கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இளமைப் பருவத்திலே!

Page 1


Page 2


Page 3

28 HYDE PATER GATE, 7 , היו .3 = Rם נLORIL 20th April 1963,
DELT MIT. RETIT
Thank you for your card of March 28 to Sir Winston Churchill.... if LLLLLL LLLLL S LLLaLLLL S S LLLLL LSLLLL L LL CCLLL LSLLLLLL your book arrived safely, and Sir Winton hals asked III le to thank y (5 LI Very ITILI, Ch for sending it to hirin. He does indeed appreciate your kind thought.
Yours sin Cercly, MOELR, Is GPLAHARt. Private Secretary
சர் வின்ஸ்டன் சேர்ச்சிலுக்கு நீங்கள் மார்ச் 28 இல் அனுப்பிய அட்டைக்கு நன்றி. உங்களு எடய நூலான "இளமைப் பருவத்திலே பற்றி. உங்கள் புத்தகம் விடைக்கப் பெற்றுேம் அதைத் தனக்கு அனுப்பி வைத்தமைக்காக உங்களுக்கு மிக்க நன்றி தெரிவிக்கும் வண்ணங் கேட்டுக் கொண்டார். உண்மையிலே அவர் உங்களுடைய அன்பான நினோவைப் பெரிதும் மதிக்கின்ருர்,

Page 4

இளமைப் பருவத்திலே!
(சிறுவர் இலக்கியம்)
அரசு வெளியீடு
கொழும்பு-13, (இலங்கை).

Page 5
அரசு வெளியீடு: 4.
முதற் பதிப்பு: டிசம்பர், 1962. இரண்டாம் பதிப்பு: ஒக்டோபர், 1965.
638):
lamai Paruvaththile
Author: M. A. RAHMAN
Publisher: ARASU PUBLICATIONS,
231, Wolfendhal Street, Colombo-13 (Ceylon).
Second Edition: October, 1965.
Price:
ரெயின்போ பிரிண்டர்ஸ் 231, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு-13,

ச ம ர் ப் பண ம்
என் தாய்
மாதருள் மாணிக்கம். என்னைப் பெற்று,
சீராட்டி வளர்த்து, மூத்த மகன் என்று என்மீது வைத்திருந்த பிரிக்க முடியாத அன்பினையுந் தியாகஞ் செய்து, என் இளமைப் பருவத்திலே, கல்வி பெறக் கடல் கடந்து அனுப்பி, என் கல்வியை விருத்தி செய்து, என்னை இன்றிருக்கும் கானுக்கிய,
என் அன்னை
செயினம்பு பீவிக்கு

Page 6

நூ லி ன் கதை
பட்டி கதை சொல்லுவாள்; குழந்தை நித் திரை கொள்ளும் . பாட்டி வளர்ப்பது குழந்தை இலக்கியம்.
பள்ளிக்கூட வாழ்க்கை கீழ்ப்பிரிவுடன் தொடங்குகின்றது. ஆசிரியை அம்மாள் வருவாள். சுவரில் வண்ணப் படங்கள் மாட்டுவாள். அந்தப் படங்களை வைத்துக் கதைகள் சொல்லுவாள். ஆசி ரியை பிள்ளை இலக்கியம் மூலம், படிப்பிலே ஆர் வத்தை வளர்க்கின்ருள்.
பாடசாலையில் வாசிப்புப் புத்தகங்களுண்டு. இவற்றுடன் வேறு புத்தகங்களும் வாசிக்கும் ஆசை தோன்றுகின்றது. இந்த ஆசையைப் பூர்த்தி செய் வது சிறுவர் இலக்கிய நூல்களாம்.
சிறரின் உள்ளங்கள் மிகச் செழிப்பானவை. நல்லவையும் கெட்டவையும் வளரும். நல்லவை வளர்வது உள்ளத்தையும் உடலையும் வளர்க்கும். இவற்றை வளர்க்கும் பண்பு சிறுவர் இலக்கியத்துக்கு உரியது; தேவை. இத்தகைய சிறப்பு மிக்க சிறுவர் இலக்கியம், என்ன காரணம் பற்றியோ, ‘குழந்தை இலக்கியம்’ என்றே வழங்கப்படுகின்றது.
சிறுவர் இலக்கியம் படைப்பது இலகுவான காரிய மன்று. எழுத்தாளனுக்குக் கடமை உணர்ச்சி தேவை; பொறுப்பு அதிகம். இலங்கையில் சிறுவர்

Page 7
இலக்கியத்தில் ஊக்கஞ் செலுத்துபவர்கள் இலர். பத்திரிகைச் செல்வாக்கின ற் பிரபலம் அடைந்த எழுத்தாளர்கள் இருக்கின் ருர்கள். அவர்கள் ஆரம்ப காலத்தில், எழுத்துப் பயிற்சிக்காக, பத்திரிகை களில் வரும் இளைஞர் பகுதிகளில் எழுதியிருக்கிறர் கள். அப்படித் தான் எழுதிப் பழக வேண்டுப் • ஆனல், அவற்றைக் "குழந்தை இலக்கியம்’ என்று சாதிப்பது தவறு. அத்தகைய செயல் மிக மிகக் குழந்தைத் தனமானது. சிறுவர் இலக்கியத்தைப் பற்றித் தவரு ன கருத்து ஒன்றும் நிலவி வருகின் றது. சிறுவர் இலக்கியத்தில், பூதமும் பிசாசும் வர வேண்டும்; ராசா-ராணி வர வேண்டும்; மிருகங் களும் பறவைகளும் பேசித்தான் ஆகவேண்டும் என்ற கற்பனைகளில் அர்த்த மில்லை. ஆன்ருேர் இத் தகைய பாத்திரங்களை வைத்துக் கொண்டு, நல்ல கருத்துக்களை உருவக முறையில் வெளியிட்டனர். இந்நாள்களில், இத்தகைய பாத்திரங்களை வைத்துக் கருத்தற்ற கதைகள் சமைப்பதிற் பயனில்லை. கொலைகளையும் களவுகளையும் சித் திரிக்கும் சிறுவர் இலக்கியம் மலிந்து வருகின்றது. இத்தகைய இலக் கியம் படைப்பவர்கள் சிறுவர் உலகத்திற்குத் துரோகஞ் செய்கின்றனர்.
சமீப காலத்தில், தமிழில் நல்ல சிறுவர் புத்த கங்கள் வந்துள்ளன. இவை தமிழ் நாட்டிலிருந்து வெளிவந்தவை. ஈழத் திருநாட்டில் சிறுவர் இலக் கியம் வளரவேயில்லை. இங்கு சிறுவர் இலக்கியம் வளராமைக்குக் காரணங்கள் பல உள. சில கார ணங்களைக் குறிப்பிடலாம். எழுத்தாளர் இத்துறை யிற் கவனஞ் செலுத்துவதில்லை. கல்வித்துறையில் உள்ளவர்கள் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை மறந்திருக்கிருர்கள். புத்தகப் பிரசுரக்காரர் பாட நூல்களை மட்டுமே பதிப்பித்துப் பெரும் பணம்

திரட்டுவதில் ஈடுபட்டிருக்கிருர்கள். சிறுவர்கள் அந் நிய நாகரிகத்தின் சூழலில் வளர்க்கப்பட்டிருக்கிருர் கள். புதிய சூழலுக்குக் கொண்டுவரப் பெற்ருே ரும் முயற்சி செய்ய வில்லை.
இந்நிலையில், அரசு வெளியீடாக இந்தச் சிறுவர் இலக்கிய நூலைக் கொண்டு வருகின்றேன்.
兴 兴
Tெனக்கு ஒரு நண்பர் இருக்கின்றர். அவர் இலக் கியம் அறிந்த எழுத்தாளர். ஒரு நாள் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அரசு வெளியீட்டாரின் முயற்சிகளைப் பாராட்டினர். இருப்பினும், சிறுவர் இலக்கியத்திற்கு நாம் ஒன்றும் செய்யாததையும் குறிப்பிட்டார். "நீங்கள், சில ஆண்டுகளுக்கு முன்பு ‘வீரகேசரி'யில் இளமையிற் பெரியார்கள்’ என்று 6T (up 96) வந்தீர்கள். அத்தொடரிற் சுவையான நிகழ்ச்சிகளுண்டு. அத்தொடரை மாதிரியாக வைத் துக் கொண்டு, சிறு வருக்கெனப் புத்தகங்களை வெளி யிட வேண்டும்” என்று வற்புறுத்தியே சொன்னர். ஏற்கனவே, சிறுவருக்கான புத்தகங்களையும் வெளி யிடவேண்டுபென்று நினைத்திருந்தேன். நான் புதிய உற்சாகம் பெற்றேன். இளமைப் பருவத்திலே!" என்ற தலைப்பில் இப் புத்தகத்தை எழுதத் தொடங் கினேன். அப்பொழுது, புலவர்மணி ஐயாவும் வந் தார்கள். என் முயற்சிக்கு ஐயாவின் ஆசி கிடைத் தது என் பாக்கியம். அவர்கள் தந்த உற்சாகத் தினுல் வெண்பாக்கள் முழு உருவம் பெற்றுள்ளன.
பெரியோர் வாழ்க்கையில் நடந்த ஒரிரு சுவையான நிகழ்ச்சிகளை, இயன்ற அளவு சிறு வருக் கான முறையில் எழுதியுள்ளேன். 'நல்வழி'யின் வெண்பாக்களை மனனஞ் செய்து பழகியவை

Page 8
சிறுவர் உள்ளங்கள். ஆகையினுல், நான் எந்தப் பெரி யோர்களைப்பற்றி எழுதியிருகின்றேனே, அவர்களை நினைவில் வைக்க வெண் பாக்களைச் சேர்த்துள்ளேன். ஒவ்வொரு பெரியாருடைய படத்தையும் சேர்த் துள்ளேன். இத்தகைய அமைப்புடன், ஈழத்தில் வெளிவரும் முதலாவது சிறுவர் இலக்கிய நூல் இஃதே என்பதில், அரசு வெளியீட்டாரின் சார்பில் எனக்கு மகிழ்ச்சியே.
炸 兴 兴
"இளமைப் பருவத்திலே! என்ற இச்சிறுவர் இலக்கிய நூலை உரியவர்களிடம் சேர்த்துவிட்டேன். இதனை ஒரு சாதனை என்று நான் சொல்லமாட் டேன். சாதனை காலத்தால் நிறுவப்படுவது.
இதனை வெளியிட்டதில் எனக்கு மனத்திருப்தி
எனது மனத் திருப்தி, இச்சிறு நூலினை வாசிக்கும் சிறுவர்களும் அடைவார்களானுல், நிறைவுறும்.
எம். ஏ. ரஹ்மான் 2-12-62.

பதிப்புரை
(UPதற் பதிப்பு ஆறு மாதங்களுக்குள் விற்பனையாகி விட்டது. எனக்கு மகிழ்வும், ஆர்வமும் மும்மடங்கு பெருகியது. இருப் பினும், காகிதத் தட்டுப்பாட்டாலும், அரசு வெளியீட்டின் நூல்கள் சில அச்சா கிக் கொண்டிருந்தமையாலும் துரிதமாக இந்நூலின் இரண்டாம் பதிப்பைப் பதிப் பித்தல் அசாத்தியமாயிற்று.
மூன்று ஆண்டுகளின் பின்னர், இந் நூல் மறு பதிப்பாக வெளிவருகின்றது. ஈழத்துச் சிருருக்கு, இந்நூலை மீண்டும் பிரசுரித்து வெளியிடுவதில் பெருமகிழ் வெய்துகின்றேன்.
எம். ஏ. ரஹ்மான்
23ーI 0-65

Page 9
இல:. ஈ பி பி/1262.
சான்றிதழ்
இளமைப் பருவத்திலே!
1952-ம் ஆண்டு பெப்ருவரி மாதம் 29 ந் திகதி வெளிவந்துள்ள இலங்கை அரசாங்க வர்த்தமானப் பத்திரிகையில் உதவி நன்கொடை பெறும் தன் மொழிப் பாடசாலைகளுக்கும், இரு பாஷைப் பாட சாலைகளுக்கும், ஆங்கில பாடசாலைகளுக்கு மான ஒழுங்குச் சட்டத்தின் 19 (40-ம் பிரிவில் பிரசுரிக்கப்பட்டதற்கமைய இப் புத்தகம் ஒரு நூல் நிலையத்திற்குரிய புத் தகமாக உபயோகத்திற்கு வித்தியாதிபதி அவர்களால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
(ஒப்.) ஜீவானந்த கானுயக்கார,
செயலாளர், பாடநூற் பிரசுர ஆலோசனைச்சபை.
கொழும்பு-2. 2-12-1963.

