கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுனாமி கடற்கோள் 26/12 (2004)

Page 1


Page 2
. ...At 3, li ġibed ... W;
C சமுத்திரம்" ༼༽ཞིག/
fuji, FL Rai
இலங்கையில்
சுனாமி தாக்கிய
பிரதேசங்கள்
 
 
 
 
 


Page 3

அnைமி
கடற்கோள் 26/12 (2004)
கலாநிதி கந்தையா குனராசா
7 appub 5uastò
| 7க/CA, பிறவுண் வீதி
யாழ்ப்பாணம்,
இலங்கை

Page 4
முதற்பதிப்பு பெப்ரவரி 2005 (C) கமலா குனராசா, 7510A, பிறவுண் வீதி, யாழ்ப்பாணம், இலங்கை,
ஆசிரியர் கலாநிதி கந்தையா குணராசா
அச்சுப்பதிப்பு யுனி ஆர்ட்ஸ் (பிறைவேட்) லிமிடட், கொழும்பு 13, அட்டை இந்தோனேசியாவில் சுனாமி - ராய்ட்டர்
விலை : eum 350/=
"Tsunami'
(A non-fiction on Tsunami, the killer waves, on 26.12.2004)
Author : Dr. Kandiah Kunarasa B.A. Hons (Cey), M.A, Ph.D, SLAS (C)Mrs. Kamala Kunarasa, 75/10A, Brown Rd, Neeraviyady, Jaffna. Printed : Unie Arts (Pvt) Ltd., Colombo 13.
Layout . : R. Sudha Price : Rs. 350/=
ISBN : 955-1200-03-9
விற்பனையாளர்
பூபாலசிங்கம் புத்தகசாலை 202, 340 செட்டியார் தெரு, கொழும்பு 1
வெள்ளவத்தை யாழ்ப்பாணம்
பூரீலங்கா புத்தகசாலை
யாழ்ப்பாணம் : கொழும்பு

26 டிசம்பர் 2004, ஞாயிற்றுக்கிழமை. அதிகாலை 6.29 மணி. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் கடற்கரையை அடுத்த கடலில் ஏறத்தாழ 9000 மீற்றருக்கும் 10000 மீற்றருக்குமிடைப்பட்ட புவியாழத்தில் பூமித்தாயை மூடியிருந்த தகட்டோட்டுச் சேலை விலகியதால் அவள் தன்னை ஒருகணம் சிலிர்த்துக்கொண்டாள். அச்சிலிர்ப்பு புவிநடுக்கமாக மாற. பொங்கியெழுந்த பேரலை ‘சுனாமி’யாகி, இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களைக் கபஸ்ரீகரம் செய்து கொண்டது. இலட்சக்கணக்கான முனித உயிர்களை உமிழ்ந்து அவர்களின் சடலங்களைத் துப்பி எறிந்தது. இனமத. ஆண்-பெண், மழலை, முதியோர் என்ற வயது வேறுபாடின்றி அனைவரையும் சமத்துவமாக வாரி எடுத்துக் கொண்டது. தரைமட்டமாகிய வதிவிடங்கள், பாடசாலைகள், கோயில்கள். ஆசியக் கரையோரப்பிரதேசங்கள் எங்கும் வானை முட்டும் அழுகுரல்கள், ஒப்பாரிகள். இலங்கைத் தீவின் தென்கரை, கிழக்குக் கரை, வடக்குக் கரை சார் கடற்கரைப் பிரதேசங்கள் அனைத்தும் சுனாமி அனர்த்தத்தால் சிதைந்து போயின. இக்கரைகளில் சுனாமிக்கு இரையாகிய3846 சடலங்கள் மீட்கப்பட்டன. எண்ணிக்கைக்குள் அடங்கியவை அவை காணாமற் போயினோரின் எண்ணிக்கை இன்னமும் சரியாக மதிப்பிடப்படவில்லை.
உலக சமூகத்தையே உறைய வைத்த 'சுனாமி
அரக்கன் என்பவன் யார்? எங்கிருந்து உருவாகினான்?

Page 5

நன்றிக்குரியோர். O O
0 இணையத்தளங்கள்/எஸ்.கஜன் (வீரகேசரி)/கே. விஜயன் (வீரகேசரி)
சி. எஸ். காந்தி (வீரகேசரி) எம். ஜி. ராதாகிருஷ்ணன் சரவணன்/ ராதிகாகிரி, எஸ். சுந்தர்தாஸ் (இந்தியாடுடே/ சபேஷ் (தினக்குரல்) விஷ்ணு (தினக்குரல்) கனகரவி (தினக்குரல்) கேசவன் (உதயன்) ச. தே. ராஜா (உதயன்) வி. ரி. எஸ். ராஜா (உதயன்) மார்க் அன்ரனி (உதயன்) பி.எம்.எம்.ஏ. காதர் (தினகரன்/எம்.சஹாப்தீன் (வீரகேசரி) கே.பி.மோகன் (தினக்குரல்/வி.டி. ராஜ்(வீரகேசரி)/யோ. வொஷிங்ரன் (வீரகேசரி) வி. ரி. சகாயதேவராஜா (வீரகேசரி) வி. பாக்கியராஜன் (வீரகேசரி) துஷ்யந்தனி கனகசபாபதிபிள்ளை தினக்குரல்) ஆதிகோவிலடி ஜெயம் (உதயன்)/சுயர்சன் (உதயன்) கீதபொன்கலன் (வீரகேசரி) அ. ரஜீபன் (தினக்குரல்) க. வீரசிங்கம் (தினக்குரல்) கே. கணேஸ் (யாழ் அரச அதிபர்)'இமெல்டா சுகுமார் (முல்லைத்தீவு அரச அதிபர்) தமிழர் புனர்வாழ்வுக் கழகம்/ க. வீரபத்திரபிள்ளை (தலைமைப்பீட உதவி அரசாங்க அதிபர்) எஸ். சிவபாலன் (தினக்குரல்/ரி. உதயகீதன் (தினக்குரல்) எம்.எஸ். பார்த்தீபன் (பொஸ்கோ) ஜோய் ஜெயக்குமார் (வீரகேசரி) தேவஅதிரன் (வீரகேசரி)/ஆர். புஷ்பபரன் (வீரகேசரி) அன்ரரிவிக்டர் செல்வராஜா(கனடா/பொ. விமலேந்திரன் (யுனி ஆர்ட்ஸ்/இ சுதா இ. அகிலர் (யுனிஆர்ட்ஸ்/கெளதம் ஐடிஎம்) பூ, பூரீதரசிங் பூபாலசிங்கம் புத்தகசாலை ரவி ந்திரன்/சதீஸ் (லங்கா புத்தகசாலை டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்) மற்றும் ராய்ட்டர், உதயன், ஈழநாடு, தினக்குரல், வலம்புரி, ஈழநாதம், வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி, இந்தியாடுடே பத்திரிகை ஆசிரியர்கள்.

Page 6
கலநீதிக குணராசாலின் SJGaoGøTuU
புனைக்கதை சாரா நூல்கள்
24 மணிநேரம்
12 ഥങ്ങി நேரம் (கிழக்கிலங்கை சூறாவளி)
மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது
களம் பல கண்ட யாழ் கோட்டை
மகாவம்சம் கூறும் இலங்கை வரலாறு
ஈழத்தவர் வரலாறு
நல்லைநகர் நூல்
யாழ்ப்பாண அரச பரம்பரை
ஏ9 நெடுஞ்சாலை (அச்சில்)

முன்னுரை
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் 26, டிசம்பர் 2004ம் திகதி பெரும் உயிரழிவையும், சொத்தழிவையும் ஏற்படுத்திச் சென்ற சுனாமி ஆழிப்பேரலை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக எங்களுடைய இளம் சந்ததியினர் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்ள வேண்டிய அத்தியாவசியம் உருவாகியுள்ளது. 24 மணிநேரம், 12 மணி நேரம், களம் பல கண்ட கோட்டை, மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது முதலான புனைக்கதை சாராத நூல்களை எழுதிய நான் அவ்வகையில் சுமாத்திராச் சுனாமியையும் இந்நூலின் மூலம் ஆவணமாக்கியதோடு அதன் தோற்றப்பாட்டினை அறிவியல் ரீதியாக விளக்கி எழுதியுள்ளேன்.
இத்துறையில் இன்னும் பல நூல்களை துறைசார் அறிஞர்கள் வெளியிட வேண்டும். மனிதன் இயற்கைக்கு எதிராக அறிவியல் தொழில் நுட்பத்தால் அதனைக் கட்டுப்படுத்தி வாழ்ந்து விடலாம் என்று கனவு காண்கிறான். இயற்கையின் ஓர் அங்கம் தான் நாம். இயற்கையோடு இயைந்து வாழக் கற்றுக் கொள்ளும் வேளையும் இயற்கையைப் புரிந்து வாழப் பழகிக் கொள்ள வேண்டிய நேரமும் வந்து விட்டதை சுமாத்திரா சுனாமி எங்கள் எல்லோருக்கும் தெரிவித்திருக்கிறது.
இந்த நூல் ஒரு தனி மனித முயற்சி என்று பெருமையாகக் கூறிக்கொள்ள நான் தயாராக இல்லை இந்த நூலினை ஆக்குவதற்கு நன்றிக்குரியோர் பட்டியலில் நான் குறிப்பிட்ட அனைவரும் பெரும் உதவியாக இருந்திருக்கிறார்கள் என்பதை மீண்டும் நினைவு கூர்ந்து என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.
கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்) மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாணம். 25.02.2005.

Page 7
. 5, 6
... O
11
... 13
14
15
சுனாமிஅனர்த்தப்
புகைப்பட விளக்கம்
1, 2, 3, 4 தாய்லாந்திலும், மலேசியாவிலும் சுனாமி தாக்கிய போது
எடுத்த படங்கள் (ராய்ட்டர்)
காலி துறைமுகத்தினை சுனாமி தாக்கி, அழிவுக்குட்படுத்துவதற்கு முன்னரும், சுனாமி தாக்கி அழிவுக்குட்படுத்திய பின்னரும் (செய்மதிப்படம்இணையத்தளம்). களுத்துறையில் கரையோரத்தைத் தாக்குவதற்கு விரையும் சுனாமிப் பேரலை (செய்ம்மதிப்படம்). சுமாத்திரா அசே பிரதேசத்தில் புவி நடுக்கம் காரணமாக பிளவு பட்டுள்ள வீதி (ராய்ட்டர்). மலேசியாவில் தென்னை உச்சியைத் தொட்டெழும் சுனாமி (ராய்ட்டர்). நாகபட்டினத்தில் சேகரிக்கப்பட்ட சுனாமி சடலங்கள், குவியலாகக் குவிக்கப்பட்டுள்ளன. (இந்தியா டுடே). கொலைகார அலையின் வேட்கைக்குப் பலியானோர்மட்டக்களப்பு வல்வெட்டித் துறையில் சுனாமி உமிழ்ந்து துப்பிய பாலகன்
(எஸ். சிவபாலன்). முல்லைத்தீவில் மழலை ஒன்றின் சடலத்தை விடுதலைப் பெண் போராளி தூக்கி எடுக்கிறார். (இணையத்தளம்) முல்லைத்தீவில் வெட்டப்பட்ட குழியினுள் சடலங்கள் அடுக்கப்படுகின்றன. (இணையத்தளம்). வல்வெட்டித்துறையில் மழலை ஒன்றின் சடலத்தினை தூக்கியபடி இளைஞர் ஒருவர் (எஸ். சிவபாலன்).

. 16
17
18
19
... 20
. 21
22, 23, 24 வடமராட்சி அழிவுகள். கட்டிடங்கள் சரிந்து
25
, 26
27
28
. 29, 30, 31, 32 இந்தோனேசிய உல்லாசப் பயணிகள் ஹோட்டல்
33
. 34
35
. 36
. 37
. 38
39
. 40
வரிசையாக வளர்த்தப்பட்டிருக்கும் சடலங்கள்.
(இணையத்தளம்). குழந்தையின் சடலம் ஒன்றின் அருகில் ... (ராய்ட்டர்) வல்வெட்டித்துறையில் சேற்றுக்குள் இருந்து தூக்கப்படும் துயரம். (எஸ். சிவபாலன்) வடமராட்சியில் உறவுகளை இழந்து பரிதவிக்கும் குடும்பம்(எஸ். சிவபாலன்) வடமராட்சியில் டிரக்ரர்களில் ஏற்றப்படும் சடலங்கள் (எஸ்.
சிவபாலன், உதயசீலன்)
இரு பிள்ளைகளையும் கடலலைக்கு காவு கொடுத்த தாய்.
கிடக்கின்றன. (எம். எஸ். பார்த்திபன்) முல்லைத்தீவில் தகர்ந்து உடைந்த கட்டிடச் சிதைவுகள்
(க. குணராசா)
வல்வெட்டித்துறையில் சிதைந்த படகினை அவதானிக்கும் கனடா எம். பி. ஜிம் ஹரியானிசும் யாழ் எம். பி. கஜேந்திரனும் (க.கு) கிழக்கில் துண்டிக்கப்பட்ட பாலம் ஒன்று. (இணையத்தளம்) அள்ளுண்டு போன முருகைக்கற்கள் -பருத்தித்துறை (க.கு)
ஒன்றினை சுனாமி தாக்குகின்றது. (ராய்ட்டர் /
இணையத்தளம்) சுனாமி அலை அள்ளிச் சென்ற வீதியின் பகுதி (இணையத்தளம்) − முல்லைத்தீவு கடற்கரையில் சுனாமியால் தாக்கப்பட்ட தேவாலயம். (இணையத்தளம்) மட்டக்களப்பில் கடல் அனர்த்தத்தால் சரிந்த கோபுரமும், புரட்டி விடப்பட்ட கிண்றும் (இணையத்தளம்) மட்டக்களப்பில் தகர்ந்து சரிந்த இந்துக்கோயில் மண்டபமும், உயர்ந்து நிற்கும் கோபுரமும் (தினக்குரல்) கடற்கரை மணலில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கோரி ஒருவர் உருவாக்கிய வடிவம். (இணையத்தளம்) இந்தோனேசியக் கரையோரம் சுனாமி வழித்தெடுத்துள்ளது. (இணையத்தளம்) எஞ்சி நிற்கும் ஒரு தீவு. (இணையத்தளம்) இழப்புக்களை கவலையோடு பார்க்கும் ஒருவர்.
(இணையத்தளம்)

Page 8
... 4
. 42
43
. 44, 45, 46 இழப்புக்களின் சோகம் (இணையத்தளம்)
. 49
. 50
51
52
கரைக்கு எத்தப்பட்ட ரோலர் (இணையத்தளம்) அம்பாறையில் விமானம் மட்டும் எஞ்சிய இந்துக்கோயில்
(இ. பாக்கியராஜன்)
சுனாமிக்கு அப்பளமான வாகனம்
. 47, 48 காலியில் உறவுகளை இழந்த மக்கள். இனமத பேதமற்ற
துன்பம் (தினக்குரல்) கடற்கரை தரையில் இளம் பாலகன் (எஸ். சிவபாலன்) வல்வெட்டித்துறையில் காவி வரும் இழப்புச் சுமைகள்
(எஸ். சிவபாலன்) திருகோணமலையில் சடலங்களின் முன் கண்ணிர் சொரியும் உறவுகள் (தினக்குரல்) முலைத்தீவில் டக்டரிலிருந்து பறிக்கப்படும் சடலங்கள்
(வீரகேசரி)
. 53, 54 தென்பகுதியில் சுனாமித் தாக்குதலால் நெளிந்து
வளைந்து போய்க்கிடக்கும் தண்டவாளங்கள் (தினக்குரல்)
.55, 56 சுனாமியின் அசுரபலத்திற்கு எதிர் நிற்க முடியாமல் சரிந்து
கிடக்கும் புகையிரதப் பெட்டிகள்(இணையத்தளம்)
. 57 அண்ணனின் சடலமடியில் ஆராத்துயில் கொள்ளும்
தங்கவிக்கிர மழலை (எஸ். சிவபாலன்)
58 சென்னையில் உறவுகளை இழந்த தாய் ஒருத்தி (ராய்ட்டர்)
59 தென் பகுதி வீதியில் வீசப்பட்ட இளம் மலர் ஒன்று
(இணையத்தளம்)
60' தமிழ்நாட்டில். (ராய்ட்டர்)
... 61 பருத்தித்துறையில் சுனாமியால் கிள்ளியெடுக்கப்பட்ட
கட்டிடம் (எஸ். சிவபாலன்.)
. 62 பருத்தித்துறை கடற்கரையில் (ஜோய் ஜெயக்குமார்-வீரகேசரி)
. 63 கரையெங்கும் இடிபாடுகள் (இணையத்தளம்)
64, 65 வீதியில் தூக்கிவீசப்பட்ட மீன்பிடிக்கலங்கள்
. 66 மலேசியாவின் உல்லாசத் தீவான லென்காவில்
சேதமாக்கப்பட்ட படகுகள் (ராய்ட்டர்)
67 கொழும்பு முகத்துவார அகதிகள் (தினக்குரல்)
68 பருத்தித்துறையில் அகதிவாழ்க்கை (ஜோய் ஜெயக்குமார்)
69 உடைந்த ஒலிவில் பாலத்தினூடாக மக்கள் பயணம்
(தேவ,அதிரன்) 70 இறுதிக் கிரியைகள்
xii

71
72
. 73, 74,
. 76, 77
78
... 79
80
... 81
. 82
83
. 85, 86,
88
. 89
90
. 91
92
. 93
. 94
95
. 96
97
98
99
பெரிய கல்லாத்துப் பாலம் உடைந்ததை அடுத்து படகுகளின் பிணைப்பால் படகுப்பாதை (தேவ,அதிரன்) யாழ் அரச அதிபர் செ. பத்மநாதன் திட்ட பணிப்பாளர் சுந்தரம்பிள்ளை, யாழ் மாவட்ட அரசியல் துறைப பொறுப்பாளர் இளம்பரிதி (எஸ். சிவபாலன்) 75 எங்கும் சிதைவுகள் (எம். எஸ். பார்த்தீபன்) இன்னும் சில அழிவுக் காட்சிகள் (இணையத்தளம்) அதிக உயிர்ச் சேதம் ஏற்பட்ட கிண்ணியா அரசினர் வைத்தியசாலை (வீரகேசரி)
snЈLuoTT"fluileu.
மட்டக்களப்பில் (தினக்குரல்) இந்தோனேசியா பூருக்கொட்டில் அடுக்கி வைத்த சடலங்கள் (ராய்ட்டர்) மெரினாவில் சுனாமி (செய்மதிப்படம் - ராய்ட்டர்) சுனாமி 81- அபிலாஷ். ஒன்பது தாய்மாரின் மையல் 87 துரத்திவரும் சுனாமி -பருத்தித்துறை (எஸ். சிவபாலன்) சுனாமி தாக்கியதன் பின் திருக்கோயில் - அம்பாறை
(இணையத்தளம்) சுனாமிக்கு எட்டாத தலைவரின் வல்வெட்டித்துறை வீடு
(க. கு) சுனாமிக்கு இரையான நிலாவெளி சுனாமி ஹோட்டல்
(nfrGeserfi) வல்வெட்டித்துறையில் சிதைந்த கலங்கள் (க. கு) வல்வெட்டித்துறையில் வலைகள், படகுகள், கற்குவியல்கள் (a. கு) நலன்புரி நிலைய வாழ்க்கை - சிதம்பராக் கல்லூரி வல்வெட்டித்துறை (க.ஞ்டி
சிதம்பராக் கல்லூரிநலன்புரி முகாம் (க.கு) குடத்தனை கூடார வாழ்க்கை (க.கு) கனடா எம். பி. ஜிம்ஹரியானிஸ்சும் யாழ் மாவட்ட அரசியல் நிர்வாகப் பொறுப்பாளர் இளம்பரிதியும் (க.கு) பருத்தித்துறை முருகைக்கற்பார் பரவல் (க.கு) கரையோரத்தில் எஞ்சியுள்ள பாகங்கள் (க.கு) பருத்தித்துறை முனைப்பகுதியில் இராணுவம் மீண்டும் அமைக்கும் அரண் (ஆர். புஷ்பபரன்)

Page 9
100
... 101
... 102
... 103
... 104
... 105
... 106
... 107
108
... 109
... 110
11
... 112
... 3
... 14
... 115
முல்லைத்தீவு - மடியில் தரையில் சோகம் (இணையத்தளம்) யாழ் அரச அதிபர் கே. கணேஷ்
காலி அனர்த்தம் மலேசியாவின் உல்லாசத் தீவான லங்காவில் என்ற மீன்பிடிக் கிராமத்தில் சேதமடைந்த வாகனங்கள் (ராய்ட்டர்) உடைந்து சிதைந்து எஞ்சிய கற்குவியல்கள்
(இணையத்தளம்) கடலை மறைக்க எதுவுமில்லை - வல்வெட்டித்துறை (க.கு) தென்னையின் இந்த வட்டைமேவி சுனாமி பாய்ந்தது வல்வெட்டித்துறை (க.கு) அமைதியடைந்த கடல் - பருத்தித்துறை (க.கு) புரட்டிவிடப்பட்ட தொழில் (க.கு) முல்லைத்தீவு சிதைவுகள் (க.கு)
சிதைந்த படகு (க.கு) வடக்கின் நிவாரணப் பணியில் கடற் தளபதி சூசை மணற்காட்டில் சுனாமிக்குத் தப்பிய வீடு ஒன்று (க.கு) கனேடிய எம். பி ஜிம் ஹரியானிசும் லின்கெயார் அதிபர் ஏ. வி. செல்வராசாவும் இளம்பரிதியுடன் சுனாமி நிவாரணம் பற்றி (க.கு) மீண்டும் வல்வெட்டித்துறையில் படகுகளை திருத்தி கடலில் இறங்கத் தயாராகும் மீனவர்கள் (க.கு) சுனாமிக்கு இறுதி விடை - அரக்கனே மீண்டும் வராதே
(ராய்ட்டர்)

Dr. SengaiAaliyaan K. Kunarasа
A word about Sengai Aaliyaan. He has a doctorate and presently he is the Municipal Commissioner of Yaalpanam having held many high positions in the administration of the country, including the post of Registrar of the Yaalpanam University. But he is one of the prolific and topmost creative writers in the country. He is also a researcher and compiler of several volumes that document Lankan Thamil literature. His real name is K. Kunarasa.
He is a geography special graduate from the University of . Peradeniya (1960-1964). While in the university, he compiled four collections of Peradeniya graduates' short stories: Kathai Poonga, Vinnum Mannum, Kaalathin Kuralkal and Yugam.
Sengai Aaliyaan and Sembian Selvan together brought out a collection of stories by Sambanthan, one of the pioneer short story writer in Sri Lanka. Sengai Aaliyaan also compiled 25 short stories by 16 writers belonging to the period of writing called "Rennaisance in the history of Lankan Thamil Literature”.
Again, he brought out another collection of short stories that appeared during 1930-1958, in Eelakesari, a leading weekly that flourished in the North some years ago. 浚文
Later, he compiled the following collection: Eelathu Munnodi Chirukattaikal, Malikai Kathaigal, Sirithiran Sundarin Oawiya Ulagil Naan, Muniyappa Dasan in Kattaikal, Puthunai Lolan Chiru Kattaikal, Suthanthiran Kathaigal (stories by 109 Lankan writers in Thamil have found a place in this collection).
Thus we see, K. Kunarasa has done a splendid job, despite exigencies of time to devote to his own creative writing. Sengai Aaliyaan
deserves a gratitude from all of us.
K. S. Sivakumaran
By Courtesy: Daily News, 15" September 2004

Page 10
10.
11.
12.
உள்ளடக்கம்
புவியின் உள்ளமைப்பு மிதக்கும் புவிய்ோடு
கண்டங்கள் நகர்ந்தன
புவித் தகட்டோடுகள்
தகட்டோடுகளின் நகர்வு/விளைவுகள்
புவிநடுக்கங்கள்
சுனாமிப் பேரலை
சுமாத்திராச்சுனாமி
சுனாமியின் விளைவுகள்
பேரலைப் பேரழிவுகள் (இலங்கை தவிர்ந்த நாடுகள்) இலங்கையில் சுனாமிப் பேரழிவுகள்
சுனாமியிலிருந்து பாதுகாப்பு
10
14
35
39
48
52
64
98
108
195

புலின் உள்ளமைப்பு
யற்கைக் காரணங்களால் புவியோட்டின் ஒரு பகுதி சடுதியாக அதிர்ந்தால் அதனைப் புவிநடுக்கம் அல்லது பூகம்பம் (Earth Quake) என்பர். இது எவ்வாறு நிகழ்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள நாம் புவியின் உள்ளமைப்புப் பற்றித் தெரிந்து கொள்வது அவசியமாகின்றது. புவியிலிருந்து 384779 கி. மீ. தூரத்திலுள்ள சந்திரனில் கால் பதித்த மனிதனால், புவியினுள் 10 கி மீ வரையிலேயே அகழ்ந்து தரவுகளைப் பெற முடிந்திருக்கிறது. அதுவும் ஆழமான பெற்றோலியக் கிணறுகள் 1970ல் கோலா குடாநாட்டில் ருசியா 12 கி.மீ. ஆழத்திற்குப் பூமியினுள் துளையிட்டு ஆராய்ந்துள்ளன. சுமார் 6400 கி. மீ. ஆழங்கொண்ட புவிக் கோளத்தில் ஆக அறுநூறில் ஒரு பங்கு ஆழத்தையே நேரடித் தரவுகள் மூலம் ஆராய முடிந்துள்ளது.
பூமியினுள்ளிருந்து மேற்பரப்பினைத் தகர்த்தபடி எரிமலைகள் வெடித்துக் கக்குகைகள் நிகழ்த்துகின்றன. அவ்வேளை பாறைக்குழம்பு, சாம்பல், வாயு என்பன வெளிப்பாய்ந்து தள்ளப்படுகின்றன. புவியின் உள்ளமைப்புப் பற்றிய தகவல்களைப் புவிச்சரிதவியலறிஞர்கள் ஆரம்பத்தில் இவ்வாறான எரிமலைக் கக்குகைகள் மூலம் பெறப்பட்ட பொருட்களிலிருந்து பெற்றுக் கொண்டனர். ஆனால் இன்று புவியின் உள்ளமைப்பைப் பற்றி அறிவதற்கு அறிஞர்களுக்குக் கைகொடுப்பது புவிச்சரிதவியல் (Seismology) தரவுகளாகும். h−
புவிநடுக்கம் ஓரிடத்தில் தோன்றும்போது அவ்விடத்தைக் குவிமையம் அல்லது புவிநடுக்க மையம் (Focus) என்பர். இக் குவிமையத்திலிருந்து புவிநடுக்க அலைகள் பூமியின் எல்லாத் திசைகளிலும் ஊடுருவிச் செல்கின்றன. குவிமையத்திற்குச் செங்குத்தாகப் புவிப் பரப்பிலுள்ள இடம் மேன்மையம் (Epicentre) எனப்படும். ஓரிடத்தில் புவிநடுக்கம் ஏற்பட்டதும். அதிலிருந்து உருவாகும் புவிநடுக்க அலைகள் மூவகைப்படும். அவை (வர்ணப்படம் 16 1. (p56)606).5Girl P-960Q56it (Primary Waves) 2, 5,60600T -960Q56its S-966)356T (Secondary Waves) 3. மேற்பரப்பு அலைகள் /L 960Guggit (Love Waves/ Surface Waves)
சுனாமி

Page 11
P அலைகள் (Primary Waves) நெடுங்கோட்டு அமுக்க அலைகளாகவும், மிகுந்த வேகம் கொண்டவையாகவுமுள்ளன. இவற்றின் வேகம் 8 கி.மீ/செக் ஆகும். இந்த அலையின் பாதையில் குறுக்கிடும் ஒவ்வொரு துகளும் அலை பாயும் திசையில் முன்னும் பின்னும் சுருங்கி விரிந்து செல்லும். இவை திடப்பொருட்கள், திரவப் பொருட்கள் அனைத்தையும் தங்குதடையின்றி ஊடுருவிச் செல்வன.
S அலைகள் (Secondary Waves) அதிர்வு அலைகளாகும். ஒப்பளவில் P அலைகளிலும் வேகம் குறைந்தவை. இவற்றின் வேகம் 4.5 கி. மீ/செக் ஆகும். இவை செல்லும் போது இவற்றின் பாதையிலிருக்கும் ஒவ்வொரு துகளும் அலைபாயும் திசைக்குச் செங்குத்தாக உயர்ந்து தாழ்ந்து அதிர்விற்குள்ளாகின்றது. இவை திடப்பொருட்களை மட்டுமே ஊடுருவிச் செல்லக்கூடியன. திரவப் பொருட்களை ஊடுருவிச் செல்லா.
L அலைகள் (Surface Waves) புவியோட்டின் மேற்பரப்பில் பயணம் செய்வன. எனவே இவை அதிக தூரம் செல்கின்றன. இவை வேகம் குறைந்தவை.
இந்தப் புவிநடுக்க அலைகள் புவியின் உட்பகுதி பற்றிய பெளதிகவியல்புகளை அறிவதற்கு உதவியுள்ளன. புவிநடுக்க அலைகளைக் கொண்டு புவியின் உட்பகுதியை ஆராய்ந்தவர்களில் கெய்த் புல்லன் (Keith Bullen), கட்டன் பேர்க் (Gutenburg), மொஹோறொவிக் (Mohorovic) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். புவிநடுக்க அலைகளைக் கொண்டு புவியின் உட்பகுதி அமைப்பினை எவ்வாறு அறிய முடியும்? (வர்ணப்படம் 6ஐ அவதானிக்கவும்.)
எடுத்துக்காட்டாக வடமுனையில் ஒரு பெரிய புவிநடுக்கம் தோன்றுவதாகக் கொள்வோம். இக் குவிமையத்திலிருந்து P அலைகளும் S அலைகளும் எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்லும். இவற்றைப் பதிவு செய்யப்
'P'அலைகள் "S" அலைகள்
2 கந்தையா குணராசா
 

புவியின் எல்லாப் பகுதிகளிலும் பதி கருவிகள் உள்ளன. பூமி முழுவதும் திட நிலையில் இருந்தால் P, S அலைகள் புவியின் உட்பாகத்தைக் கடந்து எல்லாத் திசைகளிலும் பரவிச் செல்லும். ஆனால், நிகழ்வது என்ன?
(ہ9ے)
(F)
(2–)
குவிமையத்தில் (0') இருந்து 103° வரை P அலைகள் முதலிலும், S அலைகள் பின்னரும் பதிவாகின. குவிமையத்திலிருந்து விரைந்த S அலைகள் 2900 கி. மீ. ஆழத்தில் விலகுவது புலனாகியது. S அலைகள் இவ்வாறு விலகுவதற்குக் காரணம் திரவப் பொருட்கள் குறுக்கிட்டமையாகும். எனவே, 2900 கி. மீ. ஆழத்தில் வெளிக் கோளவகம் திரவ நிலையில் குறுக்கிடுவது புலனாகிறது.
142" இல் P அலைகள் மிகவும் தொய்ந்த நிலையில் பதிவாகின. எனவே, திரவ நிலையிலுள்ள வெளிக் கோளவகத்தை ஊடுருவிய P அலைகளின் தொய்ந்த நிலையிலிருந்து 1216 கி. மீ ஆழம் கொண்ட திடமான உட்கோளவகம் ஒன்றிருப்பது உணரப்பட்டது.
S அலை பதிவான 103° இடத்திற்கும் P அலை தொய்ந்து பதிவான 142"
இடத்திற்குமிடையில் எந்த ஓர் அலையும் பதிவாகவில்லை. இப் பகுதியை நிழல் வலயம் (Shadow Zone) என்பர். இதிலிருந்து கணக்கிடில் புவியின் கோளவகத்தின் ஆரம்பம் 3416 கி. மீ. என்பது புலனாகியது.
மொஹோறோவிக் என்பவர் நிகழ்த்திய புவிநடுக்க அலைகளாய்வில், புவியோட்டில் 6. கி. மீ/செக், வேகத்தில் பயணம் செய்த P அலை, கண்ட ஒட்டைக் கடந்ததும் 8. கி. மீ/செக் வேகத்தில் பயணம் செய்வது கண்டறியப்பட்டது. எனவே, அவ்விடத்தில் ஓர் இடைவெளி இருப்பது கண்டறியப்பட்டது.
100 கி. மீ. வரை சீராகவும் வேகமாகவும் பயணம் செய்த P அலை 100 கி. மீ. ஆழத்தை அடைந்ததும் வேகம் குறுைவது கண்டறியப்பட்டது. அதனால் 200. கி. மீ. ஆழம் வரை குறைந்த லுேகம் ஏற்படுத்தும் படை ஒன்றுள்ளமை உணரப்பட்டது. அதுவே மொன்பாறைக் கோளம் என்ற அஸ்தொனோஸ்பயஸ் ஆகும்.
புவிநடுக்க அலைகளின் அடிப்படையில் புவியின் உள்ளமைப்பு மூன்று
பெரும் படையமைப்புகளைக் கொண்டிருப்பது அறியப்பட்டது. அவையாவன :
(வர்ணப்படம் 1ஐப் பார்க்க)
1. 2.
J.
L6Gur (6 (Earth crust) இடையோடு மான்ரில்படை (Mesosphere/ Mantle) G&Ir6).jGITGLo (Barysphere/ Centrosphere)
சுனாமி

Page 12
கோளவகம்
பூமியின் மையப்பகுதி கோளவகம் ஆகும். இது இடையோட்டிற்குக் கீழ் காணப்படுகின்றது. இடையோட்டிற்கும் கோளவளகத்திற்குமிடையில் கட்டன்பேக் இடைவெளி காணப்படுகின்றது. இது கட்டன்பேக் என்பவரால் கண்டறியப்பட்டது. கோளவகமானது நிக்கல், இரும்பு என்னும் (Nife) உலோகங்களின் சேர்க்கையாலானது. சிறியளவில் ஒட்சிசன், சிலிக்கன், சல்பர் அல்லது நிக்கல் என்பனவற்றையும் கொண்டுள்ளது. புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 2900 கி. மீ. கீழ் கோளவகம் காணப்படுகின்றது. புவியின் பெரும் பகுதியை உள்ளடக்கிய படை இதுவாகும். கோளவகத்தின் விட்டம் 6944 கி. மீ ஆகும். கோளவகத்தின் வெப்பநிலை ஏறத்தாழ 2000° செ (3632 ப. இந்த வெப்பநிலையில் எந்த ஒரு பொருளும் உருகாது இருக்க முடியாது. கோளவகத்தை (அ) வெளிக்கோளவகம் (ஆ) உட்கோளவகம் என இரண்டாக வகுப்பர். வெளிக்கோளவகம் 2256 கி. மீ தடிப்பானது உட்கோளவகம் 1216 கி. மீ ஆரமுடையது. வெளிக்கோளவகம் திரவ நிலையிலும், உட்கோளவகம் கடின நிலையிலும் காணப்படுவதாகக் கருதப்படுகின்றது.
இடையோடு
புவியோட்டிற்குக் கீழே, வேறுபட்ட பாறைகளைக் கொண்ட ஒரு படை அமைந்துள்ளது. இதனை இடையோடு மான்ரில் படை மூடுபாறை எனப் பலவாறாக அழைப்பர். புவியோட்டினையும் இடையோட்டினையும் ஒரு மெல்லிய இடைவெளி பிரிக்கின்றது. அதனை மொஹோ இடைவெளி என்பர். இது மொஹோறோவிச் என்பவரால் இது கண்டறியப்பட்டது. கனிந்த விளாம்பழ ஒட்டிற்கும் பழத்திற்கும் இடையிலான இடைவெளி போன்றது. மொஹோ இடைவெளி 0.16 தொட்டு 32 கி.மீ வரையிலான தடிப்பினைக் கொண்டது. இடையோடு மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 2900 கி. மீ. (1800 மைல்) வரையில் அமைந்துள்ளது. இப்படை எரிமலைக் குழம்புப் பாறைகளையும் ஒலிவின் பாறைகளையும் கொண்டிருக்கின்றது.
இடையோட்டின் அதி மேற்படையை மேல் மான்ரில் படை என அழைப்பர். இது சமுத்திர அடித்தளத்தில் 70 கி. மீ வரையும், கண்ட அடித்தளத்தில் 125 கி. மீ. வரையும் அமைந்துள்ளது. புவியினுட்பகுதியில் 125 கி. மீ. இருந்து 200 கி. மீ வரையிலான பகுதியில் புவிநடுக்க அலைகளின் வேகம் வீழ்ச்சியடைவதனைக் காணலாம். எனவே, புவியின் மேற்பரப்பிலிருந்து 125 கி.மீ. வரையிலான ஆழத்திற்குக் கீழ் காணப்படும் படை சற்று வேறுபாடானது என அறியப்பட்டது. மேல், மான்ரில் படை மக்னீசியம் இரும்பு ஆகிய மூலகங்களை அதிகம் கொண்டுள்ளது. இந்த மேல் மான்ரில் படையையும், புவியோட்டையும் சேர்ந்து ஒருங்கே கற்கோளம் (Lithosphere) என்பர். நவீன புவிச்சரிதவியல்/ புவிவெளி யுருவவியலறிஞர்கள் இந்த 125 கி. மீ. தடிப்பான கற்கோளத்தையே கவசத்தகடு தகட்டோடு (Plate) என்பர்.
மேல்மான்ரில் படையின் கீழமைந்திருப்பது மென்பாறைக் கோளம்/ அஸ்தெனோஸ்பயர் (Asthenosphere) ஆகும். இது 200 கி. மீ வரை அமைந்துள்ளது.
4 கந்தையா குணராசா

இப்படையில் புவிநடுக்க அலைகளின் வேகம் குறைவாகும். இது ஓரளவு இளகிய மென்பாறைகளைக் கொண்டுள்ளது. அதிக அமுக்கம், உயர்வான வெப்பநிலை ஆகிய காரணமாக அஸ்தெனோஸ்பயரின் பருப்பொருட்கள் இளகிய நிலையிலுள்ளன. இப்படையின் ஒலிவைன், கானெற், பைறொக்சீன் போன்ற தனிமங்கள் இவ்வுயர் வெப்பநிலையில் உருகிவிடுகின்றன. அதனால் புவிநடுக்க அலைகளின் வேகம் இந்தப் படையின் ஓரளவு திரவச் சேர்க்கையால் குறைவுபடுகின்றது. மேலும், இப்படையில் எரிமலைக்குழம்பு உற்பத்தியாவதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இளகிய நிலையில் காணப்படும் அஸ்தெனோஸ்பயரில் கற்கோளம் தகட்டோடு சறுக்கு நிலையில் படிந்துள்ளது என்பது புலனாகின்றது.
அஸ்தெனோஸ்பயரின் கீழ்ப்படை மான்ரில் படை எனப்படும். பொதுவாக இது 2700 கி. மீ தடிப்பானது. இப்படை சிலிக்கேற் கனியங்களைக் கூடுதலாகக் கொண்டுள்ளது. கீழ் மான்ரில் படையில் 400 தொட்டு 670 கி.மீ வரையிலான ஆழத்தளம் இன்று மிக முக்கியமான அம்சமாகக் கொள்ளப்படுகின்றது. பூமியில் எற்படுகின்ற மிக ஆழமான புவிநடுக்கம் 670 கிமீ ஆழத்திலேயே உருவாகின்றது. அதற்குக் கீழன்று. பல்வேறு வகையான பாறைகளின் சேர்க்கையாலான இந்த 670 கி. மீ ஆழத்தளத்தில், மேற்பரப்பிலிருந்து அதிகரித்துவரும் அமுக்கம் குலைகிறது. அதனால் இந்த எல்லையினுள் மேலிருந்து நுழையும் திணிவு உடனடியாக உருகிப் பாறைக் குழம்பாகிவிடுகிறது. இங்கு இரசாயன, பெளதிக மாற்றங்கள் உருவாகின்றன. மேல் மான்ரில் படையையும் கீழ் மான்ரில் படையையும் 670 கி. மீ ஆழ்தளம் பிரிக்கின்றது.
புவியோடு
புவியின் மேற்படையே புவியோடு ஆகும். இது கடினமான கற்கோளமாகக் காணப்படுகின்றது. இப் புவியோடு 10 கி.மீ களிலிருந்து 50 கி.மீ வரையில் தடிப்பானது. புவியின் விட்டமான 12744 கி. மீ. உடன் இப்புவியோட்டின் தடிப்பை ஒப்பிடும்போது, இது எவ்வளவு சிறியது என்பது புரியும். அதனால் தான் புவியோடு ஒரு அப்பிள் பழத்தின் தோலின் தடிப்பிற்குச் சமமாக அமைந்துள்ளது என்கின்றனர். புவியோடு பளிங்குருப் பாறைகளையும், அவற்றை மூடிய அடையற் பாறைகளையும் * கொண்டிருக்கின்றது. சமுத்திர ஓடு, கண்ட்ே ஓடு என இரு ஓடுகளைப் புவியோடு கொண்டுள்ளது. புவியோட்டின் கண்ட ஒட்டைச் சீயல்படை (Sial) என வழங்குவர். இது சிலிக்காவையும் அலுமினியத்தையும் அதிக அளவில் கொண்டிருக்கின்றது. புவியோட்டின் சமுத்திர ஓட்டைச் சீமாப்படை (Sima) என்பர். இது சிலிக்காவையும், மன்னீசியத்தையும் அதிக அளவில் கொண்டது. இது எரிமலை குழம்புப் பாறையாக விளங்குகின்றது.

Page 13
கண்டஒடு 30 தொட்டு 50 கி. மீ வரையிலான தடிப்பினைக் கொண்டுள்ளது. சமுத்திர ஓடு சராசரியாக 10 கி. மீ வரையிலான தடிப்பினைக் கொண்டிருக்கின்றது. சமுத்திர ஓடு எரிமலைக் குழம்பும், கப்புறோவும் (Gabbro) கொண்ட பாறைகளாகியது. கண்ட ஒடு, கருங்கற்பாறைகளாகியது. அதன்மேல் சொற்ப தடிப்பிலிருந்து சில ஆயிரம் மீற்றர்கள் வரையிலான தடிப்பில் அடையற்பாறைகள் மூடியுள்ளன. மலைத் தொகுதிகள், பெரும் வடிநிலங்கள் முதலியவற்றில் அதிக தடிப்பான அடையற் பாறைகளைக் காணலாம்.
கண்ட ஒட்டின் கீழ் அரைப்பகுதி அவ்வளவு தூரம் ஆய்வுக்குட்படவில்லை. எனினும், 1925 இல் யோசெப் கொன்றோட் (Josepb Conrad) என்பவரால் கண்ட ஒட்டின் கீழ் அரைப்பகுதி ஆராயப்பட்டபோது புவிநடுக்க அலைகளின் வேகம் இப்பகுதியில் மேற்பகுதிக் கருங்கற்பாறைகளிலும் பார்க்க அதிகமாக இருந்ததைக் கண்டார். அதனால் கண்ட ஒட்டின் கீழ் அரைப்பகுதி சமுத்திர ஓட்டினைப் போன்று பசால்ட் எரிமலைக் குழம்பு/ கப்புரோப் பாறைகளால் ஆகியிருக்க வேண்டுமென முடிவுசெய்யப்பட்டது. அத்துடன் புவிநடுக்க வேகத்தை வேறுபடுத்தும் கண்ட ஒட்டின் மேற்பகுதியையும் கீழ்ப்பகுதியையும் பிரிக்கும் எல்லை கொன்றோட் இடைவெளி எனப்படுகின்றது.
6 கந்தையா குனராசா

மிதக்கும் U-5éuntGB
புவியின் அடர்த்தி ஏறக்குறைய 55 gm/cm3 ஆகும். அதாவது பூமியளவு கனவளவுடைய நீரிலும் பார்க்க பூமி 5.5 gm/cm3 மடங்கு அதிகமானதாகும். புவியோட்டின் அடர்த்தி 205 gm/cm ஆகும். இடையோட்டின் அடர்த்தி 29 gm/cm இல் இருந்து 31 gm/cm வரை வேறுபடுகின்றது. கோளவகத்தின் அடர்த்தி 12 gm/cm ஆகும். எனவே, புவியின் மேற்பரப்பிலிருந்து உட்பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல அடர்த்தி அதிகரித்துச் செல்வதைக் காணலாம். இவற்றிலிருந்து பூமி உருகிய நிலையிலிருந்து குளிர்ந்து இறுகியபோது அடர்த்தி கூடிய பருப்பொருட்கள் புவியின் மத்தியில் உறைந்தன என்பதனையும், அடர்த்தியில் குறைந்த பகுதிகள் மேலே அமைந்தன என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே அடர்த்தி கூடிய கோளவகத்தின் மீது அடர்த்தி குறைந்த இடையோடு அமைந்திருக்க, அதன் மீது அதிலும் அடர்த்தி குறைந்த புவியோடு அமைந்திருக்கின்றது.
புவியோடு திடமானதாகவும், இடையோடு பாகுத்தன்மை வாய்ந்ததாகவும், கோளவகம் உருகிய பாறைக் குழம்பாகவும் அமைந்திருக்கின்றன. பூமி உருகிய நிலையிலிருந்து குளிர்ந்தபோது, புவியோடு வூெப்பத்தை விரைந்து இழந்து குளிர்ந்து திடமானதாகியது. புவியோடு இறுகிக் கவசமாக அமைந்ததால் கீழ்ப்படைகள் வெப்பத்தை இழப்பது தடைப்பட்டது. மேலும் புவியின் மேற்பரப்பிலிருந்து உட் பகுதியை நோக்கிச் செல்லச் செல்ல ஒவ்வொரு 300 மீற்றர் ஆழத்திற்கும் 1°C வீதம் ஆழத்திலேயே புவியினுட்புற வெப்பநிலை அதிகரிக்கின்றது. 50 கி.மீ ஆழத்திலேயே புவியினுட்புற வெப்பநிலை 1000°C ஆக அதிகரித்துவிடுகின்றது. இந்த அளவு வெப்பநிலையில், புவியின் மேற்பரப்பிலுள்ள, எந்தப் பாறையும் உருகாது இருக்க முடியாது. மேலும், கோள வகத்தினுள் யுரேனியம், தோரியம் போன்ற அணுத்தனிமங்கள் ஓயாது சிதைவடைவதால் வெப்பநிலை உயர்வாகவுமுள்ளது. ஆனால் புவியினுட்பகுதி முழுவதும் உருகிய நிலையில் இல்லாதிருப்பதற்குக் காரணம், அதன் உயர்வான அமுக்கமாகும். உயர் அமுக்கம் காரணமாகப் புவியினுட்புறப் பருப்பொருட்களின் உருகுநிலை உயர்ந்திருக்கின்றது.
a Jó 7

Page 14
பூமியின் அமைப்பையும், இயல்புகளையும், அடர்த்தி வேறுபாடுகளையும் ஆதாரங்களைக் கொண்டு நோக்கும்போது, கடல்நீரில் பனிக்கட்டித் திணிவு மிதப்பதுபோல புவியோடு கீழ் மான்ரில் படையில் மிதக்கின்றதா என்ற கேள்வி இந் நிலையில் எழுகின்றது. புவியோடு தாழ்வதையும் உயர்வதையும் அவதானித்த புவிச்சரிதவியலறிஞர்கள் சமநிலைத் தன்மைக்கோட்பாடு (Isotasy) ஒன்றினை அறிவித்தனர்.
பனிக்கட்டியாற்றுக் காலத்தில் ஸ்கண்டிநேவியாவில் பனிக்கட்டிப் படலம் கனிந்திருந்தது. இப்பனிக் கட்டிப் படலத்தின் பாரத்தினால் ஸ்கண்டிநேவியா சில நூறு மீற்றர்கள் அமிழ்ந்திருந்தது. பனிக்கட்டியாற்றுக்கால இறுதியிலிருந்து இன்றுவரை ஸ்கண்டிநேவியா ஒரு நூற்றாண்டிற்கு ஒரு மீற்றர் வீதம் உயர்ந்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டித் திணிவின் பாரம் புவியோட்டைத் தாழ்த்தியிருக்கின்றது. பொத்தீனியாக் குடாவின் வடபகுதியில் கரையானது ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் அரை மீற்றர் வரை உயர்ந்து வருகின்றது. எனவே புவியோடானது தாழவும் உயரவும் கூடிய விதமான பாகுத் தன்மை வாய்ந்த, ஒரு படையில் மிதக்கின்றது என்ற முடிவிற்கு வந்துள்ளனர். இதனை முதன் முதல் அவதானித்து ஒரு கருத்தினை டொற்றன் என்ற அறிஞர் வெளியிட்டார்.
புவியின் மேற்பரப்பு உறுப்புகளுக்கும் புவியின்கீழ்ப்படைக்கும் இடையில்
ஒரு நெருங்கிய தொடர்புண்டு என டொற்றன் உணர்ந்தார். அதனை விளக்கச்
LAK.h - 0 asgsåL. sasa
ஒன்றாக இருந்த பஞ்சியா என்ற ஆதிக்கண்டம் காலகதியில் உடைவுற்று கண்ட நகர்வுக்குள்ளாகி இன்றைய வடிவத்தினைப் பெற்றதென உவெக்னர் முதலான அறிஞர்கள் நிருபித்துள்ளனர். (பட ஆதாரம் - அமேரிக்க பெற்றோலிய நிறுவனம் 1979)
8 கந்தையா குணராசா
 
 
 

சமநிலைத்தன்மை என்ற வார்த்தையை முதன் முதல் பயன்படுத்தினார். நீரில் பனிக்கட்டியானது எவ்வாறு தன் பரிமாணத்தில் ஒரு பகுதியை நீரினுள் புதைத்துக்கொண்டு, மறு பகுதியை நீரின்மேல் தெரிய மிதக்கின்றதோ அவ்வாறே புவியோடும் ஒரு சமநிலைத்தன்மைக்கு இணங்கப் பிளாஸ்ரிக்’ குழம்புத்தன்மை வாய்ந்த மேல் மான்ரில் படையில் மிதக்கின்றது என டொற்றன் கூறினார். புவியோட்டின் மேற்பகுதி உறுப்புக்கள் (மலைத் தொடர்கள்). தாழ் நிலங்கள், மேட்டு நிலங்கள். தமது சமநிலைத் தன்மையைப் பேணுவதற்காக உயரவும் தாழவும் வசதியாகக் கீழ்ப்படை இறுகாத பாகுத்தன்மையானதாகக் காணப்படுகிறது. புவியோட்டின் மேல் உறுப்புக்கள் வானிலையாலழிதலிற்கு உட்படுவதால், அரிக்கப்படும் பகுதியில் பாரம் குறைவதும், படியவிடப்படும் பகுதியில் பாரம் அதிகரிப்பதும் இயல்பு பாரம் குறைந்த பகுதி மான்ரில் படையில் மிதக்கின்றது. அவ்வாறு மிதக்கும் போது ஒரு சமநிலையைப் பேணுவதற்காக ஒரு பகுதியைக் கீழே பாகுத்தன்மை வாய்ந்த படையில் புதைத்து, ஒரு பகுதியை மேற்காட்டியவாறாகப் புவியோடு மிதக்கின்றது. எனவே மிதக்கின்ற புவியோடு நகரக் கூடியது என்பது புலனாகின்றது.
ፊፋነffበበዕ'

Page 15
கண்டங்கள்நகர்ந்தன
ஜேர்மனிய வளிமண்டலவியல் அறிஞரான அல்பிரெட் உவெக்னர், 1912ம் ஆண்டு வெளியிட்ட ‘கண்ட நகர்வுக் கொள்ளை’ சமுத்திரங்களினதும் கண்டங்களினதும் தோற்றத்தை விளக்கும் சிறந்த ஒரு கருதுகோள் ஆகும். உவெக்னரின் கருத்துப்படி, இன்று பூமியில் கண்டங்கள் பரம்பியுள்ள முறையில் ஆதியில் கண்டங்கள் அமைந்திருக்கவில்லை என்பதாகும். இன்றைய கண்டங்கள் யாவும் கார்போனிபரஸ் (Carboniferous) காலத்தில் ஒரே கண்டத் திணிவாக இருந்தன. அக்கண்டத் திணிவைப் பஞ்சியா (Pangaea) என்பர். இக்கண்டத்தின் வடபாகம் அங்காரலாந்து என்றும், தென்பாகம் கொண்டுவானாலாந்து என்றும் அழைக்கப்பட்டன. இப்பஞ்சியாக் கண்டத்திணிவு இயோசீன் (Eocene) காலத்தில் தம்மிடம் விட்டு நகர்ந்தது. அமெரிக்காக் கண்டங்கள் மேற்காக நகர்ந்தன. அத்திலாந்திக்கில் ஏற்பட்ட இடைவெளியைச் சீமா பாய்ந்து நிரப்பியது. அந்தாட்டிக்கா தெற்கே நகர்ந்து தென் முனைவில் நிலைத்தது. அவுஸ்திரேலியா பசுபிக் பக்கமாக நகர்ந்தது. இவ்வாறு பஞ்சியா கண்டம் தன் இடம்விட்டு நகர்ந்து இன்றைய இடங்களில் நிலைத்தன என உவெக்னர் கருத்துத் தெரிவித்தார். (வர்ணப்படம் : 3ஐப் பார்க்க
புவியின் மேற்பரப்பில் கண்டங்கள் நகர்ந்தன என்ற கருத்து புதிதானதன்று 1858 இல் அன்ரோனியோ சினைடர் என்பவர் கண்ட நகர்வு குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். இவருக்கு முதல் 1620 இல், பிரான்சிஸ் பாகொன் என்பவர், தென்னமெரிக்காவினதும் மேற்கு ஆபிரிக்காவினதும் வெளியுருவம் ஒன்றுடன் ஒன்று இணைவானது என்று தெரிவித்த ஒரு கருத்துள்ளது. 1910 இல் எஃபி. பிரெயிலர் என்ற அமெரிக்க அறிஞர், உலகின் பெரும் மலைத்தொடர்கள் பக்க அமுக்கத்தால் தோன்றின என்றார். எனினும், கண்ட நகர்வுக் கொள்கை ஒன்றினை உருவாக்கிய பெருமை ஜேர்மனிய அறிஞரான அல்பிரெட் உவெக்னரையே சேரும்.
உவெக்னரின் கண்ட நகர்வுக் கொள்கை சுயெஸ் என்பாரின் கருத்துக்களை ஓரளவு ஆதாரமாகக் கொண்டவை. அவுஸ்திரேலியப் புவிச்சரிதவியலாளரான சுயெஸ் ஆபிரிக்காவிலும் இந்தியாவிலும் ஒரே வகையான உயிர்ச் சுவடுகள் காணப்படுவதற்குக்
o கந்தையா குனராசா
 

காரணம் முன்னர் இவ்விரு பகுதிகளும் கொண்டுவானா என்ற நிலத் திணிவின் பகுதிகளாக இருந்தமையே எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். அத்துடன் அடர்த்தி குறைந்த சீமாப்படையில் (29) அடர்த்தி குறைந்த சீயல் படை (2.05) கடல் நீரில் பனிக்கட்டி மிதப்பது போல, ஒரு சமநிலையைப் பேணிக்கொண்டு மிதப்பதாகவும். அதனால் புவியோடு சீமாப்படையில் நகரக் கூடியது என்ற கருத்துக்கள் நிலவின. இவற்றை உவெக்னர் கருத்திற்கொண்டு ‘பெருக்குவிசை (Tidalforce) காரணமாகப் பஞ்சியாக் கண்டம் நகர்ந்தது என்றார்.
உவெக்னரின் க்ண்டநகர்வுப் படிமுறைகள் வருமாறு: 1. பலியோசோக்யுகத்தின் தொடக்கத்தில் எல்லாக் கண்டங்களும் ஒன்றாகச்
சேர்ந்து, இணைந்து ஒரு கண்டமாக இருந்தன, அதனைப் பஞ்சியா எனலாம்.
2. பஞ்சியாக் கண்டத்தில்நிலத்திணிவுகள் இரு குழுக்களாக இருந்தன. வட திணிவில் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய கண்டங்களும், தென் திணிவில் அவுஸ்திரேலியா, அந்தாட்டிக்கா, தீபகற்ப இந்தியா ஆகியனவுமிருந்தன. வடபாகத்தை அங்காராலாந்து என்றும், லோறேசியா என்றும் அழைத்தார். தென்பாகத்தைக் கொண்டுவானாலாந்து என்றும் அழைத்தனர். கொண்டுவானாலாந்து தென் முனைவுக்கு அருகில் அமைந்திருந்தது. அப்போது தென்னாபிரிக்கக் கரை தென்முனைவுக்கு மிக அருகில் இருந்தது. லோறேசியாவுக்கும் கொண்டு வானாலாந்துக்குமிடையில் தெத்தீஸ் (Tethys) என்றொரு நீர்ப்பரப்பிருந்தது.
3. மாறுபட்ட புவியீர்ப்பு விசையினால் பஞ்சியாக்கண்டம் உடைந்து பல துண்டுகளாகி, வெவ்வேறு திசைகளுக்கு இடம் பெயர்ந்து சென்றது. அவற்றில் சில பகுதிகள் கடலில் மூழ்கிய பின்பு, எஞ்சியிருந்த இடம்பெயர்ந்த நிலங்கள் தான் இன்றைய கண்டங்களாக விளங்குகின்றன.
4. உடைந்த பஞ்சியாவிலிருந்த வட தென் அமெரிக்காக்கள் மேற்குப் பக்கமாக நகர்ந்தன. தென் கிழக்கு ஆபிரிக்காவுடன் இணைந்திருந்த அவுஸ்திரேலியா வட கிழக்குத் திசை நோக்கியும் தீபக்ற்ப, இந்தியா வடதிசை நோக்கியும் நகர்ந்தன.
5. இயோசீன் காலத்தில் கொண்டுவானா நிலம் ஆரை வடிவில் உடைந்து பிரிந்ததால் தென் கண்டங்கள் முக்கோண வடிவில் காணப்படுகின்றன. உடைந்த கண்டங்கள் தென் முனைவிலிருந்து மத்திய கோட்டுப்பக்கமாக நகர, அந்தாட்டிக்கா மட்டும் தென் முனைவிலேயே நிலைத்து விட்டது.
உவெக்னர் தனது கருத்துக்களை நிலை நிறுத்தப் பல்வேறு ஆதாரங்களைக் காட்டினார். ‘இன்றைய கண்டங்கள் யாவும் ஒன்றாக ஒரே கண்டமாக இருந்தன’ என்பதனை நிலை நாட்டுவதற்குரிய சாட்சியங்களாக’ அந்த ஆதாரங்கள் இருக்கின்றன. அவை
ሐነዕIfftዕ t

Page 16
1. புவிப் பெளதிகவியல் (Geophysical) ஆதாரங்கள்
சீயல், சீமா, கோளவகம் என்பவற்றின் அடர்த்தி வேறுபாடுகளையும், கடின, பாகு, திரவ வேறுபாடுகளையும் மனதில் கொண்டு கண்டம் நகர்ந்தது என்றார்.
2. இடவிளக்கவியல் (Topographical) ஆதாரங்கள்
இன்றைய கண்டங்களை ஒன்றாக இணைத்துப் பழைய பஞ்சியாகக் கண்டத்தை உருவாக்கி விடலாம் என்றார். இன்றைய கண்டங்களின் விளிம்புகள் ஒன்றோடு ஒன்று பொருந்தக் கூடியன என்றார். உதாரணமாக, அமெரிக்காக்களை ஐரோ - ஆபிரிக்காவுடன் இணைக்கும் போது, மெச்சிக்கோக் குடாவினுள் ஆபிரிக்கா பொருந்த, தென்னமெரிக்கா கினி வளைகுடாவினினுள் பொருந்துகிறது என்றார்.
3. புவிச்சரிதவியல் (Geological) ஆதாரங்கள்
உலகில் காணப்படும் இளம் மடிப்பு மலைகள் கண்ட நகர்வினால் தோன்றின. உதாரணமாக அமெரிக்காக்கள் மேற்குப் புறமாக நகர்ந்ததால் பசுபிக் அடையல்கள் மடிப்புற்று றொக்கி - அந்தீஸ் மலைத்தொடர் உருவானது. மேலும், ஒரு கண்டத்தில் காணப்படுகின்ற ஒரே வகையான பாறை, மறு கண்டத்திலும் காணப்படுகின்றது. SCJiaSc) காணப்படுகின்ற பளிங்குருப்பாறைப் பரிசை நிலம், ஆபிரிக்காவிலும் காணப்படுகின்றது.
4. உயிர்ச்சுவடியில் (Palaentological) ஆதாரங்கள்
ஒரு கண்டத்தில் இன்று சிறப்பாகக் காணப்படுகின்ற அல்லது ஒரு காலத்தில் காணப்பட்ட விலங்குகள், தாவரங்கள் என்பனவற்றின் உயிர்ச் சுவடுகள் இன்று இன்னொரு கண்டத்திலும் காணப்படுகின்றன. கண்டங்களைப் பிரிக்கின்ற பரந்த சமுத்திரத்தை அவை எவ்வாறு கடந்திருக்க முடியும்?
5. காலநிலையியல் (Climatological) ஆதாரங்கள்
அயனப் பகுதிகள் யாவும் ஒன்றாகச் சேர்ந்திருந்தமையால் தான் நிலக்கரிப் படிவு ஏற்படுவதற்குச் சாதகமாக இருந்தது என்றார். புவிச்சரித காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றங்களை இவரது ஆதாரங்கள் நிரூபித்தன.
உவெக்னரின் கண்ட நகர்வுக் கொள்கை பல அறிஞர்களின் கண்டனங்களை ஆரம்பத்தில் பெற்றது. அவருடைய முக்கிய தவறு பல சான்றுகளைத் தனது புதிய கொள்கையை ஒப்புக் கொள்வதற்குத் தொகுத்தளித்திருப்பதுடன் தன்னுடைய சிறப்பான அறிவியல் பிரிவிலிருந்து மற்றப் பிரிவுகளுக்குச் சென்றதாகும் என்பர். ‘அவர் தன் கொள்கையை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் விளக்காமல் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் தமக்குச் சாதகமற்றதாகக் காணப்படும் கருத்துக்களை விட்டுவிட்டார்’ எனக் கண்டித்தனர்.
உவெக்னரின் கண்டநகர்வுக் கொள்கைகள் பல அறிஞர்களாலும் ஆரம்பத்தில் கண்டிக்கப்பட்டன. ஆனால் இன்று ‘கண்டங்கள் நகர்ந்தன’ என்பதை ஏற்றுக்
2 கந்தையா குணராசா

கொள்கின்றனர். ஆனால் உவெக்னர் தெரிவித்த பெருக்கு விசையால் கண்டங்கள் நகர இடமில்லை என்றனர். எனினும் அண்மைய ஆராய்வுகள் உவெக்னரின் கண்ட நகர்வுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. அவ்வகையில் மூன்று கருதுகோள்கள் குறிப்பிடத்தக்கன.
960)6) JTG) 60T.
1.
மேற்காவுகை ஒட்டக் கொள்கை - உருகிய நிலையில் காணப்படும் கோளவகத்தினுள், தோன்றும் கிளர்மின் வீச்சால் ஏற்படும் மேற்காவுகை ஓட்டங்கள், புவியோட்டைத் தாக்கி நகர்த்தி இருக்கலாம் என்கின்றனர். மேற்காவுகை ஓட்டங்கள் புவியோட்டைத் தாக்கும்போது சமுத்திரப் பகுதிகளில் ஒன்றிலிருந்து ஒன்று பிரிவனவாகவும், கண்டப் பகுதிகளில் ஒன்றையொன்று கீழ்நோக்கி இறங்குவனவாயுமுள்ளன. அதனால் கண்டங்கள் நகர்ந்திருக்கலாம்.
புவிகாந்தவியக் கொள்கை - புவியினுட் பகுதி காந்தத் தன்மையைத் தோற்றுவிக்கக் கூடிய பொருட்களைக் கொண்டிருக்கின்றது. கோளவகத்தினுள் ஏற்படும் மின் அலைகள் புவியின் காந்தவயலை ஆக்குகின்றன. அவை கண்டங்களை நகரவைத்திருக்கக் கூடியன என்பது அண்மைக் கருத்துக்களில் ஒன்று.
கவசத் தகட்டுக் கொள்கை - பிரித்தானியாவைச் சேர்ந்த கீஸ், மத்யூஸ் ஆகிய இரு அறிஞர்கள் 1963 இல் வெளியிட்ட கருத்துக்களின் படி புவியோடு ஆறு கவசத் தகடுகளின்’ (Plates) இணைப்பால் உருவாகியுள்ளதென்றும், அவை நகரக் கூடியனவென்றும் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்.

Page 17
புதித்தகட்டோடுகள்
ருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் புவியின் உள்ளமைப்பு, சமுத்திர நிலம் என்பன குறித்து நிகழ்ந்த விரிவான ஆய்வுகளின் பயனாகத் தகட்டோட்டுக் கொள்கை’(Plate Tectonics) எனப்படும். புதியதொரு சிந்தனை புவியின் அமைப்புக்குறித்து உருவாகியது. பல தோல் துண்டுகளின் இணைப்பால் உருவாகிய உதைப்பந்து ஒன்றினைப்போல புவியோடு எட்டு பெரும் கவசத் தகடுகளாலும், 12 சிறிய கவசத் தகடுகளாலும் உருவாக்கப்பட்டிருக்கின்றது. புவி விஞ்ஞானத்தின் ஒரு புரட்சியாகக் கருதப்படுகின்ற தகட்டோட்டுக் கொள்கையைத் தக்கவாறு கண்டறிந்து வெளியிட்ட பெருமை பிறிஸ்ரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மத்தியூஸ் ஆகிய இரு பெருமறிஞர்களைச் சாரும்.
புவியின் பிரதான எட்டுக் கவசத் தகடுகள் வருமாறு (படம் : 2) 41 வட அமெரிக்கக் கவசத் தகடு 42 தென் அமெரிக்கக் கவசத் தகடு 43 ஐரோ - ஆசிய கவசத் தகடு 44 ஆபிரிக்கக் கவசத் தகடு 45 இந்தியக் கவசத் தகடு 4:6 அவுஸ்திரேலியக் கவசத் தகடு 47 பசுபிக் கவசத் தகடு 4:8 அந்தாட்டிக் கவசத் தகடு
ஏனைய சில சிறிய கவசத்தகடுகள் வருமாறு : 4:9 bTGvGST g535(6) (Nazca Plate) 4:10 G5s Gls, Taio 55G (Cocos Plate) 411 கரீபியன் தகடு 412 பிலிப்பைன் தகடு 4:13 பர்மியன் தகடு 4:14 GivGeoffL lauff SSG (Scotia Plate)
4 கந்தையா குனராசா
 

4:15 அராபியன் தகடு 4:16 யுனான்டி பியுகா தகடு 417 ஈரானியன் தகடு
1960 களின் ஆரம்ப காலத்தில் நகரும் கண்டங்கள் நகரும் கடல் தளம் ஆகிய இரு கோட்பாடுகள் புவிச்சரிதவியலாளரின் முக்கிய வாதப்பிரதிவாதங்களுக்குட்பட்ட கருத்துக்களாக விளங்கின. 1960 இன் பின்னர் இவ்விரு கருத்துக்களும் ஒருங்கிணைக்கப்பட்டு புவிக் கவசத் தகட்டுக்கொள்கையாகப் பரிணமித்தது.
புவியின் மேற்பரப்பிலிருந்து ஏறத்தாழ 125 கி. மீ. வரையிலான தடிப்பினைக் கொண்ட கற்கோளத்தை (Lithosphere) கவசத்தகட்டின் தடிப்பாகக் கொள்ளலாம். இதில் புவியோடும் மேல் மான்ரில் படையும் அமையும். இதன் கண்டப்பகுதியைக் கண்ட ஓடு என்றும் சமுத்திரப் பகுதியைச் சமுத்திர ஓடு என்றும் அழைப்பர். இக் கற்கோளத்தின் கீழ், மான்ரில் படையின் நடுப்படையான அஸ்தெனோஸ்பயர் (Asthenosphere) எனப்படும் மென்பாறைக் கோளம் ஒன்றுள்ளது. இதில் கவசத் தகடுகள் வழுக்கு நிலையில் படிந்துள்ளன என அறிஞர் கண்டறிந்துள்ளனர். பசுபிக் தகடு சமுத்திர ஓட்டை மட்டும் உள்ளடக்கியுள்ளது.அமெரிக்கத் தகடுகளில் கண்ட ஒட்டையும் சமுத்திர ஓட்டையும் கொண்டுள்ளன. ஆபிரிக்கக் கவசத் தகடும், இந்தியக் கவசத்தகடும் அவ்வாறே.
புவித் தகட்டோடுகளின் எல்லைகளாக அல்லது, விளிம்புகளாகப் பின் வரும் மூன்று நிலவுருவங்கள் விளங்குகின்றன.
శ్లోని 30°
o
60
g"
சுனாமி 15

Page 18
(அ) சமுத்திர மத்திய மலைத்தொடர்கள் கடற் கீழ் முகடுகள் (submarine Ridge) (*4) filauğ360'ıp Gucu Uği Fett (Fault Zones) (g) Lillqil Lochaiah (Folded Mountains)
அமெரிக்கக் கவசத்தகடுகள் மேற்கு அத்திலாந்திக் சமுத்திர ஓட்டையும் வடதென் அமெரிக்காக்களையும் உள்ளடக்கியுள்ளது. இத் தகட்டின் கிழக்கு எல்லையாக அத்திலாந்திக் சமுத்திர "S" வடிவ மலைத் தொடரும், மேற்கு எல்லையாக றொக்கி - அந்தீஸ் மலைத் தொடரும் அமைந்துள்ளன. பசுபிக் கவசத்தகடு முற்று முழுதாகச் சமுத்திரத்தை மட்டும் உள்ளடக்கிய தகடாகும். அதன் கிழக்கு எல்லையாக றொக்கி - அந்தீஸ் மலைத் தொடரும் மேற்கு எல்லையாக வில் வளைவிலமைந்த
எரிமலைத் தீவுகளும், கடற் கீழ் முகடுகள் கொண்ட நிலக்குறை வலயங்களும்
காணப்படுகின்றன. அந்தாட்டிக் கவசத்தகடு, இந்து சமுத்திரத்தின் தலைகீழான " வடிவ மலைத் தொடருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இந்தியக் கவசத்தகட்டின் வடவெல்லையாக அல்ப்ஸ் - இமயமலை மடிப்பு மலைத்தொகுதி காணப்படுகின்றது. சிறிய கலசத்தகடுகளின் ஒரு பக்க எல்லையாக நிலக்குறைகள் அமைந்துள்ளன. உதாரணமாக அராபியக் கவசத்தகட்டின் கிழக்கு எல்லையாகச் செங்கடல் - ஏடன் விரிகுடாப் பிளவுப் பள்ளத்தாக்கு விளங்குகின்றது. நாஸ்கா கவசத் தகட்டின் கிழக்கு எல்லையாகப் பேரு - சில்லியின் அகழி விளங்குகின்றது.
புவியோட்டையும் மேல் மான்ரில் படையையும் கொண்ட பகுதி மேற்கோளமாகும். புவிக் கவசத்தகடுகளில் கண்ட ஒட்டின் கீழுள்ள கற்கோளத்தின் தடிப்பு 125 கி.மீ வரையினதாகவும் சமுத்திர ஓட்டின் கீழுள்ள கற்கோளத்தின் தடிப்பு 75 கி. மீ வரையினதாகவும் உள்ளன. படம் 4A இந்தத் திடமான கற்கோளத்தின் கீழுள்ளது. அஸ்தனோஸ்யர் எனப்படும் "பிளாஸ்ரிக் பாகுத்தன்மை வாய்ந்த படையாகும். இது ஏறத்தாழ 100 கி.மீ தடிப்பானது. இங்கு வெப்பநிலையும் அமுக்கமும் அதிகமாக விருக்கின்றது. இதில் கற்கோளக் கவசத்தகடுகள் வழுக்கி நகர்கின்றன. அஸ்தோனோஸ்யருக்குக் கீழே சற்று இறுகிய மான்ரில் படை காணப்படுகிறது.
புவிக் கவசத் தகடுகள் நகருமியல்பின என்பதனைப் புவிச்சரிதவியலாளர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
புவிக்கசவத் தகடுகள் நகரும் இயல்பின. இத்தகைய நகர்வு மூன்று விதங்களில் நிகழும். அவை படம் 4A
1. விலகும் கவசத் தகடுகள்
. ஒருங்கும் கவசத் தகடுகள் , அமிழும் கவசத் தகடுகள்
. விலகும் கவசத்தகடுகள் (Divergent Plates)
கவசத்தகடுகள் ஒன்றிலிருந்து ஒன்று எதிரெதிர் திசைகளில் விலகும் இயல்பின. அவ்வாறு விலகும் பகுதிகளில் ஏற்படும் இடைவெளியூடாக இடைக்
I di கந்தையா குனராசா

படம்-01. புவியின் உள்ளமைப்பு
புவியோடு ப் தொட்டு 50 கி.மீ தடிப்பானது. கற்கோளம் II கி.மீ தடிப்பானது. இவை 2900 கி.மீ தடிப்புக் கொண்ட பாகுத்தன்மை வாய்ந்த மான்ரில் படையில் மிதக்கின்றன. மான்ரில் படையின் கீழ் கோளவகம் அமைந்துள்ளது. இக்கோளாவகம் 37; கி.மீ ஆரங்கொண்டது. வெளிக்கோளவகம் உருகிய பாறைக்குழம்பாகவும், உட்கோனவகம் திடமானதாயும் காணப்படுகின்றது.

