகுதியிலிருந்து, பணக்காரர் வெற்றிலையோடு முத்தைச் சேர்த்துச் சாப்பிடுவது பழங்காலந் தொட்டே பழக்கமாய் வந்ததென்பது தெளிவாகிறது.
பாக்குத் தொடுவாய்ப் பிரதேசத்திற் சங்கு குளிப்பார்கள்; சங்கு வளையல் முதலியன செய்ய உதவும் ; கோவில்களில் ஊதுவதற்கும், அபிடேகஞ் செய்வது போன்ற கிரியைகளுக்கும் உதவுகிறது. துரத்துக்குடியை யடுத் துச் சங்குப் படுக்கையுண்டு. சங்கு குளிப்போர் இந்தியாவிலிருந்தே வருகிறர்கள். 175 இலட்சம் சங்குகள் இலங்கைப் படுக்கைகளிலிருந்து வருடந்தோறும் பெறப்படுகின்றன. இந்தியப்படுக்கைகளிலும் இலங்கையில் மூன்று மடங்கு அதிகம் சங்குகள் கிடைக்கின்றன.
ஒருவகைக் கடல் அட்டையும் இலங்கைக் கடல்களிலுண்டு. சிறந்த இனங்கள் யாழ்ப்பாணத்தை யடுத்துக் காணப்படுகின்றன. கருவா. டாக்கிய கடல் அட்டையைச் சீனர் பெரிதும் விரும்பியுண்பர். முன் னெல்லாம் யாழ்ப்பான மீன்பிடிகாரர் கடல் அட்டையை ஏராளமாக
எற்றுமதி செய்தனர். பின்னர் இத்தொழில் மறைந்துவிட்டது.
இலங்கை மீன்பிடித் தொழிலை எவ்வாறு வளர்க்கலாமென அரசாங்கம் அண்மையில் ஆராய்ச்சிகள் நடத்தி வந்தது. இலங்கையின் குடிசனத் தொகை அதிகரித்து வருகிறது. இலங்கைக் கடல்களில் இலங்கையின் சனத் தொகை முழுவதற்கும் உணவு உதவக் கூடிய அளவுக்கு மீன்' உண்டு ; அதனைப் பயன்படுத்த மீன்பிடித்தொழிலாளர்க்கு உற்சாகமளிக்கவேண்டும். அதனல் வெளி நாடுகளிலிருந்து மீனை இறக்குமதி செய்ய வேண்டிய சந்தர்ப்பம் எங்களுக்கு உண்டாக மாட்டாது. இதுவரை மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு மூன்று யோசனைகள் கூறப்பட்டுள்ளன.
(அ) மீனைக்குளிர் அறைகளிற் போட்டுவைப்பது பற்றிய அறிவைப் பரப்பு
தல் ; கருவாட்டுத் தொழிலுக்கு உற்சாகமளித்தல். (ஆ) இலங்கை மீன்பிடிகார்ர் இது வரை சென்று மீன்பிடியாத கடல் களை ஆராய்ந்து அறிவது. ஆழ்கடல் மீன்பிடிமுறைகளை மக்கள் அனுசரிக்கச் செய்வது. . இ) மீன்பிடித் தொழிலைப் பெரிய முறையில் வளர்க்கக்கூடிய வகையிற்
படித்த வாலிபரை அத்தொழிலில் ஈடுபடச் செய்தல். ሰ
குளிர் அறையில் மீனைப் பாதுகாத்து வைக்கும் முறையை மக்கள் அறியத்து வங்கினல் மீனைப் பல நாட்கழித்தும், இலங்கையின் எல்லாப் பாகங்களுக்கும் அனுப்பக்கூடிய வழியுண்டு. மூலதனமுள்ளவர்களே கருவாட்டு உற்பத்தி

பொருளாதாரப் புவியியல் 25
யைப் பெரிய அளவிற் செய்ய முடியும் ; தனிப்பட்ட மீன்பிடிகாரர் பிடித்த மீனை உடனே விற்பதனல் அதிக வேலை செய்யாமலே சுலபமாக நல்ல பணத்தைச் சம்பாதிக்கக் கூடியதாயிருக்கும் ; மேலும் இருப்புப் பாதைக்குப் பக்கத்திலுள்ளவர்களுக்கு இது சுலபம் ; இதனல், தனிப்பட்ட மீன்பிடிகாரர் கருவாடு செய்வதில் அதிகம் ஊக்கங் கொள்வதில்லை. ஆனல், கருவாடு உணவுப் பொருள்களுள் முக்கியமான ஒரு இடத்தை வகிப்பு தால், அதற்கு அதிக தேவை எற்படுகிறது. எனவே, அதைப் பெரிய அளவில் உற்பத்திசெய்வதால் நல்ல இலாபம் உண்டாகும். ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை விருத்தி செய்ய முடியுமா என்பதை அறிவதற்கு அரசாங்கக் கடற்றெழிற் பகுதி பல ஆராய்ச்சிகளை நடத்திவந்திருக்கிறது. இலங்கைக்கு அணிமையில் இரண்டு விசாலமான ஆழ்கடல் மீன் துறைகள் உண்டெனக் காணப்பட்டது. (14 ஆம் படத்தைப் பார்க்க). இதில் ஒன்று பேதுருக் கடன்மேடை, இது 650 சதுரமைல் விசாலமானது; காங்கேசன்துறையி லிருந்து சில மணி நேரத்திற் சென்றடையக் கூடியது; மற்றயைது உவட்சுக் கடன் மேடை, மன்னர்க் குடாக் கடலையடுத்துக் குமரிமுனைக்கு அப்பாற் கொழும்பிலிருந்து 18 மணி நேரத்திற் கப்பலிற் சென்றடையக் கூடிய தூரத்திலுள்ளது. இது 2,500 சதுர மைல் பரப்புடையது. இம்மேடைகளிற் பெரிய மீன்பிடிகப்பல் மூலமே மீன்பிடிக்கலாம். கடல் ஆழத்திலுள்ள பெரிய மேடைகளிற் பெருமளவில் மீன் பிடிப்பதற்குப் பல தேசங்களில் இந்த முறையே கைக்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திலாந்திக்குச் சமுத்தி ாத்திலுள்ள நியூபண்ணிலாந்துக் கடன்மேடைகளிலும் பிரித்தானியாவுக்குச் சமீபத்தில் வடகடலிலுள்ள தொகர் கடன்மேடையிலும் இம்முறை பயன் படுத்தப்படுகிறது. சிறிய நீராவிக் கப்பல்கள் பெரிய வலைகளைக் கடலின் அடித் தளத்தில் தொங்கவிட்டு இழுத்துக் கொண்டு செல்லும் ; கப்பலிற் குளிர் அறைகள் நிறைய உண்டு ; பிடித்த மீன்களை அவ்வறைகளிற் போட்டுப் பல மாதம் கெடாமல் வைத்திருக்கலாம். இம்முறைப்படி மீனைப் பழு தின்றி ஆறு மாதத்துக்கு மேலாகவும் வைத்திருக்கலாம். வட கடலிற் பிடித்தமின், இலங்கையிலுள்ள ஐரோப்பியரின் உணவுக்காக இங்கே ஒழுங்காக அனுப்பப்பட்டுவருகிறது. இலங்கை அரசாங்கம் அண்மையில் மீன்பிடிக்கப்பலொன்றை வாங்கி அதன்மூலம் சில வருடமாக ஏராள மான மீனைப் பிடித்துவருகிறது. இதற்கு நாம் மேலே (இ) பிரிவிற் கூறியபடி படித்தவர்கள் தொழிலில் ஈடுபடவேண்டிய தவசியம் : ஆழ் கடல் மீன்பிடித் தொழிலை அபிவிருத்தி செய்வதானல் அது அவசியமே. சிங்களர் இயற்கையாகவே கடலோடுவதில் மோகமில்லாதவர்கள். அதற் கொரு காரணம் அவர்களுக்குத் தேவையான பொருள்களை உள்ளூரி லேயே அவர்கள் பெறக்கூடியதாயிருந்தமையே. அதனல், வெளிநாடு களுக்குச் சென்று பொருள்களைப் பெறவேண்டுமென்ற ஊக்கம் அவர் களுக்குண்டாகவில்லை. தீவாந்தரங்களில் வாழும் மக்களுக்கு இயல்பாகவே யுள்ள கடலோடும் ஊக்கமும், ஆர்வமும் சிங்களரிடையேயில்லை. எனவே,

Page 133
252 இலங்கைப் புவியியல்
பெரிய கப்பல்களை யோட்டிக் கடலிற் செல்வது அவர்களுக்குப் புதுப் பயிற்சியாகவே காணப்படும் ; அதனுல் அத்தொழிலைப் படிப்பு ஓரளவுக் குள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். முன்னெல்லாம் மீன்பிடித்தல் சிறிய அளவிலேயே நடைபெற்றது. அதுவும், மீன்பிடித் தொழிலைப் பரம் பரையாகச் செய்து வந்தவர்களே அதிலீடுபட்டனர். இப்பொழுது சாதிக் கட்டுப்பாடு உருக்குலைந்து வருகிறபடியால், இந்த வேலையில் இன்ன சாதி யினர்தாமீடுபடவேண்டுமென்ற நியதி கிடையாது. கொழும்பையடுத்துள்ள கடற்றெழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் உத்தியோகம் புரிய முயன்று வருகின்றனர். உத்தியோகத்தில் அதிக வருமானமும், ஒய்வு நேரமு முண்டு. நல்லபடிப்பைப் பெறும் வகுப்பினர் சட்டம், வைத்தியம் போன்ற துறைகளில் ஈடுபட முயல்கின்றனர். தொழில் முறைகளில் அவர்கள் கவனஞ் செலுத்துவதில்லை. ஆனல், கல்வியறிவு பெற்றவர்கள் சில வேலைகளைப் படியாதவர்களிலும் விசேடமாகச் செய்வார்கள். ஏனெனில், தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைத்து, தாபனங்களைத் திறம்பட அமைத்துக் கரு மங்களைச் செய்வதற்கு அவர்களுக்குத் திறமை அதிக முண்டு. இத்தகைய படித்த அறிவாளிகளே இலங்கை மீன்பிடித் தொழிலை விருத்திசெய்யக் கூடியவர்கள். பணமுள்ளவர்கள் வள்ளங்களையும் ஏனைச் சாதனங்களை யும் வாங்க முதலைப்போடுதல் வேண்டும். போட்டுத் துணைசெய்வார்க ளானல் தொழில் வளரும் ; அத்தகைய துணை வறிய மீன்பிடிகாரருக்கு அவசியம்.

மூன்றும் பகுதி-ஐந்தாம் அத்தியாயம்
கைத்தொழில், பொருள் உற்பத்தி, வியாபாரம்
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலு முள்ளவைபோன்ற உற்பத்தித்தொழில் கள் இலங்கையிற் கிடையா. கைத்தொழில் நாடுகளுக்கு உணவையும், மூலப் பொருள்களையும் உதவுவதே விவசாயத்தின் நோக்கம் , இலங்கையில் முக்கியமாக விவசாயமேயுண்டு. பழங்காலத்தில் இலங்கை மக்கள் கைவினை யில் தேர்ச்சிபெற்றிருந்தனர். அவர்கள் பலவகையான கைப்பணித்துறை களிற் சிறந்து விளங்கினர்; இவை பெரும்பாலும் குடிசைத் தொழிலாக வீட்டிலே செய்யப்பட்டன; பொது வேலைகளுக்குத் தேவைப்பட்ட சமயங் களில் அரசன் கைப்பணி செய்வோரை எற்படுத்திப் பெருமளவில் அதைச் செய்வித்து வந்தான். இரத்தினக் கல்வெட்டுதல், உலோக வேலை, நெசவு வேலை, சிற்ப வேலை என்பனவே இவற்றுள் முக்கியமான கைவினைகள்ா யிருந்தன. மேற்கு ஐரோப்பாவிலும், பிரித்தானியாவிலும் கைத்தொழிற் புரட்சியுண்டானது. அதன் பயணுக எண்ணற்ற வாழ்க்கைப் பொருள்கள் மிகக் குறைவான விலையில் உலக மெங்குங் கிடைக்கக்கூடிய வசதியுண் டானது; இவை இலங்கைச் சந்தைகளிலும் மெதுவாகத் தலைகாட்டின : தனற் குடிசைத் தொழில்களுக்குப் பெரிய நட்டமுண்டானது. ஐரோப் பியர் இலங்கைக்கு வந்த காலத்தில் நாட்டிலுண்டான குழப்பம் காரண மாய், இப்பொருள்கள் இலங்கைக்கு வருவது மிகச் சுலபமாயிருந்தது. இதனற் குடிசைக் கைத்தொழில்கள் முற்றக மறைந்துபோகாமல் உயி ரோடிருந்தமை பெரிய காரியமாகும். ஆனல், இரண்டு சிறு தொழில்கள் போதிய இலாபத்தைத் தரக் கூடியினவாயிருந்தன. அவற்றின் உற்பத்திப் பொருள்களை வெளிநாட்டவர் வாங்கி ஆதரித்த படியால் அவை தொடர்ந்து நடைபெற்று வந்தன. அவை ஆபரணத் தொழிலும், வெண்கலச் சித்திர வேலையுமாகும். தங்கம், வெள்ளி யென்பவற்றல் அழகிய நகைகளைச் செய்
வதிலும், இரத்தினங்களைப் பதிப்பதிலும் இலங்கை ஆபரணத் தொழிலாளர் மிகுந்த திறமை பெற்றிருந்தனர். இவ்வேலைக்கு இயந்திர சாதனத்திலும் கைத்திறonயே மிக வேண்டப்படுவது. m 3. . . .
ஒவ்வொரு கிராமத்திலும் பெரும்பாலும் ஒவ்வொரு பொற்கொல்லர்
இருப்பார். காலி, அம்பலாங்கொடை, களுத்துறை, "பாணந்துறை,
கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மிகத் திறமையுள்ள தொழி
லாளர் இருக்கிறர்கள். அண்மையில் இந்தியாவிலும் இலங்கையிலும் குடி:
சைக் கைத்தொழில்களை முன்னேற்ற வேண்டும் என்ற ஒரு பெரிய
25.3

Page 134
254 இலங்கைப் புவியியல்
இயக்கம் உண்டாகியிருக்கிறது. ஐரோப்பிய வியாபாரிகள் இந்நாடுகளில் மிக மலிவான விலைக்கு ஏராளமான கைத்தொழிற் பொருள்களைக் கொண்டு வந்து குவித்துவிட்டனர். வறிய நிலையிலுள்ள விவசாயிகள் இப்பொருள்களை வாங்கத் துண்ட்ப்ப்ட்டனர். இவர்கள் தமது சொந்தக் கைத்தொழில்களைக் கைவிட்டு, இவ்வந் நிய தேசப் பொருள்களை வாங்குவதற்குத் தேவையான மூலப் பொருள்களை உற்பத்தி செய்ய முற்பட்டனர். உள்நாட்டுத் தொழில் கள் மறைந்து போனமை ஒரு பெரிய கெடுதி யென்றும், அதனுல் உள்ளூர்ப் பணம் பெருந் தொகையாக வெளிநாடுகட்குச் செல்லுகின்றதென்றும், முன்னர் சீலை, மட்பாண்டம், உலோகப் பொருள்கள் முதலியவற்றை உள் ளூர்த் தேவைக்குப் போதுமான அளவு செய்து உதவிய பெருந் தொகைத் தொழிலாளர் வேலையிழக்க நெரிட்டதென்றும், இந்திய இலங்கை நாடு களிலுள்ள மக்களிற் பெரும்பாலோர் எண்ணத்தலைப்பட்டனர். இயந்திரத் திற் செய்யப்பட்ட பொருள்களிலும் கையிற்ை செய்யப்பட்டவை சிறப் புடையன. இவ்வகையான கைவினையை அழிய விட்டால் உள்ளூர்க் கலை மரபே அழிந்துவிடும். ஒவ்வொரு நாடுந் தனக்கெனவுரிய தனிக்கலைப் பண் பைக் கொண்டிருப்பது நன்று. கைவினைத் திறமையுடைய கலைஞரின் விசேட திறமையைப் பயன்படுத்தாமல் விடுவது பெருங் கெடுதியாகும். இலங்கையிலுள்ள சாதாரண்க் கிராமவாசிகள் செய்த சில கலைப்பொருள் களை வெளி நாடுகளிலுள்ள நூதனசாலைகளில் உயர்ந்த கலைப் பொருள் களாகக் காட்சிக்கு வைத்திருக்கிறர்கள். அன்றட உபயோகத்துக்காகச் செய்யப்பட்ட பல பொருள்களின் அழகைக் கண்ட அந்நிய நாட்டுப் பணக் காரர்கள் அவற்றைத் தமது வீட்டை அலங்கரிப்பதற்காக இங்கிருந்து வாங்கிச் செல்லுகிறர்கள். கிணற்றிலிருந்து நீர் எடுப்பதற்காக உபயோகிக்கப் படும் சாதாரணமான நீர்க்குடம் இங்குள்ளவர்க்கு அழகுடையதாகத் தெரி வதில்லை. அந்நிய நாடுகளில் அதைப் பெரிதாகப் பாராட்டுவர் ; அன்றியும் வியாபாரத்தின் பொருட்டு இக்காலத்தில் உற்பத்தி செய்யப்படும் அலங் கோலமான பொருள்களே அதனேடு ஒப்பிடும்பொழுது அதன் உயர்வு விளங்கும். ஒரே ‘அமைப்புள்ள மலிவான அலங்கோலம் நிறைந்த பொருள் கள்மீது உலகின் பல பாகங்களிலுமுள்ள மக்களின் அதிருத்தி அதிகரித்து வருகிறது. அதல்ை அவர்கள் கைவினைப் பொருள்களையே பெரிதும் விேரும்புகிறர்கள்; அதனல் அரசாங்கமும், இலங்கையின் முன்னேற்றத் திற் கருத்துள்ள சீமான்களும், அறிவாளிகளும் உள்ளூர்க் கை வினைப் பொருள்களேப் புனருத்தாரணஞ் செய்ய வேண்டுமென முயன்று வருகிறர்கள்.

பொருளாதாரப் புவியியல் 255
இலங்கையிற் சிறப்புப் பெற்ற தொரு தொழில் அரக்குப் பூச்சுவேலையாகும். இத்துறையிற் பழங் காலத்தில் இலங்கை யப்பானேடு வைத்து எண்ணப்பட்டு வந்தது. உலகிலேயே இவ்விரு நாடுகளும் இத்துறை யிற் சிறந்து விளங்கின. இந்தியக் காடுகளிலுள்ள சில மரங்களின் கிளை களைச் சுற்றி ஒரு பூச்சியினுல் உண்டாக்கப்படுவதே அரக்கு. மரப்பாண்டங் களைப் பாதுகாப்பதற்கு இது மிகச் சிறந்த பொருளாகும். வானிசு எனப் படும் பூச்சு இதிலிருந்தே செய்யப்படுகிறது. பூச்சுக்குப் பதிலாக, அல்லது பூச்சின் மேல் வாணிசு பல தேசங்களிற் பூசப்படுகிறது. வண்ணத்தோடு வாணிசு கலக்கப்படுவதில்லை. ஆசியாவிலுள்ள சில நாடுகளில், பழங் காலத்தில் மக்கள். அரக்கோடு நிறத்தைச்சேர்க்கப்பழகினர். இதனல் மரத்தை நன்றகப் பாதுகாக்கக்கூடியதாயிருந்தது. இம்முறையைக் கண்; டறிந்தவர்கள் இதை இரகசியமாக வைத்திருந்து தமது குடும்பத்தவர்க்கோ இனத்தவர்க்கோ சொல்லிவைத்தனர். அதை யறியாதவர் போலிமுறை களைப் பின்பற்றினர். இலங்கையில் இரண்டு வகையான அரக்கு உபயோ கிக்கப்பட்டுவந்தது. இதிற் சிறந்த அரக்கு வகையின் ஆக்கம் இரகசியமாக வைத்திருக்கப்பட்டுவந்தது. இந்த இரகசியமான தொழில் அறிவு, மறைந்து போகுமோ என்ற நிலைமை அண்மையிலுண்டானது. ஏனெனில் இதன் அந்தரங்கத்தைச் சில குடும்பத்தினரே யறிந்திருந்தனர். இதை மற்றையவர்க் கும் அறியப்படுத்துமாறு பல முயற்சிகள் செய்யப்பட்டன; ஆனல் ஒன்றும் பலிக்கவில்லை. இந்த இரகசியத்தை வெளிவிடக்கூடாதென்ற நம்பிக்கை சில கண்மூடிக்கொள்கைகளோடு கலந்திருந்ததாகத் தெரிகிறது. தங்காலை மாவட்டத்திலுள்ள அங்குறுமடுவை என்ற கிராமத்திற்றன் சிறந்த அரக்கு வேலே நடைபெறுகிறது. இப்பொழுது சில காலமாக இந்த வேலை மலி வான சில பெட்டிகளுக்குச் செய்யப்படுகிறது ; அதனுல் இவ்வேலையின் மதிப்பே குணறந்துவருகிறது.
இலங்கைத் தச்சுவேலைக்காரர் நல்ல பொருள்களைச் செய்கிறர்கள் ; மரப் பொருள்களுக்கும் மரவேலைக்கும் பேர்போன இடம் மொறட்டுவை. மாத்திற் சித்திரவேலை செய்வதற்குக் காலியும் தொடந்துவையும் புகழ் பெற்றவை. களுத்துறையிற் புல்லினலும் பேtந்துமரம் போன்ற ඉ(5 மத்தின் இலையினலும் பெட்டிகளும், கடகங்களும் பாய்களும் தொப்பி ஆளும் செய்கிறர்கள். அண்மையில் இத்தொழில் வளர்ச்சியடைந்துவரு விறது. இலங்கைக்கு வரும் அந்நிய நாட்டினர் இங்கு செய்யப்படும் வேலைப் பாடுடைய கைப்பைகளையும், பெட்டிகளேயும் பெரிதும் விரும்பி வாங்குவர்: கொழும்பிலுள்ள கடைகளில் இப்பொருள்களதிகமாக விலையாகின்றன.

Page 135
256 இலங்கைப் புவியியல்
மட்டக்களப்பிலும் இத்தகைய பாய்களும் கடகங்களும் புல்லினலும் பனை யோலையினலுஞ் செய்யப்படுகின்றன. கொழும்பிலே பிரம்பினுற் கதிரை கள் செய்யப்படுகின்றன. இதற்குத் தேவையான பிரம்பு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆமையோட்டினுற் சில பொருள்கள் காலிப் பகுதியிற் செய்யப்பட்டு வந்தன. அவை இப்போது குறைந்துவருவதற்குக் காரண்ம், அப்பகுதிகளில் ஆமைகள் குறைந்துவருவதேயாகும்.
கண்டி நூதனசாலை, உள்ளூர்க் கைப்பணிச் சங்கம் என்பன செய்த முயற்சிகளின் பயணுகக் கண்டிப் பித்தளை வேலைகள் மறுபடியும் உயிர் பெற்றுவருகின்றன. கண்டி நூதனசாலையில் வேலைக்கமர்த்தப்பட்ட கை வினைஞர் பித்தளையிலும் வெள்ளியிலும் சிறந்த வேலைப்பாட மைந்த பொருள்களைச் செய்கிருர்கள். இதனற் கண்டிச் சித்திர முறைகளையறிந்த எனைக் கைவினைஞரும் ஊக்கம்பெற்று அவ்வேலைகளில் முனைகின்றனர். இக்கலைஞர் பழைய அலங்கார உருவங்களைப் பயின்று அவற்றைத் தமது வேலைக்குப் பயன்படுத்துகின்றனர். அதனல் அவர்கள் செய்யும் பொருள் கள் இலங்கைக்குரிய பண்பை விளக்குவனவாயிருக்கின்றன.
சிற்ப வேலையும் கல்லிலே சித்திரஞ்செதுக்குந் தொழிலும் பெரும் பாலும் மறைந்துவிட்டன. ஆனல், அவை இப்பொழுது மறுமலர்ச்சியடை ந்து வருகின்றன. கொழும்பு கொச்சிக்கடையிற் கட்டப்பட்டு வரும் புதிய சிவாலயத்தில் நடைபெறும் அழகிய கல்வேலையைப் பார்க்குமிடத்து, இக்காலச் சிற்பிகள் புராதனச் சிற்பிகளுக்குத் திறமையிற் குறைந்த வர்களல்லரென்பது தெரியும். இவர்கள் தென்னிந்தியாவிலிருந்து வந்து இங்கே குடியேறியவராவர்.
மட்பாண்டங்களைப் பொறுத்தவரையில், அவற்றில் வரையப்படும் அலங் கார உருவங்கள் மிகச் சிறப்புடையன. பாண்டங்கள் அவ்வளவு சிறப் புடையனவல்ல ; இலங்கைச் சீனக்களியிலிருந்து பீங்கான் செய்வது சுலப மன்று; அதற்குக் காரணம் வேறேரிடத்திற் கூறியுள்ளோம். எனவே, அதற்குப் பதிலாக மட்பாண்டமே செய்யப்படுகிறது. அழுத்தங் கொடுக்கும் முறை தெரியாதபடியால் மட்பாண்டச் செய்கைமுறையும் புராதனமான முறையாகவேயிருந்துவந்தது. ஆனல், அண்மையில் அழுத்தங் கொடுக்கும் முறை புகுத்தப்பட்டிருக்கிறது. நீர்க்குடம், கெண்டி, சட்டிபானை முதலிய மட்பாண்டங்கள் இலங்கை எங்குமே செய்யப்பட்டு வருகின்றன.

பொருளாதாரப் புவியியல் 257
தும்புப்பாய் பின்னல் தும்புக்கயிறு பின்னல், என்பன மிகப் பழங் காலந் தொட்டே நடைபெற்று வரும் உள்ளூர்த் தொழில்களாகும். மேற்குத் தாழ்பூமிகளில் இவை முக்கியமான தொழில்களாகும். யாழ்ப்பாணத்தை யும் வேறுசிலகுக்கிராமங்களையுந்தவிர மற்றை இடங்களில் நெசவுத் தொழில் மிக்க காலமாக மறைந்துகொண்டே வருகிறது. இலங்கைக் கைநெசவுத் துணிகள் பருத்தியானலென்ன, பட் டாலானலென்ன, சாதாரண உப யோகத்துக்குப் பிரித்தானிய எந்திரத் துணிகளோடு போட்டியிடமுடியாது. எனவே இந்தியப் பட்டுத் துணிபோலப் பொற்சரிகைக் கோடுள்ள உயர்ந்த தரமான பட்டுச் சேலைகளை நெசவு செய்ய உற்சாகமளிக்க வேண்டுமென யோசனை கூறப்பட்டிருப்பதுடன் அதற் கான முயற்சியு மெடுக்கப்பட்டுவருகி றது. இதற்குப் பணமுள்ளவர்கள் ஆதரவளிக்க வேண்டும். ஏனெனில்,
பட்டு, சரிகை போன்ற விலையுயர்ந்த பொருள்களை வாங்குவதற்கு நெசவுத் Lu Lub 76. தொழில் செய்பவரிடம் பொருள் கிடை LOL "&56) Lin யாது. இறேந்தை பின்னுந் தொழில் பெண்களிடையே ஒய்வுகால வேலை யாக வாங்கும் நடத்தப்பட்டு வருகிறது. ஆல்ை, இலங்கைக்கே சொந்தமான அலங்கார மாதிரிகளை இவர்கள் கை லிட்டு விட்டு ஐரோப்பிய மாதிரிகளைப் பினபற்றுகிறர்கள். இப்பொழுது, பழைய அலங்கார மாதிரிகளைத் திரும் பவும் கொண்டுவர வேண்டுமென்ற முயற்சி, மற்றைத் துறைகளில் இருப் பது போல, இங்கு மிருந்துவருகிறது.

Page 136
258 இலங்கைப் புவியியல்
இயந்திரங்களும், இயந்திரத் தொழிற்சாலைகளும் இலங்கையில் அதிகம் ஆரம்பிக்கப்பட வில்லை. யுத்தகாலத்திலுண்டான பொருட் பஞ்சத்தினலும், கட்டுப்பாடுகளின் பயனகப் பொருள்களின் விலை எறினதாலும், பொருள் களை எற்றிவருவதற்குக் கப்பல்களில் இடமில்லாதிருந்தமையாலும் வெளி நாட்டுப் பணமாற்றிற் சிக்கன மனுசரிக்கப்பட்டமையாலும், இலங்கையிற் கைத்தொழில்கள் மெதுவாக வளர்ச்சியட்ையத் துவங்கின. அதனல் பல தொழிற்சாலைகளாரம்பிக்கப்பட்டன. 1939 ஆம் ஆண்டில் கயிற்றுத் தொழிற் சாலை ஆரம்பிக்கப்பட்டது. 1941 இல் ஒட்டுப் பலகைத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. அதே வருடத்திற் சப்பாத்துத் தொழிற்சாலையுந் தோற் ருெழிற்சாலையுமாரம்பிக்கப்பட்டன. 1942இல் கண்ணுடித் தொழிற்சாலையும் அசற்றிக்கமிலத் தொழிற்சாலையும், உருக்குத் தொழிற் சாலையுமாரம்பிக்கப் பட்டன. 1943 இல் காகிதத் தொழிற்சாலையும் குவினைன் தொழிற்சாலையுந் துவங்கப்பட்டன. 1944 இல் வனைதற் றெழிற்சாலை ஏற்படுத்தப்பட்டது. கடைசியாக 120 இலட்ச உருபாய் செலவில் சீமந்துத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. நீர்வீழ்ச்சி மின்சாரம் மலிவாகக் கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டதும், வேறு பல தொழிற்சாலைகளு முண்டாகலாம். கொழும்பி லுள்ள பல தொழில் நிலையங்களில் தேங்காயெண்ணெய் வடிப்பதற்கும், தும்பினல் பாய், கயிறு என்பன செய்வதற்கும் எந்திரங்களமைக்கப்பட் டிருக்கின்றன. அச்சுத்தொழில், மோட்டர் திருத்துதல், கப்பல் எந்திரங்கள், ஆயுதங்கள், தோட்ட எந்திரங்கள் என்பன சம்பந்தமான பல தொழிற் சாலைகளுமுண்டு. நெருப்புப் பெட்டி, சொக்களெற்று முதலிய பொருள்கள் செய்வதற்குக் காலத்துக்குக் காலம் சிறிய தொழிற் சாலைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. ஆனல், இப்பொருள்களில் உலக வியாபாரத்துறையில் ஏக போக உரிமையுள்ள ஐரோப்பிய தொழிற்சாலைகளுடன் இவை போட்டியிட முடியாத நிலையிலிருக்கின்றன.
வியாபாரம்
விவசாயப் பொருள்களைப் பற்றிக் கூறியவிடத்து இலங்கையின் ஏற்று மதியைப்பற்றிக் குறிப்பிட்டுள்ளோம். இந்த வியாபாரம் படிப்படியாக உயர்ந்துகொண்டே வருகிறது. 1927 இல் 80 கோடி உருபாய்க்கு அதிகமாக வியாபாரம் நடந்தது. இதில் இறக்குமதியைக் காட்டிலும் ஏற்றுமதி மூன்றிலொருபங்கு கூடவாகும். “ 1946 இல் 130 கோடி உருபாய்க்கு வியாபாரம் நடைபெற்றது. இறக்குமதியிலும் எற்றுமதி சற்று அதிகமா யிருந்தது. யுத்தங் காரணமாக வியாபாரப் பொருள்களிலும் வியாபாரஞ் செய்யும் நாடுகளிலும், வித்தியாசங்களுண்டாயின. இம்மாற்றங்கள் எதி துணை நிரந்தரமானவை யென்று கூறமுடியாது. யுத்தநிலை காரணமாக இந்நாட்டிலும் வெளி நாடுகளிலும் புதிய கைத்தொழிற்சாலைகள் தாபிக்கப் பட்டன. இலங்கை அந்நிய நாட்டுடன் செய்துவரும் வியாபாரம் மேலும்

259
பொருளாதாரப் புவியியல்
osaĵigog@appio,- ??ufnsfîrto ugovorņins(gou ao ‘aogopgroopfig) !pg) nuoto)oriusqif).uoc.otcoun sitoovongo gif@agose, os@pholmsson@@@solo *looajış95@ņuelgo głosouuooaj«»No școllang199ųUırmgods) 19şığı 109-8ızın sıajgos? Qørı
* ¿E qiTrı
冷„4 o劑 --• !|28,74%• K ø7/99༡༡།། * / * *一• A? - ? -‘’’’,
• o 「원환체크 . 9; g??!??’’øyż3șo-io ~~^&%$§$%,79 ”\logow/to/fr/9•心 4ơo,9%/* ooooooo/,70 (7,9%见 | soo ogo邝之
•!|-}|多

Page 137
260 இலங்கைப் புவியியல்
மாற்றமடையலாம். உதாரணமாக அரிசி இறக்குமதி குறைந்ததன் பயனுக. இலங்கையில் நெற்செய்கையை விருத்தி பண்ணப் பெருமுயற்சிகள் செய்யப் பட்டன. தனிப்பட்டவர்களும், அரசாங்கத்தாரும் புதிய தொழிற்றுறைகளை ஆரம்பித்தனர். உணவு கைத்தொழிற் பொருள்களாகியவற்றில் இலங்கை முன் இருந்த அளவுக்கு வெளி நாடுகளில் இனியுந் தங்கவேண்டிய அவசியமுண்டாகது. யுத்த காலத்தில் யப்பானிடமிருந்து இலங்கை பொருள்களை வாங்கமுடியாமற் போகவே இந்தியா, அவுத்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் வாங்கத் துவங்கிற்று. இவ்வாறு உண் டான வியாபார மாற்றம் நீடித்து நிற்கலாம் ”
பிரித்தானியப் பேரரசைச் சேர்ந்த தென்னைப் பொருள் எற்று மதிசெய்யும் நாடுகளுள் இலங்கை முதலிடம் வகிக்கிறது. தேயிலை உற் பத்தியில் அது இரண்டாவது இடத்தையும் இறப்பிர் உற்பத்தியில் மூன்ற வது இடத்தையும் வகிக்கிறது. கறுவா, புல்லெண்ணெய் என்பவற்றின் உற்பத்தியில் அது முதலிடம் வகிக்கிறது ; உலகில் மிகச் சிறந்த கொக்கோ இலங்கையிற்றன் உற்பத்தி செய்யப்படுகிறது. கொழும்புத் துறைமுகத்துக்கு வரும் கப்பல்களின் தொகை கூடிவருகிறது. அதற்கு விசேட காரணம், நிலக்கரியில் ஓடாது எண்ணெயில் ஒடும் கப்டல்களுக்கு எண்ணெய் வழங்கு வதற்கு ஒர் எண்ணெய்த் தொட்டி எற்படுத்தப் பட்டமையே. இதல்ை இடச்சுக் கிழக்கிந்திய தீவுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் அதிகரித்துவிட்டது. கொழும்பில் கடல்வழித் தந்தி கம்பியில்லாத் தந்தி வசதிகள் உண்டு. (77 ஆம் படத்தைப் பார்க்க). கொழும்பு முக்கியமான ஒரு விமான நிலையமாகவும் விளங்குகிறது.
விசேடமாக, பிரித்தானியாவிலிருந்து வானெலிக் கருவிகளும், 2LL} கரணங்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. 1927 ஆம் ஆண்டில் வானெ லிப் பெட்டிகளுக்கு 924 உத்தரவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டன. இத்தொகை வருடந் தோறும் பெருகிக்கொண்டேவருகிறது. 1927 ஆம் ஆண்டில் 1275 இலட்சம் நிறை உள்ள 4244 கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கு (பிரதானமாகக் கொழும்புக்கு) வந்தன.

நாலாம் பகுதி
மக்கட் புவியியல் நாலாம் பகுதி-முதலாம் அத்தியாயம் இலங்கையின் குடிசனச் செறிவு
பத்து வருடத்துக்கொரு முறை இலங்கை அரசாங்கம் இலங்கையின் குடி மதிப்பைப்பற்றிப் பல வகையான அறிக்கைகளை வெளியிடுகிறது. இவற்றி லிருந்து இலங்கையின் குடிமதிப்புச் சம்பந்தமான விடயங்களை அறிந்து கொள்ளலாம். பத்து வருடத்துக்கொருமுறை (1871-1931 ஆண்டுவரை) அள விடப்படும் குடி மதிப்பின்படி இலங்கையின் சனத்தொகை" தொகுக்கப் பட்டுளது. பண நெருக்கடி காரணமாக 1931 ஆம் ஆண்டில் எடுக்கப் பட்ட குடி மதிப்புச் சுருக்கமாகவே நடைபெற்றது. யுத்தம் காரணமாக 1941 ஆம் ஆண்டில் மதிப்பெடுக்கப்படவில்லை. ஆனல், சரியான புள்ளி விவரங்கள் பல துறையிலும் தேவைப்பட்டபடியால் நிலைமை திருத்த மடைந்தவுடன் குடி மதிப்பெடுக்கப்படவேண்டுமெனத் தீர்மானிக்கப் பட்டது. அவ்வாறே 1946 ஆம் ஆண்டு மாச்சு மாதம் 19 ஆம் திகதி எடுக்கப்பட்ட குடி மதிப்பின்படி இலங்கையின் சனத் தொகை 6,658,999 எனக் கணிக்கப்பட்டது. இதில் இந்நாட்டைச் சேராத இராணுவத்தினரும் கப்பல் தொழிலினரும் சேர்க்கப்படவில்லை. இதன்படி 1931 ஆம் ஆண்டின் குடிசனத் தொகையிலும் 255 வீதத்தில் குடிப்பெருக்கம் உண்டாகி யிருக்கிறது. இலங்கையில் சனச் செறிவு எறக்குறைய அதிகமென்றே கருதவேண்டும். 1946 ஆம் ஆண்டு மதிப்பின்படி ஒரு சதுரமைலுக்கு 263 பேர் இருந்தனர் எனத் தெரிகிறது. 1931 இல் இலங்கையின் மொத்தக் குடிசனத் தொகை 5,312,548 ஆகும். இதில் 87 வீதத்தினர் கிராம வாசி கள். 13 வீதத்தினர் பட்டினவாசிகள். இக்குடிசன மதிப்பு அறிக்கை மிக வியப்பானதும் அவசியமானதுமாகும். அரசாங்க வெளியீடுகள் விலைப்படும் கந்தோரில் இதை வாங்கலாம். 1921 ஆம் ஆண்டின் குடிசனப் படத் தைக் கவனமாக ஆராய்ந்து சராசரி மரணத்தைக் காட்டும் படத்துடனும் மலேரியாப் பகுதிகளைக் காட்டும் படத்துடனும் (படங்கள் 53, 12) ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அப்படத்தில் உள்ள எண்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வசிக்கும் சனங்களின் தொகையை அம்மாவட்டத்தின் சதுரமைலாற் பிரித்துக் கொள்ளப்பட்டனவாகும். இப்படம் ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில் வாழ
261

Page 138
spन् 8o
2
ԸԾ
ծ 2NԼաngնն)6A &NS иИВИ - Д. Д じ)
2.5ひー 5のの
முல்லைத்தீவு A /0/7/2/է Հt -40
மண்ணுர் மாவட்டA
அறுரதபுரம்
A/72/A All-A
< 50
go
AO/72/74. A
A/72/AA-AA
lid 4 d545672//
AA0/7á// Z ZAð
50 - WOO
2562م- 62O/
ぶのクーふタの
48
படம் 78.
இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில், சதுரமைலுக்குரிய மக்களின் சராசரித்தொகை.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கட் புவியியல் 263
வேண்டிய மக்களைச் சதுர மைலுக்கு இத்தனைபேர் எனக் கணித்து விவரிப்பது அன்று. களுத்துறை, காலி, மாத்துறைபோன்ற சில மாவட்டங் களில் மக்கள் ஐதாகவே வசிக்கிருர்கள். ஆனல் யாழ்ப்பாணம், திருக் கோணமலை, மட்டக்களப்புப் போன்ற வேறு மாவட்டங்களில் மக்கள் ஒரே பகுதியில் நெருக்கமாக வசிப்பதால் எஞ்சிய பாகம் வெறுமை யடைந்திருக்கிறது. குறிப்பாக யாழ்ப்பாணச் சனச்செறிவை நோக்கினல் வியக்கத்தக்க முறையில் அது அமைந்திருப்பதைக் காணலாம்.
குடா நாட்டுப் பகுதியில் ஒரு சதுர மைலுக்கு 500 உக்கு மேற்பட்ட சனங் கள் வசிக்கிருர்கள். குடா நாடொழிந்த பெருநிலப் பரப்பில் ஒரு சதுர மைலுக்கு 20 பேர்கூடக் கிடையா. ஒவ்வொரு பகுதியிலும் என் னென்ன சாதியினர் எவ்வெவ்விகிதத்தில் வசிக்கின்றனர் என்பது சாதிகள் என்ற அத்தியாயத்தை அடுத்துள்ள படங்களில் தரப்பட்டுள்ளது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட மொத்தம் 4,504,549 பேர் 1921 ஆம் ஆண்டில் இலங்கையில் வசித்தனர். கடந்த ஒரு நூற்றண்டில் இலங்கையின் குடிசனத் தொகை நாலுமடங்கு அதிகரித்திருக்கிறது. பெண் களிலும் ஆண்களே சற்று அதிகமாகக் காணப்படுகின்றனர். இலங்கை ஒரு விவசாய நாடு ; அந்த முறையிற் பார்க்கும்பொழுது அதன் சனச் செறிவு, ஒரு சதுர மைலுக்கு இருக்கவேண்டிய அளவிற்குக் கூடவே காணப்படுகிறது. கனடா அவுத்திரேலியா போன்ற புதிதாக வளர்ச்சியுற்ற விவசாய நாடு களில் சனச் செறிவு குறைவு. இலங்கையிலும் 120 மடங்கு பெரிதான அவுத்திரேலியாவில், இலங்கையிலும் பத்து இலட்சம் பேரே அதிகமாகக் குடியேறியுள்ளனர். ஆனல், இங்கிலாந்து, பெல்சியம் போன்ற சிறிய கைத் தொழில் நாடுகளில் இலங்கையிலும் அதிகமான சனச்செறிவுண்டு. தென் கிழக்கு ஆசியாவிலுள்ள பழைய விவசாய நாடுகளிற்றன் உலகிலேயே மிகச் செறிவான குடிப்பரம்பற் பிரதேசங்களுண்டு. இவை கங்கை வடிநிலம் போன்ற வண்டற்படிவுள்ள நெல்விளேயும் பூமிகளாகும். ஒரு விவசாய நாட்டுக்கு, ஒரு சதுர மைலில் 250 பேருக்கு அதிகமாக வசிப்பது மிகச் செறிவான குடியேற்றமென்றே கூறல் வேண்டும். வருடம் முழுவதும் பயிர்ச் செய்கை நடத்த முடியாத பகுதிகளில் இத்தகைய சனச் செறிவு இருப்பது முடியாத காரியமாகும். உதாரணமாகக் கங்கைவடி நிலத்தில் ஒரு சதுர மைலுக்கு 512 பேருக்கு அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களிற் பெரும்பாலோர் விவசாயத்திலீடுபட்டிருக்கின்றனர். ஒன்று நேரடியாகப் பயிர்ச் செய்கையிலிடுபட்டுள்ளனர்; அல்லது விளைபொருள் களை வழங்குவதிலோ, எற்றுமதி செய்வதிலோ ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையின் குடியடர்த்தியை விவரமாக ஆராயும்பொழுது மக்கள்
பெருந் தொகையாகச் சில இடங்களிலும் சிறு தொகையாகப் பல இடங் களிலும் வசிப்பதைக் காணலாம்.

Page 139
264 இலங்கைப் புவியியல்
இலங்கையின் மூன்றிலொரு பகுதியிற் குடிசனத் தொகை மிகக் குறைவு. குளங்களை அடுத்து நெல் விளைவித்தால் மேலும் அதிகமான சனங்களுக்கு, முன்னர்க் குறிப்பிட்டவாறு உணவளித்து ஆதரிக்கலாம். தீவின் மேற்கிலும் தென்மேற்கிலும் இலங்கைக் குடித்தொகையில் நாலிலொரு பகுதி உண்டு. இப்பிரதேசம் இலங்கையில் எழிலொரு பங்காகும். இலங்கையின் முழுப் பரப்பின் முப்பத்தாறிலொரு பகுதியான கொழும்பு மாவட்டம் என்னும் சிறுபகுதியில், இவர்களுள் எறக்குறைய பத்திலட்சம் பேர் வசிக்கிறர்கள். மேலும் கொழும்பு நகரில் மட்டும் இரண்டரை இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் வசிக்கிருர்கள். (இலங்கைப் பட்டினவாசிகளில் 70 விகிதத் தினர் கொழும்பிலே வசிக்கின்றனர்). இலங்கையில் தாழ்பூமியின் தென் மேற்குப் பகுதியில் பருவக்காற்று நாடுகளிற் காணப்படும் சிறந்த பிர தேசங்களோடு ஒப்பிடக் கூடிய ஒரு பிரதேசம் அமைந்துள்ளது. இது மிகவும் வளம்மிக்க பகுதி. கங்கை வடிநிலப் பகுதியைப் போல இங்கும், மக்கள் பயிர் செய்தும் விளைபொருள்களை ஏற்றுமதி செய்தும் வரும் வருமா னத்தைக் கொண்டு சீவனம் நடத்தக் கூடியதாய் இருக்கிறது. எற்றுமதி விடயத்தில் இலங்கைக்குத் தேவையான எற்றுமதிகளை நடத்துவதற்கு கொழும்பு போன்ற பெரிய துறைமுகம் தேவையில்லை. இருந்தும் அது உலக வியாபாரப் போக்குவரத்துப் பாதையில் ஒரு களஞ்சியமாக இருப்ப தால், அது அவ்வளவு பெரிதாக அமையவேண்டியதாயிற்று. குடிசனச் செறிவு பலகாரணங்களால் உண்டாகிறது. கொழும்பை விட, ஏனை இடங் களிற் சதுரமைலுக்குரிய மக்கள் வீதம் பல காரணங்களிற்றங்கியுளது. இவற்றுள் சில முக்கியமான காரணங்களைக் கீழே காண்க :-
(அ) மலேரியாக் கொசு,
(ஆ) நில வளம்,
(இ) தரைத் தோற்றம்,
(ஈ) மழை வீழ்ச்சி,
(உ) பயிர் வகை,
(ஊ) ஐரோப்பிய படையெடுப்புடன் சம்பந்தப்பட்ட பழைய ஆபத்துப்
பிரதேசங்களோடுள்ள தொடர்பு.
இலங்கையின் முழுப் பரப்பில் 23 வீதமே இப்பொழுது செய்கைபண்ணப் படுகிறது. ஆனல், இவ்விகிதம், படிப்படியாக உயர்ந்து வருகிறது. அரைப் பகுதிக்கு மேலாகப் பயன்படுத்தக்கூடிய வசதிகள் உண்டு. சனத் தொகையில் நீ இற்கு மேற்பட்ட தொகையினர் வயல் நிலங்களை அடுத்த சிறிய கிராமங்களில் வசிக்கிருர்கள். இவர்கள் முக்கியமாகக் கமத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எஞ்சிய 4 பகுதியினர் பெரிய பட்டினங்களில் வசிக்கின் றனர். அவர்கள் பெரும்பாலும் வியாபாரம் நடத்துகின்றனர். கைத் தொழிலோடு சம்பந்தப்பட்ட குடிகள் இல்லை என்றே கூறல் வேண்டும்.

மக்கட் புவியியல் 265。
இந்த வகையில் இலங்கையை இங்கிலாந்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அங்குள்ள மக்களில் * பகுதியினர் பட்டின வாசிகள். அவர்கள் சுரங்க. வேலை, கைத்தொழில், வியாபாரம், முதலியவற்றில் ஈடுபட்டிருக்கின்றனர். எஞ்சிய பகுதியினர் கிராமங்களில் வாழ்ந்து விவசாயஞ்செய்கிருர்கள்.
இலங்கையில் மூன்றில் இரு பகுதியின் வளர்ச்சிக்குத் தடையாய் இருப் பது மலேரியாச் சுரம். சனச் செறிவை நிச்சயிக்கும் காரணங்களுள் மலேரியா முக்கியமானது என முன்னர்க் கூறினேம். அது இன்றும் ஓர் அளவுக்குத் தடையாய் இருந்துவருகிறது. மலேரியாவைத் தடைசெய்வ தற்கும் பலுதிரின் போன்ற மருந்துக்களை உபயோகித்து அந்நோயைமாற்று வதற்கும் பல முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இவை விரைவில் பூரண பயன் தரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனல், பின்வரும் காரணங்களினல் மலேரியாவைத் தடைசெய்வதற்கு இடையூறு எற்பட்டி ருக்கிறது :-
(1) மக்களிடத்து அறியாமையும், கல்வியறிவின்மையும் இப்பொழுதும் இருந்து வருகின்றன. கட்டாய ஆரம்பக் கல்வியினலும் இலவசக். கல்வியினலும் அறியர்மை சிறிது சிறிதாக நீங்கிவருகின்றது. (2) இலங்கையில் ஆட்சி நடத்திய பல்வேறு ஐரோப்பிய அரசாங்கங்கள் மக்களுடைய வாழ்க்கையோடு தொடர்பில்லாத கல்வியை அவர் களுக்குப் புகட்டிவந்ததால் அது வீட்டு வாழ்க்கையைச் சீர்திருத்து வதற்குப் பயன்படவில்லை. (3) அரசாங்கம் மலேரியாச் சுரத்தைத் தடுப்பதற்காக குயினயின்போன்ற மருந்துகளை இலவசமாக மக்களுக்குக் கொடுப்பதற்கு அரசாங்க. மருந்துச்சாலைகளைக் கிராமங்களில் நிறுவி இருக்கிறது. அங்கு, சென்று சிகிச்சை பெறுவதைக் கிராம வாசிகள் வழக்கத்திற் கொண்டு வரவில்லை. பல இலங்கை வாலிபர்கள் அண்மையில் மேலை நாட்டு வைத்திய முறையைக் கற்க ஆரம்பித்துள்ளார்கள். அதனல் அடுத்த சில வருடங்களில் அவர்களுடைய கல்வியறி வினல் உண்டாகும் நன்மைகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள்.
மேலே மலேரியாவைப் பற்றிக் கூறியவை இலங்கை மக்களைப் பாதிக்கும். வேறு பல நோய்களைப் பொறுத்தவரையிலும் பொருந்தும். சனங்களில் முக்காற் பகுதியினர் கொழுக்கிப் புழு நோயினல் வருந்துகிறர்கள். அதனல் மக்களின் தேகவலிமை குன்றிவிடுகிறது ; வேறு பல நோய் களுக்குமிடமுண்டாகிறது. அரசாங்கத்தால் நடத்தப்படும் இலவச மருந்துச் சாலைகளுக்குச் சனங்கள் சென்று சிகிச்சையைப் பெற்றுக்கொள்ளலாம். மருந்துச்சாலை அதிகாரிகள் கூறும் யோசனைகளைக் கேட்டு அவற்றின்படி நடந்துகொள்ளல் வேண்டும். ஆனல், பலருக்கு இம்மருந்துச்சாலைகளிருப் பதே தெரியாது. ஏனைப் பலர் அரசாங்க மருந்துச்சாலைகள்மீது நம்பிக்கை

Page 140
266 இலங்கைப் புவியியல்
யற்றவராயிருப்பதால் அவற்றை நாடி நலம்பெறுவதில்லை. வீட்டு இலை யான்களால் எத்தனையோ நோய்கள் பரவுகின்றன. சமயலறைகளிலும், மலசல கூடங்களிலும் ஈக்கள் மொய்ப்பதைப் பலர் கவனியாது விட்டுவிடு கின்றனர். உயிருள்ள செந்துக்களுக்கு ஊறுவிளைவிக்கக்கூடாதென்ற கொள்கையினல் அவர்கள் இலையான்களைக் கொல்லாதுவிட்டு விடுகின்றனர். எலிகளின் உடம்பில், வாந்திபேதியை உண்டாக்கும் ஒருவகைத் தெள்ளு உண்டு ; ஆனல், பல வீடுகளில் எலிகள் எதேச்சையாக நடமாடுகின்றன. இங்கேயும் அரசாங்கம் உதவிபுரியலாம். எலிப்பொறிகளேவைப்பதற்கும், இறந்த எலிகளே அப்புறப்படுத்துவதற்கும் ஆட்களை எற்படுத்தலாம்; அவ்வாறு உதவிபெற விரும்புவோர் சுகாதாரப் பரிசோதகருக்கு விண்ணப்பஞ் செய்ய லாம். நோய்கள் இவ்வாறு பரவுகின்றன என்பதை அறியாத மக்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வேறு காரணங்களை எடுத்துக் காட்டுவர். சரியான காரணங்களை அறிவதானல், தடுப்பு நடவடிக்கைகளாலுண்டாகும் பயனை ஆராய்ந்து அறியலாம். இங்கே கூறப்பட்ட நடவடிக்கைகள் மூலமே மலேரியா, கொழுக்கிப் புழு, வாந்திபேதி என்பன தடைசெய்யப்பட்டன. உலகின் பல பகுதிகளிலுமுள்ள வைத்தியர்களும் இந்நோய்கள் பரவுதற்குரிய காரணங்களை எடுத்துக் கூறியதன் பயனக அயனமண்டலத்தைச் சேர்ந்த சில நாடுகளில் இந்நோய்கள் பெரிதுந் தடைசெய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் குடிசனச் செறிவைப் பாதிக்கும் எனைக் காரணங்களுள் மிக முக்கியமானது இயற்கைத் தோற்றமாகும். மலைநாட்டிலே செங்குத் தான மலைச்சரிவுகள் பல இருப்பதாற் அப்பகுதிகளில் மக்கள் வசிக்க முடியாது. எக்காலத்திலும் மக்கள் வசிப்பதற்குத் தகுதியற்ற பல பகுதி கள் உண்டு ; ஆனல், தேயிலைத் தோட்டங்கள் உண்டானதன் பயனுக இவ்வகையில் மக்கள் கொண்டிருந்த பழைய கொள்கைகள் மாறிவிட்டன. முற்காலத்தில், ஏறத்தாழ 90 வருடங்களுக்கு முன்னர், மலைநாட்டவர் நெல் விளைவிக்கக்கூடிய பள்ளத்தாக்குக்களையடுத்தே வசிப்பார்களெனக் கரு தப்பட்டது. ஆனல், இன்று குன்றுகளிற் பெரும் பகுதிகள் தேயிலைத் தோட்டங்களாக மாறிவிட்டன : தோட்டத்துரைமாரின் வீடுகளும், தொழி லாளர் விடுதிகளும் அங்கே காணப்படுகின்றன. ஒரு சதுர மைலுக்கு 250 உக்கு அதிகமான சனங்களேயுடைய கண்டி, தொப்பிதோட்டம், நுவ ரெலியா ஆகிய மாவட்டங்களில், இது விசேடமாகக் காணப்படுகிறது.
மழை வீழ்ச்சியானது மக்கள் குடியேற்றத்தைத் தடுத்துக்கொண்டிருக் கக்கூடிய பகுதி சிவனெளிபாதமலைப் பிரதேசம். இலங்கையில் மழை வீழ்ச்சி மிக்க இடம் இதுவே. தென்மேற்கை நோக்கியுள்ள சாரல் தென்மேற்குப் பரு வக்காற்றுக் காலத்திலே மக்கள் வசித்தற்குத் தகுதியற்ற முறையிற் காணப் படுகிறது. இங்கே ஈரலிப்புமிக்க பெருங் காடுகள், இன்றுங் காணப்படுகின்றன.

மக்கட் புவியியல் 267
பயிர் வகையைப் பற்றிக் கூறுமிடத்து ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. மக்களின் முக்கிய உணவு சோறு ; ஆனதால் வேறு பயிர்களை விட நெல் விளையும் வயல்கள் மூலம் அநேக மக்களை ஆதரிக் கலாம் ; இதற்கு ஒரு முக்கிய காரணம் வயல் நிலங்கள் செழிப்பான பகுதி களில் அமைந்திருத்தலாகும் ; அத்துடன் வயல் நிலம் சிறிய சிறிய தோட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வயலின் உரிமைக்காரரும், தமது சிறிய வயல் நிலத்திலிருந்து கிடைக்கக் கூடிய அவ்வளவையும் பெற்றுவிட முயலுவர். தேயிலை, இறப்பர் ஆகிய பயிர்கள் பெரிய தோட்டங் களிற் செய்யப்படுகின்றன. அவற்றின் சொந்தக்காரரும், பணம்படைத்த செல் வந்தராகவே யிருப்பர். அவர்கள் விரும்பினல் பயிர்செய்யாது விட்டாலும், அதனுற் கெடுதியில்லை. எனவே மக்கள் குடியேற்றத்தைப் பாதிப்பதற்கு நெற்செய்கையே முக்கிய காரணமாயிருந்தது என்பதைப் பின்னரும் விளக்குவாம்.
நாட்டிலே உண்டான படையெடுப்புக் காரணமாக மக்கள் தென் மேற்குப் பகுதியை நோக்கிப் புலம் பெயர்ந்தனரென்று முன்னரே குறிப்பிட்டுள் ளோம். தாழ் பூமியின் தென் மேற்குப் பகுதியில் மக்கள் பெருந் தொகை யாகக் குடியேறியிருப்பதற்கு மூலகாரண மிதுவே. முற்காலத்தில், வடக்கே நெல் விளைவித்துவந்த மக்கள் அந்நியர் படையெடுப்பின் பயனுக மலைநாடுகளுக்குச் சென்றனர். பின்னர் வியாபார நோக்கமாக அவர்கள் கரை நாடுகளை நோக்கிச் சென்றனர். அந்நிய நாட்டவர் புழக்கம் நிறைந்த பகுதிகளையடுத்து, அவர்களுக்கு விற்கக்கூடிய பொருள்களை உற்பத்திசெய்வ தில் ஈடுபட்டனர். மட்டக்களப்பு, காலி, கொழும்பு, என்பன ஐரோப்பிய வியாபாரத்துக்கு முக்கியமான பண்டசாலைகளாயமைந்தன. கறுவாவே பிரதான வியாபாரப் பொருள். மேலே கூறிய மூன்று துறை முகங்களை யடுத்தும் பெரும் பகுதிகள் கறுவா உற்பத்திக்காக ஒதுக்கப் பட்டிருந்தன. இன்று இப்பிரதேசங்களில் வேறு பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. இப்பொழுது காலியையடுத்தே இறுவா உண்டு. இக்கறுவா வியாபாரத் தினுல் வேறு பண்டமாற்றுக்களைச் செய்யவும் வழிபிறந்தது. அன்றியும் ஐரோப்பிய வியாபாரிகள் தூரகீழ்த்திசைக்குச் செல்லும் வழியில் இலங்கை முக்கிய இடம் வகித்ததால் அது பிரதானமான நிலையங்களி லொன்ருயிற்று. இந்து சமுத்திரத்திலமைந்த வழிகளுக்குக் கொழும்பு மையமாயிற்று. பெரிய கப்பல்கள் நிற்பதற்கேற்றவாறு ஒரு செயற்கைத் துறைமுகத்தை ஆக்க அங்கே முயற்சி செய்யப்பட்டது. அதன் பயனுக வியாபாரமும் அந்தப் பக்கத்திலேயே நடைபெற்றது. இது மட்டக்களப்புப் பகுதியிலும், இலேசாக வந்தடையக் கூடியதாயும், வளம் மிக்கதாயும் காணப்பட்டது. நாளடைவில் கொழும்பு ஐரோப்பிய அரசாங்கங்களின் தலை நகராயிற்று. அதனல் இந்தப் பகுதிகளில் போக்குவரத்துக்கான பல திருத்தங்களுண்டாயின. ஐரோப்பியருடைய செல்வாக்கின் பயனகவே

Page 141
268 இலங்கைப் புவியியல்
இப்பகுதிக்கு மக்கள் மற்றை இடங்களிலிருந்து வந்து குடியேறினர். குடிசனத் தொகை தென்மேற்கில் அதிகரித்ததற்கு இதுவே முக்கிய காரணமாகும்.
இலங்கை மக்களின் முக்கியமான தொழில் விவசாயம். அதனல், சனச் செறிவு ஒரளவு சமமாகவே எங்கும் காணப்படும். கொழும்பைத் தவிர்ந்த வனே நகரங்கள் சிறியனவாகவேயிருக்கும். விளைபொருள்களின் மிதமிஞ்சிய பகுதியை எற்றுமதிசெய்ய வேண்டியது அவசியமாதலால் அதற்கான துறை களையும், விளைபொருள்களைச் சேமித்து வைக்கும் பண்டசாலைகளுள்ள நகரங் களையும், அபிவிருத்தி செய்யவேண்டியது அவசியம். அத்தகைய வியாபார நிலையங்கள் பெரிய நகரங்களாக வளர்ந்து வருவது இயற்கையே. இந்து சமுத்திரத்தில் உலக வியாபாரப் பாதைகளமைந்திருக்காவிட்டால் இலங்கை யின் தலைநகராகிய இப்பெரும்பட்டினம் யாழ்ப்பாண நகரிலும் பெரிதாக அமைந்திருக்கமாட்டாது. இலங்கை சிறிய தீவு ; அதல்ை வெளி நாட்டு வியாபாரத்துக்கு வேறுதுறைகளையும் அபிவிருத்தி செய்ய வேண்டிய அவசியமுண்டாகவில்லை.
மலைநாட்டில் தேயிலையும் இறப்பரும் பயிர் செய்யப்பட்டதன் விளைவாக அங்குள்ள சிங்களரிடையே சனப் பெருக்கமுண்டானதென்று மட்டும் கூறிவிட முடியாது. அந்நிய சாதியாரான இந்தியத் தமிழ்த் தொழி லாளர் அங்கே வந்து குடியேறியமை முக்கியமானதாகும். 1921 ஆம் ஆண்டிலே தோட்டத் துரைமார் 5 இலட்சத்துக்கு அதிகமான இந்தியத் தொழிலாளரை அழைத்து வந்தனர். 1927 இல் இத்தொகை 7 இலட்ச மாகக் கூடிற்று. பின்னர் இந்திய அரசாங்கம் தொழிலாளர் வெளியேறு வதைத் தடைசெய்தபடியால் இத்தொகை குறைந்துவிட்டது.
பழங்காலத்தில் இலங்கையின் சனத் தொகை இன்றைய தொகையை விட அதிகமாயிருந்தது எனக் கருதப்பட்டது. புராதன சரித்திராசிரியர்கள் ஒன்றை மிகைப்படுத்திக் கூறும் இயல்புடையவர்கள் ; எனவே அவர்கள் கூற்றுச் சரியெனக் கொள்வதற்கில்லை. நாட்டில் அடிக்கடி உண்டான சண்டைகளினல் குடிசனத் தொகை எத்துணையோ குறைந்திருக்குமென் பதில் ஐயமில்லை. ஆங்கிலர் இலங்கைக்கு வந்தபின்னர் இலங்கையில் 74 இலட்சம் பேர் இருந்ததாகக் கணக்கிடப்பட்டது. ஆனல் இலங்கையிற் குடியிருந்த எல்லாரும் இக்கணக்கிற் சேர்க்கப்படவில்லையென்பது தெளி வான விடயமாகும். ஒரு காலத்தில் இலங்கையில் 20,000,000 மக்கள் வசித்தனர் எனப் பழைய சரித்திராசிரியர் கூறுவர். அத்தொகையை நம்பினல் ஆங்கிலர் காலத்தில் எஞ்சியுள்ளவர் 7 இலட்சமென்றே கொள்ள வேண்டும். ஆங்கிலராட்சியின் பயனக நாட்டிலே அமைதி நில விற்று. அதனுற் சனத் தொகை பெருகிற்று. கடந்த நூற்றண்டிலே எனைச் சாதியாரைக் கணக்கிலெடுக்காமல், சிங்களரை மட்டும் கணக்கிலெடுத் தாராயும்பொழுது அவர்கள் சனத் தொகை நாலுமடங்கு பெருகியிருப்ப

மக்கட் புவியியல்
269
தைக் காணலாம். இது தொடர்ந்து நடைபெறுமென்பதில் ஐயமில்லை. கல் வியிற் பெரிய திருத்தங்களுண்டானபடியால், மக்களின் வாழ்க்கைத் தரமும் உயருமென்பதில் ஐயமில்லை. வெப்பமும் ஈரலிப்புமுள்ள காலநிலை நிலவும் தேசங்களில் ஏற்படக்கூடிய பலவகையான நோய்களை எட்வாறு தடுக்கலா மென்பதை மக்கள் அறிந்து அதற்கேற்ற நடவடிக்கையெடுப்பர்.
1927 இல் இலங்கையிலுள்ள பல்வேறு சாதியாரின் தொகை,
சனத் தொகையில்
திருத்தமான 1,000 இல் எத்
தொகை தனை பேர் என்பது
சிங்களர் 3,375,655 638.3 தமிழர் (இலங்கையர், இந்தியர்) 1,174,023 222.0 சோனகர் 301,828 57.0 பறங்கியர் 32,561 6.1 ԼԸ6)frԱյfi 15,098 2.8 ஐரோப்பியர் 11,447 2.2 வேடர் 4,518 .9 மற்றையோர் 22,000 4.2
இலங்கையிலுள்ள பெரிய நகரங்களில் 1921 இல் இருந்த மக்களின் தொகை
கொழும்பு 244,163 , . மட்டக்களப்பு 10,564 யாழ்ப்பாணம் 42,436 . . குருனக்கல் 10,187 மொரட்டுவை 41,858 . . திருக்கோணமலை 9,145 காலி 39,073 . . வெலிகமம் 9, 104 கண்டி 32,562 . . வதுளை e. 8, 126 நீர்கொழும்பு 27,639 . . மாத்தளை 7,865 மாத்துறை 16,779 . . அனுராதபுரம் 7,781 களுத்துறை 18,596 . . நுவரெலியா 7,525 பாணந்துறை 10,747 . . இரத்தினபுரி 7,014
1946 இல் இலங்கையிலுள்ள பல்வேறு சாதியாரின் தொகை
சனத் தொகையில் திருக்கமான 1,500 இல் எத்தனை
தொகை
rー பேர் என்பது
சிங்களர் 4,637,000 696.0 தமிழர் (இந்தியர், இலங்கையர்) 1,508,000 226.0 சோனகர் மலாயர் w 455,000 69.0 பறங்கியர் 36,000 5.8 ஐரோப்பியர் 5,000 . ઉ6. Lfr 6,000 .9 மற்றையோர் 17,000 1.6
* குடிமதிப்பு அறிக்கை முற்றகப் பிரசுரிக்கப்படாதபடியால், இந்நிலையில் முற்ருன புள்ளி
விவரங்களைக் கொடுக்கமுடியாது.