சத்தியத்தின் வாழ்வு தருமத்தின் வைப்புலகில் உத்தமர்க ளுள்ளே ஒருதிலகம்-பக்திவளர் சாந்தி நிலை சாத்துவிக சக்திக் குதாரணமாக் காந்தி மகான் தன்னையே காண்.
அவனுக்கு எதிலும் பயம். பேய் பிசாசுக்குப் பயம். இருட்டுக்குப் பயம். பாம்புக்குப் பயம். எதிலும் பயம். அத்துடன், அவன் ஒரு கோழை, வெளிச்சமில்லாத அறையில் படுக்கவே மாட் டான். பயத்துடன், கோழையாகவே வாழ்ந்த அவனிடம் ஒரு துர்ப்பழக்கங் குடிபுகுந்தது.
அவன், தன் பெரியதந்யைார் மகனுடன் சேர்ந்து சுருட்டுப் புகைக்கப் பழகினன். அவ னிடம் சுருட்டு வாங்கப் பணம் கிடையாது. தன்னுடைய வீட்டு வேலைக்காரனின் பணத் தைத் திருடினன். அந்தப் பணம் சுருட்டு வாங்கக் காணுது. இதற்கு என்ன உபாயஞ் செய்வது' என யோசித்தான். அவனுடைய சிறியதந்தையார் சுருட்டுப் பிடிக்கும் பழக்க முடையவர். அவர் புகைத்துவிட்டு எறியும் குறைச் சுருட்டுகளைச் சேகரித்தான். குறைச்

Page 10
2. இளமைப் பருவத்திலே!
சுருட்டுகளிலிருந்து அதிகம் புகை வரவில்லை. எனவே, அவன் வெருேர் உபாயத்தைக் கண்டு பிடித்தான். ஒருவகைச் செடியின் தண்டுகளைச் சுருட்டாக உபயோகிக்கலாம் என்பதுதான் அது. புகை பிடிக்கும் தனது சகோதரனுடன் சேர்ந்து அத்தண்டினைத் தேடி அலைந்தான். இருவருமாக அத்தண்டைக் கண்டு பிடித்தனர். தண்டினைப் புகைத்தனர். திருப்தி ஏற்பட வில்லை. பெரியவர்களுக்குத் தெரியாமல் இர கசியமாகப் புகைப்பதும் சிரமமாக இருந்தது. "பெரியவர்களின் கண்களிலே பட்டு விடாமல், பயந்து பயந்து புகைப்பதில் சுவையில்லை’ என்று நினைத்தான். தான் விரும்பியவாறே, பயமில்லாமல், எல்லோருக்கும் முன்பாகச் சுருட்டுப் புகைக்க முடியவில்லையே யெனத் துக்கப்பட்டான்,
என்ன செய்வதென்று ஆலோசித்தான். கடைசியிலே, "தற்கொலை செய்வதுதான் வழி!” எனத் தீர்மானித்தான். ‘எப்படித். தற் கொலை செய்வது? அஃது இலகுவான காரிய மா?’ என்ற பயமும் வரத்தான் செய்தது. தனது எண்ணத்தைத் தன்னுடன் சுருட்டுப் பிடிக்குஞ் சகோதரனிடம் வெளியிட்டான். ஊமத்தஞ் செடியின் விதைகளைச் சாப்பிட் டால் சாகலாம் என்பதை அறிந்தான்
ஒரு நாள்; மாலை நேரம். அவன் தன் சகோதரனுடன் ஊமத்தம் விதைகளைச் சேக

இளமைப் பருவத்திலே! 3
ரித்துக் கொண்டு ஒரு கோயிலை அடைந்தான். அங்குதான் தற்கொலை செய்து கொள்வது என்று இருவரும் தீர்மானித்திருந்தனர். அவன் இரண்டு மூன்று விதைகளைச் சாப்பிட்டுவிட் டான். உடனே பயம் அவனை வளைத்தது. "இதனைச் சாப்பிட்டும் உயிர் போகாவிட்டால் என்ன செய்வது" என்ற அச்சமும் பிறந்தது. கோயிலில் நிற்கவே பயப்பட்டான். தன் சகோதரனுடன் வீட்டுக்கு ஓடினன்.
அன்றைக்கே ஒர் உறுதி எடுத்துக் கொண் டான். "சுருட்டுப் பிடிப்பதற்காக வேலைக்கார னின் பணத்தைத் திருடுவதில்லை; சிறிய தந் தையாரின் குறைச் சுருட்டுகளைப் பொறுக்கு வதில்லை; இனி, சுருட்டே புகைப்பதில்லை" என் பன அவ்வுறுதியில் அடங்கின. அன்றிலிருந்து சாகுமட்டும் அவன் சுருட்டே பிடிக்கவில்லை.
இருந்தாலும், பின்னரும் ஒரு திருட்டைச் செய்தான். இதுவேருெரு வகையான திருட்டு. அவனுடைய தமையன் ஒருவரிடம் கடன் பட்டிருந்தான். அதைத் தமையன் திருப்பிக் கொடுக்கவில்லை. கடன்காரன் தன் தமையனை இழிவாகத் திட்டியதை அவன் விரும்பவில்லை. ஒரிரவு தமையன் நன்ருகத் தூங்கிக்கொண்டி ருந்தான். அவனுடைய கையில் தங்கக் காப்பு இருந்தது. அதனைக் கழற்றி, ஒரு துண்டை வெட்டியெடுத்தான். அந்தத் துண்டினை விற் றுத் தமையனின் கடனைச் செலுத்தினன். இத்

Page 11
4 இளமைப் பருவத்திலே!
திருட்டை ஒருவரும் அறிய வில்லை. ஆனலும், இந்தத் திருட்டு, அவனுடைய மன நிம்மதி யைக் குலைத்தது. தன் தந்தையாரிடம் உண் மையைச் சொல்லி மன்னிப்புக் கேட்க வேண்டு மென்று துடித்தான். அவனே கோழை. நேரிலே தந்தையாரிடம் சொல்லத் துணிவு ஏற்பட வில்லை. நன்ருகச் சிந்தித்தான். கடைசியில் ஒரே வீட்டிலிருந்து கொண்டு, தந்தைக்குக் கடிதம் எழுதினன். அத்துடன், ‘நான் இனித் திருடுவதில்லை" என்று உறுதியும் அளித்தான் .
அக்கடிதத்தைத் தந்தையிடம் கொடுத் தான். தந்தை அப்போது சுகயின முற்றிருந் தார். படுக்கையிலிருந்தே அவர் அதை வாசித் தார். கடிதத்தின் வாசகம் அவரை உருக்கி விட்டது. கண்ணீர் விட்டழுதார். மகனின் நேர்மையைக் கண்டே அவர் அழுதார். கண் மணிர் கடிதத்தை நனைத்து விட்டது. தந்தை அழுவதைக் கண்டு மகனும் அழுதுவிட்டான். தந்தை அக்கடிதத்தைக் கிழித்தெறிந்தார். அதனை ஒருவருக்கும் அறிவிக்கவில்லை. அந்த இரகசியத்துடன் தந்தை இறந்துபோனர்.
இந் நூற்ருண்டில் வாழ்ந்த அதிசய மணி தர் மகாத்மா காந்திஜி. சத்திய பரிசோதனை யின் மூலம் தூய்மை அடைந்தவர். சத்தியாக் கிரகம் என்ற அகிம்சாயுதத்தைக் கண்டு பிடித் தவர். உப்புச் சத்தியாக்கிரகத்தின் மூலம்

இளமைப் பருவத்திலே! 5
இந்திய விடுதலைப் போருக்கு வழி கோலியவர். ஒத்துழையாமை இயக்கம் மூலம் ஆங்கில ஆட்சியினரை நடுங்க வைத்தவர். கத்தியின்றி, இரத்தமின்றி நாற்பது கோடி இந்திய மக்க ளுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்த கர்ம வீரர். சத்தியத்தின் திருவுருவம். அகிம்சா மூர்த்தி. இந்திய மக்களாலும், உலக மக்களாலும் ஒருங்கே போற்றப்படும் மகான். அவர் கூட இளமைப் பருவத்திலே மிகச் சாதாரண மனி தக் குறைபாடுகளுடன்தான் வாழ்ந்துள்ளார்.
责

Page 12
ஏழைக் குடும்பத்தி லேபிறந்து நல்லறிவின் ஆழி நிகர் கியூறி அம்மையார்-வாழி நிதம் பூவுலகை வாட்டுகின்ற புற்றுநோய் றேடியத்த தீர்வதவர் கண்ட திறம்,
போலந்து தேசம் குளிர் மிக்கது. அங்கே ஒரு பணக்காரக் குடும்பம் வசித்து வந்தது. செல்வச் செருக்கு மிக்க குடும்பம் அது. அந்த வீட்டிலே ஒரு பெண் வேலைக்குச் சேர்ந்தாள்.
அந்தப் பணக்கார வீட்டிலே பத்து வய துச் சிறுமி ஒருத்தி இருந்தாள். அச்சிறுமிக் குப் பணிவிடை செய்வதே அவளுடைய வேலை. அந்த வேலைக்காரி படித்திருந்தாள். கெட்டிக் காரி அச்சிறுமிக்குப் பாடமும் சொல்லிக் கொடுத்தாள். வறுமையின் காரணமாகத் தான் அவள் வேஃக்காரியாஞள்.
அச்சீமான் வீட்டில் வேலேக்காரி தங்கு வதற்கு ஓர் அறை இருந்தது. அந்த அறைக்கு ஜன்னல்கள் கிடையா. ஒரே யொரு கதவு. எந்நேரமும் அறைக்குள் குளிர். தாங்க முடியாத குளிர். இரவில் அவளால் தூங்க முடியவில்லை. கம்பளியும் இல்லை.
 

இளமைப் பருவத்திலே! 7
அங்குள்ள நாற்காலிக்குக் கீழே சுருண்டு படுத்தே இராப் பொழுதைக் கழிப்பாள்.
அந்தப் பணக்கார வீட்டாரின் மூத்த மகன் கலாசாஃலயிற் படிப்பவன்; பண்புள்ள வன். நத்தார் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்தாான். அந்த இளேஞனுக்குப் புது வேலேக்காரியைப் பிடித்துவிட்டது. அவளுடைய சாதுரியமான பேச்சு அவனேக் கவர்ந்தது. அந்த வேலைக்காரி பைச் சமதையாக நத்தார்க் கொண்டாட்டங் களிலே சேர்த்துக் கொண்டான். அவளுடன் பனிக் கட்டிகளில் சறுக்கி விஃபாடினுன். அவளேயே மணஞ் செய்து வாழ முடிவு செய் தான். அவனுடைய தாயும் தந்தையும் அவன் ஒரு வேலேக்காரியை மணப்பதை விரும்ப வில்லே. ஒரு வேலேக்காரியையா, படித்த பெரும் பணக்காரன் மணப்பது? கேவலம்!" என்று எதிர்த்தனர். அந்த அவமானத்தைத் தாங்க இயலாத வேலைக்காரி அவ் வீட்டிலி ருந்தே போய்விட்டாள்.
தான் எப்படியும் படித்து முன்னேற வேண்டு மென்று உறுதி பூண்டாள். அந்த உறு தியுடன் அவள் பிரான்சு தேசத்தின் தலே நகரை அடைந்தாள். மிகக் கஷ்டப்பட்டு, விஞ்
3.

