கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் பூர்வ சரித்திரம்

Page 1


Page 2


Page 3

இலங்கையின் பூர்வ சரித்திரம்
* 1 1 ᏍᏇ புதிய சித்திரப்படங்களும் தேசப்படங்களும் அடங்கியது)
ஆங்கில முதாைலா சிரியர் :
ஜி. ஸி. மென்டிவரிகஷ்டி
மொழிபெயர்ப்பு:ச நவாலியூர்-சோ. நடராஜன்
Publishers :
"HE COLOMBO APOTHECARIES CO.,LTD. PRINCE STREET, FORT, COLOMBO
942.

Page 4
கொழும்பு அப்போதிக்கரீஸ் கம்பெனி, லிமிற்றட் அச்சியந்திரச்ாலையிற் பதிப்பிக்கப்பெற்றது

மொழிபெயர்ப்பாசிரியரின் குறிப்பு
லங்கையின் பழைய சரித்திரத்தை நல்ல முறையில் ஆராய்ந்து தமிழில் ஒரு நூல் எழுதவேண்டுமென எனக்குப் பலகால மாய் ஒரு விருப்பம் இருந்தது. இளமையிலேயே, வாழ்க்கையின் போரில் ஈடுபட்டு வயிறு வளர்க்க முயன்ற எனக்கு, இந்த விருப் பத்தை நிறைவேற்ற நேரமும் வசதியும் எற்படவில்லை. பின்னர் பலதிக்கிலும் அலைந்தபின் சர்வகலாசாலையிற் சேர்ந்தபொழுது சரித்திராசிரியர் டாக்டர் ஜி. ஸி. மெண்டிஸின் பழக்கம் ஏற் பட்டது. அவர் இந்திய சரித்திரம், இலங்கைச் சரித்திரம் ஆகிய வற்றை நல்ல ஆராய்ச்சி முறையில் அறிந்திருந்ததைக் கண்டேன். அவருடைய பிரசங்கங்கள் எனக்கு உற்சாகமூட்டின. எனவே, நானகவே ஒரு இலங்கைச் சரித்திரத்தை ஆராய்ந்தெழுத வசதிப் படாதபோதிலும் டாக்டர் மெண்டிஸ் இயற்றிய நூல்களேயாவது மொழிபெயர்த்துவிட்டால் தமிழ் மக்களுக்கு உபயோகமாக விருக்கு மென்று எண்ணினேன். எனது நல்லதிஷ்டம் அவர் தாமாகவே தமது நூல்களை ஒரு நாள் என்னிடம் கொண்டுவந்து 'இவற்றை நீங்கள் தமிழில் எழுதுங்கள்’ என்று சொன்னர். பழம் நழுவிப் பாலில் விழுந்தது. அவரெழுதிய இலங்கைச் சரித்திரம் இரண்டாம் பாகத்தையும் பின்னர் முதலாம் பாகத்தையும் விளையாட்டாகவே பலபிழைகளோடு மொழிபெயர்த்துவிட்டேன். பின்னர் இந்தப் பாகத்தையும் ஒரு நாள் என்னிடம் கொடுத்தார்.
காலையில் பத்து மணிக்கு ரேடியோ நிலையத்தில் நுழைந்தால் இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்பலாம். அதன் பின்னர் ஏற் படும் பலசோலிகளையும் . முடித்துக்கொண்டுதான் நூலை மொழி பெயர்க்க முற்படுவேன். அவ்வாறு செய்த ஒரு காலசேஷ்டந்தான் இது. ஆனல், எற்கனவே 'கீதாஞ்சலி' யைத் தமிழிற்பாட ஆரம்பித்துவிட்டேனதலால் அதையும், இதையும், வேறுபலவற்றை யும் மாறிமாறிச் செய்வதுண்டு. எனது சோம்பல் நேரங்களில் செய் யும் வேலைகள்தான் இவை. ஆனபடியால் குற்றங்குறைகளை மன் னிக்க வேண்டுகிறேன்.
இந்நூலின் பலபகுதிகளே வாசித்துத் திருத்திய பலநண்பர் கட்கும் எனது நன்றியுரித்தாகும்.
சோ. நடராஜன் ** மணிபல்லவம்’
பம்பலப்பிட்டி. 15-1-42. '
iii .

Page 5
பொருளடக்கம்
Լ185 35 ԼԸ அணிந்துரை o • முதற்பதிப்புக்கு முதனூலாசிரியரின் முகவுரை . . 1. ஆதிக்குடிகள்; புத்தசமயம் இலங்கையிற்
பரம்புதல் . . · · · · 1. இலங்கைத் தீவு (1). 2. வேடர் (3). 3. புதிய கற்கால மனிதர் (7). 4. ஆரியர் (8). 5. திராவிடர் (12). 6. புத்தசமயம் (14). 7. புத்தசமயம் இலங் கையிற் பரம்புதல் (16). 8. புத்தசமயத்தினல் இலங்கைக்குற்ற பயன் (18). 惠 2. புராதன காலம் a . . . . 23 1. இந்தியா (24). 2. பூர்வீக குடியேற்றங்கள் (29). 3. அரசியல் வரலாறு (32). 4. அரசாட்சி முறையும் அரசியற் கொள்கைகளும் (34). 5. விவசாயமும் நீர்ப்பாசனமும் (39), 6. புத்தசமயமும் மற்றச் சமயங்களும் (44). 7. இலக்கியம் (48). 8. மனைக் கலையும் சிற்பமும் (49). 9. இந்திய, கிரேக்க இலக்கி யங்களில் இலங்கையைப்பற்றிய கூற்றுக்கள் (53).
3. மத்தியகால முற்பகுதி
1. வட இந்தியா (59). 2. தென்னிந்தியா (62), 3. அரசியற் பிரிவுகள் (64). 4. அரசியல் வரலாறு (67). 5. அரசியல் முறையும் கொள்கைகளும் (74). 6. விவசாயம், நீர்ப்பாசனம், வியாபாரம் (77). 7. புத்த சமயமும் இந்து சமயமும் (80). 8. இலக் கியம் (87), 9. ஒவியமும் சிற்பமும் (91).
IV

Llds 5ub
4. பொலனறுவைக் காலம் 98
1. சோழர் (99). 2. இலங்கையிற் சோழரும், முத லாம் விசயபாகுவினல் அவர்கள் தோற்றமையும் (100). 3. விசயபாகுவும் அவனுக்குப்பின் ஆட்சி புரிந்தோரும் (104). 4. பராக்கிரமபாகுவின் இள மை (106). 5. பராக்கிரமபாகு, கயபாகுவுடனும் மாஞபரணனுடனுஞ் செய்த போர்கள் (108). .ே உருகுணை வெற்றி (111). 7. கலிங்க வமிசம் (112). 8. அரசியல் முறையும் கொள்கைகளும் (114). 9. போர்முறை (116). 10, கமத்தொழிலும் நீர்ப் பாய்ச்சலும் (119). 11. புத்த சமயமும் இந்து சமய மும் (121). 12. இலக்கியம் (125). 13. சிற்பமும் ஒவியமும் (30), 14. அயல்நாட்டுத் தொடர்பு (134).
5. தென்மேற்கில் ஆதிக்கம் 37
1. பாண்டிய விசயநகர இராச்சியங்கள் (138). 2. அரசியல் பிரிவுகள் (139). 3. தம்பதேனியா, குரு ணுக்கல் அரசர்கள், சந்திரபானுவின் படையெழுச்சி (142). 4. கம்பளை மன்னரும் தமிழரசரோடு அவர் கட்கிருந்த தொடர்பும் (145). 5. கோட்டை இராமி கம அரசர்கள் (148), 6. விவசாயமும் வர்த்தகமும் (151). 7. புத்த சமயமும் இந்து சமயமும் (153). 8. இலக்கியம் (157). 9. சிற்பக்கலை (161).
5562.--

Page 6
6.
சித்திரப் படங்கள்
சிப்பி, கருங்கல் ஆதியவற்றலான கருவிகள் மலைப்பாறையில் வேடரின் இல்லம் ஒரு கற்சமாதி சிங்கள வரிவடிவத்தின் படிப்படியான வளர்ச்சி மின்னேரியாக் குளம்
அபயகிரி தாகப
மாயாதேவி கண்ட கனவு
இராவணன்
சிங்களன் கப்பல் விட்டிறங்குதல்
சிகிரியா
குஷ்ட ராசனின் சிலை விட்டுணு விக்கிரகம்-கந்தளாய் . . கெடிகே-தாளந்தா ஆண், பெண் உருவங்கள்--அனுராதபுரம்
மானிடவுருவமும் குதிரையின் தலையும், ஈசுரமுனி .
சித்திரங்கள், சிகிரியா சசசாதகக்கதை-பொலனறுவை கிரிதாகட, பொலனறுவை
இலங்காதிலக விகாரம், பொலனறுவை
2-ம் சிவாலயம், பொலனறுவை யாப்பகு-மலைப்பாறை இலங்காதிலக விகாரம்-கம்பளை
1-ம் சிவாலயம், பொலனறுவை
கடலாதேனியா விகாரம்-கம்பளைக் கருகில்
vi
55
68
84
S6
92
94
95
锚6
24
26
128 31
4()
54
丑60
62

0.
I.
2.
தேசப் படங்கள்
புராதன, மத்தியகால இந்தியா .
புராதன இலங்கை
அநுராதபுரம் டோலமியின் தேசப்படம்
மத்தியகால இலங்கை . .
சிகிரியாவின் அமைப்பு . .
பண்டை நீர்ப்பாய்ச்சல் வெட்டாறுகள்
பராக்கிரமக்கடல்-பொலனறுவை
பொலனறுவைப் பட்டணம்
தலத்ா மாலுவை
இந்தியச் செல்வாக்குப் பரவிய கீழ்த்திசை நாடுகள் . .
இலங்காதிலக விகாரத்தினமைப்பு-கம்பளை
vii

Page 7
அணிந்துரை
மியூனிச்சு நகரவாசியும் பேராசிரியருமான, உவி, கைகர் M 豆 պւD է ரு
அவர்கள் எழுதியது)
@? தீவைப்போன்று சரித்திர விஷயங்களைச் செவியாற
லாகக் கூறும் கதைகளே இந்தியாவின் எப்பாகமும் பெற வில்லை என்பது யாவரும் நன்கறிந்த விஷயம். கி.பி. 362-ம் ஆண்டு வரைக்குமான விஷயங்களைக் கூறும் பாரம்பரியக் கதைகள் தீபவமிசம், மகாவமிசம் என்னும் இரு பெரும் பாவி புராணங் களிலடங்கியுள்ளன ; இவ்விரண்டினுள், மகாவமிசத்திலே 18-ம் நூற்றண்டு வரையிலும் நடந்த விஷயங்கள் பல்வேறு ஆசிரியர் களால் பல்வேறு சமயங்களிற் சேர்க்கப்பட்டுள்ளன. எனவே, இந் ஆால், விசயன் தலைமையிலே ஆரியர் முதன்முதலாக இலங்கையிற் குடியேறிய காலமுதலாக ஆங்கிலேயர் வரவு வரையிலுமான வரலாற்றைக் கூறுகின்றது. இவ்வரலாற்றிலுள்ள விஷயங்கள், பாளி அல்லது சிங்கள மொழியில் வரையப்பட்டுள்ள பல நூல் களில் விரிக்கப்பட்டும், சில சமயங்களில் திருத்தப்பட்டும் உள்ளன. இவற்றிலிருந்து இலேசாக உண்மையானே சரித்திர விஷயத்தை அறியக்கூடுமெனக் கருதுவது பெரும் பிழையாகும்; இவையனைத் தையும் இடைவிடாது நுணுகி ஆராய்தல் வேண்டும். ஏனெனில், இந்நூலாசிரியர்கள் அநேகமாய் ஒரு கட்சியினரா யிருந்ததோடு, ஒர் இதிகாச நூலாசிரியரிடம் அவசியம் வேண்டப்படும் இன்றி ய்மையாத விஷயங்களைப்பற்றி மவுஞ்ைசாதித்து, அற்ப விஷயங் களேப் பெரிதாகக் கருதியிருக்கின்றனர். இவ்வாறு கூறுவது 'உண்மை மறைப்போர்’ என்னும் அபவாதத்தை அவர்கள்மீது சுமத்துவதாகாது; ஏனெனில், மகாவமிசத்தின் பலபகுதிகளையும்
viii

t 1X
எழுதிய பிக்குக்கள்-இலெளகிக விஷயங்களைக்காட்டிலும் தமது சமயத்தின் உயர்ச்சியிலுந் தாழ்ச்சியிலுமே கவனஞ் செலுத்துவார் கள் என நாம் எதிர்பார்க்கக் கூடியதே. மேலும், மிகப் பண்டைக் கால சரித்திர விஷயங்கள் கட்டுக்கதைகளாகவும் புராணங்களாக வும் மறைந்து கிடக்கின்றன; அவற்றிலிருந்து உண்மையான இதி காசத்துக்குரிய விஷயம் ஏதேனு முண்டோவெனக் காண்பதும் கஷ்டமான விஷயமே. மகாவமிசத்திலே கூறப்பட்ட பிற்காலச் சம்பவங்களை ஆராயும்போது, அந்நூல் ஒரு காப்பிய மென்பதை யும் அதற்குரிய அணியலங்காரங்களைப் பெற்றுள்ளதென்பதையும், பண்டைய காப்பியங்களையே பிற்காலத்திய காப்பியங்களும் தழுவி யுள்ளன வென்பதையும் நாம் மறத்தல் கூடாது. இறுதியாக, மகாவமிசத்தைத் தவிர்த்த எனைய இதிகாச நூல்களைக் கருதும் போதும் இவற்றிலே கூறப்பட்டுள்ள விஷயங்கள் நம்பத்தக்க ஆதார நூலிலிருந்து எடுக்கப்பட்டனவோ, அன்றேல் அந்நூலாசிரியர்க ளின் கற்பனசக்தியின் பயனயேற்பட்ட வெறுங் கட்டுக்கதைகளோ வென்பதையும் நாம் மனத்திற்கொள்ள வேண்டும்.
மேலே கூறிய பல காரணங்களினலே, பேராசிரியர் திரு. ஜி. வி. மென்டிஸ் அவர்கள் எழுதிய இந்நூலுக்கு முன்னுரை வரைவதிலே, எனக்கு உண்மையாகவே பெரு மகிழ்ச்சி உண்டு. எனெனில், இந்நூலின் கையெழுத்துப் பிரதியை நான் பார்வை மிட்டபோது, இலங்கைத் தீவின் சரித்திரமானது புராதன இதிகாசக் கதைகளே நுண்ணறிவோடு ஆராயும் ஒருவரால் எழுதப்பட்ட தென் பதைக் கண்டு பெருந் திருப்தியடைந்தேன். இவ்வாசிரியர் புரா ணக் கதைகளையும் ஐயத்துக்கிடமான பல விஷயங்களைபும் நீக்கி, திட்டமாக உண்மையெனக் கூறக்கூடிய சம்பவங்களையே தம் நூலுக்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார். மேலும், சம்பவங்களை யும், பெயர்களையும், காலங்களையும், வரிசையாகக் கூறுவதோடு நில்லாது, இலங்கைவாசிகளின் மனேவிருத்தி, செல்வம், கிருஷி கம், வாணிபம், சிற்பம், இலக்கியம் என்பவற்றை ஆதிகாலந்தொட் டுத் தற்காலம் வரையிலும் விவரிக்க முயன்றுள்ளார். எனவே, இந்நூல் வாசிப்போர்க்கெல்லாம் தெவிட்டாத இன்பம் தரும்

Page 8
Χ
விஷ்யங்களைக் கூறும் ஓர் அருமையான சரித்திர நூற் களஞ்சிய மாகும் என்பது என் துணிபு. இக்காலத்தில் ஏற்பட்டுள்ள சரித்திர வாராய்ச்சியின் நிலைமையை வைத்து எண்னுமிடத்து இந்நூலிற் கூறப்படும் விஷயங்கள் நம்பத்தகுந்தவையே. சில சிறு விஷயங் களிலே எனக்கும் இந்நூலாசிரியருக்கும் கருத்து மாறுபாடிருப்பி னும், இந்நூலின் கையெழுத்துப்பிரதியைப் பெருமகிழ்ச்சியுடனும் நற்பயன் தரும் வகையிலும் படித்தேன். இந்நூலின் அருமைக் கேற்றவாறு பல்லோர் இதனை வாசித்து ஆசிரியருக்கு ஆர்வ V− மூட்டுவரென நம்புகிறேன்.
உவி, கைகர்
1932-ம் இரு), ஆகஸ்டு பt".

மூன்ரும் பதிப்புக்கு முதனூலாசிரியரின் முகவுரை
லங்கையின் பூர்வ சரித்திரத்தைக்கூறும் நூலொன்றும் இல்லை யென்னுங் குறையை நீக்கவே இப்புத்தகத்தை வெளியிடு கிறேன். கட்டுக்கதைகளெனக் கருதப்படுவனவற்றைக் கூறது, கூடினவரையில் உண்மையான விஷயங்களையே இந்நூலுக்கு ஆதாரங்களாகக் கொண்டுள்ளேன். இது இலேசான காரியமல்ல. சரித்திர நூலாராய்ச்சி செய்யும் மாணவணுெருவனுக்கு, இலங்கை யின் பூர்வசரித்திரத்தைப்பற்றிக் கூறப்படும் விஷயங்களெல்லாம், ஆராய்ச்சி செய்தற்கான விஷயங்களாகத் தோன்றுமேயொழிய, திட்டமாகக் கூறக்கூடியனவாய் இருக்கமாட்டா.
இத்தகைய நிலைமையிலே, இந்நூலில் கூறப்பட்டவை யனைத் தும் விவரமாகவேனும் திட்டமாகவேனும் உள்ளன வென்று கூற முடியாது. ஆராய்ச்சி செய்தற்கு இன்னும் பலவிஷயங்க ளுள்ளனவாகையிஞலே, சரித்திர இலட்சணங்களனைத்தும் பொ ருந்திய நூலொன்றை வரைதற்கு நெடுங்காலஞ் செல்லும். மகாவமிசம் மாத்திரம் மொழிபெயர்க்கப்பட்டும் உரை யெழுதப் பெற்றும் இருக்கின்றதே யொழிய, ஆராய்ச்சிக்கான வகையில் எனைய நூல்களை இதுவரையில் ஒருவரும் பதிப்பிக்கவில்லை. கல் வெட்டுகள் பலவற்றைச் சோதிக்கவும் அவற்றிலடங்கிய விஷயங்களைப் பிரசுரம் செய்யவும் வேண்டியிருக்கிறது; எனவே, இவற்றையும் நாம் ஆதாரமாகக் கொள்ளுதற்கில்லை. புராதனக் கட்டிடவாராய்ச் சியும், இந்தியாவைப்போல வெகு நுட்பமாகச் செய்யப்படவில்லை. அநுராதபுரத்திலும் சரித்திர சம்பந்தமான கட்டிடங்களே அகழ்ந் தெடுத்துச் செய்தற்கான வேலை பெரிது மிருக்கின்றது; இவ்வாறு ஆராய்தற்கான இடங்கள் இன்னும் பலவுள.
xi

Page 9
இந்நூலை இயற்றுதற்கு அழில் உலர் இயற்றிய நூல்கள் உதவின. அவற்றின் பிேயர்களைக் கூறின், விரியும். எனினும்
கொட்ரிங்கட் அவர்கள் இயற்றிய இலங்கைச் சரித்திரச் சுருக்கம் என்பதும், பேராசிரியர் உவல்லியம் கைகர் என்பார் அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் பதிப்பித்த சூளவமிசம் என்ப தின் ஆங்கிலமொழிபெயர்ப்பும் எனக்குப் பெரிதும் உதவிசெய்தன என்று கூறுதல் அவசியமாகும். பலவழிகளிலே எனக்கு ஒத்தாசை புரிந்த திரு. எஸ். பரணவிதான அவர்களுக்கும், முகவுரை யளித்த பேராசிரியர் கைகர் அவர்களுக்கும், இந்நூலை ஆங்கிலத்தி லிருந்து தமிழில் மொழிபெயர்த்துத விய நவாலியூர் சோ. நடராசன் அவர்களுக்கும் நன்றி என்று முரியதாகும்.
இந்நூலிற் காணப்படும் வேடர்களின் படம் செலிக்மன் இயற்றிய வேடர் என்னும் நூலிலிருந்து சுருக்கப்பட்டு, கேம்பிரிஜ் சர்வகலாசாலையாரின் அன்பார்ந்த அனுமதியுடன் இந்நூலிற் பிர சுரிக்கப்படுகின்றது. 1, 3, 5-7, 10-24 இலக்கப்படங்கள் அரசினர் புராதன கட்டடப் பாதுகாப்புப் பகுதியாரிடமிருந்து பெறப்பட்டன. தலதா மாளிகை, பொலனறுவை, என்பவற்றி னமைப்புப்படங்கள் அ. பு. க. அநுமதியுடன் நூலுக்கேற்றவாறு திருத்தப்பட்டன. சிகிரியா, பராக்கிரமக் கடல் என்பவற்றின் அ. படங்கள் இலங்கை விஞ்ஞான தீபிகை (G. பிரிவு) யிலிருந்தும், இலங்காதிலக ஆல யத்தினமைப்புப்படம் பு. க. ஆராய்ச்சி (2 ம் பாகம்) யிலிருந்தும் எடுக்கப்பட்டன.
ஜி. ஸி, மென்டிஸ்

முதலாம் அத்தியாயம்
ஆதிக்குடிகள்; புத்தசமயம் இலங்கையிற்
பரம்புதல்
1. இலங்கைத் தீவு
சயனும் அவனுடைய எழுநூறு பரிவாரங்களும் இலங்கையில்
வந்து குடியேறிய சம்பவத்தையே, இலங்கைச் சரித்திரத்தின் ஆரம்பமாகப் பலரும் கொள்ளுவார்கள். புராதன இலங்கையின் சரித்திரத்தை எழுதுதற்கு பெரிய ஆதாரமாயுள்ள மகாவமிச மென்ற நூலிற்கூட விசயன்தான் இலங்கையில் முதன்முதற் குடி யேறிய மனிதனகக் கூறப்படுகிறது. ஆனல், விசயனுக்குப் பல் லாயிர ஆண்டுகட்கு முன்னரே-அதாவது, ஆரிய மொழியைப் பேசிய இக்கூட்டத்தவர் இலங்கையில் ஆட்சி நடத்துவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே-இத்தீவில் மனிதர் குடியேறியிருந்தனர்.
இத%ன ஆராய்வதற்கு முன்னர், இலங்கையின் பூகோள அமைப்பைப்பற்றிச் சிறிது அறிந்துகொள்ளவேண்டியது அவசியம். ஏனெனில், இலங்கையின் சரித்திரத்தை அது எவ்வளவோ பாதிக் கக்கூடியதாயிருக்கிறது. ஆசியாக்கண்டப் படமொன்றைப் பார்த் தால் இலங்கை, இந்தியாவுக்கு எவ்வளவு சமீபத்திலுள்ளதென்ப தும், அதனைத் தெற்கேயும் கிழக்கேயும் மேற்கேயும் பெரிய கடற் பரப்பு எவ்வாறு பிரித்திருக்கிறதென்பதும் நன்கு புலனுகும். இதனுல் இலங்கை இந்தியாவுடன் சகல துறைகளிலும் இணைய வேண்டியதாயிற்று. இந்தியாவிலேற்பட்ட பெரிய மாற்றங்க ளெல்லாம், அரசியற்றுறையிலாயினுஞ்சரி, பொருளாதாரத் துறையிலாயினுஞ்சரி, சமயத்துறையிலாயினுஞ்சரி, அல்லது சமூ கத்துறையிலாயினுஞ்சரி, இலங்கையையும் பாதித்தன. பதினைந் தாம் நூற்றண்டினிறுதிவரை இந்தியாவிலேற்பட்ட நாகரிகப்போக்
5562-A

Page 10
2 இலங்கையின் பூர்வ சரித்திரம்
கெல்லாம் இலங்கையையும் வந்து அலைசி,இலங்கைக் குடிகளின் வாழ்க்கையையும் எண்ணப்பாங்கையும் தம்வசப்படுத்தியேவந்தன. இதனலன்றே இலங்கைக் குடிகளிற் பெரும்பாலோர் இந்திய வகுப் பைச் சேர்ந்தவராயும், சிங்கள ந் தமிழாகிய பிரதானமான மொழி களும், பெளத்தம், இந்து ஆகிய சமயங்களும் இந்தியச் சமயங்க ளாகவுமிருக்கின்றன.
இந்தியாவின் நெருங்கிய சம்பந்தத்தினல் இலங்கை பாதிக்கப் பட்டபோதிலும், இவற்றைப் பிரித்திருந்த சிறிய கடற்பரப்பு இலங் கைக்கு ஒரளவில் நன்மை பயந்தது என்றே கூறலாம். இந்தியாவில் எற்பட்ட புரட்சிகளினலும் படையெடுப்புக்களிலுைம் அதன் பழைய நாகரிகம் அடிக்கடி வாரிக் கொண்டுபோகப் பட்டது. இந்தியாவில் தோன்றிய புத்தசமயம் இந்துசமயத்தின் ஆதிக்கத்தினுல் வலிகுன்றி, முகமதிய படையெடுப்போடு மறைந்து போயிற்று. ஆல்ை, கி.மு. மூன்ருவது நூற்றண்டில் இலங்கை யிற்பரவிய தேரவாத புத்தசமயம் எத்தனையோ மாறுதல்களைக்கூட நிருவகித்து இன்றும் இலங்கையிற் பெரும்பான்மையோரால் அனுட்டிக்கப்படும் சமயமாக நிலவிவருகிறது. எனவே, இலங் கைத்தீவின் நாகரிக வாழ்க்கை அதிக மாறுதல் அடையாது ஒரே நிலையில் நிலைத்திருக்கக் கூடியதாகவுமிருந்தது.
அன்றியும், இன்னெரு வகையில் இலங்கை தனிச்சிறப்புடைய தாயிருந்தது. ஐரோப்பாவுக்கும் தூரத்துக் கீழைநாடுகளுக்கும் மத்தியில், கடல் வர்த்தக மார்க்கத்தில் இருப்பதால் கிழக்கே மிருந்தும் மேற்கேயிருந்தும் வரும் வர்த்தகர்கள் இலங்கையை இடையில் எப்படியுஞ் சந்தித்தே போகவேண்டும். ஆதியில் ஐரோப் பிய வர்த்தகம் அவ்வளவு அபிவிருத்தி அடையவில்லை. சிலுவை யுத்தங்காரணமாக மேல் நாட்டு வியாபாரம் பரவவே, இலங்கையில் விளையும் சிறந்த கறுவாவுக்கு மேல் நாடுகளில் தேவை அதிகப் பட்டது. எனவே, வியாபாரத்தில் அதிகம் முனைந்து நின்ற போர்த் துக்கீசரும், ஒல்லாந்தரும், பிரித்தானியரும் இலங்கையிற் கண் ணுேட்டம் செலுத்தினர். மேல் நாட்டு வர்த்தகத்திற்கு இலங்கை மிகமுக்கியமான நாடாயிற்று. மேலும் இந்தியாவின் மேற்குக்கரை யையும் கிழக்குக்கரையையும் மேற்பார்வை செய்வதற்கு இலங்கை இராணுவ முக்கியம் வாய்ந்த ஒரு தேசமாய்த் தோன்றியது.

ஆதிக்குடிகள் : புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 3
இக்காரணங்களைக்கொண்டே ஆங்கிலேயர் இலங்கையைப் பிடித்தார் கள். கடலில் ஆதிக்க்ம்பெற்ற இந்த வல்லரசுகள் இலங்கை ஒரு சிறிய தீவாயிருந்ததினுல் அதை இலகுவிற் கைப்பற்றியதுமன்றி, இந்திய ஆதிக்கத்திலிருந்து அதைத் துண்டித்துத் தமது நாகரிகத் தைச்செவ்வனே பரப்பியும் வந்தன. போர்த்துக்கீசர் இவ்வாறு உரோமன் கத்தோலிக்க சமயத்தை நாடெங்கும் பரவச்செய்தனர். ஒல்லாந்தர் தமது சட்டமுறைகளை இலங்கையில் தாபித்தார்கள்.
அன்றியும், பரதகண்டத்தின் தென்கோடியில் ஒரு சிறிய நீரிணையினல் பிரிக்கப்பட்டிருப்பதனலும் இலங்கையின் சரித்திரம் இந்திய சரித்திரத்திலிருந்து மாறுபடவேண்டியதாயிற்று. இந்தியா விலிருந்து ஆதிகாலந்தொட்டே வெகுசுலபமாகச் சனங்கள் இலங் கைக்கு வந்து குடியேறி இந்நாட்டின் குடிசனத்தொகையைப் பெரு க்கினர்கள். இடவசதி இல்லாததால் பிந்தி வந்தவர்கள் முந்திக் குடியேறியவர்களை வேறு இடங்களுக்குக் கலைப்பதற்கு முடியாமற் போய்விட்டது. பழங்குடிகள் புதுக்குடிகளுடன் கலந்துகொண்டார் கள். சில சமயங்களில் அவர்கள் மலைநாடுகட்கு ஒடி ஒளித்துக் கொண்டதுமுண்டு. இதனல் இலங்கையிற் பலவகையான சாதி களும் காணப்படுகின்றன. இந்தியாவின் அநேக பாகங்களில் இலங் கையிலிருப்பதுபோன்ற சாதிபேதம் கிடையாது. பலவிதமான சாதி மக்களும் இலங்கையிலிருக்கிருர்கள்.
2. வேடர்
@ಞ! ஆதிக்குடிகளைப்பற்றிய சாசனங்களொன்றுமில்லை யாதலால், அவர்கள் எப்பொழுது எங்கிருந்து எவ்வாறு வந் தார்களென்பதை அறுதியிட்டுக் கூறிவிட முடியாது. அவர்க ளுடைய வாழ்க்கையைப்பற்றியும் நாகரிகத்தைப்பற்றியும் சரியான வரலாற்றை அறிந்துகொள்வதும் கஷ்டமே.
ஆதி மனிதர் உபயோகித்த சில ஆயுதங்களும், ஒரு கல்லறை யும், சில பலிபீடங்களும், இரண்டு குகைகளிற் செதுக்கப்பட்ட சிற் பங்களுமே, இந்த ஆதிக்குடிகளைப்பற்றி நாமறிவதற்கு எதுவாய் எஞ்சியுள்ள சான்றுகள். இவற்றை வைத்துக்கொண்டே நம் தீவின் ஆதிக்குடிகளின் வரலாற்றை அனுமானித் தறியவேண்டி யிருக்கிறது. י . . . "

Page 11
4 இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஆயுதங்களா யமைந்துள்ள சிப்பிகளும் கருங்கற்களும் சிக்கி முக்கிக் கற்களும் பழைய கற்காலத்தைச் சேர்ந்தவை. இந்த ஆயுதங்களே முதலில் யார் உபயோகித்தனர் என்பது தெரியவில்லை. ஆனல், இவை வேடர் வசித்துவந்த குகைகளுக்குச் சமீபத்திற் கண்டெடுக்கப்பட்டபடியால் வேடரே இவற்றை உபயோகித் திருக்கலா மென யூகிக்க இடமுண்டு. இரும்பு ஆயுதங்களின் உபயோகத்தை இவர்கள் ஆரியரிடமிருந்து கற்றர்கள்.
ஆதி மனிதரின் வரலாறுகளை ஆராய்ச்சி செய்யும் ஆசிரியர்கள் வேடரின் வாழ்க்கை முறை, நாகரிகம் முதலியவற்றைப்பற்றியும் கூறியிருக்கிறர்கள். இவைகளின் உதவியால் சரித்திரத்துக்கெட்
சிப்பி, கருங்கல், சிக்கிமுக்கிக்கற்கள்-என்பனவற்முலான கருவிகள்
سمبر
டாத மிகப்பழைய காலத்தில் இவ்வேடர் எவ்வாறு வாழ்க்கை நடத்தினர், எங்கே புலம்பெயர்ந்து சென்ருர்கள் என்ற விபரங் களைப்பற்றிச் சிறிது அறியக்கூடியதாயிருக்கிறது.
வேடர் வேட்டுவத் தொழில்புரியும் ஒரு சாதியார். இவர்கள் குறுகிய தோற்றமும், அலைபோலச் சுருளும் மயிருள்ள நீண்ட தலை யும், ஒரளவுக்கு நீண்ட முகமும், நடுத்தரமாக அகன்ற மூக்கு முடையவர்கள். திராவிடரின் வருகைக்குமுன் தென்னிந்தியக் காடுகளில் வசித்துவந்த இருளர், குறும்பர் என்ற வேட்டுவச் சாதி யையே இவர்களுஞ் சேர்ந்தவர்கள். செலிபீஸ் தீவுகளிலுள்ள
 

ஆதிக்குடிகள்: புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 5
தோலர்க்கும், சுமாத்திராவில் காணப்படும் படீன் சாதியினருக் கும், ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகட்கும் இவ்வேடருக்குமிடையில் சாதியொற்றுமையுண்டென ஆராய்ச்சியாளர் கூறுவர்.
இச்சாதியினர் ஆதியில் எங்கே தோன்றிஞர்கள் ! இந்தியாவி லிருந்து ஆஸ்திரேலியாவுக்கு எவ்வாறு பரவினர்கள் என்ற விஷ யங்கள் இன்னும் மர்மமாகவேயிருக்கின்றன. கடலாற் பிரிக்கப் படாது இந்தியாவும் இலங்கையும் ஒரே நிலப்பரப்பாயிருந்த காலத் தில், தென்னிந்தியாவிலிருந்து காட்டுமிருகங்கள் இலங்கைக்கு எவ்
வேடரின் இல்லம்-மலப்பாறையில் வசதியான ஓரிடம்
வாறு குடியேறினவோ அதுபோலவே வேடரும் அங்கிருந்து இத் தேசத்திற்கு வந்திருக்கவேண்டும்.
வேடர் இலங்கைக்கு வந்தபொழுது அவர்களுடைய வாழ்க்கை முறை ஆதிமனிதரின் வாழ்க்கைமுறையைப் போலவே யிருந்தது. இப்பொழுது எஞ்சி இருக்கும் வேட்டுவச் சாதியாரின் வாழ்க்கைகூட அவ்வாறே அமைந்திருப்பதைக் காண்கிருேமல்லவா? அம்பு வில் லின் துணைகொண்டு இவ்வேடர் மிருகங்களை வேட்டையாடி உண்டு

Page 12
6 இலங்கையின் பூர்வ சரித்திரம்
வாழ்ந்தனர். வேட்டையே இவர்களின் பிரதான தொழிலாயிருந் தது. மாரிகாலங்களிலே குகைகளிலும், கோடையில் மிருகங்கள் தாகந்தீர்க்கவரும் ஆற்றங்கரைகளிலும் வசிப்பார்கள். மயிரின, லாவது பருத்தியினலாவது நெய்த ஆடைகளை அறியாராய் மரவுரியும் இலைகுழையும் அணிந்து வந்தனர். குடும்பவாழ்க்கையை இவர்கள் பெரிதும் விரும்பினர். ஒரு குடும்பத்தில் ஒருவர் செய்யும் கரு மங்கட்கு மற்றையோரெல்லாரும் பொறுப்புடையவர்களா மிருந்த னர். குடும்பத்தைப் பரிபாலிப்பதற்காகத் தனிப்பட்ட உரிமைகளைக் கூட அவர்கள் தியாகஞ்செய்யும் இயல்பையுடையவர்களா யிருந் தார்கள். வேட்டையாடுவதற்காகவும், சத்துருக்களை எதிர்ப்பதற் காகவும் இவர்கள் ஒவ்வொரு குழுவாகக்கூடுவதுமுண்டு. வேடர் கள் ஒருவகையான இயற்கைவழிபாட்டையே தமது சமயமாகக் கொண்டார்கள். மறுபிறப்பு உண்டென்று அவர்கள் நம்பினர்கள். துன்பமும் நோயும் உற்றகாலத்தில், பிதிரர்க்குப் பலியிட்டுத் தென் புலத்தார் வழிபாட்ட்ை நடத்துவார்கள்.
வேட்டையாடி உயிர்வாழ்வது கஷ்டசாத்தியமானதே. உணவு எப்பொழுதும் கிடைக்குமென நம்பியிருக்க முடியாது. மேலும் உயிருக்கே ஆபத்து வந்துவிடுமோ என்று சதா பயந்துகொண் டிருக்கவேண்டும். அன்றியும், மிருகங்களின் நடமாட்டத்தைக் கவ னித்து இடம்மாறித் திரியவேண்டும். உடலுக்கு உணவு தேடுவதி லேயே அதிகநேரத்தைக் கழிக்கவேண்டியதால் வாழ்க்கையில் வேறெவ்விதமான வினேதத்திற்கும் அவகாசமே கிடையாது.
இலங்கையில் வேடரின் குடியேற்றம் ஒரு சரித்திர நிகழ்ச்சி யென்றளவில் கவனிக்கப்படுதற் குரியதேயல்லாமல் அவர்களது வருகையால் இலங்கையின் நாகரிகம் எவ்விதத்திலும் பாதிக்கப் பட்டதில்லை. சிங்கள சாதியை உருப்படுத்துவதில் அவர்கள் ஒரள வுக்கு உதவிசெய்தார்கள் என்பதுண்மையே. வேடர் வரலாற்றைத் துறைபோக ஆராய்ந்த பேராசிரியர் சலிக்மன் என்பார், மலை நாட்டுச்சிங்களரில் வேடர் கலப்பு அதிகமெனக் கூறுவர். வேடர் விவசாயத்தை மேற்கொண்டு, சிங்கள பாஷையைப் பயின்று, சிங் கள ரோடு வாழ்ந்து வரவே இக் கலப்பு ஏற்பட்டிருக்கலாம். கண்டிவாசிகளிடையேயுள்ள பண்டாரவழக்கம், அதாவது, இறந்து போன தலைவர்கட்கும் பெரியோர்கட்கும் பலியிட்டு வழிபாடியற்றும்

ஆதிக்குடிகள்: புத்தசமயம் இலங்ை கயிற் ւմն ւՈւվ:560 7 முறை, வேடர் கைக்கொண்டுவந்த தென்புலத்தாரை ஓம்பும் வழக்கமேயென பேராசிரியர் செலிக்மன் கூறுகிறர்.*
3. புதிய கற்கால மனிதர்
மேலே கூறப்பட்ட கல்லறையும் கற்சமாதியும் புதிய கற்காலத் தைச்சேர்ந்தவை. இந்தக் கற்சமாதியை இரம்புக்கனைக்குச் சமீபத்திலுள்ள படியகம்பளை என்ற இடத்திற் காணலாம். கல்
ஒரு கற்சமாதி
*மகாவம்சத்தில் விசய்னது கதை கூறுமிடத்து சிவஞெளி பாதத்துக் குச் சமீபத்தில் புலிக்கர் என்முெரு சாதியார் இருந்ததாகக் கூறப்படுவது வேடரைக் குறிச்கிறதெனக்கூறலாம். இந்தியாவிலுள்ள குறிஞ்சி நிலங்களில் புலிக்தர் என்ற ஈன சாதியினர் வசித்தார்கள் என்று சமஸ்கிருத நூல்கள் கூறும். வேட்டுவத் தொழில்புரியும் சபரர் என்ற இன்னுெரு ம%லச்சாதியினரைப்பற்றி யுங் கூறப்படுகிறது. இரத்தினபுரிக்குச் சமீபத்தில் ஹபரகம என்முெரு கிராமம் உண்டு. இது சிவஞெளிபாத மலைப்பிரதேசத்திலுள்ளது. போர்த் துக்கீசர் காலத்தில் இந்தக் கிராமத்தின் பெயரால் சபரகமுவா என்முெரு மாகாணம் எற்படுத்தப்பட்டது. சபரர் வாழ்ந்து வந்த கிராமமாதலின் 字L#Jé LD எனப்பெயராயிற்றுப்போலும் (சிங்கள பாஷையில் ச, ஹ என்ற எழுத்துக்கள் ஒன்றற்குப் பதிலாக மற்முென்றை ஒரு கால் ஏற்கும்). ஆதியில் வேடர் தங்கள எப்பெயர்கொண்டழைத்தார்களோ தெரியவில்லை.

Page 13
8 Հ. இலங்கையின் பூர்வ சரித்திரம்
லறைகளை மட்டக்களப்புப் பகுதியிலும், வடமத்திய மாகாணத்தி லுள்ள நூவரகம்பலாத என்ற இடத்திலும் காணலாம். இத் 256D35 ULI சின்னங்கள் தென்னிந்தியாவிலுங் கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. ஆளுல்ை, இவற்றை நிருமாணித்தவர் யாரெனத் தெரிய வில்லை. மகாவமிசம், சிங்களர், தராச்சர், இலம்பகர்ணர், பலி பேரசகர், மோரியர், கலிங்கர் என்ற பல்வேறு குழுவினரைப்பற்றிக் கூறுகிறது. இப்பெயர்கள் முறையே சிங்கம், கடுவாய், முயல் அல்லது ஆடு, காகம், மயில், ஊர்க்குருவி ஆகியவற்றைக் குறிக்கும், இலங்கையில் புராதன காலத்திருந்த பல்வேறு குழுவினரும், தாம் தாம் வணங்கிய விலங்கு பறவை ஆகியவற்றின் பெயரையே தமக்கும் இட்டுக்கொண்டார்களெனக் கூறவேண்டியதாயிருக்கிறது. வடமேற்கு இந்தியாவிற் குடியேறிய ஆரியரின் பழங்காலப் பாட்டு களாகிய இருக்குவேதத்தில் இவ்வாறன புள், மா முதலியனபற்றி யெழுந்த பெயருடைய குழுவினரிருந்ததாகக் கூறப்படாமையின் மகாவமிசம் கூறும் குழுவினர் ஆரியரல்லரெனப் பெறப்படுகிறது. கிறிஸ்தவ ஆண்டின் ஆரம்பத்தில் தென்னிந்தியாவில் மோரியர் என்றெரு குழுவினர் இருந்ததாகத் தெரிகிறது. பன்னிரண் டாவது நூற்றண்டிலே இலம்பகர்ணர் என்ற குழுவினர் தென் னிந்தியாவிலிருந்ததாக மகாவமிசம் கூறும். திராவிடர் இந்தியா வில் தோன்றுதற்கு முன்னல் இலங்கையிலிருந்த குழுவினர் போன்ற இலாஞ்சனைச்சாதியினரே அங்கேயும் இருந்திருப்பார்கள் போலும். ஆனல், இக்குழுவினர் புதியீ கற்கால மனிதர்தா னெனத் திட்டமாய்க் கூறுவதற்கு இன்னும் சான்றுகள் வேண்டும்.
4. ஆரியர்
முற்கூறிய சாதியாருக்குப் பின்னர் ஆரியர் இத்தீவுக்கு வந்தார்
கள். ஆரியர் என்ற பெயர், பாரசீகத்திலும், இந்தியா விலும் குடியேறிய இந்து-ஐரோப்பிய இனத்தைச் சேர்ந்தவர்களைக் குறிக்கும். இந்து-ஐரோப்பியர் என்றதும் ஒரு சாதியாரென்று எண்ணக்கூடாது. இது மொழிபற்றி எழுந்த ஒரு பாகுபாடு. ஒரு மூல பாஷையிலிருந்து உற்பத்தியான கிளைப்பாஷைகளைப் பேசும் பல சாதியாரையும் ஒன்றகக் குறிக்கும் ஒரு பெயர் இது. இந்து

ஆதிக்குடிகள்: புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 9
ஐரோப்பிய மொழிகளுள் மிகப்பழையது சமஸ்கிருதம். பாரவலிகம், கிரேக்கம், லத்தீனம், கெல்தியம், கோதியம் என்பனவும் சில. இவைக்கெல்லாம் மூலபாஷை எங்கே தோன்றியது என்பதைத் திட்டமாகக் கூறமுடியவில்லை. மத்திய ஆசியாதான் இவற்றின் கருவூலம் என்பர் சிலர். சிலர் தெற்கு ருஷ்யா என்பர். வேறு சிலர் வடக்கு ஜெர்மனியென்றும், ஹங்கேரியென்றும் பலவாகக் கூறுவா,
ஆரியர் எங்கே முதன்முதற் றேன்றினலும், கி.மு. 1,000-க்கு வெகுகாலத்துக்குமுன்னரே இந்தியாவுட் பிரவேசித்திருக்க வேண் டும். இவ்வாறு பிரவேசித்தவர்கள் சிந்துநதிப் பள்ளத்தாக்கிற் குடியேறினர்கள். இங்கே இவர்கள் வாழ்ந்த முறையைப் பற்றி யும், இவரது பழக்க வழக்கங்களைப் பற்றியும் இருக்குவேதம் கூறு கிறது. பெரும்பாலும் இவர்கள் முல்லைநில வாழ்க்கையையே மேற்கொண்டிருந்தார்கள். எனினும், கமத்தொழின் முறைக ளையும் அறிந்தேயிருந்தனர். இவர்கள் ஒவ்வொரு குழுவினராகப் பிரிந்து, அரசனின் தலைமையில் அவனது பரிபாலனத்தின்கீழ் வாழ்ந்தார்கள். அரசனே சேனைத்தலேவனுகவுமிருந்தான். அரச ரும் தாம் நினைத் தபடி ஒரு கருமமுஞ் செய்யவில்லை. பல்வேறு குழுவின் பிரதிநிதிகளும் வந்துகூடித் தமது முக்கியமான விடயங் களைப் பற்றி ஆலோசனைசெய்யும் ஒரு கூட்டம் இருந்தது. இதற்குச் சபை அல்லது சமிகி என்று பெயர். இச்சபையின் ஆலோசனைப் படியே அரசன் கருமங்களைச் செய்யவேண்டும். புரோகிதர், கிரா மணி என்ற பெயருடன் சில ஊர்த்தலைவர்களிருந்தார்கள். இவர் களும் அரசனுக்கு யோசனை கூறுவார்கள். புரோகிதர் வீட்டுக் கருமாதிகளை நிறைவேற்றும் அந்தணர். கிராமணி என்பவ்ல் T1 மத்தலைவனகவோ அல்லது சேனையில் ஒரு சிறு அதிபதியாகவோ இருப்பான்.
வடமேற்கிலிருந்த ஆரியர் கிழக்கேயும், தெற்கேயுமாக ஆற் றங்கரையோரமாய்ப் பரவி நாளடைவில் விந்தியமலை வரை பரம்பி விட்டார்கள். இவ்வாறு பரவியதால் இவர்கள் வேறுசாதியாருடன் கலக்க வேண்டியதாயிற்று. ஆரியரல்லாத வேறுபல சாதியினரும் ஆரியருடைய பாஷையை மேற்கொண்டார்கள்.

