கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தென்னகத்தில் சில தினங்கள்

Page 1

*
』』
|-
SS S S S S S D S

Page 2


Page 3


Page 4

தென்னகத்தில்
சில தினங்கள் O O
ஜோதி சூரியகுமார்
ஜோ தி பதிப் ப க ம் . 122/1, காலி வீதி,
தெஹிவளை.

Page 5
முதற் பதிப்பு: மார்ச், 1973, 2 life LD: பதிவு செய்யப்பட்டது.
வில: e5. 3-25
விற்பக்னக்கு வழங்குவோர்:
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட் 185, கிழுண்ட்பாஸ் வீதி,
கொழும்பு-14
முன் அட்டை:
மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் மகாபலிபுரம் கடற்கரை கோயில் பகவான பூரீ சத்ய சாயிபாபா மகிஷாசுரன் சிலை
பின் அட்டை
காஞ்சி காமாட்சி.
கொழும்பு-11, குனளன் அச்சகத்தில் அச்சிடப்பட்டது.

முன்னுரை
ஐரோப்பியப் பிரயாணக் கட்டுரை, அமெரிக்கப் பிரயா னக் கட்டுரை, ரஷ்யப் பிரயாணக் கட்டுரை, திருக்கயிலாய யாத்திரை என்று எத்தனையோ பிரயாணக் கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியிருக்கின்றன. பிறகு அவை புத் தக வடிவிலும் பிரசுரமாகியிருக்கின்றணி. ஆளுல் தென்னிந் தியத் தமிழ் நாட்டிலுள்ள திருத்தலங்களுக்கும் முக்கியமான நகரங்களுக்கும் சென்று விரிவானதொரு பிரயாணக் கட் டுரை நூலை திருமதி ஜோதி சூரியகுமார் படைத்துக் கொடுத்திருப்பதைப் பார்க்கும்பொழுது அவரை நாம் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கிருேம்.
பிரயாணக் கட்டுரைகளை “போர் அடிக்காமல் எழுது வதென்பது ஒரு பிரத்யேகமான கலை. சுவாரஸ்யமான கதை களைச் சுலபமாக எழுதிவிடலாம். சுவை குன்றம்லும் வாசக நேயர்களைக் கவர்ந்திழுக்கும் முறையில் பிரயாணக் கட்டுரை களை எழுதுவதென்பது அத்தனை சுலபமான காரியமல்ல. மித்திரன் தினசரியில் இந்தத் தொடர் கட்டுரை வெளியா கிய பொழுது தொடர்கதைகளைப் படிப்பதைக் காட்டிலும் பன்மடங்கு ஆவலுடனும் உற்சாகத்துடனும் பல்லாயிரக் கணக்கான அன்பர்கள் அவற்றைப்படித்து மகிழ்ந்தார்கள், இலங்கையிலிருந்து பிரதிவருடமும் ஆயிரக்கணக்கான யாத் ரீகர்கள் தென்னிந்தியாவிற்குச் சுற்றுப் பிரயாணத்தை மேற் கொள்ளுவதினல் அவர்களுக்கு உதவியாக ஒரு நூல் இல்லா தது . இதுவரை பெரும் குறையாக இருந்தது. அந்தக்

Page 6
குறையை திரும்தி ஜோதி சூரியகுமார் இப்பொழுது போக் கியிருக்கிருர், தென்னிந்தியச் சுற்றுப்பிரயாணத்தை மேற் கொள்ளுகிறவர்கள் கையில் இந்தப் புத்தகம் இருந்தால் போதும். வேறுயாருடைய உதவியும் அவர்களுக்கு அவசிய ம்ேயில்லை. எந்த எந்த இடங்களைப்பார்க்க வேண்டும், அதற்கு எப்படிப் போகவேண்டும். எங்கு தங்க வேண்டும், என்ன பொருள்களை எந்த இடத்தில் வாங்கலாம், என்பது போன்ற சகல விவரங்களையும் இச் சிறு நூல் தன்னகத்தே அடக்கியிருக்கிறது.
புத்தகத்தைப் புரட்டியதும் இத்தனைப் புகைப்படங்களை யும் ரசமான தகவல்களையும் திருமதி ஜோதி சூரியகுமார் எப்படித் திரட்டிஞர் என்று நாம் ஆச்சரியப்படவேண்டி யிருக்கிறது. அவருடைய திட்டமிட்ட சுற்றுப் பிரயாணமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. உங்களுக்கு எந்த திருத்த லத்தைப் பற்றிய படங்களும், விவரங்களும், வருணனைசளும் வேண்டும்? அத்தனையையும் இந்த நூலில் நீங்கள் பார்க்க Gavintuh.
ஏதோ அங்கு போனேன், இங்கு போனேன் என்றில் லாம்ல் இடையிடையே நம்ம்ை வாய்விட்டுச் சிரிக்கவைக் தம் ஹாஸ்பூச்சுவை வரிக்கு வரி நிரவியிருப்பது ஆசிரியை யின் கற்பனைத் திறனையும் இலக்கிய ரசனையையும் எழுத்துத் திறனையும் பிரதிபலிப்பதாக இருக்கிறது. ஒரே ஒரு நூலில் அதிலும் பிரயாணக் கட்டுரைத் தொகுப்பில் ஈழநாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்களிலே தமக்கும் ஒரு உன்னதமான இடத்தைப் பிடித்துக்கொண்டுவிட்ட திருமதி ஜோதி சூரிய குமார் இன்னும் பல இலக்கியங்களைச் சிருட்டித்து ஈழத்து வாசகர்களை மகிழ்விக்க வேண்டுமென்று விரும்புகிருேம். புகழ்பெற்றுவிட்ட உங்கள் பேனை சோர்ந்துவிடாமல் எழு திக்கொண்டேயிருக்கட்டுமென்று நாம் வாழ்த்து கிருேம்,
20-3-1973 கே. வி. எஸ். வாஸ்
பிரதம் ஆசிரியர் வீரகேசரி / மித்திரன்

முன்னுரை
திருமதி ஜோதி சூரியகுமார் எழுதியுள்ள பிரயாணக் கட்டுரைகளைப் படிக்கத் தொடங்கியதும் எனக்குப் பழைய நினைவுகள் எழலாயின. ஏறத்தாழப் பதினைந்து வருடங்க ளுக்கு முன் நண்பர்கள் சிலரும் நானும் கிட்டத்தட்ட இந் நூலாசிரியை பிரயாணஞ் செய்த வழியாகவே சுற்றுலா ஒன்றை மேற்கொண்டிருந்தோம்.
திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகும்ரி, திரு வனத்தபுரம், ஊட்டி, மைசூர், பெங்களுர், சென்னை ஆகி யன எமது பிரயாணத்திலும் பிரதான இடங்களாக அமைந் தன. இவற்றினிடையே பல சிற்றுார்களையும் பார்த்துக் கொண்டோம். நூலாசிரியை பயணஞ் சென்ற நெறி எனக் குப் பரிச்சயமானதொன்ருகையால் பயணத்தை விவரிக்கும் கட்டுரைகளை அக்கறையுடனும் ஈடுபாட்டுடனும் வாசித் தேன்.
ஒரே வழியாகப் போனலும் ஒவ்வொருவர் பார்க்கும் விஷயங்கள் வேறு படலாம். தனது வயது, பயிற்சி, ஈடு பாடு உலகநோக்கு முதலியவற்றிற்கு ஏற்ப இந்நூலாசி ரியை தென்னகத்திற் சில பல விஷயங்களைக் கண்டு அநுப வித்திருக்கிருர்; அவதானித்திருக்கிருர். மனிதர் எத்தனை உலகம் அத்தனை என்று கூறுவார்கள். பொருள் ஒன்றே: பார்வைகள் பலவாகின்றன. இக்காலத்து இளம் பெண் மணி ஒருவரது நோக்கையும் போக்கையும் கட்டுரைகள்

Page 7
நேரடியாகவும் மறைமுகமாகவும் பிரதிபலிக்கின்றன எனக் கொள்வதில் தவறில்லை.
பெரும்பாலும் கோயில்களை ம்ையம்ாகக் கொண்டே இவரது சுற்றுலா இருந்திருப்பினும், தினசரி வாழ்வில் நிக ழும் சின்னஞ்சிறு சம்பவங்களையொட்டியே தனது அநுபவங் களையும் அவதானிப்புகளையும் விவரித்திருக்கிருர் ஆசிரியை: சினிமா நட்சத்திரங்களைப் பேட்டி கண்டதிலிருந்து சத்ய சாயிபாபாவைத் தரிசித்தது வரை பஸ் பிரயாணங்களிலி ருந்து பல வர்ணச் சேலைகள் தெரிந்தெடுத்தது வரை தாம் பெற்ற அநுபவங்கள் அனைத்தையும் சுவைகுன்ருமற் கூறிச் செல்கிருரர். அதே வேளையில், விஷயங்களைக் கரவும் கபடமு மின்றி நேர்மையாகவும் கூறியிருக்கிருர், தம்து சொந்த அநு பவங்களைக் கூற நேரிடும்போது, பலர், அவற்றுக்கு அலங் காரஞ்செய்து, முலாம்பூசிக் கலப்படஞ் செய்து போலியாக் கிவிடுவதைக் காண்கிருேம். இந் நூலாசிரியை குழந்தையுள் ளத்துடன் சம்பவங்களை வருணித்திருக்கும் நேர்மை பாராட் டுக்குரியது.
தூரத்திலுள்ள நாடுகளைப் பற்றிய நூல்கள் மட்டு மன்றி, அண்டை நாடுகளைப்பற்றிய பயண நூல்களும் எமக்கு அத்தியாவசியமானவையே. உல்லாசப் பயணம் உலகமளரிவியதாய் மாறிவரும் இக்காலத்திலே பிரயாண நூல்களுக்குத் தேவையுமுண்டு.
கலாநிதி க. கைலாசபதி

கன்னியாகுமரியில் கட்டுரையாளர்
என்னுரை
சில தவிர்க்க முடியாத காரணங்களை முன்னிட்டு, என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எவருமின்றி, தன்னந்தனியாக நண்பர்களுடன் தென்னிந்தியச் சுற்றுலாவில் கலந்து கொள்ள வேண்டிய நிலை எனக்கேற்பட்டது, அப்படி தனி யாக (சக நண்பர்கள் அன்புடனும், அக்கறையுடனும் என் னைக்கவனித்துக் கொண்ட போதும் பிரயாணப்பட நேர்த் தது என்னைப் பொறுத்த வரையில் எனக்குப் பெரிய மனக் குறையே! அகன் காரணமாக, ஈழம் திரும்பியதும் அங்கு நான் கண்டு, கேட்டு, ரஸித்தவற்றை இங்கு சொல்லி மகிழ வேண்டுமென்பதற்காக வெறுமனே மேலெழுந்தவாரியாக சேர்த்துக் கொண்ட குறிப்புகள்-பின்னர்-மித்திரன் பத்திரி கையில் பயணக் கட்டுரையாக வெளிவந்து, இப்போது இப்படி புத்தகமாக உருப்பெறும் என்று நான்கனவு கூடக் கண்டதில்லை.
உண்மையிலேயே இப்படி ஒரு பயணக்கட்டுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆரம்பத்திலேயே எனக்கு இருந்

Page 8
திருக்கும்ால்ை, நான் இன்னும் எவ்வளவோ விஷயங்களைச் சேகரித்துக் கொண்டிருந்திருப்பேன்.
என்னுடன் பயணஞ் செய்த மற்றைய நண்பர்களின் கண்ணுேட்டம், ரசனை என்பன வேறுவிதமாக இருந்திருக்க லாம். என் கண்பார்வைக்கும், அறிவிற்கும் தப்பிய எத்த னேயோ விஷயங்களை அவர்கள் கண்டிருக்கலாம். அவர்க ளின் எண்ணத்திற்கும். எனது எழுத்திற்கும் சில வித்தியா சங்கள் இருக்கவும் கூடும். இத்தொடரில் நான் அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தால், அதைப் பாரபட்சமின்றி என் நண்பர்களும், மற்றவர்களும் ஏற்றுக்கொள்வா ர் க  ெள ன நினைக் கிறேன் . எ ன து இந்த வேண்டுகோளுக்குக் காரணம் என்ன வென்முல். இதுவே எனது முதல் முயற்சி; முதற் பயணக் கட்டுரை!! முதல் புத்தகம்!!! நடை பயிலும் சிறு குழந்தையின் தயக் கத்தோடு தான் இதை நான் எழுதி முடித்தேன். இக்கட்டுரை எழுதுவதற்கு எனக்கு சில பல வழிகளில் உதவிய காலஞ் சென்ற எழுத்தாளர் திரு. செ. கதிர்காமநாதன் அவர்களுக் கும், முன்னன் மித்திரன் செய்தி ஆசிரியரும், தற்போது பிரித் தானிய தூதரகத்தில் பணிபுரிபவருமான திரு. ஏ. டபிள்யு. ஜே. சந்திரசேகரா அவர்களுக்கும் இச் சந்தர்ப்பத் தில் எனது நன்றியை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஏதோ தென்னிந்தியாவிற்குப் போனேன், வந்தேன் எழு தினேன் என்றில்லாமல் என்னுல் முடிந்திவரை, முயற்சி செய்து சம்பவங்களைக் கோர்வையாக்கி எழுதியுள்ளேன். அவற்றை வாசகர்கள் அப்படியே அதன் போக்கிலேயே பார்த்து, வாசித்து, ரளித்து ஏற்றுக் கொள்வார்களென எதிர்பார்க்கிறேன்.
எனது பயணக் கதையை தொடர் கட்டுரையாக மித்திரன் பத்திரிகையில் வெளிவர உதவிய வீரகேசரி, மித்திரன் ஆசிரி யர் திரு. க. சிவப்பிரகாசம் அவர்களுக்கும், அத்தொடர்புத்தக உருவில் வெளிவர ஊக்கப்படுத்தியும், முன்னுரை வழங்கி யும் உதவிய பிரதம ஆசிரியர் திரு. கே. வி. எஸ். வாஸ் அவர்களுக்கும் என் வணக்கத்தையும் நன்றியையும் தெரிவித் துக்கொள்கிறேன். அத்துடன் இத்தொடரை வாசித்து பெருந் தன்மையுடன் இந் நூலுக்கு முன்னுரை வழங்கி, சிறிய எழுத்தாளினியாகிய என்னைக் கெளரவப்படுத்திய கலாநிதி. க. கைலாசபதி அவர்களுக்கும் எனது நன்றி உரித்தாகும்
ஒ! என்னுடன் பிரயாணம் செய்த அந்த நண்பர்கள், அவர்களையும் மறக்க முடியாது.
- ஜோதி சூரியகுமார்

தென்னகத்தில் சில தினங்கள்
நினைவுச் சுமைகள் !
கிலை எட்டு மணியிருக்கும். பலர்லி விமான நிலையத் தில் ஏகப்பட்ட கூட்டம். தென் இந்திய சரித்திர-சமயகலாச்சார சுற்றுலா ஒன்றை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நானும் எனது நண்பர்களும் விமானத்திற்காகக் காத்திருந் தோம். விமானமும் வந்தது. உறவினர்களிடமும், நண்பர். களிடமும் விடை பெற்றுக் கொண்டு நாங்கள் விமானத்தில் ஏறினுேம்.
விமானப் பணிப் பெண் வந்தார் "பெல்டைப் பூட்டிக் கொள்ளுங்கள்' என்ருர், கலங்கிய கண்களுடன் நான் வெளியே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்டு தானு கவே பெல்ட்டை பூட்டிவிட்டார். "தாங்க்ஸ்' என்றேன். அவர் அழகான சிரிப்பை உதிர்த்துவிட்டு அப்பால் சென்ருர்
எல்லாவற்றையும் சரிபார்த்தபிறகு விமானம் றன்லே! யில் மெதுவாக ஒடத்தொடங்கியது எண்க்கு என்னமோ ஒரே

Page 9
യ , ബ
திலொக இருந்தது. கதவுகள் எல்லாம் வெகு அவதானமாகப் பூட்டப்பட்டிருந்தன. நீள்வட்டமான யன்னல்களுக்கு திறக்க முடியாதவண்ணம் கண்ணுடி பொருத்தப் பட்டிருந்தது. என் அருகிலிருந்த கண்ணுடி ஜன்னலுரடாகத்தான் வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். வழியனுப்ப வந்தவர்கள் இன்ன மும் கையசைத்த வண்ணம் நின்றுகொண்டிருந்தார்கள்.
விமானம் ஒரு திருப்பத்துடன் சுழன்று வந்து தரையில் இருந்து கிர்ரென்று எழும்பிப் பறக்க ஆரம்பித்தது. பார்த் துக்கொண்டிருந்த போதே விமான நிலையம் கண் பார்வை யிலிருந்து மறைந்தது.
முதன்முதலாக விடுதியில் சேர்க்கப்பட்ட சிறுமியின் மனேநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது என் நிளேயும்.
உலகம் முழுவதுமே சூன்யம்ாகிவிட்டதைப்போன்ற ஒரு தனிமை உணர்ச்சி என்னைப் பிடித்துக்கொண்டது. இருக் காதா பின்னே? கிட்டத்தட்ட இன்னும் நான்கு வாரங் களின் பின்தானே திரும்பவும் என் குடும்பத்தினரைச் சந்திப் பேன். அதுவரையும், அதாவது இந்த இடைக்காலத்தில் தானும் என் நண்பர்களும் தென்னித்தியாவைச் சுற்றிக் கொண்டிருக்கப் போகிருேம். பாழும் மனம் ஏன் பரிதவிக் குதோ. கைமுட்டி அளவு இருதயத்தை அலைக்கழித்துக் கொண்டிருந்த கடலளவு எண்ணங்களில் இருந்து விடுபட முயன்றவளாக வெளியே எட்டிப்பார்த்தேன்.
குஞ்சை இறக்கைக்குள் அடக்கிக்கொள்ளும் தாய்க்கோழி போல விமானமும் தனது சக்கரங்களை உள்ளிழுத்து வயிற்றுக் குள் (நடுப்பகுதி) அடக்கிக்கொண்டது. சுற்று முற்றும் பார்த் தேன். நீலமும் வெள்ளையுமாக ஆகாய வெளிதான் தென்பட்

u 8 -
டது. நேரம் அப்போது காலை பத்தேகால் ம்ணியிருக்கும். அத் தக் காலை வெயிலில் விமான இறக்கைகள் பளீரென்று ஒளிர்ந் தன. யன்னலின் ஊடாக வெகு கீழே எட்டிப்பார்த்தேன், கோடுகீறிஞற் போன்று தெருக்களும், பாறைகளும் மூடிவில் லாது போய்க்கொண்டிருந்தன.அவற்றில் ஒடிக்கொண்டிருந்த வாகனங்களும்,சென்றுகொண்டிருந்த மக்களும் அருகேயிருந்த வீடுகளும், மரங்களும் வேறும் பனந்தோப்புகளும், மரக்கறித் தோட்டங்களும், விளையாட்டுச் சாமான்களைப்போல தென் பட்டன. இலங்கையின் எல்லையைக் கடந்து சமுத்திரத்தின் மேல் விமானம் பறக்கத்தொடங்கியது. இதற்கிடையில் தட் டும் கையுமாக வந்துகொண்டிருந்த விமானப் பணிப்பெண் அதிலிருந்த டொபிகளைப் பரிமாறியபடி என்னிடம் வந்து சேர்ந்தார்.
நான் ஒரு டொபியை எடுத்துக்கொண்டு "தாங்க்யூ" என்றேன். "அழர் தீர்கள் இன்னுமொன்று எடுத்துக்கொள் ளுங்கள்' என்று கண்களை சிமிட்டியவாறே காதிற்குள் கிசு கிசுத்தார். அழுகின்ற குழந்தைக்கு இனிப்புக் கொடுப்பது போல அவர் நடந்துகொண்டது எனக்கு என்ன வோ போலிருந்தது. சே ! எல்லோரும் சமாதானம் சொல்லும்ள வுக்கு நான் கலங்கியிருப்பதாகக் காட்டிக் கொள்ளலாமா ? உஷாராகிக் கொண்டேன்.
"ஹலோ குட்மார்னிங்" என்று அப்போது தான் விழித் துக்கொண்டவள்போல காலை வணக்கம் கூறினேன். அவரும் புரிந்து கொண்டிருக்கவேண்டுமென்று நினைக்கிறேன்.
Puri yi puri (Cheer. Up Dear)
f w உற்சாகமாக இருக்கும்படி வேண்டிக் கொண்டே மற்ற வர்களைக் கவனிக்கப் போய்விட்டார். விமானத்திலிருந்த J9š

Page 10
سسته به حساس
தனை பேரையும் புன்சிரிப்புடன் கவனிக்க வேண்டியது அவர் பொறுப்பல்லவா ?
திரும்பவும் சில 'பாரங்களைக் கொண்டுவந்து தந்தார். நிரப்புவதற்காக முன்னுல் இருந்த ஸிட்டின் முதுகுப்புறத் தில் இருந்த ஒரு பகுதியை வெளியே இழுத்து எடுத்தவுடன் அது ஒரு மேசையைப்போல் என் முன்னே நீட்டிக்கொண் டது. அதன்மேல் வைத்து பாரங்களைப் பூர்த்தி செய்ய ஆரம் பித்தேன். மீண்டும் விமானப் பணிப்பெண் பிரயாணிகளுக்கு * லைம் ஜூஸ் " கொண்டுவந்து கொடுத்தார்.
கீழே பல மைல்தொலைவில் ஆரவாரமில்லாத (ஆரவா ரம் கேட்டால் தானே ? அலை மோதிக் கொண்டிருந்த கடல் சூரிய ஒளியில் மின்னிக் கண்களை கூச வைத்துக் கொண்டிருந் தது. கப்பல்களும், வள்ளங்களும் சிறிதும் பெரிதுமான வெண் புள்ளிகளாக ஆங்காங்கே தென்பட்டன. பஞ்சுப் பொதிகளா கத் தோற்றமளித்த வெண்முகிற் கூட்டங்களைத் தாண்டிக் கொண்டு நாங்கள் மேலே பறந்துகொண்டிருந்தோம். '
விமானத்தின் உட்புறத்தை நோக்கினேன். முக்கால்வாசி யும் எங்கள் குழுவைச் சேர்ந்தவர்களே இருந்தார்கள். விமா னத்திற்கு எனக்கு அனுமதிக்கப்பட்டிருந்த எடையைவிட என் மனதிலிருந்தநினைவுச் சுமைகளே பன்மடங்கு எடையாக
இருந்தது.
பார்த்துக்கொண்டிருந்த போதே பரந்த சமுத்திரத்தைக் கடந்து நிலப்பரப்பிற்கு வந்திருந்தோம். அக்கரையிலிருந்து இக்கரைக்கு சொற்ப நேரத்தில் வந்துவிட்டோம். எமது சொந்த நாட்டையே அக்கரை என்று சொல்லுமளவிற்கு தூர மும், சமுத்திரமும் எங்களைப் பிரித்து விட்டிருந்தது.விமானம் தன் வயிற்றுக்குள் அடக்கி வைத்திருந்த சக்கரங்களைத்திரும் பவும் வெளியேற்றியது.

V
.திருச்சி நகரத்தோற்றம்.
திருச்சியில் நாம் !
திருச்சி விமான நிலையத்தில் முன் புறத்தில் பூந்தோட் டங்கள் போடப்பட்டு கண்ணிற்கு அழகாகக் காட்சியளித்
தது
விமானமும் மெதுவாக இறங்கி ஊர்ந்து நின்றது. இலங் கையிலிருந்து புறப்பட்டு சுமார் 45 நிமிடங்கள் கடந்த பின் இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்திருந்தோம் அதை என் கைப் பையிலிருந்த நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொண்டேன். அதாவது அந்த நிமிடத்திலிருந்து ஒவ்வொன் றையும் பற்றிகவனித்துக் குறிப் பெடுத்துக்கொள்வதை என் பொழுதுபோக்காக்கிக் கொண்டேன்.அந்தக் குறிப்புகள் தான். இந்தக் கட்டுரையை(எழுத எனக்குப் பெரிதும் உதவின.

Page 11
سست 6 سسس
திருச்சி விமான நிலையம் பார்வைக்கு அழகாக இருந்தது. அங்கேயும் என்னென்னவோ பாரங்கள் எல்லாம் பூர்த்தி செய்யும்படி தந்தார்கள் சுங்கப் பகுதியில் எங்கள் பெட்டி களைப் பரிசோதித்தார்கள். விமான நிலைய அதிகாரிகள் தமி ழிலும், ஆங்கிலத்திலும் மாறிமாறி உரையாடினர்கள். சுங் கத்து கெடுபிடிகள் எல்லாம் முடிந்தபின் நாங்கள் தங்க வேண்டிய "அசோக் பவான்' ஹோட்டலை நோக்கி புறப் பட்டோம்.
என்னைக் கவர்ந்த காவலர்!
திருச்சி நகருக்குள் துழைந்ததும் என்னைக் கவர்ந்த முதல் நபர், எங்கள் ஹோட்டலின் முன்னலேயே நின்று கொண்டிருந்தார். அவர் ஒரு பொலிஸ்காரர். அவரும் இங் குள்ளவர்களைப் போல்தான் காக்கியில் கட்டைக் காற்சட் டையும், காக்கி ஷேர்ட்டும் அணிந்திருந்தார். ஆணுல் காற் சட்டை எங்கள் பொலிஸ் காரரின் காற்சட்டையைப்போல் அல்லாது வித்தியாசமாக இருந்தது. காற்சட்டையின் கால்கள் அவரின் கால்களைவிட இரண்டு மடங்கு பெரிதாக இருந்தது. காற்சட்டையின் முன்பாகத்தில் சுருக்குப் போன்ற ஒரு மடிப்பு காணப்பட்டது. இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டிருந்தார். தலையில் நீலமும், சிவப்பும் வரி வரியாகப் போடப்பட்டிருந்த தொப்பி அணிந்திருந்தார். தொப்பியின் நடுவிலுள்ள குழிவிழுந்த பாகத்திலிருந்து 'பிரமிட்" போன்ற ஒரு பகுதி நீட்டிக்கொண்டிருந்தது. ஏனே அவரின் தோற்றம் என்னை அடிக்கடி திரும்பி பார்க்க வைத்தது. அவர் மட்டுமல்ல வேறு இடங்களில் பிரயாணத்தின் போதும் நான் கண்ட பொலிஸ்காரர்களும் அந்த தோற்றத்திலேயே இருந்தார்கள். இன்ஸ்பெக்டர், டிராபிக் பொலிஸ் ஆகி யோரின் உடுப்பு வேறுவிதம்ாக இருந்தது. ஹோட்டலி

னுள் நுழைந்தவுடன் இச் சுற்றுலாவுக்காக முதல் நாள் வந்து அங்கே தங்கியிருந்த எமது நண்பர்களிற் சிலர் வெகு உற்சாகமாக எம்மை வரவேற்ருர்கள்.
அன்று மாலை இச்சுற்றுலாவை ஒழுங்கு செய்த எமது நிர்வாகி எல்லோரையும் அழைத்து அறிமுகப் படலத்தை ஆரம்பித்து வைத்தார். ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள்தான். என்ருலும் அவர் திரும்பவும் அறிமுகப்படுத்தி பிரயாணத்தை பற்றிய சில திட் உங்களையும் கூறிஞர்.
இரண்டு சிறுமிகளையும், இரண்டு சிறுவர்களையும் சேர்த்து நாங்கள் நாற்பத்தி மூன்றுபேர் இருந்தோம் ஒரு கிறிஸ்தவ நண்பர் கூட எம்முடன் வந்திருந்தார்.
நிர்வாகி தனது சிற்றுரையை முடித்ததும், நாங்களும் சில கேள்விகளைக் கேட்டு எங்களுக்கு இருந்த சில சந்தேகங் களையும் தீர்த்துக்கொண்டு, அவர் அவர்க்கென ஒதுக்கப்பட் டிருந்த அறைகளே அடைந்தோம். அன்றைய முழு நாளும் ஓய்வு எடுத்துக்கொண்டு ஹோட்டலிலேயே இருந்தோம்.

Page 12
اسس 8 كـ
இந்திய மண்ணில்
இரண்டாவது நாள் !
, சைவ மக்களின் முழு முதற் கடவுள் சிவபெருமானே
ஆணுலும் முதலில் யாரும் தொழுவது வேழ முகத்தோனத் தர்னே.
விஞயகரைத் தொழுதால் விக்கினங்கள் தீருமென்பர் பெரியோர், அதன்படி மறுநாள் காலை எழுந்து குளித்து விட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரைத் தரி சித்து வர எண்ணினேம். &
எங்கள் குழுவினர் பிரயாணம் செய்ய ஏற்பாடு செய்யப் பட்ட பஸ் அன்றைய தினம் வராதபடியினுல், நாங்கள் நாலைந்து பேராக ஹோட்டலைவிட்டு கிளம்பினுேம்.
அதிகாலை நேரம் . ஹோட்டலும் விழித்துக்கொண்டு விட்டது. ஹோட்டல் சிப்பந்திகளும், சர்வர்களும் அங்கு மிங்குமாகப் பறந்துகொண்டிருந்தார்கள். கவுண்டரில் இருந்த காஷியரும், மற்றவரும் முகம் அலம்பி திருநீற்றுப் பூச்சுகளு டன் பளிரென்று காணப்பட்டார்கள். அருகேயிருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமி படங்களுக்கு ஊதுபத்திக்குச்சி கொளுத்தி வைத்து மலர் மாலை அணிவித்து சாம்பிராணி காட்டிக்கொண்டிருந்தார் இன்னுெருவர். பிஸினஸ் ஆரம் பிக்க அவர்கள் ஆரவாரப்பட்டுக் கொண்டிருந்த அந்தச் சூழ்நிலையிலிருந்து விடுபட்டு நாம் தெருவில் இறங்கி நடக்க
லானுேம்.
வெளியே. அப்போது தான வெளிச்சம் இலேசாகப் பா விக் கொண்டிருந்தது. காகங்கள் கரைந்தபடி பறந்து கொண்

- • 9 -
டிருந்தன. மக்களின் ஆரவாரமும், ஊர்திகளின் சத்தமும் ஒரே இரைச்சலாகக் கேட்டன. இந்தச் சத்தங்கள் எல்லாம் இலங்கையில் கேட்டதில்லையா என்ன? இருந்தும் தமிழகத் தின் அந்த முதல் வைகறைப்பொழுது ஏதோ புதுமையாகத் தான் தோன்றியது. w
இந்தியப் பெண்கள் பூச்சூடிக் கொள்வதை ஒரு பெருங் கலையாகக் கொண்டுள்ளார்கள் என்று கேள்விப் பட்டிருக் கிறேன். அதை உண்மையென நிரூபித்துக்கொண்டிருந்தார் கள் அந்த அதிகாலையிலேயே தங்கள் கடைகளை பரப்பிக் கொண்டிருந்த பூ வியாபாரிகள். மல்லிகை, முல்லை, கனகாம் பரம், செவ்வந்தி போன்ற பூக்களைத் தனியாகவும், சரமாக வும் கட்டி, இலைகளில் சுற்றி வாடாது தண்ணிர் தெளித்து வைத்திருந்தார்கள்.
சில வியாபாரிகள் நாலைந்து செங்கற்களை வைத்து அதன் மேல் இரண்டு மரப்பெட்டிகளை அடுக்கி, வியாபாரம் செய் தார்கள். வசதியான சில வியாபாரிகள் பூக்கடையே வைத் திருந்தார்கள். பெட்டிக் கடைக்காரனுக்கும், ஒட்டுக் கடைக் காரனுக்கும் வியாபாரம் என்னவோ ஒரே மாதிரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது. காரணம் இந்தியர்கள் பூ வாங்கு வதில் அவ்வளவு சமத்தர்கள். வண்ண பூக்கடைகளுக்கு அடுத்தபடியாகக் கண்ணைக்கவர்ந்தவை பழக்கடைகளாகும். தோடம் பழங்கள், முந்திரிகைப் பழங்கள், அப்பிள் பழங் கள் போன்ற பலவகையான பழங்களை குவியல் குவியலாக வைத்திருந்தார்கள். இந்த வியாபாரிகளின் இரைச்சல் ஒரு புறமிருக்க தெருவின் இருபுறமும் காணப்பட்ட காப்பிக்கடை களில் இருந்துவந்த றேடியோ கானம் காதைப் பிளந்தது. ஏராளமான சாப்பாட்டுக் கடைகளும் இருந்தன. சில கடை களில் தமிழ்ப் பாட்டும், சிலவற்றில் ஹிந்தியும் சிலதில் தெலுங்கும்ாக ஒரே ஆரவாரமாக இருந்தது அந்தக் கடை

Page 13
- 10 -
எத்தினி காஃபி சார் ? ஏழு கோப்பி
ஒருவிதமாக நாங்களும் பஸ் ஸ்டாண்டிற்கு அருகே இருந்த காப்பிக் கடையை அடைந்தோம். உள்ளே காப்பியை ஆற் றிக் கொண்டிருந்தவர் " "எத்தினி காஃபி சார்' என்று உரத்த குரலில் கேட்டார்.
"ஏழு கோப்பி தாங்கோ." என்ருர் எங்களில் ஒருவர். அவர் கோப்பி என்று உச்சரித்த பாணி கடைக்காரருக்கு என்ன மாதிரி தோன்றியதோ தெரியவில்லை சிரித்துக் கொண்டே வேலையில் ஈடுபட்டார். -
நாங்கள் கோப்பி என்று சொல்கிருேமே அதை அவர் கள் காஃபி என்கிருர்கள். நாங்கள் சொல்லும் விதம் அவர் களுக்கு வேடிக்கையாக இருந்தது. கேர்ப்பி வேண்டும் என கேட்டபோது ஒரு சிலருக்கு சட்டென்று விளங்காமல் கூட இருந்தது. அதனுல் போகப்போக நாங்களும் காஃபி என்று சொல்லப் பழகிக்கொண்டோம்.
காஃபி அருந்திய பின் அருகே இருந்த பஸ் நிலையத் திற்குப் போய் பிள்ளையார் கோவிலுக்குச் செல்லும் பஸ் எது எனக்கேட்டு ஏறிக்கொண்டோம். அது ஒரு ஒற்றைத் தட்டு பஸ் வண்டி. சரியாக விடியவில்லையாதலால் உட்புறம் லைட் எரிந்து கொண்டிருந்தது. சாதாரணமாக இங்குள்ள வண்டிகளைப் போன்றதுதான்,
* சில்லறை இல்லீங்களா "
கண்டக்டர் கரகரத்தார்.
பஸ்ஸிற்குள் ஏறிவிட்டால் இந்த சில்லறை பிரச்சினை எங்குமே உள்ளது தான் போலும். "மாறுசல்வி" என்றும்

- l l -
"மாத்தின காசு" என்றும் இங்கு வழக்கத்தில் இருக்கும் அந்தப் பணம் அங்கு நயா பைசாவாகத் தாண்டவ மாடி Ամֆ] •
கண்டக்டர் காக்கியில் நீண்ட கர்ல் சட்டையும், மேற் சட்டையும் போட்டிருந்தார். தேர்ளில் இருந்து நீண்ட பை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. பள்ளிச் சிறுவர்கள் கொண்டு போகும் பையைப் போன்ற து அது. அதற்குள் அவர் சில்லறைப் பணத்தை போட்டு வைத்திருந்தார். அடிக் ச்ொரு தரம் அதற்குள் கையைப் போட்டு கல கலத் கக் கொண்டிருந்தார் கண்டக்டர். அவரும் பிரயாணிகளுடன் கலகலப்பாகத்தான் கதைத் கக் கொண்டிருந்கார். ஆல்ை அவர் தமிழை உச்சரித்த வேகம் எனக்குப் பிடிபடவில்லை. பஸ் ஹால்ட்டில் பிரயாணிகள் இறங்கியவுடன் ரைட் என்
குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.
மலேக்கோட்டை உச்சிப் பிள்ளைமார்
உச்சிப் பிள்ளையார் கோவிலின் கோபுரம் தூரத்தே தெரிய ஆரம்பித்தது. பெயரளவிலேயே கேள்விப்பட்டிருந்த
அந்தக் கோவிலை நேரிலே தரிசிக்க போகிருேம் என்ற சந் தோஷத்தால் எனக்குப் பெருமை பிடிபடவில்லை.

Page 14
s I ихаса.
தந்தை அவர் தாயுமானுர் 1
பஸ்ஸை விட்டு இறங்கி கோவிலை நோக்கி நடந் தோம். கோவிலுக்கு உரிய கேணி வெளிப்புறத்தில் இருந் தது.
மலைக்கு போகும் படிக்கட்டுகள் ஆரம்பிக்கும் நுழை வாயிலின் ஊடாக உள்ளே சென்ருேம். காலில் போட் டிருந்த செருப்புகளை கழற்றி ஒரு கடையில் வைத்தோம். கோவிலுக்குப்போய்திரும்பி வரும்வரை பாதரட்சைகளை பாது காப்பதற்கு ஐந்து பைசா கொடுக்கவேண்டி இருந்தது.உள்ளே பழம், பாக்கு, வெற்றிலை, சூடம், தேங்காய், பூ போன்ற கோவிலுக்குத் தேவையான சாமான்கள் விற்கும் கடைகள் நிறைய இருந்தன. கோயிற் படங்கள், விபூதிப் பொட்ட லங்கள் சிறிய, பெரிய சுவாமி விக்கிரகங்கள் என்பனவும் விற் பனைக்கு இருந்தன.
முகம் கை, கால் கழுவிக் கொண்டு முதற் படியில் கால் வைத்து ஞான விநாயகனை நினைத்துக் கொண்டு படியில் ஏறத்தொடங்கினுேம், செங்காவி நிறமும், வெள்ளை நிறமும் கலந்து வரிவரியாக படிகளுக்கு வண்ணம் அடிக்கப்பட்டிருந் தது. அடிவாரத்தில் இருக்கும் மாதிரிக்கப் பிள்ளையாரையும் பிரர்ர்த்தித்துக்கொண்டோம்.
உஷாராக வெளிக்கிட்டதற்கு சோதனை போல சுமார் நாற்பது படிகள் ஏறுவதற்குள்ளேயே நான் களைத்து விட் டேன். ஓரிரு நிமிடங்கள் இளைப்பாறிவிட்டுத் திரும்பவும் ஏறத் தொடங்கினேன்.
ஒரு திருப்பத்தில் சிறிய கடை ஒன்று இருந்தது. அங்கு கோயிற் சுற்ருடலைக் கொண்ட படங்கள் விற்பனைக்கு இருந் தன. பத்துப் படங்கள் வரையில் ஒன்ருகச் சேர்த்துக்கட்டப் பட்ட சிறிய சைஸ் ஆல்பங்களும் இருந்தன. திரும்பிய

- 15 ഞ
போது அந்தக் கடையில் சில படங்களை வாங்கிக் கொண் டேன்.
இந்தக் கோயிலில் ம்ட்டுமல்ல பின்னல் நான் போன எல்லாக் கோவில்களிலுமே இப்படியான படங்களும் விக்கிர கங்களும் விற்பனைக் கிருந்தன.
ஒவ்வொரு கோயிலிலும் அந்தந்தக் கோயில் படங்களே வாங்கிச் சேகரித்துக் கொண்டேன்.
மலை உச்சியை அடைய முன் வழியில் ஒரு குகைக்கோயில் இருந்தது. படியேறிப்போனபோது சட்டென்று பார்வைக் குப் புலப்படாத வண்ணம், இடது புறத்தில் மலையோடு மலை யாகக் காணப்பட்ட அந்தக் கோயில் தன்னுள் ஒரு வரலாற் றுச் சிறப்பையே கொண்டிருந்தது.
முன்னெரு சமயம் தனகுப்தன் என்பவனது மனைவி சிவ பக்தியிற் சிறந்து விளங்கி வரும் நாளில் கருத்தரித்தாள். அவளுக்கு பிரசவ காலம் நெருங்கிய சமயத்தில் வெளியே போய் இருந்த அவளது தாய் காவிரி பெருக்கெடுத்ததால் அக் கரையில் நின்றுவிட நேர்ந்தது. பிரசவ வேதனையின் அதிகரிப்பினுல் துடித்துக்கொண்டிருந்த தன் பக்தையின் நிலை கண்டு இரங்கிய பெருமான் அவளது தாயைப் போன்று வேடம் பூண்டு வந்து அவளுக்கு உதவினர். தாயாகிவந்து மருத்துவம் பார்த்ததினுல் தாயுமானுர் என்ற பெயருடன் ஈசனர் அக்கோயிலில் குடிகொண்டிருத்தார்.
நாங்கன் போயிருந்த சமயம் பூஜை வேளையல்ல, அதனல் கோயிலினுள் ஒருவரும் தென்படவில்லை. பாறையைக் குடைந்து தூண்கள் எழுப்பி அதன்மீது சித்திரம் தீட்டியிருந் தார்கள், சிங்கங்களும் யாழிகளும் இன்னும் பல வகையான சிற்பங்களும் கல்லில் பொழியப் பட்டிருந்தன. குகைக்கோயி வின் மேல் கூரையும் மலைப்பாறையாகத் தான் இருக்கும் என்று யாரும் எதிர்பார்ப்பார்கள். ஆணுல் அந்த மேற்புறம்

Page 15
མ་གང་ཡང་མ་ 74 -
டரிங்கு போல சமப்படுத்தப்பட்டு அதன்மேல் வண்ணச்
ஒத்திரம் தீட்டப்பட்டிருந்தது. பார்க்கும் இடமெல்லாம். ஒரே சித்திரமயம்தான். அன்றைய சிற்பிகளினதும் ஒவியர் களினதும் கைவண்ணம் எவ்வளவு மேம்பாடாய் இருந்திருக்க வேண்டும்? இகையும்விட கருங்கல்லினல் செய்யப்பட்ட பிர மாண்டமான சங்கிலிகள் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்
தன.
கோயிலின் உட்புறத்தில் இன்னுேர் பக்கத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவச் சிலைகளும் ஆடை அகணி வித்தபடி காணப்பட்டன. வேறும் பல கோயில்களிலும் இந் தச் சிலைகளைக் கண்டேன்.
எம்மால் கோயில் மூலஸ்தானத்தை பார்க்க முடியவில்லை. பூட்டப்பட்டிருந்தது. ஆகவே அங்கே சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
அதே இடத்தில் வலது புறத்தில் ஒது சிறிய காரியால யம் காணப்பட்டது. அந்தக் காரியாலயத்தில் டிக்கட் வாங் கிக் கொண்ட பிறகே உச்சி மலைக்குப் போக அனுமதிக்கப் பட்டோம்.
ஆரம்பத்தில் மூத்தவனைத் தரிசித்த பின்னர்தான், சிவ பெருமானைக் கூட வணங்கலாமாக்கும் என்று நினைத்திருந் தேன். அவர் என்னடாவென்ருல் மலையுச்சியில் மைத்த னருக்க இடை நடுவில் தான் அமர்ந்து விட்டார். தத்தை யின் பாதங்களே சேவித்துக்கொண்டே, மைந்தனிடம் சென் ருேம்.
வழியில் இரண்டு பிராமணப் பெண்களைக் கண்டேன். தலையில் முக்காடிட்டு தண்ணீர்க் குடங்களுடன் வந்து கொண் டிருந்தார்கள். அவர்கள் பேசிக் கொண்ட பிராமணுள்பாஷை எனக்குப் புரியவில்லை. தென்னிந்தியாவில் சில இடங்களில் சிலர் தமிழ் மொழியைப் பேசிய பாணி, சில வேளைகளில்

- 15 -
விளங்காமலே அது ஒரு புதிய பாஷையோ என மயங்க வைத்தது.
மலையுச்சியை நெருங்க, நெருங்க அங்கிருந்து ஒலிபரப் பாகிக் கொண்டிருந்த பக்திப் பாடல்களின் ஒசை காதில் தெளிவாக விழுந்தது. இதனுல் படியேறும் பக்தர்களுக்கு ஒரு புது உத்வேகம் ஏற்படுகிறது. சிரமமும் தெரியாமல் இருக் கிறது. மலைப்பாதை நெடுக மின்சார வசதி செய்யப்பட் டிருந்ததினுல், இரவில் வருபவர்களுக்கும் இலகுவாக காணப்
• [LL---gjلا
தேப்பக்குளத்தின் பின்னணியில் மலைக்கோட்டை
சும்ார் 450 படிகளைக் கடந்து கோயிலை அடைந்த போது மனதில் பேருவகை பெருகி வழிந்தது.
மலையின் உச்சியில் சின்னதாக அமைக்கப்பட்டிருந்த கோயிலின் வாசலிலே ஒரு மகத்தான காட்சியைக் கண்டேன். ஒருவர் பத்மாசனம் போட்டுக்கொண்டு, கைகள் இரண்

Page 16
- 1 -
டையும் முழங்காலின் மீது வைத்துக்கொண்டு, விரல்களை ம்டக்கி நீட்டியபடி கண்களை மூடிக்கொண்டு (முனிவர்கள் நிஷ்டையில் இருப்பது போல வாயினுள் முணுமுணுத்தபடி வாசலிலேயே அமர்ந்திருந்தார். அவரைக் கடந்து கோயிலி னுள் நுழைந்தால் அவரின் தியானத்திற்கு பங்கமேற்பட்டு விடுமோ என்று அச்சம் அடையத் தோன்றியது. அவ்வள விற்கு தன்னை மறந்த நிலையில் அவர் இருந்தார். அவரைக் காவி உடையும் உரித்திராக்கமும் தரித்த வயது முதிர்ந்த ஒரு முனிவர் என்ரு நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை. அவர் ஒரு இளைஞர். கிளின் ஷேவ் எடுத்து அரும்பு மீசை வேறு வைத்துக்கொண்டிருந்தார். வெள்ளை நிற நீளக்கால் சட்டையும் வெள்ளை பனியனும் வேறு அணிந்திருந்தார். இவருக்கா பக்தி ? மண நிம்மதிக்காக விநாயகர் சந்நிதியில் தியானத்தில் ஆழ்ந்தாரோ, அல்லது பக்திப் பெருக்கினல், அன்பு மேலீட்டினல் அப்படி தன்னை மறந்து இருந்தாரோ தெரியவில்லை, எது எப்படியிருந்தபோதும், அவரைப் பார்த்த போது தன்னையறியாமலேயே ஒரு பக்தியுணர்வு எமக்குத் தோன்றியது. ஒசைப் படாமல் கோயிலின் உள்ளே நுழைந் தோம், தியர்னம் கலைந்து அவர் சாபம் போட்டுவிட்டால் என்ன செய்வது ?
எங்கள் துரதிஷ்டம், கோயில் மூலஸ்தானக் கதவுகள் இன்னும் திறக்கப்படவேயில்லை, ஆகவே சன்னிதானத்தைச் சுற்றி வரவிருந்த வீதியை சுற்றிப் பார்க்கலானுேம், அந்தச் சிறிய கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த யன்னல்களின் ஊடாக திருச்சி மாநகரத்தையே காணக்கூடியதாக இருந் தது. மலையுச்சியில் இருந்து அந்தக் காட்சியை கண்ணுற்.) போது ஒரே குதூகலமாக இருந்தது.
தெருக்களும், பாதைகளும், வீதிகளும் அதில் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களும் சிறு உருவங்களாகத் தோன் நின. நெருக்கம்ாக நிறைய வீடுகள், பொம்மைகள் போல் ஆட்கள்

நிலாமுற்றம் என்றும் மொட்டைமாடி என்றும் அழைக் கப்படும் வீட்டின்மேல் உள்ள சீமேந்து தளத்தை, கூரை இடாது வெளியாக விட்டிருந்தார்கள். அந்தப்பகுதி, அப் பளம், வடாம் ஊறுகாய் என்பன காயப் போடுவதற்கும் துணிம்ணி உலர்த்துவதற்கும், காதலர்கள், புதுமணத்தம்பதி கள் சல்லாபிப்பதற்கும், வீட்டுத் தலைவன் மனைவியுடன் தன் பிரச்சினைகளையும், வீட்டுப் பிரச்சினைகளையும் பற்றி கலத்து உரையாடுவதற்கும் உதவுமாம்.
தென்னிந்தியக் கதைகளில் வர்ணனைகளாக வாசித் திருந்த காட்சிகளையெல்லாம் கண் கூடாகக் காண முடிந் 凸函·
ஒருவீட்டின் மேல் மாடத்தில் இளம் பெண் ஒருத்தி மேலும் கீழும் உலாவியபடி, கையில் புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டு பாடத்தை உருப்போட்டுக் கொண்டிருந் காள். உதடுகள் அசைவது தெரிந்தது. இளம் பெண் அல் லவா ? பாவாடை, தாவணி அணிந்து, நீண்ட பின்னலிட்டு பூவும் சூட்டியிருந்தாள்.
இன்ஞேர் வீட்டின் முற்றத்தில் ஒரு அம்மையார் குனிந்தபடி நின்று கொண்டே கோலம் போட்டுக் கொண் டிருந்தார்.
எதிர்ச்சாரியில் ஒரு பெண் தனது புடவையை இடுப்பில் சொருகிக் கொண்டு குழாயடியில் உட்கார்ந்திருந்து பாத் திரம் துலக்கிக்கொண்டிருத்தாள்.
முண்டாசுக் கட்டுடன் ஒரு மனிதன் தாய்ப் பசுவையும் கன்றையும் வீட்டு வாயிலில் நிறுத்தி விட்டு ஒரு பாத் திரத்தை வீட்டுக்கார அம்மாளிடம் நீட்டிக்கொண்டிருந் தான். அவன் ஒருபால்காரன் போலும்,
திருச்சி விமான நிலையம் இருந்த திக்கை சிலர் சுட்டிக் க்ாட்டினர்கள், ஜாடை மாடையாக அது தெரிந்தது

Page 17
- 18 -
இவற்றைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்த போது, வாசலில் தியானத்தில் ஆழ்ந்திருந்த இளைஞரை மீண்டும் கண்டேன். அவர் உடம்பில் ஷர்ட் அணிந்து கொண்டு தனது சிறிய கைப் பெட்டியை (ஜேம்ஸ் பாண்ட் பெட்டியைப் போன்றது) சரி பார்த்துக் கொண்டிருந்தார். ஜேம்ஸ் பாண்ட் பெட்டி காவும் இந்த நவீன இளைஞர் பிள்ளையார் காலடியில் நிஷ்டையில் இருந்தார் என்ருல் . ஒ இந்த உலகில் எத்தனை ரகமான மனிதர்கள்! எத்தனை குணுதிசய மான போக்குகள் !
மலைக்கோட்டை உச்சியில் பிள்ளை யார் அங்கு எழுந் தருளிய வரலாற்றிற்கும், பூரீ ரங்கத்து விஷ்ணு பெருமானுக் கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஆகவே அந்த வர லாற்றை ஆரம்ப காலத்திலிருந்தே சொல்வது தான் பொருந் 5l LD.
இந்தக் கோயில்களைப்பற்றியும் பின்னர் நாங்கள் தரி சித்த கோயில்களைப் பற்றியும் எத்தனையோ வரலாறுகள், புராணக் கதைகள், இடையில் மக்களால் நம்பப்பட்ட கதை கள் என்று பல கதைகள் இருந்தன. அவையெல்லாவற்றை யுமே ஆராய்ச்சி செய்து எழுவது சாத்தியமல்ல. ஒரளவிற்கு கோயிற் தலங்களுடன் தொடர்புடைய வரலாறுகளையே இக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந் தோம். இப்போது தெருவில் மக்கள் இன்னும் பரபரப் பாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். நாங்கள் அங்கேயே ஒரு காப்பிக்கடையில் டிபன் சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை அடைந்தோம்.

- 19 -
அன்று மத்தியானம் எங்கள் ஹோட்டலுக்கு அருகா மையிலுள்ள கடைவீதியைச் சுற்றிப்பர்ர்க்கப் புறப்பட்ட ஒரு கேர்ஷ்டியுடன் நானும் சேர்ந்து கொண்டேன்.
வெய்யில் கொளுத்திக் கெர்ண்டிருந்தது. தெருவில் வாகனங்களும், வண்டிகளும் ரிக்ஷாக்களும் வருவது ம் போவதுமாக அ ம ஸ்ரி து ம ஸ்ரி பட்டுக்கொண்டிருந்தன. ஆட்டோ ரிக்ஷா, சைக்கிள் ரிக்ஷா, சாதாரண ரிக்ஷா என்று ரிக்ஷாக்களே வகை வகையாக ஒடிக்கொண்டிருந்தன. அதை விட மாட்டுவண்டி , குதிரை வண்டி என்று அவை ஒரு புறம் . குதிரை வண்டிகள் சிறிய கூடாரங்கள் போன்ற அமைப்பில் காணப்பட்டன. சில கூடாரங்களின் உட்புறம், பிரயாணி கள் உட்காரும் சீட் எல்லாம் பட்டுத் துணியினல் ைேதக்கப் பட்டிருந்தன. பட்டு நூல் குஞ்சங்கள் வேறு தொங்கவிடப் பட்டிருந்தன. குதிரைக்குக்கூட மணிகளும், மாலைகளும் கட்டி யிருந்தார்கள். வசதியான வண்டிக்காரர்கள் போலும் .
ஜல்ஜல் என்று அவை ஒசை எழுப்பிக் கொண்டு ஒடும் போது அழகாக இருந்தன. சில குதிரை வண்டிகள் வெகு சாதாரணமானவை. எந்தவிதத் தொழில் புரிபவனிடை யேயும் வசதியுள்ளவனும் வசதிக்குறைவானவனும் இருக்கத் தான் செய்கிருன். வசதி, வருமானத்தை பொறுத்த வரை யில் வேறுபடுகிறது. வசதி உள்ளவன் நாலு காசை அள்ளி வீசி தன் தெர்ழிலுக்கு மெருகூட்டிக் கொள்கிறன். மற்ற வன் அந்த நாலுகாசை சுழற்றியடிக்க வழி இல்லாதவளுகத் தவிக்கிருன். பணத்தை பொறுத்த வரையில் பல ரகப்பட்ட மனிதர்கள் எங்கும் உள்ளார்கள். w
வண்டிகளின் நெரிசலுக்காக பாதையோரமாக ஒதுங்கப் போய், வருவோர், போவோரோடு அடிபட்டுக்கொண்டேன். மன்னிப்புக் கேட்டுக்கொள்ளலாம் என்று திரும்பிப் பார்த் தால், அவர்கள் வெகு தூரம் போய்விட்டிருந்தார்கள். பதைக்கும் வெய்யிலில் பரபரப்பாக மக்கள் அங்குமிங்குமாகத் திரிந்து கொண்டிருந்தார்கள். என்ன நெரிசல். அந்தநேரம்

Page 18
一 30 一
ஊர் சுற்றிப்பார்க்க கிளம்பிய முட்டாள்தனத்தை நினைத் துக்கொண்டேன்.
*" அம்மா. பூட வாங்கிக்குங்க .'
* அம்மா சாத்துக்குடி, முந்திரி. வாங்கிக்குங்க **
"ஐயா. ஷர்வத்து, ஐஸ் கலர் வெய்யிலுக்கு ஜோரா
யிருக்கும். தரட்டுங்களா "
இப்படி பிளாட்பார வியாபாரிகள் வேறு அலறிக்கொண் டிருத்தார்கள். ஒரேஞ்ச் பார்லி போன்ற சோடா வகைகளை **கலர்' என்று தான் சொல்வார்கள். ஆங்காங்கே தெரிந்த ஒன்றிரண்டு புடவைக் கடை வாயிலில் நின்று கொண் டிருந்த சிப்பந்திகள் அந்த வெய்யிலிலும் புன்சிரிப்புடன் **வாங்கம்மா! வாங்கய்யா' என்று அழைத்தார்கள். நாங் கள் ஒருவர் பின்னல் ஒருவர் போய்க் கொண்டிருந்தோம். திரும்பிக் கதைக்கவே முடியவில்லை. கொஞ்சம் பராக்கா யிருந்தாலும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ள வேண்டி யிருந்தது.
திருச்சி சந்தி புகையிரத நிலையத்தை அடைந்த பின் னரே கொஞ்சம் மூச்சு விட்டோம். அந்த புகையிரத நிலை யக் கட்டிடம் எங்களது கோட்டை, யாழ்ப்பான, ஸ்டேசன் களை நினைவூட்டியது. தனியாகவும், கூட்டமாகவும், மூட்டை முடிச்சுகளுடனும், வெறுமனேயும் பத்துப் பன்னிரெண்டு பேர் வரையில் ஸ்டேசனில் நின்றர்கள். எடை பார்க்கும் மெஷின், பிளாட்பார டிக்கட் கொடுக்கும் மெஷின் என்று ஸ்டேஷன்களுக்கே உரித்தான மெஷின்கள் தான் பூதங்கள் போல் நின்று கொண்டிருந்தன, புத்தகக் கடை, பழக்கடை, குளிர்பானக்கடை போன்ற சில்லறைக் கடைகளும் காணப் பட்டன. வெய்யிலில் நடந்துவந்த களைப்பிற்கு ஏதாவது குடிக்க வேண்டும் போலிருந்தது.

- 2 1 മ
"தண்ணி விடாய்க்கிறது. ஏதாவது GajцијGurrupmro என்று நண்பர்களைக் கேட்டேன்.
** என்னத்தைக் குடிப்பது? கிரேப்ஸ் வாங்கிச் சாப்பிட்டு பார்ப்போம். இங்கே கிரேப்ஸ் நல்ல மலிவாம்ே. வாங் கிப் பார்ப்போம் ' என்ருர் ஒரு நண்பர்.
பழக்கடையில் தனியாக உட்கார்ந்திருந்த கிழவர் தூங்கி வழிந்து கொண்டிருந்தார். தட்டியெழுப்பினுேம்.
ஐயா * * ܚܘܝ ܂ -
咨 @ ம் 3 j
கிழவர் முனகிளுர்,
** இந்த கிரேப்ஸ் என்ன விலை ? ?"
தூக்கக் கலக் கத் தி ல் கண்களைக் கூசிக் கொண்டே *கிளேப்ஸா' நூறு. 40 பைசா'
பற்கள் இல்லாத பொக்கை வாயிஞல் வழ வழா, என்று ஏதோ சொன்னர்.
"எட நல்ல சீப். நூறு பழம் நாற்பது சதம் தானே" என்று வியந்துகொண்டே நண்பர் காசைக் கொடுத்த போது கிழவர் கிரேப்ஸ் பொட்டலத்தை நீட்டினர். அதற்குள் இரு பத்தைந்து முந்திரிகைப் பழங்கள் வரையில் "முழுசிக்" கொண்டிருந்தன.
"100 பழம் நாற்பது சதமென்றீர்களே..? என்று ஆரம் பித்தார் நண்பர்.
"நூறு பழம் இல்லீங்க . நூறு கிலோ தாங்க நாற்பது பைசா' என்று திரும்பவும் சொன்னர்.