Page 13
F3 இளமைப் பருவத்திலே
ஞானப் பாடங்கள் படிக்க ஒரு கலாசாலேயிலே சேர்ந்தாள். அங்கு ஒரு நாள். ஆசிரியர் படிப் பித்துக்கொண்டிருந்தார். மானுக்கர் கவன மாகப் படித்துக் கொண்டிருந்தனர். அப்பொ ழுதுமானவி ஒருத்தி மயங்கிவிழுந்தாள். முகம் வெளிறியிருந்தது. உடல் சோர்ந்து கிடந்தது. அவள் ஏழை. அவளுக்குப் போதிய பணம் இல்லே. பல நாட்கள் தொடர்ந்தாற் போல, பட்டினி கிடந்தான். பசியினுல் அவள் மயங்கி விழுந்தாள். இந்த மாணவிதான், போலந்தில் வேலைக்காரியாய் இருந்தவள். பசியையும் பொருட்படுத்தாது பாடுபட்டுப் படித்த அந்த வேலைக்காரி பின்னர் உலகம் போற்றும் விஞ் ஞான மேதையானுள்.
கியூரி அம்மையார் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியாவர். இவர் ஒருவர்தான் உலகத் திலே இரண்டு தடவைகள் நோபல் பரிசு பெற் றவர். குறிப்பிட்ட ஒரு துறையில் முன்னணி பில் நிற்பவருக்கு மட்டுமே இந்த நோபல் பரிசு வழங்கப் பெறுகின்றது. புற்று நோய் என்ற கொடிய நோய்க்கு மருந்தாக உதவும் ரேடியத்தையும் இந்த அம்மையாரே கண்டு பிடித்தார். விஞ்ஞானத் திலகமாம் கியூரி அம்மையாரின் இளமைப் பருவந்தான் எவ் வளவு கொடியது! 菁

ஆதிக்கச் சொத்தை அனேவர்க்குஞ் சேர்த்துலகைப் பாதித்த மன்னர் பறக்கவே-சேதித்து
ஏழ் பிறவியும் மறவோம் ஈங்கு.
டுேஷியா ஒரு பெரிய நாடு. அது பல மா காணங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. அவற் றுள் ஒன்றுக்கு ஜியார்ஜியா என்று பெயர். ஜியார்ஜியாவில் காக்கஸ் என்ற பிரதேச முண்டு. இஃது, ஆசியாக் கண்டத்தையும் ஐரோப்பாக் கண்டத்தையும் இணைக்கும் ஒரு பகுதியாகும். அங்குள்ள கோரி என்ற கிராமத்தில் ஒரு சக்கிவியன் வாழ்ந்து வந்தான்
அந்தச் சக்கிலியன் பரம ஏழை, செருப் புத் தைத்து வயிறு வளர்த்தான். அந்தச் சக்கிவியனுக்கு ஒரு மகன் இருந்தான். அந்த மகன் மகா துஷ்டன். அவன் எதற்கும் பயப்படா தவன். அவனுடைய துஷ்டத்தனத்திற்காக அவனேக் கிராமத்திலுள்ளவர்கள் வெறுத்

Page 14
20 இளமைப் பருவத்திலே!
தார்கள். அவன் பெரியவனக வளர்ந்தால், கிராமத்திற்குப் பெருந் தீங்கு வருமென்றும் அவர்கள் அஞ்சினர்கள்.
ஒருநாள். அவன் ஆற்றங்கரையிலிருக்கும் பழக் கடைக்குச் சென்ருன், பழம் வாங்கு வது போல அவ்விடத்தில் உலாவினன். திடீ ரென்று ஒரு பழக்கூடையைத் திருடிக்கொண்டு ஒட்டம் பிடித்த அவன் பிடிபடவில்லை. ஆற் றைக் கடந்து மறு கரையை அடைந்தான். திருடிக் கொண்டு ஓடியதும் அல்லாமல், பழச் சொந்தக்காரனைக் கேலியுஞ் செய்து அவ மதித்தான்.
அவனுக்கு முரட்டுத்தனமான விளை யாட்டுக்களே பிடிக்கும். நண்பர்களுடன் சேர்ந்து யுத்தஞ் செய்வதாக விளையாடுவான். இந்த விளையாட்டு யுத்தத்திலும் வெடி மருந்து கள் உபயோகிக்கப்பட்டன. ஒரு சமயம் வெடி மருந்து பட்டு அயலிலிருந்த வைக்கோற் போர்கள் தீப் பிடித்துக் கொண்டன. அவை எரிந்து சாம்பலாயின. கிராம மக்கள் மிக ஆத்திரமடைந்தார்கள்.
தந்தையை ஏசினர். மகனைத் திருத்தும்
படி வற்புறுத்தினர். தந்தை மனம் வருந்தி னர். இப்படித் துஷ்டனுன அவனை எப்படித்

இளமைப் பருவத்திலே! 2
திருத்துவது என்பதை அறியாது திகைத்தார்.
கடைசியில் மகனை ஒரு நகரத்திற்கு அழைத்துச் சென்ருர், அங்கு வசிக்கும் ஒரு பாதிரியாரிடம் மகனைச் சேர்த்தார். அப்பாதிரி யார் ஒரு பள்ளிக்கூடத்தை நடத்தி வந்தார். அந்தத் துஷ்டச் சிறுவனத் தன்னுடைய பள்ளிக்கூடத்திலே சேர்த்தார். தன்னுடன் விடுதியில் வசிக்கவும் ஏற்பாடு செய்தார்.
தனது பாரம் நீங்கியதாகத் தந்தை கிரா மத்திற்கு மீண்டார். இருப்பினும், அவருக்கு உள்ளூரப் பயம். பாதிரியாரின் பள்ளிக்கூடத் தில் என்ன துஷ்டத்தனங்களைச் செய்வானே
எனப் பயந்தார்.
சில நாள்கள் சென்ற பின்னர், தந்தை யார் மீண்டும் பாதிரியாரிடம் வந்தார். பாதிரி யாரைச் சந்திக்கவே அவருக்குப் பயமாக இருந்தது. மகனைப் பற்றிப் பல குற்றச் சாட்டு கள் சொல்லப் பாதிரியார் காத்திருப்பா
ரென்று அஞ்சினர்!
தயக்கத்துடன் பாதிரியாரை அணுகி, "ஐயா, என் மகன் எப்படி இருக்கிருன்?" என்று கேட்டார். அவருடைய குரல் நடுங் கிற்று.

Page 15
22 இளமைப் பருவத்திலே!
ஆனல், பாதிரியாரின் முகம் மலர்ந்தது. 'பெரியவரே! உம்முடைய மகன் மகா புத்தி சாலி. பாடங்க்ளில் நல்ல கவனம். நன்ருகப் படிக்கிருன்” என்று பாதிரியார் சொன்னர்.
தந்தையும் அக மகிழ்ந்தார்.
பிற்காலத்தில் அவன் வேருெரு காரணத் திற்காக அப்பாடசாலையிலிருந்து விரட்டப் பட்டான்.
ரூஷியா தேசத்திலே பொதுவுடமை அர சாங்கம் நடைபெறுகின்றது. அந்தச் சமதரும ஆட்சியை நிறுவப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஸ்டாலின். சுமார் முப்பது ஆண்டு களாக அவர் ரூஷியா தேசத்தின் தன்னிகரற்ற பெருந் தலைவராக விளங்கினுர். இரண்டாவது உலகப் போரிலே ரூஷியா தேசத்திற்குப் பெரும் வெற்றியீட்டிக் கொடுத்த தலைவர். ஸ்டா லின் என்ருல் இரும்பு மனிதன் என்று அர்த் தம். அவர் ஜோஸப் ஜூகாச்வில்லி என்ற இயற் பெயருடன் சிறுவனக வாழ்ந்த பொ ழுதுதான் துஷ்டனுக வாழ்ந்தார். 女

கல்லா திளமை கழித்தே படைவீரம் வல்லானுய்ப் பின்னர் மதிவளத்தால்-எல்லாப்"
பிரதமர்க்கும் மேலாம் பிரதமராம் சேர்ச்சில் துரைமகனைப் போல்வாயோ சொல்.
இங்கிலாந்து தேசத்திலே, ஒரு தனவந் தர் வசித்து வந்தார். அவர் பிரபுக்கள் குடும் பத்தைச் சேர்ந்தவர். பரம்பரையான பணக் காரர். செல்வாக்கு மிக்கவர். அவருக்கு அர சியலிலும் ஈடுபாடு இருந்தது. அவர் இங்கி லாந்து தேசத்தின் நிதிமந்திரியாக விளங்கி ஞர். மந்திரிப் பதவிகளுள் இஃது ஒரு முக்கிய மான பதவி.
அவருக்கு ஓர் ஆசை இருந்து வந்தது. தன் மகனும் தன்னைப் போன்றே செல்வாக் குடன் வாழவேண்டு மென்று விரும்பினர். தான் எப்படி நிதி மந்திரியாக இருக்கின்ரு ரோ, அப்படியே தன்னுடைய மகனும் இங்கி லாந்து தேசத்தின் நிதி மந்திரியாகத் திகழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ኳ

Page 16
24 இளமைப் பருவத்திலே!
அவருடைய ஆசை இப்படியாக இருக்க, மகனே சரியான மக்குப் பையனுக இருந்தான். அவனுக்குப் படிப்பிலே சிறிதும் அக்கறை இருக்கவில்லை. அவனுடைய மூளையிற் பள்ளிப் படிப்பு ஏறவேயில்லை. ஒரே வகுப்பில் அவன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து படித்தான். நான்காவது வருடந்தான் அவ் வகுப்பிலிருந்து அவன் வகுப்பேற்றப்பட்டான். எல்லாப்பாடங் களுக்கும் மேலாகக் கணக்குப் பாடமே அவனு டைய மூளையில் ஏற வில்லை. அந்தப் பாடத் தை அவன் வேப்பங் காயென வெறுத்தான், "இப்படியாக, படிப்பில் கவனம் இல்லாம லிருக்கும் என் மகளுல் எப்படி இந்த நாட் டின் நிதி மந்திரியாக முடியும்? என் மகன் ஒன்றுக்கும் உதவாத பிள்ளை யாகப் போய்விட் டானே" என்று தந்தை துக்கப்பட்டார்.
அவனே மகா முரடன். சக மாணவர் களுடனும் முரட்டுத்தனமாக நடந்தான். அத் துடன் அகம்பாவியும்கூட ஏழை மாணவர்களைக் காலால் உதைத்துத் துன்புறுத்துவதிலே ஒரு திருப்தி. ஆசிரியர்களையும் அவன் அதிகம் மதிப் பதில்லை. படிப்பிலே கவன மில்லாத அவனை ஆசிரியர்களுக்கும் பிடிக்கவில்லை. அவர்கள் அவனை வெறுத்தார்கள்; ஏசினர்கள்.

இளமைப் பருவத்திலே! 25
அவனுக்குத் தான் ஒரு போர் வீரனுக வேண்டும் என்னும் ஆசை இருந்தது. தான் ஒரு போர் வீரனுக வேண்டுமென்று வற்புறுத்தி வந்தான். தந்தை அதனை விரும்பவில்லை. அவனே மகா பிடிவாதக்காரன். மீண்டும் மீண் டும் தனது விருப்பத்தையே வற்புறுத்தி வந் தான். தனது பாடப் புத்தகங்களை வீசி எறிந்து விட்டுப் பாடசாலைக்குப் போவதை நிறுத்தி ஞன.
ஈற்றிலே, அவனுடைய விருப்பமே நிறை வேறிற்று. வேறு வழியின்றி மகனின் பிடிவா தத்திற்குத் தந்தை விட்டுக் கொடுத்தார். அவன் போர்வீரனுகச் சேர்ந்தான். மகனின் போக்குத் தந்தைக்குப்பெரும் ஏமாற்றத்தையே கொடுத்து வந்தது. அவன் போர் வீரனுன சில நாட்களிலே தந்தை இறந்துபோனுர்,
அவனுடைய தாய் நல்லவள். தனது நம் பிக்கையை இழக்கவில்லை. தன்னுடைய கண வனைப்போல, தன் மகனும் கீர்த்தியுடன் வாழ் வான் என்று நினைத்தாள். அவன் ஒரு காலத் தில் இங்கிலாந்து தேசத்தின் நிதி மந்திரியாகக் கூட வரலாமென்று நம்பினள். கணவன் நிதி மந்திரியாகக் கடமை பார்த்தபொழுது ஒரு விசேட உடையை அணிவார். அந்த உடை
யைத் தாய் பத்திரமாக எடுத்து வைத்தாள்.

Page 17
26 இளமைப் பருவத்திலே
அதனை என்ருவது மகனும் அணிவான் என்பது அவளுடைய நம்பிக்கையாக இருந்தது.
போர் வீரனன அவன் தைரியம் மிக்கப் போர் வீரனுகத் திகழ்ந்தான். கொடிய போர் கள் நடந்த போர் முனைகளிலே நேரடியாக ஈடு பட்டான். அனுபவம் பெற்ருன் . பள்ளியில் அதிகம் படிக்காத அவன் அனுபவப் பாடசாலை யில் நிறையக் கற்றுக் கொண்டான்.
பிற்காலத்தில் அவன் தன்னுடைய தாயின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்தான். தந்தை யின் எண்ணமும் நிறைவேறிற்று. அவன் தந்தை யைப் போல, இங்கிலாந்து தேசத்தின் நிதி மந்திரியானன். தாய், அவனுடைய தந்தை அணிந்தி விசேட உடையை எடுத்துக் கொடுத் தாள். அவனும் அதனை அணிந்தான். அவளு டைய உள்ளம் மகிழ்ச்சியால் நிறைந்தது.
தந்தை நிதி மந்திரியாக மட்டுமே இருந் தவர். ஆனல் அவனே, பிற்காலத்தில் இங்கி லாந்து தேசத்தின் பிரதம மந்திரியுமானன்.
இங்கிலாந்து தேசத்தின் பிரதம மந்திரி களுள் மிகவுங் கீர்த்தி பெற்று விளங்கியவர் சேர். வின்ஸ்டன் சேர்ச்சிலாவர். இரண்டு உலக மகா யுத்தங்களில் இங்கிலாந்து தேசத்து மக் கள் வீரத்துடன் போராட, அவர் உறுதுணை யாக இருந்தவர். அவருடைய பேச்சுகள் தேச பக்தியையும் வீரக்கனலையும் ஒருங்கே மூட்டும்.

