கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசபக்தன் கோ. நடேசய்யர்

Page 1

دا ډ N ン

Page 2


Page 3

•தேசபக்தன்"
கோ. நடேசய்யர்
- ஒரு வரலாற்று ஆய்வு ை
சாரல் நாடன்
மலையக வெளியீட்டகம்
கண்டி,

Page 4
Publication No. 06 First Edition June, 1988
с Saral Nadan
Price Rs. 75/-
* DESA BAKTHAN KO. NATÉSA AIYAR - A biographical analysis in Tamil by SARAL NADAN, Dunsinane, Pundaluoya. * First Edition June 1988 * Published by ANTHONY JEEVA, Hill Country Publishing House, Colombo 6 * Printed at ROYAL PRINTERS, 190 Colombo Street, Kandy *

17-11-1986 தொட்டு என்
வழித்துணையாய் விளங்கும்
எனதருமை அப்பாவுக்கு
– arr práv 5arL-6šv -

Page 5
4
இந் நூலாசிரியர் எழுதிய “சி. வி. சில சிந்தனைகள்” பற்றி . . . .
.....நூல் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு எழுத் தாளன் இன்னுெரு எழுத்தாளனை இனங்கண்டு, அதுவும் ஒவ் வொருவரது உணர்வுகளை உளமாரப்பகிர்ந்து கொண்டு எழுதும் போது பரிணமிக்கும் சுவையும், ஆழமும் நூலில் விரவிக் கிடக் கிறது. ஒரு தலைமுறை இன்னெரு தலைமுறையை எளிதாகப் புரிந்து கொள்ளும் பான்மையை நூலில் காண்கிறேன்.
giy. Salogiaso. M. A., L.L. B. Dip. in Education . இயக்குநர். தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு ஆய்வு மற்றும் தகவல் மையம், சென்னை.
.....சி. வி. என்ற மனிதாபிமான மிக்க மனிதரையும், அவரது சீரிய பணிகளையும், மலையகத்தையும், சாரல் நாடனின் நூலிலே தரிசிக்க முடிகிறது. கூற வந்த கருத்துக்களைச் சுவை படக் கூறிச் செல்லும் சாரல் நாடனின் நடை, பிரயத்தன மின்றி வாசிக்கக் கூடியது.
பேராசிரியர் எஸ். தில்லைநாதன்
தலைவர் தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.
... . . . எழுத்தாளர், இலக்கியப்படைப்பாளர் இறந்த பின்
மறக்கப்படுவது வழக்கம். சிலர் தமது முதுமைக்காலத்திலேயே
ஒதுக்கப்படுகிறர்கள். எமக்குத் தெரியாத பல தகவல்களைத் திரட்டித்தந்திருக்கின்றீர்கள். எமது பாராட்டுக்கள்.
பேராசிரியர் சு. வித்தியானந்தன்
துணைவேந்தர், யாழ்ப்பாணப்
பல்கலைக்கழகம் (1987)
. . . . . சி. வி. பற்றிய அரு மை யான நூல் சிறந்த ஆராய்ச்சி செய்து உண்மையான செய்திகளை நல்ல முறையில் தந்துள்ளதால் மதிப்பு அதிகம் உண்டு.
பேராசிரியர் செ. சிவஞானசுந்தரம் (நந்தி) மருத்துவத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்,

5
ஒரு சிறந்த பெருமகனின் சிறப்புக்களை எல்லாம் சுமார் எழுபது பக்கம் கொண்ட ஒரு சிறு நூலில் அடக்கி விடுவது என்பது சாத்தியமான காரியம் அல்ல. இருந்தாலும் சாரல் நாடன் என்ற ரஸவாதி தமது நூலில் இந்த அற்புதத்தை அதிசயிக்கும் படி சாதித்திருக்கின்றர். V
சிந்தாமணி இலக்கிய பீடம். - 17.5.1987
கூடியவரை இலயம் பிசகாத தகவல் சேகரிப்பு, மேற்கோள்
களாகவே தொகுத்து விவரணத்தை நடாத்திச் செல்லும் பாங்கு இரண்டுமே எனக்குப்பிடித்துள்ளன.
தினகரன் - யோகாபாலச்சந்திரன். க 22.2.1987
எமது நாட்டின் இலக்கிய வரலாற்றில் அழியாச்சுவட்டைப் பதித்த சி. வி. வேலுப்பிள்ளை அவர்களின் அனைத்துப் பரிமாணங் களையும் சுருக்கமாக வெளிக்கொணரும் முதல் முயற்சி.
தாயகம் - ந. இரவீந்திரன் - பங்குனி 1988
சி: வி. வேலுப்பிள்ளை அவர்களின் வரலாற்றையும் பணிகளையும் மிகச்சிரமப்பட்டுத்தேடி, ஆராய்ந்து, தொகுத்தெடுத்து, நூலாக வெளியிட்டுள்ள முன்னுேடி முயற்சி பாராட்டுக்குரியது.
மல்லிகை - சோமகாந்தன் - மார்ச் 1987
Saralna dan has done an excellent job in compiling the essential facts on the respected late writer and also critically examines his works briefly. As such this little book is an essential source material for research on C. V. Velupillai and his works.
ISLAND - K. S. Sivakumaran - 12-4-987
சி. வி. யின் படைப்புகள் அவரது பணிகள் குறித்து அறிந்து கொள்ள இதுவோர் அளவு கோலாகும்.
le எஸ். ராஜா மக்கள் மறுவாழ்வு. டிசம்பர் 1987

Page 6
கோ. நடேசய்யர்
தொழிற்சங்சத் தந்தையெனச் சொல்ல லாகும்;
தூயதமிழ்ப் பத்திரிகை, ஆரம்பித்து, எழிலாக முதன் முதலில் நடத்தி வந்தோன் இந்நாட்டு அரசசபை அங்கம் பெற்றேன்;
கவிஞர் பி. ஆர். பெரியசாமி - 盘岛点凸
 
 

பதிப்புரை
மலேயக மக்களப்பற்றிய வரலாறு இன்னும் நூலுருவில் வரவில்லே என்பது கசப்பான உண்மையாகும்.
அது மாத்திரமல்ல, அந்த மக்களுக்காக எழு தி யு ம், பேசியும் போராடிய மலையக மாணிக்கங்களின் வர லா றும்
எழுதப்படவில்.ே
ஆணுல், அள்ளித்தெளித்த அவசர கோலங்களாக சில குறிப்புகள் காணப்படுகின்றன.
ம&ல முகடுகளிலும், தே யி ஃ க் காடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த மனித ஜீவன்களைப்பற்றியும். இவர் களுக்காக குரல் கொடுத்த மனித மாணிக்கங்கள் பற்றியும் வரலாறு எழுதப்பட வேண்டும் என்பது எனது நீண்ட நெடு நாள் கனவாகும். -
அந்த கனவை நாங்களே நனவாக்க வேண்டும் என சங்கற்பம் பூண்டோம்.
தேரோட்டம் நடைபெற வேண்டுமானுல் "தேர்" கட்டி முடிப்பது மாத்திரமல்ல, "தெரு'வையும் நாங்களே நிர்மாணிப்ப துடன் தேரை நாங்களே இழுக்க வேண்டும்.
அதன் செயல்வடிவமே 'மயேக வெளியீட்டகம்" அதன் முதல் அறுவடை எங்களோடு வாழ்ந்து, எங்கள் மக்களப் பற்றி இலக்கியம் படைத்து மறை ந் த மக் கன் கவிமணி சி. வி. வேலுப்பின்ஃளயைப் பற்றிய "சி. வி. சில சிந்தஃனகள்" என்ற நூல்.
இந்த நூலின் படைப்பானி சாரல் நாடன். இவரோடு நெருக்கமாக பழகிய நாட்களில் ஆற்றலேயும் ஆளுமையையும் புரிந்து கொண்டேன். கோ. நடேசய்யர் பற்றி எழுதுவதற்கு இவரே பொருத்தமானவர் என தெரிந்து கொண்டேன்.

Page 7
தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதவும் பேசவும் வல்ல வரான கோ. நடேசய்யர் பற்றி எழுதுவதற்கு இருமொழி களிலும் பரிச்சயமுள்ள சாரல் நாடனே எழுத தகுதியானவர்.
இலங்கை முதல் தமிழ் தினசரியின் ஆசிரியரும், மலையக மக்களின் தொழிற்சங்க பிதாவுமான கோ. நடேசய்யரை மலையக மக்கள் மாத்திரமின்றி, முழு தமிழ் சமூகமும் அவரைப்பற்றி தெரியாத நிலையில் அய்யரைப்பற்றிய முழுமையான வரலாறு வெளிவருகிறது.
சரித்திரம் படைத்த சகாப்த நாயகனின் வரலாறு இது
தமிழ்ச் சமூகம் படித்து பாதுகாக்க Gargorಳು இது ஒரு சமூக கடமையை செய்துவிட்டோம் என்ற நம்பிக் கையில் நமது பயணம் தொடர்கிறது.
57, மகிந்த பிளேஸ் அந்தனி ஜீவா கொழும்பு-6 நிர்வாகி 27.6.88 மலையக வெளியீட்டகம்

முன்னுரை
ஒரு நாடு தன் விடுதலைக்குக் கொடுத்த விலையை உணர வேண்டும். இல்லாவிட்டால், சுதந்திரம் என்பது வெறும் வார்த் தையாகவே அமைந்து விடும் என்பது நம்மைப் பொறுத்த வரையில் மிக நிதர்சனமான உண்மையாகி விட்டிருக்கின்றது.
இந்த நாட்டில் நமது நிலை ஒளியிழந்து போனமைக்கு, சிரமங்களையும் சிறுமைகளையும் அநுபவித்த வண்ணம், வரலாறு சமைத்தவர்களை மதிப்பதற்கு நாம் தவறியிருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்ற உணர்வு என்னை அதிகநாட்களாகவே உறுத்தி வந்திருக்கின்றது. w
இலங்கை வாழ் பெருந்தோட்டத்தமிழரின் க ட ந் த நூற்றியெழுபது வருடகால வரலாற்றில் யுகப்புயல் ஒன்றை ஏற்படுத்திய மாமனிதர் கோதண்டராம நடேசய்யர் ஆவார்.
இந்த எனது இரண்டாவது நூல் அவர் பற்றியதாக அமைய நேர்ந்தது நான் செய்த பேறு என்றே கருதுகின்றேன். **சி. வி. சில சிந்தனைகள்' வெளிவந்து, வாசகர்கள் அதற்கு காட்டிய ஆதரவு அடுத்த நூலை எழுதும் தெம்பை எனக் களித்தது உண்மைதானென்ருலும், நடேசய்யரைப்பற்றியதாக நூல் அமைய வேண்டும் என்று நண்பர் அந்தனி ஜீவா விரும் பியதும் நான் மலைத்துப் போனேன்.
மூச்சடக்க இயலாத மூன்று வயது குழந்தை யாக நானிருந்தபோதே, வரலாறு சமைத்து வாழ்ந்து முடிந்துபோன ஓர் அக்கினிப்புருஷனைப்பற்றி எழுதுவது எப்படி என்ற தயக்கம் ஏற்பட்டது.
நடேசய்யரைப்பற்றிய தகவல்களைத்தருவதற்கும், அவர் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து உதவுதற்கும் எவரையும் என்னுல் காண முடியவில்லை.
நேரிலும், கடிதங்கள் மூலமும், நண்பர்கள் ஊடாகவும், பத்திரிகைத்தொடர்பு வாயிலாகவும் அந்த அக்கினியை அறிந்திட ஐந்து மாதங்கள் நான் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாமே வியர்த்தத்தில் முடிந்தன. விஷயம் தெரிந்தவர்களாக அதுநாள் வரை வெளி வேஷம் போட்டவர்களின் உண்மை சொரூபம் தெரிந்து மனதுக்குள்ளாகவே நகைத்து வைத்தேன். செவிவழி செய்தியாக நடேசய்யர் என்ற பெயரை மாத்திரமே அவர்கள் அறிந்து வைத்திருக்கின்றனர் என்பதை இ லகு வில் புரிந்து கொண்டேன். −

Page 8
0
நீர் நிலை இருக்குமிடம் தெரியாது நீர் பருக தத்தளிக்கும் நிலையில் நானிருந்த போது பெரியவர் அ. மு. துரைசாமி அவர் களின் அறிமுகம் ஏற்பட்டது. என்னை அன்போடு தேசிய சுவடி திணைக்களத்திற்கு அழைத்துச்சென்று, விபரங்களைச்சேகரிக்கும் முறைகளை அருகிலிருந்து எடுத்து விளக்கிய விரிந்த நெஞ்சினர் அவர். அந்த நல்ல உள்ளத்தினர் ‘சுதந்திரன்’ பத்திரிகையில் நடேசய்யரின் கீழ் பணியாற்றிய பெருமையும் உடையவர். அவரது ஊக்குதலும், வழிகாட்டலும் கிடைக்காதிருந்திருந்தால் இத்தனை விரிவாக இந்த நூலை எழுதி முடித்திட இயலாது போயிருக்கும் என்று நான் கருதுகிறேன்.
நடேசய்யரைப்பற்றிய ஒரு முழு நாள் கருத்தரங்கை மலையக கலை இலக்கியப்பேரவையின் ஏற்பாட்டில் கண்டியில் நடாத்திஞேம். தெரிந்ததை எழுதுவது என்ருரம்பித்து, தெரிந்து கொண்டு எழுதுவது என்று திடம் பூண்டு, தெரிந்தவரை எழுதி வைத்திருந்த நான் தெளிவு பெறுவதற்காக நடந்த கருத்தரங்கு
• ایک
16.07.19876) நடந்த கருத்தரங்கில் கலாநிதி குமாரி
ஜெயவர்தன அவர்களின் கருத்துரையும் அணு கு முறையும் என்னை மிகவும் கவர்ந்தன.
தேசிய சுவடி திணைக்களத்தில் நான் சேகரித்த விவரங்களை, 14.08.1987ம் தேதி மாலைப்போதில், கற்றறிந்த அந்த மேதை யோடு, அவரது இல்லத்தில் வைத்து மேலும் பகிர் ந் து கொண்டது எனக்கு வலுவூட்டியது. அந்த மறக்க முடியாத வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தி தந்தவர் தொழிற் சங்கவாதி எஸ். நடேசன் ஆவார்.
அதன் பின்னர் சில நூல்களை தேடிச்சென்று, அதிக விலை கொடுத்து வாங்கி, நான் படிக்க வேண்டி வந்தது. வள்ளுவர் பெருந்தகை சொன்னதற்கமைய வலிந்து பெற்றுக் கொண்ட வளமாக இதை நான் கருதுகின்றேன்.
நூல் எழுத துணிந்த நாள் முதலாக நடேசய்யரின் எழுத்தோவியங்களையும், அவரது சட்டசபை பேச்சுக்களையும் தினந்தோறும் தரிசித்தேன். அவரது தெளிந்த, சீரான கையெழுத்தைப்பார்த்த போது அய்யர் அவர்களோடு நேர் நின்று கதைப்பது போன்றதோர் புல்லரிப்பு எனக்கேற்பட்டது. அது முதல் உண்ணும்போதும், உறங்கும்போதும், தேயிலைத் தொழிற்சாலையின் மேல் மாடிகளில் நடக்கின்ற போதும் நடே சய்யருடன் சேர்ந்திருப்பது போன்ற பாதிப்புக்கு நான் உட்பட்

11
டிருக்கின்றேன் அவ்விதம் தோன்றிய, பேய் வெறியின் பத்து மாத உழைப்பே இந்த நூல். இது ஒரு நிறைப்பிரசவம்தான். என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
இந்த நூலை எழுத நான் ஆரம்பித்தது முதல் என் அறைக்குள் நுழைவதற்கும், மே சையை ஒழுங்கு பண்ணு வதற்கும் பயந்து போய், போட் டது போட்டபடி விட்டு வைப்பதற்கு பழகி கொண்ட ஒரு ஜீவனை இங்கு நான் குறிப் பிட்டாக வேண்டும்.
தேசிய சுவடி திணைக்களத்தில், செல்லரிக்கும் நிலையில் தூசி படிந்த ஏடுகளோடு பத்து நாட்களாக உறவாடி கொண்டி ருந்த நான் வீட்டில் சொல்லிக்கொள்ளாமலேயே, நடேசய்ய ரைப்பற்றிய எனது தகவல்களை பூரணத்துவமானதாக அமைக்க வேண்டி தஞ்சாவூர் ச்ென்று திரும்பினேன்.
இவற்றையெல்லாம் பொறுமையோடு விளங்கி கொண்டு எனது பணிகளுக்கு எந்தவித இடையூறும் நேரா வண்ணம் பார்த்த அந்த ஜீவன் எனது மனைவியே ஆவாள்.
குறுகிய கால இடைவெளிக்குள்ளும், நட்பை பெரிதாக மதித்து எனது கையெழுத்துப்பிரதியை தட்டச்சு பண்ணியும்; பிரதியெடுத்தும் உதவிய நண்பர்கள் கவிஞர் தங்கவேலு, எஸ். ஜேஸ்கொடி, மற்றும் என்றும் எங்களோடிருக்கும் எஸ். முரளிதரன் ஆகியோருக்கும் நான் நன்றியுடையேன்.
தேசிய சுவடி திணைக்களத்தில் பணியாற்றும் சகோதரி சந்திரிகா நாணயக்காரவுக்கும், ருேயல் அச்சகத்தை சார்ந்த நண்பர் ருெட்ரிகோவுக்கும் என் நன்றிகள் உரித்தாகட்டும். இந்த நூல் வெளிவருவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் என்னை மிகவும் வசீகரித்தது.
அட்டையை அழகுற அமைத்து உதவிய ஒவியர் எஸ். துரைசாமிக்கும் என் உளமார்ந்த நன்றி.
நூலை வாசிக்கும் நீங்கள் நடேசய்யரைமாத்திரமல்ல, அவருக்கூடாக மலைநாட்டின் சரித்திரத்தையும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதே என் இதயம் நிரம்பிய ஆசை.
எனவே, புயல் தெரியாவிட்டாலும், புயல் வீசிய தடம் தெரிகின்றதா என்று பாருங்கள். டன்சினேன், . சாரல் நாட்ன் .
பூண்டுலோயா. 25・06ーI 933。

Page 9
16.
7.
8,
9.
20.
பொருளடக்கம்
பதிப்புரை
முன்னுரை
நுழைவாயில்
அறிமுகம்
முதல் வருகை இரண்டாவது வருகை
மணிலால் தொடர்பு சட்ட நிரூபண சபைக்குத் தெரிவு குணசிங்காவோடு வேறுபாடு தொழிலாளர் சம்மேளனம்
தொழிலாளரும் சம்மேளனமும் மலைகளைக் கலக்கிய சண்டமாருதம் நண்பன் பகைவனுய் மாறும்போது
சம்பவங்கள் சாட்சியங்களாகின்றன.
மீனட்சி அம்மையாரின் மேதகுபங்களிப்பு
நடாத்திய பத்திரிகைகள்
ஆசிரியர் தலையங்கங்கள்
வெளியிட்ட நூல்கள்
சட்டசபையில் நடேசய்யர்
சில கண்டனங்கள்
விதியின் செயல் நெஞ்சில் நிறைந்தவர் பிற்சேர்க்கை (, , I) மேற்கோள் விவரங்கள்
பெயர்குறிப்பு அகராதி
13
15.
8
2
26
34
4及
47
52
70
85.
96
06
10
28
34
及48
71
17.3
76
80
Π99
204

நுழைவாயில்
நடேசய்யர்
ஒரு யுகப்புயல்!
மலைகளுக்கு
நடுவே
தொடர்ந்து
ഖിu
சண்டமாருதம்! மலைநாட்டின் முடிசூடா மன்னனுக மூன்று தசாப்தங்கள் காரியம் ஆற்றிய சாதனையாளர்! ஆண்டவனின் அவதாரமாக
அவரை கையெடுத்து வணங்கிய தோட்டத் தொழிலாளர்கள்! சாத்தான் என்று ஒதுக்க முனைந்த தோட்டத்துரைமார்கள்! சனியன் என்று பயந்து ஒதுங்கிய கங்காணிமார்கள்! 6TGigy - கொண்ட கொள்கையில்
நின்று பிடித்ததால் கால் நுாற்ருண்டு காலம் அவர் இலங்கை மலைநாட்டை ஆட்டுவித்தார்! * ヘ தங்கள் பால் அன்புகொண்டு உழைத்த அவரை நேரில் காணுகையில் கொத்தடிமைகளாக அதுவரை கூனிகுறுகி நின்ற கூலிகள் நிமிர்ந்து நின்றனர்!
அவர் ஒரு சகாப்தம்!
அவர் ஒரு சரித்திரம்! ஆங்கிலத்திலும் தமிழிலும் கைவந்த எழுத்தாளர் அற்புதமான பேச்சாளர்: இலங்கைத் தொழிற்சங்கத் துறையில் ஒரு முன்னேடி இலங்கையில் தமிழ்த் தினசரியை "ஆரம்பித்த முதல்வர் தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய ஆய்வு பணிகளுக்கும் " அவரே ஆரம்பகர்த்தா!
நிலத்தின் ஆழத்தில்
நிலக்கரி வைரமாய்
நிறமெடுப்பதைப் போல தொழிலாளர் நெஞ்சில் அவர் பிரகாசித்தாா : தோட்டங்கள் அவரது நெஞ்சில் தீ வளர்த்தன! தொழிலாளர்கள் அந்நெஞ்சில் சுடர் விட்டனர்!

Page 10
14
நிலத்தைப் பிய்த்து
ஊற்றுநீர்
நெடுவழி சமைப்பதைப் போல நினைவைப் பிணைத்து நிகழ்வை இணைத்துச்
சரித்திரம் படைத்தவர் அய்யர் ஆவார் அவரது வருகைக்குப் பின்னர் தான் மலைநாட்டில் மனித மதிப்பீடுகள் மாற ஆரம்பித்தன! தோட்டங்களில் அந்தகாரம் கலையத் தொடங்கிற்று தோட்ட சாம்ராஜ்யம்
அசையத் தொடங்கியது! அசைவு என்பது மனித மனத்தின்
சிறப்பானதொரு செயற்பாடு அய்யரிடம் அந்த
அசைவு வேண்டியமட்டும் குவிந்துகிடந்தது! அசையவும்: அசைக்கவும் அவரால் இலகுவில் முடிந்தது அரசியலில் பலர் அவரிடம் அரிச்சுவடி பயின்றனர்! வெள்ளைத்துரைமார்கள் அவரமைத்த வியூகத்தின் முன்னல் வெருண்டோடினர்!
இன்று' மலைநாட்டில் காண கிடைக்கின்ற மரகதப் பசுமை ་ཕག་ மனித உழைப்பால் தோன்றியது அந்த உழைப்புக்குச் சொந்தக்கார மக்குளின் வாழ்வில் - அதே மரகதப் பசுமை
அமைத்திட
வழிதேடியவர்
அய்யரே ஆவார்!

அறிமுகம்
கோ. நடேசய்யர் மிகப்பெரிய செயல் வீரர்.
இந்நாட்டின் தொழிற்சங்க வரலாற்றிலும், அரசியல், நட வடிக்கைகளிலும், பத்திரிகை வெளியீட்டுத்துறையிலும், மலைய கத்தமிழ் இலக்கிய முயற்சிகளிலும் தமது பாரிய பங்களிப்பி ஞல் முத்திரைப் பதித்துக்கொண்டவர்.
இந்நான்கு துறைகளிலும் அய்யரின் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது. தடம் பதித்த நிகழ்ச்சிகளாகக் கருதப்பட வேண்டியது.
கோ. நடேசய்யர் என்று இன்று முதல் எழுத்தோடு நினைவு கூறப்படும் கோதண்டராம நடேசய்யர், கே. நடேசய்யர் என்று சட்டநிரூபண சபை காலத்திலும், கே. ஆர். நடேசய்யர். என்று அரசாங்க சபை காலத்திலும் அரசாங்க ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்றர்.
கே. ஆர். என்பது கோதண்டராமர் என்பதன் சுருக் கமே ஆகும். இவர் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந் தவர். பிறப்பால் பிராமண வகுப்புக்குரியவர்.
1907ம் ஆண்டு வங்காளப்பிரிவினை காலத்தில் இந்தியா வில் பீறிட்டுக் கிளம்பிய தேசிய உணர்ச்சி ஆங்கிலேயர்கள் மீதும், ஆங்கிலேய கல்வியின் மீதும் இந்திய மக்களை வெறுப் படைய வைத்தது.
நடேசய்யரும் அந்த உணர்வினல் உந்தபட்டார்.
அதுவரை மேற்கொண்ட ஆங்கிலப் பொதுக்கல்வியை நிறுத்திக்கொண்டார். அக்கல்வியால் தனது எதிர்காலம் சிறக் கப்போவதில்லை என்பதை உணர்ந்த அவர். முதலில் கைத்தொ ழில் பயிற்சியை மேற்கொண்டார். இப்பயிற்சி முறை சென்னை அரசாங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. பயிற்சி முடிந்த பின்னல் நெசவுத் தொழிலில் சிலகாலம் ஈடுபடவும் செய்தார். அதில் அவருக்கு எதிர்பார்த்த இலாபம் கிடைக்கவில்லை. இயல்பாகவே விடாமுயற்சியும், பொருள் தேடும் மனுேபாவ மும், விசாலித்த அறிவும் மிகுந்தவர்கள் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள். அக்காலப்பகுதியில் சென்னையில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் அவ்வகுப்பினரே ஆவர். அரசாங்கத்திலும் தனியார் துறைகளிலும் உயர் பதவியிலிருந்தவர்கள் அவர்களே அய்யர் அவர்கள் வியாபார கல்வியைக்கற்று அதில் டிப்ளோ மா பட்டம் பெற்று ர். தஞ்சையிலுள்ள கலியாணசுந்தர உயர்தரக் கலாசாலையில் வியாபாரப் பயிற்சி போதன ஆசிரிய

Page 11
6
ராக சில காலம் கடமையாற்றினர். இயல்பாகவே அய்யருக்கு எழுத்தின் மீதிருந்த ஆர்வம், வேண்டிய அளவுக்கு நம்பிக்கை யையும், தளராத உறுதியையும் அவரிடம் வளர்க்க உதவி இருந் தது. தமிழ் மொழியின் வளத்துக்கும், தமிழர்களின் செழிப் புக்கும் பயன்படும் விதத்தில் பல சாத்திர நூல்களை வெளி யிட வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு மேலிட்டது.
இந்தியாவின் தேசிய கவிகளில் ஒருவரான சுப்ரமணிய பாரதியார் அவர்களின் 'பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்" என்ற கருத்து அவரை மிகவும் வசீகரித்தது. இன்ஷ்யூரன்ஸ், ஒயில் என்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகமும் என்ற மூன்று நூ ல் களை எழுதி வெளியிட்டார். இந்த மூன்று நுால்களும் சென்னை அரசாங் கத்தின் அங்கீகாரத்தைப் பெற்றன. எனினும் புத்தகங்கள் வெளியிடுவதால் அவர் எதிர்பார்த்த பொருள் லாபம் கிடைக் கவில்லை. அவரது கவனம் பத்திரிகைத் துறைக்குச் சென்றது.
1914ib ஆண்டுவாக்கில் வர்த்தக மித்திரன் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்தார்
இப்பத்திரிகை வியா பா ர ம் சம்பந்தமானது. அய்யர் பெற்றிருந்த கணக்குத் துறை சார்ந்த வி யா பா ர கல் வி. அவருக்குப் பெரும் உதவியாயிருந்தது. ஐரோப்பியர்கள் வர்த்த கத்திலும், வியாபாரத்திலும் ஈடுபட்டு பொருள் குவித்ததைப் போல தானும் செயல்பட விரும்பினுர் .
தஞ்சையில் வர் த் தக வங்கியைத் தோற்றுவிப்பதற்கு வருந்தி 'உழைத்தார். "தென்னிந்திய வியாபாரிகளின் சங்கம்" என்ற அமைப்பை ஏற்படுத்தி வியாபாரிகளை ஒன்று திரட்டினர். திருவாரூரில் *தென்னிந்திய மில்காரர்கள் சங்கம்” என்ற ஒன்றையும் ஆரம்பித்தார். கு ற் ரு லத் தி ல் "மில்காரர்கள் சங்கம்” என்ற அமைப்பையும் உருவாக்கிஞர். தனது நண்பர் ஒருவரின் மூலம் இலங்கைத்தீவில் கொழும்பு நகரில் இச்சங்கத் தின் கிளை ஒன்றை ஆரம்பிக்கச் செய்தார். அப்போது இந்திய வியாபாரிகளே கொழும்பில் ஆதிக்கம் செலுத்தினர். கொழு ம்புத் துறைமுகத்திலும் இந்தியர்களே தொழில் புரிந்தனர். ஆருயிரத்துக்கு அதிகமானேர் அவ்விதம் பணிபுரிந்தனர். அவர் களில் பெரும்பாலோர் மலையாளிகள். இந்தியர்கள், தமிழர்க ளாயிருந்தாலென்ன - மலையாளிகள் ஆயிருந்தாலென்ன இலங் கைத் தீவின் சரித்திரம் மறக்கமுடியாத அளவுக்குப் பெரும் பங்காற்றி இருக்கின்றனர். சிங்கள அரசர்கள் இவர்களை

7
கடற்றெழில் செய்யவும், கப்பல் செலுத்தவும் அழைத்து இந்நாட்டில் குடியேற்றினர் என்பதை வரலாறு செவ்வனே வெளிபடுத்துகின்றது. 1.
நடேசய்யர் முதன்முதலாக தான் இலங்கைக்கு வந்தது தனது நண்பரை கொண்டு ஆரம்பித்த வியாபாரிகள் சங்கத்தின் முதல் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போதே என்று குறிப்பிடுகின்றர்.
இச்சங்கம் கொழும்பு சம்மாங்கோட்டில் தென்னிந்திய வியாபாரிகள் சங்கம் என்ற பெயரில் இயங்கியது.
ஒரு சங்கத்தை கடல்கடந்த நாட்டில் தோற்றுவிக்க வும், அதன் ஆண்டு விழாவின் போது தானே நேரில் சென்று கலந்து கொள்ளவும் திடசங்கற்பம் பூண்டிருந்த அய்யர் தனது வருகையோடு இலங்கையில் இந்தியர்களின் வாழ்க்கையில் பொதுவாகவும், தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையில் சிறப்பாகவும் ஆதிக்கம் செலுத்துவாரானர்.
அவர் இலங்கையில் வாழ்ந்த காலப்பகுதியை (19201947) அவரது சகாப்தம் என்று கூறும் அளவுக்குச் சாதனைகள் புரிந்துளளார். அவரைப்பற்றி வெளியுலகுக்கு இதுவரைப்பூரண மாக தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இங்கொன்றும் அங் கொன்றுமாக, அவரது மறைவுக்குப் பின்னர் - அவரோடு சம காலத்தில் வாழ்ந்த இந்தியத் தமிழர்கள் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதியிருக்கிருர்கள். அவ்விதம் எழுதப் பட்ட வைகளில் அக்கட்டுரை ஆசிரியர்களிடம் அய்யரே நேரில் கூறி யதாக சில தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அத்தக வலுக்கான ஆதாரம் அக்கட்டுர்ை ஆசிரியர்களின் கூற்றுக்கள் மாத்திரமே.
நடேசய்யரைப் பற்றி ஆதார பூர்வமான சில உண்மை களை வெளியிட்டவர் கலாநிதி விசாக குமாரி ஜெயவர்தன ஆவார்கள். அவருடைய நூலிலும் அய்யரின் தொழிற்சங்க நடவடிக்கைகளும் அரசியல் ஈடுபாடுமே குறிக்கப்படுகின்றன
நடேசய்யரைப் பற்றிய உயர்வு நவிற்சியின்றி ஒரு மிகச் சிறந்த நடைச்சித்திரத்தை மறைந்த மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை எழுதியிருக்கிருர் அய்யரைப் பற்றிய தமிழில் காணக்கிடைக்கும் இக்கட்டுரை ஒன்றே சம்பவங்களை நடுநிலை நின்று வெளிப்படுத்துகிறதெனலாம். அந்நடைச்சித்திரத்தை முழு உருவில் வாசித்து அறிந்து கொள்வது பயன்தரும்.

Page 12
முதல் வருகை
1919ம் ஆண்டு முதன்முறையாக இலங்கைக்கு வந்த அய்யர் சம்மாங்கோட்டில் தென்னிந்திய வியாபாரிகள் சங்க ஆண்டுவிழாக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதோடு மாத்திரம் வாளாவிருக்கவில்லை.
தஞ்சாவூரிலிருந்து வெளிவருகிற தன்னுடைய "வர்த்தக மித்திரன்’ பத்திரிகைக்கு சந்தா சேர்க்கவும் தொடங்கினர்.
மேலும் அய்யரின் ஆற்றலையும், அறிவு நுட்பத்தையும், சாகஸத்திறனையும் அறிந்து வைத்திருந்த தஞ்சை ஜில்லா காங் கிரஸ் கமிட்டியினர் அவரது இலங்கை விஜயத்தால் பயன்பெற விரும்பி இருந்தனர். அவரது இலங்கைப் பயணத்தின் போது இந்திய தோட்டத்தொழிலாளரின் பொருளாதார செ ல் வ நிலைமைப்பற்றி ஆராய்ந்து வரும்படி பணித்திருந்தனர்.
இந்த ஆராய்ச்சியைத் தோட்டங்களுக்கு நேரில் சென்று பார்க்காமல் மேற்கொள்வதென்பது முடியாத காரியம்.
கொழும்பு நகரில் இருந்துகொண்டு தகவல்களைத் தேடிப் பெறுவதில் அவருக்கு நம்பிக்கை ஏற்படவில்லை.
பத்திரிகையாளனுகவும், கணக்குத்துறையில் நிபுணத்துவம்
பெற்ற 'அக்கவுண்டன்ட்" ஆகவும் விளங்கிய அய்யர் தானே
நேரில் தோட்டங்களுக்குச் சென்று நிலைமைகளை அறியவும், ஆராயவும் முற்பட்டார்.
தோட்டங்களில், ஐரோப்பியத் துரைமார்களின் ராஜ்யம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலம் அது. பிரித்தானிய சாம் ராஜ்ய ஆட்சி பூத்துக்குலுங்கிய் அந்நேரத்தில் அந்நிய காற்று வீசுவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. வீசுகிற காற்று வேக மாக அடிக்கையில் புயலாய் உருவெடுக்கும் என்பதை அந்தப் புத்திசாலிகள் தமது அனுபவத்தில் ஏற்கனவே அறிந்து வைத் திருந்ததே இதற்கு காரணம்.
தோட்டங்களின் உள்ளே செல்வதற்கு புடவை வியாபாரி களும் பெட்டினி வியாபாரிகளும் அனுமதிக்கப்படுவது வழக்கம். கள்ளு விற்பவர்களும், வட்டிக்குப் பணம் கொடுப்பவர்களும், மாட்டுத் தரகர்களும் அனுமதி பெருமலே போய் வருவதும் உண்டு , *
கடைத்தெருவுக்கும் நகர்ப்புறங்களுக்கும் தமது தொழி லாளர்கள் செல்வதை விரும்பாதவர்கள் இந்த ஏற்பாட்டை ஊக்குவித்தனர். தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான

9
உடுபுடவைகளையும், சில்லறைச் சாமான்களையும் அவ்விதம் தூக்கித்திரியும் நடைவியாபாரிகளிடமிருந்து தமது வசிப்பிடங் களில் வைத்தே வாங்கிகொள்வது அக்காலத்தில் வாடிக்கை யாயிருந்தது.
அய்யர் ஒரு புடவை வியாபாரியாக மாறினர். ஏனைய புடவை வியாபாரிகளோடு தானும் ஒருவராக அறிமுகமானர். தோட்டங்களுக்குள் எந்த வித சிரம மு மின் றி புடவை வியாபாரியாக போய்வரத் தொடங்கினர்.
அய்யரை இதற்கு முன்னர் அறிந்தவர் யாருமிலர். எனவே சிரமம் எதுவுமின்றி தோட்டம் தோட்டமாகச்சென்ருர்,
தொழிலாளர்களை நேரில் கண்டார். அவர்களோடு அளவ ளாவினர். அதுவரை அந்தகாரத்தில் அமிழ்ந்துகிடந்த இரக சியங்கள் அவிழத் தொடங்கின.
தோட்டங்களில் புதைந்துகிடந்த அடிமை வாழ் வின் அவலங்கள் வெளிப்பட ஆரம்பித்தன.
துன்பக்கேணியில் தமது இந்தியச் சகோதரர்கள் அல்லலு றுவதை நேரில் கண்ட அய்யரின் மனம் பேதலித்தது.
தான் வந்த நோக்கத்தை முதலில் நிறைவேற்றுவதென்று தீர்மானித்தார். புடவையைக் கட்டித் தூக்கி வந்ததைப் போல, தோட்டங்களின் அவல வாழ்க்கையின் பல அம் சங்க ளை உள்ளடக்கிய ரகசியங்களைக் கட்டித் தூக்கிக்கொண்டு திரும் பினர்.
தான் மேற்கொண்ட ஆய்வை, தோட்டத் தொழிலாளர் களின் செல்வ நிலைமைக்குறித்த விபரங்களை ஒரு பிரசுரமாக வெளியிட்டார்.
ஐரோப்பியர் வர்த்தகர் சங்கம் என்ற ஒன்று அப்போது இலங்கையில் இயங்கியது. அது சட்டப்பூர்வமாகப் பதிவுசெய்யப் பட்ட சங்கம். சம்மாங்கோட்டு இந்திய வர்த்தகர் சங்கத்தையும் பதிவு செய்து வைக்க அவர் முயற்சிகள் மேற்கொண்டார். அது வெற்றிபெறவில்லை. சுயநலங்கருதிய சிலர் அச்சங்கத்தைப் பதிவு செய்வதை தடுத்து வைத்தனர்.
அய்யர் இந்தியா திரும்பினர்.

Page 13
20
தஞ்சை காங்கிரஸ் கமிட்டியினரிடம் தனது பிரசுரத்தைக் கையளித்தார். அவரது சிந்தனை முழுக்க இலங்கையிலேயே இருந்தது. -
தமிழ்நாட்டிலிருந்து வந்து இலங்கையில் குடியேறிய இந்தியவம்சாவளித் தமிழர்களின் பின்னணியை ஆராய்பவர் களுக்கு ஒரு பேருண்மை புலனுகும். திருச்சி, மதுரை, இராம நாதபுரம் போன்ற ஊர்களிலிருந்து இலங்கைக்கு வந்தவர்கள் *கூலிகளாகவே வாழ்ந்து வந்தார்கள். கோவை, தஞ்சாவூர் பகுதிகளிலிருந்து கூலிகளாக வந்தவர்கள் மிக மிக அரிதாகவே காணப்பட்டனர். காரணம் இவ்விரண்டும் தமிழ் நாட்டின் வளம் கொழிக்கும் பகுதிகளாகும். அய்யர் இவ்வளம் கொழிக்கும் பகுதியிலிருந்து வந்தவராவார். இலங்கையின் மத்திய மலைப் பிரதேசத்தில் இப்படி ஒரு வளத்தை எதிர்பார்த்து உழைக்கின்ற தனது சகோதரர்களின் நினைவு அவர்ை வாட்டியது. பத்தொன் பதாம் நூற்ருண்டின் இரண்டாம் தசாப்த காலத்திலிருந்து இந்திய வம்சாவளியினர் இவ்விதம் உழைக்க ஆரம்பித்தனர். அவர்களது உழைப்பு வளர்ந்தது; உழைப்பவர்களின் எண்ணிக் கையும் வளர்ந்தது; ஆனல் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் கை கூடவில்லை. உழைத்துமாயும் வா ழ் க் கை யி ல் தா ன் ஒரு மாற்றமும் ஏற்படவில்லை. நூருண்டுகாலம் இந்த கொடிய வாழ்க்கையே நீடித்திருக்கிறது. மலைப்பிரதேச தோட்டங்களில் அவர் கண்ட அடிமைவாழ்க்கை எத்தனை மோசமான து? பிழைக்கவந்த இட ம் என்ற அடிமை மனப்பான்மையோடு தோட்டத்துரைமாரினதும், பெரிய கங்காணிகளினதும் அட்டூழி யங் களுக்கு அடிபணிந்து போகும் ஏழைத் தொழிலாளர்கள் தோட்டத்தைவிட்டு அனுமதியின்றி வெளியே செல்லும் தொழி லாளர்கள் குதிரையின் காலில் கட்டி இழுத்துச் செல்லப் பட்டதை சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தப்பட்டதை, மரத்தில் கட்டிவைத்துச் சாட்டையால் அடித்து வதைக்கப் பட்டதை அவர்கள் அவரிடம் கூறியிருந்தனர்.
இயல்பாகவே அநீதியை கண்டு பொங்கியெழும் போர்க் குணமும், யாருக்கும் எளிதில் தலைவணங்கா மனேபாவமும், திட்டமிட்டுச்செயல்படும் பழக்கமும் அய்யருக்கிருந்தன. தன்னு டைய நோக்குக்கும், போக்குக்கும் இலங்கையில் இடமிருக்கிறது என அறிந்து கொண்ட அய்யர், தான் செல்லவேண்டிய திசை அதுவென தீர்மானமாக நம்பினர். செல்லும் திசை தெரிந்த பின்னர் முட்டவும், மோதவும் தைரியம் பிறப்பது மனிதனுக்கு இயல்பாய் அமைந்த குணங்களில் ஒன்று.

இரண்டாவது வருகை
1920ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதி வாரத் தி ல் இரண்டாவது முறையாக அய்யர் மீண்டும் இலங்கை க் கு வந்தார்.
அவ்விதம் வந்தவர் கொழும்பு நகரில் வசித்த இந்தியர்க ளோடு சேர்ந்து இயங்க ஆரம்பித்தார். இலங்கை தேசிய காங் கிரஸ் நிர்வாகக்குழு உறுப்பினர்களான அருளானந்தன், டாக்டர் ரட்னம் என்ற இருவரையும் வெளியீட்டாளர்களாகக்கொண்டு தேச நேசன் என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் செயல்படத் தொடங்கினர்.
1922 செப்டம்பர் இருபத்திரெண்டாம் திகதி தனது முதலாவது ஆண்டு நிறைவை வெற்றிகரமாக கொண்டாடிய தேச நேசன், இலங்கையில் வெளியான ஒரே தமிழ் தினசரி என்ற பெருமையையும் அடைந்தது. இதே ஆண்டில் லாரி முத்துக்கிருஷ்ணுவுடன் இணைந்து த சிட்டிசன் என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் வெளியிட்டார். பன்னிரண்டு பக்கங்களில் பத்து சத விலையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வெளி யான சிட்டிசன், மக்களின் வாழ்க்கையையும், அவர் த ம் எண்ணங்களையும் விமர்சித்தெழுதுவதை நோக்காக கொண்ட வார இதழ். அய்யர் இலங்கையில் தொடர்ந்து வசிக்கும் திட்டத்துடனேயே வந்தார் எ ன் ப தை இப்பத்திரிகைகளின் செயற்பாடுகளே வெளிப்படுத்தும்.
இக்காலப்பகுதியில் -
தோட்டங்களில் பெரிய கங்காணிமார்களின் செல்வாக்கு கொடிகட்டி பறந்தது. அவர்கள் அனைவரும் இந்தியர்களே.
தேச நேசன் பத்திரிகைக்கு பெரிய கங்காணிமார்களின் பொருள் உதவியும் அதிகமாகவே இருந்தது. அய்யரின் அறிவு, ஆற்றல், விடாமுயற்சி அனைத்தும் அவர்களைத்தான் முதலில் பெருமளவில் கவர்ந்தது.
தங்களுக்காகப் பணியாற்றும் படி அவரை அவர்கள் வற்புறுத்தினர்.
1923ல் தோட்டமக்களின் கடன் சட்டப்பூர்வமாக தள்ளு ப்டி செய்யப்பட்டிருந்ததால், பெரிய கங்காணிமார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். தங்களது நிலையைப் பலப்படுத்திக் கொள்வதற்கும், தங்களின் நிலைமை மேலும் மோசம் அடை யாமல் பார்த்துக்கொள்வதற்கும் அவர்கள் விரும்பினர்.

Page 14
22
அய்யர் ஏற்கனவே தோட்டமக்களின் வாழ்க்கை அம்சத் தையும், பொருளாதார பின் ன ன யை யும் அறிந்து ம் ஆராய்ந்தும் வைத்திருந்தார். கங்காணிமார்களின் வேண்டு கோளுக்கிணங்க இந்தியத் தொழிலாளர்களின் நிலையை மேலும் ஆராய்ந்தார்.
பெரிய கங்காணிமார்களுக்குத் தொழிலாளர்கள் கடனளி யாவதற்கு காரணம் அவர்களுக்குக் கொடுபடும் குறைவான கூலியினலேயே என்று நிரூபிக்கும் விதத்தில் புள்ளிவிபரங்களைச் சேகரித்து ஆங்கிலத்திலும் த மி பூழி லும் துண்டு பிரசுரங்களை வெளியிட்டார்.
அப்பிரசுரங்கள் கங்காணிமார்களுக்குத் தெம்பூட்டின. சட்டப்பூர்வமாகத் தள்ளுபடிச் செய்ய ப் பட்ட கடன் தொகையை - த ங் களு க் குத் தொழிலாளர்களிடமிருந்து வர வேண்டியிருந்த தொகையை= தோட்ட்ச் சொந்தக்காரர்களே கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்த கங்காணி மார்களின் கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதத்தில் அப்பிர சுரங்கள் அமைந்திருந்தன.
இந்தியத் தொழிலாளர்களைப்பற்றி இவ்விதம் ஆய்வு பிரசுரம் வெளியானது அதுவே முதன் முறையாகும். V
இந்தக் காலப்பகுதியில் இந்திய மண்ணிலிருந்து தமது மக்கள் கூலிகளாக கடல் கடந்து செல்வதைத் தடைசெய்ய வேண்டுமென்ற உணர்வு இந்தியர்களிடையே தோன்றியது. கடல்கடந்த தீவுகளிலே தங்கள் மக்கள் விம்மி விம்மி அழுகின்ற வேதனை வாழ்க்கை மேலும் தொடர்வதை நிறுத்தவேண்டு மென்ற ஆவேசம் எழுந்தது.
சென்னையில் இயங்கிய இந்தியக் குடியேற்றக்கழகம், பிரிட்டனில் இயங்கிய அடிமை எதிர்ப்பு சங்கம், இந்திய குடி யேற்ற சங்கம் என்ற இயக்கங்களும் டி. கே. சுவாமிநாதன், சி. எஸ். அண்ட்ரூஸ், மகாத்மாகாந்தி என்ற சிந்தனையாளர்களும் மத போதகர்களும் இந்நாடுகளில் இயங்கிய முற்போக்கு கட்சி யைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது சம்பந்த மாக குரல் எழுப்பினர். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு குடி யேற்றத்தை ஆரம்பித்த விஜயனேடு தான் இலங்கை வரலாறே உருவானது.
ஆரம்ப குடியேற்றங்கள் அரசியல், கலாசார நிர்ப்பந்த 5ாரணங்களால் ஏற்பட்டன. பத்தொன்பதாம் நூற்றண்டில்

3。
ஏற்பட்ட குடியேற்றங்கள் பெருந்தோட்டங்களுக்கு உழைப் பாளர்களைத் தரவேண்டி ஏற்பட்ட பொருளாதார காரணங் களால் ஏற்பட்டன. ஆங்கிலேயர் ஆட்சி ஏற்பட்டு பெருந் தோட்டப் பயிர்ச்செய்கை ஏற்பட்டதற்கு பிறகு இடம்பெற்ற பொருளாதார குடியேற்றத்திற்கு முற்பட்ட இருநூற்றைம்பது ஆண்டு காலத்துக்கு முன்னரேயே இந்தியர்கள் இலங்கைக்கு வந்து போயினர். '
போர்த்துக்கேயர் காலத்திலும், டச்சுக்காரர் காலத் திலும் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் வியாபாரிகளாக, மீன் பிடி தொழிலாளர்களாக, துறைமுகத் தொழிலாளர்களாக இலங்கையில் தொழில் புரிந்துள்ளனர் என்பதற்கு வரலாற்று ஆதாரங்கள் இருக்கின்றன.
எனினும் இலங்கையின் மலைப்பிரதேசங்களில் குடியேறி நிலையாக வாழ்ந்து, இந்தியர்கள் தோட்டத் தொழில்புரிய ஆரம்பித்தது 1828ல் தான் என்றும், இதை ஆரம்பித்து வைத் தவர் ஜோர்ஜ் பேர்ட் என்ற ஆங்கிலேயர் தான் என்றும் அறியக் கிடக்கிறது.
அவரது கோப்பித் தோட்டம் அளவில் பெரியது என்றும், கொக்கோ பயிர் ச் செய்கையிலும் அவர் ஈடுபட்டிருந்தார் என்றும் ஆங்கிலேய முறைகளைப் புகுத்தி தனது முயற்சிகளில் வெற்றிகாண முனைந்த அவர் நிலத்தை யானைகளைக்கொண்டு உழுவதைத் தான் பார்த்ததாகவும், மிரோன் வின்ஸ்லோ என்ற பாதிரியார் குறிப்பிடுகிருர்,
இவ்விதம் ஆரம்பமான குடியேற்றம் ஆரம்பத்திலிருந்தே கண்டியர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்து வந்திருக்கின்றது. அது, காலம் செல்லச்செல்ல படிப்படியாக இலங்கை அரசியல் வாதிகளின் சிந்தனையிலும் படரவாரம்பித்தது.
1910ம் ஆண்டுக்கான குடிசன மதிப்பீட்டிலேயே முதன் முறையாக **இந்தியத்தமிழர்" என்ற பாகுபாடு காணப்படு கின்றது.
பொதுவாக உலகின் பல பாகங்களிலும் தோட்டங்களைத் திறந்த ஐரோப்பியர் இந்தியர்களின் உழைப்பையே விரும்பி பெற்றனர். மலேசியா, இலங்கை, பர்மா, மேற்கிந்திய தீவுகள், பீஜி, கிழக்காப்பிரிக்கா, ஆஸ்திரேலியா என்ற நாடு களி ல் எல்லாம் இந்தியர் குடியேறியது இவ்விதமே. இந்நாடுகளில் உள்ள தனது மக்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆராய 1922ல் இந்தியா விருப்பம் கொண்டது.

Page 15
24
அந்நாடுகளிலுள்ள இந்தியப் பிரதிநிதிகளை இந்தியாவுக்கு அழைத்து அவர்களின் கருத்துக்களை அறிந்துகொள்வது என்று தீர்மானிக்கப்பட்டது. அப்போது இலங்கை இந்தியர் சங்கம் என்ற அமைப்பின் பிரமுகர்களாக பெரியசுந்தரம், டேவிட் என் போரும், இந்தியர் சங்கம் இலங்கை என்ற அமைப்பின் பிரமுக ராக லாரி முத்துக்கிருஷ்ளு என்பவரும் இருந்தனர்.
இலங்கையிலிருந்து இந்தியர்களின் பிரதிநிதியாக யார் செல்வது என்ற கேள்வி எழுந்தது. யார் செல்வது என்பதை விட, அவ்விதம் செல்பவர் இலங்கைக்கு இந்தியத் தொழிலா ளர்கள் தொடர்ந்து வருவதை வலியுறுத்துபவராக இருக்க வேண்டும் என்று தோட்டத்துரைமார்களும், இலங்கை ஆட்சி யாளர்களும் விரும்பினர்கள். எனவே இலங்கை தூதுக்குழு ஒன்று ஹேவி என்ற வழக்கறிஞரையும், வில்லியர்ஸ், வில்கின்சன் என்ற ஆங்கிலேயர்களையும் உள்ளடக்கியதாக அனுப்பப்பட்டது.
மலேயாவிலிருந்து அரசாங்க உத்தியோகஸ்தர் தலைமையில் குழு ஒன்று அனுப்பப்பட்டது. இலங்கை தூது க் குழு வில் இந்தியர் யாரும் இடம் பெருததைக் குறிப்பிட்டு இலங்கை அரசாங்கத்துக்கு தந்தி ஒன்று அனுப்பப்பட்டது.
சென்னை அரசாங்கத்தில் அப்போது தொழில் மந்திரியாக இருந்தவர் பி. என். சர்மா என்பவர் ஆவார். அவர் மூலம் அய்யரே இதைத் தூண்டுவித்தார். லாரி முத்துக் கிருஷ்ணு தந்தி வந்ததன் பின்னல் இந்தியர்களின் பிரதிநிதியாக அனுப்பப் பட்டார். அவரே இந்தியர் வருகையை ஆதரிப்பவராக நம்பப் பட்டதே அதற்கான காரணமாகும்.
நடேசய்யர் குமுறினர்.
லாரி முத்துக்கிருஷ்ணுவோடு இணைந்து அவர் செயல்பட் டிருக்கிருர் பத்திரிகை நடாத்தியிருக்கிருர்; அவரைப்பற்றிய பூரண அறிவு அய்யருக்கிருந்தது. இப்படி ஒரு நிலைமை வரும் என்பதை உண்மையில் அய்யர் எதிர்பார்த்திருந்தார்.
**இந்த இரகசியம் உணர்ந்த நான் வெளிக்குத் தெரியாமல் தோட்டத் தொழிலாளர் விஷயமாய் 500 வாக்குமூலங்களை சுமார் 500 தோட்டங்களி னின்றும் வாங்கிக் கொண்டு சிம்லா போனேன்."

25
என்று அவரே குறிப்பிடுகிறர். அய்யர் இவ்விதம் திட்ட மிட்டுச் செயற்பட்டது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. தோட்டத் து ரைமார்கள் திகைத்துப்போயினர். இந் தி யப் பிரதிநிதி களாகத் தங்களை வெளி உலகுக்குக் காட்ட துடித்தச்சிலரும் செய்வதறியாது திகைத்தனர். தங்களது செல்வாக்கு சிதைந்து போனதாக அவர்கள் கருதினர். அவரது சாட்சியத்தை இந்திய அரசாங்கத்தார் ஏற்கக்கூடாது என்று இலங்கைத் தோட்ட முதலாளிமார்கள் கிளர்ச்சி செய்தனர்.
இலங்கை அரசாங்கம், இந்திய அரசாங் கத்தி ற் கு “நடேசய்யர் ஒரு விரும்பத்தகாத கிளாச்சிக்காரர்” என்று தந்தி ஒன்றை அனுப்பியது. தந்தியை இந்திய அரசாங்கத்தின் சார் பில் பெற்றுக்கொண்ட சர்மா, இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் "கிளர்ச்சிக்காரர்களும் உண்மைப்பேசக்கூடும்” என்று சொல்லி அய்ய்ரின் சாட்சியத்தைப் பதிவுசெய்துகொண்டார்.
சர்மாவிடம் தனக்கிருந்த அறிமுகத்தைப் பயன்படுத்தி தனது சாட்சியங்களை ஏற்க செய்த அய்யர், சிட்டிசன் பத்திரி கையில் வந்த தலையங்கங்களின் நறுக்குகளைக் காட்டி லாரி முத்துக்கிருஷ்ணுவை வாய் மூ டி மெளனியாக்கினர். தான் மற்றெல்லாரையும் விட விண்ணன் என்பதை நிரூபித்தார். 500 தோட்டங்களிலிருந்து 500 வாக்குமூலங்கள் தொழிலாள ரின் கண்ணிர் கதைகள்!
தேயிலைக்கடியில் தேங்காயும் மாசியும் இருப்பதாக எண்ணி வந்து ஏமாந்த மக்களின் துயரக்கதைகள்
வீட்டை நினைத்து, விம்மி அழுது, துன்பக்கேணியில் அவர்கள் அழுத கண்ணிர் காவியங்கள்!
சாகும் வழக்கத்துக்கு ஆட்பட்டுவிட்ட பஞ்சை மக்களின் நெஞ்சக்குமுறல்கள் 'தான் இந்தியவம்சாவளி அபலை மக்களின் பிரதிநிதியாக அல்ல, அவர்களில் ஒருவனுகவே - அவர்களின் 500 குடும்ப கதைகளை கூற வேண்டியவளுகவே வந்திருக் கிறேன்." என்று கூறி அவர் காட்டிய சாட்சியங்கள் ஏற்கப் பட்டன: அய்யருக்கு நெஞ்சமெல்லாம் நிறைந்தது; அந்த நிறைவில் தொழிலாளர்கள் சம்பந்தமாக ஏற்படுத்தப்பட வேண்டிய பொதுசன அபிப்பிராயம் குறித்து துண்டு பிரசுரங் களை இந்தியாவிலேயே அச்சிட்டு வெளியிட்டார்.

Page 16
26
தனது 500 வாக்குமூலங்களை அடியொட்டிய கருத்துக்களை அவைகளில் வலியுறுத்தினர். இந்தியாவின் பல பத்திரிகை களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் அவை வெளிவந்தன.
"நான் சிம்லா போன காரணத்தால் தேசநேசன் ஆசிரியர் பதவியையும் விட்டேன். அப்பதவியில் எனக்கு போதிய ஊதியம் கிடைத்து வந்தது. தொழிலாளர் நன்மையைப் பெரிதென்று எண்ணி னேனே ஒழிய என் சொந்தவேலையைப் பெரிதென எண்ணவில்லை என்பதற்கு இதுவே போதிய சாட்சியாகும்." என்று தன்னைப்பற்றிய கட்டுரையில் அவரே குறிப்பிடுகின்ருர், ஆமாம், வெற்றிவீரனக இலங்கை மீண்ட அய்யரால் தேச நேசனை தொடர்ந்து நடாத்தமுடியாமல் போயிற்று.
கடல்கடந்த தனது மக்களின் நிலைமையில் மாறு த ல் வேண்டிய இந்திய அரசாங்கம் குடி அகல் சட்டம் ஒன்றை உடனே கொண்டுவந்தது. அதன் தாக்கம் உடனடியாக இலங்கையில் உணரப்பட்டது. அதன்பயணுக குடி யேற்ற ச் சட்டம் ஒன்று இலங்கையில் கொண்டுவரப்பட்டது. இந்தியத் தொழிலாளர்கள் சம்பந்தமான பல விடயங்களை உள்ளடக்கிய இச்சட்டம் மூலம்தான் தொழில் கண்ட்ரோலர் ஒரு வர் நியமிக்கப்பட்டார். இந்த திணைக்களமே இன்றைய தொழில் திணைக்களமாக உருவெடுத்திருக்கிறது.
மணிலால் தொடர்பு
1921ம் ஆண்டில் தான் - தேசபக்தர் டாக்டர் மணிலால் இலங்கைக்கு வந்தார்.
"டாக்டர் மணிலால் அவர்கள் பீஜி, நியூசிலாந்து முதலிய நாடுகளினின்றும் துரத்தப்பட்டு gigurt வுக்குப் போகும் வழியில் இலங்கைக்கு வந்து இறங்கினர்' என்று குறிப்பிடும் அய்யர்,
"நான் அவரைத் தற்செயலாகச் சந்திக்கும் பாக் கியத்தைப் பெற்றேன். அவரும் என்னுடன் சில நாள் தங்க சம்மதித்தார்??
என்று சேர்க்கிருர்,

27
டாக்டர் மணிலால் அவர்களை அய்யர் கண்டிக்கு அழை த்துச் சென்ருர். பல தேயிலைத் தோட்டங்களைச் சுற்றிக்காண் பித்தார்.
* பீஜியில் இந்தியத் தொழிலாளர்கள் இருப்பதை விட இலங்கையில் அதிகக் கேவலமான நிலையிலிருக் கின்றனர். இலங்கை நிலையைக் கவனிக்கும் போது பீஜி எவ்வளவோ மேல் என்பேன்" 'என்று மணிலால் குறிப்பிட்டார் என்றும்,
"சிம்லாவுக்குச் சென்றபொழுது வெங்கடபதி இராஜ" அவர்களும் இதே கருத்தையே வலியுறுத் திஞர் என்றும்"
அய்யர் தனது கட்டுரையில் குறிப்பிடுகின்றர்.
மணிலால் .
ஓர் இந்தியன், குஜராத்தியன், மகாத்மாகாந்தியைப் போல தேசபக்திமிகுந்த ஓர் இலட்சியவிரன்.
V டி.எம். மணிலால் எம்.ஏ.எல். எல். பி. பட்டதாரி, பாரிஸ்
டர் அட் லோ, அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்திலிருந் தவர்; டாக்டர் பட்டம் பெற்றவர்; இந்திய மக்களின் உணர் வுகளை மதித்தவர்; கம்யூனிஸ சித்தாந்தங்களில் ஊறித்திளைத் தவர். இதனுலேயே உத்தியோகத்தின் கட்டுத்தளைகளை உடைத் தெறிந்துவிட்டு மனிதநேயம் பாடிய தீவிரவாதி.
மணிலால் மகாத்மா காந்தியின் நண்பர்.
தென்னபிரிக்காவில் இருந்தபோது டாக்டர் மணிலாலை யும், அவரது மன்ைவி ஜெயம் கிளார்க் மேத்தாவையும் மகாத்மா காந்தி மனப்பூர்வமாக ஆதரித்தார். அவர்கள் இருவரின் தன்னலமற்ற இந்திய உணர்வை வளர்க்க உதவினர்.
டாக்டர் மணிலால், மொரிசஸ், பீஜி, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிள் எல்லாம் வாழ்ந்தவர். அவ் விதம் அங்கு வாழ்ந்த வேளை, அங்குள்ள இந்தியர்களின் நல உரிமைக்காக இவர் குரலெழுப்பத் தொடங்கினர். அரசாங்க உத்தியோகத்தில் இருந்து கொண்டே அவ்விதம் குரல் எழுப் பும் அவரின் போக்கு அந்நாடுகளில் ஆட்சிபுரிந்த ஆங்கிலேய நிர்வாகத்தினருக்கு அச்சமூட்டியது. அதன் காரணத்தால்,

Page 17
28
தொடர்ந்து ஒரே நாட்டில் தொழில் புரிய அவரை அவர்கள் அனுமதிக்கவில்லை. நாடுவிட்டு நாடு மாறிய நிலையிலும் மணிலால் பீஜியில் செய்ததோ பேசுதற்கரியது; பெரும் போற்றுதலுக் குரியது.
பீஜி தீவில் கரும்புத் தோட்டத்தில் இந்தியப் பெண் களின் வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தச் சொன்னது மாத்திரமல்ல, அவர்களின் சார்பாக எழுத்து மனு ஒன்றையும் தனது மனைவியின் மூலமே கவர்னரிடம் கொடுக்கச் செய்தார். ஆபத்தை விலைகொடுத்து வாங்க விரும் பாத ஆங்கிலேயர் அவரையும், அவரது மனைவியையும், பிள்ளைகளையும் குடும்பத் தோடு நாடு கடத்தினர். அவ் வி தம் நாடு கடத்தப்பட்டு இந்தியா திரும்பும் வழியிலேயே அவர்களை அய்யர் சந்திக்கும். நிலையேற்பட்டது.
பின்னுட்களில் அய்யரின் பணிகளை அரசியலிலும், தொழிற் சங்கத்திலும் வழிநடாத்துவதற்கு மணிலாலுடன் ஏற்பட்ட இச்சந்திப்பே உதவியது என்ருல் அது மிகையாகாது.
தொழிற்சங்க நடவடிக்கைகளில் அ ய் யருக்கு ஏற்பட்ட முதல் தொடர்பு இந்திய தேசியவாதியும், கம்யூனிஸ்டுமான டி. எம். மணிலாலுடன் ஏற்பட்ட சந்திப்பு தான்
என்று கூறுகிருர், கலாநிதி விசாக குமாரி ஜெயவர்தன. மணிலாலும் அய்யரும் பலவிதமான கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இருவருமே தீ ஜுவாலைகள்! தனியாய் மிளிரும் பிழம்புகள்! −
ஆங்கில ஏகாதிபத்தியத்தை அறவே வெறுத்த இந்தி யர்கள்! இந்திய மக்களின் இழிநிலையை எண்ணியெண்ணி மனம் வெதும்பியவர்கள்! பேசுவதற்கு அவர்கள் இருவருக்கும் ஏராள மான விஷயங்கள் இருந்தன. கடல் கடந்த தீவுகளில், இந்தியர் களின் நிலைமை, அவர்கள் கடைத்தேறுவதற்கான வழிவகைகள், என்பவைகள் அவ்விஷயங்களில் முக்கியத்துவம் பெற்றன.
மணிலாலின் தீவிரம், தெளிந்த சிந்தை, பல நாடுகளில் நேரடியாக அவர் பெற்றிருந்த அனுபவம் எல்லாம் அய்யரை மிகவும் கவர்ந்தன. இ ல ங் கை யி ல் தன்னல மறுப்புடைய இந்தியத் தலைவர் ஒருவரும் இல்லை என்பது அய்யரின் நெடு நாளைய கவலையாயிருந்து வந்தது.
LIFélif மணிலால் அய்யரை வெகுவாக வசீகரித்தார்.

29
அய்யரின் பார்வையில் மாசுமறுவற்ற த லே வ ரா க - தன்னல மறுப்புடைய இந்திய மக்களுக்கான உயர்ந்த தலைவ ராக மணிலால் தென்பட்டார்.
மணிலாலை இலங்கையில் தங்கும்படி அய்யர் வேண்டினர். மணிலாலும் அதற்கு ஒத்துக்கொண்டார்.
இலங்கையில் அட்வகேட்டாக பணியாற்ற மணிலால் ஒத்துக்கொண்டதன் பேரில் கொழும்பு சுப்ரீம்கோர்டில் அதற் கான முறையான விண் ண ப் ப ம் செய்யப்பட்டது. ஆனல், மணிலால் இலங்கையில் தொழில்செய்ய அனுமதிக்கப்படவில்லை; அனுமதி மறுக்கப்பட்டது. அத்துடன் அவர் நாடுகடத்தப்பட வேண்டியவர் என்றும் ஆட்சியாளர் அறிவித்தனர். ஆங்கிலேய அரசாட்சியினர் தான் அவரை நாட்டுக்கு நாடு விரட்டி அடித் துக்கொண்டிருக்கின்றனரே.
தோட்டங்களில் தன்னேடு ஒருமித்துப் பயணம் செய்து, தனது தோள்களை ஆதரவோடு தட்டிக்கொடுத்து, “நீ செல்லும் வழி சரியானது' என்று தைரியமளித்து, உன்னை வழிநடத் தவும், உன்னேடு இணைந்து நின்று சோ த னை களை எதிர் நோக்கவும், துன்பங்களைப் பகிர்ந்துகொள்ளவும் நான் மட்டு மல்ல - எனது மனைவியும் கூடவே இருக்கிருள் என்று உறுதி யளித்த மணிலால் பத்து நாட்களுக்குள் நாட்டைவிட்டுச் செல்ல வேண்டும் என்று பணிக்கப்பட்ட பின்னர் மணிலாலின் மனைவி யையும், அவரது 'பிள்ளைகளையும் ரங்கூனுக்கு அனுப்பிவிட்டு மணிலாலை இலங்கையிலேயே தங்கவைக்கும் முயற்சியில் மற்றும் சிலரோடு சேர்ந்து அய்யர் உழைக்கலானர். அது வெற்றி பெறவில்லை. எல்லா முயற்சிகளும் கைகூடாமல் போன கடைசி நேரத்தில், மணிலாலின் நாடு கடத்தல் பொதுஜன அபிப்பிரா யத்தைத் திரட்டுவதற்கு சரி பயன்படுத்தப்படல் வேண்டும் என்று தீர்மானித்தார். ஒரு கண்டன கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கு உழைத்தவர்களோடு அய்யரும் முன்னின்று உழைத் தாா.
9.10.1921ல் முதன்முதலாக இலங்கையில் வந்திறங்கிய உடனேயே "இலங்கையில் தங்குவதற்கு அனுமதியில்லை" என்ற பொலிஸ் தகவலை பெற்றுக்கொண்ட மணிலால் தான் காட்டிய தீரத்தினலும், தன் து சமயோசித அறிவினலும் தன்னையும் காத்து, தன் பிள்ளைகளையும் காத்துக்கொண்டார் என்ருல்,
அவரது கொள்கை பிடிப்பும் அவரை இலங்கையில் இருக்கவைத்த நண்பர்களின் விசுவாசமும் அவரை மேலும் மூன்று மாதங்கள் இலங்கையில் தங்குவதற்கு வழி வகுத்தன.