Page 19
-ܚ- 2 2 ܚܩ
அவர் பொக்கை வாயினல் சொன்னதமிழ் எங்களுக்குத் தான் விளங்கவில்லை. நூறு கிலோ என்பது நூறு பழம் என்று எங்களுக்குக் கேட்டிருக்கிறது. வாயைச் சப்புக் கொட்டிக் கொண்டதுதான் மிச்சம்.
ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ரயிலுக்காகக் காத்திருந் தவர்கள் மட்டுமே நின்றர்கள். மற்றவர்கள் .அதாவது ரயி லில் இருந்து இறங்கியவர்களும் ரயிலேறப் போகிறவர்களு மான பிரயாணிகள் பிளாட்பாரத்தின் கீழ் காணப்பட்ட சுரங்கப் பாதையில் நடமாடிக்கொண்டிருந்தார்கள். இதனல் சன நெருக்கம் குறைவாக இருந்தது.
மேலோட்டமாக ஸ்டேஷனைப் பார்த்துவிட்டு, திரு வானைக்கா என்ற கோவிலுக்கு போகவேண்டி இருந்தததால் வெளியே வந்தோம். வெளியே வந்தபோது ஒரே தூசியாக இருந்தது. வாகனங்களின் போக்குவரத்தாலும், சன நட மாட்டத்தாலும் மேலே கிளம்பிய தூசி காற்றேடு கலந்து மண்டலமாகப் போய்க் கொண்டிருந்தது கண்முன்னே தெரிந்தது,
நாங்கள்”நடந்து சென்ற பாதையின் இரு பக்கத்திலும் நிறைய சாப்பாட்டுக் கடைகள் இருந்தன. ஒரு காபி, டிபன் கடைக்குள் நுழைந்து காப்பிக்கு ஆடர் கொடுத் தோம்.
**டிபன் ஏதாவது வேணுங்களா?' என்று சர்வர் கேட் டார். М
**வேண்டாம், காபி மட்டும் கொண்டு வாருங்கள்' என்ருேம்.
டிபன் என்றதும் கேக். பிஸ்கட், சாண்ட்விச்சஸ் என்ற வகையருக்கள் என்று நினைத்துவிடாதீர்கள். லட்டு, ஜிலேபி, தேன்குழல், மைசூர்பாகு போன்ற சிற்றுண்டிகளை அவர்கள்

ܝܘܚܢ 23 ܘ-----
ஸ்வீட்ஸ் என்றே இனிப்பு என்ருே தான் சொல்கிருர்கள். பகோடா, முறுக்கு, காராபூந்தி போன்ற உறைப்பு பலகாரங் களை காரம் என்றும் சொல்கிருர்கள்.
'டி.பன்' என்று சொன்னபோது அவர்கள் இட்லி, பூரி, தோசை, உப்பு மா என்பவற்றையே குறிப்பிடுகிருர்கள். இந்த வகையருக்களைச் சாப்பிடுவதற்கு புறம்பாகவே சில கடைகள் காபி, டிபன் கடை என்ற பெயருடன் இருக்கின் ஹன. இத்தக் கடைகளிலே போய் சோறு, கறி கேட்டால் கையை விரிப்பார்கள்.
சோறு, கறியை அவர்கள் Finti u rrG) அல்லது மீல்ஸ் என்று அழைக்கிறர்கள். இந்த விபரம் தெரியாமல் முதல் நாள் நாங்கள்பட்ட அனுபவத்தை நினைத்தபோது சிரிப்புத் தான் வருகிறது.
துண்டு வாங்குமுன் சாப்பாடா!
RUPĠ. . . . . .
முதல் நாள் மதிய உணவு சாப்பிடுவதற்காக ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து மேஜையருகில் உட்கார்ந்து கொண்டோம். சர்வர் வந்தார். வேஷ்டியும், ஷேர்ட்டும் போட்டிருந்தார். வேஷ்டியை மடித்துக் கட்டிக் கொண்டிருந்
5 π.π.
'சோறு, கறி இருக்குதா -? ஆறு பேருக்குக் கொண்டு வாருங்கள்-' என்ருேம்.
"சாப்பாடு வேணுங்களா ? கவுண்டரில் துண்டு வாங் கிட்டு வாங்க ஸார்' என்ருர் சர்வர்.
'துண்டா. என்ன துண்டு ? '.

Page 20
"என்னங்க ஸார் நீங்க. வெளியூர்காரங்களா ? ஒரு ஆளுக்கு ஒரு மீல்ஸுக்கு ஒரு ரூபா இருபத்தைந்து பைசா கொடுத்திடுங்க. துண்டு தருவாங்க, தயிறு வேணுமின்ன இன்னெரு 25 பைசா கூட.** என்று சொல்லிவிட்டு சர்வர் உள்ளே போய்விட்டார்.
கவுண்டரில் நாலைந்து பேரைக் கொண்ட ஒரு சின்ன கியூ நின்றது. கவரில் மாட்டப்பட்டிருந்த சுவாமி படத்திற்கு மல்லிகை மாலை சூட்டியிருந்தார்கள். ஊ து பத் தி யின் வாசனை மூக்கைத் துளைத்தது. அந்த மணத்தோடு போட்டி போடுவது போல, உள்ளேயிருந்து பருப்பு சாம்பார் வாசனை வந்து கொண்டிருந்தது, எந்த ஹோட்டல் வாசலில் ஏறி லுைம் முதலில் நம்மை வரவேற்பது இந்த வாசனைகளே.
காசைக் கொடுத்து துண்டுகளைப் பெற்று வந்தார் ஒரு நண்பர், சிறிது நேரத்தில் சர்வரும் வாழையிலைகளுடனும், எவர்சில்வர் டம்ளர்களுடனும் வந்து சேர்ந்தார். இலைகளை மேஜை மீது பரப்பினர். டம்ளர்களை வைத்துவிட்டு திரும்ப வும் உள்ளே போய் தூக்குச் சட்டி, வாளிகளோடு வந்து சேர்த்தார். சாதம், கறிகள் பரிமாறிய பின் ஒரு சிட்டிகை உப்புத் தூளும், (*"டேபிள் ஸால்ட்') வைத்தார். பற்ருமல் இருந்தால் தொட்டுக் கொள்வதற்கு. a.
இந்த அனுபவங்களின் பின்னர் நாங்கள் மற்ற இடங் களுக்குச் சென்ற போதும் பணம் கொடுத்து கவுண்டரில் துண்டு வாங்கிக் கொண்டே சாப்பிடப்போய் உட்கார்ந் தோம்.
ஹோட்ட லில் காப்பி சாப்பிட்டு விட்டு திருவானைக் காவிற்குப் புறப்பட்டோம்.

25 =
திருவான க் கா
மிகப் பழங்காலத்தில் யானை உலாவும் சோலையாதலால் ஆனைக்கா, என்ற சிறப்புப் பெற்று விளங்கிய அந்தப் பிர தேசத்தில் இருந்த சிவலிங்கத் திருமேனிக்கு யானை ஒன்று
தனது
S
துதிக்கையினல் நீர் கொண்டு
வந்து திருமஞ்சன LDfTULq. பூ க் கள் கொய்துஅர்ச்சித்து வந்தது, அவ்வண் ணமே பெ (5 LD nr னிடத்தில் பேரன்பு கொண்ட சிலந்திப்
பூச்சி ஒன்றும் லிங்
கத் திருமேனியின் மீது தூசி தும் பு விழாதவாறு வ3ல பி ன் னி ப் பா ģ காத்து வந்தது.
தான் தண்ணிர் கொண்டு வந்து அபிஷேகம்பண்ண சின்னஞ்சிறு சிலந் திப் பூச்சி அந்த இ ட த் தி ல் வலே
பின் னு வ து யானைக்கு அசுத்த
மான காரியமாகப்
பட்டது. எனவே யானை சிலந்தியின் வலையைப் பிடுங்கி எறிய ஆரம்பித்தது இதைக்கண்டு சினங் கொண்ட சிலந்தி யானை யின் துதிக்கையினுள் நுழைந்து தொல்லை கொடுக்கவே வலி பொறுக்கம்ாட்டாத யானை துதிக்கையை நிலத்தில் அடித்துக்

Page 21
- 26 -
கொண்டு உயிரை விட்டது. இப்படியாக பெருமான் மீது அன்பு கொண்டு உயிரையே மாய்த்துக் கொண்ட இவ் விரண்டு உயிர்களும் சமய வரலாற்றில் சிறப்புப் பெற்றன.
இக்கோயிலுக்குள் நுழையும் போதே எதிர்ப்படும் கோபுர முகப்பில் மேற்கூறிய ஸ்தல சரித்திரம் சிற்பங்களைக் கொண்டு விளக்கப்பட்டிருக்கிறது.
இங்குள்ள மூலஸ்தான லிங்கம் எந்நேரமும் தண்ணீரில் அமிழ்ந்து சலமே லிங்காாமாகத் திரண்டிருப்பதால் இந்த லிங் sub “ “ - gyu u Tg5 artyr go ó) ši gub” o எனவும் அழைக்கப்படுகின் 2து.
簽 நாங்கள் லிங்கத் திரு மேனியைத் கரிசிக்க சென்ற போது எங்கள் கணுக்கால் வரை தண்ணீர் இருந்தது. இத்தலத்தில் தான் முதன் முதலில் காலமேகப் புலவர் பாடி அருள் பெற்ருர். ஸ்லத விருஷம் ஜம்பு மரம். அதா வது நாவல் மரம். இதற்கு ஜம்புகேஸ்வாம் என்ற ஒரு
பெயரு புண்டு, R
ஒரு புறத்தில் கோயில் ar தென்னுேலையை% "ח נLו அ  ைச போட்டுக்கொண் டிருந்தது. யானையின் பரந்த தெற்றியில் திருநீறு பூசப் பட்டு சந்தனப் பொட்டும்  ைவக்க ப் பட் டி ருந்தது. நீறரிைந்த நெற்றிக்குள்ள அழகே தனிதான். அதுகூட ஒரு திரு விளை யா ப. ஸ் புரிந்தது. அது எ ன் என கோபுரமும் G.5fuji nr° 1 tjgi Gyu 3 a 48
 

--س- 37 سسس
காசை கொடுத்த போது துதிக்கையை வளைத்து பணத்தை வாங்கி அருகில் நின்ற பாகனிடம் கொடுத்துவிட்டு பணம் கொடுத்தவரின் தலையில் துதிக்கையை அழுத்தி ஆசீர் வதித்தது. யானை க்கு , அது பாகன் சொல்லிக்கொடுத்த பாடமோ, அல்லது பெருமாள் அருளோ நமக்குத் தெரியாது. ஆனல் பலரும் அந்த யானையிடம் ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதை பெரும் பேருகக் கருதினர்கள். முண்டியடித்துக் கொண்டு பணம் கொடுத்து ஆசீர்வாதத்தைப் பெற்றுக் கொண்டுமிருந்தார்கள். சகல உயிர்களுக்கும் பெருமான் அருள் பாவிக்கிறர் என்ற மாபெருந் தத்துவத்தை இத்தலம் செவ்வனே விளக்குவதாய் அமைந்திருந்தது.
கோயில் வீதியில் சில்லறைக் கடைகள் கோயிலுக்குத் தேவையான பொருட்களை விற்கும் கடைகள், கடலைப் பொரி கடைகள் காப்புக் கடைகள் என்பன இருந்தன. எந்தக் கோயிலிலும் இது வழக்கமான காட்சியாகும். இவற்றை எல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு பூரீ ரங்கத்தை அடைந் தோம்,
*\

Page 22
தங்கக் கலச கோபுரம்
அரங்கன் துயில் கொள்ளும் பூgரங்கம்!
சைவ சமயத்தவர்களுக்கு சிதம்பரம் எப்படியோ, அப் படித்தான் வைஸ்ணவர்களுக்கு பூரீரங்கம்!
அன்று புதுவருடம் பிறந்து முதல் திருவிழா வைக்கொண் டாடுவதற்காக ரங்களுதர் கோவிலை அலங்கரித்துக் கொண் டிருந்தார்கள். சனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பன்னிரண்டு திசைக் கோபுரங்களைக் கொண்ட அந்த அழகான விஷ்ணு கோயில் திருவிழாக் கோலம் பூண்டு மேலும் அழகாக விளங்கி யது. நுழைவாயிலிருந்த முகப்பில் விஷ்ணு சின்னங்களாகிய சங்கு, சக்கரம் பொறிக்கப்பட்டிருந்தது.
உயரத்தில் தெரிந்த தங்கக் கலசக் கோபுரம் அந்த மாலை வெய்யிலில் கண்ணைப்பறித்தது.
 

ܚܚܩܕ 29 - ܡܗܝ
வழக்கம்போல கோயிலுக்குச் செல்லும் பாசைகளில் கடைகள் காணப்பட்டன. கோ யி லி ன் வாயில்களிலும், வீதிகளிலும் அடி வைத்து நடக்கக்கூட இயலாத அளவிற்கு அழகான மாக்கோலங்கள் வரையப்பட்டிருந்தன. அவற்றின் மீது நடந்து போவதற்கே மனம் கூசியது. அவ்வளவு அழ கான நேர்த்தியான விதம் விதமான கோலங்கள் அவை. ஒரு இடத்தில் கண்ட கோல வடிவத்தை மற்ற இடத்தில் எம்மால் காண முடியவில்லை. இளம் டெண்டிரும் முதிய பெண்களுமாகச் சேர்ந்து கோலங்களை இட்டுக்கொண்டிருந் தார்கள், ஒரு கையில் கோல மாவை வைத்துக் கொண்டு மறு கையால் நெளிந்த நீண்ட கோடுகளை வரைந்து, அவற்றை இணைத்து நிமிட நேரத்தில் கோலங்களை பூர்த்தி யாக்கிக் கொண்டிருந்தனர். அவர்களின் கைலாவகத்தைப் பார்த்து வியந்துபோனேன் நான், அதிக செலவில்லாத அழகான கலை.
ஆண்களும் ஒரு புறத்தில் தோரணங்கள் கட்டுவதும், தீபங்களுக்கு எண்ணெய் ஊற்றுவதுமாகப் பரபரத்துக் கொண்டிருந்தார்கள். நெற்றியில் நாமக்குறி இட்டிருந்தார் கள்.
கோயிலின் உள்ளே சயன நிலையில் பெரிய விஷ்ணு சிலை காணப்பட்டது
மகாபாரத காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த விபீ ஷணன், விஷ்ணு பெருமானின் ஆதி விக்கிரகத்தை வைத்து தான் பூஜிக்க விரும்பி எடுத்துச் செல்கையில் ஸ்நான பானத் திற்குச் செல்லநேரவே அங்கே நின்று கொண்டிருந்த ஒரு பையனிடம் " தம்பி, தயவுசெய்து இந்த விக்கிரகத்தை வைத்துக் கொண்டிரு. தப்பித்தவறி கீழே ளவத்து விடாதே அப்படி வைத்தாயானல் பின்னர் பெயர்க்க முடியாது போய் விடும், நான் இதோ வந்து விடுவேன்’ எனக் கூறி அருகே இருந்த காவிரியை நோக்கிச் சென்ருர். சற்று நேரம் பொறுத் துப் பார்த்த பையன் அவரைக்கூவி அழைத்தும், அவர் வரா

Page 23
حس ہی۔ 30 " ۔۔ مسند
மல் போகவே அலுத்துப்போய் சிலையை அவ்விடத்திலேயே வைத்துவிட்டான். சற்று நேரத்தில் அங்கு வந்து இச்செயலைக் கண்ணுற்று வெகுண்டெழுந்த விபீஷணன் , தெய்வத் திரு வுளத்தின் நோக்கினை அறியாது, பையனை கலைக்கவே, அவன் ஓடோடிச் சென்று மலை உ ச் சி ஒன்றை அடைந்தான். அத்தருணம் அவனை எட்டிப்பிடித்த விபூஷணன் , அவன் தலையில் ஓங்கிக் குட்டவே, அவன் அப்படியே மலைமீது சிலே யாக அமர்ந்துவிட்டான். தன்னேடு ஓடி விளையாடிய பிள்ளே **பிள்ளையாரே' எனக்கண்டு வியந்த விபீஷணன். அவரது தாள்பணிந்து சேவித்து நின்முன். மலையில் சிலையாகிய அப் பெருமான் தான் மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார், இதைக் கேட்டு இப்படியும் ஒரு விளையாட்டா என்று நாமும் வியந்து போனுேம்,
இவ்விதமாகக் கோயில் கொண்டுவிட்ட பூgரங்கனின் திருவிழாக்கோலத்தை அன்னறய தினம்.அங்கு தங்கியிருந்தோ மானுல் கண்டு களித்திருக்கலாம். உண்மையிலேயே கோயிலே ஆசைதீரக் கண்டு களிப்பதானுல் இரண்டு நாட்களாவது கோயிலில் தங்கியிருக்க வேண்டும். ஒவ்வொரு கோயிலிலும் அப்படித் தங்குவதானல் மாதக்கணக்கெடுக்கும். அதையும் விட நாங்கள் கூட்டமாக வந்திருந்ததினுல் எல்லோரும் ஒரு வரை ஒருவர் அனுசரித்தே நடக்கவேண்டியிருந்தது.
இந்தச் சுற்றுலாவின் போது நாங்கள் தென்னகத்தின் பல பாகங்களுக்கும் சென்ருேம். கோயில்கள், சரித்திரப்புகழ் வாய்ந்த இடங்கள், பூங்காக்கள் போன்ற பலதையும் பார்த் தோம். காலையில் குளித்து, முழுகி விட்டு பஸ்சில் புறப் பட்டோமானுல் வழியில் பார்க்க வேண்டிய இடங்களை இறங் கிப் பார்த்துவிட்டு, கோயில்களையும் தரிசித்துக் கொண்டு, சாப்பாட்டு வேளைகளில் சாப்பாட்டையும் முடித்துக்கொண்டு ம்ாலையில் தான் மறுபடியும் வேருேர் ஊரை அடைவோம். இந்த இடைத்தூரத்தில் நாங்கள் ஏகப்பட்ட மைல்களை கடந் திருப்போம். எவ்வளவோ காட்சிகளைக் கண்டிருப்போம்.

- 3 I am
ஒவ்வொருவர் கண்ணேட்டமும் ஒவ்வொரு விதமாக இருந் திருக்கும். நேரத்தையும், வசதியையும் பொறுத்து சில இடங் களில் கூடிய நேரமும், சில இடங்களில் குறைந்த நேரமும், சில இடங்களை துரிதகதியிலும் பார்த்துக் கொண்டே சென்ற போது அவற்றுள் சில இடங்களை பார்க்கவே முடியவில்லை. ஒன்றையும் தவருது பார்ப்பதானுல் முன்னர் சொன்னது போல மாதக்கணக்காகாதா ?
பூரீரங்கத்திலிருந்து மீண்ட நாம் பஸ்ஸை விட்டு இறங்கி ஹோட்டலை அடைந்த போது எங்களுக்காக ஒரு நல்லசெய்தி காத்துக்கொண்டிருந்தது. முதல் நாள் சேலத்திற்கு பஸ் ஒழுங்கு செய்யப் போயிருந்த நிர்வாகி ஹோட்டலுக்கு திரும்பி வந்திருந்தார். அவர் தான் அந்த நல்ல செய்தியைச் சொன்னர்
"சேலத்தில் பூரீ பழனியப்பா டூரிஸ்ட் பஸ்ஸை ஒழுங்கு படுத்திவிட்டு வந்திருக்கிறேன். நாளேக்கு காலை சரியாக ஐந்து மணிக்கு எல்லோரும் ரெடியாக இருக்க வேணும். எவ்வள விற்கு வெள்ளென பஸ் பிரயாணத்தை தொடங்குகிழுேமோ அவ்வளவிற்கு நல்லது' என்ருர்.
ஜம்புவின் பஸ் !
மறுநாள் ஒரு வெள்ளிக்கிழமை, அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, என்னுடைய சாமான்களை, எனது உடைமைகள் என மூன்றே மூன்று சாமான்கள் தானிருந்தன. ஒரு சூட்கேஸ், ஒரு கிட்பாக், ஒரு கைப்பை எடுத்துக் கொண்டு தயாராகிவிட்டேன். ஹோட்டலில் வழக்கம் பேர்ல காலைக் காரியங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன.
எல்லோரும் அவரவர் பொருட்களோடு ஹோட்டல் வாசலில் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தார்கள். முதல் நாள் அல்லவா? எல்லோரும் உற்சாகமாகக் காணப்பட்டார் கள். ஒரு நண்பி டிரான்சிஸ்டர் கூட வைத்திருந்தார்.

Page 24
- 32 -
சற்று நேரத்தில் பூரீ பழனியப்பா டுரிஸ்ட் பஸ்ஸும் ஜட மென்று கம்பீரமாக வந்து நின்றது. பஸ் டிரைவரின் பெயர் (செல்லப் பெயர்) கூட ஜம்பு தான். வண்டியிலிருந்து அவர் இறங்கி வந்தார். காக்கி டிரெளஸரும், காக்கி ஷேர்ட்டும் அணிந்திருந்தார். எங்கள் எல்லோரையும் ஒரு முறை நோட் டம் விட்டார்.
* நம்ம வண்டி கரெக்ட் ஸார் . நீங்களெல்லாம் ரெடியா .." என்று நிர்வாகியைப் பார்த்துக் கேட்டார். அன்றுமட்டுமல்ல . கடைசி வரையிலும் அவர் வண்டி கரெக் டாகத்தான் இருந்தது. அவரின் சாரதித்துவ ஆற்றல் போகப் போகத்தான் எங்களுக்குத் தெரிந்தது.
**ஏ! அப்பா. இங்கிட்டு வந்து ஸாருக்கு ஹெல்ப் பண்ணு ." என்று பஸ்ஸை நோக்கிக் குரல் கொடுத்தார் டிரைவர்
பஸ் வண்டியின் மறுபக்கத்தில் எதையோ துடைத்துக் கொண்டிருந்த நபர் வாய் நிறைய வெற்றிலையை குதப்பிய படி வந்தார். வந்தவரை கண்டக்டர் என்ருே கிளினர் என்ருே, உதவியாளன் என்ருே எப்படி வேண்டுமானலும் அழைத்துக் கொள்ளலாம். ஏனென்றல் டிரைவிங் வேலையைத் தவிர (ஒரிரு சமயத்தில் டிரைவ் பண்ணியும் இருக்கிருர்) மற்ற வேலைகள் எல்லாவற்றையும் அவரே கவனித்துக்கொண்டார். நாங்கள் அவரை 'கண்டக்டர்' என்றே அழைத்தோம் , சாரமும் ஷேர்ட்டும் அணிந்து மலர்ந்த முகத்துடன் காணப் பட்டார். எந்த நேரமும் ஏதாவது கதை சொல்லி 'தமாஷ் பண்ணிக் கோண்டே இருந்தார்.
பஸ்ஸைப் பார்த்த போதே பிரயாணம் அலுப்பில்லாம்ல் அமையும் என்ற எண்ணம் எனக்கேற்பட்டது. முகம் பார்த் துக் கொள்வதற்கு சிறிய சைஸ் கண்ணுடி ஒன்று பஸ்ஸின் உள்ளே தொங்கவிடப்பட்டிருந்தது. குடி தண்ணீர் கொண்ட பில்டர் ஒன்றும் எவர் சில்வர் டம்ளர் ஒன்றும், பிரயாணி கள் தேவைப்படும்போது குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந் 西函·

33 -
மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரை மனதில் பிரார்த் தித்துக் கொண்டே அமைதியாக ஆனந்தமாக எங்கள் பிர யாணத்தின் முதல் நாளை ஆரம்பித்தோம்.
நீண்ட நெடிய சாலையில் பஸ் போய்க்கொண்டிருந்தது. பாதையின் இருமருங்கும் அடர்ந்த புளிய மரங்கள் காணப் பட்டன. அத்த மரங்களின் அடிப் பகுதியில் சதுரமர்க மேற்பட்டை அகற்றப் பட்டு வெள்ளை நிறத்தால் ஒன்று இரண்டு மூன்று. என்று தொடர்ச்சியாக இலக்கமிடப்பட் டிருந்தது. அந்த ம் ரங் கள் அரசாங்கத்திற்கு சொந்த
Drts)G)
ஆங்காங்கே தென்பட்ட சில வயல்களைத்தவிர, மற்றவை எல்லாம் கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே வரட்சியான பிரதேச மாக இருந்தது. மழை, தண்ணிர் இல்லாது நிலமெல்லாம் வெறுமையாகக் காட்சியளித்தது. பசுமையான காட்சிகளாக வயல்வெளிகள் மட்டுமே தெரிந்தன. உழவர்கள் வயல்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்சிக்கொண்டிருந்தார்கள். தண்ணீர் அள். ளும் இறைப்புப் பட்டை கிணற்றுக்குள் கயிற்ருல் கட்டி இறக்கப்படிருந்தது. அந்தக் கயிற்றின் மறு முனைகள் வெளியே நின்ற மாடுகளின் கழுத்தில் இணைக்கப்பட்டிருந்தன. ஜோடி யாக நின்ற அந்த மாடுகள் முன் புறமாக சிறிது தூரம் நடந்து சென்ற போது, கிணற்றுக்குள் இருந்த தண்ணீர்ப் பட்டை வெளியே வந்தது. அதை வெளியில் இழுத்து நீரை வயலுக்குள் சரித்து விட்டதும் பட்டையும் வெறுமையாகி விடுகிறது. மாடுகள் இரண்டும் திரும்பவும் கிணற்றுப் புறம் நோக்கி நடந்து வர தண்ணிர்ப் பட்டை பழையபடி தண். னிர் மட்டத்தை அடைந்து நீரை அள்ளுகிறது. இவ்வித மாகத் தான் வயல் வெளிகளில் இறைப்பு நடந்து கொண் டிருந்தது.
தென் இந்தியாவில் நர்ன் பயணம் செய்த பல பிரதேசங்
கள் காய்ந்து சருகான மரங்களுடனும் புழுதியுடனும ஒரே வரட்சியாகவே காணப்பட்டன.

Page 25
۔۔۔۔ ۔ 34 سین۔
அப்படியான இடங்களில் குடியிருப்புகளும் குறைவாகத் தான் காணப்பட்டன. வெகு அருமையாகவே வயல் வெளி
களும் மரக்கறித் தோட்டங்களும் இருந்தன.
விராலிமலை
ஆாலை சுமார் ஆறேகால் மணியளவில் விராலிமலை யை அடைந்தோம் 'குன்றுகள் தோறும் குமரன் கோயில் கொண்டிருப்பான்' என்று முருகனே சிறப்பித்துக் கூறுவாா கள். எங்கெங்கோ இருந்த மலைகளையெல்லாம் தனது இருப் பிடமாக முருகன் கொண்டிருக்க அந்தஇருப்பிடங்களை தேடி பிடித்து முன்ளுேர் ஆலயம் அமைத்திருந்த அழகை என்ன வென்று சொல்வது?
முனிவர்களே இந்த மலையில் குராமரங்களின் வடிவங் கொண்டு விராவியிருந்து முருகனை வழிபடுவதால் இந்த மலை விராலிமலை என அழைக்கப் படுகிறது என்ற ஒரு கதையு முண்டு.
 

= 85 അ
அருணகிரிநாதருக்கு முருகப் பெருமான் அஷ்டம்ா சித்தி அருளிய இடமும் மலையில் நடுப் பகுதியில் உள்ளது.
விராலிமலையில் ஏராளமான மயில்கள் நின்றன. சிநேக பாவத்தோடு என்னருகில் ஒரு மயில் வந்தது. அதைத் தொட க/த்தனித்த போது பறந்து போய்விட்டது. அது பறந்த போது உதிர்ந்த சிறிய இறகுகளைப் பொறுக்கிக் கவனமாக கைப் பைக்குள் வைத்துக் கொண்டேன். முருகனே எனக்கு மயிலிறகை அளித்தது போல, நான் பெரு மகிழ்ச்சியடைந் தேன்.
விராலிமலையை விட்டுக் கிளம்பியபோது மணி ஏழரை ாகிவிட்டது. வெய்யிலும் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தது பழையபடி வரண்ட பிரதேசங்களையும், இடையிடையே வயல் வெளிகளையும், புளிய மரங்களையும் கடந்து கொண் டிருந்தோம். வழியில் சிறு கிராமங்கள் எதிர்ப்பட்டன துவரங்குறிச்சி என்ற கிராமத்தில் காலை உணவை முடித்துக் கொண்டோம். அடுத்து அழகர் கோயிலை நோக்கிப் பயண மானுேம்.

Page 26
- 36 -
கள்ளழகரும் வேலழகரும்!
சங்கு, சக்கர சின்னங்களோடு கம்பீரமாகக் காட்சி யளித்த விஷ னு தலமே "அழகர் கோயில்' எனவும் திரு. ம்ா லிருங்குன்றம், சோலை மலை எனவும் அழைக்கப்பட்டது. அங்கு எழுந்தருளியிருக்கும் அழகர் திருமால் "பூரீ கள்ளழகர் சுந்தரராஜர்’ என்னும் திருநாமங்களையும் பெற்று சிறந்த வரப்பிரசாதியாய் விளங்குகிறர்.
அழகர் கோயில்
வழக்கமான சில்லறைக் கடைகளோடு பழக் கடைகளும் இங்கே காணப் பட்டன. கொய்யாப் பழங்கள் தான் இங்கு மிகுதியாக விற்கப்பட்டன.
மற்றக் கோயில்களைவிட ஒரு மாற்றம் இங்கு தெரிந்தது. மரங்களும், செடிகளும் இருந்ததினுல் ஆலயச்சுற்ருடல் சற்றுக்
 

| 37 ص است.
குளிர்ச்சியாகவிருந்கது. விஷ்ணு கோயில்களில் பிரசாதமாக துளசி இலையும் கிடைக்கும். . . இங்கும் அவற்றைப் பெற்றுக் கொண்டு எங்கள் சுற்றுலா நிர்வாகி நின்றுகொண்டிருந்த இடத்தை அடைந்தோம்.
அவர் 'பழ முதிர் சோலை" க்குப் போவதா, வேண் டாமா என்ற பிரச்சினையைப் பற்றிக் கதைத்துக் கொண் டிருந்தார்.
நாங்கள் நின்று கொண்டிருந்த அழகர் கோவிலிலிருந்து தனியாக, வேருகப் பிரிந்து சென்ற ஒரு ஒற்றையடிப் பாதை வழியாக நடந்து சென்றே பழமுதிர் சோலையை அடைய வேண்டும். பஸ்ஸிலோ, காரிலோ போக முடியாது. ஒற்றை யடிப் பாதை தொடங்கும் இடத்தைப் போய்ப் பார்த்தோம் மரங்களும், செடி கொடிகளும் நிறைந்த சோலையாகக் காணப் பட்டது. கோயிலுக்குப் போய் திரும்பி வருவதற்கு நாலைந்து மணித்தியாலங்கள் தேவைப்படும். அதுவும் ஒரு சிறந்த முருக ஸ்தலம் தான்.
அந்த சில மணித்தியாலங்களை மீதப்படுத்தி, மதுரைக்குப் பிரயாணமாகி சீக்கிரமே மதுரையை அடைவோம், என்று நிர்வாகி உட்பட சிலர் அபிப்பிராயிப் பட்டார்கள். இதை வேறு சிலரும் வரவேற்றனர்.
குழுவில் பெரும்பான்மையினரின் விருப்பத்தோடு கடைசி பில் பழமுதிர்சோலை போகும் எண்ணம் கைவிடப் பட்டது. பழமுதிர்சோலைக்குப் பிரிந்து செல்லும் ஒற்றையடிப் பாதை யின் ஆரம்ப வாயிலில் நின்று மானசீகமாக முருகனை வழி பட்டுக் கொண்டு பஸ்ஸிற்குத் திரும்பினுேம்.
அழகர் கோயிலில்ே கள்ளழகரும், பழமுதிர்சோலையிலே
வேல் அழகன் முருகனும், வீற்றிருந்து சைவ வைஷ்ணவ ஒற்று மையை நிலைபெறச் செய்து கொண்டிருந்தார்கள் போலும்

Page 27
- 38 ആ
ஒளவைப் பிராட்டியாருக்கு சுட்ட பழம், சுடாத பழம் வேண்
டும்ா? எனக்கேட்டு நாவற் பழங்களை முருகன் கொடுத்தது பழமுதிர் சோலையிலேதானென சிலவரலாறுகள் கூறுகின்றன.
6
மதுரைக்கு அருகாமையில் வைகை நதியைக் கண்டேன். வேகமாகப் பாய்வதால் வேகவதி என்றும், மதுரையில் இருப் பதால் மதுரை ஆறென்றும் சிறப்புப் பெயர் பெற்ற வைகை யாறு கோடைக் காலமாதலால் நீர் வற்றியிருக்கக் காணப் பட்டது. ஒரு காலத்தில் இதே வைகையாறு பெருக்கெடுத் ததினுல் தானே சிவபெரும்ான் திருவாதவூரடிகளாகிய மாணிக்கவாசக சுவாமிகள் பொருட்டு, செம்மனச்செல்வி என்னும் பிட்டு வாணிச்சிக்குக் கூலியாயாளாகி மண் சுமக்க
வேண்டி நேர்ந்தது?
வரலாற்றுப் புகழ் பெற்ற வைகை ஆறு போலவே தமிழ் நாட்டிலிருந்த பெரும்பாலான நதிகளும், ஆறுகளும் ஏதோ ஒரு வகையில் புகழ் பெற்றிருந்தன. பழமையும், பெருமையும் பேசும் இந்த நதிகளில் [ஒரீரண்டைத் தவிர) தண்ணீர் இருக்கவில்லை. கோடைக் காலமானதால் ஏற்பட்ட வரட்சியாயிருக்கவேண்டும். சில நதிகளில் ஒரு துளி தண் னிர் கூட இருக்கவில்லை. ஒரே மணற் பரப்பாகவே இருந்தது. இப்படியான இடங்களில் சிறுவர்கள் சாவகாசமாக உட் கார்ந்து கொண்டு மணல் விளையாட்டு விளையாடிக் கொண் டிருந்தார்கள்,
வேறு சில நதிகள் நீர் வற்றி மணற் பரப்பாக இருந்த போதிலும், ஆங்காங்கே நீர் தேங்கிய சிறு குட்டைகளும் காணப்பட்டன. சிலர் இச் சிறு நீர்த்தேக்கங்களுக்கு அருகே உட்கார்ந்திருந்து, அதிலிருத்த நீரை கோப்பையால் எடுத்து

=س- 39 -س
பக்கத்தில் இருந்த பானைக்குள் ஊற்றி குடிதண்ணிர் சேகரித் துக்கொண்டிருத்தார்கள்.இந்தப் பானையின் வாயில் வடிகட்டு வதற்காகச் சீலைத் துடுணி கட்டப்பட்டிருந்தது.
குன்றத்தில் குடி கொள்ளும் குமரன்,
பழமுதிர் சோலைக்குப் போகாதிருந்த குறையை (மதுரைக் குப் போகும் வழியில்) திருப்பரங்குன்றத்திற்குச் சென்று போக்கிக்கொண்டோம். இது முருகனின் முதற்படை வீடா கும். இங்கும் குன்றத் தருகேதரின் குமரன் குடி கொண்டிருந் தான். குன்றுகளுக்கும், குமரனுக்கும் என்ன தொடர்போ தெரியவில்லை . ஆனல் குமரனைத் தரிசிக்க நாம் குன்று களோடு தொடர்பேற்படுத்திக்கொள்ள வேண்டியிருந்தது.
சூரபத்மன் ஆகிய அகரர்களை அழித்து தேவர்களுடைய துன்பத்தை நீக்கியதற்கு நன்றி செலுத்தும் முகமாக இந் திரன் தன் புதல்வியாகிய தேவசேன தேவியை முருகனுக்குக் கன்னிகாதானம் செய்து கொடுத்தது. திருப்பரங்குன்றத் திலேதான் என கந்தபுராணம் கூறுகிறது.

Page 28
ത്ത് 4 {} ബ
நந்தி தேவரும், எ பி வாகனமும் மயில் வாகனமும் அரு கருகே வீற்றிருந்தது இக்கோயிலின் தனிச் சிறப்பு.
நாங்கள் இலங்கையிலிருந்து கொண்டு போயிருந்த கற் பூர வில்லைகளுக்கு கோயில்களில் நிறைய மதிப்பிருந்தது. அங்கே கிடைத்த கற்பூரம் இங்குள்ளவையைப் போல கெட் டியாக இல்லை. ஒரு நண்பர் சுவாமிக்கு சாத்த பூக்களும் தேங்காய்களும் கூட இலங்கையிலிருந்தே கொண்டு வந்திருந் தாா.
திருப்பரங்குன்றத்து தரிசனத்தை முடித்துக் கொண்டு நாம் புறப்பட்டோம்.
திருவிழாக் கோலம்
கொண்ட மதுரை!
திருச்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தூரம் கிட்ட தட்ட தொண்ணுாற்றேழு மைல்கள் ஆகும். இந்த மைல் விப த்தை ஆங்காங்கே ருேட்டின் அருகில் நடப்பட்டிருந்த பேர்ர்ட்டில் கிலோ மீட்டரில் எழுதி வைத்திருந்தார்கள். மைலேஜ் போர்டுகளே பற்றி கதைக்கும் போது தான் இன் னுமொரு முக்கிய அம்சம் நினைவிற்கு வருகிறது.
ஒரு நகரம் அல்லது கிராமத்தின் எல்லை ஆரம்பிக்கு மிடத்தில் ஒரு போர்டு காணப்படும். அதில் "வருக வருக ! என்ற வரவேற்புரை எழுதப்பட்டிருக்கும். அதே போல் அக் கிராம எல்லை முடிவிலும் வணக்கம் 'மீண்டும் வருக என்ற போர்டும் காணப்படும்.

- 4 -
சில இடங்களில் தமிழோடு ஆங்கிலத்திலும் எழுதியிருத் தார்கள். இந்த வரவேற்புரைகள் இடத்திற்கு இடம் வித்தி யாசப் பட்டிருந்ததே ஒழிய எந்தக் கிராமத்தவர்களும் வர வேற்கவும், வழியனுப்பவும் மறந்திருக்க வில்லை.
வரவேற்கும் இயல்பும் விருந்தோம்பல் பண்பும், வழி பனுப்பும் சிறப்பும் பண்டைய மன்னர் காலந்தொட்டே பாரத நர்ட்டிற்குரித்தான பெருங்குணங்கள் அல்லவா? கம் நாட்டிற்குள் நுழையும் ஒவ்வொரு உள் நாட்டுக்காரனை யும் ஏனைய மாநிலக் காரனையும் பிறதேசத்தவனையும் வர வேற்கவும் வழியனுப்பவும் ஒவ்வொருவன் சார்பாகவும் போர்ட்டில் எழுதி அழைப்பு விடுத்திருந்த அழகு மெச்சத்
மதுரை நகரத்தோற்றம் .
பழமையும் பெருமையும் கொண்ட மதுரைமா நகரம் பெற்றிருந்த வரலாற்று சிறப்புகள் எவரும் அறிந்ததே.சைவத் தையும், தமிழையும் வளர்த்த அந்தப் பெருநகரின் கண்) புகுந்த போதே என்னை அறியாமலே ஏகோ தெய்வ சந்நி தானத்துள் புகுந்தது போன்ற பிரமை எனக்கேற்பட்டது.

Page 29
- 42 -
ஆஞல் உண்மையிலேயே என் அபிப்பிராயம் வெறும் பிரமையல்ல என்பதை மதுரை மீனுட்சி அம்மன் திருக்கோ யிலைத் தரிசிக்கச் சென்ற போது கண்டு கொண்டேன்.
அன்று வெள்ளிக்கிழமை என்பதைத் தவிர வேறெத்த விசேஷமும் இல்லை. ஆனல் மதுரை நகர வீதியெல்லாம திரு விழாக்கோலம் பூண்டிருந்தது, நீறிட்ட நெற்றியும் பூச்சூடிய தலையுமாக பெண்களும் ஆண்களும் ஜே. ஜே. என்று குழுமியிருந்தார்கள். பழக் கடைகளும் பூக்கடைகளும் சாப் பாட்டுக் கடைகளுமாக வழக்கமான சுற்ருடல்கள் தான், போக்கு வரத்து நெரிசலும் இரைச்சலும் ஆரவாரமும் திருச் சியை விட இாண்டு மடங்கு அதிகமாகவே இருந்தது.
மதுரை டவுனே அண்மித்த போது எங்களை வரவேற்பது போல பஜனைக் கோஷ்டி ஒன்று எதிர்ப்பட்டது. அது ஒரு செம்புக் காவடி எடுக்கும் ஊர்வலம். சிறுவர் சிறுமியர் பெண் கள் ஆண்கள் எல்லோரும் இருந்தார்கள். பாடல்களைப் பாடிக் கொண்டே அவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள். பழையன இருந்தது போல புதியனவும் காணப்பட்டன.
தமிழ் நாடு பொலிடெக்னிக், மதுரைக் கல்லூரி என கல்லூரிகளும், வியாபார ஸ்தாபனங்களும், ஜவுளிக் கடை களும் வேறு பல நவீன கட்டடங்களும் பல பெயர்களைத் தாங்கிய வண்ணம் காணப்பட்டன.
* அப்பப்பா ! இங்கேயும் எவ்வளவு சனங்கள். தமிழ் நாட்டில் டவுன் பகுதிகளில் தான் சன நெருக்கம் போலிருக்கு இவ்வளவு பேரும் இதற்குள் எப்படித்தான் சீவிக்கினம்ோ?
என் அருகில் இருந்த ஒருவர் கூறிஞர்,
உண்மைதான் ஒவ்வொரு பக்கமும் திரும்பும் போதும் 40 பேராவது கண்ணில்பட்டனர்.
ஒருபடியாக நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலான * புதிய ராஜா' வாடி வீட்டிற்கு வந்து சேர்ந்தோம்.

- 48 -
எங்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைகளை அடைந் தோம்.
ஹோட்டல் அறை வசதியாகவேயிருந்தது. காற்ருடி . கண்ணுடி, மேஜை, நாற்காலி, மெத்தை, கட்டில், கூஜா வுடன் குடிநீர், குளியலறை மலசல கூடம் எல்லாம் இருந்தன.
காலையில் திருச்சியில் இருந்து புறப்பட்டு மத்தியானம் மதுரை வந்து சேர்வதற்கிடையில் நான் களைத்துவிட்டேன். முதல் நாள் பயணமாதலாலும் (போகப் போக பழகிவிட் டது.) அகோரமான வெய்யிலினுலும் என்னைப் போல மற் றவர்களும் களைத்துப் போய்க் காணப்பட்டார்கள். அறை யில் நுழைந்ததும் முதல் வேலையாக விசிறியை ஒடவிட்டுப் படுக்கையில் சாய்ந்து கொண்டேன். அவ்வளவு அசதியாக இருந்தது.
சாடையாக சாத்தியிருந்த கதவில் யாரோ தட்டும் சத் தம் கேட்டது. திறந்து பார்த்தபோது நிர்வாகி நின்று கொண்டிருந்தார்.
"ம்னி பன்னிரெண்டாகிறது. இனி நாங்கள் காலேஜ் ஹவுஸ்ஸுக்குப் பேர்ய்ச் சாப்பிட்டுவிட்டு வருவோம். இது தான் மதுரையில் சிறந்த சாப்பாட்டு ஹோட்டல். சாப் பிட்டுவிட்டு வந்து கொஞ்சம் ரெஸ்ட் பண்ணலாம். சரியாக பின்னேரம் நாலு மணிக்கு ரெடியாக இருக்கவேணும் நாகேஷைப் பார்ப்பதற்கு" என்ருர் அவர்.
"நாகேஸைப் பார்ப்பதற்கா?. ஏன் அவர் இங்கே வருகிருரா?" என்றேன்.
'மதுரை அம்ெரிக்கன் கல்லூரி பழைய மாணவர்கள் சங்க கட்டட நிதிக்காக நடிகர் நாகேஷ் தலைமையில் தியாகம் என்ற நாடகம் நடக்க இருக்கிறது. சுந்தரராஜனும், குமாரி பத்மினியும் அதில் நடிக்கிருர்கள். அவர்கள் மூன்று பேரும் தான் இங்கே வந்து தங்கியிருக்கிருர்கள். முயற்சி செய்து பார்ப்போம். முடியுமானல் சந்திக்கலாம்" என்று சொல்லி விட்டு அவர் ,மற்ற அறைக்குப் போய்விட்டார்.

Page 30
- 44 -
எங்கள் ஹோட்டலிலிருந்து சற்று தள்ளி இருந்த: 'காலேஜ் ஹவுஸ்" என்ற சாப்பாட்டு ஹோட்டல், இங்ே யும் முதலில் பணம் கொடுத்து துண்டு வாங்கிக்கொண்டே சாப்பிட உட்கார்த்தோம். இங்கே ஹோட்டல் சிப்பந்திகள் சர்ப்பாடு பரிமாறிய பாணி வித்தியாசமாக இருந்தது.
ஒருவர் பருப்புக்கறி பாத்திரத்தோடு வந்து பரிமாறினர்
அவர் பின்ஞல் வந்து கொண்டிருந்த மற்றவர் பாகற்காய் கறியைப் பரிமாறினர். ஒருவர் பின்னுல் ஒருவராக வந்து ஒவ்வொரு அயிட்டங்களையும் பரிமாறினர்கள். இதனுல் பரி மாறல் இலகுவில் முடிந்து இரண்டு நிமிடத்தில் நாமும் சாப்பிடக் கூடியதாய் இருந்தது. சில இடங்களில் ஒரு கறி பரிமாறப்பட்ட பின்பு மற்றக் கறியை பரிம்ாறும் வரை காத் திருக்கவேண்டியிருந்தது.
சாப்பிட்டுவிட்டு ஹோட்டலை அடைந்தோம்.
எங்கள் நிர்வாகி நடிகர்கள் தங்கியிருந்த ஹோட்ட லுடன் தொடர்பு கொண்டு அவர்களைப் போய்க் காண் பதற்கு ஒழுங்கு செய்தார்.
அன்று மாலை நாங்கள் மதுரை மீனட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் மஹால், மாரியம்மன் தெப்பக்குளம் ஆகியவற்றை பார்க்கப் போவதாகவே முதலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் நடிகர்களை மாலேயே சந்திக்க, வேண்டி இருந்ததால் கோயிலுக்குப் போவதை ரத்துச் செய்துவிட்டு அவர்களைப் பார்க்கப்போளுேம்.

நட்சத்திர சந்திப்பு !
நாகேஷ், சுந்தரராஜன், கும்ாரி பத்மினி ஆகியோர் தங்கியிருந்த ** ஹோட்டல் மிட்லண்ட் " டிற்கு நாங்கள் சென்றபொழுது அங்கு ஒரே சனக்கூட்டம்ாய் இருந்தது. நடிகர்களை பார்ப்பதற்குத்தான் இத் த ஆர்ப்பாட்டம் , இரண்டு பொலிஸ்காரர்கள் அவர்களை ஹோட்டலினுள் நுழையவிடாது தடுத்துக் கொண்டிருந்தார்கள். முன்னரே நிர்வாகி ஒழுங்கு செய்திருந்தபடியால் நாங்கள் இலகுவில் உள் நுழைந்து விட்டோம்,
நடிகர் நாகேஷ் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்தபோது அவர் கட்டிவில் உட்கார்ந்து கொண்டிருந்தார். எங்களைக் கண்டதும் எழுந்து வணக்கம் தெரிவித்தார். மயிற்கமுத்து வண்ண நீல நிறத்தில் டிரெளஸ்ரும், வெளிர் மஞ்சள் கலரில் அரைக்கை ஷேர்ட்டும் அணிந்திருந்தார். படங்களில் பார்ப்

Page 31
سس۔ 46 سیسہ
து போலத்தான் காணப்பட்டார். என்ருலும் நடிக்கும் பொழுது கொஞ்சம் "மேக்-அப்" போட்டுக்கொள்வார் போலிருக்கிறது.
"நீங்கள் எப்போது சிலோனுக்கு வருகிறீர்கள்?"
"சிலோனுக்கு வர உங்களுக்கு விருப்பமா?"
'சிலோனைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?!"
'நீங்கள் நடித்த படங்களிலே எது உங்களுக்கு பிடிக்
கும்?"
சரமாரியாகக் கேள்விக்கணைகள் அவரை நோக்கிப்பாய்ந் தன. ஆனல் அவரோ ஏதோ ஒன்றிரண்டுக்குத்தான் பதில் சொன்னுர்.
"நீங்கள் ஏன் சிரிச்சுக் கதைக்கிறீர்களில்லை" என்று
யாரோ கேட்டார்கள்.
"உங்களோட எல்லாம் சிரிச்சா எனக்குப் பணம் வரும்ா என்ன? சினிமாவிலே சிரிச்சா பணம் வரும்’ என்று வேடிக் கையாகச் சொல்லிச்சிரித்தார்.
நாங்கள் பத்துக் கேள்வி கேட்டால் அவர் ஒரு பதில் சொன்னர், களைத்துப் போயிருப்பதால் தன்னுல் அதிகம் பேச முடியாமல், இருப்பதாகவும் மரியாதைக் குறைவாக நடந்துகொள்கிறேன் என்று நினைக்கவேண்டாம் என்றும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் என்றும் சொன்னர்.
நகைச்சுவை நடிகர் நாகேஷ் நகைக்காதது ஏமாற்ற மாகவே. இருந்தது. பின்னர் அவருடன் நின்று ஒரு படம். எடுத்துக்கொண்டோம்.
அங்கிருந்து குமாரி பத்மினியைப் பார்க்கப் புறப்பட் டோம்.
சிலோன்காரர்கள் வந்துகொண்டிருக்கிறர்கள் என்று பத்மினியிடம் சொல்வதற்கு வந்திருப்பாரோ என்னவோ நாங்கள் போனபோது அந்த அறையில் நாகேஷ் இருந்தார்.

ܡܚܕ݂ 47 -ܝܘܣܒܤ
அறையில் நடக்கும் எதையுமே கவனியாதது போல் கட் டிலில் இருந்து தன் போக்கில் குமுதம் வாசித்துக்கொண் டிருந்தார். பத்மினி சரளமாகக் கதைத்தார். ஆட்டோ கிராபில் கையெழுத்துப் போட்டுத் தந்தார்.
**இவர் தான் கதைக்கவே இல்லை. கிரிக்கக்கூட இல்லை”* என்று நாகேஷைச் சுட்டிக் காட்டி பத்மினிக்குச் சொன்னர் geir uLlyfr G8putfit.
**அப்படியா. அவரெல்ல்ாம் இப்ப பெரிய மனுஷாள் ஆயிட்டார் கதைப்பாரா.என்ன?"
என்று சொல்லிவிட்டு விழுந்து விழுத்து சிரித்தார் பத் மினி. பத்மினியுடன் நின்றும் படமொன்று எடுத்துக்கொண் டோம்.
நடிகர்மேஜர் சுந்தரராஜன் அப்போதுதான் குளித்து வீட்டு வந்திருந்தார். வேஷ்டியும் ஷேர்ட்டும் அணிந்திருந் 5T*
"நாங்கள் சிலோனிலிருந்து வந்திருக்கிருேம்."

Page 32
As 4& Rsssey
} ဒွိစ္ကို
என்று எங்களை அறிமுகப் படுத்திக் கொண்டபோது 'ரொம்ப சந்தோஷம்" என்றவாறே மகிழ்ச்சியுடன் கை கூப்பி வணக்கம் தெரிவித்தார்.
‘மேஜர் சந்திரகாந்த்' படத்தில் நடித்ததினுல். மேஜர் ான்ற சிறப்புப் பெயர் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த போதி லும் அவருடைய குரலைக் கேட்டபேரிது அந்த பெயர் அவருக் குத்தகும் என்றே தோன்றியது. கம்பீரமான குரல். அதே போல் கம்பீரம்ான வாட்டசர்ட்டமான உடல் வாகு.
ஓங்கிய தொனியில் சுவையாகக் கதைத்தார்.
சுந்தரராஜனின் வெற்றி நாடகமான " ஞான ஒளி " என்ற நாடகத்தை இலங்கையில் நடாத்திய செயலாளர் தான் எம்து நிர்வாகி. நாடகத்தில் சுந்தரராஜன் ஏற்ற பாகத்தை இலங்கையில் ஏற்று நடித்த நடிகரும் எம்கூட வந்திருந்தார். அவர்களிருவரும் திரு. சுந்தரராஜன சந்தித் ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
 

ܚܡܝ 49 ܚܡܪ
மேஜரும் இலங்கையில் நாடகத்துறையின் முன்னேற்றங் களைப்பற்றி எல்லாம் . அக்கறையுடன் விசாரித்தார். இலங் கைக்கு வரும்படி எப்போது அழைத்தாலும் வருவதாகவும் உறுதி கூறினுர்.
இவரும் ஆட்டோகிராபில் கையெழுத்துப்போட்டுத்தத் 5ntrr.
“உங்களுடன் நின்று படம் எடுத்துக் கொள்ள விரும்பு கிருேம்"
"தாராளமாக ரெடிபண்ணிட்டு சொல்லுங்க. வர்ரேன்” என்று முகமலர்ச்சியுடன் செர்ன்னர், அவரை நேரில் பார்த்த போது படங்களில் அப்பா வேடங்களில் நடிப்பவர் இவர் தானென்பதை நம்பமுடியாமலிருந்தது.
சுந்தரராஜனிடமும் விடை பெற்றுக்கொண்டு வாசலில் நின்று கொண்டிருந்த சனக்கூட்டத்தையும் விலக்கிக்கொண்டு ஒரு படியாக பஸ்ஸை அடைந்தோம்.
அங்கிருந்து "மாரியம்மன் தெப்பக் குளத்தை அடைத் தோம். நகரின் இன்னெரு புறத்தின் மையத்தில் இது காணப் பட்டது. ஒரு பெரிய தெப்பக்குளம். சுற்றிவர மதில் கட்டப் பட்டிருந்தது. l
நடுவில் மாரியம்மன் கோவில் கட்டடம் காணப்பட்டது . அந்தக் கட்டடத்திலிருந்து பார்த்தால் மதுரை மாநகரின் நாற்புறத் தோற்றத்தையும் பார்க்கலாம. இந்த காட்சியைக் காண்பதற்காகவே கரையிலிருந்து தோணி மூலமாக (பணம் கொடுக்கவேண்டும்) மாரியம்மன் கோயில் கட்டடத்திற்குப் போவார்களாம், நாங்கள் போகவில்லை. வெளியில் நின்று பார்த்து விட்டுத் திரும்பிவிட்டோம்.
மதுரையை ஆண்ட நாயக்கர் அரசர்களில் ஒருவர் திரு மலைநாயக்க மன்னர், இவர்காலத்து கட்டடம்தான் "திருமலை நாயக்கர் மஹால்" அதை பார்க்கச் சென்றபோது அது பூட் டப்பட்டுவிட்டது. மாலை ஐந்தரை மணி வரைதான் திறந் திருப்பார்கள். அதனல் அங்கிருந்து மீனுகதி அம்மன் கோயி லுக்குப் போனுேம்.

Page 33
மதுரை மீனுகழி அம்மன் !
மீனகதி அம்மன் கோயிலின் கோபுர அழகு தொலைவி லிருந்தே தெரிந்தது. மாலை வெய்யிலின் மஞ்சள் நிறம்பட்டு அதன் அழகு மேலும் மிளிர்ந்தது.
டிரைவர் பஸ்ஸை கோயிலினருகேயே நிற்பாட்டினர். நாங்கள் செருப்புகளை பஸ்ஸினுள்ளேயே கழற்றி வைத்து விட்டு கோயிலை அடைந்தோம்.
வெளிவீதியில் வாயிலுக்கு ஒன்ருக நாலு பக்கமும் நாலு கோபுரங்களும் உள் வீதியிலும் வாயிலுக்கு ஒவ்வொன்முக நாலு கோபுரங்களும் காணப்பட்டன. ஒரு கோபுரத்தினடி யில் நின்று பார்த்தால் மற்ற கோபுரங்கள் அனைத்தும் தெரிந் தன. ஒன்றை ஒன்று மறைக்காத வண்ணம் நெடிதுயர்ந்த அந்த கோபுரங்களை எழுப்பியிருந்தார்கள் கலைஞர்கள்.
வெளிவீதி நிறையக்கடைகள் காப்புக் கடைகள், முடி மயிர்க் கடைகள் என்று பலவகையான கடைகள். கடைகள்
மறையும் அளவிற்குச் சனங்களும் குழுமி நின்றர்கள்.
வெளி வீதியையும், உள் வீதியையும் சுற்றி வலம் வரு வதற்குள் கால் வலியெடுத்தது. பிரமாண்டமான பரப்பை அடக்கிக்கொண்டு வீதிகள் இருந்தன. வீதியின் ஒரு புறத்தில் "மதுரை திருக்குறள் மன்றம்" என்ற பெயரைத் தாங்கிக் கொண்டு ஒரு கட்டடம் காணப்பட்டது. "கொல்லாமை' என்ற பொருள்பற்றி யாரோ ஒரு பெரியவர் அவ்விடத்தி விருந்து சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார். சிலர் கீழே உட்கார்ந்து பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
ஆங்காங்கே இன்னும் சில கட்டடங்களும் (வேறு அலு வல்களுக்காக கோயில் காரியாலயங்களும் காணப்பட்டன.