இளமைப் பருவத்திலே! • 27
அவர் ஓர் அரசியல் மேதை. சிறந்த ராஜ தந்திரி ஒப்பற்ற பேச்சாளர். சிறந்த எழுத்தா ளருமாவர். இலக்கியத்திற்கான நோபல் பரிசி னையும் பெற்றிருக்கின்ருர், இலக்கியத்தில் முழு நேரமும் ஈடுபடாமல், அரசியல் வாதியாகவே இருந்து, தன்னுடைய எழுத்தாற்றலுக்காக அப் பரிசினைப் பெற்ற ஒரே அரசியல்வாதி இவரேயாவர்.
இன்றும் நம் மத்தியில் வாழும் இந்தப் பழுத்த அரசியல்வாதி, இளமைப் பருவத்தில் படிப்பையே விரும்பாத முரடராக விளங்
கினர்.
始
*சேர். வின்ஸ்டன் சேர்ச்சில் 24-1.65 இல் தமது 90 வது வயதில் காலமானுர்.

Page 18
கல்லாமே தம்மதியாற் காசினியிற் பல்கலைதேர் வல்லாராய் மாகல்வி மக்திரியாய்- கல்லாய்கே ஆசான் மவுலான ஆசாத் தடைந்தநிலை பேசாத காவுண்டோ பேசு.
Lலைவனங்களில் சூடு அதிகமாக இருக்கும். அரேபியா ஒரு பாலைவன நாடு. அங்கே மக்கா என்ற ஒரு நகரமுண்டு. அந்த நகரத்திலே முஹம்மது நபி என்ற மகான் அவதரித்தார் கள். அவர்களே இஸ்லாம் மதத்தை உலகத்த வர்களுக்குப் போதித்தவர்கள். ஆரம்பத்திலே, மூடப் பழக்கங்களுக்கு அடிமையாக இருந்த மக்கள், அவர்களுடைய போதனைகளின் மேன் மையை உணரவில்லை. அவர்களைக் கல்லெறிந்து துன்புறுத்தினர். அப்பொழுது அவர்கள் மதீன நகரத்திற்குச் சென்றர்கள். ஆகையினல், இஸ் லாம் மதத்தின் வரலாற்றிலே மக்கா, மதீன ஆகிய இரு நகரங்களும் முக்கியத்துவம் பெறு கின்றன.
முஹம்மது நபி நாயகம் (ஸல்) அவர்கள் போதித்த போதனைகளிலே புலமை மிக்க ஒரு
 

இளமைப் பருவத்திலே! 29
வர் மக்கா நகரத்திலே வாழ்ந்து வந்தார். இத்தகைய மதப் புலமை மிக்கோரை ‘ஷெய்க்' என அழைப்பர். அவரும் ஒரு "ஷெய்க். அவர் இந்தியா தேசத்திலிருந்து அங்கு குடியேறியவர். அவருடைய மூதாதை யர் அரேபியராவர். அவர் இந்தியாவில் வசித் துக் கொண்டிருந்த காலத்தில், அங்கு சிப் பாய்க் கலகம் ஏற்பட்டது. அஃது, ஆங்கிலே யருக்கு எதிராக நடத்தப் பட்ட சுதந்திரப் போராகும். அப்போர் அடக்கப்பட்டதினுல், அவர் அரேபியாவிலே குடியேறினர். அவருக் குப் பலமொழிகள் தெரியும். அவர் ஓர் அரபுப் பெண்ணை மணஞ் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அச்சிறுவன் பாடசாலைக்குச் செல்ல வில்லை. தாயாருக்கு அரபு மொழி மட்டுமே பேசத் தெரியும். எனவே, தாயாரிடம் அரபு மொழி கற்ருன். தந்தையிடம் உருது மொழி யுங் கற்ருன். இவ் விரு மொழிகளையுங் கற்றுக் கொண்டு, பத்து வயதில் தந்தையுடன் இந் தியா தேசத்திற்கு வந்தான். கல்கத்தா என் னும் நகரத்திலே குடியேறினன்.
தந்தையின் பாத நிழலில் அமர்ந்து, தொடர்ந்து கற்று, அரபு- உருது- பாரசீகம் ஆகிய மும்மொழிகளிலும் அவன் பாண்டித் தியம் பெற்றன்.

Page 19
30 இளமைப் பருவத்திலே!
அச்சிறுவன் ஒரு கவிஞணுகத் திகழ்ந்தான். அந்தச் சிறு வயதிலேயே ஒரு பத்திரிகையின் ஆசிரியணுகவும் இருந்தான். அப் பத்திரிகையின் பெயர் ‘சத்தியத்தின் குரல்’ என்பதாகும். அப்பத்திரிகையில் ஆங்கில ஆட்சியை எதிர்த்து, இந்திய முஸ்லிம் மக்களின் ஐக்கியத்தை வேண்டி , உணர்ச்சி ததும்பும் பல கவிதைகளை எழுதினன். அக் கவிதைகலை ? விடுதலை வேட்கை மிக்கோன் " என்று உருது மொழி யிற் பொருள் படும் புனைபெயரில் எழுதினன். இன்று அவனுடைய இயற் பெயரை விட இப் புனைபெயரே வழங்கி வருகின்றது.
பதினன்கு வயதில், அவன் உபாத்தியாயன ஞன். அவனிடம் பலரும் கற்க வந்தனர். அவனுடைய தந்தையின் வயதை ஒத்த பெரிய வர்களும் அவனுடைய மாணுக்கராக இருந் தார்கள்.
அப்படிக் கற்றவர்களுள் ஒரு கிழப் பட் டாணியரும் இருந்தார். அக்கிழவருக்குப் படிப் பதில் ஆர்வம் இருந்தது. அந்த வயதிலும் ஏதாவது படித்து முன்னேறலாம் என்ற நம் பிக்கை இருந்தது. கிழவருக்குப் புத்தி கொஞ் சம் மந்தம். அவன் கற்பித்த எதுவும் அவ ருக்கு உடனுக்குடன் புரியவில்லை.
அவன் தருக்க சாத்திரமும் படிப்பித்தான்.
தருக்க சாத்திரத்தில் பகுமுறை அனுமானம், தொகுமுறை அனுமானம் என இரு பிரிவு

இளமைப் பருவத்திலே! 3i
களுண்டு. பொதுவான விதிகளிலிருந்து குறிப் பான விதிகளை நிலை நாட்டுவது பகுமுறை அனு மானம். அதற்கு மாருக, குறிப்பானவற்றி லிருந்து பொதுவானவற்றை நிறுவுவது தொகு முறை அனுமானம், இலகுவான முறையில், ஒன்று மேலே இருந்து கீழே வருவது; மற்றை யது கீழே இருந்து மேலே போவது என்று விளக்கினன். கிழப் பட்டாணியருக்கு இந்த இலகுவான முறையில் அவன் தருக்க சாத்தி ரத்தைப் படிப்பித்தான். இவ்வாறு விளங்கப் படுத்தியும் கிழவர் தவறுதலாகவே விளங்கிக்
கொண்டார்.
அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. நிதா னத்தை இழந்தான் புத்தகத்தைக் கிழவரின் முகத்திலே வீசி எறிந்தான். 'உமக்கு ஒரு நாளும் படிப்பு வராது. நீர் எதையும் கற்றுக் கொள்ள மாட்டீர். வீட்டுக்குப் போய்ப் புல் லைத் தின்னும்’ என்று கடுமையாக ஏசினன்.
கிழவர் ஒன்றும் பேசவில்லை . மெளன மாக எழுந்து வீட்டுக்குச் சென்று விட்டார். அன்று முழுவதும் அவர் சாப்பிடவில்லை. தாடி நனைய, சிறு குழந்தையைப்போல அழுது கொண்டிருந்தார்.
அந்தச் சம்பவம், அவனுடைய தந்தைக் குத் தெரிய வந்தது. அவர் மகனைக் கண்டித் தார். வயது முதிர்ந்தோருக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை விளக்கினர். உடனே

Page 20
32 இளமைப் பருவத்திலே!
அந்தக் கிழவருடைய வீட்டிற்குச் சென்று மன்னிப்புக் கேட்கும்படி வற்புறுத்தினர்.
அவன் கிழவருடைய வீட்டுக்குச் சென் முன் துக்கத்துடன் கண்ணிர் வழியக் கிழவர் இருக்கக் கண்டான். அக்காட்சி அவன் மனதை உருக்கி விட்டது.அவரிடம் மன்னிப்புக் கோரினன். ஆனல், கிழவர் எதுவும் நடவா தது போல் நடந்து கொண்டார், ஆசிரியன் என்ற முறையில், அவனுக்குத் தன்னை ஏசவும், தண்டிக்கவும், ஏன் அடிக்கவுங்கூட - உரிமை உண்டு என்று அவர் சொன்னர்.
அவனுடைய மனம் இளகிவிட்டது. அந்தக் கிழவர் சாப்பிடும்வரை அவன் அந்த வீட்டை விட்டுச் செல்லவே இல்லை. அன்றிலிருந்து, எவ்வளவு பொறுமையை இழக்கும் நிகழ்ச்சி நடந்தாலும் அவன் நிதானத்தை இழக்கவே இல்லை. அவனுடைய வாழ்க்கையிலே, இன் னெருவேடிக்கையான சம்பவமும் நிகழ்ந்தது.
லாகூரில் ஒர் இலக்கிய சங்கம் இருந்தது. அதன் அங்கத்தவர்கள் "சத்தியத்தின் குரல்" என்ற பத்திரிகையைப் பிரியமுடன் வாசிப்ப வர்கள். அதன் ஆசிரியருடைய எழுத்து வன்மை யில் மனம் பறி கொடுத்திருந்தார்கள். பத்தி ரிகையின் ஆசிரியரை நேரில் காண ஆசைப் பட்டார்கள். எனவே, அவ்வாண்டு நடை

இளமைப் பருவத்திலே! 33
பெற்ற தங்கள் இலக்கிய சங்க ஆண்டு விழா விற்கு அந்த ஆசிரியரை அழைத்தார்கள்.
அந்தப் பத்திரிகையின் ஆசிரியர் வேறு யாருமில்லை. இளமையிலேயே கற்றுத் தேர்ந்த அவனேதான். அவன் அழைப்பினை ஏற்றுக் கொண்டான்.
கூட்டம் பிரமாண்டமானதாக இருந்தது. அக்கூட்டத்துக்கு இஸ்லாமிய மார்க்க ஞானி களும், இலக்கிய அறிஞர்களும் ஏராளமாக வந்திருந்தார்கள். கவிஞர் ஹாலி, கவிஞர் இக்பால், உருது எழுத்தாளர் நஜீர் அஹ்மது போன்ருேர் முன்வரிசைகளில் இருந்தனர்.
பதினறு வயதுகூட ஆகாத ன்பயன் ‘சத்தி யத்தின் குரல்' ஆசிரியன் என்ற உரிமையோடு பேச எழுந்தான். கூட்டத்தினர் திகைத்தனர். அறிஞர்களும், பண்டிதர்களும் ஏளனப் புன் னகையை உதிர்த்தார்கள். அவன் மதத்தின் அடிப்படையான பகுத்தறிவு" என்ற பொருள் பற்றிப் பேசினன். ஆணுல், அவனுடைய பேச் சைக் கேட்ட பின்னர் அத்தனை அறிஞரும் வியந்தார்கள்; அவனைப் பாராட்டினர்கள். கவிஞர் அல்தாப் ஹ"சேன் ஹாலி, 'இளந் தோள்களில் முதிர்ந்த தலை” என்று அவனைப் புகழ்ந்து கூறினர்.