Page 142
270 இலங்கைப் புவியியல்
இலங்கையிலுள்ள பெரிய நகரங்களில் 1946 இல் இருந்த மக்களின் தொகை
கொழும்பு 364,106 . . திருக்கோணமலை - - 28,334
யாழ்ப்பாணம் 62,922 . . மாத்தளை - - 14,046 கண்டி 50,381 - குருனக்கல் - 13,466
மொறட்டுவை 50,093 . . வதுளை 13,162
காலி 49,038 . . மட்டக்களப்பு 0- 12,948
நீர்கொழும்பு 32,632 . . இரத்தினபுரி vq 12,467
மாத்துறை 23,493 . அனுராதபுரம் 12,287
களுத்துறை 18,244 . . வெலிகமை 11,891
பாணந்துறை 16,545 . . நுவரெலியா - 9,840
1921 இல் ஒவ்வொரு நிருவாகப் பகுதியிலுமுள்ள மக்கள் தொகை
கொழும்பு, நீர்கொழும்பு உட்பட களுத்துறை
மாத்தளை
கண்டி
நுவரெலியா
காலி
மாத்துறை
அம்பாந்தோட்டை
புத்தளம் . .
குருளுக்கல்
Saori La
கேகாலை
இரத்தினபுரி
யாழ்ப்பாணம் மன்னர் முல்லைத்தீவு
வதுளை
திருக்கோணமலை மட்டக்களப்பு
அனுராதபுரம்
923, 143
:) மேல் மாகாணம்
116,584 433,993 > மத்திய மாகாணம் 167, 162J
313,118 238,509 > தென் மாகாணம் 119,607]
35,610 354,197 > வடமேல் மாகாணம் 102,374J
268,839
:) சப்பிரகமூவா மாகாணம்
330,541
25,582 > 6.1L lorrasita007 La 18,706)
233,864 ஊவா மாகாணம்
34,112
Â] கீழ் மாகாணம்
96,525 வடமத்திய மாகாணம்

மக்கட் புவியியல் 27.
1946 இல் ஒவ்வொரு நிருவாகப் பகுதியிலுமுள்ள மக்கள் தொகை
கொழும்பு . . களுத்துறை மாத்தளை
கண்டி நுவரெலியா
காலி
மாத்துறை அம்பாந்தோட்டை
புத்தளம் . குருஞக்கல் சிலாபம்
கேகாலை இரத்தினபுரி
யாழ்ப்பாணம் மன்னர் வவனியா . .
வதுளை திருக்கோணமலை மட்டக்களப்பு
அனுராதபுரம்
1,141,427 458,198
156,416 709,654 > மத்திய மாகாணம் 268,574J
459,898)
352,260 தென்மாகாணம் 149,848
43,293 485,497 > வடமேல் மாகாணம் 139,402.
மேல் மாகாணம்
402,557 ப்பிாக fr மாகாணம் டி சபரகமுவா மா?
424,815
23,137 > வடமாகாணம்
31,507
373,059 ஊவா மாகாணம்
76,107 கீம் மாகாணம் 600T شما*[203,097
139,581 வடமத்திய மாகாணம்

Page 143
நாலாம் பகுதி-இரண்டாம் அத்தியாயம்
காலநிலையால் மனித வாழ்க்கையில் நிகழும் விளைவுகள்
மனிதனின் வாழ்க்கை முறையையும், ஒரளவுக்கு அவனுடைய உட லமைப்பு, குணம், பழக்கவழக்கம் என்பவற்றையும் காலநிலை மாற்றி விடுகிறது. காலநிலையில் அதிக வித்தியாசமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் மனிதப் பண்பிற் பெரிதும் வித்தியாசப்படுவதைக் கொண்டு, அதற்குக் காலநிலையே காரணமென ஊகிக்கஇடமுண்டாகிறது. புவியிய லறிஞர் இதனைப் பெரிதும் மிகைப்படுத்துவதால், அவர்களின் ஆராய்ச்சி நல்ல சாத்திர முறைப்படி யமையவில்லையெனலாம். காலநிலையின் செல் வாக்கு வாழ்க்கை முறையைப் பாதிக்கிறதென்பது சொல்லாமலே அமை' யும் ; ஆனல், அது மனிதனுடைய பண்பையும், பொதுவாக நாக ரிகத்தையுமே பாதிக்குமென்பது நிரூபித்துக் காட்டமுடியாததும், விவா தத்துக்குரியதுமாகும்.
இலங்கையில் வாழ்க்கையைப் பாதிக்கும் மிக முக்கியமான அமிசங்oள் மழையும், வெப்பமுமாகும். இவற்றுள் மழையே சிறப்புள்ளது. பாட்டம் பாட்டமாகப் பெய்யும் மழைக்கு ஏற்றவாறு மனிதன் தனது வாழ்க்கை முறையையும், நடவடிக்கைகளையுமமைத்துக் கொள்ளுகிறன். வெள்ளத் தைத் தவிர்க்கக்கூடியவாறு வீடுகளை அவன் கட்டல் வேண்டும். அதிக மழை பெய்தால் தரைக்கீழுள்ள சாக்கடைக்குழாய்கள் வெடிக்கக் கூடுமாதலால் தரை மேல் வடிகால்களோடு திருத்தியடைய வேண்டும். வெள்ளச் சமபூமியில் அவன் தனது வீட்டைக் கட்டிவிடுவானல்ை வெள் ளத்தினுல் அடிக்கடி பாதிக்கப்படுவான். களனியாற்றில் உண்டாகும் வெள்ளத்தினல் 15,000 மக்கள் வரை தற்காலிகமாக வீடின்றி அவதிப் படுவர். இவ்வெள்ளத்தைத் தடுத்து வேறு கால்வாய்களில் விட்டு, கொழும் பைச் சார்ந்த பிரதேசங்களைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகளொன்றும் நல்ல பலனைக் கொடுக்கவில்லை. மலைநாட்டில் வெள்ளம் எற்பட்டால், அது மலைச் சாரல்களிலுள்ள மண்ணை அரித்துக்கொண்டு போகாமல் தடைசெய்வதே பெரிய பிரச்சினையாகும். இம்முயற்சிகளுக்கெல்லாம் வற்ற வாறு மனிதன் தன்னை அமைத்துக் கொள்ளல்வேண்டும். இல்லையேல் இயற்கையாக உண்டாகும் பெருங் கெடுதிக்கு ஆளாவான்.
மழை, மனிதனுடைய முயற்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. இயற்கையாக மழை
வீழ்ச்சி குறைவான சில நாடுகளுண்டு. அங்கே மனிதனுடைய முயற்சியை
மழை அதிகம் தடைசெய்வதில்லை. இலங்கையிற் சில சமயம் பாட்டம் பாட்ட
மாகப் பெய்யும் மழை காரணமாகச் சில மணி நேரங்களுக்கு வெளியே
272

மக்கட் புவியியல் 273
yr s 8 * , போகமுடியாதிருக்கும் ; வீதியில் வாகனம் போகமுடியாதிருக்கும். பள்ளிக் கூடங்கஃாமூட வேண்டியேற்படும். ஏறக்குறைய எல்லா நடவடிக்கைகளையும் நிறுத்திவிடவேண்டிய நிலைமையுண்டாகும், இது ஒரு புறமாக ; பருவத் துக்குப் பருவம் வறட்சியுள்ள பகுதிகளுமுண்டு. இங்கே மழைகாலத்தில் நீரைத் தேக்கிவைக்கவேண்டிய அவசியமுண்டு. இதனற்றன் குளங்களை வெட்டினர்கள். குளத்தையடுத்துக் குடியிருப்புக்களமைந்தன. குடியிருப்புக் கள் எங்கே அமையவேண்டுமென்பதையும் எத்தகைய வீடுகள் எவ்வாறு கட்டப்பட வேண்டுமென்பதையும் மழை நிச்சயப்படுத்துகிறது. கவிந்துள்ள கூரையானது மழையைச் சுவரில் விழாமல் தடுக்கிறது. அத்துடன் சூரிய னுடைய கதிர்கள் வீட்டினுள்ளே விழாமலுந் தடுக்கிறது. மேற்காவுகை மழை நேராக விழுவதாலும் அத்தகைய மழையே அதிகம் பெய்வ தாலும் வீடுகளின் பக்கங்களைத் திறந்தபடி விட்டுவிடுவதால் எவ்வித கெடுதியுமுண்டாகாது. வீடுகட்டும்பொழுது முதலிற் கூரையையே அமைப்பர். எனெனில் ஒரு பாட்டம் நல்லமழை பெய்துவிடுமானல் கட்டுவேலைகள் யாவும் கெட்டுவிடும். எனவே, முதலிற் கூரையைத் தாங்கக்கூடிய தூண்களை நாட்டியபின்னர் கூரையை அமைத்துக்கொண்டே சுவர்களை எழுப்புவர்.
இலங்கையில் வளிமண்டலத்திலே ஈரப்பதன் அதிகமுண்டு. இதல்ை பூச்சி கள் பெருகவும், பூஞ்சணம் பிடிக்கவும், தீங்குண்டாக்கும் கொள்ளைநோய் பரவவும் வசதி அதிகமுண்டாகிறது. மனிதன், தன்னையும் பொருள்பண்டங் களையும் இத்தகைய நாசகாரிகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளல் வேண்டும். பொருள்கள் இங்கே விரைவிற் கெட்டுப்போகின்றன. அதனல் பயனுள்ள பல பொருள்களே இழக்க நேரிடுகிறது. மரப்பொருள்களைக் கறையானும் எனைச் செந்துக்களுமரித்துவிடுகின்றன. மரத்தினற் செய்த தளவாடங் களிடையே மூட்டைப் பூச்சிகள் பெருகிவிடுகின்றன. தோற் சாமான்களி லும், துணிகளிலும் பூஞ்சுபிடித்து அவை விரைவிற் கெடுதற்கேது வாகின்றன. ஈரலிப்பு இருப்பதனல் எந்தப் பொருளையும் நீண்டகாலம் வைத்திருக்க முடிவதில்லை. இதனுல் இலங்கையின் பூர்வீகக் குடிகள் தங் கள் வீடுகளில் எளிமையான சீவியம் நடத்தியமை ஆச்சரியமன்று. குளிரான தேசங்களிலேயுள்ளவர்களின் வீடுகளில், மனிதர் நினைத்தவாறு நடமாடமுடியாத அளவுக்குப் பல வகையான பொருள்களை அடுக்கிவைத் திருப்பார்கள். ஆனல், இலங்கைக் காலநிலையிற் சேதமுருமலிருக்கக்கூடிய பல இலங்யைப் பொருள்களுண்டு. சாதாரணமான கடதாசியில் அச்சடித்து மட்டையினுலோ தோலினலோ கட்டப்பட்ட புத்தகங்களை வைத்திருப்பது கடினம். ஆனல், ஒலையிற்ை செய்யப்பட்ட எடுகள் பல காலமாகப் பழு தடையாமற் கிடந்து வந்திருக்கின்றன. உலகிலுள்ள மிகப் பழைய நூல்களுள் இவ்வேடுகளுஞ் சிலவாகும். இக்குறைகளுக்குப் பதி லாகப் பல நிறைகளுங் காணப்படுகின்றன. சில நாட்களில் சீலையைத் தோய்த்துக் காயப்போடமுடியாது. ஆனல், வேறு சில காலங்களில்
11-J.N. B 70576 (11157)

Page 144
274 இலங்கைப் புவியியல்
தோய்த்த துணி சில நிமிடங்களிற் காய்ந்துபோகும். ஈரலிப்பான வெப் பத்தில் மக்கள் வியர்வையினல் துன்பப்படுவர். அதனல் அடிக்கடி குளித் துத் துணியை மாற்றிக் கொள்ளல் வேண்டும். தண்ணிர் நிறைய இருப்ப தாற் குளிப்பது மிக மகிழ்ச்சி தரும் விடயமாகும். அதனல் இலங்கை வாசிகள் “ குளிப்பதிலும் சீலை தோய்ப்பதிலும் பெரிதும் ஈடுபடுவர்” என ஒர் ஆங்கில அறிஞர் குறிப்பிட்டுள்ளார். இவை யெல்லாம் கூடிய அளவு வீட்டிற்குப் புறம்பாகவே நடைபெறும். மற்றை நீாடுகளில் மக்கள் குளிக்கும் முறைகள் இந்நாட்டு ஆராய்ச்சியாளருக்கு வியப்பையுண்டாக்க லாம் ; ஏனெனில் அவர்கள் பல மாதங்களாய்க் குளியாமலே யிருப்பார் கள். குளிருள்ள தேசங்களிலும், வறட்சியுள்ள நாடுகளிலும் மாதக் கணக்காக மக்கள் குளியாமலே இருந்துவிடுகிறர்கள்.
ஈரலிப்பான வெப்ப நிலையில் தாவரங்கள் இலேசாக வளர்கின்றன. அதனல் பயிர்ச்செய்கையும் எளிதாக நடைபெறுகிறது. ஆனல், மிருகங் களின் வளர்ச்சிக்கு இந்தக் காலநிலை ஏற்றதன்று. ஏனெனிற் பலவகையான செந்துக்களும் நோய்க்கிருமிகளும் அவற்றைத் தாக்குகின்றன. அதனல் ஆடுமாடு வளர்க்கும் தொழில் இலங்கையில் எந்தக் காலத்திலும் அதிகம் விருத்தியடையவில்லை. விவசாயயே மனிதனுடைய முக்கியமான தொழிலா யிருந்துவருகிறது. பயிரின் தேவைகளேயனுசரித்தே மனிதருடைய வாழ்க்கை முறையுமமைந்திருக்கிறது.
பருவமாற்றங்களில் அதிக வித்தியாசமில்லாதபடியால், காலநிலை ஒரே தன்மையுடையதாயிருக்கிறது. அது மனித வாழ்க்கையைப் பாதிக்கிறது. அதல்ை வருடத்தில் பருவத்துக்குப் பருவம் அவன் தனது வாழ்க்கை முறையை மாற்ருமல் இலேசாக வாழ்க்கை நடத்தக்கூடியதாயிருக்கும். சிக்கனமாகவும் வாழ்க்கை நடத்த முடியும். அன்றியும் சம வெப்பமுள்ள காலநிலையில் அவன் இருப்பதால், உணவு, உடை, வீடு என்ற இன்றியமையாத விடயங்களில் அவனுக்கு, மாறுந் தன்மை யுள்ள காலநிலையில் வசிப்பவரிலும் குறைவான தேவைகளேயுண்டு. மனித வளர்ச்சிக்கு மாற்றம் இன்றியமையாத தெனக் கருதப்படுகிறது. வருடம் முழுவதும் உணவிலோ, உடையிலோ, வீட்டுவசதியைப் பொறுத்த வரையிலோ எவ்வித மாற்றமுமின்றிவாழும் மனிதர் மாற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய அவசியமேயில்லை. இம்மாதிரியான கால நிலையில் மனிதன், காலத்தின் பெரும் பகுதியை வீட்டுக்கு வெளியே கழிக்கின்றன். அது மக்களின் பழக்கவழக்கங்களைப் பெரிதும் பாதிக்கிறது. இலங்கை மக்கள் தமது இல்லங்களின் உட்புறங்களின் அமைப்பு முதலியவற்றைப் பற்றி அதிகம் கவனமெடுக்காமைக்குக் கார ணம் இது என்றே கூறல் வேண்டும். பல அந்நிய தேச மக்களைக் காட்டி

மக்கட் புவியியல் 275
லும் இலங்கை மக்கள் உடற் சுத்தத்தை அதிகம் கவனிக்கிருர்கள். ஆனல், வீட்டுச் சுத்தத்தை அவர்கள் அதிகம் கவனிப்பதில்லை. இதற்கொரு கார ணம் சோம்பலாக இருக்கலாம் ; இதைப் பற்றிப் பின்னர் குறிப்பிடுவோம்.
மத்திய கோட்டு வலயத்தில் வாழும் மக்களின் உடலமைப்பு அப்பிர தேசத்தின் காலநிலைக்கேற்றவாறு அமைந்திருக்கிறது. இதில் வெளிப் படையாகத் தெரிவது மக்களின் கறுப்பு நிறம். தோலிலே கறுப்பு நிறப் பொருள்களதிகமுண்டு. இவை சூரியனின் கதிர்களிற் பெரும் பகுதியை உட்கொண்டு அவை தோலின்கீழேயுள்ள உணர்ச்சி மிக்க பகுதிகளையடையாமற் றடுக்கின்றன. வெயிற் காய்வு குறைவான தேசங் களிலிருந்து வரும் வெள்ளைக்காரர், ஞாயிற்றுக் கதிர்களிலிருந்து தம் மைக் காப்பாற்றுவதற்குச் செயற்கை முறைகளைக் கையாளுவர். பிர காசமான சூரிய வெப்பத்தினுல் அவருடைய நரம்புத்தொகுதி இலேசாகத் தளர்ச்சியடைகிறது. தலையையும் முகத்தையுந் தொப்பியினல் மூடிக் கொள்ளாவிட்டால் “ ஞாயிற்றடிப்பு ’ என்ற நோய் 2600TLIT கும். தோலையும் நன்றக மூடிக்கொள்ளாவிட்டால் அது கொப்புளங் கொண்டு கரிந்துபோகும். ஆனல், கறுப்பு நிறமோ, கபிலநிறமோ உள்ள ஒருவன், வெயிலில் நாள் முழுவதும் நின்ருலும் தோலில், கெடுதி யுண்டாகாது. ஞாயிற்றடிப்பு நோய் ஒரு புறமிருக்க, வெள்ளைக்காரர் மத்தியகோட்டு வலயத்தில் வெகு காலமிருந்தால், நரம்புக் கோளாற்றினல் பெரும்பாலும் பாதிக்கப்படுவர். பல வருடம் இப் பிரதேசத்திலிருந்த வன், தனது நரம்புக்கு நீண்ட ஒய்வு கொடுப்பதற்காக மறுபடியும் தனது சொந்த ஊருக்குத் திரும்பிவிடுகிறன். இலங்கை மக்களின் மண்டை யோடு வெள்ளேக்காரரின் மண்டையோட்டிலுஞ் சற்றுக் கனமுள்ளதா யிருக்கும். இதுவும் ஒரு பாதுகாப்பே.
மத்தியகோட்டு வலயத்திலுள்ள மக்களின் தோலும், சுவாசப்பையும் வெப்பமும் ஈரலிப்புமுள்ள வளிமண்டலத்துக் கேற்றவையாயமைந்திருக் கிறது. வெப்பமும் ஈரலிப்புமுள்ள காற்றிலே ஒரு கன அடிக்குரிய ஒட்சிசனின் அமுக்கம் குளிரான உலர்ந்த காற்றிலும் குறைவாகும். குளிரும் வறட்சியுமுள்ள தேசங்களிற் பிறந்த வெள்ளேக்காரன் உயர்ந்த அமுக்க முள்ள ஒட்சிசனைச் சுவாசிக்கப் பழகியுள்ளான். இலங்கையிலுள்ள ஒட்சிசன் அத்தகையதன்று. எனவே, அவன் இலங்கையிலுள்ள நிலைமைக்குத் தனது இயல்பை மாற்றிக்கொள்ள வேண்டுமாதலால், தனது தேசத்தில் வேலை செய்யும் வேகத்திலும் மெதுவாகவே இங்கு செய்தல் வேண் டும். இலங்கை மக்களுடைய தோல் இலங்கையின் ஈரலிப்பான காற் றிற்குப் பழக்கமுடையதாகிவிட்டது. இங்கே நீராவியாகல் குறைவு. உடம்பின் வெப்பத்தை அதன் மேற்றேலே அளவு படுத்துகிறது. அது இரண்டுவகையிலே தொழில்புரியும் ; (அ) உடம்பிலிருந்து வியர்வை வடிந்து நீர் ஆவியாகமாறும்பொழுது, அதற்குத் தேவையான வெப்பத்தை

Page 145
276 இலங்கைப் புவியியல்
இழையங்களிலிருந்தெடுத்துக் கொடுக்கிறது. அதனல் உடடபின் வெப்பங் குறைகின்றது. (ஆ) தோலுக்கு அடுத்துள்ள சிறிய இரத்தக் &லங்களை விரிய வுஞ் சுருங்கவுஞ் செய்து, வெளிக்காரணங்களால் இரத்தந்தை ஏற்ற வாறு குளிர்ச்சியடையச் செய்கிறது. நீராவியாவதைத் தடுக்குந் தன்மை வளிமண்டலத்திலுள்ள ஈரப்பதனுக்குண்டு ; இலங்கை வாசிகளுக்கு வெள்ளைக்காரனைப்போல அதிகம் வியர்வை உண்டாவதில்லை. வியர்வை நீராவியாக மாளுதிருக்கும் நிலையினல் அவர்கள் அல்லற்படுவதில்லை. தோலுக்கடுத்துள்ள இரத்தக் கலங்கள் அவர்களுக்கு ஏறத்தாழ எப் பொழுதும் விரிந்திருக்கும். தன் தோலுக்கு உண்டாகும் இளைப்பை நாளடைவில் அவன் சகிக்கப் பழகிக் கொள்வான் ; ஆனல், புதிய நிலைமை களினல் ஏற்படும் துன்பங்கள் அவனைப் பலவீனப்படுத்தும். குளிரான தேசங் களில் மக்கள் சுறுசுறுப்பாயிருப்பார்கள் ; இலங்கையர் நிலைமையை அனு சரித்து வேலைகளை மெதுவாகவே செய்வார்கள். அயனவலயத்துச் சுகா தார நிலையை நன்கு அறிந்த நிபுணரான வைத்திய கலாநிதி பால்வர் கேக்கு என்பவர் பின்வருமாறு கூறுகிறர். “ வேலைகள் மெதுவாக நடை பெறுவதற்குக் காரணம் சோம்பலன்று ; காலநிலையைக் கருதி நீடித்து உழைப்பதற்குச் செய்யப்படும் முயற்சியேயாகும். குளிரான நாடுகளிலுள்ள வர்களிலும் இலங்கையர் தமது சத்தியைச் சேமித்துவைத்துக்கொள்வ துடன் சாந்தமாகவும், அமைதியாகவுமிருப்பர். குளிரான தேசங்களில் மக்கள் தமது உடலை வெப்பமாக வைத்துக்கொள்வதற்காக உடலை அலைத் துச் சில அப்பியாசங்களைச் செய்யவேண்டியிருக்கிறது. இலங்கையருக்கு அவை தேவையில்லை. இந்த வித்தியாசத்தைச் சிறுவரிடையே அதிகம் காணலாம். வயது வந்தவர்களிலும் சிறுவரே உடற் காரணிகளுக்கு எளிதில் ஒத்தியங்குவர். உதாரணமாக ஆங்கிலச் சிறுவர் மிக உற்சாக முடையவராகவும், உடம்பின் உறுப்புக்களை அப்பியாசஞ் செய்யுந் துடிப் புடையவராகவுமிருப்பர். வேறு பயனுள்ள முயற்சிகளில்லாவிட்டால் தனது கூட்டாளிகளோடு சேர்ந்து சண்டையிட்டு, மல்யுத்தஞ் செய்து காலத் தைக் கழிப்பர். ஒரு செயலுமின்றிச் சும்மா இருக்க அவர்களுக்கு விருப் பங் கிடையாது. சத்தம், சலனம், ஒட்டம், ஆட்டம் இவைகளே அவர்கள் விரும்புவன. இலங்கைச் சிறுவர் அமைதியாகச் சும்மாவிருக்க விரும்பு வர். அப்பியாசஞ் செய்யும் போதும் சுயேச்சையாகச் செய்யாது பிரயத்த னத்தோடே செய்வர் ; வீண் சண்டைக்குப் போகமாட்டார். ஒரு காரியத் துக்காகவே சண்டைசெய்து தீர்ப்பர். இலங்கையில் ஒரு மக்கள் கூட்டத் தைப் பார்த்தால் அது மிக அமைதியுடையதாய்க் காணப்படும் ; வீதி களில் மக்கள் மெதுவாகவே நடமாடுவர் ; ஆறுதலான ஒரு தன்மை அவர்களிடத்துண்டு. குளிரான தேசங்களிலுள்ளவர் சுறுசுறுப்பாகவும் உற்சாகமுடையவராகவுங் காணப்படுவர். வீதிகளிலும் இவ்வாறே காணப் படுவர்.வேலைகளிலீடுபடும் பொழுது ஆரவாரத்தோடு ஈடுபடுவர். அவர்களு

மக்கட் புவியியல் 277
டைய களியாட்டுக்களும் உற்சாகம் நிறைந்தனவாயிருக்கும். நீண்ட நேரமாக நடக்கும் தருமோபதேசங்களையோ கூட்டங்களையோ சொற்பொழிவுகளையோ ஐரோப்பியர் சகித்துக்கொள்ளமாட்டார். பின்னர் அவற்றில் இன்பமடைவது எப்படி ? இலங்கையர்க்கு அவையெல்லாம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். நீண்ட நோம் அவர்கள் சும்மா இருக்கு மியல்புடையவர் ; மனத்தை ஒரு நிலைப் படுத்திச் சிந்தனையிலீடுபடுமியல்புடையவர்.
இலங்கையில் நிலவும் பொதுத் தன்மைகள் மக்களை உற்சாகக் குறை வுள்ளவர்களாக்குகின்றன ; இயற்கைக் காரணங்கள் ஒருபுறமிருக்க, இலங் கையர் பொதுவாகவே குளிர்த்தேச மக்களைப்போலச் சிக்கனமும், முயற்சியு முடையவர்களல்லர். வெப்பமும் ஈரலிப்புமுள்ள தேசங்களில் பயிர்கள் நன்றக வளரும் ; குளிர்த் தேசங்களில் மக்களுக்கு அதிக உணவு தேவைப் படும் ; ஆனல், இத்தகைய தேசங்களில் உணவு அதிகந் தேவைப்படாது ; தேவையான உணவை இலேசாக விளைவித்துக்கொள்ளலாம். பசியினல் எவரும் இறப்பதில்லை ; ஏழைகளின் பசியைத் தீர்க்கவேண்டுமென்பதே மக்களின் சமயக்கொள்கையாகவிருந்துவருகிறது. அத்துடன் எப்பொழு தும் பிரகாசமான சூரியவெளிச்சமுண்டு ; அஃது அவர்களைச் செழிப் பாக இருக்கச் செய்கிறது; நாளை வருவதைப்பற்றி அவர்களுக்கு அதிக கவலை கிடையாது. அதனல் அவர்கள் இயற்கை வசதிகள் குறைந்த கடினமான தேசங்களில் வசிக்கும் மக்களிலும் சாந்தமான மனநிலையுடைய வராய்க் காணப்படுகின்றனர். இலங்கையர் பொதுவாகச் செயல்புரிவதிலும் சிந்தனை செய்வதிலுமே திறமையுடையவர். மனத்திலே அமைதி பெறுவதே பெளத்த சமயத்தின் இலட்சியமாகும்.
இலங்கையின் காலநிலையோடு சம்பந்தப்பட்ட ஒர் உடற்பண்பினல், இலங் கையில் இசைக்கலை வளர்ச்சியடையவில்லை. வறட்சியும் குளிர்ச்சியுமுள்ள தேசங்களில் மக்கள் இயல்பாகவே பாடுவதற்கு முனைவர். மிடற்றுத் தசை நார்கள் மிகவும் உணர்ச்சியுள்ளவை ; அவை காலநிலைக்கேற்றபடி எளிதில் மாற்ற மடைகின்றன. வெப்பமும் ஈரலிப்புமுள்ள வளிமண்டலம் அத்தசை நார்களைக் கட்டிவிடுகிறது. சிங்களர் வாய்ப்பாட்டுப் பாடுவதில் அதிகம் முன்னேற வில்லை. வீடுகளில் மக்கள் பாடுவதோ சீழ்க்கையடிப்பதோ கிடையாது. அவற்றுக்குப் பதிலாக அவர்கள், சில்லோசை ஓரியல்பு வண்ணங்களைப்பாடுவர். *
மத்திய கோட்டு வலயத்திலுள்ள மக்கள் உற்சாகமற்றவரென்றும் சோம்பேறிகளென்றும் குளிர்நாடுகளிலுள்ளவராற் கருதப்படுகின்றனர். இக்குணங்கள் பொதுவாகக் காலநிலையினலுண்டாகின்றனவென்றுங் கரு தப்படுகிறது. ஐரோப்பியரும், அமெரிக்கரும் எழுதிய நூல்களில் இவ் விடயத்தைப் பற்றி அடிக்கடி குறிப்பிடப்படுகிறது. ஆனல், அத்தகைய குறிப்புக்கள் இப்பொழுது அருகி வருகின்றன. அயனமண்டலத்தில் வசிப்

Page 146
278 இலங்கைப் புவியியல்
போரிற் பெரும்பாலோர் உற்சாகங் குறைந்தவர்களென்பது உண்மையே. இதற்குக் காரணம் அங்குள்ள காலநிலையாகும். வெப்பமும் ஈரலிப்பு முள்ள தேசங்களில் மலேரியா, பிாண்டு போன்ற வியாதிகள் உண்டு ; அதல்ை அவர்கள் பலங்குறைந்து அதிக வேலைசெய்ய முடியாதிருக் சின்றனர். அத்துடன் உற்சாகங் குறைந்தவராகவுங் காணப்படுகின்றனர். வெப்பமும் ஈரலிப்புமுள்ள நாடுகளில் நோய் அதிகம் உண்டாகிறது. குளிர்த் தேசங்களில் அவ்வாறில்லை. நல்ல ஆரோக்கியத்துடனும் மலேரியிா, பாண்டுபோன்ற நோய்களாற் பீடிக்கப்படாமலுமுள்ள இலங்கையர் பொது வாக மிகுந்த உற்சாகமுள்ளவராயிருக்கின்றனர். அவர்கள் நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியவர். இந்த நாட்டுக் காலநிலையில் வெள்ளைக்காரன் செய்யக்கூடிய அளவுக்கு அதிகமாக வேலைசெய்கின்றனர். பல ஐரோப் பியர் நினைப்பது போல நண்பகலில் இவர்கள் நித்திரை செய்வதில்லை. விவசாயியானல் மத்தியானத்திற் சிறிது நேரம் துயில்வான் ; அதற்குக் காரணம் அவன் காலையில் நேரத்தோடெழுந்து மாலையில் வெகு நேரம் வரை வேலைசெய்வதாகும். உதைபந்து போன்ற மிகக் கடினமான விளை யாட்டுகளை ஆங்கிலப் பையன்களைப்போல மிகுந்த உற்சாகத்துடன் இலங்கைப் பிள்ளைகள், மத்தியான நேரத்திலும் விளையாடுவர். அந்நிய நாடுகளிலும், அந்நாட்டு மக்களுடன் சமமாக நின்று இலங்கையர் திறமையோடு போட்டி யிடுகின்றனர். விசேடமாக மூளைவேலையில் அவர்கள் ஈடாக நிற்கின்றனர். உழைப்பில் அந்நியருக்கு அவர்கள் எவ்வகையிலும் குறைவதில்லை. மத் திய கோட்டு வலயத்தில், ஐரோப்பியர் ஆதிக்கத்திலுள்ள மக்கள், அவர் கள் விரும்பும் வேலைகளை எப்பொழுதும் திறம்படச் செய்வதில்லை. அதனுற் ருன் ஐரோப்பியர் இவர்களைப் பற்றி அவ்வாறெல்லாம் எழுதியிருக் கின்றனர். ஐரோப்பியர் இந்தத் தேசங்களில் எப்பொழுதும் மேற்பார்வை செய்வார்களேயன்றித் தாமாக வேலைசெய்வது அருமை. அடியர்கள் குறு கிய நேரத்துக்கே வேலைசெய்வர். கடினமான தொழில்களை யெல்லாம். உள்ளூர்வாசிகளே செய்து முடிப்பர். எலிசுவோத்து அண்டிந்தன் என்பவர் எழுதிய காலநிலையும் நாகரிகமும் என்ற நூலிற் காட்டிய வாறு, வேலைநேரங்களை ஒப்பிட்டுக் கணக்கெடுக்கும் முயற்சி நடைபெற்றது. அது பெரும்பாலும் கைத்தொழில் சம்பந்தமான புள்ளி விவரங்களைப் பற்றியதே. வெளிவேலையிற் பிரதானமாக விவசாயத்தில் நீகிரோமக் களும் சிங்களரும், வெப்பமுள்ள ஈரலிப்பான நாடுகளில் எவ்வளவுநேரந் தொழில் செய்கிறர்களென்பதை ஆங்கிலேயர் செய்யும் நேரத்துடனும் வேலையுடனும் ஒப்புநோக்கிப் பார்த்தால், முன்கூறியவர்களே அதிகஞ் செய்வார்களென்பதிலையமில்லை. முன்னர்க் கூறிய காரணங்களால், அவர் களுடைய வேல்ை அவ்வளவு செறிவானதன்று. ஆனல், ஐரோப்பியர் ஆரம்பத்திலேயே குறுகிய நேரத்தில் அதிக வேலை செய்துவிட்டுப் பின்னர் தமது ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளுகின்றனர். இதனல் அவர் கள், தொழிலாளரிலும் மிகச் சோம்பேறிகளாய் விடுகின்றனர்.

மக்கட் புவியியல் 279
மத்திய கோட்டு வலயத்து மக்கள் உணர்ச்சி குறைந்தவர்களெனப் பொதுவாகக் கூறப்படுகிறது. குளிர்ப் பிரதேசங்களான வட அரைக் கோளத் திலுள்ள உற்சாகமான மக்களிடையே பலவகையான சுபாவங்களும் மனே வேகங்களுங் காணப்படுகின்றன. அவை மத்திய கோட்டு வலயத்திலுள்ள வர்களிடங்கிடையா. இது ஒரளவு உண்மையாயிருக்கலாம் ; ஆனல், நிரூ பிக்கமுடியாது. சத்தியைச் சேமித்து வைப்பது உடலளவிலும், உணர்ச்சி யளவிலுமவசியமாகும். உடல் சம்பந்தமான வாழ்க்கையை, உணர்ச்சி வாழ்க்கையிலிருந்து பிரித்துவிடமுடியாது. சாதிகளிடையேயுள்ள சில பண்புகள் காலநிலையோடு சம்பந்தமில்லாதவை யென்பதையும் கருத்தில் வைத்துக்கொள்ளல் வேண்டும். சீனர் சிங்கப்பூரிலிருந்தாலென்ன பீக்கினி லிருந்தாலென்ன ஒரே விதமான உணர்ச்சியற்ற வெளித்தோற்றமுடைய வராகவே காணப்படுவர். கால நிலையை வைத்துக்கொண்டு சில சாதிப் பண்புகளுக்கு விளக்கங் கொடுத்துவிட முடியாது. ஒரே காலநிலையுள்ள தேசத்தில் வாழும் பல சாதியாருக்கிடையில் ஒரே விதமான பண்புகள் காணப்பட்டால் அவை காலநிலை காரணமாக உண்டானவையென்று கூறி விடலாம். இலங்கையிலே பலசாதியினருண்டு. எனினும் அவர்கள் ஒரே விதமான புவியியற் சூழ்நிலையில் வாழ்வதால் அவர்களிடையே சில பொதுத் தன்மைகள் காணப்படுகின்றன. சோனகர் ஒரளவுக்கு அராபிய இனத்தவர் ; எனவே இலங்கைக்கு முற்றும் மாறன சூழ்நிலையிலிருந்து வந்திருக்கிருர்கள். இருந்தும், சிங்களர், தமிழர் ஆகியோருக்குரிய பல பண்புகளைப் பெற்றிருக்கிறர்கள். இலங்கையருக்கு முற்றும் வேறன சாதி யரான ஆங்கிலேயர் இலங்கையில் நெடுங் காலம் வசித்தாமல் இலங்கை யருக்குரிய பண்புகளைப் பெற்றுவிடுவர்.
நாகரிகம் காலநிலையினல் எவ்வாறு பாதிக்கப்படுகிறதென்ற சிக்கலான விடயத்தை இனி ஆராய்வாம். இலங்கை மக்கள் உயர்ந்த நாகரிக நிலையை அடையாததற்குக் காரணம் இலங்கையின் காலநிலையேயாகு மென்று ஆங்கில நூல்களிலெழுதப்பட்டிருப்பதைக் கண்டு இலங்கை மாண வர் ஆச்சரியமடையலாம். இவ்வாறு பொதுப் படையாகக் கூறுங் கூற்றுக் கள் ஆபத்தானவை. இவை நாகரிகமென்ற சொல்லின் பொருளைச் சரி யாய் அறியாமல் கடும்பற்றுள்ளங்கொண்டும் போதிய ஆராய்ச்சியில்லா மலும் கூறப்படுவனவாகும்.
ஆங்கில மொழியிலே தெளிவான பொருளின்றிக் கிடக்கும் ஒரு சொல்லு * நாகரிகம் ” என்ற சொல்லாகும். மற்றை மொழிகளிலும் இது தெளி வின்றியே காணப்படுகிறது. ஒவ்வொருவரும் த தமக்கேற்ற வகையில் இச்சொல்லுக்குப் பொருள் கொள்ளுகின்றனர். இ ன்டு பேர் ஒரே கருத் துடன் இச்சொல்லை உபயோகிப்பது அருமை. ஒருவகையில் நாகரிகம் வளர்ச்சியைக் குறிக்கிறது. அதாவது, பழைய ஆதிநிலையிலிருந்து மணி தன் படிப்படியாக உயர்ந்து வந்த நிலை, ஆணுல், . ஆளுக்களுள்

Page 147
280 இலங்கைப் புவியியல்
தேசத்துக்குத் தேசம் நாகரிகக் குறிக்கோளில் வித்தியாசமுண்டு ; எனவே, எத்தேசத்தவர் உண்மையில் நாகரிகமடைந்தவரென்பதை நிச்சயிப்பது கடினமாகும். ஒவ்வொரு நாட்டவரும், தாங்கள் எவ்வளவு சிறிய நாட்டவராயிருந்தாலென்ன, புராதன நாகரிகப்படியிலிருந்தாலென்ன, தாங்களே உலகிலுள்ளவர்களுட் சிறந்தவரென்று எண்ணுகின்றனர். இதை நிச்சயித்துக் கூறக்கூடியவர் யார் ? வாழ்க்கை பெரிய விடயம் ; ஒவ்வொரு சாதியாரும் ஒவ்வொரு வகையில் முன்னேறுவர் ; ஒரு சாதி யார் ஒரு காலத்தில் ஒரு கொள்கையை வலியுறுத்துவர் ; வேருெரு சாதியார் வேறெரு கொள்கையை வலியுறுத்துவர். காலநிலை சில இடுக் கண்களையுண்டாக்குகிறது. உடல், உளம், ஆன்மா என்பவற்றைப் பொறுத்த வரையில் இவ்வின்னல்களையெல்லாம் பொருட்படுத்தாது எவர் முன் னேறுகிறர்களோ அவர் ஒரளவுக்கு நாகரிகமடைந்தவர் எனலாம். சில தேசங்களிற் காலநிலை மனிதன் இலேசாகச் சீவிப்பதற்கு உதவு கிறது. அக்காலநிலைகள் மிதமானவையானபடியால் மனிதனுக்குவருத்தங் குறைவு. இந்நிலைதான் பிரித்தானியாவின் வளர்ச்சிக்குக் காரணமெனப் பொதுவாக நம்பப்படுகிறது. வாழ்க்கையிற் சில கருமங்களை ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. எனவே, உண்மையான ஞானமுள்ள புவியியலறிஞர் மெய்யான சம்பவங்களை வைத்தே ஆராய்வர் ; சம்பவங்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யாது பொதுக் கொள்கைகளை எடுத்து விளம்பமாட்டார். ஒரு துறையில் முன்னேறியுள்ள சாதியார் மற்றெரு துறையில் அநாகரி கராயிருக்கின்றனர். சில சாதியார் திருத்திகரமான வாழ்க்கை முறையுள்ள வராயிருக்கின்றனர். மிகக் கடுமையான நிலைகளிலும் தம்மைப் பூரணமாகச் சரிப்படுத்திக்கொண்டு உலகுக்கு நன்மையுண்டாகும் வகையில் வாழ்கின் றனர். ஆனல், அவர்களுடைய வளர்ச்சி வேறு துறைகளில் மட்டமாகவே இருக்கிறது.
இப்பிரச்சினையிலுள்ள சிக்கல்களைச் சில உதாரணங்களைக் கொண்டு விளக்குவாம். உலகிலுள்ள சாதியாருள் மிகமுன்னேற்ற மடைந்தவர் தாங்களென்று பிரித்தானியர் நினைப்பர். தேச ஆராய்ச்சியிற் சென்று புவியியலறிவுக்குப் பெருந்துணை செய்த பிரதேச ஆராய்ச்சியாளரைப் பற்றி அவர்கள் பெருமையடைகின்றனர். என ஐரோப்பிய சாதி யாரும் இவ்வாறே தமது மகிமைகளைப்பற்றிப் பெருமைகொள்வர். ஆட்டிக்குக்குரிய நிலைமைகளுக்கேற்றவாறு எசுக்கிமோச் சாதியார் தமது வாழ்க்கையை அமைத்துச் சுகமாகவும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர். ஆட்டிக்குப் பிரதேசத்தை ஆராயச் சென்ற ஐரோப்பியரின் பெருவெற்றிக்கு எசுக்கிமோச்சாதியார் பெரிதுந் துணைபுரிந்துள்ளனர். ஆனல், நாக ரிகத்தில் எசுக்கிமோச்சாதியார் கீழ்ப்படியிலிருப்பதாகவும், அதற்குக் கார ணம் அவர்களுடைய காலநிலையென்றும் ஐரோப்பியர் எண்ணுகின்றனர் எசுக்கிமோக்களிடம் இலக்கியமில்லை ; ஐரோப்பியர் ஆராய்ந்தறிந்த விஞ் ஞான அறிவுகிடையாது. இக்காரணங்களாலேயே எசுக்கிமோக்கள் நாக

மக்கட் புவியியல் 28.
ரிகத்திற் குறைந்தவராகக் கருதப்படுகின்றனர். ஆனல், அவர்கள் வேறு
துறையில் பெரிதும் முன்னேறியிருக்கின்றனர். அவர்கள் வேட்டையாடு வதிலும், மீன்பிடிப்பதிலும், ஆட்டிக்குப் பிரதேசத்தில் சுகமாகவாழும் முறைகளிலும் கைதேர்ந்தவராயிருக்கின்றனர். அவர்களுக்கு இத்துறை
யில் இணையானவர்களில்லை. பிரித்தானியரும், நோவே தேசத்தவரும் அமெரிக்கரும் வேறு சாதியாரும் ஆட்டிக்குப் பிரதேசங்களைப்பற்றி யறிந்த
தும் விலங்குரோம வியாபாரத்தில் ஈடுபட்டனர். அதனுல், அநாகரிக மான முறைகளில் நடந்துகொண்டனர். இதனல் எசுக்கிமோச்சாதியார்
நிர்மூலமாக்கப்பட்டிருக்கலாம். ஆனல், தேனியசாதியார், இச்சிறு சாதி
யாரின் சார்பாகத் தலையிட்டு விலங்குரோம வியாபாரத்தைக் கட்டுப்படுத்
தினர். அதனல் எசுக்கிமோச்சாதியார் காக்கப்பட்டனர்.
உலக நாகரிகத்துக்கு ஒவ்வொரு சாதியாருஞ் செய்த தொண்டுகளை ஆராய்ந்த பின்னர், எந்தச் சாதியார் உயர்ந்த நாகரிக முற்றிருந்தார்க ளென்று கூறுவது மிகக் கடினம். அவர்களுடைய நாகரிகத்தைக் கால நிலை எவ்வளவு தூரம் பாதித்ததென்று கூறுவது அதிலும் கடினம். காலநிலைக்குக் கட்டுப்படாமல் எத்தனையோ சாதிப் பண்புகள் தனித்து நிற் கின்றனவென்று முன்னர்க் கூறினும், அவை உலகின் எந்தப் பாகத் திலுங் காணப்படலாம். மத்திய கோட்டுவலயத்திற் காணப்படும் தென்ன மெரிக்க இந்தியர், நீகிரோவர், குறளர், யாவாவாசிகள், பப்புவர் ஆகியோரை இலங்கையரோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இவர்கள் வாழும் பிரதேசங்களின் காலநிலை ஒன்று போலிருந்தாலும், அவர் ஒவ்வொருவரும் தனித்தனியான முறையில் விருத்தியடைந்திருப்பதை நோக்கலாம். முன்னேற்றமடையாத சாதியாராகக் காணப்படுவோர் உலகின் மற்றைப் பகுதிகளோடு தொடர்பின்றி யிருப்பவரே. நாகரிக வளர்ச்சிக்கு, மற்றை நாகரிகங்களின் தொடர்பு அவசியம் ; அது காலநிலையிலும் முக்கியமான ஒர் அமிசமாகும். இந்த வகையில் பிரித்தானியாவைப்போல இலங்கையும் மற்றை நாடுகளின் தொடர்பைப் பெற்றிருந்தது. பிரித்தானியாவைப் பொறுத்தவரையில் மற்றை நாகரிகங்களோடு அதற்குள்ள தொடர்பு இலங்கையைக் காட்டிலும் பிந்தியதே. இலங்கையின் தொடர்பு நீண்ட காலமாயிருந்து வருகிறது. ஆளுல்ை, இலங்கை பிரித்தானியாவிலும் பார்க்க அமைதியுடனேயே தொடர்பு கொண்டிருக்கிறது. கடந்த நூற்றண்டில் பிரித்தானியர், பல தேசங்களுக்கும் யாத்திரை செய்து அங்குள்ள கருத்துக்களையெல்லாம் பெற்றுக் கொண்ட னர். இலங்கையர் மற்றை நாட்டவர் தமது ஊரையடையும் வரை காத்திருந் தனர். இலங்கையிற் கலந்த பண்பாடுகள், அவை எந்தத் தேசத்தி லிருந்து வந்தனவோ அவற்றின் காலநிலையினல் உருவானவையென்று இலேசாகக் கூறிவிடலாம். ஆனல், அதை நிரூபிப்பது முடியாத காரிய ப0ாகும.

Page 148
நாலாம் பகுதி-மூன்றும் அத்தியாயம் இலங்கையிலுள்ள மக்கட்சாதியார்
இலங்கையில் மிகப் பழங்காலந் தொட்டே மக்கள் குடியேறியுள்ளனர். சரித்திர காலத்துக்கு முற்பட்ட மக்களின் சான்றுகள் அதிகம் இன்னும் கண்டறியப்படவில்லை. கிறித்துவுக்குப் பல்லாயிர மாண்டுகளுக்கு முந் தியே கற்கால மனிதர் இங்கு வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றுகளுண்டு. குகைகளிற் காணப்படும் கல்லாயுதங்களே இதனை நிறுவக்கூடிய பிரதான மான சான்றுகளாகும். இவற்றிற் சிலவற்றைக் கொழும்பு நூதனசாலை யிற் காணலாம். காடுகளிலுள்ள பல குன்றுகளின் சாரல்களில் ஆதி மனிதர் கல்லை உடைத்து ஆயுதங்களைச் செய்த இடங்கள் காணப்படு கின்றன. கி.மு. 2000 உக்கு முற்பட்ட காலத்தைப் பற்றிக் கூறிக் கொள்ளும் இராமாயண காப்பியம் இலங்கை வாசிகள் இந்தியரோடு தொடர்பு பூண்டி ருந்தனரென்றும், அக்காலத்திற்கூட அவர்கள் அநாகரிகராயிருக்கவில்லை யென்றுங் கூறுகிறது. மகாவமிசவரலாறு கி.மு. ஆரும் நூற்றண்டிலேயே துவங்குகிறது. சிங்களரின் மூதாதையர் அப்பொழுதுதான் இலங்கை யில் வந்திறங்கினர். அக்காலத்தில் இலங்கையில் ஒரளவு அநாகரிகமான முறையில் வாழ்ந்துவந்த இயக்கர், நாகர் என்ற இரு சாதியார் வசித்தனர். அவர்கள் வேடர் ; விவசாயத்தைப் பற்றி அதிகம் அறியாதவராயிருந்தனர் ; இந்தியாவிலிருந்த முக்கியமான சாதிகளிலும் வேருகக் காணப்பட்டனர். தக்கிணத்திலே திராவிடர் குடியேறுவதற்கு முன் னர் அங்கே வசித்த சாதியார் இவர்களாயிருக்கலாம் ; திராவிடர் இவர் களைத் தெற்கே கலைத்து விட்டுத் தக்கிணத்திற் குடியேறியிருக்கலாம் ; இன்றும் அவர்களே அங்கு வசிக்குஞ் சாதிகளுட் சிறந்தவராய்க் காணப்படு கின்றனர். இயக்கரும் நாகரும் ஈற்றில் இந்தியாவை விட்டு இலங்கையில் வந்து புகலிடங்கொண்டனர். இத்தகைய புராதன மக்களுக்குச் சரித்திர சாசனங்களிலே ஒரு பெயர் காணப்படாத படியால் அவர்கள் பூர்வதிரா விடர் என வழைக்கப்பட்டனர். அவர்களிடையே பேச்சு வழக்கில் ஒரு மொழியிருந்த போதிலும், இலக்கியம் வளர்ச்சியடையவில்லை. விசய னின் வழிவந்தோர் இப்பூர்வ திராவிடரை இலங்கையின் வளமற்ற பகுதி களுக்குக் கலைத்து விடவே இவர்கள் காடுகளில் ஒளித்திருந்தனர். இன்று வேடரென வழங்கப்படுவோர் இச்சாதியாரின் வழித் தோன்றல்களெனக் கொள்ளப்படுகின்றனர்.
1946 ஆம் ஆண்டின் குடிசன மதிப்பிலே வேடரின் தொகை 6000
எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. சரியான தொகையை மதிப்பிட முடியாது;
எனெனில் இவர்க்ளிற் பலர் கிழக்குப்பாகத்திலுள்ள காடுகளில் அலைந்து
திரிவர். இவர்களிற் சிலர் வடமத்திய மாகாணத்திற் காணப்படுவர். ஆனல்
282

மக்கட் புவியியல் 283
வேடர் வசிக்கும் முக்கியமான பகுதி விந்தனை ; இது கிழக்கு மாகாணத் திலே அலுத்து நுவரைக்கும் பிபிலைக்கும் கிழக்கில், கல்லோயா, மதுருஒயா என்ற அருவிகளின் மேற்பாகங்களிலமைந்துளது. பல ஆண்டுகளாக வேடர் களின் தொகை குறைந்து வருகிறது. இதற்குக் காரணம், இவர்களுடைய வேட்டை நிலங்கள் தோட்ட நிலங்களானமையும், சிங்களரோடு இவர் கலப்பு மணஞ் செய்துகொண்டமையுமேயாகும். இவர்கள் முன்னர் பல குழுவினராகப் பிரிந்திருந்தனர். 1910 ஆம் ஆண்டில் வேடரைப்பற்றி ஆராய்ச்சி நடத்திய கலாநிதி செலிக்குமன் என்பவர் இவர்களின் ஆறு குழுக்களையும் வேறு சில சிறிய குழுக்களையும் ஆராய்ந்து கண்டார். “வேடர்” என்ற பெயருடன் இவர் எழுதிய நூலில் இவர்களைப் பற்றிய உண்மைகள் மிகவும் காணப்படுகின்றன. முற்காலத்தில் இவர்கள் சிங் செய்து கொண்டு தனிச் சாதியாராக வாழ்ந்தனர். வேடர், சிங்களர் தமிழரைக் காட்டிலும் குறுகிய தோற்றமுடையவர்கள். வளர்ந்த வேடரின் சராசரி உயரம் ஐந்தடியாகவோ அதற்குக் குறைவாகவோ இருக் கும். விசாலமும் திடகாத்திரமுமான தோற்றமுடையவர்கள். தலைகுறுகியிருக் கும் ; சிங்களரிலும் சிறிது கூடிய 5ருநிறமுடையவர்கள் ; ஆனற் பலர் மஞ்சள் சார்ந்த கபில நிறமோ, வெண்கலநிறமோ உடையவராய்க் காண்பர். இவர்கள் குகைகளில் வசித்துக்கொண்டு காட்டிலே வேட்டை யாடிப் பிழைத்து வருகின்றனரெனப் பொதுவாகக் கருதப்படுவர். இன்று இவர்களில் மிகச் சிலரே இத்தகைய வாழ்க்கையுடையவராயிருக்கின்றனர். பெரும் பகுதியினர் கிராம வேடராய் மாறி விட்டனர். இவர்கள் நிலையாகக் கிராமங்களில வசித்துக்கொண்டு சோளம், குாக்கன் முதலிய புன்செய் பயிர்களைச் செய்தோ, மாடுகளை வளர்த்தோ வாழ்கின்றனர். உரிமை யாக மாடுகளை வைத்திராதவர், அயற் கிராமங்களிலுள்ள சிங்களரின் மாடுகளைக் கவனிப்பர். அவர்களுடைய பிரதானமான கிராமங்கள் தம்பனி, மல்கொடை, எலக்கொட்டலியா, யக்குறை என்பனவாகும் ; இவை மகாவலிகங்கையின் வலது கரையில், அலுத்துறுவாைக்கு வடகிழக்கிலே யுண்டு. பிபிலைக்குக் கிழக்கிலுள்ள நில்கலையும் இவர்கள் கிராமமே. இவர்களுட் பெரும்பாலோர் வேட்டையாடுகிறர்கள். ஆனல், இன்று வேட்டை யாடுதல் குறைந்து வருகின்றது. சில வேடர் வருடத்தில் அரைவாசிக் காலத்திற்கே வேட்டையாடுவர். வேட்டையிற் கிடைத்த மிருகங்களையும் பலவகையான கந்த மூல பலாதிகளையுமுண்டு வாழ்வர். காட்டுத் தேனும், உடும்பும் அவர்களுக்கு நல்ல உணவாகும். இறைச்சியைத் தேனிலே தோய்த்து மரப் பொந்துகளிற் பாதுகாத்து வைப்பது இவர்கள் வழக்கம். வேட்டுவக் கிராமங்கள் இப்பொழுது திருத்தமடைந்து, சிங்களர் கிராமங் களைப் போல மாறி வருகின்றன. வேட்டுவச் சாதியார் தாய் வழியையே கூறுவர். தந்தை வழியை வழங்க மாட்டார். ஏனெனில் குடும்பத்தில் அவளே நிரந்தரமான இல்லக்கிழத்தி ஆவாள். தந்தை நீண்டகாலம்

Page 149
284 இலங்கைப் புவியியல்
தொழில் கருதி வீட்டுக்கு வராதிருப்பான் ; அல்லது, வேட்டைக்குப் போன விடத்து இறந்து படுவான்; தாயானவள் குடும்பத்தோடிருந்து புன்செய்யை யும் வீட்டையும் பாதுகாப்பாள். பெண்களுக்கு ஆண்களோடு சமமான தகை மையுண்டு. அவ்வாறே மகனும் தனது குடும்பத்தை விட்டுத் தன் மனைவியின் குடும்பத்தாரோடு சேர்ந்து விடுவான். மாமனுக்கும் மரு மகனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. வேடர் சிங்களரோடு சேரச் சேர அவர்களுடைய பழக்க வழக்கங்களைப் பின்பற்றுகிறர்கள். உண்மையான வேடர் அமைதியும், சச்சரவுமில்லாதவர் ; உண்மை, நேர்மையென்ற குண ங்களுக்குப் பேர் போனவர். தாம் வைத்திருப்பதை எல்லாம் நேர்மையாகப் பகிர்ந்து கொள்வர். ஒழுக்கத்தில் எளிமையும் உயர்வுமுடையவர்கள். செழிப்புடையவர்கள்; ஒரளவு அசட்டுத்தன்மையுள்ளவர்கள். கடந்த நூற். ருண்டில் இவர்களுடைய வேட்டை நிலங்கள் பறி போயின; அந்நிய நாடு களிலிருந்து வரும் யாத்திரிகர் முன், இவர்கள் நூதனப் பொருள்களாகக் காட்சிக்கு வைக்கப்படுவர். இந்தியப்பிரதேசத்திலுள்ள மக்களுள் இவர்களே பூர்வீக மக்களாயிருப்பதால் இவர்களைக் காட்சிப் பொருளாகக் காட்டுகின்ற னர். பணம் இவர்கள் வாழ்க்கையிற்றலைகாட்டியபடியால் அதைத் தேடுவதில் இவர்கள் தமது பழைய உண்மை விரதத்தைக் கைவிட்டு, ஒழுக்கத்திற்குன்று கிருர்கள். தமது அன்ருட வாழ்க்கையிலிவர்கள் பழைய பழக்க வழக்கங்களை யும், தம்மொழியையும் கைவிட்ட போதிலும், பார்க்க வந்துள்ளவர்க்கு நூதனங்காட்டுவதற்காகப் பாசாங்கு செய்கிறர்கள். இவர்களுடைய மொழி சிங்களத்துடன் பெரிதும் கலந்து விட்டதால், அதன் தனித்தன்மை கெட்டு மறைந்து போகும் நிலையிலிருக்கிறது. வேடர் மொழி வெறும் பேச்சு மொழியாகும். அதனல் அதன்மூலம் விளக்கக் கூடிய விடயங்களின் எல்லை குறைவாகவேயிருக்கும். எண்களேக் குறிப்பதற்கு அம்மொழியில் ஒரு முறை கிடையாது. நுண்பொருட் கருத்துக்களே விளக்கவும் முடியாது. கட்டடத் துறையில் முக்கியமான கட்டடமொன்றேனும் இவர்களிடத்தில்லை. நாடோடிகளாய் வாழ்ந்ததால் இவர்களிடையே நிரந்தரமான கட்டடங்க ளில்லை.
இவர்களுடைய சமயம் மிகப் பூர்வீகமானது ; எல்லாச் சாதியாரும் தமது வளர்ச்சியின் ஆரம்பநிலையில் எவ்வித படிகளைக் கடந்தனரோ அந்த நிலையிலேதான் இவர்கள் சமயமுமிருக்கிறது. பூர்வீக சமயமுறை களே ஆராய்வதால் இக்கால வாழ்வில் உள்ள பல விடயங்களை நன்கு விளங்கிக்கொள்ளக்கூடியதா யிருக்கும். சமயக் கருத்துக்கள் படிப்படி யாகவே வளர்ச்சியடைகின்றன. அதஞ்ல் சாதிகளெல்லாம் இப் படிமுறை யிலேதான் வளர்ந்துவந்திருக்கின்றன. உயர்ந்த ஒரு சமயப்படியில் வளர்ந்து வந்த போதிலும் மக்களிடையே பூர்வீக எண்ணங்களும், மூட நம்பிக்கைகளுமிருந்தே வருகின்றன. அதனல் அவை تیے{{Lq-- மனத்தில் நின்று பெரிதும் பாதிக்கின்றன. பெளத்தம், சைவம்

மக்கட் புவியியல் 285
போன்ற உயர்ந்த சமயங்களை அனுட்டிக்கும் மக்களிடத்திலும், பூர்வீக சமயக் கொள்கைகளின் வாசனை வீசிக்கொண்டேயிருக்கும். இச்சமயங்களின் கிரியைகளும், சம்பிரதாயங்களும் புராதன காலத்தில் நிலவிய பொது ஆசாரங்களின் அடிப்படையிலேயே வளர்ந்திருக்கின்றன. புராதன சிங்களர் இந்தியாவிலிருந்து வந்த தமது மூதாதையரிடமிருந்து சில கொள்கைகளைப் பெற்றிருப்பார்கள். வேடர்களிடையே சமய இலக்கியம் கிடையாது ; இன்று மற்றைச் சமயங்களிடையே புரோகிதரும் குருக்கண்மாரு மிருப்பதுபோலப் பூர்வீக வேடரிடையிலும் சமயாசாரங்களை வாயாருகக் கூறிவந்த அறிவர் இருந்தனர். வேட்டையும் அதுபோன்ற எனைக் கலை களும், தகப்பன் மகனுக்குச் சொல்ல மகன் தன் மகனுக்குச்சொல்ல, வரன்முறையாய் வந்திருக்கின்றன. இறந்தவரின் ஆன்மா, உயிரோடிருப்பு வரின் வாழ்க்கையை நல்வழியிலும் தீயவழியிலும் பாதிக்கிறதென்பதே வேடரின் பழைய சமயத்திலுள்ள முக்கியமான கொள்கையாகும். தென் புலத்தார் நம்பிக்கை இவர்களிடையே இருந்தது. சாதிக்குப் பெருந் தொண்டு செய்த மக்களின் ஆன்மாவை இவர்கள் விசேடமாக ஆராதனை செய்தனர். அவ்வான்மாக்கள் பாறைகளிலுங் குன்றுகளிலும் வசிப்பதாக இவர்களெண்ணினர். உதாரணமாக கந்தயக்கன் (மலையியக்கன்) என்ற கடவுளே இவர்கள் விசேடமாக வழிபட்டனர். வேட்டைத் தொழிலுக்கு அவனே அதிதேவதையெனவும் நம்பினர். இலங்கையில் இன்று விளங்கும் யாத்திரைத் தலங்களிற் பல மக்களுக்கு நன்மைபுரியும் தெய்வங்களின் இருப்பிடமாகப் பழங்காலந் தொட்டு வழங்கி வந்திருக்கின்றன. இன்று அவற்றின் சரித்திரத்தை மக்கள் மறந்து விட்டபடியால் அவற் றின் குறிக்கோள் முற்ருக மாறிவிட்டது. கதிர்காமத் தலத்தை இதற்கு ஒர் உதாரணமாகக் கொள்ளலாம். புராதன இந்துக்களிடமிருந்து கதிரமலைக் கடவுளைப் பற்றி வந்த கொள்கைகளை வேடர் தமது கருத்துக்க ளோடு பொருத்திவிட்டனர். மிக முக்கியமானதொரு சமயச் சடங்கு அமுது படைத்தல். கிழங்கையும், நீரையும் முதலிற் கடவுளுக்கு நிவேதித்தனர். பின்னர் அன்னத்தையும் தேங்காய்ப்பாலையும் படைத்தனர். இது கட வுளரை ஆராதிப்பதற்கும், வேட்டை மிருகங்களைக் காட்டிக்கொடுப்பதற்கும், செய்யப்பட்டது. இச்சடங்கைச் செய்வோர் “துக்களுவை’ என்றும் பின்னர் * கபுருளை ’ யென்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் பூசைசெய்யும்போது பூசிக்குந் தெய்வத்தின் ஆவேசத்தைப் பெறுவர். இவர்கள் “ சமனர் ” எனவும் பெயர் பெறுவர் ; இதனுல் இந்த மதமும் “ சமனர் ” மதமெனலாயிற்று. பூசைநடக்கும்பொழுது அபிநயத்தோடு நாட்டியம் நடைபெறும் ; இதுவே பிற்காலத்திற் சிங்களரிடையே பேயாட்டம் என மாறிற்று. இப்பூசைகளில் மக்கள் ஒன்றுசேர்ந்து உண்டாட்டுச் செய்வர். உயர்ந்த சமய வழிபாடுகளில் இவ்வழக்கம் சிறந்த முறையில் நடைபெறு கிறது. தேவதைகளில் நம்பிக்கைவைக்கும் பழக்கம் இலங்கையிற் பெரு

Page 150
286 இலங்கைப் புவியியல்
வழக்காக இருந்து வருகிறது. “ கண்ணுரறு ” என்ற வழக்கம் இதனேடு தொடர்புள்ளது. உலக ஆசைகளிலே தடித்த பற்றுள்ளவர்கள் இறந்தால் அவர்களுடைய ஆவி தீங்கு செய்யும் நோக்கத்துடன் வீட்டைச் சுற்றிக் கொண்டு நிற்குமென்ற பெளத்தக் கொள்கையுடன் இது மாறுபட மயங்கியிருக்கிறது. ஒருவருக்கு நோய் கண்ட காலத்தில் அல்லது வேறு விசேட காலங்களில் ஆவிகளுக்குச் சிறு படைப்புச் செய்வதும் கழிப்புக் கழிப்பதும், வேடர் சமய வழக்கத்திலிருந்து வந்த முறைகளாகும். மூட நம்பிக்கைகளாலுண்டாகும் பயமே பூர்வீக சமயங்களின் அடிப்படை அமிச மாகும். உயர்ந்த நிலையிலுள்ள சமயங்கள் இந்தப் பயத்தை அகற்றவும், மூட நம்பிக்கைகளை விலக்கவுமே முயல்கின்றன. வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பூர்வீக நம்பிக்கைகளிற் சில எஞ்சி நிற்பதைக் காணலாம். இவற்றுட் பல குறிப்பிடத்தக்கவை. ஒவ்வொரு சாதியிாரின் தனித் தன் மைக்கும் இவை எடுத்துக்காட்டா யமைகின்றன. இலங்கையின் புராதன கலைகளிலும், சமய விழாக்களிற் பயன்படுத்தப்படும் உருவங்களிலும், குறி யீடுகளிலும், *யந்திரம், பலியாட்டம் என்பவற்றிலும் இவை காணப்படுகின் றன. பலியாட்டத்தைக் கல்வியறிவுள்ளவர்கள் பொருட்படுத்துவதில்லை. ஆனல், அது தனிப்பட்ட ஒரு வழக்கம் என்ற முறையிலும், சரித்திர சம்பந்தமுள்ளதென்ற முறையிலும் அதனைப் டாதுகாப்பது நன்று. வேறு பல புராதன வழக்கங்களும் இவையிோடொத்தவை. வேடரைப்பற்றி ஆராய்ச்சி செய்வதால் இப்பழக்க வழக்கங்களை நன்கு விளங்கிக் கொள்ளலாம். வேட்டு வவினத்தவர் இன்று மறைந்து வருகின்றனர். மேலும் இவர்களுடைய தனிப் பண்புகள் மாறிவருகின்றன. பலருக்குச் சிங்களம் தெரியும் ; இயற்கைச் சூழ்நிலையிலிருந்து கொண்டு தமது பழக்க வழக்கங்களையுஞ் சம்பிரதாயங் களையு மனுட்டித்து வரும் உண்மை வேடரை இன்று காணமுடியாது. கட்டாயக் கல்வியை விந்தனைப் பகுதியிற் புகுத்தினுல் இந்நூற்றண்டி னிறுதியில் வேடர் என்ற சாதியாரின் அமிசங்கள் சிறிதும் மிஞ்சமாட்டா. சாதிக் கலப்பினல் இப்பகுதி மக்களின் உடலமைப்பே நிலையாக மாறு பட்டுவிட்டது.
தக்கிணத்தில் வசித்த திராவிடர் மிகப் பழங்காலந் தொட்டே இலங்கை யுடன் தொடர்பு வைத்திருக்கிறர்கள். சிங்களச் சாதியை உருவாக்கிய மக்கள் இலங்கைக்கு வராமலிருந்தால் இலங்கை முழுவதையும் அவர்களே கைப் பற்றியிருப்பார்கள். இந்தியப் பெருநிலத்தில் இலங்கைக்குச் சமீபமாக உள்ள திராவிட இனத்தவர் தமிழரே. சரித்திர காலத்தினரம்பநூற் ருண்டுகளிலே தமிழர் இலங்கை மீது அடிக்கடி படையெடுத்தனர். பின்னர் யாழ்ப்பாணக் குடா நாட்டிலேயே நிலையாகக் குடியேறினர். சிங்களர் இப் பகுதி வளமற்றதாயிருப்பதைக் கண்டு இதனை அபிவிருத்தி செய்யாது
*யந்திரம்= மந்திர உச்சாடன்ஞ்செய்து அட்சரக் கூடுகட்டுதல். பலி= பேயாட்டம்.