Page 19
:
Østfåå��}
!\, 『km
- )
opis, sitfussi sae,}கவசத்தகரு
:
sae.saeðır, sae;
க்வசத்தகரு
·| ----ło Ŵprolir faeW ------------
----
øárosos, „T
|)*^+ isi(~~~~---- __] .Fir |- |-^ ®sjøisiq##1 holoģijā), |-W |-|-||-!| o * F----BD。135°15{: *135°ƆƆo』5 Uso
上巳) Gufu) 1)上原卡卡*匈部劑祖腳腓即闇s* n* LL* 唱粵目已nn曲國TDLLiguLO3학m환 1**劑,噴*鹽LmL *mā出己上uL白身m皆 21F5月5ü思u階雷司* upön*mm軸 an圈L=###| ?!!!--To) +īLLửulsosissaei. [51 읽m南昌世高世TR國記m활mm& 불확lt-Lui-Lit
படம்-02 புவியின் கவசந்தகடுகள்
***T후 현행법원후 후學正 昌義高等學的可행m (學的TTim : 史的日記事 王子高等學的ua 學的 內史官民國長音義記 : 1%)
 
 
 
 
 
 
 
 
 

*251 역sigm환 m&m學高ra 후m** . "*n)** aúm *T) )n) 阳上),T)현學院트國 || . *尼gn咀嚼n與司屬甘m*
*W학력 그學性的 Rm - a mm
!s.- ----|×sı | –suraessssssssso的•(~~~~ =
「『r、 | - - ---- ,|

Page 20
விானது
iiiiiiiiiiiii si fir
a
காதுமாதங்துங்ாது
ஆதித்தது 會
பங்கர
படம் = 04ஃ புவிக்கவசந்தகடுகளின் நடந்தைகள் புவிக்கவசந்தகடுகள் ஒன்றினை ஒன்றினை நோக்கி ஒருங்கி அமுக்கும் தன்மையான, அதே போஸ் ஒன்றிலிருந்து ஒன்று விலகி பிளவுப்புள்ளத்தாக்குகளை உருவாக்கும் தன்மையன. சமுத்திர தகடும் கண்டத்தகடும் ஒன்றினை ஒன்று நோக்கி ஒருங்கும் பொழுது-அடர்த்தி கூடிய சமுத்திரத் தகடு கண்டத்தகட்டின் கீழ் அமிழ்கிறது. இவ்வாறு மான்ரில் படையில் அமிழும் பொழுது, அங்கு அது மோதுகின்ற கடைசி எல்லையாக 7ே0கி.மீ தளம் அமைந்திருக்கிறது. அவ்வாறான தளத்தில் மோதும் பொழுது அதனால் ஏற்படும் குலுக்கம் புவிநடுக்கமாகி அபரிவிதமான விசையைத் தோற்றுவிக்கின்றது. மான்ரில் படையினுள் அமிழும் சமுத்திரத்தகடு மான்ரிவின் உயர்வெப்ப நிலையினால் படிப்படியாகக் கரைந்து மக்மா பாறைக்குழம்பாக மாறிவிடுகின்றது. மேலும் இவ்வாறு அமிழ்ந்த சமுத்திரத்தகடு கரைந்து கரைந்து மோதும் பொழுது ஏற்படும் குலுக்கம் தொடரும் புவிநடுக்கங்களாக மாறுகின்றது. மான்ரில் படையில் கரையும் சமுத்திரத் தகட்டினால் உருவாகும் பாறைக்குழம்பு மிகப்படும்போழுது அவை எரிமலைக்குழம் பாக புவியோட்டைத் துளைத்துக் கொண்டு பீறிட்டுப் பாய்கின்றன. கவசத்தகடுகள் விலகும் வலயங்களிலும் புவிநடுக்கம் ஏற்படும். அவை அமிழும் வலயங்களிலும் புவிநடுக்கம் ஏற்படும்.
(பட ஆதாரம் - சாள்ஸ் சி.பிளம்மறும் டேவிட் மக்கேரியும் 1979)
L.Li - O LEB TLIFF III-SIJI
||
 
 
 
 
 
 
 
 
 
 
 

IỆs I -
||||||||
------------
-------T-1
- ヨEシJコ
Trosso fosfits sort soos@soh są įgioso
불평al1 ***n軍그활 표m - m「irl
-로t 1 -------
sẽrılısı sorps
usael T
- 1표
크다.
- ام = {
HHH雷|HHI疇 *IFFH*H聖*H
\ rosso) | | +1 |
||
|
s.

Page 21
Issıshısae, *郭封Is aes, ----saeif , ılık !!!!!!!!
!o! ¡¡¡¡¡¡¡¡¡¡ Ігнініннішні
La si - så isos issä, osoa, LL KKKKT KLL TYYT YYYK LT KLLTKK T KTK TK LT0LK KKTTK LT0T LLLLLLLLYYKK (1) F***현% 의학u드Bui u현的 原M&學T LP&## (ga正學的說TB ufuT와 親Liu guT년LF的n的TLUB 활Tau guTCPLEspgmulut amLu토활또 g軍政府事mm확: இவை செல்கின்ற பாதையில் குறிக்கிடுகின்ற பருப்பொருட்களை கிடையாகவும் முன் பின்னாகவும் அசைக்கின்றது. இந்த அலைகள் பூமியில் 103 பாகைக்கும் 142 பாகைக்கும் இடையில் காணப்படுவதில்லை. அது நிழல் வலயமாக இருக்கும்.- (2) S- 地主5ppy aatuBur 별sosa 學生田民, 學-i guTBlt學的형RT urt Bia 學官BTA&部 Gif활&mi u學的 原生Sai목am Rum확m 활Tau smwaT의 3목TTal목部 &國 內史원 &miB&#* g中學avT랜 과학&mi &L그램mT國 國師행 &MR&D 105 드T的高官府民學院 正官LT島 正言劇的mmuBa(道學的ps: 홍문학 ·5공항잃 법T와 uu읽mü 드&ui unsa현uja: g렬學的對But gu크國民軍司영크 院都部T목ali 85& 활PTERMIf EL& E&D&Mgun확달 中和aa유효라리크유용액it. (3) L-அலை இது மேற்பரப்பவையாகும்.
 
 
 
 

量를 பேயலைகளின் கரங்களுக்கு எதுவும் எதிர்நிற்கவில்லை - இந்தோனேசியா ராப்டர்)
படம் = 10 கரையை நோக்கி மனித உயிர்களைக் காவு நோள்ள பாய்ந்து வாம் ஆழிப் பேரலை - இந்தோனேசியா ராப்டர்)

Page 22
உயர்ந்த கோபுரங்களையும் குறளாக்கி போங்கி எழும் இராட்சத அலைகள்
குமுறி வரும் கடரைக்கனக் குடைபிடித்தா தடுக்கமுடியும் ராப்டர்
 
 

து
தாக்கி அப்த
唯 No | *

Page 23
சுனாமியின்
சேப்ம்மதிப் படம்)
தென்னையைத் தொட எழும்
சுனாமி
Ti
 
 

காமியின் வேட்டைக்குப் புவியானோர்

Page 24
சுனாமி விதைந்த சடங்கள்
』開
 

மீளத் தூக்கத்தில் உறங்கும் LITT GJIT EGT
யாரைத் தேடுகிறது ?
மனித வேட்டையில் வீழ்ந்த சடலங்கள்

Page 25
பெற்ற வயிறுகளைப் பற்றி எரிய வைத்த துயரம்
 


Page 26
كان يمكن أن
முல்லைத்தீவில் தகர்ந்து உடைந்த கட்டிடச் சிதைவுகள்
_ - வல்வெட்டித்துறையில் சிதைந்து கிடக்கும் தொழில் வளங்களிலில் ஒன்றின் முன் கனேடிய எம்.பி ஜிம் ஹரியானிஸ்சும் யாழ்ப்பான எம்பி கஜேந்திரனும்
 
 

3.
கோளத்தின் உருகிய பருப்பொருட்கள் வெளிப்பாய்கின்றன. அவ்வாறு வெளிப்பாய்ந்து இறுகியவையே இன்று சமுத்திரங்களின் மத்தியில் காணப்படும் மலைத்தொடர்களாகும். உதாரணமாக அமெரிக்கக் கவசத்தகடும் ஐரோ- ஆசிய, ஆபிரிக்கக் கவசத்தகடுகளும் ஒன்றிலிருந்தொன்று விலகியதால் தான். அத்திலாந்திக் சமுத்திர "S" வடிவ மலைத்தொடர் தோன்றியது. இவ்வாறு வெளிக்கசிந்த எரிமலைக் குழம்பின் விளைவாகவே ஐஸ்லாந்து, அசோறஸ், கலாபாகோத் தீவுகள் என்பன தோன்றின.
சமுத்திர மத்திய மலைத் தொடர்களின் அடிவாரங்களில் சுழியோடிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சமுத்திர நிலத்தில் எரிமலைக்குழம்பு பாய்ந்து படிந்திருப்பதை அறியத் தந்துள்ளன. சமுத்திர மலைத் தொடர்களில் ஆங்காங்கு காணப்படும் பிளவுகள் இனி மேலும் எரிமலைக் குழம்புத்தள்ளல் ஏற்பட இடமுண்டு என்பதை நிரூபிக்கின்றன. எரிமலைக்குழம்புப் படிவின் மீது ஆழ்கடல் அடையல்கள் படிந்துள்ளன.
ability, in Jahi Ji, ), JG 1), air (Convergent Plates) கவசத்தகடுகள் நேர்நேர் திசையிலிருந்து ஒன்றினை நோக்தி ஒன்று நகர்ந்து மோதி ஒருங்கும் இயல்பின. அவ்வாறு ஒருங்கும் போது இரு செயற்பாடுகள் நிகழும் அவை,
1 கவசத்தகடுகள் கீழ் நோக்கி மடிப்புறுதல். 2 அவ்வாறு மடிப்புறுவதால் அவற்றின் மீது படிந்திருந்த அடையல்கள் மடிப்பு
மலைகளாதல். றொக்கி அந்தீஸ் மலைத்தொடர் அல்பஸ் - இமயமலைத் தொகுதி என்பன இவ்வாறு கவசத்தகடுகள் ஒருங்கியதன் விளைவாக உருவானவை என விளக்குவாருமுள்ளனர்.
9||figin 561 gig, J,63, gir (Subduction Plates) கவசத்தகடுகள் எதிர் எதிர்த் திசையில் ஒருங்கும்போது ஒன்றுடன் ஒன்று மோதி மேல் உயரலாம். அல்லது கீழ் அமிழலாம். அவ்வாறு நிகழும்போது புவிககற்கோளத்தின் கவசத்தகட்டின்) ஒரு பகுதி இடையோட்டினால் நுகர்வுறுதலுக்குள்ளாகிறது. பொதுவாகக் கண்டத்தகடும் சமுத்திரத் தகடும் ஒருங்கும்போது சமுத்திரத்தகடு அடர்த்தி கூடியதாக 3.0 gm/cm விளங்குவதால் அடர்த்தி குறைந்த கண்டத்தகட்டின் 25 ஆm/cm கீழ் அமிழ்கிறது.
பசுபிக் சமுத்திரத்தோடு அமெரிக்கக் கண்டக் கவசத்தகட்டின் கீழ்
இறங்கியுள்ளது. ஐரோ - ஆசியத்தகடு தெற்கில் அல்ப்பைன் - இமயமலைத் தொடர்களுக்குக் கீழ் புதைந்துள்ளது (படம் 4Aஐப் பார்க்க இந்தியத் தகடு நியூசிலாந்தையடுத்துப் பசுபிக் தகட்டின் கீழ் அமிழ்கிறது. கீழ் அமிழ்தல் இரு கண்டங்களின் நெருக்குதலால் ஏற்படுமாயின் கண்ட விளிம்புகளில் மலைத்தொடர்கள்
சாயி

Page 27
உருவாகும். உதாரணமாக ஐரோ- ஆசியத் தகடும், ஆபிரிக்க - இந்தியக் கவசத்தகடுகளும் மோதியதால், ஐரோ - ஆசியத்தகடு கீழ் அமிழ, அல்ப்ஸ் - இமயமலைத் தொகுதி உருவாகியது. (படம் : 2ஐப் பார்க்க
கவசத்தகடுகளின் எல்லை விளிம்புகளில் தீவுக்கூட்டங்கள் அமைந்திருப்பதனைக் காணலாம். பசுபிக் சமுத்திரத்தில் எரிமலை வில் வளைவுகளாக இத் தீவுக் கூட்டங்கள் அமைந்துள்ளன. அலூசியன் வில் வளைவு, யப்பான் வில் வளைவு, மரியானா வளைவு, பிலிப்பைன் வில்வளைவு, பேரு -சில்லி வில்வளைவு முதலியன குறிப்பிடத்தக்கன. சமுத்திர ஓடு, கண்ட ஒட்டோடு ஒடுங்கிக் கீழ் அமிழ்தலின் விளைவாகவே எரிமலைகள், அகழிகள், எரிமலைத் தீவுகள் முதலியன உருவாகின. மரினா அகழி, மிண்டோனா அகழி, தஸ்காறோறோ அகழி முதலியன இவ்வாறு உருவானவையாம். எனவே, தகட்டோட்டு நகர்வின் அடிப்படையில் புவியோட்டின் பல்வேறு செயற்பாடுகளுக்கும் இன்று தக்க விளக்கம் தரமுடியும். புவி நடுக்கம், எரிமலையியல், மலையாக்கம் பாறைவட்டம் முதலான பலவற்றின் உருவாக்கத்திற்கும் புவித்தகட்டோடுகளின் இயக்கம் குறித்த புரட்சிகரமான கருத்துக்கள் விளக்கம் தரவல்லன.
4. கந்தையா குனராசா

தகட்டோடுகள்ன்நகர்வு/ திளைவுகள்
புவியின் கவசத்தகட்டோடுகள் நகர்வின் காரணமாக பூமியில் பின்வரும் விளைவுகள் ஏற்படுகின்றன.
51 சமுத்திர மலைத் தொடர்கள் 52 சமுத்திர அகழிகள் 5:3 எரிமலைகள் 54 புவிநடுக்கங்கள்
சமுத்திர மலைத்தொடர்கள்
இந்த ஆழ்கடற் சமவெளிகளில் மலைத்தொடர்கள் போன்று உயர்ந்தமைந்த பகுதிகள் காணப்படுகின்றன. அவற்றை கடற்கீழ் முகடு (Submarine Ridge) என்பர். இக்கடற் கீழ் முகடுகள் சிகரங்களையும் தொடர்களையும் கொண்டிருக்கின்றன. அத்திலாந்திக் சமுத்திரத்தில் காணப்படுகின்ற கடற்கீழ் முகடு. "S" வடிவினது. இந்து சமுத்திரத்தில் தலைகீழான “Y” வடிவ சமுத்திர மலைத்தொடர் உள்ளது.
கண்ட மலைத்தொடர்களுக்கும் சமுத்திர மலைத் தொடர்களுக்கும் இடையிலான பிரதான வேறுபாடு, சமுத்திர மலைத்தொடர்கள் ஒன்றுடன் ஒன்று இணைந்த ஒரே தொடராக இருப்பதாகும். இம் மலைத் தொடர்களின் சிகரங்கள் நீருக்கு வெளியில் தெரியுமாயின், தீவுகளாகக் காட்சி தருகின்றன. நடு அத்திலாந்திக் மலைத்தொடர், இந்து சமுத்திர மலைத்தொடர், ஆக்டிக்கின் லொமஸாவ் (LOmonOSOV) மலைத்தொடர், கிழக்குப் பசுபிக் மலைத்தொடர் என்பன முக்கியமான சமுத்திரத் தொடர்களாகவுள்ளன.
சமுத்திர மலைத்தொடர்கள் கண்டங்களின் மொத்த நிலப் பரப்புக்கு நிகரான பரப்பில் பரந்துள்ளன. 72000 கி. மீ நீளமான மலைத் தொடர்கள் சமுத்திர வடிநிலத்தில்
ፊ፡6)፤ጠበፅ 3s

Page 28
அமைந்துள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது. நடு அத்திலாந்திக் மலைத்தொடர் ஐஸ்லாந்தின் வடபகுதியிலுள்ள யான் மேயன் தீவிலிருந்து தொடங்கி தென் அத்திலாந்திக்கின் பூவே தீவு (Bouvet) வரை "S" வடிவில் செல்கிறது. ஐஸ்லாந்துத் தீவின் மத்தியினூடாக இம் மலைத் தொடர் செல்வது குறிப்பிடத்தக்கது. இம் மலைத்தொடர் 20300 கி. மீ நீளமானது. கடல் மட்டத்திலிருந்து 4000 மீ ஆழத்திலுள்ளது. சமுத்திரத் தரையிலிருந்து 1660 மீ. உயரமானது. இது அந்தீஸ் மலைத்தொடரின் உயரத்தையும் அகலத்தையும் கொண்டிருக்கின்றது.
இந்து சமுத்திரத்தில் தலைகீழான “Y” வடிவில் காணப்படும் சமுத்திர மலைத்தொடர், மாலை தீவுகள் - இலட்சதீவுகள் பகுதியிலிருந்து தொடங்கித் தெற்காகச் செல்கின்றது. கார்ல்ஸ்போக் (Carlsberg), சாகோஸ்(Chagos), சென் போல் (St. Paul) ஆம்ஸ்ரடாம்- சென்போல், கெர்குயலன் - காஸ் பேர்க் (Kerguelen - Gauss Berg) எனப்பல மலைத் தொடர்களின் இணைப்பால் இந்து சமுத்திர நடு மலைத் தொடர் ஆகியுள்ளது.
பசுபிக் சமுத்திரத்தில் மலைத்தொடர்கள் சிறப்பாக அமையவில்லை. பசுபிக்கின் கிழக்கில், வடதென் அமெரிக்காக்களின் ஒரமாகக் குறிப்பிடத்தக்க ஒரு தொடர் உள்ளது. அந்தாட்டிக் சமுத்திரத்தின் வடக்கே, பசுபிக் - அந்தாட்டிக் தொடராக ஆரம்பித்து, வடக்கு நோக்கிச் சென்று, தென்னமெரிக்கக் கரையோரமாக, கலிபோர்னியா வரை சென்று முடிவடைகின்றது.
சமுத்திர மலைத் தொடர்களின் மத்தியில், அவற்றின் மொத்த நீளத்திற்கும், நீண்ட ஓர் இறக்கம், அல்லது தாழி (Trough) அமைந்துள்ளது. இதனை மத்திய பள்ளத்தாக்கு (Median Valley) எனலாம். நடு அத்திலாந்திக் மலைத்தொடரில் இத் தாழி இறக்கம் நன்கு அமைந்துள்ளது. 30 தொட்டு 45 கி. மீ அகலமும் 2000 மீ. ஆழமும் கொண்டதாக இந்த மத்திய பள்ளத்தாக்கு அமைந்துள்ளது.
சமுத்திர அகழிகள்
ஆழ்கடற் சமவெளியில் கடற்கீழ் முகடுகளை விட ஆழமான அகழிகளும் (Trenches) காணப்படுகின்றன. பொதுவாக 540 மீற்றர்களுக்கு மேற்பட்ட ஆழமான பகுதிகள் தாழிகள் எனப்படுகின்றன. இன்று உலகிலேயே மிக ஆழம் கூடிய தாழியாகக் கருதப்படுவது பசுபிக் சமுத்திரத்தில் மறியானா அகழி (Mariana Trench) ஆகும். இது 1880 மீற்றர் ஆழமானது. மறியானாத் தீவுக்கு அருகில் இத்தாழி இருக்கின்றது. இதனைவிட பசுபிக்கில் பிலிப்பைன் தீவை அடுத்துக் காணப்படும் மிண்டானோ அகழியும், யப்பானை அடுத்துக் காணப்படும் தஸ்காறோறோ அகழியும் (Tuscarora Deep) குறிப்பிடத்தக்கன. இந்த அகழிகள் காணப்படும் பிரதேசங்களை அடுத்தே புவி நடுக்கங்கள் அதிகம் ஏற்படுகின்றன. மின்டோனா அகழி 10490 மீற்றர் ஆழமானது. தஸ்காறோறோ அகழி 10050 மீற்றர் ஆழமானது.
36 கந்தையா குணராசா

உலகிலேயே மிக நீளமான சமுத்திர அகழி பேரு - சில்லியன் அகழியாகும். இது 5900 கி.மீ. நீளமானது. இதன் அகலம் 100 கி.மீ. ஆகும். மரியானா அகழி 2250 கி. மீ. நீளமானது. யாவா அகழி 4500 கி. மீ. நீளமானது. உலகிலேயேயுள்ள சமுத்திர அகழிகளில் மிகவும் அகலமானது போர்டோரிகோ ஆகும். இது 120 கி. மீ.
அகலமானது. குரில் அகழியும் ஏறத்தாழ இந்த அகலமே.
எரிமலைகள்
புவியின் கோளவகத்தினுள் உள்ள பாறைக் குழும்பு (Magma) புவியோட்டின் பலவீனப் பிளவின் ஊடாக வெளியே வேகமாகக் பாயும்போது அவற்றை எரிமலைகள் என்பர். புவியின் மேற்பரப்பு காலப்போக்கில் சிதைந்து கொண்டு போவதனால், புவியோடு பலவீனமடைகின்றது. புவியோட்டின் கீழுள்ள ஊருகிய பாறைக் குழம்பு வெப்பநிலை, அமுக்கம் என்பன காரணமாக அங்குமிங்கும் அசையத் தொடங்குகின்றது. அவ்வாறு அசையும் பாறைக்குழம்பு புவியோட்டின் பலவீனமான பகுதியைத் தகர்த்துக்கொண்டு வெளியே பாய்கின்றது. வெளியே பாயும்போது பெரும் சத்தத்துடன் எரிமலைக்குழம்பு, சாம்பல், பாறைப் பொருட்கள், வாயுக்கள் என்பனவற்றை வெளியே கக்குகின்றது. எரிமலைகள் நிகழும் பகுதிகள் கூம்புவடிவக் குன்றுகளாக மாறிவிடுகின்றன. கக்குகை இக் குன்றுகளின் உச்சிகளிலோ பக்கங்களிலோ நிகழலாம். சமுத்திரத்தை அடுத்த பகுதிகளில் புவியோட்டின் தடிப்புக் குறைவாக இருப்பதால் அப் பகுதிகளில் எரிமலைகள் அதிகம் செயற்படுகின்றன.
எரிமலைகளின் தோற்றத்திற்குத் தகட்டோடுகளின் செயற்பாட்டடிப்படையில் இன்று விளக்கந்தரமுடியும். புவிக்கவசத்தகடுகள் ஒன்றிலிருந்து ஒன்று விலகும்போது ஏற்படும் பிளவூடாக மேல்மான்ரில் படையில் உருவாகும் பாறைக் குழம்பு வெளியே கக்குகின்றது. (படம் 4A ஐப் பார்க்க) சமுத்திர மத்திய மலைத் தொடர்களில் காணப்படுகின்ற எரிமலைகளின் செயற்பாடு இவ்வாறானதாகும். ஐஸ்லாந்து எரிமலையான ஹெக்லா தக்க உதாரணமாகும்.
சமுத்திர ஓடும் கண்ட ஓடும் ஒன்றையொன்று நோக்கி ஒருங்கும் போது, அடர்த்தி குறைந்த சமுத்திர ஓடு கீழ்நோக்கி அமிழும். அவ்வாறு அமிழும்போது இடையோட்டிலேற்படுகின்ற வெப்பவாக்கவுந்துதல் பாறைக்குழம்பை மேனோக்கிச் செலுத்துகின்றது. அதனால் கரையோரங்களில் எரிமலைகள் கக்குகை செய்கின்றன.
எரிமலைச் செயற்பாடு முக்கியமாக இரு வகைகளில் நிகழ்கிறது. (அ) எரிமலைக் குழம்பு (லாவா) மத்திய எரிமலை வாயொன்றினூடாக வேகமாக கக்கப்படுதல் ஒரு செயற்பாடாகும். அதனால் உருவாகும் எரிமலை கூம்பு வடிவ மலையாகக் காட்சி தரும். (ஆ) சிலவேளைகளில் எரிமலைக்குழம்பு வெடிப்புகள் ஊடாக மெதுவாக வெளியே கசிந்து பரவும். அதனால் பெரும் எரிமலை மேட்டு நிலங்கள் உருவாகியுள்ளன. இவ்விரு செயற்பாடுகளினாலும் எரிமலை நிலவுருவங்கள் விரைவாக உருவாகி விடுகின்றன. மத்திய எரிமலை வாயொன்றினூடாகக் கக்குகை
ፊሳነLItዕ

Page 29
நிகழ்த்தும் எரிமலைகள் மிகவேகமாகக் கூம்புவடிவைப் பெற்று வளரக்கூடியவை. 1943 இல் மெக்சிக்கோவில் கக்குகை நிகழ்த்திய பரிகுற்றின் எரிமலை ஒருசில மாதங்களில் 300 மீற்றர் உயரமும், நேபாளத்திற்கு அருகில் கக்குகை நிகழ்த்திய மொன்ரேநியுவோ எரிமலை ஒரு வாரத்தில் 130 மீற்றர் உயரமும் வளர்ந்து விட்டது. எரிமலைக் குழம்புக் கசிவால் தோன்றிய மேட்டு நிலங்களாக இந்தியத் தக்கணம், தென்னாபிரிக்க டிறக்கன்ஸ் பேக் மலை, ஐக்கிய அமெரிக்கக் கொலம்பியா - சினேக் மேட்டுநிலம் முதலியன விளங்குகின்றன.
எரிமலைகளின் விளைவுகள் எப்போதும் பாரதூரமானவையாக இருந்திருக்கின்றன. கி. பி. 79 ல் விசூவியஸ் எரிமலைக் கக்குகையால், பொம்பை நகர் சாம்பலாலும் மண்ணாலும் மூடப்பட்டது. மேற்கு இந்தியத் தீவுகளில் பீலி மலை கக்குகை நிகழ்த்திய போது (1902) சென்பியரி நகரும் 30,000 மக்களும் முற்றாக அழிந்தனர். கிழக்கிந்திய தீவுகளிலுள்ள காறக்கற்றோவா எரிமலை வெடித்தபோது (1883), 36,000 மக்கள் அழிந்தனர். அதன் கக்குகைச் சத்தம் 500 கி. மீ சுற்றாடலில் கேட்டது. 35 மீற்றர்களுக்கு மேலாக அலைகள் எழுந்தன. இத்தகைய எரிமலைகள் பொதுவாகப் புவியோட்டின் பலவீனமான பகுதிகளை அடுத்துக் காணப்படுகின்றன. குத்தான கண்டமேடைச் சாய்வுகள் இத்தகையன. அதனால்தான் கடற்கரையோரங்களை அடுத்து எரிமலைகள் அமைந்திருப்பதைக் காணலாம், தகட்டோட்டு விளிம்புகள் இவையாகும். உலகில் ஏறத்தாழ 500 எரிமலைகள் இருக்கின்றன. இவற்றில் 400 வரையில் பசுபிக் சமுத்திரத்தில் அமைந்துள்ளன. 80 எரிமலைகள் வரையில் அத்திலாந்திக் சமுத்திரப் பாகங்களில் அமைந்துள்ளன. பசுபிக் சமுத்திரத்தில் ஒரு மோதிர வளைவாக எரிமலைப் பரம்பல் அமைந்துள்ளது. புவி நடுக்க வலயங்களே எரிமலைகள் காணப்படும் பிரதான பிரதேசங்களாக அமைந்துள்ளன. காரக்கற்றோவா, பியூஜியாமா, மவுனோலோவா, கொற்றோபக்சி, பீலி, ஹெக்லா, விசூலியஸ், எட்னா என்பன மிக முக்கியமான எரிமலைகளாக விளங்குகின்றன.
இன்று உலகில் காணப்படுகின்ற எரிமலைகளை மூன்று பெரும் பிரிவுகளாகப் பாகுபடுத்தலாம். அவையாவன: (9) உயிர்ப்பெரிமலை (ஆ) உறங்கும் எரிமலை இ) அவிந்த எரிமலை
இன்றும் வெடித்துக் கக்கிக் கொண்டிருக்கின்ற எரிமலைகளை உயிர்ப் பெரிமலைகள் என்பர். இன்று உலகில் 500க்கு மேற்பட்ட உயிர்ப் பெரிமலைகள் இருக்கின்றன. இன்று கக்குதலின்றி இருக்கின்ற எரிமலைகளை உறங்கும் எரிமலைகள் என்பர். இன்று அவை உறங்கியிருந்தாலும், இருந்துவிட்டு எரிமலைக்குழம்பைக் கக்கிவிட்டு, மீண்டும் அடங்கிவிடுவன. எனினும் இவை உறங்கும் நிலையில் இருக்கும் போதே ஆவியைக் கிளப்பிக் கொண்டிருப்பன. வெகுகாலத்துக்கு முன்னர் கக்குகைகளை நிகழ்த்தி இப்போது வெகுகாலமாகத் தொழிற்படாது இருக்கின்ற எரிமலைகளை அவிந்த எரிமலைகள் என்பர். பிரித்தானிய தீவுகளில் இவ்வகை எரிமலைகளைக் காணலாம்.
38 கந்தையா குணராசா

புலிநடுக்கங்கள்
யற்கைக் காரணங்களால் புவியோட்டின் ஒரு பகுதி சடுதியாக அதிர்ந்தால் அதனைப் புவிநடுக்கம் பூகம்பம்) (Earthquake) என்பர். புவியோட்டின் கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் அகவிசைத் தாக்கங்களினால் தோன்றும் அலைகள் புவியோட்டின் ஒரு பகுதியை நடுக்கத்திற்குள்ளாகின்றன. ஒவ்வொரு இரண்டரை மணி நேரத்திற்கும் பூமியில் எங்கோ ஓரிடத்தில் புவிநடுக்கம் நிகழ்கின்றது. அவை அழிவுகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் சில வேளைகளில் மிக்க விசையோடு தொழிற்படும் புவிநடுக்கங்கள் பேரழிவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.
கடுமையான புவிநடுக்கம் ஒன்றிலிருந்து வெளிப்படும் சக்தி (Energy) உலகில் முதன்முதல் வெடித்த அணுகுண்டின் சக்தியைப்போல் பத்துமடங்கு சக்தி கொண்டதாகும்.
உலகில் ஒவ்வொரு வருடமும் 40 நடுத்தர விசையோடான புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. இரு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு சக்தி வாய்ந்த விசை கூடிய புவிநடுக்கம் ஏற்படுகின்றது. ஒவ்வொரு ஒருடமும் 40 தொட்டு 50 ஆயிரம் சிறிய புவிநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணழேயுள்ளன. புவிநடுக்கத்தால் ஏற்படுகின்ற பாறைகளின் அசைவுகள் நதிகளைத் திசைமாற்றி விடுகின்றன. நிலச்சரிவுகள் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களைக் காவு கொள்கின்றன. குடிசைகள், வீடுகள், பெருங் கட்டிடங்கள், பாலங்கள் எனக் கட்டமைப்புகள் தகர்ந்து சரிந்து அழிந்து போகின்றன. இவற்றோடு சமுத்திர அடித்தளத்தில் ஏற்படும் புவிநடுக்கம் பாரிய பேயலைகளைத் தோற்றுவித்துக் கரையோரங்களை தளர்த்தித் துடைத்து விடுகிறது. புவிநடுக்கம் நேரடியாக மக்களைக் கொல்வதில்லை. கட்டமைப்புகள் தகர்வதனாலும் பேரலைகளினாலும் அவற்றுள் சிக்கி மனிதர்கள் மரணத்தைத் தழுவிக் கொள்கின்றனர். சடுதியாக வெளிப்படும் புவிநடுக்கத்தின் சக்தி இவற்றினை நிறைவேற்றிவிட்டே ஓய்வு பெறுகிறது.
சுனாமி 39

Page 30
1906ஆம் ஆண்டு ஏப்பிரல் 18 ஆம் திகதி காலை 5.12 மணிக்கு கலி போர்னியாவை ஒரு கடூரமான புவிநடுக்கம் தாக்கியது. கலிபோர்னியாவின் வட கரையோர நிலம் 450 கிலோமீற்றர் தூரத்திற்கு பிளந்து கொண்டது. குத்தாக 45 மீற்றர் உயரத்திற்குப் பாறைப் படை குத்தாக உயர்ந்து கொண்டது. இந்தப் புவிநடுக்கம் சான் அன்றோஸ் குறைத் தளத்திற்கு அருகே சான்பிரான்சிஸ்கோவில் உருவாயிருந்தது. கட்டிடங்கள் நிலைகுலைந்து சரிந்தன. மூன்று நாட்கள் எரிவாயு தீப்பற்றித் தொடர்ந்து எரிந்தது. 3000 மக்கள் மரணித்தனர். 400 மில்லியன் டொலர்கள் சேதம் ஏற்பட்டது.
135° 80." 35° 45
: í 0° 45° go 35° 80° t35° 90" 45* 0 •
படம் = 0 உலகின் புனிதடுக்கப் பரம்பல்
ஆறாம் நூற்றாண்டில் மத்திய தரைக் கடலில் ஏற்பட்ட புவிநடுக்கத்தால் 3 இலட்சம் மக்கள் பலியாகினார். 1908 ஆம் ஆண்டு இத்தாலியில் ஏற்பட்ட நில நடுக்கம் 28 வினாடிகள் நிலைத்தது. ஆனால், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் மக்களைப் பலி எடுத்தது. சீனாவில் 1920 இல் நிகழ்ந்த புவிநடுக்கத்தால் 2 இலட்சம் மக்களும், 1917 இல் நிகழ்ந்த புவிநடுக்கத்தால் 1 இலட்சம் மக்களும், கொல்லப்பட்டனர். 1923 இல் ரோக்கியோவில் நிகழ்ந்த புவிநடுக்கத்தில் 2 1/2 லட்சம் மக்கள் அழிந்து போயினர். சான்பிரான்சிஸ்கோவில் அடிக்கடி புவிநடுக்கம் ஏற்படுகின்றது. 1964, மார்ச் 27, மாலை 515 மணிக்கு தென்அலாஸ்காவில் ஏற்பட்ட புவிநடுக்கம் 3 நிமிடங்கள் நிலைத்தது. பதினைந்து பேர் மாண்டனர். 10 இலட்சம் சதுர கிலோமீற்றர் பரப்பில் நில அதிர்ச்சி உணரப்பட்டது. 1989 ஆம் ஆண்டு ஒக்டோபர் 17 ஆந் திகதி சான்பிரான்சிஸ்கோ குடாவில் புவிநடுக்கம் ஏற்பட்டது. 67 பேர் மரணமடைந்தனர். மேன்பாலங்கள், கட்டிடங்கள் சரிந்தன. 1993 செப்டம்பர் 30 ஆந் திகதி இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் ஏற்பட்ட புவிநடுக்கத்தால் 35 ஆயிரம் மக்கள் உயிரிழந்து போயினர். 1993 டிசம்பரில் தென்னிலங்கையிலும் சிறியளவில் ஒரு புவிநடுக்கம் ஏற்பட்டது. புவிநடுக்கத்தால் நிலம் பிளவுற்றுப் போகும். கட்டிடங்கள் வீதிகள், பாலங்கள் என்பன தகர்ந்து சரிந்து விடுகின்றன.
40 கந்தையா குணராசா
 

புவிநடுக்கங்கள் எவ்வாறு ஏற்படுகின்றன?
இரண்டு விதங்களில் உருவாகின்றன. 1. இயற்கைக் காரணிகள்
1.1 புவிப்பெளதிகவியற் காரணிகள்
12. இடவிளக்கிவியற் காரணிகள்
1.3. வானிலையியற் காரணிகள்
1.4. எரிமலையியற் செயற்பாடுகள்
2. மனிதக் காரணிகள்
1.1. புவிப் பெளதிகவியற் காரணிகள்
புவிநடுக்கங்கள் தோன்றுவதற்குரிய பிரதான காரணி, புவிக்கவசத்தகடுகள் நகர்வு என இன்று பெரும்பாலும் முடிவாகியிருக்கின்றது. புவிக்கவசத்தகடுகள் நகர்வதனால் புவிநடுக்கங்கள் தோன்றுகின்றன. புவிக்கவசத் தகடுகள் குறித்து ஏற்கனவே அறிந்துள்ளோம். புவியோட்டின் கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் அகவிசைகள் தோற்றுவிக்கும் தாக்கத்தால் கவசத்தகடுகள் ஒன்றிலிருந்தொன்று விலகியும் ஒருங்கியும், அமிழ்ந்தும் செயற்படுகின்றன. தகட்டோடுகளின் இந்த அசைவு புவிநடுக்கத்தைத் தோற்றுகின்றது.
1993 ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலத்தில் நிழ்ந்த புவிநடுக்கத்திற்கு, இந்தியக் கவசத்தகடு, ஐரோ - ஆசிய கவசத்தகட்டினை நோக்கி நகர்ந்தமை காரணமென அறியப்பட்டுள்ளது. இந்த நகர்வு இன்னும் சென்ரிமீற்றர் அளவில் தொடர்வதாகப் புவிச்சரிதவியலறிஞர்கள் கருதுகின்றனர். இதனால் நர்மதைப் பள்ளத்தாக்கு - கோதாவரி நதியின் தலைப்பள்ளத்தாக்கு - மேற்குக் கரையோர மலையின் வடபாக கொய்னர் பகுதி என்ற எல்லையுள் நிலத்தின் அடிப்பாகம் பிளவுற்றுள்ளதெனவும் கண்டறிந்துள்ளனர். ܫ
1... محور . . . புவிநடுக்கங்கள் f * நடுக்கங்கள் பெனிஓஃப் வலயம் ༽།། N ༠ 670 t.
* w. ۔ ۔ ۔ ۔ ۔$( }
ས་མལ་མལ་ པས་སྣང་མ 6704at.
L-UL fo : 6
சுனாமி -

Page 31
புவிக்வசத்தகடுகள் பற்றிய விளக்கமானது புவிநடுக்கங்களின் பரம்பலையும் தோற்றத்தையும் நன்கு விளக்குகின்றது. குறைத்தளங்களூடாகப் பாறைகள் அசையும்போது புவிநடுக்கம் ஏற்படுகின்றது. புவிநடுக்கம் ஒரு ஒடுங்கிய புவியியல் வலயங்களில் ஏற்படுகின்றது. இந்த ஒடுங்கிய புவியியல் வலயங்கள் கவசத்தகட்டோடுகளின் விளிம்புகளாக இருப்பதைக் காணலாம். பசிபிக் சுமுத்திரத்தில் புவிநடுக்கம் ஏற்படும் பகுதி, ஒரு வட்ட வலயமாக இருக்கின்றது. இதனை Circum Pacific Belt GT6óTgpuò Ring of fire GT 6óTgpuò seg 60ọÜLuff. LóluGJ (5 GAJT é66ồTID புவிநடுக்கங்களில் அதிகமானவற்றின் உற்பத்திப் பிரதேசமாக இந்த பசுபிக் வட்ட வலயம் விளங்குகின்றது. அடுத்த முக்கிய பகுதி மத்திய தரைக் கடல் - இமயமலை வலயமாகும். இது மத்திய தரைக் கடலிலிருந்து தென்மேற்கு ஆசிய நாடுகளூடாக இமயமலை அடிவாரமூடாக கிழக்கிந்தியத்தீவின் (சுமாத்திரா - ஜாவா) மேற்கோரமாகப் பசுபிக் வலயத்தினைச் சென்றடைகின்றது. இற்றினை விட சமுத்திர மத்திய மலைத் தொடர்களையடுத்து சக்தி குறைந்த புவிநடுக்கங்கள் ஏற்படுகின்றன. (படம் 5ஐப் பார்க்க)
பசுபிக் மோதிர வலயத்தில் புவிநடுக்கங்கள், எரிமலைகள், சமுத்திர அகழிகள் என்பன ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டுள்ளன. இவ்விடங்களில் கண்டத் தகட்டுடன் சமுத்திரத்தகடு ஒருங்கி, கீழ் அமிழும்போது சமுத்திர அகழி ஏற்படுகின்றது. அந்த அகழியிலிருந்து 30° தொட்டு 60° பாகை வரையிலான கோணச் சாய்வில் புவிநடுக்கங்கள் உருவாகும் மையங்கள் உள்ளன. புவியினுள் 670 கி. மீ. ஆழம் வரை இந்த புவிநடுக்க மையங்கள் உள்ளன. இவ்வாறு புவிநடுக்கங்கள் மையங்கொண்ட பகுதி ‘பெனிஓஃப் வலயம்’ (Beniot Zone) என்பர். (பெனிஒஃப் என்பவரால் கண்டறியப்பட்டது).
சமுத்திரக் கவசத்தகடு ஒன்றும் கண்டக் கவசத்தகடு ஒன்றும் ஒன்றுடன் ஒன்று ஒருங்கி மோதுவதாகக் கொள்வோம். சமுத்திரக்தகடு அடர்த்தி கூடியதாகையால், அடர்த்தி குறைந்த கண்டத் தகட்டின் கீழ் அமிழ்கிறது. அமிழும் கவசத்தகடு, உயர்வெப்பநிலையைக் கொண்ட மான்ரில் படையில் மோதிக் கரைந்து போகுமியல்பினது. மோதிக் கரைகின்ற ஆழம் 300 கி. மீற்றராக 350-400 கி. மீற்றராக அல்லது 450-670 கி. மீற்றராக இருக்கலாம். ஏதோ ஒரு மட்டத்தில் மோதும்போது ஏற்படும் உதறல், புவிநடுக்கமாகப் பரிணமிக்கின்றது. உதறலால் ஏற்படும் அபரிதமான விசை, சக்தி பெரும் அனர்த்தங்களைப் புரிந்து விடுகின்றது.
புவிநடுக்கம் தோன்றுவதற்கு எரிமலைகளின் செயற்பாடுகளும் காரணமாகவுள்ளன. எரிமலைகள் கக்குகை நிகழ்த்தும்போது புவிநடுக்கம் அயற்பகுதிகளில் தோன்றுகின்றது. எனினும் எரிமலைகளின் கக்குகைகளின் போது தோன்றும் புவிநடுக்கம் தீவிரமானதன்று. புவியினுள் 240 கி. மீ. ஆழத்திற்கும் கீழ் நில அதிர்ச்சிகள் அவதானிக்கப் பட்டுள்ளன. இவற்றைப் பாதாளத்திற்குரிய நிலநடுக்கம் (Plutonic Earth Quake) என்பர். இதற்கான காரணம் இன்னமும் தெளிவாக விளக்கப்படவில்லை.
42 கந்தையா குணராசா

சிறியளவிலான புவிநடுக்கத்தினைக் தோற்றுவிக்கும் இடவிளக்கவியற் காரணிகளில் நிலச்சரிவுகள், மண்சரிவுகள், பனிக்கட்டித் திணிவுகளின், பாரிய சரிவுகள், பாறைச் சரிவுகள் என்பன புவிநடுக்கத்தைத் தோற்றுவிக்கின்றன. அத்தோடு பெருக்கு அலைகளின் தாக்குதல், பெரும் நீர்த்தேக்கங்கள் தகர்வதால் ஏற்படும் வெள்ளப்பெருக்கு என்பனவும் சிறியளவிலான புவிநடுக்கங்கள் ஏற்படக் காரணமாகின்றன. -
மனிதக் காரணிகள்
புவிநடுக்கத்தைத் தோற்றுவிப்பதில் மனிதனது நடத்தைகளும் துணை செய்கின்றன. கட்டிடங்களின் உடைவும் தகர்ப்பும் புவிநடுக்கத்தால் மனிதனுக்கு ஏற்படும் பெரும் இடராகும். புவிநடுக்கங்கள் மையம் கொள்கின்ற பகுதிகளுக்கு அண்மையில் பாரிய கட்டிடங்களை மனிதனமைத்துக் கொள்கிறான். அவனது அறிவின்மை, அசட்டையினம், புவிநடுக்க அலைகளின் தாக்கங்களுக்குச் சமாளிக்கக் கூடிய வடிவமைப்பின்மை ஆகிய அனைத்தும் உயிரழிவுக்குக் காரணமாகின்றன. புவிநடுக்கத்தின் நகர்ப் புறங்களில் ஏற்படும் தீ பரவல் இன்னோர் பேரழிவுக் கருவியாகும். நவீன உலகில் பயன்படுத்தப்படும் எரிபொருட்களும், வாயுக்களும், மின்சாரமும் நகர்ப்புறங்களில் வலைப்பின்னலாகக் குழாய்கள், கம்பிகள், மூலம் தரைக்கீழாயும் தரைமேலாயும் வழங்கப்பட்டு வருகின்றன. புவிந்டுக்கத்தால் இவை சிதையும்போது இலகுவில் தீப்பிடித்துக் கொள்கின்றன. 1906 இல் சான்பிரான்சிஸ்கோவில் ஏற்பட்ட புவிநடுக்கத்தால் அதிக உயிர் அழிவு தீயினால் ஏற்படுத்தப்பட்டதென்பதை மறக்கமுடியாது.
மனிதனால் செயற்கையாக எற்படுத்தப்படும் புவிநடுக்கங்களுமுள்ளன. முக்கியமாக மூன்று மனித நடத்தைகளைக் குறிப்பிடலாம். அவை : 1. நதிகளை மறித்து உருவாக்கும் பாரிய நீர்த்தேக்கங்கள் 2. பூமியைத் துளைத்து ஏற்படுத்தும் ஆழமான கிணறுகள் 3. நிலத்தடியில் அணுக்குண்டுகளை வெடிக்கச் செய்து நடாத்தும்
அணுப்பரிசோதனைகள்.
கடந்த ஆண்டு இலங்கையின் டிலைநாட்டில் உணரப்பட்ட புவிநடுக்கத்திற்கு ஒரு காரணமாக மாகவலி கங்கையில் அமைக்கப்பட்ட ஒன்பது பாரிய நீர்த்தேக்கங்கள் உருவாக்கிய புவியோட்டு சமநிலைத்துவக் குலைவு கருதப்பட்டது. மகாராஸ்டி புவிநடுக்கத்திற்கு நர்மதா நதியில் அமைக்கப்பட்ட இராச்சத நீர்த்தேக்கம் ஒரு காரணமாகக் கூறப்பட்டது. பெற்றோலியக் கிணறுகள் 10-12 கி.மீ. வரை நிலத்தைத் துளையிட்டு ஆராய்ந்து பெறப்படுகின்றன. சமுத்திரங்களில் துளையிடப்படும். இவ்வாறான துளைகள் திடீரென சமுத்திரத் தகட்டினை உடைவுற வைத்து அபரிதமான சக்தியை வெளிப்படுத்தும் போது புவி நடுக்கம் தூண்டப்படுகிறது. வல்லரசுகள் நிலத்திற்கு அடியில் மிக இரகசியமாக அணுக்குண்டுகளை வெடிக்க வைக்கின்றன. ஈரானில் அடிக்கடி தோன்றிய புவிநடுக்கங்களுக்கு சோவியத் ருசியா நிலத்தடியில் வெடித்த அணுக்குண்டுகளே காரணமென சில உலகநாடுகள் குற்றம் சாட்டின.
43

Page 32
புவிநடுக்க அலைகள்
புவிநடுக்கத்தினால் ஏற்படும் அலைகள் புவிநடுக்கப்பதி கருவிகளினால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவ்வாறு தோன்றும் புவிநடுக்க அலைகளை P- அலை முதலலை) S - அலை துணையலை), L - அலை (மேற்பரப்பு அலை) என மூன்றாக வகுப்பர். P அலைகள் செக்கனிற்கு 8. கி. மீ வேகம் கொண்டவை. இந்த அலையின் பாதையில் குறுக்கீடும் ஒவ்வொரு துகளும் அலைபாயும் திசையில் முன்னும் பின்னும் சுருங்கிவிரியும். இவை திடப்பொருட்கள். திரவப் பொருட்கள் அனைத்தையும் தங்குதடையின்றி ஊடுருவிச் செல்வன. S- அலைகள் அதிர்வு அலைகளாகும். இவற்றின் வேகம் 4.5 கி. மீ செக். ஆகும். இவை செல்லும்போது இவற்றின் பாதையிலிருக்கும் ஒவ்வொரு துகளும் செங்குத்தாக உயர்ந்து தாழும். இவை திடப்பொருட்களை மட்டுமே ஊடுருவிச் செல்வன. இந்த S - அலைகளே புவிநடுக்க அழிவுகளைத் தோற்றுவிப்பன. L - அலைகள் வேகம் குறைந்தவை. (படம் 5 ஐப் பார்க்க )
புவிநடுக்கத்தின் தீவிரத்தைக் கணக்கிட்டு மெர்காலி, ரோஸி போன்ற அறிஞர்கள் கணக்கிடும் அளவுகளைத் தந்துள்ளனர். புவிநடுக்கத்தைப் புவிநடுக்கக் கருவிகள் (Seismograph) பதிவு செய்தளிக்கின்றன.
புவிநடுக்க அலைகளின் தீவிரத்திற்கு ஏற்ப புவியின் மேற்பரப்பில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன.நிலம்பிளவுறுதல்,கடலலைகள் கொந்தளித்துக்கரையோரங்களைத்தாக்குதல், கட்டிடங்கள் அழிதல், மக்கள் பலியாதல் என்பன நிகழ்கின்றன.
புவிநடுக்க விசையளவு
புவிநடுக்க அலைகள் அளவிடுவதற்குப் புவிநடுக்கவியல்மானி (Seismometer) என்றொரு கருவி பயன்படுத்தப்பட்டு வருகின்றது. புவிநடுக்கம் ஏற்பட்டு நிலமதிரும் போது இந்தக் கருவி சுழலும் காகிதச் சுருளில் அலைகளைப் பதிவு செய்யும். அது புவிநடுக்கவியலை ஆராய உதவும் புவிநடுக்க விபரமாகின்றது. புவிநடுக்கம் ஒன்றின் சக்தியை அல்லது அளவினை ஒரு புவிநடுக்கத்தின் சக்தியை இரு வழிகளில் அளவிடுவர். ஒன்று புவிநடுக்கத்திலிருந்து வெளிவரும் சக்தியினுள்ளார்ந்த அளவு (Magnitude) இரண்டு புவிநடுக்கத்தின் செறிவு (Intensity) புவிநடுக்கச் சக்தியின் உள்ளார்ந்த அளவு றிச்டர் அளவில் (Richter Scale) அளவிடப்படுகிறது. றிச்டர் என்ற புவிநடுக்கவியலறிஞர் இந்த அளவீட்டினைக் கணித்தமையால் அவர் பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது. 0இலிருந்து 10 வரையான ஒரு மடக்கை வாய்ப்பாட்டினடியாக றிச்டர் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஓரிடத்தில் உருவாகிய புவிநடுக்கத்தின் சக்தியினுள்ளார்ந்த அளவு 80 ஆயின், அது 70 றிச்டர் அளவுள்ள புவிநடுக்கத்திலும் பார்க்க 10 மடங்கு அதிக சக்தி / விசை கொண்டது என அர்த்தப்படும். 6.0 றிச்டர் அளவுள்ள புவிநடுக்கத்திலும் பார்க்க 100 மடங்கு அதிக சக்தி கொண்டதென அர்த்தப்படும். 8.0 றிச்டர் அளவிலான ஒரு புவி
44 கந்தையா குணராசா

நடுக்கத்திலிருந்து வெளிப்பட்ட சக்தியானது 70 றிச்டர் அளவுடைய புவிநடுக்கம் வெளியிட்ட சக்தியிலும் பார்க்க 31 மடங்கு அதிகமானதெனக் கணித்துள்ளனர். இதுவரை பூமியில் 26 டிசம்பர் 2004 ஆம் திகதி வரை 8.9 றிச்டர் அளவுக்குக் கூடுதலாகப் புவிநடுக்கம் பதிவாகியது கிடையாது. இங்கு ஏற்பட்ட சுமாத்திராப் புவிநடுக்கம் 90 றிச்டர் அளவினதாகி, கின்னஸ் சாதனையைப் பதிவு செய்துள்ளது. 1960 இல் சில்லியில் ஏற்பட்ட புவிநடுக்கம் 8.5 றிச்டர் அளவினதாயும் 1964இல் அலாஸ்காவிலேற்பட்ட புவிநடுக்கம் 8.6 றிச்டர் அளவினதாயும் பதிவாகியுள்ளன. இந்த அளவினைச் சிலர் 9.5 றிச்டர் எனவும் 9.2 றிச்டர் எனவும் பொய்ப்படக் கணித்துள்ளனராம்.
புவிநடுக்கத்தின் செறிவினை அளவிடுவதற்கு மேர்க்காலி (Mercali) என்பவர் ஒரளவுத் திட்டத்தினை வகுத்துள்ளார். அதனை “Modified Mercal Intensity Scale (MM) என்பர். அவரின்படி புவிநடுக்கங்களின் செறிவினை ரோமன் இலக்கங்களால் 1 இலிருந்து 12 வரை பிரித்து விளக்கியுள்ளார். சுருக்கமாக வருமாறு : I. எப்பொருளும் புவிநடுக்கம் ஏற்படும்போது விழாத நிலை. II. சிறப்பாக மாடிக்கட்டிடத்திலுள்ள ஒருசிலர் விழும் நிலை II. ஒருசிலர் விழுவர். பலர் புவிநடுக்கம் ஏற்பட்டதென்பதை உணரார். வாகனங்கள்
சிறு அசைவுநிலை. ع IV வீட்டிலுள்ள சிறு பொருட்கள் கீழேவிழும், கதவுகள், யன்னல்கள் அசைவுறும்.
சுவரில் சிறு வெடிப்புகள் தோன்றும் V. அனைவரும் விழுநிலை, கதவு, யன்னல், பாத்திரங்கள் உடைவுறும். உடைவுகள் தோன்றும், மரங்கள், கம்பங்கள் சிறிது சரியும். பெண்டுலம் கடிகாரம் ஓடாது நின்றுவிடும். V. அனைவரும் உணரும் நிலை. வீட்டிற்கு வெளியே அனைவரும் ஓடிவருவர். பாரமான தளபாடங்கள் அசைந்து விலகும். கட்டிடம் சிறிது தேசமுறும். VI. அனைவரும் வெளியே ஒடும்நிலை. பலமற்றகட்டமைப்புகள் உடைந்து
போகும் நிலை. VIII. அனைத்துக் கட்டிடங்களும் பாதிப்புறும் நிலை. சிம்னிகள், புராதன கட்டிடங்கள்,
சுவர்கள் என்பன சரிந்து விழும். கிண்ற்று நீர் மட்டத்தில் மாற்றம் தோன்றும். IX கட்டிடங்கள் பலவும் சரிந்து விழுநிலை. நிலம் பிளவுறும். நிலத்தடிக்குழாய்கள்
உடைவுறும். Χ. பாரிய கட்டிடங்கள் தகர்ந்துசரியும் நிலை. நிலத்தில் பாரிய பிளவுகள் தோன்றும்.
இருப்புப் பாதைகள் வளைவுறும். நிலச்சரிவுகள் ஏற்படும். X1 ஒருசில கட்டமைப்புகளே எஞ்சிநிற்கும் நிலை. நிலத்தில் பிளவுகள், குறைகள் தோன்றியிருக்கும். தரைக் கீழ் குழாய்கள் அனைத்தும் இயங்காது உடைந்து போகும். நிலச்சரிவுகள், மட்சரிவுகள் ஏற்படும். XII முற்றாக அழிவுநிலை. சுனாமி அலைகள் ஏற்படும். உயிரழிவு சொத்தழிவு,
பிளவுகள், நிலத்தோற்ற மாற்றம் எனப் பேரழிவுநிலை. 26 டிசம்பர் 2004ஆம் திகதி சுமாத்திராவில் உருவாகிய புவிநடுக்கத்தின் செறிவு XII ஆகும்.
45

Page 33
புவிநடுக்கத்தை முன்கூட்டியே அறியலாமா?
புவிநடுக்கத்தினை முன்கூட்டியே அறிந்து எதிர்வு கூறல். ஆரம்ப
நிலையிலேயே இன்றுமுள்ளது. இன்றும் பாரம்பரிய வாழ்க்கை முறையைக்
கைக்கொண்டு ஒழுகும் மக்களிடையே மரபுவழிவந்த அல்லது விஞ்ஞான பூர்வமாக
நிரூபிக்கமுடியாத நம்பிக்கைகள் சிலவுள்ளன. விலங்குகளின் விசித்திரமான
நடத்தைகள் புவிநடுக்கம் ஏற்படப் போவதை எச்சரிப்பதாகச் சீனர் நம்பினர். குதிரைகள்
அமைதி இழந்து தவிப்பதும், புற்றுக்களிலிருந்து பாம்புகள் திரளாக வெளியே
வருவதும், எறும்புகள் சாரிசாரியாக உயரங்களை நோக்கி நகர்வதும் புவிநடுக்கம்
ஏற்படுவதற்கான முன்னறிவித்தல்கள் என நம்பினர். எனினும் புவிநடுக்கம்
ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிவதற்குச் சில நம்பகமான வழிவகைகளுள்ளன.
அெெப்
1. புவிநடுக்கப் பதிகருவிகளில் புவிநடுக்கம் ஏற்படும்போதே அலைகளின் வரையம் பதிவாகின்றது. ஆனால், தரையின் பாறைகளில் ஏற்படுகின்ற திடீர் வெடிப்புக்கள் புவிநடுக்கம் ஏற்படப்போவதை முன்னறிவிக்கின்றன. பாறைகள் உடைவுறுகின்ற ஒலி எழும். வெறுந் தரையில் படுத்து உறங்குபவன் அந்தச் சத்தத்தைக் கேட்க முடியும்.
2. கிணறுகளில் நீர் மட்டும் தாழ்ந்தோ, உயர்ந்தோ மாற்றமடையும், பாறைப்படையில் எற்படுகின்ற உடைவு காரணமாக நீர்மட்டம் கீழிறங்கவும், அவ்வுடைவுகளினூடாகப் பெருகிவரும் நீர் மட்டத்தை உயர்த்தவும் செய்யும்.
3. பாறை உடைவு காரணமாக புவியினுள்ளிருந்து அனல் மிகு ராடன் வாயுக்கள் (Radioactive radengas) வெளிவரும். யுரேனியமும் ஏனைய மூலகங்களும் இரசாயன மாற்றமுறுவதால் உருவாகுவது ராடன் வாயுக்களாகும்.
4. அமெரிக்க யலோஸ்ரோன் பூங்காவில் தானாகவே நீரை வெளித்தள்ளும் ஒல்ட்பெயித் (Old Faith) நீரூற்றின் இயக்கத்திலிருந்து அறியமுடிகிறது. நீரைத் தள்ளும் வேகத்திலும் நேரத்திலும் இருந்து புவிநடுக்கம் ஏற்படவிருப்பதைக் கணிக்கின்றன. --
5. சில பிரதேசங்களில் மேற்பரப்புத் தரையில் தோன்றும் பொருமலும் சிறிதளவு கட்புலனாகா மேலுயர்வும் புவிநடுக்கம் ஏற்படுமென்பதை விஞ்ஞானிகளுக்குப் புலனாக்குகின்றன.
6. சீனர்கள் புவிநடுக்க மேற்பட விருப்பதை மிருகங்களின் நடத்தைகளிலிருந்து கணிக்கின்றனர். ஏற்கனவே கூறியவாறு குதிரைகளின் அமைதியின்மை, புற்றுக்களிலிருந்து பாம்புகள் வெளியேறல் என்பன புவி நடுக்கமேற்படப் போவதைக் கட்டியம் கூறுவதாகக் கொள்வர்.
யப்பானிய, ருசியப் புவிச்சரிதவியலறிஞர்கள் ஏற்படவிருக்கும் புவிநடுக்கத்தை முன்கூட்டியே கணிப்பதில் வல்லுநர். 1975 இல் 73 றிச்டர் சக்தியுடன் வடகீழ் சீனாவில் ஏற்படவிருந்த புவிநடுக்கத்தை 5 மணி நேரத்திற்கு முன்பே கணிப்பிட்டறிவித்ததனால் இலட்சக்கணக்கான மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதால் தப்பினர். ஹெய்சிங் நகரத்தின் அரைப் பங்கு கட்டிடங்கள்
46 கந்தையா குனராசா

நிர்மூலமாயின. சில கிராமங்கள் முற்றாக அழிந்துப்ோயின. ஆனால் சில நூறு மக்களே இப்புவிநடுக்கத்தால் மரணத்தைத் தழுவினர். ஆனால், 1976 இல் சீன தாங்ஷான் பகுதியில் 7.6 றிச்டர் அளவில் ஏற்படவிருந்த புவிநடுக்கத்தை முன்கூட்டியே கணிக்கமுடியாது போனதால் 5 இலட்சம் மக்கள் அதற்குப் பலியாகினர்.
புவிநடுக்கமேற்படும்போது பாறைகள் முன் பின்னாக இடம்மாறுவதால் அவை ஒன்றோடொன்று உராய்ந்து ஓசையை எழுப்புகின்றன. நிலம் மேல் நோக்கியும் கீழ்நோக்கியும் உந்தப்படுவதால் நிலத்தில் வெடிப்புகளும் பிளவுகளும் பொருமல்களும் ஏற்படுகின்றன.
புவிநடுக்கங்கள் நிலத்தின் மிக ஆழத்திலேயே உருவாகின்றன. புவியில் பாறைகள் முதலில் உடையும் பகுதியைக் குவிமையம் (Focus) என்றும், அதற்கு நேர் மேலே செங்குத்தாக மேற்பரப்பிலுள்ள இடத்தினை மேன்மையம் (Epicentre) என்றும். அழைப்பர். குவிமையம் பொதுவாக 70 கி. மீ. ஆழத்தினுள் அமையும். சிலவிடத்து தரையின் மேற்பரப்பிலிருந்து 700 கி. மீ. ஆழத்திலும் ஏற்படுவதுண்டு. புவிநடுக்கம் ஏற்பட்டதும் நிலவுடைவு பிளவு ஒரு செக்கனிற்கு 3 கி. மீ. வேகத்தில் கருங்கல்லில் பரவும். இந்த நிலவுடைவானது நிலக்குறைத்தளத்தில் ஏற்படின் இந்த உடைவிற்கு ஒரு பக்கத்திலுள்ள பாறைப்படை கீழே இறங்கலாம். மற்றைய பக்கப் பாறைப்படை மேலுயரலாம். அல்லது கிடையாகப் பக்கம் பக்கமாக நகரலாம்.
புவிநடுக்கமரணங்கள் பின்வரும் காரணிகளால் ஏற்படுகின்றன.
1. கட்டிடங்கள் திடீரெனத் தகர்ந்து சரிவதால் அவற்றின் இடிபாடுகளுக்கிடையே
அகப்பட்டு மரணிப்போர் தொகை மிக அதிகம்.
2. எரிபொருள் குழாய்கள் தகர்ந்து, தீபற்றுவதால் அதனால் இறப்போர் அதிகம்.
3. நிலச்சரிவுகளால் கட்டிடங்களும் மக்களும் மூடப்படுவதால் மரணிப்போர் ஒரு சில பகுதியினர். 1970 இல் பேருவில் ஏற்பட்ட (775 றிச்டர் அளவு) அந்தீஸ் மலை நிலச்சரிவினுள் 17 ஆயிரம் மக்கள் மூடுண்டு மறைந்தனர். 1920 இல் சீன மலைக் குகைகளில் வாழ்ந்திருந்த 100000 மக்கள் புவிநடுக்கத்தால் அவை தகர்ந்து சரிய அவற்றினுள் அகப்படிேறந்தனர்.
4. புவிநடுக்கம் ஏற்பட்டதும் (80 றிச்ட் அளவுக்கு மேல் சுனாமி எனப்படும் ஆழிப் பேரலை உருவாகிக் காவு கொள்கின்ற உயிர்களின் எண்ணிக்கை மிக மிக அதிகமாகும். 26 டிசம்பர் 2004 சுமாத்திராச் சுனாமி இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் 31/2 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களைப் பலி கொண்டோய்ந்தது. ஒரு பிரதேசத்தில் பெரியதொரு புவிநடுக்கம் ஏற்பட்டால் அதனைத் தொடர்ந்து பல சிறியளவிலான புவிநடுக்கங்கள் தொடர்ந்து தோன்றி மக்களைக் கிலி கொள்ள வைக்கும். 1964 இல் அலாஸ்காவில் சில ஆயிரம் தடவைகள் புவிநடுக்கங்கள் ஏற்பட்டது. சுமாத்திராப் புவிநடுக்கத்தினைத் தொடர்ந்து (2004) 600 க்கு மேற்பட்ட சிறிய புவிநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. பாரிய புவிநடுக்கத்தால் தகர்ந்து நிலைகுலைந்து போயிருக்கும் கட்டிடங்கள். அதனைத் தொடர்ந்து வரும் சிறிய புவிநடுக்கங்களால் மேலும் சிதைவுற்றுப் போய்விடுகின்றன.
சுனாமி 47

Page 34
சுனாம்ப் பேரலை
சிமுத்திர அடித்தளத்திலேற்படுகின்ற புவிநடுக்கம், குவிமையத்தினைச் சுற்றியுள்ள சமுத்திர நீரை மிக வேகமாக உந்தித் தள்ளுவதால் மிக வேகமான பொங்கு அலைகள் ஒன்று அல்லது ஒன்றிக்கு மேற்பட்ட 'சுனாமி அலைகளை (Tsunami Waves) த் தோற்றுவிக்கின்றன. இவற்றினைப் பெருக்கு அலைகள் (Tidal Waves) எனவும் அழைப்பர். சந்திர-புவி என்பனவற்றிக்கு இடையிலான ஈர்ப்பின் காரணமாகத் தோன்றும் பெருக்கு அலைகளுக்கும் இதற்கும் எதுவித சம்பந்தமுமில்லை. புவிநடுக்க அலைகள் (Seismic Sea waves) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த அலைகள் கடற்கரையோரத் துறைகளைத் தாக்குவதால் ‘துறைமுக அலைகள்’ (Harbour Waves) என அர்த்தப்படும் “சுனாமி’ என்ற வார்த்தை இதனைக் குறிக்க முதன்முதல் யப்பானியரால் பயன்படுத்தப்பட்டது.
ε f சமுத்திர மலைமுகடு எரிமலை சமுத்திர அகழி litarinošiandi
...་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ཨ་མ་ཨཏ་༦༦་ཨ་
சமுத்திர அகழி
ላ & *:
مڼه د சமுத்திரத்தகடு 會 DroïLIOL `*«X.
6kмини Χ. XX) drøfsið ఖ: பாறை கரைந்து பாறைக்குழம்பாகும் ,
路 படம் - 04A புவிக்கவசத்தகடுகளின் நடத்தைகள்
8 கந்தையா குணராசா
 
 
 
 
 

சுனாமியின் தோற்றம்
சுனாமி ஆழிப் பேரலையின் தோற்றம் முக்கியமாகப் பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது.
1. கவசத் தகடுகளின் ஒருங்கல் ஏற்படுத்தும் அமிழ்தல் - சமுத்திரத் தகடும் கண்டத்தகடும் ஒன்றினை ஒன்று நோக்கி ஒருங்கும் போது, அடர்த்தி கூடிய சமுத்திரத் தகடு கண்டத் தகட்டின் கீழ் அமிழ்கிறது. (படம்: 4A ஐப் பார்க்க). அமிழும் போது இரு தகடுகளும் சந்தித்து அமிழுமிடத்தில் பெரியதொரு அகழி (Trench) தோன்றுகிறது. அதனால், சமுத்திர நீரானது அந்த அகழியினுள் மிகவேகமாக உள்வாங்கப்படுகிறது. ஒரு கட்டத்தில், (ஒரு துவாரத்தினுள் நீர்புகும்போது, துவாரத்தினுள்ளிலிருந்து வெளியேறும் வாயு ஏற்படுத்தும் குமிழ்க்கொந்தளிப்பு போல) புவியோட்டிலேற்பட்ட இடைவெளியூடாக மான்ரலிருந்து வெளியேறும் வாயுக்கள் அகழியினுள் உள் நுழையும் சமுத்திர நீரை மிக்கவிசையோடு உந்தி வெளியே தள்ளி விடுகிறது. அதனால் சுனாமி என்ற பேரலை தோன்றுகிறது. (பக்கம் 13 படம்)
2. சமுத்திரத் தகட்டினைத் துழைத்துக் கொண்டு, பாறைக்குழம்பு (Magma) புவியின் மேல் மிக்க வேகமாக எரிமலைக் குழம்பாகக் (Lava) கக்கும் போதும் சுனாமி அலைகள் உருவாகின்றன.
3. சமுத்திரவடித்தளத்தில் பாரிய நிலச் சரிவுகள் அல்லது நில அசைவுகள்
ஏற்படில் சிறியளவான சுனாமி அலைகள் தோன்றுகின்றன.
4. பாரிய விண்கற்கள் வானவெளியிலிருந்து வளிமண்டலத்தினைத் துளைத்துக் கொண்டு, மிக வேகமாக வந்து சமுத்திரத்தில் வீழ்ந்தாலும் சுனாமி அலை தோன்றும்.
சாதாரண கடலலைகள் போன்றதல்ல, சுனாமி அலைகள்: கடுங்காற்றொன்றினால் உருவாக்கப்படும் கடல் அலையின் அலை நீளம் 400 மீற்றர் வரையிலானதாகவிருக்கும். அது ஆழ்கடலில் மணிக்கு 90 கி. மீ. வேகத்தில் பயணப்பட்டு 0.6 தொட்டு 3 மீற்றர் விரையிலான உயரத்தில் கடற்கரையை மோதித் திரும்பும். அதனால் சுனாமிப் பேரலைலையானது 160 கி.மீ (160000 மீற்றர்) வரையிலான அலைநீளத்தைக் கொண்டிருக்கும் ஆழ்கடலில் மணிக்கு 450 கீ. மீ. தொட்டு 800 கி.மீ. வரையிலான வேகத்தில் 0.6 மீற்றர் தொட்டு 2 மீற்றர் வரையிலான உயரத்தில் விரைந்து செல்லும். ஆழங்குறைந்த கடற்கரையோரத்தை அடைந்ததும் சுனாமியின் வேகம் மணிக்கு 50 தொட்டு 100 கி.மீ. ஆகக் குறைந்து, அதேவேளை அதன் உயரம் 30 மீற்றர் இரு பனை உயரம்) வரை உயர்ந்து, ஆர்ப்பரித்து கரையோரத்தைத் துடைத்து எடுக்கும். யப்பானில் 1971இல் ரியுகியூ தீவுகளை 85 மீற்றர்கள் உயரமான சுனாமி அலைகள் தாக்கியுள்ளன.
சுனாமி 49