Page 21
34 இளமைப் பருவத்திலே!
பள்ளிக்கூடம் சென்று என்றுமே படிக்காத அவன், பிற்காலத்தில் பாரதநாட்டின் கல்வி மந்திரியாக பதினெரு ஆண்டுகள் இருந்தான்.
இந்தியா தேசத்தின் சுதந்திரப் போரில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்ட முஸ்லிம் பெரியார் மெளலான அபுல்கலாம் ஆஸாத் ஆவர். எதனையும் நேர்மையுடன் சொல்லும் தீரர். சிறந்த கல்விமான்; கவிஞர்; பேச்சா ளர்; எழுத்தாளர். இறுதிவரை இந்தியா தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட வர். இவர் தொடர்ந்து ஆறு ஆண்டுகள் காங் கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவரென்ருல், இந்திய மக்கள் இவர்மீது வைத்திருந்த நம் பிக்கையை ஒருவாறு அறிந்துகொள்ளலாம். சிறு வயதிலேயே அறிவின் சோதியாக விளங் கிய இவர் பிற்காலத்தில் இந்தியா தேசத்தின் சோதியாக விளங்கியதில் ஆச்சரியம் இல்லை
பல்லவா? -
讲

1ப்பற்சிப் பந்தியாய்க் கற்றுப்பின் மேதையாய்
ஒப்பற்ற சேவை யுணர்ச்சியால்-செப்பரிய நீரத்தால் காட்டுரிமை சேர்த்த முதல்தலைவன்
வீரத் துயர் ஹோசி மின்.
அன்ருெரு நாள். கப்பல்கள் வரிசையாக நின்ற சைகோன் என்ற துறைமுகத்திற்குள் ஒர் இளைஞன் நுழைந்தான். அங்கே அவன் ஒரு கப்பலின் மாலுமியைச் சந்தித்தான். "ஐயா, எனக்குக் கப்பலில் ஒரு வேலை தாருங்கள்” என்று மாலுமியிடம் அவன் கேட்டான்.
மாலுமிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. "கல கல’ எனச் சிரித்தான். அவனுடைய தோற் றந்தான் மாலுமியின் சிரிப்புக்குக் காரணமா கும். அவன் எலும்புந் தோலுமாக இருந் தான். உடலிலிருந்த எலும்புகளை எண்ணி விடலாம். அவ்வளவு மெலிவு. கப்பலில் நல்ல திடகாத்திர உடல் உள்ளவர்களுக்கே வேலை தருவார்கள். அப்படியிருக்க, அந்த மெலிந்த இளைஞன் கப்பலில் வேலை கேட்டால் சிரிப்பு வராதா?

Page 22
36 இளமைப் பருவத்திலே!
மாலுமியின் சிரிப்பைக் கண்ட அவன் துக்கப்பட்டான். அவனுடைய துக்கத்தைக் கண்ட மாலுமிக்கு இரக்கம் பிறந்தது. அன் பான குரலில் 'இளைஞனே! உனக்கு என்ன வேலை செய்யத் தெரியும்’ என்று கேட்டான்.
"ஐயா! நீங்கள் எந்த வேலையைத் தந்தா லும் செய்வேன்,' என்று கூறினன்.
'எந்த வேலையையும் செய்வாயா?’ என்று மீண்டும் மாலுமி கேட்டான்.
“எந்த வேலையையும் பழகினல் செய்யமுடி யும்' என்ருன் இளைஞன். அந்த பதிலில் ஓர் உறுதி தொனித்தது. மாலுமி அவனுடைய உறுதியைக் கண்டு ஆச்சரியப்பட்டான். அந்த இளைஞன் மீது பிரியமும் உண்டாயிற்று.
உடனேயே, மாலுமி அவனைக் கப்பலுக் குள் அழைத்துச் சென்ருன். கப்பல் அதிகாரி யிடம் மாலுமி அவனைப் பற்றிப் பலவாறு மெச்சிப் பேசினன். கப்பல் அதிகாரியும் சந் தோசப்பட்டார். அவனுக்குக் கப்பலில் ஒரு வேலை கொடுக்கப்பட்டது. அஃது இரண்டா வது சமையற்காரன் வேலையாகும். இந்த வேலை கிடைத்ததில் அவனுக்கு மிகுந்த சந்தோசம்.
ஒவ்வொரு நாளும், கப்பலிலுள்ள எச்சிற் கோப்பைகளைக் கழுவினன். சமையலுக்குத் தேவையான காய்கறிகளையும், மீனையும்,

இளமைப் பருவத்திலே! 37
இறைச்சியையும் வெட்டிக் கழுவினன். இது மிகக் கடினமான வேலை. நித்திரை கொள்ளும் நேரத்தைத் தவிர மற்றைய நேரமெல்லாம் வேலை செய்தான். அவன் புத்திசாலி. நித் திரை கொள்ள நேரம் கிடைத்ததும், உடனேயே நித்திரை கொள்ளமாட்டான். நடுச்சாமத்திலும் தனக்குக்கிடைத்த புத்தகங் களைப் படித்துக் கொண்டிருப்பான்.
அந்த விநோத சமையற்காரன், வாழ்க்கை பூராகவும் அந்தக் கப்பலின் சமையற்காரணுக இருக்க வில்லை. உழைப்பாலும் படிப்பாலும் முன்னேறி, தன்னுடைய நாட்டின் பெருந் தலைவனுணுன்.
சீனுவுக்குத் தெற்கே வட வியட்னும் என்ற நாடு உள்ளது. அங்கு இரண்டு கோடி மக்கள் வசிக்கிருர்கள். அந்த நாட்டின் மிக உயர்ந்த பதவி ஜனதிபதிப் பதவியேயாகும். இன்று அந்தப் பதவியை வகிப்பவர் டாக்டர் ஹோ-சி. மின் என்பவர். இவரே அந்நாட்டின் முதலாவது ஜனதிபதியுமாவர். இவர்தான் இளமைப் பருவத்தில், ஒரு கப்பலில் இரண் டாவது சமையற்காரணுக வேலை செய்தவ
punrønu ri.
本

Page 23
வான மளாவு மலைச்சிகர மேறுமகன் ஞான மலைச்சிகரம் கன்றேறி-மேனிலைசேர்
முத்தி முடிசூடிப் பாப்பாண் டவராகி வத்திக்கான் மீதாண்டான் வந்து.
இத்தாலி தேசத்தில் டீஸியோ என் ருெரு கிராமம் உண்டு. அங்கே ஒரு குடும்பம் வசித்து வந்தது. தாயும் தந்தையும் கடுமையான உழைப்பாளிகள். பட்டு நெசவு செய்வது அவர்களுடைய தொழில். அவர்களுக்கு நான்கு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் இருந்தனர்.
பட்டு நெசவுக்கு இயந்திரம் பூட்டப் பட்டது. வீட்டின் ஓர் அறையில், இந்த இயந் திரம் பன்னிரண்டு மணித்தியாலங்களும் வேலை செய்யும். எப்பொழுதும் இரைச்சலாக இருக், கும். இந்த இரைச்சலின் மத்தியில் அந்தக் குடும்பத்தில், நான்காவது மகளுகப் பிறந்த ஒரு சிறுவனும் வசித்து வந்தான்.
அக்கிராமத்திலிருந்து பார்த்தால், ஐரோப் பாக் கண்டத்தின் பெரிய மலைகளுள் ஒன்றன
 

இளமை ப் பருவத்திலே! 39
ஆல்ப்ஸ் மலைத்தொடர் தெரியும். அவன் அந்த மலைச் சிகரங்களை ஆச்சரியத்துடனும், ஆவலுடனும் பார்ப்பான். பணியால் மூடப் பட்டிருக்கும் அந்த மலைச் சிகரங்களிலே, தான் ஏறவேண்டும் என மிக்க விருப்புக் கொண்டான். மலை ஏறுவதில் அவனுக்குப் பைத்தியமே ஏற்பட்டது என்று சொல்லலாம்.
கிராமத்திற்கு அயலிலிருந்த குன்றுகளில் ஏறத் தொடங்கிவிட்டான். அவனும் நண்பர் களும் குன்றுகள் மீது ஏறிப் பொழுதினைப் போக்குவார்கள். ஒரு சமயம், அவனுடைய நண்பர்கள் வெகு வேகமாகக் குன்றின்மேல் ஏறினர்கள். உயரமான இடத்தில் அமர்ந்தார் கள். ஆனல், அவனே மிகக் கீழேயிருந்து மெது வாக ஏறிக்கொண்டிருந்தான். நண்பர்களிருந்த இடத்தை அடைந்தான்.
நண்பர்களால், அந்த இடத்திலிருந்து மேலே ஏற முடியவில்லை, அவர்கள் கீழே இறங்கத் தொடங்கினர். அவன் திடநெஞ்ச மும், தன்நம்பிக்கையும் கொண்டவன். தன்னந் தனியாக அவன் மேலே மேலே ஏறிஞன். ஈற்றில், அவன் அக்குன்றின் மிக உயர்ந்த சிகரத்தை அடைந்தான். சிறு வயதிலேயே மலையேறுவதிலே புகழ் பெற்ருன்.
பிற்காலத்தில், அவன் ஆல்ப்ஸ் மலையி லுள்ள மாண்ட்ரோஸா என்ற மலைச் சிகரத்

Page 24
40 இளமைப் பருவத்திலே!
தின்மீது ஏற உறுதி கொண்டான். மூன்று கூட்டாளிகளுடன் புறப்பட்டான். தேர்ச்சி பெற்ற மலையேறிகள் கூட இதனை ஒர் அபாய கரமான முயற்சி என்று கருதினர். இதற்கு முன்னர் இந்தச் சிகரத்தில் ஏற முயன்றேர் உயிரை இழந்திருக்கின்றனர். ஒருவரும் வெற்றி பெற்றதில்லை.
அவன் விடா முயற்சியுள்ளவன். பல இன்னல்களைச் சகித்து, தன்நம்பிக்கையுடன் ஏறினன். ஈற்றில், ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மிக உயர்ந்த சிகரத்தையும் அடைந்தான். மலையில் ஏறுவதைப்பார்க்கிலும் இறங்குவது கடினம், இறங்கும் போது, வேருெருவரும் காணுத புதிய வழியாக இறங்கினன். இஃது, ஓர் உலக சாதனையாகும். பிற்காலத்தில் அவன் கண்டு பிடித்த பாதை இராணுவத் தினருக்கு உதவியாக இருந்தது. இந்தப் பாதைக்கு, அவனுடைய பெயரைச் சூட்டி னர். இன்றும் அப்பாதை அவனுடைய பெயர் தாங்கி ‘ரட்டிபாதை’ என்றே அழைக் கப்படுகின்றது.
மலையேறுவதிலே ஆர்வங்காட்டிய அவன் வெறும் மலையேறியாகவே தனது புகழை நாட்டி விட்டு இறந்து போனன் என்று நினைக் கின்றீர்களா? இல்லை. வேருெரு விதத்தில் அவனடைந்த புகழ்தான் இன்றும் நிலைத்து நிற்கின்றது.

இளமைப் பருவத்திலே! 4.
கத்தோலிக்க மதம் எல்லா நாடுகளி லும் பரவியுள்ளது. கத்தோலிக்க திருச்சபைக்கு ஒரு தலைவருண்டு. எல்லாக் குருவானவர்களுக் கும் இவரே தலைவர். உலகத்திலுள்ள அத்தனை மதத் தலைவர்களிலும் அதிகம் போற்றிக் கெள ரவிக்கப்படுபவர் இவரேயாவர்.இவரைப் போப் பாண்டவர் என்றழைப்பர். இந்த உயர்ந்த பதவியில் இருந்து அருந் தொண்டாற்றியவர் பதினென்ரும் பயஸ் போப்பாண்டவராவர். டாமியானே அச்சில் ரட்டி என்ற பெயரில் மலை யேறியாக இருந்த இப்பெரியார், பயஸ் என்ற பெயருடன் போப்பாண்டவரானர்.
பயஸ் என்ற சொல்லுக்குச் சாந்தி’ என்று பொருள். இவர், சாந்தியை நிலை நாட்டிய ஒரு பெருந்தகையாளராவர்.

Page 25
மன்னு மறிவினிது வாய்ந்துலகில் மாபேணு
மன்னனென கன்று வயங்கியே-எங்ாநாடும்
ஏற்றும் புகழ்டிக்கன்ஸ் ஏந்து மெழுதுகோல் ஆற்றலுக்கு முண்டோ அளவு.
செம்பட்டை மயிர் நீலக் கண்கள்; வளைந்த புருவங்கள்; பெரிய வாய்; கூர்ந்த மதி; . இத்தனையுமுள்ள அழகான சிறுவனவன். அவன் ஒரு தொழிற்சாலையிலே கூலியாக வேலை செய்து கொண்டிருந்தான்.
அந்தத் தொழிற்சாலை மிகவுஞ் சிறியது. இருண்ட அறை. எங்கும் எலிகள் வசித்தன. அவ்வளவு அழுக்கு நிறைந்த இடம். அங்கு சப்பாத்துக்குப் பூசும் மை தயாரித்தார்கள். அந்த மை நிறைந்த போத்தல்களில் விளம் பரம் ஒட்டுவது அவனுடைய வேலை. அந்த வேலையை அவன் மிகவும் சுறு சுறுப்பாகச் செய்வான். அவன் அவ்வேலையை விரைவாகச் செய்வதைக் காண மக்கள் சன்னலோரங் கூடு வார்கள். அவனுடைய கைகளும், உடலுந் தான் அத்தொழிற்சாலைக்குள்ளே இருந்தன.
 