பொற்றமரை வாவி! பேரும், புகழும் பெற்ற பொற்ருமரை வாவியை அடைந் தோம். கை, கால்களைச் கழுவிக் கொண்டோம். வாவியின் ஒரு புறத்தேகாணப்பட்ட மண்டபத்தின் சுவரில் வள்ளுவர் இயற்றிய குறள் அனைத்தும் எழுதப்பட்டிருந்தன.
கோயிலினுள்ளே பெரிய அளவில் நடராஜர் சிலையும்,எட் டடி அகல எட்டடி உயர அளவில் பெரிய பிள்ளையார் உருவ மும் காணப்பட்டது.
அழகுப்பதுமையாக அம்மனின் திருவுருவத்தை மூலஸ் தானத்தில் கண்டேன் வார்த்தைகளில் எழுத முடியாத அள விற்கு மீனகதியம்மன் பேரழகுடனும், பேரொளியுடனும் விளங்கினுள், அலங்கார பூஷிதையாகக் காணப்பட்ட அத் தேவியின் அழகை தீபவொளியும், கற்பூரவொளியும் சேர்ந்து பன்ம்டங்காக்கின.
கோயிலினுள் இருந்த ஸ்வரநாதம் கேட்கும் தூண்களும் எம்மை வெகுவாகக் கவர்ந்தன. அலங்கார வேலைப்பாடுகளு டன் விளங்கிய இந்த ஸப்த தூண்களை கையால் தட்டிய பொழுது ஸ்வர ஒலி கேட்டது.

Page 34
52 -
சந்நிதானத்தின் முன்னல் ஒரு சிறிய விநாயகர் சிலை இருந்தது. சிலையின் அடியில் ஏராளமான விபூதி கொட்டி? கிடந்தது. எல்லோரும் அச்சிறிய விநாயகருக்கு விபூதி சாத்தி னர்கள். நாங்களும் விபூதி சாத்தி தொழுது கொண்டு வெளியே வந்தோம்.
வெளியில் இன்னெரு அதிசயம் காத்திருந்தது. சுமார் பத்து வயது மதிக் கத்தக்க ஒருசிறுவன்தார் ரோட்டில் சோக்கட்டி யினல் சித்திரம் வரைந்து போவோர் வருவோரிடம் கா சு வாங்கிக்கொண் டிருந்தான்.என்ன வேண் டுமோ அதை யெல்லாம் கீறிக் காட்டக்கூடிய ஆற் றல் அவனிடம் இருந்தது அந்த ஏழைச்சிறுவனிடம் மண்டிக்கிடந்த ஓவியக் கலை 1560-luntangayu. னேயே முடிவதைக்கான DDDSLLDTTLLLLLLLLDDDDLDLDDD இல் மனவேதனையாயிருந்தது. அங்கு மட்டுமல்ல வேறு சில இடங்களிலும் இது சகஜமான ஒரு காட்சியாக இருந்தது.
சனநெருக்கம் அதிகமாக இருந்த கோயில்களில் எல்லோ ரும் அர்ச்சனை செய்து கொள்ள முடியாதபோது, எங்கள் எல்லோரிடமும் காசு வாங்கி எல்லோர் சார்பிலும் ஒருவர் மட்டும் அர்ச்சனை செய்வித்துக்கொண்டு வந்துவிபூதி பிரச தம் தருவார்.
சில இடங்களில் அவரவரே அர்ச்சனையைச் செய்து கொண்டார்கள், நிலை மைக் கேற்றவாறு சமாளிக்க வேண்டி யிருந்தது.
 

-سے 3 5 سے ۔
மிகைசி அம்மன் கோயிலிலிருந்து வெளியேறிய குழுவினர் கூட்டமாகவும், தனியாகவும் ஷாப்பிங் செய்வு தற்கு புறப்பட்டுவிட்டார்கள். நானும் சிலருடன் சேர்ந்து
கொண்டேன்.
தமிழ் நாட்டில் இரவு சுமார் பத்து மணிவரைக்கும் கடை கள் திறந்திருக்கும். இதனல் ஆறுதலாக ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கிபொருட்களைத் தேர்ந்து எடுக்க முடிந்தது. ஆறு மணிக்குக் கடை பூட்டி விடுவார்களே என்று நாம் அவதிப் பட வேண்டியிருக்கவில்லை.
ஜவுளிக்கடைகளில் விற்பனையாளர்கள் கம்பளங்கள், பாய்கள் விரிக்கப்பட்டிருந்த தரையில்தான் உட்கார்ந்திருந் தார்கள் நாங்களும் தரையில்தான் உட்கார்ந்து கொண் டோம். அநேகமான கடைகளுள் நாற்புறமும் கண்ணுடி, மாட்டியிருந்தார்கள். இங்கேயும். ஊதுபத்திமணம்தான் மூக்கைத்துளைத்தது.
'அம்மா அவுங்க வெளியூர்க்காரங்களா??? என்று கேட் டார் ஒருவர்.
"நாங்கள் சிலோனிலிருந்து வந்திருக்கிருேம், அதற்காக விலையைக் கூட்டிச் சொல்லாதீர்கள். நல்ல &Frtfaserras எடுங்கோ பார்ப்போம்" என்ருர் எங்களுள் ஒருவர்.
ஆ! சிலோன் காரங்களா? உங்க ஆளுங்க எல்லாம் நிறைய ஜவுளி எடுப்பாங்களே. பையா, லேட்டஸ்ட் காஞ் சிபுரம், மணிப்புரி, ஹகோபா சால்லாம் வெளியே எடுத்துப் (ğu urfG35).
கண்ணுடி பீரோவிலிருந்து பையன் ஒவ்வொரு வகைச் சேலைகளாக தூக்கிப்போட்டான். அப்பாடி . எத்தனை வித மான வண்ணச் சேலைகள் எதை எடுக்க, எதைவிட என்று தெரியவில்லை நாங்கள் தெரிந்து வைத்திருந்த சேலைப் பெயர் களைவிட இன்னும் ஏதோ புதுபுதுப் பெயர்கள் எல்லாம் சொன்னுர்கள்.

Page 35
"ஆ? சிலோன் காரங்களா ? உங்க ஆளுங்க எல்லாம் நிறைய ஜவுளி எடுப்பாங்களே !?"
இரண்டு மூன்று மணித்தியாலங்கள் செலவழித்து, ஏழெ ட்டுக் கடைகள் ஏறி இறங்கி ஒருபடியாக ஷாப்பிங்கை முடித் துக் கொண்டு ஹோட்டலை நோக்கிப் புறப்பட்டோம்.
'மீனுகழி அம்மன் கோவிலிலிருந்து நாம் தங்கியிருந்த ஹோட்டல் அருகிலிருந்த படியினுல் எங்களைகோயிலில் விட்டு விட்டு பஸ் போய்விட்டிருந்தது.
ஷாப்பிங்கை முடித்துவிட்டு வெளியே வந்தபோது நேரம் இரவு பத்து மணி.இப்போதுதான் சாப்பாட்டுப் பிரச் சினை கிளம்பியது. அநேகமாக எல்லா சர்ப்பாட்டுக்கடை களும் வெறுமையாகக் காட்சியளித்தன. சில இடங்களில் மேஜையின் மேல் கதிரையை கவிழ்த்துவைத்துவிட்டு, நிலத் தைப் பெருக்கிக் கொண்டிருந்தார்கள். சில கடைகளின் முன் ஞல் வேலை முடிந்து சிப்பந்திகள் கதைத்துக் கொண்டிருந் தாாகள.
 

мx- 55 അം
எங்களுக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. என்ன செய் வது என்றே தெரியவில்லை. சிலதூரம் நடந்து சென்ற பிறகு ஒரு கடையைக் கண்டோம். அக்கடையும் பூட்டும் தறுவா யில்தானிருந்தது. என்ருலும் நாங்கள் ஒருபடியாக உள் நுழைந்து இட்லி, காப்பி சாப்பிட்டோம்.
அனேகமான சாப்பாட்டுக் கடைகளில் இரவு ஒன்பது மணிக்குப்பின் சாப்பாடு இருப்பது அரிதாகவிருந்தது. பகலி லும் காலை பத்தரை பதினெரு மணிக்கெல்லாம், சோறு கறி) மத்தியானச்சாப்பாடு தயர்ராகிவிடும். அதேபோல் மத்தியா னம் ஒன்றரை இரண்டு ம்ணிக்குள் சாப்பாடு முடிந்தும் விடும். ஆகவே மதிய போசனத்தை எடுப்பதற்கு ஒரு குறிப் பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டியிருந்தது. மத்தியானச் சாப்பாடுதயாரானவுடன் "சாப்பாடு தயார்? என்றே சாப் பாடு ரெடி” என்றே கடை வாசலில் போர்டு போட்டுவீடு வார்கள்.
சாப்பாட்டை முடித்துக் கொண்டு வெளியே வந்தபோது எங்களுக்குத்திசை தெரியவில்லை. எந்தப்பக்கத்தால் போனுல் ஹோட்டலை அடையலாம் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஹோட்டலைவிட்டுப் புறப்படும்பொழுது நாங்கள் பாதை காளைச் சரியாகக் கவனித்து வைக்கவில்லை,
நாங்கள் கோவிலிலிருந்து வந்த வீதிக்கு மறுபுறமிருந்த வீதியில் நடக்கத் தொடங்கினுேம். அநேகமான கடைகளும், வீடுகளும் பூட்டப்பட்டிருந்தன. ஆள் அரவமே இல்லை. ஒரு வீட்டுவாசலில் பூணுTல்தரித்த ஒரு முதியவர் நின்று கொண் டிருந்தார். அவரை அணுகிளுேம்,
**ஐயா, தானப்பமுதலி தெருவை இந்தப்பாதையினுல் போய் அடைய முடியுமா?’ என்று கேட்டோம்.
**தேவையில்லை. இதோ இந்த சந்தில் இடது பக்கமாகத் திரும்பி மற்ற தெருவிற்குப்போய், அப்புறம் வலது பக்கம்

Page 36
-ܚ ܂ 56 =ܝܗ
போனீர்கள் என்ருல் தானப்பமுதலி தெரு வந்துவிடும்?? என்று சொல்லிவிட்டு கம்மென்று இருந்தார்.
"அடுத்த தெருதான"
**ஆம்ா. அடுத்ததுதான். நான் சொன்ன வழியே போயிடுங்க, சிரமமில்லை" என்ருர்.
என்ருலும் இருட்டில், இரவு பத்து ம்ணிக்குப்பின் இன் னமும் அலைய வேண்டாம் என்றெண்ணி "ஐயா தயவு செய்து எங்களை தானப்ப முதலி தெரு டாப்பில் விட்டுவிட முடியும்ா?" என்ருேம். W w
அவரைக் கூட்டிக் கொண்டு போகாமல் நாங்கள் அவ ரின் பேச்சைக் கேட்டுக் கொண்டு அடுத்த தெருதானே என்று போயிருந்தோமானுல் சுற்றிச் சுற்றி மீஞட்சியம்மன் கோவிலையேவலம் வந்து கொண்டிருந்திருப்போம்.
சந்து, பொந்துகளில் நுழைந்து மீண்டும் சந்தடியே இல் லாத ஒரு தெருவைக்கடந்து தானப்ப முதலி தெருவில் கொண்டு வந்து விட்டார் அந்தப் பெரியவர். அவரைப்
பொறுத்தவரையில் அடுத்த தெருவாக இருந்த அந்த இடம், எங்களுக்கு காத தூரம் போல்த் தோன்றியது.
ஹோட்டல் அறையை திறந்து கொண்டிருந்தபோது எங்கிருந்தோ ஹோட்டல் பையன் வந்து சேர்ந்தான். சுமார் பத்துவயதுடைய சிறுவன். கட்டைக் காற்சட்டையும் ஷர்ட்டும் உடுத்திருந்தான்.
"அம்மா. காப்பி வேணுகளா?"
"வேண்டாம். இப்பதான் குடிச்சிட்டு வாறம்"

۔۔۔ 57 ہے۔
"அப்ப. கூஜாவைத் தாருங்கள். தண்ணிர் கொண்டு வந்து தாரேன்” என்ருன்.
உள்ளேயிருந்த கூஜாவை எடுத்துக்கொடுத்தேன்.இரண்டு நிமிஷத்தில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு திருப்பி வந்தான்.
ஏதாவது தேவையா என்று மற்றவர்களிடமும் விசாரித் துக் கொண்டான். ஒவ்வொருவருக்கும் தேவையான உதவிக ளைச் செய்து கொடுத்தால் அவர்கள் ஒவ்வொருவரும் புறப் படும்பொழுது தனக்கு ஏதாவது ஐந்து பைசாவோ, பத்து பைசாவோ ? சம்திங்" கொடுப்பார்கள் என்ற ஆசைதான்
அவனுக்கும்.
* எதனுச்சும் வேனுமின்னக் கூப்பிடுங்க அம்மா. அதோ அங்கினதான் இருப்பேன்."
என்று ஒரு இடத்தைச் சுட்டிக் காட்டினன் இரவிலும் அலைந்து கொண்டிருப்பான் போலிருக்கிறது.
"அதற்கென்ன ஏதாவது தேவையென்ருல் உன்னைக் கூப் பிடுகிருேம்?
என்று அவனை நாம் அனுப்பிவைத்தோம், அந்நேரம் எங்கள் நிர்வாகியும் வந்து சேர்ந்தார்.
"நாலைக்குக் காலை சரியாக ஐந்து மணிக்கு புறப்பட வேண் Gib. Gibst L.Gal) ligfan) no delay please,
அவர் மறுநாள் புரோகிராமை சொல்லி விட்டுப் போளுர்,

Page 37
- 58 a
எட்டயபுரம்
மதுரையிலிருந்து காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டு விடவேண்டும் என்று நிர்வாகி வேண்டிக் கொண்டதின் பேரில், எல்லோரும் சுறு சுறுப்பாக வெளிக்கிட்டு பஸ்ஸை வந்து அடைந்தோம்.
அப்போது தான் ஒரு நண்பரைக் காணவில்லை என்பது எம்க்குத் தெரிந்தது.
விசாரித்ததில் எம்து நிர்வாகியிடம் சொல்லிவிட்டே அந்த நண்பர் மது ரை யில் இருந்த ஒரு நண் பரைப் பார்த்துவரப் போய்விட்டார் என அறிந்து கொண் டேன். நேரம் மெதுவாக போய்க் கொண்டிருந்தது.
"அவருன்டய சிநேகிதன் பக்கத்து ரோட்டில் தான் இருக்கிருராம்.சீக்கிரம் வருவதாகச் சொல்லிவிட்டுப்போஞரே ஏன் இவ்வளவு லேட்' என அங்கலாயித்தார் நிர்வாகி.
பக்கத்துதெரு என்றதும்ே எனக்கு பகீரென்றது. முதல் நாள் இரவு வழிகாட்டிய பெரியவருடன் பக்கத்து தெரு என்று சொல்லி அலைந்தது நினைவிற்கு வந்தது. பக்கத்து தெருவை நம்பி பாவம் நண்பர் எங்கே அலைகின்றரோ என்று நினைத்துக் கொண்டிருக்கையிலேயே வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்தார் அவர். தனது தாமதத்திற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டே அடுத்த ஒழுங்கை தான் என்று எவ்வளவு தூரம் அலைந்து போட்டு வாறன். கடைசியில் ஆளைக்கூட காணவில்லை" என்று சொன்னர்.
அவர் வந்தவுடன் பஸ்ஸும் புறப்பட்டது.

سس 59 مست.
நீண்ட சாலையும், புளிய மரங்களும், திறந்த வெளியும், ஆங்காங்கே சிறு கிராமங்களுமாக திரும்பவும் கண்களுக்குப் பழகின காட்சிகளை கடந்து கொண்டிருந்தோம்.
திருச்சியிலிருந்து மதுரைக்கு வரும்போது கண்ட கிரா மங்களைப் போல் தான் இப்போது சுமார் 80 மைல் தொலை வில் இருந்த எட்டயபுரத்திற்குப் போகும் வழியில் இருந்த கிராமங்களும் காட்சியளித்தன. ஏன் அதன் பின்னர் தமிழ் நாட்டின் வேறு வேறு பாகங்களில் சுற்றும் பொழுது கூட கிராமங்கள் அநேகமாக ஒரே மாதிரியாகத்தான் இருந்தன.
பொதுவாக கிராம்ங்களில் சில வீடுகளே சீமேந்து தள மிட்டு ஒடு போடப்பட்டிருந்தன. மற்றவை சிறியதும் பெரி யதுமாக மண் சுவர்களைக் கொண்ட ஒலைக் குடிசைகள்.இந்த மண் சுவர்களின் மீது வட்டம் வட்டமாக சாணக வராட்டி களை (எறியப்பட்டு காயவிட்டிருந்தார்கள். பசுஞ்சாணத்தை வட்டமாகத் தட்டி விட்டெறிந்தால் அது ஜிவ்வென்று சுவ ரைப் பிடித்துக் கொள்ளும். தென்னை மரங்களிலும், வீட் டுத் திண்ணைகளிலும் கூட வராட்டியைக் காயவிட்டிருந் கார்கள். வீடுகள் மிக தெருக்கமாகக் காணப்பட்டன. வீட் டுத் திண்ணைகளில் நெல், மிளகாய், போன்ற சாமான்களை காயவிட்டிருந்தார்கள், சில கிராமங்களில் வேறு தானியங் களும் காயவிடப்பட்டிருந்தன.
கிராமத்தவர்கள் உடையளவில் மிக எளிம்ையாகக் காணப்பட்டார்கள். கட்டுக்குடுமியுடனும், வேஷடியுடனும், வெறும்மேல்களுடனும்ஒரு சிலர் உலாவினர்கள். பெண்களும் சிலர் மேற்சட்டை அணிந்திருந்தார்கள். சிலர் அலரிந்திருக்க வில்லை. பல மாதிரியான கிராமத்தவர்களையும் கண்டேன்.
பசுமாடுகளும், எருமை மாடுகளும் தன்னிச்சையாக உலாவிக் கொண்டிருந்தன. அதைவிட பன்றிகளும் குட்டி

Page 38
-س 60 ----
களும் தங்களின் சின்னஞ் சிறிய வால்களை குடுகுடு என்று ஆட்டிக் கொண்டு கொழுத்த உடம்பைத் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கு ம் ஓ டி. ஒ டி வீட்டு வாசல், கடை வாசல்களில் இருந்த அழுக்குப் பொருட்களையெல்லாம் சாப் பிட்டுக் கொண்டிருந்தன. ஊரில் உள்ள அழுக்குகளை எல் லாம் சுத்தப் படுத்துவதற்காக பன்றிகள் வளர்க்கப்பட்டு வருகின்றனவாம். ஆடுகள் செம்மறி ஆடுக்ள், வாத்துகள் என்பனவும் சில இடங்களில் கூட்டங்கூட்டமாக வளர்க்கப் பட்டு வருகின்றன t
கிராமத்தில் காணப்பட்ட சந்தைப் பகுதியில் மரக்கறி வகை, பழவகை, பூ, கடலை என்பன விற்றர்கள். அருமை யாக சில இடங்களில் மீன் விற் றுக்கொண்டிருந்தார்கள்.
காலைச் சாப்பாட்டிற்காக ஒரு கிராமத்தில் பஸ் நிறுத்தப் பட்டது. பஸ்ஸால் இறங்கி சிறிது தொலைவிலிருந்த கடைக் குச் சாப்பிடப் போனுேம்.
வழியில் இருந்த மாரியம்மன் கோவிலில் முன் மண்டபத் தில் இருந்த சிவ லிங்கத்திற்கு பெண்கள் குடம் குடமாகத் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் பண்ணிக்கொண்டிருந் தார்கள். ஆரவாரமாக பாட்டுப் பாடிக்கொண்டேகாவியான குடங்களோடு தண்ணீர் கொண்டுவர குழாயடிக்குச் சென் ருர்கள். கொஞ்சநேரம் இந்தக் காட்சியைப்பார்த்துக்கொண் டிருந்துவிட்டு, கடையை அடைந்து சாப்பிட்டு விட்டு பஸ் ஸிற்குத் திரும்பினுேம்.
உப்போடை, வைப்பாறு, நள்ளி உப்போடை என்ற பெயர்களைக் கொண்ட சில ஆறுகளை கடந்து வந்தோம். பாலம் கட்டப்பட்டிருந்ததே ஒழிய, யாரும் தவறி விழுந் தால் கூடமூழ்கிப் போவதற்கு அங்கு தண்ணீர் இருக்கவில்லை இந்த தண்ணீர் பஞ்சத்தினுல்தான் தமிழ் நாட்டின் முக் கால் பகுதியும் வரட்சியாகக் காட்சியளித்தது. சில இடங் கள் புல்பூடின்றி ஒரே பொட்டல் வெளியாகவும் இருநதன,

حسس۔ : 61' سے
பெண்கள் தண்ணீருக்காக குடத்துடன் கார்ப்பரேஷன் குழாயடியில் காத்துக் கிடப்பார்கள் என்றும். சிலர் வம் பளந்து கொண்டும் சிலர் சண்டை பிடித்துக் கொண்டும் (குழாயடிச் சண்டை இருப்பார்கள் எனவும் புத்தகங்களி லும், கதைகளிலும் வாசித்திருக்கிறேன். இந்தக் காட்சியைக் கண்கூடாகச் சில கிராமங்களில் பார்த்தபோது வேடிக்கை யாகவும் பரிதாபமாகவும் இருந்தது.
சில இடங்களில் குழாயடியிலிருந்து வரிசையாக குடங் களை அடுக்கி வைத்து தங்கள் முறைவரும் வரைக்கும் நடை பாதையில் உட்கார்ந்த கதைத்துக் கொண்டிருந்தார்கள் பெண்கள் சில இடங்களில் குடத்தை வைத்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்! ஒரிடத்தில் அரை மைல் தூரம்
அளவிற்குக்கூட கியூ நீண்டிருந்தது.
காலை சுமார் எட்டரை மணியளவில் எட்டயபுரத்தை அடைந்தோம். எட்டயபுரம் என்றவுடனேயே பாரதியாரின் ஞாபகம் வருகிறதல்லவா? ஆமாம். நாங்கள் எட்டயபுரத்தி லுள்ள பாரதிம் அணி மண்டபத்தை தான் பார்க்கப் போய்க் கெர்ண்டிருந்தோம்.
U FT J G D Gruf Lo in uude

Page 39
ano 62 aus
பாரதி மணி மண்டபத்தின் முன்னுல் ஒரு உயரமான மின்விளக்கு ஸ்தம்பம் இருந்தது. அதை செய்து நாட்டு வதற்கு நிதியுதவி செய்தவர் நடிகர் சிவாஜி கணேசன்.
அப்பால் சற்றுத் தள்ளிக்காணப்பட்ட குடி தண்ணீர் நிலையத்தைக் கட்டி முடிக்க சாவித்திரி, ஜெமினி கணேஷ் ஆகியோர் உதவி புரிந்திருந்தார்கள். காமராஜ்தான் அடிக் கல் இட்டவர். இந்த விபரமெல்லாம் அவ்வவ்விடத்தே 61 (լք தப்பட்டிருந்தது.
மண்டபத்தினுள்ளே பாரதியாரின் கையெழுத்துப் பிரதி கள், உருவச்சிலை, படங்கள் என்பனவும் ஒரு லைப்ரரியும்கூட
இருந்தது.
எளிமையும், சுவையும் கொண்ட பாரதி பாடல்கள்
னே விற்கு வந்தன. இன்றுவரை அவர் ருந்திருத்தால்
፵Dö இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் பிறந்திருக்குமோ?
அன்று அம் மண்டபத்துள் நின்றபோதுதான் அந்தப் பெரியாரின் இழப்பு எத்தகையது என்பது புரிந்தது. பாரதி யாரின் இன் சுவைக் கவிதைகளைப் படித்து ரசிக்கும் போதெல்லாம் இவ்வளவு அழகாக கவி பாடியவர்" இப் போது உயிருடனில்லையே என்று எண்ணியிருக்கிறேன்.ஆனல் துன்பப்பட்டது இல்லை. அம் மண்டபத்தினுள் அந்தச் சூழ் நிலையில் அவரின் க்ையெழுத்தப் பிரதிகளையும் அவர் எழு திய ஏனைய நூல்களையும் பார்த்தபோது என்மனம் மிகவும் வேதனைப்பட்டது. அம் மண்டபத்துச் சூழ்நிலையே இத்த கையதொரு துன்பநினவை ஏற்படுத்துமாயிருந்தால் அவரு டன் பேசிப்பழகி ஒன்முக சீவித்தும் அவரது திறமையைக் கண் ரைக் கண்டும், கேட்டும் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் இழப்பு எத்தகையதொரு துன்பத்தைக் கொடுத் திருக்கும்.

Κλασσα
பாரதி ம்ணிமண்டபத்திலிருந்து வெளியேறியபோது நெஞ்சமும் பாரமாய்த்தான் இருந்தது.
பாரதியாரின் நினைவுகள் மறையுமுன், வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்
தோம்.
கட்டபொம்மனை தூக்கிலிட்ட இடத்தில் உயரமான பெரிய பீடம் அமைத்து சிலையெழுப்பியிருந்தார்கள். இடுப் பில் கையை ஊன்றிக்கொண்டு நின்று கொண்டிருந்தான்
கட்டபொம்மன். இரண்டு வாளும், கேடயமும், மீனின் உருவமும் சுவரில் பொறிக் கப்பட்டிருந்தன. நினைவுச் ன்னமாக எழுப்பப்பட்டி ருந்த அந்தச் சிலை, நெஞ் சில் பசுமையான எண்ணங் களே யும், பயங்கரமான நினைவுகளையும் தோற்றுவித் ததோடல்லாது நம்மையறி யாமல் சிரம்தாழ்த்தி அஞ் சலி செலுத்தவும் தூண்டி யது. முன்னர் சொன்னது போல புத்தகமாகவும் கதை Η 1ητέ56ιμο படிக்கும்போது இருந்த உணர்ச்சி வேறு. நேரில் கண்டபோது அனுப வித்த உணர்ச்சி வேறு.
பஸ்ஸில் வந்து ஏறிய போது பாரதியாரும், வீர பாண்டியரும் என் மனதிற் குள் *ஆளுக்கொரு மூலை யைப்"பிடித்து உட்கார்ந்து கொண்டார்கள். அவர்களை (அவர் க ள் நினை வை) வெளியே அகற்ற முடிய வில்லை,
as LG un ai csä Sau

Page 40
سے 64 -یس
கிராமங்களைக் கடந்து பஸ் முன்னேறிக் கொண்டிருந் தது. யாழ்ப்பாணத்திற்கு வந்து விட்டோமோ என்றெண் ணும் படியாக ஓரிடத்தில் நிறைய பனம்ரங்கள் நின்றன. அது ஒரு புது காட்சி. (ஆனல் பின்னர் வேறும் சில இடங்க ளில் பனைமரங்களைக் கண்டேன்)
"சங்கர் நகர்" என்ற பெயரைக்கொண்ட போர்டுடன் அந்தச் சின்னஞ் சிறிய நகர் தொடங்கியது. சுத்தமான காம்பவுண்டுகளைக் கொண்ட வீடுகள், கிட்டத்தட்ட ஒரே மாதிரி கட்டப்பட்டவை அங்கு காணப்பட்டன. அதைவிட அந்தப் பகுதிக்கே உரித்தான ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், சீமேந்துத் தொழிற்சாலை, எல்லாம் காணப்பட்டன. "அந் தப் பகுதிக்கே சொந்தமானது" என்று ஏன் சொல்கிறேன் என்ருல் அந்தக்கட்டடம் எல்லாவற்றிற்கும் சேர்த்து மொத் தமாக எல்லை அமைப்பது போல தெரு ஓரத்தையும் சேர் த்து நாற்புறமும் கம்பிவேலி போடப்பட்டிருந்தது. அது ஒரு தனியார் காலனியோ என்பதை யாரிடமாவது அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினை த்து பின்னர் அடியோடு மறந்துவிட்டேன். இவற்றைக் கட ந்துவந்து திருநெல்வேலியை அடைந்தோம்.

= 65 س--
நெல்லையப்பர்
நெல்லையப்பர் கோயிலைப் பற்றி ஒரு புராணக்கதை உண்டு, வேதசர்மா என்பவர் பஞ்ச காலத்தில் பெருமர்னின் நைவேத்தியத்திற்கென வீடு வீடாகச் சென்று நெல்மணிகளை இரந்து வாங்கிக் கொண்டு வந்து உலர்வதற்காக வெளியில் காயப்போட்டிருந்தார். அப்போது பெருமழை பெய்தது.
பஞ்ச காலத்தில் தன் வயிற்றுக்கில்லாத போதும், நைவேத்தியத்திற்கென சேகரித்த நெல்மணிகள் மழையில் வாரிப்போகாதபடி சிவபெருமான் காத்தருளினராம். இந்த வரலாற்றினலும் சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது இந்த
கோயில்,
மூலஸ்தானத்து சுவாமி பெயர் நெல்வேலி நாதர்
என்றும்,தேவியார் பெயர் காந்திமதி என்றும் வழங்கப்பட்டு
வருகிறது.
கோயிலினுள் பெரிய அளவில் சயனநிலையில் சிவ பெருமான் சிலை காணப்பட்டது. அர்ச்சகர் நாங்க ள் கொடுத்த கற்பூரத்தை எரித்துத் தீபங் காட்டினர். அந்த ஒளியில் பெருமானைப் பார்த்தோம். திவ்வியமான காட்சி இங்கேயும் ஸ்வரம் பேசும் தூண்கள் இருந்தன.
பெருமர்னின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு வெளியே வந்தோம்.
அங்கிருந்து மதிய உணவு எடுப்பதற்காகதிருநெல்வேலி டவுனுக்குள்ளிருந்த "நெல்லை லாட்ஜை”* நோ க் கி ப் புறப்பட்டோம். வழியில் "நியூராயல் டாக்கீஸ்" என்ற கூடாரமடிக்கப்பட்ட படமாளிகை இருந்தது. அதில்

Page 41
- 6 -
"மேரர்நாம் ஜோக்கர்" என்ற இந்திப் படம் காட்டப்பட்டுக் கொண்டிருந்தது. 'திருநெல்வேலி மெடிகல் காலேஜையும்" கண்டேன். சற்று முன்னேற்றம்டைந்த டவுன் என்றும் சொல்லலாம்.
"நெல்லை லாட்ஜில்" வழக்கமான வகையருக்கள் தான் கிடைத்தன. களைப்பாக இருந்ததினுல் என்னல் வயிருரச் சாப்பிட முடியவில்லை.
மற்றவர்கள் சாப்பிட்டு விட்டு வரும்வரையில் பஸ் ஸில் சற்று ஒய்வாக இருக்கலாம் என்று எண்மணி நான் பஸ்ஸை அடைந்தபோது கண்டக்டர் பஸ் தளத்தைக் கூட்டிக்கொண்டு இருந்தார். டிரைவர் சுவாமிப் படங்களுக் குச் சாத்தியிருந்த பழைய பூமாலையை அகற்றி விட்டு புதி! மாலேயொன்றை வளையம்ாகச் சூட்டிக்கொண்டிருந்தார்.
பஸ் வண்டியை எந்நேரமும் துப்பரவாக வைத்திருந் தார்கள் அவர்கள் இருவரும்.
சற்று நேரத்தில் எல்லோரும் உணவை - முடித்துக் கொண்டுவந்து சேர்ந்தார்கள், பஸ்ஸும் புறப்பட்டது.
திருநெல்வேலியிலிருந்து சுமார் 26 மைல் தூரத்திலி ருந்த திருச்செந்தூரை நோக்கிப் பயணம்ானுேம், வழியில் பூg வைகுண்டத்திற்குப் போவதாக ஏற்பாடு.
ஜன்னலினூடாக வெளியே பார்த்துக்கொண்டு இருந் தேன். இங்கே தென்னை மரங்களையும், கள்ளிச் செடிகளையும் கிடுகு வேலி அடைக்கப்பட்ட குடிசைகளையும் கண்டேன். கள்ளிச் செடிகள் ஏராளமாக வளர்ந்து நின்றன.
திருச்சியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது பாதை யோரங்களில் புளிய மரங்கள் இருந்ததுபோல. இப்போது சில இடங்களில் வரிசையர்க ஆலமரங்கள் இருந்தன. அந்தப்

a 67 -
பெரிய ஆல விருட்சங்களின் விழுதுகள் தழைந்து தழைந்து தரையில் வேரோடி நின்றன. சில ஒன்றுடன் ஒன்று பின் னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருந்தன.
யூனி வைகுண்டம்
சுமார் ஒரு மணியளவில் பூஜீ வைகுண்டத்தை அடைந் தோம். எங்கள் துரதிர்ஷ்டம் நாங்கள் போன சமயம் பூஜை முடிந்திருந்தது. கோயிலுக்குள் ஓரிரண்டு பேரே இருந்தார் கள். கோயில் வாசல்கூட பெரிய மரப்பலகைக் கதவுகளால் மூடப்பட்டு ஒரு ஆள் நுழையக் கூடிய அளவிற்கு சதுரமான பெரிய துவாரம் மட்டுமே காணப்பட்டது. அதனுள் நுழை ந்து போனபேர்து கோயில் வீதியெல்லாம் வெறிச்சோடிக் கிடந்தது. இதற்கிடையில் மழையும் சோவென்று பெய்யத் தொடங்கியது. மழையோடு காற்றும் சேர்ந்து சுழன்றடித் ததால் நாங்களும் நனைந்துவிட்டிருந்தோம். அதையும் பொரு ட்படுத்தாது கோயிலை திறப்பித்து சந்நிதானத்தைப் பார்க் கும் ஆவலில் அங்கு ஒடியாடித் திரிந்துகொண்ட ஒரு பையனை அழைத்து எங்கள் நிலைமையைச் சொன்னுேம். அந்தப் பையனைக் கூப்பிட்டு விசாரிப்பதைக் கண்டுவிட்டு இன்னுெரு சிறுவனும் ஓடிவந்தான். A
*"பூஜை இல்லாத சமயத்திலே கோயிலைத் திறக் கனும்னு மூனு ரூபா காசு வரையில் கொடுக்கணும். அதோ அந்த தோப்புப் பக்கிட்டுத்தான் ஐயரு இருக் காரு. நான் ஒன் மினிட்லே கூட்டியாந்துடறேன்' என்று கொண்டே எங்கள் பதிலுக்கும் காத்திராமல் ஒடத் தொடங்கினுன் முதல் வந்த பையன்.
*ஸார் ஸார் நான் போயிஇட்டாறேன். என்னையும் கவனிச்சுக்குங்க ஸார்' என்று இரண்டாவதாக வந்த சிறுவ னும் கெஞ்சினன்.

Page 42
- 68 -
"யாராவது எப்படியாவது ஐயரைக் கூட்டிக்கொண்டு வாருங்கள்" என்ருேம்.
மற்றவனும் முதலில் போனவன் பின்னல் ஓடினன். இடையில் இருவரும் சண்டைப்பட்டுக்கொள்வது தெரிந்தது. அவர்கள் சாமார்த்தியமாக ஐயரை கொண்டு வந்து சேர்த்த பிறகு நாங்கள் கொடுக்கப்போகும் 'சம்திங்"குக்காகத்தான் இவ்வளவு ரகளை.
மழை பலத்த காரணத்தினல் கீழே இறங்க முடியாமல் பாதிப் பேருக்கு மேல் பஸ்ஸிலேயே இருந்தார்கள்.
நாங்கள் பதினைந்து பேருக்குக்கிட்ட நனைந்தபடி கோயி லினுள் நின்று கொண்டிருந்தோம். சிறந்த விஷ்ணு தலமான பூரீ வைகுண்டத்தில் எழுந்தருளியிருந்த பெருமானை எப்படி யாவது பார்த்து விட்டே போவது என்று அந்தப் பையனும், ஐயரும், வரும் வரை பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒவ்வொருவரிடமும் சில்லறை வாங்கி கோயில் திறப் பதற்கு வேண்டிய பணத்தை சேகரித்துக் கொண்டாய ஒருவர்.
மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க  ைப யன் கள் ஒடி வந்தார்கள். ஐயரு வருவாங்க ஸார்' என்று ஏசுகாலத்தில் இருவரும் கத்தினர்கள். சற்று நேரத்தில் அவரும் வந்தார். இதற்கிடையில்பஸ் ஹாரன் ஒலி கேட்டது. பஸ்ஸிலிருந்து ஒருவர் இறங்கி ஓடி வந்தார். 'மழை பெலக்குதாம். ம்ேலே கட்டியிருக்கிற சாமான்கள் எல்லாம் நனையப் போகு தாம். மழை கூடினல் பஸ்ஸை ரோட்டில் செலுத்தவும் முடியாதாம், ஆனபடியினல் உங்கள் எல்லோரையும் சுறுக்கு வரட்டாம்" என்று ஒரேயடியாக வற்புறுத்தினுர் அவர்.

- 69 -
ஐயரோ கோயிலைத் திறந்த பாடில்லை, இவரேர் Luahy ஸிற்கு வரும்படி கத்திக்கொண்டிருக்கிருர். திரும்பவும் கோயில் உள் வாசல் வரை போய் எட்டிப் பார்த்தோம் மூலஸ்தான வாயில் திறக்கும் சுவடே இல்லை.
கோயில் உள் வாசலுக்கும் வெளி வாசலுக்கும் நாலைந்து தடவை நடை பழகிவிட்டு, பஸ் ஹாரன் ஒலியின் அலறலும் இறங்கி வந்தவரின் புலம்பலும் சகிக்க முடியாமல் பஸ்ஸை அடைந்தோம். சொட்டச் சொட்ட நனைந்ததுதான் மிச்சம்.
விளக்கெண்ணெய் குடித்தது மாதிரி என்முகம் கோணிப் போயிருந்தது எனக்கே தெரிந்தது. தென்னிந்தியாவிலிருந்த அத்தனை கோயில்களை தரிசித்தும் "பூரீ வைகுண்டப் பெரு மானை'த் தரிசிக்காதது, அதுவும் கைக்கெட்டியது வாய்க் கெட்டாதது போல் கோயிலினுள் சென்றும் பெருமானைக் காணுதது என்னைப் பொறுத்தவரையில் எனக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது.
அங்கிருந்து புறப்பட்டு திருச்செந்தூருக்குப் போகும் வழி யில் வாழைத் தோட்டங்களும், வயல்களும் நிறைந்து பசு மையாகக் காட்சியளித்தது. இடைக்கிடையே மரக்கறித் தோட்டங்களும் காணப்பட்டன. அவற்றுள் பாகற்காய் கொடிகளே அதிகமாக இருந்தன.

Page 43
- 70 -
செந்தூர் முருகன் !
அழகின் அவதாரமே முருகன்தானென சிறப்பித்துக் கூறுவார்கள். ஆனல் அந்த முருகனே தன்னழகை மென் மேலும் கூட்டுவதே போல இயற்கை எழில் கொஞ்சும் இடங் களையெல்லாம் தனதாக்கிக்கொண்டிருநதான்.
நுங்கும், நுரையுமாகப் பொங்கிப் பிரவகித்துக் கொண் டிருந்த கடற்கரையின் அருகே அமைந்திருந்தது திருச்செந் தூர் கோயில்.
புராண வரலாறுகளின்படி முருகப்பெருமான் சூரபத்மன் மீது படையெடுத்துவரும் பொழுது வழியில் எதிர்ப்பட்ட தாரகாசூர%னயும் அவனுக்குத்துணைநின்ற கிரெளஞ்ச மலையை யும் அழித்துவிட்டுத் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கியதாகக் கூறப்படுகின்றது, சினம் தணிந்ததும் திரும் பவும் சூரபத்மன் மீது போர் தொடுத்தார். அப்போது சூரன் கடலில் மாமரமாக நிற்க, தனது மறக்கருணையினுல் அவனையும் ஆட்கொண்டு வெற்றி சூடித் தேவர்களையும்
 

അ ? 1 : -
சிறைமீட்டுத் திரும்பி வந்து தேவர்களின் பூஜையை ஏற்றுக் கொண்டதும் திருச்செந்தூரிலே தான் என்றுள்ளது. தாகம் தணிக்கவும், கோபம் தணிக்கவுமாக அங்கே குடிகொண்டு விட்டார்.
壽
கோயிலின் முன்னே பெரிய விருட்சங்கள் காணப்பட் டன. நிழல் தரும் மரங்களும், கடற்க்ரை சூழ்நிலைகளும் மனதிற்கு ரம்மியமாயிருந்தது. திருச்செந்தூரிலே வேலா டும் திருப்புகழ்பாடியே கடலாடும்" என்ற பாட்டிற்கேற்ப அந்தக் காட்சிமனுேகரமாய் இருந்தது,
பஸ்ஸைவிட்டு இறங்கி குளிப்பதற்காகக் கடற் கரையை அடைந்தோம். ஏற்கனவே அங்கு பலர் குளித்துக் கொண்டி ருந்தார்கள்
நெடிதுயர்ந்த கோபுரத்தைக்கொண்ட திருக்கோயிலில் குமரன் குடிகொண்டிருந்தமையினுல் அந்தக் கடற்கரையே பெருமை பெற்றுள்ளது.
*திருச்செந்தூர்க் கடற் கரையில் குளித்தோம் என்று சொல்வதல்லாமல், இந்து சமுத்திரத்தில் குளித்தோம் என்று சொல்வார் எவருமிலர். இந்து மகாசமுத்திரம் என்பதையே மறந்து செந்தூர்க்கடல் என்று மக்கள் மருளும் அதிசயம் குளித்த பின்னர்தான் புலப்பட்டது. செந்தூர்க் குமரனின் நினைவை மனதில் கொண்டு நீராடியபோது உவர்ப்புமிக்க கடல்நீர் பன்னீராக, பனி நீராகத்தான் தோன்றியது.
மாலைவேளை பூசைக்கான மணி ஓசை கோயிலிலிருந்து வந்து செவியினுள் இனிமையாக ஒலித்தது. கடல் நீரில் நீராடிவிட்டு கடற்கரையின் பக்கத்தே இருந்த ஒரு மண்ட பத்தின் ஊடாகச் சென்று வேறு ஓரிடத்தில் காணப்பட்ட குழாய் நீரிலும் குளித்தோம் அதன் பின்னர் அவசர அவசர மாக உடை மாற்றிக்கொண்டு கோயிலுக்குப்போணுேம்.

Page 44
حس سے 72 سے ۔
"பக்திப்பரவசம்’ என்கிருர்களே.. அதற்கு என்ன பொருள்கொள்ளலாம்? மனத்தூய்மையாக வேறெந்தவித சிந்தனையும் இல்லாமல் உள்ளன்புடன். கடவுளை வணங் கும்போது ஏற்படும் மன மகிழ்ச்சி" என்பதுதான் அர்த்தம் என்று எனக்குப் படுகிறது. :
செந்தூர்க் குமரனின் சந்நிதா தானத்தில் கற்பூர ஆராதனையும் தீப ஆராதனையும் காட்டப்பட்ட போது நான் பக்திப்பரவசமாகி ஒடுங்கிப்போய் நின்றேன் என்று தான் சொல்ல வேண்டும். எனக் கேற்பட்ட அந்தபுனித உணர்ச் : சியை விளக்குவதற்கு இதைவிட : வேறு பொருத்தமான சொல்லே : இல்லை. முருகன் உயிர்பெற்றெ ழுந்து விட்டாற்போன்ற அழகு டனும் கேஜஸுடனும் ஒளிர்ந்த அருங் காட்சியைவிளக்க வார்த் தைகளே இல்லை.
திரும்பத் திரும்ப கோயில் வீதியையெல்லாம் சுற்றிச் சுற் றிப் பார்த்தேன். இங்கு சில்ல றைக் கடைகள் அதிகம் காணப்
திருச்செந்தூர் முருகன் படவில்லை. தொடர்ந்தாற்போல் சில தினங்களுக்கு அங்கு தங்கினல் வீட்டு ஞாபகம்ோ, உலக ஞாபகமோ, வேறு எண்ணங்களோ வராது போலிருந்தது.
துணைவன் சினிமாப் படத்தின் சில காட்சிகளை இங்கே தான் எடுத்தார்கள். அவ்விடத்தையும் பார்த்தோம்.
திருச்செந்தூரில் எனக்க்ேற்பட்ட (வேறு ஒரிரண்டு இடங்களைத் தவிர). மனமயக்கம் வேறெங்குமே எனக்கு ஏற் tulasia).
 

இரண்டு, மூன்று மணித்தியாலங்களின் பின்னர் . . . ஸ்ஸை அடைந்தோம்,
ஹை! ஹை! மாட்டு வண்டி ஒட்டிகுள்
கிராமப் பெண்
*Sere ex esse
திருச்செந்தூரிலிருந்து கிட்டத்தட்ட 60 மைல் தொலை விலிருந்த கன்னியாகுமரியை நோக்கிப் பயணமானுேம்,
நாங்கள் புறப்பட்டபோது நேரம் 6 ம்ணிக்கு மேலாகி விட்டது. மாலை மங்கி இருள்படர்ந்துகொண்டு வந்தது. தென்னந்தோட்டங்களும், பனந்தோட்டங்சளும், செடி கொடிகள் நிறைந்த பற்றைகளும் ஆங்காங்கே காணப்பட்
4.67
வெளியே எதையும் பார்க்க முடியாமல் இருள் படர்ந் திருந்தது. வெறுமனே அந்த இருட்டைப் பார்த்தவண்ணம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
இதுவரை பயணம் செய்த பகுதிகளையெல்லாம் நான் நினைத்துப்பார்த்தேன். ܕ ܢ
ஏதோ ஒரு சினிமாப் படத்தில் ஒரு நடிகை கிராம்ப் பெண்ணுக நடித்தபோது மாட்டு வண்டி ஒட்டுவதைப் பார்த் திருக்கிறேன், அப்போது அந்தக் காட்சி அந்தக் கிராமப் பெண்ணை ஒரு வீராங்கனையாக காட்டுவதற்காக எடுக்கப் பட்டதாகும் என நான் நினைத்ததுண்டு. ஆனல் உண்மை யாகவே அப்படி ஒரு காட்சியை எட்டயபுரத்திற்கும் பாளை யங் கோட்டைக்கும் இடையில் கண்டேன். சுமார் 35 வயது மதிக்கத்தக்க கிராமியப் பாணியில் உடையணிந்திருந்த

Page 45
பெண் ஒருத்தி மாட்டுவண்டி ஒன்றை ஒட்டிக்கொண்டு வந்த தைக் கண்டேன்.
*சம்திங்" எதிர்பார்க்கும் பழக்கம் சில இடங்களில் காணப்பட்டது. ஹோட்டல்களில் தங்கியிருந்தபோது சிறு பையன்களும் ஒருசில (பெரிய) சர்வர்களும் கோயில்களில் ஒரு வேலையுமில்லாது அங்குமிங்கும் திரிந்துகொண்டிருத்த வாண்டுப்பையன்களும் ‘சம்திங்"குக்காக, ஏதாவது சில்லறை தரவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள். வேறு சிலர் வேறு உருவில் பணம் பெற்றர்கள்.
ஒரு இடத்தில் எங்கள் பஸ்ஸை நிற்பாட்டிவிட்டு பின் னர் அலுவல் முடிந்ததும் புறப்படுவதற்காக பஸ்ஸ்ை டிரை வர் இயக்கினர். இதைப் பார்த்துவிட்டு அருகில் நின்ற பொலிஸ்காரர் ஒருவர் "பணம் கொடுத்தால்தான் இந்த இடத்தில் இருந்து பஸ்ஸை நகரவிடுவேன்" என்று ஒரேயடி -யாகப் பிடித்துக் கொண்டார். அவ்விடத்தில் இருந்து பஸ் ஸைக் கிளப்புவதற்கு பொலிஸ் காரருக்கு ஏன் பணம் கொடுக்க வேண்டுமென்று விளங்கவில்லை. சட்ட விரோத ம்ான செயல் என்னவாவது தெரியாமல் செய்து விட் டோமா என்ருல் அதுதானில்லுை. பின் என்ன? பொலிஸ் காரராயிருந்தாலும் அவர் கூட சம்திங் வேண்டுமென்ருர் .
இன்னுமோர் இடத்தில் ரயில் பாதைக் கடவை பூட்டப் பட்டு விட்டதால் ரயில் போகும்வரையும் கேட்டிற்கு இந் தப் புறமாக பஸ்ஸை நிற்பாட்டினுர் டிரைவர்.
புகையிரதமும் வந்தது. ஸ்டேஷனில் நின்றுவிட்டு சில விநாடிகளில் எங்களை கடந்துபோயும் விட்டது. விநாடிகள் நிமிஷங்களாகி ஐந்து நிமிஷத்தின் பின்னரும் ரயில்வே கேட் திறந்தபாடில்லை. காரணம் என்ன தெரியுமா?:இந்தக் கேட் டைத்திறப்பதற்கு சம்திங் கேட்டான் அதற்கென இருந்த ஊழியன். எப்படி இருக்கிறது இந்தச் சம்திங் கதை?

- 75 -
சம்திங் என்பது பெரிய தொகை அல்ல. என்றலும் நான்கு பேரிடம் வாங்கும் போது அது பெரிய தொகை பாகி விடுகிறதுதானே. இது தனிப்பட்டவரின் சுயநலமான ஒறிய சம்பாதிப்பு என்ற்ே எண்ணுகிறேன். சிலரிடம் காணப் பட்ட இந்தக் குறைக்கு காரணம் என்னவாக இருக்கும்?
வெறும் சாட்டுக்கள் சொல்லி பணம் பறிப்பவர்கள் இங்கும் இருக்கத்தான் செய்கிறர்கள். இப்படியாக பலவற் றையும் நான் யோசித்துக்கொண்டிருந்தேன். என் ஸிட்டின் முன்னுல் இருந்த ஒரு சிலர் தூங்கி விழுந்துகொண்டிருந் தார்கள். பின்னல் திரும்பிப் பார்த்தேன், அங்கேயும் அநேகமாக எல்லோரும் உட்கார்ந்திருந்தவாறே நித்திரை பாதி விட்டிருந்தார்கள். வெளியே இருள் பயங்கரமாக பரவி
யிருந்தது.
பகல் முழுவதும் வண்டியைச் செலுத்தி களைத்திருந்த போதிலும் டிரைவர் மட்டும் லாவகமாகவும் பொறுப்பாக வும் வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
ஊரடங்கும் நேரம். கடைவீதியில் காணப்பட்ட சாப் பாட்டுக் கடைகள் மட்டும் அதுவும் ஒன்றே இரண்டோ தான் திறந்திருந்தன. நடைபாதையில் இருந்த சில்லறை வியாயாரிகள் தங்கள் பெட்டிக் கடைகளை மூடிக்கொண்டி ருந்தார்கள். ஏதோ ஒரு ஹோட்டலில் இருந்து ரேடியோ அலறிக் கொண்டிருந்தது.
ஒரு வயோதிப வியாபாரி, நடைபாதையில் பாய் விற் றுக்கொண்டிருந்தவர் போலும். தனது சைக்கிளின் காரிய ரில் பாய்களை மடித்து வைத்து கயிற்றினல் கட்டி விட்டி ற்குப் போவதற்கு ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தவர் எங்கள் பஸ் போய் அவரருகே கடை வீதியில் நின்றதைக் கண்டதும் போட்டுக்கொண்டிருந்த கயிற்று முடிச்சை அப் படியே விட்டு விட்டு நின்று அவதானித்தார்.

Page 46
سســــــــ 76 جسے
ஆமாம். நாங்கள் இரவு பத்து மணி அளவில் கன்னி யாகுமரி கடை வீதியை அடைந்தபோது தான் இந்தக் காட்சியைக் கண்டேன். பஸ் நின்றதும் சுற்றுலா நிர்வாகி இன்னெருவரையும் துணை க் கு " அழைத்துக்கொண்டு இரவு தங்கலுக்கு இடம் தேடிப் போய் விட்டார். நாங்கள் அதாவது பெண்கள் பஸ்ஸில் இருந்தபடியே கடை வீதியைப் பார்த்தோம். இரு புறமும் மாலைக் கடைகள்தான் காணப் பட்டன. மணியினுலும் சிப்பியினலும் ஆன வண்ண வண்ண மாலைகள் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.இதை விட சிப்பியிலான பொம்மைகளும் இருந்தன.
பாய்க்காரக் கிழவர் வீட்டிற்கு போகாமல் அப்படியே நின்றுவிட்டது நல்லதாகப் போயிற்று. வெளியே இறங்கி நின்ற சில நண்பர்களுக்கு அவர் தனது பாய்களை காட்டிக் கொண்டிருந்தார். வீட்டிற்குப் போகும் முன் இன்னும் கொஞ்சம் வியாபாரம் செய்து விடுவோமென்ற ஆசைதான். அவர் ஆசை வீண் போகவில்லை. அங்கு காணப்பட்ட பாய் கள் விசித்திரமான அமைப்பு உடையனவாக காணப்ப ட்டன. சாதாரணமாக இங்குள்ள பாய்களைப் போன்றவை தான். ஆனல் அவை மூன்று பாகமாக இருந்தது. இந்த மூன்று பாகங்களையும் இணைத்து மெல்லிய ரிபன் அளவில் துணி வைத்து தைத்திருந்தார்கள். இதனுல்பாயை மூன்ருக மடிக்க முடிந்தது. நீண்ட வாக்கில் மூன்ருக மடித்து குறுக் காக புத்தகம் போல் மடித்துக் கொண்டால் போக்கு வரத் துகளுக்கு எடுத்துச் செல்வதற்கும் குறுகிய இடங்களில் வைப்பதற்கும் இலகுவாக இருக்கும். கைக்கடக்கமான இந்த பாய்களை கிழவர் விரித்து முழுப்பாயாகக் காட்டியதும் சில நண்பர்கள் வாங்கிக் கொண்டார்கள். மறுநாள் வாங்க முடிகிறதோ இல்லையோ என்று நினைத்து நானும் இரண்டு
பாய்களை வாங்கிக்கொண்டேன்.
ஐந்தாறு நிமிடங்களின் பின் நிவாகி வந்து சேரவே, கீழே நின்று பேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள் பஸ்ஸில் ஏறிக்கொண்டார்கள்.

- 77 -
நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலை அடைந்து சாமா ன்க்ளை இறக்கி வைத்தோம். இதற்கிடையில் நிர்வாகி முதலில் போய் எங்கள் எல்லோருக்கும் இட்டலியும் பூரியும் தயாரிக்கும்படி வேறு ஹோட்டலில் ஒடர் கொடுத்துவிட்டு வந்திருந்தார். 40 பேருக்கும் சாப்பாடு தயாரிக்க முப்பது நிமிடங்களாவது பிடிக்கும். மெதுவாக நடந்தே போய் விட லாமென்று அவர் சொல்லவே நடக்கத் தொடங்கினுேம்,
இந்தியன் காபி ஹவுசில் ஒரு சர்வர் சுந்தரம் !
இரவுச் சாப்பாட்டிற்காக சென்ற **இந்தியன் காபி ஹவுசில்," இருந்த புதுமை என்னவென்ருல் இது ஒரு குடி சையைப் போல், கிடுகினல் வேயப்பட்டு, சுவர்கள் கூட கிடுகுத் தட்டியினல் ஆக்கப்பட்டிருந்தன. உள்ளே மட்டும் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, சர்வர்களும் டிப்டாப் பாக வெள்ளை வேஷ்டி-கோட் அணிந்து வெள்ளை நிற * காப்' போட்டிருந்தார்கள். முன்னுடியே போன நண்பர் கள் சுடச்சுட சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் மேஜைக்கு வெள்ளைக் கட்டைக் காற்சட்டையும் வெள்ளை கட்டைக் கை ஷேர்ட்டும் குல்லாயும் போட்டிருந்த ஒரு வெள்ளை நிற சர்வர் வந்து சேர்ந்தார். அவரது மெலிந்த உடல் தோற்றமும், ஒரு கையிலே தண்ணீர் டம்ளர் தட்டை ஏந்திக் கொண்டு, மற்றக் கையில் நாப்கினைப் பிடித்தபடி கையை வீசிக் கொண்டு நெளிந்து, நெளிந்து நடந்து வந்த தோரணையும் எனக்கு அசல் சர்வர் சுந்தரத் (நாகேஷைப்) தையே நினைவூட்டியது. அவருகி தனக்குள்ளே அப்படித்தான் எண்ணியிருந்தார் போலிருக்கிறது. தட்டை அப்படியே ஒரு சுழற்று சுழற்றி டம்ளர்களை மேஜையில் வைத்தார். அசட் டுச் சிரிப்புடன் "வெயிட் ஒன்லி வைவ் மினிட்ஸ் பிளிஸ்?" என்று சொல்லிவிட்டுப் போனர்.

Page 47
= 'f8' =
நாங்கள் இருந்த இடத்திற்கு அருகில் இரண்டு ரஷ்யர் கள் கையில் முள்ளுக் கரண்டிகளை வைத்துக் கொண்டு டிருந்தார்கள். முன்னலிருந்த பிளேட் வெறும்னேயிருந்தது. திடீரென்று ஒருவர். ஷர்ட் கூடப் போடாமல் பிஜாம்ா-காற் சட்டை மட்டுமே உடுத்துக் கொண்டிருந்தவர். டிரெளஸர் ஷர்ட் போட்டுக் கொண்டிருந்த மற்றவரிடம் ஏதோ சொன் ஞர். அவர்கள் தங்கள் மொழியிலே பேசிக்கொண்டார்கள். அவரும் தலையை ஆட்டியபடியே பக்கத்து கிடுகுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த நீண்ட கரும்பலகையில் எழுதப்பட் டிருந்த உணவுப் பட்டியலைப் பார்த்தார். பளிரென்று ஒரு மின்னல் அவர் கண்களில் தோன்றி மறைந்தது. வெறும் உடம்புக்காரர் சொன்ன ஐடியா மற்றவருக்கு பிடித்துக் கொண்டுவிட் ட த ரா க்கு ம். தங்களுக்கு வேண்டிய அயிட் டத்திற்கு ஒடர் கொடுப்பதற் காக சர்வரைத் தேடினர்கள். சர்வர் சுந்தரம் (அந்தப் பெய ராலேயே அழைப்போமே) தான் அகப்பட்டார். "ஹேப் யூ’’ எங்கேயோ பார்த்துக் கொண்டிருந்த சர்வர். அப் படியே தலையை மட்டும் ஒரு வெட்டு வெட்டித் திருப்பி புரு வத்தை உயர்த்திகண்ணுலேயே
"என்ன? என்று கேட்டார்.
5th -ஹியர்* அலட்சிய நடந்து வந்தார் அவர்.
 