Page 35
சுனாமியின் நடத்தைகள்
50
8.0 றிச்டர் அளவிற்கு மேலாகப் புவிநடுக்கம் சமுத்திர அடித்தளத்தில் ஏற்பட்டாலேயே சுனாமி ஆழிப்பேரலை உருவாகும். புவி நடுக்கமேற்படுவதை முன் கூட்டியே அறிவதற்கான அதே காரணிகள் சுனாமி அலையின் தோற்றத்தினையும் முன்கூட்டி அறிய உதவும்.
ஆழ்கடலில் மிகுந்த வேகம் கொண்டதாகவும் (மணிக்கு 450-800கி.மீ, சொற்ப உயரம் கொண்டதாகவும் (2 மீற்றர்) சுனாமி விளங்கும். பாரிய கப்பல்களின் கீழ் நல்ல பிள்ளையாக நழுவிச் சென்று விடும்.
சுனாமி தோன்றுவதற்கு முன் ஆயிரக் கணக்கான கி. மீ. அப்பாலுள்ள கடற்கரையோரங்களிலும் கூட சமுத்திரம் உள்வாங்குவதைக் காண முடியும். சமுத்திரத் தகடு, கண்டத்தகட்டின் கீழ் அமிழ்தலால் ஏற்பட்ட சமுத்திர அகழியினுள் சமுத்திர நீர் விரைந்து புகுவதனால், கரையோரங்களில் சமுத்திர நீர் பின்வாங்கி, சமுத்திரத்தரை 2 அல்லது 3 கி. மீ. தூரம் வரை வெறும் நிலமாகத் தெரியும்.
சுனாமி அலைகளின் அலை நீளம் சாதாரண அலைநீளத்திலும் பார்க்கப் (160000 மீற்றர்) பெரியதாகையால், புவிநடுக்கம் ஏற்பட்ட இடத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான கி. மீ. தூரத்திலமைந்திருக்கும் கடற்கரை யோரங்களையும் சுனாமி தாக்கியழிக்காது விடுவதில்லை.
ஆழங்குறைந்த கடற்கரையோரங்களை அடையும் போது, சுனாமியின் வேகம் குறைகிறது. ஆனால் அதன் உயரம் அதிகரிக்கிறது. (30 மீற்றர் - 85 மீற்றர்).
கரையோரத்தை முதலில் தாக்கிய சுனாமி அலையைப் பின் தொடர்ந்து 20 தொட்டு 45 நிமிடநேர இடைவேளையில், சில மணி நேரங்களுக்கு சுனாமியலைகளின் தொடர் தாக்கம் இருக்கும்.
சுனாமி ஒரு கெட்ட சனியன். கரையோரத்தை நோக்கித் தன் அலை நாக்கினை ஒரு அலைச்சுவராக நீட்டினால் போதும், 100 மீற்றரிலிருந்து 300 மீற்றர் வரையிலான கரையோரப்பிரதேசம் துடைத்தெடுக்கப்பட்டு விடும்
கரையோரத்தினை தாக்கும் சுனாமியின் முதல் அலை, ஆழங்குறைந்த கடல் பரப்பின் பல்வகை அடையல்களையும் வாரி எடுத்து வருவதால், கரும் அணை அரக்கனாகக் கடற்கரையோரங்களைத் தழுவும். இரண்டாம் மூன்றாம் சுனாமி அலைகள், முதலாவது சுனாமி அலை வளி எடுத்துச் சென்ற சடலங்களையும், பகுப்பொருட்களையும் மீண்டும் கரையோரங்களில் துப்பி
விடும்.
கந்தையா குணராசா

9. சுனாமிப் பேரலை உருவாக்கும் மரணங்கள் பல்வகையின :
91. மிகுந்த சக்தியோடும், அளவிட முடியாத விசையோடும் மனிதரைத் தாக்கும்போது அந்த நேரடித் தாக்குதலினாலேயே ஆயிரக் கணக்கானோர் இறந்து விடுவர்.
92 அள்ளிய மனிதரை, எதிர்ப்படும் கட்டிடங்கள், மரங்கள், பாறைகள், வாகனங்கள் என்பனவற்றோடு மோதி அடிப்பதனால் மரணிப்போர் இன்னோர் ஆயிரக் கணக்கானோர்.
93 வீடுகள், கட்டிடங்கள் என்பனவற்றைக் கணப்பொழுதில் சுனாமி அலைகள் மோதித் தகர்ந்து விடுவதால் அவற்றுள் அகப்பட்டு இறப்போர் இன்னோர் ஆயிரக்கணக்காவார்.
9.4 சுனாமி அலை நீரினுள் மூழ்கி மூச்சடக்கிச் செத்தோர் பலர்;
95 சுனாமி தன்னுடன் காவிவரும் அசுத்த நீரினைப் பருகி மரணத்தைத்
தழுவிக் கொண்டோர் பலர்.
9.6 சுனாமி காவிவந்த கடல் மண்ணாலும் சேற்றினாலும் மூடப்பட்டு
சமாதியானோர் நூற்றுக்கணக்கானோர்.
சுனாமி தாக்கும் பிரதேசங்கள்
சுனாமியினால் அதிகம் தாக்கப்படும் பிரதேசம் பசுபிக் கரையோரங்களான அடிக்கடி புவிநடுக்கங்கள் ஏற்படுகின்ற தென் அமெரிக்காக் கரையோரம் தொட்டு அலாஸ்கா - அலூசியன் தீவுப் பிரதேசம் வரையிலான பகுதிகளாம். 1964இல் அலாஸ்காவில் ஏற்பட்ட புவி நடுக்கத்தால் உருவான சுனாமி, 20 அடிகள் (7 மீற்றர்) உயர்ந்து வாஷிங்டன், ஒறிகொன், கலிபோர்ணியாவைத் தாக்கியது. அலாஸ்காவும் - ஹாவாயும் அதிகம் பாதிக்கப்பட்டன. இறந்தோர் தொகை 122 ஆகும். 1946இல் உருவான சுனாமியால் ஹிலோ, ஹவாய் ஏன்ப்னவற்றில் 159 பேர் மரணித்திருந்தனர்.
யப்பானில் அடிக்கடி சுனாமி ஏற்பட்டமைக்கான வரலாறுகளுண்டு. கி.மு. 684 இலேயே இவ்வாறான சுனாமி யப்பானைத் தாக்கியுள்ளது. 26, டிசம்பர் 2004 ஏற்பட்ட சுமாத்திரா சுனாமி ஏற்படுத்திய உயிரழிவு இலட்சங்களைத் தாண்டி விட்டது.
புவிநடுக்கம் ஏற்படுவதைக் துல்லியமாக முன்கூட்டியே அறிய
வாய்ப்பில்லை என்றாலும் சுனாமி ஏற்படப்போவதை குறைந்தது ஒருமணி நேரத்திற்கு முன்னரேயே அறிந்து கூறிவிட முடியும். எங்களுக்கு எவரும் கூறவில்லை.
சுனாமி 51

Page 36
சுமரத்திராச் சுனாமி
26 ஆம் திகதி டிசம்பர் 2004,
அதிகாலை 6.29 மணிக்கு இந்தோனேசியத் தீவுகளில் ஒன்றாகிய சுமாத்திராத் தீவின் வடமேற்குப் கரையோரத்தை அண்டிய இந்து மஹா சமுத்திரத்தில் பெரியதொரு அனர்த்தத்திற்கான ஆரம்பம் தூபமிடப்பட்டது. அவ்விடத்தின் மேல் மட்டத்திலிருந்து புவியோட்டில் 10000 மீற்றர்கள் ஆழத்தில் 90 றிச்டர் அளவிலான புவிநடுக்கமொன்று. அசுரபலத்தோடு உற்பத்தியாகி, சுனாமி என்கிற நாசகார அலைப் பெருக்கினைத் தோற்றுவித்து இந்து சமுத்திர நாடுகளைப் பெரும் சோகத்திலாழ்த்தியது.
இந்து சமுத்திர நாடுகள்
இந்து சமுத்திர நாடுகளான இந்தியா, இலங்கை, வங்காளதேசம், பாகிஸ்தான், மாலை தீவுகள், மியான்மார் (பர்மா), தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா முதலான ஆசிய நாடுகளும் மடகஸ்கார் தான்சானியா, கெனியா
சோமாலியா முதலான கி ழ க் க |ா பி ரி க் க க் கரையோர நாடுகளும் ஏமன், ஓமான், ஈரான் முதலான மத்திய கிழக்கு
நாடுகளுமடங்குகின்றன மியா ன் மார் (L if LO T; தாய்லாந்து, மலேசியா
இந்தோனேசியா ஆகிய நாடுகளின் மேற்குக் கரையோரங்களும், ஏனைய முன் குறித்த நாடுகளின்
s2 கந்தையா குனராசா
 
 

கிழக்குக் கரையோரங்களும் சுனாமியினால் தாக்கப்பட்டு உருக்குலைந்து போயின. புவிநடுக்க அலைகளின் பயணப் போக்குத் திசையில் குறுக்கிட்ட இந்தக் கரையோரங்கள் சுனாமி அலையில் வழித்தெடுக்கப்பட்டன. (படம் உள் அட்டை),
கிழக்கிந்தியத் தீவுகளென அழைக்கப்படும் இந்தோனேசியா ஏறத்தாழ 19 இலட்சம் சதுர கிலோமீற்றர்கள் பரப்பினையுடையது. தென்கிழக்காசிய நாடான இந்தோனேசியா சிறிதும் பெரிதுமாக 13667 தீவுகளைக் கொண்டதொரு நாடாகும். இந்த எண்ணிக்கை கொண்ட தீவுகளில் சுமார் 6061 தீவுகளில் மனிதர் எவரும் வசிப்பதில்லை. சுமாத்திரா, யாவா, களிமன்ரின் (போர்னியோ), சுலவேசி (செலிபஸ்), இரயன் யாவா மேற்கு நியுகினி) முதலான பெருந்தீவுகளும், பாலி, கம்பாலா, கம்பாதீவு, புளோர்ஸ், தைமூர், வெடக், புரு, செராம் என நூற்றுக்கணக்கான சிறு தீவுகளுமுள்ளன. இந்தோனேசியாவின் தலைநகரமான ஜாகர்த்தா யாவாத் தீவிலுள்ளது. சுமாத்திராத்தீவில் பண்டா அசே, சிபோல்கா, மோடின், பெங்குளு, புலோம்பாங், பாக்கான்பாறு என்பன முக்கிய நகர மையங்களாம்.
இந்து சமுத்திரத்தில் மிக முக்கியமான வல்லரசு இந்தியாவாகும். 32, 87 263 சதுர கிலோமீற்றர் பரப்பினைக் கொண்ட இந்த நாட்டில் 1050 மில். மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 28 மாநிலங்களின் ஒருங்கிணைப்பாக விளங்கும் இந்தியாவின் மத்திய ஆட்சிப் பகுதிகளாக அந்தமான்-நிக்கோபார் தீவுகள், இலட்ச தீவுகள் என்பனவும் சண்டிகார், டாம்ன் டையூ, தாக்ரா, நாகர் ஹவேரி, பாண்டிச்சேரி என்பனவும் விளங்குகின்றன.
8249 சதுர கிலோமீற்றர் பரப்பினைக் கொண்ட அந்தமான் நிக்கோபார் தீவுகள், சென்னையிலிருந்து 1190 கிலோமீற்றர் தூரத்தில், இந்து சமுத்திரத்தின் மேற்குப் பகுதியில் சுமாத்திராத் தீவுக்கு வடக்காக அமைந்துள்ளன. பெரிதும் சிறிதுமான தீவுகள்
"r''' '''N'w YY Y " ! متمم
s
\wሥ(8$ ノ تم تمسسيس அவுஸ்திரேலியக்
= ܓܠ” கவசத்தகரு A سیستشناسبتها یہX
SS
சுனாமி 53

Page 37
பலவற்றின் இணைப்பே அந்தமான் நிக்கோபார் மாநிலமாகும். வட அந்தமான், மத்திய அந்தமான், தென் அந்தமான், சிறிய அந்தமான், சிறிய நிக்கோபார். பெரிய நிக்கோபார் முதலியன அவற்றுள் குறிப்பிடத்தக்கனவாகவுள்ளன. போர்ட்பிளேயர் அந்தமானின் தலைநகராகவும், கார்நிகோபார் நிக்கோபாரின் தலைநகராகவும் விளங்குகின்றன.
இலங்கை இந்து சமுத்திரத்தின் மத்தியிலமைந்துள்ள நாடு. இலங்கைக்குத் தென் மேற்கே 700 கி.மீ. தூரத்தில் சுமார் 2000 எண்ணிக்கை வரையிலான தீவுக்கூட்டங்களின் தொகுதியாக மாலை தீவுகள் விளங்குகின்றன. பலவற்றில் மக்கள் வாழ்வதில்லை.
இந்து சமுத்திர நாடுகளில் இந்தியா, வங்காளதேசம், இலங்கை, மாலைதீவுகள் என்பன இந்தியக்கவசத் தகட்டில் அமைந்துள்ளன. மியான்மார், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா என்பன ஐரோ ஆசியக் கவசத்தகட்டில் அமைந்திருக்கின்றன. ஆபிரிக்கக் கிழக்குக்கரை நாடுகளும் சுமாத்திராவும் ஆபிரிக்கக் கவசத் தகட்டிலுள்ளன. இந்தியக் கவசத்தகட்டினையும் ஐரோ-ஆசியக் கவசத் தகட்டினையும் பிரிக்கின்ற விளிம்பு எல்லை இமயமலை - அரக்கன் யோமா ஆகிய இளம் மடிப்பு மலைகளின் தென்புறமாக வந்து, இந்து சமுத்திரத்தில் பிரவேசித்து சுமாத்திரா- யாவா தீவுகளின் மேற்கு, தெற்குக் கரைகளூடாக வட நியூகினித் தீவை அடைகின்றது. இந்த எல்லை விளிம்பு கவசத் தகடுகள் ஒன்றினை ஒன்று நோக்கி ஒடுங்கும் செயற்பாட்டினைக் கொண்டவை என ஏற்கனவே புவிச்சரிதவியலறிஞர்கள் அடையாளங் கண்டுள்ளனர். சுமாத்திராத் தீவினை அடுத்து மேற்குப் பகுதியில் ஒரு சிறிய கவசத்தகடு அண்மைக் காலத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனைப் பர்மியத்தகடு என்பர். பர்மியத் தகட்டில் அந்தமான் நிக்கோபார் தீவுகளும், சிமியிலு. நியாஸ், பட்டுத்தீவு, சிபெரட் மென்ரவாய் தீவு முதலான சுமாத்ராவின் மேற்குக் கரையோரத் தீவுகளும் அமைந்துள்ளன. (படம் : 2ஐப் பார்க்க).
:கீழ் அகிமூக் தகடும் மேலுயரும் தகடும்
படம் - 048 சுனாமியின் பயணம்
*、
5. கந்தையா குனராசா
 

நடந்ததென்ன?
1.
சுனாமி
26 டிசம்பர் 2004 அதிகாலை 6 மணி 2 நிமிடமளவில், புவியோட்டின் கீழ் மான்ரில் படையில் கிளர்மின் வீச்சுக்கள் ஏற்பட்டு, அவை மேற்காவுகை ஓட்டங்களாக மாறி, இந்தியக் கவசத்தட்டையும், பர்மியன் தகட்டுடன் கூடிய ஐரோஆசியாகக் கவசத்தகட்டையும் தாக்கின. அதனால், இந்தியக் கவசத்தகடும் ஐரோ - ஆசியக் கவசத்தகடும் ஒன்றினை ஒன்று நோக்கி ஒருங்கி மெதுவாக நகரத் தொடங்கின் (படம் 4Aயினைப் பார்க்க
அதிகாலை நேரம் 628,அடர்த்தி கூடிய இந்தியக் கவசத் தகட்டின் சமுத்திரத்தகடு, அடர்த்தி குறைந்த ஐரோ ஆசியக் கவசத் தகட்டுடன் முற்குறிப்பிட்ட விளிம்பில் மோதுகிறது. அம் மோதலின் விளைவாக பர்மியத்தகட்டின் கீழ் இந்திய சமுத்திரத் தகடு அடிச்செருகுதலுக்குள்ளாகி அமிழத் தொடங்குகிறது. பாகுத் தன்மையும், உயர் வெப்பநிலையும் கொண்ட மான்ரில் படையினுள் இந்திய சமுத்திரத்தகடு அமிழ்ந்தது. இவ்வாறு மான்ரில் படையினுள், ஒரு கண்ணாடிக் கோப்பையினுள் இராசவள்ளிக் கிழங்குக் களியினுள் கரண்டி ஒன்று சாய்வாக அமிழ்வது போல அமிழ்கிறது. கரண்டி ஒரு கட்டத்தில் கண்ணாடிக் கோப்பையின் அடித்தளத்தில் தடைப்பட்டு நிற்கும். அதுபோல மான்ரினுள் அமிழத் தொடங்கிய சமுத்திரத் தகட்டினை மான்ரில் படையின் 670 கி. மீ. தளம் தடையாக நின்று தடுக்கிறது. அமிழ்ந்த சமுத்திரத்தகடு இத் தடையில் வேகமாக மோதுகிறது. அவ்வாறு மோதும்போது ஏற்படும் பயங்கரமான குலுக்கம், அபரிதமான விசையோடு புவிநடுக்கத்தைத் தோற்றுவிக்கின்றது.
காலை 6.29 மணி. சுமாத்ராவின் வடக்கே மேற்குக் கரையின் மிக ஆழத்தில் மேலே விபரித்தவாறு 90 றிச்டர் வேகத்துடன் சுமாத்ராவின் மேற்குக் கரையோர சிறு தீவான சிமுயிலிவிலுள்ள பர்சு நாஸ்ரே என்ற இடத்திற்கு வடக்கே 42 கி.மீ. தூரத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உறங்கிக் கிடந்த அரக்கன் துயில் கலைந்து எழுகிறான். இந்தியக் கவசத்தகடு, பர்மியூத் கவசத்தகட்டின் அடியில் அமிழ்ந்து நகர்ந்ததால் ஏற்பட்ட புவிநடுக்கமாக இது அமைகிறது.
புவிநடுக்கம் ஏற்பட்ட மையத்திலிருந்து புவிநடுக்க அலைகள் உருவாகின்றன. (P) அலை எனப்படும் முதலலை மிகவேகமாக புறப்பட்டு, தன் பயணப் பாதையைக் குறுக்கிடும் பாறைப் பருப்பொருட்களை ஒடுங்கவும் விரியவும் வைக்கின்றன. அதனைத் தொடர்ந்து புறப்பட்ட (S) அலைகள் எனப்படும் துணை அலைகள் தாம் பயணம் செய்யும் பாதையில் குறுக்கிடும் பருப் பொருட்களை மேல் கீழாக அலை வடிவில் ஏற்றியிறக்குகின்றது. புவிநடுக்கம் ஏற்பட்ட குவிமையத்திலிருந்து (Focus) எல்லாத் திசைகளிலும் சுமாத்திராப் புவிநடுக்க அலைகள் பாய்ந்தன. அதனால் சுமாத்திரா, யாவா, அந்தமான், நிக்கோபார் பகுதிகள் புவிநடுக்கத்தின் நேரடித் தாக்குதலுக்குள்ளாகின.
55

Page 38
முதலலைகள் முன் பின்னாக அசைத்து விட்ட கட்டமைப்புகளை, துணை அலைகள் மேல் கீழாக அசைத்துப் பொல பொலவெனத் தரையில் சரித்தன. புவிநடுக்கக் குவிமையத்தின் முக்கிய மேன்மையமாக வட சுமாத்திராவின் பண்டா அசேப் பிரதேசம் அமைந்ததால் அங்கிருந்த கட்டிடங்கள் தரையில் இடிந்து வீழ்ந்து கற்குவியங்களாகிப் போகின்றன. எல்லாத் திசைகளிலும் பாய்கின்ற புவிநடுக்க அலைகளின் வலிமை, தூரம் கூடக் கூட தேய்வடைகின்றது. இந்தியாவின் கிழக்குக் கரை, இலங்கையின் தென்கரை என்பனவற்றில் புவிநடுக்க அலைகளின் தேய்வான தாக்கமே உணரப்படுகிறது. ஆனால், 90 றிச்டர் அளவில் உருவாகிய சுமாத்திரா புவிநடுக்கம் பிறப்பித்த சுனாமி அரக்கன் இப்பிரதேசங்களையும் துவம்சம் செய்யப் புறப்பட்டான்.
அதிகாலை 6.30 மணி. இந்திய சமுத்திரத்தகடு, பர்மியன் தகட்டின் அடியில் அமிழத் தொடங்கியதும், இவ்விரு தகடுகளின் விளிம்பில் பெரியதொரு சமுத்திரப்பிளவு அல்லது அகழி (Trench) அல்லது குறை (Fault) ஏறத்தாழ 1000 கிலோமீற்றர் நீளத்திற்கு வடக்குத் தெற்காக உருவாகிறது. ஏற்கனவே இந்த விளிம்பு எல்லையாக யாவா அகழி அமைந்திருந்தது. இந்த அகழி மேலும் அகன்று ஆழமாகி வாயைப் பிளந்து கொள்கிறது. இவ்வளவும் ஒரு நிமிடத்தினுள் நிகழ்ந்தேறி விடுகிறது. சமுத்திரத்தினடியில் அகழி வாய்பிளந்தது. அவ்வளவுதான். இந்து சமுத்திர நீரானது அந்த அகழிப் பிளவினுள் வேகமாகக்
கீழிறங்கி நிரப்பத் தொடங்குகிறது. ஆயிரமாயிரம் கிலோமீற்றர் கனபரிமான
நீர் கீழிறங்கத் தொடங்கியதால், இந்து சமுத்திர நாடுகளின் கரையோரங்களில் கடலானது பின் வாங்குவதையும், கடல் அடித்தளம் வெளித் தெரியும் காட்சியையும் வியப்புடன் பார்த்தனர். எவ்வளவு சமுத்திர நீர் தான் அகழியினுள் இறங்கமுடியும்? நிலக்குழி துவாரம் ஒன்றினுள் நீரை வார்க்கும்போது, நிரம்பும் நிலையில் துவாரத்தினுள்ள வாயு குமிழிட்டபடி மேல் நோக்கி உயர்வதில்லையா? அதுபோல மான்ரில் படையினுள் சிறைப்பட்ட வாயுக்கள் உள் நுழைந்த சமுத்திர நீரை அசுரபலத்தோடு உந்தித்தள்ளிக் கொண்டு மேற்கிளம்புகின்றன. அப்போது நேரம் காலை 6.45 மணி. அதனால் கடல்மட்டம் அகழிப் பரப்பில் திடீரென பொங்கிப் பிரவகித்து உயர்கிறது. இராச்சத அலையாகிய “சுனாமி” விழித்துக் கொண்டான். (பக்கம் 113 பார்க்க)
சுமாத்திராப் புவிநடுக்கம் ஏற்பட்டதும் சுனாமிப் பேரலை உருவாகும் சாத்தியக் கூறுகள் ஏட்பட்டிருந்தன. புவிநடுக்கமானது 8.0 றிச்டர் அளவிற்குக் கூடுதலாக ஏட்பட்டிருக்கின்றது. சமுத்திரக் கரையோரங்களில் கடல் பின் வாங்கியிருக்கின்றது. கரையோரக் கிணறுகளில் நீர் மட்டம் திடீரென வற்றியிருக்கின்றது. 26 டிசம்பர் 2004 காலை 6.45 க்கு சுமாத்திராச்சுனாமி பொங்கி எழுந்துள்ளது. அது இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை வந்தடைய 120 நிமிடங்கள் இரு மணித்தியாலங்கள்) எடுத்துள்ளது. இந்தியக் கிழக்குக் கரையை வந்தடைய 130 நிமிடங்கள் எடுத்துள்ளது. கன்னியா குமரியைக் கடந்து மாலை
கந்தையா குணராசா

தீவுகளை நோக்கிச் செல்ல 180 நிமிடங்களை எடுத்துக் கொண்டுள்ளது. ஆக அன்று காலை 6.45 க்கு வட சுமாத்திராவின் மேற்குக் கரையோரத்தில் தோற்றம் பெற்ற சுனாமி, இலங்கையை சர்வதேச நேரப்படி காலை 8.55 மணிக்குத் தாக்கியுள்ளது. (அது இலங்கை நேரப்படி காலை 9.15 மணியாகும்) காலை 855 மணிக்கு இந்தியாவின் கிழக்குக் கரையை ஆக்கிரமித்துள்ளது. சுமாத்திராவில் புவிநடுக்கம் ஏற்பட்டு 2 மணித்தியால நேரத்தின் பின்னரே இலங்கையின் கரையை அது தொட்டிருக்கின்றது என்பது முக்கியமான சம்பவம்.
6. சுமாத்திராச் சுனாமி, கவசத்தகட்டின் அமிழ்தலால் உருவாகிய யாவா அகழியிலிருந்து பொங்கியெழுந்தது. ஆழ்கடலில் ஏறக்குறைய 1 மீற்றர் உயரத்தில் ஆனால் மணிக்கு 800 கிலோமீற்றர் வேகத்தில் அது தன் பயணத்தை ஆரம்பித்தது. சுனாமியின் வேகம், கடலின் ஆழத்தினைப் பொறுத்த விடயமாகும். கடற்கரையோரங்களையடுத்து ஆழங்குறைந்த கடலில் அதன் வேகம் மணிக்கு 100கிலோமீற்றராகக் குறைந்த போதிலும் அதன் உயரம் 10 மீற்றர் தொட்டு எட்டு மீற்றர் வரையினதாக அலைச்சுவராக அமைந்திருந்தது. காதுச் சவ்வுகளைத் தகர்க்கும் பேரிரைச்சலோடு சுனாமி கரையோரங்களைத் தாக்கியது. (படம் 4B ஐப் பார்க்கவும். சுனாமி கரையோரங்களைத் தாக்கும்போது ஒரு சதுர மீற்றருக்கு 50 ஆயிரம் தொன் எடையுள்ள கடல் நீரைப் பாய்ச்சியது.
பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்
இந்து சமுத்திர நாடுகளான இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, மலேசியா, மாலைதீவு, சோமாலியா, மியன்மார், வங்களாதேசம் முதலான நாடுகள் சுனாமியினால் தாக்கப்பட்டன. இந்தோனேசியாவில் சுமாத்திரா, யாவா, கணிமான்ரன் ஆகிய தீவுகள் பாதிப்பிற்குள்ளாயின. மியன்மார், தாய்லாந்து, மலேசியா முதலான நாடுகளின் மேற்குக் கரைப் பகுதிகள் வடபகுதிகள் என்பனவற்றின் கரையோரங்கள் அதிகம் பாதிப்புற்றுள்ளன. இந்தியாவில் சுஜாமியினால் பாதிப்பிற்குள்ளாகிய பிரதேசங்கள் நாகப்பட்டினம். கன்னியாகுமாழி கட்லூர் - பாண்டி சென்னை, அந்தமான், நிக்கோபார், கேரளா, ஆந்திரப்பிரதேசம் என்பனவற்றின் தெற்குக் கரையோரங்களும் கிழக்குக் கரையோரங்களும் சுனாமியால் தாக்கி அழிவுக்குள்ளாகின. 90 றிச்டர் அளவில் பதிவான சுமாத்திராப் புவிநடுக்கம் அதிவீரியமானதால், அதனால் உருவாகிய சுனாமி அலைகளின் தாக்கம் 2028 கி. மீ. தூரத்திலுள்ள இந்தியாவையும் தாக்கியுள்ளதோடு இந்து சமுத்திரத்தைக் கடந்து சான்சிபார், தான்சானியா, சோமாலியா ஆகிய ஆபிரிக்கக் கிழக்குக் கரை நாடுகளை 27ஆம் திகதி தாக்கியுள்ளது.
இலங்கையில் சுனாமியின் அசுரப்பசிக்கு இரையாகிய பகுதிகள் வடக்கே சுழிபுரக் கரையிலிருந்து கிழக்குக் பக்கமாகக் கரையோரமாகச் சென்று தெற்குக்
கரையோரங்களை உள்ளடக்கி வெள்ளவத்தை வரை அமைந்துள்ளன. யாழ்ப்பாண
4፡ኅዕrባበዕ V− gy

Page 39
மாவட்டத்தில் கீரிமலை, காங்கேசன்துறை, வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, கற்கோவளம், மணல்காடு, குடத்தனை, மருதடிக்குளம், உடுதுறை, ஆழியவளை, உடையார் துறை, கட்டைக்காடு, சுண்டிக்குளம் ஆகிய கரையோரப் பகுதிகள் சுனாமியின் தாக்குதலுக்குள்ளாகின. முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு. அலம்பில், கொக்கிளாய் ஆகிய பகுதிகள் சுனாமியால் பேரழிவைச் சந்தித்தன. திருகோணமலைமாவட்டத்தில் புல்மோட்டை, கல்லறுவை, கொடுவாக்காட்டுமூலை, குச்சவெளி, பெரியகரைச்சி, கும்புறுப்பிட்டி, நிலாவெளி, மாங்கனாய், செம்பாடு, திருகோணமலை, கிண்ணியா, மூதூர், தாமரைசில்லு, இக்கந்தை. உப்பூறல் என்பனவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை, சல்லித்தீவு, வெரண தீவு, யானை முனை, கற்குடா, கோட்டைமுனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, தாலங்குடா, செட்டிபாளையம், களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு. கல்லாறு முதலிய பகுதிகளும் பெரும் சேதத்தினை அடைந்தன, அம்பாறை மாவட்டத்தில் கல்லாறு, கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு பாலமுனை, அக்கரைப்பற்று, சின்னமுகத்துவாரம், திருக்கோயில், பொத்துவில், அறுகம்குடா, பாணமம், ஒக்கந்தை, குமண முதலான பிரதேசங்கள் சுனாமி அழிவினைப் பெற்றுக் கொண்டன. இலங்கையின் தென்கரையோரப் பிரதேசங்களில் யாலா, கிரிந்தை, அம்பாந்தோட்டை, தங்காலை, திக்குவலை, மாத்தறை, மிறிஸ்கா, ஆகன்கம, கொக்கல, காலி, ஹிக்கடுவை, அம்பலாங்கொடை, பலப்பிட்டி, பெந்தோட்டை, அளுத்கம, பேருவளை, களுத்துறை, வாதுவை, தெஹிவளை எனப்பல பகுதிகளைச் சுனாமி சீரழித்துள்ளது. சுருங்கச் சொல்லில் இலங்கையின் தென்கரையோரம், கிழக்குக் கரையோரம், வடக்குக் கரையோரம் என்பனவற்றினைச் சேர்ந்த பிரதேசங்கள் சுனாமியின் பாதிப்பற்குள்ளான பகுதிகளாகவுள்ளன.
முன்கூட்டியே அறியமுடியாதா?
உலக வரலாற்றில் அதிக வீரியம் மிக்க பூகம்பமாகச் சுமாத்திராப் புவிநடுக்கமும், அதிலிருந்து உற்பவமான சுனாமியும் விளங்குகின்றன. சுனாமியின் தாக்குதல் பரப்பில் இந்தோனேசியா மற்றும் பப்புவா, நியுகினிப் பகுதிகளில் இருபதுக்கும் மேற்பட்ட எரிமலைகளுள்ளன. யாவாக் கலையிலமைந்துள்ள காரக்கற்றோவா இவ்வகையில் மிக முக்கியமான எரிமலையாகும். இப்பசுபிக் பகுதியில் இவ்வாறான புவிநடுக்கங்களும் சுனாமிகளும் புதியனவல்ல. ஆனால், இந்து சமுத்திரப்பரப்பில் இவ்வகையிலான சுனாமி அனர்த்தம் புதிதாகும். பசுபிக் சமுத்திரப்பகுதி போலன்றி, இந்து சமுத்திரப்பகுதி அடிக்கடி சுனாமி தாக்குதல்களுக்கு உட்பட்டிருக்கவில்லை. அதனால் சுனாமிபற்றிய எச்சரிக்கை முறை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்கவில்லை.
பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் சுனாமி பற்றிய முன் எச்சரிக்கைமுறை தற்போதுள்ளது. ஆனால், முன்னர் ஏற்பட்ட பலத்த அனர்த்தங்களின் பின்னரே இந்த எச்சரிக்கை முறை அங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 1933 ஆம் ஆண்டு யப்பானில் 85 றிச்டர் அளவில் உண்டான கடலடி நில அதிர்வு காரணமாக 27 மீற்றர்
58 கந்தையா குனராசா

உயரம் கொண்ட சுனாமிப் பேரலை உருவாகி ஆயிரக்கணக்கான மக்களைப் பலியெடுத்து ஓய்ந்தது. பின்னர் அது மணிக்கு 756 கி. மீ. வேகத்தில் பசுபிக் சமுத்திரத்தைத் தாண்டி கலிபோர்ணிய சான்பிரான்சிஸ்கோ நகரைப் பத்துமணி நேரத்தின் பின் தாக்கி 3 ஆயிரம் மக்களைப் பலியெடுத்தது. அத்துடன் அரோப், வராப்பு எனப்படும் கடற்கரையோர இரு கிராமங்களை இருந்த சுவடு தெரியாமல் அழித்துவிட்டது. அவ்வேளை எழுந்த சுனாமியின் உயரம் 12 மீற்றர் எனக் கணித்துள்ளனர். அலாஸ்காவில் ஒரு புவிநடுக்கம் ஏற்பட்டால் அதன் சீற்றம் அவுஸ்திரேலியாவில் தெரிய 17 மணிநேரம் எடுக்கும் எனவே, பசுபிக் சமுத்திரக் கடற்கரை நாடுகள் 26 ஒன்று சேர்ந்து ஒருங்கிணைந்து சுனாமி பற்றிய ஆய்வினையும், அவற்றினை முன்கூட்டியே பதிவுசெய்து பரஸ்பரம் எச்சரிக்கை செய்யவும் கூடியதான வசதிகளை இன்று உருவாக்கிக் கொண்டுள்ளன. சிங்கப்பூரும் இந்த அமைப்பில் அங்கம் வகிப்பதால், 26 டிசம்பர் 2004 நிகழ்ந்த சுமாத்திராப் புவிநடுக்கம் பற்றிய முனனெச்சரிக்கை சிங்கப்பூரின் ஆய்வுமைய விஜயகுமார் என்பவருக்குக் கிடைத்தது. அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். ஆய்வுமையம் உடனடியாகச் சிந்தித்துச் செயற்பட்டதால் சிங்கப்பூரின் கடலோரப் பகுதிகளைச் சுனாமி தாக்குவதற்கு முன்பே நான்கு கிராம மக்களை அவ்விடங்களிலிருந்து வெளியேற்றி உயிர்ச் சேதமின்றி பாதுகாக்க முடிந்துள்ளது. அது போன்றதொரு எச்சரிக்கை ஆய்வு மையம் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் எது விடமுமில்லை.
இந்திய ஆள்புலத்தினுள் அடங்கும் அந்தமான், நிக்கோபார் தீவு, புவி அதிர்ச்சியாலும் சுனாமியாலும் பாதிக்கப்படுகிறது என்ற தகவல் இந்திய ஆய்வு மையங்களுக்குத் தெரியாதிருந்தது எனக் கொள்ளமுடியாது. அவ்மைய ஆய்வாளர்களின் அசட்டையினம் தான் பல பகுதிகளின் உயிரழிவுக்குக் காரணமாகிவிட்டதென இன்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரு சில ஆய்வாளர்களுக்காவது சுனாமி தாக்கப்போவது தெரிந்திருந்ததென்பதற்கும் சில அபாய அறிவிப்புகளை இந்திய அதிகாரிகள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதற்கான காரணங்களை உதாரணங்களாகக் குறிப்பிடலாம்.
1. சுமாத்திராப் புவிநடுக்கம் அதிகாடிஃ29 மணிக்கு ஏற்பட்டது. சரியாக 50 நிமிடங்கள் கழித்து காலை 7.19 மணிக்கு அந்தமான்-நிக்கோபார் தீவுகள் புவிஅதிர்ச்சிக்குள்ளாகின. 11 நிமிடங்கள் கழிந்து காலை 7.30 மணிக்கு நிக்கோபார் பகுதியிலிருக்கும் இந்திய விமானப்படை, இந்தியாவின் சென்னைப் பிரிவுடன் தொடர்பு கொள்ள முயல்கின்றது. 750 மணிக்கு சென்னை விமானப்படைப்பிரிவு நிக்கோபார் விமானப்படையுடன் தொடர்பு கொண்டது. அவ்வேளை நிக்கோபார் விமானப்படை அனுப்பிய இறுதிச்செய்தி: “தீவு முழுவதும் நீரில் முழ்கிக் கொண்டிருக்கின்றது. எங்கு பார்த்தாலும் நீர் நிறைந்துள்ளது ” அந்த விமானத்தளத்திலிருந்து 25 விமானப்படை அலுவலர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் சுனாமி காவு கொள்வதற்கு முன்னனுப்பிய இறுதிச்செய்தி இதுதான்.
ሐ›ነገfftዕ 59

Page 40
2.இந்தியாவின் செய்மதிகள் இரண்டு, காலை 7.30 இலிருந்து 750 வரை ஆழிப் பேரலைகள் நிக்கோபாரைச் சுற்றிச் சுழன்று தாக்குவதை புகைப்படங்கள் எடுத்துள்ளன. சுனாமி இரண்டு பனை உயரத்திற்கு எழுந்து ஆர்ப்பரித்து தீவினைத் தாக்குவதைப் படம் எடுத்துக் காட்டின. இருமணிநேரத்திற்குப் பின்னரே இந்தியக் கரையோரம் தாக்கப்படவிருப்பதை இந்திய அதிகாரிகளால் ஊகிக்கமுடியாது போனமை துரதிஷ்டமே.
3. அதே இந்தியச் செய்மதிகள், காலை 8.32 மணிக்கு இந்தியக் கிழக்குக்கரை, குறிப்பாகச் சென்னை, சுனாமியின் முதலலையால் தாக்கப்படுவதைப் படமாக்கியிருந்தன. சுனாமியின் இந்த முதலலைத் தாக்குதலுக்குப் பின்னர் நான்கு தடவைகள் சுனாமி ஆழிப்பேரலை கிழக்குக் கரையோரத்தைத் தாக்கியதை இந்திய செய்ம்மதி படமாக எடுத்திருந்தது. இரண்டாவது கடற்கொந்தளிப்பு காலை 9.20 மணிக்கும், மூன்றாவது காலை 10.20 மணிக்கும், நான்காவது காலை 10.40 மணிக்கும் இறுதித் தாக்குதல் காலை 11.00 மணிக்கும் நிகழ்ந்துள்ளமையைத் தெளிவாக இச்செய்மதிப்படங்கள் பதிவு செய்துள்ளன.
இவ்வாறு சில அபாய அறிவிப்புக்கள் வெளிவந்தும், இந்தியத் தரப்பு செயற்பட்டு தனது கடலோரப் பகுதிகளையும், அயல்நாடுகளையும் காப்பாற்ற முடியாது போனது. அதற்கு அவர்கள் கூறும் சாட்டுகள் இவைதாம். சுனாமி என்றவகை அனர்த்தம் இந்திய வரலாற்றில் முன்பு எங்கும் பதிவு செய்யப்பட்டில்லை. அதனால் எங்களுக்குத் தோன்றவேயில்லை. இது ஒரு ஒரு புதிய இயல் நிகழ்வு. நாட்டில் இது காலும் ஏற்பட்டிராத ஒன்று.
இலங்கைப் புவிச் சரிதவியல், கணிப்பொருள் மையம் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்போவதை அறிந்திருந்தன என்கின்றனர். இலங்கை நேரப்படி காலை 7.14 மணிக்கு முதலாவது எச்சரிக்கை பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்தில் விடுவிக்கப்பட்டிருக்கின்றது. ‘வடசுமாத்திராவின் மேற்குக் கடலின்அடியில் 9 ரிக்டர் அளவிலான பாரிய புவிநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. அது சுனாமிக் கடற்கோள் அனர்த்தத்தைத் தோற்றுவிக்கலாம் என முதல் எச்சரிக்கை கிடைத்தது. இந்த அறிவிப்பைத் தான் காலை 7.40 க்கு அறிந்து கொண்டதாக இலங்கைப் புவிச்சரிதவியல் கணிப்பொருள் மையப்பணிப்பாளர் சரத் வீரவர்ண குலசூரிய ஒப்புக் கொள்கிறார். அதேவேளை காலை 8.27 மணிக்குக் கல்முனையை முதலாவது சுனாமிப் பேரலை தாக்குவதற்குப் பன்னிரண்டு நிமிடங்களுக்கு முன் இரண்டாவது எச்சரிக்கையை ஹாவாயிலுள்ள பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை நிலையம் விடுவித்தது. இவற்றின்படி கல்முனையை சுனாமி முதலாவதாகத் தாக்குவதற்கு முன் 113 மணித்தியாலங்களுக்கு முன் இரண்டாவது
60 கந்தையா குனராசா

எச்சரிக்கையையும் இலங்கை பெற்றிருக்கின்றது. இவற்றினை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியிருக்கின்றார்கள் என்பது புலனாகின்றது.
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் “சுனாமி கடற்கோள் புதிதா?
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முன்னர் சுனாமி கடற்கோள் ஏற்பட்டிருக்கவில்லை எனக் கொள்ள முடியாது. பலதடவைகள் நீண்ட கால இடைவெளிகளில் ஏற்பட்டிருக்கின்றது என்பதற்கு கருத்துகளும் ஆதாரங்களுமுள்ளன. அவை:
1. புவிச்சரிதவியற் காலத்தில், 120 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் கயினோசோயிக் யுகத்தின் இயோசீன் என்ற காலத்தில் இந்தியத் தீபகற்பத்திற்குத் தெற்கே, அதனையும் உள்ளடக்கி பெரியதொரு நிலப்பரப்பு பரவிக்கிடந்தது. அந்த நிலப்பரப்பு 50° கிழக்கு நெடுங்கோட்டிலிருந்து 95° கிழக்கு நெடுங்கோடு வரையும் தெற்கே 15° தென்னகலக்கோடுவரை பரந்திருந்தது. அதனை லெமூரியாக் கண்டம் என அழைத்தனர். 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஐரோ ஆசியத்தகடும். இந்தியக் கவசத்தகடும் ஒன்றினை ஒன்று நோக்கி ஒருங்கின. இரண்டு கவசத்தகடுகளும் மோதியதால் அவற்றின் படிவுகள் மடிப்பு மலைகளாக உயர்ந்தன. அல்ப்பைன் - இமயமலைத் தொகுதி உருவாகிய காலம் அது. அதனை அல்ப்பைன் மலையாக்கம் என்பர். இவ்வாறான மலையாக்க நகர்வால் பெரியதோர் புவிநடுக்கமும், வானை முட்டும் சுனாமி அலைகளும் தோன்றின. லொமுரியாக் கண்டம் கடற்கோளுக்குள்ளாகியது. மடகஸ்கார், மொரிசியஸ், சிஷெல்ஸ், இலட்சதீவுகள், மாலைதீவுகள், இலங்கை, அந்தமான் நிக்கோபார் தீவுகள் என்பனவற்றினை எஞ்சவிட்டு மிகுதி லெமூரியா நிலப்பரப்புக் கடலினுள் சங்கமமாகி அமிழ்ந்து போயிற்று.
2. மயோசீன் என்ற காலத்தில் (ஏறத்தாழ 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்) யாழ்ப்பாணக்குடா நாடு என்ற சுண்ணாம்பூக்கல் பிரதேசம் கடலின் கீழிலிருந்து மேலெழுந்தது. அவ்வேளை யாழ்ங்பாணக் குடாநாட்டின் பரப்பு, மேற்கே நெடுந்தீவு வரை பரந்திருந்தது. அதாவது யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு தென் மேற்கே பரவியுள்ள காரைதீவு, வேலணை, மண்டைதீவு, அனலைதீவு, எழுவை தீவு, புங்குடுதீவு, நயினாதீவு, நெடுந்தீவு முதலானவை அனைத்தும் ஒருங்கிணைந்த பெருநிலப்பரப்பாக விளங்கியது. அவ்வேளையில் இந்திய நிலப்பரப்பு தனுஸ்கோடியிலிருந்து மன்னார்வரை இராமர் அணை மூலம் இணைக்கப்பட்ட நிலப்பரப்பாக விளங்கியது. காலகதியில் இப்பகுதியில் ஏற்பட்ட கடற்கோள், தீவுகளை எஞ்சவிட்டு மிகுதி நிலப்பரப்பனைக் காவு கொண்டது. இராமரணை எனப்படும் நிலப்பலம் கடலினுள் இடையிடையே அமிழ்ந்து அழிந்து போனது.
dsaftå 61

Page 41
3. கி. மு. 150ஆம் ஆண்டு இலங்கையின் இன்றைய களனி கங்கைக் கரையைச் சூழ்ந்து அமைந்திருந்த கல்யாணி இராச்சியத்தின் கரையோரப்பகுதிகள் பெரும் கடற்கோளுக்குள்ளாகி அழிந்துபோயின. கல்யாணி இராச்சியத்தின் மன்னனாக கல்யாணிதீசன் என்பவன் விளங்கினான். அவனுடைய சகோதரன் அய்ய உத்திகனுக்கும், தமையனான மன்னனின் மனைவிக்கும் கள்ள உறவு இருந்தது. இந்தக் கள்ள உறவு மன்னனுக்குத் தெரிந்தபோது, உத்திக்கன் நாட்டைவிட்டு ஓடிப்போனான். தமையன் மனைவிக்குப் பிக்குவேடமணிந்த ஒருவன் மூலம் காதல் ஒலை வரைந்தான். அவன் கல்யாணித் தலைமை பிக்குவுடன் கூடச் செல்லும் பிக்குகளோடு இணைந்து உள்ளே சென்று. அந்த ஒலையை அரசி முன் நழுவவிட்டான். அந்த ஒலையின் கையெழுத்து தலைமைத் தேரரின் கையெழுத்தினை ஒத்திருந்ததால் வெகுண்டெழுந்த மன்னன், தலைமைத் தேரரையும் தன் மனைவியையும் கணப்பொழுதில் தன் வாளுக்கு இரையாக்கி சமுத்திரத்தில் தள்ளிவிட்டதாக மகாவம்சம் கூறுகிறது. அதனால் சமுத்திரத்தேவன், கோபம் கொண்டு பொங்கியெழுந்து கலியாணி இராச்சியத்தின் தென்மேற்கின் பெரும்பகுதி கடற்கோளுக்குள்ளாக்கிப் போனது என மகாவம்சம் கூறுகிறது.
4. 2000 ஆண்டுகளுக்கு முன் கடற்கொந்தளிப்பினால் காவிரிப் பூம்பட்டினம் என்ற அழகிய நகரம், கடற்கோளுக்குள்ளானதாக சிலப்பதிகாரத்திலிருந்து அறியமுடிகிறது. இன்றைய பூம்புகாரை அடுத்துள்ள சமுத்திரப் பரப்பில் கடற்கோளால் அழிந்தமைக்குரிய ஆதாரங்களை இன்றும் காட்டுகின்றன.
5. கி. பி. 900 ஆண்டுகளில் நாகபட்டினம் பெரும் கடல் அலைத் தாக்குதலுக்குள்ளாகியதென்றும், அங்கிருந்த புத்தமடம் அழிந்து போனதென்றும் வரலாற்றாதாரங்கள் கூறுகின்றன. ராஜராஜசோழர் காலத்தில் நாகபட்டினத்தினைப் பிரமாண்டமான அலைகள் தாக்கிக் கடற்கொற்தளிப்பினையும் உருவாக்கின என்பதற்கு வரலாற்று ஆதாரங்களுள்ளன.
6. கி. பி. 1200 ஆம் ஆண்டில் மகாபலிபுரம் கடற் கொந்தளிப்பின் தாக்குதலுக்குள்ளாகியது. கடற்கரையோரத்திலிருந்து ஒரு கோயிலும், பல்வேறு கலைப்பொக்கிஷங்களும் அப்பேர்து கடலில் மூழகிப் போயின. 'தவெண்டர் தற்வேஸ் இந்தியா’ என்ற வரலாற்று நூலில் ஏ.எல். பாஷ்பம் மகாபலிபுரம்,கடல் கொந்தளிப்புக்குள்ளானதெனக் குறித்துள்ளார்.
7. 1881 ஆம் ஆண்டு நிக்கோபாரை ஒட்டி உருவாகிய 8.0 றிச்டர் அளவிலான புவிநடுக்கம் ஒரு சுனாமிக் கொந்தளிப்பினை இந்து சமுத்திரத்திப் பிரதேசத்தில் ஏற்படுத்தியுள்ளது.
கந்தைய ா குனராசா

8. 1883 ஆம் ஆண்டு சுமாத்திராவுக்கும் யாவாவுக்குமிடையில் காரக்கற்றோவா எரிமலை வெடித்துப் பாறைக்குழம்பைக் கக்கியது. அதனால் உருவாகிய சுனாமிப் பேரலை இந்தியா உட்பட இந்தோனேசியப் பகுதிகளைத் தாக்கி 30 ஆயிரம் மக்களின் உயிரைப் பலிகொண்டது.
9. 1941 ஜூன் 26இல் அந்தமான் தீவின் பகுதியில் 75க்கும் 85 க்கும் இடையில் ஏற்பட்ட புவிநடுக்கம் சுனாமியும் அந்தமான் தீவுகளின் மேற்குப் புறத்தை மூழ் கடித்தது. இந்தியக் கிழக்குக் கரையோரப் பகுதிகளைத் தாக்கி ஏராளமான உடைமைகளை அழித்து. ஆயிரக்கணக்கான உயிர்களைக் குடித்தது. மட்டக்களப்புப் பகுதியைச் சேர்ந்த வயோதிபர் ஒருவர் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் பேரலைத்தாக்கம் ஒன்று நுகழ்ந்ததென நினைவு படுத்தியுள்ளமை இதனையே ஆகும்.
10. 1945, நவம்பர் 27ஆம் திகதி அராபியக் கடலில் 835 றிச்டர் அளவில் ஒரு புவிநடுக்கம் ஏற்பட்டது. அதனால் ஏற்பட்ட சுனாமிப் பேரலைகள், இந்தியாவின் மேற்குக் கரையோரத்தில் பெருங் கொந்தளிப்பினைத் தோற்றுவித்துள்ளது.
இலங்கையில் உணரப்பட்ட நிலநடுக்கங்கள்
சுமாத்திராப் புவிநடுக்கத்தின் விளைவான புவிநடுக்க அதிர்வுகள்
இலங்கையில் பல பகுதிகளில் உணரப்பட்டுள்ளன. வெள்ளவத்தைப் பகுதியில் மிக மிகச் சிறியளவில் புவிநடுக்கம் உணரப்பட்டது. அத்தோடு கண்டி, நுரரெலியாப் பகுதிகளில் காலை நில அதிர்வுகள் ஏற்பட்டன. கண்டி நகரம், பன்வலை, வத்தேகம, பேராதனை, தென்னகும்பர, குண்டசாலை, தெல்தெனியா ஆகிய பகுதிகளில் காலை 705 முதல் 715 வரை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு வீடுகளிலிருந்து வெளியே ஓடிவந்தனர்.
463 ritó
6.

Page 42
சுனாமியின் திளைவுகள்
26 டிசம்பர் 2004 அதிகாலை அனர்த்தத்தோடு விடிந்தது. சுமாத்திராச் சுனாமி மிக்க ஆக்ரோஷத்தோடு பொங்கி எழுந்தது. தான் உற்பத்தியாகிய மையத்திலிருந்து எல்லாத் திக்குகளிலும் மணிக்கு 800 கி. மீ வேகத்திலும் ஒரு மீற்றர் வரையிலுமான உயரத்தில் பரவி, ஆழங்குறைந்த கடலோரங்களை அடைந்ததும் திடீரென அவற்றின் வேகம் மணிக்கு 100 கி. மீ வரையினதாகக் குறைந்து ஆனால் உயரம் 30 மீற்றர் வரையினதாக அதிகரித்துப் பாய்ந்தது. இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளின் கடற்கரைப்பகுதிகளும் பசுபிக் சமுத்திரத்தில் இந்தோனேசியக் கடற்பரப்பிலுள்ள கடற்கரைப் பகுதிகளும் சுனாமியின் தாக்குதலிற்குள்ளாகின. சுமாத்திராவிலிருந்து ஒரு மைய வட்டமாக விகாசித்துப் பரவிய இந்த ஆழிப்பேரலை தான் மோதிய எக்கடற்கரைக் கிராமங்களிலும் நகரங்களிலும் யாரையும் எதையும் விட்டு வைக்கவில்லை. மூன்று இலட்சத்து நாலாயிரம் மக்கள் பலியாகிப் போயினர்.
"அந்தக் கணம் வரை வழமைபோல் அலை எறிந்து விளையாடிக் கொண்டிருந்த கடல், திடீரெனப் பின் வாங்கியதைக் கண்டேன். கண்முன்னால் கடல் தரை வெறுமனேவே ஒருகிலோ மீற்றர் தூரம் வரை கண்ணுக்குப் புலப்பட்டது. கடல் கணப் பொழுதில் வற்றிவிட்டது போன்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது. அடுத்த கணம் காதுச்சவ்வுகளைக் கிழிப்பது போன்ற பேரிரைச்சல் எழுந்தது. அப்படியொரு பேரிரைச்சல் குண்டு வீச்சு விமானமான கிபீர் இரைந்து கொண்டு வருவது போன்றதொரு பேரிரைச்சல் ஒரு கிபீர் அல்ல. நூறு கிபீர்கள் ஒருங்கே இரைந்து கொண்டு வருவது போன்றதொரு கோர ஒலி எழுந்தது. உயர்ந்த ஒரு தென்னையை மூடும் உயரத்தில் தூரத்தில் கரியநீர் மலைத்தொடர் ஒன்று புரண்டு வருவது போன்று கடல் அலை பொங்கியெழுந்து வந்தது ஆழ்கடலிலிருந்து கரியதொரு அரக்கன் விசுவரூபம் எடுத்ததுபோல சுனாமிப் பேரலை கிளம்பி வந்து அப்படியே முந்நூறு மீற்றர் தூரம் வரையிலான கடற்கரைப் பிரதேசத்தை மூடிக் கவிந்தது”சுனாமிப் பேரலை தாக்கிய பிரதேசங்களில் அதன் சுயரூப உற்பத்தியை அனைவரும் ஒரே மாதிரியாகவே விபரித்துள்ளனர்.
. சுந்தையா கு55ராசா
 

ளூண்டு போன
முருகைக் ܩܒܒܝ
கற்பார்கள்

Page 43
மீ - இந்தோனேசியா
நினைத் தாக்கும் சுனா
ாட்டல் ஒன்
உல்கப்ாச Tே)
கடலோடு போன காலடித் தட
fili
 
 

சுனாமி எஞ்சவிட்ட தேவாலயம் - முல்லைத்தீவு

Page 44
—
வப்
க் கோயி
岳h
தகர்ந்து போன இந்
பின் உள்ளம்
ܩܠܐ
உடைந்து போன சிற்பி
H
 
 

வழித்தெடுத்த கரை
Қыпшfi
அந்தமான் - நிக்கோபார்
தீவுகளி
ல் ஒன்று
ஞ்சள்
எதுவுமே எ

Page 45
இந்கிய இந்துக்
வாகனங்களும் 5üLöFIF)
 
 

sti
·ının,
*
து இனி எதுவுமில்லை
இழப்பதற்
கடவுளே.
וד

Page 46
| வெடிப்புகள்
ற்ற துய
த்ய
இன, மத பே
ம் பிளக்கும் துயர்
இதயம்
 
 

காவிவரும் இழப்புச் சுமை
L
ப் பா
இழுபொறி

Page 47
கைமுறுக்காகிய தண்டவாளங்கள்
7.
 

அகர பலத்திற்கு
圆 门母 홍 공 니 坪阿 狮山 府卿 T恤 司 현 口r
யில்பர்)
-ԱIյT3, 3յl

Page 48

இடிபாடுகள்
கரை எங்கு கடIடிட
דד

Page 49
|ன்றன.
வீதியில் கிடக்கி
தேதுன்
வாழ்வாதாரங்கள்
 

-
பழைய வாழ்க்கைக்குத் திரும்பும் முயற்சி
Ty

Page 50
f
ஆம்.
湖
L
=
研
§ 현 후 止旧T 引) H邮型 叫牌 s'; † 生– ! 脚"고 혼. 町나 몸 寇舞剧 祖就“扣 的)赫娜
蛋事 旧ཟློཐ་ 概就 E脚知 홍བློ་ནི་ 她圈 國 :世. 青 陋旧
都
比
—
旧
H
 
 
 

MITTńso
கடல் வற்றல்
கடல்வற்றல் - இருந்தாற்போல கடல் நீர் பின்வாங்கி வற்றியதையும், இவ்வளவு காலமும் நீரான டயால் தன்னை முடியிருந்த கடல் தாய் தன் ஆடையை நெகிழ்த்தித் தன் உள்வனப்பினைக் காட்டியது போன்று. கடல் தரை வெளித்தெரிந்ததைப் பலரும் கண்டனர். கடலோரங்களில் வசித்தவர்களும் நின்றவர்களும் தம் வாழ்நாளில் இப்படியான அதிசயத்தினைக் கண்டதில்லை. வியப்புடன் அடுத்து நிகழப்போவதை உணராது பார்த்து நின்றனர். தூரத்தில் நின்றவர்கள் கடலை நோக்கி வேடிக்கை பார்க்க ஓடிவந்தனர். கரையோரங்களில் நின்றிருந்த பலரும், கூடுதலாகச் சிறுவர்கள். வற்றிவெளித் தெரிந்த கடல் தரையினுள் பாய்ந்து ஓடினர். ஆக தாய்லாந்துக் கடற்கரையோரத்தில், உல்லாக விடுதி ஒன்றில் நின்றிருந்த பன்னிரண்டு வயதுச் சிறுமி ஒருத்திக்கு மட்டுந்தான். கடல்பின்வாங்கித் திடீரென வற்றுவது. சுனாமிப் பேரலை தோன்றுவதற்கான முன்னறிவிப்பு எனத் தெரிந்தது. அவள் தன் பாடசாலையில் இதனைக் கற்றிருக்கிறாள். அவள் ஓடிச்சென்று தன் தாயாருக்கு விடயத்தைச் சொல்ல, தாயார் உடனடியாகச் செயற்பட்டு அக்கடற்கரையிலும் உல்லாச விடுதியிலும் இருந்த நூற்றிருபது பயணிகளை அவ்விடத்திலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஒடித்தப்பும் படி எடுத்துக்கூறியதால், அவர்கள் உயிர் தப்பிக் கொண்டனர்.
பேரிரைச்சல்
சுனாமிப் பேரலையின் கடலோரத்தாக்குதலுக்கான தோற்றம் கரையோரத்தை அடைவதற்கு ஒரு சில நிமிடத் துளிகள் போதுமானதாக இருந்தாலும், அது தன் வருகையைக் காதுகள் செவிடுபடும்படியான பேரிரைச்சல் மூலம் வெளிப்படுத்தியது. இலங்கையின் வடக்குக் கிழக்குக் கரையோரங்களைச் சேர்ந்தவர்கள், தாம் முன்னர் யுத்த அனர்த்தத்தின் போது கேட்டுப் பழகிய கிபீர் குண்டுவீச்சு விமானங்களின் சத்தம் என உணர்ந்துள்ளனர். மீண்டும் ஈழத்தில் புத்தம் தொடங்கிவிட்டதென எண்ணிப் பயந்தோடியுள்ளனர். சிலர் செயின் புளொக் இரைந்து கொண்டு வருவதாக எண்ணி அச்சங்கொண்டோடியுள்ளனர். பாரிய குண்டுகள் வெடித்தன போன்ற பேரிரைச்சலாகச் சிலர் உணர்ந்தனர். கடற் படையினரின் பீரங்கித் தாக்குதல் தொடங்கி விட்டதாகச் சிலர் பயந்தனர்.
கரும் கபிலநிறப் பேரலை
ஆழங்குறைந்த கடல் பரப்பினை அடைந்த சுனாமி, தென்னை மரவட்டுக்களை மேவி. பலமீற்றர் உயரத்திற்குக் கிளம்பி ஒரு அலைச் சுவராக நாக்கினை நீட்டியபோது, அதன் நிறம் கரும் கபிலமாகச் சிலவிடத்தும். கன்னங்கரு
நிறமாகச் சில விடத்தும் காணப்பட்டிருக்கிறது. ஆழங்குறைந்த கடல்

Page 51
தரையடியோடு வாரியெடுத்தபடி கரையோரங்களைச் சுனாமி தாக்கியுள்ளது. அதனால் அது கிளம்பிப் பாய்ந்த கரையோரக் கண்டமேடையில் ஏற்கனவே படிந்திருந்த பல் பொருட்களை, மண்டி, சேறு, களி எதுவாயினும் தன்னுடன் காவி அள்ளி வந்து கரையோரத்தைத் தாக்கிவிட்டு, பின்னர் வாரி எடுத்தபடி பின்வாங்கியுள்ளது. ‘நான் கடலைக் காணவில்லை. திடீரெனத் திரண்ட கரு மேகக் கூட்டம் ஒன்று சூறாவளியாகக் கரையை நோக்கி வருவதாக எண்ணி வந்த வழியே ஒடினேன்’ என்கிறார். தப்பிப் பிழைத்த ஒருவர் யானைகள் உருண்டுவருவது போல இருந்தது’ என்று தமிழ்நாட்டில் ஒரு சிறுவன் வர்ணித்துள்ளான். “கரு மலைத் தொடர் அள்ளுப்பட்டு வந்தது’ என கிழக்குக் கரையில் ஒருவரும், “கடல் மட்டத்தில் கருமுகில் சூறாவளியால் அள்ளுப்பட்டு வருகிறது’ என வடமாராட்சியில் இன்னொருவரும் விபரித்துள்ளனர். வீடுகளின் கதவு, யன்னல்களை உதைத்துத் திறந்து உட்புகுந்து திரும்பியபோது அந்த வீடுகளுள் ஓரடி ஆழமான கரும் சேற்றையும் சுரியையும் எஞ்சவிட்டுச் சென்றுள்ளது.
சுனாமியினால் பாதிக்கப்பட்ட இந்து சமுத்திர நாடுகளில், இந்தோனேசியா, இலங்கை, இந்தியா, தாய்லாந்து, கிழக்கு ஆபிரிக்கா, மலேசியா, மியான்மார், வங்களாதேசம், மாலைதீவுகள் என்பன பெரிதும் சிறிதுமாகப் பாதிப்படைந்தன. சுனாமி ஆழிப்பேரலை ஏற்படுத்திய அனர்த்தங்களின் வடிவங்கள் வருமாறு: உயிரழிவுகள் காணாமற்போனோர் காயமடைந்தோர் வதிவிடங்கள், கட்டிடங்கள், சேதமும் சொத்திழப்பும் படகுகள், வள்ளங்கள், வலைகள் சேதம் நன்னீர்க் கிணறுகள், வயல் தோட்ட நிலங்கள் உவரானமை கையேந்து நிலையும் அகெளரவச் சூழலும் அனாதைகள், ஆதரவற்றோரானமை மானிட இயல்பு வாழ்க்கை பாதிப்பு
1
O.
மனவடுகள், உளவியற் பாதிப்புகளும் எஞ்சியமையும் இன ஐக்கியம் கரையோர நிலவமைப்பும், நிலப்பயன்பாடும் மாற்றம்
இலங்கையின் கிழக்கு, வடக்கு, தெற்குக் கரையோரங்களை விட, இலங்கையின் மேற்குக் கரையோரங்களிலும் சுனாமியின் காரணமாகக் கடற்கொந்தளிப்புகள் சிறியளவில் ஏற்பட்டுள்ளன. மன்னாரில் தாழ்வுப்பாடு, நடுக்குடா, சிலாவத்துறை, பனங்கட்டிக்கொட்டு, வங்காலை, அரிப்பு, பள்ளிமுனை ஆகிய பகுதிகளில் கடற்கொந்தளிப்பு சிறியளவில் ஏற்பட்டது. மக்கள் பயந்து கரையோரங்களைவிட்டு இடம் பெயர்ந்து திரும்பி வந்துள்ளனர். அத்துடன் பூநகரி நெடுந்தீவுப் பகுதிகளிலும் கடற் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
82 கந்குைம்பா குனராசா

1. உயிரழிவுகள்
சுனாமி காவுக் கொண்ட மொத்த மனித உயிர்களின் எண்ணிக்கை இந்து சமுத்திர நாடுகள் அனைத்திலும் 250676 மென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கை மூன்றரை இலட்சத்திற்கும் அதிகமானதென அனர்த்தக் கணிப்பு ஆய்வாளர் கூறுகின்றனர். இறப்புத் தொகை ரீதியில் இறந்தோர் தரவு வருமாறு
சுனாமியில் இறந்தோர் விபரம்
நாடு தொகை 1. இந்தோனேசியா 184135 2. இலங்கை − 38195 3. இந்தியா - 22769
(அந்தமான் 11000 நாகபட்டினம் 7793, கன்னியாக்குமரி 800, கடலூர்-பாண்டி 3100, கேரளா 40, ஆந்திரா) 36
4. தாய்லாந்து 5305 5. கிழக்கு ஆபிரிக்கக்கரை ー ・ 137 6. மலேசியா - 74
7. மியான்மார் → 59
8. பங்காளதேசம் -- 02
250676
சுனாமி தாக்கிய கடற்கரையோரமெங்கும் சடலங்களாகவே காட்சி தந்தன. எங்கும் அழுகைக் குரலும் புலம்பல்களுமே ஓங்கிக் காற்றில் கரைந்தன. முழுக்குடும்பமும் வேரோடு பிடுங்கப்பட்ட சம்பவங்கள் அதிகம்; எல்லாரையும் பறிகொடுத்து விட்டுத் தனிமரமாகத் தவித்து நிற்கும் தலைவன் அல்லது தலைவி பெற்றோரைச் சுனாமிக்குக் காவு கொடுத்து விட்டுப் பரிதவிக்கும் பிள்ளைகள் எனக் கரையோரங்கள் காட்சி தந்தன. கரையெல்லாம் தம் உறவுகளைத் தேடி அலைவோர் காணப்பட்டனர். ஆங்காங்கு வீசப்பட்டுக் கிடக்கும் சடலங்களைப் புரட்டிஃபுரட்டிப் பார்க்கும் மக்கள், கண்ணீரும்
கம்பலையுமாக அலைந்தனர். n
சுனாமிப் பேரலையின் தாக்குதலுக்குள்ளான பெரும்பாலோனோர் துகிலுரிந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மரங்களையோ, வேறு பொருட்களையோ பற்றித் தப்பியவர்கள் துகிலுரியப்பட்டுள்ளனர். சுனாமி ஆழிப்பேரலை, கடற்கரையோரத்தினைத் தாக்கும் போது ஒரு சதுர மீற்றருக்கு 50 ஆயிரம் கன மெட்ரிக்தொன் நீரைப் பாய்ச்சும். அதன் அசுர வேகத்திற்கு அரையில் கட்டிய துணியா எஞ்சி நிற்கும் ? தாழையடியில் எட்டுவயதுச் சிறுமி ஒருத்தியைச் சுனாமி அள்ளிச் சென்றபோது, அவள் ஆலமரம் ஒன்றின் கிளையைப் பற்றிக் கொண்டாள். அலை கரைமேவித் திரும்பியபோது, அவள் நிர்வாணமாக மரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டாள். "பயப்படாதே மகள் அண்ணன்மார் வந்து காப்பாற்றுவார்கள்’ என அவளுக்கு ஆறுதல் கூறினார். இன்னொரு விழுதில் தொங்கிக் கொண்டிருந்த பங்குத்தந்தை.
ሐፋዕL!tፅፃ R

Page 52
வரிசை வரிசையாகச் சடலங்கள் எல்லா விடங்களிலும் வளர்த்தப்பட்டிருந்தன. சிறு குழந்தைகள் பெருமளவில் வளர்த்தப்பட்டிருந்தன. பார்ப்போர் அனைவரையும் இதயம் உடைந்து கண்ணிர் சொரிய வைத்த காட்சிகள் அவை, சிறுகைக்குழந்தைகள் முதல் பத்துப் பன்னிரண்டு வயதுடைய சிறுவர் சிறுமிகள் கூடுதலாக உயிரிழந்திருந்தனர். மரணித்த சிறுசுகளைப் பெரியவர்கள் இரு கரங்களிலும் சுமந்து வரும் காட்சிகளும், சாக்குகளில் சடலங்களை வளர்த்துவிட்டு இருபுறங்களிலும் பற்றித் தூக்கி வரும் காட்சிகளும் மனசுகளை உடைய வைத்தன.
சுனாமி மிகக் கொடூரமாகப் புகுந்து விளையாடிய நாடு இலங்கையாகும். இலங்கையில் சுனாமி அலையின் முதலாவது தாக்குதலை எதிர்கொண்ட பிரதேசம் தென்கிழக்குப் பகுதியாகும். அதன்பின்னர் கிழக்குக் கரையோரமும் தென்மேற்குக் கரையோரமும் உட்பட்டன. பின்னர் இலங்கையின் வடரை பாதிப்புக்குள்ளாகியது. சுமாத்திராவில் கிளம்பிய சுனாமி இலங்கையை வந்தடைய 2 மணிநேரம் எடுத்துள்ளது. எனினும், அடுத்த சில நிமிடத்துளிகளுள் அது காவுகொண்ட மக்களின் எண்ணிக்கை 38195 ஆகும்.
இலங்கையின் வடக்கு - கிழக்கு, தெற்குக்கரையோரங்களாகச் சேர்ந்த 12 மாவட்டங்கள் சுனாமியினால் பாதிப்பிற்குள்ளாகின. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, அம்பாந்தோட்டை, மாத்தறை, காலி, களுத்துறை, கொழும்பு என்பன அவையாம்.
சுனாமி கடற்கோள் அனர்த்தம்
உயிரிழப்புகள் மாவட்டம் உயிரிழந்தோர் தொகை
1. யாழ்ப்பாணம் 1256 2. முல்லைத்தீவு 2902 3. கிளிநொச்சி 32 4. திருகோணமலை 984 5. மட்டக்களப்பு 2975 6. அம்பாறை 9051 7. அம்பாந்தோட்டை 4500 8. மாத்தறை 1061 9. காலி 3774
10. களுத்துறை 170 11. கொழும்பு 65 12. கம்பஹா O7
38195
ஆதாரம் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும், மாவட்டச் செயலகங்களின் நிலைமை அறிக்கையும்
84 கந்தையா குனராசா