இளமைப் பருவத்திலே! 43
மனம் வேறு எங்கோ ஒர் இடத்தில் இருந்தது. அந்த வேலை அவனுக்குப் பிடிக்கவில்லை. அவன் வறுமையினல் துன்புற்றன். இந்த வேலையை விட்டாலும் வேறு கதி இல்லை.
அவனுடைய பெற்றேர்கள் பரம ஏழை கள். வாங்கிய கடனைச் செலுத்தத் தவறியதற் காகத் தந்தை சிறைத் தண்டனை அனுபவித் துக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் இங் கிலாந்து தேசத்தில் ஒரு வழக்கம் இருந்தது. ஒரு சிறு கூலியைச் செலுத்தினல், ஒரு கைதி யின் குடும்பம் அவனுடன் சிறைச்சாலையில் வசிக்கலாம். ஏழைத் தாய் அக்கூலியைக் கொ டுத்துத் தன் பிள்ளைகளுடன் சிறையில் வசித் தாள். சிறையில் வாடிய அந்தக் குடும்பத்தின் பிள்ளைகளுள் அவன் மட்டுமே உழைத்தான். அதுவும் அந்தச் சின்னஞ் சிறு வயதில், ஒரு தொழிற்சாலைக் கூலியாக உழைத்தான். சம் பளம் நாள் ஒன்றுக்கு முப்பத்திரண்டு சதங் களே! ஞாயிறு தோறும் விடுமுறை. ஞாயிறு தோறும் பெற்றேருடன் வாழச் சிறைச்சாலைக் குச் சென்று விடுவான். அவன் தினசரி ஒரு கோப்பை பாலும், வெறும் பானுமே சாப்
பிடுவான்.
அவனுடைய தந்தைக்குத் திடீரென நல்ல காலம் பிறந்தது. தூரத்து உறவினர் ஒருவர் செத்துப் போனர். அவருடைய சொத்துக் களின் ஒரு பகுதி அவன் தந்தையைச் சேர்ந்

Page 26
44 இளமைப் பருவத்திலே!
தது. கடனை அடைத்துச் சிறையிலிருந்து மீண் டார். ஆனல், அவனுடைய தொழிற்சாலை வேலை பறி போய் விட்டது. இப்பொழுது தந்தையிடம் கொஞ்சம் பணமிருந்தது. அவன் தந்தையிடம் படிக்கப் போவதாகக் கூறினன். தந்தையும் அவனைப் பள்ளிக்கூடத்திலே சேர்த் தாா.
அந்தப் பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரி யர் மகாகொடியவர். எந்த நேரமும், எதற் கும் மாணுக்கரைத் தண்டிப்பார், அவர் உப யோகித்த பிரம்பு கத்தியைப் பேன்றதாம். அவன் அங்கு இரண்டு வருடங்களே படித்தான்.
தொடர்ந்து படிக்க முடியவில்லை. தந்தை பெரிய செலவாளி. சொத்துக்கள் கரைந்து விட் டன. இதனுல், அவன் மீண்டும் வேலை தேடி அலைந்தான். இப்பொழுது கொஞ்சம் படித் திருந்ததினுல், வாரம் ஒன்றுக்குப் பத்து ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அந்த வேலை யிலிருக்கும் பொழுது நிறைய நிறையக் கதைப் புத்தகங்களை வாசித்தான்.
தொழிற்சாலையில் வேலை செய்த பொழு தும், பாடசாலையில் படித்த பொழுதும் அவ னுடைய மனம் கற்பனைகளில் மிதக்கும். இந் தக் கற்பனைகளின் பயணுக, அவன் பிற்காலத் தில் மிகச் சிறந்த நாவலாசிரியணுகத் திகழ்ந் தான்.

இளமைப் பருவத்திலே! 4S
ஆங்கில மொழி உலக மொழி என்ற நிலை யைப் பெற்றுள்ளது. அம்மொழியிலுள்ள இலக்கியத்தை எத்தனையோ எழுத்தாளர்கள் நாடகமேதை சேக்ஸ்பியரின் அடியடியாக வளப்படுத்தி யிருக்கிருர்கள். அப்படி வளப் படுத்தியவர்களுள் சார்ல்ஸ் டிக்கன்ஸ் ஒருவர். இவர் எழுதிய நாவல்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. இலக்கியத்தின் புதிய துறையான நாவலிலக்கியத் துறை இவரால் வண்ணக் கோலம் பெற்றது. அத்தகைய நாவல்களை எழுதிய இவர் தான், இளமைப் பருவத்தில் முப்பத்திரண்டு சதங்களுக்காகக் கூலிவேலை செய்தார்! 始

Page 27
வாடும் முகத்தை மலர்விக்கும் மாதுயரம் கூடும் மனத்தின்பால் கூட்டுமே-சாடும் பகைவரையும் கண்பாக்கும் பார்சாளி சப்ளின் நகையுவகைச் சொல்லின் கயம்.
இங்கிலாந்து தேசத்தின் தலைநகரம் இலண் டன் மாநகரமாகும். அந்தப் பென்னம் பெரிய நகரத்தில், ஏழைகளும் வசிக்கின்ருர் கள். ஏழைகள் மிக நெருக்கமான சிறிய குடிசையில் ஓர் ஏழைக் குடும்பம் வசித்து வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு சிறுவன் பிறந்தான். அவனின் தந்தை அளவுக்குமிஞ்சிக் குடிப்பான். குடும்பம் பட்டினியால் வாடும். குடிகாரனன அவனுடைய தந்தை குடியின லேயே செத்துப்போனன். விதவைத் தாயினல் அவனுக்குச் சாப்பாடு போடமுடியவில்லை.
தாயிருந்தும் அவன் அநாதையானன். வேளா வேளைக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. பல சமயங்களில் பசியால் வாடினன். இந்நிலை யில், அந்தச் சின்னஞ் சிறு வயதில், அவன் வேலை தேடி அலைந்தான்.
 

இளமைப் பருவத்திலே! 47.
ஓர் அம்பட்டன், அவனுக்கு முடிவெட்டும் கடையில் வேலை கொடுத்தான். சில காலம் அங்கு சவரத் தொழில் செய்து வந்தான், அந்த வேலை அவனுக்குப் பிடிக்க வில்லை. சவ ரத் தொழிலை விட்டு விட்டு, பொம்மைக் கடையில் வேலையாளாகச் சேர்ந்தான். அவ னுக்குக் கிடைத்த கூலி, சாப்பாட்டிற்கே போதவில்லை. இதன் காரணமாகச் சிலசம யங்களிலே திருடினன். அப்பொழுது அவனுக்கு ஏழே ஏழு வயதுதான்.
அவனுக்கு நடனமாடுவதில் விருப்பமிருந் தது. நடனம் சுற்று, அதனையே ஒரு பிழைக் கும் வழியாக மேற் கொண்டான்.
ஒரு நாள். ஓர் ஊரில் நாடகமொன்று நடைபெற்றது. அந்த நாடகத்தில் ஓநாய் வரு வதாய் ஒரு காட்சி இருந்தது. அவன் ஒநா யாக நடித்தான். அவன் நடிப்பு நன்ருய் அமைந்து விட்டது.
ஏழ்மையின் காரணமாக அவன் பாட சாலைக்கே சென்றதில்லை. நிரந்தரமான வேலை யெதுவும் கிடைக்கவில்லை. கடைசியில், ஒரு நாடகக் குழுவில் ஒரு தொழிலாளியாகச் சேர்ந்தான். அவனுடைய வாழ்க்கையிலே பெரி யதோர் மாறுதல் ஏற்பட்டது.
அந்த நாடகக் குழு நல்ல பிரசித்தமாக இருந்தது. அவர்கள் அமெரிக்கா தேசத்திற்குச்

Page 28
-B இளமைப் பருவத்திலே!
சென்று பல நாடகங்களை நடத்திப் புகழ் பெற்ருர்கள். அந்த நாடகங்களில் நடிக்க அவனுக்குஞ் சந்தர்ப்பங்கள் கிடைத்தன. அவனை ஒரு நல்ல நகைச்சுவை நடிகனென்று பலரும் பாராட்டினர். பசியால் வாடிய அவ ணுக்குப் பணமும் வந்தது; புகழும் கிடைத்தது.
அப்பொழுதுதான் சினிமாப் படங்கள் எடுக்க ஆரம்பித்திருந்தார்கள். அந்த மெளனப் படங்களிலே நடித்துப் பெரும் பணமும் புக ழுஞ் சம்பாதித்தான். விஞ்ஞானப் புதுமை யினுல், மெளனப் படங்களுக்குப் பதிலாகப் பேசும் படங்கள் வந்தன. பேசும் படங்களி லும் நடித்தான். உலகின் சிறந்த நகைச்சுவை நடிகனென்று புகழ் பெற்ருன், "அவனைப் போன்ற ஒரு நகைச்சுவை நடிகன் தோன்றிய தில்லை" என்று உலகம் அவனைப் போற்று கின்றது.
சார்லி சப்ளின், நகைச்சுவையால் மக் களைக் களிப்புறச் செய்தவர். ஆழ்ந்த கருத்து களே நகைச்சுவையுடன் வெளியிடுவார். உலக சமாதானத்தை விரும்புபவர். இன்று, இவர் கோடி சீமாஞகச் சுவிட்ஸர்லாந்து தேசத்தில், அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்ருர்,
菁
 
 
 
 
 
 
 

சத் துணிவுமன் நேர்மை சுறுசுறுப்பு
சமிலா வாழ்வு வளர்அறிவு-கொஞ்சமூமோர் பழுக்கில் லாத அயல் காட்டுக் கொள்கைக்கே புவீர் நேருவினேத் தேர்ந்து.
இந்தியா தேசத்தின் வடபுலத்தில் அலஹா பாத் என்ருெரு நகரம் இருக்கின்றது. அங்கே ஒரு தனவந்தர் வசித்து வந்தார். அவர் ஒரு பெரிய நியாயதுரந்தர். எல்லாச் சிறப்புகளும் பெற்றுச் சீருடன் வாழ்ந்து வந்தார்.
அந்தத் தனவந்தருக்கு ஒரு மகன் இருந் தான். அவன் குறும்புக்காரன் முற்கோபி திட நெஞ்சமுள்ளவன் புத்திசாலி. தனவந்தர் ஒரு நாள் தனது பேணுவைத் தொஃலத்து விட்டார். அது திருட்டுப் போனதாகத் தெரிந்தது. பல ரையும் விசாரித்தார். ஈற்றில் தனது மகனே தன் பேணுவைத் திருடி ஒளித்து வைத்திருந்த தைக் கண்டார். திருட்டுப் பழக்கம் பொல்லாத பழக்கம் என்பதைத் தனவந்தர் அறிவார். மகன் என்றும் இரக்கப்படாது, குறும்புத்தனம்
ד

Page 29
50 இளமைப் பருவத்திலே!
செய்தான் என்று வாளா விருக்காது, அவனை அடித்துக் கண்டித்தார்.
அவனுக்கு ஒரு தங்கையுமிருந்தாள். தன் தங்கைக்கு அவன் கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பான். ஒருநாள், ஒரு கணக்கை நீண்ட நேரம் விளங்கப் படுத்தினன். நன்முக விளங் கப்படுத்திய பின்னர், தங்கையை அந்தக் கணக் கைப் போடச் சொன்னன். அண்ணன் அவ்வ ளவு நேரமும் சொல்லிக் கொடுத்தவற்றைத் தங்கை மறந்து போனுள். அவள் "திருதிரு” வென விழித்தாள். உடனே அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. கணக்குப்புத்தகங்களைத் தூக்கி எறிந்தான். "நீ வெளியே போ!' என்று தங்கையைப் பார்த்து உரக்கக் கத்தினன். அவ னுடைய கோபத்தைக் கண்ட தங்கை பயத்தில் அழுதுகொண்டே வெளியே போய்விட்டாள்.
எட்டு வயதாக இருக்கும் பொழுதே, அவன் குதிரைச் சவாரி செய்யவும் பழகிக் கொண்டான். தன்னந் தனியாகக் குதிரையில் ஏறி தூரத்திற்குச் சவாரி செய்யப் புறப்பட்டு விடுவான். அன்று, தனவந்தர் வீட்டில் விருந்து வைபவம். பெரிய பிரமுகர்கள் எல்லாரும் தன வந்தர் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அவன் ஒரு வருக்குந் தெரியாமல், குதிரையில் ஏறிச் சவா ரிக்குப் போய்விட்டான். அவன் ஏறிச் சவாரி செய்த குதிரை ஒரு முரட்டுக் குதிரை. அது, அவனை உருட்டிக் கீழே தள்ளிவிட்டு வீட்