ത് ? -
**நம்பர் தெட்டிநைன்”
மெனுபோர்ட்டைச் சுட்டிக் காட்டினுர்கள், “ஸாரி. பினிஷட்" "நம்பர் த்ரீ"
உநோ.நோ"
பிரியாணி கட்லட் சான்று இன்னும் இரண்டு மூன்று வகையருக்களை நம்பர் சொல்லிக் கேட்டார்கள். அவ்வளவு நேரத் தி ற்கு பிறகு அவையிருந்தால்தானே. ரஷ்யர் களுக்குப் பசியினல் இரத்தக் கொதிப்பே ஏற்பட்டு விட்டது போலிருந்தது. அவ்வளவு கோபமாக இருந்தார்கள். கொவ் வைப் பழம் போல் சிவந்த முகமும் தக்காளிப் பழம்போல் சிவந்து விட்ட உடம்புமாக அதுவும் அந்த வெற்றுடம்புக் காரர், மகா பயங்கரமாகக் காட்சியளித்தார்கள், கடைசியில் முட்டை ஆம்லெட்டில் வந்து நின்ருர்கள்,
"நம்பர் டுவென்டி நைன். அன்ட் டொமர்டோ பீஸஸ்**
யெஸ், டு எக் ஆம்லட்ஸ் அண்ட் டொமாட்டோ, பீஸஸ். பிளிஸ். வெயிட். ”என்று சொல்லிவிட்டு போனர் சுந்தரம் !
முள்ளுக் கரண்டிகளைப் போட்டு விட்டு அவர்களும் வெயிட் பண்ணிஞர்கள். நாங்களும்தான் வெயிட் பண் கலரிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் சுந்தரமும் இன்னு மொருவருமாக எங்களுக்கு பூரியும், இட்லியும் கொண்டு வந்தார்கள். அந்த வெளி நாட்டுக்காரர்கள் எப்படித்தான் நாங்கள் இட்லியை சாம்பாருடன் சேர்த்து சாப்பிடுகி ருேமோ என்பதுபோல எங்களைப் பார்த்துக் கொண்டிருந் தஈர்கள்,

Page 48
- 80 -
திரும்பவும் இரண்டு தட்டுகளை ஏந்திய வண்ணம் அழகு நடை நடந்து வந்தார் சர்வர் சுந்தரம்.
'ஹியர். யுவர் டிஷ்?? என்றபடியே ஆம்லெட் பிளேட்டுகளை மேசை மேல் வைத் தார். அவர் வாயிலிருந்து அமர்க்களமாக ஆங்கில சொற் கள் வந்துக்கொண்டிருந்தன. ஆவி பறக்கும் ஆம்லெட்டின் ஒரு துண்டை கத்தியால் வெட்டி ஆவலுடன் வாய்க்குள் போட்டு மென்று கொண்டே
"ஹேய் டூ மோர் பிளிஸ் நாட் இனவ்'
பாவம் அவர்களின் ருசிக்கேற்ப வேறு உணவு கிடைக்கா ததால் முட்டை முட்டையாகவே வயிற்றை நிரப்பிக்கொள்ள நினைத்து ஆளுக்கு இவ்விரண்டு ஆம்லெட்டுக்கு ஒடர் பண் ணிஞர்கள்.
'யெஸ் பிளிஸ்" என்று சொல்லிவிட்டு அவர்களிடமிரு ந்து எங்களிடம் வந்து 'உங்களுக்கு எனிஹெல்ப்"
ஆங்கிலம்ாக நினைத்து தமிழில் சொன்ஞர். என்னவோ அசல் ஆங்கிலயனே வந்து தமிழில் உரையாடுவது போல் இருந்தது.அவர்தமிழை உச்சரித்த விதம்"கொஞ்சம் சுறுக்கா காப்பியை கொண்டு வாருங்கோ" என்று நண்பர் ஒருவர் சொன்னுர்,
ஒயிலாக மயிலாக அவர் வந்து தேனுகப்பாகாக கதை சொல்லுமுன் வந்தவர்களுக்குப் பசி அடங்கிப் போய்விடும்.
ரஷ்யர்களையும், சர்வரையும் பார்த்துக்கொண்டே சாப் பிட்டதில் தான் என்ன சாப்பிட்டேன் என்று எனக்கே தெரியவில்லை.
யானைப்பசிக்கு சோளப் பெர்ரி போட்ட மாதிரி ஆம் லெட்டுகளையும், தக்காளிப் பழத் துண்டுகளையும் தின்று

---- 1 8 ܚܝ
நீர்த்த ரஷ்யர்கள் பில்லுக்கான பணத்தைக் கொடுத்தார்கள். பின் மீதிப்பணத்தையும் பெற்றுக் கொண்டு போகக் கிளம் பினர்கள். இதற்கு இடையில் சர்வரும் வந்து சேரவே அவ ரும் அவர்களோடு வாசல்வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தார்.
நாங்களும் காப்பி குடித்துவிட்டுப் புறப்பட்டு ஹோட் டலை அடைந்தோம். என்னை "வயிறுகுலுங்கச் சிரிக்கவைத்த சர்வரை என்னல் மறக்கவே முடியவில்லை. நளினமாக நெளிவ தும், வளைவதும் அவர் சுபாவமோ அல்லது வேண்டும் என்றே பாவனை செய்தாரோ யாருக்குத் தெரியும்?
ஹோட்டல் அறை வெகு நாகரீகம்ாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. வசதியாகவும் இருந்தது.
சூரியோதயத்திற்காக காத்திருந்து, காத்திருந்து.
கங்கைகள் கடலுக்குள் சங்கமிக்கும் என்பார்கள். அப் படியானல் கடல்கள் எங்கே சங்கமிக்கின்றன. அவற்றிற்கு சங்கமமே இல்லையா. முடிவே இல்லாமல் ஓடிக்கொண்டிருக் கின்றனவா?
முக்கடலும் கூடும்முனைப் பரப்பாகிய கன்னியா கும்ரி கடற்கரையில் நின்ற போது இப்படித்தான் எனக்குள் எண் ணத் தோன்றியது. *
மறுநாள் காலை ஆறேகால் மணியளவில் சூரியோதயம் பார்ப்பதற்காக குமரிமுனைக் கடற்கரைக்குப் போயிருந் தோம்.

Page 49
ഒ 8; i
இந்து மகா சமுத்திரமும், வங்காள விரிகுடாவும் அரே பியக் கடலும் ஒருங்கே கலக்குமிடம் கன்னியாகுமரி.
எந்த சமுத்திரம் எதற்குள் சங்கமிக்கிறது? எந்த கடல் எதற்குள்விழுகிறது, எது எதை தன்னுள் அடக்கிக் கொள் கிறது என்பதைக் கண்டு கொள்ள முடியாமல் முக்கடலும் முத்தமிட்டுப் பிரவாகித்துக் கொண்டிருந்தன. ஆன்ம்ாக்கள் யாவும் ஓரிடத்தைத்தான் அடைகின்றன என்ற உண்மைக் கும் சமயங்கள் கூட ஒரே சக்தியினின்று தான் பிறந்தவை என்ற பேருண்மைக்கும், ஆரவாரிக்கும் இந்த மூன்று கடல் களும் சான்று பகன்றுகொண்டிருந்தன. யாருக்கு என்னெ ன்ன எண்ணங்கள் தோன்றியதோ தெரியவில்லை, நான் அதுவரை நம்பாமல் இருந்த சில.நம்பாமல் இருந்த என் பதைவிட. என் அறிவிற்கு எட்டாமல் இருந்த சில உண் மைகளை எல்லாம் புரிய வைத்துக் கொண்டிருந்தன அந்த முக்கடல்கள்.
தெய்வ தரிசனம் பெற வந்தவர்கள் போல சூரியோத யம் பார்க்கவும் ஏராளமானவர்கள் குழுமி இருந்தார்கள். சில வெளி நாட்டவர்கள் தங்கள் காமெராக்களைச் சரிப் படுத்தி வைத்துக் கொண்டு நின்ருர்கள் உதய காட்சியைப் படம் பிடிப்பதற்காக. சாங்கள் நண்பரும் ஒரு கட்டை மதி லின் மீது ஏறி இருந்து கொண்டு காமெராவை ரெடியாக வைத்துக் கொண்டிருந்தார்.
எல்லோரும்"வைத்தசண் வாங்காமல் கீழ்த்திசையையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனல் அன்று சூரிய பக வான் எல்லோரையும் ஏமாற்றிவிட்டு எப்போதோ உதய மாகி முகிற் கூட்டத்திற்குள் ஒளிந்து கொண்டிருந்தான். நாங்கள் விடிய விடிய கீழ்வானையே பார்த்துக் கொண்டி ருந்தது தான் மிச்சம்,

ܒܚ- 88 ܚܝܘܢ
ஆமாம். அன்று பிழை மூட்டம் காரணமாக சூரியன் உதயமாவதைக் காணவே முடியவில்லை. கருமேகங்கள் மறைத்துவிட்டிருந்தன. ஏழு மணி வரைக்கும் நின்று பார் த்துவிட்டு குளிப்பதற்கென இருந்த இடத்திற்குப் போனுேம், டை, மாற்றிக்கொள்வதற்கென சிறு மண்டபமும் கட்டி வேறு சில வசதிகளும் செய்திருந்தார்கள்.
குளித்துவிட்டு கடற்கரை அருகிலேயே இருந்த குமரி பூம்மன் கோவிலுக்குப் போனேம். அழகான சிறிய கோயில். குடியிருந்தது குமரித் தெய்வமல்லவா. வெகு நேர்த்தியாக துப்பரவாக அலங்காரமாகக் கோயிலை வைத்திருந்தார்கள் குமரித் தெய்வத்தைப் பற்றி உலவிவந்த வரலாற்றுக் கதை gayrreraiou LDfr6ö7ğl •
சமுத்திரங்கள் மூன்றினதும் சந்திப்பால் வளம் பெற்றி நந்த கன்னியா குமரிப் பிரதேசத்தில் யெளவன எழிலோடு இருந்த குமரித் தெய்வத்திற்கும் சுசீந்திரத்தில் எழுந்தருளி பிருந்த பெருமானுக்கும் மணஞ்செய்வித்து வைக்க நாள் குறிக்கப்பட்ட-து: சீர்வரிசைப் பொருட்களாக கேட்கப்பட்ட நரம்பிலா வெற்றிலையையும் காம்பில்லாத மாங்கனியையும் இதழ் இல்லாத புஷ்பத்தையும் கண் அற்ற தேங்காயையும், முடிச்சில்லாத கரும்பையும் திரட்டிக் கொண்டு பெருமான் இரவோடிரவாக கன்னியா குமரிக்கு விரைந்து வரும் வேளை யில் கலகம் உண்டாக்குவதிலேயே கண்ணன நாரதர் சேவல் வடிவம் கொண்டு கூவவே பொழுது புலர்ந்து முகூர்த்த வேஜா தவறிவிட்டதெனத் தவருகக் கருதிய பெருமான் வந்த வழியே திரும்பி விட்டார். மண முடிக்க வந்த சுசீந்தி ரப் பெருமான் "வழுக்கம்பாறை" என்னுமிடத்தோடு பாதி வழியிலேயே திரும்பி விட்டதைக் கண்ணுற்று கோபம் கொண்ட கன்னியாகுமரி என்றென்றும் கன்னியாகவே இருக்க உறுதிபூண்டு மண்வினைக்கென சேகரித்த தற்பொருட்

Page 50
سے 4 & ۔
களை எல்லாம் தூக்கி கடலில் எறிந்துவிட்டாள். அவையெல் லாம் கடற்கரை மணலினுள் சிதறியதாலேயே இப்போதும் அவ்விடத்து மண் பல நிறமாகக் காணப்படுவதாக கூறுகி
ருர்கள்.
கோயிலில்... பா வா  ைட தாவணி அணிந்த சிறுபெண் னக குமரித் தெய்வத்தைஅபூவாக னம் பண்ணி இருந்தார்கள். அழி குக் கன்னியாக விளங்கிய அம்ம னின் கிரீடத்தில் பிறைச் சந்திர னின் வடிவம் பொறிக்கப் பட்டி ருந்தது. பெருமானுக்குடையவள் என்பதைப் பெருமையோடு பறை சாற்றுவதற்காகவா அத் த ப் பிறை! w
கோயிலுக்கு வெளியே வீதியில் சில்லறைக் கடைகள் இருந் தன. வழககமான FfF fo nr 6r களோடு மணி மாலைகளும் இருந் தன
கன்னியாகுமரித் தெய்வம் !
கோயிலை விட்டு வெளியே வந்தோம். குமரித் தெய்வத் திற்குக் கோயில் எழுப்பியிருந்த அதே கடற்கரையில்தான் காந்திஜீக்கும், விவேகானந்தருக்கும் நினைவு மண்டபங்கள் அமைத்திருத்தார்கள், கன்னியாகுமரிக்கே வந்துவிட்ட நாம் இவற்றைப் பார்க்காமல் போவதா?
கரையில் இருந்து சுமார் இரண்டு பர்லாங்கு தூரத்தில் இருந்த பிரமாண்டமான பாறையின் மீதே விவேகானந்தர் நினவு மண்டபம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு போவதற் காக மோட்டார் லாஞ்ச் சேவை நடத்துகிருரர்கள். லாஞ்சில்
 

سے 85 سے
போய்க் கொண்டிருக்கும் போது விவேகானந்தர் மண்டபத் தில் என் பார்வை லயித்தது.
நீலவானின் பின்னEயில் கம்பீரமாக எழுந்து நின்ற கட்டடத்தின் அழகு கண் கொள்ளாக் காட்சியாக இருந் தது. சுற்றிவர இருந்த பாறையில் கடல் அலைகள் முட்டி மோதி வெண் நுரைகளைக் கொப்பளித்தன. பின்னர் அது திருமபிச்செல்லும் அழகுதான் என்ன! முக்கடலினதும்பேரிரை ச்சல்இருந்தும் அமைதியின் இருப்பிடமாகக் காட்சி அளித்தது அந்தப் பாறை. இந்த அமைதியான சூழ்நிலையினல் கவரப் பட்டுத் தான் விவேகானந்தரும் தமது குருநாதர் மகா சமாதி அடைந்த பின்னர் பரிவிராஜக வாழ்க்கையில் ஈடு பட்டு இமாலயம் தொடக்கம் கன்னியாகுமரிவரை கால் நடையாக வந்த போது அந்தப் பாறையின் மீதமர்ந்து தியானத்தில் ஆழ்ந்தார் போலும். இவர் சிறந்த காளி பக் கர். குமரித்தாயின் கருணையினலும் அவருக்கு இயல்பாகவே இருந்த அறிவுத் திறனினலுமே 1898ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9ந் திகதி சிக்காக்கோ நகரில் நடந்த சர்வ சமய மக நாட்டில் பங்கு பற்றி இந்து சமயத்தின் மகிமையைப் பற்றி சொற்பொழிவாற்றி அமெரிக்கர்களினதும் மற்றவர்களின தும் மனதைக் கவர்ந்து பிறந்த பொன்ஞட்டிற்குப் பெருமை ஈட்டிக் கொடுத்தார். இந்த மகா நாட்டில் கலந்து கொண்ட பின்னர் விவேகானந்தரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப் பம் ஏற்பட்டது. ஆமாம்! அதன் பின் அவர் பல ஊர்களுக் கும் சென்று இந்து சமயத்தின் பெருமையை எடுத்துச் சொல்லி ஒரு புதிய சகாப்தத்தையே உருவாக்கினர்.
இப்படியான ஒரு மேதைக்கு புனிதமான ஒரு நினைவு மண்டபம் உருவாக்கியதில் என்ன வியப்பு இருக்கிறது! மண்டபத்திற்குள் நுழைந்த போதுதான் உண்மையிலேயே எனக்குத் தாங்கொணுத வியப்பு ஏற்பட்டது.

Page 51
- 8് അ
விவேகானந்தரின் நினைவு மண்டபத்திற்குப் போகு முன் னர் அதன் அருகாமையில் இருந்த பூரீபாத மண்டபத்தைத் தரிசிக்கப் போனேம். இங்கே குமரித்தாயின் பாதச் சுவடுகள் காணப்படுகின்றன. இருபது அடி உயரமான இந்த கட் டடமும் அழகாகவே இருந்தது. பாதங்களில் மலர்கள் வைச் கப்பட்டிருந்தன.
விவேகானந்தர் நிஷ்டை கூடுமுன்னர் அந்தப் பாறை பூரீபாத பாறை சான்றே அழைக்கப்பட்டு வந்தது.
மண்டபங்களுக்கு வழி காட்டுவதற்கு நிலத்தில் அம்புக் குறியீடுகள் போட்டிருந் தார்கள். அதன் வழியே சென்ருல் ஒன்றையும் தவற விடாமல் பார்க்கலாம்.
விவேகானந்தர் நினைவு மண்டபம்,
85 லட்ச ரூபா செலவில் நிருமாணிக்கப் பட்டிருந்த விவேகானந்தர் நினைவு மண்டபத்துள் நுழையும் போதே
 

--سس۔ 87 --سے
என்னை அறியாமல் மனதில் ஒரு அமைதி குடிகொண்டு விட்டது. ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு நிசப்தம் நிலவியது. சிற்ப வேலைப்பாடு செய்யப்பட்ட தூண்களும் சலவைக் கல் பதித்த தரையும் கண்ணைக் கவர்ந்தன.
உள்ளே எட்டேகால் அடி உயரத்தில் சுவாமி விவே கானந்தரின் வெண்கல உருவச் சிலை உயிருடன் நம் முன்னே நிற்பது போன்ற முக எழிலுடன் காணப்பட்டது. சுவாமி ஜியின் உருவ எழிலை நேருக்கு நேரே பார்த்த போது கண் களை மூடிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும் பேர்ல் தோன் றியது.
இப்படி ஒரு உர்ணச்சி ஏற்படும் போது தியானத்தில் ஈடுபடுவதற்கு என்று அமைத்தது போலவே ஒரு தியான மண் டபமும் கட்டி இருந்தார்கள். சிலர் அங்கு உட்கார்ந்து கண் களை மூடிக்கொண்டு தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களுக்குள் எத்தனை விவேகானந்தர்கள் இருந்தார்களோ யாரறிவார் ?
சொல்ல மறந்துவிட்டேன். இங்கும் நாங்கள் செருப்பு களைக் கழற்றி வைத்துவிட்டு வெறுங்காலுடன் தான் திரிந்து பார்த்தோம். மண்டபத்தினுள் ஒர் இடத்தில் பூரீராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சாரதாதேவி அம்மையாருக்கும் ஒவ்வோர் அறை ஒதுக்கியிருந்தார்கள்.
இந்த அமைதியான அழகான சூழ் நிலையில் ஒரு புகைப் படம் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். என்ன துரதிஷ்டம் 4 காவலாளி ஓடோடி வந்து, 'தயவு செஞ்சு இங்க படம் அடிக்காதீங்க ஸார்?" என்ருர்,
"சரிங்க ஸார்" என்று புகைப்படக் கா ர ந ண் பர் சொன்னரே ஒழிய மெதுவாக ஒரு புகைப்படம் எடுக்கத் தான் செய்தார். பிழையான செய்க்ை தான், என்ன செய் வது? கன்னியாகுமரிக்கு இனி நாங்கள் திரும்பி எப்போ வரப்போகிருேமோ ?
அமைதியான அழகான அந்த சூழ்நிலையிலிருந்து விடுபட மனமே இல்லாமல் கரையை வந்தடைந்தோம்.

Page 52
سے 88 سحے
காந்தி மண்டபம் ஒரு கலை வடிவம் !
12*12.1948ல் காந்திஜியின் அஸ்தியில் ஒரு பகுதி கும ரிக் கடலில் கரைப்பதற்காகக் கொண்டுவரப்பட்டு மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஒரு நினைவு மண்டபம் அமைத்திருக்கிருர்கள்.
காந்தி நினைவு மண்டபம் !
விவேகானந்தரின் அமைதியான நினைவுகளிலிருந்து விடு பட்டு மகாத்மா காந்தியின் தூய்மையான எ ன் ண ங் களோடு கலக்க காந்தி நினைவு மண்டபத்திற்கு வந்தோம்.
திருவாங்கூர்-கொச்சின் அரசாங்கத்தின் முயற்சியால் மூன்று லட்சம் ரூபா செலவில் அமைக்கப் பட்டது இம் மண் டபம். 1954ம் ஆண்டு ஜூன் மாதம் 29-த் திகதி கிருபா ளனி ஆசாரியார் என்பவர் அடிக்கல் நாட்டி வேலையைத் தொடக்கினர். 1956ம் ஆண்டு வேலை முற்ருக முடிக்கப்பட்
 

as 89 -
டது. அஸ்தி வைத்துள்ள இடத்திற்கு காந்திஜியின் பிறந்த தினமாகிய அக்டோபர் 2ம் திகதியன்று மட்டும் கூரையி னுரடாக சூரிய ஒளி படக்கூடிய முறையில் ஒரு துவா ரம் அமைத்துள்ளார்கள்.
வெளிக் கட்டடம் ஒவ்வொரு பக்கமுக் ஒவ்வொரு வித மாகக் காட்சியளித்தது. அதை எப்படிச் சொல்வது என்றே எனக்கு விளங்கவில்லை. என் கண்களுக்கு ஒரு சிக்கலான அமைப்பாக காட்சியளித்த கட்டடம், கலைஞர்க்ளின் சிறந்த சாதனை என்றே சொல்லவேண்டும். காந்தி நினைவு மண்ட பத்தையும் பார்த்துவிட்டு வெளியே வந்தோம்.
சிறிது நேரத்தில் பஸ்ஸாம் வந்து சேரவே பஸ்ஸில் ஏறி புறப்பட்டோம்.
கன்னியாகும்ரி கடலோரம் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தேன் நான். சற்று நேரத்தின் பின்னர் அக்காட்சிகள் கண் பார்வையிலிருந்து மறைந்து விட்டன. ஆணுலும் நினைவுகளோ திரும்பத் திரும்ப கன்னியா குமரியையே சுற்றிச் சுற்றி வந்தன.
சுசீந்திரம்
கன்னியா குமரியிலிருத்து சுசீந்திரத்திற்கு வந்தோம்.
குமரித்தெய்வம் இரண்டாவது அவதாரம் எடுத் து * "அறம் வளர்த்த நாயகி" என்ற பெயருடன் பெருமானை மணந்து கொண்டது இத்தலத்திலேயாகும். மாசி மாதம் ஆயிலிய நட்சத்திரத்தில் இந்திருக்கல்யாண வைபவம் விழா வாகக் கொண்டாடப்படுகிறது:

Page 53
- 960 -
கோயிலினுள் போய் பார்த்தபோதுதான் சிவன்,விஷ்ணு பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே மூர்த்தியாக எழுந்த ருளியிருக்கும் சிறப்பைக் கண்டோம். பூலோகத்துப் பெண் டிர்கூட கற்பரசிகளாய் இருக்கின்றர்களே, அதைப் பரீட்சி த் துப் பார்க்கவேண்டு என தெய்வ பத்தினிமார் முனைந்த தின் பயனுக இக்கோலம் சுசீந்திரப்பெருமானுக்கு ஏற்பட்டது.
பூவுலகிலே வ சித் து வந்த அத்திரி முனிவரின் மனைவியான அனுசூயா கற் பிற் சிறந்தவளாய் விளங்கி வந்தாள். இவள் ஒரு ச1 யம் இரும்புக் கடலைகளை வேகவைத்து அதிசயத்தைக் கண்ணுற்ற நாரதரால் சும்மா இருக்க முடியவில்லை. இப்பெருமையை பிரம்மா விஷ்ணு, சிவன் ஆகியோரின் மனவியிடத்தில் கூறினர். இதனுல் பொருமையுந் ற அவர்கள் தமது கணவர்
Lorrissar அனுசூயாவின்
கற்பினையைச் சோதித்துவர பூலோகத்திற்கு அனுப்பினர்கள் கற்பின் வலிமையர்ல் இதை அறிந்த அனுசூயா முத்தேவர் களையும் குழந்தைகளாக்கி பெருமை பெற்ருள். அப்போது அவளின் விருப்பப்படி மால், அயன், அரன் மூவரும் இணை த்து ஒரே உருவத்தில் தா னுமாலயராகி இத்தலத்திே தங்கி விட்டார்கள். என்கிறது தல புராணம்.
கோயிலச் சுற்றிக் கும்பிட்டுவிட்டு வெளியே வரும் போது, கோயில் வீதியில் ஒருவர் எவர் சில்வர், பாத்திர மும் டம்ளருமாக எதிர்ப்பட்டார்.
 

-تست I 9 سسس
"பால், பர்யாசம் சாப்பிடுங்க" என்றவாறே எங்கள் பதிலுக்கும் காத்திராமல் டம்ளரில் ஊற்றிக் கொண்டே *ஒரு டம்ளர் பாயாசம் 25 பைசாதான் ஸார்" என் ரூர் ஆளுக்கு ஒரு டம்ளர் பாயாசமாவது குடிக்கலாம் என ஆசைப்பட்ட நாங்கள், அந்த டம்ளரில் இருந்த பாயாசத்தை ஆளுக்கொரு வாயாகக் குடித்து விட்டு வத் தோம். வேறு சில கோயில்க்ளிலும் கூட வடை, லட்டு முறுக்கு ஆகிய பிரசாத வகைகளை காசுக்கு விற்கிருர்கள், கோயில் பிரசாதம் தானெருலும் நிதி நிலைமை காரணி மாக கொஞ்சம் யோசித்தே செலவழிக்க வேண்டியிருந்தது.
சுசீந்திரக் கோயிற் தோற்றம் !
சுசீந்திர தாணுமாலயர் கோயிலில் இருந்து புறப்பட்டு நாகர் கோயிலை அடைந்தோம். அங்கு மத்தியான சாப்பாட் டிற்காக இறங்கினுேம்,
சாப்பாட்டை முடித்துக்கொண்டு நான் பஸ்ஸில் வந்து உட்கார்ந்தபோது கண்டக்டர் கேட்டார்.

Page 54
ܚ92 ܡܩܘܗܝ
"நாகர் கோயிலுக்குப் பேரிகலீங்களா?" "இது தானே நாகர் கோயில், ஏன் இங்கே நாகதம் பிரான் ஆலயம் இருக்கிறதா?"
**ஆம்ாங்க நாகராஜர் ஆலயம்னு ஒண்ணு இருக்குது. அங்கே நிறைய நாக பாம்பும் கூட இருக்குதுங்களாம். ஆகு ஒருத்தருக்கும் கடிச்சது கிடையாதுங்களாம். ரொம்ப புதுமையான கோயில்" என்ருர்.
', ஆஞல் "நாகர் கோவில்" என்ற நகரில் இருந்த
நாகராஜர்ஆலயத்திற்கு நாங்கள் போக வசதிப் படவில்லை. தென்னிந்தியாவிலே திரும்பிய இடமெல்லாம் கோயில்கள் தீான். எல்லாவற்றிற்கும் போக முடியும்ா என்ன? அங் கிருத்து 56 மைல் தொலைவிலிருந்த திருவனந்தபுரத்திற் குப் பயணமாருேம்,
*சிந்துநதியின் மிசை நிலவினிலே
சேர நன்ஞட்டிளம் பெண்களுடனே
சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து
தோணிகளோட்டி விளையாடி வருவோம்".
இது செந்தமிழ்க் கவிஞர் பாரதியாரின் கனவு. சுந்தரத் தெலுங்கிளில் பண்ணிசைத்து,சேரநாட்டு இளம் பாவையரு டன் கூடிக் குலவ வேண்டும் என்று தமிழ் நாட்டிலிருந்து கொண்டு பாடி வைத்த பாரதியின் அருங்கவிதையினுல் புகழ் பெற்றது சேரநாடு. அதனை நோக்கித்தான் நாங்களும் போய்க்கொண்டிருந்தோம்.
*NSYN

LLAAASMLMLSqASAAAASLSLSL AAAASSLLLSAAAAASSLAM ASiLSLLY AMAASSiiiLLSLLLL AMAASLLLLSLLAASLLqLLSS ASSLLLLLLSS ASSMSSSLS
எழில் கொஞ்சும் கேரளம் !
LLSLSASLLLSAAAAAALLLLLSAAAAAALLLLLSAMAEATLLLLSALS YLLLLSSSAAAAAALLSSMSAAALSLSSTSAMTT LSATLLLLSAAAAAS
சேர, சோழ பாண்டியராகிய மூவேந்தருள் ஒருவரான சேர மன்னர் ஆண்ட சேர நாடே இப்போது கே ர ள
orrêa Lorras Drro acir 65.
அக்காலத்திலும் திருவனந்தபுரமே சேர நாட்டின் தலை நகராய் இருந்தது. இப்போதும் கேரளத்தின் தலைநகர் திரு வனந்தபுரமே.
இராம்யண காலத்தில் வாழ்ந்த பூரீ பரசுராமர் அரேபி யக் கடலில் தனது கோடரியை வீசியெறிந்தபோது, இந்தக் கேரள மாநிலப்பபகுதி கடலிலிருந்து துண்டிக்கப்பட்டு வேருகி வந்து விட்டது என்ற ஒரு கதை வழங்கி வருகிறது. இந்தக் கதை எவ்வளவு தூரம் உண்மையோ தெரியாது. ஆஞல் கேரளாவின் எழிலையும், செழிப்பையும் பார்க்கும் போது இக் கதை உண்மையாக இருக்கக் கூடுமோ என எண்ணத் தோன்றியது.
நீர் வளமும், நிலவளமும் ஒருங்கே பெற்று நாடு முழு வதும் ஒரே பசுமையாகக் காணப்பட்டது. தமிழ் நாட்டில் பரதம்போல கேரளாவில் கதகளி சிறந்து விளங்குகிறது. மலையாளம்ே முக்கிய ம்ொழி, சும்ார் 15,000 சதுர மைல் பரப்புடைய இந்நாட்டில், மலையாளிகளைவிட இந்துக்கள். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற பல மதத்தினரும் உள் ளனர். மிளகு, நெல், கஜா, தென்னை என்பன ஏராளமாக இங்கு விளைகின்றன. மாமரங்களும், பலா மரங்களும், கப் பாசி மரங்களும் சுமக்கமாட்டாது கனிகளைச் சுமந்து நின்றன, . ஒவ்வொரு விட்டின் முன்னுலும் நிறைய பூம்ரங்களை உண் டாக்கியிருந்தார்கள்.

Page 55
ത്ത് 94 അ
அதைவிட காட்டுப் பகுதியிலும், வண்ண வண்ணப் பூஞ்செடிகள் கேட்பாரின்றி மண்டிக் கிடந்தன. வெறும் நிலம் என்பதையே காணமுடியவில்லை. கண்ணுக்கெட்டிய வரையில் தென்னைசூழ் மலைகளும், பலரக மரங்களும் காட்சி பளித்தன. இந்த இயற்கை எழிலை ரசிப்பதற்காக மேலைத் தேய உல்லாசப் பிரயாணிகள் கூட இங்கே நிறைய வருகிருர் 556Trflrı D , .
வ ர ண் ட பிரதேசத்தையே கண் டு ம்னஞ்சலித்துப் போயிருந்த எனக்கு இந்தப் புதிய சூழ்நிலை. குதூகலத்தைக் கொடுத்தது. நான் மட்டுமல்ல பஸ்ஸில் இருந்த மற்றவர். களும் ஜன்னலினூடாக வெளியே பார்த்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து கேரள நாட்டிற்கு நுழைவதற். கிடையில் ஒரு எல்லைக் காவல் நிலையம் இருந்தது.இந்த இடத் தில் பஸ் நிற்பாட்டப்பட்டது. 'எல்ல்ைக் காவல் நிலையத்தி' லிருந்த அதிகாரிகள் பஸ்ஸிற்குள் வந்து பரிசோதனை செய்து பார்த்துவிட்டு இறங்கிப் போனர்கள். ஒரு இடத்திலிருந்து இன்னெரு இடத்திற்கு மதுபான வகை, அரிசி போன்ற பொருட்கள் கொண்டு போவது சட்ட விரோதச்செயலாகக் கருதப்படுகிறது. இங்கேயும் "சம்திங்" கொடுத்து அதிகக் கெடுபிடி இல்லாமல் தப்பித்துக்கொள்ள முடிந்தது.
நாங்களெவரும் சட்ட விரோதமாக எந்தப் 'பொருளும் கொண்டு போகவில்லை. அப்படியிருந்தும், எல்லைக்கடவை: நிலையத்தில் பணம் கொடுத்ததற்கு காரணம் எமது சுயநலம் தான். மணித்தியாலக் கணக்காக பஸ்ஸிற்குள் சோதனை போட ஆரம்பித்தால் நாம் போகவேண்டிய தூரமும், நேர மும் வீணுகி விடும்ல்லவா ?
கேரள நாட்டிற்குள் இருந்த கடை போர்டுகள், ஊரின் பெயர்போர்டுகள் யாவும் மலையாளத்திலேயே எழுதப்பட்

= 9b =
டிருந்தன. சில, சில இடங்களில் மலையாளத்தோடு ஆங் கிலத்திலும் எழுதியிருந்தார்கள். தமிழ் நாட்டில் இல்லாத முக்கிய கடை ஒன்று இங்கு காணப்பட்டது. அது என்ன கடை கள் தெரியுமா? மதுபானக் கடைகள் தான். கள்ளு ஷாப், கள்ளு கடைகள் சாராயக் கடைகள் என்றும் ஏராளமான மதுபானக் கடைகள் இருந்தன. (எங்கள் பிரயாணத்தின் போது தமிழ் நாட்டில் மதுவிலக்கு அமுலில் இருந்தது. இப் போது அது ரத்து செய்யப்பட்டுள்ளது.)
மார்த்தாண்டம், படந்தாலலுாடு, நெம்யங்டிக்காரா. என்று கிராமத்தின் பெயர்களும் வேடிக்கையாக இருந்தன. தெரியாத பாஷை ஆகையினுல்தான் எங்களுக்கு அந்தப் பெயர்கள் வேடிக்கையாக இருந்தன, . :-
கிராமப்புறச் சந்தைகளில் நிறையப் பழவகைக்ள், மீன் வகைகள், மரக்கறி வகைகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். பலாப் பழத்திலிருந்த சுளைகளே வேருக்கி சிறிய ஒலைப்பேட் டிகளில் போட்டு கூறுகூருக விற்பனைக்கு வைத்துக்கொண் டிருந்தார்கள். . . . .
இலங்கையில் உள்ள சிங்கள இனப் பெண்கள் இடுப்பில் ஒரு கம்பாயம் கட்டி, மேலே ரவிக்கையும் அணிந்திருப்பார் களே, அப்படித்தான் க்ேரள நாட்டுப் பெண்களும் இடுப்
பில் வேட்டி போன்ற துணியும் மேலே வெள் ஆள ரவிக்கையும் அணிந்து மார்பை மறைக்கும் வெண்ணம் ஒரு (சேலை அணிவது போல) துண்டும் அணிந்திருந்தார் கள். . . . . . . . .
வேஷ்டி போன்ற கம்பாயமும் மேலே தாவணிபோல அணியும் துண்டும் கேரளத்தில் ஸ்பெஷலாக நெசவு செய் கிருர்கள். தமிழ் நாட்டுப் பெண்களைவிட கேரளப் பெண் கள் அழகாகவும் குளிர்மையாகவும் நிறமாகவுமிருந்தார்கள்,

Page 56
திருவனந்தபுரம்
மால் சுமார் மூன்றரை மணி அளவில் திருவனந்த புரத்தில் இருந்த "பூஜீபத்ம்ஞபர்" கோயிலை அடைந்தோம், கோயிலுக்குச் சொந்தமான கேணி கோயிலின் வெளியே காணப்பட்டது. அந்தக் கேணியின் அருகே பஸ்ஸை நிற்பாட் ஞர் டிரைவர், நாங்கள் எல்லோருமே களைத்துப்போயிருந்த படியினுல் திருவனந்தபுரத்தில் இரண்டு மூன்று மணித்தி யாலங்கள் கழிக்கலாம் என்றும், எங்கே போனுல் என்ன சரியாக 6 மணிக்கு பஸ்ஸிற்கு வந்து விட வேண்டுமென்றும் எங்கள் நிர்வாகி சொன்ஞர்.
ஒரேயடியாக பஸ்ளில் உட்கார்த்து மைல் கணக்காகப் பிரயாணஞ் செய்வது சற்று சிரமம்ாகத்தான் இருந்தது. எழுந்து நின்று சோம்பல் முறிப்பவர்களும் இருந்தபடி இநட்டி முறிப்பவர்களுமாக நண்பர்கள் தமது களையைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். இன்னும் மூன்று மணித்தி யாலங்கள் இருக்கின்றதே. கொஞ்சம் கண்ணயரலாமென்று நினைத்து ஒரிருவர் காலி சீட்டுகளில் நீட்டி நிமிர்ந்து பகுத் தும் விட்டார்கள், வெளியே வோயிருந்த ஒரு நண்பர் வந்து லேடிஸ். லிஸின் பிளிஸ். சற்று தள்ளி பஸ் ஸ்டாண்டிற் கருகில் பாத் ரூம். இருக்கிறது. தேவையானவர்ள் போய்க் கொள்ளலாம்." என்று எங்களுக்கு உதவுமுகமாகச் சொன் ஞர். தொடர்ந்து "மறந்து போனேன். மாத்ரூமுக்கு இங் கால ஒரு ஆள் இருப்பார். அவரிடம் 2 பைசா (இரண்டு சதம்) கொடுத்துவிட்டுத்தான் பாத்ரூமுக்கு போகவேண்டும்" என்றும் கூறிஞர்.
இரண்டு பைசா என்ன இருபது ரூபாவென்ருலும் கொடுத்து பாத்ரூமுக்குப் போக வேண்டிய அவசியத்தில்

س- 97 س--
எம்மில் பலர் இருந்தார்கள். வெளியில் சொல்லாவிட்டா லும் முகத்தில் அது எழுதியிருந்தது.
நண்பர் சொன்னதுதான் தாமதம். அவரவரே தன் பாட்டில் கிளம்பிவிட்டார்கள். பட்டாளமாக நாங்கள் படை யெடுத்த போது பாத்ரூம் நுழைவுக் கட்டணம் இரண்டு பைசாவில் இருந்து பத்து பைசாவாக ஏறிவிட்டது. ஒரு நண்பர் துள்ளிக் கொண்டு திரும்பி வந்தார். என்ன சங்கதி என்று கேட்டோம்.
"என்னுடைய ரேட் பத்து பைசாவிற்கு മേഖേ' போய் விடும் போல் இருக்கிறது. அந்தப் பத்து பைசா இருந்தால் நான் ஒரு வடை சாப்பிட்டு விடுவேன்"
"அப்ப நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்??
'ஹஅம். எங்களுக்கா இடமில்லை. நீங்கள்தான் பெண்
பிள்ளைகள்.
சொல்லிக் கொண்டே வேறு பக்கமாக அவர் போய் விட்டார்.
என்ன செய்வது . ஒவ்வொருவரும் ஒவ்வொரு சதத் தையும் எண்ணிப்பார்த்தே செலவழிக்க வேண்டி இருந்தது. பணப் பிரச்சினை எமக்குப் பெரும் பிரச்சினையல்லவா?
பூரீ பத்மனபர் கோயில் மாலை ஐந்து மணிக்குத்தான் திறக்கப்படும் என்றர்கள். ஆகவே திருவனந்தபுர நகரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம்.
திருவனந்தபுரம் விஷ்ணுவிற்குரிய நகரம் என்பார்கள். இங்கு படித்தவர்கள் நிறைய இருக்கிழர்கள். என்ஜினியரிங்,

Page 57
a- 9 -
ம்ெடிசின்போன்ற பலதரப்பட்ட துறைகளிலும்பட்டம்பெற் றவர்கள் ரராளம்ாக இருக்கிருர்கள்.
கலேக் கல்லூரிகளும். சமஸ்கிருதக் கல்லூரிகளும் மருத் துவக் கல்லூரிகளும், விவசாயக் கல்லூரிகளுமாக ஊர் நிறையகல்லூரிகள் இருக்கின்றன.
அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை. விடுமுறை தினம். ஆதலினுல் பெரும் பாலான கடைகள் பூட்டப்பட்டிருந்தன. எங்கோ ஒன்றிரண்டு ஜவுளிக் கடைகளும், சில சில்லறைக் கடைகளும், சாப்பாட்டுக் கடைகளும் மட்டுமே திறக்கப் பட்டிருந்தன. ஆள் நடமாட்டமும் குறைவாக இருந்தது. வெள்ளை கம்பாய ரவிக்கை, தாவணி அணிந்த பெண்கள் ஓரிருவர் தென்பட்டனர். கேரள மக்கள் வெண்மை நிறத்தை பெரிதும் விரும்பினர்கள் எனக் கேள்விப் பட்டிருந்தேன். அதனல் தானே என்னவோ அந்தப் பெண்கள் வெள்ளை நிற ஆடைகளையே அணிந்திருந்தனர்.
திறத்திருந்த ஓரிரண்டு கடைகளிலும் வாங்கக் கூடிய தாக ஒன்று மிருக்கமில்லை. -
வழியில் ஒரு இடத்தில் ஒரு அரச மரத்தின் கீழ் பல அளவுகளில் (சைஸ்) நாக தம்பிரான் சிலைகள் கருங்கல்லி ஞல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. நேர்த்தியீன் பொருட்டு நாக தம்பிரான் உருவச் சிலைகள் செய்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
நாங்கள் போய்க்கொண்டிருந்த பாதையில் இருபக்கமும் பல வீடுகளைக் கண்டோம். ஒவ்வொரு வீட்டின் முன்புறத்தி லும் கோலம் போடப்பட்டிருந்தது. அங்கு காணப்பட்ட மக் கள் நாமக்குறி தரித்து பிராமளுள் பாணியில் உடை அணிந் திருந்தனர். அவர்கள் விஷ்ணு கோயில் அர்ச்சகர்களாயிருக்க

- 99 -
வேண்டும். மிகவும் ஆசாரமுடையவர்கள் போல் தோன்றி ஞர்கள். ஒரு சிலர் வீட்டின் கதவுகளைப் பாதிவரை சாத்தி விட்டு கதவிடுக்கின் வழியாக ளங்களை நோட்டமிட்டார்கள்
அந்தப் பாதை வழியாக சுற்றிப் போய் வேருெரு இடத் கிற்கு வந்து சேர்ந்தோம். எங்களுடன் வந்த ஒரு நண்பர் வேஷ்டி வாங்க வேண்டுமென்று சொல்லவே எல்லோருமாக ஒரு கடைக்குள் புகுந்தோம் அந்தக் கடையில் இருந்த தட் டுகளில் கைத்தறி நெசவு ஆடைகள் (வேஷ்டி, சேலை) மட் டுமே அடுக்கப்பட்டிருந்தன.
கடையினுள் சுமார் 18, 20 வயது மதிக்கத்தக்க இர ண்டு பையன்கள் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
'தம்பி இந்த வேஷ்டிகளை எடுத்து வெளியே போடுங்கோ. பார்ப்போம். என்ருர் நண்பர். பீரோ தட் டிலிருந்து நாலைந்து வேட்டிகளை எடுத்து மேசையில் போட் டான் ஒரு பையன். மஞ்சள்பட்டு நூலினுல் மெல்லிய கரை போடப்பட்ட கைத்தறி தெசவு வேட்டிகள் அவை.
"என்ன விலவரும்?"
நண்பர் கேட்ட கேள்விக்கு வெகு விபரமாகத்தான் (மலையாளத்தில்) பதில் அளித்தான் கடைப் பையன்.
திரும்பவும் நாங்கள் தமிழில் கேட்டோம், அவனும் அலுத்துக் கொள்ளாமல் மலேயாளத்திலேயே பதில் சொன்
ன்ை.
தமிழ் புரியாத அந்தப் பையனும் மலையாளம் தெரி யாத நாங்களும் ஒருவர் பாஷை ஒருவருக்கு விளங்காமல் திண்டாடிக் கொண்டிருக்சையில் மற்றப் பையன் வேருெரு வனை அழைத்துக் சொண்டு வந்தான். அந்தப் புதுப் பைய னுக்கு தமிழ் தெரிந்திருந்தது. அவனுடன் பேரம்பேசி நண் பர் வேட்டி வாங்கிக்கொண்டார்.

Page 58
号
區
 

H— ? —
"நீங்கள் மதராசிகளா?!
புதுப் பையன் கேட்டான்.
"இல்லேயில்லே நாங்கள் சிலோனிலிருந்து வருகிருேம் நீர் எப்படித் தமிழ் பேசப் பழகினீர்?"
"நான் கொஞ்ச நாள் தமிழ் நாட்டிலே இருந்தேன். அப்ப தமிழ் பேசப் பழகினேன்"
"இந்தப் பெடியன்களுக்கு மலேயாளம் மட்டுத்தான் தெரியுமோ?"
"இங்க எல்லாருமே மலேயாளத்தான் அதிகமாக கதைப் பாங்க. சினிமா ஸ்டாரு பத்மினி ராகினி கூட நம்மூர்க் காரங்கதானே."
தங்களுர்க்காரருக்கும், தமிழ் தெரியுமென்பதைச் சொல்ல நடிகையரை உதாரனம் காட்டியதோடு மட்டுமல் லாமல் ராகினியின் விலாசத்தையும் அந்தப் பையன் தந் தான். போகும் வழியையும் சொன்ஞன். ஆனூல் எமக்குப் போக வசதிப்படவில்ஃ.
கடையில் இருந்து புறப்பட்டு பூஜிபத்மஞபர் கோயில் அடைந்தோம்.
Graf கோயிலின் இஷாரியே இருந்ததனுலோ GJIT னவோ அசுத்தமாகக் காணப்பட்டது. கோயிலின் அருகா மையில் ஒரு சில கடைகளே இருந்தன. வெளியே இருந்து பார்த்தபோது கோயிலின் தோற்றம் அவ்வளவு செழிப்பான தாகத் தோன்றவில்லே
கோயிலினுள் காணப்பட்ட தூண்களிலும், சுவர்களி லும் சிறந்த சிற்ப வேஃப்டாடுகள் காணப்பட்டன. உள் வீதியில் காணப்பட்ட தூண்களில் பாவை விளக்குகள்

Page 59
am 1 0 2 aus
பொருத்தப் பட்டிருந்தன. அவற்றின் மேல் பித்தளையின லான தகழி விளக்குகள் தொங்கவிடப் பட்டிருந்தன. பாவை விளக்குகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாவம் காட்டி நின்றன.
ஆங்காங்கே பிரம்ாண்டமான குத்து விளக்குகள் காணப் பட்டன. கோயிலினுள் வெளியாக இருந்த ஒரு இடத்தில் சதுர வடிவில் கட்டடங்கள் காணப்பட்டன. கட்டடம் முழு வதும் அகல்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
மூலஸ்தானத்தில் இருந்த விஷ்ணு விக்கிரகம் ஆதிசே ஷன் மீது பள்ளி கொள்ளுமாப் போல அமைக்கப்பட்டிருந் தது. ஒரே பார்வையில் ஒரேயடியாக திருமாலைத் தரிசிக்க முடியவில்லை மூன்று வாசல்களின் மூலமாகவே தரிசிக்க வேண்டியிருந்தது. முதலில் காணப்பட்ட சிறு வாசலின் மூல மாக விஷ்ணு பெருமானின் முகம் மார்பு ஆகிய மேல் பகுதி யையும் நடு வாயிலின் மூலமாக இடை அரைப்பகுதியையும் மூன்முவது வாயிலினுரடாக பாதார விந்தங்களையும் தரிசித் தோம்.
அந்தக் கோயிலில் காணப்பட்ட ஒருசில அம்சங்கள் ான்னை வெகுவாகக் கவர்ந்தன.
ஒரு இடத்தில் சம்ார் 18 அடி உயரமுள்ள அனும்ார் சிலை கம்பிக்கிராதி அடிக்கப்பட்ட கூண்டுக்குள் காணப்பட் டது. அந்த ஆஞ்ச நேயருக்கு வெண்ணெய் சாத்தி நேர்த்தி வைப்பது அங்கு ஒரு வழக்கம். நாங்கள் போனசமயம் கூட ஆஞ்ச தேயருக்கு வெண்ணெய் சாத்தப்பட்டிருந்தது. அவ்வ ளவு அக்ோரமான வெய்யில் காலமாயிருந்தும் வெண்ணெ யில் ஒரு துளிகூட உருகியிருக்கவில்லை. ஈ, எறும்பு கூட மொய்க்கவில்லை. குழந்தைகளும், சிறுவர்களும் GLlunir Gaunrrif வருவோரும் அண்யாமல் இருப்பதற்காகவே கம்பிக் கூண்டிற்

- 103 -
குள் அனும்ாரைச் சிறைப் படுத்திவைத்திருந்தார்கள் போலும். இல்லாவிடில் சீதாப்பிராட்டியாரைச் சிைற மீட்கச் சென்ற ஆஞ்சநேயர் அங்கே சிறைப்பட்டுக் கொள்ள விரும் புவாரா?
கோயில் முழுவதும் அகல் விளக்குகளும் பெரிய, சிறிய குத்து விளக்குகளும் பாவை விளக்குகளும் தகழி விளக்குகளு மாக ஒரே விளக்குமயமாகக் காட்சியளித்தது. அவ்வளவு விளக்குகளையும் ஏற்றினல் எவ்வளவு அழகாயிருக்கு மென்று நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.
திருமாலுக்குரிய ஒணம் பண்டிகையை இங்குவெகு விமரி சையாகக் கொண்டாடுவார்கள்.
ஒல தூண்களில் பெரிய யாளிச் சிற்பங்கள் காணப்பட் டன. சிறிய கூரிய பற்களைக் கொண்ட யாளியின் வாய்க்குள் (டென்னிஸ் பந்து அளவுள்ள) ஒரு இரும்புக் குண்டு முன் வாய்ப் பற்களில் இருந்து தொண்டை வரைக்கும் உருண்டு போய் வரக் கூடியதாகப் போடப்பட்டிருந்தது. சிற்பிகள் அந்தக் குண்டை யாளியின் வாய்க்குள் இருக்கவிட்டே செது க்கி யிருந்தார்கள். யாளியின் வாயும் சரியாக மூடப்படாது சற்றுதிறந்த நிலையிலேயே காணப்பட்டது. திறந்த வாயினூ. டாக விரலைவிட்டு குண்டை மேலும் கீழுமாகத் தட்ட முடிந்தது,
இப்படியே சற்று நேரம் அதையும் இதையும் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பஸ்ஸை அடைந்தோம். கேரளா LonTp? லத்தில் திருவனந்தபுரத்தை மட்டுமே பார்க்க முடிந்தது.
NNN

Page 60
- 104 -
திருவனந்தபுரத்தை விட்டு சும்ார் ஆறு ம்ணிபோல் கிட்டத்தட்ட எழுபத்தைந்து மைல் தூரத்திலிருந்த குற்ரு லத்தை நோக்கிப் பயணமானேம். திருவனந்தபுரத்தைக் கடந்து போகப் போக பாதை ஏற்றமானதாக வளைந்து வளைந்து போய்க்கொண்டிருந்தது. இருமருங்கும் மண் குவி யல்களும், அடர்ந்த மரங்களும் காணப்பட்டன,
"குற்றுலம்" தமிழ் நாட்டில் இருந்தமையினல் திரும்ப வும் கேரள மாநில எல்லையைக் கடந்து தமிழ் நாட்டினுள் புகுந்தோம். மாலை ஆறு மணியின் பின் புறப்பட்டதஞல் இங்கேயும் பாதை ஒரங்களையும் வெளிப்புற காட்சிகளையும் அதிக நேரம் பார்க்க முடியவில்லை. ஆனல் அந்தப் பிர தேசங்கள் சற்றுக் குளிராய் இருந்தது.
வழியில் செங்கோட்.ை என்ற இடத்தில் சில இறங்கி சூடாக காப்பி அருந்தினர்கள். என்ஞல் சீட்டை விட்டுஅசையக்கூடமுடியவில்லை. கால்களிரண்டையும் சீட்டின் மேல் தூக்கிப்போட்டு, சேலைக்குள் அடக்கிக் கொண்டு ஜன்னல் ஓரமாக முடங்கிப் போயிருந்தேன். அதை விட குளிர் காரணமாக என் குரல் அடைத்துக் கொண்டு விட்டது, கதைத்தபோது உதடுகள் அசைந்ததே தவிர குரல் வெளியே வரவில்லை. குற்றுலத்திற்கு வரு முன்னரே இப்படி யென்ருல் ஊட்டிக்குப் போனல் என்னவாகுமோ என்று எண்ணி னேன்.
சிலர் இரவு உணவையும் செங்கோட்டையிலேயே முடித்துக் கொண்டார்கள். இரவு பத்தேகால் மணிபோல் தான் குற்றுலத்தில் நாங்கள் தங்கவேண்டிய "பாண்டியன் லர்ட்ஜை' அடைந்தோம். எனக்கென அறை ஒதுக்கப்பட் டவுடனேயே கை. கால், முகம் அலம்பிக் கொண்டு, உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டேன்.