Page 14
() இலங்கையின் பூர்வ சரித்திரம்
இலங்கைக்கு வந்த ஆரியர் வடஇந்தியாவிலிருந்து வந்தவர்க ளென்பதிற் சந்தேகமில்லை. ஆனல், வடஇந்தியாவில் எந்தப் பகுதியிலிருந்து வந்தார்களென்பது ஐயத்துக்கிடமாயிருக்கிறது. இவ்வையத்தை நீக்குவதற்கு ஒருவழி பழையசிங்ளமொழி புராதன இந்தியபாஷை எதனேடு அதிக ஒற்றுமை பூண்டிருக்கிறதென்பதை நிச்சயப்படுத்துவதே. ஆனல், இத்துறையில் போதிய ஆராய்ச்சி இன்னும் நடைபெறவில்லை. ஆரியரிற் சிலர் கி.மு. 500 அளவில் இந்தியாவின் கீழ்க்கரையிலும் மேற்கரையிலுமிருந்து கிளம்பி, கரை யோரமாய் வியாபாரம் நடத்திவந்த மரக்கலங்களில் ஏறி இலங் கைக்கு வந்திருக்கவேண்டும். வந்தவர்கள் நிலத்தின் வளத்தை பும், வாய்ப்பான காலநிலையையும், கரையிலிருந்து நானபக்கங்க ளிலும் விரிந்து பரந்துகிடந்த பசும்புற்றரைகளையும், சிறியகலங்கள் சேமமாய் நிற்றற்கு எற்ற கடற்றுறைகளையும், வள்ளங்களைச் சகமாக இட்டுச் செல்லக்கூடிய உள்ளூர்செல்லும் பல ஆறுகளையும் கண்டார் கள். இக்காலச் சிங்களமொழிக்கு மூலபாஷையாயுள்ள ஒர் ஆரிய பாகத சாசனத்தில் ஆரியர் இலங்கையிற் குடியேறியதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இச்சாசனம் கிறிஸ்தாப்தத்திற்கு முற்பட்டது. ஆரியர் இலங்கைத்தீவின் வடபகுதியிலும், தென் கிழக்குப்பகுதியிலும் கிழக்குப்பகுதியிலும் கிறிஸ்தஆண்டு துவங்குவ தற்குமுன் குடியேறினர்கள் என இச்சான்றுகள் பகரும். மேற்குப் பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் அதிகம்பேர் குடியேற வில்லை. களனிப்பகுதியிற் சிலர் வசித்தார்கள். களனி ஆற்றேர
மாகச் சிலர் உள்நாட்டிலும் பரவிவந்தனர்."
ஆரிய வகுப்பைச்சேர்ந்த ஒரு பிராகிருதமொழியைப் பேசினர் கள் என்ற ஒரு சான்றைக்கொண்டே இவர்கள் ஆரியர் என்று கூற இடமுண்டேயல்லாமல் இவர்களுடைய சாதியைத் திட்டமாகக் கூறி விடுவதற்கு வேறெவ்வகையான ஆதாரமுமில்லை. அன்றியும், இவர்கள் ஆரிய இனத்தைச்சேர்ந்த பிராகிருத மொழியைப் பேசும் ஆரியரல்லாத சாதியாரென்று கூறுவதற்கும் ஆதாரம்
*மகாவமிசத்தில் விசயனும் அவனது பரிவாரங்களும் வக்திறங்கும் சம்பவமே ஆரியர் இலங்கை வரும் சம்பவமாகக் குறிக்கப்படுகிறது. ஆனல், விசயன் கதை, ஆரியர் இலங்கைக்குவந்து பல ஆண்டுகட்குப்பின் நிசழ்ந்த சம்பவமாகும். அசைக்கொண்டெதையும் அனுமானிக் சமுடியாது.

ஆதிக்குடிகள் : புத்த மயம் இலங்கையிற் பரம்புதல்
கிடையாது. அற்றன்று, இவர்கள் ஆரியப்பாகதம் பேசும் அனரிய இனத்தவர்தானெனில், முற்கூறிய விலங்கு, பறவை ஆகியவற்றைத் தமது குலப்பெயராகக்கொண்ட இலாஞ்சனைச்சாதியாரையே சேர்ந்த வர்களென்று கூறவேண்டும். அற்றேல், சிங்கள சாதியினரே இவர்களுள் மற்றையோரைவிட ஆதிக்கமுடையவராயிருந்து தமது" பெயரையே நாளடைவில் மற்றச்சாதியாருக்கும் அச்சாதியார் பேசிய பாஷைக்கும் வழங்கி ஈற்றில் இத்தீவையும் தம் சாதிப்பெயரா லேயே அழைக்கலாயினர் எனல் வேண்டும்.
அக்காலத்தில் இவ்ஆரியர் விவசாயத்தையே தமது தொழி லாகக்கொண்டு, புலம்பெயராது தமது வயல்களைச் செய்கைபண்ணிக் கொண்டு அங்கேயே வீடமைத்து நிலைபேருனவாழ்வு நடத்தி வந்த னர். வேடர், இடையர்போல உணவுக்கு நிச்சயமற்ற நிலையிலில் லாமல், உழவினல் தமக்குத்தேவையான உணவுப்பொருளே நிச்சய மாகப் பெறக்கூடிய நிலைமையிலிருந்தார்கள். வருஷம் முழுவ தும் விவசாயஞ் செய்யவேண்டிய தொல்லையில்லாததால் அவர்கள், மனேவிலாசத்துக்கும் ஆன்மவிசாரத்துக்குமான பலதுறைகளில் ஈடுபட்டுச் சமூகவாழ்வு நடத்தக்கூடியதாயுமிருந்தது.:
*இங்கிலாந்து என்ற தேசப்பெயரும், ஆங்கிலேயர், ஆங்கிலம் என்ற சாதி, பாஷை ஆயினவும் இவ்வாறே உண்டாயின. ஆங்கிலர் என்ற ஆதிக்குடி கள் தமது பெயரையே தேசத்துக்கும் பாஷை க்கும் மற்றைய சிறிய சாதி யினர்க்கும் வழங்கினர். w
ர்சிலோன் என்றது இத்தீவுக்குச் சமீபத்தில் வழங்கப்பட்ட பெயர். இப்பெயரும் அராபியர் இத்தீவிற்கு வழங் ஈய “செரண் டீப்” என்ற பெயரும், சிங்களர் தீவு என்று பொருள்படும் பழைய பெயராகிய " சிங்களதீய’ என் பதன் திரிபாகும். இந்தியர் இத்தீவினை “தாமிரபர்ணி’ என்றழைத்தனர். * லங்சா’ என் முல் தீவு என்று பொருள்.
*ஆரியர் இலங்கையிலிருந்த பூர்வக்குடிகளோடு சண்டையிட்டனர் என்று எங்கும் கூறப்படவில்லை. அக்காலத்துப் புத்த நூல்களிற் கூறப்பட்ட இயக்கர், நாகர் என்போர் மனிதர் இனத்தைச் சேர்ந்தவர் சளல்லர். பறவை விலங்கு ஆகியவற்றின் பெயராற் றமது இனத்தைக் குறிப்பிட்டுவந்த வகுப் பைச் சேர்ந்தவர்களே அக்காலத்து ஆரியர் எனில் அவர்களோடு எதிர்க்கக் கூடியவர்கள் வேடரே. ஆஞல், கல்லாயுதங்களையே நம்பியிருந்த வேடர் இரும்பு ஆயுதங்களை உபயோகிக்கச் துவங்கிய ஆரியரோடு எதிர்கின்று சண்டை போட்டிருக்க மாட்டார்கள். வேடர் கற்காலத்தை விட்டு செப்புக் காலம், வெண்கலக்காலம ஆகியவற்றை அடைந்திருந்ததாகச் சான்றுகளில்லை.

Page 15
12 இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஆரியர் வருகையுடன் இலங்கைச் சரித்திரத்தில் ஒரு புதிய
சகாப்தம் உதயமாகிறது. நேரத்தோடு இலங்கைக்குவந்த இந்த ஆரியசமூதாதையரைப்போல இலங்கையின் நாகரிகத்துக்கு ஆக்கந் தேடியவர் வேறெவருமில்லை. இவர்கள் கொண்டுவந்த சிங்கள மொழியே இன்று இலங்கையின் பெரும்பாலானேர் பேசும் பாஷையாயிருக்கிறது. இரும்பு உலோகத்தை இவர்கள் இலங் கைக்குக் கொண்டுவந்தனர். அந்த உலோகம் பெருவாரியாக உப யோகத்துக்கு வந்துவிட்டது. கமத்தொழிலை இவர்கள் இங்கே முதன்முதற் புகுத்தியதால் இன்று இலங்கையின் பிரதானமான தொழிலாக அது விளங்குகிறது. அரிசி உணவே இலங்கையின் உணவாயும் அமைந்துவிட்டது. கன்சபா என்ற பஞ்சாயத்துமுறை யே. இன்றும் கிராம ஆட்சிக்கு ஏற்றதாயிருந்து வருகிறது. ஆரியர் வகுத்த அரசியல் முறைதான், பிரித்தானிய ஆட்சி இத்தீவில் எற் படும் வரை, நிலவிவந்தது.
5. திராவிடர்
ஓங்களச் சாதிக்கு ஆக்கம்கொடுத்த இன்னெரு சாதியினர் திரா
விடர். இவர்கள் இத்தீவில் எப்பொழுது குடியேறினர்கள் என்பதைப்பற்றி அறிவதற்குரிய சான்றுகள் கிடையா. சில காலங் களில் இலங்கையைக் கைப்பற்றும் நோக்கமாகவும் சில காலங் களில் சமாதானக் குடிகளாகவும் திராவிடர் இலங்கைக்கு மிகப் பழைய காலந்தொட்டே வந்துகொண்டிருந்தார்கள். இவ்வாறு வந்தவர்களுட் பெரும்பாலோர் சிங்களருடன் கலந்து அவர்களது பாஷையையே கைக்கொண்டு சிங்களாானர்கள். கரைப் பிரதேசங் களிற் சிங்கள மொழியைப் பேசுந்திராவிடரை இன்றுங் காணலாம்.
திராவிடர் இந்தியாவுள் நுழைந்தபொழுது அங்கே இருந்த பூர்வ குடிகளோடு ஆரியர் எவ்வாறு கலந்தார்களோ அவ்வாறே இவர்களும் கலந்தனர். அதனல் புராதன சாதியினர் பலர் திராவிட பாஷையை மேற்கொண்டார்கள். ஆரியர் என்ற சொல்லுத் தனிப் பட்ட ஒரு சாதியாரைக் குறியாமல் ஆரியமொழி பேசும் எல்லா மக்களை யும் குறிப்பதுபோல திராவிடர் என்ற பதமும் தமிழ், மலையாளம் கன்னடம், தெலுங்கு ஆகிய திராவிட பாஷைகளைப்பேசும் மக்கட் கூட்டத்தினரைக் குறிப்பிடும் ஒரு பெயர் எனவே கூறலாம்.

ஆதிக்குடிகள் : புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 3
ஆரியர் இந்தியாவுள் நுழைந்த காலத்தில் திராவிடர் தென் னிந்தியாவிலும் வடக்கே பெரும் பகுதியிலும் பரவியிருந்தார்கள். ஆனல், இவர்கள் எங்கிருந்து இந்தியாவுட் பிரவேசித்தார்கள் என்பதை அறிந்துகொள்வதற்குப் போதிய சான்றுகளில்ல்ை. வட இந்தியாவிலுள்ள பலுசிஸ்தானத்தில் பிராஹ9மி என்றெரு பாஷை பேசப்படுகிறது. இது திராவிடச் சார்புடையது. இந்த ஆதாரத்தைக்கொண்டு, ஆரியரைப்போலத் திராவிடரும் வடமேற் குக் கணவாய் மூலமே இந்தியாவுள் வந்திருக்கவேண்டுமென்று சிலர் கூறுகிறர்கள். இந்தக் கனவாய் வழியாக இந்தியாவி லிருந்து வேறெச்சாதியாராவது வெளியே சென்றதில்லையாதலின் இக்கொள்கை மேலும் வலியடைகின்றது.
கிறிஸ்தாப்தத்தின் ஆரம்பகாலந்தொட்டுச் சில நூற்றண்டு களாகத் திராவிடர் சிங்கள சாதியின் ஆக்கத்துக்குத் துணைபுரிந்தே வந்திருக்கிருர்கள். இதனை வலியுறுத்தற்குப்போதிய சான்றுக ளுண்டு. ஆனல், இலங்கை நாகரிகத்துக்கு உறுதுணைபுரியக்கூடிய வகையில் அக்காலத்திராவிடர் முயன்றதாகத் தெரியவில்லை. பல் லவர் இலங்கைமீது படையெடுத்த ஆறம் எழாம் நூற்றண்டுகளிற் ருன் திராவிடரின் கலாசாரம் இலங்கையிற் பரவிற்று, சோழர் இலங்கைமீது படையெடுத்து வெற்றிகொண்டு அரசு நடத்திய காலத்திலும் பின்னர் பாண்டியராட்சிக் காலத்திலுந்தான் திரா விடராதிக்கம் உச்சநிலையை அட்ைந்தது. பதின்மூன்றம் நூற் ருண்டினரம்பத்தில் திராவிடர் வட இலங்கையில் ஒரு இராச்சியம்
கண்டு தனியரசு நடத்தினர்கள். பதினன்காவது நூற்றண்டில்
தென்னிலங்கையிலுள்ள இராசாக்களிடம் திறையும் வாங்கினர்கள். இந்து சமயத்தின் மூலமாகத் தமது நாகரிகத்தைப் பரப்பினர்கள். அதனல் பதினேராம் நூற்றண்டிலே அச்சமயம் இந்நாட்டில் உறுதியாகவேரூன்றிப்புத்தசமயத்தைக்கூடப் பெரிதும் பாதித்தது.
சிங்களரில் தமிழ்க்கலப்பு எவ்வளவெனக் கூறிக்கொள்வது
கஷ்டமானுலும், அது அதிகம் என்பதில் ஐயமில்லை. சிங்கள
*இருக்குவேதத்திற் காணப்படும் த வர்க்க எழுத்துக்கள் திராவிட மொழிக்கே சொக்தமானவை. பாரசீகம் முதலிய ஏனைய இந்து-ஐரோப்பிய பாஷைகளில் இவ்வெழுத்துக்கள் இல்லை. எனவே, ஆரியர் இவ்வக்க ரங்களே வட இந்தியாவிற் குடியேறியிருந்த திராவிடரிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும்.

Page 16
14 இலங்கையின் பூர்வ சரித்திரம்
மொழியின் அமைப்பும் தமிழ்ச்சொற்கள் அதிகம் அதில் விரவி மிருத்தலும் தமிழ்க்கலப்புக்குச் சான்றகும். அன்றியும், சிங்கள ருடைய சாதிப்பாகுபாடு தென்னிந்திய சாதிப்பாகுபாட்டுடன் பெரும் பாலும் ஒற்றுமைப்பட்டிருத்தலும் இந்த உண்மையையே வற் புறுத்துகின்றது.
6. புத்தசமயம்
9. வந்த ஆரியரின் சமயம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்குப்போதிய சான்றுகளில்லை. கி மு. முதலாம் நூற்றண்டளவில் புத்தசமயம் இவர்கள் குடியேறிய பகுதிகளி லெல்லாம் பரவியிருந்ததென்பதற்குப் போதிய சான்றுகளுண்டு.*
புத்தசமயம் தோன்றுவதற்குமுன் பலநூற்றண்டுகளாக இந் தியாவில் சமயவாழ்க்கை அபிவிருத்தியடைந்து வந்தது. வட மேற்கு இந்தியாவிற் குடியேறிய ஆரியர் கிரியாபூர்வமான ஒரு சமயத்தை அனுஷ்டித்துவந்தார்கள். இயற்கைத்தோற்றங்களான சூரியன், வச்சிரன் (இடி) ஆகியவற்றையே தெய்வமென அவர்கள் வழிபட்டு வந்தனர். உயிருள்ள பொருட்கள்தான் அசைந்தும் தொழில் புரிந்தும் வருமென்ற அனுபவத்தைக்கொண்டு, இந்த இயற்கைத் தோற்றங்கள் இயங்கும் உயிருள்ள வஸ்துக்களென் றும் ஆதலால் மனிதருடைய வாழ்க்கையை இவை பாதிக்கும் இயல் புடையன என்றும் எண்ணினர்கள். அவர்கள் பாடிய இருக்குகளில் சூரியனை விட்டுணுவென்றும் இடிமுழக்கத்தை இந்திரன் என்றும் கூறிஞர்கள். இக்கடவுளர் மனிதரைப்போலவே உடையணிந்து, ஆயுதம்பூண்டு, தேரூர்ந்து வருவார்களெனக் கற்பனைசெய்தார்கள். மக்களுக்கு வரும் நன்மை தீமைகளெல்லாம் இக்கடவுளர் அனுக் கிரகமேயென்று கருதி, நன்மைவந்தெய்தவும், தீமைபோயகலவும் அவர்களைப் பிரீதிப்படுத்த பலியும் பரவலுஞ் செய்தார்கள்.
*இலங்கை க்கு வந்த ஆரியர் பிராமண சமயத்தை அனுஷ்டித்தார்க ளெனச் சிலர் கூறுகிமுர்கள். ஆஞல், இதற்கு ஆதாரமில்லை. பிராமண சமயம் அக்காலத்தில் வடஇந்தியாவின் மத்தியபாகத்திலேயே பிரதானமாக நிலவிவந்தது. ஆனல் ஆரியவழித்தோன்றல்சளாகிய வேறு பல சாதியார் பிராமண சமயத்துக் வேருன சமயங்கள அனுஷ்டித்து வந்த துண்டு.

ஆதிக்குடிகள்: புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 5
இவ்வியற்கை வழிபாடு நாளடைவில் பெரிய மாறுதலை யடைந்தது. பலிகள் வேள்விகளாக மாறின. பிராமணப்புரோகி தர்கள் கிரியைகளைப் பெருக்கினர்கள். இக்கிரியைகளை அனுப்பிச காமற்செய்வதுதான் மேலானதென்று கூறினர்கள். வாழ்க்கை யை நெறிப்பட நடத்தவேண்டுமென்பதைப்பற்றி அவர்கள் அழுத்த மாய்க்கூறவில்லை. மக்கள் நல்வினை தீவினைகளுக்கீடாகப் பிறந் திறந்து உழல்வர். முற்பிறப்பிற்செய்த வினைப்பயன்படி அவர்க ளுக்கு இப்பிறப்பில் தனுகரணபுவனபோகங்க ளேற்படுமென்ற எண்ணம் இக்காலத்தில் தோன்றிற்று. எனவே, பிறப்பிறப்பி லிருந்து விடுதலைபெறலாமா என்ற கேள்வி மக்களிடையே உண்டா யிற்று. வாழ்வு துக்கம் நிறைந்தது. பிறவியோ சகடக்கால்போல மாறிமாறி வருகிறது. வேள்வியினலும் கிரியைகளினலும் இப் பிறவிக்கு விடுதலை கிடைப்பதில்லை. உயர்ந்த பிறவி மாத்திரம் கிடைக்கிறது. இதனல் விமோசனமில்லையென்று பலர் ஆன்ம விசாரங்கொண்டார்கள். மோட்சமே இப்பிறவியின் பயன் என்று வைராக்கியங்கொண்டோர் துறவுபூண்டார்கள்.
இவ்வாறு துறவொழுக்கம்பூண்டோர் விடுதலைக்கு வழி என்ன என்று விசாரணைசெய்து உலகுக்குப் போதித்து வந்தார்கள். இவர் களுள் சிறந்த ஒரு ஆசிரியர்தான் கெளதம புத்தர். இவர் கி.மு. 563 வரையிற் பிறந்தார். நேபாளத்துக்குத் தெற்தே தாக்கியர் என்றெரு சாதியினர் ஒரளவுக்குச் சுதந்தரமுடைய நடத்தி வந்தார்கள். கெளதமர் இச்சாக்கியர் குலத்தைச் சேர்ந்தவர்: சிறுதெய்வவழிபாடும், வேள்வியும் வீட்டுநெறிக் க்ேற்றவையல்ல வென அவர் ஒதுக்கித் துறவறத்தை மேற்கொள்ளுமாறு போதித் தார். உடலை மெலித்துச்செய்யும் நோன்புகளை கெளதமர் அனு மதிக்காதபோதிலும், சம்சாரம் துக்கமயமானதென்றும் ஆசை (திருஷ்ணை) யே அதற்குக்காரணம் என்றும் இதினின்றும் விடுதலை பெறுதற்கு அட்டாங்க மார்க்கத்தை அனுசரிக்க வேண்டுமென்றும் போதித்தார்.
இவ்வட்டாங்க மார்க்கீமாவது: நற்சாட்சி, நல்லுற்றம், நல் வாய்மை, நற்செய்கை, நல்வாழ்க்கை, நன்முயற்சி, நற்கடைப்பிடி, நல்லுளத்தோர்தலைப்பாடு, என்னும் இவ்வெட்டுமாம். பாளிபாஷை யில் இவை சம்மதிட்டி, சம்ழசங்க்ற்பம், சம்மவாயாம, சம்மஆஜீவ,

Page 17
6 இலங்கையின் பூர்வ சரித்திரம்
சம்மவாசா, சம்மகம்மாந்த, சம்மசதி, சம்மசமாதி எனக் கூறப் படும். புலன்களை அடக்கி ஆன்மாவைச் சுத்திசெய்து அருகதறிலை எய்தி பிறப்பிறப்பு நீங்கிய வீடுபேருகிய நிர்வானநிலையடையும் மார்க்கத்தையே கெளதமர் போதித்தார்.
இல்லறத்திலுள்ளவர்க்கு அருகததிலையடையு மிவ்வழி கடின மாகையால், தமது போதனேப்படி நடக்கவிரும்புவோரை ஒன்று படுத்துவதற்காய் பிக்குகள் சங்கமொன்றை கெளதமர் ஏற்படுத்தி ஞர். உலக இன்பங்களைத் துறந்து பிரமசாரியாக, வறியவாழ்க்கை யையே பிக்குகள் மேற்கெர்ள்ளவேண்டுமெனவும் தமக்குத்தேவை யான ஊண், உடை முதலியவற்றுக்கு இல்வாழ்வாரையே அவர் கள் நம்பியிருக்கவேண்டுமெனவும் விதித்தார். .
இல்லறத்தாரை அவர் கைவிடவில்லை. அவர்களுக்கும் ஒரு ஒழுக்கமுறையைக் கற்பித்தார். கொல்லாவிரதம் குவலயமெல் லாம் ஒங்க என அவர்கட்குக்கூறி, இம்மைக்கும் மறுமைக்கும் உறுதுணைபுரியக்கூடிய நல்வாழ்வு நடத்துமாறு அவர்களைப் பணித் தார். ஆனல், கிறித்தவரிடையே நிலவுவதுபோன்ற இல்லறத் தார்க்குரிய முறையை அவர் வகுக்கவில்லை. இல்லறத்தாரின் சிறு தெய்வவழிபாட்டை மாற்றவாவது, சமயானுட்டானங்களைப் புறக் கணிக்கவாவது, அவர் முயற்சிக்கவில்லை. தமது போதனைப்படி நடக்குமாறு தூண்டிவந்தார்.
புத்தருடைய வாழ்நாளிலேயே அவரை ஒரு மகானகவும், விடு தலைக்கு வழிகாட்டிய பெரியாராகவும் சனங்கள் மதித்தார்கள். கி.மு. 483 ல் கெளதமபுத்தர் பரமபதமடைந்தார். அவருடைய சீடர்கள், அவர் ஞானவெளிச்சம் பெற்ற போதிவிருட்9ங்களை வழிபட்டும். அவருடைய அஸ்தி அடங்கியதாகக் கருதப்படும் தாது கோபங்களைப் போற்றியும் வந்தார்கள்.
7. புத்தசமயம் இலங்கையிற் பரவுதல்
புத்தருடைய போதனையாகிய திரிபிட்கத்தை உபதேசித்துவந்த
பிக்குகளே இலங்கையிற் புத்தசமயத்தைப் பரப்புதற்குப் பெரிய துணைசெய்தார்கள். புத்தபகவான் ஞான ஒளிபெற்ற புத்த காயாவுக்கும் இக்காலத்து பாட்ன நகரத்துக்கு மிடையிலுள்ள மகத

ஆதிக்குடிகள் : புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 17
தேசமே புத்தசமயம் தோன்றிய நாடாகும். இதன் தலை நகர் இராசகிருகம். அங்கிருந்து புத்தசமயம் மேற்கிலுள்ள பிரசித்தி பெற்ற இடங்கள் வழியாகப்பரவி, நருமதையாற்றுக்கு வடக்கே யுள்ள அவந்தியிலும், வடமேற்கே நெடுந்தொலையிலுள்ள காஷ் மீரம் வரையிலும் பரந்து வேரூன்றிற்று.
இவ்வாறு புத்தசமயம் பாவிக்கொண்டுவருதலும், புெளத்த சங்கம், அபிப்பிராய பேதத்தினுல் மகாசாங்கிகர், தேரவாதிகள், சர்வாஸ்திவாதிகள், மகின்ஷாஸ்கர் எனப் பலவிதமாய்ப் பிரிந்தது. ஆதியிற் தேரவாதிகள், யமுனைக்கரையிலுள்ள கெளஸாம்பியிலும் அவந்தியிலும் மல்கியிருந்தனர். இக்காலத்து அலகபாத்துக்குச் சமீபத்தில் கெளஸாம்பியிருந்தது. இலங்கையிற் பரவியுள்ள தேர வாத தர்மம் கெளசாம்பியில்தான் ஆதியில் விரிக்கப்பட்டதாகப் பலர் கூறுவர்.
மெளரியவமிசத் தரச்ணுகிய சந்திரகுப்தன் வடஇந்தியா முழு வதையும் தன்னணேப்படுத்தி அமைதிநிலவச்செய்த கி.மு. நாலா வது நூற்றண்டின் கடைசிக் காற்பகுதியிலே, புத்தசமயம் முன்னை யிலும்பார்க்கத் தீவிரமான முன்னேற்றமடைந்தது. சந்திரகுப்தன் மகஞன அசோகன் (274-237 கி.மு.) தன்னட்சியில் நன்னெறியை உலகெங்கும் பரப்பி, மக்கள் நற்சீவியம் நடத்தும்படி செய்தான். இதனுல், இவன் அரசருட் டலைசிறந்து விளங்கினன். இவன் அரசுக் கட்டிலேறிச் சிலகாலத்தின்பின், புத்தசமயத்தை மேற்கொண்டு, அதை இந்தியாவெங்கும், பரப்பியதுமல்லாமல் தன்னேடு அரசியற் சம்பந்தமோ, வியாபாரத்தொடர்போ கொண்டுள்ள மற்றத்தேசங்க ளிடையும், பரப்பமுயற்சி செய்தான். இந்தியாவிலிருந்து புத்த சமயத்தைப்பரப்ப வெளிநாடுகளுக்குச் சென்ற சமயது.தருள் ஒரு கோஷ்டியார், மகிந்தன், தலைமையில் இலங்கைக்கு வந்தார்கள். வந்து இரண்டு நூற்றண்டுள் புத்தசமயம், இலங்கையின் மூலை முடுக்குகளெங்கும் பரவலாயிற்று.
இவ்வாறு புத்தசமயம் வெகுவிரைவிற் பரவியதற்குப் பல காரணங்களுண்டு. இக்காலத்தில் அனுராதகமத்தில் அரசுபுரிந்த தேவானம்பிரியதீசன், அசோகன்போன்ற பெரிய சக்கரவர்த்தி அனுப்பிய சமயதூதரை அலட்சியஞ்செய்யாமல் அன்புடன் வர வேற்று, அவர்கள் செய்யும் போதனையைப்பரப்ப முயற்சிசெய்து

Page 18
18 இலங்கையின் பூர்வ சரித்திரம்
வந்தான். அன்றியும், இலங்கையில் நிலவிய பாஷை மகிந்தனது கோஷ்டியார் பேசிய மொழிக்கு அதிகம் வேறுபடாமலிருந்தபடி யால், போதனைசெய்வது சுலபமாயிருந்தது. புதிதாகப் போதிக்கப் பட்டுவந்த இந்தச் சமயத்தை எதிர்ப்பதற்கு பலம்பொருந்திய ஒரு சமயம் இலங்கையிலில்லாதிருந்தது. புத்தசமயம் மக்களின் வாழ்க் கையை நல்வழிப்படுத்துவதில் முனைந்ததேயன்றி, கடவுள் வழி பாட்ைேட மாற்ற முயற்சிசெய்யவில்லை. தங்களுடைய சங்கத்திற் சேர்ந்து நல்வாழ்வு நடத்தவேண்டுமென மகிந்தன் போதனை செய்துவந்தான். அதனல், மக்கள் தாம் தாம் அனுட்டித்துவந்த சிறிய கோட்பாடுகளைக் கைவிடும்படி நிர்ப்பந்தப்படுத்தப்படவில்லை. விவசாய வாழ்க்கை நடத்தியபடியால் சனங்கட்கு அதிக ஒய்வுநேரம் கிடைத்தது. எனவே, இந்த ஒய்வு நேரங்களே அவர்கள் கல்வி கற்பதிலும் சமய சாத்திரங்களே ஒதுவதிலும் செலவு செய்தார்கள். மேலும், புத்தபிக்குகளின் வாசஸ்தலமான விகாரங்கள் இவ்வித மான காவியசாத்திர வினேதங்களிற் காலத்தைச் செலவிடப் பெரி
தும் பயன்பட்டன.
8. புத்தசமயத்தினல் இலங்கைக்குற்ற பயன் த்தசமயம் இலங்கைக்கு வந்த காலத்தில் இலங்கைவாசிகள் மூடநம்பிக்கையும், அநாகரிகமான பழக்கவழக்கங்களுமுடைய வர்களாயிருந்தார்கள். இயற்கைத் தோற்றங்களையும், தேவதை களையும், பூதங்களையுமே வழிபட்டுவந்தனர். இந்நிலைமையில் புத்தசமயப் போதனைகள் சனங்களுடைய மனதைக் கவர்ந்தன. வினையின் பயணுக உலகத்தில் இன்பதுன்ப முண்டாகிறதென்ற கொள்கை, விவேகமுள்ளவர்களிடையே உற்சாகத்தைக் கொடுத் தது. ‘தீதும் நன்றும் பிறர்தரவாரா.’ சிறுதெய்வங்களும் பூதங் களும் மனிதர்க்கு இன்பதுன்பஞ்செய்யமாட்டா. இன்பதுன்பங்கள் ஒரளவுக்கு மனிதருடைய முயற்சியினுலுண்டாகின்றன என எண்ணி னர்கள். மேலும், புத்தசமயத்தின உயர்ந்த ஒழுக்கமுறை அவர்களை ஆசார சீலராக்கிற்று. பஞ்சசீலம் முதலிய பெளத்த ஆசாரமுறை கள் அவர்களிடையே ஒருவிதமான கட்டுப்பாட்டை உண்டாக்கின. மனிதரிடத்தும் எனைய உயிருள்ள பிராணிகளிடத்தும் அன்பா யிருக்கவேண்டுமெனப் புத்தசமயம் போதித்தது. ஒரு புறத்தில் புத்தபிக்குகள் உயர்ந்த வாழ்க்கை நடத்திக்காட்டினர்கள். இவற்

ஆதிக்குடிகள் : புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 9
றின் பலனுக சனங்கள் பெரியநன்மை யடைந்தார்கள். விவசாயத் துக்குப் பெரிதும் தடைபுரிந்துவந்த குடும்பச் சச்சரவுகளும், சாதிச் சண்டைகளும் ஓய்ந்தன.
இவ்வாறு சமயவளர்ச்சியோடு கலேகளின் வளர்ச்சியுமுண்டா யிற்று. பெளத்த சங்கத்தவர் இலங்கைக்கு வந்தபொழுது அவர் களது ஆகமமான பாளி அறவுரைகளையும் கொண்டுவந்தார்கள். இலங்கைக்கு முதன்முதல் வந்த நூல்கள் இவையென்றே கூறலாம். இப்பிடகநூல், பாளி என்று பின்னர் வழங்கப்பட்ட ஆரியபாகதக் கலப்புப் பாஷையில் எழுதப்பட்ட அநேக நூல்களைக்கொண்டவை. கிறிஸ்தவத் திருச்சபையைச்சேர்ந்த துறவோர் புராதன ஐரோப் பாவில் இலத்தீனைத் தமது பாஷையாகக் கொண்டாடியது போலவே இலங்கைப் பிக்குகளும் பாளியையே வழக்காற்றிற் கொண்டு வந்தார்கள். பாளியில் நூல்கள் யாத்தனர். பாளி சொல்நயமும் பொருள்நயமுமுடைய பாஷையாயிருந்தது. சிங்கள மொழியிலுள்ள பரிபாஷைகள் பல பாளி பாஷையிலிருந்தே வந்தன.
ப்ாளியிலுள்ள தர்மநுாலை திரிபிடகம் என்றும் வழங்குவர். திரிபிடகமென்ருல் மூன்று கூடை என்று பொருள். இந்நூல் மூன்று பகுதிகளையுடையது. அவை விநயம், தம்மம் அல்லது சுத்தம், அபிதம்மம் என்பன. இவற்றுள் விநயம் என்பது பிக்கு களின் ஒழுக்கமுறையைக் கூறும். தம்மம் அல்லது சுத்தம் (தரு மம் அல்லது சூத்திரம்) புத்தபகவானும் அவருடைய சீடர்களும் அருளிய உபதேசங்களைக்கொண்டது. அபிதம்மத்திலே பெளத் தருடைய தத்துவசாத்திரம் விரிக்கப்பட்டிருக்கிறது. சுத்தபிடகத் தில், பிக்குக்களின் சமயவாழ்வைக் குறித்தே முக்கியமாகக் கூறப் பட்டபோதிலும் சில நூல்களில் பொதுசனங்கட்குரிய விடயங்களும் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சாதகக்கதை பேர்போனது. புத்தருடைய முற்பிறப்பு வாழ்வைப்பற்றிக்கூறும் இக்கதைகளுக்கு முகவுரையாக நிதான கதையென ஒன்றும், அதற்கு வியாக்கியான மும் அடங்கியிருக்கின்றன. வையகத்தவர்க்கு வாழ்வுகொடுக்க வேண்டிப் புத்தபகவான் நிர்வாண நிலையை அடைவதை மறுத்துப் போதிசத்துவராயிருந்து அருஞ்செயல்களைப் புரிந்தார். சாதகத்தில் இக்கதைகளே கூறப்படுகின்றன. இக்கதைகளின் சுவாரசியத்திலும், இவை கற்பிக்கும் போதனைகளிலும் சிங்களர் ஈடுபட்டபடியால் அவை

Page 19
20 இலங்கையின் பூர்வ சரித்திரம்
0。5-ピー。ェf (a)>.めb/C t d・スん、し○ fr「Crんん、LVA
+/á v ( R H Ki' D. (3) u ro
H r. J A R + & JJ
>め上もし8いPA8ェんいいん>め上じU Ku8(Oulu) j3 HAKHL^KA55sU AAA
8յr ع) را که به A را نل ۵ < |x در یکی از X 3,8-L-jj čj. Iý8 ur EC UN, S E o Ly
V 8 {84', 'J')്രഗ്ധരcau?{{8 ^ 14४१& ö(०.५/१८° ~?०८०१ / ८८.७५6
VT 1 v J-L ấoon vo va es? a 6°Ca-იw š-6aი კი კი )U δεν υ) υι θ\ dι βυ 4 ںQ'c وہ (کچ (رح a J
5 25 Ü'2;८h **8
சிங்கள வரி வடிவத்தின் படிப்படியான வளர்ச்சி

ஆதிக்குடிகள் : புத்தசமயம் இலங்கையிற் பரம்புதல் 21
எல்லாராலும் விரும்பிப் படிக்கப்பட்டன. பாளி பாஷையிலும் சிங்களத்திலும் எழுதப்படும் பலநூல்கள் புத்தர் போதிசத்துவரா யிருந்த காலந்தொட்டு அவரது சரித்திரத்தைக்கூறியே தொடங்கும். சாதகக் கதைகளை அடிப்படையாகக்கொண்டு பல பாட்டுக்களைச் சிங்களக் கவிகள் யாத்திருக்கின்றனர். விசயன், பாண்டுகாபயன் ஆகியோரைப்பற்றி வந்த கன்னபரம்பரையான கதைகள் இந்த சாதகக்கதைகளின் போக்கைப் பின்பற்றியே எழுந்தன.
எழுத்துக்கலையும் புத்தசமயத்துடன்தான் இலங்கைக்கு வரலா யிற்று. புராதன இலங்கைச்சாசனங்களிலுள்ள இலிபிகள் அசோக சாசனங்களிற் காணப்படும் பிராமி இலிபிகளேயே பெரும்பாலும் ஒத்திருக்கின்றன. இக்காலத்துச் சிங்கள எழுத்துக்கள் இவற்றி லிருந்தே வளர்ச்சியடைந்தன. புராதன இலங்கைச் சாசனங்களை குகைகளில் மேற்கூரையாயுள்ள பாறைகளின் கீழ்ப்புறத்தில் அல் லது மேற்புறத்தில் இன்றுங் காணலாம். தம்பளேகுகைகளைப்பார்க்க.
தமிழ் உட்பட இக்காலத்து இந்திய எழுத்துக்களுக்கெல்லாம் பிராமி இலிபியே தாய் இலிபி என்று கூறலாம். பலஸ்தீனத்தில் ஒரு கல்லிற் செதுக்கப்பட்டுள்ள கி.மு. 9-ம் நூற்றண்டு இலிபியான பினிசிய இலிபியை இவை ஒக்கும். இக்காலத்துப் பல ஐரோப்பிய எழுத்துக்கள் பினிசிய எழுத்தையே மூலதாதுவாகக் கொண்டிருக்க வேண்டும். இன்றேல், பினிசிய இலிபி எதிலிருந்து உற்பத்தி யானதோ அதிலிருந்தே சிங்கள இலிபியும் பிறந்திருக்கவேண்டும். எழுததுக்கள் வரிவடிவில் வருவதற்குப் பலகாலஞ் செல்லும். ஆஞல், சிங்கள பாஷையிலுள்ள பலவேறு ஒலிக்கூட்டங்களையும் வரிவடிவில் எழுதுவதற்கு, பிக்குகள் கொணர்ந்த இலிபி போது மானதாயிருந்தமை இலங்கையின் அதிட்டம் என்றே கூறலாம்.*
* ஆதியில் மக்கள் காம எழுதிக்காட்ட விரும்பிய பொருளின் உருவத் தைப் பரு மட்டாகக் கீறிஞர்கள. வேடர்களின் எழுத்துக்கள் இந்த நிலை ககு அப்பால் செல்ல வில்லை. பின்னர், சீன ைப்போல முழுப்படத்தையும் குறிகக ஒரு குறியீடு எழுதப்பெற்றது. பின்னர், இந்தக்குறியீடே பொரு ளுக்கும் அப்பொருளைக்குறிக்கும் பெயரின் ஒலிக்கூட்டத்திற்கும் குறியிடா யிற்று. சிங்கள எழு சதி வளர்ச்சியின் மூன்முவது படியும் இஃதெனலாம். இதஞல் எழுத்துக்கலை இலேசாக்கப்பட்டது. இல்லையேல், சீன இலிபியிற் போலமுதற்பலகுறியீடு களக் சற்றபின்னரே எண்ணத்தை எழுதக்கூடியதா Այ6»ւpա4 լc.

Page 20
22 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இலங்கையில் மிகப்பழைய கட்டிடங்களாயுள்ளவை தாதுகோ பங்களும் விகாரங்களுமாகும். பழைய சிற்பங்களிலும் புத்தசமயச் சார்பான அம்சங்களேயே காணலாம். கட்டிட அமைப்புக்கு புத்த சமயம் பெரிதும் துணைபுரிந்தது. ஒவ்வொரு விகாரத்திலும் ஒரு விக்கிரக மண்டபம் ஏற்படுத்தவேண்டி யிருந்ததால் சிற்பமும் பெரிதும் விருத்தியடைந்தது.
இலங்கைக்கு வந்த புத்தபிக்குகள் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தபடியாற்றன், இலங்கையில் மனைச்சாத்திர மும் சிற்பசாத்திரமும் இவ்வளவு தூரம் வளர்ச்சி யடைந்தன. இலங்கையில் வந்து குடியேறிய ஆரியர் இங்கே குடியேறியதும் இந்தியாவிலுள்ள தமது பந்துக்களுடன் தொடர்பைத் துண்டித்துக் கொண்டார்கள். ஆனல், புத்தபிக்குகளோ, இந்தியாவிலுள்ள பெளத்த சேஷத்திரங்களுக்கு அடிக்கடி செல்வதனல் அங்குள்ள பழக்கவழக்கங்களேயும் நாகரிகத்தையும் இலங்கைக்குக் கொண்டு வந்து பரப்பினர்.
புத்தசமயம் மக்களை ஒரளவுக்கு ஒற்றுமைப்படுத்திற்று. கிறிஸ் தவ திருச்சபைபோலப் புத்தசங்கமும் ஒரு தலைமையின்கீழிருக்க வில்லையென்பதுண்மையே. பிக்குக்களில் ஒவ்வொரு சாகையின ரும் தாம்தாம் கொண்டகொள்கைப்படியே வாழ்ந்துவந்தார்கள். இவர்களை ஒன்றுபடுத்தக்கூடிய ஒரு தலைமைத்தாபனம் இருக்க வில்லை. மேலும், பொதுசனங்களது வாழ்விற்றலையிட்டு அவர்களே ஒன்றுபடுத்தும் முயற்சியிலும் புத்தபிக்குகள் ஈடுபடவில்லை. ஆஞல், பலவேறு சாகையைச்சேர்ந்த பிக்குகளும் ஒரு பொதுவான பெளத்தாசாரத்தையே போதித்துவந்ததால் பல சாதியினரும் ஒன்றுபட்டு ஒரே நோக்கத்தையுடையவரானர். V

இரண்டாம் அத் தியாயம்
புராதன காலம்
லங்கைச் சரித்திரத்தைச் சரிவர அறிவதற்கு இந்திய சரித்தி
ரத்தை அறிந்து கொள்வதும் இன்றியமையாததாகும். இலங்கையின் ஆரம்ப சரித்திரம் இந்தியாவில் நடைபெற்ற சம்ப வங்களால் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டதென்பதை நாம் அறிந்திருக்கிருேம். போர்த்துக்கீசர் இலங்கைக்கு வருவதற்கு முற் பட்ட இலங்கைச் சரித்திரத்தைச் சரிவர அறிவதானுல், #ნ)lრნი) எற்பட்ட முக்கியமானசம்பவங்களேயாவது மனதில் $(tତitତ! வேண்டியது அவசியமாகும். இலங்கை நாக கீகாலத்தில் இந்திய நாகரிகத்தின் ஒரு அமிசமாகவேயிருந்தஇைந்தியாவில் இக்காலத்தில் நடைபெற்ற எண்ணங்களும் செய்ன் தம் இலங்கை வாசிகளின் எண்ணங்களையும் செயல்களையும் பெரி(Rாதித்து அவர்களது வாழ்வை மாற்றின. இலங்கைச் சரித்திரத்தின் காலப்பகுதிகளை அன்னிய் சாதியாரின் செல்வாக்கு இலங்கையிற் பரவிவந்ததைக் கொண்டே பிரதானமாகப் பாகுபடுத்த வேண்டி யிருத்தலால், போர்த்துக்கீசருக்கு மூற்பட்ட இலங்கைச் சரித்திர காலத்தை இந்தியகாலம் என்று பிரித்துவிடலாம். அவ்வாறே பிற்காலப்பகுதிகளும் போர்த்துக்கீசர் காலம், ஒல்லாந்தர் காலம், பிரித்தானியர் காலம் எனப் பாகுபடும்.
இந்தியகாலத்தை இரண்டாகப் பகுக்கலாம். ஒன்று வட இந்தியகாலம், மற்றது தென்னிந்தியகாலம். சோழர் இலங்கை யில் ஆதிக்கஞ் செலுத்தும்வரை இலங்கை வடஇந்தியாவின் ஆதிக் கத்தில் திழைத்தது. பின்னர், சோழராட்சிதொட்டு போர்த்துக்கீசர்
23

Page 21
24 இலங்கையின் பூர்வ சரித்திரம்
வரும்வரை ஐந்து நூற்றண்டுகளாகத் தென்னிந்தியராதிக்கததி லிருந்தது. வடஇந்தியகாலத்தை புராதனகாலம் என்றும் மத்திய கால முற்பகுதி என்றும் இரண்டு பிரிவாகப் பிரிக்கலாம்.
அசோகனது காலத்து கி.மு. 274-237) அரசாண்ட தேவானும் பியதீசன் (கி.மு. 247-207) காலமே புராதன காலத்து ஆரம்ப மெனலாம். புத்தசமயம் இலங்கைக்கு வந்தபின்னர்தான் தொடர் பான ஒரு இலங்கைச் சரித்திரத்தை எழுத இடமுண்டு. புராதன காலம், மகாசேனனுடைய (கி.பி. 334-362) ஆட்சியோடு முடிகிறது. இவன் பெரிய குளங்களைக் கட்டினன். தேரவாத பிக்குகளுக் கெதிராக முயற்சிசெய்த முதல்மன்னன் இவனே. இக்காலத்தில தென்னிந்தியாவிலிருந்து நான்குமுறை இலங்கைமீது படையெடுக் கப்பட்டது. இலங்கை இக்காலத்தில் விவசாயத்திலும் நீர்ப்பாசன முயற்சியிலும் பெரிதும் முன்னேற்றமடைந்து அசோக நாகரிகத் தாலும் புத்தசமய வளர்ச்சியினலும் அதிகம் நன்மையடைந்தது.
து. அவனுக்குப்பின் ஆட்சிசெய்த அரசர்கள் வலி *யிருந்ததால், சிற்றரசர்களெல்லாரும் நாளடை
மறுபடியும் குழப்பமுண்டாயிற்று. சிற்றரசுகளெல்லாம் தம்முட் கலாம் விளைத்துத் தத்தம் இராச்சியங்களைப் பெருக்க முயன்றன. இதுகாறும் செவ்வனே அரண்செய்யப்பட்டிருந்த இராச்சிய எல்லை கள் இக்காலத்தில் பாதுகாப்பற்றுக் கிடந்தன. ஆசவே, வடமேற் குக் கணவாய்மூலம் மத்திய ஆசியச் சாதியார் படையெடுப்பதற்குப் போதியவசதி ஏற்பட்டது.
・豪 இந்தக்கலவரத்தில் இந்தியாவிற் பல இராச்சியங்கள் தலைமை
வகிக்க முயன்றன. மகாநதிபாயும் பிரதேசத்தை ஆண்ட கலிங்க ரும், இக்காலத்தில் பெஸ்நகர் என வழங்கும் விதிசத்தை ஆண்ட சங்கவடமிசத்தவரும், கோதாவரிக்கும் கிரிஷ்ணுநதிக்கு மிடையி லுள்ள கரைப்பிரதேசத்தை ஆண்ட ஆந்திரரும், வடமேற்குக் கண வாய் வழியாகவந்த கிரேக்கரும் இந்தியாவில் தனியாதிக்கஞ்
 

புராதன காலம் 25
செலுத்த விரும்பினர்கள்.* கி.மு. 200 வரையில் ஆந்திரர் மேற் குப் பக்கமாகப் பரவி கோதாவரிச் சமவெளியையும் நாவபிக்குப் பகுதியிலுள்ள பீடபூமியையும் அடைந்தார்கள். கி.மு. முதலாவது நூற்றண்டில் உச்சைனியையும் பின்னர் சுங்க அரசரிடமிருந்து விதி சத்தையும் கைப்பற்றினர்கள். இவ்வாறு ஆந்திரர் ஒரு பெரிய இராச்சியத்தைத் தாபித்து கி.பி. மூன்றவது நூற்ருண்டின் மத் தியகாலம் வரை ஆதிக்கஞ் செலுத்தினர்கள். ஆந்திரரின் முன் னேற்றத்துக்கு அவர்களது சேபைலத்தைவிட இன்னெரு காரணமு முண்டு. மெளரிய இராச்சியத்தின் வடமேற்கு எல்லையிலிருந்து மத்திய தரைக்கடல்வரை பரந்த கிரேக்க இராச்சியமான சீரியா, அசோகன் இறப்பதற்கு முன்னரே சீர்குலைந்தது. இது காரண மாக இந்தியாவிலிருந்து வடமேற்குக் கணவாய்மூலம் ஐரோப்பா வுக்குச் சாமான்களனுப்புவது கஷ்டமாயிற்று. எனவே, சாமான் களைப் பாடலிபுரத்திலிருந்து பிருகுக் கச்ச என்ற மேற்றிசைத் துறைக்கு விதிசா உச்சைனி ஆகிய நகரங்களுக்கூடாக அனுப்பினர் கள். அங்கிருந்து கடல்மார்க்கமாகப் பாரசீகக் குடாக்கடல் வழி யாகவோ அன்றி செங்கடல் வழியாகவோ சாமான் ஐரோப்பாவுக்கு அனுப்பப்பட்டது. எனவே, வடக்கேயிருந்தும், தெற்கிலிருந்தும், கிழக்கேயிருந்தும், மேற்கிலிருந்தும் வரும் பாதைகளெல்லாம் உச்சைனியூடாகவே சென்றன. ஆதலால், உச்சைனி வியாபாரத்துக் குப் பேர்போன ஒரு பெரிய நகரமாயிற்று. அதற்குக் கிழக்கே யுள்ளதும் மகிந்தனின் பிறப்பிடமுமாகிய விதிசா நகரும் முக்கிய மான நகரமாயிற்று. விதிசா நகரின் பெருமையை இன்றும் அங் குள்ள புராதன கட்டிடங்களிலிருந்து யூகித்துவிடலாம். மெளரியர் காலத்திலும், சுங்கவமிசத்தவர் காலத்திலும் ஆந்திரா காலத் திலும் கட்டப்பட்ட எராளமான கட்டிடங்களின் கிலத்தை இன்றும் அங்கே காணலாம். உதாரணமாக, சாஞ்சிக்கட்டிடங்கள் சிறந்தவை.
*இக்காலத்தில் இந்தியா மூன்று பெரும் பிரிவுகளாயிருந்தது. இவற் றுள் மிக முக்கியமான பிரிவு வடக்கேயுள்ள சிந்து, கங்கை சமவெளிகள். இரண்டாவது கர்மதை ஆற்றுக்கும் விந்தியமலைக்கும் தெற்கேயும், கிருஷ்ணு, துங்கபத்திரை நதிகட்கு வடக்கேயுமுள்ள தக்கிண பீடபூமி. இதன் மேற்குப் பாகம் புராதன மகாராட்டிரம். கலிங்க காட்டை வடக்கேகொண்ட கிழச்குப் பாகம் தெலிங் கானம். கிருஷ்ணு நதிக்கும் துங்கபத்திரைக்கும் தெற்கேயுள்ள தென்னிந்திய பாகம் சேரசோழ பாண்டியமென்ற மூன்று இராச்சியங்களே க் கொண்ட தமிழகம்.