இளமைப் பருவத்திலே! S.
டுக்குத் திரும்பிவிட்டது. தனியாக வரும் குதி ரையைக் கண்டதும், தனவந்தர் பயந்து போனர். மகனுக்கு ஏதாவது ஆபத்து நேர்த் திருக்குமோ என்று பயப்பட்டார். விருந்துக்கு வந்திருந்த நண்பர்கள் சிலருடன் மகனைத் தேடிப் புறப்பட்டார். வழியிலே மகன் சிரித்த படி வருவதைக் கண்டார். மகனுடைய திட நெஞ்சையும் தைரியத்தையும் கண்ட தனவந் தர் மிகுந்த சந்தோசங் கொண்டார்.
இப்படிக் குறும்புக்காரனகவும். முற்கோபி யாகவும், தைரியசாலியாகவுமிருந்த அவன் படிப்பிலே கெட்டிக்காரன். தனவந்தர் அவனை இங்கிலாந்து தேசத்திற்குப் படிக்க அனுப்பி வைத்தார். அங்கு, ஒரு சமயம் அவனுடைய படிப்பின் திறமைக்காக ஒரு புத்தகம் பரிசாகக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படித்த அவ ஒனுக்கு ஓர் எண்ணம் பிறந்தது. தான் பிறந்த நாட்டினை இங்கிலாந்து தேசத்தார் ஆள்வது கொடுமை என்பதை உணர்ந்தான். இந்தியா தேசம், அடிமை நாடாக இருக்கக் கூடாது; அது சுதந்திர நாடாக வேண்டும் என நினைத்தான். அதற்காகத் தான் பாடு பட வேண்டுமென்று உறுதி பூண்டான். அப்பொழுது அவனுக்குப் பதினறு வயது தான்.
தனவந்தரைப் போன்றே நியாயதுரந்தர் படிப்பை முடித்துத் தாய் நாட்டிற்கு மீண் டான். ஒரு காலத்திலே தந்தையின் பேணு

Page 30
5. இளமைப் பருவத்திலே!
வைத் திருடிய அவன், பிற்காலத்திலே பல புத்தகங்கள் எழுதினுன் முற்கோபியாகத் தங் கையைக் கோபித்த அவன், மக்களின் அன் பைப் பெற்றன். மக்களுக்குச் சுதந்திர வேட் கையை ஊட்டினுன் தைரியத்துடன் சிறை சென்ருன். சுதந்திரக் கனவை நனவாக்க உழைத்தான்.
இந்தியா தேசம் 1947-ம் ஆண்டில், சுதந் திரம் பெற்றது. பண்டிட் ஜவஹர்லால் நேரு சுதந்திர இந்தியாவின் முதலாவது பிரதம மந்திரியானுர், கடந்த பதினேந்து ஆண்டு களாக அவரே தொடர்ந்து பிரதம மந்திரி யாக இருந்து வருகின்ருர்". இந்தப் பெரியாரின் இளமைப் பருவத்துச் சம்பவங்கள் எவ்வளவு
வேடிக்கையானவை!
鹊
ஜவஹர்லால் நேரு 27-5-64 இல் டில்லியில் காலமாளுர்,

ட்டாகத் தேடியே சீவியத்தில் எப்போதும் டாக வாழ்கோடி சீமானேத்-தட்டாத
ாவெனும் ஹென்றிபோட் வாழ்வை புதாரணமாக்
ாள்க குறிக்கோளாக் கொண்டு. مراسم
"புதிய உலகம்" என்று அமெரிக்காக் கண் டம் அழைக்கப்படுகின்றது. அங்கு ஐரோப்பி யச் சாதியார் பலர் வசிக்கின்ருர்கள். அந்நாட் டிலே வசித்த ஒருவர், ஒல்லாந்து நாட்டின் வம் சத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை விவாகஞ் செய் தார். அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந் தTTகிள.
அவர்களுள் மூத்தவன் கெட்டிக்காரன். தனது கிராமத்திலிருந்து, இரண்டு கட்டை தூரத்திலுள்ள ஒரு பாடசாலைக்கு நடந்தே போவான். பகல் வேளைக்கு, உணவு கட்டிச் செல்வான். படிப்பில் மிகவும் ஊக்கம், இயந் திர சம்பந்தமான விடயங்களிலும் அதிக கவன மிருந்தது. இதனல், ஆபத்துகளுக்கும் ஆளாகி யிருக்கிருன்.

Page 31
S4 இளமைப் பருவத்திலே!
ஒரு நாள், அவன் நீராவியின் சக்தியை அறிய விரும்பினன். தண்ணீர் வாயு உருவம் பெறும் பொழுது சக்தியும் பெறுகின்றது, ஒரு மண் கேத்தலை எடுத்தான். அந்தக் கேத்தலின் மூக்கினையும் அடைத்தான். அதனை அடுப்பில் வைத்தான். தண்ணிர் கொதிக்கத் தொடங் கியது. சிறிது நேரத்தில் கேத்தல் வெடித்தது. அதன் துண்டுகள் நாலா பக்கமுஞ் சிதறின. ஒரு துண்டு கண்ணுடியை உடைத்தது. ஒன்று அவன் முகத்தைச் சிராய்த்தது. வாழ் நாள் பூராகவும் அந்தத் தழும்பு அவன் முகத்தில் இருந்தது. இருப்பினும், நீராவியின் பெருமை யை உணர்ந்த அவன் அதனைத் திருவாளர் நீராவி’ என்றே அழைப்பான்.
இந்த இயந்திரப் பரிசோதனை பாடசாலை யிலும் நடக்கும். ஒரு நாள் அவனும் கூட் டாளியும் சேர்ந்து ஒரு கடிகாரத்தின் பகுதி களைக் கழற்றினர்கள். பகுதிகள் துண்டு துண் டாகக் கிடந்தன. இதனை உபாத்தியாயர் கண்டு விட்டார். "எதற்காகப் பள்ளிக்கூடம் வரு கின்றீர்கள்? அந்தக் கடிகாரத்தைக் கொண்டு வாருங்கள். அதனைப் பாடசாலை விட்டதும் பொருத்தி விட்டுத்தான் போக வேண்டும்” என்று கண்டிப்பாகச் சொன்னர். அதனைப் பொருத்த பல மணி நேரமாகும் என்றே உபாத்தியாயர் நினைத்தார். ஆனல், அவனே பத்து நிமிடங்களுக்குட் சரி செய்துவிட்டான். அன்று தொடக்கம் அவன் அயலிலுள்ளவர்

இளமைப் பருவத்திலே! S5
களுடைய கடிகாரங்களைத் திருத்தவும் தொடங்கி விட்டான்.
அவன் வாலிபணுகி, மணஞ்செய்து வாழ்ந் தான். அப்பொழுது அவனுக்கு ஓர் ஆசை உண்டாயிற்று. அந்தக் காலத்தில், குதிரை பூட்டிய வண்டிகளிலேயே மக்கள் பிரயாணஞ் செய்தார்கள். குதிரையில்லாத வண்டி ஒன்று கண்டு பிடிப்பது தான் அவனுடைய ஆசை.
ஒரு நாள். தன் மனைவியிடம், ‘குதிரை யில்லாத வண்டி ஒன்று செய்யப் போகின் றேன்' என்ருன். தன் கணவனுக்குப் பைத்தி யமோ என்று கூட அவன் யோசித்தாள். 'எப் படிக் குதிரையில்லாமல் வண்டி ஒடும்?" அவ எால் அதைக் கற்பனை கூடச் செய்ய முடிய வில்லை. அவள் ஆச்சரியத்துடன் விழிப்பதைக் கண்டு, அவன் சிரித்தான்.
“ஒரு பேப்பரும் பென்சிலும் கொண்டு வா விளக்குகின்றேன்" என்ருன். அவள் ஒரு கசங்கிய பேப்பரும் பென்சிலும் கொடுத்தாள். அவன் அதிலே பல படங்களைக் கீறி, குதிரை யில்லாத வண்டியின் அமைப்பைக் காட்டி ஞன். அவள் அப்படி ஒரு வண்டியைச் செய் யலாம் என்பதை நம்பவில்லை. ஆனலும், கண வனுக்கு உதவியாக இருந்தாள்.

Page 32
56 இளமைப் பருவத்திலே!
பல நாள்கள் தொடர்ந்து உழைத்தான். அவன் குதிரையில்லாத வண்டி ஒன்றைக் கண்டு பிடித்தான். இதனைக் கண்டு பிடிக்கும் பொழுது பசியாலும் பட்டினியாலும் வாடி யிருக்கிருன். அவன் கண்டு பிடித்தது தான்
மோட்டார்கார்,
அமெரிக்கா தேசம் கோடீஸ்வரர்கள் வாழும் தேசம் என்று சொல்லப்படுகின்றது. சுய முயற்சியினுலும், உழைப்பினுலும் அங்கு பலர் செல்வந்தராகி வாழ்கின்றனர். அவர் களுள் ஒருவர் ஹென்றி போர்டு என்பவர். அவர் தன்னுடைய சொந்த முயற்சியினுலே பெரும் தொழில் அதிபராக விளங்கினர். பெருங் கோடீஸ்வரராகத் திகழ்ந்தார்.
+F
 

கவி செந்தமிழை ஆதரியார் தம்மைவசை ாகவி சான்ருேரைப் பேணுவரை-வாசிச்
படையால் தாக்கும் திறன் சேர்வேற் பிள்ளே
கெள முதிநூலேக் காண்.
GF Gogol என்பது ஒரு வடிவாக நின்ற சொற்ருெடர் பல பொருளுடையதாக வரும் ஒர் அணியாகும். இதனேக் கையாள்வதற்குப் புத்தி சாதுர்யந் தேவை. இது கற்ருேருக்கு இன் சுவை பயப்பதாகும். அவன் சிலேடை யாகப் பேசுவதிற் சமர்த்தன். ஒரு சமயம் அவன் ஒரு தட்டானைப் பார்த்து, "பத்தரை வெள்ளியால் செய்ய முடியுமா?" என்று கேட் டான். பத்தரை ரூபாய் எடையுள்ள வெள்ளி பால் செய்யும்படி கேட்கின்ருன் என்றே தட் டான் நினைத்தான். அதனுல், 'முடியும்' என்று சாதித்தான். அவன் 'முடியாது' என்று சொன்னுன் கடைசியில், 'பத்தரை (தட்டானே) வெள்ளியால் செய்ய முடியுமா?" என்று கேட்டான். அந்தக் கேள்வியிலிருந்த

Page 33
58 இளமைப் பருவத்திலே
இரட்டை அர்த்தங்களை வைத்தே இப்படி வேடிக்கை செய்தான்.
ஒரு சமயம், கற்பலகையிலே ஒரு செட்டி யாரைப் பற்றி அவதூருக எழுதி வைத்து விட்டான். கோபங் கொண்ட செட்டியார் அவன் மீது வழக்குப் போட்டார். வழக்கு விசாரணைக்கு வந்தது. "நீர் தானே சிலேட்டில் எழுதியது” என்ற கேள்வியுங் கேட்கப்பட்டது. அவன் ஒன்றுமே தெரியாதது போல நின்ருன். அப்பொழுது அந்தச் சிலேட்டை எடுத்துக் காட்டினர்கள். அதற்கு அவன், "உதையா கேட்கிறீர்” என்ருன். அந்த மறுமொழியில், "உ" சுட்டெழுத்தாகவும் தொனிக்கிறது. அதே சமயம், ‘என் காலால் உதை வேண்டுமா?* என்ற அர்த்தத்திலும் அமையும்.
அந்தக் காலத்தில் தம்பு துரைசாமி என்ற ஒரு பிரபல நீதிபதி வாழ்ந்தார். அவர் சாவ கச்சேரியைச் சேர்ந்தவர். சாவகச்சேரியைச் சேர்ந்தவர்களை ‘குளைக்காட்டார்” என்று வேடிக்கையாக அழைப்பர். ஒரு சமயம் அந்த நீதிபதியின் முன் நிலையில் அவன் சாட்சியாக இருந்தான். நீதிபதி சாட்சியான அவனைப் பார்த்து, “கொலை நடந்த பொழுது என்ன நேரம்” என்று கேட்டார். அதற்கு அவன், **அப்பொழுது பொழுது குளைக்குள் நின்றது' என்று சொல்லி, அறிந்தோரைச் சிரிக்கச் செய்தான்.