மக்கட் புவியியல் 287
விட்டுவிட்டார்கள். நாளடைவிலே தமிழர் வடமாகாணம் முழுவதும் பரவிக் கிழக்குக் கரையோரமாகவும் பரவினர். இப்பொழுது இப்பகுதியிலுள்ள குடிசனங்களுள் அரைப்பங்கு துவக்கம் முக்காற்பங்குவரையுள்ளவர் தமிழரே. யாழ்ப்பாணம் நீங்கலாக, வட மாகாணத்திலுள்ள எனப் பாகங்களில் வசித்த தமிழர் “ வன்னியர் ’ எனப் பழைய இலங்கைச் சரித்திர நூல்களிற் காணப்படுகிறது. வன்னியர் என்ருல் காட்டுப்பகுதியி லுள்ளவரெனப் பொருள்படும். இது ஒரு சாதியைக் குறிப்பதன்று வேடர், தெற்கே குடியேறிய யாழ்ப்பாணத்தவர், குளத்தையடுத்து வசித்த சிங்களரில் எஞ்சியுள்ளோர் ஆகிய எல்லாரையுங் குறிக்கும்.
இலங்கைத் தமிழர் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவந்த இந்துப் பண்பாடுகளின் முக்கிய அமிசங்களையெல்லாம் காப்பாற்றிவருகிறர்கள். இருந்தும், இவர்கள் தமக்கெனச் சொந்தமான தனிப்பண்புகளையும் வளர்த்து வந்தார்கள். அதனுல், தமிழினத்தில் அவர்கள் ஒரு தனியினம். 1946 ஆம் ஆண்டில் இலங்கைத தமிழரின் குடிமதிப்புத் தொகை 826,000. இது இலங்கையின் மொத்தக் குடிசனத் தொகையில் 123 வீத மாகும். குளங்கள் நிறைந்த பகுதியிற் சனங்கள் அதிகமாகக் குடியேறி யிருந்த காலத்திலே தமிழர் சிங்களரோடு நெருங்கிய தொடர்புடையவரா யிருந்தனர். ஆனற் சிங்களர் தெற்கேயும் மேற்கேயும் கலைக்கப்பட்ட பின்னர் இடைப்பட்ட நிலங்கள் காடடர்ந்துபோயின. அதனற் பல நூற் முண்டாக அவர்கள் தொடர்பின்றி யிருந்தனர். கடல் மார்க்கமாக மட்டும் தொடர்பிருந்து வந்தது. பின்னர், தெருவும் இருப்புப் பாதையு மமைக்கப்பட்டதும், மறுபடியுந் தொடர்புண்டானது. “சிங்களர் எப்பொழுது காணப்பட்டனரோ அப்பொழுது துவங்கித் தமிழருங் காணப்பட்டனர். அவர் களுடைய அரசர்களும், நாம் முன்னர் கண்டதுபோல், ஆட்சி நடத்தி வந்திருக்கிருர்கள். அவர்கள் இந்தியாவிலுள்ள சோழ தேசத்திலிருந்தும் (தஞ்சாவூரின் பழைய பெயர்) பாண்டி நாட்டிலிருந்தும் (மதுரை, திரு நெல்வேலி மாவட்டங்கள்) வந்திருக்கிறர்கள். சிங்களராட்சியிலுமே தமிழர் உயர்ந்த இடத்தை வகித்தனர். விசேடமாக எழாம் நூற்றண்டு துவக்கம் பதினெராம் நூற்றண்டுவரை, இவர்கள் உயர் பதவிகள் வகித்தனர். முதன்மந்திரிப் பதவி துவக்கம் எல்லாப் பதவிகளையும் இவர்கள் வகித்துவந்தனர். சிங்காசனத்துக்குப் பிோட்டியேற்பட்ட காலத் திலே தமிழர் நடுநின்று உரிமை வழங்கியுள்ளனர். ’ (எச்சு. எ. சே. குலூகலை எழுதிய “இலங்கை ’ என்ற ஒட்சுபோட்டுச் சஞ்சிகையிலிருந்து எடுக்கப்பட்டது). தமிழர் தமது பழக்க வழக்கங்களை இலேசாகக் கைவிடமாட்டார். சமீபத்தில் எனைச் சாதியாரோடு பெரிதும் நெருங்கிப் பழகும் வாய்ப்புக்கிடைத்த பின்னரும், அவர்கள் சிங்களரைப் போலத் தமது பழக்கங்களை அதிகம் விட்டுக்கொடுக்கவில்லை.

Page 151
>90%
50ኤ-70/7ዕኔ-99
ه٪ 25 - 07
5%-10% Ow **
5%-50 awan 7ے%507ءoمڑ
然
KN
幻25%
<5%
La: i, 79. 1921 ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி இலங்கையின் பல மாகாணங்களிலுமுள்ள தமிழரின் நூற்றுவீதம். வடக்கிலும் கிழக்கிலும் அதிகப்படியானேர் தமிழர் நிறந்தீட்டிய பகுதிகளில் உள்ள தமிழரில் 95 வீதத்தினர் இந்தியத் தமிழர். இவர்கள் குடியேறிய தொழிலாளர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மக்கட் புவியியல் 289
தமிழருடைய தனித்தன்மையின் பயனக பிரித்தானிய அரசாங்கம், அவர் களின் சமய சம்பந்தமான பழக்க வழக்கங்களை யனுசரித்த சட்டமான “தேச வழமை ’யை அனுட்டிக்க விட்டுவிட்டது. தமிழருக்கும் சிங்கள ருக்கும் பல வேற்றுமைகளுண்டு : மக்களின் தன்மைகளைச் சாதியும், சூழ்நிலையும் பாதிக்கிறதென்ற பிரச்சினை புவியியல் நூல்களில் அடிக்கடி ஆராயப்படுகிறது. அதற்கு இவ்வேற்றுமைகள் உதாரணமாகக் காட்டப் படுகின்றன. தேசத்தின் பெளதிகவமைப்பு மக்களின் பெரும்பாலான தன்மைகளை உருவாக்குகின்றது என்ற உண்மையைப் பல நூல்களெடுத்துக் காட்டுகின்றன. ஆனல், பரம்டரையாக வந்த குணவியல்புகளை இந்நூல் கள் முற்றக ஒதுக்கி விடுவதுந் தவறு ; அவை மக்களியல்பை நிச்ச யிப்பதிற் பெரும் பங்கெடுக்கின்றன. இலங்கையிலுள்ள புவியியற் றன்மைகள் அதன் எல்லாப் பாகங்களிலும் அதிக வித்தியாசமின்றிக் காணப்படுகின்றன. தமிழருக்குஞ் சிங்களருக்கும் பொதுவான பல பழக்க வழக்கங்களுண்டு. உடலமைப்பிலிவ்விரு சாதியாருக்கும் அதிக வித்தியாசமில்லை. சராசரி உயரம் இருவருக்கும் ஒன்றே. வேடரிலும் இவர்கள் உயரமானவர்கள் ; ஆனல், ஐரோப்பியர், ஆபிரிக்கராகியோரின் சராசரி உயரம் இவர்களுடைய உயரத்திலும் சிலவங்குலங் கூடினது. இரு சாதியாருடைய மண்டையோடும் ஒடுக்கமாகவே யிருக்கின்றது. தமிழ ருடைய மண்டையிோடு சிங்களருடையதிலும் சிறிது நீளமானது. புவியியல் நிலையும், உடலமைப்பும் இரு சாதியாருக்கும் ஒன்றுபோலிருந்தாலும், வீட்டு வாழ்க்கையிலும் பழக்க வழக்கங்களிலும் அதிக வித்தியாசமிருப் பதைக் காண்கிறேம். உடை, உணவு, சுபாவம், சமயம் என்பனவெல்லாம் தனித்தன்மை யுடையன. இது சாதியில் இயற்கையாயமைந்த ஒரு தன்மை யேயன்றிப் புவியியல் நிலைமைகளாலுண்டானதன்று.
பல நூற்றண்டாகவே கோடிக்கணக்கான இந்தியரின் வாழ்வைப் பெரி தும் உருவாக்கிய வேதம், மனுதர்ம சாத்திரம் போன்ற புராதன நூல் களினடிப்படையி லமைந்த இந்துமதப் பண்பாட்டை இலங்கைத் தமிழர் கைவிடாது காப்பாற்றிவருகிறர்கள். இவர்கள் இந்து சமயத்தின் ஒரு கிளை யான சைவ சமயத்தை அனுட்டித்து வருகிறர்கள். சாதாரன சிங்களரிலும் தமிழர் வைதீக மனப்பான்மையுடையவர். உடை, உணவு, வீட்டுப் பழக்கம் என்பவற்றில் ஐரோப்பிய பழக்க வழக்கங்களைப் பெரும்பாலும் கைக்கொள் ளாது விட்டனர். அறிவுத்துறையிற் கிறித்தவ பாதிரிமார் அளித்த கல்வி முறையை எற்றுக் கொண்ட போதிலும், பழக்க வழக்கங்களில் அவர்கள் புராதனமான இந்து சமய ஆசாரங்களேக் கைவிட ஒருப்படவில்லை. அதனல் வேறு சாதியாரோடோ அந்நியரோடோ இவர்கள் இலேசாகக் கலந்து கொள்ள வில்லை. உணவு உண்ணும் விடயத்திலும் இவர்கள் தனித்தன்மையுடையவரா யிருந்தனர். இந்து சமயம் எக தெய்வக் கொள்கையுடையது. கிறித்து சமய

Page 152
290 இலங்கைப் புவியியல்
முமப்படியே. அதனுல் இந்துக்கள், நிரீச்சுரவாதிகளான பெளத்தரிலும் இலேசாகக் கிறித்து சமயத்தைக் கைக்கொள்ளக்கூடியதாயிருந்தது. சிங்கள ரிலும் அதிகமான தமிழர் கிறித்து சமயத்திற் சேர்ந்தனர்.
1921 ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி தமிழ்க் கிறித்தவர் 11.7 வீத மாகவும் சிங்களக் கிறித்தவர் 9 வீதமாகவுங் காணப்பட்டனர். அண்மையில் மதம் மாறினவர்களின் தொகை sெரிதுங் குறைந்து விட்டது. புத்த சமயம் இந்து சமயத்திலிருந்தே தோன்றிய போதிலும் இந்து சமயம் விதிக்கும் ஆசாரங்கள், புத்த சமயம் விதிப்பனவற்றிலும் விரிவாயிருக்கின்றன. இருந்தும் இவ்விரு சமயங்களுக்கும் பொதுவான பல ஆசாரங்களுமுண்டு. சிங்களர் தமது இந்திய மூதாதையரிடமிருந்தே சாதிக்கட்டுப்பாட்டைப்பெற் றனர். ஆனல், பெளத்த மதச் சார்பில் அது தனிப்பட்ட முறையில் வளர்ச்சியடைந்தது. புத்த சமயம் மனிதரெல்லாம் சமமானவர்களென்று கூறிற்று. அதனல் அது குடியாட்சித் தத்துவத்தைப் போதித்தது. தமிழரின் சாதிக்கட்டுப்பாடு பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரரென்ற பழைய இந்தியப் பாகுபாட்டை யனுசரித்தது. பரிசுத்தமில்லாத தொழிலில் ஈடு பட்டவர்களும் சாதிப் பிரட்டர்களும் “தீண்டாதார் ” என மற்றெரு சாதியினராய் வகுக்கப்பட்டனர். இச்சாதிப் பிரிவின்படி அறிவாளிகளான அந்தணர் எல்லாரிலும் உயர்ந்தோரெனக் கொள்ளப்பட்டனர். புரோகிதரும் குருக்கண்மாரும் இந்த வகுப்பிலிருந்தே தோன்றினர். சிங்களரிடையே பிராமண வகுப்பு இல்லை. புத்தர் தமது போதனையில் பயிற்சிபெறக்கூடிய எவரும் புத்த பிக்குக்களாகலாமென்று கூறியமையே இதற்குக காரணம். பிக்குக்கள் மணஞ்செய்யக் கூடாதென்றும், உலக வாழ்க்கையை அவர்கள் துறந்துவிட வேண்டுமென்றும் புத்த மதத்தினர் மற்றெரு கொள்கையையும் பரப்பினர்கள். சிங்களரிடையே தொழில்பற்றியே சாதி பிரிக்கப்பட்டது. அத னல் எல்லாச் சாதிகளும் சமமாகக் கருதப்பட்டன. ஆனல், இக்கொள்கை எப் பொழுதும் நடைமுறையிற் கையாளப்படவில்லை. காலத்துக்குக் காலம் சில சாதியார் தமது தகைமையை நிலைநாட்டப் பிார்த்தனர். மிக அண்மைக் காலத்திலேயே, நாட்டில் எல்லாருக்கும் சம உரிமையுண்டென்ற கருத்து வளர்ச்சியடைந்தது. இது பெரும்பாலும் பிரித்தானியராட்சியின் பயனகவே யுண்டானதெனக் கூறலாம். இந்தியப் பிரதேசத்தில் வாழும் மக்க ளிடையே சாதிக்கட்டுப்பாடு முக்கியமான ஒர் அமிசமாயிருந்தபடியால் மக்கட் புவியியலை ஆராயும் மாணவர் அதன் தோற்றம், இயக்கம் என்பவற்றைப்பற்றிச் சரிவர அறிந்துகொள்ளல் வேண்டும். அதுவும், இக் கட்டுப்பாடு மிகக் கடுமையானதொரு முறையெனக் கண்டு மக்கள் அதனை ஒழித்துவிட முயலும்போது, சரியான அறிவைப் பெறுவது நன்று. எனவே இச்சந்தர்ப்பத்தில் சிறிது அகலவுரை கூறுவது பொருத்தம். இது முக்கிய மானதொரு விடயமாதலால் விளக்கம் அவசியமாகும்.

மக்கட் புவியியல் 29.
உலகிலுள்ள நாகரிகங்களுட் பழையதும் பெரியதுமான இந்திய நாகரிகம் நிலைபெற்று வந்ததற்கு மூலகாரணம், அச்சமுதாயத்தைத் தாபித்த வர்கள் அதன் அமைப்பை உருவாக்குவதில் எடுத்த பெருங் கவனமாகும். அதிலுள்ள விசேடமான ஓர் அமிசம் அங்கு காணப்படும் திட்டவட்டமான அமைப்பு. இச்சாதிக்கட்டுப்பாட்டை யொத்த அமைப்பு உலகின் வேறு தேசங்களிலுங் காணப்படுகிறது. மனிதரிடையே யுள்ள இயற்கைப் பேறு கள் வேறுபடுவனவாற்ருன் இம்மாதிரிப் பாகுபாடு காணப்படுகிறது. ஆனல் இந்தியப் பிரதேசத்திலேயே இச்சாதிப் பாகுபாடு திட்டவிட்டமாக உருவாகியிருக்கிறது. ஐரோப்பாவில் நிலவி வந்த சேவைமானியச் சமூக அமைப்பு இதைப் போன்றதே. இம்முறையானது காலப் போக்கில் அவ்வப் போது சம்பந்தப்பட்ட தேசங்களால் ஒழிக்கப்பட்ட போதிலும், அதன் செல் வாக்கு இன்றும் பல தேசங்களிற் காணப்படுகிறது. ஆற்றலைப் பொறுத்த வரையில் மனிதரிடத்து வேறுபாடுகளுண்டு ; எனவே, அவ்வாற்றலைச் சமூ கத்திற்குத் தேவையான தொழில்களை யனுசரித்தும், சமூக வியவகாரங் களைப் பொறுத்தும் பிரித்துப் பயன்படுத்த வேண்டும் என்ற இக்கருத்தை யடிப்படைsாகக் கொண்டே இவ்விரு வகையான சாதிப் பாகுபாடுகளு முண்டாயின. கல்வியறிவிற் சிறந்தவர்கள், ஆட்சியை நடத்தவும், சமயா சாரங்களைப் பரிபாலிக்கவும் இன்னோன்ன விடயங்களை மேற்பார்வைசெய்ய வுந் தம்மை மேல் வகுப்பினராகப் பிரித்தனர். கீழ் வகுப்பினரின் அறி யாமைகாரணமாக உலகில் நோயும், அசுத்தமும் பரவாமற் றடுக்கவும் இந்த ஒழுங்கை மேற்கொண்டனர். பல சாதியாரிடையிலும் இம்மாதிரியான பாகுபாடு இருந்து வந்ததாலேயே சமுதாயம் முன்னேற்றமடைந்தது. ஆனல் எல்லா வகுப்பார்க்கும் கல்வி புகட்டப்பட்டதும், இப்பாகுபாடுகள் மறையத் தலைப்படுகின்றன. இங்கிலாந்திற் பதின்மூன்றம் நூற்றண்டிலேயே (1215) சட்டத்தைப் பொறுத்தவரையில் மனித ரெல்லோரும் சமன் என்று கூறும் * மகா சாசனம்’ அரசனுற் பிரகடனஞ் செய்யப்பட்டது. ஆனல், 19 ஆம் நூற் ருண்டின் பிற்பகுதியிலேயே, இருபத்தைந்து வருடமாகக் கட்டாயக் கல்வி கற்பிக்கப்பட்டதன் பயனப், மக்கள் தாமெல்லாஞ் சம தகுதியுடையவ ரென்பதைத் தமது செய்கைகளினற் காட்டத் துவங்கினர். சமூக உண் டாட்டுக்களில் மக்கள் தாராளமாகத் தம்முட்கலந்து கொள்வதை இன்னும் நாம் காண்பதில்லை. வீட்டுவேலைக்காரர் போன்றவருடனிருந்து விருந்துண் ணுமாறு அழைத்தாற் கோபிக்கக்கூடிய பலர் இன்றுமிருக்கிருர்கள். மக் கள் இன்னும் தம்மினத்துள்ளேதான் விவாகஞ் செய்கின்றனர். ஆங்கிலப் பெருமகன் ஒருவன் தனது மகளைத் துறைமுகத் தொழிலாளிக்கு விவாகஞ் செய்துகொடுக்கமாட்டான். சுத்தமான பழக்கங்களையுடைய மக்கள் ஆசார மில்லாதவரோடு வந்து கலந்தால், உடனே குளித்து உடையை மாற்றிக் கொள்வர். பல்லாயிரம் வருடமாக இதையே இந்தியாவிலுள்ள உயிர் சாதியினர் செய்துவந்தனர். இந்தியாவில் இப்பழக்கம் திட்டமாகவும், விதிமுறையாகவு மிருக்கிறது. இங்கிலாந்திலோ அப்படியில்லை. இங்கிலாந்

Page 153
292 இலங்கைப் புவியியல்
தில் மக்கள் தாம் நினைத்தவாறு நடக்க உரிமையுடையவர்களென மனதில் நினைத்துக்கொள்கின்றனர். இதுவே இவ்விடயத்தில் இவ்விரு நாடுகளுக்கு முள்ள வித்தியாசம். எனவே, இந்தியச் சாதிக் கட்டுப்பாட்டைக் கண்டிப் போர் தம்மையறியாமலே, இந்தியர் விதித்த விதிமுறைகளைக் கையாளு கின்றனர். இந்தியாவிலே தன் சாதியைவிட்டு வேறு சாதியில் விவாகஞ் செய்வோர் சாதிப் பிரட்டம் செய்யப்படுவர் ; அதுபோலவே இங்கிலாந்திலும் ஒரு சாதியைச்சேர்ந்தவன் குறைவான மற்றெரு சாதியில் மணஞ்செய்தால் அவனுடைய குழுவினலே தள்ளிவைக்கப்படுகிறன். உலகிலுள்ள எல்லாத் தேசங்களிலும் இம்முறை நிலவி வருகிறது. அந்நியராலே வெற்றி கொள்ளப்பட்ட மக்கள், குறைந்த நிலைமையில் வைக்கப்பட்டு இழிவான வேலைகளைச் செய்யுமாறு ஒதுக்கப்படும் பொழுது இந்தச் சாதியாசாரம் மேலும் வலுவடைகிறது. எனவே, சாதிக்கட்டுப்பாடுகள் சமுதா யத்தில் ஒரளவு நிலைபேருன தன்மையையுண்டாக்க வாய்ப்பாய் அமைந்துள்ளன.
வடமொழியில் “ வருணம் ” என்ருல் நிறம். ஆரியர் இந்தியாவின் வடபகுதி|மீது படையெடுத்த பின்னரே சாதிக்கட்டுப்பாடு உண்டானதெனக் கூறப்படுகிறது. நிறத்தால் உயர்ந்த வருணத்தையுடைய ஆரியர் தம்மை உயர்சாதி யென்றும், கறுப்பு நிறமுள்ள திராவிடரையும் எனைப் பூர்வீகக் குடிகளையும் தாழ்ந்த சாதியாரென்றுங் கருதினர். வெண்ணிறமுள்ளவர் களை உயர் வருணத்தவரென இன்றும் இலங்கையிலே சில மக்கள் கருது கின்றனர். ஐரோப்பியர் அடிமைப்படுத்திய நாடுகளிலும் இத்தகைய நிலைமை உண்டாயிற்று. அங்குள்ள ஐரோப்பியர் சுதேசிகளோடு கலப்பதில்லை. படிப்படியாக ஆரியர் திராவிடரோடு கலக்கவே தொழில் பற்றிய பாகுபாடு உருவானது. ஆரியரிடையேயும் திராவிடரிடையேயும், நாகரிகப்படியிற் குறைந்தவர்களிருந்தனர். இவர்கள் இழிவான தொழில்களில் ஈடுபடுத்தப் பட்டனர். இவர்களே குறைந்த சாதியினராயினர். சாதிக்கட்டுப்பாடு காலப் போக்கிலே மிகவுஞ் சிக்கலாயிற்று. பிரிவுகளிடையே பல உப பிரிவுக ளுண்டாயின. அதனுல், அங்கு வந்த அந்நியர்க்கு அவை பெருஞ் சிக்கல் நிறைந்த புதிராயின. இந்தியச் சாதிக்கட்டுப்பாட்டின்படி ஒரு சாதியார் வேறு சாதியில் விவாகஞ் செய்யக்கூடாது. இதனற் குறித்த ஒரு தொழி லைச் செய்வதற்கு ஒரு தொகை மக்கள் எப்பொழுதுங் கிடைத்தனர். பல படியான நாகரிக நிலைகளில் பல சாதியாரிருந்தபடியாற் சாதிக் கட்டுப்பாட்டின் பயனகச் சமூக அமைப்புச் சீர்குலையவில்லை. அதனற் பொருளாதாரத் துறையிற் பல நன்மைகளுண்டாயின. உயர் சாதியார் தாழ்ந்த சாதியாரோடு வாழ நேர்ந்ததால் அவர்கள் தமது வீடு வாசலிற் புகுதல், உணவை அசுத்தமாக்கல், தீண்டினுற் கழுவுதல் முதலிய விடயங்கள் சார்பாக விதிகளை வகுத்து, நோய் பரவாமலும், அசுத்தம் பரவாமலும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டனர். இது நியாயமானதே.

மக்கட் புவியியல் 293
திட்டமானவொரு சமுதாயக் கட்டுப்பாட்டை உண்டாக்குவதால் சில தீமை களும் வந்து சேர்கின்றன. அவற்றுள்ளே முக்கியமானது கல்வியறிவில் லாதவர்கள் சமுதாய விதிகள் உண்டானதற்குரிய காரணங்களை அறியாமல் அவ்விதிகளைக் கண்மூடித்தனமாக அனுசரிப்பதேயாகும். விதிகளேற்பட வேண்டியதற்குரிய காரணங்களில்லாத காலத்திலுமவ்விதிகளைக் கைவிடாது அனுட்டிக்கின்றனர். இதனற்றன் சாதிக் கட்டுப்பாடு ஏற்றதன்றெனக் கூறி மக்கள் அதனை ஒழித்துவிட முனைகின்றனர். சாதிக் கட்டுப்பாட்டைக் கண்டிக்க எழும் அந்நியர், சாதிப் பெயரால் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமை களையும் அறியாமையாற் செய்யுந் தீமைகளையும் இலகுவில் உதாரணமாக எடுத்துக் காட்டிக் கண்டிக்கின்றனர்.
இச்சமூகப் பிரச்சினைகளை அகன்ற மனப்பான்மையுடன் நோக்கவும் ; பல தேசங்களிலுமுள்ள சமூக அமைப்புக்களை ஒப்பிட்டுப்பார்க்கவும் ; பொருளாதார வாழ்க்கையையும், நாகரிக வளர்ச்சியையுமவை யெவ்வாறு பாதிக்கின்றன வென்பதைச் சரிவர மதிப்பிடவும் மக்கட் புவியியல் பற்றிய ஆராய்ச்சி பயன்படுகிறது. பிராமணரல்லாத சாதியாரிடையிலே கல்வியறிவு பரவியதன் காரணமாக அவர்களும் பிராமணரோடு ஒத்த அறிவு நலமுடைய வராகிவிட்டனர். அதனுற் சாதிக்கட்டுப்பாடுகளே இனி ஒழித்துவிடவேண்டுமென இந்தியப் பிரதேசத்திலுள்ள மக்கள் பலர் முயன்று வருகின்றனர். சாதிப் பாகுபாடு போன்றதொரு மூலாதாரமான சமூக அமைப்பைக் கைவிடுவதானல், அதன் தத்துவத்தை நன்கு உணர்ந்து, அதனினும் சிறந்தவோர் அமைப்பை உருவாக்கல் வேண்டும். இந்த மாற்றம் படிப் படியாகவே வரவேண்டும். முன்னர்க் கூறிய காரணங்களின் பயனுய் இம்மாற்றம் இந்தியாவிலும் இலங்கையிலேயே விரைவாய்ப் பரவுகின்றது. வெளியுலகுடன் அதிக தொடர்பு பெற்றுள்ள சிங்களரே இலங்கைத் தமிழரிலும் முன்னதாக மாற்றத்தையுண்டாக்கினர். ஆனல், இதில் ஒர் இடுக்கணுண்டு. இலங்கையில் இது தோன்றியுமுள்ளது. உயர் வகுப்பினர் நூலறிவை விருத்தி செய்து வந்திருக்கின்றனர். முழுச் சமூகத்துக்கும் வரையறையில்லாத கல்வி வசதிகளே யுதவில்ை, மக்கள் தாழ்ந்த தொழில் களைக் கைவிட்டு நூலறிவை வளர்ப்பதிலேயே கருத்துக் கொள்ளுவர். இதனுற் சில தொழிற்றுறைகளில் அளவுக்கு மிஞ்சிய நெருக்கமும், மற்றைத் துறைகளில் ஆட்குறைவுமுண்டாய் விட்டது. சாதிக் கட்டுப்பாடு இதனைத் தடுத்து வந்தது. இந்நிலை நிரந்தரமாயிருக்க முடி யாது. பயிற்சி பெற்ற மக்கள் கீழான தொழிற்றுறைகளிலீடுபட வேண் டியும் வரும். அதன் பயனக அவர்கள் அத்துறைகளில் புதிய முறை களைப் புகுத்தி, கை வேலையைக் குறைப்பதற்கு வழிகளை வகுப்பர்.

Page 154
294 இலங்கைப் புவியியல்
தொழில் முன்னையிலும் விரைவாக நடைபெறும் ; அத்தொழில்களின் தன் மையே முற்றக மாறும் ; இதனல் ஓய்வு நேரம் கிடைக்கும்; அவர்கள் அந்த ஒய்வு நேரங்களில் அறிவுத்துறையை வளர்க்க முற்படலாம்.
உலகில் உண்டான மிக முக்கியமான சமுதாய அமைப்புக்களிற் சாதிக் கட்டுப்பாடு சிறந்தது ; இந்தியப் பரப்பிலுள்ள மனிதரின் முயற்சிகளெல் லாவற்றையும் இது பெரிதும் பாதித்து வந்திருக்கிறது ; ஆதலின், இதனை ஒதுக்கி விட்டு எந்தப் பொருளாதாரப் பிரச்சினையையு மாராய முடியாது ; மக்கட் புவியியலை ஆராய்வோர் இதனைக் கருத்திலிருத்திக் கொள்ள வேண்டும். இலங்கையிற் சாதியமைப்பு அமைந்துள்ள முறையை இன்று ஆராய்வது பயனுடையதாகும்; இலங்கையில் மாற்றங்கள் விரைவாக உண் டாகி வருகின்றன. பழைய இந்திய முறைப்படியமைந்த சாதிக்கட்டுப்பாடு இலங்கைத் தமிழரிடையே இன்றும் நிலவி வருகிறது. சிங்களரிடையில் அச்சாதிக் கட்டுப்பாடு பல மாற்றங்களோடு விளங்குவதுடன் விரைவாக மறைந்தும் வருகிறது. ஐரோப்பாவிலே சேவை மானிய முறை முற்றக மறையப் பல காலஞ் சென்றது. இலங்கையிலும், மக்கள் வாழ்வின் பல துறையிலுமிருந்து சாதிப் பாகுபாடு ஒழிவதானல் நெடுங்கால மெடுக்கும். இக்காலமானது முற்காலத்திலிருந்து வளர்ந்த ஒரு தோற்ற மென்பதைக் கருத்தில் வைத்துக் கொண்டால் இக்கால மக்களிடையேயுள்ள பிரச்சினை களே நன்கு விளங்கிக் கொள்ளலாம்.
இந்து சமயப் பண்பாட்டின் வேறு பல முக்கிய அமிசங்களையுந் , தமிழர் பாதுகாத்து வந்திருக்கிறர்கள். அவற்றை விவரமாய் ஆராய்ந்து மற்றைத் தேசத்தவரின் பழக்க வழக்கங்களோடு ஒப்பிடல் பயனுடைத்தாகும். புரா தனமான இத்தகைய பல வழக்கங்களை மற்றைத் தேசப் பண்பாடுகளின் தொடர்பு பெற்ற இலங்கை வாலிபர் பெரிதுங் கண்டிக்கின்றனர். மக்கள் சமூக அமைப்புக்கு மூலாதாரமான விவாகம் சம்பந்தமான பழக்க வழக்கங்களுங் கண்டிக்கப்படுகின்றன. இந்தியப் பிரதேசத்தில் பிரயாணஞ் செய்த ஐரோப்பியரின் கவனத்தை இவை பெற்று விட்டன. திருமணத்தில் இரு முக்கிய அமிசங்கள் கண்டிக்கப்படுகின்றன; ஒன்று மண மாவோரின் வயது ; மற்றையது பெற்றேரால் ஒழுங்கு செய்யப்படும் மண முறை. இவ்வமிசங்கள் தேசத்துக்குத் தேசம் வித்தியாசப்படுகின்றன. கல்வியறிவு வளரவளர மக்கள் கலியாணஞ் செய்யும் வயதை உயர்த்து கின்றனர். கல்வி வளர்ச்சியோடு தமக்கு வாய்க்கும் இல்லத் துணையைத் தாமே தெரிந்தெடுக்க வேண்டுமென்ற சுயாதீனத் தன்மையும் வளரு கிறது. இலங்கையிலுள்ள எல்லாச் சாதி மக்களிடையேயும் இது நிகழ்ந் துள்ளது. அதனற் கடந்த ஐம்பது வருடங்களுள் மணஞ் செய்யும் வயது, ஐரோப்பாவில் உயர்ந்தது போலவே, இங்கும் உயர்ந்து விட்டது. புத்த சமயக் கொள்கைகளின் பயனகச் சிங்களரிடையே விவாக விடயத் தில் அதிக சுதந்திரமுண்டாயிற்று. தமிழர் பெரும்பாலும் இந்து தரும

மக்கட் புவியியல் 295
முறைகளையே பின்பற்றி வந்தனர். பற்பல நாடுகளில் நிலவும் வழக்கங்களைக் கூறுவதோடு அமைவதே புவியியலாராய்ச்சிக்கு ஏற்றது. அதற்கு மேல் எதுவுங் கூறுவது பொருந்தாது. ஆயினும், இங்கு குறிப் பிடவேண்டிய தொன்றுண்டு. சிறுமிகள் பராயமடைந்தவுடன் அவர்களு க்கு மணஞ் செய்து வைப்பதனற் சில நன்மைகளேற்பட்டன. வேறு தேசங்களில் இருந்து வரும் பெரிய சமூகத் தீமைகளுக்கு அது இடங் கொடாதிருக்கிறது. இந்த உண்மையைப் பல நாட்டு நிகழ்ச்சிகளை ஒப்பிட்டுப் பார்த்து முடிவு செய்திருக்கிறர்கள். இது மேலும் நன்கு ஆராயப்பட வேண்டிய விடயம். மற்றைத் தேசங்களிலுள்ள முறைகளை ஆராய்வதால் உண்டாகும் முடிபுகளை நோக்கினல் இந்தப் பிரச்சினை நன்கு விளக்கம் பெறும். அந்நிய தேசத்தவர் இந்தியர் விவாக முறைகளை விளக்க மின்றிக் கண்டிக்கின்றனர். சாதிக் கட்டுப்பாடு ஒன்றைத்தவிர்த்து இந்தியர் விவாக முறைகள் போல விளக்கக்குறைவான விடயம் வேறில்லையெனலாம். இலங்கை மாணவர், தமிழர், சிங்களர், இசுலாமியர், ஆங்கிலேயராகிய நான்கு சாதியாரின் விவாக வழக்கங்களை நேராக அறியும் வாய்ப்புடைய வர்கள் ; ஆதலால் தமது விவாக முறைகளிற் சீர்திருத்தங்களை உண்டாக்க முற்படுமுன் எல்லா முறைகளேயும் நன்கு ஆராய்ந்து முடிபு காணவேண்டும். பழக்க வழக்கங்கள் சாதிக்குச் சாதி வித்தியாசப் படலாம்; ஆனல், அவை காலப் போக்கில் நன்மை பயப்பனவாக இருக்கலாம் ; ஒரு சாதிக்கு எற்ற பழக்க வழக்கங்கள் மற்றெரு சாதிக்கு எலா. ஆதலால் அவற்றிடையே வித்தியாசமிருப்பது பொருத்தமுடையதே.
உயர்சாதிப் பெண்கள் ஒதுங்கி வாழும் பழக்கம் சிங்களரிலும் தமிழரி டத்தே அதிகமுண்டு. பல நூற்றண்டாகவே இது இந்து சமயச் சமூக வாழ்வின் ஓர் அமிசமாக விளங்கி வந்திருக்கிறது. குறைந்த சாதியைச் சேர்ந்த பெண்கள் வெளியே சென்று தொழில் புரியவும் வீடுகளிற் பணியாட்களாக வேலை செய்யவும் வேண்டியிருந்ததால் அது அவர்களுக்குப் பொருந்தவில்லை. இப்பிரச்சினையை ஆராய்வதானல், பல பகுதிகளிலும் உள்ள நிலைமைகளே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பெண்கள் ஒதுங்கி வாழும் முறையானது, சட்டமும் ஒழுங்கும் குறைவான தேசங்களிலும், அந்நியர் படையெடுப்பு அடிக்கடி நடக்கும் நாடுகளிலும் பொதுவாக உண்டு. பாலைநிலங்களில் வாழும் அராபியர் அடிக்கடி'இன்றும் கொள்ளைக் கூட்டத்த வரால் தாக்கப்படுவர். அவர்கள் தங்கள் பெண்களை ஒதுங்கி வாழச் செய்வது இன்றியமையாததாகும். இவ்வாறே முசிலிம் மக்களிடையே * பருதா” வழக்கம் உண்டானது. புராதன இந்தியரோ, சிங்களரோ இந்த வழக்கத்தைக் கைக்கொண்டதாகத் தெரியவில்லை. அந்நியப் படை யெடுப்புக்களாலுண்டாகும் கொடுமைகளிலிருந்து தப்புவதற்காகவே இந்த முறை கைக்கொள்ளப்பட்டது. நாகரிக முற்ற நாடுகளென்று கூறப்படுப வற்றில், யுத்த காலங்களில் இன்றும் பெண்களின் கற்புற்குத் தீங்கு.

Page 155
296 இலங்கைப் புவியியல்
விளைக்கும் பழக்கமுண்டு. இந்தியாவிலும் இலங்கையிலும் காலத்துக்குக் காலமுண்டான படையெடுப்பின் பயனுய் இப்பழக்கம் முதிர்ந்தது. அது பெண்களின் மனவளர்ச்சிக்குப் பெரிய தீங்கைவிளைத்தது. கல்வியறிவு பெற்றவர்களின் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கும் ஆண்களோடு நிகரான கல்வி வழங்கப்பட்டிருந்தால், அதனல் இல்வாழ்க்கையில் எவ்வளவு நன்மையுண்டாகியிருக்கும் ? கல்வியறிவைப் பெண்கள் பெருத தால் வீட்டு வாழ்க்கையிலுள்ள வித்தியாசத்தை உணர்பவர், நாட்டிலே ஒழுங்குஞ் சமாதானமுமிருந்திருக்க வேண்டியதன் முக்கியத்தை நன்கு அறிவர். இக்காலத்தில் பெண்களுக்குப் பாதுகாப்புத் தேவை யில்லையென்ற கருத்துப் பரவி வருகிறது. ஆனல், இக்கால யுத்தங்களின் பயனக உண்டாகும் தீமைகளேயோ, அந்நியர் படையெடுப்பினுலுண்டாகும் கெடுதிகளையோ ஆராய்ந்தறிந்தவர்கள், பெண்களுக்குப் பாதுகாப்பு அவசிய மென்பதையும், இவ்விடயங்களிற் சாவதானமாயிருந்தாற் காலப் போக்கிற் பெரிய நன்மையுண்டாகு மென்பதையுமுனர்வர். வாழ்க்கையின் மூலா தாரமான விடயங்களிலே தமிழர் வைதீக மனப்பான்மையுடையவர்களா யிருக்கிருர்கள். பழைய பழக்க வழக்கங்களேக் காப்பாற்றி வந்திருக்கிறர் கள். காலதேசங்களுக்கேற்றபடி நடக்கும் குணமுடைய சிங்களரிலும் தமிழ ரின் வாழ்வு இதனுல் விசேடமடைந்திருக்கிறது.
இந்துக்களின் பண்பாடுபற்றிய விவரங்களைப் பழைய நூல்களிற் காணலாம். அவ்வாறே இந்து சமய தருமங்களும் பழைய சாத்திரங்களிற் காணப்படு கின்றன. இச்சமயம் புத்த சமயத்திலும் மிகப் புராதனமானது. ஒர் ஆசிரியராலோ சமய குரவராலோ உருவாக்கப்பட்டதன்று. காலத்துக்குக் காலந்தோன்றிய சமயாசாரியர்கள் ஞானக் காட்சியாற் கண்ட கருத்துக்களை யுதவி அதனை வளர்த்து வந்திருக்கிருர்கள். ஆரம்பத்தில் இந்து சமயம் எங்கும் கடவுளேக் காணும் கொள்கையுடையதாயிருந்தது. பின்னர் காலப் போக்கில் எகதெய்வக் கொள்கையுடையதாயிற்று. ஒழுக்கம், தத்துவம், பிரமஞானம் என்ற துறைகளிலெல்லாம் இந்து சமயாசாரியர்கள் நுண் கருத்துக்களை யுதவி அத்துறைகளை விருத்திசெய்திருக்கிருர்கள். அவை மிக உயர்ந்த தகுதியையடைந்துள்ளன. ஆனற் சில காலங்களில் சம யத்தை அனுட்டிப்பவருடைய குறையினல் இந்து சமயம் மகிமை குன்றிய துண்டு. இக்காலங்களில் மக்கள் பூர்வீக சமயங்களிலிருந்து தழைத்த மூட நம்பிக்கைகளே மட்டும் கைக்கொண்டு, நுண்கருத்துக்களே யடக்கிய ஒழுக்க முறைகளைக் கைவிட்டு விடுகின்றனர். அத்தகையதொரு நிலையிற் ருன் கி.மு. ஆரும் நூற்றண்டிலே கெளதம புத்தர் தோன்றிப் புத்த சமயத்தைத் தாபித்தார், மக்கள் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடந்ததைக் கண்ட அவர், தெய்வங்களில் நம்பிக்கைவைக்க வேண்டா மென்றும், உலகப் பொருள்களிற் பற்றுவைக்கக் கூடாதென்றும், (lfநம்பிக்கைகளைக் கைவிட வேண்டுமென்றும் போதித்தார். மக்கள் மனதை இதுகாறும் ஆட்கொண்டு வந்தனவும், பூர்வீகச் சமயங்களிலிருந்து முளைத்

மக்கட் புவியியல் 297
தனவுமான புராதன கொள்கைகளைக் கைவிடுவதற்கு மக்கள் ஒருப்படுவ தில்லை. இன்று இவ்விரு சமயத்தவரிடையும், புராதனமான மூட நம் பிக்கைகள் பல காணப்படுகின்றன. எனவே, அந்நியர் அவற்றைப்பற்றி விகாரமான கருத்துக்கொள்கின்றனர். இந்தியப் பிரதேசத்துக்கு வெளியே யுள்ள மக்கள் இந்து சமயம் பல தெய்வக்கொள்கை யுடையதெனக் கருது கின்றனர். புராணக் கதைகளில் வரும் காட்சிகள், ஆலயக் கோபுரங் களிற் சித்திரிக்கப்பட்டிருப்பதைக் காண்போர் அவை இந்து சமயக் கடவுள ரெனத் தப்பான கருத்துக்கொள்கின்றனர். ஒரு தெய்வத்தின் பல தன் மைகளைப் பல பெயரால் குறிப்பிட்டுப் பல குறியீடுகளைக் கொண்டு விளக்கிக் காட்டும் சமய வழக்கத்தைப் பார்க்கும்பொழுது அவர்கட்கு மேலும் அத்தப்பபிப்பிராயம் வலுப்பெறுகிறது. இந்து சமயத்தை விளங்கிக்கொள் வது அந்நியருக்கு மிகக் கடினமாகும்.
இலங்கையின் நிலத்தோற்றத்தை அலங்கரிக்கும் பொருள்களில் கோவில் களும், தாது கோபங்களும் விசேடமானவை. அவை சமய சம்பந்தமான பல தத்துவங்களே விளக்குகின்றன. சமயக் கருத்துக்களைக் குறியீடுகள் மூலம் விளக்கும் தன்மை இந்தியப் பிரதேசத்தில் எப்பொழுதுமே உண்டு. இந்தக் கீழை நாட்டுக் குறியீட்டு முறை ஆதிக்கிறித்தவ திருச்சபைகளையும் நன்கு பாதித்தது. குறியீடு இலங்கையர் வாழ்வில் முக்கிய அமிசமாகும். கிறித்து சமயத்திற் பிற்காலத்திலுண்டான வளர்ச்சி இதனைக் குறைத்து விட்டது. பழைய திருச்சபைக் கட்டடங்களையும், பிற்காலத்திலே தோன்றிய பாதிரி வேதத் திருச்சபைகளையும் ஒப்புநோக்கினல் இவ்வுண்மை புலன. கும். பிற்காலத்திருச்சபைக் கட்டடங்கள் எளிய அமைப்புடையனவாயும் அர்த்தமற்றனவாயுமிருக்கின்றன. இந்து சமயமும் புத்தசமயமும் சில வெளிவிடயங்களில் வித்தியாசப்படுகின்றன. அவை சமூக வாழ்வின் வெளி யமைப்பைப் பாதிக்கின்றன. புத்த சமயப் பிக்குக்கள் எல்லா வகுப்புக் களிலுமிருந்து வருகிறர்கள். அவர்கள் வறுமை விரதம் பூண்டவர்கள். இந்துக்களிடையே புரோகிதர் பிராமண வருணத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய வழிபாடு புரோகிதர்மூலமாகவே பெரும்பாலும் நடத்தப் படுகிறது. பெளத்தர், விருப்பமானல் பிக்குக்களின் துணையோடு வழிபா டியற்றுவர். இல்லாவிட்டாற்றமாகவே செய்வர்.
இலங்கையின் சமூக அமைப்புக்கு இவ்விரு சமயங்களும் பெரிதுந் துணை புரிந்தன. வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் இவை செறிந்துள் ளன. இந்துக்களின் சமயக் கொள்கைப்படி மாமிசம் உண்ணலாகாது. ஆனல், நடைமுறையில் இந்துக்கள் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி என்பன வற்றையே தவிர்ப்பர். உயிர்க்கொலை கூடாதெனப் புத்த சமயங் கூறும் ; ஆனல், தாம் கொல்லாவிட்டாலும் மற்றவர்கள் கொன்றவற்றை அவர்கள் உண்பர். தமிழரிற் பெரும்பாலோர் தாவர உணவு உண்பவர் ; சிங்களரிலும் தமிழரிடையே தாவர உணவு கொள்வோர் வீதம் அதிகம்.

Page 156
298 இலங்கைப் புவியியல்
உணவு சம்பந்தமான ஏனைய வித்தியாசங்கள், ஊருக்கு ஏற்றபடி வேறு படும் ; ஒரூரில் உண்டாகும் பயிர்களைப் பொறுத்து அவ்வூர் உணவு வகை மாறுபடுகின்றது. தமிழர் வாழும் பகுதிகளில் பனையின் பொருள்களை அதிகம் உபயோகிப்பர். தென்னைப் பொருள்கள் அவ்வளவு பழக்கத்தி லிரா. தமிழர் பலாக்காய், ஈரப்பலாக்காய் முதலியவற்றைப் பெரும் பாலும் சாப்பிடமாட்டார். கத்தரிக்காய், பொதுவாக எங்கும் உண்டு ; சிங்களர் சமையலுக்குத் தேங்காயெண்ணெயை உபயோகிப்பர். தமிழர் நல்லெண்ணெயும், நெய்யும் பெரும்பாலும் உபயோகிப்பர். பணியாரம், சிற்றுண்டி முதலியவற்றில் புவியியல் சம்பந்தமான தன்மைகளிலும் ஒவ் வொரு சாதியாரின் பல வகைப்பட்ட விருப்பங்களையே அதிகமாகக் காணக் கூடியதாயிருக்கிறது. உதாரணமாகத் தமிழர் விரும்பியுண்ணும் வடை சிங்களரிடையே காண்பது அருமை.
உடைவிடயத்திலும் ஒவ்வொரு சாதியும் குறிப்பிட்ட சில முறைகளைக் கைக்கொள்ளுகின்றது. சிங்களப் பெண்கள் வீடுகளிலிருக்கும்பொழுது இடையைச் சுற்றிக் குறுந்துணி கட்டுவர் ; தமிழ்ப் பெண்கள் வீட்டிலுஞ் சேலையே கட்டிக்கொள்வர். தமிழர் தலைப்பா அணிய விரும்புவர் ; சிங்க ளர் தலையில் எதுவும் அணியமாட்டார். இவற்றுக்குக் காரண மறிய முடியாது. தமிழர் வைதீகப் பான்மையுடையவராதலால் ஐரோப்பிய உடை கள் அவர்களை அதிகம் ஆட்கொள்ளவில்லை. சிங்களரிடையே ஐரோப்பிய ரின் நடையுடை பாவனை அதிகமெனலாம். தமிழரிலும் ஒரு சிறு தொகை யினர் ஐரோப்பிய உடையை அணிகின்றனர். அரசாங்க உத்தியோகத்தி லிருப்பவர் மூலமே இந்தப் பழக்கமும் பரவியிருக்கவேண்டும்.
இலங்கைத் தமிழர் சிக்கனத்துக்கும் இடைவிடாமுயற்சிக்கும் பேர்போனவர் கள். இதற்கு ஒரு காரணம் இவர்களுடைய புவியியற் சூழ்நிலையாகும். உலகிலேயே மிகச் சிறப்பானவொரு மக்கட்டொகுதியினர் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்கள் ஆவர். நிலமோ வளமற்றது; அதனல் மிகுந்த சிக்கனத்தோடு, அமைதியான கடுமுழைப்பினுல், யாழ்ப்பான மக்கள் சீவனம் நடத்துகின்றனர். இவர்கள் ஒய்வை அதிகம் எதிர் பார்ப்பதில்லை ; நிலத்திலே இடைவிடாது பல வகைப் பயிர்களை உண்டாக்கித் தமது தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளுகின்றனர். அவ்வாறு பயிர் செய்வதால் ஒயாத முயற்சியும் நீர்ப்பாய்ச்சலும் அவசியமாகிறது. இவற்றேடு இந்தியாவுடன் புகையிலை வியாபாரமும் நடத்துகிருர்கள் ; மீன்பிடித்தும் பிழைக்கின்றனர். பீங்கான் கோப்பைகளுக்குப் பதிலாக உயர் வகுப்பி னர் வெண்கலப் பாத்திரங்களை உபயோகிப்பர். அது அவர்களுடைய விசேட அமிசங்களிலொன்றகும் ; வெண்கலத்துக்குப் பதிலாக இன்று அலுமினி யப் பாத்திரங்கள் உபயோகிக்கப்படுகின்றன. இது சேர்மன் வியாபாரி களின் முயற்சியாகும். இவர்கள் சென்னையிற் செய்யப்படும் வெண்கலப் பாத்திரங்களைப்போன்ற கலங்களேக் காற்பங்குச் செலவில் செய்துவிற்கிருர்கள்.

மக்கட் புவியியல் 299
யாழ்ப்பாணத் தமிழர் தமது தேவைகளைக் குறைத்துக் கொள்வதிலே சமர்த்தர். வயலில் வேலைசெய்யும்பொழுது காட்டும் அடக்கம், முயற்சி, எளிமை என்ற குணங்களை அறிவுத் துறையிலுங் காட்டுகின்றனர். விவசாயி எவ்வாறு ஒய்வுகாலத்தை எதிர்பார்க்கமாட்டானே அது போலவே கல்வி கற்கும் மாணவரும் ஒய்வை எதிர்பார்க்கமாட்டார். அதனல் மிக நீண்ட நேரம் மூளை வேலையிலும் ஈடுபடுவர். மேலும் அவர்களுடைய வேலையில் ஒரு தனிப்பட்ட செம்மை காணப்படும். இலங்கையின் பண்பாட்டுக்கு யாழ்ப் பாணத் தமிழர் உதவிய பங்கு அளப்பரிதென்பதில் ஐயமில்லை. தமிழருடைய பண்புகளைச் சிங்களருடைய பண்புகளோடு ஒப்பிட்டுப் பார்க் கும் பொழுது அவற்றிற் சில தமிழினத்துக்கே உரியனவென்பதையும், மற்றையவை புவியியற் சூழ்நிலையாலேற்பட்டவை யென்பதையு மறிந்து கொள்ளலாம்.
இலங்கைக்குத் தமிழர் இன்றும் வந்து கொண்டேயிருக்கிறர்கள். ஐரோப்பியர் படையெடுப்புக்களின் போது இது பல காலமாகத் தடைப்பட் டிருந்தது. பண்டைக் காலத்திலே தமிழ் அரசர் இலங்கைமீது படை யெடுத்தபொழுது பல வகையான மக்கள் அவர்களோடு வந்தனர். இன்று வறிய விவசாயிகளே இலங்கையிலுள்ள ஐரோப்பியரின் தோட்டங்களில் வேலைசெய்ய வருகிறர்கள். தலையிற் கம்பளிபோர்த்துக்கொண்டு நிற்கும் தேயிலைத் தோட்டத் தமிழ்த் தொழிலாளிகளே இன்று மலைநாட்டில் எங்குங் காணலாம். ஏற்கெனவே சிறந்த வொரு விவசாய முறையை வளர்த்து வந்த சிங்களர் புதிய இந்தப் பிரித்தானியத் தோட்டக்காரரின் கூலியாட்களாக இருக்க விரும்பினரில்லை. ஆனல், பொறுப்புள்ளதும், விசேட திறமையுள்ளதுமான வேலைகளே அவர்க்ள் வெறுக்கவில்லை. சாதாரணமான சிங்களர் எவ்வளவு வறுமையுற்றவராயிருந்தாலும், நிலம் புலமுடையவராகவும், உணவுக்கு மற்றையவரை எதிர்பார்க்கும் அவசிய மில்லாதவராயுமிருந்தனர். அதனல் அவர் கீழ்த்தரமான விவசாயவேலை களைக் கூலிக்குச் செய்யும் நிலைமை அடையவில்லை. நிலத்தை வெட்டித் துப்புரவு செய்தல், தேயிலைத் தோட்டத்திற் களேபிடுங்குதல், கொழுந் தொடித்தல் போன்ற வேலைகளைச் செய்வதற்குத் தேவையான பெருந் தொகையான தொழிலாளரைப் பெற வேண்டிய பிரச்சினை தோட்டத் துரைக் கேற்பட்டது. தெற்குத் தக்கிணத்தில் நெடுங்காலமாகவே குடி சனத் தொகை பெருகிவந்தது. பத்தொன்பதாம் நூற்றண்டில், மேலதிக மான தொகையினர் குடிபெயர்ந்து வேறிடத்துக்குப் போகவேண்டிய நிலைமையுண்டானது. அதுவும் பருவமழை பெய்யாத காலங்களிலே விளை வின்றி நாட்டிற் பஞ்சமுண்டானல் நிலைமை மோசமாகும். இத்தகைய நிலைமையில் மக்கள் வயிற்றுப் பிழைப்புக்கு எங்கே போவதற்கும் ஆயத்த மாயிருந்தனர். இக்காலத்தில் அயனமண்டலத்திலுள்ள ஐரோப்பியக் குடி யேற்ற நாடுகளில் விவசாயத் தொழிலாளர் பெரிதுந் தேவைப்பட்டனர். இக்குடியேற்ற நாடுகளிலே தொழிலாளரைத் திரட்டுவதற்கென்றே வியா

Page 157
300 - இலங்கைப் புவியியல்
பாரச் சங்கங்களுண்டாயின. இவை “ ஒப்பந்தத் தொழிலாளர் ” என்ற முறையிற் தொழிலாளரைத் திரட்டின. இவர்கள் ஒப்பந்தத்தின்படி நீண்ட காலம் ஓரிடத்திலிருக்க உடன்பட்டனர். போக்குவரத்துச் செலவு வியா பாரச் சங்கத்தாற் கொடுக்கப்பட்டது. இத்தொழிலாளர் தமது புதிய தேசங் களேயடைந்ததும் அடிமைகள் போல நடத்தப்பட்டனர். பொருளாதாரத் துறையில் இவர்கள் சற்று முன்னேற்றமடைந்தபோதிலும், அரசியலுரிமை யற்றவர்களாய், நிலங்கொள்ள உரிமையில்லாதவராயிருந்தனர். இவர் ளுடைய மூதாதையரிற் சிலர் தாய்நாட்டில் நிலம்புலமுள்ளவராயிருந்த படியால், தாமும் சிறிது பணஞ் சேர்த்து நிலம் வாங்கி வீடுகட்டிக் குடி யிருக்க விரும்பினர். வேறு சிலர் சிறிது பணஞ் சேர்ந்தவுடன் தாய கத்தின் நல்ல நிலைமையைப் பார்த்து ஊருக்குத் திரும்பிவிட எண்ணி னர். அங்கே புதிய முயற்சிகளில் ஈடுபடவும் திட்டமிட்டனர். ஆனல் அவர்களுடைய சம்பளம் மிகக் குறைவாயிருந்தபடியால் ஒப்பந்தம் முடிந்த பின்னர் ஊருக்குப் போகவே பணமில்லாதவராயிருந்தனர். மேற்கிந்திய தீவுகள், பசிபிக்குத் தீவுகள், நேட்டால் போன்ற தென்னபிரிக்கப் பிரதேசங் களிலுள்ளவர்கள் இந்நிலைமையை உணர்ந்து பெரிதும் மனங்கலங்கினர். 1922 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றச் சட்டத்தின் பயனகப் பல கொடுமைகள் ஒழிக்கப்பட்டன. இலங்கையும் மலாயாவும் இந்தியா வுக்குச் சமீபத்திலிருந்தபடியால் இந்தியத் தொழிலாளரிற் பெரும் பாலோர் இத்தேசங்களுக்குச் சென்றனர். இப்பகுதிகளில் இவர்களுக்கு அதிக இன்னலேற்படவில்லை. எனெனில் தாய்நாட்டிலுள்ள நிலைமையே இவ்விரு தேசங்களிலுங் காணப்பட்டன. இலங்கைக்குப் போவதானல் மாத ஒப்பந்தத்திற் போகலாம். மாதம் மாதம் அந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கவும் வசதியிருந்தது. மேலும் மனைவி மக்களுடன் செல்லவும் வசதியிருந்தது.
முதலாளி தொழிலாளியாகிய இரு சாராருக்கும் இத்தகைய ஒப்பந்தத் தொழிலால் பல இன்னல்களுண்டாயின. அவற்றுட் பல ஒருபோதும் தீர்க்க முடியாதவை. முதலாளி தனது தோட்டத்து வேலையை ஒழுங்காகவும், திறமையாகவும் நடத்த விரும்புவான். ஆனல், அவனுடைய வாழ்க்கை தொழிலாளரின் வாழ்க்கையிலும் வேறனது ; அன்றியும் அவன் போதிய பணத்தைச் சம்பாதித்தவுடன் தன் தாய்நாட்டுக்குச் செல்ல விரும்புவான் ; அதனல் தொழிலாளருடயை அரசியல் உரிமைகளைப் பற்றியோ பழக்கவழக்கங்களைப் பற்றியோ அவனுக்குக் கருத்துக்கிடை யாது. பிரித்தானிய முதலாளிகள் தமது தொழிலாளரின் அரசிய லுரிமைகள் விடயத்தில் அனுதாபங் காட்டாவிட்டாலும் பொருளாதார விட யத்தில் அவர்களைக் கவனித்து வந்தனர். சுகாதாரமுறையில் அவர்கள் தொழிலாளருக்கு வீடமைத்துக் கொடுத்தனர். பாடசாலைகளை அமைத் தும், வைத்திய வசதிகளையுண்டாக்கியுங் கொடுத்தனர். நிலையான சம்ப ளத்தையுங் கொடுத்துவந்தனர். இந்தியத் தொழிலாளர் மிகுந்த

மக்கட் புவியியல் 30
வறுமையுள்ள குடியிற் பிறந்தவர்கள் ; முன்னர் கல்வி சிறிது மற்ற வராய்த் தாம் போகும் தேசத்தின் நிலைமைகளைச் சிறிது மறியாதவரா யிருந்தனர். அந்நிய நாட்டு முகவர் அவர்களுக்கு ஆசைவார்த்தை காட்டி நல்ல சம்பளமும் வீடுவாசலுந் தருவதாகச் சொல்லிக் கூட்டி வந்தனர். புதிய ஊருக்கு வந்திறங்கியதும், இவர்களின் கனவு பலியா மற்போகவே ஏமாற்றமடைந்தனர். இதனுற் சிலர் சுகவீனமுற்றனர்; புதிய நிலைமைக்கேற்றவாறு தமது வாழ்க்கையைச் சீர்ப்படுத்த முடியாதிருந்தனர். எனவே பொருத்தம் முறிந்துவிடும், தொழிலாளி மறைந்து விடுவான் ; அவனுக்குப் போக்குவரத்துச் செலவும் சில சமயம் சம்பளத்திலே முற்பணமுங் கொடுபட்டிருக்கும். பொருத்தத்தை முறிப் பது தண்டனைக்குரிய குற்றமாகும். ஒரு தோட்டத்திலிருந்து மற்றெரு தோட்டத்துக்குப் போவானுனல் அவனுக்குரிய கடனை அங்கே அவன் கொடுக்கவேண்டியிருக்கும். வீட்டிலிருக்கும் பொழுது அவனுக்கு எவ் வளவு கடன் தொல்லையிருந்ததோ அதே தொல்லை இங்கு முண்டாகும். வீட்டிலே விளைவு கிடையாவிட்டால் நிலத்தையே ஈடுவைத்திருப்பான். இத் தொழிலாளர் தாயகத்திலும் நித்திய பட்டினி நிலையிலேயே இருந்து வந்தவர்களென்பதையுங் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதனல் விளைவு குன்றிய காலத்தில் நிலைமையைச் சமாளிப்பதற்கோ, கல்வியின் பொருட்டுச் செலவு செய்வதற்கோ பொருளைச் சேகரிக்க முடியாத நிலைமை யிலிருந்தார்கள். அரசாங்கம் இவர்களுடைய போக்குவரத்தைக் கட்டுப் படுத்துவது எதனுலென்றும், முதலாளியோடு பொருத்தஞ் செய்துகொண் டால் அதைக் காப்பாற்ற வேண்டியது கடமையென்றும், இவர்கள், அறியா மையினுல் உணராதிருந்தனர்.
இவர்களிற் பெரும் பாலோர் தோட்ட வேலையிலிடுபட்டுள்ளனர். போக்கு வரவுத் தொழிற் பகுதியில் வேறு சிலர் தெரு வேலை, இருப்புப் பாதையமைத்தல், முதலிய வேலைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு அதிக பணம் கிடைக்கும் ; தோட்டத் தொழிலாளரைப் போல இவர்க ளுக்குப் படியரிசி கிடையாது. 1946 இல் இலங்கையில் 682,000 இந்தியத் தமிழர் இருந்தனர். மொத்தச் சனத் தொகையிலிவர்கள் 102 வீதத்தினராவர். தோட்ட வேலையில் 80 வீதம் இந்தியத் தொழிலாளர் கையிலுண்டு. இவர்களிற் பெரும்பாலோர் பிரிட்டிசுத் தேயிலைத் தோட்டங் களிற் பெரும் பகுதியுள்ள மத்திய மாகாணத்திலேயிருக்கிருர்கள். நிலைமை திருத்திகரமாக வளர்ச்சியடைந்திருப்பதைக் கண்டு, பலர் இங்கேயே நிலையாகக் குடியேறிவிட்டனர். இவர்கள் இலங்கைத் தமிழரைப்போலவே இந்து சமயக் கொள்கைப்படி வாழ்க்கை நடத்துவர். இவர்களுட் பெரும் பாலோர் கீழ்ப்படியிலிருக்கின்றனர். கல்வியறிவில்லாதபடியால் மூட நம்பிக்கை யுடையவராயும், சமயத் துறையில் பூர்வீகக் கொள்கைகளை யுடையவராயுங் காணப்படுகின்றனர். இவர்கள் வருகையால் இலங்கையில் இருவகையான குடியேற்றங்களுண்டாயின. ஒன்று தோட்டத் தொழிலாளர்

Page 158
302 இலங்கைப் புவியியல்
குடியேற்றம் ; மற்றையது போக்குவரவுப் பகுதித் தொழிலாளர் குடி யேற்றம். முன்னையது மலைநாடுகளிலுண்டு ; பின்னையது பிரதான வீதிகளை யடுத்துள்ளது. இலங்கைக்கு வரும் ஐரோப்பியர் இந்தியத் தொழிலாள ரோடேயே அதிகந் தொடர்புடையவராயிருக்கிறபடியால், ஐரோப்பிய சஞ்சிகை களில் “ இலங்கை வாசிகள் ” எனக் காட்டப்படுவோர் இந்தியத் தமிழரே. அதனுற் பலர் உண்மையான இலங்கையரைப் பற்றித் தப்பான அபிப் பிராயங் கொண்டுள்ளனர்.
இந்தியத் தமிழரிடையே காணப்படும் மற்றெரு சிறிய சமூகம் இறிச்சோ இழுக்கும் மக்கள் ; இவர்கள் தனித் தன்மையுடையவர்கள் ; பெரும்பாலும் கொழும்பிலேயே காணப்படுகிறர்கள். இவ்விசேட சமூகத்தவர் தோட்டத் தொழிலாளரிலும் உயர்ந்த படியிலுள்ளவர். கல்வியறிவுள்ளவர்கள் ; ஏற்றிச் செல்வதற்கு ஆட்களைப் பார்த்துக்கொண்டிருக்குஞ் சமயங்களில் நல்ல நூல்களை வாசித்துக் கொண்டிருப்பர். சிலர் நல்ல நூலறிவுடையவராய்க் காணப்படுகின்றனர். தாய்நாட்டிலிவர்களுக்கு நிலம்புலம் உண்டு. சிறிது காலம் இறிச்சோவிழுத்துப் பிழைத்த பின்னர் தாயகந் திரும்பிவிடுவர். இறிச்சோவிழுக்குந் தொழில் மிகக் கடுமையானது. சிறு வயதுதொட்டே அதற்குப் பயிற்சி வேண்டும். இவர்கள் திடமான உடலமைப்புள்ளவர்கள். சிறிது ஆங்கிலமும் சிங்களமும் பேசுவார்கள். இறிச்சோ உடையவர்களிடம் இவர்கள் கூலிக்கு அமர்வார்கள்; அல்லது சொந்தத்திலேயே இறிச்சோ வைத்து ஒடுவார்கள். இவர்கள் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்களான படியால் இந்து சமயத்தை யனுசரிப்பார்கள். சிங்களர் வீடுகளில் வசிக்க மறுப்பார்கள். தனிக்குடிசையிலிருந்து கொண்டு தமது உணவைத் தாமாகவே சமைத்துண்பர். சிக்கனமான உணவு உண்பர் ; சோற்றையே பெரும்பாலும் புசிப்பர். நன்றகப் பணத்தை உழைத்துக் கொண்டு தாயகந் திரும்பிவிடுவர். அங்கே தமது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்கச் சேமித்த பணத்தைப் பயன்படுத்துவர்.
தமிழர் திராவிடர் இனத்தைச் சேர்ந்தவர். தக்கணத்திலிருந்த ஆதிக்குடி களிவரே. இவர்கள் வட இந்தியாவிலும் பரவியிருக்க வேண்டும் ; ஆரியர், மத்திய ஆசியாவிலிருந்து வடமேற்குக் கணவாயூடாக இந்தியாவுக்கு வந்த பொழுது அங்கிருந்த திராவிடரைத் தெற்கே கலைத்தார்கள். ஆரியர் உயரமானவர்கள் ; நிறத்திலும் வெண்மையானவர்கள்; வடமொழியை இவர்களே கொண்டுவந்தனர். அது சிங்களத்துக்கும் வேறு பல இந்திய மொழிகளுக்கும் ஆக்கம் உதவிற்று. கி. மு. 1000 வரையில் ஆரியர் வட இந்தியாவில் நிலையூன்றினர். பின்னர் திராவிடரோடு கலந்துகொண்டனர். இன்று அக்கலப்பின் பயனகப் பலதரமான இனத்தவர் காணப்படுகின்றனர். சொக்கிலேற்று நிறமுள்ள சுத்த திராவிடருக்கும் பஞ்சாப்பிலுள்ள வெண்ணிறமான உயர்ந்த ஆரியருக்கு மிடையில் இடைத்தரமானவர் பலர் காணப்படுகின்றனர். ஆரியரும் திராவிடரும் ஒடுக்கமான மண்டை யோடும் சுருண்டு அலையும் மயிரும் உடைய மக்கட்டொகுதியைச்

மக்கட் புவியியல் 303
சேர்ந்தவர். ஐரோப்பிய சாதியாரும் பெரும்பாலும் இத்தொகுதியைச் சேர்ந்தவர்களே. சிங்களரின் மூதாதைகள் கங்கை வடிநிலத்தின் தென்கரையிலிருந்து வந்தவரெனக் கருதப்படுகின்றனர். எனவே, அவர்கள் மேலே கூறிய இடைத்தர வகுப்பைச்சேர்ந்தவர்களெனலாம். சிங்களர், விசயனின் வழித் தோன்றல்களெனக் கருதப்படுகின்றனர். பழைய கன்ன பரம்பரைக் கதைகளின்படி விசயன் தேசப்பிரட்டஞ் செய்யப்பட்ட ஒா அரச குமாரன். அவன் கி. மு. 6 ஆம் நூற்றண்டிலே தனது தேசத்தை விட்டுக் கிளம்பி மன்னருக்கணித்தான ஓரிடத்தில் வந்து இறங்கினன். இலங்கையிலுள்ள ஆதிக் குடிகளை அவன் வென்று அடிப்படுத்தினன். பூர்வீக சிங்களர் இன்றுள்ள சிங்களரிலும் உயர முடையவர்களெனக் கூறப்படுகிறது. இது அவ்வளவு உண்மையன்று ; புதிய தேசத்தை யடைந்ததும் அவர்களுடைய தன்மை ஓரளவு மாறி யிருக்கலாம் ; ஆனற் புதிய சூழ்நிலையில் ஒரு சாதியார் தமது முக்கியமான தன்மைகளில் அதிகம் மாற்றமடையமாட்டார்கள். நிறத்தில் ஓரளவு கறுப்புக் கலந்திருக்கலாம். சிங்களர் அந்நிய நாட்டவருடன் அதிக தொடர்புகொண்டிருந்தபடியால் ஆங்கிலேயரைப் போலவும் ஏனைத் தீவு வாசிகளைப் போலவும், வேறு சாதியாரின் கலப்பைப் பெற்றுவிட்டனர். ஐரோப்பியக் கலப்பில்லாதவர்களிடையேயும், மிக வெண்மையான ஆரிய இனமக்களைக் காண்பது அருமையன்று. சிங்களர், இலங்கையிலிருந்த கறுப்பு நிறமுள்ள ஆதிக் குடிகளோடு கலந்துகொண்டனர். அதனுற் சிங்களரிடையே பல நிறபேதங்களைக் காணக் கூடியதாயிருக்கிறது. “ அவர் கள் கலப்புச் சாதியார் ; பல பல படையெடுப்புக்களின் பயனுக இக்கலப் புண்டானது. தமிழிரத்தம் அவர்கள் நரம்பில் அதிகம் ஒடுகின்றது. மிகப் பழங் காலந்தொட்டே தனிப்பட்ட ஒரு மொழியை அவர்கள் பேசினர். இம்மொழி ஆதியில் பிராமி எழுத்தில் எழுதப்பட்ட ஓர் ஆரியபாகத மொழியாயிருந்தது. சங்கதச் சொற்களும் பாளிச் சொற்களும் அதில் அதிகங் கலந்துவிட்டன. தமிழ் மொழியின் செல்வாக்கு சிங்களச் சொல் வளத்தில் மட்டுமன்று, அம்மொழியின் அமைப்பிலேயுங் காணப்படுகிறது.” (எச். எ. சே. குலூகலை என்பவர். எழுதிய “இலங்கை’ என்ற சிறு நூலி லிருந்து எடுக்கப்பட்டது. இது ஒட்சுபோட்டுச் சஞ்சிகைப் பிரசுரம்).
1946 ஆம் ஆண்டில் இலங்கையில் 4,631,000 சிங்கள மக்கள் வசித்தனர். இலங்கையின் மொத்தக் குடிசனத் தொகையில் இது 69 வீதமாகும்.
இவர்கள் இருவகைப்படுவர் ; ஒரு பகுதியினர் மேல் நாட்டுச் சிங்களர், அல்லது கண்டிச் சிங்களர் எனப்படுவர் ; மற்றையவர் கீழ் நாட்டுச் சிங்களர் எனப்படுவர். நாடு பெளதிகவமைப்பின்படி இரண்டாகப் பிரிக்கப் பட்டிருக்கிறது. இந்தப் பாகுபாட்டை யொட்டியே மக்களும் பிரிக்கப்பட்டனர். மலைநாட்டவர் அண்மையிலுள்ள சமபூமியில் வாழ்பவரிலும் புறம்பான வர்களே. அவர்கள் மற்றையவர்களோடு அதிக தொடர்பின்றித் தனித்து வாழ்வர் ; அதனுற் சுதந்தரமுள்ளவராகவும் வைதீகமனப்போக்குடையவ

Page 159
Lo 80.
1921 ஆம் ஆண்டுக் குடிமதிப்பின்படி இலங்கையின் பல மாவட்டங்களிலுமுள்ள கண்டிச் சிங்களரின் (மேல் நாட்டுச் சிங்களரின்) நூற்று வீதம்.
 