Page 22
ர்ப்பாரகம் £ളutി
W sta't laui.
{L(naపత్తి
கார்லே
தரும்:
காச்மீரம் Տ e கதகடிசிலை a.
مق۱T
s 현
اسر
(37 એ. (S), - 4ރނ ނަ 6. 32 خe Gerrat: 3572a - X) مع '. s **
கல்யாலரி
— புராதன, மத்தியகால இந்தியா
s ، ... .۶ அயோத்தி அசிராவஸ்தி )
கேைனுசி
O at Saj வாஸ்து
r2,t. 7 765 7) いー, ---لام
7477్యగా(ancyyL
 
 
 
 
 
 
 
 
 
 
 

புராதன காலம் 27
ஆந்திர அரசர்கள் பிராமண சமயத்தை அனுட்டித்து வந்த போதிலும், புத்த சமயத்துக்கு அவர்கள் பேராதரவு காட்டினர்கள். அமராவதியிலும், கிருஷ்ணு நதியிலுள்ள நாகார்ச்சுன கொண்டை யிலும், காணப்படும் தாதுகோபங்களும் பெளத்த சிற்பங்களுமே இதற்குச் சான்றுபகரும். மேற்கு இந்தியாவிலுள்ள அஜந்தாக் குகைகளும், கார்லே, நாசீக்கு ஆகிய இடங்களிலுள்ள பாறை மண்ட பங்களும் ஆந்திரர் புத்த சமயத்துக்களித்த பேராதரவுக்கு அறிகுறி யாகும். கி.பி. இரண்டாவது நூற்றண்டின் கடைசியிலிருந்தவரும் மகாயான புத்த சமயத்தைத் தாபித்தவருமான நாகார்ச்சுனர் என்ற புகழ்பெற்ற பெளத்த ஆசிரியர் ஆந்திர தேசத்தவர். இவர் நாகார்ச்சுன கொண்டையை வாசத்தலமாகக் கொண்டிருக்கலாம்.* தென்னிந்தியாவில் சேர, சோழ, பாண்டியமென மூன்று இராச்சி
*இக்காலத்தில் வடஇந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருதற்கு மூன்று பேர்போன மார்க்கங்களிருந்தன. இவற்றிலிரண்டு ஆந்திரராச்சியத்து ச்கூடா கச் சென்றன. இக்காலத்து பட்ரூ என வழங்கும் பாடலிபுத்திரத்திலிருந்தே எல்லா மார்க்கங்களும் துவங்கின. இவற்றிலொன்ற பாடலிபுத்திரத்தி லாரம்பமாகி, பிரயாகை (அலகபாத்) கெளஸாம்பி (கோசாம்பி) பார்கச்து, விதிசா, உச்சைனி, மாஹிஷ்மதி (மந்தாதா) பிரதிஷ்டான (பைதான்) ஆகிய நகரங்சளூடாகச் சென்று கோதாவரி, கிருஷ்ணு ஆகிய 6திகளின் முகத்துவா ரத்தை யடையும். பின்னர் அங்கிருந்து இலங்கை க்குச் செல்லும். இரண்டா வது மார்க்கம் பாடலிபுத் திரக்கி லிருந்து உச்சைனிக்கு வந்து அங்கிருந்து பிரு குக்க ச்ச (பாறுக்கச்சு இக்காலத்து புருே ச்) என்ற துறைபட்டினத்துக்குச் செல்லும். இங்கிருந்து கடல் மார்க்கமாக மேற்கிந்தியக் கரையோரமாகச் சென்று பம்பாய் மாகாணத்துத் தானுபகுதியிலுள்ள சூர்பாரக (சொபா ர) என்ற பட்டினத்தையும் தாண்டி இலங்கை செல்லும். மூன்முவது பாதை வங்காள விரிகுடா வழியாக நேரே இலங்சைக்குச் செல்லும், பாடலிபுத்தி ரத்திலிருந்து கப்பலேறிக் கங்கையாற்று வழியாகத் தாம்ரலிப்தி (தாம்லுக்} யை அடைந்து அங்கிருந்து கீழ்க்கரை வழியாய் இலங்கை செல்லும்.
பாண்டிய நாடு இக்காலத்து மதுரை, திருநெல்வேலி சில்லாக்சளின் பெரும்பகுதியை அடக்கியிருந்தது. தாமிரபர்ணியாற்றிலுள்ள சொற்கையும் பின்னர் மதுன ரயும் பாண்டிகாட்டின் தலைநகராயிருந்தன. Fோழநாடு கிழக்கே வடபெண்னே தொட்டு வெள்ளாறு வரையும் மேற்கே குடகுவரையும் பரந் திருந்தது. முதலில் திருச்சிளுப்பள்ளிக்கடுத்த உறையூரும், பின்னர் காவிரிப் பூம்பட்டினமும் சோழநாட்டின் தலைநகராயிருந்தன. காஞ்சி (சஞ்சீபுரம்) இன்னுெரு பெரிய நகரமாகும் கேரளம் என்று சொல்லப்படும் சேரநாடு இக்காலத்துத் திருவிதாங்கூர், கொச்சி, மலையாளம் ஜில்லா முதலியவற்றை அடக்கியிருந்தது. கொச்சிக்குச் சமீபத்தில் பெரியாற்றின் கரையிலே இப் போது திருச்காரூர் என வழங்கப்படும் வஞ்சிமா நகரமே முதலில் இதன் த%ல ஈகராயிருந்தது. பின்னர், அவ்வாற்றின் கழிமுகத்தருகேயுள்ள திருவஞ்சிக களம் க%லநகராயிற்று.

Page 23
28 இலங்கையின் பூர்வ சரித்திரம்
யங்களிருந்தன. சேர என்பது கேரள மென்றும் வழங்கும். அசோக சாசனங்களில் இம்மூன்று இராச்சியங்களும் கூறப்பட்டிருக் கின்றன. கிறிஸ்தாப்தத்திற்கு முந்தியே இங்கு புத்த சமயமும் சமண சமயமும் பரவியிருந்தன. திருநெல்வேலி மதுரை ஜில்லாக் களில் பெளத்த சமண அடிகள் வசித்த குகைகளிற் கிறிஸ்தாப் தத்துக்கு முற்பட்ட பிராமி இலிபியில் சாசனங்கள் காணப்படுகின் றன. கிரேக்க, உரோம சரித்திராசிரியர்கள் கி.மு. நான்காவது நூற்ருண்டு துவங்கியே தென்னிந்திய தமிழகத்தைப் பற்றிக் குறிப் பிட்டு வந்திருக்கிருர்கள்.
அகப்பொருள், புறப்பொருள், சமயம் ஆகியவை சம்பந்தமான சங்கநூல்கள் இக்காலத்திற் றேன்றியபோதிலும் தென்னிந்திய சரித்திரத்தைத் தொடர்பாகத் தொகுத்துக் கூறுவதற்குப் போது மாஓரசரித்திரச் சான்றுகள் கிடையா. கரிகாற்சோழன், சேரன்செங் குட்டுவன் ஆகிய மன்னர் பெருந்தகைகளைப்பற்றிச் சங்கநூல்கள் குறிப்பிட்டபோதிலும், அவை கூறுபவையெல்லாவற்றையும் சரித் திர உண்மைகளாகக் கொள்வது முடியாது. M
பிராமண சமயமும், பெளத்தசமண சமயங்களும் தமிழர் வாழ்க்கையை மாற்றிவந்தமை சங்கநூற்களிலிருந்து புலப்படுகிற்து. சிவன், திருமால், முதலிய இந்து சமயக்கடவுளரும், சிவகுமர னெனப் பிற்காலத்தில் இந்துக்கடவுளரோடு சேர்க்கப்பட்ட கந்தக் கடவுளான குறிஞ்சிநிலத்து முருகக்கடவுளும், சங்கஇலக்கியங்களில் இடம்பெறுகின்றனர். இலங்கையில் இக்காலத்திற்கூட வழிபடப் படும் பத்தினிக் கடவுளைப்பற்றியும் சங்கநூல்கள் கூறும். சமணர், பெளதர், பிராமணராகிய ஆரியர்மூலம் தமிழகத்தில் பல ஆரிய சம் பிரதாயங்கள் நுழைந்தமைக்கும் இந்நூல்களிற் சான்றுகளுண்டு.
இக்காலத்தில் தென்னிந்திய நாடுகளுடன் கிரேக்கர் முதலிய பல அந்நிய நாட்டவர் வியாபாரம் நடத்தினர்கள். அதனல் அது பேர்போன நாடாயிருந்தது. முதலில் அராபியர் தென்னிந்தியா வுடன் வியாபாரம் நடத்தினர்கள். பின்னர் கிறிஸ்தாப்த ஆரம்பத் தில் உரோமசாம்ராச்சியத்துக் குட்பட்டிருந்த கிரேக்கர் வியாபாரத் தில் முனைந்தார்கள். எடன்குடாக்கடலிலிருந்து பிரயாணமாகிப் பெரிய சமுத்திரத்தைத்தாண்டி இந்தியாவுக்கு வருதற்குப் பருவப் பெயர்ச்சிக்காற்று மிகஉதவியாயிருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.

புராதன காலம் 29
உரோம சக்கரவர்த்தியான ஆகஸ்தசு (கி.மு. 3-கி.பி. 14) காலந் தொட்டு நீரோசக்கரவர்த்தி இறக்கும்வரை (கி.பி. 68) தென்னிந்தி யாவிலிருந்து வாசனைத்திரவியங்களையும் மஸ்லின், முத்து, இரத்தி னம் முதலிய பொருட்களையும் கிரேக்க வர்த்தகர்கள் உரோமா புரிக்கு ஏற்றிச்சென்று வியாபாரம் நடத்தினர்கள். பிப்பிலி, இஞ்சி வேர், கறுவா முதலிய சொற்கள் கிரேக்க பாஷையிலும் அவ்வாறே வருதல்பற்றி* கிரேக்கர் தென்னிந்தியாவுடன் நடத்திய வியாபர்ரத்
தைத் துணிந்துகூறலாம்.
நீரோமன்னன் இறந்தபின் கிரேக்கரின் வியாபாரம் குறைந்து வந்தது, எனினும் மூன்றவது நூற்றண்டின் முற்பகுதிவரை வியாபாரம் நின்றுபோகவில்லை. இலங்கையில் விளையும் பொருட் களும் முதன்முதல் இந்தியாவுக்கு எற்றுமதியாகி அங்கிருந்தே கிரேக்கருக்கு விலையாயின. ஆனல், கி.பி. இரண்டாவது நூற்றண் டில் கிரேக்கர் நேரே இலங்கைக்கு வந்து வர்த்தகம் நடத்திஞர்கள்.
2. பூர்வீகக் குடியேற்றங்கள்
@* *ಸ್ತ್ರಿ ೩ ஆரம்பத்திற் சனங்கள் இலங்கையின் வடக்குச்
சமவெளியிலும், தென்கிழக்கு உருகுணைப் பகுதியிலும் குடி யேறினர்கள். வடக்கே அனுராதகமவும், தென்கிழக்கில் மகா கமவும் தலைநகரங்களாயின. பெரிய ஆறுகள் வழியாக வடக்குச் சமவெளிகட்குச் செல்லக்கூடியதாயிருந்தது. இவ்வாறுகளின் உற்பத்திகளும் ஒன்றுக்கொன்று அண்மையிலேயே இருந்தன. மல்வத்தைஒயாவில் மிகப்பிரதானமான ஒரு இடத்தில் சம வெளியின் மத்தியிலமைந்தபடியால் அனுராதகமம் தலைநகரா யிற்று. மல்வத்தைஒயா மன்னருக்கணித்தாகவுள்ள மாந்தைக்கு (மாதோட்டம்)ச் சமீபத்தில் கடலொடு கலப்பதால் தென்னிந்தியா விலிருந்து படையெடுத்துவந்தவர்கள் மாந்தையிலிறங்கி, நதி மார்க்கமாக உள்நாட்டை அடைந்தார்கள். கடற்கரைக்கு அணித் தாக இல்லாமற் சிறிதுதுரரம் உள்நாட்டிலமைந்தபடியால், பகைவர் அனுராதகமத்தை இலேசாகத் தாக்கமுடியாதிருந்தது. அன்றி
* பிப்பிலி கிரேக்க மொழியில் பெப்பெரி என்றும் இஞ்சிவேர் விக்கி பெரிஸ் என்றும் கறுவா சார்பியன் என்றும் வழங்கப்படும்.

Page 24
புராதன இலங்கை
பாசவக்குத் 魏 గ్రామ డిv ചി
சினேகடிடம் šaj. ളെg്നur8 لرشه
È. S
چه نر
"ఉష్ణో கதிர்காழம்
&
ܨܪ ܪܵܦܸܐܼܲܵ
** వికోణa
& s * } சீதல்பர்வதும்
சஃபாந்தோட்டை
 
 
 
 
 
 
 
 
 
 

புராதன காலம் 31
யும், கரையிலிருந்தே பகைவரின் படையெடுப்பைத் தடுக்கக்கூடிய வசதியுமிருந்தது. மத்தியமலைத் தொடர்களில் உற்பத்தியாகிச் சமாந்தரமாகப்பாயும் வளவைகங்கை, கிரிண்டிஒயா, மாணிக்க கங்கை, குமுக்கன்ஒயா ஆகிய நான்கு ஆற்றங்கரையைச்சார்ந்தே தென்கிழக்குக் குடியேற்றங்கள் பரவின. கடற்காைக்குச் சேண்மை பில் மத்திய பாகத்தில் அமைந்தபடியால் மகாகமவும் அந்நியர் எதிர்ப்புக்கு இலக்காகவில்லை.
இவ்விரு பகுதிகளிலும் சனங்கள் விரைவாகக் குடியேறிய தற்குப் பலகாரணங்களுண்டு. இங்கே ஆற்றுப்பெருக்கினல் நீர் வளமும் அடர்த்தியில்லாத காடுகளிருந்ததால் விவசாயம் செய்வதற்கு நல்ல நிலவளமும் பொருந்தியிருந்தது. மற்று மலை நாடுபோலவும், தென்மேற்குப் பிரதேசம்போலவும் காடடர்ந்து நெற்சாகுபடிக்கு வாய்ப்பற்றனவாய் இப்பிரதேசங்களிருக்கவில்லை. ஆறடுத்த வயல்நிலங்கள் அங்கே ஏராளமாயிருந்தன.
அன்றியும், இவ்விரு பிரதேசங்களுக்குமிடையில் பூர்வகாலந் தொட்டே மாவலிகங்கையாற்றின் மார்க்கமாகப் போக்குவரத்து நடைபெற்றுவந்தது. அக்காலத்தில் அனுராதகமத்துக்கும் மகா கமத்துக்குமிடையில் ஒரு பெரிய பாதையிருந்தது. இது கஹகலை, ரிதிகலை ஆகிய இடங்களுக்கூடாகச்சென்று, மாவலிகங்கை அதன் உபநதியான அம்பன்கங்கையைச் சந்திக்குமிடத்திலுள்ள மாகந் தோட்டத்தை (கச்சக்க திட்டை) அடைந்தது. பின்னர், அங்கிருந்து மாவலிகங்கைக் கரைவழியாய் அலுத்துவரையை (மஹியங்கணை) அடைந்து அங்கிருந்து மாணிக்ககங்கையின் மேற்பிரதேசத்திலுள்ள
|த்தளேயை அணுகிப் பின்னர் மகாகமத்துக்குச் சென்றது.
களனிகங்கை பாயும் பிரதேசத்திலும் ஒரளவுக்குச் சனங்கள் குடியேறியிருந்தார்கள். ஆனல், சாசனங்களிலாவது, சரித்திரக் குறிப்புகளிலாவது இக்குடியேற்றத்தைப்பற்றி அதிகம் கூறப்பட வில்லை. அனுராதகமத்து அரசர்களாவது மாகமத்து அரசர்க ளாவது இப்பிரதேசத்திற் கண்ணுேட்டஞ் செலுத்தவில்லை. அதிக மழை பெய்வதன் காரணமாக அடர்த்தியாகக் காடுசெழித்து மனித சஞ்சாரத்துக்குத் தடையேற்பட்டிருக்கலாம். அன்றியும். நதிகள் கிழக்கிருந்து மேற்கேபாய்வதும் தென்கிழக்கிலிருந்து இப்பிரதேசத் துட் செல்வதற்குத் தடையாகும்.

Page 25
32 இலங்கையின் பூர்வ சரித்திரம்
முதன்முதற் சனங்கள் எந்தப்பகுதியிற் குடியேறினர்க ளென்று திட்டமாய்க்கூறமுடியாது. வடமேற்குப் பகுதியில் முத் துச்சிப்பிகள் நிறைந்திருந்ததால் அப்பகுதியிற்றன் முதன்முதல் குடியேறியிருக்கலாம். பின்னர், அங்கிருந்து தென்கிழக்கே பரவி யிருக்கலாம். இல்லையேல், கடலோடிகள் இம்மூன்று கரைப்பிர தேசங்களிலும் தனித்தனி குடியேறி, ஆற்றுவழியாக உள்ளூரிற் பரவியிருக்கலாம்.
மலையரட்டை எனப்படும் மத்திய மலைநாடுளில் நுழைந்து கொள்வது கஷ்டமாதல்பற்றி அங்கே குடிசனம் குறைவாகவே மிருந்திருக்கவேண்டும். மாவலிகங்கை, வளவைகங்கை வழியாகச் சிலர் மலைநாட்டை அடைந்திருக்கலாம். இராசத்துரோகிகளும் புரட்சிக்காரருமே இம்மலைப் பிரதேசத்தை அக்காலத்திலும் ஒதுக் கிடமாகக் கொண்டிருக்கக்கூடும்.
3. அரசியல் வரலாறு
மேற்கூறிய பிரதேசங்களில் ஆரியர் குடியேறியதன் பயனுகப் பல கிராமங்கள் உண்டாயின. அவற்றை காமணி என்ற கிராமாதிகாரிகள் ஆட்சிபுரிந்தனர். இந்தக் கிரா மாதிகாரிகளே நாளடைவில் தமது ஆணையைப் பெருக்கி அரசருமானர்கள். என்வே, புத்தசமயம் இலங்கைக்குவந்த காலத்தில் அனுராத கமத்திலுள்ள காமணியும் தென்கிழக்கே மகாக மத்திலுள்ள காமணியும் அரசாட்சி நடத்தினர்.
புத்தசமயம் இலங்கையிற் பரவியகாலத்தில் தேவானம்பிய தீசன் (தேவானம் பிரியதீசன், கி.மு. 247-207) அரசு செலுத்தினு னென முன்னரே கூறினுேம் . இவன் மோரிய வம்சத்தைச் சேர்ந்தவன். இவனுடைய வழித்தோன்றல்கள் ஆட்சிபுரிந்து வரு நாளில் கி.பி. 120-ல் சுபன் என்றெரு இராச்சியாபகாரி அரசைக் கவர்ந்து தானே முடிசூடினன். தேவானம்பியதீசன் இறந்து சில காலத்துக்குப்பின் தென்னிந்திய வீரர் சிலர் இலங்கைமீது இரண்டு முறை படையெடுத்து வந்து அனுராதகமத்தைக் கைப்பற்றி இலங் கையைச் சிலகாலமாய் ஆட்சிபுரிந்தார்கள். இவ்வாறு இரண்டா வது முறையாக எல்லாளன் (கி.மு. 145-101) படையெடுத்து வந்து வடஇலங்கையைக் கைப்பற்றி ஆண்டான். பின்னர் உருகுணையில்

புராதன காலம் 33
அரசுபுரிந்த துட்டகெமுனு) (கி.மு. 101-77) எல்லாளனைப் போரிற் கொன்று அவனது இராச்சியத்தையுங் கைப்பற்றினன். கி.பி. இரண்டாவது நூற்றண்டினிறுதியில் துட்டகெமுனு பல சிற்றரசர் களையும் வென்று எல்லாளனையும் கொன்றபின் வடக்கு இராச்சியத் துக்கும் தென்கிழக்குப் பகுதிகட்குந் தனியரசனஞன். இவனே இலங்கையிற்றமிழராட்சியை ஒழித்தவீரனென்றும், மூவான்வெலி சாயா என்ற தாதுகோபத்தையும் மகாவிகாரத்தின் உபோசாத இல்லமான? லோவமகாபாயாவையும் கட்டிப் புத்தசமயத்துக்குப் பேருதவி புரிந்த வள்ளலென்றும் சிங்கள கன்னபரம்பரைக் கதை கள் கூறும்.
துட்டகெமுனுவுக்குப்பின் அவனது தம்பியான சத்தாதீசன் (கி.மு. 77-59) அரசுகட்டிலேறிஞன். இவன் ரூவான்வெலிசாயாவி லெஞ்சியிருந்த பாகத்தைக் கட்டி முடித்ததோடு, தீக்கிரையான லோவமகாபாயாவையும் மறுபடி கட்டுவித்தானென மகாவமிசம் கூறும். இவனுடைய மகன் வலகம்பா (கி.மு. 43-29) வின் ஆட்சிக்கால ஆரம்பத்தில் தீசன் என்ற ஒரு பிராமணன், குடிகள் பலரின் உதவியைப்பெற்று அரசனுக்கெதிராகக் கலகஞ்செய்தான். இதைத் தருணமாகக்கொண்ட பாண்டியர் மன்னர் வமிசத்தைச் சேர்ந்த சிலர் இலங்கைமீது படையெடுத்து வந்து வலகம்பாவைக் கலைத்துவிட்டு அரசுசெய்தார்கள். ஒருவர் பின் ஒருவராய் இவர் களேந்துபேர் ஆட்சிநடத்தியபின் 14 வருடங்கள் கழிய வலகம்பா மறுபடியும் பாண்டியர் ஆட்சியை ஒழித்துத் தானே யரசஞனன். இவன் பின் வந்த அரசருள் ஈழநாகனுடைய (கி.பி. 96-103) ஆட்சியில் மோரியவம்சத்தவரின் எதிரிகளான இலம்பகர்ணர் புரட்சிசெய்து ஈழநாகனை முடிநீக்கிச் சிலகாலம் தாமே அரசு செய் தார்கள். ஆனல், ஈழநாகன் அவர்களுடன் சண்டையிட்டு மறுபடி யும் அரசனனன். கி.பி. 126-ல் இலம்புகர்ணர் மறுபடியும் ஆதிக் கம் பெற்றனர். இயசலாலகதீசன் என்ற மோரிய அரசனிடமிருந்து அரசு கைப்பற்றிய சுபன் (கி.பி. 120-126) என்பவனைக்கொன்று வசபன் (இ.பி. 127-171) என்ற இலம்பகர்ணர் தலைவன் அரச
- * பித்தளையாலியற்றப்பட்ட மாளிகை.
ர் இப்பாண்டியர் மாறன் வழியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் இருவர் பணயமாறன், பிளயமாறன் எனப்படுவா.
5562-B

Page 26
34 இலங்கையின் பூர்வ சரித்திரம்
ணைன். இவ்வரசனே அநேக குளங்களையும் கால்வாய்களையும் வெட்டுவித்த புகழ் உடையவன். இவனுடைய காலந்தொட்டு இரண்டு நூற்றண்டுகளாக இலம்பகர்ணரே ஆட்சிசெலுத்தினர்
5G.
வசபணுக்குப்பின் ஆண்ட பலருள் அவனது பேரனன கயவாகு வும் ஒருவனுகும் (கஜபாகு கி.பி. 174-196). இவன் தென்னிந்தியா மீது படையெடுத்துச் சென்று பலரைச் சிறைப்படுத்திக் கொண்டு வந்ததாகப் பிற்காலத்திலேற்பட்ட கன்னபரம்பரையான கதைகள் போதிய ஆதாரமின்றிக் கூறுகின்றன.* கொடிய பாதகமொன் றைச் செய்ததால் இலங்கையை விட்டுத் தென்னிந்தியாவோடிய வீரதீசனின் (கி.பி. 269-291) இளைய சகோதரனன அபயநாகன் கய வாகுவின் வழித்தோன்றல்களுள் ஒருவன். தமிழர் சேனையின் உதவியால் இராச்சியத்தைக் கைப்பற்றிய முதற்சிங்கள மன்னன் இவன் என்ற முறையில் இவனது சரித்திரம் சற்று விசேஷ முடையது. இதே வமிசத்து இன்னெரு அரசன் பூரீ சங்கபோ (கி.பி. 307-309). இவன் ஒரு சாதுவெனக் கன்னபரம்பரையான கதைகள் புகழும். இக்காலப் பகுதியின் கடைசி அரசன் மகாசேனன் (334-362). இவனே மின்னேரியாக் குளத்தைக் கட்டுவித்தவன்.
4. அரசாட்சி முறையும், அரசியற் கொள்கைகளும்
@·ಷ್ಟ್ರಿ? இலங்கையில் அரசியல் நிர்வாகம் எவ்வாறு நடந்ததென்பதைப் பற்றி அறிந்து கொள்வதற்குத் திட்ட மான ஒரு ஆதாரங் கிடையாது. மகாவமிசத்தில் அங்குமிங்குஞ் சிதறிக் கிடக்குங் குறிப்புக்களைக் கொண்டும், சாசனங்களின் துணை கொண்டும், இக்காலத்தில் இந்தியாவில் இருந்த அரசியல் நிவேமை யோடு இலங்கை நிலைமையை ஒப்பிடுவதன் மூலமாகவும், ஒரள வுக்கு இலங்கை அரசாட்சி முறையை அறியக்கூடியதாயிருக்கிறது.
* மகா வம்சத்திலாவது பண்டைத்தமிழ் நூல்களிலாவது இதற்கு ஆதரிா மில்லை. சேரன் செங்குட்டுவன் காலத்திருந்த " கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்த * னென்முெரு கயவாகுவைப்பற்றிச் சிலப்பதிகாரத்துச் சில பதிப்பு கள் குறிப்பிடும்.

புராதன காலம் 3
ஆரியர் இலங்கைக்கு வந்தபொழுது கிராமங்களிற் குடியேறிக் கன் சபா என்ற கிராம சபைகளை, ஏற்படுத்தினர்கள். இச்சபைகளின் தலைவராக கிராமத்திலுள்ள பெரியவர்களே நியமித்தார்கள். இவர் கட்குக் கிராமணிகள் என்ற பெயர் வழங்கியது. அனுராத புரியிலிருந்த கிராமணி வடபகுதிக்கு அரசனகவும், மாகமத்தி லுள்ள கிராமணி தென்கிழக்குப் பகுதிகட்கு அரசனுகவும் தங்களே நிறுவிக்கொண்ட பின்னர் மற்றக் கிராமசபைகளை இவ்வரசர்கள் மேற்பார்வை செய்யவே ஒருவிதமான மத்திய அரசாங்கம் எற்பட லாயிற்று. இந்நவீனமான அரசாட்சிமுறை பலவிதத்தில் நமது இக்கால அரசியல் முறைக்கு மாறுபட்டதாயிருந்தது. அரசனே தானஞம் நிலமெல்லாவற்றுக்கும் உரிமையுடையவன். அவனது ஆணைக்குட்பட்ட பூமியிலிருப்போர் அவனுக்கு வாரக்குடிகளாயிருப் பர். குடிக்கூலியாக அவர்கள் விளைபொருட்களை அரசனுக்கு உதவ லாம், அல்லது எதாவதொரு தொண்டு செய்யலாம். நிலந்திருத்தி வளம் பெருக்குவதுபோல இறை கொண்டவர்சளிடம் திறை பெறுவதற்குப் பதிலாக அரசர் அவர்களுடைய சரீர உதவியைப் பெற்று தமது நிலவளம் பெருக்கப் பெரிய குளங்களை வெட்டியும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்தும், நெற்சாகுபடியை அபிவிருத்தி பண்ணிஞர்கள். விவசாயம் விருத்தியடைந்ததால் அவர்களின் திறையும் பெருகிற்று. வயல்களுக்குதவும் நீர்மீது வரிவிதித்தும் அவர்கள் தமது வருவாயைப் பெருக்கிக்கொண்டார்கள். கடற் றுறையிலும் ஆற்றுத்துறையிலும் சுங்கவரிகளை விதித்துக்கூட அவர்கள் தங்கள் வருமானத்தைப் பெருக்கினர்.
சிங்களக்கூட்டுக் குடும்பமுறையில் முதல் ஆண்பிள்ளேயே தாயத் துக் குரிமையுடையவன். அவனுக்குப்பின் குடும்பச் சொத்தெல் லாம் அவனுக்கு நேரே இளைய ஆண்பிள்ளைக்கே செல்லும். இதே தாய முறையையே அரசரும் பின்பற்றினர்கள். ஒரு அரசன் இறந் தால் அவனது தம்பிமாருக்கே அரசு உரியது. அவர்களின் பின் னர்தான் அவனது மக்களுக்கு உரிமையுண்டு.
இக்காலத்து அரசாங்கங்களைப்போல எராளமான கடமைகளை அரசன் அக்காலத்திற் செய்யவேண்டி யிருக்கவில்லை. உள்ளூர்க் குழப்பத்திலைாவது வேற்றரசரின் படையெடுப்பிலைாவது தனது குடிகட்கு இடையூறு வராமற் காப்பதே முதற் கடமையென

Page 27
36 இலங்கையின் பூர்வ சரித்திரம்
அரசன் எண்ணியிருந்தான். விவசாயம் விருத்தியடைவதற்கு நாட் டிலே அமைதியிருக்க வேண்டிய தவசியம். இந்த உண்மையை அறிந்த அரசர் தமக்கும் தமது குடிகட்கும் இன்பத்தைக்கொடுப்பது செங்கோலென உட்கொண்டு அல்லவைசெய்யாது குடிகளை ஒம்பி வந்தார். நாட்டின் பலதுறைப்பட்ட கருமங்களையும் நேரிற்ருனே பார்த்துக்கொள்வது முடியாதென அறிந்த அரசன் ஒவ்வொரு பகுதியிலும் தன் ஆணையைச் செலுத்துவதற்குப் பிரதானிகளே நியமித்தான். மத்திய அரசாங்கத்தின் அலுவல்களைப் பார்ப்ப தற்கு உத்தியோகத்தரை எற்படுத்தினன். இந்த உத்தியோகத்தர் எல்லாரும் சேர்ந்து அரசனுக்கு அதிக முக்கியமான அலுவல்களில் ஆலோசனை கூறுவார்.
அக்காலத்திற் பெரிய கைத்தொழில் கிடையா. நாணய முழ் வழக்கத்தில் வரவில்லை. செல்வமென்பது நாட்டுவிளை பொருட்களே. காணிபூமியையே அக்காலத்தவர் பெரிய செல்வ மாக மதித்தார்கள். கொடுக்கல் வாங்கல் எல்லாம் பூமியையோ விளைபொருளையோ வழங்கும் பண்டமாற்றகவேயிருந்தது. அரச னுக்குச் சேவை புரிவோருக்குச் சம்பளமாக நிலங்கள் தானஞ் செய்யப்பட்டன. தனக்குத் தொண்டுசெய்யும் படைவீரருக்கும், தொழிலாளருக்கும் அரசன் நிலங்களையே வழங்கினன்.
விகாரங்களைப் பரிபாலிப்பதற்கும், பிக்குகளைச் சம்ரட்சணைசெய் வதற்கும் நிலங்களே மானியமாக அரசன் விட்டான். அக்காலத் துச் சமூகவாழ்வு கூட்டுறவுக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. அரசனுக்கும் அரசாங்கநிருவாகத்துக்கும் தே வையான ஊழியஞ்செய்வோருக்கு அவர் தம் தொண்டின் தகுதிக் கேற்றபடி நிலங்கள் வழங்கப்பட்டபடியால் போட்டியிடுவதற்கே இடமில்லாமற் போயிற்று. அரசகாரியஞ்செய்வோர் அரசின் அங். கங்களாகவே கருதப்பட்டனர். இல்வாழ்வானுக்குப் புரோகிதரா மிருந்து வந்த பிக்குக்களை ஆதரிப்பதே மேலான புண்ணியமெனக் குடிகளும் மன்னரும் மதித்தனர்.
இக்காலத்து அரசர் தாம் நினைத்தபடியெல்லாஞ் செய்யக் கூடியவர்களாயிருந்தனர். அவர்களெவ்வித சட்டத்துக்கு மமைந் திருக்கவில்லை. தேசவழமையையும் பழக்கவழக்கங்களையும் அனு சரித்துப் பொதுசன விருப்பத்திற்கு மாறுபாடில்லாமலே அவர்கள்

புராதன காலம் 37
கருமங்களே நடத்தினர். சனங்களின் நலவுரிமைகளை மதியாமல் தான்றேன்றித்தனமாக நடந்தால் நாட்டிலே குழப்பமுண்டாகி, அரசுரிமையை யாராவது கைப்பற்றி ஆட்சிசெய்யக் கூடுமெனவும் அவர்கள் பயந்தார்கள்.
சேனேயின் பலத்தினுற்றன் அக்காலத்து அரசன் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தான். அரசர்க்கு வாரக்குடிகளா யிருக்கும் எல்லோரும் சேனையிற் சேரவேண்டுமென்ற ஐரோப்பிய வழக்கத்தைப்போலன்றி, இலங்கையில் அரசர் தமக்காகத் தண்டெடுத்துப் போர்செய்வோருக்கு நிலத்தை மானியமாகத் தாமே கொடுத்தனர். பிரதானிகள் மூலம் கொடுக்கவில்லை. இதனல், அரசன் தனது பிரதானிகட்குப் பயப்படவேண்டிய நிலை எற்படவில்லை. ஏனெனில், சேனை முழுவதும் அரசனிடத்திலிருந் தே ஊதியம் பெற்றது. அன்றியும், படைக்கலப் பயிற்சிபெற்றவர் களும் பெருதவர்களும் சண்டைசெய்யாமல், போர்முறை தெரிந்த வீரர்களே அரசனுக்குப் படைத்துணை செய்தார்கள். ஆனல், சேனைத்தலைவஞன சேஞபதியே சைனியத்துக்குப் பொறுப்புள்ளவ ஞதலால் அவனிடத்து அதிகம் செல்வாக்கிருந்தது. ஒரு சேனபதி சைனியத்தில் போதிய செல்வாக்குள்ளவனுயிருந்தால், சனங்கள் விரும்பாத ஒரு அரசனை முடிதுறக்கச்செய்து இன்ைெருவனை அரச ணுக்கவோ அல்லது தானே அரசனுகவோ அவனுக்கு வசதி யிருந்தது.
நல்ல போக்குவரத்துச் சாதனங்க வில்லாதிருந்தமையே அக் காலத்து அரசியல் நிருவாகத்துக்குப் பெருங் குறையாயிருந்தது. குடிசனங்களுக்குத் தேவையான உதவியைச் செய்யவோ அல்லது மாகாணங்களில் ஆட்சிநடத்தும் பிரதானிகளே அடக்கவோ அதிக வசதியிருக்கவில்லை. ஆதலால், குடிசனங்கள் தற்பாதுகாப்புக்காக வும், ஒற்றுமையுடன் செய்யவேண்டிய கருமங்களை நடத்துவதற் காகவும் சங்கங்களேற்படுத்தி ஒன்றுபட்டார்கள். நெருங்கிய உறவு பூண்ட குடும்பத்தினர் தமது குடும்பத்தாரைக் காப்பாற்றுவதற்காக வும், வியாதியினலோ அல்லது வயோதிபத்தினலோ சீவனம் நடத்த முடியாதவர்களேக் காப்பாற்றுவதற்கும் ஒன்றுபட்டார்கள். தமது சுயநலத்தையும் தம் குழுவினரின் தொழில் நலத்தையுங் கருதி, ஒவ்வொரு தொழிலிலீடுபட்டவர்களும் தொழிற்சட்டமாகக் கூடினர். சமயவாதிகள் கூடத் தம்முள் ஒருவிதமான கூட்டுறவை

Page 28
38 இலங்கையின் பூர்வ சரித்திரம்
எற்படுத்தினர்கள். ஒவ்வொரு சாகையைச் சார்ந்த பிக்குகளும் ஒவ்வொரு சங்கத்தை ஏற்படுத்தி அதன் ஆலோசனைப்படியே நடந் தார்கள். சங்கத்து அங்கத்தவர்கள் ஒருவிஷயத்தைக் குறித்து எகோபித்த அபிப்பிராயமுடையவரா மிராவிட்டால், ஒரு சிறிய பிரதி நிதித்துவ சபையின் ஆலோசனைக்கு அவ்விஷயம் விடப்பபடும். பெரும்பான்மையோர் சம்மதத்தைப் பெற்று ஒரு விஷயத்தை முடிவு செய்வதென்பது அபூர்வமென்றே கூறலாம். கன்சபா என்று வழங்கப்படும் கிராமசபையே அக்காலத்தில் பெருவழக்கா யிருந்தது. இச்சபை நிர்வாக விஷயங்களேயும் வழசகுத்தீர்ப்பு முதலிய கருமங்களையும் கவனித்து வந்தது. கமக்காரரே (5ԼԳசனத்திற் பெரும் பாகத்தவராயிருந்தபடியால் இக்கிராம சபை அவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்யப் போதுமானதாயிற்று. ஒரு கிராமத்துச் சனங்களைப் பாதிக்கக்கூடிய எந்த விஷயததிலும் அரசன் கிராமசபைப் பிரதிநிதிகள் மூலமாகவே ஆணை செலுத்து வான். கிராமசபைகளே ஒரு சமுதாயத்தின் அங்கங்களாக இருந் தன அன்றித் தனிப்பட்ட மனிதரல்ல. பொலீஸ் முதலிய தாப னங்கள் மூலம் தனப்பட்டவர்களுக்கு இக்காலத்து அரசாங்கம் பாது காப்பளிப்பது போல அக்காலத்திலில்லை. தனிப்பட்டவர்கள் கிராம சபைகளைச் சேர்ந்து அவை அளிக்கும் பாதுகாப்புகளையும் உரிமை களையும் அனுபவித்து வந்தார்கள். இச்சபைகள் தாங்கள் அரச னுக்குச் செலுத்தவேண்டிய வரிகளைச் செலுத்தத் தவறிஞலன்றி மற்றும்படி அரசன் இவர்கள் விஷயங்களிற் றலையிடமாட்டான். ஒருகால் கிராமசபை ஒழுங்குகளே மீறியவர்கட்குத் தண்டனை விதிக்க வும் அரசன் தலையிடக் கூடும்.
ஒர் அரசன் கொலையுண்டதனலோ அல்லது அரசுரிமையில் மாறுதல் ஏற்பட்டோ மத்திய அரசாங்கம் குழப்பமடைந்தாலும், ஸ்தல தாபனங்கள் குலைவதில்லை. எனவே, கிராமவாசிகளது வாழ்க்கையில் மாறுதல் ஏற்படாது சீவியம் நடைபெறும், உள் ளூர்க் குழப்பம் அதிக நாளேக்கு நீடித்திருத்தலினலோ, அல்லது அந்நியர் படையெடுப்பினலோ இவ்வமைதிக்குப் பங்கம் நேரிடக் கூடுமன்றி வேறெவ்வகையிலும் குழப்பமேற்படாது.
பண்டைக்காலத்து எனேய சாதியாரைப்போல சிங்களரும் அர சன் தெய்வீகத்தன்மை யுடையவனென கருதவில்லை. அரசன் தெய்வப் பிறப்பென்றும் அவனிடம் திவ்வியமான வல்லமை

புராதன காலம் 39
யுண்டென்றும் அவர்கள் எண்ணவில்லை. இந்திய அரசரைப் போலச் சிங்கள மன்னரும் தாம் சூரிய குலத்தவர், சந்திர குலத்த வர் என்று கூறிக்கொள்ளவில்லை.
கிராமாதிகாரிகளாயிருந்து அரச பதவியைப் பெற்ற அரசர்கள் தாம் உயர்ந்த பிறப்புடையவர்களென்ருே) அல்லது திவ்வியமான வல்லமை யுடையவர்களென்றே கூறிக்கொள்ளுதல் முடியஈது. சாசன்ங்களிற்கூட அவர்கள் கிராமணிகளென்ற பெயரைக் குறித் திருந்தார்கள். அன்றியும், பெளத்தநூற் கொள்கைகளேயே அவர் * (oi) பின்பற்றியதால் தெய்வத்தன்மையைக் கற்பிக்க இடமில்லா மற் போயிற்று. தேரவாதிகளின் ஆகமங்களின்படி முதன்முதல் அரசாட்சிசெய்த அரசன் மகாசம்மதன் என்பான். இவனேக் குடி களே அரசனக்கித் தம்முடைய விருப்பத்துக்கேற்றவாறு அவன் சில கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென்றும் அவனுக்குத் திறையாகத் தமது விளேவின் ஒரு பகுதியைத் தாம் கொடுப்பதாக வும் வாக்களித்தார்கள். W
சமயானுட்டானங்களை விதிதவரும லியற்றிச் செங்கோல் செலுத்தும் அரசன், குடிகள் விரும்பியதைக் கொடுக்க வல்லவ னெனச் சிங்களர் அக்காலத்தில் நம்பினர்கள். மழையில்லாது போனல் அரசன் ஆணேயில் மழை பெய்யும் என அவர்கள் நம்பி ர்ைகள். ஆஞல், அரசர் மாத்திரம் இவ்வாறு செய்ய வல்லமை :புடையவர்களல்ல. ஆன்மசக்தி நிறைந்த பெருநெறியாளர் எல் லாருமே இதைச்செய்யக் கூடியவராதலின் அரசர்க்குத் தெய்வீக சக்தி கிடையாதென அவர்கள் எண்ணிஞர்கள்.
5. விவசாயமும் நீர்ப்பாசனமும் 6. வந்த ஆரியர் இந்நாடு விவசாயததுக்கு மிகவாய்ப் பானதென்பதை அறிந்தார்கள். நெற்சாகுபடிக்கு எற்ற நிலவளமும், சீதோஷ்ண நிலையும் இலங்கையிலிருந்தது. அனறி யும் க ல்ை குழப்பட்டிருந்ததால் தமது முயற்சியைப் பகைவர் தொல்?லயின்றிச் செய்யக்கூடியதாயு மிருந்தது. ஆனல், இன் னெரு இடையூறு அவர்களுக்குண்டாயிற்று. அதாவது, அவர்கள் குடியேறியிருந்த வடக்குப் பகுதியிலும் தென்கிழக்குப் பகுதியிலும் வருடத்தில் நான்கு மாதத்திற்றன் மழைபெய்தது. நெற்சாகு படிக்கு அதிகம் மழை தேவையாதலால் பெய்யும் மன்ழ போதா

Page 29
40 இலங்கையின் பூர்வ சரித்திரம்
திருந்தது. சிலசமயங்களில் மழை வறங்கூர்ந்து ஆறுகள் பல வற்றிப்போவதுமுண்டு.
எனவே, தண்ணிரைச் சேமஞ்செய்து தேவையான காலங்களில் பெற்றுக்கொள்வது அரசர்க்கும் குடிகட்கும் பொறுத்த கடன) யிற்று. வயல்களுக்குச் சமீபத்தில் கிணறுகளையோ குளங்களையோ வெட்டில்ை, தண்ணிரை இறைத்துக்கொள்வது பலநாள் வேலை; யென எண்ணி அவ்வாறு செய்வதை விட்டுவிட்டார்கள். பருவ காலத்தில் மழைபெய்து ஆறுகள் பெருகி ஓடும்பொழுது ஆழமான பள்ளத்தாக்குகளில் நீர்பாயும். இவற்றை மறித்துக்கட்டி குளங்களே உண்டாக்கினர்கள். இவ்வாறு உயர்ந்த பூமியில் கட்டப்பட்ட குளத் திலிருந்து மதகுகள் மூலமாகத் தண்ணிரை வயல்களுக்குப் பாய்ச் சினர்கள். கால்வாய்களூடே நீர் பாய்ந்து வயலுக்குச் செல்லும். இம்மதகுகளேக் கல்லினலும் செங்கல்லினலும் அமைத்தனர். இதைத்தவிர பெரிய ஆறுகளுக்குக் குறுக்கே அணைகளைக் கட்டி நீரைக கால்வாய்கள் மூலம் பலமைல் துரத்திலுள்ள பெரிய நீர்த்தேக்கங்களில் சேமிப்பார்கள். தண்ணிரிற் கொஞ்சமாவது வீணுய்ப் போகவிடாமற் சிலசமயங்களிற் பல நீர்த்தேக்கங்களே உண் டாக்குவர். உயர்ந்த இடத்தில் ஒரு தேக்கமும், அதற்குப் பதிவான இடத்தில் மற்றெரு தேக்கமுமாக இவ்வாறு சங்கிலித் தொடர் போலத் தேக்கங்களே உண்டாக்கி ஒரு தேக்கத்தில் நிறைந்து வழியும் தண்ணிர் மற்றத்தேகத்திற் பாய்ந்து அங்கேயும் நிறைந்துவிட்டால் அடுத்த தேக்கத்திற் பாயக்கூடியதாக இருக்கும்.
நாட்டில் எவ்விதமாக விவசாய அபிவிருத்தி ஏற்பட்ட தென்ற விபரத்தை அறிவதற்கு இக்குளங்களின் வரலாறு இன் றியமையாதது. ஆனல், துரதிட்ட வசமாக இவற்றைப்பற்றி அறிந்துகொள்வதற்குப் போதிய சரித்திரக் குறிப்புகள் கிடையா. இக்குளங்களிற் பெரும்பாலானவை எக்காலத்திற் கட்டப்பட்டன், எவை முந்தியவை, எவை பிந்தியவை என்றே கூறமுடியாம லிருக்கிறது.
அனுராதகமத்திலும், மாகமத்திலும் நாளடைவிற் குடிசனத் தொகை அதிகரிக்கவே மிகப்பழைய குளங்கள் இப்பகுதிகளிற்றன் கட்டப்பட்டன. இப்பொழுது பசவக்குளம் என வழங்கப்படும் அபய வாவியும், திசாவாவியும், அனுராதகமத்திலுள்ள நுவரவாவி

qi ne@ # urmgleg) og

Page 30
42 இலங்கையின் பூர்வ சரித்திரம்
யுமே முதற்கட்டப்பட்ட குளங்களுள் மூன்றகும். வசபன் (கி.பி. 127-170) பதினெரு குளங்களையும் பன்னிரண்டு கால்வாய்களையும் கட்டினனெனக் கூறப்படுகிறது. அனுராதபுரிக்கு தென் கிழக்கே யுள்ள ஈருவாவி வசபன் கட்டியதாகவே கருதப்படுகிறது. முதலா வது தேதுதீசன் (கி.பி. 323 334 ஆறு குளங்களைக் கட்டுவித்தானென வும் அவனது தம்பியாகிய மகாசேனன் (கி.பி. 334 362) பதினறு குளங்களையும் மலைகளுக்கிடையிலிருந்து ஆரம்பமாகும் ஒரு வெட் டாற்றையும் வெட்டுவித்தானெனவும் கூறப்படுகிறது. இப்பதினறு குளங்களுளொன்று கந்தளாய்க் குளத்துக்குத் தெற்கேயுள்ள கவுடுலுவீவா என்பது. இன்னென்று மின்னேரியாக்குளம். தண்ணீர் நிறைந்திருக்கும்பொழுது இதன் பரப்பு 4560 ஏக்க ராகும். இதன் அணை 40 முதல் 50 அடி உயரமிருக்கும் இக்கா லத்தில் கட்டப்பட்ட கால்வாய்களுளொன்று அலஹாரா கால்வா யெனப்படும். இது 25 மைல் நீளமானது. மின்னேரியாக் குளத் தை இக்கால்வாய் அம்பன் கங்கை (காரகங்கை) யுடன் அலகாரா என்ற கிராமத்துக்குச் சமீபத்தில் இணைக்கிறது. அம்பன்கங்கை மாத்த%ளக் குன்றுகளில் உற்பத்தியாகி, நிறைந்த நீரைக்கொண்டு மாவலிகங்கையை நோக்கி ஓடுகிறது. அலஹாராக் கால்வாய் இந் நீரின் ஒரு பகுதியை மின்னேரியாக் குளத்துக்கு இட்டுச்செல்லு கிறது. இல்லையேல், இந்நீர் முழுவதும் மாவலிகங்கையில் விழுந்து வீணே கழியும். வசபணும் மகாசேனனும் கட்டிய குளங்களும் கால்வாய்களும் விவசாயத்தை முற்போக்கடையச்செய்து, அனுராத புரிக்கும் மாவலிகங்கைக்குமிடையில் குடிசனத்தொகையையும் விருத்திபண்ணியிருக்க வேண்டும். மின்னேரியாக் குளத்தினுல் நன்மையடைந்த சனங்கள் மகாசேனனை ஒரு கடவுளாக மதித்துப் போற்றினர்கள். உருகுணே நீர்ப்பாசனம் சம்பந்தமான குறிப்புகள் ஒன்றும் கிடைக்கவில்லை. மாகமத்தில் ஆதியில் திசாவாவியும், இக்காலத்தில் யோதவாவி என்று வழங்கப்படும் துரதிசாவாவி யுமே கட்டப்பட்டன. தீகவாவி என்ற திக்வாவியும் மிகப்பழையது. இது கல்முனைக்கு இருபது மைல் மேற்கேயுள்ளது. வளவைகங்கை, கிரிண்டிஒயா, மாணிக்க கங்கை, கும்பகர்ணஒயா ஆகிய நான்கு நதிகளையடுத்த நிலங்களில் பண்டைக்காலந்தொட்டே விவசாயம் நடந்துவந்தது. ஆறுகளையும் உபநதிகளேயும் மறித்து அணைசெய்து அந்த நீரைக் கால்வாய்கள் மூலம் குளங்கட்குப் பாயச்செய்தும் நேரே வயல்களுக்குப் பாயச்செய்துமே நீர்ப்பாசனம் நடைபெற்றது.