2. காணாமற் போயினர்
ஞாயிறுச் சுனாமிப் பேரலை தாக்கிய போது, உயிரிழந்தவர்களோடு அள்ளுப்பட்டுக் காணாமற் போயினோர் தொகையும் கணிசமானவளவு உள்ளது. இலங்கையின் சுனாமியோடு காணாமல் போயினோர் மூவகைப்படுவர்.
1. அலையினால் அள்ளிச் செல்லப்பட்டு சடலங்களாக மீட்கப்படாதோர். 2. இலங்கையின் வேறிடங்களிலிருந்து, சுனாமிப் பிரதேசங்களுக்கு
அலுவல்களுக்காப்போனோர். 3. நலன்புரி நிலையங்களிலிருந்தும், சிலவிடத்து வைத்தியசாலைகளிலிருந்தும் காணாமற்
போனோர். எவ்வாறியினும் இலங்கை தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிக்கைப்படி 5023 பேர் காணாமற் போயுள்ளனர். வடக்கு கிழக்கு மாகாணப் புனர்வாழ்வு புனரமைப்பு அமைச்சின் அறிக்கைப்படி 2240 பேர். வடக்கு-கிழக்கு மாகாணத்தில் காணாமல் போயுள்ளனர். அலையினால் அள்ளிச் செல்லப்பட்டோர் உயிருடன் உள்ளனரா என்பது ஐயத்திற்கிடமானது. அவர்களின் சடலங்கள் எங்கெங்கோ கரைகளில் ஒதுங்கியிருக்கலாம். அல்லது கடலிற்குள் காணாமல் போயிருக்கலாம். கன்னியாகுமரியில் கரையொதுங்கிய சடலம் ஒன்று இலங்கையருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளது. சுனாமிப் பிரதேசங்களுக்கு வேறிடங்களிலிருந்து அலுவல்கள் காரணமாக வந்தவர்கள் காணாமற் போனவர்கள் தொகையிலடங்குவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜீவநாதனின் குடும்பத்தில் மூவர், ஹிக்கடுவையின் தெல்வத்தைப் புகையிரதப் பயணத்தில் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். வடமராட்சி செம்பியன்பற்றினைச் சேர்ந்த காணாமற்போன சிறுவன் ஒருவன் வவுனியா ஆஸ்பத்திரியிலிருந்து மீட்கப்பட்டுள்ளான். தென்னிலங்கையில் 60 வரையிலான சிறார்கள் ஆஸ்பத்திரிகளிலிருந்து காணாமற் போயுள்ளனர்.
சுனாமிக் கடற்பெருக்குத் தணிந்ததும், தப்பியோடச் சந்தர்ப்பம் கிடைத்த மக்களும், அயற்கிராமத்தவர்களும் கடற்கரைகளுக்கு ஓடோடி வந்தனர். விடுதலைப் புலிகள், இராணுவ வீரர்கள், பொலீசார் என வேறுபாடின்றிச் சடலங்களை மீட்பதிலும், காயம்பட்டோரை ஆஸ்பத்திரிகளில் சேர்ப்பதிலும் ஈடுபட்டனர். இனமத பேதமின்றி அனைவரையும் ஒன்றாக்கி மீட்புப் பணியிலீடுபடச் சுமத்திராச் சுனாமி வழிவகுத்து விட்டது. கட்டிட இடிபாடுகளுள் சடலங்களும் காயம் பட்டோரும் கிடந்தனர். கடலோர மணலால் மூடப்பட்டும், பற்றைகள், காடுகள், வாய்க்கால்கள், மரங்கள் என்பனவற்றிலும் சடலங்கள் காணப்பட்டன. கடற்கரையோரப் பாதுகாப்பு என்ற போர்வையில் இராணுவ முகாம்களை இணைத்து, இராணுவத்தினர் இட்டிருந்த முட்கம்பிச் சுருள்களில் சிக்கி அதிகளவில் பெண்களும் பிள்ளைகளும் இறந்திருந்தனர். முதல் நாளும் இரண்டாம் நாளும் சேகரித்த சடலங்கள் உருக்குலையாது இருந்தன. ஆனால், பின்னர் ஒரு மாதம் வரையிலான காலகட்டத்தில் சேகரித்த சடலங்கள் அழுகி, வீங்கி, மணம் எழுந்து சிதைந்து கிடந்தன. கடலில் தொடர்ந்து சடலங்கள் மிதந்து வந்து கரையொதுங்கிக் கொண்டிருந்தன.
சுனாமி 85

Page 53
வடக்கு-கிழக்கு கரையோரங்களில் வெள்ளம் தேங்கி நின்றதால், மீட்கப்பட்ட சடலங்களை அடக்கம் செய்ய முடியாத இக்கட்டும் காணப்பட்டது. பாரிய சிரமங்களுக்கு மத்தியில் மேட்டுப் பாங்கான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அவை புதைக்கப்பட்டன; அல்லது சில விடத்து தகனம் செய்யப்பட்டன. பாரிய புதைகுழிகள் மனித வலுவுடனும் சில விடத்து யந்திர உதவியுடனும் அகற்றப்பட்டு, அவற்றுள் பெரும் எண்ணிக்கையில் சடலங்கள் கொட்டப்பட்டு புதைக்கப்பட்டன. -
பொதுவாக இன்னொரு துர்ரதிர்ஷ்டம் இலங்கைக் கடலோரப் பகுதிகளில்
அவதானிக்கப்பட்டது. குடும்பம், குடும்பமாக இறந்து போனதால், மீட்டெடுக்கப்பட்ட சடலங்களை அடையாளம் காட்டுவதற்கும் எவருமிருக்கவில்லை.
வடக்குக் கிழக்கில் எட்டு இராணுவ முகாம்கள் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளன. நாகர்கோயில், மணல்காடு, பருத்தித்துறை, தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, காங்கேசன்துறை, மாதகல் உட்பட்ட கடல்அலை அகற்றிச் சென்றது. 400உக்கு மேல் படையினர் பலியாகிப் போயினர். மேலும் இலங்கையில் பரவலாக ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக 150 உக்கு மேற்பட்ட உல்லாசப் பயணிகள் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. 32 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 11 சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை உல்லாச விடுதிகளில் தங்கியிருந்த 45 உல்லாசப் பயணிகள் காணாமற் போயுள்ளனர். மூவரது சடலங்களே அகப்பட்டன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உடனடியாக எந்தவித அரச நிதி நிர்வாகச் சட்டங்களுக்கும் உட்படாது சடலங்களை அடக்கம் செய்வதற்காக ரூபா 2000/=வீதம் வடமராட்சியில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் செ. பத்மநாதனால் வழங்கப்பட்டது. அரசு முடிவு செல்வதற்கு முன்பே தற்றுணியோடு இக்காரியத்தினை அவர் செய்துள்ளார். அதன் பிறகே உயிர் இழந்தோரின் இறுதிக்கிரியைகளுக்கு ரூபா 1000/= வீதம் வழங்குமாறு அரசு முடிவெடுத்தது. -
3. காயமடைந்தோர்
சுனாமித் தாக்கத்தினால் அள்ளிச் செல்லப்பட்டோர் பின்வரும் விதங்களில் காயம் அடைந்தனர். V
1. பேரலையானது அப்படியே அவர்களை தூக்கி மரங்கள், கட்டிடங்கள் மீது
மோதி அடித்தமையால் காயமடைந்தோர். 2. கட்டிடங்கள் உடைந்து நொருங்கி வீழ்ந்ததால் அவ்விடிபாடுகளுள் சிக்கிக்
காயமடைந்தோர்.
አ6 , கந்தையா குணராசா

3. சரிந்து விழுந்த மரங்களுக்கிடையில் அகப்பட்டுக் காயமடைந்தோர்.
4. சுனாமி காவிவந்த சேற்றையும் நீரையும்விழுங்கியதால் பாதிப்புற்றோர்.
5. இராணுவத்தினரால் இடப்பட்டிருந்த முட்கம்பி அரண்வேலிகளில் சிக்குண்டு
காயப்பட்டோர்.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சுனாமியால் காயமடைந்து ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 14521 ஆகும். தென்னிலங்கையில் காயமடைந்தோர் தொகை 7026 பேராவார். கடும் காயமடைந்தோரில் பலர் அரச வைத்தியமனைகளில் மரணமடைந்துமுள்ளனர்.
காயமடைந்தோர் விபரம் வருமாறு :
வடக்கு-கிழக்கு காயமடைந்தோர் விபரம்
மாவட்டம் எண்ணிக்கை
யாழ்ப்பாணம் 1647 முல்லைத்தீவு 2590 * கிளிநொச்சி 670 திருகோணமலை 1328 மட்டக்களப்பு 1575 அம்பாறை 6771
மொத்தம் 14521
ஆதாரம் : வடக்கு-கிழக்கு மாகாண புனர்வாழ்வு அமைச்சு
4. வதிவிடங்கள், கட்டிடங்கள் தேடிய சொத்துகள்
இலங்கையில் மாத்திரமன்றி, னோமி தாக்கிய இந்து சமுத்திர நாடுகள் அனைத்திலும் கடலோர வதிவிடங்களில் 99 சதவீதமானவை தகர்ந்து இடிந்து விழுந்துள்ளன. கரையோரங்களில் அமைந்திருந்த பொதுக்கட்டிடங்கள், அரச கட்டிடங்கள், உல்லாசப் பயணிகளின் ஹோட்டல் என அனைத்தும் தாக்குப்பிடிக்க முடியாது அழிந்து போய்விட்டன. கிடைக்கும் தரவுகளின்படி வடக்கு - கிழக்கில் 5152 வீடுகள் முழுமையாகவும், 19565 வீடுகள் பகுதியாகவும் சேதமுற்றுள்ளனவென அறியமுடிகிறது. தென்னிலங்கையில் கரையோரச் சேரிப்புறக்குடிசைகள் அனைத்தும் கழுவிச் செல்லப்பட்டுள்ளன. மாத்தறை, களுத்துறை, காலி, அம்பாந்தோட்டைக் கடலோர வீடுகள் சுனாமியால் தாக்கப்பட்டு சிதைந்து போய்விட்டன.
சுனாமி 87,

Page 54
வடக்கு - கிழக்கு சேதமுற்ற கட்டிடங்கள்
LDITG).JL-L-Lb (p(p68)Louissés பகுதியாக அழிந்த
அழிந்த வீடுகள் (வீடுகள் குடிசைகள் உட்பட) குடிசைகள் உட்பட)
யாழ்ப்பாணம் 3708 1700 முல்லைத்தீவு 5033 424 திருகோணமலை 4830 3835 மட்டக்களப்பு 15477 5541 அம்பாறை 18886 8651 மொத்தம் 47934 20151
குடிசைகள் உட்பட கல்வீடுகள், மதில்கள் என்பன எதுவும் கடலோரங்களில் தப்பவில்லை. குடிசைகள் கடலோடு அள்ளிச் செல்லப்பட்டிருந்தன. கல்வீடுகள் காங்கிறீட் பாளங்களாக நொருங்குண்டு சரிந்திருந்தன. வீதிகள் கடல்நீரால் முழுமையாகவும், ஒருபகுதியாகவும் அள்ளி எடுக்கப்பட்டிருந்தன. பாலங்கள் பலவும் தகர்க்கப்பட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தன. கனரக வாகனங்கள் கூடச் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்டிருக்கின்றது. மருதங்கேணியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்டோசர் கடலலையால் இழுத்துச் செல்லப்பட்டு, அரைக்கிலோ மீற்றருக்கு அப்பால் புரட்டிவிடப்பட்டது.
வடக்கு-கிழக்கில் சுனாமியின் கடும் அனர்த்தத்தால் 30 பாடசாலைகள் வரையில் முற்றாகச் சேதமடைந்துள்ளன. ஐம்பதுக்கு மேற்பட்டவை ஓரளவு சேதமடைந்துள்ளன. அம்பாறை மாவட்டத்தில் மட்டும் 20 பாடசாலைகள் தரைமட்டமாகியுள்ளன. மட்டக்களப்பில் ஆறு பாடசாலைகளும், யாழ்ப்பாணத்தில் ஆறு பாடசாலைகளும் முழுமையாக சிதைந்துள்ளன. யாழ்ப்பாணத்தில் எட்டுப்பாடசாலைகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன. கல்வியமைச்சின் செயலாளர் கலாநிதி தரா டி மெல். ‘கடற்கோள்’ அனர்த்தம் காரணமாக இலங்கையில் 41 பாடசாலைகள் முற்றாகத் தரைமட்டமாகிவிட்டன. 70 பாடசாலகள் பெரியளவில் சேதமடைந்துள்ளதெனக் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆறு பாடசாலைகள் முற்றாக உடைந்து போயுள்ளன. வெற்றிலைக்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ்ப்பாடசாலை, கட்டைக் காடு றோ. க. த. பா. தாழையடி றோ, க. த. பா, மாமுனை அரசாங்கத் தமிழ்க் கலவன் பாடசாலை, மணற்காடு றோ. க. த. பாடசாலை, வல்வெட்டித்துறை சிவகுரு வித்தியாசாலை ஆகிய 6 பாடசாலைகளும் தரைமட்டமாக்கியே சுனாமி மீண்டது. இவற்றோடு குடத்தனை றோ. க. த. வெற்றிலைக் கேணி பரமேஸ்வரா வல்வெட்டித்துறை றோ. க. த. பாடசாலை, செம்பியன் பற்று றோ. க. த. பா. ஆழியவளை பாடசாலை, கலட்டி றோ, க. த. பா. ஹாட்லிக் கல்லூரி, மெதடிஸ்ற் கல்லூரி என்பன பகுதியாகச் சேதமடைந்துள்ளன. இப்பாடசாலைகள் அனைத்தையும் புனரமைக்க 96.1 மில்லியன் ரூபா தேவை என யாழ்ப்பாண அரச அதிபர் கே. கணேஸ் மதிப்பிட்டுள்ளார்.
88 கந்தையா குணராசா

முல்லைத்தீவில் 12 பாடசாலைகள் பலத்த சேதமடைந்துள்ளன. முல்லைத்தீவு மகா வித்தியாலயம், கள்ளப்பாடு அ. த. க. பா, முல்லைத்தீவு றோ. க. த. பா. என்பன முற்றாக அழிந்துள்ளன. அத்துடன் அலம்பில் றோ. க. த பாடசாலை, அம்பலவன் பொக்கனை வித்தியாலயம், செம்மலை வித்தியாலயம், உடுப்புக்குளம் வித்தியாலயம், நிலாவத்தை தமிழ் பாடசாலை, வலைஞர் மடம் அ. த. க. பாடசாலை, வெட்டுவாகல் அ. த. க. பாடசாலை என்பனவும்பாதிப்புற்றுள்ளன. வடக்கு-கிழக்கின் ஏனைய மாவட்டங்களிலும் 160 உக்கு மேற்பட்ட கடற்கரையோரப் பாடசாலைகள் சுனாமியால் தரையில் சரிக்கப்பட்டுள்ளன.
வடக்கு-கிழக்குக் கரையோர மாவட்டங்களில் பல பொதுக் கட்டிடங்கள், சுனாமியால் கீழிறக்கி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்ட அரசப்பணிமனைகள் 4, பொதுச்சந்தைகள் 11, பொதுநூலகம் 1 சனசசமூக நிலையங்கள் 12. கலாசார மண்டபம் 1, மீனவர் தங்குமிடம் 2, மயானங்கள் 5, மயான மடம் 2 என்பன தகர்க்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்தச் சுனாமியின் சீற்றத்திற்கு ஆறு அரச வைத்தியசாலைகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. காத்தான்குடி, மட்டக்களப்பு பாலமீன்மடு, கல்லாறு, வாகரை, கல்லடி-நாவலடி, பாலமுனை முதலான வைத்தியசாலைகள் முற்றாகச் சேதமாகின. திருகோணமலை மாவட்டத்தில் 23 பாடசாலைகள், 9 மருத்துவமனைகள் என்பனவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 36 பாடசாலைகளும் 8 மருத்துவமனைகளும், அம்பாறை மாவட்டத்தில் 40 பாடசாலைகளும் 29 மருத்துவமனைகளும் சுனாமியால் சேதமாக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவில் 16 இந்துக் கோயில்கள், 13 கத்தோலிக்க தேவாலயங்கள், ஒரு இஸ்லாமியப் பள்ளிவாசல் என்பனவும், பல அரச கட்டிடங்களும் சுனாமியால் முற்றாக அழிந்து போயுள்ளன.
சொத்தழிவு எனும்போது வதிவிடங்களுக்கு அப்பால் தளபாடங்கள் உட்பட்ட வீட்டுப்பொருட்கள், உடுபுடவைகள், நகைகள், பணம், வாகனங்கள் என்பனவற்றினைக் குறிக்கும். யுத்தகாலத்தில் வடக்கு-கிழக்கு தீமிழ் மக்கள் அடிக்கடி இடம்பெயர்ந்து ஒடியிருக்கிறார்கள். அவ்வேளைகளில்ெல்லாம் தங்களுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் உடுபுடவைகளையும், பணம் நகை பண்டங்களையும் எடுத்துக் கொண்டு ஓடிப்போயினர். ஆனால் சுனாமி, ஆமி தந்த சந்தர்ப்பத்தையும் வடக்கு கிழக்கு மக்களுக்குத் தரவில்லை. ‘20 வருடங்களில் ஏற்பட்ட உயிரழிவு 70000 பேர்; ஆனால் 20 நிமிடங்களில் ஏற்பட்ட சுனாமி அழிவு 35 ஆயிரம் பேர். உடுத்த உடுப்போடு ஓடிய மக்களாயினர்’ என யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினர் பத்மினி குறிப்பிட்டமை நோக்கற்பாலது. உடுத்த உடுப்போடு ஓடியவர்களை வாரி எடுத்த சுனாமி, அவற்றினையும் உரிந்து விட்டுத்தான் கரையில் துப்பியிருந்தது. மக்கள் பொங்கிய கடலலையைக் கண்டு ஓடிப் போனார்கள். கரையோர வீடுகளிலிருந்து அனைத்தும் சுனாமியால் காவு கொள்ளப்பட்டன.
8)

Page 55
5. படகுகள், வள்ளங்கள், வலைகள்
இந்து சமுத்திர நாடுகளின் கரையோரப் பிரதேசங்களே சுனாமிக் கடலலையால் பாதிப்புற்குள்ளாகின. அவை அனைத்தும் கடலை நம்பிச் சீவிக்கின்ற மீனவக் கிராமங்களும் நகரங்களுமாம். அவ்விடங்களில் காணப்பட்ட காட்சிகள் எங்கும் பொதுவானவைதாம்.
கடற்கரையோரங்களில் கட்டப்பட்டிருந்த இயந்திரப் படகுகளும், கடற்றொழிலில் ஈடுபட்டிருந்த படகுகளும் பல நூறு மீற்றர்களுக்கு அப்பால் சுனாமியால் எடுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே சிதறிக் காணப்படுகின்றன. வீதிகளிலும், வயல்வெளிகளிலும் மீன்பிடிப் படகுகள் தூக்கி வீசப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் கடற்கரையிலிருந்து வெகுதூரத்திற்குப் படகுகள் எடுத்தெறியப்பட்டிருந்தன. பனை மரங்களோடு மோதியதால், இரண்டாகப் பிளந்த படகுகள் பலவும் காணப்பட்டன. வல்வெட்டித் துறையிலிருந்து திருக்கோயில்வரை மீனவரின் உயிர்ச் சொத்துக்களான கலங்களும், வலைகளும் கடலலையால் அடித்துச் செல்லப்பட்டவைபோக, மிகுதியானவை உடைத்தெறியப்பட்டிருந்தன. ஒரு சிறு பாதிப்பிற்குமுள்ளாகாத படகுகள் எதுவுமேயில்லை. வல்வெட்டித்துறையில் கரையோரத்திலிருந்து படகுகள், சுனாமியினால் தூக்கி கரையோர வீதிக்கு எறியப்பட்டிருந்தன. பருத்தித்துறையில் தோட்டக்காணிகளுள், வீசப்பட்டிருந்தன. முல்லைத்தீவில் 1 கி.மீ. தூரத்திற்கு அப்பால் பனங் கூடலிற்குள்ளும், வயல்வெளிகளிலும் வீசப்பட்டிருந்தன. திருகோணமலையில் விளையாட்டு மைதானத்திற்குள் எத்தப்பட்டிருந்தன. பெரும்பாலான கலங்கள் வீதிகளில் தூக்கி எறியப்பட்டிருந்தன.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 31.2 தொன் மீன்பிடிக் கலங்கள் 89, இழைநார்ப்படகுகள் 1137, யந்திரக் கட்டுமரங்கள் 43. சாதாரண கட்டுமரங்கள் 88, வள்ளங்கள் 815 மாதல்கள் 107 என மொத்தமாக 2279 கலங்கள் துவம்சமாகியிருந்தன. இவற்றினை மீளப்பெற 9942 மில்லியன் ரூபா தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. முல்லைத்தீவில் பைவர் படகுகள் 1573, அவுட்மோட்டர் யந்திரங்கள் 1627 வள்ளங்கள் 242, கரைவலைகள் 108, ஏனைய வலைகள் 4500 என்பன அழிவடைந்துள்ளன என முல்லைத்தீவு அரசாங்க அதிபரின் அறிக்கை கூறுகிறது.
6.நன்னீர்க் கிணறுகள், வயல் தோட்டநிலங்கள்
உவரானமை
软
இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணத்தில் மட்டுமன்றி சுனாமி தாக்கிய இந்து சமுத்திரநாடுகள் அனைத்திலும் முதலில் எதிர்நோக்கிய இடர்ப்பாடு நன்னீராகும் கரைமேவி 1 கி.மீ வரை ஊடுருவிப் பாய்ந்த சுனாமி அலை சில காரியங்களைச் செய்துள்ளது.
1. கடலோரத்தில் 1 கி. மீ. எல்லைக்குள் அமைந்திருந்த கிணறுகளை கடல் நீராலும்
அழுக்கு நீராலும் நிரப்பி விட்டது. 2. கரையோர நன்னீரோடைகள், குட்டைகள் என்பனவற்றில் கடல் நீரைத் தேங்க
வைத்தது.
9. கந்தையா குனராசா

3. வடமராட்சி கிழக்குப் பகுதிகள், முல்லைத் தீவுப் பகுதிகளில் பல கிணறுகளை
மணலால் மூடிவிட்டுள்ளது.
4. சிலவிடங்களில் கிணறுகளின் கட்டுமானத்தையே தகர்த்து நிலைமாற வைத்துவிட்டது. திருக்கோயில், ஒரு கோயில் கிணற்றை முழுமையாக வெளியே கட்டுடன் கிளப்பிப் புரட்டி விட்டுள்ளது.
5. கரைமேவி உள்ளாக நோக்கி வெகுதூரம் பாய்ந்ததால் நல்ல தோட்ட நிலங்களும், வயல் நிலங்களும் உவராகிப் போயுள்ளன. வடக்கு-கிழக்குக் கரையோரங்களில் உருவாகியுள்ள இந்த நிலைமையை அவதானிக்கலாம். முல்லைத்தீவில் சுனாமி கடலலை மேவியதால் ஏறத்தழ 850 ஏக்கர் வயல் அறுவடைக்கு உதவாது பாழடைந்துள்ளது.
உலக நாடுகள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட போது, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குக் குடிநீரை வழங்குவதில் கவனம் செலுத்தின. உள்நாட்டு நிறுவனங்கள் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீரை விநியோகித்தன. அம்பாறை மாவட்டத்தில் அமெரிக்கத் தொண்டர்கள் குளத்து நீரைச் சுத்திகரித்து நன்னீராக்கிப் பருகக் கொடுத்துள்ளனர்.
w
7. கையேந்து நிலையும் அகெளரவச் சூழலும்
இந்து சமுத்திர நாடுகளில் சுனாமியில் பாதிக்கப்பட்ட கரையோர மக்கள், தம் இருப்பிடங்களை இழந்து, வேறிடங்களில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். பெரும்பாலும் பாடசாலைகள், பொதுக்கட்டிடங்கள், கோயில்கள், தேவாலயங்கள், தற்காலிக முகாம்கள் என்பன இம்மக்களிற்கு இருப்பிடங்களாக அமைந்தன.
அகதிகளானோர் விபரங்கள்
மாவட்டம் பாதிக்கப்பட்ட | இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை
குடும்பங்கள் முகாம்களில் நண்பர், உறவினர். இருப்போர் இருப்போர் வீடுகளில் இருப்போர் எண்ணிக்கை) எண்ணிக்கை. எண்ணிக்கை
யாழ்ப்பாணம் 12902 (48745) 7605 .333 O1
கிளிநொச்சி 2297 (3O278) 4O7
முல்லைத்தீவு 6745 (266O1) 11993 10564
திருகோணமலை 30545 (126679) 18O81 64255
மட்டக்களப்பு 63719 (254.868) 22OO2 96.O3
அம்பாறை 58729 (191163) 2A396 81653
அம்பாந்தோட்டை 28946 28785
மாத்தறை 12000 A4O5(OO)
காலி 44582
களுத்துறை A836 33794
கொழும்பு 4395 245OO
மொத்தம் 225O14. 84O77 172161 1997.83
dó 9

Page 56
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் 174935 குடும்பங்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக தனிநபர் எண்ணிக்கையில் 657334 ஆகும். இவர்களில் 86054 குடும்பங்களைச் சேர்ந்த 325042 பேர் இடம் பெயரநேர்ந்தது. அவர்களில் 24256 குடும்பங்களைச் சேர்ந்த 92122 பேர் நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். மிகுதியானோர் நண்பர்கள், உறவினர்களுடன் வசித்தனர்.
நலன்புரி முகாம்களில் வசித்தவர்களுக்கு உணவு, உடை, மருத்துவம் என்பனவற்றினை வழங்குவதில் இடத்திற்கிடம் வேறுபாடுகள் இருந்தன. உடனடியாக விடுதலைப் புலிகளால் பொறுப்பேற்கப் பட்ட நலன்புரி நிலையங்களில் கூடியவரை பிரச்சனைகள் உணவு,உடை, பொருட்கள் விநியோகத்தில் தலைதூக்கவில்லை. தெற்கில் அரசே நிவாரணப் பணிகளைச் செய்தது. எவ்வாறாயினும், கடல் அன்னை அள்ளிக் கொடுத்த செல்வத்தில் தன்னிறைவோடு வாழ்ந்திருந்த இம்மக்கள் பிறரின் தயவை எதிர்பார்த்துக் கையேந்தும் நிலை காணப்பட்டது.
வடக்கு கிழக்கில் 164 நலம்புரி முகாம்கள் இருந்தன.
8. அனாதைகள், ஆதரவற்றோரின்மை
குடும்பம் குடும்பமாகச் சுனாமி காவு கொண்டது. ஏதோ ஒரு வகையில் கரையோர மக்கள் இழப்பினைச் சந்தித்துள்ளனர். கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவன், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர், வயோதிபத்தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் என ஆதரவற்றோர் நிலமையைச் சுனாமி ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் தாபனத்தின் யுனெஸ்கோ சேகரித்து வெளியிட்ட தகவலின்படி இலங்கை முழுவதும் 26 ஆயிரம் பிள்ளைகள் தாய் தந்தையரை இழந்துள்ளனர் என்பதாகும். அதில் 3 ஆயிரம் வடபகுதியினர். வடக்கு - கிழக்குக் கரையோர மக்களிடம் தகவல்களைச் சேகரிக்கில், ஒவ்வொருவரும் எவரையோ ஒருவரையோ பலரையோ இழந்தவர்களாகவே உள்ளனர். வாழ்க்கையில் பிடிப்பற்ற நிலையும், நம்பிக்கையீனமும், விரக்தியும் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
9. மானிட இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சுனாமியால் பாதிக்கப்பட்டு வதிவிடங்கள், சொத்துக்கள் என்பனவற்றினை இழந்த கடலோர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தனித்தனிக் குடும்பங்களாக பிள்ளைகளுடன் வாழ்ந்த வதிவிடங்கள் அழிந்து போனதில் கூட்டு வாழ்க்கை ஏற்பட்டுள்ளது. தம்பதியினர்களிடையே குடும்பவாழ்க்கை பாதிப்புற்றுள்ளது. அவர்களதும் பிள்ளைகளினதும் சுதந்திரம் பாதிக்கப்பட்டுள்ளது. விரும்பிய உணவைச் சாப்பிட முடியாமை, விரும்பிய ஆடையை அணிய முடியாமை ஏற்பட்டுள்ளது. பொதுமலசலகூடங்கள் குளிப்பிடங்கள் பிரச்சனையாகிவிட்டன. தனித்தனி கிணறுகளுடனும் மலசலகூடங்களுடனும் வாழ்ந்த மக்களால் நலன்புரி
92 கந்தையா குனராசா

நிலையங்களில் ஆரோக்கியமாகவும் கெளரவமாகவும் வாழ்வதென்பது இயலாது போய்விட்டது. சிறார்களின் கல்வி பாதிப்புற்றுள்ளது. அவர்கள் அனைவரினதும் மனநிலை இயல்பு வாழ்வுக்கு இன்னமும் திரும்பிவரவில்லை. சுனாமியால் இறந்தவர்களின் கூடுதலானவர்கள் இளம் சிறார்களாவர். நாட்டின் வளம் அழிந்து போனது மட்டுமல்ல, அவர்களைப் பெற்றோரின் நம்பிக்கையும் சிதைந்து போய்விட்டது. *·
மானிட இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு வீதிகள், பாலங்கள், மின்சாரம், தொலைபேசி போன்ற அத்தியாவசிய வசதிகளும் தேவை. சுனாமி பேயாட்டம் போட்ட பகுதிகளில் பாதைகள் துண்டிக்கப்பட்டு அள்ளிச் செல்லப்பட்டமையும், பாலங்கள் உடைந்து இணைப்பை இழந்தமையும் பிரதானமான இழப்புகள். வட கரையோரத்தில் மின் கம்பங்களும் தொலைபேசிக்கம்பங்களும் முறிந்து விழுந்தன. இணைப்புக் கம்பிகளைச் சுனாமி அறுத்தெறிந்திருந்தது.
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் பொதுப் போக்குவரத்துச் சேவைகள் சுனாமியினால் துண்டிக்கப்பட்டன. மின்சாரம், தொலைபேசி வசதிகளற்றுப் போயின. வீதிகள் தகர்ந்தும், அள்ளுப்பட்டும் போயின. பாலங்கள் முற்றாகத் தகர்ந்து போனதால் கிராமங்களுக்கிடையிலான இணைப்பு துண்டிக்கப்பட்டுப் போனது. அதனால், நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்டு நலன்புரிநிலையங்களிலும் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தவர்களுக்குக் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
10. மனவடுக்கள், உளநலப்பாதிப்பு
சுனாமியின் பாதிப்பிற்குற்ற பிரதேசங்களில் எங்கும் காணக்கூடிய நிலமை மனப்பிறழ்வு நிலையாகும். மனக் காயங்களால் அனைவரும் பாதிக்கப்பட்டிருந்தாலும் ஒருசிலர் அத் துயரங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமையால் விரக்தியின் உச்சத்திற்குச் சென்று, மனநிலை பேதலித்துள்ளனர். ‘எல்லாரையும் பறிகொடுத்து விட்டோம்.இனி என்ன இருக்குது, எதிற்காக வாழவேணும்’ என்ற விரக்தி மேலோங்கியுள்ளது. மனோரீதியான பதிப்புக்களைக் குறைப்பதற்கு உளரீதியான மனோ ஆற்றுப்படுத்துகைகள் இன்று அவசியமாகிவிட்டன. சிறார்களின் மனதிலிருந்து சுனாமிப் பயம் இன்னமும் தீரவில்லை. அவர்கள் உறக்கத்தில் பிதற்றுகிறாார்கள். பயத்துடன் அலறுகிறார்கள். “கடல் வருகிறது’ என்று கூவித்திரிகிறார்கள். நமது ஊடகங்கள் அனைத்தும் விலாவாரியாகச் சுனாமி அனர்த்தங்களைப் படம் பிடித்துக் காட்டியமை கூட சுனாமியால் பாதிப்படையாதவர்களின் மனநிலையையும் பாதித்துள்ளதாக உளவியல் அறிஞர்கள் எடுத்துரைக்கின்றனர். அளவற்ற சடலங்களைக் குவியல் குவியலாகப் பார்த்த மக்கள் தூக்கத்தை இழந்து விட்டார்கள். கடற்கரையோரங்களில் அழுகுரல் கேட்பதாகச் சிலர் பிரமைப்படுகிறார்கள். பகுத்தறிவுக்கு ஒவ்வாத விதத்தில் அந்தமான் கரைகளில் பேய்கள் உலாவுவதைக் கண்டதாகச் சிலர் கூறியுள்ளனர். எனவே, அனைத்து சுனாமி
93

Page 57
பாதிப்பாளர்களுக்கும் உளவளச் சிகிச்சை அத்தியாவசியமாகின்றது. வடக்கு, கிழக்கு எங்கும் யாழ்ப்பாணத்தில் இயங்குவதுபோல சாந்தி நிலையங்கள் அகவொளி நிலையங்கள், சகவாழ்வு நிலையங்கள் அமைக்கப்படவேண்டும்.
11. இனமத ஐக்கியம்
சுமாத்திராச் சுனாமி, இலங்கையில் ஏற்படுத்திவிட்ட பெருநலன், இனமத ஐக்கியமாகும். தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் தாம் நெருங்கிய உறவுகள் என்பதை நிரூபிக்க ஒரு சந்தர்ப்பம் சுனாமியால் வாய்ந்தது. சிங்கள மக்களும் தமிழ் பேசும் மக்களும் தத்தமது துயரங்களில் பங்கு கொள்ள சுனாமி வழிவகுத்துவிட்டது. ஏனெனில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் ஓரின, ஒருமத மக்களல்லர். சுனாமி அனைத்து இன மத மக்களையும் ஏற்றத் தாழ்வின்றி சமத்துவமாக நடாத்தி ஓய்ந்துள்ளது.
தேசியப் பேரழிவாகச் சுனாமி அனர்த்தத்தை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க பிரகடனப்படுத்தினார். தெற்கில் சுனாமிப் பேரலையால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணியில் பொலிசாரும், இராணுவத்தினரும் முழுமூச்சில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு - கிழக்கில் இனமத வேறுபாடின்றி மக்களும் விடுதலைப் புலிகளும், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினரும், பல்கலைக்கழக மாணவர்களும் ஈடுபட்டுழைத்தனர். தெற்கில் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்களும் வள்ளங்களும் ஹெலிகொப்டர்களும் மீட்புப் பணிக்காகப் பயன்படுத்தப்பட்டன.
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் இன, மத, இராணுவ, புலிகள் நல்லுறவும் பரிந்துணர்வும் அதிகமாகும். கிழக்கிலங்கையில் முஸ்லீம்கள் தமிழ் மக்களை மீட்பதிலும், போசிப்பதிலும் முதலில் ஈடுபட்டுள்ளனர். இராணுவ அதிரடிப்படை தமிழ்மக்களை மீட்பதில் உதவியுள்ளது. கல்லடி இலங்கை இராணுவத்தினைச் சேர்ந்த ஏ. டி. வசந்த என்ற இராணுவவீரர் வெள்ள அனர்த்தத்தில் சிக்கி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் ஒதுங்கினார். அவரை மீட்டுத் தமிழீழப் புலிகள் இராணுவத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். கடல் பெருக்கெடுத்தபோது, இலங்கை இராணுவ வீரர்கள் பலர் ஓடி, புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளுள் அடைக்கலம் தேடினர். அவர்களுக்கு விடுதலைப் புலிகள் உதவிகளும் அனுமதியும் வழங்கிப் போசித்துள்ளனர். இயற்கையின் சீற்றம் இன, மத, குல வேறுபாடுகளின்றி அனைவரையும் பாதித்துள்ளதால் இன ஐக்கியத்தினைக் காணக் கூடியதாக உள்ளது.
மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் பெரிய நீலாவணைக்கும் ஒந்தாச்சிமடத்துக்குமிடையில் வீதிகளும் பாலங்களும் உடைந்து போனதால் பெரிய கல்லாறு, கோட்டைக் கல்லாறு போன்ற பகுதிகள் முற்றுமுழுதாகத் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மக்களுக்கான சமைத்த உணவு, ஏனைய நிவாரணப் பொருட்களைத் தலைகளிலும் தோள்களிலும் சுமந்து எட்டு கிலோமீற்றர் தூரம் வரை நடந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு வழங்கியவர்கள் அயற்கிராம சிங்கள மக்களாவர்
94 கந்தையா குனராசா

என்பது குறிப்பிடத்தக்கது. இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜனாதிபதி சந்திரிகாவும் ஒரு பெண் போராளியும் கிழக்கில் ஒரு முகாமில் கைகுலுக்கிக் கொண்டனர்.
முக்கியமாக இலங்கையில் மீண்டும் யுத்தம் வெடிக்கலாமென்ற நிலமையைப் பின்போடவைத்தது சுனாமி அனர்த்தம்தான்.
12. கரையோர நிலவமைப்பும் நிலப்பயன்பாடும் மாற்றம்
சுனாமிக்கு முன்னுள்ள நிலவமைப்பும் நிலப் பயன்பாடும் செய்ம்மதிப்படங்களால் ஏற்கனவே பல நாடுகளுக்கு எடுக்கப்பட்டுள்ளன. சுனாமி வந்து போனதன் பின்பும் எடுக்கப்பட்டு ஒப்பாய்வு செய்து கருத்துக்கள் வெளிவந்துள்ளன. சுனாமிக்கு முன்பிருந்த அழகும், விருத்தியும், வளமும் சுனாமிக்குப்பின்புள்ள படங்களிலில்லை. கரையோரங்கள் եւս T6ւյլք குடிமனைகளையும் கிராமங்களையும் இழந்து மூளியாகக் காட்சி தருகின்றன. தமிழ் நாட்டின் மெரினாக் கடற்கரையில் பரவிக் கிடந்த மணல் முழுவதும் கடலலையில் வாரி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இலங்கையின் வட கரையோரத்திற்கு வனப்பாயும் வளமாயும் பாதுகாப்பாகவும் விளங்கிய முருகைக்கற்பாறைகள் சுனாமியலையால் வாரி அள்ளப்பட்டுப் போய்விட்டன. 50 சதவீதம் கடலிற்குள் போய்விட்டது. பருத்தித்துறை முனையிலிருந்து சுண்டிக்குளம் வரை பரந்து கிடந்த மணல் குன்றுகளில் ஒரு பகுதி, சுனாமிக்கு இரையாகிப் போய்விட்டது.
இயற்கை இவ்வாறாக வளங்களை மனிதருக்குத் தருவது பயன்படுத்துவதற்காகத் தான். வருங்கால சந்ததிகளுக்காகப் பேண வேண்டும் என்பதற்கும் ஒரு எல்லையிருக்கின்றது. நாம் பட்டினி கிடந்து கொண்டு என்றோ வரப்போகிற ஒரு சந்ததிக்காகப் பேணிப் பாதுகாப்பது சூழலியலின் சூழலாதிக்கத்துவக் கருத்துக்கு முரணானது. வளங்களை நாமும் பயன் கொண்டு எதிர்காலச் சந்ததிக்கும் பேண வேண்டும். பருத்தித்துறை முனையிலிருந்து சுண்டிக்குளம் வரையிலான மணல் ஆக்கும்.அலையான வடகீழ்ப்பருவக் காற்றால் அள்ளி வந்து கரையில் சேர்க்கப்பட்டவை. எவ்வளவு எடுத்தாலும் இயற்கை தன்னை மீளவும் சமநிலைப்படுத்திக் கொள்ளும். நாம் கூடிய கவனத்தோடு இயற்கையின் செய்தியைப் புரிந்து கொள்ளாது போனதால் கருமியின் செல்வத்தை ஒருவன் வாருவது போல சுனாமி என்ற இயற்கை ஒரு பகுதி மணல் வளத்தை வாரி மீண்டும் தனக்கென எடுத்துச் சென்று விட்டது.
சுனாமியின் தாக்குதலால் மாத்தறை, காலி, களுத்துறைக் கரையோரங்களின் நிலப்பயன்பாடு மாறிவிட்டது. அந்தாமன் தீவிலொரு தீவு இரண்டாகப் பிரிவுபட்டுள்ளது. மாலை தீவுகளில் சில கடலால் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பின் களப்புகள் தம் முதல் வடிவ அமைப்பினை இழந்துபோய்விட்டன.
hatáso 9s'

Page 58
இவற்றினை எல்லாம் கவனத்தில் கொண்டு, இலங்கையின் புறவுருவ வடிவம் மாறிவிட்டதெனக் கூறுவது பொருத்தமற்றது. புறவடிவம் ஒன்றும் சுனாமியால் மாறிவிடவில்லை. வடிவமைப்பு மாறவில்லை. நிலப்பயன்பாடு தான் மாறியுள்ளது.
இலங்கையின் கரையோர நிலப்பயன்பாட்டினை மாற்றியமைக்கின்ற முயற்சிகள் நடந்து வருகின்றன. அது சுனாமி அரசியலாகவும் மாறிவிட்டது. புதிய குடிமனைகள் கடலிலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால் என்றும், 200 மீற்றர்களுக்கு அப்பால் என்றும், 500 மீற்றர்களுக்கு அப்பால் என்றும் கருத்துக்கள் வெளிவந்து இன்று சட்டமாக்கவும் பட்டுள்ளன. கடற்கரையோரத்திலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால்தான் குடியிருப்புகள் அமைய வேண்டுமென்பது சாத்தியமா?
இதனை நடைமுறைப்படுத்துவது சாத்தியப்படுவதில் பல சிக்கல்களுள்ளன. யாழ்ப்பாணத்தின் வடகரையில் கீரிமலையிலிருந்து பருத்தித்துறைமுனை வரை 10 மீற்றர்களுக்கு அப்பால் குடியிருப்புகள் செறிவாகவுள்ளன. அவர்களை ஒரு மீற்றர் கூடப் பின்னால் அகற்ற முடியாது. அது சாத்தியமல்ல இடமேயில்லை. அழிவுகள் நடந்தேறிய கையோடு அவர்கள் தம் இருப்பிடங்களைத் திருத்திக் குடியேறத் தொடங்கிவிட்டார்கள். வடமராட்சி கிழக்கிலும் முல்லைத்தீவிலும் 100 மீற்றர் அல்லது அதற்குக் கூடுதலாக மீற்றர் கருத்துச் சாத்திமாகலாம். ஆனால், தமது பாரம்பரியமான சொந்த உறவுகளையும் பரம்பரை பரம்பரையாக எந்தக் காற்றினைச் சுவாசித்து, எந்தக் கடற்கரை மணலில் வாழ்ந்தார்களோ அவற்றைக் கைவிடுவார்களா? மக்களுக்குச் சுனாமியின் தன்மையை எடுத்துக் கூறவேண்டும். உலக வரலாற்றில் 30 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ 50 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறையோ ஏற்படுகின்ற சுனாமிக்கு எங்கள் வாழ்வின் சிறிய பகுதிகளைத் தாரை வார்க்க முடியாது. ஆனால், இரு செயல்கள் சாத்தியமானவை.
1. சுனாமி ஏற்படுவதற்கு முன் ஓரிரு மணிநேர அவகாசம் இருக்கிறது. யப்பான், கலிபோர்னியா, அலாஸ்காக் கரையோரங்களில் வாழ்கின்ற மக்களுக்குச் சுனாமி பற்றிய செய்தி ஓரிரு மணிகளுக்கு முன்பே தெரிவிக்கப்படுகிறது. அது போன்ற முன்னெச்சரிக்கை முறையை இந்து சமுத்திரத்தில் உருவாக்க வேண்டும். இந்தியா அவ்வாறு அமைக்கத் திட்டம் வகுத்துவிட்டது.
2. அதுவரை தொழிலிற்கான வாடிகளையும் தற்காலிக குடிசைகளையும் கடற்கரையோரங்களில் அவர்களது வளவுகளில் அமைக்க விடவேண்டும். நிரந்தர வதிவிடங்களை கரையை விலக்கி அமைத்துக் கொள்ளலாம்.
3. புவிநடுக்கத்திற்கு ஈடுகொடுக்கக் கூடிய நெகிழ்ந்து வளையத் தக்க வீடுகளை
அமைத்துக் கொள்ள வேண்டும். கலிபோர்னியா இதில் வெற்றி கண்டிருக்கிறது.
96 கந்தைய குனராசா

திருகோணமலையில் நகர்ப்புறத்தில் கோணேசர் மலைக் கோயில் பாதையில் அடாத்தாகக் காணி பிடித்துச் சீவித்து வரும் சிங்கள மீனவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் சீவிப்பதே கடலிருந்து 75 மீற்றர்களுக்குள் தான். அவர்கள் மீண்டும் அங்கேயே குடிமனைகளை அமைக்கலாமென விசேஷ வர்த்தமானி உரிமை வழங்கியுள்ளது. இவ்வளவு காலமும் அடாத்துக் காணியெனக் கருதப்பட்ட நிலம், இந்த விஷேச வர்த்தமானி மூலம் உரிமைக் காணியாக மாறிவிட்டது. அதனால், நிலாவெளிக்கரையில் 200 மீற்றர்களுக்கு அப்பால் குடியிருப்பு அமைய வேண்டுமெனச் சட்டம் கூறுகிறது. மந்திரதந்திர ஜாலமா? அப்படியே குடிமனைகளைப் பின்னால் நகர்த்துவிட்டு, கடலோர மக்களை 200 மீற்றர்களுக்கு அப்பால் குடியமர்த்த?
மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் மக்களைக் கடற்கரையோரத்திலமைந்த தமது சொந்த வளவுகளிலிருந்து பின்னகர்த்துவது சாத்தியமன்று. தென்னிலங்கையில் ஒரு இன மக்களை கடற்கரையோர மையங்களிலிருந்து அப்புறப்படுத்தினால், பின்னால் உள்ள பெரும்பான்மையினர் முன்னணிக்கு வருவார்கள் என்ற எதிர்பார்ப்பும் எவ்வளவு தூரம் நடைமுறைச் சாத்தியம் என்பது ஐயமே.
மக்களை அவர்கள் விரும்புகின்ற இடங்களில் வாழ விடுங்கள். நன்மை தீமைகளை அவர்களே நிர்ணயித்துக் கொள்வார்கள் என்பதே உகந்ததாகும்.
- 7

Page 59
பேரலைப் பேரழிவுகள்
(இலங்கை தவிர்ந்த நாடுகள்)
1. இந்தோனேசியா
சி மாத்திராச் சுனாமியை உருவாக்கிய இந்தோனேசியாவின் சுமாத்திர மேற்கு வடகரையில் தோற்றம் பெற்றது முதன்முதல் 9.0 றிச்டர் அளவிலான புவிநடுக்கமாகும். அதனால், இந்தோனேசியப் பகுதிகள், அந்தமான் - நிக்கோபார் தீவுகள் ஆகியன புவிநடுக்கத்தின் பாதிப்புகளையும், சுனாமி அலையின் தாக்கத்தையும் ஒருங்கே அனுபவிக்க நேர்ந்தது. சுமாத்திராவில் உருவாகிய புவிநடுக்கம் பெரும் கடல் கொந்தளிப்போடு எழுந்து கடலோரங்களைச் சூழ்ந்தது. சுமாத்திராவின் அசே மாகாணத்தின் தலைநகரான பண்டா அசே முதலில் பெரும் பாதிப்பிற்குள்ளாகியது. “நான் பார்த்துச் கொண்டிருக்கும் போது கட்டிடங்கள் சரிந்து வீழ்ந்தன. வீடுகளை விட்டு மக்கள் பதறியடித்துக்கொண்டு திக்குத் திசை தெரியாமல் ஓடினர். பண்டா அசே நகரத்தினைப் பெரும் சமுத்திர நீர் தேங்கி வழிந்தது. நான்கு பிள்ளைகளின் சடலங்களையும் ஐந்து முதியவர்களின் சடலங்களையும் நான் பார்த்தேன். கடல் மட்டம் வெகுவாக உயர்ந்து வந்தது. பெரும் அலைகள் தோன்றின” என முஸ்தபா என்பவர் விபரிக்கிறார்.
இந்தோனேசியாவிலும் ஏனைய தென்கிழக்காசிய நாடுகளிலும் மாத்திரம் ஒன்னறரை இலட்சத்திற்கு மேல் மக்கள் சுனாமியால் கொல்லப்பட்டுள்ளனர். பண்டா எக் நகர், மேலாகாப் நகர் ஆகிய இரண்டிலும் எதுவும் மிஞ்சவில்லை. இந்த இரு நகர்களில் ஒரு கட்டிடம் கூட எஞ்சியிருக்கவில்லை. இந்த இரு நகரங்களையும் மீட்புக் குழுவினர் சென்றடைவதற்கான வழிகள் தடைப் பட்டதால், ஆங்காங்கு சிதறிக் கிடந்த சடலங்கள் அழுகித் துர்நாற்றம் வீசின.
இந்தோனேசியப் பிரதேசங்களில் சுற்றுலாப் பயணிகள் பெருமளவில் காணாமற் போயுள்ளனர். சுவீடன் நாட்ட்வர் (1500), நோர்விஜியன்கள் (200),
98. கந்த்ையா குனராசா
 

டென்மார்க் நாட்டினர் (214), பின்லாந்து நாட்டவர் (200), இஸ்ரேலியர் (188), ஜேர்மனியர் (100), இத்தாலியர் (100) என பல்நாட்டு மக்கள் இப்பிரதேசங்களில்
சுனாமிப் பேரழிவினால் காணாமற் போயுள்ளனர்.
இந்தோனேசிய சுமாத்திரா நகரமான பண்டா அசேயில் முதல்நாளே 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இறந்து போயினர் என மதிப்பிடப்பட்டது. அசேயின் வீதிகள் எங்கும் உடல்கள் சிதறிக் கிடந்தன. அழுகித் துர்நாற்றம் வீசின. அவற்றிடையே தம் உறவுகளைத் தேடியபடி பலர் அலைந்தனர். என் தந்தை ஒரு மீன் வியாபாரி. ஞாயிறு அதிகாலை சந்தைக்குப் போன அவரைக் கர்ணவில்லை. ‘நான் என் தந்தையைத் தேடுகிறேன். களைத்துப் போய்விட்டேன். எனக்கு உதவுங்கள்’ என வீதியில் 22 வயது யுவதியான மையோரி அமுதாபி அழுதார்.
இந்தோனேசியாவில் இறந்தவர் தொகை நாளாந்தம் அதிகரித்து வருகின்றது. அங்கு மட்டும் 80 ஆயிரம் பேர் இறந்துள்ளனரென அரச அறிக்கை கூறுகிறது.
இந்தோனேசியாவில் ஒரு வாரமாக ஒரு படகின் அடியில் சிக்கிக் கிடந்த இருபத்திநான்கு வயது மீனவர் தென்கூகையான் மீட்புக் குழுவினரால் மீட்கப்பட்டார். ஒரு வாரமாக எதுவித உணவும் நீருமின்றி மயங்கி மிகச் சோர்வடைந்த நிலையில் கிடந்த அவருக்கு அவசர வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டார்.
சுமாத்திராத்தீவின் ஒதுக்குப் புறமான வடமேற்குக் கரையோரத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஜனவரி 9 ஆந் திகதி இந்தோனேசிய மரணங்கள் 107000 எனக் கணக்கிடப்பட்டது. அசே மாகாணத்திலேயே மரணங்கள் மிகக் கூடுதலாக நடந்துள்ளன. சுமாத்திராவின் அசே மாகாணத்தில் தனியான அரசொன்றினை அமைக்க அசே சுதந்திர இயக்கம் (GAM) என்பது போராடி வருகின்றது. சுனாமி ஏற்பட்டதும் இந்த இயக்கமும் அரசும் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றைக் கடைப்பிடித்து வருகின்றன. இலங்கையின் வடக்குகிழக்குப் போராளிகளுக்கும் அரசுக்குமுள்ள அதே நிலைப்பாடுதான் அசே மாகாணத்திலும் இருக்கின்றது.
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து பதினொரு நாட்களுக்குப் பிறகு 70 வயதுடைய ஒருவர் கட்டிட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளார். “எனக்கே தெரியவில்லை நான் எப்படித் தப்பினேன் என்பது. இது ஒரு அதிசயம் தான். என்னுடலை அசைக்கமுடியவில்லை. ஆனால் என்னைச் சுற்றியிருந்த நீரைப் பருகியுயிர் வாழ்ந்தேன்.’ என்கிறார் முகம்மது சயினி என்பவர். அவர் தனது மனைவியையும் ஆறு மக்களையும் இக்கடல் பெருக்கில் இழந்து போனார்.
99

Page 60
2. இந்தியா
இந்தியாவின் கிழக்குக் கரையோரப் பிரதேசங்கள் சுனாமியின் தாக்குதலுக்குள்ளாகின. அந்தமான் நிக்கோபார் தீவுகள் சுனாமி தோன்றிய பிரதேசத்திலேயே அமைந்திருந்தமையால் 11 ஆயிரம் மக்கள் அங்கு மரணமடைந்தனர். தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் (7793 பேர்), கன்னியா குமரி (800 பேர்), கடலூர் பாண்டி (3100 பேர்) என மரணமாகினர். மற்றும் கேரளாவில் 40 பேரும், ஆந்திரப் பிரதேசக் கரையில் 36 பேரும் சுனாமியால் காவு கொள்ளப்பட்டனர். ஆக இந்தியாவின் சுனாமியால் உயிர் குடிக்கப்பட்டவர்கள் தொகை 22769 ஆகும்.
2. அந்தமான் - நிக்கோபார்
அந்தமான் தீவில் இந்திய விமானப்படையினர் 120 பேரைச் சுனாமி அலை காவு கொண்டது. அதிக உயிர்ச் சேதத்தை அந்தமான் - நிக்கோபார் தீவுகளடைந்துள்ளன. கார் நிக்கோபார், நான் சுங்கிரித் தீவுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் புவிநடுக்கங்கள் சுமாத்திராப் பெரும் புவிநடுக்கத்திற்குப் பின்னர் ஏற்பட்டுள்ளன. ‘அதிகாலை 6.50 ஆகவிருக்கலாம். எனது படுக்கையறை யன்னலை உடைத்துக் கொண்டு அந்தப் பேரலை புகுந்தது. நான் யன்னலோடு மாட்டிக் கொண்டேன். என் மனைவி அள்ளி வெளியே இழுக்கப்பட்டபோது ஒரு மரத்தில் சிக்கிக் கொண்டாள். என் மூன்று வயது மகளும் ஒரு வயது மகனும் அந்தப் பாவி அலையால் இழுத்துச் செல்லப்பட்டனர். என சீக்கிய விமானப் படை வீரர் கதறியழுதார். அந்தமானில் முதல்நாள் நிகழ்ந்த மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தைத் தாண்டியது. 6000 பேர் காணாமல் போயிருக்கிறார்கள். அந்தமானின் 80 சதவீதப் பிரதேசம் சுனாமியால் கழுவப்பட்டது. அங்கிருந்த இந்திய விமானப்படைத்தளம் முற்றாக அழிந்து போனது. சவுரா, கார் நிக்கோபார். கட்சால், காமோர்தா, தெரஸா, ஹட்பய் ஆகிய தீவுகள் ஏறக்குறைய நீரில் மூழ்கிப்போயின. கார்நிக்கோபார் விமானத் தளத்தில் இறந்த 400 பேரில் 117 பேரின் சடலங்களே கிடைத்துள்ளன. (சௌமித்ரா கோஷ்).
அந்தமான் - நிக்கோபார் தீவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்ட போதிலும், அந்தமான் ஆதிவாசிகள், முன்கூட்டியே கரையோரங்களை விட்டு விலகி மேட்டுப் பாங்கான பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர். ‘தரையில் படுத்திருந்தேன். வெறுந்தரை. நிலத்தினுள் ஏதோ உடைகிற சத்தம் ம்ெது மெதுவாக எழுந்தது. உடனே என் மக்களையும் அழைத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு விலகி விட்டேன்’ என்கிறார் ஆதிவாசிக் குழுத்தலைவர்.
சுனாமிப் பேரலை தாக்கியதால் அந்தமானின் அழகிய கடற்கரைகள் அள்ளிச் செல்லப்பட்டு தம் வனப்பினை முற்றாக இழந்து போயுள்ளன. அந்தமானின் டிரிங் தீவு இரண்டாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. போர்ட்பிளேயர், மேம்பூபிளாட் தீவு ஆகிய பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
100 கத்தையா குனராசா

அந்தமானில் இயற்கை அனர்த்தம் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, இன்னொரு இயற்கை நிகழ்வும் நடந்தது. “சுனாமி அலை கரையோரத்தில் வானளாவிப் பொங்கி எழுந்ததும் நானும் கர்ப்பிணியான என் மனைவியையும் அவ்விடத்தைவிட்டு எழுந்து ஓடி தூரத்திலுள்ள ஒரு கற்பாறைப் பிரதேசத்தில் பெரும் குன்றொன்றிற்குப் பின்னால் மறைந்து கொண்டோம். அங்கு என் மனைவி நம்ரிதாவுக்குப் பிரசவவலி ஏற்பட்டது. மூன்று வாரங்களுக்கு முன்னரே அந்த வலி ஏற்பட்டது. சிரமத்திற்கு மத்தியில் பெண்குழந்தை ஒன்றினைப் பெற்றெடுத்தாள். சுனாமியை அடுத்து இக் குழந்தை பிறந்ததால் “சுனாமி றோஸ்’ என்று பெயரிட்டுள்ளோம்’ என்கிறார் லக்ஸ்மா நாராயனர்.
26 டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட 90 றிச்டர் அளவிலான புவிநடுக்கத்தினைத் தொடர்ந்து, குறைவான ஹிச்டர் அளவில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் நூற்றிற்கும் மேலான தடவைகள் பூகம்ப நிலவதிர்ச்சிக்குள்ளாகின. அவ்வாறு ஏற்பட்ட புவிஅதிர்ச்சிகள் 6.5 றிச்டர் அளவிற்குக் குறைவாக இருந்துள்ளன.
2.2 நாகபட்டினம்
நாகபட்டினத்தினைச் சேர்ந்த வேளாங்கண்ணி ஆலயத்துக்குத் தம் மகன் பிரவீனுக்குத் தலை மொட்டையடித்துத் தம் நேர்த்தியை நிறைவேற்றச் சென்ற அந்தோணி பிரான்சில் குடும்பம், சுனாமிக்கடல் கொந்தளிப்பில் சிக்கிக் கொண்டது. கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் பிரவீன் ஓர் இடத்தில் ஏனைய பிணங்களுக்கிடையில் மயங்கிக் கிடந்தான். மீட்புக் குழுவினர் சடலங்களோடு சடலமாக அவனையும் எடுத்துச் சென்று நாகபட்டின ஆஸ்பத்திரியில் குவித்து விட்டனர். ‘என்னால் நம்பவே முடியவில்லை குவிக்கப்பட்டுக் கிடந்த சடலங்களைப் புதைப்பதற்காக வாகனத்தில் அடுக்கிக் கொண்டிருந்தோம். அச் சடலங்களுக்குள்ளிருந்து ஒரு சிறுவன் எழுந்து அமர்ந்தான். தூக்கிய பிரேதங்களைக் கைநழுவ விட்டுவிட்டு பயத்தால் ஒரு கணம் உறைந்து போனோம். ஒருவர் அவ்விடத்தினை விட்டு ஒடியே விட்டார்’ என நாகபட்டின வைத்தியசாலை ஊழியர் ஒருவர் கூற்று. மயங்கிய நிலையில் கிடந்த சிறுவன் பின்னர் தகுந்த சிகிச்சை அளித்துக் காப்பாற்றப்பட்டான். ஆனால் அவனது குடும்பத்தினர் அனைவரும் கடலினால் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர்.
நாகபட்டினத்தில் இவ்வாறான இன்னொரு சம்பவமும் நடந்தது. ‘நான் மதுரையைச் சேர்ந்தவன். உறவினர்களுடன் வேளாங்கண்ணிக்கு வந்தேன். திடீரென எழுந்த கடலலை எங்களை அடித்துச் சென்றது. என்ன நடந்ததென்றே எனக்குத் தெரியவில்லை. மயக்கம் தெளிந்து விழித்த போது பிணக்குவியல்களுள் நான் கிடப்பதை உணர்ந்தேன்.’ என்கிறார் பஞ்சவர்ணம். அரையுயிரோடும் மயக்க நிலையிலும் கிடந்த எத்தனை பேரை இறந்துவிட்டனர் என முடிவு செய்து கிடங்குகளில் புதைத்தோமோ?
சுனாமி 101

Page 61
நாகபட்டினத்தில் வேளாங்கண்ணித் தேவாலயம் இந்தியக் கடற்கரையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாகும். கிறிஸ்மஸ் தினத்திற்கு அடுத்தநாள், கடல் சீற்றங்கொண்டு எழுந்தது. தேவாலயத்திற்கு வெளியே வர்த்தக நிலையங்கள். கைவண்டிகள், வாகனங்கள், மனிதர்கள், மிருகங்கள் எல்லாம் சுனாமியால் சிதறடிக்கப்பட்டு போயின. கிறிஸ்மஸ் விழாவிற்காக அமைத்த பந்தல்களில் சடலங்கள் வளர்த்தப்பட்டிருந்தன. தன் குடும்பத்தினைச் சேர்ந்த ஆறு பேர்களைச் சுனாமிக்குப் பறிகொடுத்துவிட்டு எஞ்சிய ராஜூ போல பலர் நாகபட்டினத்திலுள்ளனர். காதை கிழிக்கும் பேரிரைச்சலுடன் புறப்பட்டுவந்த பேரலை கண்டு. தேவாலயத்தின் படிக்கட்டுகளை நோக்கி ஓடியவர்களில் முந்நூறு பேர் வரை கடலலை இழுத்துச் சென்றது. நூற்றுக்கணக்கான சடலங்கள் யாத்திரிகர்கள் தெருக்களில் சிதறிக் கிடந்தனர். நாகபட்டின மாவட்டத்தில் கரையோரப் பகுதிகளான மயிலாடுதுறை, வேதாரணம், சீர்காழி என்பனவும் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள். 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இப் பகுதியில் ஜலசமாதியாகினர். நாகபட்டினத்தின் அரச வைத்தியசாலைக்குள் புகுந்த 10 அடி உயரச் சுனாமி, அங்கிருந்த நோயாளிகளில் 140 பேரைப் பலி கொண்டது. நாகபட்டினக் கரையோரக் குடிசைகள், கட்டிடங்கள் அனைத்தும் தகர்ந்து போயின. மீன்பிடிப் படகுகள் அனைத்தும் தூக்கிச் சில கிலோமீற்றர் தூரம் தூக்கியெறியப்பட்டு உடைந்து போய்க் காட்சி தந்தன. நாரிழைப் படகுகளைச் சுனாமி அலாக்காத் தூக்கி மரங்களில் மோதி உடைத்திருந்தது. கரையெங்கும் சடலங்களும், அவல ஒலங்களும் நாகபட்டினத்தில் நிறைந்து கிடந்தது. பெரும்பாலான குடும்பங்களில் ஒருவர், இருவரே எஞ்சியுள்ளனர்.
வேளாங்கண்ணியில் இனங்காணப்படாத சடலங்கள் நூற்றுக் கணக்கானவை, அதனால் இனங் காணாத சடலங்களைப் புகைப்படங்களாக எடுத்துவிட்டுப் புதைத்தனர். சடலங்களை மணலில் பெருங் கிடங்கு அகழ்ந்து கொத்துக் கொத்தாகத் தூக்கிப் போட்டுப் புதைத்தனர். மரியாதைக்குரியதாக மரணமோ இறுதிப் புதையலோ அமையவில்லை. நல்லடக்கமாக அமைய வாய்ப்பில்லாது போனது. அடையாளங் காணமுடியாத சடலங்களின் புகைப்படங்கள் வேளாங்கண்ணிச் சுவரில் காட்சிக்கு வைக்கப்பட்டது. தங்கள் உறவினர் அப்படங்களில் உள்ளனரா என உறவுகள் விழிகளில் நீரைக் கொட்டியபடி பார்த்து நின்றனர். (எம்.ஜி. ராதாகிருஷ்ணன்)
நாகபட்டினத்தில் தோண்டத் தோண்ட பிணங்கள் அகப்பட்டுள்ளன. ஒரு லட்சம் வீடுகள் கடல் கொந்தளிப்பால் அழிந்து போயுள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் பலியானோர் தொகை 7793 ஆகும். இந்த எண்ணிக்கையில் நாகபட்டினமே அதிக தொகையினர் இறந்துபோன பகுதியாகும்.
4.3 சென்னை
சென்னையில் காலை 9.15 மணியிலிருந்து காலை 10.30 மணிக்குள் இரு
தடவைகள் பொங்கிய கடல் எண்ணுர், திருவொற்றியூர், காசிமேடு, இராயபுரம், மெரினா,
பட்டினபாக்கம் போன்ற கடலோரப் பகுதிகளை மிக மோசமாகத் தாக்கியழித்து
102 கந்தையா குனராசா

விட்டது. முதல்நாளே 200 வரையிலான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மெரினாக் கடற்கரையில் காலை வாக்கிங் போனவர்கள் திரும்பவில்லை. கிரிக்கெட் விளையாடச் சென்றவர்கள் தம் வீடுகளுக்கு மீளவில்லை. அக்கடற்கரையில் மாங்காய், சுண்டல் விற்றுப் பிழைப்பவர்கள் கடலுக்குள் போய் விட்டார்கள். காற்று வாங்க காலை வந்தோம். மனைவி, இரண்டரை வயது மகன், எட்டு வயது மகன் உட்பட ஏழுபேர் வந்தோம். இப்போது எஞ்சியிருப்பது நானும், தம்பியும் தான். ஏனையோரின் சடலங்களில் இன்னும்ஒன்றைத் தேடிக் கொண்டிருக்கின்றோம் என்கிறார் முகமது ஆப்தீன் கண்ணீர் மல்க். இக் கடற் கரையில் சுமார் இரண்டு இலட்சம் மீனவர்கள் வீடுகளை இழந்திருக்கின்றனர். சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகள் முற்றிலும் அழிந்துள்ளன. ‘தங்குவதற்கு வீடுகளில்லை. கடலுக்குப் போக படகுகள் இல்லை. கூடி மகிழ உறவுகள் இல்லை’ என்பது இப்பகுதிக் கடலோர மக்களின் ஏக்கக் குரலாகும். (சரவணன்)
மெரினாக் கடற்கரையில் சீறிப் பாய்ந்தெழுந்த கடல் அலையைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனவர்களையும் பயந்து உயிர் பிழைக்கும் ஆவலுடன் பிரதான வீதிக்கு ஓடி வந்தவர்களையும் துரத்தி வந்த கடலலை மூழ்கடித்துச் சென்றது. மெரினாக் கடற்கரையே காணாமல் போய்விட்டது போலக் கடல் நீர் தேங்கி நின்றது. கடல் தண்ணீரின் சீற்றத்திற்குக் குடிசைகளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. கடலோடு அள்ளுப் பட்டுப் போயின. கடலோர மக்களின் உடைமைகள் அனைத்தும் கடலோடு அள்ளுப்பட்டுப் போயின. கடல் அலைகள் ஆர்ப்பரித்து வந்ததால் கூவம் ஆற்றுக்குள் கடல் நீர் வெள்ளம் போலப் பெருக்கெடுத்தோடியது. குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு மக்கள் உயிர் பிழைக்க ஓடினார்கள். வெட்டுவாங்கேணியிலிருந்து 5000 குடிசைகளும் ஒரு கணப் பொழுதில் கடலோடு போயின. பழவேற்காடு பகுதியில் 25 மீனவக் கிராமங்கள் கடல் நீருள் மூழ்கிப் போயின. முதற் கொந்தளிப்பினைக் கேள்விப்பட்டு மெரினாக் கடற்கரைக்கு திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் வேடிக்கை பார்க்க வந்தனர். இரண்டாவது கிளம்பிய சுனாமி அலை அவர்களில் பலரை இழுத்துச் சென்றது. தமிழ்நாட்டில் மட்டும் 7000 மக்களுக்கு மேல் பலியாகிவிட்டனர் என அறிக்கைகஸ் கூறுகின்றன. இந்தியா முழுவதும் ஏறக்குறைய 10 ஆயிரம் மக்கள் சுனாமிக்கு ரயாகிவிட்டனர்.
மெரினாக் கடற்கரையின் மணல்பரப்பு இருந்தவிடம் தெரியாமல் மறைந்து போய்விட்டது. மேலும் கல்பாக்கம் பகுதியில் பயங்கர அலைகள் வீறிட்டெழுந்து மோதியதால் அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயம் இடிந்து விழுந்தது. அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அறுபது பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.
4. 4. கடலூர்
é
கட்டுமரங்களைக் கரை ஒதுக்கிவிட்டுக் கொண்டிருந்தோம். அன்று பிடித்து வந்த மீன்களை விற்க எங்கள் பெண்கள் தயாராகிக் கொண்டிருந்தார்கள்.
fhoff' '' 03

Page 62
கடற்கரையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவ்வேளை திடீரென கடல் வற்றியது. மறுகணமே பொங்கிப் பெருகி இராச்சத அலையாக உயர்ந்து கரையை நோக்கி வந்தது. சிலர் ஒட்டமெடுத்தனர். சிலர் அரண்டுபோய் அப்படியே நின்று விட்டார்கள். சிலர் கைக்குக் கிடைத்தவற்றைப் பற்றிக் கொண்டார்கள். சிலர் மரங்களிலும் உயர்ந்த இடங்களிலும் ஏறிக் கொண்டார்கள். ஆனால் சுனாமி அரக்கன் முன் இவை எதுவும் பலிக்கவில்லை. என் கண் முன்னாலேயே LJ Gab f அலையால் அடித்துச்செல்லப்பட்டனர். கடலூரில் ஒரு மரத்தினைப் பற்றிப் பிடித்ததால் அதிஷ்டவசமாகத் தப்பிய ஒருவரின் வாக்குமூலம். கடலூர், பாண்டி, கல்பாக்கம் ஆகிய கடலோரப் பகுதிகளில் 3100 பேரின் சடலங்கள் பொறுக்கி எடுத்து அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இக்கடலோர மீனவக் கிராமங்கள் ஆளரவமற்று மயான அமைதியில் மூழ்கிக் கிடக்கின்றன. மீனவர்களின் வீடுகளுள் புகுந்த கடலலை அங்கிருந்த ரீவிக்கள், பீரோக்கள் முதலியவற்றினை அள்ளிச் சென்று விட்டு, மணல், சேறு. சகதி என்பனவற்றினை வாரியிறைத்து விட்டுச் சென்றிருந்தது. வீடுகளுள் ஒரடி உயரத்திற்குக் கரும் சேறு குழம்பாகிக் காட்சிதந்தது. கதவு, யன்னல்கள் பிய்த்து வீசியெறியப்பட்டுள்ளன. மீன்பிடிப்படகுகளும், ஆண், பெண், சிறுவர்களின் சடலங்கள், வயல்வெளி எங்கும் தூக்கி வீசப்பட்டிருந்தன. கடலூர் மாவட்டத்திலுள்ள சின்னவாய்க்கால், முடசலோடை ஆகிய தீவுக் கிராமங்கள் இருந்தவிடம் தெரியாமல் காணாமற் போய்விட்டன. ‘வாழ்நாள் முழுவதும் நாம் சேகரித்த சொத்துக்கள் முழுவதும் ஒரு அதிகாலையில் ஒரு சில நிமிடங்களில் நாசமாகி விட்டன. இனிமேல் என்ன செய்யப்போகிறோம்’ என்பது தான் எஞ்சிய கடலூர் மீனவ மக்களின் கேள்வியாகவுள்ளது. ராதிகா கிரி)
4.5. கன்னியாகுமரி
தமிழ்நாட்டில் நாகப்பட்டினத்திற்கு அடுத்த լ / tգ եւ Ift Ց கன்னியாகுமரியில்தான் சுனாமியால் அதிகமானோர் இறந்துள்ளனர். அன்று மாலையே ஏறத்தாழ 800 உடல்கள் தேடி எடுக்கப்பட்டன. வெளியே பேரிரைச்சலோடு தென்னை மரஉயரத்திற்குக் கிளம்பிய சுனாமி வந்த போது, நானும் என் மனைவியும் வீட்டிற்குள் இருந்ததால் தப்பினோம். ஆனால். சுனாமி அலை ஒய்ந்தபின் வெளியேவந்து பார்த்தபோது என் பிள்ளைகள் மூவரும் முற்றத்தில் இறந்து கிடந்தனர்’ என்கிறார் ஹனீபா கன்னியாகுமரியில் தாமரைக்குளம், மணக்குடி ஆகிய இடங்களில் கடும் உயிர்ச்சேதம் நிகழ்ந்துள்ளது. அழிக்கப்பட்ட வதிவிடங்களிலிருந்த பாத்திரங்களும், பிறபொருட்களும் சுமார் 300 மீற்றர் தொலைவுவரை கடலலையால் தூக்கி வீசப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த நாளின் பின்னர் பல நாட்களாகப் பிரேதங்கள் கரைஒதுங்கிக் கொண்டிருந்தன. கரையோரம், சடலங்களின் அழுகிய நாற்றத்தால் ஆரோக்கியம் இழந்திருந்தது. சில குடும்பங்கள் முற்றாக அழிந்து போயின. (எஸ். சுந்தர்தாஸ்) பொங்கி எழுந்த பேரலை இங்கு
104 கந்கையா குனர்ாசா

