கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை இடப்பெயர் ஆய்வு 2

Page 1
இலங்கை இடப்ெ
வடமராட்சி
-မျိုမ္ဗိန္တိ
卜4
IIկ 21
நி
இ.
ப
HFF
南
西
TI
 
 
 
 
 

*
اساطير
- 2
ஆய்வு
சி
| 5) / 63&5
தன்மராட்
| Juu
| .

Page 2


Page 3
SRI LANKAN PLACE NAMES STUDIES.
WADAMARADCHI & THENMARADCHI
Dr. E. BAASUND ARAM, Senior Lecturer, - Gr. I. Department of Tamil, University of Jaffna, Sri Lanka. Thirunelvely,
All rights reserved with the author.
Published to Commemorate : Mr, & Mrs. Thamotharampill Kandiah and Sinnammah Kandia Usan, Mirusuvil, Sri Lanka.
Published by Wallipurana Hindu Educational and
-Cultural Society.
Price Thirty Rupees
Date of Publication : 05.09 - 1989.
Printers : Mercury Printers, Jaffna

sh,
மதிப்புரை
பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை, தமிழ்த்துறைத் தலைவர்; யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி,
2-லகப் பண்பாட்டுக்குத் திராவிடர், சிறப்பாகத் தமிழர் சிறப்பான பங்களிப்புச் செய்துள்ளனரி. ஆனல், அப்பங்களிப்பின உலகமோ, திராவிடரோ, தமிழரோ இன்று உணர்ந்திருக்கின் ரூர்களெனக் கூறுவதற்கில்லை. ' காலமென்பது கறங்குபோற் சுழன்று கீழதுமேலாய் , மேலது கீழாய் மாறி வரும்போது, தமிழர்நில மிகத் தாழ்ந்து போய்விட்டது. இன்றைய உலகம் அன்றைய தமிழர் பங்களிப்பினத் தேடி அறிய வேண்டிய நில
பிலில்லை. இன்றைய தமிழர்களுக்கு அன்றைய தமிழர் பங்களிப்பு
நினைவில் இல்லை. ஆணுலும் ஐந்துகோடி தமிழ் மக்கள் இன்றைய உலகில் வாழ்கின்ருர்கள். அவர்களுட் சிலருக்காவது, வாழவேண் டும் என்ற துடிப்பு இருக்கிறது, அந்தத்துடிப்பு தமிழர் பிறரை யும் பற்றிப் பிடிக்கலாம்; காரீருளிலும் ஒளிக்கீற்றுத் தென்படு கிறது.
தமிழருடைய பங்களிப்பின் உலகம் உணர்ந்துகொள்வது உலகத்துக்கே பயனுள்ளதும் தேவையானதுமாகும் என்ற கருதி தோட்டமே சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோன்ற வழிவகுத்தது. தமிழக அரசு தொடங்கி நடத்தி வருகிற இந்த நிறுவனத்துக்கு வெளிஉலக ஆதரவு குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு இ ன் னு ம் கிடைக்கவில்லை. எனினும் டாக்டர், ச. வே. சுப்பிரமணியம் வழிகாட்டலில் இயங்கிய இந்நிறுவனம் எடுத்துச் சொல்லக்கூடிய சில பணிகளை ஆற்றியுள்ளது. அப்பணிகளுள் இடப்பெயராய்வு பாராட்டப்பட வேண்டிய ஒன்று. பேராசிரியர் சேதுப்பிள்ளை * ஊரும் பேரும் எழுதிய காலத்திலிருந்து, இன்றும் இத்துறை யில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டது. இடப்பெயர் ஆராய்ச்சி மேனுடுகளில் வளர்ந்துவரும் ஆராய்ச்சித் துறைகளுள் ஒன்று. இடப்பெயராய்வை நோக்கமாகக்கொண்டு, ஆங்கு பல குழுக்கள் இயங்குகின்றன; பல சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்
AD 68የኳቇ

Page 4
w
தென்னிந்தியாவிலே, அண்மைக் காலத்திலே, இடப்பெய ராய்வு முக்கியமான ஒரு துறையாக அங்கீகரிக்கப்பட்டு வருகி றது. இடப்பெயராய்வு பற்றிய கருத்தரங்குகள் சில நடைபெற் றுள்ளன. இடப்பெயராய்வு டாக்டர் பட்டம் பெறுவதற்கான ஆராய்ச்சிப் பொருளாக இன்று காணப்படுகிறது. கேரளப் பல் கலைக்கழகத் தமிழ்த்துறையில் கோயம்புத்தூர் மாவட்ட இடப் பெயர்களை ஆராய்ந்து டாக்டர் பட்டம் பெற்றவரும் அத்துறை யிலேயே பேராசிரியராக விளங்குபவருமான நாச்சிமுத்துவின் தமிழில் இடப்பெயராய்வு ( 1983 ) என்ற நூல் இடப்பெயராய்வு முறைகளைத் தமிழிலே அறிமுகஞ் T. அமைந்தது. 2-ல் கத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழ்நாட்டு மாவட்டங்கள் சில வற்றிலுள்ள இடப்பெயராய்வுகளை வெளியிட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களின் இடப்பெயராய்வுகளும் விரைவில் வெளிவரு மென்று எதிர்பார்ப்போம். ” دی ۔
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வேண்டுகோளை ஏற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துத் தமிழ்த்துறையைச் சேர்ந்க கலாநிதி இ. பாலசுந்தரம் இலங்கை இடப்பெயராய்வுகளில் முனைந்து நிற்கிருர், அவர் முயற்சியின் முதல் அறுவடை காங் கேயன் கல்வி வட்டார இடப்பெயர்களைப் பற்றிய நூலாகும். யாழ்ப்பாண மாவட்டம், தமிழ் உலகத்தின் ஒருபகுதி என்று கூறத்தக்க முறையில், தமிழர் செறிந்து செல்வாக்குடன் வாழும் பகுதியாகும். புவியியல் நோக்கிலே, தமிழ் நாட்டுக்கு மிகவும் அண்மையில் அமைந்துள்ள இலங்கைப்பிரதேசம் யாழ்ப்பாணமே ஐரோப்பியர் இலங்கையைக் கைப்பற்ற முன்பு, யாழ்ப்பாணத் திலே சில நூற்ருண்டுகளாகத் தமிழரசு நிலவியதென்பது வர லாற்றுண்மை. இவ்வாறெல்ல்ாமிருந்தும், யாழ்ப்பாணப் பிரதேச வரலாறு இன்னும் மிகவும்,கருகலாகவே காணப்படுகிறது.
இலங்கைத் தமிழர் வரலாறு பேணபட்டுவரவில்லை. சோழப் பெருமன்னர் இலங்கையைக் கைப்பற்றி ஆள்வதற்கு முன்பு, யாழ்ப்பாணமாவட்டம் இருந்த நிலைபற்றி அறியத் தமிழ் நூல்கள், தமிழ்ச் சாசனங்கள் கிடைக்கவில்லை. சிங்கள பெளத்த கருமார் பாளிமொழியில் எழுதிவந்த காலரடுகளான மகாவம்சம், சூள வம்சம் முதலான நூல்கள்லே, இலங்கைத்தீவு முழுவதும் தம் முடையதென உரிமைபாராட்டி வந்துள்ளனர். தமிழ்நாட்டிலும், இடப்பெயராய்வு நடைபெற்றிராத நிலையிலே, பிரபலமான தமிழ் நாட்டு இடப்பெயர்களிலிருந்து வேறுபாடுடையனவாக யாழ்ப் பாணத்து இடப்பெயர்கள் பல காணப்படுவதஞலும் அப்பேர்

களுட் சில கூறுகள் தென்னிலங்கையிலும் பயின்று காணப்படு வதஞலும், அப்பெயர்கள் சிங்கள மூலத்திலிருந்து வந்தனவாதல் வேண்டும் என்ற கருத்து இருபதாம் நூற்ருண்டுத் தொ.க்கத் திலே அறிஞர் சிலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
வடஇந்தியர் இலங்கைக்குக் குடியேற வந்தபோது, வ. இலங்கையிலும் மேற்கு இலங்கையிலும் வாழ்ந்தோர் நா க ரி என்று மகாவம்சம் கூறுகிறது. இவர்களின் மொழி, இனம், t.፡6öör LJrrG Lifð sólu J விளக்கம் எதுவும் மகாவம்சத்தில் இடம்பெற வில்லை. அண்மையில் இலங்கையிலே தொல்லியல் ஆய்வு நடத்திய அறிஞரிசிலர், வடஇந்தியர் வருகைக்கு முன்பு இலங்கையிலே சிறப்பாக யாழ்ப்பானத்திலே திராவிடப்பண்பாடு நிலைபெற்றி ருந்ததென்ற முடிவுக்கு வந்துள்ளனர். சங்ககாலத்திலும் அதற்கு முன்பும் திராவிடரிட்ையே சிறப்பாகக் காணப்பட்ட பெருங்கற் பண்பாடு இலங்கையின் பல பகுதிகளிலும் காணப்பட்டவற்றை கலாநிதி சி. க. சிற்றம்பலமும் (1980 ) ஆதித் திராவிடர் குடி யேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம் பெற்றவற்றைக் கலாநிதி பொ. இரகுபதியும் ( 1983 ) எடுத்துக் காட்டியபின், யாழ்ப்பாண மாவட்ட ஊர்ப்பெயர்கள் பெரும்ப்ாலும் திராவிடத் தோற்றுவாயையுடையனவாயிருக்கலாமா என மறுபரிசீலனை செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது.
இலங்கையின் ஆதிவாசிகளெனக் கூறப்பட்ட நாகர்கள். தமி
ழர்களாக இருக்கலாமா அல்லது பிறிதொரு திராவிட மொழி பேசுவோர்களாக இருக்கலாமா என்பது ஒரு சிக்கல். இலங்கை இடப்பெயர்களிற் காணப்படும் தனித்துவமான கூறுகள் எனப் படுபவை தென்னிந்தியத் தமிழில் முற்ருக இடம்ப்ெறவில்லையா என்பது இனித்தான் தெரியவரவேண்டும். இந்தத் தனித்துவ மான கூறுகள் சில, திராவிடமொழிகளான மலையாளம், தெலு ங்கு என்பவற்றுட் காணப்படுவதாகக் கலாநிதி பாலசுந்தரம் எடுத்துக் காட்டுகிருர், தென்னிந்தியர்வின் பல்வேறு பகுதிகளி லிருந்து இலங்கையிற் குடியேறியோரின் செல்வாக்கு இலங்கை இடப்பெயர்களிற் காணப்படுகிறதென்ற கருத்து பாலசுந்தரத் தால் முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டுத்தமிழ், இலங்கைத்தமிழ் என்பன வெவ்வேறு கிளைமொழிகள். இலங்கைத் தமிழ் நீண்டகாலமாகத் தனித்து வத்தோடு வளர்ந்துள்ளது. இத்தகைய வளர்ச்சியிலே, தனித்து வமான இடப்பெயர்க் கூறுகள் தோன்றுவதில் வியப்பில்லை. இலங்கைப் பேச்சுத் தமிழில் இடம்பெறும் சொற்கள் சில,

Page 5
Vj
இடப்பெயர்க் கூறுகளாக வருவறை நூலாசிரியர் காட்டியுள் ளார். வில் என்ற சொல் குளத்தைக் குறிக்க வழ்ங்குவதை உதா ரணமாக எடுத்துக் காட்டலாம். பளை என்ற இடப்பெயரீறும் இலங்கைச் சூழலிலே தோன்றியதாகலாம் என்று நூலாசிரியர் கூறுவதை, வேறு தக்க காரணம் காட்டமுடிந்தாலன்றி, நிரா கரித்துவிட முடியாது.
இந்தோ - ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததெ னக் கொள்ளப்படும் சிங்களம் இந்தோ - ஐரோப்பிய மொழிகள் பிறவற்றிலில்லாத கூறுகளை இலங்கைச் சூழலிலே பெற்று வளர்ச்சி யடைந்துள்ளதெனக் கூறக் கூடுமாயின், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைத் தமிழும் திராவிட மொழிகள் பிறவற்றிவில்லாத கூறுகளை இலங்கைச் சூழலிலே பெற்று வளர்ச்சியடைந்திருக்கலாமெனக் கூறுவதிலே தவறில்லை.
இலங்கை முழுவதும் பயின்று காணப்படும் இடப்பெயர்க் கூறுகள் தென்னிந்தியாவிலே காணப்படாவிட்டால், அவற்றின் தோற்றத்துக்கு இன்னெரு விளக்கம் கூறலாம். இலங்கையின் ஆதிக்குடிகளெனப்படும் நாகர்களின் மொழிக்கு அக்கூறுகள் உரி யனவாகலாம். தமிழர்களும் சிங்களவர்களும் இந்தியாவிலிருந்து வந்து இங்கு வாழ்ந்த நாகர்களோடு கலந்தபோது, சிங்களத் திலும் இலங்கைத் தமிழிலும் இக்கூறுகள் இடம்பெற்றிருக்கக் கூடும்.
யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயர்களைப் பற்றி விளக்குவ தற்கு நூலாசிரியர் இயலுமான வழிகளைக் கையாண்டுள்ளார் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று க ள ஆய் வி நிகழ்த்தி இடங்களின் புவியியலமைப்பையும் பழம்பொருட்சின் னங்களையும் ஐதீகக் கதைகளையும் நாட்டாரியல் துறையில் மக் களிடையே வழங்கும் விளக்கங்களையும் நூலாசிரியர் தொகுத் துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயர்கள் பற்றிய முன் னையோர் வெளியிட்ட கட்டுரைகளைத் தொகுத்த இவர். இலங் கைத் தமிழர் வரலாறு பற்றி இதுவரையில் வெளிவந்த நூல் களையும் தமிழ்ப் பேரகராதி, பேராசிரியர்கள் பருேவும் எமெ னேவும் கூட்டாக ஆக்கிய திராவிடமொழிகளின் சொற்பிறப்பிய லகராதி (1961) முதலியவற்றையும் இங்குள்ள நூலகங்களிற் கிடைக்கும் பல்வேறு வெளியீடுகளையும் நன்கு பயன்படுத்தியுள் ளார் நூலிலே கையாளப்பட்டுள்ள ஆய்வுமுறை, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்துள்ள வழிகாட்டல்களுக்கு ஏற்ப அமைந்திருப்பதும் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தககது.

vit
யாழ்ப்பாண மாவட்டத்து ஊர்களின் எல்லைகளும் ஊர்க ளுள் அடங்கிய குறிச்சிகளும் வெவ்வேறு காரியங்களுக்கு வெவ் வேருக அமைவதனல், அவற்றைப்பற்றிக் கருத்து வேறு பாடு காணப்படுவது தவிர்க்க முடியாதது.
வடமராட்சி, தென்மராட்சி இடப்பெயர்கள் முழுவதன் தோற்றத்தையும் நூலாசிரியர் ஆராய்ந்து நிறுவியுள்ளாரெனக் கூறஇயலாது. எனினும் வேறு எவராவது இன்னும் சிறப்பான ஒரு நூலே இன்று இது தொடர்பாக இயற்றித்தர முடியுமென்று நான் கருதவில்லை. யாழ்ப்பாணப் பிரதேச வரலாறும் இலங்கைத் தமிழர் வரலாறும் தெளிவாக இருந்திருந்தால், யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயராய்வில் இன்னும் கூடிய நிச் ச ய மா ன தன்மை காணப்படும். ஆறல், இடப்பெயராய்வு யாழ்ப்பாணப் பிரதேச வரலாற்றையும் இலங்கைத் தமிழர் வரலாற்றையும் துலக்கவேண்டியநிலையில் இன்று காணப்படுகிறது.
பல்வேறு ஆராய்ச்சித் துறை களும் இன்று வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. ஆராய்ச்சித் துறை ஒன்றன் வளர்ச்சி வெகுவிரைவில் ஆராய்ச்சித்துறைகள் பிறவற்றைப் பாதிக்கிறது. இலங்கைத் தமிழர் வரலாறும் யாழ்ப் பாண மாவட்ட இடப்பெயராய்வும் வெகு விரைவில் இன்னும் கூடிய நிச்சயமான தன்மை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இத்த கைய நிலை ஏற்படுவதற்கும் பாலசுந்தரத்தின் நூல் ஒரு முக் கியமான பங்களிப்பு.
பாலசுந்தரம் ஏற்கனவே எழுதிமுடித்துள்ள யாழ்ப் ப ம ன மாவட்டத்து ஏனைய பிரதேசங்களிலுள்ள இடப்பெயர்களைப் பற்றிய ஆய்வு விரைவில் வெளிவர வேண்டும். இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் பாரம்பரியத் தாயகமான வடக்கு - கிழக்கு மாகாணத்தி லுள்ள ஏனைய மாவட்டங்களின் இடப்பெயர்களையும் நூலாசிரியர் தொடர்ந்து ஆராய்ந்துவரவேண்டும்.
31 - 8 - 89 ஆ. வேலுப்பிள்ளை

Page 6
முன்னுரை
多 இடப்பெயர்கள், இடங்களை அறிந்து கொள்ளப்பயன்படும் அதேவேளையில், அப்பெயர்கள் குறிக்கும் பிரதேசத்தின் வர லாறு, மொழி, மானிடவியல், நாட்டார் வழக்கியல் முதலிய ஆய் வுத்துறைகளுக்குரிய பெறுமதிமிக்க ஆய்வு மூலங்களாகவும் விளங்கு வனவாகும். குறிப்பாக ஒரு நாட்டின் அல்லது ஒர் இனத்தின் வரலாற்றை மீளாய்வு செய்து எழுதுவதற்குரிய ஆவணங்களில் இடப்பெயர்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. மூதாதையர் களின் சமூக நடைமுறைகள், சம்பிரதாயங்கள், ஒழு ங் கு க ள், சமய அனுட்டானங்கள், சடங்குகள், நம்பிக்கைகள், பழமரபுக் கதைகள், பொழுதுபோக்குகள், அரசியல் நடவடிக்கைகள், நிரி வாக ஒழுங்குகள் முதலான பல்வேறு விடயங்களைப்பற்றி அறிந்து கொள்ளவும் இடப்பெயர்கள் துணையாகின்றன. இடப்பெயர் ஆய்வின் மூலம் குறிப்பிட்ட இடங்களின் தரைத் தோற்றம், நில வளம், குடியேற்றம், தொழில்வளம், போக்குவரத்து, வர்த்தகம் முதலாம் விடயங்களும் அறியப்படுகின்றன. இடப்பெயர்கள் பல் வேறு ஆய்வுப் புலங்களுடன் தொடர்பு %ொண்டிருப்பதால், இத்துறையிலீடுபடுவோர் விஞ்ஞான பூர்வமான ஆய்வுமுறைகளை அறிந்திருத்தல் அவசியமாகின்றது.
பத்தோன்பதாம் நூற்ருண்டின் பிற்பகுதியிலிருந்து ஐரோப் பிய நாடுகளிலும், ஐக்கிய அமெரிக்காவிலும் இடப்பெயரி ஆப் வினைப் பல்கலைக்கழகங்களும், இடப்பெயர்க் கழகங்களும் மேற் கொண்டு வருகின்றன. கருத்தரங்குகள், மாநாடுகள், நூல்வெளி யீடுகள், ஆய்விதழ் வெளியீடுகள் என்பன தொடர்ச்சியாக நடை பெற்றுவந்துள்ளன. பெல்ஜியத்தில் இயங்கி வரும் " சர்வதேச இடப்பெயர் ஆய்வுக் கழகம் ‘ வெளியிட்டுவரும் " Onama * என்ற ஆப்விதழ் முக்கியமாகக் குறிப்பிடத் தக்கதாகும்.'
இந்தியாவில் இடப்பெயர் ஆய்வு ‘கடந்த இரு தசாப்தங்க ளாகவே வளர்ந்து வருகிறது. இடப்பெயர் ஆய்வி லீ போடு கொண்ட தென்னித்திய அறிஞர்கள் இணைந்து 1983 இல் கேர ளத்தில் இடப்aெயர்க் கழகம் * (Plans) ஒன்றை அமைத்து ஆக்கபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அக் கழகம் வெளியிடும் "Plans Bulletin” என்ற இதழும் சுட்டிக்

1X
காட்டப்பட வேண்டின் தாகும். மேலும், தென்னிந்தியப் பல்கலைக் கழகங்கள் அனைத்திலும் இடப்பெயர் ஆய்வு M. A., M.Phil, Ph D ஆகிய மேற்பட்டப் படிப்புக்குரிய விடயமாகவும் காணப் படுகின்றது.
விஞ்ஞான பூர்வமான இடப்பெயர் ஆய்வு ஈழத்தில் இன்னும் வளரவில்லை; இத்துறையின் முக்கியத்துவமும் இன்னும் ஈழத் தமிழ் அறிஞர் சிலரால் உணரப்படவில்லை. இத்தகையதொரு சூழ்நிலையில் இலங்கைத் தமிழ் இடப்பெயர் ஆய்வுத் துறையில் எனது இரண்டாவது வெளியீடாக இந்நூல் வெளிவருகிறது.
நாட்டார் வழக்கியல் துறையிற் கடந்த 18 ஆண்டுகாலமா கக் கொண்டிருந்த ஈடுபாடும், தமிழ் இடப்பெயர் ஆய்வுத்துறை யின் சிறந்த ஆய்வாளரும் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியருமான டாக்டர் கி. நாச்சிமுத்து அவர்களுடன் கொண் டிருந்த தொடர்பும், உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன முன்னை நான் இயக்குநர் பேராசிரியர் ச. வே. சுப்பிரமணியன் அவர் கள் ஈழத்து இடப்பெயர் ஆய்வினை நிகழ்த்துமாறு பணித்த அன்புக் கட்ட*ளயும், ஈழத்து இடப்பெயர்கள் பற்றி வெளிவந்த * பக்கச்சார்பு ’ நூல்களும் என்னை இத்துறையில் ஈடுபடத் தூண்டின. இடப்பெயர் ஆய்வுத்துறையில் வெளிவந்த ஆராய்ச்சி நூல்களும், ஆய்விதழ்களும் என்னை இத்துறையில் நெறிப்படுத் தின. மேலும் 1983 - 1984 காலப்பகுதியில் மாஸ்கோவில் மேற் கொண்ட பத்துமாத விடுமுறைக்காலக் கல்விச் சுற்றுலாவின் போது பூஷ்கின் ரூசிய மொழி இலக்கிய நிறுவனத்தில் இடப்பெயர் ஆய்வு தொடர்பாக எமக்கு வழங்கப்பட்ட விரிவு ரைகளும் எனக்கு இடப்பெயர் ஆய்வுத்துறையிற் பயிற்சி தந்தன. இவற்றின் பெறுபேருக 1986 இல் ‘* யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயர் ஆய்வு" என்ற 420 பக்கங்களைக் கொண்ட தட் டச்சு நூல் எழுதப்பட்டு, அது வெளியீட்டுக்காகக் காத்துநிற்கி றது. இரண்டாவது முயற்சியாக, 1988 இல் 'இலங்கை இடப்பெயர் ஆய்வு - காங்கேசன் கல்வி வட்டாரம் " என்ற நூல் வெளியிடப்பட்டது. அடுத்த முயற்சியே இந் நூலாகும்.
ஈழத்தமிழர் வரலாறு இன்னும் வரன்முறையாக எழுதப் படவில்லை என்பது கசப்பான் உண்மைதான். ஈழத்தின் தொல் குடிகளாக ஆதித்திராவிடர்கள் வாழ்ந்திருக்கிறர்கள் பண்டை நாள் தொடக்கமாக ஈழத்திற்கும் தமிழகத்திற்கும் பல்வேறு அடிப்படையிலான தொடர்புகள் இருந்து வந்துள்ளன: தமிழ

Page 7
塞
கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு க்ாலகட்டங்களில் தமிழர்குடியேற்றங்கள் நடைபெற்றிருக்கின் ஒன்; தமிழ்ப் பெளத் தம் வடஇலங்கையிலே நிலபெற்றிருந்திருக்கிறது; தி ரா விட மொழிக் குடும் பத்திற்குரிய அடிச்சொற்கள் ஈழத்து இடப்பெய ராக்சுத்திற் பரவலாக இடம்பெற்றிருக்கிறது - என்ற உண்மை களை ஈழத்து இடப்பெயர் ஆய்வு வெளிப்படுத்துகின்றது. ஆளுல் இலங்கையிற் பிரித்தானிய ஏகாதிபத்தியம் நிலைபெற்றிருந்த காலத்தில் வடஇலங்கையில் அவர்களின் அதிகாரிகளாக இருந் தோர் சிலர், ஈழத்தமிழரது வரலாறு விளக்கமில்லாதிருந்த அக் காலச் சூழலில், ஈழத்தமிழர் தம் தொல்பதிகளுக்கு (உ + ம் : வல்லிபுரம், கந்தரோடை) * சிங்களமூலம் " கற்பித்திருக்கிருர் கள். சிங்களத்திற் புலமையுள்ள தமிழறிஞர் சிலர் இதே நோக் கில் மேலும் விளக்கம் தந்து கொண்டிருக்கின்றனர்.
இடப்பெயர் ஆய்வின் மூலம் ஈழத்தமிழர்தம் அரசியல், கலாசார வரலாற்றை நன்கு எழுதுவதற்குரிய பெறுமதிமிக்க சான்றுகளைப்பெற வாய்ப்புண்டு. எனவே ஈழத் தி லே புள்ள அனைத்து இடப்பெயர்களை மாவட்ட அடிப்படையில் உடனடியா கத் திரட்டித் தொகுத்து வெளி யிட வேண் டும். இத் துறையில் ஈடுபாடுகொண்ட அறிஞர்கள் இடப்பெயர் ஆய்வில் ஈடுபடவேண்டும்; இதற்குரிய வசதிகளைப் பல்கலைக்கழகங்களும் பண்ப்ாட்டு நிறுவனங்களும் வழங்க முன்வர வேண்டும்
காழ்ப்பாண மாவட்டத்தின் வடகரையிலே தொண்டைமா ஞறு பிரிக்கும் வடபகுதியும் அதனேடிணைந்த வடகிழக்குப் பகு தியும், தென்பகுதியுமே வடமராட்சி, தென்மராட்சி என்ற பிர தேசங்களாகும். இவை முறையே வடமராட்சி வடக்கு, கிழக்கு ( வடம. வ. கி, ) வடமராட்சி தெற்கு மேற்கு ( வடம. தெ. மே ), தென்மராட்சி (தென்ம. ) என்ற மூன்று நிர்வாகப்பிரிவு களாக அம்ை ந் திருந்தன. 1989 இல் வடமராட்சி கிழக்கு என்ற தனி நிர்வாகம் பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பிரதேசம் 522, 64 சதுர மைல் பரப்பினைக்கொண்டது. 1981 ஆம் ஆண்டின் குடிசனமதிப்பீட்டு அறிக்கையிலுள்ள இடப்பேயர்ப் பட்டியலை அடிப்படையாகக் கொண்டே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடப்பெயருக்கும் அருகில் அடைப்புக்குறியினுள்ளே தரப்பட்டுள்ள எழுத்துக்களும் எண் களும் முறையே அந்த இடம் அமைந்த உதவி அரசாங்க அதிபர் பிரிவினையும், அவ்விடத்தின் கிராமசேவகர் பிரிவு இலக்கத்தையும் சுட்டுவனவாகும். உ+ம் கொடிகாமம் (தென்ம 10) என்பது,

gi
தென்மராட்சியில் 109 ஆம் இலக்க கிராம சேவகர் பிரிவிலுள்ள ஓரிடம் கொடிகாமம் என்பதைக் குறிக்கும்.
ஒவ்வொரு இடப்பெயரினதும் ஆக்கக் கூறுகள் பிரித்துக் காட்டப்பட்டு அதற்கு ரிய விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. சொற்பொருள் விளக்கம் முதலிலே கொடுக்கப்பட்டு, பின் பு அவ்விடப்பெயர் காலப்பேர்க்கில் அடைந்துள்ள மாற்றங்களும் காட்டப்பட்டுள்ளன, மக்கள் வழக்கிலே இப்பெயர்கள் உச்சரிக் கப்படும் முறையும் ஆங்காங்கே காட்டப்பட்டுள்ளன. இப்பெயர் கள் தொடர்பாகப் பொதுமக்கள் கூறும் விளக்கங்களுக்கும் முக் கிய இடம் அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியத் தொடர்புடை யனவாகக் காணப்படும் பெயர்கள் தென்னிந்திய வரலாறு, இலக்கியம், இடப்பெயர்கள் ஆகியனவற்றுடன் தொடர்பு படுத்தி விளக்கப்பட்டுள்ளன. இன்று உருத்திரிந்து வழங்கும் சில இடப் பெயர்கள் முன்னர் எள்வாறு வழங்கியிருக்கலாம் என்ற ஊகங்களும் சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளன. மேலும் ஓர் ஊரின் பெயர் விளக்கம் கூறப்படும்போது, இயன்றவரை அந்த ஊரிலுள்ள குறிச் சிப்பெயர்கள், காணிப்பெயர்கள், குளப்பெயர்கள் என்பனவும் தரப்பட்டுள்ளன. இத் தரவுகள் மேலாய்வு செய்வோருக்கு வழி காட்டுவனவாக அமையத்தக்கவை.
இந் நூலாக்கத்தின்போது எழுந் த ஐயங்களைத் தீர்த் து, பயனுள் ள கருத்துக்களை வழங்கிய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆ வேலுப்பிள்ளை அவர்களுக்கு நான் கடப்பாடு டையேன். மேலும் அவர்களது மதிப்புரை இந்நூலை அணிசெய் கிறது. மொழியியற்றுறைப் பேர்ாசிரியர் சு. சுசீந்திரராசா அவர்களது அறிவுரைகளும் இந் நூ ஃல மேலும் செம்மையுறச் செய்கின்றன. இடப்பெயர் பற்றிய விளக்கங்களைக் கிராமங்கள் தோறும் எனக்குக் கூறிய பெரியவர்கள் அனைவரையும் இச்சந் தர்ப்பத்தில் நினைத்துப்பார்த்தலே அவர்களுக்கு நான் செய்யும் கைமாருகும். நூலின் அ ட் டைப்பட த் தைத் தந்துதவிய திருநெல்வேலி * பேபி போட்டோ " உரிமையாளருக்கும் என் நன்றி.
இந்நூலை உசனைச்சேர்ந்த காலஞ்சென்ற திரு. தாமோதரம்பிள்ளை கந்தையா, திருமதி. சின்னம்மா கந்தையா தம்பதிகளின் நினைவாக வெளியிடுவதற்கு முன் வந்த வல்லிபுரம் இந்து கல்வி கலாசார மன்றத்தினரைத் தமிழ் உலகு என்றும் நன்றியுணர்வோடு நினை விற் கொள்ளும், இந்நூலை அழகுற அச்சிட உதவிய மேக்கூரி அச்சக ஊழியர்கட்கும் எனது உளங்கனிந்த நன்றிகள்
Ꭿ5-09-89, . இ. பாலசுந்தரம்

Page 8
பதிப்புரை
வரலாற்றுக்கு முற்பட்ட இலங்கைத் தமிழர்களது முறை யான சரித்திரம் முழுமை பெருத நிலையொன்று இன்னும் நில விக்கொண்டே இருக்கிறது. ஈழத்தமிழரது நீண்டகால வர லாற்றை அவதானிக்கும்போது ஒரு வெற்றிடக் காட்சியே தென்படும். இதுகாலவரை வெளியான இலங்கை வரலாற்று ஏடுகள் எவற்றிலுமே தமிழர் வரலாறு தெளிவாக எழுதப்பட வில்லை, எழுதினவர்களும் கூட முரண்பட்ட கருத்துக்களையே வெளிக்கிகாணர்ந்துள்ளனர். "தாய்மலடி" என்ற பாங்கிலே வர லாறு தந்த தமிழர்களுமுண்டு.
இலங்கை இடப்பெயராய்வு தொகுதி ஒன்றில் பதிப்பாளர் கள் முன்வைத்த தரவுகளும் கேசரி சஞ்சிகையில் (27, 11. 8ே 30. 4. 89, 7. 5, 89 ) ஆ. தேவராசன் அவர்கள் தெளிவுபடுத் திய உண்மைகளும், மறுபிரசுரஞ் செய்யப்பட்ட ( 7, 6. 89 ) இலங்கை வாழ்தமிழர் வரலாறு என்னும் நூலின் பதிப்பாசிரியரி பக்கமும் பலமுறை படித்து அமுல் நடத்தப்படவேண்டிய கருமங் களே.
வரலாற்றுத்துறையிலும், தமிழ்த்துறையிலும் வல்லு நர் களாய் இருப்பவர்களும், இடப்பெயராய்வறிஞர்களும் காலத்தாற் சாகாத உண்மையான வரலாற்றை மக்கள் முன்வைக்காவிடின் இளம்தலைமுறையினர் தம் தொன்மை மேன்மைகளை அறியும் நிலையை இயல்பாகவே இழக்கவும் கூடும். ஈழநாட்டு இடப் பெயர்களிலே தமிழின் ஆளுமை இலங்கை முழுவதும் நிலத்திருப் பது எல்லோரும் மறுக்கவொண்ணு உண்மை. இப்பெயர்களைக் கொண்டே இலங்கைத்தமிழர் பாரம்பரியம் வரலாற்றுக் காலத் துக்கு முற்பட்டது என்பதை இயல்பாகவே நிலை நிறுத்தலாம்.
கடந்த பல தசாப்தங்களாக மகாவம்சத்தின் ay 9 lusa) - லேயே வாலாறுக்ள் ஒத்திசைக்கப்பட்டு எழுதப்பட்டு வந்தன. இந்நெறியிற் பேராசிரியர் செனரத்பரணவிதான மகாவம்சத்தை நியாயப்படுத்துவதற்கு ஆதாரமாக ஏனைய வரலாற்றுச் சான்று களை ஏற்ற்வகையில் இசைத்துங் கொண்டார். இவருடைய 11ல்ல விக்கு அனுபல்லவியும் சரணங்களும் வடபுலத்தாராலும் பாடப் பெற்றதுமுண்டு,

Χii
எனினும் இன்று "மகாவம்சத்தை வரலாறக ஏற்கமுடியா தென இக்கால இலங்கை அறிஞர்களும், வெளிநாட்டறிஞர்களும் கூறியுள்ளார்கள். மகாவம்சம் வரலாற்ருய்வுக்கு உரைகல்லாகவும் முடயாது. மகாவம்சம்தழுவிய வரலாறும் வரலாருகமுடியாது" SYey” ஆ. தேவராசன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள் ('சிகி ரிக்குன்றத்தின் மீதுலவுவோம்", கேசரிசஞ்சிகை (27, 11. 88 ).
முதலியார் இராசநாயகம் முதல் கலாநிதி. பொ. இரகுபதி வரை ஆ. முத்துத்தம்பிப்பிள்ளையில் இருந்து புலவர் ஜெகந்நாதன் ஈருக, கைலாசமாஃலயிலிருந்து திருக்கேதீஸ்வர மான்மியம் ஈருக வரலாற்று ஏடுகளுக்குப் புறம்பாக பல்கலைக்கழகி மட்டத்திலும் வெளியிலும் பிரசுரமான வரலாறுபற்றிய ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே ஈழத்தமிழர்களின் வரலாறுபற்றிப் பேசும் சிலசாசனங் &évrégib.
தமிழகத்தோடு தொன்மையான தொடர்புடைய ஈழத்துத் தமிழர்களின் பூர்வீகவரலாறு மறைக்கப்பட்டு சிங்க்ள பெளத்த சாயம்பூசப்பட்ட கருத்துகள் வெளியானது போன்று இடப்பெய ராய்விலும் அந்தப் பட்டைநாமம் சாத்தப்பட்ட ஒரு நிலப் பாடே இந்நூற்றுண்டின் முதற்பாதி காலம்வரை இருந்திருக்கிறது. இன்றும் கூட வரலாறு சொல்லும் வல்லிபுரம் பற்றிய சிங்களச் சாயல் தமிழர் மத்தியில் விடுபட்டதாயில்லை. திருநெல்வேலி, புத் தூர், நல்லூர், நாகர்கோயில்போல வல்லிபுரம் முற்ற முழுக்கத் தமிழ்ப் பெயரென்பதை நம்மவர்களால் உணரமுடியவில்லை. வல் லிபுரம், இராஜவல்லிபுரம், ஆனந்தவல்லிபுரம், கோமளவல்லி புரம், மருதவல்லிபுரம் என்று வழங்கும் தமிழ்நாட்டு இடப் பெயர்களே ஈழத்து வல்லிபுரம் பற்றிய உண்மை நிலையைத் துலக்கு கின்றமை இந் நூலிற் காட்டப்பட்டுள்ளது:
சுவாமி ஞானப்பிரகாசரும், எஸ். டபிள்யூ. குமாரசுவாமியும் கண்டமுடிபுகளுக்கு ததாஸ்து மொழிவதாக ஆாழ்ப்பாண வைபவ கெளமுதி அமைத்துகிடக்கிறது. இடப்பெயராய்வு ஆழங்காற் பட்ட கலாநிதி இ. பாலசுந்தரம் அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட

Page 9
xy
இடப்பெயராய்வு ஒன்றைப் பூர்த்தியாக்கி, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைத்தார்கள். இன்னும் அஃது நூலாக்கம் , பெறவில்லே. எனினும் 1988இல் காங்கேயன் கல்வி வட்டார இடப்பெயராய்வு வெளியானது. அவ்வெளியீட்டுவிழா உரையில் அவர்கள் நெஞ்சிலிருந்து வந்த சில வார்த்தைகனே இந்நூல் வெளிவரக் கால்கோளானது.
இந்நூலில் வடமராட்சி, தென்மராட்சி இடப்பெயராய்வு இடம் பெற்றுள்ளது மற்றவர்கள் போல் கடதாசி ஆய்வு செய் யாது கலாநிதி இ, பாலசுந்தரமவர்கள் கள ஆய்வ9வ அடிப்படை யாக வைத்து, ஆவணம் போன்ற இதர சான்றுகளையும் இணைத் துக்கொண்டார்கள். தொண்டைமண்டலத்தின் வடக்கேயிருந்து வந்தவர்கள் குடியேறிய இடம் வடமராட்சி. ( யாழ்ப்பாணச் சரித்திரம் பக் 16 ) வடமறவர்+ ஆட்சி-வடமராட்சி தென்மற வர்+ஆட்சி - தென்மராட்சி, பாண்டிநாட்டு மறக்குலத்தோர் வந்துதங்கிய இடம் (ஐந்தாம் உலகத்தமிழ் மகாநாட்டு மலர். பக் 225) என்ற கருத்து நோக்கற்பாலது.
இப்பிரதேசங்களிலுள்ள கிராமசேவையாளர் பிரிவுகளில மைந்த முக்கிய இடப் பெயர்களின் வரலாறே இந்நூற்ருெகுப்பு , இருபிரதேசங்களிலும் உள்ள குக்கிராமங்களின் பெயர்கள் வர வில்லையேயென்ற குறைபாட்டுக்குப் பொறுப்பாளி நூலாசிரிய ரன்று; பிராந்திய மக்களே என்பதை இங்கே சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியவில்லை. எனினும் ஆசிரியரின் பூரணமுயற்சியின் பெறு பேருகவே இந்நூலை நாம் கணிக்கமுடிகிறது. வரலாற்ருசிரியர்கள் செய்யாத ஒரு சேவையை நாட்டார் வழக்கியல்துறை விற் பன்னர் செய்தமைக்கு நிறைய நியாயமுண்டு. அதை நூல்படிப் போர் உணர்வர்.
எதிர்காலம் பற்றிய சுயசிந்தனைகளை வெகுதாரம் நுணுகியாய் ந்து சிறந்த வர்லாற்று நூல்கள் ஆக்கம் பெறவேண்டியதன் அவசியத்தையும் இன்றியமையாமையையும், இன்று நேரிலே நிதர்சனமாய்க் சாணக்கூடியதாய் இருக்கிறது. சரித்திரமென்பது உலகிற்குமாத்திரமல்ல, நாட்டிற்குமாத்திரமல்ல ஒவ்வொருவளருக் கும் சரித்திரமுண்டு ஒவ்வொரு தெருவிற்கும் சரித்திரண்டு; ஒவ் வொரு வீட்டிற்கும் சரித்திரமுண்டு.

ጸ♥
யாழ்ப்பான அரசின் வரலாறு சொல்லும் வல்லிபுரத்தில் இருந்து உசன் வரை சாவகச்சேரியில் இருந்து சோழங்கள் வரை தமது சிந்தனையலைகளை வீசியுள்ளார் ஆசிரியர் தென்னகத்திலேற் பட்ட பெளத்த சமண அலைவீச்சுகள் இந்நாட்டிலும் தாக்கம் பெற்றதால் ஏற்பட்ட விளைவுகள்பற்றி சரியான மதிப்பீடுகள் தர வரலாற்று நூல்கள் தவறிவிட்டபோதும்-சிங்கைதகர் பற்றிய தொகுப்பு இந்நூலில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
வரலாற்று உண்மைகளை எவ்விதம் கல்வெட்டுக்கள், சிற்பங் கள், ஓவியங்கள், சாசனங்கள், கட்டிடங்கள், வீதிகள், நாணயங் கள் இடிபாடுகள், முதுமக்கட்டாழிகள், மட்பாண்டங்கள், நாட் டார் வழக்கியல் முதலியன எடுத்துக்காட்டுகின்றனவோ அன் வண்ணமே இடப் பெயர்களாலும் பல வரலாற்றுண்மைகளை அறி யக்கூடியதாய் இருக்கின்றதென்பதைத் தெளிவுபடுத்தும் இந்நூல் வரலாற்ருசிரியர்கட்கும், தமிழ்ச்சமுதாயத்துக்கும், வருங்காலத் துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகும்.
நாம் வாழும் வல்லிபுரத்தைப்பற்றி பல பிரபந்தங்களை மன் றச்சார்பிலே வெளியிட்டோம் அவற்றுள் ஆழ்கடலான், வல்லிபுரத் கான் தலபுரானாம், வல்லிபுர மாயவன் பிள்ளைத்தமிழ் என்பன குறிப்படத்தக்கன. புதிய கோணத்தில் எழுதப்பட்ட இந்நூலை எமது வெளியீடாக மக்கள் முன்வைப்பதில் பெருமைப்படுகிருேம். நூலாக்கத்துக்காக உழைத்தவர்கள் யாவர்க்கும் எமது நன்றி உரித்தாகுக. இடப்பெயராய்வு11 வெளியாவதுபோல தொகுதி.I வெளி யா வ தற்கு வலிகாம மக்கள் முன்வருவார்களாக, ஆசிரியர்க்குத் தமிழர் சார்பில் எமது நன்றி உரித்தாகுக,
"சரித்திரத் தேர்ச்சி கொள்? -(மகாகவிபாரதி)
ஆழ்கடலான் 16 - 8 s 89. தூப்புல்
வல்லிபுரம் (சிங்கைநகர்)
புலோலி.

Page 10
பொருளடக்கம்
மதிப்புரை முன்னுரை
பதிப்புரை
இயல் - 1 : இடப்பெயர் ஆய்வு ஒர் அறிமுகம் இயல் 2 : இடப்பெயர்களும் வரலாறும்
இயல் - 3 = நீர்நிலைப் பெயர்கள்
இயல் - 4: நிலவியல்பு குறித்த பெயர்கள் இயல் - 5 : நிலப் பயன்பாட்டுநிலப் பெயர்கள் இயல் - சி 2 குடியிருப்புநிலைப் பெயர்கள்
இயல்- 7 ஊராட்சிநிலைப் பெயர்கள்
இயல் - 8 தாவரம் சுட்டிய பெயர்கள்
இயல். 9 சிறப்புநிலைப் பெயர்கள்
ஆய்வுத்துணை நூல்கள்
இடப்பெயர்கள் அகர நிர
idents
ili -vii
viii -- xi
xi i - XV
31 سے 16
32 - 60
86 - 10 8
26 ماه 9 10
27 - 29
30 a 43
144 - 48
{) خت (H

இயல் -
இடப்பெயர் ஆய்வு - ஒர் அறிமுகம் இடப்பெயர்களின் தோற்றம்
ஆதிகால மக்கள் காடுகளிலும், நதிக்கரை ஓரங்களிலும் அலேந்து திரிந்து வேட்டையாடித் தமது உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து வாழ்ந்த நிலையில் அவர்களுக்கு நிலையான இருப் பிட வசதிகளை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட வில்லை. காலம் செல்லச் செல்ல நாகரிக வளர்ச்சியும், தேவைக ளும் ஒழுங்குகளும் ஏற் பட்ட நிலையில் நிலையாக ஓரிடத்தில் இருந்து தொழிற்பட வேண்டிய அவசியம் ஏற்படலாயிற்று. அத் தகைய ஒரு சூழ்நிேைய இடப்பெயர்களின் தோற்றத்திற்குக் காரணமாயிற்று, Af ;
நிலையாகக் குறிப்பிட்ட இடங்களில் வாழத் தொடங்கிய ஆதிவாசிகள் அவற்றையே சூழலாக ஆக்கிக் கொண்டு தமது தொழில்களையும் அச்சூழலோடு அமைத்துக் கொண்டனர். அவ் விடங்களை மற்றவர்களுக்குச் சுட்டிக்காட்டவும், ஏனைய இடங்க ளில் இருந்து ஒன்றைப் பிரித்துக் காட்டவும் பெயர்களைச் சூட் டலானர்கள். அன்றைய நிலையில் அவர்களுக்கு இயற்கைகளே பெயர்க்கருவூலங்களாக அமைந்தன. எனவே அவற்றின் அடி
1. " ஆதிவாசிகளிடம் கூட ஆழமான வகைப்படுத்திப் பெயர் சூட்டும் பண்பு காணப்பட்டமையை லெ விஸ் ட்ரா ஸ் ( Claude - Levi Strauss ) is GirL“-prófögs Git Girar ff. Gay GITri jög சமூகங்களை விட மரங்களைப்பற்றியும் அதே போல் செடி கொடிகன், பறவைகள் பற்றியும் மிக நுண்மையான விப ரங்களும் அம் மக்களுக்குத் தெரிந்திருந்ததால்தான் அச் செடி, கொடிகளையும், விலங்குகளையும் சரியாகப் பாகு படுத்தி அறிந்திருந்தனர். கனூணுே (Hanunoo ) என்னும் பிலிப்பைன்ஸ் தீவில் உள்ள மக்கள் தங்களைச் சுற்றிய இடங்களில் இருந்து 93 சதமான ம் செடிவகைகளைத் தெரிந்து வைத்திருந்தனர் என்று சொல்லப்படுகின்றது. சுமார் 12 வகைப் பாம்புகளை இனம் பிரித்து வைத்தனர். 60 வகை மீன்களை அறிந்திருந்தனர். ஆயிரக்கணக்கான பூச்சிகன் 108 வகைகளாகப் பிரித்திருந்தனர்." தமிழவன், ஸ்ட்ரக்சுரலிசம், சென்னை, 1982, பக் 66,

Page 11
2
யாக மரப் பெயர்கள், ஆற்றுப் பெயர்கள். நிலவியல்புப் பெயர் கள், விலங்கு பறவைகளின் பெயர்கள் முதலியன இடப்பெயர்க ளைக் குறிக்கப்பயன்படலாயின. அன்று தோன்றிய பெயர் சூட் டும் பண்பாடு அதே சூழலிலே தொடர்ந்தும் பல்லாயிரம் ஆண் டுகளாக நிலைத்தும், பின்பற்றப்பட்டும் வந்தமை அதிசயமாகவே அமைகிறது. காலப்போக்கில் அவற்றில் சில புதிய மரபுகளும் தவிர்க்க முடியாதவாறு இணைவதாயின. மனித னின் அறிவு வளர்ச்சிக்கு அமைய அரசர். தலைவர், அதிகாரிகள் என்போரின் பெயர்களும், மற்றும் தொழில் அடிப்படையிலான புதுப்பெயர் களும். புராண இதிகாச இலக்கியப் பெயர்களும் சேர்ந்து கொண் டன. மனிதன் எவ்வாறு தனது வாழ்க்கையின வளம் அடையச் செய்தானே அவ்வாறே தன் வசிப்பிடங்களுக்குப் பெயரிடுவதி லும் மின்னேறிக் கொண்டான். இம் முன்னேற்றத்தில் மொழி, இலக்கியம், வரலாறு, கலை, கலாசாரம், அரசியல் என்பனவும் இடம் பிடித்துக் கொண்டன.
ஒரு பழம் பதியில் இருந்து பஞ்சத்தினுலோ, பேரழி வி ஞலோ, போர் வேட்கையினலோ, வாணிக அபிவிருத்தி நோக்கி ஞலோ அந்நியதேசம் சென்று ஆங்கே காடாய்க் கிடந்த ஒரி டத்தை வெட்டித் திருத்தியேனும், மாற்றுரை வெற்றி கொண் டேனும் அன்னவர் நாட்டைக் கைப்பற் :யேனும், அந்நிய தேச வேந்தனிடம் இருந்து ஒரு வெற்றிடத்தைப் பரிசாகப் பெற்றே னும் குடி கொள்ளும் மாந்தரானவர் தமது நினைவில் நின்றும் நீங்குவதற்கு அரிய தம் தொல் பதியின் மேல் உண்டான பாசத் தினலேனும், தம் வரலாற்றைத் தமது சந்ததியார்க்கு விளக்கும் நோக்கத்தினலேனும் அத் தொல் பதியின் கண் உள்ள சில தானப் பெயர்களைத் தம் மாற் புதிதாய் அமைக்கப்பட்ட ஊரில் உள்ள இடங்களுக்கு இக்டு வழங்குதல் உலகத்திலே ஈர்க் கணும் உள்ள ஒரு பெரு வழக்காகக் காணப்படுகிறது. தம் பழைய ஊரில் உள்ள ஓரிடத்தைப் புதிய ஊரில் உள்ள ஓரிடம் எவ்வாழுயினும் ஒத்தி ருத்தல் உண்டாயின் அதன் பெயராலே இதனை வழங்குதலும் உண்டு.
ஈழத்தில் ஒல்லாந்தர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் தம் நாட்டில் வழங்கிய பெயர்களை ஈழத் திலும் சில இடங்களுக்கு இட்டு வழங்கலாயினர். அவ்வகையில் வட இலங்கையின் தீவுகளுக்கு அவர்கள்கயிற்ஸ், ரொட்டர்டாம்,

3
லேடன், மிடில்பேர்க், ஆம்ஸ்ரடாம், டெல்ப்ற் ஆகிய பெயர்களை இட்டனர். ஆயினும் ஆண்டாண்டு காலமாக வாய்மொழி மரபில் வழங்கி வந்த இடப்பெயர்களைப் புதுப்பெயர்கள் எளி திங் மாற்றி வி. முடியாது என்ற உண்மையின் அடிப்படையில் இப்பெயர்களிற் பல இன்று வழக்கொழிந்து போயின,
பண்டைத் தமிழரின் பண்பாடு ஐந்திணை நிலத்தைக் களமா கக் கொண்டு அப்பின்னணியிலேயே வளர்ந்து வந்துள்ளது. அவர்களது வாழ்வும், தொழிலும், கலையும் அந்நிலப்பாகுபாடு, அவற்றின் கருப்பொருட்கள் என்பவற்றுக்கு ஏற்பவே அமைய லாயின. அம்முறையில் அவர்கள் தாம் வாழிடங்களுக்கும் இயற்கையோடு ஒட்டிய கருப்பொருட்களாகிய தாவரங்கள், விலங் குகள், பறவைகள், தானிய வகைகள், நீர்நிலை, நில இய்ற்கை திணைமாந்தர், தெய்வம் என்ற அடிப்படையில் பெயர்கள் வைக் கலாயினர். இவற்றுக்கு உதாரணமாக முறையே கச்சி, புலியூசி, நாரையூர், நெல்வேலி தெள்ளாறு, மணலூர், எயினலுர்ர், தேவூர் முதலியவற்றைக் குறிப்பிடலாம். இவ்வகையில் நோக்கும் போது இயற்கையோடு இணைந்து வாழ்ந்த பண்டைத்தமிழரது பண்பாட்டைப் பிரதிபலிப்பனவாக அவர்தம் இடப்பெயர்கள் அமைவது தெளிவாகின்றது.
ஈழத்துத்தமிழ் இடப்பெயர்களும் இந்நாட்டு மக்களது பண் பாட்டுப் பாரம்பரியம், வரலாற்று நிகழ்வுகள், பிறநாட்டு அர சியல் தொடர்புகள், போர்கள், பிறநாட்டுக் குடியேற்றங்கள், சமய நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள் என்பவற்றைப் பதிவு செய்து விளக்கம் தருவனவாகக் காணப்படுகின்றன. சமூ சுப் பெரியார், சாதி அமைப்புக்கள், தொழில் நடவடிக்கைகள் என்பவற்றின் அடிப்படையிலும் இடப்பெயர்கள் தோற்றம் பெற் றுள்ளன,
குமரிக்கண்டம், (Raveriumri, Asašt-uh பற்றிய உண்மைகள் குறித்து ஆய்வுகள் நடை.ெற்று வருகின்றன. இவற்றுக்கு ஆதா ரமாக இந்திய - ஆபிரிக்க நாட்டார் கதைகளும் பல உண்ம்ை களைத் தருகின்றன. மடகாஸ்கார் தீவிற்கு குமர் " (Komar )
1. ஊர்காவல்துறை - Kayt, அனலைதீவு - Rotterdan,
Gau Gv&M7 = Leydesa, LyrivesGary = Middleburgh, distadu Say as Amsterdam, a sGfi3ay = Delft, நயினதிவு = tatem ஆகிய இடப்பெயர்களை நோக்குக.

Page 12
4
என்பதும், மற்றும் அம்யக்களை கொமரி (Komári) 676åvus ub அங்கு Komores என்ற கடல் இருப்பதும், Comoro Islands காணப்படுவதும், குமரிக்கடல், குமரிக்கண்டம் பற்றிய சிந்தனைத் தெளிவைக் காட்டுகின்றன. குமரிக்கண்டம் பற்றிய பழமரபுக் கதைகள் ( Legends) வழியாகப பெறப்படுகின்ற இடப்பெயர் களைச் சான்றுபடுத்துவனவாக மேற்குறித்த பெயர் ள் அமை கின்ற்ன. 1
15ஆம் நூற்றண்டில் இருந்து ஐரோப்பிய ஆதிக்கம் பாரத கண்டத்திலும் ஈழத்திலும் படிப்படியாக ஏற்படுவதாயிற்று. அன்று முதல் அவர்கள் தொடர்பாலும் தமிழர் வாழிடங்களும் புதுப் பெயர்களைப் பெறலாயின. ஓரிடத்தைப் புதிதாக எ வர் ஒருவர் கண்டு பிடித்தாரோ அவர் பெயராலே அவ்விடம் வழங்கப்படும் மரபு மேல்நாட்டினரிடம் காணப்படுகிறது. உதாரணமாக கொலம் புஸ்தீவைக் குறிப்பிடலாம், இவ்வகையில் பிரித்தானியத் துரை மார் தோட்டங்கள் அமைப்பதற்காகத் தேர்ந்தெடுத்த புது இடங் கள் அவர்கள் பெயர்களாலே வழங்கிவருவதை ஈழத்தின் மலைநாட் டுப் பகுதிகளிலே காணலாம். உதாரணமாக நோர்வூட், ஸ்காட், ஹற்றன் முதலிய இடங்களை இவ்வரிசையிற் குறிப்பிடலாம்.
தனிமனிதன் அல்லது மக்கள் கூட்டம் என்ற நிலையில் பெயர் கள் தோன்றிய நிலைக்கு அடுத்த பகுதியாக அம்மக்கள் கூட்டத் தினரின் தலைவன் அல்லது அரசன் என்ற நிலையிலும் இடப் பெயர்கள் தோன்றலாயின, ஒரு குறிப்பிட்ட இடம் ஒரு மன்ன னின் ஆளுகைக்குக் கீழ்க்கொண்டுவரப்படுமிடத்து அவ்விடம் அம் மன்னனின் பெயர் பெறுதல் வரலாற்றுச் செய்திகளாக உள்ளன. உதாரணமாக இலங்கை சோழராட்சியின் கீழ் வந்த போது முத லாம் இராசேந்திரனது ‘மும்முடிச் சோழன்’ என்ற பட்டப் பெய ரிலிருந்து மும்முடிச் சோழ மண்டலம் எனப் புதுப்பெயர் பெற்ற
மையைக் asn 686Tauri b.
அதன் பின்னர் அரசியல், மொழி, கலாசார வளர்ச்சியின் பின்னணியில் அவ்வவ்விடங்களில் வாழ்ந்த அரசியல்வாதிகள், ஆறிஞர்கள், எழுத்தாளர்கள் முதலிய இன்னேரன்னேரின் ஃபயர்களால் இடப்பெயர்கள் அமைத்த வரலாறும் அறிந்ததே.
1. - K. P. Aravanan “o Lemuria. - The original Home of
Pravido Africans 10 ஆவது கருத்தரங்கு - ஆய்வுரைக்
கோவை, தொகுதி 3, இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரி யர் மன்ற வெளியீடு 1978 பக், 38-39.

இடப்பெயர் மாற்றம்
இடப்பெயர்கள் மாற்றம் அடைந்து வந்தமைக்கு மூன்று கார னங்கள் கூறப்படுகின்றன.
. அரசர்கள் தங்கள் வெற்றியின் நினைவாகவும், தாங்கள் வெற்றி கண்ட ஊர்களில் தங்களது உரிமைகளை நிலை நாட்டவும், வெற்றி கொண்ட ஊர்களின் பெயர்களை மாற்றுதல்; (உ+ம் மனதோட்டம் = இராஜராஜபுரம், பொலநறுவை = ஜனநாதமங்களம் )
2. அரசர்கள், கோயில்களுக்கும் பிராமணர் முதலியோருக்கும் தானமாக அளிக்கும் நிலங்களுக்குத் தங்கள் பெயர்களைச் சூட்டுதல்; மிக அதிகமான ஊர்களுக்குப் பெயர் மாற்றம் ஏற்பட இதுவே முக்கிய காரணமாக இருந்தது. (உ+ம் கந்தளாய் - இராஜராஜ சதுர்வேதி மங்களம் )
粤
3. அரசர்கன் தங்களது உறவினர்கள் பெயராலும், தங்க ளுக்கு வேண்டப்பட்டவர்களது பெயராலும் இடங்களுக் குப் பெயர் மாற்றம் செய்தல்,
இத்தகைய மாற்றங்களைப் பற்றிய செய்திகளின் மூலம் அக் கால அரசியல், சமூக நிகழ்ச்சிகள், பெயர் மாற்றம் செய்தோரின் வாழ்க்கைப் பின்னணி என்பவற்றை அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுகிறது
இடப்பெயர் ஆய்வு
இடப்பெயர்கள் மொழியில் ஏற்படும் பொதுமாற்றங்களுக்கு உட்பட்டும் உட்படாமலும் நிற்கும் வல்லமை உடையன. மொழி வில் உள்ள மற்றச் சொற்களைவிட திலைபேறுடையவை இடப் பெயர்கள். இவை வரலாற்றேடு நேரடித் தொடர்வு கொண்டு பழமையின் எச்சங்களாக நின்று மனித வரலாற்றையும், பண்பாட் டையும் விளக்கும் ஆற்றல் பெற்றவை. மணி த க் கற்பனைக்கு இடம் தந்து கொண்டே இருந்த புராணம், நாட்டார் கதைகள் ஆகியனவும் இடப்பெயர் குறித்தும் தோற் ற ம் பெறலாயின. மொழியியல், பண்பாட்டியல், நாட்டாரிலக்கியம், வரலாறு முத
1. மா? நயிஞர் "ஊர்ப் பெயர் மாற்றங்கள்" 10ஆவது கருத் தரங்கு ஆய்வுரைக்கோலை - தொகுதி - 3, 1973, பக் 99.

Page 13
6
லிய பல துறைகளோடு தொடர்புடைய இடப் பெயர்கள் மொழியியலில் உள்ளடங்கும் இயல்பினவாக இருந்தும் சிறப்பு இயல்புகளால் * இடப்பெயராய்வு " என்ற தனித்துறையாகி வளர்ந்து இருக்கின்றது.1 h−
gii. 565 Sai Place Name Studies stair oth, Toponomy என்றும் கூறப்படுவதைத் தமிழில் இடப்பெயராய்வு " என வழங்குவர். மேற்குலக நாடுகளில் 1841 இலிருந்து முறையான இடப்பெயர் ஆய்வுக் கால கட்டம் தொடங்குகின்றது. :ொழி நூல் (Philology வளர்ச்சி இடப்பெயர் ஆய்வுகளுக்கு ஓர் உந்து சக்தியாக அமைந்தது, தனிப்பட்ட அறிஞர்களாலும் அரசுகளாலும் இடப்பெயர்களை ஆராயத் தனிப்பட்ட அமைப் புக்கள் நிறுவப்பட்டன. அடிக்கடி அனைத்துலகப் பெயராய்வு மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடாத்தப்பட்டு வரலாயின. இடப்பெயர்களில் மேற்பட்டப்படிப்பு ஆய்வுகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இடப் பெயர்க் கழகங்கள் இயங்கி வருகின்றன. 1949 இல் ஐரோப்பிய அறிஞர்களின் முயற்சியால் யுனெஸ்கோ ( Unesco ) சார்பில் -2yž37 ši stavsŮ @Juurm uiờajši 5g ( International Committee of Onotnastics Sciences) அ ைமக்கப்பட்டு அஃது பெல்ஜியத்தி லுள்ள லூவெய்ன் நகரில் இயங்கி வருகின்றது. ஜேர்மனி ஆஸ்ட் டிரியா, பிரான்ஸ் முதலிய நாடுகளில் மிக விரிவான முறையில் இடப்பெயராய்வுகள் நடைபெற்று வருகின்றன.2 இந்தியாவை நோக்க இந்நிலையினை எட்ட முயற்சி செய்து கொண்டிப்பதையே காணமுடிகின்றது. 1979 இல் தொடங்கப்பட்ட இந்திய இடப் பெயராய்வுக் கழகம்.3 இந்திய மொழிகளில் நடைபெறும் இவ் வாய்வுக்குரிய ஒரு மையமாக அமைகிறது.
“Studies in Indian Place Names” GT67 Ap?rf eius supuh இங்கு வெளியாகின்றது. பல்கலைக்கழகங்களில் பல்வேறு மாநிலங் களின் இடப்பெயர் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.4 தமிழ கத்து இடப்பெயர்களைப் பொறுத்தவரை இற்றைவரை பல
1. ச. வே. சுப்பிரமணியன், ஆய்வு மலர்த் தொகுதி - 1,
15 Tr 35 rf G835nri:Safio, I 3 7 2, a Já - 3 39.
2. கி. தாச்சிமுத்து தமிழ் இடப்பெயராய்வு 1983 7)
என்னும் நூலிலே விபரங்காண்க. ダ
3. The Place Names Society of India, Mysore.
辖· கே. பகவதி, தமிழக ஊர்ப்பெயர்கள், 1986 பக், 10.

ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இலக்கியங்களில் உள்ள ஊர்ப் பெயர் நூல்களும் மாவட்ட அடிப்படையிலான ஊர்ப்பெவர் ஆராய்ச்சி நூல்களும் வெளிவந்துள்ளன. இப்பின்னணியில் நோக்கும் போது ஈழத்தில் இடப்பெயராய்வு இந்நூலாசிரியது முயற்சியிலேயே ஆழங்கண்டுள்ளது எனலாம் .
இடப்ப்ெயர் ஆய்வின் பயன்
ஒரு நாட்டின் விடுபட்டுப்போன வரலாற்றுச் செய்திகளை அறிந்து கொள்ளத்தக்க சான்றுகளைத் தருவது நாட்டார் வழச் கியல்ாகும். இடப்பெயராய்வும் நாட்டார் வழக்கியலில் ஒரு கூரு? கும் 3 பொதுவாக ஒரு நாட்டின் வரலாற்று நிகழ்ச்சிகளையும், பண்பாட்டுச் செய்திகளையும், கல்வெட்டுக்கள் மற்றும் புதை பொருட் சான்றுகள், கட்டிட சிற்ப ஒவியங்கள், இலக்கியங்கள் எடுத்து இயம்புகின்றன. இவ் விடயங்களைத் தக்கவாறு அறிந்து கொள்வதற்குத் துணையாக இடப்பெயர் ஆய்வும் அமைகிறது. அன்றியும் மொழிமாற்றம், மொழியில் பிற நாட்டார் தாக்கம் என்பன பற்றியும் அறியக் கூடிய வாய்ப்பினை இடப்பெயராய்வு தருகின்றது. மேலும் இடப்பெயராய்வின் மூலம் இடங்களின் புவியியல் அமைப்பு, மக்கள் குடிப்பெயர்ச்சி, அரசியல் நிகழ்வு. பிறமொழித் தொடர்பு மூ த லா ன பல வேறுவிடயங்களையும் அறிந்து கொள்ளத்தக்க வாய்ப்பு ஏற்படுகின்றது. மேலும் இடப் பெயர் ஆய்வின் மூலம் சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமய வரலாற்று நிகழ்வுகள் என்பன பற்றியும் அறியக்கூடியதாகவுள்' ளது. நாட்டுத்தலைவர்களின் வீரதீரச்செயல்களைத் தக்கவாறு அறிந்து கொள்ளவும், சமூகக் கட்டமைப்புக்கள், நிறுவனங்கள் என்பனபற்றிய தரவுகளேப் பெறவும் இவ்வாய்வு துணையாகின்றது.
1. இத்துறையில் வெளிவந்த நூல்களின் விபரம் ஆய்வுத்
துணை நூற்பட்டியலிற் காண்க.
2. மேலது குறிப்புப் பார்க்க,
3 Jawaharial Handoo, 1981 : P
4. K. M. George, 1937 P 110

Page 14
8 தென்னிந்திய - இலங்கைத் தொடர்பும் இடப்பெயர்களும் இலங்கை முழு வ தி லும் தென்னிந்தியாவுடன் ஒத்ததாக Gollut på 35 giò L'arisTU "7"|B) 15TrSF ffosib ( South Indians Phenomenon of Megalithic Culture ) பரவியிருந்தது என்பது தன்கு நிறுவப் பட்டுள்ளது. அப்பண்பாட்டு நிலையின் தளங்கள், யாழ்ப்பாண மாவட்டத்திற் காணப்பட்ட் இடங்கள் பற்றிய தொல்லியற். சான்றுகளுடனன ஆய்வுகளின் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்திற் பெருங்கற் பண்பாட்டுநிலை எவ்வாறு நிலத்து இருந்தது என்ற வரையறையான கண்டு பிடிப்புக்களும் வெளியிடப்பட்டுள்ளன (Pr Ragupathy : 1987). .
இத்தகு பண் பாட்டு வரலாற்றுப் பின்னணிகளை இடப்பெயர் களின் மூலங்கள் அல்லது அவற்றின் விளக்கங்கள் பற்றிச் சிந் திக்கும் போது கருத்திற் கொள்ள வேண்டிபது அவசியமாகின் ይDé፱•
இலங்கை இந்தியாவில் இருந்து கடற்கோள்களாற் பிரிக்கப் படுவதற்கு முன்னர் தென்னிந்தியாவில் இருந்து கால்நடையாகத் திராவிட இனத்தைச் சேர்ந்த மக்கள் யாழ்ப்பாணப் பிரதேசத் தில் குடியேறி இருக்க வேண்டும் என வும் கருதப்படுகின்றது. மிகப் பழங்காலந் தொட்டே இந்திய இலங்கைத் தொடர்புகள் பல்வேறு வழிகளில் நிலவி வந்துள்ளன. வர்த்தகக் குடியேற்றம் சமாதானக் குடியேற்றம் என்ற வகையில் காலத்திற்குக் காலம் ஏற்பட்ட குடியேற்றத் தொடர்புகளால் இந்தியப் பெயர்கள் அப்படியே இலங்கையிலும் இடம் பெறலாயின. காலப்போக்கில் சில பெயர்கள் திரிபடைதலும் இயல்பாயிற்று. -
இலங்கை இடப்பெயர்கள்
இலங்கையின் இடப்பெயர்களை அறிந்து கொள்ளுதல் அதன் வரலாற்றை அறிந்து கொள்ளுதலின் ஒரு பாகமாகும். இந்நாட் டிற் பண்டைக் காலத்தில் வாழ் ந் த இயக்கர், நாகர் முதலிய மக்கட் குழுவினரும், இதனைக் காலத்திற்குக் காலம் தரிசித்த பேர் பெற்ற பிரயாணிகளும், இதனை வென்று ஆட்சி புரிந்த சோழர், பாண்டியர், போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலே
1. S. K. Sittampalam : The Megalithic Culture in SriLanka, ( Unpublished Ph. D. Thesis), University of
Poona, 1980.

65
அந்தணன் திடல் (வடம. தெ மே, 119 அ. 1 )
இது கரணவாய்ப் பகுதியிற் பருத்தித்துறை-சாவகச்சேரி வீதியில் 8 ஆம் மைல் கல் எல்லையில் உள்ளது. இதன் ஒரு பக் கம் பரவைக் கடலும், மறுபக்கம் வயல்வெளிகளும், நடுவே குடி யிருப்பும் அமைந்துள்ளன. நிலத் தோற்றத்தின் அடிப்படையில் இப்பெயர் வந்ததென்ப. இங்கு முன்பு பிராமணர் வாழ்ந்ததா கக் கூறப்படுகின்றது. எருதிடல் (தென்ம 88. 1 )
இது கைதடிக்கிராமத்தை அடுத் துள் ள இட மா கும். எரு+திடல் எருத்திடல். காலப்போக்கில் இது எருதிடலாக வழங்' கிற்று. ( எருமபசளை, உரம் )
இப்பகுதியில் ஆடு, மாடு என்பன பெரிதும் வளர்க்கப்பட் டன. அவற்றின் கழிவுப் பொருட்களைக் குவித்து வைத்த இடம் எருத்திடலாகக் காணப்பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம் இப்பகுதி இப்போதும் திடலாகவே காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எருவாடி" என்ற இடமும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.2
*பிட்டி ஈற்றுப் பெயர்கள் பீடு (பிட்டி, பீடு=தரிசுநிலம் (த. லெ. 5 2732), இலங் கைப் பேச்சு வழக்கில் மேடு என்பதைப் பிட்டி புட்டி என்பர். அதனை ஈருகக் கொண்டு பல இடப் பெயர்கள் அமைந்துள்ளன. இச்சொல் சிங்கள இடப்பெயர் ஈருகிய Hittiya அல்லது siddi என்பதிலிருந்து வந்தது என்பர் (ஞானப்பிரகாசர் 1917:168, குமாரசுவாமி 1917:32). ஆனல் ஜே.பி. லூயிஸ் இதனை மறுத்துள் ளமையும் நோக்கற்பாலது (191744). புலோலி தெற்கில் வெல் லப்பிட்டி என்ற ஒரு பகுதியும், வல்லிபுரக் குறிச்சியில் வல்லாப் பிட்டி என்ற சிறுபிட்டியும் காணப்படுகின்றன.
1. பண்டைய ஈழத்தில் விஜயன் காலந்தொட்டுப் பிராமணர் பெற்றிருந்த செல்வாக்கை மகாவம்சம் உரைக்கின்றது. கி. மு. 4ஆம் நூற்ருண்டிற் பாண்டுகாபய மன்னன் காலத்திற் பிராம ணருக்கே பிரத்தியேகமாக இருந்த வசிப்பிடத்தை மகாவம்சம் குறிக்கின்றது. (m.w+102) இது "பிராமண வட்டம்” என அழைக்கப்பட்டது. ( க. சிற்றம்பலம் "ஈழமும் இந்துமதமும்", சிந்தனை, 2; 1 ; 1984 112)
2. South Indian Inscriptions Vol XIV; No. 129; P;67

Page 15
66
உடுப்பிட்டி (வடம. தெ. மே. 12.3 )
உடு + பிட்டி-உடுப்பிட்டி, இக் கிராமத்தின் தெற்கு ம் மேற்கும் வயலவெளி; கிழக்கே கரணவாய்; வட க் கே வல் வெட்டி ஆகியன அமைந்துள்ளன. உடுப்பிட்டியின் அமைவிடம் திடலாகவும் அதன் எல்லைப்புறம் உடுவடிவிற் காணப்பட்டமை யாலும் இப்பெயர் வந்ததென்க.
கூழாறுப்பிட்டி (தென்ம. 91.2 )
கோயிலாக்கண்டி என்னுமிடத்திற்கு அயலில் இவ் வூர் அமைந்துள்ளது. இதனைக் கோளாறுபிட்டி எனவும் வழங்குவர். கூழா + அறு + பிட்டி. கூழா என்ற மரங்கள் நிறைந்து காணப் பட்டுப் பின்னர் அவை அழிந்த நிலையில் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம். முன்பு இது கூழாப்பிட்டி எனவும் வழங்கிற்றென்ப.
‘மணல்" முதனிலைப் பெயர்கள்
யாழ்ப்பாணத்தின் பழம் பெயர்களான மணற்றிடர், மணலை, மணற்றி 1 முதலான பெயர்களும் மணலுடன் தொடர்புபட் டனவே. தரைத்தோற்ற அடிப்படையில் மணல் பெரிதுங் காணப் பட்ட இடங்களில் மணல் முதனிலைப் பெயர்களாக இடப் பெயர்கள் வழங்கலாயின.
மண்டான் (வடம. தெ. மே, 119.3)
இது கரணவாய் தெற்கிலுள்ள செம் மண் பகுதியாகும். புதுக்குடியிருப்புப் பகுதியாகவும் தோட்டப்பயிர்ச் செய்கை நிலங் களையுடைய இடமாகவும் இது காணப்படுகின்றது. மண் + தாள் மைண்தாள்> மண்டான். செம்மண்ணின் சிறப்பியல்பை விதந்து கூறும் நிலையில் இப்வெயர் தோன்றிற்று எனலாம்.
மணவளை (தென்ம. 100.3)
இது மட்டுவிற் பகுதியிலுள்ள ஓரிடம், மணல்+ வளை = மன வளையாயிற்று, மணற்பகுதியான சுற்ருடல் மணல்வளை என வழங்கிப் பின்னளில் மணவளை எனச் சுருங்கிற்று எனலாம்.
1. C. Rasanayagam; 1926; pp 34-44, 141, 246, 253, 296,
-298.

67
மணற்காடு ( வடம, வ, கி. 142.2)
இது வல்லிபுரத்திற்குத் தென் கிழக்கே கடற்கரையோர மாக அமைந்துள்ள இடம். மணல்வெளிகளும் சிறு பற்றைகளும் காணப்படுவதால் மணற்காடு என்ற பெயர் பெற்றுள்ளது. மணல் நிறைந்து பரந்து காணப்படும் நிலையில் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம். (மணல்) காடு-குவியில், மிகுதி என்பவற்றை வெளிப் படுத்துகிறது. மீனவர்களின் சிறு குடில்களே இங்குக்காணப்படும்" இவை மணல் மேடுகளால் மூடப்பட்டு விடுவதால், அடிக்கடி குடிசைகள் புதிது புதிதாக அமைக்கப்படும். மணற்காடு கத் தோலிக்க தேவாலயம் ஒன்றும் ம ன ல |ால் புதையுண்டதாகக் கூறப்படுகின்றது.
‘மலை ஈற்றுப் பெயர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் மலையே இல்லை, இருப்பினும் மலைஈற்றுப் பெயர்களாகக் கம்பர் மலை, கீரிமலை, சுதுமலை என்ற மூன்று இடங்களுள்ளன. எனவே இப்பெயர்கள் கற்பனையடிப் படையிலோ அல்லது வேறு சொற்களின் திரிபாகவோ தோன்றி யிருக்க வேண்டும்.
கம்பர் மலே ( வட ம. தெ. மே, 121. 2 )
இது வல்வெட்டித்துறைப் பகுதியில் உடுப்பிட்டிக் கிராம சேவகர் பிரிவில் இடம் பெறும் ஒரு கிராமமாகும். இதன் பழைய
பெயர் கம்பர் மூ?ல. கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இப் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 150 வருடங்களுக்கு
1. இத்தாலியின் வடக்கேயுள்ள " போ ? சமவெளிப் பிரதேசத் திலிருந்து காற்றிஞல் அள்ளுண்டு வரும் செம்மண் செங்கடலிலே கொட்டப்படுவதனல் அக்கடல் ° செங்கடல் "* எனப்பெயர் பெற்றது. அது போன்றே தென்னிந்தியக் கரையின் தனுஷ் கோடி இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலிருந்து சுழற் கா ற் று உருவாகி, மண்ணையும் அள்ளி வருக்போது, வட இலங்கைக் கரை யிலுள்ள மணற்காடு, வல்லிபுரம், நாகர்கோயில், மண்கும்பான் முதலிய பகுதிகளில் வீசுவதனல் ஆங்கு மணல் மேடுகள் அதிக ரிப்பதாயின. ( தகவல் : க. குதபாலன், புவியியற்றுறை, யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் )

Page 16
68
முந்திய வல்லை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் நிர்வாக ஒழு நீ கு களில் உபயமாகக் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தவர் பெயர் வரிசையில், வைரவக்கடவுளின் மண்டப உபயம் எ ன் பதில் வேலு ப் பிள் ளை யும் பெண் மீனுட்சியும் கம்பாமூலை உபயம்" என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே கம்பருக்கும் இவ்விடத்திற் கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
வடகரைப்பகுதிகளிற் காணப்பட்ட யானைக்ளைப் பிடித்து: அவற்றின் மதத்தை அடக்கி, கட்டி வைத்த மேட்டு நிலம் கொம் பர்மூலை எனப்பட்டது. (கொம்பர். யானை) இக்கொம்பர்மூலையே பின்பு கம்பர்மலையாக மாற்றம் வெற்றுள்ளது எனவும் அறியப்படு கிறது?. இவ்விடப்பெயர் பற்றிய விளக்கம் மேலும் ஆராயப் படவேண்டியதாகும்
*மூலை ஈற்றுப் பெயர்
ஊரின் ஒர் ஒதுக்குப்புறமாக எல்லையிலமைந்த இடம் மூலை எனப்படுவதாயிற்று
வியாபாரி மூலை ( வடம. வ. கி. 139, 4 )
இது பகுத்தித்துறையிலே புலோலியின் எல்லையிலுள்ள ஒரு பகுதியாகும். வியாபாரம் காரணமாக இப்பெயர் தோன்றிற்று. இங்கு ஓர் அம்மன் ஆலயமுங் காணப்படுகிறது. மக்கள் வழக்கில் *யாவாரிமூல" என்றே இவ்விடம் வழங்கப்படுகின்றது. இதன் அயற்கிராமம் தம்பசிட்டியாகும். எனவே இப்பகுதியில் செட்டி மார் ஆதிக்கமும் வணிகமும் முதன்மைபெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது,
1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவி செல்வி இ. தங்கவடிவேல் 1979இல் மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கை.
2. கே. ஏ. நீலகண்ட

வேளை ஈற்றுப் பெயர்
வள்:வளம்; வள்+ஐ=வளை=வளம் செறிந்த இடம் வளை== வளேந்த அல்லது ஆழமான இடம் என்ற பொருளிலும் இச்சொல் இடத்தைச் சுட்டும் பின்னெட்டு இடப்பெயராக வழங்குகின்றது. இவ்வகையில் அமைந்த இடப்பெயர்களாக ஆழியவளை, கும்பளா வளை, கோணுவளை, தனிவளை, மணவளை முதலான இடங்கள் யாழ்ப் பாண மாவட்டத்திலுள்ளன.
ஆழியவளை :
வடமராட்சியின் கிழக்கே கடற்கரையோரமாக இக்கிராமம் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதி வளைவாகக் காணப் படுகிறது; இதன் மறுபக்கமுள்ள் தொண்டைமானுறும் வளைவா கவேயுள்ளது. எனவே இக்கிராமத்தின் இரு எல்லைகளும் நிலையான (அழியாத ) வளைவுடையனவாகக் காணப்பட்டமையால் * அழி பாவளை " என்ற பெயரேற்பட்டு காலப்போக்கில் அது "ஆழிய வன்” எனத் திரிந்த தென்பர்.1 ஆழி - கடல். கடலால் வளைக் கப்பட்ட இடம் என்ற அடிப்படையிலும் ஆழி + வளை > ஆழி வன் > ஆழியவன் என்ற பெயரேற்பட்டிருக்க வாய்ப்புண்டு.2 பண்டை நாளில் இங்கு துறைமுகம் இருந்ததென்றும், ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு வெளிச்சக்கட்டை (Light Post) அமைக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது (பூரீ லங்கா, மார்ச் 1951, шd. 15 ).
தனிவளை (தென்ம, 112, 4)
இது கொடிகாமத்தின் வடபால் அமைந்த ஓரிடம். தனிமை+ வளை: தனிவளை. இங்கு குறிப்பிட்ட ஒரு சால்பு மக்கள் குடியேறி வாழ்ந்தமையால் இவ்விடத்தை ஏனையோர் தனிவளை எனப் பெயரிட்டழைத்தனர்.3 தனிமையான குடியிருப்பிடம் என்ற பொருளில் இப்பெயர் ஆக்கம் பெற்றுள்ளது.
1. தகவல் : க. கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்
பட்டதாரி மாணவன், 1988. .ே தமிழகத்திலும் " ஆழி " முதனிலையாகக் கொண்ட பல
இடப்பெயர்கள் காணப்படுகின்றன. 3. தகவல்: பி. சிவத்திரை, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப்பட்ட
தாரி மாணவி 1984.

Page 17
இயல் - 5
நிலப் பயன்பாட்டுநிலைப் பெயர்கள்
பண்டைக்கால மக்கள் நிலையாக ஒரிடத்திற் குடியிருக்க முற் பட்டபோது காடழித்து, மனை அமைத்து, சூழலில் வளம் பெருக்கி வாழத் தொடங்கினர்; வளமான சுற்றுடல்களிலே பரந்து வாழ வும் தலைப்பட்டனர். உணவு உற்பத்தியின் பயனகப் களனிகளும் தோட்டங்களும் தோன்றலாயின. அவற்றிற்குப் டிதுப் புதுப் பெயர்களும் சூட்டப்பட்டன, நிலப்பயன்பாட்டு நோக்கில் வயல் களும் தோட்ட நிலங்களும் முதன்மை Aெற்றன. அவற்றின் பய ஞக மொழியிற் புதுப் புதுச்சொற்களும் பெருகலாயின.
ஈழத்திற் பொதுவாக கமம், வயல், வட்டை, வெளி என்ற பெயர்ச் சொற்கள் வயல் நிலத்தைச் சுட்டுவனவாக அமைந்துள் ளன. இவற்றில்-கமம் என்பது காமம் என நீண்டொலித்து வழங் கக்காணல்ாம் கண்டி என்பதும் வயற் பெயரைச் சுட்டும் பெயர்க் கூருகவே வழங்கப்படுகின்றது. கொல்லை, தோட்டம், தோப்பு என்பன பயிர்த்தோட்டங்களுடன் தொர்புடைய பெயர்ச் சொற் களாகும். இவற்றை விட வத்தை என்ற சொல்லும் தோட்டம் குடியிருப்பிடம் என்ற பொருளிலும் வழங்கப் பெற்றுள்ளமை நூலில் விளக்கப்பட்டுள்ளது.1 வெட்டி என்ற சொல்லும் நிலப் பயன்பாட்டடிப்படையில் இடப்பெயர்க் கூருக அமைந்துள்ளது.
இப் பெயர்க்கூறுகள் அனைத்தையும் தமிழகத்து இ ட ப் பெயர்க் கூறுகளுடன் ஒப்பிட்டு ஆராயும் போது ஈழத்திற்குரிய தனித்துவமான பெயர்க் கூறுகள் எவை என்பதை அறிய வாய்ப் பேற்படுகின்றது. s
*கண்டி ஈற்றுப் பெயர்கள்
கண்டி-எருமைக்கடா, மந்தை, அடைத்து மீன்பிடிக்கும் கரு விவகை, கழுத்தணிவகை, உருத்திராக்கமாலை. முகத்தல் அளவை யில் 4கலன், 75 ஏக்கர் நிலப்பரப்பு, ஒரு முகத்தல் அளவு, சிறு கீரை கண்டிகை (ஒருவகைப்பறை), கண்டியூர் (அட்டவீரட்டானங் களுள் ஒன்று) (த.லெ.2;689). மேலும் கண்டி என்பதற்கு 28துலாக் கொண்ட நிறை 20 பறை கொண்ட அளவு என்றும் பொருள் களுள. சிங்களத்தில் ‘கண்டி" என்பது ஆற்றங்கரை, வாய்க்காற்
1. இந்நூலின் 77 - 82ஆம் பக்கங்களைப் பார்க்க,

71
கரையிலுள்ள மேட்டுப்பூமி' என்று பொருள் தருவதாகும். இந் நிலையில் குமாரசுவாமி அவர்கள் கண்டி ஈற்றுப்பெயர்கள் யாவும் சிங்களச் சொல்லின் திரிபு என்கிருர் ( 1918 ; 59 ). அவர் கருத் தை மறுத்துரைக்கத் தக்க சான்றுகள் பெரிதுமுள்ளன. கண்டி * என்பது மலையாள மொழியில் பின்வரும் பொருள்களில் வழங்கு கின்றது. வேலி இடைவெளி,2 மதில் வெடிப்பு, வயலில் நீர்வடிந் தோடத் திறக்கப்படும் வழி, மேட்டுநிலம், கணவாய் துண்டம் , 500 இருத்தல் நிறை, 4 யார் நீளமுடைய தடி, ஒருவகைமரம், கிழங்கு என்பனவாம்.
தமிழகத்திலே செங்கற்பட்டு மாவட்டத்திற் சோகண்டி * என்ற பெயரில் இர ண் டு இடப்பெயர்கள் காணப்படுகின்றன. * இவ்வூர்ப்பெயர்கள் எளிதிற் பொருள் புரியாதவாறு புதிராகவே அமைந்துள்ளன. கண்டி என்பது பிரிந்துள்ள பகுதி எனப்பொருள் படும் என்கிருர் கரு. நாகராஜன் ( 1985 : 184 ), தஞ்சாவூர் மாவட்டத்திலும் " கண்டியூர் ” என்ற பாடல்பெற்ற தலமொன் றுளது. இக் கண்டியூர் பற்றி கே. பகவதி (1984 : 79) குறிப் பிடும்போது ? இவ்வூர்ப் பெயர்க் காரணம் விளங்கவில்லை. எனி னும் கண்டி என்பதற்கு மந்தை என்றும், 75 ஏக்கருள்ள ஒரு நில அளவை என்றும், தமிழ் லெக்ஸிக்கன் ( 2. பக் 689 ) குறிப் பிடுவதைக் காண மந்தைவெளியாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது ”” என்கிருர், கண்டியூர் பற்றி மெய், சந்திர சேகரன் கருத்துத் தெரிவிக்கும்போது ' சிவபெருமான் பிரமா வின் தலையைக் கொய்த இடம் ஆதலால் பெற்ற பெயர்' என்கிருர்3.
கண்டியீற்றுப்பெயர்கள் கேரள நாட்டிலுமுள்ளன. புறநா நூற்றிலே ( 148 - 150 ) வன்பரணர், வள்ளல்களில் ஒருவரான கண்டீரக் கோப்பெரும் தள்ளியைப் பாடுகின்ருர், கண்டீரநாடு = மலைநாடு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. இவற்றைக் கவனிக்கும் போது பழந்தமிழகத்திலும், பழந்தமிழிலக்கியத்திலும் கண்டி ? என்ற சொல் பயின்று வந்துள்ளமை தெளிவாகின்றது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்துக் கண்டியீற்றுப் பெயரில்வரும் கண்டி’
1. H. Gundert, A Malayalam and English Dictionary,
1872 p, 199.
2. தீவுப்பகுதிகளில் வேலியில் ஏற்படும் முறிவு, இடைவெளி என்பவற்றைக் கண்டி " என்ற சொல் குறிப்பது காண்க.
3. மெய், சந்திரசேகரன் - தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்
1984 பக் 199,

Page 18
72
என்பதன் பொருள் என்ன என்பதை அறிதல் அவசியமாகிறது. கண்டி ( Kandy ) என்பது இலங்கை மலைநாட்டின் முக்கிய நக ராகும். ஆணுல் ஈழத்தின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் சில ஊர்ப்பெயர்கள் கண்டி ? என்ற ஈறுபெற்றுள்ளன சங்கமnங் கண்டி கிழக்கிலங்கைக் கரையோரப்பகுதியில் கதிர்காமத்திற்குப் போகும் வழியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற் கோயிலாக்கண்டி, பொலிகண்டி, முறிகண்டி என்ற ஊர்ப்பெயர் சள் இடம்பெற்றுள்ளன. தென்மராட்சிப் பகுதியில் வர ணி வடக்கில் ஐயன் கண்டி, ஒளவைக்கண்டி என்ற தோட்டப் பெயர்களும், வல்வெட்டித்துறையில் வலிகண்டி என்ற குறிச்சியும் காணப்படுகின்றன.
இவற்றை விட வேறு பொருளிலும் " கண்டி " என்ற சொல் வழங்கி வருகின்றது. மீ ன வ ர் மத்தியில் 9 கண்டிகட்டுதல் " என்ற வழக்காறுண்டு. மீனவர் இருல், சிறுநண்டு, திரளி, சள்ளை முதலியவற்றைப் பறி கட்டிப் பிடித்தல் மரபு, அதனையே கண்டிகட்டுதல் என்ற தொடர் குறிக்கின்றது. கண்டி> கண்டித் தல் = துண்டித்தல், எனவே தனித்துத் துண்டிக்கப்பட்ட நிலப் பகுதி கண்டி எனப்பட்டது. இவ்விளக்கம் மலைநாட்டுக் கண்டி ? என்ற இடப்பெயருக்கு மிகப் பொருந்துவதாகும்.
ஹோர்ஸ்பரோ ( 1916, 1917 ) என்பவர் எதுவித கார ணமோ விளக்கமோ குறிப்பிடாது பொலிகண்டி, கோயிலாக் கண்டி என்பன சிங்களப் பெயர் என்ருர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கண்டி " என்ற சொல் இடப் பெயராகவும் மற்றும் அன்ரு. வாழ்க்கையிற் பயன்படும் பொருள்களைச் சுட்டு வதாகவும் அமைவதால், அஃது தமிழ்ச்சொல் என்பதில் தவ றில்லை. மேலும் வயற்பரப்பும் நீர் நிலைகளும் சார்ந்த இடத்தை * கண்டிகை ** என்பது குறிப்பதால் கண்டிகை என்பதன் ஈற் மூேசை இன்றி வழங்கிய கண்டி " என்பதே இடப்பெயர் ஈரு கவும் வழங்கிற்றெனலாம்.
கோயிலாக்கண்டி ( தென்ம, 9 11 ).
தென்மராட்சியிலே நாவற்குழியை அடுத்த பகுதி கோயிலாக் கண்டியாகும். கோ + இலாக் + கண்டி; கோயில் + ஆ + கண்டி எனப்பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது. கோ+இலாக்கண்டி என்பதற்கு அரசனில்லா ஊர் என்றும், அர சாட்சி நாட்டில் நடைபெற்ற போதிலும் இங்கு அரசர் ஆட்சி நடக்கவில்லை என் றும் கூறுவர்; இங்கு கோயிலும் பசுக்களும் நிறைந்து காணப் l. Kandi is a valley; a place adjacent to a hill. ( Turner, Comparative Dictionary of Indo - Aryan Languages' London, 1973.)

1ገ
குழு ஆனைக்கோட்டையில் நடாத்திய ஆய்வுகளின் மூலம் பெருங் siban Gyll UGifurt. Gi sirgal tissir (Megalithic remains ) அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இங்கு காணப்பட்ட ஈமத்தாழி கலாப் (Urn burials ) போன்று, மன்னர், மட்டக்களப்பு, அது ராதபுரம், மாத்தளை, அம்பாறை, திஸ்ஸமகறகமை முதலிய பல இடங்களிலும் ஈமித்தாழிகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவைபற்றிக் கருத்துத் தெரிவித்த வரலாற்றுப்பேராசிரியர் எஸ். பரணவிதான, மேற்குறிப்பிட்ட இப்பிரதேசங்கள் திராவிடரின் முன்ஞேர் வாழ்ந்த இடங்கள் தாம் என்பதை மறுக்கமுடியாதவ ராகக் காணப்படுகினருர்.1
ஆனக்கோட்டை அகழ்வாராய்ச்சிமூலம் கிடைத்த சான்று கள் உறையூர், காவிரிப்பூம்பட்டினம் ஆகிய இடங்களிற் கண்டு பிடிக்கப்பட்ட சான்றுகளுடன் ஒத்துக் காணப்படுவதன் மூலம் பூர்வீகத் தமிழரின் பரம்பலும் -வாழ்வும்-வளமும் உணரப்படு கின்றன.
இந்நிலையில் இடப்பெயர் ஆய்விற் பெயர்களின் திராவிட மூலங்களைக் காணவேண்டியது அவசியமாகிறது. இடப்பெயர் வில் வேற்றுமொழிக் கலப்புகள் ஏற்படுதல் இயல்பே. எனி னும் கலப்புப் பெயர்கள் தோன்றுவதற்கு முன்பு அவ்விடங்களின் பழைய பெயர்கள் எவை என்பதறிதல் அறிவுபூர்வமானது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் பூர்வீக வரலாற்றுடன் தொடர்பு உடைய இடங்களாக வல்லிபுரம், நாகர்கோயில், கந்தரோடை மணிபல்லவம், மாவிட்டபுரம், கீரிமலை, தொண்டை மானுறு முதலானவற்றைக் குறிப்பிடலாம். இத்தகு வரலாற்றுப் பழைமை வாய்ந்த இடப்பெயர்களை ஆராய்வதன் மூலம் வரலாற் றுண்மைகள் மேலும் துலக்கம் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படு கிறது. அத்துடன் இத்தகு இடங்களிற் கண்டெடுக்கப்பட்ட நாண யங்களும் இடப்பெயர் ஆய்வுக்குத் துணைபுரிவனவாகும். உதா ரணமாகக் கந்தரோடையில் தந்தி பொறிக்கப்பட்ட சேது நாண ந்ள், மத்தியகால பாண்டிய நாணயங்கள், சுவஸ்திகாவும் யானையும் பொறிக்கப்பட்ட புராதன நாணயங்கள், ருேமன்
1. 6 The few megalithic monoments and urn burials dis - covered in Ceylon are obviously on overflow from South India ” S. Para navithana, Singalayo, 1967, P.9.

Page 19
18
நாணயம் முதலானவை கிடைத்துள்ளன. இவற்றை ஆராயும் போது உரோமருக்கும் தென்னிந்தியருக்கும் இடையே நடை பெற்ற வர்த்தகத்தொடர்பு, அவர்கள் கந்தரோடையில் நடாத் திய வர்த்தகம், அமைந்த வர்த்தகக் குடியிருப்புக்கள், அவற்ருேடு தொடர்புடைய இடப்பெயர்கள் முதலான விடயங்கள் பற்றி உண்மைகளை அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது.
யாழ்ப்பாண மாவட்டத்துச் சாசனங்களில் இடப்பெயர்கள்
சிங்கைநகர்:-
பருத்தித்துறையிலிருந்து சுண் டி க் குளம் வரையில் வெண்மணல் ( மணற்றிடர்) பரந்து கிடக்கின்றது. இங்கு வந்து கலிங்க ஆரியர் இறங்கிய படியாற்ருன், பின்னர் ஸிங்க புரப் என்ற கலிங்கத்துப் பெயரைச் “ சிங்கைநகர்” என வல்லிபுரப் பகுதிக்கு இட்டனர்.? யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட ஆரி யச் சக்கரவர்த்திகள் சிங்கைநகரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சிபுரிந்துள்ளனர்.3 இதனல் இம்மன்னர்கள் சிங்கைநகர ஆட் சியாளர்" என்றே வருணிக் கப்பட்ட ன ர், “ சிங்கையெங்கோ மான் “ சிங்கையாரியன்’ ‘சிங்கை தங்கும் ஆரியர் கோமான்' முதலான பல விருதுப் பெயர்கள் இலக்கியங்களிலும் கல்வெட் டுக்களிலும் காணப்படுகின்றன. மேலும் சிங்கை என்ற பெயர் வட இலங்கை அரசுக்கும், அதன் தலைநகருக்கும் உரித்தாக வழங் இந்று. இதனைச் * செயம் பெறும் சிங்கை நாடான் செகராச சேகரன் " எனவரும் செகராசசேகரத்தின் தொடர் (செகராச சேகரம் சர்ப்ப சாத்திரம் - செய் - 9” சான்றுபடுத்துகின்றது,
இச்சிங்கைநகர் வல்லிபுரமா, யாழ்ப்பாணமா, அல்லது நல் லூரா என்பதில் ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. பறங்கிக்காரர் கி. பி. 1590 இற் கொழும்
1. (அ) செ. கிருஷ்ணராசா, * யாழ்ப்பாணக் குடாநாட்டில் கிடைத்த நாணயங்கள் " சிந்தனை, தொகுதி 1, இதழ் 3, 1983. N (ஆ) வி. சிவசாமி * வல்லிபுரம் ஒரு தொல் பொருட்
களஞ்சியம்** சங்கமம், 19 பக், 12-16. 2. க. குணராஜா, நல்லைநகர், 1987, பக், 6. s. Dr. S. Pathmanathan. The kingdom of Jaffna,
1978: p. 170.

9
புத்துறையில் இறங்கி நல்லூரைத் தாக்கிய போது சிங்கைநகரம் என்னும் பெயரோடு ஒர் அரண் இருந்ததாகக் கு வேருெ ஸ் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிக் குலசபாநாதன் வருமாறு கூறு scuit. :-
* பூர்வசிங்கைதகர் கொழும்புத்துறைக்கும் நல்லூருக்கு மிடையிலாமெனக் கொள்ள வேறு சான்றில்லாமை யால், அச்சிங்கைதகர் அழிந்துபட்டு நல்லூர் தலைநக ராயின. பின் அப்பழைய நகர்ப்பெயரோடு ஒளி அரன் இங்கு விளங்கியதெனக் கொள்ளலாம் என்க.?
செகராசசேகரமாலை, செக ராச சே க ரம், தட்சிண கைலாய புராணம் என்பன வடஇலங்கை இராச்சியத்தின் தலே நகர் "சிங்கை" அல்லது ‘சிங்கை நகர்" எனக் குறிப்பிட்டுள்ளன. ஆளு ற் பின்னர் தோன்றிய யாழ்ப்பாண வைபவமாலை, கைலாயமாலை ஆகிய இரு நூல்களும் வடஇலங்கை மன்னர் களாகிய ஆரியச் சக்கரவர்த்திகளின் தலைநகர் நல்லூர் எனக்குறித் துள்ளன. எனவே ஆரியச்சக்கரவர்த்திகளின் முதலாவது தலை நகர் "சிங்கை ** என்பதும் அதன் அழிவின் பின்னர் நல்லூர் தலைநகரமாயிற்று என்பதும் பெறப்படுகின்றன.
பரராசசேகரன் சிதம்பரத்தில் மேற்கொண்ட திருப்பணி பற்றிக் கூறும் செப்புப்பட்டயமொன்றிற் சிங்கையூர் பற்றி இரு இடங்களிற் குறிப்பிடப்பட்டுள்ளது.ே ஆரியச்சக்கரவர்த்திகள் சிங்கை நகரிலிருந்து ஆண்டமையாலே தட்சிணகைலாய புராணம், செகராசசேகரம், செகராசசேகரமாலை, என்னும் நூல்களித் *சிங்கையாதிபன்", சிங்கைமேவும் செகராசசேகரன்", "சிங்கை காவல் மன்னன் " என்னும் அடைமொழிகளால் அவர்கள் வரு ணிக்கப்பட்டுள்ளனர்,4
1. Queiroz : The Temporal and spritual conguent of
ceylon p. 367. 2. குலசபாநாதன் இலங்கையின் புராதன சைவாலயங்கள். நல்லூர்க் கந்தசுவாமி கோவில், நல் லூ ர் தேவஸ்தான வெளியீதி - 1971, பக், 3. 3. சி. பத்மநாதன் இரு தமிழிச் செப்பேடுகள் சிந்தனை
மலர் 3, இதழ் 1, 1970 பக். 55 - 56. 4. தட்சிணகைலாய புராணம் சிறப்புப்பாயிரம், செகராச
Gæsprub - FífluenéSgth = Geti = 0 timaás •

Page 20
20
ஆனல் முதலியார் செ. இராசநாயகம் (1926 54 ) சிங்கை நகர் என்பது வல்லிபுரமே எனக் குறித்துள்ளார். அவர் வாதத் திற்குச் சான்ருகக் கேகாலை மாவட்டத்துக் கொட்டேகம என்ற இடத்திற் பொறிக்கப்பட்டிருந்த தமிழ்க் கல்வெட்டில் வரும் *பொங்கொலிநீர்ச் சிங்கைநகர்” என்ற தொடரைப் பயன்படுத்தி யுள்ளார். அக்கல்வெட்டு வருமாறு :-
攀毅 சேது
கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டிஞர் காமர் வளைப் பங்கயக்கை மேற்றில தம் பாரித்தார் - பொம் கொலிநீர்ச் சிங்கைநக ராரியனைச் சேரா வறுரேசர் தங்கள் மடமாதர் தாம்."
** பொங்கொலிநீர்ச் சிங்கை தகர் " என முன்னர் அழைக்கப் பட்ட இடம் வல்லிபுரமே என்பதைச் சுவாமி ஞானப்பிரகாசர் கூற்றும் சான்றுபடுத்துகின்றது.
* பருத்தித்துறைக்கணித்தாய் மணல்மேடுகள் பொருந் தி யி ருக்கின்ற வல்லிபுரமே பூர்வகாலச் சிங்கைநகராம் . . . வல்லிபுர மணற்கும்பிகளுள் காற்றுக்காலங்களில் அகப்படும் பழம்பொருட்கள், அங்கு பலவிடங்களிற் குவிந்து கிடக் கின்ற பூர்வகாலக்கல்லோடுகள், கீச்சுக் கிட்டம், ஆகியன வும், அங்கிருந்து கரைமார்க்கமாய்ப்போன பெரும் வீதியின் அடையாளங்களும் ஒர் நாள் விஸ்தார நகராய் விளங்கி யது எனக் கரதலாமலகமாய்க்காட்டும்.
நல்லூருக்கண்மையில் நாயன்மார்கட்டு அரசடி விநாயகர் கோயிற்குளம் புனருத்தாரண வேலைகள் நடைபெற்ற போது 1942 இல் ஒரு சிறிய கல்வெட்டு அகப்பட்டுள்ளது. சிங்கைநகர் சிங்கை ஆரியச்சக்கரவர்த்தி. பற்றிய குறிப்பு அக்கல்வெட்டிலும் இடம்பெற்றிருத்தல் நோக்கற்பாலது. அக்கல்வெட்டு வாசகம் GJILA Tigy -
* கலி 3025 தீர்த்தம் கொடுக்க
சிங்கையாரியனல் அமைகப் பெற்றது.’2
・一。 r T ` w 1. சுவாமி ஞானப்பிரகாசர், யாழ்ப்பானவைபவ விமரிசனம்
பக், 67 - 68. 2. செ. கிருஷ்ணராசா : நாயன்மார்கட்டில் கண்டெடுக்கப்
பட்ட கன வெட்டு விகேசரி வாரமலர் 30 - 12 - 1979

21
இக்கல்வெட்டுப் பற்றி பேராசிரியர் இந்திரபாலா வருமாறு கருத்துத் தெரிவித்துள்ளார். w
* இக்கல்வெட்டு கலி 3025 இல் நடைபெற்றதாக ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறது. கலி 3025 என்பது கி. மு 76ஆம் ஆண்டளவிலாகும். சாசனத்தின் எழுத் தோ கி. பி. 14ம் நூற்ருண்டுக்கு முற்பட்டது எனக் கூற
plg. Lurrg,”
எவ்வாறயினும் இக்கல்வெட்டிலே சிங்கை நகரத்து வழித் தோன்றல்களாகிய சிங்கை ஆரியச்சக்கரவரித்தி பற்றிய செய்தி கூறப்பட்டிருப்பது கவனத்திற்குரியதாகும்.
சிங்கை நகருக்கும்-வைஷ்ணவ நரசிங்கமூர்த்தி வழிபாட்டிற் கும் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும். பல்லவர் காலத் தின் ஆரம்பக் கட்டத்திற் சமயப்பிாசாரம்-போட்டி-வாதங்கள் என்பன நடைபெற்றபோது சைவ நாயன்மார்கள் இராவணன் கதையையும், வைஷ்ணவ ஆழ்வார்கள் நரசிங்கமூர்த்தி அவதர் ரக்கதையையும் தம் எதிரிகளுக்குப் பயtpட்டும் வகையிற் பயன் படுத்தியிருக்கலாம். இதஞல் நரசிங்கமுர்த்தி கோயில்கள் தோற் றம் பெற்றிருக்கலாம். அத்தகையதொரு காலகட்டத்திலே வல்லி புரத்தில் நரசிங்க அவதாரங் கொண்ட திருமால் கோயில் கட் டப்பட்டு, கோயிலறை தெய்வ மூர்த்தியின் பெயராற் (சிங்கம்) சிங்கைநகர் என்ற பெயரும் இவ்விடத்திற்கு ஏற்பட்டிருக்கலாம். சுவாமி ஞானப்பிரகாசர் ( 1928; 63.64 ) சிங்கை நகர் பற்றிக் கூறும் போது கிழக்குக் கலிங்க தேசத்துக் கங்கவம்சத்தைச் சேர் ந்த உக்கிரசிங்கனின் பரம்பரையினரே சிங்கைநகரைத் தாபித்து ஆட்சி மேற்கொண்டனர் என்ருர். இது தொடர்பான பேரா சிரியர் வேலுப்பிள்ளை அவர்களின் கருத்து ஈண்டு பொருத்தமா கின்றது.
"கலிங்க நாட்டின் பழைய தலைநகரமொன்றின் பெயர் சிங்க புரமாகும். மேலும் கலிங்கநாட்டிலே சிங்காசலம் அல்லது சிங்கவேள் குன்றம் என்ற பிரசித்தி பெற்ற வைணவத் திருப் பதி உண்டு. திருமால் நரசிங்க அவதாரம் கொண்ட இடம் அது என்று தம்பப்படுகின்றது. பல்லவர் காலத் தொடக்கத் திலே தமிழ்நாட்டின் வடபகுதியிலே நரசிங்காவதாரம் சிறப்
. மேலது ; பார்க்க,

Page 21
22
பாகப் போற்றப்பட்டதாகத் தெரிகின்றது தொண்டை மண்டலத்திலுள்ள இன்னெரு பெரிய வைணவத்தலம் சோழசிங்கபுரம். என்றிருந்து இன்று மருவிச் சோளங்கி புரம் என்று வழங்குகின்றது. பல்லவர் காலத்திலே இலங்கையிலே சிங்கைநகர் குறிப்பிடப்படுவதால் அக்காலத் தில் வல்லிபுரப்பகுதியிலே நரசிங்க மூர்த்தி தாபிக்கப்பட் டிருக்க வேண்டும் என்றும் அம்மூர்த்தியின் பெயராலேயே ஊர்ப்பெயர் சிங்கைநகரென்று மாறிற்றென்றும் கொள்ளக் கிடக்கின்றது’*1.
புராணச் செய்திகளுடன் தொடர்புடைய இடம்பெயர்கள்:
அனைத்து உலகநாடுகளினதும் ஊர்ப்பெயர்கள் வரலாற்றிற் புராணக் கதைகளும், வரலாற்றுச் செய்திகளும் இணைந்தே காணப் படுகின்றன. அவை அவ்வவ்வூர்களுக்குப் பழைமையும் பெருமையும் கற்பிக்கும் நோக்குடன் வழங்கப்பட்டு வந்துள்ளன. இவ்வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலும் புராணக்கதைகளுடன் தொடர் புடையதாகப் பண்டைநாள் முதலாகப் பல இடப்பெயர்கள் வழங்கி வந்துள்ளன. அவற்றுட் புண்ணியபுரம், க " ந் த ரு வ நகரம், வீணுகானபுரம், எருமை முல்லைத்தீவு, நாகதீவு, மணற்றி டர், வல்லிபுரம், நாகர்கோயில், கந்தரோடை, முதலியன இவ் வகையிற் குறிப்பிடத்தக்கன. இப் பெயர்களுக்குரிய விளக்கங் கள் யாழ்ப்பாண வைபவஇெளமுடு, யாழ்ப்பாண வைபவம7ஃ) மு 3 லியநூல்களிலே காணப்படுகின்றன. -
எருமை முல்லைத்தீவு:
யாழ்ப்பாணத்தின் வடமேற்குப் பாகத்தில் இருக்கும் சிறு திடரான மலையும் அதன் பக்கத்திலிருந்து கடலுட்ப7யும் நன்னீர் அருவியும் காலத்துக்குக்காலம் அயற்றேசவாசிகள் பலரை இவ் விடம் வரும்படி கவர்ந்தன. அந்நீரருவியில் ஸ்ந?னஞ் செய்தும், அச்சலத்தைப் பாணஞ் செய்தும் சுகம் பெறும் நோக்கமாய்ப் பலர் வந்தனர். அந் நோயாளரே குடியில்லா இந்நாட்டுக்கு அக்
(1) ஆ. வேலுப்பிள்ளை, தமிழர் சமய வரலாறு, சென்ன்ை,
1985 : шф. 238.

23
காலத்தில் எருமைமுல்லைத்தீவு எனப் பெயரிட்டனர் என்ப. இராசநாயகம் வடமராட்சியை இப்பெயராற் குறிப்பிடுகிருர்,2
வல்லிபுரம்:-
யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடகிழக்குக் கரையிற் பருத் தித்துறை ஆழியவளை மருதங்கேணி வீதியிற், பருத்தித்துறையி லிருந்து 3த் மைல் தொலைவில் வல்லிபுரம் அமைந்துள்ளது. இங்கு பழைமைச் சிறப்புடைய விஷ்ணு ஆலயம் உள்ளது. இக்கோயில், முன்பு கடலோரமாகவே இருந்ததென்றும், பின்னர் கடல் பின் வாங்கிச் சுமார் மூன்று மைல் தூரம் சென்றுள்ளது என்றும் கூறப்படுகிறது. வல்லிபுரத்தின் தென்கிழக்கே நாகர் கோயில் செம்பியன் பற்று, குடத்தனை, குடாரப்பு முதலிய கிராமங்களும் வட கிழக்கே கற்கோவளமும், வடமேற்கே புலோலி ஆகிய கிராமங்களும், தென் மேற்கே புலோலி-துன்னலைவடக்கும் எல் இலகளாக அமைந்துள்ளன. *
வடஇலங்கையின் புராதன காலத்துத் தலைநகராக விளங்கிய இடமே வல்லிபுரம், இங்கு கடற்றுறைமுகம் இருந்தது, பண் டைத் தமிழரின் தலைநகராம் சிங்கைநகரும் இதுவேயாகும். (S. Pathmanathan 978 : 170 ).
இலங்கை யின் புராதன நாகரிக நிலைகளைக் காட்டும் தொல்லியற் சான்றுகளைக் கொண்டுள்ள இடங்களில் வல்லிபுர மும் ஒன்று இதுவரை இங்கு அறியப்பட்டுள்ள புராதன சின்னங் களில் ஆதிகால மத்தியகால மட்பாண்ட ஓடுகள், செங்கட்டித் துண்டுகள், கூரை ஒட்டுத்துண்டங்கள், ஈமத்தாழி, புத்தர்சிலை, விநாயகர்சிலை, பொற்சாசனம், பல்வேறு காலத்திய நாணயங் கள், கட்டிடப்பகுதிகள் பொன்னுற் செய்த மண் காலணி கோள வடிவம் முதலியவற்றைக் குறிப்பிடலாம்.
1. க. வேலுப்பிள்ளை : 1918; Johns , 1878 : 6
2. “ In ancient times the eastern portian of the Jaffna Penninsula was separate island and was known as Erumaimullaitivu from the name of a plant Erumai. moullai I prenna serratifolia I 'C. o Rasanayagamo, 1926, P. 53-54,

Page 22
24
கி. மு. 10 ஆம் நூற்ருண்டு தொடக்கம் கி. பி. 5 ஆம் நூற்ருண்டு வரை தென்னிந்தியாவிலே நிலவிய திராவிடநாகரிகச் சின்னங்களிலே ஈமத்தாழியும் ஒன்றகும். புராதன திராவிடர் பெரியதாழிகளிலே இறந்தவர்களின் சரீரத்தை அல்லது எரித்த பின் எஞ்சும் சாம்பரையும் எலும்புகளேயும் இறந்தவர் பயன் படுத்திய அணிகலன்கள் கருவிகள் முதலியவற்றையும் நெல் போன்ற தானியங்களுடனிட்டு அடக்கம் செய்தனர். வல்லிபுரத் திற் கண்டெடுக்கப்பட்ட தாழி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் வல்லிபுரத்திலே திராவிட மக்கள் வாழ்ந்தமையைச் சான்றுபடுத்து கின்றது ஆகவே திராவிட மக்களில் ஒரு பிரதான பிரிவின ரான தமிழர் புராதன காலத்தில் இங்கு வாழ்ந்து வந்தனர் எனக் கொள்ள இடமுண்டு.1
இடப்பெயர்க்காரணம்
வல்லியதேவன் என்ற தமிழ் அதிகாரி அதிகாரஞ் செய்த இடமாகையால் இது " வல்லிபுரம் ” ( நகரம் ) எனப் பெயரி பெற்றது என ஒரு சாரார் கருதுவர். வல்லிபுரம் வல்லிபுர (Waipura) என்ற சிங்களப் பெயரின் வழி வந்தது எனச்சிலர் கருதுவர்2. வல்லி என்பது பூமிதேவி எனவும், பூமிதேவி இத்தலத் திலே திருமாலைப் பூசித்தமையால் இப்பெயர் ஏற்பட்டது எனவும் கூறப்படுகிறது?. மேலும் வல்லிபுரம் என்பது இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற விஷ்ணு தலத்தின் பெயர் என்பதால் அங் இருந்து இவ்விடம் வந்த வைஷ்ணவர் தம்ஊர்ப் பெயரை இதற்கு இட்டனர் என்பதே பொருத்தமானது.
ஸ்கந்தபுராணத்தின் ஒரு சிறுபகுதியாகிய தக்கதிணகைலாச மகாத்மியம் என்னும் வடமொழி நூலிலே வல்லிபுரச்சிறப்பு பற்றி ஒரு அத்தியாயம் உள்ளது. இதன்படி முன்னெரு காலத் தில் மீன் வடிவம் கொண்டிருந்த திருமான் வலைஞர் பிடிக்க
1. அ) ருரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய திருக்குடமுழுக்கு
Depri, 1977 பக் 3.
ஆ) வி. சிவசாமி " வல்லிபுரம் - ஒரு தொல்லியற் களஞ்சி யம்” சங்கமம் மலர் 1 இதழ் 4, 1975 பக், 13
2. சுவாமி ஞானப்பிரகாசர். 1917, 1918, Hersburgh.1916
1917, J. P. Lewis 1916, 1917.
ஈழமண்டலச்சதகம் செய் 60.

25
முயன்றனர். அப்போது அம்மீன் குதித்து லவல்லி என்ற கன்னி யின் மடிமீது விழுந்தது. பின் திருமால் மீன்வடிவம் நீங்கிக் குழந்தை வடிவமானுர், லவல்லி நாகசாபந் தீர்த்து, புத்திரப் பேறு பெற்ருள். லவல்லி என்பவள் பிறந்த இடமே வல்லிபுரம் ஆகும் எனத் தட்சிணகைலாய மான்மியம் கூறுகிறது?. இக்கதை வல்லிபுரத்து விஷ்ணு கோயில் எழுந்த பின்பே எழுந்திருக்க வேண்டும். இப்புராணம் மத்திய காலத்தைச் சேர்ந்தது. ஈழத் தின் காவற்றெப்வமான திருமாலின் இந்த ஆலயம் மிகப் பழைமை வாய்ந்ததாகும் (வி. சிவசாமி 1975: 15 ).
முதலியார் செ. இராசநாயகம் மகாவம்சத்தை ஆதாரமா கக் கொண்டு விஜயனும், தோழர்களும் வந்திறங்கிய இடங்களில் எருமைமுல்லைத்தீவும் ஒன் இறனவும், வல்லிபுரத்திற்கு முன்பு மணலூர், எருமை முல்லைத்தீவு எனப் பெயர்கள் வழங்கிற்றென வும் காட்டி, விஜயனது இரண்டாவது குழு வினர் அங்கு ஓங்கபுர" என்ற ஒரு நகரை நிறுவினர் எனவும், அதுவே பிற்காலத்திற் புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாண இராச்சியத் தின் தலைநகரான சிங்கைநகர் ஆக விளங்கிற்று எனவும் கூறுவர் (c. Rasanayagam 1926, P.54). இக்கருத்தைச் சான்றுபடுத்துவ தற்காகக் கி. பி. 14ஆம் நூbருண்டில் ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவன் கேகாலை மாவட்டத்திலுள்ள கோட்டேகம என்னுமிடத் திற் பொறித்த கல்வெட்டுச் செய்யுளைக் காட்டு வர்3. இக்கல்வெட்டில் வரும் “பொங்கொலிநீர்ச் சிங்கைநகர்" என்ற தொடரினை ஆதாரமாகக் கொண்டு சிங்கைநகரே வல்லிபுரம் என்றும் அதுவே யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியத்தின் முதற் றலநகர் என்றும் இராசநாயகம் (1926 54) குறிப்பிட்டுள்ளார்,
1. நூரிவல்லிபுர ஆழ்வார் சுவாமி ஆலய திருக்குடமுழுக்கு
மலர், 1977, பக், 3
2. சிங்கை ஆழியான் - ஆழ்கடலான். 1983. பக் 24,
3. சேது,
கங்கணம்வேற் கண்ணிணையாற் காட்டிஞர் காமர்வ&ளப் பங்கையக்கை மேற்றில தம் பாரித்தார்.பொங்கொலி நீர்ச் சிங்சைதக ராரியரேச் சேரா வதுரேசர் Asias do AD-4D/7Srř SrTub”.

Page 23
26
முன்னொருபோது வடமராட்சியிற் குடியேறிய வென்ரி பாகு தேவன், சேற்கொடி தேவன், வல்லிபாகு தேவன், வதிரிபாகு தேவன் முதலிய குறுநில மன்னர் பரம்பரையைச் சேர்த்தி வல் லிய தேவன் குடியேறிய பகுதிக்கு அவன் தனது பெயரை இட்டு வழங்கலாயினுள் என்ற கருத்தும் நோக்கற்பாலது.
வல்லியம் சா புலி. சோழர் புலியை இலச்சினையாகக் கொண் ட்வர். சோழமன்னரின் ஆதிக்கம் இங்கு நிலவிய போது (வல்லியம+புரம்) வல்லியம்புரம் என்ற பெயர் வழங்கிப் பிற் காலத்தில் அது வல்லிபுரம் என மருவிற்ருே எனவும் சிந்திக்க லாம். இக்கிராமத்தின் தெற்கே செம்பியன்பற்று என்ற இடம் சோழர் தொடர்பைச் சான்றுபடுத்துவதாக விளங்குவதும் ஈண்டு நோக்கத்தக்கது.
வரலாற்றுப் பழைமைமிக்க வல்லிபுரத்தில் இன்னும் அகழ்வா ராய்ச்சி வேலைகள் மேற்கொள்ளப்படவில்லை. எனினும் மேற்பரப் பிற் காணப்பட்ட அழிபாடுகள் பற்றி ஜே. பி. லூயிஸ் என்ப வர் முதன்முதலாக வருமாறு கருத்துத் தெரிவித்தார்.2 * மரபு களின் படி வல்லிபுரம் ஒரு நகர அமைப்பினைக் கொண்டிருந் தது. இப்பொழுது அவை மணற்குன்றுகளால் மறைக்கப்பட்டு விட்டன. நிச்சயமாக வல்லிபுரத்திற் சில பகுதிகளின் நிலத்தின் மேற்பரப்புத் தோற்றப்பாடுகள் கட்டிடங்கள் இருந்தன என் தற்கு ஆதாரமாக உள்ளன."
1. 6. The site has several historical references. That among those who were brought to settle in Jaffna were some from North of Thondainadu; The place they settled down assumed the name of Wadamarachchi meaning occupied by the Notherners. That region, where Walliathevan was the chief settler, became known as Wallipuram. They were Telugu people and were Vaishnavaties. So, a temple for the worship of Sri Vishnu got built at Vallupuram."
A. Moothuthamby 1 Jaffna History, 1933, p. 13.
2. J. P. Lewis Some notes on archaeological matters in the Northern province', C. A. L. R. 2 (2 oct, 1916, pp. 94.99.