புராதன காலம் 43
இக்காலத்தில் இவ்வளவு குளங்களும் நீர்ப்பாசன வசதிகளு மிருந்தும் நாட்டில் நான்கு முறை பஞ்சமுண்டாயிற்று. முதலா வது பஞ்சம் அக்ககாயிக பஞ்சமென வழங்கப்பட்டது. இது துட்டகெ முனு காலத்தில் எற்பட்டது. கழங்காடுவதற்கு உபயோகமாகும் காய் களையே சனங்கள் உண்டு உயிர்வாழ்ந்ததால் இப்பஞ்சத்திற்கு இப் பெயராயிற்று. இரண்டாவது பஞ்சம் வலகம்பா காலத்திலுண் டானது. தீசன் என்ற பிராமணன் செய்த கலகத்துக்குப்பின் இப் பஞ்சம் உண்டாகி 12 வருட காலமாக முதல் மூன்று பாண்டிய ராட்சிக் காலம் வரை நிகழ்ந்தது. பஞ்சத்தின் கொடுமை அதிகமா பிருந்ததால் சில புத்தபிக்குகள் அனுராதபுரத்திலிருந்து இந்தியா வுக்குச்சென்று பஞ்சம் நீங்கி நாடு நாடாயினபின் திரும்பினர்கள். சிலர் மலையநாட்டுக்குச் சென்று அங்கே கிழங்கு, இலே ஆகியவற்றை யும் மது என்ற ஒரு வகைப் பழங்களேயும், தவிட்டையும், நீலோற் பலம், நீராம்பல் முதலியவற்றின் தண்டுகளேயும், வாழைத்தண்டை யும் சாப்பிட்டார்கள். பஞ்சத்தினுற் பலர் இறந்தனர். சிலர் நரமாமி சத்தையே உட்கொண்டு உயிர்வாழ்ந்தனர். குட்டநாகன் (248-249) காலத்திலும் பின்னர் பூரீ சங்கபோ (307-309) காலத்திலும் உண் டான பஞ்சங்கள் நாட்டிலே மழையில்லாது வற்கடஞ்சென்றதாலேற் பட்டன. குட்டநாகன் காலத்துப் பஞ்சத்தில் ஒரு நாழி சோறே ஒருவ ருக்குக் கிடைக்கக்கூடியதாயிருந்ததால் அது ஏகநீாழிக பஞ்சம் எனப்பட்டது.* கஷ்டநிவாரணத்திற்கு அக்காலத்தில் போதிய வசதி பில்லாதிருந்ததால் பஞ்சக்கஷ்டத்தைப் போதிய அளவு நிவர்த்தி செய்ய முடியாமலிருந்தது. தென்மேற்குப் பருவப்பெயர்ச்சிக் காற்று வீசுங்காலங்களில் மழையைப்பெறும் தென்மேற்குப் பகுதி யிலும், மத்திய பகுதியிலும், உணவுப்பொருள் உற்பத்தி அதிகம் நடைபெருததால், வடகிழக்குப் பருவக்காற்றை நம்பி விவசாயம் செய்யும் வடக்குப் பாகங்களிலும் தென்கிழக்குப் பாகங்களிலும் மழை பெய்யத்தவறிப் பஞ்சமுண்டாகுங் காலத்தில், அங்கிருந்து இப்பகுதிகட்கு உணவு அனுப்புவது முடியாது. அன்றி, இலங் கைக்கு வெளியேயிருந்து அரிசி இறக்குமதி செய்வதும் முடியாத காரியமாகவேயிருந்தது. \ஏனெனில், அயல்நாடுகளிலேயும் தமது தேவைக்கதிகமாக நெல் சyகுபடியாவதில்லை. ஆனலும், போக்கு வரவு சாதனக்குறைவினல் ஏற்றுமதிசெய்வது கஷ்டமாயிருந்தது.
* ஏககாழி- ஒரு நாழி : நாழி நாலு சிறங்கைகொண்டது.

Page 31
44 இலங்கையின் பூர்வ சரித்திரம்
உள்ளூரிலேயும் எற்ற போக்குவரவு சாதனங்களில்லாததால் அர சாங்கம் போதிய சகாய மளிப்பதற்கு இடையூறுண்டாயிற்று.
6. புத்தசமயமும் மற்றச்சமயங்களும்
ந்திய அத்தியாயத்திற் கூறியபடி புத்தசமயம் பிக்குகளின் சமய மாயிருந்தது. அதன் ஒரே ஒரு தாபனம் பிக்கு சங்கமா கும். அதன் வரலாறு பிக்குகளின் நடவடிக்கை சம்பந்தமானதே. இலங்கைக்கு வருமுன்னரே புத்தசமயத்தில் மூன்று பிரிவுகளிருந் தன. சீலம் சம்பந்தமாக சங்கத்தவரிடையே அபிப்பிராபேதம் ஏற்பட்டது. அதனல், புதிய கொள்கைகளுண்டாயின. வாக்கு வாதங்களேற்பட்டன. புத்தசமய! மக்களுடைய ஒழுக்கத்தை மாத் திரம் திருத்த எழுந்த ஒரு சமயமல்ல; ஆராதனைக்குரிய பல விஷ யங்களுமுண்டெனக் கூறப்பட்டது. இலங்கையிலும் புத்தசமயத்தில் இந்த முறையிற் பலமாற்றங்களேற்பட்டன. ஒரு சில நூற்றண்டுள் சீலம் சம்பந்தமாக அபிப்பிராயபேத மேற்படவே இலங்கையிற் பலகால் நிலவிவந்த தேரவாதக் கட்சியுடன் வேறு கட்சிகளும் தோன்றலாயின. வலகம்பா (கி.மு. 43-29) காலத்தில் பிக்குகள் இல்லறத்தார் வீடுகட்கு அடிக்கடி போகக்கூடாதென்ற பிரமாணத் தை மீறியதற்காக மகாவிகாரத்தைச்சேர்ந்த ஒரு வயோதிபப் பிக்கு சங்கத்திலிருந்து கலைக்கப்பட்டார். இகையறிந்த அப்பிக்குவின் சீட னுெருவன் சங்கத்தைவிடுத்து அடயகிரி விகாரத்தக்குச் சென்று வேருெரு கட்சியை ஏற்படுத்திஞன். இப்புதிய கட்சி தர்மருசி கட்சியென வழங்கப்பட்டது. கோலு அபா (கி.பி. 309-323) என்ற அரசனுடைய காலத்தில் சாகலிககட்சியென ஒரு கட்சி ஏற்பட்டது. இக்கட்சியைச் சேர்ந்த பிக்குகள் அபயகிரி விகாரததை விட்டுச்சென்று தக்கிண விகாரத்திலிருந்தார்கள். இவ்விகாரத்தை அடுத்த தாது கோபமே எல்லாளன் கல்லறை என வழங்கப்படுகிறது. மகேசன் காலத்தில் இக்கட்சியார் ஜேதவனராம விகாரத்தில் வசித்தார்கள்.
புத்தசங்கத்தில் இவ்வாறு எற்பட்ட பிரிவினுற் பொதுசனங்கள் பாதிக்கப்படவில்லை. கிறிஸ்தவ திருச்சபையைப்போல பொதுசனங் களையும், மதகுருமாரையும் ஐக்கியப்படுத்தும் ஒரு தாபனம் புத்த சமயத்திலில்லாததால், அவர்கள் புத்த சங்கத்தி லேற்பட்ட பிரிவுகளினுற் பாதிக்கப்படவில்2 . மிக்குகளுக்குப் பிச்சையிடுவ

புராதன காலம் 45
தும் அவர்கள் போதிக்கும் மார்க்கத்தில் ஒழுகுவதுமே தங்களின் கடமையெனப் பொதுசனங்கள் எண்ணியிருந்தார்கள்.
புத்தசமயத்திலேற்பட்ட பிரிவுகள் புத்தபகவானுடைய தன் மையை விள்க்குவதன லேற்பட்டன. இக்காலத்தில் புத்தபகவா னுடைய தாதுக்களையும், போதிவிருட்சத்தையும் வணங்கினர்கள். புத்தசமய வியாக்கியானங்கள் புத்தர் சாதாரண மனிதரைப் போன்றவரல்லவென்றும், அவருக்கு நரை திரை மூப்புக் கிடையா தென்றுங்கூறத் தொடங்கின. மகாயானவாதத்துடன் சம்பந்தப் பட்ட இன்னெரு கொள்கையும் இக்காலத்திலேற்பட்டது. மகா யானவாதத்தை வைதுல்யவாதமென்று இலங்கையிற் கூறுப. கி.பி. முதலாம் நூற்றண்டளவிற்றன் மகாயான புத்தசமயம் இந்தியாவிலுண்டானது. ஜாதகக் கதையில், புத்தர் தன்னலம் மறுத்துப் பிறர் நலங்கருதித் தொண்டுசெய்யும் போதிசத்துவ நிலை யை அடைவதற்காக நிர்வான நிலையைத் துறந்து புத்தநிலையை அடைய முயன்றரென்று கூறப்பட்டது. புத்தர் தமது சீடர்களே ஐம்புலனடக்கி ஆன்மவாழ்வைச் செம்மைப்படுத்தி விடுதலைக்கான அருகத நிலையை அடையுமாறும் புத்த நிலைக்கு முயலவேண்டா மென்றும் கூறியதாகத் திரிபிடகத்திற் கூறப்பட்டிருக்கிறது. கிறிஸ் தாப்தத்திற்கு முந்திய நூற்றண்டிற் சில பெளத்தசமயப் பிரிவி னர் ஒரு புதிய கொள்கையைப் பரப்பிஞர்கள். அதாவது, பெளத்த சமயிகள் அருகதந்லை யடைவதையே தமது இலக்காகக்கொள்ள வேண்டியதில்லை. புத் தரைப்போலவே அவர்களும் போதிசத்துவ நிலையை அடைந்து பிறருக்கு விடுதலையருளிப் பின்னர் புத்தத்துவ
மடையலாம் என்பதே.
இப்புதிய கொள்கை திரிபிடகத்திற் கூறப்பட்ட மார்க்கத்திற்கு வேறுபடாததா யிருந்தபடியால் ஆரம்பத்தில் ஒருவரும் இக் கொள்கையை எதிர்க்கவில்லை. ஆனல், சிலகாலத்துக்குப்பின் போதிசத்துவ இலட்சியத்தை உபதேசித்து வந்த சிலர் அருகததிலே யடையும் இலட்சியத்தைக் கண்டித்து அது ஹரீனயானம் (கீழான மார்க்க) மென்று கூறினர்கள். A... எல்லோரும் மே லான மார்க்கமான (மஹாயான) புத்தத்துவத்தை அடைய முயல வேண்டுமென்று உபதேசித்தார்கள். இது திரிபிடகக்கொள்கைக்கு மாறுபட்டத்ாயிருந்தது. திரிபிடகம் அருகத நிலையடைவதையே

Page 32
46 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இலட்சியமாகக்கூறும். எனவே, திரிபிடகத்தை அனுசரித்த தேர வாதிகட்கும், போதிசத்துவ இலட்சியத்தை ஆதரித்த மகாயானி. கட்குமிடையே பிணக்கு உண்டாயிற்று.
இக்காலத்தில் இந்தியாவில் இந்து சமயம் வேள்வியிலும் தெய்வவழிபாட்டிலும் மூழ்கியிருந்தது. வேள்விசெய்து தெய்வங் களைப் பிரீதிப்படுத்தினர்கள். சிவபெருமான், விஷ்ணு ஆகிய கடவு ளரை, வீடுபேறளிக்குந் தெய்வங்களாகக் கருதி வழிபட்டார்கள். பக்திமார்க்கம் பரவிற்று. இதனற் பாதிக்கப்பட்ட மகாயான பெளத்தர்கள் போதிசத்துவ நிலையை அடைவதற்கான மார்க்கத் தைப் புகழ்ந்ததுடன் நில்லாது, போதிசத்துவ நிலேயடைந்தோரை வழிபட்டால் அவர்களுடைய அனுக்கிரகம் கிடைக்குமெனவும் உப தேசம்பண்ணினர்கள். புத்தசமய சீலங்களே அனுட்டித்து வந்த சாதாரண சனங்கள் சிறு தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட்டேயிருந் தனர். போதிசத்துவர்களை வழிபடலாமென்ற கொள்கை பரவவே பழைய வாசனையின் பயனுக அவர்கள் போதிசத்துவ வழிபாட்டில் முனைந்தார்கள். விரும்பிய வரங்களைக்கூட வழிபாட்டினுற் பெற லாமென்ற கொள்கை பரவியதாலும் போதிசத்துவ வழிபாடு பல முற்றது. காலஞ்செல்லச்செல்ல புத்தர்களைப்பற்றிய இலட்சணமே மாறிற்று. விடுதலைக்கு வழிகாட்டிகள் என மதிக்கப்பட்டுவந்த புத்தர்கள் கடவுளராகவும் மதிக்கப்பட்டார்கள். எனவே, இந்துக் களது கடவுளரைட்போல புத்தர்களையும் பெளத்த சமயிகள் கடவு ளராக மதித்தனர்.
மகாயானசமயம் முதலில் இலங்கைக்கு வந்தபொழுது அதை ஒருவரும் ஆதரிக்கவில்லை. வீரதீசன் (கி.பி. 269- 291 , கோலுஅபா என்ற சிங்கள அரசர்கள் மகாயானசமயத்தைப் பரவவொட்டா மற் றடுத்தனர். சோழ நாட்டிலிருந்து பேயோட்டுவதில் வல்ல சங்க மித்தன் என்னும் மகாயான பிக்கு கோலு அபா காலத்தில் இலங் கைக்கு வந்தான். பின்னர், மகாசேனன் காலத்திலும் அவன் இங்கு வந்தான். அக்காலத்து மகாவிகாரத்திலிருந்த பிக்குகள் சரியான சீலங்களை உபதேசிக்கவில்லையென்று சங்கமித்தன் மகாசேனனிடம் குறைகூறி அப்பிக்குகளை ஆதரியாது விடுமாறு மகாசேனனைத் துண்டினன். இது காரணமாக மகாவிகாரம் சிறிதுகாலமாய் ஆதரவற்றிருந்தது. அன்றியும், மகாவிகாரக் கட்டிடத் தளபாடங்களிற் சிலவற்றை எடுத்துச்சென்று அபயகிரி

புராதன காலம் 47
விகாரத்திற் சில புதிய கட்டிடங்களை அமைத்தார்கள். மகாசேன னும் அபயகிரி விகாரையையே ஆதரித்தான்.
இக்சாலத்திற் பெளத்த சங்கம், சனங்களுடைய சமயவாழ் வைப்பற்றி அதிக அக்கரைகொண்டது என்பதற்குப் பலசான்றுகள் உண்டு. புத்தபகவானும் புத்தசங்கமுங் கூடச் சனங்கட்கு ஒழுக்க நெறியை உபதேசிப்பதிலேயே முதலில் முயன்றிருந்தார்கள். பின் னர், விக்கிரக வழிபாட்டு முறையை ஒட்டிப் பொதுசனங்கள் புத்த தாதுக்களுக்கும் போதிமரத்துக்கும் தீபாராதனைசெய்து மலர்தூவி வணங்கிஞர்கள். தாதுக்களை வழிபடுவதினுல் புண்ணியத்தை ஈட்ட லாமெனச் சனங்கள் நம்பியிருந்ததாய்ப் பாளி வியாக்கியானங்களே குறிப்பிடுகின்றன. எனவே, தாதுகோபங்களையோ, போதிவிருகஷங் களேயோ அழித்தல் பெரிய பாதகமாகக் கருதப்பட்டது. பொது சனங்கள் பெளத்த ஆசாரங்களை அனுசரிப்பதற்குச் சமயச்சடங்குகள் உற்சாகமூட்டினு, ஆகையாற்றன் சமயச்சடங்குகள் சிறிது சிறிதா கத தோன்றல்ாயின. -
பிரித்து ஒதும் வழக்கம் பிக்குகளிடையே சகசமாயிற்று. நாடோ றும் பெளத்த சமயிகள் அனுசரிக்கவேண்டிய சீலங்களைக் கூறும் பாளி சுலோகங்களை பிக்குகள் ஒதினர்கள். பில்லி, சூனியம் முதலியவற்றில் அதிக நம்பிக்கை வைத்திருந்த் சனங்களை அவற்றி னின்றும் விடுவிப்பதற்காக பிரித்தை ஒதினர்கள். பேயை ஒட்டுவ தற்கும், பைசாசத்தினற் பீடிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்குமாக வே பிரித்து ஒதப்பட்டது.
பெளத்தர்களேவிட, சில நிகந்தர்களும் ஆசீவகரும் அனுராத கமத்திலிருந்தார்கள். நிகந்தர் சமணசமயிகள். புத்தர்காலத்தி லிருந்த மகாவீரரே இச்சமயத்தின் தாபகர். கடுந்தவஞ்செய்வ தால் வீடுபெறலாமென மகாவீரர் போதித்துவந்தார். ஆசீவ கரும் புத்தர் காலத்தவர். இவர்கள் சிவனுேபாயத்தின் பொருட் டுத் துறவுபூண்டவர்களென இவர்களுடைய எதிரிகள் கூறுவார் கள். பிராமணரைப்பற்றியும், தேவாலயங்களேப்பற்றியும் கூறப் பட்டிருப்பதால் சிவ வழிபாடும் முருகன் வழிபாடும் இலங்கையி லிக்காலத்தில் இருந்திருக்க வேண்டும். பொதுசனங்களிடையே இயற்கைவழிபாடும், துர்த்தேவதைகளை வழிபடும் பழக்கமு மிருந்து வந்தது. மரங்களிற் தெய்வங்க ளுறைவதாகக் கருதி மரவழி பாடுஞ் செய்துவந்தார்கள்.

Page 33
48 இலங்கையின் பூர்வ சரித்திரம்
7. இலக்கியம் ரெழுத்துக்கலையை இலங்கைக்கு கொண்டுவந்தவர்கள் பெளத்த பிக்குகளேயானலும் girl sniff இரண்டு நூற்றண்டுகளாக அவர் கள் நூல்களே எழுதவில்லை. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட தேரவாதப்பிரமான நூலாகிய பாளிதர்மம் எழுத்தில் எழுதப்படவில்லை. கேள்வியளவிலேயே நிலவிற்று. குரு சீடனுக்கு உபதேசித்தான். சீடன் மறுபடி தனது சீடனுக்கு உபதேசித்தார். இவ்வாறு எழுதாமறையாக இருந்து வந்தது. தீசன் என்ற பிராமணன் நடத்திய உள்நாட்டுக் குழப்பத்தின் பின்னர் நாட்டிலே கொடிய பஞ்சம் உண்டாயிற்று. பாளிதர் மத்தை மனனம் பண்ணியிருந்த பல பிக்குகள் பஞ்சத்தில் மாண் டார்கள். சிலர் விநய பிடகத்திற் கூறப்பட்ட அனுட்டானங்களைப் பின்பற்ற முடியாமல், பிக்குநிலைமையைத் துறந்தார்கள். தமது நெறியிற் றவருமல் எஞ்சியிருந்த பிக்குகள் பாளிதர்மம் இவ்வாறு அழிந்து போமோவென அஞ்சி, கேள்வியில் மாத்திரம் இருந்து வந்த தர்ம நூல்களை எழுதிவைத்துவிட வேண்டுமென எண்ணி ஞர்கள். பஞ்சகாலத்தில் அனுராதபுரியை விட்டு மலேயரட்லிடமிற் போய் வசித்துவந்த பெளத்த சந்நியாசிகள் மாத்தளையிலுள்ள அலுவிகாரையில் பாளிதர்மத்தை எழுதினர்கள். எழுதி முடிந்த தும், சிங்களத்திலுள்ள விரிவுரைகளையும் எழுதி கி பி. முதலாவது அநுாற்றண்டின் மத்தியில் வேலையை முடித்ததாகத் தெரிகிறது.
அக்காலத்துச் சிங்கள பாஷைக்கும், எனைய ஆரிய பாகதங்
கட்கும் அதிக வித்தியாசமிருக்கவில்லை யென்பதற்கு அக்காலத்துச் சாசனங்களே சான்று பகரும்.* கி.பி. முதலாவது நூற்றண்டில்
* பழைய சிங்கள மொழி ஈழம் என வழங்கப்படும். இது வேத காலச் சமஸ்கிருத பாஷையுடன் நெருங்கிய தொடர்புடையது. நெடில் குறிலாவதும் ஒற்றுக்கள் மெலிதலும் வேதகாலச் சமஸ்கிருதத்திற்கும் சிங்களத்துக்குமுள்ள முக்கியமான "வித்தியாசமெனலாம். உம் : சமஸ்கிருதத்தில் பார்யா என்றது பாளியில் பரியா என்றும் சிங்களத்தில் பரிய என்றும் மாறு : , இரட்டித்த ஒற்று ஒன்முகி விடுகிறது. உதாரணமாக சமஸ்கிருதத்தில் தர்ம ரகூதித என்ற சொல் பாளியில் தம மரக்கித என்று நின்று சிங்களத்தில் த மரகித் என் மு கிறது. சில இடங்சளில் மெல்லினம் கெட்டுப்போய் விடுகிறது. சமஸ்கிரு தத்திலும்பாளியிலும் 'சங்க’ என்று நிற்குஞ் சொல்லு சிங்களத்தில்
’ வாக மாறு
“gegE ”? என்று கிற்கிறது. “ஸ’ என்ற எழுத்து சிங்களத்தில் ‘ஹ கிறது. இவ்வாருன, திரிபுகள பாளிபோன்ற ஏனைய ஆரிய பாகதங்களிலுங் காணப்பட்டாலும் சிங்கள பாஷையிற்முன் இவை அதிகம்.

புராதன காலம் 49
சிங்கள இலிபியிலேயும் பெரிய மாற்றத்தைக் காண்கிருேம். அது வரை சிங்கள இலிபி அசோக சாசனங்களையே பின்பற்றி வந்ததென் էմֆl பாறைகளிற் செதுக்கப்பட்ட சிலாசாசனங்களைக்கொண்டு அறியக் கூடியதாயிருக்கிறது. கி.பி. முதலாவது நூற்ருண்டில் இவ்வாறு சிங்கள இலியியில் எற்பட்ட மாற்றங்கள் ஆந்திரராச்சியத்திற்
காணப்பட்ட சிலாசாசனங்களைப் பின்பற்றியே எழுந்தன.
8. மனைக்கலையும் சிற்பமும்
@॰ வந்த பெளத்த சந்நியாசிகள் முதலில் அனுராத புரியிலுள்ள மிகிந்தலை, வெஸ்ஸகிரி, ஈசுரமுனி போன்ற குகைகளிலும், மாணிக்ககங்கைக்குப் பக்கத்திலுள்ள சிதுல்பகுவ என்ற குகையிலும் அனுராத புரியிலுள்ள மகாமேகவனம் போன்ற சோலைகளிலும் வசித்து வந்தார்கள். பின்னர் சிறிது காலத்தில் துபாராம என்ற தாதுகோபம் கட்டப்பட்டது. அனுராதபுரிக்குத் தெற்கே இன்றும் காணப்படும் வெள்ளால விருட்சம் அப்பொழுது தான் நாட்டப்பட்டது. கி.மு. முதலாவது நூற்றண்டிலேயே வடக் கிலும் பின்னர் தென்கிழக்கிலும் விகாரங்கள் கட்டப்பட்டன. கி.பி. முதலாவது நூற்றண்டின் பின் குகைகள்ல் வசிக்கும் வழக்கம் சிறிது சிறிதாக நீங்கிற்று. மகா விகாரமும், வலகம்பாவினற் கட்டப்பட்ட அபயகிரி விகாரமும், மகாசேனன் கட்டிய சேதவன ராமயவும் அனுராதபுரியிலுள்ள பேர்போன புராதன விகாரங்க ளாகும். திசமகாராமயா என்றது மாகமத்திலுள்ள மிகப்பழைய விகாரமாகும். மகாவிகாரம் கல்வியபிவிருத்திக்குப் பேர்போனது. அக்காலத்தில் மிக வைதீகமான பிக்குகள் இவ்விகாரத்திற்றன் வசித்து வந்தார்கள். புதிய கொள்கைகளே ஆதரித்தவர்களுக்கு அபயகிரி விகாரமும் சேத்வனுராமவுமே இருப்பிடமாயிருந்தது. இவ்விகாரங்கள் விஸ்தாரமாகக் கட்டப்பட்டதால் ஏராளமான பிக்கு கள் இங்கே வசித்தார்கள். மகாவிகாரத்தின் மனைக்கட்டு துபா ராமாவிலிருந்து எல்லாளன் சமாதியென வழங்கும் தக்கின விகாரம் தாதுகோபம்வரை பரந்திருந்தது என்றல், அக்காலத்து
விகாரங்களின் விஸ்தீரணத்தை பூகித்துக் கொள்ளலாம்.
கிறிஸ்தாப்தத்தின் ஆரம்பத்திற் கட்டப்பட்ட விகாரங்கட்குக் கல்லினுல் அஸ்திவாரம் போட்டார்கள். மேற்றளத்தை மரத்தி தினலும், களியினலும், செங்கல்லினலுங் கட்டினர்கள். அனு

Page 34
qn , Howe soo“Tīru æg) olio gaernra ?
 

புராதன காலம் 5.
ராதபுரியிலுள்ள பர்முடைந்த கட்டிடங்க்ளே இதற்குச் சான்று பகரும். பிக்குகள் தங்குமிடம், போசன சாலை, உபோசாத மண்டபம் என மூன்று பகுதிகளே இக்கட்டிடங்களிற் காணலiம். உபோசாத மண்டபத்தில் பெளர்ணிமை அமாவாசை விரத தினங்க ளாகிய ‘போய’ தினங்களிற் சங்கம் கூடிப் பஞ்சசீலத்தை ஒதும். மகாவிகாரத்தின் ஒரு பகுதியாயிருந்த பித்தளே மண்டபமே உபோ சாத மண்டபத்திற்குச் சிறந்த உதாரணமாகும்.
ஒவ்வொரு விகாரத்தின் வளவுக்குள்ளும் ஒரு தாதுகோப முண்டு. அனுராதபுரியிலுள்ள மகாவிகாரத்துக்குச் சொந்தமான ரூவான்வெலிசாய தாதுகோபமே அக்காலததில் மிகப்பேர் போனது. மத்திய இந்தியாவில் சாஞ்சியிலுள்ள தாதுகோபங்களைப் பின்பற்றியே இதுவும் கட்டப்பட்டது. இக்காலத்திற் கட்டப்பட்ட தாது கோபங்கள்ெல்லாம் அநேகமாகச் சாஞ்சியைப் பின்பற்றியேயெழுந் தன. தெற்கேயுள்ள திசமகாராமயா என்ற தாதுகோபத்தை ஈழ நாகன் (கி பி. 96-103) கட்டுவித்தான். கஜபா (கி.பி. 174-196) அபயகிரி தாதுகோபத்தை விஸ்தரிப்பித்தான். அதனல், அக்காலத் துத் தாதுகோபங்களுள் அதுவே பெரியதாயும் எகிப்திலுள்ள கீஸ்ே யின் மூன்றம் பிராமிதத்திலும் பார்க்கப் பெரிதாயுமிருந்தது. கள னியிலுள்ள தாதுகோபமும் அக்காலத்தைச் சேர்ந்ததே. எனவே, அரசரும் குறுநிலமன்னரும் தங்கள் தங்கள் தலைநகரிலேயே பெரிய தாதுகோபங்களைக் கட்டுவித்தார்கள். அக்காலத்து இராசாக்களின் செல்வ நிலையையும், தொழிலாளரை ஒருங்கு சேர்த்து வேலை செய் விக்கும் திறமையையும் இவை சுட்டிக்காட்டுகின்றன.
தாது கோபத்தைச் சைத்தியம் என்றும் தூபி என்றும் கூறுவது வழக்கம். இவை பெளத்த சகாப்தத்திற்கு முந்தியவை. பற்பல உருவத்தில் இவை கட்டப்பட்டு வந்தன. தூபாராம தாது கோபம் முதலில் நெற்சூட்டின் வடிவாகக் கட்டப்பட்டது. மற்றவை அரைக்கோள வடிவிற் கட்டப்பட்டிருந்தன. இவை சதுர வடிவ மான அல்லது வட்டவடிவமான மேடையிற் கட்டப்பட்டன. அடிப் பாகத்தில் அகன்ற படிபோன்ற மூன்று தளங்களிஞ்ந்தன. மூன் ருவது தளத்திலேதான் கோபுரம் நிறுவப்பட்டது. கோபுரத்துக்கு மேல் நாற் சதுரமுள்ள ‘ஹதரஸ் கொட்டுவ’ என்ற சதுரக்கோட் டையுண்டு. அதற்கு மேல் கூர்முனைக் கோபுரத்தின் வட்டவடிவ

Page 35
அநுராதபுரத்தின்
Lulth
பசவககுளம் (அபயவர்.பி)
ge*** Æ?ti
ఢిఫణి
இலங்கை அரசினர் புராதனக்கட்டட பரிபாலன பகுதியாரின் அலு மதியுடின், அவர்கள் தயாரித்த படத்தை யொட்டி வரையப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புராதன காலம் 53
முள்ள அடித்தளமான தேவதைக் கோட்டை கட்டப்பட்டது. ஆரம் பத்தில் இக்கூர்முனைக் கோபுரம் ஒரு கற்றுண்மேற் குடைவடிவமா யமைக்கப்பட்டது.
இதுகாறும் பெளத்த பிக்குகளின் இல்லங்களைப் பற்றிக் கூறி னுேம். பொதுசனங்கள் வசித்த மனைகளைப் பற்றிய் அடையாளங்க ளொன்றுங் கண்டுபிடிக்கப்படவில்லை. பொதுசனங்கள் ஒன்றில் குகைகளில் வசித்திருக்கவேண்டும். அல்லது இலேசாயழியக்கூடிய பொருள்களாலமைந்த வீடுகளில் வசித்திருக்கவேண்டும். சமய
மாயாதேவி கண்ட கனவு
சம்பந்தமான மேற்கூறிய கட்டிடங்களைத் தவிர அனுராதபுரி யரணுள் கட்டப்பட்ட அரச மாளிகையையுங் கூட கன்னதீசன் (கி.பி. 16-38) கட்டிய நகர மதிலையுமே மகாவமிசம் கூறுகிறது. வேறு கட்டிடங்களை அது குறிப்பிடவில்லை. வசபன் (கி.பி. 127-171) மேற் கூறிய மதிலை 25 அடிக்கு உயர்த்திக் கட்டுவித்தானெனவும் மகா வமிசம் கூறும்.
கட்டிடக்கலை இவ்வாறு அபிவிருத்தியடையச் சிற்பத்திலும்
ஊக்கமுண்டாயிற்று. சுண்ணப்பாறையிற் செதுக்கப்பட்ட அக்காலத்

Page 36
54 இலங்கையின் பூர்வ சரித்திரம்
துச் சிற்பங்கள் சிலவே இப்பொழுது கிடைத்திருக்கின்றன. இவை கிருஷ்ணுநதிக் கரையிலுள்ள நாகார்சுனகொண்டை அமராவதி ஆகிய இடங்களிற் காணப்படும் ஆந்திர சிற்பமுறையிலேயே அமைந் திருக்கின்றன. சிராவத்தியில் நடந்த பெரிய அற்புதச் செயலைக் காட்டும் சித்திரமும் மாயாதேவியின் கனவைக் காட்டுவதும் (கொழும்பு நூதனசாலை இலக்கம் 46A 468) தென்னிந்தியாவி லிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டவையெனவே தெரிகிறது. இம்முறையிற் செதுக்கப்பட்ட ஏனைய சிற்பங்கள்,சேதவனுராம தாது கோபத்தின் பலிபீடத்தை அலங்கரிப்பதற்காக இலங்கையிலேயே சித்திரிக்கப்பட்டவை . இவைக்கு உதாரணம் நாகராஜனையும், எழு தலை நாகத்தையும், குருமூர்த்தியாய்த் தோன்றும் போதிசத்துவ ரையும் குறிக்கும் சித்திரங்களாகும்.
9. இந்திய, கிரேக்க இலக்கியங்களில் இலங்கையைப் பற்றிய கூற்றுக்கள்
@*"ವ್ಲಿ' நான்கு இந்திய நூல்களில் இலங்கையைப் பற்றிக்
கூறப்பட்டிருக்கிறது. இலங்கை, இயக்கரும் மனிதர் இனத் தைச் சேராத மோகினிகளும் வசிக்கும் தீவென இந்நூல்களின் ஆசிரியர்கள் நினைத்தார்கள். வலாகஸஜாதகம் என்ற நூல் இலங் கையை தாம்பிரபர்ணி என்ற பெயர்கொண்டழைக்கும்; இதில் நாக தீபம், கல்யாணி என்ற இடங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இயக்கினி கள் என்ற இராட்சதப் பெண்களே இத்தீவிற் குடியிருந்ததாக இந் அநூல் கூறும். கி.பி. இரண்டாவது நூற்றண்டிலே வடமொழியி லியற்றப்பட்ட திவ்வியாவதானம் என்னும் பெளத்த இலக்கிய நூலிலே இலங்கை தாமிரதுவீபம் என்றழைக்கப்பட்டுள்ளது. இதில் சிங்களன் என்ற பெயருடைய ஒரு வணிகன் மகன் இலங் கைக்கு வந்து அங்கிருந்த இயக்கினிகளை வென்று இத்தீவை யாண்ட தாக ஒரு கதை கூறப்பட்டிருக்கிறது. இவ்வாருன, கதைகளிலிருந்து தான் விசயன், குவேனி வரலாறுகள் முளைத்திருக்கவேண்டும். இந் திய இதிகாசங்களுளொன்றன இராமாயணத்திலும், இலங்கையைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை இராக்கதர் தேசமென்றும்,
* இயக்கினி என்ற சொல் அடிக்கடி ராக்ஷவலி என்பதற்குப் பதிலாக உபயோகிக்கப்பட்டு வருகிறது. சிங்களனுடைய இலங்கை விஜயம் அஜந்தா குகைச் சித்திரங்களில் வரையப்பட்டிருக்கிறது.

புராதன காலம் 55
இராவணன் அவர்களுக்கு அரசனென்றும் இராமாயணம் கூறு வதை நாம் அறிந்திருக்கிருேம். பெளத்த கலியான தர்மம் இலங்கைக்கு வந்த வரலாற்றிைப்பற்றிக்கூறும் சத்தர்ம லங்காவ தார சூத்திரம் என்ற நூல் இராவணன் பெளத்தசமயத்தை அனுட்டித்தான் எனக்கூறும்.
இராவணன்
இந்திய ஆசிரியர்கள் சமயசம்பிரதாயத்தையொட்டி இலங்கை யைப்பற்றி எழுதிய வரலாற்றுக்கும். இரேக்க வியாபாரிகள் இலங் கையைப்பற்றிக் கூறியுள்ள குறிப்புக்களுக்கும் அதிக வித்தியாச முண்டு. பெரிய அலெக்ஸாந்தர் காலந்தொட்டே இலங்கையைப் பற்றி கிரேக்கர்கள் குறிப்பிட்டு வந்தார்கள். தபிரபோன்’ என் பதே (தாமிரபர்ணி) கிரேக்கர் இத்தீவுக்கிட்ட பெயர். பாரசீகக் குடாக்கடலிலிருந்து கரையோரமாக இந்திய மேற்கரைவரை பிர்

Page 37

புராதன காலம் 57
யாணஞ்செய்யும் வர்த்தகர்களுக்கு உதவியாக கி.பி. முதலாவது நூற்றண்டில் எழுதப்பட்ட பெரிப்புளுஸ் என்னும் கிரேக்க நூலில் இலங்கையின் பிரதான நகரம் பலேசிமுண்டு எனவும் முத்து, இரத்தினம், மஸ்லின், ஆமை ஒடு முதலியன இங்கிருந்து பிற நாடுகட்கு ஏற்றுமதி செய்யப்பட்டன எனவும் கூறப்பட்டிருக்கிறது. இலங்கை ஆபிரிக்காவரை பரந்திருந்ததாகவும் தீவின் விஸ்தீர ணத்தை மிகைப்படுத்திக் கூறியிருக்கிறது. கி.பி. இரண்டாவது நூற்றண்டில் எகிப்தில் இருந்த கிரேக்க வானசாஸ்திரியும் பூமி சாத்திரத்திற் சிறந்த பயிற்சியுடையவனுமான தலமி என்பவன் இலங்கையை சலிஸ் என்ற பெயர்கொண்டழைத்தான். அரிசி, இஞ்சி, நீலமணி, கோமேதகம், பொன், வெள்ளி, யானை முதலிய பொருட்கள் இலங்கையில் உண்டெனவுங் கூறியிருக்கிருன்.
இக்கூற்றுக்களை முழுவதும் உண்மையாக நம்பிவிடக்கூடாது. எனெனில், இலங்கையைப்பற்றி கிரேக்கர்கள் செவ்வனே அறிந் திருக்கவில்லை. எனினும், தலமி வரைந்த இலங்கைப் படத்தில் மலையரட்டை, அனுராதகம, மாவலிகங்கை முதலிய இடங்கள் சரி யாகவே குறிக்கப்பட்டிருப்பதால் கி.பி. இரண்டாவது நூற்றண்டில் இலங்கையின் உள்நாட்டைப்பற்றி ஒரளவுக்கேனும் கிரேக்கர் அறிந் திருந்தார்களெனத் துணியலாம்.

Page 38
மூன்ரும் s9 த் தியாயம்
மத்தியகால முற்பகுதி
இர்த்தி பூரீ மேவன் (கீர்த்தி பூரீ மேகவர்னன்) கி.பி. 362-ல் அரசு கட்டிலேறிஞன். இவன் மகா சேனன் மகன். மத்தியகால முற்பகுதிச் சரித்திரம் இவன் காலத்தில் ஆரம்பமாகி சோழர் இலங் கையைக் கைப்பற்றிய ஐந்தாவது மிகுந்து காலத்துடன் முடிகிறது. சோழர் வெற்றி 1017-ல் நடைபெற்றது.
மத்தியகால முற்பகுதியில் அரசியல் முன்னேறிற்று. விவசாயமும் நீர்ப்பாசனமும் விருத்தியடைந்தன. இலங்கையில் பெளத்த சமயம் வளர்ச்சியுற்றது. வட இந்தியாவின் நாகரிகம் இலங்கையைப் பாதித்ததுடன் தென்னிந்திய படையெடுப்பினலும் மாற்றங்களுண்டாயின. புராதன காலத்திலும் இந்திய நாகரிகத் தினுல் இவ்வாறே இலங்கை பாதிக்கப்பட்டதெனினும், வட இந்தியா வில் நிகழ்ந்த சில சம்பவங்களின் பயனக கலாசாரத்திலே பெரிய மாற்றமுண்டானது. வட இந்தியாவின் பெரும் பாகத்தைத் தனது ஆணைக்குட்படுத்திய சமுத்திரகுப்தன் (கி.பி. 335-385) என்ற இந்திய சக்கரவர்த்தி இந்து சமயத்தைப் புனருத்தாரணஞ்செய்து சமஸ்கிருத கல்விக்குப் புத்துயிரளித்தான். எனவே, இவனட்சியிற் புதிய சகாப்தமொன்று தோன்றிற்று கீர்த்தி பரீ மேவன் இக்குப்த மன்னன் காலத்தவன். சமுத்திரகுப்தனுேடு இவன் நட்புடைய வனயிருந்தான். எனவே, இக்காலந்தொட்டு சோழர் படையெழுச் சிக் காலம்வரை இலங்கை குப்தர் நாகரிகத்திலிடுபட்டிருந்தது. கீர்த்தி பரீ மேவன் காலந்துவங்கி ஐந்தாவது மிகுந்து காலம்வரை யுள்ள காலம் இலங்கைச் சரித்திரத்தில் வட இந்திய காலப்பகுதி யைச் சேர்ந்ததெனினும், புராதன காலப்பகுதியிலிருந்து வேறு பாடுடையதென்பதில் ஐயமில்லை.
58

மத்தியகால முற்பகுதி 59
1. வட இந்தியா
இ..ெ மூன்றவது நூற்றண்டின் மத்திய பகுதியில் ஆந்திர இராச்சியம் நிலைகுலைந்தது. அக்காலந்தொட்டு குப்தர் காலம்வரை வடஇந்தியாவிலாவது, தக்கிணத்திலாவது பெரிய வல் லரசுகள் ஆட்சி நடத்தவில்லை. கி.பி மூன்ருவது நூற்றண்டின் பிற்பகுதியில் பாடலிபுத்திரத்தில் குப்தவமிசத்து முதலரசன் ஆட்சி நடத்தியிருக்கவேண்டும். குப்தவமிசத்துக்குத் திலகம்போன்றவன் சமுத்திரகுப்தன். இந்தியாவில் ஆண்ட பெரிய சக்கரவர்த்திகளுள் இவன் திறமையும் பல்கலைப் பயிற்சியுமுடையவன். அசோக சக்கர வர்த்திக்கு முற்றும் மாறன சுபாவமுடையவன். தான் போரில் ஈட்டிய வெற்றிகளைப் புகழ்ந்து இவன் ஒரு சாசனம் செய்திருக் கிறன். கங்கைநதிப் பள்ளத்தாக்கிலுள்ள தனது அயல் மன்னரின் இராச்சியங்களே முதல் வெற்றிபெற்றபின் தெற்குநோக்கிப் படை யெடுத்து வந்ததாகவும் கிருஷ்ணுநதி தீரத்தில் இவனது படையை காஞ்சியில் ஆண்ட பல்லவ அரசன் தலைமையில் வந்த பல மன்ன ருடைய சேனைக்கூட்டம் தடுத்ததென்றும் மேற்கூறிய சாசனத்தி லிருந்து தெரிகிறது. இந்தியாவின் பெரும்பகுதியைத் தன்னடிப் படுத்தச் சமுத்திரகுப்தனல் முடியாமற் போனபோதிலும், அவனது தலைமையைப் பொதுவாக எல்லாரும் ஒப்புக்கொண்டார்களென் பதில் ஐயமில்லை. தனது இராசதானிக்கு நெடுந்துரத்திலுள்ள சிங்களர்கூடத் தனக்கு வணக்கஞ் செலுத்தியதாக அவன் கூறு கிறன்.
இவன் தனது வெற்றிப் பிரதாபங்களினல் புகழீட்டியதுமல்லா மல் ஒரு சிறந்த கவியெனவும், சங்கீத வித்துவானெனவும் கீர்த்தி பெற்றிருக்கிருன், சமுத்திரகுப்தனுக்குப் பின் அரசாண்ட விக்கிர மாதித்தன் காலத்தில் இந்திய நாகரிகமும் கலையும் உச்சநிலையை அடைந்தன. விக்கிரமாதித்தன் என்பது இரண்டாவது சந்திரகுப்த னின் (கி.பி. 385-413) பட்டப்பெயராகும். இவன் தனது இராச்சி யத்தை மேற் கடல்வரை விஸ்தரித்து உச்ன்சனியை இராச தானியாகக்கொண்டு ஆண்டு வந்தான். பல புலவோரும் அறிஞ ரும் இவன் அவைக்களத்தை அலங்கரித்தார்கள். மகா கவிகாளி தாசர் இவ்வரசன் காலத்தவரே.