நிறுவப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை மேவி எழுந்தது. ஆனால் அச்சிலையை அதனால் தகர்க்க முடியவில்லை. வள்ளுவரிடம் தோற்றுப் பின்வாங்கிப் போனது.
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கடலோரப் பிரதேசமான திருச்செந்தூரில் ஞாயிறு காலை கடலானது ஒரு கிலோ மீற்றர் தூரத்திற்குப் பின்வாங்கிச் சென்றது. அதனால் கடல் தரையின் பாறைகள் வெளித் தெரிந்தன. திருச்செந்தூர் முருகன் கோவிலிலிருந்து கடல் பின்வாங்கியதால் பெரும் பள்ளம் ஏற்பட்டது போன்று காட்சி தந்தது. நேரம் ஆக ஆக உள்வாங்கிய கடல் நீர் கரையை நோக்கி உயர்ந்து தரையினுள் புகுந்தது. 10 அடி உயரத்திற்கு அலைகள் கிளம்பின. ஆனால் ஆலயத்திற்கு எதுவித சேதமும் ஏற்படவில்லை.
4.6 கேரளா
கேரளாவில் அழிக்கல் என்ற கிராமம் முற்றாகச் சுனாமியால் அழிக்கப்பட்டு விட்டது. இங்கு 2000திற்கு மேற்பட்ட வீடுகளும், 40 துக்கு மேற்பட்ட மக்களும் அழிந்து போயினர். கேரளாவில் மொத்தமாக 200 பேருக்குமேல் இறந்து போனார்கள். கடலோரங்களிலிருந்து சிறு குடிசைகளிலிருந்து பெரிய கட்டிடங்கள் வரை பாகுபாடு காட்டாது சுனாமி நொருக்கித் தள்ளிவிட்டது.
4.7 ஆந்திராக்கரை
ஆந்திராக்கரையில் சுனாமி தன் கோரத்தாண்டவத்தினை ஆடியுள்ளது. மஞ்சினாப்புடி கடற்கரையோரத்தில் அன்று காலை நின்றிருந்தவர்களை, பொங்கியெழுந்த அலை அப்படியே அடித்துச் சென்றது. கடல் உள்வாங்கியபோது அடுத்து நிகழவிருக்கும் சங்கதியை உணராது வியப்புடன் பார்த்து நின்றவர்கள் இவ்வாறு பலியாகிப் போயினர். அவ்வாறு அள்ளிச் சென்றவர்களின் எண்ணிக்கை 36 ஆகும்.
5. ஏனைய நாடுகள்
வங்களாதேசத்தின் தென்கிழக்கு சிட்டாகொங் துறைமுக நகரைச் சுமாத்திராப் புவிநடுக்கம் தாக்கியது. நகரமே பலமாக உலுக்கப்பட்டது. இப்புவிநடுக்கம் 1 நிமிடம் 42 விநாடிகள் வரை நீடித்தது. மக்கள் தமது வதிவிடங்களை விட்டுக் கிலி பிடித்தவர்களாக வெளியே ஒடி வந்தனர்.
"விமானம் சீறிக் கொண்டு வருவது போல கடலலை பீறிட்டு வந்தது. தென்னை மரஉயரத்திற்கு உயர்ந்து கலங்கல் நீராக வந்து கிராமத்தையே சின்னாபின்னமாக்கிவிட்டது. வெளியே விளையாடிக் கொண்டிருந்த என் மகனும்
øSTATá 105

Page 63
மகளும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. சில விநாடிகளில் வீட்டிற்குள் புகுந்தது அலை. கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நான் தப்பினேன். என் மக்களைத் தேடி அலைந்தேன். சேற்றில் மகன் பிக்ரி வாய் முழுக்கச் சேற்றுடன் கிடந்தான். அவனை மருத்துவமனையில் சேர்த்தேன். துள்ளி விளையாடும் அவன் இப்போது பீதி அடைந்துள்ளான். உறக்கத்தில் திடீர் திடீரென அலறுகிறான்’ என்கிறார் மலேசியா பினாவ தீவுப் பகுதியைச் சேர்ந்த ரஹீபா (ராய்ட்டர்)
ஆபிரிக்கா
சுமாத்திராச் சுனாமி இந்து சமுத்திரத்தில் பல நூறு கிலோமீற்றர்கள் வேகமாகப் பயணப்பட்டு ஆபிரிக்காவின் கிழக்குக் கரையோரத்தையும் தாக்கியுள்ளது. கிழக்காபிரிக்க நாடுகளான சோமாலியா, கென்யா, தன்சானியா என்பன பாதிக்கப்பட்டுள்ளன. சோமாலியாவில் 38 பேர் சுனாமியால் காவு கொள்ளப்பட்டுள்ளனர். தன்சானியாவின் துறைமுக நகரமான தாருஸ்ஸலாமில் கரையோரமாக நீந்திக்கொண்டிருந்த 10 பேர் கடலலையால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். இக்கரையோரத்தில் 26 டிசம்பர் மாலை 2 மணிக்கும் 5 மணிக்குமிடையில் கடுமையான அலைத்தாக்கம் ஏற்பட்டது. கென்யாவில் கரையோரத்தில் நின்றிருந்த ஒருவரை அலைகாவிச் சென்றது.
மாலைதீவு
மாலைத்தீவுகள் சுனாமி அலைகளினால் தாக்கப்பட்டன. மாலைத்தீவின் மூன்றில் இரண்டு பகுதி கடல் நீரினுள் மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. மாலைதீவுக்குச் சொந்தமான 1192 தீவுகளில் 42 தீவுகள் இருந்தவிடம் தெரியாமல் கடலினுள் அடியோடு அமிழ்ந்து விட்டன. மக்கள் வசிக்கும் 13 தீவுகளும் முற்றாக அழிந்து போயின. 29 சுற்றுலாத் தீவுகளுக்குப் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தாய்லாந்து
தாய்லாந்தின் தென் மாகாணங்கள் நான்கு சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தாய்லாந்தின் உல்லாசத் தீவாகக் கருதப்படும் பூகெட் முதலில் புவிநடுக்கத்தால் உலுக்கப்பட்டது. பின்னர் திடீரெனக் கிளம்பிய சுனாமி நூற்றுக்கு மேற்பட்ட உல்லாசப் பயணிகளை அடித்துச் சென்றது. இது நிகழ்ந்த காலம், உல்லாசப் பயணக் காலமாதலால் ஏராளமான ஊர்காண் பயணிகள் அங்கு வந்திருந்தனர். பூகெட் நகரின் மேற்குப் பகுதியிலிருந்த உல்லாச ஹோட்டல் சுனாமியின் முதலலை அடிப்பிலேயே பொல பொல வெனக் கற்குவியலாகி விட்டது. நூற்றிற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். பூகெட்டின் சுவோலா கடற்கரையோரப் பகுதியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
106 கந்தையா குனராசா

பல உடல்கள் கட்டிட இடிபாடுகளுள்ளும், மணலில் புதையுண்டும் இருப்பதாகத் தெரிந்தது. பிரான்சின் அகோர் நிறுவனங்களுக்குச் சொந்தமான சொவிடெல் உல்லாசப் பயண விடுதியிலிருந்து 500 பேர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் 20 உடல்கள் அன்றே மீட்கப்பட்டன. பூகெட்டின் புளுவில்லேஜ் ஹோட்டலில் தங்கியிருந்த 340 ஸ்கண்டினேஷிய உல்லாசப் பயணிகள் சுனாமியால்
கொல்லப்பட்டனர்.
பூகெட் தீவில் 100 க்கு மேற்பட்ட உல்லாசப் பயணிகளை 10 வயது பிரித்தானிய சிறுமி டில்லி காப்பாற்றியுள்ளாள். இவர்கள் பூகெட் தீவின் மைக்கோ கடற்ரையில் உல்லாசமாகப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். ‘நான் கரையோரத்தில் நின்று கொண்டிருந்தேன். திடீரெனக் கடலில் மாற்றங்கள் தென்பட்டன. நுரைகள் தோன்றின. கடல் அலைகளின் கொந்தளிப்புத் திடீரென நின்றது. கடல் சற்றுப் பின்வாங்கியது என்ன நடக்கப்போகிறதென்பதை உணர்ந்தேன். பாடசாலையில் படித்தவை நினைவு வந்தன. சுனாமி தாக்கப் போகிறதென என் தாயாரிடம் கூறினேன். அவர் எல்லாரையும் எச்சரித்து அக்கடற்கரையிலிருந்து அப்பால் ஓடிப்போகச் சொன்னார்’ என்கிறாள் டில்லி மேலும், சுவோலாக் என்ற உல்லாச விடுதியில் பெற்றோர், சகோதரர்களுடன் வந்திருந்த ஆறுவயதுச் சிறுமி சூஷியூ நீச்சல் குளத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். திடீரென சுனாமி வெள்ளம் விடுதியினுள் புகுந்தது. வெள்ளத்தில் மிதந்து வந்த சோபா மெத்தையைப் பிடித்துக் கொண்டு சூஷியூ மிதந்தாள். பின்னர் காப்பாற்றப்பட்டாள். அவளுடைய பெற்றோர். இரு சகோதரர்கள் காணாமற் போயுள்ளனர்.
இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகளான இவை சுனாமி அழிவிலிருந்து தம்மைக்கட்டி எழுப்ப முயல்கின்றன.
66. Tad 107

Page 64
இலங்கையில் சுனாம்ப் பேரழிவுகள்
லங்கையின் காரைநகர் கசூர்ணாக் கடற்கரையிலிருந்து பருத்தித்துறை முனை உட்பட கிழக்குக் கரையோர யாலவைக் கடந்து, தென் கரையோரங்களையும் உள்ளடக்கிக் கொழும்புவரை சுனாமி தன் அனர்த்தங்களைப் புரிந்துள்ளது. அது சென்ற விடமெல்லாம் உயிர் அழிவுகளும் சொத்தழிவுகளும் நிதர்சனமாயின.
26 டிசம்பர் 2004 காலை யாழ்க் குடாநாட்டின் வடகரையோரத்தில் கடலலை பொங்கிக் கிளம்பி ஊர் மனைகளுள் புகுந்ததோடு கரையோரத்தில் நின்ற ஆட்களையும் அள்ளிச் சென்றுவிட்டதான செய்தி எனக்குப் பிற்பகல் கிடைத்தது. உடனடியாக அவ்விடங்களுக்குச் சென்று பார்வையிட முடியாதவாறு, அன்று பிற்பகல் மறைந்த மூதறிஞர் க. சொக்கலிங்கம் (சொக்கன்) அவர்களின் நூல் வெளியீட்டு விழாவும் அஞ்சலி நிகழ்ச்சியும் நல்லை ஆதீனத்தில் தம்பி கிருபானந்தா ஒழுங்கு செய்திருந்ததோடு என்னை அந்நிகழ்வின் தலைவராகவும் கேட்டுப் போட்டிருந்தார். நிர்ப்பந்தத்தில் சிறைப்பட்டு, அடுத்தநாள் காலையே அவ் விடங்களைப் பார்வையிடச் சென்றேன். அதன்பின்னர் ஒரு தடவையும் அதன்பின் கனடா நாட்டிலிருந்து ரொறன்ரோ - ஸ்காபரோப் பாராளுமன்ற அங்கத்தவர் ஜிம்கரியானிஸ் சுனாமி அனர்த்தப் பகுதிகளைப் பார்வையிடலின்கெயர் தாபனத்தின் உரிமையாளரும், கனடா வளர்ப்புப் பெற்றோர் சங்கத்தின் ஆளுநருமான அன்ரனி செல்வராஜாவுடனும் வருகை தந்த போது அவர்களை அழைத்துச் சென்று அனர்த்தங்களைக் காட்டுகின்ற போது மறு தடவையும் இப் பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டேன். முல்லைத்தீவு, திருகோணமலை வரை ப்ார்வையிட்டேன். தென் பகுதிகளையும் பார்வையிடச் சந்தர்ப்பம் கிட்டியது.
27 டிசம்பர் காலை காரைநகரின் கசூர்ணா கடற்கரைக்குச் சென்ற போது அந்த அழகிய கடற்கரை சோபை இழந்து மயான அமைதியில் ஆழ்ந்திருந்தது. யாழ்ப்பாண மக்களதும், உல்லாசப் பயணிகளினதும் பொழுது போக்கிடமாகவும். கடற்குளியலிடமாகவும் விளங்கிய கசூர்ணா பீச்சினை சுனாமி அலை தாக்கியதென்பதை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் சுனாமிப்
108 கந்தையா குணராசா
 

பேரலையின் நேரடித் தாக்கம் அதன் பயணப் பாதையில் குறுக்கிட்ட கிழககுக் கரையோரங்களாகவே அமைந்தது. குடாநாட்டின் மேற்குக் கரையோரத் தீவுகளில் ஒன்றாகிய காரை நகரின் கரையோரத்தைத் தாக்கியதென்பது வியப்பினை முதலில் தந்தது. கிழக்கு கரையில் ஏற்பட்டது போன்ற தொரு சுனாமித் தாக்குதல், இலங்கையின் மேற்குப் பக்கத்தில் ஏற்பட்டிருந்தால் எங்களது சப்த தீவுகளும் அதனோடிணைந்த சிறுதீவுகளும் கபளிகரமாகிக் கடலினுள் ஆழ்ந்து தம்மை முழுமையாக மொட்டையடித்துக் கொண்டு மீண்டிருக்கும்.
கசூர்ணா கடற்கரையில் நின்றிருந்த இராமலிங்கத்தைக் கேட்டேன். ‘அன்று ஞாயிற்றுக் கிழமை. அப்போது தான் கடற்கரைக்குக் குளிப்பதற்காக ஆக்கள் வரத் தொடங்கியிருந்தார்கள். முதலில் வெளிநாட்டிலிருக்கின்ற நம்மடை பிள்ளைகள் குடும்பத்தாருடன் இரு வாகனங்களில் வந்திருந்தார்கள். இன்னமும் கடலுக்குள் இறங்கவில்லை. அந்த நேரம் கடலலை திடீரென ஒரு பத்தடி உயரம் எழுந்து கரையை நோக்கி வேகமாக வந்தது. கரையில் நின்றவர்கள் அப்படியே தரைக்குத் தள்ளப்பட்டார்கள். 50 மீற்றர் வரை கடல் நீர் தரைக்குள் வந்தது. மரங்களைக் கட்டிப் பிடித்தவர்களும், மரத்தைக்கட்டிப்பிடித்தபடி ஆக்களைப் பிடித்தவர்களுமாக நின்றார்கள். ஐந்தடி வரை வெள்ளமாக நின்ற கடல் நீர் வேகமாகத் திரும்பி விட்டது. நல்லவேளை எவருக்கும் உயிராபத்து இல்லை. எல்லோரும் ஓடி வந்துவிட்டார்கள் என்றார். சுனாமி தனது முழுவேகத்துடன் கசூர்ணாக் கடற்கரையில் எழும்பவில்லை எனத் தெரிந்தது. அவ்வாறு எழுவதற்கான காரணமுமில்லை. சுழிபுரக் கடற்கரைப் பகுதியிலும் கடற்கொந்தளிப்பு ஏற்பட்டு, கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை உள் நோக்கித் தூக்கி வீசி விட்டதாகத் தெரிவித்தனர்.
11. 1 கீரிமலை
சுனாமியின் தாக்குதலுக்குக் கீரிமலைக் கடற்கரையோரம் உட்பட்டிருந்தது. கீரிமலைக்கு வந்தபோது, கேணிக்குள் கூடுதலாகக் கலங்கிய கடல் நீரும், குப்பை கூழங்களும் நிரம்பிக் கிடந்தன. கட்டுகள் தகர்ந்திருந்தன. அங்கிருந்து பார்க்கும்போது கிழக்காக அந்தியேட்டி மடத்திற்கும் அப்பால்-கடல் கரையேறிய அடையாளங்கள் தெரிந்தன. கடற்கரை முருகைக் கற்களால்"இறைக்கப்பட்டிருந்தன.
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில், கீரிமலையில் அந்தியேட்டிக் கடமைகளைச் செய்வதற்காகச் சென்றவர்களில் 17 பேர் திடீரென எழுந்த சுனாமிப் பேரலையால் காவு கொள்ளப்பட்டனர். தாவடியைச் சேர்ந்த அச்சியந்திர விற்பன்னரான அற்புத தேவனும் அவரது பிள்ளைகள் இருவர், மற்றும் உறவினர்கள் நால்வரும் கீரிமலைக் கடலில் பிதிர்க்கடன் நிறைவேற்றும்போது கடலலையால் அள்ளிச் செல்லப்பட்டனர். ஏழுபேர் காணாமற் போயுள்ளனர். நீர்வேலிப்பகுதியிலிருந்து அந்தியேட்டிக் கிரியைக்காகச் சென்றவர்களும் அலையினால் அள்ளிச் செல்லப்பட்டனர். மொத்தமாக அன்று பத்துச் சடலங்களே மீட்கப்பட்டன. நாற்பது அடிகளுக்கு மேல் சீறி வந்த கடலலை கீரிமலைப் புனித தீர்த்தக் கேணியில் நீராடிக்
d 60 TLs 109

Page 65
கொண்டிருந்தவர்களையும், கடலில் நீராடிக் கொண்டிருந்தவர்களையும் அள்ளிச் சென்றது.
கீரிமலையில் இறந்தவர்களில் அச்சு இயந்திரத் தொழில் நுட்ப வல்லுநரான அற்புத தேவனின் இழப்பு, யாழ்ப்பாண அச்சு தொழிலிற்குப் பேரிழப்பாகும். மாயவன் என்று அச்சக உலகில் புகழ்பூத்திருந்த கலைஞன் அவர். அவருடன் அவரது இரு புதல்வர்களான காங்கேயன், யதீசன் ஆகியவர்களும் கடலலையால் அள்ளிச் செல்லப்பட்டுச் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
'பாரிய இரைச்சலுடன் எழுந்து வந்த பேரலை ஒன்று நாங்கள் பிதிர்க்கடன் செய்து கொண்டிருந்த மடத்திற்குள் புகுந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கும்பங்கள், பொருட்கள் அனைத்தையும் வாரி எடுத்துச் சென்றது. நாங்கள் வெளியே ஓடிவிட்டோம். ஆனால் எங்களுடன் வந்தவர்கள் ஐவர் கேணியில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை வாரி அள்ளிச் சென்றுவிட்டது' என்கிறார் அந்த அனர்த்தத்தில் உயிர் தப்பிய நீர்வேலிப்பசுபதி.
கீரிமலைக்கு அப்பால் வடகரையோரத்தில் எங்களால் தரிசிக்க முடிந்த பகுதி தொண்டைமானாற்றிலிருந்து ஆரம்பமாகியது. காங்கேசன்துறைக் கரையோரம் நிச்சயமாகச் சுனாமி அலையின் தாக்குதலுக்குள்ளாகி இருக்கும் என்பதில் ஐயமில்லை. கீரிமலையிலிருந்து காங்கேசன்துறை உட்பட தொண்டைமானாறு வரையிலான உயர் பாதுகாப்பு வலய கடற் காவல் அரண்கள் துவம்சம் செய்யப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காவலுக்கு அந்த அரண்களிலிருந்து இராணுவ வீரர்கள் கடலோடு அள்ளுப்பட்டனர் எனத் தகவல்கள் கூறின. காங்கேசன் துறையில் அள்ளுப்பட்ட கப்டன் தரத்திலான ஒரு இராணுவ வீரர் சடலமாகப் பின்னர் மீட்கப்பட்டதாகச் செய்தி பத்திரிகையில் வந்தது.
11. 2 வடமராட்சி
வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியிலிருந்து பருத்தித்துறை முனைவரை, பயணம் செய்தோம். நெஞ்சு கனத்து வெடித்து விடும் போலிருந்தது. கரையோரக் கட்டிடங்கள் அத்தனையும் ஏதோ ஒரு விதத்தில் தகர்ந்து கிடந்தன. சில கட்டிடங்கள் முற்றாக உடைந்து கற்குவியல்களாகக் கிடந்தன. அவற்றிடையே மீன்பிடிப்படகுகள் தூக்கியெறியப்பட்டிருந்தன. எந்தப் பைபர் கிளாஸ் படகுகளும் சேதமுறாது இல்லை. உடைந்தும், பிளந்தும் முற்றாக நொருங்கியும் கிடந்தன. கரையோரத்திலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால் வீதியிலும் படகுகள் தூக்கி எறியப்பட்டிருந்தன. கற்குவியல்களிடையே மீனவர்களின் பெறுமதி வாய்ந்த வலைகள் சிக்கிக் கிடந்தன. முற்றாகத் தரைமட்டமாக வீடுகளின் சுவர்கள் சுனாமியால் அறைந்து உடைக்கப்பட்டிருந்தன. ஒரு வீட்டின் ஒரு பகுதியைச் சுனாமி அப்படியே அள்ளிக் கொண்டு போயிருந்தது. ஒரு வீட்டினைக் கூரை இருக்கத்தக்கதாகக் குடைந்திருந்தது. வீடுகளுக்குள் நுழைந்து தேடி ஆராய்ந்திருந்தது. கூரை தகர்ந்த வீடுகளையும், சுவர்கள்
O கத்தையா குனராசா

சரிந்த வீடுகளையும் வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித் துறை முனைவரை காண முடிந்தது.
கடற்கரை வீதியின் அணைச்சுவர் திடமாகவிருந்ததால் கடலலையின் தாக்கத்திற்கு முற்றாகச் சீரழியாது கடற்கரை வீதி தப்பியிருந்தது. ஆனால், கடற்கரை வீதிக்கு அரணாக விளங்கிய முருகைக் கற்பாறைப் பரவலும் அவற்றினூடாகப் படகுகளை உள்ளே இருந்து வந்து கட்டுவதற்குரிய வான் பாதைகளும் அங்கு காணப்படவில்லை. அவை சுனாமி அலையால் இழுத்துச் செல்லப்பட்டுவிட்டன. சொற்ப முருகைக் கற்பாறைகளே எஞ்சிக் கிடந்தன.
பிளாஸ்ரிக் கதிரைகள் கால்கள் முறிந்து எங்கும் கிடந்தன. இசுசூ ஹன்ரன் வாகனம் ஒன்று கட்டிட இடிபாடுகளுள் அகப்பட்டுக் கிடந்தது. புதிய மோட்டார் சயிக்கிள்கள், சாதாரண சயிக்கிள்கள் கட்டிட இடிபாடுகளுள் சிக்கிக் கிடந்தன. கடல்நீர் மேவிப் பாய்ந்ததால் தென்னை மரங்களின் வட்டுக்கள் கருகத் தொடங்கியிருந்தன. வீதியோரங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து கிடந்தன. மின் இணைப்பு வயர்கள் அறுந்து தொங்கின. எங்கும் அழிவின் கற்குவியல்கள். வடமராட்சியின் வடகரைப் பகுதிகளில் கடல் நீர் மேலே ஏறியிருந்தது. “பொங்கி எழுந்த சுனாமிக்கடலலை எங்களைத் துரத்திக் கொண்டு வந்தது. ஒடித்தப்பினோம்’ என்கிறார் ஓர் இளைஞர். அதனை அதாவது கடலலை பொங்கி வருவதையும் நாங்கள் ஓடி வருவதையும் ஒரு இளைஞர் பயப்படாது நின்று படம் எடுத்தார் என்கிறார். அவர் தொடர்ந்து தினக்குரல் எஸ். சிவபாலன் என்ற புகைப்படக் கலைஞர் தான் அவர் எனப் பின்னால் அறிந்தேன். அப்படங்கள் தினக்குரலில் வெளிவந்திருந்தன. அவை தத்ரூபமான படங்களுக்கான விருதுக்குரியவையாகச் சிபார்சு செய்யப்பட வேண்டியவை.
கடற்கரை வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சி தந்ததாகத் தெரிவித்தனர். சிலரது உடைந்து எஞ்சிய வீடுகளுள் வெள்ளம் புகுந்து தேங்கி நின்றது. கடற்கரையில் கட்டப்பட்டிருந்த பெரியதொரு படகு வீதிக்குக் குறுக்கே தூக்கி வீசப்பட்டிருந்தது. வீதியோரதூரத்தைக் குறிக்கும் எல்லைக் கற்கள்அப்படியே புரட்டி விடப்பட்டிருந்தன.
கரையோர இடிபாடுகளுள் சடலிங்கள் சிக்கியிருக்கலாமெனத் தேடும் தொண்டர்கள் செயலில் ஈடுபட்டிருந்தனர். மந்திகை மருத்துவமனைக்குச் சென்றோம். அங்கு மரணஒலம் கேட்டவண்ணம் இருந்தது. சடலங்கள் பல அங்கு வைக்கப்பட்டிருந்தன. தமது உறவுகளின் பிரிவினைத் தாங்கமுடியாது சடலங்களுக்கு முன்பாக விழுந்து விழுந்து அழும் காட்சி நெஞ்சத்தைப் பிழிந்தது. காணாமற் போனவர்களைத் தேடி மந்திகைக்கு மக்கள் ஓடிவந்தார்கள். சடலங்களை முதலில் பார்ப்பதும் பின்னர் வார்ட்டுகளுக்கு ஒடிக் காயம் பட்டவர்களிடையே உறவுகளைத் தேடுபவர்களாகவும் இருந்தனர். யாழ்ப்பாண அரசினர் வைத்தியசாலையில் காலையிலிருந்து சடலங்களும் காயப்பட்டோரும் எடுத்துவரப்பட்டுக் கொண்டிருந்தார்கள். சடலங்களால் பிணஅறை நிரம்பி வழிந்தது. திண்ணைகளிலும் பாதைகளிலும் வளர்த்தப்பட்டிருந்தன. சின்னஞ்சிறார்கள் வரிசையாகக் கட்டில்களில்
A 63rd

Page 66
வளர்த்தப்பட்டிருந்தனர். சடலமாகக் கிடக்கும் அண்ணனின் கால்களுக்கிடையில் தங்க விக்கிரகம் போன்றதொரு மழலை வளர்த்தப்பட்டிருந்தது. அதனைப் பார்த்துக் கண்ணீர் விடாதோரில்லை.
யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சிப் பகுதியில் பொலி கண்டி முதல் மணல்காடு, குடத்தனை வரையிலான கரையோரத்தில் 400 மீற்றர்கள் வரையிலான சுனாமிப் பேரலைத் தாக்குதலால் நூற்றுக் கணக்கானோர் இரையாகிப் போயினர். நூற்றுக்கணக்கனோர் காணாமற் போயினர் கரையோரம் எங்கும் சடலங்களைச் சுனாமி அரக்கன் உயிர்களைக் குடித்துவிட்டு வீசியெறிந்திருந்தான். இக்கரையோரப் பகுதிகளில் பாதுகாப்பு அரண்களை அமைத்துப் பாதுகாப்புக் கடமையிலீடுபட்டிருந்த இராணுவத்தினரின் ‘சென்ரிகள்’ தரைமட்டமாகின! அவற்றில் காவலுக்கிருந்த இராணுவ வீரர்கள் கடலலையால் அள்ளிச் செல்லப்பட்டனர்.
வடமராட்சிப் பிரதேசத்தில் சக்கோட்டை பருத்தித்துறை முனை, கற்கோவளம், மணல்காடு, குடத்தனை ஆகிய பகுதிகளில் சுனாமி உட்புகுந்ததால் கரையோரக் குடிசைகள் அனைத்தும் அள்ளியெடுத்துச் செல்லப்பட்டன. குடிசைகளில் இருந்தோரும், முற்றங்களில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் அள்ளிச் செல்லப்பட்டனர். சடலங்களாக மீண்டோர் ஒரு பகுதியினராவார்கள். நாகர் கோயில், செம்பியன் பற்று. தாழையடிப் பிரதேசங்களிலும் சுனாமி ஏற்படுத்திய அனர்த்தம் மிகப் பெரியதாகும். வடமராட்சி கிழக்கில் சுனாமிக்குப் பலியானவர்களில் 150 சடலங்கள் முதல்நாளே கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது. கிளிநொச்சி வைத்தியசாலையில், சடலங்களை வைப்பதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள சென் திரேசாப் பாடசாலையில் சடலங்கள் வைக்கப்பட்டன. தாழையடி, வெற்றிலைக்கேணிப் பகுதிகளில் பலியானவர்களில் அகப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் மருதங்கேணி வைத்தியசாலையில் வைக்கப்பட்டன.
வடமராட்சி கிழக்கில் மீட்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சடலங்கள் அழுகிய நிலையில் அடையாளங்காணப்படாமையால் புகைப்படம் பிடிக்கப்பட்டபின்னர் புதைக்கப்பட்டன.
வடமராட்சியில் செம்பியன்பற்று, நாகர் கோவில், குடத்தனை, மணல்காடு, ஆதிகோவிலடி சுப்பர் மடம், வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, திக்கம், தொம்மையர் கோவிலடி, சாக்கோட்டை ஆகிய கரையோரப் பகுதிகளில் அனைத்துக் கட்டிடங்களும் சேதமடைந்தன. பெருந்தொகையான வீடுகள் நீரில் மூழ்கியதுடன் பெருந்தொகையான வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. உடமைகள் அனைத்தும் இழந்த மக்கள் கரையோரம் எங்குமுள்ளனர். ‘ஆமி வருகிறதென்றால் ஏதாவது தேவையான பொருட்களையும் பணம் நகைகளையும் எடுத்துக் கொண்டு ஓடிப் பழக்கப்பட்ட எங்களுக்கு. இந்தச் சுனாமி கணப் பொழுதில் வந்து ஓடித்தப்பவும் முடியாது சீரழித்துவிட்டது’ என ஆதி கோவிலடி மீனவர் ஒருவரின் ஏக்கக் குரல்
2 கந்தையா ᏪᏏᏛᏈᏡᏤiᎫiᏧᏧ1Ꮀ

கடல் மட்டம்
| கடல் தரை
SeSTS BuBSBu HH uiH ui iSSiSS SHSuHSuiSBDSH SHuiSii
... . . . . . . . ¥: ಸ್ಲೀ W # ¥ ¥ LLS SkkS SSkLSLSSSSLYSSS SYS S LSLLSSS SS SeSSLSS S SLLLLSS SYS SYS SLLS S SS SS SSLLS S SYS S Y ¥ à: W # YS SYSSYSSYSSLLS S L S SSS SS SSLSLSS SSSZ W YSYSLSLSLS SLSkkSLk SLLkkSS S LSSY SLLS * 8.
露 iii SSiSS S LSSSkSSSLSSS SS SS -Ca 鯊 囊 翼 囊 * 義 蠶 囊。翼 黨 義 翼*驚。蠶 靴。囊 翼 囊 寧 驚 蠶 x 夏丁 窦 篱
蒸。囊 籌蕊:鷲.繁 霧,幫,鯊蕊驚鶯幫。護 鷲。翼 W w 鷲 w 該 減 慧 繁
% .灣。澱 黨 霧′ 為 鷲 灣
A, புவிநடுக்கம் தொடங்குவதற்கு முன்
s
ܕ݂
驚 贏 ° 委 : % :
LLS SkSS SLLLS SLSLS S SLS S SLLLSSSSYSSSS LLSSSSSSz SSSSS S SLSLSLS S
C கடல் நீர் அகழி இறக்கத்தினுள் வேகமாக இறங்கியதும் உள்ள்ரீருந்து அதன்னை வேகமாக வாயு வெளியே உந்தி தள்ளுகின்றது. அதனால் சுனாமி பொங்கி எழுகிறது.
豪
குறைந்த தாயும் கரையை நோக்கி விரைகிறது. ஆழம் குறைந்த கரைய்ோர்த்தை அடைந்ததும் 30 மீற்றர் உயரம் வரையில் கிளம்பி தாக்குகிறது.
படம்: 6A சுனாமி தோற்றம் பெறும் விதம்
113

Page 67
எங்கும் சிதைவுகள்
 
 

அதிக உயிர்ச்சேதம் ஏற்பட்ட கிண்ணியா வைத்தியசாலை

Page 68
குவித்துவிட்ட சடலங்கள்
 
 

முல்லைத்தீவு செந்

Page 69
த்தித்துறை
፴b
வரும் கனாமி - பு
தி
趾町忠
||
 
 

சுனாமிக்குத் தப்பிய தலைப்வேர் பிரபாகரனின் வல்வெட்டித்
ቌቋቒlJ] வீடு,
சுனாமிக்கு
இரையான
நிலாவெளி சுனாமி ஹோட்டல்

Page 70
நலன்புரி நிலைய வாழ்க்கை
|고II
 
 

சிதம்பராக் கல்லூரி நலன்புரி முகாம்
கூடார வாழ்க்கை குடத்தனை
கனேடிய எம்.பி ஜிம் ஹாரியானிசும் இளம்பரிதியும்

Page 71

ധിയ്ക്കൂ
பின் துயரம் மடியிலும் தரை
--
தை
தந்
அதிபர் கே. கனேனப்
ங்க
யாழ்ப்பான அரசா
நகர அர்த்தம்
୩ ବର୍ଷୀ

Page 72
தேன்பகுதியில் எஞ்சிய கட்டிட இடிபாடுகள்
 

தென்னையின் வட்டை மேவிய சுனாமி

Page 73
அமைதி அடைந்த
கடல்
Lyll iLÜULL
தொழில்
த்தீவுச்
சிதைவுக
LÉFÉL
ள்
|si
 
 
 
 
 
 

யில் தி சூசை
اوF:
நிவாரணப் பணி
கடற்றளப
டில் சுனாமிக்குத் த
TL".
LDTM:3|
I

Page 74
செல்வராசாவும்
பர் ஏ. வி.
பற்றி.
TT53: III.
பூவோம்
ம் வின்கேயார் அதி
நிவ
----+ ) 환 홍 현 院 = 川口 州 的
சுனாமிக்கு இறுதிவிடை. அரக்கனே மீண்டும் வராதே !
பி. ஜிம்
TLD)
கனேடிய
 
 
 
 

பாடசாலைகள், கோயில்கள் என்பனவும் சுனாமியால் நொருக்கியடிக்கட்பட்டுள்ளன. கடல் கொந்தளித்து வந்த வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட மக்கள் கட்டிடங்களிலும், மரங்களிலும் பலமாக மோதிய நிலையில் உயிரிழந்துள்ளனர். பலரது சடலங்கள் பனங் கூடல்களில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்டன.
காலை நேரத்தில் கடற்கரையோரத்தில் உடற்பயிற்சியிலீடுபட்டிருந்த பெரும் எண்ணிக்கையிலான படையினர் கடலின் சீற்றப் பேரலையினால் அள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். கடலோரமாக அமைக்கப்பட்டிருந்த பல இராணுவ அரண்கள் கடல் நீரால் கழுவிச் செல்லப்பட்டன. இராணுவ உபகரணங்கள், துப்பாக்கிகள், உடுப்புகள் முதலானவை வடமராட்சிக் கரையோரங்கள் என்று சிதறிக் கிடந்தன. மணல்காடு, குடத்தனைப் பகுதியில் காலை உடற்பயிற்சியிலீடுபட்டிருந்த இராணுவ வீரர்களில் 40 பேர் வரையில் எவரும் தப்பவில்லை. 21 இராணுவத்திர்ே உயிரிழந்ததாகவும், 45 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சுனில் தென்னக்கோன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். முதன் முதலாக இராணுவத்தினரும் இடம் பெயர்ந்தனர்.
வடமராட்சிப் பகுதியில் மருதங்கேணிப் பிரிவிலேயே மிகவும் கூடுதலான அழிவுகளைச் சுனாமி ஏற்படுத்தியுள்ளது. மருதங்கேணியில் சுனாமி அனர்த்தத்தால் 4251 குடும்பங்களும் பாதிப்புற்றன. இங்கு மணற்காடு, பொற்பதி, மண்முனை, செம்பியன்பற்று. தாழையடி, மருதங்கேணி, வத்திவயன், உடுதுறை ஆழியவளை, வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு ஆகிய கிராமங்களில் கடலோரக் கட்டமைப்பு எதுவும் எஞ்சவில்லை. படகுகள் உட்பட வெள்ளம் அடித்துச் சென்ற பொருட்கள் எங்கும் இறைத்துக் காணப்பட்டன. உழவு இயந்திரங்கள் உட்பட பலதரப்பட்ட வாகனங்கள் அனைத்தும் சுனாமியால் இழுத்துச் செல்லப்பட்டு ஆங்காங்கே புரட்டிவிடப்பட்டிருந்தன. செம்பியன்பற்றிலுள்ள புனித பிலிப் நேரியர் தேவாலயம் இடிந்து சரிந்துள்ளது. மருதங்கேணிப் பகுதியில் கடல் ஒரு கிலோமீற்றர் நிலத்தினுள் உட்புகுந்துள்ளது.
"கணப்பொழுதில் அந்த அனர்த்தம் சிற்பட்டுவிட்டது. கரையோரத்திலிருந்து முப்பதடிகளுக்கு அப்பாலுள்ள எனது வீட்டின் முற்றத்தில் நின்றிருந்தேன். கடலலை என் வீட்டுத் தென்னைவட்டுக்கு மேலாக உயர்ந்து எழுந்து வருவதைக் கண்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் விழித்தபோது உடைந்து போன கட்டிடம் ஒன்றின் குட்டிச் சுவரின் மறைப்பில் கிடப்பதைக் கண்டேன். குட்டிச் சுவர் தடுக்காது விடில் கடலிற்குள் இழுபட்டுப் போயிருப்பேன்’ என்றார் மீனவர் ஒருவர். கடலலையின் கோரத்தைக் கண்ட பலர் மூர்ச்சித்துப் போயினர். பேய்விரட்டுவதாக எண்ணிப் பலர் ஓட்டமெடுத்தனர்.
"என் குழந்தையை விட்டுவிட்டு நான் மட்டும் தப்பி ஓடி வந்ததாகச் சிலர் ஏசுகின்றனர். கடவுளே, ஏகவே, நான் பத்து மாதம் சுமந்து பெற்ற என் செல்வத்தை
விட்டு விட்டு ஓடி வருவேனா? அவனையும் வாரித் துக்கிக் கொண்டு ஓடி வந்தேன்.
கனவி

Page 75
ஆனால், அந்தக் கெ:டிய அலை என்னை மூடி என் கர அணைப்பிலிருந்த என் அருமைக் குழந்தையை அப்படியே பறித்தெடுத்துக் கொண்டது’ எனக் கண்ணிர் விடும் ஒரு தாயைக் காணமுடிந்தது. இந்த அனுபவம் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. கரத்தில் பற்றியபடி ஓடிவந்தவர்களிடமிருந்து, சிறுவர் சிறுமிகளைச் கடலலை அப்படியே பறித்து எடுத்துச் சென்றுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தப்பியமை அருந்தப்பாகும். வடமாராட்சியில் கடற்கரையோரமாக இருந்த மேல் மாடிக்கட்டிடம் ஒன்றில் மக்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது திடீரெனக் கடலில் ஒரு பேரிரைச்சல் கேட்டது. அனைவரும் எழுந்து கடற்கரைப் பக்கமாக ஓடினார்கள். பின்னர் கடல் கொந்தளித்துக் கொண்டு வருகிறது என்று கத்திக் கொண்டு திரும்பி ஓடி வந்தார்கள். கட்டிடத்தின் கீழ்த்தளத்திலிருந்த மக்கள் மேல் தளத்திற்கு ஓடி வந்தார்கள். அப்போது இரைச்சலுடன் கடல்நீர் கட்டிடத்தின் கீழ் தளத்தினுள் புகுந்து அதற்குள் நின்று கொண்டிருந்த சிலரை அடித்து இழுத்துச் சென்றது. நாங்கள் நின்று கொண்டிருந்த ஒரு புதிய கட்டிடம் ஆகையால் நல்லவேளை அது இடிந்து விழவில்லை. அருகிலுள்ள சில கட்டிடங்கள் தகர்ந்து விழுந்ததைக் கண்டேன். கீழ்த்தளத்தில் நிரம்பிய நீர் திரும்பிச் சென்றபின் மாடியிலிருந்து இறங்கித் தப்பி வந்தோம்' - என்கிறார் கஜேந்திரன்.
வடமராட்சியில் கடலோரங்கள், மண்குவியல்கள், கட்டிட இடிபாடுகள், பற்றைகள், புதர்கள், காடுகள் எங்கும் சடலங்கள் சிக்குண்டு கிடந்து மீட்கப்பட்டன. கடலிலிருந்து ஏராளமான சடலங்கள் கரை ஒதுங்கிக் கொண்டிருந்தன. அவற்றினை அடையாளம் காண முடியாதிருக்கின்றது.
‘நான் குடத்தனை இராயப்பர் ஆலயத்தில் திருப்பலி நடத்திக் கொண்டிருந்தபோது, அலையின் சீற்றத்தினை நேரடியாகப் பார்த்தேன். ஒரு பனையளவு உயர்த்துக்கு மேலாக அலை பாய்ந்து வந்தது. கரையோர மக்கள் பலரை அடித்துச் சென்றது’ என்கிறார் பங்குத் தந்தை றோய் பேடினன்ட். ‘ஒரு போர் தொடங்கி விட்டது போன்ற சத்தத்துடன் எழுந்து வந்த அலை 20 வருட யுத்த காலத்தில் ஏற்படுத்தியிராத பாரிய இழப்புகளை கணப்பொழுதில் தந்துள்ளது என கவில்கிறார் அருட்சகோதரர் மதி. இவ்வளவு காலமும் கடலை எமது தாயாகத்தான் நினைத்தேன். கடலுக்குள் தொழிலுக்காக இறங்கும்போது தொட்டு வணங்கி விட்டுத்தான் இறங்குவேன். இப்போது கடலை ஒரு கொடூர மிக்கவளாக எண்ணுகிறேன்’ எனக் குமுறுகிறார் நாகராஜா. - சபேஸ், விஷ்ணு) s
‘நான் கடற்கரையில் நின்று வலை பொத்திக் கொண்டிருந்தேன். அப்போது பாரிய இரைச்சல் கேட்டு நிமிர்ந்தேன். கடலிலிருந்து பாரிய அலைகள் திரண்டு கரையை நோக்கி வந்தன. வீட்டை நோக்கி வேகமாக ஓடினேன். அவலக்குரலிட்டேன். வீட்டிற்குள்ளிருந்த மனைவி. பிள்ளை. மாமியார் ஆகியோர் வெளியே வந்தனர். குமுறி வந்த அலை எங்களை மூடி அப்படியே அள்ளிச் சென்றது. மனைவியும் பிள்ளையும்
130 கந்தையா குணராசா

இறந்து போயினர். நாங்கள் எப்படியோ தப்பிவிட்டோம்’ என்கிறார் வெற்றிலைக் கேணியைச் சேர்ந்த சிவராஜன் - உதயன்)
மணல்காடு கிராமம் 232 குடும்பங்களைக் கொண்டது. பெயருக்கு ஏற்ப மணல் கும்பங்களையும் கடல் போல மணல் பரப்பினையும் கொண்டது. அக்கிராமத்தில் 69 பேரைச் சுனாமி இழுத்துச் சென்றுவிட்டது. மணல் மேடுகள் அவ்வாறே கடலலையால் மீண்டும் வாரி எடுத்துச் செல்லப்பட்டு விட்டன. மணல் மேடு ஒன்றில் சுனாமியால் வாரித் தூக்கி எறியப்ப்ட்டிருந்தது. 7 சிறார்கள் பின்னர் காப்பாற்றப்பட்டனர். மணல் காட்டில் 10 நாள் குழந்தையையும், ஆழியவளையில் 100 வயதுப் பாட்டியான கட்டப் பிள்ளையும் சுனாமி விட்டு வைக்கவில்லை. தன் பசிக்கு இரையாக்கிக் கொண்டது. ரெஜிபோம் பெட்டி ஒன்றில் ஏறிப் பதுங்கிக் கொண்ட சிறுமியும் அவர் புத்தகப்பையும் கடலலையில் பக்குவமாகத் தூக்கி வரப்பட்டு, கரையில் ஒதுக்கப்பட்டது.
வடமராட்சிப் பிரதேசத்தினை நேரடியாகப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களின் அனுபவக் குறிப்புகளை வீரகேசரி ஜோ. வொஷிங்டன் பின்வருமாறு விபரிக்கிறார்.
“காலை 850 மணி இருக்கும். திடீரென பாரிய சத்தம் கடலில் கேட்டது நான் இடி முழக்கம் என நினைத்தேன். ஆனால் அந்த சத்தத்தைத் தொடர்ந்து பெரிய இரைச்சல் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. ‘கிபிர் வருவது மாதிரியான அந்தச் சத்தத்தைக் கேட்ட மறுகணமே கடலலை எமது வீட்டை அடித்து தாண்டிச் சென்று விட்டது. பள்ளிக் கூட கூரைக்கு மேலாக என்னை தூக்கியெறிந்த கடலலை, தொடர்ந்து வேகமாக புரண்டு புரண்டு எழும்பியது. பள்ளிக் கூட கூரையின் ஒரு பகுதியைப் பிடித்து நின்று நான் சிறிது நேரத்தில் அங்கிருந்து விடுபட்டு ஒரு வடலியில் எதுவித உடையுமின்றி சொருகப்பட்டேன்” - செந்தமிழ்ச் செல்வி
“நான் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது குண்டு வெடித்த சத்தம் மாதிரி ஏதோவொரு ஓசை கேட்டது. பின்னர் “பொம்மர் வருகிற மாதிரி இரைச்சல். குசினிக்குள் இருந்து வெளியே வந்து பார்த்தபோது கரிய நிறத்தில் கடலலை மேலெழும்பி வந்து கொண்டிருந்தது. நல்க்க இருக்கும் விபரீதத்தை அறிந்து சுதாரித்துக் கொள்வதற்கு முன்பாகவே கிடல் என்னை மூடிவிட்டது. தரையிலிருந்து கடலலையின் மேல் மட்டத்திற்கு வந்த நான் அங்கிருந்த வேப்பமரம் ஒன்றின் கொப்பை பிடித்துவிட்டேன். 68 வயதான எனது கணவர் பொன்னையாவும் அந்த வேப்பமரத்தில் தான் ஏறியிருந்தார். எங்களுக்கு ஒரேயொரு பொம்பிளைப் பிள்ளை தான் இருந்தாள். அவளை கடல் தாய் கொண்டு போட்டா. மரத்தில் இருந்தவாறு எமது பிள்ளையையும் உறவினர்களையும் தேடினேன். நுரை கக்கிக் கொண்டிருந்த கடலலையின் நடுவே ஒருவரையும் என்னால் இனங்காண முடியாமல் போய்விட்டது. ஆனால் சனம் மட்டும் செத்து மிதப்பது தெரிந்தது. விடுதலைப் புலிகளின் பெண் பிள்ளைகள் தான் அங்கு முதன் முதலில் ஓடிவந்து மரத்தில் இருந்த எங்களை இறக்கிவிட்டனர். என்னய்யா இது? கொடுமையிலும் கொடுமை.” - ஆழியவளை சிவகாமசுந்தரி
ሐካስ፡፡፡፡ፅ 3.

Page 76
ஆதி கோயிலடி ஜெயம் என்பவர் வடரைாட்சிப் பகுதி மக்கள், சுனாமியை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பதனைப் பின்வருமாறு விபரிக்கிறார். 1. “கடற்பக்கத்திலிருந்து பாரிய வெடிச்சத்தங்கள் கேட்டதும் கடல் சண்டை நடக்குது. இனிக் கரைக்கும் ஷெல் அடிப்பாங்கள். பொம்பரும் வரும். எல்லாரும் விழுந்துபடுங்கோ. இவ்வாறு கடற்கரையில் படுத்து கடலால் காவு கொள்ளப்பட்டோர் பலர்” 2. “பாரிய சத்தம் கேட்டமையால் பிள்ளைகளைக் கொண்டு ஓடமுடியாத பெற்றோர்
கதவுகளை இறுகப் பூட்டி வீட்டினுள் இருந்து உயிர் பிரிந்தோர் சிலர்” 3. “பரவலாகக் கேட்ட சத்தத்தினால் ஆழிபுகுந்துவிட்டான் என எண்ணி கடற்பக்கம்
ஒடிச் சென்று பலியானோர் பலர்” 4. “மணற்காடு போன்ற பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த இராணுவத்தின் முட்கம்பி வேலியினால் அக்காவலரணுக்குள் சிக்குண்டு தம்மை மீட்டுக் கொள்ள முடியாது இறந்தவர்கள் ஏராளம். இதில் தம் கூந்தல் சிக்குண்டு மீளமுடியாது இறந்த பெண்கள் ஏராளம்.”
வடமராட்சியில் சுனாமி அரக்கனிடமிருந்து உயிர் தப்பிய வேறு சிலரின் துயர அனுபவங்களை க. இரத்தினசிங்கம் பின்வருமாறு விபரித்துள்ளார். “காலை ஒரு ஒன்பது மணியிருக்கும். நான் சாப்பிடும்போது விமானச் சத்தம் போல் கேட்டுது. ஆனால், திடீரென்று இருபது அடி உயரமளவில் தண்ணீர் வர்றது கண்டன். என்னைத் தண்ணீர் மூடிற்று. பிறகு நான் ஒரு கம்பி வேலியில் சிக்கி இருப்பதை உணர்ந்தேன். அந்தக் கணத்தில் ஒரு போட் மிதந்து வந்தது. அதில் ஏறி தம்பியையும் மூன்று வயது பிள்ளையையும் கஷ்டத்தின் மத்தியில் போட்டில் ஏற்றிற்றன். ஒரு செக்கனில் தண்ணீர் வத்தி போட் ஒரு நாவல் மரத்தில் சிக்கியது. நாம் உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்தோம். அப்பதான் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். எனது தம்பியும், மனைவியும், பிள்ளைகளும் கம்பி வேலிக்குள் சிக்கிக் கிடந்ததைக் கண்டு அவர்களையும் பாரிய சிரமத்தின் மத்தியில் மீட்டு வைத்தியசாலைக்கு விடுதலைப் புலிகள் வாகனம் மூலம் கொண்டு வந்து சேர்த்தார்கள். வைத்தியசாலையில் ஒரு தம்பியின் மனிசி செத்துப் போச்சு” - கட்டைக் காடு கெ. கெளரியாம்பிள்ளை.
“முல்லைத்தீவுக்கு தொழில் ரீதியாகப் போயிருந்தேன். எட்டு மணியிருக்கும். திடீரென்று பேரிரைச்சல் கிபீர் என எல்லோரும் ஆகாயத்தைப் பார்த்தோம். கடல் தண்ணி பாய்ஞ்சு வந்தது. நாங்கள் ஓடினோம். தண்ணீர் எங்களை மூடின அந்த நிலையில் எனது கைக்கு ஒரு பெரல்தான் ன்ட்டியது. அதன் உதவியுடன் சிலாவத்தை வரைபோன பிறகுதான் தண்ணீர் வற்றியது. காலில் பெரிய காயம். முள்ளியவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின் அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு வந்தார்கள். ஆனா, என்ர மகள் சுதர்சினி வயது 20. அவர் செத்திட்டா, மூண்டு பிள்ளைகளும் மனிசி காயங்களோட இருக்கின்றனர். வீடு எதுவுமே அங்கு இல்லையாம். அங்கு போய்க் குடியேறவும் பயமாக இருக்கிறது. எற்கனவே GTZ கட்டித் தந்த வீட்டில் தான் இருந்தோம். அதுவும் போயிற்று. என வேதனையோடு கூறினார்.” - வெற்றிலைக் கேணி அந்தோனிமுத்து குயிந்தன்
132 கந்தையா குணராசா

“இந்த கொடூர அனர்த்தத்தில் தன் குடும்பம் அழிவதை நேரடியாகப் பார்த்தவர் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. வெறித்த பார்வையோடு இருக்கிறார். பலர் இப்படியான சூழ்நிலையில் தங்கள் வாழ்விடங்களை, பச்சிளம் பாலகரை இழந்து குறிப்பாகப் பெண்கள் மனம் பேதலிக்கப்பட்ட நிலையிலேயே பேசுகின்றனர். விலை மதிப்பில்லா மனித உயிர்கள் மீண்டும் வருமா. அழிந்த சொத்துக்களைத் தேடாமல் இழந்த உறவுகளை எங்கே தேடுவது? இந்த மனித அவலங்களை மாறி இவர்கள் இயல்பு வாழ்வு வாழ்வது எப்போது’ - நாகரத்தினம்
“காலையில் திடீரென பெரிய இரைச்சல் கேட்டது. ஐயோ. கிபீர் வருகுது எண்டு திடுக்குற்று வீட்டைவிட்டு வெளியில் ஓடியந்தன். அவ்வளவுதான். பனைமர உயரத்துக்கு தண்ணி வந்தது. அவ்வளவு தான் தெரியும். பிறகு கண் முழிச்சு பார்த்தா இஞ்ச ஆஸ்பத்திரி கட்டிலில படுத்திருக்கிறேன். கடவுளே எண்டு என்ர மனுசனையும் பிள்ளைகளையும் தேடினா, அவருக்கு சரியான காயம் எண்டு யாழ்ப்பாணம் ஏத்திச்சினமாம். (அழுகிறார்) என்ர பொம்பிளைப் பிள்ள ஜெசினா 24 வயது செத்துப் போயிற்ராய்யா. மகன் ஜெயக்குமார் கால் முறிஞ்சு ஆம்பிள வார்ட்டில இருக்கிறான் ஐயா. என்னத்த சொல்லிறது. கடவுளே. நான் இன்னும் இழக்கிறதுக்கு என்னட்ட ஒண்டுமே இல்லையே. என்ர தம்பி அருள்தாஸ், அவன்ரபெஞ்சாதி பிள்ள எல்லாத்தையும் அள்ளிக் கொண்டு போயிட்டய்யா கடல்.” - வெற்றிலைக்கேணி அல்பிரட் மகாலிங்கம்.
‘அப்பா, அம்மா யாழ்ப்பாண வைத்தியசாலையில் காயப்பட்டுள்ளார்கள். என் தம்பி செத்துப் போச்சு. வீட்டில் இருக்கும்போது எனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. பிறகு நான் இரத்தக் காயங்களுடன் கடற்கரையில் கிடந்தேன். அண்ணன் மார் என்னை வைத்தியசாலையில் கொண்டு வந்து சேர்த்தார்கள். சிலாவத்தை தியோகு நகரைச் சேர்ந்த 58 வயதுடைய சின்னு ஆரியான் “என்ர இரண்டு பிள்ளைகளையும் பேரப் பிள்ளைகளையும், பெண்சாதியையும் மகள், அவாவின்ர பிள்ளைகளில் ஒண்டையும் இதுவரை காணவில்லை’ நான் ஒரு கூலித் தொழிலாளி, சையிக்கிளுக்கு காற்று அடித்துக் கொண்டு வெளிக்கிட மழைச் சத்தம் போல் கேட்டது. திரும்பிப் பார்க்க கடல் தண்ணீர் பாய்ஞ்சு வந்து கிெண்டிருந்தது. என்னால் ஒன்றுமே செய்யமுடியவில்லை. அதற்குப் பிறகு என்ன நடந்தது. எதுவுமே தெரியாது. ஆஸ்பத்திரியில் ஊசி போடும்போது தான் நான் முழிச்சேன்” - மருதங்கேணி செ. மனோகரன் .
நான் மூன்றாம் முறையாக ஜிம்காரியானிசுடன் வல்வெட்டித்துறைக்குப் போனேன். ஆதி கோயிலடியில் பைபர் இழைப் படகுகளைச் செப்பனிட்டு ஒட்டுவதில் சில மீனவ இளைஞர்கள் ஈடுபட்டிருந்தனர். ஜிம் காரியானிஸ் மிக அவதானமாக அக் காட்சியைப் பார்த்தார். பின்னர், “இற் இஸ் கிறேற். இது மிகப் பெரிய விசயம். அழிவிலிருந்து மீண்டெழுகின்ற முயற்சியை உடன் உங்கள் மக்கள் தொடங்கி விட்டார்கள். பிறரது எதுவித உதவியும் தயவுமின்றி தம்மை மீளக்கட்டியெழுப்பும் இந்த முயற்சியைக் கண்டு நான் வியக்கிறேன்” என என்னிடம் கூறினார்.
ሓሳዕ!፡፡tዕ 133

Page 77
உண்மைதான். நமது மக்கள் சாதாரணமானவர்களல்லர். சாம்பலிலிருந்து மீண்டெழும் சக்கரவாகப் பறவைகள்.
1.3 முல்லைத்தீவு
கிழக்குக் கரையோரப் பிரதேசங்களில் அம்பாறைக்கு அடுத்ததாக அதிக உயிர்ச் சேதத்தையும், பொருட்சேதத்தையும் அடைந்த பகுதி முல்லைத் தீவு மாவட்டமாகும். அதிகாலை முல்லைத்தீவினைத் தாக்கிய சுனாமி, ஆயிரக் கணக்கான மக்களை அப்படியே வாரி எடுத்துச் சென்றதுடன், ஆங்காங்கே சடலங்களை குவித்துவிட்டது. 500 மீற்றர்கள் வரையிலான கடலோரப்பரப்பில், ஒரு கட்டிடங்களையும் முழுமையாகக் காண முடியவில்லை. முல்லைத்தீவு வைத்தியசாலை வெள்ளத்துள் மூழ்கியதால், காயப்பட்டவர்களை அங்கு வைத்துப் பராமரிக்க முடியவில்லை. முல்லைத்தீவுக் கரையோரக் கிராமங்களான செம்மலை, அளம்பில், புதுமாத்தளன். வலயர் மடம், வட்டுவாசல், முள்ளிவாய்க்கால் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிந்து போயுள்ளன. பல குடும்பங்களில் எவருமே எஞ்சவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் 2902 பேர் மரணமடைந்துள்ளனர். 421 பேர் காணாமற் போயுள்ளனர்.
முல்லைத்தீவில் எங்கு பார்த்தாலும் கட்டிட இடிபாடுகளும், தூக்கி வீசப்பட்ட படகுகளும் காணப்பட்டன. சுனாமி எழுந்து தாக்கியதால் வீதிகள் எல்லாம் வெள்ளக்காடாகின. ஏறத்தாழ 1 கிலோ மீற்றர் வரை கடல் நீர் பரவியிருந்தது. பஸ் வண்டிகள் தம்மிடங்களிலிருந்து இழுத்துச் செல்லப்பட்டிருந்தன. சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்கள் எல்லாம் கட்டிட இடிபாடுகளிடையே சடலங்களுடன் காணப்பட்டன. மீனவரின் மீன்பிடிவலைகள் கட்டிட இடிபாடுகளுள்ளும், பனை வடலிகளிடையேயும் சிக்குண்டு சீரழிந்து கிடந்தன. முல்லைத்தீவு நகரக் கடற்கரையின் கிறிஸ்தவ தேவாலயத்தின் முன் முகப்புத்தவிர எஞ்சியவை அனைத்தும் தரைமட்டமாகிப் போயிருந்தன. உடைந்த கற்குகைகளையும் கடல் அள்ளிச் சென்றிருந்தது. தேவாலய முகப்பில் கம்பீரமாக உய்ர்ந்து நின்ற சிலுவையைக் கடலலையால் காவிச் செல்ல முடியவில்லை. அவ்விடத்திலேயே சரித்து விட்டிருந்தது. கரையோரத்தில் வாழ்ந்து வந்த மக்கள் பலரின் சடலங்கள், ஒரு கிலோ மீற்றருக்கு அப்பால் பனை மரங்களுக்கிடையே சுனாமி எத்தியிருந்தது.
முல்லைத்தீவில் சுண்டிக்குளம், நல்ல தண்ணித் தொடுவாய், கோரமோட்டை, பேப்பராம்பிட்டி அடங்கலான பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அப்பிரதேசத்தில் 6745 குடும்பங்களைச் சேர்ந்த 26601 பேர் பாதிப்பிற்குட்பட்டுள்ளனர். அவர்களில் 2902 பேர் மரணத்தைத் தழுவி விட்டனர். காணாமற் போயினோர் தொகை 421 என உத்தியோக பூர்வ அறிக்கை தெரிவிக்கினும், அது ஆயிரத்துக்கு மேலிருக்கும் என அஞ்சப்படுகின்றது. முல்லைத்தீவே வெறிச்சோடிப் போயிற்று. ஒரு கடற்கோள் ஒரு பிரதேசத்தை எவ்வாறு நிர்மூலமாக்கும் என்பதற்கு முல்லைத்தீவு தக்க உதாரணமாகும். சுனாமியால் தூக்கிவீசப்பட்ட பெரும் எண்ணிக்கையான சடலங்கள் காடுகளிலிருந்து மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் முள்ளியவளை
3-4 கந்தையா குணராசா

வித்தியானந்தக் கல்லூரி, மத்திய வைத்தியசாலை, புதுக்குடியிருப்பு மாவட்ட வைத்தியசாலை ஆகிய இடங்களுக்குத் தொடர்ச்சியாக எடுத்து வரப்பட்டு வளர்த்தப்பட்டன. பெரும் பெரும் குழிகளில் ஒருங்கே அவை இடப்பட்டு மண்ணிட்டு மூடப்பட்டன.
முல்லைத்தீவில் கேட்போர் இருதயத்தைப் பிழிந்தெடுக்கும் சம்பவமாக செந்தளிர் சிறுவர் இல்லத்திற்கு ஏற்பட்ட துயரம் உள்ளது. அச்சிறுவர் இல்லத்திலிருந்த பிள்ளைகளில் 80 பேரைச் சுனாமிப் பேரலை அள்ளிச் சென்றுவிட்டதாக முதல் முதல் வெளிவந்த முல்லைத்தீவு அரசாங்க அதிபர் மேரி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார். செந்தளிர் சிறுவர் இல்லம் போரினால் அனாதையான சிறார்களின் வதிவிடமாக விளங்கியது. 175 சிறார்கள் இங்கு நன்கு பராமரிக்கப்பட்டு வந்தனர் எனத் தெரிகிறது. அவ்வேளை அங்கு 152 சிறார்கள் இருந்தனர். 22 சிறார்கள் உறவினர் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். சுனாமி அள்ளிய சிறார்களில் 30 பேரையே உயிருடன் மீட்க முடிந்தது. திடீரெனக் குமுறி எழுந்த ஆழிப்பேரலை இச் செந்தளிர் கட்டிடத்தையே அப்படியே கழுவி எடுத்துள்ளது. ஆக செந்தளிர் சிறுவர் இல்ல அடையாளப் பலகைமட்டும் எஞ்சி நிற்கிறது. சிறார்களின் உடுப்புகள், பைகள், பாத்திரங்கள் என்பன ஆங்காங்கு சிதறிக் கிடந்தன. பார்க்கும் போது நெஞ்சு கனக்கிறது.
செந்தளிர் சிறுவர் இல்லத்திலிருந்து சுனாமி அனர்த்தத்திற்குட்பட்ட காப்பாற்றப்பட்ட சிறார்களின் சுனாமிப் பயங்கர அனுபவத்தை தினக்குரல் துஷ்யந்தினி கனகசபாபதிப்பிள்ளை பதிவு செய்துள்ளார். அவற்றில் சில வருமாறு:
“நான் காலை உணவை அருந்திவிட்டு புதிய தவணைக்குரிய அப்பியாசக் கொப்பிகளுக்கு உறை போட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பெரிய இரைச்சல் சத்தம் கேட்டது. அலை வருகின்றது. பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று செந்தளிர் இல்லத்தில் எங்களைப் பராமரித்து வருகின்ற அம்மா கூக்குரலிட்டார். அதற்கிடையில் நாம் எல்லோரும் நாலா பக்கமும் சிதறி ஓடினோம். நான் அலையில் அடிபட்டு வேப்ப மரத்தில் ஏறினேன். எனது தங்கை அலையில் அடிபட்டுச் செல்வதைக் கண்டேன். சிறிது நேரத்தில் கடற்புலி மாமாமார் எமது இடத்திற்கு வந்தனர். அவர்கள் என்னை மரத்திலிருந்து கீழே இறக்கி விட்டனர். எல்து தங்கைக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. முள்ளியவளை வைத்தியசாலைக்குக் கொண்டு செல்கின்ற போது இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால், நான் எனது தங்கையின் சடலத்தைக் காணவில்லை” - சசி சின்னத்துரை (9)
“நான் எனது நண்பிகளுடன் சேர்ந்து புதிய அப்பியாசக் கொப்பிகளுக்கு உறை போட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுது பெரிய இரைச்சல் சத்தம் கேட்டது. அலை வருகின்றது. பிள்ளைகளைக் காப்பாற்றுங்கள் என்று செந்தளிர் இல்லத்தில் எங்களைப் பராமரித்து வருகின்ற அம்மா சத்தமிட்டார். அதற்கிடையில் தண்ணீர் உள்ளுக்குள் வந்துவிட்டது. நான் அலையால் அங்குமிங்கும் அடித்துச் செல்லப்பட்டேன். பின்னர் நுளம்பு வலைகள் கட்டுவதற்காகப் போடப்பட்டிருந்த கயிற்றை இறுகப் பற்றிக் கொண்டேன். பின்னர் கடற்புலி மாமா ஒருவர் என்னைக்
135

Page 78
படவம் நடப்பதற்கு முன்னர் எனது தம்பி வெளியில் விளையாடிக் கொ ததாகவும், பின்னர் மழை பெய்ததால் வந்து படுத்திருந்ததாகவும் எனக்குச் சொன்னார்கள். நான் எனது தம்பியைக் காணவில்லை. சில நாட்களின் பின்னர் எனது அம்மாவைப் பார்ப்பதற்காக அழைத்துச் சென்றார்கள். அப்பொழுது தம்பி இறந்து விட்டதாக அம்மா என்னிடம் கூறினார்.” - செல்வி தனபாலசிங்கம் (2
“காலை உணவை அருந்திவிட்டு நானும் புதிய அப்பியாசக் கொப்பிகளுக்கு உறை போட்டுக் கொண்டிருந்தேன். அப்பொழுதுவாகன இரைச்சல் போன்றதொரு சத்தம் கேட்டது. அதன்பின்னர் தண்ணீர் உள்ளுக்குள் வந்துவிட்டது. ஒவ்வொருவரும் அங்குமிங்குமாக அடித்துச் செல்லப்பட்டோம். அதன்பின்னர் நான் கட்டிலிற்கு மேல் ஏறி நின்றேன். பின்னர் சுவறிற்கு மேல் ஏறினேன். கடற்புலி மாமா வந்து என்னையும் என்னுடன் இருந்த கடைசி தங்கையையும் காப்பாற்றினார். ஆனால் எனது மற்றைய இரண்டு தங்கைமாருக்கும் என்ன நடந்ததென எனக்குத் தெரியாது. அவர்களைக் காணவில்லை. சம்பவம் நடப்பதற்கு முன்னர் ஒரு தங்கை என்னிடம் வந்து, என் புத்தகமொன்றைப் படிப்பதற்காக எடுத்துச் சென்றார். அதன்பின்னர் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது. அலை வந்து போன பின்னர் எங்களில் சிலர் காப்பாற்றப்பட்டு ட்ரக்டர் மூலம் முள்ளியவளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டோம். குளிரால் நாம் அனைவரும் நடுங்கிக் கொண்டிருந்தோம். வைத்தியசாலையில் உள்ள மரத்திற்கடியில் பாய் விரித்து உட்கார்ந்தோம். எங்களுக்குத் தேநீரும், சாப்பாடும் தந்தார்கள். சடலங்களையும் காயப்பட்டவர்களையும் உயிர் தப்பியவர்களையும் ட்ரக்டர் மூலமாக அங்குகொண்டு வந்தார்கள். நான் ட்ரக்டர் வரும் போதெல்லாம் ட்ரக்டருக்கு அருகில் எனது தங்கைமார் உள்ளனரா என்று தேடிப் பார்த்தேன். ஆனால், அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் இருந்தால் எனக்குக் கூறுவதாகச் சொன்னார்கள். ஆனால், இதுவரை அவர்கள் பற்றிய தகவல் எதுவுமில்லை. நான் சந்திப்பவர்களை எனது தங்கைமாரைக் கண்டீர்களா என்று கேட்டவண்ணமே உள்ளேன். என்னைப் போன்று தங்கை, தம்பி, அண்ணா, அக்கா ஆகியவர்களைத் தேடும் பலரும் இதே கேள்வியை என்னிடம் கேட்கின்றனர்” - சந்தினி சிவகுமார் (3
“நான் சம்பவ தினம் சிறிய பிள்ளைகளுக்குக் காலை உணவை ஊட்டி விட்டு நகம் வெட்டுவதற்காக வெளியே சென்றேன். பெரிய சத்தத்துடன் அலை வந்தது. வீட்டிற்குள் இருந்த அலுமாரி போன்றன எம் மீது விழுந்தன. நான் ஒரு மாதிரி எழும்பி மூன்று வயது நிரம்பிய ஆரபியைத் தூக்கிக் கொண்டு காப்பாற்ற முயன்றேன். ஆனால், மீண்டும் வந்த அலை ஆரபியை என்னிடமிருந்து பறித்து விட்டது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை” என்று அழுதவாறு சொன்னார். இவரால் தொடர்ந்து என்ன நடந்ததெனக் கூற முடியவில்லை. சிறிது நேரத்தின் பின் தொடர்ந்து உரையாடிய பொழுது “ஆரபியை அலை பறித்த பின்னர் நான் சுவரின் மேல் ஏறினேன். கடற் புலி மாமா வந்து என்னைக் காப்பாற்றினார். சுவரிலிருந்து கீழே இறங்கிய பின்னர் ஆரபி இறந்து கிடந்த6தக் கண்டேன். என்னால் தாங்க முடியவில்லை. அவரது சடலத்தைக் தூக்கியவாறு முள்ளியவளை வைத்தியசாலைக்கு ஏனையவர்களுடன் சென்றேன்.” நிரஞ்சனா பாலகிருஷ்ணன் (13) У
136 கந்தையா குனராசா