ം 105 =
மறுநாள் காலை எழுந்தவுடன் "குற்ருலத்தில் தன் னிர் இல்லையாம்” என்ற சொற்கள்தான் முதலில் என் காதில் விழுந்தன. குற்ருலத்திலே தண்ணீர் வற்றிப் போகும் அளவிற்கு சீதோஷ்ண நிலை வெப்பமாயிருந்தது குற்ருலத்தின் பிரதான நீர் வீழ்ச்சியை விடவேறும் நீர் வீழ்ச்சி கள் மலையிலிருந்து மற்றப் புறங்களால் விழுந்து கொ? டிருந்தன. அவையும் குற்ற லத்தின் பிரதான நீர் விழி** யைச் சேர்ந்தவைதான். இந்தக் கிளைகளுள் ஒன்ரு  ை ஐந்தருவி” என்ற நீர் வீழ்ச்சியில் மட்டுமே ஓரளவு த? ணிர் இருந்தது.ஆகவே முதலில் ஐந்தருவிக்குச் சென்று குளித்துவிட்டுப்பின், பிரதான, நீர்வீழ்ச்சியைப் போய்ப் பார்ப்பது என்று ஏற்பாடாயிற்று,
குற்றலம் நீர் வீழ்ச்சி
"ஐந்தருவி காணப்பட்ட இடத்தில் வ்ேறும் பலர் நின்று குளித்துக் கொண்டிருந்தார்கள். கடலை விற்கும் கடைகள் நிறைய இருந்தன. ஓரிரண்டு பழக் கடைகளுமிருந்தன. ஏரா

Page 61
- 106 -
ளமான குரங்குக i மரத்திற்கு மரம்தர்விக் கொண்டு திரிந்தன.
குளிப்பதற்கென பஸ்ஸை விட்டுச் செல்லுமுன் ஜன் னல்களை எல்லாம் இழுத்து மூடிவிட்டுச் செல்ல வேண்டு மென்று எச்சரிக்கப்பட்டோம். குற்றலத்துக் குரங்குகள் அவ் வளவு குழப்படிக்கார குரங்குகளாம். பஸ்ஸிற்குள் நுழைந்து சாமான்களை எடுத்துக்கொண்டு போய் விடுமாம். அது எவ்வ ளவு உண்மையென்பதை விளக்க ஒரு சம்பவம் நடந்தது.
எங்கள் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்மணி குளியல்
முடிந்ததும் கடையில் வாங்கிய கடலைப் பாக்கெட்டை ஒரு கையில் பிடித்தபடி, மற்றக்கையில் ஈரத் துணிகளைத் தாங் கிக் கொண்டு காடை வீதிகளைப் பார்த்தபடி பராக்காக வந்து கொண்டிருந்தார். வாயினுள் கொஞ்ச கடலையைப் போட்டுக் கொறித்தடி சுவாரஸ்யமாக பேசிக் கொண்டே மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்த அவரை பின்னலிருந்து யாரோ சர்ரென்று இழுத்தது போலிருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் கடலைப் பாக்கெட்டைக் காணவில்லை. அவர் திரும்பிப்பார்த்த ப்ொழுது, பக்கத்திலிருந்த கட்டைச் சுவ ரின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த குரங்கு ஒன்று கட லேயை ஒவ்வொன்ருகக் கொறித்து அழகு காட்டிக் கொண் டிருந்தது. கொஞ்சம் அசந்தால் ஆளையே கொண்டு போய் விடுங்கள் போலிருந்தன அந்தக் குரங்குகள். இச்சம்பவத்
தைக் கண்ட மற்ற நண்பர்கள் மரியாதையாக கடலைப்பாக் கெட்டுகளை பஸ்சிற்குள் வந்தே திறந்தார்கள்.
மலைச்சாரலில் இருந்து அவ்வளவு வேகமில்லாது (தண் னிர் வற்றியிருந்ததால் வேகம் குறைவாய் இருந்தது.) மெது வான நடைபோட்டு வந்து வீழ்ந்த நீர்ப் பிரவாகத்தில் நாம்னைவரும் குளித்தோம். ஜில்லென்று இருந்தது, அங் கேயே இருந்த சிறிய ஐயனர் கோவிலுக்குச் சென்று கும் பிட்டோம்,

- 107 -
பின்னர் அங்கிருந்து புறப்பட்டு குற்றுலத்தின் பிரதான நீர்வீழ்ச்சியை அடைந்தோம்.
அகத்திய முனிவர் பொதிகை மலைக்கு ஒருமுறை போய்க் கொண்டிருந்த பொழுது குற்ருலம் வழியாகச் செல்ல நேர்ந் தது. அப்போது இங்கு விஷ்ணுதலமே இருந்தது. அங்கே இருந்த வைணவர்கள் சைவராகிய அகத்திய முனிவரை கோபத்துடன் துரத்தினர்கள். மனம் புண்பட்ட பெருந்த கைதானே ஒரு வைணவன் போல் வடிவு தாங்கி மீண்டும் கோயிலை அடைந்து ஆலயத்துட் பிரவேசித்து விஷ்ணு மூர்த்தியைத் தம்து திருக் கரத்தால் குழைவித்துச் சிவலிங்க மாகச் செய்து பூசித்தார்" என ஒரு கதை திருக்குற்றலநாத ரைப் பற்றி வழங்குகிறது. இது சம்பந்தரால் பாடப்பட்ட தலங்களுள் ஒறுன், விக்கிரங்களுக்கு வேஷ்டி, சால்வை உடுத் தப்பட்டிருந்தது. கோயில் கட்டடம் கொஞ்சம் பழம்ையா னதாகக் காணப்பட்டது. அழுத்தம் திருத்தமற்ற கற்றுரண் களும் இருந்தன. உள்வீதியில் ஓரிடத்தில் தலத்தைப் பற்றிப் பாடப்பட்ட திருப்பதிகங்களும் தலபுராணமும் செதுக்கப் பட்டிருந்தன. தலவிருட்சம் பலாமரமாகும்.
இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு 9-30 ம்ணி போல குற்றுலத்தை விட்டுப் புறப்பட்டோம். நீர் வீழ்ச்சிய்ை பற்றிக் குறிப்பிடும்படியாக எதுவும் இருக்கவில்லை. குற்ருல நகரின் மையப்பகுதியில் பேரறிஞர் அண்ணுதுரையின் உரு வச் சிலை காணப்பட்டது. காலஞ்சென்ற பெரியவர்களை கெளரவிக்கும் முகமாக தென்னிந்தியாவின் பல இடங்களி லும் சிலைகள் எழுப்பி இருந்தார்கள், இதைவிட நினைவு மண்டபங்களும் கூட அமைத்திருந்தார்கள்.
நாம் பஸ்சில் திண்டுக்கல், சிந்தாமணி, தென் காசி வழி யர்கப் போய்க்கொண்டிருந்தோம். பசுமையான வயல்களும்" சோளப் பயிர்களும், மிளகாய்ச் செடிகளும், பனை, தென்னை

Page 62
سیسے 1008 سے
மரங்களும் வழியில் காணப்பட்டன. ஒரு கிராமத்தில் காணப்பட்ட பஸ் நிலையத்திற்கு "காந்திஜி நூற்ருண்டு நி%னவு பேரூந்து நிலையம்" எனப் பெயரிடப்பட்டிருந்தது.
சும்ார் பதினென்றரை மணி அளவில் பூஜீவில்லிபுத் தாரில் இருத்த பூரீ ஆண்டாள் கோயிலை அடைந்தோம்.
AAMLMLSAMTLSLSMLSLS MMML MAETMSLiLMM AALSLiMY MSiLiiLMMMLEMMMLALAMSiMMMMTMLMMMMS
சூடிக் கொடுத்த நாச்சியார்
qAeAMAqAMMALL LqLqMMAMMLL LLLLLLSMMATS qMMLSS SAALLLAMMMMS YSSLMMMMME SLLES SSLSSSMAMTS
சிறந்த திருமால் பக் கரான விஷ்ணு சித் தர் தன் தோட்டத்து துளசி மாடத்தில் ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்து "அது தெய்வ அனுக்கிரகத் தால் கிடைத்தசெல்வ மெனக் கருதி வளர் த்து வந்தார். அப் பெண் குழந்தை பரு வமெய்தி மணப் பிரா யத்தை அ  ைட ந் த பின்னரும் பரந்தா tp 6öt நினைவாகவே இருந்து வருவதைக் கண்டு விஷ்ணு சித்தர் பெருமைப் பட்டுக் கொண்டாலும் பக்தி மேலீட்டினுல் மகள் செய்யும் காரியங்களி ரூல் மனம் வெதும்
 

is 109 as
யூரீ ஆண்டாள் கோயில் கோபுர தோற்றமும் ரதமும்
பினர். மலர்ச் சரம் தோடுத்து தான்குடிப் பார்த்து விஷ் ணுவுக்குச் சூடுவ தெல்லாம் தகாத செயல் என கண்டித்தும் அவள் கேட்கவில்லை.
முடிவில் ஒருநாள் தன் பக்தையை தன்னுடனே சேர்த் துக் கொண்டார் விஷ்ணு பெருமான். 'குடிக்கொடுத்த நாச் சியார் என போற்றப்படும் ஆண்டாளை தெய்வமாகக் கண்டு கொண்டாட எழுப்பிய திருக் கோயில்தான் பூரீ ஆண்டான் கோயில். மரங்கள் சூழ்ந்து சோலைப் பாங்காகக் காட்சி அளித் தது. ஆண்டாள் அவதார மெடுத்த இடமும் காணப்பட்டது. அழகான சிறிய கோயில்.
இங்கு அதிக நேரஞ் செலவழிக்காமல் புறப்பட்டோம்.
திருமங்கலம் என்ற இடத்தில் மதிய உணவை முடித்துக்
கொண்டு. . மேற்கொண்டு பயணத்தை தொடர்ந்தோம் வழியெல்லாம் ஒரே தென்னை மரங்கள் காணப்பட்டன.

Page 63
അ I 10 ബ
காட்டு வாசிகள்
"மேட்டூர் கேட்" என்ற இடத்தில் ரயில்கேட் கடவை பூட்டப்பட்டிருக்கவே பஸ்ஸை நிறுத்தினர் டிரைவர். அஸ் நின்றதுதான் தாமதம் கிலு மொலுவென்று பஸ்ஸைச் சுற்றி மொய்த்துக்கொண்டது அங்கே நின்ற ஒரு காட்டு வாசிக் கூட்டம். கூடைகளிலும் பெட்டிகளிலும் தாங்கள் வைத்துக்கொண்டிருந்த முந்திரிகைப் பழங்களை விற்பதற்காக இச்சு, மூச்சென்று காட்டுக் கத்தலாகக் கத்திக்கொண்டிருத் தார்கள் அவர்கள். வெளியிலிருந்து ஜன்னலினூடாக பஸ்ஸி ஒதுள்ளேயே வந்துவிடுவார்கள்போல் அவதிப் பட்டுக்கொண் டிருந்த அவர்களின் தொல்லை தாங்க மாட்டாது, அநேகமாக ஸ்ஸில் இருந்தஎல்லோருமே பழங்கள் வாங்கிக்கொண்டோம்
தூதுவழங்காயிலும் சற்று பெரிதான அளவில் முந்திரிகைப் பழங்கள் இருந்தன. விலையும் கொஞ்சம் குறைவாகவே இருந் தது. அங்கிருந்த காட்டுப்பகுதிகளில் வசிக்கும் ஆட்களாம் அவர்கள் அங்கு கிடைக்கும் காட்டு முந்திரிகைப் பழங்களைக் கொண்டுவந்து இப்படி விற்பது அவர்கள் வழக்கமாம். தாங் கள் கொண்டு வந்திருந்த பழங்கள் முழுவதையும் விற்றுப் போகும்வரை பஸ்ஸை நகரவிட மாட்டோம் என்பது போலக் காணப்பட்டார்கள் அந்தக் காட்டு வாசிகள். ஆண் களும், பெண்களும், சிறுவர்களுமாகச் சேர்ந்துகொண்டு அவர்கள் போட்ட கூச்சலினுல் காது இரண்டு பட்டுவிடும் போலிருந்தது.
அவர்களிடமிருந்து மீள முடியாமல் நாங்கள் பட்டுக் கொண்டிருந்த அவதியை ஸ்டியரிங் வீலில் கையை வைத்துக் கொண்டு சாய்ந்தபடி இருந்த டிரைவர் . பார்த்து வெகுவாக ரசித்துக்கொண்டிருந்தார். கண்டக்டர் வேறு ஒரு பக்கத்தில் நின்று சிரித்துக்கொண்டிருந்தார். அந்த ரயில்வே கடவையில்

سے 1 1 1 --سے
பஸ்ஸை நிற்பாட்டும் போதே, இந்த வேடிக்கை நடிக்கும் என டிரைவர் முன்னமேயே தெரிந்துவைத்திருந்தார்போலும். அடிக்கடி "டூர்' காரணமாக அவ்வழியே வந்து போகிறவர் அவர். ஒரு சிலர் தாங்கள் அவதியில் பணம் கொடுக்காமல் பழங்கள் வாங்கிக்கொண்ட கெட்டிக்காரத் தனத்தைப் பற்றி யும் ஜம்பம் அடித்துக்கொண்டிருந்தார்கள்.
ஆணுல் பழங்களை வாயில் போட்டு உமிழத் தொடங்கிய போது அங்குள்ள அனைவரினதும் முகங்கள் அஷ்ட கோண லாகச் சுழிந்ததை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரு கிறது.
காயும் பழமுமாக இருந்த அந்த பழங்களுள் அநேக மானவை புளிப்பானவையாக இருந்தது.
ஒரு இடத்தில் கிராமங்களின் பெயர்கள் ஒரே பட்டி மயமாகக் காணப்பட்டன. சுரக்காய்ப்பட்டி, குய்யநாய்க்கன் பட்டி, வெள்ளை மடத்துப் பட்டி, எட்டமநாய்க்கன் பட்டி என்பன இங்கு குறிப்பிடக்கூடிய சில பெயர்கள்.
நாம் நெடிய, வளைந்த பாதையின் ஊடாகப் போய்க் கொண்டிருந்த போது வெகு தொலைவில் பழநிமலையப்பரின் கோயில் கோபுரம் தெரிந்தது.
பழநியில் நாங்கள் தங்கிய "பூரீ தண்டபாணி நிலையமும்" சுமாரான வசதிகளை உடையதாய் இருந்தது. அன்று மாலை ப் பூஜையை பார்ப்பதற்காகப், பலர் ஹோட்டலில் இறங்கிய உடனேயே குளித்து உடை மாற்றிக் கொண்டு புறப்பட் {TIT56.

Page 64
سص 114 سے
աքյ5
ஒரு சமயம் கயிலயங்கிரிக்குச் சென்ற நாரதர் மாங்கனி பொன்றை சிவபெரும்ானுக்குக் கொடுக்க, அதைக் கண் னுற்று ஆசைப்பட்ட வேலவனுக்கும், இடையே "உலகத்தை யார் முதலில் சுற்றி வருகிருரர்களோ அவர்களுக்கே கனி உரியது" என ஒரு போட்டிவைக்க , தாய் தந்தையரைச் சுற்றி வந்து மாங்கனியைப் பிள்ளையார் பெற் றுக்கொண்டார். மயிலேறி உலகத்தைச் சுற்றிவிட்டு ஆவலு
டன் ஓடோடி வந்த முரு கன், கனி தனக்குக் கிடை க்காத கோபத்தினுலும் ஏமாற்றத்தினலும் சினந்து கொண்டு ஆடை ஆபரணங் க3ள களைந்தெறிந்து விட்டு "திருவாவினன் குடி" என் னும் இடத்திலுள்ள மலைச் குப்போய் இருக்க பெரு மானும் தேவியாரும் குமர னின் சினம் தணித்து "பழம் நீ" எனவும் "நீயே பழம்' எனவும், இன்னும் பலவா முகவும் புகழ்ந்து சமாதா னப்படுத்திய வரலாறு யாவ கும் அறிந்ததே. திருவாவி னன் குடியிலிருந்த அந்த மலே, இச்சம்பவத்தின் பின் "பழநி என வழங்கலா யிற்று.
யூரீ
கண்பதிக்கும்
பழநி ஆண்டவர்
 

- 113 -
மாலைப் பூஜைக்குப் போகாமல் பின் தங்கி நின்ற சில ரும் நானுமாக "பழநி மலையின் அடிவாரத்திலிருந்த கடை வீதியைப் பார்த்து வரப் புறப்பட்டோம்.
தேவலோகத்தில் இருந்து இறங்கிவந்த ஒளிப்பிழம்பு
சுமார் 450 அடி உயரமான மலையின் உச்சியில் அமைக் கப்பட்டு இருந்த கோயிலின் கோபுரம், மின்சார லைட்டுகள் பூட்டப்பட்டு ஜகஜ்ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருந் தது. வெகுதொலைவில், மேகத்தைத் தொடுமாற் போல் உயர்ந்திருந்த கோபுர அழகைப் பார்த்தபோது அது தெய்வ லோகத்திலிருந்து விடுபட்டுவந்த திவ்விய ஒளிப் பிழம்போ என எண்ணத் தோன்றியது.
நம்மையும்றியாது மனமும், உடலும் உருகிநிற்க சில நிமிடங்கள் கோபுர அழகைப் பார்த்துக்கொண்டே நின் ருேம். “பாகாய் உருகி நின்றன்" என்று கதைகளில் வாசித்தி ருக்கிறேன். அப்படியொரு தன்மைதான் பழநி யாண்ட வன் சந்நிதியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது ஏற்பட் டது. மனதிலுள்ள துன்பங்கள் தீய நினைவுகள் யாவும் அகற் றப்பட்டு நாமே தூய்மையாக்கப்பட்டு விட்டோம்போல் தோன்றியது. ஒரே எட்டில் தாவியேறி மலையை அடைந்து முருகன் பாதங்களில் விழுந்து ஆசைதீர கும்பிட வேண்டு மெனவும் தோன்றியது. தெய்வ சந்நிதானங்களுக்கு இருந்த ஆற்றல்தான் எத்தனை மகத்தானது. சில நிமிடங்கள் உற்று

Page 65
a 4 -
நோக்கி முருகனை நினைக்கு முன்னமேயே, எங்களே உருகி நிற்க செய்யும் அந்தம்ாபெரும் சக்தி, அவன் நினைவாகவே அல்லும் பகலும் தவம் இயற்றும் முனிவர்களையும், நாயன் மார்களையும் தன்பால் ஈர்த்து ஆட்கொண்டு அருள் புரிந்த தில் வியப்பில்லையே. அந்த பேரருட் சக்தியின் மகத்துவத் தினுல்தான் அவர்கள் உலக ஆசைகளைத் தூக்கி யெறிந்து விட்டு, தூய்மையான பேரின்பத்தை நாடிச் செல்லுகிருர் கள் போலும்,
ஏனே என்னை அறியாத ஒரு பரவசம் எனக்கேற்பட டது. திருச்செந்தூர்க் குமரனின் சந்நிதானத்தில் நின்ற போது ஏற்பட்ட பரவசம் வேறு. இப்போது திருப் பழநி யாண்டவனின் காலடிகளில் நின்ற போது ஏற்பட்ட பரவ சம் வேறு. சிலையாக மெளனமாக நின்று கொண்டே மணிக உள்ளங்களை ஆட்டிப்படைக்கும் விந்தையை நினைத்துக் கொண்டே மற்றவர்களோடு கடைவீதிப் பக்கமாக நடந்து செல்லலானுேம்.
மலையின் அடிவாரத்தில் ‘பாத விநாயகர் ஆலயமும் அதற்கு எதிரில் மீனுட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமும் அமைந் துள்ளன. ம்லையேறுவதற்கு சுமார் 820 படிகள் வரையில் இருக்கின்றன. அதைவிட மலைக்குச் செல்வதற்கு "லிப்ட்" போன்ற ஒரு கோச்சு வண்டியும் இருக்கிறது. விரும்பியவர் கள் "லிப்ட்" மூலமாகவும், போகலாம். படியேறி செல்லும் பாதையிலும் "லிப்ட் பாதையிலும் மின்சார லைட்டுகள் ஒளிர்ந்ததை கீழே இருந்தே பார்க்க முடிந்தது.
இங்கு நிறைய சனக்கூட்டம் காணப்பட்டது. ஏராள மான கடைகளும் இருந்தன. கோயிலுக்குத் தேவையான பல வகைப்பட்ட சாமான்களையும் கடைகளில் பெற முடிந் தது. கோயில் பிரசாதமான பஞ்சாமிர்தத்தை பல அள

um 15 masa
வான டின்களில் அடைத்து விற்கிருர்கள் இந்தப் பஞ்சாமிர் தத்தைப் பல நாட்களுக்கு வைத்துக் கொள்ளலாம். சுவா மிக்கு விபூதி, பஞ்சாமிர்தம் சாத்தி பூஜை செய்யும் வழக் கம் இங்குண்டு.
நேர்த்திக்காக தலையை ம்ொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கமும் உண்டு. மலையேற தொடங்கு முன்னர் பாத விநாயகருக்குக் கற்பூரம் கொளுத்தி வணங்கிக் கொண்டே ஏறத் தொடங்கினர்கள். இரவு ஏட்டரை ஒன்பது மணி வரை பழநிக் கோயில் திறந்திருக்கும்.
சற்று நேரம் கடைவீதியெல்லாம் சுற்றிப் பார்த்து விட்டு ஹோட்டலுக்கு அருகாமையில் இருந்த ஒரு கடை யில் இரவு சாப்பாட்டை முடித்துக் கொண்டு ஹோட்டலை அடைந்தோம்.
மறுநாள் காலை மலைக்குப்போக வேண்டுமென்ற நினைப் பில் சீக்கிரமாகவே நான் படுப்பதற்கு ஆயத்தமானேன்.

Page 66
سی۔ 16 1 حس۔
மறுநாள் காலையில் குளித்துவிட்டு, முதல்நாள் மாலை போகாமலிருந்த சில நண்பர்களும் நானுமாக் பாத விரு கரை தொழுது கொண்டு படியேறத் தொடங்கினுேம். சுமார் 185 படிகளைக்கடந்ததும் "யானைப் பாதை வழியாக நடக்கத்தொடங்கினுேம்,
திருவிழாக் காலங்களில் யானைகளை மேலே அழைத்துச் செல்வதற்கே இந்தப்பாதை பயன்படுத்தப்படுகிறது, Ligபேறிச் செல்வதிலும் பார்க்க இத்தப்பாதை கொஞ்சம் இலகுவாக இருந்தது. பாதையின் ஒருபக்கம் முழுவதும் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன. மற்றப் பக்கத்தில் ஆங் காங்கே சில மரங்கள் இருந்தன. அதைவிட சில இடங்களில் ஒற்பங்கள் வடித்து சில வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி டிருந்தார்கள். உதாரணமாக மாங்கனிக்குப் போட்டி நடந்த பவத்தை விளக்க பெருமானையும், தேவியாரையும் சிற் பங்களாக வடித்து மயிலோடு முருகனையும் மாங்கனியோடு கணபதியையும் உருவாக்கியிருந்தார்கள். இப்படி இன்னும் ஒல சம்பவங்களை, சிற்பங்களாக வடித்து அழகாக அமைத் திருந்தார்கள். தெய்வீகக் களையோடு காணப்பட்ட அவற் றைப்பார்த்தபோதே வணங்கத் தோன்றியது. அவற்றுட் சில வள்ளியை மணமுடிக்க வேடனுக வந்த சிற்பம், இடும் பன் மலை தூக்கி வந்த சிற்பம், . என்பனவாகும்.
காலைவேளையின் இங்கிதமான மலைக்காற்றை அனுபவித் தபடி சிரமம் தெரியாமல் சொற்ப நேரத்திற்கெல்லாம் ம% உச்சியை அடைந்து விட்டோம்.
கோயில் வாசலில் நிறைய பக்தர்கள் குழுமியிருந்தனர். மதிலுடன் கூடிய ஒரு அகலமான வெளி வீதியும் ஒடுங்கிய தாக ஒரு உள்வீதியும் காணப்பட்டது. தங்க, வெள்ளி ரதம் இழுப்பது அங்கு ஒரு விசேஷம், சிலர் தங்கள் நேர்த்தி களைத் தீர்ப்பதற்கு ஆயிரம் ரூபாவரையில் கொடுத்து தங்க ரதத்தை வீதியைச் சுற்றி இழுப்பிப்பதும் உண்டு. M

- 17 -
மூலஸ்தானத்தில் முருகவேள் ஆண்டிக் கோலத்தோடு நின்று கொண்டிருந்தார். காலைப் பூஜையைக் ரான :pடிய வில்லை சீக்கிரம்ே பஸ்ஸிற்குத் திரும்பவேண்டி இருந்ததால் சில நிமிடங்களில் கீழே இறங்கத் தொடங்கினேம். மலையில் பாதி தூரத்தில் இறங்கிக் கொண்டிருந்த போதே கீழே நின்ற எங்கள் பஸ்லண்டி கண்ணுக்கு தெரிந்தது. சாமான் கள் எல்லாம் பஸ்காரியரில் வைக்கப்பட்டு, கான்வஸ் துணி போட்டுக் கட்டப்பட்டிருந்ததும் ெேவளியே எங்கள் ஆட்கள் எங்களை எதிர்பார்த்துக்கொண்டு உலாவிக் கொண்டிருந்த தும் தெரிந்தது.
நாங்கள் வந்து சேர்ந்தவுடன் சுமார் 66 மைல்களுக்கப் பால் இருந்த கோயம்புத்தூரை நோக்கி பஸ்ஸும் புறப்பட் - القسسة
பொள்ளாச்சி என்ற இடத்தில் இருந்த "ஆண்டவர் கபே'யில் காலே உணவை முடித்துக் கொண்டு பஸ்ஸிற்குத் திரும்பியபோது மேல்சட்டை போடாமல் இடுப்பில் வேஷ டியணிந்து கொண்டிருந்த நாலைந்து சிறுவர்கள், தங்கள் வெறும் வயிறுகளில் தாளம் போட்டு ஏதோ சினிமாப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். மத்தளத்தில் அடித்து ஓசை எழுப்புவதைப்போல வயிற்றிலும் பார்த்துப் பாராமல் கைகளினல் ஓங்கி ஓங்கி அடித்து தாளம் போட்ட தைப் பார்க்கப் பாவமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது, நாங்கள் சில்லறை கொடுத்தவுடன் ஒருகும்பிடு போட்டு விட் டுப் போனுர்கள்.
வளைவான அகலம்ான சாலையில் பஸ் போய்க் கொண்டி ருந்தது. கோயம்புத்தூர் நகர் தொழிற்சாலைகளும் காரியால யங்களுமாக பெரிய டவுணுகக் காணப்பட்டது. அந்நகரை பஸ்ஸினுள் இருந்தபடியே மேலோட்டமாகப் பார்த்து விட்டுப் புறப்பட்டோம்.
கோயம்புத்தூருக்கும் ஊட்டிக்கும் இடைப்பட்ட தூரம் சும்ார் 60 மைல்கள்.

Page 67
- 118 അ
ஊட்டியை நினைத்த போதே குளிர்வது போல் இருந்தது. கால பத்தரை மணிபோல் மேட்டுப்பாளையம் என்ற இடத் தில் காப்பி குடித்தோம்.மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி க்கு 33 மைல் வரைதான் உள்ளது என்றும், ஆனல் அந்தத் தூரத்தைக் கடக்க மூன்று மணித்தியாலங்களுக்கு மேல் பிடிக் கும் என்று டிரைவர் சொன்னர். பாதை அம்ைப்பே நேரம் செல்வதற்குக் காரணம்.
மேட்டுப்பாளையம் கழிந்த பின்னர் கொஞ்சம் கொஞ்ச மாக் குளிர ஆரம்பித்தது. பாதையின் இரு மருங்கும் நிறைய மரங்கள் காணப்பட்டன. வெகு தொலைவில் காணப்பட்ட மலைச்சிகரங்களில் அந்தக் காலே வேளையிலும் இலேசான பனிப்படலம் தெரிந்தது.
நாங்கள் போய்க்கொண்டிருந்த ரோட்டிற்குச் சற்றுத் தள்ளி (எங்கள் தலைக்கு மேல் போவது போல) மேடாக அமைந்திருந்த பகுதியில் அமைந்திருந்த ரயில் பாதையில் குட்டிப் புகையிரதமொன்று போய்க்கொண்டிருந்தது. இந்த ாயில் வண்டி மற்றவற்றைவிடச் சின்னதாக இருந்தது. ச்ேசு, கீச்சு என்ற மெல்லிய சப்தத்துடன் மெதுவாக ஒடிக் கொண்டிருந்தது. ரயில் வண்டியின் என்ஜின் அறைக்குள் டிரைவர் இருந்து வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தார். வண்டிக்கு வெளியால் முன்புறத்தில் காணப்பட்ட இருக்கை போன்ற பகுதியில் இருவர் உட்கார்ந்திருந்தார்கள். பயங்கர மான-வளைவுகள் உள்ள, குறுகிய பாதைகளில் போக வேண்டி யிருப்பதால் முன் புறத்தில் இருவர் இருந்து கண்காணித்துக் கொள்கிருர்களென நினைத்தேன். இப்படியொரு அமைப்புக் கொண்ட ரயில் வண்டியை "ஆராதன இந்திப் படம் பார்த்தபோது முதற் காட்சியில் கண்டேன்.
மலேப்பிரதேசத்தில் செல்லும் ரயில் வண்டிகளில் இந்த ஏற்பாடு உள்ளன போலும்,

-۔ 119 سے
நேரான, நீண். பாதைகள் இங்கு கிடையாது, திடீ ரென்று முறிந்து வளைந்து சென்ற, செங்குத்தான, ஏற்ற மான பாதைகளே இருந்தன. அதன் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாம் கடந்து வந்த பாதை தெரிந் தது. வளைந்து, நெளிந்து பெரிய மலைப்பாம்பு போலத் தெரிந்த ரோட்டில் வந்து கொண்டிருந்த வாகனங்கள் எல்லாம் சின்ன சின்ன பொம்மை வண்டிகள்போல் தோற்ற மளித்தன. எங்கு பார்த்தாலும் மரக் கூட்டங்கள். சோலை சோலையாக கமுகும், மூங்கிலும், சவுக்கும், யூகிலிப்டஸும் வளர்ந்து நின்றன.
ஊட்டியை நெருங்க யூகிலிப்டஸ் மரங்களின் தொகை அதிகரித்தது. பச்சை இலைகளை விட, சாம்பல் பூத்தது போல் வெள்ளை நிற இலைகளே அதிகம் காணப்பட்டன. இவை சூரிய ஒளி படும்போது வெள்ளித்தகடுகளாகப் பிர காசித்தன. ஏனே தெரியவில்லை நெடிதுயர்ந்த நீண் ட கிறிஸ்தவக் கோயில் கோபுரங்கள் போல் தோற்றமளித்த இந்த யூகிலிப்டஸ் மரங்களின் அழகு என்னை வெகுவாகக் கவர்ந்தது. பாதையின் ஒருபுறம் மரங்களடர்ந்த மேடான பிரதேசம், மறு புறம் கிடு, கிடு பாதாளம். தப்பித் தவறி விழுந்தால், எலும்பைக்கூட எடுக்க முடியாத அதள பாதாள மான அந்தப் பகுதியைப் பார்த்தபோது பயங்கரமாகவிருந்
தது.
கொண்டை ஊசித் திருப்பங்கள்
இன்னுமொரு பெரிய பயங்கரம் 'கொண்டை ஊசித் திருப்பங்கள்" என்ற பெயருடன் எங்களுக்காக காத்திருந் தன. பெண்கள் கொண்டைக்குக் குத்த உபயோகிப்பார்களே

Page 68
-- Il 20 arpis
கோண்டை ஊசி அதிலுள்ள வளைவு நெளிவுகளைப் போல அமைப்புக் கொண்டதாய் இருந்ததினுல்தான் இந்தப் பெயர் ஏற்பட்டது.
கொண்டை ஊசியும் ஒரேயடியாக நீண்டிராமல் உள் வளைந்து நெளிவு சுளிவுகளுடன் காணப்படுவது போல, இந்த ரோட்டும் முதலில் ஒரேயடியாக நெளிந்து உள்ளே வளைந்து திரும்பவும் திடீரென்று மறுபக்கம் வளைந்து திரும்பு கிறது. சற்று வேகமாகப் போனலோ, அல்லது அஜாக்கிர தையாக இருந்தாலோ முன்புறம் மேட்டுப் பகுதியில் மோதிக் கொள்ளவோ, மற்றப் பக்க கிடு கிடு பாதாளத்தில் போய் இறங்கவோ வேண்டி நேரிடும். இப்படியான கொண்ட ஊசி திருப்பங்கள் சுமார் 13 வரையில் இருக்கின்றன என்று நினைக்கிறேன். இத் திருப்பங்களில் டிரைவர் பஸ்ஸை அவ தானத்துடன் திருப்பிக் கொண்டிருக்கும் போது கண்டக்டர் பின்புற வாசலில் நின்றபடி ரைட் என்று வாயால் சொல்லா மல் மணியை அழுத்தி சைகை செய்வார். இந்த மணி இப் படியான அவதியான கட்டங்களுக்கு உபயோகப் படுத்து வதற்காக அமைக்கப் பட்டிருந்தது. கண்டக்டர் குரல் கொடுப்பதனுல் டிரைவரின் கவனம் பாதிக்கப்பட்டு - விடும். என்பதற்காகத்தான் இந்த மணியான ஏற்பாடு. பஸ்ஸினுள் இருந்த அனேவரும் மூச்சுவிடக் கூட மறந்து போனவர்களாக கப்சிப் என்று இருந்தார்கள். சிலருக்குத் தலை சுற்றல், மயக் கம், வாந்தி போன்ற சில்லறை சுக வீனங்கள் கூட ஏற்பட் டிருந்தன.
வண்டியோட்டிகளுக்காக ஆங்காங்கே பல சாச்சரிக்கை போர்டுகள் போட்டிருந்தார்கள். ஒவ்வொரு வளைவிலும் வண்டி ஹாரனைப் பாவிக்கும்படி கேட்டிருந்தார்கள்.
ஊட்டிக்குப் பல இடங்களிலிருந்தும், இந்தியாவின் ஏனைய பாகங்களிலிருந்தும் பிரயாணிகள் வருவதால், அவர் களுக்கு உதவும் முகமாக, வழியில் சில இடங்களில் பிரபல

سست I 2? l -سس
ஹோட்டல்களின் பெயர் விபரங்களை போர்டுகளில் எழுதி நாட்டியிருக்கிருர்கள். இதஞல் சிலர் போகும் வழியிலேயே தங்குமிடங்களை பற்றிய தகவல்களைப் பெற முடிந்தது.
இந்தப் போர்டுகள் எல்லாம் ஒருபுறம் இருக்க கண்ணில் படக்கூடிய மரங்களில் சிவப்பு முக்கோண அடையாளம் இடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டியும் பெரிய மரங்களிலே தீட்டியும் வேறு ஒன்றையும், நினைவு படுத்தியிருந்தார்கள்.
பஸ்களும், கார்களும், லாரிகளுமாக இன்னும் பல வண்டிகள் எங்களை கடந்து போய்க்கொண்டும், வந்துகொண் டும் இருந்தன. ஒன்றை ஒன்று விலத்தும்போது எங்கே அவை அடிபட்டு விடுமோ என்று மனதிற்குள் திகிலாப் இருந்தது. கிர் கிர் என்ற இரைச்சலுடன் ஏற்றமான பாதை யில் போய்க்கொண்டிருந்த எங்கள் பஸ் கொஞ்சம் தவறி குலும், அப்படியே வழுக்கிக்கொண்டு கீழே, கீழேமிதந்து பள்ளத்தில் நைசாக உட்கார்ந்து கொள்ளும் எ ன் ற ஒரு விசித்திரமான க்ற்பனை எனக்குத் தோன்றியது. மோதிக் கொண்டால் பின்னடி போய் நைசாகவா உட்கார்ந்து கொள்ளும்?
கிடுகிடுவென்று தலைகீழாக உருண்டுபோய் சுக்குநூருகி விடாதோ.. என்ன. என் கற்பனையை நினைந்து நானே சிரித்துக் கொண்டேன். -
வழியில் ஆங்காங்கே பல சம்யக் கோயில்களும் காண ப்பட்டன ஓர் இடத்தில் பிள்ளையார் கோவில். இன்ஞேர் இடத்தில் கிறிஸ்தவக்கோவில். இன்னேர் இடத்தில் முஸ் லிம் தொழுகை இடங்கள் காணப்பட்டது. இதிலிருந்து அங்கே பல சமயத்தவர்களும் வாழ்கிருர்கள் என்பது புலப்
ill-gil.
ஒரு படியாக கொண்டை ஊசித்திருப்பங்களைக் கடந்து வந்த சந்தோஷத்தில் நாங்கள் தெய்வத்திற்கும், டிரைசுரு

Page 69
sm 22 -
க்கும் மனதிற்குள் நன்றியைச் செலுத்திக் கொண்டிருந்த போது அவரும் தனது நன்றியை செலுத்துமுகமாக ஒரு சிறிய வைரவர் கோயிலின் முன்னல் பஸ்ஸை நிற்பாட்டி கற்பூரம் கொழுத்தினர். அவரவரே கற்பூரம் கொழுத்து வித்து, பஸ்சிலிருந்தபடியே கும்பிட்டோம். தெய்த்ெதிடப் தான் எத்தனை நம்பிக்கை.
வழியில் ஓர் இடத்தில் ஆட்டு மந்தையை மேய்த்துக் கொண்டு ஒருவன் சென்று கொண்டிருந்தான். அவன் அழுக் கடைந்த நீண்ட காற்சட்டையும், ஷர்ட்டும் இரண்டு மூன்று ஸ்வெட்டர்களும் அணிந்திருந்தான். தலையை மூடி , மப்ளர் கட்டி, அதன்மேல் தொப்பி யும் போட்டிருந்தான். கையில் வைத்திருந்த தடியினுல் ஹேய்., ஹேய்... என்று ஆடுகளை ஒரமாக அடித்துத் துரத்தி எங்கள் பஸ்சிற்கு வழி விட்டான்.கால்களுக்குக்கூடகாலுறைகள் போட்டு சப்பாத்து அணிந்திருந்தான். கண், மூக்கு, வாய் கைகளை தவிர உட ம்பின் மற்றப்பகுதிகள் எல்லாவற்றையும் போர்த்துக் கட்டி க்கொண்டு, கம்பளி ஆட்டைப்போல் தோற்றமளித்த அவ னைப் பார்த்தபோது வேடிக்கையாகவும் சிரிப்பாகவும் இருந்தது. -
அவன் மட்டுமல்ல, அங்கு காணப்பட்ட மற்றவர்களும், அதிலும் தொழிலாளர்கள் . உடலில் பல சைஸ்களில் ஸ்வெட்டர்களை மாட்டிக் கொண்டிருந்தார்கள். சிலர் இது வும் பற்றதென்று தலைக்கு கறுப்புக் குல்லாய்களும் போட்டு க்கொண்டு உடலைக் கறுப்புக் கம்பளிகளால் போர்த்துக் கொண்டு, சின்ன, சின்ன கரும்பூதங்கள்போல் காட்சியளித் தார்கள், நாகரீக மாணவர்கள் கொஞ்சம் ஸ்டைலாக உடுத் திக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பஸ்ஸிற்குள்ளேயே நெடு நேரமாக உட்கார்ந்திருந்து கொண்டிருந்தபடியால் குளிர் அதிகம் தோன்றவில்லே.
தேயிலை பாக்டரிகள். பழ ஆராய்ச்சிப் பண்ணைகள்,ஆடு வளர்ப்பு ஆராய்ச்சி நிலையங்கள், ஊசித்தெழிற்சாலைகள்

---- l23 -س-
(இங்கு இன்ஜெக்ஷன் ஊசியிலிருந்து சாக்கு ஊசி, தையல் ஊசி வரை தயாரிக்கிருர்களாம்) ஆகியன ஆங்காங்கே காணப்பட்டன.
பேசும் ‘புலிகள்!
"குன்னூர்" என்ற இடத்தில் மத்தியானச் சாப்பாட்டிற் காக பஸ் நிற்பாட்டப்பட்டது. குன்னுரர் ஒரு கிராமமுமல்ல நகரமுமல்ல இரண்டிற்கும் இடைப்பட்டது இது.
இங்கு ஏராளமான வீடுகளும், கடை வீதிகளும் காணப் பட்டன. அன்று அங்கிருந்த மாரியம்மன் கோவிலில் ஏதோ விசேஷம் இதனுலோ என்னவோ ஏராளமான மக்கள் குழு மியிருந்தனர். இதைவிட திருவிழாக் கேளிக்கைகளில் கலந்து கொள்வதற்காக சிலர் உடல் முழுவதும் பல வர்ணங்களைப் பூசிக்கொண்டு ஆடிக் கொண்டும், பாடிக்கொண்டும் திரித் தார்கள். சிலர் உடல் பூராவும் முகங்களில் கூட கறுப்பு வர் ணத்தைப் பூசி, கன்னம், மூக்குப் பகுதிகளில் வேறு வர்ணங் களால் புள்ளிகள் போட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் உடலில் கறுப்பும், மஞ்சளுமாக வர்ணக்கோடுகள் கீறி நீண்டவாலும் வைத்துக்கொண்டு புலி வேஷம் போட்டிருந் தார்கள், தாவித் தாவி ஓடிக்கொண்டும் சர்ரென்று புலி யைப்போல் பாய்ந்து கொண்டும் புலியாகவே மாறிக் கொண் டிருந்தார்கள்.
முகத்திற்கு வர்ணம் பூசி கண்ணிேற்கு மைதீட்டி நீண்ட பின்னலிட்டுக் குஞ்சம் கட்டியும், பெரிய அஜந்தாக் கொண் டைகள் போட்டு, பூச்சூடியும், ஜிகின உடைகளை உடுத்துக் கொண்டிருந்த பெண்களும் இருந்தார்கள். அவர்கள் உண் மையிலேயே பெண்களா. அல்லது பெண் வேஷமிட்ட ஆண்களா என்பதும் எனக்குப் புலப்படவில்லை. இவர்கள்

Page 70
س--- 24 II -سمیه
எல்லாம் ஆடிப்பாடிக்கொண்டு, கடைகளிலும். வீடுகளிலும் போவோர் வருவோரிடமும் அன்பளிப்பு கேட்டுக்கொண்டி ருந்தார்கள். நானும் இன்னும் இருவரும் சாப்பிடச் சென்ற போது இரண்டு கறுப்பு புலிகள் வர்ணம் பூசிக்கொண்ட வர்கள்) வந்து என்னிடம் பணம் கேட்டார்கள். கறுப்பு வர்ணத்தை எங்கள்மேல் பூசிவிடுமாற்போல் நெருங்கி நின்ற அவர்களுக்கு அவசர அவசரமாக சில்லறை கொடுத்து அணு ப்பி வைத்தோம். அந்தப் பெயின் டை எங்கள் மேல் பூசி விட்டால் கழுவுவதற்கு அந்தநேரத்தில் எங்கே போவோம்? அவர்கள் அந்த பெயிண்டைப் போக்கிக்கொள்ள மண்ணெ ண்ணெய் பீப்பாவிற்குள் இறங்கிக் கொள்வார்களோ, என் னவோ யாருக்குத் தெரியும்?
சற்றுநேரம் கடைவீதியெல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டு பஸ்ஸை அடைந்தோம்.
சுமார் இரண்டு மணிபோல் பஸ் புறப்பட்டது, இப் போது நிறைய தேயிலைச் செடிகளையும், பூக்கன்றுகளையும் கண்டேன். கொத்துக் கொத்தாக இருந்த பூக்கள், அந்த மெல்லிய காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. ஒவ் வொரு வீட்டின் முன்னுலும் நிறையப் பூஞ் செடிகள்
காணப்பட்டன.
வழி நெடுக குளிர்மையான, பசும்ையான, இதமான காட்சிகளே என்ருலும் அவற்றை அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

- 15 -
MATTSiMMML MAEELSSLSLS S SMSSSLiMM S AMiMMqS MAEMiSLMLLMAMTSiMMAEEMMAtLEMSiMMAAEMiMMS ജി.
கண்ணிற்கிணிய ஊட்டி
~പ്പൽ പ്രഞ്ഞ് 'ഘന ൽ ഘത്:"പ"," "ജ്ഞ് "ടിൽ '(.*
மாலை நாலு மணியளவில் ஊட்டியில், நாங்கள் தங்க வேண்டிய ஹோட்டலான "தாஷப் பிரகா" ஷை அடைந் தோம். பிரமாண்டமான இந்த ஹோட்டல் அறைகளின் தரைக்கு கயிற்றுப்பாய் விரிக்கப்பட்டிருந்தது. பாரம் என நல்ல கம்பளிகள் போர்ப்பதற்காக வைக்கப்பட்டிருந்தன. ாங்கள் அறையில் காணப்பட்ட வெந்நீர்க்குழாய் வேலை செய்ய மறுத்துவிட்டதால் பச்சைத் தண்ணிராலேயே முகம் அலம்பிக்கொள்ள வேண்டி நேர்ந்தது. பச்சைத் தண்ணிரா அது. அப்பாடி! ஐஸ் தண்ணீரே குழாயிலிருந்து நேராக வருவது போலிருந்தது. கதவு, சுவர், ஜன்னல். கட் டில் சீட், தலையணை எல்லாமே ஜில்லென்று குளிர் ந் தன. இப்போது தான் மெல்ல மெல்லமாக குளிர் ஏறிக்கொண்டி ருந்தது. அப்படியிருந்தும் முகம் அலம்பிக்கொண்டு வெளி பே புறப்பட்டோம்.
ஊட்டி டவுன் ஒரே பிஸியாகக் காணப்பட்டது. கடை சளில் எல்லாம் மற்ற உடைகளைவிட கம் பளி யி ரூ லான ஆடைகளே சாரமாரியாக தொங்கிக்கொண்டிருந்தன.வீதியில் விலத்த முடியாத அளவிற்குச் சனக்கூட்டம் காணப்பட்டது மக்கள் அவசர அவசரமாக இங்கும் அங்குமாக ஒடிக்கொண் டிருந்தார்கள். குளிர் காரணமாக அவசரப்பட்டார்களோ அல்லது குளிர் அதிகமாகுமுன் வீட்டில்போய் மு டங் கிக் கொள்ரை வேண்டுமென்று அவசரப்பட்டார்களோ தெரி யாது. ஆனல் எல்லோரும் காலில் சக்கரங்கள் கட்டிக்கொண் டது போலப் பறந்தார்கள் மக்கள். சிவந்த மேனியராயும் அழகாகவும் இருந்தார்கள். மேலைநாட்டு நாகரீகம் வெகுவர் *ப் பரவியிருந்ததை, அவர்களின் 2.- Gao L , நடைகளிலிருந்து

Page 71
--سے 1236 سیسی
கண்டுகொள்ள முடிந்தது. லுங்கி, பெல் பாட்டம்ஸ், சால் வார், கமீஸ் அணிந்த பெண்கள் காணப்பட்டார்கள்.
கடைகளின் உட்புறங்கள் வெகு நேர்த்தியாக கண்ணைக் கவரும் வண்ணம் அலங்கரிக்கப் பட்டிருந்தன. அங்குள்ளவர் கள் தமிழை விட ஆங்கிலத்திலேயே அதிகமாக உரையாடி ஞர்கள். பெண்களுக்கான நவநாகரீக உடைகளும், காஸ் ltg-44th go GlavấdrřGMvoub (Costum e Jewel le ry ) , paosp Li இருந்தன.
ஒரு கடையில் ஏதோ சாமான்கள் வாங்கிக் கொண்டி ருந்த பொழுது ஒரு ஊழியர் என்னை நெருங்கி, "நீங்கள் எங்கேயிருந்து வருகிறீர்கள்?" என்ருர்,
'சிலோனிலிருந்து" என்றேன்.
* உங்களிடம் சிலோன் கரன்சீஸ் இருந்தால் தாருங்க ளேன். அதற்குச் சமமாக இந்தியன் நோட்டுக்கள் தருகி றேன்" என்ருர்.
**ஸாரி ஸார் என்னிடம் இல்லை?" என்று கூறினேன். ஏன் கேட்டார் என்பது புரியவில்லை.
ஊட்டியில் காணப்பட்ட பொலிஸ்காார் கூட கறுப்பு வர்ணத்தில் நீளக் காற்சட்டையும், ஷேர்ட்டும் அலந்திரு க்கக் காணப்பட்டனர்.
சனக் கூட்டத்தோடு கூட்டமாக நாங்களும் போய்க் கொண்டிருந்த பொழுது இடையில் ஒரு கடையில் ஏதோ ஒரு பொருளைக் கண்டுவிட்ட சிநேகிதி ஒருத்தி அந்தக்கடை
க்குப் போக வேண்டும் என்ருர்,
** யாராவது என்னுடன் வாருங்கோ. அந்தக் கடைக் குப் போய் விட்டு வருவோம்.’’ என்று சொல்லி, என்.

- 127 =
கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனுர். எனக்கு ஒன்றும் செய்யத் தோன்ற வில்லை. அவரின் பின் ஞல் போனேன். மற்ற நண்பாகள் "நாங்கள் சுப்பர் மார்க்கட்டு க்கு போகிருேம். உங்கள் வேலை முடித்தவுடன் அங்கே வாரு ங்கள். இல்லாவிட்டால் இங்கேயே நில்லுங்கள் திரும்பி வரும்போது சேர்ந்து கொள்கிருேம். வழிமாறி எங்காவது போய்விட வேண்டாம்' என்று சொல்லி விட்டு மேலே போய் விட்டார்கள்.
நானும், அந்த சிநேகிதியுமாக சில கடைகள் ஏறி இறங் கினேம். சில பொருட்களை (அவர் வாங்கிக்கொண்டார். வெளியில் வந்தோம். இனி என்ன செய்வது? எங்கே போவது? மற்ற நண்பர்கள் போன இடத்திற்கோ அல்லது ஹோட்ட லுக்குத் திரும்பிப் போகவோ, வழி தெரியாது. மற்றவர்கள் வந்து சேர்ந்துகொள்ளும் வரை கடையின் முன்னலேயே நிற்கலாம் என்று வெளியிலே நின்று கொண்டோம்.
நேரஞ் செல்லச் செல்ல குளிரும் படிப்படியாக ஏறிக் கொண்டிருந்தது. என் உடம்போ பச்சை தண்ணீராகச் சில்லிட்டுப் போய்விட்டது. சேலைத் தலைப்பிரூல் போர்த்துக் கொண்டிருந்தென்ன சேலை கூட பணியினுல் நனைந்து ஈரமாகி விட்டிருந்தது.
வீதியில் இளம் வயதுடைய (சில ஆண்களும், பெண் களும் (அவர்கள் தம்பதிகளோ, காதலர்களோ நானறியேன்) சன நெருக்கத்தையும், குளிரையும் சாக்காகக் கொண்டு கைகோர்த்த வண்ணம் நெருக்கியடித்துக் கொண்டு கூட்டத் தினரிடையே போய்க்கொண்டிருந்தார்கள்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வரையில் கடை யின் முன்னுலேயே நின்று கொண்டிருந்தோம்.
கால்கள் வலியெடுத்தன. அதற்கு மேலும் நிற்க முடியா மல் யார் யாரிடமோ விசாரித்துக் கொண்டு ஹோட்டலை

Page 72
- 128 -
அடைந்தோம், கொஞ்ச நேரத்தின் பின் அவர்களும் வந்து சேர்ந்தார்கள். எங்களைத் தேடியதாகவும் சொன் ஞர்கள்
பனிக் குளிரைப் பிடித்துக்கொண்டு இரண்டு மணித்தி பாலங்களை வீணுக்கி விட்டோமோ என்று என் மனம் தவித தது.அங்கேயே கால்கடுக்க நின்றதில் இரவுச் சாப்பாட்டை கூட கோட்டை விட்டு விட்டோம். பேசாமல் உடை மாத றிக் கொண்டு படுத்துக்கொண்டேன்.
அடுத்த நாள் காலைக் கடன்களை முடித்துக் கொள்வே பெரும்பாடாக இருந்தது. எங்கே திரும்பினுலும் குளிர். குளிர் . ஒரே குளிர் .
அன்று ஊட்டியை சுற்றிப் பார்த்துவிட்டு ஹோட்ட லுக்குத் திரும்பி வராமல் அப்படியே மைசூருக்குப் போவது என்பது தான் எங்கள் திட்டம். எல்லோரும் சாமான்களோடு பஸ்ஸை அடைந்தேர்ம்.
பஸ் வண்டி நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் நிறுத்தப்படுவதில்லை. பஸ் வண்டிகள் நிறுத்தப்படுவதற் கென டவுனுக்குள் வேறு ஒரு இடம் இருக்கும். எங்கஃ: இறக்கிவிட்டு விட்டு டிரைவரும். கண்டக்டரும் வண்டியுடன் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்விடுவார்கள். இரவுத்தர் கலுக்காக வண்டியை நிறுத்துவதற்கு காசு கொடுக்கவேண் பு யிருந்தது. "பஸ்ஸிற்குள் ஒரு சாமான்கள் கூட வைக்க வேண்டாம். இரவில் தொலைந்து போனல் நான் பொறுப் பாளியல்ல" என்று டிரைவர் சொல்லியிருந்தார். ஆகவே ஒவ்வொரு மாலையும் சாமான்களோடு இறங்கி காலையில் சாமான்களைக் கட்டிக் காவிக்கொண்டு பஸ்ஸில் ஏற வேண்டி யிருந்தது. ஒவ்வொரு இடத்திலும் இறங்கி ஏறும்போது ஏதாவது ஒரு சாமான் கூடவாக இருக்கும்.
வழியில் சாப்பிடுவதற்காக ஆரஞ்சு, முந்திரிகை, கடலை என்பன வாங்கி வைத்திருப்போம். பெயர்போன சாத்துக் குடி ஆரஞ்சுப் பழங்கள் 25, 30 சதத்திற்குப் பெற முடிந்

- 12.9 -
வழக்கத்தைவிட சற்று தாம்தித்தே பஸ்ஸிற்கு வந்து
சேர்ந்தார்கள் நண்பர்கள். முதல்நாள் மாலை ஊட்டி டவுனேச்
சுற்றியதின் பயணுக ஆண்கள் சுவெட்டர்களும், பெண்கள் ஸ்காவ்களும் கட்டியிருக்கக் காணப்பட்டார்கள்.
ஊட்டியில் நண்பர்களின் படகுச் சவாசி !

Page 73
- 130 -
SSLLSSLLSSLLSLLSSLSLLSLSSLLLSL LSLASLS SLSLSSSSLSLSSLSLSSLLSLSSSLS
() 6 ஊட்டி வாவி ! () () SLLSLSLLSLSSLLSLSLLSLLSLLLLLSLSLSSLSLSSLSLSSLSLLLSLLSLLLLLSLLLSLLSLLSSLLSSLLS
ஏதோ ஒரு கடையில் காலை டிபனை முடித்துக்கொண்டு * ஊட்டி வாவியை" அடைந்தோம். பிரமாண்டமான அந்த வாவியின் நடுவில் காணப்பட்ட தரைப்பகுதியில் யுகிலிப்ட்ஸ் மரங்களும், வேறு மரங்களும் காடுபோல் வளர்ந்திருந்தன. அந்த வாவியைச் சுற்றிப் பார்ப்பதற்காக ம்ோட்டார் படகு கள் வைத்திருந்தார்கள். படகில் சுற்றி வரும்போது ஊட் யின் மற்றப் பகுதிகளையும் பார்க்க முடிந்தது. படகில் சுற்றி வருவது ஒரு உற்சாகமே தவிர, வேறு குறிப்பிட விசேஷ மாக எதுவுமில்லை.
அங்கிருந்து பரோடா மாளிகையைப் பார்க்கலாம் என்று போனுேம். ஏதோ சில காரணங்களுக்காக அங்கு அன்று அனுமதிக்கப்படவில்லை. ஆகவே அங்கிருந்து ஊட்டி பூந் தோட்டத்தை அடைந்தோம்.
மலர்க் கூட்டத்துள் ஒரு மழலைக் கூட்டம்
எங்கும் கண்ணுக் கெட்டிய தூரம் வரை ஒரே ம்லர்க் க்ாடுகள். பேராதனைப் பூந்தோட்டத்தைப் போல் ஊட்டிப் பூந்தோட்டம் நேர்த்தியாக இருந்தது. மலர்ப் பாத்திகள் குரோட்டன்கள் என்பன அழகாக அளவாக வெட்டப்பட்டு வழக்கமான "பார்க்'குகள் போலத்தானிருந்தன.
எல்லோரும் மெதுவாக நடந்தபடியே பூந்தோட்டத் தைச் சுற்றிப் பார்க்கப் போயிருந்தார்கள்.

- 131 me
பார்க்கில் இருந்த மலர்க் கூட்டங்களைவிட, அங்கே விளையாடிக்கொண்டிருந்த "மழலைக் கூட்டம்" ஒன்று என்னை கவர்ந்திழுக்கவே நான் ம்ேற்கொண்டு போகாமல் அவர்கள் நின்ற இடத்தை அடைந்தேன். என்னுடன் இன்னெரு நண்பியும் சேர்ந்து கொண்டார்.
சுமார் இருபத்தைந்து சிறுவர்களைக் கொண்ட குழு வொன்று பார்க்குக்கு வந்திருந்தது. அந்த இளஞ் சிட்டுக்கள் வண்ண, வண்ணச் சட்டைகளோடு அங்குமிங்கும் ஒடியோடி கும்மாளம் இட்டுக் கொண்டிருந்தார்கள்! தன்னிச்சையாக அவர்களை விளையாட விட்டதனுல் அவர்களுக்கு ஒரே சந்தோ ஷம். மொழு, மொழுவென்று மெழுகுப் பொம்மைகள் போன்ற அழகான குழந்தைகள் அவர்கள்.
சற்றுத் தள்ளி இளைப்பாறும் மண்டபத்தில் இரண்டு கன்னியாஸ்திரிமார் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களைச் சுற்றி நாலைந்து குழந்தைகள் நின்றுகொண்டிருந்தார்கள். இவர்களை விட இரண்டு பெண்களும் குழந்தைகளைப் பார்ப் பதற்கு வந்திருந்தார்கள். ஏணுே எனக்கு அவர்களுடன் உரையாட வேண்டும் போல் தோன்றவே, அவர்களிருந்த இடத்தை அடைந்தேன்.
கண்ணுடி போட்டுக் கொண்டிருந்த கன்னியாஸ்திரியை நெருங்கி "குட் மானிங் சிஸ்டர்" என்றேன்.
"ஹலோ! வெரி - வெரி குட்மானிங்" என்ருர் சிரித் துக்கொண்டே. அவரது உட்சாகமான வரவேற்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
"நாங்கன் சிலோனிஸ்"
"ஆ! அப்படியா! இப்படி உட்கார்ந்து கொள்ளுங்கள் என்று என்னையும் நண்பியையும் உபசரித்தார்.

Page 74
om- I 32 o
"நீங்கள் எல்லாம் இங்கே உள்ளவர்களா?"
"ஆமாம். என் பெயர் சிஸ்டர் பெனிக்ன, இவர்கள் நிர்மலா நர்ஸரி ஸ்கூலைச் சேர்ந்தவர்கள்.இன்றைய தினத்தை இங்கு கழிப்தற்காக வந்திருக்கிருேம்”*
* மாலை நாலு ஐந்து மணியளவில் திரும்பி விடுவோம். அதோ அந்த சிஸ்டர் எங்கள் சிநேகிதி வெளிநாட்டில் இருப்பவர். விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிருர்* என்று தன் அருகில் புத்தகம் வாசிப்பதில் சுவாரஸ்யமாக ஈடுபட்டிருந்தமற்ற சிஸ்டரை அறிமுகப்படுத்தி வைத்தார். தக்காளிப்பழம்போல் இருந்த அந்த சிஸ்டர் எங்களைப் பார் த்து அழகான புன்னகை உதித்தார். “குட்மார்னிங் ஒஸ்டர்" என்றேன். "ஹலோ குட்மார்னிங்" உதடுகளை மெதுவாகப் பிரித்து மெதுவான குரலில் கூறிவிட்டுத் திரும் பவும் மென்மையாக புன்னகைத்து விட்டு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினுர் . பிரெஞ்சுக்காரரான அவருக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராததால் அவர் எங்களுடன் உரையாட வில்லை.
சிஸ்டர் பெனிக்ன பக்கம் என் கவனத்தைத் திருப்பி னேன். V
"நான் பிள்ளைகளின் தேவைக்காக கொஞ்சம் பிஸ்கட் டுகள் கொண்டு வந்திருக்கிறேன். இவை இந்தியாவில்ே தயாரிக்கப்பட்டவை. நீங்கள் கொஞ்சம் சாப்பிட்டு பாருங் கள். என்று சில பிஸ்கட்டுகளையும், டொபிகளையும் (Toffee) எடுத்து தந்தார்.
அவர் ஆங்கிலத்திலேயே உரையாடினர்.தமிழ் கொஞ்சம் தெரியுமென்ருர். "இவை இந்தியாவின் சிறந்த மிட்டாய் கள். பாரி மிட்டாய் என்று பெயர்' என்று சொல்விக் கொண்டு வாழைப் பழமும் தந்தார். அவர் அன்புடன் தந்த பிஸ்கட்டுகளைச் சாப்பிட்டோம்.

ܝ 33 7 =
*நல்லாய் இருக்கிறதா?
*ம். நல்லர்யிருக்கிறது மிக்க நன்றி " என்றேன் இந் திய புத்தக விளம்பரங்களில் கண்டிருந்த பாரி மிட்டாயைச் சுவைத்துக்கொண்டேன்.
அந்தக் குழந்தைகளுள் சிலர் புற்றரையில் உருளுவதும் திரும்ப எழும்பி ஓடுவதும்ாக விளையாடிக் கொண்டிருந் 5mrti கள். இரண்டு மூன்று குழந்தைகள் ஓரிடத்தில் உட்கார்த் திருந்து கொண்டு கதை அளந்து கொண்டிருந்தார்கள். இன் னும் சிலர் கொஞ்சம் தூரத்தில் நின்று கொண்டு புதிய விருந்தாளிகளான எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார்
56.
சிலோனுக்கு வரும் எண்ணம் எதுவும் உங்களுக்கு இல் &abul irri?”
*சிலோன் அழகான ஒரு நாடு என்று கேள்விப்பட்டி ருக்கிறேன். அங்கு வருவேன, இல்லையா என்றெல்லாம் நிச் சயமாகச் சொல்வதற்கில்ஜல 676öTOpri gyauri.
"நீங்கள் வருவதாய் இருந்தால் கட்டாயம் எனக்கு அறி வியுங்கள். உங்களை விருந்தாளியாக வரவேற்பதில் நானும் என் குடும்பத்தாரும் மிகவும் சந்தோஷப்படுவோம் என்று கூறி எனது முகவரியை அவருக்கும், அவரது முகவரியை தானும் பரஸ்பரம் பெற்றுக் கொண்டோம்.