Page 39
60 இலங்கையின் பூர்வ சரித்திரம்
குப்த மன்னராட்சியில் இந்தியா ஒருபோதும் அடையாத சிறப் பைப் பெற்றது. அரசருடைய ஆதரவைப் பெற்று புத்த சமயமும் இந்து சமயமும் முன்னேற்றமடைந்தன. சாத்திரங்கள் பெருகின. இலக்கியம், சிற்பம், கட்டுக்கலை, ஓவியம் முதலிய நற்கலைகள் உயர் நிலை யடைந்தன. கல்விமான்கள் சமஸ்கிருத பாஷையையே வழங்கினர்கள். குப்த சாசனங்களெல்லாம் சமஸ்கிருதத்தில் எழு
சிங்களன கப்பல் விட்டிறங்குவதைக் காட்டும் சித்திரம்-அஜந்தாக் குகையிலுள்ளது
தப்பட்டன. மகாபாரதம், இராமாயணம் என்ற இதிகாசங்களும், மனுதர்ம சாத்திரம், கெளடில்லியரின் அர்த்த சாத்திரம் ஆகிய நூல்களும், சரித்திர வரலாறுகளடங்கிய புராணங்களும் குப்தர் காலத்திற்றன் திருத்தமுற்று இன்றையநிலையை அடைந்தன. சாகுத்தலம் என்றபெரிய நாடகத்தையும், இரகுவமிசம், இரு து சங்காரம், மேகதூதம் ஆகிய நூல்களையும் காளிதாசர் இயற்றி
 
 
 
 

மத்தியகால முற்பகுதி 6.
னர். வியக்கத்தக்க வடிவழகும், உன்னதமான நிலையமைவும், தனியமிசங்களே விவரிப்பதில் அடக்கமும் பொருந்திய சிறந்த சிற்பங் கள் தோன்றின் அஜந்தாக் குகைகளிற் காணப்படுவனபோன்ற அபூர்வமான ஒவியங்கள் தீட்டப்பட்டன.
கிழக்கே இந்தியாவே தலைமை பூண்டது. உரோம சக்கரவர்த் திகளோடும் பாரசீக சக்கரவர்த்திகளோடும் சீன சக்கரவர்த்திக ளோடும் இந்தியா தொடர்பு வைத்துக்கொண்டது. பாஹியான் போன்ற சீன யாத்திரீகர் இந்தியாவுக்கு வந்தார்கள். குமார சீவன்போன்ற இந்திய சாதுக்கள் சீன சென்றனர். இந்திய செல் வாக்கு அவ்வளவு பரந்திருந்ததால் ஆசியாவிலுள்ள பல தேசங் களும் இந்தியாவையே முன்மாதிரியாகக் கொண்டன. ܫ
உள்நாட்டுக் கலகங்களே அடக்கி ஹூணரின் படையெடுப்பைத் தடுத்து ஆட்சிசெய்த ஸ்காந்த்குப்தன் கி.பி. 470-ல் இறந்ததும் குப்தர் சிறப்பு ஒடுங்கிற்று. பின் ஆண்ட அரசர்கள் ஹஜினர் படை யெடுப்பினல் தமது இராச்சியங்களிற் பலவற்றை இழக்க நேரிட்டது. பாடலிபுத்திரத்திலிருந்து அதனைச் சுற்றியுள்ள ஒரு சிறிய இராச்சி யத்தை குப்தர்கள் கி.பி. எழாம் நூற்ருண்டுவரை ஆண்டிருக்க வேண்டும். ஹர்ஷன் காலத்து இந்தியாவுக்கு வந்த ஹியூன்ரிசங் என்ற சின யாத்திரீகராற் குறிப்பிடப்பட்ட நாலந்த" என்னும் பேர் போன பெளத்த சர்வகலாசாலையின் கோவிலை முதன்முதல் நிர்மா ணித்தவன் இவ்வாறு ஆட்சிபுரிந்த குப்தருள் ஒருவனகிய நரசிங்க குப்தனே.
ஹஇணர் வ்ட இந்தியாவில் சிலகாலமே ஆட்சி நடத்தினர். அவர்களது வலிகெடவே புதிய பல அரச வமிசங்கள் தோன்ற லாயின. டில்லிக்கு வடக்கேயுள்ள தானேசர் என்ற இடத்தில் வர்த்தனர் என்ற வமிசத்தவர் ஆட்சி செய்தார்கள். மகாராட்டி ரத்தில் சாளுக்கிய மன்னர் கோலோச்சினர். ஏழாவது நூற்றண்டி னரம்பத்தில் ஹர்ஷர் (606-647) என்ற மன்னன் தானேசரில் அரசனகி வட இந்திய அரசருள் முதன்மை பெற்றன். பின்னர் இவன் தெற்குநோக்கிப் படையெடுத்துச் சென்றபொழுது நர்மதை ஆற்றுக்குச் சமீபத்தில் சாளுக்கிய மன்னனன இரண்டாவது புலி கேசன் இவனை மேற்செல்லவிடாது தடுத்தான்.

Page 40
62 இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஹர்ஷன் புத்த சமயத்தை அனுசரித்துச் சமய வளர்ச்சியி லீடுபட்டிருந்தான். இவன் மகாயான வாதிகளை ஆதரித்து அதை இந்தியாவெங்கும் பரப்ப உதவிபுரிந்தான். இவன் இறந்ததும் வடஇந்தியாவிற் பல சிற்றரசுகள் தோன்றின. இவை தம்முட்தாம் கலாம்விளேத்து வருகையில் வட இந்தியக் கணவாய்வழியாக முக மதியர் வந்து கொஞ்சங்கொஞ்சமாக அப்பிரதேசம் முழுவதையும் கைப்பற்றினர்கள்.
2. தென்னிந்தியா
சென்ற அத்தியாயத்தில் சங்கநூல்களைப் பற்றியும் தென்னிந்திய நாகரிகத்தைப் பற்றியும் குறிப்பிட்டோம். கலேபரர் என்ற ஒரு இனத்தவர் தென்னிந்தியாவை வென்று அடி படுத்தினர். இவர்களைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. கி.பி. ஆருவது நூற் ருண்டின் இறுதியில் கடுங்கோன் என்ற பாண்டிய மன்னன் பாண்டிநாட்டைக் கைப்பற்றினன். சோழநாட்டை, காஞ்சியிலிருந்து ஆண்ட சிங்கவிஷ்ணு என்னும் பல்லவ மன்னன் வென்றன். கடுங் கோன் மரபினர் ஒன்பதாவது நூற்றண்டினிறுதிவரை ஆட்சி நடத்தினர்கள். இவர்களுள் மிக்க கீர்த்திவாய்ந்தவன் பூரீ மார பறீ வல்லபன். (815-860) தனது ஆட்சிக்கால ஆரம்பத்தில் இவன் அயற்றேசத்தரசரையெல்லாம் வென்றன். ஆனல், கடைசிகாலத் தில் தோல்விக்குமேற் றேல்வியுண்டானது. இவன் பின்னண்ட அரசனைப் பல்லவர் தோற்கடித்து விட்டார்கள். இவ்வாறு பாண்டிய ராதிக்கம் வலிகுன்றிப் பத்தாவது நூற்ருண்டில் சோழராச்சியத் துடன் சேர்க்கப்பட்டது.
கிருஷ்ணுநதிக்கு மேற்கேயுள்ள தேசங்களே கி.பி. ஆருவது நூற்றண்டின் மத்தியிலிருந்து எட்டாம் நூற்றண்டின் மத்திய காலம் வரை மேலைச்சாளுக்கியர் ஆண்டார்கள். எழாவது நூற் ருண்டு துவங்கிப் பல்லவ மன்னர் இவர்களுடன் ஒயாமற் சண்டை செய்து வந்தார்கள். பல்லவருள்தலை சிறந்த மன்னன் நரசிங்க வர்மன் மகாமல்லன் (சுமார் 625-660), ஹர்ஷனின் தெற்குவிஜ யத்தை நர்மதைதிரத்திற்றடுத்த மேலைச்சாளுக்கிய மன்னருள் தலை சிறந்தவனுன இரண்டாவது புலிகேசனை (609- 642) நரசிங்கவர்மன் போரிற் புறங்கண்டு வெற்றிகொண்டான். இந்த யுத்தங்களினல்

மத்தியகால முற்பகுதி 63
இருவர் பலமும் வீழ்ச்சியுற்றது. பல்லவர் ஆதிக்கம் ஒன்பதாம் நூற்றண்டினிறுதியில் மறைந்தது.
சமயம், இலக்கியம், கட்டுக்கலை, சிற்பம் முதலியன தென் னிந்தியாவில் பல்லவர் காலத்தில் மிக முன்னேற்றமடைந்தன. பல்லவர் சைவ சமயத்தையும் வைணவ சமயத்தையும் ஆதரித் தார்கள். சைவநாயன்மாரும் வைணவ ஆழ்வாரும் இக்காலத் திற்ருன் திகழ்ந்தனர். தேவாரம், திருவாய்மொழியாகிய தமிழ் வேதங்க ளெழுந்தன. புத்த சமணசமயங்கள் வலிகுன்றின. தென்னிந்தியாவில் முதன்முதற் கல்லினுற் கோவிலமைத்தவர்கள் பல்லவரே, கற்பாறைகளைக் குடைந்து கோவிலமைத்தார்கள். தனிக்கல்லில் கோபுரம் செதுக்குவித்தார்கள். கல்லினற் கோவில் சமைத்தார்கள். சென்னைக்குத் தெற்கேயுள்ள மகாமல்லபுரம் என்றழைக்கப்படும் மகாபலிபுரத்தில் இவர்களுடைய சிற்பத்திற மைக்கறிகுறியாக அநேக கோவில்களிருக்கின்றன. தனிப்பாறை பிற் குடைந்த அழகிய ஏழு கோவில்களையும், ஒரு கற்பாறையில் வெகு கைத் திறனேடு செதுக்கப்பட்ட சிற்பக்காட்சிகஃயுெம், கல்லி ணுற் பல்லவ சிற்பமுறையிலமைந்த ஒரு கோவிலையும் அங்கே 51760)76) iTlf.
பல்லவர் வலிகுறையவே சோழராதிக்கம் தலையெடுத்தது. சோழர் தமது சுதந்தரத்தை வலியுறுத்தியதோடு பல்லவர் நாட் டையும் பாண்டி நாட்டையும் வென்றர்கள். முதலாவது பராந்த கன் என்ற சோழ அரசன் (907-953) இரண்டாவது மாறவர்மன் இராசசிங்கன் என்ற பாண்டிமன்னனை முடிதுறக்கச் செய்தான். அத்துடனமையாது சோழராச்சியத்தின் எல்லையை மேலும் பெருக்க முயற்சி செய்கையில் 949-ல் இராஷ்டிரகூடர் என்ற ஒரு சாதியார் அவனே மேற்செல்லவொட்டாது தடுத்தனர். இவர்கள் ஏற்கனவே மேலைச்சாளுக்கியரை வேரனுத்து வெற்றிகொண்டிருந்தவர்கள் தென்றிசையில் இவ்வாருெரு புதிய வல்லரசு கிளம்புவதை விரும்ப வில்லை. ஆல்ை, 973-ல் மேலைச்சாளுக்கியர் இராஷ்டிரகூடரை " வலிதொலைத்தனர். தனது இராச்சியத்தை விஸ்தரிப்பதற்குச் சோழ அரசனுன முதலாவது இராசராசனுக்கு இஃது ஒரு அருந் தருணமாயிற்று. உடனே இராசராச சோழன் சேரபாண்டிய தேசங்

Page 41
64 இலங்கையின் பூர்வ சரித்திரம்
களைத் தன்னணேப்படுத்தி கீழைச்சாளுக்கிய* ராளுகையிலிருந்த வேங்கியைத் தனது பாதுகாப்பிற் குட்பட்ட நாடாக்கிஞன். பின்னர் இலங்கைமீது படையெடுத்துச் சென்று மலையரட்டையை வென்ற துடன் மாலைதீவுகளையும் கைப்பற்றினன். சோழ மன்னருள் இராச ராசன் மிகப் புகழ்படைத்தவன். அதனுல் இவனுக்கு மகா இராச ராசன் என்ற பெயர் வழங்கப்பட்டது. தஞ்சாவூரிலுள்ள பெரிய கோவிலைக் கட்டுவித்தவன் இவனே. இவன் காலத்தில் சோழ ராச்சியமே இந்தியாவில் ஆதிக்கம் பெற்றிருந்தது.
سمي
3. அரசியற் பிரிவுகள்
க்காலத்தில் அனுராதபுரத்தைத் தலை நகராகக்கொண்ட இலங்கையின வடபகுதி பிகிடிரட என வழங்கப்பட்டது. அர சர்க்கு இராசதானியாயிருந்ததால் இதை ராசரட்டை என்றும் கூறி னர். இலங்கையின் தென்கிழக்குப்பாகம் உருகுணை யென்றும் மலைப்பகுதி மலையரட்டையென்றும் வழங்கப்பட்டன.
இராசரட்டை உத்தர தேசம், (வடபகுதி) பச்சிம தேசம் (மேற் பகுதி) பிராசீன தேசம் (கீழ்ப்பகுதி) தக்கின தேசம் (தென்பகுதி) என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மற்றெல்லாப் பகுதி யிலும் தக்கிண தேசப்பகுதியே விசாலமானதாயிருந்தது. முதலா வது அக்போ (அக்கிரபோதி) (568-601) காலந்தொட்டுத் தக்கிண தேசத்தை அரசனது பட்டத்திளவரசனே ஆண்டு வந்தான். இவனே மகபார் என்றும் மகயா என்றும் அழைத்தார்கள். இதனல் இத் தேசம் மாபாரட்டை (மகபா) அல்லது மாயா (மகயா) ரட்டை என வழங்கப்பட்டது. ஏனைய பகுதி அரசன் ஆணைக்குட்பட்ட பகுதியென்ற பொருட்படும் ராசரட்டை என வழங்கப்பட்டது. தக்கின தேசமான மாயாரட்டை மிகமுக்கியமான பகுதியாய் வந்தபடியால் உருகுணே, இராசரட்டையுடன் மாயாரட்டையும் இலங்கையின் முக்கியமான பகுதிகளில் ஒன்றபிற்று.
*இரண்டாவது புலிகேசின் தனது தம்பியை வேங்கி5ாட்டுக் கரசனுக்கி ஞன். இவனது வழித்தோன்றல்களே கீழைச்சாளுக்கியர்.
fமஹபா = மஹா + ஆர்யபாத; மஹயர் = மஹா + ஆர்யா மஹபா என்மு லும் மஹயா என் முலம் முதல் இளவரசன் என்று பொருள்படும். ஆபா= ஆர்யபாத என்பது இளவரசன் எனப் பொருள்படும்.

யாழ்ப்ப்ாணும்
மத்தியகால இலங்கை
W ஆ கடல்மட்டத்துக்குமேல் 3000 یiftج
ஆற்றுக்கடவை, வ்ன்னி
கன்னி சிமாந்தை
ஒஇசாக்கதக்குள்ம் -ఆనg, .N. శ్రీa Gశ్రాూ, அேக்ட்ஆமுறிப்பு ಕ್ರಿಯಾ ಆಸ್ಟ್ರ್ಯ
மிகிந்தல்ை , ఊ . ; Estiarr ဗု%; ழகர்தனாய்க்குளம் . خ&گ
之* Sns శ్రమౌఎR ஜீன்னேரி: குளம் புத்தளம்* அவுசுகாஇ
* . : - s ?Jrifವಿಶ್ಲ ܗܝ s ཁྲོལ། ༣།། சிகலா வீவா
Viglif தில்ே S - m - يسه . స్తో శ్రీశ్వGఒ** aw - *ళశశపెES *
ነ።roቓ፲" હ્યું * ** エリr N. அம்ப்ஆேAs في سفينهneyrة
نفس : v ( 6N :žಳಿ
குருக்ாகல்மர்த்தஃ . , 丐醫) ஐழ்பூதேனிஐஆரிசு Lg tడిఎ్మశకాH_0 చిలిజాత్యానిజాజీతో له བ་ వీ స్త్రీಎತ್ತು Fi్యక్తి *அதிேஞ்சை. ثل 2ంrgeN క్లే నీస్ సీక్షి. 德 ' uj Vk « AYA டடிகமம : مجسمہ^یخ ܐܵ ଈ
2 ஹெவகெத்தை திருக்கோவில் கோறளைதழ் .)يقتله M கு
மூன்று கோறளுை? g *(" 琢
"صنيعية". * డ్యుక్తి ஆதிதுதிர்சாம.
5562-C

Page 42
66 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இப்பகுதிகளெல்லாம் அனுராதபுர மன்னன் ஆணையின் கீழ்த்தானிருந்தன. ஆனல், உருகுனே, தக்கின தேசம் என்ற பகுதிகளில் எவ்வளவு தூரம் அனுராதபுர மன்னனின் ஆணை சென்றதென்பது அவ்வப்பொழுது ஆட்சிசெய்த அரசரின் வலிமை, குணம் முதலியவற்றைப் பொறுத்திருந்தது. உருகுனேயில் அரசு செய்த சிற்றரசர் பெரும்பாலும் அனுராதபுர மன்னனுடைய ஆணைக்கு அதிகம் பாத்திரமாகவில்லே. சிலர் தனியரசு நடத்தியும் வந்திருக்கிருர்கள்.
இக்காலத்தில் அனுராதபுரியே இலங்கையின் தலைநகராயிருந் தது. காசியப்பன் ஆட்சியில் மாத்திரம் தலைநகரம் வேறிடத்துச்கு மாற்றப்பட்டது. இக்காலத்து வாழ்க்கைமுறையை நோக்குமிடத்து அனுராதபுரம் ஒரு பெரிய நகரமென்றே கூறலாம். நகரிற் பல தெருக்களும் சிறு விதிகளும் இருந்தன. பல புண்ணிய சேத்திரங் கள் நகருள் மலிந்திருந்தபடியால் யாத்திரீகர்கள் வந்துவந்து போனபடியிருந்தார்கள். அன்றியும் ஏராளமான பெளத்த சன்னி யாசிமார் நகரில் வசித்தனர். விவசாயஞ்செய்தே நகரிலுள்ள பெரும்பாலான சனங்கள் சீவனம் நடத்தினர்கள். விவசாயத்துக் குத் தேவையான தண்ணிர் குளங்களிலிருந்து கிடைத்தது. அர சாங்க அலுவலெல்லாம் நகரிலேயே நடைபெற்றது. அந்நியநாட்டு வணிகர் பலர் அங்கு குடியிருந்தர்கள். நுவரலத்தா என்ற பெய ருடைய ஒரு விசேஷ அதிகாரியே இந்நகர பரிபாலன விஷயங்களைக் கவனித்து வந்தார்.
இக்காலத்தில் வேறும் மூன்று நகரங்கள் சிறப்புற்று விளங் கின. அவற்றிலொன்று சிகிரியா. முதலாவது காசியப்பன் தனது அரசிருக்கையை இங்கே மாற்றியதால் இது முக்கியமான நகரமா யிற்று. மற்றெரு நகரம் பொலனறுவை. உருகுணையிலிருந்து வரும் படையெடுப்பைத் தடுப்பதற்கு இந்நகரம் மிக முக்கியமான இடத்திலமைத்திருந்ததால் இதுவும் சிறப்புற்றது. இந்நகரைச்
*கிந்தகம என்று வழங்கப்படும் உத்தியோஈஸ்தர் ஒரு நிலம்படைத்த செல்வர். இவருடைய பூமியில் இருக்கும் குடிகளைப் பரிபாலிப்பதற்கு இவ ருக்கு ஒரளவு அதிகாரம் கொடுக்கப்பட்டது. அதன் பிாகாரம் ஓரளவுக்கு உரிமையுண்டு. நு வரலத்தா என்பது இம்மாதிரியான ஒரு உத்தியோகம் வ்கிப்பவரே.

மத்தியகால முற்பகுதி 67
சுற்றியுள்ள பிரதேசத்தில் நீர்ப்பாசனமும் விவசாயமும் அபி விருத்தியடைந்ததால் இந்நகர் சீருஞ் சிறப்பும் பெற்று விளங் கிற்று. நாலாவது அக்போ (கி.பி. 658-674) வும் எழாவது அக்போ வும் (766 772) தற்காலிகமாக இங்கே வசித்து வந்தார்கள். தனக் கெதிராகக் கிளர்ச்சிசெய்த சேனுபதியுடன் சமாதானஞ் செய்தபின் ஐந்தாவது சேனன் (972-9st) பொலனறுவையிலேயே வசித்து வந்தான், சோழர் இந்நகரைக் கைப்பற்றியபின் இதற்கு ஜனனத மங்களம்என்று பெயரிட்டனர். இந்தியாவிற்கு அண்மையிலிருந்த காரணத்தைக் கொண்டு மாதோட்டமெனப்படும் மாந்தை மிக முக்கியமான துறைப்பட்டினமாயிற்று. முதலாவது இராசராசன் இராசரட்டையைக் கைப்பற்றியபின மாந்தை இராசராசபுரமென வழங்கப்பட்டது. மாதோட்டத்தைச் சுற்றிப் பெரிய குளங்கள் கில 1டைந்து கிடப்பதைப் பார்த்தால் ஒரு காலத்தில் அங்கே மிகச் சிறப்பு வாய்ந்த ஒரு நகரம் விளங்கியிருக்கவேண்டுமென்று யூகிக்க (லாம்.
4. அரசியல் வரலாறு
நாம் இங்கு குறிப்பிட்டுள்ள காலப்பகுதியில் அறுபத்தாறு அரசர் இலங்கையை ஆண்டிருக்கிருர்கள். இவர்களுட் பெரும்பா லோர் மோரிய வமிசத்தையோ இலம்பகர்ண வமிசத்தையோ சேர்ந்த வர்கள். இவர்கள் ஆட்சிநடத்தியகாலம் பலபடும். சிலர் சிலமாதங் கட்கே ஆட்சி நடத்தினர்கள். இவ்வரசர்களின் முழுநாமாவளியை யும் இங்கு குறிப்பிடுவதானுல் இக்காலப்பகுதியிலுள்ள அரசரின் நாமாவளியென்ற அளவிலன்றி அதனுல் வேறு பயனில்லை. இக் காலத்துமுதல் அரசன் மகாசேனனின் மகனன கீர்த்தி பூரீமேவன். இவனுக்குப்பின் ஆண்ட அரசர்களுள் இவன் மருகனன புத்த தாசன் வைத்தியத்திற் பேர்போனவன் என்றும்,தனது இராச்சியத் தின் பலபகுதிக்கும் மருந்து வகைகள் உதவி மாற்றமுடியாத பல வியாதிகளை அபூர்வமான முறையில் மாற்றினன் என்றும் கன்ன பரம்பரைக் கதைகள் குறிப்பிடுகின்றன. புத்ததாசனுடைய இரண் டாவது மகளுனை மகாநாமன் (409-431) காலத்திற்ருன் புத்த கோஷன் என்ற பெளத்த சந்நியாசியும் பாஹியான் என்ற சீன யாத்ரீகனும் இலங்கைக்கு விஜயஞ் செய்தார்கள். இவ்வரசரெல் லாம் இலம்பகர்ண வமிசத்தைச் சேர்ந்தவர்கள்.

Page 43

மத்தியகால முற்பகுதி 69
இவ்வாறு இலம்பகர்ண மரபினர் ஆட்சிசெய்து வருகையில் மித்திரசேனன் என்றெரு வந்தான்வசத்தானே இலம்பகர்ண மந் திரி ஒருவன் அரசனுக்கினன். குடிகள் இவ்வரசனை வெறுத்த மையை அறிந்த பாண்டியர் இதுதான் நல்ல தருணமென உட் கொண்டு இலங்கைமீது படையெடுத்தார்கள். மித்திரசேனனைக் கொன்றுவிட்டு அறுவர் பாண்டியர் ஒருவர்பின் ஒருவராய் ஆட்சி நடத்தினர். பின்னர் பாண்டியரும் குடிகளின் வெறுப்புக்காளா கவே, தமது ஆதிக்கத்தை மறுபடியும் செலுத்த இதுவே தக்க தருணமென மோரிய வமிசத்தவர் முயன்றர்கள். உருகுணையில் வசித்துவந்த மோரியனன தாதுசேனன் (460-478) பாண்டியரோடு போர்தொடுத்துக் கடைசிப்பாண்டியனை வென்றன். தாதுசேன னுக்குப் பிறந்த முதலாவது காசியப்பனது (478-496) தாய் பட்டத் தரசியல்லாத படியால் அரசுரிமை அவனுக்கு மறுக்கப்பட்டது. எனவே, தனது தந்தையுடன் கோபங்கொண்டிருந்த சேனபதி யுடன்கூடிப் புரட்சிசெய்து தாதுசேனனைக் கொல்லுவித்தான். அர சுக்குரிமையுள்ள முதலாவது முகலன் தென்னிந்தியாவுக்கு ஒடி னன். முகலன் படைத்துணை பெற்றுக்கொண்டு வந்து தன்னை எதிர்ப்பானே என்ற அச்சத்தினல் காசியப்பன் அனுராதபுரத்தை விட்டு ஒடி சிகிரியா என்ற மலைக்கோட்டையில் வசித்துவந்தான். பதினெட்டு வருடம் இவ்வாறு காசியப்பன் அரசாண்ட பின்னர் தென்னிந்தியாவிலிருந்து முகலன் திரும்பிவந்து போரில் தன் சகோதரனை வென்று அனுராதபுரியிலிருந்து ஆட்சிநடத்தினன்.
இலம்பகர்னமரபைச் சேர்ந்த இரண்டாவது உடதிசன் என்ப வன் மோரிய மன்னனன சிவனைக்கொன்று அரசனனதும் மோரிய மரபினர் ஆட்சி அவ்வளவில் முடிவுற்றது. தனது வலிமையைப் பெருக்கிக்கொள்ளுவதற்காக உபதிசன் மோரியவமிசத்து இளவரசி ஒருத்தியை மணஞ் செய்தான். அப்படியிருந்தும் சிலாகாலன் என்ற அவனது மருகன் அவனே முடியிழக்கச்செய்து தானே அரச னைன். கேசதாதுவை இலங்கைக்குக் கொண்டுவந்தவன் இவனே.
மோரியவமிசத்தைச் சேர்ந்த மகாநாகன் என்பவன் (556-568) இலம்பகர்ணரை மறுபடியும் வலிதொலைத்தான். இவன் கீர்த்தி பூரீ மே என்ற அரசனின் சேனபதியாயிருந்து பின்னர் அவனுக் கெதிராய்க் கிளம்பி அவனைத் தோற்கடித்தான். மகாநாகனுக்குப்

Page 44
S లా 、ュリ
を薰
边
を逸
参
l,
محم
ープ
རྙི
ܟ
معممة
---
组
سمیه
އި
{పై
系
天
多%
名。
尖
Fళ్లీ
wr
వనై
-
RحS
sشخية
ప
g
生
כל
SS
S
S
. S.
S ܪ܆ مرسمی مهمې؟
NŞa
○*
y የ ‰ጥ Š
به لس ンプ عي
3 مه وت حجم میبرمی به همه مه ۶۳۶
Vs
---------- s
波
V
n
書
s
ぎ妻 S 冀
妾
;
f
*R*
幸
美
恕
ミ
,
i
f
έ
p
f
t
ჯg
sss
 

மத்தியகால முற்பகுதி 71.
பின் முதலாவது அக்போ (568 601) ஆண்டான். இவனே குருந்து வீவா மிகிந்தலைக்குளம் ஆகியவற்றைக் கட்டுவித்தவன். இவனுக் குப்பின் ஆண்ட அரசனே கந்தளாய்க்குளம், கிர்த்தலைக்குளம் ஆகியவற்றைக் கட்டுவித்த இரண்டாவது"அக்போ (601- 611).
இரண்டாவது சங்கதீசன் என்ற கடைசி மோரிய அரசனே இலம்ப கர்ண தலதமுகலன் என்பவன் வெற்றிகொண்டான். இதனுல் நாட்டில் பலவருடங்களாக உள்நாட்டுக் குழப்பமுண்டாகிச் சனங்கள் பெரிய கஷ்டத்துக்குள்ளாயினர். குழப்பக்காரர் சிலசமயம் விகா ரங்களையும் தாதுகோபங்களையும் கொள்ளையடித்தனர். சனங்கள் உணவையிழந்ததுமல்லாமல் விவசாயஞ்செய்வதும் கஷ்டமாயிருந் தது. இக்குழப்பத்தில் சிலாமேகவர்ணன் ஆட்சியில் பூரீ நாகன் என்ற அவன் சேனபதி தென்னிந்தியாவுக்குச் சென்று தமிழ்ப் படையொன்று திரட்டிவந்து குழப்பமுண்டாக்கினன். மூன்றவது அக்போவும், முதலாவது தாதோபதீசனும் (626-641), இரண்டா வது தாதோபதீசனும் (650-658), மாணவர்மனும் (676-711) இவ் வாறே தென்னிந்தியா சென்று தமிழ்ப்படை திரட்டிவந்து சிங்காச னத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தார்கள். இதல்ை நாட்டிற் சங்கடமான நிலைமை எற்பட்டது. தமிழ்ப் போர்வீரர் ஆதிக்கம் பெற்று அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றியதுமல்லாமல் முடிக் குரிமையுடையோரை எற்படுத்தும் விஷயத்திலும் செல்வாக்குடைய வராயிருந்தார்கள். பிற்காலத்தில் தென்னிந்திய அரசர்கள் இலங்கைமீது படையெடுத்து வந்தபொழுதெல்லாம் இவர்கள் அவர் ளுடன் சேர்ந்து சிங்கள மன்னருக்கெதிராகச் சண்டைசெய்தார்கள். மாணவர்மன் இரண்டாவது காசியப்பனின் (644-650) மகன். இரண்டாவது தாதோபதீசன் இவனே முறியடிக்கவே இவன் இந்தி யாவுக்கு ஓடி முதலாவது நரசிங்கவர்மனுக்குத் துணைபுரிந்தான். இரண்டாவது புலிகேசினுக்கெதிராக நரசிங்கவர்மன் சண்டை செய்தப்ொழுது மாணவர்மன் உடன் சென்று சண்டைசெய்தான். அதற்குப் பதிலுடகாரமாக நரசிங்கவர்மன், மானவர் மனே இலங் கைக்கரசனுக்கினன். மாணவேர்மன் முதன்முறை படையெடுத்த பொழுது அனுராதபுரியை மாத்திரம் கைப்பற்றக கூடியதாயிருந் தது. இரண்டாவதுமுறை படையெடுத்தபொழுது சிங்காசனத்தை யும் கைக்கொண்டான். இவ்வெற்றிக்குக் காரணம், அக்காலத்தில அரசாண்ட மன்னன் அரசவம்சத்தை சேராதிருந்தமையோடு, அர

Page 45
72 இலங்கையின் பூர்வ சரித்திரம்
சியல் நிர்வாகத்தை நடத்திவந்த பொத்தகுட்டன் என்ற தமிழ் மந்திரியின் சொல்லுக்கு ஆடக்கூடியவனுயிருந்தமையே.
மாணவர்மன் அரசுகட்டிலேறியதும் உள்நாட்டுக் குழப்பம் அடங் கிற்று. ஆனல், புதிய தொல்லைகள் விரைவிலுண்டாயின. ஆற வது நூற்றண்டினிறுதியில் தென்னிந்தியாவில் பூரீ மாற பூரீ வல்ல பன் (815-860) என்ற பாண்டியனல் ஆதிக்கம்பெற்ற பாண்டியர், முதலாவது சேனன் (831-851) காலத்தில் இலங்கைமீது படை யெடுத்தனர். உள்ளூரிலிருந்த தமிழ்ப்படையாட்சிகளும் இப்படை யெடுப்பில் பாண்டியர்க்கு உதவிசெய்தார்கள். பூரீ மாரன் நாட் டைக் கொள்ளையடித்து, அனுராதபுரியைக் கைப்பற்றினன். ஏராள மான பொருட்களைக் கொள்ளையடித்துக் கொண்டு தன்னடு சென் ருன். மாறனுடைய ஆட்சிமுடிவில் அவன் ஆதிக்கம் குன்றவே 860-ல் அவனது மகன் புரட்சிசெய்தான். பூரீ மாரனைப் பழிவாங்க நினைத் திருந்த இரண்டாவது சேனன் (851-885) புரட்சிசெய்த இள வரசனுக்கு உதவிபுரிந்து மன்னனின் இராசதானியாகிய மதுரையை முற்றுக்கையிட்டு, ஈற்றில் அவன் மகனைச் சிங்காதனமேற்றி மீண்டான்.
இதற்குப்பின் இலங்கையரசர்கள் பாண்டிய மன்னரோடு நட் புரிமை கொண்டாடினர்கள். ஆனல், இன்னெரு வல்லரசுடன் நிருவகிக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதுதான் வலிமை பெற்று வந்த சோழராதிக்கம். 910-ல் முதலாவது பராந்தகன் என்ற சோழ அரசன் இரண்டாவது இராசசிங்க் மாறவர்மனைத் தோற்கடிக்கவே இவன் இலங்கையின் துணையை நாடினன். இலங் கையை இக்காலத்திலாண்ட கல்வியறிவிற் சிறந்த ஐந்தாவது காசி யப்பன் என்னும் சிங்கள அரசன் (913 923) சோழர்க்குப் பயந்த போதிலும் இரண்டாவது இராசசிங்கனுக்குத் துணைபுரியுமாறு படையை அனுப்பினன், பராந்தகன் இவ்விருசேனையையும் புறங் கண்டு இராசசிங்கனை மேலும் நெருக்கவே அவன் இலங்கைக்கு ஓடி வந்தான். இலங்கையில் அப்பொழுது ஆண்ட ஐந்தாவது தப்புலன் என்ற அரசன், தனது அதிகாரிகளிடையே குழப்பமிருந்ததால் இராசசிங்கனுக்கு உதவிபுரிய முடியாமற் போயிற்று. அதனல் அவன் முடியையும் அரச அணிகளையும் விட்டு துணைவேண்டிச் சேர அரசனிடம் ஒடினன்,

மத்தியகால முற்பகுதி 73
மூன்ருவது உதயன் காலத்தில் இப்பராந்தகன், இராசசிங்க னது முடியையும் அணிகளையும் கைப்பற்றுவதற்காக இலங்கைமீது படையெடுத்தான். உதயன் குடிவெறியன்; ஆட்சிசெய்யும் திறமை மில்லாதவன். படையெடுப்பைக் கேள்வியுற்றதும் அவன் உருகு ணைக்கு ஒடிவிட்டான். ஆனல், பராந்தகன் இப்படையெடுப்பை வெற்றிகரமாய் நடத்துவதற்குத் தடையேற்பட்டது. 949 ல் மூன் ருவது கிருஷ்ணன் தலைமையில் இராட்டிரகூடர் சோழர்மீது படை யெடுத்து அவர்களே முறியடித்ததோடு பராந்தக சோழன் மகனையும் கொன்றர்கள். இதைத் தருணமாகக்கொண்டு உதயன் சோழ இராச்சிய எல்லையிற் கொள்ளே அடித்துப் பெரிய அழிவுண்டாக் கினன்.
இந்தத் தோல்வியின் பின்னர் சோழர் தமது இராச்சியத்தின் பெரும்பகுதியை இழந்தபோதிலும், 959-ல் மறுபடியும் அவர்கள் இலங்கைமீது படையெடுத்தனர். சோழருக்கெதிராக நடந்த புரட் சியிற் பாண்டியருக்கு நாலாவது மிகுந்து (956 972) உதவி செய் ததைத் தண்டிப்பதற்காக இரண்டாம் பராந்தகன் (953-973) இலங்கைமீது படையெடுத்தான். மிகுந்துவின் படை சோழரை முன் னேறவிடாமற் றடுத்ததுமன்றிச் சோழச் சேனபதியையும் யுத்தத் திற் கொன்றது. கலிங்க நாட்டுடன் விவாகசம்பந்த மேற்படுத்திய முதற் சிங்கள அரசன் நாலாவது மிகுந்துவே. இதல்ை இலங்கை யின் வருங்காலச் சரித்திரத்தில் மாறுதல்கள் எற்பட்டன. இவ் வகையில் மிகுந்துவின் சரித்திரம் முக்கியமானது.
நாலாவது மிகுந்துவுக்குப்பின் ஆட்சித்திறமையற்ற ஐந்தாவது சேனன் (972-981) இராச்சியபரிபாலனஞ் செய்தான். இவனுக்குக் கீழிருந்த சேரப்படையாட்சிகள் கலகம் விளைக்கத்துவங்கவே இவன் உருகுணைக்கு ஒடி அங்கே சிலகாலம் வசித்துவந்தான். இவனது தம்பியான ஐந்தாவது மிகுந்து (981-1017) இவனிலும் பார்க்கத் திறமையற்ற அரசனுக இருந்தான். குடிகள் வரிகொடுக்க மறுத் தனர். அதஞல் சேனைக்குப் படியளக்க முடியாமற் போயிற்று. எனவே,991-ல் சேனையிற் குழப்பமுண்டானது. அரசன் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக உருகுணைக்கு ஓடினன். இராச ரட்டையை சேரத்துருப்புகளும் கன்னடச்சிப்பாய்களும் . சிங்களப் படையாட்சிகளுமாய்க் கைப்பற்றினர்கள்.

Page 46
74 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இத்தகைய குழப்பமான நிலையை, நாளுக்குநாள் தனது இராச்சிய எல்லையைப் பெருக்கிவந்த சோழ அரசஞன முதலாவது இராசராசன் கண்டு 993-ல் இலங்கைமீது படையெடுத்து இராச ரட்டையைக் கைப்பற்றிஞன். சோழப்படை அனுராதபுரியிலுள்ள பலகட்டிடங்களே அழித்து, தான் கைப்பற்றிய பகுதியைச் சோழ ராட்சிக்குட்பட்ட ஒரு மாகாணமாக்கிப் பொலனறுவையை இராச தானியாக்கிற்று. இராசராசன் மகனன முதலாம் இராசேந்திரன் (1014-1644) தனது தந்தை துவங்கிய படையெடுப்பைத் தொடர்ந்து நடத்தி இலங்கை முழுவுதையும் தன்னுணைக்குக் கீழ்ப்படுத்தினன். 1017-ல் ஐந்தாவது மிகுந்துவைச் சிறைப்படுத்தி பாண்டிய அரச அணியுடன் தென்னிந்தியாவுக்கு அனுப்பினன். பத்தாவது நூற் ருண்டில் சோழருக்கெதிராக ஒருவாறு எதிர்நின்று வந்த சிங்களர் இராசராசனுடைய சோழராச்சிய ஆதிக்கத்தின்முன் நிருவகிக்க முடி யாது தோற்றர்கள். இவ்வாறு இலங்கை முதன் முதலாக அந்நி யர் ஆதிக்கத்தின்கீழ் அடங்கிற்று.
5. அரசியல் முறையும் கொள்கைகளும்
முந்தியகாலத்தரசரைப் போலவே இக்காலத்தவரும் சர்வாதி
காரியாயிருந்தார்கள். நாட்டு வளப்பம், சம்பிரதாயம் முத லியவற்றுக்கு மாத்திரம் கட்டுப்பட்டுத தமது அதிகாரத்தைச் செலுத்தி வந்தனர். தமையனுக்குட் பின் அரசுரிமை தம்பிக்கு வழங்கப்பு ப்டது. தம்பி மாரின் பின்னர் மூத்த தமைய னுடைய சிரேட்ட புத்திரர்க்கு அரசு வழங்கும் முறை நிலவிற்று. தந்தை வழியிலன்றித் தாய் வழியிலும், உயர்ந்த குலத்தைச் சேர்ந்தவர்கட்கே அரசுரிமை வழங்கப்பட்டது. அரசனுக்கடுத்தாப் போல் அதிகாரமுடையவர் யுவராசா. நாட்டு அரசியல் நிர்வாகத் திற் பங்குபற்றும் யுவராசாவை உபராசாவெனப் பட்டஞ் சூட்டினர் கள். உபராசாவே அடுத்தாப்போல் அரசுரிமையுடையவர். இவரை மகா ஆ என்றும் வழங்குவர். இவருக்கு அடுத்தபடியான அந் தஸ்து உருகுணை அரசனுக்கும் மலேயரட்டை அரசனுக்கு முண்டு. இவர்கள பெரும்பாலும் அரசவமிசத்தையே சேர்ந்தவர்களாயிருப் பார்கள். அரசியல் நிர்வாக உத்தியோகஸ்தர்களைப் பற்றியும், ராணுவ உத்தியோகஸ்தரைப் பற்றியும் அறிவதற்குச் சில ஆதாரங்க ளுண்டு. புராதன காலத்தைப்போலவே இக்காலத்திலும் சேனபதி

மத்தியகால முற்பகுதி 75
ஸ்தானம் மிக முக்கியமானதாகக் கருதப்பட்டது. அரசனுக்குப் பூரண நம்பிக்கையுள்ள அரச வமிசத்தைச்சேர்ந்த ஒருவருக்கே இப் பதவி அநேகமாக வழங்கப்பட்டு வந்தது. மகாலேக்கர் (பிரதம லிகிதர்) சத்தகா ஹகர் (குடை தாங்குவோர்) அசிகா ஹகர் (வாளேந்துவோர்) என வேறும் மூன்று உத்தியோகஸ்தரைப் பற் றிக் கூறப்பட்டிருக்கிறது. மகாலேகர் அரச கட்டளைகளை எழுதுவர். இவ்வுத்தியோகம் மிக முக்கியமானதெனக் கருதப்பட்டது. சத்தி ரம் என்பது கொற்றக்குடை. அது இக்காலத்துக் கொடிபோல ஒரு அரச சின்னமாக மதிக்கப்பட்டது. குடை தாங்குவோரும், வாளேந்து வோரும் அநேகமாக அரசனின் சுற்றத்தவராகவே இருந்தார்கள். அரசனின் அணுக்கருள் இவ்விருவரும் முக்கியமான தானம் வகித்தார்கள். இவ்வுத்தியோகத்தர்களை விட அரச கட்டளைகளே நிறைவேற்றிவைப்பதற்கு ஒரு சபை இருந்தது.
இக்காலத்துச் சாசனங்களில் கிராம ஆட்சியைப் பற்றிய விஷயங் கள் பல கூறப்பட்டிருக்கின்றன. முக்கியமாகக் கிராம சபைகள் கிராமங்களில் சமாதானத்தையும் ஒழுங்கையும் கவனித்தன. குற்ற வாளிகளைத் தண்டித்தன. கிராமத்துப் பொதுக் கட்டிடங்கள் வேலை கள் உதாரணமாக குளங்களைக் கரை கட்டுவித்தல்- முதலிய வற்றை மேற்பார்வை செய்துவந்தன. கிராமங்களில் நடந்த குற் றங்களை விசாரணை செய்து, குற்றவாளிகட்கு ஏற்ற தண்டனை விதிக் கும் வேலையும் இச்சபைகளால் நடத்தப்பட்டன. அக்காலத்துத் தண்டனைகள் மிகக் கொடூரமானவை. கொலைக் குற்றத்துக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சால்நடைகளைக் கொன்றல் அதற்கும் மரண தண்டனை, கொள்ளேயடிப்போர் துக்கிடப்பட்டனர். களவு செய்வோர்க்கும் அடிபட்டவர்க்கும் அபராதம் விதிக்கப்பட்டது. கால்நடை களவு செய்வோர்க்குக் குறி சுட்டார்கள். அபராதம் கொடுக்கத் தகுதியற்ற வேலையாட்கள் பணியாட்கள் முதலியோரின் கைகளை வெட்டி விடுவார்கள். சுட்ட குறியை அழித்துவிட முயன் றேரை காச்சிய இரும்பு மிதியடியில் நிற்கச் செய்வார்கள். தனிப் பட்ட மனிதர் சமூகத்தின் அங்கமாக இக்காலத்திற் கருதப்பட வில்லை. ஒரு குடும்பத்தவர் அல்லது ஒரு குழுவினரே சமூகத்தி னங்கமாகக் கருதப்பட்டார்கள். எனவே, ஒருவர் மீது விதிக்கப் பட்ட அபராதத்தை அவர் கொடுக்கத் தவறினல் அவரது குடும்பமோ அல்லது குழுவோ அதற்குப் பொறுப்புள்ளதாகிவிடும்.

Page 47
ግ6 இலங்கையின் பூர்வ சரித்திரம்
பணியாட்கள் விஷயத்தில் இம்முறை அனுசரிக்கப்படுவதில்லை. ஒரு கிராமத்திலுள்ளவரெல்லாரும் அக்கிராம வாசிகளின் செயல் களுக்கு அரசனுக்குப் பொறுப்புடையவர்களாயிருப்பார்கள். உதா ரணமாக ஒரு குற்றவாளியை 45 நாட்களுக்குள் அந்தக் கிராமவாசி கள் கண்டுபிடித்து ஒப்படைக்காவிட்டால், அரசாங்க உத்தியோகஸ் தர் வருடாந்த சுற்றுப்பிரயாணத்தில் வரும்பொழுது அக்கிராம வாசிகளிடம் அபராதம் வசூல்பண்ணிக்கொண்டு போவார்கள்.
விகாரங்களுக்குச் சொந்தமான கிராமங்களிலும் திட்டமான சில விதிகளின் பிரகாரமே நிருவாகம் நடத்தப்பட்டுவந்தது. பெளத்த சந்நியாசிகள், கிறிஸ்தவ சந்நியாசிகளைப்போல விவசாயஞ் செய்யவோ நிலங்களைப் பரிபாலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை. எனவே, விகாரங்கட்குச் சொந்தமான நிலங்களைப் பரிபாலிக்கவும், குத்தகைக்கு விடப்பட்ட நிலங்களின் வருமானத்தைச் சேகரிக்கவும், குடியானவரிடமிருந்து செய்விக்கவேண்டிய தொழில்களைச் செய் விக்கவும், பிக்குகளுக்குத் தேவையான செளகரியங்களையெல்லாம் தேடிக்கொடுக்கவும் விசேஷ உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டார்கள். பெரிய விகாரைகளில், காரியாதிகாரி, குமாஸ்தா, பிட்சையிடுவோர், பெட்டிகளைப் பதிவுசெய்வோர், அவற்றைக் காவல்செய்வோர். ஆகிய உத்தியோகத்தரும், பணியாட்களும், அடிமைகளும் இருந் தார்கள். இவர்கள் செய்யும் சேவைக்குச் சம்பளமாக விகாரை நிலங்கள் பகிர்ந்து கொடுக்கப்படும். இந்நிலங்கள் தலைமுறை தலை முறையாகத் தகப்பனிடமிருந்து மகனுக்கும் மசனிடமிருந்து அவன் மகனுக்குமாய்ச் செல்லும். சேவையும் இடையருது நடைபெறும். விகாரத்து உத்தியோகத்தர்கள் இவ்வாறு வழங்கப்படும் நிலங்களைப் பற்றியும் அவரவர் புரிந்த சேவைகளைப் பற்றியும் எழுதி வைத்திருப் பார்கள். இந்த உத்தியோகத்தர்கள் விகாரத்துக்குச் சொந்தமான நிலங்களில் வசிப்போரிடம் எவ்விதமான இலஞ்சமும் பெறக்கூடாது.
விகாரமும் அதைச்சேர்ந்த நிலங்களும் சகலர்க்கும் பொதுவான தபோவனம் போலிருந்தது. இங்கே அரசாங்க உத்தியோகத் தர் தலையிடமாட்டார்கள் ; மரம் வெட்டவோ அங்குவந்து பாதுகாப்புத் தேடியிருக்கும் குற்றவாளிகளைக் கைதுசெய்யவோ அவர்களுக்கு அதிகாசம் கிடையாது. ஆனல், அந்தக் கிராமத்துச் சனங்கள் அப் படிப்பட்ட குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும், இல்லையேல் அர சன் அக்கிராமம் முழுவதையும் தண்டிப்பான்.