மேலும் செந்தளிர் இல்லத்தை நடத்தி வருகின்ற பெண்கள் அபிவிருத்திப புனர்வாழ்வு நிறைவேற்றுப் பணிப்பாளரான சுதர்ஷினி செல்வகுமார் கூறியதாவது: “சம்பவம் நடந்து அரை மணித்தியாலயத்திற்குள் நான் சம்பவ இடத்திற்குச் சென்று விட்டேன். அப்பொழுது சடலங்கள் ஆங்காங்கே காணப்பட்டன. உயிர் தப்பிய சிறுவர்கள் ஏக்கத்துடன் காணப்பட்டனர். அவர்களை ஒருவாறு தேற்றி முள்ளியவளை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தோம்.
அனைவரும் அசுத்த நீரைக் குடித்ததால், மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அணிந்திருந்த ஆடைகள் கறுப்பு நிறமாகக் காணப்பட்டன. ஆடைகளை மாற்றி உணவு கொடுத்த பின்னர் கிளிநொச்சிக்குக் கூட்டிக் கொண்டு வந்தோம். அது வரை பல சிறுவர்கள் ஒன்றும் கதைக்கவில்லை. பயத்துடன் இருந்தனர். இறந்த சிறுவர்களுள் ஞாபகார்த்தமாகப் பெற்றோரை இழந்த இன்னும் முந்நூறு சிறுவர்களை எடுத்துப் பராமரிக்கவுள்ளோம். அழிந்த இடத்தில் மீண்டும் செந்தளிர் இல்லத்தை அமைக்காமல் வேறொரு இடத்தில் அமைப்பதற்குத் தீர்மானித்துள்ளோம். பழைய இல்லம் கடற்கரைக்கும், அருவிக்கும் அருகில் அமைக்கப்பட்டிருந்தது. சிறுவர்களின் பிறந்தநாளைக் கடற்கரையில் கொண்டாடி வந்தோம். ஆனால் இந்த அனர்த்தத்தின் பின்னர் தண்ணீர் என்றால் சிறுவர்கள் மிகவும் பயப்படுகின்றனர்.
உயிர் தப்பியவர்களுள் மிகவும் சிறியவர்களுக்கு அவர்களுடன் இருந்த ஏனையவர்களுக்கு என்ன நடந்ததென விபரமாகத் தெரியாது. ஆனால், வளர்ந்த சிறுவர்களுக்கு ஓரளவு தெரியும். இவர்கள் மூலமாகச் சிறியவர்கள் அறிந்து கொள்வார்கள். அத்துடன் நாமும் படிப்படியாகக் கூறவுள்ளோம். உடனடியாகக் கூறுவது உசிதமில்லை. ஏனெனில் இவர்களுள் அநேகமானவர்களுக்கு இன்னமும் பயம் தெளியவில்லை”
முல்லைத்தீவில் அண்மையில் கட்டப்பட்ட அரச கட்டிடங்களிலிருந்து நகரத்தின் அனைத்து அரச கட்டிடங்களும் இடிந்து விழுந்துள்ளன. முல்லைத்தீவு மகா வித்தியாலயம் உதவி அரசாங்க அதிபர் பணிமனை, அஞ்சல் அலுவலகம் உட்பட பல திணைக்களக் கட்டிடங்கள் தகர்ந்து டேவூள்ளன. இப் பகுதி மக்களின் 2000 க்கு மேற்பட்ட படகுகள், பல லட்சம் பெறுமதியான வலைகள், மோட்டர்கள் எல்லாமே கடலலையில் அழிக்கப்பட்டுவிட்டது. கடல் நீர் ஒரு கிலோமீற்றர் வரை உட்பாய்ந்ததால் வயல், நிலங்கள் உவராகிப் போயின.
‘இரண்டு பெரும் குண்டு வெடிப்புகள் கேட்டன. கடற்படைக்கும் கடற் புலிகளுக்கும் யுத்தம் தொடங்கி விட்டதென எண்ணியபோது, ஒரு பனை உயரத்திற்கு மேலாக கடுமையான பேரலை எழுந்து வந்தது. இந்த அலை வேகமாக உருண்டபடி வரும்போது அதற்குள் சிக்குப்பட்ட மக்கள் வேகமாக உருட்டப்பட்டு, கிடந்த அனைத்துப் பொருட்களிலும் அடிபட்டுள்ளனர். வந்த பேரலை வந்த வேகத்தில் திரும்பிய போது இயலுமானதை இழுத்துச் சென்றுவிட்டது ' என்கிறார் முல்லைத்தீவுப் பெரியவர் ஒருவர். கல் நெரிக்கும் டோசர், பேருந்துகள், பார ஊர்திகள், உழவுயந்திரங்கள்,
ሐኅን፡፡፡ፅ‛ 13

Page 79
என்பனவுட்பட பல வாகனங்களையும் அலையால் தூக்கியெறியப்பட்டுள்ளன. இழுத்தும் செல்லப்பட்டுள்ளன. - (கனகரவி)
முல்லைத்தீவு அழிவுகளை கனகரவி என்பவர் நன்கு தினக்குரலில் சித்தரித்துள்ளார். பாதிப்புற்ற மக்களின் அனுபவங்கள் இதயத்தை இறுக்கின்றன.
வருமாறு: பேராபத்தில் இருந்து உயிர் தப்பியவர்கள் ஒவ்வொருவரும் தமது திகில் அனுபவத்தைச் சொன்னார்கள்.
“நான் தண்ணியில் மிதந்து உள்ளே இழுபடக் கூடாதென்பதை ஊகித்து தரையை நோக்கி சிரமமான நீச்சலை செய்கின்றபோது ஏராளமானவர்கள் காப்பாற்றுமாறு கதறினார்கள். என்னை காத்துக் கொள்வதே இயலுமா என்ற நிலைமையில் உயிருக்காகப் போராடினேன்”
“எங்களுடைய நான்கு வயது பெண் குழந்தையை நாங்கள் வளர்த்த நாய்தான் காப்பாற்றியது. வீட்டுக்கு முன் தண்ணி வந்ததும் மகள் நாயைக் கட்டிப்பிடிச்சிட்டாள். அது பனையொன்றை நோக்கி நீந்தியதால் மகள் பனையைக் கட்டிப் பிடிச்சிட்டாள். நாயை கடல் இழுத்துக் கொண்டு போயிற்று”
“ரெண்டு பிள்ளைகளையும் ரெண்டு கையால பிடிச்சி வைத்திருந்தன். ஆரோ பறிச்சுக் கொண்டு போற மாதிரி பிள்ளையள கடல் பறிச்சுக்கொண்டு போயிற்றுது ”
“குண்டு வீச்சில் காலொன்றை இழந்தன்.இன்றைக்கு மனைவியையும் ரெண்டு பிள்ளைகளையும் இழந்தன். இனி முல்லைத்தீவிற்றே போகமாட்டேன்”
“லண்டனில் இருந்து முல்லைத்தீவிற்கே வந்து, கடற்றொழில் செய்து சொந்த மண்ணில் வாழலாம் எண்டு நினைச்சன். திருமணம் செய்து ஆறுமாதத்தில மனைவியை இழந்து நிற்கிறேன்.” என்ர பரம்பரைக்கென்று எவருமே இல்லை. சகோதரர்கள் பிள்ளைகள், மனைவி, பெற்றவையள் என எல்லாரையும் இழந்து தனிமரமாக நிக்கிறன்”
“கறுப்பா பேரலையொன்று பனைக்கு மேலாக வருதே என்ன செய்வதென்று தெரியாமல் பொருட்களைத் தள்ளியபடி எமது வீட்டை நோக்கி வந்ததினால், நாம் வீட்டிற்குள் இருந்து விட்டோம். பேருந்துகள் வீட்டில் மோதி நின்றதினால் எமது வீடு சேதமானது. நாம் தப்பிவிட்டோம்”
"இளம் பெண்ணொருவர் கடுமையான காயங்களுடன் ஆடைகளெதுவுமில்லாமல் இருந்தபோது போராளியொருவர் தனது ஆடைகளைக் கழற்றிக் கொடுத்தார்”
“என்னுடைய தலைமயிர் கம்பிகளிலும் வேறு பொருட்களிலும் சிக்கி என்னை சுழற்றி அடித்ததாலேயே பெருங்காயங்கள் ஏற்பட்டன.”
138 கந்தையா குணராசா

“கடலில் மின் பிடித்துக் கொண்டிருக்கும்போது, கரையிலே கறுப்பாக பேரலை எழுந்து கரையே தெரியவில்லை. கரையில என்ன நடப்பதென்றே தெரியவில்லை. படகை கரையை நோக்கிச் செலுத்தினோம். கரையை தாண்டி ஐநூறு மீற்றருக்கு அப்பால் தூக்கியெறியப்பட்டோம். கடலில் இருந்து வந்த நாங்கள் தப்பித்தோம். கரையில் இருந்த குடும்பத்தில் ஒருவரையும்காணவில்லை. ”
சாவகச்சேரிக் கச்சாய்ப்பகுதியைச் சேர்ந்த 26 குடும்பங்களைச் சேர்ந்த 73 பேர் முல்லைத்தீவில் அனர்த்தம் புரிந்த சுனாமிக்கு இரையாகிப் போயினர். கச்சாயில் அவர்கள் முதல் இருந்த வதிவிடம் இராணுவ வலயத்திற்குள் வந்ததால், அவ்விடத்தை விட்டு வெளியேறி முல்லைத்தீவில் குடியேறியிருந்தனர். அங்கு யமன் காத்திருந்துள்ளான்.
முல்லைத்தீவின் சுனாமிச் சோகக்கதைகள் ஓராயிரமுள்ளன. உயிர்தப்பியவர்களது அனுபவங்கள் பயங்கரமானவை. உதயனில் கேசவன் சிலரது அனுபவங்களைக் கூறுகிறார்.
சுண்டிக்குளத்தில் அப்பையா என்பவர் இந்தப் பேரனர்த்தத்தைப் பற்றிக் கூறுகையில், محم
“காலையில் கடலுக்குப் போட்டுவந்து சாப்பிடத் தயாரானேன். ‘டும்’ என்ற ஒரு சத்தம் அதோட இரைஞ்சும் கேட்டது. நான் கிபீர் வருகுது என்று பொருட்படுத்தவில்லை. பார்த்தா வீட்டுக்குள்ள தண்ணிவந்துட்டுது. கடைசிப் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தன். கடல் பிள்ளையைப் பறிச்சுக் கொண்டு போட்டுது. புட்டியில நின்ற மரத்தில பிடிச்சுக்கொண்டு பாத்தா மனைவியும் இன்னுமொரு பிள்ளையும் கடல் அலையில் சுழண்டு போய்க்கொண்டிருந்தது.” என்றார் - பேப்பாரம்பிட்டியில் மரியம்பிள்ளை என்பவர் கூறும்போது -
‘நேற்றுத்தான் ரீவி, டெக், புதிசாய் வாங்கினாங்கள். இரவு எல்லோரும் சேர்ந்து படம் பார்த்தோம். காலையில கடலுக்குப் போட்டு வந்து சாப்பிடப் போனேன். மச்சான் ஒருவர் கடல் வருகுது என்று கத்திக்கொண்டு வந்தார்.
கடல் வருகுதோ? இது எங்களுக்குப் புதுசுதானே என்று வெளியே வாறதுக்கிடையில் என்ன நடந்தது என்று தெரியாது. என்னண்டு நான் தப்பினேன். என்றும் தெரியாது. ஆனால், என்ர குடும்பத்தில் யாரும் மிச்சமில்லை. ஊர் கூடி ஒன்றாய் இரவு இருந்தம். விடிய இப்படி நடக்கும் என்று யார் கண்டது.
வடமாகாணத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசம் முல்லைத்தீவாகும். சுனாமி கடலலை முல்லைத்தீவுக் கரையோரத்தை மிக மோசமாகத் தாக்கியுள்ளது. சுனாமி ஆழிப்பேரலையிலிருந்து தப்பிப் பிழைத்தவர்களின் அனுபவ வாக்கு மூலங்கள் நெஞ்சைப் பிழிவன. முல்லைத்தீவில் கள்ளப்பாடு ஒரு அழகிய கரையோரக் கிராமம். அந்தக் கிராமமே இருந்தவிடம் தெரியாமல் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. அங்கு தப்பியவர்களின் அனுபவத்துயர்களை வீரகேசரி வி. டி. ராஜ் விபரிக்கிறார்.
arðsstó 139

Page 80
"அப்பொழுது கடலில் பெரும் வெளிச்சம் ஒன்று தெரிந்தது. எங்களுடைய வீடு கடலில் இருந்து கொஞ்சத் தூரத்தில்தான் இருந்தது. கடல் நீர் வீட்டுக்குள் புகத் தொடங்கவே நாம் ஓடத் தொடங்கினோம். கடல் அலை எம்மை புரட்டி எடுத்து பல அடி உயரத்திற்குக் கொண்டு சென்றது. நாங்கள் நால்வரும் கடல் அலையில் இருந்து தப்பி மரத்தில் ஏறிக் கொண்டோம். ஆனால் எமது குடும்பத்தைச் சேர்ந்த மற்றைய நால்வரும் பெண்கள். அவர்களை கடல் இழுத்துச் சென்றுவிட்டது. அவர்களில் எனது கடைசி தங்கையின் உடல் மாத்திரம் கிடைத்தது. மற்றவர்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை.” அப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். அம்மா, அக்கா, தங்கச்சி இருவர் காணாமல் போயுள்ளனர்” என்றார் - ஜோன் சந்திரசேகரன்.
“கடந்த 26 ஆம் திகதி காலை 8.30 மணிபோல் இறால் கம்பெனியில் பணம் பெறுவதற்காகச் சென்றேன். கடல் ஓரத்தில்தான் இறால் கம்பனி இருந்தது. இறால் கம்பெனியில் கதைத்துக் கொண்டிருந்தபோது பெரும் மழை வருவது போல் இருண்டு கொண்டு வந்தது. மழை பெய்து கொண்டிருக்கும் போது கடலில் இருந்து பல அடி உயரத்தில் கடல் அலை எழும்பி வந்தது. அங்கு வேலை செய்து கொண்டிருந்த பிள்ளைகளிடம் என்ன மழை பெய்யது பின்னாடி இருண்டு கிடக்குது. கடல் அலை பல அடி உயரத்திற்கு எழும்பி வருகிறது என்று கூறினேன்.
எனது சொந்தக்காரர்களான எனது மச்சான், தங்கச்சி, தங்கச்சியின் பிள்ளைகளுக்குக் கடலைக் காட்டி அலை எழும்பி வருவதைக் காட்டிக் கொண்டு நின்றேன்.
மழை முன்னுக்கு வருது கடல் அலையும் இருளும் வருகின்றதே என சொல்லிக்கொண்டு இருக்கையில் அலை முன்னால் இருந்த மதிலை உடைத்துக்கொண்டு வந்தது எல்லோரும் ஒடுங்கள் என்று கூற அலை என்னை மோட்டார் சைக்கிளுடன் அடித்து விழுத்தி விட்டது.
கீழே விழுந்த நான் அந்த இடத்தில் இருந்த சுவரில் ஏற முயன்றேன். சுவரை அலை உடைத்துவிட்டது. முன்னால் இருந்த பல கட்டிடங்களை உடைத்துக்கொண்டு வந்த கடல் அலை என்னையும் அள்ளிக்கொண்டு சென்றது.
நான் உயிர் தப்புவதற்காக நீந்த முயன்றும் முடியவில்லை. கடல் அலை என்னை சுருட்டி உருட்டி எடுத்து மேல் கொண்டு வந்தது. மேலாக அடித்துச் செல்லப்பட்ட கூரைகளைப் பற்றிப் பிடித்தபோதும் பின்னால் அலையுடன் அள்ளுண்டு வந்தவைகள் நான் பிடித்திருந்த கூரையுடன் மோதவே கூரை சுழல நானும் சுழன்று வந்தேன்.
நான் உடுத்திருந்த சாரம், சட்டை அனைத்தையும் அலை என்னில் இருந்து உருவிக் கொண்டது. நான் கையில் கொழுவி இருந்த மோட்டார் சைக்கிள் சாவி
மாத்திரமே அப்படியே இருந்தது. அலைக்குள் இழுபட்டு சென்ற நான் அள்ளுண்டு வந்த மரம் ஒன்றைப் பிடித்துக் கொண்டேன். அந்த மரத்துடன் ஒரு கோழிக்கூடு
140 கந்தையா குணராசா

வந்து மோதவே கையை விட்டு விட்டேன். அலைக்குள் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கையில் புகைக் கூடு ஒன்று தெரிந்தது. அதைப் பிடித்துக் கொண்டேன். அப்போது எனக்கு அறிவு மயக்கத்தில் கையை விட்டு விடுவேன் என்ற பயத்தில் கூட்டுக்குள் காலை விட்டேன். அதனால் எனது மேல் முழுவதும் உரசி காயம் ஏற்பட்டது. எனினும் தப்புவதற்காக இரு கால்களையும் அந்தப் புகைக் கூடுக்குள் திணித்தேன். திணித்ததுதான் தாமதம் அப்படியே வழுக்கிக் கொண்டு குசினிக்குள் போய் விழுந்தேன்.
குசினிக்குள் நீர் நிறைந்து இருந்தது. அதற்குள் மிதந்து கொண்டிருந்தேன். பிறகு நீர் வேகமாகக் குறையத் தொடங்கியது. தரைக்கு இறங்கி கால் வைக்க
முயன்றேன். ஆனால் கழுத்தளவுக்கு மேல் அந்தக் குசினிக்குள் நீர் நின்றது.
திரும்பவும் மேலேறி புகைக் கூட்டைப் பிடித்துக்கொண்டு இருந்தேன். பின் இலேசாக நீர் வடியத் தொடங்கியது. புகைக் கூட்டில் இருந்து குசினிக்குள் இறங்கி வெளியே வந்தேன்.
ஒரே அழுகுரல், ஒரு அம்மா உடலில் ஒரு துண்டு துணி கூட இல்லை. இறந்த ஒரு ஆம்பிளைப் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு அழுது கொண்டு இருந்தார்.
"அண்ணே என்னைக் காப்பாற்றுங்கோ’ காப்பாற்றுங்கோ, காப்பாற்றுங்கோ என என்னைப் பார்த்து கதறி அழுதார். பிள்ளை செத்துவிட்டது. நீங்கள் எழும்பி வாங்கோ அம்மா என்று நான் கூறினேன். ஆனால் அந்த அம்மா காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்னை என அழுது கொண்டே இருந்தார்.
பிள்ளை செத்துவிட்டது. என்னால் அந்த இடத்துக்கு வர முடியாது. நடக்க முடியாத நிலையில் இருக்கின்றேன். அதற்கு அந்த அம்மா என்னால் எழும்ப முடியாதிருப்பதாகவும் காப்பாற்றுங்கள் என மீண்டும் அழுதார்.
உங்களை யாராவது வந்து காப்பாற்திவார்கள். அப்படியே இருங்கள் என்று நான் கூறிக் கொண்டிருக்க மறுபக்கத்தில் இருந்த அண்ணாச்சி என்னைக் காப்பாற்றுங்கோ என்ற அழுகுரல் வந்தது. திரும்பிப் பார்த்தேன். ஒரு குமர் பெட்டை கக்கூசுடன் செருகுப்பட்டு கொண்டு நின்று காப்பாற்றுமாறு அழுகின்றது. அந்த பெட்டையின் உடம்பிலாம் ஒரு துணி கூட இல்லை. அம்மா என்னால் ஒன்றும் செய்ய இயலாது. நடக்க முடியாத நிலையில் உள்ளேன். நான் வீட்டுக்கு போய்ச் சேருவேனா என்று தெரியவில்லை. என்று கூறிக்கொண்டு பாதையில் நிற்கின்றேன் இடுப்பளவு தண்ணீர் நிற்கின்றது.
அப்போது ஒரு அண்ணன் வந்தார். நான் அவரிடம் என்னைத் தூக்கிக் கொண்டு போய் ஒரு திட்டியில் விடுங்கள் என்றேன். பிறகு அவர் என்னைத் தூக்கி ஒரு திட்டியிலில் விட்டார்.
ho 141

Page 81
அங்கு நான் பார்த்தவர்கள் எல்லோரும் தத்தமது பிள்ளைகளையும், உறவினர்களையுமே தேடிக் கொண்டிருந்தனர்.
கடல் மீண்டும் வருகிறது என்று கூறிக் கொண்டு தப்பி நின்றவர்கள் தண்ணீருக்குள் நீந்தி ஓடத் தொடங்கினர். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போது ஒரு வயது போன ஐயாவும் மற்றொருவரும் நீந்திக்கொண்டிருந்தனர். ஐயா என்னையும் கூடிக் கொண்டு போங்கோ என்று கூற அவரும் எனது தோளைப் பிடித்துக்கொண்டு இழுத்துக் கொண்டு போனார்.
கொஞ்சத் தூரம்தான் போயிருப்போம். என்னைக் கூட்டிக்கொண்டு போன ஐயா இழுபட்டு தண்ணீருடன் போய்விட்டார். ஐயாவையும் பிடிக்க முடியாது என்னாலும் போகமுடியாது. தவித்துக் கொண்டிருக்கும்போது மிதந்து வந்த ஒரு மரக்கட்டையைப் பற்றிக் கொண்டேன். ஆனால் கட்டை நீரில் சுழன்று கையைவிட்டுப் போய்விட்டது.
அப்போது சங்கிலிப் பக்கம் சின்ன ஆறு ஒன்று உள்ளது. அதில் இழுபட்டுப் போன ஒரு பெரிய சூட்கேசு மிதந்து வந்தது. அதைப் பிடித்துக் கொண்டு கிடக்கும் போது அது வழுக்கிக் கொண்டு போனது. சிப் தான் கையில் அகப்பட்டது. சூட்கேசுவும் இழுபட சிப் இழுபடவே அது திறந்து கொண்டது. அதற்குள் பணம் நகைகள் இருந்தன. அதைப் பார்த்தும் நான் ஒன்றும் செய்ய இயலாது கரையோரமாக சேரவேண்டும். மெதுவாக நீந்தி கூரைத் தகரத்தைப் பிடித்துக் கொண்டேன். கூரை நீரில் அடித்துச் செல்லப்பட்டு நானும் அள்ளுப்பட்டு கரையை நோக்கி இழுத்து வரப்பட்டேன். அப்போது இயக்க அண்ணன்மார்கள் என்னைக் காப்பாற்றினார்கள்.
எனக்கு அறிவு மயங்கிவிட்டது. சுயநினைவு வந்து பார்த்தபோது மருத்துவமனையில் கிடந்தேன். என்னைக் கிளிநொச்சி மருத்துவமனைக்குக் கொண்டு போக வேண்டுமென்று கூறினர். ஆனால் நான் போக விரும்பவில்லை. ஏனென்றால் எங்களது குடும்பத்தில் பலர் இல்லை. எங்களது உறவுக்குள் தம்பியின் குடும்பம் அப்படியே இல்லை. அத்தானின் தம்பியின் குடும்பமும் அப்படியே இல்லை. நான் இறால் கம்பெனியில் காலையில் நின்ற போது என்னுடன் கதைத்துக் கொண்டு நின்ற எனது மனைவியின் தங்கச்சியையும் காணவில்லை. எங்களுடைய குடும்ப உறவுகளில் பலர் காணாமல் போயுள்ளனர். எங்களுடைய குடும்பத்தில் மாத்திரமல்ல எங்களது ஊரில் பல குடும்பங்கள் அந்தக் குடும்பங்களின் உறவுகளில் பலர் காணாமல் போயுள்ளனர். எங்களுடைய ஊரில் இருந்தவர்களில் மூன்றாகப் பிரிந்து ஒரு பகுதியினர் தான் உயிருடன் தப்பியுள்ளனர். கள்ளப்பாடு, முல்லைத்தீவு. பன்னாங்குளம், மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்புலிகள் தான் மும்முரமாக நின்று உதவி செய்து கொண்டிருக்கின்றனர். எமது ஊருக்கு எனது தம்பி சென்று பார்த்து வந்து கூறும் கதை அங்கு ஒன்றும் இல்லை என்பதுதான். சிறு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டாலும் மீண்டும் ஊருக்குள் கடல் புகுந்துவிடும்.
நாங்கள் இனி ஊருக்குப் போயும் பிரயோசனம் இல்லை.
142 கந்தையா குனராசா

எனது பிள்ளைகள் இருவரும் தப்பிவிட்டனர். கடல் கொந்தளிப்புக்கு இரண்டு மணித்தியாலயத்திற்கு முன் எனது அம்மா பிள்ளைகள் இருவரையும் கோயிலுக்கு கூட்டிச் சென்றுவிட்டார்.
மனைவி அலையில் அள்ளுப்பட்டு கிணற்றில் விழுந்தவரை அயலவர்கள் காப்பாற்றி விட்டனர்.
தங்கச்சியின் பிள்ளைகளையும் ஊத்தங்க கரை பிள்ளையார் கோவிலுக்குக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார். கர்ப்பிணி மனைவி உடுத்த உடையுடன் இருக்கின்றார். எங்களிடம் இப்போது மிஞ்சி இருப்பது மனைவி மற்றும் எனது மகளின் காதுகளில் உள்ள தோடுதான். மற்றப்படி வெறுங்கையுடன் உற்றார் உறவினர்களை இழந்து நிர்க்கதியாக நிற்கின்றோம். எல்லாமே கடல் அலை வந்த ஐந்தே பத்து நிமிடங்களுக்குள் முடிந்துவிட்டது.
இந்த விஞ்ஞான யுகத்தில் இந்தப் பேரழிவை முன் கூட்டியே அறிவித்திருந்தால் உயிரிழப்புக்களையாவது தடுத்திருக்கலாம். ஆனால் யாரும் அறிவிக்கவில்லை. எந்த விஞ்ஞானமும் எமக்குப் பயன்படாமல் போயிற்றே. இந்தக் கடல் அனர்த்தம் இரவு வேளையில் வந்திருந்தால் இன்று தப்பி உயிருடன் இருப்பவர்கள் கூட மிஞ்சியிருக்க மாட்டோம். அனைவரையும் கடல் அலை கொண்டு போய் இருக்கும் நித்திரையில் இருந்தவாறே அள்ளுண்டு போய் இருப்போம். கடல் அனர்த்தம் பகலில் ஏற்பட்டதால் இந்த சிறிய தொகையினராவது மிஞ்சக் கூடியதாகவிருந்தது. நான் கடற்றொழில் செய்கின்றேன்.
எங்களுடைய துறைக்குள் குறிப்பாக வண்ணான் குளம், சின்னான், குளம், மணற் குடியிருப்பு, சிலாவத்தை, கள்ளப்பாடு போன்ற அனைத்துத் துறையிலும் மீன் பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஒவ்வொரு துறையிலும் சாதாரணமாக 500 வள்ளங்களுக்கு மேல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
எங்களுடைய கள்ளப்பாடு, துறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட வள்ளங்களில் மூன்று வள்ளங்கள் தான் உடைந்த நிலையில் காணக்கூடியதாக இருக்கின்றன.
மிகுதி வள்ளங்களைக் காணவில்லை. ஒவ்வொரு மீன்பிடி படகும் 8 இலட்சத்தில் இருந்து 10 இலட்சத்திற்குள் வரும். என்ஜின் மாத்திரமே ஒவ்வொன்றும் ஒன்றரை இலட்சத்துக்கு மேல் வரும்.
வீடுகளில் கட்டப்பட்டிருந்த மலசல கூடத்தைக் கூட அரை மைல்களுக்கு அப்பால் இழுத்துக் கொண்டு வந்து போட்டுள்ளது" - சுரேந்திராஜா
முல்லைத்தீவில் ஜிம்காரியானிசையும் அவருடன் வந்த குழுவினரையும் சேர்ந்தவர்களும், விடுதலைப் புலிகளின் சீரான ஒழுங்கமைவில் நலன்புரி நிலையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதை அற்புதமாக வடிவமைத்து நிவாரணப் பணிகள், அங்கு நடைபெறுவதை மெச்சிக் கொண்டனர். இவ்வளவு விரைவாகவும் அதேவேளை நேர்த்தியாகவும் சீராகவும் பாதிக்கப்பட்ட மக்களை பராமரிப்பதென்பது இலகுவான காரியமல்ல. அதற்குப் பயிற்சியும் கட்டுப்பாடும்
ሐሳስ!፡፡tዕ” 143

Page 82
தேவை. எல்லாவற்றிற்கும் மேலாக கடமையுணர்வும் இயல்பான விருப்பமும் தேவை’ என வியந்தார் கனேடிய எம். பி.
11. 4 திருகோணமலை
“திருகோணமலையின் நகரினை ஞாயிறு காலை சுனாமி தாக்கியது. நான் கோணேஸ்வரர் கோயில் மலையில் நின்றிருந்தேன். திடீரென கடல் பின் வாங்கிச் செல்ல அடிவாரத்தில் கடலின் தரை பரந்து தெரிந்தது. ஏராளமான கட்டிடச் சிதைவுகள் அப்பரப்பில் இருந்ததைக் கண்டேன். இப்படியொரு காட்சியை நான் என்றும் கண்டதேயில்லை. பார்த்துக் கொண்டிருக்கும்போது பேரிரைச்சல் ஒலி எழுந்தது. கருமலைகள் எழுந்து வருவது போலக் கடலலை பொங்கிப் பிரவகித்து மலையை நோக்கி வந்தது. நான் நின்றிருந்த மலை உச்சிவரை சுனாமியின் அலை முடி உயர்ந்து, படீரென மோதி உடைந்தது. என்ன பயங்கரம். நான் அவ்விடத்தை விட்டு இறங்கி ஓடினேன்” - சிவபாலனின் அனுபவம் இவை.
திருகோணமலை நகரில் சுனாமியின் தாக்கம் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும்போது குறைவானதாகும். கடல் கொந்தளிப்பினால் திருகோணமலை நகருக்குள் கடல் நீர் புகுந்தது. திருகோணமலை நகரின் கடல் தரையிலிருந்து 100 மீற்றர்களுக்கு அப்பால் பாய்ந்து வந்த சுனாமியால், மிக்க உயரத்திற்குக் கிளம்பித் தன் நாக்கை நீட்ட முடியவில்லை. எனினும், கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக் கணக்கான படகுகள் கடலோடு அள்ளுப்பட்டுச் சென்றன. பல படகுகள் விளையாட்டு மைதானத்திற்குள் தூக்கிவீசப்பட்டன. கடற்கரை யோரங்களில் வீடுகளும் குடிசைகளும், மீன்வாடிகளும் அமைத்து வாழ்பவர்களின் வதிவிடங்கள் சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இறந்தோர் என திருகோணமலை நகரில் எவருமில்லை.
திருகோணமலை நகருக்குள் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை கடல், உட்புகுந்ததால் வர்த்தக நிலையங்கள், வீடுகள் என்பனவற்றுள் பொருட்கள் சேதமடைந்துள்ளன. திருகோணமலையில் லிங்கநகரில் சுனாமி, வதிவிடங்களைத் தகர்த்துள்ளது. சமுத்திராகம என்ற பிரதேசம் முழுமையாக அழிவுக்குள்ளாகியுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் சுனாமித் தாக்குதலுக்குள்ளாகிய இன்னொரு பிரதேசம், நிலாவெளியாகும். உல்லாசப் பயணிகளின் விருப்பிடமாக நிலாவெளிக் கடற்கரை விளங்கி வருகின்றது. பல உல்லாச ஹோட்டல்கள் அங்குள்ளன. சுனாமிப் பேரலை இப்பகுதியில் முழுவீச்சோடு தாக்கியதால், கரையோரக் கட்டிடங்கள் அனைத்தும் சரிந்து போயின. உல்லாசக் ஹோட்டல்கள் தகர்ந்து போயின. ஒரு உல்லாசப்பயண ஹோட்டல் முற்றாகத் தரைமட்டமாகின. 11 பேர் கடலலையினால் இழுத்துச் செல்லப்ப்ட்டனர். 16 வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் காயமடைந்தனர். நிலாவெளிப் பிரதேசத்தில் கடற்கொந்தளிப்பால் அன்றைய மதிப்பீட்டில் மரணமடைந்தோர் 150 க்கு மேலாக இருந்தது. பல நூற்றுக்கணக்கானோர் காணாமற் போயிருந்தனர். நிலாவெளிப் பள்ளிவாசலில் 30 பேரின் சடலங்களும், திருகோணமலைப் பொது வைத்தியசாலையில் 85 பேரின் சடலங்களும், நிலாவெளிக்
144 கந்தையா குனாபசா

கோயிலில் 15 பேரின் சடலங்களும் வைக்கப்பட்டிருந்தன. நிலாவெளி வீதியோரமாகப் பல சடலங்கள் அடுக்கி வளர்த்தப்பட்டிருந்தன.
'நிலாவெளியில் தச்சனக்கல் என்ற தமிழ்க் கிராமம் முற்றாக நாசமாகியுள்ளது. 139 குடும்பங்களைச் சேர்ந்த 1675 பேரைக் கொண்ட இந்தக் கிராமத்தில் 126 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். இக்கிராமக் கடற்கரையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் முருகன் கோயில் மட்டுமே எஞ்சியுள்ளது. - (கீதபொன்கலன்)
திருகோணமல்ல மாவட்டத்தில் மிகவும் கொடூரமாகவும் நெஞ்சினைப் பிளக்கும் துன்பகரமாகவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேசம் கிண்ணியா ஆகும். அங்கு நூற்றுக் கணக்கானோர் சுனாமிக்குப் பலியாகினர். முதல்நாளில் மட்டும் 521 சடலங்கள் அங்கு மீட்கப்பட்டன. ஐந்து நிமிடங்களுள் ஒரு கிலோமீற்றர் தூரம் திடீரெனப் பொங்கிக் கொண்டு கிளம்பி ஊடுருவிய கடல், கிண்ணியாவில் 400 க்கு மேற்பட்டோர் வாரிக் கொண்டு செல்லப்பட்டனர். அதிகம் சேதமுற்ற கிண்ணியா ஆஸ்பத்திரியிலிருந்து அனைத்து நோயாளர்களும் மற்றும் ஆஸ்பத்திரி ஊழியர்களுமாக நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆறடி உயரத்திற்கு மேல் கிண்ணியாவினுள் கடல் நீர் புகுந்தது. பிள்ளைக் குழிமணல், சின்னக் கிண்ணியா, பைசல் நகர் என்பன பெரும் அழிவினை அடைந்துள்ளன. கிண்ணியா - தம்பலகாமம் வீதிப்பாலம் முற்றாக உடைந்து போக்குவரத்துத் தடைப்பட்டதால், திருகோணமலையுடனான தொடர்பும் துண்டிக்கப்பட்டது. அன்று பொறுக்கிச் சேகரிக்கப்பட்ட 400க்கும் அதிகமான சடலங்கள் கிண்ணியா தேசிய பாடசாலையில் வைக்கப்பட்டிருந்தன. காயமடைந்த ஆயிரக் கணக்கானோர் வைத்திய உதவியின்றி அவதிப் பட்டனர். கிண்ணியாவில் 413 உடல்கள் ஒரே குழிக்குள் வைத்து அடக்கம் செய்யப்பட்டன.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர்ப் பிரதேசத்தைத் தாக்கிய சுனாமிப் பேரலை நூற்றுக்கணக்கானோரைப் பலிகொண்டது. தர்குவா நகர், ஹதீப் நகர் ஆகியவை முற்றாகக் கடல் நீரினுள் மூழ்கிப்போய் மீண்டன. ஞாயிறன்றே 228 சடலங்கள் அங்கு பொறுக்கி எடுக்கப்பட்டன. மூதூர் கரையோரத்தில் உப்போடை தொடக்கம் ஈச்சிலம்பற்றை வரையிலான 200கிராமங்கள் வரை பாதிப்புற்றன. மூதூர் இறங்கு துறைப்பகுதி வெகுவாகப் பாதிக்கபேட்டுள்ளது. சுனாமி தாக்கி ஓய்ந்த அன்று 156 சடலங்கள் ஆங்காங்கு பொறுக்கி எடுக்கப்பட்டன. மூதூரில் பதினைந்துக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் கிராமங்கள் கடற் கொந்தளிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு கரையிலிருந்து 100 மீற்றர் வரையிலான தூரத்திற்குக் கடல் தாக்கியுள்ளது.
11.5 மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாவலடி, புதுமுகத்துவாரம், கல்லடி, திருச்செந்தூர், சாய்ந்தமருது, சின்ன முகத்துவாரம், காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, அமிர்தகழி மாமாங்கம் ஆகிய கிராமங்கள் சுனாமிக்கடல் கொந்தளிப்பால் முற்றுமுழுதாகச் சேதமடைந்தன. கல்லடி, திருச்செந்தூர், புதுமுகத்துவாரம். நாவலடி ஆகிய கிராமங்கள் அப்படியே வாரித்து
+605 145

Page 83
துடைக்கப்பட்டுப் போயின. சுனாமிப் பேரலை வாகரையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பகுதியில் 50 கிராமங்கள் வரை அழிந்து போயுள்ளன. ‘இரண்டு தென்னைமர உயரத்திற்குக் கடலலை எழுந்து கரையை நோக்கி விரைந்து வந்தது. கணப்பொழுதில் என் குழந்தையைப் பற்றிப் பிடித்தபடி மரம் ஒன்றில் ஏறினேன். வந்த அலை என் குழந்தையை அப்படியே வாரி எடுத்துச் சென்று விட்டது’ எனக் கூறும் பெண்ணொருத்தியின் கதை போல, ஓராயிரம் கதைகள் கிழக்கிலங்கையிலுள்ளன. இக்கிராமங்களில் மரணமடைந்தோரில் 8 வயதுக்குட்பட்ட குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும் பெரும்பாலானோராவர். இளையவயதினர் சுனாமி தாக்கியபோது கைகளில் அகப்பட்டவற்றினைப் பற்றித் தப்பிக் கொண்டனர்.
முதல்நாள் மட்டக்களப்பில் 208 சடலங்களும் சாய்ந்த மருதுவில் 192 சடலங்களும் பொறுக்கிக் குவிக்கப்பட்டன. மட்டக்களப்பு மாவட்டத்தில் காலை 9 மணியளவில் திடீரெனக் கடலலை பேரிரைச்சலுடன் புகுந்தது. அன்று மட்டும் 400 உக்கு மேற்பட்ட சடலங்கள் மட்டக்களப்பு அரச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன. கடற்கரை கிராமங்களைச் சேர்ந்தவர். பொங்கிப் பிரவகித்து வந்த அலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நின்றனர். நிலமையின் தாக்கத்தை உணருமுன் கடலலை அவர்களை அடித்துச் சென்றது. கரையோர வீடுகளுள் அடித்துத் திறந்து புகுந்த அலை அங்கிருந்தோரைச் சுழற்றியடித்து இழுத்துச் சென்றது. கட்டிடங்கள் தகர்ந்தன. குடிசைகள், மதில்கள், மரங்கள் உடைந்து வீழ்ந்து வெள்ளத்துடன் அள்ளுப்பட்டன. இடிபாடுகளுள் சிக்கியும், நீரினுள் மூழ்கியும் பலர் உயிரிழந்தனர். வீதிகளில் சென்றவர்கள் கூட வாரியிழுத்துச் செல்லப்பட்டனர். “கடல் வருகுது என்றபடி பலர் ஓடி வந்தனர். அவர்களின் பின்னால் ஒரு ரெலிவிசன் பெட்டி தள்ளாடித் தள்ளாடி பத்து அடி உயரத்தில் துரத்தி வருவதைக் கண்டேன். கிட்ட வந்த பிறகுதான் அது கரு நிறக்கடல் நீரில் மிதந்து வந்தது என உணர்ந்தேன். வீட்டிற்குள் ஓடி விட்டேன். கதவு, யன்னல்களை அறைந்து பிளந்தபடி கடல்நீர் வீட்டிற்குள் புகுந்தது. சுவரோடு எத்தப்பட்டேன். கடலலை திரும்பிப் போன பிறகு, ஒரு அடிச்சேற்றினுள் வீட்டிற்குள் கிடப்பதை உணர்ந்தேன். அறைகளுக்குள் என் தந்தையும் தாயும் சேற்றில் கிடந்தனர். அவர்களை இழுத்தபடி, இரண்டாம் அலை வருவதற்கு முன் ஒடித்தப்பினேன்’ இது விக்கி என்பவரின் அனுபவம். பலரது அனுபவம் இதுவாகவே இருந்தது.
மட்டக்களப்பில் உயிரிழந்த பலரின் சடலங்கள் கல்லடிப் பாலத்திலும், புதுமுகத்துவாரக் கடலிலும் கிடந்தன. நாவலடி, முகத்துவாரம் பகுதிகளில் வதிவிடங்கள் முற்றாக நாசமாகிப் போயின. உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளுமே அதிகமாவர்.
ஏறாவூரில் கல்குடாவில் பெரியதொரு இராணுவப் பயிற்சி முகாம் இருந்தது. சுனாமிப் பேரலை கரையை நோக்கிக் கிளம்பி வந்தபோது, 200 வரையிலான இராணுவ வீரர்கள் பயிற்சியிலீடுபட்டிருந்தனர். கல்குடா முகாம் முற்றாகச் சுனாமி
16 கந்தையா (ф6олЈтвіі

நிர்மூலமாகியதுடன், பயிற்சியிலீடுபட்டிருந்த வீரர்கள் அனைவரையும் அடித்துக் கொண்டு சென்றது. கல்குடாப் பகுதியில் இடிபாடுகளிடையேயும், கரையோர ஒதுக்கங்களிலுமிருந்து உடனடியாக 60 சடலங்கள் மீட்கப்பட்டன. கல்குடா இராணுவ முகாமிற்குள் கடல்நீர் புகுந்ததையடுத்து, அம் முகாமிலிருந்த இராணுவத்தினர் உடன் வெளியேறினர். இராணுவத்தினரின் ஆயுதங்கள், தளவாடங்கள் என்பன நீரில் மிதந்தன. கல்குடாவில் இறந்த இராணுவத்தினரின் சடலங்கள் பொலநறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தன.
காத்தான்குடியின் பிரதான வீதி அமைந்துள்ள ஒரு கிலோ மீற்றர் தூரம் வரை கடல் பாய்ந்து சென்றுள்ளது. கடலோரக் கட்டிடங்கள் தகர்ந்து போயின. பொதுவைத்தியசாலை, பள்ளிவாசல்கள், இ. போ. ச. டிப்போ என்பன அழிந்து போயின. வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
மருதமுனைப் பிரதேசத்தில் அக்பர் கிராமம், பெரிய நீலாவணை, முஸ்லீம் பிரிவு, பாண்டிருப்பு முஸ்லீம் பிரிவு ஆகிய பகுதிகள் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இது வரை 2379 சடலங்கள் இப்பகுதியில் மீட்கப்பட்டு சம்மாந்துறை, நற்பிட்டிமுனை, அக்பர் கிராமம் என்பனவற்றிலுள்ள மையவாடிகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 301 ஆண்களும், 992 பெண்களும் 1086 குழந்தைகளும் அடங்குவர். மருதமுனை நெசவுத்துறைக்குப் புகழ்பெற்றது. கைத்தறிகளைப் பலர் சுனாமியால் இழந்து நிற்கின்றனர். (பி. எம். எம். ஏ. காதர்)
கடல் கபளிக்ரம் செய்த நாவலடிப் பிரதேசத்தைப் பற்றி இளைய அப்துல்ஹாவ் தினகரனில் பின்வருமாறு விபரித்துள்ளார். “நொச்சிமுனை ஆற்றின் ஊடாக தண்ணீர் அடித்துச் சென்றதை நேரில் பார்த்தேன். அதில் உயிருள்ள மனிதர்கள் கட்டைகளைப் பிடித்தவாறு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சியதைப் பார்த்ததில் இருந்து எனக்கு மனம் முழுக்க அந்தரமாக இருக்கின்றது” என்றார் தியாகராஜா.
“எனது அக்கா என்மீது எவ்வளவு பாசம். அக்காவையும் ஒரு பிள்ளையையும் அம்மாவையும் வெள்ளம் அடித்துச் சென்று விட்டது” என்கிறார் சாமித்தம்பி ராஜேந்திரம். இவர் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்.
“கடலைப் பற்றி சொல்லாதீர்கள். அதனைப் பார்க்கும்போதே பயமாக இருக்கிறது. கடலுக்குப் பக்கத்தில் இருக்கவே பயமாய் இருக்கிறது. மீண்டும் கடல் வந்து எங்களை எல்லாம் கொண்டு போய் விடுமோ என்று அச்சமாக இருக்கிறது” என மட்டக்களப்பைச் சேர்ந்த நிலாம்டீன் மஃரூப் சொல்கிறார். அவர் ஒரு மீனவர். வாழ்க்கை என்ற அர்த்தத்தை மூன்று நிமிடத்திலும் ஐந்து நிமிடத்திலும் அழித்துவிட்டது இயற்கை, கடலழிவில் இருந்து காப்பாற்றப்பட்டவர்கள் மனதளவில் பாரிய பயப்பீதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்ட பெண் ஒருவருக்கு வாந்தி எடுக்கும் மருந்து கொடுக்கப்பட்டது. அவர் மண் மண்ணாக வாந்தி எடுத்தார். வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் மணல் அடைத்து மூச்சு நின்றவர்கள் அதிகமானவர்களாக இருக்கின்றனர்.
ሐሳን!!!ዕ 147

Page 84
அந்தப் பெண்மணி “கடல். கடல். அலை. அலை.” என்றே கத்துகிறார். அவர் மன நோயாளியாகி விட்டார் போல இருக்கிறது. அலை தாக்கிய அதிர்ச்சியில் இருந்து இன்னும் அவர் மீளவில்லை. கடல் என்ற வார்த்தையைக் கேட்டதுமே சிலர் அதிர்ந்து போய்விடுகிறார்கள்.
மனோவியல் ரீதியான தாக்கமடைந்தவர்களுக்கு உரிய மனோ சிகிச்சை வழங்கப்படுவது இப்போதைய அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது. தமது கண்ணுக்கு முன்னாலேயே குழந்தைகளை இழந்துபோன தாய்மார்கள் பைத்தியம் பிடித்தவர்கள் போல் இருக்கிறார்கள்.
சில குடும்பத்தில் கணவன் மட்டுமே மிஞ்சி இருக்கிறார். இவர்கள் பாரிய மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள். இவர்களுக்கான”கவுன்ஸிங்' செய்யப் பட வேண்டும். இது உடனடித் தேவை !
“எல்லாம் அழிஞ்சு போச்சு தம்பி, மக்களுக்கு ஏது வழி தெரியவில்லை. பார்க்கவே கஷ்டமாக இருக்கிறது. எல்லோரும் அகதிகளாக இருக்கின்றனர். நெஞ்சு தாங்குதில்லை” என்று எழுத்தாளர் எஸ். முத்துமீரான் சொன்னார்.
“இவ்வளவு காலமும் சொன்னார்கள் புயல் வந்தது. கடல் கொண்டது என்று. ஆனால் எங்கடை சந்ததிக்கு நாங்கள் கண்டதைச் சொல்வதற்கு இந்த அழிவு இருக்கிறதடா” என்று மனம் நொந்தார் கவிஞர் ரஷ்மி இளைய அப்துல்ஹாவ்)
சுனாமி ஏற்படுத்திய அனர்த்த பயங்கர அனுபவங்களை எம். சஹாப்தீன் விசாரித்துக் குறித்துள்ளார். அவை வருமாறு:
“நான் கடற்கரையில் வலை போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது கடல் திடீரென கொந்தளித்து ஊருக்குள் சென்றது. நான் கையிலிருந்த வலையை போட்டு விட்டு ஓடத் தொடங்கினேன். எப்படியும் இதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஓடினேன். மனைவி பிள்ளைகள் எவரைப் பற்றியும் ஒரு சிந்தனையும் எனக்கு வரவில்லை. கடல் அமைதியானதன் பின்னர்தான், வீட்டிலுள்ளவர்களின் நினைவு வந்தது. உடனே வீட்டுக்கு போய் பார்த்தேன். எனது மகன் இர்பான் (O2), மகள் இர்பானா (05) ஆகிய இருவரும் மரணமடைந்தார் வீடு முற்றாக அழிக்கப்பட்டிருந்தது' - எஸ். முஸ்தபா லெப்பை,
“எனது குடும்பத்தில் மகன் ஸப்ராஸ் (07). தங்கை குழந்தை உம்மா (28). அவரின் இரண்டு பிள்ளைகளும் மெளத்தாகி விட்டார்கள். கடல் வரும்போது நாங்கள் வீட்டிற்குள் இருந்தோம். பெரிய சத்தம் ஒன்று கேட்டது. அப்பக்கம் பார்த்தேன். பெரிய உயரத்தில் தண்ணீர் வந்தது. வீட்டில் இருந்த எல்லோரையும் ஒடும்படி கூறிக் கொண்டு ஒடினேன். என்றாலும் அல்லாஹ் எங்கட குடும்பத்தில் நான்கு பேரை எடுத்து விட்டான். வீடு தரை மட்டம். யாரிடம் போய்ச் சொல்வது, அரசாங்கம் வீடு அமைத்துத் தரும் என்கிறார்கள். அது எப்போ நடப்பது? நடக்குமா? நடந்தாலும் எங்களுக்கு வீடு
148 கந்தையா குனராசா

கிடைக்குமா? பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கொடுக்காது போனால் அல்லாஹ் சும்மா விட மாட்டான்” - கலந்தர் உம்மா.
“எனக்கு இனிப் படிப்பதற்கு விருப்பமில்லை. எல்லாம் அழிந்து விட்டது. எங்களுடைய பாடசாலை (மழ்ஹர் சம்ஸ் மகா வித்தியாலயம்) முழுமையாக அழிக்கப்பட்டுள்ளது. எனது புத்தகம், கொப்பி, சீருடை எதுவுமில்லை. தொடர்ந்து படிப்பதற்கு உம்மா, வாப்பாவிடம் வருமானமும் இல்லை. எல்லோரும் முகாமில் இருக்கின்றோம். கூடப் படித்த நண்பர்கள் மரணித்து விட்டார்கள். பாடசாலைக்கு போனால் அவர்களின் நினைவுகளே வரும்.
கடல் வருவதற்குள் முன் நான் தூங்கிக் கொண்டிருந்தேன். கடல் தண்ணீர் வீட்டிற்கு வந்ததன் பின்னர்தான் விழித்துக் கொண்டேன். கையில் மருமகளை எடுத்துக் கொண்டு ஓடினேன். கடலின் அலையில் அடிபட்டதனால் கையிலிருந்த மருமகள் விழுந்து விட்டார். அவர் மரணித்து விட்டார். அந்த காட்சி எனது கண்களில் இன்னும் தோன்றிக் கொண்டே இருக்கின்றது” - எம். ஐ. அன்ஸார்
“கடல் ஊருக்குள் வந்து விட்டதென்று செய்தி கிடைத்ததும், வீட்டுப்பக்கம் போவோம் என்று ஓடினேன். என்னை எவரும் போகவிடவில்லை. பகல் 12 மணி இருக்கும் எனது மனைவி மரணமான பேரப்பிள்ளையை (ஜஹனா (3) தோளில் போட்டு அழுது கொண்டு வந்தார். ஜஸிர் (5) என்ற பேரனும் கடலால் மரணமாகி விட்டார். மீண்டும் கடல் வரும் என்ற பயத்தில் சம்மாந்துறைக்குப் போனோம். அங்கிருக்கும் போது கடல் மீண்டும் வருவதாக (வதந்தி) கூறினார்கள். பயத்தால் அம்பாறைக்கு ஓடினோம். கடல் வரும்போது எனது மருமகன் (ஏ. எல். அச்சி முகம்மது (25) கடலுக்குள் தோணியில் இருந்துள்ளார். அவர் சொன்னார் கடல் அப்படியே உயர்ந்து ஊருக்குள் போய்க் கொண்டிருந்ததாம். கடலுக்குள் எந்த ஆபத்தும் ஏற்படவில்லையாம். அவர் நினைத்தாராம் ஊர் முழுவதும் கடல் போய் விட்டது என்று. எல்லாம் முடிந்ததன் பிறகு கரையேறி வந்தபோது அவர் அழுதே விட்டாராம்” - முகம்மது இஸ்மெயில்
“கடல் வந்ததும் எனது ஆறுமாதக் குழந்தையை எனது (19 வயது மகன் எடுத்துக் கொண்டு ஓடும் போது அவரின் மேல் அலுமாரி விழுந்தது. இதனால், அவரின் கையில் இருந்த பிள்ளை தண்ணீருக்குள் விழுந்து மரணித்துவிட்டது. மகளுக்கு பலத்த வருத்தம் 14 நாள் ஆஸ்பத்திரியில் கிடந்தார். 40 ஸேலைன் போடப்பட்டு இப்போது ஓரளவிற்கு சுகமடைந்துள்ளார்” – திருமதி பெளசியா,
“நான் சாய்ந்தமருது கடற்கரையில் வலைகளை சரி செய்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு இரைச்சல் கேட்டது. என்றாலும், கடல் அமைதியாகவே இருந்தது. அந்த இரைச்சல் கேட்டு சிறிது நேரத்தில் பாரிய அலையொன்று தென்பட்டது. அது சுமார் 30 அடிக்குமேல் உயர்ந்து காணப்பட்டது. அந்த அலையில் கடற்கரையில் நின்ற எல்லோரும் அள்ளுப்பட்டுக் கொண்டு போனார்கள். எல்லோரும் ஓவென்ற சத்தம்
ሐ6ürጠuዕ 49

Page 85
போட்டு அழுதார்கள். அலையின் உந்துதலால் எனது கால்களில் பாரிய அடியொன்று விழுந்தது. அது எதில் மோதி ஏற்பட்டது என்று எனக்குத் தெரியாது என்ற போதிலும் நான் சுமார் 15 பேரை அல்லாஹ்வின் உதவியால் காப்பாற்றினேன். ஆனாலும், எனது குடும்பத்தில் எனது தாயின் உம்மா உட்பட ஒன்பது பேர் மரணமடைந்துள்ளார்கள். - சாய்ந்த மருது சுபைதீன்.
“நான் குளியல் அறையில் குளித்துக் கொண்டு நின்றேன். அப்போது எனது மனைவி குளியல் அறையின் கதவுகளை பலமாகத் தட்டினார். நான் அதனை பொருட்படுத்தவில்லை. வருகிறேன் என்று மட்டும் கூறினேன். பின்னர் மீண்டும் மிகவும் பலமாக தட்டப்பட்டு, கடல் வந்து கொண்டிருக்கின்றது. ஓடிப் தப்புவோம் வெளியே வாருங்கள் என்றார். குளித்த உடையோடு வெளியே வந்தபோது உண்மையில் கடல் மிகவும் வேகமாக சுமார் 25 அடி உயரத்தில் வந்து கொண்டிருந்தது. உடனே மனைவியின் கைகளை பிடித்துக் கொண்டு ஓடி. அப்போது உம்மா, வாப்பா என்ற அழுகைச் சத்தமும் அல்லாஹ்வே காப்பாற்று என்ற அவலக் குரல்களும் கேட்ட வண்ணம் இருந்தது. அது மட்டுமன்றி வீடுகளும், சுவர்களும் விழும் சத்தம் தடார். தடார் என்று பயம் காட்டிக் கொண்டிருந்தது. எப்படியோ யார் தந்த பலமோ தெரியாது. அவ்வளவு வேகமாக ஓடி தப்பினேன். எனது இரு பிள்ளைகளும் அந்த நேரம்
டியூசனுக்குப் போய் இருந்தார்கள்.”
- ஏ. எல். எம். சலீம்.
வீரகேசரியின் மண்டூர் நிருபர் இ. பாக்கியராஜா சுனாமியால் பாதிப்புற்றவர்களைச் சந்தித்துத் தந்திருக்கும் பயங்கர அனுபவக் காட்சிகள் நெகிழ வைக்கின்றன. அவற்றில் சில வருமாறு:
“நாவலடி கடற்கரையில் கரைவலை போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது திடீரென பெருக்கெடுத்த சுனாமி பேரலை என்னை அடித்துச் சென்று மட்டக்களப்பு வாவி வழியாக சின்ன உப்போடை பொலிஸ் காவல் அரண் முன்பாக கரை ஒதுங்கியது. கரையொதுங்கிய எனது உடம்பில் ஆடை எதுவும் இருக்கவில்லை. *மகே அம்மே” என்று அலறிக் கொண்டு எனதருகே வந்த பொலிஸார் என்னை மீட்டெடுத்தனர்” நான் உயிர் தப்பியபோதும் எனது மனைவியும் நான்கு பிள்ளைகளும் இன்று உயிருடன் இல்லை. V
26 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு என்னுடைய மகன் கரிதரன் என்னிடம் வந்து மாமா வலை போட வரட்டாம் என்று கூறி தேநீர் தந்தான். குடித்து கடற்கரைக்கு போய் கரைவலை போட்டோம். பின் வலையை இழுத்து பிடித்த மீன்களை 1700 ரூபாவுக்கு விற்பனை செய்தோம். -
வலையை காயவைத்து கட்டி வைத்தார். தைப்பூசம் கழித்தே மீண்டும் வலை போடுவது என்று பேசிக் கொண்டோம். பின் ஒரு மீனை எடுத்துக் கொண்டு வீடு செல்ல ஆயத்தமானேன். அப்போது நேரம் சுமார் 905 மணியிருக்கும். நிலம் உலை வைத்த பானையிலிருந்து பொங்குவது போல புகு புகு என்றிருந்தது. அதனைக் கவனிக்காமல்
150 கந்தையா குனராசா

சுமார் 50 மீற்றர் சென்றிருப்பேன். பின்னால் பொங்கி வந்த பேரலை என்னை அப்படியே அடித்துச் சென்றது.
எதிரில் ஓர் ஆலமரம் தென்பட்டது. எட்டி ஒரு கிளையைப் பற்றிய போது அது முறிந்து விட்டது. மீண்டும் அலை அடித்துச் சென்றது அங்கும் இங்கும் மோதுண்டு வாவிக்கரையை அடைந்தபோது ஒரு தாழை மரம் சென்று கொண்டிருந்தது. அதில் தாவிப் பிடித்தவாறு சின்ன உப்போடை காவல் அரணுக்கு முன்பாக கரை சேர்ந்தேன். நீச்சல் தெரிந்த காரணத்தினாலே தான் என்னால் தப்பித்துக் கொள்ள முடிந்தது. நான் உயிர் தப்பியும் என்ன பயன் ? எனது மனைவி பிரபாகரி (வயது 39), மகன் செந்தூரன் (வயது 19) பிரதீஸ் (வயது 17), கரிதரன் (வயது 12), நிசாந்தன் (வயது 15) அனைவரையுமே பேரலை பலி கொண்டு விட்டது. நால்வருமே பாடசாலை செல்பவர்கள். இவ்வாறு வேதனைக்கு மத்தியிலும் அவர் தனது சோக அனுபவத்தை விபரித்தார்.
மட்டு. விவசாயத் திணைக்களத்தில் சாரதியாகப் பணி புரிபவர் செ. சந்திரன், கல்லடி கடற்கரையில் வசிக்கும் இவர் கூறும் கதையிது. - “26ஆம் திகதி காலையில் எமது வீட்டுக்கு வந்த அடுத்த வீட்டு பெண் வெளியே சென்றதும் அன்ரியே என்று கத்தினார். கேற்றடிக்கு ஓடுவதற்குள் ஒடுங்கள் என்று கத்தினேன். ஆனால், எனது 12 வயது மகன் டயப் பிரியாவினால் மட்டுமே வீட்டினுள் செல்ல முடிந்தது. ஏனையோரை பேரலை அடித்துச் சென்று விட்டது. ஆனால், மகளை சடலமாகவே மீட்டோம்.
அன்ரியே என்று அவர் கத்தியதும் ஒடிச் சென்று பார்த்த போது கடல் அலை உயர்ந்து வந்தது. கடல் வருகிறது வீட்டுக்குள் போங்கள் என்று கத்திக் கொண்டு வருவதற்குள் என்னை அலை அடித்து விட்டது. கடல் அலை உயர்ந்து வந்ததால் தென்னை மட்டையில் பிடித்துக் கொண்டேன். ஆனால், அந்த பேரலை மனைவியை இழுத்துச் சென்று விட்டது. அம்மாவை கடல் கொண்டு போகிறது மகனே என்று கத்தினேன். ஆனால் கடலில் இருந்து வந்த அடுத்த அலை அவரை மீண்டும் எம் பக்கம் கொண்டு சேர்த்தது.
மற்றொரு மரத்தில் இருந்த மூத்த மகனும், நானும் அவரைப் பிடித்து மரத்தில் பிடித்துக் கொள்ளச் செய்தோம். பேரலையின் அனர்த்தம் ஓய்ந்த பின்பு இளைய மகனும் வந்து சேர்ந்தான். மூத்த மகன் ரியூசனுக்கு போனதால் தப்பித்துக் கொண்டான். ஆனால், இளைய மகனை சடலமாகவே கண்டோம்” - நாவலடி மகேஸ்வரன்
“அன்று அதிகாலையில் எழுந்து நானும் மனைவியும் மகள் ஜனனி (வயது 19) யும் கோயிலுக்கு திருவெம்பாவைப் பூசைக்கு போனோம். சிறிது நேரத்தில் வீடு வந்த மகள் எமது உறவினரின் 2 வயது மகனை தூக்கி வந்தார். எனது மற்றைய இரு பெண்களும் வீட்டில் இருந்தனர். மற்றைய மகன் கினியா (வயது 13) பூரீதேவி ஆச்சிரமத்துக்கு அறநெறி வகுப்புக்குப் போயிருந்தார். பூசை முடிந்த பின் மகளும்
dinarti 51

Page 86
அரிய புத்திரனும் ஆலயத்தில் தங்கினர். நானும் மனைவியும் வீடு வந்தோம். ஏதோ மின்சாரம் பாய்வது போன்ற ஒரு சத்தம் கேட்டது. வெளியே ஓடிவந்தபோது அதற்குள் கடல் வந்து விட்டது. கடைசி மகளைக் காப்பாற்ற பதறி அடித்துக் கொண்டு ஓடினேன். ஆனால், என்னை கடல் அலை அடித்து விட்டது. நான் முதலில் ஓடும் போது கடலலையின் மட்டம் குறைவாகவே இருந்தது. மகளைத் தேடி ஓடிய போது அலை உயர்ந்து வந்தது. இவ்வாறான கடலலைக்கு 2 வகையாக நீந்த முடியும். ஆனால், அப்போது அந்த 2 வகையும் நினைவுக்கு வரவில்லை. திரும்பி வீட்டுக்கு ஓடினேன். அடுத்து வந்த அலை என் பின்புறமாக அடித்து உருட்டிச் சென்றது. எதிர்பட்ட ஒரு பூவரசு மரத்தைப் பிடித்துக் கொண்டேன். இது கனவா நனவா என எண்ணிப் பார்த்தேன். ஏனெனில் சூறாவளி வீசினால் தான் கடலலை வருவது வழக்கம். ஆனால் அப்படி எதுவும் நடக்காமல் கடல் அலை வந்துள்ளது.
இது நிஜமே என சிந்திப்பதற்கு முன்னர் பூவரசு மரம் வேருடன் சாய்ந்தது. பற்றிப் பிடிப்பதற்கு எதுவுமின்றி மீண்டும் அலையில் அடித்துச் செல்லப்பட்டேன். எனது வேட்டி கம்பியில் சிக்கியதால் கழன்று விட்டது. மிதந்து செல்லும் ஒரு நச்சு மரத்தை பிடிக்க முயன்றேன். ஆனால், அதுவும் கை கூடவில்லை. அதற்குள் அந்தப் பேரலை என்னை மட்டக்களப்பு வாவிக்குக் கொண்டு சேர்த்தது.
எல்லா கடவுளரையும் கூவி அழைத்து இந்த அனர்த்தத்தை நிறுத்துமாறு வேண்டினேன். கடலலையினால் அடித்து வரப்பட்ட ஒரு கட்டை கைக்கு அகப்பட்டது. பின் பலகை ஒன்று வந்ததும் அதனைப் பிடித்துக் கொண்டேன். பின் மேசை ஒன்றைக் கண்டதும் அதனைப் பிடித்துக் கொண்டேன். கல்லடிப் பாலத்தின் கீழாக வரும்போது மேசை தவறிவிட்டது. அலை ஓய்ந்தது: எனது வீடுகள் தரைமட்டம் இப்போது அலை ஓய்ந்து ஆறு அமைதியடைந்திருந்தது. தோணி ஒன்று அசைந்து சென்றது. அதில் ஏறுவதற்கு முயற்சித்த போது அதனுள் நீர் புகுந்திருந்தது. நிலையுடன் பாதிக் கதவு காணப்பட்டது. கதவில் வயிற்றை வைத்து நிலையில் கையைப் பிடித்துக் கொண்டு நீந்தினேன். எதிரில் ஒருவர் தோணியால் வந்து கொண்டிருந்தார். அவர் என்னை ஏற்றிக் கரையில் சேர்த்தார்.
பல மைலுக்கு அப்பாலுள்ள நொச்சிமுனையில்தான் நான் கரை சேர்ந்தேன். எனது மனைவியும் 2 பிள்ளைகளும் தப்பி வந்திருந்தனர். ஆலயம் சென்ற மகள் அவளுடன் இருந்த 2 வயது பிள்ளை, அவருடைய சகோதரன் அபிசாதரன், சகோதரி கோவரனிக்கா, தாய் சியாமளாதேவி, இவருடைய மாமி தங்கமலர் பூரீதேவி ஆச்சிரமத்துக்குப் போன என் மகள் இனி யாவருமே தப்பவில்லை.
எனது 3 வீடுகளும் தரைமட்டமாகி விட்டன. நாம் மீண்டும் அங்குதான் மீளக் குடியமர்வோம். என்னைக் காப்பாற்றிய அரிய புத்திரன் என்பவரை நான் நன்றியுடன் நினைவு கூறுகின்றேன்” - கிராம சேவையாளர் நடராசா
“26ஆம் திகதி காலையில் குளித்துக் கொண்டிருந்தேன். அக்கா மதிவதனி பைபிள் வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது கடல் பெருக்கெடுப்பதாக மக்கள் வீதிகளில் ஓடினார்கள்.
152 கந்தையா குனராசா

அப்போது எனது கணவர் எனது மகன் கேசவனை (வயது 11) தூக்கிக் கொண்டு ஓடினார். எங்களையும் ஓடிவரச் சொன்னார். எமது மகள் பிரஜித்தா (வயது 8) நடன வகுப்புக்கு சென்றிருந்தார்.
நான் துவாயைக் கட்டிக் கொண்டு அம்மாவைக் கையில் பிடித்தேன். அக்கா அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டு நாங்கள் ஓடினோம்.
அப்போது வந்த அலை எங்கள் நால்வரையும் சுருட்டி அடித்துச் சென்றது. கட்டைக்குள்ளும், இடிபாடுகளுக்கிடையில் நாம் அடிபட்டோம். அப்போது என் கையில் பிடித்தபடி இருந்த என் தாயார் நீரில் அடித்து செல்லப்பட்டார். அவர் கையை நீட்டிக் காட்டியவாறே தத்தளித்தார். அந்தக் காட்சியை என்னால் மறக்க முடியவில்லை. மற்றொரு அலைக்கு நாம் மூவரும் வேறானோம். அப்பா ஒரு மின்கம்பத்தின் நுனியைப் பிடித்துக் கொண்டிருந்தார். அந்த அளவுக்கு நீர் உயர்ந்திருந்தது.
அக்காவும் நானும் ஒரு முருங்கை மரத்தின் நுனியை பிடித்துக் கொண்டபோது மூன்றாவது அலை அடித்தது. மின் கம்பம் அப்படியே சாய்ந்தது. அப்போது அப்பா தெய்வாதீனமாக அக்கம்பம் சாய்ந்து மின் கோபுரத்தில் தாவிக் கொண்டார். அப்போது எமது கழுத்தளவு தண்ணீர் நின்றது. அப்பாவை அழைத்துக் கொண்டு அம்மாவை தேடினோம். மகளும், மகனும் பாதுகாப்பாக இருப்பதாக கணவர் கூறினார்.
மீண்டும் அலை வரலாம் என்ற அச்சம் இருந்ததால் அம்மாவை தொடர்ந்து தேடாது பிரதான வீதிக்கு நடந்து வந்தோம். அப்போது பிக்அப் ஒன்று வந்தது. அதில் ஏறிக் கொண்டோம். பின்னர் நடந்தது எதுவுமே எனக்கும் அக்காவுக்கும் தெரியாது. உணர்வு வந்த பின்பு மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்தோம்.
அன்று பிற்பகல் 2.30க்கு அம்மாவின் சடலத்தை கண்டெடுத்தனர். நாம் அங்கும் இங்கும் முட்டி மோதுப்பட்டதால் உடம்பு முழுவதும் காயங்கள் உள்ளன.
நாம் மரத்தில் தொங்கும்போது நான் சோர்ந்து விட்டேன். அந்த நிலையில் அக்கா ஒரு கையால் மரத்தைப் பிடித்துக் கொண்டு ஒரு கையால் என்னை அரவணைத்து பிடித்தார். அவர் இல்லையேல் இன்று நானும் இறந்திருப்பேன்” – திருச்செந்தூர் வனஜா குலேந்திரன்.
Ve
11.6 அம்பாறை w
சுனாமி அனர்த்தத்தால் இலங்கையில் க்டும் பாதிப்பிற்குள்ளான பிரதேசம் அம்பாறையாகும். அங்கு மரணமடைந்த ஆயிரக்கணக்கானோரில் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 6096 பேராகும். அவற்றினைவிட 188 பேர் காணாமற் போயுள்ளனர். நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனைக்குடி, கல்முனை, பாண்டிருப்பு மருதமுனை, திருக்கோயில் ஆகிய விடங்களில் சடலங்கள் கொத்துக் கொத்தாக மீட்கப்பட்டன. சாய்ந்த மருதுவில் மட்டும் இரண்டாயிரம் வரையிலான சடலங்கள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளன. இயற்கை அனர்த்தத்தினால் அம்பாறை மாவட்டத்திலுள்ள தம்பட்டை, 40 ஆம் கட்டைத் தமிழ்க்கிராமம் என்பன மனித சஞ்சாரமற்ற பிராந்தியமாகி விட்டன. நாய்களும், கோழிகளுமே அங்கு
ሐኅነ፡ቦ1ዕ 53

Page 87
காணப்படுகின்றன. ஆலையடி, வேட்பு, திருக்கோயில், தம்பட்டை பகுதிகளில் 417 சடலங்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டன. தம்பட்டை முதல் விநாயகர்புரம் வரையிலுள்ள கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலங்கள் மீட்டெடுக்கப்பட்டன. அவை சம்மாந்துறைப் பள்ளிவாசலிலும், நகர மண்டபத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்டத்தில் ஆறு தடவைகள் சுனாமிக் கொந்தளிப்புகள் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர். பாரிய வெடிச் சத்தங்கள் போலச் சுனாமிப் பேரலையின் இரைச்சல் இருந்தது. அம்பாறையில் சுமார் அரைக்கிலோ மீற்றர் கடலோரத்தைக் கடல்நீர் மூழ்கடித்தது.
அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறையில் இரண்டு ஏக்கர் பரப்பில் நீளமான புதைகுழி தோண்டப்பட்டு 5600 சடலங்கள் ஒருங்கே புதைக்கப்பட்டன. ஒரு முழுநாளும் பாரிய யந்திரங்களால் இப்பாரிய புதைகுழியை வெட்டின. இதில் அடக்கம் செய்யப்பட்ட சடலங்களில் அறுபது சதவீதமானவை. மூன்று வயதுக்கும் 12 வயதுக்குமிடைப் பட்டவையாகும். இவர்கள் அனைவரும் முஸ்லீம் சமூகத்தினராவர்.
அம்பாறையில் 10436 மக்கள் உயிரிழந்ததாக அரச புள்ளி விபரம் கூறுகிறது. ஆனால், 13 ஆயிரம் மக்களுள் பலியாகியிருப்பதோடு, 2600 உக்கு மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர் என அம்பாறை மாவட்ட அறிக்கை தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையிலேயே மிகமிக மோசமாகப் பாதிக்கப்பட்ட மாவட்டம் அம்பாறையாகும். கல்முனை முஸ்லீம் பிரிவில் 3400 பேர் பலியாகியுள்ளனர். மருதமுனைக் கிராமம் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. சாய்ந்த மருதுவில் 2810 பேர் சுனாமியால் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மீன்பிடிப் படகுகள் அடித்து நொருக்கப்பட்டு குடிமனைகளுள் வீசப்பட்டுள்ளன. காரைதீவில் 240 பேரைச் சுனாமி பலியெடுத்துள்ளது. கல்முனைத் தமிழ் பிரிவான பெரிய நீலாவணை, கல்முனை, பாண்டிருப்புக் கிராமங்களில் 2000 பேர் வரை இறந்துள்ளனர்.
அம்பாறைப் பிரதேச அனர்த்த அனுபவத் துயர்களை வீரகேசரி ரி. வி. சகாதேவராஜா கோடிட்டுள்ளார். அவை வருமாறு:
“சம்பவதினம் கடலுக்குக் காலை 7.45 மணியளவில் “துள்ளன்’ மீன் பிடிக்க தோணியில் சென்றேன். 8.45 மணியளவில் கடல் திடலாவது போன்று எமது தோணி கீழ் நோக்கி வந்தது. அப்போது பார்த்தேன். கரைதீவைக் காணவில்லை. ஏகத்திற்குக் கடல்தான் தெரிந்தது. அங்கிருந்த தோணிகள் உடைக்கப்பட்டு தூர வீசப்படுவதைக் கண்டேன். இந்த அழிவைப் பற்றி நான் அறிந்திருக்கவில்லை. சற்று நேரத்தில், சென்ற தண்ணீர் படு வேகமாகக் கடலினுள் வந்தது. அப்போது எமது தோணியில் நீர் நிரம்பியது. உடனே சேட்டைப் பிய்த்து உயர்த்திக் காட்டினேன். தூரத்தில் இயந்திரப் படகில் நின்ற முஸ்லிம் மீனவர்கள் வந்து என்னைக் காப்பாற்றினர்.
பகல் 1.30 மணியளவில் கரை வந்து சேர்ந்த பின்தான் தெரிந்தது எனது மனைவியும், மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டது. வாழ் நாளிலே இழக்க முடியாத அனைத்தையும் இழந்து விட்டேன். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை” - க. விநாயகமூர்த்தி
54 கந்தையா குணராசா