Page 75
"ஓ! ஷ்வர் ஷ்வர், தாராளமாக எடுத்துக் கொள்ள லாம். எங்கே எல்லோரும் இங்கே ஓடி வாருங்கள் " என்று குழந்தைகளைப் பெயர் சொல்லி அழைத்தார். அவர்கள் வந் தால்தானே? கடைசியில் நாங்களே அவர்களை வரிசைப்படு த்தி எங்கள் நண்பரைக்கொண்டு ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டோம் .
"தாங்க்யூ வெரிமச் சிஸ்டர், கட்டாயம் உங்களுக்கு ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன். இந்தக் குழந்தைகளை என்னு டனேயே அழைத்துப் போக வேண்டும் போலிருக்கிறது’ என்றேன் உண்மையிலேயே கள்ளங் கபடமில்லாத அந்தக் குழந்தைகள் என்னை வெகுவாக கவர்ந்து விட்டார்கள். அது தான் பூங்காவைச் சுற்றிப் பாாக்கப் போகாமல் அங்கேயே நின்றுவிட்டேனே.
 

ܚ- 35 1 -ܚ
"இந்தக் குழந்தைகளுடன் பழகுவதே ஒரு குதூகலம் தான்- உங்கள் கடிகத்தையும், படத்தையும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பேன் எனக்குக்கூட புது நண்பர்களைப் பெற்றுக் கொள்வதில் நிறைந்த மகிழ்ச்சி ஏற் படுகிறது ." என்று கைகுலுக்கி தன் அன்பை மேலும் தெரி வித்துக்கொண்டார்.
இதே நேரத்தில் மற்ற நண்பர்களும் சுற்றிப் பார்த்து விட்டு வந்து சேரவே திரும்பவும் அந்த இரண்டு சிஸ்டர் மாருடன் கைகுலுக்கி விடைபெற்றுக் கொண்டேன். அங்கி ருந்து புறப்பட்டு ஊட்டி டவுனுக்கு வந்தோம். அந்த நேரங் கூட, மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. பொது விலேயே ஊட்டி நகரம் எந்நேரமும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நகரம் போலும்,
அங்கே ருேட்டுப் பெருக்குகிறவர்கள் கூலி வேலை செய்ப வர்கள் கூட நீண்ட காற்சட்டைதான் உடுத்தியிருந்தார்
கள்.
ஒரு சில நிமிடங்களை அங்கே செலவழித்துவிட்டு மைசூரை நோக்கிப் புறப்பட்டோம்.
வெள்ளிப்பபனி மலையும்
மின்னும் இலை மரமும்
கண்முன் காட்சியாகி
பின்னே நழுவி மறைய
நாங்கள் மெதுவாக, ஊட்டிக்கே உரிய அந்தக்காட் சிகளைக் கடந்து கொண்டு, ஆங்காங்கே இருந்த கொண்டை ஊசித் திருப்பங்களில் திருப்பி, வெளியேறிப் போய்க் கெண்டிருந்தோம்,

Page 76
مش 136 است.
என் கண்கள் பழக்கப்பட்டுவிட்ட அந்தக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்ததே தவிர, ம்னம் இலங்கையை நோக்கியே தாவியிருந்தது.
நான் சந்தித்த சிஸ்டர் பேணிக்ன மட்டுமல்ல. இன்னும் சிலரும், இலங்கையை பற்றி பலரகமான கேள்விகள் கேட் டார்கள். ஒவ்வைாரூத்தர் ஒவ்வொருவித அபிப்பிராய த்தை கொண்டிருந்தார்கள். ஒரு ஹோட்டல் சர்வர் சாதத் தைப் பறிமாறிக் கொண்.ே "ஏங்க சார் சிலோன்லே நம்ப ஆளுங்ககூட இருக்காங்களே?" என்றர். உடனும் நான் கேட்டேன்.
“உங்களுடைய ஆட்கள் இலங்கையில் எந்தப் பகுதியில் இருக்கிறர்கள்.
கண்டிங்க . அங்கே ஒரே மழையும், குளிருமாகவும் இருக்குமாங்களே. அங்கெல்லாம் குளிர் ஜாஸ்தியோ?"
*கண்டிப்பக்கம் கொஞ்சம் குளிராய்த்தான் இருக்கும் அதுகூட பழகிவிட்டால் சரியாய்ப்போய்விடும்." -
ஏன் நீங்களே இலங்கைக்கு வந்து பார்த்தால் என்ன?
ஐயையோ அதற்கெல்லாம் எங்களாலே முடியுங் களா? இதோ அவுங்கதானே வரப் போராங்களே. பார்த் துக்களாம்" என்ருர்,
எம்மவர்கள் உத்தியோகத்தின் பொருட்டு யாழ்ப்பாண த்திலிருந்து கொழும்பிற்கு வந்து தங்கியிருப்பதைப் போல, வேறு ஒரு ஊரில் இருந்து வந்து ஹோட்டல் ஒன்றில் அறை யெடுத்துக் கொண்டு தங்கியிருந்த ஜவுளிக்கடை "சேல்ஸ்மன்" ஒருவர் பேச்சுவாக்கில் கேட்டார்.
*சிலோன்ல என்ன இருக்கு பெரிய பெரிய கட்ட டங்கள் பாக்டரிகள் எல்லாம் இருக்கிறதா ? கிராஜுவே ட்ஸ். படித்தவர்கள், ஹை ஆபிஸர்ஸ் இருக்காங்களா?"

شست l37 صس
"ஓ! தராளமாக இருக்கிறது. படித்தவர்கள் நிறைய இருக்கிறர்கள் . உலகத்தின் பல இடங்களுக்கும்போய் ஒவ் வொரு துறையிலும் ஸ்பெஷலாக பிரத்தியேகமாக வடித்து விட்டு வந்தவர்களும் இருக்கிருர்கள். நவீனமான நாகரீக மான ஆபீஸ்கள், தெர்ழிற்சாலைகள், எல்லாம் இருக்கின்றன.
எனக்குத் தெரிந்த வரையில் ஈழத்து புகழைச் சொன் னேன் எல்லாவற்றையும் கேட்டு விட்டு அவர் ஆசைததும்ப வாயைப் பிளந்தார்.
"மாணிக்கக்கல் கூட நிறையக் கெடைக்கும் இல்லையா?*
ஏதோ நாங்கள் எல்லோரும் கீழே கிடக்கும் மாகணிக்க கற்களை சர்வசாதாரணமாகப் பொறுக்கி எடுக்கிருேம் என்று நினைத்துக் கொண்டாரோ என்னவோ? உடனும் சிந்துபாத் தின் அற்புதக்கதைகளை நினைத்துக் கொண்டேன்.அவர் என்ன செய்வார் தன் மனதில் பட்டதைக் கேட்டார்.
ஒருவரை பிடித்து வைத்துக்கொண்டு. இலங்கையைப் பற்றி அதில் வாழும் மக்களைப்பற்றி அவர்களின் கலாச்சா ாம், நடை, உடை பாவனைகளைப் பற்றிஇலங்கையின் செல்வ நிலையை பற்றி, பொருளாதாரத்தைப் பற்றி சொல்லி விட் டால் எல்லோரும் அறிந்ததாகுமா? நாமெல்லாம் இந்தியப் பத்திரிகையான குமுதம், ஆனந்த விகடன். கல்கி போன்ற வற்றை வாசித்து அரசியலிலிருத்து அடுப்பங்கரை வரை உள்ள அவர்களின் பழக்கவழக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக எவ்வளவைத் தெரிந்து கொண்டிருக்கிருேம். மாக்கோலம் இடுவதையும். கல்யாண ஊர்வலம் போவதையும் மொட் டைமாடியில் உலாவுவதையும் கதைகளில் படித் து விட்டு கண்ணுரடாக பார்த்தபோது எவ்வளவு சந்தோஷமாய் இரு ந்தது. சினிமாக்களாலும், புத்தகங்களாலும் அவர்களின் அன்ருட வாழ்க்கை எமக்கு எவ்வளவு அறிமுகமாய் இருந்

Page 77
தது. அப்படியே எங்கள் நாடான இலங்கையிலும் எமது வாழ்க்கையின் பிரதிபலிப்புகளாக நாவல்கள், கதைகள், வெளிவந்து அதை அந்நியரும் விரும்பிரசித்து வாசிக்கத்தக்க தாய் அமைய வேண்டும், எமது நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளும் கடல் கடந்து மற்றவர்களைக் கவரவேண்டும் என்று பலவாருக எண்ணிக் கொண்டேன். எமது நாட்டில் புத்தகங்கள், பத்திரிகைகள் நாவல்கள் இல்லாமலில்லை சிற ந்த எழுத்தாளர்கள் கூட நாளுக்கு நாள் பிறந்துகொண்டு டுதான் இருக்கிருர்கள் இருந்தும் எல்லோரும் (நான் கூட ஏன் அப்படி விழுந்தடித்துக் கொண்டு தமிழ் நாட்டுப் பத் திரிகைகளை வாசிக்கிருேம்? தமிழ் பிறந்தது என்னவோ அந்த மண்ணில் தான் என்ருலும் எங்களுள்ளும் தமிழ்ப் புலமை உடையவர்கள் இருக்கிறர்கள்தானே?
திடீரென்று பிரேக் போட்டு பஸ்ஸை நிறுத்தினர் டிரை வர். என்னவென்று பார்த்தேன். நான் தான் இலங்கைக் கும் இந்தியாவிற்குமாக ஓடிக்கொண்டிருந்தேனே ஒழிய பஸ் என்னமோ ஊட்டிக் காட்சிகளுக்குள் தான் நின்று கொண்" டிருந்தது.
ஒரு பக்கம் உயரமான மேட்டு நிலம் மறுபக்கம் கிடு கிடு பாதாளம். ஆனல் இங்கு காடாக இருக்கவில்லை. பள்ளத்தில் சல சலவென்று தண்ணிர் ஒடிக்கொண்டிருந்தது. இரண்டு யானைகள் புரண்டு, புரண்டு பாறைகளோடு, பாறைகளாக
குளித்துக் கொண்டிருந்தன.
* ஸார் ஸார்! அதோ பார்த்தீங்களா? இரண் டு யானைங்க குளிக்குது'
இந்த யானைக் குளிப்பை வேடிக்கை காட்டத்தான்
பஸ்ஸை நிறுத்தினர் டிரைவர்.

س- 39 } ---
தங்கள் நாட்டு யானைகள் நீராடுவதைக் காட்ட அவ ருக்கு அவ்வளவு ஆர்வம் இருக்குமானுல் எங்கள் நாட்டை பற்றி எடுத்துச்சொல்ல எங்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்க வேண்டும்.
பஸ்ஸில் இருந்த நண்பர்கள் இலங்கையில் யானைகளைக் கண்டதில்லையா? அல்லது யானை குளிப்பதைக் கண்டதில் லையா?. இருந்த போதிலும் ஏதோ புதுமையைக் கண்ட தைப்போல எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு பார்த் தார்கள். யானை குளிப்பதில் அப்படியென்ன விசேஷத்தைக் கண்டார்களோ, ஏன் நான் மட்டும் என்ன முதல் நாள் திருச்சியில் பொலிஸ்காரரை கண்டே அறியாதவள் போல, பார்க்கவில்லையா? அப்படித்தான் இதுவும் என்று நினைத்துக் கொண்டேன். இக் கரை மாட்டிற்கு அக்கரை பச்சை என்று சும்மாவா சொன்னர்கள்.
*சரி ஸார் . யானைக் குளியல் பார்த்தாச்சு. இனி போவோம்" என்று கூறினுர் நிர்வாகி டிரைவரிடம். பஸ் ஊரத்தொடங்கியது.
இங்கு நம்மவர்களிடையே அண்ணை, மச்சான், / ஐயா என்ற செர்ற்கள் எந்தவிதத் தொடர்பற்றவர்களையும் அழைக்க உதவுவது போல, அங்கே ஸார், என்ற பிரதர் சொற்கள் நாளாந்த வழக்கில் உள்ளன. டிரைவரைக்கூட "டிரைவர் சார்” என்றே கூப்பிடுவோம். தெருவில் போவோர் வருவோரைக்கூட, ஏதாவது கேட்க வேண்டுமா ஞல் 'ஸார்" என்று அழைத்தே கேட்டோம். சில ஹோட் டல்களில் கொஞ்சம் வயதான சர்வரைக் கூட "ஸ்ார்" போட்டே கூப்பிடுவோம். அதிலும் ஒரு வேடிக்கை என்ன வென்ருல், வயதாகி அப்பாமார் மாதிரி தோற்றமளிக்கும் சர்வர்களைப்பார்த்தபோது அவரை ஒரு சர்வர் என்று சொல்லமுடியவில்லை. வெள்ளை வேஷ்டி ஷர்ட் அணிந்து

Page 78
سیست- 40 i -س
தலையைப்படிய வாரி விட்டுக்கொண்டு நெற்றி நிறைய திரு நீறும், குங்குமப்பொட்டும், சந்தனப்பொட்டும்ாக அவர்கள் காட்சியளிக்கும் போது சர்வரெனக் கண்டு பிடிப்பது சற்று சிரமமாகவிருக்கும். அவர் அறையினுள் வந்து கூஜாத் தண் ணிரை மாற்றி வைக்கும் போதோ பெட்கீட்டுகளை மாற்றிப் போடும்போதோ தான் நாங்க ள் ஆச்சரியப்பட்டுப்
போவோம்.
சுத்தம்ான உடைகளுடன் வளையவரும் சர்வர் சளைக்கண் Lபோது இனங்கண்டு கொள்ள முடியாமல் போனதற்கு இன்னெரு காரணமும் இருந்தது ஓட்டல் அறைகளில் தங்கி யிருந்த மற்றும் சிலரும் உத்தியோகத்தரிலிருந்து தற்கா லிக பிரயாணிகள்வரை "அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந் தவர்கள் அநேகமானேர் வேஷ்டி, ஷர்ட் உடுத்தியிருக்கக் காணப்பட்டார்கள். அப்படியிருக்க எப்படி வேறுபடுத்திக் கண்டு பிடிப்பது?
மேலும் அங்குள்ளவர்கள் எங்களைக் குறிப்பிடுகையில் ஒலோன்காரர்” என்றுதான் குறிப்பிட்டார்கள் இலங்கை பர் என்றே, இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்ருே சொல்லவில்லை. அதுவே எங்களுக்கும் பழக்கமாகி விட்டது. நாங்களும் அவர்களுடன் கதைக்கும்போது சிலோன்காரர் என்ருே, சிலோனிலிருந்து வந்திருக்கிருேம் என்றே சொல் விக் கொண்டோம்.
சாப்பிடும்போது கறிகளுக்கு உப்பு பற்ருதுபோஞல், மாவாக்கப்பட்ட "டேபிள் சோல்ட்" டைக் கேட்டுப் பெற லாம் அதற்கும் நாங்கள் "உப்பு கொஞ்சம் பத்தாது கொண்டு வந்து தாருங்கோ’ என்ருல் சட்டென்று அவர்க ளுக்கு விளங்காது. 'ஸால்ட் கம்மி கொண்டு வர்றிங் களா.." என்ருல்தான் புரியும். உப்பு என்பதற்கு ஸால்ட் என்றர்கள். இப்படி சிலவார்த்தைகளை நாங்களும் அவர்களு டன் உரையாடுவதற்கெனப் பாவித்தோம். வார்த்தைக்கு வார்த்தை ஸார் போட்டுப் பேசினுேம்.

- !!! -
SLLLLLSLLLSLLLLLSLLLL LLLLLLLLSLLSLLYLLLLLCL LLLLLSLLLLLSS LM SLMLL LLLLLS
கோலாகலமான பிருந்தாவனம்!
நீர்த்தேக்கங்களில் இருந்து பாயும் நீர்க்கீற்றுகள் !
ஜில்லென்று வீசிக் கொண்டிருந்த குளிர் காற்று இப் போது "சில்லென்று மெதுவாகத் தவழ்ந்து கொண்டிருந்தது குளிரூட்டிக் கொண்டிருந்த ஊட்டியின் சூழலிலிருந்து விடுப ட்டு, வேருெரு சுவாத்தியத்தை அனுபவித்துக் கொண் டிருந்தோம்.
மாலை சுமார் நாலரை மணியளவில் மைசூர் ராஜ்ய
எல்லைக் கடவை காவுல் நிலையத்தை அடைந்தோம் மைசூர் ராஜ்யத்தினுள் காலடி எடுத்து வைத்தாயிற்று

Page 79
142 -
முன்னல் விரிந்து பரந்து கிடந்தது நீண்ட, நெடிய
Frray -
திடீரென்று அது ராஜபாட்டையாக மாறி வாழை, ம்ாவிலை தோரணங்களோடு காட்சியளிக்க முத்தும், ம “ளி யும் வைத்திழைத்த கிரீடங்களை சுமந்த மன்னர் அம்பாரி யில் பவனி வருவதுபோலவும், அவர்களைத் தொடர்ந்து தந்தப் பல்லக்சில் ரதியையொத்த பட்ட மகிஷிகள் ஒய்யா ரமாக வருவது போலவும், மேளதாள மங்கள ஒலிக ளோடு பிருந்தாவனத்துக் கண்ணனின் வேய்ங்குழலோ சையை கேட்பதுபோன்றும் ஒரு பிரமை எனக்குஏற்பட்டது வெறுங் கற்பனைதான்.
கற்பனையில், மனத்திரையில் நான் கண்ட இக்காட்சி யைப் போல் யாரும் எங்களை வரவேற்க வில்லையாயினும், ரோட்டின் இக்கரையிலிருந்து அக்கரைக்குக் குறுக்காக சப் பரம் போல் எழுப்பப்பட்டிருந்த நுழைவாயிலில் பொறிக் கப் பட்டிருந்த "வெல்கம் டூ மைசூர் ஸ்டேட்" என்ற எழு த்துக்கள் எங்களைக் கம்பீரமாக வரவேற்றன. அன்த அடு த்து சில மைல் தூரத்திற்கப்பால் காணப்பட்டது. ஒரு சிறிய விஷ்ணு கோயில்.பஸ்ஸை நிறுத்தி கிருஷ்ண பரமாத்மாவின் தரிசனத்தையும் பெற்றுக்கொண்டு பயணத்தைத் தொடந் தோம்.
சிவப்புக் கம்பளம் விரித்தாற் போன்று கண்ணுக்கெட் டிய தூரம் வரை செம்மண் நிலப்பிரதேசம் காணப்பட்டது. ஆங்காங்கே பலவகை மரங்களும் செழிப்பாக வளர்ந்து இருந்தன.
அழகு வளமும் செல்வக் கொழிப்பும் நிறைந்த மைசூர் 74, 112 சதுர மைல் பரப்பையும், இரண்டு கோடி, சனப் பெருக்கத்தையும்,கொண்டது. இந்த பரப்பினுள் 20 சதுர

மைல்களை தனக்குள் அடக்கிக் கொண்டுள்ளது மைசூரின் பிரசித்தி பெற்ற "கோலார்’ தங்க வயல். கடல் மட்டத் திலிருந்து 2524 அடி உயரமுடைய மைசூரின் சுவாத்திய நிலை குளிரும் இல்லாமல் வெப்பமும் இல்லாமல் மிதமான தாய் இதமாய் இருந்தது,
“ஸார். கண்ணுடியினூடாகப் பார்த்து குரல் கொடுத் தார் டிரைவர். என்ன டிரைவர் ஸார்" என்று கொண்டே அவரை அணுகினர் நிர்வாகி.
*ஹோட்டல் கிருஷ்ணராஜ சாகர்"
"பிருந்தாவனத்திலே இந்த நேரம் லேட் போட்டிடு வாங்க. அதைப் பார்த்துவிட்டு ஹோட்டலுக்குப் போக Gvarlom?'' srsör(U?rf g-6ðrarf...
கலைந்த கேசமும் வியர்த்த முகமுமாக அவர் வெகுவாகக் களைத்துப்போய்க் காணப்பட்ட போதிலும், எங் களை அழைத்துப்போய் பிருந்தாவனத்தைக் காட்டவேண்டும் என்ற அவரது ஆர்வம் உண்மையிலேயே பாராட்டத்தக்கது.

Page 80
- 144 -
"ம்,. பிருந்தாவனத்திலே லைட்னிங் ஜோராயிருக்கும். போயிடலாம். ஸார் கண்டக்டரும் தன் பங்கு க்கு ச் சொன்னுர், х
சுமார் ஏழு மணியளவில் பிருந்தாவனத்தை அடைந் தோம். இரவு நேரம்ாகிவிட்டதனல் எல்லோரும் ஒன்ருகவே போய் சுற்றிப் பார்த்து வரலாம் என்று நிர்வாகி அபிப்பிரா பப்படவே எல்லோரும் இறங்கிஞர்கள். உடம்பு அசெளகரி யம் காரணமாகவும் மறுநாளும் பிருந்தாவனத்திற்கு வருவ காக இருந்ததாலும் நான் நண்பர்களிடம் சொல்லிவிட்டு பஸ் சிலேயே இருந்தேன்.
நண்பர்கள் பிருந்தாவனத்தைச் சுற்றிப்பார்க்க போகவே ஒன்னர் நான் பஸ்சில் இருத்தபடியே பிருந் காவனத்தின் காட்சிகளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். பஸ் நிற் பாட்டப் பட்டிருந்த இடத்தில் நிறைய பெரிய மரங்கள் சுற்றிவர இருந்தபடியினல் பிருந்தாவனத்தின் உட்புறத்தை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.
கருவானத்தின் மின் னும் நட்சத்திரங்களைப்போல இருட்டின் பின்னணியில் பெரிதும், சிறிதுமாக ஒளிவீசிக் கொண்டிருந்த மின் விளக்குகள் கருநிற வெல்வெட்டில் பதித்த வைரச் சிமிழ்களாக ஜொலித்தன. &
நீலமும், மஞ்சளுமாக சிவப்பும் பச்சையுமாக.ஊதா வும் ஆரஞ்சுமாக பல வண்ணக் கலர்களில் பூட்டப்பட்டி ருந்த மின்விளக்கொளியில் ஆங்காங்கே காணப்பட்ட சதுர மான வட்டமான நீர்த்தேக்கங்களின் கரைப் பகுதியிலிருந்து கீற்றுக்கீற்ருகப் பாய்ந்துசென்ற நீர்க்கற்றைகள், நடுமையத் தில் அந்தரத்தில் சந்தித்து திரும்பவும் உதிர்த்துவிட்ட பூச்சரங்களாக, சிதறி விழும் கோமேதகங்களாக, வைரங்க

അ 145 -
ளாக மாணிக்கங்களாக, சொரிந்த அழகு கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.
ஒருமுறை கண்ணைச் சுழற்றி பிருந்தாவனத்தைப் பார்த் தபோது இவ்வளவு காட்சியையும் காணமுடிந்தது. பிருந்தா வனத்துக் கோலாகலத்தினின்று விடுபட்டு பஸ்சின் அருகா மையில் இருந்த மரங்களடர்ந்த இருட்டுப் பகுதியில் நடந்து கொண்டிருந்த குதூகலமான காட்சி ஒன்றை க்வனிக்க ஆரம் பித்தேன்.
பெரிய ஒரு மரத்தினடியில் சுற்றி வளைத்து உட்கார்ந்து கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தினர், ஆரவாரம்ாக சமையலில் ஈடுபட்டிருந்தார்கள். தற்காலிகமாக அமைக்கப் பட்டு இருந்த அடுப்பு தகதகவென்று எரிந்து கொண்டிருந் தது. அதன் மேலேயிருந்த பெரிய பாத்திரத்தில் ஏதோ' தள தள வென்று கொதித்துக் கொண்டிருந்தது. நாலந்து நடுத்தர வயது பெண்மணிகள் தேங்காய் திருவுவதும், மரக் கறி நறுக்குவதும், அரிசி களைவதுமாக வெவ்வேறு வேலைக ளில் ஈடுபட்டிருந்தார்கன். சற்றுத்தள்ளி ஒருவர் தன்மகனு டன் (பன்னிரண்டு வயதிருக்கும் சேர்ந்துகொண்டு ஒரு 2,...' கோழியை துண்டாடிக் கொண்டிருந்தார். அவர்களைச் சேர்ந்த இன்ஞெரு சிறுவனும், சிறுமியும் சற்றுத்தள்ளி இருந்த கடைக்குப் போவதும் திரும்பி வருவதும் வந்து சட்டி பானைகளை எட்டிப் பார்த்து திட்டு வாங்குவதுமாக அலேந்து கொண்டிருந்தனர்.
அன்றையப் பொழுதைக் கழிப்பதற்காக பிருந்தாவனத் திற்கு வ ந்தவர்கள், ஜாலியாக சமையலில் ஈடுபட்டிருக்க வேண்டுமென நினைத்துக்கொண்டேன்.
கசமுசவென்று கதைத்துக் கொள்வதும். as Llanrri i luft ரென்று பாத்திரங்களைச் சப்தப்படுத்துவதுமாக அவர்கள்

Page 81
- 146 -
ஒரே ஆரவாரப்பட்டுக்கொண்டு இருந்தார்கள் கோழிக் கறியோடு விருந்தல்லவா? நான் அவர்களைக் கவனிப்பதைத் கண்டுவிட்ட கண்டக்டர்.
"பாத்தீங்களா அம்மா கோழிக்கறி காய்ச்சுருங்க இஸ்லாம்காறங்கபோலிருக்கு. அப்படியே ஜாலியா வந்தி ருக்காங்க" என்ருர், அப்போதுதான் நான் கண்டக்டரைக் கவனித்தேன். அவர் வாளியும் கையுமாக பஸ்ஸைக் கழுவிக் கொண்டிருந்தார். காவேரித் தண்ணீரைக் கண்டு விட்டா ரல்லவா! சும்மாயிருப்பாரா?
ஆமாம்! காவேரி ஆற்றுத் தண்ணீரை மறித்தே, பிருந் தாவன உபயோகத்திற்காக "கிருஷ்ணராஜ சாகர் அண என்ற பெயருடன் சுமார் 8600 அடி தூரத்திற்கு அணைகட்டு கட்டியிருக்கிருர்கள். ܝ ܝ
கண்டக்டர் கட்டைக் காற்சட்டை உ டுத் தி க் கொண்டே கழுவிக்கொண்டிருந்தார். "ஜட்டி" என்று அழைக்கப்படும் அந்த வகைக் காற்சட்டையை உள்ளே உடுத்து அதன் மேல்தான் பெரும்பாலான ஆண்கள் சாரeோ? வேஷ்டியோ அணிவார்கள். சில காற்சட்டை களில் பாக்கெட் கூட இருக்கும், அதற்குள் காசுகூட வைத் திருப்பார்கள். இங்கேயும் ஒருசிலர் அப்படி உடுத்துக் கொள் வதுண்டென ஒரு நண்பர் கூறினர்.
ஒருசமய்ம் ஒரு கடைக்காரரிடம் காசும்ாற்ற எத்தனித் தபோது அவ ர் மற்ற ப் பக்க ம் திரும்பிக்கொண்டு உள்ளே அணிந்து கொண்டிருந்த ஜட்டிப் பாக்கெட்டிலிரு ந்து பணம் எடுத்துத் தந்தார். முதன்முறை அப்படிக்கண். போது சிரிப்பாகவும் சங்கடமாகவும் இருந்தது.
சுமார் எட்டுமணிபோல நண்பர்கள் வந்து சேரவே நாம் மைசூர் தாஷப்பிரகாஷ் ஒட்டலுக்குப் புறப்பட்டோம் அது ஒரு பெரிய நாகரீகமான ஒட்டல் கப்பல் போன்ற பெரிய கார்களும், நவநாகரீக உடையணிந்தவர்களும் வெளியே காணப்பட்டார்கள். நாங்கள் தங்கியிருந்த அறை யும் நல்ல வசதியை உடையதாயிருந்தது.

- 147 -
சந்தன மணம் கமழும் மைசூர்
பண் ങ്ക
மறுநாள் காலை எட்டு மணியளவில் எல்லோரும் பஸ் சில் ஹோட்டலை விட்டுப் புறப்பட்டோம். பகலில்தான் மைசூர் நகரின் அழகிய பெரிய கட்டிடங்களையும், விசாை ம்ான ஹோட்டல்களையும், அலங்காரமான நவீன கடை வீதிகளேயும் நன்முகப் பார்க்க முடிந்தது.
நகரின் இன்னுேர் பக்கத்தில், ரோட்டின் மையத்தில் அழகான ஒருமண்டபம் கட்டி, அதனுள் பூஜீ சாமராஜ வட யரின் உருவச் சிலையை எழுப்பியிருந்தார்கள். அதைக் கண் ணுற்ற போது கொஞ்சகாலத்திற்கு முன் மைசூர் ராஜ்யம் மன்னராட்சியில் எவ்வளவு அலங்காரங்களுடன் காட்சியளி த்திருக்கக் கூடுமென்று எண்ணிப்பார்த்தேன், இங்கு வெகு நாகரீகமானவர்களையும், அதே சமயம் சாதாரணமானவர் களையும் காண முடிந்தது. மைசூர் பெரிய மாநிலமாக இருந்தபோதிலும் அங்கு மளுேகரமான ஒரு அமைதி குடி கொண்டிருந்தது. .
சுமார் எட்டரை மணி அளவில் லலித ம்ஹால் அர ன்மனையை அடைந்தோம். அது இப்போது அரசாங்க விருந்தாளி மன்றமாக இருக்கிறது. உட்புறம் பெரியவரா த்தாக்களையும், விசாலமான அறைகளையும், 150 பேர் ஒரே

Page 82
an. 148 m
லலித மகால் பலஸ்
கபடியாக இருந்து சாப்பிடக் கூடிய டைனிங் ஹாலையும் சித்திரம் தீட்டப்பெற்ற சுவர்களையும்கொண்டு அழகாக விளங்கியது அந்த பிரமாண்டமான மாளிகை.
"சாந்தி நிலையம்" என்ற தமிழ்ச் சினிமா படக்காட்சிகள் அந்த மாளிகையிலேயே எடுக்கப்பட்டது என அங்குள்ளவர் கள் கூறினர்கள்.
அங்கிருந்து 'பூg சாமுண்டீஸ்வரி" கோயிலுக்குப் போ னுேம், மைசூரில் இது பிரசித்தி பெற்ற ஒரு கோயில், நாங் கள் போனசமயம் பூசைநேரம் அல்லாததால் கோயிலின் உட்புறத்தைப் பார்க்க முடியவில்லை, வெளியே கற்றிப்
 
 
 

149 -
பார்த்துவிட்டு வந்தோ ம் வெளி யில் காணப்பட்ட சிற்ப, சித்திர வேலைப்பாடு களிலிருந்து அது ஒரு அழ கான கோயிலாக இருக்க
வேண்டுமென எண்ணிக் கொண்டோம். வழியில் பார் ப்பதற்கு பயங்கரமாகத்
தோற்றமளித்த ம்கிஷாசுரன் சிலை காணப்பட்டது. ஒரு கையில் பாம்பையும், மறு கையில் ஓங்கியபடி வாளை யும் பிடித்துக் கொண்டு நின்ற அந்த ராட்சத உரு வத்தின் கீழ் நின்று ஒரு படம் எடுத்துக் கொண்டா ர்கள் சிலர், w
மகிஷாசுரன் சிலை
அங்கிருத்து சாமுண்டி மலையிலிருந்த திருநந்தியைப் பார்க்கப் போனுேம், பெயர்தான் சாமுண்டிமலை என்று இருந்ததே தவிர, அதொன்றும் பெரிய மலை அல்ல. ரோட் டிலிருந்து சற்று மேடாகக் காணப்பட்ட ஒரு பீடமே ஆகும். அவ் வழியால் போய்க் கொண்டிருந்த ஒரு சிற்பி. அங்கே இருந்த பெரிய கருங்கல்லைப் பார்த்துவிட்டு அந்த நந்தியைச் செதுக்கினராம். மரங்களடர்ந்த, உயரமான பீடத்தில், அந்தப் பிரமாண்டமான நந்தி சகல அலங்கா ரங்களுடனும் தனியாக வீற்றிருந்தது. நந்தியைச் சுற்றி கோயிலோ, கட்டிடங்களோ எதுவும் கிடையாது. கருங்கல் லில் செதுக்கப்பட்டிருந்த போதும் உடம்பு முழுவதும் மணிகளோடும், சங்கிலிகளோடும், திருநீற்றுக்குறிகளோடும்

Page 83
سے 150 سے
சாமுண்டி மலையிலுள்ள திருநந்தி
(யாவும் கருங்கல்லிலேய்ே பொலியப்பட்டிருத்தன) நெற் றிச் சட்டியோடும் ஏதோ ஒருவித காந்தியோடும் காணப்பட்ட திருநந்தியை சற் று நேர ம் சுற்றிப்பார்த்துவிட்டுப் புறப்பட்டோம்.
இடையில் 'ஹான்டி கிராவ்ட் சேல்ஸ் எம்போரியம்" என்ற கடையில் பஸ் நிற்பாட்டப் பட்டது அங்கு சந்தன மரத்தினலான பலவகைப்பட்ட பொருட்களும் விற்பனைக்கு இருந்தன. பதினைந்து, இருபது நிமிஷங்கள் அந்த கடை யில் நின்று சில சமான்களை வாங்கிக்கொண்டோம்.
அடுத்ததாக மைசூர் அரசாங்க பட்டு உற்பத்தி தொழிற் ச்சாலையை பார்வையிடப் போளுேம், பட்டுப் பூச்சி வளர்ப் பதிலிருந்து, நெய்த ஆடைகளை விற்பதுவரை பலரகப்பட்ட வேலைகளும், கச்சிதமான அந்தக்கட்டடங்களுள் நடைபெற் றுக்கொண்டிருந்தன. இழைகள் நூல்கள் வேழுக்கப்படுவதை
 

ー 151 (TA
யும், வேஷ்டிகள் சேலைகள் நெய்யப்படுவதையும், ஆடைக ளுக்கு வண்ணச் சாயங்கள் ஏற்றப்படுவதையும், சுற்றிப்பார் துக்கொண்டு பட்டுத்துணிகள் விற்குமிடத்திற்க்கு வந்தோம், சுத்தமான பட்டாடையல்லவா? ஏகப்பட்ட வில்ை சொன்னு ர்கள். ஒருவரும் ஒன்றுமே வாங்கவில்லை.
"ஐயோ பாவம், லேடீஸ் வெறும் கையோடு வருகிருர் கள்" என்று நண்பர்கள் வேறு கேலிசெய்தார்கள்.
அங்கிருந்து ஹோட்டலுக்கு திரும்பி மத்தியான உணவை முடித்துக்கொண்டு, மைசூர் அரண்மனைக்குப் போணுேம். எங்களுடன் ஒரு வழிகாட்டியும் வந்திருந்தார். மாளிகையினுள் காணப்பட்ட ஒவ்வொரு பொருளினதும் வரலாற்றை எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஒப்புவித்தார்.
மாளிகையின் உள்ளேயே சாமுண்டீஸ்வரி, பிள்ளையார். சிவபெருமான் வேறும் தெய்வங்களை பிரதிஷ்டை பண்ணி கோயில்கள் கட்டியிருந்தார்கள்.
மல்யுத்த வீரர்கள் பொருதும் மேடைகள், நாட்டியப் பெண்கள் நடனமாடும் மேடைகள் எல்லாம் அங்கே இருந்: தன. .
மன்னருக்கு வெளி தேசத்தவர் பரிசளித்த பரிசு வகைய முக்கள் ஒருபுறமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. "
அலங்காரமான அழகிய அந்த மாளிகையில் உள்ள எல்லா மின்விளக்குகளும் எரிந்தால், ஒரு மணித்தியாலத் திற்கு ஐந்நூறு ரூபாய் செலவாகும் என்ருல்பார்த்துக் கொள்ளுங்களேன். எவ்வளவு பிரமாண்டமான நாகரீகமான மாளிகையாய் அது இருக்கவேண்டுமென்று ஏதோ கனவுல கிலிருந்து விடுபட்ட மாதிரி பஸ்சிற்கு வந்து சேர்ந்தோம்.
அங்கிருந்து சந்தன எண்ணெய் உற்பத்தித் தொழிற் சாலைக்கு வந்தோம் கிட்ட நெருங்கும்போதே 'கம கம” என்று வாசனை அடித்தது பிரமாண்டமான மெஷின்கள், சந்தன மரத்துண்டுகளைத் தூளாக்குவதும் மாவாக்கப்பட்ட தூளை வேருெரு மெஷின் இரசாயன மாற்றங்களோடு எண்

Page 84
一 】52 →
ணெய்ப் பதம் ஆக்குவதுமாக கட, கட, லொட, லொட சப்தங்களோடு வேலைசெய்து கொண்டிருந்தன.
சந்தன எண்ணெயில் எண்பது விகிதத்தை வெளி நாட் டிற்கு ஏற்றும்தி செய்கிருர்கள். இங்கேயும் தொழிற்சாலை காம்பவுண்டிற்குள்ளேயே இருந்த காரியாலயத்தில் சந்தன எண்ணெய், சாம்பிராணிக்குச்சி என்பனவற்றை விற்பனைக்கு வைத்திருக்கிருர்கள். இங்கு சாம்பிராணிக்குச்சு பாக்கற் வாங்கிக்கொண்ட போதுதான் அன்று காலை போலி சாம் பிராணிக்குச்சிகளை வாங்கி ஏமாந்துவிட்டேன் என்பது எனக்குப் புரிந்தது.
ஆமாம், அன்று காலை ஹோட்டல் வாசலில் தானும் இன்னும் சில நண்பர்களும் நின்று கொண்டிருந்தபோது நாலைந்து வியாபாரிகள் சாம்பிராணிக் குச்சி பாக்கட்டும் கையுமாக வந்து எங்கள் தலையில் இவற்றைச் சுமத்திவிட் டுப் போஞர்கள். அதிலும் ஒருவர் ஒரு குச்சியைக் கொளுத் தியும் காட்டிஞர், "ஆகா என்னவாசனை" என்று வியந்து கொண்டே, வாங்கிக் கொண்டு, உள்ளே போனபோதுதான் அங்கேயிருந்த ஒரிரு சர்வர்கள் "இதையெல்லாம் ஏங்க வாங் கிக்கிட்டீங்க. அவங்கள்ளாம் படா ஏமாத்துக்காரங்க. வெறும் குச்சியிலே சாணத்தை ஒட்ட வச்சி பன்னீருதெளிச்சு கொண்டுவந்து விற்கிருனுங்க. அவங்களை நாங்க ஒட்டல் உள்ளுக்கு எல்லாம் அனுமதிக்கிறதில்லை" என்ருர்கள்.
இனி என்ன செய்வது.? வாங்கியாயிற்று. இப்படி யான ஏமாற்றுக்காரர்கள எங்கேயும் உள்ளார்கள் போலும்,
சந்தன. எண்ணெய் உற்பத்தித் தொழிற்சாலையில் இருந்து ஜகன் மோகன் பலஸில்" உள்ள சித்திர சாலையை

- -153 -
ஜகன் மோகன் சித்திர சாலை
அடைந்தோம். சிற்பங்கள், புராதன கலைப்பொருட்கள் யர்வும் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன, அவற்றை யெல்லாம் பார்த்துவிட்டு, நேராக பிருந்தாவனத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்போது நேரம் சரியாக மாலை ஐந்து மணியிருக்கும். ஏழு மணிவரைக்கும் அங்கே பொழுதைக் கழிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டோம். ஆகவே அவர வரே புறப்பட்டுவிட்டார்கள். ஒரு நண்பர் துவாய்களை எடுத்துக்கொண்டு, "காவேரி நீரில் குளித்துவிட்டு வரப் போகிறேன்" என்று புறப்பட்டார். கிருஷ்ண ராஜ சாகர் அணையில் குளிப்பதற்கென ஒருபகுதி ஒதுக்கப்பட்டிருந்தது.
ஆசை தீரும்வரைக்கும். அங்கே இருந்துவிட்டு சுமார் ஏழரை மணிபோல், ஹோட்டலே அடைந்தோம்.
அன்று நாள்பூராவும் ஒரே அலைச்சலாய் இருந்ததனுல் சீக்கிரம்ே சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குப் போய்விட்டேன்.

Page 85
سے 154........... --سٹس',
இரவு சும்ார் பதினெரு மணியிருக்கும். திடீரென்று ஹோட்டல் காம்பவுண்டினுள் பாண்ட் வாத்திய இசை ஒலிக்கத் தொடங்கியது. அந்த இரவில் எதற்காக இவ்வளவு அமர்க்களம் என்று எண்ணி அறைக்கு வெளியே வந்து பார்த்தேன். என்னைப் போலவே அந்த பாண்ட் முழக்கம் கேட்டு மற்றவர்களும் வந்து வராந்தாக்களிலும், மாடிக ளிலும் நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கறுப்பு சூட்டு கோட்டு, தொப்பிகளுடன் இசைக்குழுவின குக்கே உரிய அலங்காரத்தோடும் காணப்பட்ட வாத்தியக்கார கள் ஹோட்டலின் நடுவில் இருந்த ஒரு கட்டிடத்துள் வட்ட மாக உட்கார்ந்து கொண்டிருந்து, தங்கள் கருவிகளை மீட் டிக்கொண்டிருந்தார்கள்.
அங்கே குழுமி நின்ற சிலரின் பேச்சுக்களிலிருந்து அந்த ஹோட்டலின் மாடியிலிருந்த ரிஷப்ஷன் ஹாலில் யாருக்கோ கல்யாணமோ, அல்லது கல்யாணத்தின் பின் நடத்தும் ரிஷப் ஷனே நடந்து இருக்க வேண்டும் எனவும், அவர்களை ஹோ ட்டலில் இருந்து அழைத்துச் செல்வதற்காகவே இந்த இன் னிசை முழக்கம் என்பதையும் தெரிந்து கொண்டேன்.
பத்து பதினைந்து நிமிஷங்களின் பின் உறவினர் புடை சூழ, மாப்பிள்ளையும் பொண்ணும் மாடியிலிருந்து இறங்கி வந்து அலங்கரிக்கப்பட்ட காரில் ஏறி, பாண்டுவாத்தியக் காரர்கள் முன்னே செல்ல, பின்தொடர்ந்தார்கள். மணப் பெண்ணின் அலங்காரத்தைப் பார்த்தபோது ஹிந்திப் படக் கதாநாயகிகளுக்குப் போடும் மணக்கோலத்தை ஒத்திருந்தது மற்றப் பெண்களும், தொப்புள் தெரிய சேலை, உடுத்தவர் களும், அஜந்தாக் கொண்டை போட்டவர்களுமாக நாகரீக உச்சத்தில் இருந்தார்கள். கூட்டம் கலைந்த பின் திரும்பவும் வந்து படுத்துக் கொண்டோம்.

-- ( Ji . دیسه
புனித பிலோமிஞ தேவாலயம் ജ്ഞങ്ങ
மறுநாட்கால மைசூர் தாஷ்ப்பிரகாஷ் ஹோட்டல் விட்டுக்கிளம்பி, அங்கேயேயிருந்த "புனிதபிலோமிஞ GrišGSnr ஜித்த கோலயத்ஜஅழைத்தோம். இது ம்ைகு சித்தி பெற்ற ஒரு கிறிஸ்தவ கோயிலாகும்.
எங்கள் கிறிஸ்தவ நண்ப ருடன் நாங்களும் உள்ளே சென்று பார்த்தோம்.
அந்தச் சர்ச் கட்டிடத் தின் கீழேயும் l Insrsr அறையைப் போல, 9Gg பிரார்த்தனை E6TLAub இருந்தது. அங்கே யும் மாதா வின் சொரூபம் வைத்து அழகாக அலங்கு ரிக்கப்பட்டிருந்தது.
கீழேயுள்ள அந்த ஹாலு க்குப் போவதற்கு படிக்கட் டுகள் இருந்தன. படிக்கட் டைச் சார்ந்த பக்கத்து s சுவர்களில்க agylül piiri பிள்- சலவைக் கல் பதிக்கப்பட்டிருந்தது. அந்தக் கறுப்பு சலவைக்கல் சுவரில், யேசுபிரானின் பொன் மொழிகளாய் இருக்க வேண்டும் வெள்ளை எழுத்தில் எழுதப்பட்டிருந்தது. சர்ச்சை சுற்றிப் பார்த்துவிட்டு பஸ்ஸை அடைந்தோம் கிறீஸ்தவ நண்பர் பார்த்த கிறீஸ்தவ தேவாலயம் அது ஒன்றுதான். ஆஞலும் அவர் சைவக் ே tinrtřšas

Page 86
au 156 m=
வும் தவற வில்லே, சில கோயில்களில் டிரெளஸர் அணிந்த ஆண்கள் அனுமதிக்கப்படவில்லை. அப்படியான இடங்களில் அதிகம் வேஷ்டி, உடுத்து பழக்கமில்லாத அந்த நண்பர் வெளிவீதிகளையும், பிறவற்றையும் சுற்றிப் பார்த்தார். சில கோயில்களில் உள் மூலஸ்தானம்வரை வந்து ஆர்வத்துடன் சுற்றிப்பார்த்தார்.
டிரெளஸருடன் போக முடியாத சில கேர்யில்களை சுற் றியிருந்த கடைகளில் வாடகைக்கு வேஷ்டிகள் கிடைத்தன. ஆலய தரிசன்த்தைக் கட்டாயம் ப்ெற்றே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தத்திலிருந்த எங்கள் சைவநண்பர்கள் அந்த வாடகை வேஷ்டிகளை வாங்கிக் கட்டிக்கொண்டார்கள்.
சில கோயில்களில் கிடைத்த வாடகை வேஷ்டிகள் அழுக்காக இருந்தன என்று ஒரு நண்பர் சொன்ஞர். MAASiLLL AAALLSA AAMiMA ATASiLMAAMAASLiLMLATALMS AAALSLiLSAAAASiMA AMASLq ASiiiLS திப்பு சுல்தானின் கலே உணர்வை
பறைசாற்றும் அழகு மாளிகை
LAMSAAqAS LMAMMALAq SiMMAMAAS SASAMAL LeMAMMAJEEM CLEE SLLMMALSLSSSAAAS SLSASSSLS SSLiLMMTAMAAS
திப்பு சுல்தான் மாளிகை வளவில் கட்டுரையாளர் மைசூரிலிருந்து பெங்களுருக்குப்போகும் வழி யில் 1ீ ரங்கப்ட்டினத்திற்குப் போனுேம் அந்நகரைச்சுற்றிக் காட்டுவதற்காக எங்களுடன் ஒரு வழிகாட்டி வந்திருந்தார்
 

سس۔ 157 . سسسسسه
அவர் ஒரு பல்கலைக்கழக மாணவராம். தனக்கு ஒழிந்த நேரத்தில் வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கு வழிகாட்டியாக இருக்கிருர், Y
பூரீ ரங்கப்பட்டினத்தை ஒரு காலத்தில் ஆண்டுவந்த மன்னன் திப்பு சுல்தான் பெரிய கலாரஸிகன் என்பதை அவரது அழகான மாளிகை பறைசாற்றிக் கொண்டிருந்தது.
"தரியா தெளலத்'
"தரியா தெளலத்" என்றழைக்கப்படும் இந்த மாளி கையின் வாயிலேயே புருக் கூண்டு இருக்கிறது. தபால் ஊழியர்கள்போல் முன்னைய மன்னர்களுக்கு இவை உதவி வந்தன. மாளிகை இருந்த காம்பவுண்டு. சவுக்கமரங்களும் பப்பாளி, மாமரம் போன்ற மரங்களும் நிறைந்து ஒரு சோலையைப்போன்று குளிர்மையாகக் காணப்பட்டது.

Page 87
a- 58 m
மாளிகையின் சுவர்களில் ஒருவகை துணி ஒட்டப்பட்டு, அதன் மேலே வரலாற்றுச் சித்திரங்கள் தீட்டியிருந்தார்கள். ஒரு இடத்தில் மன்னனின் வீரத்தைக் காட்டுமுகமாக புலி யுடன் போரிடும் சித்திரமும் காணப்பட்டது. பழைய நாண யங்கள் பரிசுப் பதக்கங்கள் என்பனவும் பார்வைக்காக வைக் கப்பட்டிருந்தன. பேர்புகழுடன் வாழ்ந்த இந்த மன்னன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்திலும் சிறிய நினைவுச் சின் னம் அமைத்திருக்கிருரர்கள்,
W
itsu sides at Fups
திப்பு சுல்தானின் சம்ாதியிருந்த கட்டிடம் மாளிகையை விட எடுப்பாக இருந்தது. “கும்பஸ்" என்றழைக்கப்பட்ட இந்த சமாதி முழுவதிலும், கறுப்பு சலவைக்கல் பதிக்கப் பட்டு, வெண்:ளிற யானைத் தந்த வேலைப்பாடு காணப்பட் டது. சந்தன மரவேலைப்பாடும் மிகுந்திருந்தது.
 

es 159 -
திப்பு சுல்தானின் சமாதியைவிட, ஹைதரவி ஆமினு பேகம், வேறும் சுல்தானின் உறவினர்களின் சமாதிகளும் அங்கே காணப்பட்டன. சில முஸ்லிம் பெண்மணிகள் சமாதி யின் அருகில் கண்மூடி மெளனமாக அமர்த்திருந்து தியா சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து பூரீ ரங்களுத சுவாமி கோயிலுக்கு வந் தோம், இக் கோயில் கட்டடம் கொஞ்சம் பழம்ையாகக் காட்சியளித்தது.
*ஆதிரங்கம்" என அழை க்கப்படும் இக் கோயிலின் மூலஸ்தானத்திலிருந்த பிர மாண்டமான விஷ்ணு பெரு மானின் தரிசனத்தை முடி த்துக்கொண்டு வெளியே வந்தோம். எம்முடன் வந்த வழிகாட்டியும் அ ந் த க் கோயிலில் இறங்கிக் கொண் L-rrri. இறங்கியதுதான் தாம்தம் போட்டோஆல்பம் புத்தகங்களைத் துர க் கிக் கொண்டு விற்க ஆரம்பித்து sialt-nrrf.
கோயிலடியிலேயே கால உ ன வை முடித்து க் கொள்ள எண்ணினுேம்.எங் *ள் பஸ்வண்டியைப் போல ஜீரங்களுத
சில வண்டிகளும் samrud Gasse ங்கே நின்றிருந்தன.

Page 88
جسے 160 سے
உணவை முடித்துக்கொண்டு எல்லோரும் வந்து ஏறிய வுடன் டிரைவர் பஸ்ஸை ஸ்டார்ட் பண்ணினர், எங்கள் பஸ் அருகே நிற்பாட்டப்பட்டிருந்த பஸ்ஸிலிருந்த பிரயா ணிகளுக்கிடையே ஏற்பட்டிருந்த சலசலப்பு எங்களையும் ஈர்க் கவே, நாங்கள் எல்லோருமே என்ன வென்று கவனித் தோம்.
அந்த பஸ்ஸிற்குள் இருந்த ஒருவர் கோயில்லேயிருந்து ஆளு வந்திருக்காங்க, யாராச்சும் மணிபர்ஸைத் தவற விட்டு ட்டீங்களா. சரி பார்த்துக்குங்க" என்று சொல்லிக் கொண் டிருந்தார்.
இதைக் கேட்டவுடன் எங்கள் பஸ்ஸிலிருந்த நண்பர் களும் தத்தம் பாக்கட்டுகளைத் தடவிப் பார்த்துக் கொண்
nrrifssosir. M
"ஐயையோ! அது. என்னுடைய பர்ஸ், என்று எங் கள் நண்பர் ஒருவர் அலறிஞர்.
"உங்களுடையதா? "டிரைவர். டிரைவர் ஹோல்டான் - ஹோல்டான்' "எவ்வளவு காசு வைத்திருந்தீர்கள்? h o 300 junir GnuGoguruleio” "நல்ல ஆள்தான் நீங்கள், ஒடுங்கோகோயிலடிக்கு" "பாவம்! நல்லவேளை ஒரே களேபரம். ஒரே குளறுபடி. ஆளுக்கு ஆள் கத் திக் கொண்டிருந்தார்கள். تتمة
பர்ஸைத் தொலைத்து விட்ட நண்பருக்கு ஒன்றுமே ஒட வில்லை. அவரை இழுத்துக் கொண்டு மற்றவர்கள்தான் ஓடி ஞர்கள்.

ஏதோ சாம்ான் வாங்கப்போன இடத்தில் கோயில் கடை வீதியிலேயே பர்ஸை மறதியாக வைத்துவிட்டாராம்.
கடைக்காரர், கோயில் அர்ச்சகர், பர்ஸைத் தொலைத்த ஆசாமி இவர்தான? என்று கேள்விக்கணைகளால் துளைத்து விட்டு நிச்சயமான பின் பர்ஸைக் கொடுத்தார்கள். பர்ஸி லிருந்த அத்தனை சாமான்களும் அந்தப்படியே இருந்தன.
என்ன கண்ணியமான நேர்மையான மக்கள். முந்நூறு ரூபாயோடு தொலைந்த பர்ஸ் திரும்பக் கிடைப்பது என்பது சும்மாவா? கிருஷ்ணபரமாத்மாவின் பேரருளை எண்ணி வியந்தவாறு அங்கிருந்து புறப்பட்டோம்.
பெங்களுரை சுற்ற வைத்த பகவான் சத்ய சாயிபாபா
மைசூரிலிருந்து சுமார் 87 மைல் தொலைவிலிருந்தது பெங்களூர்.
மைசூர் ராஜ்யத்தின் தலைநகரமான பெங்களூரை "பென்ஷன் காரர்களின் சுவர்க்கம்" என்று வேடிக்கையாக சொல்வார்களாம். காரணம் என்னவென்ருல் இளைப்பாற்றுச் சம்பளம் பெறும் அரசாங்க உத்தியோகத்தர்கள் தங்கள் கடைசி நாட்களை பெங்களூரில் கழிப்பதற்கு பெரிதும் ஆசைப் படுவார்களாம். அதனலேயே இந்தப் பெயர் ஏற்பட்டது.
இந்நகர் கடல் மட்டத்திலிருந்து 3021 அடி உயர முடையது. இங்கு கன்னடம், தமிழ், தெலுங்கு உருது, ஹிந்தி, ஆங்கிலம் போன்ற எல்லா மொழிகளையும் பேசு

Page 89
- 162 -
கிறர்கள், பெங்களூர் பொருளாதாரத்திலும், தொழில் வள த்திலும், முன்னேற்றம் அடைந்துள்ள நகர் என்பதற்கு ஹிந்துஸ்தான் நிறுவனங்களே சாட்சியாகும்.
குடிசைக் கைத்தொழிற்காரர்களும் சந்தன மரங்களை நம்பித்தான் சாம்பிராணிக்குச்சிகளை செய்து குவித்து இருக் திருர்கள். பெரும் ஆலைக்காரர்களும் அவற்றை நம்பித்தான் சந்தன எண்ணெய் சோப்புகளை உருவாக்கி அந்நிய செல வாணியை அதிகப்படுத்தி பணத்தை குவிக்கிருர்கள். ம்ைகு ரும் பெங்களூரும் செல்வச் செழிப்போடும், அழகின் செருக் கோடும், சந்தன வாடையோடும் திகழ்கிறது என்று சொன்
ஞல் மிகையாகாது.
பெரியசாலைகளில் பிரம்மாண்டமான கார்களும், இரட் டைத்தட்டு பஸ்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் குதிரை வண்டிகளும், விலத்த இடமில்லாம்ல் ஒடிக்கொண்டிருந்தன. சந்தைப் பகுதிகளில் சீகைக்காய், கொச்சிக்காய் மரக்கறி, வழ வகைகள் போன்ற பல சாமான்களையும் வைத்து விற்று க்கொண்டிருந்தார்கள். பெரிய ஆபீஸ் கட்டிடங்களும், அழ கான வீடுகளும், காரியாலயங்களும், தியேட்டர்களும் நிறை ந்து பெங்களூர் நகர் குபேர பட்டணமாகக் காட்சி அளித்தது.
சால்வார், கமீஸ், பெல்பாட்டம்ஸ் அணிந்த நவநாகரீக யுவதிகளையும், அதே சமயம் உடல் முழுவதையும் கறுப்பு அங்கியால் மூடி, முகத்தின் ஒருபகுதி மட்டுமே தெரியக் கூடியதாக கறுப்பு முகமூடி போன்ற மறைப்பு அணிந்து கொண்டு நிலத்தையே பார்த்துக்கொண்டு நடந்து சென்ற முஸ்லீம் பெண்களையும் ஒருங்கே பெங்களுர் சாலைகளில் பார்க்க முடிந்தது. இங்கே காணப்பட்ட குதிரை வண் டிகள் மற்ற இடங்களில் காணப்பட்டவையைவிட அழகாக அலங்கரிக்கப்பட்டு ராஜகாலத்து வண்டிகள் போலக் காட்சியளித்தன.