மத்தியகால முற்பகுதி 77
மகாயான மதத்தின் செல்வாக்கினல் அரசனைப் பற்றிப் புதிய கொள்கை பரவலாயிற்று. மன்னர் சாதாரண மனிதரல்லவென் றும் அவர்களைப் போதிசத்துவராகவோ அல்லது தெய்வீக புருஷ ராகவோ கருதவேண்டுமென்ற கொள்கை பரவிற்று. ஒன்பதாவது நூற்றண்டில் புராணங்களின் கொள்கையைப் பின்பற்றி அரசர் தாம் சூரிய வமிசத்தவரென்று கூறித் தமக்குப் பெருமை தேடிக் கொண்டார்கள்.
6. விவசாயம், நீர்ப்பாசனம், வியாபாரம்
@*ಞ್ಳಿ' நீர்ப்பாசன வசதிகள் மேலும் பெருக்கப்பட்டன. விவசாயம் முன்னேற்றமடைந்தது. நெற்சாகுபடிக்கு ஊக்கமளிக்கப்பட்ட்து. பெரிய குளங்களைக் கட்டினர்கள். முந்திய காலப் பிற்பகுதியில் ஆரம்பமான இவ்வேலை இக்காலப்பகுதியின் முற்பகுதிவரை தொடர்ந்து நடைபெற்றது. ஐந்தாவது நூற்றண் டின் ஆரம்பத்தில் முதலாவது உபதிசன் பொலனறுவையில் தோப வீவ என்ற குளத்தை வெட்டுவித்தான். காலஓயாவை மறித்து அணைகட்டி காலவீவா என்ற குளத்தை தாதுசேனன் (460-478) கட்டுவித்தான். இரண்டாவது முகலன் (587-556) பல குளங்களைக் கட்டுவித்தான். முதலாவது அக்கிரபோதி (568-601) குருத்துவீவா வையும் மிகிந்தலைக் குளத்தையுங் கட்டுவித்தான். முந்தியகாலத் தில் கட்டப்பட்ட அலஹார கால்வாயைப் புதுப்பித்தான். குருத்து வீவா என்றது ஒன்றில் நெடுங்குளமாயிருக்கலாம், அல்லது ஆகட்டி முறிப்பு என்ற குளமாயிருக்கலாம். இரண்டாவது அக்கிரபோதி கந்தளாய்க் குளத்தையும் கிரித்தலைக் குளத்தையும் வெட்டு வித்தான்.
நீர் நிறைந்திருக்கும்பொழுது காலவீவாவின் விஸ்தீரணம் சுமார் எழுமைல் இருக்கும். இதன் அணை மூன்றரை மைல் நீளமும் முப்பத்தாறடி துவக்கம் ஐம்பத்தெட்டடி உயரமு முடையது. மதகு கள் கருங்கல்லாலானவை. அம்பங்கங்கையின் ஒரு உபநதியும், மாத்தளைக் குன்றுகளிலிருந்து வரும் நீரைத்தாங்கிச்செல்வதுமான நாளந்தா ஒயாவை இக்குளத்துக்கு நீர் கொடுத்துவரும் தம்பல ஓயாவுடன் இணைத்துக் காலவீவாவை நிரப்பினர்கள். இதிலிருந்து வரும் கால்வாய்களின் வழியாகவே கால ஒயாவுக்கும் மல்வத்து ஓயாவுக்கு மிடையேயுள்ள பிரதேசத்துக்கு நீர் பாய்ச்சப்படுகிறது.

Page 48
78 இலங்கையின் பூர்வ சரித்திரம்
காலவீவாவிலிருந்து செல்லும் கால்வாய்களுட் பிரசித்தி பெற்றது இப்போது யோதனலை எனப்படும் சயகங்கையாகும். இது காலவீவாவை அனுராதபுரத்திலுள்ள திசவீவாவுடன் இணைத்திருக்கிறது. இது ஐம்பத்துநாலு மைல் நீளமும் நாற்பது அடி அகலமுமுடையது. இதனமைப்பு வெட்டியவரின் பெருந் திறமையைக்காட்டுகிறது. ஏனெனில், முதற் பதினேழுமைல்களிலே இது மைலுக்கு ஆறு அங்குல உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக் கிறது. ஏறக்குறைய 180 சதுர மைல் பரப்புள்ள பிரதேசத்துக்கு இச்சயகங்கையின் நீர் பயன்படுகிறது. அனுராதபுரிக்கும் பெரும் பாலும் இதிலிருந்தே தண்ணிர் எடுக்கப்பட்டது.
ஆகட்டிமறிப்பின் கரை நாலரை மைல் நீளமுள்ளது. மல் வத்தை ஒயாவை அணைகட்டி மறித்து அதிற்றேங்கிய தண்ணிரின் ஒரு பகுதியைக் கால்வாய்மூலம் இக்குளத்திற்குப் பாயவிட்டார்கள். நெடுங்குளத்தின் கரை மேற்கூறிய குளத்தின் கரையிலும் பார்க்க நீண்டது. இக்குளம் ஆருயிரத்து நானுறு எக்கர் விஸ்தீரணமுள் ளது. இதற்கும் ஒரு சால்வாய்மூலம் மல்வத்தை ஒயாவிலிருந்தே தண்ணீர் வருகிறது. கந்தளாய்க் குளக்கரையின் நீளம் ஒரு மைலுக்கு மேலிருக்கும். நாற்பத்து நாலடி உயரமானது. நீர் நிறைந்துள்ள காலத்தில் இதன் விஸ்தீரணம் சுமார் மூவாயிரத் தெழுநூறு எக்கர் எனலாம்.
இந்தக் கரைகளையும் அணைகளையும் கால்வாய்களையும் வெட்டுவ தற்கு எராளமான தொழிளாலர் வேலை செய்திருக்கவேண்டும். நெடுங் குளத்தின் கரைகளைப் பழுதுபார்ப்பதற்கு மாத்திரம் 500 தொழிலாளர் நாலைந்து மாதங்களுக்கு வேலை செய்வார்களென
அக்குளத்தைச் சுற்றி வசித்தவர்கள் வான் இமோப் என்ற டச்சு
தேசாதிபதிக்குக் கூறினர்களாம். அக்காலத்தில் சனங்கள் நெல் சிறுதானியம் முதலியவற்றைச் சாகுபடிசெய்வதே தொழிலாயிருந் ததால் வருடத்தில் ஆறுமாதத்திற்குக் குறைவாகவே வேலைசெய் தார்கள். மற்றக்காலத்தில் அவர்கள் இம்மாதிரியான கட்டுவேலை களில் ஈடுபட்டதாற்ருன் இவ்வளவு பெரிய குளங்களையுங் கால்வாய் களையுங் கட்டக்கூடியதாயிற்று. அரசனும் தொழிலாளர் தேவைப் பட்டவிடத்துச் சனங்களை இராசகாரியத்துக்கு அழைப்பான்.

மத்தியகால முற்பகுதி 79.
கீர்த்தி பரீமே பரீ மேகவர்ணன்) (556) சிலாமேகவர்னன் (617-826) முதலாம் தாதோபதீசன் (626-641) முதலாவது உதயன் (885-896) ஆகிய அரசர் காலத்தில் நான்கு பஞ்சமேற்பட்டதாக சூளவமிசம் என்ற நூல் கூறும். முதலாவது தாதோபதீசன் காலத்தில் உண்டானபஞ்சம் உள்நாட்டுக் குழப்பங் காரணமாக எற் பட்டது. மற்றப் பஞ்சங்களின் காரணம் தெரியவில்லை.
சிங்கள அரசர்கள் வியாபாரத்தில் அதிக சிரத்தையெடுக்க வில்லை. தானியவரியினல் வரும் வரும?னத்தையே அவர்கள் நம்பியிருந்தார்கள். ஆனல், வெகுகாலத்துக்கு முன் தொட்டே அந்நிய நாட்டு வியாபாரிகள் இலங்கையில் விளையும் வாசனைப் பொருட்களேத் தேடி வந்திருக்கிருர்கள்.
கிறிஸ்தாப்தத்திற்கு முன் தென்மேற்கு இந்தியாவுக்கு வியா பாரஞ்செய்ய வந்த அரேபியர் இலங்கைக்கும் வந்தார்களோ என் பது திட்டமாகத் தெரியவில்லை. கி.பி. இரண்டாவது நூற்றண்டு துவக்கம் மூன்றவது நூற்ருண்டின் ஆரம்பம்வரை கிரேக்க வியா பாரிகள் இலங்கையோடும் வியாபாரம் நடத்தினர்கள். கொன்ஸ் தாந்தி நோபிளைத் தனது உரோம சக்கிராதிபத்தியத்தின்* தலை நக ராகக்கொண்டு கீழைத்தேசங்களுடன் நெருங்கிய தொடர்பு எற் படுத்தி ஆட்சிநடத்திய கொன்ஸ்தாந்தைன் (கி.பி. 323-337) என்ற அரசனுக்குப் பின் இந்த வியாபாரம் மறுபடியும் புத்துயிர் பெற்றது.
பாரசீகக் குடாக்கடலிற் கப்பலேறிவந்த பாரசீகரும் இலங்கை யுடன் வியாபாரம் நடத்தினர்கள். பாரசீகர் ஆதியில் ஸோராஸ்தர் என்ற பெரிய மதாசிரியர் தாபித்த சமயத்தை அனுசரித்தார்கள். இந்தியாவிலும் இலங்கையிலுமுள்ள பாரசீகர் இச்சமயத்தையே இன்றும் அனுட்டித்து வருகிறர்கள். ஆனல், இலங்கைக்கு வந்த பாரசிகர் நெஸ்தோரிய வகுப்பைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் புத்த ருடைய தன்மையைப் பற்றி ஈனயான வாதிகள் மகாயானிகளோடு
* கொன்ஸ் தாக்திகோப்பிளுக்கு இன்னுெரு பெயர் பைசாந்தியம். பை சாந்தியத்தில் அரசாண்ட மற்முெரு உரோம சக்கரவர்த்தி, ஜஸ்டினியன் என் ப் வன் (கி.பி. 527-565) இவன் உரோமச் சட்டங்களையெல்லாம் ஒன்முகத் தொகுப்பித்தான். ஐரோப்பிய தேசங்கள் பல இந்த உரோமன் சட்டப் பிர மாணங்களைக் கைக்கொண்டன. ஜோன் மட்சூக்கர் என்ற ஒல்லாந்த தேசாதி
பதியே இச்சட்டங்களை இலங்கையிலும் புகுத் திஞர்.

Page 49
80 இலங்கையின் பூர்வ சரித்திரம்
மாறுபட்டதுபோலவே கிறிஸ்துவின் தன்மையைப் பற்றி நெஸ்தோரி யர் மற்றக்கிறிஸ்தவ வகுப்பாரோடு மாறுபட்டார்கள். திருவாங்கூரி லுள்ள சிரியரின் கிறிஸ்தவத் திருச்சபை, பாரசீகர் தென்மேற்கு இந்தியாவில் வியாபாரம் நடத்தியகாலத்திற் றேன்றியது.
பாரசீகத்தை முஸ்லிம்கள் கைப்பற்றியதும் இலங்கையுடன் நடந்த வியாபாரம் ஏழாவது நூற்றண்டில் நின்றுவிட்டது. கி பி. 632-ல் முகம்மது நபி இறப்பதற்கு முன்னுல், அரேபியா முழுதிற் கும் திலைவரானர். அவர் இறந்து பத்து வருடங்களுள் அவரது வழித் தோன்றல்களாகிய கலீபாக்கள் சீரியா, எகிப்து, பாரசீகம் ஆகிய தேசங்களை வெற்றிபெற்றனர். கி.பி.638-ல் அலெக்ஸான்ரியா கைப்பற்றப்பட்டது. இவ்வெற்றியால் பைசாந்திய இராச்சியத்தோடு நேரடியாக இலங்கை செய்துவந்த வியாபாரமும் தடைபட்டது. அதன் பின்னர் அரேபியாவிலுள்ள ஈமன் என்ற இடத்துக்கும் இலங்கைக்கும் வர்த்தகத்தொடர்புண்டானது. பத்தாவது நூற் ருண்டு முடிவதற்குமுன் கொழும்பில் அரேபிய வர்த்தகக் குடி யேற்றமொன்று தாபிக்கப்பட்டது.
அரேபியர் சீனுவரை வியாபாரம் நடத்தினர்கள். பத்தாவது நூற்றண்டில் சீனவில் சுங்கவழிசம் (960-1280) ஆதிக்கம் பெறவே சீன மற்றத் தேசங்களுடன் நேரடியாக வியாபாரஞ் செய்தது. பின்னர் சீன மரக்கலங்கள் இலங்கைத் துறைகட்கு வந்து, மேலைத் தேசத்திருந்துவந்த வியாபாரிகளோடு பண்டமாற்றுச் செய்தன.
7. புத்த சமயமும் இந்து சமயமும்
6. புத்த சமயம் பெரிதும் வளர்ச்சியடைந்தது. மகா
" யானக் கொள்கைகள் பரவி, பாமர சனங்களின் மனதைக் கவர்ந்தன. புதிய புதிய கோவில்கள் பல கட்டப்பட்டன. விக்கிரக ஆராதனை பரவிற்று. போய (புண்ணிய) தினங்களில் பெளத்த சன்னியாசிகள் சமயப் பிரசங்கங்கள் செய்தார்கள். சமய விழாக்கள் எங்கும் கொண்டாடப்பட்டன. பிரித் முதலிய சமயக் கிரியைகளை அடிக்கடி செய்வதால் பெளத்த பிக்குகளும் பொதுசன வாழ்வில் அதிகமாக ஈடுபட்டனர். கிறிஸ்தவ குருமாரைப் போலவும் பிராமண புரோகிதரைப் போலவும் பெளத்த பிக்குகள் அரசியலில் ஆதிக்கம் பெற்றதில்லை. சில காலங்களில் பிக்குகள் அரசர்க்கு

மத்தியகால முற்பகுதி 8.
ஆசிரியர்களாக இருந்ததுண்டு. அரசாங்க உத்தியோகத்தராகவோ அரசியல் ஆலோசனையாளராகவோ அவர்கள் எக்காலத்திலும் இருந்தது கிடையாது. கிறிஸ்தவ திருச்சபையின் அதிகாரிகள் அர சியல் விஷயங்களில் அரசர்க்கு விரோதமாகவும், அரசனது உரிமை கட்கு மாறன உரிமைகளைக் கேட்டும் கிளர்ச்சி செய்திருக்கிறர்கள். கொடிய நரகத்துன்பத்திலிருந்து நீங்கி பேரின்பத்தை அடைய வேண்டுமென எண்ணும் சனங்களும் அரசரும் பிக்குகளே கெளர வித்தார்கள். அன்றியும் நல்ல குணமும், பரநல சேவையும் எவ் வளவுக்குண்டோ அவ்வளவுக்கு பிக்குகளின் செல்வாக்கு அதி கரித்தது.
புத்த சமயத்தைச் சேர்ந்த பலவகுப்பாரும் தத்தம் மதங்களை விருத்திசெய்து போட்டியிட்டார்கள். தர்மருசிவர்க்கத்தைச் சேர்ந்த வர்கள் பெருகினர்கள். இவர்கள் மகாவிகாரம், சிகிரியா, மிகிந்தலை ஆகிய இடங்களில் வசித்தனர். மகின்சாசகர், சருமகுப்தகர் என்ற புத்த சமயப் பிரிவினர் இக்காலத்தில் இலங்கையிலிருந்த தாகச் சீன ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆசார முறைகளில் இவர் கள் தேரவாதிகளோடு மாறுபட்டார்கள். பாளி வியாக்கியானங்கள் சிலவற்றில் மகாசாங்கிகருடைய சில கொள்கைகள் காணப்படுகின் றன. தேரவாதக் கட்சியிலிருந்து முதன்முதற் பிரிந்தவர்கள் இவர்கள்தான். சூளவமிசம் என்ற நூல் இவர்களைப் பற்றிக் கூறுகிறது.
சன்னியாச ஒழுக்கமுறைகளைச் சிறிது கடுமையாக அனுசரித்து வந்த பஞ்சுகூலிகர் என்ற மதத்தவர் இரண்டாவது சேனனுடைய ஆட்சிகாலத்தில், அதாவது, 871-ல் தனிப்பட்ட ஒரு கட்சியை வற் படுத்தினர்கள்.
இவ்வாறு பலவேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த சிங்கள பிக்குகள் இலங்கையில் மாத்திரம் தமது சமயத்தொண்டைச் செய்யவில்லை. இந்தியாவிலுள்ள புத்தகாயா போன்ற பல பெளத்த புண்ணிய சேத்திரங்கட்கு யாத்திரை செய்தார்கள். சிங்கள யாத்திரீகர்கள் தங்குவதற்கு புத்தகாயாவில் ஒரு விகாரம் கட்டச் சமுத்திரகுப்த சக்கர வர்த்தியிடம் அனுமதி பெற்று வருமாறு கீர்த்தி பூரீ மேவன் என்ற சிங்கள மன்னன் ஒரு தூது அனுப்பினன் எனக் கூறப்பட்டிருக்கிறது. சிங்கள பிக்குகள் இந்தியாவின் பல
5562-D

Page 50
S2 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இடங்களில் புத்த சமயத்தைப் பரப்பி வந்தார்கள். நாகார்ச்சுன கொண்டை என்ற இடம் புத்த சமயாசிரியர்களின் தலைமைத் தானமாயிருந்தது. சிங்கள பிக்குகளிருந்த ஒரு விகாரம் இந்த இடத்தில் இப்பொழுது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. சீனவில் பிக்குணிகளுக்கு ஒரு தாபனத்தை ஏற்படுத்த விரும்பியபோது இலங்கையிலிருந்த தருமகுப்தக மதத்தைச் சேர்ந்த பிக்குணிகள் கடல்கடந்து சீனசென்று அங்கே பிக்குணிகள் சங்கமொன்றைத் தாபித்தார்களெனச் சீன நூல்கள் கூறும். அக்காலத்தில் கடற் பிரயாணம் மிகக் கஷ்டமானதாயிருந்தும் அதைக் கூடப் பொருட் படுத்தாது இவர்கள் சீனசென்ற மனத்துணிபுதானென்னே!
கி.பி. முதலாவது நூற்றண்டில் ஹன்வமிசத்தவராட்சிக் காலத்தில் (கி.மு. 206-கி.பி. 220) புத்த சமயம் சீனுவிற் பரவிற்று. அதன் பின்னர் இலங்கையிலிருந்து பெளத்த சன்னியாசிகள் சீன வுக்குச் சென்றர்கள். பெளத்த கேஷத்திரங்களேத் தரிசிப்பதற் காகவும், பெளத்த நூல்களைப் பிரதிசெய்வதற்காகவும், சீன யாத்தி ரீகர்கள் இந்தியாவுக்கு வந்தார்கள். பாஹியான் என்ற இச்சீன யாத்திரீகரில் ஒருவர் கி.பி. 412-ல் இலங்கைக்கு வந்து இங்கே இரண்டு வருடகாலந் தங்கிஞர். ஐந்தாவது நூற்றண்டின் ஆரம்பகாலந் துவங்கி டியாங் வமிசத்தவரின் ஆட்சியின் (கி.பி. (618-907) கீழ் சீன ஆதிக்கம் உச்சநிலையை அடைந்த எட்டாவது நூற்றண்டின் மத்தியகாலம்வரை மகாநாமன் போன்ற சிங்கள அரசர், சீன சக்கர வர்த்திகளிடம், புத்த சமயத்துடனிருந்த பொதுவான தொடர் பினல், தூது அனுப்பிவந்தார்கள். -
இலங்கையிலும் மற்றத் தேசங்களிலும் பெளத்த தருமத்தைப் பரப்பி புத்த பிக்குகளும் பிக்குணிகளும் பெருஞ் சேவை செய்தார் கள். கல்வியை விருத்திசெய்து கலைகளை வளர்த்தார்கள். தம் மிடம் கல்வி பயிலவந்தவர்களுக்கு வாசித்தல் எழுதல் முதலிய பாடங்களைப் படிப்பித்தார்கள். பிக்குதருமத்தை அனுட்டித்துப் பலர் உயர்ந்த வாழ்வு நடத்திவந்தார்கள். இராசாக்கள் விகாரங் கட்கு சொத்துக்களே மானியம் எழுதியதால் அல்லை தொல்லை யில்லாது சீவியம்நடத்த விரும்பிய சோம்பேறிகள் கூடச் சங்கத்தில் நாளடைவில் சேர்ந்தார்கள். இதல்ை உயர்ந்த ஒழுக்கத்தை அனுட்டியாமற் பலர் பேரளவில் மாத்திரம் பிக்குகளாயிருந்த படியால் எட்டு அரசர்கள் இக்காலத்தில், சங்கத்திலிருந்து பல பிக்கு களைக் கலைத்தார்கள்.

மத்தியகால முற்பகுதி 83
புத்த பெருமானுடைய தந்ததாதுவெனக் கலிங்கத்திற் பூசிக் diliull- தலதா கீர்த்தி பரீ மேவன் காலத்தில் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இத்தந்ததாதுவை விசேஷமான ஒரு கோயி லமைத்து, வருடத்துக்கொருமுறை அதை ஊர்வலமாக எடுத்துச் சென்று விழாக் கொண்டாடிவந்தார்கள். புத்த பகவானின் அறி குறியாக இந்தத் தாதுவைச் சனங்கள் வழிபட்டனர். நாளாவட்டத் தில் இது சிங்கள அரசரின் அரசுரிமைக்கடையாளமாயிற்று. இத் தந்தம் அற்புதமான சக்திவாய்ந்ததெனவும், முடியும் அரச அணி களும் போல அரசர்க்கு இதுவும் அவசியமானதெனவும் கருதப் பட்டது. எனவே, அரசர் தந்தலைநகரை மாற்றும்போதெல்லாம் தந்ததாதுவையும் எடுத்துச் சென்று அங்கே புதிய கோவிலொன் றிற் பிரதிட்டை செய்தார்கள்.
முதலாவது முகலன் (கி.பி. 496-513) காலத்தில் புத்தரின் கேசதாது இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. இதையும் ஒரு விலை யுயர்ந்த பேடகத்தில் வைத்துப் பிரத்தியேகமான ஒரு கோவிலிற் பிரதிட்டை பண்ணிஞர்கள்.
மகாயானக் கொள்கைகள் தீவிரமாகப் பரவின. விசேஷமாக அபயகிரி, ஜேதவன என்ற விகாரங்ககிளில் வசித்தவர்கள் போதிசத் துவக் கொள்கையில் அதிராத நம்பிக்கைகொண்டிருந்தார்கள் போதிசத்துவரின் விக்கிரகத்தை அமைத்துப் பலர் வழிபட்டார்கள். வலிகமத்தில் குஷ்டராசனின் உருவமெனக் கொண்டாடப்படும் விக்கிரகம் இவ்வாறேற்பட்ட போதிசத்துவ விக்கிரகங்களிலொன்றே. நாதன் என்று இக்காலத்திலும் வழிபடப்படும் தெய்வம் மகா யானிகள் உலக இரட்சகர் எனக்கொண்டாடும் உலோகேசுவர நாதர் அல்லது அவலோகிதேசுவரர். ஏழாவது நூற்றண்டில் தப்புலன் திஹிரெலிஉபுலுவன் என்றெரு தெய்வத்திற்குக் கோவில் சமைத் தான். இத்தெய்வமும் மகாயானிகளின் போதிசத்துவரில் ஒருவ ரெனக்கூற இடமுண்டு.
மகாயானக் கொள்கையை விளக்கும் நூல்கள் சமஸ்கிருதத்தி லேயே எழுதப்பட்டன. அதனல் மகாயான மதம் பரவவே சமஸ் கிருதக் கல்வியும் வளர்ந்தது. எழாம் நூற்றண்டைச் சேர்ந்த இலங்கைச் சாசனம் ஒன்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. தான்செய்த புண்ணியத்தின் பயனகத் தனக்குப் புத்தர் பதவி

Page 51
குஷ்டராசனின் சிலை
 

மத்தியகால முற்பகுதி 85
கிடைக்கவேண்டுமென அச்சாசன கர்த்தா கூறுகிறர். எட்டாம் நூற்றண்டைச் சேர்ந்த இன்னெரு சமஸ்கிருத சாசனத்தில் அனு ராதபுரியிலுள்ள அபயகிரி விகாரையிலும் அதற்குச் சொந்தமான நிலங்களிலும் வசிக்கும் பிக்குகளும், குடியானவர்களும் அனு சரிக்க வேண்டிய சில விதிகள் கூறப்பட்டிருக்கின்றன. மதச் சலு கைக்கு அபயகிரி விகாரை பேர்போனது. அங்கு வசித்தவர்களுக்கு சமஸ்கிருத அறிவு சிறந்திருந்ததென்று சாசனத்திலிருந்து அறி கிருேம். h−
சமஸ்கிருதக் கல்வி பரவியதால் வடமொழியிலுள்ள இதிகா சங்களையும் காளிதாச மகாகவியின் நூல்களையும் இலங்கையிற் பலர் படித்தார்கள். சிங்கள பாஷைக்குத் தேவையான பல சொற்களை வட மொழியிலிருந்து கடன் வாங்கிச் சிங்கள பாஷையை வளம் படுத்தினர்கள். இதுகாறும் பாளி தருமநுால்களையே பிரமாணமா கக் கொண்டவர்கள் இப்பொழுது சமஸ்கிருத நூல்களைப் பின் பற்றிச் சிங்களத்திலும் நூல்களை யாத்தனர். இலக்கணம், நிருக் தம், சப்த சாத்திரம் முதலியவற்றைப் பயின்றதனல் சொற்களின் கருத்துக்களை ஒரு புதிய முறையில் அறிந்தார்கள். யாப்பு, அலங் காரம் முதலியவற்றைக் கற்றுத் திறமையான பாட்டுக்களை யாத் தார்கள். வான சாத்திரம், வைத்தியம், மாந்திரிகம், சங்கீதம், சிற்பம், அரசியல் முதலிய விஷயங்களைப் பற்றி வடமொழியில் உள்ள நூல்களைச் சிங்கள கலாவினேதர் படித்தார்கள். சமய விஷயங்களிற் பாளி நூற்கள் அறிவுறுத்தியது போலவே இலெள கீக விஷயங்களில் சமஸ்கிருத நூல்கள் அறிவுறுத்தின.
இன்னுெரு காரணத்தினுலும் சமஸ்கிருதக் கல்வி இலங்கையிற் பரவியது. அதாவது, இந்து சமயத்தின் செல்வாக்கு. தேரவாத பெளத்தர்களுக்குப் பாளிபாஷை போலவே இந்துக்களுக்கும் சமஸ் கிருத மொழி முக்கிய பாஷையாயிருந்தது. குப்த அரசர்களின் ஆட்சிகாலத்தில் இந்து சமயம் இந்தியாவில் புத்துயிர் பெற்று இலங்கையிலும் தனது ஆதிக்கத்தைப் பரப்பிற்று. ஏழாவது நூற் ருண்டில் தென்னிந்தியாவில் இந்து சமய மறுமலர்ச்சியுண்டா யிற்று. சைவ நாயன்மாரும் வைணவ ஆழ்வாரும் பக்தியைப் பெருக்கும் தேவார திருவாய் மொழிகளைப் பாடினர்கள். இக் கிளர்ச்சி இலங்கையையும் பாதிக்காமல் விடவில்லை. மாந்தை, திருக் கோணமலை ஆகிய இடங்களிற் குடியேறிய தமிழர் சைவக் கோவில்.

Page 52
கந்தளாயில் கண்டெடுக்கப்பட்ட விட்டுணு விக்கிரகம்
 

மத்தியகால முற்பகுதி 87
களைத் தாபித்தார்கள். கண்டி மகா தேவாலயத்தில் உள்ள விட்டுணு விக்கிரகம் 790-ல் தேவி நுவர்ைக்குக் கொண்டுவரப்பட்ட தாகக் கூறுப. இக்காலம் முடிவடைவதற்குமுன் கந்தளாயில் ஒரு விட்டுணு கோவில் கட்டப்பட்டது. ༥༽
இந்து சமயம் பரவியதற்கு இரண்டு முக்கியமான காரணங்க ளுண்டு. சமயத் தண்டனை விதிக்கும் வழக்கம் இந்தியாவிலாவது இலங்கையிலாவது இருக்கவில்லை. அரசர்கள் எல்லாரையும் ஆதரிப் பதில் பின்னிற்கவில்லை. ஒருகாலத்தில் பெளத்த பிக்குகளே ஆத ரித்தது போலவே இப்பொழுது பிராமண புரோகிதரையும் ஆதரித் தார்கள். அன்றியும், பிராமன புரோகிதருக்கும் பெளத்த பிக்கு களுக்குமிடையில் முரண்பாடேற்படவில்லை. பிராமணர் செய்யும் புரோகித வேலைக்கும் பெளத்த பிக்குகளுக்கும் எவ்விதமான தொடர்புமில்லாதிருந்ததே இதற்குக் காரணம். உள்ளூரில் வழி பட்ட சிலதெய்வங்களுக்குப்பதிலாகப் பிராமணர் சிலதெய்வங்களேப் புகுத்தினர். இப்புதிய தெய்வங்களின் வழிபாட்டை எதிர்ப்பதற்கு பிக்குகளுள் ஒருவித கட்சியாவது இருக்கவில்லை.
8. இலக்கியம்
புத்த சமய வளர்ச்சியினலும், சமஸ்கிருதக் கல்வி பரம்பியதா லும் இலக்கியத் துறையிற் கிளர்ச்சியுண்டானது. இக்காலத்து மிகப்பழைய நூல் தீபவமிசம் என்னும் ஒரு தொகை நூல். பாளி பில் எழுதப்பட்ட பல சூத்திரங்களையும் கவிகளையும் இது தன்னகத் துக்கொண்டிருக்கிறது. இக்கவிகளுட் பல புராதன காலத்தவை. புத்தசமயம் இலங்கைக்கு வந்ததையும், மகாசேனன் என்ற அர சன் வரையுள்ள இலங்கைச் சரித்திரத்தையுங் கூறுகிறது. மகா நாமன் காலத்தில் (409- 431) இந்தியாவிலிருந்து புத்தகோசன் இலங்கைக்கு வந்ததும், பாளி பாஷையைப் படித்து அதில் நுால் களை யெழுதும் வழக்கம் அதிகரித்தது. இவ்ன் விச்சத்தி மார்க்கம் என்ற நூலே எழுதினன். இதில் பெளத்த தருமக் கொள்கைகளே எடுத்து விளக்கியிருக்கிருன், மேலும், பெளத்த நூல்களுக்குச் சிங்களத்தில் எழுதப்பட்ட வியாக்கியானங்களைப் பாளியில் மொழி பெயர்த்திருக்கிறன். பின்வந்த பெளத்த சமயிகள் இவனது நூலைப் பெரிதும் பாராட்டினர். இவன் எழுதிய வியாக்கியான முறையை பர்ம்ாவிற்கூடப் பிற்காலத்திற் பின்பற்றினர்கள்.

Page 53
விாங்டபோட:
*ஆக்ச படிே நா?
雲
- - - - F-ri...." புரோவிடி என்ாரிங் இயங்கள்ே பங்ாடப் பார்: le, li tal-ir ''rivili".
 
 
 
 
 
 
 

இதுங்கையிங் கா. புதி,
வடமேற்குப் பகுதியவில் பார்ப:ே
| Lil' air ri - if it's uirlin.i. fji வெட்டாதுகள்
fri
ந்ே நடி
i ii ii ii r

Page 54
as . . . இலங்கையின் பூர்வ சரித்திரம்
இக்காலத்துப் பாளி நூல்களுள் மிகமுக்கியமானது மகாவமி சம். இது கி.பி.ஆருவது நூற்றண்டில் எழுதப்பட்டது. தீபவமிசத் த்திற் கூறப்பட்ட சரித்திரத்தையே இது கூறினலும் அட்டகதை யிலிருந்து பல விஷயங்களே இந்நூல் தன்னகத்துச் சேர்த்திருக் கிறது. இது ஒர் இதிகாச நூல், பல இலக்கிய நலங்களுடன் அமைந் தது. பாஷை நடை முதலியவற்றில் சமஸ்கிருத மொழியின் செல்வாக்கதிகம் பெற்றது. பிற்காலத்துச் சிங்கள இலக்கியத்தை யும் பாளி இலக்கியத்தையும் பெரிதும் பாதித்த இரண்டு பெரிய நூல்களுள் மகாவமிசம் ஒன்று. மற்றது சாதகமும் அதன் முக வுரையான நிதான கதையுமாகும். இவ்விரு நூல்களைப்பின்பற்றி எழுந்த மகாபோதிவமிசம் என்ற நூல் இக்காலத்து இறுதிக் காலத்தில் இயற்றப்பட்டது. இதில் அனுராதபுரி போதிவிருட்சத் தின் சரித்திரம் கூறப்படுகிறது.
குமாரதாசர் என்ற புலவர் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற கதையைக் கூறும் ஜானகீஹாணம் என்ற நூலை எழுதி ஞர். காளிதாசனின் இரகுவமிசத்தை இப்புலவர் பின்பற்றி எழு தினரென்பதற்கு இந்நூல் சான்றகும். இந்நூலாசிரியன்தான் குமாரதாதுசேனன் என்ற அரசன் (513-522) எனப் பலர் அபிப் பிராயப்படுகின்றனர். இவ்வாசிரியர் யாராயிருந்தாலும் இவரது நூல் இலங்கையில் மாத்திரமல்ல இந்தியாவிலும் புகழ்பெற்றது.
சிங்களத்திற் பார்க்கப்பாளிபாஷையிலேதான் பலநூல்களெழு தப்பட்டன. நாலாவது நூற்றண்டினிறுதியில், புத்ததாசன் காலத் தில் புத்த தருமத்தின் சில பாகங்கள் சிங்களத்தில் மொழிபெயர்க் கப்பட்டன. முதலாவது அக்கிரபோதி காலத்தில் (568-601) பன் னிரண்டு சிங்களப்புலவர்கள் இருந்தார்களெனக் கூறுவர். இக் காலத்தில் 51ழுதப்பட்ட நான்கு சிங்கள நூல்கள் இன்றும் நிலவு கின்றன. 'சியபஸ்லகர ’ என்ற சிங்கள அணிநூல் ஒன்பதாவது நூற்றண்டில் எழுதப்பட்டது. சமஸ்கிருதத்தில் அலங்காரத்தைப் பற்றிக்கூறும் காவியாதர்சம் என்ற தண்டியாசிரியரின் நூலையே இந்நூலும் பின்பற்றியெழுந்தது. மற்ற மூன்று நூல்களும் சமய சம்பந்தமானவை. பிக்குகளும் சீடரும் ஒழுகவேண்டிய முறை களை ' சிகவலந்தவினிச’, ‘ ஹெரணசிக ’ என்ற இரு நூல்களும் கூறும். பாளி நூலாகிய தம்மபத அட்டகதை என்ற நூலிலுள்ள

மத்தியகாலி ( A 9. தத గ్రgg
பதங்கட்கும் பிரயோகங்கட்கும் அர்த்தம் கூறும் முகத்தாலெழுந் தது 'தம்பியஅடுவாகடபதய ’ என்ற நூல். இந்நூல் ஐந்தாவது காசியப்பன் (913-923) எழுதியதெனக் கூறுவர். V
இக்கால ஆரம்பத்தில் சிங்கள பாஷை ஒரு தனி நிலையை அடைந்தது. எழுத்துக்களும் மாற்றமடைந்து இக்கால இறுதியில் வட்ட எழுத்தாயின. பாளி, சமஸ்கிருதம் ஆகிய பாஷைகளினல் சிங்கள மொழியும் பாதிக்கப்பட்டது.
9. ஒவியமும் சிற்பமும்
புத்த சமய வளர்ச்சியினலும், செல்வம் விருத்தியடைந்ததாலும், இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதாலும் சிற்ப சாத்திரத்திலும் முன்னேற்றமுண்டாயிற்று. இக்காலத்தில் முதன் முதலாக அமைக்கப்பட்ட கோவில்கள் இரண்டு பகுதிகளையுடையன. ஒன்று கர்ப்பக்கிருகமாகவும் மற்றது பேரிகை கொட்டும் முரசுக்கோவிலாகவு மிருந்தது. இவை வெவ்வேருகக் கட்டப்ப ட்டன. ஆனல், ஒரு பெரிய கற்பலகை இவ்விரு பகுதியையும் இணைத்திருந்தது. காலஞ்செல்லச் செல்லப் பெரிய கோவில்களை அமைக்கலாயினர். உதாரணமாக, சேதவன ராம தாதுகோபத் துக்கு மேற்கேயுள்ள கட்டிடம் முதலில் அரைக்கோள வடிவுள்ளதா யிருந்தது. இதன் செங்கற் சுவரையும் பிரமாண்டமான கற்கதவு நிலைகளையும் இன்றுங் காணலாம். இது மண்டபமும், கூடமும், சிறு தாழ்வாரமும், கர்ப்பக் கிருகமுங் கொண்டதாய்ச் சில அமிசங் களிற் கிறிஸ்தவர் கோவிலை ஒத்துளது. இக்காலத்துத் தாதுகோபங் கள் சிறியனவாயும், சதுரமான மேடையில் எடுக்கப்பட்டனவாயு மிருந்தன.
நாளந்தாவிலுள்ள கெடிகே என்ற ஒரு கட்டிட முறையும் இக்காலத்திற்றன் பெரும்பாலும் பரவியிருக்கலாம். முதலாவது நரசிங்கவர்மனுக்குப்பின் வந்த பல்லவ அரசர்கள் கட்டுவித்த கட்டி டங்களைப் பின்பற்றியே இக்கட்டிடமும் முற்றும் கல்லினல் எடுக்கப் பட்டிருக்கிறது. நாளந்தா, தம்புளே யிலிருந்து மாத்தளேக்குப் போகும் மார்க்கத்தில் நடுவேயுள்ளது. இது அனுராதபுரிக்கும் மலையரட்டைக்குமிடையில் முக்கியமான ஒரு தானத்திலிருப்பதால் இங்கே இராணுவ நிலையமொன்றிருந்தது. இக்காலத்துச்சேனையில்

Page 55
田心子母9499@@L战退el4
 

மத்தியகால முற்பகுதி 93
ஒரு பகுதி தேன்னிந்திய இந்துக்களாக விருந்த்னர். மானவர் மன் பல்லவ சேனையொன்றன் துணைகொண்டே இலங்கைக்கு அரச னனபடியால் அவனது சேனையிலிருந்த இந்த இந்துக்களிற் சில ரேனும் பல்லவ போர் வீரரென்பதில் ஐயமில்லை. நாளந்தாவி லுள்ள இந்த இந்துக்கோவில் அங்கிருந்த இந்து சமயப்போர்வீர ரின் உபயோகத்திற்காகவே கட்டப்பட்டிருக்கவேண்டும்.
ஐரோப்பாவில் வாழ்ந்த பழைய அரசரைப்போலவும் பிரபுக் களைப்போலவும் சிங்கள அரசர்கள் தற்பாதுகாப்புக்காகக் கோட்டை களைக் கட்டவில்லை. அவர்கள் தங்கள் நகரைச்சுற்றி இரண்டொரு மதில்களைக் கட்டி அவற்றைச்சுற்ற அகழி வெட்டியிருந்தார்கள். ஆபத்தான காலங்களில் அவர்கள் மலைக்கோட்டைகளிற் சென்று. ஒளித்துக்கொண்டனர். இலங்கையிலுள்ள மலைக்கோட்டைகளுள் விசேஷமானது சிகிரியாக் கோட்டை. இது முதலாவது காசியப்டன் காலத்தில் அவனது இராசதானியாயிற்று. இக்குன்று ஏறமுடியாத படி செங்குத்தாய் நிலத்திலிருந்து 600 அடி உயரமுடையதாயிருக் கிறது. இத்தகைய கற்குன்றை, அழித்தற்கரிய ஒரு கோட்டையாக மாற்றிய முதலாவது காசியப்பனின் கற்பனுசக்தியையும் மனே திடத்தையும் போற்றமலிருக்கமுடியாது. இக்குன்றின் அடித் தளத்தில் நித்திரைகொள்ளும் ஒரு சிங்கத்தின் பிரமாண்டமான உருவம் அமைக்கப்பட்டிருக்கிறது. இதனுற்றன் இதற்கு சிகிரி (சிங்ககிரி) சிங்கக்குன்று எனப் பொருள்படும் பெயரைக்கொடுத்தார் கள். இக்கோட்டையில் பல உள்மண்டபங்களும் அவற்றைச் சுற்றிச் சலவைக்கல்போல அழுத்தமாய்க் காணப்படும் சுண்ணக்கலவை தீட்டிய சுவர்களும், பல அழகிய குகைச்சித்திரங்களும் காணப்படு கின்றன. இவற்றையெல்லாஞ் செய்வித்த காசியப்பன் அழகிய வற்றை ரசிப்பதில் மிகுந்த பிரியமுடையவன் என்பது நன்கு விளங் கும். இக்குன்றின் உச்சியில் அரண்மனையைக் கட்டுவித்தான். கீழே உள்ள பிரதேசத்தில் மேற்குப் பக்கத்தில் அத்தாணி மண்டபம், சபாமண்டபம் முதலியவற்றைக் கட்டுவித்தான். குன்றின் இரு மருங்கிலுள்ள சமவெளியில் மதில்களேயும் அகழிகளையும் அமைத்து நகரைச் சமைத்துக்கொண்டான். s
இலங்கையிற் காணப்படும் மிகச்சிறந்த கற்சிற்பங்களுட் சில
இக்காலத்தவையே. இதற்கு முந்திய காலத்தில் சிற்பங்கள் சுண் ணக்கல்லிற் செதுக்கப்பட்டன. இப்பொழுது அவற்றைக் கற்பாறை

Page 56

மத்தியகால முற்பகுதி 95
யிலேயே செதுக்கலாயினர். இக்காலத்து ஆரம்பத்தில் குப்த சிற்ப முறையே இலங்கையிற் பெருவழக்காயிற்று. ஈசுரமுனியில் கற் பாறையிலே செதுக்கப்பட்டுள்ள ஆண், பெண் வடிவங்களும், தியான பாவனையிலிருக்கும் புத்தர் வடிவமும், அனுராதபுரியில் இராணி மாளிகை என்று கூறப்படும் கட்டிடத்தின் வாசற்படியிற் கருங்கல் லிற்செதுக்கப்பட்ட சந்திரவட்டக் கற்படியும் குப்த சிற்பமுறையையே பின்பற்றி எழுந்தன.
மானிட வுருவமும் குதிரையின் தலையும், ஈசமுனி
பல்லவ சிற்பமுறையைக் காட்டும் சில உதாரணங்களுமுண்டு. ஈசுரமுனியிலேயுள்ள பாறையின் பிளவுக்கிருமருங்கும் செதுக்கப் பட்ட யானையுருவச் சிற்பங்கள் மகாபலிபுரத்தில் கங்கையாற்றின் உற்பத்தியைக் குறித்துச் செதுக்கப்பட்ட பெரிய சிற்பத்தை நமக்கு நினைப் பூட்டுகின்றன. P@វាចា ஆற்றைக்காட்டுவது போன் |றுள்ளது. அவ்விடத்திற் காணப்படும் மானிட வடிவமும் குதிரை Sபின் தலையும் பல்லவமுறைப்படியான சித்திரங்களாகும்.