“அன்று காலை பில் நான் பாண் சாப்பிட்டுக் கொண்டிருந்த வேளை, வீட்டுக்கருகில் கடல் அலை வருவதாக மனைவி கூறினார். உடனே எழும்பிச் சென்று பார்த்தேன். கரையிலிருந்த தோணியை இழுத்துச் செல்கிறது. எனக்குச் சந்தேகமேற்பட்டது. எதற்கும் பார்ப்போம் என கடற்கரைக்குச் சென்ற போது திடீரென கடல் நீரின் அளவு உயர்ந்து தென்னை மர உயரத்திற்கு எழும்பியது.
நானும் மனைவியும் பலரும் அடித்துச் செல்லப்பட்டோம். சிறிது நேரத்தில் ஒரு மரத்தில் மோதுண்டு காயப்பட்டேன். திரும்பிப் பார்த்தேன். மனைவி மூச்சுத்திணறி தத்தளித்துக் கொண்டிருந்தார். மறுகணம் மரணித்தார். நீந்தி கரை சேர்ந்த பின்பு பார்த்தேன். மகளின் மகன் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருந்தார்.
காரைதீவின் 50 வீதப்பகுதி கடலினால் காவு கொள்ளப்பட்டுள்ளது. இதனை மீளக் கட்டியெழுப்ப இருவருட காலமாவது எடுக்கலாமென கூறப்படுகிறது. காயப்பட்டவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விடுதலைப் புலிகளும், விசேட அதிரடிப் படையினரும். ஊர் இளைஞர்களும் சடலங்களைத் தேடிப் புதைத்தனர். எரித்தனர். கடந்த புதனன்றும் அழுகிய 52 சடலங்களை பெற்றோல் ஊற்றி எரித்தனர்” - நமசிவாயம்
“10 அடி உயரத்திற்கு திடீரென வந்த கடல் அலையால் நிலை தடுமாறியபோது அருகிலிருந்த பிள்ளை அழுகுரலுடன் இழுத்துச் செல்லப்பட்டார்.
நான் மரத்தை பிடித்துக் கொண்டேன். ஒருவாறு தப்பி கரைசேர்ந்த போது அருகிலிருந்தவர் ஓலமிட்டு அழுதார். ஏனென்று கேட்டபோது தனது ஆறு பிள்ளைகளையும் கடல் கொண்டு சென்று விட்டது என்றார். பின்பு சாகாமம், கண்ணகிபுரப் பகுதியில் தஞ்சமடைந்தோம்” என்கிறார். - நவரத்தினம்.
“அன்று காலை சோறு சமைப்பதற்கு அரிசி அரித்துக் கொண்டிருந்த வேளை திடீரென பாரிய ஓசையை அடுத்து அயலவர்கள் ஓடி வந்தனர். என்ன என்று கேட்பதற்குள் கடல் நீர் 10 அடி உயரத்தில் வந்தது.
豪王
நான் அம்மாவைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடி வந்தேன். வழியில் அலை மேலும் தாக்கியதால் அம்மா கண்ணகை (வயது 82) மூர்ச்சையுற்றுவிழுந்தார். நான் எனது உயிரைக் காப்பாற்ற அவரை விட்டு விட்டு வேறு வழியில்லாமல் ஓடினேன். பிறகு பார்த்த போது அம்மா இறந்து விட்டார். அக்கா விமலா பாரிய காயத்துடன் தப்பியபோதும் அவர் தனது 4 பிள்ளைகளையும் இழந்து விட்டார். அங்கு நான் சுமார் 257 சடலங்களைக் கண்டேன்” - வேல்முருகு கமலாதேவி
“பேரிரைச்சலுடன் உயர்ந்து விரைவாக வந்த பேரலை என் பேத்தியையும், மனைவியையும், மகளையும், மாமா, மாமியையும் பறித்துச் சென்றது. கடலை நம்பி வாழ்ந்த நாம் இனி யாரை நம்புவோம் ? இழக்க முடியாததை இழந்து வாடுகின்றேன்.
inst 15s

Page 88
அன்று கடற்கரைக்குப் போய் வழமை போல் நண்பர்களுடன் பேசிவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். திடீரென பாரிய வெடிச்சத்தம் கேட்டது. சனங்கள் பதறிக் கொண்டு ஓடி வருகின்றனர். உடனே வீட்டிலிருந்தவர்களை ஒடும்படி கூறிவிட்டுத் திரும்புவதற்குள் பாரிய அலையொன்று என்னைத் தாக்கியது. குறைந்தது 8 அடி உயரமிருக்கும். நான் ஒருவாறு எழுந்து வீட்டு வளையில் தொங்கினேன். மற்றுமொரு அலை வந்தது. ஒன்றுமே செய்ய முடியாமல் வீட்டின் கூரை மீது ஏறினேன். அப்போது எனது மனைவி துளசிமணி, மகள் இந்திராணி, பேத்தி சதுஷ்டிதா, மாமா - கிருஷ்ணபிள்ளை, மாமி சுந்தரவல்லி ஆகியோர் அலையில் அடித்துச் செல்லப்படுவதை என் கண்களால் பார்த்தேன். ஆனால் இறங்கிக் காப்பாற்ற முடியவில்லை. கீழே 10 அடிக்கு மேல் கடல் நீர் மூன்று பாரிய அலைகளும் பாரிய சேதத்தை விளைவித்தன. நீர் குறைந்தது. கீழே மருமகன் நடேசன் வர அவரது உதவியுடன் இறங்கினேன். பின்பு சடலங்களை மீட்டேன்” - காரைதீவு க. தம்பியப்பா (60).
“படகு மூலம் 100 பேரைக் காப்பாற்றிய எனக்கு அம்மா தெய்வானையையும் அக்கா மீனாட்சியையும் காப்பாற்ற முடியாமல் போனதே என்பதை நினைக்கும்போது வேதனையாக உள்ளது. சம்பவதினம் காலை 8.40 மணியளவில் சனத்தின் அவலக்குரல் கேட்டது. வெளியில் வந்து பார்ப்பதற்குள் 20 அடி உயரமான கறுப்புநிற அலை என்னைத் தாக்கியது. ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்து மனைவியையும், பிள்ளைகளையும் பிடித்து நீந்த முயற்சித்த போது மற்றுமொரு பேரலை என்னைத் தாக்கியது. கையிலிருந்த பிள்ளையும் மனைவியும் பறிக்கப்பட்டு அலையில் அடித்துச் செல்வதைக் கண்டேன்.
மறு அலை என்னை அடித்துச் சென்று கரையில் சேர்த்தது. அங்குள்ள மரங்களிலும் பற்றைகளிலும் சுமார் 100 க்கு மேற்பட்ட பிள்ளைகள் தொங்கிய வண்ணம் அலறிக் கொண்டிருந்தனர். அப்போது கடலிலிருந்து அடித்து வரப்பட்ட ஒரு தோணி கரைச்சையில் கிடந்தது.
அதனைப் பயன்படுத்தி அங்கு வந்து சேர்ந்த அதிரடிப் படை வீரர்களுடன் இணைந்து அப்பிள்ளைகளை கஷ்டத்தின் மத்தியில் காப்பாற்றினேன். துடுப்புக்குப் பதிலாக கைகளைப் பயன்படுத்தி தோணியை நகர்த்தி கரை சேர்ந்தோம்.
கரைக்கு வந்த பின் பார்த்தபோது எனது அம்மாவும் அக்காவும் சடலமாக கிடந்தனர்.” - இராசையா நவசேகரம் (வயது 45) −
“அன்று காலை வீட்டிலிருந்த போது பாரிய இரைச்சல் கேட்டது. ஒடி வந்து கேற்றடியில் சேர முன்பு 6 அடி உயரமான பாரிய அலை என்னைத் தாக்கி வீழ்த்தியது. ஒடு மகன் என்று கூறியபடி எழும்பி நிற்பதற்குள் மற்ற அலை என்னை மீண்டும் நிலைகுலைய வைத்தது. பிறகு ஒரு மாமரத்தில் என்னைக் கொண்டு வைத்தது. இறங்க முயற்சித்த போது பலர் கடலினுள் அடித்துச் செல்லப்படுவதைக் கண்டேன். அப்போது அருகில் மிதந்து வந்த பற்றைக்குள் 2 வயதுக் குழந்தையொன்று கிடந்தது. மரத்திலிருந்தவாறு எட்டிப் பிடித்தேன். சிறிது நேரத்தில் நீர் மட்டம் குறைய கீழே வந்து தாயை தேடிப்பிடித்து பிள்ளையை ஒப்படைத்தேன்.
s கந்தையா குணராசா

கிண்ணை மரத்தில் மகள் இருந்து அதிரடிப்படை காப்பாற்றியதாக அறிந்தேன். ஆனால் எனது மனைவி இன்னும் கிடைக்கவில்லை. எனது வண்டில் மாடும் தப்பிற்று. வண்டில் 300 மீற்றருக்கு அப்பால் அடித்துச் செல்லப்பட்டு நொறுங்கிக் கிடந்தது”- காரைதீவு க. புவிநாயகம்
“சம்பவதினம் அதிகாலை 200 மணிக்கு எழுந்து ஆலயத்திற்குச் சென்று வேலைகளை முடித்து விட்டு திருவெம்பாவை பூஜை செய்தேன். அப்போது பஞ்சாரத்தியிலிருந்து கற்பூரம் எனது கையில் விழுந்தது. எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது.
முதல் நாள் கடல் வருவது போலவும் நானும் எனது இரு பிள்ளைகளும் தப்பியோடுவது போலவும் கனவு கண்டேன். கற்பூரமும் கையில் விழவே ஏதோ நடக்கப் போவதை உணர்த்தி இருப்பினும் பூஜையை முடித்துவிட்டு ஆறுமணியளவில் வீடு வந்து சேர்ந்து சற்றுக் கண்ணயர்ந்தேன். எனது மூத்த மகள் வெளியில் கோலம் போட்ட வண்ணம் பிள்ளையார் பிடிக்கச் சாணம் கேட்டுக் கொண்டிருந்தாள். நான் அசதியில் மறுத்துவிட்டு சராசரி தூக்கத்திலிருந்தேன். அப்போது கடல் வருது என்று கத்திக் கொண்டு சிலர் ஓடி வந்தனர்.
நான் எழுந்து வந்து வெளியில் நின்று பார்த்தேன். கடல் நீர் அருகிலுள்ள வளவிற்குள் வந்துகொண்டிருந்தது. நான் பிள்ளைகளையும் மனைவியையும் அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு ஓடினேன். அதற்குள் எனது சகோதரன் மகேஸ்வரக் குருக்கள் பிள்ளையுடன் ஓடிவந்தார். எனது அக்கா, அத்தான் தியாகராஜ குருக்கள் பிள்ளைகளுடன் ஓடி வந்தனர்.
அனைவரும் அருகிலிருந்த அம்மா வீட்டிற்குச் சென்றோம். அம்மாவைக் கட்டிப் பிடித்த வண்ணம் இறைவனை வேண்டினோம்.
மறுகணம் பாரிய இரைச்சலுடன் வந்த பேரலை எம்மைப் பார்த்து ஆளையாள் வெவ்வேறு திசையில் அடித்துச் சென்றது. என்னைக் கொண்டு போய் மரமொன்றில் சொருகி வைத்தது. களப்பு என்ற பகுதியில் நின்றேன். அவ்விடத்தில் சுமார் 20 அடிநீர் நின்றிருக்கும்.
அப்பொழுது அங்கு ஒரு குழந்தையும் அலையில் அடித்து வந்து கொண்டிருந்தது. உடனே எட்டிக் குழந்தையையும் பிடித்துக் கொண்டு மரத்தில் தொங்கினேன். மற்றக் கிளை முறிந்து எம்மீது விழ அதிலிருந்து முசுறுகள் என் முகத்தின் மீதும் குழந்தையின் மீதும் படர ஆரம்பித்தன.
அவை கடிக்கத் தொடங்கின. கையை விட்டால் 20 அடி நீர் குழந்தையும் பீறிட்டு அழுதது ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மரத்தில் குழந்தையைப் பிடித்தவாறு தொங்கினேன். முசுறு கடித்துக் கொண்டிருந்தது.
ф6зн"tó 15.

Page 89
அப்போது என்னையறியாடில் அலறினேன். தூரத்திலிருந்து சீராளன் என்பவரும் பிள்ளைகளும் நண்பர்களும் சேர்ந்து கயிற்றைக் கட்டிக் கட்டி என்னை மீட்க முயற்சித்தனர். கயிற்றைப் பற்றிப் பிடித்தவாறு நீரினுள் அமிழ்ந்து நின்று கரை சேர்ந்தேன்.
உடம்பில் சிறுதுணி கூட இல்லை. சுயநினைவற்றவனாக கரையேறியதும் ஒருவர் சேட்டினால் கச்சை கட்டி விட்டார். பின்பு வீதிக்கு வந்தேன். ஒருவர் என்னைக் கண்டு ஓடிப்போய் வேட்டியொன்றைக் கொண்டு வந்து கட்டி விட்டார். என்னைச் சம்மாந்துறை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் ஊசி போட்டார்கள். எனது குடும்பத்தாருக்கு என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.
எனது மனைவி இருகுழந்தைகள் அம்மா எனது அக்கா, பிள்ளைகள் என ஏழு பேர் பலியாகியுள்ளனர் என்று பின்னர் தெரியவந்தது.
ஒருவாறு தமிழர் வாழும் பகுதியென்று எண்ணி வீரமுனைப் பிள்ளையார் ஆலயத்திற்குச் சென்றேன். அங்கு ஆயிரம் சனம். அன்றிரவு பாரிய மழை அடித்தது. ஆலயத்தினுள் சனம் உட் செல்ல முயற்சித்தபோது ஆலயம் பூட்டப்பட்டது.
தொடக்குள்ளவர்கள் வருவார்கள் ஆசூசம் நேரும் எனவே யாரும் வர வேண்டாம் எனக் கூறி ஆலயத்தைப் பூட்டி விட்டார்கள்.
ஆயிரம் சனமும் கொட்டும் மழையில் அழுதழுது நனைந்தனர். ஆலயம் எதற்காகக் கட்டப்படுகிறது என மனதிற்குள் நினைத்து அழுதேன்.
சுனாமியைப் போல் ஆயிரம் சுனாமி வந்தாலும் எம்மவர் திருந்த மாட்டார்கள் என்று கூறினேன். மறுநாள் வீடு வந்து பார்த்தேன் அங்கு உடைமைகள் எதுவுமே இருக்கவில்லை. அண்ணரின் 60 பவுண் நகைகள் 2 லட்ச ரூபா பணம் வகைவகையாக வேட்டிகள் ஒன்றையும் காணோம்.
நான் மனம் தளரவில்லை பிள்ளையார் என்னை மட்டும் மிஞ்சவைத்தது அவருக்குச் சேவை செய்யவே என்று நினைத்தவனர்க வாழ்கிறேன். -காரைதீவு ச. பிரகதீஸ்வரசர்மா
அம்பாறைப் பிரதேசத்தில் சுனாமி ஏற்படுத்திய அனர்த்தப் போராட்டத்தில் சிக்கித் தப்பிப் பிழைத்தவர்களின் அனுபவங்கள் மிகத் துயரமானவை. ச. தே. ராஜா மட்டக்களப்பிலிருந்து உதயன் மூலம் தெரிவிக்கும் துயர்க்கதைகள் சில :
காரைதீவைச் சேர்ந்த உலகசேகரம் நித்தியானந்தன் (வயது 42) தனது 4 பிள்ளைகளையும், தந்தையையும், சகோதரியையும் பறிகொடுத்துப் பித்துப் பிடித்தவர் போல் அலைகிறார்.
அவர் அவரது அனுபவம் பற்றிக் கூறுகையில் : "கடல் வருகிறது ஒடுங்கள் என்று சனம் ஓடிவர நானும் எனது மனைவி, பிள்ளைகளுடன் ஊர்ப்பக்கம் நோக்கி ஓடிவந்தேன். திடீரென வந்த சுழியலை எம்மைப் பிரித்தது.
158 கந்தையா ருசுணராசா

"காப்பாற்றுங்க அட்பா, காப்பாற்றுங்க அப்பா” என்று எனது பிள்ளைகள் கூக்குரலிட்டனர். வகுப்பில் முதல் தரமாகப் படித்த எனது செல்வங்கள் அலையில் அலை மோதுவதைச் சகிக்க முடியாது ஓங்கி அழுதேன்; புலம்பினேன்.
சற்று நேரத்தில் அள்ளுப்பட்டு வந்த தண்ணீரில் மனைவி வந்தார். உடனே அந்த இடத்தில் இருந்த மரமொன்றில் பிடிக்கச் சொன்னேன். மறுகணம் என்னை மற்றுமொரு இராட்சத அலை அடித்துச் சென்றது.
"சுமார் அரை மணிநேரத்தில் அரைக்கட்டை தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்ட எனக்குக் கரையொதுங்கிய பின்புதான் எனது குடும்பத்தில் ஆறுபேர் இல்லாதது தெரியவந்தது. எனது கனவிலும் நினைவிலும் எனது பிள்ளைகள் வந்து வந்து போகிறார்கள்” என்றார்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதால் உயிர் பிழைத்தேன். ஆனால், எனது மகள், எனது மகன் கிரிசாந் ஆகியோரை அலை அடித்துச் சென்றிருக்கிறது. மனைவி பாரிய கரயங்களுடன் அம்பாறை ஆஸ்பத்திரியில் உள்ளார்.
இவ்வாறு காரைதீவு கடற்கரை வீதியிலுள்ள மீனவர் கந்தையா ஜிவாகரன் (வயது 35) கூறினார்.
17 வருட கால கடல் அனுபவம் கொண்ட அவர் தாம் அனுபவித்தவைகளை இவ்வாறு கூறுகிறார்.
"அன்றிரவு ஆழ்கடலுக்குப் படகில் மீன்பிடிக்கச் சென்ற நானும் நண்பனும் (ராஜூ - வயது 32 சம்பவதினம் காலை, கும்புளா, பாரைக்குட்டி போன்ற மீன்கள் நிரம்பிய படகுடன் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது கடல் கீழே போனது. எமது படகு கீழே செல்வதை உணர்ந்தேன். ஊர்ப்பக்கமாகப் பார்த்தபோது கடல் மட்டுமே தெரிந்தது. பல தோணிகள் அடித்துச் செல்லப்பட்டன.
நாம் உடனே கரையை நோக்கிப் படகினைச் செலுத்தினோம். கரையைக் காணாது தொடர்ந்து செலுத்தினோம்.
திடீரெனப் பனை மரமொன்று தென்பட்டது. எமது படகு அதில் மோதி இரண்டு துண்டுகளாகியது. ஒரு துண்டில் அகப்பட்ட எனது நண்பன் ராஜூ கடலில் அடித்துச் செல்லப்பட்டான். நான் மறுபடகுத் துண்டில் ஒருவாறு பற்றிப் பிடித்து எழுந்தபோது பனைமரம் என்மீது வீழ்ந்தது. அப்படியே கீழே வீழ்ந்தேன்.
மறுநாள் அம்பாறை ஆஸ்பத்திரியில்கண் விழித்தேன். எனது மனைவி ஜெயவதியைக் காப்பாற்றிய எனது புதுக்குடியிருப்பு நண்பனும், மனைவியும், பிள்ளைகளும் பலியாகியுள்ளனர். எனக்கு நிவாரணம் வேண்டாம். நானும் அதேவழியில் செல்வேன் - என்றார். s
மனைவி விமலாவதி மகள் ஜெயவித்யா(வயது 12) ஆகியோரைக் கடலில் பறிகொடுத்த மீனவர் எஸ். கோவிந்தசாமி (வயது 40) தன் அனுபவம் பற்றிக் கூறுகையில் :
"கடலுக்கு மீன் வாங்கச் சென்ற நான் அங்கு மாயவலை மீன் வந்ததால் அதை வாங்காமல் வீட்டுக்கு வந்து இடியப்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது "டும்டும்” என்ற பேரிரைச்சல் கேட்டது. நிமிர்ந்து பார்ப்பதற்குள் வீட்டுக்கு மேலாகக் கறுப்புநிற அலை எழுந்து அடித்தது. சனம் கூக்குரலிட்டது.
சுனாமி - 159

Page 90
எனது பிள்ளைகள் 4 டேர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். வீட்டுக்குள் புகுந்தது கறுப்பு அலை பற்றிக் கூறுவதற்குள் என்னை ஓர் அலை தாக்கியது.
மேலும் அலை இழுத்தடித்துக் கொண்டு சென்றது. சுமார் அரைக் கட்டை இழுத்தடிக்கப்பட்ட நான் கம்பிவேலியொன்றில் சிக்கினேன். பின்பு தண்ணீர் வற்றியபின் வந்து பார்த்தேன். இருவரதும் சடலங்களே கிடைத்தன. வீடு இருந்த இடமே இல்லை. எனது மனைவியும் பிள்ளையும் இறந்த பிறகு நான் மட்டும் ஏன் உயிருடன் இருக்கிறேன்! என்றபடி அழுகிறார். என்ற படி அக்கரைப்பற்று நீதிமன்ற முதலியார் என். லோகராஜ் (காரைதீவு தனது மாமன், மாமியை இழந்தவர் அவர் தனது நேரடி அனுபவத்தை விவரிக்கையில் :
"வீட்டின் முன் வேலை செய்து கொண்டிருந்தபோது சனங்களின் அவல ஒலம் கேட்டது. உடனே மனைவி வீதிக்குச் சென்று பார்க்க ஓடினார். மறுகணம் எனது காலடியில் ஒரு அடிக்கு கடல்நீர் வந்துவிட்டது.
அருகிலிருந்த சேட்டை எடுத்து மாட்டிக் கொண்டு பின்னால் ஒடமுயற்சித்த வேளை பாரிய அலையொன்று என்னை அடித்துச் சென்றது.
அப்போது பரவலாகக் குழந்தைகள் அலறியபடி அலைமோதின. எவரையும் பிடிக்க முடியாத நிலை. மீண்டும் ஓர் அலை அடிக்க மரமொன்றல் தொங்கித்தப்பிவந்தேன். மனைவியும் பிள்ளையும் என்னைப்போல் அடிபட்டுத் தப்பி வந்தனர். ஆனால், மாமாவும், மாமியும் அலையில் சிக்கிப் பலியாகினர்.” என்றார். இப்படியான சோகக் கதைகள் ஆயிரமாயிரம் மட்டக்களப்பில் உண்டு -ச தே. ராஜா
இன்னும்பலதுயரக்கதைகளுள்ளன. வீரகேசரி இ. பாக்கியராஜன் தரும் தகவல்துயர்கள் வருமாறு:
“அந்தப் பயங்கரத்தை நினைத்தால் எனக்கு ஈரல் வெடிக்கின்றது. கடல் வளத்தினாலே பிள்ளைகளைப் பெற்று வளர்த்தோம். ஆனால், இன்று அந்தக் கடலே எமது சொத்து, சுகம், எம் உயிரினும் மேலான பிள்ளைகளை எம் கண்முன்னாலேயே அடித்துச் சென்று விட்டது. இனிமேல் கடற்கரையும் வேண்டாம். கடல் தொழிலும் வேண்டாம். மீனவர் என்ற சொல்லே இருக்கக் கூடாது.
இவ்வாறு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் திருமதி இக்னஸ் பெரேரா பெருகி வரும் கண்ணிரை ஒரு கையினால் துடைத்துக் கொண்டு கூறினார். அவரின் மற்றைய கையில் பனை மரத்தைக் கட்டிப் பிடித்து பனம் கருக்கு வெட்டிய காயம் காணப்பட்டது.
"வாகரை - பனிச்சங்கேணியிலுள்ள சல்லித்தீவில் நாம் வசிக்கின்றோம். சம்பவதினம் காலையில் எனது மகள் சுமித்திரை (22 வயது மீன் அறுத்துக் கழுவிக் கொண்டிருந்தார். மீனை அப்படியே விட்டுவிட்டு பதறித்துடித்துக் கொண்டு ஓடிவந்து கடல் பொங்கி வருகிறது. அம்மா எங்காவது ஓடிவிடுவோம் என்று அவலக் குரல் எழுப்பினார். எனக்கு நாவரண்டது. எனது மூத்த மகள் தனது சகோதரியான 7 வயது சரண்யாவைத் தூக்கினார். நான் அனுஸ்குமார் (9 மாதம்) என்ற எனது கடைசி மகனைத் தூக்கிக் கொண்டேன். மற்றைய மகள் நிலோஜினி (வயது 15) அனைவரும் கடலுக்கு எதிர்த் திசையில் ஓடினோம். எங்கே ஓடுவது? எப்படித் தப்புவது?
60 கந்தையா குனராசா

பொங்கி வந்த கடலலை ஒரே அடியாக அடித்து விட்டது. கையில் இருந்த மகன் மட்டுமல்ல 10 மாதம் சுமந்து பாலூட்டி சீராட்டி வளர்த்த நான்கு பிள்ளைகளுமே கடலலைக்குப் பலியாகிவிட்டனர்.
என் கண்முன்னே என் செல்வங்களை இழந்த மகாபாவி நான். பனை மட்டையைத் தாவிப் பிடித்து உயிர் தப்பி காயங்களுடன் மீட்கப்பட்டேன். இனிமேல் கடல் வாடையே என்மீது வீசக் கூடாது. எனது கணவர் புத்தளத்தில் வலை வாடியில் தொழில் புரிகின்றார்” என்றார்.
எமது வீடு கட்ற்கரையில் இருந்து 30 யாருக்கு அப்பால் உள்ளது. வீட்டில் இருந்து பார்த்தால் கடற்கரை நன்கு தெரியும்.
அன்று காலையில் வழமை போன்று வீட்டு வாசலில் நின்றபோது பாரிய ஒரு வெடிச்சத்தம் கடற்கரையில் கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன். கடல் நீர் பொங்கி வந்தது. ஐயோ மகளே, ஒடிவா மகளே! எனக் கூறி அவளை தூக்கி அணைத்தபடி” இறைவா என்ன கொடுமை நாங்கள் செய்தோம்?” எங்களைக் காப்பாற்ற மாட்டாயா இறைவா?’ என்று கதறிக் கொண்டு தலை தெறிக்க ஓடினேன். ஓடும் வழியில் கையில் இருந்த குழந்தை எங்கே எவ்வாறு பறிபோனது என்றே எனக்குத் தெரியவில்லை.
இந்த அனர்த்தம் நடக்கும் போது எனது மாமா தோட்டத்தில் இருந்தார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியவில்லை. எனது அப்பா காயங்களுடன் உயிர்தப்பி உள்ளார். - குமுதினி
நான் அன்று காலையில் கூலி வேலைக்குப் போனேன். மனைவி மக்கள் வீட்டில் இருந்தனர். வேலை செய்யும்போது கடல் வருகிறது என்ற சத்தம் விண் அதிரும்படியாகக் கேட்டது. உடனே அவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆதங்கத்தில் ஒடினேன். எவ்வாறு ஐயா பொங்கி வரும் நீரை எதிர்த்து ஓட முடியும்? முதலாவது அலை மரம் செடி கொடிகளை முறித்து மடக்கிச் சென்றது. நான் ஒருவாறு தப்பிக் கொண்டேன். நிம்மதிப் பெருமூச்சு விடுவதற்கு முன்பாக அடுத்து பாரிய அலை பொங்கி வந்தது. மரம் ஒன்றில் ஏறிக் கொண்டேன். எனது மேனியில் உடுப்புகளும் இருக்கவில்லை.
எல்லாம் முடிந்த பின்னர் மரத்தில் இருந்து இறங்கிப் பார்த்தேன். நான் எதைத் தேடினேனோ - என்வீடு அதனை காணவில்லை. யாரைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தேனோ அவர்களைக் காணவில்லை. இன்று நிர்க்கதியாகி நிற்கிறேன். சிலர் உடுத்த உடை மட்டுமே மிச்சம் என்பார்கள். ஆனால், எனக்கு அதுவும் மிஞ்சவில்லை. எனது மனைவி மக்களின் சடலமும் எனக்குக் கிடைக்கவில்லை.
அறநெறிப் பாடசாலைக்குப் போன எனது 10 வயது மகன் திரும்பி வரவில்லை. காயத்திரி கோயிலுக்குப் போன 13 வயது மகள் சிந்து திரும்பி வரவில்லை. மற்றொரு மகன் சின்னத்தம்பி (வயது 8), கடைசி மகன் தனுசன் (வயது 4) எவருமே இன்று உயிருடன் இல்லை. மனைவி வனிதா, கடைசி மகள் தக்ஸாநந்தி (வயது 3) எவருமே இல்லை, நாங்கள் என்ன கொடுமை செய்தோம்? கடற்கரையில் வசித்தது நாங்கள் செய்த கொடுமையா? - நாவலடி சிவநாதன்
161

Page 91
மனைவி மகேஸ்வரி, மகள் ரம்யா (வயது 8), கலைப்பிரியா (வயது 6), மகன் யதுர்சன் அனைவரையுமே வங்கக் கடல் மட்டக்களப்பு வாவிக்குப் பலி கொடுத்து விட்டது.
எனது சின்ன மகன் - ஒரே மகன் யதுர்சனின் உயிர் அற்ற உடலைக் கூடக் காணக் கொடுத்து வைக்காத பாவியாகி விட்டேன்”
- கலாமோகன் இது மாரிகாலம். வழமையாக மாரி காலத்தில் கடலில் கரை வலை போடுவதில்லை. வழமைக்கு மாறாக இம்முறை கடந்த சில தினங்களாக வலை போடப்பட்டது. அன்றைய தினம் நானும் சென்றேன். கடற்கரைக்குச் சென்றதும் கடலைப் பார் என்று அங்கிருந்த ஒருவர் என்னிடம் கூறினார். பார்த்தபோது கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தோணி ஒன்று மேலே எழுந்து கரையை நோக்கி வந்தது.
இவ்வாறு கூறியவர் சற்று பேச்சை நிறுத்தி விட்டு தண்ணீர் கொண்டு வா என்று ஒரு பையனிடம் கூறிய பின் வாய்க்குள்ளிருந்து உப்புநீர் வருவதாக என்னிடம் சொன்னார். தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு தொடர்கிறார்.
இது வழமையான கடல் பெருக்கு என நினைத்துவிட்டு தோணியைப் பிடித்து இழுத்தேன். அப்போது பெரிய அலை எழுந்தது. கிராமத்தை நோக்கி ஓடினேன். வீட்டிற்கு ஓடிச் சென்று மனைவி, ஒரு வயது மகள், எனது அக்கா அவரின் கடைசி மகள் அனைவரும் தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டு நின்றனர். நான் நான்கு பேரையும் கட்டிப் பிடித்தவாறு நின்று 2 நிமிடம் நீருடன் போராடினேன். அவர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது எனது ஆசை. ஆனால், அது நிராசையாகப் போய்விட்டது.
எனது பிடியில் இருந்து அக்கா சியாமிளா அவருடைய மகன் நிதர்சன், எனது மகள் யதுசா, மனைவி ஜெயசித்திரா எவ்வாறு போனார்கள் என்றே தெரியாது. நானும் அடிபட்டுச் சென்று ஒரு கம்பியில் சிக்கி ஆற்றுப்பக்கமாக நீரில் அடித்துச் செல்லப்பட்டேன்.
ஆற்றில் விழுவதற்கு முன்பாக கால்களை நிலத்தில் உதைத்து மேலே எழுந்த போது ஒரு வீட்டின் யன்னல் கம்பி தென்பட்டது. -
மரத்தில் இருந்த பிள்ளையை நீர் இழுத்துச் சென்றது. ஆனால், கண் இமைக்கும் நேரத்துள் அடுத்த வெள்ளம் வந்தது. பின்பு அந்த வீட்டின் பிளேட்டில் ஏறிக் கொண்டேன். அங்கே ஒரு மாமரத்தில் தனது பிள்ளையுடன் ஏறியிருந்த ஒருவரின் பிள்ளை இந்த மரத்தில் இருந்து அடித்துச் செல்லப்பட்டது.
இப்போது அனாதரவாக அகதியாக உள்ளோம். ஆனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. குழந்தைகளுக்கு பால்மா கூட வழங்கப்படவில்லை” என்று- இத்தனை கவலைகளுக்கு மத்தியிலும் அவர் மற்றைய மக்களுக்காக இரங்கிய பரோபகார சிந்தையை எண்ணிக் கொண்டேன்” - பொ. வரதசீலன்
அம்பாறை மாவட்டத்தில் சுனாமிப் பேரவையின் தாக்குதலிற்கு மோசமாக
உட்பட்ட இன்னொரு கிராமம், திருக்கோவிலாகும். 22 கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்ட திருக்கோயிலில் 6610 குடும்ப்ங்களைச் சேர்ந்த 23730 மக்கள் வாழ்ந்து
162 கந்தையா குணராசா

வந்தனர். இவர்களில் 740 பேர் சடலங்களாகியுள்ளனர். திருக்கோயிலின் இரு கிராமங்களான தம்பட்டை, உமிரி ஆகியவிரு கிராமங்கள் இருந்தவிடம் தெரியாமல் அழிந்து போயுள்ளன. திருக்கோவிலின் சரித்திரப் புகழ்பெற்ற சித்திர வேலாயுதர் ஆலயம் பூரணமாக சுனாமியால் உடைக்கப்பட்டு விட்டது. ஆலயக் குருக்களின் மனைவி ருக்குமணிதேவி, சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் காயத்திரி தபோவனம், தம்பட்டை சிவலிங்கப் பிள்ளையார், தம்பட்டை தமிழ் வித்தியாலயம், அருணோதயா வித்தியாலயம், பாலவிநாயகர் வித்தியாலயம் என்பனவும் முற்றாகத் தரைமட்டமாகியுள்ளன. திருநாவுக்கரசு நாயனார் குருகுலம் முற்றாகச் சேதமடைந்து, ஒரு சிறுவனும் மூன்று சமையற்காரரும் பலியாகிப் போயினர். தெய்வாதீனமாக ஏனைய 30 சிறுவர்கள் தப்பியுள்ளனர்." - (வி ரி சகாய தேவராஜா)
கரவெட்டியைச் சேர்ந்த தந்தை, தாய், மூன்று பிள்ளை அடங்கிய குடும்பம் ஒன்று, மட்டக்களப்புக்கு விடுமுறையைக் கழிப்பதற்காகவும், நேர்த்தி ஒன்றினை நிறைவேற்றுவதற்காகவும் சென்றிருந்தனர். கல்லாறு கடற்கரையோ காயத்திரீ பீட ஆலயத்திற்குச் சென்றபோது, திடீரெனப் பொங்கியெழுந்த சுனாமியால் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் மரணமான தந்தையான ஐயாத்துரை பராபரன் மக்கள் வங்கி உபமுகாமையாளர் ஆவர்.
சுனாமிப் பேரலைக்குத் துறை நீலாவணை, நிந்தாவூர், கல்முனை, புதிய காத்தான்குடிப் பகுதிகளில் ஏற்பட்ட 'உயிர்ச்சேதம் மிகவும் அதிகமாகும். அன்று ஞாயிற்றுக்கிழமையாதலால் வணக்கத் தலங்களுக்குச் சிறுவர்கள் சென்றிருந்தனர். நிந்தாவூரில் கடற்கரைப்பள்ளியில் மதரஸாவுக்கு வழிபாட்டிற்கும் கற்றலிற்கும் சென்ற 75 சிறுவர்கள் சுனாமியால் அடித்து அள்ளிச் செல்லப்பட்டனர். பாண்டிருப்பில் அறநெறிப் பாடசாலைக்கு மாமாங்க வித்தியாலய அறநெறிப் பாடசாலைகளில் சிறுவர்களும், சிறுமிகளும் சுனாமி வெள்ளத்தினால் இழுத்துச் செல்லப்பட்டனர்.
கல்முனைப் பிரதேசத்தில், ஞாயிறு காலை நிகழ்ந்துபோன சுனாமி அனர்த்தத்திற்கு அறநெறிப் பாடசாலைகளுக்குச் சென்ற 128 சிறார்களும் 11 ஆசிரியர்களும் பலியாகியுள்ளனர். பாண்டிருப்பு மகா விஷ்ணு வித்தியாலயத்தில் அறநெறிப் பாடசாலைக்குச் சென்ற மாணவிகளும், மாமாங்க வித்தியாலயத்தில் அறநெறிப் பாடசாலைக்குச் சென்ற 75 மாணிவர்களும் சுனாமிக்குப் பலியாகிவிட்டனர்.
வழமைபோல காலை 8.00 மணிக்கு எங்களுட்ைய அறநெறிப் பாடசாலை ஆரம்பமாகியது. 75 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் வந்திருந்தோம். திடீரெனப் பிள்ளைகள் "ரீச்சர் கடல் அலை வருகுது. பாருங்கோ எனக் கத்தினர். எல்லாரும் வேடிக்கை பார்த்தோம். வெளியே பலர் கதறிக் கொண்டு ஓடுவது கேட்கிறது. நாங்களும் ஒட எண்ணினோம். நேரமில்லை. கடலலை எங்களை அப்படியே மூடிக் கொண்டது. நாங்கள் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. கடலலை அள்ளிக் கொண்டு மீண்டது. நான் ஒரு கட்டையைப் பற்றிக் கொண்டேன். கண் இமைக்கும் நேரத்தில் எல்லாமே நடந்து முடிந்து விட்டது’ என்கிறார் மாமாங்க வித்தியாலய அறநெறிப் பாடசாலை ஆசிரியைகளில் ஒருவரான நிமாலினி.
சுனாமி 16

Page 92
சம்பவதினம் என் தங்கச்சிக்குக் கொப்பி கொடுப்பதற்காக விஷ்ணு அறநெறிப் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். திடீரெனக் கடலலை எழுந்து வருவதைக் கண்டேன். தங்கச்சி படித்துக் கொண்டிருந்தா. பாடசாலையைக் கடலலை மூடியது. கட்டிடம் இடிந்து விழுவதைக் கண்டேன். பிள்ளைகளைக் கதறக் கதறக் கடலலை இழுத்துச் சென்றது. நான் பக்கத்திலிருந்து மதிலுக்கு மேலால் குதித்து ஓடிவிட்டேன். என் தங்கச்சி ஏழுவயது யதுர்சினியை கடல் அள்ளிக் கொண்டு போய்விட்டது' என்கிறான் சின்னத்தம்பி குகன்.
காரைதீவுத் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் 39 மாணவர்கள் சுனாமிக்கு இரையாகிப் போயினர். அன்று நண்பகல் வரை 202 சடலங்கள் மீட்கப்பட்டு கல்முனை வைத்தியசாலையிலும், 192 சடலங்கள் சாய்ந்தமருது பள்ளிவாசலிலும் வைக்கப்பட்டிருந்தன. கடலில் ஆங்காங்கு சடலங்கள் மிதப்பதைக் கரையிலிருந்து காண முடிந்தது. இது என்ன கொடுமை? ஈவிரக்கமின்றி அப்படியே படிக்க வந்த பச்சிளம் பாலகர்களை அள்ளிச் சென்ற துயரை எப்படி இந்தக் கிராமம் மறுக்கும்? காலையில் எழுந்து, குளித்து. உணவுண்டு, துடிப்போடு சென்ற பிள்ளைகள் கடலலைக்குப் பலியாகிப் போனதுயர் பொறிக்கக்கூடியதாகவில்லை. பலரின் சடலங்கள் கூடக் கிடைக்கவில்லை’ என முதியவர் ஒருவர் குமுறி கொண்டார்.
புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, புதுமுகத்துவாரம், புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகள் சுனாமியால் முற்றாகத் துடைத்து வழிக்கப்பட்டுவிட்டன. புதிய காத்தான் குடியில் 46 சடலங்கள் அன்றே மீட்கப்பட்டன. கல்முனை ஆஸ்பத்திரியில் நூற்றுக்கு மேற்பட்ட சடலங்கள் பிரேத அறையில் இடமின்மையால் ஆங்காங்கே வளர்த்தப்பட்டுள்ளன. இடிபாடுகளிடையே அகப்பட்ட சடலங்களை மீட்கும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது.
நான் எனது பெற்றோருடன் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வானில் வந்து கொண்டிருந்தபோது, கல்லடிப் பிரதான வீதியில் வெள்ளத்தால் வான் தடம்புரண்டது. நான் நீரில் அடித்துச் செல்லப்பட்டேன். என்னருகில் பனைமரம் ஒன்று மிதந்து வந்தது. அதனை இறுக அணைத்துக் கொண்டு மிதந்தேன். கனதூரம் அப்படியே கிடந்தேன். காத்தான்குடி வாவியில் உரையாக்கன் தீவுக்கு அருகில் என்னை அண்ணன்மார் இருவர் காப்பாற்றினர்’ என்கிறார் கல்முனை ஜிவ்றினா. இரு மீனவர்கள் இந்தச் சிறுமியைக் காப்பாற்றி மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேர்த்திருந்தனர். அவளுடைய பெற்றோருக்கு என்ன நடந்ததென்பது இன்னமும் தெரியாது.
கல்முனை1ஆம் குறிச்சி மொஸ்தாபா வீதியிலுள்ள வதிவிடங்கள் அனைத்தும் கடற் கோளினால் அழிந்து போயின. வீடுகளிலிருந்த இடங்களில் கற்குவியல்களும் குப்பைகளுமே எஞ்சியிருந்தன. கல்முனை சிங்கள மகா வித்தியாலத்தைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர் 9 நாட்களின் பின் தன் வீட்டுக்குப்பையைக் கிளறியபோது அதற்குள் மூன்று மாதக் குழந்தையொன்று உயிருடன் கிடந்தது. அதனை உடனே கல்முனை ஆஸ்பத்திரியில் சேர்ப்பித்தார். குழந்தை ஆரோக்கியமாகவுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இக்குழந்தையின் பெற்றோரைத் தேடும் பணி
164 கந்தையா குனராசா

ஆரம்பமாகியது. அப்பிள்ளைக்கு இருதாய்மார் உரிமை கொண்டாடி வந்தார். கல்முனை வைத்தியசாலை நிர்வாகம் பொலீசாரிடம் இந்த வழக்கினை ஒப்படைத்தது. அக்குழந்தையின் பெற்றோர் தாமென ஜெயராஜா - ஜூனித்தா தம்பதி அது தமது குழந்தை அபிலாஷ் என உரிமை கோரியது. ஆனால் இக்குழந்தை தங்களுடையதென ஒன்பது பெற்றோர் உரிமை கொண்டாடுவதாக ஆஸ்பத்திரிச் சமூகம் கூறியதில் வழக்கு நீதிமன்றத்துக்கு சென்றது. இக்குழந்தைக்கு 'சுனாமி 81’ எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டது. 2 நீதிமன்றத்தில் கத்திக்குழறி கண்ணீர் விட்டழுத ஜெயராஜாவும், ஜூனித்தாவும் தாம் குழந்தையின் பெற்றோரென எல்லாருக்கும் தெரிந்திருந்தது. எனினும் சட்டம் இறுக்கமாக இருந்தது.
தினக்குரல் அ. ரஜீவன் உணர்ச்சிக் கொந்தளிப்பான இந்த நிகழ்வை வார்த்தைகளில் பின்வருமாறு படம் பிடிக்கிறார்:
கல்முனை நீதிமன்றத்திற்குப் புதன்கிழமை என்றுமில்லாத முக்கியத்துவம் கிடைத்திருந்தது. நீதிமன்ற வளாகத்தினுள் சர்வதேச ஊடகவியலாளர்கள் பெருமளவிற்குக் கூடியிருந்தனர். கல்முனை இதுவரை பார்த்திராத முகங்களின் வருகை காரணமாக அப்பகுதி மக்கள் மத்தியில் என்ன நடக்கிறது என்ற ஆர்வம் தொற்றியிருந்தது. நீதிமன்ற வளாகத்தினுள் நின்றிருந்த பொலிஸார் மத்தியில் ஒருவிதப் பரபரப்பு.
இவையனைத்திற்கும் காரணம், அன்றைய தினம் ஒன்பது தாய்மார்கள் உரிமை கோருவதாக கல்முனை அரச மருத்துவமனை வட்டாரங்களால் தெரிவிக்கப்பட்ட குழந்தை குறித்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படவிருந்ததே. மேலும், இந்தக் குழந்தையின் பெற்றோர் யார் என்பதைக் கண்டறிவதற்கான மரபணு பரிசோதனைக்கு உத்தரவிடப்படலாம் என வெளியான தகவல்களுமே.
வழக்கு விசாரணையும் எந்தவித சூடான விவாதங்கள் இன்றி நடைபெற்றது. நீதிபதி மொகைடின், ஏப்ரல் 20ஆம் திகதிவரை குழந்தை மருத்துவமனையில் பாதுகாப்பில் இருக்கும் என அறிவித்த அடுத்த நிமிடமே நீதி மன்றத்தினுள் பரபரப்பு தோன்றியது.
குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்காவிட்டால் குழந்தை என்னை மறந்து விடுமே என நீதிபதியைப் பார்த்துக் கேட்ட யுனிட்டா. தன்னால் குழந்தையை விட்டுவிட்டு அவ்வளவு காலத்திற்கு இழுக்க-முடியாது என நெஞ்சிலடித்தபடி கதறியழத் தொடங்கினார்.
தாய்ப்பால் இல்லாமல் இருந்தால் எங்களை மறந்திடுவான். நீண்ட காலம் அப்படியிருக்க முடியாது எனக் கதறினார்.
நான்காம் மாதம் வரை 20ஆம் திகதி வரை தாய்ப்பால் கொடுக்காமல் இருக்க முடியாது என்றார். நீதிபதி எங்களிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே என்றார்.
என்ன செய்வது எனத் தெரியாமல் அவரும் அவரது கணவர் ஜெயராஜ் அவரது உறவினர்கள் சிறிது நேரம் திகைத்து நின்றனர்.
பின்னர், சீற்றம் கொண்டவர்களாக கல்முனை அரசினர் வைத்தியசாலை நோக்கிச் செல்லத் தொடங்கினர். கல்முனை நீதிமன்றத்திலிருந்து மருத்துவமனை நோக்கிச் செல்லும் வீதி அழுகுரல்களாலும் ஆவேச வார்த்தைகளாலும் வசை பாடல்களாலும் அதிர்ந்தது.
d6) (ió 16S

Page 93
யுனிட்டா ஓவென்று பெருங்குரலெடுத்து அழுதார். மன்றாடினார். தன். குழந்தையைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு கெஞ்சினார், கதறினார், ஆவேசப்பட்டார். வீதிகளில் சென்றவர்களையும் வீடுகளிலிருந்து எட்டிப் பார்த்தவர்களையும் நோக்கி நியாயம் கேட்டார். ஆவேசப்பட்டார். V
‘ஒரு கட்டத்தில் ஜெயராஜ் தன்னிடம் தனது குழந்தையைத் தராவிட்டால் தற்கொலை செய்யப் போவதாகக் கதறினார்.
குழந்தையை மருத்துவரே வைத்திருக்கட்டும் என்னிடம் குழந்தையைத் தராவிட்டால் நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்றார். மிகவும் உணர்ச்சிகரமான அந்த நிமிடத்தில் ஜெயராஜ் தம்பதியினர் எதனையும் செய்வதற்குத் தயாராகக் காணப்பட்டனர். அவர்களுடன் கூட வந்தவர்களும் வீதியில் நின்று கதறினர். மயங்கி விழுந்தனர்.
இதன் காரணமாக முதலில் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் வேடிக்கை பார்க்க வந்த மக்கள் ஆவேசப்படத் தொடங்கினர். இதனால் கூட்டம் சேரத் தொடங்கியது.
நிலைமை மிக வேகமாக உணர்ச்சிகரமானதாக மாறியது. ஓட்டமும் நடையும் அழுகையும் கண்ணிருமாக மருத்துவமனைக்குள் நுழைந்தவர்கள் நேராகக் குழந்தை வைக்கப்பட்டிருந்த பகுதியை நோக்கிச் சென்றனர். மருத்துவமனை ஊழியர்கள் என்ன நடக்கிறது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த நிமிடத்தில் வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகவியலாளர்கள், ஜெயராஜ் குடும்பத்தவர்கள், ஊரவர்கள் எனப் பெருங்கூட்டம் "பேபி 81’ வைக்கப்பட்டிருந்த இடத்தை நெருங்கி விட்டது.
குழந்தை வைக்கப்பட்டிருந்த கண்ணாடி அறைக்குள் நுழைந்த யுனிட்டா குழந்தையைத் தூக்கத் தயங்கியபடி நின்றார்.
வெளியிலிருந்து கூக்குரல்கள், "எடுத்துக் கொண்டு வா, எடுத்துக் கொண்டு வா” என்றன. ஆத்திரம் கொண்ட சிலர் அந்த அறையின் கண்ணாடிகளைத் தட்டத் தொடங்கினர்.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற யுனிட்டா திடீரென ஆவேசம் வந்தவர்போல, குழந்தையைத் தூக்கித் தன்னுடன் சேர்த்து முத்தமிட்டார். வாரியணைத்தார். மிகவும் உணர்வுபூர்வமான தருணமாக அது காணப்பட்டது.
குழந்தையைத் தன்னுடன் தூக்கி வைத்துக் கொண்டவர் வெளியே வருவதா, என்ன செய்வது எனத் திகைத்துக் கொண்டிருக்க, கூடியிருந்தவர்கள் ஆவேசப்பட்டுக் கூச்சலிட ஆரம்பிக்க குழந்தைகள் வாட் தன்னுடைய இயல்பான அமைதி குலைந்து சிறிய போர்க்களம் போல மாறியது.
இந்தத் தருணத்திலேயே மருத்துவமனையின் தாதிமார்களும் மருத்துவர்களும் ஆவேசப்படத் தொடங்கினர். வாக்குவாதங்களும், ஆவேச வார்த்தைகளுமாக இரண்டு பக்கமும் கைகளால் மோதாதகுறையாக அடிபடத் தொடங்கின.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் மருத்துவமனையின் குறிப்பிட்ட பெண் ஊழியர் ஒருவர் தாதி) செய்த செயலே நிலைமையை மேலும் குழப்பகரமானதாக மாற்றியது.
166 கந்தையா குனராசா

சூழ்நிலையின் உணர்வுகளால் உந்தப்பட்ட அவர் ஊடகவியலாளர்கள், கூடி நின்றவர்களை நோக்கி இவர்களைக் கைது செய்யப்போவதாக எச்சரித்தார்.
பொலிஸைக் கூப்பிடப் போறன் என்றார். வெளியே போவதற்கான பாதையை வேறு சில ஊழியர்களுடன் இணைந்து பூட்டினார்.
இதன் காரணமாக, ઠીદ્રો) மணிநேரம் ஊடகவியலாளர்கள் சிறைப்படுத்தப்பட்டது போன்ற மனோநிலைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஜெயராஜ் - யுனிட்டா தம்பதியினர் அவர்களது உறவினர்கள், ஊர்மக்கள் எனப் பலர் வெளியேற முடியாத நிலை காணப்பட்டது.
இந்த நேரத்தில் பொலிஸாரும் வந்து சேர, நிலைமை இன்னும் மோசமடைந்தது.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான சில வெளிநாட்டு மருத்துவர்கள் கதவினைத் திறந்து விடுமாறு கேட்டனர்.
எனினும், மருத்துவமனை ஊழியர்கள் இணங்கவில்லை. மருத்துவமனை ஊழியர்கள் குறிப்பாக, தாதிமார்கள் உணர்வுக் கொந்தளிப்பினால் எழுந்த இந்தச் சூழலைப் புரிந்து கொள்ளாதவர்களாக, தனது பிள்ளையைத் தொலைத்த ஒரு தாயின் உணர்வுகளை விளங்கிக் கொள்ள முடியாதவர்களாக மோதிப் பார்த்து விடுவோம் என்ற மனோ நிலையில் காணப்பட்டதைப் பரவலாகக் காண முடிந்தது.
அந்த நேரத்தில் தாதிமார்கள் பற்றிய எமது மதிப்பீடுகள் மிறைந்து அவர்கள் ஏதோ தெருச் சண்டைக்குத் தயாராகுபவர்கள் போலக் காணப்பட்டனர். மருத்துவமனை ஊழியர்களினால் மூடப்பட்ட அந்தக் கதவு திறக்கப்பட்ட நேரத்தில் அனைவரும் வெளியே வருவதற்கான முயற்சியை மேற்கொள்ள, யுனிட்டாவின் கையில் காயம் ஏற்பட்டது. அவர் நிலத்திலிருந்து கொண்டு கதறினார்.
ஒரு கட்டத்தில் தாய், தந்தை இருவரும் தாங்கள் வீட்டிற்குச் சென்று தற்கொலை செய்யப் போவதாகத் தெரிவித்தனர்.
இந்த நிமிடத்திலேயே பொலிஸார் ஜெயராஜ் தம்பதியினரை விசாரணைக்கு என அழைத்துச் சென்றதும் பின்னர் விடுவிக்கப்பட்டதும் இடம் பெற்றது.
இதற்கிடையில், மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஓடி ஒடி ஏனைய ஊழியர்களை வீதி மறியல் போராட்டத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சிலமணி நேரம் இடம்பெற்ற மருத்துவமனை ஊழியர்களின் வீதி மறியல் போராட்டம் அவர்கள் பரவலாகக் கொடுத்த புகாரையடுத்து, சிறி மாஸ்டர் என்பவர் கைது செய்யப்பட்டமை போன்றவையும் நிகழ்ந்தது.
சாமித்தம்பி சிறிஸ்கந்தராஜா எனப்படும் சிறி மாஸ்டரே குழந்தையை குப்பைத் தொட்டியிலிருந்து மீட்டுள்ளார்.
26ஆம் திகதி பின்னேரம் ஒரு வயதுபோன நபர் இந்தக் குழந்தையை எம்மிடம் கொண்டு வந்து தந்தார் எனக் கல்முனை அரசினர் வைத்தியசாலை வைத்தியர் அத்தியட்சர் முருகானந்தன் தெரிவித்தார்.
பற்றைக்குள் அழுகுரல் கேட்டது. பார்த்தபோது ஆண் குழந்தையொன்று கிடந்தது என அவர் சொன்னார். பிள்ளையின் உடம்பில் காயங்கள் காணப்பட்டன. உடுப்பு எதுவுமில்லை. உடல் முழுக்கச் சேறு காணப்பட்டது. நாங்களே குளிப்பாட்டி மருந்து கொடுத்து. உடுப்பு அணிவித்தோம் எனவும் முருகானந்தன் தெரிவித்தார்.
சுனாமி 16

Page 94
பிள்ளைக்கு உரிமை கோரி ஒருத்தரும் வரவில்லை. தாதிமாரிடம் பொறுப்புக் கொடுத்தோம். அதன்பின்னரே நிறையப் பேர் வந்தார்கள். பொலிஸ், நீதிமன்றம் என விவகாரம் திசை மாறியது என்கிறார் முருகானந்தன்.
தாங்களே மரபணுப் பரிசோதனைக்கு வலியுறுத்தியதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு பெற்றோர் குழந்தையைத் தொலைத்த விவகாரமல்ல. இவ்வாறு நூறு குழந்தைகள் அநாதைகளாகியுள்ளன. நூற்றுக்கணக்கான தாய்மார் பிள்ளைகளை இழந்துள்ளனர். இதனால், எதனையும் நூறு வீதம் தீர்மானிக்க முடியாது என்பதாலேயே நாங்கள் மரபணுப் பரிசோதனைக்கு வலியுறுத்தினோம் என்கிறார் டாக்டர் முகுந்தன்.
இது பிள்ளை யாருடையது என்பதை மிகச் சரியாக உறுதிப்படுத்த உதவும் எனவும் அவர் தெரிவிக்கிறார். அன்றைய வழக்கு விசாரணையின் போதும் இந்தக் கருத்து மருத்துவமனை வட்டாரங்களால் முன்வைக்கப்பட்டது.
எனினும், அன்றைய தினம் ஒரேயொரு பெற்றோரே நீதிமன்றத்திற்கு வந்திருந்ததைச் சுட்டிக் காட்டி நீதிபதி ஒரு பெற்றோரே உரிமை கோருவதால் மரபணுப் பரிசோதனை அவசியமா எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்கு டாக்டர் முகுந்தன், கல்முனையின் இன்றைய சூழலை கருத்திற் கொண்டு ஒரு பெற்றோர்தான் என்றாலும், அவர்களையும் உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
எனினும், ஜெயராஜ் யுனிட்டா தம்பதியினரின் ஆவேசமும் அழுகையும் கண்ணிரும் எவ்வளவு தூரம் ஒரு உண்மையான பெற்றோரின் வேதனை என்பதில் எந்தவித சந்தேகங்களுக்கும் இடமின்றிப் புலனாகின்றது.
நாங்கள் எங்கள் உறவுகளில் பலரை இழந்து விட்டோம். மிஞ்சியிருப்பது இந்தக் குழந்தைதான். அதனை எங்களிடம் ஒப்படையுங்கள் என யுனிட்டாவின் உறவினர்கள் புதன்கிழமை வீதி வீதியாக அழுததைக் காண முடிகின்றது.
அவர்களது வீட்டிற்கு முன்னால் இருப்பவர்கள் அந்தப் பகுதியில் அந்தப் பெற்றோரின் பிள்ளைதான் காணாமல் போயுள்ளது. வேறு யாருடைய பிள்ளையும் காணாமல் போகவில்லை நீதிபதி பெப்ரவரியில் அந்தக் குழந்தையை பெற்றோரின் பராமரிப்பில் கொடுப்பதாக அறிவித்ததும், பின்னர் அதனை மாற்றியதுமே பலத்த ஆத்திரத்தை உண்டு பண்ணியுள்ளது என்கின்றனர்.
ஒன்பது பேர், ஒன்பது பேர் என்றார்கள். எவரும் அன்றைக்கு வரவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதனைவிட முக்கியமாக வைத்தியசாலை இந்தக் குழந்தை மேல் இவ்வளவு அக்கறை காட்டுவது. ஏன் என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது.
ஒரு குறிப்பிட்ட மருத்துவ தாதிக்கு அந்தக் குழந்தை மீது ஒரு கண் என்கிறார் ஒருவர்.
பிள்ளையை மருத்துவமனையில் ஒப்படைத்த அன்றே ஒரு தாதி அந்தக் குழந்தையை தன்னுடைய வீட்டுக்குக் கொண்டு போய் விட்டார்.
பிள்ளையை ஒப்படைத்தவர் பிள்ளை எங்கே எனக் கேட்டதற்கு நீர் எந்தப் பிள்ளையைச் சொல்கிறீர் என அவர் கேட்டிருக்கிறார்.
168 கந்தையா குனராசா

இதன் பின்னர் ஒரு தாதியே குழந்தை எங்கிருக்கின்றது என்ற உண்மையைப் போட்டுடைத்தார் எனச் சட்டத்தரணி அப்துல் ரஹீம் முகமட் சுல்பி தெரிவிக்கின்றார். இதற்கிடையில், குறிப்பிட்ட பிள்ளையின் பராமரிப்புக்கென வெளிநாட்டிலிருந்து நிதி வருகின்றது. அதனால் தான் மருத்துவமனை குழந்தையை
ஒப்படைக்கத் தயங்குகிறது என்ற குற்றச் சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.
அ. ரஜீபன்)
குழந்தையின் உண்மைப் பெற்றோரைக் கண்டறிய மரபணுப் பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குழந்தைக்கு உரிமை கோரிய ஒன்பது தாய்மாரில் ஒரே ஒரு தாயே அதற்கு ஒப்புக் கொண்டு, நீதி மன்றம் வந்தார்; அவர்தான் ஜூனித்தா. மரபணுப் பரிசோதனையில் அவரது மரபணு குழந்தை அபிலாஷ் மரபணுவோடு ஒற்றுமைப்பட்டுப் போனது. நீதிமன்றம் அபிலாசை அதன் நிஜத் தாயிடம் கையளித்தது. அவ்வேளை அதன் பெற்றோர் அடைந்த மகிழ்ச்சிக்குக் கரையில்லை.
அக்கரைப்பற்றில் சுனாமி அலை கிளம்பித் தாக்கியதில், கரையோர வதிவிடங்கள் அனைத்தும் தரைமட்டமாகின. ஐநூறுக்கு மேற்பட்ட வீடுகள் இவ்வாறு சுனாமியால் தகர்க்கப்பட்டுப் போயின. நூற்றுக் கணக்கானோர் சுனாமி அலைக்குட்பட்டு மரணமாயினர். முதல் நாளே அவர்களில் 36 சடலங்கள் எடுக்கப்பட்டன. கடல் வருகிறது என்று கத்தியபடி மருதமுத்து ஓடி வந்தான். நான் அதனை நம்பவில்லை. கடலாவது வருவதாவது’ என்று எண்ணுவதற்கிடையில் குண்டுவீச்சு விமானங்களின் பேரிரைச்சலோடு கிளம்பி வந்த இருட்டுப்போன்ற பேரலை, மருதமுத்தோடு கூடவே ஓடிவந்த பத்துப்பன்னிரண்டு பேரையும் அப்படியே தன்னுள் எடுத்துக் கொண்டது. பக்கத்திலிருந்த தென்னை மரத்தைக் கட்டிப்பிடித்ததால் நான் தப்பினேன். ஆனால் அந்த அலை நான் கரையில் கட்டியிருந்த சாறத்தை உருவி எடுத்துச் சென்று விட்டது. தென்னைமரத்தை இறுகக் கட்டியபடி இருந்த போது அந்த பேய் அலை என்னை மூடியது அவ்வேளை என்னோடு மோதிய ஒருபொருளை ஏனோ மறுகையால் நான் பற்றிக் கொண்டேன். மோதிய அலை பின்வாங்கிச் சென்றபோது பலர் அதில் உயிருக்காக அவலப்பட்டுப் போராடியதைக் கண்டேன். கடவுளே, இதென்ன கொடுமை? என் கையில் நான் ஒரு சிறு குழந்தையின் சடலத்தைப் பற்றியிருந்தேன்’ என்கிறார். - ஆசிரியர் ஒருவர் மேலும், அக்கரைப்பற்றில் விசேஷ அதிரடிப்படையினரின் நான்கு முகாம்கள் சுனாமியில் முற்றாகச் சேதமாகின. நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர் எனக் கூறப்படுகின்றது. அக்கரைப்பற்றில் மீட்கப்பட்ட 86 சடலங்கள் ஆஸ்பத்திரி விறாந்தையில் அடுக்கி வைக்கப்பட்டன.
அம்பாறை மாவட்டத்தில் 9051 பேர் மரணமடைந்துள்ளார்கள். இலங்கையில் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்த மாவட்டம் இதுவாகும்.
11.7 தென்பகுதி
இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த நான்கு மாவட்டங்களாக களுத்துறை,
காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை என்பனவற்றில் 61 கிராமங்கள் முற்றாகச்
சுனாமி 169

Page 95
$டல் அனர்த்தத்தின் போது தங்காலை சேவர் ரிவோர். உல்லாசப் பயணிகள் ஹோட்டல் கடும் பாதிப்பிற்குள்ளாகியது. அங்கு தங்கியிருந்த 35 வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் கடலலையில் அள்ளிச் செல்லப்பட்டனர். ' கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். திடீரெனப் பொங்கியெழுந்த அலை ஹோட்டலைத் தாக்கி நுழைந்தது. அவர்கள் அனைவரும் அள்ளுப்பட்டனர். உதவிகோரி அலறினர். உதவுவார் எவருமில்லை. எனக்கலங்குகிறார். உயிர்தப்பியுள்ள ஹோட்டல் சிப்பந்தி ஒருவர். யாலதேசிய வனத்தில் அதனைப் பார்வையிடச் சென்றிருந்து 98 வெளி நாட்டவர் உட்பட 248 பேர் மரணமடைந்துள்ளளர்.
இந்தக் கடற் கொந்தளிப்பினால் கொழும்புக்கும் மாத்தறைக்குமிடையில் 3 பாரிய புகையிரதப்பாலங்களும் பல சிறிய பாலங்களும் உடைந்து சிதைந்துள்ளன. ரயில் பாதைகள் சிதைந்து, முறுகிக் கிடக்கின்றன.
தென்னிலங்கையில் சுனாமிக் கடற்கொந்தளிப்பினால் பாணந்துறைப்
பகுதியும் பாதிப்பிற்குள்ளாகியது. அப்பகுதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை நிலத்தினுள் கடல் ஊடுருவியுள்ளது. பாணந்துறைச் சந்தைப்பகுதி, புகையிரத நிலையப் பகுதி என்பன ஆறடி நீரினுள் மூழ்கிப் போயின. பாணந்துறைக் கடற்கரையில் குடைமறைப்பில் கதைபேசி மகிழ்ந்த பல காதல் சோடிகளும், அக்கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் பலரும் சுனாமியால் வாரி எடுத்துச் செல்லப்பட்டனர். முதல்நாள் இப்பகுதியில் 19 சடலங்கள் கரையொதுங்கின. பாணந்துறைக்குள் கடல் புகுந்து வீதிகள் எங்கும் கடல் நீர் வெள்ளமாக ஓரடிக்குமேல் தேங்கி இறங்கியது.
சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் 250 சடலங்கள் காலி கரப்பிட்டிய வைத்தியசாலையிலும் 250 சடலங்கள் மாத்தறை ஆஸ்பத்திரியிலும் 115 சடலங்கள் வெலிகம ஆஸ்பத்திரியிலும், 70 சடலங்கள் தங்காலை ஆஸ்பத்திரியிலும், 26 சடலங்கள் பாணந்துறை ஆஸ்பத்திரியிலும் வைக்கப்பட்டிருந்தன. வெள்ளவத்தை கடற்கரை தொடக்கம் மொரட்டுவை வரை கடலோரமாக அமைக்கப்பட்டிருந்த அனைத்துக் குடிசைகளும், மொரட்டுவ தொடக்கம் காலிவரையிலான ஆயிரத்திற்கு மேற்பட்ட கல்வீடுகளும் பாரியளவில் சேதமாகியுள்ளன. தென் பகுதியில் நான்கு பொலிஸ் நிலையங்கள், இரண்டு படைமுகாம்கள், நான்கு பஸ்டிப்போக்கள் எட்டுமீன்பிடித்துறைமுகங்கள் , இருபதுக்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகளுக்கான ஹோட்டல்கள் என்பன சேதமடைந்து போயின.
‘நான் அதிகாலை மாத்தறை - கொழும்பு பிரதான வீதியால் சைக்கிளில் வந்துகொண்டிருந்தேன். என்முன்னால் என்னைக் கடந்து ஒரு ஹைஏஸ்வான் சென்ற வேளை, நான் என்றுமே கேட்காத பயங்கரப் பேரிரைச்சலோடு கடல் நீர், கடல் பக்கமிருந்து பொங்கிக் கிளம்பி வருவதைக் கண்டேன். அவ்வளவு தான் சைக்கிளை விட்டுவிட்டு ஓடிப்போய் ஒரு தென்னை மரத்தில் பத்தடி உயரம் ஏறிக்கொண்டேன். வீதியை மேவி, என்னை மூடி வந்த கடலலை என்முன்னால் போய்க் கொண்டிருந்த வானை அப்படியே இழுத்துச் செல்வதைக் கண்டேன். அதற்குள் இருந்தவர்கள் இறங்கி ஒடுவதற்குச் சந்தர்ப்பமே கிடைக்கவில்லை என்று விவரிக்கும் தென்னக்கோன் கண்ட ஹைஏஸ் வானில் கொழும்பு ஆட்டுப்பட்டியைச் சேர்ந்த மூன்று சகோதரர்களின் குடும்பங்கள் கொச்சிமலைப் பள்ளிவாசலைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்கள். ஞாயிறு விடுமுறையைப் பயனுள்ளதாகக் களிக்கச் சென்ற அக்குடும்பத்தைச் சேர்ந்த
172 கந்தையா குணராசா

மூன்று சகோதரர்கள். அவர்களின் மனைவிமார், ஒன்பது பிள்ளைகள் அனைவருக்கும் சுனாமி எமனாக வந்து வாய்த்தது.
சுனாமிக்கடற் கொந்தளிப்பினால் தென்பகுதியில் காலி, மாத்தறை, ஹிக்கடுவை, தங்காலை ஆகிய கடற்கரைப் பிரதேசங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், பல்லாயிரக் கணக்கானோர் வீடுகளையும் உடமைகளையும் இழந்து போயினர். இத்தென் பிரதேசத்தில் காலை 8.45 மணி தொடக்கம் 11 மணி வரை தொடர்ச்சியான கடற்கொந்தளிப்பு ஏற்பட்டது. ‘நான் கடல்வற்றியதையும், பின் குமுறி எழுந்து பேரிரைச்சலோடு பனையை நோக்கி உயர்ந்து வந்ததையும் கண்டேன். முதல் சுனாமித் தாக்கம் சரியாகக் காலை 8.59 மணிக்கு ஹிக்கடுவையைத் தாக்கியது. முழுச் சேற்றுக்கரிய நீரலை 40 நிமிடங்களுக்குப் பின்னர் இரண்டாவது கடலலை தாக்கியது. பின்னர் 1 LDGØof 05 நிமிடங்களுக்குப் பின்னர் மூன்றாவது கொந்தளிப்பு ஏற்பட்டது. பின்னர் நான்காவது கடற் கொந்தளிப்பு 20 நிமிடங்களுக்குப் பின்னர் ஏற்பட்டது. சுனாமியின் ஆக்கிரோசமும், உயரமும், நீரின் நிறமும் படிப்படியாகக் குறைந்து வருவதைக் கண்டேன். ’ என்கிறார் வசதியான மாடிப்படிகளில் மாறிமாறி ஏறிக் கவனித்த ஆசிரியர் ஒருவர்.
முதல் நாளே மாத்தறையில் 254 சடலங்களும், காலியில் 260 சடலங்களும், தங்காலையில் 104 சடலங்களும், அம்பாந்தோட்டையில் 74 சடலங்களும், வெலிக்கந்தையில் 115 சடலங்களும் பொறுக்கி எடுக்கப்பட்டன. ஹிக்கடுவை பிரதேசத்தில் தெல்வத்தைக்கு அருகில் சுனாமியால் அள்ளிச் செல்லப்பட்ட புகையிரதத்தில் பயணப்பட்டவர்களுக்கு நிகழ்ந்த இச் சம்பவம் மறக்கமுடியாதது. இதில் பயணப்பட்டவர்களில் 1126 பேரின் சடலங்கள் காலி காரப்பிட்டிய வைத்தியசாலையில் குவிக்கப்பட்டன. அச்சடலங்கள் பலவற்றில் விரல்கள், கைகள் என்பனவற்றை வெட்டி ஈவிரக்கமில்லாத திருடர்கள் நகைகளைக் கொள்ளையிட்டுள்ளனர். சுமார் 2000 பயணிகளுடன் கொழும்பிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த புகையிரதம் கடற்கொந்தளிப்பில் அகப்பட்டு கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இரு பெட்டிகள் ஹலாவத்தை என்ற இடத்தில் சரிந்து வீழ்த்தப்பட்டிருந்தன. ஐந்து புகையிரதப் பெட்டிகளைக் கடல் அடித்துச் சென்று விட்டது. சுனாமி அழித்த மூன்றாம் நாள்வரை பயணிகளில் 900 பேருடைய சடலங்கள் பொறுக்கி எடுக்கப்பட்டுள்ளன. 达
இந்தப் புகையிரதப் பயணத்தில் யாழ்ப்பாண மாநகரசபையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் திரு. ஜீவநாதனின் குடும்பம் அடங்கும். அவரும் அவர் மனைவிமார்களும், தந்தையும், அவரது சகோதரியும் அவரது பிள்ளைகளும் கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்குப் பயணப்பட்டபோது அந்த அனர்த்தம் நிகழ்ந்து போனது. உதயன் மார்க் அன்ரனிக்கு அவர் தரும் பேட்டி நெஞ்சை நெகிழ்விக்கிறது. “26122004 ஞாயிறு காலை 7.10 இற்கு கோட்டைரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கி அந்தப் புகையிரதம் புறப்பட்டது. முதல் நாள் கிறிஸ்மஸ் என்பதால் அன்று விடுமுறை நாளானாலும் புகையிரத வண்டியில் கூட்டம் அலைமோதியது. வழமையாகவே அந்த வழிப் புகையிரதம் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது வழமை. அன்று கூட்டம் மிக அதிகம். இரண்டாம் வகுப்பிலேயே நின்று பயணிக்கும் நிலை மெல்லத் தொடங்கிய பயணம், தெல்வத்த புகையிரத நிலையத்தில் ரயில் நின்ற போது முடியாமலேயே முடிந்து போய்விட்டது”
ሐሳዕIfftዕ 173