سب سے 163 .........
ரோட் டிரெயின் என்ற பெயருடன் ரோட்டிலேயே ஒரு கோச்சுவண்டி ஒடிக்கொண்டிருந்தது. அதைவிட இரண்டு பஸ்கள் ஒன்ருக இணைக்கப்பட்ட நீண்ட பஸ்வண் டியையும் கண்டோம். நகருக்குள் எங்கே திரும்பினலும், காபாலி தியேட்டர், ஆனந்த் தியேட்டர், சங்கம் தியேட் டர். என்று ஒரே தியேட்டர் மயம்தான்.
பெங்களூர் என்றதுமே இந்த நாட்களில் யாருக்குமே ஞாபகம் வருவது பூரீ மத் சத்யசாயி பாபா அவர்களைத்தான் . மைசூரில் இருந்து புறப்பட்டநேரம் தொடக்கம் பஸ்சிற்குள் சத்யசாயி பாபாவைப் பற்றிய கதைதான். சிலர் போற்றி ஞர்கள், சிலர் தூற்றினர்கள். சிலர் நடுவில் நின்று வாதாடி ஞர்கள். பகவான் சத்யசாயி பாபாவைப் பற்றிய சர்ச்சை பெங்களூரை அடையும் வரை நடந்து கொண்டேஇருந்தது. நான் போற்றுபவர் கட்சியிலும் சேர்ந்து கொள்ளாமல், தூற்றுபவர்கட்சியிலும் சேர்ந்து கொள்ளாமல் பேசாமல் காதால் சர்ச்சைகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இந்த விவாதங்களில் ஈடுபடப்போனல் நான் குறிப்பெடுத்துக் க்ொள்வதை கோட்டைவிட்டு விடுவேன்.
பஸ்சிற்குள் இந்த சம்பாஷணைகள் நடந்து கொண்டே இருந்தன. நாங்களும் பெங்களூரைச் சுற்றிக் கொண்டே இருந்தோம் என்ன நடந்தது என்று நினைக்கிறீர்கள். நாங் கள் அன்றைய தினம் தங்க வேண்டிய ஹோட்டலை டிரைவ ராலோ, கூட வந்த வழிகாட்டியாலோ கண்டுபிடிக்க முடிய வில்லை. பார்த்த காட்சிகளையே பார்த்துக்கொண்டு, திரும் பத் திரும்ப பெங்களூர் நகரைச் சுற்றிக் கொண்டிருந்தோம். வழிகாட்டி காட்டிய பாதைகளில் எல்லாம் நுழைந்து நுழைத்து வந்தபோதும் ஒரே காட்சிகளைத்தான் சந்தித்துக் கொண்டிருந்தோம். டிரைவர் தன்போக்கில் பஸ்ஸை செலுத்திக் கொண்டிருந்தபோதுகூட பழைய இடங்களையே தாண்டிக்கொண்டிருந்தோம், ஒன்றரை மணித்தியாலங்க

Page 90
- 164 -
ளாக நகரைச் சுற்றிக் கொண்டு இருந்ததில் எந்தெந்தக் கட்டிடம் எங்கெங்கே இருக்கிறது என்பது கூடப் பாடமாகி விட்டிருந்தது. சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நேரமோ பகல் இரண்டு மணியாகிவிட்டது. பசிவேறு குட லைப் பிடுங்கியது.
பஸ்சிற்குள் இருந்தவர்களின் சம்பாஷணை இப்போது வேறுவிதமாகத் திரும்பிவிட்டிருந்தது.
*பார்த்தீர்களா பகவான் சத்யசாயிபாபாவின் மீது நம்பிக்கையில்லாமல் கதைத்தபடியாலதான் இப்படி வைத்து அலைக்கழித்துக் கொண்டிருக்கிருர்"
*சிறுபிள்ளைத்தனம்ாக பகவானைப் பழித்துக் கொண்டி ருக்கலாமோ? அவரின் சக்தியைக்காட்டி விட்டார்தானே? இனியாவது சாயிபாபாவை நம்புங்கள்."
இப்படி சாயிபாபாவின் ஆதரவாளர்கள் கூறினர்கள். அவர்களின் கை இப்போது ஓங்கி நின்றது. அவர்களின் வாதம் சரியாக இருக்குமோ என்னவோ சாயிபாபாவைக் குறைத்துக் கதைத்ததினுல்தான் இப்படியொரு நிலைமை ஏற் பட்டது என்று எண்ணத் தோன்றியது. எப்படியோ வாத மும், பிரதிவாதமும் அடங்கிவிட்டிருந்தன.
கடைசியாக இரண்டே கால் மணியளவில் 'பாரதி ஹோட்டலை" அடைந்தோம். இது நடிகை சரோஜா தேவிக் குச் சொந்தமான ஹோட்டலாகும்.
அங்கு குளித்து உடைமாற்றி சாப்பிட்டுக்கொண்டு சும்ார் மூன்று மனிேபோல் பகவான் சத்யசாயி பாபாவைத் தரிசிப்பதற்காகப் புறப்பட்டோம்.
பெங்களூர் டவுனிலிருந்து சுமார் ஆறு மைல்களுக்கு அப்பால் இருந்த "வைட்பீல்ட்" என்னும் இடத்தில் அமைந் திருந்தது பூரீமத் சத்ய சாயிபாபாவின் "பிருந்தாவனம்" என்றழைக்கப்பட்ட இருப்பிடம்.

--سم۔ 165 حس۔
நிழல்தரும் அடர்ந்த மரங்களோடு பசுஞ்சோலையாகக் காணப்பட்ட அந்த இடம் பிருந்தாவனம் என்ற பெயருக் கேற்ற எழிலோடு அமைந்திருந்தது.
அந்தச் சூழ்நிலை கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தியது. நாங்கள் உள்ளே சென்றபோது நடுத்தர வயதுடைய ஒரு சுமங்கலிப் பெண்மணி மெட்டி ஒலியோடு வந்து எங்களை வரவேற்று சிலிோனிலிருந்து வந்திருக்கிமுேம் என்பதை அறிந்ததும் வெகு சந்தோஷத்துடன்.
"அப்படியா, இவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறீர் களே" பகவான் தரிசனம் உங்களுக்கு நிச்சயமாகக் கிடைக் கும். இப்படியே கீழே மணலில் உட்கார்ந்திருங்கள். உள்ளே ஸ்கூலில் பரீட்சை நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அவர் வந்துவிடுவார்' என்ருர், நாங்கள் அங்கே இருந்த மர நிழலின் கீழ் சாவகாசமாக உட்கார்ந்து கொண்டோம்.
Y
அவரது ஆசிரமம் இருந்த அந்த காம்பயிண்டின் உள் ளேயே "பூரீ சாயிபாபா சயன்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் ஸ்கூல்" லும் இருந்தது. வேறு சில கட்டடங்களும் இருந்தன. அந் தப் பள்ளிக் கூடத்தில் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. உள்ளே மாணவர்கள் இருந்து எழுதிக்கொண்டிருந்தார்கள்.
சில்லென்று வீசிக்கொண்டிருந்த காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டு அங்கு தரிசனத்திற்காக வந்து கொண்டிருந்தவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். பலரகப் பட்டவர்களும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுள் தொப்புள் தெரிய சேலை உடுத்து கையில்லாத "ரவிக்" அணிந்து கொண்டவர்கள்கூட இருந்தார்கள். கண்ணனின் பிருந்தாவனத்திற்கு செல்வதைப்போலவே பாபாவின் பிருந் தாவனத்திற்கும் மக்கள் ஆர்வத்துடன் வந்து குழுமிக் கொண்டிருந்தார்கள்,
சற்று நேரத்தின்பின் சாயிபாபா வருவதாகத் தெரிவிக் கப்படவே ஆண்கள் வரிசையாக ஒரு புறமும், பெண்கள்

Page 91
- 1 66 -
வரிசையாக ம்று புறமும் சாப்பாட்டுப் பந்திக்கு இருப்பது பேர்ல ம்ணல் தரையில் உட்கார்ந்து கொண்டோம். சிலர் தங்கள், கைகளில் பகவானுக்குக் கொடுப்பதற்காக மிலர் மாலைகள், பூக்கள், பழங்கள் என்பன வைத்திருந்தார்கள், வேறுசிலர் தங்கள் குறைகளை, வேண்டுதல்களை எல்லாம் காகித உருவில் எழுதி கவரில் போட்டு அவரிடம் கொடுப் பதற்காக வைத்திருந்தார்கள், சிலர் கண்களை மூடிக் கொண்டு வாயினுள் ஏதோ முணுமுணுத்துக் கொண் டிருந்தார்கள்.
எத்தனை விதமான பக்தி உள்ளங்கள்? மனம் பக், பக் கென்று அடித்துக்கொள்ள பாபா வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். சரியாக நாலே முக்கால் மணிக்கு பகவான் சாயிபாபா வந்தார். ஆண், பெண் இருபாலாரும் உட்கார்ந்து இருந்த பாதையின் நடுவழியே நடந்துவந்தார். ஏதாவது அதிசயம் நடக்குமா என்ற ஆர்வத்தில் நான் வைத்த கண்வாங்காது அவரையே பார்த்துக்கொண் டிருந்தேன்.
பூரீ சாயிபாபா மிகச் சாதாரண உடலமைப்பைக் கொண்டிருந்தார். மயில் தோகைபோல் மண்டிக்கிடந்த தலை மயிருக்குள் வட்டவடிவினதாகக் காணப்பட்ட முகத்தில் மட்டும் தெய்வீகமான ஒரு தேஜஸ் சுடர் ஒளிவிட்டுப் பிர காசித்துக் கொண்டிருந்தது. முகத்தில் தெரிந்த அந்த தெய்வீக ஒளியில் ஏதோவொரு அருள் தெரிந்தது. வரிசைப் பற்கள் சிறிதே தெரிய மென்னகை புரிந்து கொண்டே ஆண் பெண் இரு சாராரிடமும் அருகேபோய் சம்பாஷித்தார். கண்ணைப்பறிக்கும் ஆரஞ்ச் வண்ணத்தில் சில்க்கோ, பனரஸ் பட்டோ என்னமோ உயர்ந்தரகத்தினலான பட்டில் நீண்ட அங்கியை அவர் அணிந்திருந்தார்.
கைவிரல்களையும், காலையும், முகத்தையும் தவிர மற்ற எல்லாப்பாகத்தையும் அந்த அங்கி மறைத்துக்கொண் டிருத்தது. தரையைக் கூட்டுவதுபோல தளையத் தளைய அங்கி

- 167 -
தொங்கிக் கொண்டிருந்ததால் இடது கைவிரல்களினல் மெதுவாகத்தூக்கிக்கொண்டு நடந்துவந்து எங்கள் குழுவினர் இருந்த இடத்தை அடைந்தார், நான் இன்னும் கவனிக்க ஆரம்பித்தேன். ܖ
எங்கள் குழுவினர்க்கருகில் சற்றுநேரம் நின்றுநிதானித்து விட்டு "நீங்கதான் சிலோனிலிருந்து வந்தவர்களா? என்ருர் தமிழில்.
அவர் வாய் திறந்து பேசியதும் ஒரு கணம் ஒன்றுமே ஒட வில்லை, சட்டென்று சமாளித்துக்கொண்டு ஒருவர் "ஓம்" என்ருர், பின்னர் வெளியே நின்றுகொண்டிருந்த பஸ்ஸைக் காட்டி "அதோ அந்த பஸ்ஸிலேயா வந்தீர்கள்!" என்ருர்,
ʻgpliÄʼ. . . . . “எத்தனை பேர் வந்தீர்கள்?? "நாற்பது பேர்வரையில் வந்தோம்"
இனி எங்கே போகிறீர்கள்?" "மட்ருஸுக்குப் போகிருேம்"
அற்புதம்! விரல்களைச் சுழற்ற திருநீறு வந்தது!
சாயிபாபா நின்றநிலையிலேயே நின்றுகொண்டு வலது கைவிரல்களை ம்ெதுவாகச் சுழற்றினர். நிலத்தை நோக்கி மும்முறை சுழற்றிய பின்னர் கைக்குள் இருந்து திருநீற்றை எடுத்துக்கொடுத்த போது ஒரே வியப்பாய் இருந்தது. இப் படியும் ஒரு புதுமையா? திருநீற்றை எங்களைச் சேர்ந்த ஒரு பெண்மணி பயபக்தியோடு வாங்கிக்கொண்டதும் பாபா மற்றப் பக்கத்திற்குப் போனர்.

Page 92
سس l68 سسسه
ம்ாலைகள், மலர்கள், காகிதங்கள் வைத்துக்கொண் டிருந்தவர்கள். எல்லாம் தத்தம் பொருட்களை பயபக்தியோடு அவரிடம் கொடுத்தார்கள். பாபா சிலரிடம் இருந்தே சில வற்றைப் பெற்றுக் கொண்டார்.
அப்படி வாங்கிக்கொண்ட சில பொருட்களை... மாலை, பூக்கள் என்பவற்றை வேறு சிலரிடம் கொடுத்தார். அப்படி வாங்கிக் கொண்டவர்கள் அவற்றைப் பெறுதற்கரிய பெரும் பேருகக் கருதி கண்களில் ஒற்றிப் பத்திரப் படுத்திக் கொண் டார்கள். வேறு சிலருக்கு திருநீறு கொடுத்தார். ஒரு சிலர் பக்கம் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை, சிலர் அவர் நடந்து சென்ற பாதையில் இருந்த மணலைக்கூட பத்திரப் படுத்திக் கொண்டார்கள். சிலர் அவர் தாள் பணிந்து கண்களில் ஒற்றிக்கொண்டார்கள், வெளிநாட்டைச் சேர்ந்த பெண் மணி ஒருவர் தன் குழந்தைக்குப் பெயர் சூட்டிவிடும்படி கேட்டுக் கொள்ளவே சாயி பாபா தன் சக்தியால் நின்ற வாறே திடீரென குங்குமம் எடுத்து அக்குழந்தையின் நெற் றியில் இட்டு ஆசிர்வதித்துப் பெயரும் சூட்டிஞர், இச்சக்தி க்கு என்ன பெயர் சூட்டுவது? "தெய்வம்" என்ற மா பெரும் சக்தியின் சன்னிதானத்தில் நின்றுகொண்டு மெளன. மாகவே புலம்பிக்கொண்டிருக்கும் மக்கள், நடமாடிக்கொண் டிருக்கும் இந்த தெய்வத்தின் முன்னுல்பட்டுக்கொண்டிருந்த பாட்டையும் பகவான் அவர்களிடம் நடந்துகொண்ட அழகையும் இ ன் ற ள வும் பார்த்துக்கொண்டிருக்கலாம் போலிருந்தது.
எல்லோருக்கும் தரிசனம் கொடுத்தபிறகு பகவான் மற் றப் பாதையால் ஆசிரமத்தை நோக்கி நடக்கலாஞர், அப் போது அங்கேயிருந்த பெரிய மரத்தடியில் காமிராவும, கையுமாக நின்றுகொண்டிருந்த எங்கள் புகைப்படக்கார நண்பர் அவரை அணுகி ஒரு படம் எடுத்துக்கொள்ள விரும் புவதாகக்கூறவே ஒரு புன்னகையுடன் அவர் சம்மதித்தார்.

- 19 -
ஆஞல் சாயி பாபா நின்று போஸ் கொடுக்கவில்லை. தன் போக்கில் போய்க்கொண்டிருந்தார், எங்கள் நண்பர் கெட் டிக்காரர் ஒரு பக்தர் பாபாவின் கால்களைப்பற்றி தொழுத போது படத்தை எடுத்துவிட்டார் அந்தப் படம்தான் இந்தப் பக்கத்தில் காணப்படுகிறது.

Page 93
- 1; 70 ബ
பகவான் சாயிபாபா உள்ளே சென்றபின்னர் நாங்கள் பஸ்ஸை அடைந்தோம், திருநீறு பெற்றுக்கொண்ட பெண் ம்ணி எங்கள் எல்லோருக்கும் திருநீறு தந்தார்.
சிலர் பூரீமத் சாயி பாபாவின் உருவம் பொறிக்கப் பட்ட மோதிரங்கள் பென்டன்கள் படங்கள் என்பவற்றை வெளியில் வைத்து விற்றுக்கொண்டிருந்தார்கள், அங்கு சில படங்களை வாங்கிக்கொண்டோம்.
சாயி பாபாவின் தரிசனம் முடிந்த பின்னரும் அவரைப் பற்றிய கதை ஒய்ந்தபாடில்லை. ஹோட்டலை அடையும் வரை திரும்பவும் சர்ச்சை தான்.
வெந்நீர் வாங்கப் போய் மணிபர்ஸ் கொண்டு வந்த கதை
தலைப்பைப் பார்த்துவிட்டு விக்கிரமாதித்தனுக்கு வேதா ளம் சொன்ன கதையைப்போல ஏதாவது புதிர்க்கதை சொல்லப் போகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள்.
பகவான் சாயிபாபாவைத் தரிசித்துவிட்டு வந்தபின் அன்றுமாலை கபாலி தியேட்டரில் நடந்துகொண்டிருந்த ஹிந்திப் படத்தை பார்ப்பதற்காக சிலர் போனர்கள்.
எங்களுள் அநேகமானேர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருந்தோம். அந்தப் போத்தல் நிறைய குடி தண்ணீர் பிடித்து வைத்திருப்டோம். சமயத்தில் வெந்நீர் கூட எடுப் போம். சில வேளைகளில் நாங்களே டீ அல்லது காப்பிதயாரித் துக் கொள்வதும் உண்டு.
தேநீர் வடிப்பதற்கு வடிதட்டு இருக்க மாட்டாது. சீலைத்துண்டில் வடித்துக்குடிப்போம். என்ருலும் அந்த "டீ"

- 171 -
பிரமாதமாயிருக்கும், நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலில் அன்று வெந்நீர் கிடைக்காதபடியால், நண்பர்கள் சமீபத் தில் காணப்பட்ட வேறு ஏதாவது கடையில் அல்லது ஹோட்டலில் பெற்றுக்கொள்ளலாமென எண்ணி வீதிக்குச் சென்ருர்கள், அவர்கள் துரதிர்ஷ்டம் வெந்நீர் கிடைக்க வில்லை. என்ருலும் சிறிது தூரம் சென்று பார்த்துவர எண்ணி மேலே நடந்து போகையில் ஒரு வீட்டின் முன்னல் ஒரு பெண்மணி நிற்பதைக் கண்டு அவரை அணுகிஞர்கள்.
"எங்களுக்கு கொஞ்சம் சுடுதண்ணிர் தந்து உதவுவீர்
களா?”.
அடக்கமான புன்னகையுடன் நண்பர்களிடம் இருந்து பாட்டிலை வாங்கிக் கொண்ட அந்த அம்மாள் விடுவிடு என்று உள்ளே போய் பாட்டில் நிறைய தண்ணீர் நிரப்பிக் கொண்டு வந்து கொடுத்தார். பத்திரமாக போத்தலை வாங் கிக்கொண்டபோது தான் அது பச்சைத் தண்ணிர் என்பது தெரிந்தது.
"எங்களுக்குப் பச்சைத் தண்ணீர் வேண்டாம்- வெந்நீர் வேணும் ட'
(அவர்கள் சுடுதண்ணிரை வெந்நீர் என்று தான் குறிப் பிடுவார்கள். ஆகவே அவர்கள் பாணியிலேயே வெந்நீர் வேண்டும் என்ருர்கள்)
*தேத் தண்ணி. தேநீர். தேநீர். போடுவதற்கு வெந் நீர். ஹாட் வாட்டர் வேண்டும். கடைகளில் வாங்க முடிய வில்லை’ என்று நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த விதத்தில் எல்லாம் டொல்லிப்பார்த்தார்கள். அம்மையாரோ அசைவ தாய்க் காணுேம் . பாவம் அவருக்கு விளங்கினல்தானே?
ஒரு நண்பருக்கு திடீரென்று ஒரு யோசனை உதயமாகி il 3,
"ஹார்லிக்ஸ் கரைப்பதற்கு வெந்நீர் தாருங்கள்

Page 94
-- 72 J -ܗܘܝ
இப்படிக் கூறியதும் விஷயத்தைப் புரிந்து கொண்டார் அவர். சைகை காட்டி எங்கள் நண்பர்களை திண்ணையில் இருக்கச் சொல்லிவிட்டு உள்ளே போளுர் அந்த அம்மை Այrrn.
திண்ணையிலே உட்கார்ந்த நண்பர்கள் சும்மாயிருப்பார் களா. அந்த அம்மாள் போன திக்கில் பார்வையைப்போக விட்டார்கள்.
திண்ணை, வீடு வாசல் என்பவை வெகு துப்பரவாகவைக் கப்பட்டிருந்தனவாம். அடுக்களையில் அம்மாள் வேலேயில் ஈடுபட்டிருந்தார். அங்கு அடுக்கிவைக்கப்பட்டிருந்த எவர் சில்வர் பாத்திரங்களைப் பார்த்தபோது பாத்திரக் கடைக் குள்ளேயே வந்து விட்டாற் போன்ற பிரமை ஏற்பட்ட தாம். வீட்டுப் பாவனைக் கென்றிருந்த அத்தனை பாத்திரங் களும் எவர் சில்வசீனலானவைதான்.
மணிவைத்திழைத்து "பர்ஸ்" தயாரிப்பதுதான் அந்த அம்மாளுடைய குடும்பத்தினருடைய பொழுது போக்கான கைத்தொழில். வெந்நீரோடு திரும்பி வந்த அம்மாள் கையோடு மணி வைத்திழைத்த பர்ஸ் ஒன்றும் கொண்டு பந்து கொடுத்தார். இவர்கள் வேண்டாம்ென்று எவ்வ *ாவோ சொல்லியும் அந்த அம்ம்ாள் அன்புடன் வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்தவே வேறு வழி இல்லாது பெற்றுக் கொண்டார்கள். தமிழே தெரியாத அந்தக் கன்னடக்காரப் பெண்மணியின் அன்பு எங்களை மெய்மறக்கச் செய்தது.
வெந்நீர் வாங்கப்போய் மணிபர்ஸுடன் GQApnr. டலுக்குத்திரும்பி வந்த நண்பர்கள் சோன்னகதைதான் இது.
“கபாலி" தியேட்டரில் "ஹஸினென் கா தேவதா? என்ற ஹிந்திப் படத்தைப் பார்த்து விட்டு வந்த நண்பர் களும், படத்தைவிட தியேட்டரைப்பற்றித்தான் நிறையச் சொன்னுர்கள்.

ബ് 178 =
* கபாலி சினிரமா" என்ற பெயரைக் கொண்ட அந்த படமாளிகை இந்தியாவில் மிகப் பெரிய தியேட்டர். சுமார் 1700 பேரை அடக்கிக்கொள்ளக் கூடியதாம், மேலும் வசதி யான, சொகுசான ஸிட்டுகளையே அங்கு வைத்திருந்ததாகச் சொன்னுர்கள்.
மறுநாள் காலை திருப்பதியை (கிட்டத்தட்ட 116 மைல் தூரம்) நோக்கிப் பயணம்ான போது பெங்களூரின் இன் னேர் பகுதியில் ஒலைக் குடிசைகளையும் வசதிக் குறைவான குடியிருப்புகளையும் எம்மால் காணமுடிந்தது. தென்னிந்தி பாவின் பல பகுதிகளிலும் பர்மா ஷெல்" "எஸ்ஸோ' ஆகிய பெற்ரோல் வகைகளே பாவனையில் இருந்தன. பிர தான சாலைகள் கூட இடத்திற்கு இடம் வித்தியாசமாக இருந்தன. சில இடங்களில் தார் சாலைகள் காணப்பட்டன. சில இடங்களில் தார் சாலைகளின் நடுப்பகுதிக்கு ம்ட்டும் சிமெந்து பூசப்பட்டிருந்தது. i
வழி முழுவதும் நிறையப் பாறைகளும் கற்களும் காணப் பட்டன. முந்திரிகைக் கொடிகளும், சவுக்குமரங்களும் ஆங் காங்கே இருந்தன. சுமார் பத்தரை மணியளவில் ஆந்திரப் பிரதேச எல்லைக் கடவையை அடைந்தோம், 'ஆந்திரப் பிர தேஷ் வெல்கம்ஸ் யூ" என்ற கம்பீரமான போர்டு எங்களை வரவேற்றது.
கிருஷ்ணு கோதாவரி, பெண்ணுறு ஆகிய மூன்றும் சேர்ந்து ஆந்திராவை வளம் படுத்துகின்றன? முக்கிய மொழி தெலுங்காகும். கரும்பு, பஞ்சு, பருத்தி புகையிலை நிலக்கடலை ஆகியவை இங்கே நிறைய விளைகின்றன. கர்நா டகப் பாடல்களுக்கும், நாட்டுப் பாடல்களுக்கும், நாட்டுக் கூத்துவகைகளுக்கும் இப்பிரதேசம் பெயர் போனது.
பாலமனேரு, மோகினி, மாடுபலேரு போன்ற பெயர் களைக் கொண்ட கிராமங்களைக் கடந்து கொண்டு பன்னி ரண்டு ம்ணி அளவில் திருப்பதியை அடைந்தோம். வழியில்

Page 95
- 174 -
காணப்பட்ட சித்தூர்டவுன் எங்களுக்கு சித்தூர் ராணி பத் மினியை நினைவூட்டியது திப்பு சுல்தான் காலத்தில் சிறந்த நாட்டிய கலாவல்லியாக பத்மினி வாழ்ந்து வந்தாளாம்.
திருப்பதியில் "ஜே ஜே என்று சனக் கூட்டம் நிரம்பி வழித்தது. முக்கால்வாசி பேரின் தலையில் மயிரைக் காண முடியவில்லை. நேர்த்திக்காகப் பெரும்பாலானுேர் மொட்டை யடித்திருந்தார்கள்.
மத்தியானச் சாப்பாட்டிற்காக ஒரு ஹோட்டலுக்குப் போனுேம். அங்கேயும் தயிர், ஊறுகாய், சாம்பார் என்று தமிழ் நாட்டு அயிட்டங்களே கிடைத்தன. ஆந்திரா சட்னி என்று ஒரு புதுவகை சட்னியை அறிமுகப் படுத்தினர்கள். இதர இடங்களைவிட இங்கே சாப்பாடு கொஞ்சம் காரசார மாய் இருந்தது. சுவைத்துச் சாப்பிட்டோம். அன்றைய இரவை "பாலாஜி பவன் ஹோட்டலில் கழித்தோம். மறு நாள் காலைதான் திருப்பதிக் கோயிலுக்குப்போக முடிந்தது.
திருப்பதிக்குப் போகும் மலைப்பாதை
 

- 175 -
செல்வம் கொழிக்கும் திருப்பதி
திருவெங்கடம் என்று அழைக்கப்படும் திருப்பதி மலைக்குப்போவதற்கு படிக் கட்டுகளை விட தேவஸ்தான பஸ்வண்டியும் உ ஸ் ள து, சாதாரண பஸ்வண்டிகளைப் போல் அல்லாது இது அள வில் சிறியதாக, இம்மலை யில் செலுத்து வ த ந் கெனவே பிரத்தியேகமாக உள்ளது.
மலைக்குப்போகும் பாதை வளைந்து வளைந்து ஏற்ற மாகச்செல்கிறது. இரவில் பயணம் செய்கிறவர்களுக்கு செளகரியமாக கறுப்பும், வெள்ளை வர்ணமும் அடிக்க ப்பட்ட கட்டைச் சு வ ர் வழியெல்லாம் காணப்பட் டது, இடைக்கிடையே சில : கடைகள் இருந்தன. இந்தக் கடைகளில் விரும்பியவர்கள் தங்கி நின்று இளைப்பாரிச் செல்வதற்காக அ றை க ள் வாடகைக்கு இரு ந் தன. அரைவாசி தூரம் போகும் போதே தொலைவில் கோயில் கோபுரம் தெரியும். திருப்பதி கோயிற்
தோற்றமும் பக்தர்களும்

Page 96
திருப்பதி வெங்கடேஸ்வரர்! திருவெங்கடமுடையானின்
வைரக் கிரீடம் !
அதிகாலை மூன்று ம்ணிக்கு கோவிலிலிருந்து ‘சுப்ரபாதம் ஒலி பரப்பும் நேரத்திலிருந்தே மக்கள் எறும்புக் கூட்டங் களைப்போல் மலையை நோக்கி பஸ்களிலும், படிக்கட்டு வழி யாகவும் போவதைக் காணலாம். காலை ஆறரை, ஏழு ம்ணி வரை "இலவசமாக" திவ்ய தரிசனத்தைக் காணலாம.
அதன்பின் போகிறவர்கள் குறைந்தது தலைக்கு நாலு ரூபா டிக்கட்டாவது வாங்கவேண்டும். கியூவரிசையில் நின்று டிக்கட் பெற்றுக்கொள்வது மகா கடினம், அவ்வளவிற்கு
 

- 177 --
சனக்கூட்டம். இதனல் வசதியுள்ள சிலர், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர்களுக்கு என்று விற்கப்பட்ட 110 ரூபா டிக்கட்டை வாங்கக்கூட தயங்க வில்லை. விலை கூடிய இந்த டிக்கட்டை பெற்றுக் கொண்டவர்களுக்கு முதலில் தரிசனம் கிடைக்கும்.
கோயிலுக்குரிய கேணியில் மக்கள் தமது உடைகளை அலம்பியும் குளித்தும் அசுத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள் சுமார் ஒன்பது அடி உயரமுள்ள வெங்கடேசப் பெரும்ான் அலங்காரங்களுடன் அழகாக, பூரீதேவி, பூதேவி -سا (260ی சமேதரராக எழுந்தருளியிருப்பது கண்கொள்ளாக் காட்சி யாகும். பெருமானுக்குரிய வாகனங்களாகிய குதிரை, அன் னம், கருடன், பாம்பு என்பனவை தங்க தகட்டினுற் செய் யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தன. மூலஸ் தானக் கோபுரபும் தங்கத்தால் வேயப்பட்டதாகும்.
திருவெங்கடமுடையானின் வைரக்கிரீடத்தால் ஆசி பெறுவதை பக்தர்கள் பெரும் பேருகக் கருதுகின்றனர். பிர சாதங்கள் வடை, லட்டு என்பன. தென்னிந்தியாவிலேயே மிகச் செல்வாக்கான கோயில் திருப்பதியேயாகும். கோயில் தரிசனம் முடிந்ததும் திருப்பதியிலேய்ே மதிய உணவையும் முடித்துக்கொண்டு சுமார் பதினென்றறை மணியளவில் திரு ப்பதியை விட்டுப் புறப்பட்டோம். ஆந்திரப் பிரதேசத்திலி ருந்து திரும்பவும் தமிழ்நாட்டிற்குள் புகுந்தோம்.
பகல் சுமார் ஒரு மணியளவில் முருகனின் ஐந்தாவது படைவீடாகிய திருத்தணிகையைப் போயடைந்தோம். திரு ப்பதி சென்று பூரீ வெங்கடாசலபதியைத் தரிசித்துத் திரும் பும் பக்தர்கள் திருத்தணிகை முருகப் பெருமானையும் வழி
பட வேண்டும் என்பது ஐதீகம்.

Page 97
അ 178 -
திருத்தணிகை
சூரபத்மன் முதலிய அசுரர்களோடும், வள்ளியின் உற வினர்களாகிய வேடுவரோடும் போர் புரிந்த பின்னர் முரு கன் கனது கோபம் த0ணிந்து வந்து அமர்ந்த மலை இத் திரு த்தணிகை மலையாகும். மலைக்குச் செல்வதற்கு சுமார் 365 படிகள் இருக்கின்றன. பக்தர்கள் மார்கழி மாதம் 31ந் திகதி இரவு தீபம் வைத்தவுடன், ஒவ்வொரு படிக்கும் ஒவ் வொரு திருப்புகழைப் பாபித் தேங்காய் உடைத்து கற்பூரம் கொழுத்தி வ ண ங் கி க் கொண்டே போய் மலே யை அடைந்து இரவு முழுவதும் கோயி வி லேயே தங்கியிருந்து தை மாதம் முதலாம் தி க இழே இறங்குவர். இந்த வழிபாட்டி ஞல் வருடம் முழுதும் எவ்வித குறை யுமின்றி தம்மைக் காப் பாற்றுவான் என்று பக் தர்கள் பெரிதும் நம்பு கிருர்கள். ஒவ்வொரு ஆண்டிலும் மாசி மாதத் தில் குமரனுக்கு மன விழாநடாத்தி மகிழ்வார்
st
திருத்தணிகை மலையை சுற்றிக் கும்பிட்டுவிட்டு மன நிறைவுடன் பஸ் ஸி ற்குத் இரும்பினுேம்,
திருத்தணிகையில் வள்ளி தெய்வானேயுடன்
அழகன் முருகன்!
 

aum- 79 -
தமிழ் நாட்டிற்கே உரிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டு அரக்கேர்ணம், செங்கல்பட்டு, சேந்தமங்கலம் ஆகிய இடங்களைக் கடந்துகொண்டு வந்தபோது "காஞ்சி புரம் ஊராட்சி ஒன்றியம்" வணக்கம் கூறி எங்களை வர வேற்றது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் "தங்கநகரம்’ என்ற சிறப்புப்பெயரையும் பெற்றுள்ளது. இங்கிருந்த திருஏகாம்பரேஸ்வரர், கோயி லுக்குப் போனுேம்.
உமாதேவியார் மண்ணினல் சிவலிங்கம் ஸ்தாபித்து பூஜித்து வருகையில் அதனைப் பரீட்சிக்க விரும்பிய சிவபெரு மான் கம்பா நதியைப்பெருகச் செய்து அந்த லிங்கத்தை மூழ்குவிக்க, தேவியார் மார்போடு அனைத்துக் காப்பாற்றி ஞராம். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமான் பெயர் ஏகாம்பரநாதர். அன்னை பெயர் காமாட்சி என்பதாகும். தல விருட்சம் மாமரமாகும். இதுதான் கோவில் வரலாறு.
இக் Garrasava சுற்றிப் பார்த்துவிட்டு ஷாப்பிங் செய் வதற்காக் இன்னுேர் பகுதிக்கு வந்தோம். இந்தப் பகுதியில் நிறைய வீடுகள் காணப்பட்டன. சில வீடுகளில் இருந்த ஒரிரண்டு அறைகளில் பீரோ நிறைய காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், வேஷ்டிகள், பாவாடைத் துணிகள் என்பன வைத்து விற்கிருர்கள், எங்கள் பஸ் அந்த வீதிக்குள் நுழைந்ததும் நாங்கள் வெளிநாட்டுப் பிரயாணிகள் என் பதை இனங்கண்டுகொண்டு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நின்றவர்க்ள் கை காட்டி எங்களை அழைத்தார்கள்.

Page 98
جسے 160 --۔
உள்ளே சென்றதும் அவர்கள் காட்டிய சேலைகளில் எதை எடுப்பது எதைவிடுவதென்பது தெரியாமலிருந்தது. அவ்வளவு தொகையான அருமையான தினுசுகள் அவை! சுமார் மூன்று மணித்தியாலங்கள் ஷாப்பிங்கை முடித்துச் கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டோம்.
மெட்ரூஸ் நல்ல மெட்ருஸ்
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் நாற்பத்தைந்து மைல் தொலைவில் இருந்தது சென்னைப் பட்டினம்.
திருச்சியில் இருந்து ஒரு பதிஞரும் திகதி புறப்பட்ட நாங்கள் இருபத்தைந்தாம் திகதி இரவு சென்னையை நோக் கிப்போய்க் கொண்டிருந்தோம். இந்தப் பத்து நாட்களில் தாங்கள் பார்த்து முடித்துவிட்ட கோயில்களையும் பிற இடங்களையும் பற்றி நினைத்துப் பர்ர்த்தபொழுது ஒரே பிர மிப்பாக இருந்தது.
இரவு சுமார் ஒன்பது மணிபோல் சென்னையை அடைந் தோம். அந்த நேரத்தின்பின் கூட நாங்கள் நாற்பது பேரும் தங்குவதற்கு ஒரு வசதியான ஹோட்டலை ஏற்பாடு செய்து கொள்ள முடிந்தது. எங்களுக்கு இருந்த அசதியில் "பூருரீராம பவான்" ஹோட்டலில் அறை கிடைத்ததுதான் தாமதம் அவரவரே அறைகளில் முடங்கிக் கொண்டோம்.
சென்னையில் மொத்தம் மூன்று நாட்கள் தங்கி இருந் தோம். சென்னை நகர் அல்லது தமிழ்நாடு என்றபோதே முன்னரேயே பழக்கப்பட்ட இடத்திற்கு வந்து விட்டாற் போன்று அறிமுக உணர்ச்சி ஒன்று ஏற்பட்டது.
பொதுவாக எல்லோருமே சென்னையைப்பற்றி நிறையக் கேள்விப்பட்டிருந்தார்கள், ஐம்பது சதுர மைல் பரப்பள

ܚ 7 8 ܐ ܚܚܢ
வைக்கொண்ட சென்னையின் சனத்தொகை கிட்டத்தட்ட பதினைத்து லட்சமாகும்.
லண்டன் நகரத்தின் மத்தியில் ஒடுகின்ற தேம்ஸ் நதி யைப்போல் சென்னை நகரை ஊடறுத்து மெல்லென ஒடிக் கொண்டிருந்தது கூவம் நதி, கூவத்தின் அருகே ஏராள ம்ான ஊழியர்கள் திருத்த வேலையில் ஈடுபட்டிருந்தார்கள்.
கலை வளர்க்க அடையாறும் களையைத் தீர்க்க மெரீஞ அம் அதைவிட எலியட்ஸ், சாந்தோம் போன்ற பீச்சுக்க ளும் கவலையைப் போக்க சபையர், எம்ரால்ட், புளுடய மண்ட் போன்ற பல தியேட்டர்களும் களிப்புடன் நடன மாட நைட் கிளப்புகளும் அங்கு கன்னியர் அழகு காட்டும் பாஷன் ஷோக்களும், பாஷன் பாரேட்டுகளும், அறுசுவை உணவு படைக்கும் டிரைவ் இன் ஹோட்டல்களும், சாதா ரண சைக்கிளிலிருந்து மோட்டார் சைக்கிள், கார், ஸ்கூட் டர், புகைவண்டி வரை தயாரிக்கும் தொழிற்சாலைகளும் இன்னும் பல சிறப்புக்களும் கொண்ட மாநகர்தான் சென்னை,
இம்மாநகரை அவரவரே தத்தம் போக்கில் சென்று பார்த்தோம். சில முக்கிய இடங்களுக்கு மட்டும் குழுவினர் எல்லோருமாகச் சேர்ந்து போய்ப் பார்த்து வந்தோம். அநேகமானுேர் ஷாப்பிங் செய்வதிலேயே கண்ணும் கருத்து மாக இருந்தார்கள்.
மெட்ருஸில் இலங்கையைச் சேர்ந்த பலர் இருப்பது யாவரும் அறிந்ததே. நான் அங்கு தங்கியிருந்த பொழுதும் சில தெரிந்தவர்களைக் காணவும், தெரியாத இலங்கைத் தமிழர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளவும் முடிந்தது.
அன்று மத்தியானம், அத்தனை நாட்களிலும் இல்லாத ஓர் ஆசை எங்களுக்கு ஏற்பட்டது.
ஆமாம்! அன்று மத்தியானம் எப்படியாவது "நொன் வெஜிடேரியன்’ சாப்பாடு சாப்பிட்டுவிட வேண்டுமென்று

Page 99
- 182 -
விரும்பினேம். நானும் இன்னும் இருவரும், நாகரீகமாகக் காணப்பட்ட ஒரு ஹோட்டலினுள் மெல்லியதாக தவழ்ந்து வந்து கொண்டிருந்த மேல் நாட்டு இசையை அனுபவித்த வாறே நுழைந்தோம். மேலே செல்லும் படிக்கட்டுகளில் கயிற்றுப்பாய் போடப்பட்டு, ஆங்காங்கே காணப்பட்ட கட் டைச் சுவர்களின் மீது மலர்ச்சாடிகள் வைக்கப்பட்டிருந் தன. அழகான விரிப்புகள் போடப்பட்டிருந்த மேஜைகள் ச குஷன் நாற்காலிகள், மேஜையின் மையத்தில் இருந்த பூச் சாடி, கண்ணுடிக் குவளையாலான சிகரெட் ஆஷ்டிரேக்கள், ஆகிய எல்லா அலங்காரங்களும் அந்த மெல்லிசையும் சேர்ந்து எங்கள் மனதில் ஒரு எக்களிப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இந்த எக்காளத்தினுல் மனம் குதிபோட கால்களும் மெதுவாகக் குதிபோட, பற்ருததற்கு கைவிரல் களும் ஹாண்ட்பாக்கில் தாளம்போட்டுக் கொண்டன. அங்கே ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருந்த சில மொட்” ஆசா மிகள் சற்று தாராளமாகவே தாளம் போட்டுக் கொண்டி ருந்தார்கள்.
"டிப் டாப்"பாக டிரஸ் செய்து கொண்டிருந்த சர்வர் வந்து பணிவுடன் நின்றர்.
*ப்ளெயின் ரைஸ்ஸும், சிக்கன் கறியும்" வேண்டும் என்று சொல்லவே, சற்று நேரத்தால் தும்பைப்பூவாக மலர்ந்து போயிருத்த சாதத்தையும், கோழிக்கறியையும், இன்னெரு தட்டில் தயிர் விட்டுத் தயாரித்திருந்த பம்பாய் வெங்காய சாலட்டையும் கொண்டுவந்து வைத்தார்.
"அடடே! வெஜிடபிள்ஸ் எதுவும் இல்லையே"
நான் அங்கலாயித்துக் கொண்டதை கேட்ட நண்பர். உருளைக்கிழங்கு கறியை எடுப்பித்துத் தந்தார். எங்களுடன் வந்த மற்ற நபர் வெறும் "ப்ரூட் ஸாலட்" மட்டுமே சாப் பிட்டார்.
வாயைத் தீட்டிக்கொண்டு நானும் நண்பியும் சாப்பிட்டு முடித்துக்கொண்ட பின்னர், சர்வர் பத்து ரூபாய்க்கு பில்

கொண்டு வைத்தபோது, கையைத் தீட்டிக்கொண்டு பணத் தைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தோம். கொழும்பில் சைனீஸ் ஹோட்டலில் நுழைந்துவிட்டு வந்தது போலிருந்
岛函· m
அன்று மாலையே திரும்பவும் ஒரு தடவை வெளியே சுற்றிவரப்போனுேம், மவுண்ட்ரோட்,மூர் மார்க்கெட் ஆகிய இடங்களுக்கெல்லாம் போய்விட்டு ஹோட்டலுக்கு வந்த போது மணி பத்தாகி விட்டிருந்தது.
மெரீனு
காந்தி, வள்ளுவர், கண்ணகி சிலைகளையும் அண்ணு சமாதியையும் கொண்டிருந்த மரீனு பீச்சோ கண்பார்விைக்கு எட்டாத வரையில் பரந்து விரிந்து கிடந்கத. அந்க மினP
அண்ணு சமாதி

Page 100
-a l84 m.
பரப்பில் ஒருபகுதியைத் தோண்டி அதனுள் ஊறிக்கொண்டி ருந்த நல்ல தண்ணீரை குடிநீராக டம்ளர்களில் விற்றுக் கொண்டிருந்தார் ஒருவர். சிப்பிகள், கிளிஞ்சல்கள், சீப்புகள் கண்ணுடிகள், முத்து ம்ாலைகள் விற்றுக்கொண்டிருப்பவர் ஒரு புறம். சாயா, கலர், சுக்குத்தண்ணீர் விற்பவர் ஒருபுறம். பொரித்த கடல் பொரியாத கடலை விற்பவர் ஒருபுறம், ப்படி எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு மெரீனுவை மெரீயாக்கிக் கொண்டிருந்தார்கள்.
இவ்வளவு சந்தடியிலும் அமைதி குடி கொண்ட ஒரு இடம் இருந்ததென்றல் அதுதான் அண்ணு சமாதி. அந் தச் சமாதியின் அருகில் வெறும்கால்களுடன் பூக்களை தூவி அர்ச்சித்து அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த மக்கள் ஏரா னம். ஆளுல் அத்தனை பேரும் அமைதியே உருவாக ஒடுங்கி நின்றர்கள்,
கல்லிலே கலைவண்ணம்
மெட்ருளில் நின்றபோது ஒருநாள் காலை மகாபலிபுரம் போவதாக ஏற்பாடாயிற்று. மகாபலிபுரம் என்றதும் எனக்கு அமரர் கல்கியின் சிவகாமியின் சபதமே நினைவிற்கு வந்த்து!
பள்ளி நாட்களில் பரீட்சைக்காக இரவு பகல் பாராது விழுந்தடித்துக்கொண்டு, இந்திய வரலாறு படித்த சமயம் பல்லவன் போர் தொடுத்தபோது இலங்கை அரசன் மான வர்மன் எங்கே இருந்தான்? பாண்டியன் என்ன செய்தான்? என்றெல்லாம் தலையைப் பிய்த்துக்கொண்டு ஞாபகம் வைத் திருக்கவேண்டியிருந்தது. ஆணுல் அதே பல்லவ மன்னன் மகே ந்திரவர்மர் அமரர் கல்கியின் படைப்பில் உலாவியபோது, அந்த வரலாற்றிற்கு இருந்த சுவையே தனி இவற்றையெல் லாம் நினைவு கூர்ந்து கொண்டிருக்கையில் சுமார் எட்டேகால்

- 185 -
மரியளவில் பஸ் மகாபலிபுரத்தை அடைந்தது. எங்களுக்கு உதவுவதற்காக ஒரு வழிகாட்டியை தேடிக்கொண்ட பிறகு, மாமல்லபுரத்தை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.
சற்று வயதானவராய் நல்ல உயரமுடையவராய் ம்ெலி ந்கதேகத்தை உடையவராய் வேட்டியும் தோளில் ஒரு துண் டும் மட்டுமே போட்டுக்கொண்டிருந்த வழிகாட்டியைக் கண்ட போது "அவரால் எமக்கு விளங்க வைக்க முடியுமா?" என நான் சந்தேகப்பட்டேன் பின் ஞடி அவர் தன்னை "ஐ ஆம் ஹெட் கைட் ஆறுமுகம்" என்று அறிமுகப் படுத்திக்க்ொண்டு சிற்பங்களுக்குக் கொடுத்த விளக்கங்களைக் கேட்டபோது திகைத்து விட்டேன்! அவர் கூறியது சரித்திரத் தையே தலைகீழாக்கிவிட்டது. அவ்வளவு கச்சிதமாகக் கதை சொன்னுர்.
வெகு கம்பீரமாக ராஜ நடைபோட்டார். ' அந்தக்கம் பீரம் மகேந்திரருக்கும், மாமல்லருக்கும்கூட இருந்திருக்குமோ என்னவோ? மாமல்ல நரசிம்மர் சிறுவராய் இருந்தபோது, தந்தை மகேந்திர பல்லவரோடு மகாபலிபுரத்துக் கடற்கரை க்கு உலாவ வருவாராம். சிறிய பெரிய கற்பாறைகளும். குன்றுகளும் சூழ்ந்திருந்த அந்த கடற்கறை பிராந்தியத்தில் இருவரும் அமர்ந்திருந்து இராஜாங்க விஷயத்திலிருந்து வீட்டு விஷயம்வரை உரையாடுவார்களாம்.
அப்படி ஒரு சமயம் வந்தபோதுதான் கற் பாறை ஒன்றின் நிழ லைக்கண்ட இளவரசர் “goyu unr பாறையின் நிழலைப்பாருங்கள், அது யானையைப்போல் இல் லையா?" என சுட்டிக் காட்டினராம்.
சகாதேவ ரதமும் யானையும் !

Page 101
سس- 186 --
தெய்வாதீனம்ாக அவர் வாயிலிருந்து வெளிவந்த அச் சொற்கள் கலைப்பிரியாான மன்னரை சிந்திக்கத் தூண்டியது, அதன் பின்னர் அந்தக் காலத்தில் துறைமுகமாக விளங்கிய கடற்கரைக் குன்றுகள்யர்வும் சிற்பங்களாகின. கற்களைக் குடைந்தும், விமானங்கள் எழுப்பியும் ஆயனச் சிற்பியின் தலைமையில் வேலே நடந்தது. இந்தக் கதையெல்லாம் இப் படியிருக்க வழிகாட்டி கனது சொந்தக் கதையை சொல்லிக் கொண்டிருந்தார். “இதோ பாருங்கள் இந்த இடத்தை! பஞ்ச பாண்டவர் வனவாசம் மேற்கொண்ட நாட்களில் இந்தக் குகைகளில் வந்துதான் இளைப்பாறினர்கள். அதனல் இதற்கு "பஞ்ச பாண்டவர் வனவாச இல்லம்" என்று பெயர் வந்தது என்று கூறி அங்கே காணப்பட்ட சில பாறைகளுக்கு விளக் கம் கொடுத்தவாறே அவர் மேலே செல்ல நாங்களும் பட்டா ளமாக பின்னல் சென்ருேம்.
இன்னேர் இடத்தில் ஒரு பெரிய நீண்ட பாறையிருந்தது, அதன் மேலேபிரம்மாண்டமான வட்டப் பாறையொன்று நூலிழையில் தொத்திக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க அதிசயமாக இரு த்தது. மேலே ஏறிநின்று ஒரு கையால் தள்ளினு
வெண்ணை உருண்டை.
லேயே அது பயங்கரமாக கீழே உருண்டு வந்துவிடும் போலத் தோன்றியது. எங்கள் நண்பர்களிள் சிலர் தம் பலங்கொண்ட LDL (6th வட்டப்பாறையைத் தள்ளிப் பார்த்தார்கள். உ ஹஜூம். . . . . . முடியவில்லை.
இந்த அழகைவிட வழிகாட்டியின் வாய்ப்பேச்சு வெகு அழகாக இருந்தது. 'லிஸின் டு மீ! வீமன் இதோ இத்தக் குகையில் இளைப்பாறிக் கொண்டிருக்க, வீமனுக்காக திரெள பதை கடைந்து எடுத்த வெண்ணைக் கட்டி தான் இது" என்று அந்த வட்டப்பாறையைச் சுட்டிக்காட்டிஞர்" அந்த பிரமா ண்டமான வட்டப்பாறைதான் வீமனுக்காக திரெளபதை கடைந்தெடுத்த வெண் ணைக் கட் டி யாம். எப்படி இருக்கிறது சதை?
 

-سس- : 187 -سم
அங்கேயிருந்து வேறு ஒரு இடத்திற்கு வந்தபோது "இங்கே பாருங்கள். கீழே எட்டிப்பாருங்கள், இது திரெள பதை அம்மையாரின் நீச்சல் குளம், அவர் தோழியருடன் நடந்து வந்து ஸ்நானம் செய்த இடம் இதுதான்’ என்ருர் வழிகாட்டி,
நாங்களும் அவசரம் அவசரமாகக் கீழே குனிந்து பார்த் தபோது புல்லும், புதரும், மண்ணும் மண்டிக்கிடந்த வெறும் தரைதான் தெரிந்தது. அதைவிட சில படிக்கட்டுக ளும், சிதைந்த உருவில் கற்பாறைகளும் காணப்பட்டன, அது ஒரு குளமாக இருந்திருக்கக் கூடும்.
அங்கே காணப்பட்ட கற்கள், சிற்பங்கள் எல்லாம் அரு கருகே காணப்படவில்லை. மணலும், சிறு கற்களும், சிறு புதர்களும் செறிந்திருந்த அந்தப் பிரதேசத்தில் வழிகாட்டி யைப் பின் தொடர்ந்து நாங்கள் சென்று கொண்டிருக்கும் போது சில இடங்களில் திடீரென வழிகாட்டி நின்று ஆகா யத்தையோ, தூரத்தே தெரியும் பெரிய மரத்தையோ பார்த் துக்கொண்டிருப்பார். ஏதாவது விசேஷம் இருக்கிறதாக்கும் அதனுல்தான் நிற்கிருர் என்ற எண்ணத்தில் நாங்கள் அவரை நெருங்குவோம். நாங்கள் எல்லோரும் அவர்அருகே போய்ச் சேர்ந்தவுடன் 'ஆஹா ! எல்லோரும் வந்து விட்டீர் களா? சரி! இனி பேதலே போவோம். வொலோ மீ (Fallow Me) என்று மேற் கொண்டு நடக்கத் தொடங்குவள்ர். ஆனல் அவர் நின்ற இடத்தில் எந்க விதமான விசேஷமும் இராது. மெதுவாகப் பின் தொடரும் எங்களை ஒன்று சேர் த்து அழைத்துச் செல்வதற்காகவே இந்த யுக்தி,
ஒரு இடத்தில் ஒரு பெரிய கற்பாறையைக் குடைந்து அதே கல் லைக் கொண்டே விநா யகப் பெருமானின் உருவம் செதுக்கியிருந் கார்கள். விபூதியைப் பட்டையாகப் பூசிக் கொண்டு அவரும் அழ காக வீற்றிருந்தார்.
சிங்கமும் திரெளபதி ரதமும்

Page 102
-- 188 -
வழிகாட்டி தனது கதையை நீட்டி முழக்கத் தொடங் கினர். na
"நான் இப்போது பல வருஷ காலமாக இந்த கைடு வேலையைப் பார்க்கிறேன். எலிஸபெத் மகாரா மணியம்மா கூட ஒரு சமயம் இங்கே வந்திருந்தாங்க. இதோ இப்படித் தான் அவங்க நடப்பாங்க" என்று சொல்லியவாறே தனது தோளில் போட்டுக்கொண்டிருந்த சால்வைத் துண்டை எடுத்து உடலைப் போர்த்திக் கொண்டார், பிறகு வலது கையை மடக்கிக் கொண்டு, ஒரு கைப்பையை கொழுவிக் கொண்டு வருவது போன்ற பாவனையாக வைத்துக்கொண் டார். தலையை மெதுவாக, ஒய்யாரமாக அப்படியும் இப்படி யும் திருப்பித் திருப்பிப் பார்த்துக்கொண்டே உதட்டில் ஒரு சிறிய புன்னகையை தவழவிட்டுக்கொண்டு ஹை ஹில்ஸ் போட்டுக்கொண்டால் போல பாதங்களை சற்று உயர்த்தி அவர் நடந்து காட்டிய போது எங்களால் சிரிப்புத் தாள முடியவில்லை.
அதற்குப் பிறகு அறிஞர் அண்ணு, சிவாஜி கணேசன், எம். ஜி. ஆர்., நாகேஷ் ஆகியோர் நடப்பது போலவும் செய்துகாட்டி எங்கள் நடையின் சிரமத்தை மறக்க வைத் தார். "பெரிய பெரிய ஸ்டாரெல்லாம் சினிமா ஷ"சட்டிங் கிற்கு வரும் போதெல்லாம் நான்தான் கைடு, "வா ராஜா வா' படத்திலே கூட நல்ல சூட் எல்லாம் போட்டுக்கிட்டு நான் இருக்கேனே! பார்க்கலையா நீங்க," என்றர்.
அவரது சாதுர்யமான நாவன்மையால் களையைக் கூட ம்றந்திருந்தோம் நாங்கள். ஒருவழியாகக் கடற் கரைக் கோயிலை வந்தடைந்தோம். கடற்கரையில் வேறு சிலரும் காணப்பட்டனர். w

= !89 -
ச ந் று பாழடைந்த கோலத்தில் காண ப் பட்ட கடற் கரைக் கோ யி லை பார்த்துக் கொண்டு ஒன்பதே கால் மணிபோல் பஸ்  ைஸ் அடைந்தோம்.
கல்கியின் கைவண்ண த்தில் சிவகாமியின் சபத மாக உருவாகி மனதைக்
கடற்கரை கோயில் கொள்ளை கொண்ட பல்லவர் கலைவண்ணத்தை வழி காட்டி தன் நாவன்மையால் அழகு படுத்தியதை எம்முள் பாராட்டாதவர்களே கிடையாது.
எங்களுள் யாரோ ஒருவர் "நீங்கள் சொன்னீர்களே சிற் பங்களைப்பற்றிய கதைகள், வெண்ணைக் கட்டியென்றும் பாண்டவர் வனவாச இல்லம் என்றும், உண்மையாகவே இதெல்லாம் பாண்டவர் காலத்தவையா?" என்று வழிகாட் டியிடம் கேட்டார்.
*சே சே! இல்லையம்மா இதெல்லாம் ஐயாவுடைய சொந்தக் கற்பனைகள். பொய்யோ, மெய்யோ நானும் பிழைக்கனுமில்லையா?" என்று உண்மையை ஒப்புக்கொண் டார். ஹெட் கைட் ஆறுமுகம் மெச்சப்படவேண்டிய ஒரு காரெக்டர் தானே?
எங்களிடம் தனக்குரிய சன்மானத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு, ஆ%ளக்காணக் கிடைக்கவில்லை. வேறு ஒரு கிராக்கியைத் தேடிக்கொண்டு போய்விட்டார்போலும். நாமும் மகாபலிபுரத்திலிருந்து புறப்பட்டு திருக்கழுக் குன் 2த்தை அடைந்தோம்.