27
இங்கு 1936இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எழுத் துப்பொறிக்கப்பட்ட ஒரு பொற்றகடு கிடைத்துள்ளது. கி.பி. 2ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த பிராமிலிபியில் எழுதப்பட்ட இத்தகடு ஆகிச் சிங்களமாகும் என்கிருர் பரணவிதான4. இது கி. பி. 3070 இல் அனுராதபுரத்தில் ஆட்சிபுரிந்த வசபனுடைய காலத் தைச் சேர்ந்தது என்பதும், அவன் காலத்திற் பியகுகதில்ஸ் என் பவள் படகரஅதன* என்ற இடத்தில் ஒரு விகாரையைக் கட் டினன் என்பதும் இச்சாசனச் செய்தியால் அறியப்படுகின்றன.
இப்பொ ன் த கட்டில் வரும் " படகரஅதன" என்பதே பண்டை நாளில் வல்லிபுர இடப்பெயராக இருத்திருக்க வேண் டும் என்ற பேராசிரியர் பரணவிதான வின் கருத்தைச் செ. குண சிங்கம் தக்க காரணங்காட்டி மறுத்துள்ளார்.2 பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை " படகரவென எழுதப்பட்டிருப்பதற்கு வட கரை" என விளக்கம் கொடுத்திருப்பதும் ஈண்டு நோக்கத்தக்கது.8
ஆலயத்தின் நேர் வடக்கே 50 யார் தொலைவில் ஒரு புத்தர் சில் அகழ்ந்தெடுக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்பு 1906 இல் அச்சிலே கவர்ணர் சேர் ஹென்றி பிளாக்கினலே தாய்லாந்து மன் னருக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது. அண்மைக்காலத்தில் மத் திய காலத்தைச் சேர்ந்த சுண்ணும்புக் கல்லினலான விநாயகர் சிற்பம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
1972இல் யாழ்ப்பாணத்துத் தொல்லியற்கழகத்தினர் இங்கு நடாத்திய ஆய்விலே தாழி ஒன்றை வெளிபடுத்தியுள்ளனர். இப் பிரதேசத்தில் முழு  ைம யாக நடாத்தப்படும் அகழ்வாராய்ச்சி மேலும் பல வரலாற்றுண்மைகளைத் தரலாம்.
1. S. Paranavithana, Vallipuram Gold plate Inscription of the reign of Vasaba,' Epigraphica Zeylanica, 1940, iv, pp. 229 - 237
2. செ. குணசிங்கம். ' வல்லிபுரம் பொ ன் னேட் டி ன் வரலாற்று முக்கியத்துவம் ஒரு மறுமதிப்பீடு" - பூரீவல்லிபுர ஆழ்வார் சுவாமி கோவில் திருக்குடமுழுக்கு மலர் - 1977.
A. Veluppillai, “*Tamil and ancient Jaffna and Vallipuram Gold p'ate", Journal of Tamil Studies, No. 19, June 1981, p. 6,
3

Page 24
28
வல்லிபுரமும் கதைமரபும் . 1. ஸ்கந்தபுராணத்தில் தகரிணகைலாச மான்மியத்து வல்லிபுர அத்தியாயம் பின்வருமாறு இடப்பெயர் விளக்கம் கூறுகிறது:-
* தக்கன் தேவர்களை வதைத்து அவர்களது சங்கணங்களக் கடலில் எறிய, விஷ்ணு மீனுருவாகிக் கடலிற் சென்று. அவற்றை மீட்டார். பின்பு அந்த மீன் வல்லிபுரத்து மீனவரின் வலையில் அகப்பட்டு, கரைக்குக் கொண்டுவரப்பட்ட போது, அதன் கரை யிலே தவம் செய்து கொண்டிருந்த வல்லி என்பவளுடைய மடி யிலே துள்ளிவிழ, அது துளசிமாலையோடு கூடிய குழந்தையாக மாறிற்று, அக்குழந்தையை அங்கு கூடிய யாவரும் பக்திப்பரவ சத்துடன் வணங்கினர். பின்பு அக்குழந்தை மீனு ருப்பெற்று மீண்டும் கடலிற் பாய்ந்தது. மக்களது பக்திப்பரவச வேண்டு கோட் கிணங்கி திருமால் மீண்டும் கிழப்பிராமண வடிவத்துடன், கையிற் சக்கரத்தரித்து வந்து, அங்கு கூடியிருந்தோரிடம் கொடுத்து * இச்சக்கராயுதத்தை வைத்துப் பூசிபுங்கள் " என்று கூறி மறைந்தார். இச்சக்கராயுதத்தை வைத்துப் பிரதிட்டை செய் யப்பட்ட இடமே வல்லிபுர ஆலயமாகும் *.
2. கர்ணபரம்பரைக் கதை :
* வங்காளவிரிகுடாக் கடலிற் பரதவர் மீன்பிடிக்கும்போது, அழகிய குழந்தையொன்று நடுக்கடலிலே திருவிளையாடல் புரியக் கண்டனர். அவர்களால் அக்குழந்தையைப் பிடிக்க முடியவில்லே, பரதவர் தலைவனுக்கு ஒருவர் கனவில் தோன்றி **வல்லிநாச்சன்”* எனப்படும் வயது முதிர்ந்த மாதுசிரோமணியைக் கடற்கரைக்கு அழைத்து வரும்படி திருவாய்மலர்ந்தருள, அவ்வாறே அப்பெண் ணைக் கடற்கரைக்கு அழைத்தேகினர். அப்பெண் 'கன்று கட்டிப் பால் கறந்தேனேயன்றி வேருென்றையும் அறியேன் பாற்கடலிற் பள்ளிகொள்ளும் பரந்தாமனே வருக ** என்று கூறித் தம் முந்தா னையை நீட்ட குழந்தை தவழ்ந்துவந்தது. யாவரும் ஆனந் 5 பர வசத்தால் ஆடிப்பாடினர். பின்பு குழந்தையையும் வல்லிந ச்சனை யும் பல்லக்கில் அவள் வீட்டுக்கு, மணல்வழியாலே துரச்கி வரும் போது, களேப்புற்றுக் கொன்றை மரத்தடி ஒன்றில் இறக்கிக் களைப் புப்போக்கிய பின்பு மீண்டும் துர்க்க முற்பட்டபோது முடியாமை கண்டு, அவ்விடத்திலேயே கோயில் கட்டி வழிபடலாயினர். அந்த வல்லிநாச்சனின் வழித்தோன்றல்களே இன்று ம் ஆலய முகாமையை நடாத்தி வருகின்றனர்." (பூரீலங்கா ஜனவரி
1. செ. நடராசா, "வல்லிபுரம் - ஆழ்வார் சுவாமி ஆலயம்"
பூரீலங்கா, ஜனவரி 1956 பக், 89,

29
1988 பக். 29 ). இவ்விரு கதைகளையும் நோக்கும் போது வல்லி புரக்கோவில் வல்லிபுரத்து மூத்த குடிகளால் அமைக்கப்பட்ட தென்பதும் அவர்களால் அக்கோயிலுக்குப் பல நிவந்தங்கள் செய்து கொடுக்கப்பட்டன என்பதும் அறியப்படுகின்றன."
செங்கடக நகர்
யாழ்ப்பாணவைபவமாலையில் (பக்-22-23) கதிரமலையைத்தல் நகராகக் கொண்டு ஆட்சிபுரிந்துவத்த உக்கிரசிங்கன் என்ற மன் னன் மாருதப்பிரவீகவல்லியைத் திருமணம் செய்தபின்பு, பாது காப்புக்கருதித் தன் த*லநகரைச் செங்கடாசுருக்கு மாற்றினன் எனக்கூறப்படுகிறது. இச் செங்கடநகர் வல்லிபுரத்திலே அமைக் கப்பட்டதென்பதற்குரிய ஊகங்களைப் பொ ஜெகந்நாதன்? முன் வைத்துள்ளார். மேலும் மாருதப் பிரவீகவல்லி (வல்லி யைக் திரு மணம் செய்து கொண்டுவந்த புதிய இடத்திற்கு (வல்லி+பட் டினம்-புரம்) வல்லிபுரம் எனப்பெயர் வைக்கப்பட்டதென்பதும் ஜெகந்நாதனின் கருத்தாகும்3. கண்டியிலுள்ள செங்கடகல என்ற இடத்தினின்றும் செங்கடகநகர் வேறுபட்டது என்பதும் அவரது நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. செங்கடகநகர் =நன்கு பாது காப்பரணுகக் கட்டப்பட்ட வட்டவடிவமான கோட்டைதகர் என் பது பொருளாகும். செங்கடகக் கோட்டை வல்லிபுரத்திலே அமைக்கப்பட்டிருந்தமைக்கு இன்று காணப்படும் கட்டிட அழி பாடுகள் சான்று என்கிருர் ஜெகந்நாதன்.
நாகர்கோவில்
யாழ்ப்பாணத்துக் கிழக்குக் கரையிற் பருத்தித்துறைக்குத் தெற்கே 10 மைல் தொலைவில் இவ்வூர் அமைந்துள்ளது இ கன் தெற்கே புன்செய் நிலமும். ஊரின் வடக்கே நெய்தல் நில மும் காணப்படுகின்றன. கடற்கரைப் பிரதேசம் 2 மை ல் தொை வரையும் பரந்து மணற்பரப்பாக உள்ளது.
1. சிங்கை ஆழியான், ஆழ்கடலான், வல்லிபுரம், 1983;
கு. பெரியதம்பி. டீ ஆழ்கடலான், வல்லிபுரத்தான் தலபுரா ணம், 1987, என்னும் நூல்களில் இவ்விபரங்காண்க.
2. பொ. ஜெகந்நாதன், யாழ்ப்பாணத் தரசர் வரலாறும்
காலமும், யாழ்ப்பாணம், 1987, பக் 41-46
3. மேலது பக் - 43

Page 25
3)
இங்கு மிகப் புகழ்பெற்ற நாகதம்பிரான் கோயில் உள்ளது. இக் கோயிலுடன் தொடர்புடையனவாகப் பல அற்புதக் கதைகள் வழங்குகின்றன. பறங்கியர் யாழ்ப்பாணத்தைக் கைப் பற்றி யாண்ட காலத்திலே தமிழ் இளைஞர்களைக் கைது செப்து கப்பலில் ஏற்றிக் கோவைக்குக் ( Goa ) கொண்டு செல்ல முற்பட்டபோது, இம்முயற்சியை நாகதம்பிரான் தடுத்துக் காத்தது என்ற கதை பெரிதும் வழங்குகிறது.
இவ்வூர் சரித்திரப் பழைமைவாய்ந்த இட மாக க் கூறப் படுகிறது. வடஇலங்கையில் வலிமை வாய்ந்ததும் தொடர்ச்சி யானதுமான தரகர் இராச்சியம் ஒன்று பண்டை நாளிலே கி. மு. 8 ஆம் நூற்ருண்டிலிருந்து கி. பி. 2 ஆம் நூற்றண்டு வரை இ ஈந்திருக்கிறது. அன்றியும் கி. பி. 2 ஆம் நூற்ருண்டளவில் நாகர் முழு இலங்கையையும் ஆட்சி செய்யக்கூடிய வல்லமை பெற்றிருந்தார்கள் என்ற கருத்தும் ஈண்டு நோக்கற்பாலது ( Rasanayagam i 1926 Lu â t 3 1 - 32). Frypš svů řsifas iš Sugar ளாகிய நாகர்களது முதற் ற%லநகர் நாகர் கோயில் ஆகும். அவர் களது இராசதாணியின் நினைவாகப் பழைய சான்றுகள் கிடைத்து வருகின்றன. நாகதம்பிரான் = நாகர்+தம் பிரான் சா நாக தம்பிரான் - நாகர் என்னும் சா தி யா ரின் அரசன். யாழ்ப் பாணம் பழைய காலத்தில் நாக சாதியினரின் குடியிருப்பாக இருத்த போது ‘நாகர்கோயில்" எனப்படும் இவ்வூர், நாக அரசர் வதியும் நகராக இருந்திருக்கலாம். நாகர்கோயிலின் கோட்டை அங்கேயே இருந்தது. அங்கிருந்தே நாகர் தலைவன் அப்பகுதியை அரசாண்டான். தமிழகத்து நாகபட்டினம், நாகர்கோயில் என் பவற்றின் மூலம் மிகப் பழங்காலத்தில் நாகசாதியசர் தென் கோடியில் வாழ்ந்தனர் எனத் தெரிகிறது. தென்னிந்திய நாக வழிபாடும் இதனை உணர்த்துகின்றது?. எனவே யாழ்ப்பாணத்து நாகர்கோவில் பண்டைய ஈழ வரலாற்றின் சின்னமாக அமையும் பெருமை சான்றதாகும்.
நாகர்கோயிலின் அயற்கிராமங்கனாகிய வல்லிபுரம், செம்பி யன்பற்று முதலான இடங்கள் வரலாற்றுப் பழைமையையும் . தொடர்ச்சியாகக் தமிழர்களின் தொடர்பு இப்பகுதியில் இருந் தது என்பதையும் காடடுகின்றன.
1. க. கணபதிப்பிள்ளை, "நாகர்கோயில் பூரீலங்கா - ஜூன் 955 už 23 -
2. பண்டைய சேரநாடாகிய இன்றைய கேரளத்தில் நாயர் என்போர் நாகத்தைக் குலதெய்வமாகக் கொண்டோர். தாகர் என்பதே நாயர் எனத் திரிந்தது எனக் கொள்ளப்படுகின்றது.

3.
நாகர் கோயிற் பகுதியிற் கிடைத்த தொல்லியற் சான்று களிற் பல்வகை மணிகள், சேது நாணயங்கள், டச்சு - ஆங்கி லேய நாணயங்கள் என்பவை முக்கியமானவை. இவை பெரும் பாலும் " கருகுமணல்கும்பி " என்ற இடத்திலேயே கிடைத் துள்ளன. முன்பு குடியிருப்புக்கள், கோயில்கள் என்பன இருந்து பின்பு எரிந்துபோன இடம் என்ற பொருளில் " கருகுமணல்கும்பி " என்ற பெயர் தோன்றியிருக்கலாம். நாகர்கோயிற் கடற்கரை யிற் கோரியடி என்ற இடமுண்டு. இங்கே பழைய வெளிச்ச வீடும் காணப்படுகிறது. கோரி, மூன. இஃது பழைய வழக்கு என்கிருர் இராசநாயகம். (1926 - 113).
பிற்காலத்தில் யாழ்ப்பான மன்னன் சங்கிலியின் அரச கட் டிடங்கள் இங்கு இருந்ததாகவும் அவை போத்துக்கீசரால் அழிக் கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இன்று பழங்கிணறு ஒன்றும கட்டிட அழிபாடுகளும் காணப்படுகின்றன. இந்த அழிபாடுகள் 14 மீகாரி ?? என மக்களால் அழைக்கப்படுகின்றன. இங்கு போர்த் துக்கீசராலே 100 அடி உயரமுடையதாகக் கட்டப்பட்ட கோபுரம் ஒன்று காணப்படுகின்றது. இது மீனவருக்கு வெளிச்சவீடாகப் பயன்படுகின்றது. முன்பு இங்கு அரச கைதிகள் தண்டிக்கப்பட் டனர் என்றும், அதன் சான்ருகக் ** கோரியடி ** யிலே தூக்கு மரம் ஒன்றும் காணப்படுகிறது என்றும் அறியப்படுகின்றது.1
1. தகவல் சாஸ். கணேசலிங்கம் (ஈழமுரசு 1-9-85

Page 26
இயல் - 3
நீர் நிலைப் பெயர்கள்
நீர்நிலைகளும் இடப்பெயர்களும்
இயற்கை நியதிகளுக்கு அடிபணிந்து இயற்கை வளங்கண்யே தம்வாழ்க்கைக்கு ஆதாரமாக்கிக்கொண்ட பண்டைக்கரில மனித இனங்கள், இயற்கைவளம் செறிந்த இடங்களையே தமது குடியி குப்புக்களாக ஆக்கிக்கொண்டன. உலகின் பழையவையான எகிப்திய, சுமேரிய, பபிலோனிய, சிந்துவெளி நாகரிகங்கள் அனைத்து ம் ஆற்றங்கரைக் குடியிருப்புக்களாகவே தோன்றி வளர்ச்சி பெற்றவையாகும்.
பண்டைக்கால மக்கள் இடங்களுக்குப் பெயர் சுட்டி அழைக் கத் தொடங்கிய காலத்திலே நீர்நிலப் பெயர்களே முதன் முத லிற் பெரிதுந் தோன்றியிருக்க வேண்டும் என எதிர்பார்த்தல் இயல்பானதே. தமிழ் நிகண்டுகள் நீர்நிலைப் பெயர்களைப் பெரு கக் கூறுகின்றன. சங்க இலக்கியத்திலே நீர் நிலைப்பெயர்களாக ஆறு, ஊற்று கயம், கழி, கால், சிறை, துறை, படக்கை, பாழி என்பன வழங்கியுள்ளன ( கி. நாச்சிமுத்து. 1983 133 ). * நீரகம் பொருந்திய ஊரசத்திரு” என்பது ஒளவையார் வாக்கு, பண்டைக்கால மக்களின் குடியிருப்புக்கள் நீர்நிலை சார்ந்த இடல் களிலேயே அமையலாயின.
யாழ்ப்பாண மாவட்டம் நீர்வளம் செறிந்த பிரதேசம் அன் றெனினும் நீர்நிலைகளாற் சூழப்பட்டுக் காணப்படுவதால் நீர் நிலைப் பெயர்கள் இங்கு பெரிதுங் காணப்படுதல் சிறப்பியல்பா யிற்று. வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலுள்ள இடங் களிலே நீர்நிலைப் பெயர்களாக அமைந்த பெயர்க்கூறுகள் வரு மாறு : அனை, ஆன்ர. ஆவி ஆறு ஒடை கரை, களப்பு, குளம் கேணி, கொட்டு, துறை, வில் என்பனவாகும்.
இத்தகு நீர்நிலைப் பெயரி க் கூறுகளோடு மூன்றெட்டு ( Prefix) நிலையில் அடைகள், இயற்கைக்கூறுகள், ஆட்பெயர் கள் என்பன இணைந்து இடப்பெயர்கள் ஆக்கம் பெற்றுள்ளமை parkar sálfavrras gartrutuGâsir Apg.

33
"அனை" ஈற்றுப்பெயர்கள்
அளே என்பது புற்று, பொத்து, குகை எனப்பொருள் தருவ தாகும். வயலில் நீர் வடிந்து ஒடும் பொருட்டு வெட்டப்படும். வடிகாலும் அளை எனப்படும்? நாகவழிபாட்டினரான திராவிட மக்கள் ஆதியிலே தாம் குடியேறிய இடங்களிற் காணப்பட்ட பாம்பின் உறைவிடமான புற்றைப் ப யத் தி ன் காரணமாக அதற்கு முதன்மை அளித்து அதனை நினைவுக்குறியீடாகக்கொண்டு ஊர்ப்பெயர் அமைத்தனர் எனவுங் கருத இடமுண்டு3. அளை ? ஈற்று இடப்பெயர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று காணப்படுகின்றன.4 இவற்றில் அளை=வாய்க்கால் என்ற பொரு ளில் இரு இடப்பெயர்களும், அளே -புற்று என்ற பொருளில் ஓரிடப்பெயரும் ஆக்கம்பெற்றுள்ளன.
தும்பளை :( வடம. 140. 2 -3)
வடமராட்சிப்பகுதியிற் பருத்தித்துறைக்கு அண்மையிலுள்ள ஒரு பெரிய கிராமம் தும்பளே. இதனூடாகப் பருத்தித்துறை - மரு தங்கேணி வீதி செல்கிறது. தும்பு + அளை = தும்பளை. இங்கு அளை என்பது வாய்க்கால், ஒடை என்ற பொருளில் வந்துள் ளது. முன்பு இக்கிராமத்திலே தும்புக் கைத்தொழில் முதன்மை பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. தேங்காய் மட் டையிலிருந்து (கோம்பை ) தும்பைப் பெறுவதற்கு மூதற்படி யாகத் தேங்காய் மட்டையை நீரில் ஒரிரு வாரங்களுக்குப் போட்டு வைக்க வேண்டும். இதன்பொருட்டுச் சிறு ஓடைகளை வெட்டி நீர்பாய்ச்சி அதனுள் தேங்காய்க் கோம்பைகளைப்போட்டு வைப்பது வழக்கம். இந்நிலையிலே தும்பு அளைகள் (ஓடைகள்)
1. பொருநர்ஆற்றுப்படை : வரி. 7 உரை காண்க.
2. கையளை - சிறுவடிகால், கால் அளை - பெரியவடிகால், தாயளே/ பேரளை - சிறுவடிகால்கள் வந்து சேரும் பெரியவடிகால், விதைப்பு நடைபெறும்போது விதைப்பதற்கு எளிதான முறை யில் வயற்பரப்பைச் சிறு சிறு பகுதிகளாக வகுப்பதற்கு அமைக்கப்படும் மிகச்சிறிய வடிகால் தட்டளை எனப்படும். இ. பாலசுந்தரம் : 1979. பக். 329,
3. புற்று, கருவள வழிபாட்டில் ( Fertility Cut ) இடம்பெறு
s நோக்குக.
4. கும்பண் தும்பன், புற்றள

Page 27
34 வல இங்கு காணப்பட்டமையால் இவ்விடத்திற்குத் (தும்பு+அளே} தும்பளை எனக் காரணப் பெயர் அமைதல் இயல்பாயிற்று. இக்கிராம மக்களின் பொருளாதாரத்தை நிர்ணயிக்குந் தொழி லாகத் தும்புக்கைத்தொழில் இருந்தது. இம்மக்கள் எந்நேரமும் தும்பை அளைந்து, அளைந்து தொழில் புரிந்தமையாலே தும்பளை* (தும்பு + அள) எனக் காரணப்பெயர் பெறுவதாயிற்று Tait றும் கூறப்படுகிறது.1
இங்குள்ள குறிச்சிப் பெயர்களிற் பல கலட்டி ' என்ற ஈறு பெற்றுள்ளன. தச்சன்கலட்டி, காரைக் கலட்டி, கொம்மாகட்ைடி, வண்ணுர்கலட்டி, தெணிக்கலட்டி முதலிய குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன. சில பகுதிகள் காணிப்பெயர்களைக் கொண்டும் வழங்குகின்றன. நயணுவத்தை, புங் கன்சீமா, வரானே, தம்புரு வனை, மடப்பள்ளி, கணக்கிலாவத்தை என்பன இவ்வகையிலே
குறிப்பிடத்தக்கவை.
கிணற்றுப் பெயர் கொண்டும் இடப்பெயர் வழங்கும் என்ப தற்கு இங்குள்ள ** கிலு கிலுப்பான ’ என்ற பெயர் சான்முகின் றது. ஊர்ப்பொதுக் கிணற்றிற் பெண்கள் நீர் அள்ளும் போது ஏற்படும் நீரோசையும், டெண்களின் குரலோசையும் கலந் து * கிலு கிலு ' என்ற ஓசை இங்கு எந்நேரமும் ஒலித்தமையால் இவ்விடத்திற்குக் " கிலு கிலுப்பான ” என்ற பெயரேற்படுவ தாயிற்று. மந்திகையிலிருந்து வல்லிபுரக் கோயிலுக்குச் செல்லும் வீதியில் ஆனைவிழுந்தான் என்ற இடமும் இலட்சுமாந்தோட்டம் ( இலட்சுமணன் தோட்டம் ) கடையகாடு முதலிய குறிச்சிப் பெயர்களுமுள. மருதநில மக்கள் பண்டைநாள் முதல் இருந்து வருமிடம் கடையகாடு எனப்படுகிறது. இராமாயணத்துடன் தொடர்புபடுத்தி இலட்சுமணன் தங்கியிருந்த இடம் இலட்சு மனதோட்டம் " எனப்பெயர் பெற்றதென்பர். அதேபோலவே யானை விழுந்து இறந்த பள்ளமான இ ட ம் ஆண்விழுந்தான் எனப்படுகிறது. இப்பெயர் பழை ய யானை வணிகத்தையோ அல்லது சோழர்காலத்து நிகழ்ந்தபோர்களையோ நினைவுபடுத்துவ தாகலாம்.
1. தகவல்: பிறேமா, தங்கராசா (தும்பளை ) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்பட்டதாரி மாணவி.

35
புற்றளை : ( வடம. வ. கி. 140 , 3 )
புலோலி தெற்கு கிராமசேவகர் பிரிவின் ஒருபகுதி புற்றளை எனப் பெயர்பெறும். புற்று + அளே - புற்றளை, ஒருபொருள் குறித்த இருசொற்கள் இணைந்து இப்பெயர் ஆக்கம் பெற்றுள் ளது. புற்று+தளை எனப்பிரித்து இதற்கொரு விளக்கமும் கூறப் படுகிறது. இங்கு ஒரு புற்றை வெட்டியபோது, ஒரு பிள்ளை யார் சிலை காணப்பட்டது. அச்சிலை கண்டெடுக்கப்பட்ட இடத் திலே புற்றளை விநாயகர் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. சில் புற்றிலிருந்து தளிர்த்தது ( வெளிப்பட்டது ) என்ற காரணத் தால் இவ்விடம் புற்றளை எனப்பெயர் பெற்றதென்றும் வாய் மொழி மரபிற் கூறப்படுகிறது. போர்த்துக்கீசர் காலத்திற் கோயிற்சில்களை மரத்தடியிலும், புற்றடியிலும், கிணற்றினுள்ளும் வைத்து மறைத்தமை வரலாற்றுச் செய்தி. எனவே அத்தகைய தொரு சூழலில் இப்பிள்ளையார் சிலையும் மறைக்கப்பட்டிருக்க லாம். பின்னுவில் இச்சிலை கண்டுபிடிக்கப்பட்ட போது அவ்விடத் திற்குக் காரணப்பெயராய்ப் புற்றளை என்ற பெயர் தோன்றியி ருக்கலாம்.
‘ஆரை ஈற்றுப் பெயர்
ஆரை என்பது கோட்டை மதில், அரண் எனப் பொருள் படும். இம் மாவட்டத்தில் ‘ஆரை' ஈற்றுப் பெயர் களாக க் கொண்ட அல்லாரை, கல்லாரை என்ற ஈரிடங்களுள. தமிழ் நாட்டில் ஆரைக்கல் (நாமக்கல்) என்ற பழம்பதி இருந்ததாகச் சேதுப்பிள்ளை ( 19765) குறிப்பிட்டுள்ளார். நாஞ்சில் நாட்டி அள்ள ஆரவாங்மொழி ஆரல்வாய்மொழி என்பதன் திரிபென்றும், அது ஒரு கோட்டையைப் போன்று மூன்றுபுறமும் சூழ்ந்த பொதிய மலைத்தொடரின் கண் அமைந்தமையால் அப்பெயர் ஏற்பட்டதென் றும் கூறப்படுகிறது. இங்கே ஆரை என்பது கோட்டை என்ற பொருளில் வந்தது. மட்டக்களப்புப் பேச்சு வழக்கில் மழை பெய்து நீர் வடிந்து ஒடும் இடம் "ஆரை” அல்லது ஆரைப்பற்றை”* எனப்படும். அத்துடன் மட்டக்களப்புக்குத் தெற்கே நான்கு மைல் தொலைவில் ஆரைப்வற்றை என்ற கிராமமும் உள்ளது.
1. GS. சதாசிவம் ! சேரநாடுந் தமிழும் சென்னை 1964
பக். 106 - 107.

Page 28
36
அல்லாரை (தென்ம. 105:1,2)
இது கச்சாய்ப் பகுதியில் அமைந்துள்ளது. அல்+ஆரைாசால் காரை. கச்சாயிலே கோட்டையும் துறையுமிருந்திருக்கின்றன. கச்சாய் தொல்லியற்றளமாகவும் கருதப்படுகிறது. (இரகுபதி: 1987) இப்பின்னணியில் அயற் கிராமமாகிய அல்லாரையும் கோட்டை (ஆரை) அல்லது பாதுகாப்பு அற்ற இடம் என்ற பொருளிற் பெயர் பெற்றிருக்கலாம்.
அல்லாரை-ஒருவகை மரம். அம்மரப் பெயரடியாகவும் இப் பெயர் தோன்றியிருக்கலாம். மல்லாகம் கிராமத்திலும் "அல் லாரை" என்ற குறிச்சிப் பெயர் வழக்கிலுள்ளது.
*ஆவி ஈற்றுப் பெயர்
நீர்நிலைகளைக் குறிக்கும் சொற்களுள் ஆவியும் ஒன்ரும் (த. லெ. 251). ஈழத்தில் ஆவி' என்ற ஈற்றுப் பெயருடைய பல இடங்கள் உள்ளன. திருக்கேதீஸ்வரத்தின் புனித நீர்த் தீர்க் தம் பாலாவி எனப்படும். சுந்தரமூர்த்திநாயனர் பாலாவியின் வளம் பற்றித் திருக்கேதீஸ்வரப் பதிகத்திற் பாடினர், நீர்நிறைந் திருக்கும் இடத்திலிருந்து சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாக எழுங்காட்சி அற்புதமானது. அக்காட்சியினுற் கவரப்பட்ட மக் கள் குறிப்பிட்டநீர் நிலயையும் அதன் சூழலையும் ஆவி என்று அழைத்திருக்கலாம். தமிழ் தாட்டிலும் நீராவி, கல்லாவி முதலிய ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றமையும் நோக்கத்தக்கதே. யாழ்ப் பாண மாவட்டத்தில் நீராவியடி, பாலாவி, புன்னே நீரா வி எனப்பல இடங்கள் காணப்படுகின்றன.
பாலாவி (தென்ம. 105, 6, )
கச்சாய்ப் பகுதியிலும், பூநகரிப் பகுதியிலும் 'பாலாவி’ என்ற இடங்களுள. கச்சாய்க்கிராமத்திற்குக் கிழக்கே பாலாவி என்ற இடம் அமைந்துள்ளது, பால் + ஆவி:பாலாவி. இங்கு மந்தை வளர்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது, ஆனுற் குளம் எதுவும் இங்கில்லை. பண்டைதாள் முதல் இங்கு பால் மாடுகள் நிறைந்து காணப்பட்டதால் இப்பெயரேற்பட்டது என்பர். மேலும் இவ் வூருக்குத் தெற்கே கடற்பகுதியுள்ளது. வெப்பத்தினுற் கடல் நீரானது ஆவியாகி மேலெழுகின்ற காட்சி தினமும் இங்கு இடம் பெறும், பால்போன்ற ஆவி மேலெழும் இடம் என்ற காரணட்

37
பெயராகப் பால்ாவி என்ற இடப்பெயர்த் தோற்றம் அமைவ தாயிற்ருே எனவும் கருதலாம்.
*ஆறு ஈற்றுப் பெயர்
நதிக்கரைகளே மனித நாகரிகத்தின் ஊற்றிடங்களாகும். தண்பொருணையாறு என்ற அழகு தமிழ்ப் பெயர் கண்ட தமிழர், தாம் வாழ்ந்த ஆற்றுப்படுக்கைகளுக்கு அவ்வாற்றுப் பெயர்களை இட்டழைக்க, காலப்போக்கில் அதன் சூழலில் அமைந்த குடியி ருப்பும் அப்பெயர் பெறுவதாயிற்று. திராவிட ஆரிய நாகரிகங் களிலும் ஆறு தெய்வமாகப் போற்றப்படும் நிலை எய்திற்று. அத ணுேடு இணைந்து விழாக்களும் கதைகளும் தோற்றுவிக்கப்பட் டன. இந்நிலையில் ஆறுகள் மக்கள் வாழ்வில் முதன்மை பெற் றன. அதனுல் ‘* ஆறில்லா ஊருக்கு அழகுபாழ் " என்ற பழமொழியும் வழங்குவதாயிற்று.
சோழவளநாடு சோறுடைத்தென்பர். ஆணுல் 'ஈழவளநாடு ஆறு டைத்து’ என்று கூறுமளவிற்கு ஆற்றுவளம் பொலிந்தது. ஈழதாடு, யாழ்ப்பாண மாவட்டத்திற் பெருங்காடுகளோ அன்றி மலைகளோ இன்மையாற் பாய்ந்தோடும் ஆறுகளும் இல்லை. ஆயி னும் யாழ்ப்பாணக் குடாநாட்டினுள் தொண்டைமாளுறும் வழு க்கையாறும் ஒடுகின்றன. முன்னது உப்பாறு; பின் ன து நன்னீராறு. மாரிகாலத்து மழைநீரைத் தேக்கி அமைத்த ஆறே வழுக்கையாறு, கட்டுவன் என்ற ஊரில் இதன் உற்பத்தி அமை கின்றது. கட்டுவனிலே திரண்ட மழைநீர், தெல்லிப்பளை, அம்பன அளவெட்டி முதலான ஊர்களினூடாகப் பாய்ந்து அராலிக் கடலோடு கலக்கின்றது.
தொண்டைமானுறு : ( வடம. வ. கி. 144.2 )
தொண்டைமான் + ஆறு ஆறு என்பதற்குப் பல பொருள் கள் தரப்படுகின்றன. ஆறு = யாறு, வழி, பக்கம், பயன். சம் யம், அறம், உபாயம், விதம், இயல்பு, தணிதல், அடங்குதல், த லெ. 1. பக். 259 ), தொண்டைமானுறு என்ற இடப் பெயரை நோக்கும்போது தொண்டைமான் வெட்டுவித்த நீர் வழியே தொண்டைமானுறு எனப்பெயர் பெறுவதாயிற்று. வர லாற்றுச் செய்திகள் இப்பெயருக்கு விளக்கந் தருகின்றன.
இலங்கையின் மேற்குப்புறமாகத் திருக்கேதீஸ்வரத்திலும், துணுக்காய் என்ற இடத்திலும், "பாலாவி " என்ற பெய ருடைய இடங்களுமுள

Page 29
38
தொண்டை தாட்டை ஆண்ட தொண்டைமான்களுக்கும் இத்தெ7ண்டைமானற்றுக்கும் தொடர்பு கூறப்படுகிறது. வட்டுக் கோட்டையிலுள்ள ஒரிடமும் தொண்டைமான் தோட்டம் எனப் பெயர் பெற்றுள்ளது. தொண்டைமான்கள் மிகமிகத் தொன்மை யானதொரு பழங்குடிப் பரம்பரையினராவர். ஆயினும் தொன்று தொட்டு வழிவந்த அரச பரம்பரையினர் அல்லர். தமது வீர தீர பராக்கிரமங்களாலும் வீர சாகசங்களாலும் படிப்படியாகச் செல் வாக்குப் பெற்று அரச அந்தஸ்திற்கு உயர்ந்தவர்கள். யானே பிடித்தில் பழக்குதல் என்பவற்றிலும் சிறந்து காணப்பட்டனர் எனத் தொண்டைமான்கள் பற்றிக் கூறப்படுகிறது. புதுக்கோடைத் தொண்டைமான்கள், தொண்டை மண்டலத் தொண்டை மான்கள் என்ற இருவேறு வகையினர் இருந்திருக்கின்றனர் ள்ன் புதும் ஈண்டு சுட்டத்தக்கது,
இவ்விடப்பெயர்பற்றி யாழ்ப்பாண வைபவகெளமுதி என்ற நூல் வருமாறு விளக்கம் கூறுதலும் நோக்கற்பாலது :-
“கி. பி. 795இல் உக்கிரசிங்கன் என்னும் அரசன் இந்தியா விலே இருந்து படையெடுத்துவந்து கதிரமலையைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்யும்போது, தென்னிந்தியத் தொண்டை மண்டலத்தரசன் தொண்  ைட மா ன் தனது பரிவாரங் களுடன் கீரிமலையில் வந்திறங்கி அவ்வரசனைச் சந்தித்து யாழ்ப் பாணத்துக் கரணவாய், வெள்ளப்பரவை என்னுமிடங்களில் விளேயும் நல்லுப்பைத் தனது மக்களுக்குத் தரும்படி வருந்திக் கேட்க, உக்கிரசிங்கன் அதற்கிசைந்து அதற்கேற்ற ஒழுங்குகளைச் செய்யும்படி உத்தரவிட்டான், தொண்டைமான் வட கடலி லிருந்து உப்பு விளையும் இடத்திற்கு தனது மரக்கலங்கள் சென்று உப்பேற்றி வரவும், மாரிகாலங்களில் அவற்றுக்கு ஒதுக் கிடமாக நிற்கத்தக்கதாகவும் அங்கிருந்த ஒரு சிற்ருற்றை ஆழ மாக வெட்டுவித்துத் தன் பதி சென்றனன். தொண்டைமான் வெட்டுவித்த ஆறு இன்றுந் தொண்டைமானுறு என அழைக் கப்படுகின்றது” (க. வேலுப்பிள்ளை 1918 : 8)2
1. சிரஞ்சீவி (பதிப்பாசிரியர் ) புதுக்கோட்டை சமஸ்தான வர லாறு (தொண்டைமான்கள் ஆட்சி), சென்னை, 1980: பக்17.
2. யாழ்ப்பாண வைபவமாலை, பக், 14 இலும் இக்கருத்துக்
கூறப்படுகின்றது.

39
டச்சுக்காரர் காலத்திலே கொழும்பிலிருந்து நீர்கொழும்புவரை உள்நாட்டுப் பொருட்களை ஏற்றி இறக்குமதி செய்வதற்காக வாய்க் கால் ஒன்று வெட்டப்பட்டது. அதுபோன்றே ஆனையிறவுப் பகு தியில் விளையும் உப்பைத் தென்னிந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வ. தற்கு உதவியாகத் தொண்டைமானலே தோண்டப்பட்ட நீர் வழியே தொண்டைமாஞறு எனக் கருதப்படுகிறது.
முதலாம் குலோத்துங்கனின் தளபதியான கருணு க ரத் தொண்டைமானின் ஈழப்படையெடுப்புக் காரணமாக இப் பெயர் ஏற்பட்டது என்கிருர் இராசநாயகம் (1926266), இங்கு "அத்திப்படை ஆண்டவன் கொல்லை", "நாயினர் கொல்ல", *சேதுபதியார் கண்டு’, ‘இராக்காவளவு", "பணிக்க வளவு? முதலிய காணிப்பெயர்கள் பண்டை வரலாற்றைக் குறிப்பிடுவன வாகக் காணப்படுகின்றன.
தொண்டைமானற்றின் கிழக்கே சந்நதி கோயில்2 கோணே சர் கோயில், ஆதிவைரவர் கோயில், பிள்கிளயார் கோயில், பத் திரகாளி கோயில், வீரமாகாளி அம்மன் கோயில் எ ன் பன அமைந்துள்ளன. வீரமாகாளி அம்மன் கோயிலை யாழ்ப்பாணத் தரசன் "பரராசசேகரன்" கட்டிஞன் எனக்கோயிற் சான்றுகள் கூறுகின்றன,
1. செ. நாகலிங்கம், தொண்டைமாளுறும் செல்வச்சந்நிதியும்,
கொழும்பு, 1985, பக். 6.
2. ''The sanskrit word samnidhi "presence' become can nati in Tamil. This word also occurs as canniti and can nati in Tamil. But cannati is the most popular form in current usage. The temple of Lord Subra mania at Thondaimanar in Point-Pedro is generally refered to as cannati by pious devoties, living even many miles away because they feel that God manifests himself there,
A. Velupillait Ceylon Tamil Inscriptions, II, 1971; р, 63.

Page 30
40
‘ஓடை" ஈற்றுப்பெயர்
ஒடை ம நீரோடை, குளம், அகழி, மலை, வழி, நெற்றிப் LullLib, 9,56, 596 LD7 th (Ochlandiatravancorila ) ( 5. Ga). பக்.6222)சிற்ருறு, சிற்றருவி என்பனவற்றிலும்விடச் சிறிய நிலையில் இயற்கையாக நீர் வடிந்தோடும் நிலையிலுள்ளவை ஓடை எனப் பெயர் பெறும், "ஓடை ஈற்றுப்வெயருன்டய ஊர்ப்பெயர்கள் கிழக்கு மாகாணத்திற் பெரிதுங் காணப்படுகின்றன; யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று ஊர்ப்பெயர்களும் குறிச்சிகளைச் சுட்டும் நிலையிற் பல பெயர்களும் காணப்படுகின்றன. ஒடு+ஐ ஒடை என வரும் தூய தமிழ் மூலத்தைக்கொண்ட இடப்பெயர்களும் சிங்கள மூலத்தன என சுவாமி ஞானப்பிரகாசர் (1917 1 170), லூயிஸ் (J. P. Lewis 1917 : 4) முதலியோர் எழுதியுமுள்ளனர். கொட (G (da) என்ற சிங்களப் மொழிப்பதமே ஒடையாயிற்று எனச் சுவாமி ஞானப்பிரகாசர் கூறுவது வலிந்துரைக்கும் பொருந் தாக் கூற்றகும்.
பெரியான் ஒடை (தென்ம. 111, 5)
இது மிருசுவிற் கிராமத்தின் ஒரு பகுதியாகும். பெரியான் + ஒடை பெரியான் ஓடை, ஓடை - வாய்க்கால் பெரியான் என் பவன் வெட்டிய ஓடை. என்ற முறையிற் காரணப்பெயராயிற்று.
*கரை ஈற்றுப்பெயர் நீர்நிலைகளின் கரையோரங்களை அடுத்துள்ள நிலப்பகுதி அல் லது குடியிருப்புக்கள் “ கரை " என்ற ஈற்றுச்சொல் அமைந்த பெயர்களால் வழங்குகின்றன. இவ்வகையில் நான்கு இடப் பெயர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் காணப்படுகின்றன.1
ஒடக்கரை (வடம. வ. கி. ந. 22:2)
இது பருத்தித்துறைக் கடற்கரைப் பகுதியில் அமைந்த ஓரிடமாகும். ஒடம் + கரை= ஓடக்கரை. பண்டைநாளில் இங்கு ஒடங்கள் வந்து கரைசேருமிடம் என்ற நிலையில் இப்பெயர் ஏற் பட்டிருக்கலாம்.
களப்பு ஈற்றுப்பெயர் களப்பு என்பது கடல்நீர் உள்நுழையும் ஆழமில்லாத சதுப்பு நீர்நிலையாகும். கடனீரேரி என்ற பொருளிற் கடல்
1. ஒடக்கரை, கற்கரை, திக்கரை, மயிலிட்டிக்கரை,

41
நீளும், ஆற்றுநீறும் கல்ந்து நிற்கும் ஆழமற்ற நீர்நில களப் பாகும். களப்பு என்ற ஈற்றுப்பெயர் தமிழகத்தின் இருப்ப தாகத் தெரியவில்லை. கிழக்கிலங்கையில் மட்டக்கிளப்பு, கோரக் கிளப்பு முதலான பல இடப்பெயர்களிலே ‘களப்பு? ஈறு அமைந்து காணப்படுகின்றது.
தனங்கிளப்பு (தென்ம.94.1.)
களப்பு> கிளப்பு. தனக்காரர்+களப்பு ாதனங்களப்பு) தனங் கிளப்பு. தனக்காரர் என்பேசர் யானை கட்டுவோராவர். ஆன. பிறவிலிருந்து சுமார் 20 மைல் தூரத்தில் இவ்விடம் இருப்பதும் நோக்கற்பாலது. எஸ். டபிள்யூ. குமாரசுவாமி (1918:87) தன" (-புல், குழை) என்ற சிங்களப்பெயரடியாகவே பிறந்தது என்றும், தன் (கநாவல்) என்ற சிங்களச் சொல்லடியாக 'தன்-கலப்புவர் என்னுஞ் சிங்களப்பெயருக்குப் பண்டைத்தமிழ் மக்கள், தம்மொழி முறை பற்றி அம் சாரியை பெய்து, தனங்கலப்பு என்னும் நாம் ரூபத்தைப் பிறப்பித்து, பின்னர் அதனைத் தனங்களப்பு அல்லது தனங்கிளப்பு எனத் திரித்து வழங்குவராயினர் போலும் என்ருர். குறித்த இடத்து வாழ் மக்கள் நில பற்றியும், சொற்பிறப்பியல் பற்றியும் நோக்க இவர் கருத்துப் பொருந்துமாறில்லை.
குளம்" ஈற்றுப்பெயர்கள்
ஈழத்து ஊர்ப்பெயர்களில் நீர்நிலைகளைச் சுட்டிய பெயர்களே எண்ணிக்கையில் மேம்பட்டுக் காணப்படுகின்றன. குளம், கேணி முதலிய நீர்நிலைப் பெயர்களை ஈருகக் கொண்ட 3 2 இடப்பெயர் கன் வன்னிப் பகுதியிலே உள்ளன என லூயிஸ் (1896:205) கணக்கிட்டுள்ளார். நீர்நிலையைக் குறிப்பனவாக அமைந்த மடு, கேணி, நீராவி, ஓடை, குழி, வில், தாழ்வு, மோட்டை, பள்ளம் முதலான சொற்கள் இடப்பெயர் ஈருக அமைந்து வழங்குகின்
1. உதாரணம் மட்டக்களப்பு:மட்டம்+களப்பு:மட்டமான (ஆழமற்ற) சதுப்பேசி என்ற பொருளைத்தரும் மட்டக் களப்பு என்னும் பெயர், அவ்வாவியின் இது மருங்கிலுமுள்ள நாட்டிற்கும் வெயராயிற்று. ( இ. பாலசுத்தரம், 1979, பக், 29) "சம்புக்களப்பில்-தாங்க/தளச்சவள்ளல் பிச்சுவந்து/ கறியாக்கித் திண்டு- நாங்க களை தீர்த்தோம் போடியாரே' (மேலது பக். 393) என்ற நாட்டார் பாடலிலும் களப்பு என்ற சொல் வந்தமை நோக்குக w

Page 31
42
றன. நீர்நிலைகளுக்குப் பெயர் வைக்கும்போது, விவசாயிகளோ அன்றி ஏனையவரோ அவற்றைச் சூழ இருந்த முக் கி ய மா ன மரங்களுக்கு முதன்மை அளித்து, அம்மரப்பெயர்களோடு ஈற்றில் நீர்நிலைப் பெயர்களையும் இணைத்து அழைக்கலாயினர். அவ்வாறு பெயரிடும்போது ஒரு மரப்பெயரைச் சுட்டிய பல குளப்பெயர் காணப்பட்டால் அவற்றுக்கு அடை கொடுத்து ஒன்றிலிருந்து மற்றதை வேறுபடுத்தி வழங்கியுள்ளமையும் கவனிக்கக்கூடிய தாகவுள்ளது.
சுண்டிக்குளம்
யாழ்ப்பாண மாவட்டத் தி ன் கிழக்குக் கரையோரத்தே ஆனையிறவுக் கடனிரேரியின் அந்தத் தில் அமைந்துள்ள இடமே சுண்டிக்குளம், பளையிலிருந்து கண்டிக்குளத்திற்கு வீதி அமைத் துள்ளது. (சுண்டி+ குளம்) இது குளம் ஈற்றுப்பெயராக அமை யினும் இங்கு குளங்களில்லை பதிலாகச் சுண்டிமரங்கள் (கண்டல் மரம்) நிறைந்த பள்ளநிலம் என்ற பொருளில் இவ்விடப்பெயர் தோன்றியுள்ளது.
தவசிகுளம் (தென்ம; 106 ,5)
இது கொடிகாமம் பகுதியிலுள்ள ஓரிடமாகும். தவசி என்ற பெயரினர் ஒருவர் இங்கு வாழ்ந்து, குளம் ஒன்றை வெட்டு வித்தார் என்பது அவ்வூர் மக்கள் தம்பிக்கை அவர் பெயரால் இடமும் குளமும் வழங்குவதாயின. இங்கு வாழ்வோர் அனை வரும் இந்துக்களாவார்.
*கேணி ஈற்றுப்பெயர்
கேணி=சிறுகுளம், கிணறு, அகழி என்பவற்றைக் குறிக்குஞ் சொல்லாகும். ஆட்பெயருடன் இனைந்தனவாகவே கேணி ஈற்று இடப்பெயர்கள் ஈழத்தில் பெரிதும் வழங்குகின்றன.
செட்டிக்கேணி (தென்ம; 107. 1 )
இது உசன் பகுதியிலுள்ள குடியிருப்பிடமாகும். செட்டி
என்பவரை முதல்நிலைப்படுத்தி இப்பெயர் வழங்கியிருக்கலாம். கேணிகளும் இங்கு காணப்படுகின்றன.
1. தவகிமுருங்கை என்ற செடிப்பெயரால் இவ்விடப்பெயர்
தோன்றிற்முே எனவும் ஆராயலாம்.

43
மருதங்கேணி
வடமராட்சியின் கிழக்கில் பருத்தித்துறை-வெற்றில்க்கேணி வீதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. இதன் கிழக்கே கடல் வள மும், மேற்கே மருதநில வளமும் சிறந்து காணப்படுகின்றன. இங்கு மருதமரங்கள் பல இடங்களிலும் வளர்ந்து நிற்கின்றன. வல சிறு கேணிகளுமுள. மருதமரங்களும் கேணிகளும் முதன்மை பெற்றநிலயில் மருதங்கேணி என்ற பெயர் தோன்றிற்று என லாம். இங்கு மருதடிப்பிள்ளையார் என்ற பெயரில் ஒருகோயிலு முண்டு, வெத்திலைக்கேணி
இக்கிராமத்தின் எல்லைகளாகக் கடல், தாழையடி, மண் டக் தட்டான்கோடு, நித்தியவெட்டை என்பன காணப்படு கின்றன. தாழையடி - கட்டைக்காடு கரையோர வீதியில் இக் கிராமம் அமைந்துள்ளது. வெற்றிலைப் பயிர்ச்செய்கை இங்கு நடைபெறுவதால் வெற்றில்யை முதல் நிலையாக்கிப்பெயர் தோன் றிற்று, இங்கு டச்சுக்கோட்டையில் அழிபாடுகளும் தொல்லியற் சான்றுகளும் காணப்படுவதைக்கொண்டு, பழைமைவாய்ந்த புதை பொருள் நிலையத்திலே டச்சுக்காரர் தமது கோட்டையைக் கட்டி யிருக்க வேண்டுமென்று இரகுபதி ( 1987 : 93 ) கருதுகிருர், நாச்சிமாகுளம், ஒல்லாந்தக்காடு, உடையார்துறை ஆகிய இடங் களும இங்குள்ளன. இங்கு தொல்லியற் சான்றுகளான நாண யங்கள், மட்பாண்ட ஓடுகள், கல்லாயுதங்கள், கண்ணுடித் துண்டு கள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. இவற்றைக்கொண்டு நோக்கும்போது இங்கு பண்டைக்காலம் முதலாக மக்கள் வாழ்ந் திருக்கிருர்கள் என்பது புலளுகின்றது.
கொட்டு . முன்னெட்டுப் Guust
வைரம் கொண்ட பாலை மரத் தி ன் அடிப்பகுதியை நீளமான துண்டாக அறுத்தெடுத்து, அதனை உட்குடைந்து குழாய்போல் நிலத்துட் பதித்துக் கிணருகப் பயன்படுத்தும் வழக்
1. இவ்வூரில் நடைபெறும் "பூசைப்பேத்தி " என்ற வழிபாட்டு
முறைகள் தனி ஆய்வுக்குரியனவாகும்.
2. 1981ஆம் ஆண்டு குடிசனமதிப்பீட்டு அறிக்கையில் இவ்விடப்
பெயர் குறிபிடப்படவில்லை. (வெற்றிச்ை கேணி > வெத் Savai Gasal )

Page 32
44
கம் உண்டு. இதனக்கொட்டுக்கிணறு" என்பர். இவ்வழக்கம் மிக அண்மைக்காலம்வரை மட்டக்களப்புப் பகுதியில் இருந்தது. இம் வழக்கம் மன்னரிலும் மலேயாளத்திலும் உண்டென்பதும் நோக்கத் தக்கது (இ. பாலசுந்தரம் : 1979, 297 ),
கொட்டோட்டை ( வடம. வ. கி. 144, 2)
கொட்டு + ஒட்டை - கொட்டோட்டை. இக்கிராமம் வட மராட்சிப் பகுதியிற் கடற்கரையை அண்மித்த இடமாகும். மணற் பிரதேசத்திற் கொட்டுக்கிணறு அமைத்தல் எளிது. எனவே பண்டைநாளில் இங்கு கொட்டுக்கிணறு அமைக்கும் முறை பின் பற்றப்பட்டதால் அதன் காரணமாக இடப்பெயரும் தோன்றியி ருக்கலாம்.
துறை ஈற்றுப் பெயர்கள்
துறை - இடம் நியாயவழி, பகுதி, உபாயம் கடற்றுறை கடல் ஆறு வண்ணுன் ஒலிக்குமிடம் நீர்த்துறை, சபைகூடு மிடம் பொருட்கூறு, ஒழுங்கு (த. லெ. iv பச் 2009 ). துறை என்பது சமஸ்கிருத மூலத்திலிருந்து அல்லது சிங்கள -Tara என் பதிலிருந்து வந்திருக்க வேண்டுமென்பர் யாழ்ப்பாண இடப்பெயர் கள் பற்றி எழுதிய ஜே. பி. லூயிஸ் ( 1917 45 ). துறைமுகத் தைச் சுட்டும் துறை " என்ற சொல் சங்கத் தமிழ் வழக்குப் பெற்ற தமிழ்ச்சொல் என்பதற்குச் சான்றுகள் பலவுள. உதாரண மாகப் பின்வரும் பாடல் வரிகளைக்காட்டலாம்.
(1) * சொற்கையாம் பெருந்துறை முத்தின் அன்ன ”*
(அகம். 27 9.) (i) * நற்றேர் வழுதி கொற்கை மூன்றுறை " (அகம் 130 : 1) (i) * புகழ்மலி சிறப்பிற் கொற்கை மூன்றுறை அகம் (201 : 4) (iv) முத்துபடு சிறப்பிற் கொற்கை முன்றுறை ' (நற் 23:6) (W) நறையு நரந்தமுமகிலுமாரமும் துறை துறை தோறும்
பொறையுயிர்த் தொழுகி ( பொருநர் 238-239 ) இவ்வாருகத் தமிழ்ச் சொற்களுக்குச் சிங்கனமூலம் கற்பிக்கும் செயல்கள் யாழ்ப்பாண இடப்பெயர் ஆராய்ச்சியில் நடைபெற் றுள்ளன என்பதற்கு இதுவுமோர் எடுத்துக்காட்டு,
1. " கொட்டுக்கிணறடைச்சு குனிஞ்சு நிண்டு தண்ணியள்ள எட்டுப்பணத்தாலே ஏறிவந்து விழுந்ததப்பா " என்ற நாட் டார் பாடல் மட்டக்களப்புப் பிரதேசத்தில் வழங்குகின்றது காண்க. மேலும் யாழ்ப்பாண மாநகரசபை எல்லையினுட் கொட்டடி என்ற ஓரிடம் உள்ளமையும் நோக்கற்பாலது.

4S
யாழ்ப்பாண மாவட்டத்தின் மூன்று கரையோரங்களிலும் அமைந்துள்ள இறங்கு துறைகள், துறைமுகங்கள் என்பன வர்த் தகப்பண்பாட்டுப் பாரம்பரியங்கண்ப் பரிமாறிக் கொள்ளும் வாயில் களாக விளங்கின என்பது இவற்றின் பெயர்களைக் கவனிக்கும் போது அறியப்படுகின்றது. க ப்ப ல் கள் இத்துறைகளிலிருந்து எங்கே புறப்பட்டுச் சென்றனவோ அந்த இடத்தின் பெயரையே இத்துறைகள் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. கொழும்புத் துறை, காயாத்துறை, சம் புத் துறை ஆகியன இவ்வகையின வாகும். இத்துறைமுகங்கள் பண்டைக்கால வணிக வரலாற் றுடனும், பண்பாட்டு வரலாற்றுடனும் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன.
உடுத்துறை
வடமராட்சி கிழக்கிற் கடற்கரையோரமாகச் செம்பியன்பற் றுக்குத் தெற்கே இது அமைந்துள்ளது. உடுமான் என்ற தனபதியின் பெயரால் இவ்விடப்பெயர் வழங்கிற்று என்றும் அவ்வூர்மக்கள் கருதுவர். இராமாயணத்துடன் தொடர்புபடுத்திச் சீதை சிறை மீட்கப்பட்டு, சீராக உடுப்பு அணிந்து கொண்ட இடம் என்ற காரணத்தால் உடுப்பு அணிந்த துறை என்பது உடுத்துறை என மருவிற்று என்ற கதை வழக்கும் அங்குண்டு. தமிழகத்திலே தஞ் சாவூர் மாவட்டத்தில் உள்துறைதோட்டம் " என்ற ஒரிட முண்டு. இதில் உள்துறை " என்ற பெயர்க்கூறு இங்கும் வழங் கிற்ரு எனவும் சித்திக்கலாம். உடுத்துறையின் மேற்கே தொண் டைமானுறு அமைந்திருப்பதால் ஆற்றினுாடாகப் பயன்பட்ட உள்துறை ( முகம் ) என்ற அடிப்படையிலும் இவ்விடம் உள் துறை எனப்பெயர் பெற்று காலப்போக்கில் உடுத்துறை எனவும் மருவியிருக்கலாம்.3
பருத்தித்துறை (வடம, வ. கி. ந. 22)
இலங்கையின் வடகரையில் அமைந்துள்ள ஒரு துறைமுகமும் நகரும் சேர்ந்த பகுதி மருத்தித்துறையாகும். இதற்குப் " பகுத் தித்துறைமுவா ", "முனே ‘ என்றும் பெயருண்டு. இலங்கை
1. M. D. Raghavan, Tamil Culture in Ceylon; a genral
introduction, pp. 65-66.
2. தகவல் - கணேசலிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாண
caudir, 1989.
3. இந் நூலில் உடுப்பிட்டி என்ற பெயர் விளக்கம் பார்க்க

Page 33
46
யின் புவியியல் அமைப்பின் அடிப்படையில் வடக்குத் தெற்காக முறையே பருத்தித்துறை முனையையும் தெய்வேந்திரமுனையையும் நேர்கோடாகக் கொண்டு அளவிட்டு இலங்கையின் நீளம் 270 மைல்கள் எனக் கணித்துள்ளனர். பருத்தித்துறை என்ற பெயரி மக்களிள் உச்சரிப்பிலே ' பருத்துறை ** என ஒலிக்கக் கேட்கலாம். போர்த்துக்கேய ஒல்லாந்த காலத்தில் இங்கு சிறந்த துறைமுகம் ஒன்றிருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளாக இடிபாட்டுச் சின்னங்கள் காணப்படுகின்றன. அத்துடன் இதன் அண்மையிற் கற்கோவளத்தில் வெளிச்சவீடு அமைந்திருப்பதும் இதனை வலுப் படுத்துகின்றது. ஒல்லாந்தர் காலத்திற் பருத்திப்புடவை வியா பாரமும், சாயமூட்டும் தொழிலும் பெரிதாகக் காணப்பட்ட மையாற் பிறநாடுகளிலுமிருந்தும் இத்துறையில் நூலோ அன்றிப் புடவைகளோ பெ ரும ள வில் இறக்குமதிசெய்யப்பட்டிருக்க லாம் அல்லது இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம். அந்த நிலையில் இத்துறை சிறப்புப் பெயராகப் பருத்தித்துறை என வழங்குவதாயிற்று. போர்த்துக்கீசர் காலம் முதலாக இத்துறை யிலிருந்து வடமராட்சிப் பகுதியில் விண்விக்கப்பட்ட புகையில் மலேயாளத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பால்தேயஸ் Gteštuař gólů 6667íř ( see a Queiroz ).
போர்த்துக்கீசர் பருத்தித்துறை என்ற பெயரை Pountadas pedres ( Rocky point ) GT Jr ud r fð sólaorrf. Lair y a švá லேயர் காலத்திலே Point Pedro? என வழங்குவதாயிற்று. டச்சுக்காரர் இங்கு ஒரு கோட்டை அமைத்தனராயினும் அது அழிந்துபோயிற்று (சைமன்காசிச் செட்டி 18341186).
சோழ கிணற்றடி, பெரிய தோட்டம் முதலான இடங்கள் பருத்தித்துறைப்பகுதியிற் காணப்படுகின்றன. சோழராட்சி நில விய போது மக்களின் தேவையையொட்டி, சோழ அதிகாரிகள் ஒரு பொதுக்கிணற்றை வெட்டிக் கொடுத்தமையால் அது சோழர் கிணறு என வழங்கிற்று. இன்றும் இக்கிணறு பொதுக்கினமுகவே
1. பகுத்தித்துறைக்கு அண்மை யில் அல்வாய் தெற்கிலே * பஞ்சுத்தோமிடம் ” என்ற குறிச்சியும் காணப்படுகிறது. மேலும் தல்மன்னர்ப் பகுதியிற் பருத்திப்பண்ணை என்ற இடம் பருத்திச் செய்கையாற் பெயர் பெற்றிருத்தலும் ஈண்டு நோக்கத்தக்கது.
2. Point = முனை: Pedro = மீன்பிடித்தளம், கடல் அடித்
தளமேடை

47
கருதப்படுகின்றது. பெரியந்தோட்டம் என்பதும் பெரியன் என்ற சோழத் தளபதியின் பெயரிஞரல் ஏற்பட்டதென்பர். அடுத்த தாகப் பெரியதேவனத்தாய் என்ற இடத்திற் பெரியதேவன் என்ற சோழத் தளபதியின் தாய் வாழ்ந்தமையால் அப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்பதிகின்றது.1
கொட்டடி என்றழைக்கப்படுமிடம் பருத்தித்துறையின் துறை மகத்திற்கருகே அமைந்துள்ளது. கொட்டையடி > தொட்டடி என மருவியிருக்கலாம். பருத்தித்துறையிற் பருத்தித் தொழில் முதன்மை பெற்றிருந்த காலத்தில் இங்கு கொண்டு வரப்பட்ட பருத்தியிலிருந்து கொட்டைகள் அகற்றும் சாலைகள் அமைந்திருந்த இடம் * கொட்டையடி * (அடித்துக் கொட்டைகள் அகற்றப்படு மிடம்) என்ற பெயர் பெற்றிருத்தல் இயல்பே.
மேலும் கொட்டு" என்வது தோணியின் ஒருவகைப் பெய ராம். எனவே அத்தகைய கொட்டுத் தோணிகள் வந்து தங்கு மிடம் என்ற பொருளிலும் கொட்டடி எனப்பெயர் அமைந்து மிருக்கலாம்.
வல்வெட்டித்துறை (வடம, வ, கி. ந, 23 )
வல் வெட் டி த் துறை யின் எல்லைகளில் வடக்கே பாக் குநீரிணை, கிழக்கே திக்கம், தெற்கே உடுப்பிட்டி, மேற்கே தொண் எதடமானறு என்பன அமைந்துள்ளன. சமதரையாகக் காணப் படும் இப்பகுதியிற் சில இடங்களிற் சுண்ணக்கற்பாறைகள் மேலெ மூம்பிக் காணப்படுகின்றன. இங்கு இயற்கையாக அமைந்துள்ள துறைமுகம் பற்றி இராஜகோபால் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
அ. “வல்வெட்டித் துறை ஒரு விசேட துறைமுகமாகவும், கப்பல் கட்டுந் தளமாகவும் கடலோடிகளின் வசிப்பிட மாகவும் இகுந்தது என "பே ஒவ் பெங்கோல்’ என்ற நூல் குறிப்பிடுகின்றது. கப்பல் கட்டுவதிலும், கப்பல் ஒட்டு வதிலும் வல்வெட்டித்துறை மக்கள் சிறப்பு மிக்கவர் கல் என்பதைப் பல நாடுகளும் அங்கீகரித்துள்ளன.992
1. தகவல் ஆ. தேவராசா, பருத்தித்துறை.
2, இராஜகோபால் - வல்வெட்டித்துறையிலிருந்து அமெரிக்கா வரை கப்பலோட்டிய தமிழர்கள். யாழ்ப்பாணம், 1984, ed, 7-8,

Page 34
48
ஆ. "இத்துறைமுகத்திலிருந்து வெல்வெட்" என்ற பட்டு ஏற்று மதி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது, வேறுநாடு களிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த "வெல்வெட்?? வல்வெட்டித்துறைக் களஞ்சியங்களில் நிறைத்து வைக் கப்பட்டு, ரோம், எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டனவாம். வெல்வெட்டுக்குப் பேர்போன இடமாகத் திகழ்ந்தமையால், வெல்வெட்டித்துறை என அழைக்கப்பட்டு நாள்டைவில் அது வல்வெட்டித்துறை எனப்பெற்றது.”*
வல்+வெட்டி+துறை என்ற சொற்கள் தரும் விளக்கத்தின் அடிப் படியில் இடப்பெயர் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. யாழ்பாடி என்ற பாணனுக்கு மணற்றி என்ற இடம் வாலசிங்க மகாரா சஞற் பரிசாக அளிக்கப்பட்டதும், யாழ்பாடி யாழ்ப்வாணத்தில் (மணற்றி) வந்து குடியேற முற்பட்டபோது, தான் அழைத்து வந்த ஐந்து வகைத் தேவர் குலத்தலைவர்களுள் வல்லித்தேவன் என்பவனே வல்வெட்டித்துறைப்குைதியிற் குடியமர்த்திஞன். இந்த வல்லித்தேவனுக்கு அளிக்கப்பட்ட இடமே வல்வெட்டித்துறையா
Øst AS. V
y இவ்வல்லித் தேவனுக்கு ஆடு மாடுகள் பட்டியாக இருந்தன என்றும், இவ்விடத்திற் படகுகள் கட்டுந்துறையும் இருந்தமை யாலும் இவ்விடம் ( வல்லி+பட்டி+துறை ) வல்லிபட்டித்துறை யாக வழங்கிவந்து காலப்போக்கில் வல்வெட்டித்துறையாயிற்று என்றும் கூறப்படுகிறது. இப்பெயர்த் தோற்றத்திற்கு இன்னு மொரு காரணம் வருமாறு கற்பிக்கப்படுகிறது தென்னிந்தியா விற் பல்லவர் ஆட்சி நடைபெற்றபோது, அவர்களில் ஒரு பிரி வினரான வல்லவர் என்போர் இங்கு வந்து தாமே வெட்டி உரு வாக்கிய துறையே (வல்லவர் வெட்டியதுறை ) வல்வெட்டித் துறை என்று பெயர் பெறுவதாயிற்று. ஆனல் இதற்கான ஆதா ரம் தமிழகத்திலோ, இலங்கையிலோ இருப்பதாகத் தெரிய வில்லை. 1617ஆம் ஆண்டில் இவ்விடம் வல்லை" எனவழங்கப் பட்டமையை இங்குள்ள கோயில் இடாப்புக்கள் சான்றுபடுத்து கின்றன. ஆட்சியாளர்களின் கோயில் இடாப்புக்களில் முக்கிய மாக முத்துமாரியம்மன் ஆலயக் குறிப்பில் "வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோயில் அக்கால மணியகாரரான வேலாயுத
l. மேலது: Euáŝ, 9-10.