Page 96
“எஞ்சினுக்கு அருகில் இருந்த எமது பெட்டி ரயில்வே பிளாட்பாரத்தைக் கடந்து நின்ற சில நிமிடங்களில் கடற்கரையோரப் பக்கமிருந்து பலர் ஒலமிட்டபடி ஓடி வந்தார்கள். நான் மீண்டும் கலவரம் வெடித்து விட்டதோ என நினைத்தேன். சிங்கள மக்கள் சிலர் மக்களை யானை துரத்துவதாகக் கூறினார்கள். நானும் அப்படியென்றே நினைத்தேன். ஜன்னல் வழியே வெளியே பார்த்திருந்த சிலர் கூக்குரல் இட்டபோதுதான் எட்டிப் பார்த்த நான் ஏங்கிப் போனேன், பேரலை ஒன்று பெரும் ஓசையுடன் வந்து பெட்டியில் மோதியது. அலையடித்த வேகத்தில் எமது பெட்டி மட்டும் சரிந்து வீழ்ந்தது. பெட்டி சரிந்தவுடன் சீற்களில் காலை வைத்தபடி ஜன்னல்களில் பிடித்துத் தொங்கிக் கொண்டோம். உள்ளே முழங்காலளவு தண்ணீர். ரயிலின் இருபுறமும் ரயில் நிலையத்தில் நின்றோரும் கடற்கரைப் பக்கமிருந்து ஓடிவந்த பலரும் ரயிலின் மீது ஏறி நின்று கொண்டார்கள். நானும் என் சிறிய மகளையும் பெண்பிள்ளைகள், மருமக்களையும் ஜன்னல் வழியாக மேலே ஏற்றிவிட்டேன். மூத்த மகன் ஜன்னலால் தலையை வெளியே விட்டபடி பார்த்திருந்தார். அந்த நேரம் இரண்டாவது தடவை அலை ரயிலைப் பதம் பார்த்தது. அதோடு, சூழலெங்கும் நீர்மட்டம் உயர்ந்து விட்டது. அவலக்குரல்கள், பிரார்த்தனைகள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. நானும் மரணத்தை நெருங்கி விட்டதை உணர்ந்தேன். 3 ஆவது அலை வீச்சு எம்மை நெருங்கும் நேரம். என்மனைவி தன்மரணத்தை உறுதி செய்தவளாக, பிள்ளைகளைக் காப்பாற்றும்படி என்னை மேலே தள்ளினாள். மூன்றாவது அலை அறைவோடு எல்லாமே மூழ்கிப் போனது. சிலநிமிட நேரம் என்ன நடந்ததென்று எனக்கு ஞாபகமில்லை. நினைவை நான் உணரத்தொடங்கியபோது ஒரு மரத்தைக் கட்டி அணைக்க நான் பேராடிக் கொண்டிருந்தேன். அதே மரத்தை மறுபுறத்தில் கட்டிப்பிடிக்க ஒருவர் (சிங்களவர்) போராடிக் கொண்டிருந்தார். அவர் தோளில் ஒரு குழந்தை. அதை அணைத்தபடி இருந்தார். நான் மரத்தைப் பிடிப்பது அவருக்கு இடைஞ்சலாகவும் அவர் பிடிப்பது எனக்கு இடைஞ்சலாகவும் இருந்தது. இந்தக் குழந்தையைக் காப்பாற்ற என்னைப் பிடிக்க விடுங்கள் என அவர் என்னிடம் கெஞ்சினார். அதே நேரம் சடுதியாக ஒரு கையால் மரத்தையும் மறுகையால் அவரது கரத்தையும் பிடித்துக் கொண்டேன். அந்த மரத்தின் அருகில் ஒரு வீடு இருந்தது. அதன் கூரை அந்த மரத்தில் ஏறக்கூடிய உயரத்தில் இருந்தது. நீரின் ஒட்ட வேகம் சற்றுக் குறைந்ததும் அந்தச் சிங்களவர் என்னிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு வீட்டின் கூரையில் ஏறிக்கொண்டார். நானும் சிரமப்பட்டு மரத்திலேறிக் கூரையிலேறியபோது முகட்டில் என்பிள்ளை இருப்பதைக் கண்டேன். என் மூத்தமகளையும் மூத்த மருமகனையும் காணவில்லை. அதிசயமும் மகிழ்ச்சியும் மேலிடப் பிள்ளைகளிடம் சென்று எப்படி வந்தீர்கள், அண்ணாமார் எங்கே? எனக்கேட்டேன்” இது ஜீவானந்தனின் குரல். மூன்றாவது அலை வீச்சுடன் ரயில் பெட்டிகள் மிதக்கத் தொடங்கி விட்டன. இவர்கள் ஏறி அமர்ந்திருந்த பெட்டியும் மிதந்து வந்தபோது அந்த வீட்டின் சுவரில் மோதி நின்றிருக்கிறது. சுவரின் அருகே இருந்த மலசல கூட பிளாற்றில் குதித்து கூரை மீது பலரும் ஏறியிருக்கிறார்கள். ஜீவநாதனது மூத்த மகன் நிரோஜன் தன் தம்பி, தங்கைகளையும் இளைய மச்சானையும் கூரைமீது ஏற்றியிருக்கிறான். தன் உறவுகளைக் காப்பாற்றிக் கூரையேற்றிய அந்த உறுதி மிக்க சிறுவன் தான் ஏற
174 கந்தையா குனராசா

முற்படும் போது சன நெரிசலில் சிக்கி கீழே தண்ணீரில் வீழ்ந்திருக்கிறான். அலையின் வேகம் அந்த சிறுவனையும் அள்ளிச் சென்று விட்டது. காலை 9.30 மணிக்கு முதல் அலையை சந்தித்தபின் இவர்கள் கூரையில் சந்தித்தபோது நேரம் 12.30 ஐக் கடந்து விட்டது. இதில் வேடிக்கை என்னவெனில், முதல்அலை அடித்து மூன்றாவது அலை அடிக்கும் வரை சுமார் 2 மணிநேர இடைவெளி இருந்திருக்கிறது. அது வரையும் அந்த மக்களை மீட்க எவரும் எதுவும் செய்யவில்லை என்பது தான் பெரிய சோகம். “எங்கட அண்ணா தண்ணீரில் விழுந்ததை நாங்கள் பார்த்தனாங்கள், எங்களால அவரைக் காப்பாற்ற'ஏலாது போய்விட்டது”என்று அந்த விபரீத நிகழ்வின் தாக்கத்தை இன்றும் உணர முடியாத அந்தப் பிஞ்சுத் தங்கைகள் கூறுகிறார்கள். கண்முன்னே அண்ணனைப் பறிகொடுத்த அதிர்ச்சி பிள்ளைகளை அழச் செய்திருக்கிறது. தேற்றுவதற்கும் தேறுவதற்கும் வழியின்றித் தவித்திருக்கிறார் ஜீவநாதன் அந்தக் கூரையில் அவர்கள் மட்டுமல்ல இன்னும் அதிகம்பேர் இருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியும் தன் கணவனைப் பறிகொடுத்து விட்டுக் கதறிக் கொண்டிருந்தார். சிலர் அடுத்த அலை வரும் முன் அங்கிருந்து சென்றுவிட வேண்டும். என்ற அவசரத்தில் கீழே குதித்தபோது வெள்ளத்தில் அள்ளுண்டு சென்றனர். ஒரு ஓட்டைக்கழற்றி வீட்டினுள் பார்த்தபோது வீட்டின் சுவரின் ஓட்டைக்கல் அளவிற்கு வெள்ளம் நின்றிருந்தது. இதுவரை ஜீவநாதனது மனைவியோ, தங்கையோ, தந்தையோ தங்கையின் மூத்த மகளோ கண்ணில் படவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது.
நேரம் பிற்பகல் 3ஐக் கடந்துவிட்டது. கூரையில் இருந்த சனக்கூட்டம் வெகுவாகக் குறைந்து விட்டது. அழுது குளறிக்கொண்டிருந்த அந்த வெள்ளைக்கார பெண்மணியைக் கூடக் காணவில்லை. இப்பொழுது நானும் எனது பிள்ளைகளும் மட்டுமே கூரையின் மீது இருக்கிறோம். மற்றவர்கள் எப்படிச் சென்றார்கள் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. ஆனால் என் சிறிய பிள்ளைகளைக் கொண்டு அந்தத் தண்ணீரில் இறங்குவதற்கு எனக்கு அச்சமாக இருந்தது. கூரை ஓடு ஒன்றினைக் கழற்றி உள்ளே பார்த்தேன். கதவு நிலையில் மேல் விளிம்பு தெரியுமளவுக்கு வெள்ளம் சற்றுக் குறைந்திருந்தது. என்றாலும் சிறுவர்களை அந்த வெள்ளத்தில் இறக்கி நடத்த முடியாது. செய்வதறியாது நான் திகைத்து நின்றபோது ஒருவர் எம்மை நோக்கி வருவதைக் கண்டேன். வேகமாக நீந்திவந்த அவர் ಫ್ಲಿಂಕ। ரில் மிதந்தபடியே எம்மை நோக்கி மீண்டும் அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாகவும் உடனே அங்கிருந்து வெளியேறி மேட்டுப் பகுதியிலுள்ள விகாரைக்கு வருமாறும், சிங்களத்தில் உரத்துக் கூவினார். பின் வந்த வேகத்திலேயே அங்கிருந்து சென்று விட்டார். என்ன செய்வதென்று புரியாத நிலையில் அவர் நீந்திச் சென்ற திசையை அவதானித்துக் கொண்டேன்.
என்னையும் என்பிள்ளையையும் கீழே இறக்குவதற்கு யாராவது உதவி செய்வார்களா என நாற்புறமும் தேடினேன். தூரத்தில் ஒரு மேடான நிலப்பகுதியில் ஒருவர் நடமாடுவது தெரிந்தது. எமக்கு உதவி செய்யுமாறு சிங்களத்தில் உரத்துக் கத்தினேன்.
அவரோ காணாமற்போன தனது மனைவியையும் பிள்ளைகளையும் தேடுவதாகவும் எங்களுக்கு உதவும் நிலையில் தான் இல்லை என்றும் கூறினார்.
சுனாமி 75

Page 97
பிள்ளைகளை மட்டும் இறக்கிவிட உதவுமாறு மன்றாடி அவரிடம் கேட்டுக்கொண்டேன். அந்த நிலையிலும் மனமிரங்கி அவர் எமக்கு உதவினார். அந்த மனிதரின் உதவியுடன் அவரின் தோளில் கால்வைத்து கீழே இறங்கினோம் எமக்கு உதவிய பின் அவர் தனது உறவுகளை தேடச் சென்று விட்டார்.
“எனது சிறிய மகனை தோளில் ஏற்றியபடி ஏனைய பிள்ளைகளை இறக்கிவிட்டு நீர் மட்டத்தை பரீட்சித்துப் பார்த்தேன். சற்றுத்தூரம் நடந்ததுமே என் கழுத்தளவை நீர் மூடி விட்டது. அதன் பின் நிதானத்துடன் சிந்தித்து செயலாற்றினேன். இடிந்த வீடுகள் கட்டடங்களை மையமாக வைத்து நடக்கத் தொடங்கினோம். நீந்திச் சென்ற நபர் திசையை நினைவில் வைத்தபடி வளைந்து வளைந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை தண்ணீரில் நடந்தோம். சில இடங்களில் உடைந்த கட்டடங்களூடாக நடக்கமுற்பட்ட போது அவற்றின் தரையில் பதிக்கப்பட்டிருந்த மாபிள்களில் கால்கள் வழுக்கின தவறி வீழ்ந்தால் ஓடிக்கொண்டிருக்கும் நீர் என் பிள்ளைகளை இழுத்துச் சென்று விடக்கூடும். ஒருவரை ஒருவர் கைகளில் இறுக்கிப் பிடித்தபடி அணுஅனுவாக நகர்ந்து கொண்டிருந்தோம்”
பின்னால் அடுத்த அலை வந்து தாக்குமோ என்ற அச்சம், முன்னால் தஞ்சமடைவதற்கு ஏதாவது இடம் கிடைக்காதா என்ற ஏக்கம், முன்னாலும் பின்னாலும் மாறிமாறிப் பார்த்தபடி ஜீவநாதனும் ஆறு குழந்தைகளும் ஒரு ஜிவமரண போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரம் ஒரு கிலோ மீற்றர் வரை நகர்ந்து மேட்டு நிலத்திலிருந்த அந்தப் பன்சாலையை (விகாரையை) அவர்கள் அடைந்த போது நேரம் 430 ஐத் தொட்டு விட்டது. காலை 9.30 இற்கு தொடங்கிய அந்த அவல நாடகம் 430 வரை நீடித்த போது ஆண்டவன் மட்டுமே அவர்களுக்கு துணையாக இருந்திருக்கிறான் என்பதைத் தெய்வ நம்பிக்கையில் அதிக நாட்டமில்லாத ஜீவநாதனே ஒப்புக்கொள்கிறார்.
பன்சாலையை அவர்கள் அடைந்தபோது அது சற்று மேடான இடத்தில் இருந்ததால் பலர் அங்கு தஞ்சமடைந்திருந்தார்கள். பன்சாலை நிர்வாகம் ஏற்கனவே. அங்கிருந்து ஓடிவிட்டது. அங்கிருந்தவர்களும் தப்பி ஓடும் நிலையில் இருந்தவர்கள் இல்லை.வயோதிபர்களும் ரயில் விபத்தில் அகப்பட்டு ஆவி அகத்தோ புறத்தோ என்று தெரியாமல் சேடம் இழுத்துக் கொண்டு இருப்பவர்களாகவே இருந்தார்கள். இத்தனை துன்பத்துக்கு மத்தியிலும் அந்தப் பன்சாலையில் ஜீவநாதனுக்கும் பிள்ளைகளுக்கும் ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.
‘மாமா மாமா!’ என்று கூவி அழைத்தபடி ஓடி வந்து அவரை
கட்டியணைத்துக் கொண்டான், ஷாம் என்கின்ற ஷாமுவேல் தேவகுமாரன். ஆம் அங்கு இறந்துவிட்டதாகக் கருதிய மூத்த மருமகனை சந்தித்தார் ஜீவநாதன். ஷாமுக்கு ஆஸ்மா வருத்தம் சிறுவயதிலிருந்தே இருந்திருக்கிறது. அதிலிருந்து மீள்வதற்காக நீச்சல் பயிற்சியை வைத்தியர்கள் சிபாரிசு செய்ய அதனை தன் மகனுக்கு பயிற்றுவித்திருக்கிறார் ஷாமினது தாய் அருள் நேசம். அந்தப் பயிற்சி அந்தச் சிறுவனை காப்பாற்றியிருக்கின்றது. ரயில் பெட்டிமீதிருந்து அச்சிறுவனை அலை அடித்துத் தண்ணீரில் வீழ்த்தியபோது நீந்தி அந்த விகாரைப் பக்கமாகக் கரை ஏறியிருக்கிறான்
ରq:TLD
கந்தையா குணராசா

மூன்றாவது அலை ரயில் பெட்டி மீதிருந்த ஷாமை அடித்துத் தள்ளியபோது பெட்டிக்குள் இருந்த ஷாமின் தாய் ஷாம் ஷாம்’ எனக் கைகளை நீட்டியபடி கத்தியிருக்கிறார். தன்மகனுக்கு என்ன முடிவு நேர்ந்தது என்று அறியாமலேயே இந்த அன்னையின் ஆன்மா அகன்று விட்டது. இந்தச் சம்பவம் அந்தச் சிறுவனுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை சொற்களால் வடிக்க முடியாது.
பன்சாலைக்கு வந்த பிறகு பிள்ளைகள் சோர்வாலும் பசியாலும் வாடி இருப்பதைக் கண்டேன். அந்த நிலையில் அவர்களுக்கு கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை. நாம் கொண்டுவந்த உணவுகள் பணம் எல்லாமே அலை அள்ளிப் போய்விட்டது. அப்போது அங்கிருந்த ஒருவர் சேறு அப்பிய நிலையில் மூன்று சோடாப் போத்தல்கள் வைத்திருப்பதைக் கண்டேன். அதில் ஒன்றை அவரிடம் கேட்டு வாங்கி என் பிள்ளைகளுக்குக் கொடுத்தேன். எங்கு வாங்கினீர்கள் எனக் கேட்டதற்கு எங்கும் வாங்கவில்லை சற்றுத் தூரத்தில் ஒரு கடை உடைந்து கிடக்கிறது. அங்கிருந்து எடுத்து வந்தேன் எனக் கூறினார். அவர் காட்டிய திசையில் சென்று மேலும் சில உணவுப் பொருள்களை எடுத்து வரும் நோக்கோடு நான் புறப்பட்டபோது பிள்ளைகள் என்னைப் போகவிடவில்லை. தண்ணீர் சற்று வடிந்ததும் பிள்ளைகளை பத்திரமாக இருக்குமாறு கூறிவிட்டு கடை இருந்த திசையை நோக்கி நடந்தேன். சற்றுத் தூரத்தில் அந்தக் கடை தெரிந்தது. அலை அந்தக் கடையை அலங்கோலப்படுத்தியிருந்தது. குளிர்சாதனப் பெட்டியொன்று வீதியில் கிடந்தது. அதனைத் திறந்து பார்த்தேன். என்ன அதிர்ஷ்டமோ தெரியவில்லை. எமது பசியைத் தீர்க்கக் கூடியவாறு பொதி செய்யப்பட்ட நிலையில் பாண், பிஸ்கற், தண்ணீர்ப் போத்தல் என்பன அதற்குள் இருந்தன. அவற்றை எடுத்து வந்து பிள்ளைகளிடம் கொடுத்தேன். அரைகுறை மனத்துடன் பசியினால் அவற்றை உண்டோம்.
“விகாரையில் தங்கியிருந்தபோதும் எவரும் அவ்விடத்தை பாதுகாப்பானதெனக் கருதவில்லை. விரைவில் அவ்விடத்தை விட்டுச் சென்று விட வேண்டுமென்றே விரும்பினார்கள்.
“எப்படி வெளியேறலாம் என நாம் சிந்தித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த உதவி அவர்களுக்கு கிட்டியது. சுமார் பத்து வரையான சுழி ஒடுபவர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் விகாரைக்கும் அதிலிருந்து சுமார் 1 கிலோமீற்றர் தூரத்திலிருந்த மேட்டுத் தரைப்பகுதி ஒன்றிற்கும் இடையே கவிற்றுப் பிணைப்பை ஏற்படுத்தினார்கள். குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களிைநாம் மீட்டுச் செல்வதாகவும் ஏனையோர் அந்தக் கயிற்றைப் பிடித்தபடி வருமாறும் கூறினார்கள். என்பிள்ளைகளை தோள்களில் ஏற்றியபடி கயிற்றைப் பிடித்துபடி அவர்களைப் பின் தொடர்ந்தேன். நெஞ்சு மட்டம் வரை தண்ணீர், ஓடும் திசையில் எம்மையும் இழுத்தது. கயிற்றை விட்டால் கடலுக்குத் தான் செல்லவேண்டும். அதிகம் அதிகம் பேர் பிடித்ததால் கயிறும் பதியத் தொடங்கியது இடையிடையே தெரிந்த மேடான இடங்களில் சிங்கள மக்கள் பலர் அந்தக் கயிற்றை தூக்கிப் பிடித்து, இழுத்துப்பிடித்து எம்மை காப்பாற்றும் முயற்சியில் போராடிக்கொண்டிருந்தார்கள். நாம் சொன்ன மாதிரியே விகாரையில் இருந்த அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். இயலாதோரை அந்தச் சுழியோடிகள் மீட்டுக் கொண்டிருந்தனர். நீண்டதூர கயிற்றுப் பயணம் முடிந்தபோது சோர்வு எம்மை வாட்டியது. நாம் கரையை எட்டியபோது ஒரு கடையைக் கண்டேன். அங்கும் ஒரு
ሐኅዕIጠ!!ዕ 177

Page 98
பெண்மணி தனது கணவரைத் தொலைத்துவிட்டு கதறிக் கொண்டிருந்தார் (கணவர் ஒரு டாக்டர்) கடைக்காரரிடம் இடங்களை விசாரித்துக் கொண்டு ஒருமைல் தூரம் நடந்திருப்போம். இப்போது தான் வீதியில் வாகனங்களைக் கண்டோம். வீதியில் வந்த வாகனங்களை மறித்து, அதில் ஒன்றில் ஏறி ஒரு வழியாக அந்த வீதியில் 6 மைல் பயணித்து மீட்டியா கொட பொலீஸ் நிலையத்தில் இறங்கினோம் . பொலீஸ் நிலைய வாசலில் தாடி வைத்த ஒரு மனிதர் (முஸ்லிம் என்றே நினைக்கிறேன்) எம்முடன் கதைத்து ஆறுதல் கூறினார். அங்கிருந்து தென்னையில் இளநீர் பறித்து எமக்குத் தந்தார். இரவு 730 மணியளவில் பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் டுமிந்தவைச் சந்தித்தேன். எங்கள் நிலைமையைச் சொல்லி நான்கு பேரைக் காணவில்லை, முறைப்பாட்டை பதிவு செய்யுங்கள் எனக் கூறினேன். அவர் என்னைச் சற்று பொறுமை காக்குமாறு கேட்டுக்கொண்டார். பெரும் மீட்புப் பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் காலையில் முறைப் பாட்டை ஏற்கிறோம். அதுவரை என் வீட்டிற்குச் சென்று ஓய்வெடுங்கள் என்று கூறினார். பின் வீட்டிற்குச் சென்று எம்மை அழைத்து வர தன் துணைவியாரை அனுப்பினார். திருமதி டுமிந்த எம்மைத் தம் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பொலீஸ் நிலையத்திற்கு பின் புறமாக இருந்த அவரது வீட்டிற்குச் சென்றோம்.
“ஜீவநாதனது குடும்பத்துடன் சுனாமி அனர்த்தத்தில் சிக்கிய ஒரு ஜப்பானியரையும் திருமதி டுமிந்த தமது இல்லத்தில் தங்கவைத்தார். ஜீவநாதனது பிள்ளைகளை பரிவுடன் கவனித்துக் கொண்டிருக்கிறார். அவர்களுக்கு புதிய ஆடைகளை வழங்கியிருக்கிறார். இந்த அனுபவங்களை நாம் ஜீவநாதனோடு பகிர்ந்து கொண்ட தருணத்தில் தாம் இப்போதும் இன்ஸ்பெக்டர் டுமிந்தாவின் சேர்ட்டை அணிந்திருப்பதாக கூறினார். அன்று நள்ளிரவு அடக்க முடியாத சோகத்தில் ஜீவநாதன் எழும்பியிருந்து அழுது கொண்டிருந்த போது டுமிந்த தம்பதியினர் அவருக்கு ஆறுதல் கூறியிருக்கின்றனர்.
“அடுத்த நாள் விடிந்ததும் அங்கிருந்து 6 கிலோமீற்றர் தொலைவிலுள்ள வட்டபொல வைத்தியசாலையில் உடல்கள் பல வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு உங்கள் உறவினர்களின் சடலங்கள் உள்ளனவா? எனக் கண்டறியும் படியும் இன்ஸ்பெக்டர் டுமிந்த கூறிவிட்டுச் சென்று விட்டார்.
“வீதியில் வந்த ரிப்பர் ஒன்றை மறித்து நானும் மருமகனும் வட்டபொல வைத்தியசாலைக்குச் சென்றோம். வைத்தியசாலைக்குள் சென்றதும் எனக்குத் தலை சுற்றியது. வைத்தியசாலை முழுவதும் பிணங்கள். எங்கு பார்த்தாலும், எல்லா திசைகளிலும், இதற்குள் தான் நான் என் மனைவி, தங்கை, அப்பா, மகன் இவர்களைத் தேட வேண்டும். கிட்டதட்ட ஆறாயிரம் உடல்கள் அங்கு கிடப்பதாகக் கூறினர். இது தவிர புதிதாக கன்டர்களில் கொண்டு வந்து உடல்கள் பறித்துக் கொண்டிருந்தார்கள். உடல்கள் பல சிதைந்திருந்ததால் ஆடை அடையாளங்களை மட்டுமே கொண்டு தேடவேண்டிய நிலை. மருமகனை வைத்தியசாலை வாயிலில் நிறுத்தி விட்டுத் தேடினேன். காலை 930 இல் இருந்து மாலை 3.00 மணி வரை ஒய்வின்றித் தேடினேன். என் உறவுகளின் உடல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. வாசலில் மருமகன் தனியே காத்திருந்தான். 3 மணியோடு தேடுதல்ை முடித்துக்கொண்டு டுமிந்தவின் வீட்டிற்கு
78 கந்தையா குனராசா

திரும்பினேன். இரவு திருமலையின் இருந்த எனது சகோதரனை மீரிய கொடைக்கு வருமாறு தகவல் அனுப்பிவிட்டு விடியும் வரை காத்திருந்தேன். அடுத்த நாள் அதிகாலை வாகனத்துடன் அவர் வந்தார். அன்று மீண்டும் இருவரும் வட்டபொல வைத்தியசாலைக்குச் சென்றோம். அன்றும் 1.30 மணிவரை தேடுதல், எதுவும் கிடைக்கவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு வாகனத்தைச் செலுத்துமாறு சகோதரரிடம் கேட்டேன். அங்கு நாம் சென்றபோது வெள்ளம் வடிந்திருந்தது. விகாரையிலிருந்து நாம்தப்பி வந்தபோது கட்டியிருந்த கயிறு அப்படியே இருந்தது. நாம் ஏறியிருந்த வீட்டின் கூரை ஓடுகள் பல விழுந்திருந்தன. செல்லும் வழியெங்கும் பலரதும் பைகள், ஆடைகள், பணப்பைகள்,என பல சிதறிக்கிடந்தன. ஆனால் என் உறவுகளின் எச்சங்களை மட்டும் காணவில்லை. ரயில் பெட்டி அடித்துச் செல்லப்பட்ட வழியே அலை முட்டும் கரைமட்டும் சென்று தேடினேன். கிடைக்கவில்லை அவர்கள்.” ஹிக்கடுவப் புகையிரதப் பயணத்தின் பயங்கர அனுபவத்தைப் பெற்ற ஒருவர் முன்னாள் கோண்டாவில் இராமகிருஷ்ண வித்தியாலய அதிபர் வேலுப்பிள்ளை சிவராசா ஆவார். அவருடைய அந்தப்பயங்கரமான கணப்பொழுதை உதயனில் சுயர்சன் விபரிக்கிறார்.
‘26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாத்தறை நோக்கி ரயில் புறப்பட்டது. பயணிகள் கூட்டம் வழமையை விட அதிகமாக இருந்தது. அதில் நாங்கள் 2 ஆம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருக்க ரயிலின் வழமையான தாள ஒலி ஒலிக்கத் தொடங்கியது. எழில் நிறைந்த இயற்கைக் காட்சிகளை ரசிப்பதற்காக யன்னல் ஒரமாய் பார்வையைத் திருப்பினேன். கரையோரப் புகையிரதத்தின் வேகம் விடவில்லை.
ஹிக்கடுவவிற்கு போக முதல் தெல்வத்தை புகையிரத நிலையத்தில் ரயில் நின்றது. திடீரென சனங்கள் எல்லோரும் பெரிதாக ஓலமிட்டு தமது இஷ்ட தெய்வங்களை வேண்டி தலையிலடித்துக் கதறி அழுதார்கள். ரயிலைச் சூழ ஒரே வெள்ளக் காட்சி, பாலம் உடைந்து ரயிலின் முன்பக்க பெட்டிகள் விழுந்து விட்டதாக நினைத்தோம். அப்போது ரயிலின் கீழிருந்து தண்ணீர் படிப்படியாக பெட்டியை நிறைத்துக் கொண்டிருந்தது. ரயிலின் இடது பக்கத்தில் இருந்த நாம் வலது பக்கத்திற்கு நகர்ந்து வந்தோம். யன்னலின் ஊடாக வெளியேற முற்பட்டவேளை பேரலை ஒன்று பெரும் ஓசையுடன் உயர எழுந்து வந்து ரயில் இபட்டியுடன் பலமாக மோதியது. அந்தத் தாக்குதலால் ரயிலின் உள்ளிருந்த அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். அலையடிப்புக்கு மத்தியிலும் என்னுடன் கூட இருந்த நண்பரான மருத்துவபீட மாணவன் கஜன் பியசேனன் ஜன்னல் ஊடாக வெளியே சென்று உள்ளிருந்தவர்களை வெளியே மீட்டெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நானும் வெளியே செல்ல முற்பட்டவேளை என்னால் உடனே முடியவில்லை. அப்போது ரயிலின் யன்னல் ஊடாகக் கடல் நீர் வந்து கொண்டிருந்தது. என்னால் எனது தலையைக் கூட நிமிர்த்த முடியவில்லை. ஏனெனில், எனது கழுத்தளவுக்கு நீர் நின்றது. அப்படி இருந்தும் எனது நண்பரின் உதவியுடன் வெளியேறி ரயில் பெட்டி மீது ஏறி நின்றேன். ரயிலைச் சூழ உள்ள பகுதியெங்கும் கடல் நீர்மட்டம் உயர்வடைவதுடன் ஒடிக்கொண்டிருந்தது. தொடர்ந்தும் அவ்விடத்தில் நிற்பது உசிதமல்ல என்பதை உணர்ந்து அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினோம்.
4ሓንI!!ዕ 179

Page 99
சிறிய வயதில் எனக்குச் சுமாராக நீந்தத் தெரியும். அந்தத் துணிவில் நானும் எனது நண்பருமாகச் சரிந்து விழுந்த மரங்களை விலக்கியபடி நகர்ந்தோம். அப்போது சிறுவன் ஒருவன் மரத்தைக் கட்டிப்பிடித்தபடி உதவி கோரி “என்னை யாரெண்டாலும் காப்பாற்ற மாட்டீங்களோ? என்று கூக்குரலிட்டுக் கொண்டிருந்தான். ஏனென்றால், அவ்விடத்தில் வரவர நீர்மட்டம் உயர்ந்து கொண்டிருந்தது.
எம்மையெல்லாம் ஆபத்துச் சூழ்ந்திருந்தவேளை சிறுவனையும் காப்பாற்ற வேண்டும் என நினைத்து உடனடியாக விரைந்து சென்று அவனையும் மீட்டெடுத்தோம். பின்னர் அவ்விடத்தில் இருந்து நிமிர்ந்து பார்த்தபோது சில மீற்றர் தூரத்தில் உள்ள வீட்டின் பிளாட் கூரை மீது பலர் தாவி ஏறிக்கொண்டிருப்பதைக் கண்டு அங்கு செல்ல ஒரிரு அடி எடுத்து வைத்தோம். அப்போது அதில் ஏறி நின்றவர்கள் பாரம் தாங்காது கூரை இடிந்து விழுகிறது நீங்கள் இங்கு வரவேண்டாம் என உரத்துக் கதறினார்கள். நாங்கள் அவ்விடத்தை விட்டு விலகி அடுத்த பக்கமாக நகர்ந்தோம். அப்போது இன்னொரு வீட்டின் கூரை மீது ஏறி நின்றவர்கள் “அங்கே போகாதீர்கள் அங்கே கங்கை ஒடுகிறது. அது மிகவும் ஆழமான பகுதி” என்று அவர்களும் போகவிடாது தடுத்தார்கள். நான் நினைக்கிறேன் அதி ஜின் கங்கையாக இருக்க வேண்டும் என்று)
இந்த நிலையில் வாழ்வா சாவா என்ற போராட்டம் மிகவும் இக்கட்டான நிலை. மிகப்பெரிய துன்பமாக இருந்தது. இருந்தும் நாங்கள் மனதைத் தளரவிடவில்லை. நானும் எனது நண்பரும் சிறுவனுமாகச் சேர்ந்து இன்னொரு வீட்டின் கூரைமீது ஏறிநின்றோம். இனி நாம் உயிர் பிழைப்பதாயின் மீட்பு நடவடிக்கையின் மூலம் தான் பிழைக்கமுடியும் என நினைத்தோம். அந்த வேளையில் கடற்கரையோரமாகக் ஹெலிக்கொப்டர் ஒன்று பறந்து சென்றது. நாம் நினைத்தோம் ஒருவேளை இந்தத் தகவல் அறிந்துதான் ஹெலி எங்களை மீட்க வருகுது என்று. ஆனால், அது தன்பாட்டிலே தனது பயணத்திசை நோக்கியே பறந்து சென்றது. இத்தனைக்கும் இலங்கையின் பிற கரையோரப் பகுதிகளை “சுனாமி” அலை தாக்கியது எமக்குத் தெரியாது.
சற்றுநேரத்தில் கண்ணுக்கு எட்டிய தூரத்தில் பெளத்த விகாரை ஒன்று தென்பட்டது. வீட்டின் கூரையில் இருந்து இறங்கி நீரை விலக்கியபடி மெல்ல மெல்ல நகர்ந்தோம். ஆனால், அப்போது நீருக்கடியில் (காலுக்குகீழ் முட்கம்பிகள், போத்தல் ஒடுகள், முட்கள் என்பன இருந்தன. அவை எமது காலைப் பதம் பார்த்தன. இந்தத் துயரத்திற்கு மத்தியிலும் நம்பிக்கை எம்மோடு ஒட்டியிருந்தது. விகாரைக்குள் சென்றபோது அங்கே பலர் காயங்களுடன் பயம் நீடித்த நிலையில் உள்ளாடைகளுடன் நிற்கும் துன்பகரமான நிலையைக் கண்டேன். கடல் அலையிடம் இருந்து தப்பியோடி வருகையில் ஆடைகள் கிழிந்தும் சின்னாபின்னப்பட்டும் இருந்ததை அவதானிக்க முடிந்தது. என்னுடன் கூடவந்த மருத்துவ பீட மாணவன் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்தார்.
பெளத்த விகாரையைச் சுற்றியும் ஒரே வெள்ளக்காடு. அப்போது சுவீடனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணியான பெண்ணொருவர் தேம்பித் தேம்பி அழுதுகொண்டிருந்தார்.
18O கந்தையா குனராசா

அவர் மொழிப் பிரச்சனையால்னிபெருடனும் கதைக்க முடியாத நிலை. இருக்கும் இடமும் பரீட்சயமில்லாத இடம். அவரை ஆற்றுப் படுத்துவதற்காக அருகில் சென்றபோது தான் கணவருடன் வந்ததாகவும் அவரை அலையடித்து இழுத்துக் கொண்டு சென்று விட்டதாகவும் அவரில்லாமல் தற்போதைய நிலையில் தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்றும் கூறினார். அவரிடம் இருந்து அறிந்ததில் இருவருமே நன்றாக நீந்தக் கூடியவர்கள். அத்தோடு அவரது கணவர் சுவீடன் நாட்டு கடற்படை வீரராக கடமையாற்றியிருக்கின்றார். அவர் தனது பயிற்சிக் காலங்களில் திருகோணமலை இயற்கைத் துறைமுகத்துக்கெல்லாம் ஏற்கனவே, வந்து போயிருக்கின்றார்.
அந்தப் பெண்மணியை ஒருவாறு தேற்றி கொழும்புக்கு கூட்டிச் செல்ல முடிவெடுத்தோம். அவரும் அதற்கு இணங்கினார். அந்த வேளையில் அப்பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு இருந்த ஒரே பாதையில் இருந்த பாலம் அலையின் தாக்குதலுக்கு உள்ளாகி உடைந்து விழுந்து விட்டது. உடனே அங்கிருந்த கிராமத்து மக்கள் மூங்கில் தடிகளில் பலகைகளைப் பிணைத்தும், கயிறுகளின் மூலமும் ஒரு தற்காலிக கடப்புப் பாலத்தை உருவாக்கினார்கள். பின்னர் அங்கிருந்து ஒருவாறு வெளியேறினோம். ஆனால், நாம் காப்பாற்றிய சிறுவனை அவ்விடத்தில் உள்ள விகாரையில் விட்டுவிட்டு வந்தோம். (பின்னர் அவனை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம் நானும், எனது நண்பரும், சுவீடன் நாட்டுப் பெண்மணியுமாக பல மைல் தூரம் நடந்து வந்து கருங்கல் ஏற்றிக்கொண்டு சென்ற கன்ரர் வாகனத்தில் குறித்த சில மைல் தூரம் கடந்து வந்தோம். பின்னர் கன்ரர் வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு கடையில் ஒரு சோடாவும் பணிசும் வாங்கி ஓரளவுக்கு எமது பசியைத் தணித்து விட்டு, அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பஸ்சை மறித்து அதில் ஏறிப் பயணித்தோம். ஒரு கட்டத்தில் பஸ்சின் ரயர் காற்றுப் போய்விட்டது. எல்லோரும் இறங்கி நடந்தார்கள். வெள்ளைக்காரப் பெண்மணி நடப்பதற்குப் பெரிதும் சிரமப்பட்டார். ஏனெனில் எங்களது பாதங்களிலும் காயங்கள் ஏற்பட்டிருந்தன. உடனே வீதியோரமாக இருந்த கடையில் அவருக்கு செருப்பொன்றை வாங்கி கொடுத்துவிட்டு நடக்கத் தொடங்கினோம். அப்போது மருத்துவ பீட மாணவனது கால் பாதத்தில் இருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டிருப்பதை அவதானித்தேன். உடனே என்னிடம் இருந்த கைலேஞ்சியைக் கொடுத்து இரத்தம் வடியாமல் இருக்கக் கட்டுப்போட்டோம். மீண்டும் எமது பயணத்தைக் கைவிடவில்லை. சிறிது தூரம் சென்ற வேளை ஓர் எதிர்பாராத அதிசயம் ஒன்று நிகழ்ந்தது. .
சுவீடன் நாட்டுப் பெண்மணியின் கணவர் காயங்களுடன் ஆடைகள் கிழிந்த நிலையில் நடந்துவந்து கொண்டிருந்தார். இருவரது விழிகளிலும் கண்ணீர் மல்கக் கட்டிப்பிடித்து முத்தமிட்டுக் கொண்ட காட்சி உணர்ச்சி பூர்வமாக இருந்தது. சினிமாவிலும் கூட ஆழ்ந்த துயரத்திலும் இப்படி ஓர் உணர்வு பூர்வமான யதார்த்தக் காட்சியை நான் பார்த்ததில்லை. அந்த வேளைதான், சுவீடன் நாட்டுப் பெண்மணியின் முகத்தில் புன்னகையைக் கண்டேன். அவர் முன்னர் தான் அழுது கொண்டதற்கு என்னிடம் மன்னிப்புக் கோரினார். பின்னர் அங்கிருந்து கொழும்பு சென்று அவர்களை ஒரு ஹோட்டலில் தங்க வைப்பதற்கு ஒழுங்கு செய்தோம். அதற்கு அவர்கள் இணங்கவில்லை. கடலில் இருந்து 100 மைலுக்கு அப்பால் உள்ள ஹோட்டலில் தங்க
சுனாமி 181

Page 100
இடம் கேட்டார்கள். அந்த அளவிற்கு அவர்கள் பயந்துபோய் இருந்தார்கள். மறுநாள் அவர்கள் விமானம் மூலம் சுவீடன் நாட்டுக்குச் செல்ல, நான் யாழ்ப்பாணம் திரும்பினேன்.”
தென்னிலங்கையில் கரையோர மாவட்டமான மாத்தறை சுனாமியால் பெரும் அழிவினை எதிர்கொண்டது. சம்பவத்தினத்தன்று மட்டும் 355 வரையிலான சடலங்கள் மாத்தறைக் கரையோரத்தில் சேர்க்கப்பட்டு, மாத்தறை ஆஸ்பத்திரியின் நுழைவாயில் வரிசையாக வளர்த்தப்பட்டன. உற்றார் உறவினர் அங்கு குழுமிக் கதறியழுதனர். எங்கும் அழுகையும் புலம்பல்களுமே எழுந்தன. நான் அதிகாலையிலேயே புறப்பட்டு ஒரு சாவீட்டிற்குத் தெனியாவிற்குச் சென்றபோது என்வீடு, பிள்ளைகள் எல்லாம் இருந்தன. திரும்பி வந்தபோது என்வீடு நிர்மூலமாகிக்கிடந்தது. என் குடும்பமே சுனாமியால் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இந்தப் பிணக் குவியலிடையே அவர்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இது மாத்தறை வைத்தியசாலை முன் வளர்த்தப்பட்டிருந்த சடலங்களிடையே தன்னுறவுகளைத் தேடிக் கொண்டிருந்தவரின் புலம்பல். அவ்விடத்தில் கடல் காவு கொண்டதன் ஒரு வயது மகளை ஒரு வெளிநாட்டு வெள்ளையர் தேடிக் கொண்டிருந்தார். ஓரிடத்தில் வெளிநாட்டினரின் 20 வரையிலான சடலங்கள் வளர்த்தப்பட்டிருந்தன. அதற்குள் அவரது ஒன்பது வயது மகளும் ஆறாத்துயரில் சடலமாக இருந்தாள். ஓவென வாய்விட்டு அவர் அழுதார். அங்கு வளர்த்தப்பட்டிருந்த சடலங்களில் 160 பேர் அடையாளம் காணாமலே புதைக்கப்பட்டனர். - சி எஸ். காந்தி
“மாத்தறையில் பெரமுல்ல தொட்டமுன்ன ஆகிய கரையோரப் பகுதிகள் அதிகம் பாதிப்புற்றுள்ளன. மாத்தறை, டச்சுக் கோட்டைக்குள் எங்கள் மாடி வீடு இருந்தது. இராச்சத அலைகள் கோட்டைக்குள் பிரவேசித்ததும் வீட்டுக் கதவை மூடிவிட்டு மாடிக்குத் தப்பி ஓடி ஏறினோம். எனது மூத்த மகளால் சடுதியாக ஏறிவிடமுடியவில்லை. அதற்குள் வீட்டின் கதவோடு மோதிய அலை, உள்ளே புகுந்தது. வீட்டின் கீழ்ப்பகுதி வெள்ளக் காடாகியது. அலை வற்றியபின் கீழே இறங்கி வந்தோம். கொடுமை. என் மூத்த மகள் அங்கு பிணமாகக் கிடந்தாள். கருநிறச் சேற்றுக் குவியலுள் அவள் சடலமாகக் கிடந்தாள். 'எனது வீடு வாசல் சொத்துகள் அனைத்தையும் இழந்தேன். பரவாயில்லை. தேடிக் கொள்ளலாம். ஆனால் எனது இரு புதல்விகளையும் தாயையும் சகோதரியையும் இராட்சத அலைகள் அள்ளிக் கொண்டு போவதை ஒரு தென்னை மரத்தைக் கட்டிப் பிடித்தபடி நான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவர்கள் உயிருக்காக அவஸ்தைப்பட்டபடி கடலோடு போனார்கள். அதனைப் பார்த்த பாவி நான். இவ்வாறு பல சோகக் கதைகள் எங்கும் இருந்தன.
மாத்தறையில் ஜனத் ஜெயசூரியா விளையாட்டு மைதானம் சீரழிந்து போயிருந்தது. பஸ்வண்டிகள் புரட்டி விடப்பட்டு கவிழ்ந்து சரிந்து கிடந்தன. அநேக கடைகளும் கட்டிடங்களும் பாழடைந்த கோலத்தில் காட்சியளித்தன. மாத்தறைக் கோட்டையைச் சுற்றியிருந்த பல வீதிகளை இருந்தவிடம் தெரியாமல் சுனாமி அழித்திருந்தது. - சி. எஸ். காந்தி
182 கந்தையா குணராசா

சுனாமிப் பேரலை மாத்தறைச் சிறைச்சாலையையும் தாக்கியது. அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த நானூற்றியம்பது வரையிலான கைதிகள் அலைக்குள் அகப்பட்டுக் கொண்டனர். அவர்களில் பெரும்பாலோர் திக்குத் திசை தெரியாது தப்பி ஓடிவிட்டனர். அவர்களில் பலர் பின்னர் திரும்பிவந்து சரணடைந்துள்ளனர். மாத்தறை, அம்பலாங்கொடை, பட்டிப்பொலை ஆகியவிடங்களில் இரு குழிகளில் 500 க்கு மேற்பட்ட சடலங்கள் புதைக்கப்பட்டன. காலி, கோட்டையைப் பார்க்கச் சென்ற 20 மாணவர்கள் 18 பேர் கடல் கொந்தளிப்பினால் கவர்ந்து செல்லப்பட்டனர்.
மாத்தறை ஆஸ்பத்திரியில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. இடிபாடுகளிலிருந்து மீட்டெடுக்கப்பட்டு வைத்தியசாலைப் பிண அறையில் வைக்கப்பட்டிருந்த உதிகா என்ற பெண், திடீரென எழுந்து அமர்ந்த சம்பவம். ‘நாங்கள் மாத்தறை கமுறுமுலைப் பிரதேசத்தில் வசித்து வருகின்றோம். சுனாமி பொங்கியபோது நான் ஒரு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு இரு பிள்ளைகளைக் கையில் பிடித்தபடி ஒடத் தயாரானபோது கிளம்பிய பேரலை எங்களை மூடியது. என் பிள்ளைகளைப் பறித்து எடுத்துச் சென்றது. நான் சுயநினைவிழந்தேன். சுய உணர்வு வந்து பார்த்தபோது நான் வெள்ளைப் புடவையால் மூடப்பட்டு தரையில் பிணங்களுக்கிடையே வளர்த்தப்பட்டிருந்ததைக் கண்டு கூச்சலிட்டுக் கத்தினேன். என் கூச்சலைக் கண்டு அச்சத்தில் ஆஸ்பத்திரி ஊழியர்கள் பேயென ஓடுவதைக் கண்டேன்.’ என்கிறார் உதிகா (38) தமிழ்நாட்டில் இவ்வாறாக இரு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
11.8 சுனாமி அனர்த்தத்தின் பின்.
1. மீட்புப் பணிகளிலும் நிவாரணப் பணிகளிலும் மிக வேகமாக வடக்குகிழக்கில் ஈடுபட்டவர்கள் தமிழீழப் புனர்வாழ்வுக் கழகத்தினராவர். மாவட்ட அரச அதிபர்கள் பிரதேச செயலாளர்கள். பிரதேச சபைச் செயலாளர்கள் என்போருடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் பல்துறை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பல்கலைக்கழகமாணவர்கள் பொதுத் தாபனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பாதுகாப்புப் படையினர், பொலீசார் பொதுமக்கள் எனப் பலரும்
மீட்புப் பணிகளில் முழுவீச்சுடன் ஈடுபூட்டுழைத்தனர்.
2. இலங்கை அரசு உலகநாடுகளுக்கு விடுத்த உதவி கோரல் அடுத்து, இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக பொருட்களாயும் பணமாயும் இலங்கை ரூபாவின் மதிப்பினை உயர்த்துமளவிற்கு உதவிகள் கிடைத்துள்ளன. ஐக்கிய அமெரிக்கா, 25 மில். டொலர்), உலக சுகாதார நிறுவனம் (15 மில். டொலர்), ஜேர்மனி (4 மில். டொலர்), இந்தியா (100 கோடி ரூபா), ஜேர்மன் (1 மில், யூரோ), தென்கொரியா (11 மில். டொலர்), நோர்வே (250 மில். டொலர்), யப்பான் (296 மில். டொலர்) ஆசிய அபிவிருத்தி வங்கி (500 மில் டொலர்), ஐ. நா. சபை (977 மில். டொலர்), அவுஸ்திரேலியா 92 மில். டொலர் என நிதி உதவிகள் கிடைத்துள்ளன. அதேவேளை சிலநாடுகளிடம் இலங்கை பெற்றிருந்த கடன்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
4 &mid''' 183

Page 101
184
3. இந்திய, ஐக்கிய அமெரிக்கா, பாகிஸ்தான், என்பன தமது கப்பல்களையும் இராணுவத்தினரையும் மீட்புப் பணிக்காக இலங்கைக்கு அனுப்பி வைத்தன. சில நாடுகளிலிருந்து மருத்துவக் குழுக்கள் வந்தன.
4. மீண்டும் சுனாமி வருகிறது என்ற வதந்தி 30, டிசம்பர் 2004 இந்தியாவிலும் இலங்கையிலும் சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் தகவல் தெரிவித்தன. தென்னிலங்கையிலும் வடக்கு - கிழக்குக் கரையோரங்களிலும் வாழ்கின்ற மக்கள் தம்மிடங்களை விட்டு ஓடினர். திருக்கோயில் தம்பிலுவில் பகுதியில் இரு குழந்தைகள் நசியுண்டு இறந்து போயினர். திராய்க்கேணியில் முதியவர் ஒருவர். அதிர்ச்சியில் மரணமாயினார்.
5. சுனாமி அனர்த்தத்தின் பின் வியப்பான சம்பவங்கள் அடிக்கடி
நிகழ்கின்றன.
1. காலி, கிந்தோட்டையில் பிட்டிவெல்ல பகுதியில் வீடொன்றின் கீழ் திடீரென வெப்பம் ஏற்பட்டது. அதனால் வீட்டிலும் பக்கத்து வீட்டாரும் அவ்விடத்தைக் கைவிட்டு விரைந்து சென்றனர்.
2. களுத்துறைப் பிரதேசச் செயலகம் கட்டிடம் 4, ஜனவரி செவ்வாய்க்கிழமை காலை 10.40 மணியளவில் சுவர்கள் திடீரென வெடித்துச் சேதமடைந்தன. இரண்டு மாடிக் கட்டிடத்தின் சுவர்களில் திடீரென பலத்த சத்தத்துடன் வெடிப்புப் பரவியது. சுவர்களில் பதித்திருந்த மாபிள்கள் சிறு சிறு துண்டுகளாகச் சிதறிப் பறந்தன. கட்டிடத் தரையிலும் ஆங்காங்கு திடீரென வெடிப்புகள் பரவின. இவை காரணமாக பிரதேசச் செயலக ஊழியர்கள் அனைவரும் அச்சம் காரணமாக கட்டிடத்தை விட்டு வெளியே பாய்ந்தோடினார்கள்.
3. மணற்காட்டில் சுனாமிப் பேரலை வெள்ளக் காடாகக் கிளம்பியபோது பெற்றோரால் தனித்து விடப்பட்ட சுகன்யா, சசிரூபன் ஆகிய இருவரும் அதிசயமாக உயிர் தப்பினர். கடலலையால் தரை மட்டமாகிவிட்ட வீட்டின் இடிபாடுகளுள்ளிருந்து அவர்கள் மீட்கப்பட்டனர். கடல் அலை தங்களை நோக்கிவந்தபோது ஓர் அம்மா தங்களை அணைத்து வைத்திருந்தா. என சுகன்யா கூறுகிறாள். கடல் ஆர்ப்பரித்து முடிந்ததும் அந்த அம்மா மறைந்துவிட்டார் என்கிறாள். ஊரவர்கள் அது வேளாங்கண்ணி மாதா என நம்புகின்றனர்.
4. கரையோரக் கடலலை தாக்கியபோது ஆழ்கடலில் பெரியதொரு பாம்பின்மீது ஒருவர் படுத்திருந்ததைத் தான் கண்டதாகவும் அது இந்துக் கோயிலிலுள்ள பாம்பில் பள்ளி கொள்ளும் பரந்தாமம் சிலை மாதிரி இருந்ததாகவும் கிழக்கிலங்கையில் ஒருவர் தெரிவித்து வியந்தார்.
கந்தையா குணராசா

5. சுனாமி அலையின் பொங்குதல் அல்லாஹ் என்ற நாமத்தினைச் சுட்டும் அராபிய எழுத்து மாதிரியிருந்ததாக இஸ்லாமியப் பெரியார் ஒருவர் தெரிவித்தார்.
6. கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, கிணற்று நீர் வெப்ப நீராக மாறியது எனவும், பலரும் வியப்புடன் அதனைக் கண்டனர் எனவும் அம்பாறையைச் சேர்ந்த செய்தி தெரிவித்தது.
7. பள்ளிவாசல் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நிலத்தில் பதிக்கப்பட்டிருந்த மாபிள்கள் பொருமி வெடித்துச் சிதறியுள்ள சம்பவமும் கிழக்கில் நிகழ்ந்துள்ளது.
எவ்வாறாயினும் சுனாமியால் இலங்கையின் கடற்கரையோர மீனவச் சமூகமும் பெரும் பாதிப்பினை அடைந்துள்ளது. அவர்களை மீளவும் வழமைக்குக் கொண்டு வருவது இந்நாட்டின் அபிவிருத்திச் செயற்பாட்டுக்கு அவசியமாகும். சீரழிந்த போன கரையோரங்களைச் சீரமைத்து சிறப்புற மாற்றுவது இன்று எம் பெரும் பணியாகவுள்ளது”
சுனாமி 85

Page 102
சுனாமியில்ருந்து பாதுகாப்பு
சீனாமிப் பேரலையின் தாக்குதலிலிருந்து எவ்விதத்திலும் தப்பிக்க
முடியாது. ஆனால், அதன் உருவாக்கத்தை முன்கூட்டியே அறிவதன் மூலம் உயிர்ச் சேதங்களைப் பெருமளவிலும் பொருட்சேதத்தைச் சிறியளவிலும் தவிர்த்துக் கொள்ளல் முடியும். சுனாமி முன்னெச்சரிக்கை அறிவிப்புக் கிடையாதபோது, நாம் சில சுனாமி முன்னறிகுறிகளை அறிந்திருக்க வேண்டும்.
1.
186
கடல் உள்வாங்குவது வரப்போகும் அனர்த்தத்தின் முதலறிகுறி. அந்நேரம் கடல் உறிஞ்சும் ஒலி எழும். குமிழிட்டுக் கொதிக்கும் நீர்ச்சப்தம் கேட்கும். எவ்வளவு விரைவாக அவ்விடத்தைவிட்டு அகல முடியுமோ அகன்று ஓடிவிட வேண்டும்.
பெரும் பாறைகள் புரண்டு விழும் கனத்த சத்தம் நிலத்தில் தலைவைத்துப்படுத்திருப்பவர்களுக்குக் கேட்கும். தண்டவாளத்தில் காதைப் பதிக்கில் வெகுவெகு தூரத்தில் ஓடிவரும் புகைவண்டியின் அதிர்வு கேட்பது மாதிரி பாறைகள் புரளும் ஒலி கேட்கும்.
விலங்குகளின் நடத்தைகள் புவிநடுக்கத்தை முன்கூட்டியே தெரிவிக்கவே செய்கின்றன என நம்பலாம். பெருந்தொகையான மீன்கள் செத்துக் கரையொதுங்கினால் அது புவிநடுக்கம் ஏற்படுத்திய அதிர்ச்சியால் செவுள் அறுந்து (டைனமைற் போட்டு மீன்பிடிக்கும் செயல்) இறந்தவையாகும். தமிழகக்கரையில் சுமாத்திரா சுனாமி ஏற்படுவதற்கு முன் குமுளா மீன்கள் இறந்து கரை ஒதுங்கின. கடல் பாம்புகள் திரளாகக் கரையொதுங்கில் அதுவும் வரும் அனர்த்தத்தின் அறிகுறியாக இருக்கலாமென. மட்டக்களப்பு வாவியில் ஆயிரக்கணக்கில் திரண்ட நீர்ப்பாம்புகள் சாட்சி. சுனாமி தோன்றியபோது, கரையோர விலங்குகள், பறவைகளுக்கு யாது நடந்தது? கரையொதுங்கிய சடலங்களுள் அவை எதுவுமில்லையே?
கந்தையா குணாாசா
 

4. சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பினை இந்து மகா சமுத்திரத்தில்
நிறுவுதல்.
சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு
இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் 26 டிசம்பர் சுமாத்திராச் சுனாமி ஏற்படுத்திய பேரழிவினை சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு ஒன்று இந்து சமுத்திரத்தில் இருந்திருந்தால் பெருமளவு உயிர்ச்சேதத்தைக் குறைத்திருக்கலாமென பாதிக்கப்பட்ட நாடுகள் இன்று குரல் எழுப்புகின்றன. பொதுவாகப் பாரிய சமுத்திரங்களின் மத்தியில் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு இருக்கில், சுனாமி ஏற்பட்டும் அவை ஆயிரக்கணக்கான கிலோமீற்றர்களுக்கப்பாலுள்ள நாடுகளின் கரையை வந்தடைவதற்கு முன்பு எச்சரிக்கை விடுவித்து மக்களை அப்புறப்படுத்தி விட முடியும். இலங்கையின் கரையைச் சுனாமி வந்தடைய இரண்டு மணி நேரம் எடுத்துள்ளது. ஆனால், அதுவரை சுனாமி தாக்கப் போகிறதென்ற அசுகை தெரிந்திருக்கவில்லை. அதே சுனாமி பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்தால் அது உடனடியாகப் பசுபிக் சமுத்திரத்தைச் சேர்ந்த 26 நாடுகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்.
பசுபிக் சமுத்திரத்தைச் சேர்ந்த 26 நாடுகள் சுனாமி எச்சரிக்கை அமைப்பினால் பாதுகாக்கப்பட்டு விடுகின்றன. பசுபிக் சமுத்திரத்தில் 1949 ஆம் ஆண்டிலிருந்து சுனாமி எச்சரிக்கை அமைப்புகள் செயற்படுகின்றன. பசுபிக்கில் இரண்டு நிலையங்கள் இயங்கி வருகின்றன.
1. பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் (PTWC)
Pasipic Tsunami Warning Centre
2. சர்வதேச சுனாமி தகவல் நிலையம் (ITC)
International Tsunami Information Centre
இந்த இரு நிலையங்களும் ஐக்கிய அமெரிக்காவிற்கு மேற்கேயுள்ள ஹவாய்த் தீவில் அமைந்துள்ளன. இந் நிலையங்களுள் அமெரிக்க தேசிய சமுத்திர சூழலியல் நிர்வாகத்தின் கீழ் (NOAA) இயங்கி வருகின்றன. பசுபிக்பிராந்திய சுனாமி எச்சரிக்கை நிலையம், பசுபிக்பிராந்தியத்தில் சுனாமி ஏற்படப் போவதற்கான அறிகுறி தெரிந்ததும் தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் ஹவாய் மற்றும் அமெரிக்க மேற்குக் கரை மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுகின்றது. சர்வதேச சுனாமித் தகவல் நிலையம் கூடியவரை அச்செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்கின்றது.
1965 நவம்பர் மாதம் யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச சுனாமி தகவல் மையம் தவறாது. பசுபிக் சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பிலும் அங்கம்
வகிக்கின்ற பின்வரும் நாடுகளுக்குத் தவறாது தகவலை அனுப்பி வைக்கின்றது.
சுனாமி 187

Page 103
அவுஸ்திரேலியா 9560T
ઈી606ઈી ઈઢoIII கொலம்பியா குக்தீவுகள் கோஸ்ராறிக்கா வடகொரியா தென் கொரியா ஈக்குவடோர் எல்சல்வடோர் பிஜி பிரான்ஸ் கெளதமாலா இந்தோனேசியா யப்பான் மெக்சிக்கோ பிலிப்பைன்ஸ் ருசியா சமோவா சிங்கப்பூர் தாய்லாந்து அமெரிக்கா நியூசிலாந்து பேரு
சுனாமி முன்னெச்சரிக்கை அமைப்பு மூன்று கருவிகளின் இணைப்பால் உருவாகிய தகவல் சாதனமாகும்.
1. கடலின் அடித்தள அமுக்கத்தை அளவிடும் கருவி
அமுக்கம் மற்றும் ஒலி கண்காணிக்கும் கருவியாக இது செயற்படுகின்றது. சமுத்திரத்தின் அடித்தளத்தில் நங்கூரமிட்டுப் பொருத்தப்படும் இச்சாதனம், தனக்கு மேலுள்ள நீரின் அமுக்கத்தை அளவிடுவதுடன் கடல் மட்டத்தின் உயரத்தையும் மிகத் துல்லியமாக அறிவிக்கும். ஒரு சென்ரிமீற்றர் அளவினைக் கூட அளவிடக் கூடியது. சமுத்திர அடித்தளத்தில் பொருத்தப்படும் இக்கருவியை மிதவைகள் நிலையாக வைத்திருக்கும் (படம் பக்கம் 198 ஐப் பார்க்க)
2. மிதவைச்சாதனம்
மிதக்கும் நுண்ணுணர்வுக் கருவி பொருத்தப்பட்டு மிதக்க உதவும் றப்பர் ரியூப் ஒன்றுடன் பொருத்தப்பட்டிருக்கும். இம்மிதவைச் சாதனம் அடித்தளம் அமுக்கப் பதிவிடும் கருவியை சமுத்திர அடித்தளம் துறை கொண்டிருக்கும். இது நிலநடுக்கத்தை ஒலி மூலம் உணரும் பகுதியாகும்.
3. செய்மதி -
கடலின் அடித்தள அமுக்கத்தை அளவிடும் கருவி அனுப்பும் தகவலை, அடித்தள அமுக்கப் பதிவிடும் கருவி பெற்று; வானில் வலம்வரும் செய்மதிக்கு அனுப்பும், சுனாமித்தகவல்கள் சமிக்கைகளால் மாற்றப்பட்டு செய்ம்மதிக்கு அனுப்பப்படுகின்றன.
அதாவது கடலின் அடிப்பகுதி அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்டால், நுண்ணறிவுக்கருவி சென்சர்கள் அதைக் கடலின் மேற்பரப்பில் இருக்கும் மிதவைச்
188 கந்தையா குணராசா

செய்ம்மதி
செயற்கைக்கோள்)
கருவியை நிலைக்குத்துத்தாக வைத்திருக்கும்
மிதவைகள் தகவல் பெறும் பகுதி
அழுத்தம் மற்றும்
நிலநடுக்கத்தை ஒலி மூலம் உணரும் கருவி
சுனாமி முன் எச்சரிக்கை அமைப்பு
சுனாமி

Page 104
சாதனத்திற்கு அனுப்புகின்றன. அது அத்தஃவலை செய்கைக்கோள் மூலம் நிலத்திலிருக்கும் மையங்களுக்குக் கடத்தப்படுகின்றது. உடனே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தோனேசியப் புவிநடுக்கம் ஏற்பட்டவுடன் 15 நிமிடங்களில் அது குறித்து தகவலை அமெரிக்க தேசிய சமுத்திர சூழலியல் நிர்வாகம் (NOAA) National Oceanographic and Atmospheric Administration GlouefuSlu L-g. 961пdo 9ђg எச்சரிக்கையை விடுவிப்பதற்கான செயற்றிட்டம் இந்து சமுத்திரத்தில் பிராந்தியத்தில் இல்லாமையினால் தங்களால் உதவமுடியவில்லை என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் (PTWC) தெரிவித்துள்ளது. 1809 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்து சமுத்திரத்தில் ஒரேவேளையில் பலவிடங்களில் சுனாமி தாக்கவில்லை. 1883 ஆம் ஆண்டில் இந்தோனேசியாவில் ஏற்பட்ட பாரிய சுனாமியின் பின்னர் இந்து சமுத்திரத்தில் எதுவித சுனாமிக் கடலலைத் தாக்கம் ஏற்படாமையால் இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் அசட்டையாக இருந்துள்ளன. 26, டிசம்பர் அனர்த்தத்தின் பின் இந்திய இந்து சமுத்திரத்தில் சுனாமி எச்சரிக்கை தொடங்கியுள்ளது. சுமாத்திராச் சுனாமி அதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.
சுனாமியின் வேகத்தைக் கட்டுப்படுத்துவன
1. குடிமனை அமைவிடம்
கடலோரக் குடியிருப்புகள் எப்போதும் ஆபத்தானவையாக இருக்கின்றன. பருத்தித்துறை முனையிலிருந்து பொத்துவில் வரையிலான உயிரழிவுகளையும் சொத்தழிவுகளையும் அவதானிக்கும் போது, கடல் விளிம்பிலிருந்து 100 மீற்றருக்குள் அமைந்திருந்த கிராமங்களும் குடிமனைகளுமே அதிகம் பாதிப்பிற்குள்ளாகி முற்றாகத்துடைத்து வழிக்கப்பட்டுள்ளன. மருதங்கேணிப் பிரதேசத்தின் மணல்காடு, செம்பியன்பற்று. தாழையடி சுண்டிக்குளம், என்பனவும் முல்லைத்தீவின் கரையோரக் கிராமங்களும் கூடுதலாகச் சுனாமியால் பாதிக்கப்பட்டுள்ளன. திருகோணமலையில் நிலாவெளி, கிண்ணியா, மூதூர் என்பன பாதிக்கப்பட்டன. காரணம் இக்கிராமங்கள் கடலோரத்தில் உருவாகியிருந்தமையே. அம்பாறையில் கல்முனை, மருதமுனை, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, காரைதீவு ஆகிய கிராமங்கள் கடலோரத்தில் 160 மீற்றருக்குள் அமைந்திருந்தன. மரணமடைந்தவர்களில் 75 சதவீதமானோர் 100 மீற்றர்களுள் குடிமனை அமைத்து வாழ்ந்தவர்களே. இவை தரும் செய்தி என்ன?
100 மீற்றர்களுக்கு அப்பால் குடிமனைகள் அமைய வேண்டிய அவசியமாயிருக்கிறது. ஆனால் , வடமராட்சி கிழக்கு, முல்லைத்தீவு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இது சாத்தியமில்லை. குறிப்பாக அம்பாறை பிரதேசத்தில் பாதிப்பிற்குள்ளான கல்முனை, மருதமுனை போன்ற ஆறு கிராமங்களில் அது சாத்தியமேயில்லை. அவ்வாறாயின், இப்பகுதிகளில் நாம் அமைக்கின்ற கட்டிடங்கள், புவிநடுக்கத்திற்கு ஈடுகொடுக்கக் கூடியனவாக வடிவமைக்கப்பட வேண்டும். யப்பான், கலிபோர்னியா, அலாஸ்கா முதலான நாடுகளில் புவிநடுக்க அணிகளின்
190 கந்தையா குனராசா

அலைமோதலுக்கு முன்பின்னாக அeைந்து ஈடுகொடுக்கக் கூடிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வறிய நாடாக விளங்கும் இலங்கையில் அவ்வகையான கட்டமைப்பு சாத்தியமாகாது என்றே தோன்றுகிறது. சுனாமியின் அலைத்தாக்கத்திற்கு ஈடுகொடுக்கக்கூடிய விதமான பலமான கட்டிடங்கள் அமைதல் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண குடா நாட்டின் வடகரையில் சில கரையோரக் கட்டிடங்கள் சுனாமி அலையின் எதிர்ப்பினைச் சமாளித்து நின்றுள்ளன.
2.கரையோரத் தாவரம்
சதுப்புநிலக்காடுகளும், சவுக்கு மரங்களும் சுனாமி அலையின் வேகத்தினைக் கட்டுப்படுத்தக் கூடியன எனக் கண்டறிந்துள்ளனர். தமிழ் நாட்டுக் கரையோரத்தில் அவ்வாறான பகுதிகளில் சேதம் குறைவாக இருந்துள்ளது. இயற்கை கடலலையின் தாக்குதலைச் சமாளிக்கக் கரையோரக் காடுகளை உருவாக்கியது; மனிதன் அவற்றினை அழித்துள்ளான். நமது கடற்கரையோரங்களில் தாவரங்களை நாம் மீண்டும் வளர்க்க வேண்டும். சவுக்கு மரக்காடுகளையும் , தென்னந்தோப்புக்களையும் உருவாக்க வேண்டும். சதுப்பு நிலத்தாவரங்களை அழிக்காது பேண வேண்டும்.
3.கடலணை அமைத்தல்
சுனாமியைத் தடுக்கக் கடலணை அமைக்கலாமென பலர் கூறுகின்றார்கள் தமிழக முதல்வர் 500 கி. மீ நீளமான கடலணை அமைக்க விருப்பதாக அறிவித்துள்ளார். லெபனான் நாட்டில் அவ்வாறான கடலணைகளுள்ளனவென உதாரணம் கூறுகின்றனர். லெபனான் நாட்டில் அமைக்கப்பட்டிருப்பவை பெரும் அலைத்தடுப்பான்களே ஆகும். சுனாமியைக் கடலணை அமைத்துத் தடுக்க முடியாது. ஆனால், சுனாமியின் வேகத்தைக் கட்டுப்படுத்தவும், கரைமேவித்திரும்பும்போது அள்ளிச் செல்பவற்றை மட்டுப்படுத்தவும் கடலணை உதவலாம். வல்வெட்டித்துறை, பருத்தித்துறைக் கரையோரக் குடிமனை ஓரளவாவது காப்பாற்றப்பட்டது. கடலணையோடு கூடிய வீதியும், முருகைக் கற்பாறைகளுமாம் என்பது குறிப்பிடத்தக்கது. கிழக்குக் கரையோரம் முழுவதும் கடலணை கட்டுவதென்பதும், இயற்கையின் அமைப்பையும் அழகையும் குலைப்பதென்பதும் ஏற்றதுமல்ல; சாத்தியமானதுமல்ல. நாங்கள் கூடியவரை இயற்கையை அனுசரித்தே வாழவேண்டிய அவசியம் இருக்கின்றது.
முடிவுரை
இலங்கையின் வரலாற்றில் சுமாத்திராச் சுனாமி ஏற்படுத்தியிருக்கும் வடு மாறக் கூடியதல்ல. சந்ததிசந்ததியாக நினைவு கூர்ந்து பேசப்படப்போகின்ற இயற்கை அனர்த்தம் கரையோர மக்களுக்குச் சுமாத்திராச் சுனாமி ஏற்படுத்தியிருக்கின்ற மனக்காயங்கள் ஆறுவதற்கு ஒருதலைமுறை கழிய வேண்டும். கடலன்னையை தமது வாழ்வாதாரமாகக் கருதிய மக்கள், இன்னொரு தலைமுறைக்காலம் கடலன்னையை அச்சத்தோடுதான் பார்க்கப் போகின்றார்கள்.
இயற்கை தன்னையும் மனிதரையும் சீராக்கிக் கொள்ளும்
சுனாமி 19

Page 105
b{}8
சுந்தைய குசாராசா
 


Page 106
சுனாமி கடற்கோள்
| 26220
 

ISBN: 955-1200-03-9
கமலம் பதிப்பகம்