Page 57
Imy密面“哈994圈圈g
 

மத்தியகால முற்பகுதி 97
*இலங்கையின் பண்டைக்காலச்சித்திரங்களுள் சிகிரியாக்குகைச் சித்திரங்கள் மிகப் பிரசித்திவாய்ந்தவை. மேற்கு இந்தியாவில் அஜந்தாக் குகையிற் காணப்படும் சித்திரங்கட்கும் இவைக்கும் பெரி தும் ஒற்றுமையுண்டு. தனியாகவோ சோடியாகவோ இருபது அப்ஸ்ர ஸ்தீர்களின் உருவம் சிகிரியாவில் வரையப்பட்டிருக்கிறது. இப்பெண்கள் காசியப்பனின் மனைவியரெனவே பலர் கூறுவர். இவ்வோவியங்களின் அமைதி தனிச்சிறப்புடையது. வண்ணத் தீட்டு ஆழ்ந்த ஒவிய அறிவைக் காட்டுகிறது. அஜந்தாச் சித்திரங்க ளிற் சிறந்தவற்றேடு இவற்றை ஒப்பிடமுடியாவிட்டாலும், இவை தம்மளவில் வசீகரமான ஒவியங்களென்றே கூறலாம்”*
** இந்திய ஒவியம்' என்ற நூலில் பெர்ஷலி பிரவுன் இவ்வாறு எழுது கிமு ர். -
5562一E

Page 58
நான்காம் அத் தியாயம்
பொலனறுவைக் காலம்
G3 gest up அரசர்கள் காலம்வரை இலங்கை முதலில் அசோக நாக ரிகத்திலும் பின்னர் குப்த நாகரிகத்திலும் ஈடுபட்டிருந் தது. ஆனல், பத்தாம் நூற்றண்டின் பின் வடஇந்தியாவில் முக மதிய ஆட்சி எற்படவே இந்துக்களின் ஆதிக்கம் தேய்ந்தது. தென் னிந்தியாவில் 1565 வரை இந்த ஆதிக்கம் நிலைபெற்றது. இதற் கிடையில் சோழர், பாண்டியர் இராச்சியங்களோடு விஜயநகர இராச் சியமும் ஒன்றன்பின் ஒன்ருய்த் தோன்றின. இலங்கையும் இம் மூன்று இராச்சியங்களோடும் நேரடியான தொடர்பு வைத்திருந்த தால் சிற்சிலகாலங்களில் சோழ, பாண்டியராதிக்கத்தின் கீழ் வாழ நேர்ந்தது. இதன் பயனக சோழர் இலங்கையை வென்ற காலந் தொட்டுப் போர்த்துக்கீசர் காலம்வரை இலங்கை தென்னிந்திய ஆதிக்கத்திலேயே இருந்தது எனலாம்.
இத்தென்னிந்திய காலத்தை மேலும் இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம். ஒன்று 1017-ல் சோழர் வெற்றி துவக்கம் 1235-ல் மாகன் ஆட்சி முடியும்வரையுள்ள பகுதி. மற்றது மூன்ருவது விசயபாகுவின் ஆட்சி துவங்கி (1232-1236) 1505-ல் போர்த்துக்கீசர் இலங்கைக்கு வந்த காலம்வரையுள்ள பகுதி. 107 துவக்கம் 1235 வரை பொலனறுவையே இலங்கையின் இராசதானியாயிருந்த படியால் இதைப் பொலனறுவைக்காலமென்றே கூறிவிடலாம்.
சோழ மன்னர் பொலனறுவையைத் தலைநகராகக் கொண்ட தற்குப் பலகாரணங்களுண்டு. விவசாயத்தில் அனுராதபுரியிலும் பொலனறுவை பன்மடங்கு முன்னேற்றமடைந்துவிட்டது. அத் துடன் தென்னிந்தியாவிலிருந்து பகைவரை எதிர்பாராத சோழ
98

பொலனறுவைக் காலம் 99
மன்னர் உருகுணையிலுள்ள சிங்களரின் பகைமையை எதிர்பார்த் தார்கள். எனவே, தெற்கேயிருந்து வரும் படையெடுப்பைத் தடுத் தற்குரிய முக்கியமான இடத்தில் பொலனறுவையிருந்ததால் சோழ மன்னர் அதையே இராசதானியாக்கினர். சோழரை இலங்கையி லிருந்து கலைத்தபின்னர், அனுராதபுரி கிலமடைந்து கிடந்ததைக் கண்ட சிங்கள அரசர்கள் பொலனறுவையையே தமது இராச தானியாகவுங் கொண்டார்கள். பொலனறுவை மத்திய தானத்தி லமைந்திருந்ததால் இலங்கை முழுவதையும் நிருவகிப்பதற்கு அது எற்றதாயிற்று.
சிங்கள அரசருள் மிகச்சிறந்த இருவர் இக்காலத்தில் ஆட்சி நடத்தினர். இவர்களுளொருவனை முதலாம் விசயபாகு முத லில் மலையரட்டைக் கதிபணுகிப் பின்னர் சோழரைக் கலைத்து இலங்கை முழுவதிற்கும் அரசனனன். மற்றவன் பெரிய பராக் கிரமபாகு. இவன் இலங்கை முழுவதையும் ஆண்டதுமல்லாமல் தென்னிந்தியாவோடும் பர்மாவோடும் போர்புரிந்தான். திறமை வாய்ந்த அரசியல் முறையை எற்படுத்திப் பெரிய நீர்ப்பாசனத் திட் டங்களையெல்லாம் உண்டாக்கினன். இதஞல் விவசாயம் விருத்தி யடைந்தது. மடங்கள் ஆலயங்கள் முதலியவற்றைக் கட்டுவித்துப் பெளத்த மதநூல்களையும் இவன் பெருகச்செய்தான்.
1. சோழர்
பெரிய இராசராசன் என்ற சோழமன்னன் நிறுவிய பெரிய
சோழ சாம்ராச்சியம் அவன் மகனுன முதலாவது இராசேந் திரன் காலத்தில் (1014-1044) உச்சநிலையை அடைந்தது. இந்தியா விலும் இலங்கையிலுமுள்ள சோழரின் நிலைமையை உறுதிப்படுத் தியதுமன்றி இராசேந்திரன் மலேய தீபகற்பத்தையும் கிழக்கிந்திய தீவுகளையும் தன்ட்ைசிக்குட்படுத்தினன். இழந்த ஆதிக்கத்தைத் திரும்பவும் பெற்ற மேலைச்சாளுக்கிய மன்னர் 1016-ல் சோழ ருடன் போர்தொடுத்தனர். இதனுல் இராசேந்திரனுக்குப்பின் ஞண்ட முதலாம் இராசாதிராசன் (1044-1054) இரண்டாம் இரா சேந்திரன் (1054-1064) வீரராசேந்திரன் (1064-1070) ஆகியோ ரும், தம் ஆட்சிக் காலத்தில் இப்போரிலேயே FF(8 L 1 L வேண்டியிருந்தது. அடுத்த அரசானை அதிராசேந்திரன் அரசு

Page 59
100 இலங்கையின் பூர்வ சரித்திரம்
கட்டிலேறிய 1070-ல் உள்நாட்டுக் கலகத்தால் அரசன் இறக்கவே கீழைச்சாளுக்கிய மன்னஞன முதலாம் குலோத்துங்கன் (10701120) உடனே அரசைக் கைப்பற்றினன். குலோத்துங்கன் சாளுக் கியருடன் சண்டைசெய்து சோழ நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் கலிங்க்த்திலுமுள்ள கிளர்ச்சிக்காரரை அடக்கினன். இவனுக்குப் பின் விக்கிரம சோழனும், (1120-1135) இரண்டாவது குலோத் துங்கனும் (1135-1150) குலோத்துங்கனுடைய இராச்சியத்தைப் பரி பாலித்து வந்தார்கள். அடுத்த அரசனுன இரண்டாவது இராசேந்தி ரன் (1150-1173) காலத்திற் சோழராட்சி வலியிழந்தது. சிற்றரசர் மகாராசாவுக்கு அறியாமலே தம்முட் சண்டைசெய்யத் துவங்கினர். இரண்டாம் இராசாதிராசன் ஆட்சிக்கால முடிவில் இவ்வாறு இரண்டு பாண்டிய மன்னர் போர்செய்தனர். இச்சண்டை இரண்டாம் இரா சாதிராசன் (1173-1182) காலத்திலும், மூன்றம் குலோத்துங்கன் காலத்திலும் (1182-1218) நடைபெற்றது. தம்மிடம் துணைகேட்ட கட்சியாருக்குச் சோழ அரசர் உதவிசெய்து அவர்களின் ஆதிக்க த்தை அங்கீகரித்தார்கள். இதனுல் பாண்டியராச்சியம் ஒர் அரசன் ஆணைக்குட்பட்டு, வலிமைபெற்றுச் சுதந்திரமடைய எத்தனித்தது. இத்தருணத்தில் இன்னெரு சாதியார் ஆதிக்கம் பெற்றர். இவர் களைக் கோசாலர் என்ப. 1173-ல் காகதீயர் என்பவர் மேலைச் சாளுக்கியரை வலிதொலைத்தனர். அவர் ஆணையின் கீழிருந்த கோசாலர் அப்பொழுது சுதந்தரம்பெற்றர்.
1216-ல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றம் குலோத் துங்களுேடு சண்டையிட்டான். இவன் சண்டைக்கார் ருது தனது இராசதானியைவிட்டு ஓடினன். பாண்டியராதிக்கம் பெருகுவதைக் கண்டஞ்சிய கோசாலர் குலோத்துங்சனுக்கு உதவி செய்தார்கள். குலோத்துங்கன் பாண்டியராதிக்கத்தை ஈற்றில் அங்கீகரித்தான். இவ்வாறு ஒருகாலத்தில் இந்தியாவின் பெரும் பகுதியைத் தன் குடைக்கீழாண்ட சோழ சக்கரவர்த்தி நெடுங்காலமாய்த் தனக்குத் இறைகொடுத்துவந்த பாண்டிய மன்னனுக்கு அடங்கவேண்டியதா
f). Dl. 's
2. இலங்கையிற் சோழரும், முதலாம் விசயபாகு வினல் அவர்கள் தோற்றமையும்
() 7-ல் இலங்கையைக் கைப்பற்றிய சோழர் 1070 வரை ஆட்சி
நடத்தினர்கள். 1017-க்கு முன் பாண்டிய மன் ரும் சோழரும் பல( ~ ? " எ சிம்மாசனத்தைக் கைப்பற்றி இதீ!

பொலனறுவைக் காலம் 10
தீவை ஆட்சிபுரிந்ததுண்டு. ஆனல், அரசுகள் மாறியதால் பொது சனங்களுடைய வாழ்வில் மாறுதல் உண்டாகவில்லை. சோழ பாண் டிய மன்னரும் சிங்கள அரசரைப் போலவே ஆட்சிநடத்தி வந்தார் கள். ஆனல், 1017-ல் இலங்கை சுதந்தரமிழந்து சோழ சாம்ராச்சி யத்தின் ஒரு பகுதியாயிற்று. அரசியல் நிர்வாகத்தில் சீோழர் குறிப் பிடத்தக்க மாற்றமேதும் ஏற்படுத்தினர்களோ என்னவோ தெரிய வில்லை. அவர்கள் அரசிலோ, இராணுவத்திலோ உயர்ந்த பதவிகளைத் தம்மவர்க்கே வழங்கினர். போர்க்காலங்களில் சோழ யுத்த வீரர் பெளத்த ஆலயங்களைத் தாக்கினர்கள். ஆனல், தமது மரபுக்குமாறக அவர் பெளத்த சமயிகளைத் துன்புறுத்தியிருக்க மாட்டார். சோழர் இந்துக்களாயிருந்தபடியால் இந்துக்களே அவர்கள் ஆதரித்தனர். எனினும் இவ்விடயத்தில் அவர்கள் புதிய ஒரு கொள்கையைத் தாபிக்கவில்லை. சிங்கள அரசர்களே பிரா மணரை ஆதரித்து வந்திருக்கிருர்கள். நாகரிகத்திலும் சிங்களர் சோழருடன் ஒற்றுமையுடையவராகவே யிருந்தனர். எனெனில், சிங்களர்க்குச் சொந்தமான வடஇந்திய நாகரிகம் சிங்களரிலும் பார்க்க முன்னதாகவே சோழரைப் பாதித்தது. ஆதிக்கமும் செல் வாக்கும் பறிகொடுத்த சிங்கள அதிகாரிகள் சோழராட்சியை விரும்பியிருக்க மாட்டார்கள். குடிகளும் தங்களது நன்மைக்கு ஆட்சி நடவாததைக்கண்டு அதிருப்தியடைந்தனர், அதிக செல வான யுத்தங்களைச் செய்வதற்கும் பெரிய இராசராசனல் தஞ்சை பயிற் கட்டப்பட்டதுபோன்ற பெரிய கோவில்களைக்கட்டிப் பரிபாலிப்ப தற்கும் இலங்கைப் பணம் உபயோகிக்கப்பட்டது. 1014 துவக்கம் மேலே கூறிய கோவிலுக்கு இலங்கையிலுள்ள ஐந்து கிராமங்கள் மானியமாக விடப்பட்டன.
முதலாம் இராசேந்திரன் (1014-1044) ஆட்சியின் முற்பகுதி யில் சிங்களர் தமது ஆதிக்கத்தை மீட்டுக்கொள்வதற்கு முற்பட வில்லை. ஆனல், 1022-இல் சோழராதிக்கத்தை வலிதொலைப்ப தற்கு முன்வந்த சேரபாண்டியருக்குச் சிங்களர் உதவி புரிந்தனர். இப்புரட்சியை இராசேந்திரன் அடக்கிப் பாண்டிய சேர மன்னரைக் கலைத்துவிட்டுத் தனது ഥ4ങ്ങ ஒருவனை இத்தேசங்கட்கு அரசனுக்கி ஞன். பின்னர் தென்னிந்திய இராச குடும்பத்தினர் சிலர் இலங் கைக்கு வந்து உருகுணேயிற் றங்கிச் சோழருக்கெதிராகத் தனியாக வும் சிங்களரோடு சேர்ந்தும் போர்செய்தார்கள்.

Page 60
102 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இலங்கையிலிருந்து சோழரைக் கலைப்பதற்கு முதன்முதலாக 5-ஆம் மிகுந்துவின் மகனன விக்கிரமபாகு 1029-இல் முயன்றன். இவனுக்குப் பின்னர் ஐந்து மன்னர் சிறிதுசிறிது காலம் ஆண் டார். இவர்களுள் கடைசியாக ஆண்ட மூவரில் ஒருவன் பாண்டிய அரச வமிசத்தைச்சேர்ந்த விக்கிரமபாண்டியன். மற்ருெருவன் கன்னேசிநாட்டு ஜகத்பாலன். இவ்விருவரும் களுத்துறையிலிருந்து ஆண்டார்கள். மூன்றமரசன் பாண்டிய மன்னன் மகன் பராக் கிரம பாண்டு.
சோழர் இக்கடைசி மன்னனைக் கொலை செய்தபின், 1049-இல் சிங்களர் ஒரு பகுதியாரின் துணையுடன் உலோகேசுவரன் என்றெரு சிங்கள தளபதி (1049-1055) உருகுணேயைக் கைப்பற்றி மாணிக்க கங்கையிலுள்ள கதிர்காமத்தில் ஆட்சி நடத்தினன். உலோகேசு வரனுக்கெதிரானவர்களின் துணையுடன், சிங்கள இராசவமிசத்தைச் சேர்ந்த கீர்த்தி என்பவன் மலையரட்டைக்கு அரசனனன். உலோ கேசுவரன் ஆறு வருஷம் உருகுணையில் அரசாண்டபின் இறக்கவே கேசதாது காசியப்பன் என்ற இன்னுெரு சிங்கள அதிகாரி அரசுா மையை ஏற்றுக் கொண்டான். உடனே சோழரும் பஸ்தும் கோருளையில் அதிக செல்வாக்குப் பெற்றுவந்த கீர்த்தியும் ஒருவர் பின் ஒருவராய் காசியப்பனை எதிர்த்தனர். சோழரை ஒருவாறு காசியப்பன் நிர்வகித்தபோதிலும், கீர்த்தி அவனைத் தோற்கடித்துக் கதிர்காமத்தைக் கைப்பற்றினன்.
கீர்த்தி, விசயபாகு என்ற பெயரைத் தாங்கி சோழரைக் கலைத்து இலங்கைக்கு அரசனுக வேண்டுமென எண்ணிஞன். இந்நோக்கத்துடன் இவன் யுத்தத்துக்கு ஆயத்தஞ்செய்து வருகை யில் சோழர் சேனையொன்று உருகுணையிற் பிரவேசித்தது. தான் முழுப்பலத்துடன் புறப்பட ஆயத்தமாவதற்கு முன் சோழர் சேனே வந்துவிட்டதேயென எண்ணி விசயபாகு இத்தருணம் சோழருடன் சண்டையிடுவதிற் பயனில்லையெனத் தேர்ந்து விரைவாய் மலையரட் டைக்கு ஒடிஞன். சோழியர் சேனை அங்கிருந்து நீங்கும்வரை அவன் மலேயரட்டையிலேயே இருந்தான். பின்னர் உருகுணைக்குத் திரும்பிவந்து கிணகங்கையின் உற்பத்தி தானத்துக்குச் சமீபத்தி லுள்ள தம்பலகாமத்தில் வசித்தான். ஏனெனில், தம்பலகாமம் கதிர்காமத்திலும் பார்க்க சோழர் படையெடுப்புக்குச் சேய்மையி லிருந்தது.

பொலனறுவைக் காலம் - 103
இக்காலத்தில் இராசரட்டையில் அனேகர் சோழராட்சியை எதிர்த்தனர். இவ்வெதிர்ப்பை யடக்குவதற்குத் தென்னிந்தி யாவிலிருந்து ஒரு சேனை அனுப்பப்பட்டது. இராசரட்டையை அடக் கியதும் சோழியர் சேனை தெற்குநோக்கிச் சென்று உருகுணையை அழித்தது. விசயபாகு பின்னர் பலுத்தகிரி* என்ற மலைக்கோட்டை யில் வைகி அதை அரண்செய்தான். சோழர்சேனை அங்கே சென்று அவனை எதிர்த்தபொழுது சோழரை வென்று அவர்களின் சேன பதியையுங் கொன்று பொலனறுவையையுங் கைப்பற்றினன். இக் கெடுதியைக் கேள்வியுற்ற வீரராசேந்திர சோழன் (1064-1069) 1067-இல் தென்னிந்தியாவிலிருந்து ஒரு பெரும் படையை இலங் கைக்கு அனுப்பினன். விசயபாகு உடனே சோழர் படையைத் தடுக்கத் தனது சேனையை அனுப்பினன். அனுராதபுரியில் இச் சேனை சோழரால் நிர்மூலமாக்கப்பட்டதால், விசயபாகு பொலனறு வையைவிட்டு ஒடிக் கடுகனவைக்கு மேற்கேயுள்ள வாகிரிகலை என்ற குன்றில் மூன்று மாதமாகத் தங்கினன்.
விசயபாகு இவ்வாறு தங்கியிருக்கையில் கேசதாது காசியப்ப னின் தம்பி தலைமையில் புத்தல என்ற இடத்தில் ஒரு குழப்பம் உண்டாயது. உடனே விசயபாகு உருகுணேக்குச் சென்று குழப் பத்தை அடக்க வேண்டியதாயிற்று. கேசதாது காசியப்பனின் தம்பி தோல்வியடைந்து சோழர் பக்கம் சென்றன். இன்னும் சரி யான பாதுகாப்பின்றியிருந்த விசயபாகு மறுபடியும் தம்பலலக மத்துக்குச் சென்று அதை மேலும் அரண் செய்தான். பின்னர் அவன் அங்கிருந்து வளவகங்கையின் சங்கமத்திலுள்ள மகாநாக குலமென்ற இடத்துக்குச் சென்று சோழருக்கெதிராகப் படை யெடுக்க ஆயத்தஞ் செய்துவந்தான்.
1070-இல் அதிராசேந்திர சோழன் அரசேற்றபொழுது நாட்டிற் குழப்பமுண்டானது. பின்னர் இம்மன்னன் இறந்ததும் உண்டான கலவரத்தில் பாண்டியன் தனது ஆதிக்கத்தை மீண்டும் பெற்றுக் கொண்டான். இதே தருணத்தில் விசயபாகுவும் இலங்கையி லிருந்து சோழரைக் கலைக்க முயற்சி செய்தான். மேற்கேமிருந்து
*பலுத்தகிரி என்பது பலத்துபான என்ற மலைக்கோட்டையாயிருக்க லாம். இது திசமகாராமைக்கு 8 மைல் கிழக்கேயுள்ள மகுல் மகா விகாரத்
துக்கு அணித்தாயுள்ளது.

Page 61
104. இலங்கையின் பூர்வ சரித்திரம்
மாப்ரட்டை மார்க்கமாக ஒரு சேனையை அனுப்பினன். இப்படை அனுராதபுரியைக் கைப்பற்ற மாந்தையைப் பிடித்தது. கிழக்குக் கரையோரமாக பொலனறுவையை நோக்கி இன்னெரு படையை அனுப்பிவிட்டு, தான் ஒரு படையுடன் மகியங்கனையூடாகச் சென்று பொலனறுவையைப் பிடித்தான். இவ்வாறு விசயபாகு சோழ ராட்சியை ஒழித்துப் பொலனறுவையைத் தனது இராசதானி யாக்கினன். இந்நகருக்கு விசயராசபுரமென்ற புதியபெயரையுஞ் குட்டினன்.
3. விசயபாகுவும் அவனுக்குப்பின் ஆட்சி புரிந்தோரும்
முதலாம் விசயபாகு (1070-1114) ஏகசக்கரவர்த்தியாக நாற்
பத்துநான்கு வருடம் ஆச்சி புரிந்தபோதிலும், நாட்டிலே பல கலகங்களேற்பட்டதால் இவனது ஆட்சி சிறந்ததெனக் கூற முடியாது. சோழரை வலிதொலைத்து நாட்டைவிட்டுக் கலைத்ததும், இவனது சேனபதியொருவன் உண்டாக்கிய கலகத்தை அடக்க வேண்டியதாயிற்று. உயர்ந்த பதவிகளே வகித்த இவனது மூன்று சகோதரர்கள் மூட்டிய கலகம் மாயரட்டை, உருகுணே, மலையரட்டை ஆகிய இடங்களெங்கும் பரவிற்று. 1085-இல் இன்னெரு குழப்ப முண்டாயிற்று. இதனல் விசயபாகுவின் நிலைமை முன்னையிலும் மோசமாயிற்று. மேலைச்சாளுக்கிய மன்னனை ஆறவது விக்கிர மாதித்தியனிடம் இவன் அனுப்பிய தூதரைச் சோழர் அவமானப் படுத்தினர். அதற்காகச் சோழரைத் தண்டிக்க எண்ணி இரண்டு சேனபதிகளோடு ஒரு சேனையை அனுப்பினன். சேனை இலங் கையைவிட்டு நீங்குமுன் அதிலிருந்த வேலைக்காரர் என்ற தமிழ்ப் படை வீரர் சிலர் சோழராகிய தமது நாட்டவருக்கெதிராய்ப் போர் செய்ய மறுத்துச் சேனைத்தலைவரிருவரையும் கொன்று அரசனின் அரண்மனையையுந் தீக்கிரையாக்கினர். விசயபாகு உயிருக்குப் பயந்து விலையுயர்ந்த தனது சொத்துக்களையும் எடுத்துக்கொண்டு வாகிரிகலைக்கு ஓடிவிட்டான். அவன் அங்கிருந்து சேனையுடன் திரும்பிவந்து கலகஞ்செய்தவர்களே அடக்கித் தனது விருப்பத் துக்கு மாறக எதிர்நின்ற குழப்பத் தலைவர்களையெல்லாப்) தீயிலிட் டுக் கொல்லுவித்தான்.

பொலனறுவைக் காலம் 105
விசயபாகு இறந்தபின் அவன் தம்பியாகிய சயபாகு அரசன னன். இவனுக்குப் பின்னர் விக்கிரமபாகுவுக்கே அரசுரிமை உண்டு. இவன் விசயபாகுவுக்குக் கலிங்க தேசத்து இளவரசியொருத்தியின் வயிற்றிற் பிறந்தவன். நாட்டு வளப்பத்தின்படி இவனே யுவராச னகி மாயாரட்டைக்கு அதிபதியாக வேண்டும். ஆனல், பாண்டிய இராசகுமாரனெருவனே மணந்திருந்த மித்தா என்ற தனது சகோ தரியின் பிள்ளைகளையே சயபாகு ஆதரித்து வந்தபடியால் அவளது மூத்த மகஞன மானபரனனையே சயபாகு யுவராசனக்கி மாய ாரட்டைக் கதிபதியாக்கினன். சயபாகுவுக்குப் பின்னர் அரசு அவனுக்கே செல்லவேண்டுமெனச் சூழ்ச்சி செய்துவிட்டான். தனது அரசுரிமையை இழக்க் விரும்பாத விக்கிரமபாகு சேனையோடு உடனே படையெடுத்துச் சென்று போர்க்கோலங் கொண்டுவந்த மானபரணனேயும், கீர்த்தி பூரீ மேகன், பரீ வல்லபன் என்ற அவ னது சகோதரரையும் புத்தல என்ற இடத்தில் எதிர்கொண்டான்.* இதில் நடந்த பலசண்டைகளில் விக்கிரமபாகு வெற்றிபெற்று, சய பாகுவைக் கலைத்துவிட்டு இராசரட்டைக்கு அரசனனன். மானபர ணன் புங்ககாமம் என்ற இடத்தை இராசதானியாகக்கொண்டு மாயாரட்டையை ஆண்டான். இரண்டு சகோதரர்களும் உருகுணை யைத்தம்முட் பிரித்து ஆட்சி நடத்தினர். வளவகங்கைக்கு மேற்கே யுள்ள உருகுணேப் பகுதியான தொலொஸ்தகஸ் ரட்டையை மகா நாககுலம் என்ற பட்டினத்திலிருந்து பூரீ வல்லபன் ஆண்டான். கிழக்குப் பகுதியான அட்டதகஸ் ரட்டையை உத்தானத்துவாரத்தி லிருந்து (இந்நகரம் மொனரகலைக்குச் சமீபத்திலுள்ள கலபத்தா வெனக்கூறலாம்) கீர்த்தி பூரீமேகன் ஆண்டான். ஒரு வருடத்துக்குப்
أنواعه عى لأL لعة
1-ம் விசயபாகு சயபாகு மித்தா
| 2-ம் விக்கிரமபாகு
மானுபரணன் கீர்த்தி பூரீ மேகன் பூரீ வல்லபன் 2-ம் கயபாகு
1-ம் பராக்கிரமபாகு மாஞபரணன்
*இந்நகரம் தாடிகமம் என இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

Page 62
106 இலங்கையின் பூர்வ சரித்திரம்
பின் மூன்று சகோதரர்களும் மறுபடியும் விக்கிரமபாகுவுக் கெதி ராக எழுந்து சென்று போதிசேடைப்பதம் என்ற இடத்தில் தோல்வி யடைந்து பஸ்தும்கோறளைக்குப்பின்வாங்கினர். விக்கிரமபாகு அவர் களை விட்டுவிடாது பின்தொடர்ந்து கழனிவரை கலைத்துச்சென்றன். இத்தருணத்தில் இந்தியாவிலிருந்து வீரதேவனென் ருெருவன் இலங்கைமீது படையெடுத்து வரவே விக்கிரமபாகு திரும்பினன். மன்னரில் நடந்த சண்டையில் வீரதேவன் விக்கிரமபாகுவை வென்று பொலனறுவைவரை அவனைக் கலைத்தான். பின்னர் பொலனறுவையையும் அவன் கைப்பற்றவே விக்கிரமபாகு மகா வலிகங்கைக்குத் தெற்கேயிருந்ததெனக் கருதப்படும் கொட்டுகார என்ற இடத்துக்கு ஒடினன். பின்னர் வீரதேவனை வென்று மறுபடியும் அவன் இராசரட்டைக்கரசஞனன்.
இதன் பின்னர் விக்கிரமபாகுவைக் கலைப்பதற்கு அந்தச் சகோ தரர் மூவரும் முயலவில்லை. ஆனல், இரண்டு பக்கத்துப் படை களும் எல்லைகளில் கலகம் விஃாத்ததால் நாட்டில் ஒரளவுக்கு குழப்பமும் சமாதான பங்கமு முண்டாயிற்று.
சிலவருடம் அரசாண்டபின் மானுபரணன் இறக்கவே அவன் தம்பியான கீர்த்தி பூரீ மேகன் மாயாரட்டைக்கரசனணன், உரு குனே முழுவதையும் பூரீ வல்லபன் ஆண்டான். இரண்டாவது விக்கிரமபாகு 1137-இல் இறக்க அவனது மகனன இரண்டாம் கய பாகு அரசனனன். கீர்த்தி பரீ மேகனும் பூரீ வல்லபனும் கயபாகு வுக் கெதிராகச் சண்டையிட்டார்கள். ஆனல், கயபாகு தன் தந்தை யைப் போலவே தனக்கெதிராய் வந்த பகைவரையெல்லாம் தோற் கடித்து வெற்றிபெற்றன்.
4. பராக்கிரமபாகுவின் இளமை
ప్రతీతి ஒரு புதிய தலைவன் தோன்றினன். இவனே மானுபரணனின் மகனன பராக்கிரமபாகு, இவன் தனது மதியூகத்திலுைம் திறமையினலும் இலங்கை முழுவதையும் ஒரு குடைக்கீழ்க் கொண்டுவந்தான். அதிட்டவசமாக சூலவம்சத்தில், பராக்கிரமபாகுவைப் பற்றிப் பலவிஷயங்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவ்வரசனின் வரலாறு மிகஉருசிகரமானது. இவனது வாழ்க்கைச் சரித்திரத்தை மூன்று பாகமாகப் பிரிக்கலாம். முதற்பாகம் இவ

பொலனறுவைக் காலம் 107
னது சிறிய தந்தையான கீர்த்தி பூரீ மேகனுக்கும் மைத்துனனுகிய கயபாகுவுக்கு மெதிராய்ச் சூழ்ச்சிசெய்வதிற் கழிந்தது. இரண்டாம் பாகம் மாயரட்டையை ஆள்வதிலும் கயபாகுவுடனும் பூரீ வல்லபன் மகனான மானுபரணனுடனும் போர்செய்வதிற் செலவாயிற்று. மூன்ரும் பாகம் இவன் இலங்கைக்கு எகசக்கரவர்த்தியானதையும் கோவில்கள் ஆலயங்கள் முதலியன கட்டுவித்ததையும் நீர்ப்பாசன வேலைகள் செய்வித்ததையும் பர்மாவிலும் தென்னிந்தியாவிலும்
சண்டைசெய்ததையும் கூறும்.
தன் தந்தை பிறந்ததும், பராக்கிரமபாகு உருகுணைக்குச் சென்று மகாநாகசூலத்திற் றனது சிறிய தந்தையுடன் வாழ்ந்து வந்தான். பின்னர் மாயரட்டைக்கு வந்து கீர்த்தி பூரீமேகனுடன் சங்கத்தலி என்ற இடத்திற் காலங்கழித்தான். சிலநாளில் பேரா சைப் பேய் அவனேப் பிடித்தாட்டத் தன்னை அன்புடனுதரித்த சிறிய தகப்பனுக்கெதிராய்ச் சதிசெய்யத் தலைப்பட்டான். சங்கத்தலிக்குப் பத்துமைல் தூரத்திலுள்ள பதல்கொடை* என்ற இடத்துக்கு பராக் கிரமபாகு ஒரு சேனையுடன் புறப்பட்டு அங்கேயிருந்த தனது சிறிய தந்தையின் சிறந்த சேனபதியைக் கொன்று அவனிடமிருந்த பொருளையெல்லா மபகரித்துக்கொண்டான். பின்னர் மாத்தளைப் பகுதியிலுள்ள மணிக்தெனை என்று கூறப்படும் புத்தகாமத்துக்குப் போனன். வழியில் தன்னைத் தொடர்ந்துவந்த போர்வீரரையெல் லாம் கொன்று காலவீவாவிலிருந்த கயபாகுவின் சேனபதியுடன் நட்புப் பூண்டான்.
இந்நிலையில் தனக்கும் இவனல் ஆபத்து வருமோ என அஞ் சிய கீர்த்தி பூரீ மேகன், இவனைப் பிடித்து வருமாறு ஒரு பெரிய சேனையை அனுப்பினன். இந்தச் சேனை கையிற்படாமற் றபும் பொருட்டுப் பராக்கிரமபாகு முதல் மாத்தளைக்கு வடகிழக்கேயுள்ள போகாம்பறைக்குப் பின்வாங்கினன். பின்னர் அங்கிருந்து இலக்கலை மலைகட்குச் சென்றன். இங்கிருந்து அம்பன என்ற இடத்துக்கு வந்தபொழுது கீர்த்தி பரீ மேவன் அனுப்பிய சேனை இவனது சேனையைக் கலையச்செய்து இவனையும் தோற்கடித்தது. தப்புவ தற்கு வேறு வழியில்லாமற் பராக்கிரமபாகு தனது மைத்துனனுன கயபாகுவுடன் நட்புப்பூண்டு அவனுடனேயே பொலனறுவையிற்
*பதலத்தலி

Page 63
OS இலங்கையின் பூர்வ சரித்திரம்
றங்கினன். இங்கேயும் அவன் தன்னை ஆதரித்த கயபாகுவுக்கெதி ராய்ச் சூழ்ச்சி செய்தான். தன்னை ஆதரிக்கக்கூடியவர்களே ஒன்று சேர்ப்பதிலும், இராசரட்டையின் வளம் செல்வம் முதலியவற்றை அறிந்து கொள்வதிலும் பராக்கிரமபாகு அங்கிருந்தே முயற்சி செய் தான். கயபாகு தன்னைச் சர்தேகிக்கிருன் என்று கண்டவுடன் அவன் அங்கிருந்து மாயரட்டைக்கு ஒடிவிட்டான். கீர்த்தி பூரீமேகன் மறுபடியும் இவனை ஏற்றுக்கொள்ள இணங்கவில்லை. ஆனல், இவன் தாயார் மன்றட ஏற்றுக்கொண்டான். வயதுசென்ற கீர்த்தி பூரீ மேகன் விரைவில் இறந்துபோகவே பராக்கிரமபாகு மாய ரட்டைக்கு அரசனனன். கீர்த்தி பூரீ மேகனின் தம்பியான பூரீ வல்லபன் எற்கனவே இறந்துபோனன்.
幕
5. பராக்கிரமபாகு, கயபாகுவுடனும் மானபரண ஆணுடனுஞ் செய்த போர்கள்
@:೪೮ பகுதிக்கு மாத்திரம் அரசனுயிருப்பதுடன் பராக்கிரமபாகு திருத்தியடையவில்லை. இராசரட்டையையுங் கைப்பற்ற வேண்டுமென எண்ணினன். முதன்முதலாக அவன் எல்லைக் காவற்படைகளைப் பலப்படுத்திப் பின்பு போருக்காயத்தஞ் செய்யலானன். இராசரட்டையை மேற்கிலிருந்தும் தெற்கிலிருந் தும் ஒரேசமயத்திற்ருக்க எற்பாடு செய்தான். பின்னலிருந்து வந்து தனது படையைத் தாக்காமலிருப்பதற்காக மலேயரட்டையை முதற் பிடிக்குமாறு ஒரு சேனதிபதியை அங்கே அனுப்பினன். அவனைக்கொண்டு மலையரட்டையைக் கைப்பற்றுவித்ததுமன்றித் தும்பரையையும் வெற்றிபெறச் செய்து அங்கிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்க முயன்ருன். தும்பரையை பராக்கிரமபாகுவின் சேனை பிடித்ததும் கயவாகு வேந்தன் அச்சேனையை எதிர்க்க ஒரு படையை அனுப்பினன். இப்படையைப் பராக்கிரமபாகு முறியடித்து மேற்கி லிருந்து படையெடுப்பைத் துவக்கினன். இச்சேனை இராசரட்டை யின் மேற்குக் கரையையும் முத்துச்சிப்பித் துறையையும் பிடித்த பின் காலஓயாவை நோக்கிக் இழக்குப் பக்கமாகச் சென்று எல்லையி லுள்ள எதிரிகளைத் துரத்திற்று. பின்னர் தம்பளயைத் தாண்டி அப்பாற் செல்லுகையில் புதிய சேனையைக் கயபாகு அனுப்பி பேற் கில் தோற்ற பூமியைக் கைப்பற்றினன். ஆனல், தும்பரையைப்

பொலனறுவைக் காலம் 109
பிடிக்க அனுப்பிய படையைப் பராக்கிரமபாகுவின் சேனை தோற் கடித்துச் சிதறச் செய்தது.
இவ் வெற்றியின் பின்னர் மேற்கிலிருந்து மறுபடியும் படையை அனுப்பினன், மேற்கிருந்து வந்த சேனை மறுபடியும் கடற்கரைப் பிரதேசங்களைப் பிடித்தது. பின்னர் கிழக்குநோக்கிப் படையெடுத்துச் சென்று அனுராதபுரியைக் கைப்பற்றியது. தெற்கி லிருந்து வந்த சேனை வடக்கு நோக்கிச் சென்று அலஹராப் பகுதி யைப் பிடித்தது. பின்னர் இவ்விரு சேனையும் பொலனறுவையை நெருங்கி கயபாகுவைச் சிறைப்படுத்தின.
உடனே கயபாகுவை ஆதரித்தோர் உருகுணேயில் அரசு நடத்திய பூரீ வல்லபன் மகனுன மானுபரணனிடம் உதவி கேட்டார் கள். மானுபரணன் எற்கனவே பராக்கிரமபாகுவுடன் செய்த உடன் படிக்கையைக் கைவிட்டு, தனது சேனையோடு வந்து பொலனறுவை யைப் பிடித்தான். கயபாகுவை விடுதலை செய்வதற்குப் பதிலாக அவனே இருட்டறையொன்றிற் சிறையிட்டு இராசரட்டைக்குத் தானே அரசனனன்.
முன்னிலும் கேவலமான நிலையிலிருந்த கயபாகு இப்போது பராக்கிரமபாகுவின் உதவியை வேண்டவே, அவன் மீண்டும் பொல னறுவையைப் பிடித்தான். தோல்வியடைந்த மாஞபரண்ன் உருகு 2ணக்கு ஒடிவிட்டான். விடுதலைபெற்ற கயபாகு கோதுசார என்ற இடத்துக்கு ஒடிச்சென்று பராக்கிரமபாகுவின் படைகளுக்கெதிராக நடவடிக்கை யெடுத்துக்கொண்டான். கொஞ்சக்காலஞ் சென்ற பின், சில பிட்சுக்களின் உதவியைக்கொண்டு பராக்கிரமபாகுவுடன் சமாதானஞ் செய்துகொண்டான். ஒருவருக்குப்பின் மற்றவர்தான் அரசுக்குரிமையுடையவரென்றும், பரஸ்பரம் சமாதானமாக இரு வரும் இனி வாழவேண்டுமென்றும், பகைவர்தாக்கினல் ஒருவர் மற்றவரின் உதவிக்குச் செல்லவேண்டுமெனவும் சமாதான உடன் படிக்கை செய்யப்பட்டது.*
*சில அயற்றேசத்து இளவரசர் பொலனறுவையில் பராக்கிரமபாகுவின் அரசவைக்கு வந்தனர். இவர்களுள் ஒருவன் கயபாகுவுக்குப்பின் அரசுரிமை ஏற்றுக்கொள்ளக் கூடுமென்றஞ்சியே பராக்கிரமபாகு 8 யபாகுவுடன் போர்
தொடுத்தான். இது ge(5 காரணமாயிருந்திருக்கலாம்.

Page 64
10 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இதன்பின் கயபாகு தன் வாக்குறுதிப்படி நடந்தான். மான பரணன் தன்னுடன் ஒப்பந்தஞ் செய்வதற்கு அவன் இணங்க வில்லை. ஆனல், கயபாகு இறந்ததும், இராசரட்டையைக் கைப்பற்றி தீவு முழுவதற்கும் அரசனுக வேண்டுமென எண்ணி மானுபரணன் சேனையை இட்டுச்சென்று பராக்கிரமபாகுவுடன் யுத்தஞ் செய்தான்.
உடனே பராக்கிரமபாகு மகாவலிகங்கையை மானபரணன் தாண்டாவண்ணம் அந்நதியிஞேரத்திற் றனது படைகளை நிறுத்தி னன்; எனவே, சண்டையின் பெரும்பகுதி மகாவலிகங்கையின் ஆற்றுத் திடர் வழிகளில் நடந்தது. அலுத்துவரைக்குப் பதின் மூன்று மைல் வடக்கேயிருக்கும் ஹெம்பராவைக்குச் சமீபத்தி லுள்ள ஆற்றுத்துறையிலும், தஸ்தோட்டை, மாகன்தோட்டை முத லிய ஆற்றுத்திடர் வழிகளிலும் சண்டை நடந்தது. எதிர்த்து வந்த படைகளை முன்னேருமற் றடுத்தபோதிலும் அவர்களைக் கலைத்து வெற்றிபெறப் பராக்கிரமபாகுவினல் முடியவில்லை. எனவே, புதிய முறைகளை அனுசரித்தான். எதிரியின் படைகளைப் பின்புறத்திலிருந்து தாக்குவதற்கு உருகுணேயின் வடமேற்கி லிருந்து ஒரு படையை இரத்தினபுரி மார்க்கமாக அனுப்பினன். மேற்கேயிருந்து வரும் படையை எதிர்க்கும் வண்ணம் மான பரணன் தனது படையின் ஒரு பகுதியை அனுப்பினன். எதிரியின் படையில் ஒரு பகுதி இவ்வாறு பின்வாங்குவதனுல் எற்பட்ட வசதியைப் பராக்கிரமபாகு பயன்படுத்திக் கொள்வதற்கிடையில் அனுராதபுரத்தில் இருந்த நாராயணன் என்ற சேனபதி குழப்பஞ் செய்தான். குழப்பத்தை அடக்குவதற்கு ஒரு சேனையை அனுப்ப வேண்டியதாயிற்று. குழப்பத்தை அடக்கியபோதிலும் மானபர னன் பராக்கிரமபாகுவின் படையைத் தோல்வியுறச் செய்தான். உடனே பராக்கிரமபாகுவின் படை பொலனறுவைக்குப் பின்வாங்கி அங்கிருந்து தம்புளேக்குச் சென்றது. பின்னர் நிகவவட்டிய என்ற இடத்துக்குச் சமீபத்திலுள்ள விக்கிரமபுரத்துக்குப் போயிற்று. மானுபரணன் பின்தொடர்ந்து கிரித்தலை வரைச்குஞ் சென்றன். இங்கிருந்து அனுராதபுரிக்கு ஒரு சேனையை அனுப்பினன். இது வடகிழக்கிலிருந்து மாயரட்டையைத் தாக்கிற்று. கிழக்கிலிருந்து தாக்கும் நோக்கமாக மானுபரணன் தானகவே மணிக்தென என்ற இடத்தை நோக்கிச் சென்றன். அனுராதபுரிக்குச் சென்ற சேனை காலவீவாவுக்குக்கிட்டத் தோற்கடிக்கப்பட்டது. இதனல் இந்தப்படை

பொலனறுவைக் காலம்
யெழுச்சி தோல்வியுற்றது. பின்னர் பராக்கிரமட்ாகு மானபரண
னின் சேனையை நெருக்கி ஆறுமாதத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றன். மானுபரணன் உடனே உருகுணைக்கு ஒடி அங்கே கொஞ் சக்காலத்தின் பின் இறந்தான். பராக்கிரமபாகு அவனுடைய மக
ஞன பூரீ வல்லபனைச் சிறைப்படுத்திப் பொலனறுவையையுங் கைப்
பற்றினன். 1153-இல் பராக்கிரமபாகு, அந்நகரில் வைத்து முடி
குடினன்.
6. உருகுணை வெற்றி
LDரனுபரணன் இறந்த போதிலும் பராக்கிரமபாகுவுக்கு உருகு ணையில் எதிர்ப்பு நிற்கவில்லை. 1157-இல் பராக்கிரமபாகு தங்களைத் தண்டிக்கக்கூடுமென அஞ்சிய சில பிரதானிகள், மான பரணனின் தாயான சுகலை என்பவளின் ஆதரவுடன் கலசஞ் செய் தார்கள். கலகக்காரரை அடக்குவது இலேசான காரியமல்ல என்ப தைச் சோழர் எவ்வாறு அறிந்தார்களோ அவ்வாறே பராக்கிரம பாகுவும் அறிந்துகொண்டான். ஏனெனிற் ருேல்வியடைந்தவுடன் கலகக்காரர்கள் மலைப்பிரதேசங்கட்கு ஒடிச்சென்று அங்கிருந்து தனித்தும் வாய்ப்பானபோதும் தம்மெதிரிகளுடன் போரிட்டனர்.
கலகந்தோன்றியவுடன், ப்ராக்கிரமபாகு தந்த தாதுவையும் பிட்சாபாத்திரத்தையும் கைப்பற்றும் பொருட்டுச் சுகலையிருந்த உடுந்துறைக்கு ஒரு சேனையை அனுப்பினன். ஆனல், அச்சேனையி லிருந்த வேலைககாரரும் சேரரும் சிங்களரும் குழப்பஞ் செய்ததால் முற்போக்குத் தடைப்பட்டது. குழப்பம் அடங்கியதும் பராக்கிரம பாகுவின் சேனை மகாவலிகங்கை மார்க்கமாகச் சென்று பிபிலே பாதையில் முன்னேறிற்று. பக்கத்திலிருந்து தாக்காதவண்ணம் பாதுகாப்பதற்காகச் சேனேயினெருபகுதி பசறைவழியாய் அனுப்பப் பட்டது. இச்சேனை மறுபடியும் மூலச்சேனையை வந்து சேர்ந்ததும், மடகம என்ற இடத்துக்கூடாகச் சென்று உடுந்துறையில் ஒரு பெரிய போர்செய்து வெற்றியீட்டிற்று. இதையறிந்ததும், சுகலை தந்த தாதுவையும், பிட்சாபத்திரத்தையும் எடுத்துக்கொண்டு ஒடினுள். திக்வாவ (மகாகண்டியவாவ) என்ற இடத்திற் குழப்பக்காரரை அடக் கிய்சேனையினல் மேலும் வலிமைபெற்ற பராக்கிரமபாகுவின் சேனை சுகலையைப் பின்தொடர்ந்து சென்று தாதுக்களைக் கைப்பற்றியது.

Page 65
112 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இதன் பின்னர் வதுளேக்கு வடக்கிலிருந்து எதிரிகள் தாக்கா வண்ணம் சேனையின் ஒருபகுதி அங்கு அனுப்பப்பட்டது. மூலபடை தெற்குநோக்கிச் சென்று புத்தல என்ற இடத்தில் இரண்டு போர் களில் வெற்றிபெற்றது. குழப்பஞ் செய்து தோற்றவர்கள் நடத்திய கிரமமில்லாத யுத்தத்தினுல் பராக்கிரமபாகுவின் படை மேலே செல்லமுடியாமற் போயிற்று.
இதன் பின்னர் அவனது படை மேற்கிலிருந்து உருகுணே மீது பாய்ந்தது. ஒரு சேனை கரையோரமாகச் சென்று ஜின் தோட்டை, வலிகமம், கம்புறுகமம், மாத்தறை, தேவநுவ்ரை ஆகிய இடங்களைக் கைப்பற்றியது. இன்னெரு படை பல்மதுளே, இரக் வானை ஆகிய இடங்களைத் தாண்டிச் சென்று, உநுபொக்கமலைகளை அடைந்து கடைசியாக மகாநாகசூலத்தைப் பிடித்தது. பின்னர் இரண்டு சேனைகளும் ஒன்றுகூடிச் சத்துருவைப் பல இடங்களில் முறியடித்துக் கடைசியாக மாகமத்தைக் கைப்பற்றியது. கிழக்கு உருகுணையில் மேலும் சண்டை செய்தபின் சுகலையைத் தோற் கடித்து மறுபடியும் உடுந்துறையைக் கைப்பற்றினர். உருகுணையை இவ்வாறு பராக்கிரமபாகு வெற்றிகொண்டான்.
இதன் பின்னர் 1160-இல் உருகுணையிலும், 1168-இல் மாந் தையிலும் குழப்பங்களுண்டாயின. பராக்கிரமபாகு அவற்றை இலேசாக அடக்கிவிட்டான்.
7 கலிங்க வமிசம்
ராக்கிரமபாகுவுக்குப் புத்திரப்பேறில்லாதபடியால் தனது சகோ
தரி மகனன கலிங்க தேசத்து இளவரசன் விசயபாகுவே தனக்குப்பின்னரசுசெய்ய வேண்டுமென அவன் ஒழுங்கு செய்தான். ஆனல், விசயபாகு அந்நிய தேசத்தவனென்ற காரணத்தால் ஒரு சாரார் இதை விரும்பவில்லை. விசயபாகு முடிசூடின அன்றே நாட்டில் ஒரு குழப்பமுண்டாயிற்று. அரசனே ஆதரித்த சேனபதி யொருவன் அக்குழப்பத்தை அடக்கிவிட்டான். அமைதி ஏற்பட்ட தும் விசயபாகு தன்னை எதிர்த்தவர்களைத் தண்டிக்க எண்ணுது அவர்களைத் தன்பக்கம் சேர்த்துக்கொள்ள முயற்சி செய்தான். பராக்கிரமபாகு சிறைப்படுத்தியவர்களை விடுதலைசெய்தான். கைப் பற்றப்பட்ட அவர்களது நாடுகளை மறுபடியும் அவர்களுக்கு வழங்கினன்.