Page 18
30
9.1.1922ல் மணிலால் இலங்கை மண்ணிலிருந்து கடத் தப்படுவது தவிர்க்க முடியாதது என்று ஆகிவிட்ட வேளை ம மணிலாலும் அவரது குடும்பமும் ஆங்கில சாம்ராஜ்யத்தினல் உலகளாவிய முறையில் வெறுத்து ஒதுக்கப்பட்ட வேளை -
இந்தியர்கள் நெஞ்சுகொதித்து மெய் சுருங்கிச் செக்கு மாடுகள் போல் உழைத்து ஏங்குகிற நிலையில் இருந்து ஒரு மாற்றத்தையும், ஏற்றத்தையும் வேண்டிநின்ற நடேசய்யருக்கு மனக்கொதிப்பை ஏற்படுத்தியது. இந்தியர்களின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார். ஏழாம் தேதி மருதானை டவர் ஹோலில் இடம்பெற்ற இம்மாபெரும் கண்டன கூட்டத்துக்கு இந்தியர் சங்கத்தின் தலைவர் லாரி முத்துக்கிருஷ்ணு தலைமை வகித்தார்.
பிற்பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகி மாலை 7.30 மணிக்கு முடிவடைந்த இந்த மாபெரும் கூட்டத்தில் - இந்தியர்களின் பொதுகூட்டத்தில் - பின்னுட்களில் அரசியலில் செல்வாக்குச் செலுத்திய டி. எஸ். சேனநாயக்கா, சி. டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கரா, எம். யூ. முரே, டி. பி. ஜயதிலக்கா, டாக்டர் சி. வி. இரட்னம் ஆகியோரும் மேடையில் அமர்ந்து தமது கருத்துக்களை வெளிப்படுத்தினர்.
** மணிலாலைப் போல் பத்து பேர் கள் நம்மத்தி யிலிருந்தால் நாம் சுயராஜ்யம் பெற்று விடலாம்'
என்று சி. டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கரா அந் த க் கூட்டத்தில் கருத்து வெளியிட்டார்.
மொத்தத்தில் இரண்டாயிரம் பேர்கள் அக்கூட்டத்தின் போது சமுகம் அளித்து இருந்தார்கள் என்பது மாத்திரமல்ல,
அந்த மாபெரும் கூட்டத்தில்,
தனது நெருங்கிய சகாவான சத்யவாகேஸ்வர ஐயர் அவர் களின் துணைவியான நல்லம்மாவை - மணிலாலின் மனைவி ஜெயம் கிளார்க் மேத்தாவைப்பற்றி பேசும்படி செய்தார்.
கே. சத்யவாகேஸ்வர ஐயர், நடேசய்யரின் நண்பனுக, அரசியல் சகபாடியாக, அவரது வழக்கறிஞராக தொடர்ந்து பல ஆண்டுகளாக விளங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.
தனது ஆங்கில ஏடான சிட்டிசனில் மணிலாவின் வாழ்க் கைக் குறிப்புக்களையும், இலங்கையில் அவருக் கு ஏற்பட்ட அவலங்களையும் அச்சொட்டாக வெளியிடவும் துணிந்தார். மணிலால் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட அதே நாளில் ஆங்கிலேயரின் நேரடி பகையை அவர் சம்பாதித்த அதே பீஜி தீவிலிருந்து ஹென்றி மார்க்ஸ் என்பவர் இலங்கைக்கு வந்தார். நிகழ்ச்சியின் முக்கியத்துவம் குறித் து உடனடியாக அவர் பேட்டிக்கு உட்படுத்தப்பட்டார். அப்போது அவர்,
** மணிலால் இல்லாத எந்த நாடும் விரும்பத்
தக்கதே' என்று பதில் அளித்தார். பீஜித்தீவில் மணிலாலும் அவரது மனைவியாரும் எந்த அளவுக்கு ஆட்சி புரிந்த ஆங்கிலே யர்களுக்கும், துரைத்தனம் புரிந்த தோட்டச் சொந்தக்காரர் களுக்கும் அச்சமுண்டாக்கி இருந்தார்கள், என்பதற்கு அதுவே வலுவான ஆதாரமாகும். இத்தகு செயல் வீரனுக்கு ஆதரவாக கொழும்பில் கூட்டப்பட்ட கூட்டத் துக் கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் -
சில இந்தியத் தலைவர்கள் கையொப்பமிட தயங்கினர்.
கூட்டம் நடந்தபோது வருகைதராமலும் இருந்தனர். கொழும்பு நகரமெங்கும் இந்தியர்கள் கொ டி க ட் டி ஆண்ட அந்த காலத்தில், இந்தியர்களின் பொதுக்கூட்டம் ஒன்றுக் கு = இந்தியன் ஒருவனை இலங்கையிலிருந்து நாடுகடத்தப்படுவதை கண்டனம் செய்வதற்காகக் கூட்டப்படும் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு - மொத்தம், அறுபத்தைந்து பேர்களின் கையொப்பம் மாத்திரமே கிடைத்தது. அச்சமும், சுயநலமும் கொண்டவர் களாக தமது மக்கள் இருப்பதைக் கண்டு அய்யரின் மனம் வெகுண்டது!
கடல் கடந்த தீவில் -
கண்ணற்ற ஒரு பிரதேசத்தில் -
எந்தவித ஒரு நியாயமான காரணமுமின்றி இந்தியன் ஒருவன் நாடு கடத்தப்படுகிருன். என்ன கொடுமை இது? எதிர்த்துப்போராட துணிவில்லை, என்ருலும் கூட எடுத் து இயம்புவதற்கு தானும் நம்மவர்கள் முன் வருகிருர்களில்லையே என்பதை அறிந்த அய்யருக்கு இலங்கையிலிருந்த இந்தியத் தலைவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.
முதுகெலும்பு இல்லாத இத்தகு தலைவர்களை நம்பி எவ் விதம் இந்தியவம்சாவளியினர் இலங்கையில் கடைத்தேறப் போகிருர்கள் என்பது குறித்துக் கவலைகொண்டார்.

Page 19
32
உண்மையில் மணிலால் இலங்கையில் தொடர்ந்து இருப் பதை அத்தலைவர்கள் விரும்பவில்லை. அவரின் வருகை அவர் களின் தலைமைக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. மணிலால் நாடு கடத்தப்படுவதை அவர்கள் மனதார விரும்பினர் என் பதே உண்மை. மணிலால் சம்பந்தமாக இந்தியர் சங்கம் அய்யர் விரும்பியதைச் செய்யவில்லை.
பெரிய கங்காணிமார்கள் இந்தியர் சங்கத்தோடு ஆரம்ப காலந் தொட்டே சேர்ந்து பணிபுரிந்து வந்தனர். அய்யரின் வருகைக்குப் பின்னர் அது குறையத்தொடங்கியது. இந்தியர் சங்கத்திற்கு அது பேரிழப்பாயமைந்தது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, பெரிய கங்காணிமார்களின் வருடாந்த மகாநாட்டில் அய்யர் கலந்துகொள்ளவும் இந்தியர் சங்கப் பிரமுகர்கள் யாரும் வந்து கலந்துகொள்ள முடியாத நிலையும் உருவானது.
மணிலாலின் நாடு கடத்தல் தொடர்ந்தது.
இலட்சுமண ஐயர் இலங்கையிவிருந்து வெளியேற்றப் Lu L-Arti“.
திரிகூட சுந்தரம் பிள்ளை நாடு கடத்தப்பட்டார்.
இலட்சுமணப்பிள்ளை நாடு கடத்தப்பட்டார்.
இவைகளையெல்லாம் பார்க்கச் சகிக்காத அய்யர், மற்ற வர்களை இனி நம்புவதில் பயனில்லை என்ற முடிவுக்கு வந்தார்.
தானே முன்னின்று இந்தியவம்சாவளி மக்களை ஒன்று திரட்டுவது என்று முனைந்து செயல்பட ஆரம்பித்தார்.
கொழும்புத் துறைமுகத்தில் தொழில் செய்த ஆருயிரம் இந்தியர்கள் அவரது கண்ணில் பட்டனர். அவர்கள் அவருக்குத் தேவையான ஜனசக்தியாகத் தென்பட்டனர். மணிலால் சம்பந்த மாக ஏற்பாடான கூட்டத்தில் ஏ. ஈ. குணசிங்காவின் அறிமுகமும் நட்பும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அன்றைய கூட்டத்தில் பேகியவர்களில் குணசிங்காவும் ஒருவர்.
"நாட்டைவிட்டுப் போகும் படி பணிக்கப்பட்ட ஒருவர் அப் படி ப் போகாமல் அடம்பிடிக்கும் பட்சத்தில் நாட் டு க் குட் பட்ட மூன்று மைல் தொலைவுக்குட்பட்ட கடல் பிராந்தியத்தில் தூக்கி எறியப்படும் அபாயம்'
இருப்பதை அய் ய ரு க்கு நன்கு விளக்கியவர்களில் குணசிங்காவும் ஒருவர்.

33
இந்தியர் சங்கத்திலும், இலங்கை தேசிய காங்கிரளிலும் காண்பதிலும் பார்க்க நகர்ப்புற தொழிலாளர்களைக் கவர்ந் திழுக்கும் சக்தி குணசிங்காவுடன் கூட்டுச் சேர்வதால் ஏற்படும் என்பதை அய்யர் உணர ஆரம் பி த் தார். குண சிங் கா இலங்கையின் தொழிற்சங்க வரலாற்றில் மிக முக்கியமானவர் களில் ஒருவராக இன்றும் கருதப்படுபவர். இருவரும் அற்புத ஆற்றல் படைத்தவர்கள்; ஒருவருக்கொருவர் சளைக்காத ஆசை கொண்டவர்கள்; தமது செயல் திறனிலும், விசாலித்த அறிவிலும் இருவருக்குமே மிகுந்த நம்பிக்கை,
ஏ. ஈ. குணசிங்காவின் பணிகளைப்பற்றி ஒருமித்த கருத்து இன்று இல்லை. ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப் பதைப் போல ஒவ்வொரு தனி நபருக்கும் இரு வேறுபட்ட குனம்சங்கள் இருக்கவே செய்யும். பொதுப் பணி களி ல் ஈடுபடும் தலைவர்களுக்கு இந்த இரு குளும்சங்களையும் மிகைபடுத்தியும், குறைத்து மதிப்பிட்டும் விமர்சனம் செய்யும் ஆபத்து எப்போதுமே உண்டு. w
**1922 செப்டம்பரில் ஆர். தம்பிமுத்து தலைமையில் தடைபெற்ற கூட்டம் மண்டபம் நிறைந்து வழியும் அளவு க்கு அங்கத்தினர்களை உள்ளடக்கியிருந் தாலும், உறுப்பினர்களாகச் சேருவதற்கு இருபத் தைந்து பேர்கள் மாத்திரமே முன் வந்தனர்." என்று எழுதிய குணசிங்கா,
"அக்கூட்டத்தில் சங்கத் தலை வ ராகத் தெரிந் தெடுக்கப்பட்ட சி. ஈ. விக்டர் கொரியா சில மாதங்களுக்குள்ளாகவே செயலாளராகத் தெரிவு செய்யப்பட்ட தன்னையேத் தலைவர் பணியையும் கொண்டு நடாத்தும் நிலைக்குட்படுத்தினர்."
என்று தனது சுயசரிதையில் எழுதியிருக்கிறர். எனினும் இலங்கை உழைப்பாளர் சங்கம் பதுளை, நீர்கொழும்பு, நாவலப் பிட்டி என்றெல்லாம் கிளைகள் அமைக்கவும், நகர்ப்புற இந்தியர் களும், துறைமுக இந்தியர்களும் அதில் அங்கம் வகிக்கவும் அய்யரின் பங்களிப்பே அதிகமாகும். குறுகிய காலம் இந்த சிலோன் லேபர் யூனியன் உப தலை வ ராகவும் அய்யர் கடமை யாற்றினர்.8
1923ல் ரயில்வே ஊழியர் ஒருவருக்குத் திருமணம் செய்து கொள்வதற்கு விடுமுறை கொடுக்காததை எதிர்த்து தடந்த வேலைநிறுத்தத்தோடு, குணசிங்கா தன்னைத் தொடர்பு படுத்திக்

Page 20
34
கொண்டபோது, அநகாரிக தர்மபாலா ஒருவரின் அனுதாபமும் உதவியுமே தனக்குக் கிடைத்ததாக அவரே குறிப்பிட்டு தனது பணியின் சிறப்பை பலரும் உணரவில்லை என்று குறிப்பிடு கின்ருர். இதுவே இன்னெருவிதத்தில் லேபர் யூனியனின் வளர்ச் சிக்கு அய்யரின் பங்களிப்பை வெளிப்படுத்த உதவுகி ன் ற கூற்முகவும் அமைகிறது எனலாம்.
3FL நிரூபண சபைக்குத் தெரிவு
1924ம் ஆண்டு இலங்கைவாழ் இந்தியரின் சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தமாகும். அந்த ஆண்டு நாட்டு நிர்வாகத்தில் இந்தியர்களுக்கும் ஒரு பொறுப்புக் கொடுக்கப்பட்டது. இரண்டு இந்தியப் பிரதிநிதிகளுக்குச் சட்ட நிரூபண சபையில் இடம் ஒதுக்கப்பட்டது. ஒவ்வொரு வாக்களிக்கும் வாக்காளருக்கும் மூன்று வாக்குரிமை இருந்தது. இரண்டு இடங்களுக்கு இரண்டு இந்தியர்களையும், மாகாணவாரியாகத் தெரிந்தெடுக்க ஒன்றும் என்று மூன்று வாக்குகள் இருந்தன. அதுவரை இந்தியப் பிரதி நிதித்துவம் ஒன்ருகவே இருந்தது. இந்த ஓரிடமும் நியமன பிரதிநிதித்துவமேயாகும். அப்படி இலங்கை அர சி ய வில் இந்தியர்களை அதுவரை பிரதிநிதித்துவம் செய்த வர் ஈ. ஜி. ஆதாம் அலி என்பவராகும்.
தானே முன்னின்று இந்தியவம்சாவளியினரை ஒன்று திரட்டுவது என்று தீர்மானித்துச் செயல்பட ஆரம்பித்திருந்த அய்யருக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
நான்கு ஆண்டுகள் அதிலும், அநேகமாக 'கொழும் பிலேயே வசித்த அய்யர், கொழும்பில் இருபத்து நான்கு ஆண்டு களுக்கு மேலாக வசித்த இந்தியர்களை, இந்தியத் தலைவர்களை எதிர்த்து செயல்பட வேண்டிதாயிருந்தது.
தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளவும், தனது கொள் கைகளை விளக்கப்படுத்திக்கொள்ளவும் தனக்கு ஒரு பத்திரிகை அவசியம் என்பதை அய்யர் உணர்ந்தார்.
"தமிழ் பத்திரிகை இல் லா த காரணத்தால் நாட்டு நடப்புக்களைப்பற்றி மக்களுக்கு எவ்வித அறிவும் எட்டுவதில்லை என்பதை உணர்ந்து, “தேசபக்தன்” என்ற பத்திரிகையை ஆரம் பித்தார்.

85
3.9.1924ல் இதன் முதல் இதழ் வெளியானது
ஒவ்வொரு திங்கள், புதன், வெள்ளியும் மாலைப்பதிப்பாக 5 சத விலைக்கு இது வெளிவந்தது.
இதில் அய்யரின் கைவண்ணம் பளிச்சிட்டது.
*ஜாதி, மத அபிமானத்தைக்கொண்டு ஊமையருக்கும், உளறுவாயருக்கும் உங்கள் வோட் டைக் கொடுத்து பிறர் நகைக்க இடம் கொடுக்காதீர்கள். தகுந்த அபேட்சகர்களைத் தேர்ந்தெடுத்து இந்தியாவின் நற்பெயரைக் காப்பாற்றுங்கள்' என்ற வரிகள் தேர்தலை முன்னிறுத்தியே பத்திரிகை வெளிவரத் தொடங்கியது என்பதை புலப்படுத்தும். அத்தேர்தலில் திவான் பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா, முகம் மது சுல்தான், எஸ். பி. சார்ல்ஸ் டேவிட், ரஸ்டம்ஜி, கோ. நடேசய்யர் என்ற அறுவர் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் சார்ல்ஸ் என்பவரை ஆதரித்து தோட்டத் துரைமார்கள் சுற்றறிக்கை வெளியிட்டனர். டேவிட் என்பவரை ஆதரித்து சத்யவாகேஸ்வர ஐயர் பிரச்சாரம் புரிந்தார். பின் னட்களில் இந்த சத்யவாகேஸ்வர ஐயர் நடேசய்யரின் பல மான ஆலோசகராக மாறினர்.
தேர்தலில் அய்யர் வெற்றிபெற முடியவில்லை. இருவர் கட்டுப்பணத்தை இழந்தனர். நடேச ய் யர் வெற்றிப்ெருது போனலும், அவரது செல்வாக்கு அத்தனை குறுகிய காலத்தில் பிரமிக்கத்தக்கது என்பதை தேர்தல் முடிவுகள் காட்டின.
தேர்தலில் பெற்ற வாக்கு விபரம்
ஐ. எக்ஸ். பெரைரா 574. முகம்மது சுல்தான் 351
கோ. நடேசய்யர் 2948 எஸ். பி. Frtridi)6) 1877
டேவிட் 0543
ரஸ்டம்ஜி O266

Page 21
36
“பொருள் வளம் மிகுந்தவர்கள் சத்தியத்தை மறந்து விட்டார்கள். ஆனல் அதனை அழிக்கமுடியாது. " சத்தியத்தின் ஒலியாய் நான் நிற்பேன். தொழிலாளர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை" எ ன்று முழங்கினர். "தேர் த ல் முடிவைப் பாருங்கள். வெற்றி நம்முடையதே. தேர்தலுக்கு நான் செல வழித்தது 150/= ரூபா மாத்திரமே " எ ன்று விளக்க ம் காட்டினர். /
'தனக்குக் கிடைத்த வாக்கு களி ல் இரண்டாயிரம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் உடையது என்பதை நான் நன்கு உணர்ந்திருக்கிறேன்" என்று பகிரங்கமாக கூறத் தலைப்பட்ட அய்யர் முன்னிலும் பார்க்க அதி தீவிரமாகச் செயற்பட ஆரம்பித்தார். அய்யர் த ன் னை இலங்கைவாழ் இந்தியமக்களிடையே எப்படி அறிமுகம் செய்து கொண்டிருந் தார்? ஆங்கில நாகரீகத்தை அறவே வெறுப்பவராக, கதர் அபி விருத்தியில் மிகுந்த பற்றுள்ளவராக, பல அரசாங்கங்களின் கொடிய பகைவரென கருதப்பட்ட டாக்டர் டி. எம். மணிலால் அவர்களை வரவேற்று உபசரித்து, தம் இல்லத்திலே வசிக்கும்படி சகல வசதியும் செய்து கொடுத்தவராக, மக்களிடையே அறிமுக மான அய்யர் தனது கம்பீரமான தோற்றத்தாலும், மிடுக்கான நடையாலும், அற்புதமான பேச்சாற்றலாலும், ஆற்றல் மிகுந்த பத்திரிகை எழுத்தாலும் அவர்களை இலகுவில் கவரலானர். முயற்சியுடையவர்களுக்குத்தான் தெய்வம் துணைநிற்கும் என் பார்கள். அய்யர் சட்ட நிரூபண சபைக்குச்செல்லவேண்டியது தெய்வ சித்தமாக இருந்தது போலும். சுல்தான் மரணமடைந் தார். ஆறுமாத இடைவெளிக்குள் இடைதேர்தல் நடந்தது. அந்த இடைதேர்தலில் - o
முதல் தேர்தலில் தனக்கு வாக்களிக்கவேண்டும் என்ப தற்கு அய்யர் காட்டிய ஆறு காரணங்களும் மக்களால் ஏற்கப் பட்டன என்று கூறலாம். அந்த ஆறு காரணங்களாவன:-
1. தோட்டத் தொழிலாளர் விடயங்கள் குறித்த அவரது
அறிவு.
2. தோட்டமக்கள் குறித்து அவர் மேற்கொண்ட சிம் லா பயணமும், இந்திய கவர்னருடன் நடந்த பேச்சுவார்த்தையும்.
3. முத்துச்சம்பா அரிசி தடையின்றி இலங்கைக்கு கொண்டுவர
செய்தமை.
4. அரிசி கண்ட்ரோலை அகற்ற செய்தமை.
5. தமிழ்த்தாயை வளர்ப்பதற்காக பல அரிய சா ஸ் தி ர
நூல்களை தமிழில் வெளியிட்டு வைத்தமை.
6. இன்னமும் நூல்கள் வெளியிடும் அர்ப்பணிப்பு.

37
அந்த இடைதேர்தலில் அய்யரை எதிர் த் து நின்று திருமதி ஸி. எஸ். ராஜரட்ணம் போட்டியிட்டார். அய்யருக்கு 16, 324 வாக்குகளும், அவரை எதிர்த்துப் போட்டியிட்டவருக்கு 3,635 வாக்குகளும் கிடைத்தன.
அத்தேர்தலின் போது இலங்கைத்தமிழர், இந்தியத் தமிழர் என்ற பேதம் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும், அத்தேர்தலில் அய்யரை எதிர்த்து நிற்க முன்வந்த பெரிய சுந்தரம் தேர்தலில் போட்டியிட முடியாது போய்விட்டது. பெரியசுந்தரம் இலங்கையில் பிறந்தவர். இந்தியவம்சாவளி யாக இருந்தும் இலங்கையில் பிறந்ததால் அந்த வாய்ப்பு அவருக்கு மறுக்கப்பட்டது. V,
*இலங்கையில் பிறந்தவன் இந் தி யன் அல்ல வென்று மு த ல் கோர்ட்டிலும், இரண்டாவது கோர்ட் டி லும் தீர்மானிக்கப்பட்டது. அதனல் நண்பர் பெரியசுந்தரம் அவர்கள் ஒர் அபேட்ச கராக வரமுடியாமல் போயிற்று. அது இந்தியர் களின் துரதிருஷ்டமே. அவர் அ பேட் சக ராக வந்திருந்தால் இப் பொழுது ஏற்பட்டு வரும் பல குழப்பங்கள் ஏற்படாது என்பது என் அபிப் பிராயம்?? என்று அய்யர் பின்னுளில் எழுதினர். காலமும் கருத்தும் எவ்வாறு மாறுகிறது?
நேரமும் நிலையும் எவ்விதம் தலைகீழாகிறது?
1924ல் இலங்கை மண்ணில் பிறந்த காரணத்தால், இந்தியவம்சாவளியினராக இருந்தும் - தேயிலைத் தோட்டத்தில் பெரிய கங்காணியின் மகனக பிறந்திருந்தும் - பெரியசுந்தரம் இந்தியரை பிரதிநிதித்துவம் செய்யமுடியாது என்று நீதிமன்றம் கூறியது.
1960ல் இலங்கை மண்ணில் பிறந்தாலும் இலங்கைக் குடியுரிமைப் பெற்ருலும் இலங்கையன் என்று கூறிக்கொள்ள முடியாது. இந்தியத் தமிழன் என்றே தன்னை ஒருவன் குறிப் பிடல் வேண்டும் என்று கூறி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இலட்சக்கணக்கான இந்தியவம்சாவளியினர் அரசியல்வாதி களின் கையில் சிக்கி எவ்விதம் பகடைக்காய்களாக உருட்டப் பட்டார்கள் என்பதற்கு இதுவே ஒரு மிகச் சிறந்த உதாரண மாகும். இலங்கையில் பிறந்த இந்தியனுக்கு இந்தியரைப் பிரதி நிதித்துவம் வகிக்க முடி யா தென் ற நீதிமன்ற முடிவில் அய்யருக்கு உடன்பாடில்லை.

Page 22
38
'ஐரோப்பியர்களுடைய நிலையில் தான் நாமும் இருக்கிருேம். எல்லோரும் பிழைக்கவந்தவர்கள். ஐரோப்பியர்களது வியாபாரத்தைத் தழைக்கச் செய்வதும், உள்நாட்டு வியாபாரத்தை நடாத்தி வைப்பதும் இந்தியர்களே. ஆகவே அரசியல் விஷய மாய் ஐரோப்பியருக்கும் நமக்கும் எவ்வித வித்தி யாசமும் ஏற்படவேண்டிய அவசியமில்லை?" என்று எழுதினர்.
*"ஐரோப்பியர்களுக்கு இந்நாட்டில் இருக்கின்ற
அத்தனை உரிமையும் இந்தியர்களுக்கும் இருக்க
வேண்டும் - அதற்காக நாம் போராடவேண்டும்" என்று கூறினர்.
*தோட்டச் சொந்தக்காரர்களுக்கு இருக்கிற பிரதி நிதித்துவம் நமக்கும் வேண்டும்" என்று வற்புறுத்தினர்.
'ஐரோப்பியர்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் போது, ஐரோப்பியர் என்ற பதத்துக்கு வியாக் யானம் செய்வதைப் போலவே இந்தியர் என்ற பதத்துக்கும் வியாக்யானம் செய்யப் படல் வேண்டும்" என்பது அவரது வாதமாக அமைந்தது.
அய்யரின் இத்தகு தீரமிகுந்த கருத்துக்களும், தர்க்கரீதி யான வாதங்களும் அவருக்குச் செல்வாக்கை ஏற்படுத்திய அதே வேளையில் அவருக்கு எதிரிகளையும் உண்டுபண்ணின.
"இலங்கையர்கள் இந்தியாவிலும், மலேயாவிலும் வேலைப்பெற முடிந்தால், இந்தியவம்சாவளியினர் ஏன் இலங்கை சிவில் சேர்விஸ்ஸிலும், அரசாங்க உத்தியோகத்திலும் சேரமுடியாது???
என்று விவாதித்தார்.
மலாய் நாட்டிலே இலங்கையர்க்கு உத்தியோகம்
கிடைப்பதில் சிரமம் தோன்றியபோது சேர்.
பொன்னம்பலம் இராமநாதன் சென்று காரிய
மாற்றி தனது மக்களுக்குச் சார்பான விதத்தில்
மாற்றங்களை ஏற்படுத்தியது போல இலங்கைவாழ்
இந்தியர்க்கு ஏன் செய்து கொடுக்கவில்லை - என்று வினவிய அவர்,

39
**தாங்கள் இந்தியாவில் எவ்விதம் நடத்தப்பட
வேண்டும் என்று நினைக்கிருர்களோ, அவ்விதமே
இலங்கையிலும் இந்தியர்கள் நடத் த ப் பட
வேண்டும் என்பதை இலங்கையர்கள் மனத்தில்
பதிப்பிக்கவேண்டுவது ஒவ்வொரு இந்தியனின்
கடமையாகும்?" என்றும் வலியுறுத்தினர்.
1931ல் சட்ட நிரூபணசபை கலைக்கப்படும் வரை அய்யர் தனது பதவியை இந் தி ய வம்சாவளி மக் களை ப் பற்றி இலங்கையில் உள்ள மக்களின் மனுேபாவத்தை மாற்றியமைக்க முயன்ருர்,
இந்தியத் தொழிலாளர்களை “குடியேற்றக் கூலிகள்” என்று கூறிவந்த பொன் இராமநாதன் போன்றவர்களின் கருத்துக்களை நேரிடையாகவே அய்யர் எதிர்க்கத் தொடங்கினர்,
இந்தியர்களைப்பற்றி அதுநாள்வரை இலங்கை அரசியல் வாதிகள் சரியான கண்ணேட்டம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய அய்யர், இலங்கைத் தமிழர் இம்மக்களை தாழ்வுபடுத்துவதையும், சிங்களமக்கள் இம் ம க் களை வெறுத் தொதுக்குவதையும், ஐரோப்பிய தோட்டத்துரைமார்கள் இம் மக்களை அடிமைப்படுத்துவதையும் எதிர்த்து பணிகள் ஆற்று வதையே நோக்காகக் கொண்டார். இக்காலப்பகுதியில் தனது சட்டசபை உறுப்பினர் பதவியால் தனது பத்திரிகையின் தரம் பாதிக்கப்படக்கூடாது என்று கருதிய அய்யர், டி. சாரநாதன் என்பவரை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவழைத்தார். சாரநாதன் அய்யருக்கு மரு ம க ன் உ ற வு முறையானவர். சாரநாதன் தமிழகத்தில் ஈ. வே. இராமசாமி நாயக்கருடன் இணைந்து குடியரசு பத்திரிகையில் வேலை செய்தவர். இண்டி பென்டண்ட், மோனிங் லீடர் என்ற பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியவர். ஆங்கிலத்திலும், தமிழிலும் . அய்யரைப் போன்றே ஆற்றல் படைத்தவர்.
சாரநாதனின் ஆரம்பகால பணிகள் அய்யருக்குப் பெரிதும் உதவியாயிருந்தன. ஏ. ஈ. குணசிங்காவை எதிர்த்து அய்யர் போர் முரசம் கொட்டிய வேளை, தன் பங்குக்கு சாரநாதன் காந்தி என்ற பெயரில் ஒரு பத்திரிகையை ஆரம்பித்து குணசிங் காவின் இந்திய எதிர்ப்பைத் தளரவைப்பதற்குப் பெரிதும் உதவினர். அய்யரின் அரசியல், தொழிற்சங்க நடவடிக்கை களிலும் ஈடுபட்டார். எனினும் அய்யருடன் நாளாவட்டத்தில் அவருக்கு வேறுபாடு தோன்றியது. அய்யருடனிருந்து பிரிந்தது மல்லாமல், அவருக்கு எதிராகவும் செயல்பட்டார்.

Page 23
40
அவ்விதம் எதிராகச் செயல்பட அவருக்குத் துணையாக பெரியகங்காணிகளும் நகரப் பிரமுகர்களும் உதவி நல்கினர். தொழிலாளி என்ற ஒரு பத்திரிகையை நடாத்தும்படி அவரைத் தூண்டிவிட்டுச் செயல்படவும் செய்தனர்.
"தோட்டத் தொழிலாளருக்கு சங்கம் கிடையாது. ஒரு வரும் இது வரை தைரியமாக ஆரம்பிக்கவில்லை. தோட்ட வெள்ளையர்கள் எதிர்ப்பார்கள், அவர்களின் அடிமைகள் எதிர்ப் பார்கள், நாம் சொல்வதுண்மை, இந் த அடிமைகளையும், அடிமைகளின் அடிமைகளையும் எதிர்ப்பது நம் வேலை.
சுத்த இரத்தமும், சுயமரியாதையும் உள்ள ஒவ்வொரு இந்தியனும் நமது முயற்சியை ஆதரிக்க வேண்டுகிருேம்.
அட்டன் பிரதிநிதி 'பேன்சு" "கூடாதென்கிறர். இதைப் பெரிய எதிர்ப்பு என சங்கத் தலைவர் கருதுகிருரா? வீண் கிளர்ச்சி என்பது ப்லரது அபிப்பிராயம். இந்தியரைப் பொது வாகப் பாதிக்கும் அரசியல் பிரச்சனைகள் பல நம்மைச் சூழ்ந் திருக்கும் இத்தருணத்தில் இவ்விதச் சில்லறை விஷயங்களைக் கிளப்பி இந்திய சமூகத்தை கூறு கூருகப்பிரிக்க முற்படுவது அறிவுடைய காரியமல்ல. இக்கிளர்ச்சியினல் கங்காணிமார் தம்மை ஒரு தனிக்கூட்டமாக நினைத்துப் பெரும் அரசியல் பிரச்சனைகளில் தலையிடாமலிருக்கும் நிலை ஏற்பட்டாலும் ஏற்படும்' என்று நடேசய்யருக்கு எதிரான தனது நிலைப் பாட்டை வெளிப்படுத்தினர். இக்கட்டுரை அய்யர் அரசாங்க சபை உறுப்பினராகத் தெரிந்தெடுக்கப்பட்டதற்கு பிறகு 1938ல் எழுதப்பட்டது.
சாரநாதன் பிரிந்து சென்ருலும், அவரது மர்மியார் மீனுட்சி அம்மாள் அய்யருடனேயே தங்கினர். தனது முதல் மனைவி இறந்ததன் பின்னல் தனியணு இருந்த அய்யர் மீனுட்சி அம்மையை மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தார்.

குணசிங்காவோடு வேறுபாடு
1926ம் ஆண்டு ஏ. ஈ. குணசிங்காவும், நடேசய்யரும் சேர்ந்து ஃபோவர்ட் என்ற ஆங்கிலவார ஏட்டை நடாத்தினர். "நடேசய்யரின் முதல் தீவிர தொழிற்சங்க அனுபவம் குணசிங் காவுடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பினுலேயே சாத்திய மாயிற்று" என்று விசாக குமாரி ஜெயவர்தணு குறிப்பிடுகிருர், இலங்கையில் அய்யரின் பணிகளைப் பொறுத்தமட்டில் அவர் கூறுவது சரியாய் இருக்கலாம். ஆனல் ஏற்கனவே தொழிற்சங்க அறிவும், அநுபவமும் அய்யருக்கு நிறைய இருந்தன என்பதை தென்னிந்தியாவில் தஞ்சை, திருவாரூர், குற்ருலம் என்ற பகுதி களில் அவர் ஏற்படுத்திய சங்கங்களும் திரு. வி. கல்யாணசுந்தர னரிடம் அவருக்கிருந்த அறிமுகமும் வெளிப்படுத்தும்.
முதன்முதல் இந்தியாவில் தொழிற்சங்கம் ஏற்பட்டது சென்னையிலே ஆகும். அதன் அமைப்புக்கும் வளர்ச்சிக்கும் முதற் காரணமாயிருந்தவர் திரு. வி. க. அவர் பல ஆண்டுகள் அதன் தலைவராகவும் இருந்துள்ளார்.
அரசியலிலும், தொழிலாளர் சங்கத்திலும், சமுதாயச் சீர்திருத்தத் துறையிலும் எழுத்தாலும், பேச்சாலும் பெரும் சாதனைபுரிந்த திரு. வி. கலியாணசுந்தரஞர், அய்யரை பெரிதும் ஆட்படுத்தியிருந்தார். திரு. வி. க. ஆசிரியராக இருந்து நடாத்திய ‘தே ச பக் த ன்' எ ன் ற பெயரிலேயே அய்யர் இலங்கையில் பத்திரிகை ஆரம்பித்ததும், அச்செல்வாக்கினலேயே எனலாம்.
எனவே அய்யரும் குணசிங்காவும் ஒன்று சேர்ந்ததில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஒரே ரகத்துப் பறவைகள் இரண்டு ஒன்று சேர்ந்ததைப்போன்ற சம்பவமே அது.
1927ம் ஆண்டு இடம்பெற்ற துறைமுக வேலைநிறுத்தம் மூன்று வாரங்கள் நீடித்தது. அவ்வேலைநிறுத்தத்தை முறிய டிக்கும் முயற் சி யி ல் இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் கொண்டுவந்து ஈடுபடுத்தப்பட்டனர். அத்தொழிலாளர்களை அவ்விதம் வேலைசெய்ய வேண்டாமென்று தூண்டும் முயற்சியில் அய்யரே முன் நின்ருர், வேலை நிறுத் தம் செய்பவர்களுக்கு வேண்டிய உணவையும், பணத்தையும் கொழும்பு வியாபாரி களிடமிருந்து பெற்றுத்தரும் முயற்சியிலும் அய்ய ரே முன் நின்ருர், சட்டநிரூபண சபையிலும் இவ்வேலை நிறுத்தம் குறித்து கேள்விகள் எழுப்பியவர் அய்யரே ஆவார்.
எல்லாவற்றுக்கும் மேலாக ஐரோப்பியத்துரைமார்களின் பங்களாவில் வேலைசெய்யும் இந்தியர்களையும் பணிமனைகளில்

Page 24
42
தொழில்புரியும் இந்தியர்களையும் வெளியேறி வேலைநிறுத்தத் திற்கு ஆதரவு காட்டும்படி அறைகூவல் விடுத்தார். புறக் கோட்டை பொலிஸ் சுப்பிரிண்டன்ட் முன்னிலையில் சாட்சிய மளிக்கையில் அந்த ஆலோசனைக்குத்தானே பொறுப்பாளி என்று அய்யர் கூறியது இந்தியர் சமூகத்தினரிடை மிகுந்த பரபரப் பையே ஏற்படுத்தியது. அதனுல் விரும்பத்தகாத பின் விளை வுகள் ஏற்படும் என்று பலரும் பயந்தனர்.
இக்காலப்பகுதியில் உயிருடனிருந்த இந்தியர் சங்கம், இலங்கை, இந்திய வாலிபர் சங்கம், இலங்கை இந்தியர் சங்கம், கங்காணிமார்கள் சங்கம் என்ற சங்கங்கள் எல்லாம் பேருக்கு இருந்தன. அய்யரைக் கேள்விகேட்கும் திண்மை அவைகளுக்கு இருக்கவில்லை. அய்யரின் செல்வாக்கும் செயலாற்றலும் அவை களைப் பின்னே தள்ளிச் சென்றன. மேலும் 1912-லிருந்து செயல்பட்ட இந்தியர் சங்கமோ அன்றேல், முத்துக்கிருஷ்ணு. ஜோன். ஐ. எக்ஸ். பெரைரா என்ற பழைய தலைமுறையினரோ 1927ல் சம்பள நிர்ணயசபை கலந்தாலோசனைக்கு அழைக்கப்பட வில்லை என்பதும் அய்யரே அவ் வாய்ப் பை அடைந்தவர் என்பதும், அவர்கள் இழக்கத் தொடங்கிய நிலையை வெளிப் படுத்தும். 5
எனினும் 1928ம் ஆண்டு குணசிங்காவின் நடவடிக்கைகள் இந்தியர்களுக்கு எதிரானவைகளாக உருவெடுப்பதை அய்யர் அவதானித்தார். அதுநாள்வரை அ ய் யரும், குணசிங்காவும் ஒருங்கிணைந்து செயற்பட்டிருந்தாலும், இந்தியத் தொழிலாளர் களின் பொருளாதார, அரசியல் நிலை குறித்து அநுதாப பார் வையைச் செலுத்திய குணசிங்கா, ஒருபோதும் தனது தொழிற் சங்க நடவடிக் கைகளை தோட்டத் தொழிலாளர்களையும் உள்ளடக்கியதாக ஆக்கவேண்டுமென்று ஆர்வம் காட்டியதில்லை. சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்களில் மத்தியதர வகுப் பினரும் பெருந்தோட்டத் தொழிலாளர்களை உழைக்கும் வர்க் கத்தில் ஒரங்கமாகக் கருதாமையே இதற்கான காரணமாகும் குணசிங்காவை இந்தியர்களின் விரோதி என்று நடேசய்யர் பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.
குணசிங்கா அ ய் ய ரை யூனியனிலிருந்து உடனடியாக விலக்கிவைத்தார். குணசிங்காவை எதிர்த்து அய்யர் தனது தேசபக்தனில் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளும், கவிதை களும் கார்ட்டூன்களும், நடைச்சித்திரங்களும் அய்யரின் நெஞ் சுறுதியை வெளிப்படுத்த உதவும்.

43
கொழும்பு நகரிலே குணசிங்காவின் புகழ் "கொடிகட்டிப் பறந்த நேரமது. சிங்களத் தொழிலாளர்களின் ஏகோபித்த தலைவனுக அவர் அப்போது விளங்கினர்.
துறைமுக வேலைநிறுத்தத்தின் போது "குருநாகலையில் கவர்ண்மென்ட் ஏஜென்டாக நீங்கள் இருந்திருக்கலாம். இது கொழும்பு கொழும்பு, குருநாகலை இல்லை என்பதை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அத்தோடு உங்களுக்குப் பேசவும் தெரியவில்லை" என்று அரசாங்க உத்தியோகத்தர் ஒருவருக்கு எதிராக தான் ஆத் தி ரத் தோ டு பே சி ய போது தனது கோபத்தை உணர்ந்த சங்க அங்கத்தினர்கள், அவ்வுத்தியோகத் தரை அடிக்க முனைந்ததையும், பின்னல் அவரது உருவத்தைத் தீயிட்டுக் கொழுத்தியதையும் குணசிங்காவே தனது சுயசரிதைத் தொடரில் பெருமையோடு குறிப்பிடுகிறர்.
இத்தகு இடர்பாடான நிலையில் குணசிங்காவை எதிர்ப் பதற்கும், அவரது அரசியலை விமர்சிப்பதற்கும், அவரது நட வடிக்கைகள் குறித்து ஏடுகளில் எழுதுவதற்கும், கருத்து சித்தி ரங்கள் வெளியிடுவதற்கும் அய்யரைத் தவிர வேறு யாருக்குத் துணிவுவரும்?
எதையும் தடித்தனத்தினுல் நடத்திவிட வேண்டு மென்ற எண்ணம் ஏற்பட்டால், அதனை அடக்க வேண்டியது எ ல் லோருடைய கடமையாகும். எதிரியை அடக்குவது ஒருபுறமிருக்க, தற்பாதுகாப் புக்காகச் செய்யவேண்டிய காரி ய த் தை எவர் செய்யாவிட்டாலும், அவர் தேசத்துரோகியாவார். அந்நிலையை கொண்டே இந்தியத் தொழிலாளர் சங்கத்தை ஏற்படுத்த முன்வந்தோம் -
என்று "இந்தியத் தொழிலாளர் சங்கம் வேண்டுவதேன்"? என்ற தலைப்பில் எழுதி ய கட்டுரையில் அ ய் யரின் மன வோட்டமும், எதிர்கால நடைமுறைத் திட்டங்களும் வெளிப் படுகின்றது.
1929க்கும், 1934க்கும் இடை பட்ட "பொருளாதார மந்தம்” ஏற்பட்ட காலப்பகுதியில் இந் தி ய எதிர்ப்புணர்வு இலங்கையில் மேலும் மேலும் வளரலாயிற்று. இலங்கையில் பெருகிவரும் வேலையில்லாத் திண்டாட்டத்திற்கு இந் தி யத் தொழிலாளர்களே காரணம் என்ற நிலைப்பாடு வலுப்பெற ஆரம்பித்தது. இந்நிலைமையில் இந்தியத் தொழிலாளர்களின்

Page 25
44
நலன்கருதி ஒரு தொழிற்சங்கம் - இந்தியத் தொழிலாளர்களை அதிகமாக தன்னகத்தில் கொண்டிருந்த தோட்டப்புறத்தில் - தோன்றுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இது ஒரு வர லாற்று நிர்ப்பந்தமான செயல் என்றே கூறவேண்டும். இதை வெற்றிகரமாக நிறைவேற்ற நடேசய்யர் முன்வந்தார்.
அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்ற பெயரில் அவர் அமைத்த தொழிலாள்ர் சங்கத்தின் செயற் பாடுகள் வெளிப்படுவதற்கு முன்னரேயே சட்டநிரூபண சபை கலைக்கப்பட்ட நிலையில் அய்யர் எழுத்துத்துறையில் மிகுந்த கவனம் செலுத்தினர். அவர் ஒரு பிராமணர், குடியேற்றத் தொழிலாளர்களைக் குறித்து அதிக கவனம் செலுத்தியவர் கோ. நடேசய்யர்' என்ற குறிப்பு தேர்தல் முடிவுகள் என்ற இலங்கை நாடாளுமன்ற குறிப்பேட்டில் காணப்படுகின்றது.
சட்ட நிரூபணசபை கலைக்கப்பட்ட பிறகு டொனமூர் ஆனக்குழுவின் பரிந்துரைக்கேற்ப அரசாங்கசபை அமைக்கப் tull-gil.
டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்குச் சர்வசன வாக் குரிமையை அறிமுகப்படுத்திய போது, சேர். பொன்னம்பலம் இராமநாதன் போன்றவர்கள் அதை வன்மையாக எதிர்த்தனர். இங்கிலாந்துக்கு நேரடியாகச் சென்று எதிர்ப்பை வலியுறுத் தினர். டொனமூர் ஆணைக்குழு விசாரணையின் போது, வயது வந்தோருக்கான சர்வசன வாக்குரிமையை ஆதரித்து வாதாடி யவர்களில் அய்யர் குறிப்பிடத்தக்கவர்.
டொனமூர் சீர்திருத்த அறிக்கைப் பற்றிய விவாதம் சட்டநிரூபணசபையில் நடந்த போது பெண்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை சேர். பொன். இராமநாதன் எதிர்த்தார்.
"பெண்களுக்கு வாக்குரிமை வேண்டாம் என்று கூறும் எனது நண்பர்கள் சிலர் தங்களுக் குக் கிடைத்த சீ த ன பணத்தால் இங்கு வந்திருக் கிருர்கள். பெண்களுக்கு வாக்குரிமை கொடுத்தால் தேர்தலில் மனைவியும் நிற்பார் என்று நினைத்து அவர்கள் தயங்குகிருரர்களா?"
என்று அய்யர் தாக்குதலை மேற்கொண்டு பெண் சமத்து வத்துக்கும் வாதாடினர். டொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சுகள் அய்யருக்கு அதிருப்தியைத் தந்தன.

45
**டுனமோர் இந்தியரை டூ-நோ-மோர் இந்திய ராகச் செய்துவிட்டார். இந் தி யரை ஒதுக்கிக் கொண்டார். இலங்கையில் சிறுபான்மையோர்களில் பெரும்பான்மையோராகிய இந்தியர்களுக்குக் கால் களும், கை களும் விலங்கிடப்பட்டது போன்ற அடிமைத்தனமே மிஞ்சும்ம என்று தனது பத்திரிகையில் குறிப்பிட்டார்.
“நமது கவர்னர் அவர் க ள் தென்னுப்பிரிக்கா விலிருந்தவர். ஏதோ நாடகம் ஆடி இந்தியரை ஏமாற்றப்போவது நிச்சயம். இந் தியர் களும் ஏமாந்து போவார்கள். ஏன்? அவர் களிடம் ஒற்றுமை இல்லை. விஷயம் அறியும் எண்ணம் இல்லை. தென் ஆபிரிக்காவிலிருந்து வெளியேறும் இந்தியன் முந்நூறு ரூபாயோடு வ ரு கி ரு ன்; இலங்கையிலிருந்து உடுத்திய துணியோடு போக வேண்டிய நிலை வரும்' என்று அவர் எச்சரித்தார்.
1929ல் டொனமூர் சிபார்சுப்படி அரசாங்கசபைக்கான தேர்தல் நடைபெற ஏற்பாடாகியது.
ஆயிரம் கனவுகளை சிந்தையில் இருத்தி அய்யர் போட்டி யிடத் தயாராயினர். இலங்கை யருக்கு அரசாங்கசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எல்லாவித வசதிகளுமிருந்தன. பிரச்சார வாய்ப்புக்கள் அவர்களுக்கு ஏராளமாயிருந்தன.
இந்தியவம்சாவளியினருக்கு இது ஒரு பெரும் குறையா யிருந்தது. அய்யர் தனது தேசபக்தனை தினசரியாக்கினுர்,
1924ல் சட்டநிரூபணசபைத் தேர்தலின் போது காட்டிய அதே எழுத்துவன்மையை 1929ல் அரசாங்கசபைத் தேர்தலின் போதும் காட்டத் தொடங்கினர்.
அய்யரின் எழுத்துநட்ை இயல்பாகவே லாவண்யமானது. சவாலை எதிர்நோக்குகின்ற போதும், எதிரியை எழும்பவிடாது மட்டம் தட்டுகிறபோதும் அதில் லாகிரி வெறி ஏறு வ தை அவதானிக்கலாம். தேர்தல் சமயத்தில் வெளியான தேசபக்தனில் பக்கத்துக்குப் பக்கம், வரிக்கு வரி அய்யரது ஆற்றல் வெளிப்
Lt-gs.
எனினும்,

Page 26
46
தேர்தலில் அய்யர் போட்டியிடமுடியாது போய்விட்டது. அதற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரிந்து கொள்ளும் சான்றுகள் இல்லை.
அய்யரது தொழிற்சங்கப் போராட்டங்களில் உடனிருந்து உழைத்த பி. ஆர். பெரியசாமி எழுதிய தோட் டத் தொழி லாளரின் வீரப்போராட்டம் என்ற நூலிலும்,
**டொனமூர் அரசியல் ஆட்சி முறை யாகிய அரசாங்கசபை தோன்றியது, ஐ யரை அந்த சபையில் அங்கம்பெற விடாது சதிவேலைகள் செய் தனர். தகடுதத்தக்காரர்கள்?? என்ற வரிகளே காணக்கிடைக்கின்றன.
பெரிய கங்காணி ஒருவர் அய்யருக்குச் செலுத்தவேண்டிய கட்டுப்பணத்தைத் தருவதாகக் கூறி கடைசிநேரத்தில் அவரை ஏமாற்றிவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. இது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனல் அதுகாலவரை சாடாத அளவுக்கு பெரிய கங்காணிமார்களை அதற்கு பிறகு அய்யர் சாட ஆரம்பிப்பதை அவதானிக்கும் போது, அந்த கதையில் நிறைய உண்மையிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது.
அரசாங்கசபை முதன்முறையாக 7.7.1931ல் கூடிய பொழுது, இந்தியமக்களைப் பிரதிநிதித்துவம் பண்ணுபவர்களாக கீழ்க்காணும் பிரமுகர்கள் பிரசன்னமாகியிருந்தார்கள்.
பண்டாரவளை - ஏ. ஃபெலோஸ் கோர்டன் தலவாக்கொல்லை - எஸ். பி. வைத்திலிங்கம் ஹட்டன் - பெரிசுந்தரம்
நியமன அங்கத்தவர் - திவான் பகதூர் ஐ. எக்ஸ், பெரைரா
முதலாவது அரசாங்க சபையிலே பெரிய சுந் த ரம் தொழில் மந்திரியாக நியமனம் பெற்றர். பின்னுல் இரண்டாவது அரசாங்க சபையிலே பதில் தொழில் மந்திரியாக இரண்டரை மாதங்கள் பெரைரா கடமையாற்றி இருக்கிருர், அய்யர் முதல் அரசாங்க சபையில் இடம்பெருமல் போனது மலையக மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரியதோர் இழப்பு என்பதை சம்ப வங்கள் விளக்குகின்றன. பொதுத்தேர்தல்களில் நின்று வெற்றி பெறும் வாய்ப்பும் தோட்டப்பகுதிகளில் மாத்திரமே இருக்கிறது என் பதை உணர்ந்திருந்த அய்யர், தோட்ட மக்களிடையே தனது நிலையை பலப்படுத்தலானர். வளர்ந்து வரும் இந்திய துவே சத்திற்கு எதிராக - குணசிங்காவின் எதிர்ப்பை முறியடிக்க இதுவே வழியெனத் தீர்மானமாக முடிவெடுத்தார்.

7
இலங்கை இந் தி ய தொழிலாளர் சம்மேளனம், அகில இலங்கை இந்தியதோட்டத்தொழிலாளர் சம்மேளனம் என்ற இரண்டு அமைப்புக்களை அவர் தோற்றுவித்து தோட்டப்பகுதி களைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வசித்த இந்தியர்களின் நலனை முதலாவதன் மூலமும், தோட்டத் தொழிலாளர்களின் நலனை இரண்டாவதன் மூலமும் பேண ஆரம்பித்தார்.
தொழிலாளர் சம்மேளனம்
இலங்கையில் தொடர்ந்து வசித்த பத்தாவது ஆண்டில், இந்தியர்கள் இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர். களாக, குடியேற ஆரம்பித்த 103வது ஆண்டில், தொடர்ந்து ஆருண்டுகள் (1925-1931) இந்நாட்டின் அதி உயர் ந் த மன்றத்தில் இந்த இந்திய மக்களைப் பிரதிநிதித்துவம் செய்து, இவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் தனது இதயபூர்வ மான கருத்துக்களை எவ்வித நிர்த்தாட்சண்யமுமின்றி வெளி யிட்டு மகிழ்வு எய்திய நடேசய்யரால் கெளரவப்பிரதிநிதியாக நாடு முழுவதும் ஏற்றுக்கொண்ட ஒருவரால் செயலாற்ருமல் வாளாவிருக்க முடியும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
அய்யர் எரிமலைக்கு ஒப்பானவர். குமுருமல் இருப்பது அவருக்குப் பழக்கமில்லாத ஒன்று!
கொழும்பு நகரில் வளர்ந்து வந்த "குணசிங்க வழி பாடும் - சிங்கள உணர்வும் - இந்திய துவேஷமும் - அய்யரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டின. தான் நம்பியிருந்த தோட்டப் பெரிய கங்காணிகளும் தான் எதிர்பார்த்த அளவுக்கு எழுந்து நடக்காததை உணர்ந்தார் அய்யர்.
தனது பலம் தோட்டத்து மக்களை மையமாகக் கொண்டு வளரவேண்டிய அவசியத்தை உணர்ந் தார். தோ ட் டத் து மக்கள் ஏழைத்தொழி லாளர்கள்; மிகவும் எளிமையானவர்கள்; உள் ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத வர்கள்; தமது எஜமானர்களுக்காக உலகத்தின் எல்லைக்கே செல்லத் தயங்காதவர்கள். இலங்கை அரசாங்கத்தின் காருண்யமற்ற, அறிவில்லாத, பிடிவாதம் மிகுந்த தரமில்லாத செய்கையால்

Page 27
48
தோட்டத் துரைமார்களையே சர்வமும் என்று நம்பிவாழ வேண்டியவர்களானர்கள்.
என்பதை உணர்ந்த அய்யர் உடனடியாக தமது இருப் பிடத்தை தொப்பித் தோட்டத்துக்கு மாற்றினர்.
இன்று ஹட்டன் என்ற பெயரில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளிலும் அறியக்கிடக்கும் நகரம் தொப்பித்தோட்டம் என்ற பெயரிலேயே முப்பதுகளில் தமிழில் குறிப்பிடப்பட்டது.
சிக்கு புக்கு நீலகிரி தொப்பி தோட்டம் நாங்கபோற கப்பலிலே மிச்சம் கூட்டம்
என்ற நாடோடிப் பாடலிலும் "ஹெட் - ஒன் என்ப தற்கு மறைந்த வி. கே. வெள்ளையன் அளித்த பொருள் விளக் கத்திலும் இந்த நகரின் பெயருக்கான விளக்கத்தை க் காணலாம். ;
தோட்டத் தொழிலாளர்களிடையே பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையின் ஆரம்பகாலந்தொட்டு நன்கு அறிமுகமான மூன்று நகரங்களில் தொப்பி தோட்டமும் ஒன்ருகும். இன்றைய ஹட்டன் இந்துமகாசபையின் அடிவாரத்திற்கருகில் தான் 1930களில் அய்யர் தனது இருப்பிடத்தை அமைத்துக்கொண் டார். ஐந்து ஆண்டுகள் சட்டநிரூபண சபையில் ஆங்கிலத்தில் முழங்கிபழகிய அய்யர் தோட்டத்துச் சனங்களை ஊமையராய் உறங்கிக்கிடக்கும் மக்களை தட்டியெழுப்பும் பாரிய முயற்சியில் நேரடியாக ஈடுபட ஆரம்பித்தார்.
அவருக்குப் பக்கப்பலமாக நின்றவர் அவரது துணைவி மீனட்சி அம்மையார் ஆவார். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால், அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம் என்று பாடிய சுப்பிரமணிய பாரதியார் மரணமான 1921ம் ஆண்டு, தனக்கு முன் பின் அறிமுகமில்லாத மணிலாலுக்காக - இந்தியன் என்ற உணர்வோடு ஒட்டி உறவாடி - அதன் நிமித்தம் ஆங்கில சாம்ராஜ்யத்தோடு முட் டி மோ த வும் துணிந் த வ ராக இலங்கை யி ல் போ ரா ட் ட ம் நடத்திக்கொண்டிருந்தவர் நடேசய்யர் ஆவார். அய்யர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்டிருந்த பற்றும் மதிப்பும் அளப்பரியன. சிறப் பாக பெண்ணுரிமைப் பற்றிய பாரதியாரின் கருத்துக்களைச் செய லாக்கி மகிழ்ந்தவர் அய்யர் ஆகும். பீமா ன ஞ் சேர்க் கும் மனைவியின் வார்த்தைகள்’ என்று நம்பி 'கைகள் கோத்துக் களித்து நின்ருடிய பெருமகன் அய்யராவார்.

49
மலைகளைச் சாட்வும்,
காற்றிலேறி யவ் விண்ணையுஞ் சாடவும்,
ഷങ്ങി விழுங்கும் ஆண்மையைத் தரவும்” அய்யருக்குத் துணையாயிருந்தவர் மீனுட்சி அம்மையாரே ஆவார்.
அய்யர் அவர்களுடன் இணைந்து அம்மையார் பொது மேடைகளிலும், பஸ்தரிப்பு நிலையங்களிலும், மக்கள் கூடும் பொதுச்சந்தை நிலையங்களிலும் தோன்றவாரம்பித்தார்.
பேச்சாலும், பாட்டாலும் மக்களைக் கவர்ந்து வசப் படுத்தும் பெரும்பணியில் அய்யருக்குச் சமதையாக அம்மை யாரும் விளங்கியது அய்யருக்குக் கிடைத்த மிகப் பெரியதொரு பங்களிப்பு நிதியமாகும்.
அய்யர் சங்கநாதம் புரிவார். அம்மையார் இசையாய் பொழிவார். அம்மையார் பேசி முடிக்கும் முன்னர் அய்யர் கூடியிருக்கும் கூட்டத்தினரின் நாடி பிடித்து முடித்திருப்பார். மகுடிக்கு அமையும் நாகமாய் மக்கள் அய்யரிடம் ஆட்பட ஆரம்பித்தனர்.
உழைப்பதற்கென்றே பிறந்துள்ளதாக நினைத்து -
*கூடைதலைமேலே, குடிவாழ்க்கை நடுரோட்டிலே" என்று விதியை நொந்து வாழ்ந்து கொண்டிருந்தவர்கள்;
"கேள்வி கேட்பது எங்களுக்கு உரிய வேலை இல்லை; உழைத்து ஓய்ந்து, மாள்வது என்பதே எங்களின் தொழில்
என்று நம்பவும், தங்களது க ல் ல றை களி ல் வாசகங்க ளாகப் பொறித்துக்கொள்வதில் திருப்திகாணவும் பழகிப்போன இந்தியவம்சாவளி தொழிலாளர்கள் சிலிர்த்துப்போயினர். தோட்டத்துரைமார்களின் வெள்ளைநிறத்தைக்கண்டு வெளிறிப் போனவர்கள், தங்கநிறத்தில் தமிழ்ப்பேசும் அய்யரையும் அவரது மனைவியையும் கண்டு வீறு பெற்றனர்.
"கம்பளி மூன்று ரூபாய், கருப்பு கம்பளி மூன்று ரூபாய், "வேஷ்டி மூன்று ரூபாய், வெள்ளை வேஷ்டி மூன்று ரூபாய்' என்று தங்களின் கணக்கு விபரங்களை தங்களின் பெரிய கங்காணிமார்களிடம் கேட்டுப் பழகியவர்கள்;

Page 28
50
தனது பற்றுச்சீட்டை வாங்கிக்கொண்டு, தனது
மனைவியைத் தோட்டத்திலேயே விட்டு வருவதை
வாழ்க்கை அமைப்பு என்று ஏற்றுக்கொண்டவர்கள்.
பட்டப்பகலிலே சட்டிப்பானைகளை தூக்கி எறிந்து, தப்படித்து விரட்டப்பட்ட சண்டாளத் தனத்தைச் சகித்துக்கொண்டவர்கள்.
தோட்டத்தில் கெடுபிடி அதிகமாகின்றது என்ற அச்சத்தில் ஓடி விட த் துணிகையில் அகப்பட்டு குதிரைக்காலில் பிணைக்கப்பட்டு குருதி வெளிவரும் வரையில் த ர்ை யி ல் இழுத்தடிக்கப்படுவதை எதிர்க்கத் துணியாதவர்கள்.
தன்னையே சர்வமும் என்று நம்பிவந்த தனது மனைவியை பெண்டாள முனைந்த பெரியகங்காணி யையும், தோட்டத்துரையையும் தடுத்துநிறுத்த வலுவின்றி பைத்தியக்காரணுகக் கணிக்கப்பட்டு அங்கொடையில் அனுமதிக்கப்படுவதைச் சகித்துக் கொண்டவர்கள். r தங்கள் அனுபவத்திலேயே இதுவரைக் கண்டிராத புதிய காட் சியை நேரில் கண்டார்கள். W,
அவர்களால் அதை அத்தனை இலகுவில் நம்பமுடியவில்லை.
"இந் த த் தோட்டத்திற்குச் சொந்தக்காரர்கள் இருக்கிருர்கள். சுப்பிரண்டன்ட் து ரை யின் கை யொப்பம் இல்லாமல் உள்ளே பிரவேசிப்பவர்கள் கோர்ட் மூலமாகத் தண்டனைக் குள்ளாவார்கள்"
என்று தோட் டத் து எ ல் லை யி ல் நுழைவாயிலில் அறிவிப்புப் பலகையில் பொறிக்கப்பட்ட வாசகங்கள் நூருண்டு களுக்கும் மேலாக நாகரீக காற்றைத் தங்களுக்குக் கொண்டு வராமலும், தங்களின் விம்மி அழும் வாழ்க்கையை வெளியில் கொண்டுச் செல்லாமலும் தடுத்து நிறுத்தியிருப்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்த அம்மக்கள் ஒரு புதிய அனுபவத்திற்கு உள்ளானர்கள்.
குடைபிடிக்காதே! செருப்புப் போடாதே வெள்ளை வேஷ்டி கட்டி வெளியில் வராதே! பத்திரிகை படிக்காதே!

என்ற குரல்களை மாத்திரமே கேட்டுப் பழகியவர்களுக்கு -
பாட்டாளித் தோழனே பயப்படாதே தலை நிமிர்ந்து வெளியில் வா இந்தா இந்த நோட்டீசைப்படி கள்ளக்கணக் கெழுத கங்காணிகளுக்கு இடம்கொடாதே! குட்டிச்சாக்கில் சம்ப ளத்தை எடுக்கும் மட்டித்தனத்தை எட்டி உதை அரைப்பெயர் போடுவதை எதிர்த்து நில்! பகல் சாப்பாட்டுக்கு ஒருமணி நேரம் லீவு உண்டு, அதைப்பயமின்றிக் கேள்! உன்னை மிரட் டும் வீணருக்குப் பயந்து உரிமை யை விட்டுக்கொடாதே! எ ன் ற் குரல்கள் புதுத் தெம்பை தந்தன!
அய்யருக்கு ஆரம்பத்தில் போய் வந்தது போல் தோட்டங் களுக்குள் சென்று வருவதில் சிரமம் ஏற்படத் தொடங்கியது. அய்யருக்கு எதிராக ஆங்கிலேய்த்துரைமார்கள் மாத்திரமல்ல, பெரிய கங்காணிகளும், நகர முதலாளிமாசிகளும் செயற்படத் தொடங்கினர். இந் த க் காலப்பகுதியில் 153 இந்தியர்கள் தோட்டச் சொந்தக்காரர்களாகவும், இருந்தனர். இவர்கள் அனைவருமே ந டே சய்ய ரின் நடவடிக்கைகளை எதிர்த்துச் செயற்பட முனைந்தனர்.
பெரிய கங்காணிகளுக்கு எதிராக அய்யர் போர்க்குரல் எழுப்பத் தொடங்கியதன் பிறகே, இந்த நிலைமை தீவிரம் பெற்றது. "தொழிலாளர்களிடம் சார்பு உள் ள வர்கள் தோட்டங்களுக்குள் போய் வருவதைத் தடுக்க துரைமார்கள் பிரியப்படுவதில்லை; நேரில் கண்டாலும் கண்டதுபோல் காட்டிக் கொள்வதில்லை. ஆளுல் தொப்பிப்போட்ட கருப்புத்துரைமார் களோ துள்ளிக்குதிக்கத் தலைப்பட்டிருக்கிருர்கள். ஏன்? அவர்கள் எஜமான் கீழுள்ள அடிமை மிருகங்கள்.
ஒரு தோட்டத்திற்கு தமது ஆசிரியர் அடிக்கடி போய் வருவதுண்டு. அது விஷ ய மாய் து ரை யும் யாதொன்றும் சொல்லியது கிடையாது. ஆனல் கருப்புத்துரை சும்மாயிருக்க வில்லை. ஆசிரியர் போகும் வீட்டுக்காரரைக் கூப்பிட்டு கண்டித் திருக்கிருர், பயமுறுத்தியிருக்கிருர். யார் வந்தாலும் பரவாயில்லை நடேசய்யர் வரக்கூடாது என்று கூறி இருக்கிருர்" என்று தனது பத்திரிகையில் எழுதிய அய்யர் -
"தோட்டத்திற்குள் எம்மை வரக்கூடாது என ஒருவரும் நேரில் சொல்ல எண்ணத்துணியார்கள். ஆனல் தங்கள் அடிமை களான கங்காணிமார்களையும், உத்தியோகஸ்தர்களையும் இவ் வேலைக்கு ஏவி விட்டிருக்கிருர்கள். எவ்விதப்பலன் எமது சுற்றுப் பயணத்தால் ஏற்பட்டது என்று கவனிப்போம்.

Page 29
52
சென்ற ஒருமாத காலத்திற்குள்ளாக அரைப்பெயர் போடுவது அடியோடு நின்றுவிட்டது. மற்ற குறை களும் நீங்கவேண்டுமானல் தொழிலாளர்களுக்குக் கல்விகொடுக்கவேண்டும். அக்காரியத்தை எவ்விதம் செய்யக்கூடும்? சட்டப் புஸ்தகம் வாங்கித் தொழி லாளர் வசம் போகாமல் பல கங்காணிமார்கள் செய்து வைத்திருக்கிருர்கள். என்ன செய்யலாம்? தொழிலாளர்கள் கண் விழித்தாலன்றி பிறரிட மிருந்து நன்மை கிடைத்துவிடும் என்று எண்ண வேண்டாம், புத்தகங்கள் மூலமும், துண்டுப்பிர சுரங்கள் மூலமும், பிரசங்கங்கள் மூலமும் புத் துணர்ச்சி யை உண்டாக்கவேண்டும், கங்காணி மார்களை தற்சமயம் நம்பி நிற்க முடி யாது. அவர்கள் நிலைமையே தடுமாற்றத்தில் இருக்கிறது. ஆகவே இல்வித பிரச்சார வேலை யை பொது ஜனங்கள் கூடிய சீக்கிரம் ஏற்று நடத்த முன்வர வேண்டும்."
என்று 1929ல் சட்டசபை அங்கத்தவர் என்ற பதவி தனது போர்க்குணத்துக்கு ஒரு பிரதான கவசமாக பாவிக்கப் படக் கூடியது என்பதை உணர்ந்திருந்த நேரத்தில் - எழுதி யிருந்தார்.
தொழிலாளரும் . சம்மேளனமும்.
1931ல் தானே அவைகளைச் செயல் படுத்த வேண்டியவ ராஞர். சகோதரத்துவம், சுயமுயற்சி, சிக்கனம் என்ற குணங் களைத் தொழிலாளர்களிடம் பரப்பவும், குடி, சூது, கடன் என்ற பழக்கங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவும் அய்யர் அமைத்த அகில இலங்கை இந்திய தோட்டத் தொழிலாளர்
சம்மேளனம் முயற்சித்தது.
கடன் தொல்லைகளுக்கு ஆளாகாமல் இருப்பதற்கு கூட்டு றவு சங்கங்களும், கடனுதவி சங்கங்களும் ஆரம்பிக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தி தொழிலாளர்களின் கல்வி அறிவை அபிவிருத்திச் செய்து அவர்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் அரசியல் நிலையைச் சிறப்பானதாக்கவும் தொழிலாளர் சம்மேளனம் இலட்சியம் கொண்டிருந்தது.

53
தொழிலாளர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலும், வயோதிப தொழிலாளருக்கு உதவி பணம் பெற்று இந்தியாவுக்கு அனுப்பி வைக்கும் முயற்சிகளிலும் "சம்மேளனம் கவனம் செலுத்தியது.
ஆக, தொழில் சம்பந்தமானதாக மாத்திரமல்லாமல், சமுதாயப் பிரச்சனைகளை உள்ளடக்கியதாகவும் தனது தொழிற் சங்க முயற்சியை நடேசய்யர் திட்டமிட்டு ஆரம்பித்தார் என் பதை உணர்ந்து கொள்ளமுடியும். தொழிற்சங்கம் தொழி லாளர்களின் அன்ருட பிரச்சனைகளை மாத்திரம் பேசிக் கொண் டிருப்பதால் பயனில்லை என்ற கருத்து ஒலிக்கும் இன்றைய காலகட்டத்தில் - ஐம்பதாண்டுகளுக்கு முன்னரேயே அதைச் செயல் வடிவில் காட்ட ஆரம்பித்த நடேசய்யரின் அறிவும், புத்திக்கூர்மையும் நினைக் கும் போ தே பிரமிப்பூட்டுகிறது. தோட்டங்களில் குழுக்களாக அமைந்து இ யங் கி ய தொழி லாளர்கள், நடேசய்யருடன் தொடர்பு கொண்டவர்கள் என்ற காரணத்தால் பழிவாங்கப்பட்டார்கள். தோட்டங்களுக்குள்ளும், வெளியிலும் கூட்டம் நடாத்துவதற்கு மைதானமோ, கட்டிடமோ கிடைக்காதவிதத்தில் தோட்ட நிர்வாகத்தினரும், நகரமுதலாளி களும் நடேசய்யருக்கு விரோதமாகச் செயல் பட்ட னர். எந்த நேரத்திலும் அவருக்கு உயிராபத்து ஏற்படக் கூடிய நிலையை உணர்ந்த வெள்ளையர் அரசு கைத்துப்பாக்கி வைத்தி ருக்க அவருக்கு அனுமதி வழங்கியது.
'நடேசய்யர் தங்கிய சுற்றுப்புறத் தோட்டங் களில் நிர்வாகம் தொழிலாளருக்கு அரிசியை நிறுத்தியது. நீர் விநியோகத்தைக் கூட தடை செய்தது' என்று சட்டத்தரணி வேர்ணன் குண சேகரா தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறர்.
குணசேகரா நடேசய்யருக்காக தொழிலாளர் சம்பந்தப் பட்ட வழக்குகளில் 1940களில் பங்கெடுத்துக் கொண்டவர். 1942ல் ஏழு அம்சத்திட்டம் கைச்சாத்திடப்பட்ட போது சம்மேளனத்தின் சார்பில் அய்யரும், இலங்கை இந்தியர் காங்கிரஸ் சார்பில் ஜி. எஸ். மோத்தாவும், சமசமாஜக்கட்சியின் சார்பில் வேர்ணன் குணசேகராவும் கையெழுத்திட்டனர்.
ஆரம்பகாலந்தொட்டே விசாலித்துச் செயல்படும் வாய்ப்பு அய்யர் ஆரம்பித்தத் தொழிற்சங்கத்துக்கு இருக்கவில்லை. அவர் தொழிற்சங்கம் ஆரம்பித்த கால நிலவரம் அவ்விதம். பொருளா தார மந்தம் நிலவிய காலப்பகுதி அது! ஆயிரக்கணக்கான தொழிலாளருக்கு வேலையில்லாமல் போனது. நாளுக்கு நாள் தொழிலாளர்களில் வருமானம் குறையத்தொடங்கியது. அவர் களின் ஊதியம் குறைக்கப்படலாயிற்று.