49
புண்ணியர் என்பவராற் கட்டப்பட்டது” என்ற செய்தியும் அறி யப்படுகிறது. எனவே 1795இல் வல்வெட்டித்துறை என்ற பெயர் வழங்கியமை சர்ன்றுபடுத்தப்படுகின்றது.
வல்வெட்டித்துறையிலே பின்வரும் குறிஞ்சிப் பெயர்கள் வழக்கிலுள்ளன: புழுவெட்டியந்துறை (மல்லிகைத்தெரு). பெரிய கல்லடி (மதவடி), நெடியகாடு, நெருஞ்சிக்காடு, கட்டைக்காடு, ஆனைவிழுந்தான், ஊரிக்காடு, கொண்டைக்கட்டைச் செட்டியூர், ஊறணி, ஊரீநுழையன்தெணி, தெணியம் பை, வித்தன. தீரு வில், வேவில், கந்தவனம், நிக்கொழு முதலியனவாகும்.
புழுவெட்டியந்துறை என்ற இடம் வல்வெட்டித்துறையின் கடற்கரையை அடுத்துக் காணப்படுகிறது. இங்கு புளியமரங்கள் மிகுந்து காணப்பட்டமையால் இவ்விடத்தின் பழைய பெயர் புளியங்காடு எனவழங்கிற்று. பின்பு இங்கு வாழ்ந்த மீனவர் தம் செய்கையால் இப்பெயர் மாற்றம் பெறுவதாயிற்று. தூண்டில் மூலம் மீன்பிடிப்போர், மீனுக்கு இரையாசக் கடற்கரையிற் குழி களை பெட்டி, மண்புழுக்களைப் பெற்றனர். இதனல் இவ்விடம் புழுவெட்டியந்துறை எனக் காரணப்பெயரால் வழங்கலாயிற்று. மேலும் இவ்விடத்தில் முதன்முதலாகக் கோயில் ஒன்று கட்டப் பட்டது. அதனல் இவ்விடத்திற்கு ஆதிகோவிலடி" என்ற பெயரும் வழங்கிவந்துள்ளது. காலப்போக்கில் இப்பெயரும் கை விடப்பட்டு "மல்லிகைத்தெரு’ என்ற பேயர் சூட்டப்பட்டுள் ளது. எனவே குறிப்பிட்ட ஒர் இடம் இயற்கைப் பெயரால் ஆதி யில் வழங்கப்பட்டு, பின்பு தொழில் நிமித்தமாகப் புதுப் பெயர் பெற்று சமயம், கல்வி, கலாசார வளர்ச்சி என்பவற்ருல் மேலும் பெயர் மாற்றம் பெறும் என்பதை இவ்விடப்பெயர் சான்று படுத்துகின்றது. (புளியங்காடு->புழுவெட்டியந்துறை->ஆதிகோயி
லடி-அமல்லிகைத்தெரு)
...:
பெரியகல்லடி என்ற இடத்திற் பெரியதொரு கல் காணப் பட்டது. அதனல் இவ்விடம் பெரிய கல்லடி என்ற பெயர் கொள்வதாயிற்று. இப்போது இக்கல் அகற்றப்பட்டு மழை நீரைப்போச்கும் பொருட்டுப் புதிதாக மதகு ஒன்று கட்டப்பட் டுள்ளது. அதனுற் பெரிய கல்லடி என்ற பெயர் மறைந்து மதவடி என்ற புதுப்பெயர் வழங்கி வருகின்றது.
1. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்து வரலாற்றுத்துறை மாணவி செல்வி. இ. தங்கவடிவேல் 1979இல் மேற்கொண்ட கள ஆய்வேடு தரும் செய்திகள்

Page 35
50
நெடியகாடு என்ற இடத்திற் புராதன விநாயகர் ஆலயம் அமைந்திருக்கின்றது. இங்கு நீண்டுயர்ந்த சவுக்கு மரங்கள் பண் டைநாளில் வளர்ந்து காணப்பட்டமைபால் நெடியகாடு” எனப் பெயர் வழங்கலாயிற்று. அம்மரங்களின் நினைவாக இ ன் றும் இரு முதிய சவுக்கு மரங்கள் காணப்படுகின்றன. இங்கும் ஒரு நீரூற்று அமைந்துள்ளது. 1905 இல் இவ்விடம் ** மண்டபம் " என்ற பெயரால் வழங்கிற்று என அறியப்படுகின்றது ( எஸ். கதி ரேசு 1905 51 ) . யானை விழுந்தான் எ ன் ற இடப்பெயரும் நோக்கத் தக்கதாகும். பண்டை நாளிற் காங்கேசன்துறை, வல் வெட்டித்துறை முதலிய துறைகளினூடாக யானை ஏற்றுமதி நடைபெற்றிருக்கலாம். அவ்வாறு கொண்டுவரப்பட்ட யானை களில் ஒன்று வீழ்ந்திறற்த இடம் "* யானைவிழுந்தான் " என்ற பெயரைப் பெற்றிருக்கலாம்.
கொண்டைக்கட்டை என்ற குறிச்சிப் பெயர் மரப்பெயராக அமைந்துள்ளது. கொன்றை + கட்டை = கொன்றைக்கட்டை > கொண்டைக்கட்டை எனத் திரிந்துள்ளது. கொன்றை மரங் கள் நிறைந்து நின்ற பகுதியில் அம்மரங்கள் அழிக்கப்பட்டபின், எஞ்சி நின்ற மரஅடியின் பெயரால் அவ்விடம் அழைக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கங் பால் நெடிய காடு, ஊரிநுழை பன்தெணி என்ற குறிச்சிகளுக்கிடையில் உள்ள ஊறணி என்ற குறிச்சிப் பெயர்க்காரணம் விதந்தோதத்தக்கதாகும். இங்கு கடற் கரையுடன் தொடர்புடையதாய்ப் பாழடைந்த ஒரு நீர்ச்சுனை காணப்படுகின்றது. வல்வெட்டித்துறையின் கிழக்கெல்வியில் அமைந்துள்ள இந்நீரூற்று பண்டை நாளில் ஊருணியாகப் பயன் பட்டு மக்கள் பேச்சு வழக்கில் ஊறணி எனத் திரிந்திருக்கலாம்.
ஊரிநுழையன்தெணி என்ற குறிச்சிப் பெயரை நோக் கும்போது ( ஊரி + விளை + தெணி) அப்பகுதியிற் கிணறு தோண்டும்போது நிலத்தின் அடியில் ஊரிகள் அதிகபாகக் காணப் பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
செம்னாடு என்ற குறிச்சியை அடுத்து "நிக் கெர மு ?? என்ற ஓரிடம் காணப்படுகிறது. 1880 ஆம் ஆண்டுக்குரிய இப் பகுதிக் கோயில் தோம்புகளில் இவ்விடம் " நெற் கொழு? எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இப்பகுதி தெற்செய்கைக் குரிய இடம் என்ற அடிப்படையில் நெல் + கொழு - நெற்கொழு என்ற பெயரால் வழங்கி, அது நிக்கோழு என மருவியிருக்கலாம், (கொழு = கலப்பைக்கொழு)

51
* வில் ஈற்றுப் பெயர்கள்
வில் என்ற சொல்லுக்குப் பல்வேறு பொருள்கள் கூறப்படு கின்றன. வில் - விற்றல் (குறள் - 280 ), அம்பு எய்தற்குரிய கருவியாகிய வில் ( தொல் பொரூன் - 638 ), வில்லின் நான் (இலக்கணவிளக்கப்பாட்டியல் - 608, உரை பக். 574), வான வில் (நெடுநல்வாடை 109), ஒளி (சீவகசிந்தாமணி 2959 ), வில்மாடம் - விற்போல் வளைந்த கட்டடப் பகுதி; வில்யாழ் (பெரும்பாரூற்றுப்படை 182), வில்லரணம் ( முல்லப்பாட்டு 42) முதலான தொடர்களும் வழக்கிலுள்ளன (த. லெ. 6 3708 ). கிழக்கு இலங்கைத்தமிழரின் பேச்சு வழக்கில் வில் என் பது பெரிய குளத்தையும், நீர்த்தேக்கத்தையும் குறித்து வழங்கு கின்றது. வில் என்ற சொல்லே சிங்களத்தில் வில ? என்ற சொல்லாகக் குளத்தைக் குறிக்கிறது. வளைந்த இடத்தை அல் லது வளைந்து நீர் தேங்கி நிற்கும் இடத்தைத் தமிழிற் காரணப் பேயராக " வில் ' என்பது குறித்து வழங்கிற்று. இவ்வாறிருக்க யாழ்ப்பான இடப்பெயர் பற்றிய தம் கட்டுரையில் எஸ். சபா ரத்தின முதலியார் 48 தமிழில் ஊர்ப்பெயர் விகுதியாக வில் ? என முடிவுறும் போது எவ்வித அர்த்தமுமில்லை '1 என்று கூறி ஞர். அவருக்கு முன்பு யாழ்ப்பாண இடப்பெயர் பற்றி எழுதிய ஹோர்ஸ்பரோ என்பவரும் அவரைப் போன்றே தமிழில் இடப் பெயர் இறுதியாக வரும் வில் " என்பதற்கு எவ்வித பொருளும் இல்லை எனத் துணிந்து எழுதிஞர் ( Horsbourgh - 1916 55 ),
அக்கட்டுரையாளர் இத்தாவில், இணுவில், உடுவில், கெரு டாவில், கொக்குவில், கோண்டாவில், நுளுவில், மட்டுவில், மந்துவில், மல்வில், மிருசுவில், முகவில் ஆகிய 12 ஊர்ப் பெயர் களைத் தந்து இவையாவும் சிங்களப்பெயரின் சிதைவாகத் தமி ழில் வழங்கின என்ருர். ஆயினும் அப்போதிருந்த தமிழிறிஞர் இதனே மறுக்கத்துவவியாத போது, ஜே. பி. லூயிஸ்? என்ற ஆகி கில அறிஞர் அக்கருத்தை மறுத்து, இதனை நுணித்து ஆராய வேண்டும் என்றும், இது போன்ற பெயர்கள் மன்னுர் மாவட்
1. The suffix will has no meaning in Tamil as part of a Village name, while in sinhalese it has an appropriate meaning.'" Sabaratna Muthaliyar, 1917 :
p, 170. 2. J. P, Lewis, 1917, p. 171,

Page 36
52
டத்தில் வில் ', ' வில்லு' என்ற ஈற்றையுடையனவாக உள் ளன என்றும் கூறினர். ஆனல் அதேயாண்டில் இடப்பெயர் பற்றி எழுதிய சுவாமி ஞானப்பிரகாசர், 1916 இல் ஹோர்ஸ் பரோ குறிப்பிட்ட 12 ° வில் ஈற்றுப் பெயர்களுடன் மேலும் பின்வரும் 12 பெயர்களேக் குறிப்பிட்டார். கண்டு வில், காவில், கூவில், கொணுவில், சுளுவில், தளுவில், துலாவில், நந்தாவில், நீவில், பண்டாவில், யாவில், வேவில் என்பன அவை. ஞானப் பிரகாசரும் ஹோர்ஸ்பரோ கருத்தை அவ்வாறே ஏற்று இப் பெயர்கள் யாவும் சிங்களப்பெயரின் சிதைவென்முர்.1 இதனைச் சாதகமாக்கிக் கொண்ட ஹோர்ஸ்பரோ 1917 இல் வருமாறு கூறியதில் வியப்பில்லை, W י
* Fr. Gna napragasar accepts my articls as placing beyond dout the fact of a sinhaleæse occupation of the Jaffna peninsula antecedent to the tamil period.' ( Horsbourgh : 1917 173 )
இக்கூற்றிலிருந்து சுவாமி ஞானப்பிரகாசர் உட்பட சகல அறி ஞர்களும் யாழ்ப்பாண இடப்பெயர்களுக்குச் சிங்கள மூலம் கற்பிக் கும் நோக்கத்துடன் தம் ஆய்வை நடத்தியிருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது,
தமிழகத்திற் செங்கற்பட்டு மாவட்டத்தில் * விற்கோலம் ? என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடப்பெயர் பற்றிக் குறிப் பிடும் கரு. நாகராசன், கூவம் " என வழங்கும் நிலையிற் செங்கற்பட்டு மாவட்டத்தில் உள்ள் இடம் இது என விளக்கம் கூறுகின்றர்?, கூவம், வில்: குளம். பல்லவர் காலத்தில் இப் பெயர் வழங்கிற்று 8 சோழர்காலத்திலே நடுவில்நாடு " ஜெயங்
1. சுவாமி ஞனிப்பிரகாசர், 1917 :பக் 168.
2. கே. பகவதி. இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள் (தொகுதி -
இரண்டு) 1984 பக் 262.
3. "முந்தினன் மூவருண் .சிந்துவான் உறைவிடம் திருவிஸ்
கோலமே?” ( சம்பந்தர் தேவாரம் 28.5)

23.
கொண்ட சோழ மண்டலம் எனப் பெயர் பெற்றிருந்தது என அறியப்படுகின்றது. அங்கும் வில் என்ற சொல் இடப்பெயரு டன் இணைந்து வரக்காணலாம்.
மேலே எடுத்துக் காட்டி ய வ ற் ரு ல் வில் ’ என்பது தமிழ்ச்சொல் என்பதும். அது வில் போன்றமைந்த குளங் க% !ச் சுட்டவும் பயன்பட்டது என்பதும், குளங்களைச் சுட்டிய * வில் ஈற்றுப்பெயர்கள் குளங்களுள்ள இடங்களயும் இருமடி ஆ85 பெயராகக் குறித்து நின்றதும் புலனுகின்றன? இக்கருத்துக் கலைா டிேலும் சான்று படுத்துவதாகக் பொ. இரகுபதி அவர் களின் சுற்று அமைவதால், தம் மதம் நிறுவுதல் என்னும் உத்திக் கமைய அவர் கருத்தை ஈண்டுத்தருதல் பொருத்தமானது :-
• Vil=Pond / Tank. Vill is a natur ally formed, shallow water - stagnant spot, converted into a pond by erecting а bow - like bund. This was a primitive mode of tank. irrigation practiced since megalithic times. The term originated from the Tamil word vil for bow it became vila in Sinhalese. In the place names, vil mostly comes as suffix. The prefix of such names usually denote a fauna or flora associated with the pond. The names of these ponds became the names of the villages. This is a pop a lar place — name suffix in Jaffna ʼ ( P., Ragupathy : 1987 : , p p. 22. 213).
1. “ The Vanniars were originally a group of semi - peasant forest dewellers who inhabited in the forest in territories between the Cola country and Paar - Pennar river valley of Jeyankondasolamandalam Naduvil Nadu was the name by which that tract was known by during Cola period ” Venkata Raghatham; Tamil Civilization, Vol. 5, no, 3. p. 94.
2. சிகிரிக் குன்றின் அயற்பிரதேசமான பிதுரங்கலப் பகுதியிற் கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டச் சிதைவுகள் பெருங்கற் பண்பாட்டுக் காலத்தவை (கி. மு. 3. நூ. ) எனக் கருதப் படுகின்றது. பிற்காலத்திற் காசியப்பன் அ  ைமத்த சிகிரிக் குகையில் காணப்படும் 685 பாடல்களில் 484, 543, 550 558 ஆகிய பாடல்களில் “வில்" என்ற சொல் இடம் பெற் றுள்ளது. குளமும் குளம் சார்ந்த பகுதியையும் இச்சொல் குறிப்பதாக ஆ. தேவராசன் குறிப்பிடுதலும் நோக்கற்பாலது. * சிகிரியாவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ்க் கவிதைகள் ?? வீரகேசரி, 27-11-88 பக். 1,

Page 37
54
கணுவில்: (வடம, தெ. மே. ப. 37 6)
இது நெல்லியடிப் பட்டின சபைப் பகுதியிலுள்ள ஓரிடம். பண்டை நாளில் இப்பிரதேசங்களில் வல்லிபுர ஆழ்வாரிசுவாமி கோயிலின் செல்வாக்குப் பரவி இருந்த நிலையில் இவ்விடம் கண் ணன் + வில்-கண்ணுவில் என்றிருந்து, பின்பு கண்ணுவில்) கணு வில் ஆயிற்றெனவும் நோக்கலாம்.
கெருடாவில் (தென்ம 21-3: வடம. வ. கி. 128. 1)
கருடன் >கெருடன்) கெருடா + வில்=கெருடாவில், கருடப் பறவை ஒன்றை வழிபட்ட இடம் பின்ஞளிற் கெருடா வில் ஆயிற்று என்பர். வடமராட்சியிலும் தென்மராட்சியிலும் இரண்டு இடங்க ள் இப்பெயரால் அழைக்கபடுதல் நோக்கற்பாலது. பண்டை நாளிற் பொன்ஞலை, வல்லிபுரம் முதலான இடங்களில் விஷ்ணு கோயிலும் வழிபாடும் நிலைபெற்று வந்துவினன. அப் பின்னணியிற் கருடன் முதன்மை பெற்று, இவ்விடங்கள் கருடன் வில் என வழங்கப்பட்டிருக்கலாம். ከ
சாவகச்சேரிப் பகுதியிலுள்ள ஒரு குளத்தருகிற் கருடப் பறவையொன்று வாழ்ந்து வந்ததாகவும், அதனை அப்பகுதி மக் கள் வழிபட்டு வந்ததாகவும், அதஞல் அக்குளமும் இடமும் "கருடாவில்" எனப்பெயர் பெற்று, வழக்கிற் கெருடா வில் எனத் திரிந்ததென்றும் கூறப்படுகிறது.
பருத்தித்துறைலிருந்து கடற்கரையோரமாகப் பொன்னுலைக் குச் செல்லும் வீதியில் வல்வெட்டித்துறைக்கு மேற்கே 2மைல் தொலைவிற் கெருடாவில் அமைந்துள்ளது. இங்கே மண்டபம் எனப்படும் குகை ஒன்றும் காணப்படுகிறது.
சிலுவில் (தென்ம: 110.5)
மட்டுவிற் கிராமத்தின் வடக்கேயுள்ள ஒரு பகுதி கிலுவில் ஆகும். சிலு+வில் சிலுவில், சில்-வட்டப்பொருள்; சில்லெனல்: குளிர்தல் சிலும்பல் ஒலித்தல், ஒலியுடன் நீர்முதலியன கிளம் புதல் தமிழகராதி: 130 ) சின்) சிலு. எனவே சிலுவில் என்னும் போது சிறிய குளம், குளிரும் குளம், ஒலி எழும் குளம் என்ற பொருள்கள் தொனிக் 1 ன்றன. சலவுதல் என்பது சுழலுதல் சுழற்றுதல். சூழ்தல் என்ற பொருள் தருதலாற், சுவுை+வில்ை கலாவில், என வழங்கி கிலுவில் எனவும் திரிந்திருக்கலாம்

55
நுணுவில் (தென்ம. 91 : 1)
சாவகச்சேரி நகரின் மேற்குப் புறமாக நுணுவில் அமைந்துள் ளது. நுணு + வில்; நுண30:தவளை நுணவை-எண்ணுேலே, மா! நுளு=ஒருவகை மரம்.1 இங்கு நுணு மரங்கள் அதிகமாக க் காணப்படும் நிலையில் இப்பெயர் தோன்றியிருக்கிறது, "உணு வில்" என்றும் இதனே உச்சரிப்பது வழக்கம்.
நுணுவில் (வடம. தெ. மே. 37.4)
நுணு+வில்=நுணுவில். நுணு>நுணுகுதல்=மெலிதல், வற்று தல், அருகுதல், குறைதல் என்ற பொருளில் இச்சொல் வழங்கிற்று, எனவே நுணுவில் என்பது வற்றும் குளம் அல்லது பெரிதாய் இருந்து சிறிதாக மாறிய குளம் எனப்பொருள்படும். இங்குள்ள நுணுவிற்குளம் ஆழமானதாகும்.? இது பிள்ளையார் கோயிலுக்கு அருகேயுள்ளது. வயலும் வயல் சூழ்ந்த இடமுமாக நுணுவில் விளங்குகின்றது. நுணுவில் என்பது வற்றுங் குளம் எனப் பொருள்தரலால் வற்றுதலைத் தடுக்கும் முறையிற் பின்னர் இதனை ஆழமாக்கினர் போலும்.
பெரிய மந்துவில், ( தென்ம. 118, 4)
இது மந்து விற் கிராமத்தில் ஒரு பகுதியாகும். (மந்துவில் இடப்பெயர் விளக்கம் பார்க்க பக். 57-59).
மட்டுவில் (தென்ம, 100, 2)
சாவகச்சேரியை அடுத்துள்ள நுணுவில், மந்துவில், சரசாலை, கைதடி, கல்வயல் ஆகிய இடங்களுக்கு இடையே அமைந்துள்ள தோட்டப்பயிர் வளங்களுடைய குடியிருப்புப் பகுதியே மட்டு விற் கிராமம். இக்கிராமத்தின் கிழக்கெல்லையில் ஐஞ்சந்தி
1. நுணு=மஞ்சனறிமரம், தனக்குமரம் (மதுரைத்தமிழ்ப் பேர
கராதி. 274 ) 'ኣ
2. இங்குள்ள குளம் 'நுணுக்கன்குளம்" எனவும் பெயர்பெறும்
நுணுக்கப் பிள்ளையார் கோயிலும் இங்குண்டு. நுணுக்கம்குற்றமற்றதாக இருத்தல்: நுணுக்கம் பார்த்தல்=குற்றம் கண்டுபிடித்தல். இப்பிள்ளையார் கோயிலுக்குச் செல்வோர் மிகவும் தூய்மையாகவும், மனக்கட்டுப்பாட்டுடனும் செல்லு வர் என்றுங் கூறப்படுகின்றது. ( தகவல்: செ. கிருஷ்ண ராசா-யாழ்ப்பாண பல்கலைக்கழகம்),

Page 38
56
ஒன்றுளது. இங்கிருந்து சாவகச்சேரி, கொடிகாமம், பருத்தித் துறை, சுண்ணுகம், நுணுவில் ஆகிய ஊர்களுக்குத் தெருக்கள் செல்கின்றன.
இங்கு சிறுசிறு குளங்கள் பல காணப்படுகின்றன, நீர்மட்மாக* அல்லது மட்டுமட்டாக ( சிறிதளவு) நிறைந்து நிற்கும் குளம் என்ற பொருள் விளக்கமும் மட்டுவிலுக்குக் கூறலாம் மட்டு--தேன். இவ்விடம் முன்னர் பெருங்காடாக இருந்த வேளை யில, இங்கு தேன் பெரியளவிற் சேகரிக்கப்பட்ட தெனறும், அத னலே தேன் நிறைந்த இடம் என்ற பொருளில் மட்டுவில் என்ற பெயர் ஏற்பட்டதென்றும் கூறுவர்?
இக்கிராமம் "சந்திர புரம் என முன்னர் வழங்கியிருக்க வேண்டும் என்பது மட்டுவில்ப் பிறப்பிடமாகக் கொண்ட !AG 3 ජිණ දේ வேற்பிள்ளை பாடிய, ஈழ மண்டல சதகத்தால் அறியப்படுகிறது.4 அந்நியராட்சிக் காலத்திலேயே இப்பெயர் மட்டுவிலாக மாறியிருக் கலாமென்பர்.
சோழர் காலத்தில் இவ்விடம் "மட்டிவால்" (mattival) என்ற பெயரால் அழைக்கப் பட்டமை மூன்றும் இராசராச சோழ னின் திருவாலங்காட்டுக் கல்வெட்டொன்றினல் அறியப்படுகிறது.8 இங்கு சோழப்படைகள் நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன என அக்கல் வெட்டுக் கூறுகின்றது. எனவே இப்பிரதேசத் திற் சோழர் கால வரலாற்று நிகழ்வுகளையும் வரலாற்றுத் தொடர்புகளையும் வெளிப்படுத்தப்கூடியதாக ஆய்வுகள் மேற் கொள்ளப்படவேண்டியது அவசியமாகின்றது.
1. இது கனகன்புளியடிச்சந்தி என்று பெயர் பெறும். 2. அ-"மட்டம் பெய்த மணிக்கலத் தன்னசுவை’ (குறுந்- 193) ஆ-மட்டு- மட்டம், தாழ்வு, குறைவு ( 5. லெ. 5.393 ) 3. மட்டுநகர்-மட்டக்களப்பு என்ற பெயர்களுக்கு விளக்கம் கொடுக்கும் போது தேன்பாயும் நகர் என்றும், மட்டமான களப்பு என்றும் சொல்லும் மரபும் நோக்கற்பர்லது (இ. பாலசுந்தரம். 1979:29-30). S. 4. சந்திரபெளலீசர்சதகம் என்னும் ஈழ மண் ட ல ச த கம், ( ஆனந்த வருடம் ) சென்னைப்பட்டணம் முன்னுரை பக்ரு. 5. Epigraphica Indica: XXII a 86 - 92, University of Ceylon, History of Ceylon; Vol. I. Fart. II, P. 483.

57
இக்கிராமத்திற் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் கோயி லொன்றுளது. இத்தெய்வத்திற்கு இப்பெயர் வந்தமைக்கான கதைகளும் இங்கு வழங்குகின்றன.1
இக்கிராமத்தின் வடக்கெல்லேயில் ஆயம்" என்ற ஓரிடமுண்டு, போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்தில் அந்த இடத்தில் வரி (ஆயம்) அறவிட்டனர். அதனுல் அவ்விடம் "ஆயம்" என்றுயிற்று. மட்டு வில் வடக்கேயுள்ள வங்களாவடி, தோப்பு என்ற இடங்களும் அரசியலாளருடன் தொடர்புபடுத்தி எண் ண த் த க் கன வே . கப்பல் தோட்டம் என்ற குறிச்சியுமிங்குள்ளது. இங்கே 2ஆம் உலக மகாயுத்த காலத்தில் ஆகாயவிமானம் பழுதடைந்து வீழ்ந் ததாகவும் அதன் நிக்ாவாக இவ்விடம் கப்பல் தோட்டம் என வழங்கிற்று என்றும் கூறப்படுகிறது. இங்குள்ள குட்டிச்சிதம்பரம் என்ற குறிச்சியில் தமிழகத்துச் சிதம்பரக் கோயிலுக்குரிய தர் மக்காணிகள் இருப்பதஞல் இப்பெயர் தோன்றிற்று, கிராய் என் பது நீர்நிலை (குளம் ) வாகும். இங்கு உப்புக்கிராய், முதலைக் கிராய், பெரியகிராய், சின்னக்கிராய் என்ற இடங்களுமுள.
மந்துவில் ( தென்ம, 118, 8 )
இது கொடிகாமத்திற்கு வட மே ற் கே அமைந்துள்ளது. மந்து+வில்=மந்துவில் மந்து என்பதற்கு பல்வேறு பொருள் விளக்கம் கொடுக்கப்படுகிறது. மத்தி>மந்து ஆ விற் றெனக்
1. ஒல்லாந்தரின் ஆட்சிக்காலத்தில் ஒவ்வொரு சைவனும் ஒல் லாத்த அதிகாரிகளுக்கு இறைச்சிக்காக ஒவ்வொரு பசுமாட் டைக் கொடுக்க வேண்டும். அத்துடன் மாடுகளை வெட் டும் உரிமையும் அரசுக்கே இருந்தது. இது ஒல்லாந்தர் சட்டம் தனிப்பட்ட ஒருவன் மாட்டை வெட்டி அதன் தைேயப் புதைத்து விட்டான். இதனை அறிந்த அதிகாரி கன் அதனைச் சோதனையிட்டனர். மாட்டை வெட்டியோன் அம்மன் அருளை வேண்டினன். அம்மன் அருளால் மாட் டுத்த ைபன்றித்தல்யாக மாறியது. இதன் மாற்று வடிவ மாக இன்னுமொரு கதை வழங்குகின்றது, மாடு திருடிய ஒருவன் அதன் வெட்டிய பின்பு அதன் தலையைக் கோயில் வளவினுட் புதைத்துவிட்டு, பிடிபடாதிருக்க அம்மன் அருளை வேண்டியதாகவும், மாட்டுச் சொந்தக்காரர் இதனை அறிந்து தோண்டிப் பார்த்தபோது அது பன்றித்தலையாகக் காணப் பட்டதாகவும் கூறப்படுகிறது. இவ்விரு கதைவடிவங்களும் அவ்வூர் மக்கனாற் பெரிதும் வழங்கப்படுவதோடு, நம்பவும் படுகின்றன.

Page 39
58
கொண்டு, மந்திகள் நிறைந்த் காட்டுப்பகுதியே மந்திவில் என வழங்கிப் பின் மந்துவில் ஆயிற்று என்பாருளர். அவ்வாறு கூறு வதற்கேற்ப இங்கு பண்டைநாளில் பெருங்காடுகளும் இருந்திருக் கின்றன. இப்பின்னணியில் மட்டுவில்லுக்குச் சிங்களமூலம் கற் பித்துள்ளார் பூாழ்ப்பாண வைபவ கௌமுதி ஆசிரியர். வந்துரா என்பது சிங்களத்தில் மந்தியாகும். எனவே 'வந்துராவில’ என்ப தன் தமிழ்மொழி பெயர்ப்பே மந்திவில்" என வழங்கி, அது மந்துவில் ஆபிற்றென்ருர் (1918).
மந்து ஒருவகைச்செடி. இப்பின்னணியிலும் இதற்கு வரு மாறு விளக்கம் கொடுக்கலாம். காவிளா, மந்துச்செடி என்ப வற்றைப் புகையிலைப்பயிர் செய்கை தொடங்குமுன் திலத்தினுட் பசளையாகப் புதைக்கும் வழக்கமுண்டு. வடமராட்சிப் பகுதியினர் இங்கு வந்து மந்துச் செடி ஏற்றிச் செல்லும் வழக்கம் இருந் திருக்கிறது. எனவே மந்துச்செடிகள் பெரிதும் காணப்பட்ட இடம் மந்துவில் எனப்பெயர்பெறுதல் இயல்பே.
மந்தை + வில் எனப்பிரித்தும் பொருள் கூறுவர், மந்தை கள் பெரிதும் வளர்க்கப்பட்ட இடம் என்ற அடிப்படையில் இப் பெயர் தோன்றியது என்றும் கருதப்படுகின்றது.
- ஹோர்ஸ்பரோ (Hoursburgh-1916:55 ) இதற்கு மண்டு aidi ' (pond of mandu Tree cycas circinals) orax alari கம் கொடுத்துள்ளமையும் நோக்கற்பாலது.
இது மிகப்பழைமை வாய்ந்த குடியிருப்புப் பகுதியாக இருந் தது என்பது இங்கு காணப்படும் தொல்பொருட் சான்றுகளால் தற்போது நிறுவப்படுகின்றது. மந்து என்பது செடி, ஒரு வகைப் புல், பற்றைக்காடு எனப் பொருள் தருவதால் பண்டு குடியிருப் பாக இருந்து பிற்றைநாள் மந்துக்காடாகிய இடத்தைத் தூய தமிழில் மந்து வில் எனப்பெயரிட்டிருத்தல் பொருத்தமாகவே தோன்றுகின்றது. மந்துவில்லின் வடக்கே கல்வளை என்ற குறிச் சியும் ஒரு பிள்ளையார் கோயிலுமுள்ளன. இது “கோட்டை வாசல் பிள்ளையார் கோயில் " என அழைக்கப்படுகிறது. இங்கு பேரள விலான பழைய கட்டிட அழிபா டு கள் காணப்படுகின்றன.1 சுவாமி ஞானப்பிரகாசர் (1981) இப்பகுதிகளை நேரில் அவதானித்து எழுதியுள்ளார். குவைருேள் பாதிரியார் ( 1930 ) கருத்துப் படி
1. இங்கு காணப்படும் கட்டிட அழிபாடுகள், நாணயங்கள் பற்றி பொ. இரகுபதி (1987) விரிவாக ஆராய்ந்துள்ளார்.

59
யும் இங்கு கோ ட் ைட இருந்தது என்றும் அறியப்படுகிறது. கோப்பாயிலிருந்து தோற்றேடிய சங்கிலிமன்னன் இங்கு வந்து ஒளித்திருந்தான் என குவைருேஸ் குறிப்பிட்டுள்ளார்.
மந்துவில் என்ற ஊரின் கிழக்கேயுள்ள வீரக்காடு என்ற இடத்தில் பழைய அழிபாடுகள் காணப்படும் பகுதியில் 52 அடி உயரமான மண்கும்பி அமைந்துள்ளது. " அந்த இடத்தில் அரசி ஒருத்தியின் ஆபரணங்கள் ஒரு கிணற்றினுள் போடப்பட்டு, மண் குவிதலால் மூடப்பட்டுப் பூதங்களால் காவல் செய்யப்பட்டு வரு கின்றன, அங்கு மக்கள் நடமாடவே பயப்படுகின்றனர் " என ஞானப்பிரகாசர் ( 1921 119 ) எழுதியுள்ளமையும் காண்க.
மிருசுவில் (தென்ம. 1 11.3)
இது கொடிகாமத்திற்குக் கிழக்கே யாழ்ப்பாணம் - கண்டி வீதியில் அமைந்துள்ளது. மிரியல் - மிளகு, சிங்களத்தில் மிரிஸ் மிளகாய் ஆகும். எனவே சிங்களப் பெயராம் மிரிஸ் என்பதி லிருந்து மிருசு வில் என்ற பெயர் தோன்றித்றென்று பல ரும் விளக்கம் கூறுவர். ஆயினும் இப்பெயர் பற்றிய ஆய்வு விரிவாக மேற்கொளஞம் வரை முடிபான கருத்துக்கு வருதல் பொருத்தம் அன்று,2
இங்குள்ள குருக்கள் மாவடி, மன்னன் குறிச் சி, பழைய வாய்க்கால், பெரியான் ஓடை செம்பாடு, வேளாப்பள்ளம் முத லிய குறிச்சிப் பெயர்களை நோக்கும்போது மிருசுவில் என்பதற்குத் சிங்களமூலம் காணவேண்டிய அவசியமிருக்காது. மன்ன்ன் குறிச்சி இங்கு இருப்பதால் இது முரசுவில் என இருந்திருக்குமோ என்ற ஐயமுந்தோன்றுகிறது. வடஇலங்கையில் முரசு மோட்டை என்ற இடம் இருப்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாதுை. மன்னன் குறிச் சியில் அரண்மனை இருந்ததாகக் கர்ணபரம்பரைக்கதை ஒன்று வழங்குகின்றது. இங்கு இருபெரும் வாய்க்கால்கள் காணப்படு கின்றன இவற்றில் பழைய வாய்க்காற்பகுதியை அண்டிய குடி யிருப்புப்பகுதி பழையவாய்க்கால் " என வழங்குகிறது.
1. சுவாமி ஞானப்பிரகாசர் 1918; குமாரசுவாமி 1918; s, Gaspıt'ül ?siz&T 1918 : Horsburgh 1916; J. P. Lewis,
197. 2. மிசுரி> மிருசு எனத் திரிந்ததா எனவும் சிந்திக்கலாம்?

Page 40
50
ராமாவில் ( தென்ம, 10 2,3 )
தென்மராட்சியில் மீசாலை என்ற கிராமத்தின் ஒரு பகுதி யாக ராமாவில் அமைந்துள்ளது. இங்கு இப் பெயர் உடைய குளம் உள்ளது. இப்பெயர் விளக்கத்திற்கு இதிகாசத் தொடர்பு கற்பிக்கப்படுகிறது. இராம இராவண யுத்தம் முடித்துத் தாய கம் திரும்பிய இராமர் குழு வழியிலே தாகசாந்தி செய்யும் பொருட்டு இவ்விடத்தில் வில்ல்ை ஊன்றியபோது குளம் ஏற்பட்ட தாக வாய்மொழி மரபிற் கூறப்படுகின்றது. இக்கதை நிகழ்ச்சி யோடு தொடர்புடையதாக யாழ்ப்பாண நகரிலும் கிழக்கிலங் கையிலும் “வில்லுான்றி” என்ற இடங்கள் காணப்படுகின்றன. இத்தகு இதிகாசத் தொடர்புடைய பெயர்களின் தோற்றம் dište i வாழ் மக்களின் இதிகாசப் பற்றையும் பயிற்சியையும் காட்டுவன வாக அமைகின்றன என்பதில் ஐயமில்லை.
1. ஊரெழு கிராமத்தின் கிழக்கே வற் ரு த ஒரு சிறிய தீரூற்
றுண்டு, அதற்கு யாமா " என்பது பெயர்.

இயல் -4
நிலவியல்பு குறித்த பெயர்கள்
நிலவியல்பு, நிலத்தோற்றம் என்ற நிலைகளிலும் இடப் பெயர்கள் பெரிதும் ஆக்சம் பெற்றுள்ளன. பழங்காலத்து இடப் பெயர்களும் இப் பின்னணியிலேயே தோற்றம் பெற்று வழங்கி வந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. சங்க இலக் கிடங்களிலுள்ள பெரும்பாலான இடப்பெயர்கள் இதற்குச் சான் ருகின்றன. * தமிழ் இலக்கியம் ஐவகை நிலங்களுக்கேற்ற பெயர் ாசைப் பேசுகிறது. ஆறல் அவ்வரையறை எல்லாம் ம ய ங் கி க் கிடப்பதையும் பார்க்கி0ரும். இதற்குக் காலந்தோறும் ஏற்பட்ட நிலஅமைப்பு மாறுபாடுகள் காரணமாகலாம் "" ( கி. நாச்சிமுத்து 1983 58). நிலத்தோற்ற அடிப்படையில் " கலட்டி " என்றும் திடல் ? என்றும் பண்டை நாளில் பெயரி பெற்ற இடங்களிற் பல இன்று வளமானதும், சமமானதுமான நிலத்தோற்றத்துடன் காட்சி தருகின்றன. ஆயினும் அவ்விடங்களுக்கு அப் பழம் பெயர் களே இன்றும் வழங்கி வருவதைக் காணலாம். எனவே இடப் பெயர் ஆய்வின் மூலம் குறிப்பிட்ட இடங்களின் பழைய புவிய மைப்பு எவ்வாறிருந்தது என்பதுபற்றி அறியவும் வாய்ப்பு ஏற் படுகிறது.
“கல் முதல்நிலைப் ப்ெயர்கள்
பாறை, கல், மைற்கல், மணல் என்ற அடிப்படையில் இடப் பெயர்கள் ஆக்கம் பெறுதலுண்டு. கிழக்கிலங்கையில் அழகிய பாறை அமைந்த இடத்தை " அம்பாறை " எனவும், சொறிக் /கல் உடைய முனையைச் * சொறிக்கல்முனை ? என்றும், குறுமணல் நிறைந்த இடத்தைக் குறுமண்வெளி " என்றும் பெயரிட்டழைத் தனர். * கல்லை முதற்பொருளாகக் கொண்டமைந்த திண்டுக் கல் ’, ‘ ஆரைக்கல் முதலான ஊர்கள் தமிழகத்திலுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்திற் கற்பாரி கொண்ட நிலப்பகுதிகள் இருப்பதால் கல்லை முன்னெட்டாகக் கொண்டு பல இடப்பெயர் கள் அமைந்துள்ளன,
1. கே. பகவதி, இலக்கியத்தில் ஊர்ப் பெயர்கள் தொகுதி i
1984, Lurr ffišas.

Page 41
62
கல்லாகம் : ( தென்ம. 89, 4)
இது கைதடிப்பகுதியில் அமைந்துள்ள ஓரிடமாகும். இப் பகுதி க்ல் நிறைந்த பகுதியாக இருந்தமையாற் கல்லாகம் எனப் பெயர் பெற்றுள்ளது. இன்றும் இவ்விடம் கற்பூமியாகவே காணப் படுகிறது. கல்லகம் - கல்லாகம் என விரிந்தது. கல்லகம் -.மல் யைச் சுட்டும் சொல் என்கிறது சூடாமணி நிகண்டு (பக். 99. )
கல்லுவம் (வடம. தெ: மே 121, 1)
இது உடுப்பிட்டிப் பகுதியிலுள்ளது. கல் > கல்லு + அம் ம கல்லுவம், கற்றவரப் பாங்கான இடமே கல்லுவமாகும். வல்) வல்லுத்தரை வலிகாமம் ஆனது போற் கல் > கல்லு > கல்லு வம் ஆயிற்று. கல்லுவம் = கற்களைத் தோண்டி எடுத்த இடம் என்ற பொருளும் அமையும்.1
கல்வயல் : : தென்ம 21, 4. )
சாவகச்சேரிப் பட்டினசபை எல்லைக்குட்பட்ட ஓரிடமாகும். முரண்பட்ட இரு சொற்களின் இணைப்பால் இடப்பெயராக்கம் அமைந்துள்ளது. கற்பாராக இருக்கும் இந்நிலப்பகுயில் இங்கு வாழ் மக்கள் கற்களைத் தோண்டி எடுத்து, நிலத்தை வளமாக்கி தோட்டங்களாகவும், வயலாகவும் பயன் படுத்தி வருகின்றனர்.
கற்கோவளம் :( வடம. வ. கி. 141. 1)
கல் + கோவளம்  ைகற்கோவளம். கோவளம் : கடலுக் குள் நீண்ட தரைமுனையிலுள்ள ஊர் (த. லெ. 2 : 1198). எஸ். ஞானமுத்து (1972 : 149) கோவளம் என்பதற்குக் கிராமி யத் துறைமுகம் பாதுகாப்பான வளைகுடா எனப்பொருள் கூறு வதோடு, இதனைக் கோவை + குளம் எனப் பிரித்து, கோவை (Carcum Augstifolia) GT Gărp Lourt 'Gou Luruq-Lurrastů spjöss utili பெயரெனவும் விளக்கம் தந்துள்ளமையும் நோக்கற்பாலது. கேரளத்திலும் கோவளம் என்ற அழகிய கடற்கரையூருண்டு. இப்பெயருடைய ஓரிடம் சென்னையிலும் காணப்படுகிறது. வட இலங்கையிற் பருத்தித்துறைக்கு அண்மையிற் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள ஒரிடமே கற்கோவளம். இதனைக் கற்கோணம் ” எனவும் உச்சரிப்பர். * கற்கைநகர் ’ என்றும் இதனை எழுத்தாளர் பயன்படுத்துவர்.
1. உடுவில் கிராமத்திலும் கல்லுவம் என்ற ஓரிட முண்டு.

63
*கலட்டி ஈற்றுப் பெயர்கள்
கலடு'>கலட்டிக்கலட்டித்தரை, கற்கள் நிறைந்த தரையமைப் புடைய பகுதியைக் கலட்டி’ என்ப. யாழ்ப்பாண மாவட்டத்திற் கலட்டி என்ற பெயருடைய ஐந்து கிராமங்களும், அனேக குறிச்சிப் பெயர்களும் காணப்படுகின்றன. மட்டக்களப்பு வழக்கில் வயற் காணிகளில் வளம் குறைந்த வயல் நிலம் கலட்டி~ எனப்படும்
கலட்டி
இப்பிரதேசத்தில் தும்பளேயின் பகுதியாகவும், நெல்லியடிப் பட்டினசபையையின் ஏழாம் வட்டாரமாகவும், கரவெட்டி மேற் குக் கிராம சேவகரின் ஒரு பிரிவாகவும் கலட்டி என்ற பெயர் பெற்ற இடங்களுன. இப்பகுதிகளுள் சுண்ணும்புக் கற்களும் மக் கிக் கற்களும் கொண்டமைந்துள்ளன.
குழி’ ஈற்றுப்பெயர்கள்
குழி:நீர்நிலை, பள்ளம், வயிறு, பாத்தி, 2 அடிச்சதுரக் குழி 144 சதுர அடி முதல் 576 சதுர அடிவரை பற்பல இடங்களில்
வெவ்வ்ேருய் வழங்கும் ஒரு நில அளவு (த. லெ, 2. 1032).
குழிந்த பகுதியிலுள்ள குடியிருப்பு குழி என்றிருக்கலாம் எனக் கருத்துத் தெரிவிக்கிருர் டாக்டர் கே. பகவதி (1984 : 284, இம் மாவட்டத்திலுள் குழி ஈற்றுப்பெயர்கள் 'பள்ளம்" என்ற நிலத் தோற்ற அடிப்படையிலேயே தோற்றம் பெற்றுள்ளன.
கற்குழி (தென்ம.107. 3.)
கல்+குழி கற்குழி. சாவகச்சேரியின் தென் பகு தி யாக அமைந்துள்ள இக்கிராமத்தின் நிலம் கற்பாறைகளைக் கொண்ட தாகும். இங்கு வாழ் மக்கள் நிலத்தைத்தோண்டி கல்லை குழிபறித் தெடுத்து விற்று வருகின்றனர். அங்கு கற்குழிகள் பலவற்றைக் காணலாம். (குழி=கிடங்கு)
நாவற்குழி. (தென்ம. 91. 3)
இவ்விடம் கைதடிக்குத் தெற்கே அமைந்துள்ளது. தாவல்+ குழி-நாவற்குழி. இதனை மரப்பெயரடியாகப் பிறந்த பெயர் என்றும் கூறலாம். நாவல்மரத்திற் குழிநாவல் என்ற ஒருவகையு முண்டு. அவ்வகையினடியாகப் பிறந்து, அதே வேளையில் குழி நாவல் என்ற பெயர் முன்பின்னகத் திரிந்து நாவற்குழியாக மாறிற்று என்றும் பொருள் கொள்ளலாம்.

Page 42
64
இக்கிராமத்திற்குச் சம்புகுண்டம் என்ற பெயரு முண்டு. இது நாவற்குழி என்பதன் வடமொழியாக்கமாகும். நாவல் மரங் 4ளும் பள்ளங்களும் நிறைந்த இடம் , என்ற அடிப்படையில் நாவல் + குழி=நாவற்குழி எனப் பெயர் ஏற்பட்டதென்றும் கருத லாம், இதன் புவியியல் அமைப்பும் தாவர வளமும் இதனைச் சான்றுபடுத்துகின்றன. W w
நாவற்குழியின் ஒரு குறிச்சிப் பெயர் சாவாங்கொட்டை ୩rgir பதாகும். சாவகர் கோட்டை>சாவாங்கொட்டையாயிற்று, சாவ கச்சேரியையடுத்துள்ள இப்பிரதேசத்தில் சாவகர் கோட்டை அமைந்ததாகவும், அக்கோட்டை காலப்போக்கில் அழிந்து அவ் விடம் இப்போது திடலாகக் காணப்படு வதாகவும் அறியப்படு கிறது. எனவே கோட்டை இருந்த பகுதி சாவகர்கோட்டை என முன்னர் அழைக்கப்பட்டிருக்கலாம்.
‘தரை ஈற்றுப் பெயர்
தரை என்ற ஈற்று விகுதிப்பெயர் திராவிட நாகரிகத்திற் கேயுரிய மிகப்பழைய இடப்பெயர் என்பதை "முகிஞ்சதரா” (இறந் தோர்தரை ) என்ற இடப் பெயரால் அறிபலாம். தரை என்பது நிலம் என்ற பொருளில்வரினும், சிறப்பு நிலையில் சற்று மேடான நிலப்பகுதியைச் சுட்டுவதாகவும் வழங்குகின்றது.
வாய்க்கால் தரவை. (தென்ம 107. 11)
தரை-தரவை. வாய்க்கால் ஊடறுத்துச் செல்லும் பகுதி என்ற பொருளில் இப்பெயர் தோன்றிற்று.
திடல்" ஈற்றுப் பெயர்கள்.
மேட்டு நிலப்பகுதி-திடல் (திடர்), பீட்டி, மேடு எனப் பெயர் பெறும் திட்டு>திடல் திட்டு=மேடு, சிறுகுன்று, ஆற்றி டைக்குறை (த. லெ. 3 1868), தமிழகத்திலும் திடல் ஈற்று இடப்பெயர்கள் காணப்படுகின்றன. (உ+ம்: நடசெட்டித்திடல் மாளிகைத்திடல் : தஞ்சாவூர் மாவட்டம்)

65
அந்தணன் திடல் ( வடம. தெ. மே, 119 1 ، وهى (
இது கரணவாய்ப் பகுதியிற் பருத்தித்துறை-சாவகச்சேரி வீதியில் 8 ஆம் மைல் கல் எல்லையில் உள்ளது. இதன் ஒரு பக் கம் பரவைக் கடலும், மறுபக்கம் வயல்வெளிகளும், நடுவே குடி யிருப்பும் அமைந்துள்ளன. நிலத் தோற்றத்தின் அடிப்படையில் இப்பெயர் வந்ததென்ப. இங்கு முன்பு பிராமணர் வாழ்ந்ததா கக் கூறப்படுகின்றது. எருதிடல் (தென்ம 88. 1. )
இது கைதடிக்கிராமத்தை அடுத் துள்ள இடமாகும். எரு+திடல் எருத்திடல், காலப்போக்கில் இது எருதிடலாக வழங் கிற்று. ( எரு - பசளே. உரம் )
இப்பகுதியில் ஆடு, மாடு என்பன பெரிதும் வளர்க்கப்பட் டன. அவற்றின் கழிவுப் பொருட்களைக் குவித்து வைத்த இடம் எருத்திடலாகக் காணப்பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம் இப்பகுதி இப்போதும் திடலாகவே காணப்படுகின்றது. தென்னிந்தியாவில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள எருவாடி’ என்ற இடமும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.2
*பிட்டி ஈற்றுப் பெயர்கள்
பீடுKபிட்டி. பீடுன-தரிசுநிலம் (த. லெ. 5 2732), இலங் கைப் பேச்சு வழக்கில் மேடு என்பதைப் பிட்டி/ புட்டி என்பர். அதனை ஈருகக் கொண்டு பல இடப் பெயர்கள் அமைந்துள்ளன. இச்சொல் சிங்கள இடப்பெயர் ஈருகிய Hittiya அல்லது siddi என்பதிலிருந்து வந்தது என்பர் (ஞானப்பிரகாசர் 1917:168, குமாரசுவாமி 1917:52), ஆனல் ஜே.பி. லூயிஸ் இதனை மறுத்துள் ளமையும் நோக்கற்பாலது (191744). புலோலி தெற்கில் வெல் லப்பிட்டி என்ற ஒரு பகுதியும், வல்லிபுரக் குறிச்சியில் வல்லாப் பிட்டி என்ற சிறுபிட்டியும் காணப்படுகின்றன.
1. "பண்டைய ஈழத்தில் விஜயன் காலந்தொட்டுப் பிராமணர் பெற்றிருந்த செல்வாக்கை மகாவம்சம் உரைக்கின்றது. கி. மு. 4ஆம் நூற்றண்டிற் பாண்டுகாபய மன்னன் காலத்திற் பிராம ணருக்கே பிரத்தியேகமாக இருந்த வசிப்பிடத்தை மகாவம்சம் குறிக்கின்றது. ( n.w+102) இது 'பிராமணு வட்டம்” என அழைக்கப்பட்டது. ( க. சிற்றம்பலம், "ஈழமும் இந்துமதமும்", சிந்தனை, 2 : 1 ; 1984: 112)
2. South Indian Inscriptions: Vol; XIV; No -129; P;67

Page 43
66
உடுப்பிட்டி ( வடிம. தெ. மே. 112, 3 )
உடு + பிட்டி-உடுப்பிட்டி, இக்கிராமத்தின் தெற்கு ம் மேற்கும் வயல்வெளி; கிழக்கே கரணவாய் வட க் கே வல் வெட்டி ஆகியன அமைந்துள்ளன. உடுப்பிட்டியின் அமைவிடம் திடலாகவும் அதன் எல்லேப்புறம் உடுவடிவிற் காணப்பட்டமை யாலும் இப்பெயர் வந்ததென்க.
கூழாறுப்பிட்டி (தென்ம. 91.2)
கோயிலாக்கண்டி என்னுமிடத்திற்கு அயலில் இவ் வூர் அமைந்துள்ளது. இதனைக் கோளாறுபிட்டி எனவும் வழங்குவர். கூழா + அறு + பிட்டி. கூழா என்ற மரங்கள் நிறைந்து காணப் பட்டுப் பின்னர் அவை அழிற்த நிலையில் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம். :ன்பு இது கூழாப்பிட்டி எனவும் வழங்கிற்றென்ப.
‘மணல்’ முதனிலைப் பெயர்கள்
வாழ்ப்பாணத்தின் பழம் பெயர்களான மணற்றிடரி, மணலை, மணற்றி 4 முதலான பெயர்களும் மணலுடன் தொடர்புபட் டனவே. தரைத்தோற்ற அடிப்படையில் மணல் பெரிதுங் காணப் பட்ட இடங்களில் " மணல் முதனிலைப் பெயர்களாக இடப் பெயர்கள் வழங்கலாயின.
மண்டான் (வடம. தெ. மே, 119.3)
இது கரணவாய் தெற்கிலுள்ள செ ம் மண் பகுதியாகும். புதுக்குடியிருப்புப் பகுதியாகவும் தோட்டப்பயிர்ச் செய்கை நிலங் களையுடைய இடமாகவும் இது காணப்படுகின்றது. மண் + தாள் =மண்தாள்> மண்டான். செம்மண்ணின் சிறப்பியல்பை விதந்து கூறும் நிலையில் இப்பெயர் தோன்றிற்று எனலாம்.
மணவளை (தென்ம, 100.3)
இது மட்டுவிற் பகுதியிலுள்ள ஓரிடம், மணல்+ வளை = மன வளையாயிற்று, மணற்பகுதியான சுற்ருடல் மணல்வளை என வழங்கிப் பின்னளில் மணவளை எனச் சுருங்கிற்று எனலாம்.
1. C. Rasanayagam; 1926, pp 34-44, 141, 246, 253, 296,
-298.

67
மணற்காடு ( வடம, வ, கி. 14 2.2 )
இது வல்லிபுரத்திற்குத் தென் கிழக்கே கடற்கரையோர மாக அமைந்துள்ள இடம், மணல்வெளிகளும் சிறு பற்றைகளும் காணப்படுவதால் மணற்காடு என்ற பெயர் பெற்றுள்ளது. மணல் நிறைந்து பரந்து காணப்படும் நிலையில் இப்பெயர் ஏற்பட்டிருக் கலாம். (மணல்) காடு-குவியில், மிகுதி என்பவற்றை வெளிப் படுத்துகிறது. மீனவர்களின் சிறு குடில்களே இங்குக்காணப்படும்" இவை மணல் மேடுகளால் மூடப்பட்டு விடுவதால், அடிக்கடி குடிசைகள் புதிது புதிதாக அமைக்கப்படும். மணற்காடு கத் தோலிக்க தேவாலயம் ஒன்றும் ம ன லா ல் புதையுண்டதாகக் கூறப்படுகின்றது.
‘மலை’ ஈற்றுப் பெயர்
யாழ்ப்பாண் மாவட்டத்தில் மலையே இல்லை, இருப்பினும் மலைஈற்றுப் பெயர்களாகக் கம்பர் மலை, கீரிமலை, சுதுமலை என்ற மூன்று இடங்களுள்ளன. எனவே இப்பெயர்கள் கற்பனையடிப் படையிலோ அல்லது வேறு சொற்களின் திரிபாகவோ தோன்றி யிருக்க வேண்டும்.
கம்பர் மலே ( வட ம. தெ, மே, 121.2 )
இது வல்வெட்டித்துறைப் பகுதியில் உடுப்பிட்டிக் கிராம சேவகர் பிரிவில் இடம் பெறும் ஒரு கிராமமாகும். இதன் பழைய பெயர் கம்பர்மூல. கடந்த 15 வருடங்களுக்கு முன்பே இப் பெயர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. 150 வருடங்களுக்கு
1. இத்தாலியின் வடக்கேயுள்ள போ ? சமவெளிப் பிரதேசத் திலிருந்து காற்றிஞல் அள்ளுண்டு வரும் செம்மண் செங்கடலிலே கொட்டப்படுவதனுல் அக்கடல் * செங்கடல் "* எனப்பெயரி பெற்றது. அது போன்றே தென்னிந்தியக் கரையின் தனுஷ் கோடி இராமேஸ்வரம் ஆகிய பகுதிகளிலிருந்து சுழற் காற் று உருவாகி, மண்ணையும் அள்ளி வருக்போது, வட இலங்கைக் கரை யிலுள்ள மணற்காடு, வல்லிபுரம், நாகர்கோயில், மண்கும்பான் முதலிய பகுதிகளில் வீசுவதனல் ஆங்கு மணல் மேடுகள் அதிக ரிப்பதாயின. ( தகவல் : க. குசுபாலன், புவியியற்றுறை, யாழ்ப் பாணப் பல்கலைக்கழகம் )

Page 44
68
முந்திய வல்லை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் நிர்வாக ஒழுங்கு களில் உபயமாகக் கட்டிடங்களைக் கட்டிக்கொடுத்தவர் பெயர் வரிசையில், வைரவக்கடவுளின் மண்டப உபயம் எ ன் பதில் வேலு ப் பிள்ளை யும் பெண் மீனுட்சியும் கம்பாமூலை உபயம்’ என்றே எழுதப்பட்டுள்ளது. எனவே கம்பருக்கும் இவ்விடத்திற் கும் எவ்வித தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.
வடகரைப்பகுதிகளிற் காணப்பட்ட யானைகளைப் பிடித்து; அவ்ற்றின் மதத்தை அடக்கி, கட்டி வைத்த மேட்டு நிலம் கொம் பர்மூலை எனப்பட்டது. (கொம்பர் = யானை) இக்கொம்பர்மூலையே பின்பு கம்பர்மலையாக மாற்றம் வெற்றுள்ளது எனவும் அறியப்படு கிறது?. இவ்விடப்பெயர் பற்றிய விளக்கம் மேலும் ஆராயப் படவேண்டியதாகும்
மூலை ஈற்றுப் பெயர்
ஊரின் ஓர் ஒதுக்குப்புறமாக எல்லையிலமைந்த இடம் மூலை எனப்படுவதாயிற்று
வியாபாரி மூலை (வடம. வ. கி. 139. 4 )
இது பருத்தித்துறையிலே புலோலியின் எல்லையிலுள்ள ஒரு பகுதியாகும். வியாபாரம் காரணமாக இப்பெயர் தோன்றிற்று. இங்கு ஓர் அம்மன் ஆலயமுங் காணப்படுகிறது. மக்கள் வழக்கில் *யாவாரிமூலை" என்றே இவ்விடம் வழங்கப்படுகின்றது. இதன் அயற்கிராமம் தம்பசிட்டியாகும். எனவே இப்பகுதியில் செட்டி மார் ஆதிக்கமும் வணிகமும் முதன்மைபெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது,
1 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மாணவி செல்வி இ. தங்கவடிவேல் 1979இல் மேற்கொண்ட கள ஆய்வு அறிக்கை
2. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, 1976, பக், 70-91.