Page 103
سے 190 تـــــــــے
தாயி! சாமி! ஊசி, பாசி வாங்கிக்கோ!"
மகாபலி புரத்திலிருந்து சுமார் பத்து மைல் தொலை வில் இருப்பது திருக்கழுக்குன்றம். இக் குன்றையடுத்த பிரா ந்தியத்தில் அதாவது மலையடிவாரத்தில், நிறைய நரிக்குற வர்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
எங்கள் பஸ் அவ்விடத்தில் நிற்பாட்டப்பட்டதும் அவர் கள் பஸ்ஸை நெருங்கி வந்து "தாயீ, சாமி, ஊசி, பாசி வாங்கிக்கோ" என்று கத்திக்கொண்டே தங்கள் கைகளில் இருந்த மணிகள், மாலைகளைக் காட்டினர்கள். ஊசியையும், பாசியையும் எங்களில் யாரும் வாங்கிக்கொள்ளவில்லை. கொஞ்சநேரம் பஸ்ஸை சுற்றிச்சுற்றி வந்து கத்திவிட்டு வாங்கிக்காட்டி போய்யா" என்ற நளின பாவனையுடன் ஏற்கனவே தாம் குழுமியிருந்த இடத்திற்குப் போய் சுவாரஸ் யூமாக வளவளா என்று பேச்சில் ஈடுபடத்தொடங்கிவிட்
Irri 356ir.
நசிக் குறவர்" என்று அவர்களுக்கு யார்தான் பெயர் வைத்தார்களோ? நரிக்குறத்திகள் எல்லோருமே அனேகமாக ஒரு மாதிரியே ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தார்கள். ஆபரணங்கள் என்றதும் தங்க வைர நகைகளாக இருக்கும் என்று மலைத்துவிடாதீர்கள், எல்லாம் மணியினலும் சிப்பியி ஞலும் ஆன மாலைகள் தான். ஒவ்வொருத்தியும் குறைந்தது ஆறு மாலைகளாவது கழுத்தில் போட்டுக்கொண்டிருந்தாள். கைகளில் நிறைய வளையல்கள், காலில் கொலுசு, மெட்டி, மிஞ்சி. மேலும் கூந்தலை தூக்கி முடிந்து அதிலும் மணி ம்ாலைகளைச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். பூக்களைச்சூடிக் கொண்டவர்களும் இருந்தனர். சில இளம் பெண்கள் கொஞ் சம் ஸ்டைலாகவே காணப்பட்டார்கள். மார்போடு சேர்ந் தாற் போல், நெஞ்சுக் குழியோடுமுடிச்சுப்போட்டுக்கொண்ட

a- 19 -
ரவிக்கையும், இடுப்பிற்குக் கீழ், தொப்புள் தெரிய அணியப் பட்ட ஒரு சுருக்குப் பாவாடையுமே அவர்களது ஆடை. அந்தப் பாவாடை கூட முழங்காலுக்கு கீழ் கணுக்காலுக்கு மேல் ஒரு முக்கால் பாவாடை யாகத்தான் இருந்தது.இடுப்பை ஒடித்து, நாரியை வளைத்து அவர்கள் அழகு நடை நடந்தபோது பார்ப்பதற்கு கவர்ச்சியாகவே இருந்தது.
நரிக்குறவர்களோ சர்வ சாதாரணமாகவே இருந்தார் கள். ஒரு முழத்துண்டுதான் அவர்களின் ஆடை, ஒரு சிலர் கொஞ்சம் கூடக் குறையவும் ஆடை அணிந்து கொண்டிருந் தார்கள். சிலர் குடுமியும் கட்டி, முண்டாசும் கட்டிக்கொண் டிருந்தார்கள். ஒய்வே இல்லாம்ல் வாய் நிறைய வெற்றிலை யைக் குதப்பிக் கொண்டிருந்தார்கள்.
திருக்கழுக்குன்றத்து வரலாற்றுச் சிறப்பு பிரசித்தி பெற் றது. சிவபெருமான் திருவாக்கிற்கு எதிர் வாக்குரைத்த துற விகள் இருவரும் கழுகு ரூபம் பெற்று அங்கே வழிபட்டு வரு கிருர்களாம் என்பது தான் ஐதீகம். மாணிக்கவாசக சுவாமி களுக்கு குருவடிவு காட்டிய தலமிதுவே. "காட்டிஞய் கழுக் குன்றிலே’ எனத் திருவாசகத்திலும் உள்ளது. சுவாமியின் பெயர் வேத கிரீச்சுரர். அம்மையார் பெயர் பெண்ணினல் லாள் என்பதாகும்.
அர்ச்சகர் அந்தக் கழுகுகளுக்கு பிரசாதம் வைப்பது வழக்கம். ஆனல் அன்றைய தினம் பகல் ஒருமணி வரை காத்திருந்தும், கழுகுகள் வந்து வட்டமிட்டுக் கொண்டிருந் தனவே தவிர, பிரசாதத்தின் ருசியை அவை பார்க்கவில்லை" திருக்கழுக்குன்றத்தில் காலை பத்தரை மணியிலிருந்து, மத்தி யானம் ஒன்றரை மணிவரை கழித்த அந்த நேரத்திற்குள், ஒரு முறை ஒய்வாக பஸ்ஸிற்குள் நானும் இன்னும் சில நண் பர்களும் உக்கார்ந்து கொண்டிருந்தோம். அப்போது நான் டிரைவருடன் பேச்சுக் கொடுத்தேன்.
"டிரைவர் ஸார், உங்களால் எனக்கு ஒரு சின்ன உதவி ஆக வேண்டியிருக்கிறதே."

Page 104
ہے۔ 192 سے
"என்னங்க சொல்லுங்க, செய்திட்டாப் போச்சு" என் ருர் தன் ஸிட்டிலிருந்தபடியே முகத்தை மட்டும் திருப்பி: "நாங்கள் இப்போ இவ்வளவு தூரம் பயணம் செய்திருக் கோமே, எனக்கு அந்த மைலேஜ் கணக்குகளை மேலெழுந்த வாரியாகச் சொல்ல முடியுமா?*
*ம்! முடியாம என்ன? மொதல்ல திருச்சியிலே ஸ்டாட் பண்ணி மதுரைக்கு ' என்றவாறே தொடங்கி நாம் நின்று கொண்டிருந்த திருக்கழுக் குன்றம் வரை பிரயாணம் செய்து விட்ட கிலோ மீட்டர் க்ணக்குகளை பெருக்கிப் பிரித்து மைல்களாக்கி சொன்னர். பிறகு நான் வழிகாட்டிப் புத்த கங்களைப் பார்த்த போது அவர் அன்று கூறிய மைலேஜ் கணக்குகள் கனகச்சிதமாகப் பொருந்தியிருந்தன.
பின்னர் திருக்கழுக்குன்றத்திலிருந்து புறப்பட்ட நாங் கள் சுமார் மூன்றரை மணியளவில் திரும்பவும் மெட்ருஸை அடைந்தேர்ம்.
திருவள்ளுவருக்கு கோயில்
a-oe-assasso--
மெட்ருஸை விட்டு மறுநாள் காலை சுமார் ஆறுமணி போல புறப்பட்டோம். மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந் ததனுல் நண்பர்களிடையே கதைப்பதற்கும் நிறைய சங்கதி கள் இருந்தன. சேலை வாங்கியதைப் பற்றியும், பிரியாணி சாப்பிட்டது பற்றியும் இன்னும் பல கதைகளையும் நண்பர் கள் ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
என் முன் ஸிட்டு நண்பர் ஒருவர் ஏதோ நினைவு வந்த வராக, "நான் திருவல்லிக் கேணி பார்த்த சாரதீஸ்வரர் கோயிலைப் பார்த்தேன்" என்ருர், "அப்படியா? விசேஷம் ஏதாவது இருக்கிறதா?’ என்றேன். முன் ஸிட்டுக் காரரும் நானும் அடிக்கடி பார்த்த, பார்க்கத்தவறிய கோயில்களை யும், ரஸித்த காட்சிகளையும் பற்றி பரஸ்பரம் உரையாடிக் கொள்வது வழக்கம். அவர் தொடர்ந்தார்.

in 93
*அருச்சுனனுக்கு பாரத யுத்தத்தின் போது கிருஷ்ண பகவான் உபதேசித்த பகவத் கீதை வாசகமெல்லாம் அக் கோயில் சுவரிலே எழுதி வைத்திருக்கி ருர்கள். பார்த்தசார நிக்குரிய ஒரே ஒரு கோயில் இது தானும். அதைவிட திரு வள்ளுவருக்காக அமைந்துள்ள ஒரு கோயிலையும் பார்த்தேன் திருவள்ளுவர் சப்பானி கட்டிக்கொண்டு இருப்பதைப் போல உருவம் அமைத்துள்ளார்கள். அவர் பிறந்தது முதல் உள்ளதாக கருதப்படும் இலுப்பை மரத்தின் அடிப்பா கத்தை வெட்டி பாதுகாப்பாக இன்றும் வைத்திருக்கிருர் கள். ஆதி பகவன் வள்ளுவரைக் குழந்தையர்க விட்டுச் சென்ற வரலாற்றை விளக்குவதற்காக மரத்தடியில் குழந் தைச் சிலை எழுப்பி வைத்திருக்கிருர்கள். இன்னுெரு விசே ஷம் என்னவென்ருல் அங்கே தமிழில் தான் பூஜை நடக்கி றது. விபூதி கூட தருகிருரர்கள்" என்று தான் பார்த்துவிட்டு வந்ததைப் பற்றி விபரமாகச் சொன்னுர்.
'm * நீங்கள் திருமயிலை கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போனீர் களா?" என்றர். திருமயிலை கபாலீஸ்வரர் கோயில் பிரசித்த tானது, ஒரு சிறு தடங்கல் ஏற்பட்டதஞல் என்னுல் அந் தக் கோயிலுக்குப் போகமுடிய வில்லை. சிவநேசர் என்ற ஒரு பக்தர் மரணமடைந்து விட்ட தனது மகளினது எலும்பை சம்பந்தருக்கெதிரே வைக்க, அவர் திருப்பதிகம் பாடி அவ் வெலும்பை மறுபடியும் உருவம் பெறச் செய்தது இந்த சில ஸ்தலத்திலேயேய்ாகும். சுவாமி பெயர் கபாலீச்சுரர், தேவியார் பெயர் கற்பகவல்வி
藉 மயிலாப்பூரிலிருந்க இந்தக் கோயிலுக்கு நான் போகாத காரணத்தினல் கோயிலைப் பற்றிய விபரங்கள் எழுத முடிய வில்லை. .
திருவண்ணுமலே
سمتیے حی��e= صبسحہ
சுமார் பத்தேகால் மEயளவில் திரு:ைண்ணுமலையை அடைந்தோம். அடிமுடி தேடிய பிரம்டி விஷ் ஒதுகளுக்கு

Page 105
-- I 94 Aur
சோதிப் பிழம்பாக நின்று சிவன் தரிசனம் கொடுத்த தலம் இதுவாகும், மாணிக்கவாசகர் திருவெம்பாவையும் திருவம் மாஃனயும் பாடியது இத் தலத்திலேயேயாகும். அருணகிரி நாதரது ஜன்ம பூமியும் இதுவேயாகும். பெருமான் பூரீ அண்ணுமலையார் எனவும் பிராட்டியார் பூரீ உண்ணுமுலை அம்மன் எனவும் அழைக்கப்படுகின்றனர். அக்கோயிலைச் சுற்றிக் கும்பிட்டுக்கொண்டு பூரீ ரமணுசிரமத்தை அடைந் தோம்,
 

ܡܘܗܡܗ 1935 ܚܢ
ழரீ ரமண மகரிஷி
ரமணர் ஆச்சிரமத்து 'ரமணி!"
-es secreer
பாண்டிய நாட்டின் திருச்சுழியல் என்னும் தலத்தில் 29-12-1879ல் சுந்தரம் அய்யருக்கும், சதி அழகம்மைக்கும் புதல்வராக அவதரித்த பூரீ ரமண மகரிஷி, தனது பதினே ழாவது வயதில் "தந்தையின் தாளை நாடிச் செல்வதாய்", ஒரு சீட்டெழுதி வீட்டில் வைத்து விட்டு திருவண்ணுமலைக்கு ரயிலேறிபோய் அங்கே துறவு பூண்டார். இளமையிலேயே உலக பற்றை விட்டு பரதேசிக்கோலம் கொண்டு விட்ட

Page 106
- - 6 9 il -اس
ரமணரின் நினைவிற்காக எழுந்து நிற்கும் ஆசிரமம் பெரிய நெடிய மரங்கள் சூழ்ந்த சோலைக்குள் அழகாகக் காட்சி யளித்தது.
பூரீ ரமணர் உயிர் வாழ்ந்த காலத்தில் பாவித்த பொருட்கள் யாவையும் பாதுகாப்பாக, பார்வைக்காக வைக்கப் பட்டிருக்கின்றன. அவரை பற்றிய நூல்கள் விற் பனைக்கென "பூரீ ரமணுச்ரமம் புக் டெப்போ வில் ஒதுக்கப் பட்டிருந்த ஒரு பகுதியில் நிறைய இருந்தன. பூஜீ ரமண விஜயம் பூரீ ரமண ஸ்தோத்ர ரத்னவளி, பூgரீ ரமண அஷ் டோத்தரம், பூரீ ரமண லஹரி என்று அங்கு எல்லாம் ஒரே ரமண மயம்தான்.
அழகான, அமைதியான அந்த ஆசிரமத்தை சுற்றிப் பார்த்துக்கொண்டு வந்தபோது யாரோ இருவர் உரையாடும் சப்தம் கேட்டது. ஒரு இந்தியக் குரலும் ஒரு அசல் ஆங்கி லக்குரலும் சுத்த ஆங்கிலத்திலேயே சம்பாஷித்துக் கொண் டிருந்தன.
ஆவல் மேலீட்டினல் அந்தக் குரல்கள் வந்த திக்கை நோக்கிப்போனேன். அங்கு நான் கண்ட காட்சி என்னைப் பிரமிக்க வைத்தது.
கால் முட்ட நீண்ட பாவாடையும், இடுப்பிற்குள் கீழே சாது ஷர்ட் போன்ற மேற் சட்டையும் உடுத்திக் கொண்டு குட்டையான கூந்தலை குட்டி குதிரை வாலாக கட்டிக் கொண்டு, அதில் இரண்டு பூவும் சூட்டிக் கொண்டு, நெற் றியில் நீறும், குங்குமப் பொட்டும்ாக நின்று கொண்டிருந்த வெள்ளே வெஹோரென்ற வெள்ளைக்காரப் பெண்மணியைக் கண்டால் யார்தான் வியக்காமல் இருப்பார்கள். பால் போன்ற குழந்தை முகம். அவரின் உயரம் சுமார் ஐந்தரை அடி இருக்கும். அவர் யாருடன் கதைத்துக் கொண்டு இருந் தார் என்று நினைக்கிறீர்கள். ஆசிரமத்தில் உள்ள ஒரு பெரி யவரிடம்தான். துண்டு வேட்டியும், கட்டைச் சட்டையும், நீறும் நெற்றியும் கழுத்தில், கையில் எல்லாம் உருத்திராட்ச மாலை தரித்தவராக அவர் நின்று கொண்டிருந்தார்.

- 197 -
இதற்கிடையில் மற்றவர்களும் அவ்விடத்திற்கு வந்து சேரவே அந்தப் பெரியவர் பூரீ ரமண மகரிஷியைப் பற்றி சொல்லத் தொடங்கினர். அந்தப் பெண் "எக்ஸ் கியூஸ் , மீ” என்று கொண்டே, எங்கள் நண்பர்களை விலத்திக் கொண்டு வெளியே வந்தார். நானும் மெதுவாக அவரை நெருங்கி னேன், என்னைக் கண்டதும் அவர் "லிப்ஸ்டிக் பூசப்படாத இதழ்களால் மெதுவாக சிரித்தபடியே “வணக்கம்" என்றர் கை கூப்பிக்கொண்டு. என் நெஞ்சம் ஒரு கணம் மூச்சு விடு வதையே மறந்து செயலிழந்து நின்றது அசல் ஆங்கிலேயப் பெண்மணி அசல் தமிழில் வணக்கம் கூறுவதாவது.
சுற்று முற்றும் பார்த்தேன், நண்பர்கள் மெதுவாக ஒவ் வொன்றக சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் கள் பஸ்ஸிற்குப்போக குறைந்தது இன்னும் பதினைந்து நிமி டங்களாவது பிடிக்கும். அதற்கிடையில் இவருடன் கொஞ் சம் கதைத்து விடலாம் என்றெண்ணினேன். "எனக்காக ஒரு பத்து நிமிஷம் உங்களால் ஒதுக்கமுடியுமா? எப்ப டியோ வெளிநாட்டவள் அல்லவா? அதனுல் இங்கிதமாகக் கேட்டுவைத்தேன்.
*ஓ! யெஸ். பை ஆல் மீன்ஸ்"-
வெகுதாராளமாக தலையாட்டினர். அடுத்ததாக அவர் ஒரு கேள்வி கேட்டார். "நீங்கள் ஒரு ஜேர்னலிஸ்டா? அல் லது பத்திரிகை நிருபரா?-- "இல்லையில்லை. ஏன் அப்படிக் கேட்கிறீர்கள். -- இல்லை பேப்பரும் பேணுவுமாக நிற்கிறீர் களே, அதுதான் கேட்டேன்"
*சே! சே! அப்படி யொன்றுமில்லை. நாங்கள் இலங்கை யிலிருந்து வந்திருக்கிருேம். எவ்வளவோ இடங்களைப் பார்த்து விட்டோம். அவற்றைப் பற்றியெல்லாம் சும்மா ஒரு ஞாபகத்திற்காக குறிப்பெடுத்துக் கொள்கிறேன்: "அது சரி! நீங்கள் இப்படி நீளமான பாவாடை அணிந்து கொண் டிருக்கிறீர்களே உங்களுக்கு இந்த உடை பிடிக்குமா ? என்றேன்.

Page 107
- 198 -
*ம், ம், நிரம்பப் பிடிக்கும். நான் முன்பெல்லாம் கட் டையான ஆடைகளை அணிவேன். இப்போது இப்படி நீள ம்ாக உடுக்க பழகிக் கொண்டுள்ளேன். நானும் இன்னும் சிலரும் சிலமாதங்களுக்கு முன்னர் இங்கு வந்தோம், எங் களுக்கு இந்த தமிழ் பண்பாடு, கலாசாரம், சமயப்பற்று எல் லாம் நிரம்பப் பிடித்துக் கொண்டது, எவ்வளவு கட்டுப் பாடுகளை வகுத்துக் கொண்டு எவ்வளவு கட்டுக்கோப்பான அமைதியான வாழ்க்கையை நடத்துகிருர்கள். எ60 ன அமைதி என்ன அமைதி" அவர் ஆர்ப்பரித்தார்.
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இனி இந்தியா விலேயே செட்டில் பண்ணி விடுவீர்கள் போலிருக்கின்றதே?? "ஓ! நோ. கொஞ்ச காலம் இங்கே இருந்து இந்தியாவைப் பற்றி நிறைய அறிந்துகொண்டு வேறு இடங்களுக்குப் போக இருக்கிருேம். முக்கியமாக சிலோனுக்கும் வர இருக்கிருேம் "... "அப்படியா? சிலோனைப்பற்றி ஏதாவது? -"நிறையத் தெரி ந்து வைத்திருக்கிறேன்! அழகான கடற்கரைகளைக் கொண்ட செழிப்பான நாடு என்று என் நண்பர்கள் சொல்லக், கிேட் டிருக்கிறேன்".-"நீங்கள்தான் ஆத்மீக ஆசையில் இங்கே ஆசி ரமத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்களே. உங்களை சங் கள் கடற்கரை கவருமா என்ன? என்றேன் சிரித்துக் கொண்டே.
வாழ்க்கையில் எத்தனை சந்தோஷம் உல்லாசம் இருந்து ம்ென்ன மனதில் அமைதியும், நிம்மதியும் இல்லாவிட்டால் ? வரபரப்பும் பகட்டும், வெறும் சம்பிரதாயங்களும், போலி உபசாரங்களும் மலிந்த வாழ்க்கையை விட எனக்கு இட்படி யான அமைதியான வாழ்க்கை தான் பிடிக்கும். என்னுடன் வாருங்கள், எனது சில நண்பர்கள் தியான கூடத்தில் எவ்வ ளவு ஆனந்தமாக தியானத்தில் ஆழ்ந்திருக்கிறர்கள் என் பதைக் காட்டுகிறேன்." என்றவாறே அவர் நடக்க ஆரம் பித்தார்.

- 199 -
'நீங்கள் "லவ்" அதாவது காதல்..."அதைப்பற்றி என்ன நினக்கிறீர்கள். மெதுவாக கேட்டேன் நான். "ஓ! லவ், அது ஒரு அழகான வார்த்தை. அழகான உணர்ச்சி’
"அவ்வளவு தான?"
இல்லையில்லை. பொறுங்கள் சொல்கிறேன். நான் இங்கே இப்போது இந்த ஆசிரமத்தில் இருக்கிறேன், இந்த வாழ்க்கை எனக்கு நிரம்பப் பிடித்துக் கொண்டது. சில காலம் செல்ல ஒரு வேளை "இதுவும் ஒருவாழ்க்கையா?? என்ற எண்ணம் ஏற்பட்டாலும் ஏற்படக் கூடும். . . அல்லது இந்த துறவு வாழ்வை விட குடும்ப வாழ்வு பெரிது என்ற எண்ணம் ஏற்பட்டாலும் ஏற்படும். இதெல்லாம் சொல்ல முடியாது. எது எப்படி இருந்தாலும் வாழ்க்கை எந்த ரீதி யில் அமைந்திருந்தாலும் "மனத்திருப்தி" தான் முக்கியம். இருப்தி தரும் எந்த வாழ்வும் சந்தோஷமானது. என் மன திற்கு இல்லறம், துறவறம் இந்த இரண்டில் எது திருப்தி யையும், நிம்மதியையும் தருகிறதோ அந்த வாழ்க்கையில் குதித்து விடுவேன். வாழ்க்கையை அந்தப்படியே மனதிற்குப்
திற்காகவும், யாருக்காகவும் வாழக்கூடாது அதில் அமைதியோ நிம்மதிபோ எமக்குக் கிடைக்கப் போவதில்லை" என்ருர்,
அவர் என்னை அழைத்துப் போன இடத்தில் ஒரு அறை யைப் போன்ற மண்டபம் காணப்பட்டது, அதற்குள் எட் டிப் பார்த்தேன். நாலைந்து வெள்ளையர்கள். அவர்கள் அமெரிக்கர்களோ பிரிட்டிஷ்காரர்களோ அல்லது வேறேதும் இனத்தவர்களோ தெரியவில்லை. உட்கார்ந்திருந்து கண்களை மூடிய வண்ணம் தியானத்தில் ஈடுபட்டிருந்தார்கள், மெளனமாக அவர்கள் என்னத்தை மனனம் செய்து கொண் டிருந்தார்கள் என்பது அந்த மகாதேவனுக்கே வெளிச்சம், அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீகக்களை காணப்பட்டது.
அதே சமயம் பஸ்ஸிற்குப்போக எனக்கு அழைப்பு வரவே அவரிடம் விடை பெற்றுக் கொண்டேன்.

Page 108
um- 206 -
"மே, கோட் பிளெஸ் யூ" என்று விடை தந்தார் அந் தப் பெண்.-பின்னர் எமது கோ ஷ் டி யினர் சிதம்பரத் திலிருந்த கல்யாண லாட்ஜை அடைந்த போது மணி நாலே மூக்கால் ஆகி விட்டிருந்தது.
குளித்து உடை மாற்றிவிட்டு அருகாம்ையில் இருந்த கோயிலை நோக்கி நடந்தோம்.
சிதம்பர ரகசியம் என்றல் என்ன ?
சிதம்பரத்து தில்லை நடராஜர் கோயிலுக்குள் நாங்கள் நுழைந்தபோது, விளக்குகள் ஏற்றப்பட்டு மக்கள் அங்கு மிங்குமாக ஆர்ப்பாட்டமாக நடமாடிக்கொண்டிருந்தார்கள். அந்த சன நெரிசலில் அகப்பட்டு கோயிலினுள் புகும் வழி தெரியாமல் நாங்கள் திண்டாடிக்கொண்டிருக்கையில், ஒரு நடுத்தர வயதுடைய பெண்மணி உதவிக்கு வந்தார். என்னை யும், மற்ற இருவரையும் உற்றுப்பார்த்துவிட்டு, - " என் னம்மா, வெளியூர்க் காரங்களா?' எ ன் ரு ர். "ஆமாம்”* *" வீதி தெரியாமல் இருக்கேள் பேர்லிருக்கு. என் பின்னடி வாங்கோ' என்று அன்புடன் கோயில் வீதிகளைச் சுற்றிக் காட்டிவிட்டு மூலஸ்தானப் பகுதிக்கும் அழைத்துச் சென்ருர்,
கையில் பூ வட்டிலுடன் பிராமணுள் Lurressfu$heu - G39r&an: கட்டியபடி பிராமணுள் பாஷையில் சம்பாஷித்துக்கொண்டு வெகு சுறு சுறுப்பானவராக காணப்பட்டார்.
'சிதம்பர ரகசியம் என்கிறர்களே அது என்ன," என்று அந்த ரகசியத்தைப் பற்றி நாங்கள் கேட்டோம்.
"சிதம்பர ரகசியம் என்றதுமே ஏதோ சிதம்பர நாத னையே பிடித்து கட்டி வைத்திருக்கிருர்களோ என்றுதான் தெரியாதவர்கள் நினைக்கிருர்கள். அப்படியொன்றும் இல்லை.

سے 1 20 جس سے
கட்டணம் செலுத்தில்ை திரை நீக்கம் செய்து சிதம்பர ரக சியத்தைக் காட்டுவார்கள். சோதிம்யமான அந்த ஒளிப் பிளம்பை நாம் பார்க்கையில், ஏற்படும் பரவசமே தனிதான். அவாள் அவாளுக்கு ஒவ்வொரு விதமாக பெரும்ான் காட்சி யளிப்பார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக அபிப்பி ராயப்படுவாங்க" என்ருர் அந்த அம்மையார்.
அவர் சொன்ன வார்த்தைகளில் இருந்த உண்மை பின் ணுல் தான் எனக்கும் புலப்பட்டது. அர்ச்சகர் திரை நீக்கம் செய்து இது தான் சிதம்பர ரகசியம் எனக் காட்டியபோது ஒளி மயமான ஒரு வெளியைத் தவிர வேருென்றும் என் கண்ணில் படவில்லை. ஏதோ அதிசயம் என்று அந்த ரகசி யத்தை வைத்த கண் வாங்காமல், திறந்த வாய் மூடர்மல், ஆவலுடன் பார்த்து நிற்கிருேமோ அந்த நிமிடத்தில் அந்த ஒளிப்பிழம்பிற்கு நாம் என்ன உருவத்தைக் கற்பித்துக் கொள்கிருேமோ அது தான் உண்மை. என் அருகில் நின்ற நண்பியைக்கேட்டேன் என்ன பார்த்தீர்கள் என்று.
*தில்லை நடராஜர் காலைத்தூக்கி ஆனந்த நடனம் புரி வதுபோல ஒரு காட்சி தெரிந்தது" என்ருர், "எனக்கென் மூல் ஒரு பகுதி ஏதோ ஒளியாய் தெரிவதுபோலவும், இன் னுெரு பகுதி ஒன்றுமே இல்லாமல் வெறுமையாக இருப்பது போலவும் தான் தோன்றியது" என்ருர் இன்னெருவர்.
அந்த அற்புதக் காட்சியை அவரவர் தம் தம் சொந்த கருத்துப்படி கண்டு களித்துவிட்டு வெளியே வந்தோம். என் னைப் பொறுத்த வரையில் "சிதம்பர ரகசியம்’ எனக்கு ஒரு புரியாத ரகசியமாகவே இருந்தது.
உதவிக்கு வந்த அந்த அம்மையார் எங்களுக்காக வெளியே காத்திருந்தார். திரும்பவும் உள் வீதியை சுற்றிக் கொண்டு வந்தபோது கோயிலின் முகப்பு மண்டபத்தில் ஒரு நாயனக் கோஷ்டியினர் கீழே உட்கார்ந்திருந்து அமர்க்கள மாக இன்னிசை பொழிந்து கொண்டிருந்தார்கள்.

Page 109
سی۔ 302ھ ۔۔
“இப்படி சித்தே உட்கார்ந்து கொள்வோமா?" என்று கேட்டார் அவர். "தாராளமாக" என்றபடியே அவரருகே உட்கார்ந்துகொண்டோம். "இது கோவில் மேளமா?" என் றேன்.
"இல்லை. உள்ளூரிலே நாளைக்கு யார் வீட்டிலோ கல்யா ணம், அந்தச் சடங்கிற்கு நாயனம் வாசிக்க வந்தவங்கதான் இவாள்ளாம். வீட்டிலே வாசிக்கிறதற்கு முன்னலே எல்லா கும் கோவில்லே ஒரு கச்சேரி செய்திட்டுதான் மறுவேலை பார்ப்பாங்க. ஏன், நாட்டியக்காரங்க கூட அப்படித்தான். முதல்லே நடராஜருக்குத் தான் சமர்ப்பணம்’- அவர் தொடர்ந்து சொன்னர்.
"இந்த சிதம்பர ரகசியத்தைப் பற்றி இன்னெரு கதை யும் சொல்கிருங்க.
நடராசப் பெருமானின் விமானம் கூரையிலே 21600 பொன் ஏடுகளை 72000 ஆணிகளால் அடித்துப் பொருத்தி இருக்கிருர்கள். மனுஷாள் தெனம் 21600 தடவை மூச்சு விட்றதையும், நம்ம தேகத்திலே 72000 நாம்புகள் உள்ள தையும் குறிக்கவே அப்படி செய்திருக்கிருங்களாம். மனுஷ உடம்பும் கோயில் மாதிரிதான் என்கிறதை உணர்த்துவது தான் சிதம்பர ரகசியமாம்" என்ருர்,-- "அப்படியா? இந்தப் பெரும்ானைப் பற்றி ஏதாவது வரலாறு இருக்கிறதா?’ என் றேன்.
*ம் ஒரு கதை உண்டு பூலோக கைலாசம் என்று சொல்லப்படுகிற தில்லைவனத்தில் இருந்த முனிவர்களான வியாக்ரபாத மகரிஷியும் பதஞ்சலி மகரிஷியும் இறைவனு டைய தாண்டவத்தைக் கண்டு களிக்க ஆசைப்படவே ஈசு வரன் மூவாயிரம் முனிவர்களோடு வந்து, இந்தச் சிதம்பரத் தில் தான் ஆடிக்காட்டினராம்" அத்துடன் இங்கேயே கோயில் கொண்டு விட்டார். அவருடன் கூட வந்த முனி வர்கள் தான் "தில்லை மூவாயிரவர்கள். இன்றும் அவர்கள் வழித்தோன்றல்கள் தான் கோயிற் பணி புரிகிறர்கள்? என் ருர் அவர்.

-ܗܝܪܢ- 2:03 -ܚܝ
அதே சமயம் என் நண்பி கடிகாரத்தில் மணி பார்ப் பதை கண்டுவிட்டு அந்த அம்மையார்,-- "ஓ! உங்களுக் கெல்லாம் நேரமாயிட்டுதா. வாங்கோ, மடப்பள்ளியிலே பிரசாதம் பொங்கல் வாங்கித்தருகிறேன்" என்று கொண்டே எங்கள் பதிலுக்கும் காத்திராமல் எழுந்து விடு விடென்று நடக்கத் தொடங்கினர். நாதஸ்வர ஓசையிலிருந்து விடு பட்டு சிறிது தூரம் சென்ற பின்தான் அந்த அம்மையாரின் கால் விரலில் மாட்டியிருந்த மெட்டி ஒலி காதில் விழுந் திது.
மடப்பள்ளியில் இருவர் வேலையில் ஈடுபட்டிருந்தார்கள் *இதோ இவாள்ளாம் வெளியூர்க்காரங்க, நான் வீட்டிற்குப் புறப்பட்டிருக்கிற சமயம் பார்த்தா இவா தவிச்சுக்கிட்டி ருந்தாங்க, பாவம்னு தோணிச்சு அப்படியே எல்லாம் சுத்திக் காம்பிச்சிட்டு இங்கே கூட்டியாந்தேன், அவங்களுக்கு பிரசா தம், பொங்கல் எல்லாம் கொடுத்திடுங்க" என்று அவர்களி டம் கூறினர்.
பணம் கொடுத்து பிரசாதத்தைப் பெற்றுக்கொண் டோம். இப்போது தான் அந்த அம்மையார் முகத்தில் ஒரு திருப்தி நிலவியது. அங்கிருந்து மெதுவாக வெளிவாயிலை அடைந்தோம்.
"நீங்கள் எங்கே தங்கியிருக்கீங்க?" என்ருர். "கல்யாணம் லாட்ஜிலே’ என்ருேம்.
"அது கிட்டத்தானே இருக்கு, நம்ப ஆத்துக்கு வந்துட்டு போங்களேன். இட்லி, காப்பி சாப்பிட்டு போகலாம்." என் றர். 'உங்கள் வீடு எங்கே இருக்கிறது??-"பக்கத்திலேதான்" வாங்களேன் கூட்டிட்டுபோறேன்."
எங்களுக்கு இரண்டிற்கும் மனமாய் இருந்தது. அவர் வீட் டிற்குப்போய் லேட்டாகி யாரும் தேட ஆரம்பித்து விட் டால் என்ன செய்வது? ஆகையால் வேண்டாங்க, உங்க

Page 110
- 204 -
அன்பிற்கு ரொம்ப நன்றி, முடியுமானுல் காலையில் சந்திப் போம்" என்று பலமுறை நன்றி கூறி விடைபெற்றுக் கொண்டோம்.
வெளியில் வந்தபோது "மாப்பிள்ளை ஊர்வலத்திற்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. தென்னிந்தி யக் கதைகளில் வாசித்தறிந்து வைத்திருந்த "மாப்பிளை ஊர் வல அழைப்புக் காட்சி கண் முன்னே நடைபெற்றபோது பார்க்காமல் போய்விடுவதாவது?
ஒரு பெரிய திறந்த கார், அதில் பின் ஸ்பீட்டில் நடுவில் மாலையும், கழுத்துமாக மாப்பிள்ளை உட்கார்ந்திருக்கிருர், அவரையும், கார் டிரைவரையும்விட காரில்ே நிறைந்திருந்த வர்கள் யார் என்று நினைக்கிறீர்கள்? சிறிதும், பெரிதுமான வாண்டுப் பயல்கள்தான். −
காரின் முன்னுல் சற்றுத் தள்ளி (கோயிலினுள் வாசித் துக்கொண்டிருந்தவர்கள்) நாதஸ்வரக்காரர்கள் ஊதித் தள்ளிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு முன்னல் நரிக் குறவர்கள் காஸ் லைட்டுகளை தூக்கியவண்ணம் நின்று கிொ ண்டிருந்தார்கள்.
அவர்கள் எல்லோரும் சேர்ந்து திறந்த காரில் மாப்பிள் ளையை ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள் போலிருக்கி ይDòj• V
இவையெல்லாவற்றையும் பார்த்துவிட்டு லாட்ஜை அடைந்தபோது மணி இரவு ஒன்பதற்கும் மேலாகிவிட்டது இரவு சாப்பாடாக இட்லி, சட்னி, சாம்பாரும் சாப்பிட்டு விட்டு, வழக்கம்போலக் காப்பி குடியாமல் ஏதாவது ப்ழ வகை வாங்கிச் சாப்பிடலாம் என்றெண்ணி எங்கள் லாட் ஜுடன் சேர்ந்தாற்போலவே இருந்த கடைக்குப் போனுேம் அங்கு வரிசை வரிசையாக வாழைக் குலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

سه 205 س
* கதலி வாழைப்பழம் இருக்கிறதா?” *ம்ஹ"ம் இல்லையே" என்ருர் கடைக்காரர்?
"அப்படியானல் கப்பல் வாழைப்பழம் இருக்கிறதா?”
*கப்பல் வாழைப்பழமா" என்று கேட்டுவிட்டுச் சிரித்த வாறே இதோ இந்த வகைகளில் எது வேணுமோ சொல், லுங்கள், வெட்டித்தருகிறேன்" என்ருர்,
அங்கே காணப்பட்ட வகைகளை நாங்கள் பார்க்கத்தான் செய்தோம். ஆஞல் என்னென்ன வகை என்று பிரித்துக் கூற முடியாமற் போகவே, எங்கள் நண்பருக்குள் சற்று வய தான ஒருவரை துணைக்கு அழைத்தோம். அவர் அருகே வந்து சட்டென்று வாழைப்பழங்களை இ ன ங் கண் டு கொண்டார். அவர் சுட்டிக்காட்டிய வாழைப்பழக் குலையிலி ருந்து பழங்களை வெட்டிக்கொண்டே "இதுக்கு நீங்க என்ன பேர் சொன்னிங்க" என்ருர் வியாபாரி,
*கப்பல் பழம் என்று சொல்வோம்" இங்கே "ரஸ்தாலியா” என்று சொல் வாங்க என்ருர்,
அதன்பிறகு நாங்கள் தேவைப்பட்டபோது ரஸ்தாலியா
என்று கேட்டு கப்பல் வாழைப்பழங்களை வாங்கிச் சாப்பிட்டோம்.
அன்றைய பொழுது அப்படிக் கழிந்தது.
தி ல் லை க் காளி
ത്ത
மறுநாள் காலை விடிந்ததும், விடியாததும்ாக ஒரு சிலர் சிதம்பரம் நடராஜர் கோவிலிலிருந்து சுமார் அரை மைல் தொலைவிலிருந்த தில்லைக் காளி கோவிலைத் தரிசித்துவிட்டு வந்தார்கள். "எப்படி தில்லைக் காளி கோவில்? என்ன பார்த் தீர்கள்? என்று போன ஒருவரிடம் கேட்டுவைத்தேன்.

Page 111
مست 6 20 س
"சின்னக் கோவில்தான்; என்ருலும் நல்ல அற்புதமான கோயில், காளியம்மனின் உருவமே தெரியாமல் குங்குமம் சாத்தியிருந்தார்கள். கண்கள் மட்டுமே தெரிவதால் கொஞ் சம் பயங்கரம்ாய் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். ஒன்றிரண்டு குடும்பங்கள் கோயிலடியிலேயே ஆறுதலாகக் குளித்து முழுகி பூசைக்காகக் காத்திருந்தன, என்முர்.
*கோயிலுக்குப் போகிற பாதையெல்லாம் எப்படி?*
சசின்னப் பாதைதான். வழியில் ம்ன்சுவரைக் கொண்ட வீடுகள் நிறையக் காணப்பட்டன, பிராமணர் வீடுகளாக இருக்க வேண்டும். கூட்டி, மெழுகி ஒவ்வொரு வீட்டு வாச விலும் கோலம்போட்டிருந்தார்கள்" என்றும் கூறினர். சுமார் 9-30 மணியளவில் சிதம்பரத்தை விட்டுப் புறப்பட் டோம். இடையில் அண்ணுமலை நகரில் அண்ணுமலை பல் கலைக்கழகத்தை மேலோட்டமாகப் பார்த்துக் கொண்டு, முன்னேறினேம். இங்கு சில இடங்களில் இலக்கமிடப்பட்ட பனைமரங்கள் காணப்பட்டன. சுமார் பத்துமணியளவில் கொள்ளிடம் "வணிக வரிததுறை தணிக்கை சாவடி எல்லா வற்றையும் கடந்து கொண்டு சீர்காழியிலிருக்கும் தோணி :பப்பர் கோயிலை அடைந்தோம்.
சீர்காழி தோணியப்பர்
இந்தக் கோவில் மிகமிக அற்புதமான வரலாற்றுப் பெருமையைக் கொண்டது. ஒரு சமயம் சிவபாதவிருதயர் எனப் பெயர் கொண்டவர், தனது பாலகனைக் கரையில் இருத்திவிட்டு பிரம்ம தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருக்கை யில் குழந்தை பசி மேலீட்டினல் அழத் தொடங்கினன், அந்த அழுகுரல் கேட்ட சிவபெருமான் உமையம்மையுடன் எழுந்தருளி முலைப்பாலைப் பொற் கிண்ணத்தில் கறந்து ஊட் டும்படி தேவியாருக்கு ஆக்ஞாபிக்கவே அவரும் அவ்வண் ணமே செய்தருளினர்.

- 207 -
பின்னர் குளித்துவிட்டு கரையேறிவந்த தந்தை, பால் வழியும் வாயுடன் மகன் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டுவிட்டு "யார் பாலுட்டியது?’ என்று வினவ, பாலகன் கோபுரத் திசையைச் சுட்டிக்காட்டி, "தோடுடைய செவி யன்" என்று பாடத்தொடங்கினுன்.
ஈசுவரன் அருள் கண்டு மெய்சிலிர்த்து நின்றர் சிவபாத விருதயர்.--திருஞானசம்பந்தருக்கு ஞானப் பாலூட்டிய அத் தலத்தில் நுழைந்தபோது நாமும் மெய்சிலிர்த்துப் போனுேம்.
இக்கோயில் ஆண்டுதோறும் சித்திரைப் பிரம்ம உற் சவத்தின் போது திருமுலைப்பால் உற்சவம் நடந்தேறும். திருஞானசம்பந்தப் பெருமானின் உருவச்சிலேயும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு அதிக நேரம் தாமதிக் காமல் நாம் புறப்பட்டோம்"
வேளுர் வைத்தீஸ்வரர் கோயில்
திரும்பவும் இலக்கமிடப்பட்ட புளிய மரங்களும் வயல் வெளிகளும் எம்மை வழிநெடுக வரவேற்றன. இடையில் வேளூர் வைத்தீஸ்வரர் கோயிலை அடைந்தோம்.
புராண வரலாறுகளின்படி முருகவேள் தாரகாசுரனேடு நிகழ்த்திய போரில் காயமுற்ற வீரர்களுக்கு வைத்தியம் செய் வதற்காக சிவபெருமான் வைத்திய நாதராகவும், அன்னை தையல்நாயகி அம்மையாராகவும் மருந்து மூலிகை வகை களுடன் ஸ்தலத்திற்கு வந்து வைத்தியம் செய்ததாலேயே இக்கோயிலுக்கு இப்பெயர் உண்டாயிற்று.
அக்கோயிலினுள் புகும் போது எம்க்கும் உடல் புத் துணர்ச்சி பெற்றது.
சுற்றிக் கும்பிட்டுக் கொண்டு திரும்பவும் சில மைல்கள் பிரயாணம் பண்ணிேப் பின்பு திருப்புன்கூர் பூரீ சிவலோக நாத ஸ்வாமி கோயிலை வந்தடைந்தோம்.

Page 112
- 208 a -
திருப்புன் கூர்
--see-sacs-e-
எல்லோருக்கும், எல்லாவற் றிற்கும் முதல்வனுன சிவ பெருமான் போடாத வேடமில்லை. அருள் புரியாத உயி ரில்லே போலிருக்கிறது. தாழ்ந்தது என்றும் உயர்ந்தது என் றும் பாகுபாடில்லாது எவ்வுயிர்களுக்கும் அருள் பாலிப்பான் மகாதேவன் என்ற உண்மையை இக்கோவிலில் நடத்திய திருவிளையாடலால் பெருமான் உணரவைக்கிருர்.
புலையனன நந்தனர் மூலஸ்தானத்தைப் பார்த்து வணங் கும்படி நந்தியை விலகச் செய்தது இத்தலத்திலேயாகும். நாம் கோயிலினுள் புகும்போதே வாசலினூடாக மூலஸ் தான அழகு கண்ணில் படுகிறது. பிரமாண்டமான நந்தி ஒரு பக்கமாக ஒதுங்கிக்கொண்டு வழிவிட்டுள்ள அழகை என்ன வென்று சொல்வது?- அங்கிருந்து சுமார் ஒன்றரை மணியளவில் புறப்பட்டோம். - சேஷத்திர பாலபுரம், தியா கராஜபுரம், கோவிந்தபுரம், திருவிடை மருதூர், அம்பா ச முத்திரம் ஆகியவற்றைக் கடந்துகொண்டு கும்பகோணத் தையடைந்து அந்நகரை பஸ்ஸிலிருந்தபடியே மேலோட்ட மாகப் பார்த்துக்கொண்டு மூன்றே கால் மனயளவில் பயணத்தை தொடர்ந்தோம்.
தந்தைக்குக் குருவாகி
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகர் கோவில் நுழை வாச லால், முருகனின் நான்காவது படை வீடாகிய சுவாமி மலையை வந்தடைந்த போது மாலை நான்கு மணியிருக்கும்.
செருக்குற்றவர்களின் தலைக்கணத்தை தணிப்பதற்கா கவே முருகன் தோன்றினணுே என எண்ணும்படியாகவே இத்தலத்திலும் ஒரு திருவிளையாடலை நிகழ்த்தியுள்ளான்
குமரன்.

as 209 am.
சுவாமி மலை
கயிலையில் ஒருநாள் முருகன் நவ வீரர்களோடு விளை யாடிக் கொண்டிருக்கையில் அவ்வழியே வந்த இந்திராதி தேவர்கள் முருகனை வணங்க, சிருஷ்டிக்ர்த்தாவான பிரம்ம்

Page 113
= 10 ത്ത
தேவன் மட்டும் முருகனை சிறுவன்தானே என்று வணங்கா மல் செல்லவே கோபம் கொண்ட முருகன் பிரம்மனின் செருக் கையடக்க விரும்பி, பிரம்மாவை அழைத்து வேதம் ஒதும்படி பணித்தார். -- பிரம்மாவும் "ஓம்" என்று ஆரம் பித்து வேதத்தை ஒதத் தொடங்கவே முருகன் அவரை இடைம்றித்து "ஓம்" என்ற பிரணவப் பொருளை விளக்கு மாறு ஆக்ஞாபிக்கவே, பிரமன் பிரணவத்தின் பொருள் கூற இயலாது வெட்கமுற்று நிற்க, சிறுவன் முருகன் , பிரமனின் நான்கு சிரங்களிலும் குட்டி சிறை வைத்தார்.
இதைக் கண்ணுற்ற சிவபெருமான் விரைந்து வந்து, பிரணவப் பொருளின் பொருளை முருகன் அறிந்துள்ளான என வினவ குமரனும் தந்தைக்குத் தானே குருவாகி பிரண வப் பொருளைச் சிவபிரானது திருச்செவியில் ஒதினர். இந்த ஸ்தலத்தில் ஸ்வாமியாகிய சிவபெருமானுக்கு முருகப் பெருமான் குழந்தைக் குருவாக விளங்கியபடியால் இப்பதி சுவாமி மலையென்றும் குருமலை என்றும் காரணப் பெயர்
களைப் பெற்றுள்ளது.
நாங்கள் போனசமயம் பூஜை வேளை யல்லாததால் மூலஸ்தானத்தைப் பார்க்க முடியவில்லை. முருகன் தந்தைக்கு உபதேசித்த காட்சியை சிற்பங்களாகவடித்து ஓரிடத்தில் அமைத்துள்ளார்கள். -- சுற்றிப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டு பஸ்ஸை அடைத்தோம்.
ராஜகிரி, வழுத்தூர் சக்கராவள்ளி போன்ற கிராமங் களில் நிறைய முஸ்லிம் மக்களைக் காணமுடிந்தது.- பலர் வெள்ளைச் சால்வையால் தமது உடம்பை போர்த்திக்கொண் டிருந்தார்கள். சுமார் ஐந்து மணிபோல தஞ்சாவூர் பிரக தீஸ்வரர் கோயிலை வந்தடைந்தோம்.
தஞ்சாவூர்
-ബm
ஒரு காலத்தில் சோழப் பேரரசு இருந்து ஆட்சி செலுத் திக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் தஞ்சாவூர் மாநகரினுள் நின்றபோது நாதப் பிரம்மம் தியாகராஜரின் ஞாபகம்தான் எனக்கு வந்தது.

യ 21 =
அன்றும். இன்றும் புகழ் பரப்பிநிற்கும் தஞ்சாவூரில் அமைந்துள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தை நிர்மாணித்த பெரும்ை ராஜ ராஜ சோழனுக்கே உரியது . சுமார் 216 அடி அளவில் உயர்ந்து நிற்கும் கோவில் கோபுர நிழல் கீழே விழமாட்டாதாம். அஐந்தாவின் வண்ண ஒவியங்களை நினை வூட்டும் வண்ணச் சித்திரங்கள் தீட்டப்பெற்ற கோவில் உட் புறச் சுவர்களும், சுமார் பன்னிரெண்டு அடி உயரமும், 19த் அடி நீளமும், 83 அடி அகலமும் கொண்ட திருநந்தி யின் அழகும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
பிரகதீஸ்வரர் கோயிலிலிருக்கும் திருநந்தி
மாபெரும் கலை மேதை தியாகராஜரின் நினைவை யொட்டி ஜனவரி மாதங்களில் அங்கு நடக்கு தியாகராஜ உற்சவம்" மிகச் சிறந்ததொரு வைபவமாகும், தஞ்சாவூரில் இருந்து சுமார் ஏழுமைல் தொலைவிலுள்ள திருவையாறு என்னும் இடமே இவரது பிறப்பிடமாகும்.
இசைக் கருவியான வீணை தயாரிப்பிற்கு தஞ்சாவூர் பெயர்போனது. தஞ்சாவூர் தலையாட்டிப் பொம்மையைப் பற்றி யாரும் அறிவார்கள்.

Page 114
ஜம்புவின் பஸ்
எம்து சுற்றுலாவின் கடைசித்தினமாகிய அன்று, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலைக் கும்பிட்டுவிட்டு வந்தகையோடு எங்களது பஸ்ஸின் முன்னல் நின்று எல்லோருமாகச் சேர்ந்து ஒரு படம் எடுத்துக்கொண்டோம். −
கோயில்டியை விட்டுப் புறப்பட்டு தஞ்சாவூர் டவுனுக் குள் வந்தவோது கரக ஆட்டம் ஆடிக்கெர்ண்டு வந்த ஒரு கோஷ்டியினரைக் கண்டோம். நாங்கள் எல்லோரும் ஆவ லாக வெளியே பார்த்ததைக் கண்ணுற்ற டிரைவரும் பஸ்ஸை நிறுத்தினர். - இடையில் இருவர் சிலம்படியில் ஈடுபட்டிருந் தார்கள். எங்கள் பஸ்ஸிலுள்ளவர்கள் தலைகளை வெளியே போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் ரசிப்பதைக் கண்டதும் சிலம்படிக்காரர்கள் இன்னும் உற்சாகமாகவும், விரைவாக வும் சிலம்படியில் ஈடுபட்டார்கள். கரசுக்காரர்களும் லயம் தப்பாது ஆடிக்கொண்டிருந்தார்கள். - கொஞ்சநேரம் பார் த்துக்கொண்டிருந்துவிட்டுப் புறப்பட்டோம். அப்போது நேரம் சுமார் ஆறு மணியிருக்கும். தஞ்சாவூரிலிருந்து கிட் டத் தட்ட 32 ம்ைல் தொலைவில் உள்ளது திருச்சி.
 

- 213 -
பசுமை நிறைந்த நினைவுகளே !
பதினைந்து நாட்களாகச் சுற்றிக்கொண்டிருந்துவிட்டு திரும்பவும் திருச்சியை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டி ருந்த அந்த மாலைப்பொழுது மிக மிக மனுேகரமாய் இருந் தது. வைத்த கண் வாங்காது எங்களைத் தாண்டிக் கொண்டு பின்னே சென்று கொண்டிருந்த அந்தப் பிராந்தி யக் காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பஸ்ஸில் ஒரே மெளனம் நிலவியது. இரவு எட்டரை மணியளவில் மீண்டும் திருச்சி "அசோக் பவான் " ஹோட் டலை அடைந்தோம், நாங்கள் இறங்கி சாமான்கள் எல்லா வற்றையும் எடுத்துக்கொண்டு பஸ்ஸைக் காலியாக்கினுேம். எங்கள் எல்லோரிடமும் இறுதிவிடை பெற்றுக்கொண்டு டிரைவரும், கண்டக்டரும் புறப்பட்டார்கள்.
அதன் பின்னர் திருச்சி அசோக் பவான் ஹோட்டலில் நாங்கள் நாலைந்து நாட்கள் தங்கியிருந்தோம்.
அன்று இந்திய மண்ணில் இதுவரை ஊன்றிக் கொண்டி ருந்த கால்களை விமானத்தினுள் எடுத்து வைக்கவேண்டிய தினம்;- ஆமாம்! நாங்கள் திரும்பி இலங்கைக்கு வரவேண் டிய நாள் வந்துவிட்டது. ஏக தடபுடலாக வெளிக்கிட்டு திருச்சி விமான நிலையத்தை அடைந்தோம்.
வீட்டிற்குத் திரும்பும் உற்சாகத்தில் என் மனம் இருந்த தாலோ என்னவோ விமான நிலையம் கூடப் புது ம்ெருகுடன் என் கண்களுக்குக் காட்சியளித்தது. வெகு சரளமாக, சிநே கபாவத்துடன் உரையாடும் ஆபீஸர்கள், கண்டிப்புடனும், நியாயத்துடனும், அதே சமயம் அன்புடனும் ஒவ்வொரு பிரயாணியிடத்தும் நடந்துகொண்ட சுங்க அதிகாரிகள் சுறு சுறுப்பாக, கவனமாகப் பிரயாணிகளின் உடைமைகளை விமா னத்தின் வயிற்றுக்குள் தள்ளிக்கொண்டிருந்த போட்டர்கள். எல்லோரையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.

Page 115
- 314 -
குறிப்பிட்ட நேரம் வந்ததும் நாங்கள் விமானத்தை அடைந்தோம். எல்லோரையும் பத்திரமாகத் தனக்குள் அடக் கிக் கொண்ட பின் விமானம் மேலெழுந்து பறக்க ஆரம் பித்தது. - ஜன்னலின் ஊடாக நான் வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது இன்றும் என் நினைவிற்கு வந்து கொண் டிருக்கும் ஒரு அரிய காட்சியைக் காண நேர்ந்தது. இந்தி யாவின் தென் கரையோரம், (கோடிட்டாற்போல் உலக வரை படத்தில் முக்கோணமாகச் சாய்ந்து காணப்படுவது போல்) அழகாகக் காட்சியளித்தது.
அந்தத் தென்னிந்தியக் கரையோர அழகைக் கண்ணுற்ற போது "திரும்பவும் வந்து பார்க்கத் தவறியவற்றையெல் லாம் பார்த்துவிட வேண்டும்" என்ற ஆவல் மனதில் எழுந் தது. சூரியன் தனது பொற் கதிர்களைப் பரப்பி அழகுபடுத் திக்கொண்டிருந்த எனது தாயக மண் கண்களில் தெரிந்தது பசுமையான நினைவுகளுடன் கீழே. கீழே இறங்கலா னேன்.
இறுதியாக;-
கட்டுரையைப் பூர்த்தியாக்கியாயிற்று. ஆணுலும் மனம் சங்கடப்படுகிறதே என்ன அது? வேறென்ன, நான் அங்கு பார்க்கத்தவறிய பல விஷயங்களை நினைத்துக்கொள்கிறேன்.
த்ென்னகத்தைப்பற்றி நான் இந்நூலில் குறிப்பிட்டுள் ளவை வெகு சொற்பமே. இங்கு இன்னும் பார்க்க வேண்டி யவை அறிந்து கொள்ள வேண்டியவை, ரஸிக்க வேண்டி யவை ஏராளம் ஏராளம்!! இந்நூலை மட்டும் வைத்துக் கொண்டு தென்னகத்தை எடைபோட்டு விடுவது சாத்திய மில்லை.- கழுத்து ஒடியும் வண்ணம் மேலே அண்ணுந்து, நாம் கேர்யிற் கோபுரங்களைப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு பெரிய ஏணியின் மீது ஏறிக்கொண்டு, பூதக்கண்ணுடி

a- 215 -
போட்டுப்பார்த்தால் தான் அவ்வழகினை நாம் முழுமையாக ரஸித்துவிட முடியும். அவ்வளவு கொள்ளை அழகு.
அங்கு நாம் தரிசித்த ஒவ்வொரு கோயிலும், அதனுள் அருளுடன் எழுந்தருளியிருக்கும் ஒவ்வொரு மூர்த்தியும் பல வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்டிருக்கின்றன. பல மேதை களும், பெரியவர்களும் அவற்றைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்கள். தெய்வத்திரு மேனிகளின் உற்பத்தி, கீர்த்தி என்பன பற்றியும் பலர் ஆராய்ச்சி நடத்தியிருக்கி முர்கள். இது பலரும் அறிந்த உண்மை.
அவர்களைப் போலெல்லாம் விரிவாக ஆராய்ச்சி நடாத்தி கோயில்கள் பற்றிய புராணசம்பவங்களை, சீர் சிறப்புகளை எல் லாம் அக்கு வேறு, ஆணி வேருக எழுதும் ஆற்றலும், தேர்ச்சியும் எனக்கு நிச்சியமாகக் கிடையாது. ஆனலும் ஏதோ என் அறிவிற்கு எட்டிய வரையில் சில புராண வர லாற்றுப் புத்தகங்களை வாசித்தும், கந்த புராணத்தைத் தழுவியும், கோயிற் சுற்ருடலில் கேட்டறிந்த கதைகளைக் கொண்டும், அத்துடன் கல்லூரியில் கிடைத்த இந்து சமய, சரித்திர அறிவைத் துணையாகக் கொண்டுமே இக் கட்டு ரையை எழுதலானேன். இந்த வரலாறுகளானது இக் கோயில்களைப் பற்றிய பல வரலாறுகளில் ஒன்றே அல்லாது, இதுதான் முழுக்க முழுக்க கோயிலைப்பற்றிய விபரமும் அல்ல,
உதாரணமாக காயப்போட்டிருந்த நெல் மணிகளை மழை வாரி விடாமல் பெருமான் பாதுகாத்துத் தந்தமை யினலேயே "நெல்லையப்பர்" என்ற பெயர் திருநெல்வேலி யிலுள்ள அந்தக் கோயிலுக்கு வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டுள்ளேன். ஆனல் அந்த ஒரே ஒரு காரணம் மட்டும் அந்தக் கோயிலுக்கு சிறப்பைக் கொடுக்கிறது என்று. எண்ண முடியாது. இன்னும் பல!
பேரரசர்களும், பெரும் புலவர்களும் கைதேர்ந்த கலை ஞர்களும் சீர், சிறப்புடன் வாழ்ந்த அந்தக் காலத்திலும் சரி, பழம் பெருமைகளையும், பண்டைக் கோயில்களையும்

Page 116
--س۔ 16 حس۔
போற்றிக்கொண்டு, அதேசமயம் தற்காலத்திற்கேற்ருற் போல் விஞ்ஞானம் கலை, கல்வி, கலாச்சாரங்களில் தமது திறமைகளை பன்மடங்காக வளர்த்துக்கொண்டு மென் மேலும் மெருகேறி முன்னேறி வரும் பாரதத்தின் பெருமை சொல்லற்கரியது. அப்படி பலப்பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ள தென்னகத்தின் அருமை பெருமைகளைகற் றுக்குட்டி எழுத்தாளியாகிய நான் கைக்கடங்கிய இந் துரலில் வடித்துவிட முடியாது. அயல் நாட்டை, அன்னிய நாட்டைச் சேர்ந்தவராய் இருந்தாலும் எம் மினத்தைச் சேர்ந்த, தமிழினத்தவர் அல்லவா? அந்த தமிழினம் அங்கே ஓங்கி உயர்ந்து நிற்பதைக்கண்டு பெருமைப்படுகிறேன்.
 

>so을HsoloO
ooooooot i 18. Noong),剧 细,
Gironssoos@gisae
si úhụsnuşanIs ql 11sigoş,
soigs No Wo
心Ļotoàɔɛŋmɔ
圈 ca* né心國•ếlo

Page 117

o 11 JII où troðiðC· Toš,
uponísș* • •* タグ kmQQQ3/ Glogynff || .《 剧/剧く }un súun 6,1 )
£Gæstsí süúsią FasNN. ŒGji)&poulioUZ- -*g グ5Qシ S外門外기>،
植}} Lsj tio2

Page 118


Page 119
|
 

-·