Page 30
54
கழுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில், சங்கத்தில் சேர்ந்து உழைக்கவும், சமர்புரிந்து பணியாற்றவும் நெஞ்சுரம் எத்தனைப் பேரிடம் தொடர்ந்திருக்கமுடியும்?
1929க்கும் 1932க்கும் இ டை பட்ட காலப்பகுதியில் அரசாங்கப் புள்ளிவிபரப்படி 84,000 இந்தியர்கள் தங்கள் தொழிலை இழந்து நின்றனர். சேர் குலோட் கொரியா தலை மையில் அமைந்த ஆணைக்குழு ஒருலட்சம் தொழிலாளர்கள் இந்தியா திரும்பியதாக குறிப்பிட்டது. மேலும் அனுமதியின்றி தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்குள் போக முடி யா து என்றும், அப்படி போனது சட்டத்தை மீறியச் செயலாகும் என்றும் கருதப்பட்டது. எனவே அய்யரின் சங்கப்பணிகள் கட்டுப்பாட்டுக்குள் அமையவேண்டியதாயிற்று. பெட்டிசன் எழுது வதையும், பிட்நோட்டீஸ் அடிப்பதையும், கூட்டங்கள் போடு வதையும் தனது நடவடிக்கைகளுக்கான யுக்திகளாக அய்யர் வெற்றிகரமாகக் கையாளத் தொடங்கினர்.
இலங்கையில் பெட்டிசன் எழுதுவது ஒரு கலை யாக வளர்ந்து வந்திருக்கிறது. ஒவ்வொரு பட்டினத்திலும், நகரத் திலும் பெட் டி சன் எழுதவென்றே தனிமனிதர்கள் இருக் கின்றனர். அவர்களின் ஜீவியமே அதில் தான் நடக்கிறது. தோட்டங்கள் திறக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் எழுதபடிக்கத் தெரியாத கூலிகள் இந்திய கிராமத்தில் தன் உறவினர்களுடன் தொடர்புகொள்வதற்காக ஒவ்வொரு தோட்டத்திலும் ஒருவர் நியமிக்கப்பட்டார். அவர் மூலம் கொள்ளும் தொடர்பை பெட்டிசன் என்றே கூறுவர்.
1922லிருந்தே இந்த மக்களைத் தங்களின் புகார்களை பெட்டிசன் உருவில் இந்திய ஏஜெண்டுக்கு எழுதவைத்தவர் அய்யராவார். முதன் முதலாக இந்திய ஏஜெண்டாக வந்த எஸ். ரெங்கநாதன் நடேசய்யருக்கு நெருக்கமான நண்பராகவும் இருந்தார். அவருடைய முகவரியைக் கொடுத்து அவரோடு தொடர்புகொள்ளும் வழிமுறைகளையும் வெளியிட்டு போதாதற்கு சில மாதிரி முறைப்பாடுகளையும் தனது தேசபக்தன் பத்திரி கையில் வெளியிட்டு தோட்டத்து மக்களைத் தூண்டுவித்திருந் தவர் அய்யரே ஆவார். இப்போது நேரடியாக பெட்டிசன்களை தன்னுடைய சங்கத்துக்கு அனுப்பச்செய்து அதன் மூலம் அவர் களின் சார்பாக பேசும் உரிமையைச் சங்கத்துக்குப் பெற்று விடும் தந்திரோபாயத்தை அய்யர் கையாண்டார்.

55
இந்தக் காலப்பகுதியில் ஆண்டுக்கு 5000 பெட்டிசன்கள் அளவில் தான் பெற்றதாக இந்திய ஏஜெண்ட் குறிப்பிடுகிருர். இவ்வித முறைப்பாடுகள் மூலம் தோட்டமக்களின், துயரங்கள் வெளிப்படும் அதிகரிப்பு ஏற்பட்டதற்கு அய்யரின் சங்கமே பொறுப்பு என்றும் குறிப்பிடுகிருர்,
மற்றும் தோட்டத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டக் காரணத்தால் தோட்டத்துக்கருகில் இருக்கும் நகர்ப்புறத்தில் கூட்டங்கள் போட்டார் தோட்டத்துக்குச் சொந்த மில்லாத பொது வழிகளில் தனது காரை நிறுத்தி, காரில் இருந்த வண்ணமே மக்களோடு பேசத் தொடங்குவார்.
திறந்தகாரை மேடைபோல் பாவித்து அதிலிருந்து நடேசய்யர் அவர்களும், அவரது மனைவி மீனட்சி அம்மையும் பேசும்போது தொழிலாளர்கள் புத் துணர் வு பெற்ருர்கள். நடமாடும் தொழிற்சங்கத்தின் பிரசன்னத்தைப் பெறவேண்டி தொழிலாளர்கள் நகர்புறங்களில் கூடும் தினத்தன்று தோட்டங் களில் வேலை நடைபெறுவதில் சிரமம் ஏற்பட்டது. சந்தாமுறை இல்லாத அந்நாட்களில் தொழிற்சங்கம் நடாத்துவது எத்தனைச் சிரமமானது. தொழிலாளர்கள் தரும் உதவியிலேயே சங்கம் நடைபெறவேண்டியிருந்தது. அய்யரின் கார் கூட்டம் முடிந்து போகும்போது, தொழிலாளர்கள் அன்பளித்த காய்கறிகளால் நிரம்பிவழிந்த நாட்களுமுண்டு.
இவ்விதம் இருந்த தடைகளையெல்லாம் மீறிக்கொண்டு அய்யரின் சங்கம் மலைநாட்டு தோட்டப்புறங்களில் பரவ ஆரம் பித்தது. 1931 மே மாதத்தில் அட்டன் நகரில் கூடிய அவரது கூட்டத்தி ல் 5000 தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். சம்பளக்குறைப்புக் குறித்து அவர்கள் கண்டனத் தீர்மானத்தை மேற்கொண்டனர். அடுத்த ஜூன் மாதத்தில் கண்டியில் நடை பெற்ற மாபெரும் கூட்டத்தில் தொழிலாளர்கள் தன்னுடைய சங்கத்தின் மூலமே இந்திய ஏஜெண்டோடும், தோட்டத்துரை யோடும் தொடர்புகொள்ளவேண்டிய அவசியத்தை வலியுறுத் தினர். தொழிலாளர்களின் உரிமைகளும் கடமைகளும் குறித்து தனது பிரசுரத்தை அவர்களிடம் ஆயிரக்கணக்கில் விநியோகித் தார். இவைகளால் கவர்ந்திழுக்கப்பட்ட வி. பி. நாதன் கண்டிக் கிளைக்குத் தலைவராயிருந்து செயற்பட்டார். இந்த ஆண்டில் நாதனேடு இணைந்த நடேசய்யர் இண்டியன் எஸ்டேட் லேபரர் என்ற ஆங்கில பத்திரிகையையும் நடத்தினர்.

Page 31
56
கண்டியில் நடைபெற்ற பிரமாண்டமான கூட்டம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அய்யருக்கெதிராகச் செயல்படுப வர்கள் தீவிரமானர்கள். சங்கத் தொழிலாளர்களை கீழ்ப்படியா மைக்குத் துர ண் டு ம் அய்யரின் நடத்தைக் கண்டிக்கப்படக் கூடியது என்று காரணம் காட்டி கூட்டங்கள் போடுவதற்கு இடம் தருவதில்லை என்று கண்டி நகரசபை ஒரு தீர்மானம் கொண்டுவந்தது.
இதை அடியொட்டி மலைநாட்டு நகர்ப்புறங்க்ள் எங்கும் கூட்டம் நடாத்தும் அனுமதி அய்யருக்கு மறுக்கப்பட்டது.
வளர்ந்துவரும் அபாயத்தை உணர்ந்த தோ ட் ட ச் சொந்தக்காரர்கள் முழுமூச்சோடு அய்யர் ஆரம்பித்த சங்கத்தை அழிக்க நினைத்தனர்.
தங்கள் அங்கத்தவர்களை அய்யரின் சங்கத்திலிருந்து வரும் கடிதங்களுக்கு எந்தவிதமான பதிலும் தராமல் மெளனம் சாதிக்கும்படி துரைமார் சம்மேளனம் அறிவுறுத்தியது. மேலும் துரைமார்களைப்பற்றிய முறைப்பாடுகள் சம்பந்தப்பட்ட துரைமார்களின் பார்வைக்கு அனுப்பப்படல் வேண்டு ம் என்று லேபர் கண்ட்ரோலரிடம் கோரி, அதி ல் துரை மார்கள் வெற்றியும் கண்டனர்.
இந்திய ஏஜெண்டாக பதவி ஏற்ற கே. பி. எஸ். மேனன் இடம் பெட்டிசலாகளை பெரிதுபடுத்தாது உதாசீன படுத்தும் படியும் கேட்டுக்கொண்டனர். நீதவான்களிடம் தொழிலாளர்கள் சமர்ப்பித்த விண்ணப்ப மனுக்கள் கூட் துரைமார்களின் பார் வைக்கு அனுப்பப்படடு நீதி வெறும் கேலிக்கூத்து ஆக்கப்பட்ட சம்பவங்களை அய்யர் வன்மையாகச் சாடினர். இலங்கையில் அச்சமயம் தங்களை மிகவும் வலுவுள்ளதாக வளர்த்து ஒர் அமைப்புக்குள் செ ய ல் பட் ட முதலாளிவர்க்கத்தினராக தோட்டத்துரைமார் விளங்கினர். போதாதற்கு பிரித்தாளும் சூழ்ச்சியில் பேர்போன பரம்பரையினர் அய்யருக்கும், பெரிய கங்காணிமார்களுக்கும் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும் பெரி தாக்கி கடும்ப்கையாக வளர்த்தெடுத்தனர்.
அய்யர் பிராமண வகுப்பைச் சார் ந் த வ ர், தென்னிந்தியாவில் பார்ப்பானியர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் நிலையில் த ன் னை ப் பாதுகாத்துக் கொள்ள இலங்கையில் த ஞ் சம் புகுந்திருக்கும் சுயநலவாதி என்று கூறி வகுப்புத்துவேசத்தை எழுப்பினர்.

57
'மதத்தின் பேரால் முப்பது கோடி மக்களை ஏமாற்றி பாழ்படுத்தி வாழும் குலத்தில் பிறந்த அய்யருக்கு இலங்கையில் ஏழரைலட்சம் மக்களை ஏமாற்றுவது சிரமமா? என்று தேர்தல் காலத்துச் சாதி ப் பிரி வினை மீண்டும் உயிர்த்தெழுவதற்கு அய்யருக்குப் போட்டிச்சங்கமாக இந்தியர் சங்கம் மீண்டும் உயிர்பெற உதவினர். தோட்டங்கள் தோறும் அச்சடிக்கப் பட்டச் சுற்றறிக்கைகளை அய்யருக்கு எதிராக விநியோகித்தனர். எல்லாவற்றுக்கும் மேலாக அதே ஆண் டி ல் (1931) ஊழியன் என்ற பெயரில் தமிழ்வார ஏடு ஒன்றை ஆரம்பித்து நடாத்து வதற்கு வேண்டிய நிதி உதவியைத் துரைமார்கள் செய்தனர். நடேசய்யரைத் தாக்குவதென்பதே ஊழியனின் வேலையா இருந்தது.
1931 நவம்பரில் "நடேசய்யர் சிறை க்கு அனுப்பப்பட வேண்டி uGuri ””
என்றும்
வெகுவிரைவில் துரை ஒருவரின் பராக்கிரமத்தால் அய்யரின் வாய் அடைக்கப்பட்டுவிடும்” என்றும் எழுதிய ஊழியன்
"டிசம்பரில் தூக்கிலிடப்பட்டுக் கொல் லப்பட வேண்டியவர்" என்றும் எழுதி யது. தோட்ட் உத்தியோகத்தர் சங்கம் தன் பங்குக்கு
*தோட்டத்துரைமாரே நமது தெய்வம், அவர்களை அடிபணிந்து வாழ்வதே வாழ்க்கை. நமது அங்கத் தவர்கள் நடேசய்யரோடு எவ்விதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது" என்று தீர்மானம் நிறைவேற்றியது.
நடேசய்யரின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்ருக கூட்டுறவு சங்கங்களைத் திறக்கவும் துரை மார்கள் ஆரம்பமாயினர். அவ்விதம் திறக்கப்பட்ட இம்புல் பிட்டிய தோட்டக் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தில் நடேசய்யரின் தொழிற்சங்க கருத்துக்கள் பிளேக் நோ யை ப் போல வெறுத் தொ துக்க ப் பட வேண்டியது ༥. என்று பகிரங்கமாகவே துரைமார் சங்கத்தலைவர் பேசினர். பழுத்த மரத் தி ல் தான் கல்லெறிவிழும் என்பதைப்போல அய்யர் ஆரம்பித்தச் சம்மேளனம் சத்திமிகுந்தாக ஆகிவரு வதைக் காணச்சகிக்காத நிலையிலேயே இத்தனை எதிர்ப்பிர

Page 32
58
சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று கணிப்பது நியாய மானது. இத் த னை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தோட்டத் தொழிலாளர்களின் நிலைமை மேலும் சீர்குலைய கூடாது என்பது அய்யரின் கவலையாயிருந்தது.
சம்பளக்குறைப்பு மேலும் மேலும் அதிகரிப்பதை அய்யர் அவதானித்தார். -
**அமைதியாக இருப்பது போல் தோற்றம் தரும் தோட்டநிலவரம் தொழிலாளர்கள் திருப்தியாக இருப்பதாக காட்டுகிறது என்று கருதுவது தவறு" என்று எச்சரித்து,
"மேலும் சம்பளக் குறைப்புக்கு எத்தனம் செய்வது வெடிமருந்து குவியல் மேலமர்ந்து மெழுகுவர்த் தியில் சுருட்டுப்பற்றவைப்பது போன்ற செயல்" என்று கருத்துத் தெரிவித்தார். −
சம்பளக் குறைப்புக்கெதிராக சம்மேளனத்தின் மூலம் பலபகுதிகளிலும் தீர்மானங்கள் நிறைவேற்றி பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்கத் தொடங்கினர்.
இந்த நிலைமையில் 1932 செப்டம்பரில் கண்டிக்கிளையின் தலைவராயிருந்த வி. பி. நாதன் தலைவர் பதவியிலிருந்து விலகிய தோடு, தொழில் அமைச்சருக்குக் கடிதம் எழுதி அய்யரின் சம்மேளனத்துக்கு தான் எதிர்ப்புக் காட்டுவதாகச் சொன்னர். கூடவே இலங்கை அரசாங்கம் * குறைவான சம்பளத்தில் வேலை செய்ய விரும்பாத இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லலாம் என்ற நிபந்தனைக்கு ஒப்புதல் தெரிவித்துச் சம்பளக் குறைப்புக்குச் சம்மதித்தனர்.
அய்யர் இதை ஒரு சக்திமிகுந்த ஆயுத மா கப் பாவிக்க நினைத்தார். இந்தியத் தொழிலாளர்களை ஒருசேர இந்தியாவுக்குப் போக தூண் டி னர். ஹட்டன் ரயில்வே நிலை ய த் தி ல் பல்லாயிரக் கணக்கில் கூடிய இந் தி யத் தொழிலாளர்கள் ரயில்வே திணைக்களத்தை நிலைகுலையச் செய்தனர். அரசாங்கம் மிரண்டது! துரைமார்கள் துவண்டு போயினர்! ஆங்கில ஆட்சியும், இந்திய அரசாங் கமும் திகைத்துப்போயின!
எனினும் அய்யரின் இம்முயற்சி, தேவைக்கதிக
மானத் தொழிலாளர்கள் தோட்டங்களில் இருந்த கார ணத்தால் உரிய பலனளிக்காது விட்டது.

ஆண்டாண்டு காலமாக அய்யர் வாதாடி வந்த இந்தியர்களின் வருகையை அளவோடு நிறுத்தி வைத்திருந்தால் அய்யரின் இந்தியா திரும் புழ் பயமுறுத்தல் இலங்கைத்தீவில் இந்தியர்களின் வரலாற்றை சிறப்பான முறையில் எழுத உதவி யிருக்கும். r
அய்யரின் முயற்சி கைகூடாமல் போனமைக்கு தோட்டத் துரைமார்களின் பலமும், மனுேபாவமும் மற்ருெரு காரணமா கும். அவர்கள் நகர்ப்புற முதலாளிகளைப் போன்று தொழிற் சங்கங்களை அங்கீகரிப்பவர்களாகவும், தொழிற்சங்கப் பணிகளை சகித்துக் கொள்பவர்களாகவும் இல்லாதவர்கள் 1933 லிருந்து இலங்கையில் அய்யரின் வாழ்க்கை நாட்டைச் சுற்றிச் சுற்றித் திரிவதிலேயே கழிந்தது.
அவ்வாறு சுற்றியதன் பயனப் இலங்கையைப் பற்றி இலங் கையர்களைவிட அதிக உண்மைகளை அவர் அறிந்துகொண்டார். ஆதாரப்பூர்வமாக அந்த அறிவைப் பயன்படுத்தினர்.
பின்பு அவர் அழகிய இலங்கை என்று எழுதிய மிகச் சிறந்த புத்தகமொன்று இந்த உண்மையை நிரூபிக்கிறது.
இதுநாள்வரை இதற்கு சமமான ஒரு புத்தகம் தமிழில் இலங்கையைப்பற்றி வேறெவராலும் எழுதப்படவில்லை. இத்தகு வெற்றிக்கு அவரது பத்திரிகை அனுபவங்களே காரணமாகும்.
நான் பத்து வருட காலமாய் செல்வ விஷயமாய் ஆராய்ச்சி செய்துவரும் ஒர் பத்திரிகைக்கும், அர சியல் விஷயமாக ஓர் தினசரி பத்திரிகைக்கும் ஆசிரியராய் இருந்து வந்ததால் இது சாத்தியமா யிற்று" என்று அவரே குறிப்பிடுகின்ருர், பிரயான வசதியும், தபால் தொடர்பு வசதியும் குறைந்த அந்தக் காலப்பகுதியில் இப்பிடிச் செயலாற்றுவதற்கு எத்தகு நெஞ்சுரமும், கொள்கைப்பிடிப்பும் ஒரு மனிதரிடம் இருந்திருக்க வேண்டும்?
கொழும்பில் நடக்கும் அரசாங்கசபை கூட்டம் குறித்து அட்டனிலிருக்கும் தனக்குப் பிந்தியே தெரி யவருகிறது. இதல்ை சில சமயங்களில் நிர்வாகக் கூட்டங்களைத் தவறவிட்டிருக்கிறேன்" ()
என்றும்,

Page 33
60
'நான் சொல்வது உங்களுக்கு விளங்காது இந்த நாட்டில் உங்களுக்கு அனுபவம் போதாது, புத்த ளத்தில் ஒரு நாளும், காலியில் இன்னெரு நாளும், இன்னுமோரிடத்தில் இன்னெரு நாளும் என்றிருந் தால் எப்படி? தோட்டத்துரைமார்களையும் நிலச் சொந்தக்காரர்களையும் சந்தித்து ரிப்போர்ட் எழுதி இங்கு வந்து சட்டம் பண்ணுகிறீர்கள்' என்றும், *தோட்டங்களுக்குப் போய் பிரட்டுக்களத்திலிருந்து இலங்கையில் பிறந்தவர்களைக் கணக்கெடுத்திருக் கிறேன்"
என்றும் சட்டசபையில் அய்யர் முழங்கியிருக்கிறர்.
மலையகத் தோட்டப்புறங்களுக்கும், கொழும்பு நகருக்கும் உள்ள மனிதத் தொடர்புகளும் குறிைவே. மலைநாட்டில் லின் டுல என்ற நகரிலிருந்து பிலிப் என்பவர் எழுதிய பத்திரிகை கட்டுரைக்குப் பதில் தரும்போது, "பிலிப் வசிப்பது லின்டுல என்றவிடம். அது வெளிநாடு, நாம் வசிப்பது கொழும்பு. இலங்கையின் தலைநகரம்" என்று ச் ங் க க் காரிய த ரிசி ஒருவர் பதில் தந்திருப்பதைப் பார்க்கும்போது நடேசய்யர் கொழும்பிலமர்ந்துகொண்டு பத்திரிகைகளில் அறிக்கை வெளியி டும் இந்தியத் தலைவர்களில் ஒருவராக இல்லாதிருப்பதை எளி தில் அறிந்துகொள்ளலாம்.
மக்களிடம் சென்று, அவர்களுடன் வாழ்ந்து, அவர்களிட் மிருப்பதை வைத்து ஆரம்பித்து அவர்களுடனேயே திட்டம் வகுத்து, அவர்களையும் தனது திட்டத்துக்கு வளர்த்தெடுப்பதும் வளைத்தெடுப் பதும் எல்லோருக்கும் எளிதில் கைவராது.
அதில் கைவந்தவர்கள் வரலாற்றில் இடம்பெறும் தலைவர் களாக உருவாகிறர்கள்.
கோதண்ட்ராம நடேசய்யர் நிசேயமாக அவர்களில் ஒருவர். ஊமை ஜனங்களாக, எழும்பிநின்று போராடும் வலுவற்றிருந்த குடியேற்ற கூலிகளாக-நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தாம் தவிப் பதை வெளியில் சொல்லும் விஷயஞானம் இல்லாதவர்களாக அடிமை நிலையில் உறங்கிக்கிடந்த கோப்பிக்காட்டான்களையும். தோட்டக்காட்டான்களையும், விழிப்புற்று, எழுந்து நிற்க செய் தவர் அய்யரே ஆவார்.
அவரது வழிகாட்டலில் தான் அவர்கள் பேசத் தொடங் கினர். அவர் அவர்களுக்காகப் பேசவேண்டும் என்று அவர்கள்

6.
ஆசைப்பட்டதன் விளைவு
1936ல் நடந்த அரசாங்கசபைத் தேர்தலில் அவர்பெற்ற மகத்தான வெற்றியாகும். முதலாவது அரசாங்கசபைத் தேர்த லில் அவருக்கு ஏமாற்றத்தை உண்டுபண்ணிய பெரியசுந்தரம், இரண்டாவது தேர்தலில் அட்டனில் போட்டியிடும் முன்னுரி மையை அய்யருக்கு அளித்துவிட்டு ஒதுங்கும் நிலை உருவாகியி ருந்தது.
முதல் அரசாங்கசபையில் அமைச்சராகப் பதவி வகித்த
ஒருவரை-தோட்டத்தில் பிறந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வெளிவந்த இலங்கையிலுள்ள ஒரே ஒரு இந்திய வம்சாவளித் தமிழரை 44 தஞ்சாவூரில் பிறந்து அக்கவுண்டன்ட் ஆக தொழில் கல்வி பயின்ற பிராமணர் ஒருவர் - பார்ப்பானிய வெறுப்பு வேர் கொள்ளத் தொடங்கிய நேரத்தில் எதிர்த்து நிற்பது - அதுவும் தேர்தலில்; தற்கொலைக்கொப்பான முயற்சியா கும். ஆனல் -
அந்த முயற்சியை அய்யர் வெற்றிகரமானதாக்கிக் காட் டிஞர்.
பெரி. சுந்தரம் தொழில், கைத்தொழில், வர்த்தக மந்திரி யாக இருந்த நேரத்தில் அன்னி பெசண்ட் அம்மையாரையும், லோகமான்ய திலகரையும் இலங்கையில் வரவேற்று வெள்ளையர்க் கெதிராக மக்களிடையே சுதந்திரக் கனலைப் பரப்ப முன்னின்று உழைத்தார்; தொழிலாளர்களின் நட்டஈட்டுச் சட்டத்தைக் கொண்டுவந்தார். இலங்கை வங்கியைத் தோற்றுவிப்பதற்கான பணியைத் தொடக்கியிருந்தார். இலங்கைத் தென்னைச் சபையைத் தோற்றுவித்தார். புள்ளிவிவரக்குழுவை அறிமுகப்படுத்தினர். இருந்தும் வெளியில் மக்களோடு உறவாடி அய்யர் ஆற்றிய பணி களே வெற்றிபெற்றன.
பெரி சுந்தரத்துக்கு ஆதரவாக ஏராளமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தாரும், தோட்டத்துரை மார்களும், தோட்ட உத்தியோகஸ்தர்களும் பெரிய கங்காணி மார்களும் களத்திலிறங்கி பணியாற்றினர்.
டிக்கோயா, தரவளை மைதானத்தில் நடைபெற்ற பிரசா ரக் கூட்டத்தில் வீரகேசரி ஆசிரியர் வ. ரா கலந்துகொண்டார். பாரதியாரின் புகழ்மிகுந்த சீடரான இவர் அய்யருக்கு எதிரா கவே இத்தேர்தலில் பணியாற்றினர். இருந்தும் என்ன?

Page 34
62
பொருளாதார மந்தத்தால் ஏற்பட்டிருந்த அழிவு அய்ய யருக்கு உதவிற்று. தொழிலாளரின் சம்பளம் 54 சதத்திலிருந்து 41 சதமாகக் குறைக்கப்பட்டதை அய்யர் நினைவுபடுத்தினர். அது ஒரு தொழிலாளியின் வருமானத்தில் 24 சதவீத சம்பள வெட்டாகும். தெருவோரத்தில் தொழிலாளர்கள் பிச்சையெடுப் பதையும், பிணமாய்க் கிடந்ததையும் எடுத்துச்சொல்வி சம்பளக் குறைப்புக்கும் ஆட்குறைப்புக்கும் காரணகர்த்தாவாக இருந்தவர் பெரிசுந்தரமே என்று பிரச்சாரம் புரிந்த அய்யர் "குறைந்த பட்ச சம்பளத்தை மேலும் குறைக்கும் மனிதரை தூக்கி எறி" என்று கேட்டுக்கொண்டதை மக்கள் ஆதரிக்கவேண்டியிருந்தது.
*சமீபத்தில் ஹட்டனில் நடைபெற்ற கூட்டத்தில் என் மீது கற் கள் வீசப்பட்டன. சுயமரியாதையை இழக்காமல் ஹட்டனில் காடைத்தனத்தை எதிர்த்து நிற்பது மிகவும் கஷ்டம்" என்று கருதிய அமைச்சர் பெரிசுந்தரம் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்கிவிட்டார். இரண்டாவது அரசாங்க சபையிலிருந்த மொத்த அங்கத்தவர்கள் தொகை 61 ஆகும். 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். 8 பேர் நியமனம் பெற்றவர்கள். 3 பேர் அரசாங்க அலுவலர்கள். தேர்தவில் வெற்றிபெற்ற 9 தமிழர்களில் நடேசய்யரும் ஒருவராவார்.
இத்தேர்தலில் தான் டாக்டர் என். எம். பெரேரா, பிலிப் குணவர்தணு எ ன் ற இருவரும் முதன்முறையாக அரசாங்க சபைக்குத் தெரிவானுர்கள். அவர் க ள் லங்கா சமசமாஜக் கட்சியைச் சேர்ந்தவர்கள். தோட்டப்புறங்களில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்த இவர்களுடன் சபை நடவடிக் கைகளிலும், சபைக்கு வெளியேயும் அய்யருக்கு உறவு இருந்தது. சாமான்யர்களின் குரல்களாக சட்டசபையில் இவர்கள் ஒலித் தனர். 50 அங்கத்தவர்களும், ஏழு நிர்வாகக் குழுவாக இயங் கினர். ஒவ்வொரு நிர்வாகக் குழுவுக்கும் தலைவராக இருந்தவர் மந்திரியாக கடமையாற்றவேண்டியவரானர்.
நடேசய்யர் உள்ளூர் ஆட்சிமன்ற நிர்வாகக்குழுவில் செயல் பட்டார். அக்குழுவின் தலைவராக விளங்கியதால் உள்ளூராட்சி மன்ற அமைச்சராகவிருந்தவர் எஸ். டப்ளியு. ஆர். டி. பண்டார நாயகா ஆவார்.
பின்னுட்களில் இந்நாட்டின் பிரதமராக உயர்ந்த பண்டாரநாயகாவின் சிந்தனைகளிலும், செயற்பாடு களிலும், அரசியல் கோட்பாடுகளிலும், தீர்மானங் களிலும் நடேசய்யரின் செல்வாக்கு ஓரிரு இடங் களில் தெட்டெனத் தெரிகின்றது. அ ய் ய ரி ன் அரசியல் ஞானத்தையும், தீர்க்கதரிசனத்தையும் இது வெளிப்படுத்துகின்றது.

63
நடேசய்யரின் அரசியல்சபை பிரவேசம் ஐரோப்பியத் துரை மார்களுக்கு மிகுந்த அச்சத்தைக் கொடுத்தது.
முதலாவது அரசாங்கசபைத் தேர் த லின் போது தோட்டத்தொழிலாளர்கள் தோட்டத் துரைமார்களுக்கு ஆதர வாகவே இயங்கினர். துரைமார்களின் விருப்பப்படியே வாக்கும் அளித்தனர். இரண்டாவது அரசாங்கசபைத் தேர் த லி லும் அவர்கள் இந்த முறையிலேயே வாக்களிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்த்ததில் வியப்பொன்றுமில்லை.
இத்தேர்தலின் போதே மக்கள் தமது பிரதிநிதி களைத் தேர்தலின் மூலம் தெரிந்தெடுக்கும் புது வாய்ப்பினைப் பெற்றனர். இதனுல் முதலாவதாக உபயோகிக்கும் போது இ ய ல் பாக மனிதர்களி டையே ஏற்படுகின்ற கிளர்வுணர்வு வாக்காளர் களிடையேயும் தலைதுாக்கி நின்றது. சுவரொட்டி விளம்பரங்கள் மூலமும், வேட்பாளர்களின் செயல் தலைவர்கள் மூலமும், வாக்களிக்கும் முறை அவர் களுக்கு விளங்கப்படுத்தப் பட் டி ரு ந் தாலு ம், பிதற்றிக்கொண்டும், பேதலித்த நிலையிலும் இருந்த வாக்காளர்களைப் பார்த்தபோது அவர்களுக்கு விளக்கம் தரக்கூடிய ஒரு பேச்சை நான் நடத்த வேண்டுவது உசிதம் என்றுணர்ந்தேன். இரகசிய வாக் களிப்பின் மூலம் நடைபெற்ற வா க் களிப் பு என்ருலும், தேர்தல் நிலை யம் அமைந்திருந்த பண்டாரவளை விளையாட்டு மைதானத்தில் காணக் கிடைத்த காட்சியின் மூலம் கோர்டனின் வெற்றி ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிய முடிந்தது. அவருக்கு ஒதுக்கப்பட்ட நிறத் திலேயே சேலைகளையும், சட்டைகளையும், சாரங் களையும் அணிந்த மனித வெள்ளம் மைதானத்தில் நிறைந்து வழிந்தது.48
என்று பதுளை மாவட்ட நீதிபதி கூறும் அளவுக்கு ரோம்ப்டன் தோட்டத்துரையான ஏ. ஃபெலோஸ் கோர்டனின் வெற்றிக்கு ஆதரவளித்த தொழிலாளர்கள் இரண்டாவது தேர்தலில் அதே தோட்டத்துரையை ஒதுக்கிவைத்துவிட்டு டேனியல் டயஸ் குணசேகரா என்பவரைத் தெரிந்தெடுத்தனர்.
இவைகளால் அச் சமு ற் ற ஆங்கிலேயத்துரைமார்கள் தொழிலாளர்கள் வாக்காளர் இடாப்பில் இடம்பெருது செய் வதில் தீவிர கவனம் காட்டத் தொடங்கினர். பல தில்லுமுல்லு களின் மூலம் இப்படி ஆரம்பித்த இவர்களின் மோசடி செயல்

Page 35
64
களினல் தொழிலாளர்களின் வாக்குரிமை வீனுக்கப்படக்கூடாது என்று கூறி சட்டச் செயலாளரின் கவனத்தை ஈர்த்து பிலிப் குணவர்தணு அரசாங்கசபையில் பேசவேண்டிய அவசியம் கூட நேர்ந்தது.49
இலங்கையில் நாடாளுமன்ற வளர்ச்சி வெவ்வேறு கட்டங் களைக் கொண்டது. 1833-1931 வரைக்குட்பட்ட தொண்ணுாற் றெட்டு ஆண்டுகள் சட்டநிரூபணசபை என்ற பெயரிலும், 19311947 வரைக்குட்பட்ட பதினறு ஆண்டுகள் அரசாங்கசபை என்ற பெயரிலும் விளங்கிய நாடாளுமன்றத்தில் அல்லது சட்ட சபையில் அங்கத்தவராக பங்கேற்கும் வாய்ப்புக்கிடைத்த மிகச் சிலரில் நடேசய்யரும் குறிப்பிடத்தக்க ஒரு வ ரா வார். ஆருண்டுகள் (1925-1931) சட்டநிரூபணசபையில் பெற்ற அனு பவம் அடுத்த ஐந்தாண்டுகள் (1931-1935) வெளியிலிருந்தாலும் அய்யருக்கு நிர ம் பி ய அரசியலறிவுபெறும் சந்தர்ப்பத்தைக் கொடுத்திருந்தது. இரண்டாவது அரசாங்கசபையில் அங்கத்த வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவுடனேயே தனது சிம்மநாதத் தைத் தொடங்குவதற்கு பிரேஸ்கேர்டிலின் நாடுக் டத் த ல் உத்தரவு வழிவகுத்தது.
மார்க் அந்தனி லிஸ்டர் பிரேஸ்கேர்டில் மாத்தளை பகு தியில் மடுல்கலைக்கருகில் உள்ள ரேலுகாஸ் தோட்டத்தில் சின் னத்துரையாக வேலை கற்க ஆரம்பித்தார்.
1912ல் பிறந்த அந்த வெள்ளையர் 1928லிருந்து ஆஸ்தி ரேலியாவில் கல்விகற்றபோது கம்யூனிஸ் இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இருபத்து நான்கு வயது இளைஞனக ரேலுகாஸ் தோட் டத்தில் தோமஸ் என்ற பெரிய துரையின் கீழ் வேலைப்பயில ஆரம்பித்த அவர் மூன்று நான்கு மாதங்களுக்கு மேல் பயிற்சியி லிருக்க அனுமதிக்கப்படவில்லை.
பிரேஸ்கேர்டில் ஒவியக்கலை பயின்றவர், கலையுணர்வு மிகுந் தவர், தோட்டத்துரையாக தொழில்பயில அவரது குளும்சங்கள் ஒத்துப்போகவில்லை. தோட்டத் தொழிலாளர்களின் தோள்கள் மீது கைப்போட்டுக்கொண்டு நடக்க ஆசைப் பட டார். ஆகவே ஆபத்துக்குள் சிக்கிக்கொண்ட்ார்.
அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்புவதற்கு தோமஸ் ஏற்பாடு செய்தார். வேலையிழந்த பிரேஸ்கேர்டில் இலங்கையிலிருந்த இடதுசாரியினருடன் தொடர்பை ஏற்படுத் திக் கொண்டார். அவர்களது சங்க நடவடிக்கைகளில் பங்கேற்று

65
பணியாற்றினர். இதே ஆண்டில் திருமதி கமலாதேவி சாட்டோ
பாத்யாயர் இலங்கைக்கு விஜயம் செய்து மலைநாட்டில் பல கூட்
டங்களில் பேசினர். அவரது கூட்டம் ஒன்று நாவலப்பிட்டியில்
நடந்தது. அந்தக் கூட்டத்தில் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள
முடியாத பிரேஸ்கேர்டில் மேடையேறி பேசினர். அவரை அங்கு கூடியிருந்த இரண்டாயிரம் மக்களுக்கு அறிமுகப்படுத்திய டாக்
டர் என். எம். பெரேரா "ஒரு வெள்ளையர் - உங்களுக்காக கண்
ணிர் வடிக்கும் தோழர் என்று கூறினர்.
அதோ அந்த வெள்ளை மலைகளைப் பாருங்கள். அதோ அங்கிருக்கும் வெள்ளை மலைகளைப் பாருங்கள்! வெள்ளையர்கள் அங்கிருந்து கொண்டு டாம்பீக வாழ்க்கை நடத்துகிருர்கள். அவர்கள் உங்களது ரத்தத்தை உறிஞ்சுபவர்கள் அவர்கள் புல்லுரு விகள்; துரைமார்களின் ரகசியங்களை நானறிவேன். நானே தோட்டமொன்றில் தொழில் செய்தவன் தான். உங்களுக்காக என்னுயிரை தத்தம் செய்வேன். என்ற அவரது உணர்ச்சி ஊட்டுகிற பேச்சும்,
*எழுங்கள், எழுந்து உங்கள் சுதந்திரத்தை வென் றெடுங்கள், உங்கள் உரிமையை அடையுங்கள்?"
என்று முடித்தவிதமும்' சாமி, சாமி" என்று கூட்டத்தினரைக் குரல் எழுப்ப வைத்தது! அவை மலைகளெங்கும் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.
அவரது பேச்சை அன்று தமிழில் மொழிபெயர்த்தவர் நடேசய்யரின் மருமகன் சாரநாதன் ஆவார். இரகசிய பெர்லி சாரின் குறிப்புக்கள் இக்கூட்டம் குறித்து அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டன.
லுணுகலையில் அதற்கு பிறகு நடந்த இன்னெரு கூட்டத்தில் பேசுகையில்,
*எனது நண்பர் நடேசய்யர் தனது மனைவியின் உடல் நலக்குறைவால் இங்கு வரமுடியாமல் போனது வருந்துதற்குரியதே!?? "எனது நாட்டைச் சேர்ந்த வர்கள் குடிகாரர்கள், ஆபத்தானவர்கள், தேளைவிட அதிகமான நஞ்சுடையவர்கள். அழிக்கப்பட வேண்டியவர்கள் அவர்கள் என்பதை மறக்கா தீர்கள்??

Page 36
66
என்று முழங்கினர். துரைமார்களின் செல்வாக்குப் பிரயோகிக்கப் பட்டது. பிரேஸ்கேர்டில் இங்கிருப்பதால் ஆபத்து என்று தீர்மானிக்கப்பட்டு நாடுகடத்தப்பட் வேண்டுமென்று பணிக்கப் பட்டார்.
நாடு கடத்தப்படல் குறித்து அரசாங்கசபையில் விவாதம் ஆரம்பமான பொழுது, உள்நாட்டு அமைச்சருக்கெதிரான பிரேரணையை பீ. எச். அலுவிகார மு ன் மொழிந்தார். நடேசய்யர் வழிமொழிந்தார். பலத்த விவாதங்களுக்குப் பிறகு இரண்டாம் நாளும் தொடர்ந்த விவாதத்தில், மடுல்கல பகுதியி லிருந்து விலகிவந்த பிரேஸ்கேர்டில் நண்பர்கள் சிலரோடு வந்து தன்னைச் சந்தித்ததையும், சுரண்டப்படும் தொழிலாளருக்காகத் தான் உழைக்க விரும்புவதை வெளிப்படுத்தியதையும் அய்யர் குறிப் பிட்டார். அட்டன், நாவலப்பிட்டி என்ற நகரங்களில் தொழிற் சங்க வேலைகளில் தனக்கு உதவும்படியும், தான் மாதம் நூறு ரூபாய்சம்பளம் தருவதாயும் அவரிடம் அய்யர் கூறியிருக்கிருர்,
"கொழும்பில் அவருக்கு ஒரு வீடு பெற்றுக்கொடுக்க முயற்சித்தேன். டாக்டர் ஒருவரின் வீட்டில் இடம் கிடைத்தது. துரைமார்களைக் கண்டு அஞ்சாதவர் அந்த டாக்டர் என நினைத்து முன்பணம் கட்டிவிட்டு உரிய ரசீதுக்காக காத்திருக்கையில் என்னுடைய "செக்"கைத் திருப்பி அனுப்பிவிட்டார். நாவலப் பிட்டியிலும் வீடு கிடைக்கவில்லை. "நாவலப்பிட்டி யில் அவர் என்னேடு இருக்கும்போது, வெள்ளையர் ஒருவருக்கு இங்கென்ன வேலை? என்று பொலிசார் கேட்டபோது, எங்களது யூனியனின் வருங்காலச் செயலாளர் என்று பதில் அளித்தேன்."
"அவர் கூட்டங்களில் தமிழில் பேசவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்குத் தமிழ் படித்துக் கொடுக்கவும் செய்தேன்'
என்றெல்லாம் விபரமாக விளக்கிய அய்யர், தோட்டங்களில் பொலிசாரின் கெடுபிடிகளை விளக்குவதற்கும் அந்த விவாதத்தைப் பயன்படுத்திக்கொண்டார்.
"துரைமார்களுக்காக பொலிசார் மலைநாட்டில் எதையும் செய்வார்கள். ஏனென்ருல் துரைமார்களில் பெரும் பா லோர் சமாதான நீதவானக நியமிக்கப்பட்டிருப்பதே" என்று காரணம் காட்டுகிருர்,

67
நோர்வூட்டைச் சேர்ந்த தோட் டத் தி ல் உள்ள சிலர் கண்டக்டருக்கு எதிரான பெட்டிசன் கொடுக்க நினைத்தார்கள். தில்லுமுல்லின்றி பெட்டிசன் துரைக்குப் போய்ச் சேரவேண்டு மானல் பெட்டிசன் அவரது கையிலேயே சே ர் ப் பிக் கப்படல் வேண்டும் என்று தீர்மானித்தார்கள். துரையின் கார் பாதையில் வேகமாக வருவதைக் கண்டு ஓடோடி வந்தார்கள். அந்தக்காரில் வந்து கொண்டிருந்தவர்கள் துரையும் கண்டக்டருமே முன்னுல் நின்ற தொழிலாளர்களைப் பார்த்து காரிலிருந்த கண்டக்டர் துரையிடம் சொன்ஞர், "இப்படி நின்று மறித்தால் மற்றவர்கள் உங்களைத் தாக்குவதற்கு உதவியாயிருக்கும் என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக" ஆத்திரமடைந்த துரை பொலிசுக்குச்சொல்லி அவர்களைச் சிறை ப் படுத் தினர். தேர்தலில் தனக்கு உழைத்தவர்களில் ஒருவனும் அதிலிருப் பதை அறிந்த அய்யர், நடவடிக்கையிலிறங்கினர். துரையும், கண்டக்டரும் உஷாராஞர்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று கூறி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பி விட்டார்கள். தோட் டத் தி லி ருக்கும் தன் பிள்ளைகளையும், மனைவியையும் ஆதரிக்கும்படி அவன் அங்கிருந்து அய்யருக்கு கடிதம் எழுதியிருக்கின்றன் என்று கூறிய அய்யர், "இதுகுறித்து கெளரவ அமைச்சரிடம் தான் கதைத்ததாகவும், பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் ஏன் இவ்விதம் 450 இந்தியர்கள் இருக்கிருர்கள் என்று அவர் தன்னைத் திருப்பிக் கேட்டதாகவும்", வெளிப்படுத்து கிருர்,
இன்னெரு தோட்டத்தில் கங்காணி தன் மனைவியோடு தகாத முறையில் நடந்துகொள்வதைக் கண்டித்த ஒரு தொழி லாளி பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அ3)!ப்பப்பட்டான், என்கி முர் அய்யர். இவைகளையெல்லாம் பிரேஸ்கேர்டில் சம்பவத் தோடு தொடர்பில்லாதது என்பதை ஓர் அங்கத்தவர் அடிக்கடி குறுக்கிட்டுச்சொல்ல முனைகிருர், பிரேஸ்கேர்டில் மீது சாட்டப் பட்டிருக்கும் குற்றம் தெளிவில்லாதிருப்பதால் அய்யர் பேசு வதைக் தடுக்க தன்னுல் முடியாது என்று பி ரதி சபாநாயகர் பதில் அளிக்கவே உற்சாகமுற்ற அய்யர் மேலும் தொடர்கிருர்,
பாரதியார் புத்தகத்தைக் கையில் வைத்திருந்ததற்காக ஒருவர்
நாடு கடத்தப்பட்டதை எடுத்துச்சொல்லி, பாரதியர்ரின் பெயரை இலங்கை ஹன்சார்டில் முதன் முதலில் இடம் பெற வைத்தப் பெருமையையும் அய்யர் தட்டிக்கொள்கிறர்.
மூன்று துரைமார்கள் பொலிசாரின் உதவியோடு ஒருமாத காலமாக அட்டனில் முயற்சிகள் மேற்கொண்டு பொய் வழக்கில் சம்பந்தப்படுத்தித் தன்னை நாடுகடத்த முயற் சித் த தை யும் பின்கதவு வழியாக காரியமாற்றும் துரைமார் சம்மேளனம் தனக்கு இதில் பொறுப்பில்லை என்று தட்டிக்கழித்ததையும் பலரறிய பகிரங்கப்படுத்துகிருர்,

Page 37
68
4.
1947ம் ஆண்டுவரை தேர்தல்களில் கட்சிகளின் நியமனப் பிரதிநிதிகளாக அங்கத்தவர்கள் போட்டியிடவில்லை. தனி மனிதர் களே தேர்தல்களில் நின்ருர்கள். சேர் அண்ட்ரூஸ் கோல்கட் என்ற தேசாதிபதி குறிப்பிட்டாற் போல
"இலங்கையில் ஒவ்வொரு அரசியல் வாதியும் தன க்குத்தானே தலைவனுவான், கட்சி திட்டங்களோ, கொள்கைகளோ, கடப்பாடுகளோ அவனை கட்டுப் படுத்துவதற்கில்லை"
கடவுளின் அவதாரங்கள் தாங்கள் என்று அரசியல் வாதிகள் தங்களை கருதும் அளவுக்கு, தனிமனிதர் செல்வாக்கில் - ஆட்சி புரிவோரை எதிர்த்துப்பேச முடியாத நிலையில் ஆங்கில மொழியில் பேசி மக்களை வெறுமனே வேடிக்கைப்பார்க்க வைத்த தனிமனிதர் ஆளுமையில் - இலங்கையின் நாடாளுமன்ற சரித்திரம் இருந்த ஆரம்பநிலையில் நடேசய்யரின் நாடாளுமன்ற பிரவேசம் இருந்தது.
ஆரம்பத்தில் ஆருண்டுகள் (1925-1931) சட்டநிரூபண சபையிலும், அடுத்ததாக பதினெரு ஆண்டுகள் (1936 - 1947) அரசாங்க சபையிலும், இந்தியவம்சாவளித் தமிழரையும், தோட்டத் தொழிலாளரையும் பிரதிநிதித்துவம் பண்ணிய அய்யரைக் கட்டுப்படுத்தும் திட்டங்களும், கொள்கைளும், கடப் பாடுகளும் இருந்தன. இந்திய வம்சாவளியினரின் நல்வாழ்வு என்ற ஒன்றே அது மணிலால், பிரேஸ்கேர்டில் என்ற இருவரின் நாடு கடத்தும் பிரச்சனையைக் கூட அந்நோக்கத்திலேயே அய்யர் பயன் படுத்தினர்.
"திருமதி கமலாதேவியும், அய்யரும், பிரேஸ்கேர்டி லும் அட்டனில் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்ட னர் 5000 பேர்கள் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் மிகக் குறிப்பிடத்தக்க அம்சம் நடேசய்யர்பால் தோட்டத்து மக்கள் காட்டிய மரியாதை, கூடியிருந் தவர்களின் பேச்சும் நடத்தையும், அய்யர்பால் அவர் களுக்கு இருந்த குருட்டு நம்பிக்கையை வெளிப்படுத் தின அய்யர் கூறிய எதையும் செய்வதற்கு அவர்கள் தயாரர்யிருந்தனர். கூட்ட முடிவில் திருமதி கமலா தேவியைப்பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளாத மக்கள் நடேசய்யரைப்பற்றியே கதைக்கத் தொடங் GGarrit.” * بیر
'நடேசய்யர் எல்லாத் தோட்டங்களிலும் தன்னு டைய ஏஜெண்ட்களை வைத்திருந்தார் என்பது தெளிவு. கூட்டங்கள் போடுவதற்கு "நோட்டீஸ்"

69
அடிக்கவேண்டிய தேவை அவருக்கில்லை. வாய் சொல்
மூலம் தோட்டத்துக்குத் தோட்டம் செய்தி அனு
ப்பும் தூது முறையிலேயே அவருக்கு அதைச் சாதிக்க
முடிந்தது".
என்று பொலிஸ் அந்தரங்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டி ருக்கிறது.
இந்திய வம்சாவளியினர் பெருந்தோட்டக் குடியேற்றத்தை ஆரம்பித்த ஐந்தாவது ஆண்டிலேயே இலங்கை சட்டநிரூபண சபையும் இயங்க ஆரம்பித்தது. பெருந்தோட்டப் பிரச்சனைகள் குறித்து ஆரம்பகாலந்தொட்டே இச்சபையில் பேசப்பட்டு வந்தி ருக்கிறது. அவைகள் பயிர்ச்செய்கைப் பற்றியும், பராமரிப்புக் குறித்தும் அமைந்திருந்தன.
பத்தொன்பதாம் நூற்ருண்டின் கடைசி ஒன்றரை தசாப் தங்களில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டமக்களை யும், அவர்களின் ஊதியத்தையும் குறித்து, பெருந்தோட்டப் பிரதிநிதியாக இருந்த ஆங்கிலேயர் ஜே. எல். சாண்ட், தேசாதி பதி சேர் ஜோன் டக்லஸ் போன்றவர்கள் பேசத்தொடங்கினர். இலங்கையர்களான பொன்னம்பலம் அருணுசலம், பொன்னம் பலம் இராமநாதன் ஆகியோரும் குரல் எழுப்பினர்.
பெருந்தோட்ட மக்களை குடியேற்றக் கூலிகள் என்று நினைத்து, பரிதாபத்துக்குரியவர்கள் என்று அனுதாபமும், ஆசு சூயையும் கலந்த பார்வையில் தெறித்து விழுந்த கருத்துக்களை யே அவைகளில் கேட்கலாம். நடேசய்யரின் குரல் ஒலிக்க ஆரம் பித்தப் பிறகுதான் அது பெருந்தோட்ட மக்களின் குரலாக இருந் தது: அதுவரை அது கூலிகளின் குரலாய் காட்டில் ஒலித்த காணகக் குரலாய் அமைந்திருந்தது.
அய்யரின் ராஜ நடையையும், சிம்மக்குரலையும் அடுத்தச் சில ஆண்டுகள் இந்நாடு கண்டது! அதனுல் தூக்கம் கலைந்த தோட்டத்து மக்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர்.
தோட்ட ஜனங்களை மையமாக அமைத்துக்கொண்ட ராஜபாட்டையில் அய்யரின் அரசியல் பணிகளும், இலக்கியப் பணிகளும் பின்னடையத் தொடங்கின. இந்நாட்டில் சக்தி மிகுந்த ஓர் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புக்களை அய்யரால் உருவாக்க முடியாது போயிற்று. இடதுசாரி கட்சி களும், இலங்கை-இந்தியன் காங்கிரஸும் (இன்றைய இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் I ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ்) மெல்ல மெல்ல தோட்டத் தொழிலாளர்களின் இ த யத் தில் இடம் பிடிக்க ஆரம்பித்தன.

Page 38
70
1947ல் நடந்த நாடாளுமன் றத் தேர்தலில் அவரை இலங்கை இந்தியன் காங்கிரஸ் பிரதிநிதி மஸ்கெலியாத் தொகு தியில் தோற்கடித்தார்.
* காங்கிரஸ் சார்பில் நீங்கள் நிற்க வேண்டும்,
போட்டிக்கு ஆள் இல்லாமல் பார்ப்பது எங்கள் கடமை” என்று வலிந்துசென்று வேண்டிநின்ற இலங்கை இந்தியன் காங்கிரஸ் இளைஞர்கள் -அய்யரின் திறமை உணர்ந்த இளைஞர்கள். அவரது தோல்வியைக்கண்டு மனதுக்குள்ளாகவே குமுறிஞர்கள். அய்யரும் குமுறினர்.
அது அவரது மரணத்தில் முடிந்த்து. ஆம்! 07-11-1947ல் தேர்தலில் தோல்வியுற்ற சொற்ப நாட்களில் அவர் ஆவி பிரிந்தது. அய்யர் மாரடைப்பால் மரணமானுர், அய்யரின் எழுத்தாற்றலையும், அரசியல் மதியூகத்தையும் சரியாக எடைபோட்டு அவரை இணைத்துக்கொள்ள ஆரம்பித்த எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவரின் இறுதிக் கிரியைகளை ஒழுங்கு செய்ய வேண்டியவரானர். மயிர்நீப்பின் உயிர்வாழா கவரிமான் என்ற வள்ளுவர் வாக்கை உதாரணம் காட்டி அவரைப் பெருமைப்படுத்தத் தோன்றுகிறதா?
மலைகளைக் கலக்கிய சண்டமாருதம்!
உலகமெல்லாம் விசாலித்துப்பரவிய பிரித்தானிய சாம்ராஜ் யத்துக்கு உடல் உழைப்பை மிகுவதாக நல்கியவர்கள் ஆப்பிரிக்கர், சீனர். இந்தியர் என்ற மூன்று தேசத்தவர்களேயாவர்.
சமீபகாலம் வரை இந்தியர்கள் அனைவரும் கடல் கடந்து குடியேறிய நாடுகளில் கூலிகள் என்றே கருதப்பட்டனர். உத்தி யோகத்தர்கள், உடல் உழைப்பாளிகள் என்ற பாகுபாடின்றி கூலி என்ற அடைமொழி அவர்களைக் குறிப்பதற்கு பாவிக்கப் பட்டது.
ஆப்பிரிக்காவில் மகாத்மாகாந்தி கூலி பாரிஸ்டர் என்றே அழைக்கப்பட்டார். இந்தியர்களுக்குச் சொந்தமான கப்பல்கள் கூலி கப்பல்கள் என்றே குறிக்கப்பட்டன. இலங்கையில் இவர்கள் குடியேற்றக் கூலிகள் என்றே குறிப்பிடப்பட்டனர். தோட்டத்து

71
மக்கள் குடியிருந்த வசிப்பிடங்கள் கூலி லயன்கள் என்றும், அவர்களுக்குக் கொடுபடும் சம்பளம் கூலிச் சம்பளம் என்றுமே குறிக்கப்பட்டுள்ளன. ஆங்கிலே யர்களுக்குத் தமிழ்படிக்க உதவுவதற்காக வெளி யிடப்பட்ட புத்தகம் "கூலித்தமிழ்” என்ற தலைப் பிலேயே வெளியானது."
இம்மக்களிடையே மதத் தொண்டு செய்ய 1854ல் ஆரம்பிக்கப்பட்ட கிறிஸ்துவ சபை 1927 வரை தமிழ் கூலி மிஷன் என்றே அழைக்கப்பட்டது.87
எந்தச் சூழ்நிலையையும் அனுசரித்துப் போகும் கடின உழைப்பாளர்கள் இந்தியர்கள். அடிமைத்தனம் என்று கருதும் அளவுக்கு அவர்களுக்கிருந்த கீழ்ப் படியும் குணத்தை மாத்திரமே ஆங்கிலேயர் பயன் படுத்திக்கொண்டனர். மற்றும்படி அவர்களின் நற் பண்புகளை விரும்பவும், பேணவும், மதிக்கவும் பின் தங்கினர்கள். உண்மையில் அவர்களின் நற்குண ங்களை ஆங்கிலேயர்கள் பொருமையோடு நோக்கி னர். இந்தியர்களின் நற்பண்புகள் மீது ஐரோப் பியர்களுக்கு ஏற்பட்ட பொருமையாலேயே அரசியல் பழிவாங்கலைத் தோற்றுவித்தார்கள்,
என ஆங்கில அரசாங்க அதிகாரி ஒருவர் மகாத்மாகாந்தியிடம் நேரிடையாகவே கூறியுள்ளார்.98
1833ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அடிமை முறை ஒழிக்கப் பட்டது. ஆப்பிரிக்கர்கள் அதற்கு பிறகு கூலிகளாகச் செல்வது குறைந்தது. இவ்வேளையிலேயே இலங்கையில் தொழிலாளர்கள் தேவைப்பட ஆரம்பித்தனர்.
சீனர்களையும், ஆப்பிரிக்கர்களையும் இங்கு கொண்டுவர யோசனைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இறுதியில் இந்தியர்கள் அதிலும் தென்னிந்தியர்களேத் தொழிலாளர்களாக வரநேர்ந்தது.
இந்தியர் குடியேற்றம் சுதேச மக்களின் வெறுப்புக்குக் காரணமாயிற்று. அக்குடியேற்ற நாடுகள் சுதந்திரம் அடையத் தொடங்கியதிலிருந்து அவ்வெறுப்பு பகையாக உருவாகத் தொடங்கி, சங்கிலித் தொடராக நீண்டுவளர்ந்த வண்ணமிருப் பதைக் காணலாம். இன்னும் இந்தியர்கள் குடியேறிய எல்லா நாடுகளிலும் இதுவே நிலைமை.

Page 39
72
இலங்கையில் சுதேச குடிகளான சிங்களவர்களின் எதிர் ப்பைச் சம்பாதித்த இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைத் தமிழ ராலும் அரவணைக்கப்படவில்லை. என்பதை பொன்* இராமநாதன், எஸ். மகாதேவா, ஸி. சுந்தரலிங்கம், ஜி. ஜி. பொன்னம்பலம் முதலானேரின் நாடாளுமன்ற உரைகள் பலமுறை வெளிப்படுத்தி யிருக்கின்றன.
**கண்டியர்களை இந்தியர்கள் கீழிருந்தும், ஐரோப்பிய
ர்கள் மேலிருந்தும் நசுக்குகிருர்கள்" "9ே என்று அரசாங்க சபையிலே இவர்கள் பேசினர்கள். இவர்களில் இருவர் அமைச்சர்களாயிருக்கும் போதுதான் இத்தொழிலாளர் களின் குடியுரிமைப் பறித்தெடுக்கப்பட்டது.
வெறும் தொழிலை மாத்திரம் எதிர்பார்த்து இம்மக்கள் இங்கு குடியேறவில்லை. நூற்றைம்பது மைல் கடலிலும் (தூத்துக் குடி - கொழும்பு) இருநூறு மைல் தரையிலும் (மன்னர் குடியேறிய தோட்டம்) இயற்கையின் கோரத்தாண்டவத்தையும் கொடிய வனவிலங்குகளின் அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது இம்மக்கள் இலங்கைக்கு வந்தார்களென்ருல், வளமான வாழ்வை அவர்கள் எதிர்பார்த்ததே காரணம்.
அவர்களுக்கு அதற்கான உத்தரவாதம் கொடுக்கப்பட் டிருந்தது. அந்த உத்தரவாதம் தனிமனிதரால் கொடுபட வில்லை. அரசாங்கத்தால் கொடுக்கப்பட்டிருந்தது.
தொழில் கமிஷனரின் அறிக்கைகளையும், தேசா திபதி அண்ட்ரூ கொல்கேட்டின் கூற்றுக்களையும் மேற்கோள்காட்டி இந்த நிலைப்பாடு வாதாடப் பட்டது. 1927ல் இலங்கையில் குடி யேறும் மக்களுக்கு சமஉரிமை, சட்ட உரிமை கொடுக்கப் பட்டு நாட்டில் சமமானவர்களாக அவர்களும் கருதப்படுவார்கள் என்று துண்டுபிரசுரங்கள் வெளி யிடப்பட்டதாக நடேசய்யர் அரசாங்கசபையில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இந்தியர்கள் குடியேற ஆரம்பித்ததிலிருந்து, எந்த ஆண்டையும் விட 1927ல் தா ன் அதிகமான குடியேற்றம் நடைபெற்றது.9 V−
புகைப்பட்ங்களைக் காட்டியும் சலனப்படங்களைக் காண்பித்தும் இலங்கை மலைநாட்டின் இயற்கை அழகை தென்னிந்தியர்களுக்குக் காட்டியதோடு, இவ்வித உத்தரவாதங்களையும் கொடுத்து அவர்களை பல்லாயிரக்கணக்கில் கொண்டு வந்து குவிக்க லாஞர்கள்.

f
ஆரம்பகாலங்களில் தனியாக-அதிகமாக ஆண்களே வந்து குடியேறிஞர்கள். தேயிலை பயிரிடப்படத் தொடங்கியதன் பின்னல் - 1858க்குப் பின்னல்; குடும்பமாக வந்து குடியேறும் சூழ்நிலை உருவாகியது. oh
ஆண்கள் மலைவேலையும், பெண்கள் கொழுந்தெடுக்கவும். பிள்ளைகள் உ த வி செய்ய வும் என்று குடும்பம் முழுக்கத் தொழில் செய்யும் வாய்ப்பிருந்தது.
மலேசியா, பர்மா, ஆகிய தூரதேசங்களைவிட அண்மையி லிருந்த இலங்கைக்குக் குடும்பத்தோடு வருவதில் அவர்களுக்கு வசதியிருந்தது. மேலும் அந்நாடுகளில் விளைந்த றப்பரும், கரும் பும் பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்பையும் கொடுக்கவில்லை. உழைப்பு ஒன்றையே மூலதனமாகக் கொண்டு இலங்கையில் குடியேறிய இம்மக்கள் சலியாது உழைத்தனர். ஓய்வின்றி உழைத் தனர். சிந்திப்பதற்கு நேரமின்றி உழைத்தனர்.
மலைகளில் பசுமைத் தோன்றியது, இந்த மக்களின் உழைப் பால் தான்! மலைக்குன்றுகளுக்கூடாக சுரங்கம் அமைந்தது இவர் களின் உழைப்பினுல் தான் நெளிந்தோடும் பாதைகளும், நீண்டு வளைந்த தண்டவாளங்களும் அமைக்க உதவியவர்கள் இந்த மக்கள் தாம்!
அவர்களின் உழைக்கும் சக்தியைக்கண்டு ஆட்சி யாளர்கள் பூரித்துப் போஞர்கள். உணவு உற்பத் தியில் அவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மேலும் இந்நாட்டில் வளம் ஏற்படுத்த மு டி யும் என நினைத்து ஆயிரம் பவுண் நிதி ஒதுக்கினர்கள். அவர்களை கந்தளாய் வாவி பகுதியில் குடியேற்ற முயற்சிகளும் மேற்கொண்டனர்.
தோட்டத்துரைமார்கள் இம்முயற்சியை எதிர்த்தார்கள். 1856ல் ஆட்சியாளர் அந்த முயற்சியை கைவிட நேர்ந்தது. தோட்டத்துரைமார்கள் இலங்கையில் ஒரு மாபெரும் சக்தியாக விளங்கியவர்கள். அமெரிக்க ஜனதிபதிதான் உலகிலேயே அதிக அதிகாரங்களைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது. அதிகாரங் களைப் பொறுத்தமட்டில் அவரைவிட துரைமார்கள் அதிகம் செல்வாக்குப் பெற்றிருந்தனர் என்பதை மலைநாட்டின் வர லாற்றில் பல கறைபடிந்த சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. துரைமார்களின் எ தி ர் ப் பை ச் சம்பாதித்துக் கொண்டு யாரும் நிம்மதியாக இலங்கை யில் வாழ்ந்ததில்லை. நாட்டின் அதி உயர்ந்த பதவியி விருந்த தேசாதிபதிகளுக்கே இந்நிலைமை ஏற்பட்

Page 40
74
டிருக்கிறது. தனது தேசாதிபதி பதவியைத்தொடர விரும்பிய கோர்டன் தொழிலாளருக்குச் சார்பாக வெளியிட்ட தனது குறிப்புக்களையே மாற்ற நேர்ந்தது. மொரிஷஸ் தீவில் தான் ஊக்குவித்த கிறிஸ்துவ பாதிரிமார்களின் இந் தி ய ன் நலன் பேணும் காரியங்களை அண்டர்சன் தனது பதவி காலத்தில் இலங்கையில் செய்யமுடியாது போய் விட்டது. தோட்டக்கூலிகளின் நிலை வெட்கப்படக் கூடியது என்று கிரே பிரபுக்கு எழு தி ய தனது குறிப்புக்கள் அவசரத்தில் எழுதப்பட்டவை என்று டொரிங்டன் பிற கு ஒப்புதல் வாக்கு மூ ல ம் கொடுக்கவேண்டியிருந்தது.
வில்லியம் போய்ட் என்ற ஆரம்பகால தோட்டத்துரை
*கூலிகளை மி ரு கத் தன மாக வும், அவமானப் படுத்தியும் தனது நண்பர் கள் நடந்து கொண்டனர்"
என்கிருர், கண்டியில் கடமையாற்றிய நீதவான்,
*கூலிகளை அறிவற்றும், சட்டங்களைத் தெரிந்து கொள்ளாமலும் இருந்தமையால் துரைமாருக்கு இலகுவில் இரையானர்கள்"
என்கிருர்,
வழக்குகளில் தொழிலாளர்களைச் சம்பந்தப்படுத்தி விடுவ தோடு மாத் திர ம ல் ல, அவ்வழக்குகள் விசா ர னை க் கு எடுக்கப்படும் போது, நீதிமன்றத்துக்கு துரைமார்கள் இலேசில் வருவதில்லை. வழக்குகளின் தொகை அதிகரிக்க தொடங்கவே, வழக்குகளின் தீர்ப்பை சாட்சிகள் வருகிருர்களா இல்லையா என்பதை பொருட்படுத்தாது ஒரு நீதவான் பதுளையில் தீர்ப்புச் சொல்ல ஆரம்பித்தார், அந்த நீதவான் துரைமார்களின் நேரடி பகைவரானர். அவரைப்பற்றி மேல்மட்டத்தில் புகார் செய்யப் ۰ro لوی-انالا
ஆங்கிலேயர் ஆட்சி யி ல் நிர்வாகத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர்கள் மனிதாபிமான நோக்கில் செய்ய முயன்ற சீர்திருத்தங்கள் செய்யமுடியாமலேயே போய்விட்டதையும், மாருக தோட்டநிர்வாகத்தில் நேரடி தொடர்பு கொண்டிருந்த துரைமார்களும், தோட்டச் சொந்தக்காரர்களும் விரும்பிய சீர்திருத்தங்கள் உடனுக்குடன் செய்து முடிக்கப்பட்டன என் பதையும் விளங்கிக்கொள்வதில் சிரமம் இல்லை. அத்தகு சீர்திருத் தங்கள் சுயநலத்தோடு செய்யப்பட்டன. இந்தியத் தொழிலா

75,
ளர்கள் தொடர்ந்தும் இலங்கைக்கு வரவேண்டும் என்பதற்காக, குறைந்த வேதனத்தில் பெறப்படும் அவர்களின் உ ழை ப் பு இடையில் தடைபட்டுப் போகக்கூடாது என்பதற்காக அவுைகள் செய்யப்பட்டன. பயன்கருதி மேற்கொள்ளப்பட்ட அச்சீர்திருத் தங்கள் ஒரு வரம்புக்குள்ளாகவே இருந்தன.
அவர்களை வெறும் உழைக்கும் யந்திரங்களாக தொடர்ந்து பராமரிப்பதற்கான ஏதுவானவை களாக மாத் திர மே அ வை கள் கருதப்படக் கூடியவை. இயந்திரசாதனங்களாலும், "பழக்கப்பட்ட மிருகங்களாலும் பெறப் படுகின்ற உழைப்புக்கு இவைகளைவிட மேலதிகமான பராமரிப்புச் செலவு ஏற்பட்டிருக்கும். நாட்டின் நிர்வாகத்தில் பங்கேற்ற உயர் அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்த இலங்கை விவுசாய சங்கம் கூட இந்தியத் தொழிலாளர்களின் பயணமுறை களிலும், தேக ஆரோக்கியத்திலும் மாற்றம் தேவை என்று தான் வலியுறுத்தியது.
அந்த மக்களின் நல்வாழ்விலோ, அபிவிருத்தியிலோ கவ னம் காட்டப்படவில்லை. அந்த மக்களுக்கும் அதுகுறித்து அவ் வளவு கரிசனமிருந்ததில்லை. அதற்கான தூண்டுதல் வெளியில் இருந்துதான் வரவேண்டியிருந்தது.
கிறிஸ்துவ மதப்பணிபுரியும் இரண்டு தென்னிந்திய மத குர வர்கள் முதலில் தோட்டம்வாழ் இந்திய வம்சாவளியி னருடன் தொடர்புகொள்ள முயற்சித்தனர். 1846ல் மேற் கொள்ளப்பட்ட இந்த முயற்சி தோல்விகண்டது. இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியர் நடந்துகொண்டதைப்போல இலங்கை மலைப்பிரதேசங்களில் தோட்டத்துரைமார்கள் நடந்துகொண்ட னர். தோட்டத் தொழிலாளர்களிடையே வெளியார் பணியாற் றுவதை அவர்கள் வன்மையாக எதிர்த்தனர்.
சர்வ வல்லமைபெற்ற துரைமார்களின் தான்தோன் றித் தனத்துக்கு எதிராகவும், நலிந்து, மெலிந்து, சக்தியிழந்துபோன பரிதாப நிலையிலிருந்த தொழி லாளருக்காகவும், முதன் முதலாக இந்திய அர சாங்கம் பேசவேண்டிய நிலைமை ஒன்று உருவானது. இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சில தொழிலாளர்கள் இங்கிருந்து மலேயாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 1880ல் இது நடந்தது. இது மிகவும் தவருண செயல் என்றும், 1846ல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறிய செயல் என் றும் இந்தியா எடுத்துக்காட்டியது. 4s

Page 41
76
இந்திய வம்சாவளி மக்களிடையே இது நம்பிக்கையூட்டியி ருக்கவேண்டும். தங்களை இந்தியா வாழவைக்காவிடடாலும், முழு வதாக கைவிட்டுவிடவில்லை என்று அவர்கள் உணரத்தலைப் பட் Lsrs 066it.
அந்த உணர்வில் தங்களைப் பற்றி எண்ணத்தலைப்பட் டார்கள். அவர்களின் அந்த எண்ணத்துக்கு வடிவம் கொடுத் தார்கள். அது வழக்காக உருவெடுத்தது. ஆம் 1883ல் இந்த நாட்டில் குடியேறிய தொழிலாளர்கள் தங்களது எஜமானருக்கு எதிராக தங்களது சம்பளம் மாதக்கணக்கில் பாக்கியிருப்பதை எதிர்த்து வழக்குப் போட்டார்கள்! இதை சில கங்காணிகளே முன்னின்று செய்தனர். கூட்டாகத் தொழிலாளர்கள் செயற் பட முடியாதென்றும், வேண்டுமானுல் தனித்தனியாக அவ்வாறு வழக்குப் போடுவதற்கே சட்டம் இடம் கொடுக்கிறதென்றும் அந்த ஆரம்ப முயற்சியும் முறியடிக்கப்பட்டது. எ னினும் தோட்ட மக்கள் துயிலெழ ஆரம்பித்துவிட்டனர் என்பதை இச் சம்பவம் வெளிப்படுத்தியது. தொழிலாளர்களின் ஊதியம் இரு பத்தைந்து மாதங்களாகக் கொடுபடாமலிருந்த சம்பவங்களும் இதனல் வெளிக்கொணரப்பட்டன. அதன் எதிர் விளைவுகள் உருப்பெற ஆரம்பித்தன.
1889ல் இது சம்பந்தமாகச் சட்டம் உருவாக்கப்பட்டது. கிழமையில் ஆறுநாள் வேலை கொடுக்கப்படல் வேண்டும் என்றும், அவர்களின் ஊதியம் அறுபது நாளுக்கு ஸ் கொடுக்கப்படல் வேண்டுமென்றும் சட்டம் கொண்டுவரப்பட்டது இதுவே இந் தியத் தொழிலாளர் நலம்பேணும் முதல் சட்டமாகும். இதற்கு பிறகு 19ம் நூற்றண்டில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய எதையும் காணுேம். மாருக துரைமார்களும், தோட்டச் சொந்தக்காரர் களும், கங்காணிகளும் ஒன்ரு ய் சேர்ந்து நின்று தோட்டப் பொரு ளாதாரத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் தொழிலாளர்களின் குரல் வெளியில் கேட்காதவாறு அடக்கி ஆட்சிபுரிந்ததை காண் கிருேம்.
சட்டங்கள் மாத்திரம் சமூகத்தில் மாற்றங்களை ஏற் படுத்துவதில்லை. அவை நடைமுறைப்படுத்தப்படல் வேண்டும். நடைமுறைப்படுத்தப்படாத சட்டங்கள்இந்தியத் தொழிலாளர்களுக்கென்றே இயற்றுவிக் கப்பட்டவைகள் - நிறைய இருக்கின்றன. இவைகளை அமுல் படுத்தி ஆகவேண்டும் என்று வலியுறுத்துவார் யாரும் இல்லை. இப்படிச் சட்டங்கள் இருப்பதை தெரிந்துகொள்ளும் விஷயஞானமும், கல்வியறிவும் அந்த மக்களுக்கு இல்லை; அதை அறிந்து வைத் திருந்தவர்கள் செயலாற்ற முன்வரவில்லை.