69
*வளை ஈற்றுப் பெயர்
வள்=வளம்; வள்+ஐ= வளை=வளம் செறிந்த இடம் வளை== வளைந்த அல்லது ஆழமான இடம் என்ற பொருளிலும் இச்சொல் இடத்தைச் சுட்டும் பின்னெட்டு இடப்பெயராக வழங்குகின்றது. இவ்வகையில் அமைந்த இடப்பெயர்களாக ஆழியவளை, கும்பளா வளை, கோணுவளை, தனிவளை, மணவளை முதலான இடங்கள் யாழ்ப் பாண மாவட்டத்திலுள்ளன.
ஆழியவளை :
வடமராட்சியின் கிழக்கே கடற்கரையோரமாக இக்கிராமம் அமைந்துள்ளது. இதன் கடற்கரைப்பகுதி வளைவாகக் காணப் படுகிறது; இதன் மறுபக்கமுள்ள தொண்டைமானறும் வளைவா கவேயுள்ளது. எனவே இக்கிராமத்தின் இரு எல்லைகளும் நிலையான (அழியாத ) வளைவுடையனவாகக் காணப்பட்டமையால் * அழி பாவளை " என்ற பெயரேற்பட்டு காலப்போக்கில் அது 'ஆழிய வன்” எனத் திரிந்த தென்பர்.1 ஆழி - கடல். கடலால் வளைக் கப்பட்ட இடம் என்ற அடிப்படையிலும் ஆழி + வளை > ஆழி வன் > ஆழியவளை என்ற பெயரேற்பட்டிருக்க வாய்ப்புண்டு.2 பண்டை நாளில் இங்கு துறைமுகம் இருந்ததென்றும், ஆங்கி லேயர் ஆட்சிக்காலத்தில் ஒரு வெளிச்சக்கட்டை (Light Post) அமைக்கப்பட்டதென்றும் கூறப்படுகிறது (பூரீ லங்கா, மார்ச் 195 l, Lă. 15 ). -
தனிவளை (தென் ம, 112, 4)
இது கொடிகாமத்தின் வடபால் அமைந்த ஓரிடம். தனிமை+ வளை: தனிவளை. இங்கு குறிப்பிட்ட ஒரு சால்பு மக்கள் குடியேறி வாழ்ந்தமையால் இவ்விடத்தை ஏனையோர் தனிவளை எனப் பெயரிட்டழைத்தனர்.3 தனிமையான குடியிருப்பிடம் என்ற பொருளில் இப்பெயர் ஆக்கம் பெற்றுள்ளது.
தகவல் : க. கணேசலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பட்டதாரி மாணவன், 1988, A.
.ே தமிழகத்திலும் * ஆழி ** முதனிலையாகக் கொண்ட பல
இடப்பெயர்கள் காணப்படுகின்றன.
3. தகவல் பி. சிவத்திரை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப்பட்ட
܀

Page 45
இயல் - 5
நிலப் பயன்பாட்டுநிலைப் பெயர்கள்
பண்டைக்கால மக்கள் நில்யாக ஒரிடத்திற் குடியிருக்க முற் பட்டபோது காடழித்து, மனை அமைத்து, சூழலில் வளம் பெருக்கி வாழத் தொடங்கினர்; வளமான சுற்ருடல்களிலே பரந்து வாழ ஷம் தலைப்பட்டனர். உணவு உற்பத்தியின் பயணுகப் களனிகளும் தோட்டங்களும் தோன்றலாயின. அவற்றிற்குப் புதுப் புதுப் பெயர்களும் சூட்டப்பட்டன. நிலப்பயன்பாட்டு நோக்கில் வயல் களும் தோட்ட திலங்களும் முதன்மை கெற்றன. அவற்றின் பய ஞக மொழியிற் புதுப் புதுச்சொற்களும் பெருகலாயின.
ஈழத்திற் பொதுவாக கமம், வயல், வட்டை வெளி என்ற பெயர்ச் சொற்கள் வயல் நிலத்தைச் சுட்டுவனவாக அமைந்துள் ளன. இவற்றில் கமம் என்பது காமம் என நீண்டொலித்து வழங் கக்காணலாம் கண்டி என்பதும் வயற் பெயரைச் சுட்டும் பெயரிக் கூருகவே வழங்கப்படுகின்றது. கொல்லை, தோட்டம், கோப்பு என்பன பயிர்த்தோட்டங்களுடன் தொர்புடைய பெயர்ச் சொற் களாகும். இவற்றை விட வத்தை என்ற சொல்லும் தோட்டம் குடியிருப்பிடம் என்ற பொருளிலும் வழங்கப் பெற்றுள்ளமை நூலில் விளக்கப்பட்டுள்ளது.1 வெட்டி என்ற சொல்லும் நிலப் பயன்பாட்டடிப்படையில் இடப்பெயர்க் கூருக அமைந்துள்ளது.
இப் பெயர்க்கூறுகள் அனைத்தையும் தமிழகத்து இடப் பெயர்க் கூறுகளுடன் ஒப்பிட்டு ஆராயும் போது ஈழத்திற்குரிய தனித்துவமான பெயர்க் கூறுகள் எவை என்பதை அறிய வாய்ப் பேற்படுகின்றது.
*கண்டி ஈற்றுப் பெயர்கள்
கண்டி-எருமைக்கடா, மந்தை, அடைத்து மீன்பிடிக்கும் கரு விவகை, கழுத்தணிவகை, உருத்திராக்கமாலை. முகத்தல் அளவை யில் 4கலன், 75 ஏக்கர், நிலப்பரப்பு, ஒரு முகத்தல் அளவு, சிறு கீரை, கண்டிகை (ஒருவகைப்பறை), கண்டியூர் (அட்டவீரட்டானங் களுள் ஒன்று) (த.லெ.2:689). மேலும் கண்டி என்பதற்கு 28துலாக் கொண்ட நிறை 20 பறை கொண்ட அளவு என்றும் பொருள் களுள. சிங்களத்தில் ‘கண்டி’ என்பது ஆற்றங்கரை, வாய்க்காற்
1. இந்நூலின் 77 - 82ஆம் பக்கங்களைப் பார்க்க.

71
க்ரையிலுள்ள மேட்டுப்பூமி என்று பொருள் தருவதாகும். இந் நிலையில் குமாரசுவாமி அவர்கள் கண்டி ஈற்றுப்பெயர்கள் யாவும்: சிங்களச் சொல்லின் திரிபு என்கிருர் ( 1918 59). அவர் கருத் தை மறுத்துரைக்கத் தக்க சான்றுகள் பெரிதுமுள்ளன. " கண்டி " என்பது மலையாள மொழியில் பின்வரும் பொருள்களில் வழங்
கின்றது. வேலி இடைவெளி.2 மதில் வெடிப்பு, வயலில் நீர்வடிந், தோடத் திறக்கப்படும் வழி, மேட்டுநிலம், கணவாய், துண்டம், 500 இருத்தல் நின்ற, 4 யார் நீளமுடைய தடி, ஒருவகைமரம், கிழங்கு என்பனவாம். . .
தமிழகத்திலே செங்கற்பட்டு மாவட்டத்திற் சோகண்டி ? என்ற பெயரில் இரண்டு இடப்பெயர்கள் காணப்படுகின்றன. * இவ்வூர்ப்பெயர்கள் எளிதிற் பொருள் புரியாதவாறு புதிராகவே அமைந்துள்ளன. கண்டி என்பது பிரிந்துள்ள பகுதி எனப்பொருள் படும் என்கிருர் கரு. நாகராஜன் ( 1985 : 184 ), தஞ்சாவூர் மாவட்டத்திலும் " கண்டியூர் ” என்ற பாடல்பெற்ற தலமொன் றுளது. இக் கண்டியூர் பற்றி கே. பகவதி (1984 : 79) குறிப் பிடும்போது இவ்வூர்ப் பெயர்க் காரணம் விளங்கவில்லே. எனி னும் கண்டி என்பதற்கு மந்தை என்றும், 75 ஏக்கருள்ள ஒரு நில அளவை என்றும், தமிழ் லெக்ஸிக்கன் ( 2. பக் 589 ) குறிப் பிடுவதைக் காண மந்தைவெளியாக இருந்திருக்கல்ாமோ எனத் தோன்றுகிறது ?" என்கிருர், கண்டியூர் பற்றி மெய், சந்திர சேகரன் கருத்துத் தெரிவிக்கும்போது 8 சிவபெருமான் பிரமா வின் தலையைக் கொய்த இடம் ஆதலால் பெற்ற பெயர்* என்கிருர்3.
கண்டியிற்றுப்பெயர்கள் கேரள நாட்டிலுமுள்ளன. புறநா நூற்றிலே ( 148 - 150 ) வன்பரணர், வள்ளல்களில் ஒருவரான கண்டீரக் கோப்பெரும் தள்ளியைப் பாடுகின்றர். கண்டீரநாடு= மலைநாடு என்பதும் ஈண்டு நோக்கத்தக்கது. இவற்றைக் கவனிக்கும் போது பழந்தமிழகத்திலும், பழந்தமிழிலக்கியத்திலும் கண்டி ? என்ற சொல் பயின்று வந்துள்ளமை தெளிவாகின்றது. எனவே யாழ்ப்பாண மாவட்டத்துக் கண்டியிற்றுப் பெயரில்வரும் கண்டி’
I. H. Gundert, A Malayalam and English Dictionary,
1872 p, 199.
2. தீவுப்பகுதிகளில் வேலியில் ஏற்படும் முறிவு, இடைவெளி என்பவற்றைக் கண்டி " என்ற சொல் குறிப்பது காண்க.
ச. மெய், சந்திரசேகரன் - தஞ்சை மாவட்ட ஊர்ப்பெயர்கள்,
1984 பக் 199,

Page 46
72 என்பதன் பொருள் என்ன என்பதை அறிதல் அவசியமாகிறது. கண்டி ( Kandy ) என்பது இலங்கை மலைநாட்டின் முக்கிய நக ராகும். ஆணுல் ஈழத்தின் வடக்குக் கிழக்கு மாகாணங்களின் சில ஊர்ப்பெயர்கள் கண்டி ? என்ற ஈறுபெற்றுள்ளன சங்கமnங் கண்டி கிழக்கிலங்கைக் கரையோரப்பகுதியில் கதிர்காமத்திற்குப் போகும் வழியில் அமைந்துள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்திற் கோயிலாக்கண்டி, பொலிகண்டி, முறிகண்டி என்ற ஊர்ப்பெயர் கள் இடம்பெற்றுள்ளன. தென்மராட்சிப் பகுதியில் வர னி வடக்கில் ஐயன் கண்டி, ஒளவைக்கண்டி என்ற தோட்டப் பெயர்களும், வல்வெட்டித்துறையில் வலிகண்டி என்ற குறிச்சியும் காணப்படுகின்றன.
இவற்றை விட வேறு பொருளிலும் * கண்டி " என்ற சொல் வழங்கி வருகின்றது. மீ ன வ ர் மத்தியில் * கண்டிகட்டுதல் " என்ற வழக்காறுண்டு. மீனவர் இருல், சிறு நண்டு, திரளி, சள்ளை முதலியவற்றைப் பறி கட்டிப் பிடித்தல் மரபு, அதனையே கண்டிகட்டுதல் என்ற தொடர் குறிக்கின்றது. கண்டி> கண்டித் தல் = துண்டித்தல். எனவே தனித்துத் துண்டிக்கப்பட்ட நிலப் பகுதி கண்டி எனப்பட்டது. இவ்விளக்கம் மலைதாட்டுக் கண்டி ? என்ற இடப்பெயருக்கு மிகப் பொருந்துவதாகும்.
ஹோர்ஸ்பரோ ( 1916, 1917 ) என்பவர் எது வித கார ணமோ விளக்கமோ குறிப்பிடாது பொலிகண்டி, கோயிலாக் கண்டி என்பன சிங்களப் பெயர் என்ருர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் * கண்டி " என்ற சொல் இடப் பெயராகவும் மற்றும் அன்ருட வாழ்க்கையிற் பயன்படும் பொருள்களைச் சுட்டு வதாசவும் அமைவதால், அஃது தமிழ்ச்சொல் என்பதில் தவ நில்லை. மேலும் வயற்பரப்பும் நீர் நிலைகளும் சார்ந்த இடத்தை * கண்டிகை "" என்பது குறிப்பதால் கண்டிகை என்பதன் ஈற் முேசை இன்றி வழங்கிய கண்டி " என்பதே இடப்பெயர் ஈரு கவும் வழங்கிற்றெனலாம்.1
கோயிலாக்கண்டி ( தென்ம, 9 11)
தென்மராட்சியிலே நாவற்குழியை அடுத்த பகுதி கோயிலாக் கண்டியாகும். கோ + இலாக் + கண்டி; கோயில் + ஆ + கண்டி எனப்பிரித்துப் பொருள் கூறப்படுகின்றது. கோ+இலாக்கண்டி என்பதற்கு அரசனில்லா ஊர் என்றும், அர சாட்சி நாட்டில் நடைபெற்ற போதிலும் இங்கு அரசர் ஆட்சி நடக்கவில்லை என்' றும் கூறுவர்; இங்கு கோயிலும் பசுக்களும் நிறைந்து காணப் l. Kandi = a valley; a place adjacent to a hill. ( Turner, Comparative Dictionary of Indo - Aryan Languages' London, 1973. )

73
பட்ட  ைம ய ர ல் (கோயில் + ஆ + கண்டி கா ) கோயிலாக் கண்டி என்ற பெயர் ஏற்பட்டது என்றும் கருதப்படுகிறது. மேலும் இங்கு அம்மன்கோயில், காளி கோயில், கந்தசுவாமி கோயில், நாகதம்பிரான் கோயில், கிருஷ்ணன் கோயில், அண் ணன் மார் கோயில், பிள்ளையார் கோயில், நாச்சிமார் கோயில், வைரவர்கோயில், ஐயனர்கோயில் முதலிய பல கோ யி ல் கள் நிறைந்து காணப்படுதல் மேற்காட்டிய ஊர்ப்பெயர் விளக்கத்திற் குச் சான்ருகின்றது. எனவே இப்பெயரைக் கோயில் + ஆர் + கண்டி எனப்பிரித்துப் பொருள் கோடலே பொருத்தமா கிறது. தென்ம ரா ட்சிப் பகுதியில் * கண்டி * ஈற்றுப் பெயர்கள் பெரிதும் காணப்படுகின்றன. இங்கு அதிக மான கோயில்கள் உள்ளமையாற் கோயில் வழிபாட்டிலும் கோயில் தொண்டிலும் ஈடுபாடுடையோர் அதிகமாக வாழுமிடம் என்ற பொருளில் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம் போலத் தெரிகிறது. வடமலபார் பகுதியிற் கோவில்கண்டி" என்ற பெயர் பெற்ற gypsår) * ( N. M. Nampoothiry : i 1985 : p. 47 ). SyšuS@ : ருந்து குடிபெயர்ந்த மக்கள் இங்கு வந்து தம் பழம்பதியின் பெயரைத் தாம் குடியேறிய புது இடத்திற்கும் இட்டு வழங்கி “னர்களா என்பதும் ஆய்வுக்குரியது.
பொலிகண்டி (வடம. வ. கி. 126, 1)
ர்லி + கண்டி = பொலிகண்டி, இக்கிராமத்தின் எல்லைக ளாக வடக்கே பாக்குநீர்த் தொடுகடல்; கிழக்கே திக்கம்; அல் வாய்; மேற்கே வல்வெட்டித்துறை, வல்வெட்டி; தெற்கே கரண வாய் வடக்கு என்பன அமைந்துள்ளன.
பொலிகண்டி என்பது ஒரு தூய தமிழ்ப் பெயராகும் குமார சுவாமி|அவர்கள் ( 1918 : பக். 59 - 60 ) இப்பெயரைத் திரா விடப்பெயர் எனக் குறிப்பிட்டுள்ளமையும் நோக்கற்பாலது :-
* பொலி என்பதற்குச் சிங்களத்திலே பொருள்படாமை யால் அதனேச் திராவிடச் சொல்லெனல் தவருகாது. களத்திலுள்ள மணியைப் பொலியென்பது தமிழர்க்கும் மலையாளிகளுக்கும் வழக்கமாதலின் பொலியினுற் சிறந்த பூமியைப் பொலிகண்டியெனல் பொருத்தமான பேச்சாம். அஃதே பொலிகண்டியின் உண்மையான பொருளெனின் முறிகண்டிக்கும் நென்முறியாற் சிறந்த பூமியென்று பொரு ளுணர்த்தல் கூடும் ’ தென்மராட்சிப் பகுதியிற் கிருஷ்ணன் கோயில் அமைத் துள்ள இடமும் இவ்வூரேங்ாம்
l

Page 47
t
74
கிராமிய மக்களது வழக்கில் இப்பெயர் தொடர்பான வேறு விளக்க முந் தரப்படுகின்றது. இங்கு வேளாண்மைத் தொழி லும், மீன்பிடித் தொழிலும் முதன்மை பெற்றுக் காணப்பட்ட மையால் இருவகைத் தொழிலாளர் வழக்கிலுமுள்ள இரு சொற் களும் இணைந்து, பொலி (= நெல்) + கண்டி (= மீன்பிடி கருவி) பொலிகண்டி ஆயிற்றென்ப.
இங்கு வழக்கிலுள்ள குறிச்சிப் பெயர்கள் முறையே கந்த வணக்கடவை, ஆழக்கிணற்றடி, பொன்னதறை, சங்கத்தோட் டம், கோட்டுவளவு, ருத்தலடி, கொத்தர்மலே, ஆலடி, ஏழு புளியடி, மா வ  ைடப்பு, அணிஞ்சில்காடு, அணிஞ்சாம்புலம், மாவத்தை, உந்துவத்தை, கெல்லாவத்தை, மாளுங்கானை, பாலா வியடி, திகதை, ஆட்டுப்பட்டியடி பத்தானை, சின்ஞவளை, தெணி, ஒதியவளவு என்பனவாம். t
குறிச்சிப் பெயர்களில் ஆழக்கிணற்றடி என்பதை நோக்கும் போது, ஆழ்வான் என்ற தனிமனிதன் ஒருவன் கிணறு வெட்டி அதிலிருந்து நீர் இறை துத் தோட்டம் செய்து வந்ததாகவும் அக்கிணறு " ஆழ்வான்கிணறு " எனப்பெயர் பெற்றி தென்றும் காலப்போக்கில் ஆழ்வான் கிணற்றடி> ஆழக்கிணற்றடி என மரு விற்றென்றும் கூறப்படுகின்றது. பொன்னி+தறை = பொன்னித் தறை>பொன்னுதறை. (தறை-வயல்நிலம்). பொன்னியின் நிலம் என்ற பொருளில் இப்பெயர் வழங்குகின்றது. சங்கரன் + தோட் டம்) சங்கத்தோட்டமாகத் திரிந்தது எனக் கூறப்படுகிறது.
இக்கிராமத்தின் கடற்கரையோரமாக ருத்தலடி *ான்ற ஒரி டமுண்டு. மீனவர் தாம் பிடித்து வந்த மீனை இருத்த்ற் கணக் கிலே நிறுத்து விற்றுவந்த இடம் என்ற நிலையில் இப்புெயர் வந்த தாகக் கூறப்படுகின்றது. முன்னுட்களில் மீனவர் தாம் பிடித்த மீனை நிறுத்துக் கொடுக்காமல், பார்வை அளவில் பேசிக் கொடுக்கும் வழக்கமே இருந்தது. அம்மரபுக்கு மாருகப் பொலி கண்டி மீனவர் நிறுத்துக் கொடுத்தமையால் அவர்கள் வாழ்ந்த இடத்திற்கு ருத்தலடி எனப்பெயர் வரலாயிற்று. மரமீறுதல் என்பதன் நிக்ரவாக இப்பெயர் வந்திருக்கலாம்.
ܬܼ காமம் ஈற்றுப் ப்ெயர்
காமம் =ண நகரம் அல்லது கிராமம் என்கிருர் வின்ஸ்லோ, வடமொழி " க்ராம " என்ற சொல்லிலிருந்தே காமம் என்ற
 

75
சொல் தோன்றியுள்ளது, விங்களமொழியில் "கம”, “கமுவ" என்ற ஈறுபெறும் இடப்பெயர்களுள. அப்பெயர்களும் வடமொ ழிக் " க்ராம " என்பதிலிருந்தே ஆக்கம் பெற்றுள்ளன. எனவே தமிழில் வரும் காமம், சிங்களத்தில் வரும் " கம", "கமுவ ” -ஆகிய மூள்ாறு சொbாரும் ஒாே வடமொழிச் சொல்லிலிருந்து தோற்றம் பெற்றன வ என்பது தெளிவு.
இலங்கையின் பல பாகங்களிலும் காமம் " ஈற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத்திற் கொடிகாம்ம், தம்பகாமம், வலிகாமம், வீமன்காமம் என்பனவும் முல்திைதீவிற் பனங்காமமும், கிழக்கு மாகாணத்தில் இறக்காமம் பழுகாமம் என்பனவும், இலங்கையின் தென்கோடியிற் கதிர் காமம் முத்லிய இடங்களும் " காமம் “ ஈற்று இடப்பெயர்களா கும். h−
GarprřaduGrrr ( 19 I 6 i 54 ) “as rruob”, “aso”, “’asypa”*
என்ற செர்ற்கள் ஒரே மூலத்திலிருந்து தோற்றம் பெற்றவை என்பதை ஏற்றுக்கொண்ட பின்னர், அதே கட்டுரையின் 55 ஆம் பக்கத்தில் * காமம் ' என்பது சிங்களக் " கம " என்பதன் தமிழ் வடிவம் என்கிருர், கட்டுரை ஆசிரியரே முன்பின் முரணுகக் கூறுவதிலிருந்து, அவரே தம்மொடுதாம் முரண்படுவதைக் காண Gavinrubis 1
ஞானப்பிரகாசர் ( 1917 167 - 169 ), குமாரசுவாமி 6 ) முதலியோர் கொடிகாமம், தம்பகாமம், வலிகாமம்
al ( 1918
வீமன்காமம் என்பவற்றுடன், குறிச்சிப் பெயர்களாம் இளகாமம் தேகாமம் என்பனவும் சிங்களப் பெயர்களே என்றனர். ஆயி னும் ரிகளது ஒரு பக்க வாதங்கள் மேலும் ஆய்வுக்குரியன
காணப்படுகின்றன.
. New Graamam is from the sanskrit Graama, from which the Sinhalese word gama is derived. So that from both Kaamam and gama came from antreir common stock...... I am however of opinion that where Kaamam is found in place name of the Jaffna peninsula, it is a Tamilized form of gama, because the Tamil word Kaamam is not used by the Tamils of the peninsula.' (Horsburgh,
1916 : pp. 54-55.)

Page 48
76
கொடிகாமம் : ( தென்ம 106. 3)
தென்மராட்சிப் பகுதியிற் சாவகச்சேகரிக்குக் கிழக்கே 6 மைல் தொலைவிற் கொடிகாமம் அமைந்துள்ளது. இதனூடாக யாழ்ப் பாணம்-கண்டி வீதியும், கச்சாய் கூபருத்தித்துறை வீதியும் சென் கின்றன. தென்னந்தோப்புக்களும் மாஞ்சோலேகளும், பனந்தோட் டங்களும் நிறைந்த மணற்பூமியாக இப்பகுதி :: இதன் எல்லைப்புறங்களில் வயல்வெளிகள் உள்ளன. இப்பகுதி யிலே முன்பு பெருந்தொகையாகக் கமம் செய்யப்பட்டதென்றும் எண்ணிக்கையடிப்படையிற் கோடிகமம் என்ற பெயர் ஏற்பட்டு காலப்போக்கிலே கோடிகமம்) கொடிகாமமாயிற்று šrutr(5(yp ளர். கூட்டமாகச் சேர்ந்து (கோஷ்டியாக ) கமஞ்செய்
தும் வெள்ளம் தேங்கி நிற்கு மி டம் இதுவாதலாலும், இங்கு கமம் செய்வதற்கு ஏற்ற வாய்ப்பு இருப்பதாலும், கமத்தை அடிப்படையாகக் கொண்ட கோடிகாமம் > கொடிகமம் ஆயிற்று எனப்பொருள் கொள்வார் வாதம் வலுப்பெற்றுக் காணப்படு
கிறது. 1 எனவே கமம் : காமம் ஆயிற்று என்க.
கொடிகள் கட்டப்பட்ட இடம் கொடிகாமம் என்
சென்று வெற்றியுடன் மீண்டும் வரும்போது, அவனது வீரர்கள் சிற்சில இடங்களிலே தமது வெற்றிக் ெ நாட்டி வந்தனர் என்றும், அவற்றில் பல கொடிகள் பட்ட இடம் "கொடிகாமம்’ என்ற பெயரைப் பெறுவதrயிற்று எனவும் கூறப்படுகிறது. இதற்கு ஆதாரங்க ள் தெரியவில்கின. பண்டை நாளிற் கொடிகாமத்தின் அயற்கிராமங்களிற் கல்வியிற் சிறந்த பலர் வாழ்ந்தனர் என்றும், அவர்களது கோஷ்டி விரும்பி
தும், அதனலேயே இப்பெயரேற்பட்டது எ ன்று ங் கூ அவ்வகையில் கோஷ்டி>கொடி என மாறிற்று. காமம்-வி வந்து கூடுமிடம் எனப்பொருள் தருதல் நோக்கற்பாலது. 1. தமிழ்நாட்டிற் பேராவூரணியிலுள்ள கொடி வ ய ல்
இடப்பெயரும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. 2. தகவல். பண்டிதர் க. கந்தையனர் . ஒய்வுபெற்ற அதிபர்,
கொடிகாமம்.
 
 
 
 
 
 
 
 
 

וד
* தோட்டம்" ஈற்றுப் பெயர்கள்
பயிர்ச் செய்கையுடன் தொடர்புடையதாக இப்பெயர் வழக் குதல் இயல்பு. தேயிலைத் தோட்டம், கரும்புத் தோட்டம், மாந் தோட்டம், தென்னந்தோட்டம் என்ற தொடக்கத்தன பெரும் பயிர்ச் செய்கையுடன் தொடர்புடையவை. மரக்கறி வகை பயிரி டப்படுமிடங்களையும் தோட்டம் என்பது யாழ்ப்பாணத்துப் பெரு வழக்கு, புகையிலத் தோட்டம், வாழைத் தோட்டம், கத்தரித் தோட்டம் மிளகாய்த் தோட்டம், மரவள்ளித் தோட்டம் என்ற தொடக்கத்தன அவை. இத் தோட்டங்களுக்கு உரிமையுடை யோர் ' தோட்டக்காரர்?’ என அழைக்கப்படுவர். இத்தகைய பயிர்ச்செய்கையற்ற, மக்கட்குடியிருப்புடைய சில இடங்களும் 8 தோட்டம் ' என்ற ஈ ற் றுப் பெயருடையனவாகவுள்ளன. அவை பண்டு தோட்டக்காணிகளாக இருந்து, பின்பு மக்கட் குடியிருப்புக்களாக மாறிய இடங்கள் என்பது இத்தால் அறிய வருகிறது. அத்தகைய குடியிருப்பிடங்களாக யாழ்ப்பாண மாவட் டத்திலுள்ள தோட்டம் ஈற்றுப் பெயர்கள் சில வருமாறு : கிழவித்தோட்டம், கொய்யாத்தோட்டம், கோவில்தோட்டம், சந்தத்தோட்டம், புதுத்தோட்டம், மாவிலங்கைத்தோட்டம், வெள்ளிமலைத்தோட்டம் முதலியனவாகும். இவற்றுள் கிழவித் தோட்டம் ( வடம. தெ. மே 129, 3 ), சந்தத்தோட்டம் ( வடம, வ, கி. 137, 3 ) ஆகிய இரு இடங்கள் வடமராட்சிப் பகுதியிலே அமைந்துள்ளன. இவ்விடப் பெயர்களின் விபரம் பற்றி விதந்து கூறுவதற்குரிய தகவல்கள் கிடைத்தில,
'வட்டை" ஈற்றுப் பெயர்
வட்டை = வழி, தேர், புலிவரி, வட்டகை, பெருங்காடு, திக்கு (த, லெ, 6 :3471 ). பேச்சு வழக்கில் வயல் - வட்டை என வழங்குவதுமுண்டு. தமிழகத்து வட்டம் ஈற்று இடப்பெயர் இங்கு வட்டை ஆயிற்ரு எனவும், வயல் - வட்டை எனத் திரிந் ததா எனவும், வெளி என்பது > வெட்டை > வட்டை என மாற்றம் பெற்றதோ எனவும் ஆராய்தல் வேண்டும். இவ்வகை யில் வடமராட்சி தென்மேற்கில் ( 130 : 3) குடாவட்டை என்ற இடப்பெயர் இழங்குகிறது.
* வத்தை ஈற்றுப் பெயர்கள் ஈழத்தின் பல பாகங்களிலும் வத்தை ஈற்று இடப்பெயர்கள்
மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிங்களத்திலும் வந்த ஈற். றுப் பெயர்கள் அநேகமுள. சொல்லின் புறவடிவத்தையும் அதன்

Page 49
g
ஒலியமைப்பையும் கருத்திற் கொண்டு ' வத்தை" என்ற சொல் சிங்கள மூலச் சொல் எனப் பலர் வாதிடுவர். ஈழத்தில் இற்றை வர்ை இடப்பெயர் ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் வத்தை " ஈற்று இடப்பெயர் அனைத்தும் சிங்களப் பெயர் என்றே எழுதி னர். குறிப்பாக சுவாமி ஞானப்பிரகாசர் ( 1919) குமாரசுவாமி ( 1918 ஹோர்ஸ்பரோ ( 1916) முதலியோரை இவ் வரிசை யிற் குறிப்பிடலாம். சுவாமி ஞானப்பிரகாசர் வத்தை “ சிங்க ளச் சொல் எனவும், போர்த்துக்கீசச் சொல் எனவும் குறிப்பிட் டுள்ளமையும் நோக்கற்பாலது.
* வத்தை " என்பது தமிழ்ப் பெயர் என நிறுவுவதற்குச் சில சான்றுகள் காணப்படுகின்றன. இதனைச் சோற் பிறப்பியல் சொற் பொருள் மக்கட் பண்பாடு, வாழ்வியல் அடிப்படையி லும் நிறுவலாம். " வத்தை ’’ என்பதற்கு நீரிற் செல்லும் கட்டு மரம், மக்கட்குடியிருப்பிடம் என்ற இரு பொருட்கள் உள. முத லில் வத்தை என் ப த ன் அடிச்சொல், சொல்லாக்கநி.ை பொருள்நிலை என்பன பற்றியும் அறிதல் அவசியமாகிறது.
1. வறு > வற்று > வத்து > வத்தை = ஈரலிப்புத் தன்மை காய்ந்து வற்றிய மரத்துண்டுகள், நீர்ப்பரப்பைக் கடக் கும் கருவியாகப் பயன்பட்டபோது, அம் மரத்துண்டு கள் ( வற்றல்கள் ) வத்தை என வழங்கப்பட்டன.
2. வறு > வற்று > வற்றல் > வத்த(ல்) + ஐ = வத்  ைத, பண்டைநாளில் நிலையான மக்கட் குடியிருப்புக்கள் நீர் நிலையை அண்மித்த ஈரலிப்பான் பிரதேசங்களுக்கு அரு கிலேயே அமையலாயின. ஈரலிப்பான பகுதியில் மக்கள் விவசாயத்தை மேற்கொண்டனர். குடியிருப்புக்குரிய குடிசை, வீடு முதலியவற்றைத் தண்ணிர் பரவாததும், என்றும் காய்ந்ததாக (வற்றலாக) இருப்பதுமான மேட் டுப் பகுதிகளில் அமைத்துக் கொண்டனர். எனவே அவர்தம் குடியிருப்புப் பகுதி பெரு வெள்ளம் ஏற்பட்ட போதும் வற்றும் பகுதியாக இருந்தபடியால் அது காலப் போக்கில் 'வற்றை ' என வழங்கி பின்பு 9 வத்தை " யாகத் திரிபு பெற்ற காரண்ப்பெயராக இருக்கலாம்.
3. நீர்ப் பரப்பைக் கடக்கப் பயன்பட்ட வத்தைகள் (வள் ளம் ) மலிந்த நிலப்பரப்புப் பாகம் இருமடி ஆகுபெய ராய் வத்தை என வழக்குப் பெற்றதென்றும் கொள்ள லாம்.

ፃ9
* வத்தை " என்ற ஈறு தனிக் கிராமத்திற்கு மட்டுமன்றி, ஊரின் உபபிரிவுகளிலமைந்த தோட்டங்களுக்கும். சிறு குறிச்சிகளுக் கும் பெயராக வழங்குகின்றது. சுவாமி ஞானப்பிரகாசர் ‘வத்தை" பற்றிக் குறிப்பிடும்போது இதன் பெ ாது வா ன உச்சரிப்பு * வத்தை " அல்ல வெட்டை ‘ என்றும் கூறினர்.4
வயல் > வட்டை > வெட்டை > வத்தை :
யாழ்ப்பாணத்து இடப்பெயர்களில் வத்தை ஈற்றுப் பெய ராகப் பல ஊர்கள் உள. தமிழில் ஊர்ப் பெயர்களின் ஈருக வரும் வயல், வெளி, புலம், கமம் முதலியன விவசாயத்துடன் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. தமிழகத்து ஊர்ப் பெயர் முழுப் பட்டியலையும் ஈண்டு ஒப்பு நோக்குதல் அவசிய மாகின்றது.? வயல் என்பதை மட்டச்களப்புத் தமிழில் வட்டை என்றே வழங்குவர். அங்கு வயற் பெயர்களாகக் கோமாரி வட்டை, கரைவாகுவட்டை, சாளம்பைவட்டை முதலான பல பெயர்கள் வழங்குகின்றன. வட்டை>வெட்டை எனத் திரிந்து ஒலிப்பதுமுண்டு. வட்டை என்பதை ஆங்கி லத் தி ல் Wattai என்றெழுதினர். இதனைச் சிங்களத்தில் வத்த " என உச்சரித் தனர். சிங்களத்தில் * வத்த " - தோட்டம் என்பது பொருள், எனவே தமிழிலுள்ள * வத்தை " என்ற ஈற்று ஊர்ப்பெயர்கள் பண்டு, ' வட்டை ‘ என்ற ஈற்றுப் பெயராகவே அமைந்திருந்து, அவை பின்பு வத்தை " என மாறிற்று எனக் கூறின் பொருந் துமோ என்பதை அறிஞர்பால் விடுவாம். மேலும் ' வட்டை? என்பது வயலை மட்டுமன்றி, குடியிருப்புக்களையும் மட்டக்களப்பு மாநிலத்திற் சுட்டி நிற்கின்றது.
சிங்களமொழியில் வத்தை " (Watte ) என்பது தோட் டம், வழி என்பவற்றைச் சுட்டும். சிங்கள மொழிவழக்கில் ‘வத்தை" என்பது இடப்பெயர் ஈருகப் பெரிதும் வழக்கிலுள்ளது. பாளி மொழியில் வத்த என்பது இப்பொருள்களை நேரடியாகச் சுட் டவில்லை.3 ஆளுல் திராவிட மொழிகளில் வத்தை என்பதற்குரிய
1. As to Nichchiya vattei the common pronounciation, I belive is with the affix veddai, and not Wattei' . ( S. Gnanaprakasar: 1917 : 47) r
2. தமிழகத்து ஊர்ப் பெயர்ப் பட்டியல் முழுவதுங் கிடைக்கு மாயின் இதனுடன் ஒப்பிட்டு ஆராயும்வோது ப்யனுள்ள கருத்துக்கள் வெளிவரலாம்.
3. The Pali Text socilty's Pali English Dictionary, Ed Rhys David, London, 192, pp.55-56 o

Page 50
80
இடப்பெயர் விளக்கப் பின்னணி காணப்படுகின்றது. தெலுங்கு மொழியில் “வத்தை" என்பது வற்றிய காய்ந்த பொருள் என்ற கருத்தில் வழங்கிற்று. எனவே இடப் பெயர் ஈரு கவரும் "வத்தை ஈற்றுச் சொல்பற்றிய மொழியியல் அடிப்படையிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் ஈழத்தமிழர் வரலாறு மேலும் தெளிவு பெறத்தக்க வாய்ப்பு ஏற்படலாம்.
வட்டம் > வத்தை
பண்டை நிலையில் மக்கட் குடியிருப்பு வட்டமாக அமைந்தி ருந்தது. அவர்களது குடிசைகளும் வட்டமாகவே காணப்பட் டன2. அவர்கள் வாழ்ந்த பரந்த இடமும் வட்டம் எனப்பட் டது. காலப்போக்கில் வட்டம் > வத்தை எனவும் மாற்றம் பெற் றிருக்கலாம். இக்கருத்தைச் சான்று படுத்தும் வகையிலான சுவாமி ஞானப்பிரகாசர் கூற்றுப் பொருத்தம் நோக்கி ஈண்டுத் தரப்படுகின்றது ! -
* நம் இலங்கையில் இருந்த பழந்தமிழர்களே சிங்களத்தை ஆக்கிக்கொண்டு தாங்களும் சிங்களர் ஆஞர்கள். முந்திய தமிழ்ச் சிங்களர் வைத்த ஊர்ப் பெயர், காணிப் பெயர் களையே தாம் இன்றைக்கும் வழங்கிக் கொண்டு அவற் றைச் சிங்களப் பெயர்கள் என்கிருேம், ஒரு உதாரணம் மாத்திரம் : எத்தனையோ காணிப்பெயர்களின் ஈற்றில் * வத்தை " என வருகின்ற தன்ருே ? வத்தை எனும் சொல் இன்றைக்கும் தஞ்சாவூர் முதலிய சில இடங்களில் வழங்குகின்ற வட்டம் என்பதே, வட்டம் - தோட்டம், இக்காலத்து வளவு (வளைவு = அடைப்பு) என்பதும், வட் டமும் பேயரளவில் ஒன்றுதான். வத்தையின் வேலியைச் சிங்களர் வய்ற்ற என்ருர்கள். வட்டம், வட்ட, வய்ற்ற வத்த, வத்தை எனச் சொல் திரிந்து வந்ததைக் காண்க. இவ்வாறே பழந்தமிழ் வட்டம் தமிழ்ச் சிங்களத்தில் வத் தையாகி வந்தது " ஞானப்பிரகாசர் 1973 : 341.
1. Watta = (N) A dried vegetable, anything that has dried up or withered. (Telugu - English Dictionary. Ed. M. Venka ta Ratnam, Madras, 1903, p. 1 133 .ே பூர்வீகக் குடிகளின் இருப்பிடங்கள் (Primitive hats) இவ் வாறு வட்டமாகவே இருந்தமை அத்துறை அறிஞர்க ளால் நிரூபிக்கப்பட்டுள்ளன.

8.
யாழபபாணக் குடாநாட்டிலேயே பெருமளவு வத்தை ஈற்று
இடப் பெயர்கள் காணப்படுகின்றன, அவற்றிற் கிராம சேவகர் பிரிவில் உப பகுதிகளாகக் குறிப்பிடப்பட்ட இடப் பெயர்கள்
வருமாறு ே
கலியாவத்தை (வலி, மே, ப, 31. 1 ) கொற்ருவற்தை ( வடம. தெ. மே, 127) சித்தவத்தை (வலி. தெ மே, 17, 2) தலியாவத்தை (வலி. மேல் ப. 31, 3 ) பத்தாவத்தை (வலி, வ. திே. 2) மாவத்தை வலி. வ. 65. )ே all LT6.5605 ( all-LD. a. s. 140. 6) வட்டுவத்தை ( வடம. வ. கி. 140. )ே
வட்டுவத்தை (வடம, தெ. மே, ப. 33, 4 )
வாதரவத்தை (வலி. கி. 78. 2)
கொற்ருவத்தை, வட்டாவத்தை வட்டுவத்தை என்ற இடங்
கள் வடமராட்சிப் பகுதியில் அமைந்துள்ளன. இவற்றைவிட அனேக குறிச்சிப் பெயர்கள் *வத்தை ஈறுகொண்டனவாகவும் வழங்குகின்றன. எனவே " வத்தை ஈற்று இடப்பெயர்கள் பற்றி மொழியியலாளரும் கூடிய 3#s6nu6asrGo)LDG6t'üu. umrifas67Tmralasir
1. புத்தூர் கிழக்குப் பகுதியில் வாதரவத்தை அமைந்துள்
岑,
ளது. வாதுரு = காற்று, வாதுமை, ஒரு வ் கை மரம், பண்டை தாளில் வாதுர ( வாதுமை ) மரத் திறல் வள்ளம் (வத்தை ) கட்டி தொண்டைமானற்றின் ஊடாக
உப்பேற்றிச் சென்றதாகவும் அதனலேயே இப் பெயர் ஏற்
பட்டதாகவும் கூறப்படுகிறது.
வடுகர் + வத்தை = என்பது வடுகர்வத்தை>வட்டாவத்தை >வட்டுவத்தை என மருவியிருக்கலாம்; வடுகரின் தாய் மொழி தெலுங்கு; இவர்களிற்பெரும்பாலானேர் வைணவர்; நாயக்க மன்னர், ரெட்டியார், கம்பளத்தார் என்போரும் வடுகர் ’ என அழைக்கப்பட்டனர். எனவே " வடுகர் " என்போருடன் இவ்விரு இடப்பெயர்களுக்குமுள்ள தொடர்பு பற்றி ஆராய்தல் அவசியமாகிறது. W

Page 51
82
ஈழத்தமிழர் பண்பாட்டு வரலாறு பற்றிய செய்திகள் மேலும் துலக்கம் பெறலாம்.
* வயல் ஈற்றுப் பெயர்கள்
வயல் சூழ்ந்த இடங்கள் வயல் ஈறுகொண்ட பெயர்களால் வழங்கப்படலாயின. இவ்வகையில் யாழ்ப்பாணக் குடாநாட்டிற் கோவில் வயல். சங்கத்தார் வயல், கல்வயல் என்ற மூன்றிடங் களுள. இவற்றில் கல்வயல் தென்மராட்சியில் அமைந்துள்ளது?
*வெட்டி ஈற்றுப் பெயர்கள்
தென்னிந்தியச் சாசனங்களில் வெட்டிக்குடி பற்றி ய செய்திகள் வருகின்றன. கோயிலுக்கு நெய் கொடுக்கம் நிவந்தக் காரர் என அவர்கள் குறிப்பிடப்படுகின்றனர்?. மேலும் "வெட்டி" என்பது கோயில் வரிகளில் ஒன் ரு கவும் காணப்படுகின்றது.4 முகவெட்டி' என்ற பெயரி b சோழப் பெருமன்னர் கால அதிகாரிகள் இருந்திருக்கிறர்கள். புதுக்கோட்டை இரகுநாதரா யத் தொண்டைமானின் ஆறு மனைவி மாரில் ஒருத்தி காடுவெட் டி யா ரின் மகள் வீரத்தாயி" என்பவளாகும்.5' முகவெட்டி என்ற தொட்டரும் * காடுவெட்டி " என்ற தொடரும் ஒப்பிட்டு
ஆராயப்பட வேண்டியனவாகும். مہر
1, யாழ்ப்பாண மாவட்டத்தின் தொல்குடியிருப்பிடங்கள் பற்றி ஆராய்ந்த இரகுபதி அவர்கள் வத்தை பற்றிக்கூறும் கருத் தும் ஈண்டு நோக்கற்பாலது :-
Pattai I Wattai = Scrub forest. Parrai in standard Tamil. - Pa and Va are interchangeable in South Asian Languages, eg. l. Piranpattai se the scrub forest where a deity dwells. 2. Kottiyavattai = the serub forest where Kotti dwells.''' (P. Kagupathy - 1987. P. 213.)
2. தல்வயல் பற்விய லீளக்கத்தை இந்நூலின் 62 ஆம் பக்கத்திற்
5r)as.
s. South Indian Inscriptions vol. v., p, 151. 4. South Indian Inscription vol. viii, p. 217.
5. சிரஞ்சீவி (பதிப்பு ) புதுக்கோட்டை சமஸ்தான வரலாறு
Geskrar, 1980, иé e 47.

83
கோப்பெருஞ்சிங்கன், காலத்தில் ( கி. பி. 1249 ) இருந்த கோயிற் கணக்குகளைக் கவனிக்கும் தணிக்கை அதிகாரிகள் * உடைய பெருமாள் என்றும், காடு வெட்டிகள்" என்றும் பெயர் பெற்றிருந்தனர். இவர்களது ஈற்றுப் பெயராகவுள்ள * வெட்டி' என்ற சொல் கரவெட்டி, அளவெட்டி என்ற ஊர்ப் பெயர்களுடன் காணப்படுவதும் சோழர் கால நிர்வாகத்தை நின்வூட்டுவதாக அமைகின்றது.2
கரவெட்டி (வடம. தெ. மே, 128 அ )
இது யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் 17 ஆம் மைல் கல்லுக்கு அண்மையில் அமைந்துள்ள பெரிய கிராமமாகும். 18 ஆம் நூற்ருண்டில் வாழ்ந்த சின்னத்தம்பிப் புலவர் இ கி கு வாழ்ந்த மாப்பாண முதலியார் மகன் வேலாயிதம்பிள்ளை எள் பவர்மீது கரவை வேலன் கோவை’ என்ற நூலப் பாடியுள் ளார். கரவெட்டியின் தென் எல்லையில் உப்பாறு அமைந்துள் ளது. இதன் உட்பிரிவுகளாகக் கரம்பொன் கிழவித்தோட்டம் பெரிய தோட்டம், யாரிக்கரு, கட்டைவேலி, கலட்டி, மாத்தனை தில்லையம்பலம் என்பன அமைந்துள்ளன. இங்கு துலு க் கள் கோட்டை என வழங்கப்படும் தொலுக்கன் கோட்டையின் அழிபாடுகளும் காணப்படுகின்றன.
இக்கிராமத்தின் தெற்கும் கிழக்கும் நெற்கழனிகளால் நன்கு சூழப்பட்டுள்ளன. கழனிகளுக் குடியிருப்புக்களும் வெள்ளப்பெருகி காற் பாதிக்கப்படாதிருக்ச. அதன் கரையிலிருந்த பெரிய மணற் குன்றை வெட்டி ஊரைக்காத்தமையாற் கரைவெட்டி > கர வெட்டி எனக் காரணப் பெயர் இவ்வூருக்கு ஏற்படுவதாயிற்று 3 கரவெட்டியின் எல்லைப்புற வயல் வெளிகளை அடுத்துள்ள பகுதி களில் இப்போதும் இந்நோக்குடன் வெட்டிக்கட்டப்பட்ட மண் வரம்புகள் பெரிதாகக் காணப்படுகின்றன.4
, 1 . Ᏸ5Ꮘ . வெங்கடேசன், வரலாற்றில் வில்லியனூர், சென்னை
1979, 2. தமிழகத்திலே திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளக்காடு வெட்டி, "காடுவெட்டி என்ற இரு ஊர்ப்பெயர்களுள்ளமை யும், கன்னிய7குமரி மாவட்டத்திலே *தோடுவெட்டி", *காடுவெட்டி" என்ற ஊர்ப்பெயர்கள் காணப்படுகின்றமை யும் நோக்கதக்கன. 3. மு. கந்தப்பு, தினகரன் - 22 ம் 6 - 1959 4. தகவல், சி. சி. ஆனந்தம் கரவெட்டி

Page 52
84 வல்வெட்டி (வடம. தெ. மே, 124, 2)
இது வல்வெட்டித்துறைக்குத் தெற்கெல்லையில் அமைந்துள் ளது. வல் + வெட்டி = வல்வெட்டி. இவ்விடப்பெயர் தொடர் பாகப் பல்வேறு விளக்கங்கள் காணப்படுகின்றன.
1. வல் + ஈட்டி தையிட்டி, பொயிட்டி என்பன போன்று வல்ஈட்டி நாட்டப்பட்டுக் காவல் புரிந்த இடம் வல் ஈட்டி என அழைக்கப்பட்டது. அது பேச்சு வழக்கில், வல்லூட்டி ஆகிப் பின்னர் திரிந்து வல்வெட்டி ஆயிற்று சிலர் இதனை வல்லூட்டி எனவும் வழங்கக் கேட்கலாம்.
2. வல்லித்தேவன் என்ற தலைவனின் ஆடு, மாடுகள் பட் டிகளாக (கூட்டமாக) மேய்ந்த இடம் (வல்லிபட்டி ) * வல்லிப்பட்டி" என வழங்கிற்று. பின்பு வல்லிப்பட்டி > வல்வெட்டி ஆகிற்றென்றும் கூறுப.
3. இப்பகுதி முன்பு வலிய காடாக இருந்தமையால் வலிமை கொண்டு வெட்டிக் காடழித்துக் கழனிகள், குடி மனைகள் ஆக்கினர். அதஞல் (வல் = வலிமை + வெட்டி தொழில் அடிப்படையில் இவ்விடம் வல்வெட்டி எனப் பெயர் பெறுவதாயிற்று என்றும் கூறப்படுகிறது.
இதன் குறிச்சிப் பெயர்களாகவும் காணிப் பெயர்களாகவும் வரும் பெயர் கள் சில வருமாறு : மாடந்தை பரியாரிவளவு, சீனன்தோட்டம், சீனட்டி, வேவில், சேகண்டி, செம்பிபாடு, செம் பாடு, பற்றியவத்தை, பழவத்தை, ஒல்லை, நெய்யம்பலம், கொத்
தன்கலட்டி, கட்டியந்துறை, தெல்லுழுவை, மாவத்தை முதலிய Goranu nrub. 3
வேவில் என்ற பகுதியிற் குளமும் பிள்ளையார் கோயிலு முள்ளன. மாடந்தைப் பிள்ளையார் கோயில், கட்டியாந்துறை வன் னிச்சியம்மன் கோயில், கடுக்காய் வைரவர் கோயில் முதலிய கோயில்களும் அமைந்துள்ளன. 1871 ஆம் ஆண்டுக் குடி சன மதிப்பீடு அறிக்கையில் இவ்வூர் " வல்லுவெட்டி " என்றே குறிப் பிடப்பட்டுள்ளது.
1. இ. பாலசுந்தரம், 1988 : பக். 40 - 41 பார்க்க. 2. வல்வெட்டித்துறை பெயர் விளக்கம்,பாரிக்க, பக்: 47.50 3. தகவல் சி. செல்லத்துரை, வல்வெட்டி

85
வெளி ஈற்றுப் பெயர்கள்
வெளி = புறம், மைதானம், ஆகாயம்; வெளிக்கால் = நீர் வெளியேறிச் செல்லும் வாய்க் கால் (த. லெ, 6 : 3806). வெளி = பரந்த இடம், வயல் சூழ்ந்த இடம் என்ற பொருளில் வந்துள்ளது. சங்க காலத்திலும் * வெளி ஈற்றுப் பெயர்களைக் எருமை வெளி, வீரை வெளி என்ற ஊர்ப்பெயர்சள் இருந்திருக் கின்றன. மட்டக்களப்பு வழக்கில் வெளி என்பது வயல் நிலத் தையும் சுட்டுஞ் சொல்லாகும். வெளியீற்றுப் .ெ யர் க ளா ல் கொண்ட மூன்று இடங்கள் தென்மராட்சியிலுள்ளன. அவை வயலும் வல்சார்ந்த இடங்களுமாக உள்ளன.
கும்பாவெளி (தென்ம. 118 - 2)
இது மந்து விற் பகுதியில் அமைந்துள்ள ஓரிடமாகும். இங்கு வயல் வெளிகள் பரந்து காணப்படும் நிலையில் (கும்பல் க நிறைவு; வெளி = வயல் நிலம் ) கும்பல் + வெளி - கும்பாவெளி எனப்பெயர் பெறுவதாயிற்று. ട
சம்பாவெளி ( தென்ம. 107 - 8 )
இது உசன் பகுதியிலுள்ள மருதநிலத்தாராகும். சம்பாக ஒருவகை நெல், சம்பா நெல் விளையும் வயல் சூழ்ந்த பகு சம்பா வெளி எனப்பெயர் பெற்ற தெனலாம், x -
செட்டியாவெளி. (தென்ம, 106 . 2)
இது மட்டுவில் வடக்குப் பகுதியிலுள்ள வவலூர், இதுசெட் டியாருக்குச் சொந்தமாக இருந்தபோது செட்டியா வெளி எனப் பெயர் பெற்றிருக்கலாம். யாழ்ப்பாண மாவட்டத்திற் செட்டி ? என்ற பெயருடன் இணைந்துவரும் இடப்பெயர்களேப் போன்றே இவ்விடமும் சோழர்கால வணிகக் கூட்டத்தினரின் குடியிருப் பிடமாக இருந்திருக்குமோ என எண்ணத் தோன்றுகிறது.

Page 53
இயல் ... 6
குடியிருப்புநிலைப் பெயர்கள்
இடப்பெயர்களிலே மக்கட் குடியிருப்புக்களையும், அவர்கள் நடமாடும் பகுதிகளையும் சுட்டுவன் தனித்துவம் வாய்ந்தவை. மக்கள் குடிமனை அமைத்து வாழ்ந்த பகுதிகள் மொழி. பண் பாட்டு விடயங்களை அகத்தே கொண்ட பழைமைமிக்க பெயர்க ளைப் பெற்றுள்ளன. இப்பெயர்கள் அவர்தம் பண்டைச் சிறப்பை, வரலாற்று நிகழ்வுகளை, சமய நடவடிக்கைகளை எடுத்தியம்புவன வாகும்,
தென்னிந்தியாவிலே தமிழர் வாழும் குடியிருப்புப் பகுதிகளி லேயுள்ள இடப்பெயர் ஈறுகளுக்கும் இங்குள்ள இடப்பெயர் ஈறு களுக்குமிடையே சில ஒருமைப்பாடுகள் காணப்படினும் வேறு பட்ட தன்மைகள் இருப்பதை இப்பெயர்கள் காட்டுகின்றன. இது இரு இடத்து மக்களது மொழி, சூழல் அவதானிப்பு, கலாசாரப் பே7க்கு ஆகிவற்றின் தனித்துவத்தைக் காட்டுவ தாக அமைகின்றது. இவ்வகையிலான ஒப்பீட்டு ஆய்வு மேற் கொள்ளப்படுதலும் அவசியமாகின்றது.
வடமராட்சி, தென்மராட்சிப் பகுதிகளிலுள்ள குடியிருப்பு நிலை இடப் பெயர்க்கூறுகளை வருமாறு வரிசைப்படுத்தலாம்
அகம் ഉളtt് சேரி to. Lћ ஆலே குடியிருப்பு பளை anuar til இட்டி குறிச்சி புலம்
அகம்” ஈற்றுப் பெயர்கள்
அகம் என்பது பழந்தமிழ்ச் சொல்லாகும் அகம் = இடம் வீடு, உள்ளிடம், மனம், மார்பு, மலை, ஆசௌசம், பாவம் மாசு, தானியம், நாள், பூமி, விலாசம், ஆகாயம், ஆழம், ஓர் மரம், பாம்பு, ஏழாம்வேற்றுமை உருபு (தமிழகராதி - பக் 2. ). இத்தகு பொருள்களைக்கொண்ட ‘அகம்" என்ற சொல் இடப்பெயர் ஈருகத் தமிழகத்தில் (ஏடகம், சல்லகம், வையகம், திருஏரகம் மருதகம்) மட்டுமன்றி யாழ்ப்பாண மாவட்டத்திலும் (கரம்பகம்

87.
கல்லாகம், சுன்னுகம், பண்ணுகம், மல்லாகம் ) காணப்படுகின்றது, இச்சொல் முதலில் வீட்டுக்கு அமைந்து, அப்பால் வீடுகளுடைய ஊரைக்குறித்தது போலும்! என்கிருர் ரா. பி. சேதுப்பிள்ளை ( 1976 : 57 ). இவ்வாறு அறிவு பூர்வமான விளக்கங்கள் அமைந்து காணப்பட்ட " அகம் ஈற்று இடப் பெயர்கள் யாவும் சிங்களப் பெயர்களின் திரிபு எனக் குமாரசுவாமி ( 1917 : 27; 1918 158 ), ஹோர்ஸ் பரோ ( 1918 55 ) முதலியோர் எழுத லாயினர். அன்னர் மதம், இவ்விடப்பெயர்களின் சொற்பிறப் பியல் அடிப்படையிலும் சொற்பொருளடிப்படையிலும் பொருந் தாமை காண்க
கரம்பகம் (தென்ம, 107, 2 )
இது தென்மராட்சி, உசன் பகுதியிலுள்ள ஓரிடம். கரம்பு என்பது சாகுபடி செய்யாத நிலத்தைக் குறிக்கும். கரம்பை க வண்டல் பரந்த பூமி. வரண்ட கவிமண்ணிலம், ( இருநிலக்கரம் பைப் படுநீருடி ...” பெரும்பாணுற்றுப்படை 93 ); தரிசுநிலம் (*" விடுநிலக்கரம்பை விடரளை நிறைய ...” பதிற்றுப்பத்து : 28 (த லெ. பக்:744). எனவே கரம்பை+அகம்=கரம்பகம் என இடப் பெயராயிற்று. இவ்வாறு பொருள் செறிந்த தமிழ்ப் பெயராக இது அமைய, " கரம்பகம் " என்பதற்குத் தமிழிற் பொருளே இல்லையெனத் தட்டிக் கழித்தார் ஹோர்ஸ்பரோ ( 1917 ), மேலும் கரம்பு - வாற்கோதுமைக்கூழ் என்றும், அது திராவிடச் சொல் என்றும் கூறினர் தாவீது அடிகள் ( 1970 ; 12). இந் நி3லயில் கரம்பகம் ? என்பது சிங்களப்பெயர் என்போர் ( குமார சுவாமி 1 1917 27 ) கூற்றிலிருந்து விடுபட்டு, கரம்பகம் என் பது தமிழ்ப்பெயர் என்ற நிலைக்குத் துணியலாம்,
சின்னக்கரம்பகம் (தென்ம. 107. 9)
இவ்விடம் கரம்பகத்திற்கு அண்மையில் அமைந்திருப்பதால்
இதனைக் கரம்பகத்திலிருந்து பிரித்துக் காட்ட சின்னக் ரம்பகம்
என்றனர். சின்ன + கரம்பகம் - சின்னக்கரம்பகம்.
* ஆலை ஈற்றுப்பெயர்கள் ஆஃ9 ਨੂੰ 3.  ைற க் & th பொறி, நீர்வழிந்தோடும் சிறு வாய்க்கால், மழைநீர் வழிந்தோடும் பள்ளமான நிலம், ஆலயம்,
சோண், குடியிருப்பிடம் என்ற பொருள் நிலையில் இடப்பெயர் ஈருக அமைந்த 10 இடங்கள் யாழ்ப்பாணமrவட்டத்தில் உள்ளன.
1. அகம் > ஆகம் என நீண்டது. கல் + அகம் = கல்லாகம்.

Page 54
888
முறையே அரியாலை, இளவாலை, ஏழால், சரசாலை, சில்லாலை, தம்பாலை துன்னு,ை பன்னுலை, பொன்னுலை, மீசாலை என்பன அவை. அவற்றைவிட மன்னுரி மாவட்டத்திற் பேசாலை, வங்காலை என்ற இடப்பெயர்களும், தென்னிலங்கையிற் கேகாலை, தங்காலை என்ற இட்ப்பெயர்களும் காணப்படுகின்றன.
சுவாமி ஞானப் பிரகாசர் (1917 ) ** ஆல" என்பது குளங் களிலிருந்து நீர் கொண்டு செல்லும் புராதன வாய்க்கால்களைச் சுட்டும் என்கிருரர். இவர் கருத்தை ஏற்று, வெ. சு. நடராரா என்பவர் " சுடர் ' ( ஆவணி 1976 பக் - 13 ) என்னும் இத ழில் எழுதிய கட்டுரை ஒன்றிலே கால்வாய்கள் பொருந்திய நிலை யில் ஆலை ஈற்று ஊர்ப்பெயர்கள் அமைந்ததென்பது பெறப்படும். எனக் கூறினர். ஆனல் மேற்குறிப்பிட்ட கிராமங்களிற் பெரும் கால்வாய்கள் இருந்தன என்பதற்கு ஆதாரங்கள் இல்லை என்பது கள ஆய்வில் உறுதிசெய்யப்பட்டது.
ஆலயங்கள் இருந்த இடம் என்ற நிலையில் ஆலை ஈற்றுப் பெயர்கள் ஏற்பட்டன எ ன் ற க ரு த் தே பொது மக்களிடம் காணப்படுகின்றது. இக்கருத்து ஏழு ஆலயங்கள் அமைந்துள்ள ஏழாஜலக்கும், பொன்மயமான விஷ்ணு ஆலயம் அமைந்திருந்த பொன்னலைக்கும் பொருத்தலாம். ஆளுல் ஏனைய ஊர்ப்பெயர்கள் இவ்விளக்கத்துக்குப் புறம்பாகவே அமைகின்றன.
ஆலை ஈற்றுப் பெயர்கள் பற்றி எழுதிய சுவாமிய ஞானப் பிரகாசர் ( 1987 : 188) * இவ்வீற்றுப் பெயரின சிங்களப் பெயர் களேயாம் " என்ருர், ஆளுல் ஜே. பி லூயிஸ் ( J. P. Lewis 1917 : 170) இவை தமிழ்ப் பெயர்கள் என்பதில் ஐயமில்லை என எழுதிஞர். எஸ். டபிள்யூ. குமாரசுவாமி ( 1918 52 ) ஆல" என்பது சிங்களச் சொல் என்றும், அது சிற்றறு, ஆறு, குளத் திலிருந்து வயலுக்குத் தண்ணிர் கொண்டு போகும் வாய்க்கால் எனப் பொருள் தரும் எனவும் குறிப்பிட்டார். ஆயினும் "ஆல்" என்பது தூய தமிழ்ச் சொல் எனக் கொள்வதில் ஏதும் தடை யிகுப்பதாகத் தோன்றவில்லை.
ஆலை - ஆலமரம் எனவும் பொருள்படும். ஆலம் எள் பது தமிழில் விசா :ம், அகலம், ஆல்=ஆலமரம் (Banyan, Ficusban galenis ) என் பதாகும். கன் ன டத் தி லும் * ஆலெ ” என ( Banyan, fictos indica roxb ) g G5 Guntes6ñde absg, una யாளத்திலும் ஆலம் ' என இதே பொருளில் வழங்குகிறது. கன்னடம், குடகு கொண்டி ஆகிய மொழிகளில் வரும் ஆலெ "

89
'ஆலி', 'ஆலி' என்பவற்றை உற்று நோ க் கி ஞ ல் தமிழ்த் தொடர்ச் சொற்களில் வரும் ஆலை ” இதனையே குறிக்குமெனக் கொள்ளப்போதிய இடமுண்டு.1 துன்ஞல்ை, ஏழாலை முதலிய இடங் களில் ஆலமரங்கள் முன்னர் செறிந்திருந்ததாகக் கூறப்படுகின் றது. இக்கருத்தைச் சான்று படுத்தும் வகையில் தாவீது அடிகள் வருமாறு கூறுகிருர்:
* இவ்வூர்ப் பெயர்களை மாந்தர் எங்ங்ணம் உச்சரிக்கின் றனர் எனக்கவனியுமின்; "புன்ஞலெ, சரசாலெ, வங் காலெ” என்றல்லவா உச்சரிக்கின்றனர். இந்த ஆலெ” என்பதற்கும் ஆலமரத்தைக் குறிக்கும் கன்னட 'ஆலெ” என்பதற்கும் எவ்வித வேறுபாடுமின்று. ஆனதிஞலே தமிழிலும் இச்சொல் இக்கருத்தில் மாந்தரின் சாமான்து வழக்கில் வழங்கப்பட்டதெனக் கொள்வதே சால்புடை யதெனக் கொள்மின் "2.
மேற்காட்டிய சான்று க ளா ற் சுவாமி ஞானப்பிரகாசர், குமாரசுவாமி முதலியோர் கூறியவாறு இது சிங்களச் சொல் அல்ல என்பதும், இஃது திராவிடச்சொல் என்பதும் நிறுவப்படு கின்றன. தமிழகத்தில் மதுரை மாவட்டத்திற் சித்தா ைஎன்ற இடமும், தென்னுர்க்காடு மாவட்டத்திற் பூவாலை என்ற இடமும் உள்ளமை நோக்கற்பாலதாம். துளு நாட்டிலும் " ஆல ” என்ற ஈற்றுப் பெயர்கள் வழக்கிலுள. இது பற்றி ஆராய்ந்த இரகுபதி கெம்துர் என்பவரும் " ஆல ” என்ற துளுதாட்டு இடப்பெயர் ஈறும் தண்rைர் என்ற நிலையிற் பெயர்த் தோற்றம் பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.3 கர்நாடக மாவட்டத்து ஆல ஈற்றுப் GuLugašeg (haala, vaala, aala) 5 Mass pflavih (fallow land) aras imp பொருளுல் கூறப்பட்டுள்ளமையையும் நோக்குக.4
1. தாவீது அடிகள் 'ஊரும் பெயரும்’, சில்லாலை சமூகசேவா
(வெளியூர்) சங்க வெள்ளிவிழா நினைவு மலர், 1971 : 56.
2. மேலது. பக் 57.
3, Aala's This must not be taken as a most common hydronym i. e i aal (water, river etc.) prevailing in all Dravidian Languages......o”. Raghupati Kemtur; “ “ A few interesting place - names of Tulu Nadu". Studies in
Indian place Names - I, 1980; p. 50.
4; B. B. Rajapurahit; “ “ Regional features in naming Place - Names in Karnataka ', Studies in Indian place Nanes, I, 1980. p. 65.