மக்கட் புவியியல் 305
ராகவு மிருக்கிறர்கள். மலைத் தொடர்களாற் பிரிக்கப்பட்ட தனி இனத் தவராகவோ சாதியாராகவோ அவர் வாழ்க்கை நடத்துவர். சமபூமி வாழ்க்கையிலும் மலைநாட்டு வாழ்க்கை இன்னல்மிக்கது. ஆனல், மலை நாட்டுக் காற்றுச் சுகத்துக்கேதுவானது. மலைநாட்டவர் கடின சுபாவமும், தைரியமுமுடையவராயிருப்பர் ; சமபூமியிலுள்ள செல்வந்தரைப்போல வாழ்க்கையை இலேசானதென எண்ணுபவரல்லர். தாழ் நிலத்தவரை அந்நியர் இலேசாக வெற்றிகொண்டனர். ஆனல், கண்டியர் தமது சுதந்திர்த்தை நிலைநாட்டப் பலகாலமாகச் சண்டையிட்டனர். ஈற்றில், வெற்றிகொள்ளப்பட்ட போதிலும் தமது புராதன பழக்க வழக்கங்களை விட்டுக்கொடுக்கவில்லை. வெற்றிகொண்டவர்களோடு வாதாடித் தமது சட்டங்களை அனுசரிக்க உரிமை பெற்றனர்.* இக்காலத் தெருக்களும் இருப்புப் பாதைகளும் கண்டியரின் ஒதுங்கி வாழும் வாழ்க்கையைச் சிதைத்துவிட்டன. இருந்தும், அவர்கள் தனிப்பட்டதொரு சமூகமாக விளங்குகின்றனர். சிங்களருள் அவர்களே மிகுந்த வைதீகத் தன்மை யுடையவர். ஐரோப்பியப் பழக்க வழக்கங்கள் அவர்களை அதிகம் பாதிக்க வில்லை. மற்றைச் சாதியாரேர்டு அவர்களதிகம் கலந்து மணஞ்செய்ய வில்லை. உயர் வகுப்பாரிடையே இம்மணவினை மிகக் குறைவு. மத்திய காலச் சின்னங்களுள் இன்றும் எஞ்சியிருக்கும் ஒரு சிறந்த அமிகம் இரட்டேமகாத்துமயாக்கள் அணியும் பழைய உத்தியோக உடையாகும்.
குடிசனச் செறிவைக் காட்டும் படத்தைப் பார்த்தாற் கண்டிச் சிங்களர் மலைநாட்டு எல்லையைவிட்டு வெளியே பரவிவிட்டனர் என்பது தெளிவாகும். பெரும்பாலும் அவர்கள் வடமத்திய மாகாணத்திலுள்ள உயர் நிலங்களிற் போய்க் குடியேறிவிட்டனர். அவர்கள் எங்கும் பரவியிருந்த போதிலும், கீழ்நாட்டுச் சிங்களரைப்போலப் பெருகவில்லை.
கீழ்நாட்டுச் சிங்களர் இலங்கையின் மேற்குப் பகுதியிலும், தெற்குப் பகுதியிலு மிருக்கிருர்கள். இப் பகுதிகளிற் குடிசனச் செறிவு அதிகம். அன்றியும் இலங்கையில் வளம்மிக்க பகுதியுமிதுவேயாகும். அந்நிய நாட்ட வரின் பழக்கவழக்கங்கள் இப்பகுதிகளிற்றன் அதிகம் பாவின. அதனல் அவர்களுடைய வாழ்க்கை பெரிதும் மாற்றமடைந்தது. அவர்கள் ஐரோப்பிய உடையையும் வாழ்க்கை முறையையும் மேற்கொண்டுவிட்டனர். இத்தகையோர் பெரும்பாலும் கொழும்பிலேயே காணப்படுகின்றனர்.
*கண்டி மக்களுட் பெருவிகிதத்தினர் தாழ்நில மக்களே தமிழர் படையெடுப்பால் குளக் கரைக் குடியேற்றங்களிலிருந்து மலை நாட்டிற்குச் சென்றவரென்பது நினைவிலிருத்தல் வேண்டும்.
12-J. N. B. 70576 (11157).

Page 160
Lilo 81.
1921 ஆம் ஆண்டுக் குடி மதிப்பின்படி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள
கீழ்நாட்டுச் சிங்களரின் நூற்றுவீதம்.
 

மக்கட் புவியியல் 307
மலைநாட்டவரிலும் இவர்கள் வைதீகக் கட்டுப்பாட்டிற் குறைந்தவர்கள். அதனல் மற்றைச் சாதியாருடைய வாழ்க்கை முறையை இலேசாகப் பின் பற்றக்கூடியவர். அதன் பயனுய்ச் சென்ற நூற்றண்டில் gD_6ðiðIL TGÖT விரைவான மாற்றங்கள் இவர்களைப் பாதித்தன. அண்மையில் இவர்களுடைய தொகை மற்றெச்சாதியாரையும் விடப் பெருகிவருகிறது.
சிங்களர் இந்திய மூதாதையர்களின் வழித்தோன்றல்களானபடியால் அவர்களுடைய பண்பாடும் இந்திய நாகரிகத்தின் அடிப்படையிலேயே அமைந்திருக்கிறது. இருந்தும் அவர்களிடையே தனிப் பண்புகளுண்டு; வாழ்க்கை முறையிலும், பண்பாட்டு முறையிலும் அவர்கள் தனிப்பட்ட வர்களென்றே கூறலாம். இதற்குப் பல காரணங்களுண்டு ; அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு :-
(அ) புவியியற் சூழ்நிலையிலுள்ள வேறுபாடு.
(ஆ) வியாபாரிகள் மூலமும், படையெடுத்து வந்த அந்நியர்மூலமும் வேற்றுநாட்டவரோடு உண்டான தொடர்பு.
(இ) இந்தியர் புத்தசமயத்தைக் கைவிட்டு இந்து சமயத்தை மேற்கொண்ட மையாலும், இசுலாமியர் இந்தியரிற் சிலரைத் தமது சமமத்துக்கு மாற்றிய மையாலும், இலங்கையிலேயே புத்த சமயம் சுத்தமாகப் பாதுகாக்கப்பட்டு வந்தது ; வேறு நாடுகளிலுள்ள புத்த சமயிகளோடுண்டான தொடர்பு.
புவியியற் சூழ்நிலை மாறியதால் சிங்களரின் வாழ்க்கை முறையிற் சிறிது மாற்ற முண்டானது. ஆனல், அவர்களுடைய மூதாதையர் வாழ்ந்த நாட்டில் நெல்விளைவித்தலே பிரதான தொழிலாயிருந்தபடியால், தொழி லோடும், வீட்டு வாழ்க்கை யோடும் சம்பந்தப்பட்ட பல பழக்கங்கள் மாற்ற மடையவில்லை.
அந்நிய நாட்டு வியாபாரிகளுடன் சிங்களர் அடிக்கடி தொடர்புகொண் டிருந்தபடியால் அவர்கள் மற்றையவர்களின் பழக்க வழக்கங்களை ஏற்கவும், பாந்த சமரசக் கொள்கையை அனுசரிக்கவும் முடிந்தது. புத்த சமயம் சிந்தனைச் சுதந்திரத்தைத் தூண்டியதும் இதற்கொரு காரணமாகும். தூய நிலையில், உலகத்துப் பெருஞ் சமயங்களுள்ளே சிறந்த புத்த சமயமே மற் றைச் சமயங்களை வெறமலும், சுதந்திரமான சிந்தனைக்கு இடமளித்துமிருக் கிறது. இந்து சமயத்துக்கு அது மாருணதன்று ; ஏனெனில் அது அச் சமயத்திலிருந்தே தோன்றியது. அதனல், புத்த சமய முறைகள் பல இந்து சமயக்கொள்கைகளையுடையனவாயிருக்கின்றன. சிங்களர் கலையும் இலக்கியமும் தமிழருடைய கலை இலக்கியங்களோடு பல வகையில் ஒன்று பட்டிருக்கின்றன. உதாரணமாகச் சைவக் கொள்கை பல புத்த விகாரங்களிற் காணும் சித்திரங்களில் எழுதப்பட்டிருக்கின்றன. (82 ஆம் படத்தைப் பார்க்க.) சிங்களர் வளர்த்து வந்த சற்றுமாறுபட்ட சாதியாசாரங்களைப் பற்றி மேலே கூறினும். இலங்கையிலுள்ள சாதிப்பாகுபாடு தொழில்

Page 161
308 இலங்கைப் புவியியல்
பற்றி எழுந்தது. இவை இந்தியச் சாதிக்கட்டுப்பாடுகள் போலக் கடின மானவையன்று. திண்டாதார் என்ற சாதியார் மிகக் குறைவாகவே யிருந்தனர். அவர்களைப் பொறுத்தமட்டில் எவ்வித விதிகளுமனுட்டிக்கப் படவில்லை. இன்றுள்ள மிக இழிந்த சாதியார் “ உரொடியர் ’ எனப் படுவர். இவர்கள் ஒரு காலத்திற் சாதிப் பிரட்டஞ்செய்யப்பட்ட உயர் வகுப்பினர் ; பிச்சையெடுத்து உயிர் வாழவேண்டுமெனச் சமுதாயம்
LuLúD 82.
கழனியிலுள்ள சுவரோவியம்.
இவர்களுக்குத் தண்டனை விதித்தது. கல்வியில் வளர்ச்சி எற்பட்டதனுல் சாதிக் கட்டுப்பாடுகள் இலங்கையிலிருந்து விரைவாக மறைந்து வருகின்றன. ஐரோப் பாவிற் சேவை மானிய முறை ஒழிக்கப்பட்ட பின்னரும் அதன் வாசனை நெடு நாளாக இருந்து வந்தமைபோலவே இலங்கையிலும் சாதிக் கட்டுப்பாட்டை யொழித்து விட்டாலும் அதன் வாசனையிருந்து வருகிறது. ஏனெனில் அது சிங்களரின் பழக்க வழக்கங்களிலும் பண்பாட்டிலும் நன்கு கலந்
 

மக்கட் புவியியல் 309
திருக்கிறது. மக்கட் புவியியலையும் பொருளாதாரப் புவியியலையும் கற் கும் மாணுக்கர் சிங்களரிடையேயுள்ள சாதிக்கட்டுப்பாடுகளைக் கவனமாக ஆராயவேண்டும்.
பெண்களுடைய நிலையும் சிங்களரிடையே வித்தியாசப்படுகிறது. சாதாரண மாக வீடுகள் திறந்த முகப்பையுடையனவாயிருக்கும். வீடுகளைச்சுற்றி வேலி கள் கிடையா ; தமிழ்ச் சமூகத் திற் காணப்படும் கட்டுப்பாடு இங்கே கிடையாது. சிங்களப் பெண்கள் சுதந்திரமுடையவர்களாகக் காணப்படுகின்றனர். சிங் களர் “பருதா’ முறையை அனுசரித்ததில்லை. நாட்டிலே காலத்துக்குக் காலம் அந்நியரின் படையெடுப்புக்களேற்பட்டுப் பெண்கள் ஒதுங்கி வாழவேண்டிய சந்தர்ப்பங்களுண்டான போதும் அவர்களிவவாறு வாழவில்லை. இவ்விட யத்திலுஞ் சாதிக் கட்டுப்பாட்டிலும் பிரித்தானியர், சிங்களர்க்கு முன்மாதிரி காட்டினர். தனிப்பட்டவரின் சுதந்திரத்தை விருத்தி செய்ய இது உதவியது. பிரித்தானியராட்சிக் காலத்தில் நாளடைவில் தனிப்பட்டவரின் சுதந்திரங் காப்பாற்றப்பட்டதால் அது பெண்கள் சுதந்திரமாயிருப்பதற்கு வழி கோலிற்று. பொருளாதாரங் காரணமாகப் பெண்களுக்குக் கல்வி வழங் கும் விடயம் பின்போடப்பட்டது. பெண்களுக்குக் கல்வியளிக்கும் விடயத் தைச் சிங்களர் எதிர்க்கவில்லை. எல்லாரும் அதை நன்கு வரவேற்றர் கள். பிற்காலத்திற் பெண்களுக்குக் கல்வி பயிற்ற வேண்டுமென்ற கொள்கை நன்ருகப் பரவிற்று. அந்நிய நாடுகளிற் சென்று மேற் கல்வி பயின்று தாயகம் திரும்பிய வாலிபர் படித்த பெண்களையே தமது வாழ்க்கைத் துணைவியாகக் கொள்ள விரும்பினர். பள்ளிக்கூடப் படிப் பில்லாவிட்டாலும் சிங்களப் பெண்களுக்கு இயல்பாகவே உயிர்ந்த விவேக மும், பண்பாடுமுண்டு ; அது அவர்களனுபவித்துவந்த தனிப்பட்ட சுதந் திரத்தாலும், புத்த சமயக் கொள்கைகளாலுமேற்பட்டதே. வியாபாரத் திலும் என உதிதியோகத்துறைகளிலும் பெண்கள் ஈடுபடவில்லை. இருந்த போதிலும் புதிதாக இலங்கைக்கு வழங்கப்பட்ட அரசியலமைப்பில் ஆண் களுக்குள்ள அரசியலுரிமை பெண்களுக்குங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதை ஆண்கள் எதிர்க்கவில்லை. கேட்ட மாத்திரத்திலே அவர்களிதனைப் பெற்றனர்.
ஆங்கிலப்பெண்களிந்த உரிமையைப் பெறுவதற்கு 50 வருடமாகப் போராடி னர். அதற்குப் பல வகையான எதிர்ப்புக்களுண்டாயின. இலங்கையில் ஆண் களுடன் பெண்களுக்குச் சமமான வாக்குரிமை எப்பொழுது வழங்கப்பட்டதோ அப்பொழுதே ஆங்கிலப் பெண்களுக்கும் அவ்வுரிமை வழங்கப்பட்டது. ஆங்கி லப்பெண்களைவிடச் சிங்களப் பெண்கள் பயந்தவர்கள். அரசியற்கருமங்களி லீடுபட அவர்களுக்கு அதிகம் விருப்பமில்லை. வீட்டுவாழ்க்கையையே அவர் கள் பெரிதும் விரும்புவர்.

Page 162
810 இலங்கைப் புவியியல்
சிங்களர் உடையில் அந்நியநாட்டு அமிசங்கள் கலந்துள்ளன வென்று முன்னரே குறிப்பிட்டுள்ளோம். நாளடைவில் அவ்வுடை பல நாகரிகச் சேர்க்கையுடையதாய் வழங்கிற்று. அண்மையிலுண்டான தேசிய இயக்கம் தேசிய உடையில் மக்களைக் கருத்துன்றச் செய்தது. “குறுந்துணி”ஒன்றுதான் உண்மையான சிங்கள உடை. அது சமீபகாலத்தில் மறுபடியும் பழக்கத் துக்கு வந்து விட்டது. அதற்குமுன் அது முற்றக மறைந்தே போயிருந்தது.
E I Lib 83.
புத்தபிக்கு பிச்சையேற்கும் காட்சி.
மக்கள் தலையிலனியும் ஆமையோட்டுச் சீப்பு இன்று மறைந்துவருகிறது. பல வகையான ஆபரணங்கள், அட்சரக்கூடு, வெற்றிலைப் பெட்டி ஆகியன இன்றும் விசேட இடம் வகிக்கின்றன. சிங்களரிடையே தலையணி கிடையாது.
சிங்களர் உணவு ஒரளவுக்குத் தனித்தன்மையுடைய தெனலாம். முக்கிய மான உணவான சோறு இலங்கைக்குமட்டும் உரியதன்று. மிகச்சிலரே அதனைப் பிரதான உணவாகக் கொள்ளாது விடுவர். “சேனை’ப்பயிர்செய்யும்
 

மக்கட் புவியியல் 31.
ஒரு சிலர் குரக்கனை உண்பர்; தலாவைப் பிரதேசத்திலுள்ள சிலர் சோளத்தை உணவாகக் கொள்வர். பட்டினங்களிலே இப்பொழுது கோதுமை மாவிற்செய்த அப்பத்தையும், விசுக்கோத்தையும் உபயோகிக் கிருர்கள். இவைசோற்றிலும் இலேசாகக் கொண்டு செல்லக்கூடியன. சோற்றுக்கு அடுத்தபடியாகப் பிரதான உணவாகத் தேங்காய் பயன்படுகிறது. மிருகக்கொழுப்புக்குப் பதிலாகத் தேங்காய்யெண்ணெயைச் சமைய லுக்கு உடயோகிக்கிருர்கள். தேங்காய்ப்பாலும் உபயோகிக்கப்படுகிறது. தேங்கரியெண்ணெயையும் பாலையும் மிளகாயையும் கலந்து கறி சமைக்கும் முறை இந்தியமுறையிலும் வித்தியாசமானது. சிங்களர் கறிக்கு வாழைக்காய், பலாக்காய், ஈரப்பலாக்காய், கிழங்குவகை யென்பவற்றை 3.
யோகிப்பர்.
மக்கள் சிறிது இறைச்சியும் உணவோடு சேர்த்துக் கொள்வர். கடலையடுத்த பகுதிகளில் மீன்கறி பிரதானமானது. மாலைதீவிலிருந்து வரும் “மாசி ’ க்கருவாடு எங்கும் உணவோடு சேர்த்துக் கொள்ளப்படும்.
மாமிசம் உண்பதைப் புத் தசமயம் எவ்வாறு தடுக்கிறதென்று எற்கெனவே கூறியுள்ளோம் மற்றைப் புத்தசமய ஆசாரங்களைப் போல இதுவும் நல்ல வொரு சமயபோதனையாகும். இது புத்தசமயம் பிறந்த நாட்டில் தோன்றி யிருப்பது குறிப்பிடத்தக்கது. மாமிசம் சூட்டையுண்டாக்குமுணவு. தேகவெப்ப நிலையிலும் குறைவான வளி வெப்பநிலையுள்ள நாடுகளில் இது பொருந்தும், உணவாகும். மாமிச உணவை அதிகமாகச் சாப்பிடும் எசுக்கிமோசாதியார், உடம்பின் வெப்பமான 984° ப. இற்குக்கீழே 150° ப. வரையிற் குறைவா யுள்ள வளிமண்டல நிலையில் வசிக்கிறர்கள். இலங்கையில் வளிமண்டல நிலை உடம்பின் வெப்பத்துக்கு 20 ப. பாகையேனும் கீழே செல்வ தில்லை. குளிக்கும் நீர் இந்த வெப்பத்துக்குக் குறைய ஒரு போதும் செல்லமாட்டாது. எனவே, இலங்கைவாசிகள் மாமிச உணவைக்குறைத்தல் வேண்டும். கொழுப்பில்லாத மாமிசத்திலும் முட்டை, மீன், பருப்பு, வித்து முதலியவற்றிலுள்ள புரத உணவை உண்பது நன்று. அவை இழையங்களை வளர்ப்பதற்கு அவசியமாகும். ஐரோப்பியப் பழக்கத்தால் இலங்கையில் மாமிச உணவு அதிகரித்துக் கொண்டது. ஆனல், வெப்பமான காலநிலைக்கு அஃது ஏற்றதன்று. மேலும், மாமிச உணவைத் துப்புரவாகவும், கெடாம லும் வைத்திருப்பது கடினம். மாடுகளே வளர்ப்பதும், சுத்தமாகப் பாலை வைத்துக் கொள்வதும் கடினமானபடியாற் சிங்களர் பாலைப் பெரும் பாலும் உபயோகிப்பதில்லை. புத்தசமயமும், இந்து சமயமும் மதுபானம் அருந்துவதைத் தடுக்கின்றன. வெப்பமான ஒரு தேசத்தில் மதுவை நீக்குவது நன்று.
இலங்கையிற் சிங்களர் வசிக்கும் பகுதிகளிலே கமுகும் வெற்றிவைக் கொடி யுமுண்டு. வெற்றிலை பாக்குச் சாப்பிடும் வழக்கம் மிகப்புராதனமானது. அதஞ்ல்ை, கமுகிலிருந்து பாக்கும் வெற்றிலைக் கொடியிலிருந்து வெற்றிலை,

Page 163
312 இலங்கைப் புவியியல்
யும் எடுக்கப்படுகின்றன. பழைய வழக்கங்கள் பலவற்றில் வெற்றிலை பாக்குப் புகுந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது; கையுறை கொடுக்கும் பொழுது விசேடமாக வெற்றிலை பாக்குடன் கொடுக்கிருர்கள். அது போலவே தேங்காயும் இந்து பெளத்த சமயச் சடங்குகளிலும் வீட்டுக்கிரியை களிலும் பெரிதும் இடம் பெறுகின்றது. தென்னேவையாற் பந்தல் போடுகிறர்கள்; தென்னம் பூவினல் மண்டப அலங்காரங்களைச் செய் கின்றனர். இவை விசேடமாகச் சிங்களர்க்குரிய வழக்கங்களென்பதை, நாட்டுக்குப் புதிதாய் வரும் அந்நியர் விரைவில் அறிந்து கொள்வர்.
சிங்களரின் பண்பாடும் சமூகவாழ்வும் புத்தமதத்தினுற் பெரிதும் உரு, வாக்கப்பட்டனவே. மேலும், அவர்களுடைய சிறந்த தன்மைகளிற் பெரும் பாலன புத்தசமயத்தாலுண்டானவையே. சிங்களரில் 92 வீதத்தினர் பெளத்தர் ; 8 வீதத்தினர் கிறித்தவர். அண்மையில் கிறித்தவர் தொகை குறைந்துகொண்டே வருகிறது. நீண்ட நாட்களாக மக்களிற் சிலர் பொரு ளாதார நன்மையை முன்னிட்டுத் தாம் கிறித்தவரெனக் கூறிவந்தனர். சென்றநூற்றண்டின் குடிசனத்தொகை நம்பத்தக்கதன்று. கி.மு. ஐந்தா வது நூற்றண்டிலிருந்து கி.பி. எட்டாவது நூற்றண்டுவரை புத்த சமயம் மத்திய ஆசியாவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் விரைவாகப் பரவி, உலகின் சனத்தொகையில் அரைவாசியைப் பெளத்த சமயத்துக்கு மாற்றினது மன்றி அவர்களுடைய வாழ்க்கை முறையையும் கருத்துப் போக்கையும் மாற்றியது. இவ்வளவுக்கும் சமயப்பிரசாரம் நடத்தப்படவில்லை; தனது சொந்த மகிமையினலேயே இம்மதம் மக்கள் மனதைக் கவர்ந்தது. இது உலக சரித்திரத்திற் குறிப்பிடத்தக்கவொரு நிகழ்ச்சியாகும். இலங்கையி லெழுதப்பட்ட திரிபிடகம், உலகில் வேறெந்தச் சமயநூலுஞ் செய்யாத அள வுக்கு மக்கள் மனத்தைக்கவர்ந்தது. இந்தியாவில் கி.பி. எட்டாவது நூற்ருண் டுக்கும் பன்னிரண்டாவது நூற்ருண்டுக்குமிடையில் புத்த சமயம் பெயரளவில் ஒரு சமயமாக நிலவாத போதிலும், மற்றைத் தேசங்களில் அதன் தன்மை மாற்ற மடைந்து உருக்கெட்ட போதிலும், அது பரவியநாட்டிலுள்ள மக்களின் சமுதாய வாழ்வைப் பெரிதும் பாதித்தது என்பதில் ஐயமில்லை. எனவே, புத்த சமயக் கொள்கைகளைப்போல் உலகில் சமாதானத்தையும் அன்பையும் வளர்த்த ஒரு சமயம் உலகிலில்லை.
இலங்கையிற் புத்த சமயம் துய நிலையிற் காப்பாற்றப்பட்டு வந்தது. ஐரோப்பிய படையெடுப்புக்களினல் அது வலி குறைந்த போதிலும் இரு பதாம் நூற்றண்டில், குறிப்பிடத்தக்க அளவுக்கு மறுமலர்ச்சியடைந்தது* தனிப்பட்ட வாழ்வுக்கும் கல்வி வளர்ச்சிக்கும் இது உறுதுணை செய்தது; இருபதாம் நூற்றண்டில் பெளத்த பாடசாலைகள் பல தாபிக்கப் பட்டன. சிங்கள சாதியாரின் சரித்திரத்தில் இது குறிப்பிடத்தக்கவோர் அமிசமாகும். வருங்காலச் சமுதாய, பொருளாதார வளர்ச்சிக்கு இது

மக்கட் புவியியல் - 313
பெரிதுந் துணைபுரியும்; ஆசியாவிலும், அண்மையில் உலகின் ஏனைப் பாகங்களிலுமுள்ள சிறந்த சிந்தனையாளரின் தொடர்பு, புத்த சமயத்தின் மூலம் சிங்களருக்கு உண்டானது. புத்த சமயம் வலிகுன்றிய காலத்திலேற் பட்ட மாசுகளே நீக்க வேண்டிய கடமை சீர்திருத்தக்காரர்களே எதிர் நோக்கி நிற்கிறது. ஆனல், முன்னேற்றம் நடைபெற்றே வருகிறது.
புத்தசமய முறையில் அமைந்த சமூகம், மற்றைச் சமூகங்களுக்கு வேறன ஒரு தனிப்பட்ட தன்மையுடையதாயிருக்கும்; புத்த சமயக் கொள்கைகளும் புத்த சமயப் பெரு நூல்களிற் காணப்படும் வாழ்க்கை முறைகளும் அதனை அத்தகைய தனித்தன்மையைப் பெறச் செய்கின்றன. இச் சமயத்திலுள்ள மிக முக்கியமானவோர் அமிசம் இங்கு காணப்படும் பிக்குக்கள் சங்கமாகும். இதில் எவருஞ் சேரலாம்; அவர்களின் ஆன்ம லாபத்துக்காகவே இது எற்பட்டது. சமுதாயத்துக்கு அவர்கள் செய்யும் சேவை புறம்பாகக் கணிக்கப்படும்.
பிக்குக்கள் வறுமை விரதம் பூண்டவர்கள். அவர்கள் தமது சமய வாழ்வை வாழ்வதற்குச் சமுதாயத்திலுள்ளவர் உணவு முதலியன உதவித் துணைபுரிவர். சமய அனுட்டானங்களில் ஈடுபட்டவர்களுக்குச் சமுதாயம் விசேட கெளரவம் காட்டும். சங்கத்திற் சேர விரும்பினேர் பெரிதுங் கெளரவிக்கப் படுவர். வேறு எச் சமூகத்திலும் இவ்வளவு தொகையினரான பிக்குக்களைக் காண முடியாது. மற்றைச் சமூகங்களில் பிக்குக்கள் பிச்சையெடுத்துச் சிவிக்கும் வழக்கங் கிடையாது. சமய வாழ்வுக்கு விசேட மதிப்புக் கொடுக்கப்படுகிறது. சமய அனுட்டானங்களில் ஈடுபடுவோருக்கு உதவியாக ஒருவருக்கொருவர் நன்மை பயக்கக்கூடிய பல வசதிகள் செய்யப் படுகின்றன. உதாரணமாக யாத்திரை செல்வோருக்குச் செய்யப்படும் உதவி களையெடுத்துக் கொள்ளலாம். இது மக்கள் செய்யவேண்டிய ஒரு புண் னியமாகக் கருதப்படுகிறது. ஆன்ம வளர்ச்சிக்கு அனுகூலமாகப் புண் ணிய கருமங்களைச் செய்ய வேண்டுமெனப் பெளத்த சமயம் போதிக்கிறது. எனவே, யாத்திரை செய்வோருக்கு வேண்டிய வசதிகளை எல்லா மக்களும் தாமாகவே முன் வந்து செய்கின்றனர். இதற்கு மத்திய தாபனமில்லாதிருப் பதும் கவனிக்கப்பட வேண்டியதாகும். யாத்திரிகர் தங்குவதற்கு அம்பலங் களும், தண்ணீர்ப் பந்தல்களும், இலவச உணவும் ஒழுங்கு செய்யப்படு இன்றன. இந்தியப் பிரதேசங்களில் இது சாதாரணமாக எங்குங் காணப் படும். ஆன்ம ஈடேற்றமே வாழ்வில் முதலிடத்தைப் பெற வேண்டுமெனப் புத்த சமயம் மக்களுக்கு முயன்று போதித்து வந்திருக்கிறது. ஆன்ம ஈடேற்றத்துக்கான முயற்சிகளிலீடுபடுவதோடு உலகத்து ஆசைகளைக் குறைக்க வும் வேண்டும். இதஞற்றன் வியாபார மனப் போக்குள்ளவர்கள் புத்த சமயத்தை வளர்ச்சியில்லாத சமயமெனக் கருதுகின்றனர். புத்தசமயம் மக்கள் எளியவாழ்க்கை வாழச் செய்கிறது. மேனுட்டு இலட்சியங்களுக் கேற்ற வகையில் முன்னேற அது தூண்டவில்லை. .

Page 164
34 இலங்கைப் புவியியல்
இந்தியாவிலும், இலங்கையிலும், யாத்திரிகர்க்குச் செய்யப்படும் ஒழுங்கு களைப் பற்றி அந்நிய நாட்டவரான சாதாரண ஐரோப்பியருக்கோ, அமெரிக் கருக்கோ கூறினுல், அவர், இலவச போசனத்துக்கும், இரவு தங்குவதற்கும் ஒரு யாத்திரிகர் ஏதாவது அனுமதிச் சீட்டுக் காட்ட வேண்டியிருக்குமோ வென்று கேட்பார்; இவர்களுடைய வியாபார மனே பாவமே இவ்வாறு
படம் 84,
கிராமச் சந்தை.
கேட்கச் செய்கிறது. புத்த சமயமும் இந்து சமயமும் பரவியுள்ள சமூகங் களில் மக்கள் செய்யும் புண்ணியச் செயல்களைப் பற்றி இவர்கள் விளங்கிக் கொள்வது கடினம். மக்கள் தாஞ்செய்யும் நியமமான தொழில்களை விட்டு
 

மக்கட் புவியியல் 315
விட்டு யாத் திரைகளிலிடுபடுவது நல்ல தன்றெனவுமிவர்கள் எண்ணுவர். ஆங்கிலத் தோட்டத் துரை இத்தகைய யாத்திரைகள் அணுவசியமானவை என நினைப்பார். சிங்களரும் அதை ஆட்சேபமின்றி ஒப்புக்கொள்ளுவர். இந்துக்களும் முசிலிம்களும் இதனை ஒரு புண்ணிய கைங்கரியமாகவே கருதுவர்.* ་་་་་་་་
“திபேத்தில் வாழும் நாம்” என்ற நூலில் திபேத்து அறிஞரான இரின்சென் இலாமோ என்னும் பெண்மணி புத்த சமயத்தைச் சேர்ந்த சமூகத்தவரின் வாழ்க்கைக் குறிக்கோளேப் பற்றிப் பின்வருமாறு விளக்குகிருர்: “உங்கள் கொள்கைப்படி நாம் இவ்வுலக இன்பங்களிற் பற்றில்லாதவா. நமது சமயம் அதை வற்புறுத்துகிறது. நமது குரு மார் அந்த இலட்சியத்தோடு வாழ்க்கை நடத்துகின்றனர். உலக வாழ்வுக் குரிய பொருள்களுக்காகப் போரிடுவது சரியன்றெனவே கருதுகிறேம்; அயலாருக்கு இல்லாத பொருள்களுக்காக நாம் முயற்சி செய்ய
மாட்டோம். . . . . . . உங்களுக்குள்ள ஓயாத போராட்டமும், இன்னலும், உழைப்பும், பணஞ் சேர்ப்பதற்காகவுள்ள ஒட்டமும், வறுமையைக் குறித் துண்டாகும் பயமும் எங்களிடமில்லை . . . . . நாகரிக மென்பது உலோகாயத
மன்று. நாகரிகமடைந்தவர்களென்பவரிடம் இலெளகீகப் பொருள்களதிக மிருக்க வேண்டும்; அவ்வளவிற் சரி; எங்களிடம் அவையுண்டு; உங்களிடம் அளவுக்கதிகமுண்டு. எங்களிடமில்லாத அநேக பொருள்கள் உங்களிட முண்டு. அவை அற்புதமானவை. உங்கள் இயந்திரங்களைப் பார்ப்பதில் எனக்கு அலாதியான விருப்பம். அதிற் களைப்பேயுண்டாவதில்லை. இவ் வளவு போகப் பொருள்களையும் உண்டாக்கிய நீங்கள் உண்மையில் அற்புத மானவர்களே . . . . . . . . ஆனல், இதில் மற்றெரு அமிசமுமுண்டு. இப் பொருள்களில்லாமலே மக்கள் வாழ முடியும். ஆனல், இவை கிடைத்தால் இவற்றை மக்கள் பயன்படுத்தவே விரும்புகிருர்கள். அதனல் செலவு கூடுகிறது. சிலருக்கே இப் போகப் பொருளே வாங்க முடியும்; ஆனல் எல்லாருக்கும் இவற்றில் ஆசையுண்டு. பணமிருந்தால் வாங்கலாம், பண மில்லாவிட்டால் வாங்க முடியாது. இவற்றை வாங்கி விட்டால் எல்லாரும் அவர்களைக் கனம் பண்ணுகிறர்கள்; வாங்கா விட்டாற் குறைவாக நினைக் கிறர்கள். முயற்சியின் குறிக்கோள் செல்வம்; மனிதனுக்கு முக்கியமான தேட்டம் வேறு; அதனல் அவனுடைய மனம் அதில் நாட்டமின்றிச் செல்வத் தையே நாடுகிறது. செல்வத்தைத் தேடுவோனும், வறுமையை அஞ்சு வோனும், நேர்மையாக வாழும். முறையைக் கைவிடுகிறன். மக்களிடத்து
"பொதுவாகப் பார்க்குமிடத்து இந்தியப் பிரதேசத்திலுள்ள சமய சம்பந்தமான அநேக பழக்கங்கள் ஒப்புமையுடையன போலக் காணப்படும். ஆனல், அவற்றைப் பற்றிய விவரங் கள் ஊருக்கு ஊர் வித் தியாசப்படும். இந்துக்களுடைய ஒழுங்குகள் முசிலிம்களுடைய ஒழுங்குகளோடு ஒத்திருக்கலாம்; ஆனற் சிங்களருடையவை தனித்தன்மையுடையனவாயிருக் (5un.

Page 165
316 இலங்கைப் புவியியல்
அன்பு காட்டுவதையும் கைவிடுகிறன். ஆன்மாவையே இழந்து விடுகிறன்; செல்வம் என்ற நூதனமான கடவுளைத் தேடித்திரிகிறன். அது, எங்களிடம் கிடையாது. உங்கள் உலோகாயத வாழ்வு இத்தகையதே. உலகப் பொருள் களைத் தேடுவது அவசியமே ; அவ்வளவில் அம் முயற்சி நன்று. அப் பொருள்களை உற்பத்தி செய்த நோக்கமும் நன்று; புகழ்தற்குரியது.
ஆனல், அவற்றை மக்கள் பிழையாகப் பயன்படுத்தக் கூடாது. அவற் றுக்காக மாரடித்துத் திரியக்கூடாது. அவை எவ்வளவுக்கு வேண் டப்படுகின்றனவோ அவ்வளவுக்கு அவற்றைக் கைவிட்டாற் புண்ணிய முண்டு. அவை கைவிடப்படவே இருக்கின்றன என்றுங் கூறலாம்; ஆனல் அஃது அப்படியன்று ; அவற்றைப் பிழையாகப் பயன்படுத்தக் கூடாது. உங்கள் உலகாயத நாகரிகத்தைப்பற்றி நீங்கள் பெருமை கொள்வது நியாய மானதே ; ஆனல், அந்த நாகரிகம் இல்லாதவர்களை அநாகரிகர் என்று சொல்லக் கூடாது. நாகரிகந்தான் உலகாயத மன்று ; நகரத்திலே உள்ள
பல போகப் பொருள்கள் உங்கள் கிராமவாசிகளிடம் கிடையா. அதனல் அவர்களை அநாகரிகரென்று கூறிவிடமுடியாது. ஒருவேளை அவர்கள் உங் களிலும் நாகரிகம் படைத்தவர்களாயிருக்கலாம். ஆன்மார்த்தமான கொள்கைதான் நாகரிகத்தையோ அநாகரிகத்தையோ நிச்சயிப்பது.”
இந்த இலட்சியத்தை இலங்கை அடைந்து விட்டதென்று கூறமுடியாது. ஆனல், இவ்வறிஞர் பெளத்த சமூகத்தின் குறிக்கோளைத் தெள்ளத் தெளியக் கூறிவிட்டார். இச்சமூகத்தினர் வியாபார மனப்பான்மையின்றி அன்போடும் அமைதியோடும் வாழப் பெளத்தக் குறிக்கோளே காரணம். பிற் காலத்தில் இக் கொள்கைகளுக் கெதிரான ஐரோப்பிய கொள்கைகள் நாட் டிற் புகுத்தப்பட்டபடியால் இன்று நிலைமை சிக்கலாகி விட்டது. சமுதாய வாழ்விலே பெளத்தக் கொள்கைகள் உண்டாக்கிய மாற்றங்களைக் கவனி யாது விட்டால் இலங்கையின் மக்கட் புவியியலையோ, பொருளாதாரப் புவியியலையோ பூரணமாக அறிந்து கொள்ளமுடியாது. சாதிக் கட்டுப்பாடு, மனிதரிடையே வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளுமுண்டென்பதை வலியுறுத்திற்று. ஆனல், புத்தசமயம் இவ்வித்தியாசங்களைத் தகர்த் தெறிந்து குடியாட்சித் தத்துவத்தையும், எல்லாச் சமூகங்களும் ஒன்று, சேரக்கூடிய சமுதாய வாழ்க்கையையும் வலியுறுத்திற்று. இது சிங்களக். கிராமங்களிலேதான் நன்கு தெரியவரும். அங்கே மக்கள் எளிய முறையில் அமைதியான வாழ்க்கை நடத்துவர். மக்கள் பெளத்த நூல்களினறி வன்றி வேறு நூலறிவில்லாதவராயிருந்தும் மனப்பண் புடையவராகக் காரைப்படுவர்.
பிறப்பு, இறப்பு, விவாகம், குடும்பக் கடமைகள் என்பனபற்றிய சாதாரண விதிகளெல்லாம் பெளத்த நூல்களிற் கூறப்படுகின்றன. சிங்களருடைய சமூக வாழ்க்கைக்கு இவையே அடிப்படையாகக் காணப்படுகின்றன. இவ் விடயங்களில் கிறித்தவ நூல்கள் தெளிவாக எதையுங் கூறுவதில்லை ; கிறித்

மக்கட் புவியியல் 37
தவ சமூகத்தில் உள்ள விழாக்களும், கிரியைகளும் பெரிதும் வேருனவை. இவற்றைப் பற்றிப் பின்பு ஆராய்வோம். அண்மையில் ஆங்கில சமூகத் தவரிடையே இந்த வழக்குக்களைக் கைவிடுவதே போக்காயிருப்பதால், இலங்கையிலும் கல்வியறிவுள்ள சமூகத்தவர் அவற்றைக் கைவிட்டு வரு கிறர்கள். பழைய சிங்களச் சமூகத்தவர், விவாக காலங்களில் மாப்பிள்ளையின் பெருவிரலையும் பெண்பிள்ளையின் பெருவிரலையும் இணைத்து நீர் வார்த்துத் தத்தஞ்செய்வர். அவ்வழக்கம் இப்பொழுது அருகிவிட்டது. கிறித்தவ திருச்சபையில் பூசை செய்து நிறை வேற்றப்பட்டாலன்றி ஒரு விவாகம் சட்டமாகாதென்ற பழைய விதியினுற்ருன் சிங்கள விவாகச் சடங்குகளிற் பல மறைந்திருக்க வேண்டும். ஆனல், திருச்சபைபற்றிய பழைய விதியும் இப்பொழுது நீக்கப்பட்டுவிட்டது.
சிங்கள சமூகத்திற் குடும்பத் தொடர்பு பலமுள்ளதாக எப்பொழுதுமே இருந்து வருகின்றது. இவ்வகையில், இந்திய சாதியார் பலரிடையே இருக்கும் முறைக்குஞ் சிங்களர் முறைக்கும் அதிக பேதமில்லை. க0ை வன் வீட்டில் வாழும் “பின்ன”மணம், மனைவி வீட்டில்வாழும் "தீக”மணம் என்ற விலாகமுறைகள், இந்திய மக்களிடையேயுள்ள மணங்கள் போன்றவையே. விரிவாகப் பார்க்கும் பொழுது சில வித்தியாசமுண்டு. புதிதாக மணஞ்செய்த தம்பதிகள் பெற்ற ரைப் பிரிந்து தனிக்குடித்தனஞ் செய்வது இன்று வழக்கமாகி வருகிறது. இது ஆங்கிலேயரைப் பார்த்துப் பழகிய பழக்கமாயிருக்கலாம். சமீபகாலத்தில் விவாகஞ் செய்யும் வயதும் உயர்ந்து விட்டது. அதுவுமிதற்கொரு காரணமா யிருக்கலாம். இந்தியாவிலுள்ள கூட்டுக் குடும்பம் சில இடங்களில் பெரிதாயி ருக்கும். இலங்கையில் அவ்வாறில்லை. மணப்பொருத்தம் பார்ப்பது இலங் கைக்கே யுரிய வழக்கமன்று. சாதகம் பார்க்கும் வழக்கம் இன்று, ஐரோப் பாவிலும் ஆசியாவிலேதானதிகம். அதுபோலவே முகூர்த்தம் பார்த்தலும் நாட்பார்த்தலும் ஐரோப்பியரிடையே பெரும்பாலுமில்லை. ஆனல் அவை இலங்கையிலுண்டு.
இலங்கைச் சோனகர் ஒரளவு அராபியருடைய வழித்தோன்றல்களே. வரலாற்றுப் புவியியல் என்ற அத்தியாயத்திலே அவர்களது குடி யேற்றத்துக்குரிய காரணங்களைப்பற்றி யெடுத்துக் கூறியுள்ளோம். 1946 இல் இவர்கள் தொகை 455,000 ஆகும் ; இலங்கையின் மொத்தச் சனத் தொகையில் இது 7 வீதமாகும். அராபியரிலும் இவர்கள் பல வகையில் மாற்ற மடைந்துவிட்டனர். அவர்களிலும் நிறத்திற் சற்றுக் கறுப்பானவர் கள். தேகமும் அவ்வளவு பருத்ததன்று. சிங்களரிலும் உயரமானவர்கள். அராபியரின் பலமும் சகிப்புத்தன்மையும் இவர்களிடமுங் காணப்படுகின்றன. அராபியருடைய செமிற்றிக்குத் தன்மைகளை இவர்களிடமுங் காணலாம். ஒரு பாடசாலைக்குச் சென்றல் சோனகரை இலேசாகக் கண்டு பிடித்துவிடலாம் ; இவர்கள் எப்பொழுதும் தொப்பியணிந்திருப்பர் : சிங்களரையோ, தமிழரை யோவிட உயரமுடையவராய்க் காணப்படுவர். இவர்களுள் இரண்டு பிரிவின் ருண்டு; ஒன்று இலங்கைச் சோனகர் ; மற்றையது இந்தியச் சோனகர்.

Page 166
ulüp 85.
1921 ஆம் ஆண்டுக் குடி மதிப்பின்படி இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலுமுள்ள சோனகரின் நூற்று வீதம்.
 

மக்கட் புவியியல் 39
முன் தலைமுறைகளில் இலங்கையிலே வந்து குடியேறிய அராபிய வியா பாரிகளின் வழித்தோன்றிய நிரந்தரமான இலங்கைக் குடிகளே இலங்கைச் சோனகர். இவர்களுடைய மூதாதையரிற் பலர் நிலபுலம் வாங்கக்கூடிய அளவுக்குப் பணமுடையவர்களாயிருந்தபடியால் நிலத்தை வாங்கிப் பிற் சந்ததியாருக்கென விட்டுச் சென்றனர். அவர்கள் நிலையான குடிகள், மூன்றிலொரு பங்குக்கு மேற்பட்டவர்கள் நிலமுள்ளவராகவோ, விவசாயி களாகவோ இருக்கிருர்கள். மற்றையவர்கள் மீன் பிடித்தல், வியாபாரஞ் செய்தல், கடைவைத்தல், உத்தியோகம் புரிதல் போன்ற பல துறைகளிலு மீடுபட்டிருக்கின்றனர். தமிழரைப் போலவே இவர்களும், சிங்களரோடு சேராது தனிப்படவாழ்ந்தனர்; இசுலாமியச் சமயக் கோட்பாடுகளுக்கிணங்க வாழ்ந்தனர். அராபியர் செல்லுமிடமெல்லாந் தமது சமயாசாரங்களைக் கைவிடாது அனுட்டிப்பர். சில முறைகளில், அதாவது பெண்களைப் “பருதா’ அனுட்டிக்கச் செய்வதிலும், வீட்டைச்சுற்றி மறைவான வேலியடைப்பதிலும், அவர்கள் சிங்களரிலும் தமிழரோடு ஒத்திருக்கின்றனர். இவ்விடயத்தில் அவர்கள் தமிழரிலும் வைதீகமுடையவர். அராபியப் பருதா முறையை அவர் கள் சற்றுத் திருந்திய முறையில் அனுட்டிக்கின்றனர். பெண்கள் அராபிய உடையை விட்டுவிட்டுச் சேலை அணிவதை நெடுங்காலத்துக்கு முன்னரே கைக் கொண்டுவிட்டனர். ஆனல், பருத்தி நூலால் இறேந்தையிழை போன்று பின்னியதுணியால் வெளியே வீதியிற் செல்லும்பொழுது முகத்தை மூடிச் செல்வர். வாகனங்களிற் செல்லும்பொழுது உயர்வகுப்புச் சோனகப் பெண்கள் முகத்தை மூடியவண்ணமே செல்வர். அராபியரிடையே இவ் வழக்கம் நிலவியதற்கான காரணத்தை முன்னரே கூறியுள்ளோம். அரா பியாவிலிருந்த புராதன வாழ்க்கை முறையின் சின்னமேயிதுவாகும்; ஆண்களின் உடையும் இன்று மாற்றமடைந்துவிட்டது. ஆனல், தலையிலே தொப்பி அணியும் அராபிய வழக்கம் மாறவில்லை. இந்தத் தொப்பி இலங். கையிற் பல வகைப்படும். சிவப்புத் துருக்கித்தொப்பி துவங்கி வெள்ளேத் துணியினற் செய்த சிறிய தொப்பி வரை பலவகையான தொப்பிகளுண்டு. அத்துடன் இறுக்கமானதும் கழுத்துவரை தெறிபூட்டக்கூடியதுமான நீண்ட் சட்டையை அணிவர். முசிலிம் பெண்கள் வேளியே வருவதை முசிலிம்கள் எதிர்த்து வந்ததால், அவர்களின் கல்வியறிவு, விவேகம் முதலியன ஆண்களிலும் மந்தமாகவுேயிருந்து வந்தது. சிங்களரிடையோ தமிழரி டையோ ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் எத்தகைய ஏற்றத்தாழ்வு மில்லை. முசிலிம் பெண்கள் பள்ளிவாசலுக்குப் போய் வழிபாடு செய்யும் வழக்கமில்லை. சமய வழிபாடுகளேயெல்லாம் ஆண்களே செய்தல் வேண்டும். ஆனற் இக்காலக் கல்வியின் பயனகப் பருதா போன்ற பழைய வழக் கங்கள் மாறி வருகின்றன. முசிலிங்களிடையிலும், தமிழர் சிங்கள்ரின்ட் யிலும் உள்ள பணக்கார வகுப்பு வாலிபர் வெளிநாடுகளுக்குச் சென்று உயர்நிலைக் கல்வி கற்றுத் தாயகந்திரும்பிய பின்னர் தமது அறிவுத்தகு

Page 167
320 இலங்கைப் புவியியல்
திக்குச் சமமான பெண்களை மனைவியராகக்கொள்ள வேண்டுமென விரும் பினர். பெண்கள் கல்விபெற வேண்டுமென்ற இயக்கம் அண்மையிற் தீவிர மடைந்ததற்கு இது ஒரு காரணமாகும். இசுலாமியர் தமக்கெனச் சில உயர் கல்வி நிலையங்களைத் தாபித்திருக்கிறர்கள். இவற்றுட் பெரும்பாலா னவை ஆண்பாடசாலைகள். இவற்றுட் சிறந்தது கொழும்பிலுள்ள சகிராக் கல்லூரி. முசிலிம் பிள்ளைகள், மற்றைச் சமூகத்தவர் நடத்தும் பாடசாலை களுக்குப் போவதில் வெறுப்புக் காட்டுவதில்லை. கொழும்புக்கு வெளியே யுள்ள சிறிய பட்டினங்களில் முசிலிங்கள் அவ்வாறே செய்கின்றனர். முசி லிங்கள் தொகை கூடிய இடங்களில் தனிப்பட்ட முசிலிம் ஆரம்ப பாடசாலை களுண்டு. உலகின் எனைப் பகுதிகளிலுள்ள அரபுப்பாடசாலைகளை அறிந்த வர்கள் இப்பாடசாலைகளையும், அங்கு சத்தத்தோடு செய்யும் “ஒதலையுங்’ கேட்டு அறிந்து கொள்வார்கள். இப்பாடசாலைகள் பெரும்பாலும் பள்ளி வாசல்களையடுத்திருக்கும். சோனகருடைய உணவு சிங்களர் தமிழர் உண விலும் வித்தியாசமானது. அராபியர் பொதுவாகக் கோதுமைப் பண்டங் களையே சாப்பிடுவர். இலங்கையிலவர்கள் அரிசியைப் பெரும்பாலும் உபயோ கிக்கவேண்டி யேற்பட்டது. இருந்தும் அராபிய நாடுகளில் வழங்கும் ஒரு வகையான கோதுமை அப்பத்தை இவர்களும் உண்பர். இவர்கள் சமைக் கும் புரியாணிச்சோறு இலங்கையிற் பிரசித்தமானது. பன்றியிறைச்சியை இவர்கள் சாப்பிடமாட்டார்கள். இருந்தும், சிங்களரிலும் தமிழரிலும் அதிக மாக இவர்கள் வேறுமாமிசத்தை உண்பர். இந்துக்களேயும் பெளத்தர்களையும் போல உயிர்க் கொலையைப்பற்றி இவர்கள் சமயம் தடைவிதிக்கவில்லையாத லால், இறைச்சிக் கடைகளிற் பெரும்பாலானவை சோனகரால் நடத்தப்படு கின்றன. இந்த வியாபாரத்தில் தமிழரோ, சிங்களரோ ஈடுபடவில்லை.
இந்தியச் சோனகர், இலங்கைச் சோனகரிலும் மாறுபட்டவர்கள். அவர்கள் நிரந்தரமான குடிகளல்லர். இந்தியாவின் மலையாளக்கரையிலிருந்தே பெரும்பாலோர் வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சிறு வியாபாரிகள். எறத்தாழக் காற்பங்கினர் பெரிய வியாபாரிகளாவர். சிலர் சிறிய வள்ளங் களிலே தென்னிந்தியக் கரையெங்குஞ் சென்று வியாபாரம் நடத்துவர். சொற்ப காலங்களுக்கு இலங்கையிலே தங்குவர். வெருவெலை போன்ற கரையோரப் பட்டினங்கள் சிலவற்றில் இவர்களுடைய செல்வாக்கைக் காணலாம். வெருவலை, சோனகர் குடியேறிய ஒரூர். அங்கே இவர் களுடைய வள்ளங்கள் வந்து தங்குவதற்கு ஒரு சிறு துறைமுக முண்டு. மட்டக்களப்புக்கண்மையிலுள்ள காத்தான் குடியும் சோனகர் குடியேற்றம் நிறைந்தது. இதிற் கவனிக்கவேண்டிய பல அமிசங் களுண்டு. இவர்கள் பலவகையான தொழில்களிலிடுபட்டிருக்கிறர்கள். பலர் வீட்டுவேலைக்காரராயிருப்பர். சிலர் தேயிலைத்தோட்டங்களில் விசேட வேலைகளிலமர்ந்திருப்பர். வியாபாரத்தில் தந்திரமுள்ளவர்களென்றெரு கெட்ட பெயர் துரதிட்டவசமாக இவர்களுக்குண்டாகிவிட்டது. இவ்வாறு

மக்கட் புவியியல் 321
பணத்தைச் சம்பாதித்துக்கொண்டு இவர்கள் வறிய விவசாயிகளுக்கு, அதை நெருக்கடியான சமயங்களில் உயர்ந்த வட்டிக்குக் கொடுப்பர். கடனைத் திருப்பிக் கொடுக்கத்தவறினுல் அவர்கள் அந்த வறிய விவசாயியைத் தங்கள் ஆதிக்கத்தில் முற்றக வைத்துக்கொள்வர். இவர்களுடைய தந்திரங்களைப் பற்றிக் கன்ன பரம்பரையான பல கதைகளுண்டு. மூன்று உருபாய் பெறுமதி யான இரண்டு புசல் நெல்லைக் கொடுத்து அதன் வட்டிக்காக ஒருவன் 2000 உருபாய் பெறுமதியான நிலத்தை விவசாயியிடமிருந்து அபகரித்த கதை கூறப்படுகிறது. பொதுவாக நம்பப்படுவதுபோல, அவர்கள் அவ்வளவு கெட்டவர்களன்று; ஐரோப்பாவில் யூதரைப்போல இவர்களும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் முறை பிரசித்தமாகிவிட்டது. “காக்கை இல்லாத ஊரு மில்லை, சோனகர் போகாத தேசமுமில்லை” என்பது சிங்களத்திலுள்ள வொரு பழமொழியாகும்.
பட்டாணிகளென்று சொல்லப்படும் பலுக்கித்தானியர் மிகச் சிறிய வொரு சமூகத்தினராவர். இவர்களில் சில.பாயிரம் மக்களேயுளர். இவர் களும் வட்டிக்குப் பணங்கொடுப்போர். கடும் வட்டி எடுத்து வறியவர்களை வருத்துபவர்களெனப் பிரசித்தியடைந்தவர். அதனுல் வறிய மக்களுக்கு இவர்களிடத்துப் பயமுண்டு. கிராமங்களிலும், பட்டினங்களிலும் இந்தப் பலுக்கித்தானியர், கடன்காரருடைய வாசலில் நிற்கும் காட்சி, பயங்கரமான தெனினும், விசித்திரமானதாகும். தோற்றத்தில் பலுக்கித்தானியன் பெரிய தோற்றமுடையவனுகக் காணப்படுவான்; உயரமும், நல்ல தேகக்கட்டுமுடையவன்; இலங்கையிலுள்ள ஐரோப்பியரைத்தவிர மற்றெல் லாரிலும் பார்க்க நல்ல நிறமுள்ளவன். சோனகரைப் போலவே இவனும் முற்றும் மாறன சாதியிலுள்ளவன். ஆரியவகுப்பின் ஒரு கிளையைச் சேர்ந்த வன். இலங்கையிலுள்ள மற்றெச் சாதியாரின் உடையிலும் வேறன உடையு டையவன். இந்தியர் வேட்டியணிவதுபோலத் துணியைச் சுற்றித் தளர்வான காற்சட்டையணிந்தது போல அணிவான். அதற்குமேல் முழங்கால்வரை நீண்ட வொருசட்டையை அணிவான். அதற்குமேலே வெல்வெற்றினலோ, வேறு கறுப்புநிறமுள்ள துணியினலோ செய்யப்பட்ட கையில்லாத சிறு சட்டை யணிவான். சிவப்புத் துருக்கித் தொப்பியின் மேலே பெரியதொரு தலைப்பாகையணிவான். இது அராபியத் தலையணிபோல இருந்தாலும் தனித்தன்மையுடையதாயிருக்கும். கையிலே பிரம்பு பிடித்திருப்பான். பலுகித்தானியர் சோனகரைப் போன்றவரே. இருவருக்கும் வாழ்க்கை முறையில் ஒப்புமை உண்டு. கொழும்பிலே இவர்களில் அநேகர் வசிப்பர்.
மலாயர் மற்றெரு சிறியசமூகத்தவர். ஒரு காலத்தில் கொழும்பிலே மலாயரடங்கிய படையொன்று நிறுத்தப்பட்டிருந்தது. இவர்கள் பல வருடமாக இங்கேயிருந்தபின்னர், நிரந்தரமாக இங்கேயே குடியேறினர். இன்றுள்ள மலாயர் அவர்களுடைய வழிவந்தவர்களே. வியாபார நிமித்த மாகத் தங்கள் தாயகத்திலிருந்து இங்கேவந்து குடியேறிய சிலருமிருக்கிறர்

Page 168
322 இலங்கைப் புவியியல்
கள். இவர்களெல்லாரும் இசுலாம் மார்க்கத்தை யனுசரிப்பவர். எனவே இசுலாத்திற் சொன்ன முறைப்படி வாழ்க்கை நடத்துவர்; பள்ளிவாசல்களிலே தொழுகை செய்வர். பெரும்பாலுமிவர்கள் கொழும்பிலும் அதற்கண்மை
........... لادن نشxت... & 2- منجمنض&منش&ھئش:نند‘، ’’نعر ۔ ۔ ...........
Julio 86.
மட்டக்களப்பில் முசிலிம் பெண்கள் நீர் எடுக்கப்போகுங் காட்சி.
யிலும் வசிப்பர். இவர்களிற் பத்திலொரு பகுதியினர் பொலிசுப்பகுதியிலே வேலை புரிகின்றனர். சிலர் தேயிலைத்தோட்டங்களிலும், விவசாயத்திலும், உயர் பதவிகளிலும், முதலாளித்துறையிலும் இருக்கின்றனர். சிலர் தொழி
 

மக்கட் புவியியல் 323
லாளிகளாயுமிருப்பர். இருபதிலொரு பகுதியினர் வீட்டுவேலைக்காரராயிருக், கிருர்கள். சிங்களரைப் போலவே உடை உடுத்துக்கொள்வர். ஏனெனில் மலாயாவிலும் சாரம் உடுக்கும் வழக்கமுண்டு. சோனகரைப் போலத் தலையில் தொப்பி போட்டுக்கொள்வர். ܕ
சேனையில் அந்நியநாட்டுப் படை வீரரையும் அமர்த்திக்கொள்வது ஐரோப் பியர் வழக்கம். இலங்கையில் அவ்வாறு வந்து சேர்ந்த காப்பிரிகளும் ஒருசிறு தொகையினருண்டு. கடந்த நுாற்றண்டிலே புத்தளப் பகுதியிலே காப்பிரிகள் படையொன்று நிறுத்தப்பட்டிருந்தது. அப்படையிலுள்ளவர்கள் பின்னர் சிங்களப் பெண்களை மணந்தனர். அதன் பயனுகக் கறுத்த தோலும், கம்பளிமயிரும், ஆபிரிக்கரைப் போன்ற உருவமு முள்ள சிலர் காணப்படுகின்றனர்.
பதினேழாம் பதினெட்டாம் நூற்றண்டுகளில் இலங்கை இடச்சுக்காரரால் ஆளப்பட்டது. அப்பொழுது இலங்கையிற்குடியேறிய இடச்சுக்காரரின் வழித் தோன்றல்களே பறங்கியர். இடச்சுக்காரர். பெரும்பாலும் வியாபாரிகள்; வேறுநாடுகளிற் குடியேறி அங்கேயே விவாகஞ் செய்து வாழ்வதை அவர்கள் விரும்பினர்.இடச்சு அரசாங்கம் அதை ஊக்கப்படுத்தியது. இதன்பயனுக ஒரு சமூகம் உருவானது. இவ்வாறு வாழ்ந்த இடச்சுக்காரரிற் பலர் ஐரோப் பியரினத்திலேயே விவாகஞ் செய்தனர். பிரதானமாக ஆங்கிலேயரோடு விவாக சம்பந்தம் வைத்துக்கொண்டனர். அதனுல் இவர்களுடைய வழி வந்தவர் ஐரோப்பியர் இனத்தவராகவே கருதப்பட்டனர். இவர்கள் நல்ல நிறமுடையவர்கள். வடமேற்கு ஐரோப்பியரைப் போன்ற உடல் நல முள்ளவர்கள். சிங்களருடனும் தமிழருடனும் விவாகஞ் செய்த வரின் சந்த தியார் பல வகையான கபில நிறமுடையவராயிருக்கின்றனர். பின்னர் சந்ததி சந்ததியாக நிறம்மாறத் துவங்கிற்று. இதனுல் சிலசமயம் பறங்கிகள் சிங்களரைப் போலவுந் தமிழரைப் போலவுங் காணப்படுவர். ஐரோப்பியருடைய உடல் அமைப்புமே அவர்களிடங் காணப்படமாட்டாது. சிலசமயம் ஆங்கிலேயரைப் போலவோ இடச்சுக்காரரைப் போலவோ நிற முள்ள பிள்ளைகளுந் தோன்றும். பழக்கவழக்கங்களிற் பறங்கியர் ஐரோப் பியரையேபின்பற்றினர். அவர்கள் இடச்சுமூதாதையரைப் போல உலூதரின் பாதிரிவேதத்தைப் பின்பற்றுவர். உணவு, குடி முதலியவற்றில் அவர்கள் எவ்வித கட்டுப்பாடுமற்றவராயிருப்பர். நாளடைவில் அவர்களுடைய உணவு மாறுதலடைந்தது. இப்போது சிலர் சிங்களரைப்போலச் சோறு கறி முதலியவற்றை உணவாகக் கொள்வர். வேறுசிலர் ஐரோப்பிய உணவைக்

Page 169
324 இலங்கைப் புவியியல்
கைக்கொள்ளுகின்றனர். கோதுமையப்பம், ட்டை, பன்றியிறைச்சி, களி என்னும் ஆங்கில உணவுகளை அவர்கள் உண்பர். பிரதான உணவுநேரத்தில் இறைச்சி, காய்கறி, களி என்பவற்றையுண்பர். சிங்களருடைய சமூகப்பழக்க வழக்கங்களதிக மிவரிடம் காணமுடியாது. ஆண்களும் பெண்களும் அதிக மாகச் சுதந்திரமாய்ச் சந்திப்பதும் ஐரோப்பியக் களியாட்டுக்களான நடனம், சங்கீதம், குதிரையோட்டம் என்பவற்றிலீடுபடுவதும் இவர்களிடையேயுண்டு. விவாகமாகாத பெண்ணுசிரியரில்லாததால் பெண்கல்வி பெரிதுந்தடைப் பட்டது. மேலும், பெண்கள் இளம் வயதிலே விவாகஞ் செய்வதுமொரு தடை யாயிற்று. இலங்கையில், 1927 இல், மக்கள் விவாகஞ்செய்து வந்த சராசரி வயது ஆண்களிடையே 272 ஆகவும் பெண்களிடையே 209 ஆகவுமிருந்தது. 1927 இல், விவாகஞ்செய்த கண்டிச் நீங்களப் பெண்களுள் முக்காற்பங்கினர் 21 வயதுக்கிடையில் விவாகஞ்செய்தவராயிருந்தனர். தமிழரிடையிலும், சோனகரிடையிலும் இவ்வயதுள் விவாகஞ்செய்தோர் வீதம் மேலுமதிக மாகும். இதல்ை 21 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆசிரியராயிருக்க முடியாத நிலைமையிருந்தது. வயது முதிர்ந்து அனுபவம் பெறும் காலத்தில் அவர்கள் வேலையை விட்டு விட்டு விவாகஞ் செய்து கொள்கின்றனர். பெண் பாடசாலைகளுக்கு நல்ல பெண்ணுசிரியர்களையுதவும் விடயத்தில் பறங்கியினத் தவர் நல்ல தொண்டு செய்துள்ளனர். இலங்கை வாசிகளனைவரும் இவர் களுக்கு நன்றியறித லுடையவராயிருக்க வேண்டும்.
குடிசனமதிப்பிலே பறங்கிகள் வேறு சில ஐரோப்பாசியக் கலப்புச்சாதியா ரோடு சேர்க்கப்பட்டனர். 1946 இல் இவர்களின் தொகை 36,000 ஆகும். இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் இது 5 வீதமாகும். இவர்கள் உற்சாகமும் முயற்சியுமுடைய ஒரு சிறுசமூகமாவர். பறங்கியரிற் பலர் கடைத்தொழில்களிலும் வியாபாரத்திலுமீடு பட்டிருக்கிறர்கள். சிலர் அரசாங்க உத்தியோகத்திலே, விசேடமாகப் புகையிரதப் பகுதியிலே வேலை செய்கின்றனர். விவசாயஞ் செய்பவர் மிகச்சிலரே. இடச்சுக்காரரின் குணங்கள் பல இவர்களிடமுமுண்டு. ‘பேகர்’ என்ற இடச்சுப்பதம் “குடிமகன்’ எனப் பொருள்படும். அது ஒர் இனத்துக்கு இங்கே வழங்கப்படுகிறது. பறங்கியர் இடச்சுமொழியை வீட்டிலும், திருச்சபைகளிலும், பாடசாலைகளிலும் பலகாலமாகப் பயன்படுத்திவந்தனர். இன்று அம்மொழி வழக்கிறந்துபோய் விட்டது. அது பாடசாலைகளிலுமே படிப்பிக்கப் படுவதில்லை. ஆனற் பாடசாலைகளில் இடச்சு அமிசங்கள் பல இருந்துவந்தன.
1746 இல் இலங்கையிலே 5000 ஐரோப்பியர் வசித்தனர். இவர்களிற் பெருந்தொகையினர் பிரித்தானியர். 1914-18 ஆம் ஆண்டு யுத்தத் துக்குமுன் இங்கே சில சேர்மனியர் வசித்தனர். புத்த சமயத்தைப் பயில