77
தோட்ட மக்களின் துயில் நீடித்தது.
அவ்விதம் குடிகொண்ட நீடுதுயிலை நீக்க முனை ந் த வர் நடேசய்யரே ஆவார்.
இக்காலப்பகுதியில் இந் தி யா வில் கொழுந்துவிட்டு எழ ஆரம்பித்த தேசிய எழுச்சியாலேயே இது சாத்தியமாயிற்று.
மகாத்மாகாந்தியின் ஒத்துழையாமை நெறி தேசத் தை வசீகரித்து நம்பிக்கையை மலரச் செய்தது. அது எங்கும் பரவியது. பற்றி பரவியது; அதைக் கண்டதும் பழைய சீர்கேடு ஒடி மறைந்தது.
தேசிய உணர்வில் பற்றிபடர்ந்த தீ நாலாப்பக்கங்களிலும் வெடித்துச் சிதறியது. அப்படிச் சிதறிவிழுந்த தீப்பொறிகளில் ஒன்றே நடேசய்யர் உருவில் இலங்கையில் பற்ற ஆரம்பித்தது.
இந்திய தேசிய எழுச்சியால் சிங்களத் தலைவர்களும் விழிப் புற்றனர். அரசியல், சமூகப்பிரச்சனைகளைப் பற்றி ஆய்வுக்குழு அமைத்தும் செயல்படத் தொடங்கினர். டி. எஸ். சேனநாயக்கா, எஸ். டப்ளியூ. ஆர். டி. பண்டாரநாயக்கா போன்ருேர் ஒன்ருக உட்கார்ந்து பணியாற்றினர். யாழ்ப்பாணத்தில் இளைஞர் காங்கிரஸ் பிறந்தது.
நடேசய்யர் வெறும் தேசிய உணர்வால் மாத்திரம் உந்தப்பட்டவரில்லை. ஆசையும், அபிலாசையும் மிகுந்தவர்; தீரமும், தெளிந்த ஞானமும் நிறைந்தவர்; செயலாற்றும் திறம் படைத்தவர். அவரது சட்டசபை பிரவேசமே அதை மெய்ப் பிக்கும்.
செயற்பாடுகளிலேயே அவர் நம்பிக்கை வைத்திருந்தார். இலங்கையில் அதிதீவிரவாதிகளாகக் கருதப்பட்ட அரசியல்வாதி களுடன் இணைந்தது அதனலேயே குணசிங்காவுடன் இணைந்ததும் அதனலேயே, சிட் டி சன் பத்திரிகையில் சேர்ந்ததும், தேச பக்தன் பத்திரிகையை ஆரம்பித்ததும், தனது குறிக்கோள்களை அடையவேண்டியே. பொலிஸ் அறிக்கைகளின் படி அய்யர் ஒர் அரசியல் கிளர்ச்சிக்காரர். இலங்கை தேசிய காங்கிரசிலிருந்த தீவிர அரசியல்வாதிகளுடன் அவருக்கு இணைப்பிருந்தது. வேல்ஸ் இளவரசர் வருகையை இந்தியாவில் காங்கிரஸ் பகிஷ் கரித்தபோது, இலங்கையில் தனது தேசநேசன் பத்திரிகையில் நடேசய்யர் எழுதிய கட்டுரை அவருக்கெதிரான பொலிஸ் அறிக்கையில் சேர்க்கப்பட்டது. 1925ல் அய்யரின் பேச்சுக்களும், எழுத்துக்களும் நடவடிக்கைகளும் பொலிசாருக்கு ஆத்திர

Page 42
'78
மூட்டின. அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கும்படி அவர்கள் அரசாங்கத்தை நிர்ப்பந்தித்தனர். பிரிட்டிஸாரே எச்சரிக்கை என்ற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையில்
"சாம்ராஜ்யம் ஆட்டம் காணுகிறது, அழிவு ஏற்படுவது நிச்சயம்"
என்று எழுதி ஞர். இக்கட்டுரையைப்பற்றி குடி யேற்ற ச் செயலாளர்க்கு அனுப்பிய அறிக்கையில்
"இலங்கைத் தீவில் இந்த அளவுக்குத் தேசத் துரோகம் பண்ணியது வேறுயாரும் இல்லை” என்று குறிப்பிட்ட பொலிசார் அவருக்கெதிராக தேசத்துரோக குற்றச்சாட்டைப் பயன்படுத்த முயற்சி செய்தனர். அதற்கு ஒத்துக்கொள்ளாத குடியேற்றச் செயலாளர்
அய்யரின் நடவடிக்கைகளை மேலும் கண்காணிக் கும்படி பொலிசாருக்கு அறிவுறுத்தினர்.
மணிலாலுடன் ம ட் டு மல்ல, அவுஸ்திரேலியா, மலேயா, ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள தீவிர வாதிகளுடன் எல்லாம் அய்யர் தொடர் பு கொண்டிருந்ததாக பொலிசார் குறிப்பிட்டிகுக் கின்றனர்.
இந்தியாவில் அவருக்கிருக்கும் தொடர்புகள் குறித்து கண் காணிக்கும்படி இந்தியப் பொலிசார் கேட்கப்பட்டனர்.
தேவையான விபரங்களைத் தேடி பெறும் பணிக்கு பொலி சாரையே அன்று சகலரும் நம்பியிருக்க வேண்டியிருந்தது. அவர்கள் பலவற்றை விருப்பு வெறுப்புக்கேற்ப சேர்த்தும், தவிர்த்தும் அறிக்கைகள் அனுப்புவது உண்டு என்பது பலரும் அறிந்த உண்மை! அய்யர் விடயத்தில் நாடுகடத்தப்பட்ட டாக்டர் மணிலாலுடன் அவருக்கு இருந்த தொடர்பு மறைக்கப்படக்கூடியதல்ல!
ஏடன்னிலிருந்து இந்தியர்களைப் பற்றி அவர் தொடர்ந்து எழுதினர். தனது தேசபக்தனில் அதை மொழி பெயர்த்து அய்யர் பல இதழ்களில் வெளி யிட்டிருந்தார்.

79.
தோட்டத்துரைமார்களின் ராஜ்யம் பற்றி ஆங்கி லத்திலும், தமிழிலும் அவர் எழுதிய நூல் நெருப் பைக் கக்கியது. தோட்டச் சொந்தக்காரர்களும், பெரிய கங்காணிமார்களும் தொழிலாளர்களை உறிஞ் சுகின்ற அக்கிரமங்கள் அதில் வெளியிடப்பட்டன. அந்த இருசாராரும் அப்புத்தகத்தை நூற்றுக்கணக் கில் வாங்கி தீயிட்டுக் கொளுத்தினர். இந்திய
அரசாங்கமும், பிரித்தானிய ஆட்சியும் இச்செயலால் திடுக் குற்றதாக சி. வி. தனது கட்டுரையில் குறிப் பிட்டிருககிருர்.
சட்டசபை அங்கத்தவர் என்ற பதவி அய்யரின் போர்க் குணத்திற்கு ஒரு பிரதான கவசமாக இருந்தது. அதை அய்யர் நன்குணர்ந்திருந்தார். மற்றவர்கள் சட்ட சபை உறுப்பினர் பதவியை ஒரு வசதியாக நினைத்தார்கள். அய்யரவர்களோ அதை ஒரு வாய்ப்பாக நினைத்துச் செயல் ஆற்றினர். சட்டநிரூபண சபையில் எந்த விதத்திலேனும் இடம்பெற வேண்டுமென்று துடித்தவர்களில் ஒருவராக அய்யரைக் கணிக்கமுடியாது.
1923ல் களனிவேலி இந்தியர் சங்கம் என்ற அமைப்பு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. கிளார்க்கர்களையும், மலை உத்தியோகத் தர்களையும் உள்ளடக்கிய இச் சங் கம், தொழிலாளர்களுக்கு வாராந்தச் சம்பளம் கொடுக்கப்படல் வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தது. சட்டநிரூபண சபையில் அங்கத்துவம் பெறு வதற்கே இக்கோரிக்கை விடுக்கப்பட்டது என இது குறித்து இந்திய குடியேற்ற அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களைப்பற்றி வெறுமனே குரல் எழுப்புபவர் களாக எத்தனையோ பேர் இருந்திருக்கின்றனர். இந்தியத் தலைவர் கள் இலங்கைக்கு வந்தபோது தங்களை த் தலைவர்களாகக் காட்டிக்கொள்வதோடும், இந்தியாவுக்குத் தங்களை தலைவர் பதவியில் இருத்தி தூதுக்குழுவுக்குத் தலைமைதாங்குவதோடும் அமைந்துவிடும் அவர்களின் ஆசை மக்களின் நலன் பேணும் ஆர்வமாக பெருக்கெடுப்பதில்லை.
தொழிலாள மக்கள் தோட்டங்களில் இருந்தார்கள்; துயருற்ற அடிமை நிலையிலே இருந்தார்கள். அவர்களைப்பற்றி பேசுபவர்கள் படித்தவர்களாக இருந்தார்கள். ப டி. க் காத பாமரத் தொழிலாளர்களிடமிருந்து அவர்கள் உருவாகவில்லை. தொழிலாளர்களிடம் அத்தகு நினைப்பை உருவாக்கும் முயற் சியிலும் அவர்கள் முனையவில்லை.
தோட்டங்களுக்குள் செல்வது அத்துமீறல் எனக் கருதப் பட்டு சிறைவாசம் செல்லும் நிலையும் இருந்தது. w

Page 43
80
இப்படி ஒரு சம்பவத்தின் போது தோட்டத் துக்குள் சென்று கூட்டம் போட்ட ஒரு வ ர் இரண்டுமாத கடுங்காவல் தண் டனை விதிக்கப் பட்டார். அவர் செய்துகொண்ட மேன்முறையீட் டிலும் அவர் குற்றவாளியாகவே காணப்பட்டார். தொழிலாளிகள் இருப்பது லயக்காம்பிராக்களாக இருக்கலாம். ஆனல் அவர்களுக்கு அவை மாளிகை களே அவைகளுக்குரித்தான துரைமார்களின் அனு மதி யின்றி அங்கே போகமுடியாது. தோட்டத்துக்கு அருகேயும், ஆலயத்திலும், ஆலயத்துக்கருகிலும் கூடிப்பேச முடியாது' என்று செப்பல்டன் தோட்ட வழக்கில் ஹட் டன் நீதி மன்றத்தில் கூறப்பட்டது.80
ஜனப் அஸிஸ் இதே விதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு சிறைக்குச் சென்ருர் கீழ்க் கோர்ட்டிலும், உயர் நீதிமன்றத் திலும் அவருக்கெதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு உயர் நீதி மன்றத்திலும் வலிந்துரைக்கப்பட்டது. பிரிவிகவுன்சிலில் தான் அவர் வெற்றி அடைந்தார். இத்தீர்ப்பு 1967ல் கொடுக்கப் 81. لقة ساسا لا
இந் த ப் பின்னணியில் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் தோட்டங்களுக்குள் செல்வதற்கு எத்தகு தைரியம் இருந்திருக்கவேண்டும்? தொழிலாளர்களைக் கண் டு, கதைத்து, கலந்தால்ோசித்துச் செயல்படுவதற்கு எந்தளவுக்கு கொள்கையில் தீவிரம் இருந்திருக்கவேண்டும்! நடவடிக்கைகளில் எந்த அளவுக்கு நளினம் இருந்திருக்கவேண்டும்.
அய்யரை சிறையில் அடைக்கவும், உயிரை எடுக்கவும், நாடுகடத்தவும் எத்தனைப்பேர்கள் காத்துக்கிடந்தனர்.
சட்டசபையின் கெளரவ உறுப் பினர் எ ன் ற கவசத்தைப் பாவித்து அய்யர் எதிரிகள் தன்னை வெற்றிக்கொள்ளாது காத்துக்கொண்டார்.
சட்டசபையில் அவரது பேச்சுக்கள் கருத்துப் பொதிந் தவைகளாக இருந்தன; இந்திய வம்சாவளியினரின் இதயக் குமுறல்களாக ஒலித்தன. இலங்கை மண்ணில் ஒன்றி வாழத் துடிக்கும் ஜீவன்களின் குரலாக அவர் மிளிர்ந்தார். M
கேட்பாரைப் பிணிக்கும் விதத்தில் அவரது ஆங்கில பேச்சு அமைந்திருப்பதை ஹன்சார்டின் பல பக்கங்களில் காணலாம்.

81
1931ல் இந்த வாய்ப்பு அவரைவிட்டு நழுவிபோனது. அதற்கு காரணமாயிருந்தவர்களை அவர் தன் வாழ்நாள் முழுக்க மறக்க வில்லை. மீண்டும் 1936ல் அந்த வாய்ப்பைத் தனதாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஹட்டன் அவருக்கு மிகவும் பிடித்த நகரம் அங்குதான் அவரது சட்டசபை பிரவேசத்துக்கு ஒத்துழைக்காத அகில இலங்கை பெரிய கங்காணிமார் சங்கம் தனது தலைமையகத்தை வைத்திருந்தது. அதே நகரில், அத்தலைமையகம் அ மை ந் த இடத்திற்கு அண்மையிலேயே தானும் இயங்கத் தொடங்கினர்.
தோட்டத் தொழிலாளர்களிடம் குடிகொண்ட கடன் பழக்கமும், அறியாமையும், குறுகிய பழக்க வழக்கமும், குடிபழக்கமும் திருத்தப்படல் வேண்டும் என்று விரும்பினர். நாட் டி ன் செல்வத்துக்கு உழைத்த அவர்கள் தொழுநோயாளர்களைப் போல பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட் டிருந்தனர். இந்நிலையிலிருந்து இவர் களை மீட்ப தென்ருல் இவர்களை முதலில் விஷ ய ஞானம் உடையவர்களாக்கவேண்டும் எ ன் பதை அய்யர் உணர்ந்தார்.
விஷயஞானம் என்ருல் என்ன?
தனக்கு நோயிருக்கின்றது என்பதை நோயாளி உணரவேண்டும். த ன் ஞ ல் முடியாதென்பதை
இயலாதவன் உணரவேண்டும். தான் உறிஞ்சப்படு
வதை அபாக்கியசாலி உணரவேண்டும். தன்னல்
முடியும் என்பதை பலசாலி உணரவேண்டும். மனித
வாழ்க்கையில் இவை அத் த னை யும் இயல்பாய்
அமைந்துவிடுவதில்லை. அப்படி அமைவதும் சாத்திய
மில்லை. . v
மனித வரலாறே இதுதான். இதற்கு மலைநாடு மாத்திரம் எப்படி விதிவிலக்காக முடியும்? ஊமை ஜனங்களாகப் பரித விக்கும் இம்மக்களை எழும்பிநின்று பேசவைக்கவேண்டும் என்று நடேசய்யர் விரும்பினர். அம்மக்களின் பரிதாப வாழ்க்கையைப் பிறர் காணவைக்கவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.
பேசுகின்ற மனிதனின் தேவை எல்லோரும் அறிந்ததே! பேசாதவனின் தேவை,
பேச முடியாதவனின் தேவை, பேச விரும்பாதவனின் தேவை,

Page 44
82
- என்ற தேவைகள் அவசியமாகும் போது - அறியப்பட்டே யாகவேண்டும். அதை எல்லாராலும் செய்யமுடியாது.
இறைவன் இதைச் செய்ததாக இதிகாசம் கூறுகிறது. இந்த நூற்ருண்டிலும் இதை சிலர் செய்து வரலாற்றுச் சிறப்பு எய்திருக்கின்றனர். அய்யரும் அவர்களில் ஒருவர் என்பதை எழுந்து நின்று - எதிர்த்து நின்று பேசவாரம்பித்த இந்தியத் தோட்டத் தொழிலாளியின் சரித்திரம் கூறி நிற்கிறது.
ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து மக்களிடையே தானும் தன் மனைவியுமாக நேர் நின்று விநியோகித்தனர்; நோ ட் டி ஸ் களைக் கொட்டை எழுத்தில் அச்சிட்டுப் பொது இடங் களில் ஒட்டுவித்தனர். ஹட்டனில் அச்சகம் ஒன்று கணேஷ் பிரஸ் அவரது பணிகளுக்கு கைகொடுத்து உத்வியது.
இந்த வேளையில் தான் தேயிலை விலை குறைந்துவிட்ட தென காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலைநாட்கள் குறைக்கப்பட்டன. அவர்களின் சம்பளம் குறைக்கப்பட்டது; ஆயிரக்கணக்கில் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்க ப் பட்டனர். மாதம் முழுக்க வேலைசெய்த நாட்க ளிலே யே தொழிலாளியால் வயிருற உணவுப் பெற முடி யாத நிலை யென்றல், இப்போது கேட்கவா வேண்டும்?
தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் பிச்சையெடுக்கும் நிலைக்குள்ளானர்கள். தோட்டத்து எல்லையிலும், தெருவோரத் திலும் சிலர் பிணமாகக் கிடந்தனர். அய்யரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. தனது சம்மேளனத்தின் மூலம் நேரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
குமுறப்போகும் எரிமலையாய் கொதித்து நிற்கும் தோட்டப்பகுதி மேலும் மேலும் இக்கட்டான திசைக்கே இட்டுச்செல்லப்படுகின்றது என்றெச் சரித்தார். அ மை ச் சர் பதவியிலிருந்த பெரி சுந்தரம் பரிதாபகரமான நிலைக்குள்ளாஞர். அமைச் சரவையின் தீர்ப்புக்கு எதிராகச் செயல் பட அவரால் எப்படி முடியும்?
மேலும் சம்பளக் குறைப்பு நடந்தது. விருப்பமில்லாத வர்கள் வேலையிலிருந்து விலகி இந்தியா செல்லலாம் என்ற விளக்கம் வேறு. அய்யருக்கு இதைவிட்டால் வேறு சந்தர்ப்பம் கிடைக்குமா? ஒரேயடியாய் இந்தியா போவதற்கு என்று

83
ஆயிரக்கணக்கில் அவர் மக்களைக் கூட்டிச் செய்த ஆர்ப்பாட்டம் அமைச்சர் பெரிய சுந்தரத்தை அடுத்த தேர்தலின் போது அசைத்துவிடும் அளவுக்குப் பெரிதாயிருந்தது.
ஏற்கனவே போர்க்களம் சென்ற அனுபவம், எதிரி களின் கொட்டத்தை அடக்கச் சந்தர்ப்பம் தேடி நின்ற மனுேபாவம். கிடைக்கும் வாய்ப்பை அய்ய
ரைப்போல் பாவிக்க யாரால் முடியும்?
தோட்டமக்களை "யார் யாரெல்லாம் பிரதிநிதித்துவம் பண்ணி யிருக்கிருர்கள்? தோட்டத்துரைமார்கள் தோட்டச் சொந்தக் காரர்கள், இனத்தாலும், மதத்தாலும் தொடர்பேயில்லாத வியாபாரப் பிரமுகர்கள். இவர்களிலிருந்து தான் வேறுபட்டவன் என்பதைக் காட்டவேண்டுமானல், தோட்டப் பொருளாதாரத்தைப் பற்றி பேசாமல், தோட்டமக்களைப்பற்றி பேசவேண்டும் என்பதை ஏற்கனவே அய்யர் திட்டமிட்டு வைத்திருந்தார்.
தனது பணி தோட்டத்து மக்களின் சமுதாய அமைப்பை மாற்றுவதாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக அய்யர் விரும்பினர். சமுதாய அமைப்பு மாறுவதற்கு இடைஞ்சலாக இருப்பது பெரியகங்காணியின் பதவிக்குட்பட்ட தோ ட் ட அமைப்பும் அதனைப் பிணைத்துவைக்கும் பற்றுச்சீட்டும் என்பதை அய்யர் ஏற்கனவே ஆராய்ந்து வைத்திருந்தார். போதாதற்கு அவர் பெரியகங்காணிகளின் மேல் பகையுணர்வும் கொண்டி ருந்தது அவரது செயல் வேகத்தை அதிகரிக்க உதவியது.
நோய்நாடி நோய்முதல்நாடி அது தணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் (குறள் 948)
என்ற வள்ளுவர் வாக்குக்கமைய அவர் தோட்டமக்களின் நோயைக் குணப்படுத்தும் செயலை ஆரம்பித்தார். ஏற்கனவே - அய்யர், தோட்டப்புறங்களில் சிரமப்பட்டு உருவாக்கிய பலரை இழந்திருக்கிருர், அவர்களில் பலர் தொழிலை இழந் தி ரு க் கிருர்கள்; மேலும் பலர் தோட்டத்தைவிட்டு விரட்டி அடிக்கப் பட்டிருக்கிருரர்கள்; சிலர் பைத்தியக்காரப்பட்டம் சூட்டப்பட்டு அங்கொடையில் அடைபட்டுக்கிடக்கிருர்கள்; வேறு சிலர், ஊருக்குப்போகும் ஆசையில் இங்கிருந்து ஒரேயடியாக ஏமாற்றி

Page 45
84
அனுப்பப்பட்டார்கள்.
இந்தியாவுக்குப் போனவர்களில் சிலரை மீண்டும் இலங்கை யில் பார்ப்பதற்கு சில துரைமார்கள் விரும்பவில்லை.
ஒருமுறை இங்கிருந்து போனவர்கள் ஒட்டுமொத்த மாக வராமல் தடுக்க முடியாதா என்று துரைமார் கள் ஆதங்கப்பட்டார்கள் என்று துரைமார் சங்க செயலாளராக இருந்த ஆர்தர். டப்ளியூ. எல். மேர்னர் கூறுகிருர்,84
துரைமார்களின் ஆதங்கத்துக்குக் காரணம், தொழிலாளி நிமிர்ந்து நின்று கேள்வி கேட்க ஆரம்பித்தது தான். ஆகவே விரும்பத் தகாதவன் என்று பட்டம் சூட்டி அவனை துரை ஒதுக்க ஆரம்பித் தார்.
அவருக்கு வழிவகைகள் கூறி அவருக்குத் துணையாய் நின்ற வர்கள் பெரிய கங்காணிமார்களேயாகும். அவர்களை அழித் தொழிக்கும் முயற்சியில் அய்யர் ஈடுபட்டது தனிப்பட்ட குரோ தத்தால் என்று அவர்கள் பல முறைப்பாடுகள் செய்தனர்.
அந்த முறைப்பாடுகள் பத்திரிகைளில் அறிக்கையாக, துரைமார் சம்மேளனத்துக்கு மனுவாக, சட்டமன் றத்தின் உரையாக, சங்கக்கூட்டங்களில் தீர்மான மாக வெளியிடப்பட்டன. .
தோட்டப்பகுதிகளில் தொழிலாளர் சம்மேளனம் ஆரம்பித்த தற்காக நான் யாரிடமும் மன்னிப்பு பெறவேண்டிய அவசியமில்லை. ஒரு நூற்றண்டுக்காலம் துன்பத்தில் ஆழ்ந்த தொழிலாளி தன் கையே தனக்குதவி என்பதை உணர ஆரம்பித்து விட்டான். தான் விரும்புகிற விதத்தில் தனக்கு உதவுவதற்கு யாருமில்லை என்பதை அவனது சோகம் இழைந்தோடும் நீண்ட வரலாறு கூறிய வண்ணம் இருக்கிறது.39
என்று முழங்கிய அய்யர் சோக வரலாற்றை மாற்ற முனைந்தார் தொழிலாளிகளை அவர் சுத்தமாக உடுக்கச் செய் தார்; செருப்பு போடும்படி கேட்டார்; கோட் அணியச் சொன்னர்; தலைப்பாகை கட்டச் சொன் னர்; கையிலே பிரம்பு எடுத்துக் கம்பீரமாக நிமிர் ந்து நடக்கச் சொன்னர்! தொழிலாளி விழித்தான்! இவை யெல்லாம் கங்காணியின் அடையாளங்கள்; கங்காணிகள் மாத்திரமே இவ்விதம் உடுத்த லாம். வேறுயாரும் அப்படி இருக்க முனைவது எப்படி சாத்திய மாகும்? என்று அவன் விழித்தான்!

85
தானே அவ்விதம் உடுத்தி வந்து அவர்கள் முன்னின்ருர். அவர்கள் முன் பேசும் போது அவரது கம்பீரத் தோற்றம் கங்காணிகள் மீது வைத்திருந்தப் பிரேமையை அழித்தது:” பயத்தைப் போக்கியது. கங்காணிகளின் உருவ அமிைப்புக் கலையத் தொடங்கியது. தொழிலாளர்கள் ஒன்றுபடுவதென்றல், அவர்களுக்குத் தலைவன் ஒருவன் இல்லாது முடியுமா? அத்தலை வன் யார்? தலைவன் தோட்டத்தை விட்டு வெளியில் இருப்ப வராக இருக்கமுடியுமா? முடியரிதே ! என்று தனது தொழிலா ளர் இயக்கம் கட்டுரையில் எழுதிய நடேசய்யர் தோட்டத்துக் குள்ளாக தலைவர்கள் உருவாகும்வரை தானே தலைவனுயிருக்க வேண்டியதாயிற்று. -
நண்பன் பகைவனுய் மாறும் போது
இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கை பிரித்தா னியரின் திறமையால் மாத்திரம் உருவானதல்ல.
ஆப்பிரிக்க, சீன, இந்திய உழைப்பாளர்களை இங்கு கொண்டு வர மேற். கொள்ளப்பட்ட முயற்சிகள் இதனை வெளிப்படுத்தும், இந்தியர்கள் இங்கு உழைப்பாளர்களாக இலட்சக்கணக்கில் குடியேறுவதற்கு கங்காணிகளின் ஒத்துழைப்பும் உ த வி யும் வெள்ளையருக்கு அளவிடமுடியாத அளவுக்கு கொடுக்கப்பட்டன. அவர்களின் ஒத்தாசையின்றி மலைப்பிராந்தியம் இந்த அளவுக்குப் பொன் கொழிக்கும் பூமியாக உருவாகியிருக்குமா என்பது சந்தேகமே !
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆள் கூட்டிவரும் உரிமைப்பெற்றவன் கங்காணி என்று அழைக்கப் பட்டான்.84 இந்த் கங்காணி பெரும்பாலும் தோட்டச் சொந்தக் காரருக்கோ அன்றி தோட்டத்துரைக்கோ வேண்டப்பட்டவ
ஞகவே இருந்தான்.

Page 46
86
இந்திய சட்டப்படி ஏற்கனவே தொழிலாளியாகக் கடமையாற்றிய ஒருவன், அதிலும் தான் யாரு க்கு ஆள் சேர்க்கிரூனே அதே துரையின் கீழ்
கடமையாற்றிய ஒருவனே கங்காணியாகும் உரிமை உடையவளுகிருன். &
இவ்விதம் கொண்டுவரப்படும் தொழிலாளர்கள் ஒன்று கங்காணிக்கு உறவினர்களாக இருந்தார்கள்; அல்லது இந்தியா வில் கங்காணியின் கிராமத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தார் கள்; இரண்டு விதத்திலுமே அவர்கள் கங்காணிக்குக் கட்டுப் பட்டே வந்தார்கள்; இலங்கையிலும் வாழ்ந்தார்கள்; இறக் கும் வரை உழைத்தார்கள்: உழைக்க தமக்கு வாய்ப்புக் கிடைத்தது கங்காணியால் தான் என்று உணர்வு பூர்வமாக அறிந்து வைத்திருந்த அந்த உழைப்பாளர்கள் தங்களின் வாழ் வைப் பேணி பாதுகாக்கும் பெரும் பொறுப்பையும் கங்காணி யிடமே கொடுத்து விட்டார்கள்.
கங் காணி என்றழைக்கப்பட்டவர் தொழிலாளிக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்தார். அவர்கள் நெற்றிவியர்வை நிலத்தில் சிந்த உழைத்துப் பெறும் ஊதியத்தை அவரே வாங்கினர். அவர்கள் அதில் வேற்றுமை காணவில்லை. தனயர் களின் ஊதியம் தந்தையிடம் சேர்வதில் தவறு என்ன இருக்கி றது? இவ்விதம் உழைக்கும் மக்களின் ஒட்டு மொத்தமானஅதிகாரபூர்வமான தலைவன் நிலையிலிருந்த கங்காணி - தோட்டத் துரையை அதிகாரம் பண்ணுமளவுக்குச் சக்திபடைத்தவனுக உருவாஞர்.
இலங்கைவர ஆசைப்பட்ட ஒருவனுக்கு இந்தியா வில் முன்பணம் கொடுத்து அழைத்து வந்த கங் காணி, அவனுக்கு வேண்டிய அத்தனையையும் கேளாமலேயே செய்து கொடுத்தார்.
கிராமத்தில் அவனுக்கிருந்த கடனை கங்காணி பணம் கொடுத்து அடைத்தார். தோணியில் கடல் கடந்து வரும் பிரயாணச் செலவை அவன் கொடுக்கவில்லை. அவனைப் பொறு த்தவரையில் கங்காணி கொடுத்ததாகவே நினைத்தான். உணவுக் கென்று ஒருசதமும் அவன் கொடுக்கவில்லை. அவனை பொறுத்தவ ரையில் கங்காணி கொடுத்தாகவே நினைத்தான்.

87
இலங்கைக்கரையில் இறங்கியவுடனேயே பரிச்சய மில்லாத காலநிலையை அவன் உணர்ந்தான். கம்ப ளிப் போர்வையை அவனுக்குக் கொடுத்துக் கதகதப்பைத் தரும் போது கூலி என்று எதையும் கேட்கவில்லை. இருநூறு மைல்கள் நடந்துவந்த போது வழியில் அம்பலத்தில் தங்குவதற்கும். உணவு உட்கொள்வதற்கும் அவன் எதையும் கொடுக்க வில்லை, கங்காணியாரும் கேட்க வில் லை, ஆக தோட்டத்துக்கு அவன் எவ்வித செலவுமின்றியே வந்தான். அதை அவனுக்குப் பெற்று தந்த கங்காணிக்கு அவன் வாழ்நாள் முழுக்கப் பணிந்து நிற்க தீர்மானித்ததில் என்ன தவறு? காட்டுவழியே நா.ந்து வந்த போது, பாதையின் இரு மருங்கிலும், அம்பலத்துக்கருகிலும் புளியமரங்களும், வேப்ப மரங்களும் தோப்பாக அடர்ந்து வளர்ந்திருப்பதைக் கண்டான்.
தனக்கு முன்னரேயே இலட்சக்கணக்கில் இந்தி வழியில் நடந்துசென்ற ம னி த ர் களு க்கு அவை சாட்சிய மளித்தன. கங்காணி எவ்வளவு பெரிய மனிதர் என்ற நினைப்பில் வியப்பேற்படும் நிலையில் தோட்டத்துக்கு வந்தவன் அஞ்சி அடங்கிவிடும் நிலைக்குக் கீழிறங்கிப்போனுன், கங்காணியின் சக்தி அத்தனை மகத்தானதாக இருந்தது. அவரை மீறி எதுவுமே தோட்டத்தில் நடப்பதில்லை. அவனுக்கு எஜமானன் கங்காணியே. நல்லதோ, கெட்டதோ அனைத்தும் அவரது தயவிலேயே அவனுக்கு நடந்தது.
தோட்டத்துக்கு கடன்காரர் கங்காணி ஒருவரே. தொழில் சம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் இத ணுலேயே கங்காணிகளைத் தோட்டச் சொந்தக் காரர்கள் நம்பவேண்டி வந்தது. தொழிலாளர் களிடமிருந்து ஒரு சதம் விடாது கடனைப் பெற் றுக் கொள்ள கங்காணிக்கு வசதியிருந்தது.
ஆம் ஒரு தொழிலாளி இந்திய மண்ணிலிருந்து இலங் கை வந்து உழைத்திட விருப்பம் தெரிவிக்கையில் அவனுக்காக முன்பணம் கொடுத்து, ஆகும் செலவுகளை ஏற்றுக் கொள்ளும் கங்காணி, திரும்ப அந்தப்பணத்தை வட்டியும் முதலுமாக ஒருசதம் விடாது எடுத்துக்கொள்ள தோட்ட அமைப்பு வழி செய்து கொடுத்தது.
ஆக ஒரு மனிதனின் மூலதனம் உழைப்பாளர்களின் கடும் முயற்சிகளால் பல்கி பெருகத் தொடங்கியது. உழைத்தவன் பெறுவதோ ஒன்றுமேயில்லை.

Page 47
88
மோட்ச வாசமாய் ஆச்சுதே இந்த அழகிய பூமி1
சுவர்க்க இன்பமாய் ஆச்சுதே என் மக்கள் ஆக்கிய பூமி”
என்று மக்கள் கவிமணி சி. வி. வேலுப்பிள்ளை பாடியது போல் இந்தியத் தொழிலாளியின் உழைப்பால் பயன்பெற்றவர்கள் பெரிய கங்காணிகளும், தோட்டச் சொந்தக்காரர்களுமேயாகும்.
உழைப்பவன் நோயில் படுத்தால் அவனை லயக்காம் பிராவில் வைத்து மருத்துவம் பார்ப்பதில் கங்காணி மார் அக்கறைச் செலுத்தினர். வைத்தியசாலைக்கு அனுப்புவதில் அவர்களுக்கு விருப்பம் இல்லை. சுகம் பெற்றதும் சொல்லாமல் தனது கடனை அடைக்காமல் ஓடி விடுவார்கள் என்று சுயநலம் கலந்த பயத்தால் கங்காணிமார் இத்தகு நடவடிக் கைகளை மேற்கொண்டனர்
இவர்களின் அசுரபிடியை ஆட்டுவித்தவர் நடேசய்யரே ஆகும். இவர்களின் அட்டூழிய ஆட்சியின் ஆணிவேரையே அவர் அசைத்துக் காண்பித்தார். கங்காணி அமைப்புமுறையில் ஏற்ப டும் குறைகளையும், அதிகார துஷ்பிரயோகத்தால் உண்டாகிற பாதிப்புக்களையும் அய்யருக்கு முன்னரேயே பலரும் உணர்த்தி யிருக்கிருர்கள். ஆங்கில தேசாதிபதிகளும், இந்திய ஏஜெண்ட்க ளும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களும் இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். குணும்சம் நிறைந்த சில ஆங்கிலேயத் துரைமார்களும் இதில் அடங்குவர். தேசாதிபதி மக்கெலம் (1907-1916)
கங்காணிகளின் கைப்பலத்தைக் குறைப்பதன் மூலமே தொழிலாளர்களை அவர் களின் கோரபிடிப்பில் இருந்து விடுவிக்கலாம். கங்காணிகளின் கையில் அத்தொழிலாளர்கள் பகடைக் காய்களாக இருக்கின்
ருர்கள்.
என்று குறிப்பிட்டுள்ளார்.

89
கங்காணிகளின் முழு சுயரூபத்தைக் கண்டவர் அய்யர் ஆவார். அய்யர் ஒருவரே ஆவார். கங்காணிகள் இந்தியவம்சா வளித் தொழிலாளர்களின் கடவுளாக ஒவ்வொரு தோட்டத் திலும் கருதப்பட்டவர்கள். சர்வ வல்லமை படைத்தவர்கள்; ஆணவத்தோடு நடப்பதற்கு வசதிபடைத்தவர்கள்; ஆங்கிலேயத் துரைமார்களுக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மி டை யி ல் தொடர்பு பாலமாக விளங்கியவர்கள். தொழிலாளர்களின் தலைவர் ஸ்தானத்தில் ஒவ்வொரு தோட்டத்திலும் செயல்பட் டவர்கள். அவர்களின் உதவியோடும், அவர்களின் வழி நடத்த லோடும், தோட்டத்து மக்களின் வாழ்வில் மாற்றம் தேடவே அய்யர் முயற்சித்தார். அய்யரின் ஆரம்பகால நடவடிக்கை களில் அவர்களுக்குச் சார்பான போங்கையே அவதானிக்கலாம்.
அவர்களுக்குச் சமூகத்தில் ஒர் அந்தஸ்தை ஏற் படுத்திக் கொடுத்தவரே அய்யர் தான். சம்பள சபையில் கங்காணிகளிள் ஒருவர் பிரதிநிதித்துவம் பெற காரியம் ஆற்றியவர் அய்யர் அவர்களே ஆகும். கங்காணிமார்களும் நடேசய்யரின் அறிவைத் தங்க ளது சங்க வளர்ச்சிக்குப் பயன் படுத்தினர்கள். அவரது பத்திரிகை முயற்சிகளுக்கு நிறைந்த அள வில் பணம் கொடுத்து உதவினர்.
கங்காணிமார்களுக்கு ஓர் வார்த்தை என்ற தலையங்கம் எழுதிய போது கங்காணிமார்களின் உதவி தனக்குக் கிடைத்ததைப் பகிரங்கமாக அய்யர் ஒத்துக்கொண்டிருக்கிருர். பத்திரிகை ஆரம் பிக்க பணம் கொடுத்ததோடு, விற்பனையின் போது சந்தா தேடிக்கொடுத்தும் அவர்கள் உதவியை நன்றியோடு நினைவு கூறுகிருர், ·
ஆனல் நடேசய்யர் பெரிய கங்காணி அமைப்பு முறை யை வெறுத்தார். அது கட்டிகாக்கும் அடிமைமுறையை மாற்ற முனைந்தார். இந்தியர் என்ற உணர்வோடு அவர்களையும் தொழிலாளர்களையும் உள்ளடக்கிய எழுச்சிக்கு அவர்களது துணையைப் பயன்படுத்த முனைந்தார். அவர்களுக்கு இருந்த செல்வ வளத்தையும், சமூக அந்தஸ்தையும் அதற்கு உபயோ கிக்க முனைந்தார்.
ஆனல் பெரிய கங்காணிமார்களோ தமது சமூக அமைப்பை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கவே விரும்பினர். அதில் அவர்க ளுக்கு லாபம் இருந்தது, இலயிப்பும் இருந்தது. அய்யருக்கு உதவுவதை நிறுத்திக்கொண்டது மாத்திரமல்ல அவரை அடி யோடு இல்லாது ஒழிக்கவும் முயற்சிகளில் இறங்கினர். அய்யரும் சளைத்தவரா? அவர்களை வேரனுக்கும் வன்மம் பூண்டார்.

Page 48
90,
1929ம் ஆண்டின் இறுதிப்பகுதியிலிருந்து நடேசய்யரின் எழுத்துக்களில் இது பூர்ணத்துவத்தோடு வெளிப்படுகிறது.
பல சம்பவங்கள் அய்யரை இந்த முடிவுக்கு இழுத்துச் சென்றன.
பெரிய கங்காணிமார் சங்கத்தின் புதிய நிர்வாகக் குழு அவரை ஒதுக்கியமை; ஏ. ஈ. குணசிங்காவின் தீவிர் இந்திய எதிர்ப்பு: டொனமூர் சிபார்சுபடி வகுப்பு வாரியான பிரதிநிதித்துவம் ஒழிக்கப்பட்ட மை; தன்னைவிட்டுப் பிரிந்துசென்ற மருமகன் சார நாதனுக்கு கங்காணிமார்கள் அளிக்கத்தொடங்கிய ஆதரவு என்பவவை அவைகளில் சில.
பெரிய கங்காணிமார் சங்கத்திற்கு ஓர் நிலையையும், பெரிய கங்காணிமார்களுக்கு ஒர் செல்வாக்கையும் கொடுக்கும் படி நாம் சில காலமாய்ச் செய்து வந்த காரியங்களையெல்லாம் சிலர் மறந்துபோன போதிலும், சரித்திரத்தில் காண வழியு ண்டு என்று குறைபட்டுக்கொண்ட நடேசய்யர், "பெரிய கங்காணிமார் சங்கம்" என்ற தலையங்கத்தில் டொனமூர் சிபார்சுபடி இந்தியர்களுக்குப் பிரத்தியேக ஸ்தானங்கள் இல்லை. பொதுத்தேர்தல்களில் இந்தியர்களும் அபேட்சகர்களாக நின்று போட்டியிட வேண்டும். அதற்கு போதிய வசதிகள் தோட்டப் பகுதிகளில் மாத்திரம் இருக்கிறது. வாக்காளர்களைப் பதிவு செய்யவேண்டும் g என்று அவர்களையும் தமது பணிகளின் போது அரவணைத்துச்செல்லும் பாங்கிலேயே எழுதுகிருர்,
பெரிய கங்காணிமார் சங்கம் தனது ஆண்டு கூட்டத்து க்கு நடேசய்யரை அழைப்பது வழக்கம். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட குழுவினர் துரைமார்களின் ஆலோசனையின் பேரில் தமது கூட்டங்களுக்கு அவரை அழைப்பதை தவிர்க்க ஆரம்பித்தனர் போதாததற்கு சாரநாதனுக்குப் பணம் கொடு த்து உதவினர்; சொந்தத்தில் பத்திரிகை நடாத்தத் தூண்டி னர். "பெரிய கங்காணிமார்களுக்கு ஒர் எச்சரிக்கை" என்று தலைப்பிட்டு “வரப்போகும் பெரும் பொறுப்புக்களை ஏற்றுக் கெளரவமாய் நடந்துகொள்ளும் நிலையில் தன்னைப் பெரிய கங்காணிமார் சங்கம் வைத்துக் கொள்ளும் என்று எண்ணுகி ருேம்" என்று எழுதினர்.
இது ஒரு நெருக்கடியான காலம். கங்காணி என்ற
பதம் தற்சமயம் மிகவும் கேவலமான முறையில் உபயோகிக்கப்பட்டு வருகிறது. ஆள் விழுங்கும்

91
பிசாசுகளுக்கு ஒப்பாகவே அவர்களை இந்தியாவில் பொதுஜனங்கள் கருதுகிருர்கள், என்று ஆரம்பித்து, இந்தியமக்கள், இந்திய அரசாங்கம், இலங்கை அரசா ங்கம், இந்திய கவர்மென்ட் ஏஜெண்ட் என்று எல் லோருமே கங்காணி முறை தேவையில்லை என்ப தோடு இந்தியாவில் இலங்கைக்காக ஆள்கட்டும் வேலையை கண்காணித்து வரும் மாபெரும் கங்காணி யாகிய எமிகிரேஷன் கமிஷனரும், கங்காணி தேவை யில்லை என்று கூற ஆரம்பித்திருப்பதை எடுத்துக் காட்டுகிறர்.
சில பெரிய கங்காணிமார்களுக்கும் பெரிய குருட்டு நம்பி க்கை இருந்து வருகிறது. அதாவது, இலங்கையில் பெரிய கங்காணி இல்லாமல் தோட்டக்காரர்களால் காலம் கழிக்கமுடி யாது என்பதே. அது தவறுதல். மலாய் நாட்டில் பெரிய கங்காணிமார்களை எடுத்த காரணத்தால் தோட்டக்காரர்களு க்கு கஷ்டம் கிடையாது. தொழிலாளர்களுக்கு கஷ்டம் உண்டு இதனை நாம் ஏற்றுக்கொள்கிருேம். என்றுகூறி நூறு ஏக்கர் தேயிலைத் தோட்டத்துக்குச் சொந்தக் காரரான ஒரு பெரிய கங்காணி தனது பிள்ளையைப் படிக்கவைப்பதில் விருப்பமில் லாதிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தை எடுத்துக்காட்டி மனம் புழுங்குகிறர்.
தனது அறிவுரைகளை அந்தப் பெரிய கங்காணி ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையும் வெளிப்படுத்தி,
"ஒரு சாமி ஆடி வந்து சொல்லவேண்டும். இல் லாவிட்டால் பொலிஸ்காரன் வந்து சொல்லவேண் டும். இந்த நிலையில் இந்தியன் அன்னிய நாட்டில் சுயமரியாதையுடன் எப்படி விாழமுடியும்?"
என்று குமுறுகிறர்.
சட்டசபை உறுப்பினரான தன்னை நேரில் காணும்போது ஒரு மாதிரியாக நடக்கும் துரைமார், பெரிய கங்காணிமார் களைத் தனக்கு எதிராக உபயோகிப்பதைக் கண்டார். துரை மார்களின்பால் விசுவாசம் கொண்ட கங்காணிமார்கள் தோட் டங்களுக்குள் அய்யர் வந்து தொழிலாளர்களிடம் பழகுவதை தடுப்பதில் முன்னின்றனர். அய்யர் எழுதிய சட்ட்புஸ்தகம் என்ற நூலைதாமே பெருமளவில் காசுகொடுத்து வாங்கி தொழிலாளர் களிடம் சென்றடையாமல் செய்தனர்.

Page 49
92
கங்காணிமார்களைப்பற்றி அடுத்த நாளும் தனது பத்திரிகையில்
எழுதுகிருர்,
அவர்களைப்பற்றி அய்யர் எழுதிய கடைசி பத்திரி கைத் தலையங்கம் அதுவே ஆகும். அதில் கங்காணி மார்கள் துரையைவிட அதிக சம்பளம் வாங்குவதும், தோட்டங்கள் சொந்தமாக வாங்கியதும், கார்கள் வைத்திருப்பதும் துரைமார்களுக்குப் பிடிக்காமல் போயிற்று. அதனுலேயே கங்காணிகளை அழிக் கிருர்கள் .
என்று கூறி பெரிய கங்காணிமார்கள் தங்கள் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள வேண்டுமானுல் வேறு துறைகளில் பிரவேசிக்கவேண்டும். இது விஷயம் கூட்டம் கூடியே யோசிக்க வேண்டுமே யொழிய வேறு பத்திரிகைகளில் எழுதி பகிரங்கப் படுத்தலாகாது.
இத்தனைக்குப்பிறகும் கங்காணிமார்கள் தோட்டத் துரைமார்களின் ஆதரவை வைத்து அய்யரை வெற் றிகாண முடியும் என நம்பினர். தனக்குக் கீழிரு க்கும் உழைப்பாளிகள் தன்னை எதிர்க்கத்துணிய மாட்டார்கள் என்று ஒவ்வொரு கங்காணியும் கனவு கண்டான். -
1921ல் துண்டுமுறை ஒழிக்கப்பட்டது. கங்காணியின் பலம் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். பற்றுச்சீட்டை வைத்து அதே பலத்தை நிலைநிறுத்திக்கொள்ள கங்காணிகளுக்கு துரை மார்கள் துணைபோஞர்கள்.
1923ல் கடன் தள்ளுப்படி செய்தார்கள். இந்தியாவில் கொடுபட்ட எந்தபணமும் இலங்கையில் பெறமுடியாது என்று சட்டம் வந்து என்ன பயன்? இந்தியாவிலேயே கடனை வசூலி க்கவும், இலங்கையில் பற்றுச்சீட்டைக் கடனுக்கான உத்தரவாத மாகவும் க்ங்காணிகள் பாவிப்பதற்கு துரைமார்கள் ஆதரவளித் தனர்.
1927ல் குறைந்த சம்பள நிர்ணயம் செய்தார்கள். உணவு நேரத்தோடு ஒன்பது மணிநேர வேலைக்கு இது வழிசெய்தது. சம்பளத்தைத் தொழிலாளியின் கையிலேயே கொடுப்பதற்கும் இது வழிசெய்தது. தொழில் செய்யுமிடத்திலேயே தொழிலாளி யை சாப்பிட வைப்பதற்கும், தனது கையிலே வாங்கிய பணத் தை மீண்டும் குட்டிச்சாக்கிலும், கடையிலும் குவித்துக் கங்கா ணியிடமே கையளிக்க வைப்பதற்கும் துரைமார்கள் உதவி செய் தனர். அனுபவபூர்வமாக இவைகளையெல்லாம் கண்டுவந்த கங்

93
காணிமார்கள் கனவுகளை கலைத்துக்கொள்ளாமலிருந்ததில் வியப் பில்லை. ஆனல் நடேசய்யரும் இவைகளையெல்லாம் அவதானி த்து வந்திருக்கிருர் என்பதையும் அவர் நல்ல நண்பன் பயங்கர மான விரோதி என்பதையும் கங்காணிகள் உணரத் தவறிவிட் டனர். அய்யர் படிப்படியாக ஆரம்பித்தார்.
பற்றுச்சீட்டு அதன் பயனை இழந்திருந்ததை முத லில் வெளிப்படுத்தினர். கங்காணிகள் மேலதிக மான பதவிகளைச் செய்வதில் உள்ள தவறுகளை அடுத்ததாக எடுத்துக்காட்டினர். தோட்டத்தில் கங்காணியின் மிக நெருங்கிய உறவினர் களே கணக்கப்பிள்ளையாக மலையிலும், உதவி கிளார்க்கராக ஆபீசிலும் இருந்தார்கள். தொழிலாளிகளின் சம்பளத்தில் மாத் திரமல்ல, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு தானியங்களிலும் அவர்கள் கைவைக்கத் தயங்கவில்லை.
அரிசிபோடும் போது எலி அரிசி கோயில் அரிசி என்று குறைத்துக் கொள்வதற்கு - தொழிலாளிகளி டம் பகிரங்கமாக கூறி அள்ளிக் கொள்வதற்கு அவர்களுக்கிருந்த அதிகார மமதையை எடுத்துக் காட்டினுர், இறுதியாக தொழிலாளர்களை கங்காணியின் பிடியிலிரு ந்து கழற்றும் மார்க்கமாக தோட்டப்பிரட்டை அறிமுகப்படுத்தி னர். கங்காணியால் கொண்டுவரப்பட்டு தோட்டத்தில் பதியப் பட்டுத் தொழில் செய்யும் ஒருவன் தான் கங்காணி பிரட்டி லிருந்து விலகிக்கொள்ளலாம். அவன் தோட்டப்பிரட்டு அல் லது துரைபிரட்டில் சேர்க்கப்படுவான். கங்காணிக்கும் தொழி லாளிக்கும் உள்ள மிகப் பலமான பிணைப்பு இதுதான். கங் காணி பிரட்டிலிருக்கும் போது ஒரு தொழிலாளி கங்காணியின் வார்த்தைக்கே கட்டுப்பட வேண்டியவனகிருன்.
தோட்டத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்த, துரைக்கு எதிராக திரண்டுநிற்க, சம்பளம் போதாதென்று கூறி வேறு தோட்டங்களுக்குப் போவதாக பயமு றுத்த அத்தொழிலாளர்களே கங்காணிக்கு வலிமை யைக் கொடுத்தனர்.
மேலும் தோட்டநிலம் முழுக்கப் புல் பூண்டு வராமல் செய்யவேண்டிய பொறுப்பு கங்காணியிடமே இருந்தது. தொழி லாளர்களின் பிள்ளைகளை சதக்கணக்கில் சம்பளம் கொடுத்து இந்தப் புல்வெட்டுக் கொந்தரப்பில் உழைக் கப் பண் ணி லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க வழி பண்ணியது இந்தப் பிணைப்புதான். பென்ஸ் காசு மூலம் கங்காணிக்குத்

Page 50
94
தோட்டச் சொந்தக்காரர்களாக்கும் அளவு பணம்திரட்டியது, இந்தப் பிணைப்புதான் நடேசய்யர் இதைத் தகர்த்தெறியும் தீர்மானத்தை அரசாங்கசபையில் கொண்டுவந்தார். வழக்கம் போல் துரைமார்களின் ஆதரவை கங்காணிகள் எதிர்பார்த்த னர்.
ஆங்கிலத்துரைமார் காரியகாரர்கள் எதிலும் லாப நட்டம் பார்ப்பவர்கள் நடேசய்யரின் தீர்மானம் செயல்படு த்தப்படும் போது தமது கையே ஒங்கிநிற்கும் என்று உணர லானுர்கள்.
பெரிய கங்காணி ஒழிப்புக்கு அய்யர் முயன்றது தனிப் பட்ட குரோதத்தால் என்று கூறி கங்காணிமார்கள் சங்கம் துரைமார் சங்கத்தின் தலையீட்டைவேண்டி நின்ற போது,
"1939 லிருந்து எதிர்பார்த்த விதத்தில் தங்களை கங்காணிமார்கள் மாற்றிக்கொள்ளவில்லையென்று அச்சங்கம் குறை கூறியது" தனிமனிதர்கள் மாறி வருகிறர்கள், கங்காணிமார் மாழுவிட்டால் யாரைக் குறைகூறி என்ன பயன்?
என்று அவர்கள் கூட்டம் போட்டு தீர்மானம் எடுத்து கடித மும் எழுதினர்கள் 100
இத்தீர்மானம் எளிதில் எடுக்கப்பட்டதில்லை, பெரிய கங் காணிகளுக்கு ஆதரவான துரைமார்கள் இருந்தனர்; தோட்டச் சொந்தக்காரர்களின் குரல் எச். டப்ளியு. அமரசூரியாவின் உரு வில் அரசாங்க சபையில் ஆதரவாக ஒலித்தது.
**கங்காணி முறை ஒழிக்கப்பட்டால் தோட்டத்து ரைக்கு அதிகவேலைசெய்யவேண்டி நேரிடும். இந்த ஆலோசனை எதிர்காலத்தில் மிகவும் விரும்பத்தக் கதாயிருக்கலாம். இன்று தோட்டங்களிலிருக்கும் நிலைமையில் இது அத்தனை அவசியமானதல்ல"
என்று அவர் பேசினர். அய்யர் விட்டாரில்லை. "தொழிற் சங்கத் தலைவன் என்ற முறையில் எனது அனுபவத்தில் கங்கா ணிமார்களுக்கு ஆதரவான துரைமார்களையே கண்டிருக்கிறேன். பென்ஸ் காசுக்காக கங்காணியை அவர்கள் பாதுக்ாக்க முனைகி முர்கள். கங்காணிக்கு இன்று என்ன தேவையிருக்கிறது? ஆள் திரட்டிவரும் வேலை இன்று இல்லை. எஜமானர்களின் வேலை யைத்தான் கங்காணிகள் செய்கிருர்கள். 1941ல் துரைமார் சங்கம் இதன் ஏற்றுக்கொண்டது. இரண்டு வருடங்களுக்கு

95
மேலாகியும் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை. பெரிய கங் காணி பதவி தேவையில்லாத ஒன்று. பல தோட்டங்களில் நிலவி வரும் தீங்குகளுக்கு கங்காணிகளே காரண கர்த்தாக்க ளாக இருக்கிருர்கள்! என்று வாதிட்டார்.
இத்தீர்மானம் நிர்வாகக்குழுவின் ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பெரிய கங்காணிமார் சங்கத் தலைவ ராயிருந்த பெரிசுந்தரம் வெளியிட்ட ஒரு கருத்து கவனிக்கத் தக்கது.
"தொழிலாளர்களை வேலைக்கமர்த்தியிருப்பவர்கள் பெரிய கங்காணிகளே. அவர்களே தொழிலாளர் களின் எஜமானர்கள். துரைமார்கள் தொழிலாளர் களைப் பயன்படுத்துவது கங்காணியோடு செய்து கொண்ட தொழில் ஒப்பந்தத்தினலேயே?*
என்ருர். இதைத்தான் - இந்த அமைப்பு முறையைத்தான் அய்யர் அழிக்க விரும்பினர்.
இறுதியில் பெரிய கங்காணி முறையின் இயற்கை சாவுக்கு வழிசமைத்துக் கொடுப்பதென்று முடிவானது. அதாவது பெரிய கங்காணிகளை இனி புதிதாக நியமிப்பதில்லை; இருப்பவர்கள் விலகிப்போகும் வரை அல்லது மரணம் அடையும் வரை அதே பதவியில் இருக்கலாம், என்று முடிவாகியது.
ஒவ்வொரு தொழிலாளியும் தமது விருப்பத்தின் பேரில் நடந்துகொண்டு தோட்டப் பிரட்டுக்கு மாறலாம் என்ற ஒரு பிடி போதுமே. அய்யரின் ஆலோசனையின்படி ஏராளமான தோட்டங் களில் தொழிலாளர்கள் துரை பிரட்டுக்கு வந்தார்கள். கங்காணி மார்களின் ராஜ்யம் பழைய கதையாக மாறியது.
"பெரிய கங்காணிமார்களில் பலர் கெட்டவர்கள் என்பதை யாவரும் ஒப்புக் கொள்வார்கள். எனினும் மாதச்சம்பளம் வாங்கிவரும் கண்டக்டர் போன்ற உத்தியோகஸ்தர்கள் தொழிலாளருக்கு எவ்வளவு ஆதரவு கொடுக்கிருர்களோ, அதைவிடப் பன் மடங்கு ஆதரவு கங்காணியிடமிருந்து கிடைக்கும் என்பதையும் ஒப்புக்கொள்ளவேண்டியதே.
என்று நண்பனக இருக்கையில் பேசிய நடேசய்யர், *கங்காணிகள் ஆள் விழுங்கும் பிசாசுகள்” என்று எதிரணியிலிருந்து சாடியதைக் காண நேர்ந்தது. நடேசய்யரின் கை ஓங்க ஆரம்பித்தது.

Page 51
96
சம்பவங்கள் சாட்சியங்களாகின்றன
பெரிய கங்காணிகளின் அட்டூழியத்தை அழிப் பதில் தொடங்கிய அய்யரின் ஆரம்பம் மிகவும் நம்பிக்கையூட்டுவதாக அமைந்தாலும், அடுத்து, நிகழ்ந்தவைகள் மகிழ்ச்சியூட்டுவனவாக அமையவில்லை.
தோட்டப்புறங்களில் ஆரோக்கியமான தொழிற் சங்க வளர்ச்சிக்கு அந்நிகழ்ச்சிகள் உதவாமல் போனமை வருந்துதற் குரியதே. அய்யரின் ஆரம்பத்தோடு வியாபித்து எழுந்திருக்கக் கூடிய ஒரு மாற்றம் முழு உருப்பெருமல் போனமைக்கு அவைகளே காரணங்களாயமைகின்றன. அக்காரணங்களை இரண்டுவகைப் படுத்தலாம். ஒன்றை அக காரணம் என்றும், மற்றையதைப் புற காரணம் எனவும் கொள்ளலாம்.
புற காரணமாயமைந்தது நாட்டில் நிலவிய பொருளாதார மந்தம்.
இலட்சக்கணக்கில் தொழில் இழந்து வருவாயின்றி, அதன் காரணத்தால் அமைதியிழந்து நடுத்தெருவில் விடப்பட்ட மக்கள் கூட்டத்தினர், தமது வாழ்வில் மாற்றம் ஏற்படுத்தும் போராட்டம் ஒன்றுக்குத் தயாரான நிலையில் இல்லை. இதில் அய்யரால் செய் திருக்கக்கூடியது "தர்ம ஒடர்” வாங்கி இந்தியா வுக்கு அவர்களை அனுப்பிவைப்பதே ஆகும்.
g காரணமாயமைந்தது இந்திய உணர்வு. அய்யருக்கெதி ராக அது விசுவரூபம் எடுத்தது.
அய்யரின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் இந்தியரின் நலன் பேணுவதிலேயே இருந்தது என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது. அய்யர் அந்த உணர்வோடுதான் வளர்ந்தார். அந்த உணர்வையே மக்களிடம் வளர்க்கவும் செய்தார்; அந்த உணர்வு பாலில் சீனி கலப்பதைப்போல ஒன்றிணைந்து, எதற்கு எது இனிமை சேர்க்கிறது என்று பிரித்துணர முடியாத நிலைக்குச் செல்லவேண்டியது அவசியம் என்று அய்யர் உணர்ந்தார். அவரது மக்கள் அதை உணராமல் போனர்கள். சிங்களத் தலைவர்களுடன் நெருங்கியும், சிங்கள மக்களுடன் இணைந்தும் வாழவேண்டுமென்று அவர் வெளியிட்ட கருத்துக்கள் மக்களைக் கவரவில்லை. அதைவிட தீவிரமான எண்ணங்களை வெளியிட்டத் தலைவர்களை - அவர்கள்

97
சிங்கள இனத்தவராயிருந்த போதும் நம்ப ஆரம்பித்தனர். மேலும் அச்சிங்களத் தலைவர்களான என். எம். பெரேரா போன்ற வர்கள் இந்தியத் தலைவர்களைக் கனம் பண்ணினவர்கள். அவர் களின் பேச்சை சிங்களத்தில் மொழிபெயர்த்து மலைநாட்டில் அவர் களோடு சுற்றுப்பயணம் செய்தவர்கள் அவர்களே ஆவார்கள்.
அய்யர் அழிக்க ஆரம்பித்த பெரிய கங்காணிகள் முழுக்க முழுக்க தென்னிந்திய தமிழ்பேசிய இந்துக்களும், ராவுத்துக்களு மாவர், நாமெல்லாம் ஒன்று என்று அவர்கள் எழுப்பிய கூப்பாடு களுக்கு முன்னர் அய்யரின் கோட்பாடுகள் எடுபடவில்லை. அதை விளங்கிக்கொள்ளும் சக்தி மக்களுக்கு அந்த நேரத்தில் இல்லை.
இந்திய உணர்வு மண்ணுேடு கிளர்ந்தெழவேண்டுமென்று அய்யர் விரும்பிஞர். இலங்கையில் தொடர்ந்து வாழ்வதன் மூலமே ஒர் இந்தியன் இன்னுெரு இந்தியனுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் - உதவியாயிருக்கமுடியும் என்று அய்யர் நம்பினுர்,
மணிலாலை இலங்கையில் தொழில்புரிந்து தொடர்ந்துவாழச் சொன்னது அந்த நம்பிக்கையினலேயே. பிரேஸ்கேர்டிலை இலங்கை யில் தொடர்ந்து வாழவைக்க முனைந்ததும் ஆங்கில உணர்வு மண்ணுேடு கிளர்ந்தெழ வழியமைக்கவேண்டும் என்ற காரணத் திஞலேயே ஆகும். அவ்விதம் மண்ணுேடு கிளர்ந்தெழுந்த ஆங்கில உணர்வு கனடா, அமெரிக்கா என்ற புதிய நாடுகளையே உண்டு பண்ண உதவியிருக்கின்றது. இந்திய உணர்வை அவ் விதம் வளர்க்க அய்யர் முயன்றது பலனளிக்கவில்லை. அய்யர் இது குறித்து மிகவும் திடமான கருத்துக்களைக் கொண்டிருந்தார். கடல்கடந்த தீவுகளில் இந்தியர்கள் படும் துயர் குறித்து பல ரது கவனமும் பெறப்பட்ட வேளை யி ல் அணித்தாயுள்ள இலங்கையின் மீதே சட்டென்று கவனம் செல்வதுண்டு.
மகாத்மா காந்தி 1927 ஆம் ஆண்டிலும்,
பண்டித ஜவஹர்லால் நேரு 1939 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு விஜயம் செய்தனர். இந்த இருவரின் வருகையின் போதும் அய்யர் இந்தியர்களைப் பிரதிநிதித்துவம் பண்ணும் கெளரவ உறுப்பினராக நாடாளுமன்றத்தில் வீற்றிருந்தார். அச் சந்தர்ப்பங்களில் அய்யரின் மனுேபாவம் எப்படியிருந்தது?
மகாத்மா காந்தியை மாலையிட்டு வரவேற்றவர்களில் அய்யரின் பெயரைக் காணுேம். ஐ. எக்ஸ். பெரைரா, உம்பிச்சி, ஏ. ஈ. குணசிங்கா, ஜோர்ஜ் ஈ. டி. சில்வா, ஜாயா, டாக்டர் முத்தையா, ஈ. வி. ரட்னம் என்ற பெயர்களையே காணக்கிடைக்கிறது. மகாத்மாவின் பயண ஏற்பாட்டை பாதுகாப்புக் காரணங்களுக்காக இலங்கை சிங்களவர்களே மேற்கொள்ளவேண்டு மென்று ஏ. ஈ. குணசிங்கா கூறிய கருத்தினுல் அய்யர்

Page 52
98
ஒதுங்கிக்கொண்டார், என்று கருதுவதற்கு இட மில்லை. ஜவஹர்லால் நேருவின் வருகையின் போதும் அய்யரின் இந்த எட்டி நிற்கும் நிலையே வெளிப்படு கிறது. ஜவஹர்லால் நேருவுக்கு அளிக்கப்பட்டது வரலாற்றுச் சிறப்பு மிகுந்த வரவேற்பு. அதிலும் அய்யரின் பெயரைக் காணுேம்.
நேருவைப் பார்ப்பதற்காக இலட்சக்கணக்கான தொழி லாளர்கள் கம்பளியும் கையுமாகக் காத்துகிடந்தனர் தோட்டத் துப் பெண்கள் பஜனைபாடி நடனமாடி அவரை வரவேற்றனர். தோட்டத் துரைமார்கள் மாலையிட்டு வரவேற்புரை நிகழ்த்தினர் என்றெல்லாம் செய்திகள் பலவற்றை வாசித்துவிட்டு இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் சார்பாக பூரீ கோ. நடேசய்யரும், ஹெட் கங்காணிமார் சங்கத்தின் சார்பாக் பூரீ சண்முகமும் நேருஜிக்கு மலர்மாலை அணிவித்து வரவேற்புப் பத்திரங்களைப் படித்துக்கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய நேரு, இலங்கை யிலுள்ள உங்களை காங்கிரஸ் மறந்துவிட்டதென்று வரவேற்புப் பத்திரத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது. இது சுத்தத் தவறு" என்ற செய்தியை வாசிக்கும் போது அய்யரின் நிலைப்பாடு மேலும் தெளிவாகியது.
இந்தியனுன என்னைவிட் - இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்து அனுபவம் பெற்ற இந்தியஞன என்னைவிட - இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இந்தியனுக்கு அதிகமாக என்னத்தை அறிந்திட முடியும் என்பது அய்யரின் வாதமாகும்.
இந்தியத் தலைவர் ராஜாஜியும் தன்னிடம் இலங்கை யில் தொடர்ந்து வசிக்கின்றவர்கள் தாங்களாகவே போராடவேண்டும். இந்தியத் தலைவர்களை எ தி ர் பார்க்கக்கூடாது என்று கூறியதாக அரசாங்க சபை uai) அய்யர் குறிப்பிட்டார்.
இலங்கைவாழ் இந்தியர்களை முன்னேற்ற இந்தியா விலிருந்து ஆட்கள் வரவேண்டும் என்று எண்ணிக் கொண்டு காலந்தள்ளுவது. முட்டாள்கள் செய்யும் காரியம். தங்களைத் தாங்களே முன்னேற்றிக்கொள்ள வேண்டும். மரியாதையுடன் தலைநிமிர்ந்து இலங்கை வாழ் இந்தியன் இலங்கையில் நடமாடப் போகிருணு அல்லது ஒடுங்கிய வயிறும், கிழிந்த துணியும் கையில் சட்டியுமாக இலங்கையில் அ லை யப் போகிருஞ என்பது ஒவ்வொரு இந்தியனும் யோசிக்க வேண்டிய விஷயம், பிறர் கொடுத்துவரும் சுதந்திரம் நெடுநாள்

99.
நில்லாது. கிடைத்த சந்தர்ப்பத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தக்க பலமும், தைரியமும் அவர்களுக்கு ஏற்படாது. ஆகவே இலங்கைவாழ் இந் தி யன் ஒவ்வொருவனும் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்
என்ற அய்யரின் தர்க்கப்பூர்வமான வாதத்தை விளங்கிக் கொள்ளும் அளவுக்குத் தோட்டமக்கள் பக்குவப்படவில்லை. அல்லது அந்தப் பக்குவத்தை அடைய கூடிய அளவுக்கு அவர் களின் அதுகால வரையிலான வாழ்க்கை முறையும், தொழில் அமைப்பும் இடம் கொடுக்கவில்லை எனலாம்.
இந் தி யத் தலைவர்களைத் தெய்வமாகக் கருதியவர்கள் தோட்டமக்கள். அண்ணல் காந்தி பண்டிட் ஜவஹர்லால் நேரு, நேதாஜி ஆகியோரின் உருவப்படங்களை தெய்வபடங்களோடு இணையாக படம்போட்டு பூஜித்தார்கள் அந்த மக்கள். அய்யர் அந்த முறையில் பொதுஜனங்களின் ஆதரவை இழக் கத் தொடங்கிஞர்,
நேருவின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்தியன் காங்கிரஸ் இதற்கு மாருண் கொள்கையைக் கொண்டி ருந்தது. இந்திய காங்கிரஸ் பிரமுகர்களான ஜஞப் அப்துல் ரஹ்மான் (கேரளா) பூரீ ராமநாதன் (முன்னுள் சென்னை மாநில அமைச்சர்) பூரீ டி. எம். வர்கீஸ் (திருவாங்கூர்) என்பவர்களை 1939ல் அழைத்ததோடு இவ்விதம் காலத்துக்காலம் இந்தியத் தலைவர்கள் இங்குவரவேண்டியது அவசியம் என்றும் கருதியது கிரி ராஜேந்திர பிரசாத், சந்தானம், ராஜாஜி என்று பின் ஞ ல் இலங்கைக்கு இந்தியத் தலைவர்கள் வரத்தொடங்கியது அந்த அடிப்படையிலேயே ஆகும்.
இலங்கை இந்தியன் காங் கிர ஸ் நேருஜியின் ஆசி யோடும், அறிவுரையோடும் தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் நேருஜியால் அவ்வியக்கத்தின் சார்பாகத் தயாரித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நடேச ய்யர் கையொப்பம் இடவில்லை. அவரது நண்பர் சத்தியவாக்ஸ்வரய்யரே கையொப்பமிட்டிருந்தார். காங்கிரசின் தற்காலிகக் குழுவிலும் ஒராண்டு காலம் அங்கத்தவராயிருந்தாலும், கருத்து வேறுபாடு கொண்டிருந்தவராகவே இருந்தார். காங்கிரசிலிருந்து அய்யர் ஒதுங்க ஆரம்பித்த வேளையில், காங்கிரஸ்  ைஸ கங்காணிமார்கள் இழுத்துபிடித்துக்கொண் டார்கள். கங்காணி காங்கிரஸ் என்று கூறுமளவுக்கு அதில் அவர்கள்

Page 53
00
ஈடுபாடு கொண்டிருந்தனர். அவ்விதம் ஈடுபடுவதன் மூலமே அய்யரின் செல்வாக்கை அடக்க முடியும் என்பதைப் பல ரு ம் உணர்ந்து அவர்களுக்குப் பக்கப்பலமாக நடந்துகொண்டனர்.
'க ங் கா னி சகோதரர்களுக்கு இது ஓர் அருமையான சந்தர்ப்பம். கங்காணிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் மத்தியில் பிணக்கை உண்டுபண்ணுவதற்கு, கங்காணி முறை யை யே அகற்றுவதற்கும் சிலர் இடைவிடாது கிளர்ச்சி செய்துகொண்டு வருகிறர்கள் என்ற விண்ணப்பம் இலங்கை இந்தியன் காங்கிரஸ் தோற்றுவிக்கப்படுவதற்கு முன்னமையே - கணக்கிட்டுச் சொல் வதானல் 198 நாட்களுக்கு முன்பதாகவே செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் கல்வி அறிவும், வர்க்க உணர்வும் குறைந்திருந்த நிலையில், சிங் கள வகுப்புணர்வு வளரத்தொடங்கிய நிலையில் இந்திய உணர்வைத் தனக் குச் சாதகமாக வளர்த்தெடுப்பதில் நடேசய்யப் தவறிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். ஆரம்பத்தில் அவரை உயர்த்தியதே அந்த இந்திய உணர்வு தானே!
இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் தொழிற்சங்கங் களின் அறிமுகம் கடினமான ஒரு பணியாக - மகிழ்ச்சி அளிக்க முடியாத ஒரு கருமமாக இருந்தது" என்று எழுதிய தோட்டத் துரையாயிருந்த ஒருவர் இங்கிலாந்தில் போல இலங்கை யில் தொழிற்சங்கம் வளராமைக்கு அரசாங்கத்தைக் குறை கூறுகிருர் தொழிற்சங்கம் என்பது தொழிலாளார்களின் தொழில் சார்ந்த நல முயற்சிகளை முன்னெடுத்துச் செ ல் வதற்கான அமைப்பு என்றும், அந்த முயற்சிகளில் வெற்றிபெற்றதாலேயே இங்கி லாந்தில் தொழிற்சங்கங்கள் வெற்றிகண்டன. குறை ந் தள வு சம்பள நிர்ணயம் இல்லை; வீடு தரவேண்டிய கட்டாயம் இல்லை; வேலைதரப்பட வேண்டிய நாட்களோ, வேலை செய்ய வேண்டிய நேரமோ சட்டத்தால் நிர்ணயிக்கப்படவில்லை. சட்டமின்றியே இவர்களைத் தொழிற்சங்கங்கள் பெற்று தந்திருக்கின்றன. ஆரோக் கியமான அங்கத்தவர்களை அது உருவாக்க உதவியது" என்றும் கூறும் அவர், "இலங்கைத் தோட்டத்துறையில் இவை கள் அத்தனையும் அரசாங்கமே செய்து கொடுத்திருக்கின்றது. போதா ததற்கு பேறுகால சலுகை, இலவச உணவு, சம்பளாநிர்ணயம், பஞ்சப்படி என்ற இவைகளையும் கவனிக்கையில் தொழிற்சங்கம் பெற்றெடுப்பதற்கு வேறு என்ன இருக்கின்றது? தோட்டத்

01
தொழிற்சங்கங்கள் வெற்றிபெறவில்லையென்று பலராலும் கூறப் படுவது தொழிற்சங்கத்தின் குறைபாடு இல்லை தொழிற்சங்கம் தனது பிரசன்னத்தை உயிர்ப்பிப்பதற்கு சில்லரைப் பிரச்சனைகளை பெரிதுபடுத்தவேண்டிய நிலையிலேயே இருக்கின்றது என்று தனேது நூலில் எழுதுகிருர்,
தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளைப்பற்றிய டெம்பில்ஸ்ஸின் ஆய்வுக்கண்ணுேட்டம் சரியானதாக இருந்தாலும், அய்யரின் சட்டசபை உறுப்பினர் பதவியால் மேற்குறித்த அரசாங்க திருத்தங்கள் சில மேற்கொள்ளப்பட்டன என்பதுவும், தனித்து தொழிற்சங்கத்தால் சாதிக்கமுடியாததை தனது கெளரவ உறுப்பினர் பதவியை வைத்து அய்யர் சாதித்தார் என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
அரசாங்கசபைக்குத் தெரிவான காலபகுதியில் இவ்விதம் இலங்கை இந்தியன் காங்கிரசும், சமசமாஜக்கட்சியினரால் ஆரம் பிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர் சங்கமும் வேர்கொள்ள ஆரம்பித்ததை அய்யரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை.
1933ல் அய்யர் ஆரம்பித்தத் தொழிலாளர் சம்மேளனத் துக்குப் பிறகு இந்திய மக்களின் பிரச்சனைகளில் கவனம் செலுத் தும் தலைவர்களின் எண்ணிக்கைப் பெருகியது. ஆனல் அம்மக் களின் பிரச்சனைகள் வெற்றிகரமாக த் தீர்க்கப்படுவதிலும், வளர்ந்து வரும் இந்தியத் துவேசத்துக்கு ஈடுகொடுப்பதிலும் அய்யர் பெற்ற வெற்றியை மற்றவர்கள் காணவில்லை. அய்ய ராலும் பாரிய வெற்றியைப் பெற முடியாது போயிற்று.
1939ல் நேருஜி இலங்கை வந்து இந்திய மக்களை ஒரனிக்குள் திரட்ட முயன்ற வேளை இலங்கையில் ஒரு டஜனுக்கு மேற்பட்ட தலைவர்கள் இருப்பதாக டாக்டர் பட்டாபி சிதாராமையா குறை பட்டுக்கொண்டிருக்கிருர், இந்தியர் அனைவருக்கும் ஒரு தலைவ ரில்லையா? என்ற கேள்விக்குத் தன்னல் பதிலளிக்க முடியா து போனதாக இ . இ. கா. பிரதிநிதியாக இந் தி யா போய்வந்த எம். எம். தேசாய் குறிப்பிட்டிருக்கிருர்,
1935ல் நிறைவேற்றப்பட்ட தொழிற்சங்க சட்டம் தொழிலாளர்களைச் சங்கத்தில் சேர்வதை அனுமதித் திருந்தது எனினும், அச்சங்கங்கள் தங்களைப் பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று நிர்ப்பந்தித்தது.