Page 55
90
ஆலை என்பதற்குப் பொறிகள் பொருத்தப்பட்ட சாலை என்ற பொருள் நிலையில் ஆலைஈற்று இடப்பெயர்கள் தோற்றம் பெற்றுள் ளன என ஆராய்தல் பொருந்துவதாக அமைகின்றது. இவ்வகை யில் மரவேலை செய்யப்பட்ட இடம் அரியாலே எனவும், பொன் னகை செய்யப்பட்ட இடங்கள் பொன்ன?ல, புன்னுலைக்கட்டுவன், பன்ன?ல எனவும், துன்னர் ஆலை இருந்த இடம் துன்னலை என வும், தனிநபருக்குரிய ஆலைகள் ஆட்பெயர் பெற்றுச் சரசாலை, தம்பாலே எனவும், ஆலை களின் இயல்பு நோக்கி இளவாலை, ஏழாலை, சில்லாலை எனவும் பெயர் பெற்றன எனப் பொதுப்படக் கூறலாம். ஆயினும் இப்பெயர்கள் பற்றித் தனித்தனியாக ஆரா யும்போது வெவ்வேறு விளக்கங்களும், காரணங்களும் இவற்றுக்கு அடிப்படையாக அமையும் தன்மையும் ஆங்காங்கே ஆராயப்படு கின்றன.
சரசாலே (தென்ம. 101)
இவ்வூர் சாவகச்சேரியிலிருந்து வடக்கே மூன்று மைல் தூரத் திலுள்ளது. சரம் + ஆலை = சரசால். இராம, இ ரா வன யுத்தத்தின் போது இராமருடைய படைகள் சரங்களைச் சேகரித்து வைத்த சாலையாக இவ்விடம் விளங்கியமையாற் சரசாலை என்ற பெயர் ஏற்பட்டதாகக் கதை வழங்குகிறது. சரசு +ஆலை எனப் பிரித்து சரசு என்ற பெண்ணின் குடியிருப்பிடம் என்ற பொரு ளிலும் இவ் விடப்பெயர் ஆக்கம் பெற்றிருக்கலாம்,
பருத்தித்துறை சுண்ணுகம், யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கொடிகாமம் என்ற ஐந்து இடங்களிலுமிருந்து வரும் பெகுஞ் சாலைகள் சரசாலை -கனகம்புளியடிச் சந்தியியிற் சந்திக்கின்றன. விநாயகர், ஐயனுர், காளி முதலிய தெய்வங்களுக்குரிய ஆலயங் களும் இங்கே அமைந்துள்ளன.
இக்கிராமத்தின் குறிச்சிப் பெயர்களாக கனகம்புளியடிச்சந்தி, பாலைநகர், கள்ளியந்துரவு, நடுக்கிணறு, ஒளரிக்காடு, தில்லங்குழி, அம்மன்வீதி, நாவலடி, சங்கக்கிணறு, அருமந்துரவு, பறங்கிவாய்க் கால், கட்டைக்காடு, இல்லாரை, மாத்தளாய் நுணுவில் என்பன அமைந்துள்ளன.
தில்லை மரங்கள் நிறைந்து காண்ப்பட்ட இடம் தில்லங்குழி என வழங்கிற்று. கிராமச்சங்கத்தாற் கட்டப்பட்ட கிணறு அமைந்த இடம் சங்கக்கிணறு எனவும். "அருமந்தவர்" என்பவ ரால் வெட்டப்பட்ட (நீர்நில்) துரவு (அருமந்தவர்+துரவு) அரு மந்துரவு எனவும் வழங்கலாயின. இவ்வூரிற் பறங்கி வாய்க்கால்

91
என்ற வாய்க்காலுளது. இது மாத்தளாய் என்ற சிறு குளத்தி லிருந்து செல்கிறது. இதனைப் போரித்துக்கீசர் வெட் டினர் 67 sår u.
தாவளை இயற்றலே. (தென்ம. 116.1)
இப்பெயரைத் தாவளம்+இயத்து+ஆலை எனப் பிரிக்கலாம். இது வரணிக் கிராமத்தின் மேற்குப் பக்கமாக அமைந்துள்ளது. சில நூற்றண்டுகளுக்கு முன்பு இங்கு ஏராளமாகக் கரும்பு செய்கை பண்ணப்பட்டதாகவும், கரும்பு ஆலைகள் சில அமைக்கப்பட்டு சர்க் கரை தயாரிக்கப்பட்டதாகவும் கூறுவர். இதற்காக இத்தியாவில் இருந்து பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் வருவிக்கப்பட்டு அவர் களிடம் இவ்வூர் மக்கள் இத் தொழிலைக் கற்றுக் கொண்டதாக வும் கதைகள் வழங்குகின்றன. இப்பின்னணியில்(தாவளம் + இயற் ருலோதாவளை இவற்ருலே) நோக்கும் போது, தாவளம் என்ப தற்கு நகரம் இருப்பிடம், மருதநிலத்தூரி என்ற பொருளும் இயற்ருலை என்பதற்குக் கட்டப்பட்ட ஆலை எனப் பொருளும், தொனிப்பதால் மருத நிலத்தூரிலே கட்டப்பட்ட சாலையையுடைய இடம் என்பது பெறப்படுகிறது.
தாவளை இயற்றலை= தாவளம் +இயத்து+ஆலை எனப் பிரித்து நோக்கும்போது இப்பெயர் மேலும் பொருள் செறிந்து காணப் படுகிறது. தாவளம் -மருத நிலைத்தூர் இயத்து - சட்டி, பானை முதலியன ஆலை-தொழிற்சாலை. களிமண் பொருந்திய நிலப் பாங்குடையதும் மட்பாண்டத் தொழில் நடைபெறும் சால்களை உடையதுமான இடம் என்ற காரணத்தின் அடிப்படையில் இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். வரணிப்பகுதியில் மாவடி இயற்றலை, வரணி இயற்ருலே என்ற குறிச்சிப்பெயர்களும் வழக்கிலுள்ளன. இப்பெயர்களும் ஆங்காங்கு காணப்பட்ட மட்பாண்ட தொழிற் சாலைகளின் அடிப்படையிலே தோற்றம் பெற்றமை தெளிவா கின்றது. தாவனே இயற்ருலேயிற் கொட்டிக் கிழங்கடியாகப் பிறந்த கொட்டிக்கான் ? என்ற குறிச்சிப் பெயரும் வழங்குகின்றது,
இங்கு போக்கன், தன்வளை முதலான குறிச்சிப் பெயர்களும் உள. போக்கற்றவர்கள் வந்து குடியேறிய இடம் போக்கன் என வும், தல்லம் + வளை < தல்வளே = குழியான இடம், பதிவான இடம் என்ற பொருள்களில் தல்வளை என்ற குறிச்சிப் பெயரும் வழங்குகின்றன. 1. தகவல் சு. தவமணி, பட்டதாரி மாணவி. யாழ்ப்பாணப்
பல்கச்ைகழகம்,

Page 56
92
தாவளம் = மருதநிலத்தூர் ( குடாமணி நிகண்டு, பக். 107 ) தாழ் + வளை > தாவளை + அம் > தாவளம் என்ருயிற்று. தாழ் வான இடம் என்ற பொருள்நிலையில் இப்பெயர் பெற்றுள்ளது. தாவளையின் அயற் புறத்தே கோட்டைத் திடல் என்ற ஓரிட முளது. இவ்விடத்தில் 1921 இல் சுவாமி ஞானப்பிரகாசர் பல அழிபாட்டுச் சின்னங்களைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.?
துன்னுலே ( வடம. ఎు. G。130)
வருத்தித்துறைக்குத் தெற்கே மூன்று மைல் தொலைவிற் சுமார் 3000 ஏக்கர் நிலப்பரப்புடைய பகுதியாகத் துன்னலை அமைந்துளது. துன்னர் + ஆலை = துன்னலை ஆயிற்று. துன்னர்ஒருவகைச் சாதியார், துணி முதலியவை தைப்போரி (அபிதான சிந்தாமணி. பக். ஒ84 ). துன்னர் + ஆலை = துன்னர் குடியிருப் பிடம் என்ற பொருளில் இவ்விடப்பெயர் தோன்றியிருக்கலாம்.
1. Taavalam lodging place, place of rest, some scholars hold the view that taavalam is a Dravidian word. In this case the possible etymology is (Drv) taavu- to spread' -- ( DI v ) alam= place ”; taavalam place where a species spreads ””.
P. M. Joseph “Prakrit influenec on kerala place Natnes" ISDL Working papers in Applied Linguistics, 1985 No 1 : 4, 5 P. 2,
2. இவ்விடம் பற்றிய நாட்டார் கதை ஒன்றும் வழங்குகின் றது. இங்கு ஏழு அரசிகள் வாழ்ந்தனர்; அவர்களின் பெயர்கள முறையே அங்கநாச்சி, மன்னிநாச்சி, குங்குனிநாச்சி: ஏனையோர் பெயர் தெரியவில்லை. அவர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கு களின் காரணமாக அவர்களின் வாழிடங்கள் அழிக்கப்பட்டதும், அவ்விடத்தை விட்டகன்றனர், அவர்கள் சென்ற பின்பு அவர் களின் வீட்டு வேலைக்காரன் ஒருவன் அவர்களின் மீது கொண்ட பக்தி காரணமாக அவர்களைச் சப்தகன்னியர் எனப்போற்றி கோயிலமைத்து இங்கு வணங்கி வரலாஞன். தற்போதும் அக் கோயிலின் பரம்பரையில் வந்த பூசாரி ஒருவரே அக்கோயிலைப் பராமரித்து வருகிறர். அக்கோயிலில் ஐயனர், நாகதம்பிரான். ஏழுநாச்சிமார், வைரவர், அண்ணன்மார் ஆகியோரின் சின்னங்கள் காணப்படுகின்றன. அவை நாச்சிமாரி கோயிலின் நடுவே இடம் பெற்றுள்ளன (சுவாமி ஞான பிரகாசர் : 1921 பக் 120.

93
டச்சுக்காரர் காலத்திற் பருத்தித்துறையை மையமாகக் கொண்ட பகுதிகளிற் பருத்தி உற்பத்தி, பிடவை நெய்தல், சாய மூட்டுந் தொழில் முதலாந் தொழில்கள் முதன்மை பெற்றிருந் தன. இந்நிலயிலே துன்ஞல்ப் பகுதியிலே துன்னர் எனப்படும் தையற்காரர் பெரிதும் வாழ்ந்து தையற்ருெழில் சம்பந்தமாக ஒரிரு ஆலைகளை நடாத்தியதாலே துன்னர் ஆலை என அவை வழங் கப்பட்டுக் காலப்போக்கில் அது துன்னலே என இடத்தையும் குறிப்பதாயிற்று. ஆளுல் இன்று இக்கிராமத்திலே துன்னர்களோ அவரிகளது ஆலைகளோ இல்லை. இக்கிராமம் துன்னையூர், துன்னை என்னும் பெயர்களாலும் வழங்கப்படுகிறது,
இங்கு பல குறிச்சிகள் காணப்படுகின்றன போதரமடம் ( பொக்கர்மடம்) பொடிக்காடு, ஆயம், புளியாங்கி, வட்டிய வளை, கைப்பற்றை, ஆத்தியடி, தேவாதனம் இலுப்பைநின்ற பாதி, கலிகை, மானின்றகாடு, தாமரைக்குளத்தடி, கிராவளை, கோவிற்கடவை, கொள்வெளி, செவுப்பிட்டி வல்வத்தை, இந்திரம் மன் கோவிலடி (மித்திரம்மன் கோவில் ), மானின்றகாடு, குட வத்தை, கிளானை, மணியந்தோட்டம், இனவொல்லை(இனவெல்லை), மருதடி முந்திசியங்காடு, பாலாவோடை முதலியனவாகும்.2
போதரவு : ஆதரதவு. போதரவு மடம் > போதரமடமா யிற்று பண்டைநாளில் மடம் கட்டிப் பிரயாணிகளைப் பேணிய இடம் இதுவெனப்படுகிறது. புளியாங்கி மருந்து மூலிகையாகப் பயன் படும் ஒரு கீரைவகை. அச்செடிகள் நிறைந்து காணப்பட்ட பகுதி புளியாங்கி எனப்படுவதாயிற்று. இப்போது இதனைப் புளியாரை என்றே உச்சரிக்கின்றனர். தேவதானம் > தேவாதனம் என மரு விற்று என்றும், தேவர்+ஆதனம்-தேவதானம் எனப் புணர்ந் தது எனவும் கொள்ளலாம். இப்பகுதியிலுள்ள பல காணிகள் கோயிலுக்குச் சொந்தமாக இருப்பதும் இக்கருத்துக்குச் சான்ரு கின்றது. இந்திரம்மன் என்ற பெண் தேவதையின் பெயரால் இவ்
1. பருத்தித்துறை இடப்பெயர் லிளக்கம் பார்க்க; பக். 45-47.
வி. தகவல் செல்வி. சுபதினி. செல்வராசா, மொழியியல்துறை,
யாழ்ப்பாணப் பல்க*க்கழகம்,

Page 57
94
விடப்பெயர் வந்துள்ளது. வவிகண்டி என்பது நெல்வயற் பகுதி யைக் குறிக்கின்றது. வலி என்பது நிலத்திற்கோ அல்லது தொழிலுக்கோ அடையாக வந்திருக்கலாம். வடமராட்சி கிழக்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் இக்கிராமம் உள்ளது. குமார சுவாமி (1918:52) துன்ன%ல சிங்களப்பெயரென்ரூர். துன்=சிங் களத்தில் ஒரு மரப்பெயரையும், மூன்று என்ற எண்ணையும் சுட்டு வதாகும்.
மீசாலை. (தென்ம, ந. 21, 1, 2 )
இது சாவகச்சேரிக்குக் கிழக்கேயுள்ள கிராமமாகும். மீசு + ஆல் உயர்ந்த மரச்சோலைகள் உள்ள இடம் என்றும் மாசாலை=மாம ரச்சோலைகள் நிறைந்து காணப்படுமிடமென்றும் பொருள் கூறப் படுகிறது. இக்கருத்துக்களைச் சான்றுபடுத்தும் வகையிலே தென் மராட்சியில் மா, பலா, தென்னை முதலிய மரங்கள் இன்றும் சோலைகளாக வளர்ந்து காட்சி தருமிடம் மீசாலையே.
மீ+ ஆலை உமீசாலை. மீ=இலுப்பை பண்டை நாளில் இங்கு இலுப்பை எண்ணெய் தயாரிக்கும் ஆல்கள் இருந்தபடியால் (மீ+ஆலை) மீசாலை என்று பெயர் ஏற்பட்டதோ எனவும் கருத லாம்.2 மேலும் மீன் + சா-ைமீசாலை; மீன் சந்தைகளிருந்த இடம் என்ற பொருளும் தொனிக்கின்றது. கச்சாய்க் கடலிற் பிடிக்கப்பட்ட மீன்களைச் சந்தைப்படுத்துமிடமாக இது பயன் பட் டிருக்கலாம் என்றும், இவ்வூர்த் தலைவனுக மீகாமன் என்போன் இருந்தான் என்றும் கூறப்படுகின்றது.8 இப்போது இங்கு ‘புதுச் சந்தை" என்ற பெயரில் ஒரு சந்தை இயங்குகிறது.
மீசாலை வடக்கிற் 'சோனகன் பும்ை" என்ற குறிச்சியும், சோனகன் புலவு என்ற இடமும் உள்ளன. தற்போது இப்பகுதி தோட்ட நிலங்களாகக் காணப்படுகின்றது.
1. இந்நூலிற் கண்டி ஈற்றுப்பெயர் விளக்கம் நோக்குக. பக்: 70
2. சோழர் காலத்துக் கல்வெட்டுக்களில் வரிமுறையைக் குறிப் பிடும் மீசாலை (சாலபோகம்)மீயாட்சி முதலான சொற்ருெடர் கள் வருதலும் ஈண்டு நோக்கற்பாலது. மேலும் இரமநாத புரம் மாவட்டத்தில் மீசலூர் என்ற கிராமமும் உள்ளது.
3. தகவல்: இரத்தினபூபதி முருகுப்பிள்ளை. யாழ்ப்பாணப் பல்
தலைக்கழகம், பட்டதாரி மாணவன் 1979.

95
மீசான் வடக்கில் இன் ஞெரு புறம் மருதடிக் குறிச்சியுள்ளது. இங்கு மருது மரங்கள் பெரிதுங் காணப்பட்டமையால் இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். இங்குள்ள மருதடிப்பிள்ளையார்கோவில் முன்பு கிழக்கு நோக்கியிருந்ததென்றும், பின்பு மேற்கு நோக்கித் திரும் பியது என்றும் கூறப்படுகின்றது. மீசாலை வடக்கே கட்டை பறித் தான் என்ற குறிச்சியுமுள்ளது. மாரிகாலத்தில் இங்குள்ள குளம் நிரம்பி. அணைக்கட்டை உடைத்துப் பாயும் நிலை ஏற்படுவதால் கட்டுப்பறித்தான் என்ற காரணப்பெயர் ஏற்பட்டு காலப்போக்கிற் கட்டைபPச்சான் என வழங்கிற்று. அதற்கு அப்பால் புத்தூரிலி ருந்து வரும் பாதை சந்திக்கும் இடம் புத்தார்ச்சந்தி எனப்படு கிறது. இங்கு பிரசித்தி பெற்ற மாவடிப்பிள்ளையார் கோயில் ஒன்றுமுளது. மீசாலையின் ஒவ்வொரு காணியிலும் மாமரம் நிற்கக் காணலாம்; மாம்பழமும் இங்கு அதிகம் பெறப்படுகிறது. வெள்ளைமாவடி, கரும்புமாவடி, பாண்டிக்கேணி (பாண்டிமாவகை) ஆகிய குறிச்சிப் பெயர்கள் மாமரத்தை அடிப்படையாகக்கொண்டு பெயர் பெற்றிருத்தலும் நோக்கற்பாலது.
மீசரில்பில் வேம்புகள் அதிகமாகக் காணப்பட்ட ஓரிடம் வேம்பிராய் என அழைக்கப்ப்டுவதாயிற்று. வேம்பு+பராய்=வேம் பிராய். இவ்விரு மரங்களும் இணைந்து காணப்பட்ட நிலையில் இக்குறிச்சிப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். மேலும் நீராவரங்கேணி, பாலேயடி முதாைன குறிச்சிப் பெயர்களும் இங்கு வழங்குகின் றன.1
*இட்டி' , 'சிட்டி ஈற்றுப் பெயர்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தின் சில இடப் பெயர்கள் இட்டி", "சிட்டி என்ற விகுதி பெற்றமைந்துள்ளன. இவற்றுள் இடு>இட்டி ஆயிற்று. இடு=தங்குதல்; தங்கி வாழுமிடம் என்ற பொருளில் வந்தது. இட்டி, வெட்டி, பிட்டி, சிட்டி ஈற்றுப் பெயர்கள் யாவும் சிம்களமுலம் பெற்றவை என்றும் கூறப்படுதல் காண்க. (குமார சுவாமி - 1918);
“Darfeó og < Mayilahitiya; asu (9) fulg. < Katupitiya; GLumtu9u“.1g-

Page 58
96
மேற்காட்டிய பெயர்கள் மாற்றம் பெற்று அல்லது உருத் திரித்து சிங்களத்திலிருந்து தமிழுக்கு வந்தன என்கிருர் குமார சாமி (1918 158) ஆணுல் "இடு” ( தங்கியிரு) என்ற வினையடி திரிந்து இடு>இட்டி என்ற வடிவம் பெற்று, இடப்பெயர் விகுதி யாக வழங்கிற்று எனக் கொள்வது பொருத்தமாகத் தெரிகிறது .
இன்பருட்டி (வடம. வ. கி. 135. 2)
பருத்தித்துறைக் கடற்கரையோரமாக இக்கிராமம் அமைந் துள்ளது. மக்கள் வழக்கில் இவ்விடம் 'இம்பிலிட்டி" என அழைக்கப்படுகிறது?. இன்பில்+இட்டி எனவும், இன்பர்+இட்டி எனவும் இதனைப் பிரித்துப் பொருள் கொள்ளலாம். இம்பில் அல் லது இன்பர் என்பதற்குரிய பொருள் தக்கவாறு புரியுமாறில்லை. இன்பர் தங்கியிருந்த இடம் என்ற பொருளில் இன்பர்+இட்டி> இன்பருட்டி என இவ்விடம் வழங்கியிருக்கலாம்.
தம்பசிட்டி (வடம, ந. ச. 22, 1)
பருத்தித்துறை நகர சபையின் முதலாம் வட்டாரமாகவும், புலோலி கிராம சபையின் ஒரு பிரிவாகவும் தம்பசிட்டி அமைநி துள்ளது. தம்பர் என்ற பெயருடைய செட்டி ஒருவர் அப்பகுதி யில் முன்பு வாழ்ந்தார் என்றும், அதஞல் அப்பகுதி தம்பர் செட்டி என வழங்கிக் காலப்போக்கிலே தம்பசெட்டி>தம்பசிட்டி என மருவிற்றென்றும் கூறப்படுகின்றது. சென்னையிலே தம்பு செட்டி வீதி அமைந்திருப்பது இங்கு ஒப்பிடத்தக்கது
ஊர் ஈற்றுப் பெயர்கள்
ஊர் என்ற பெயர் கொண்ட ஏழு இடப்பெயர்கள் யாழ்ப்பாண மாவட்டத்திற் காணப்படுகின்றன, ஊர்> ஊர்தல், நகர்தல் பரவு தல், வடிதல், அடர்தல், ஏறுதல், ஊர்கை, ஊர்=வசிக்கும் ஊர் (த. லெ. 1. பக். 498 ). ஊர் என்ற சொல் மிகப் பழையதொன் ருகும். பண்டைய திராவிடர்தாம் குடியேறிய இடங்களில் 'ஊர்' என்ற பெயரை இட்டு வழங்கியிருக்கிருர்கள். சுவாமி விபுலானந் தர் “மேற்றிசைச் செல்வம்" என்னும் கட்டுரையிற் சுமேரியத் தலைநகர் நிப்பூர் என்ருர், பபிலோனியா, தைக்கிராஸ் நதிக்கரை யிலிருந்த ஆசூர் முதலிய 'ஊர்' ஈற்று இடப்பெயர்கள் பழைமை யைச் சான்றுவடுத்துகின்றன.
1. அருள் செல்வதாயகம் (தொப்பாசிரியர்) விபுலாநந்த ஆராய்வு.
சென்னை, 1964, பக். 34-38 2. தகவல் பேராசிரியர் அ. சண்முகதாஸ்

97
உலகப் பழைய நாகரிக கால இடங்களில் எல்லாம் 'ஊர்' ஈற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. ஊர் என்னும் சொல் திராவிட இனச்சொற்களுக்கு பொதுவான ஒரு பழைய சொல். துளுநாட்டிலேயும் " ஊர் 7 ஈற்றுப் பெயருள்ள பல ஊர்களுள.2 பழந்தமிழ் இலக்கியங்களிலும் 'ஊர்', "ஊர” என்ற சொற்கள் பயின்றுவரக் காணலாம், பல்லவர் காலம் முதலான இலக்கி யங்களில் ஊர் ஈற்று இடப்பெயர்கள் பரவலாக இடம்பெறலாயின. தமிழகத்தில் ஊர் ஈற்றுப் பெயருடைய பல நூற்றுக்கணக்கான இடப்பெயர்சள் காணப்படுகின்றன 3
மக்கள் காடு திருத்தி, மன அமைத்துக் குடியேறுகின்ற இடம் புது ஊராகின்றது. அது போன்றே பண்டைராவில் மக் கள் புதிதாகத் தாம் அமைத்த குடியிருப்புக்களை 8 ஊர் ' எள் றனர். ஊர்தல் = ஏறுதல் என்ற பொருள் தருவதால், குடிகள் ஊர்ந்து வந்து நிலையாக இருந்த ( குடி ஏறிய, பரவிய ) இடமே ஊராயிற்று எனலாம்.4
இவ்வகையில் யாழ்ப்பாண மாவட்டத்திலே 1ஊர்' ஈற்றுப் பெயரினவாகக் குடத்தனைக் கரையூர், கொற்றையூர், செட்டியா வூர் தல்லூர் (இருஇடங்கள்), பாசையூர், புத்தூர் என்ற ஏழு
1. "..... ... Nearly all the words for cities are Sumero. Dravidian in origin, say whether it be Uur ' which entered from presentday Iraq, where ancient Sumerian had a populous city called “Uur' the ruins of which were excavated by the archaeologists and from which came the patriarch Abraham to poles time. ...'
I Daaviidu : 1972 : 50.]
2. மயிலை. சீனிவேங்கடசாமி : துளுநாட்டு வரலாறு, சென்னை,
966, Luis. 76. 3. " ஊர் " ஈற்று இடப்பெயர்களாகத் தஞ்சை மாவட்டத்
தில் 518 இடங்களும், செங்கற்பட்டு மாவட்டத்தில் 46 இடங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 86 இடங்களும், பழந்தமிழ் இலக்கியங்களில் 120 இடங்களும் அமைந்திருப் பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ( மெப், சந்திரசேகரன் - தஞ்சைமாவட்ட ஊர்ப்பெயர்கள், 1983) 4. See : S. V. Subramaniam. 'The place names in Early Tamil Literature' All India Conference of the place name, socity of India, Mysore, 20-4s-84,

Page 59
98
இடங்கள் அமைந்துள்ளன. இவற்றேடு 'ஊர்' என்ற சொல் முன் னெட்டாக அமைந்த (ஊர் + அணி “ஊரணி" என்ற இடப்பெய ரும் இவ்வரிசையிற் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுள் வடமராட் சிப் பகுதியில் அமைந்துள்ள மூன்று இடங்கள் இங்கே ஆராயப் படுகின்றன. குடத்தனைக் கரையூர் ( வடம. வ. கி. 142 - 1)
இவ்வூர் வல்லிபுரத்திற்குத் தென்கிழக்கே மணற்காடு, வலிக் கண்டி, பங்குனிப்பிட்டி, கருமணல்கும்பி, இந்துமாசமுத்திரம் ஆகிய பகுதிகளுக்கு நடுவேயமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடா நாட்டின் கிழக்குப் பக்கத்திலுள்ள கடற்கரையூர்களில் இதுவும் ஒன்ருகும்.1 இங்கு நோயாளிக்கு மந்திரத்தால் மருத்துவம் செய்து நோயகற்றும் நல்ல வைத்தியர்கள் வாழ்கிறர்கள். இவர்களைக் குட நாடாம் மலையாளத்து மாந்திரீகர் பரம்பரையினர் என்றும் கூறுவர். கொற்றையூர். ( வடம. தெ. மே, 127.3 )
இது தமிழகத்திலுள்ள கொற்றையூர் என்ற பெயருடன் ஒத்துள்ளது. இங்கு வாழ் மக்கள் அவ்வூர்ப் பழங்குடிகளாக இருக்க லாம். இது கரணவாய் வடக்கில் அமைந்துள்ளது. கொற் றம்+ஊர்=கொற்றையூர் ஆயிற்று. செட்டியா ஊர் (வடம. வ. கி. 123.3)
இவ்விடம் கெருடாவிற் கிராம சேவகர் பிரிவில் அமைந் துள்ளது. இங்கு செட்டிமார் குடியேற்றம் அல்லது வணிக நட வடிக்கைகள் இடம் பெற்றபோது இப்பெயர் ஏற்பட்டிருத்தல இயல்பே.2
'குடியிருப்பு ஈற்றுப் பெயர்கள்
குடி = குலம், கோத்திரம், குடிமக்கள், ஊர், மருதநிலத் தூர், குடிசை, புருவம் (தமிழகராதி 83 ), உறவுமுறையுடைய பல குடும்பத்தினர் சேர்ந்து வாழு மி டம் குடியிருப்பாகும் ( ரா. பி. சேதுப்பிள்ளை 1976 : 60 ). தமிழகத்திலும் குடியிருப்பு ஈற்றுப்பெயரிலே பல் நூற்றுக்கணக்கான இடப்பெயர்கள் அமைந் துள்ளன. இவை முன்னெட்டு நிலையில் ஆட்பெயர், சூழல்,
1. இயல் 9 இலுள்ள குடமியன், குடத்தன - என்னும் ஊர்ப்
பெயர் விளக்கங்களையும் ஈண்டும் நோக்குக. 2. செட்டிக்கேணி, செட்டியூர், செட்டியாவெளி ஆகிய இடப் பெயர் விளக்கங்களையும் பார்க்க, பக், 42, 49, 5,

99
பழைமை, புதுமை என்ற சொற்களைச் சேர்த்துப் பெயர் ஆக்கம் பெற்றுள்ளன, இவ்வகையில் இருபெயர்கள் தென்மராட்சிப் பகுதியில் உள்ளன.
குடியிருப்பு (தென்ம. 118 )
இது மந்துவிற் கிராமத்தின் ஒரு பகுதியாகும். மந்துவில் பண்டை நாளிற் காட்டுப் பகுதியாக விளங்கிய போது, காட ழித்து மக்கட் குடியிருப்பு அமைத்த இவ்விடம் குடியிருப்பெணச் காரணப்பெயர் பெறுதல் இயல்பாயிற்று.
கோயில் குடியிருப்பு (தென்ம, ந. 21.8)
சாவகச்சேரி நகரசபைப் பகுதிகளில் இது அமைந்துள்ளது. சாவகச்சேரி சிவன்கோயிலுக்குச் சொந்தமான காணிகளே இங்கு அதிகமாக உள்ளன. அக்கோயிலுக்குச் சேவகம் செய்த மக்கள் பண்டை நாளில் இங்கு குடியிருந்தமையாற் காரணப் பெய ராய்க் கோவில் குடியிருப்பு எனப் பெயர் பெறுவதாயிற்று. கோயிலுக்குச் சொந்தமான குடிஇருப்புப் பகுதி என்பது இதன் பொருளாம். w
'குறிச்சி ஈற்றுப் பெயர்கள்
குறிச்சி - குறிஞ்சி, குறிஞ்நிலத்தூர், ஊர், குறி. அடையா ளம், இலக்கு, குறியிடம், நோக்கம், குறிப்பு, குறித்தல். கோடு வரைதல், கட்டுதல், பற்றுதல் ( த லெ, 2 1047 - 1048 ). ஆதியிற் குறிச்சி என்பது குறவர் குடியிருப்பைக் குறித்ததாயினும், பிற்காலத்தில் மற்றைய குலத்தார் வாழும் சிற்றுார்களும் அப் பெயர் பெற்றன (ரா. பி. சேதுப்பிள்ளை ; 1976 : 6 ), எனவே குறிச்சியிருக அமையும் இடப்பெயர்கள் தொடக்க காலத்திற் குறி ஞ்சிப் பிரதேசமாகிய சேரநாட்டிலே தோற்றம் பெற்றுப் பின்பு தமிழர் வாழும் ஏனைய பகுதிசளிலும் இடம் பெறுவதாயின.
யாழ்ப்பாண மாவட்டத்திலே தென்மராட்சிப் பகுதிகளில் மட்டும் குறிச்சி என்ற தனியிடப் பெயர்கள் அமைவதைக்கொண்டு இப்பகுதியிற் சேரர். தொடர்பு அதிகம் இருந்திருக்குமோ எனவும் சிந்திக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனைய பகுதி களிற் சிறு பகுதியைச் சுட்டும் நியிேற் குறிச்சி" என்ற சொல் பயன்பட்டிருப்பதும் நோக்கற்பாலது,

Page 60
00
இடைக்குறிச்சி (தென்ம. 115 1)
வரணி, தாவளைஇயற்ருல் ஆகிய கிராமங்களுக்கு இடையே யுள்ள குடியிருப்புப் பகுதியாக இக்கிராமம் அமைந்தமையால் இது இடைக்குறிச்சி எனப் பெயர் பெறுவதாயிற்று. இதுபோன்றே இடைக்காடு" என்ற கிராமமும் பெயரி பெற்றதென்க. இக்கிரா மத்தின் வடபகுதி வடக்குக்குறிச்சி’ எனப் பெயர் பெறும். இக் கிராமம் மிகப் பழைமை வாய்த்த ஒகிடமாகும். "சுட்டிபுரம்" என்ற குறிச்சியும், பழைமைவாய்ந்த "சுட்டிபுரம் கண்ணகி அம் மன்" கோயிலும் இங்குள்ளமை இதற்குச் சான்ருகும்.
கரம்பைக்குறிச்சி (தென்ம. 115. 2)
இது மேற்குறிப்பிட்ட இடைக்குறிச்சிக்கு அருகிலுள்ள இட மாகும், கரம்பை+ குறிச்சி=கரம்பைக்குறிச்சி. கரம்பைச் செடி கள் ( Carissa Sprinarum) பெரிதும் இங்கே காணப்பட்டமை குறித்து இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
மன்னன்குறிச்சி (தென்ம, 111.3)
இது தென்மராட்சியில் மிஞ்சுவிற் கிராமத்தின் ஒரு பகுதியா கும். மன்னன் + குறிச்சிய மன்னன் குறிச்சி. இவ்விடத்தில் முன்பு அரச மாளிகை இருந்து அழிந்துவிட்டதாகக் கூறுவர். ஆணுல் இதற்குரிய சான்றுகள் அங்கு காணப்படவில்லை. அகழ்வாராய்ச் சியின் மூலமே இதன் உண்மைத் தன்மையை நிறுவலாம்.
சேரி ஈற்றுப் பெயர்
சேர்>சேரி=ஊரி, முல்லை நிலத்தூரி (த. லெ. 3; 1637 ). சேரிபற்றிப் புலவர் சிவபாதசுந்தரனர் கூறும் கருத்துப் பொருத் தம் ரோக்கி ஈண்டுத் தரப்படுகிறது
“முல்லயுலகிற் பாடி என்பதைவிடச் சேரி” என்றஊர்ப் பகுதியுமுண்டு. இந்த ஊர் குழுக்குடும்பத் தலைவன் தொழில் நெருக்கடியால் தன் சொத்தையும் குடும்பத் தையும் பிரிந்து விட்டபோது அவர்கள் தம் வாழ்வு வளம் நோக்கி வந்து சேர்ந்த இடமாகும் பிரிந்து சேரித்தவிடம் சேரி எனப்படும்; அல்லது ஒன்ருேடொன்று சேர்ந்த இல்லங்களை அமைத்து இருந்த இடம் சேரி எனப்படும். இங்கு இல்லம் சேர்ந்திருந்தாலும் குடும்பம் தனித்தே இருந்தது. எனவுே செரி தனிக் குடும்

O1
பத்தின் உறைவிடமாயிற்று. பாடி என்பது குழுக்குடும்ப நிலையையும், சேரி என்பது தனிக்குடும்ப நிலையையுங் கொண்டவை எனத் தெளிக ( நா. சிவபாதசுந்தரஞர்: 1972; 160- 161 ).
சாவகச்சேரி: (தென்ம, ந. ச. 21 )
சாவகர் + சேரி-சாவகச்சேரி: , சாவகம் > சாவகர். வரலாற் றேடுகள் சாவகம் என்பது பாவா, சுமாத்திரா ஆகிய இடங்கள் எனக் குறித்தன. பண்டைச்சரித்திர ஆசிரியர் தொலமி, யாவா வைச் சிறியசாவகம் என்றும், சுமாத்திராவைப் பெரிய சாவகம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மலாயாக் குடாநாட்டுத் தீபகற்பங் கள் அனைத்தும் பண்டு ‘சாவகம்" என அழைக்கப்பட்டது. சாவக நாட்டிலே பண்டைத்தமிழர் கலாசாரம் நன்கு நிலையூன் றியிருந்தமையை மொழி, சமயம், கட்டிடம் முதலியவிடயங்கள் வெளிப்படுத்துகின்றன. இத்தகைய தொடர்புகள் அரசியல், வணி கம் என்பவற்ருல் ஏற்பட்டிருக்கலாம்.
"தமிழகத்தோடு வணிகஞ் செய்த சாவகர் இரத்தின துவீப மென விளங்கிய ஈழத்தேயத்தையும் நன்கறிந்தவராய் இங்கும் பண்டைக் காலத்தே பண்டமாற்றஞ் செய்து வந்திருத்தல் சாத் தியமே. அம்மக்களது குணுகுணங்களைச் செவ்வனேயறிந்த தமிழ் வேந்தரும் சிங்கள வேந்தரும் அவரைத் தம் படை வீர ராய். அமைத்துக் கொண்டனர், யாழ்ப்பாணத்தையாண்ட தமிழ் அர சராலே சாவகர் தென்மராட்சியிற் குடியேற்றப் பட்டிருத்தலுங் கூடும். தற்காலத் தமிழ் வழக்கிலே யாவுகர் எனப்படுவார் இச் சாவகரே யாம்" என்ருர் குமாரசுவாமி ( 1918 12). எனவே முற்காலத்திற் ( யாவகர் ) சாவகர் வந்து குடியேறிச் சேரியாக வாழ்ந்த இடம் சாவகச்சேரியாயிற்று. சாவகச்சேரியிற் சாவகம் தொடர்பு பற்றி யாழ்ப்பாணச் சரித்திரம் (பக். 86 ) கூறும்போது, "குலோத்துங்க சிங்கையாரிபன் 13 ஆம் நூற்றண்டில் யாப்ப கூவாவை அழித்த பொழுது சிறையாகப் பிடிபட்ட யாவகர்களே இங்கு வாழ்ந்தார்கள்" என்கிறது. இவர்களைச் சங்கிலிமன்னன் சாவாங்கோட்டையிலிருந்தும் சாவகச்சேரியிலிருந்தும் துரத்தினன்
Sii
1. O. W. Wolters, Early Indonesian Commerce, A study of the origins of Sri Viyaya, Newyork, 1967 என்ற நூற் செய்திகளும் ஈண்டு நோச்கத்தக்கன,

Page 61
102
என யாழ்ப்பாண வைபவமாலை (பக் 60 ) கூறுகின்றது. 13 ஆம் நூற்ருண்டிற் சாவகமன்னன் சந்திரபானுவின் ஆட்சி வடஇலங்கை யில் இருந்திருக்கிறது. அதன் தொடர்பாகவே சாவகச்சேரி சாவாங்கோட்டை, சாவகன் சீமா என்ற இடப்பெயர்கள் அமை பலாயின.
சாவகச்சேரியிற் பண்டைநாளில் இருந்த வாரி வனநாதர்" என்ற பழம்பெருங்கோயில் பின்னுளில் அழிந்திருக்கிறது. வெள் ளங்காடு என்பதை வடமொழியில் வாரிவனம் என வழங்குவர். (மறைக்காடு) வேதாரணிகம் என வழங்கியதைக் குறிப்பிடலாம்) இக்கிராமம் மழைக்காலத்தில் வெள்ளப்பெருக்கிற்கு உட்பட்டி ருக்கலாம். எனவே இவ்விடம் வெள்ளக்காடு->வெள்ளங்காடு என வழங்கிவந்து, பின்பு அங்கு ஆலயம் அமைக்கப்பட்டபோது வெள்ளங்காடு > வாரிவனம் என வட மொ ழி யில் மொழி பெயர்க்கப்பட்டு முதலிற் கோயிற் பெயராக வழங்கிற்று. பின்பு ஊருக்கும் வாரிவனம் என்றபெயர் ஏற்பட்டிருக்கலாம். அப் பெயர் பின்னுளிற் சாவகர் தொடர்பால் வழக்கொழிய, சாவ கர்சேரி>சாவகச்சேரி என்ற வழக்கே நிலைபெறுவதாயிற்று.
போர்த்துக்கீசர் ஆட்சி நடைபெற்ற காலத்தில் அவர்களால் வடமாகாணத்திற் பல தேவாலயங்கள் அமைக்கப்பட்டன. அவற் றிற் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட தேவாலயம் மிகப் பெரிய தாகக் காணப்பட்டது என்கிருர் பால்தேயல் அவர்கள். இந்துக் கோயில் ஒன்று அழிக்கப்பட்ட இடத்திலேயே இக்கோயில் கட் டப்பட்டதாக சுமிாமி ஞானப்பிரகாசர் ( 1921 118 குறிப்பிட் டுள்ளார். அவர்களுக்குப் பின்னர் ஏற்பட்ட டச்சுக்காரர் ஆட் சியை நினவூட்டுவதாக இங்கு "டச்சு வீதி"யும் உள்ளது.
சாவகச்சேரி மிகப்பரந்த இடமாகும். இதன் வடக்குப் பகு தியில் கல்வயல், குசவன்மடம், கிராம்புவில், கெருடாவில், மண்டு வில், பெருங்குளம் சந்தி, சங்கத்தாளை, பெரிய அரசடி, அல்லாரை, முதலியாவெளி, மருதடி முதலிய கிராமங்களுள. இதன் தென் பகுதியிற் கற்குழி, கண்டுவில், கோயிற்குடியிருப்பு, மகிழங்கேணி, பெரியமாவடி, அல்லாரை, சப்பச்சிமாவடி சிவன்கோவிலடி முத லிய இடங்கள் அடங்குகின்றன.
1. கா. இந்திரபாலா யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம், யாழ்ப்பாணத் தொல்பொருளியற்கழகம், 1972 பத். 4446

103
இதன் குறிச்சிப் பெயர்களில் மண்டுவில் என்பதை நோக் கும்போது மண்டு ஒருவகை மரத்தைச்சுட்டி, அது குளப்பெய ராகி (மண்டுவில் ), குளப்பிபயர் இடத்தையும் குறிப்பதாயிற்று. குசவன்மடம் ( குயவன்மடம் ) சட்டி, பானை செய்யும் குயவர் பெயரால் அமைந்தது. இவ்விடத்திற் சிறிய மடமுங் குளமுங் காணப்படுகின்றன. பெருங்குளம்சந்தி என்ற இடத்தில் * பெருங்குளம் ” என்ற பெயருடைய குளமும் நாற்சந்தியும் அமைந்திருக்கின்றன. இதன் அயற்பகுதியாகிய கிராம்புவில், இல்லாரை என்ற இடங்களிலுள்ள குளங்களிலும் பார்க்க இக்குளம் பெரிதாகக் காணப்பட்டமையாற் பெருங்குளம் எனக் காரணப்பெயர் பெறுவதாயிற்று, М
கண்டுவில் என்ற குளப்பெயரால் அமைந்த கண்டுவில் குறிச்சியும் இங்குள்ளது. கண்டு+வில் (<கன்று+வில்). இது தோட்டப்பயிர் செய்யும் பகுதியாகும். இத்தோட்டங்களிற் பயி ரிடுவதற்குரிய பயிர்க் கன்றுகளைப் பிற ஊர்களிலிருந்து கொண்டு வந்து, இங்கு தட்டுப்பயன் பெற்றிருக்கினறனர். பின்னர் நாற்று நடுகைக்குரிய பயிர்க் கன்றுகளை உண்டாக்கி விற்பனை செய்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் வந்திருக்கலாம். அதனுலே (கன்று) கண்டுவில் என்ற பெயர் வழங்கலாயிற்று.
சாவகச்சேரியில் இரு சிவன்கோயில்களுள. இவற்றில் மிகத் தொன்ம்ையானது வாரிவனநாதசிவன் கோயிலாகும். போர்த் துக்கேயர் இதனை அழித்தனர். பின்ஞளில் வயல் உழும்போது சிவலிங்கம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுக் கோயில் அமைக்கப்பட் டது என்ப. இதன் பழைய கோயிலின் தீர்த்தக்கிணறு சாவகச்சேரி பேரூந்து நிலையத்திற்கண்மையிற் காணப்படுகின்றது.
சாவகச்சேரியில் அரசடிப்பகுதியில் அமைந்த ஒரிடம் சப்பச்சி மாவடி, இங்கு * சப்பச்சிமாவடி விநாயகர் ஆலயம் " அமைந் துள்ளது. தமிழ்நாட்டுக் காஞ்சிமாவடி என்ற தலத்து மாவிதை கோண்டுவரப்பட்டு இங்கு நட்ட மரத்தடியிலேயே கோ யில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாவின் கனி விதையின்றி இருப்ப தால் * சப்பச்சி " எ ன ப் பெயர் பெற்றதென்பர். மேலும் பெரிய மாவடி" என்ற வட்டாரமும் இங்குளது. இங்கு பெரிய மாவடிக் கந்தசுவாமி கோவிலும் அமைந்துள்ளது. மரப்பெயரா ன்ரித்தலம் பெயர்பெறுவதாயிற்று.
1. சாவகச்சேரி என்ற இடப்பெயருடன் சாவாங்கோட்டை, சோனகன்புலம் ஆகிய இடப்பெயர் விளக்கங்களையும் ஒப்பிட்டு ரோக்குக. பக். 64, 94, 102

Page 62
i0.
‘பளை ஈற்றுப் பெயர்கள் பளே - குடியிருப்பு, மக்கள்வாழும் பகுதி, மாவட்டம், மாகா ணம் ( Daavidu 1972 : 53 ), பள்ளி, பளை இரண்டும் ஒரு பொருட்கிளவிகள். பள்ளி - நகரம், இடம், இடைச்சேரி, சிற்றுார், நித் தி லை, தேவர்கோயில், மக்கட்படுக்கை, முனிவர்வாசம், விலங்கின் ப்டுக்கையிடம், வீடு, சாலை (தமிழகராதி பக் 210 ).
பளை ஈற்று இடப்பெயர்கள் பற்றி எழுதிய குமாரசுவாமி ( 1918 : 46) பொல = பூமி எனப்பொருள்படும் சிங்களச் சொல்லை எம்மவர் " பளே ’ எனச் சிதைத்தே பெரிதும் வழங் குவர் " எனக் குறிப்பிட்டுள்ளார். சுவாமி ஞானப்பிரகாசர் ( 117 - 167 ), ஹோர்ஸ்பரோ ( 1917 172 ) முதலியோரும் * பளை என்பதைச் சிங்களம் என்றெழுதினர். சபாரத்தின முத லியார் ( 1917 - 10 ) பாழி என்ற சொல்லைப் பளை யு டன் தொடர்புபடுத்தி இரண்டும் தூய தமிழ்ச்சொல் என்று நிறுவிஞர்.
பள் + ஐ = பளை, பள் + இ = பள்ளி. இவை இரண்டும் தமிழ் அடிச்சொற்களினின்றும் பிறந்தவை. சங்க இலக்கியத்தில் அகத்தியன் பள்ளி, காட்டுப்பள்ளி, நனிபள்ளி முதலாம் தமிழ்ப் பெயர்களிடம்பெற்றுள்ளன. தென்னிந்தியாவிற் பாளேய்ம் என்ற ஈறுபெற்ற இடப்பெயர்கள் பரவலாகக் காணப்படுகின்றன. பள் ளம் என்ற ஈறு பெற்ற பெயர்கள் இருநாடுகளிலும் வழக்கி லுள்ளன. அதுவும் பள்’ என்ற அடிச்சொல்லினின்றே தோன் றியதாகும். பளை, வற்றப்பளை, பட்டிப்டளை முதலாம் பளை ஈற்றுப்பெயர்கள் இலங்கையின் பற்பல பாகங்களிலும் காணப் படுகின்றன. வரத்துப்பளை : ( வடம. வ. கி. 140.13)
இது பருத்தித்துறைப் பகுதியிலுள்ளது. வரத்து + பளை வரத்துவாரி=குளக்கால் (த. லெ. Wi, பக். 3508). எனவே வரத் துப்பளை என்பது மக்கள் வந்து தங்கிய இடம் என்ற பொருள் தருவதாகும். இதனே வராத்துப்பளை என்றே எழுதுகின்றனர். எனினும் மக்கள் வழக்கில் இப்பெயர் விராத்துப்பளை என்றும் ராத்துப்பளை என்றும் வழங்கக் கேட்கலாம்.
விடத்தற்பளை ( தென்ம. 107.13 )
விடத்தல் + பளை = விடத்தற்பளை, விடத்தல் ஒரு வகை மரம். விடத்தல் மரங்கள் செறிந்து காணப்பட்ட இடம் என்ற பொருளில் மரப்பெயரடியாக இப்பெயர் தோற்றம் பெற்றுள் ளது. மன்னர் மாவட்டத்தில் விடத்தல் தீவு என்ற ஒரிடமுமுண்டு,

10S
*புலம்’ ஈற்றுப் பெயர்கள்
புல் + அம் = புலம். இச்சொல் திராவிட மொழிகளில் வழங் குவதாம். உ+ம் பொலமி ( கொலமி ), பொல ( கன்னடம் ) (தாவீது : 1970 : 69 ), புல்+இலை + வைப்பு - புல்லில் வைப்பு = குடிப்போய்ப் பாழ்ந்த ஊர்; இலை க ளா ல் வேயப்பட்ட குடிசைகளையுடைய ஊர். அகநாநூற்றிற் புலம் என்பது நிலம் என்ற பொருளில் 29 முறை வந்துள்ளது. மேலும் புலம் என்ப தற்கு வயல், இடம், திக்கு, மேட்டுநிலம் என்ற பொருள்களு முள (த. லெ. 5, 2484). புலம்பு = நெய்தல் நிலம். புலம்பன் நெய்தல் நிலத் தலைவன் (அகம் : 40 : 4 ).
புலம் = முல்லைநிலத்தையும் குறித்தது. புல்>புலம்) புலம்பு =நெய்தல் நிலத்தைச் சுட்டிற்று. புலம்பு-தனிமை என்ற பொரு ளில் ( அகம், தொல் ) நூற்சான்று காட்டி, பெயராக -தனிமை, வினையாக - தனிமையுறு என்று பொருள் தந்தார் தாவீது ( 1970 : 60 ). காலப்போக்கிற் புலம்பு = வருந்து - வருத்தம் என்ற பொருளும் சேர்ந்தது. அகநாநூற்றிலே நிலத்தைச் சுட் டும் புலம் என்பதிலிருந்தே புலவி (ஊடல் ) என்ற பதமும் வந் தது ( தாவீது: 1979:7). புல் + அர்=புலர் - விடிதல். (மணம்) விரிதல்; புலரி - விடியல் ( தாவீது 1970 72). விடியற் காலத் தில் உழவன் செல்லிடம் புலம் ஆதலால் அது காரணப்பெய ராகவும் அமையலாம். மேலும் * வெள்ளம் உவரோடு உவரிக் கடற்புலவு மாற் று ம்..” ( முத்துக்குமாரசுவாமிபிள்ளைத் தமிழ் - செய் - 3 ) என்ற பாடல் வரியாலும் உவர் நிலம் சார்ந்த நிலப்பகுதி என்ற பொருளுந் தொனித்தது. முல்லைநிலம் இருவகைப்படுமெனவும் அவை முறையே மரம் நிறைநிலம், புல் நிறைநிலம் எனப்படுமெனவும் முன்னது புறவு எனவும், பின்னது புதவு எனவும் படும். இப்புதவே புலம் எனப்பட்டதாகும். இவ் வாறு பொருள்தரும் ‘புலம்’ ஈற்று இடப்பெயர்கள் பற்றி ஈண்டு ஆராயப்படுகிறது.
கொற்புலவு ( தென்ம, 105.5)
இது கச்சாய்ப் பகுதியில் அமைந்துள்ள ஓரிடம், கொல்லர்கள் நெருங்கி வாழ்ந்த இடம் என்ற பொருளில் ( கொல்லர் + புலம் ) கொல்லர்புலம் என்றிருந்து காலப்போக்கிற் கொற்புலவு என மருவிற்று என்பர். (புலம் > புலவு என வழங்கிற்று).
1, நா. சிவபாதசுந்தரஞர், 1972 : பக், 145 - 150,

Page 63
105
மறவன் புலவு ( தென்ம. 93)
இது யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாற்ருெடு தொடர்பு டைய ஒரிடமாகும். இது சாவகச்சேரிக்குத் தென் மே ற் கே அமைந்துள்ளது. மறவன் + புலம் = மறவன்புலவாயிற்று. " மற வன்புலோ ' என்ற உச்சரிப்புங் காணப்படுகின்றது, ‘ யாழ்ப் பாண வைபவகெள முதி ' என்னும் நூலிலே மறவன்புலத்தார் பற்றிய செய்தி வருமாறு கூறப்பட்டுள்ளது :
* வீரோதயசிங்கையாரியன் ( கி. பி. - 1458 வரை ) மது ரையில் ஆட்சிபுரிந்த சந்திரசேகர பாண்டியனுக்குதவி யாகத் தமிழகத்திற்குப் படையுடன் சென்று பாண்டியன அரசஞக்கினன். பாண்டியன் இந்த உபகாரத்திற்குப் பதி லாகப் பெருந்திரவியத்துடன் மல்யுத்தத்தில் வல்ல சில கன்னடரையும், மறவரையும், வில்வித்தையிற் சிறந்த சில வீரரையும், சில வே ட  ைர யு ம் ஆரியச்சக்கரவர்த்திக்கு அளித்தான். ஆரியச் சக்கரவர்த்தி அம் மறவரை மறவன் புலத்திலும், வேடுவரை வேடுவன் கண்டியிலும், கன்ன டரை மா வி ட் ட புரத் தி லும் குடியமர்த்தினன். * ( க. வேலுப்பிள்ளை - 1918 22 ) எனவே மறவர் குலத்தினர் தங்கியிருந்த இடம் மறவன்புலம் எனப்பெயர் பெற்றதெனலாம், 1 -
* மடம் 7 ஈற்றுப் பெயர் நெடுஞ்சாலைவழியே செல்லும் பிரயாணிகள் தங்கிக் களைப்பு ஆறிச்செல்லத்தக்க மண்டபங்கள் மடம் எனப்படும். அங்கு நீர் வசதி, படுக்கைவசதி முதலியன அமைந்திருக்கும். இவ்வகையான மடங்கள் அமைந்த இடங்கள் மடத்தின் பெயரால் வழங்கலா யின. இலங்கையின் பல பாகங்களிலும் " மடம் ' ஈற்று இடப் பெயர்கள் காணப்படுகின்றன. சுப்பர் மடம் (வடம. வ. கி. 131அ. 1 )
இது பருத்தித்துறையில் உள்ள ஒரு பகுதி. ஆட்பெயர் பெற்ற மடம், அது அமைந்த இடத்தையும் சுட்டிற்று.
* வாய் ஈற்றுப் பெயர்கள் வாய் = இடம் என்ற பொருளில் இடப்பெயர் சுட்டிற்று. தமிழகத்தில் “வாய் ஈற்றுப் பெயருடைய இடங்களாக அவைாய், ஆலவாய், ஏரிவாய், கல்வாய், நாவாய், ரெல்வாய் எனப் பல இடங்கள் உள்ளன. 1. இராமநாதபுரத்திலிருந்து சில மறவர் இங்கு வந்து குடியேறி
னர் என்று கூறுகிறது யாழ்ப்பாண வைபவமால், பக். 6

107
அல்வாய் (விடம. தெ. மே. 33. } )
பருத்தித்துறைக்குத் தென்பாகமாக அமைந்துள்ள பெரிய கிராமம் அல்வாய். இது வடக்கு, தெற்கு என்ற இரு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டது. அல் + வாய் ~ அல்வாய். (அல் - இருள் ; அல் > அலை - கடல்அலை வாய் + இடம் ) அலை + வாய் = அலைவாய் > அல்வாய். திக்கம் உட்பட்ட இப் வகுதி கடற்கரையோரப் பகுதியாதலால், அலமோதும் இடம் என்ற பொருளில் அலைவாய்" எனப்பெயர் பெற்றிருக்கலாம். மட்டக்களப்புத் தமிழில் கடற்கரை ஓரத்தை "அலவாய்", "அல வாய்க் கடற்கரை" என வழங்குவர். கேரளத்தின் தெற்கேயுள்ள கொச்சின் துறைமுகத்தின் வடக்கே 20 மைல் தொலைவில் அல் வாய் ( Alwaye ) என்ற ஒரிடமுண்டு. இதுவும் கடற்கரையோர மாகவுள்ளது. இங்கிருத்து குடிபெயர்ந்து வந்த மக்கள் குடியேறிய இடம் இதுவாகவும் இருக்கலாம்.
அல்வாய்க் கிராமத்தின் குறிச்சிப் பெயர்களுள் மாயக்கை, மன்னன் மூல என்ற இரண்டும் ஆய்வுக்குரியனவாகும், மாயக்கை யில் நிலக்குகை ஒன்று தூர்ந்த நிலையிற் காணப்படுகிறது. இக் குகையுடன் தொடர்புடையனவாக நாட்டார் கதைகளும் வழங்கு கின்றன. அத்துடன் இங்கு குறுணிக் கற்காலத்துக்குரிய ( Micro 1ithic period ) க ரு வி கள் இக்குகையிற் க எடுபிடிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்விடத்திற்கு மேற்குப் புறமாக மன்னன் மூல என்ற குறிச்சிப் பெயர் அமைந் திருப்பதும் பண்டைய அரசனின் அந்தரங்க இடமாக இப்பகுதி இருந்திருக்கலாம் என்ற ஊக்கத்தைத் தருகின்றது,
கந்தபுராணத்துடன் தொடர்புடையனவாகப் பல இடங்கள் இலங்கையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. கந்தபுராணங் கூறும் சூரன்போரின்போது சூரபத்மன் பல்வேறு மாயயாக்கை களப்பெற்ற இடமே மாயக்கை என்ருயிற்று என்றும், அல்வாய் என்பது குரன் இருள் வடிவாய் நின்று பூதங்களை வாயினுள் விழுங் கிய இடம் என்ற பொருளில் இப்பெயர் பெற்றது என்றும், தேவர் ளுக்கு அபயம்கொடுத்து ஆஃகொண்ட இடம் தேவரையாளி என் றும், இவ்விடங்களோடு தொடர்புடையதாக இதற்கண்மையில
1. தகவல் : யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை விரிவுரையாளர், செ. கிருஷ்ணராசா. இக்கண்டு பிடிப்புக் கள் தொடர்பாக வீரகேசரி வாரமலர்களில் (2 - 5 - 84 ; 12:5-84) லெளிவந்த கட்டுரைகளும் நோக்கத்தக்கனவுே

Page 64
108.
மைந்துள்ள குறணங்கவாழி (தற்போது காந்திதகர் எனப்பெயர் பெற்றுள்ள இடம் ) என்பது குற + நங்கை + வாழி ( வாழ்ந்த இடம் ) என்ற அடிப்படையில் பெயர் பெற்றதென்றும் கூறப் படும் விளக்கமும் இலக்கிய நயம் நோக்கி ஈண்டுத் தரப்படட்து. கரணவாய் ( வடிமே, தெ. மே, 127; 119)
பருத்தித்துறை -> நெல்லியடி -> சாவகச்சேரி வீதியின் 5ஆம் மைல் கல்லின் வடக்கும் தெற்குமாக அமைந்துள்ள பெரியபகுதி கரணவாய் எனப்படும். இங்கே வயல் வெளிகள் காணப்படுகின் றன. தெற்கு எல்லையிற் பரவைக் கடலுள்ளது. இங்கே உப்பு விளை விக்கப்படுகின்றது. இவ்விடம் உப்புக்கழி’ எனப்படும். இங்கு *எள்ளங்குளம்” என்ற குளமும், கங்கைகொண்டான், சோழங்கள், இளங்காமம், மணல்பாதி எனப் பெயர்பெற்ற பகுதிகளும் அமைந் துள்ளன. கங்கைகொண்டான், சோழங்கன் என்பன சோழர் ஆட்சித்தொடர்பைக் காட்டுகின்றன.
கரணவாய் என்றபெயர் கருணிகருடன் தொடர்பு கொண்ட தாகும். கருணிகர் வாயில்’ என்ற இடமே மருவி கரணவாய் என வழங்கிற்று என்கிறர் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை (1933:62). கருணி கம் = கிராமக்கணக்குவேலை: கருணிகன் - கிராமக்கணக்கன் கணக்கு வேலை பார்க்கும் ஒரு சாதி (த.லெ. 2756). யாழ்ப்பாணத் தில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி வளமாக இருந்த போது பாண்டியநாடு முதலிய தேசங்களிலே பெரும் பஞ்சம் நிகழ்ந் தமையாற் பலர் அங்கிருந்து குடிபெயர்ந்து யாழ்ப்பாண இராச் சியத்திற் குடியேறினர்; இச்சமயத்தில் தொண்டை நாட்டிலிருந்து 12 கருணிகாரர் தங்குடும்பங்கருடன் வந்து கரணவாயில் வசித் தனர்; இவர்கள் அரசளுல் உடுப்பிட்டியைச் சேர்ந்த 12 குறிச்சி களுக்கும் கணக்கராய் நியமிக்கப்பட்டனர்; தமிழரசு முடிந்த பின் அவரும் அவர் மரபினரும் சைவக்குருமாராய் விளங்கி வரு கின்றனரென்றும் கூறப்படுகின்றது (க. வேலுப்பிள்ளை 191835) இக் கருத்தும் ஈண்டு நோக்கற்பாலது.
கரணவாய் என்பது கருணைவாய் என்பதன் சிதைவாகவும் இருத்தல் கூடும், கருணை (ஒரு வகைக் கிழங்குச் செடி) என்பது வழக்கிலே கரணை அல்லது கறன எனத்திரிதலுண்டு. இவ்வூரிப் பெயரைக் கருணையம் பதி, கருணையூர் எனவும் வழங்குவர்.
1. மு. கந்தையா மாவை பிள்ளைத்தமிழ், செய். 9.
& "குளக்கேட்டன் சோழகங்கன் என்ற பெயரைப் பெற்றிருந் தான் எனத் தட்சிண கைலாச புராணம் கூறுகின்றது. குளக் கோட்டன் என வழங்கிய சோழகங்கன் பத்தாம் நூற்ருண் டின் பின்னரே வாழ்ந்திருத்தல் வேண்டும், சோழப்பேரரசு எழுச்சி பெற்ற பின்பே சோழகங்கன் என்ற பெயர் வழக்கில் வந்தது." (சி. பத்மநாதன், 1970:40)

இயல் - 7
ஊராட்சிநிலைப் பெயர்கள்
காலமாற்றங்களுக்கு ஏற்பக் கருத்து மாற்றங்களும் ஏற் 3. கின்றன. இம்மாற்றங்களின் பிரதிபலிப்பு இடப்பெயர்களிலும் அ 射 வப்போது காணப்பட்டு வந்துள்ளது. மனிதன் காடழித்துக் கழ னியாக்கி, கழனிகளுக்கருகே குடிமனை யமைத்து வாழ்ந்த காலக் களிலே தத்தம் குடியிருப்பிடங்களுக்கு நிலவியல்பு, தாவரங்கள் முதலியவற்றின் நினைவாகப் பெயர்களையும் சூட்டிக் கொண்டான்? கிராமங்கள், நாடுநகர்களாகி நாகரிகங்களுந் தோன்றின: அரசு கள் தோன்றின; போர்கள், வெற்றி, படையெடுப்பு, நாடுபிடிப்பு வல்லரசுப்போட்டி என்பன நடைபெற்றன; நீதி, நிர்வாகங்களும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையிலே அரசுகள் தாம் ஆட்சி செய்த இடங்களில் தம் ஆட்சிநிலை சுட்டிய பெயர்களேயிட்டு வழங்கிய போக்கை உலக வரலாறு மெய்ப்பிக்கின்றது.
தமிழகத்திற் பல்லவ, சோழ. விஜய நகர ஆட்சியை நினைவு கூறும் வகையிற் பல இடப்பெயர்கள் ஊராட்சி நிலையிற் காணப் படுகின்றன. ஆயம், பாளையம், கோட்டம், ஜில்லா, கோட்டை நகரம், தேவதானம், வேலி, பேட்டை, மங்கலம் முதலான பல ஊராட்சிநிலைப் பெயர்க் கூறுகளை இவ்வகையிற் குறிப்பிடலாம். இப்பெயர்கள் ஆட்சியாளரின் பெயர்கள், நிர்வாகிகளின் குடியி ருப்பு, நிர்வாகக் கடமைகள், படைகளின் தரிப்பிடம் திறை வசூலிப்பு, வழிச்சோதனை (கடவை) என்ற இன்ஞேரன்ன ஊராட்சி நிலைப்பட்ட பொருள் பெற்றனவாக அமைந்துள்ளன. இவ்வகை யில் வடமராட்சி, தென்மராட்சிப் பகுதியிலுள்ள ஊராட்சி நிலை சுட்டிய இடப்பெயர்கள் பற்றி இங்கே ஆராயப்படுகின்றது.
"ஆயம் ஈற்றுப் பெயர்
ஆயம் என்பது சோழர் காலத்து அரச வரியைச் சுட்டும் சொல்லாகும். தென்மராட்சியில் நல்லாயம் எனப்படும் ஒர் இடம் காணப்படுகிறது. வடமாரட்சியிலே ஆயக்கடவை என்ற இடம் உள்ளது. இவ்விடப்பெயர்கள் சோழர்காலத்து வரிமுறையை நினை வூட்டுவதால் இங்கு சோழராதிக்கம் நிலைபெற்றமைக்கு இப்பெயர்
ாளும் சான்முகின்றன.