மக்கட் புவியியல் 32b
வந்த சில சேர்மன் மாணவர் பின்னர் புத்தபிக்குக்களாயினர். யுத்த காலத்தில் அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். பின்னர் இலங்கைக்கு மிகச் சிலரே வந்தார்கள். (ஐரோப்பாவிலே புத்த சமய ஆராய்ச்சிக்கு சேர்ம னியர் பெரிது முதவியுள்ளனர்). அரசாங்க சேவையிலுள்ளோர், தோட்டங் களிலுள்ளோர், கல்வி நிலையங்களிலோ திருச்சபைகளிலோ தொண்டு செய்வோர், என இலங்கையிலுள்ள பிரித்தானியர் முப்பிரிவினராவர். இவர்களுள் தோட்டத்துரைமார் தொகையே அதிகம். கடந்த 100 வருடங்களிலவர்கள் தொகை அஇகரித்துக் கொண்டே வந்திருக்கிறது.
பிரித்தானியர் வெள்ளே நிறமுடையவர். திரைந்த மயிருடையவர். (மயி ரும் வெண்ணிறமுடையதாகவேயிருக்கும்). உயரத்தாலும் உடலமைப்பாலும் மற்றை ஆசியச் சாதியாரிலும் உயர்ந்தவர்கள். சிங்களரிலும் அரை அடி துவக்கம் ஒரடிவரை உயர்ந்தவர். பெயரளவில் அவர்கள் கிறித்தவர். இன்று அவர்களிற் பெரும்பாலோர் குறிப்பாக எந்தச் சமய வழிபாடுஞ் செய் வதில்லை. இலங்கையிலுள்ள எனைய மூன்று சமயங்களை விட இவர்களுடைய சமயம் தெளிவற்றது. ஒழுக்கத்தைப் பற்றி இது சில விதிகளைக் கற்பிக்கிறது. அத்துடன் உருவுடைத் தெய்வமாய் கடவுளைக் கருத வேண்டுமெனக் கூறு கிறது. தெளிவற்ற தன்மையுடையதாயிருப்பதாற் கிறித்த சமயத்தை மற்றை மூன்று சமயங்களை விட இலேசாக எந்த நாட்டவரும் கைக் கொள்ளலாம். கல்வியறிவில்லாதவர்கள் இச் சமயத்தைக் கற்கவோ அனுட்டிக்கவோ பழகு வது கடினமாகும்; எனெனில் அதிலுள்ள தெளிவில்லாத தன்மை மக்களின் சொந்த அபிப்பிராயப்படி பல விடயங்களைத் தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறது. இச் சமயம் பலத்தீனத்திலே இயேசுநாதரால், (புத்த சமயத்தைப் புத்தர் ஆரம்பித்தது போல) ஆரம்பிக்கப்பட்டது. இயேசுநாதர் சிறந்த ஒராசிரியர்; அவர் யூத சமயத்திலுள்ள கெட்ட வழக்கங்களைக் கண்டித்து, அதிலே பல திருத்தங்களைச் செய்ய முற்பட்டார். யூதர் அனுட்டித்த சமயம் கி.மு. 16 ஆவது நூற்றண்டிலே மோசசு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. கடவுட் கொள்கையும், அன்ருட வாழ்க்கைக்கு வேண்டிய விவரமான நியமங் களும் இச் சமயத்திற் காணப்பட்டன. இந்த நியதிகளும், புராதன யூதரின் சரித்திரமும் விவிலிய வேதத்தின் முற்பகுதியிற் காணப் படுகின்றன. விவிலிய வேதமே கிறித்தவரின் ஆதி மத நூல். இந் நூலின் பிற்பாகம் புதிய ஏற்பாடாகும்; அதில் இயேசுநாதரின் சோதனைகள் காணப்படுகின்றன. புத்தரைப் போலன்றி, இயேசுநாதர் கடவுளில் நம்பிக்கை வைக்குமாறு கூறினர். மூட நம்பிக்கைகளையும், தீய ஒழுக்கங்களையுங் கைவிடுமாறு போதித்தார். யூத நாட்டவர்க்கெனவே வகுக்கப்பட்ட யூதர் வாழ்க்கை நியதிகளைக் கிறித்தவர் பெரும்பாலும்

Page 170
326 இலங்கைப் புவியியல்
கைவிட்டு விட்டனர். ஆனல், பொதுவாக எல்லாச் சாதியாருக்கும் நன்மை: பயக்கக் கூடியவையென அனுபவத்தாற் கண்ட பல விதிகளை அவர்கள். அனுசரிக்கின்றனர். ஏறத்தாழ ஈராயிரம் வருடங்களுக்குமுன் ஆரம்பிக்கப்பட்ட கிறித்து சமயம் பெரிதும் மாற்றமடைந்து விட்டது; அது வடக்கு நோக்கிப் பரவியதன் பயனகப் புத்த சமயத்தைப் போலவே, நிலையில் மாற்ற மடைந்தது. இன்று அதனை மூன்று கிளேகளாகப் பிரிக்கலாம். (அ) உரோமன் கத்தோலிக்கத் திருச்சபை. இப் பிரிவிலேதான் மிகவதிகமான கிறித்தவருளர். இது ஐரோப்பாவின் தென் மேற்கு நாடுகளிலுண்டு. (ஆ) கிரேக்க கத்தோ லிக்கத் திருச்சபை. இது முக்கியமாக ஐரோப்பாவின் தென் கிழக்கிலும், கிழக்கு ஐரோப்பாவிலுமுண்டு. (இ) புரட்டசுத்தாந்திய திருச்சபை (பாதிரி வேதம்). இது வடமேற்கு ஐரோப்பாவிலுண்டு; மேற் கூறிய இரு வகுப்புக்களி லும் அனுசரிக்கப்படுஞ் சடங்குகளிங்கேயில்லை. விசேடமாக “இணங்காதவர்” கட்சியைச் சேர்ந்தவர்களின் சடங்குகளை இவர்கள் கைவிட்டு விட்டனர். கிறித்து சமயம் இன்று தியானத்தை முதலாவது கூறமல், கிரியை, செய்வதையே வலியுறுத்திக் கூறுகிறது. இவ்வகையில் அது புத்த சமயத். துக்கும் இந்து சமயத்துக்கும் மாறுபட்ட கொள்கையையுடையது. இதற்குக் காரணம், கிறித்து சமயம் ஊக்கமுஞ் செயலில் உற்சாகமுமுள்ள வட நாட்டு மக்களிடை பரப்பப்பட்டமையே. இசுலாம் மார்க்கம் போலவே கிறித்து சமயமும், பிரசாரத் தன்மையும், மார்க்கத்தைப் பரப்பும் நோக்கமுமுடை யது. கடந்த மூன்று நூற்றண்டுகளாகக் கிறித்தவர் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் போய்ப் பிரசாரஞ் செய்திருக்கிறர்கள். எங்கே சென்றலும் அவர்கள் செல்வாக்குப் பெற்றனர். முற்காலத்தில் அவர்கள் மற்றைச் சமயங்களிடஞ் சகிப்புத்தன்மை காட்டவில்லை. ஆனல், இசுலாமியரைப் போல ஆக்கிரமிப்புடையவராயிருக்க வில்லை. இலங்கைக்கு முதலில் வந்த கிறித்துவ சமயம் உரோமன் கத்தோலிக்கம். கத்தோலிக்கர்செய்த பிரசாரத் தினல் அநேக மக்கள் இம் மதத்திற் சேர்ந்து கொண்டனர். கிரேக்க கத் தோலிக்கம் இங்கு வரவேயில்லை.
புரட்டசுத்தாந்திய சமயத்தை முதன் முதல் இலங்கைக்குக் கொண்டு வந்தவர் இடச்சுக்காரர். இது பல கிளைகளாகப் பிரிந்திருக்கிறது. ஒவ்வொரு கிளையினரும் தமது மதத் துதுவரை இலங்கைக்கு அனுப்பினர். இவர் களுள் முக்கியமானவர் இங்கிலாந்துத் திருச் சபையினர், உலூதர் திருச் சபையினர், உவெசிலியன் மெதட்டிசுச் சபையினர், பபுதிசுச் சபையினர் என்போர். மறு சமயத்தவர்க்கு இப் பல கிளைகளும் ஒன்றுக்கொன்று. மாறுபட்ட கொள்கையுடையனவாகத் தோன்றினுலும் அவைகளிடையே கொள்கையளவிற் சிறிய வேறுபாடும் வழிபாட்டு முறையில் வேறுபாடுமே யுண்டு. புத்த சமயத்திலுள்ள பல கிளைகளும் எவ்வாறு மாறுபடுகின் றனவோ அவ்வாறே இவையும் வேறுபடுகின்றன. ஒவ்வொரு சமயத்தி லும் அத்தகைய பிரிவுகளுண்டு; எனெனிற் சமய போதனைகளை ஒவ்

மக்கட் புவியியல் 327
வொருவரும், ஒவ்வொரு தேசத்தவரும் வெவ்வேறு வகையில் விளக்குவர். இலங்கையிலுள்ள கிறித்தவரல்லாதவர்க்கு இப் பல்வேறு சமயப் பிரிவு களும் புதிதாகத் தோன்றலாம். ஏனெனில் இப்பிரிவுகளின் வேற்று மையே பெரிதாகத் தெரிவதன்றி ஒற்றுமை தெரிவதில்லை. சமய தூதுவர் புகுத்திய வாழ்க்கை முறைகள் அவ்வவர் நாட்டோடு தொடர்புடையவாயிருக் குமேயன்றிச் சமயத் தொடர்புடையவாயிருக்கமாட்டா. ஆதியில் வந்த சமய தூதுவர் குளிரான தேசங்களுக்குப் பொருத்தமான கருத்துக்களைப் புகுத் தினர். உதாரணமாக உடையை எடுத்துக்கொள்ளலாம். சரியாக உடையணியா மற் செல்வது அநாகரிகமென்று அவர்கள் எண்ணினர். ஆனல், உடையைக் குறைப்பது இந் நாட்டுக்கும், நாட்டின் கால நிலைக்கும் பொருத்தமுடையதே. இச்சமயத்தைத் தாபித்தவர் இலங்கையரைப் போலவே உடையணிந்திருக்கக் கூடும். அவர்களுடைய பழக்க வழக்கங்களையே உடையவராயிருந்திருப்பர். ஏனெனில் அவரும் “கீழை நாட்டைச்” சேர்ந்தவரே. இருபதாம் நூற்றண் டிலே வாழ்க்கை பற்றிய கருத்துக்கள் பெரிதும் மாற்றமடைந்து விட்டன. அவசியமற்ற விடயங்களேக் கிறித்தவ சமய துதுவர் அறியாமையினல், அதிகம் வலியுறுத்தியபோதிலும், இலங்கையின் பண்பாட்டுக்கு அதிகம் உதவியிருக்கின்றனர். கிறித்த சமயம் இலங்கையிலுள்ள எல்லாருக்கும் ஏற்புடையதல்லாவிட்டாலும், அதிலிருந்து பல விடயங்களையறியக் கூடிய தாயிருக்கிறது. நன்ருக வளர்ச்சியடைந்த எந்தச் சமயத்திலிருந்தும் பல விடயங்களேயறியலாம். ஒரு சாதியாருடைய பழக்க வழக்கம், வாழ்க்கை முறையென்பவற்றை அறிவதற்கு அவருடைய மதத்தை அறிவது நன்கு துணைபுரியும்.
இலங்கையருடைய உணவுக்கும் பிரித்தானியருடைய உணவுக்கும் எவ் வளவோ வித்தியாசமுண்டு. பிரித்தானியர் இயல்பாகவே வைதீக மனப்பான் மையுடையவர்; பிரித்தானியர் இறக்குமதி செய்யப்பட்ட உணவுகளையே உண்பர். சிங்களரின் சாதாரண உணவைப் பற்றி அறியாத பல பிரித்தானியர் இலங்கையிலிருக்கிறர்கள். இலங்கையின் காலநிலை வெப்பமுடையதா யிருந்தபோதிலும் அவர்களிற் பெரும்பாலோர் அதிக மாமிசஞ் சாப்பிடுவர். சூட்டையுண்டாக்கும் பொருள்களான களி, முட்டை, பன்றியிறைச்சி என் பவற்றைக் காலையிலுண்பர். தாய் நாட்டிலுண்பதிலுமதிகமாகச் சோற்றை யுண்பர்; கோதுமைப் பண்டங்களையே அதிகம் அருந்துவர்; கோதுமை யப்பமே அவர்களுடைய பிரதான உணவாகும். சிங்களருண்பதிலும் பல்வேறு வகையான உணவை அவர்கள் உண்பர். சென்ற நூற்ருண் டிலே பிரித்தானியருடைய வியாபார வளர்ச்சியின் பயணுகப் பல பொருள் கள் அவர்களுக்கு அனுபவிக்கக் கிடைத்தன. சோறு கறிக்குப் பதிலாக அவர்கள் மாமிசத்தைப் பிரதான உணவாகக் கொள்வர். இது பல வகையாகப் பாகஞ் செய்யப்படும். மாமிசத்தோடு காய்கறியைச் சேர்த்துக்

Page 171
328 இலங்கைப் புவியியல்
கொள்வர். பிரதானமாக உருளைக் கிழங்கு காணப்படும். பணக்காரர் மாமிச உணவுக்கு முன் "சூப்பு’ எனப்படும் இரசத்தையும் மீனையுஞ் சாப்பிடுவர். பின்னர் “களி’ சாப்பிடுவர். “களி” கோதுமை, சோளம், அரிசி என்ப வற்றிலொன்றேடு பழம், முட்டை, பால் என்பவற்றைச் சேர்த்துச் செய்யப் படுவது. அரிசியைப் பெரும்பாலும் இவ்வாறு களியாகச்செய்தே சாப்பிடுவர். சிங்கள முறையில் அரிசியை நீரில் அவித்துச் சாப்பிடும் வழக்கம் ஐரோப்பிய ரிடங் கிடையாது. இலங்கையிலே பிரித்தானியர் தமது பழக்கங்களிற் சில வற்றை மாற்றிக்கொள்வர்; ஆனல் முக்கியமானவற்றைக் கைக்கொள்வர். அவர்கள் பழவகைகளே அதிகமாக உண்பர் ; இலேசான உணவு வகைகளை விரும்புவர் ; இங்கிலாந்திற் குடிப்பதிலும் அதிகமாக மதுவகை யுண்பர். (பல சமயதுதுவர் முற்ருகக் குடிப்பதேயில்லை.) சுத்தமான தண்ணிர் வசதியாய்க் கிடைக்கா விட்டால் அவர்கள் மது வகையையுண்பர். உலகின் எல்லாப்பாகங்களிலும் நொதித்த குடிவகை பயன்பட்டுவருகிறது. இலங் கையிற் கள்ளை உபயோகிக்கிருர்கள். நெடுந்தீவிலே குடிப்பதற்கு நல்ல தண்ணிரில்லாதபடியால் மக்கள் கள்ளைக் குடிப்பர். ஐரோப்பாவிலும் பல தேசங்களில் இதே நிலைமையுண்டு. அதனல், திராட்சை இரசத்தையும், 'பீர்' குடிவகையையு மருந்துவர். இலங்கையில் இவற்றைக் கிறித்தவரே அதிகம் பயன்படுத்துகின்றனர். பிரித்தானியாவில் விசுக்கி என்று சொல்லப்படும் குடி இங்குள்ள சாராயம் போன்றது; அது கள்ளிலிருந்து தூயமதுசாரத்தை வடித்து எடுத்துச் செய்யப்படுகிறது. விசுக்கியிலும் சாராயத்திலும் மது சாரம் செறிந்திருப்பதால் அவற்றை அதிகமாகக் குடித்தால் ஆபத் துண்டாகும்.
ஆங்கிலேயரின் உடை சிங்களருடைக்கு முற்றும் மாறனது. அது அவர் களுடைய தேசத்துக் காலநிலைக் கேற்றவாறமைந்துளது. இங்கிலாந்திலுள் ளோர் வெப்பமான கோண்ட காலத்திலே பருத்தியாலும் பட்டாலுஞ் செய்த உடைகளையணிவர் ; குளிர்காலத்திற் கம்பளியுடைகளை யணிவர். மற்றெரு வித்தியாச மென்ன வெனில் அவர்கள் எப்பொழுதும், சப்பாத்தையும். உள்ளுறையையும் அணிந்து கொள்வர். குளிரான காலநிலையிலவை எப் பொழுதுந் தேவைப்படுகின்றன. பிரித்தானியர் வெளியே செல்லும்பொழுது ஒரு வகையான தலையணியை அணிவர். இலங்கையில் அவர்களனியும் தொப்பிக்கும் அதற்கும் பேதமுண்டு. இங்கிலாந்தில் ஆண்களனியும் தலை யணிக்கும் பெண்களனிவதற்கும் வித்தியாசமுண்டு ; வைக்கோல், கம்பளி போன்றவற்றலேயே இவ்விரு தொப்பிகளுஞ் செய்யப்பட்டபோதிலும், நூதனமான தன்மைகளிருக்கமாட்டா. இலங்கையில் ஆங்கிலேயன் அணியுந் தொப்பி அவனுடைய முகத்தை வெயிலிலிருந்து முற்றக மறைக்கிறபடி யால் அவனுடைய முகம் தாய்நாட்டிற் காணப்படுவதிலும் வெளிறிக் காணப்படும்.

Lsaids!'. புவியியல் 329
ஒரு காலத்தில் இலங்கையில் வசித்த ஆங்கிலேயர் ஆரோக்கியமற்றவர் களாய்க் காணப்பட்டனர். அதற்கு இவ்வூர்க் காலநிலையும் இங்குள்ள நோய் களுமே காரணமாயிருந்தன. ஆனற் கடந்த ஒரு நூற்ருண்டிலே வைத் தியத்துறையிற் பல அற்புதமான விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. மலேரியா உட்படப் பல வகையான அயன மண்டல நோய்களுக்குக் காரண மும், மருந்துங்கண்டு பிடிக்கப்பட்டுவிட்டன. இன்று வெள்ளைக்காரர் மத் திய கோட்டுப் பிரதேசத்தில் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருக்க லாம். அதற்குத் தேவையான பாதுகாப்புக்களை அவர் எடுத்துக் கொள்ள வேண்டும். மலேரியாச் சுரத்தையுமே தவிர்த்து விடலாம். கடந்த ஐம்பது வருடமாகப் பிரித்தானியர் பெளதிகவியற்றுறையிலும், உயிரினவியற்றுறை யிலும் வியத்தகு ஆராய்ச்சிகளைச் செய்து,அதன் பயனக அயனமண்டலத்திலே விவசாயத்தை விருத்தி செய்யப் பல புதியமுறைகளைக் கண்டுபிடித்திருக் கிருர்கள். அவர்கள் இயல்பாகவே குடியேற்றத்தை விரும்புவர் ; அத்துடன் தாயகத்திலே சன நெருக்கமதிகமானபடியால் வேறு தேசங்களிற் குடியேற வேண்டிய அவசியமுமவர்களுக்குண்டாயிருக்கிறது. பல துறையில் அவர் கள் உலக நாகரிகத்துக்கு உதவியிருக்கின்றனர். ஆட்சிமுறை, வியாபாரம், பிரயோகவிஞ்ஞானம், கடற்பிரயாணமாகிய துறைகளில் அவர்கள் விசேட மாகப் பல விடயங்களை உதவியுள்ளனர்.
மனித இனங்களை ஒப்புநோக்கி ஆராய்வதை விடுத்து ஈற்றில், எவ்வினம் உயர்ந்த நாகரிகநிலையையடைந்ததென வினவியறிதல் கடினமாகும். கால நிலை மனிதனை எவ்வாறு பாதிக்கிறதென்ற பகுதியில் இவ்விடயம் ஒரளவு ஆராயப்பட்டது. இது பெரியவிடயமென்றும் இதனை மாணவன் சாவதானமாக ஆராய வேண்டுமென்றும் அங்கு குறிப்பிட்டுள்ளோம். இவ்விடயம் பற்றி இரின்சென் இலாமோ என்பவரெழுதிய நூலிலிருந்து ஒரு மேற்கோளும் இவ்வத்தியாயத்திற் சேர்க்கப்பட்டது. இலங்கை மாணவர் ஆங்கிலமொழி மூலமாகவே அறிவைப் பெறுகிறர்கள். புவியியற்றுறையிலும் பொது நூல் களிலும், ஆங்கில ஆசிரியர்கள் தமது நாகரிகமே உயர்ந்த நாகரிகமெனக் கொள்வர். இத்தகையவொரு பிரச்சினையைப் பற்றி முடிவுகூறுவது புவி யியற்றுறைக்கு அப்பாற்பட்ட தாகும். உலகில் ஆங்காங்கு காணப்படும் நிலை மைகளை அப்படியே எடுத்துக் கூறுவதே புவியியலுக்குரிய விடயமாகும். மாணுக்கர் அவற்றையெல்லா மாராய்ந்து, நல்ல முடிவுகளையும், விரிவான இலட்சியத்தையுங் கருத்திற் கொள்வது கடன். ஆசிய மக்கள் “பிற்போக் கானவ’ ரென்றும், காலத்தோடு முன்னேறதவர்களென்றும் ஆங்கிலநூல். கள் குறிப்பிடும் மேனட்டவரின் இயந்திர வளர்ச்சியைப் பெரிதாக நினைப் பவரே இவ்வாறு கூறுவர். மோட்டர்வண்டி முதலிய இக்கால வாழ்வுக் குரிய சாதனங்களை யெல்லாமுடையவர்கள் உள்ளத்தில் காட்டுமிராண்டி களாக இருப்பதையுங் காணுகிருேம். 1914-18 வரையுள்ள ஆண்டு களிலும் 1939-45 வரையுள்ள ஆண்டுகளிலும் நடந்த இரண்டு பெரிய உலக மகாயுத்தங்களிலே நாசத்துக் கேதுவான எத்தனையோ இயந்திரங்களை

Page 172
330 இலங்கைப் புவியியல்
யெல்லாம் பயன்படுத்தினர். இவை அற்புதமானவை; எனினும் அநாகரிக மானவை. இவ்விரு யுத்தங்களும், உலகு இதுவரை காணுத அநாகரிகச் செயல்களுக்குப் பேர்போனவை. உலக நாகரிகத்துக்குப் பேருதவிபுரிந்த தேசங்கள்தாம் இவ்வநாகரிகத்தையு முண்டாக்கின. அவர் தமது அறி வைக் கெட்ட வழியிற் செலுத்தினர். சிங்களக் கிராமவாசி எளிய வாழ்க் கையுடையவனென்பதால் அவனிடம் நாகரிக மில்லையென நினைப்பது தவறு. இலங்கையர் ஐரோப்பியரிலும் முற்றும் மாறனவர். இவர் களிடையேயுள்ள பேதங்களுட் சிலவற்றைப் பற்றி எலவே கூறியுள் ளோம். அவற்றை மாணவர் மேலும் ஆராய்ந்து கொள்ள வேண்டும். பற் பல சாதியாரின் இயல்புகளை ஆராய்வதற்கு இலங்கையிற் போதிய வசதி யுண்டு. மனிதன் தனது சாதிக்குணங்களால் எவ்வளவு பாதிக்கப்படுகிறன்; புவியியற்றன்மைகளால் அவனுடைய குணம் எவ்வளவு தூரம் மாற்றமடை கிறதென்பவற்றை ஆராய வசதிகளுண்டு. சில சாதியாருடைய குணங்களே நொண்டிச் சமாதானங் கூறியொதுக்கி விடமுடியாது ; தமிழர் சிங்களராகி யோர் பிரேதத்தை என் சுடுகிறர்கள் ; சோனகரும் பிரித்தானியரும் என் புதைக்கிறர்கள் ; பெளத்தசமயிகளும் இந்துக்களும் பிரேத ஊர்வலத்தில் என் பறையடிக்கிறர்கள் ; சோனகர் திருக்குருனிலிருந்து ஒதுகிறர்கள் ; கிறித்தவர் அமைதியாக ஊர்ந்து செல்கிறர்கள் ; இவற்றின் காரணங்களே யறிவது கடினம் ; இவை வாழ்வினைப் பல திறப்பட்டதாகவும் கவர்ச்சி கரமான தாகவுஞ் செய்கின்றன. இலங்கையிற், சிறுவர் விசேடமாகத் தாம் பழகும் ஒவ்வொரு சாதியாருடைய இயல்புகளைப் பற்றியும் படித்திருக்க வேண்டியது கடமையாகும். பொதுநல விடயத்தில் ஒத்துழைப்பும், ஒருவரை யொருவர் அறிவதும், சமாதானமும் வேண்டுமானல் இது அவசியமாகும்.

நாலாம் பகுதி-நாலாம் அத்தியாயம் மக்கள் வாழிடங்களுங் குடியிருப்புக்களும் வளர்ச்சியடைந்த முறை
ஒரு சீரான வெப்பமும் ஈரலிப்புமுள்ள நாட்டில் மக்கள் வாழிடங்களும் குடியிருப்புக்களும் வளர்ச்சியடைவதற்கான நிலைமைகள் இடைவெப்ப வலயத்திலுள்ள நிலைமைகளுக்கு முற்றும் மாறனவையாயிருக் கும். பருவகால மாற்றங்களில்லாத வெப்பமுள்ள நாட்டில், மனிதன் வசிக்கும் இடத்தில் தேவைப்படும் பொருள்கள் வேறு; பருவமாற்றமுள்ள இடத்தில் வசிக்கும் மனிதனின் தேவைகள் வேறு. குளிர்ப் பருவத்தில் அவன் வருடத்திற் சில பகுதியை விட்டுக்குள்ளிருந்தே கழிக்கிறன். வெப்பமுள்ள நாடுகளில் அவ்வாறு செய்யவேண்டிய அவசியமில்லை. மத் திய கோட்டு வலயத்துக்கும், இடைவெப்பவலயத்துக்குமுள்ள இவ்வடிப்படை யான வித்தியாசம், மனிதனுடைய பழக்கவழக்கங்களையும், சமூகத்தாபனங் களையும் பெரிதும் பாதிக்கின்றது; விசேடமாக அது அவனது வீட்டமைப் பையும், அவன் ஆக்குங் குடியிருப்பின் மாதிரியையும் பெரிதும் நிச்சயிக்கும்.
இலங்கையில் வெப்பநிலை ஒரே தன்மையாயிருப்பதால் மக்கள் வீட்டி லடைந்து இடவாமல் வெளிவாழ்க்கையை மேற்கொள்ளலாம். இந்த ஒர் அமிசத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் வீடின்றியே வாழலாம். மழை, காட்டு மிருகம் என்பவற்றிலிருந்து தப்புவதற்காக்வே அவனுக்கு வீடு அவ சியம். இன்று காட்டு மிருகங்களின் தொல்வை குறைந்து வருகிறது. சனநெருக்கமுள்ள இடங்களில் அந்தப் பிரச்சினையே கிடையாது. காடு சார்ந்த கிராமங்களில் அஃது ஒரு முக்கிய பிரச்சினையாகும். வெப்பமும் ஈரலிப்புமுள்ள காலநிலையில் மிருகங்கள் நன்றகப் பெருகும். வேறு வகையான காலநிலைகளில் இது குறைவாகும். இன்று காடுகளில் வசிப்போர், முற்காலத்தில் ஆதிமனிதன் தன்னைச் சூழ்ந்த வனமிரு கங்களோடும் சிவசெந்துக்களோடும் எத்துணைப் போராடினன் என்பதை உணரமாட்டார். தற்பாதுகாப்புக்கான இந்த ஆதி இயல்பூக்கத்தின் பயனகவே சாதிகளிடையே பல பழக்கவழக்கங்களுண்டாயிருக்க வேண்டும். அவற்றை இன்று ஆராய்ந்தறிவது கடினமாகும். மிகக்குறைவான கதவுக ளும், பலகணிகளுமுள்ள பழைய வீடுகளைப் பார்க்கலாம்; அவை தடித்த பெரிய சுவர்களுடையனவாயிருக்கும்; தீங்கு விளக்கும் பாம்பு, யானை, ஏனைச் செந்துக்களென்பவற்றிலிருந்து தப்புவதற்கு இத்தகைய வீடுக ளுதவுகின்றன. இத்தகைய ஆபத்துக்களில்லாத தேசங்களிலிருந்தோ, அவ்வாபத்துகள திகமிராத நாடுகளிலிருந்தோ வரும் அந்நியர், இலங் கையில் இரவிலே மக்கள் வீட்டைக் காற்றுவரமுடியாதபடி நன்றக அடைத்
33

Page 173
332 இலங்கைப் புவியியல்
துக்கொண்டு நித்திரை செய்வதைப் பார்த்து ஆச்சரியப்படுவர். ஆனல், சிலகாலங்களுக்கு முன்பு இத்தகைய பாதுகாப்பு இலங்கையிலுள்ள வீடுகளுக்கு அவசியமாயிருந்ததென்பதை மறக்கக் கூடாது.
மழை வீழ்ச்சியும் வீடமைக்கும் முறையைப் பெரிதும் பாதித்து விட்டது. மழை குறைவான தேசங்களில் முதலிற் சுவரைக் கட்டிப் பின்னரே கூரையை வேய்வர். இலங்கையில் முதற் கப்பு நாட்டிக் கூரைவேய்ந்த பின்னரே சுவர்களைக் கட்டுவர். மேற்காவுகை மழையே பெரும்பாலும் இலங்கையிலுண்டு; பலமான காற்றேட்டமும் இல்லை. எனவே, மழை வீட்டுள் விழாமற்றடுப்பதற்குச் சுவரோ, பலகணியோ தேவையில்லை. படுக்கையறை தவிர்ந்த மற்றைக் கட்டடப்பகுதிகளிலே பக்கச்சுவர்களிரா ; அல்லது சுவர்கள் அரைப்பங்குக்கு உயர்த்தப்பட்டிருக்கும். திறந்த விருந்தை எப்பொழுதும்
அவசியமாகக் காணப்படும்.
நல்ல வெளிச்சத்தையும் சுத்தமான காற்றையும் கொடுக்கக் கூடிய வளிமண்டலச் சூழலில் நாளின் பெரும் பகுதியைக் கழிக்க விரும்பும் ஒருவன் தனது வீட்டை அதிக வேலைப்பாடின்றியே கட்டப் பார்ப்பான். பெரிய வீடுகளைக் கட்டி என்ன பயன்? அங்கே தங்கிச் சுகிக்கும் நேரம் சொற்பமே. எனவே, இலங்கையில் மிகப் பழங்காலந் தொட்டே நாகரிகம் வளர்ச்சியடைந்து வந்த போதிலும், கட்டடக்கலை எளிமை யுடையதாகவே சமீபகாலம்வரை இருந்து வந்தது. மேலும் பலகாலம் அது அவ்வாறே இருந்திருக்கும். ஆனல், ஐரோப்பியர் வருகை அதற் குத்தடையாயிற்று. வீடுகட்டுவதற்குத் தேவையான பொருள்கள் இலங்கை யின் எல்லாப் பகுதிகளிலுங் காணப்படுகின்றன. எனவே, பழுதடைந்த வற்றை விரைவிற் சீர்திருத்திக் கொள்ளலாம். நெடுங்காலம் நிலைத் திருக்கக் கூடியவாறு வீட்டைக் கட்டவேண்டியது அவ்வளவு அவசிய மில்லை. காலநிலையும் கவலையற்றிருக்கக் கூடிய ஒரு நிலையை உண்டு பண்ணுகிறது. ‘வெயிலெறிக்குந்தானே; என் சங்கடப்படுவான்’ என்ற பழமொழிப்படி தன்னையறியாமலே மனிதன் திருத்தியடைந்து விடுகிறன்; ஆனல், குளிர்மிக்க நாடுகளிலே நிலையுள்ள இல்லத்தையமைப்பது அவசியம். இல்லையேல் மனிதன் குளிரில் வாடி மடிய நேரிடும். இன்று இலங்கையில் ஒரு நூற்றண்டுக்கு மேல் உள்ள பழைய வீடுகளேக் காணமுடியாது. அந்நியர், குறிப்பாக இடச்சுக்காரர் கட்டிய சில பழைய கட்டடங்களே காணப்படுகின்றன.
இந்நாட்டின் ஆதிக்குடிகள் குகைகளிலே இன்றைய வேடரைப் போல வசித்திருப்பார்கள். வெறும்பாறைமீது நித்திரை செய்வது அவர்களுக்குச் சுகமாயிருந்திருக்கும். சரித்திர காலத்துக்கு முற்பட்ட கல்லாயுதங்கள் காணப்படும் பல குகைகளுண்டு; ஆதிமனிதர் அங்கே நீண்டகாலம் வசித் தனர் என்பதைக் காட்டுஞ் சான்றுகளுமுண்டு. கி.மு. இரண்டாயிரமாண்டு

மக்கட் புவியியல் 333
வரையில் பல குடியிருப்புக்களிருந்ததாக இராமாயணங் குறிப்பிடுகிறது. நன்கு அமைக்கப்பட்டவொரு நகரத்தைப்பற்றி முதன்முதற் குறிப்பிடும். நூல் மகாவமிசம். இலங்காபுரமென்ற இயக்கர் நகரமொன்றிருந்திருக்
LI lio 87.
வைக்கோலால் வேயப்பட்ட நெற்குதிர்.
கிறது. இந்நகருக்கு வெளியேதான் குவேனி கொல்லப்பட்டாள். ஆனல், அந்நகரின் அமைப்பைப்பற்றிய விவரமொன்றுங் காணப்படவில்லை. வேடர்

Page 174
334 இலங்கைப் புவியியல்
தாம் வசிப்பதற்குக் குகைகளில்லாத சமயங்களில் எத்தகைய வீட்டை அமைத்தார்களோ அத்தகைய அமைப்புக்களே முதலிற் கட்டப்பட்டவீடுக ளாகும். ஒரு பாறை மீது படுத்துறங்க வேடர் விரும்பினல் அதற்குமேலே மரக்கிளைகளாலோ பெரிய இலைகளாலோ ஒரு கூடாரத்தை இன்றும் அமைப்பர். தளப்பற்று அல்லது பனையோலையென்பவற்றலேயே ஆதியிற் குடிசைகளமைக்கப்பட்டிருக்கவேண்டும். மரக்கொம்பர்களைக் கொண்டு கூரை அமைக்கப்படும். அத்தகைய குடிசை ஒழுக்கின்றிப் பலகாலத்துக்கு நிலைத்திருக்கும். இந்த முறை தான் பின்னர் விருத்தியடைந்து கிடுகுக்கூரை யாக மாறிற்று. இன்று கிடுகுக் கூரை சாதாரணமாக எங்கு முண்டு. பின்னர் வைக்கோலினல் வேயும் பழக்கமுமுண்டானது. கிராமங்களிலுள்ள சிறு வீடுகள் இன்று பெரும்பாலும் வைக்கோலினலும் கிடுகினலும் வேயப் பட்டிருக்கின்றன.
கி.மு. ஆரும் நூற்றண்டிலே இந்தியாவின் கங்கை வடிநிலத்திலிருந்து புதிதாக வந்த மக்கள் வீடு அமைக்கும் புதியதொரு முறையையும் புகுத்தியிருக்கவேண்டும். நாற்சுவருள்ள எளிமையான வீடு எந்தக்காலத் தில் முதன்முதற் கட்டப்பட்டதென்பது தெரியவில்லை. அவர்களே இதைப் புகுத்தியிருக்கலாம். ஆணுல், அம்முறை படிப்படியாகவே வளர்ச்சி யடைந்துள்ளது. நெல்விளையும் வண்டற் களிமண்ணுள்ள பிரதேசங்களில் அக்களியினுல் இலேசாக வீடுகட்டமுடியும். எனவே, சுவர்வைத்து வீடு கட்டும்முறை அந்நிலங்களிலேதான் முதலிற்றேன்றியிருக்க வேண்டும்.
நெற்செய்கை எப்பொழுது ஆரம்பிக்கப்பட்டதென்பது தெரியவில்லை. அது மிகப்பழங்காலந்தொட்டே நடைபெற்று வந்திருக்கிறது. விசயன்இலங்கைக்கு வந்தபொழுது நெற்செய்கை கங்கை வடிநிலத்தில் வழக்கிலிருந்தது. அதற்கு முன்னரே சீனவில் அது வழக்கிலிருந்தது. அரிசி உணவுக்கேற்ற தெனக் காணப்பட்டதும், அதுவரை வேட்டையாடிக் கொண்டு ஆங்காங்கு வாழ்ந்து வந்தமக்கள், வண்டல் படிந்த பள்ளத்தாக்குக்களேயடைந்தனர். தென்கிழக்கு ஆசியாவிலே பருவக்காற்று மழை பெய்யும் தேசங்களில் நெற் செய்கையே சனச்செறிவுக்கு முக்கியகாரனமாய்ச் சரித்திர காலந்தொட்டு இருந்து வருகிறது. களிமண் சுவரினலும் மரத்தினலும் கட்டப்பட்டு வைக்கோலினல் வேயப்பட்ட வீடுகளே (88 ஆம் படம் பார்க்க) இந்த வண்டற் சமவெளிகளிற் பொதுவாகக் காணப்படும் வீடுகளாகும். இலங்கையில் இத்தகைய வீடுகளையே, யாழ்ப்பாணக் குடாநாட்டைத்தவிர்ந்த, எல்லா இடங்களிலுங் காணலாம். இது அதிக காலம் நிலைத்திருக்காது; இருந் தாலும் இலேசாகத்திருத்திக் கொள்ளலாம். இத்தகைய வீடுகளிற் பெரும் பாலும் பலகரிையில்லாத இரண்டு அறைகளே காணப்படும்; ஒன்று சமை யலறை; அங்கே பண்டசாலையுமுண்டு; மற்றையது படுக்கையறை. கூரை சுவர்களே மறைத்து வெளியே சிறிது தூரம் நீட்டிக்கொண்டு நிற்கும். அது சுவர்களுக்குப் பாதுகாப்பாயமையும். ஒருபுறத்தில் விருந்தை யெனப்

மக்கட் புவியியல் 335
படும் திறந்த கூடமுண்டு. இங்கேயே அன்றட நடவடிக்கைகளெல்லாம் நிகழும். பலகணிகளில்லாததற்குரிய காரணமும் உள்ளறைகள் பகலில் என் அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை யென்பதும் முன்னர் கூறப் பட்டது. சூரியவெப்பத்தைக் களிமண்ணுலாய தடித்த சுவர் தாங்கிக் கொள்ளும். அதனல் உள்ளறை குளிராயிருக்கும். நிலமும் அதே களி மண்ணுலானது. புதுப்பிக்க வேண்டுமானல் மேலே களிமண் ஞல் மெழுகிவிடலாம். இத்தகைய வீடுகள் காலநிலைக் கேற்ற
Luluid 88.
விவசாயக் குடும்பத்தினர் வீடு. இது களிமண் சுவரும் வைக்கோற் கூரையுமுள்ளது.
மாற்றங்களுடன் உலகின் எல்லாவண்டற்சமவெளிகளிலுங் காணப்படுகின்றன இங்கிலாந்தின் தெற்கு மாவட்டங்களிலொன்றன தெவொன்சயரில் “கொப் புக்குடிசைகள்’ என்ற குடிசைகளிருப்பதாய் ஆங்கிலநூல்களில் வாசித்திருப் பீர்கள். இக்குடிசைகளும் இவ்வாறே கட்டப்பட்டுள்ளன. இவை கோதுமை வைக்கோலால் வேயப்பட்டன; இரண்டுமாடியுள்ளன. முற்காலத்தில் இவை எங்குங் காணப்பட்டன; இன்று அருகிவருகின்றன.

Page 175
336 இலங்கைப் புவியியல்
படிப்படியாக வேறுபொருள்களும் வீடுகட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. இவை இடத்துக்கேற்றவாறு வித்தியாசப்படும். முதலில், கடினமான
Lo 89.
ஒரு பாடசாலைக் கட்டிடம்.
களியைத் தேர்ந்தெடுத்து அதைக் கையாலெடுக்கக்கூடிய சிறு சிறுதுண்டு களாக வெட்டி வெயிலிற் காயவைத்தனர். இவை செங்கல் என வழங்கு
 

மக்கட் புவியியல் 337
கின்றன. செங்கல்லையடுக்கிக் கட்டுவதானுல் அதற்குச் சாந்துவேண்டும்; முதலில் ஈரமண்ணைச் சாந்தாகப் பயன்படுத்தினர். ஆனல், குவிவுள்ள கட்டட வேலைக்கு இது பொருத்தமாகத் தோன்றவில்லை. சாந்துக்குச் சுண்ணம் உபயோகிக்கும் முறை ஆரும்நூற்ருண்டு வரையிற்றன் கண்டுபிடிக்கப்பட்டது. முதன் முதல் அது சிகிரிக் கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்டது. அதற்கு முன்னர் மக்கள் திண்மமான உருவங்களையே செங்கல்லாற்கட்டினர். வீடு கட்டச்செங்கல்லைப் பயன்படுத்தவில்லை. ஆதியிற் கட்டப்பட்ட தாதுகோபங்கள் திண்மமாய்க் கட்டப்பட்டதற்கு இதுவுமொரு காரணமாயிருக்கலாம். பழங்கால முறையிற் செய்யப்பட்டதும் வெயிலிற் காயவைக்கப்பட்ட களிக்கட்டி போன்றதுமான செங்கல்லாற் கட்டப்பட்ட வீடுகளை இன்று தெற்குக் கரையோரமாகவுங் கிழக்குக் கரையோரமாகவுங் காணலாம். தாழ்பூமியின் தென்மேற்குப் பகுதியிற் காணப்படும் செம்பூரான்கல்லு இத்தகைய செங்கல்லே. சிவப்பு நிறத்திலாயினும் கபில நிறத்திலா யினும் திடமான களி காணப்படும் பகுதிகளிலே அண்மையில், செங்கல் வெட்டுந் தொழில் பெரும்படியாக நடத்தப்படுகிறது. இக்களியினற் செய்த செங்கல் பலகாலம் நிலைத்து நிற்கக்கூடியதும் அழகுடையதுமாகும். இது முக்கியமாகக் கண்டி மாவட்டத்திலும் வதுளே மாவட்டத்திலும் கொழும்புக்கு வடக்கேயுள்ள பகுதிகளிலும் காணப்படுகிறது. இவ்வகையான செங்கற்றெழிலைப் பின்பற்றி இப்போது ஒடுஞ்செய்யப்படுகிறது. அதுவுழ், களிமண்ணைச் சுடுவதன்மூலமே செய்யப்படுகிறது. ஒட்டுத்தொழில் விருத்தி யடையவே வைக்கோற் கூரைகளும் கிடுகுக் கூரைகளும் மறைந்து வருகின்றன. கிடுகு, வைக்கோல் என்பவற்றிலும் ஒடு நெடுநாளேக்கு நிலைத்து நிற்கக் கூடியது. புகை வண்டிமூலம் ஒட்டை ஏற்றிச் செல்ல வசதியேற்பட்டதன் பயனுகவே அது எங்கும் பரவிவருகிறது. இன்று உபயோகத்திலிருக்கும் ஒடு ஒல்லாந்தில் இடச்சுக்காரரால் உபயோகிக்கப்படுவது போன்றது. இடச்சுக்காரர் இலங்கையைக் கைப்பற்றியபின்னரே இத்தகை! ஒடு உபயோகத்துக்கு வந் திருக்கவேண்டும. தென்மேற்குக்கரையோரமாக முருகைக்கல்லு அதிகமான பகுதிகளில் செங்கல்லுக்குப்பதிலாக அதை உபயோகிக்கின்றனர். இந்துருவை யிலிருந்து மாத்தறைவரையுள்ள பகுதிகளில் முருகைக்கல் அதிகமாக வுண்டு. இதற்குச்சாந்து அவசியம் , முருகைக்கல்லைச் சுட்டாற் சுண்ணும்பு கிடைக்கும். அதை மணலோடு சேர்த்து நனைத்துச் சாந்தாகப் பயன்படுத் தலாம். மலைநாட்டில் முருகைக்கல்லுக்குப் பதிலாகப் பளிங்குருச் சுண்ணும் புக்கல்லை உபயோகிக்கின்றனர்.
வீடுகட்டுவதற்கு ஏற்ற தடித்த களிகிடையாத பகுதி யாழ்ப்பாணக்குடாநாடு; இங்கே சுண்ணம்புக் கல்லுக்கிடைத்தபடியால் அதைக்கொண்டு மிகப்பழங் காலத்திலேயே கல் வீடுகட்டத் துவங்கினர். தீவின் எனப்பகுதிகளிற் கட்டடத்துக்குத் தேவையான கல்லு எராளமாகக் காணப்பட்டபோதிலும், அவை பிற்காலத்திலேயே வீடுகட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டன. கற்களே வெட்டி உருப்படுத்தி எடுத்துச் செல்வது கடினமாதலால் மக்கள் வேறு
13-J. N. B. 70576 (1157).

Page 176
338 இலங்கைப் புவியியல்
பொருள்களைக் கொண்டே வீடுகட்டினர். வெப்பமான காலநிலையுள்ள தேச மாதலால் கல்வீடு அவசியமற்ற தெனவுங் கருதினர். இன்றும் கல்வீடுகள் அருமை. பணமுள்ள அந்நியரே கல்வீடுகளைக் கட்டுகிறர்கள். காலியில் இடச்சுக்காரருடைய செல்வாக்கதிகமாயிருந்ததால் அங்கே பல கல்வீடுகளைக் காணலாம். இடச்சுக்காரர். காலி, மட்டக்களப்பு, களுத்துறை, கற்பிட்டி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் கோட்டைகளைக் கட்டினர். குன்றுகளின் சாய்வில் வீடுகட்ட விரும்பும் தோட்டமுதலாளிகள் அங்கே தொழிலாளரை மலிவாகப் பெற்றுக்கொள்ளக்கூடுமாதலால் கல்லினலே வீடுகளைக் கட்டுவர். வேறுகட்டடங்களேயுமவ்வாறே கட்டுவிப்பர். (90 ஆம் படம் பார்க்க.)
Lıı-D 90.
ஒடு வேயப்பட்ட வீடு.
மிகப்பழங்காலந்தொட்டே இலங்கையிற் கல்லினற் கட்டிடங்கள் கட்டப்பட்டன. அவற்றுட் சில இன்றும் நல்ல நிலையிலிருக்கின்றன. பெளத்த ஆலயங்கள் பெரும்பாலும் கருங்கல்லினலேயே கட்டப்பட்டுவந்தன. பெளத்த சிற்பக்கலை யின் விசேட அமிசமான தாதுகோபங்கள் செங்கற் கட்டிடங்களே. உலகில் மனி தனின் மிகப்புராதனமான முயற்சிகளினுற் பெறப்பட்ட மிகப் பெரிய சின்னங் களுள் இவை சில. சேதவனுராம தாது கோபம் 360 அடி விட்டமும் 249 அடி உயரமுமுள்ளது. 20 அடி நீளமுள்ள 8000 வீடுகளைக் கொண்ட ஒரு
 

மக்கட் புவியியல் 339
சிறிய நகரத்தை அமைக்க அதிற்காணும் செங்கற்கள் போதுமான்வை யென்று சேர் எமர்சன் தெனண்டு கூறுகிறர். இத்தாது கோபம் மிக வற்புதமானது. இதைப் போன்ற ஒரு கட்டிடம் என்றும் அமைக்கப்ப்ட்வில்லை யெனக்கூறலாம். தம்புளே, அலுவிகாரையாகிய இடங்களிலுள்ள குகைக் கோயில்கள் பளிங்குருப்பாறைகளிடையே செங்கல்லினல் ஒட்டுவேலை செய் வதன்மூலம் அமைக்கப்பட்டன. பழைய அரசாங்கக் கட்டிடங்களிற் பெரும்பகுதி பெரும்பாலுங் கல்லினலேயே கட்டப்பட்டன. நாளடைவில், அதாவது எட்டாவது நூற்றண்டில், எல்லாக் கட்டிடங்களுக்கும் கல்லையே பயன் படுத்தினர். இன்று சேதமடைந்து எஞ்சி நிற்கும் பண்டைக் கட்டிடங் களிற் பெரும்பாலானவை கி.மு. 500-கி.பி. 300 வரைக்குட்பட்ட மகா வமிசகாலத்தவை. கி. மு. இரண்டாவது நூற்றண்டில் வாழ்ந்த துட்டகாமினி அரசனே இப்பழங் கட்டிடங்களிற் பலவற்றைக் கட்டுவித்தவன். செங்கல்லினுற் கட்டப்பட்ட தாது கோபங்களேத் தவிர்ந்த மற்றையவை யெல்லாம் விரைவிற் சேதமடைந்தன; அவைகளுள் எஞ்சி நிற்பவை சிலவே. எனவே, அழிந்த நகரங்களிற் பிரதானமாக எஞ்சி நிற்பன தாது கோபங்களும், கல்லற்ை கட்டப்பட்ட அரசமனைகளுமேயாகும். சூள வமிசக் காலத்தில் இலங்கை மீது படையெடுத்த தமிழர், சிங்களரைத் தெற்கே கலைத்துப் பழைய கட்டிடங்களா யெஞ்சி நின்றவற்றையுஞ் சிதைத் தனர். அனுராதபுரத்தைப்பற்றி நாம் கடைசியாகக் கேள்விப்படுவது 1110 இல். கி.பி. பன்னிரண்டாவது நூற்றண்டில் மகா பராக்கிரமபாகு ஆட்சி செய் தான். அப்பொழுது நாட்டிலே சமாதானம் நிலவிற்று. பொலனறுவையிற் பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. பழைய கட்டிடங்கள் பல புதுப்பிக்கப்பட்டன. பின்னரும் தமிழர் படையெடுத்து வட பகுதியை ஆக்கிரமித்தனர். பொல னழுவையைப்பற்றி நாம் கடைசியாகக் கேள்விப்படுவது 1295 இல் ஆகும். பின்னர், ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்றினர். அவர்களோடு வியாபாரஞ் செய்வதற்காக மக்கள் தென் மேற்குப்பகுதியிற் பெருந் தொகையாகக் குடியேறினர். அரசர்கள் மலைநாட்டுக்கு ஒடி விட்டனர். இவ் வாறு கைவிடப்பட்ட நகரங்கள் பல நூற்றண்டுகளாகக் காடடர்ந்து மறைந்து போயின. பின்னர் ஏறத்தாழ 50 வருடங்களுக்கு முன்பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனக அழிந்த நகரங்களைப் புனருத்தார ணஞ் செய்யும் வேலை தொடங்கப்பட்டது. கடந்த முப்பது வருடமாக இவ் வேலை நன்கு முன்னேற்ற மடைந்தது. இருந்தும், மேலுமதிக வேலை செய்ய வேண்டியிருக்கிறது. உதாரணமாக அலுத்துறுவரை என்ற பழைய நகரம் காடுமண்டிக் கிடக்கிறது. அதைப் புனருத்தாரணஞ் செய்வது அவ சியம் ; அப்பொழுது சரித்திரசம்பந்தமான பல விடயங்களை ஆராய்ந்தறிய லாம். சிகிரிக் கோட்டை அற்புதமானதொரு கட்டடவமைப்பாகும். அது 1000 அடி உயரமுள்ள செங்குத்தான பாறையினு:ச்சியிலமைந்திருக்கிறது. அங்கே செங்கல்லாலமைந்த அரண்மனையுண்டு. அக்காலத்திற் சாதாரண

Page 177
340 இலங்கைப் புவியியல்
மக்களெவ்வாறு வாழ்ந்தார்களென்று இக்கட்டிடங்களைக் கொண்டு சொல்லமுடியவில்லை. அரசர் அடிமைகளை வைத்தே வேலை செய்வித்திருக் கிருர்களென்பது தெரிகிறது.
ஐரோப்பியர் படையெடுப்பின் பின்னர், நாட்டின் ஏனைக்கலைகள் கெட் டொழிந்தமை போலவே கட்டடக்கலையு மழிந்தது. அரசமாளிகைகளுக்குப் பதிலாக ஐரோப்பிய உத்தியோகத்தருக்கு அவசியமான வீடுகள் கட்டப்பட் டன. அப்பொழுது அந்நியநாட்டுச் சிற்ப முறையிலவை கட்டப்பட்டன. இந் நிலை இன்றுவரை நிலவிவருகிறது. இக்காலக்கட்டிடங்களிற் கலையமிசங்கள் குறைவு. பயன்கருதும் அமிசங்களதிகம். அதஞல் இலங்கைக்குரிய அரு மையான கட்டடக்கலை அழிந்து விடுமோ என்ற ஆபத்துமுண்டு. கொழும்பு நகரசபைக்கட்டிடம் அந்நிய அமைப்பிற் கட்டப்பட்ட அழகிய கட்டிடமாகும். கொச்சிக்கடையிலுள்ள சிவன் கோவிலும், இரத்தின புரிக்கச்சேரியும், இவை போன்ற பிறவும் நமது பழைய கட்டடக்கலையின் மறு மலச்சிக்கு எடுத் துக் காட்டாகும். மனேக்கட்டட அமைப்பு ஐரோப்பிய முறையில், விசேடமாக இடச்சு முறையிலமைந்து வருகிறது. பெரியவீடுகளிற் காணப்படும், முகப்பு, விருந்தை, நடைகூடம், முற்றம் என்பன இடச்சுக்காரர் தென்ன பிரிக்காவிற் கட்டிய வீடுகளைப் போன்றன. பலகணிகளை அதிகமாக அமைப்பதும், பல விதமான உருவமைந்த கதவுகளையும் பலகணிகளையு மமைப்பதும் ஐரோப்பிய முறையாகும்.
இலங்கையில் வசிக்கும் பல சாதியாரும் கைக்கொள்ளும் பழக்க வழக்கங் களுக் கேற்றபடியே மனேக்கட்டடமமைந்துள்ளது. இதிலுள்ள வித்தியாசிங் களுக்குக் காரணம் பெண்களே ஒதுங்கி வாழச் செய்யும் பழக்கத்தை அடிப்படை யாகக் கொண்டுள்ளது. சோனகரும் தமிழருமே பெண்களை ஒதுங்கி வாழச் செய்யும் பழக்கமுடையவர். அதனுல் அவர்களுடைய வீடுகளிற் சில மாற்றங் களேக்காணலாம். சிங்களரிடம் இப்பழக்கமில்லை. சிங்களர் பெண்களுக்குச் சுதந்திரமளித்து வந்தனர். அது அவர்களுடைய இலட்சியம். ஆனல் நடை முறையில் ஒதுங்கி வாழவேண்டிய அவசியமேற்பட்டது. விசேடமாகச் சண்டைக் காலங்களிலும் படையெடுப்புக் காலங்களிலும், ஆக்கிரமிப்புப் பிரதேசங்களில் அது மிக அவசியமாயிற்று. சிங்களர் வீடுகள் திறந்த அமைப்புடையன வாயிருக்கும். வேலி எல்லையைக் காட்டுவதற்காக அமைக்கப்படுமேயன்றி பாதுகாப்புக்கன்று. சிங்களக் கிராமவாசிகள் எல்லாரோடும் சாவகாசமாகப் பழகுவர். சோனகரும் தமிழரும் தமது பெண்களை ஒதுங்கி வாழச் செய்யும் பழக்கமுடையவர்களானபடியால் அவர்களுடைய வீடும் மூடி மறைக்கப் பட்ட வீடாகவேயிருக்கும். யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஒவ்வொரு வளவைச் சுற்றியும் பனையோலையால் வேலியடைத் திருப்பார்கள். வீடுகளில் நடப்பதை வீதிகளில் நின்று பார்க்கமுடியாது. அடுக்களை புறம்பாகவும், படுக்கையற்ை புறம்பாகவும், பெண்களுக்குரியவறை புறம்பாகவும் அமைக்கப்படும். இவை சாதாரண வீடுகளினமைப்பு. பட்டினங்களிற் கட்டப்படும் தமிழ்வீடுகள்

மக்கட் புவியியல் 34
சிங்களர் வீடுகளை ஒத்தவையே; ஆனல், சற்று மறைப்புடையனவாய் விருந்தை கள் நெய்யரிவேலை செய்த மரப்பலகைகளால் மூடப்பட்டிருக்கும். கிராமத்தி லுள்ள சோனகரின் வீடுகள் சிங்களர் வீடு போன்றவை. ஆனல், இவை உயர மான வேலிகளைக் கொண்டிருக்கும். மட்டக்களப்புக் கண்மையிலுள்ள காத் தான் குடி, சோனகக் குடியிருப்புக்கு எடுத்துக்காட்டாகும். பெரிய பட்டினங் களிலே சோனகவியாபாரிகள் அராபிய நாடுகளிலுள்ளது போன்ற வீட்டைக் கட்டியிருக்கிறர்கள். இது மிக உயர்ந்த கட்டிடம். ஐரோப்பியர்களுக்கு இது மறியற்சாலை போலத்தெரியும் ; தெருப்பக்கத்தில் பலகணிகளிருக்கமாட்டா. வீட்டிற்கு நடுவில் முற்ற மிருக்கும் ; பெண்கள் அங்கே தமது நேரத்தைக் கழிப்பர்.
அண்மையில் வீடுகள் ஒரு சீரான முறையிற் கட்டப்பட்டு வருகின்றன. வீடு கட்டுவதற்குரிய தளவாடங்களை இன்று இலேசாக ஏற்றிச் செல்லலாம். தனிப்பட்டவர் செய்து வந்த கட்டடத் தொழிலை இப்பொழுது பெரிய கம் பெனிகள் மேற் கொண்டுள்ளன. கல்வித் துறையிலும் ஏனைத் துறைகளிலு முண்டான விரைவான மாற்றங்களின் பயனுகப் பல புதிய கட்டிடங்களைக் கட்ட வேண்டியேற்பட்டது; அதனுல் அவை எல்லாம் ஒரே தன்மை யிலமைந்து விட்டன. இது தற்காலிகமான ஒரு நிலையாகும்; நிலைமை பலம்பெற்றதும் இது மாற்றமடையும்.
தோட்டப் பகுதிகளிலே, இலங்கையில் முன்னெப்பொழுதும் காணப்படாத, முற்றும் புதியவொரு மனையமைப்புத் தோன்றி வளர்ந்து வருகிறது. இங்கி லாந்திலே சேவை மானிய முறை நிலவிய காலத்தில் உள்ளது போன்ற ஒரு மனையமைப்பைத் தோட்டங்களிற் காணலாம். கிராமாதிபதியான பிரபு தனது தோட்டத்திலே ஒரு பெரிய வீட்டிலிருப்பார். அதையடுத்து ஒரு கிராமமிருக்கும்; அங்கு சிறு சிறு குடிசைகளிருக்கும். அவற்றில் அவனுடைய பண்ணை யாட்கள் குடியிருப்பர். அவர்கள் அக்காலத்திலடிமைகளாகவேயிருந்தனர். கல்வி அவர்களுக்குப் புகட்டப்படவில்லை. இறப்பர்த் தோட்டங்களிலுந் தேயிலைத் தோட்டங்களிலும் உள்ள தோட்டத்துரை, மலைச் சாரலில் வீட்டையமைப்பார். அண்மையில், தொழிலாளரின் வீடுகள் நிரையில் அமைந் துள் என. அங்கே தொழிலாளர் ஒரளவு புராதனமான முறையிற் சிவனம் நடத்துவர். அவர்கள் மிகக் குறைந்த சம்பளம் பெறுபவர். அவர்களிற் பலர் கல்வியறிவற்றவராயிருப்பர்; வாழ்க்கைத்தரமுங் குறைந்ததாகவேயிருக்கும். இப் புதிய குடிசைகள் கல்லினுற் கட்டப்படும். சிலசமயங்களிற்ருன் களி மண்ணும் மாமும் பயன்படுத்தப்படும். கூரை பெரும்பாலும் தகரத்தால் அமையும். இவை விரைவிற் கட்டப்படவேண்டியனவாகையால் இவ்வாறு செய்யப்படுகிறது. இத்தொழிலாளர் நிலையானவரல்லர். அடிக்கடி மாறிச் செல்லுமியல்புடையவர். அதனல் இவர்களுடைய குடிசைகளே அமைப் பதில் அதிக கவனஞ் செலுத்தப்படுவதில்லை. சில தோட்டத்துரை மார் தங்கள் தொழிலாளரின் இல்லங்களே நன்றக அமைப்பர். அத்துடன்

Page 178
342 இலங்கைப் புவியியல்
இந்து சமய ஆசாரப்படி நடப்பதற்கேற்ற ஒழுங்குகளையும் மல கூடம் முதலிய மேனுட்டு வசதிகளையுஞ் செய்வர். இவ்வாறு ஒழுங்கான ஒரு கிராமம் அமையும். இப்பொழுது கட்டாயக் கல்வி நடைமுறையிலிருப்பதால்,
படம் 91.
தேயிலைத் தோட்டம். குன்றுச்சியில் தேயிலைத் தொழிற் சா?லயும் குன்றுச் சாய்வில்
தோட்டத்துரையின் வீடும் அமைந்திருப்பதை நோக்குக.
 

மக்கட் புவியியல் 343
கல்வியறிவுபெற்ற தொழிலாளர் இக் குடியிருப்புக்களின் தன்மையை நாளடைவிற் சீர்திருத்துவர். இக் குடியிருப்புக்கள் நாட்டின் நிரந்தர அமி சங்களாக நாளடைவில் மாறும்.
இனி மக்கள் குறிப்பிட்ட இடங்களிற் குடியேறுவதற்குரிய காரணங்களை ஆராய்வாம். ஆதிக் குடிகள் சிறு தொகையினராகவே யிருந்தனர்.அவர்கள் வேடராயிருந்தபடியால், வேடரின் குடியிருப்புக்கள் போன்றே அவை அமைந்திருந்தன. எனவே, ஆதியிலுள்ள குடியிருப்புக்கள் பெரிய குகை களாகவிருந்தன. அங்கு ஒர் இனத்தைச் சேர்ந்த மக்கள் எல்லோரும் இரவிற் பயமின்றி நித்திரை செய்யவும், நெருப்பின் உதவியினல் வன மிருகங் களினல் ஆபத்தேற்படாமலிருக்கவும் முடிந்தது. இவர்களிடம் சொந்தப் பொருள், சொந்த நிலமென்ற உரிமையுணர்ச்சியில்லை. ஆனல், காட்டிலே சில பகுதிகளில் நிரந்தரமாக வேட்டையாடுவர். இவர்களுக்கு அதில் விவசாயஞ் செய்யவும் நிரந்தர உரிமையுண்டு. பின்னர் சேனைப் பயிர்ச் செய்கையை யாவரும் கைக்கொண்டதால் சேனைகளுக்குப் பக்கத்தில் குடி யிருப்புக்களை யமைக்கத் தொடங்கினர். இரவிற் பயிரை அழிக்க வரும் மிருகங் களைக் கலைக்க அப்பொழுது வசதியுண்டு. இவ்வகையான ஒரு குடியிருப்பி லிருந்தே மகா வமிசத்திற் கூறப்பட்டமுதல் நகரமான இலங்காபுரம் விருத்தி யடைந்திருக்கவேண்டும்.
விசயனும் அவனுடைய தோழரும் இலங்கைக்கு வந்ததன் பயனக உயர்நிலை நாகரிகம் இலங்கையிற்றேன்றிற்று. நெற் செய்கையும் நீர்ப் பாசனமும் இவர்களறிந்து வந்த விடயங்களாகும். சில நூற்ருண்டுகளில் இவர்கள் இலங்கையின் வட பகுதியிற் சில குடியிருப்புக்களே ஏற்படுத்தினர். வட பகுதியிலே காலநிலை வறட்சியானதாயிருந்தபடியால் காட்டை வெட்டியழிப்பது இலேசாயிருந்தது. ஆறுகளில் ஆங்காங்கு அணைகளை மண்லவினுற் கட்டி அற்புதமான குளங்களை உண்டாக்கினர். இவை சிங்களத்தில் “வெவ’ (வாவி) எனப்படும். குளத்தையடுத்துத் தாழ்வான பகுதிகளில் நிலத்தைப் பாத்தியாகக் கட்டி நீரோடுவதற்கேற்ற வாய்க்கால் களேயமைத்தனர். நீர்ப்பாசன வேலைகளைப் பரிபாலிப்பதற்கும், நீரைச் சமமாக எல்லாருக்கும் பகிர்ந்து கொடுப்பதற்கும் மக்கள் சமூகமாகத் தங்களேயமைத் துக் கொஸ்டனர். காட்டுமிருகங்கள் பயிரை அழியாமற் காவல் செய்ய வேண்டியிருந்ததாற் குளத்தையடுத்த (வயற்றரையல்லாத) மேட்டு நிலங் களிற் குடியேறிக் கிராமங்களையுண்டாக்கினர். பெரிய குளங்களையடுத்துப் பரந்த வயல் நிலங்களுண்டாகும். அங்கு பல கிராமங்கள் தோன்றும். அதனல் மக்கள் தமது வயல்களுக்கு நெடுந்தூரம் நடந்து செல்ல வேண்டிய சந்தர்ப்ப முண்டாகாது. குளத்தையடுத்துள்ள இக்காலக் கிராமங்கள் நெருக்கமா யிருக்கும். இவை மற்றை வகையான வயல் நிலத்தையடுத்த கிராமங் களிலும் வித்தியாசமானவை. சில ஆறுகளையடுத்துள்ள குளங்கள் விசேட மானவை. சில இடங்களில் ஒருசதுர மைலுக்கு ஒரு குளங் காணப்படும்.