Page 54
அவ்விதம் பதிவுசெய்து கொண்ட சங்கம் தனது அங்கத்தினர்களைப் பற்றிய விவரத்தையும் வெளிப் படுத்துதல் தேவைய்ர்யிருந்தது. இது ஆபத்தை விலைகொடுத்து விாங்வதற்குகொப்பானது என்பதை அறிந்த அய்யர், தனது சம்மேளனத்தைப் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.
இலங்கை இந்தியன் காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்டவுடன் தனது சம்மேளனத்தை வலுவுள்ளதாக்க நினைத்து 1940 ஜனவரி யிலேயே அய்யர் தனது சங்கத்தைச் சட்டபூர்வமாகப் பதிவு செய்தார். இலங்கை இந்தியன் காங்கிரஸ் 1940 மே மாதத்தில் தொழிலாளர் பிரிவு ஒன்றை ஏற்படுத்தித் தன்னைப் பதிவு செய்யும் வரை அதற்கெதிராக பதிவு செய்யப்படாத சங்கம் என்ற குற்றச் சாட்டை அய்யர் பயன்படுத்திஞர். ஆளுல் இவைகளினலெல்லாம் தொழிலாள மக்கள் தம்மிடமிருந்து விலகிக்கொள்வதை நிறுத்த முடியாது போயிற்று. 1939ல் அய்யரின் சம்மேளனமே மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்தது.
"சம்மேளனம் அட் டன், நுவரெலியா, பதுளை ஆகிய மலை நாட் டு நகரங்களில் தனது காரியால யங்களை வைத்து இயங்கியது. ஒவ்வொரு தோட்டத் திலும் அதன் ஏஜெண்ட்கள் இருந்தனர்.
இந் தி ய காங்கிரசோடு தொடர்பு கொண்டிருந்த காரணத்தால் இலங்கை இந்திய காங்கிரஸ் மிகுந்த செல்வாக்கோடு வளர ஆரம்பிக்கிறது. கண்டியில் தலைமையகத்தைப் கொண்ட சமசமாஜக்கட்சியின் தொழிற்சங்கமும் முக் கி யத் துவ ம் அடையத் தொடங்குகிறது.
என்ற கணிப்பு மிகவும் சரியா ய் அமைந்து, 1947ல் நாடாளுமன்ற தேர்தலில் அ ய் யரின் தோல்விக்கே இட்டுச் செல்கிறது.
இலங்கை தொழிற்சங்க வரலாற்றை ஆராய்ந்தால் தொழிற்சங்கத் தலைவர்களாய் வந்திருப்பவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் இருந்து வந்திருக்காததைக் காணலாம். ஓர்டி பிரவுண் தனது பிரசித்திப் பெற்ற தொழிலாளர்களின் நிலைகள் குறித் தெழுதிய அறிக்கையில் 1943ல் இதை வெளிப்படுத்தினர்
பொருளாதார விரிவுரையாளரான என். எம். பெரேரா, வழக்கறிஞர் கொல்வின் ஆர். டி. சில்வா, நீதவானின் மகன்

10
பீட்டர் கெனமன், மருத்துவ நிபுணர் டப்ளியூ. டி. டி. சில்வா, வழக்கறிஞர் பாலாதம்பு என்ற தொழிற்சங்கத் தலைவர்கள் தாம் பிரதிநிதித்துவப்படுத்திய தொழிலாளர்களின் தொழி லோடு சம்பந்தப்படாதவர்களே. ஏ. ஈ. குணசிங்காவும் ஆசிரியர் தொழில் புரிந்தவரே. இந்தப் பின்னணியில் பார்க்கும்போது நடேசய்யர் இந்தியன் என்ற உணர்வோடு தோட்டத் தொழிலாளர்களுக்குத் தலைமையேற்க ஆரம்பித்ததையும், அது இதயசுத்தமான செயல் என்பதையும் புரிந்துகொள்ளலாம்,
தோட்டப்புறங்களின் கொடுமைகளை எதிர்த்து நிற்கும் மஞேபாவத்துக்கான விதையைத் தெளித்த முதல்வர் நடேசய்யரே ஆகும்.
எதற்கும் அஞ்சாதவர்களாக கருமம் ஆற்றிய ஆங்கிலேயத் துரைமார்களை அதிரவைத்தவர் அய்யரே ஆவார். இந்த இரண் டையும் வெளிப்படுத்தும் மூன்று நிகழ்ச்சிகளைச் சற்று நோக்கு வோம்.
ஆங்கிலேயத்துரைமார்கள் தங்களை சர்வ வல்லமைபடைத் தவர்களாக நினைத்துக் கொண்டிருந்த ஆயிரத்துத் தொள்ளாயி ரத்து இருபத்தேழில் இந்திய ஏஜெண்ட்டாக இருந்தவர் எஸ். ரெங்கநாதன் ஆகும். இப்படி ஒரு நியமனம் இதற்கு முன்னர் செய்யப்படவில்லை. ரெங்கநாதனும் அய்யரும் மிக நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததைக்கண்டு ஆங்கிலேயத்துரைமார்கள் மருண்டனர். மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்ற நிலையில் இருந்தனர்.
மத்துரட்டைப் பகுதியிலுள்ள் தோட்டங்களுக்கு இந்திய அரசாங்க ஏஜென்ட் திடீரென வருகைதந்தார். தோட்ட ங் களுக்குள் சென்று தொழிலாளர்கள்ன் முறைப்பாடுகளைக் கேட்ட றிந்தார். செக்ரோலைப் பரிசோதனை செய்தார். துரைமார்கள் செய்வதறியாது திகைத்தனர். ஒவ்வொரு தோட்டத்திலும் அவருக் குரிய பட்டா நாற்பத்தொரு ரூபா உடனடியாக கொடுபட்டது ஏஜெண்ட் தனது கடமைகளை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு போன பின்னரே அவர் ஒரு போலி இந்திய ஏஜண்ட் என்று தெரியவந்தது கே. எம். ஏ. கே. அம்பலம் என்ற அந்த நபர் மூன்று வருட சிறை தண்டனைக்குட்படுத்தப்பட்டார். அய்யரின் பணிகளால் ஆங்கிலேயத்துரைமார்கள் எந்த அளவுக்கு நிலையிழந்து போயிருந்தனர் என்பதை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது.
தோட்டத் தொழிலாளர்கள் குடியர்கள் என்பதே பலரது நினைப்பாகும் இது உண்மையாகவும் இருக்கலாம். ஆசார சீலரான நடேசய்யர் இதை ஒத்துக்கொள்ளவில்லை. தோட்டத் தொழி லாளரும் குடியும் என்ற தலைப்பில் தமது பத்திரிகையில்

Page 55
104
"குடிவகைக் கடைகள் ஒழிந்தாலன்றி தொழிலாளி கள் முன்னேறுவது அசாத்தியமென இந்திய கவர்ண் மெண்ட் ஏஜன்ட் ரெங்கநாதன் தக்க ஆராச்ய்சி யுடன் சொல்லியுள்ளார்” என்று ஆரம்பித்து,
'மது க் கடைக்கு எதிராக தோட்டமக்களுடைய ஒட்டைப் பெறமுடியும் என்ற தனது நம்பிக்கையைத் தெரிவித்தார் ” சட்டசபையில் தீர்மானம் கொண்டு வர முயல்வேன் எ ன் ரு ர், தோட்டக்காரருடைய பேச்சைக்கேட்டு எல்லா வகைகளிலும் தொழிலா ளர்கள் பணிந்து நடக்கமாட்டார்கள். அந்தகாலம் மலையேறிவிட்டது." என்று எழுதிய அய்யர்
"மதுவிலக்குத் தொண்டர்கள் தோட்டங்களுக்குள் சென்று பிரசாரஞ்செய்யவேண்டும்?" என்று கேட்டுக்கொண்டார்.
அவரது வேண்டுகோள் பைத்தியக்காரத்தனமாகக் கருதப் பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் யாரும் எதிர் பாராத விதத்தில் அது பூதா காரமாய் வெடித்துச்சிதறிய ஒரு சம்பவத்தைக் காணலாம். இலங்கைத் தோட்டத் தொழிலாளர் களின் வரலாற்றில் ஒரு புதிய ஆரம்பமாகக் கருதப்படத் தக்க முறையில் பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள கொட்டி யாக்கொல்லைத் தோட்டத்தில் ஒரு நிகழ்ச்சி இடம் பெற்றது.
சூதாடுதலையும் மது அருந்துவதையும் த டு க்க விரும்பியத் தொழிலாளர்கள் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றும் நோக்கில் ஒரு சங்கத்தை அமைக்க வேண்டித் துரையிடம் அனு ம தி வேண்டினர். அப்படி ஒரு சங்கம் அமைப்பதற்கான அவசியம் எதுவுமில்லை எ ன் று கூறி தோட்டத் தலைமை கங்காணியின் அதிகாரத்தை வேரறுக்கும் முயற் சியே அது எ ன் று பறைதாற்றிய தோட்டநிர்
வாகம் தொழிலாளர்கள் வேண்டி நின்ற அனுமதி யைக் கொடுக்க மறுத்தது.
ஆயிர த் துத் தொள்ளாயிரத்து முப்பத்தொன்பதாம் ஆண்டு, ஏப்ரல் பதினேழாம் தேதி - பண்டிட் ஜவகர்லால் நேரு இந்த, மக்களுக்கென ஒரு பேரியக்கத்தை ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரேயே இத்தோட்டத்து மக்கள் எந்த விதமான வெளியாரின் தூண்டுதலுமின்றி வேலைநிறுத்தம் செய்

I 05
தனர். தோட்டத்தில் ஒர் அசைவு இல்ல. ஓர் அரவம் எழ வில்லை. தோட்டத்து மக்களின் மண உணவுகளை உயர்த்தி எழவைத்த இச்சம்பவத்தைக் குறித்து எழுதுகையில்.
"தலைவர்கள் இ ன் றியே அரசியல் நோக்கங் களின்றியே சமுதாய சீர்திருத்தத்திற்காக மக்கள் எழத் தொடங்கிவிட்டதைக் காணலாம்"
என்று அரசாங்கக் குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இதற்கு மூலகர்த்தா அய்யரே ஆவார் என்பதை யாரால் மறுத் துரைக்கமுடியும்?
பன்னிரெண்டாண்டுகளுக்கு முன்னரேயே அய்யர் ஏற்றுக் கொண்ட சவால் சரியான திசையிலேயே அமைந்திருந்தது என்பதை அறிந்துகொள்ளும் எவரும் அய்யரின் தீர்க்கதரிசனத் தைச் சந்தேகிக்க முன்வரமாட்டார்கள்.
1945ம் ஆண்டு சிங்கள - இந்தியத் தமிழர் வேறுபாடு அதிகரிக்க ஆரம்பித்த வேளை தோட்டமொன்றில் கண்டக்ட ராக கடமையாற்றிய சிங்கள இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதே தோட்டத்தைச் சேர்ந்த பெரிய கங்காணி ஒருவரைக் கொலை செய்வதற்கு காரணகர்த்தாவாக இருந்தார். உதவி தோட்டத் துரையும் அதற்கு உடந்தைய்ாக இருந்தார். இதை எதிர்த்துத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் புரிந்தனர். தோட்டநிர்வாகத் திற்கெதிராக எழுந்த இந்தப் புதிய குரலை - பதினறு ஆண்டு களுக்கு முன்னரேயே கண்டக்டரைவிட கங்காணி மேலானவன் என்று அய்யர் எடுத்துரைத்ததை எண்ணிப்பார்த்தல் அவசிய மாகும். நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கைக்கோரி நடந்த முதல் போராட்டமாக அது கருதப்பட்டது.
தோட்டத் தொழிலாளர்களை தேவையான விதத்தில் தகுந்தமுறையில் உரியதிசையில் நடேசய்யர் வளர்த்தெடுத்தார் என்பதற்கு இச்சம்பவங்கள் சாட்சிகளாகும்.
சம்பவங்கள் சாட்சியங்களாக உயிர்த்தெழுவதே தலைவர் களின் குளும்சத்தை வெளிப்படுத்தும் சாதனங்களாகும்.

Page 56
106
மீனுட்சி அம்மையாரின் மேதகு பங்களிப்பு
உலகில் சாதனைபுரிந்த ஒவ்வொரு ஆணின் பின்னலும் ஒரு பெண் மா பெரும் சக்தியாக இயங்கிவந்திருப்பதைக் காணலாம். சரித்திரத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் a 67G.
நடேசய்யரின் சக்தியாக விளங்கியவர் அவரது மனைவி யான மீனுட்சி அம்மையார் ஆவார்.
இருபதாம் நூற்ருண்டில் தமிழர்களின் வாழ்வின் உயிர்த் துடிப்பை ஏற்படுத்திய வ. வே சு. ஐயரின் மனைவி பெயரும் மீனுட்சி அம்மையார் என்பதே. *
மதுரையை ஆண்ட சொக்கநாதரின் துணைவியாயிருந்து தெய்வமாய் இன்று எழுந்தருளியிருப்பதும் மீனுட்சியம்மையார் என்பதே ஆகும். . . . .
தோட்டமக்களைப் பற்றிய பேச்சு வியந்துரைக்கப்பட்ட வேளையிலோ, அன்றி உதாசீனம் படுத்தப்பட்ட போதோ பெண் களைக் குறிப்பிடும் போது "கொழுந் தெ டு க் கும் மீளுட் சிகள்." என்றமைவதை அரசியல் பேச்சுக்களிலும், ஆய் வாளர்களின் பேச்சுக்களிலும், நடைமுறை உரையாடல்களிலும் காணக்கிடக்கிறது. இன்னும் இது மாறவில்லை.
தோட்டம் தோட்டமாகச்சென்று அய்யருக்குத் துணை யாக நின்று கருமங்கள் ஆற்றியவர் மீனுட்சி அம்மையாரே. அய்யரின் முன் கோபத்துக்கு ஈடுகொடுத்து, அவரது முரட்டுச் சுபாவத்தைக்கரைபுரண்டோடாது கட்டிக்காத்து காட்டாருகத் தடம் புரளவிடாது தடுத்து நிறுத் தி, தடைகளைத் தகர்த் தெறியும் சக்தியாக உருவாக்கியவர் மீனட்சி அம்மையாரே ஆவார்.
மீனுட்சி அம்மை பட்டுவின் அம்மா ஆவார். சாரநாதனின் மனைவியான பட்டுவின் அம்மா மீ ஞ ட் சி அம் மை யார். நடேசய்யரின் இரண்டாவது மனைவியாக வாழ்க்கைப்பட்டவர். மனைவியை இழந்திருந்த நடேசய்யரின் எல்லாவிதமான பணி களிலும் இணைந்து நின்றவர் மீனுட்சி அம்மையார் அய்யரின் உறவுக்காரியுமாவார்.

107
அம்மையாரின் தொடர்பு ஏற்பட்டதன் பின்ஞலேயே சபலமனம் கொண்டிருந்த அய்யரின் மனம் ஒருமுகப்படுத்தப்
tull-gi.
சாதனைகள் பலபுரியும் செயல்வீரனக அய்யர் உயரலாஞர்.
மீளுறட்சி அம்மை எழுதவும், கவிதை ஆக்கவும் வல்லவர்.
உடுமலை முத்துசாமிக் கவிராயரின் குடும்பத்தினருக்கு இந்த ஆற்றல் இல்லாமல் போகுமா? மேலும் மேடையில் பேசவும், பாடவும் கூடியவர்,
கணவனும் மனைவியும் இவ்விதம் பின்னிப்பிணைந்தாற் போல் ஒரே துறையில் ஈடுபாடு கொண்டிருப்பது அபூர்வத் திலும் அபூர்வம். அந்த விதத்தில் அய்யர் கொடுத்து வைத் 点5alfr。
மலைநாட்டின் மூலை முடுக்குகள் தோட்டத்து எல்லைகள்; பஸ்தரிப்பு நிலையங்கள்; மக்கள் கூடும் சந்தைகள் என்றெல்லாம் இருவரும் இணை ந் து நின்று மக்க ளோடு தொடர் பு கொண்டனர். ኳ
சட்டமிருக்குது ஏட்டிலே - நம்மள்
சக்தியிருக்குது கூட்டிலே
பட்டமிருக்குது வஞ்சத்திலே - வெள்ளைப் பவர் உருக்குது நெஞ்சத்திலே
வேலையிருக்குது நாட்டிலே - உங்கள்
வினையிருக்குது வீட்டிலே .
என்று அம்மையார் பாடிய தொழிலாளர் சட் ட் க் கும்மியில் மெய் மறக்காதவர் யாருமே இல்லை.
அம்மையார் தோட்டங்களில் தொழிலாளர்கள் மத்தியில் மட்டும் தான் பேசினர் என்றில்லை. நகர்ப்புற கூட்டங்களில் கலந்துகொண்டு அரசியல் பேச்சுக்கள் செய்வதிலும் சிறந்து விளங்கினர்.
முப்பதுகளில் இந்திய துவேசம் எல்லா மட்டங்களிலும் வெளிவர ஆரம்பித்திருந்தது. சலூன்களை நடாத்தியவர்கள் எல்லோருமே இந்தியர்கள். இவர்களைப் பாதிக்கும் விதத்திலும் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

Page 57
108
கொழும்பில் அகில இலங்கை மருத்துவர் சங்க மகாநாடு ஏ. ஈ. குணசிங்காவின் தலைமையில் நடைபெற்றது. 19.7.1936ல் நடைபெற்ற அன்றைய மகாநாடு புதிதாக நிறைவேற்றப் பட்டச் சட்டங்களைப் பற்றி ஆராய்ந்தது. '
"தோட்டங்களிலே சிறிய அறைகளிலே மூன்று குடும்பங்கள் வசிக்கும்படி செய்வதைச் சகிக்கும் அரசாங்கம், சவரம் செய்யும் இடத்திற்கு I25 சதுர அடிகள் தேவையென்று சட்டம் போடுவது வியப்பாயிருக்கிறது"
என்று கூறி அரசாங்கம் கொண்டுவந்த 28 புதிய விதிகளையும் கண்டித்துப் பேசினர். அம்மையார் அவர்கள்
அவரது பேச்சில் தெறித்து விழுந்த தர்க்க நியாயமும் கருத்துக் குவியலும் கூடியிருந்தோரை மெய்சிலிர்க்க வைத்தன. கொழும்பில் இந்தியரின் மாபெரும் கூட்டம் ஒன்று 27.5.1939ல் நடைபெற்றது. நாட் டி ல் ஏற்பட்டுவரும் நிலைமைக்குறித்து ஆராயவும், இலங்கைவாழ்’ இந்தியரின் எதிர்காலம் குறித்துச் சிந்திக்கவும் தலைவர்கள் ஒன்று கூடினர். கதிரேசன் கோவில் கம்பவுண்டில் கூடிய அக்கூட்டத்தில் ஜி. ஜி. பொன்னம்பலம், அஸிஸ், ஐ. எக்ஸ். பெரைரா, நடே சய் யர் ஆகியோரோடு அம்மையாரும் கலந்துகொண்டு அரசியல் விமர்சனம் செய்தார்.
இந்தியர்கள் ஏ கோபி த் த குரலில் g ரு நாள் போராடவேண்டும்
என்ற கருத்து முகிழ்த்தது இங்கு தான்.
பதுளையில் வ. ஞானபண்டிதன் கூட்டிய சமத்துவ மகா நாட்டில் மாதர் வரவேற்பு கமிட்டியின் தலைவியாக இருந்து காரியமாற்றினர். தன்னுடைய காரியங்கள் அனைத்திலும் தன் மனைவியும் பங்கேற்கவேண்டும் என்று ஆசைப்பட்ட சுப்பிரமணிய பாரதியார் வருந்தி அழைத்தாலும் அவரது மனைவி வெட்கப் பட்டு வெளியில் வருவதில்லை. கவிஞரின் புரட் சிக ர மா ன சிந்தனைகளை நண்பன போல் சமநிலையில் நின்று புரிந்துகொள்ள
அவர் முயன்றதில்லை. ,
நடேசய்யருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது.
அவரது கருத்துக்களைப்பகிர்ந்துகொள்ளவும், காரியங்களில் பங்கேற்கவும் அவரது மனைவி எப்போதும் தயாராயிருந்தார்.

109
பிரேஸ்கேர்டில் சம்பந்தமாக பொலிசாரின் கெடுபிடி களைப் பொருட்படுத்தாது கணவனும் மனைவியுமாக கூட்டங் களில் கலந்துகொண்டு உரையாற்றினர்.
லுனுகலையில் நடந்த கூட்டத்தில் நடேசய்யரின் மனை வியின் உடல் குறைவால் அவர்களுக்குக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது போய்விட்டது. இது பிரேஸ்கேர்டிலுக்குப் பெரிய குறையாகப் போய்விட்டது. அவர்களின் பேச்சுக்கள் அவையோரைக் கவரும் காந்த சக்தியாக இருந்ததை அவர் அவதானித்து வந்தவர் தானே. தனது பேச்சில் இதுபற்றி குறிப்பிடுகின்ருர். பிரேஸ்கேர்டில் சம்பந்தமாக காலிமுகத்திடலில் நடந்த கூட்டத்திலும், மீன ட் சி அம் மை கலந்துகொண்டு பேசினர்.
சாரநாதன இலங்கைக்கு வரச்செய்ததே அய்யர் தான். ஆனல் அவர் அய்யரைவிட்டுப் பிரிந்து போய்விட்டார். மது போதைக்கு அதிகமாக இடம்கொடுத்த அவரால் மது பழக்க மில்லாத அய்யரோடு அவ்வளவாக ஒத்துப்போக முடியவில்லை. மீனுட்சி அம்மை அந்த இடத்தைப் பூர்த்திச் செய்தார்.
1929ம் ஆண்டில் "தேசபக்தன்" தினசரியாக வெளிவர ஆரம்பித்தது. மீனுட்சி அம்மையார் பத்திரிகையைப் பொறுப் பேற்ருர், பிரதம ஆசிரியரும், சொந்தக்காரருமாகிய கெளரவ கோ. நடேசய்யருக்காக அன்னரின் மனைவி பூரீமதி கோ. ந. மீனுட்சியம்மாளால் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்படுகிறது என்ற குறிப்புடனேயே பத்திரிகை தினந்தோறும் வெளிவந்தது.
இந்த ஆண்டு அம்மையாரின் கட்டுரைகள் நிறை ய இப்பத்திரிகையில் இடம் பெற்றன.
"போதுமென்ற மனம்" "அளவுக்கு மிஞ்சிய செலவு" "சமையல் பாகம்” “இந்தியாவின் முன்னேற்றம்”
என்ற பல தலைப்புக்களில் அவரது கட்டுரைகள் எழுதப்பட் டிருந்தன.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதே காலப்பகுதியில் தனது அச்சுக்கூடத்தில் எழுத்துக்கோர்க்கும் பணியில் சில பெண் களைச் சேர்த்துப் பணிபுரியவும் வைத்தார். 1929ல் இம்முயற்சியை

Page 58
10
அய்யரின் ஒழுக்கத்திற்கு மாசுகற்பிக்கும் கைங்கரியத்துக்கு அவரது எ தி ரி கள் பயன்படுத்த ஆரம்பித்தார். எ னினும் அய்யரின் மனைவியே பொறுப்பாயிருந்து இவைகளை நிர்வகித்த தால் எதிரிகளின் எண்ணம் கைக்கூடவில்லை.
அய்யரின் ஆற்றல் அசுரத்தனமானதாக அடக்கி ஒடுக்கப்பட் முடியாததாக வளர்ந்தது, மீனுட்சி அம்மையாரின் கண்காணிப்பில் தான்.
பிரித்தானிய சாம் ராஜ் யம், வெள்ளைத்துரைமார்கள், தலைமைக்கங்காணிகள், சில இந்தியத் தலைவர்கள், நகரப்பிர முகர்கள், குணசிங்கா போன்ற சிங்களத் தலைவர்கள், பொலிஸ் கெடுபிடிகள் ஆகிய இத் த னை எதிர்ப்புக்களையும் சமாளித்து அய்யர் வெற்றிகரமாகப் பணியாற்றினர் என் ரு ல் அதற்கு காரணகர்த்தாவே மீனுட்சி அம்மையார் தான்.
காற்றிலேறி யவ் விண்ணையும் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே
என்ற கவிஞரின் வார்த்தைகள் எத்தனை அற்புதமானவைகள்
கொண்ட கணவன் பலமிருந்தால் கூரை மீதேறிச் சண்டை செய்யலாம் -
என்று செய்து காட்டியவர் அம்மையார் ஆகும்
நடாத்திய பத்திரிகைகள்
அய்யர் ஆற்றல் மிகுந்த எழுத்தாளர். பத்திரிகை ஆசிரி யராகவும், நூலாசிரியராகவும், வெளியீட்டாளராகவும் வெற்றி கரமாக காரியங்கள் ஆற்றியவர்.
இலங்கைக்கு வருவதற்கு முன்னரேயே இந்தியாவில் பத்திரிகை நடாத்தியும், நூல்கள் வெளியிட்டும் இத்துறைகளில் நிறைந்த அனுபவம் பெற்றிருந்தார்.
இலங்கையில் தனது செயற்பாடுகளை வெற்றிகரமாக்கு வதற்கு பத்திரிகைகளின் அவசியத்தை அவரைபோல உணர்ந் தவர் வேறு எவருமிலர்; அவற்றைப்பாவித்து பயன் பெற்ற திலும் அவரே முன் நிற்கிருர் .

1 11
தேசநேசன் (1922 - 1923) தேசபக்தன் (1924 - 1929) தொழிலாளி. (1929) தோட்டத் தொழிலாளி (1947) உரிமைப் போர், சுதந்திரப்போர், வீரன், சுதந்திரன் என்று தமிழிலும் சிட்டிஷன் (1922) ஃபோர்வர்ட் (1926) இந்தியன் ஒப்பீனியன் (1936) இந்தியன் எஸ்டேட் லேபர் (1929) என்று ஆங்கிலத் திலும் அவர் பத்திரிகைகளை வெளியிட்டிருக்கிருர், அப்பத்திரி ரிகைகளில் ஆசிரியராகக் கடமையாற்றியிருக்கிருர், லேக்ஹவுஸ் விலும் சிலகாலம் பணியாற்றியிருக்கிருர், −
இலங்கையில் வியாபார நோக்கில் தமிழ்த் தேசிய பத்திரி கைகளின் தோற்றம் 1930 களிலேயே ஏற்பட்டது. அப்படி முதலில் ஆரம்பமான வீரகேசரியின் முதல் ஆசிரியரான எச். நெல்லையா என்பவர் நடேசய்யரின் கீழ் தேசபக்தனில் 1927ல் கடமையாற்றியவரே ஆவார். வீரகேசரி ஆசிரியராகப் பிறகு வந்த நாகலிங்கம் என்பவர் அய்யருக்கு மருமகன் உறவாவார். இவ்விதம் தன்னுடைய எழுத்துக்களாலும், தனது தலைமையின் கீழ் பயிற்றப்பட்டவர்களின் எழுத்துக்களாலும் நடேசய்யர் இலங்கைப் பத்திரிகை உலகுக்கு அளப்பரிய பணிகளைச் செய் திருக்கிருர். அதைமிகவும் நுட்பமாக அவதானித்தவர் காலஞ் செலாற ஜி. ஜி. பொன்னம்பலம், எஸ். ஜே. வி. செல்வநாயகம் ஆவார்கள். இருவரும் பத்திரிகை ஒன்றின் மூலமே தமது கருத் துக்களை மக்களிடையேப் பரப்பமுடியும் என்று 1947ல் எண்ணிய போது அவர்களுக்கு நினைவில் வந்தது நடேசய்யரே ஆகும்.
அவர்கள் ஆரம்பிக்க விரும்பியது அரசியல் பத்திரிகை, அரசியல் எழுதுவதில் அய்யருக்கு இணையானவர்களாக வேறு எவரையும் அதுவரை அவர்கள் அறிந்திருக்கவில்லை. தங்கள் பத்திரிகையில் ஆசிரியர் பணி ஆற்றுவதற்கு அவரையேத் தெரிந் தெடுத்தனர். உண்மைதான், அரசியல் உணர்வையும், அரசியல் கருத்துக்களையும் மக்களிடையே பரப்புவதற்கென்று தானே அய்யர் பத்திரிகைகளை நடத்தினர்.
அய்யர் இலங்கையில் நடத்திய முதல் பத்திரிகை தேச நேசன். இது ஒரு கூட்டுமுயற்சி. ஏறக்குறைய ஒருவருடம் நின்று பிடித்தது. "சுயநலங்கருதிய கொழும்பில் உள்ள சில இந்திய சகோதரர்கள் எலக்ஷன் காலத்தில் அது தங்களுக்கு விரோத மாகிவிடுமோ என்று கருதி, அது இறப்பதற்கான முயற்சிகளைத் தேடினர், என்று எழுதிய அய்யர் "சிலர் தேசநேசன் இறந்த தற்குக் காரணங்கள் அவரவர்கள் மூளைவளர்ச்சிக்குத்தக்கப்படி சொல்லி பொதுஜனங்கள் என்னிடம் கொண்ட அன் பை மாற்றப் பார்க்கிருர்கள்" என்று அங்கலாய்த்தார்.

Page 59
தேசநேசனில் தோட்டத் தொழிலாளர்கள் பெரியகங் காணிகளைப் பற்றி எழுதிய இரண்டு கடிதங்களை வெளியிட்டிருந் தார். இந்த இரண்டு கடிதங்களும் கங்காணிமார்களை மிகவும் கேவலப்படுத்தின. கங்காணிமார்கள் இதை விரும்பவில்லை. பத்திராதிபர் என்ற முறையில் தனக்கிருக்கும் பத்திரிகா தர்மத் தின்படி இவைகளைத் தான் வெளியிட்டதாகக் கூறி அய்யர் அவர்களைக் சாந்தப்படுத்த முனைந்தாலும், அவர்கள் அய்யரின் சமாதானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
அய்யரின் இரண்டாவது பத்திரிகை முயற்சி தேசபக்தன் ஆகும். தேசபக்தனை அவர் திட்டமிட்டு ஆரம்பித்தார்.
இது தன்னை ஒரு தேசியத் தமிழ்ப் பத்திரிகையாகத் தெரிவித்துக்கொண்டது.
மாற்ருனுக்கிடங் கொடேல், ஏற்பதிகழ்ச்சி, வீடு
பெற நில், புத்துயிரால் . என்ற குறிப்பும் பின்னல் சேர்த்துக்கொள்ளப்பட்டது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வெளிவந்த சுடார்ந்த சித்திரமும் இதோடு இணைத்துக்கொள்ளப்பட்டது. 3.9.1924ல் இதன் முதல் இதழ் வெளிவந்தது. 27.9.1924 வரை வெளி வந்த பதினெரு இதழ்களிலும் நடேசய்யரின் கைவண்ணத்தைக் காணலாம். அந்த ஆண்டு இடம் பெற்ற சட்டநிரூபண சபைக்கு அய்யருக்கு ஆதரவுப்பெற வேண்டிய அவசியத்துக்காகவே தேச பக்தன் வெளியிடப்பட்டது என்ப்தே உண்மை தேர்தல் முடிந்த பிறகு வெளிவந்த இதழ் களி ல் நிறையச்செய்திகள் வெளி வந்தன. பின்னுல் இது தினசரியாக வெளி வந்து வரலாறு சமைத்தது. 1929ல் தினசரி ஏ டா க மிளிர்ந்த தேசபக்தன் பத்திரிகையே அய்யர் தொடர்ந்து நீண்டகாலம் நடாத்திய பத்திரிகையாக விளங்குகிறது. தேசநேசனைப் போலவே தேச பக்தனை ஆரம்பிக்கவும் அவரிடம் பணம் இருந்தது கிடையாது. நண்பர்களிடமும்
(வணிகர்கள், பெரிய கங்காணிமார்கள்) தொழிலாளர்களிடமும்
(நகர்ப்புற, தோட்டப்புற இந்தியர்கள்) இருந்து பணத்தைச் சேகரித்தே இவைகளை நடாத்தினர்.
தேசபக்தன் அய்யரின் சொந்தப்பத்திரிகை. அதன் கருத் துக்களுக்கு அவரே முழு உரிமைக் கொண்டாடினர்.

13
**தேசநேசன் ஒருவருக்கும் விரோதியல்ல. ஆனல் பொய் யனு க்கு விரோதி. அக்கிரமக்காரனுக்கு விரோதி, போலியர்களுக்கு விரோதி. வேஷக்கார னுக்கு விரோதி. அது போலவே தேசபக்தனும் உண்மையையே நாடி நிற்பான். சாதி மத வித்தி யாசம் பாரான். உண்மையான சமத்துவம், சகோ த ரத் துவ ம், சுதந்திரம் பொதுஜனங்களுக்கு உண்டாக உழைப்பான். பணக்காரர் ஜாதி, ஏழை ஜாதி என்று இப்பொழுது ஏற்படுத்தி வரும் ஜாதியை மனந்தளராது எதிர்ப்பான். தொழி லாளர் சார்பில் அன்புகொண்டு உழைப்பான்." என்று முதல் இதழில் எழுதினர்.
கொழும்பு சந்தா தேசபக்தனுக்கு ஒன்பது ரூபா ய், அதைப்பற்றி பின்வருமாறு எழுதினர்.
'நாள் ஒன்றுக்கு 3 சதம். ஒரு சிகரெட் வாங்கு வதை நிறுத்தி தேசபக்தனை ஆதரிக்கமாட்டீர்களா? வெற்றிலை பாக்கை இரண்டு தடவை நிறுத்தி ஓர் பத்திரிகை வாங்கமாட்டீர்களா? இரண்டு பேருக்கு தர்மம் கொடுத்தோ மென் றெண் ணி நாள் ஒன்றுக்கு 3 சதவீதம் கொடுத்து பத்திரிகையை ஆதரிக்க மாட்டீர்களா?
என்று நயம்பெற ஆதரவு தேடினர்.
பத்திரிகை அதிலும் தமிழ்ப்பத்திரிகை இல்லாத காரணத் தால் ஆங்கிலம் அறியாத தமிழர்கள் நாட்டு நடப்பைப்பற்றி எந்தவிதமான அறிவுமில்லாதவர்களாக இருப்பதாக உணர்ந்த அய்யர் இப்பத்திரிகையில் தேர்தல் பகுதி” என்றும் 'ஒர் கடற் கரை சம்பாஷணை” என்றும் தொடர்ந்து எழுதிஞர்.
தமிழ் மக்களுக்கு அர சி ய ல் கருத்துக்களைப் பரப்பு வதிலும், நாட்டு நடப்புக்களை வெளிப்படுத்துவதிலும் அய்யரின் பத்திரிகை அளப்பரிய சேவைபுரிந்தது. அக்காலத்தில் அரசியல் நடவடிக்கைகள் எல்லாம் ஆங்கிலத்திலேயே நடைபெற்றன. சிங்கள மக்களும் இப்படியான இக்கட்டான நிலை மை யே ருந்தது. நாட்டு நடப்புக்களை மக்கள் புரிந்துகொள்கிருர்களில்லை என்று உண ர் ந் த தகாநாயக்கா அ ர சாங் க ச பை யி ல் “ஹன்சார்ட்"டை சுதேச மொழியில் பதிப்பித்து கிராமங் களுக்குப் பரப்பவேண்டும் என்று ஒரு தீர்மானமே கொண்டு வந்தார்.

Page 60
114
*என்ன நடக்கிறது என்று மக்கள் அறியவேண்டும். ஒரிரண்டு பத்திரிகைகள் அதை செய்யாது. ஒரு சிலரின் சுயநலத்திற்காக அவைகள் நடத்தப்படு கின்றன. வேண் டு மென்றே இச் செய்திகள் இருட்டடிக்கப்படுகின்றன. பத்திரிகைத் தேவையை நாங்கள் பலரும் உணர்கிருேம். தங்கள் பிரதிநிதி என்ன செய்கிருர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டு மா ஞ ல் பத் தி ரி கைகள் அவசியம்"
என்று ர. ரட்னுயக்கா - அத்தீர்மானத்தை ஆதரித்துப் பேசுகையில் குறிப்பிட்டார்.
1945ல் சிங்களத்தலைவர்கள் இப்படி கருத்துக்கள் வெளி யிடத் தொடங்குவது மக்கள்பால் அவர்களுக்கிருந்த ஈடுபாட் டையே காட்டியது. மக்களின் ஆதரவைத் தொடர்ந்து பெறு வதற்கான வழிமுறையாக கருதப்பட்டது. இதற்கு இருபத்து மூன்று ஆண்டுகளுக்கு மு ன் பே இவைகளையெல்லாம் நன்கு சிந்தித்துப் பத்திரிகைகளை ஆரம்பித்த அய்யரின் முக்கியத்துவம் இந்தப் பின்னணியில் மேலும் அதிகமாகிறது.
"பத்திரிகைகளுக்கு வியாசங்கள் எழுதிவருவது ஒர் தேச கைங்கிரியம் என எ வரும் கொண்டால் என்னைவிட தேச கைங்கரியத்தில் ஈடுபட்டவர்கள் கிடையாது என்று சொல்லலாம். ஏனெனில் பத்திரிகை எழுதும் தொழிலையே நான் மேற்கொண் டிருப்பவன்" என்று *எனது வாழ்க்கையின் நோக்கம்” என்ற கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். தேசபக்தனை வெற்றிகரமாக நடாத்து வதற்கு முன்பு நடாத்திய வர்த்தகமித்திரன், தேசநேசன் என்ற ஏடுகளில் கிடைத்த அனுபவம் அவருக்கு உதவிற்று.
"நான் பக்தன், தேசபக்தன், அனைவருக்கும் பக்தன். இந்தியர்களின் பக்தன், இலங்கையர்களின் பக்தன், இதர நாட்டினரினதும் பக்தன், குறிப்பாக ஏழை மக்களின் பக்தன். முன் நிலவியவர்கள் மித்திரன கவும், நேசனுகவும் இருந்தார்கள். ஆனல் தற் பொழுது பொதுமக்களுக்குத் தொண்டர்க்குத் தொண்டனய் பக்தி விநயத்துடன் பணிசெய்துவர பக்தன் நான் வெளிவருகிறேன்."

II5
என்று அவர் எழுதிய வரிகள் அதற்கு சான்ருகும்.
எழுதுவதில் அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருந்ததோ, அதே அளவு ஆர் வம், செயல்புரிவதிலும் அவருக்கிருந்தது. அவர் செயற்கரிய செயல்களையெல்லாம் செய்து காட்டிய தீரர்.
"நான் அதிகம் சொல்லத் தேவையில்லை. எழுத வேண்டும் என்று எண்ணினல், பக்கம் பக்கமாக எழுதமுடியும். எழுத விஷயங்களுமுண்டு. ஆனல் எழுதியபிறகு அதனை வாசித்து திருப்தியடைவதை விட ஏதாவது நன்மை செய்யும் துறையில் இறங்க வேண்டும் என்பதே என் எண்ணம். அதற்கு எனக்கு வசதி செய்து கொடுப்பீர்களா?"
என்று எழுதியவர், அடுத்த இதழிலேயே
"எனக்குச் சட்டசபை பெரிதல்ல, பத்திரிகைதான் பெரிது. நான் சட்ட சபைக்குப் போய் செய்யக் கூடிய நன்மையைவிட பன்மடங்கு அதிக நன்மை பத் திரிகை யால் ஏற்படுத்தக்கூடும்"
என்று எழுதிஞர்.
இந்த இரண்ட்ையுமே - சட்டசபையும், பத்திரிகையையும் -
மக்கள் மேன்பாட்டுக்கு பயன்படுத்துவதில் அவர் வெற்றியீட்டிஞர்
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
அய்யரின் ஒவ்வொரு எழுத்தும் தொழிலாளர்களைப் பற்றி யதாகவே இருந்தது. தொழிலாளர்கள் தேசபக்தனுக்குப் பணம் கொடுத்ததை நினைவி ல் வைத்திருக்கவேண்டி தனது அச்சுக் கூடத்துக்கு தொழிலாளர் அச்சுக்கூடம் எனப் பெயர் கொடுத்தார். இது கொழும்பு கன்னரத்தெருவில் இருந்து இயங்கியது.
1924ல் முதலாவதாக நடந்த சட்டநிரூபணத் தேர்தலில் - இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்னர் - தோற்றவுடன் அய்யர் துவண்டாரில்லை. உடனே "மூலையில் குந்திய முதியோன் அல்லது துப்பறியும் திறம்” என்ற தலைப்பில் ஒரு நாவலை எழுதிஞர். இது 3.10.24 தே ச பக் த னில் ஆரம்பமானது. நாவல் என்ற ரூபத்தில் தனது உள்ளக்கிடக்கைகளை வெளியில் கொட்டித் தீர்ப் பதற்காக இந்தத் தொடரைப் பயன்படுத்தினர் என்பதே சரி. இது இவருக்கு கைவந்த கலை.

Page 61
தேசநேசனை ஓர் பெண்மணியாக வைத்து, அதன் சரித் திரத்தை, ஓர் நாவல் ரூபமாக எழுதுவதாகவும் அதில் அதிக விட யங் கள் வெளிப்படுத்தப்படும் என்றும்
இவர் 15.9.24ம் தேதியிட்ட தேசபக்தனில் குறிப்பிட்டிருப்பது இதை உறுதிப்படுத்தும்.
1929ல் தேசபக்தன் தி ன ப் பதிப் பாக வெளிவந்தது. இலங்கையில் வெளிவருகிற ஒரே தமிழ் த் தினசரி என்ற பெருமையையும் இது பெற்றது. ஆறு பக்கங்களில் ஏராள மானச் செய்திகளைத் தாங்கி வெளிவந்த இப் பத் தி ரி கை கொழும்பில் 3 சதத்துக்கும், இலங்கையில் பிற இடங்களில் 5 சதத்துக்கும் விற்கப்பட்டது. இதற்கான காரணம் பத்திரிகை யைப் பல பகுதிகளுக்கும் கொண்டு செல்வதில் இருந்த சிரமமே யாகும.
பத்திரிகைகள் அய்யரைப் பொறுத்தவரை அச்சில் வார்த்த ஆயுதங்கள். கூனி குறுகி கிடந்த மக்களை - ஏணிப்படிகளாகப் பிறர் ஏறிமிதிக்கப் பயன்பட்ட மக்களை - நாடி பிடித்து அழைத்துவர அவைகளை அவர் பயன்படுத்தினுர்,
தான் நடத்திய பத்திரிகைகளில் ஏராளமான வாசகர் கடிதங்களை வெளியிடுவார். அவைகளில் பல அவரால் எழுதப் பட்டவைகளே. வெவ் வேறு பெயர்களில் அவை வெளிவந் திருக்கும். சில உண்மையாகவே வாசகர்களால் எழுதப்பட்டவை களாக இருக்கும். தோட்டங்களில் நடக்கின்ற கொடுமைகள் துரைமார்களின் அலட்சியம், கங்காணிமார்களின் கயமைகள், உத்தியோகஸ்தர்களின் பேடித்தனங்கள் என்று அவைகள் பல வற்றை வெளிப்படுத்தின.
தேர்தல் மோசடிகள், அரசியல் சூழ்ச்சிகள், தலைவர்களின் ஏமாற்று வித்தைகள் என்பவைகளையும் அ வை கள் வெளிப் படுத்தத் தவறவில்லை. அய்யர் இதைப் பிரமாதமாகப் பாவித் தார். மாதிரிக்கு ஒரு கடிதம்:-
*1. கிளார்க்கும், கண்டாக்கும் சேர்ந்து எங்களை துன்புறுத்துகிருரர்கள். இவர்களுக்கு சிகரெட்டின், பிரண்டி முதலிய சாமான்கள் வாங்கிக் கொடுத்து வர வேண்டும். இல்லாவிடில் எங்களுக்கு நியாய மாய்க் கிடைக்கக்கூடிய சம்பளம் கி டை யாது. தங்களுடையமிருக இச்சைக்கு உடன்படாத பெண்

17
களுடைய பாடும் இப் படித்தான். எங்கள் தோட்டத்துரை நல்லவர் தான், ஆனல் இவர்கள் இங்கிலிஸில் பேசி அவருக்கு எங்களுடைய விஷயம் தெரியாதபடி செய்து விடுகிருர்கள். தோட்டத்தில் நடக்கும் உண்மை விஷயங்கள் துரைக்குத் தெரிந் தால் இவர்களைத் தோட்டத்தில் வைக்க மாட்டார். ஆகையால் தயவுசெய்து இவ்விஷயத்தைப் பெரிய துரைக்கு எழுதி எங்கள் குறைகளை நிவர்த்திக்க வேண்டுகிருேம். 9 அம்பாதன்னையைச் சேர்ந்த ஆறு தொழிலாள்ர்கள். (தேச பக்தன் - 19.12.1924) V−
குணசிங்காவோடு கருத்து வேறுபாடுகொண்ட காலப் பகுதியில் தேசபக்தனில் முன்பக்கத்தில் வெளியான கார்ட்டுன் களும், கவிதைகளும் கண்டன மொழிகளும் அய்யரின் நெஞ் சுரத்துக்கு சான்று பகரும் தன்மையுடையன.
தொழிலாளர் தொல்லை
குணசிங்கம் துரையே - எங்கள்
பணமெங்கே உரையே
ஏளை பிழைப்பதற்கு
ஏற்பாடு செய்வேனென்று
ஆளைவிட்டு மிரட்டச் சொல்லி அஞ்சுசதம் வாங்கினிரே.
முன்னே கொடுத்ததற்கு
முழுக்கணக்கும் சொல்லவேணும்
பின்னேதும் சொல்வீராணுல்
பிழைவந்து சேரும் சொன்னுேம்
(தேசபக்தன் 9.1.1929)
இந்து மக்கள் சிந்தும் வேர்வை ரெத்த காசுதானே ம அடா இரவு பகல் உறக்கமின்றி ஏய்த்துப்பறிக்கலாமா?
(தேசபக்தன் 5.2.1929)

Page 62
18
குணசிங்காவின் காடைத்தனத்துக்குப் பலரும் பயந்திருந்த சமயம்
"ஏதாவது கஷ்டம் நேருங்காலத்தில் நாமெல்லாம் சகோதரர்கள், இந்தியர்கள் சகோதரர்கள் அவர் களும் தங்களுடன் ஒத்துழைக்கவேண்டும். இப் பணத்தை நிர் வகிக் கும் விஷயத்திலும் இந்திய னுக்கு உரிமையில்லை. இந்தியர்களுக்கு சாதகமாக வேலை செய்வது போலிருந்தது அவர்கள் வாயில் மண்போட்டுக் கொண்டுவரும் இந்த ஆசாமிக்கு ஆதரவு பயத்தாலே அல்லாது வேறல்ல என்பதை மறக்கலாகாது. ஏணியை உபயோகிப்பது போல் இந்தியர்களை உபயோகிக்கிருர், நமக்கென்று ஒரு சங்கம் வேண்டும்"
என்று பத்திரிகை தலையங்கம் தீட்டிய அய்யர்:
ஒற்றுமையில்லாமை  ைஉங்கள் நிலை ஊழலாய்ப் போகுதையோ சற்று யோசித்துத் தானே இந்தியரே சங்கம் நிறுவுங்களே!
காட்டிக் கொடுத்துவிட்டு க பின்வாங்கி காலங் கழிப்பதிலும் நாட்டைவிட் டோடுவதே - இனிமேல் நலமென்று கூறுவமே!
ஒரு ரோமம் போனுலும் - கவரிமான் உயிர்வாழா தென்பார்கள் மிருக குணத்தைவிட் = நங்குணம் மிகவும் குறையாமோ!
ம்ாமிழந்து வுயிர் - வாழாமை மதியென்பார் பெரியோர் ஏனதை மறந்து இலங்கையில் ஈனத்தொழில் புரிவீர்!
சாண் வயிர் தானே - நமக்கு சரீரமெல்லாம் வயிருே ஊண் உண்டு வாழ்வதிலும் - நாம் உயிர் துறக்க லாமே!
(தேசபக்தன் 10,1.1929)

119
இக்காலப்பகுதியில் இந்தியாவில் கூட புத்தகப் பிரசுரத் தொழில் அவ்வளவாக பிரபல்யம் அடைந்திருக்கவில்லை. பிரசுரத் தொழிலை ஒரு தொழிலாகக்கருதி பணம் மு த லீ டு செய்ய எவரும் முன்வருவதில்லை. எனவே இந்தக் காலப்பகுதியில் பிர சுரத் தொழிலிலும், பத்திரிகை வெளியீட்டிலும் ஈடுபட்டுழைப் பதற்கு ஒருவருக்கு எந்த அளவுக்கு இதயசுத்தியும், இலட்சிய வேட்கையும் இருந்திருக்கவேண்டும்? Y.
1930 வரையிலும் இலங்கைவாழ் இந்திய மக்களிடையே விழிப்புணர்வு தோன்றியதற்கு இந்தியர்கள் நடாத்திய பத்திரி கைகளே காரணம்; இந்தியாவிலிருந்து வெளிவந்த பத்திரிகை களும் இதில் பங்கேற்றன, இலங்கையில் இதை முன்னின்று நடத்தியவர் அய்யரே ஆவார்.
அவரின் வெற்றியைக் கண்டு இலங்கையில் வேறு சில பத்திரிகைகளை சில இந்தியர்கள் தோற்றுவித்தனர். இலங்கை = இந்தியன் (1928) தொழிலாளர் தோழன் (1928) என்பவை அவைகளில் குறிப்பிடத்தக்கவை. −
அய்யரை எதிர்த்து நின்ற இந்தியர்களும் பத்திரிகைகளை ஆரம்பித்தனர். இந்தியன் (1924) சத்யமித்திரன் (1927) என்பவை இவைகளில் அடங்கும். ஊழியன் (1931) என்ற பத் தி ரி கை தோட்டத்துரைமார்களின் நிதி உ த வி யோ டு அய்யருக்கெதிராகப் பிரச் சா ர ம் மேற்கொள்ளப்படுவதற்கு என்றே ஆரம்பிக்கப்பட்டது. இவைகள் அத்தனையின் தோற்றத் திற்கும் அய்யரே மூலகர்த்தாவாக விளங்கினர்.
இக்காலத்தில் மலையாளப் பத்திரிகைகளும் இந்தியர் களால் இலங்கை யில் தோற்றுவிக்கப்பட்டன. 1925க்கும், 1941க்கும் இடைப்பட்டப் பகுதியில் வெளிவந்த 23 மலையாளப் பத்திரிகைகளுக்குக் குறிப்புக்கள் உள்ளன. இலங்கையில் 1908ம் ஆண்டு இந்திய பாலபோதினி என்ற பெயரில் ஒரு தமிழ் பத்திரிகை வந்ததாகக் குறிப்பு ஒன்று தெரிவித் தாலும் அதுகுறித்து மேலதிக விபரம் எதுவும் கிடைக்கவில்லை.
மக்களிடையே வாசிக்கவும், கிரகிக்கவும் பழக்கம் ஏற் பட்டது. எழுதவும், தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் பழகத்தொடங்கினர்.

Page 63
120 .
1930க்குப்பிறகு தேசிய மட்டத்தில் வீரகேசரி, தினகரன் என்ற பத்திரிகைகள் பணியாற்ற ஆரம்பித்தன. அய்யர் அப் பத்திரிகைகளின் மூலம் தனது கருத்துக்களை வெளியிடலானர். சில பிரச்சனைகளில் சூடு ஏற்படும் போது, சில சமயங்களில் பொதுசன அபிப்பிராயத்தை உண்டுபண்ண நேரும் போதும் தேவைக்கேற்ப இடைவெளிவிட்டு சில ஏடுகளை அய்யர் நடாத் தியதுமுண்டு.
அய்யர் இந்தியர்களைப்பற்றிய கருத்துக்களை இந்நாட்டில் உள்ள எல்லோருக்கும் அறியவைப்பதில் எப்போதும் முன் நின்றவர். ஆங்கில பத்திரிகையை நடாத்தியது அதனுலேயே தான்.
லாரி முத்துக்கிருஷ்ணுவுடன் இணைந்து சி ட் டி சன் ஏட்டையும்.
குணசிங்காவுடன் இணைந்து ஃபோர்வர்ட் ஏட்டையும் நடாத்திய அய்யர் இந்தியன் ஒப்பீனியன் ஏட்டை இந்தியர்களின் கருத்தையும் செயற்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக தனது அரசாங்க சபை காலத்தில் நடாத்தினர். இந்தியன் எஸ்டேட் லேபரர் ஏட்டை கொள்கை பரப்பும் இதழாக நடாத்தினர்.
வீரன் என்ற பத்திரிகை நடாத்தியபோது அய்யர் மஞ்சள் பத்திரிகையின் தரத்துக்கு அதைக் குறைக்கநேர்ந்தது. பெரிய கங்காணிகளின் நிர்த்தாட்சன்யமான எதிர்ப்பைச் சமாளிக்கவும், இந்தியன் என்ற பத்திரிகையில் தனக்கெதிராக பாவிக்கப்பட்ட அதே முறை தாக்குதலை தனது எதிரிகளின் மீது பாவிக்க அய்யர் தீர்மானித்து இப் படி நேர்ந்திருக்கலாம். அய்யர் "பிளாக்மெயில்' செய்து மனிதர்களைப் பயமுறுத்தி காரியம் சாதிப்பதில் நிபுணர் என்ற குற்றச்சாட்டுக்கு இது வலுவூட்டுவ தாயமைகிறது.
சுதந்திரன் என்ற பெயரில் தமிழரசுக்கட்சியின் அரசியல் ஏடாக வெளிவந்த பத்திரிகையின் முதல் ஆசிரியராக இருந்தவர், நடேசய்யர் தான் என்ருலும், இதே பெயரில் ஏற்கனவே நடேசய்ய்ர் பத்திரிகை ஒன்றை நடாத்தி இருக்கிருர், தேசபக் தனில் நடேசய்யரின் கட்டுரையும் (15.9.1924) சத்யமித்திரனில் ஏ. எஸ். ஜோன் என்பார் எழுதிய குறிப்பும் (29.10.1927) இதை வலியுறுத்துகின்றன. செல்வநாயகம், பொன்னம்பலம் என்ற தமிழ்த்தலைவர்கள் புதிதாக பத்திரிகை ஒன்றை ஆரம்பிப்பதில் -

12
குறிப்பாகச் செய்தித் தாளாக அதைப் பதிவுசெய்து கொள் வதில் சிரமம் அனுபவித்தபோது, தான் நடாத்தியிருந்த ஏட்டின் பெயரையே இவர்களையும் பாவிக்க நடேசய்யர் உதவினர், என்று கூறப்படுவது தவறில்லை என்றே முடிவு செய்யவ்ேண்டி யிருக்கிறது.
அய்யர் கடைசியாக ஆசிரியர் பணியாற்றிய பத்திரிகை *சுதந்திரன்’ ஆகும். அப்பத்திரிகை காரியாலயத்திலிருந்து தான் "தோட்டத் தொழிலாளி" என்ற ஏட்டையும் வெளியிட்டார்.
அய்யர் கடைசியாக வெளியிட்ட பத்திரிகை இதுவே ஆகும்.
தொழிலாளர் கண்விழித்து தங்கள் காரியங்களைத்
தாங்களேசெய்துகொள்ள அறிவூட்டும் பத்திரிகை” என்று தன்னை விளம்பரம் பண் ணிக் கொண்ட "தோட்டத் தொழிலாளி”
அச்சம் தவிர்; அடிமைப்படேல்; தன்கையே தனக்
குதவி
என்ற மூன்றையும் தன் நெறி உரைகளாகக் கொண்டிருந்தன.
நெறி உரை என்பது பத்திரிகையின் குறிக்கோள் ஆகும். பத்திரிகை உயிர்ப்பெற்றதன் அவசியத்தை எடுத்துரைப்ப தாகும்.
தேசபக்தனுக்கும், தோட் ட் த் தொழிலாளிக்கும் நீண்ட இடைவெளி உண்டு. 1924 - 1947 என்ற கால இடைவெளியில் இருபத்து மூன்று ஆண்டுகள் உருண்டோடியிருக்கின்றன. இந்த இடைவெளியின் போது நடேசய்யர் இலங்கையில் தொடர்ந்து வசித்தார். இலங்கையில் இடம்பெற்ற அரசியல் மாறுதலுக்கும், பொருளாதார நெருக்கடிக்கும் இந் தி ய வெறுப்புணர்வுக்கும் முகம் கொடுத்தார். எனவே, அவர் தெரிந்தெடுத்தப் பத்திரிகை நெறி உரைகளில் அர்த்தமிருக்காமல் இருக்காது. .
மாற்ருனுக்கிடங்கொடேல் - அடிமைப்படேல் ஏற்பதிகழ்ச்சி - தன்கையே தனக்குதவி வீடுபெற நில் "அச்சந்தவிர்
தேசபக்தனில் இடம்பெற்ற
ஏற்பதிகழ்ச்சி’ - ஒளவையார் அருளியது. தோட்டத் தொழிலாளியில் இடம் பெற்ற
'அச்சந்தவிர்" பாரதியார் அருளியது. மற்றவைகள் எல்லாம் அய்ய ராக உருவாக்கிக்கொண்ட சொற்ருெடர்கள்.

Page 64
122
இரண்டு பத்திரிகைகளிலும், இடம்பெற்ற முதலிரண்டு சொற்ருெடர்கள் ஒத்தக்கருத்தனவே. கடைசி ஒன்றிலேயேவித்தி யாசம் தெரிகிறது. வீடுபெற நில் என்பது செய்கையின் இறுதி யைக் கணித்த நம்பிக்கையூட்டுந் தொடர். அச்சந்தவிர் என்பது செயலின் ஆரம்பத்துக்கு நம்பிக்கையூட்டும் அறிவுரைத் தொடர்.
முடிவைப்பற்றிச் சிந்தித்தவர்கள் ஆரம்பத்தைக் குறித்து அதைரியமடைந்தது காலத்தின் கொடுமையே ஆகும்.
ஒற்றுமையிழந்து, நம்பிக்கைச் சிதைந்து, எதிர்காலம் என்ன ஆகுமோ என்று தடுமாறி கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்துக்கு நம்பிக்கையூட்டி அச்சம் அகற்றவேண்டியதே பிர தான பணியாக அமைந்தது.
திரு. வி. க. இந்தியாவில் நட்ாத்திய தேசபக்தனைப் போலவே கோ. நடேசய்யர் இலங்கையில் நடாத்திய தேசபக்தன் அதன் ஆசிரியருக்கு அழியாப் புகழைக் கொடுத்திருக்கிறது.
தேசபக்தன் ஏட்டில் தான் அய்யரின் அரசியல் தீவிரம்
அரசியல் கட்டுரைகளில் அய்யரின் அனல் வேகத்தைக் காணமுடிகிறது.
அரசியல் எதிரிகளையும், சமூகவிரோதிகளையும், சுயநலக் கும்பல்களையும் தோலுரித்துக்காட்டிய கடிதங்களை காணமுடி கிறது.
டாக்டர் மணிலாவின் தொடர் கட்டுரைகளும் (ஏடனில் இந்தியர்) உடுமலை முத்துச்சாமி கவிராயரின் கவிதைகளும் (சத்யாக்கிரகப் போருக்கு அழைப்பு) வீரகேசரி ஆசிரியராகப் பின்னல் உயர்ந்த எச். நெல்லையாவின்
விளக்கக்கட்டுரைகளும் நிறையவே இடம் பெற்றிருக்கின்றன.
சுப்பிரமணிய பாரதியாரின் கவித்துவப்புகழை இலங் கையில் பரப்பிய பெருமையில் பெரும்பங்கு நியாயமாக தேச பக்தன் ஏட்டையும், அய்யர் அவர்களையும் சேரவேண்டும்.