Page 65
1()
*ஆராட்சி ஈற்றுப் பெயர்கள் ஆராட்சி என்பது மேற்பார்வை, கணக்குப்பரிசோதனை அவற் றைச் செய்யும் அதிகாரி, அதற்காக இறுக்கும் வரி என்ற பொருள் தரும் சாசன வழக்குச் சொல்லாகும். யாழ்ப்பாண மாவட்டத் திலுள்ள வடமராட்சி, தென்மராட்சி என்ற இரு பெரும் பிரிவு களும் 'ஆராட்சி" என்ற ஈறுபெற்றிருத்தல் நோக்கற்பாலது. மற வர் (போர்வீரர்) ஆட்சி நிலைபெற்ற இடம் மறவர்+ஆட்சி: மறவராட்சி > மராட்சி என மருவியிருக்கலாம். *தொண்டை மானின் கருமமாக வந்த சனங்கள் பெரும்பாலும் தொண்டை நாட்டின் வடபாசுத்தில் இருந்து வந்தவர்கள். அவர்கள் குடி கொண்ட பகுதி வடமராட்சி எனப்பட்டது. அவர்கள் வடமர் எனவும், வடுகர் எனவும் பெயர் பெறுவர்” என்கிருர் ஆ. முத் துத் தம்பிப்பிள்ளை (1933:13). எனவே வடமர்+ஆட்சி: வடம
ராட்சி எனப் புணர்ந்து இடப்பெயர் சுட்டிற்று.
நிற்க, வட + மறவர் + ஆட்சி = வடமராட்சி எனவும் தென் + மறவர் + ஆட்சி - தென்மராட்சி எனவும் புணர்ந்தது எனக் கூறும் மரபும் உண்டு, கலிங்கமாகோன் க்ேரளத்திலிருந்து மறவர் படைகளோடு படை எடுத்து வந்து அம் மறவர்களை இராஜரட்டையிற் ( வடஇலங்கையிற் ) குடியமர்த்தினுன் எனச் சூளவம்சம் செப்புகின்றது.2 மேலும் பரிண்டிய சோழப்படையெ டுப்புக்களின் போது வந்த மறவர்கள் போர் முடிந்த பின்னர், இப்பகுதிகளிலேயே நிரந்தரமாகத் தங்கியிருக்கலாம்.8 எனவ்ே மறவர் குடியிருப்பு இப்பகுதிகளில் இடம்பெற்று, மறவர் தம் ஆட்சி நடைபெற்ற இடம் மறவராட்சி என வழங்குவதாயிற்று. அப்பெயர் வழங்கிய வடபகுதியையும் தென்பகுதியையும் சுட்டிய தி ஃ) யில் வடமராட்சி, தென்மராட்சி எ ன் ற இடப்பெயர்கள் தோற்றம் பெறலாயின. சந்நிதி சிவானந்தன் என்பவர் எழுதிய யாழ்ப்பாண வரலாறு என்ற நூலிலே4 வடமராட்சியிலும் தென்
1. திரு. நா. சுப்பிரமணியன் ( பதிப்பு ) தென் னித் தி ய
கோயிற் சாசனங்கள், தொகுதி 111, பகுதி 2 : 1957 tudii. 1398.
2. சூளவம்சம் XXX 61 - 70, 74 - 79. 3. இ. பாலசுந்தரம் 1988 பக். 39 - 43 இட்டி ஈற்றுப்
பெயர் விளக்கம் பார்க்க. 4. இந்நூலின் பழம் பிரதி ஒன்று கள் ஆய்வின் போது
கிடைத்தது. இதன் முதல் கடைப் பகுதிகள் கிடைத்தில

ம்ராட்சியிலும் குடியேறிய தலைவர்கள், அவர்களது பெயர்களால் வழங்கும் குறிச்சிகள், இத்தல்வர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் உள்ள தொடர்பு என்பனவும் விரிவாகக் கூறப்பட்டுள்ளமை மேலாய்வு செய்யப்படவேண்டியனவாகும்.
மேலும், யாழ்ப்பாணத்து மன்னர் பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, ஆங்கு ஆற்றிய திருப்பணிகள் பற்றிக் கூறும் செப்புப்பட்டியமொன்றில் “படை ஆராச்சி’, ‘நிருவாங் கப்படை ஆராச்சி" என்ற தொடர்கள் இடம் பெற்றுள்ளன. இத்தொடர்கள் குறித்து சி. பத்மநாதன் அவர்கள் கூறும் கருத்து ஈண்டு நோக்கத்தக்கது:
* ஆராச்சி (ஆராய்ச்சி) என்ற மொழிவழமையாக ஒரு படைப்பிரிவின் தலைவனைக் குறிப்பதுண்டு. தமிழ்நாடு அளின் இராணுவ முறையிலும், சிங்களமன்னர்களின் இராணுவ முறையிலும், ஆராச்சி என்னும் படைத்தலை வர்கள் இடம் பெற்றனர். மேலு:ம் குவேறேஸ் சுவாமி களின் நூலின்படி சங்கிலியின் படைகளில் பல ஆராச்சி மார் இடம்பெற்றிருந்தனர்."2
இப்பின்னணியில் வட+மறவர்+ ஆராச்சி) வடமராட்சி எனவும், தென் + மறவர்+ஆராச்சி>தென்மராட்சி எனவும் இடப் பெயர் கள் திரிபடைந்துள்ளனவா எனவும் ஆராய்தல் பயன் தருவதா கும். 'w,
‘கடவை ஈற்றுங் பெயர்கள்
YTSSLSLSLL TSASLLTSTLTkALLLSTTaS S SYLLALASLOLTT STTTT S S S TLSTTS LSL கடந்து செல்லுமிடம், எந்த இடத்தைக் கடந்து சென்ருர்களோ அந்த இடத்திற்குக் கடவை என்ற பெயர் ஏற்படுவதாயிற்று. வீதிகன் பொதுவாக எல்லா இடங்களையும் கடந்து செல்லுதல் இயல்பே. ஆயினும் குறிப்பிட்ட ஒர் இடத்தைக் கடக்கும்போது சில முக்கிய அம்சங்களாக வரி அறவிடல், கோயில் வழிபாடு, அச்சந்தீர்த்தல், களைப்பாறுதல் முதலானவை நிகழும்போது இந் நிகழ்ச்சிகளையும் சேர்த்துக் கடவை எனப் பெயர் அவ்விடத்திற்கு ஏற்படுதல் இயல்பாயிற்று கடவை ஈற்று இடப்பெயர்கள் ஈழத்திற்
1. சி. பத்மநாதன், 'இருதமிழ்ச் செப்பேடுகள், சிந்தனை, மலர் 3
இதழ் 1, 1970 பக் 55-56 B. Gteаg: ш4. 54-55

Page 66
112
பல பாகங்களிலும் காணப்படுகின்றன. யாழ்ப்பாண மாவட்டத் தில் 11 இடங்கள் "கடவை” ஈற்றுப் பெயர் பெற்றுள்ளமை காண்க. அவற்றுள் நான்கு இடங்கள் இப்பகுதியிலுள்ளன.
அம்பன் கடவை ( வடம. வ: கி. 144, 1 )
இது பருத்தித்துறை-நாகர்கோயில் வீதியில் அமைந்துள்ளது. பழைய வல்லிபுர நகரப் பகுதியைத் தாண்டி வெளியே செல்லு மிடத்தின் எல்லைப்புற இடமாகவும், அம்பன் என்ற கிராமத்தின் பகுதியாக இருப்பதாலும் இவ்விடம் அம்பன் கடவை எனப் பெயர் பெறுவதாயிற்று.
கந்தவனக் கடவை
இது பொலிகண்டிப் பகுதியில் அமைந்துள்ள ஓரிடம், கந்தப் பெருமானின் கோயிலைத் தாண்டிச் செல்லும் வழியில் இவ்விடம் அமைவதால் கந்தவனக் கடவை எனக் காரணப் பெயர் பெற்றது.
காயான்கடவை. 2
இது உசன் பகுதியிலுள்ளது. காயான்=ஒருவகைச் செடி பழைய வீதி ஒன்று காயான் செடிகள் நிறைந்த இடத்  ைத க் கடந்து சென்ற போது, அவ்விடத்தைச் சுட்ட காயான்சுடவை" என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.
கோவிற் கடவை (தென்ம, 107.6; வடம, தெ. மே 130-2)
இப் பெயருடைய இரு இடங்கள் வடமராட்சியிலும் தென் மராட்சியிலும் அமைந்துள்ளன. பண்டை நாளில் மாவிட்டபுரத் திற்கும் கோவிற்கடவை என்ற பெயர் வழக்கில் இருந்திருக்கின் றது. இன்று கோயிற்கடவை என்ற குறிச்சிப் பெயரும் மாவிட்டபு ரத்திலே காணப்படுதல் நோக்கற் பாலதாகும். துன்னலையிற்
1. இவற்றுள் அதிகமான பெயர்கள் சாதிப்பெயர்களை முன்ருெட் டாகப் பெற்றுள்ளன. உ+ம்: அம்பட்டக்கடவை, கோவியக் கடவை, நட்டுவக்கடவை, பண்டாரக்கடவை, பறைய கடவை, தட்டா கடவை முதலியனவாம்.
2. இப்பெயர் 1981 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டு அறிக்கை
uè arraîrů udáváv.

13
கோவிற்கடவைப் பிள்ளையார்கோவில் அமைந்துள்ள மருத நிலத் தூர் " கோவிற்கடவை " எனப்படுகின்றது. இப்பகுதியினூடாகப் பண்டைநாட் பெருந்தெருவான சாவகச்சேரி - பருத்தித்துறை வீதி அமைந்துள்ளது. வடமராட்சிக்குரிய காவல் தளமாக இருந்த இடம் இதுவாதலாலும், இங்கே கோயில் காணப்பட்டமையா லும் இது " கோவிற்கடவை " எனப் பெயர் பேறுவதாயிற்று.
* கோட்டை ‘ ஈற்றுப் பெயர்
இம்மாவட்டத்திற் கோட்டை ஈற்றுப்பெயர்களாக ஆனைக் கோட்டை, வட்டுக்கோட்டை என்ற இரு இடங்கள் காணப்படு கின்றன. இவை கோட்டை, செறிவு என்ற பொருளிற் பெயர் ஆக்கம் பெற்றுள்ளன. மேலும் கோடு என்பது மேட்டு நிலத் தையுஞ் சுட்டும் (மதுரைக் காஞ்சி 289). கோடு + ஐககோட்டை
சக்கோட்டை ( வடம. வ. கி. 134. 2)
பருத்தித்துறை - காங்கேசந்துறை வீதியிலே திக்கம் சந்திக் கும் இன்பருட்டிக்கும் இடையிலுள்ள பகுதியே சக்கோட்டை எனப்படுஞ் சிற்றுாராகும். இங்கு போர்த்துக்கீசர் காலத்துப் புனித சவேரியார் ஆலயம் அமைந்துள்ளது. இதற்குத் தெற்கே பழம்வேதக்கோயிலடி என்ற ஒரு குறிச்சியும் காணப்படுகின்றது. பண்டைநாளில் இப்பதியின் கிழக்குக்கரை " கோளாங்கல்லு முனை’ எனவும், மேற்குக்கரை * பனைமுனை ** எனவும் வழங் கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அந்நியராட்சியில் இங்கு கற் கோட்டை கட்டப்பட்டிருந்தது பின்பு அழிந்திருக்க வேண்டும் என்பதையே இவ்விடப் பெயர் விளக்குகின்றது, கற்கோட்டை> சக்கோட்டை எனத் திரிந்திருக்கலாம். 1960 ஆம் ஆண்டளவி லேயே சக்கோட்டை என்ற பெயரைச் சற்கோட்டை என மாற் றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.?
1. கிழக்கிலங்கையில் கோட்டைக்கல்லாறு என்ற பெயருடைய ஒரு கிராமமுண்டு. அதன் பழைய பெயர் சின்னக்கல்லாறு என்பதாம். அங்கு ஒல்லாந்தர் கோட்டை கட்ட முயன்று அது கைகூடாது போய்விட்டது. அது முதலாக அவ்விடம் கோட்டைக்கல்லாறு எனப்படுவதாயிற்று. கரவெட்டியி லுள்ள துலுக்கன் கோட்டை என்ற இடப்பெயர் விளக் கமும் நோக்கற்பாலது. பக். 3,
2, தகவல் : சி. சிவராசா, ஆசிரியர், திக்கம்

Page 67
14
* பற்று ஈற்றுப் பெயர்
பல் > பல்லு > பற்று என்ருயிற்று. * யாதும் கொடா அர் எனினும் உடையாரைப்பற்றி விடாஅர் உலகத்தவர் . . . " (நாலடி ; 337 : 2 - 4 ) என்ற தொடரிலே பற்று க பிடித்தல் என்ற பொருள் தொனித்தல் காண்க. பற்று என்ற சொல்லுக்கு மேலும் 9 பொருள்கள் தரப்பட்டுள்ளன:- 1. ஒட்டு, பற்ருசு, பசை, சோற்றுப்பருக்கை; 2. உரிமையிடம், தங்குமிடம், நாட்டுப் பகுதி 3. பற்றுக்கோடு, தூண்; 4, ஏற்றுக்கொள்கை, சம்பந் தம்; 5. கட்டு; 6, இல்வாழ்க்கை அன்றேல் வீட்டுநெறி; 7. அகப்பற்று, புறப்பற்றுக்களாய அபிமானங்கள்; ,ே அன்பு, நட்பு; 9. செல்வம் - (தாவீது 1970, 62 ), சுமேரிய மொழி யில் Bal ( திராவிடத்தில் பல்:- ) பிரி, கிழித்திடு என வினை யrயிற்று ( தாவீது : 1970, 66 ). எனவே பலம் கொண்டு பிரித்து எடுத்த பகுதியே பற்று ஆயிற்று எனலாம். பற்று என்பது நன்செய் நிலமாகும். அது தமிழ்நாட்டின் தென்பகுதியில் 'பத்து எனவும், வடபகுதியில் பட்டு எனவும் திரிந்து வழங்கும். திருக் கோவிலுக்கு நிவந்தமாக விடப்பட்ட நிலங்கள் உடைய ஊர், கோ விற் பற்று என்று பெயர் பெறும். பெருங்கருணைப்பற்று, (செங்கழுநீர்ப்பற்று) செங்கழுநீர்பட்டு, (பூக் தலைப்பற்று பூத லப்பட்டு, (தெள்ளாற்றுப்பற்று ) தெள்ளாரப்பட்டு ரா. பி. சேதுப்பிள்ளை 1976 : பக். 27 ) என்பனவும் நோக்கத்தக்கன. சோழராட்சிக் காலத்தில் ஈழத்தில் இருந்த அதிகாரிகள் நிர்வா கத்தின் பொருட்டுப் பற்று என்னும் பிரிவுகளை வகுத்திருந்தனர்
சி பத்மநாதன் - 1970 பக் 38 ).
பள்ள நிலங்களைப் பற்று எனக்கூறும் மரபுண்டு. உதாரண மாகக் கிழக்கிலங்கையிற் கரைவாகுப்பற்று, அக்கரைப்பற்று, கோளாவிற்பற்று முதலிய பள்ளமான இடங்களை நோக்கின் இவ் வுண்மை புலப்படும். யாழ்ப்பாணத்துத் தமிழ் ம ன்  ைர் க ள் தொண்டைமண்டலத்து அரசியல் முறைகளைப் பின் பற்றி ச் செய்த ஒழுங்குகளுள் நிலவரி ஒழுங்குகள் குறிப்பிடத்தக்கன. இந்த ஒழுங்குகள் தமிழரசர் காலத்தில் ஏடுகளில் எழுதிவைக்கப் பட இவற்றைப் பின்னர் வந்த ஒல்லாந்துக்காரர் புத்தகங்களிற்படி
1. தெலுங்கில் " பற்று ’ என்பதற்குப் பின்வரும் விளக்கம் GasVG) jasluGSAsiv G35T digs f “ Parru = sloming part of sea shore or river bank. It also mean', 'salt pledu. cing fieIds ”. S. J. Mangalam : 985 i 87.-k.

115
எடுத்து வைத்தனர். அவை தோம்பு எனப்பட்டன. அவர்களது மொழியிலே தோமு " என்பது புத்தகத்தைக் குறிப்பதாகும். காணிப்பதிவின்போது, இறை ', கோவிற்பற்று " என்ற வாச கங்கள் இடம்பெறும். இவை தமிழரசர் காலத்தனவே. இக் காணிக்கு இன்ன கிராமத்தின் அதிகாரிக்கு இவ்வளவு பணம் இறை கொடுத்தல் வேண்டுமென இறை ஏட்டில், எழுதப்படுத லின் இறை எனவும், கோட்டம் அல்லது கோவிற்பற்றின் அதி காரி அக்கோவிற்பற்றிக்குரிய அரசிறைகளைப் பற்றிக்கொண்டு பற்றுச்சீட்டு முடித்துப் பற்றேட்டில் பற்றெழுதுவதால் கோவிற் பற்று எனவும் தமிழரசர்காலந்தொட்டு இறை, கோவிற்பற்று என்பன வழங்கலாயின எனவும் கூறப்படுகிறது.
போர்த்துக்கீசர் காலத்தில் யாழ்ப்பாண நாடு 32 கோவிற் பற்றுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு கோயிற்பற்றிலும் தேவா லயங்கள் அமைக்கப்பட்டு, அத்தேவாலயங்களின் மூலம் அவ்வப் பகுதிகள் நிர்வகிக்கப்பட்டன என அறியப்படுகிறது.
செம்பியன்பற்று :
இது பச்சிலபள்ளிப் பகுதியில் வங்காள விரிகுடாக் கடற் கரை ஓரமாக அமைந்த ஒரிடமாகும். செம்பியன் 2 என்பது சோழ மன்னர்களின் சிறப்புப்பெயர்களில் ஒன்று என்பதை அவர் தம் சாசனங்களால் அறியலாம். இப்பெயரின் தொடர் சின்னமாக் செம்பியம், செம்பிய நல்லூர், செம்பகுடி முதலிய ஊர்கள் தமிழ் நாட்டிற் காணப்படுகின்றன.3 இந்த அடிப்படையில் யாழ்ப்பா ணத்தின் வடமராட்சிப் பகுதியிற் செம்பியன்பற்று என்ற ஓரிட முள்ளது. ஒரு காலத்தில் இது துறைமுகமாகவும், சோழப்படை ஒன்று வந்து தங்கிய இடமாகவும் இருந்திருத்தல் கூடும். அக ஞல் இவ்விடம் செம்பியன்பற்று எனப்பெயர்பெற்றது. அக்
1. வ. குமாரசுவாமி, ( பதிப்பு) தண்டிகைக் சனகராயன்
பள்ளு, 1932, பக். 43. 2. இராசேந்திர சோழன் காலத்தில் வாழ்த்த மலையகுல மன் னர்களில் ( மலையமான்கள்) செம்பியன்மிலாருடையாரும் ஒருவர். (சு, குப்புசாமி, மல்யமான்கள் சேகர் பதிப்பகம், சென்னை, 1978 பக், 69 ), 3. சோழராட்சியின் கீழ் இராமநாதபுர மாவட்டம் அடங்கியி ருந்த போது அதன் தென்பகுதி" செம்பிநாடு ' என வழங் கிற்று. ( இராமநாதபுர மாவட்ட வரலாற்றுக் குறிப்புகள், 1984. பக். 9 )

Page 68
16
காலத்திலே வட இலங்கையிலிருந்து பொலனறுவைக்குச் செல் லும் பெருந்தெரு இவ்வூருக்கணித்தாய் அமைந்திருந்த காரணத் தாற் பொலனறுவைக்குச் செல்லும் படைகள் இத்துறையில் வந் திறங்கியிருக்கக்கூடும் எனவும் கருதப்படுகிறது:
இவ்விடப் பெயர் பற்றிச் செ. குணசிங்கம் கூறும் கருத்தும் ஈண்டு நோகற்பாலது
* சோழராட்சியை நினைவூட்டத்தக்க விதத்தில் உள்ள செம் பியன் பற்று போன்ற இடப்பெயர்கள், யாழ்ப்பாண மாவட் ட்த்தில் ஏற்பட்ட சோழ ஆட்சியின் பாதிப்பினை அளவிட உதவலாமா என்பதும் கேள்விக்குரியதாகும். இருந்தும் இத்த இடத்தில் தாம் கூறமுடிவது இப்பெயர்கள் எக்காலத்தி லிருந்து குறிப்பிட்ட இடங்களுக்கு வழங்கிவருகின்றன என அறிய வேறு ஆதாரங்கள் இன்மையால் இவ்விடப்பெயர் களைக் குறிப்பிட்ட நோக்கத்திற்குச் சான்ருகப் பயன்படுத் துவது கஷ்டமாகும்.’2
சோழர் காலத்து நிர்வாகப் பிரிவுகளின் கீழ் செம்பிநாடு, செவ் விருக்கைசெம்பிநாடு என்பன கடற்துரை ஒரப்பிரதேசங்கவிாக இருந்தனவென சி. பத்மநாதன் அவர்கள் (1978 : 174) குறிப் பிடுகின்ருர். அக் கீழ்க் கடற்கரையோரச் சோழர் நிர்வாக மாவட் டத்துடன் இணந்ததாக இச்செம்பியன் பற்றும் இருந்திருக்கலாம்
புரம்’ ஈற்றுப் பெயர்
புரம் என்பதற்குப் பின்வரும் விளக்கம் கொடுக்கப்பட்டுள் ளது. புரம் 4 ஊர், நகரம், இராசதானி, கோயில், மேன்மாடம், வீடு, சரீரம், தோல் (த. லெ 5. பக் : 2770 ), புரம் என்பது ஊர் >பூர்) புரம் என மாற்றம் பெற்று வந்தது என்கிருர் தாவீது அடிகள்.3 புரம் என்பது வடசொல் என்பதும், அது மிகப் பழங் காலம் முதலாகத் தமிழிற் கலந்து விட்டது என்பதும் ஏற்றுக் கொள்ளத்தக்கனவே.
1. பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை, 1962 : பக். 104.
2. செ. குணசி ஃகம். கோணேஸ்வரம், 1970, பக். 81 - 82.
3. ** The Tamizh fortification to the Sanskritic “ pura o or fort is just a short semantic step, now we know the origin of the Sanskrit pura -- "pur ( fort ), which English transform into pore as " Singapore; Civilization is associated rightly with city life; and nearly all the words for cities are Sumero - Dravidian in ci rigino' ( Daavidu, 1972 p., 5 C. ),

17
புரம் என்ற ஈற்றுப் பெயருடைய கிராமங்களும், நகரங் களும் தமிழகத்தில்ே தொன்மைக் காலம் முதலாக இருத்துள் ளன எனக் கூறும் டாக்டர் கரு. நாக ரா ச னின் கருத்து ( 1985 95 ) ஈண்டு நோக்கத்தக்கது:
* புரம் என்பது இடத்தைக் குறிக்கும் சொல்லாக நெடுநாள் வழக்கிலுள்ளது. அந்தப்புரம், சந்தைப்புரம் போன்ற வழக்கு களேயும் காணமுடிகிறது, கபாடபுரத்தில் இரண்டாம் தமிழ்ச் சங்கம் இருந்ததாகவும், அது கடலுள் மறைந்து விட்ட4ாகவும் அறிஞர் கூறுவர். அவ்வூர்ப் பெயரை நோக்கி ஞல் புரம் என்ற பொதுக் கூறினது தொன் மையும், அப் பெயரிற் பல ஊர்கள் முன்னர் தமிழ்நாட்டில் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையும் புலப்படும் ויי
*சிறந்த ஊர்கள், நகரம் என்னும் பெயரால் வழங்குக் என் றும், அது போன்றே புரம்" என்னும் சொல்லும் சிறந்த ஊர்களைக் குறிப்பதாகும்" என்றும் ரா. பி. சேதுப் பிள் ளே ( 1976 : 49 ) குறிப்பிட்டுள்ளார். புரம் " என்பதற்குச் சமனன புரி " என்பது தமிழ் நாட்டில் அநேக இ ட ங் க ளின் ஈருக அமைந்துள்ளது. அவ்வகையில் ஈழத்தில் இரத்தினபுரி என்ற பெயரைத் தவிர புரி ஈற்று இடப்பெயர்கள் வழக்குப் பெருமை குறிப்பிடத்தக்கதாகும். புரம்-புரி-நகரம் என்பன ஒரே பொருள் தரினும், நகரம் சற்று வேறு பட்டு வழங்கவதையும் கவனிக் கலாம். திவாகர நிகண்டிலே புரம் என்பதற்கு இராசதானி என்ற பொருள் கூறப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற் பதினைந்து இடப் பெயர்கள் *புரம் ஈறு பெற்றமைந்துள்ளன. இப்பெர்களைத் தெய்வம் சார்ந் தவை: வரலாற்றுத் தொடர்புடையவை; தனிமனிதப் பெயர் பெற்றவை; நிகழ்வுகளுடன் சம்பந்தப்பட்டவை என நான்காகப் பிரிக்கலாம்.
யாழ்ப்பாண மாவட்ட இடப்பெயர்களிற். "புரம்" என்பது நகரம் என்ற பொருளில் எந்த இடப்பெயரிலாவது அமையவில்லை. மாவிட்டபுரம், வல்லிபுரம், சுழிபுரம் என்பன தவிர்ந்தவை யாவும் புதுக்குடியிருப்புக்களைச் சுட்டும் புதுப் பெயர்களாகவே உள்ளன.
1. அந்தப்புரம் வடமொழிச் சொல். அன்றியும் புரம் ஈற்றுச் சொற்கள் தமிழிற் பண்டை நாளில் இருந்தமைக்குச் சான்று களில்லை. பல்லவர் காலத்திலே கண்ணபுரம், சிவபுரம் முதலிய பெயர்கள் வழங்கின என்பதும் நோக்கத்தக்கது,

Page 69
118
சனத்தொகைப் பெருக்கம், சேரிஒழிப்பு, புதிய குடியேற்றத் திட்டங்கள், தனிநபர் சார்ந்த அரசியல் புகழாரம், சான்ருேரைக் கெளரவித்தல் என்ற அடிப்படையிற் புதிய இடங்களுக்குப் பெயர் சூட்டும் போது ‘புரம்”, “நகர்’ என்ற ஈற்று இடப் பெயர்களே பெரிதுங் கையாளப்படுகின்றன, எனவே "புரம்" என்ற ஈற்றுப் பெயர்களிற் பழைமை சுட்டும் எண்ணிக்கையிலும் விட, புதுமை யைக் குறிப்பிடுவனவே பெருந் தொகையின என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகத்துப் பெயர்கள் சான்றுபடுத்துகின்றன. இப்பிர தேசத்தில் அமைந்துள்ள வல்லிபுரம் என்ற இடப்பெயர் தென் னிந்தியத் தமிழ்த் தொடர்பு மிக்கதாகக் காணப்படுதல் இங்கே விளக்கப்படுகிறது. {
வல்லிபுரம் ( வடம வ, கி. 131. 2 )
வல்லி என்பது வடமொழிச் சொல்; இது தமிழ்ப் பெயராகிய வள்ளி என்னும் கொடிப்பெயரிலிருந்தே உற்பத்தியாகி, சமஸ்கி ருதத்திற் புகுந்தது. வடமொழியில் கி, மு. 600 ஆம் ஆண் டு தொடங்கி ‘ல்-ள்" என்னும் எழுத்துக்களின் தடுவண் யாதொரு வேறுபாடுந் தோன்ருமையிஞலும். இரண்டையும் 'ல்' எனவே வட மொழியால் உச்சரித்ததினுலும் தமிழ் வள்ளி”, வட மொ ழி *வல்லியாய் மாறியதிற் சற்றேனும் வியப்பில்லை எ ன் கி ரு ர் தாவீது (1970 9). வள்ளி பழந்தமிழ்ச் சொல்லாகும்.
"வாடாவள்ளி ( குறுந்-26 ), (பெரும்பா970), *முதிர்காய் வள்ளியங்காடு' முல்லை 101 ), வள்ளி ( தொல், பொருள்.88:1) *வண்டே இழையே வள்ளிப் பூவே ( தொய்யிற்கொடி) (தொல், பொருள் 95.1 ), "வாடாவள்ளி வயவர் ஏத்த" ( வள்ளிக்கூத்து ) ( தொல்பொருள்.60:6) "வலந்த வள்ளிமான் ஓங்குசாரல்’ (அகம் 52 ), "வள்ளி நுண்ணிடை' (அகம் 286;2) வள்ளியோடு சம்பந்தமான வேருெரு கொடி "வள்ளை" எனப்படுகிறது. இதனை அகநாநூற்றுப் பாடல்களிலும் ( 6:17, 365, 25811, 376:46,15) காணலாம். வல் = அழகு, தூய்மை; வல்>வல்லிஇைளம்பெண், முருகனின்தேவி ( த லெ. 3520 )
வல்வேலிமை, வல்லியர்':மன வலிமை எய்தியோர் (அகம் 223 - 1 ), "வல்லியோர்". வன்மையுடையோர் (அகம்; 316 12, 398 15 ), வல்லு:வல்லுத்தரை (அகம் 377; 8 ).
d
1. வல்லிபுரம் பற்றிய புராண-இதிகாச வரலாற்றுச் செய்திகள்
முன்னர் விளக்கப்பட்டுள்ளன. பக். 23 - 28 பார்க்க

19
வல்-அவுல்லு->வல்லுத்தரை = கடினம், பயனில் நிலம் என்று பொருள்படும் (அகம் 377.8). வல்> வலி=சேவை வெற்றி ( தாவீது-1970:85 ) எனவும் கூறப்படுகின்றது.
வடமராட்சி வடக்கின் கிழக்கேயமைந்த கிராமம் வல்லிபுரம் இது வடமராட்சி வடகிழக்கு உதவியரசாங்க அதிபரின் நிர்வாகத் தின் கீழ் பரிபாலிக்கப்படுகிறது. இது பருத்தித்துறையிலிருந்து சுமார் மூன்று கல் தொலைவிற் கொடிகாமம் வீதிக்கு மேற்காக வங்காளவிரிகுடாக் கடல்வரை பரந்துபட்டு, நெய்தலும் மருதமும பொருந்திய இயற்கை வளம் கொண்டது. வல்லிபுரக் குறிச்சி
யென்ற வழக்கும் இக் கிராமத்திற்குண்டு.
வல்லியம் என ஆயர்பாடி (பிங்கலந்தை நிகண்டு ); வல்லிபுரத் தில் ஆயர்கள் மாயோனுக்குக் கோயில் அமைத்திருக்கலாம் எனக் கொள்வதே பொருத்தமுடையதாகும். புன்ன?லயில் எமது ஆய் விற் கிடைத்த வரலாற்று உதயகாலக் கறுப்பு, சிவப்புநிற மட் பாண்டங்கள், மிகப் பழைய காலத்தில் இறை வழிபாட் டுக்குரிய இடங்களாக புன்ஞலே, வல்லிபுரம் ஆகியவை விளங் கின என்பதை எடுத்துக்காட்டுகின்றன. சந்தேச இலக்கியங்கள் பிற்காலத்தில் இவ்வாலயங்களின் பெருமையை எடுத்துக் கூறின லும் இங்கு காணப்படு b தொல்லியற் சான்றுகள் கிறிஸ் து சகாப்தத்திற்கு முன்பே இவ்விட்ங்ாள். இவ்வழிபாட்டிலே நிலைத் திருப்பதை எடுத்தியம்புகின்றன.1 t
இவ்விடப் பெயர் மிகப் பழைமை வாய்ந்தது என்பதை நிறு வும் வகையிற் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்களின் கூற்று வருமாறு அமைகிறது: "வல்லிபுரப் பகுதியிற் பல இடங்களிற் குவிந்து கிடக்கின்ற பூர்வகாலக் கல்லேடுகள், கீச்சுக் கிட்டம் ஆகியனவும், அங்கிருந்து கரைமார்க்கமாகப் போன பெரும் வீதியின் அடையாளங்களும் அவ்வூர் ஒரு காலத்திற் பெருநகராக விளங்கியிருக்க வேண்டும் என்பதைக் காட்டும். ஆரியச் சக்கர வர்த்திகள் பெரும்கடற்படையுடையோராய் பிரசித்தி பெற்றிருந் தமையால் மரக்கலத்தில் ஆழியிந் சென்று சுலபமாய்த் திரும்பக்
19 கி. சிற்றம்பலம் வாரதி, கலமகள் மகாவித்தியாலய மலர்
1982.

Page 70
120
கூடிய துறைமுகம் இருந்திருக்க வேண்டும். வல்லிபுரத்துறை இன்று கப்பல்துறை என்றே வழங்குகின்றது.1
தமிழகத்திற் செங்கற்பட்டு மாவட்டத்திலே ஆனந்தவல்லி புரம், கனகவல்லிபுரம், மருத வல்லிபுரம், வல்லிபுரம் என்னும் தான்கு இடங்கள் இன்றும் வழக்கில் இருக்கின்றமை? யாழ்ப்பா னத்து வல்லிபுரம் என்ற இடப்பெயர் தமிழ்த் தொடர்புடையதே என்பதைக் காட்டப் போதுமான சான்ருகும். இராஜவல்லிபுரம் (செப்பறை) கோமணவல்லிபுரம் (இப்போ கோவளம் என வழங்கு கிறது) என்பனவும் வல்லிபுரம் என்ற பெயருடனுந் தொட்டர் புடையனவே. *
கடல் படுத்தவொரு தானத்திற் குடியேறி ஆங்கு தாம் வழி படும் கடவுட்கு ஒர் ஆலயமமைத்து வாழும் வைஷ்ணவ மாந்தர் அத்தானத்திற்கு வல்லிபுரம் என்னும் திருநாமத்தை இட்டு வழங் குதலும் கூடும். செங்கற்பட்டிலே கடலோரத்திலிருந்து 20 மைல் தூரத்திலுள்ள விஷ்ணுதலம் வல்லிபுரம் என்னும் பெயரிலுள்ள
1. ஆ. வேலுப்பிள்ளை. 1985 பக், 237 - 238
கரு. நாகராசன் : 1985, பக். 270 - 27,
8. வல்லிபுரம் தெரிடர்பான சில நாட்டார் பாடல்கள் வழக் கிற் காணப்படுகின்றன. அவற்றை ஈண்டு நோ க் கு த ல் பொருத்தமுடையதாகும்
தாலாட்டு:
1. வல்லிபுரம் கண்டாபோ வாரணம் கொண்டாயோ வல்லிபுரம் சென்றயோ வாசிகள் பெற்ருயோ,
2. வல்லிபுர ஆழ்வாரே வனசமுறை புண்ணியரே
கல்வளையில் ஆழ்வாரே கடலில் உறை புண்ணியரே மல்லியில் ஆழ்வாரே மலரில் உறை புண்ணியரே புன்ஞலை ஆழ்வாரே பூவிலுறை புண்ணியரே.
(சிங்கை ஆழியான். ஆழ்கடலான், 1983 பக், 74)

121
மையும் ஈண்டு கவனிக்கத்தக்கது. "வல்லிக்குப் பூமிதேவி எனப் பெயர்கூறி அத்தேவி மகாவிஷ்ணுவைத் தரிசித்தவிடமே வல்லி புரம் எனக் கூறுவார் ஈழமண்டல சதக ஆசிரியர்” (குல. சபா நாதன் : 1956 : பக். 16 ),
இக்கிராமத்தில் ஆழ்வார் சுவாமி ஆலயம், குருக்கட்டுச் சித்தி விராயகர் ஆலயம், தான்தோன்றீஸ்வரன் கோவில் என்பன பிர சித்தமானவை. கொல்லனத்தாய், குசவனத்தாய், செம்பாட்டன் புலம், பள்ளன் பரவை, எழுவாக்கை, குமாராங்கியான் என்ற காணிப்பெயர்கள். போன்று பல வழக்காறுகளும் உள்ளன.
*வேலி ஈற்றுப் பெயர்
- வேலி என்பது பழந்தமிழ்ச் சொல். " வேரல்வேலி வேர்க் கோட்பலவு " என்ற தொடக்கத்தையுடைய குறுந்தொகைப் பாடல் (8) காண்க. வேலி = அரண் மதில், சோழர் காலத்து நிலஅளவுப் பெயர்களில் வேலி " யும் ஒன்ருகும். யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலி ஈற்று இடப்பெயர் கொண்டதாக அச்சுவேலி கட்டைவேலி, சங்குவேலி, திருநெல்வேலி, நீர்வேலி முதலான இடங்களுள. ஊராட்சி முறையில் நிலங்களுக்கு எல்லை வகுக்கும் போது வேலி அமைக்கப்பட்டது. அதேவேளையில் * நிவந்தம் " அல்லது " இறையிலி " நிலம் அரசனுல் தானமாக வழங்கப்பட்ட போது வேலி " என்ற அளவில் நிலங்கள் அளந்து கொடுக்கப் பட்டன. இவ் வகையிலே இப்பிரதேசத்திலுள்ள கட்டைவேலி என்ற இடப்பெயர் விளக்கம் ஆராயப்படவேண்டியதாகும்.
கட்டைவேலி (shi l-LD. தெ. மே, 132. 1)
வேலி " என்ற பொதுக் கூறுடன் " கட்டை ‘ என்பது முன் னெட்டுச் சொல்லாக இணைந்து கட்டைவேலி என்ற பெயர் ஏற் பட்டுள்ளது. " வேலி " அளவுகொண்ட நிலப்பகுதி அளக்கப்பட்டு
1. வேலி என்ற நி ఐ அ ள வைப் பெயருக்குக் கல்வெட்டுச்
சான்றுவருமாறு: * உடையார் பூரீ ராஜராஜீச்சுரம் உடையார்க்கு திவந்தக்
5ir pyptnt & . . . . . . . . . நிவந்தமாய் பங்குசெய்தபடி பங்குவழி ஒன்றினல் நிலன் வேலியினுல்.”
நாகசாமி (பதிப்பு), தஞ்சைப் பெருவுடையார் கோயிற் கல்
வெட்டு, 1, பக். 54 - 55

Page 71
122
அதன் எல்லை யாக க் கட்டை ( தாண்) நாட்டப்பட்ட இடம் கட்டைவேலி என வழங்கப்பட்டிருக்கலாம். யாழ்ப்பாண மாவட் டத்திலுள்ள கட்டைக்காடு, கட்டைப்பிராய் என்ற இடங்களும் ஈண்டு சிந்திக்கத்தக்சன.
கட்டைவேலி என்ற இடக் கரவெட்டிப் பகுதியில் அமைந் துள்ள மருத நிலத்தூராகும். போர்த்துக்கீசர் ஆட்சிக்காலத்திலும் இப்பெயர் வழக்கில் இருந்திருக்கிறது. போர்த்துக்கீசர் காலத் திற் பால்தேயுஸ் பாதிரியார் கட்டைவேலியில் மதப்பிரசாரம் செய்தார் என்ற குறிப்பும் அவரது நூலிற் காணப்படுகிறது. பிரித் தானியர் ஆட்சிக்காலத்திலும் இங்கு இடம் பெற்ற கத்தோலிக்க மத சம்பந்தமான நடவடிக்கைகள் பற்றிய செய்திகளும் அறியப் uG665rpaor ( Casie Chetty t 1834 : 1 38 ).
ஆட்பெயர் சுட்டிய இடங்கள்
ஆட்சித் தலைவர்கள், அதிகாரிகள், படைத்தளபதிகள், பெரு நிலக்கிழார், சமூகப் பெரியார் முதலியோர்களது பெயர்களால் இடப்பெயர்கள் வழங்கிவருதலும் உலகப் பொது வழக்கமாக இருந்து வருகின்றது. இந்த அடிப்படையில், இந்நூல் குறிப்பிடும் பிரதேசங்களிலுள்ள ஆட்பெயர் சுட்டிய இடங்கள் பின்வருவன வாகும் :- அந்திரான், இமையாணன், உசன், கங்கைகொண் டான், சமரபாகு, நெல்லியான், செம்பியன் பற்று, தொண்டை மானறு, வத்திராயன், வதிரி, வீரப்பிராயன் ஆகியனவாகும். இவ்விடப் பெயர்கள் சுட்டும் தலைவர்கள் பற்றிய வரலாற்றுச் செய்திகள் விரிவாக ஆராயப்படும்போது, வடஇலங்கைத்தமிழர் பிரதேசத்தின் வரலாறு மேலும் daಣ್ಣೆಹt பெற'வாய்ப்புண்டு,
இமையாணன் ( வடம. தெ. மே, 127. அ)
இமையாணன் எனப்பெயருடைய இரு இடங்கள் உடுப்பிட்டி யிலும் கரவெட்டியிலும் அமைந்துள்ளன. ஆட்சியதிகாரி2 அல்லது படைத்தளபதி எனப்பெயருடைய ஒருவரது பெயரால் இவ்விடப் பெயர் தோற்றம் பெற்றிருக்கிறது. ஆனல் இந்த இமையாணன் யார் என்பது பற்றி ஆராயவேண்டியுள்ளது. உடுப்பிட்டியிலுள்ள இமையாணனில் 19 - 5 - 1989 இல் கட்டிட நிர்மாண வேலைக்
1. வடமராட்சி தென்மேற்கில் அமைந்துள்ள இவ் விடப்
பெயர் பற்றிய விளக்கங்கள் அறியுமாறில்.ை
2. யாழ்ப்பாண வைபவமாலை, (பக். 30 ) கு ք ւն ւն ($ լծ
இமையாணமாதாக்கன் என்ற பெயரை நோக்குக.

123
காக நிலத்தைத் தோண்டியபோது 300 நாணயங்கள் கொண்ட ஒரு செப்புக்கலசம் கிடைத்துள்ளது.1 இந்த நாணயங்களுக்கும் இமையாணனுக்கும் எத்தகு தொடர்பு இருந்தது என்பதுபற்றிய ஆய்வுகள் நடைபெறும் போது இவ்விடப்பெயர் வற்றிய மேலும் தகவல்களைப் பெறலாம்.
உசன் (தென்ம. 107. 10 )
உசன் கிராமம் தென்மராட்சியில் மிருசுவிலுக்குத் தெற்கே அமைந்துள்ள மருதநிலவளம் கொண்ட ஓர் அழகிய இடமாகும். உசன் என்பது ஹ"சையின் என்ற பெயரிலிருந்து வழக்குப் பெற் றுள்ளது, இவ்வூரில் ஹ"சையின் பாவாத்தம்பி என்ற இஸ்லாமி யப் பெரியார் ஒருவர் வாழ்ந்திருக்கிருர், அவரது பெயரே ஹ"சை யின் > உசையின் > உசன் என மருவி வழங்குவதாயிற்று. இங்கு "சோனகன் வளவு" என்ற காணிப்பெயரும் உள்ளது. இவ்வூர்க் காணிகள் பற்றிய பழைய தோம்புகளில் முஸ்லீம் பெயர்களிற் காணிப் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.2 மேற்கூறிய இடப் பெயர் விளக்கத்தைச் சான்றுபடுத்தும் வகையில் ஆ. முத்துத் தம்பிப்பிள்ளை ( 1933 86 ) அவர்களின் கருத்து அமைவதால் பொருத்தம் நோக்கி அஃது ஈண்டுத் தரப்படுகிறது :
* இக் காலத்திற் காயற்பட்டினத்திலிருந்து சில சோனகர் வந்து மிருசு வில் என்னும் இடத்திற் குடியேறினர்கள் அவர்கள் குடிகொண்ட இடம் * உசன் " என வழங்கு
1. " இந்த நாணயங்கள் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கடைசி யாக அரசாட்சி செய்த சங்கிலி மன்னனின் காலத்திற் பயன்படுத் தப்பட்டவையாக இருக்கலாம் என ஒர் ஊகம் தெரிவிக்கப்பட்டது. இமையானன் என்ற இடம் சங்கிலிய மன்னனல் அவனது பிரதம படைத்தளபதியான இமை யாணன் என்பவனுக்குச் சன்மானமாக வழங்கப்பட்டதா கச் சரித்திரம் கூறுகிறது" என உதயன் பத்திரிகையில் 28-5-1989 இல் வெளியான செய்தியும் ஈண்டுச் சிந்திக்கற் பாலதே.
2. தகவல் பெ. செல்லத்துரை, ஆசிரியர், உசன், கே. நடராசா, சமாதான நீதவான், உசன்; வைத்திய கலாநிதி . தா. க. மணிக்கம் உசன் முருக வே. பரம நாதன், வல்லிபுரக் குறிச்சி.

Page 72
124
கின்றது. அச்சோனகர்கள் அங்கு நின்றும் அகன்று சோன கன் புலவிலே ( மீசாலை } சிறிது காலம் வைகினர்.”
சாவகச்சேரியில் யாவகர் தொடர்பு ஏற்பட்ட காலத்தில் இங்கும் முஸ்லீம் வணிகத் தொடர்பு ஏற்பட்டிருக்கலாம். இன்று இக்கிராமம் இந்துக் கலாசாரத்தினல் மேம்பட்டு விளங்குகின் றது. இங்கே உசன் கந்தசுவாமி கோயில், வீ ர பத் தி ர ன் கோயில், கஜகேணிப்பிள்ளையார்கோயில் என்பனவும் அமைந்து காணப்படுகின்றன.1 ་་་་་་་་་་་་
கங்கைகொண்டான் (வடம. தெ. மே, 127 )
கரணவாய் வடக்கே கொற்ருவத்தைப் பகுதியிற் கங்கை கொண்டான் என்ற இடம் அமைந்துள்ளது. இதன் அயலிடங்கள் பாலாவி, பொலிகண்டி என்பன. பழைய காணி உறுதிகளிற் "கங்கை கொண்டான்' என்ற இடப்பெயர் காணப்படுகிறது. மக் கள் தம் பேச்சுவழக்கில் இப்பெயரை "கங்குண்டான்” என்றே உச்சரிக்கின்றனர். இங்கே சோழர்கால நாணயங்களும் கிடைத்துள் ளன.2 "கங்கை கொண்டான்" - என்பது முதலாம் இராசேந்திர சோழனுக்குரிய விருதுப்பெயராகும். அப்பெயரால் இவ்விடம் வழங்கப்படுவதால் அவனது ஆட்சிக் காலத்தில் இங்கும் சோழர் நிர்வாகம் நிலவியிருக்கவேண்டும் என்பது பெறப்படுகிறது.
சமரபாகு ( வடம. தெ. மே, 124. 1 )
கொற்ருவத்தையிற் பொலிகண்டி, பாலாவிப் பகுதிகளை அடுத்துச் சமரபாகு என்ற இடம் அமைந்துள்ளது. "சமரபாகு தேவன்’ என்ற ஆட்சியதிகாரி பற்றி யாழ்ப்பாண வரலாறு குறிப்பிடுகிறது. இவ்வதிகாரியின் பெயராலேயே இவ்விடப்பெயர் ஆக்கம் பெற்றதென்க.
நெல்லியான் ( வடம. கி. }
இக்கிராமத்தின் அயல்இடங்களாகச் செம்பியன் பற்று,மாமுன ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளன. இம் மூன்று கிராமங்களின் பெயர்களும் சோழர்ஆட்சி பினை நினைவுபடுத்துகின்றன. “நெல்லி பாயன்' என்ற படைத்தளபதி ஆட்சிசெய்த இடமே, அவன்
1. உசனன்-சுக்கிரன், உசனன் > உசன் ஆயிற்ரு எனவும் சிந்திக்
956svnTLD na ?
2. செ. கிருஷ்ணராசா, ' கங்கை கொண்டான் கிராமம் ",
வீரகேசரி : 28, 12. 1986

12S
பெயரால் வழக்குப்பெற்று, பின்பு மருவி நெல்லியான் எனப் வெவர் பெற்றதென மரபுவழியாகக் கூறிவருகின்றனர்.
வத்திராயன்:
வடமராட்சி கிழக்கில் உடுத்துறை, மருதங்கேணி ஆகிய கிரா மங்களுக்கருகே இவ்விடம் அமைந்துள்ளது. வத்தி + ராயன். ரோயர்" எனத் தெலுங்குத் தொடர்பு காட்டுவதாக இப்பெயர் காணப்படுவதால் ஆட்சியாளர் தொடர்பும் இப்பெயரில் இணைந் துள்ளது. கீழே குறிப்பிடப்படும் வதிரிபாகுதேவனுக்குரிய இடம் என்ற அடிப்படையில் வதிரி என்ற சொற்கூறும் ராயன் என்ற பெயர்க்கூறும் ( வதிரி + ராயன் ) இணைந்து மக்கள் வழக்கிலே வத்திராயன் என வழங்கியிருக்கலாம்.
வதிரி (வடம. தெ. மே. ப. 37. 1 )
இது பருத்தித்துறைப் பகுதியிலமைந்துள்ளது. வதிரி என்ற இடம் தமிழ்தாட்டுத்தொடர்பைக் குறித்துக்காட்டுவதாகவுள்ளது. இங்கு சுடுமண்ணுற் செய்யப்பட்ட நீர்க்குழாய்கள் நிலத்துக்கடி விற் கண்டெடுக்கப்பட்டுள்ளன2, இவை போன்ற சுடுமண் நீர்க் குழாய்கள் தமிழ்நாட்டிற் பெரியார் மாவட்டம், செங்கற்பட்டு மாவட்டம் முதலிய இடங்களிலும் காணப்பட்டுள்ளன. இவை சோழர் காலத்தன என்பது நிறுவப்பட்டுள்ளது.ே இவை ஒத்த தன்மையுடைய நீர்க்குழாய்கள் வதிரியிலும் காணப்படுவதால் இங்கு சோழர் தொடர்பு இருந்திருக்குமாவெனச் சிந்தித்தல் பொருத்தமானதே.
மேலும், செங்கற்பட்டு மாவட்டத்தில் வதியூர் என்ற இடம் காணப்படுகிறது. வதியூர் > வதிரி ஆயித்ரு எனவும் வழுதி> வதிரி ஆயிற்ரு எனவும் சிந்திச்கலாம். தஞ்சை மாவட்டத்தி லுள்ள பரிதிநியமம் என்ற இடப்பெயர் குறுகி பரிதி > வதிரி எனத்திரிந்ததா எனவும் கானின் வதிரி என்பது சோழர்காலக் குடியிருப்பிடம் (ான நிறுவலாம். தமிழ் நாட்டிலிருந்து இங்கு குடியேறிய வதிரிதேவன் என்ற ஆட்சித் தலைவனது பெயரா லேயே இவ்விடம் வழக்குப் பெற்ற தென்பார் ஆ. முத்துத்தம்பிப்
leihåT( 1933 : 3 ).
1. தகவல் : எஸ். கணேசலிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்
கழகப் பட்டதாரி மாணவன். 1988, 2. Jaffna Campus News, No. 20, Feb. 1977. த. வீரகேசரி வாரமலர் 11-8-1985.

Page 73
126
வீராணன்கல், புலிக்குட்டிசீமா, புலவராவோடை ( புலவர் ஓடை) முதலான இடப்பெயர்களும் வதிரியிற் காணப்படுகின்றன. தமிழ்நாட்டிற் சோழராலே தோண்டப்பட்ட வீராணம் ஏரி என்ற பெயருடன் வீராணன்கல் என்ற இடப்பெயர் ஒத்துக் காணப்படுவதன் மூலம் இங்கு சோழராட்சியின் தாக்கம் இருந் தமை பெறப்படுகின் நிறது
வீரப்பிராயன் (வடம. தெ. மே. 119.6)
வடமராட்சியிலே ஆட்சியதிகாரிகளின் பெயரால் வழங்கு கிராமங்களுள் இதுவும் ஒன்ருகும். தொண்டைமானின் கருமா, காரிகளுள் ஒருவனே வீரப்பிராயன் என்கிருர் ஆ. முத்து, தம்பிப்பிள்ளை ( 1933:13). இப்பெயரும் வடமறவர் ஆட்சிை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இயல் - 8
தாவரம் சுட்டிய பெயர்கள்
நிலம், நீர், தாவரம் முதலான இயற்கை நிலைப்பெயர்களே காலத்தால் முற்பட்ட இடப் பெயர்களென்பதும், அப்பெயர் களுள்ளும் பொதுக்கூறு, சிறப்புக்கூறு இல்லாத ஒரே சொல்லாக அமைந்த பெயர்களே முதலில் இடப்பெயர்களாக வழங்கியிருக்க வேண்டும் என்பதும் இடப்பெயர் ஆய்வாளர்களாற் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இப்பின்னணியிற் பல்வகை இயற்கை நிலப் பெயர்களிலும் தாவரப்பெயர் சுட்டும் இடப்பெயர்களே காலத்தால் முற்பட்டவை என்ற கருத்தும் நிலவுகிறது?
பண்டைக்கால மக்கள் நிலத்தோற்றம், நீர் நிலைகள் என் பனவற்றின் அடிப்படையில் இடப்பெயர்களைச் சுட்டிய நிலையி னின்றும் வளர்ச்சியடைந்தபோது தமது சூழலிலே நிலையாகக் காணப்பட்ட தாவரங்களையும் அடையாளமாக வைத்து இடப் பெயர்களைக் குறிக்கும் மரபை ஏற்படுத்திக் கொண்டனர். அவ் வகையில் மரங்கள், செடிகள், கொடிகள், புல் என்பவற்றின் பெயர்களை இனங்கண்டு, அவை காணப்பட்ட இடங்களுக்கு அப் பெயர்களைச்சூட்டி வழங்கலாயினர். மரம், செடிகளின் தோற்றம் பயன்வாடு, அவை வளருமிடம், தொகுதி, அவற்றில் வாழும் பறவைகள், விலங்குகள் என்பன இடப் பெயரடைகளாகச் சேர்த்துக் கொள்ளப்படலாயின.
இந்நூலில் ஆராயப்படும் பிரதேசத்திலுள்ள இடங்களிலே, தாவரப்பெயர்களின் அடியாகத் தோற்றம் பெற்ற இடப்பெயர் கள் முதலில் இங்கு தரம்படுகின்றன
அ. மரப்பெயர் சுட்டிய இடப்பெயர்கள்
ஆத்தி - ஆத்தியடி ( வடம. தெ. Gua, 36, 1 )
ஆத்தியடி (தென்ம. 08, 1 ) ஆல் - புருப்பொறுக்கிஆலடி (வடம. தெ, மே. 119.4)
1. கே. பகவதி, 1984, பக். 289. 2. S. V. Subramaniam, 1984,

Page 74
128
irrepp - தாழை - நாவல் -
நெல்லி -
LuTT ulu --
நுணு - سسسسه * 6ST
மருது ”
Lorr error
காரையடி ( வடம. தெ. மே 139.4) கைதடி ( தென்ம 89 ) நாவற்காடு ( தென்ம. 112, 2) நாவற்குழி (தென்ம. 91, 3 };" தெல்லண்டை ( வடம. வ. கி. 140. 1 ) நெல்லியடி ( வடம், தெ. மே, ப. 37 ) நெல்லியான் (வடம. கி. ) ' ’, ‘ ’ ” வம்பிராய் (தென்ம. 107. 12 ) வேம்பிராய் (தென்ம. 102. 4) வேலம்பிராய் (தென்ம. 91, 5 ) நுணுவில் (தென்ம. 99. 1 ) பனங்காடு (தென்ம, 107, 7 ) புன்னவேலி (தென்ம. 112, 3) மருதங்கேணி ( வடம. கி. ) மருதடி (வடம. வ. கி. 22, 9 ف به است. در மருதடி (வடமி, தெ. மே. ப 37. 3) குருக்கள் மாவடி ( தென்ம. 111.1 ) சப்பச்சிமாவடி ( தென் ம. ந. 21.11 )
விடத்தல் - விடத்தல்பளை (தென்ம. 107.13)
வேம்பு -
வேம்படி (வடம. கி. ப. 23.4 ) வேம்பிராய் ( தென்ம, 102.4 )
ஆ. செடி, கொடி என்பன சுட்டிய இடப்பெயர்கள்
கரம்பை அண sy b6OMLu -- கரம்பை - காயான் - ghairmreir -
கொடி - சண்டி -
«Fliburr -
சுண்டி - தவசி - பருத்தி - பற்றை - மந்து - மந்து ை
asgausib ( G56irud. 107,2 ) கரம்பைக் குறிச்சி (தென்ம 115.2 ) சின்னக்கரம்பகம் ( தென்ம. 107.9 ) காயான்கடவை (தென்ம 10.7.4) விளான் (வடம. தெ. மே, 130.1) கொடிகாமம் ( தென்ம. 106.3) சண்டில் (வடம. தெ. மே, 1284.2) சம்பாவெளி ( தென்ம. 107.8 ) சுண்டிக்குளம் ( வடம. கி. ) தவசிக்குளம் ( தென்ம. 106.5 ) பருத்தித்துறை (வடம. வ. கி. 22 ) பொற்பத்தை ( வடம. கி. 142.2 ) பெரியமந்துவில் (தென்ம. 118.4) மந்துவில் (தென்ம. 118.3)
இவற்றுட் சில இடப்பெயர்கள்பற்றி ஈண்டுநோக்கப்படுகிறது.

29
கைதடி ( தென்ம. 89 )
தென்மராட்சிப் பகுதியில் அமைந்துள்ள இக்கிராமத்தின் நான்கு பக்கங்களிலும் நீர் நிலைகள் காணப்படுகின்றணி. நீர்க் சரையோரங்களிலே தாழை மரங்கள் இன்றும் செறிந்து காணப் வடுகின்றன. தாழையின் பெயர்களாகச் சூடாமணி நிகண்டில் 3 9 கைதை, முண்டகம், முடங்கல், முசலி, மடி, கண்டல் கேதகை ஆகிய பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவற்றிற் கைதை என்ற சொல் கைதகி என மருவி, நாளடைவிற் கைதடி எனப் பெயர் பெறுவதாயிற்று. இக் கிராமத்தின் எல்லைகள் கைதை மரங்களாற் சூழப்பட்டிருந்ததிலே நோக்கி, அம் மரப்பெயரே, கைதை) இடப்பெயராகி, காலப்போக்கில் அது கைதை > (கைதகி>கைதடி ஆயிற்றுப்போலும். கைதடியூர் என்ற வழக்கும் மக்களிடம் காணப்படுன்றது.
விநாயகப்பெருமானது ஒற்றை மருப்பின் அடியாகவும் (கை தறிக்கப்பட்ட இடம் என்ற பொருளிலும் - கைதறி) விளக்கம் கூறப்படுகிறது. வயலில் கை ஒடிந்த விநாயகர் சிலை ஒன்று கண் டெடுக்கப்பட்டு, அதற்கென ஒரு கோயில் அமைக்கப்பட்டு, அக் கோயில் 'கைத்தறி விநாயகர் கோயில்" என வழங்கிற்று என்றும், அதoல் இவ்விடமும் கைதறி என இருந்து, பின்பு கைதடி என மருவிற்று என்பாருமுளர், x à
இக்கிராமத்தில் ஆயத்தடி, குமாரத்திபுட்டி, உவரி முதலான குறிச்சிப் பெயர்கள் காணப்படுகின்றன. ஆயம் என்ற வரி வசூ லிக்கப்பட்ட இடம் ஆயத்தடியாகும். சோழர் காலத்தில் விதிக் கப்பட்டிருந்த வரிகளில் ஆயம் ஒன்ருகும். இவ்வரி நெல்லாக வும், பணமாகவும் செலுத்தப்பட்டது. மேலும் பண்டைத்தமி ழர் தம் உள்ளூர் அமைப்பில் " குழு ", " ஆயம் என்ற இருபிரி வுகள் இருந்தன என்றும். குழுமேற் சபையாகவும், ஆயம் கீழ்ச் சபையாகவும் இயங்கிற்றென்றும் கூறப்படுகிறது (நா. சிவபாத சந்தரஞர் 1972 340 ). அந்நிலையிலும் ஆயத்தடி என்ற பெயர் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. vu.
நெல்லண்டை (வடம. வ. கி. 140 )
இவ்விடம் பருத்தித்துறைப் பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு “நெல்லண்டை அம்மன் ஆலயம்’ ஒன்றும் காணப்படுகின்றது. நெல்லி + அண்டை = தெல்லியண்டை ( அண்டை = அயல் ) என்பது காலப்போக்கில் செல்லண்டை என மருவியிருக்கலாம். இங்கு நெல்லி மரங்கள் செறிந்து காணப்படுகின்றமை நோக்கற் Ꭰ-fᎧᏫfᎢᏯᎸ.
இந்நூலின் 109 ஆம் பக்கம் பார்க்க.