Page 179
344 - இலங்கைப் புவியியல்
இவை ஒன்றேடொன்று தொடர்புள்ளவை. எனவே, ஒவ்வோர் ஆற் ருேடுஞ் சம்பந்தப்பட்ட கிராமங்களை நிருவகிப்பதற்கு ஒழுங்கான சமுதாய அமைப்பு அவசியம். எழு, அல்லது எட்டு மைல் நீளமுள்ள அணைகளையுடை யனவும், 12 சதுர மைல் விசாலமுள்ளனவுமான பெரிய குளங்கள் பின் வருமாறு:- அருவியாற்றையடுத்தவை: கட்டுக்கரை, நாச்சியார்தீவு, மலகந்தராவ; கலாஒயாவின் மேற் பகுதியைச் சேர்ந்த கலாக் குளம்; மகாவலி கங்கையையடுத்தவை: கந்தளாய், மின்னேரி, மட்டக்களப்பை யடுத்தது உரூகம்; வடக்கேயுள்ள சிறிய ஆறுகளையடுத்தவை: இரணைமடு, பத் வியா என்பன. இக்குளங்களையடுத்துப் பெரிய கிரமங்களிருந்திருக்க வேண்டும்.
படம் 92.
நாச்சியார்தீவுக் குளம்.
வட கிழக்குப் பகுதிகளிற் பல் இடங்கள் “வெவ” “குளம்” என முடி கின்றன. இவை குளக்கரையடுத்த கிராமங்களென்பது தெளிவு. இன்று பல குளங்கள் பிரதானமாகத் தென் கிழக்கிலுள்ளவை, கைவிடப்பட்டு விட்டன. வடக்கேயுள்ள தாழ் பூமியில் பல சிறிய குடியிருப்புக்களுண்டு; பழங் காலத்தில் இவை பெரிய கிராமங்களாயிருந்தன போலும். அடுத்த படத்தில் இத்தகைய குடியிருப்புக்கள் சில காட்டப்பட்டுள்ளன. இக் கிராமங் களுக்கு ஒரு விதான தலைமைக்காரனயிருப்பார். இவருடைய வீடு மற்றை
 

மக்கட் புவியியல் 345
வீடுகளுக்குப் புறம்பாகப் பெரிதாய்க் காணப்படும். கிராம வாசிகளிற் சிலரை இவர் வேலைக்கு அமர்த்துவர். இக் கிராம விதானமார் சற்று முன்ன தாகவே கல்வியறிவு பெற்றிருந்தபடியால் இவர்களுடைய வழித்தோன்றல் கள் உயர் நிலையில் இன்று விளங்குகிறர்கள். இக் குளக் கிராமங்களைச் சுற்றிக் கோட்டைகளிருக்கவில்லை. இந்நாட்டில் அவ்வப்போதுண்டான யுத்தங் களை நோக்குமிடத்துக் கோட்டைகளில்லாதிருப்பது ஒரு விசேடமாகும். இதற் கொரு காரணம் புராதன காலத்திற் சண்டை செய்வதற்கென குறிப்பாக வொரு சாதியிருந்தமையே. அச்சாதியினரே போர்முனைக்குச் சென்று சண்டை செய்தார்கள். அவர்களுக்குங் கிராம வாசிகளுக்குந் தொடர்பிருக்க வில்லை. சில சமயம் ஒரு கிராமத்தவர் தமது குடியிருப்பை விட்டு வேறு இடங்களுக்கு மாற வேண்டிய நிர்ப்பந்தம் மட்டும் உண்டானது. இலங்கை யிற் கோட்டைக் காப்புடன் விளங்கிய குடியிருப்புக்களிருக்கவில்லை. சிங்களக் கிராமம் எப்பொழுதும் பாதுகாப்பற்றதாகவேயிருந்தது. மக்கள் சாவகாசமாகப் பழகுவதும், பெரும்பாலும் வெளிப்புற வாழ்வு நடத்து வதுமே இதற்குக் காரணமாகும்.
ஆதிகாலத்தில் ஐரோப்பாவிலிருந்த இத்தகைய குடியிருப்புக்கள் பாதுகாப் புடையனவாயிருந்தன. இவை சிங்களக் குடியிருப்புக்களுக்கு முற்றும் மாறு பட்டவை. ஐரோப்பிய ஆக்கிரமிப்புக்காரர் அவற்றை விரைவில் அழித்துக் கிராமங்களைக் கைப்பற்றினர். அவர்கள் சாதிப்பாகுபாட்டைக் கவனித்ததில்லை; சண்டை செய்யும் சாதியாரும் விவசாயிகளும் அவர்களுக்கு ஒன்றே. இலங் கையில் அவர்கள் வேருதலால் உணவு உற்பத்தி செய்வது எளிது. வருடம் முழுவதும் பயிர்செய்யலாம். அதனல் யுத்தக் கலவரமுண்டான போதும் விவசாயிகள் தமது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை.
வயல் நிலங்கள் நெருக்கமாயிருந்தால், கிராமங்களும் நெருக்கமா யிருக்கும். அதன் மத்தியில் கடைவீதி காணப்படும். சனங்கள் தங்களுக் குரிய பொருள்களைத் தாங்களே உற்பத்தி செய்வார்கள். அங்குள்ள சிறு தொகையான கடைகளைச் சோனகர் நடத்துவர். அவர்கள் கரைப்பிரதேசங் களோடு தொடர்புடையவராயிருப்பர். தனிப்பட்ட குடிசைகளைக் காண்பது அருமை. வயல்கள் நீண்டு வளைந்திருந்தால், வீடுகள் ஒரு நீண்ட வரிசையில் நெருக்கமாகக் காணப்படும். தற்போது காணப்படும் குளக்கரைக்குடியிருப் புக்கள் மிகச்சிறியவை; சுமார் 6 வீடுகளமைந்தனவாயிருக்கும்.... இந்த அத்தியாயத்திலுள்ள ஒரங்குல அளவைப் படங்களில் இக்குடியிருப் புக்கள் காட்டப்பட்டிருக்கின்றன. இவற்றின்தொகை குடிசன மதிப்பு அறிக் கைப்படி கணக்கப்பட்டதன்று. ஆனல் வீதப்படியமைந்துள்ளன. மற்றை அமிசங்களோடு தொடர்புள்ள அமைப்புக்கள் சரியாயிருக்கும்.
இக்காலத்துத் தெருக்கள் இக்குளக்கிராமங்களின் வாழ்க்கையை எவ்வி தத்திலும் பாதிக்கவில்லை; கரையையடுத்த ஒரு நகரத்திலிருந்து மற்றைக் கரையிலுள்ள ஒரு நகருக்குச் செல்வதற்காகவே இந்தத் தெருக்கள் இக்கிரா

Page 180
346 இலங்கைப் புவியியல்
அனுரதபுரிக்கு
985 wamgw குேடியிருப்பு ಸ
Ito 93.
குளங்களுள்ள பகுதிகளிற் காணப்படும் குடியிருப்புக்கள். கிடைக் கோடிட்ட இடம் வயல் கருஞ் சதுரம் வீடு. கருங் கோடு வீதி. புதிய கிராமத்தில் பொதுவேலை அலுவற் பகுதியைச் சேர்ந்த மாவ்ட்ட எஞ்சினியரின் வீடும், தொழிலாளர் வீட்டு நிரையும், வாடிவிடும், அஞ்சலனு வலகமும், மருந்துச்சாலையும், அம்பலமும், கடைகளும் உண்டு. நெடுந்தெருச் செல்லும்:
மார்க்கத்தைக் கவனிக்க. -
 

மக்கட் புவியியல் 347
மங்களுக்கூடாக அமைக்கப்பட்டன. உதாரணமாக கொழும்பு, யாழ்ப் பாணம், திருக்கோணமலை ஆகிய பகுதிகளைத் தொடுக்குந் தெருக்களைப் பார்க்கலாம். சிலசமயம் இத் தெருக்கள் இக்கிராமங்களுக் கூடாகச் செல்லும். சிலசமயம் மனிதசஞ்சாரமற்ற காடுகளுக்கூடாகப் பல மைல் தூரஞ்செல்லும். காடுகளுக்கூடாகச் செல்லும் தெருக்களிருந்து சிலமைல் தூரத்தில் உள்நாட் டிற் பல குளக்கிராமங்களிருக்கும். இங்குள்ள மக்கள் வெளியுலகத்தோடு எவ்வித தொடர்புமின்றியிருக்கின்றனர். 93 ஆம் படத்தில் இத்தகைய தன்மைகள் காட்டப்பட்டுள்ளன. தெருவும் இருப்புப்பாதையும் புதிய குடியிருப்புக்களையுண்டாக்கியிருக்கின்றன. இவற்றை இரண்டு வகுப் பாகப் பிரிக்கலாம். ஒன்று, பொதுவேலை அலுவற்பகுதியைச் சேர்ந்த தொழிலாளரின் குடியிருப்பு. இத்தொழிலாளர் கல்லுடைப்பதோடு இருப் புப் பாதையையுந் திருத்துவர். மற்றையது, வியாபாரிகளின் குடி யிருப்பு. விசேடமாகக் கரையோரச்சோனகரே இத்தொழிலை நடத்துவர். சந்தி களிலும், நெடுந் தெருக்களிற் பொருத்தமான இடங்களிலும் பெற்றேல் எண்ணெய்க் குதங்கள் காணப்படும். உதாரணமாக மாங்குளம், வவனியா, அபரணை ஆகிய இடங்களைக் குறிப்பிடலாம். இவ்விடங்களிலெல்லாம் இன்று பிரதான அஞ்சலஓவலகங்களும், வாடிவீடுகளும், மருத்துவசாலைகளு முண்டு. அனுராதபுரம் புனருத்தாரணஞ் செய்யப்பட்டதன்பயனுய்த் தன் பழைய முதன்மை நிலையை மீண்டும் பெற்றுள்ளது. இங்கே குளங்களையடுத்த குடியிருப்புக்களும் அரசாங்க நிலையங்களும் உண்டு. பல தெருக்களிங்கே வந்து சந்திக்கின்றன. இந்தப்பாதைகளில் அண்மையிற் பிரயாணஞ் செய்யும் யாத்திரிகரின் தொகை அதிகரித்து விட்டபடியால், விடுதிச்சாலை களும், கடைகளும் பெருகி வருகின்றன. அடுத்தநூற்றண்டில் இங்கே பெரிய மாற்றங்களுண்டாகலாம்.
பெரிய நீர்ப்பாசனத்திட்டங்கள் சீர்திருத்தஞ் செய்யப்பட்டிருப்பதால், இங்கே அபிவிருத்தி எற்பட்டுவருகிறது. சிறிய குளங்களையும் கால்வாய்களையும் தற்கால முறையிற் சீர்திருத்துவதற்கு நீர்ப்பாசனப் பகுதியார் தமது எந்திர சாதனங்களை யெல்லாம் துரிதமாகப் பயன்படுத்தி வருகின்றனர். 1933 ஆம் ஆண்டு துவக்கம், பல நீர்ப்பாசனத்திட்டங்களும் பெருந்தொகையான சிறிய குளங்களும் புனருத்தாரணஞ் செய்யப்பட்டுள்ளன. இங்கே புதுக்குடியிருப் புக்கள் பெருகிவருகின்றன. இவ்வளவு சிறிய காலத்தில் இத்துணை வேலைகள் செய்யப்பட்டிருக்கின்றன வென்பதை நினைக்க ஆச்சரியமாயிருக்கிறது.
94 ஆம் படத்தில் 1, 2, 3, 4 எனக் குறிக்கப்பட்டுள்ள பகுதிகளில் குளங் களுண்டு; ஒரு காலத்தில் இக்குளங்களை யடுத்துக் குடியிருப்புக்களிருந்தன போலும், 1 ஆம் பிரதேசத்தில் இன்று பல கிராமங்கள் காணப்படுகின்றன. புள்ளிக்கோட்டினற் சூழப்பட்டுச் சமாந்தரமான இடைக்கோடுகளாற் காட்டப் பட்டுள்ள பகுதிகளில் இன்று மக்கள் வசிப்பதில்லை. 2 ஆம் 3 ஆம் பகுதி களிலே பல குன்றுகளுண்டு. இங்கு குளங்களில்லை. இப்பகுதிகளின் சமநிலங்

Page 181
348 இலங்க்ைப் புவியியல்
a ፬፥ ማ
gլ Շ
Lub 94. கிராமக்குடியிருப்புக்களைக் காட்டும் குறியீட்டுப்படம். விளக்கம் நூலகத்துண்டு. எல்லை களைக் குறிப்பதற்காகச் சிலபட்டினங்களின் முதலெழுத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
 

மக்கட் புவியியல் 349
களில் ஒரு காலத்தில் மக்கள் குடியேறியிருந்தனர். இன்று அங்கு குடிசன மில்லை; குளங்களும் பழுதடைந்து கிடக்கின்றன. 4 ஆம் பகுதி தலாவைப் பிரதேசம். இது இடைப்பட்ட தன்மையுள்ளது. இங்கே சில குளங்களும் வண்டல்படிந்த நெல்வயல்களுமுண்டு. மழை அத்துணை குறைவன்று; மற்றைப் பகுதிகளிலும் இங்கே வறட்சி குறைவு. பிபிலையையடுத்தே சனச் செறிவு அதிகம்.
மலைநாட்டிலே குளங்களில்லை. வண்டல் நிறைந்த பள்ளத்தாக் குக்களில் நெற்செய்கை யுண்டு. 11 ஆம் பிரதேசம் அதற்கு விலக்காகும். மலை நாட்டில் இப்பகுதியிற்றன் அதிக மழை காணப்படுகிறது. தேயிலைத்
Lo 95.
பெண்கள் வயலில் நாற்றுநடுங்காட்சி.
தோட்டங்களாரம்பிக்கும்வரை இங்கு குடிசனமிருக்கவில்லையென்றே கூற லாம். இங்கே பள்ளத்தாக்குக்களில் நெற்செய்கை கிடையாது; ஆனல் மலைச்சாரல்களிலே தேயிலைத்தோட்டங்களுண்டு. மலைநாட்டிலேயுள்ள நெல் வயல்களைச் சுற்றி வீடுகள் இரண்டுவகையாக அமைந்திருக்கின்றன. 96 ஆம் படத்தைப் பார்க்க. இங்கே பள்ளத்தாக்கில் நெற்செய்கையுண்டு; வீடுகள் தாழ்ந்த குன்றுச் சாரலில் வயலெல்லையையடுத்துக் காணப்படுகின்றன. இந்

Page 182
350 இலங்கைப் புவியியல்
நிலைகண்டிமேட்டுநிலத்திற் சாதாரணமாக உண்டு; சிறிய அருவிகளும் அவற்றின் கிளைகளும் படிகட்டிய வயல்களுக்கு நீர்ப்பாய்ச்ச உதவுகின்றன. பள்ளத் தாக்குக்களில் இப்படிகட்டிய வயல்கள் காணப்படுகின்றன. ஒடுக்கமான பள்ளத்தாக்குக்கு இது மிகப் பொருத்தமுடையது.
l
W
*_4
. #oSo :
鲁 JEN "NMN4p3/7Q/24AY941?
f
༧ཚ༡ སྔ་མ་ལ་སྡེ་ A(o
N \V
ub 96.
பள்ளத்தாக்குக்களிலாங்காங்கு சிதறிக்கிடக்கும் கிராமங்கள். இவை கண்டிமேட்டுநிலத்தி லுள்ள வயல்நிலங்களையடுத்துள்ளன. நெல் வயல்கள் கறுப்பு மை தீட்டப்பட்டுள்ளன. கறுப்புச்
சதுரங்கள் வீடுகளாகும்.
விசாலமான பள்ளத்தாக்குக்களிலுள்ள ஒழுங்கு முறை 97 ஆம் படத்திற் காட்டப்பட்டிருக்கிறது. மலைச்சாரல்களில் வந்திழியும் சிற்றருவிகள் விசால மான படிக்கட்டுவயல்களின்மேற் பரந்துபாயும்; இந்நீரைக்கடைசியாகப்
 

மக்கட் புவியியல் 35
ஐந்துழை $چل வயுல் நிலம் 数簇盆 代 ليyسک i • žಲ್ಲ್ನನ್ತಿ\- @}
%i= ഴുന്നുpളേl-മ V apao f రీ < ഭ്യ ایسسسسسس مکتبیین تاسیس
LuLind 97. களுகங்கையின் மேறபககத்திலுள்ள வண்டல் படிந்த வயல் நிலங்களின் அபிவிருத்தி. கிடைக்கோடு - வயல் நிலம்; தடித்தபுள்ளிக் கோடு = வீதிகள் ற = இறப்பர்த் தோட்டம் ; ET = 历T@。

Page 183
352 இலங்கைப் புவியியல்
பெறும் பெரிய ஆறு பள்ளத்தாக்கின் தாழ்ந்த பகுதியிலோடும். வீடுகள் வயல்நிலங்களையடுத்து மேலே, அல்லது கீழே காணப்படும். சில சமயம் இவ்வீடுகளுக்கு இடையாக வீதி செல்லும்; இதனை ஆங்கிலப் புவியியலா சிரியர் “வீதிப்பட்டண’ மென்பர் (வீதி மருங்கிலுள்ள வீடுகளைக் கொண்ட நகரமாயாரம்பித்தது). எல்லாவளே இதற்கு ஒர் உதாரணம். கிராமவாசிகள் மலைச்சாரல்களில் இறப்பர் மரங்களை நாட்டித்தமது செல்வத்தைப் பெருக்கிச் கொள்வர். வடகிழக்கிலே ஒரிறப்பர்த்தோட்டமுண்டு; இது வண்டல் நிலங்
தோட்டத்துரையின் வித = 8 گریسمان سےسN) $ r r
J
S
2.
ཚོད་ ༦།: ཚེས་ ་ స్క్రిA:
i
": نماد با 0اه y ...)
(ノ } ge ད།། wN ܚ
༩ས་ཡོད།༽ V( “”سرڑہ 亡罗-斗士 - که 00 و a سمس۔ ۔
( -000
NJ S. R 2 ہےسبیب=۔۔۔
LLuo 98.
நெற் செய்கையில்லாத பெருந்தோட்ட மாவட்டமொன்றில் குடியிருப்புப் பரம்பல். தடித்த கருங் கோடுகள் வீதிகளைக் குறிக்கும். B-தோட்டத்துரையின் வீடு. சமவுயரக் கோடு வரைந்து படை முறையிற் படத்திற்கு நிறமூட்டுக. பின்னர் வீடுகளையுஞ் சேர்க்க.
களுக்கு அப்பாலமைந்துள்ளது. ஆங்காங்குத் தனித்தனி வங்களாக்கள் காணப்படும். பிரதான பள்ளத்தாக்கின் கீழ்ப்பாகத்தில், களுகங்கைப் பள்ளத் தாக்குடன் சேருஞ் சந்தியில் கடைகள் மலிந்த ஒரு வீதிப்பட்டணமுண்டு.
குளப்பிரதேசங்களிற் போலவே மலைப்பிரதேசங்களிலும் மக்கள் ஆதியில் நெற்செய்கைக்காகக் குடியேறினர். பின்னர் அப்பகுதிகளிலே தேயிலைத்தோட்டங்களும் இறப்பர்த் தோட்டங்களு முண்டாயின. 11 ஆம் பிரதேசத்தில் இத்தோட்டங்களை எளிதிற் காணலாம்; இங்கே நெல்
 

மக்கட் புவியியல் 353
விளையும் பகுதிகள் கிடையா. 98 ஆம் படத்தில் 11 ஆம் பிரதேசத்தின் ஒரு பகுதி காணப்படுகிறது. தோட்டத்துரைமாரின் வீடுகள் மலைச்சாரல்களிற் காணப்படுகின்றன. சில அதிக உயரத்தில் அமைந்துள்ளன. அளவைப் படங்களிலே தொழிலாளர் குடிசைகள் புறம்பாகக் காட்டப்படவில்லை. வங்களாவென்றுகுறித்துக் காட்டப்படாத சதுரங்கள், தேயிலைத் தொழிற் சாலைகளாகவோ, தொழிலாளர்குடிசைகளாகவோ இருக்கும். பள்ளத் தாக்குத்தளங்களில்எவ்வித பயிர்ச்செய்கையுமில்லை. 12 ஆம் பிரதேசமான மலைநாட்டின் எஞ்சிய பகுதியில் இத்தகைய வீடுகளோடு, வயல் நிலத்தைச் சேர்ந்த இரு வகையான வீடுகளுங் கலந்துள்ளன.
Lo 99.
கொழும்புக் கணித்தாயுள்ள நெல்வயல்.
கடற்கரையைச் சேர்ந்த தாழ்பூமியில் எராளமான வயல் நிலங்களுண்டு. இவை ஆற்றின் வெள்ளச் சமவெளியாகும். 100 ஆம் படத்திலே நெல் வயல் நிறைந்த இத்தகைய பிரதேசமொன்றைக் காணலாம். நெல்வயல் களில் வீடுகள் கட்டப்படுவதில்லை; வெள்ளம் ஏற்பட்டால் இடுக்கணுண்டாகு மென்பது ஒரு காரணம்; மற்றையது வண்டல் நிலம் நெற்செய்கைக்கு மிக வாய்ப்பானது; அதில் வீடுகட்டுவது பொருந்தாது. ஆயினும் 94ஆம் படத்தில் S ஆம் பிரதேசமெனக் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் மிக விசாலமான வயல் நிலீங்களுண்டு; அங்கே வீடுகளும், இருசிறு தோட்டங்களும் (100 ஆம் படத்தி

Page 184
இலங்கைப் புவியியல்
354
'iso@loff oureuo igolyure@mae omræ Øșoșnuite = qinşa los umgerse,
· : Igo@g9 =@uog) șiyong H :qigos comfo =@uo@onwog 'ugoslogsgøsıre yere(s)ano?/1919.f3(9) so gofuuo@gados” șHņuogoșorogi
*001qızırı ...)
đượ7cae~1 -• ---- ----„* -入叫圳队批 -* 乙化 |- 尹门都ル~少懂州 ~~別에내西山府
novo???777ờggoợ sẽ
 
 
 

மக்கட் புவியியல் 355
லுள்ளதுபோல) உண்டு; இது மட்டக்களப்புப் பகுதியிலுள்ள ஒரிடத்தைக் காட்டும். வெள்ளச் சமவெளிகளிலே கல்லும் பரலும் சேர்ந்த மேட்டு நிலங்க ளுண்டு; இங்கே வீடு கட்டலாம்; இங்கு குறிப்பிட்ட மூன்று பிரதேசங்களிலும்
ம77 = மாதம்பை பழையபட்டினம் சிவபக் மர2 = மாதம்பை புதியபட்டினம் stafari?
LLo 101. வயல் நிலமும் தென்னந் தோட்டமுங் கலந்து காணப்படுகினறன. கிடைக்கோடு- நெல் வயல் ; சிறு புள்ளிகள் = தென்னந் தோட்டம் , கறுப்புச் சதுரங்கள் - வீடு.
வெள்ளச் சமவெளிகள் நன்றகச் செய்கைபண்ணப்படவில்லை. சனநெருக்கம் மிக்க மேல் மாகாணத்தில் இவ்வெள்ளச் சமவெளிகள் நன்றகச் செய்கை பண்ணப்படுகின்றன. இப்பரந்த பிரதேசங்கள் அயலேயுள்ள பட்டணங்களில்

Page 185
356 இலங்கைப் புவியியல்
வசிக்கும் பணக்காரருக்குச் சொந்தமானவை. (உதாரணமாக 100 ஆம் படத்திலுள்ளவை). இவர்கள் மட்டக்களப்பில் வசிக்கும் சோனக வியாபாரி கள். இவர்கள் சில வறியவர்களுக்குப்பனங் கொடுத்து வயல்களைப் பார்க்க விடுவார்கள். அவர்கள் தோட்டஞ் செய்ய ஒரு சிறு துண்டுக் காணியையும் ஒதுக்கிவிடுவார்கள்.
5 ஆம் பிரதேசத்திலுள்ள வெள்ளச் சமவெளியைச் சேர்ந்த நெற்காணிக ளிற் சில, பட்டினத்துப் பணக்காரருக்குரியவை. மற்றையவை கிராமவாசிகளுக் குரியவை. அவர்கள் வயலுக்கணித்தாகவுள்ள எல்லைப்பகுதிகளில் வீடுகட்டி வசிக்கின்றனர். சில சமயம் அவர்கள் சிதறியும், சிலசமயம் தொகுதியாகவும் சேர்ந்து கிராமங்களில்வாழ்வர். குளக்கிராமங்கள் எப்பொழுதும் கூட்டமா யிருக்கும்; மற்றைவகையான நெல்வயல்களில் வீடுகள் சிதறிக்காணப்படும். 5 ஆம் பிரதேசத்திலுள்ள நெல்வயற்றெகுதியைப் பிரித்தறிந்து கொள்வது கடினம். இங்கே வெள்ளச்சமவெளி நெற்காணியோடு தென்னந்தோட்டங் களும் பின்னிக்சிடக்கின்றன. இங்குள்ளவீட்டுத் தொகுதிகள் முற்றும் வித்தி யாசமானவை. 101 ஆம் படத்தில் 5 ஆம் பிரதேசத்தின் ஒரு பகுதி காட்டப் பட்டிருக்கிறது. மாதம்பை யென்னும் பழையபட்டணம் ஆதியில் நெற் செய்கையிலிடுபட்டிருந்த விவசாயிகளின் கிராமமாயிருந்தது. கிழக்கேயும் பல வீடுகள் சிதறிக் கிடந்திருக்கவேண்டும். புகையிரத நிலையமுண்டானதும் வியாபாரிகள் புகையிரதப்பாதைக் கணித்தாகக் குடியேறியதாற் புதிய மாதம்பை நகர முண்டாயிற்று. அடுத்துள்ள தென்னந் தோட்டங்களில் வீடுகள் சிதறுண்டு கிடக்கின்றன. இவை வீதியையடுத்தோ, தோட்டங்களுக் குள்ளோ இருக்கின்றன. இவற்றைப்பற்றிப் பின்னர் ஆராய்வாம். முதலில், இப்பகுதிகளில் நெற்செய்கையே நடைபெற்றிருக்கவேண்டும். பின்னர் காட்டு நிலங்களைத் திருத்தித் தென்னந்தோட்டங்களை யுண்டாக்கினர்கள். 5 ஆம் பிரதேசமே இலங்கையில் குடிசனத்தொகை நிரம்பிய பகுதி. இதற்கான காரணங்கள் சிக்கலானவை.
இலங்கையில் ஒருவரிறந்தால் அவருடைய சொத்து எல்லாப் பிள்ளை களுக்குஞ் சமமாகப் பிரித்துக் கொடுக்கப்படும். அதனல் நிலங்கள் சிறியன சிறியனவாகப் பிரிக்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு துண்டிலும் ஒவ்வொரு வீடு காணப்படும்; எனவே, வீடுகள் எங்குஞ் சிதறிக் காணப்படுகின்றன. சில துண்டுகளைச் சொந்தக்காரர் வட்டிக்குப் பனங் கொடுப்போருக்கு விற்று விட்டபடியால், அந் நிலங்களில் வசிப்போர் பெரிய முதலாளியின் சொற்படி அங்குள்ள வேலைகளைச் செய்து வருவர்.
கரைப் பகுதிகளிலேயே சன நெருக்கமதிகம். பெரும்பாலோர் தென்னந் தோட்டங்களுக்குச் சொந்தக்காரர். இவற்றிற் பெரும்பாலானவை மிகச் சிறியவை. தென்னந் தோட்டத்தையே நம்பி வாழ்வோர் பொதுவாக ஏழைகளாயிருப்பர். சிலருக்கு வேறு வருமானமுண்டு. அவர்கள் கரைப் பகுதியிலேயே இருக்க விரும்புவர். பணம் படைத்தவர்களுக்கு மலைநாடு

மக்கட் புவியியல் 35
Lb 102. சிலாபக் கடலேரிக்குத் தெற்கேயுள்ள கரைப் பிரதேசத்தின் ஒரு பகுதி. 1 அங்குலம்=1
மைல், உலுணுவிலைக்குச் சமீபத்திலுள்ள உல்லிட்டியாவைக் கிராமம். ஒவ்வொரு வீட்டிற்குஞ் சிறு தென்னந் தோப்பு உண்டு. இங்குள்ளோர் பலர் மீன்பிடிப்பவராவர்.

Page 186
358 இலங்கைப் புவியியல்
களிலேதோட்டமுண்டு; அல்லது உள் நாட்டிலே நெல் வயலிருக்கும்; சிறு சிறு காணித் துண்டுள்ள ஆண்களும் பெண்களும், வேலையாட்களாகவோ, கடைகளில் உதவியாளர்களாகவோ கொழும்புக்கும், எனைப் பட்டினங் களுக்குஞ் செல்வர். வீட்டிலுள்ளவர் தென்னந் தோட்டங்களைப் பார்த்துக் கொண்டிருப்பர். கரையோரமாயுள்ளவர்களிற் பெரும்பாலோர் மீன் பிடிக் குந் தொழில் செய்வர். அதனுலும் அவர்கள் கரைப் பகுதிகளிற் சிதறிக் காணப்படுவர்.
சிலாபத்திலிருந்து தங்காலை வரை தொடர்ச்சியாக வீடுகளுண்டு. அங்கு மிங்கும் அவை நெருங்கிக் “கிராமங்களாகக்” காணப்படும். பெரிய தெருவையடுத்துச் சிறு கடைக் கூட்டமுண்டு. 102 ஆம் படத்தைப் பார்க்க.
LULLD 103.
தங்காலைக்கண்மையில் கலப்புப் பயிர்ச்செய்கை, சிறிய புள்ளிகள் “சுதேசித் தோட்டத்தை”க் காட்டும். கிடைக்கோடு= நெல்; பு=சித்திரனல்லாப் புல்லுத்தோட்டம் ; தே = தென்னை. கறுப்புச் சதுரங்கள் வீடுகளைக் குறிக்கும்.
இஃது அப்படியொரு கிராமம். இக் கிராமத்து வீடுகள் பல வீதிதோறும் சிதறிக் கிடக்கின்றன. நிருவாக வசதியையொட்டிப், பிரதானமாகத் தபாற் போக்கு வரத்தை முன்னிட்டுக் கிராமத்துக்குப் பெயர் கொடுக்கப்படுகிறது. ஒருகிராமம் எங்கே முடிகிறது; மற்றையது எங்கே துவங்குகிறதென்பதைக்
 

மக்கட் புவியியல் 359
za69משa
uLio 104.
கற்பிட்டிக் குடாநாடு; சிறு புள்ளி=தென்னை ; கறுப்புச் சதுரம்= வீடு. இவை தென்னந் தோட்டங்களிடையே ஆங்காங்கு காணப்படும்.

Page 187
360 இலங்கைப் புவியியல்
கூறிக் கொள்ள முடியாது. நல்ல தெருக்களமைக்கப்பட்ட பின்னர், வீடுகள் பொருத்தமான இடங்களில் தெருவையடுத்து அமைந்துள்ளன. (இக்கால வீடுகளிற் பல, அண்மையிற் கட்டப்பட்டனவே என்பதும் மனத்திலிருத்தத் தக்கது). 5 ஆம் பிரதேசத்தின் தென் பகுதியிற் கலப்புப் பயிர்ச் செய்கை அதிகமாகவுண்டு. இத்தகைய கலப்புப் பயிர்ச்செய்கையுடைய சிறு தோட்டங்களை “சுதேசித் தோட்டம்’ என அளவைப்படம் குறிப்பிடுகிறது. இங்கே தென்னே மரங்களுண்டு; அவற்றுடன் எலுமிச்சை, மா, பலா, ஈரப்பலா, மிளகாய், வெண்டி, மிளகு, கத்தரி என்பனவும் வேறு பலவகைப் பழ மரங்களுமுண்டு.
103 ஆம் படம், தங்காலையில் இத்தகைய தோட்டங்களுள்ள ஒரு பிரதேசத் தைக் காட்டுகிறது. தென்னந் தோட்டங்களிலே வீடுகளெவ்வாறு சிதறிக் கிடக்கின்றனவோ அவ்வாறே இங்கும் வீடுகள் சிதறிக் கிடக்கின்றன. இங்கே பயிர்ச் செய்கைக்கு வாய்ப்பில்லாத சில மேனிலங்களுண்டு. இம் மேனிலங் களிற் கிராம வாசிகள் சித்திரனெல்லாப்புல்லைப் பயிரிடுவர். இதற்கு அதிக கவனஞ் செலுத்த வேண்டியதில்லை. புல்லை வெட்டிய பின்னரே அதைக் கவனிக்க வேண்டும். புற்ருேட்டங்களில் வீடுகளைக் காணமுடியாது.
கொழும்பில் பெருந்தொகையான வீடுகளுண்டு. பட்டினத்தின் பிற் பகுதி சதுப்பு நிலமாகவும் வெள்ளத்துக் குட்பட்டதாகவுமிருப்பதால், கரையோரமாக வீடுகள் பெருகிக் கொண்டு வருகின்றன. பக்கத்தேயுள்ள கிராமங்களையும் படிப்படியாக வீடுகட்டப் பயன்படுத்துகின்றனர். பழைய பட்டினத்திலிருந்து 10 மைலுக்கு இரு பக்கமும் உள்ள குறுகிய பகுதி களிலும் வீடுகள் பெருகுகின்றன.
7 ஆம் பிரதேசமெனக் குறிக்கப்பட்ட இரண்டு சிறிய பகுதிகளில் வண் டற் படிவுள்ள வயல் நிலங்களுண்டு. இங்கே குளங்களுமுண்டு. இப்பகுதி களிற் குடிசனங்கள் குறைவு. சிறிய துண்டுகளாகப் பல வயல் நிலங்களுண்டு. வயலெல்லைகளிற் சில வீடுகளைக் காணலாம். அவற்றேடு சிறிய குளக் கிராமங்களுமுண்டு.
104 ஆம் படத்திலே வயல் நிலங்களில்லை. இங்கே தென்னந் தோட்டங்க ளுண்டு. இப்பகுதியில் வீடுகள் அமைந்துள்ள முறையைக் கவனிக்க. மணற்றரை யானபடியால் காய்கறிப் பயிர்களுஞ் செய்கைபண்ண முடியாது. தென்னந்தோட்டங்களில் வீடுகளமைந்திருக்கும் முறையை இங்கே காணலாம். முதலில் வீடுகளமைந்த முறையிதுவாகும். அவை தோட்டங்களிடையே அங்குமிங்குங் காணப்படுகின்றன. நல்ல தண்ணிர்க் கிணறுக்ளெங்கேயுண்டோ அங்கே விசேடமாக வீடுகள் கட்டப்பட்டனவென்பது இதிலிருந்து தெரிகிறது. கடற்கரையடுத்த மணற் பிரதேசத்துக் கிணறுகள் உப்புத் தண்ணீரா யிருக்கும். வீடுகள் நெருக்கமாயிருந்தால் கிணறுகள் அழுக்கடைந்து விடும். தென்னந் தோட்டத்தைப் பொறுத்தவரையில் வீட்டை எந்தப் பகுதியிலுங்

மக்கட் புவியியல் 36.
கட்டலாம். சில சமயம் தோட்டமுதலாளி தமது விவாகமான பிள்ளைகளுக் குத் தோட்டத்திலேயே வீட்டைக் கட்டிக்கொடுப்பார், கணவன் விவசாயத்தி லீடுபடாது வேறு தொழில் செய்பவனுயிருந்தால் ஒரே தோட்டத்திலேயே பல வீடுகளைக் காணலாம்.
புத்தளக் கடனீரேரி
to 105.
புத்தளக் கடலேரிக்குத் தெற்கேயுள்ள தென்னந் தோட்டங்கள். வீதியையடுத்துத் தொகுதி
களாக வீடுகளும் சிறிய வீதிப்பட்டினங்களு மிருப்பதைக் கவனிக்க, கரையையடுத்து மீன்
பிடிகாரர் வசிப்பர். சிறிய புள்ளிகள் தென்னந் தோட்டங்களையும், கிடைக் கோடுகள் வயல்நிலங் களையுங் காட்டும். கறுப்புச் சதுரங்கள் வீடுகளாகும்.

Page 188
362 இலங்கைப் புவியியல்
105 ஆம் படத்தில் அபிவிருத்தியடைந்த ஒரு நிலைமை காணப்படுகிறது. முக்கியமான வீதிகள் செல்லும் பகுதிகளிற் சனங்கள் வீதி மருங்கே வீட மைப்பர் ; தோட்டங்களில் வீடுகள் காணப்படா. மோட்டர் வசுவண்டி முதலிய சாதனங்களிருப்பதே இதற்குக் காரணம். இது புதிதாக அபிவிருத்தி யடைந்த பகுதி. காலப்போக்கில் தோட்டங்கள் சிறு பகுதிகளாகப் பிரிக் கப்பட்டபின் வீடுகள் நெருக்கமாகத் தோன்றக் கூடும். நெடுந்தெருக்களை யடுத்துத் “தெருப்பட்டினங்கள்’ விருத்தியடைந்து வருகின்றன. கடற்கரை யையடுத்து மீன் பிடிப்போர் வசிக்கின்றனர்.
ulo 106.
ஆனையிறவுக்கு அணித்தாயுள்ளதும் யாழ்ப்பாணக் குடாநாட்டின் கிழக்கு எல்லேயிலுள் ளதுமான ஒரு பகுதி. கரையையடுத்தும் கடனிரேரியையடுத்தும் மீன் பிடிகாரர் வசிப்பர். கிடைக்கோடு = நெல்வயல். சிறு புள்ளிகள் = தென்னையையோ பனையையோ குறிக்கும்.
94 ஆம் படத்திலுள்ள 8 ஆம் பிரதேசத்தில் தென்னையதிகம். வீடுகளும் அதற்கேற்றவாறு சிதறிக் கிடக்கின்றன. தீவுப்பகுதிகளிலே தண்ணர் உவர்ப்பாயிருக்கும்; குடிதண்ணிர் கிடைப்பது அருமை. 9 ஆம் பிரதேசத்திற் பல தென்னந் தோட்டங்களுண்டு; பெரியபட்டினங்களைத் தவிர மற்றைப்பகுதி களிற் பெரும்பாலும் மீன் பிடிகாரரே வசிக்கிறர்கள்; அவர்கள் சில சம யம் விவசாயஞ்செய்வதுமுண்டு. வட மேற்குக் கரையிலுள்ள மூன்று சிறிய பகுதிகளிற் சனத்தொகை மிகக்குறைவு; குறிப்பாக மன்னருக்கு வடக்கே தற்காலிகமான மீன் பிடிக்குடிசைகளேயுண்டு. 106 ஆம் படத்தில் ஆனை யிறவுக்கு அணித்தாயுள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் ஒரு பகுதி காணப் படுகிறது. இங்கே மக்கள் இருபிரிவாக வசிக்கின்றனர். ஒரு பிரிவு கரைய்ை யடுத்தும் மற்றைப் பிரிவு கடனீரேரியையடுத்து முள்ளது. கடனீரேரிகள் பிர்
 

மக்கட் புவியியல்
Gé/7/07/25 607///
Lo 107.
பொத்துவிலுக்கு வடக்கேயுள்ள கரையடுத்த சிறு குடியிருப்புக்கள்.

Page 189
364 இலங்கைப் புவியியல்
யாணத்துக்கு வசதியானவையாயும், கடலோடு தொடர்புடையனவாயு மிருக்கு மிடத்து மக்கள் கடனிரேரிகளை யடுத்தேயிருக்கின்றனர். கரை யடுத்த மண்கும்பிகளிலே எப்பொழுதும் விவசாயஞ் செய்யமுடியாது. 107 ஆம் படத்தில் கடனிரேரியிலுள்ள மீன் பிடிகாரரின் கிராமத்தைக் காணலாம். இங்கே மக்கள் கோமாரியிலிருந்து கடனிரேரிக் கூடாகச் சென்று அக்க ைரயில் நெற் செய்கையிலீடுபடுவர். தெமித்தாவையிலே தென்னந் தோட்டமுண்டு. இங்கு வீடுகள் கரையையடுத்திருப்பதால் சனங்கள் மீன்பிடிக்க வசதியாயிருக்கும்.
10 ஆம் பிரதேசம் யாழ்ப்பாணக் குடாநாட்டின் பெரும் பகுதியையடக்கி யுள்ளது. இது சிக்கலான வொரு பிரதேசம். 5 ஆம் பிரதேசத்தைப் போலவே இப்பகுதியில் எங்கும் வீடுகள் காணப்படும். இலங்கையிலுள்ள சன நெருக்கமதிகமான பகுதிகளில் இதுவுமொன்று. ஒவ்வோர் அங்குல நிலமும் இங்கே யாதேனுமொரு வகையிற் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மிங்குஞ் செய்கைபண்ணப்படாத தரைகளு முண்டு. இங்கு விவசாயத் திலீடுபடாதவர்களின் வீடுகள் அமைந்திருக்கும். வயல்களுக்கு நீர் கிணற்றி லிருந்து இறைக்கப்படுகிறது. சில இடங்களில் நீர்த் தேக்கங்களைக் காணலாம்; மேற்குப் பகுதியிலேயே நெல் அதிகம் விளைகிறது. வயல்களுக் கிடையிற் பனந் தோட்டங்களும் புகையிலைத் தோட்டங்களுங் காய்கறித் தோட்டங்களுங் காணப்படுகின்றன. யாழ்ப்பாணக் குடா நாட்டிலே தெருக்கள் குறுக்கு மறுக்குமாகச் செல்லும் பகுதிகளிநேக முண்டு ; அவை சிறிய பட்டினங்க ளென அறிந்து கொள்ளல்வேண்டும். தெருக்கரையையடுத்து வீடுகள் அமைக் கும் முறை பெருகி வருகிறது. சிறியனவும் வளைந்து செல்வனவுமான பல தெருக்கள் புராதனமானவை. பிரித்தானிய அரசாங்கம் அண்மையிலே அமைத்ததும் குடாநாட்டை யூடறுத்துச் செல்வதுமான யாழ்ப்பாணம்காங்கேசந்துறை வீதிபோன்ற வீதிகளேயடுத்து ஏராளமான வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இக்கால இருப்புப் பாதையையடுத்தும் வீடுகள் தொடர்ச்சியாக வமைந்திருப்பதைக் காணலாம்.
108 ஆம் படம், குடா நாட்டின் மேற்பகுதியிலுள்ள ஒரு சிறுபாகத்தைக் காட்டுகிறது. நெருக்கமாக வீடுகளுள்ள பகுதிகளில் இது ஒரு சிறு பகுதி யாகும். யாழ்ப்பாணத்தைச் சுற்றியும், பருத்தித்துறைக்குத் தென் மேற் காகவும் வீட்டு நெருக்கம் அதிகம். இப்பகுதிகளில் நிலைமை சிக்கலானது. தமிழ்வீடுகள் மூடிக்கட்டப்பட்டிருக்கினறன என்ற வகையிற் பார்க்குமிடத்து வீதியையடுத்துக் கட்டப்பட்டுவரும் பெருந் தொகையான வீடுகள் ஒருவருக்கு. ஆச்சரியத்தை யுண்டாக்கலாம். படத்திற் காட்டப்பட்ட வீடுகள் சிலவே. யாழ்ப் பாண மக்கள் மிகவுஞ் சிக்கனமாக வாழ்பவர். மிகச் சிறிய நிலப்பரப்பில் பயிர் செய்து வாழக்கூடியவர். சிறுசிறு வகையிலே வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்பவர். யாழ்ப்பாணத்தவர் கொழும்புக்குப் போனல் அவர்களுக் குரிய கடும் உழைப்பின் பயனுகப் பெரும் பொருள் சேகரித்து விடுவர். பின்னர்

மக்கட் புவியியல் 365
படம் 108,
மேற்கு அராலி, வட்டுக்கோட்டையென்னும் கிராமங்களையடக்கிய யாழ்ப்பாணக் குடா நாட்டின் ஒரு பகுதி. கிடைக் கோடுகள் வயல் நிலங்களைக் காட்டும். எஞ்சிய பகுதியில் பனை, புகை யிலை, காய்கறி என்பனவுண்டு. அளவு, அண்ணளவாக 1 மைல் = 3 அங்குலம். கறுப்புச் சதுரம் = வீடு. இரட்டைக் கோடு = தெரு.

Page 190
366 இலங்கைப் புவியியல்
தம்மூருக்கு ஒய்வுபெற்றுக் கொண்டு சென்றுவிடுவர். அதனல் குடி சனங் களிற் பல வகையானவர் காணப்படுவர். ஒய்வு பெற்றுள்ளவர்கள் 8 ஆம் பிரதேசத்திலுள்ள தென்னந் தோட்டங்களிலும், குடாநாடு தவிர்ந்த பெருநிலத்திலுள்ள வயற்காணிகளிலும் முதலீடுசெய்வர்.
இலங்கையிலுள்ள பட்டினவகைகள் ஒன்றுக்கொன்று அதிக வித்தியாச முடையனவன்று. இவற்றுள் முக்கியமானவகை சந்தை கூடும் இடமாகும்.
LЈLo 09.
மாத்தளையின் பெருந்தெரு.
இது ஆதியில் கிராமத்தெருவாயிருந்து பின்னர் வளர்ச்சிபெற்றது. இதையே ஆங்கிலப் புவியியலாசிரியர் “வீதிப்பட்டினமென்பர்’. இந்நகரங் களில் திறந்த சந்தைகள் உண்டு. அயற்கிராமங்களிலுள்ளவர்கள் தமது விளை பொருள்களை இங்குகொண்டுவந்து விற்பார்கள். கிழமையில்வழக்கமாக ஒரு நாளே சந்தை நாளாயிருக்கும். பெரிய நகரமானல் பல நாள்கள் சந்தை கூடும். சமீபகாலத்திலே மூடிய கட்டிடங்கள் இச்சந்தைகளிற் கட்டப்பட் டுள்ளன. பொருள்கள் மழையினுற் சேதமடையாமல் அங்கே வைத்து விற்பது சுலபம். ஐரோப்பிய கிராமங்களிலே சந்தை ஒரு குறித்த மாதிரிப்படி யமைந்திருக்கும். அதைச்சுற்றி முக்கியமான கட்டிடங்கள் காணப்படும்; அத்தகைய மாதிரிப்படியமைந்த சந்தைகள் இலங்கையில் இல்லை. தெரு
 

மக்கட் புவியியல் 367
விலுள்ள கடைகளுக்கிடையே திறந்த வெளியொன்றிருக்கும். இவ்வெளி பட்டினத்தின் அமைப்பையோ கிராமத்தினமைப்பையோ அதிகம் பாதிக்க மாட்டாது. மாத்தளைபோன்ற பெரிய நகரமானல் இரட்டை வீதிகள் காணப் படும். குருனக்கலைப்போல, நகரமானது பலவீதிகள் சேருஞ் சந்தியிலிருக்கு மானல் கடைகளும், அலுவலகங்களும் ஒவ்வொரு முக்கிய வீதியையு மனுசரித்துப் பட்டினத்துக்கு வெளியே சிறுதுரம் பரந்திருக்கும். அத்தகைய பட்டினத்தில் வீதிகள் சந்திக்குமிடத்திலே திறந்த வெளியிற் கச்சேரிக் கட்டிடங்கள் காணப்படும்.
ஐரோப்பிய நகரங்களில் சந்தைக்கு மத்தியிலே விசேடமான இடத்தில் தேவாலயம் அமைந்திருக்கும். கோவில்கள் இந்நகரங்களில் ஒரு சிறப்பான இடத்தைப் பெறுவதில்லை. கண்டி, அனுராதபுரம், வதுளே என்பன இதற்கு விதிவிலக்காகும். வழக்கமாகக கோவில் நகருக்கு வெளியே ஒதுக்கமான இடத்திற் காணப்படும். இது புத்தசமய ஆசாரங்களுக்குப் பொருத்தமானதே. குருமார் தமது சமயானுட்டானங்களைச் செய்வதற்குத் தனிமையும் அமைதியும் நிறைந்த இடததை விரும்புவர்.
துறைமுகங்கள் பெரும்பாலும் பாறைகளையடுத்து ஆழமான நீருள்ள கரைகளிற் கட்டப்படுகின்றன. எனவே, அவை உள்ளூர்ப் பட்டணங்களிலும் வித்தியாசமானவை. பட்டினம், துறைமுகத்துக்கு வற்றவாறு அமைய வேண்டும். அதனலேயே காலி, வெருவலை, தங்காலை போன்ற துறை முகங்களிற் கட்டிடங்கள் ஒழுங்கற்றமுறையிற் சேர்ந்து காணப்படுகின்றன.
வீடுகள் தொகுதியாகவமைந்திருக்கும் முறையும் ஐரோப்பியப் பண்பாட்டி னற் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆரம்பித்த வியாபாரத்தின் பயனுகப்பட்டினங்கள் விரிவடைந்தன. உலக வியாபாரம் பரவப்பரவ, நகரங் களும் விரிவடைவது உலகின் எல்லாப் பாகங்களிலுங் காணக்கூடிய ஒர் அமிச மாகும். பொதுவாகப் பட்டினமானது இரண்டு வகையிற் பாதிக்கப்படுகிறது. ஒரு புறம் பல அலுவலகங்களும் வியாபாரிகள் இல்லங்களுந் தோன்று கின்றன. மறுபறம் அழுக்கடைந்த ஒரு பிரதேசம் உண்டாகிறது. இங்கே வறியவர்கள் வசிப்பதற்குச் சிறு வீடுகளமைகின்றன. இவர்கள் வறிய விவசாயிகள் வீடுகளிலிருந்து துறைமுகத்திற் கூலிக்குப் பிழைப்பதற்காக வரும் எழைகள். உயர்ந்த கூலியை உத்தேசித்தே இவர்கள் நகருக்கு வருகிறர்கள். இவர்கள் சேரிகளில் நெருங்கி வசிப்பது, வெப்பம் பொருந் திய நாடுகளில், மற்றைச் சமூகத்தவருக்கு ஆபத்தாய் முடியும். நகரில் கிணறுகள் கிடையா. கிராமங்களிலுள்ள மலகூட வசதிகளும், சேரிகளிற் கிடையா. நல்ல காற்றுக் கிடையாது. அதனுல் மக்கள் ஆரோக்கியமற்றவரா யிருப்பர். இதன்பயகைப் பரவு நோய்களுண்டாகின்றன. இப்பகுதி களில் மரண விகிதம் மிக அதிகம். அழுக்கு நிறைந்த சூழ்நிலையிற் குழந் தைகள் பிறக்கின்றன; இதனற் சிறுவயதிலேயே பல இறந்துவிடுகின்றன. கிராமங்களில் இந்நிலை கிடையாது. வெப்பமான நாடுகளிலுள்ள பெரிய

Page 191
368 இலங்கைப் புவியியல்
நகரங்கள் அத்துணை நன்மையுடையனவென்று கூறமுடியாது. இட்ை வெப்பவலயத்திலுள்ள துறைமுகச் சேரிகளிலும் இத்தகைய நாடுகளிலுள்ள சேரிகள் மற்றைப் பகுதியிலுள்ளோர்க்கு மிகுந்த கேட்டை விளைவிக்கக்கூடி யன. பெரிய பட்டினங்களிலுள்ள சிறந்த நன்மை, கல்வித்துறையில் ஏற்படும். சனத்தொகை அதிகமானபடியாற் கல்வி வசதிகளுமதிக முண்டு. இதனற் றன் பலர் கொழும்பு, கண்டி, காலி, யாழ்ப்பாணமாகிய நகரங்களுக்குச் செல்கின்றனர். கொழும்பிலுள்ள பல்கலைக்கழகம் பேராதனைக்குச் சென்ற வுடன் கொழும்பிலிருந்து பலர் கண்டிக்கு நகர்ந்துவிடக் கூடும்.
ulo 110.
ஒரு தொழிலாளியின் குடிசை.
ダー
பிரித்தானியர் வீதிகளமைப்பதிலும் இருப்புப் பாதைகளைப் போடுவ. திலும் மிகுந்த கவனஞ் செலுத்தினர். இதனுல் குடியிருப்புக்கள் பல விதத்திற் பாதிக்கப்பட்டன. இருப்புப்பாதை புதிய பல நகரங்களையுண்டாக் கிற்று. உதாரணமாக இருப்புப்பாதை சம்பந்தமான வேலைகள் நாவலப் பிட்டியில் நடைபெறுவதால் அது ஒரு நகரமாயிற்று. முக்கியமான இருப்புப் பாதைச் சந்தியிலிருப்பதால் நானு ஒயாவும் நகரமாக மாறிற்று. வேறுசில
 

மக்கட் புவியியல் 369
நகரங்கள் இருப்புப் பாதையையடுத்துப் புதிதாகவமைந்தன. சில, புகையிரத நிலையங்களுக்கணித்தாகப் புதிய இடத்தைப்பெற்றன. உதாரண மாக கட்டுகாசுத்தோட்டை, மொறட்டுவை முதலிய பட்டினங்களைக் கூறலாம். பல இடங்களுக்குச் செல்லும் வீதிகள் சந்திக்குமிடமாயுள்ள கம்பள போன்ற நகரங்களின் முதன்மையும் மோட்டர் வசுவண்டிச் சேவையினல் அவ்வாறே உயர்ந்தது. பெருந் தெருக்களையடுத்துப் பொதுத்தொழில் அலுவற் பகுதித் தொழிலாளர் புதிதாகக் குடியேறி யிருப்பதைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம்.
பல பட்டின விசாலிப்புத் திட்டங்கள் இப்போது ஆலோசனையிலிருந்து வருகின்றன. விசேடமாகக் கொழும்பு நகர விசாலிப்புத்திட்டத்தைக் குறிப் பிடலாம். இதிற் பல இடர்ப்பாடுகளுண்டு. நகரின் பின்புறம் வெள்ளம் பரவுந் தன்மையுடையது. அன்றியும் கொழும்புத் துறைமுகத்தை யடுத்து அழுக்கு நிறைந்த சேரிகளுண்டு. எனினும் வருங்காலத்திற் பல மாற்றங்களிங்கே யுண்டாகுமென்பதற் கையமில்லை.
14--J. N. B 70576 (11157).

Page 192
ஐந்தாம் பகுதி
சுருக்கம்
ஐந்தாம் பகுதி-முதலாம் அத்தியாயம் இலங்கையின் இயற்கைப் பிரதேசங்கள்
இலங்கை, அரசியலையொட்டி ஒன்பது மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டி ருக்கிறது. இவற்றினெல்லைகள் சிலசமயம் ஆறுகள்போன்ற இயற்கை உறுப்புக்களாயும், சிலசமயம் நிர்வாக வசதிக்கேற்றபடிசெயற்கையெல்லை களாயுமிருந்து வருகின்றன. இம்மாகாணங்களைத் தனியாக விளக்குவது அவசியமற்ற சிக்கல்களே யுண்டாக்குவதோடு கூறியது கூறல் என்ற குற்றத் துக்குள்ளுமடங்கும். எனெனில் இவ்வெல்லைகள் டெரும்பாலும் ஒத்த இயற்கை நிலைமைகளுடைய பிரதேசங்களுக்கூடாகச் செல்லுகின்றன. புவியியலாராய்ச்சிக்கு, இலங்கையைப் பல இயற்கைப் பிரதேசங்களாகக் பிரிப்பது நன்று. இப்பிரதேசங்களிற் பல பெளதிகவியல்புகளும் வேறு
பண்புகளும் ஒத்தனவாயிருக்கின்றன. பெளதிகப்புவியியல் மக்கட்புவியியல் என்பவற்றின் பலவகை அமிசங்களே இந்நூலிற் பெரும் பாலும் ஆராயப்பட்டுள்ளன. இவ்வாராய்ச்சியின் பயனகக்கிடைத்த
உண்மைகளேச் சேர்த்து இலங்கையைப் பற்றிய ஒரு முழுத் தோற்றத்தைப் பெறவேண்டும். அதன்மூலம் ஒத்த இயற்கை அமைப்புள்ள பல பிரதேசங் களில் வாழும் மக்களின் அபிவிருத்திகளைப் பற்றி அறியலாம்; இந்த அத்தியாயத்தைப் படித்தபின்னர் இயற்கைப் பிரதேசங்களின் படத்தையும், 46 ஆம் பக்கத்திலுள்ள அரசியற் பிரிவுகளேக் காட்டும் படத்தையும் ஒத்துப் பார்க்குமாறு மானவரைக் கேட்டுக்கொள்ளுகிருேம்.
பெளதிக வியல்புகளையும் எனை முக்கியமான அமிசங்களையும் காட்டும் பரம்பற்படங்களே ஒப்பிட்டு ஆராய்ந்தபின்னரே ஒரு தேசத்தின் இயற் கைப் பிரதேசங்களைக் காட்டும் படத்தை அமைக்கலாம்; அந்த அமிசங்களுள் முக்கியமானவை பின்வரும்ாறு:- அமைப்பு (அதாவது, புவிச்சரிதவியல்), தரைத்தோற்றம், வருடமழைவீழ்ச்சி, பருவகால மழைவீழ்ச்சி, வெப்பநிலை, இயற்கைத்தாவரம், மக்களினம். ஒளிபுகவிடுந்தாளில் இப்பல்வேறு அமிசங் களையுந் தனித்தனிப் படங்களிற் குறிப்பிட்டு எல்லாவற்றையும் ஒன்றன் மேலொன்றக அடுக்கினல் சில பகுதிகளில் பல அமிசங்கள் பொருந்து
370

சுருக்கம் 37.
வதைக்காணலாம்; எல்லா அமிசங்களும் பொருந்தாவிட்டாலும், பெரும் பாலானவை பொருந்தக்காணலாம். ஒரிடத்தில் இவ்வாறு பொருந்தி யிருக்கும் அமிசங்கள் பலவானல் அப்பகுதி, மக்களைப் பொறுத்தவரையில் விசேடமுடையதாயிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் மக்களின் தொழில்கள் ஒவ்வொரு விதமானவையாயிருப்பது எதனலென்றும், பெளதிகச் சூழ் நிலையிஞல் மனிதன் எவ்வளவுதூரம் பாதிக்கப்படுகிறன் என்றும் இயற்கைப் பிரதேசங்களைக் காட்டும் படத்திலிருந்து இலேசாக அறிந்துகொள்ளலாம்.
தேவையான படங்களே வைத்துப் பார்த்தாற் பின்வரும் விடயங்கள் தெரியவரும்:-
(1) பெளதிகவமைப்பைப் பொறுத்தவரையில் இலங்கை குறிப்பிடத் தக்க வகையிலொரே தன்மையுடையதாயிருக்கிறது. எங்கும் பளிங்குப் பாறைக் கற்களுண்டு. வடமேற்கிலுள்ள சுண்ணும்புக்கற் சமவெளியைத் தவிர மற்றைப்பகுதி யெல்லாம் இப்பாறையாலமைந்ததே. மக்கட் புவியியலில் இந்த அமிசத்தைக் காணலாம். யாழ்ப்பாணக் குடாநாடு தனிப்பட்ட ஒரு பகுதி, இலங்கையின் எனைப்பகுதியிலுள்ள மக்களிடையே இனவேறுபாடுகள் காணப்பட்டாலும், வாழ்க்கை ஏறக்குறைய ஒரே தன்மையுடையதாக விருக் கிறது. அதற்குக் காரணம், மண்ணிலும் கணிப்பொருள் வளங்களிலும் நீரோட்டத்திலும் ஒற்றுமையிருப்பதே. இது பளிங்குருப்பாறையாலுண்டான நேரடியான விளைவாகும்.
(2) தரைத்தோற்றத்தைப் பொறுத்தவரையில் இலங்கையில் மூன்று பிரிவு கள் உள. (அ) கரையோரத் தாழ்பூமி (ஆ) உள்நாட்டுத் தாழ்பூமியும் மேட்டுப் பாங்கான நிலமும் (இ) மலைநாடு. மலைநாடு பல மலைத்தொடர்களால் அநேக பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதனல் ஒவ்வொரு பிரிவுந் தனித்தன்மை பெற்றுள்ளது. இப்பிரிவுகள் மலைநாட்டுப்பிரிவு சம்பந்தமான விளக்கப்படத்திற் காட்டப்பட்டுள்ளன.
(3) வருடச் சராசரி மழைவீழ்ச்சிப் படத்திலே பின்வருமாறு ஐந்து பிரிவுகளுண்டு- (அ) (ஆ) இவ்விரு பிரதேசங்களிலும் மழைகுறைவு; இவை புத்தளம், அம்பாந்தோட்டைப் பகுதிகளாகும்; வருடத்தில் இப்பகுதிகளில் 50 அங்குலத்துக்குக் குறைவாகவே மழைபெய்கிறது. (இ) வடக்கேயும் கிழக்கேயுமுள்ள தாழ்பூமிகள்; இங்கே 75 அங்குலத்துக்குக் குறைவான மழையேயுண்டு; இப்பகுதிகளில் நீர்ப்பாசனமவசியம்; (இம்முப்பிரிவுகளுமே வறண்டபிரதேசம் என வழங்கப்படும்) (ஈ) 75 அங்குலச் சமமழைக்கோட்டுக் குட்பட்ட பூமி: இங்கே நல்ல மழையுண்டு. (உ) மிக அதிகமான மழை யுள்ள பிரதேசம். இது சிவனுெளிபாத மாவட்டத்தைச் சேர்ந்தது. 150 அங்குலச் சம மழைக்கோட்டுக்குட்பட்டது.
(4) பருவமழைப் பரம்பல் இப்பிரிவுகளை மேலும் பிரிக்கிறது. வறண்ட பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. (அ) வடக்கிலும் கிழக்கிலுமுள்ள கரைப்பிரதேசம். இங்கே ஒரு பருவத்திலேயே மழைபெய்கிறது. (ஆ)

Page 193
372 இலங்கைப் புவியியல்
எஞ்சியபகுதி ; இங்கே இரண்டு பருவமழையுண்டு, மழைவீழ்சியுமதிகம். ஈரலிப்புப் பிரதேசமும் இரண்டாகப் பிரிக்கப்படும். (அ) ஈருயர் மழை வீழ்ச்சி யுள்ள பகுதி (ஆ) தென்மேற்குப் பருவக்காற்றல் மழைபெறும் மலைப்பிரதேசம் (இ) வடகிழக்குப்பருவக்காற்றல் மழை பெறும் மலைப்பிர தேசம். (ஈ) மூன்று பருவத்தில் நல்லமழை பெறும் மலைபிரதேசம்.
(5) வெப்பநிலைப் படம் இலங்கையை இரண்டாகப் பிரிக்கிறது. (அ) மலை நாட்டைச் சேர்ந்த குளிரான பகுதி. இங்கே சராசரி வெப்பநிலை 75° ப. ஆகும். (ஆ) வெப்பமான தாழ்பூமி.
(6) இயற்கைத் தாவரப் படத்தில் விசேடத் தன்மையுள்ள பகுதிகளில்லை. பயிர்ச்செய்கையின்றியே தீவின் பெரும்பகுதி மத்திய கோட்டுக்காடுகளால் மூடப்பட்டிருக்கும். காட்டின் தன்மை மழை வீழ்ச்சியையனுசரித்து மாறு படும். வறண்டபகுதிகளிலே காடுகளேயழித்தமை காரணமாக மேற்பரப்பு வறண்டு தாவரங்களில் வித்தியாசத்தைக்காட்டுகிறது. சிலபகுதிகளிற் காடுகள் கிடையா. இவை வருமாறு: (அ) யாழ்ப்பாணமாவட்டம். இங்கே புதரும் முட்செடிகளுமுண்டு. அடிமண் நீர்கசியுந் தன்மையுள்ள சுண்ணும்புக் கல்லாயிருப்பதே இதற்குக் காரணம். (ஆ) புத்தளம் அம்பாந்தோட்டை யாகிய பகுதிகளிலுள்ள வறண்ட பூமி. இங்கும் புதர்களுண்டு. (இ) தலாவைப்பகுதி (ஈ) பத்தனைப்பகுதி. இவை பெரும்பாலும் பெளதிக வமைப்பு, மழைவீழ்ச்சி, வெப்பநிலை ஆகிய காரணங்களாலேயே வேற்றுமை யடைகின்றன.
(T) மக்களினத்தின் பரம்பலும் ஒவ்வொரு பகுதியின் தனித்தன்மையைப் பெரிதும் பாதிக்கின்றது. உதாரணமாக யாழ்ப்பாணச் சுண்ணும்புக் கற் பகுதியில் பெரும்பாலும் தமிழர் வாழ்கின்றனர். அப்பகுதி மற்றைப்பகுதி களிலும் தனித்தன்மை வாய்ந்த தென்பதை இது வலியுறுத்துகிறது. மக்களினச் செறிவைக்காட்டும் படத்தில் மூன்று பெரும்பகுதிகளுண்டு (அ) தாழ்பூமிச் சிங்களர் (ஆ) மலைநாட்டுச் சிங்களர் (இ) இலங்கைத்தமிழர். பெளதிகவமைப்பு, தரைத்தோற்றம், காலநிலை என்பவை முக்கியமானவை. இனம் அவற்றைப் போல முக்கியமானதன்று. ஒர் இனத்தவர் ஒரு பகுதியில் வாழ்வதால் அங்கு குறிப்பிட்ட சிலவியல்புகள் தோன்றுகின்றன. அதனல், அப்பகுதியின் தனித்தன்மைமேலும் வலியுறுகின்றது.
இயற்கைப் பிரதேசங்களின் படத்தை யமைக்கும் பொழுது மற்றுமோர் அமிசத்தைக் கவனிக்க வேண்டுமென்று சில அறிஞர் கூறுவர். அதாவது பிரதேசங்களைச் சென்றடையக்கூடிய தன்மையும், சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள முக்கியகுடியிருப்புக்களுக்கும், குறித்தபிரதேசங்களுக்கு முள்ள தொடர்புமாகும். நாட்டின் உயர்வுதாழ்வை யனுசரித்தே ஒரு பிரதே சத்தைச் சென்றடையக்கூடியதன்மை நிச்சயிக்கப்படுகிறது. மலைநாட்டை இலேசாகச் சென்றடைய முடியாதபடியால் அது ஒதுங்கிக் கிடப்பதோடு

சுருக்கம் 373
ஒருவகையான தனித்தன்மையையுங் கொண்டிருக்கிறது. கரைப்பகுதிகளிற் தனிப்பட்ட சிலகுடியிருப்புக்கள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்களின் முன்னேற்றத்திற்கு கடலை எளிதிற் சென்றடையக்கூடிய வசதியிருப்பது அத்தியாவசியம்.
இயற்கைப் பிரதேசப்படமானது ஒரு விடயச் சுருக்கமென்ற முறையிலேயே பயன்படுகிறது; அதை அமைத்துக் கொண்டு செல்லச் செல்லப் புவியியலறிவு விரிவடையும். இப்படம் மழை வீழ்ச்சியையோ, வெப்ப நிலையையோ காட்டும் படம் போன்றதன்று. இதிலுள்ள சில அமிசங்களின் முதன்மை பற்றிப் புவியியலாராய்ச்சியாளரிடையே அபிப்பிராய வேற்றுமையிருக்கலாம். கீழே தரப்படும் இலங்கையின் இயற்கைப் பிரதேசப்படம் முடிவான படமென்று கூறுதற்கில்லை. அது குறிப்பாகச் சில விடயங்களை எடுத்துக் கூறுகிறது. பலபட்ட அமிசங்களின் சேர்க்கைகளைப்பற்றி இந்நூலாசிரியர் கொண்டுள்ள கருத்துக் கள் சுருக்கமாக இங்கே காட்டப்படுகின்றன. இவ்வளவில் மாணக்கன் மேலே கூறியவாறு கிடைக்கக்கூடிய தகவல்களைச் சேர்த்துத் தானகவே ஒரு படத்தை அமைக்க முயற்சி செய்யவேண்டும். கீழே காணும் படத்திற் குறிக்கப்பட்ட முக்கியமான அமிசங்களின் சுருக்கம் இக் குறிப்புக்களிற் காணக்கிடக்கின்றது.
(1) தென் மேற்குத் தாழ்பூமி: இதிற் பெரும் பகுதி கடல் மட்டவளவில் அமைந்துள்ளது. 600 அடிக்கு உயரமான நிலத்தை இங்கு காண்பதரிது. பளிங்குருப் பாறைகளேத் தடித்த செம்பூரான் கற்படையும் வண்டற் படிவும் மூடியிருக்கும். ஆறுகளின் வெள்ளச் சமவெளிகளிலேயே வண்டற் படிவுகள் அதிகமுண்டாகின்றன. காற்றினல்வீசப்பட்ட மனால் உள்ளூரிற் சிறிது தூரம்வரை பரந்திருக்கும். கரையோரத்தில் தென் மேற்குப் பருவக்காற்றினலுண்டாகும் மழை அதிகம். இப் பகுதியின் வருட மழை வீழ்ச்சி 75 அங்குலந் தொட்டு 150 அங்குலம் வரையுண்டு. சமவிராக் காலத்தில் மேலுமதிக ம்ழையுண்டு. எங்குந் தேவைக்கதிகமான மிழை ; அதனல் வெள்ளப் பெருக்குண்டாகும்; வெள்ளத்தைக்கழியச் செய்வதே பெரிய பிரச்சினையாகும். இங்கே எல்லாப்பகுதியிலும் விவசாயமுண்டு; பிரதானமான பயிர் தென்னே. பெரும்பகுதி தென்னந் தோட்டமாயிருக்கும்; விசேடமாகக் கரையையடுத்த எறிமணற்கும்பிகளில் தென்னையதிகம். வீட்டு உபயோகத்துக்குத் தேவையான காய்கறி பழம் முதலியனவும், நெல்லு, இறப்பர், கறுவா முதலியனவும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கையில் மிகக்கூடிய சன நெருக்கமுள்ள பகுதி இதுவாகும். குடிப்பரம்பல் பெரும் பாலுஞ் சீராக அமைந்திருக்கும். பெரிய நகரங்கள் முக்கியமான ஆற்று வாயிலையடுத்தும், கடனீரேரியையடுத்தும் அமைந்துள்ளன. 6) {{0|6||9ہب(.J கொழும்பு, நீர்கொழும்பு, பாணந்துறை, களுத்துறை, பெந்தோட்டை அம்பலாங்கொடை, காலி, மாத்துறை, தங்காலை என்பவற்றை யடக்கும்.