123
அய்யரவர்கள் சுப்பிரமணிய பாரதியாரைப் பற்றி
ஆசிரிய தலையங்கம் தீட்டினர். அவரது கவிநய
மாண்பு குறித்து கட்டுரைகளை எழுதுவித்தார். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற் போல்:
*சாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தினராயின் வேதியராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தினராயினும் ஒன்றே" என்ற கவிதையையும் w
'தாயின் மணிக்கொடி பாபீர் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!” என்ற வரிகளையும்
நெறி உரைகளாகப் பிரசுரித்து சுப்பிரமணிய பாரதி யாரின் பெயரையும் கீழிணைத்து தனது தேசபக்தன் நாளேட்டில் 1929ல் வெளியிட்டார். அய்யர் தன்பத்திரிகைக்கு மலாயா விலும், சந்தர சேர்த்திருந்ததை அறியும் போது பாரதி புகழ் பரப்பும் பணியில் அய்யரின் பங்களிப்பு இன்னும் பெரிதாக உணரப்படவேண்டியதாகிறது.
பத்திரிகை நடாத்துவதில் ஒரு பரபரப்பையும், புதுமை யையும் அய்யர் தொடர்ந்து கையாண்டார்.
தோ ட் டத் தி ல் துரைமார்களினதும், கங்காணிமார் களினதும் கெடுபிடி ராஜ்யம் எந்தளவுக்கு இருக்கிறதென்பதை தேசபக்தனில் - கொடுமை தாங்காமல் பதுளையிலிருந்து ஏழு மைலுக்கப்பால் உள்ள தோட்டத்திலிருந்து உண்ண உணவில் லாமல் கொழும்புக்கு நடந்தே வந்தவர்களை போட்டோ படம் பிடித்து அதை பிரசுரித்து பெரியதோர் அமளியை ஏற்படுத்
தினர்.28
ஏ. எஸ். ஜோன் எ ன் ற "இந்தியன்’ பத்திரிகையின் பிரசுர கர்த்தா (இந்தியன் அய்யருக் கெதிரான பத்திரிகை) சட்டசபை தேர்தல் குறித்து தனக்கு எழுதிய இரகசிய கடிதத் தைப் பகிரங்கப்படுத்தினர்.
தன்னை பெரிய கங்காணிமார்களோடு பிணைத்துக் குற்றம் சாட்டும் கடிதத்தை வெளியிட்டு அனுதாபம் தேடினர்

Page 65
丑24
இவைகளால் வாசகர்களின் ஆர்வம் பெருகியது.
தேசபக்தன் கிழமைக்கு மூ ன் று என்று வந்துகொண் டிருந்த 1927ல் திங்கள் 16 பக்கம், புதன் 14 பக்கம், வெள்ளி 12 பக்கம் என்ற ஒரு புதுமையையும் அறிமுகம் செய்தார்.
லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்திலும் உதவி ஆசிரிய ராக சிலகாலம் பணியாற்றிய நடேசய்யர், வீரகேசரியிலும், தினகரனிலும் ஆரம்பகாலத்திலிருந்தே த்ொடர்புகளை வைத் திருந்தார்.
அந்நிறுவனங்களில் பல மட்டங்களில் பணியாற்றிய வர்கள் இந்தியர்களே ஆவர். அவர்களில் சில ர் அய்யரின் உறவினர்கள். அதிலும் சிலர் அவரின் கீழ் தேசபக்தனில் பணி யாற்றியவர்கள். ஒரு சில ர் அய்யரோடு கோபித்துக்கொண்டு வெளியேறி வந்திருந்ததுண்டு. அய்யரைப்பற்றிய செய்திகள் இருட்டடிப்புச் செய்யப்படுவதற்கும் அய்யருக்கெதிரான கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுவதற்கும் இது வழிவகுத்தது.
எனினும் அய்யர் கெளரவம் பொருந்திய சட்டசபை உறுப்பினர் பதவியிலிருநீததால் முற்ருக ஒதுக்கப்பட முடியாத வராக இருந்தார்.
அய்யரோடு ஒத்துவராத சத்யமித்திரன் த ன து வருடாந்த பஞ்சாங்கத்தில் அவரது உருவப்படத் தைப் போட்டு ஆண்டுதோறும் கெளரவம் செய்தது. ஆண்டுதோறும் இது முறையாக இடம் பெற்றதற்கு இதுவே காரணமாகும்.
இலங்கையின் ஆங்கில ஏடான டைம்ஸ் ஒஃப் சிலோன் பத்திரிகையிலும் அய்யர் தனது கட்டு ரை களை வெளியிடு வதுண்டு. அப்பத்திரிகை நிறுவனம் முற்று முழுதாக ஆங்கிலே யருக்குச் சொந்தமாயிருந்தது. துரைமார்களின் பை பிளா க டைம்ஸ் பத் திரிகை க் கருதப்பட்டது. தங்களுக்கெதிரான கட்டுரைகளைப் பிரசுரிக்காது உதவும் அதன் ஆசிரியரைப் பாராட்டித் துரைமார்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் க டி த த் தை எழுதியதுமுண்டு, அதுபோன்ற நேரத்தில் அய்யரின் கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளிவரு கின்ற ஹிந்து பத்திரிகையில் வெளி வருவதுண்டு. அக்கட்டு ரைகள் பரந்துபட்ட வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வாய்ப் பைப் பெற்றிருந்தன. அதன் காரணத்தால் தங்களது கடிதங் களையும் ஹிந்து பத்திரிகையில் வெளியிட துரைமார் சங்கம் ஆலோசித்த சம்பவங்களும் உண்டு.

125
*தோட்டத் தொழிலாளரும் டைம்ஸ் பத்திரிகையும்" என்ற தனது ஆசிரியர் தலையங்கத்தில்
தோட்டக்காரருடைய வக்கீலாயிருந்து தொழிலாள ருக்கு விரோதமாகப் பிரசாரம் செய்வதே டைம்ஸ் பத்திரிகையின் தொழிலாயிருந்து வருவதை அடிக் கடி நாம் எடுத்து விளக்கியுள்ளோம்" என்று கூறி
"கடைசியாக ஒருவார்த்தை டைம்ஸ் ஆசிரியருக்கு சொல்லவிரும்புகிருேம், எழுதுகிறவர் எழுதினல் படிக்கிறவர்களுக்கும் புத்தியுண்டு எ ன் பதை யும் பொய் சொன்னலும் பொருந்தும்படி சொல்ல வேண்டும் என்பதையும் அவருக்கு எடுத்துக்காட்ட வேண்டியது நமது கடமையாகிவிட்டது."
என்று அந்நிறுவனத்தோடு மல்லுக்குப் போனவர் அய்யராவார்.
"தமிழ் மக்களிடையே படித்த வர் கள் என்று சொல்லிக்கொள்ளும் ஆங்கிலம் கற்றவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளைப் படிப்பது கெளரவத்தாழ்வு'
என்று நினைத்த அந்தக் காலப்பகுதியில் பத்திரிகை நடாத்துவது அத்தனை எளிதானதாயிருக்கவில்லை. பத்திரிகை "பணம் விழுங்கி" தொழில், தமிழ்ப்பத்திரிகை உலகில் சிசுமரணம் அதிகம் என்று தனது பன்னிரெண்டு வருட அனுபவத்திற்குப் பிறகும் வீரகேசரி ஆசிரியர் எச். நெல்லையா கூறுகிறரென்ருல், அய்யர் எத்தனைச்சிரமங்களுக்கு மத்தியில் தனது பத்திரிகைகளை நடாத் தியிருப்பார் என்பது புலனுகும்.
தனது பத்திரிகை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு முறையாக சம்பளம் கொடுக்க அவரால் முடியவில்லை. அதனல் விலகிச்சென்றவர்கள் அவரை அவ தூ று செய்தனர். சிலர் அவருக்கெதிராக வழக்குப் போட்டார்கள். அப்போதெல்லாம் அய்யருக்குத் துணையாக நின்று வாதாடியது சத்யவாகீஸ்வர அய்யரே ஆவார்.
தேசபக்தனிலிருந்து விலகிச்சென்ற எஸ். கணபதி என் பார் அவ்விதம் வழக்குத் தொடுத்தபோது சட்டசபை அங்கத்த வர்களுக்குச் சம்பளம் கொடுப்பதைப்பற்றிய வாத பிரதி வாதங்கள் நாட்டில் இடம் பெற்றுக்கொண்டிருந்தன. அதுவரை இலங்கையில் சட்டசபை அங்கத் து வம் சம்பளமில்லாத கெளரவப்பதவியாகவே இருந்தது.

Page 66
盈2份
"சட்டசபை அங்கத்தவர்களுக்குச் சம்பளம் கொடு
படாவிட்டால் அய்யரிடம் ஒன்றும் இல்லை?" என்று வழக்கு மன்றத்திலேயே கூறப்பட்டது. அய்யரின் நிலை மைக்குப் பச்சாதாபம் படும் முறையில் நீதிபதி வழக்கைத் தள்ளிப்போட்டார். அவ் வி தம் தள்ளிப்போடப்பட்ட தேதி ஏப்ரல் முதலாம் தேதியாகும்.
நீதிபதி - ஏப்ரல் முதலாம் தேதி உமக்கு வசதிப்படுமா?
(சிரிப்பு)
சத்யவாகீஸ்வரர் - ஆம் ஐயா (பலத்த சிரிப்பு) உலக முட்டாள் தினம் என்பதால் ஏமாற்றுக் குற்றச்சாட்டுக்குரிய வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைத்து எழுந்த சிரிப்பொலி அடங்க அதிக நேரமாயிற்று.
இந்தியாவில் (1904 - 1921) இக்காலப்பகுதியில் கவியரசர் சுப்ரமணிய பாரதி தன் ஆற்றலை தமிழிலும் ஆங்கிலத்திலும் காட்டியதைப் போல இலங்கை மலைநாட்டில் (1919 - 1947) காலப்பகுதியில் அய்யர் காட்டியிருக்கிருர், பாரதியாரும் சொந்த மாக தமிழிலும் ஆங்கிலத்திலும் பத்திரிகைகள் நடாத்தியவரே!
ந டே சய் யர் தனது எழுத்துக்கள் எல்லாவற்றையும் பத்திரிகைகளிலே வெளியிட்டார். அவரே முயன்று தனது நூல் களையும் வெளியிட்டுள்ளார். . .
அவைகள் இலக்கிய நயத்துக்காகவோ, கலையம் சத்துக்காகவோ வெளியிடப்படவில்லை. மக்களுக்கு நேரடியாகப் பயன் தரவேண்டும் என்ற நோக்கி லேயே எழுதப்பட்டன. அந் த எழுத்துக்களில் இலக்கிய நயமும், கலையம்சமும் தானுகவே மிளிர ஆரம்பித்தன.
அய்யரது பணிகளை காலவரிசையோடும், கருத்து வளர்ச் சியோடும் ஆராய இதனல் இடம் இருக்கிறது. மொழி வளத் தையும், அழகையும் கருத்தை வெளியிட அவர் பயன்படுத்திய நேர்த்தியை அறிய இடம் இருக்கிறது.
பாரதியாரை ஆய்வு செய்வதற்குக்கூட இந்த வாய்ப்பு இல்லாதிருப்பதை நினைவில் கொளல் நலம். இப்படி வாய்ப்பை அமைத்துக்கொண்ட இலக்கியகர்த்தாக்கள் மிகக் குறைவே.

127
நடேசய்யர் வாழ்ந்த கால ப் பகுதியில் பத்திரிகைத் தொடர்பும் அரசியல் தொடர்பும் கொண்டவர்களின் சிலரது பெயர்களைக் கீழே காணலாம். ஒப்பீட்டாராய்ச்சிக்கு இது சிலரைத் தூண்டலாம். A
திரு. வி. கலியாண சுந்தரனர் 1883 - 1953
எஸ். வையாபுரிப் பிள்ளை 1891 - 1956 சோமசுந்தர பாரதியார் 1879 - 1959 மறைமலை அடிகளார் 1876 - 1950 உ. வே. சாமிநாதய்யர் 855 a 1942 சுப்பிரமணிய சிவா 1884 - 1925 வ. உ. சிதம்பரம் பிள்ளை 1872 - 1931 தேசிக விநாயகம் பிள்ளை 876 - 1954
நடேசய்யர் காலப்பகுதியில் இலங்கையில் வாழ்ந்த அறிஞர் விபுலாநந்த அடிகளாவார். (1892 - 1947) இருவரும் மரணமானது 1947ம் ஆண்டே ஆகும். அடிகளார் இவ்வுலக வாழ்வை நீத்தது 19.7.1947ல் அய்யர் மரணமானது 7.11.1947ல் ஆகும். இருவரும் நிறைய மொழிபெயர்ப்புத் துறையில் ஈடு பாடு கொண்டிருந்தனர்.
அய்யரின் பத்திரிகை பணிகள்”நாட்டின் நாலா பக்கங் களிலும் பரவ ஆரம்பித்தபிறகே தமிழ் வித்வான் யாழ்ப்பாணத்து நவநீதிக் கிருஷ்ண பாரதியார் -
'தருமமுறை தழுவித் தாரணியெல்லாம் வாழுங் குருமுறை கொண்டூழி வரை குளிர் ந் து வாழ் தேசபக்தா??
என்று பாராட்டினுர்,
தமிழ் வசனத்தை சனத்தொடர்பு சாதனமாக்கியவர் ஆறுமுக நாவலர் என்பர். நடேசய்யர் தனது பத்திரிகைகளில் அதை சக்தியும் கூர்மையும் வாய்ந்த சாதனமாக்கியுள்ளதைக்
Gressorsirib.

Page 67
28
ஆசிரியர் தலையங்கங்கள்
அய்யரின் பணிகள் சட்டசபை, தொழிற்சங்கம் என்று படர்ந்து சென்றபோதும், அய்யரின் கவனம் பத்திரிகைத் துறை யிலிருந்து விலகியது கிடையாது. தனது பத்திரிகைகளில் அவ்வப் போது பி ற ர து ஆசிரியத்துவத்தை அநுமதித்தபோதிலும், டி. சாரநாதன், டி. ராமாநுஜம், எச். நெல்லையா, அய்யங்கார், மீனுட்சியம்மை என்று சில ரை க் குறிப்பிட்டுச் சொல்ல்லாம், பத்திரிகைக்குத் தலையங்கக் கட்டுரைகள் எழுதுவதை அவர் மறந்தாரில்லை. அது அவரது நாளாந்த பணிகளில் ஒன்ருகவே அமைந்திருந்தது.
நடேசய்யரின் எழுத்து வன்மையைப் பறைசாற்றும் சான்று களாக அவை இன்றும் மிளிர்கின்றன.
ரோட்டிலும், தோட்டங்களிலும் கூவி வேலை செய்
கிறவர்களுக்காக அவர் எழுதினர். ரிக்ஷா இழுக்கும் , தமிழ்ச்சகோதரர்களும் புரிந்துகொள்ள வேண்டு
மென்று எழுதினர். தனது ஆங்கில அறிவையும்,
மொழிப் புலமையையும் சா மா ன் யர் களுக்கு
விளங்கும் விதத்தில் எடுத்தாண்டார். அவரது
கட்டுரைகள் குண்டுகளைப் போன்றமைந்திருந்தன.
அதை அவர் மிகுந்த எச்சரிக்கையோடு பயன்படுத்
தினர்.
தனக்கிருந்த அரசியல் அறிவையும், பொருளாதார அறி வையும் அவைகளில் வெளிப்படுத்தினர்.
*கேவலம் பொருளிட்டல் என்ற ஒரே நோக்கில் தேர்தல் காலம் வந்துற்ற காலையில் எந்த அபேட்ச கரிடமிருந்தாவது தொகையான பொருளை பறித்துக் கொள்ளலாமென்று எதிர்பார்த்து மீன்கொத்திக் குருவியைப் போலிருக்கும் சுயநல துரந்தரர்கள் பத்திரிகையாசிரியர் பதவியில் அமர்ந்து விடுவ தால், நேரிடக்கூடிய கஷ்ட நஷ்டங்களை"
அவர் அனுபவத்தில் அறிந்திருந்தார்.
தன்னுடைய எழுத்தின் மூலம் 'தடி எடுத்தவரெல்லாம் தளகர்த்தராகிவிட
முடியாது’ என்பதை நிரூபித்துக் காட்டினர்.

丑29
இந்தியத் தொழிலாளர் துயர் இந்தியத் தொழிலாளர் சட்டம் இலங்கை சட்டசபை பெரிய கங்காணிமார்களுக்கு ஓர் எச்சரிக்கை பற்றுச்சிட்டு தொலையவேண்டும் அவிவிவேக குருவும் அவரது பரமானந்த சிட்ர்களும் அரசியல் சங்கம்
பொக்கவாயனும் பொரிமாவும் இலங்கைத் தமிழ்ப் பத்திரிகைகள் டெய்லிநியூஸ் வேலைநிறுத்தம் கற்பிக்கும் பாடம் இலங்கைக்கு சுயராஜ்யம் மாதா கோவிலில் நட்மாடும் பிசாசுகள்
பைசாசத்தின் அழுகுரல்
என்பவை அவர் எழுதிய ஆசிரிய உரைகளின் தலைப்புக் களில் சிலவாகும். அத்தலைப்புக்களில் எழுதிய கட்டுரைகளில் அவரது நோக்கின் விசாலம் புலப்படுவதோடு, அவரது மொழி ஆற்றலும், எழுத்து வன்மையும், இலக்கிய நயமும், சொல்லாட்சியும் மொழிபெயர்க்குந் திறமும் அழகுற வெளிப் பட்டுள்ளன.
தாம் வாழ்ந்த காலச் சூழ்நிலைகள்ை ஒட்டி - தேவைகளை நோக்கி, அரசியல், பொருளாதாரம், சமூகம், பத்திரிகைகள் என்று அவர் எழுதிய கட்டுரைகள் அவரது கருத்துத்தெளிவு, சிந்தனைத்தெளிவு, தீர்க்கதரிசனம் ஆகியவற்றை வெளிப்படுத்து கின்றனவாக அமைந்து இலங்கை பத்திரிகை உலகில் அவர் ஆற்றிய பணிகளின் சிறப்பை வெளிப்படுத்த உதவுகின்றன. மாதிரிக்கு ஒருசில தலையங்கங்களைப் பார்க்கலாம். அடைப்பு குறிக்குளுள்ளவை நூல் ஆசிரியர் எழுதிய குறிப்புகள்.
இந்தியத் தொழிலாளர் சட்ட்ம். (எதிர்பார்த்த பலனைத் தரவில்லை)
தொழிலாளர் எவ்வளவு பேர் சாட்சி சொல்லிய போதிலும், ஒரு வெள்ளையனின் சாட்சியத்திற்கு ஈடு வருவதாயில்லை. வெள்ளையன் சாட் சி ய மே மேலானதாகக் கவனிக்கப்படுகிறது. இதன் காரண மாய் எ வ் வள வோ தொழிலாளர்கள் சாப் பாட்டுக்குக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதை

Page 68
30
கவனித்திருக்கிருேம். த ந் கால ம் தொழிலாளர் சட்டம் அனுஷ்டிக்கப்பட்டு வருவதைக் கவனிக் கையில் இத்தகைய சட்டங்கள் இருப்பதைவிட இல்லாதிருப்பதே மேல் எனச் சொல்ல வேண்டிய வர்களாயிருக்கிருேம்.
பற்றுச்சீட்டு தொலேயவேண்டும் 0.
தொழிலாளியை யாதொரு விதமான நிர்ப்பந்தங் களுக்குள்ளும் உள்ளாக்கலாகாது" என்று யோசித்து யோசித்துச் சட்டம் செய்யப் போகத் தோட்டக் காரர்கள் இர க சி ய உடன்படிக்கைகள் செய்து கொண்டு சட்டத்தைப் பலனற்றதாக்குகிறர்கள்.
(கடன் இருந்தால் பற்றுச்சீட்டு இ ல் இல-பசி. வேல் இல்லை. பெரிய கங்காணி உட்பட 70 பேருக்கு பதுளையில் இந்த கதி நேர்ந்த விபரிப்பு.)
இலங்கை சட்டசபை.. (இலங்கையர்க்கு சட்டசபைத் தேர்தலுக்கான பிரசாரத்துக்கு எ ல் லா வசதிகளுமிருந்தன. இந்தியருக்கிருக்கவில்லை)
இந்திய ஜனங்கள் இலங்கை முழுவதும் சிறு சிறு பகுதிகளாகப் பிரிந்திருக்கிருர்கள். அவர்களுக்கான பத்திரிகைகள் கிடையாது. இருக்கும் இரண்டொரு பத்திரிகைகளையும் அவர்கள் வாசிப்பதும் கிடை யாது. இந்தியர்களுக்கென பிரத்தியேக சங்கம் கிடை யாது. வகுப்பு பிரிவினைகளுமுண்டு. வியாபாரிகள் தொழிலாளர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. தொழிலாளரோ சாராயத்தவரணை தவிர வேறு காரியங்களில் தலையிடப் பிரியப்படுவதில்லை.
இந்நிலையில் இந்தியர்களை எவ்விதம் ஒன்றுபடுத் துவது? அவர்கள் கடமைகளை எவ்விதம் கற்பிப்பது? அவ்விதம் செய்ய எவ்வளவு பணம் தேவைப்படும்? 2000 தோட்டங்களுக்குச் சென்று பிரசார வேலை செய்ய எவ்வளவு பிரசாரகர்கள் வேண்டும்? எவ் வளவு துண்டுப்பிரசுரங்கள் தேவை.
s h is . இலங்கை இந்தியன் என்ற பிரிவினை தோன்றுவது நாட்டின் துரதிருஷ்டம் எனினும், சிலகாலம் வரையில் தோன்றியே தீரும் . . 献

3.
இந்தியர்களுள் பெரும்பான்மையோர் மத்திய மாகாணத்தில் இருப்பவர்கள். மத்திய மாகாணத் தையாவது ஒற்றுமைப்படுத்தினல் வருங் கால அரசியல் நிர்வாகத்தில் இந்தியர்களுக்குப் போதிய இடம் கிடையாமல் போகாது என்பது திண்ணம். என்ன செய்யப் போகிறீர்கள்?
அவிவேக குருவும், அவரது பரமானந்த சீடர்களும். கொழும்பில் அவிவேக குருவான குணசிங்கம் துரை தொழிலாளர் சங்கம், தொழிலாளர் சங்கம் என்று காடையர் கொண்டு கூட்டம் கூடி ஊரைமிரட்டிக் கொண்டு வந்தது போய் இப்பொழுது உலகத் தையே மிரட்ட எண்ணுகிருர் போலும். நமது குருவிற்கும், அவரது சீடர்களுக்கும் நாம் மிகவும் இரங்குகிருேம். (ஆங்கிலப்பத்திரிகைகளில் எழுத வேண்டிய அவசியத்தை விளக்கல்) . . . .
சோதனைக்காலம். . இன்று அயர்ந்திருப்பவர்கள் என்றும், அயர்ந்தே இருக்க வேண்டும். இந்தியருக்கு ராஜிய உரிமை கொடுக்க மறுப்பவர்கள் "இந்தியர் இங்கு வரலாம், தொழில்கள் செய்யலாம், மரம் அறுக்கலாம், தண்ணீரெடுக்கலாம், தோட்டக்காடுகளில் பகல் முழுதும் மெய்ப்பாடுபட்டு இலங்கையைச் செழிப் பாக்கலாம் ஆனல் ராஜ்ய உரிமைகள் மட்டும் உங்களுக்கில்லை” என்று சொல்லியிருக்கிறர்கள்.
(டி. எஸ். சேனநாயக்கா சட்டநிரூபண சபையில் 19.11.1926ல் பேசிய வார்த்தைகள்.)
டெய்லிநியூஸ் வேலைநிறுத்தம் கற்பிக்கும் LuMrLib ... ...
நாம் இறங்கப்போகும் போராட்டம் நீதியான தர்மமான அடிப்படையைக் கொண்டிருக்கிறதா என்பதை ஒவ்வொரு தொழிற்சங்கத்தாரும் புரிந்து துணிந்து இறங்கவேண்டும். துணிந்தபின் எண்ணுவ தென்பது எப்பொழுதும் இழுக்கு. தோல்வியுற்ற பின்னும் எண்ணுமலிருப்பது மடமையும், மெளட்டீ கமுமாகும். நீதியான ஒரு காரணம் மட்டும் போதாது. போராட்டத்தின் முடிவுவரை பொறு மையும் சகிப்புத்தன்மையும், அகிம்சையும், தியாக உணர்ச்சியும் வேண்டும். சரியான தலைவன் வேண்டும்.

Page 69
32
பைசாசத்தின் அழுகுரல் (இ ல ங் கை இந்திய ன் என்ற பத்திரிகை மறுபடியும் வரத்தொடங்கியபோது)
மறுபிறப்பில் நம்பிக்கையுள்ள இந்து க ஞ க்குள் அ கா ல மரணமடைந்தவரின் ஆவி பாக்கியுள்ள ஆயுட்காலம் வரையில் பிசாசாகச் சுற்றி இரவுகளில் அழுது திரியும் என்ற நம்பிக்கையுண்டு. சுடுகாடு களில் சிற்சில சமயங்களில் தனி அழு கு ர ல் கள் கேட்டால், அத்தகைய பிசாசுகளின் அழு கு ர ல் என்று சொல்வதைக் கேட்டிருக்கிருேம், இது ஒரு புற மிருக்க இறப்பவன் எந்த எண்ணத்தில் இறக்கிருனே அதே எண்ணத்தைப் பூர்த்திச் செய்ய முயற்சிப் பதாகவும் ஒரு கொள்கை உண்டு.
இந்தியருக்கு விரோதமாகக்கிளர்ச்சி (கண் டி குயி ன் ஸ் ஹோட்டலில் 8 சிங்களவர்களை நிறுத்திவிட்டு, 8 இந்தியர்களைச் சேர்த்தபோது சிங்களவர்களைத் தூண்டிவிட்டனர்)
0C S S S S SSL S L SS0L LSS SL S LLL LL LLL LLL LLL SS SSL SSL ஒரு விசாலமான புல் தோட்டத்தில் முதலில் மேயப்போன மாடு பின்வரும் மாடுகளை விரட்டுவது போலிருக்கிறது சிங்களவர் விவாதம். புல் ஏராளமாயிருப்பதஞலேயே மற்ற மா டு கள் அங்கே போகின்றன. முதலில் சென்ற மாடு தான் படுத்துப் படுத்துத் தனது செ ள கரிய ம் போல் மேய்ந்து கொண்டு நிற்கவேண்டுமென்ற பொழுமைக் குணம் படைத்தே மற்ற மாடுகளை விரட்டுகிறது.
இலங்கைக்கு சுயராஜ்யம்
up 8 a o சுதந்திர காற்று புயலாக மாற ஆரம்பித் திருக்கிறது. சுயராஜ்யம் கொடுக்கப்படும்.
தோட்டத் தொழிலாளரும் டைம்ஸ் பத்திரிகையும்.
ஏ  ைழ களை க் கடனுக்குள்ளாக்கி அடிமைகளிலும் தாழ்ந்த நிலையில் அமுக்கிவைத்துக் கொண்டிருந்த துண்டு முறையையும் அநாகரீகச் சட்டதிட்டங்களை யும் தோட்டக்காரர் தாமாகவே அகற்றினர்களா? இல்லை! இந்தியாவிலும் இலங்கையிலும் ஜனத் தலைவர்கள் பெரும் கிளர்ச்சி செய்தார்கள்; இந்திய அரசாங்கம் இலங்கைக்கு தொழிலாளியை ஏற்றுமதி செய்வதைச் சட்டபூர்வமாகத் தடுக்கும் வரையிலும்,

S3
தோட்டக்காரர்களுக்கு நல்லறிவு பிற க்க வில்லை. தொழிலாளருடைய வருகையை நிறுத்தி இந்திய அரசாங்கம் கட்டாயப்படுத்தின பிறகுதான் துண்டு முறையும், பிறவும் நீக்கப்பட்டது. தற்சமயம் பரி சீலனையிலிருந்து வரும் சம்பள நிர்ணயச் சட்டத்தை நிறுவுவதற்கு தோட்டக்காரர்கள் எவ்வளவு தூரம் தடை செய்தார்கள், செய்து வருகிருர்கள், என்பதை இங்கு விரிவாய்ச் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. சுருங்கச் சொல்லுமிடத்து ஏழைத் தொழிலாளர் களுக்கு அற்ப சொற்பம் ஏ ற் பட்ட நன்மைகள் தோட்டக்காரர்களிடமிருந்து பி டுங் கப்பட்டன. அவர்களால் அளிக்கப்படவே இல்லை. இந்நிலைமையில் இந்திய அரசாங்கம் தொழிலாளர் விஷ யத் தி ல் தலையிட வேண்டாமென்று டைம்ஸ் பத் தி ரி  ைக எழுதுவதின் அர்த்தம் நமக்கு விளங்கவில்லை. தென் ஆபிரிக்கா இந்தியர்கள் 366 இந்தியர்கள் ய மு ன கப்பலின் மூலம் தென்னபிரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இது மாத்திரமல்ல, இந்தியர் களுக்கிடையே கங்காணி மாதிரியாகப் பிரசாரம் செய்து, இந்தியாவுக்குப் போ கும் படி தூண்டு கிருர்கள் ஆங்கிலேயர்கள். தங்களுக்குக் குறைந்த விகிதத்திற்கு வேலை செய்ய வேண்டிய காலத்தில் இந்தியன ஏற்றுக்கொள்வதும், காரியம் முடிந்ததும் அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளுவதாயுமுள்ள முறை எவ்வளவு காலந்தான் நடக்கும்? இந்தியர் சுயநலம் விட்டு பொதுநலம் நாடும் வரை யில் இருந்தே தீரும் என்பதற்கு ஐயமில்லை. m அரசியல் சங்கம் இலங்கையில் பல சங்கங்கள் ஆரம் பிக்கப்படுகின்றன. அநேகமாக ஒன்று பாக்கியில் லாமல் அரசியல் நோக்கமே கொண்டிருக்கின்றன. அ  ைவக ள் பயனுள்ளவைகளாக விளங்கவேண்டு மா ன ல் சமூக ஊழியத்தையும் மேற்கொள்ள வேண்டும். உபதேசிப்பதோடு நின்றுவிடாது பணங் கொ டு த் து ச் செலவு செய்ய முன்வரவேண்டும். இ ல ங் கைத் தோட்டங்களில் வருந்தியுழைக்கிறத் தொழிலாளர்களுக்கு நல்ல உணவு கிடைப்பது மட் டு ம் போதாது. அவர் களு க்கு மனத்தில் சந்தோஷம் ஏற்படத்தக்க காரியங்கள் எதுவுமில்லை." இதுபோன்ற ஆயிரக்கணக்கான தலையங்க கட்டு  ைர களில் த னது கரு த் துக் களு க் கு ஆதரவு தேடியிருப்பதைக் d5).

Page 70
134
வெளியிட்ட நூ ல் க ள்
இன்ஸ்யூரன்ஸ்,
ஒயில் என்ஜின்கள், வங்கிகளும் அவற்றை நிர்வகிக்கும் நிர்வாகமும், வியாபாரப்பயிற்சி நூல்,
வெற்றியுனதே,
நீ மயங்குவதேன், நரேந்திரபதியின் நரக வாழ்க்கை, தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம், இந்தியா - இலங்கை ஒப்பந்தம், தொழிலாளர் சட்ட் புத்தகம்,
கதிர்காமம்,
அழகிய இலங்கை,
Planter Raj,
The Ceylon Indian Crisis.
. அய்யர் எழு தி நூல்களாக வெளியிட்ட புத்தகங்களின் பெயர்களே மேற்குறிப்பிட்டவைகள், முதல் மூன்று புத்தகங்களும் அய்யரால், இலங்கை க் கு வருவதற்கு முன்னர் இந்தியாவில் வைத்து வெளியிடப்பட்டவை. சென்னை அரசாங்கத்தின் அங்கீ காரமும் அப்புத்தகங்களுக்கு கிடைக்கப்பட்டிருந்தன. வியாபார சம்பந்தமானதும், கணக்குத் துறை சார்ந்ததும் ஆன அறிவு சாத்திர நூல்களை வெளியிடும் ஆர்வம் அய்யருக்கிருந்ததை ஆரம்ப நூல்களே வெளிப்படுத்துகின்றன. இதை அய்யர் அவர்களே.
**எனது வாழ்க்கையின் நோக்கம் ?
என்ற கட்டுரையில் குறிப்பிடுகிருர் . இவரது கட்டுரை தேச
பக்தனில் 1924ல் வெளிவந்தது,
நடேசய்யரைப்பற்றி எழுதுகையில்
**சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரே கணக்குப் பதிவு நூல், ஆயில் எ ன் ஜி ன் க ள், பம்புகளும் அவற்றை உபயோகிப்பதும் ஆகிய பல வகையிலும் பயன்படும் நூல்களை எழு தி யு ள் ளார் என்பது

135
பெருமைப்படத்தக்கதொன்ருகும்,'
என்று கனக செந்திநாதன் தனது ஈழத்து இலக்கிய வளர்ச்சி என்ற நூலில் குறிப்பிடுகிருர். இந்த நூல் 1964ல் வெளி வந்தது. இதன்படி 1934க்கு முன்னரே அய்யரின் நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும். கனக செந்திநாதன் தனது குறிப்புக்களை எங்கிருந்து பெற்ருர் எனத் தெரியவில்லை. அவர் குறிப்பிடுபவைகள் அய்யரால் குறிப் பி டப்படும் புத்தகங்களா அன்றி வேறு புத்தகங்களா என்பதை அறிந்து கொள்ள ஆதாரமெதுவுமில்லை என்பது கவலைப் படத்தக்கதே.
அய்யரின் தமிழ்நடை தெளிவானது, எளிமையானது என்று குறிப்பிடும் கனக செந்திநாதன் அய்யரின் வெற்றியுனதே, நீ மயங்குவதேன் என்ற மற்ற இரு நூல்களைப் பற்றியும் குறிப் பிடுகிறர் " . .
சோம்பேறிகளையும் விழிப்புற்று ஊக்கங் கொண்டு உழைக்கத் தூண்ட வேண்டுமென்ற விருப்பத்தால் எழுந்தது ‘வெற்றியுனதே" என்றும், மக்களை மயக்க நிலையிலிருந்து தட்டி எழுப்பி முன்னேறும் வழியைக் காட்டுவதாக எழுந்தது. 'நீ மயங்குவதேன்'
என்றும் இந்நூல்களைக் குறித்து அய்யர்குறிப்பிட்டுள்ளார்.
நடேசய்யர் அர சி ய லில் ஈடுபடவும், தொழிற்சங்கத் துறையில் ஈடுபடவும் முனைந்தவேளை இப்புத்தகங்கள் மக்களின் ஆதரவை அவருக்கு திரட்ட உதவின உண்மையில் இப்புத்த கங்களின் மூலம் மக்களிடையே அய்யர் தன்னை நன்கு அறிமுகப் படுத்திக் கொண்டார்.
மக்களுக்குப் பயன்படும் அறிவு நூல்களை எழுதவேண்டும் என்ற தனது நோக்கை தனது தேவைக்கேற்ப உபயோகிப்பதில் அய்யர் வெற்றி கண்டார் என்பதற்கு இந்த இரண்டு நூல்களும் சான்ருகும். வணிகர்களுக்கு பயன்படுவதற்காக எழுதப்பட்ட ‘வியாபாரப் பயிற்சி நூல்" என்ற புத்தகமும் ஓர் அறிவு நூலாகும். வணிகர்களை மேலும் ஞானமுள்ளவர்களாக்க எழுதப்பட்ட இந் நூல் அய்யருக்கு அத்துறையிலிருந்த அறிவை நன்கு வெளிப் படுத்தியது. அக்கவுண்டன்ட் ஆகவும் ஆடிட்டர் ஆகவும் தொழில் புரிய தனக்கிருந்த தகைமைகளை வைத்து இந்த நூலை தெளிந்த, எளிமையான கவர்ச்சியான நடையில் அய்யர் எழுதியிருந்தார்.

Page 71
136
நரேந்திர பதியின் நரக வாழ்க்கை" என்ற நூலில் இந்தியா விலுள்ள மகாராஜாக்களின் உண்மையான வாழ்க்கைச் சரித த்தை வெளிப்படுத்தினர். இது அய்யரின் வழமையான அறிவு நூலிலிருந்துச் சற்று விலகிக் கதை சொல்லும் பாணியில் அமைந் திருந்தது. மக்களுக்குக் கதை கேட்பதில் இருந்த ஆர்வத்தைப் பயன்படுத்தி உண்மைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் அய்யர் இந்த நூலில் ஈடுபட்டிருந்தார். மேலும் இந்தியாவிலிருந்த, இலங்கையின் கடைசி மன்னனன விக்ரம ராஜசிங்கனின் பரம் பரையினர் தமக்கு இலங்கை அரசாங்கத்தினரிடமிருந்து கிடை க்கும் அரசியல் பெலாஷன் அதிகரிக்கப் படல் வேண்டும் என்றும் விண்ணப்பித்திருந்தனர். அவர் கள் தஞ்சாவூரிலிருந்து தமது விண்ணப்பத்தை அனுப்பியிருந்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த நடேசய்யர் அச்சமயத்தில் இப்படி ஒரு நூலை வெளியிட்டதில் ஆச்சரியப்படுவதற்கில்லை.
*கதிர்காமம்" எனும் தலைப்பில் கதிர்காமத்தைப் பற்றிய சரித்திர ஆராய்ச்சி, புராண வரலாறு, வாய்மொழி வரலாறு முதலிய விவரங்களை உள்ளடக்கியும் ஒரு நூலை வெளியிட்டார்.
இவ்வித புத்தகங்களை மக்களின் அறிவை விருத்தி செய்யவும் அவர்களுக்குப் பயன்படவும் அரிய முறையில் நடேசய்யர் முப்பது களிலேயே வெளியிட ஆரம்பித்தது உண்மையிலேயே மிகவும் போற்றத்தக்க பணியாகும்.
தான் எதிர்பார்த்த அளவிற்கு இந்தியாவில் பொருள் லாபம் கிடைக்காததால் மூன்று புத்தகங்களை வெளியிட்டதோடு அமைந்து வர்த்தகமித்திரனை ஆரம்பித்ததாகச் சொல்லிய நடே சய்யர் இலங்கையில் பத்திரிகையை நடாத்திக் கொண்டு இவ்விதம் நூல்களை வெளியிடவும் செய்தார் என்பது கவனிக்கத்தக்கது.
அந்நூல்கள் பொதுத் தன்மையைக் கொண்டிருந்தன. தமிழ் தெரிந்த எந்த வாசகனும் அவைகளை படித்துப் பயன் பெறலாம்.
நடேசய்யர் தனது வழமையான இந்தப்போக்கிலிருந்து விடுபட்டு ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
*தொழிலாளர் சட்ட் புஸ்தகம்’ என்ற பெயரில் 1929ல் வெளி வந்த அந்தப் புத்தகத்தைப்பற்றி நடேசய்யர் தனது பத்திரிகை யில் குறிப்பிட்டிருக்கிருர், w .

7
தனது எழுத்தாற்றல் மீது அய்யருக்கு அளப்பரிய நம்பிக்கை இரு ந் தது. தொழிலாளர் சம்பந்தப்பட்டவைகளை அது காலம் வரை அய்யர் பத்திரிகைகளில் கட்டுரைகளாக எழுதி இருக்கிருர்; அறிக்கைகளாகத் தயாரித்திருக்கிருர் துண்டு ப் பிரசுரங்களாக வெளியிட்டு இருக்கிறர்; நோட்டீஸ்களாக அச் சடித்திருக்கிருர்,
அறிக்கைகளாக வந்த பொழுது இது இந்திய அரசாங்கத், தையும், இலங்கை ஆட்சியினரையும் திணறடித்திருக்கிறது.
துண்டுப் பிரசுரங்களாக வந்த போது துரைமார்களை திகில டையச் செய்தது. • V.
நோட்டீஸ்களாக விநியோகிக்கப்பட்ட போது பெரிய கங்கா ணிகளை பேயைக் கண்டவர்களைப்போல பேதலிக்க வைத்தது!
இப்போது அய்யரின் கருத்துக்கள் நூல் உருவில் வெளி வந்துள்ளன. தோட்டத் தொழிலாளர்களை கண் விழித்தெழச் செய்ய வேண்டுமானல் அவர்களை தமது கடமைகள் என்ன என்பதை உணர்ந்து கொள்ளவும் அவசியம் நேர்ந்திருக்கிறது என மனப்பூர்வமாக நம்பிய நடேசய்யர், தனது எழுத்தாற்றலால் தனது இந்திய சகோதரர்கள் - தோட்டத்தில் உழைத்து உருக் குலையும் மக்கள் - பயன்பெற வேண்டும் என நினைத்துச் சட்டப் புத்தகத்தில் அவர்களுக்குத் தேவையான அறிவுரைகளை - துன்பத் திலிருந்து மேலெழும் வழி முறைகளை விளக்கியிருந்தார்.
அ  ைவ கள் வெளியிலிருந்து வந்த பிரசாரங்கள் என்று வெள்ளைத் துரைமார்கள் கருதினர். அப்பிர சாரங்களை வாசித்தறிந்த தொழிலாளர்கள் மூன்று தோட்டங்களில் துரைமார்கள் மிரளும் அளவிற்கு குழப்பம் விளைவித்தனர். குடியேற்றத் தொழிலாளர் களின் கட்டுப்பாட்டதிகாரியும், இந்திய ஏஜன்டும். அத்தோட்டங்களுக்கு வர வழைக்கப்பட்டனர். ஆங்கிலத் துரைமார்கள் எதிலும் பிழை காண்பதில் எப்போதும் திறமைசாலிகள், சட்டப் புத்தகம் என்ற தனது நூலில் தொழிலாளிக்கான அறிவுரை களில் "உனக்கு ஏதும் இடைஞ்சல் ஏற்பட்டால் கட்டுப்பாட்டதிகாரிக்கு முதலில் தெரிவிக்க வேண்டும். அதற்கடுத்ததாக இந்திய கவர்ண்மென்ட் ஏஜண்ட்டுக்காவது அல்லது எனக்காவது அறிவிக்க வேண்டும்" என்று கூறியிருந்த  ைத பெரிது படுத்தினர்.

Page 72
138
நடேசய்யர் எ ப் படி தன்னை இந்திய ஏஜண்ட்டின் நிலைமைக்கு உயர்த்திக் கொள்ள முடியுமென்று அவர்கள் குதர்க்கம் பேசினர். இந்திய அரசாங்க ஏஜண்ட் டாயி ரு ந் த மேனன் மெளனம் சாதித்தார். கட்டுப்பாட்டதிகாரி லடிங்டன் ஒத்துப் பாடினர்.
இது குறித்து இந்திய அரசாங்கத்துக்கு அய்ய ருக்கு விரோதமாக அறிக் கை கள் அனுப்பப் பட்டன. இக்குழப்பங்களில் ஈடுபட்டதாக கருதப் பட்ட தோட்டத் தொழிலாள தலைவர்கள் உடனடி யாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப் பட்டனர். அய்யர் விழித்துக் கொண்டார்.
தன்னுடைய சட்டப் புத்தகம் அத்தனையையும் பெரிய கங்காணிகள் விலை கொடுத்து வாங்கி தொழிலாளர்களிடம் போகாது பதுக்கிக் கொண்டதைக் கவனித்தார்.
தொழிலாளர்களைச் சந்தித்து உரையாற்றும் கூட்டங் களில் “தொழிலாளர்களின் கடமைகளும் உரிமைகளும்’ என்ற தலைப்பில் சட்டப்புத்தகத்திலுள்ள முக்கிய அறிவுரைகள் சில வற்றை அச்சடித்து துண்டுப் பிரசுரங்களாக விநியோகித்தார்.
தமிழில் எழுதினல் தானே தொழிலாளர்களை தூண்டு வதற்கான பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது என்று வெகுண்ட நடேசய்யர் ஆங்கிலத்தில் ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார். தோட்ட முதலாளி களின் இராஜ்யம்' என்பது அந்நூலின் பொருள்.
அந்நூலில் தோட்டச் சொந்தக்காரர்களும், பெரிய கங்காணிமார்களும் தொழிலாளர்களை உறிஞ்சுகிற அக்கிரமங்களை வெளியிட்டிருந்தார்.
அதை வாசித்த எவரும் தன்னை தோட்டச் சொந்தக் காரர்களென்றே, பெரிய கங்காணி என்ருே கூறிக் கொள்ள விரும்ப மாட்டார்கள்.
அகில உலகுக்கும் அந்த இரு சாராரின் அக்கிரமங்களை அய்யர் அந்த அளவுக்கு வெளிப்படுத்தியிருந்தார். நூல் பரவு வதை தடுக்க விரும்பிய தோட்டச் சொந்தக்காரர்களும் பெரிய கங்காணிகளும் அப்புத்தகங்களை விலை க்கு வாங்கி தீயிட்டுக் கொளுத்தினர்.
இந்திய - இங்கிலாந்து அரசாங்க வட்ட த் தி ல் இது பரபரப்பை ஏற்படுத்தியது. அய்யர் அ டு த் த நடவடிக்கை யிலிறங்கினர்; அவரது சாமர்த்தியம் அதில் பளிச்சிட்டது.

19
“தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்" என்ற நூல் வெளியானது. இது வசனமும் பாடலும் கலந்து நாடக உருவில் வெளியாகி இருந்தது.
மலைநாட்டின் படைப்பிலக்கியத்துக்கு இதன் மூலம் அய்யர் அடி எடுத்துக் கொடுத்தார்.
அய்யர் இயற்றிய அநேக பாடல்கள் இதில் இடம் பெற்றிருந்தன. கணவனும் மனைவியுமாக தோட்டங்களுக்குச்சென்று கூட்டங்கள் போடும் போது பாரதியாரின் பாடல்க ளோடு இந்தப் பாடல்களையும் அவர்கள் பாடிக் காட்டுவதுண்டு.
w தோ ட் டங்க ளில் நடக்கும் அதி அக்கிரமங்களையும், கங்காணிகளின் ஆட்கட்டும் தந்திரங்களையும் அந்த நூல் அழகுற வெளிப்படுத்தியது.
"பெண்கள் அநேகமாக கிணற்றடியில் தான் கூடுவது வழக்கம். காலை முதல் மாலை வரையில் வீட்டுக்கு வேண்டிய ஜலம் எடுப்பதற்காக அடிக்கடி வருவார்கள். அப்படி வரும் போதெல்லாம் அணுவசியமான பல சங்கதிகளை பேசிக் கொண் டேயிருப்பார்கள். இந்த வேளையில் ஸ்திரிகள்தான் தரகர்களாக அமர்த்தப்படுவது வழக்கம். இவர்களுக்கு அந்தப் பெண்களின் மனதைக் கலைக்கும் பல வழிகள் தெரியும். முதலில் அந்தப் பெண்களிடத்தில் ஏதோ பரிதாபம் காட்டுவது போல் தானும் பேச்சில் கலந்து கொள்வாள். ஏதே னும் சில குறைகளைச் சொல்லி பெண்களுடன் ஆப்த சிநேகிதியுமாக ஆகிவிடுவாள். பிறகு அவர்கள் மனதை தனது விஷம வேலையால் கலைத்து தான் கொண்ட கொள்கைக்கு இணங்கும் படியாய் செய்து விடுவாள்' என்றும்
"உண்மையில் தோட்டக்காடுகள் தொழிலாளர் களுக்கு சுவர்க்கலோகம் போலிருந்தால் பதினயிரக் கணக்கான கங்காணிகளை ஆள் திரட்ட அனுப்ப வேண்டிய அவசியமென்ன? இலங்கையில் இப்படி யிருக்கிறது, அப்படியிருக்கிறது, என்று பொய் பிர சாரம் செய்ய ஆளை அனுப்ப வேண்டிய அவசிய மென்ன?
இலங்கையைப் பற்றி சினிமாப்படங்களை காட்ட வேண்டிய அவசியமென்ன? கைலஞ்சம் கொடுப் பானேன்? பலாப்பழத்திற்கு ஈ யைப் பிடித்து

Page 73
140
விடுவாருண்டோ உண்மையைப் பேசு மி டத் து ஏழைகள் தாய் நாட்டிலிருந்து பல வகை யில் ஏமாற்றப்பட்டு இங்கு இழுத்துக் கொண்டு வரப் படுகிருர்கள்.
என்று "வெறுங்கை காட்டி மிருகங்களை அழைப்பது போல 5 ரூபாய் 10 ரூபாய் கொடுத்து இலங்கைக்கு ஆள் சேர்ப்பதை கண்டிருக்கிறேன்" என்றும் தனது பத்திரிகைகளில் கட்டுரை களாக எழுதியவைகளுக்கு தனது நாடகத்தில் கற்பனை வடிவம் கொடுத்திருந்தார்.
பெரிய கங்காணிகளிடம் தாம் அனுபவிக்கும் கொடுமை களையும் அக் கொ டு மை களை அனுபவிப்பதற்கென தாம் ஏமாற்றப்பட்டு அழைத்து வரப்பட்டதையும் நூல் உருவில் தொழிலாளர்களும், இந்திய வம்சாவளித் தமிழர்களும் வாசித் தறிந்தனர்.
மக்களின் உள்ளத்தில் கனல் எழும்பியதை யாராலும் தடுக்க முடியாமல் போய் விட்டது. மேலும் இதற்குள் அய்யரும் தன்நிலையை அரசாங்கசபை உறுப்பினராக பல ப் படுத் தி க் கொண்டிருந்தார். தன்னை அத்தனை எளிதில் எதிரிகள் வெல்ல முடியாது என்ற நிலை மை உருவாகியிருப்பதை உணர்ந்த நடேசய்யர் மீண்டும் சட்ட புஸ்தகத்தை அச்சில் நூல் வடிவில் கொண்டு வந்தார். 1939ல் வெளி யிட ப் பட் ட் அந்த நூல் தொழிலாளர்களின் அமோக ஆதரவை ப் பெற்றது. தொழி லாளர்கள் ஆயிரக்கணக்கில் புத்தகத்தை வாங்கிவாசித்துப் பயன் அடைந்தனர். அந்த நூல் தொழிலாளர்களை “விஷய ஞானம் மிகுந்தவர்களாக ஆக்குவதற்காகவே எழுதப்பட்டது.
**சட்டம் அமுலில் இருந்தும் பல தொழிலாளர் களுக்கும் இதன் நிபந்தனைகள் தெரியாதிருக்கும் காரணத்தால் தங்களுக்கு நியாயமாகக்கிடைக்க வேண்டிய நன் மை களை ப் பெருதிருக்கிருர்கள். தொழிலாளர்களை சட்ட நிபுணர்களாக்க இப்புத் தகம் எழுதப்படவில்லை. அயோக்கியர்கள் இட்ம் அக ப் பட் டு க் கொண்டு அவதிப்படாதிருக்க வேண்டியே இது எழுதப் பெற்றது என்பதை மறக்க வேண்டாம்,??
என்று நூலின் முகவுரையில் நடேசய்யர் குறிப்பிட்டிருக்கிறர்.

141,
இலங்கைவாழ் இந் தி யத் தொழிலாளர்களுக்கெனச் செய்யப்பட்டுள்ள எல்லாச் சட்டங்களையும் பற்றி இந்த நூலில் ஆராயப்பட்டிருந்தது.
இலங்கையிலும், இந்தியாவிலும் இயற்றப்பட்ட அத்தனை சட்டங்களும் முதலாளிமார்களுடைய ஏஜன்டுகளான கங் கா னி மார் கள் ஆட்களை சேகரிக்கும் முறையில் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும், அவர்கள் இலங்கைக்கு வந்து சேரும் வரையில் எவ்விதம் நடத்தப்பட ல் வேண்டும் என்பதை பற்றியுமே பேசுகின்றன
என்பதை அய்யர் இந்நூலில் எடுத் துக் காட்டினர். தங்களுக்குள்ள சுதந்திரங்களை அறியாத தொழிலாளர்கள் எழுத்துக் கூலிக்காரர்களிடமும், சில ஏமாற்றுக்காரர்களிடமும் அகப்பட்டுக் கொண்டு உள்ளவற்றையும் தொலைத்து அவதிக் குள்ளாவதை தொலைக்க வேண்டுமென்ருல் மக்களை விஷய ஞானமுள்ளவர்களாக்கிச் செயலாற்றத் தூண்ட வேண்டு ம் என்று விரும்பிய அய்யர் இந்நூலில் "சகோதரர்களுக்கு ஒரு வார்த்தை" என்று பின்வருமாறு எழுதுகிருர்,
"இலங்கைத் தோட்டங்களில் வேலை செய்யத் தொழி லாளர்களாக உங்களை அழைத்து வரத்தலைப்பட்டு 100 வருஷ காலமாகிறது. ஆரம்ப காலத்தில் பாய்க் கப்பலில் வந்து நூறு நூற்றைம்பது மைல் காடு வழியாக பட்டினியாலும் பசியாலும் வாடி உலர்ந்து வந்து புலிகள் வாழ்ந்த காடுகளை வெட்டித் திருத்தி தோட்டங்களாக்கினீர்கள். அக்காலங்களில் கடன் பட்டும் அடிப்பட்டும், உதைப்பட்டும் ஜெயிலில் அடைப்பட்டும் அந்நியர்களுக்கு உழைத்துக் கொடுத்தீர்கள். தோட்டக்காரர்கள் லட்சாதிகாரி ஆஞர்கள். இங்கிலாந்து செழிப்படைந்து காடா யிருந்த இலங்கை சிங்கார நாடாயிற்று பிரிட்டிஸ் காரர்களுக்கு செல்வம் கொடுக்கும் நாடாக இலங்கை ஆயிற்று. ஆயிரக்கணக் கான கார்கள் வரலாயிற்று, இந்நாடே செழித்தது, உங்கள் நிலைமை தான் என்ன? அன்றைக்கும் அடிமை, இன்றைக்கும் அடிமை, தேயிலைத் தூரில் தேங் கா ய் காய்க்கிறது, மாசி உண்டாகிறது, தங்கக்காசு சம்பளம் என்று அழைத்து வரப்பட்ட உங்கள் முன்னேர்கள் தேயிலைத் தூர்களுக்கும் ரப்பர் மரங் களுக்கும் எருவானதைத்தவிர உங்களுக்கு சொத்து சேர்த்து வைத்திருக்கிருர்களா? கூலிக்காரன் எ ன் ற பெயர் போய் விட்டதா? சிங்களவர்கள் கிராமவாசிகள் விவசாயிகள், இந்தி யர்கள் கூலிகள்தான் என்ற கேவலமான பெயர் போயிற்ற?

Page 74
丑42
மானமிழந்த பின் வாழாமை முன்னினிதே என்பது பழைய பழமொழி, உ ங் க ள் மானத்தைக் கா ப் பா ற் றி கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. உங்கள் மானத்தை நீங்களே காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அந்நியர்கள் வந்து காப்பாற்று வார்கள் என்று எண்ண வேண்டாம்.
இலங்கைத் தோட்டங்கள் பல கம்பெனிக்குச் சொந்தம். கம்பெனிகளின் முதல் பல பங்குகளாய்ப் பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கம்பெனிக்கும் பல்லாயிரம் பங்குகள் உண்டு. இந்தி யாவிலுள்ள கவர்னர்கள், வைஸ்ராய்கள் வேறு பெரும் உத்தி யோகஸ்தர்கள் இங்கிலாந்திலுள்ள காமன்ஸ் சபை அங்கத்த வர்கள், மந்திரிகள் மற்றும் அநேக செல்வாக்குள்ள பிரமுகர்கள் நீங்கள் வேலை செய்யும் தோட்டங்களின் பங்காளிகள், உங்கள் உழைப்பினுல் ஏற்படும் லாபத்தைக் கொண்டு அவர்கள் சாப் பிட்டு சுகிர்த்து உலகத்தை ஆளுகிருர்கள். உங்களால் அவர்கள் ராஜ போ கம் அனுபவிக்கையில்" அவர்களுக்கு ராஜபோகம் கொடுக்கும் நீங்கள் உங்களுக்கு வேண்டிய மனித சுதந்திரத்தை யாவது பெற முயற்சிக்க வேண்டாமா? உங்களுக்கு ராஜ போகம் வேண்டாம் மோட்டார்கள் வே ண் டாம். மாட மாளிகைகள் வேண்டாம், உல்லாச வாழ்க்கை வேண்டாம்,
நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்தும் உங்களுக்கு இரண்டு வேளை வயிறு நிறைய சோருவது கிடைக்க வேண் டாமா? அதற்காகப் பாடுபடுவது குற்றமா? நீங்கள் வேண்டுவது மனிதருக்குள்ள உரிமைதான். மிருகங்களைப் போல் நடத்தப் பெருமல் மனிதர்களைப் போல் தலை நிமிர்ந்து நடக்க உங்களுக்கு உரிமை வேண்டும். அந்த உரிமையில்லாத வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நீங்கள் இன்றே யோசியுங்கள் இக்கட்டுரையில் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனித் து வாசியுங்கள். வாசிக்கத் தெரிந்தவர்கள் வாசிக்கத் தெரியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். எல்லோரும் ஒன்று கூ டுங் கள், ஒற்றுமைப் படுங்கள். சங்கங் கூட்டுங்கள். அவ்விதம் நீங்கள் ஒற்றுமைப் பட்டு விட்டதாகக் கண்டாலும் கேட்டாலும் எல்லோரும் சந்தோஷப்படுவார்கள். பாரத மா தா சந்தோஷப்படுவாள். சுதந்திர வீரர்கள் கூத்தாடுவார்கள், உங்களை அடிமைகளாக வைத்து உங்கள் இரத்தத்தை உறிஞ்சும் இனத்தவர்களுக்கு வருத்தந்தான். அவர்கள் ஒரு சிறுபான்மையோர், அவர்களைப் பற்றி உங்களுக்கு கவலை வேண்டாம். ஆ ற ரை லட் சம் பெயர்களை கவனிப்பதா? அல்லது நாலு ஐந்து ஆயிரம் பேர் களைக் கவனிப்பதா? இன்றே கூடுங்கள், சுதந்திரம் தேடுங்கள், !

143
தொழிலாளர்களின் வேதபுத்தகமாகக் கருதப்பட்டது அய்யர் எழுதிய சட்டப்புஸ்தகம். அவர்களை துயில் எழ வைப்பதற்கு துணையாக நின்றதும் அந்தப் புத்தகமேயாகும்.
மாறிவரும் சமுதாய இயக்கத்திற்கு ஒரு வழி காட்டியாக “தொழிலாளர் சட்டப் புஸ்தகம்" விளங்கியது என்பது புலனுகும்.
இந்தியா - இலங்கை ஒப்பந்தம்" என்ற நூல் இலங்கை வாழ் இந்தியர் சம்பந்தமாய் இரண்டு அரசாங்கங்களும் மேற் கொண்ட ஒப்பந்தங்கள் குறித்து எழுதப்பட்ட விளக்கங்கள் ஆகும்.
இது அய்யரின் அறிவையும் ஆற்றலையும் வெளிப்படுத்திய இன்ஞெரு பிரசித்தம் பெற்ற நூல் ஆகும். 1941ல் இது வெளியாயிற்று.
ஒவ்வொரு இந்தியனும் தன்னுடைய நிலை மை வருங் காலத்தில் என்னவாகும் இனித்தான் செய்ய வேண்டியது என்ன என்பதை அறியக் கூடும். "யாருக்கு வந்த விருந்தோ" என்று
ஒரு இந்தியன் இருப்பானேயானல், அவன் ஏமாந்து போக*
வேண்டி ஏற்படும்.
இலங்கை வாழ் இந்தியர்களை முன்னேற்ற இந்தியா விலிருந்து ஆட்கள் வர வேண்டும் என்று எண்ணிக் கொண்டு காலந் தள்ளுவது முட்டாள்கள் செய்யும் காரியம். தங்களைத் தாங்களே முன்னேற்றிக் கொள்ள வேண்டும். மரியாதையுடன் தலை நிமிர்ந்து இலங்கை வாழ் இந்தியன் இலங்கையில் நட மாடப் போகிருணு அல்லது ஒடுங்கிய வயிறும் கிழிந்த துணியும், கையில் சட்டியுமாக இலங்கையில் அலையப் போகிருஞ என்பது ஒவ்வொரு இந்தியனும் யோசிக்க வேண்டிய விஷயம். பிறர் கொடுத்து வரும் "சுதந்திரம் நெடு நாள் நில்லாது. கிடைத்த சுதந்திரத்தை காப்பாற்றிக் கொள்ளத்தக்க பலமும், தைரியமும் அவர்களுக்கு ஏற்படாது. ஆகவே இலங்கை வாழ் இந்தியன் ஒவ்வொருவனும் தன்னுடைய சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முன் வர வேண்டும்", என்று இதில் கூறியிருக்கும் அய்யர்
அரசியல் அது கா ரம் சங்களவர்களின் கையில் கிடைத்தவுடன் தங்களுக்குச் சாதகமாய் உபயோ கிக்க அவர்கள் முனைவது சகஜமே என்று கூறி (பக்கம் 2) இலங்கையைத் தான் ஜன்மதேசமாக
'll

Page 75
144
எவன் கொள்கிருனே அவனே இலங்கையன் எனப் படுவான்,
என்று விளக்கி (பக்கம் 5)
விருப்பாய் நிரந்தரவாசியாக தொழிலாளர் தம்மைப் பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று காட்டி (பக்கம் 11)
இலங்கையன் ஆவதால் தனது பிள்ளைகளுக்காவ்து பூரண சுதந்திரம் கிடைக்கும் முறையில் ஒவ்வொரு இந்தியனும் நடந்து கொள்ள வேண்டுமென்று எழுதினர்,
அரசியல் உரிமையில்லாத தொழிலாளி அடிமையே என் பதை வலியுறுத்தி (பக்கம் 29) தொழிலாளர்களை வழிநடாத்தி யதை நூலில் காணலாம். அரசியல் சம்பந்தமான நூல்களை தமிழில் எழுதுவது கடினம் என்று கருதி குழுக்கள் ஏற்படுத்தி கலைச் சொற்கள் கண்டு பிடிக்க வேண்டுமெனறு அவர் காத் திருக்கவில்லை.
ஆங்கிலச் சொற்களை தேவையான இடத்தில் அப்படியே தமிழில் எழுதியும் தகுந்த இடத்தில் மொழி பெயர்த்தும் அய்யர் இந்த நூலை அபாரத் திறமையோடு எழுதி இருக்கிறர்.
காலத்தின் தேவைக்கேற்ப அமைந்த இந்த கருத்தோவி யத்தை எழுதிய நடேசய்யர் ஆங்கிலத்திலும் இலங்கை இந்தியர் களின் எரியும் பிரச்சனைகள் குறித்தெழுதினர். தமிழ் அறியா தவர்கள் உண்மை அறிந்து பயன் பெறும் பொருட்டும், தமிழருக்கெதிராக மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களை முறி அடிப்பதற்கும் அய்யர் நூலை எழுதினர்.
அவரது அரசியல் மேதாவிலாசமும் வாக்கு சாதுர்யமும் நூல் முழுக்க பரவிக் கிடந்தன, இந்தியர்களுக்கெதிராக சாட்டப் படும் பொதுவான குற்றச்சாட்டு அவர்கள் இலங்கை சிங்கள வர்களோடு கலந்துறவாடுவதில்லை எ ன்பது ம் இந்தியர்கள் வகுப்புவாதிகள் என்பதுமாகும். நடந்து முடிந்த இரண்டு அரசியல் சபைத் தேர்தல்களிலிருந்தே நடேசய்யர் உதாரணங் களைக் காட்டி வாதாடுகிருர்,
பண்டாரவளை இந்தியத் தமிழர் அதிகமாக வாழும் தொகுதி. அனுராதபுரம் சிங்களவர்கள் அதிகமாக வாழும் தொகுதி.

145
பண் டா ர வளையில் 1931ல் தெரிவான ஏஃவெ லோஸ் கோர்டன் 1936 தேர்தலில் தோற்றுப் போனுர், அநுராதபுரத்தில் 1931ல் தெரிவான எச். ஆர். ஃபிரீமென் 1936 தேர்தலிலும் வெற்றி பெற்ருர்.
இந்தியத் தமிழர்கள் ஒர் ஆங்கிலேயரை - அதுவும் தன் தோட்டத்துரையாக இருப்பவரை ஒதுக்கி விட்டு சிங்களவர் ஒருவரை தேர்ந்தெடுத்தனர். சிங்களவர்களோ வெள்ளையர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள். இதை என்னவென்று குறிப் பீர்கள்? இதுவா நாட்டுப்பற்று என்று அய்யர் வாதிட்டுள் ளார். மேலும் இரண்டாவது அரசாங்க சபைத் தேர்தலில் இந்தியத் தமிழர்கள் செறிந்து வாழ்ந்தாலும் பதுளையில் சோமசுந்தரம் தெரிவாகவில்லை. டி. எச். கொத்தலாவல தான் தெரிவானுர், நுவரெலியாவில் இராமையா, இரட்னம் என்று இரண்டு த மிழர் கள் போ ட் டி யிட் டா லும் ஈ. டபிள்யூ அபயகுணசேகராவே தெரிவானர். இது இந்தியத் தமிழர்கள் வகுப்புவாதிகள் இல்லை என்று காட்டவில்லையா என்று கேட்கும். இது போன்ற வாதங்களை இந்நூலில் காணலாம்.
அய்யரின் கடைசி நூல் அழகிய இலங்கை, அது இந்தி யாவில் அச்சிடப்பட்ட அரிதான தகவல்களை உள்ளடக்கின
அற்புதமான நூல்.
இந்திய வம்சாவளியினரை மையமாக வைத்து இலங்கை சரித்திரத்தை கூறும் நூல் அதுவாகும். இத்துறையில் கவனம் செலுத்திய இந்திய வம்சாவளிப்பிரதிநிதியாக நடேசய்யர் ஒரு வரே இன்று வரை விளங்குகிறர்.
*தோட்டமக்களிடம் இலங்கையில் என்ன இருக் கிறது பார்க்க என்று கேட்டால் சிவஞெளிபாதம், கதிர்காமம், நுவரெலியா பூந் தோ ட் டம் என் பார்கள். ஹட்டன், பதுளை, நுவரெலியா என்ற இந்த நகரங்கள் தாம் நூறு ஆண்டாக அவர் கள் நம்மைப் பார்க்கச் சொல்லும் இடங்கள்"
என்று கூறும் நடேசய்யர் சீதை யைத் தேடி அனு மான் இலங்கையைச் சுற்றிப் பார்த்திருக்கையில் நாம் இலங்கையைச் சுற்றிப் பார்க்காமல் இருப்பதும் அதன் வரலாற்றை அறியா திருப்பதும் குறையாகக் கருதப்படல் வேண்டும்" என்கிருர்,
எத்தனை ரத்னச் சுருக்கமான வாதம்

Page 76
丑46
அய்யரின் எழுத்தாற்றல் எத்தனை என்பதை இந்நூல்கள் வெளிப்படுத்துகின்றன. நூற்றுக்கு மேற்பட்ட துண்டுப் பிர சுரங்கள் ஆயிரக்கணக்கான ஆசிரியர் தலையங்கங்கள், பத்திரிகைக் கென்று எழுதிய கட்டுரைகள், தயாரித்தளிக்கப்பட்ட அறிக் கைகள் என்பவைகளோடு அவர் எழுதி வெளியிட்ட நூல் களையும் கணக்கிலெடுத்தால் அவர் சாதனை புரிந்த எழுத்தாளர் என்பதில் எவ்வித ஐயமும் ஏற்பட வழியில்லை.
தமிழ் பத்திரிகை ஆசிரியர்களையும் தமிழ்நூல் வெளி பீட்டாளர்களையும் தமிழ் மக்கள் உரிய முறையில் ஆதரிப்பதில்லை என்று குறைபட்டுக் கொண்ட சுப்பிரமணிய பாரதியார் தனது கூற்றுக்கு ஆதாரமாக தமிழ் நூல் எழுதுவதையே கைவிட்டு ஆங்கில மாதப்பத்திரிகை நடாத் தப் போன கமலாம்பாள் சரித்திரம் எழுதிய ராஜமய்யரை எடுத்துக் காட்டுகிறார்.
அய்யரின் எழுத்துநடை மக்களை மிகவும் கவரத்தக்கது. மனதில் ஆணிப்பதித்தாற் போல பதியும் தன்மையுடையது. எதிரிகளைக் கண்டனம் செய்ய ஆரம்பிக்கும் போது அதி ல் புரளித்தன்மையும், கிண்டலும் இழைந்தோடும். இலாவண்யம் பளிச்சிடும், நடேசய்யரின் வசன நடையில் சுப்பிரமணிய பாரதி யாரின் கவிதை வேகம் இருந்தது என்றுகூட எண்ணலாம். அந்த அளவுக்கு தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் அவரது காலப்பகுதியில் வாழ்ந்த எவருக்கும் தாழ்வுபடாத விதத்தில் அய்யரின் எழுத்துநடை அமைந்திருந்தது என்பது உண்மையில் வியப்பூட்டும் செய்தியாகும். இந்த அம்சத்தில் நடேசய்யரின் ஆற்றலும், பங்களிப்பும் மனந்திறந்து பாராட்டப்பட வேண்டிய ஒன்ருகும்.
அய்யரின் நாவல்கள் எதுவும் புத்தகமாக வெளிவந்த தாக அறியக்கிடைக்கவில்லை. நடேசய்யர் தாம் ஆசிரியராக பணிபுரிந்த சுதந்திரன் பத்திரிகையில் ஓரிரண்டு நாவல்கள் எழுதியதாகக் கூறப்படுவது உண்மைக்கு மாறனது.
1947 ஜூன் முதலாம் திகதி சுதந்திரன் வெளிவர ஆரம்பித்தது. அதே ஆண்டு நவம்பர் ஏழாம் திகதி அய்யர் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற விரக்தியில் மரண மானர். இக்காலப்பகுதியில் அய்யரின் அரசியல் கட்டுரைகள் மாத்திரமே சுதந்திரனில் வெளியாகியிருக்கின்றன.