Page 75
இயல் - 9
சிறப்பு நிலைப் பெயர்கள்
இதுவரை வகுத்துக் காட்டிய் இடப்பெயர்கள் இயற்கைநிலை, செயற்கை நிலப் பெயர்க் கூறுகளின் அடியாகத் தோத் றம் பெற்றுள்ளம்ை அறியப்பட்டது. ஆயினும் இவ்வகையில் வகைப் படுத்தவியலாத சில சிறப்புநிலை இடப்பெயர்களும் இப்பிரதேசத் திற் காணப்படுகின்றமை இவ்வியலில் ஆராயப்படுகின்றது
அத்துளு ( வடம. தெ. மே 119 அ. 1 )
கரவெட்டியின் கிழக்குப் பக்கமாக அத்துளு என்ற இடம் அமைந்துள்ளது. அவ்விடத்திற் பழைமை மிக்க கண்ணகி ஆல காணப்படுகிறது. நெல்வயல்கள் சூழ, தா ம  ைர க் குளமும் பொருந்த, அயற்புறங்களில் குமிழ், மகிழ், ச ட ம் பு, வேம்பு ஆகிய பல்வகை மரங்கள் மலிய, இம்மரங்களில் ஒட்டி சிங்கிலி, குறிஞ்சா, சூரை தவிட்டை முதலிய கொடிகள் படர்ந்து மூடி மறைக்கின்ற சோலையின் நடுவே இயற்கை அரணை உருவாக்கி அத்துளு அம்மன் வீற்றிருக்கிருள். இற்றைக்கு இரு நூருண்டு களுக்கு மேலாக இங்கு அம்மன் வழிபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.1
அ + துளு - அத்துளு, இது திராவிடச் சொல்லாக இருக் கலாமா என ஆராய்தல் தகும். துளு திராவிட மொழிகளில் ஒன்று?. அத்துளு என்பது சிங்களத்தில் உள்ளே” எனப் பொருள் படும். எனவே காடுகளின் உள்ளே கோயில் அமைந்திருந்த இடம் என்ற அடிப்படையில் இவ்விடப்பெயர் சிங்கள மொழிவாயிலா கத் தோற்றம் பெற்றுள்ளதா எனவும் ஆராயவேண்டியுள்ளது.
எழுதுமட்டுவாள் ( தென்ம. 110.1-2 )
தென்மராட்சிப் பகுதியிற் கொடிகாமத்திற்குக் SypkGa கண்டி வீதியில் இக்கிராமம் அமைந்துள்ளது. டச்சு வர்த்தகக் கொம்பனியினர் வன்னிப்பகுதியில் வாங்கிய யா வை கனே மேற்கு நாடுகளுக்கு ஏற்று மதி செய்வதற்கு முன் பு
1. சி. இந்திரா * அத்துளு அம்பாளும் நவராத்திரி விழாவும் ?
ஈழநாடு, 4 - 10 - 1984 பக். 4 - 5.
2. அத்துலூ ( அக்காதியச் சொல் ) = வானம், இருள், அடை
தல் ( தாவீது : 1979 39 )

13.
இவ்விடத்திலேயே கட்டிவைத்திருந்தனர் (சைமன்காசிச்செட்டி. 1834 : 88 ), இந்த யானைகளை ஏற்றுமதி செய்ய முன்பு பதிவு செய்தனர். பதிவு செய்யும்வரை யானை ஈழ மண்ணுக்குரியது: அதன்பின்பு ஏற்றுமதிப் பொருளாகிவிடும். அந்நிலையில் யானை யைக் குறித்து, எழுதுமட்டுவாழ், ( எழுதுமட்டுவாள் ) என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். இக்கிராமத்தைப் போர்த்துக்கீசரிட மிருந்து டச்சுக்காரர் கைப்பற்றி தமது ஏற்றுமதிப்பொருட்களை இங்கு சேமித்து வைத்திருந்ததாகவும் அறியப்படுகிறது.
இவ்வூரில் ஆயத்தடி, கொற்பிட்டிஏற்றம், ஒட்டுவெளி, சிலா வில், ஆசைப்பிள்ளை ஏற்றம் முதலிய குறிச்சிப் பெயர்கள் வழக் கிலுள்ளன. போர்த்துக்கீசர் ஒல்லாந்தர் காலத்தில் ஏற்றுமதி இறக்குமதிப் பொருட்களுக்கு இங்கு வரி அறவிடப்பட்டதன் காரணமாக (ஆபம்=வரி ) ஆயத்தடி என்ற பெயர் ஏற்பட்டி ருக்கலாம். கொல்லர்+பிட்டி+ ஏற்றம்=கொற்பிட்டி ஏற்றம் என வழங்கிற்று. இவ்விடம் சற்று ஏற்றமாக இருத்தலும் குறிப்பிடத் தக்கது. குடிமனைப் பகுதியைச் சேர்ந்து ஒட்டினுற்போற் காணப் படும் வயல்வெளியுள்ள இடம் காரணப் பெயராய் ஒட்டுவெளி என்ருயிற்று. எழுதுமட்டுவாழ் என்ற பெயரின் அடிப்படையில் ஒர் கதை வழங்குகிறது? 1. ஒட்டு - நெல் அறுவடை முடிந்த பின்னர் எஞ்சி நிற் கும் நெற்பயிரின் அடிக்கட்டை ஒட்டு, ஒட்டுதாள் எனப்பெயர் பெறும். 2. "இவ்வூரில் பெருஞ்செல்வந்தரான ஒரு வயோதிபர் வாழ்ந் தார். அவர் யாழ்ப்பாணத்திலே வாழ்ந்த வறிய விவசாயி யின் பேரழகுடைய ம9 ளை மணஞ்செய்ய விரும்பினர். அவள் பெற்றேர் பணத்துக்கு ஆசைப்பட்ஒ திருணஞ் செய்வித் தனர். திருமணம் பெண்வீட்டில் நடைபெற்றது. எழுத்துப் பதிவு நடைபெறவில்லை, ஐந்தாம் நாள் முதியவரின் ஊருக் குப் புறப் பட்ட போது, கன்னிப்பெண் கதறலாள்ை. அப்போது, பெற்றேர் மகளே. தைரியத்தை இழக்காமல் gyn (5Lear GBAJT uiu Gour, 356Orgy செல்வம் முழு வ  ைத யும் உனக்கு நன்கொடையாக எழுதித் தருவதாக வாக்குச் செய் திருக்கிருரி. எனவே இவர் தன் ஆஸ்தியை உன்பெயரில் * எழுதுமட்டும் வாழ் ’ என்று தந்திரமாகப் புத்தி சொல் லி அனுப்பிஞர்களாம். இச்சூழ்ச்சி அக்கிராமத்தில் பகிரங்கப் பட்டபின் அவ்வூருக்கு எழுதுமட்டு(ம்)வாழ்" என்ற பெயர் ஏற்பட்டதாம். (பூரிலங்கா - பெப், 1956 பக். 15 ). இது நகைச்சுவை கருதி வழங்கும் கதை என்றே எழுதிய வரும்

Page 76
134
கப்பூதூ (வடம, தெ. மே. 119அ. 2)
வடமராட்சிப் பகுதியில் தென் எல்லையில் வயல் சூழ்ந்த கிராமமாக இது அமைந்துள்ளது. இதன் தென் எல்லையில் பர வைக்கடலும், கண்டல், தில்லை முதலிய மரங்கள செறிந்த காட்டுப் புதர்ப் பகுதிகளும் காணப்படுகின்றன. இதனைக் கும்பிக்காடு கப் பூதூவெளி என்றும் கூறுவர். நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் ( 18ம் நூற்ருண்டு ) கரவெட்டியைச் சேர்ந்த செயதுங்க மாப் பாண வேலாயுத முதலியார் மீது பாடிய “கரவை வேலன் கோவை’ என்ற நூலைக் கப்பூது வெளி என்னும் இடத்தில் தில் அமைக்கப்பட்ட எல்லைமானப் பந்தலில் இருந்தே பாடினர் என்பது நூலோர் வழக்கு, இப்புலவரைக் கப்புகள் நாட்டிப் பந் தரிட்டு வெள்ளை கட்டி உபசரித்த இடம் "எல்லைமானப் பந்த ரடி" என வழங்குகிறது. இப்பந்தரடி கப்புகள் நாட்டிப் பந்த ரிட்ட கப்பூதூ வெளியிலுள்ளது. இதுவே அக்காலத்தில் யாழ்ப் பாணத்தில் இருந்து மட்டுவில் வழியாகக் கரவெட்டிக்குப் போகும் மார்க்கமாக இருந்தது இங்கு கி. பி. 15 ஆம் நூற்ருண்டைச் சேர்ந்த பிள்ளையார் சில ஒன்று நிலத்தினடியிற் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. -
குடாரப்பு (வடம. கி.) செம்பியன்பற்று, மாமுனை ஆகிய இடங்களுக்கு அடுத்துள்ள இடம் குடாரப்பு. இவ்விடத்தின் உட்பக்கமாகத் தொண்டைமானறு குடாவடிவில் அமைந்துள்ளது. இங்கு உப்பு விளைவிக்கப்பட்டு, ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கலாம். இப்பின்னணியில் குடா +உப்பு >'குடா உப்பு’ என்பது காலப் போக்கிற் குடாரப்பு என வழங் கியிருக்கலாம்.2
மிசுரி: (தென்ம. 100 - 4)
மட்டுவில் வடக்கில் இவ்விடம் அமைந்துள்ளது. முசுரி3 > மிசிசி என மருவியிருக்கலாம். சேரநாட்டுப் பழங்காலத் துறை முகமாகிய முசிரியிலிருந்து வந்து இங்கு குடியேறிய மக்கள் தம்
1. சின்னத்தம்பிப்புலவர் - கரவை வேலன் கோவை, பருத்தித்
துறை, கலர் நிதியந்திரசாலை, 1956 : பக். 2. 2 தகவல் எஸ். கணேசலிங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக
மாண வன், 1988 3. "கள்ளியம் பேர் யாற்று வெண்ணுரை கலங்க யவனர் தந்த வினைமாண் நன்கலம் பொன்னெடு வந்து கறியொடு பெய ரும் வளங்கெழு முசுரி’ அகம் : 149 ).

133
மூதூர்ப் பெயரை இங்குமிட்டு வழங்க, அதுகாலப் சோக்கில் மிசுரி எனத் திரித்துள்ளது. மேலும் இங்கு சிதம்பரக் கோயிலுக் குரிய காணிகளும் உள்ளன. இவ்வூரினருக்கும் தென்னிந்தியா வுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகவுங் கூறப்படுகிறது.
ராக்கா: (வடம. வ. கி. ந. 23, 3)
இது தொண்டைமானற்றுப்பகுதியிலுள்ள ஓரிடம், "இராக்கா" என்னும் பெயரையுடைய படைத்தலைவர்கள் தலைமுறை தலே முறையாக இங்கு வாழ்ந்து வந்ததாகத் தெரிகிறது. இங்கு “இராக் கப்பனை" என்று சொல்லப்படும் காணியுமுள்ளது. இது தொண் டைமானற்றுப் பாலத்தின் கிழக்குத் தலைப்பிலிருந்து சுமார் 75 யார் தூரத்திற் செல்வச்சந்நிதிக்குப் போகும் பாதையிற் கிழக் குப் பக்கமாக அமைந்திருக்கின்றது: இந்த இடத்திலே தான் ஆற்றின் மே ற்கு க் கரையிலிருந்து ஆற்றைச் கடக்குமிடம் அமைந்திருந்தது. ஆற்றைக் கடந்து, அரச கோட்டமாக விளங்கிய வடமராட்சிக்குச் செல்லும் யாவரும், இராக்கா குடும்.த்தைச் சேர்ந்த ஒரு உத்தியோகத் தராற் பரிசோதிக்கப்பட்ட பின் னரே மேலும் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். இந்த அரச உத்தியோகத் தர்களின் பெயரால் வழங்குவதே இவ் விடப்பெய ராகும்.
வரணி (தென்ம. 114. 1)
கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில், கொடிகாமத்திற்கு வடக்கே மூன்று மைல் தொலைவில் வ ர னிக் கிராமம் அமைந்துள்ளது. இது பழம்பெரும் மூதூர் என்பதற்குரிய சான் றுகள் காணப்படுகின்றன. வரணி என்பது மாவினங்கம் என்ற udgrava) s ( Crataea va religiosa Rexbughi ) (35, Gav, 6 i 3508). வருணி என்பதன் திரிபே வரணி எனக்கொண்டு செழிப்பான பூமி என்ற நிலயில் இவ்விடப்பெயர் ஆக்கம் பெற்றுள்ளது என்பர். வரணம்=பால். மந்தைகள் செறிந்த இடம் என்ற பொருளிலும் இப்பெயர் தோன்றியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. வரணி மருதநிலப்பாங்கான நில அமைப்பைக் கொண்டுள்ளது. வெங்கி
1. வரணம் s பால், மதில், சூழ்தல் ( மதுரைத் தமிழ்ப் பேரக
ராதி பக் 526 )

Page 77
S4
ராயன். தீனிக்கிராய், தாவளம், குடமியன் முதலான பகுதிகள் வயற்பிரதேசங்களாகும். கிராய் என்பது களிமண் நிலத்தைச் சுட் டுவத"கும் நல்லகளிமண் நிறைந்த பகுதிகள் வெங்கிராயன் எனப் பெயர்பெறுவதாயின.
பண்டைநாளில் இங்கு யானைகளின் நடமாட்டம் இருந்திருக் கிறது அத்துடன் சங்கிலி மன்னனின் தொடர்பும் இக்கிராமத் தில் இருத்தபடியால் மன்னனின் யானைசளும் இங்கு திரிந்திருக்க லாம். அக்தகைய யானைகளில் ஒன்று விழுந்து இறந்த இடமே ஆண்விழுந்த வெங்கிராயன்' என அழைக்கப்படுகிறது. இது வர ணியின் கிழக்குப் பக்கமாகவுள்ள வயல் நிலமாகும். இதன் மேற் கேயுள்ள தாவளம் என்ற பகுதியும் மருதநிலத்தூர் என்ற அடிப் படையில் பெயர்பெற்றுள்ளது.
வரணியிலுள்ள குறிச்சிப் பெயர்களாகப் பின்வருவனவற் றைக் குறிப்பிடலாம். வெங்கிராயன், ஆலட்டி, அல்லர்மடம், தனிவளை, நாவற்காடு, மாரியார் தோட்டம், புனைவேலி, குடமி யன், காரைக்காடு, நொத்தரிஸ் தோட்டம், தீனிக்கிராய், காட் டுப்புலம், குறண்டிப்பிட்டி, சேவலப்பிட்டி, இ டைக் குறிச் சி, மாசேரி, கறுக்காய், போக்கன், சுட்டிபுரம், இயற்றலை, பால வாய்க்கால், ஆலடி இயற்றலை, கொம்புதட்டி ஆலடி, குருக்கள் குடியிருப்பு, கட்டுமேய்ச்சல், முத்தட்டு, தில்லையம்பலப் பிள்ளையார் கோவிலடி, கரம்பான், சைவக் குடியிருப்பு, தம்பான் கஞ்சகம், சூழங்கிராய் என்பனவாகும்.
வரணி மக்களுக்கும் சோழநாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இங்கு சோழங்கன்சீமா, சோழங் கன்புலம், சோழங்கன்வளவு என்பன காணிப்பெயர்களாகத் தோம்புகளில் மட்டுமன்றி, இன்றும் வழக்கிலுள்ளன. முதலி யார், ஐயனர் முதலிய பெயர்கள் ஆட்பெயர் ஈறுகளாகவும் இங்கு வழங்கப்பட்டுவந்துள்ளன. ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் அவர் கள் நடாத்திய பசுவதைக்கு ஒருப்படாத இவ்வூர்ப் பெரியார் தில்லைநாதத்தம் பிரான் என்பவர் இரவோடிரவாக மரக்கலமேறிச் சென்று தஞ்சாவூர் பே7ய்ச் சேர்ந்தார். அவர் தஞ்சாவூர் மகர் ராசாவின் மகளின் தீராத நோயைப் தீர்த்தமையால் அவருக்கு வேதாரணியத்தின் தேவாலயப் பொறுப்பையும் மற்றும் பல வசதிகளையும் அரசர் செய்துகொடுத்திருந்தார். இன்றுவரை திருமறைக்காட்டின் கோயிற் பரிபாலன உரிமை வரணிக்கிரர்
1. ஐந்நூலிற் சோழர் தொடர்புபற்றிய குறிப்புக்களைப் பின் வரும் பக்கங்களில் நோக்குக- 10, 39, 45 - 46, 56, 82, 25, 108 - 109, 115-116, 121, 124, 125, 129.

135
மத்துச் சைவக்குருமாரிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிதம்பரம் கோயிலுக்கு வரணியில் வயலும் புலமும் தருமசாதன மாக அளிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்பாகச் சிதம்பரத்தில் *வரணியான்மடம் ஒன்றிருப்பதாகவும் அறியப்படுகிறது.1
தமிழரசர் காலத்தில் இப்பகுதிக்கு அதிகாரியாக நியமிக்கப் பட்டோர் வாழ்ந்த இடம் மாசேரி என அழைக்கப்படுகிறது. அவர்களது சந்ததியினர் இன்றும் இங்கு வாழ்கின்றனர். திவ் வாறே முத்துஊட்டு ' என்ற அரசவரியைச் செலுத்துவோர் வாழ்ந்த இடம் இப்பெயரால் வழங்கி, பின்பு மருவி " முத்தட்டு ? என்ருயிற்று. கொடிகாமம் -> பருத்தித்துறை வீதியில் 5 ஆம் மைல்கல்லுக்கு அணித் தாக * சங்கிலியன் திடல் " என்ற ஒரு மேட்டுநிலம் காணப்படுகிறது, இங்கு மட்பாண்ட ஒடுகள், சுண் ணக்கற்கள், மற்றும் கட்டிட அழிபாட்டுத் தடயங்கள் தென் படுவதால் இவ்விடத்திற் பழை ய கட்டிடமொன்றிருந்திருக்க வேண்டும் என்பது புலனுகின்றது.2 மேலும் வரணியில் சுமார் 3 சதுர மைல் பரப்பளவில் பழைய அழிபாடுகள் தென்படுவதால் முன்பு தமிழரசரின் மறைவிடங்களாக் அல்லது தரிப்பிடங்களாக இங்கு கட்டிடங்கள் இருந்திருக்கலாம் என ஊசிக்கப்படுகிறது. Gurrriggs digirisatlus sagali (Constantine de Braganza) lö5636) கோப்பாயிலிருந்த சங்கிலி மன்னனின் கோட்டையை அழித் ததும், சங்கிலிமன்னன் வரணிக் கோட்டைக்கு இன்று சங்கிலியா திடல் என வழங்குமிடத்திற்கு ஓடி வந்திருக்கலாமோ என சுவாமி ஞானப்பிரகாசர் ( 1921; 120 ) கருதுகிருர், கோப்பாய் அரண் மனையிலிருந்து உப்பாற்றைக் கடக்க நேரே வருவது சங்கியா திட லாகும். இவ்விடம் தென்மராட்சிப்பகுதியின் வரிவசூலித்துச் சேக ரிக்கப்படுமிடமாகவும் இருந்திருக்கலாம். தோம்புகளில் இவ்விடம் சங்கிலிக்கொல்லை, சங்கிலியன் திடல், சங்கிலிக் கோட்டம் என வும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசநின்ற புலம்’ என்ற காணிப் பெயர் இங்கு வழக்கிலிருப்பதும் வரணிக்கும் அரசுக்கும் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுவதாகும்.
மக்கட் குடியிருப்பையடுத்து அவர்கட்குத் தேவையான மட் பாண்டங்களைச் செய்வோர் சாலைகளும் அமைந்திருந்தமை தொல் லியல் தளங்கன் ஆராயும்போது அறியப்படுகிறது. வரணியிற்
1. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவரின் கள
ஆய்வு அறிக்கை : 1979.
2. சுவாமி ஞானப்பிரகாசர் (1921) இவ்விடத்திற் காணப்படும்
அழிபாடுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளமை காண்க.

Page 78
136
களிமண்வளம் உள்ளமையால் அங்கு பல மட்பாண்டத் தொழிற் சாலைகள் இருந்திக்க வாய்ப்பு உண்டு. இதனைச் சான்றுபடுத்தும் வகையில் இங்குள்ள இடப்பெயர்கள் துணைபுரிகின்றன. இங்கு தாவளை இயற்ற%ல, வரணி இயற்றலை, ஆலடி இயற்றுக்ல ஆகிய மூன்று இடங்களிலும் மட்பாண்டத்தொழில் சிறப்பாக நடை பெற்றிருக்கலாம். இயத்து + ஆலை > இயத் தாஃல > இயற்ருலே என மருவுதல் இயல்பாயிற்று.
பண்டைநாளில் இங்கு பிராமணக் குடிகள் பல வாழ்ந்த தாகக் கூறப்படுகின்றது. அப்பிண்ணணியிலும் வரணி என்ற பெய ருக்கு விளக்கம் காட்டலாம். வரை>வரைதல், வரை  ைகோடு, எல் ைக்1ே7 டு. யாழ்ப்பாணத் தமிழரசர் காலத்தில் அல்லது சோழர் ஆட்சி நிலவியபோது வரையறுத்து, பிராமணருக்குப் பிரமதேயக் காணிகள் வழங்கப்பட்ட இடம் (வரையறுக்கப்பட் டவிடம் ) வரணி எனப்பெயர் .ெற்றதா எனவும் நோக்கலாம்.
- மாதனை Callid. தெ. கி. 120.4 }
இது கற்கோவளத்தின் தென்மேற்கே கால்மைல் தொலைவில் அமைந்துன் ளது. மா + துறை வக மாதுறை என்பதே மாதனை யாக மாறிற்று என்ற கருத்தும் நிலவுகிறது. மா + துறை > மாத்தறை? என மருவியது போன்று இதுவும் அவ்வாறு மக்கள் வழக்கிலே திரிந்திருத்தல் இயல்பே. இவ்விடம் துறைப் பகுதிக்கு அண்மையிற் காணப்படுகின்றது. இங்கு இரும்புவேலை, மரவேலை செய்வோர். பெரிதும் வாழ்கின்றனர். இங்கு வாழ்ந்த மக்கள் பருத்தித்துறைப் பகுதியிற் க ப் பல் கட்டுந் தொழிலாளrாக இருந்தனர் என்பதையும் ஊகித்துணரலாம். "
இங்கு புகழ்பெற்ற கண் ண கி கோயில் ஒன்றுள்ளது. ழாது + அணை = மாதனை > மாதனை எனக் கண்ணகி பெய்ரால் இப்பெயர் தோன்றிற்றே எனச் சிந்தித்தலும் தகும்.
மாத்தனே (வடம.கி. 137. )
இப்பெயர் கொண்ட ஓரிடம் புலோலியில் அமைத்துள்ளது. மகாஸ்தானம்) மாத்தனை ஆயிற்றுப்போலும்.
1. தகவல் : ஆ. தேவராசா - பருத்தித்துறை. 2. தென்னிலங்கையிலுள்ள ஓர் இடப்பெயர்,

137
ஆய்” ஈற்றுப்பெயர்கள்
ஆய் சீன தெரிந்தெடு: பிடுங்கு, கிள்ளு, கொய்; இடைக் குலம் இடைச்சாதி ( தாவீது 1970, பக். 24). ஆய் ஈற்று இடப்பெய்ர்களாக அத்தாய் கச்சாய், மூளாய் வளலாய் முத லிய இடங்கள் இம்மாவட்டத்திற் காணப்படுகின்றன. மூளாய் Mullaya'ya; -9 i 35TÜ Hattaya’ya; ISBD, & smrtů Dunukeya’y ஆகிய பெயர்கள் சிங்களத்திலிருந்து திரிந்து தமிழில் வழங்கின. என்ருர் குமாரசுவாமி ( 1918 : 258). ஞானப்பிரகாசர் மூளாய் avarantů orašu60" சந்தேகத்திற்கிடமின்றி இவை Yaya * என்ற இங்களப் பெயரீற்றுச் சொற்களே என்று கூறினுர் ( 1917 168) இருப்பினும், ஆயம் என்பதிலிருந்து * ஆய்" என்ற பதம் வழங்
கிற்றே எனவும் சிந்திக்கவேண்டியுள்ளது.
) 133.2 ,LD۰ தெ. மேسا5m till ( 6ul ق به
இது அல்வாய் தெற்கிலுள்ள ஓரிடம். அத் தாய் அத்து + ஆய் லாம். அஃது > அற்று > அத்து > அத்தை அல்து> அத்து ( தொல் எழுத்து 119 - 2. அத்தே அற்றே இருமொழி .. ) ஒல வேளைகளில் அத்து நீண்டு அத்தை என ப்ெபதுமுண்டு (புறம் 2:20 நிசியரோ அத்தை 287 (திறம்"+ அத்தை = திறத்தை அத்தை = கற்றழை. இவ் வாருன சொற்பொருள் விளக்கங்களும் நோக்கத்தக்கன. ஆதிதா (atta) என்பது அன்னமின்னப்பழத்தைச் சுட்டும் போர்த்துக் சேச் சொல் என்பதும் ஈண்டு சிந்திக்கத்தக்கது.? -
இங்கு “ அத்தாய்ப்பிள்ளையார் " கோயில் ஒன்றுளது. கோயிற் ேேய இடமும் அழைக்கப்படுகிறது. இங்கு ஒத்திரார் குளம் திமிலிக்கண்டை வயிரவர்கோயில் என்பனவுங் காணப் படுகின்றன. பள்ளப்பாதி, இலகடி, தென்னியம்பிள்ளை, புதுக் கலட்டி என்ற குறிச்சிப் பெயர்களும் வழக்கிலுள்ளன.
பொதியமலக்கு அண்மையில் இருந்த நாட்டை ஆய் என்ற குலத்தார் நெடுங்காலம் ஆண்டு வந்தனர். அக்குலத்தில் வந்த ஆய்அண்டிரன் என்னும் வள்ளல், புலவர் turrGh Lasgup62) l— tuaj 89ŭ விளங்கினன். அவன் காலத்துச் சிறந்து விளங்கிய ஆய் குடி என்னுமூர் (புறம் ல் 99 ) இன்றும் பொதியம?லச் சாரலில் உள்ளது. (சேதுப்பிள்ளை 1976 -
g என்ற குறிப்பும் நோக்கத்தக்கது.
2. S. Gnanapakasar: “Portuguese in Tamil ', Ceylon
Antiquiary, 1919 P. 70,

Page 79
138
கச்சாய் (தென்ம. 105 3 - 4)
கொடிகாமத்தின் தெற்கே கடற்கரையோரமாகக் . sjefrir til & கிராமம் அமைந்துள்ளது. கச்சு + ஆப் - கச்சாய். கச்சு = பொதி; ஆய் - ஆராய்தல். கச்சாய்த் துறைமுகம் தமிழரசர் காலத்தி லும் டச்சுக்காரர் காலத்திலும் துறைமுகமாகப் பயன்பட்டிருக் &pgi. GT6736u. Qurt 3.5 gir -gutturutli ( Custom checking ) இடம் என்ற நிலையிற் கச்சாய் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.1 சுமாத்திரா தீவிலே இந்தியக் குடியேற்றம் ஏற்பட்டபோது அங்கு * கச்சா ? என ஒரிடத்திற்குப் பெயர் வைத்தனர். கச்சியம்பதியே அம்மொழியில் கச்சா என்ருயிற்று. யாவாவிலும் சுமாத்திராவிலும் இருந்து சாவகர், வடஇலங்கையிலே வணிக நோக்குடன் குடி யேறிய போது சரிவகச்சேரிப் பகுதியில் அவர்கள் குடியிருப்புகள் அமையலாயின. சாவகச்சேரியின் துறைமுகமாக அமைவது கச் சாய்த்துறையாகும். எனவே " கச்சா ’ என்ற இடத்தில் இருந்து வந்து குடியேறியோர் தாம் குடியேறி வாழ்ந்த இடத்திற்கும் * கச்சா " எனப்பெயரிட்டிருக்கலாம். காலப்போக்கில் கச்சா-> கச்சாய் என நீண்டொலிப்பதாயிற்ரு எனவும் சிந்திக்கலாம்.
பண்டைநாளில், கச்சாய்ை மையமாகக் கொண்ட பகுதியில் வன்னியர் குடியேற்றங்கள் நடைபெற்றனவாக அறியப்படுகின் றது, காலிங்கர், மலையகத்தார், கன்னர் முதலியோர் கச்சாயிற் குடியேறியதாக வையாபாடல் (செய் - 44 ) கூறுகிறது. மன்னவரா யன்காடு, கோட்டைப்பிட்டி, துறைமுகம், க ச் சா ன் த ர வை கோண்டாமூலை, கொக்கட்டிச்சோலை, ( கொக்கட்டியன் காடு ) ஆலடி புங்கடி பறையன்தென்பு முதலிய குறிச்சிப் பெயர்கள் கச்சாயில் வழங்குகின் றன.
ஒல்லாந்தர் தம் ஆட்சிக்காலத்திலே கச்சாய்த் துறையில் ஒரு கோட்டை கட்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது. க ச் சாய்த் துறைக்கு அணித்தாகக் கோட்டைப்பிட்டி என்ற இடமுள்ளது. இதனைப் பாதிரித்தோட்டம், மணியன்காடு என்றும் வழங்குவர். கோட்டைப்பகுதியைத் தொடர்ந்து துறைமுகம் அமைந்திருந்தது. அங்கு முன்னரிருந்த கலங்ரை விளக்கம் இன்று இடிந்த நிலையிற் காணப்படுகின்றது. டச்சுக்காரர் காலத்தில் மரம், உப்பு, யானே முதலியன கச்சாய்த்துறைமுக வழியாகவும் ஏற்றுமதி செய்யப் பட்டன. அன்று சிறப்போடு விளங்கிய வர்த்தகத்துறை, இன்று மீன்பிடித்துறையாகத் திகழ்கிறது. இன்றும் இப்பகுதி * துறை முகம் " என்ற பெயருடன் வழங்குகிறது. தமிழ் மன்னர் காலத்
1. தகவல் கல்ஞானி செல்வரெத்தினம், சண்டிலிப்பாய்.

139
திற் கச்சாய் பெருந்துறைமுகமாகப் பயன்பட்டு வந்துள்ளமை யைச் செகராசசேகரமலே என்ற சோதிட நூற் பாயிரமும் ( செய். 8 ) சான்றுபடுத்துகிறது.
* ஆலி * ஈற்றுப் பெயர்கள்
ஆலி < ஆலு ( கன்னடம், மலையாளம் ) = மழைத்துளி, காற்று; ஆலி > ஆலித்தல் - ஒலித்தல் (த. லெ. 1.248). ஆலி : ஒலித்தல் என்ற பொருள் நிலையே முதன்மை பெறுகிறது: ஆலி ஈற்றுப் பெயர்கொண்டனவாக இம்மாவட்டத்தில் அராலி கிளாலி, நவாலி, பலாலி, புலோலி என்ற ஐந்து பெரிய ஊர்கள் காணப்படுகின்றன. இவற்றுள் புலோலி இந்நூல் குறிப்பிடும் பகுதியிலமைந்ததாகும். புலோலி (வடம். தெ. மே. 136 + 139 )
புலம் + ஆலி - என்ற சொற்களின் கூட்டுச்சேர்க்கைவே புலோலி எனத் திரிந்துள்ளது. நீர்வளம் செறிந்த இடம் என்பது இதன் பொருளாம், இதனைப் புலவர் + ஆலி எனப் பொருள் கொள்வாருமுளர். w •
புலோலி பருத்தித்துறைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய கிராமம். புலவர் + ஒலி = புலோலி. இங்கு usarsen நாளிற் புலவர் ஒலி முழங்கியமையால் இப்பெயரேற்பட்டதென் பர். இக்கூற்றைச் சான்றுபடுத்தும் வகையில் இங்கு கல்விச் ởrsör3(? ? &am r sử பலர் வாழ்ந்திருக்கிருர்கள். பின்னளிற் Gugrnr சிரியர்கள் பலர் பிறந்தகமும் புலோலியாகக் காணப்படுகிறது. யாழ்ப்பாணத்துச் சிங்கை ஆரியச்சக்கரவர்த்திகளால் இக்கிராமம் புலவர்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டது என்றும் கூறுவர்.
இதன் குறிச்சிகளாக ஆலடி , துறை பாமூலை, முருவில், பால யடி, வடுவாவத்தை முதலியன வழங்குகின்றன, கிராமத்தின் தாழ்ந்த பகுதி பள்ளக்கை எனப்பட்டது. துறையாமூலை என்பது ஒரு குளத்தை அண்டிய பகுதியாகும். அக்குளத்திற் சலவைத் தொழில் நடைபெறுகிறது. இத்தகைய இடங்களைத் துறை ?, துறையடி என்பது ஈழவழக்கு. முருவில் என்ற இடத்தில்
1. மன்னர் மாவட்டத்திற் புலவர் குடியிருப்பு " என்ற ஓரிடப் * பெயருள்ளமை ஈண்டு நோக்கற்பாலது. *

Page 80
140
ஒரு பள்ள வயலும் குளமுமுள்ளன முறையாக வயல் செய்து
பயனடைந்து வந்தமையால் இது " முறைவில் " என்ருகிப் பின், முழுவில் என வழங்கிற்று எனலாம். வடுகர் = தெலுங் கர்,
என வே வடுகர் வாழ்ந்த இடம் என்ற பொருளில் வடுகர்
வத்தை > வடுவர்வத்தை எனப்பெயர் பெற்றதென்க.
மேலும் வரலாற்றேடு தொடர்புடைய இடப்பெயர்களாக சிங்கபாகுதேவன் குறிச்சி, செகற்கொடிதேவன் குறிச்சி, மழவ ராயன்குறிச்சி என்பனவும் அமைந்து காணப்படுகின்றன. மேலும் புலோலியிற் சவஞய், மாதளை, மூக்கம், இலட்சு ம ன ன் தோட்டம், சின்ன அத்தாய், பெரியதேவன் அத் தாய், அத்தியடி, கோணன் கலட்டி, சாளம்பை, கூவில், தொப்பிளாவத்தை சாரையடி மாரக்காய், ஒப்பியா வொடுப்பு, மந்திகை குறணங் கவாளி, பொக்கலப்பனை, பல்லப்பை முதலான பல குறிச்சிப் பெயர்சளும் வழக்கிலுள்ளன.
பல்லப்பை என்ற குறிச்சியில் பள்ள நிலமும் கேணியும் காணப்பட்டன. அந்நிலையில் இது பள்ளக்கை என வழங்கி, பின்பு பல்லப்பை என மருவியிருக்கலாம். பண்டைதாளில் தடை பெற்ற பல்லவர் படையெடுப்புடன் இப்பெயரைத் தொடர்பு படுத்திக் கூறுவாருமுளர். மந்திகையிற் பழைமை மிக்க கண்ணகி ஆலயம் ஒன்று முள்ளது.
புலோலி கிழக்கிற் காணிப் பெயர்களாகவுள்ள சிவந்த மரக் காயன் சீமா, வல்லபெருமாள்மரக்காயன், குளக்கோட்ட வத்தை, பணிக்கன் தோட்டம், தாண்டவக்கோளுன் குடியிருப்பு, இலங் கையன் கட்டுவாசல், மாப்பாணவளவு, மற்றும் தம்பசெட்டி முத லிய பெயர்கள் வரலாற்றுத் தொடர்புடையனவாகத் திகழ்தல் மேலும் ஆராய்ச்சிக்கு வழிவகுக்கின்றது. புலோலி கிழக்கு ை கீழைப் புலோலி எனவும், புலோலி மேற்கு = மேலைப் புலோலி எனவும்; புலோலி தெற்கு - தென் புலோலி எனவும் வழங்கப் படுகின்றன.
சங்கத்தானே (தென்ம. 21, 10)
இலங்கையில் யானையுடன் தொடர்புடைய பல இடப்பெயர் களுள்ளன. உதாரணமாக ஆனையிறவு, ஆனைமடு, ஆனப்பந்தி ஆனைக்கோட்டை, ஆனைவிழுந்தான் முதலான பல இடங்களே
1. தகவல் : வல் கு. கணபதிப்பிள்ளை, சட்டத்தரணி, புலோலி
மேற்கு, பருத்தித்துறை,

14
இவ்வரிசையிற் குறிப்பிடலாம். இப்பெயர்கள் இலங்கை வரலாற் றிலிடம் பெற்ற போர்கள், வணிக நடவடிக்கைகள் முதலிய வற்றை நினைவுபடுத்துகின்றன. பண்டைய கிரேக்க வரலாற்ருசி ரியரான மெகஸ்தனீஸ் இலங்கையிலிருந்து இந்திய சவுக்கு ஏற்று மதி செய்யப்பட்ட யானை வணிகம் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.1 ஒல்லாந்தர் காலத்தில் யானை வியாபாரம் வடஇ ல ங்  ைக யி ற் சிறந்து விளங்கிற்று.? இலங்கையின் வன்னிப்பெருங்காடுகளிற் பிடிக்கப்பட்ட யானைகளை ஆனையிறவு ஊடாக ஆனைக்கோட்டைக் குக் கொண்டுவந்து, பின்பு அங்கிருந்து காரைதீவுத் துறையூடாக வடதேசத்திற்கு, ஏற்றுமதி செய்தனர் என அறியப்படுகிறது (ss. Gauyu'i sîr år 191 : 125 ).
இத்தகு யாகிாவணிகப் பின்னணியிற், சங்கத்தானை என்ற இடப்பெயருக்குரிய விளக்கத்தைக் காணவேண்டும். சாவகச்சேரி யின் கிழக்கே சங்கத்தானை அமைந்துள்ளது. இக்கிராமம் பண்டை நாளிற் பெருஞ்சோலையாகக் காணப்பட்டதென்றும், ஆனையிறவுக் கடல் வற்றுங்காலத்தில் வன்னியானைகள் கூட்டமாக வந்து இங்கு மேய்ந்து சென்றன என்றும் அவ்வூர் மக்கள் கூறுவர். ஆண்யி றவு வழியாக வணிக நோ க் கோ டு ம், அரசபடைக்காகவும் கொண்டுவரப் பட்ட யானைக%ள நடாத்தி வந்து, பெரிய சோலே யாகத் திகழ்ந்த இவ்விடத்திற் சேர்த்துக் கட்டிவைத்த இடம் என்ற நிலையில் சங்கத்தானை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். ( சங்கம் - கூட்டம் ) பின்னர் இங்கிருந்து ஆனைப்பந்தி, ஆனக் கோட்டை முதலிய இடங்களுக்கு அவற்றை நடாத்திச் சென்றி ருக்கலாம். சங்கம் + அத்து + யானை எனப் பிரித்து யானைக் கூட் டம் நிறைந்த இடம் என்பது இதன் பொருளாம்.
நவிண்டில் ( வடம. தெ. மே, 124, 4)
உடுப்பிட்டியின் ஒரு பகுதியாக நவிண்டில் என்ற கிராமம் அமைந்துள்ளது. இப்பெயர் பழைய உறுதிகளில் நவு ன் டி ல் என்றே எழுதப்பட்டுளது. இங்கு எள்ளங்குளமும், அப்பெயரான் அமைந்த இடமும் உள்ளன. இங்குள்ள மயானத்திற் பெருங்கற் காணப்பண்பாட்டுக்குரிய ஒரு தாழி அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.* இவ் விடப்பெயர் விளக்கம் பற்றி மேலும் ஆராயவேண்டியுள்ளது.
1. கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, 1984, பக் 70 - 91. e. Henry, W. Cave, The Book of Ceylon, London,
Cassel and Company, 1908, p. 602. 3. தகவல் : செ. கிருஷ்ணராசா, வரலாற்றுத்துறை சிரேஷ்ட
விரிவுரையாளரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

Page 81
142 குடத்தனை / குடத்தனைக்கரையூர் / குடமியன்
யாழ்ப்பாணத்து அரசியல் வரலாற்றிலே நாகர்கோவில், சிங்கைநகர் என்பன மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பழைய நகரங்களாகும். அவை மத்திய இடங்களாகவும், மக்கட் குடி யிருப்புப் பெருகிய பகுதிகளாவும் இருந்திருக்கலாம். அந்நிலையில் அயற் கிராமங்களை திசைப் பெயர்களால் அழைத்திருக்கலாம். நகருக்கு மேற்கே இருந் தோர் குடபுலத்தார்’ என்றும், மேற்குப் பகுதி 'குடமியன்’ (கு.புலம்) என்றும் அழைக்கப்பட்டிருக்கலாம்,
இந்நிலையில் யாழ்ப்பாணக் குடாநாட்டுப் படத்தை நோக் கும்போது நாகர்கோவிலுக்குத் தென்மேற்குப் புறமாகக் குடத் தன, குடத்த%னக் கரையூர், குடமியின் ஆகிய மூன்று ஊர் களும் அமைந்து காணப்படுவதால் இவை திசை குறித்து வந்த
காரணப் பெயர்கள் எனலாம்.
இரண்டாவது நிலையில் இப்பெயர்களை நோக்கும்போது குடம் " என்ற மட்பாத்திரம் பற்றிய சிந்தனையையும் முன் வைக்க வேண்டியது அவசியமாகின்றது. இலங்க்ை வாழ் தமிழர் மத்தியிலே தோட்டக் காணிகளுக்கு நீர் மொண்டு நீர் ஊற்று வதற்கு இலங்கையின் கிழக்குக் கரை முற்றிலுமுள்ளோர் குடத் தையே பயன்படுத்தி வந்துள்ளனர். அவ்வகையில் இலங்கையின் கிழக்குக் கரையினைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட மூன்று ஊர் களிலும் தோட்ட வேலைக்குக் குடம் பயன்படுத்தப்பட்டமையால் இப்பெயர்கள் ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு.
யாழ்ப்பாண மாவட்டத்திலே இம் மூன்று கிராமங்களைத் தவிர்ந்த ஏனைய பகுதித் தோட்டக்காரர் தோட்டங்களுக்கு நீர் இறைப்பதற்குப் பனையோலையாற் செய்யப்பட்ட பட்டை " என்ற பாத்திரங்களைப் பயன்படுத்துவதே பொது வழக்கம். இப் பொது வழக்கிற்கு மாறக இவ்வூரினர் மட்குடங்களைப் பயன்
1. குடம் என்னும் சொல் மாட்டையே (எருது-பசு ) ஒரு காலம் உணர்த்திற்று என்கிருர் சுவாமி ஞானப்பிரகாசர் ( 1973 : 76). சுமேரியத்தில் எருது "குட்" எனப்படும். குடம் என்னுஞ்சொல் வளைவு எனும் குறிப்பால் கொம்பை விளக்கி, அப்பால் கொம்பையுடைய மாட்டை, அவ்வினத்துள் சிறப்பு முறையாகப் பசுவைக் குறித்து நின்ற நாட்கள் போய், பசு வின்பால் கறக்கும் கலமும் குடம் என அறியப்பட்டு வந்த காலத்தில் குடம் என்ற சொல் தமிழில் பசுவுக்குக் குறியீடாக நிற்கும் வழக்கு ஒழிந்தது (மேலது 1973 பக்.79 - 80 ) என்ற குறிப்பும் நோக்குக.

143
படுத்தியமையால் குடத்தினடியாக இவ்வூர்களுக்குப் பெயர் சூட் டப்படுவதாயிற்றே எனவும் சிந்திக்கலாம். இம்மூன்றுார்களும் மணற் பிரதே:ங்களாகும். இங்கு வெற்றிலப்பயிர்ச் செப்கையும் நடைபெறுகிறது. குடத்தனையூர் எல்லையில் " வெற்றிலக்கேணி " என்ற குறிச்சியம் அமைந்துள்ளது. இம்மூன்றுார்களிலும் "நித்திய வட்டைப் புகையில்’ என்ற ஒரு வகைச் சிறப்பினப் புகையினப் பயிர் செய்கை பண்ணப்படுகின்றது. வெற்றிலத் தோட்டங்களி லும் புகையிலைத் தோட்டங்களிலும் குடம் பயன்படுத்தப்பட்ட மையால் ' குடத்தை முதன்மையாகக் கொண்டும் இந்த ஊர்ப் பெயர்கள் தோற்றம் பெற்றிருக்கலாம் ! திக்கம் (வடம. வ. கி. 134. 3) w
பருத்தித்துறையிலிருந்து காங்கேசன்துறை நோக்கிய வீதியின் 24 ம்ைல் தொலைவில் திக்கம் அமைந்துள்ளது. திக்கம் என்பதற் குப் பக்கம், பகுதி என்ற பொருள்களும் உள. இப்பகுதி தனித்த குடியிருப்பாக இருந்தபோது இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். இங்கு ஜேர்மன் நாட்டினரால் நடாத்தப்பட்ட சீனித்தொழிற்சாலை இருந்ததாகவும், அது இரண்டாம் உலகப் போரில் அழிக்கப்பட் டதாகவும் கூறப்படுகின்றது. தற்போது அரசாங்கத்தின் பணம் பொருள் கூட்டுத்தாபனத்தின் கீழ் வனம் பொருள் உற்பத்திச் சாலை இயங்கிவருகின்றது.
இங்கு வாரியா ஒடை மணிவீரபாகு தேவன் குறிச்சி முத லான குறிச்சிப் பெயர்கள் வழங்குகின்றன. மடத்துவாசல்பிள்ளை யாசி கோயில், நீர்வளைப் பிள்ளையார் கோயில், தேவரையாழி' அம்மன் கோயில் முதலிய ஆலயங்களும் உள்ளன.2
1. குடம் என்ற தொடக்கத்தினையுடைய இடப்பெயர்களுடள் * குடவர் " என்ற சாசன வழக்குச் சொல்லைத் தொடர்பு படுத்தலாமா எனவும் தோக்கலாம். குடவர் விஷ்ணு கோவி லிற் பணிபுரிவோரில் ஒரு பிரிவினர், கிருஷ்ணன் வழிபாட்டி னராகவும் இருத்தல் கூடும். (தென்னிந்தியக் கோயில் சாசனங் கள் பாகம் 3. பகுதி 2 1957 14:18) இவ்விடங்களுக்கு அண்மையில் வல்லிபுரத்து விஷ்ணு கோயில் இருப்பதும் இக் கருத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைகிறது.
3. தகவல் : சி. சிவராசா. திக்கம். V

Page 82
ஆய்வுத்துணை நூல்கள் *
தமிழ் நூல்கள்
இந்திரபாலா, கா. ய7ழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்,
யாழ்ப்பாணத் தொல்லியற்கழக வெளியீடு, 1972
கணபதிப்பிள்ளை, க, ஈழத்து வாழ்வும் வளமும், சென்னை,
பாரி நிலையம், 1962.
குமாரசுவாமி, எஸ். டபிள்யூ. வடமாகாணத்துச் சில ஊர்ப்
பெயர்கள், குப்பிழான், 1918. ( யாழ்ப்பான வைபவ கெளமுதி என்ற நூலின் பின்னிணைப்பா கவே இந்நூல் வெளிவந்துள்ளது ).
சந்திரசேகரன், மெய். தஞ்சை மாவட்ட ஊசிப்பெயர்கள், சென்னை, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 1984.
சிங்கை ஆழியான், ஆழ்கடலான், சுன்ஞகம், வேலழகன்
வெளியீடு, 1983.
சிவபாத சுந்தரனர், புலவர் நா. புறப்பொருள் வெண்பாமாலை ஆராய்ச்சி, வட்டுக்கோட்டைத் தொகுதித் தமிழ்ச் சங்க வெளியீடு, 1972.
சேதுப்பிள்ளை, ரா. பி. தமிழகம் ஊரும் பேரும், (15ஆம் பதிப்பு)
சென்னை, பழனியப்பா பிரதர்ஸ், 1976.
ஞானப்பிரகாசர், சுவாமி எஸ். தமிழ்மொழி ஆராய்ச்சிக்கட்டுரை
தொகுதி 1, திருநெல்வேலி ஞானப்பிரகாசர் ஆச்சிரம வெளியீடு, 1973.
தாவீது அடிகள், ஹ. சி. லீலா கதை அன்றேல் சொற்பிறப்பு ஒப்பியல் தமிழகராதி, ( முதற்பாகம் ) யாழ்ப் பாணம், ஆசீர்வாதம் அச்சகம், 1970.
* தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களினதும், கட்டுரைகளினதும் விபரங்களே ஈண்டுத் தரப்பட்டுள்ளன. இதில் இடம் பெருதன நூலின் அடிக்குறிப்பிலே ஆங்காங்கே முழு விபரங்களுடனும் குறிக்கப்பட்டுள்ளமை காண்க

145
நாகராசன், கரு. செங்கை மாவட்ட ஊர்ப்பெயர்கள், சென்னை,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 1985.
நாச்சிமுத்து, கி. தமிழ் இடப்பெயர் ஆய்வு, நாகர் கோ வி ல்,
கோவிதம் பதிப்பகம், 1983. நீலகண்டசாஸ்திரி, கே. ஏ. தென்னிந்தியாவைப்பற்றி வெளிநாட் டினர் குறிப்புக்கள் ( மொழி பெயர்ப்பு: மு. ரா. பெருமாள் முதலியார் ) சென்னை, தமிழ் நாட்டுப் Lunt.--Täib pignyai 537 b, 1978.
பகவதி, கே. இலக்கியத்தில் ஊர்ப்பெயர்கள், தொகுதி-,ே சென்னை
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 1984, m
பகவதி, கே. தமிழக ஊர்ப்பெயர்கள், சென்னை, உலகத் தமிழா
ராய்ச்சி நிறுவனம், 1986.
பத்மநாதன், சி. வன்னியர் யாழ்ப்பாணம், சைவப்பிரகாச அச்சி
யந்திர சாலை, 1970.
பாலசுந்தரம் இ. ஈழத்து நாட்டார் பாடல்கள் ஆய்வும் மதிப் பீடும் - மட்ட்க்களப்பு மாவட்டம், சென்னை, தமிழ்ப் பதிப்பகம், 1979 பாலசுந்தரம், இ. இடப் பெயர் ஆய்வு - காங்கே சன் கல்வி வட்டிாரம், யாழ்ப்பாணம், செட்டியார் அச்சகம், 1988. வெரியதம்பி, கு, + ஆழ்கடலால், வல்லிபுரத்தான் தலபுராணம்,
வல்லிபுரம், 1987, மயில்வாகனப் புலவர், மாதகல் - யாழ்ப்பாண வைபவமாகல, (குலசபாநாதன் பதிப்பு) சுன்னகம் ஈழகேசரி வெளியீடு, 1953, முத்துத்தம்பிப்பிள்ளை, ஆ. யாழ்ப்பாணச் சரித்திரம் (3 ஆம் பதிப்பு), யாழ்ப்பாணம், நாவலர் அச்சகம், 1933. வேலுப்பிள்ளை, க. யாழ்ப்பாண வைபவ கௌமுதி, வயா விளான், சாரதா ஜயறுரீ பீடேந்திரசால், 1918,
ஜெகந்நாதன், பொ. யாழ்ப்பாணத் தமிழரசர் வரலாறும் காலமும், யாழ்ப்பாணம், யாழ் இலக்கிய வட்டம், 1987.

Page 83
146
English Books :
Casie Chetty, Simon, The Ceylon Gazetteer, Colombo, 1834.
Daavidu, Rev. Fr.
George. K. M.,
H. S. Maintain : The three in one and
etimological and comparative Lexicon, (2nd. Vol.) Jaffna, Aseervatham, 1972.
Place - Names of Southern India, A
Generic Approachs to Toponomy, Trivan
drum, Dravidian Linguistics Associa
tion, 1986,
Gnanamuthu, s.
Jhons
Katti. Madhav N,
Pathmanathan, S. Raghavan. M, D.
Ragupatkay, P.
Place - Names of Kanyakumari District, ( Ph. D. Thesis), University of Kerala,
I972.
History of Jaffna, pt. I, Telippalai, American Ceylon Mission, 1878.
(Editor) Studies in Indian Place Names, Vols I - II, Mysore, The Place Names Society of India, 1980, . 1981.
The Jaffna Kingdom, Colombo, 1978.
Tamil Culture in Ceylon a A General Introduction, Colombo, Kala Nilayam, ( No date ). Early Settlement in Jaffna An Archalogical Survey, Madras, Sudarsan Graphics, 1987.
Ramachandran, Puthusseri, ( Chief Editor) Perspectives
Queyroz,
in Place Name Studies, Proceedings of the National Semiaar on South Indian Place Names, Trivandrum, Place Name Society (PLANS), 1987.
Fernando de. The Temporal and Spritual Con
quest of Ceylon, (Translated by Fr. S. G. Perera) Colombo, 1930.

147
Rasanayagam. C. Ancient Jaffna, Madras, Every Man's
Publication, 1926.
Veluppillai, A. (Edited ) Ceylon Tamil Inscriptions,
Pt. II, Kandy, Royal Printers, 1971. Study of the Dialects in Inscriptional Tamil, Trivandrum, Dravidian Linguistics Association, University of Kerala, 1976,
参款
Working Papers in Applied Linguistics, A Supplement on Place Name study, International Sohool of Dravidian Linguistics Regional Centre, Pondichery, Vol. I, Oct, 1985.
撫 撫 崇
ARTICLES:
Coomaraswamy, S. W. “Place Names in பn: ending in PAY, Ceylon Antiqary and Literary Register, (C. A. L. R.) Vol.3 No.3, Jan. 1918 : pp. 157.162.
Gnanaprakasar, Ref. S. Some ruins in Jaffna ', C. A. L. R.
Vol. 4, No. 4, Oct. 1935 pp. 118-121.
“ Dravidian place names in Europe C. A. L. R. Vol. 4, No. 4 Oct. 1935 pp. 186-188.
Ceylon originally a land of Dravidian Tamil Culture, Wol. 1, No, l, 1952. pp. 25 - 27.
Handoo, Jawaharlal, Place Names and Folklore A Brief Note, Studies in Indian Place Names
Vol. Ji, 1981, pp. 52 - 57,
99

Page 84
JuJ
Horsburgh, B. " Sinhalese place names in the Jaffna Peninsula C. A. L. R. Vol. 2, No. 1, Jan, 1916 pp. 54.58.; Vol. 2, No. 3, Jan. 1917; pp 172 - 174.
Lewis, John, Penny, Derivation of Chavakachcheri" Orientalist, Vol. 2, 1885-1886: pp, 200-20 î.
, "Place names in Vanni J. R. A. S. C. B.
Vol. 14, No 47, 1896; pp. 203-222.
Sinhalese place names in the Jaffna'
Peninsula C. A. L. R. Vol. 2, No. 3, Jan. 1917 : pp. 171-172. Vol. 3, No. 1, July 1917 t pp. 44-46, 48.
Mangalam, S, J. Hydronomic morphemes of Telugu.
Inscriptional Toponyms. ISDL working
Papers in Applied Linguistics. Oct, 1935, Quarterly 1 ; 45, pp. 71 - 95.
Nampoothiry, N.M. Indian toponomy - A critical evalution. of the work done in this field in Indija with a bibliography , Special Number of PLANS, Bulletia and Souvenir, Trivar drum, 1985, pp, 17-63.
Sabaratna Mudaliyar, S. Sinhalese place names in the northern Ceylon, J. R. A. S. C. B. (N.S) Vol. 4, No. 4, Mar. 1916,pp. 83-86,
* Sinhalese place names in the Jaffna peninsula C. A. L. R. Vol. 2, No. 3,
veluppillai, A.: “Tàmil in Ancient Jaffna and Vallipuram Gold Plate Journal of Tamil Studies, No. 19 June, 1981.

இடப் பெயர்கள் அகர நிரல்
(எண்
sewż nru - 1 3 7 அத்துளு  ை130 அந்தணன் திடல் சி 65 அம்பன்கடவை - 112 அல்லாரை - 36 அல்வாய் - 197 ம் 108 ஆத்தியடி - 129 ஆராட்சி - 110 - 111
faunrayuw - 69 இடைக்குறிச்சி - 100 இமையானன் . 122 - 123 இன்பருட்டி - 96
124 سے 1223 جة 6är * உடுத்துறை - 45 உடுப்பிட்டி - 66, 95 எருதிடல் - 65 எருமைமுல்லைத்தீவு - 22, 25 எழுதுமட்டுவாள் - 130, 131 ஒடக்கர்ை - 40 கங்கைகொண்டான் - 124 érógrfrtfi - l38 - 139 கட்டைவேலி - 121 - 122 கணுவில் - 54 கந்தவனக்கடவை - 112 கப்பூதா - 132 கம்பர்மலை - 67 - 68 awtur607 asunti - 108 és Tubuasib - 87, 1 28. கரம்பைக்குறிச்சி = 100, 128 கரவெட்டி - 83, 95 கல்லாகம் - 62 கல்லுவம் - 62 கல்வயல் - 62, 82 கலட்டி  ை63 கலியாவத்தை - 81 கற்குழி = 68 கற்கோவளம் = 23, 62 காயான்கடவை - 112; 128
= பக்க எண்)
36troir - 128 கிழவிதோட்டம் - 77 குடத்தனை - 23, 142 - 143 குடத்தனைக்கரையூர்-97, 98,142 குடமிய்ன் - 142 - 143 குடாரப்பு - 23 132 குடாவட்டை - 77 குடியிருப்பு - 99 கும்பாவெளி - 85 குருக்கள்மாவடி - 128 கூழாறுபிட்டி - 66 கெருடாவில் - 51, 54 கைதடி 128, 129 கொட்டோட்டை - 44 கொடிகாமம் - 75, 76, 128 கொற்புலவு - 105 கேர்ற்கையூர் - 97; 92 கொற்ருவத்தை - 81 கோயில்குடியிருப்பு - 99 கோயிலாக்கண்டி - 72 - 73 கோவிற்கடவை - 112 - 113
சக்கோட்டை - 113
சங்கத்தானை - 140 - 141
சண்டில் - 128 சந்தத்தோட்டம் - 77 சப்பாச்சிமாவடி - 128 சம்பாவெளி 85, 128 சமரபாகு - 124 srg Fräv - 88 - 91
FrfarsitGrif - 10 - 104 சிங்கைநகர் - 18, 22, 25
சித்தாவத்தை - 81,
சிலுவில் - 54 சின்னக்கரம்பகம் - 37, 128 சுண்டிக்குளம் - 42, 128
Luitple - 106
செங்கடகதகர் - 29
செட்டிக்கேணி - 42

Page 85
50
செட்டியாவூர் - 48, 97, 98 செட்டியா வெளி - 85 செம்பியன்பற்று 23,28,115, 116 சோழங்கன் - 108 தம்பசிட்டி - 95 - 96 தவசிகுளம் - 42, 128 தனங்கிளப்பு - 41 = 42 தனிவளை - 69 தாவளை இயற்றலை - 91 -92 திக்கம் - 143 தும்பள்ை - 33, 34 துன்ன?ல - 88, 92 - 94 தென்மராட்சி 32, 72, 110 தொண்டைமானுறு - 37-39 தல்லாயம் - 109 நலியாவத்தை - 81 தவிண்டில் - 141 நாகர்கோவில்-22, 23, 29-31-67 நாவற்காடு - 128 நாவற்குழி - 63 - 64, 128 நுணுவில் - 51, 55, 128 நுணுவில் - 51, 55, 128 நெல்லண்டை - 128, 129 நெல்லியடி - 128 நெல்லியான் - 124 - 125 பத்தாவத்தை - 81, 123 பருத்தித்துறை - 45 - 47 பனங்காடு - 128 பாலாவி - 36 புலோலி - 139 - 140 புற்றளை - 35 புழுப்பொறுக்கி ஆலடி, - 127 புன்னைவேலி - 128 பெரியமந்துவில் 55, 128 பெரியான் ஒடை - 40 பொலிகண்டி - 73 - 74 பொற்பத்தை - 128 மட்டுவில் 51, 55 - 57
u.B6af7 Lrrasör . = 6 6
மணலூர் - 25 ” ഥഞ്ഞrഞ്ച് - 66 மணற்காடு - 67 மத்துவில் - 51, 57 = 59, 128 மருதங்கேணி - 43, 128 மருதடி - 128 மறவன்புலவு - 196 மன்னன்குறிச்சி - 100 மாத்தனை - 136 Lontop 250T - 124 மாவத்தை - 8 Lálgiri - 1.32 - 13 3 மிருசுவில் - 51, 59
FrTài - 8I, 94 gi 95 Errikasnf - 132 grrrl norrøão - 60
வடமராட்சி - 32 111
வட்டாவத்தை - 81 வட்டுவத்தை - 81 வத்திராயன் - 125
வதிரி - 125 - 126
6utbol onputntuit - 128 வரணி - 133 - 136 வரத்துப்பளை = 104 வல்லிபுரம் - 18, 22-29, 67, w 117, 118, 121 வல்வெட்டி - 84 , வல்வெட்டித்துறை - 47- 50 வாதரவத்தை = 81 வாய்க்கால்தரவை - 64 விடத்தற்பளை - 104, 128
வியாயாரிமூலை - 68
வீரப்பிராயன் - 126 வெத்திலைக்கேணி - 43 வேம்படி - 128 Galuh ritulů - 128 வேலம்பிராய் - 128


Page 86


Page 87


Page 88
நூல்க
1979 - ஈழத்து நாட்டார் . மட்டக்களப்பு மர்
I Գ8E
காத்தவராய்ன்
1988 - இலங்கை இடப்ெ அரிங்கேசன் கல்வி
IԿ8Կ
இலங்கை இடப்ெ இடமராட்சி  ெ

பாடல்கள்
வட்டம் ஆய்வும் மதிப்பீடும்.
ாடகம் பதிப்பு 1
பயர் ஆய்வு
வட்டாரம் 1.
பயர் ஆய்வு உ2 தன்மராட்சி"
-
 ݂ - ܒܚܒܫ ܒ =
--
பார்ப்பரினம்.