Page 194
74
இலங்கைப் புவியியல்
b மது bit G5گی C) : ஜ
3 Φ - κυ/7 σλα βλάλμ SÒN 4 ஜாவா வடி திசம
5 உஆணுக ஜ0 பிரதேசம் Q ոնց՝ 6 ಖ್ವ 42-- 4 ہے۔ZB ・ 62 7 பிதுரு மஜ டுகடு ཊི་ தேசம் 8 கனடி ட/ z ý2 - Z Sỳ” e a'r ar 9 இதனசு பாகைத் தொடர்
M ീ :ീ♫g
V 2 24; தே Zo* Öø V ーミふ st V
V S. V Sỳ W N2* W W ܫ ۶لا
வடமத்திய மெட்டு நிலமம்,
தாழ் பூமியும்
స్త్రా *
ནི་ AV లై
Qs M VA M? V s W È 5 ميجي 2ల 《 osపల్లి صهم wed
ఈ్క V
V
V /As/aa/l صے Z0 ۶ جری/Z۶
等
es
KSA محس
స్త్రి 6 རྒྱུ་ ്
영
ws
ULilo 111
இலங்கையின் இயற்கைப் பிரதேசங்கள்.
 

சுருக்கம் 375
ஐரோப்பியர் செல்வாக்கு இப்பகுதிகளில் அதிகரித்தமையாற்ற னரிங்கே குடிசனநெருக்க மேற்பட்டதெனலாம். மேலும், கடந்த முந்நூறு வருட
மாகக் கொழும்பு உலக வியாபாரத் துறையாக வளர்ச்சியடைந்து வந்தமையு மொரு காரணமாகும். எனக் கரைப் பட்டினங்களும் ஐரோப்பிய வியாபாரத்
துடனுே, இந்திய வியாபாரத்துடனே, கரையோரக் கப்பற் பிரயாணத்துடனே,
தொடர்பு கொண்டவை. காலி, மாத்துறை, களுத்துறை, நீர்கொழும்பு,
ஆகிய பட்டினங்கள் இடச்சுக்காரரதும் போத்துக்கேயரதும் தொடர்பைப் பெரிதும் பெற்றிருந்தன. எனவே இவ்விரு சாதியாரின் செல்வாக்கை இந்
நகரங்களிற் காணலாம். இப் பட்டினங்கள் இன்று இந்தியாவுடன் சிறு வியா
பாரம் நடத்துகின்றன. உலக வியாபாரத்தில் இவற்றுக்குத் தொடர்பு குறைவு. வெருவலை, கரைச் சோனகரின் வியாபாரத்தோடு நெடுங்காலமாகத் தொடர்பு பெற்றிருந்தது. இக்கரைப் பகுதியில் மீன்பிடித் தொழில் நடை பெறுகிறது. இது மிகமுக்கியமான தொழில். உள்ளூரிற் பெரிய நகரங்கள் கிடையா. வியாங்கொடை, கம்பகா, உடுகமம், எல்பிட்டி, வத்தகமம் போன்ற கிராமச் சந்தைத் தலங்களுண்டு. இவை ஆங்காங்குக் காணப் படுகின்றன.
இப் பிரதேசம் எங்கும் ஒத்த தன்மையுடையதாகக் காணப்படும். எங்கும் தென்னை மரங்கள் உண்டு. தாழ்பூமிச் சிங்களரே எங்குங் காணப்படுகின் றனர். அதனல் மக்கள் செய்யுந் தொழில்களும் அவர்களின் நடை முறைகளும் ஒரே மாதிரியமைந்திருக்கும். கொழும்பும் அதன் அண்மையி லுள்ள பிரதேசமும் தனிப்பட்ட இயற்கைப் பிரதேசமாகக் கொள்ளப் படலாம். ஏனெனில் அதைப் போன்ற பகுதி இலங்கையில் வேறெங்குங் காணக்கிடையாது. இதற்குக் காரணம், பிரித்தானியக் கப்பற்போக்குவரத்து அதிகரித்ததும், தேயிலை, இறப்பர்த் தொழில் பெருகியதுமாகும். எனவே, துறைமுகத்தையடுத்து எராளமான சனங்கள் வந்து குடியேறி விட்டனர். இங்கேயுள்ள சூழ்நிலை போல இலங்கையில் வேறெப் பகுதி யிலுங் காணமுடியாது. மேலும் ஐரோப்பியப் பண்பாடு இங்கேயே மற்றைப் பகுதிகளிலும் அதிகமாகக் காணப்படுகிறது. பாய்க் கப்பலிற் பிரயாணஞ் செய்த காலத்தில், சிறிய துறைமுகங்களிலுங் கப்பல்கள் வந்து நங்கூரம் பாய்ச்சக் கூடியதாயிருந்தது. பாய்க்கப்பலில் வந்த ஐரோப்பியர் தீவின் சகல பகுதிகளிலுள்ள துறைமுகங்களையும் பயன்படுத்தினர். இந் நிலைமை நீடித்திருக்குமானல் இலங்கையின் சரித்திரம் வேறு விதமாக வளர்ந் திருக்கும். பாய்க் கப்பலுக்குப் பதிலாகப் பெரிய நீராவிக் கப்பல்கள் தோன்றின. அவை சாதாரணமான துறைகளில் வந்து தங்கமாட்டா. எனவே, பெருஞ் செலவில் அகன்ற, நவீன சாதனங்களுள்ள துறை முகங் களே யமைக்கவேண்டியேற்பட்டது. ஐரோப்பியரின் கப்பல்கள் முன்னர் வந்தணைந்த இலங்கைத் துறைமுகமொவ்வொன்றிலும் இவ்வாறமைப்பது முடியாத காரியமாயிற்று. எனவே, வியாபாரிகள் காலி, மட்டக்களப்பு, திருக் கோணமலை, நீர்கொழும்பு போன்ற துறைகளுக்குப் போவதை விடுத்துக்

Page 195
376 இலங்கைப் புவியியல்
கொழும்புக்கே வந்தனர். கொழும்பில் அக்காலத்திற் பெரிய துறைமுக மில்லை. சோனக வியாபாரிகளுடைய பாய்க் கப்பல்கள் வந்து தங்குவதற்கு அது ஒரு துறையாக விருந்தது. பின்னர் போத்துக்கேய வியாபாரிகள் கோட்டையர சனிடம் அனுமதி பெற்று அங்கே ஒரு வியாபாரத்தானமமைத்தனர். இந்த அனுமதியைப் பயன்படுத்திக் கொண்டு போத்துக்கேயர் அங்கே ஒரு கோட்டையையும் கட்டினர். கோட்டை கட்டிய அதே இடத்திற்றன் இன்று கடைகளும் அரசாங்கக் காரியாலயங்களு மிருக்கின்றன. அந்நிய தேசத்த வருடன் அதிக தொடர்பு பெற்ற கொழும்பு வாசிகள் தீவின் எனப்பகுதி களில் வசிப்பவரிலுஞ் சற்றே தனிப்பட்ட பண்புடைய வராயினர். அவர்களு டைய பொருளாதார வாழ்க்கையும் வித்தியாசமானது. அவர்கள் தமது உணவு உடை என்பவற்றை உற்பத்தி செய்வதில்லை. வியாபாரம் அரசாங்க உத்தியோகம் ஆசிரியத் தொழில் என்பவற்றிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். பணம் அவர்களுக்கு அதிகமாகக் தேவைப்படும் ; அவர்களிடம் உணவு உற்பத்தி செய்வதற்கு நிலமில்லை. எனவே பணமாக அவர்கள் அதிக ஊதியம் பெறவேண்டியிருக்கும், நகர வாசிகளுக்கும் கிராம வாசிகளுக்கு முள்ள வித்தியாச மிதுவே. இலங்கையிலுள்ள மிகப்பெரிய நகரம் கொழும்பு. ஆதலால் அப்பகுதியை விசேட இயற்கைப் பிரதேசமாகக்கொள்ள வேண்டும். ஐரோப்பியர் கொழும்பைப் பிரதான நகராகத் தெரிந்தெடுத்த தற்குக் காரணம், அங்கிருந்து மலைநாட்டுக்குச் செல்வதற்கு வழிகள் இருந்த மையே. காலியிலிருந்து மலைநாடு செல்வது முடியாதகாரியம். ஏனெனில், சப்பிரகமூவாச் சமாந்தர மலைத்தொடர்களைக் கடந்து செல்லவேண்டும் ; பின்னர் சிவனெளிபாத மலைச்சுவரைத் தாண்டவேண்டும். கொழும்பி லிருந்து போவதாஞல் சீதாவாக்கை மூலம் (இக்கால அவிசாவலை) கழனிகங் கைப் பள்ளத்தாக்குக் கூடாகக் கினிகத்தேனைக் கணவாயையடையலாம். அல்லது கடுகளுவைக் கணவாய் மூலம் கண்டியையடையலாம். மேலும் வடக்கே மன்னருக்கும் தெற்கே காலிக்குஞ் செல்லும் கரைப்பாதைகளைக் கொழும்பிலிருந்து ஆட்சி செய்யலாம். ஆதியில் இங்கு வந்திறங்கியவர்க ளுக்குக்கொழும்பின் முதன்மைநிலை தெரியவில்லை. ஆனல், நாட்செல்லச். செல்லத் தீவின் இயற்கையமைப்பை யறிந்த பின்னர் ஐரோப்பிய வல்லரசு கள் மூன்றும் கொழும்பை வாய்ப்பான நிருவாகத்தானமாகக்கொண்டன. 20 ஆம் நூற்ருண்டில் கொழும்பு அதிசயிக்கத்தக்க முறையில் முன்னேறி யுள்ளது. உலக வியாபாரம் அதிகரித்ததல்ை உலகத்துப் பல்வேறு நாட்டுத் துறைமுகங்களு மபிவிருத்தியடைந்தே வந்துள்ளன. கொழும்பும் அவ் வகையில் வளர்ச்சி பெற்றது. இப்பகுதியில் வெள்ளப் பெருக்கு உண்டானல் ஏறத்தாழ 15,000 சனங்களுக்குப் பெரிய ஆபத்துண்டாகும். அதையும் பொருட்படுத்தாது மக்கள் துறைமுகப் பிரதேசத்தையடுத்துக் குடியேறியே வருகிறர்கள்.

சிநல்வயல்
V \
V நெலவயல
V
s
叉フ一ー
ULD 1 12.
கொழும்பு அமைந்துள்ள இடம். வடக்கேயும் தென் கிழக்கேயும் குறியிட்ட இடங்கள் சதுப்பு நிலம், நகருக்குப் பின்புறத்தில் விசாலமான நெல்வயல்களிருப்பதைக் கவனிக்க கழனிகங்கையின் வெள்ளச் சமவெளியில் சதுப்பு நிலமும், நெல்வயல்களு மிருந்து ந்கர் உள்ளே விசாலிப்பதற்குத் தடை செய்கின்றன. எனவே, வடக்கு நோக்கியும் தெற் நோக்கியும் கரையையடுத்துப் பட்டினம் பாரிக்கின்றது. நெல்வயல்களுக்கும் கடற்கரைக்
மிடையிலுள்ள பகுதிகள் முழுவதிலும் வீடுகள் நெருக்கமாக அமைந்திருக்கின்றன.

Page 196
፵78 இலங்கைப் புவியியல்
(2) சப்பிரகமூவா மலைநாடு: இதற்கும் மேலே கூறிய பகுதிக்கும் பல துறையில் வேற்றுமையுண்டு. தென் மேற்குத் தாழ்பூமி சன நெருக்கம் மிக்கது. சப்பிரகமூவா மலைநாடு மனிதசஞ்சாரங் குறைந்ததும், காடுகள் நிறைந்ததுமாகும். காலநிலையில் அதிக வித்தியாசமில்லை. தென் மேற்குப் பருவக்காற்று மலைகளிற் படிவதால் மலை நாட்டில், மேலதிகமான இயற்கைத்தோற்ற மழை உண்டு, ஈரலிப்பும் அதிகம். தெனியாயாவுக்கும் இரக்குவானைக்கு மிடையிலுள்ள உயர்ந்த பகுதி மிகக் குளிருள்ளது. ஆங்கிலத் தோட்டத் துரைமார் இங்கே பல தேயிலைத் தோட்டங்களே வைத்திருக்கிருர்கள். எஞ்சிய பகுதி ஈரலிப்பான காட்டுப்பிரதேசம். இது யானைகளுக்கு வாய்ப்பான இடம். வண்டல் படிந்த பள்ளத்தாக்குக்களிலேயே நெற் செய்கையுண்டு. இவற்றை யனுசரித்துக் கிராமங்களுண்டு. பழங்காலத் திலும் இங்கே சனங்கள் அதிகமாகக் குடியேறியிருந்ததாகத் தெரியவில்லை. பகைவரிடமிருந்து முதுகு காட்டி யோடுவோர் இப்பகுதிகளில் வந்து ஒளித்திருந்தனர். இங்குள்ள குன்றுகளில் மேலும் பல இறப்பர்த் தோட்டங் களும் தேயிலைத் தோட்டங்களு முண்டாகலாம்.
(3) அம்பாந்தோட்டை வறண்ட பிரதேசம் : இப் பிரதேசம் 50 அங் குலச் சமமழை வீழ்ச்சிக் கோட்டினல் துண்டிக்கப்படுகிறது. இங்கே மழை குறைவு. வருடத்திற் சொற்ப மழை பெய்தபோதிலும் அது வெகுவிரை வாக நீராவியாய் மாறிவிடுவதால் பயிர்செய்வது கடினம். முட்புதரும் வறண்ட காட்டுமரமுமே இங்கு அதிகம் ; ஆஞல், வடக்கே கருங்காலி, முதிரைபோன்ற மரங்களதிகமுண்டு. குளங்கள் நல்ல முறையிலிருந்த காலத் திலே இப்பகுதியிற் குடிசனமதிகமாயிருந்தது. வளவை கங்கைத் தொகு தியில் பல குளங்கள் கட்டப்பட்டிருந்தன. கடற்கரையையடுத்துள்ள பகுதிகளில் நிலம் உவராகவிருக்கும். விசேடமாக, உப்புப்பாத்திகளுள்ள பள்ளங்களில் உவர்ப்பு மிகவதிகம். உப்புச்சார்ந்த மண் பல பயிர்களுக்குக் கூடாது. அதனல், விவசாயத்துக்கு இங்கே வசதியில்லை. உவர் நிலத்திலுண் டாகக் கூடிய பயிர் பருத்தி. அது பெரும்படியாக இலங்கையில் என்றுமே விளைவிக்கப்படவில்லை. அரசாங்க விவசாயப் பகுதி இங்கே பருத்தியைச் செயன்முறையில் வளர்த்துப் பார்த்து வெற்றி கண்டுள்ளது. இலங்கையிற் செடிகள் அதிகம் இலை விட்டுவளர்வது இயல்பு ; அதனுல் இவை காய்ப்பது குறைவு. அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள விவசாயிகள் அரசாங்க நிலத்தை வாடகைக் கெடுத்து அதிலே பருத்திப் பயிர் செய்கிருர்கள். அரசாங்கம், அப்பயிரை விருத்தி செய்யும் முறையில், அவர்களுக்கு ஆலோசனை கூறி வருகிறது. அம்பலாந்தோட்டையில் தக் காளி முதலிய பயிர்கள் செயன்முறையிற் செய்கை பண்ணப்பட்டு வருகின்றன. மிளகாய், வேர்க் கடலை யென்பனவும் செய்கை பண்ணப் படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற் புகையிலை நல்ல பலனைக் கொடுத்திருப்பதால் இப்பகுதியிலும் அதைச் செய்யலாமென யோசனை கூறப்படுகிறது. இப்பிரதேசத்தின் சில பகுதிகளிற் பழங்

சுருக்கம் 379
காலத்திலே மக்கள் நெருக்கமாகக் குடியேறி யிருந்தனர். கிரிந்திக்குச் சில மைல் மேற்கேயுள்ளதும் கரையையடுத்ததுமான மாகமம் கி. மு. நாலாம் நூற்றண்டிலே நிறுவப்பட்ட கிராமம். இது நெடுங்காலமாகப் பிரசித்தி பெற்ற கிராமமாய் விளங்கிவந்திருக்கிறது. பல விக்கர் நிலங்களுக்கு நீரை வழங்கக் கூடிய மூன்று மிகப் பெரிய குளங்களாற் சூழப்பட்டுள்ள திசமகாருமை, பெளத்த கோவில்களும் தூபிகளுங் கட்டப்பட்ட காலத்திலே பெரியதொரு கிராமமாய் விளங்கிற்று. ஊவாவிலிருந்து திசமகாருமைக்குச் செல்லும் வீதிமருங்கிலும் நெருக்கமாக வீடுகளிருந்தன வென்றும், ஒரு சேவல் வீட்டுக் கூரைகள்மீது பாய்ந்து கொண்டே ஊவாவிலிருந்து திசமகா ருமைக்குச் செல்லக்கூடுமென்றும் ஒரு பழங்கதையுண்டு. இன்று இங்கே யிரண்டு வகையான தொழில்களுண்டு. உப்பு வியாபாரம் மிகப் பழமை யானது. அம்பாந்தோட்டையிலு மதையடுத்துள்ள பகுதிகளிலும் இவ்வியா பாரமுண்டு. அத்துடன் மீன் பிடிக்குந் தொழிலுமுண்டு. பழங்காலந்: தொட்டே இந்நகர், கரை வியாபாரத்தோடு தொடர்பு பெற்றிருந்தது. கரை யையடுத்துள்ள சிறிய துறைகளுள் இதுவுமொன்று. சிறிய பாய்க்கப்பல்கள், நாள் முழுதும் பிரயாணஞ் செய்து, பின் துறையையடையும் சிறு துறைகளுள் இதுவும் ஒன்று. மாகமத்துக்கும் திசமகாருமைக்குஞ் சமீபமாயுள்ள துறைமுகம் இதுவாகும். இப்பிரதேசத்திலுள்ள மற்ருெரு சனப்புழக்கழ கதிர்காமயாத்திரைக் காலத்திலுண்டாவது. கதிர்காமத்துக்குச் செல்லும் பாதை முழுவதும் மக்கள் நடமாட்டமிருக்கும். அரசாங்கம் வெள்ளவாயாவி லிருந்து ஒரு வீதியமைத்திருக்கிறது. அதற்குச் சமாந்தரமாகப் புத்தளே யிலிருந்து காட்டுமார்க்கமாக மற்றெரு வீதியுண்டு. இதன் வழியாகவும் அநேக யாத்திரிகர் கதிர்காமத்துக்குச் செல்வர். இது புராதனமான பாதை. இப்பாதைகளில் யூன், யூலை, ஒகத்து மாதங்களிற்றன் நடமாட்ட மதிகம். யாத்திரைக் காலங்களில் சிறு வியாபாரிகள் வீதி நீளம் கடைபோடுவார்கள். திருவிழா முடிந்ததும் கடைகள் மறைந்து விடும். சன நடமாட்டமு மில்லாமற் போகும். குமுக்கன் ஒயாப் பள்ளத்தாக்கிலேயுள்ள நிலத் திற் பெரும் பகுதி இன்று சன சஞ்சார மற்றிருக்கிறது. முன்னர் சனங்கள் குடியேறியிருந்தார்களென்பதற்குரிய சான்றுகள் சிலவேயுள. குளங்களும் இங்கு குறைவு. திசமகாருமைக்கு மேற்கே பல கிராமங்களுண்டு. வளவை கங்கையையடுத்துச் சனச்செறிவு அதிகம். இம் மாவட்டத்தில் இன்றும் பயன்படுத்தப்படும் பல குளங்களுண்டு. மொத்தத்தில் இப்பகுதியில் குடிசனம் குறைவு.
(4) கீழைக்கரைத் தாழ்பூமி: இப்பகுதி ஒடுக்கமானது; இதன் அகலம் 10 மைல் துவக்கம் 30 மைல் வரையிருக்கும். இது பொத்துவில் தொட்டு முல்லைத் தீவுவரை நீண்டிருக்கிறது. நிலம் எங்குஞ் சமதரையாகவேயிருக்கும்; பிரதானமாகக் கரைப்பகுதி மிகவும் சமதரையாயுள்ளது. ஆறுகள் பெரிய கடனீரேரிகளாகப் பரந்து சில இடங்களில் ஒன்ருே டொன்று மிக அண்மை யில் நெருங்கிக் கிடக்கின்றன. கரையிலிருந்து 5 மைல்வரை இவ்வாறு

Page 197
380 இலங்கைப் புவியியல்
நீர்ப் பரப்புக்களும் இடையிடையே சதுப்பு நிலங்களுங் கலந்து காணப்படும். இங்கெல்லாம் நிலம் நீர்மட்டத்தோடு காணப்படும். மகாவலிகங்கை இப் பிரதேசத்தின் மத்திக் கூடாகச் சென்று கடலொடு கலக்கிறது. கரையடுத்த சம பூமிக்கூடாக இது நெளிந்து நெளிந்து சென்று, பல கிளேகளாப் பிரிகிறது. ஆனல் முக்கியமான பெரிய கிளேகளிரண்டு. ஒன்று, திருக்கோணமலையை யடுத்த கொட்டியாரக் குடாவில் விழுகிறது. மற்றையது, செங்கோணமாகப் பிரிந்து யானை முனைக்கும் பவுல் முனைக்குமிடையாகக் கடலில் விழுகிறது.
N introd/or glz Zarzezicz
°公、 . W * 2.
V のが24?)
இடசசுத குட7
Lo 3. திருக்கோணமலை அமைந்துள்ள இடம் (கறுப்பு நிறம் பூசப்பட்டது). நல்ல பாது காப்பமைந்த ஆழ்ந்த துறைமுகத்தைக் கவனிக்க, அளவுத்திட்டத்திற்கேற்றபடி இதனை அளந்து அவுத்திரேலியாவிலுள்ள சிட்டினித் துறைமுகத்துடன் ஒப்பிடுக. புள்ளிக்கோடுகள் வீதியைக் குறிப்பிடுகின்றன. தெற்குப் பாதையிலமைந்துள்ள படகுத் துறைதளேக் கவனிக்க.
கொட்டி யாரக் குடாக்கடல் திருக்கோணமலைத் துறைமுகத்தையும் தம்பல காமக் குடாவையும் உள்ளடக்கியுள்ளது. எனவே இது உலகிலேயே மிகச் சிறந்தவோர் இயற்கைக் கடற்றுறையாயிருக்கிறது. இலங்கையின் மிகப் பெரிய ஆற்று வாயிலமைந்து, சிறந்த துறைமுகமாயிருந்த போதிலும், அண்மையிலுள்ள சதுப்பு நிலம் திருக்கோணமலையின் வளர்ச்சிக்குத் தடையாயிருந்து வருகிறது.
 

சுருக்கம் 38
மட்டக்களப்பு 30 மைல் நீளமுள்ள பல கடனிரேரிகளின் அந்தத்திலிருக் கிறது. இடச்சுக்காரர் இதைக்கண்டு இவ்வுள்ளூர் நீர்த் தேக்கங்களிற் பிர யாணஞ் செய்ய வசதியுண்டாக்கலாமென எண்ணினர். இங்கே மழை வீழ்ச்சி குறைவு. வட கிழக்குப் பருவக் காற்று வீசும் பருவத்தில் மட்டும் உயர் மழை வீழ்ச்சியுண்டு; வெப்பநிலையுமதிகம். விசேடமாகத் தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்தில் இங்கும் திருக்கோணமலையிலும் மிகக் கூடுதலான வெப்பநிலையுண்டு. இக்காலத்திலுள்ள வறட்சியைப் போக்க மலை நாட்டிலுற்பத்தியாகும் ஆறுகளின் நீர் உதவுகிறது. நெல் எங்கும் பயிர் செய்யலாம்; மக்களுக்குத் தேவையான நெல்லு இங்கேயே உற்பத்தி செய்யப்படுகிறது. கடனீரேரிகளையடுத்துக் கண்டற் காடும் சதுப்பு நிலங்களு முண்டு. இவ்வேரிகளில் முற்காலங்களில் முதலைகளதிகங் காணப்பட்டன. இன் றும் அவை இப் பகுதிகளிற்றன.திகம். நீண்ட கடனீரேரிகள் கரையையடுத் திருப்பதால் தரைப் பிரயாணஞ் செய்வது கடினம். ஒவ்வொரு துறையிலும் “பாதைக’ளுண்டு. ஆனல் அவை ஒழுங்கான முறையிலில்லாதபடியால் பிரயாணத்தை விரைவிற் செய்து கொள்ள முடியாது. மலை நாட்டில் அதிக மழை பெய்யுமானல் இப் பகுதிகளில் வெள்ளப் பெருக் குண்டாகும். அதனல் த ரைப் பிரயான ஞ் சுணங்கிவிடும்; மகா வலிகங்கைக் கழிமுகத்தையடுத்துப் பிரயாணஞ் செய்யவே முடியாது போய்விடும். வதுளையிலிருந்து வரும் வீதி மட்டக்களப்புக் கடனிரேரியின் வட முனைக்குச் சமீபத்தில் கரைப் பாதையிலுள்ள செங்கலடியைச் சந்திக் கிறது. அங்கே ஓர் அறிவித்தலைப் பெரும்பாலுங் காணலாம்; வெள்ளப் பெருக்கின் பயனகத் திருக்கோணமலைக்குப் போகும் வீதி வெள்ளத்தில் அமிழ்ந்தி விட்டதென்பதே அவ்வறிவித்தலாகும். கடற் கரையையடுத்து வழி நீளம் பல சிறு கிராமங்களைக் காணலாம். மட்டக்களப்புப் பகுதியில் இவை அதிகம்; திருக்கோணமலைக்கு வடக்கே மிகக் குறைவு. இக் கிராமங்களுக் கிடையேயுள்ள போக்கு வரத்திற் பெரும் பகுதி கடனிரேரி மூலமோ கடல் மூலமோ நடைபெறுகிறது. கொழும்புக்கும் காலிக்குமிடையில் உள்ளது போல நெருக்கமாக, இப் பகுதிக் கரையையடுத்து வீடுகளில்லை. இங்கே வீடுகள் கடலுக்கு வெகு துரத்திலுள்ளன. கிராமங்களிற் பெரும் பாலா னவை கடனிரேரியைப் பார்த்தபடி கடலுக்கு முதுகு காட்டிக் கொண்டே யிருக்கின்றன. நீண்ட மணற் கடற்கரைகளுங் காணப்படுகின்றன. இவை அநேக மாக மனித சஞ்சாரமற்றவை. தென் மேற்குப் பருவப் காற்றுக் காலத்தில் மேற்குக் கரையில் மீன் பிடிக்க முடியாத செம்படவர் இங்கு வந்து வட பகுதியில் முகாமிட்டு மீன் பிடிப்பர். நெல்லும் தென்னையும் கடனீரேரி களையடுத்துப் பயிர் செய்யப்படுகின்றன. ஆனற் பெரும் பகுதி ஈரக் காடா யிருக்கும். இங்கே வன விலங்குகளுண்டு. குடிசனம் குறைவான நீண்ட நிலப் பரப்புக்களையுங் காணலாம். உள்ளூரிற் பல சிதைவுற்ற குளங் களிருப்பதால் ஒரு காலத்திலிங்கே மக்கள் குடியிருப்பிருந்ததென ஊகிக்க

Page 198
382 இலங்கைப் புவியியல்
இடமுண்டு. இங்கே மக்கள் ஆங்காங்கு பிரிந்து வாழுகின்றனர். ஒருவரோ டொருவர் தொடர்பு கொள்ள முடியாதபடி நெடிய காடுகளும், சதுப்பு நிலங்களும், நீர் நிலைகளுமுண்டு. இங்குள்ளவரிற் பெரும்பான்மையினர் தமிழர். தமிழ் மொழியே அதிகம் பேசப்படுகிறது. கிராமங்களிலுள்ள
ل---د
படம் 114. மட்டக்களப்பு அமைந்துள்ள இடம். பட்டினத்துக்கு எதிரே நீண்ட மணற்றடைகளிருப் கடனீரேரியையடுத்துக் கடலைப்பார்த்துள்ள நிலப்பரப்பின் பெரும்பாகம்
எறிமணற்படிவாலாயது.
பதைக் கவனிக்க.
சிங்களரும் தமிழையே பேசுகிருர்கள். உதாரணமாகப் பொத்துவிலில் தமிழ் பேசுஞ் சிங்களர் வசிக்கின்றனர். மட்டக்களப்புக்கு சிலமைல் தொலைவிலுள்ள காத்தான்குடி போன்ற இடங்களிற் கரைச் சோனகர் வசிக்கின்றனர். இத் தகைய குடியிருப்புக்களங்குமிங்குமாக அமைந்துள்ளன.
 

சுருக்கம் 383
போத்துக்கேயர், இடச்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோர் மட்டக்களப்பிலும் திருக்கோணமலையிலும் ஒரு காலத்தில் வசித்ததற்குரிய சான்றுகள் பல காணப்படுகின்றன, “மடக்களப்புவ’ என்ற சிங்களப் பெயரை இடச்சுக்காரர் “பற்றிக்கலோ’ என மாற்றினர். அவர்களுடைய செல்வாக்கு இங்கு அதிகம். அவர் காலத்தில் மட்டக்களப்புக்கண்மையில் கறுவாத் தோட்டங்களிருந்தன. இப்பொழுது அவை மறைந்துபோயின. சிங்கள அரசர் ஊவாப் பகுதியைத் தங்கள் தானியக் களஞ்சியமாக எண்ணியிருந்தனர். மட்டக்களப்பிலிருந்து அப்பகுதியில் ஆதிக்கஞ் செலுத்தலாமென இடச்சுக்காரர் எண்ணினர். இன்று மட்டக்களப்புத் திருக்கோம்ைமலையைப் போலவே நீண்ட காடுகளாற் பிரிக்கப்பட்டிருக்கிறது ; சன நெருக்கமுள்ள மற்றைப்பகுதிகளோடு தொடர்பு கொள்வது கடினம். அதனுல் அவற்றின் வளர்ச்சி தடைப்பட்டு, ஐரோப்பியர் ஆதிக்கத்துக்குட்பட்ட சிறு இடங்களாகவே இவ்விருபட்டினங் களும் இன்று காணப்படுகின்றன. இரண்டாவது உலகயுத்தத்தில் சிங்கப்பூர் வீழ்ச்சியடைந்ததும் திருக்கோணமலை முதன்மை பெற்றது. கிழக்கில் பிரித்தானிய கடற்படையின் முக்கியதலமாக அது இன்று அமைந்து விட்டது. திருக்கோணமலையின் பின்னணிப் பிரதேசம் விரைவாக வளர்ச்சி யடைந்து வருகிறபடியால், இராணுவத் தலமென்ற முறையிலும், வியாபார நிலையமென்ற முறையிலும் அது மேலும் முதன்மை பெறும். கீழ் மாகாணத்தின் தலைப்பட்டினமாகவே மட்டக்களப்பு அமைந்துள்ளது. அப் பகுதியிலுள்ள கடல் ஆழமற்றதாயிருப்பதால் மட்டக்களப்பு, கரையோர வியாபார நிலையமாக மட்டுமே பயன்படும்.
(5) யாழ்ப்பாணச் சுண்ணும்புக்கற் பிரதேசம் : இதன் எல்லை புத்தளத் திலிருந்து கடற்கரைக்குச் சமாந்தரமாக மடுவரை சென்று, யானையிறவுக்குச் சற்றுத் தெற்காக ஓடி, முல்லைத்தீவையடுத்த பகுதியில் முடியும். வடகிழக்குப் பருவக்காற்றுக் காலத்திற்றன் இங்கே அதிகமான மழையுண்டு ; இப்பிரதேசத்தின் பெரும்பகுதி இந்நியதிக்குட்பட்டது. இது மன்னர்வரை பரந்துள்ளது. மன்னுருக்கும் புத்தளத்துக்கு மிடை யிலுள்ள குறுகிய பிரதேசம் இடைப்பட்ட பிரதேசமாகும். இங்கே சம விராக் காலங்களில் அதிக மழைபெய்யும். வறட்சிகாரணமாகத் தென் மேற்குப் பருவக்காற்றுக் காலதகில் வெப்பநிலையதிகம். ஆனல், திருக்கோணமலை யைப் போலவோ, கிழக்குக் கரைப் பிரதேசத்தைப் போலவோ அவ்வளவு வெப்பமில்லை. எப்பிரில், மே, மாதங்களில் இந்திய வெப்பக் குவியம் இப் பிரதேசத்தையும் பெரிதும் பாதிக்கிறது. முன்கூறிய பகுதியிலிருப்பதுபோல வெப்பம் இங்கே செத்தெம்பர் வரை நிலைத்திருப்பதில்லை. காலநிலையை ug) சரித்து இட்பிரதேசம் இரண்டு பிரிவுடையது. மன்னருக்கு அண்மையில் இப் பிரிவு காணப்படுகிறது. இதன் தென்பகுதி அதிக மழையும் சற்றுக் குறை வான வெப்பமு முடைய இருபருவங்களையுடையது. வருடச் சராசரி மழை வீழ்ச்சி குறைவாகவேயிருக்கிறது. பெளதிகவமைப்பைப் பொறுத்தவரையில்

Page 199
384 இலங்கைப் புவியியல்
இப்பகுதியில் ஒரேதன்மையான சுண்ணும்புக் கற்பாறைகள் பளிங்குருப் பாறையை எங்கும் மூடியிருக்கின்றன. தெற்கு எல்லையில் சுண்ணும்புக்கல் குறைவு ; அது அருகி விட்டமையின் தெளிவற்றதாகவிருக்கிறது. மக்கட் புவியியலைப் பொறுத்தவரையில் இப்பிரதேசம் யாழ்ப்பாணக் குடாநாடு பெருநிலப்பரப்பு என இரண்டாகப் பிரிக்கப்படலாம். காலநிலை சம்பந்தமான வித்தியாசங்கள் குறைவு ; ஆனல், மக்களினத்தைப் பொறுத்தவரையி லவை அதிகம்; எனவே இவ்விருபகுதிகளையும் தனித்தனியாக ஆராய்வதே பொருத்தமுடையது. தெற்கு ஆசியாவிலுள்ள குடியிருப்புக்களில் யாழ்ப் பாணக் குடாநாடு மிக விசேடமானது. இங்குள்ள தமிழர் மற்றையோரிலும் வேறன தனித்தன்மை வாய்ந்தவர். ஒல்லாந்தின் சில பகுதிகளோடு யாழ்ப்பாணத்தை ஒப்பிடலாம் ; இங்கே, நிலத்திலும் மக்களே முக்கிய மானவர்கள். இடச்சுக்காரரின் செல்வாக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிகம் ; அழகான பல கட்டிடங்களையும், கோட்டைகளையும் அவர்கள் இங்கே கட்டியுள்ளனர். மண்ணில் உவர்ப்பு அதிகமில்லாத எல்லாப்பகுதி களிலும் மக்கள் குடியேறியுள்ளனர். என்வே, எங்கே பார்த்தாலும் வீதி களும் வீடுகளுமுண்டு. மேற்குப் பகுதியிற்ருன் நல்ல நிலமுண்டு. அங்கே யாழ்ப்பாணப் பட்டினம் இருக்கிறது. மக்கள் நடமாட்டம் இங்கே அதிகம். இங்குள்ள முக்கியமான தீவுகள் வேலணை, காரைதீவு, மண்டைதீவு, புங்குடு தீவு, நெடுந்தீவு என்பன. இவை, குடாநாட்டின் ஒரு பகுதி ஒரு காலத்திற் கடலிற்றழ்ந்த பொழுது எஞ்சியுள்ள பிரதேசங்களாம். யாழ்ப்பாணத்து வாழ்க்கை முறையையே இத்தீவுகளிலுங் காணலாம். கிழக்குப் பக்கத்திலே முக்கியமான கடனிரேரிகளுண்டு; இவற்றேடு சம்பந்தப்பட்ட உப்பு உற்பத்தித் தொழில் இப் பகுதியிற் காணப்படும் விசேட தொழிலாகும். இக்கடனீரேரி களையடுத்து உவர் நிலங்களுண்டு; இங்கே மனிதசஞ்சாரமில்லை. முட்செடி களும், மென்றசையுடையதாவரங்களுங் காணப்படும். இவை சாம்பலும் பச்சையுங் கலந்த நிறமுடையவை. இத்தகைய நிலத்திலே பொருளாதாரத் தைப் பெருக்கக்கூடிய எவ்வகைப் பயிரும் வளராது. மேற்பரப்பு வறண்ட தாயும் நிலத்தின் கீழே நீரோட்ட முடையதாயுமுள்ள தன்மையினல் யாழ்ப்பாணக் குடாநாடு இலங்கையின் ஏனைப் பகுதிகளிலும் வேறு பட்டதாய்க் காணப்படும்.
பயிர் செய்வதற்கு எற்ற நிலங்களிலே நெல், புகையிலை, மிளகாய், காய் கறி என்பன செய்கை பண்ணப்படுகின்றன. ஒரு காலத்திலே ப?ன மரங்கள் எங்கும் வளர்க்கப்பட்டன; இப்பொழுது அதிக பயனுள்ள தென்னை எங்கும் வளர்க்கப்படுகிறது. பனை மரம் இலங்கைத் தமிழரோடு தொடர்பு பெற்று வந் திருக்கிறது. சிங்களர் வாழ்க்கையில் தென்னை எவ்வளவு முக்கியம் பெறு கிறதோ அதேபோலப் பனையும் தமிழர் வாழ்க்கையில் முக்கியம் பெறுகிறது. பனையோலை தென்னுேலையிலும் வித்தியாசமானது. வேலியடைக்கவும் வீடுவேயவும் இரண்டு முதவிலுைம், பார்வைக்கு வித்தியாசப்படும். பனம் பழம் உணவாகிறது. பனைமரம் வீடுகட்டவும் வேறு கட்டட

சுருக்கம் 385
வேலைகட்கும் பயன்படும். தேங்காயில் மட்டை, சிரட்டை என்பன விருப்பது போலப் பனம் பழத்திலில்லை. அதனுல் அது தென்னைபோலப் பலவகையிற். பயன்படுவதில்லை.
பெருநிலப் பரப்பைச் சேர்ந்த சுண்ணும்புக்கற் பிரதேசத்திற் சனங்கள் மிகக் குறைவு. இங்கே சுண்ணும்புக்கல் அதிகம் ஆழமாயில்லாதபடியால் குடா நாட்டிலுள்ளது போன்ற விசேட அமிசங்களில்லை. தெற்கேயுள்ள காட்டுமரங்களே இப்பிரதேசத்திலுந் தொடர்ந்து காணப்படுகின்றன. ஆனல், வடக்கே செல்லச் செல்ல முட்செடிகளதிகரிக்கின்றன ; மரங்கள் குறைகின்றன. யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஆறுகளென்று சொல்லக் கூடியவையில்லை. இப்பிரதேசத்தில், மத்திய மேட்டுநிலத்திலிருந்து ஊற் றெடுத்து வரும் பல ஆறுகள் குறுக்கேயோடிக் கடலொடு கலக்கின்றன. இதனற் பல குளங்களமைந்துள்ளன. விவசாயஞ் சம்பந்தமாகத் தேற்கே யுள்ள நிலைமைகளே இங்குங் காணப்படுகின்றன. இலங்கையிலேயுள்ள மிகப்பெரிய குளங்களிலொன்றன கட்டுக்கரைக் குளம் இப்பகுதியிலுண்டு. அது அருவியாற்றின் கீழ்ப்பகுதியிலுள்ள உபநதிகளில் ஒன்றையடுத்திருக் கிறது. இக்குளத்துக்கு எதிரே ஆற்றின் இடது கரையை அடுத்து மற் ருெரு பெரியபாழடைந்த குளமுண்டு. மன்னர்த் தீவுக்கு அணித்தாயிருப்ப தாலும் இந்தியாவுக்குச் செல்லுந் தரைப்பாதையிலிருப்பதாலும் இக் குளப் பகுதிகளில் எப்பொழுதுமே மற்றைப் பகுதிகளைவிட, அதிகமாக மக்கள் குடியேறியிருந்தனர். பெருநிலப் பரப்பிலுள்ள மிகப் பழைய நகரம் மாதோட்டம்; இக்கால மன்னர் நகருக்கு எதிரேயுள்ளது. இந்தியா விலிருந்து அனுராதபுரத்துக்கு வருவோர் இறங்குந் துறையாக இது இருந்து வந்தது. பின்னர் மாந்தை என்ற நகர் வளர்ச்சியடைந்தது. ஐரோப்பியர் இலங்கை மீது படையெடுத்த காலத்திலே மன்னர் பிரபல்லிய மடைந்தது. அங்கே அவர்கள் கோட்டையமைத்தனர். பெருநிலத்தோடு தொடர்பின்றி ஒரு தீவாயிருந்தபடியால் மன்னரைப் போர் முனையாக அவர்கள் கொண்டனர். இந்தியாவுக்கு மிக அண்மையிலிருப்பதால் மன்னர் அந்நியர் செல்வாக்கு மிக்கதாயிருந்தது. 1914 ஆம் ஆண்டில் அனுராதபுரத்துக்கு வடக்கே 16 மைல் தூரத்திலுள்ள மதவாச்சியிலிருந்து மன்னருக்கும் தலைமன்னருக்கும் இருப்புப் பாதை அமைக்கப்பட்ட தால், இப் பகுதியிற் பெரிய மாற்றங்களுண்டாயின. இந்தியாவுக்கும் இலங் கைக்குமிடையிலுள்ள பிரயாணிகள் போக்குவரத்தும் பொருளேற்றுமதி யிறக்குமதியும் இவ் வழியாகப் பெரிதும் நடைபெறத் துவங்கின. இந்திய இருப்புப்பாதைக் கடைசித்தானமான தனுக்கோடிக்கும் தலைமன்னருக்கு மிடையிலுள்ள 20 மைல் கடற் பாதையைக் கடக்கக் கப்பற் சேவை யேற்படுத்தப்பட்டது. இதனுல் மன்னரின் குடிசனத் தொகையதிகரித்தது. முத்துக்குளிப்போரின் கூடாரங்கள் மன்னருக்கும் குதிரைமலை முனைக்கு மிடையில் அமைக்கப்பட்டன. முத்துச் சிப்பி விளையுமிடங்களிதையடுத்திருப்
5-J. N. B. 70576 (1157).

Page 200
386 இலங்கைப் புவியியல்
பதால் மறிச்சுக்கட்டியிலேயே பெரிய முகாம் வழக்கமாக அமைக்கட்படும். இப் பகுதியிற்றன் இலங்கையின் மிகக் குறைவான மழை வீழ்ச்சி பதியப் பட்டுள்ளது. போத்துக்கேயரும் இடச்சுக்காரரும் கற்பிட்டிக் குடா நாட்டிற் சிறிது காலந் தங்கியிருந்தனர். காரைதீவிலும் அவர்கள் பாசறை யமைத்திருந்தனர். கற்பிட்டியிற் பல கோட்டைகளையும் தேவாலயங் களையும் கட்டினர். அங்குள்ள குடாக்களுக்கு இடச்சுக்குடா, போர்த்துக்கல் குடா என்ற பெயர்களையுங் கொடுத்தனர். இங்கே மீன்பிடித் தொழிலும் உப்பு உற்பத்தியுமே நடைபெறுகிறது. சில சமயம் இந்தியாவுடன் வியாபார முஞ் செய்யப்படுகிறது. இங்குள்ள கடனிரேரிகளையடுத்தே மக்கள் வாழ் கின்றனர். வெளியான கடற் கரையையடுத்துக் குடியிருப்புக்களில்லை. இங்கே நீண்ட மணற் கரைகள் காணப்படும். புத்தளத்துக்கு வடக்கேயுள்ள பகுதி கள் வரை தென்னந் தோட்டங்களிப்பொழுது பரவியிருக்கின்றன. கற்பிட் டிக் குடாநாட்டிலும் பல காலமாகவே தென்னந் தோட்டங்களிருந்து வருகின்றன. இடச்சுக்காரர் புத்தளம் ஏரியை நீர்கொழும்புக் கடனிரேரி யோடு இணைக்கப் பல கால்வாய்களை வெட்டினர். இவற்றின் மூலமவர்கள் பெரிய வள்ளங்களிலே புத்தளத்திலிருந்து கொழும்புக்குப் பொருள்களை ஏற்றிச் செல்லக் கூடியதாயிருந்தது. இதனுல் நெடுங் கடலற் பிரயாணஞ் செய்யும் ஆபத்துக் குறைந்தது. அந்நியர் செல்வாக்குப் புத்தளத்தில் எப் பொழுதுமேயிருந்து வந்தது. முக்குவர் என்ற சாதியார் இப் பகுதியில் ஒரு காலத்திலதிகமாக வாழ்ந்து வந்தனர். இவர்கள் கிறித்தவத் தமிழர். இவர்கள் சிலாபம் வரை பரவியிருந்தனர். இவர்கள் ஒரு காலத்தில் நிலச் சொந்தக்காரராயும், பெரிய வியாபாரிகளாயுமிருந்தனர். பின்னர் குடிவெறியினல் இவர்கள் பெருமை குன்றிவிட்டது. இப்பொழுது மிகச் சிலரேயிருக்கின்றனர். ஒரு காலத்திலிங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்நிய நாட்டுப் பட்டாளத்தினர், உள்ளூரிலேயே விவாகஞ் செய்து நிலை யாகக் குடியேறி விட்டனர். இவர்களுள் முக்கியமாகத் தென்னபிரிக்கக் காப்பிரிப் பட்டாளமொன்றைக் குறிப்பிடலாம். புத்தளத்திற் சோனகரதி கம். இவர்கள் பெரும்பாலும் வியாபாரிகளாகவும், உப்புத் தொழிலிலீடு பட்டவராகவுமிருக்கிருர்கள். புத் தளத்துக்குப் பின்னலுள்ள கரைப் பகுதி வறட்சி நிறைந்ததானபடியால் அதிகம் அபிவிருத்தியடையவில்லை. கலா ஒயா போன்ற ஆறுகள் தென் மேற்குப் பருவக்காற்றுக் காலத்திற் பெருக்கெடுக்கும். இப் பெருக்குநீரைப் பயன்படுத்த வழி வகுத்தால் இங்கே பயிர்ச்செய்கையை மேலும் விருத்தி செய்யலாம். இப்பகுதிகளில் மரவள்ளி நன்றக வளரும்; தென்னந் தோட்டங்களை மேலும் பெருக்க இடமுண்டு.
(6) சிலாபத்து நிலைமாறு வலயம் ஈரலிப்புள்ள தாழ்பூமிப் பிரதேசங் களின் நிலைமைகளுக்கும், வடக்கேயுள்ள வறண்ட பிரதேசங்களின் நிலைமைகளுக்கும் இடைப்பட்ட நிலைமை இங்கேயுண்டு. அண்மையி

சுருக்கம் 387
இப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டது. எறி மணலானது பலமைல் உள்ளூரிற் பரந்திருப்பதால் அப் பிரதேசத்தில் தென்னை நன்றக வளரும். தெதுரு ஒயாவையடுத்து வடக்கே குளங்கள் அமைந்துள்ளன. கரையையடுத்த கடனீரேரியோரமாக உள்ளது சிலாபம். இது ஒரு சிறிய நகரம். இங்கே மீன் பிடித்தொழிலும் வியாபாரமும் நடைபெறுகின்றன. மக்கள் அதிக மாக வசிக்கும் இடமிதுவே.
ULb 115.
புத்தளக் கடனிாேரி. பின்னணியிற் பள்ளிவாசல் அமைந்துள்ளது.
(T) வட மத்திய தாழ்பூமியும் மேனிலமும் வடக்கே மாங்குளத் திலிருந்து தெற்கே தம்புல்லை வரை இப் பிரதேசம் பரந்திருக்கிறது. மலை நாட்டின் ஆரம்பம் தம்புல்லையிலெனலாம். இப் பிரதேசம் தென் கிழக்காக அலுத்துதுவரை வரை பரந்து மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கின் பெரும் குதியை உள்ளடக்கியிருக்கிறது. இப் பகுதி முழுவதும் 100 அடி உயரத் க்கு மேற்பட்டது. தாழ்வான பகுதிகள் 100 அடிக்கு மேற்படாதனவாயுள.

Page 201
,o as இலங்கைப் புவியியல்
இங்கே நிலத்திலாழ்ந்து வண்டற் படிவுகளுக்கு மேலாக நீட்டிக்கொண்டு நிற்குந் தாழ்ந்த குன்றுகள் பலவுண்டு. தெற்கே மலை நாட்டைச் சார்ந்து 600 அடிக்கும் 1000 அடிக்கும் இடைப்பட்ட உயரமுள்ள பல தாழ்வான பாறைத்தொடர்களைக் காணலாம். இவை மற்றைக் குன்றுகளைப் போலவே ஒரளவு நிலத்தில் ஆழ்ந்து மலை நாட்டை அணுக அணுக உயர்ந்து காணப் படுகின்றன. சிகிரிக்குன்றிலோ மிகிந்தவைக் குன்றிலோ அனுராதபுரித் தாது கோபங்களிலோ நின்று பார்த்தால் இப் பகுதியின் பெரும் பாகத்தைப் யார்க்கலாம். சமவிராக் காலங்களையடுத்து இங்கே அதிக மழையுண்டு. மற்றிருபருவங்களிற் பெய்யும் மழைவீழ்ச்சி விரைவில் நீராவியாக மாறி விடுவதால் நிலத்துக்குப் பயனற்றுப் போகிறது. வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்திலேதான் அதிக மழையுண்டு; தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்திலவ்வளவு மழையில்லை. நீர்ப்பாசனம் எங்குந் தேவைப் படுகிறது. அதனலேயே குளங்களெங்குங் கட்டப்பட்டுள்ளன. ஒரங்குல அளவைப்படத்திலே குளங்கள் ஒவ்வொன்றுங் காட்டப்பட்டுள்ளன. பாழடைந்தவைகூடக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஒவ்வோராற்றின் உப நதி களிலும் பல குளங்களைக் காணலாம். சில குளங்கள் மிகச் சிறியனவா யிருக்கும். மற்றையவை 6 சதுர மைல் தொட்டு எட்டுச் சதுர மைல் வரை விசாலமுடையன. மக்கட் குடியேற்றத்தின் விசேட அமிசமிவைதாம். சாதாரணமாக உபயோகத்திலிருக்கும் படங்களிற் பெரிய குளங்களே காட்டப் பட்டுள்ளன. சிறியவை குறிக்கப்படவில்லை. அதனல், குளங்களுக்கும் ஆற்றுப்பள்ளத்தாக்குக்களுக்குமுள்ள தொடர்பு, அவற்றின் தொகை என்பனவற்றை அறிய முடிவதில்லை. வட மாகாணம், வட மத்திய மாகா ணம் ஆகியன சம்பந்தப்பட்ட ஒரங்குல அளவைப் படங்களை மாணவர் பயில வேண்டும். வரலாற்றுப் புவியியலில், குளப் பிரதேசங்களை மக்கள் கை விட்டமை பெரிய சம்பவமாகும். அதைப்பற்றி எலவே விளக்கியுள்ளோம். இப் பகுதி பின்னர் காடடர்ந்த இடமாயிற்று; பல சதுர மைல்களுக்கு இக் காடுகள் இன்று கடல்போற் பரந்திருப்பதைக் காணலாம். அனுராதபுரம் பொல னறுவையாகிய புராதன நகரங்களின் பழைய பாழடைந்த கட்டிடங்களை ஆராய்வதற்காகவும், சனநெருக்கமுள்ள தென்மேற்குப் பகுதிக்கும், திருக் கோணமலை, யாழ்ப்பாணம், மன்னர் போன்ற பகுதிகளுக்கும் நெடுந் தெருக்களை அமைக்கவேண்டிய அவசியமேற்பட்டதாலுமே இப்பகுதிகளைப் புனருத்தாரணஞ் செய்ய வாய்ப்புண்டானது. மக்கள் குடியிருப்புக்களைப் பற்றிக் கூறுமிடத்து, குளக்கிராமங்களின் அடிப்படையமைப்பு இன்றுமிருக் கிறதென்றும், அவை சிறு சிறு குடியிருப்புக்களாக வெளியுலகத்துடன் தொடர்பற்று ஒதுங்கிக் கிடக்கின்றனவென்றுங் குறிப்பிட்டிருந்தோம். இப் பகுதிகளிற் குடியேறியவர்கள் ஒரு காலத்தில், வன்னியர் எனப்பட்டனர். வடபகுதி வன்னியெனச் சாதாரணமாக வழங்கப்பட்டது. வன்னியென்றல் காடடர்ந்தவிடம் என்று பொருள். இலங்கையின் இனங்களேப்பற்றி ஆராய்ந்த பழைய ஆராய்ச்சியாளர், அவர்கள் தனிப்பட்ட ஒரு சாதியாரென நினைத்

சுருக்கம் 389
தனர். அவர்கள் உண்மையில் குளக்கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வழித்தோன்றல்களென இப்பொழுது காணப்பட்டது. நாட்டிலுண்டான பல படையெழுச்சியின் காரணமாக மக்கள் சிதறிவிட இவர்கள் தனித்து நின்று தமது வாழ்வை நடத்தினர். காடு எனப்பகுதிகளை மூடிவிடவே இவர்கள் வெளித்தொடர்பின்றி வாழ்ந்தனர். மற்றைப்பகுதிகளுடன் தொடர்பு வைப்பதற்கு வழியில்லாதபடியால் இவர்கள் வாழ்க்கை கீழ்நிலை யடைந்தது. இவர்களிற் சிங்களரும் தமிழருங் காணப்படுகின்றனர்.
இப்பிரதேசத்திற் பெரிய பட்டணங்களில்லை. கி.மு. 5 ஆம் நூற்றண்டில் அனுராதபுரி இதன் தலைநகராயிற்று. பின்னர் அங்கு அரசாண்ட சிங்கள அரசர் காலத்துக்குக் காலம் அதைத் திருத்தினர்கள். அது கைவிடப்பட்ட காலத்தில் அழகியதொரு நகராக விளங்கியிருக்க வேண்டும். கி.பி. 11 ஆம் நூற்றண்டின் பின்னர் இந்நகரைப்பற்றி ஒன்றுங் கேட்கப்படவில்லை. அதைச்சுற்றியுள்ள கட்டிடங்களும், சோலைகளும், வயல்நிலங்களும், காட்டுக் கிரையாகி மறைந்தன. இது குளநாகரிகத்தோடு தொடர்புடையதாகவே யிருந்தது. வடக்கே செல்லும் பல வீதிகள் இதன் அதிகாரத்தின் கீழி ருந்தன. இதன் அண்மையிற் பல உயர்ந்த குன்றுகள் காலைப்பட்டன. அவற்றின் மேலிருந்து பார்த்தால் சுற்றியுள்ள ஊர்களேயெல்லாம் பார்க் கலாம். இரண்டு முக்கியமான வழிகள் இதன் அதிகாரத்திலிருந்தன. ஒன்று, மன்னர்த்தீவு இருக்குந் திசையிலிருந்து அருவியாற்றுப் பள்ளத் காக்கு வழியாகவும் அதன் உபநதியான மல்வத்து ஒயா வழியாகவும் அமைந்திருந்தது. தமிழ்ப் படையெடுப்புக்காரர் இதையே பயன்படுத்தினர். மற்றையது, தம்புல்லே, மாத்தளேப் பள்ளத்தாக்கு வழியாக மலைநாட்டுக்குப் போகும்வழி. (28 ஆம் படம் பார்க்க). ஐரோப்பியராட்சிக் காலத்தில் மக்கள் கவனம் வேறு திசையிற்றிரும்பவே அனுராதபுரம், முற்ருகக் கைவிடப்பட்டது. இலங்கையிற் பலகாலம் வசித்து வந்த ஆங்கிலேயரும், சிங்களராற் சிறைபிடிக்கப்பட்டு 17 ஆம் நூற்றண்டினிறுதியில் தப்பியோடிய வருமான உரோபெட்டு நொட்சு என்பவர் இந்நகரைப் பற்றிக் கூறியுள்ளார். இந்நகரின் சிதைந்த பெரிய கட்டிடங்களையும் அவை காடடர்ந்து கிடப்பதை யும், அண்மையிற் குடியிருப்புக்களில்லாததையும் அவர் கண்டு வியப் படைந்தார். கடந்த 50 வருடத்திலேயே அனுராதபுரம் புனருத்தாரணஞ் செய்யப்பட்டது. வயல் நிலங்கள் தோன்றியிருப்பதாலும், யாத்திரிகர் பலர் அடிக்கடி அங்கு செல்வதாலும் அனுராதபுரத்தின் சனத்தொகை அதிகரித்துக்கொண்டு வருகிறது. பிரித்தானிய ஆட்சியாளர் அமைத்த பல வீதிகள் அனுராதபுரத்தில் வந்து சந்திக்கின்றன. எனவே, வடஇலங்கை யில் அது மறுபடியும் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்று விட்டது. சென்ற நூற்றண்டினிறுதியில் வடமத்திய மாகாணத்தினுடாகவும், வட மாகாணத்தினுடாகவும் இருப்புப்பாதையமைக்கப்பட்டதால் இப்பகுதியிற் பல மாற்றங்களுண்டாகிவிட்டன. அண்மையில் மாகோவிலிருந்து திருக்

Page 202
390 இலங்கைப் புவியியல்
கோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் இருப்புப் பாதை போடப்பட்டிருப் பதால் கிழக்கு மாகாணத்திலும் இத்தகைய பல மாற்றங்களுண்டாகலாம். இந்த இயற்கைப் பிரதேசத்தின் பெரும் பகுதியை உள்ளடக்கிய வடமத்திய மாகாணம் 1873 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதன் தலை நகர் அனுராதபுரம். இருப்புப்பாதை போடும்வரை இப்பகுதியின் வளர்ச்சி மிக மெதுவாகவே நடைபெற்றது. பின்னர், நெடுந்தெருக்களில் வசுப்போக்கு வரத்துண்டாகவே முன்னேற்றந் துரிதமாக நடைபெற்றது. பொலனறு வைக்குத் தென்கிழக்கிலுள்ள பகுதியிற சனச்செறிவு மிகக்குறைவு. இந் நகர் கி.பி. எட்டாம் நூற்றண்டிலே தலைநகராயிற்று. அதன் பின்னரே அங்குள்ள பல கட்டிடங்கள் கட்டப்பட்டன. மலைநாட்டின் கிழக்கைச் சுற்றி அலுத்துநூவரை வழியாகப் பிபிவைக்குப் போய் அங்கிருந்து கதிர்காமஞ் செல்லுமொரு பழைய பாதையிருந்தது. அப்பாதையிலேதான் இந்நகர மமைக்கப்பட்டது. பிறகாலத்தில் இப்பாதை பெரும்பாலும் கைவிடப் Lull-gil. 13 ஆம் நூற்றண்டிலே பொலனறுவை கைவிடப்பட்ட தால் இப்பாதை முற்ருகக் கைவிடப்பட்டது. இதே காலத்தில் அலுத்து நுவரையும் முதன்மை பெற்றது. இப்பாதையின் முதன்மை குறையவே அலுத்துருவரையின் பெருமையுங் குன்றியது. இப்பாதை இன்று ஒற்றையடிப் பாதையாயிருக்கிறது. கதிர்காமம் செல்லும் யாத்திரிகர் சிலர் இவ்வழியாகச் செல்வர். இன்று பொலனறுவை மீண்டும் அபிவிருத்தியடைந்து வரு கிறது. அங்கேயுள்ள பழைய கட்டிடங்களும், புராதன ஆலயங்களும் அதனை ஒரு யாத்திரைத்தலமாக்கி விட்டபடியால் எராளமான யாத்திரிகர் அங்கே சென்று வருகின்றனர். அத்துடன் பராக்கிரம சமுத்திரமுந் திருத்தப் பட்டுளது. பல புதிய குடியேற்றத் திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விரைவில் இந்நகர் அதன் பழைய சிறப்பை ஓரளவாவது பெற்றுவிடு மென்பதில் ஐயமில்லை.
வீதிச் சந்திகளிலுள்ள சிறு கிராமங்களான கொறவப்பொத்தானை, மத வாச்சி, வவுனியா, மாங்குளம் போன்றவை மோட்டர்வசுப் போக்கு வரத் தினல் வியாபாரத்தானங்களாக மாறினதோடு விசாலமாக விரிவடைந்தும் வருகின்றன. கடந்த 25 வருடங்களில் வவுனியா விரைவாக அபிவிருத்தி யடைந்து நிருவாகத் தலமாக மாறிவிட்டது. நெற்செய்கையும் பழமரங்கள் பயிரிடுவதும் இங்கு பெருகி வருகின்றன. இது விரைவில் ஒரு மத்திய சந்தையாகவும் மாறக்கூடும். குளப்பிரதேசம் முழுவதும் புனருத்தாரணஞ் செய்யப்படவேண்டியிருக்கிறது. எவ்வகையான பயிர்களை இங்கே விளை விக்கலாமென்ற ஆராய்ச்சி விசேடமாக அனுராதபுரிக்கண்மையில் நடத்தப் பட்டு வருகிறது. ஐரோப்பியச் சந்தைகளில் நல்ல விலையைப் பெறும் சிசற் சணல் இங்கே நன்ருக வளருகிறது. கயிறு திரிப்பதற்கும் நூல் திரிப்பதற்கும் இச்சணல் மிக வாய்ப்பானது. ஆனல், குளங்களைத்

சுருக்கம் 391.
திருத்தி நெல்விளைவை அதிகரிப்பதனுல் பணப்பயிர்களை உண்டாக்குவதிலும் மிகுந்த பயனைப் பெறலாம். எவ்விதமான அபிவிருத்திக்குந் தடையா யிருந்து வந்த மலேரியா இப்பொழுது முற்றக ஒழிக்கப்பட்டு வருகிறது.
(8) தலாவைப் பிரதேசம்: இது தனித்தன்மையுள்ள பகுதி யாகும். சமீபத்தில் மக்கள் அதிகமாக வந்து குடியேறிய பகுதிகளிலிருந்து இப்பகுதிக்கு வருவது கடினமானபடியால் இவ்விசேடத்தன்மையிதற்குண் டானது. முற்காலத்திலே மற்றைப் பகுதிகளோடு தொடர்பின்றித் தனித்து நின்ற பகுதிகளில் இதுவுமொன்றகும். வதுளையிலிருந்து மட்டக்களப் புக்குச் செல்லும் பாதை இப்பகுதியை ஊடறுத்துச் செல்வதால் இது இப் பொழுது வெளியுலகத்தொடர்பைப் பெற்று வருகிறது. காலநிலையைப் பொறுத்தவரையில், குளப்பிரதேசங்களை இது ஒத்திருந்தாலும் இங்கே 75 அங்குலத்துக்கு அதிகமான மழையுண்டு. அதனல் இங்கே வறட்சியில்லை. வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் சனப்புழக்கம் மிகக் குறைவான பகுதிகளால் இது சூழப்பட்டிருக்கிறது. இங்கே பல குன்றுகளுண்டு; சில ஆயிரமடிக்குமேலே உயர்ந்தவை. இவற்றுக்கிடையே சமதரையானதும் வண்டல் படிந்ததும், நெற் செய்கைக்கு வாய்ப்பானதுமான நிலமுண்டு. சில குளங்களுமிங்கே காணப்படுகின்றன. கல்-ஒயா, மகா-ஒயா, மதுரு ஒயா என்ற ஆறுகளின் கிளைகள் கிழக்குப் பகுதியில் ஒடுகின்றன. இங்கே நீண்டு பரந்த புற்றரைகளும், மரச் சோலைகளும் உண்டு; சிங்களத்தில் இப் பகுதி 'தலாவை’ எனப் பெயர் பெறும். இங்கு வசிப்போர் அரிசியை மட்டுந் தமது பிரதான உணவாகக் கொள்பவரல்லர். குரக்கன், சோளம் என்பனவும் அதிகமாகப் பயன்படுகின்றன; சோளத்தை இடித்துக் கூழ் காய்ச்சிக் குடிப்பர். அதற்குக் கறியுஞ் சேர்க்கப்படும். வேடர்கள் இன்று இங்கேயே பெரும் பாலும் வசிக்கிருர்கள். அவர்களுடைய பிரதானமான ஊர் நில்கலை. கண்டிச் சிங்களரும் காணப்படுகின்றனர். இவர்கள் பல கிராமங்களில் தனிப்பட்ட வாழ்க்கை நடத்துகின்றனர். இவர்கள் மற்றையவர்களோடொப் பிட்டுப் பார்க்கையில் வறுமைப் பட்டவர்களென்றே கூறல் வேண்டும். ஏனெனில், பனப்பயிர் இங்கே விளைவிக்கப்படுவதில்லை. தேவையான பொருளெல்லாம் உள்ளூரிலேயே விளைவிக்கப்படுகிறது.
(9) மலைநாடு: இதனைச் சில வகைகளில் ஒரு தனி இயற்கைப் பிரதேச மாகவுங் கொள்ளலாம். அமைப்பைப் பொறுத்தவரையில் இது ஒரே தன்மை வாய்ந்தது. எங்குங் காடுகள் சூழ்ந்து ஒரு சீரான தோற்றமுடையதாக முற் காலத்திலிருந்தது. ஊவாச் சமவெளியும், உயர் சமவெளியும் இதற்கு விதிவிலக்காயிருந்தன போலும். ஆனல், அவற்றின் இன்றைய நிலை, விசேடமாக ஊவாச் சமவெளியைப் பொறுத்த வரையில், காட்டைப் பாகு பாடின்றி வெட்டியழித்தமையாலுண்டானதெனலாம். உயர் சமவெளிகள் எப்பொழுதும் புற்றரைகளாகவேயிருந்தன போலும். மேற் பரப்பிலே யுள்ள ஈரம் நீராவியாகமாறுந் தன்மை இங்கே எப்பொழுதுமுண்டு.