147
மேலும் இக்காலப்பகுதியில் வெளியான எல்லா சுதந்திரன் இதழ்களையும் பார்வையிட்ட போது சுதந்திரனில் நாவலோ, சிறுகதையோ அப்போது பிரசுரிக்கப்படவில்லை என்பது இந் நூலாசிரியர் தெரிந்து கொண்ட உண்மையாகும்.
நடேசய்யர் 1929ல் நடாத்திய தேசபக்தன் தினசரி ஏடு இலங்கையில் வெளிவருகிற ஒரே தமிழ்த் தினசரி என்று முன்பக்கத்தில் ஆங்கிலத்தில் பிர கடனம் செய்திருக்கிறது. இதுவும் ஆய்வுக்குரிய உண்மையாகும்.
இது காலம் வரை இலங்கையில் முதலாவது செய்திப்பத் திரிகை க. அ. மீராமுகைதீன் நடாத்திய தினத்தபால் என்றே கரு தப் பட்டது அது வெளிவர ஆரம்பித்த காலம் சரியாகத் தெரிய வில்லை. என்று கூறப்பட்டதோடு, அதையடுத்து வெளியான செய்திப் பத்திரிகை வீரகேசரி என்றும் கருதப்பட்டது. கண்க செந்திநாதன் தனது நூலில் இதே கருத்தை வெளியிட்டிருக் கிருர். (பக்கம் 164) தேசிய சுவடித் திணைக்களம் தரும் குறிப்பு களின்படி 1930ல் தான் தினத்தபால் வெளிவர ஆரம்பித்திருக் கின்றது.
இதே ஆண்டில் தான் வீரகேசரியும் வெளிவரத் தொடங் கியது. இதற்கு முன்னரே தேசபக்தன் தினசரியாக வெளி வந்துள்ளது. 1929ல் தினசரியாக வெளி வந்த தேசபக்தன் ஓராண்டுவரை தொடர்ந்து வெளிவந்து பின் நின்று போனது. அதற்கு முன்பே தேசநேசன் சிலகாலம் தினசரியாக வெளிவந்து நின்று போனது.
வீரகேசரி ஆசிரியராக பணி ஆற்றி சாதனைகள் புரிந்த எச். நெல்லையா, 1927ல் தேசபக்தனில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்த போது அது வாரத்துக்கு மூ ன் ரு க வெளிவந் துள்ளது.
அய்யர் மரணமான பின் வெளியான சுதந்திரன் தலையங் கத்தில் (8.11.1947)
இலங்கையில் முதன் முதலாக தினசரி தமிழ்ப்பத் திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே. இன்று இலங்கையிலும், இந்தியாவிலும் அவரிடம் பத்திரி கைத் தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் “சுதந்திரன்'

Page 77
48
பத்திரிகையை தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளிவரச் செய்த முக்கியகர்த்தாவும் திரு. நடே சய்யர் தான் . .
என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இவை களை ஒப்பு நோக்குகையில் இலங்கையில் முதல் தமிழ்த் தினசரியை வெளியிட்ட பெருமைக்குரியவர் கோ. நடே சய்யர் தான் என்பதை அறிஞர் உலகம் ஏற்றக வேண்டும்.
இந்த உண்மை இது காலம் வரை வெளியிட்ப்படாமல் போனது நடேசய்யர் அவர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகமாகும்.
ஏ. ஈ. குணசிங்கா தனது அனுபவங்களைப்பற்றி எழுதிய தொடர் கட்டுரையில் ஓரிடத்தில் கூட நடேசய்யரைப்பற்றிக் குறிப்பிடவில்லை. கருத்து வேறுபாட்டால் கடைசி காலத்தில் அவர்கள் இருவரும் பிரிந்திருக்கலாம். குணசிங்காவைப் பத்திரி கையில் மிகப்பெரும் அளவுக்கு எதிர்த்து எழுதியவர் நடேசய்ய ராகவே இருந்திருக்கலாம். எனினும் அய்யரின் பங்களிப்பை ஒரே அடியாக இருட்டடிப்புச் செய்திருப்பது நாகரீகமான செயலாகக் கருதப்பட முடியாது. 対
ஒருவேளை தனக்குப் பக்கத்திலேயே அய்யருக்கும் சிலை அமைக்கப்பட்டுவிடும் என்று அவர் அஞ்சினரோ தெரியவில்லை.
நடேசய்யர் என்ற பெயர் அவர் வாழ்ந்த காலத்தில் மாத்திரமல்ல, அவர் மரணித்தப் பின்னரும்கூட ஒருசிலருக்கு அதிர்ச்சி தருவதாகவும், வேறு சிலருக்கு அச்சம் ஊட்டுவதா கவும் அமைந்தது போல் தோன்றுகிறது.
சட்டசபையில் நடேசய்யர்
இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் குறித்து முதல் குரல் எழுப்பிய இலங்கையர் சேர். பொன்னம்பலம் அருணுசலம் ஆவர்.
தொழிலாளர்களின் அறியாமையையும் வறுமையையும் குறித்து அவர் அநுதாபப்பட்டார், கவலை அடைந்தார்.

A9
அநுதாபப்படுவதும், கவலை அடைவதும் மனித நேயம் கொண்ட அனைவரும் செய்வதே அது போதாது, அதற்கும்.
முனைந்தார் ஒருவர். s
இந்தியத் தொழிலாளர்களே சர்வமும் என்று நினைத்து அவர்களைப் பிரதிநிதித்துவம் பண்ணுவதற்கென்றே நாடாளு மன்றத்தில் ஒருவர் இருக்க வேண்டும் என்று திட்டங்கள் தீட்டி தீர்மானங்கள் போட்டு போராடி வெற்றி கண்ட அந்த ஒருவர் கோ. நடேசய்யரே ஆவார்.
அவர் அமைத்துக் கொடுத்த ராஜபாட்டையில் வழி நடந்த வெறெந்த வம்சாவளிப் பிரதிநிதியும் இதுவரையிலும் அவர் அளவுக்குப் பாராளுமன்ற பதிவேட்டில் இடம்பெற வில்லை என்றே தோன்றுகிறது.
அ வர து சட்டசபைப் பேச்சுக்கள் அத்தனையும் ஆணித்தரமானவைகள். தனது கருத்துக்களை வலி யுறுத்த அவர் கையாளும் உதாரணங்களும் புள்ளி விபரங்களும் எதிர்த்துப் பேச நினைப்பவரை ஒரு கணம் தடுமாறச் செய்திருப்பதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன.
இந்தியாவிலே எல்லாப் பகுதி களி லும் அவர் பிரயாணம் செய்தவர். இலங்கையின் எல்லா மூலை முடுக்குகளும் அவருக்கு அத்து படி, அவர்
மலாயாவிற்கும் பர்மாவிற்கும் போய் வந்தவர். அங்குள்ள தொழிலாளர் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்.
இந்திய அரசாங்க ஏஜண்டாக வருபவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்கிருந்தது. ஆஸ்திரேலிய, அமெரிக்க தொழிலாளத் தலைவர் களுடன் தொடர்பிருந்ததாக அறிக்கைகள் கூறு கின்றன.
அவரது பேச்சுக்களில் இவை அத்தனையும் இழைந்தோடி கருத்துக் கோர்வையாகி கனல் கக்கியிருக்கின்றன, எழுத்துக்களில் அனலின் சூடேற்றி ஆரவாரம் பண்ணியிருக்கின்றன. ஆற்றிய பணிகளில் மாற்றம் தேடிய மனதுக்கு ஆராத்திப்பண்பாடியிருக்

Page 78
丑50
கின்றன. 17/12/1925ல் சட்ட ம ன் ற த் தி ல் உறுதி மொழி எடுத்துக் கொண்டவர் 19/02/1947ல் தனது இறுதிப் பேச்சை நடாத்தியவரை தனது பேச்சுக்களின் வேகத்தைக் குறைத்துக் கொண்டதேயில்லை.
இந்தியர்களின் குடியேற்றத்தை நிறுத்த வேண்டு மென்று இலங்கை சட்டசபையில் கூறியவர்கள் இருவராவர். ஒருவர் மறைந்த பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா மற்றவர் தேச பக்தன் கோ. நடேசய்யர் ஆவார்.
இருவரும் தங்களின் கொள்கையிலேயே குறியாயிருந்த தேசபக் தர்களே தாம்!
தாம் வரித்துக் கொண்ட கொள்கை வழி நின்று அவர்கள் செயல்பட்டார்கள் என்பது அவர்களின் சிறப்பாகும்.
பண்டாரநாயக்கா அவ்விதம் குடியேற்றம் குறித்து வெளி யிட்ட கருத்து இந்தியர் வருகையால் இலங்கையரின் தொழில் வாய்ப்புக்கள், குறைகின்றன என்ற உணர்வால் தோன்றியது ஆகும்.
1934ல் அவர் சட்டசபையில் இவ் வித ம் பேசியதின் பின்னல் சேர். எட்வர்ட் ஜெக்சன் தலைமையில் ஒரு குழு அமைக் கப்பட்டது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நிலை மை இந் தி யக் குடி யேற்ற த் தை ப் பெருக்கியும் குறைத்தும் தானகவே கட்டுப்படுத்தும் என்றும்
அவசியமில்லை என்றும் அது கருதியது. கூடவே எந்தக் காரணத்தாலும் இந்தியர் வருகையை தடை செய்யலாகாது என்றும் அது நாட்டின் செல்வ வளத்தைப் பாதிக்கும் என்றும் அறிவுறுத்தியது. "டெல்லிப் பேச்சு முடிந்தவுடனே குடியேற்றத் தடை ஏற்பட்டிருக்க வேண்டும். என்னை விட இந்தியப் பிரச்சனையில் வேறுயாருக்கு அறிவிருக் கிறது"
என்று பேசினர், பண்டாரநாயக்கா.

I5 I
அய்யரும் இந்தியக் குடியேற்றத்தை நிறுத்த வேண்டு மென்று தனது சட்டநிரூபணசபை அங்கத்துவ காலத்திலிருந்தே குரல் எழுப்பினர் இப்படி முதல் குரல் கொடுத்த முதல்வர் கோ. நடேசய்யரே ஆவார். அவரை யாரும் விளங்கிக் கொள்ள வில்லை,
சாதாரண உண்மைகளை விளங்கிக் கொள்ளாதவர்கள் மு ட் டா ள் கள் எனக் கருதப்படுகிருர்கள். அசாதார ண உண்மைகளை விளங் கி க் கொள்ளும் சக்தி அறிஞர்களுக்கும் தப்பிப்போவதுண்டு. தீர்க்க தரிசனம் என்ற பெயரில் மனித சமுதாயம் அடுக்கி வைத்திருக்கும் ஏராளமான உதாரணங்கள் இந்த இரண்டு வகையிலுமே அடங்கும்.
அய்யர் அவ்விதம் குரல் கொடுத்ததன் காரணம் என்ன? 1. தொழிலாளர்கள் தோட்டத்தில் தேவை க்கு அதிகமாக இல்லாத போது அவர்களுக்கு ஒரு மதிப்பும், தேவையும் ஏற்படுவதென்பது நிர்ப்பந்திக்கப்படுகிறது. 2. தொழிலாளர்களுக்கான தேவைகள் நிர்ப்பந்தமாகின்றபோது அவர்களின் கோரிக்கைகள் பல ப் படுவது த வி ர் க்க முடியாததா கின்றது. 3. தொழிலாளர்கள் இங்கு தொடர்ந்து தொழில் பண்ணும் பொழுது இயற்கையாகவே நாட் டு நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுவது தவிர்க்க முடியாததாகின்றது. 4. நாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும் எவரும் இந்த நாட்டு குடிமக்களாக ஏற்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாததா கிறது. 5. இவை எல்லாவற்றிற்கும் மேலாக கூலிகளை இறக்குமதி யாக்கும் டிப்போக்களாக இந்தியா இருப்பதை அய்யர் வெறுத்து ஒதுக்கினர். இலங்கையின் அதி உயர்ந்த சிவில் நிர்வாகத்தில் பங்கேற்க விரும்பியவர் நடேசய்யர்.
அவரால் எப்படி அமைதி காண முடியும்?
இருதுருவங்கள் நோக்கம் வேருண திசையைக் குறிக்கின்ற போது ஒன்று சேர முடியுமென்பதை ஒரே இடத்திலிருந்து செயற்பட்ட முடியுமென்பதை நடேசய்யரும். பண்டாரநாயக்கவும் நிரூபிக்கிருர்கள். --
தொழிற்சங்கத்துறையில் இந்நாட்டில் ஈடுபாடு கொண்டவர்களாக இரு வரை மாத் தி ர மே பண்டாரநாயக்கா மதித்தார். அவர்கள் என். எம். பெரேராவும் கோ. நடேசய்யருமாவார்கள்.
இது எப்படி சாத்தியமானது?

Page 79
型52
இன்னுமோர் உதாரணத்தைக் காணலாம்.
சிங்கள மக்களைத் தோட்டங்களில் வே லை க் க ம ர் த் த வேண்டும், என்பதில் பலரும் ஈடுபாடு கொண்டனர். அவ்விதம் செய்வதன் மூலமே படர்ந்து வரும் இந் தி ய ஆளுகையை கட்டுப்படுத்த இயலும் என்று பலர் அபிப்பிராயம்தெரிவித் தனா.
சிங்களவர்களைத் தோட்டங்களில் வேலைக்கு அமர்த்துவதற் கான பாரிய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.
அக்மீமான, அக்குரஸ்ஸ, கட்டுகாஸ்தோட்டை, ஆகிய இடங்களில் முகவர் நிறுவனங்கள் திறக்கப் பட்டன. விளம்பரங்களும் நோ ட் டீ ஸ் களும், அச்சடிக்கப்பட்டு விநியோகம் பண்ணப்பட்டன. சிங்களவர்களை தோட்டத்தில் அமர்த்தும் இம்முக வர் நிறுவன முயற்சிகள் வெற்றி பெறவில்லை, சிங்களவர்கள் மிகக் குறைவாகவே தோட்டத்தில் வேலைக்குச் சேர்ந்தனர்.
இம்முகவர் நிறுவனங்களிலிருந்து 72 தோட்டங்களுக்குத் தேவையான தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப் பட்டனர். ஓரிரு தினங்களிலேயே அத்தொழிலாளர்கள் திரும்பிச் சென்று விட்டனர்.
1938ல் நடந்த இந்த சம்பவம் தென்னிந்தியர்களை வரச் செய்வதில் மேற்கொள்ளப்பட்ட "ஆள்காட்டி" முறையைச் சிங்களவர்களிடமும் அறிமுகப்படுத்த முடியுமா என்று பலரை ஆலோசிக்கப் பண்ணியது.
உண்மை இப்படி இருந்திருக்கலாம். ஆனல் நெஞ்சார சிங்களத் தொழிலாளர்கள் தோட்டத்தில் குடியமர்த்தப்படுவதை நடேசய்யர் விரும்பினர். அவர் அவ்விதம் விரும்பியதற்கு தேசபக்தன் கோ. நடேசய்யராக அவர் விளங்கியதே காரண மாகும்.
நடேசய்யர் விளக்குகின்ருர்:-
"சில நாட்களுக்கு முன்னர் ஒரு தோட்டத்துரையோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம் "அய்யர் நீங்கள் சிங்களவரின் கையில் அகப்பட்டுக் கொண்டு அவர்களுக்காகப் பேசுகிறீர்கள்" என்ருர்,

158
"நீங்கள் எங்க கள சிங்களவர்களிடம் ஒப்படைத்து விட்டீர்கள். அதற்குப்பிறகு இதென்ன பேச்சு" என்று கேட் டேன். அவரோ "இந்தியர்களை நான் நேசிக்கிறேன். அவர்கள் கீழ்பணியும் வகையைச் சார்ந்தவர்கள்.” என்று பேசியிருப்பதை எடுத்துக் காட்டுகிருர்,
பண்டாரநாயக்கா அவரிடம் எத்தனை பேர் இப்படி இருக்கிறர்கள்?
நடேசய்யர்: 400 பேர்கள் இருக்கிருர்கள். அவருக்குப் பாடம் ஏற்கனவே படித்துக் கொடுத்தாயிற்று. சிங்களவர் ஒருவரை அவர் நல்ல முறையில் நடத்தவில்லை அவன் அத்துரையிடம் கத்தியைக் காட்டி விட்டான். அத்துரையிடம் நான் "ஒவ்வொரு தோட்டத்திலும் 25 சத வீதம் சிங்களத் தொழிலாளர்கள் இருக்கு மாப் போலச் செய்கிறேன். இந்தியர்கள் மிருகங் களைப் போல நடவாது மனிதர்களைப் போல நடக்க அப்போது தான் முனைவர்" என்று கூறினேன், என்கிருர்.
இந்தியத் தமிழர்களின் நன்றி யுணர்வு அடி மையின் நிலைக்கு அமிழ்ந்து போவதையே நடே சய்யர் கண்டு வந்திருக்கிருர், தோட்டப் பகுதி களில் இப் படி யான நிலை தொடர்வதையே தோட்டத்துரைமாரும் நிர்வாகமும் விரும்பியது. பே னிப் பாதுகாத்தது. இது அழித்தெடுக்கப் படுவதற்கு சிங்களவர்களின் தொடர்பு உதவும் என்று அய்யர் மனமார நம்பினர். ஒவ்வொரு தோட்டத்திலும் 25 சதவீத சிங்களத் தொழி லாளர்கள் அறிமுகப்படுத்தப்படுவது இந்தியத் தொழிலாளர்களின் மனுேபாவத்தை மாற்றியமைக் கவும், மனுேபாவத்தை வளர்க்கவும் உதவும் என் றும் அய்யர் திண்ணமாக நம்பினர்.
கொழும்பில் நகரத் தொழிலாளர்களிடையே சிங்களவர் களின் சேர்க் கை யா ல் த மிழ் தொழிலாளர்களிடையும், மலையாளத் தொழிலாளர்களிடையும் நேர்ந்த பிரமிக்கத்தக்க மாற்றத்தை அவர் அவதானித்து வந்து ஸ் ளார். தொழில் திணைக்களம் செய்த மதிப்பிட்டின்படி 1938ல் 27, 883 சிங்களத் தொழிலாளர்கள் 1270 தோட்டங்களில் தொழிலாளர்களாக இருந்திருக்கின்றனர். அய்யர் மேற்கொண்ட முயற்சி வெற்றி அடைந்து இருக்குமானுல் இலங்கை மலை நாட்டில் வகுப்புத் துவேஷம் வளர்ந்திருக்காது. வர் க் க ரீதியான ஓர் எழுச்சி

Page 80
154
ஏற்பட வழியேற்பட்டிருந்திருக்கும். நிச்சயமாக தோட்ட மக்களின் வாழ்க்கை முறையிலே ஒரு மாற்றம் ஏற்பட்டிரு திருக்கும். w
குடியேற்ற மசோதா மீது நடைபெற்ற விவாதத்தின் போது:
நடேசய்யர்: ஆஸ்திரேலியாவில் 1500 இந்தியர்களும், நியூசி லாந்தில் 900 இந்தியர்களும் அந்தந்த நாட்டில் சமதையான குடிமக்களாக ஏற்கப்பட்டிருக்கிருர்கள்
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா நாமும் 1500 பேரை
ஏற்றுக் கொள்வோம்.
of unft கெளரவ அங்கத்தினர் ஒருவரைத் தானும் அள் விதம் ஏற்க மாட்டார். இந்நாட்டில் நா ங் கள் மூலதனமாக இட் டி ரு க் கும் பணத்தை - நான் அப்படிச் சொல்வதன் அர்த்தம் தொழிலாளர்களுக்கு சம்பளமாக தரப்பட வேண்டிய பணத்தை - கொடுத் தால் நாங்கள் ஒட்டு மொத்தமாக இந்நாட்டை விட்டுப் போவதற்கு தயாராக இருக்கின்ருேம்.
பண்டாரநாயக்கா தரப்பட வேண்டிய பணமா? அவர்கள் தான்
கடனளிகளாக இருக்கிருர்களே!
பிரதி சபாநாயகர்: (அமைதி. .தயவு செய்து அமைதியா
யிருந்து அவரை பேச விடுங்கள்)
அய்யர் மடை திறந்த வெள்ளம் போலத் தொடர்கிரு 6 KM கடல் கடந்து வெளி நாடுகளில் குடியேறிய இந்தியர்களின் தொகை 25 லட்சம் ஆகும். இதில் 90 சத வீதத்தினர் தமிழர் களாவர். இவர்கள் உலகின் பல பாகங்களில் குடியேறினர்கள் அவர்கள் தொழிலாளர்களாகவே குடியேறினர்கள். அவர்களின் குரல் காட்டில் அழு கி ன் ற கதறலாகவே அமைந்திருக்கிறது இலங்கையின் 1871 குடிசனமதிப்பின்படி 12 சத வீதத்தினர் இலங்கையில் பிறந்தவர்கள். 1921ல் 21 சதவீதமாகவும் 1941ல் 80 சத வீதமாகவும் இது அதிகரித்துள்ளது. இப்புள்ளி விபரங்கள் உங்களிடமில்லாமல் இரு க்க லா ம். ஆனல் தோட்டத்துக்குப் பிரட்டுக்களம் போய் நின்று இலங்கையில் பிறந்தவர்களை நான் கணக்கெடுத்திருக்கின்றேன்" என்கிருர். குடிசன மதிப்போடு ஒத்து வருகிற புள்ளி விபரங்களைத் தருவதன் மூலம் பல முறை தனது மேதா விலாசத்தை நிரூபித்திருக்கிருர். தொழில் முறை

155
பற்றி பேசுவதே அரசி ய லா கி விடுகிறது. தொழிலாளர் பிரச்சனை குறித்து இணக்கம் தெரிவிப்பதற்கு பதில் தோட்டங்களை மூடுவோம் என்று பயம் காட் டுகி ற ர்கள். தொழிலாளர்கள் தேவைக்கு அதிகமாயிருப்பதாலேயே அது நடக்கிறது என்று. கருதிய அய்யர் அது நாள்வரை குடியேற்றத்தை தடை செய் வதைப் பற்றியே பேசி வந்த ஐயர் இங்கிருந்து தொழிலாளர் களில் ஒரு பங்கினரைத் திருப்பி அனுப்பிவிட வேண்டும். என்று எண்ணுகிறர். இப்படி ஒரு யோசனையை இலங்கை நாடாளுமன் றத்தில் கூறிய முதல் பிரமுகர் கோ. நடேசய்யரே ஆகும்.
அய்யர்: இப்போதிருப்பதில் 20 சதவீதத்தினரை இந்தியாவுக்கு அனுப்பி விட்டு மிகுதியாயிருக்கும் 80 சதவீதத்தினரை இந்நாட்டு குடிகளாக ஏற்போம், 20 சதவீதத்தினர் 80 சத வீதத்தினருக்கு ஒரு பாரமாக இருக்கின்றனர். சில கவர்ச்சிகரமான ஊக்குவிப்பையும் அவர்களுக் கான பிரயாணச் செலவையும் கொடுத்தால் இது இலகுவில் நடக்கக் கூடியதே.
எஸ். ட்பிள்யூ. ஆர். டி. பண்ட்ாரநாயக்கா இல்லை,
அய்யர்: நீங்கள் இல்லை என்று சொல்லலாம். நீங்கள் விரும்பு
கின்றீர்களோ இல்லையோ அது தான் நடக் கப் போகிறது.
ஒா அங்கத்தினர்: உங்களுக்கு அது எப்படித் தெரியும், அய்யர்: அநுபவத்தின் மூலம் அதை நான் தெரிந்து கொண்
Gl-Giria
நடேசய்யரின் தீர்க்க தரிசனம் மிகுந்த வார்த்தைகள் 1940ல் நவம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற சமாதானப் பேச்சு வார்த்தைகளை அவதானித்ததால் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடேசய்யரின் கூ ற் றை விளக்கிக் கொள்ளாது மறுத் துரைத்த மறைந்த பிரதமரும் நகையாடிய மற்ற அரசியல்வாதி களும் பின்னல் எதைக் கண்டார்கள்?
இந்திய மக்களைப் பற்றி அய்யர் நாடாளுமன்றத்தில் 1941ல் எதைச் சொன்னரோ அந்த அடிப்படையில் தான் பல ஒப்பந்தங்கள் பிறகு ஏற்பட்டன. இந்திய மக்கள் இ ன் று இங்கிருந்து மீண்டும் இந்தியா திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.

Page 81
சட்ட நிரூபண சபையில் 17/2/1927ல் நடேசய்யர் கீழ்க் கானும் தீர்மானங்களை கொண்டு வந்தார்:
1. எல்லாத் தோட்டங்களிலும் தொழிலாளர்கள் அதிகரித்து அசெளகரியம் கூடியிருக்கிறது. ல ய ன் கள் திருத்தப்பட்டு ஒதுக்கிட வசதி திருப்திகரமாகச் செய்யப்பட்டு வாழக்கூடிய செளகரிய நிலைமை உருவாகும் வரை இந்தியத் தொழி ாைளர்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவது நிறுத்தப் படல் வேண்டும்
2. திருச்சிளுப்பள்ளியில் பணியாற்றும் குடியகல்வு ஆணையாளர் சிவில் சேர்விஸ் தரத்துக்கான அரசாங்க உத்தியோகஸ்தரா யிருத்தல் வேண்டும். இலங்கை தொழில் ஆணையாளர் என்ற பெயரில் தோட்டத்துரைமார் சங்கத்தின் பிரதிநிதிகளே அங்கு நியமிக்கப்படுவது நிறுத்தப்படல் வேண்டும்.
முதல் தீர்மானத்தை சமர்ப்பித்த நடேசய்யர்:-
**இந்தியாவில் குடியேற்ற நாடுகளுக்குச் செல்பவn
தடை செய்யக் கோரும் எண்ணம் வலுவடையு முன்னர் நாம் இங்குள்ள நிலைமைகளை திருத்த வேண்டும். 1876ல் தயாரிக்கப் பட்ட முதல் மருத்துவ அறிக்கையின் படி ஒரு காம்பிராவில்10 அடிக்கு 8 அடி என்ற காம்பிராவில் எட்டு பேர்கள் இருக் கிருர்கள் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இன்னும் இதே நிலைமை தான் நிலவுகிறது. இது சும் பந்த மா ன புள்ளி விபரங்களை அரசாங்கத்திடம் கேட்டுப் பெற மு. யன்றே ன். அவர்களிடமில்லை. நான் தரும் விபரங்கள் நானே சேகரித் தவைகள். அதிகம் தவறு இருக்க முடியாது. சிம்லாவுக்கு நான் 1922ல் சென்றிருந்த போது லயன்கள் 1927க்கு முன் திருத்தப் படும் என்று துரைமார்களின் பிரதிநிதிகள் கூறினர்கள். இன்னும் அது திருப்திகரமாக இல்லை. ஆள் காட்டிகள் அழகிய லயன் களையும் நீர்வீழ்ச்சிகளையும் போட்டோ படங்களில் காட்டி அவர்களை ஆகை வார்த்தைகளால் ஏ மாற்றி வருகிருர்கள். ஒரே காம்பிராவில் ஒரே பெண்ணும் 5 ஆண்களும் வாழும் கொடுமை மூன்று பெண்களும் ஒரே ஆணும் வாழும் துர்ப்பாக் கியம் இன்னும் இருக்கிறது. தற்போதைய மருத்துவ உத்தி யோகஸ்தர் துரைமார் சங்கத்தால் நியமிக்கப்பட்டவர். அவரது அறிக்கை உண்மையானதாகப் படவில்லை. நீங்கள் 1876 அறிக், கையை வாசித்துப் பார்க்க வேண்டும்.”*

157
நடேசய்யரின் உரை தோட்ட மக்களின் உண்மை நிலையை வெளி உலகுக்கு அம்பலப்படுத்தியது. டி. பி. ஜாயா இந்த தீர்மானத்தை வழி மொழிந்தார். இது குறித்து நடந்த விவா
தத்தில்:-
டி. எஸ். சேனநாயக்கா:
டி. எல். வில்லியர்ஸ்
கோ. நடேசய்யர்:
டாக்டர் ஜே. எவ். ஈ. பிரிட்ஜர்:
கோ. நடேசய்யர்:
கொழும்பு நகரில் தெருவோரங்களில் தூங்கும் இந்தியர்களை விட தோட்டங் களில் வாழும் இந்தியர்கள் நன்ருக இரு க் கி ரு ர் கள். உ ண் மை யில் இலங்கைக்கு வந்திருக்கும் இந்தியர் களில் தோட்டங்களில் வாழ்பவர்களே வாழ் க் கை யை அநுபவிக்கிருர்கள். என்று பேசினுர்,
(ஐரோப்பிய பிரதிநிதி) அய்யரை ஓரள விற்கு ஆதரித்த அதே நேர த் தி ல் தோட்டங்களில் அரிதாக காணக்கிடைக் கின்ற வழமைக்கு மாருன நிகழ்ச்சிகளைப் பெரிது படுத்தி குறை கூறுவது அய்யரின் பழக்கம் என்று குறை கூறினர்.
இந்த தீர்மானத்தை எதிர்க்கும் சிலர் தேயிலை தோட்டங்களுக்கு சொந்தக் காரர்கள், மற்றவர்கள் பிரச்சனையின்
தாக்கம் தெரியா த வர்கள் என்று
சாடினர்.
(சுகாதார சேவை) சின்ன சம்பவம் என் ருலும் மிகைப்படுத்தும் ஒவியக்காரனைப் போ ன் ற வர் அய்யர் என்று கேலி பண்ணினுர்,
இரண்டு ஆண்டுகள் ஒவியம் பயின்றவன் நான்; எ ன் னை நோக்கம் எதுவுமற்ற ஓவியக்காரன் போன்றவன் என்கிருர் சு காதார சேவையாளர் ஒவியத்தின் நோக்கத்தையும் நிறம் தீட்டும் தேவை யையும் நானறிவேன். தொடுவானத்தின் சிறு புள் ளி யை யு ம் சமுத்திரத்தின் எல்லைக்கோட்டையும் வேறு படுத் து வதற்கு என்னுல் முடி யும். ஆனல்

Page 82
158
அலுவலகத்துக்குள்ளாகவே அ ம ர் ந் திருக்கும் மருத்துவம் பயின்ற ஒருவருக்கு முந்நூறு, நாநூறு மைகல்ஞக்கப்பால் உள்ள "கூலி லயன்களில்" என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந் கொள்ள முடியாது.
அறிக்கைகள் தயாரிப்பதில் மாத்திரம் பலனில்லை. ஆற்றின் ஆழத்தை அறிந்து கொண்டிருந்த நிபுணனை வெள்ளம் வந்து அடித்துச் சென் ற  ைத போல இன்று நா ட் டி ல் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மலாயாவில் துரை மார்கள் ப டி ப் படி யாக சீனர்களை குறைத்து இந் தி யர் களை ஏற்பதற்கு காரணம் இந்தியர்கள் கடும் உழைப் பாளிகள் என்பதால் அல்ல; உதைகளை சப்தமின்றி வாங்குவதால்தான்.
டி. எல். வில்லியர்ஸ்: (குறுக்கிட்டு) உங்கள் இந்திய பயணத் துக்கு காசு கெரடுத்தவர்கள் கங்காணி கள்தானே.
கோ. நடேசய்யர்: இன்னும் கூட கங்காணிகள் என்னிடம் உதவி கேட்டு வந்தால் இந்தியன் என்ற விதத்தில் அவர்களுக்கு உதவுவேன்.
இத் தனை க் கும் பிறகு இத்தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது இத்தீர்மானத்தை சபையில் அறிமுகப்படுத்திய அய்யரோடும், ஜாயாவோடும் சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா என்ற ஒருவர் மாத்திரமே ஆதரவாக வாக்களித்தார். திவான் பகதூரார் தனது வழக்கப்படி வாக்களிக்காது நடுநிலை வகித்தார். 32 வாக்குகள் எதிராக விழுந்தன.
இப்படி பல முறை - இந்திய மக்களின் நலன்களை வேண்டி அய்யர் கொண்டு வந்த தீர்மானங்களை சட்டசபையிலே தோற்கடித் திருக்கின்றனர். தோட்ட மக்களைப்பற்றிய தங்களது உண்மை உரு வத்தை காட்டி இருக்கின்றனர். தனது இரண்டாவது தீர்மானத்தை இலங்கை இந்திய அரசாங்கங்கள் பேச்சு வார்த்தைகள் நடாத்திக் கொண்டிருக்கின்றன என்ற முறையில் விவாதத்திற்கு விடாது திரும்பப் பெற்றுக்கொண்டார். தரம் குறைந்திருக்கின்ற போது,

覆荔9
கேட்பவரின் தரம்-தகுதி-பலம் குறைந்திருக்கின்றபோது உரைப் பவரின் சொல்லே உயர்ந்து நிற்கும். சொன் ன தைச் செய்ய வில்லையே என்று மனதுக்குள்ளாகவே வெந்து மாயலாமே தவிர வெளியே சொல்லிப் பரிகாரம் தேட முடியாது. அய்யரின் "தீர் மானம் அரசாங்கங்களின் பேச்சால் தடைபட்டது உண்மையாக இருக்கலாம். ஆனல் செயலில் உருப்படியாக எதுவுமே நடைபெற
வில்லை,
செயல் ஒன்றின் மீது தான் அய்யருக்கு நம்பிக்கை இருந்தது.
செயல் அல்லால் ஜெயமில்லை என்பது அவரது கோட்பாடு. எனவே காத்திருந்தார் காத்திருந்தார். காலம் தகுவதாய் வரும் வரை காத்திருந்தார். 28/8/1928ம் தேதி ஒரு வருடம் நான்கு மாதம் பதினெரு நாள் ஆகிவிட்ட ஒரு நாளில் மீண்டும் அதே தீர்மானத்தைக் கொண்டு வந்தார். இரண்டு அரசாங்கங்கள் நடாத்துகிற பேச்சு வார்த்தைகள் இரண்டு நாட்டி ன் சனத் தொகையையும் பாதிக்கக் கூடிய பேச்சு வார்த்தைகள் சட்டசபை யில் தனி ஒரு மனிதரால் மீண்டும் கிளப்பப்படுவதென்றல் அதற்கு என்ன அர்த்தம் இருக்க முடியும்?
படம் எடுத்தாடும் பாம்பு கொத்தாமல் விடுவதில்லை!
பாய்ந்து வரும் பெருநதியில் - நடுவழியில் ஏற்படும் இடர் பாடுகள் பாதிப்பைத் தருவதில்லை! என்பதற்கமைய,
கொண்ட கொள்கையில் நின்று பிடித்த நடேசய்யர் அதே தீர்மானத்தை மீண்டும் கொண்டு வந்தார்.
அன்று அவர் மிகப் பெரியதோர் உரையை நிகழ்த்தினர். அன்றைய அவரது உரை இந்தியர்கள் இந்நாட்டுக்கு வந்த இழி நிலையை கண்ணீரால் கூறுகிறது.
துரைமார்களின் பிரதிநிதி ஒருவரே தொழில் ஆணையாளர் என்றும் குடிஅகல்வு ஆணையாளர் என்றும் எடுத்துக் கூறிய அய்யர் இந்த முறையில் மாற்றம் வேண்டியது அவசியம், அல்லது வேலிக்கு ஒணுனே சாட்சி என்ற நிலைமைதான் என்பதை வலியுறுத்தினர்.
"இலங்கையில் இருக்கின்ற கூலி லயன்கள் இவை, இந்த தளிர் அரும்பிய மலைகளில் தாம் கொழுந்தெடுப்பது, இப்பசும் புல் வெளியில் தாங்கள் வளர்க்கும் பசுக்களுக்கு புல்லறுப்பார்கள், இந்த அழகிய நீர் வீழ்ச்சிகளில் தான் மலையில் வேலை முடிந்து

Page 83
60
குளிப்பது, தோட்டங்களில் இருக்கும் பூசாரி இவர்தான் என்று தாம் கொண்டு சென்றிருக்கும் அழகிய படங்களை காண்பித்து ஓர் ஆங்கிலேயர் (துரைமார்களின் நியமனமான துணை ஆணையாளர்) படிப்பறியாத கிராம வாசிகளிடம் கூறும் போது - அவருக்கு ஆதர வாக அங்கு வந்து கங்காணி ஒருவரும் அதற்கு மேலதிக விளக்கம் தரும் போது உயார்தான் மயங்க மாட்டார்கள்? இக்கிராம வாசி கள் வேறு எந்த வெள்ளையரையும் கண்டே இருக்க மாட்டார்கள். ‘துரை வந்திருக்கிறர்" "துரை வந்திருக்கிருர்’ என்று எழுகின்ற Gl) சத்தங்களினல் திரண்டு வரும் மக்கள் துரையையும், அவரது குதிரையையும் அவர் அணிந்திருக்கும் கண்ணுடியையும், கண்டு வியந்து போகிருர்கள். அவருக்குக் கீழ்தான் இலங்கையில் வேலை செய்யப் போகின்ருேம் என்ற நினைப்பு எழுவதற்கு முன்னரேயே அவருக்கு ஏற்கனவே அறிமுகமான் பழைய கூலிகள் அவ்விடம் வந்து அன்னியோன்னியமாக கதைக்கிருர்கள். இவைகளை நம்பி ஒரு கூட்டமே புறப்படத் தயாராகிறது" என்று அய்யர் எடுத்துக் காட்டிய பிறகு தான் இலங்கை தொழில் ஆணையாளர் என்பதும் குடிஅகல்வு ஆணையாளர் என்பதும் இரண்டு வெவ்வேருண பதவிகள் என்ருலும் அதை இலங்கையிலே புரிவது ஒருவரே என்பதும், அவரும் துரைமார் சங்க த் தால் நியமிக்கப்பட்டவரே என்ற உண்மையும் வெளி உலகுக்குத் தெரிய வருகிறது.
என்ருலும் தோட்டச் சொந்தக்காரர்களுக்கு ஆதரவாக வில்லியர்ஸ், ஜோர்ஜ் பிரவுன், பேர்டன் ஆகியோர் பல கருத்துக் களை முன் வைக்கின்றனர். நடேசய்யர் அவைகளுக்குப் பதிலளித்து மீண்டும் வாதாடுகிறர்.
'திருச்சினப்பள்ளி டிப்போவும், மண்டபம் கேம்ப்பும் நல்ல நிலையில் இயங்குகின்றதா எ ன் பதை கலந்தாலோசிப்பதற்காக நாமிங்கு கூடி இருக்கவில்லை. குடி அகல்வு ஆணையாளர் தொழில் ஆணையாளராக பணியாற்றுவது சம்பந்தமாக எ ந் த விதத்தில் சரியானது என்று தீர்மானிப்பதே நம் முன்னுள்ள பணி. குடி யகல்வு ஆணையாளர் செய்யும் கடமைகள் என் கருத்துப்படி இந்திய குடியகல்வு.சட்டத்துக்கு முரண் ஆனது. காசு கொடுத்து தொழிலாளர்கள் தூண்டப்படுவதற்கு அவர் துணையாய் நிற்கிருர்
· A 8 & d - 8 8 8 பத்தாயிரம் ரூபா கங்காணிகளிடம் கொடுக்கப்பட்டு ஆட்கள் திரட்டப்பட்டதை நானறிவேன். . இந்திய சட்டப் படி ஒரு கங்காணி 20 குடியேற்றக்காரனைத்தான் கொண்டு வரமுடியும்

6.
சட்டத்திலுள்ள ஒட்டைகள் எப்போதும் தோட்டக்காரர்களுக்கு சார்பாகவே இருக்கும். ஒரு குடும்பத்தின் தலைவன் மாத்திரமே குடியேற்றக்காரன். மற்றவர்கள் மனைவி, மகன், மகள், மருமகன், மருமகள் எல்லோரும் சார்ந்து நிற்பவர்கள். இந்த விளக்கத்தைப் பயன்படுத்தி 20 பேர் வரவேண்டிய இடத்தில் 200 பேர்கள் கொண்டு வரப்படுகிறர்கள். ஆளுக்கு பத்து ரூபா என்ற வீதத்தில் கங்காணி 2000 ரூபா பெற்று விடுகிமுன், மாதம் ஆளுக்கு 50 சதம் என்று குடியேற்றத்தொழிலாளர்களிடமிருந்து கடனையும் பிடித்து கங்காணிக்கு கொடுத்து விடுகிருர்கள். ஆள் கட்டுபவர்கள் இப் போதில்லை என்று கூறுகிருர்களே 20 சோடி தயார் என்று இந்தி ய்ாவில் கிராம கடைகளிலிருந்து தோட்டங்களுக்கு கங்காணிமார் களுக்கு வருகின்ற தந்திகளுக்கு அர்த்தம் என்ன? 20 குடும்பங்கள் இலங்கைக்கு வரத் தயாராக இருக்கின்றன என்பதுதான்.
தோட்டச் சொந்தக்காரர்கள். சட்டத்தைப் படிப்பதில்லை. நியதிகள் அவர்களுக்கு புரிவதில்லை. அவர்களின் பெரிய குறைபாடு அதுதான். * இப்படி நீள்கின்ற அய்யரின் வாதத் திறமையால் கவரப்பட்ட திவான் பகதூரார், ஈ. ஆர். தம்பிமுத்து (மட்டக்களப்பு), துரைசுவாமி (வடமாகாணம்) ஆகியோர் அய்ய ருக்கு சார்பாக குரல் கொடுக்கின்றனர். இத்தீர்மானத்தில் அய்ய ருக்கு சார்பாக "பெரியவர் திவான் பகதூரார்" பேசியது தனக்கு ஆச்சரியமாய் இருக்கிறதென்றும், அது முழுமனதாகச் செய்யப் படவில்லை என்று தான் நம்புவதாகவும் வில்லியர்ஸ் வாய்விட்டே கூறுகிறதைப் பார்க்கலாம்.
அய்யரின் சட்டசபைப் பிரவேசம் ஏற்படுத்திய மாறுதலுக்கு இது போன்ற ஏராளமான சான்றுகள் "ஹன்சார்ட்டில்" காணக் கிடைக்கின்றன.
ட்ொனமூர் ஆணைக்குழுவின் சிபார்சு குறித்த விவாதத்தின்போது:-
"நாங்கள் எப்போதும் இந்நாட்டின் அபிவிருத்தியிலும், அரசியல் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டிருக்கின்ருேம், இந்நாட்டின் அபிவிருத்தியிலேயே இந்தியத் தொழிலாளர் களினதும், இந்திய வியாபாரிகளினதும் வளர்ச்சி அமைந்துள்ளது என நாங்கள் கருதுவதே அதற்கு காரணம். அத ஞ ல் தா ன் இலங்கையரோடு இணைந்து நின்று இந்நாட்டின் அரசியல் அபி விருத்திக்காக நாம் போராடிளுேம், நாங்கள் சிறுபான்மையினராக இருந்தாலும் இந்த சபையில் ஏனைய சிறுபான்மையோரோடு

Page 84
62
இணையாமலும், அரசாங்க அலுவலகர்களோடு சேராமலும் தேசிய காங்கிரஸ்ஸோடு இணைந்தே வாக்களித்தோம். சில கால த்துக்கு முன்னர் மத்திய மாகாணத்தில் நடைபெற்ற இந்தியர் களின் மகாநாட்டில் டொனமூர் ஆணைக்குழு அறிக்கையில் தேசிய காங்கிரஸ்ஸோடு இணைந்தே நான் செயல்பட வேண்டும் என்று கேட்கப்பட்டேன். தேசிய காங்கிரஸ் இந்தியத் தொழிலாளர் களின் வாக்குரிமையை ஆதரிக்கும் என்று நம்பினுேம்,
எங்களின் நம்பிக்கை முழுவதாக சிதறடிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான நிலையை இன்று காண்கிருேம்.
ஐயா, அடுத்ததாக எனது சிங்கள நண்பர்கள் காட்டிய காரணங்கள் குறித்தும் சொல்வதானுல் உண்மை நிலை  ைய விளங்கிக் கொள்ளாமல் அவர்கள் வாதம் புரிகிருரர்கள் என்றே கூறமுடியும். அவர்களில் பலர் ஆசன அரசியல்வாதிகள். வீட்டி லிருப்பதற்கும், விரும்பிய போது அரசியல் பண்ணுவதற்கும் அவர்கள் அறிந்திருக்கிருர்களே தவிர இந்திய சமூகத்தினரைப் பற்றிய அறிவு அவர்களுக்கில்லை. அக்கறையும் இருப்பதாகக் கூற முடியாது. சீதோஷ்ண நிலை காரணமாக ஆங்கிலேயர்கள் இங்கி லாந்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை போவது போல இந்தியர்களும் மூ ன் று ஆண்டுக்கொருமுறை இந்தியா போய் விடுகிறர்கள் என்று கூறப்படுகிறது. இது அப்படி இல்லை. இங்கு வரும் இந்தியர்கள் இந்நாட்டிலேயே இற ந் து விடுகிருர்கள். கண்ட்ரோலரின் புள்ளி விபரங்கள் தவருனவை. இங்கு சபை யினரை அவை குழப்பியடிக்கின்றன. (புள்ளி விபரங்களை எடுத்துக் கூறி விளக்குகிருர்)
மிகச் சிறிய அளவினரான தொழிலாளர்களே இந்தியா போக முடிகிறது. இங்கு கிடைப்பதில் மிச்சம் பிடித்தாலல்லவா அவர்களுக்கு திரும்பிப் போக முடியும். ஆனல், தோட்டக்காரர் களோடு நல்லுறவோடிருந்து - திரும்பி வரும் போது அதிகமான தொழிலாளர்களைக் கூட்டி வருவதாகக் கூறி அனுமதிப் பத்திரம் பெற்று, ரயில்வே சலுகை பெற்று போய் வருவோருமிருக் கிருர்கள். அந்த அளவுக்கு தோட்டத் தொழிலாளர்களுக்கு புத்திக் கூர்மையில்லையென்கின்ற போது இங்கே யே தங்கி, உழைத்து உழைத்துச் சாக வேண்டியவளுகின்றன். களுத்துறைப் பகுதி தோட்டம் ஒன்றில் கல்லறை ஒன்றில்
**உழைத்து மாய்வதே எங்களின் வேலை - ஏனென்று கேட்க எங்களுக்கு ஏது உரிமை"
என்று எழுதியிருக்கும் வரிகளைக் காணலாம்.

63
கல்லறையில் பொறிக்கப்பட்டிருக்கும் இவ்வாசகங்கள் தாம் இந்நாட்டு வாழ் இந்தியத் தொழிலாளர்களின் தலைவிதி யாக அமைந்திருக்கிறது. அவ னு க் கு விருப்பமிருக்கிறதோ இல்லையோ வா யைத் திறக்காமலேயே உழைத் துச் சாவ தொன்றே அவன் செய்ய வேண்டியது.
தனி யார் தோட்டங்களில் உள்ள தொழிலாளர்களை அபேட்சகர்கள் சென்று பார்க்க முடியாததால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்க தேவையில்லை என்று கூறி இருக்கிருர்கள். ஐயா, அந்த காரணத்துக்காகத்தான் நாங்கள் வாக்குரிமை வேண்டி நிற்கிருேம்.
வாக்களிக்கும் உரிமை என்று வருகின்ற போது தொழி லாளர்கள் நிலைமைத் திருப்திகரமானதாக இல்லாத காரணத் தால் அவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கக் கூடாது என்று கூறும் பிரதிநிதிகளை - தோட்டத்துரைமார்களாக இருக்கும் பிரதிநிதிகளை - இச்சபையில் காண்பதற்கு நான் வருத்தப்படு கிறேன். தமது தொழிலாளர்களை அடிமை நிலையிலிருந்து விடுப் பதற்கு அவர்கள் முயற்சிக்காதது வெட்கப்படக் கூடிய காரிய மாகும். தொழிலாளர்களின் நலன் பேணுபவர்களாக அவர்கள் இருப்பார்களேயானுல் அவர்களின் நிலையை உயர்த்தி அவர் களுக்காகப் போராடி இருப்பார்கள். சரியான செயலை செய் வதற்குப் பதிலாக அவர்கள் தவருன வழியில் போகிறர்கள்.
மத்திய மாகாண நகர அங்கத்தவர் இந்தியர்கள் தங்களின் விருந்தினர்கள் என்று குறிப்பிட்டார்.
விருந்தினர்களைப் பற்றிப் பேசும் போது இந்துக்களான நாங்கள் இந்நாட்டில் எப்படிப்பட்ட விருந்தினராக இருக்கின் ருேம் என்று மனதில் பட்டதைக் கூற விரும்புகின்றேன்.
விருந்தினர் இல்லாமல் இராச்சாப்பாடு சாப்பிடுவதில்லை. என்ற கொள்கையைக் கடைப்பிடிக்கும் ஒருவன் இருந்தான். இரவு மணி மூன்ருகியது. விருந்தினர் யாரும் வரவில்லை. அவனை சோதிக்கவிரும்பிய சிவபெருமான், மனித உருவில் விருந்தாளி போல் வந்தார். அவனேடு விருந்துண்ண விருப்பம் காட்டினர். ஒரு நிபந்தனையும் போ ட் டார். தனக்கு மனித மாமிசம் வேண்டும், அதுவும் அந்த வீட்டு குழந்தையுடைய மாமிச மாயிருக்க வேண்டும் என்று சொன்னர். அவ்வளவிற்கும் ஒத்து அவர்கள் அவருக்கு உணவு படைத்த வேளை, குழந்தைகள் இல்லாத வீட்டில் தாலி உணவு கொள்வதில்லை என்று பிடி வாதம் பிடித்தாராம். இருந்த ஒரே மகனையும் கறியாய் சமைத்து

Page 85
64
விட்ட வீட்டாரின் நிலை எப்படி இருந்திருக்கும். செய்வதறியாது திகைத்து நின்ற அவன் உண்மையைக் கூறிய போது சிவபெரு மான் அவனது மகனை திருப்பிக் கொடுத்து ஆசீர்வதித்தார். அதுவே கதை. விருந்தும், விருந்தாளியும் இப் படி இருக்க வேண்டும். நீங்களோ விருந்தாளிகளைக் கொண்டு வருவதற்கு பணம் கொடுத்து மனிதர்களை அனுப்பினீர்கள். அவர்களால் கொண்டு வரப்பட்ட விருந்தினர்கள் ஆருேடு ஆருக உழைத்தார்கள். ஒரு நேர உணவும், உடுத்திய கோவணத்தோடும் வாழ வேண்டியவர் களானர்கள். எங்களை விருந்தாளிகளாக அழைத்து வந்தவர்கள் எங்களுக்கு விருந்து கொடுக்கும் நேர்த்தி இது தான். எனது அங்கத்துவ நண்பர் சிங்களவர்கள் தமிழரை அண்ணன் என்றும் முஸ்லீம்களை தம்பி என்றும் இந்தியரை பாய் என்றும் உறவு முறை வைத்துக் கூப்பிடுவதாக குறிப்பிட்டார்கள்.
"அய்யா" முறை கொண்டாடுகின்ற இலங்கைத் தமிழர் தீவின் மூலையில் இருக்கின்றனர். அவர்களது வாக்குகளை பற்றிய பயம் சிங்களவர்களுக்கில்லை. தம் பி முறை கொண்டாடுகிற முஸ்லீம்கள் சிறுபான்மையினர். அவர்கள் சட்டசபையில் அங்கத் துவம் பெறுவது அரிது. இந்தியர்களைப் பற்றித்தான் சிங்களவர் களுக்கு பயமிருக்கிறது. சில இடங்களில் அவர்களின் வாக்குகள் அதிகமாக இருக்கின்றன. அவர் களை த் தேடிப் போயாக வேண்டும். மத்திய மாகாண அங்கத்தவர்கள் தனது வாக்கைத் தேடி வரும் முதலாளியை விட தான் பெரியவன் எ ன் ற எண்ணத்தை தொழிலாளி இதனல் பெறுகிருன், என்று கூறினர். இதுதான் - இந்த உண்மைதான் - இவர்களை உறுத்துகிறது. 50 சதத்துக்கு நாளெல்லாம் உழைத்து மாய்பவனுக இந்தியத் தொழிலாளி இந்த நாட்டில் இருக்க வேண்டுமென்றே அவர்கள் கருதுகிறர்கள்.
(5 வருட வாசம், கல்வித் தகைமை, தொழிலாளர் பிரதிநிதித்துவம், தோட்டங்களில் காலரா, மருத்துவ அறிக் கைகள் என்றெல்லாம் விவரிக்கிருர்) இந்தியவாக்குரிமைய்ை எதிர்க்கும் சிங்களத் தலைவர்களை என்னுல் விளங்கி கொள்ள முடிகிறது. ஆனல் தோட்டச் சொந்தக்காரர்களாக விளங்கும் இச்சபை அங்கத்தவர்கள் - இந்தியர்களின் உழைப்பினுல் தான் தங்கள் நிலையும், வள மும் பெருகியதென்று கூறுபவர்கள் - இந்தியர்களின் நலம் பேணுவது தமது இதயத்தில் இருப்பதாக கூறுபவர்கள் வாக்குரிமை கொடுக்க வேண்டாமென்று கூறுவதை விளங்கிக் கொள்ள முடியவில்லை. இந்தியர் வாக்குத் தொகை 8 லட்சம் என்று பெருகி விடும் என்று பயப்படுபவர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன்.

65
இரண்டு வருடத்திற்கு முன்னர் இந்தியர் வரவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நான் கொண்டு வந்த தீர்மானத்தை ஏன் தோற்கடித்தீர்கள்?
இந்தியர்கள் வருகையைத்தடை செய்யக் கூடாது என்று ஏன் வரிந்து கட்டி கொண்டு நின்றீர்கள்? உடல் உழைப்பைத் த ரு வ தற்கு மாத் தி ர ம் இந்தியத் தொழிலாளி உங்களுக்கு வேண்டும் . . இந்தியன இங்கு சமமாக வைக்க விருப்பமில்லை - சேவகளுக வைப்பதிலேயே விருப்பம் இருக்கிறது.
(சாதி வித்தியாசம், ஆங்கில அறிவு, சிவில் சேர்வீஸ், என் றெல்லாம் விளக்குகிருர்) கல்வித் தகைமை ஒரு காரணமாக இருந் தால் அது இந்தியர்களுக்கு மாத் தி ர ம ல் ல எல்லா சமூகத் தவருக்கும், இருக்க வேண்டும். இந்தியத் தமிழர்கள் எங்கள் சகோதரர்கள். உறவினர்கள் என்று கூறுபவர்கள் ஏன் வாக்குரி மையில் மாத்திரம் நொண்டிக் காரணங்களோடு வாதாடுகிறீர்கள்? மறைக்காமல் திறந்த மனசோடு உரிமையைத் தரமாட்டோம், உழைப்பது மட்டும் தான் உங்கள் வேலை என்று சொல்லி விடுங்கள். ஒத்துக் கொள்கின்ருேம். என்ன செய்ய வேண்டு மென்பதை அப்போது நாங்கள் முடிவெடுத்துக் கொள்கி ன்ருேம். (தன்னுடைய வாதத்துக்கு வலு சேர்க்கும் உண்மை சம்பவங்களை உதாரணங்களின் மூலம் அடுத்து அடுத்து காட்டுகிருர்)
இலட்சக்கணக்கான தொழிலாளர்களை இந் தி யா ஏற்றுக் கொள்ளாது என்று மட்டு ம் நினைக்கா தீர்கள். இங்கு குடியேறியவர்களை விட அதிகமான வெளி நாட்டார் இந்தியாவில் இருக்கிருர்கள். வளம் கொழிக்கும் தஞ்சை வயல் நிலத்தை புறக் கணித்து விட்டு இங்கு தொழிலாளர்கள் வந் திருப்பது இந்தியாவுக்கு பொருளாதார இழப் பாகும். வைக்கோலை வரியில்லாது பெற முடியு மானுல் இந்தியாவுக்கு மாட்டுக்குத் தீனி யாக வைக்கோல் இருக்காது.
(எல்லாம் இங்கே தானிருக்கும் என்ற பொருளில்)
இலங்கையில் இருப்பதை விட த ஞ் சாவூரில் அரிசியின் விலை அதிகம். V (இல்லாதவர்களாக நாங்கள் இந்த நாட் டு க் கு வரவில்லை ஏமாற்றி வரவழைக்கப் பட்டோம் என்பதற்கு அழுத்தம்) . . சுற்றி வளைக்காமல் சொல்லுங்கள் உள்ளதை என்று முழங்கு &მფr†.

Page 86
66
இலங்கை பல்கலைக் கழகம் பேராதெனியாவில் அமைக்கப் படல் வேண்டும் என்று தீவிரமாக வாதாடியவர்களில் நடேசய்யர் குறிப்பிடத்தக்கவர். பல்கலைக்கழகம் கொழும்பில் அமைந்தால் தனது நிலத்திற்கு பெரும் தொகைப் பணம் கிடைக்கும் என்று ஆசைப்பட்ட செட்டியார் ஒருவர் - தனக்கு தேர்தலின் போது அறுநூறு வாக்குகளை பெற்றுக் கொடுத்தவராக இருந்தும் தன்னை தனது இல்லத்தில் வைத்து சந்தித்த போது அவரது விருப்பத் திற்கு இணங்க மறுத்ததை கூறி பல்கலைக்கழகத்துக்கேற்ற இடம் கொழும்பு அல்ல கண்டிதான் என்று வாதாடிஞர்.
இலங்கையிலும், இந்தியாவிலும் குறி ப் பி ட் டுச் சொல்லும் அளவுக்கு தான் பயணம் செய்திருப் பதையும் இமாலயத்தின் அடிவாரத்தைத் தவிர்ந்த வேறெந்த பகுதியும் கண்டியின் இயற்கை அழகுக்கு ஈடு செய்ய முடியாது என்றும் கருத்துத் தெரிவித் தார்.14 பொன். இராமநாதன் கொழும்பே சிறந்த இடம் என்று கருத்து வெளியிட்டதை எதிர்த்த நடேசய்யர்.
"இந்து கலாச்சாரத்திலும் இந்திய தத்துவத்திலும்
ஈடுபாடுள்ள இராமநாதன் அவர்களுக்கு அழகை
ரசிக்கும் குணம் இல்லாது போய்விட்டதா" என்று அங்கலாய்க்கிருர்,
இலங்கையரல்லாதோர் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற பிரேரணையை எதிர்த்துப் பேசிய நடேசய்யர்
நல்ல சட்டத்துக்குப் பணிந்து போக வேண்டியது தனது கடமை என்று இந்தியன் உணர்கிருன். அதே நேரத்தில் கெட்ட சட்டத்தை உடைத்தெறிய வேண்டியது தனது கடமை என்பதையும் உணர் கிருன், தனக்கிருக்கும் சக்தி முழுவதையும் உப யோகித்து அவன் அவ்விதம் உடைத்தெறிவரன்.
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காக அவர் கைகளை வரிந்து கட்டுகிருரே.
9ůuň - 9. . . . . . ஆமாம். நிலைமை அப்படித்தான் வருகிறது.

167
எஸ். ட்பிள்யூ. ஆர். டி. ப ஹட்டன் அங்கத்தவர் சில சமயங் களில் தன் வரம்புக்குள் மிகத் தெளிவாக சிந்திக்கக் கூடிய வல்லமை உடையவராக இருக் கிருர், பிரச்சனைகளைச் ச ரி யா ன முறை யில் அணு கும், பொருள் பொதி ந் த அவரது பேச்சுக்களை இச்சபையில் கேட்டு நாம் பழக்கப் பட்டுப் போயிருக்கின்ருேம். இன்று மட்டும் அப்படி ஒரு தப்பெண்ணம் கொள் வதந் கு கண்ணியம் மிகுந்த அந்த மனிதருக்கு என்ன நடந்தது? ஏனிந்த குறுகிய நோக்கு?
அமைதி போராட்டம் என்று பயமுறுத்துகிருர். அவரது அறிக்கைகள் இரத் த த் தை உறைய வைக்கும் அவரது பயமுறுத்தல்கள் - எப்படியாவது, எந்த முறையிலாவது இங்குள்ள மக்களை எதுவும் செய்வதிலிருந்து தடுக்க வேண்டும் என்ற அவரது விருப்பத்தை காட்டுகிறது.
ஏ. மகாதேவா இன்னும் சில மாதங்களில் இலங்கைக்கு என்ன நடக்கப் போகின்றதோ என்று பயமாயிருக் கிறது. இத்துடன் அட்டன் அங்கத்தவர் பய முறுத்திய வண் ணம் செயலில் காட்டினல் இத் தீ வில் உள்ள எ ல் லா ச் சிறைகளும் தங்களை பதிவு செய்ய மறுக்கும் இந்தியர்களால் நிரம்பி வழியும்,
இத்தீர்மானம் "ஏ" கமிட்டிக்குப் பாரபடுத்தப்பட்ட போது தலவாகெல்லைப் பிரதிநிதியாக இருந்த எஸ். பி. வைத்திலிங்கம் அதில் பணிபுரிய மறுத்து விட்டார். நடேசய்யரும் திவான்பகதூர் ஐ. எக்ஸ். பெரைராவுமே கடமை ஆற்ற ஒத்துக் கொண்டனர். இந்தியர்களை பிரதிநிதித்துவம் பண்ணிய பிரதி நிதிகளில் சட்டசபையை தனது வாதத்திறமையாலும் தீவிர மான கருத்துக்களாலும், கலக்கியவர் நடேசய்யரே ஆவார். எஸ். பி. வைத்திலிங்கம், திவான்பகதூர் ஐ. எக்ஸ். பெரைரா, இருவரும் பொதுப் பிரச்சனைகளில் அய்யரின் தீவிரத்தைப் பகிரங்கமாக ஆதரிப்பதில்லை. சில சம யங் களி ல் மெளனம் சாதித்து நடுநிலைமை வகிப்பதுண்டு. திவான்பகதூர் ஜ. எக்ஸ். பெரைராவின் இந்த போக்கை ஏனையோர் விரும்பினர். வாய் விட்டு சபையிலேயே கூறியிருக்கின்றனர். பின்னல் தற்காலிக தொழில் அமைச்சராக ஜி. ஸி. எஸ். கொரியாவுக்குப் பதிலாக (29.1.1945லிருந்து 14.4.1945) பதவி வகிக்கவும் திவான் பக தூராருக்கு உதவி புரிந்தனர்.

Page 87
168
குடியேற்ற மசோதா குறித்து அய்யர் 26 5.1941ல்
இது ஒரு முக்கியமான விடயமாகும். மிகுந்த கவனத் துடனும், அவசரமில்லாமலும், இந்த விட யம் அணுகப்பட வேண்டும். கடும் வார்த்தைப் பிரயோகங்களும் சுடு சொற்களும் அச்சுறுத்தலும் உதவப் போவதில்லை. மனம் விட்டு பேசுதல் அவசியம். நான் இப்படிச் சொல்வது சில இந்திய நண்பர் களுக்கும், ஐரோப்பியர்களுக்கும், தேசாதிபதிக்கும் மன வருத் தத்தை அளிக்கும். தற்போதைய குழப்ப நிலைக்கு இவர்கள் அனைவருமே தான் காரணகர்த்தாக்கள்.
உறுதிமொழிகளும், கடப்பாடுகளும் புதைக்கப்படு வதும், மறுக்கப்படுவதும், இப்போது சாதாரண மாகி விட்டது.
1929ல் தென்ஞபிரிக்காவிலிருந்த ஒருவர் இங்கு தேசாதிபதியாக அனுப்பபட்டுள்ளார்.
இந்தியர்களை அடக்குவதில் அவருக்குத் தென்னு பிரிக்காவில் இருந்த அனுபவம் இங்கு அவருக்கு உதவியாயிருக்கும் என்பதற்காகவே அவர் இங்கு அனுப்பப்பட்டார்.
ஆப்பிரிகாவின் சில பாகங்களில் இந்தியர் பிரச்சனை குறித்து அனுபவம் உள்ள எவரும் இலங்கையில் இப் போது இடம் பெறுவது வெறும் அரசியல் பிரச்சனை என்று கூறி வாளா இருக்க முடியாது. தென்னுபிரிக்காவில் இந்தியர் பிரச்சனை சூடு பிடித் திருக்கின்றது என்று இங்குள்ள நண்பர்களை எச்சரித்து சிங்களப் பகுதியில் உள்ள இந்திய வாக்குகள் மொழி, இன, மத அடிப் படையில் செல்வாக்கு படுத்தப்பட்டால் என்ன ஆகும் என்று கூறி சிங்களவர்களுக்கும் இலங்கை தமிழருக்குமிடையே ஆப்பு வைக்கும் முயற்சியே இந்த மசோதா - சிங்களவர்களுக்கும் இந்தி யர்களுக்குமிடையில் பிளவு ஏற்படுத்தும் மு யம் சி யே இந்த மசோதா..
அய்யரின் சட்டசபை பேச்சுக்கள் சுவையானவை, நிறைய தகவல்களைக் கொண்டவைகள் என்பதோடு சொல்லும் முறையிலே ஒரு கம்பீரமும், எடுப்பும் இருப்பதை அவர் பங்கேற்ற எல்லா விவாதத்தி லுமே காணலாம். இது அவரின் தனிச்சிறப்புக் களில் ஒன்று. .

69
அய்யரின் சட்டசபை பேச்சுக்கள் தனியாக ஆராயப்படும் அளவுக்கு பரப்பால் விரிந்தவை. இந்நாட்டில் இந்திய வம்சா வளித் தமிழர்கள் குடியேறிய காலத்திலிருந்து அவரது காலம் வரை உள்ள சரித்திரத்தை அவரது பேச்சுக்கள் அணு அணு வாக வெளிப்படுத்துகின்றன.
அய்யரின் சிந்தனை வளமும், வருவதுணரும் திறமும், எப்படி அமைந்திருந்தன என்பதைக் காட்டும் அவரது பங்களிப் புக்கள் இன்னும் சிலவற்றை கீழே காண்போம்.
வாசகர் ரசனையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றதற்கு ஏது வாக இருக்கும் இந்தியாவில் இருந்து வருகின்ற சில பத்திரி கைகளை தடுக்கக் கோரியமை - 1938ல்
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் இதற்காக பின்னல் இயக்கமே நடாத்தியது
வாக்குச்சீட்டை தயாரிப்பதில், அவரது - கலர்த்தாளில் வாக்குப் பத்திரம் அடிப்பது சாத்தியமே என்பதை உணர்த்திக் காட்டிய அச் சக அநுபவத்தை சட்டசபையில் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டமை. 1945ல்
திணறி நிற்கும் போது தெளிவேற்படுத்துவது தலைவனின் அத்தியாவசிய குணம்சம்
இலங்கையரல்லாதவர்கள் மீது கட்டுப்பாடுகளை அறிமுகப் படுத்த விரும்பினுல் சுதந்திர வர்த்தகத்தை நிறுவுகிற போது தான் சாத்தியம். அப்போது தான் வெளிநாட்டு இறக்குமதி யாளர்களை நாம் கட்டுப்படுத்த முடியும் என்று எடுத்துக் காட்டி யமை க 1947ல்
இலங்கையில் சுதந்திர வர்த்தக நிலையம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது
சேமலாபநிதியம் தோற்றுவிக்கப்படல் வேண்டும். பத்து சதவீதம் முதலாளியும், பத்து சதவீதம் தொழி லா ஸ்ரீ யும் கொடுக்க வேண்டும். தொழிலாளி மு த லா வி அரசாங்கம் மூவரும் சம்பந்தப்பட்ட விதத்தில் இது நிர்வகிக்கப்படல் வேண்டும் என்று எடுத்துக் காட்டியமை - 1947ல்
மக்கள் அரசாங்கம் அமைந்த காலத்தில் இது செயலுரு பெற்றது கவனிக்கத்தக்கது

Page 88
70
தோட்டத் தொழிலாளர்களுக்கு வேலை செய்த ஒவ்வொரு வருடத்துக்கும் ஒரு மாத சம்பளத் தை ப் போனஸ் ஸ்ாக கொடுத்து அவர்களை வேலையிலிருந்து ஓய்வு பெற வைத்தல் அதற்கான பணத்தை ஏக்கர் தீர்வை மூலம் பெறலாம் என்று கூறியமை - 1941ல்
மக்கள் அரசாங்கம் அமைந்த காலத்தில் பிரதமர் பண்டாரநாயக்கா தொழில் மன்றங்களை அமைத் ததன் பின்னல் படிப்படியாக ஏற்கப்பட்டுள்ள
நடைமுறை
கருத்துக்கள் பொதுவானவைகள். அவரவர் சிந்தனை வளத்துக்கேற்ப சிறகடித்துப் பறப்பவைகள்.
அஞ்சல் ஓட்டத்தில் அதே உரு வில் கைமாறுவதைப் போலவும், போலர்விளையாட்டில் காதுக்கு காது குசுகுசுத்து வட்டத்தின் முடிவில் செய்தி வேறு உரு பெறுவதைப் போலவும் அவை பரவுகின்றன.
ஆரோக்கியமான கருத்துக்கள் செழித்து வளர்ந்து நிகழ்ச்சிகளாக உருவாகின்றன. அப்போது முதலில் கருத்துக்களை உதிர்த்தவர் யார் என்பது மறக்கப் பட்டு போவதுண்டு.
அய்யர்வெளியிட்ட கருத்துக்கள் - சட்ட சபை பதிவேட்டில் அவரது புகழை அழிய விடாது பேணி பாதுகாத்து வந்திருக் கின்றன. அவை வளர்ந்து இந்நாட்டு இலக்கிய அர சி ய ல், பொருளாதார, கல்வி ஆகிய துறைகளில் ஏற்படுத்திய மாற்றங்கள் உடன் நிகழ்கால சம்பவங்களாக உருவெடுத்திருக்கின்றன.