இளமைப் பருவத்திலே! 59
சில புகையிரதக் கடவைகளில் 'கோச்சி வரும் கவனம்' என்ற பெயர்ப் பலகையைக் காணலாம். 'கோச்சி என்ருல் ரயிலைக் குறிக் கும். அதேசமயம், யாழ்ப்பாணப் பேச்சுவழக் கில் தாயையுங் குறிக்கும். ஆகவே, அவன் வேடிக்கையாக, அதன் கீழே, “கொப்பரும் வருவார் கவனம்' என்று எழுதி வைத்தான்.
ஒரு குளத்திலே சேறு அதிகம் இருந்தது. அதிலே குளிப்பது ஆபத்தானது. அதனைப் பொதுமக்களுக்கு அறிவிக்க, “இந்தக் குளத் தில் குளிக்க முடியாது’ என்ற அறிவிப்பினை எழுதி வைத்தார்கள். அதனைக் கண்ட அவன், 'முடியாது’ என்ற சொல்லை வெட்டி, "கூடாது" என்ற சொல்லை எழுதினன். ஏன் குளத்தில் குளிக்க முடியாது? சாக விரும்பியவனுல் குளிக்க முடியுமல்லவா?
அந்தக் காலத்தில், புதிதாகப் பாலங் கட் டினல், அதன் மீது செல்லும் வாகனங்களுக்கு ஒரு வரி அறவிடுவார்கள். இந்த வரியை அற விட நியமிக்கப் பட்ட காவலாளர் சூது விளை யாட்டில் ஈடுபட்டிருப்பார்கள். கருமத்திற் கண்ணுயிருக்கமாட்டார்கள். இதனுல், அவர் களை ஏமாற்றுவதில் அவன் இன்ப மடைந் தான். வண்டியைப் LITGab வரைக்கும் கொண்டு சென்று, தான் வந்த வழியை

Page 34
60 இளமைப் பருவத்திலே!
நோக்கி வண்டியைத் திருப்பி வைத்தான். அதன் பின் காவலாளரிடஞ் சென்று, 'நான் அவசரமாகப் போக வேண்டும். ஆயக் காசு இல்லை” என்று விநயமாகச் சொன்னன். சூது விளையாட்டில் ஈடுபட்டிருந்த அவர்கள், "அதெல்லாம் முடியாது. வண்டியைத் திருப்பிக் கொண்டு போ” என்று கடிந்தனர். “சரி”* என்று சொல்லித் தன் வண்டியைத் திருப்பி, தான் செல்ல வேண்டிய இடத்திற்குச் சென் Ꮼr?6ᎼᎢ .
அவன் செய்து வந்த குறும்புகளின் நகைச் சுவையை அறியாத ஒரு நீதிபதி அவனுக்குத் தண்டம் விதித்தார். அதனையும் அவன் வேடிக் கையாக்கினன். குற்றப் பணத்தினை அரைச் சதங்களாகவும், காற் சதங்களாகவுஞ் சேகரித்து, ஒரு குட்டிச் சாக்கில் கட்டிக் கொடுத்தான். எண்ணுவதிலுள்ள சிரமத் தினல், இதனை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று சினந்தனர். உடனே அவன், “இவை அரசாங்க முத்திரை பெற்ற காசுகள்' என்ருன்.
இப்படி எதனையும் சிலேடையாகவும் நகைச் சுவையாகவும் பேசும் அவன் ஒரு சிறந்த கவிஞனுமாவான். போலிக் கவிஞர்களை அவனுக்குப் பிடிக்காது. அவர்களைக் கண்டிக் கும் முகமாக,

இளமைப் பருவத்திலே! 6
'முன்னே ஒரு கவிக்கு முன்னூறு காநூறு
பொன்னே கொடுப்பார் புலவர்க்கு - இக்காளில் வாசிக்க அறியாத வம்பர் தலைப்பட்டு காசுக்கு ஐநூறு கவி'
என்று பாடினன்.
இந்தக் குறும்புகள் செய்தவர்தான், 'கல் லடி வேலன்' என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட ஆசுகவி வேலுப்பிள்ளையா வர். இவர், யாழ்ப்பாணத்திலுள்ள வசாவவா னில் பிறந்தவர். 'சுதேச நாட்டியம்' என்ற பத்திரிகையை நடத்தியும், பல புத்தகங்கள் இயற்றியும் தமிழுக்கு அரும்பெரும் தொண் டர்ற்றிய பெரியார். இவர் ஈழத்து மணி விளக்குகளுள் ஒருவராவர். ஆசுகவி என்ருல், 'பாடு என்றவுடன் பாடும் ஆற்றல் பெற்றவர்’ என்றுபொருள்படும்.

Page 35
$ பிள்ளைப் பருவத்தின் பேராவல், நுண்ணறிவி * உள்ளத் தெழுந்த உயர் கோக்கும்-தெள்ள 8 அணுவின் அதிநுட்பம் ஆய்ந்துரைத்தார் ஈன்
ழனுவுய்ய வந்த மகான்.
இரண்டாம் உலக மகா யுத்தத்துக்கு ஹிட் லர் என்ற சர்வாதிகாரி காரணமாக இருந் தான். அவன் ஜெர்மன் தேசத்தின் சர்வாதி காரியாக இருந்தான். அவன் ஜெர்மனியர் உயர்ந்த சாதி என்று சொன்னன். யூதர்களை இழிந்த சாதி என்று கொடுமைப் படுத்தினன். அவனும், அவனுடைய சகாக்களும் எத்தனை யோ இலட்சக் கணக்கான மக்களைத் துன் புறுத்தினர்கள்; கொன்று குவித்தார்கள்.
யூதர்கள் கொடுமைப்படுத்தப்பட்ட ஜெர் மணி தேசத்தில் ஒரு யூத குடும்பம் இருந்தது. அக்குடும்பத்தில் ஒரு சிறுவன் இருந்தான். படிப்பிலோ மந்தம்; சரியாகப் பேசவராது. கோழை, எதிலும் பயந்த சுபாவம். யாவற்றி லும் நாணம். பையன்களுடன் சேர்ந்து விளை யாடமாட்டான். கோழிக் குஞ்சுகள் தாம்
 
 

இளமைப் பருவத்திலே! 63
அவனுடைய நண்பர்கள். இப்படியாக வாழ்ந்த அவனை உலகுக்கு உதவாத பிறப்பு என்று ஆசிரியர்கள் சொன்னர்கள். பெற்றேரும் அவன் படித்து முன்னேற மாட்டான் என்றே நினைத்தனர்.
அவன் பிற்காலத்திலும் பல சந்தர்ப்பங் களில் அசட்டுத் தனமாகவே நடந்திருக்கின் முன். ஒரு நாள் "டிரும் வண்டியில் பயணஞ் செய்து கொண்டிருந்தான். கொண்டக்டரிடம் பணம் கொடுத்து டிக்கற் பெற்றன். கொண் டக்டர் பாக்கியைக் கொடுத்தான். சரியான பாக்கி தரப்படவில்லை யென்று அவன் நினைத் தான். கொண்ட க்டரிடம் இது குறித்துக் கேட் டான். கொண்டக்டர் தான் கொடுத்த பாக் கியை எண்ணிக் காட்டி, தனது கணக்குச் சரி யென்று நிரூபித்தான். 'உனக்கு இந்தச் சின்னக் கணக்குக் கூடத் தெரியவில்லை" என்று கொண்டக்டர் கோபித்தான். இன்னுெருநாள். அவன் கணப்புச் சட்டிக்கு முன்னுல் இருந் தான். குளிர் தேசங்களில், குளிரைப் போக்கு வதற்குக் கணப்புச் சட்டி உபயோகிப்பார்கள். அன்று கணப்புச் சட்டியில் சூடு அதிகமாக இருந்தது. அவனுல் அதைத் தாங்க முடிய வில்லை. அவன் கூச்சலிட்டு வேலைக்காரியை அழைத்தான். அவள் வந்தாள். 'இந்தக் கணப் புச் சட்டியில் அதிகஞ் சூடு. இதைத் தூக்கிக் கொஞ்சம் எட்ட வை” என்ருன். வேலைக் காரி பணிவுடன், கணப்புச் சட்டி சூடு என்

Page 36
64 இளமைப் பருவத்திலே!
முல், நீங்கள் எழுந்து எட்ட உட்காரக் கூடாதா?’ என்று கேட்டாள். அப்பொழுது தான் தானே எழுந்து எட்ட உட்கார்ந்திருக் கலாம் என்று அவனுக்குத் தோன்றியது.
இப்படி ஒரு மக்கு மனிதனைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்?
இந்த நூற்ருண்டில், விஞ்ஞானத்தில் அதிகம் புதுமைகள் நிகழ்ந்திருக்கின்றன. இந் தப் புதுமைகளைச் சாத்தியமாக்கியது ஈன்ஸ் டீன் என்ற பேரறிஞர் சொன்ன தத்துவம். அவர் சொன்ன "ரிலெட் டிவிட்டி" என்ற கால இடப் பொதுத் தொடர்புத் தத்துவம் அறி வின் மகத்தான சாதனை. இந்தத் தத்துவ விளக்கம் புதிய போக்கினை ஏற்படுத்தி, செயற் கரிய சாதனைகளை விஞ்ஞானிகள் சாதிக்க வழி வகுத்தது. இந்நூற்ருண்டில் பிறந்த மிகச் சிறந்த அறிஞர் ஈன்ஸ்டீன் என்பதிலே துளி யும் ஐயமில்லை. இந்த மனிதர் தான் பல சந்தர்ப்பங்களில், ஒரு புதிராகவும் அசட்டு மனிதராகவும் விளங்கினர்.


Page 37


Page 38
tetS AeAAeSeSeKASASKSAAAAAAS AAAAS AAAAS KAeSAKS
அரசு வெளியீடுகள்
மண்டலப் பரிசு பெற்ற
சிறுகதைத் தொகுதி விலே, ரூ. 3வழையடி வாழை சு. செபரெத்தினம்
வாழ்க்கை வரலாறு விலே, ரூ. 3
பகவத்கீதை வெண்பா புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளே
- சாகித்திய மண்டலப் பரிசு பெற்ற கவிதை நூல் விலே, ரூ. 3/50 & இளமைப் பருவத்திலே எம். ஏ. ரஹ்மான் - சிறுவர் இலக்கி யம் நூல் நிலையத்துக்குரிய சான்றிதழ் பெற்றது. (இரண்டாம் பதிப்பு) வில். ரூ. 1/35 L{ எம். ஏ. ரஹ்மான் - உருவகக்கதைகள்חחו
(வண்ணச் சித்திரங்களுடன்) விலே, ரூ. 2/- ஈழத்து இலக்கிய வளர்ச்சி இரசிகமணி கனக.செந்திநாதன் - ஈழத்தின் தற்கால இலக்கிய வரலாறு.
வரலாற்று நூல் விலே, ரூ. 350 அண்ணல் கவிதைகள் - கவிஞர் அண்ணல்
கவிதைத் தொகுதி விலே, ரூ. 325 பரியாரி பாமர் "சர்ணு'
பேஞச் சித்திரம் விலே, ரூ. 1790 இலக்கிய உலகம் வி. கந்தவனம்
கவிதை நூல் விலே, ரூ. 140 காப்பியச் சொற்பொழிவுகள் - பத்துக் காவியங்கள் பற்றிய சொற்பொழிவு விலே, ரூ. 350 & புதுயுகம் பிறக்கிறது மு. தளையசிங்கம்
சிறுகதைத் தொகுதி விலே, ரூ. 影 மஹாகவியின் குறும்பா
ரசிகர் குழு போட்டிக் கதைகள்
சிறுகதைத் தொகுதி விலே, ரூ. வீ எஸ். பொன்னுத்துரை 影 சிறுகதைத் தொகுதி வில், ரூ.
அரசு வெளியீடு
93 II, ஆதிருப்பள்ளித் தெரு, கொழும்பு - 13, இலங்கை.
R
The Rainbow Printers, Wolfendhal Street, Colombo-13.
 
 
 
 
 
 
 


Page 39


Page 40