Page 203
392 இலங்கைப் புவியியல்
அத்துடன் மழை நீரானது தங்காமல் தாழ் பூமியை விரைவிற் சென்றடைவ தாலும் ஈரங் குறைகிறது. இவ்வாறு காட்டு வளர்ச்சி தடுக்கப்பட்டதால் இப் பகுதி மற்றைப் பகுதிகளிலும் முதன்மையடைந்தது. மலை நாட் டிலே பல வகையான பகுதிகளிருப்பதற்கு நிலத்தின் உயரம், மழை வீழ்ச்சி, மழைப் பருவம் என்பனவே காரணமாகும். நாட்டின் தரைத் தோற்றம் சம்பந்தமாகக் கூறப்பட்ட இயற்கைப் பிரிவுகளே இப் பகுதியை மிக வசதியாகப் பிரிப்பதற்கு ஏற்றவை. இவை மழை வீழ்ச்சிப் பிரதேசங்க ளோடு பெரிதும் ஒத்திருக்கின்றன.
(9அ) தென் மேற்குப் பாறைத்தொடர்கள் : சிவனுெளிபாதத்தையடுத் துள்ள இப் பகுதியில் வருடத்தில் 200 அங்குலம்வரை மழை பெய்கிறது. ஈரலிப்புள்ள பருவக் காற்றுக் காடுகளால் இது ஒரு காலத்தில் மூடப் பட்டிருந்தது. இங்கே அட்டைகள் அதிகம். தென் மேற்குப் பருவக் காற்று மலை முகடுகளிற் படிவதால் மழை மிக வதிகம்; அன்றியும் வளிமண்டலத்தி லுள்ள ஈரமும் சம பூமியிலிருந்து எழும் வெப்பமான காற்றுஞ் சேர்ந்து இப் பகுதி மக்களுக்கு ஒவ்வாத ஒரு நிலையை உண்டாக்கி விடுகின்றன. இத்தகைய நிலை தீவில் வேறெப்பாகத்திலுங் கிடையாது. இப் பகுதி, மனித சஞ்சார மற்றதாக எப்பொழுதுமேயிருந்திருக்கும்; ஆனல் இங்கே தேயிலை நன்ருக வளருமென்பதை ஆங்கிலேயர் கண்டனர். பெரிய நகரங்களொன்றுமிங்கேயில்லை. பெரிய தேயிலைத் தோட்டங்களில் ஆங்கிலத் தோட்டத் துரைமார் இந்தியத் தமிழ்த் தொழிலாளரை வேலைக்கமர்த்திக் கொண்டு தோட்டஞ் செய்கிறர்கள். எங்குந் தண்ணீர் ஓடியபடியேயிருக் கும். அழகிய பல நீர் வீழ்ச்சிகளிங்கேயுண்டு; நீர்மின் திட்டங்களாரம்பிப் பதற்கு இதுவே சிறந்த பகுதி; சன நெருக்கமதிகமுள்ள மேல் மாகாணத் துக் கண்மையிலும் இஃது அமைந்திருக்கிறது. மசுக்கேலியாக் கிராமத்தை மையமாகக்கொண்டு பாதைகள் செல்லுகின்றன. தேயிலைத் தோட்டங்கள் மலைகளின் காற்றுக் கொதுக்கான பக்கத்திலமைந்திருக்கின்றன. இலங்கை யின் இரண்டு பெரிய ஆறுகளான மகாவலிகங்கையும், கழனி கங்கையுமிங் கேயே ஊற்றெடுக்கின்றன. சிவனெளிபாதமிங்கேயிருப்பதால் ஏராளமான யாத்திரிகர்கள் வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்தின் மத்திய காலத்தில் இங்கு வருகிறர்கள். அப்பொழுது இப் பகுதி வறட்சியுள்ளதாக இருக்கும். வளிமண்டலத்தில் ஈரலிப்பிருப்பது மக்களுக்குப் பல வசதிக் குறைவுகளை யுண்டாக்குகிறது. சீலை துணி, வீட்டுத் தளவாடம், புத்தகம் முதலியவை விரைவிற் பூஞ்சணம் பிடித்துச் சேதமடையும். தோய்த்த துணிகள் பல நாள் களுக்குக் காயமாட்டா; வளிமண்டலத்தில் அவ்வளவு ஈரலிப்புண்டு. இப் பகுதியிலேதான் இலங்கையின் மிக அழகான இயற்கைக் காட்சிகளைக் காணலாம். சூரிய உதயத்திலும், அத்தமனத்திலும் முகிற் கூட்டங்களின் சாலவித்தை மிக வனப்புடையதாயிருக்கும்.

சுருக்கம் 393
(9ஆ) தொப்பிதோட்ட மேட்டுநிலம்: இங்கே 150 அங்குல மழை பெய் தாலும் வறட்சியுண்டு. உயர்ந்த பாறைத்தொடர்கள் மழை யொதுக்கையுண் டாக்குகின்றன. தென் மேற்குப் பருவக் காற்றின் முழுப் பயனையும் பெற முடியாதபடி அவை தடைசெய்கின்றன. சமவிராக் காலங்கள், பருவக் காற்றுக் காலத்தின் நடுப்ப தி ஆகிய மூன்று பருவங்களில் அதிக மழை பெய்கிறது. சிவனெளிபாத மலைப்பகுதியிலும் இங்கே காலநிலை ஆரோக்கிய முள்ளதாயிருக்கும். ஈரலிப்பினுல் ஒரளவு வசதியீனமுண்டு. வெப்பநிலை 70 ப. பாகையை அடுத்துள்ளது. நவெம்பர் துவக்கம் பெப்புருவரி வரை வறட்சிக்காலம்; இக்காலம் மிக மகிழ்ச்சி தரக்கூடிய காலமாகும். தாழ் பூமியிலுள்ளவர்கள், சுகத்துக்காக இக் காலங்களில் இங்கே வந்து தங்குவர்.இப்பகுதி படிப் படியாகப் பெரிய தேயிலைத் தோட்டமாக மாறி வருகிறது. பல மலைகளைத் துப்புரவுசெய்து நிரை நிரையாகத் தேயிலை நாட்டியிருக்கிறர்கள். இங்கே ஆங்கிலத் தோட்டத் துரைமாரும் தமிழ்த் தொழிலாளிகளும் அதிகம் காணப்படுவர்.
(9இ) உயர் சமவெளிகள்: இலங்கையிலுள்ள தொடர்பான உயர் நிலம் இதுவாகும். இவற்றிற் பெரும் பகுதி 7000 அடி உயரமுள்ளது. இங்கே 60° ப. வெப்பமுண்டு; 75 அங்குலந் துவங்கி 100 அங்குலம் வரை மழையுண்டு. மரங்களில்லாதபடியால் நுவரெலியாவிலும் இங்கு வெப்ப மதிகமாகக் காணப்படும். காலநிலை ஆரோக்கியத்துக்கேற்றதாகவும், உற்சாகமளிக்கக் கூடியதாகவுமிருந்தும் இங்கே மக்களதிகம் குடியேறவில்லை. பயிற்சி பெறும் இராணுவத்தினரும் ஆசியாவின் வினைப்பாகங்களிற் சேவை செய்து ஆரோக்கியங் குன்றின கடற் படையினரும் கூடாரமடித்துத் தங்கு கின்றனர். இங்குள்ள பிரதானமான நகரம் இப் பகுதியின் எல்லையிலுள்ள தியத்தலாவையாகும்.
(9ஈ) ஊவா வடி நிலம்: இது விசேடமான ஒர் இயற்கைப் பிரதேசம். இங்கே 50 அங்குல மழைவீழ்ச்சியேயுண்டு. சுற்றியுள்ள உயர்பாறைத் தொடர் கள் மழை யொதுக்கையுண்டாக்குகின்றன. தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்து நடுக் கூற்றில் இங்கே வறட்சியுண்டு. அதனல் மக்களல்லற்படுவர். வளிமண்டலம் வறட்சியுடையதாயிருப்பதாலும் நிலம் உயரமாயிருப்பதாலும் இப்பிரதேசம் ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்தது. சயரோகக்காரருக்குப் பண்டாரவளே நல்ல ஆரோக்கியத்தலமாகும். காற்று உற்சாகமளிக்கக் கூடிய தாயிருக்கிறது. தென் மேற்குத் தாழ் பூமியில் ஈரலிப்பான வளிமண்டலத்தில் வாழ்ந்து உற்சாகமிழந்தவர்க்கு இது நல்லதொரு மாற்றத்தை உதவுகிறது. புற்றரைகள் மிச்க ஊவாச் சமவெளிகளைப் பற்றி முன்னரே கூறியுள்ளோம். பள்ளத்தாக்குக்களேயனுசரித்து முற்காலத்தில் நெல் விளைவிக்கப்பட்டு வந்தது. ஆனல், அண்மையில் மலைச்சாய்வுகளிலே தேயிலைத் தோட்டங்கள் தோன்றி யுள்ளன. வறட்சியுள்ளபோதிலும் தேயிலைத் கோட்டங்கள் கூடிக் கொண்டே வருகின்றன. தேயிலைப்பயிர் செய்யப்படும் வறட்சியுள்ள பகுதி இதைப்போல

Page 204
394 இலங்கைப் புவியியல்
உலகில் வேறெங்குங் காணமுடியாது.
ஊவா வடிநிலத்தின் தலைநகர்
வதுளை. இது பழைய நகரம். (116 ஆம் படத்தைப் பார்க்க). சிங்கள அரசர் அயலேயுள்ள பிரதேசத்தைக் களஞ்சிய சாலையாகப் பயன்படுத்தினர் தேயி லைத் தோட்டங்களதிகரிக்க அதிகரிக்க தெம்மோதரை, வெலிமடை போன்ற சிறிய கிராமங்கள் விரைவாக முன்னேற்ற மடைந்து வருகின்றன. ஆங்கிலர் தொகையும் அதிகரிக்கிறது; ஆனல், சிங்களரே பெருந்தொகையினர்.
TÍ
|¬ யாவுக்கு i
Hiini
It f ''' all, gyly: |-ệ\, ( Jill j!'); 3340" A. 曾 ". అపోక్తి晏慧言、 ଐ;
|μ Στ' Ε. ਅ . : 4. 测 F:
«VÜNC) ܥܓܶ A ༼༄་་་༽| }^م鐵 ||\)| )\alN أبر
'//m3 \ே {.
l "NN \s
" '4|||, YY .િ 2: البین
வதுளை அமைந்துள்ள இடம். படத்தின் மத்தியில் ஆற்றின் ஒரு பெருவளைவில் வயல்நிலங் களாற் (கிடைக் கோடுகள்) சூழப்பட்டு இந்நகர் விளங்குகிறது. பள்ளத்தாக்குக்களூடாக வரும்
நாலு பாதைகள் இங்கே சந்திக்கின்றன.
(9 உ) உலுணுகலைப்பிரதேசம் : தொறப்பொத்த கலைச் சிகரத்தையுடைய (4969 அடி) பாறைத்தொடரை மகாவலிகங்கையின் ஒரு சிறிய இளையினது பள்ளத்தாக்கு, மலை நாட்டிலிருந்து பிரிக்கிறது. இது ஊவா வடி நிலத்தின் புறச்சுவருக்குச் சமாந்தரமாகவமைந்துள்ள நீண்ட சுவர்போன்ற மலைத் தொடராகும். இதிற் பெரும்பகுதி காடடர்ந்திருக்கிறது. அண்மையிலிவை
 
 
 

சுருக்க ம் 395
பெரும்பாலும் தேயிலை, இறப்பர் என்பவற்றை விளைவித்தற்காகப் பயன்படுத் தப்படுகின்றன. இப் பிரதேசமும் இதைச்சுற்றியுள்ள கீழைப் பீடபூமியும் விரை வாகத்துப்புரவு செய்யப்பட்டு வருகின்றன. ஊவா வடிநிலத்திலிருந்து வரும் பாதை பசறைக் கணவாய் வழியாகக் கீழ்ப் பீடபூமிக்கு இறங்குகிறது. பின் னர் இரு கிளேயாகி பாறைத்தொடரின் உட்பக்கமாக மதுல்சீமையைத் தாண் டிச் செல்லுகிறது. மற்றையது கிழக்குப்பக்கமாக உலுணுகலைக்குச் சென்று பிபிலைக்கு இறங்கி மட்டக்களப்புக்குச் செல்கிறது. இங்கே சனச் செறிவு குறைவு. இரண்டு பாதைகளையடுத்துஞ் சில சிறு கிராமங்களுண்டு. தென் கிழக்குப் பீடபூமியையடுத்து இவை அங்கு மிங்குஞ் சிதறிக் கிடக்கின்றன. இப்பிரதேசத்தின் கீழ்ப்பாகத்திலே இறப்பர்த் தோட்டங்களதிகமுண்டு ; உலுணுகலைப் பாறைத்தொடர் உயரமானதால் அங்கே தேயிலைத் தோட்டங் களுண்டு.
(9 ஊ) தெற்குப் பீடபூமி மலைநாட்டின் செங்குத்தான தெற்குச் சுவரின் முன்னுல் அமைந்துள்ள இப்பிரதேசம் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது. இது ஒரு பெரிய படி போன்று இயற்கையாகவே அமைந்திருக் கிறது. சமதளமான தாழ்பூமியிலிருந்து இது திடீரென 1000 அடி உயரத்துக் கெழும்புகிறது. பலாங்கொடைக் கணித்தாக இது 3000 அடிக்கு உயருகிறது. எஞ்சியபாகம் ஆயிரமடிக்குமிரண்டாயிரமடிக்கு மிடைப்பட்டு உயர்ந்துந் தாழ்ந்துஞ் செல்லுகிறது. அங்கு மிங்கும் வட்டமான உயர்ந்த குன்றுகளும் பீடபூமியிலிருந்து உயர்கின்றன. தாழ்பூமிக்கு மிதற்கும் கால நிலையில் வித்தியாசமில்லை. இது சற்றுக் குளிர்ச்சியுடையதாயிருக்கும். சம விராக் காலங்களில் இங்குமதிகமழையுண்டு. இரத்தினபுரிப்பாதை இப்பிரதேசத் துக் கூடாகப் பலாங்கொடை, அலுதுமுல்லையென்ற நகரங்களேத் தாண்டி அப்புத்தளைக் கணவாயூடாக மலைநாட்டுடன் தொடர்பு பெறுகிறது. இந்தப் பாதை அமைக்கப்படுவதற்கு முன்னர் இப்பகுதி இலங்கையின் எனச் சனச் செறிவுள்ள பகுதிகளுடன் தொடர்பின்றியிருந்தது. கழனிப்பள்ளத்தாக்கு இருப்புப் பாதை இரத்தினபுரிக்குச் சென்று அங்கிருந்து இப்பகுதியின் எல்லையிலுள்ள ஒப்பநாயக்காவுக்குச் செல்கிறது. இவ்வாறு இப்பகுதி மேல் மாகாணத்துடன் தொடர்பு கொள்ளுகிறது. இங்கே மலேரியாச்சுரங் குறைவு. காடும், சேனையும் உண்டு. பலாங்கொடைப் பக்கத்திலும் கொசுலாந்தை யிலும் இறப்பர்த் தோட்டங்களுண்டு. மலை நாட்டுக்கு இட்டுச்செல்லும் உயர் மலைச் சாய்வுகளில், விசேடமாக அப்புத்தளேக் கண்மையிற் பெரிய தேயிலைத் தோட்டங்களுண்டு. இவை ஊவாவடி நிலத்தையனுசரித்துப் பரந்துள்ளன. இங்கே அபிவிருத்திக்கு ஏற்ற வாய்ப்புக்களுண்டு; தாழ்பூமி அமிசங்கள் பல காணப்படுகின்றன. இருந்தும், இது குளிர்ச்சி பொருந்தியது. இப்பகுதிக் கூடாகச்செல்லும் வீதி கொழும்பு மாவட்டத்திலிருந்து ஊவா வடி நிலத்துக் குச் செல்வதற்கு மிக வசதியான மோட்டர் வழியாகும். இரத்தினபுரிக்குக் கீழேயுள்ள பகுதியில் வெள்ளம் பெருகுவது இயல்பு. இருப்புப்பாதை ஒரு காலத்தில் இப்பகுதிக் கூடாகச் சென்று மலை நாட்டுப் புகையிரதத்தானமான

Page 205
396 இலங்கைப் புவியியல்
அப்புத்தளையைச் சந்திக்கும். பின்னர் கொசுலாந்தை வெள்ளவாயா ஆகிய இடங்களுக் கூடாகக் கிழக்குக் கரைவரை நீட்டப்படலாம். இங்கே மக்கள் குடியேற்றம் குறைவு. சில தோட்ட வங்களாக்களும், சிறு கிராமங்களு முண்டு. அயலேயுள்ள தோட்டங்களுடன் தொடர்பு பெற்றிருப்பதாற் கொசு லாந்தை முக்கியமான வியாபாரப் பட்டினமாய் விளங்குகிறது.
(9 எ) பீதுருப்பாறைத் தொடர்கள் : இலங்கையில் மிகப்பெரிய மலைச்
சிகரங்களையுடைய அதிகம் உயர்ந்தபகுதி இதுவாகும். இப்பகுதியிலிருந்து பல பாறைத்தொடர்கள் எல்லாத் திசைகளிலுஞ் செல்லுகின்றன. இடையிடையே பள்ளத்தாக்குக்களுமுண்டு. பீதுருதாலகாலை (8292 அடி) இலங்கையின் மிக உயர்ந்த சிகரமானலும், அவ்வளவு கம்பீரமான தோற்றம் அதற்கில்லை.
எலவே, 6000 அடி உயரத்திலுள்ள பள்ளத்தாக்கிலிருந்து கிளம்பும் டல் வட்டமான மலைச் சிகரங்களுள் இதுவுமொன்று. சிவைெளிபாதமலை மிகத்
தாழ்ந்த பள்ளத்தாக்கிலிருந்து திடீரெனக் கிளம்பி உயர்வதால் அது இச்
சிகரத்திலும் உயர்ந்த தோற்றத்தையளிக்கிறது. பிரசித்திபெற்ற கக்கலைப் பாறை செங்குத்தாக 1600 அடி உயரமுள்ளது. அதை ஒடுக்கமான பள்ளத் தாக்கு வழியாக அடையலாம். அது மிகுந்த கம்பீரமான தோற்றமுள்ளது.
இப் பாறைத்தொடருள் முக்கியமானவை பின்வருமாறு:--பெரிய மேற்குத் தொடர், இது நுவரெலிக்கு நேர் மேற்கே 7264 அடி உயரமுள்ள
சிகரத்தையுடையது. தலங்கந்தைத் தொடர், இது தொப்பிதோட்டப் பக்கமாகத்
தென் மேற்காய்ச் செல்கிறது. இதன் உயர்ந்த பகுதி 6137 அடி உயரமுள்
ளது. இது தெற்கே உயர் சமவெளிக்குச் சென்று மூன்று சிகரங்களோடு முடிகிறது. இவை, தோட்டப்பொலை (7741 அடி), குடுகுகலை (1610 அடி),
இரிகல்பொத்தை (7857 அடி) என்பன. உடப்புசலாவைப் பள்ளத்தாக்கிற்கு
வடக்கிலும், தெற்கிலுமுள்ள இரு தொடர்கள் ; இவற்றின் சிகரங்கள் சற்றே
உயரங்குறைந்தவை. உயரங்குறைந்ததும் நீளத்தாற் கூடியதுமான ஒரு தொடர் கண்டிப்பக்கமாக வடக்கே செல்லுகிறது. இதற்கும் பெரிய மேற்குத்
தொடருக்கு மிடையேயுள்ளது புகழ்பெற்ற இரம்பொடைக் கணவாய்.
சிக்கலான இப்பிரதேசத்திலுள்ள முக்கியமான வொருபாதை இது; இதற்
கூடாகச் செல்வது மிகக்கடினம். ஒடுக்கமான பள்ளத்தாக்குக்களுக் கூடாகவே
போக்குவரத்து நடைபெறுகிறது. இவை மிக்க இயற்கையழகு வாய்ந்தவை.
இந்நான்கு பாதைகளும் அறுவரெலியாவிலிருந்து மூலைவிட்டமாக அமைந்து
செல்கின்றன. தொப்பிதோட்ட மேட்டு நிலத்திலிருந்து வருவதற்கு நானு
ஒயாப்பள்ளத்தாக்கு வாயிலாக அமைந்துள்ளது. கக்கவைத் திசையாகச் செல் லும் மற்ருெரு பாதை ஊவாவடிநிலத்திலுள்ள வெலிமடைக்குச் செல்கிறது.
மூன்றவது இருப்புப் பாதையையுடையது; இது ஊவா வடிநிலத்துக்கு வட இழக்காக உடப்புசலாவை வழியாய்ச் செல்கிறது. நான்காவது இரம்பொடைக் கணவாய். இது புசலாவைக்கும் கம்பளேக்குஞ் செல்கிறது. காலநிலையைப் பொறுத்தவரையில் இப் பகுதியே இலங்கையில் மிகக் குளிரான பிரதேசம். இப்

சுருக்கம் 397
பகுதியே எப்பொழுதும் குளிருடையதாயிருக்கும். இடைவெப்ப வலய நிலைமை களோடு ஓரளவு ஒப்புள்ள தன்மைகளிங்குண்டு ; இது மத்திய கோட்டி லிருந்து 7 பாகை தூரத்திலேயுள்ளது. இதன் காலநிலை ஆபிரிக்கா விலுள்ள கெனியாவுடனும், தென்னமெரிக்காவிலுள்ள ஈக்குவடோருட னும் ஒப்பிடத்தக்கது. 75 அங்குலந் தொட்டு 100 அங்குலம் வரை மழை வீழ்ச்சியுண்டு. மேற்குப் பகுதியில் மழை வீழ்ச்சியதிகம். ஒதுக்கான பகுதி
t-le
639A}ぬ】
ஈ. குதிரைப்பநதயத் திடல
&nリ
ந ஜ ? vallas
ULlo 117. நுவரெலி அமைந்துள்ள இடம். புள்ளியிட்டபகுதி நகர்ப்பரப்பைக்காட்டும். கருநிழற்றல் = ஏரிகள். தடித்த கரிய கோடு- வீதிகள்.
களில் இரண்டுமுறை உயர் மழைவீழ்ச்சியுண்டு ; மேற்குப் பக்கத்தையடுத்த சாய்வுகளில், விசேடமாகத் தென் மேற்குச் சாய்வுகளில், பல இடங்களிலே தென் மேற்குப்பருவக் காற்றுக்காலத்திலே அதிக மழையுண்டு. உயர்ந்த மலைகளில் விசேடமான ஒருவகைக்காடு உண்டு; எச்சு. இடபிளியூ. கேவு என்பார் இதைப்பற்றி, குறிப்பாகப்பீதுருக் காடுகளேப்பற்றி பின்வருமாUr குறிப்பிட்டுள்ளார்.

Page 206
398 இலங்கைப் புவியியல்
"பயங்கரமான மரங்கள், விரிந்த அடியையும் கவர்க் கிளைகளையுமுடையன; தோரணம் போன்று மரப்பாசி இவற்றிற் படிந்திருக்கும். பச்சைப் பசேலென்ற கொடிகளும் உள்ளூர் ஒக்கிட்டுக்களும் அடிமரங்களைச் சுற்றி புதினமான மலர்கள் பூத்து விளங்கும். உயர்ந்த கிளேகளிலே எண்ணுக் கடங்காத மேல்வளரிகள் நூதனமான மலர்களோடு விளங்கும். அலிஞ்சி நீண்ட கிளைகளையும், நிறமான பூக்களையுங் கொண்டு சாதாரண காட்டுமரம் போல் எங்கும் காணப்படுகிறது.”
மரை இலங்கைக்கே சொந்தமான மிருகம். இக்காடுகளில் அது வேட்டை யாடப்படுகிறது. முற்காலத்தில் இப் பகுதிகளேயடைவது முடியாத காரியமாதலால் இங்கே மக்கள் வசித்தது குறைவு. வண்டல் படிந்த பள்ளத்தாக்குக்களைச் சுற்றிச் சில சிறு கிராமங்களிருந்தன. யுத்த காலங்களில் இது ஒதுக்கிடமாயமைந்தது. ஆங்கிலராட்சிக் காலத்திலிப் பகுதி முற்றகவே மாறிவிட்டது. வெப்பமும் ஈரலிப்புமுள்ள நாட்டில் நெடுங்காலம் வசிப்பதால் ஆங்கிலர் தளர் வெய்துகின்றனர். அயன மண்டலத்திற்றேன்றும் நோய்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள் வதற்கு அவர்கள் முதலிற் பழகிக்கொள்ளவில்லை. அதனுல் அக்கா லத்தில் அவர்களுடைய சீவியம் இக்காலத்தைக் காட்டிலும் கடினமாயி ருந்தது. 1827 ஆம் ஆண்டில், இலங்கைக்காடுகளிலே யானை வேட்டை யாடித் திரிந்த சில ஆங்கில உத்தியோகத்தர் பீதுருதாலகாலை மலையடி வாரத்தில் ஒர் எரியைக்கண்டனர். அதையடுத்தே இன்றைய நுவரெலியா அமைந்துள்ளது. இவ்விடத்தின் இயற்கையழகைக் கண்ட இவ்வுத்தியோ கத்தர் அக்காலத் தேசாதிபதியான சேர். எற்றுவேட்டு பான்சுக்கு விடயத்தை யறிவித்தனர். இப்பகுதி குறிப்பிடத்தக்க குளிருள்ளதென்றும், இங்கு செல்வதற்கு வீதியமைக்கப்பட்டால் ஆங்கிலர்க்கு மிகுந்த உபயோகமாயிருக்கு மென்றும் அவர்கள் கூறினர். தேசாதிபதி உடனே இப்பகுதிக்கு வீதிய மைத்தார். இவ்விடத்தை ஆரோக்கியத்தானமாக்கி, தானும், எனை உத்தி யோகத்தரும், அயனமண்டலச் சோம்பல்நோயால் வருந்தும் போர் வீரரும் தங்க வீடுகளையுங் கட்டுவித்தார். நாளடைவில் இவ்விடம் விடுமுறையைக் கழிப்பதற்கு மிக வாய்ப்பான இடமாயிற்று. இன்று பணம் படைத்த பல இலங்கையர் விடுமுறையைக் கழிக்க இங்கே சென்று தங்குவர். இப்பகுதி யிலே தேயிலைத் தோட்டங்கள் விரைவிற் பெருகின. இருந்தும், இன்னும், இப்பகுதி பழைய காட்டுத் தோற்றத்தையுடையதாகவே காட்சியளிக்கிறது. மலைநாட்டுக்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டது. பின்னர் அது 1899 இல் அப்புத்தளைவரை நீட்டப்பட்டது. அதன் பயனுக இப்பகுதி யிற் பெரிய மாற்றங்களுண்டாயின. அத்துடன் தெருக்களுமமைக்கப் பட்டன; இவை மிகுந்த திறமையோடு அமைக்கப்பட்டன. எனவே உலகி லுள்ள சிறந்த தெருக்களோடு இவற்றையுஞ் சேர்த்துக்கொள்ளலாம். மோட்டர் வாகனப் போக்குவரத்து அதிகரிக்கவே பிரயாணிகள் போக்கு

சுருக்கம் W ;399
வரத்து மோட்டர்வன்டி மூலம் நடைபெற்றது. அதனல் புகையிரதப் பிாயா னத்தின் தேவை குறைந்தது. இப்பொழுது பொருள்களே எற்றவும் இறக்க வுமே புகைவண்டி அதிகம் பயன்படுகிறது. எராளமான தேயிலை நுவரெ லியாவிலிருந்து கரைக்குக் கொண்டுவரப்படுகிறது. அத்துடன் இப்பகுதி வாசிகளுக்குத் தேவையான உணவுப் பொருள் முதலியன புகையிரத மூலமே கொண்டுவரப்படுகின்றன. தெருவமைக்கப்பட்டதாலும் தேயிலைத் தோட்டங்கள் தொடக்கப்பட்டதாலும் பல புதிய கிராமங்களுண்டாயின. பெரும்பாலான கிராமங்களிலே இந்தியத் தமிழரே வசிக்கின்றனர். நானுஒயா உடப்புசலாவைக்குச் செல்லும் இருப்புப் பாதைச் சந்தியிலிருப்பதால் நடமாட் டம் நிறைந்த ஒருநிலையமாய் விட்டது. இவ்விருப்புப் பாதைகள் எந்திரவிற் பன்னரின் மிகுந்த திறமையைக் காட்டுகின்றன. சில இடங்களிற் பெரிய பாறைகளை வெட்டியுங் குடைந்துமே பாதை அமைக்கவேண்டியிருந்தது. தெருப்போட வேறுவழியில்லாததன்மை வாய்ந்த இடங்களில் எந்திரவிற் பன்னர் பாறைகளைக் குடைந்து பாதையமைத்தனர். இரம்பொடைக் கணவாயையடுத்துப் பல கிராமங்களுண்டு; அவை வெளியுலகத்தோடு தொடர்புவைத்துக்கொள்வதற்கு மோட்டர் வசுச்சேவை உதவிபுரிகிறது. தொப்பிதோட்ட மேட்டு நிலத்தைப்போலவே இங்கும் ஆதியில் வெகு சில சிங்களரே வசித்து வந்தனர். இப்பொழுது பிரதானமாகத் தோட்டத் துரைமாரும் இந்தியத்தொழிலாளரும் குடியேறியுள்ளனர். நானுஒயா வுக்குப் போகும் பாதையிலே பிளாக்குப்பூலென்ற இடத்தில் நானுஒயா நீர் வீழ்ச்சியுண்டு. அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சத்தி நுவரெலியா நகருக்கும் பல தோட்டங்களுக்கும் வழங்கப்படுகிறது. நுவரெலியா விசா லிக்கப்பட்டு வருகிறது. அதற்குப் பல திருத்த்ங்கள் செய்யப்படுகின்றன. அருவிகளை மறித்துக்கட்டி இரண்டு எரிகளமைக்கப்பட்டுள்ளன. h−
இடைவெப்பப் பிரதேசத்தில் வளரக்கூடிய பல பழமரங்களும் காய் கறிகளும் இங்கே பயிர்செய்வது சுலபமாதலால் ஆங்கிலர் விவசாயத்தில் மிகுந்த சிரத்தையெடுத்து வருகிறர்கள். இம்முறையில் ஆங்கிலர் நடத்திய பரீட்சைகள் இலங்கையர்க்கு மிகப்பயன்றருவனவாகும். புதுப்புதுப் பயிர்கள் புகுத்தப்பட்டுள்ளன. இடைவெப்பப் பிரதேசப் பயிர்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே கக்கலைப் பூந்தோட்டமமைக்கப்பட்டது. தோபெரி என்ற பழத்தைத் தவிர, இங்கிலாந்தில் வளரக்கூடியமற்றைப் பழவகைகளை யெல்லாம் இங்கே உற்பத்தி செய்யலாம். ஆனல், அவை ஆங்கில நாட்டிற் பயிராகும் பழங்களைப் போலச் சுவையுடையனவன்று. இலங்கை உருளைக் கிழங்கு அத்துணை சுவையுடையதாயிராது.
(9 எ) கண்டிமேட்டுநிலம்: மலைநாட்டில் நெடுங்காலமாக மிகச் சனச் செறி வுள்ளதும் நன்கு அபிவிருத்தி செய்யப்பட்டதுமான பகுதி இது. இதன் முன்னேற்றத்துக்கு இங்கே போதிய வளங்களிருக்கவில்லை. (அ) வடக்குத் தாழ்பூமியிலிருந்து மாத்தளைப் பள்ளத்தாக்குக் கூடாகவும், (ஆ) கடுகன

Page 207
400 இலங்கைப் புவியியல்
வைக்கணவாய்க்கூடாகவும், கினிகத்தேனைக் கணவாய் வழியாகவும் கொழும்பு மாவட்டத்திலிருந்து இப்பகுதியை இலேசாக அடையக்கூடியதா யிருந்தமையே இதற்கு முக்கிய காரணங்களாகும். ஐரோப்பியராட்சிக் காலந் துவங்கிக் கொழும்பு மத்திய வியாபாரத்தலமாயிருந்து வந்ததென் பதுங் குறிப்பிடத்தக்கது. 16 ஆம் நூற்றண்டினிறுதியிலே கண்டி மலை நாட்டுத் தலைநகரானதற்குப் பல காரணங்களுண்டு. ஒன்று, அது பலதிசைக் குஞ் செல்லும் பாதைகள்மீது ஆதிக்கம் பெற்றிருந்தமை. மற்றையது, தலதா மாளிகையென்ற தந்தக்கோவில் அங்கே கட்டப்பட்டமை. அதோடு சம்பந் தப்பட்ட பெரகரா என்ற விழா 18 ஆம் நூற்றண்டினிறுதி தொட்டு எடுக் கப்பட்டது. இதனற் கண்டி நகர் வெறும் பாதுகாப்பு மட்டுமேயமைந்த நகரம் என்ற வகையிலன்றி ஒரு புண்ணியத்தலமாகவுஞ் சிங்களராற் கருதப்பட்டது. தேசத்துப் பண்பட்ட பழக்க வழக்கங்களங்கேதான் பாது காக்கப்பட்டு வந்தன என்றவோர் எண்ணமும் அவர்கள் மனதில் வேரூன்றியது. அழகிய கண்டி ஏரி 1810 ஆம் ஆண்டில் கண்டிக் கடைசி யரசனற் கட்டப்பட்டது. அதற்கும் கண்டி நகரின் அமைவுக்கும் முதலில் எவ்வித தொடர்புமில்லை. பள்ளத்தாக்கிலே 'எராளமான நெற் காணி களிருந்தன. அவற்றையழித்தே எரி கட்டப்பட்டது. கண்டி நகர் ஆதியில மைந்த இடம் “சதுப்பு நிலங்களாலும் குன்றுகளாலுஞ் சூழப்பட்டிருந்தது.” வயல்களே ஏரியாக்கியதும் நகரை எங்கேயமைக்கலாமென்று நிச்சயஞ் செய்யப்பட்டது. கண்டி நகரம் நிறுவப்பட்டதோடு தொடர்புள்ள கதை குறிப்பிடத்தக்கது. (“இலங்கைத் தொல்பொருளாய்வோன்’ என்ற சஞ்சிகை யின் நாலாந்தொகுதி இரண்டாம் பகுதியில் எல். சே. பி. தேனர் இக் கதையைக் கூறியிருக்கிறர்) மூன்ருவது விக்கிரமபாகு தனது இராசதானி யைக் கம்பளையிலமைத்து ஆண்ட 14 ஆம் நூற்றண்டினிறுதியில் கண்டி நகர் நிறுவப்பட்டது. அரசன் வயது முதிர்ந்த பண்டிதர் ஒருவரிடம், அரச நகர் அமைப்பதற்கேற்ற இடமொன்றைக் குறித்துக் காட்டுமாறு கேட்டானென் றும், அவர், தலதா மாளிகையையடுத்து ஒர் அணிலும் பாம்புஞ் சண்டை யிட்டு, அணில் வெற்றி பெற்றதைப் பார்த்து அந்த இடமே ஏற்றதெனக் கூறியதாகவுங் கதையுண்டு. இது கண்டிக்குப் பின்னல் ஏற்படவிருந்த இன்னல்களைக் குறிப்பிடும் உற்பாதமாயிருந்ததெனக் கொண்டால் முந் நூறு வருடம் இது ஐரோப்பியருடன் போரிட்டு வந்ததையும் பின்னர் இன்று உலகிலேயே அமைதியும் அழகுமுள்ளவொரு நகரமாயிருப்பதையும் உய்த்துணரல் வேண்டும். சுவிற்சலாந்திலுள்ள உலூசேண் நகரோடு கண்டியை ஒப்பிடலாம். அதுவும் கண்டியேரியிலும் மிகப் பெரிய ஒர் இயற்கை எரிக்கரையிலுள்ளது. இங்கேயே, சுவிசு மக்கள் தங்கள் சுதந்திரத்துக்காகப் பல காலம் போராடினர்.
கண்டிக்குச் சிங்களரிட்ட பெயர் “மகாநுவரை.” மகாநுவரையென்பது பெரிய பட்டணம் எனப் பொருள்படும். “கந்த” என்பது சிங்களத்தில் குன்று எனப் பொருள்படும். சிங்களர் படை எங்கேயுள்ளதெனப் பிரித்தானியப் போர்

40
'q, Iĵrīg) ựfnrito, sitzelo [qilgos-IzırıIngrīgs fortessousean YY00LLYLL LL0Y SLL00L LLLLL LL0 LLL SLLLLL 0LLLLL LLLLLLLLs@g9.gs. Ģsse) qisnleg so!? go@ ựmoč odihnego pus's poigri ongig,0$ 1ços@s,‘qiłmfocologno 199Ųnogorgio sporto uspor'q1@@@@ mqo u os@@ș șomosyo talogo? 'gogs tilosoɛ suoises@@@-@s q@@@@so igogogo ogogong'son1995 s'in og -iĝ 101g Nogsonoods af bilogo?
·sin(n-ın

Page 208
402 இலங்கைப் புவியியல்
வீரர் கேட்டபொழுது அது “கந்த’விலுண்டென அவர்களுக்கு அடிக்கடி கூறப்பட்டது. இதிலிருந்தே கண்டி என்ற பெயர் திரிந்து வந்துள்ளது. மலை நாட்டிலுள்ள பெரிய வியாபாரத் தலம் கண்டி, இங்கே வருடம் முழுவ தும் சனங்கள் வந்தபடியும் போனபடியுமேயிருப்பார்கள். அந்நிய நாட்டு யாத்திரிகர் பலர் கொழும்புத் துறைமுகத்தில் கப்பல் வந்து சேர்ந் ததும் இங்கே ஊர் பார்க்க வருகிறர்கள், இலங்கை க்கு வரும், பன முள்ள அவுத் திரேலியர் கண்டியிலும் நுவரெலியாவிலுமுள்ள பெரிய விடுதிச் சாலைகளிற்றங்குகிறர்கள், வருடந்தோறும் ஒகத்துப் பெரகெராக் காலங்களில் பெருந் தொகையான மக்கள் இங்கே வருகிறர்கள். தந்த தாது காட்சிக்கு வைக்கப்படும் காலங்களில் ஏராளமான யாத்திரிகர் கண்டிக்கு வந்து தற்காலிகமாக நகரில் தங்குவர். பல வகையான வீடுகள் கண்டியிலுண்டு; அங்குள்ள நிரந்தர வாசிகளுக்கு அவசியமான கடைகளிலும் மிக அதிகமான கடைகள் அங்கேயுண்டு. விழாக்காலங் களில் தற்காலிகமான உணவுச் சாலைகளும் ஏனைப் பொருள்களை விற்பனை செய்யுமிடங்களும் வீதிகளிலே பெருகிவிடுகின்றன. கண்டியிலும், அனுராதபுரத்திலும் யாத்திரைக்கு வருஞ் சனங்களின் போக்குவரத்தை ஒழுங்கு செய்வது உள்ளூராட்சித் தாபனங்களுக்கு மிக முக்கியமான பிரச்சினையாகும். யாத்திரிகர்க்குத் தொண்டு செய்தும் பல சங்கங்கள் கண்டியிலுண்டு.
தொப்பிதோட்டப் பிரதேச மழை வீழ்ச்சிக்கு ஒப்பான மழை வீழ்ச்சி கண்டி மேட்டுநிலத்திலுமுண்டு. வருடச் சராசரி 75 அங்குலந் துவக்கம் 100 அங்குலம் வரையுமாகும். இப் பிரதேசத்தின் கிழக்கெல்லையிலுள்ள மல்லிப் பிட்டிக்கு அண்மையில் 75 அங்குலத்துக்குக் குறைவான மழைவீழ்ச்சியே உண்டு. தொப்பிதோட்டபிேட்டுநிலத்திலும் சற்று அதிகமான வெப்ப நிலையிங் குண்டு. சாதாரணமாக இது 75° ப. மேலே செல்வதில்லை. இப் பகுதியின் சராசரி உயரம் 1500 அடி; தாழ் பூமிப் பிரதேசத்திலும் இது குளிர் நிறைந் தது. இங்கேயுள்ள இயற்கைக் காடுகளில், மலைச்சாய்வில் பயிர் செய்வதற்குத் தகுதியற்ற இடங்களிலுள்ளவற்றை விட, மற்றையவையெல்லாம் அழிக்கப் பட்டுவிட்டன. இங்கே ஒரு காலத்திற் கோப்பித் தோட்டங்கள் பல விருந்தன. அவை பின்னர் கைவிடப்பட்டன. அப்பகுதிகள் இன்று புற்றரைகளாகக் காட்சி யளிப்பதைக் காணலாம். இன்று தேயிலைத் தோட்டங்களேயதிகமுண்டு. கம் பளேக்கும், வத்தகமைக்குஞ் சமீபத்திலுள்ள மகாவலி கங்கைப் பள்ளத் தாக்கில் எராளமான இறப்பர்த் தோட்டங்களுண்டு. தும்பறைப் பள்ளத்தாக் கிலும் இறப்பர் அதிகம். கண்டி மாவட்டத்தில் ஒரு முக்கியமான பகுதி தும் பறை. இங்கே விசாலமான திறந்த பள்ளத்தாக்குண்டு; இது கண்டிக்குக் கிழக்கேயுள்ளது; குன்றுத் தொடர்களால் கண்டியிலிருந்து புறம்பாக்கப் பட்டது. இங்கே கொக்கோ, புகையிலையென்பன நன்றக வளரக் கூடியவளம் பொருந்திய நிலமுண்டு. 'பள்ளத்தாக்கின் வண்டற் படிவு நெற் செய்கைக் குப் பயன்படுகிறது. மலை நாட்டிற் காணப்படும் சிறந்த படிக்கட்டு வயல்

சுருக்கம் 403
களிங்கேயுண்டு. முன்னர் சனங்கள் அங்குமிங்குமாகச் சிதறியிருந்தனர்; இப்போது பிரதானமான வீதிகளையடுத்து வீடுகள் கட்டிக் குடியேறியுள்ள னர். இப் பிரதேசமெங்கும் அங்குமிங்குமாகச் சிறு சிறு கிராமங்களுண்டு. மலைச் சாய்வுகளில் தனித் தனியே தோட்டத்துரைமாரின் வங்களாக்கள் பலவற்றைக் காணலாம். முக்கியமான கிராமங்கள் கண்டியிலிருந்து பல திசையிலுஞ் செல்லும் வீதிகளையனுசரித்திருக்கின்றன. கிழக்கிலுள்ள முக் கியமான பட்டணங்கள் தெல்தெனியாவும் வத்தகாமமுமாகும். கட்டுகாத் தோட்டை (தொட்ட = கடவைத்துறை) முக்கியமான ஒரு தானத்தி லமைந்திருக்கிறது. கண்டியிலிருந்து வடக்கே மாத்தளைக்குச் செல்லும் பாதை சிங்களர் சரித்திரத்தில் முக்கியமான பங்கெடுத்து வந்திருக்கிறது. இங்கே மகாவலி கங்கையை இது கடக்கிறது. இதிலோர் ஆற்றுத் துறை யுண்டு. இதனை யானைகள் மூலம் அக்காலத்திற் கடந்தனர். இது இன்று மிகச் சிறிய நகரமாக விளங்குகிறது. ஆங்கிலர் ஆட்சிக் காலந் தொட்டுப் பேராதனை அங்குள்ள பூந்தோட்டங் காரணமாக உலகப் புகழ் பெற்றிருக் கிறது. இன்று அத் தோட்டத்தோடு விவசாயப் பாடசாலையுமிணைக்கப்பட்டுள் ளது. மேலும், இலங்கைப் பல்கலைக் கழகம் இங்கு கட்டப்பட்டுவருகிறது. அடுத்த சில வருடங்களில் இலங்கைப் பல்கலைக் கழகம் இங்கு தாபிக்கப்பட்டு விடும். மகாவலிகங்கை குறுகியவொரு பாறைவழியாகச் செல்லும் இடத் துக்குச் சற்று மேலே இந்தப் பல்கலைக் கழகம் அமைந்திருக்கிறது. இது இயற்கையழகு மிகுந்த ஒரு பகுதியாகும். கடுகனவைக் கணவாயூடாகக் கண்டிக்குச் செல்லும் பாதையும் இதைச் சந்திக்கிறது. இந்தக் கணவாயை யடையும் இருப்புப் பாதை 1867 இல் கண்டிவரை நீட்டப்பட்டது. இருப்புப் பாதைக்குச் சமாந்தரமாகச் செல்லுந் தெரு சரித்திரப்பிரசித்திபெற்றது. பிரித்தானியர் தெருவமைக்குங் கலையை உரோமரிடமிருந்து கற்றனர். அவர் கள் சென்ற குடியேற்ற நாடுகளெங்கும் இக்கலையை விருத்தி செய்தனர். நல்ல ஆட்சிக்குத் துணை புரிவதற்காகச் சிறந்த தெருக்களையவர்களமைத் தனர். மலைநாட்டையினைக்கும் பல பெருந் தெருக்களையமைத்தாலே இலங்கை ஒன்றுபடுமென்றும், இல்லாவிட்டால் மலைநாடு பூரணமாகத் தனித்து நின்றுவிடுமென்றும் ஆரம்பகாலத்துப் பிரித்தானிய தேசாதி பதிகள் எண்ணினர். பத்துவருடமாக மிகுந்த பிரயாசையோடு பலவகை யான வேலைகளைச் செய்தபின்னர் 1831 இல் தெரு முடிவெய்தியது. பெரிய கற்பாறைகளை வெட்டியும், குடைந்தும், குத்துமலைகள் மீது பாலங்கள் போட்டும் அரும்பாடுபட்டனர்.
கண்டிமாவட்டத்தின் மேற்கிலுள்ள முக்கியமான பட்டினம் கம்பளை. இது முக்கியமான ஒரு தானத்திலமைந்திருக்கிறது. சிலவகையிலிது கண்டி யிலும் முக்கியம் வாய்ந்ததெனலாம். பிரகாசமான காலத்தில் கம்பளை நகரின் பின்னுள்ள மலையுச்சியிலிருந்து பார்த்தால் தென் மேற்குத்

Page 209
404 இலங்கைப் புவியியல்
தாழ்பூமியின் பெரும்பகுதி தெரியும். கம்பளை கடுகைைவக் கணவாய்க் கும், கினிகத்தேனைக் கணவாய்க்கு மிடைநடுவில் அமைந்திருக்கிறது. இரம்பொடைக் கணவாய்க்குச் செல்வதானல் கம்பளையைக் கண்டே போகவேண்டும். 14 ஆம் நூற்றண்டிலே இந்நகர் ஏறக்குறைய முப்பது வருடமாகத் தலைநகராயிருந்தது. பின்னர் நடந்த யுத்தங்களில் பின்னிட் டோடி மறைந்திருப்பதற்கு இது அடிக்கடி பயன்பட்டது. இன்று இது அண்மையிலுள்ள தோட்டப்பொருள்களைக் கொண்டுவந்து புகைவண்டியி
f 6ÇÝ): Ահա f f
%5ھ7///////4یق -- سر ہے ۔
. مشکلا స్నే
ཙི་ (ക
莒、 التي
(t
اتفق معمرو
8
°
*ళ్కి
குருனுக்கல் நகரமைந்துள்ள இடம். 1 ஆம் இலக்கக்குன்று யானைமலை. இதற்கு அணித் தாகவே நகரமைந்திருக்கிறது. 2 ஆம் இலக்கக்குன்று கொலைப்பாலெல்லை. விசாலமான வயல் நிலங்களும் (கிடைக் கோடிடப்பட்டுள்ளவை) எல்லாத் திசையிலும் செல்லுந் தெருக் களுமமைந்திருப்பதைக்கவனிக்க.
லேற்றுவதற்கேற்ற மத்தியநிலையமாகவும், பல மோட்டர்வசுச் சேவை களுக்கு மத்தியத்தானமாகவுமமைந்திருக்கிறது. இங்கே வல்லாக கொடைத் தேவாலயமென்ற மிகப்பழைய ஆலயமொன்றுண்டு. கடந்த 800 வருடமாக நடைபெற்று வருவதும், கண்டிப் பெரகராவிலும் பழமை வாய்ந்ததுமான வொரு விழா வருடந்தோறும் இங்கு நடைபெற்று வருகிறது. கம்பளையின் பழைய பெயர் “கங்காசிரிபுரம்’, மகாவலிகங்கைப் பள்ளத் தாக்கின் மேற்பகுதியில் நாவலப்பிட்டியுண்டு. இது தொப்பிதோட்ட மேட்டுநிலத்தின்
 

சுருக்கம் 405
வாயிலில், தொலசுபாகைத் தொகுதி மகாவலிகங்கையைச் சந்திக்கு: தானத்துக்கு அண்மையில் அமைந்துள்ளது. இதுவும் நெடும்பாதை யிலமைந்த ஓரிடமாகும். கம்பளேயிலும் இது புதிய நகரம். மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கையனுசரித்துச் செல்லும் நெடுந்தெரு நாவலப்பிட்டி யின் அதிகாரத்திலிருக்கிறது. இந்நெடுந்தெருவினெருகிளே கினிகத்தேனைக் கணவாய் வழியாக எட்டியாந்தோட்டையைக் கடந்து தாழ்பூமிக்குச் செல் கிறது. எட்டியாந்தோட்டை கழனி கங்கையிலுள்ள ஆற்றுத்துறை பொருந் தியநகரம். மற்றிரு கிளைகள் தேயிலைத்தோட்டங்கள் மலிந்த தொலசு பாகைக்கும் தொப்பிதோட்டத்திற்கும் செல்கின்றன. கம்பளையிலும் நாவலப் பிட்டியிலும் அநேக சோனக வியாபாரிகள் உளர்.
(9 ஐ) தொலசுபாகைத் தொகுதி ! இக்குன்றுத் தொகுதி மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கினல் பெரிய மலைத்தொடர்களிலிருந்து பிரிக்கப்படு கிறது. இங்கு 3000 அடி உயரத்திற்கு மேற்பட்ட பகுதி அதிகமுண்டு. மிக உயர்ந்த சிகரம் 4404 அடி உயரமுள்ள உணுலுகலை. இங்கே நல்ல மழை யுண்டு. எங்குங் காடடர்ந்திருக்கும். பாறைகளின் இயற்கையழகு போற்றத் தக்கது. பிரசித்திபெற்ற “பைபிள்” பாறை இங்கேதானுண்டு. மலைச்சாய்வை யடுத்த ஒரங்களிலேயே தெருக்களமைக்கப்பட்டுள்ளன. மற்றைப்படி ஒற்றையடிப்பாதை மூலமாகவே எனைப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டும். இங்கே தோட்டங்கள் புதிதாக அமைக்கப்படுகின்றன. விசேடமாக இறப்பர்த் தோட்டங்களேயுண்டு. பள்ளத்தாக்குக்களில் அழகிய படிக்கட்டு நெல்வயல் களைக் காணலாம். அவற்றையடுத்துச் சிறு கிராமங்களுண்டு; ஆனல் சனச்செறிவு குறைவு.
(9 ஒ) வடமேற்கு மேனிலம்: இது இடைப்பட்ட ஒரு பிரதேசமாகையால் இதனை வகைப்படுத்துவது கடினம். இது மலைநாட்டுக்கு வெளியேயிருந்த போதிலும் மலைநாட்டுத்தன்மைகள் பொருந்திய உயர் நிலங்களைக் கொண்டுள்ளது. மேற்குத்தாழ்பூமியின் தன்மைகளையுடைய விசாலமான பள்ளத்தாக்குக்களுமிங்கேயுண்டு. தோட்டங்கள் செய்வதற்காக இப்பகுதி அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது. தெற்கே இறப்பர்த் தோட்டங்களே முக்கிய மானவை. இப்பகுதியின் பெரிய பட்டினம் கேகாலை. மத்திய பகுதியில், பிரதானமாகப் பொல்காவலை, இரம்புக்கனையாகிய இடங்களிலே தென்னை யுண்டு. மேலும் வடக்கே சென்றற் குருனக்கலையடையலாம். இதுவும் முக்கியமான ஓரிடமாகும். 14 ஆம் நூற்றண்டின் முற்பகுதியிலே சிங்கள அரசர் இதனைத் தமது தலைநகராகக் கொண்டனர். புகழ்பெற்ற யானைமலை ஒர் இயற்கையரணுக அமைந்திருந்தது. அதனுச்சியிலிருந்து பார்த்தால் பலமைல் தூரம்வரை பரந்துள்ள அயலூர்களைக் காணலாம். குருஞக். கலிலிருந்து 5 முக்கியமான வீதிகள் கிளேவிட்டுச் செல்கின்றன. புத்தளத் துக்கும், நீர்கொழும்புக்கும், கொழும்புக்கும், கண்டிக்கும், தம்புளேக் குமிவை செல்லும். அண்மையில் இதன் முதன்மைநிலை அதிகரித்து" விட்டது. பல தோட்டங்களுள்ள ஓரிடமாய் அது இன்று விளங்குகிறது.

Page 210
406 இலங்கைப் புவியியல்
புதிதாகப் பல பகுதிகளைத் துப்புரவுசெய்து தோட்டங்களாக்கியிருக்கிருர்கள். அவற்றிற் பெரும்பகுதி வெள்ளேக்காரரின் மேற்பார்வையிலிருக்கிறது. ஆங் கிலர் செல்வாக்குக் குருனுக்கலில் அதிகம். தென்னையே முக்கியமாகப் பயிர் செய்யப்படுகிறது. ஆணுல், நகரின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள பள்ளத் தாக்குக்களில் கொக்கோ பயிர் செய்யப்படுகிறது. பென்சிற்கரி உற்பத்திக்கும் இவ்விடம் பெயர் பெற்றது. நகருக்கு அண்மையில் பல சுரங்கங்கள் முற் காலத்திற் காணப்பட்டன. இப்பொழுது நகரின் கிழக்கில் மாத்தளை மாவட்டத் தைச் சார்ந்த குன்றுகளில் ஒரு சில சுரங்கங்கள் காணப்படுகின்றன. சமீப காலத்தில் இந்நகர் வெகு விரைவாக வளர்ச்சியடைந்து வந்துள்ளது.
(9 ஒ) மாத்தளைப்பள்ளத்தாக்கு இப்பகுதி நீண்டகாலமாகச் சிங்களச் சரித்திரத்தோடு தொடர்பு பெற்றுவந்தது; அன்றியும் பல பக்கத்தாலும் ஒதுக்கமாயுள்ள பிரதேசம் இது. இவ்விரு காரணங்களினலும் இப்பகுதி தனித்தன்மை பெற்றுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் பள்ளத்தாக்கை யடுத்து 3000 அடி உயரமுள்ள நீண்ட மலைத்தொடர்களுண்டு. தெற்கே சிறிய குன்றுகள் பல சேர்ந்து சுவர் போன்று அமைந்துள்ளன. இதற்கூடாக ஒடுக்கமான தெருவொன்று நெளிந்து சென்று கண்டி மேட்டுநிலத்தையடைகிறது. வடக்கே பள்ளத்தாக்குத் தாழ்ந்து சென்று வடமத்திய மாகாணத்து மேனிலங்களோடு மயங்கிவிடுகிறது. மகாவலி கங்கையின் மிகப்பெரிய கிளையான அம்பன் கங்கையைச் சேர்ந்த சிற்றருவிகள் இப்பிரதேசத்திற் பாய்கின்றன. பள்ளத்தாக்கினடித்தளத்திலுள்ள பெருந் தொகையான படிக்கட்டு வயல்களுக்கு இந்த அருவிகளின் நீர் பயன்படு கிறது. இப்பள்ளத்தாக்கில் பளிங்குருச் சுண்ணும்புப்பாறைகளுண்டு. மேற் பரப்பிலிங்கே தண்ணிர் அதிகம் கிடையாது. இச்சுண்ணும்புக்கல்லில் அதிக மானவை சுண்ணும்பு செய்வதற்காக வெட்டியெடுக்கப்படுகின்றன. சில பகுதியில் தென்னந் தோட்டமுண்டு; நிலம் வளமற்றதானலும், வளிமண் டலம் வெப்பமாயும் ஈரலிப்பாயுமிருந்தால் தென்னவளரும். 75 அங்குலந் தொட்டு 100 அங்குலம் வரை மழைவீழ்ச்சியுண்டு. அண்மையிலுள்ள குன்றுட்பகுதிகளில் 100 அங்குலத்துக்குமேல் மழைபெய்கிறது. அதிற் பெரும் பகுதி பள்ளத்தாக்கையடைகிறது. மாத்தளைப் பள்ளத்தாக்கின் கால நிலை பெரும்பாலும் காற்றேட்டமில்லாதிருக்கும். எப்பொழுதும் அது மிக்க ஈரலிப்புடையதாயுமிருக்கும். நாலுபக்கமும் மலைகள் சூழ்ந்திருப்பதால் காற்றேட்டமில்லை. கொக்கோச் செய்கைக்கு இது மிகவாய்ப்பான காலநிலை. கொக்கோச் செய்கை இப்பகுதியிலே பெருகி வருகிறது. தேயிலையும் இறப் பருமே பிரதான விளபொருள்கள். பள்ளத்தாக்கின் சாய்வு முழுவதும் விவ சாயஞ் செய்யப்படுகிறது. இதிற் சிங்களரும் தமிழரும் ஈடுபட்டிருக்கின்றனர். சில ஆங்கிலத்தோட்டத்துரைமார் இப்பகுதியிற் குடியேறியிருக்கிறர்கள். பள் ளத்தாக்கின் அடித்தளத்தையொட்டிப் பல சிறு கிராமங்களுண்டு. கிளைநதிப் பள்ளத்தாக்குக்களிலும் சில கிராமங்களுண்டு. கண்டியிலிருந்து கட்டுகாத்

சுருக்க ம் 407
தோட்டை வழியாக மாத்தளைப்பள்ளத்தாக்கைத் தாண்டித் தம்புளேக்கும் பின்னர் அங்கிருந்து கிழக்காகச் சிகிரியாவுக்கும் வடமேற்காக அனுராத புரிக்குஞ் செல்லும் பாதை சிங்களர் சரித்திரத்திலேயே மிகப்புகழ்பெற்ற பாதையாகும். தம்புளே கி.மு. முதலாம் நூற்றண்டிற் கட்டப்பட்ட மிகப் பழைய குகைக்கோயிலாகும். சிகிரி கி.பி. 5 ஆம் நூற்றண்டிலே தந்தை யைக் கொன்ற காசியப்பனென்ற மன்னனல் சேம அரணுகக் கட்டப்பட்ட அற்புதமான மலைக்கோட்டை. மலைநாட்டுக்குச் செல்வதற்கு ஏற்பட்ட மிக எளிதான பாதையிது. சனநெருக்கடி மிக்க வடக்குத்தாழ்பூமியிலிருந்து மகாவலிகங்கைக்கு அப்பாலுள்ள மேட்டுநிலத்திற்குச் செல்வதற்கும் எளி தானபாதையிதுவே. இப்பாதையிலுள்ள மிகமுக்கியமான பழைய வியாபாரத் தானங்களில் மாத்தளையொன்று. இங்கே பெருந்தொகையாகச் சோனகருந் தமிழரும் வசிக்கிறர்கள். இவர்கள் பெரும்பாலும் வியாபாரிகள். கண்டி போலவே இங்கும் எலவே பல கிறித்த குருமார் வந்து தீவிரமாகப் பிரசாரஞ் செய்தனர். பலபள்ளிக் கூடங்களைக் கட்டுவித்தனர். சரித்திர சம் பந்தமுள்ள பல இடங்களிங்கே யுண்டு. இவைகளுள் மிகச்சிறப்புவாய்ந்தது அலுவிகாரை. பிரகாசமான நாள்களில் இக்கோவிலின் உயர்ந்த பாறையில் நின்று பார்த்தால் மாத்தளைப் பள்ளத்தாக்கு முழுவதும் தெரியும். இன்று மாத்தளைப் பிரதேசம் மற்றைப்பகுதிகளுடன் ஒரளவு தொடர்பற்றிருப்பதால் பொருளாதாரத்துறையில் சற்றுப் பாதிக்கப்பட்டு வருகிறது. முற்காலத்திலே மிகச் செழிப்புற்றிருந்த குளப்பிரதேசங்களைச் சார்ந்து விருத்தியடையாமல், இப்பிரதேசம் வடக்கு நோக்கிக் காட்டுப்பக்கமாக விசாலிக்கிறது. இங்கே சனச்செறிவு குறைவு; கிழக்கிலும், மேற்கிலும் உயர்ந்த குன்றுகள் அமைந் துள்ளன. அவற்றினுச்சிகள் காடடர்ந்துள்ளன். இவற்றுக்கூடாக மிகச்சில வீதிகளே உண்டு ; மாத்தளைப் பட்டணம் ஒரு “ வீதிப்பட்டணமாகும்’. பெருந் தெருவையடுத்துக் கடைகளுண்டு; இம்மாவட்டத்தில் பிரதான வியபாரத். தானமிதுவே. கண்டியிலிருந்து மாத்தளேக்குச் செல்லும் இருப்புப் பாதை யானது மாத்தளையை மற்றைப் பகுதிகளுடன் மேலுந் தொடர்பு படுத்தியுள்ளது.
(9 ஒள) நக்கிளிசுத் தொகுதி: மலை நாட்டினிப்பகுதி, பெருந் திணி விலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. தெற்கே மகாவலிகங்கைப் பள்ளத்தாக் கும் மேற்கே மாத்தளைப் பள்ளத்தாக்கும் இதைத் துண்டிக்கின்றன. மாத் தளைப் பள்ளத்தாக்கின் மேற்பகுதிக்குக் குறுக்காக வத்தகாமத்துக்குச் செல் லும் பாறைத் தொடரே இதனைத் தொடர்புபடுத்துகிறது. இப்பகுதியின் மத்தியபாகமும் கிழக்குப்பாகமும் காட்டு நிலம்; இங்கே தெருக்கள் கிடையா; மாட்டுவண்டி மட்டுஞ் செல்லக் கூடிய பாதையுண்டு; மேலும், சனச் செறிவு மிகக் குறைவு. இங்குள்ள சிலரும் "சேனை' விவசாயஞ் செய்வோரே. முற்காலத்தில் தம்புளையிலிருந்து அலுத்துருவரைக்குச் செல்லும் பாதை

Page 211
408 இலங்கைப் புவியி: ஸ்
யுடன் தொடர்பிருந்தபடியால் இப் பகுதியில் குடியேற்றம் அதிகமாயிருந் தது. மலை நாட்டின் இப் பகுதிக்கு அலுத்துதுவரையே முக்கியமான வாயிலாயிருந்தது. நைட்டர்க் குகையென்ற பெரிய இயற்கைக் குகை இங்கேயுண்டு. ஆயிரக்கணக்கான வெளவால் வசிக்கிறபடியால், அவற்றின் எச்சம் குகையிற் படிந்திருக்கிறது. கண்டி மேட்டு நிலத்திலிருந்து இப் பிரதேசத்தின் மேற்குப் பக்கத்திற்கு இலேசாகப் போக முடியுமாதலால், இது பெரிதும் அபிவிருத்தியடைந்திருக்கிறது. மலையின் வட கிழக்குப் பகுதி யில் அதிக மழை பெய்வதால், மக்கள் வறண்ட பகுதிக்கு நகர்ந்து விடுகிறர்கள். வட கிழக்குப் பருவக் காற்று இப்பகுதியையே பெரிதும் பாதிக்கிறது. இங்கே 100 அங்குலத்துக்கு மேலான மழையுண்டு. உயர்ந்த மலைகளில் 200 அங்குலமும் பெய்யும். சென் மாட்டின்சுப் பகுதியிலுள்ள இரங்கலையில் வருடச் சராசரி 180 அங்குலமாகும். ஆனல், இது ஒதுக் கான பகுதியிற்றன் உண்டு. ஒதுக்கற்ற பகுதிகளில் இதற்கு அதிகமான மழையுண்டு. தென் மேற்குப் பருவக் காற்றுக் காலத்திலே மழை குறைவாயிருந்தாலும் சமவிராக் காலங்களில் அதிகரிக்கிறது. வட கிழக்குப் பருவக் காற்றுக் காலத்திலேயே உயர் மழைவீழ்ச்சியுண்டு. வெப்ப நிலை கண்டிமேட்டுநிலத்திற்கு ஒரளவு ஒப்பாயிருக்கிறது. 1லைத் தொடர் 5000 அடிக்குமேலுயரமாயும் காடடர்ந்துமிருக்கிறது; இம் மலைத் தொடரின் மிக உயர்ந்த சிகரம் நக்கிளிகச் சிகரம் (6112 அடி). மேற்குப் பக்கத்தில் இப்பொழுது தேயிலைத் தோட்டங்களுண்டு; தென் மேற்கில் மடுகொடையையடுத்துச் சிறிதளவு இறப்பருண்டு. இங்கே மூன்று மோட்டர்ப் பாதைகளுண்டு. ஒன்று வத்தகாமத்திலிருந்து வட மேற்குப் பிரதேசத்துக் குச் செல்கிறது; மற்றையிரண்டும் தெல்தெனியாவிலிருந்து மத்திய மலைப் பிரதேசமான இரங்கலைக்கும், தெற்கேயுள்ள மதுகொடைக்குஞ் செல்கின் றன. மதுகொடைக்குச் செல்லுந் தெரு அலுத்து நுவரை வரை செல்கிறது. இப் பகுதியை முற்றக ஊடறுத்துச் செல்லும் தெரு இதுவே. இங்குள்ள தோட்டங்களிற் பெரும்பாலானவை ஆங்கிலத் தோட்டத் துரைமாரின் மேற் பார்வையிலுள்ளன. இத்தோட்டங்கள் வர வரப் பெருகிச் செல்கின்றன. இப்பகுதிக்கு இயற்கையான பட்டணம் இல்லை. வத்தகாமம், தெல்தெனியா என்பன இரண்டு முக்கிய நகரங்கள்; கண்டியே பிரதானமான பெரிய நகராகும். இப் பகுதிக்கு இருப்புப் பாதை கிடையாது. மோட்டர் வண்டிப் போக்கு வரத்து உண்டு.

ஐந்தாம் பகுதி-இரண்டாம் அத்தியாயம்
முடிவுரை
இக்காலப் புவியியல் பிரதானமாகச் செயன்முறைத்தன்மைத்து. உங்கள் நாட்டைப் பற்றிய அறிவைக்கொண்டு நீங்கள் நன்மக்களாக வாழலாம். இந்நூலைப் படித்து முடித்ததும் பின்வரும் விடயங்களே மறுபடியும் வாசித்து ஆராய்க:
(அ) உங்கள் நாட்டில் விருத்தியடையாமலிருக்கும் பகுதி எவ்வளவு ; அதற்குக் காரணமென்ன?
(ஆ) இப்போதுள்ள நிலைமைகளைச் சீர்திருத்துவதற்கு என்ன நட வடிக்கையெடுக்கவேண்டும்?
(இ) நீங்களதற்குச் செய்யக் கூடியதென்ன?
இந் நூலைப் படித்து முடிப்பதோடு உங்கள் ஆராய்ச்சியை நிறுத்தி விட வேண்டாம். வருங் காலத்தில் உமது நாட்டையும், விசேடமாக உமது அயலிலுள்ள பகுதிகளேயும் அறிய நீர் முயல வேண்டும். எவ்வளவோ செய்ய வேண்டியதிருக்கிறது. எல்லையற்ற விரிவும், கவர்ச்சியுமுள்ளவொரு விடயத்துக்கு இங்கு கூறப்பட்டவை சுருக்கமான முகவுரையாகும். இள்கை வந்து செல்லும் யாத்திரிகர் இதனைப் ‘பூலோக சுவர்க்க” மென்று கூறி யுள்ளனர். இலங்கையை நன்கு ஆராய்ந்து அறிந்த எமக்கு அதன் இயற்கைத் தோற்றத்திலுள்ள பல குறைப்ாடுகள் தோன்றும். எல்லா நாடுகளிலுஞ் சில குறைபாடுகளுண்டு; உங்கள் நாட்டுக் குறைகளை நீக்க நீங்கள் முயல வேண்டும். உங்கள் நாட்டின் வருங்காலம் மிகச் சிறப்புடையதாயிருக்குமென்பதையும், அவ்வாறு சிறப்படைதற்கான தகை மைகளிங்கேயுண்டென்பதையும் இந்த ஆராய்ச்சி உங்களுக்கு உணர்த்தி யிருக்க வேண்டும்.

Page 212