17
சில கண்டனங்கள்
விமர்சனம் என்பது நல்லதோ கெட்டதோ உள்ளதை வெளிப்படுத்துகிறது. அய்யரின் பேச்சும், எழுத்தும் செயல்களும், அவர் காலத்தில் விமர்சிக்கப்பட்ட பாங்கே தனி.
பொருமையில் அன்று வெளியிடப்பட்ட கண்டனங்களே (1927 சத்யமித்ரன் ஏட்டில் காணப்படுபவைகள்) இன்று புகழ் மாலைகளாக மாறி அவருக்கு பெருமை அளிக்கின்றன. தோட்ட் இந்தியர்களின் வாழ்க்கையை நகர்புற இந்தியர்களின் வாழ்க் கையை விட் சுபீட்சமுள்ளதாக்கும் பணிகளில் அய்யர் ஈடுபட்டிருந்த வேளை,
நகர்ப்புறங்களில் கிடைக்காத வாழ்வு தோட்டங் களில் கிடைக்குமா?
தோட்ட இந்தியர்கள் தங்கள் இழிநிலையை உணர ஆரம் பித்து கங்காணிகளும் துரைமார்களுக்கு எதிராக பேச ஆரம்பித்த வேளை,
தொழிலாளர் கள் மதுரை மார் கள் - கங்காணி மார்கள் என்ற பிளவை ஏற்படுத்தியவர் அய்யரே.
இந்தியத் தொழிலாளர்கள் இலங்கைக்கு வருவதை தட்ை செய்ய வேண்டுமென்ற அய்யரின் கோரிக்கை வலுப் பெற்று விடக்கூடாதென்ற அச்சத்தில் அவருக்கெதிராக பிரச்சாரம் செய்யப் ul Galat,
தஞ்சாவூரில் நிலத்துக்கு அவர் ஆள் சேர்க்கிருர், தஞ்சாவூரிலிருக்கும் போது தொழிலாளர்களைப் பற்றி அய்யர் பேசாமலிருந்தது எதனுல்?
உண்மைத் தலைவனுக உயர்ந்து நின்று தனது செயல் களுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட பெருந்தன்மையைப் பொறுக் காத சில உள்ளங்கள் பொருமைப்பட்ட வேளை,

Page 89
72.
புறக்கோட்டை பொலிஸ் சூப்பிரண்டன் அவர்கள் முன்னிலையில் கொடுத்த சாட்சியத்தில் தாம் துரை மார்கள் பங்களாவில் வேலை செய்பவர்களையும், வேலை நிறுத்தம் செய்யச் சொன்னதாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிருரே மூளை இருக்கிறதா?
கெளரவ பதவிகள் இந்தியரின் மதிப்பை உயர்த்துவதாக இருக்க வேண்டுமேயன்றி கெளரவ குறைவை ஏற்படுத்துவதாக அமையக்கூட்ாது என்று செயல் பட்ட வேளை,
இங்கிலிஷ் தெரியாத இந்தியனுக்கு ஜே. பி. பட்டம் கொடுத்தால் இவருக் கென்ன? கொடுத்திருப் பதையும் திரும்பப் பெறச் சொல்ல இவருக்கென்ன வந்தது?
இந்தியன் என்ற உணர்வால் பெருமைப்பட்டவர் நடேசய்யர் இந்தியர்கள் தர்மத்திற்கும் நியாயத்துக்கும் கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய வேளை
அரசாங்க உத்தியோகஸ்தரை பொய் குற்றம் சாட்டிய வேளை இந்திய வியாபாரிகள் இருவர் மீதும் பொலிஸ் த ரப்பில் வழக்கு தொடர வேண்டும் என்ற அய்யர் கேட்டிருக்கிருர் இந்தியர் களுக்கு சேவை பண்ணுகிறவர் செய்கிற காரியமா இது?
மக்கள் மொழி தெரியாதோர் மக்களை பிரதிநிதித்துவம் பண்ண முடியாது என்பது அய்யரின் வாதம், இந்திய ஏஜன்டாக வும், இந்திய குடியேற்ற கட்டுப்பாட்டதிகாரியாகவும் தென்னிந் தியத் தமிழர்கள் நியமிக்கப்படுவதை அய்யர் வலியுறுத்திய வேளை,
கொழும்பு முனிசிபல் சபையில் இந்திய பிரதிநிதி யாக வடநாட்டுக்காரர் இருப்பது சில ரு க்கு பொறுக்கவில்லை.
கடித உருவில் அய்யரின் எழுத்துக்கள் கனல் பரப்ப தொடங்கிய
戏
ஆதாரம் காட்டாமல் விவகாரத்திலிருக்கும் விஷயத் திற்கும் சம்பந்தமற்ற சில போலிக் கடிதங்களைப் பிரசுரிப்பது, அவலை நினைத்து உரலை இடித்த து

17.3
போலிருக்கிறது. இந்தியர்களுக்குள் சமாதானத்தை உண்டு பண்ண வேண்டிய பிரதிநிதி கொண்டை
தலைக்கும் மொட்டைத் த லைக் கும் மு டி ச் சுப் போடுவதா?
விதியின் செயல்
இலங்கைத் தமிழருக்கும், இந்திய வம்சாவளித் தமிழ ருக்கும் நடேசய்யரின் சுதந்திரன் ஆசிரியப்பணியோடு ஆரம்பித் திருக்கக் கூடிய தொடர்பு அய்யரின் மரணத்தால் அற்ப ஆயுசில் முடிந்தது மிகவும் சாபக் கேடான ஒன்ருகும்.
ஒருவரை ஒருவர் குறை கூறிய வண் ண ம் இரண்டு சமூகத்தினருமே இந்த நாட்டில் தமக்குள் கட்டி எழுப்பியிருக்க கூடிய ஆற்றல் கை கூடா ம லே போய் விட்டது. யாழ்ப்பாணத்தில் கோப்பி குடிப்பதிலிருந்து மக்களைத் தேயிலைப் பருகும் பழக்கத்துக்கு மாற்றி கொண்டு வருவதற்கு முன்பு பாரிய முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டிருக்கின்றன. அது ச ம ய ம் பாடசாலைகளில் இலவசமாக தேநீரை பரிமாறி பிரசாரங்கள் மேற் கொள்ளப்பட்டன.
அரசியல் பிணைப்பும், சமூகப் பிணைப்பும் இவ்விதம் மேற்கொள்ளப்படுவதற்கு முயற்சிகள் மேற் கொள்ளப்படாதது வருந்துதற்குரியதே.
946ல் எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி யாழ்ப்பாணத்தைத் தவிர்ந்த மற்றெல்லா திறைசேரிப் பகுதிகளிலும் தோட்ட சனம் குடியேறியிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதிலும்,
மன்னர், புத் தளம், சிலாபம், அம்பாந் தோட்டை ஆகியவைகளைத் தவிர்ந்த மற்றைய பதினைந்து பகுதிகளிலும், தோட்டசனம் (இந்திய வம்சாவளித் தமிழர்)
குடும்பமாக ஆணும், பெண் ணு மாக குடியேறி யிருந்ததாகவும், அறியக் கிடக்கிறது.

Page 90
雄74、
ஆரம்ப காலத்திலிருந்தே நடேசய்யருடைய பேச்சுக்களும், செயல்களும், யாழ்ப்பாணத் தலைவர்களிடமிருந்து வேறுபட்டே வந்திருக்கின்றன. காலமாறுதல் கருத்து மாறுதலே ஏற்படுத்து வதுண்டு என்ற நியதிக்கேற்ப இரண்டு சமூகத்தினர்களிடமும் ஏற்பட்ட மாறுதலால் கருத்து தெளிவால் இது ஏற்பட்டதாக இருக்கலாம்.
ஒரு காலத் தி ல் தோ ட் டத் தி ல் இர வில் தான் பாடசாலைகள் நடாத்தப்பட்டன. இரவில் பேருக்கு பாடசாலை நடாத்தி விட்டு (இரவு ஸ்கூல்) காலையில் அத்தனை சிறுவர் சிறு மிகளையும் வேலைக்குப் பயன் படுத்துவதை நிர்வாகம் ஊக்குவித் திருக்கிறது. இந்த நடைமுறையில் உள்ள குறை பா டு கள் எடுத்துக் காட்டப்பட்டபோது தோட்ட நிர்வாகம் தனியாக ஒரு கங்காணியை நியமித்து தோட்டக் குழந்தை களைத் தோட்டப் பள்ளிக்கு இட்டுச் செல்லும் பணியை ஆரம்பித்தது.
சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை. காலை பிரட்டுக் களம் சென்று பின்னர் மூன்று மணித்தியாலயங்கள் தோட்டப் பாடசாலைகளில் படிப்பிப்பதற்காக வைக்கப்பட்டிருந்து அதன் பின்னர் எட்டு மணித்தியாலங்கள் அத்தோட்டக் குழந்தை களிடம் வேலை வாங்கப்பட்டது இன்று இந்த நிலைமை இல்லை. காலம் மாறியிருக்கிறது.
கல்வி ஒன்றின் மூலமே தோட்ட மக்களின் கண்களைத் திறக்க முடியும் என்று நம்பி தனது செயல்களை அட்டவணைப் படுத்தி கொண்ட நடேசய்யர் 1947ல் "சுதந்திரன்’ பத்திரி கையில் வடபுலத்து அர சி ய ல் பத்திரிகையில் - சேர்வதற்கு இணக்கம் தெரிவித்தார். இலங்கையில் அரசியல் கருத்துக்கள் இன ரீதியில் வளர ஆரம்பிப்பதை கண்ணுற்ற நடேசய்யர் தற்பாது காப்பு முயற்சியில் ஈடுபடுவது அவசியம் என்பதை உணர்ந்ததா லேயே இது நேர்ந்தது.
1947ல் ஆரம்பமான எஸ். ஜே. வி. செல்வநாயகம் - கோ. நடேசய்யர் பிணைப்பு ஒரு திருப்பு முனையாக வளர்ந்திருக்க வாய்ப் பிருந்த து என்பதை வரலாற்று மாணுக்கர் ஏற்றுக் கொள்வர். "
எனினும், குறுகிய இடைவெளியில் ஆரம்பமும் முடிவும் அமைகின்ற வேளை எதிர்பார்த்தப் பலன் ஏற்பட வாய்ப்பில்லாமல் போவதும் தவிர்க்க முடியாததே.

நடேசய்யர் தன் வாழ்நாளில் எந்த ஒரு பணியையும் திட்டமிடாமல் செய்தது கிடையாது அவர் முழு ஆற்றலை யும் பிரயோகித்து தோட்டப் பகுதிகளில் தொழிற் சங்கப் பணிகள் புரிந்த போது இந் தி யத் தொழிலாளர்கள் தலை நிமிர்ந்து நின்றனர். தங்கள் எஜமானர்களைத்தட்டிக் கேட்கும் தைரியம் பெற்றிருந்தனர்.
இந்தியத்தொழிலாளர்களால் தங்கள் எஜமானர்களுக்கெதி) ராக போடப்படும் வழக்குகளின் எண்ணிக்கை இதைக் காட்டும்
ஆண்டு எண்ணிக்கை ஆண்டு எண்ணிக்கை
1926 11 . 1933 02
1927 05 1934 03.
1928 05 1935 00
1929 05 1936 Ol
1930 0. 1937 00
193 02 1938 00
1932 03
இதே பதின்மூன்று ஆண்டுகளிலும் தொழிலாளருக் கெதிராக தோட்டக் காரர்களால் 337 வழக்குகள் போடப்பட் டிருந்தன. அவைகளில் பெரும்பாலானவை ஜோடிக்கப்பட்ட வைகள். தொழிலாளர்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற நோக்கில் தொடரப்பட்டவைகள்.
ஆண்டு எண்ணிக்கை ஆண்டு எண்ணிக்கை
1926 68 1933 07
1927 23 1934 09
1928 32 I935 23
1929 39 1936 24
1930 19 937 45.
1931 11 1938 28
1939 6
எடுத்துக் காட்டாக 1938ல் தொடரப்பட்ட 28 வழக்கு களில் ஒரு வழக்கில் மாத்திரமே தொழிலாளி குற்றவாளியாகக் காணப்பட்டதாக தொழி ல் கட்டுப்பாட்டாளர் எஃவ், ஸி. ஜிம்ஸன் குறிப்பிடுகிருர்,

Page 91
76 :
அய்யர் வரு கை யோ டு தோட்டப்புறங்களில் ஆரம்பமான விழிப்புணர்ச்சி அய்ய ரி ன் இறுதி காலத்திலேயே மார்க்ஸிய சித்தாந்தத்தை நோக்கி நகர ஆரம்பித்தது.
அய்யர் தனது அந்திம காலத்தில் மாறுபாட்டுக்கும், மறுதலிப்புக்கும், முரண்பாட்டிற்கும் உள்ளான கருத்துக்களை வெளிப்படுத்தினர். அதனல் தானே என்னவோ அவருக்குரித் தான பெருமைகளைக் கூட அறிஞர் உலகு அவருக்கு கொடுக்க தவறி விட்டது.
இலங்கை நாடாளுமன்ற பதிவேடுகளில் கூட எ ல் லா கெளரவ அங்கத்தவர்களுக்கும் கொடுக் கப் படும் மரியா தை அவருக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.
சபையின் கெளரவ அங்கத்தவர் ஒருவர் இறந்தால்
அவருக்காக மேற் கொள்ளப்படும் அ நு தா பத்
தீர்மானம் கூட அய்யருக்குச் செய்யப்படவில்லை என்பதை விதியின் செயல் என்று சொல்வதல்லால் வேறெப்படி அழைப்பது?
நெஞ்சில் நிறைந்தவர்
இந்தியவம்சாவளி மக்கள் உ ல கி ன் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மகாத்மாகாந்தியைத் தமது தலைவராக ஏற்றுக் கொண்டிருந்தனர். அவரைக் கடவுள் அவதாரமாக நினைத்து வணங்கினர். அவரை நினைத்தவுடன் தமது சிறுமைகளிலிருந்து விடுபட்டு புதியதோர் எழுச்சி உணர்வை அவர்கள் பெற்றனர்.
தம்மை இரட்சிக்க வந்த அவதாரப் புருஷராக அவர் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
கதருடுத்தி காந்திக்குல்லாய் அணிவதைப் பெருமையாக எண்ணிய அவர்கள் தமது வாழ்வு ஈடேறுவது அவராலும், அவரது நெறிமுறைகளாலும் என்று நம்பி வாழ்ந்தனர்.

1፵ 7 ,
இலங்கைவாழ் இந்தியத்தமிழர் நடேசய்யரைப் பல வழி களிலும் தமது இரட்சகராகக் கருதினர். தங்களை இலங்கையில்
வழிநடாத்தும் காந்தியாக அவரை வழிபட்டனர்.
காந்தி நடேசய்யர்
என்று அவரை மக்கள் அழைக்கத் தொடங்கியதன் தரத்பரியம்
அதுவே ஆகும்.
- என்று அவர் மரணமான போது பத்திரிகை
எழுதப்பட்டது.149
"அப்பெயர் ஒன்றே அவரின் சேவையை, மக்கள் அவர் பால் கொண்டிருந்த மதிப்பை வெளிப்படுத் கிறது. காந்தி நடேசய்யர் இலங்கைத் தமிழரின் ஜீவநாடியாகவுள்ளவர். அவர் இதயத்தில் தமிழ்க் குருதி துள்ளிக் குதித்தோடியது.
ஆண்டிலும் அறிவிலும் முதிர்ந்தவர், விடாமுயற்சி மிகுந்தவர், சேவா பக்குவம் பெற்றவர், ஏழை எளியவரிடம் பாசம் கொண்டவர்.
தோட்டத் தொழிலாளர்களின் நலனையே கனவிலும் கருதி உழைத்தப் பெரியார். தமிழன் என்ருல் ஆண்மையுடன் முன்னேறு என்பதை இலட்சிய
மாகக் கொண்டவர்.”
காலவெள்ளத்தை எதிர்த்து நிற்கும் தேசபக்தன்
அவரது பணிகள் அத்தனையிலும் ஆரம்பகாலத்தில் இந்தியன் என்ற உணர்வும், இறுதி காலத்தில் தமிழன் என்ற உணர்வும் பூரணமாக பரிணமித்தது. பிராமண குலத்துக்குள்ள விவேகமும், சாதுரியமும் படர்ந்திருந்தன. அவரது காலத்தில் அவர் காவியப் புருஷனுகவே கருதப்பட்டார்.
தலையங்கம்
கோ.
நடேசய்யர் ஆங்கில ஏகாதிபத்தியம் பூத்துக்குலுங்கிய நாட்களில் இலங்கையில் வாழ்ந்தார். சுதந்திர இலங்கையில் அவரது நடாத்துதல் கிடைக்காமல் போனது ஒரு பேரிழப்பாகும்.
வழி

Page 92
78.
அவரைப்பற்றி மக்கள் மிக உயர்வாகவே எண்ணினர்.
மிக சிறந்த மிக விசுவாசமான, மிக அறிவுள்ள என்ற அடைமொழி சிறப்புக்களைக் கொடுத்தே அவரை மதித்தனர்.
அவர் -
சமர்ப்பித்த மகஜர்கள், ஆற்றிய பிரசங்கங்கள், ஆயிரக் கணக்கான வெளியீடுகள் அவருக்கு அச்சிறப்புக்களைப் பெற்றுக் கொடுத்தன. ஏழைத்தொழிலாளியிடம்
இந்திய உணர்வு எழுந்திட, இந்தியனும் ஆங்கிலே யனும் உழைக்க வந்த இடத்தில் ஒரு நிலையினரே என்று கூவிட,
இந்தியரின் பங்களிப்பு உட்லுழைப் போடு மாத்திரம் அமையக்கூடாது என்று போராட்டம் நடாத்திட,
நடேசய்யர் காரணகர்த்தாவாக விளங்கியிருக்கிருர்,
மண்ணுக்குச் சமமாக மலைகளில் முடங்கிக் கிடந்த வர்கள்,
எண்ணுதற்கேலா இடர்களைத்தாண்டி முன்னுக்குப் GBunrGanurr
மென்று முனைந்து எழுந்தமைக்கு அய்யரே வழி வகுத்தார்.
தஞ்சையில் பிறந்து கனத்தையில் தகனமான நடேசய்யர் பஞ்சையாய் வாழ்ந்து, பாழும் வறுமையில் மாய்ந்த இந்திய மக்களை, இலங்கைவாழ் மக்களை ஈடேற்றும் வழிமுறை ஆய்ந்த முதல்வர்.
தென்னவர் அடிமைவாழ்வு தேயட்டும் என்று சொன்ன கோதண்டராம நடேசய்யர் - இலங்கைத் தமிழ்ப்பத்திரிகை உலகில் முன்னேடியாவார். தொழிற்சங்கத்துறை முன்னேடி களில் அவர் 'முக்கியமானவர்.
இலங்கை சட்டசபை அங்கத்தவர். அரசியல் வா தி. இலங்கையில் பத்திரிகை உலகிலும் நூல்கள் வெளியீட்டிலும் சாதனை புரிந்தவர்.

179
மலையக படைப்பிலக்கியத்தின் பிதாவும் அவரே ஆவார். இவைகளில் பலவற்றை முதலில் ஆரம்பித்த பெருமை அவரை யேச் சாரும். 拳
சுதந்திர இலங்கையில் ஏற்படுத்தப்பட்டச் சில முற்போக்கு அரசியல் மாற்றங்களுக்கு முதலில் அடி எடுத்துகொடுத்த வரும் நடேசய்யராகவே விளங்குகிறர்.
அவர் ஒரு சாதனையாளர்:
செயற்கரிய செயல்களையெல்லாம் செய்து காட்டிய திண்ணிய நெஞ்சினர்.
மலையக மக்களை நேசித்துத் தனது பணிகளை வேள்வியாக வளர்த்த அவரது நாமம் அத்தனை எளிதில் மறக்கப்படக் கூடிய தல்ல. எத்தனை ஆண்டுகளானலும் மறைக்கப்படக் கூடியதல்ல. எந்த ஒருவராலும் மறுக்கப்படக் கூடியதுமில்லை.
அமைச்சர் பதவி தன்னை அலங்கரித்த வேளையில் அதிகார உச்சத்திலிருந்த ஹெக்டர் கொப்பேகடுவ ந டே சய் யரின் பெயரை நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டது அதனல் தான்.
இந்திய குற்றவியல் புலனய்வு குறிப்புக்களும், இலங்கைப் பொலிசாரின் பதிவேடுகளும், இலங்கை தேசிய சுவடி திணைக்களமும் அய்யரின் சரித்திரத்தை அச்சில் வைத்திருக்கின்றன.
**ஹன்சார்ட்" பக்கங்கள் காலம் உள்ளவரை அவரது கருத்துக்களின் மகிமை யைக் காத்து நிற்கும்.
இந்தியவம்சாவளித் தமிழரோ தமது இதயத்தில் நடே சய்யரின் நாமத்தைப் பதித்து வைத்திருக்கிருர்கள்.
அந்த மக்களுக்குத் தெரிந்தது அதுவே தான் - அது ஒன்றே தான்!

Page 93
ISO
நீர்ப்பபேபு "DE SABAK.THAN.
TTă= []Lil'r Tamil] TĩLự []arlton-J கதரநகிடகங்கஜ்: ந்ேத
-ாடத
TE
| + r - || 1 ||
" حتی بیبی Er Frau Hij Gus Haidi ஆொழிவாளர்டிொல்லே
-roukagorili" '
التسميم ----- -3-r- -- Hlid
u jiġru f' "-- ii ii il
- - - - " whil Juli Liriki பக்ரா காங்டி
Hur- if in
El 4 a 4 d. i. படி?. ப்காங் -ra Fill i'r artir
u il Li Fili. L'
u li Futur li li
ஆங்ார்டங்ார்டிடாசோக்சி
Jurğanı F - F. du dirilir?" " |
i - IF ' I u IL " Paul : Fik il
.
ir
Fiii - Ei i = i ாது சிரக் போட சிங்,துர
சாபங்கு ஆடி பாய ரத்த 11ம் 27, கர்" |
- F + hi vil y
SMMLLTLTTTLLLLLLL LSLLL LS S S LLLLLLS
•தேசபக்தன்', கோ. நடேசய்யர் சொந்தமாக நடத்திய தினசரி. அதன் முன்பக்கத்தில் கேலியும், கிண்டலும் கொண்ட பாடல்களே பிரசுரித்து அதற்கு ஏற்ற கோட்டு சித்திர €t ॥೩॥ படங்களேயும் பிரசு ரிப் பார். "தேசபக்தன்" தினசரியின் 9-1-1929 இதழில் "தொழிலாளர் தொல்&ல" என்ற த&லப்பில் திரு. எ. ஈ. குணசிங்காவைப் பற்றி பிரசுரித்திருந்தார்.
"தேசபக்தன் முதல் இதழ் 3.9.1924ல் வெளியாகியது.
 
 
 

J岛茂
司 "،ة قدم مع سد سعدد
---F "Ora è HF. リ--cm G ==Film
முதலேய்ாரும் శి" r
O
இ
விடியூப்ம்போதகம் கார்ந்து காரியங்கவிங்யாங் நந்திேக மிக்க 槛 யேய் #ெங்iய luluwÅ Lladilibrid ... He all as Alan Hill
தே ச பக் த வின் 18-1-89ல் வெ எளி வந்த இதழில் "முதலேயாரும் இராசாவும்" என்ற பாடலும், படமும் முன் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. முதலேயாக திரு. ஏ ஈ. குணசிங்காவை உருவகப்படுத்தி எழுதியிருந்தார்.

Page 94
J
in EuTriurnunnu
PHari kana-a
Els Himml | m į, yr AA || ; F5,
Lenz Fis வேண்டுமானுந் ஆயுதபலம்|ங்கE
நம்பி ங் இவ்வித் Alriffith பயோத்துப் பகுங்கள்"
Fl'Agoig rif Lar Fark శ్లే
f
krisialdia 臀 :
:::နှီ
நீங்" வடிவி
பேட்'ட் ' E*** **
sig. Ek is of
பெரியார் எஸ். ஜே. வி செல்வநாயகத்தினுல் ஆரம்பிக்கப் பட்ட "சுதந்திரன்' பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் கோ, நடேசப்யர். அய்யர் அமரரான மறுதினம் 8-11-47ல் சுதந்திரன் முன் பக்கத்தில் அய்யரின் படத்தை பிரசுரித்து அ ஞ் ச வி செலுத்தியது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

፲ Š ‰ .
திரு. கோ. நடேசய்யர் வெ ளி யிட்ட "தேசபக்தன்" தினசரிவின் இரண்டாம் பக்கத்தில் இடம் பெற்ற ஆசிரியத் த8லயங்கத்தின் மேல் பிரசுரிக்கப்படும் சின்னம்,
TRYS
-- ------- ਨੁ ፲፱፻፵፰፻፺፡
-
F*†ा। #Fी
::::::::B; ဖွံႏွါးဒွိစ္ထိန္နီ
:
်းဗွိုဆြးေႏြးF;"|ါး
“ါး န္တိ . இ: x: ళ్లవ్లో 接
:::::: x :
繼雛醬雛
மலையக கஜல இலக்கியப் பேரவையின் ஏற்பா ட் டி ல் 16.7.1987ல் கண்டியில் நடைபெற்ற திரு. கோ. நடேசய்யூர் பற்றிய ஆய்வரங்கில் எழுத்தாளர் சாரல் நாடன் அய்யரின் பத்திரிகைத்துறை பணிகளேப்பற்றிய ஆய்வுரை நிகழ்த்துகிருர், படத்தில் மூதறிஞர் திரு. சார்ள்ஸ் டி. சில்வா, தலேமை வகித்த தொழிற்சங்கவாதி திரு. எஸ். நடேசன், திரு. ஜயரட்ண மல்லியாகொட் கலாநிதி குமாரி ஜயவர்தன ஆகியோர் காணப்படுகின்றனர்.

Page 95
நடேசய்யரின் சில சங்கநாதங்கள்
(ஹன்சாட்டில் காணப்படும் குறிப்புக்கள்)
ஆண்டு வகைப்படுத்தப்பட்ட மசோதாக்கள் பதிவானபக்கங்கள்
1927
1928
1937
முடிக்குரிய காணி குத்தகை. இலங்கை பல்கலைக்கழகத்துக்
கான இடம்
இலங்கை தோட்டங்களில்
கூலிலயன்கள்.
இந்திய தொழிலாளர்க்கு
களவு ரேஷன். துறைமுக வேலை நிறுத்தம். இந்திய தொழிலாளர்
சட்டம்.
கங்காணி.
இலங்கை தோட்டங்களில்
கூலிலயன்கள். டொனமூர் அரசியலமைப்பு.
ஊவா விவசாய நிலையம், நாடு கடத்தும் ஆணை. இந்திய தொழிலாளர்கள்.
மறைமுக ஆட்திரட்டல், தொழிற் சட்ட மீறல். தூத்துக்குடி கப்பல்
சேவையும் தபால் சேவையும்.
தொழில் கட்டுப்பாட்டாள
ருக்கு மனு. தேயிலைத் தோட்ட தொழி லாள்ர்கள் தாயகம்
திரும்புதல். கிராம கமிட்டி திருத்த கட்டளைச்சட்டம்
கொத்மலை முடிக்குரிய காணி விற்பனவு. சுதேச மருத்துவசபை.
1371. 1372.
2144-2145.
311,312,357-359,360.
377-379,380,381. 327,328,329.
2157.
2246.
776-794.
1696- 1706.
1813 938,954-957.
3379,3380,4106.
3374.
542,543.
1561.
1754.
1419,41 16-41 18,424. 4139,4156,457,458.
892.
0.

1938
1939
1940
1941
942
மண்டபம் ஊடாக பிரயாணம்
செய்யும் தொழிலாளர், கொழும்பு மாநகரசபை. வார பத்திரிகைகள். கிராமிய திருத்த மசோதா,
விவசாய உற்பத்தி
பொருட்கள். பற்றுச்சீட்டு ஒழிப்பு. குடியேற்ற தொழிலாளர். இலங்கையரல்லாத
நாட் கூலிகள்.
அரசியலமைப்புச் சீர்திருத்தம்.
தேயிலைத் தோட்டக்
கணக்கெடுப்பு
இலங்கையரல்லாத வாக்காளர்
இடாப்பு.
குடியேற்ற் மசோதா
முக்கியபங்கு வகிக்கும் தோட்ட
உத்தியோகத்தர்கள். மேலதிக தோட்டத்
தொழிலாளர். தோட்டத் தகராறுகள். தோட்ட கணக்குக்கு
மாற்றுதல். இலங்கையரல்லாதோர்
பதிவாதல், தோட்டத் தொழிலாளர்
சம்பளமும் தொழில் நிலையும்.
தொழிலாளர் சம்பளம்.
மந்திரிசபை. கடுதாசி தொழிற்சாலை
&SL-GST. விடுமுறை தொழிலாளர் நட்டஈட்டுச்
&FL-L-A- போர் இன்னல்கள்.
I&5
2218
2
3497,3498. 3317-339,3346,3351, 3352,3354.
1608, 1622-1624. 620. 619,
1822 881-887, 1378,1379.
36.
955-957.
687-696.
903,990.
9(3,989. 904,990.
904,990.
723.
3189,
2O75,3035.
299-30.
1136, 1 38. 329.
936. 75,76,92.

Page 96
IS
1943
1945
1946
1947
உரிமையாக்கல் மசோதா, தோட்டதொழிலாளர் தோட்ட
கணக்கு மாறுதல்.
சுதேச வைத்தியசாலே,
தேர்தலில் இரகசிய வாக்களிப்பு. தொழிற்சங்க ஆலோசகர்.
தோட்டத் தொழிலாளர்
இறக்குமதி உரிமை சேமலாப திட்டம்,
194 - 1944.
38.
1849.
169-1693. 145-146.
763.
77,773.
Tն4,
 

APPENIOIX
THE HON. MR. K. NATESA AIYAR:-
sir, this is an important matter on which I think there should be some plain speaking. I should first of all, like to discuss the points raised by my colleagues against the Indian vote.
I remember, Sir, the day when the first Ceylon National Cngress was assembled in the Public Hall under the president ship of Sir Ponnambalam Arunachalam who advocated a Legislative Council with a territorially elected majority and a Tamil seat for Clombo Town. The Hon. Mr. Kesava Pillai and myself were present as the Indian delegates. On that day, Sir, most of the important members of the C ngress winted to pass a una nimbus resolution advocating a Legislative Cuncil with a territorially electcid majority and having n) Co. In Tlunal seats. We had to protest and on account of the protests of the Indian and some of the minority communitics, these words were added to the resolution :-
With due consideration for the minorities. "
While speaking on that resolution, most of the leading members of the Congress said that the Ceylonese hawe been treating the Indians as their own brothers and that they should rely on their good sense, and that they would always treat the II in a similar manner. Then they asked us to trust them and trust them implicitly. Of course, we trusted them and even during the visit of the Donough enore Commission, when I led the deputation of the Indians of the Central Provinccs, I told the Collimissioners that we want Cd to hawe the Indian seats only as a temporary measure and that we were prepared to Incrge into the general electoratic at the nearest opportunity. Then Sir Matthew Nathan asked us "Can you not give a date when you cxpcct to be merged into the general electorate?' I replied - "" lif you give

Page 97
us manhood suffrage, we are prepared to forego the commuual seats. The Indians have never tried to discriminate between themselves and the Ceylonese. We always stood for the development of this country and for the political advancement of this country, because we fully believed that in the development of this country, the development of the Indian labourer and the Indian merchant depended. Therefore, Sir we fought side by side with the Ceylonese for the political advancement of this country. Even in Council, although we belong to the minority communities, we have always voted with the Congress people and not with the officials or any other minority community. Some time back there was a conference of Indians in the Central Provinces and they instructed me explicitly that I should vote with the Congress people in the Council when the discussion of the Donoughmore Commission's report took place, because they fully believe that the Congress people would support the enfranchisement of the Indian labourer. But to our utter disappointment we find quite a different thing in the Council to-day.
Then, Sir, with regard to the reasons adduced by my Sinhalese friends, I may say that they have been arguing on points without understanding the real situation. Most of them are arm-chair politicians who stop at home and go out only when it suits them, and they do not care to study the real state of affairs of the Indian community in this country though they happen to represent them also as territorial Members. It has been said that the Indian labourer who comes to this country goes away once in every two years as every Enropean, goes to England once in three years owing to this climate. It is not so. When the former comes into this country he dies in this country. Of course, the Controller's figures are very misleading, and they lead to a lot of confusion in this Council. In the report of the Contoller of Indian Immigrant Labour for 1927, we find that 159,398 assisted labourers have come to this Island, and 87,481 have gone out, and if you refer further down,
( ii )

you will find that 21,439. licences have been issued and 4.949 have been re-issued. That comes to a total of 26,338. The kanganies who go to recruit these labourers make at least two trips a year; sometimes they make three trips, and every time he comes to this country and goes oit he is counted as one immigant coming in and one immigrant going out. In actual practice, a very small number of the labourers go back. The labourer coming to this country gets so little that he cannot save anything to go back, but if he wants to go back he must be in the good graces of his employer and suggest to him that he will bring more labourers, and get licences, railway concession tickets, and then go to India. If he is not so intelligent, then he has to stop here, work and work and die. In one of the Kalutara estates, you find on the grave of a kangany the following couplet engraved :-
6. It is not our business to reason why, but it is to serve and die. “
This couplet is engraved on the grave of the kangany, and I think it is the fate of the Indian labourer in this country. Whether he wishes or not certain things are put on him and he has to serve and die, and die without opening his mouth.
One of the objections raised for giving the vote to the Indian labourer is that he is placed in a private estate where any of the candidates are not able to enter because anybody who enters is prosecuted. I say, Sir, it is for that very reason that the Indian labourer wants the vote. Now when it comes to the question of the franchise, Members of the Legislative Council who are planters come here and say that because the labour conditions are so bad, the labourers ought not to be given a vote. Sir, it is a shame that a Member of the Legislative Council should stand up and say that the labourer is in a slavish condition when he has not attempted to emancipate him and make him a free man. If he only had the good of the labourer in his mind, he
( iii )

Page 98
should have attempted to mike him a free man and give him the vote instead of refusing it to him. Instead of doing the right thing, they are going on the wrong path. My honourable friend, the Central Province Urban Member, has been telling us that the Indians are their guests. Sir, when I talk of guests a story comes to my mind illustrating what we in our own country, at least the Hindus, mean by guests. There was a pious man who did not have his dinner without a guest. One day he had no guest and he waited till three o'clock, when the God Siva, in order to test him, came in the guise of a man and offered to dine with him on condition that he cooked human flesh which must be the flesh of the , child of the host. Further, that it should also be cooked and served by the mother of the child; and the host was prepared to do it and he did it, and when the guest was ready to take the food, he said, that he was not in the habit of eating food in a house where there were no children. Unfotunately, the host had only one child, and he was in a fix and did not know what he was to do“ He explained the whole situation to the guest, who was the God Siva. Then the God gave the child back and having blessed the man took him to Heaven. That is the story. That is the idea of the guest and the host. But you send paid men to bring in the guests, you send the Agents and they advertise and bring the guests, and when the guests are brought they have to work from six o' clock in the morning till six o' clock in the evening, and live on one meal a day with just a loin cloth on. That is the way our hosts are treating us. My friend, the Honourable Member for Central Province Urban District, said that the Sinhalese calls the Tamil as “ Aiya' or elder brother, and the Muslim as “Thambi' or younger brother, and the Indian as “ Bhai. ' In the case of the “ Aiyas' the Ceylon Tamils are in one corner of the Island and thay have no fear of their vote. In the case of the Thambis, they are in the minority and even if manhood suffrage is given, they cannot come to the Council. In
( iv )

the case of the Indians, they find that in some cases they are in the majority and they will have to go to them for their votes. The Honourable Member for the Central Province (Rural ) said that the estate labourer will think that he is a bigger man than the Mudalali when he finds that the Mudalali has to come for his vote. That is what is pricking these people. They only
want to see the Indian labourer working for 50 cents a day and dying in this country. Sir! the five years qualification laid down by the Donoughmore Commisson is sufficient to shut out from the franchise those whom you wish to prevent from having the vote. By the five years restriction most of the chetties and many of these Muslim leaders will not
get the vote, because the custom among the chetties is they come once in tw.) and a half years and the business is carried on by the kanaka pulles in the meantime, and
most probably these kanakapulles will not get the vote.
But the lab burer who comes here and who is unable to go back to India, will naturally get the vote if manhood
suffrage is given. By the five years' residential qualification, the chetties and traders will b2 out of the franchise; and in addition to all this you want to have a literacy qualifiaction to see that all the labourers are out of it. We must remember the well known principle in the administratiuli uf a county “taxation without representa. tion is robbery. '
The grant of the franchise to the immigrant labourers is no doubt going to affect the employers' pockets; hence the objection on the part of employers of Indian labour to the grant of the franchise to labourers. Another reason why we think the Indian labourers should be given the vote is this. The Indian labourer who comes to work in this country is working both under Ceylonese and European employers, and if there is no representation on his behalf there will be laws and regulations passed against his own interests without his knowledge or without his opinion being taken. The Honourable the Executive Council Members called attention to one of
( v )

Page 99
the statements in the “ Indian Review ' about the cooly lines being very bad and appealed to the Honourable the European Unofficial Members of this Council to say whether the conditions of the estate lines were such as were described in the passage referred to. I may read from the report ot the Medical Officer of Health about the state of the cooly lines. The report is dated August 15, 1927, and the Medical Officer of Health says that the death rate of the Indian coolies is due to the most insanitary conditions prevailing in the estate lines. Once there was a cholera case in one of the estates and the Medical Officer of Health having gone and inspected the estate wrote a report which ran into ten pages of typewritten matter. Speaking of the superintendent, the Medical Officer says :- ് ...
“He has not taken any effort to get the lines cleared up even temporarily. He was very nasty with
me and wanted to know whether any Government Offical has any authority to stop his coolies. He told
me that those responsible are fools. "
The superintendent wanted all the contacts to work To quote another paragraph :-
* I tried to explain for about one hour that we were taking all steps in his own interests but failed to convince him. He was growing more discourteous towards me and it was only wasting time.... He had ordered , all contacts to work. '
This report of the Medical Officer of Health was sent to the firm and the firm wrote to the Director of Medical and Sanitary Services asking him to take steps
against the Medical Officer of Health for making such a bad report or in the alternative to get him to with
draw the remarks. 400 copies of that report were also sent to the various Planters' Associations in order that steps may be taken to see that no such report was ever made hereafter. Now the Inspecting Medical Officer
(νi )

always made a report favourable to the estate. A month or two after the incident I have just related, Dr. Gunasekera, Assistant Director of Sanitary Services, visited the estate and made the following remark:-
“ regret I cannot agree with the conclusions that you have come to, namely, that the Medical Officer of Health represented matters in a false light. I have not the silghtest doubt that the condition of the lines, and so on, at . . . . . estate was at that time as unsatisfactory as the Medical Officer of Health represented them to be.
I may read also the following extract of the letter form the Director of Medical and Sanitary Services sent to the estate authorities :-
Having dealt with the points raised in your letter. I may be permitted to point out that you have left undisputed the graver charges made in the Medical Officer of Health's report against Mr. Hall, namely, (1) that Mr. Hall was guilty of neglect of duty in not keeping the lines and latrines in his estate in a clean and sanitary condition; (2) that Mr. Hall was non-co-operating and , refused to carry out the
instructions given him by the proper authority under
the Quarantine and Prevention of Diseases Ordinance, in as much as (a) he ordered all the contacts to work although he had been requested not to do so. The result was that some contacts plucked tea near a paddy field in which villagers were working. (b) He refused to get the lines cleaned up although asked to do so. I would therefore inquire what action has been taken by you as regards these grave charges against Mr. Hall. '
THE HON. M.R. E. W. PERERA :- Was the man prosecuted
THE HON. MR. K. NATESA AIYAR :- I am comling to that. It would be more interesting if I read the
(vii).

Page 100
whole letter, but it runs to nearly thirteen pages, of typewritten matter and I shall not take the time of the Council by reading it. If any Honourable. Member so desires I shall be able to furnish him with the number and date of that letter and other praticulars regarding it. Of course privately the Medical Officer of Health was told that one of the proprietors of the estate happened to be a Member of the Legislative Council and that therefore he should not have made the remark complained against. Thus, Sir, you will see the anxiety of the employer to prevent the Indian labourer from getting the vote. The labourer, if he gets the vote, will have his representative always to take an interest in him and strive to better his condition. The labourer might not be able to influence his employer or the Indian agent, but he could at least think of the Member who represented him in Council. If my honourable friends refuse the franchise to the Indian labourer, the fate of the Indian labourer is doomed. I can, of course, understand the attitude of the Senior Burgher Membar who once belonged to that class of rulers in this country whise interest was always to se2 that the people whom they ruled were unfit to exercise the vote.
. I can understand the aristocrats, the Kandyan Mem
bers, who think that the Low-country Ceylonese are
invading their country; and they have indulged in some peculiar utterances.
THE HON. MR. G. E. MADAWALA :- What utterances?
THE HON. MR. K. NATESA AIYAR - Utterances of some of your leaders. I can quite understand wheh they speak against the grant of the franchise to the Indians; but I cannot understand why some of the Honourable Members who are owners of estates themselves and who say that they have the good of the Indian labourer at heart-and whose present position and status is due to the toils of the Indian lab)urers -are against the enfranchisement of the Indian labourers.
( viii )

One of my honourable friends remarked that if the Indian labourer was allowed the franchise there would be in a few years eighty lakhs of Indian voters. I can, of course, assure my honourable friends that the Indian labourer does not come to Ceylon of his own accord. The cost to an estate of bringing an in ilian labourer is about Rs. 40 or Rs. 50. Last year or the year before I brought up a resolution to the effect that owing to the insanitary conditions prevailing in th: cooly lines the recruitm2nt of labourers must b2 temporarily stopped. Then all the people who now fear Indian labourers flooding this country voted against the resolution. The reason is not far to seek. Taay want the labourer to work but do not want to give him the opportunity to speak through a Member because if that is done the employers would hear some truths against themselves from their own employees. Of course as regards Sir Harcourt Butler's remarks, the Indians know Sir Harcourt Butler more intimately than the Ceylonese, and therefore, we know how to treat his remarks ab but Indians entering Burma. He is one of the official enemies of the lndian national movement, and I would not have been surprised if he had anything stranger to say.
As regards che Indians and the Ceylon Civil Service the question was asked by an Honourable Mamber why the Indians had raised no objection when the Indians were prevented from competing. But I ask, where was the opportunity for the Indians to speak. There was no Indian Member then in this Council. We had a question put in this Council regarding the matter and it ended with the answer given by Government, When I went to Simla and Delhi I found efforts made by some, by way of retaliation, to prohibit Ceylonese from entering the Ind ian Civil Service. But the Indians said that they might be more generous than the Ceylonese. India is giving rcom for people of all sorts, and it has room. What we really resent is the fact that the Indian is wanted here not as an equal but as a servant. That is treatment which
( x )

Page 101
we do not like. The Indian Members did not take part in the discussion of the Committee System suggested by the Donoughmore Commission for the reason that they thought that everything depended, as far as they were concerned, on the grant of the franchise to the Indian labourer. If manhood suffrage is approved of there will be some of us having a share in the administration of the country. When efforts were made to aviod us we thought that before we get a decision on this matter we would rather keep away from the discussion of other matters.
My honourable friend the Executive Council Members (Mr. A. C. G. Wijeyekoon) has spoken about the existence of caste distinctions in India. I ask my honourable friend whether they have not the same-thing in this country. The Donoughmore Commission have in their report devoted a page to it. I also know that one of the candidates for Legislative honours got defeated because he belonged to a low caste and all high caste people began to support the high caste candidates. When you find that state of affairs in your own country, I ask what have the people of this country done to rectify it? Of course we are in the same boat and there is no use of our merely referring to such a condition without attempting to improve it.
The Honourable Member for the Cental Province, Rural Division, was talking of the special benefit the kanganies had-freedom from arrest for civil liabilites. That benefit, I say, was given in the interests of the employer and not in the interests of the labourer. The kanganies had to get advances for bringing and labourers they were compelled to borrow money from the Chetties. When they got into debt it so happened that when the chetties filed action the kanganies asked for more money from their em
(κ)

ployers. It was to prevent that and not to protect the kangany that the so-called benefit had been obtained. In reality the kangany is now in a worse state than the other Indians in the country. His credit is lost.
Then again it has been said that the labourer had no stake in the country. I do not undersland what they mean by a stake in the country. Does it mean owning a Property or land or building? The labourer is not able to purchase two pieces of cloth and therefore he has no chance of ever purchasing any property and having a stake in this country. Further, under the Land Scheme we are proposing the Indians are excluded from purcha
sing property.
Then again it was urge that the Indian labourer, if he is given the vote, will vote for his European employer! I am sorry to note that Honourable sembers have not correctly studied the report issued by the Commissioners. The five years' qualification applies even to the Europeans who in this hot climate cannot live continuously for five years. As a rule they periodically go to England on a nine months holiday. So that, when they return they will not have the right to vote. Therefore nearly seventy or eighty percent of the Europeans will not be eligible to vote or to stand for election. And even if a handful of Europeans are eligible for election you may rest assured that the lindian will not vote for Europeans in a hurry because he knows on which side the bread is buttered for him. I do not mind, of course, an Indian labourer voting for a European who loves him
( xi)

Page 102
It has been said that to properly exercise the right of voting one must have passed the English SchoolLeaving Certificate Examination, and so on. But I find that the illiterate voter is better able than half the educated persons to choose a candidate. It is only the half-educated people who want money for voting, money for this and money for that. The illiterate man is more discriminating. I can give one example in illustration of my remark. A Roman Catholic friend of mine came to this country about thirty years ago as a labouter at the age of about thirteen, at the time when the railway line was extended from Nanu-oya to Bandarawela. By dint of perseverance and hard work he is now the owner of about 300 or 400 acres of tea. He has an English clerk, and he gets this clerk to read and explain to him daily the articles in the “ fimes of Ceylon'' and other newspapers to which he is a subscriber. He is able to manage his estate m ich bettei than most Ceylonese manage their own estate. Now, even when his clerk could not understand the cogency of the articles or editorials in the newspapers he used to explain to the clerk and often say :- “The Editor could not have written like that. It must be this ' And alm )st invariably he was correct. This friend of mine although he dose not know English is more accurate than the clerk who knows English. During the first election one of my firends who was a candidate for one of the Indian seats wrote to a Roman Catholic priest to ask this friend of mine not to support a Hindu like myself. The French padre of course wrote to him that “ Mr. Aiyar is an agnanam ' and saked him not to support my candidature. But this friend of mine wrote to the padre saying “I am prepared to do everything for the Church, but the Church is one thing and politics another.' That was the reply. -
The Hon. Mr K. Nates a Aiyar.
A W 9 لله هذاقه \

11. 12.
13. 14. 15.
6. 17.
18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. 27. 28. 29. 30. 31. 32. 33.
199
மேற்கோள் விவரங்கள்
இலங்கை புவியியல் வளம், மக்கள் - அரச கரும மொழித் திணைக்களம் - பக்கம் 36 The Rise of the Labor Movement in Ceylon - Visakha Kumarie Jayawardena. ஸி. வி. வேலுபிள்ளை தினகரன் 14-09-1958, The Citizen - 1922. Ceylon under the British Occupation - Colvin R. de. Silva. Images of Sri Lanka through American Eyes - H. A. I. Gooneti leke. Page 45.
தேசபக்தன் 3/9/ 1924.
Hansard Year 194. Page 690. தேசபக்தன் - 1924. Emigration Act No. 7 of 1922 (INDIA). The Indian Immigrant Labour Ordinance - 1923. The Bvolution of Labour Law in Sri Lanka -
R. Weerakoon. Page 16.
Visakha Kumari Jayawardena. Page 338. Daily News - 9-1-1922.
சத்யமித்ரன் 15-01-1927.
- அதே - 04-06-1927. My Life and Labour - A. E. Goonesinha - OBSERVER - 25-7-1965. Visakha Kumari Jayawardena. Page 338. Hansard. Year 1941. Page 732. தேசபக்தன் 1924. தொழிலாளி 24-07-1938. திரு வி. க. - மு. வரதராசன் - பாரி நிலையம் - பக், 11 Hansard. Year 1927 Page 327 - 329. சத்யமித்ரன் 05-03-1927.
- அதே - 02-04-1927. Visakna Kumarie Jayawardena, Page. 342. My Life and Labour - OBSERVER - 29-8-1965. தேசபக்தன் 21-1-1929.
- அதே - 02-03-1929. Trade Unionism in Ceylon - V. Sarvaloganayagam. Sixty Four Years in Ceylon - Fredrick Lewis. Times of Ceylon Green Book - Year 1936. தேசபக்தன் 1929.

Page 103
200:
34.
35.
CNA. - Objectives of the All-Ceylon Estate Labours Federation of K. Natesaiyer.
The Ceylon Economy - A. D. V. de. S. Indra ratne.
Page 4.
36.
37. 38.
The Economy of Sri Lanka - Mallory. E. Wijesinghe. Page 208. சத்யமித்ரன் 15-10-927. Miemerandum on the Reduction of Wages
by Natesa Iyer. CNA.
39.
40. 4. 42, 43. 44.
45. 46. 47. 48. 49. 50.
51. 52. 53. 54. 55.
56.
57.
58. 59. 60.
6. 62. 63.
64. 65
Visakha Kumarie Jaya war dena. Page 354.
Hansard Year 1942. Page 936.
Han sard Year 1930. Page 911. Hans ord Year 1941. Page 694. சத்யமித்ரன் 29-06-1927, - Memories and Musings - Sir Arthur Ranasinha. Page 146. 婷 "times of Ceylon Green Book Year 1936. இந்திய கேசரி 05-0-936.
- அதே - 19-01-1936. Memories and Musings. Page 109 Hansard Proceedings of 28-9-1937.
Report of the Brace Girdle Commission. Gover in ment Press.
Hansard Year 1937. Page 956, The Economy of Sri Lanka. Page 3. Report of the Brace Girdle Commission. Ceylon Legislative Council Proceedings of 6-12-1883.
Indian Immis rant Plantation Workers in Sri Lanka - Dharmapriya Wesumpeuma.
Wells Cooly Tamil-Third Edition - 1925.
A History of the Tamil Church Mission. Canon. S M. Thames. Mahatma Gandhi-A biography of B.R. Nanda, Page 50. - ibid W Page 202. Indians in Ceylon - Thonda man and Reja lingam. on behalf of C1C. 25-10-1948. Hansard Year 1941 Page 689. Administration Report of Controller of Labour for 1938. Natesa Aiyer Speech in Legislative Couccil ot 29-6- l928. - ibid -
indian Immigrant Plantation Workers in Sri Lanka.
Page 196.

66. 67. 68. 69. 70. 7. 72.
73.
74. 75. 76. 77. 78. 79.
80,
81. 82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
9. 92. 93. 94. 95. 96.
97, 98. 99, 00.
20
The Evolution of Labour Law in Sri Lanka. Page 13.
- ibid - - Page 07. - ibid - Page 07. - ibid - w Page 0.
Memories and Musings. - Page 107. Indian Immigration to Ceylon - Dr. K. M de. Silva. A History of the Tamil Church Mission. Page 6.
Indian Immigration Plantation Workers
in Sri Lanka Page 28.
- ibid - Page 195. Ceylon Labour Commission Hand Book Fourth Edition. Glimpse of India - Jawaharlal Nehru. The Assasination of Prime Minister - A. C. Alles. Visakha Kumari Jaya wardena. Dharmapriya Wesumperuma. Federation Quarterly - CEEF - Volume V. No 1. Page 115. 75 th Birth Day Felicitation Volume - Abdul Aziz. A. W. L. Turner - Ceylon Labour Commission XVIII. No. 4. Page 52. CNA. Open letter of K. Natesa Aiyer. Ceylon Labour Commission Hand Book - Fourth Edition. Report of the Controller for Indian Immigration Labour for 1924. தேச நேசன். 1924.
Dr. K. M. de. Silva. Dharma priya Wesumperuma. Dr. K. M. de. Silva.
தேசபக்தன் 17-10-1924. - அதே - 02-04-1929. .02-03-929 = 35)yی ہے - அதே நீ 13-04 - 1929.  ைஅதே - 18-04-1929 - அதே - 1927.
- அதே ம . 1928,
Hansard Year 1939 Page 620.
Hansard Year 1941 Page 903. Ceylon Labour Commission Hand Book Page 63.
Planters Association Review Volume X, No. 4. . Page l l 2.

Page 104
202
101.
02.
03. 104.
05. 106. 07. 108. 109.
110. 1 1. l 12. 13. 1贯4。 15. 16. 17.
118. 9. 120.
12. 122. 123.
l 24.
25. 126.
27.
28.
129.
30. 13. 132.
133.
134.
Hansard Year 1943. Page 2381. Federation Quarterly - CEEF - 1946. Page 23.
தேசபக்தன் 29-07-1929. சத்யமித்ரன் 28-08-1927. வீரகேசரி 23.07.1939,
Hansard Year 1941 Page 694.
Report of the Committee for 1939. CIC. Page 16.
வீரகேசரி O8-0 - 1939.
Ceylon Plantation Labour Problems (1943)
H. J. Temple.
வீரகேசரி 02-07-1939.
- அதே - 09-07-1939. The Evolution of Lebour Law in Sri Lanka. Page 33, சத்யமித்ரன். 13-07-1927.
தேசபக்தன் 22-06-1927. Ceylon Administrative Reports for 1939. Page 09. தேசபக்தன். 1929.
Federation Quarterly. CEEF. First Quarter. 1946. Page 23. இந்திய கேசரி 26-07-1936.
வீரகேசரி 28-05, 1939. - A Short History of Dr. N. M. Perera - E. P. De. Silva. Page 13. Hansard Year 1945. Pages (2799-2828).
தேசபக்தன் 1924.
- அதே - 08-09-1924. - அதே - 10-09-1924. - அதே - 16-07-1929, - அதே - 17-11-1924. - அதே - 17-09-1924. - அதே - 17-10-1924,
Minutes of the Planters' Association of Ceylon
1930 - Page 120.
- ibid - Page 128. தேசபக்தன். 27-06-1927. வீரகேசரி 03-2-1939.
நாவலர் நூற்ருண்டு மலர் இ. முருகையன் கட்டுரை - பக்கம் 26, Minutes of the Planters' Association of Ceylon-1930. Page 195.

35. 136. 37. 138. 39.
140, 14.
142.
143.
144. 145. 146, 岚47。
148. 49.
203
Indian Estate Labourer - 1931.
தேசபக்தன். 05-0-1927. தேசபக்தன். 27-06- 927. - அதே - 10-09-924.
Speeches and Writings -
S. W. R. D. Bandaranayake. Page. Il 15. Hansard. Year 1946. Page 150. Administration Report of the Controller of Labour 1938. Page 20. Hansard Year 1941. Page 690. Administration Report of the Controller of Labour 1938 Page 20. Hansard Year 1941. Page 691. Hansard Year 1927 Page 2145. Census of Ceylon 1946. Volume 1. Part II., Ceylon Administrative Report for 1925. Fried - Indian Immigration Controller. Ceylon Administrative Reports for 1938. Page 49. சுதந்திரன் 8-11-1947.

Page 105
204
பெயர் குறிப்பு அகராதி
(எண் - பக்க எண்)
O
அக்குரஸ்ஸ 152 அக்மீமான 152 அங்கொடை 83 அடிமை எதிர்ப்பு சங்கம் 22 «ფIL"-L—6ზr 48,55,58, 59,62,66,68,80
81,82,10245,167 அண்டர்சன் 74, அநகாரிக தர்மபாலா 34 அநுராதபுரம் 144,145,
syuug,6007 Garsig E. W - l45 அப்துல் அஸிஸ் 80,108 அப்துல் ரஹ்மான் 99 அமர குரியா H. W. 94 அமெரிக்கா 97,149
9y libLu@v) lib K. M. A. K. 103 அம்பாந்தோட்டை 173 அய்யங்கார் 128
அரசாங்கசபை 15,44,45,46,59
6,64 அருணுசலம், சேர் பொன். 69
48 அருளாநந்தன் 20 அலுவிகார P. H. 66 அழகிய இலங்கை 59,13445, அன்னி பெசன்ட் 61
O
ஆஸ்திரேலியா 23,27,64,78,149,
54
ஆண்ட்ரூஸ் C.S. 22
ஆண்ட்ரூஸ் சேர். கோல்கட் 68
72,
ஆதாம் அலி E. G. 34,
ஆப்பிரிக்கா 78,
ஆறுமுக நாவலர் 127
to
இங்கிலாந்து 141,142,162, இண்டிபெண்டன்ட் 39 இண்டியன் எஸ்டேட் லேபர் 120 இண்டியன் ஒப்பீனியன் 11,121 இண்டியன் லேபரர் 55,114, இந்திய பால போதினி 119 இந்திய ஏஜண்ட் 54,55,56,103
137,138,172 இந்தியர் சங்கம் 24,30,42,57 இந்திய குடியேற்ற சங்கம் 22 இந்திய வர்த்தகர் சங்கம் 19 இந்திய வாலிபர் சங்கம் 42 இந்தியன் 119,120, 123 g)sögurr 15,16, 19,20.23,24,25,
26,31,37,47,54,58,59.64,85,92, 98,141,143,149,162,165,169, இந்தியா இலங்கை ஒப்பந்தம்
34,143, இந்து 124 இந்து மகாசபை 48 இம்புல் பிட்டிய தோட்டம் 5 இராமநாதபுரம் 20 இராமநாதன் சேர் பொன். 38
39,44,69,72,99, 166, இராமசாமி நாயக்கர் ஈ. வே.
39 இலங்கை 17-20,23-26,28,29,31
32,34,37,47,54,59,64,85,92,98 141,146,149,150,162,65,166, 167,168,169,171,74,176, 177. 179 இ. இ. காங்கிரஸ் 53 இ. இ. தொ. சங்கம் 47,52 இ. இ. சங்கம் 24,42 இலங்கை இந்தியன் 119,132

இலங்கை விவசாயிகள் சங்கம்
75
இலட்சுமண ஐயர் 32
இலட்சுமணப்பிள்ளை 32
இன்ஸ்யூரன்ஸ் 134
O
ஈழத்து இலக்கிய வளர்ச்சி 135
O
உடுமலை முத்துச்சாமிக்கவிராயர்
107,122
O
bģg 97
உரிமைப் போர் 11
O
ஊழியன் 57,119
எட்வர்ட் ஜெக்சன் சேர் 150
O
ஏடன் 78,122
O
ஐயர் வா. வே. சு. 106 ஐரோப்பிய வர்த்தக்ர் சங்கம் 19
O ஒயில் என்ஜின்கள் 134
O .
ஓர்டி பிரவுண் 102
O
ஒளவையார் 121
O கங்காணிமார்கள் சங்கம் 4281 கட்டுகாஸ்தோட்டை 152 கணபதி, S. 125 கணேஷ் பிரஸ் 82 56örtg: 55,56,58,74, 102,132, 166, கதிர்காமம் 134,136,145 கந்தளாய் 73 கமலாம்பாள் சரித்திரம் 146
205
கமலாதேவி சட்டோபார்த்யாயர்
65,78
களனிவெளி இந்தியர் சங்கம் 79 களுத்துறை 162 கனக செந்திநாதன் 135,147 e56oTLT 97 assirearrisprir C. W. W. 30,158
O
sirral GO காந்தி 39
O கிரி 99 கிரே பிரபு 74 கிழக்காப்பிரிக்கா 23
O
G5 u rasi 39 குணசிங்கா A, B, 13,32,33,41,
. 4 43, 47779097, 1030 110, 17, 18, 20, 148
O
குணசேகரா, டேனியல் டயஸ்
63
குயீன்ஸ் ஹோட்டல் 132
குற்ருலம் 41
O
கூலித்தமிழ் 71
கெனமன், பீட்டர் 103
о : . கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 61
O
கொட்டியகொல்லை 104 கொத்தலரவல D. H. 145, கொப்பேகடுவ, ஹெக்டர் 179 கொரியா சேர் குளோட் 54,167 கொழும்பு 16,17,21,29,32,43,59,
60,66,72108,113,116,123,131, 153,151,166,172
O
கோர்டன் 74

Page 106
206
கோர்டன் ஃபெவ்லோஸ் 46,63,
145
கோவை 20
ஹேர்வி 24
சட்டசபை 52,60,64,91 சட்ட நிரூபணசபை 45,69 சத்யமித்ரன் 119,120,124,171
சத்யவாகேஸ்வரர் ஐயர் 30,99,
25,126
சந்தானம் 73,99
சமசமாஜ கட்சி 53,62,101,102 சண்முகம் பிள்ளை 94
சம்பள நிர்ணய சபை 42 சம்மாங்கோடு 17
Friont P. N. 24,25
O சாமிநாத ஐயர் உ. வே. 127 சாண்ட் J. L. 69
சாரநாதன் T. 39,40,6590,106,
109, 28 .
Frtridia) S. P. 35
O
சிட்டிசன் 11,21,25,77,120 சிலாபம் 173,
சிலோன் இண்டியன் கிரிஸைஸ்
134 சில்வா, கொல்வின் R. D. 102 gaipart D. D. i03
சிவனெளிபாதம் 145
O சீதாராமையர் பட்டாபி 101
O
சுதந்திரப் போர் 111 சுதந்திரன்
11,120,121,146,147, 173,174 சுந்தரலிங்கம் S. 72 guing upGoofilu u gour 127 சுப்ரமணிய பாரதியார் 16,48,
61,67, 108,121-123,126,139,46 சுவாமி நாதன் T. K. 22 O செல்வநாயகம். S. J. W. 70,83;
1,120,174
சென்னே 15,16
2
சேனநாயக்கா D. S. 30,77,131
157
சோமசுந்தர பாரதியார் 127
சோமசுந்தரம் 145
o
ஜ. தொ. கா. 69
ஐயத்திலக்கா 30
O
grrum. T. B. 97,157,158
O
ஜிம்ஸன். F. C. 175
O
ஜெயம் கிளார்க் மேத்தா 27
O ஜோர்ஜ். E.De. சில்வா 79 ஜோர்ஜ் பேர்ட் 23 Gigitair A. S. 120,123 ஜோன், சேர் டக்லஸ் 69
O ஞானபண்டிதன் 108
O
டிக்கோயா 61
O டெய்லி நியூஸ் 129,131 O டேவிட் 24,35
O
டைம்ஸ் ஒஃவ் சிலோன் 124,125,1 O
டொரிங்டன் 74
டொனமூர் 44.4546,90,161,16: O
தகாநாயக்கா W. 113 தஞ்சாவூர் 15,20,41,60,136,165, 1778 -. தமிழரசு கட்சி 120 தமிழ் கூலி மிஷன் 71 தம்பிமுத்து. R. R. 33,161
O திரிகூட சுந்தரம்பிள்ளை 32 திருச்சி 20,156 திருவாரூர் 41 திரு வி. க. '41,122, 127
120,124
தினத்தபால் 147

O துரைமார் FibGupantgarth 56 தூத்துகுடி 72
தென்னுப்பிரிக்கா 168 தென்னிந்திய மில்காரர்கள்
சங்கம் 16 தென்னிந்திய வியாபாரிகள்
சங்கம் 16, 17
o V தேச நேசன் 21,26,77,111-114,
16,147 தேசபக்தன் 34,45,54,77,78,111
ll8, 120-125, 127,134, 147, தேசாய் 101 தேசிக விநாயகம் பிள்ளை 127
O
தொழிலாளி 40,111 தொழிலாளர் அந்தரப்பிழைப்பு நாடகம் 134,139 தொழிலாளர்களின் உரிமைகளும்
கடமைகளும் 55 தொழிலாளர் சட்டப்புஸ்தகம் 52,
91, 34,136,137,140,143 தொழிலாளர் தோழன் 119
O
தோட்ட உத்தியோகஸ்தர்கள்
சங்கம் 57 தோட்டத்துரைமார்கள் ராஜ்யம்
79,134, 138 தோட்டத் தொழிலாளி தோமஸ் 64
O
11, 12
நரேந்திரபதியின் நரக வாழ்க்கை
134,135
நல்லம்மாள் சத்யவாகேஸ்வரர்
30
நவநீத கிருஷ்ண பாரதியார் 127
207.
நாகலிங்கம் 11 p5mTag56ör V. P. 55,58 நாவலப்பிட்டியா 65,66
O .
நியூசிலாந்து 26,154
O நீ மயங்குவதேன் 134,135
O
நுவரெலியா 102,145
O
நெல்லையா H. 111,122,125,128,
147
நேதாஜி 99 நேரு, ஜவகர்வால் 97,98,99, 104 நோர்வூட் 67
O
பட்டு அம்மாள் 106 பண்டாரநாயக்கா S, W. R. D. 62.77, 50, 151,153,154, 55,166 167, 170 பண்டாரவளை, 63,144,145 74,102,108,123,130,145 T&ופg {_ו பர்மா 23,73,149 பாலாதம்பு 103
O
பிரேஸ் கேர்டில் 64-68,97,109 பிலிப் குணவர்தன 62 64 பிளாண்டர் ராஜ் 134
O
பீஜித் தீவுகள் 23,26,27.28,31
O
புத்தளம் 60,173
புறக்கோட்டை 172
O
பெரிசுந்தரம் 24,3746,61,62,82,
83

Page 107
208
Guflusnts) P. R. 46
GILGirrar N. M. 62,65,97, 102,
15
பெரைரா I, X.
161,167
35,46,97,108,
o
பேராதெனிய 166
o
பொகவந்தலாவ 104
பொன்னம்பலம் ஜி. ஜி. 72,111
120
o
Distr G35 ausar A. 70,72, 167
மகாத்மா காந்தி 22,70,71,7797
99, 176
மக்கெலம் 88
மஸ்கெலியா 70
மணிலால், டாக்டர், D, M. 26
30,36,48.68,78,97.122
மதுரை 20,106
மதுரை சொக்கநாதர் 106
மலாய் நாடு 73,78,94,149,158
மறைமலை அடிகளார் 127
மன்னர் 72,173
O
மாத்தளை 64
மார்க்ஸ் ஹென்றி 31
மிரோன் வின்ஸ்லோ 23
Êrrr முகைதீன் க. அ. 147
மீனுட்சி அம்மை 40,4849,55,
28! 110 سے 06}
o முகம்மது சுல்தான் 35 முத்தையா, டாக்டர் 97
மூரே 30
O
மேற்கிந்திய தீவுகள் 23 மேனன் 56,138
O மொரிஷஸ் தீவு 74
O மோத்தர் G. S. 53
மோனிங் லீடர் 39
O
யாழ்ப்பாணம் 77,173,174 o .
ரங்கூன் 29 ரஸ்டம்ஜி 35 ° gTlʻl68oTub E. V. 2 1,30,97
ரட்னுயக்கா 114
о ராஜாஜி 98.99 ராஜேந்திர பிரசாத் 99 ராமானுஜம் T. 128 ராஜரட்ணம் S. 37 ராஜமய்யர் 146
о ரெங்கநாதன் S 54
d w லாரி, முத்துக்கிருஷ்ணு 2124
25,30,120
O லிடிங்டன் 138 லிண்டுல்லா. 60
O லுணுகலை 65,109
O லேக் ஹவுஸ் 124
லேபர் கண்ட்ரோலர் 56

209
லேபர் யூனியன், சிலோன் 33 லோக் மான்ய திலகர் 61
O
வங்கிகளும் அவற்றை
நிர்வாகிக்கும் நிர்வாகமும் 134
வ ஊ. சிதம்பரஞர் 127
al. print. 6
aurigah) ) M. 99
வர்த்தக மித்திரன் வள்ளுவர் 70,83
16, 18,114
6?¿il Lirio Gé5rrifluurt C. E. 33 விக்ரமராஜ சிங்கன் 136 விசாக குமாரி ஜெயவர்தன 17
28,40 விபுலாநந்த அடிகள் 127 வியாபாரப் பயிற்சி நூல் 134 வில்கின்சன் 24 வில்லியம் போய்ட் 74 வில்லியர்ஸ் T. ப. 24,157, 158,
160
O
வீரகேசரி 61,11,120,122.124.
125,147 sífur Gurrírí Lúo 46 வீரன் 111,120
o
வெங்கட்ராமன் V K 48 வெற்றியுனதே 134,135
வேர்ணன் குணசேகரா 33 Gargyll 96frast C. W. 1779,88 வேல்ஸ் இளவரசர் 77,
o
ஃபோர்வர்ட் 111,120
O வைத்திலிங்கம் S. P. 46,167 வையாபுரிப்பிள்ளை S. 127

Page 108

எமது வெளியீடுகள்
சி. வி. சில சிந்தனைகள்
- சாரல் நாடன்
தியாக யந்திரங்கள்
- சு. முரளிதரன்
குறிஞ்சி தென்னவன் கவிதைகள்
- குறிஞ்சி தென்னவன்
யெளவனம்
- தேவதாசன் ஜெயசிங் கூடைக்குள் தேசம்
- சு. முரளிதரன்
விவரங்கட்கு
Hill Country Publishing House 57, Mahinda Place
Colombo - 6
Sri Lanka.
17.50
11.00
200
25.00
0.00

Page 109


Page 110
சிறுகதை, கவிதை, குறு துறையிலும், விமர்சனம் வர என்று ஆய்வுத்துறைகளிலும் ஆ
இவரின் "சி. வி. சில சிந் யின் ஆற்றல்பற்றி புதிய பரிம
பிரதேச அபிவிருத்தி அ அவர்களால் 1986ல் பொ ே பொற்கிழி வழங்கியும் கெளர
. . . . .
" இவர் நுவரெலியா மாவட தோட்ட தொழிற்சாலையின் ,
IT IS NOT OUR BUS BUT IT IS TO SERVE AN
This Cauplet i ri i grated oi Il - Fli" : I Li al IEI liaj Ei la bigJ ALI
In Ceylan regislaıti'li'. Calificil foi TIL H
(see http:ri dix
 
 

மலேயக கலே இலக்கியப் பேரவையின் தஃலவரான சாரல் நாட்ன் மலேயகத்தில் அறுபது களில் ஏற்பட்ட இலக்கிய எழுச் சியில் மலர்ந்தவர்.
நாவல் என்று படைப்பிலக்கியத் லா று வாய்மொழி இலக்கியம் பூளுமையை நிலே நாட்டி வருகிருர்,
தனேகள்" என்ற ஆய்வுநூல் சி. வி. ானத்தை தந்தது.
மைச்சர் திரு. செ. இராசதுரை ன் னு டை போர்த்தியும் 1987ல் விக்கப்பட்டார்.
2டத்திலுள்ள மிகப்பெரிய தேயிலை அதிகாரியாக கடமையாற்றுகிருர்,
NESS TO REASON, WHY "יEום ני
I the Kangany, and I think it is the rate of Er in this country.
Commission Franchise, an. Mr. K. NATESA AIWAR
for Full Text