பொலனறுவைக் காலம் 113
ஒரு வருடத்தில் விசயபாகு கொல்லப்பட்டான். பின்னர் இன்னெரு கலிங்க அரசன், கீர்த்தி நிசங்கமல்லனென்ற பெய ருடையவன் (1187-1196) அரசனனன். இவன் மிகத்திறமையுள்ள அரசன். தான் ஆண்ட ஒன்பது வருடங்களுள் இலங்கையின் வளத்தைப் பெருக்குவதற்குப் பெரு முயற்சி செய்தான். இன் னும் தனது எதிரிகளைத் தண்டியாது தன் பக்கத்திற்சேர்த்துக் கொள்ள முயன்றன். சனங்கள் சஞ்சலமின்றித் தமது கருமங் களைச் செய்துவரக்கூடியதாய் நாட்டில் அமைதி நிலவச்செய்தான். அடிக்கடி ஊர் சுற்றிப்பார்த்து ஆங்காங்குக் குடிகட்கு வேண்டிய வற்றைச் செய்து அவர்களின் சந்தோஷத்தை நாடிவந்தான்.*
நிசங்கமல்லனுக்குப் பின் கலிங்க அரசர் மூன்றுபேர் ஒரு வருடத்துக்கு ஆட்சி நடத்தினர். கடைசியாக ஆண்ட அரசனை எதிர்க்கட்சிச் சேனதிபதி ஒருவன் அரசிருக்கையிலிருந்து கலைத்து விட்டு பராக்கிரமபாகுவின் மனைவியான லீலாவதியூை அரசுகட்டி லேற்றுவித்தான். இதன் பின்னர் இவ்விருகட்சிகளும் தம்முட்டாம் கலாம்விளைத்துத் தத்தம் பிரதிநிதிகளேத் தலைமையேற்கச் செய்த னர். இக்காலத்தில் நாலு கலிங்க இளவரசரும் ஒரு பாண்டிய இள வரசனும் இலங்கையில் ஆண்டனர். இவர்களுட் கடைசியாக ஆண்டவன் கலிங்கமாகன் (1214-1235). இவன், விசயபாகுவும் நிசங்கமல்லனும் அனுசரித்த சமாதானக் கொள்கையைக் கைவிட்டு மிருகபலத்தினுல் சனங்களை அடக்கி ஆண்டான். இவன் தன் சேனை யுடன் இராசரட்டைக்குச்சென்று நாட்டைச் சூறையாடி, அங்குள்ள பிட்சுக்களையும் பிரசைகளையும் கொடுமையாக நடத்தி, எங்கும் நாசத்தையுண்டாக்கிஞன்.
பராக்கிரமபாகுவின் நாட்டில் இவ்வாறு குழப்பங்களேற்படுவ தற்குப் பல காரணங்களுண்டு. பராக்கிரமபாகுவுக்குப்பின் வந்த
* நிசங்கமல்லன் இவ்வளவு நன்மையெல்லாஞ் செய்தபோதிலும் சில சிங்க ளப் பிரதானிகள் இவனது ஆட்சியை எதிர்த்தார்கள். முதற் சிங்கள மன்ன ஞன விசயன் கலிங்க நாட்டவணுதலால் இலங்கையின் அரசுரிமைக்குக் கலிங்க வமிசம் போதிய யோக்கியதையுடையதென்றும் சோழபாண்டிய வமிசத்தவர் புத்த சமயத்தை ஆதரியாதவர்களாதலால் அவர்கள் தகுதியுடையவரல்ல ரென்றும், கொவிகுலத்தவர் (வேளாண் மக்கள்) சத்திரியரல்லாதபடியால் அவர்களும் அரசுக்கு அருகரல்லரென்றும் கிசங்கமல்லன் தனது சாசனமொன்
றிற் கூறியிருக்கிமுன்,

Page 66
114 இலங்கையின் பூர்வ சரித்திரம்
அரசர்கள் ஒருவரும் முழுத்தேசத்தின் ஆதரவைப் பெறக்கூடியவர் களாயிருக்கவில்லை. பராக்கிரமபாகுவின் வலிமைபொருந்திய ஆட்சி முடிவடைந்ததும் அவனல் அடக்கிவைக்கப்பட்டவர்கள் மறுபடியுந் தமது ஆதிக்கத்தைத் தாபிக்க முயன்றர்கள். அன்றியும், இலங்கையிலும் அயல் நாடுகளிலும் போர் நடத்திய அனுபவ முள்ள சேனைத்தலைவர் பலர் பராக்கிரமபாகு இறந்த பின்னரும் சேவையிலிருந்ததால் இவர்கள் சேனையிடம் மிகச் செல்வாக்குள்ள வர்களாயிருந்தனர். அதனல் தாங்கள் விரும்பியவர்களை அரியா சனத்திலேற்றவோ விரும்பாதவர்களைக் கடத்திவி வோ முடிந்தது. மேலும், இலங்கையை ஆட்சிபுரிவதற்குத் தங்களுக்குள்ள உரி மையை விட்டுக்கொடுக்கக் கூடாதெனக் கலிங்க வமிசத்தவர் கொண்ட உறுதியினல் நாட்டில் பல சண்டைகள் நடந்தன. அதனல் ஊர்கள் அழிந்தன. பின்வந்த அரசர்கள் இவ்வழிவுக் குப் பரிகாரந்தேட முயலவில்லை. விவசாயத்தை விருத்தியண்ண முற்படவுமில்லை.
8. அரசியல் முறையும் கொள்கைகளும்
இக்கால அரசியல்முறை முந்தியகாலத்தினின்றும் பெரிதும்
மாறுபடாத போதிலும் பெரிய ப்ராக்கிரமபாகு நிர்வாகத்தை முன்னையிலுந் திறமையுடையதாகச் செய்தான். இவன் மாயாரட் டையை ஆண்டபொழுது இராணுவ இலாகாவைப் பணஇலாகாவி னின்றும் பிரித்து ஒவ்வொரு இலாகாவுக்கும் ஒவ்வொரு தனி உத்தியோகத்தரைத் தலையாக நியமித்தான். பின்னர் இலங்கை முழுவதுக்கும் அரசனனதும் ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ் வொரு தேசாதிபதியையும், சிறு பகுதிகட்கு ஒரு சிறு அதிகாரியை யும் நியமித்தான். அரசியல் நிர்வாகத்தின் பல துறைகளையும் மேற்பார்வையிடுவதற்காகப் பல இலாகாக்களை உண்டாக்கினன்.
அரசனுக்கு ஒரு ஆலோசனைச் சபையிருந்தது. அதில் யுவராச னும், இளவரசியும், சேனபதியும், பிரதான அதிகாரிகளும், மகா லேககர் என்ற பிரதம காரியதரிசியும், மாகாணங்களின் நிர்வாகத் தலைவர்களும், பகுதிகளின் தலைவர்களும், வர்த்தகத் தலைவர்களு மிருந்தார்கள். மிக முக்கியமான விடயங்களிலெல்லாம் அரசன் இந்த ஆலோசனைச் சபையை உசாவுவதுண்டு. ஆனல், இச்சபை யின் அதிகாரங்களெவையென்பது திட்டமாய்த் தெரியவில்லை.

பொலனறுவைக் காலம் 15
முந்திய காலத்தைப் போலவே இக்காலத்திலும் விவசாயத் தின் மூலமாகவே அரசனுக்கு வருமானம் கிடைத்தது. சனங்கள் விவசாயத்தையே மேற்கொண்டிருந்ததால் தானிய வரியே முக்கிய மான திறையாயிருந்தது. நன்செய்யானலென்ன, புன்செய்யா னலென்ன, தோட்டங்களானலென்ன விளைவிலொருபகுதி அரச னுக்கு இறையாகக் கொடுக்கப்பட்டது. ஆனல், சேவைக்காக மானிய மாய் வழங்கப்பட்ட நிலங்கள் இறையிலி நிலங்களாகவேயிருந்தன. நிசங்கமல்லன் காலத்தில் நிலங்கள் மூன்று விதமாகப் பிரிக்கப் பட்டன. விளைவுக்குத் தக்கவாறே நிலங்களுக்கு வரி விதிக்கப் பட்டது. நிலமில்லாது வியாபார முதலியன நடத்துவோர் பண மாகவோ அல்லது பண்டமாகவோ வரியிறுத்தனர். பதினைந்தாம் நூற்றண்டினிறுதியில் எழுதிய சாசனமொன்றில் கூறப்பட்ட மராள என்ற வரி பூதல்வரியாக இருக்கலாம். இதன்படி ஒரு வரின் சொத்தில் மூன்றிலொருபாகம் அரசனுக்குச் செல்லும் : சந்ததியில்லாதவர்களுடைய சொத்துக்கள் முழுவதும் அரசனுக்கே சொந்தமாகும்.
அரசுரிமை தாயம் சம்பந்தமாக இக்காலத்தில் தென்னிந்திய கொள்கைகள் அதிகமாகப் பரவின. வடஇந்திய ஆரியர் தகப்பன் வழியையே கொண்டாடினர்கள். ஆனல், திராவிடரிற் சிலர் தாய் வழியைக் கொண்டார்கள். ஒரு அரசன் தாய் தந்தையாகிய இரு மரபிலும் உயர்ந்த தொடர்புடையவனுயிருக்க வேண்டுமெனச் சென்ற அத்தியாயத்திற் கூறினுேம். இக்காலத்தில் இக்கொள்கை மேலும் தீவிரமாகியதால் பல அரசர்கள், என் பராக்கிரமபாகுகூடத் தாய்வழி மரபையே பெரிதும் கொண்டாடினர். விக்கிரமபாகுவுக் கெதிராக இராசரட்டையின் அரசுரிமை கூறிய மித்தாவின் புத்திரர் தாய்வழியைக்கொண்டே அவ்வாறு செய்தார்கள் என்று கூறலாம்.
அரசைப்பற்றிய கொள்கைகளும் இக்காலத்தில் மாற்றமடைந் தன. அரசனைப் போதிசத்துவனகக் கொண்டாடினர்களென்று முந்திய அத்தியாயத்திற் கூறினேம். கோல்கோடாத மன்னன் புத்தனுக்குச் சமானமாவானெனவும் மானிடவடிவிலிருந்தபோதி லும் மன்னன் தெய்வ அமிசமுடையவனெனவும் நிசங்கமல்லன் கருதினன். இந்துக்கள் இவ்வாறே கருதியதால் நிசங்கமல்லன் இந்துக்கொள்கையை மிகவும் தழுவினனென்பது மலைமேல் விளக்கு.

Page 67
6 இலங்கையின் பூர்வ சரித்திரம்
9. போர்முறை
@**... நடந்த சண்டைகளைப் பற்றி அறிவதற்குப் போதிய சான்றுகளிருப்பதினுல், இக்காலப் போர்முறையைப் பற்றி யும், போர்க்கருவிகளைப் பற்றியும் ஒரளவுக்குக் கூறலாம். பண்டைய இந்திய நூல்கள் ரத, கச, துரக, பதாதி என்ற தேர், யானே, குதிரை, காலாள் எனும் நான்கு படைகளேப் பற்றிக் கூறும் ; இலங்கையில் யானை, குதிரை, தேர் ஆகியவை சிற்சில சண்டைகளிற் கலந்துகொண்டதுண்மையே. ஆனல், பெரும்பாலும் இவை இலங் கைப் படையில் அபூர்வமென்றே கூறலாம். இதற்கொரு முக்கிய காரணம் இலங்கை மலைமடுவுள்ள தேசமுமல்லாமல் காடு அடர்ந்த பூமியாயுமிருந்தமையே. அத்துடன் சேனைகள் செல்வ தற்கு வசதியான பாதைகளும் அமைந்திருக்கவில்லை. இக்காலத் தில் ஒரே ஒரு நல்ல பாதையிருந்தது. இதுவே மாந்தையிலிருந்து மாகமஞ் செல்லும் பிரசித்திபெற்ற பாதை. இரண்டுமைலுக் கொருகல்லாக நிசங்கமல்லன் இப்பாதையிற் கல்லமைத்திருந் தான். ஆஞல், சேனைகள் எப்பொழுதும் இந்தப் பாதையாற் செல்வதற்கு வாய்ப்பதில்லை. காட்டுக்கூடாகவும் செங்குத்தான பாதைகளிலும் சிலசமயம் செல்லவேண்டியிருந்ததால் யானை, தேர், குதிரை ஆகிய போகமுடியாமலிருந்தது. இப்படியான் சந் தர்ப்பங்களில் போர்வீரர் கால்நடையாகவே சென்றர்கள். சேனத் தலைவர் அதிகாரத்தைக் காட்டும் குடைமேலே நிழல் செய்யப் பல்லக்கூர்ந்து சென்றர்கள்.
வாள், குத்துவாள், வேல், ஈட்டி, கவண், எறிவேல், கதை ஆகிய ஆயுதங்களைப் போர்வீரர் உபயோகித்தனர். தற்பாதுகாப்புக் காக எருமைத்தோற் கேடகங்களை எந்தினர். வில்லாலிகள் முக்கிய மாக நகரங்களையும், கோட்டைகளையும் பாதுகாத்தார்கள். இவர் சில சமயங்களில் நஞ்சூட்டிய அம்புகளைப் பிரயோகித்தனர்.
படையில் உள்ளூர் வீரரும் கூலிப்படையினருமிருந்தனர். புரா தன காலத்திற் சிங்களரே பெரும்பாலும் படையாட்சிகளாயிருந் தார்கள். மத்தியகால ஆரம்பத்தில் சேரவீரரும், மைசூர் முதலிய இடங்களிலிருந்து வந்தோரும் சேனையிலிருந்தனர். படையினுெரு பகுதி அரசனுக்கு மெய்க்காவலாயிருந்தது. மற்றது எல்லைக் காவ

பொலனறுவைக் காலம் 117
லிலும், துறைகளிலும் வேறு முக்கியமான இடங்களிலும் வைக் கப்பட்டது. இதனை அவ்வப்பகுதியை ஆளும் அதிகாரிகள் மேற் பார்வை செய்தனர்.
வேலைக்காரர் என்போர் முதலாம் இராசேந்திர சோழனேடு இலங்கைக்கு வந்த போர்வீரர். இவர்கள் முதலில் ஒரு வர்த்தக தாபனத்தின்கீழ்ச் சேவைபுரிந்து வந்தார்கள். இதன் தலைமைக் காரியாலயம் மகாராஷ்டிரத்திலுள்ளது. இதன் கிளைத்தாபனங்கள் தென்னிந்தியா, இலங்கை, பர்மா ஆகிய இடங்களிலும், இந்தியாவி ஞட்சிக்குட்பட்ட துரதேசங்களிலுமிருந்தன. இவர்களது சாதாரண கடமை வர்த்தக தாபனங்களைக் காப்பாற்றுதல். தம்மை ஆளும் அரசனது படையிலும் இவர்கள் சேர்ந்து சேவை புரிந்தனர். இவ் வேலைக்காரர் செல்வாக்குள்ள ஒரு கூட்டத்தவராயிருந்தபடியால் இலங்கையில் முதலாம் விசயபாகு, இரண்டாம் கயபாகு, பெரிய பராக்கிரமபாகு போன்ற அரசர்க்குக்கூட இடையூறு செய்துவந்தார் கள். முதலாம் விசயபாகு இறந்தபின், அவன் கட்டுவித்த தலதா கேக் கட்டிடத்தைப் பகைவர் தீண்டாமலிருக்கும் பொருட்டு அது இவ்வேலைக்காரர் பொறுப்பிலேயே விடப்பட்டது. இவர்களைச் சேவைக்கமர்த்திய வர்த்தகத் தாபனத்தைப்பற்றி ஒன்றுந்தெரிய வில்லை. ஐரோப்பியரது கிழக்கிந்திய கம்பெனிகள், யுத்தகாலங்க ளிலும், குழப்பகாலங்களிலுந் தமது வியாபாரத்தைப் பாதுகாப்ப தற்காகச் சிப்பாய்ளே எற்படுத்தியதுபோலவே இவர்களும் சேவைக் கமர்த்தப்பட்டிருக்கலாம். 德
தற்பாதுகாப்புக்கான நகரங்களே மதிலும் அசழியும் சூழ்ந் திருக்கும். தோல்வியுற்ற சேனைகள் பாதுகாப்புக்காக வாகிரிகலை போன்ற மலைக்கோட்டைகளிற் றஞ்சம்புகுவது வழக்கமாயிருந்தது. கூர்முனைகொண்ட தடிகளைத் தரையில்நாட்டி அவற்றை வேலியாக அமைத்து இடையே அகழிகள் கிண்டி அவற்றுட் கூரான முனைகளை யும் முட்களையும் இட்டுப் பாசறைகளமைத்தார்கள்.
ஆற்றங்கரையோரமாகவே பெரும்பாலும் சேனைகள் படை யெடுத்துச் சென்றன. இவை வெற்றிக்கனுகூலமா யிருப்பது போலவே சில சமயங்களில் பிரதிகூலமாகியும் விடுகின்றன. சேனை கள் ஆற்றைக் கடக்க வேண்டிவந்ததால் வியா குலந் தான்.

Page 68
18 இலங்கையின் பூர்வ சரித்திரம்
தெற்கேயுள்ள சேனைகள் மாவலிகங்கையின் வலதுகரையாகச் சென்ற போதிலும் இராசரட்டையை அடைவதற்கு நதியை எங்காவது ஒரு இடத்திற் கடக்கவேண்டியது அவசியம். அலுத் நுவரைக்குக்கிட்ட உள்ள வீரகந்தோட்டைதொட்டுப் பொலனறுவைக் குச் சமீபமாயுள்ள மாகந்தோட்டைவரை எராளமான ஆற்றுத் துறைகளிருந்தன. ஆனல், இவற்றை இராணுவம் காவல் செய் தது. இதனற்றன் பொலனறுவையைத் தாக்கவேண்டினுற் சில சமயம் மாயாரட்டைக்கூடாகப் படையெடுத்துச் சென்று மேற்குப்பக்க மாக வரவேண்டி யேற்பட்டது. தெற்குநோக்கி கீழ்க்கரை வழியாய்ச் செல்லும் சேனைகள் வழக்கமாக பிபிலே, மாடகம, மொனரகலை ஆகிய இடங்களைத் தாண்டிச் சென்றன. வழக்கமாக இவர்களது செலவு புத்தல என்ற இடத்துக்குச் சமீபத்தில் தடைப்பட்டது. ஏனெனில், அங்கே குமுக்கன்ஒயாவைத் தாண்டி, ஒரு மலைக் கண வாயையும் கடந்துசெல்ல வேண்டியிருந்தது. இக்காரணத்தால் உருகுணையை எப்பொழுதும் எதிரிகள் மேற்கிலிருந்தே தாக்கினர். அதற்கு அவர்கள் கரைமார்க்கமாகவோ அல்லது பெல்மதுளே, புலுத்தோட்டை ஆகிய இடங்களுக்கூடாகச் செல்லும் பாதைவழி யாகவோ போகவேண்டியதாயிருந்தது. மலையடுக்கும் கொடிய காடும் நெருங்கியிருந்தமையால் மலையரட்டையை வெற்றிபெறுவது எப்பொழுதும் கடினமாகவேயிருந்து வந்தது.
இல போர்களினல், விசேடமாக நீண்டகாலப் போர்களினல், அதிக அழிவும், நாட்டிற் குழப்பமும் உண்டாயின. சனங்களின் சிவனுேபாயத்திற்கு ஆதாரமான தென்னை போன்ற மரங்களை எதிரி களின் படை நாசஞ்செய்தது. கிராமங்களையும் அங்காடிப் பட்டினங் களேயும் தீக்கிரையாக்கிச் சனங்களின் வீடுவாசல்களேயும் பொருட்களே யும் அழித்தார்கள். விவசாயத்தையும் பயிர்களையும் நாசப்படுத் துவதற்காக நீர் நிரம்பிய குளங்களின் கரைகளை உடைத்தும், ஆறு, கால்வாய் முதலியவற்றுக்குக் குறுக்கேபோட்ட அணைகளை அழித் தும் விட்டார்கள். சில இடங்களில் அவர்கள் செய்த அழிவு வேலை அவ்வளவு அதிகமாயிருந்ததால் கிராமங்கள் இருந்த இடந்தெரி யாமலே போயின.
போக்குவரத்துக்குக் கடினமான பகுதிகளில் வசித்த அதிகாரி கள் சில சமயங்களில் அரச ஆணையை மீறித் திறைகொடாதிருந்
f

பொலனறுவைக் காலம் 19
தார்கள். நிலங்களில் வேலைசெய்யாது அடிமைகளுந் தொழிலாளி களும் எசமானருக்கு விரோதமாய்க் கிளம்பியதால் நிலங்கள் செய்கையின்றிப் பாழ்பட்டன. சிலர் வழக்கத்துக்கு மாறய்ச் சேனை யிற் சேர்ந்து, வழக்கப்படி தமக்கு உரிமையில்லாத பல உயர்தர உத்தியோகங்களைப் பெற்றனர். தண்டிக்க ஒருவருமிலரென்பதை அறிந்து சிலர் நகரங்களேக் கொள்ளேயடித்தும் ஆறலைத்துச் சூறை கொண்டும் வந்தனர். இவ்வாறு ஒழுங்கும் சமாதானமுமின்றி யும் உயிருக்கும் சொத்துக்கும் பாதுகாப்பின்றியும் சனங்கள் வாழ்ந்து வந்தார்கள்.
10. கமத்தொழிலும் நீர்ப்பாய்ச்சலும்
@*51೩ಷ್ಟ್ರಿ) பல யுத்தங்கள் நடந்தபோதிலும் விவசாயம் மும் முரமாக நடந்தது. சோழர்காலத்தில் கைவிடப்பட்ட பல குளங்களை முதலாம் விசயபாகு பழுதுபார்த்துப் புதுப்பித்தான். பெரிய பராக்கிரமபாகு மாயாரட்டைக்கரசனனதும் தெதுறு ஒயாவின் குறுக்கே பல அணைக்கட்டுகளை அமைத்து, அதன் நீரை வாய்க்கால் களுக்குப் பாயச்செய்தான். இவற்றைச் சுற்றியுள்ள காடுகளை அழித்து வயலாக்கினன். குருணுக்கலுக்கு வடமேற்கேயுள்ள பாண்டவீவா என்ற குளத்தை வித்தரித்ததுடன் புத்தளத்துக்குக் கிழக்கேயுள்ள தபோவீவாவையும், நிக்கவரட்டிக்கணித்தாயுள்ள மகல்லவீவாவையும் இவைபோன்ற பல குளங்களையுஞ் செப்பனிட் டான். பஸ்தும்கோறளையிலுள்ள சதுப்புநிலங்களின் நீரைவற்றச் செய்து அவற்றை நன்செய் நிலமாகமாற்றினன்.
இலங்கைக்கு அரசனனதும் பராக்கிரமபாகு ஒருபெரிய நீர்ப் பாசனத் திட்டத்தை வகுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்தான். பல குளங்களைப் புதுப்பித்தான். திசாவீவாவுடன் கால வீவாவை இணைக்கும் சயகங்காபோன்ற பல முக்கியமான கால்வாய் களைத் திருத்தி நீர்பாயச் செய்தான். புதிய பல கால்வாய்களையுங் குளங்களையும் வெட்டுவித்தான். சூளவமிசத்தில் இவற்றின் பெயர் கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும் இவை வழக்கிலில்லாதபடியால் இப்பொழுது இவற்றைச் சுட்டி அறிந்துகொள்வது கடினம்.
தோபவிவாவையும் இக்காலத்தில் தும்புத்துலுவீவா என அழைக்கப்படும் குளத்தையும் இணைத்துப் பராக்கிரமக்கடல் என்ற

Page 69
பொலன்னறுவையில்
* பராக்கிரமக் கடல்"
என்னும் பெருங்குளம் 7་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་
கீர்ப்பர்ய்ச்சல் ట్,సోటి {{@}
“இலங்கை விஞ்ஞான பத்திரிக்ை-பிரிவு "ேஇலிருந்து அனுமதியுடன் எடுக்கப்பட்டது.
 
 
 
 

பொலனறுவைக் காலம் 121
பெரிய குர்த்தை இவன் கட்டினன். இவன் கட்டிய பெரிய குளங்க ளுள் இதுவுமொன்று. பராக்கிரமக்கடலுக்குத் தண்ணிர் கொடுப்ப தற்காக ஆங்கமாடில்ல.ஆல (ஆகாசகங்கை) என்ற கால்வயினல் அம்பன் கங்கையை அதனுடன் இணைத்துப் பின்னர் அந்தக் கால்வாயையே மின்னேரியாக் குளம்வரை நீட்டியிருந்தார்கள் மினிப்பேஆல் என்ற கால்வாயையும் பராக்கிரமபாகுதான் வெட்டி யிருக்கவேண்டும். இக்கால்வாய் வடக்கே செல்வதற்குமுன் மகா வலிகங்கையாற்றின் தண்ணிரில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொள்ளு கிறது. இக்காலத்திற்றன் அலஹராக்கால்வாய் வடக்கே கந்த ளாய்க்குளம்வரை வித்தரிக்கப்பட்டது. ஆற்றின் மேற்பகுதியில் அணையிட்டு, முப்பது முப்பத்தைந்து மைலுக்குத் தெற்கேயும் வித்தரிக்கப்பட்டது. -
இக்குளங்களும் வெட்டாறுகளும் முன்னெருபோதுமில்லாத முறையில் விவசாயத்துக்குத் துணைபுரிந்திருக்க வேண்டும். பெருத்த பொருட்செலவில் யுத்தங்கள் செய்யவும், ஏராளமான பணத்தைச் செலவுசெய்து பெரிய கட்டிடங்களைக் கட்டவும் பராக்கிரம பாகுவுக்கு பொருளெவ்வாறு கிடைத்ததென்றல் இந்த விவசாய விருத்தியினலேயே எனக் கூறலாம். -
இவற்றைப் பழுதுபார்ப்பதற்கே எராளமான தொழிலாளர் தேவைப்பட்டிருக்கும். நிசங்கமல்லன் தன் காலத்தில் இக்குளங்க ளும் வெட்டாறுகளும் பழுதுபடாமலிருந்தன என்று கூறுகிறன். ஆனல், இவனுக்குப்பின் நிகழ்ந்த படையெழுச்சிகளும், யுத்தங் களும், மாகன் காலத்தில் நடைபெற்ற கொள்ளேகளும் நாட்டிற் பெரிய அழிவையுண்டாக்கின. அதனுல் இந்நீர் நிலையங்களும் கால்வாய்களும் பாழடைந்தன. பின்னர் ஆண்ட அரசர்கள் அவற் றைச் சீர்திருத்த முயலவில்லை.
11. புத்த சமயமும் இந்து சமயமும் முந்திய ஆாற்றண்டுகளிற் போலப் புத்த சமயம் இக்காலத்தில் அதிக உயிர்ப்புடனிருக்கவில்லை. சோழர்படை யெடுப்பினு லும் பின்னர் நாட்டில் நடந்த பல யுத்தங்களினலும் புத்த சமயம் வளர்ச்சி குன்றியது. எனவே, முதலாம் விசயபாகு, பிக்கு சங்கத் தைப் பரிசுத்தப்படுத்திச் சங்கம் நிலைபெறுவதற்காக பர்மாவி லிருந்து (ராமன்ன) பிக்குகளை வரவழைத்தான்.

Page 70
122 இலங்கையின் பூர்வ சரித்திரம்
விசயபாகு இறந்தபின்னர், விக்கிரமபாகுவுக்கும் மித்திரையின் (மித்தா) புதல்வர்களுக்கு மிடையே போர் நிகழ்ந்த காலத்திலே, பெளத்த சமயம் மீண்டுங் கீழ்நிலை யடைந்ததென்க; புத்த விகாரங் களிலிருந்த விக்கிரகங்களும், செல்வமுஞ் சூறையாடப்பட்டன. ஒழுங் கற்ற பிட்சுக்களைப் பராக்கிரமபாகு சங்கத்தினின்றும் நீக்கவேண்டி யிருந்தது. அவன் திம்பூலகலையிலிருந்த பிட்சுக்களின் நல்லுதவி யினல், மகாவிகாரம், அபயகிரிவிகாரம், சேதவனவிகாரம் ஆகிய மூன்றிலும் பிரதானமாயிருந்த பிரிவினருக்குள் ஒற்றுமை யுண்டாக்கினன். இவன் காலத்திலே பெளத்த சமயம் ஓங்கிய தெனத் திட்டமாகக் கூறலாம் ; ஆனல், இவனிறந்தவுடனே அத னிலை சிறிது குறைந்ததெனலாம். நிசங்கமல்லன், தானும், தகைமையற்ற பிட்சுக்களே நீக்கி, முப்பிரிவினருக்கும் ஒற்றுமை யேற்படுத்தியதாகக் கூறுவதினலே இது விளங்கும். நாம் விவரிக் கும் இச்சரித்திரகாலப் பகுதியி னிறுதியிலே கலிங்கனன மாகன் காலத்திலே பெளத்த சமயம் பெரிதும் துன்பத்துக்கிடமாயிற்று : இவன் பெளத்தாலயங்களை அழித்து, செல்வத்தைச் சூறை யாடினன்.
ஆதிகாலந் தொடங்கி சிவனெளிபாதம் ஒரு புண்ணிய தல மாகக் கருதப்பட்டு வருகின்றது ; இதற்குக் காரணம் மலையினுச்சியி லுள்ள சிறு பள்ளம் புத்த பகவானின் அடிச்சுவடெனக் கருதப் பட்டமையே. ஆனல், இக்கால முதலாகத்தான் அவ்விடத்துக்குச் சனங்கள் யாத்திரை செய்வது வழக்கமாயிற்று. இதற்குச் செல் லும் பாதையிலே யாத்திரிகர்கள் தங்குதற்கான மடங்களை 1-ம் விசயபாகு எற்படுத்தியதோடு யாத்திரிகர்களுக்கு உணவளித்தற் பொருட்டு இரத்தினபுரிப் பகுதியிலுள்ள கிலிமலை என்னுங் கிரா மத்தையும் மானியமாக விட்டான்.
கீர்த்தி பூரீ மேவன் காலத்திலே இலங்கைக்குக் கொண்டுவரப் பட்ட தந்ததாது (தலதா)வை, அரசன் வைத்திருப்பது அவசியமென இக்காலத்திற்றன் திட்டமாகக் கூறப்பட்டது. முடிதரிக்க விரும்பிப் போர்புரிந்த அரசர்கள் இதனையும் பாத்திாதாதுவையுங் கைப்பற்று வதைப் பெரிதாக மதித்தனர். முதலாம் விசயபாகு தனது சேனைத் தலைவனைக் கொண்டு தந்த ஆலய மொன்றையுங் கட்டுவித்தா னெனக் கூறப்படுகிறது. இவ்வாறே பராக்கிரமபாகுவும் நிசங்க மல்லனும் ஆலயங்களைக் கட்டுவித்தனர்.

பொலனறுவைக் காலம் 123
சோழர் ஆட்சிக் காலத்தில் இந்து சமயத்துக்கு இலங்கையிற் பேராதரவு கிடைத்தது. இலங்கையரசருட் சிலர் மனுநீதி தவறது அரசாண்டார்களெனக் கூறப்பட்டிருக்கிறது. மனுதர்ம சாத்திரம் வேறு பல விடயங்களோடு வருணுச்சிரம தருமத்தைப் பற்றியுங் கூறுகிறது. தாழ்ந்த சாதியார் வழிபாடியற்றுவதற்கென முதலாம் விசயபாகு சிவனெளிபாதத்தில் தாழ்ந்தபடிக்கட்டொன் றையுங் கட்டுவித்தான். சாதியென்பது ஒரு கூட்டத்தவர் மரபு கடந்து வெளியிடத்திற் கலியாணம், பந்திபோசனம் கொண்டாட்டம் முதலியன செய்யாமற் றடுத்து, அவர்களே ஒற்றுமைப்படுத்துதற்கு ஏதுவான ஒரு தாபனம். சாதிக்கட்டுப்பாடுகளே அமுல் நடத்துவ தற்கு ஒரு அதிகாரியோ அல்லது சங்கமோ கிடையாது. ஆனல், ஒரு சாதியைச்சேர்ந்த பல குடும்பத்தவரும், பரஸ்பரம் தம் சாதிக் குரிய கட்டுப்பாடுகளே அனுசரித்து வந்தார்கள். அவற்றை அனுசரி யாது தவறினுேரைச் சாதியிலிருந்து தள்ளினர்கள். அதனல் அவ்வாறு சாதிப்பிரட்டம் செய்யப்பட்டோர் அந்தச் சாதி உரி மைகட்கு உரிமையற்றவர்களாஞர்கள். எனவே, குடும்ப முறையை அனுசரிததே சாதிக் கட்டுப்பாடு நிலைபெறுகிறதெனலாம். ஏனெனில், இவ்வாறன குடும்பமுறை பழங்காலத்தில் தனிப்பட்ட வர்களின் பாதுகாப்புக்கும், அவர்களுடைய சமூகத்தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கும் அவசியமாயிருந்தது. எனவே, தம் நலத் துக்குப் பாதகமேற்பட்டாலும் சாதிநலத்தைக் காப்பாற்றினர்கள். முழுக்குடும்பத்தவரின் நன்மையை உத்தேசித்துத் தம் சாதியா ருள்ளேயே விசேடமாக்க் கலியாணம் நடத்திவந்தனர். w
சாதியென்பது செய்தொழில்வேற்றுமையால் எற்பட்ட பாகு பாடெனப் பொதுவாய்க் கூறப்படுகிறது. இந்தக் கொள்கை பிழை யுடையது. ஏனெனில், சாதிகள் பொதுவாக பகுப்பையும் இனத்தை பும் சார்ந்து தோன்றியிருப்பதாய் சமீபகால ஆராய்ச்சியாளர் கூறு வர். தொழிலினல் இவர்க்குச் சாதிபாகுபாடு ஏற்படவில்லை. தம் முள் வேறுபட்ட பல இனத்தவர் சாதியாகப் பிரிக்கப்படுந் தறுவா யில் ஒவ்வொரு தொழிலை மேற்கொண்டிருந்தார்கள்.
சாதிப்பாகுபாடு இந்து தர்மத்துக்கே பிரத்தியேகமானது. குடும்பங்களின் சமய ஒற்றுமையினுலும், சுவகர்மக் கொள்கை மினலும் ஒரளவுக்கு ஏற்பட்டதெனலாம். தென்புலத்தார் வழி பாடு இருந்துவருவதே குடும்பத்திற் சமயஒற்றுமை இருக்கிறதென

Page 71
54學*e ee@e4741@司鬼出3 eg@haefeerrg): Fez增用g=%
----∞----- --~~~~
 

பொலனறுவைக் காலம் 125
பதற்குச் சான்றகும். மேலும், தமது சமயத்தைச் சேர்ந்த எல்லா ரையும் சமமாகக்கொள்ளும் கிறித்தவ திருச்சபையைப்போலல்லாது இந்து சமயத்தில் பிராமணப்புரோகிதர், தனிப்பட்ட குடும்பங்க ளுக்கு கர்மாதிகளைச் செய்து குடும்பமுறையான சமயானுட்டா னத்தை நிலைநிறுத்தி வந்தார்கள். சுயகர்ம மென்றது ஒருவ னுக்கு வாய்ந்த பிறவியும் வாழ்க்கைநிலையும் அவன் முற்பிறப்பிற் செய்துகொண்ட கர்மத்தைப் பொறுத்ததாகு மென்பது. அத னல், அவ்வந்நிலை க்குரிய கடமைகளைச் செய்யவேண்டியது தருமமாகும்.
கர்மக்கொள்கையைப் புத்த பிக்குக்கள் ஒரளவுக்கு எற்றுக் கொண்டபோதிலும், சாதிக்கட்டுப்பாடுகள் அவர்களுக்கு உடன் பாடானவையல்ல. குறைந்தசாதியிற் சேர்ந்தவன் புத்த சங்கத்திற் சேரமுடியாதென்ற கட்டுப்பாட்டுக்கு விநயபிடகம் இடமளிக்கவில்லை. ஆனல், புத்த சமயத்துப் பொதுசனங்கள் சாதியானுட்டானங்களே அனுசரிப்பதைப் பிக்குக்கள் தடுக்கமுடியவில்லை. ஏனெனில், சாதி வித்தியாசம் பாராட்டாத சங்கம்போன்ற ஒரு தாபனம் இல்லாத படியால் இந்துக்கொள்கைகளைத் தடுக்கமுடியாமற் போயிற்று.
2. இலக்கியம்
@* இலக்கியம் விருத்தியடைந்தது. பெரிய பார்க்கிரம
பாகு புத்த சமயத்தைப் புனருத்தாரனஞ் செய்ததன் Լ}ա } | ஞக இலக்கியத்துறையிற் பல முயற்சிகள் நடைபெற்றன. பாளி மொழி பெரிதும் பயிலப்பட்டது. பாளிதர்மங்கட்குப் பாடியங்களும், விரிவுரைகளும், சுருக்கவுரைகளும் எழுதப்பட்டன. அபிதம்மத சங்கிரகம் இவ்வாறெழுந்த ஒரு நூலே. முந்திய காலத்தில் எழுதப் பட்ட பாளி பிடக வியாக்கியானங்களின்மீது மறுபடியும் வியாக்கியா னங்கள் எழுதப்பட்டன.
தந்ததாதுவின் வரலாற்றைக் கூறு முகத்தான் இக்காலத்தில் தாதாவமிசம் என்ற பாளிநால் எழுதப்பட்டது. மகாபோதிவமிச மென்ற பாளி வசனகாவியம் போலவே இந்நூலும் விடயத்தில் ஒத்திருக்கிறது. இது ஒருவிதமான மணிப்பிரவாள நடையில் பாளி யும் சமஸ்கிருதமுஞ் சேர்த்து எழுதப்பட்டது. தாதாவமிசத்தை எழுதிய தர்மகீர்த்தி என்பவர்தான் மகாவமிசத்தின் தொடர்ச்சி

Page 72
司食feeung* # Till opg
 
 

subgat-ul-L- u్కఏt - - متجد
பாழ் இடம், ஜேகவஜா ஆலயம் ل شب چلات قهpآ زی ش செல்லும் (
பட்டணத்தின் *து:
幻”盛 盛乐 -p / O *trf að r *' !á
* ఓవణా
烈 i 器 i షేతసి కి ፩ 4.
s瓷 澀鑫愛必勝會 ක්‍රි. g yo སྤྱི་ལ་ས་ས་ཅ་ཏུར་མ་ས་བས་ཙམ་
ہو۔ منگوئن 烈 ## గోణి
w ჯ " ఖశ* *. **
l
* ع** Â፡گہ を- تنہا
ಸಹಾ&bur೯ಕ್ಕೆ s 3.
据 . . .
tx.
às fut » uir, if
இரங்கோட்சிதான்
|
t
8
துவிதானبه ;{:گھس
د
:88ای
స్టోశ94 thyf sy'n 8,838
ழ்வே wawusî
{శిr: : ታ÷ '; صنعت سمعیبصصی
, 'rs?Jఓat?
" "فtرسér4تهp
s
ಟ್ಲಿಗೆರ್ಳಿ ଈ, a مخينه
گر
igrir nyaof *** f *
8
摩, وفقا பொத்தல் کرنه نه بtز.ېiوړاندې بر فtنږ نه ۴ له هرې فيچر گاه ته نه ؟ இலங்அைஹெர்புச்ாகவக்கட்ட பாலன பகுதி:அஐ திேயுடன் அவர்கள்தப்புரிந்த படத்தை யொட்டி ஓசையப்.டி.டி.அ

Page 73
இலங்சாதிலக விகாரை, பொலனறுவை
 

பொலனறுவைக் காலம் 29
யான சூளவமிசம் என்ற நூலின் முதற்பாகத்தையும் எழுதிய வராகக் கூறப்படுகிறர். இந்நூல் சமஸ்கிருத காவியப்போக்கும், இந்திய அலங்கார நடையும் உடையது. அதனல், இதன் ஆசிரியர் கெளடில்லியர் அர்த்த சாத்திரம்* காளிதாசரின் காவியங்கள் முத லியவற்றை நன்கு வாசித்திருக்கவேண்டுமென யூகிக்க இடமுண்டு. பாளியில் எழுதுவதே சம்பிரதாயமாயிருந்ததால் சிங்களத்தில் வெகு சில நூல்களே இயற்றப்பட்டன. சில நிகண்டுகளும், பாளி பிடகஞ் சிலவற்றின் மொழிபெயர்ப்புந் தோன்றின. இக்கால இறுதியில் இரண்டு முக்கியமான வசன நூல்ஞம், இரண்டு காவியங் களும் இயற்றப்பட்டன. அமாவதுர (= அமிர்தப்பிரவாகம்) தர் மப்பிரதீபிகாவ என்பன அவ்வசன நூல்கள். இவை பதின்மூன் றம் நூற்றண்டினரம்பத்தில் குருலுகோமி என்பவரால் இயற்றப் பட்டன. தர்மப்பிரதீபிகாவ என்பது மகா ாேகிவமிசமென்ற நூற்கு எழுதப்பட்ட விருத்தியுரையாகும். சசதாவத, முவதேவ தாவதம் என்ற இரு காவியங்களுமே இப்போதுள்ள சிங்களக் காவியங்களுட் பழையன. இவை சாதகக் கதைகளை அடிப்படை யாகக்கொண் டெழுந்தன. சசதாவதம்i லீலாவதி (1197-1200) யின் ஆட்சிக்காலத்து முற்பகுதியில் எழுதப்பட்டது. போதிசத்துவர் முயலாகப் பிறந்த கதையை இது கூறும். முவதேவதாவதம் மகாதேவ சாதகக் கதையைக் கூறும். இந்நூல்கள் காளிதாசர், அவரைப் பின்பற்றிய குமாரதாசர் முதலியோருடைய நடையைக் கொண்டிருக்கின்றன.
பிக்குகள் சமஸ்கிருத நூல்களே அதிகம் படித்ததினல் பாளி மொழியிலும் சிங்கள பாஷையிலும் சமஸ்கிருதச்சார்பு எற்பட்டது. இலக்கியங்களின் நடையும், பொருளும் சமஸ்கிருதத்தையே பின் பற்றின. சில பிக்குகள் சமயபந்தமான நூல்களை எழுதுவதை விடுத்து சமஸ்கிருத நூல்களைப்பின்பற்றிப் பாளிமொழியில் யாப்பு, வியாகரணம், நிகண்டு முகலியன இயற்றினர்கள். மொகல்லான எழுதிய பாளி இலக்கணம் சந்திய கோமின் எழுதிய வியாகரணத்தை யே பின்பற்றியெழுந்தது. அபிதானப்பதீபிகா என்ற பாளிநிகண்டு அமரகோசமென்ற சமஸ்கிருத நிகண்டைப் பின்பற்றி எழுந்தது.
*அரசியல் முறை பற்றிய ஒரு நூல் : மக்கியாவெலி என்ற மேனுட்டாசிரி யர் எழுதிய * பிரின்ஸ் ” என்ற நூல்போன்ற திஃதெனக்கூறுப.
ர்சச சாதக
محبر
5562. ...F

Page 74
30 இலங்கையின் பூர்வ சரித்திரம்
13. சிற்பமும் ஒவியமும்
பொலனறுவை யரசர் அதி சிறப்பும் செல்வமுமுற்று அரசு
நடத்திய காலத்திற் சிற்பக்கலையும் ஒவியக்கலையும் விருத்தியடைந்தன. பாழடைந்த விகாரங்களையும், தாதுகோபங் களையும் பழுதுபார்க்கவேண்டியிருந்ததால் முதலாம் விசயபாகு புதிய கட்டிடங்களை நிர்மாணிக்க முடியாமற் போய்விட்டது. ஆனல்,
1-ሠõ விசயபாகு
छ. !
s
ఉత్తgāzāకూడāజ్Eజాse2eal
ལྷོ་ தலதா மாலுவை
苔空三、三云江、罕翠
பெரிய பராக்கிரமபாகு பல பெரிய கட்டிடங்களைக் கட்டுவித்தான். பொலனறுவையில் அவன் கட்டுவித்த தமிழ மகாசாய என்ற தாது கோபமே சரித்திரத்திற் குறிப்பிடப்பட்ட தாதுகோபங்களுள் மிகப் பெரிது. இன்று அது அழிந்து ஒரு பெரிய திடலாகக் காட்சியளிக் கிறது. கிரிவிகாரமும் இவன் கட்டுவித்ததே. நிசங்கமல்லன்
 
 
 
 
 
 
 
 


Page 75
132 இலங்கையின் பூர்வ சரித்திரம்
கட்டுவித்த இரங்கொத விகாரமென்னும் பொன்முடி விகாரமும் இதுவும் பெரியனவாயும் அனுராதபுரியிலுள்ள தாகோபங்களைப் போல அர்த்தகோள வடிவுள்ளனவாயுமிருக்கின்றன.
இக்காலத்து விகாரங்கள் உருவத்திற் பெரியன; செங்கல், சுண்ணும்பு ஆகியவற்ருற் கட்டப்பட்டன. இலங்காதிலக விகாரமும் தமிழ மகாசாயாவுக்கு வடக்கேயுள்ள சேதவனுராம விகாரமும் பராக்கிரமபாகு கட்டியவையே. துபாராம விகாரத்தின்மீது ஒரு விதமான தூபியுண்டு. அதன் சுவர்கள் ஒருவகைச் சுண்ணத் திற்ை பூசப்பட்டன. இந்த வேலைப்பாடு இக்காலத்திற்ருன் ருேன்றி வளர்ச்சியடைந்திருக்கிறது. வட்டதாகே, ஹட்டதாகே (தந்த ஆல. 1ம்) என்ற இரு ஆலயங்கள் நிசங்கமல்லனல் நிர்மாணிக்கப் பட்டன. பராக்கிரமபாகுவின் அரண்மனை இப்பொழுது கிலமடைந்து கிடக்கின்றது. இது மிக எடுப்பாகவே கட்டப்பட்டது. பொலனறு வையிலுள்ள இரண்டாவது சிவாலயம் சோழசிற்பமுறையிற் கட்டப் பட்டது. இது பதினேராம் நூற்றண்டுச் சோழச்சிற்பமுறையில் கல்லிஞ்ற் கட்டப்பட்டது. பல்லவசிற்பமுறையில் இது விசேட முடையது. .
இக்காலத்துக் கல்லுருவங்கள் பிரமாண்டமாகவும் ஆழமாகச் செதுக்கப்பட்டு மிருக்கின்றன. காலவீவாவுக்கு அண்மையிலே அவுக்கானலிலும் பொலனறுவையில் கல்விகாரை (உத்தராராம) யிலும் செதுக்கப்பட்ட புத்த உருவங்கள் இலங்கையிலுள்ள மற்ற உருவங்களிலும் பார்க்க மிகப் பெரியவை. பொலனறுவையில் பொத்கல்விகாரைக்குச் சமீபத்திலுள்ள பாறையிற் செதுக்கப்பட் டிருப்பதும், பெரிய பராக்கிரமபாகுவின் உருவமென்றும், அகத் தியர் உருவமென்றும் பலவாறு கூறப்படுவதுமான இந்து இருடி யின் உருவமே இக்காலத்துச் சிற்பங்களுட் டலைசிறந்தது. பொல னறுவையிலுள்ள சந்திரவட்டக் கற்கள் போன்ற இதர சிற்பங்கள் சிற்பக்கலை தேய்ந்து வருவதையே காட்டுகின்றன. குப்தர்காலத்து எளிமையையும் சீவகளையையும் இக்காலத்துச் சிற்பங்களிற் கான முடியாது. ஆணுல், திராவிடரின் கலப்பினுற்போலும் அதிக அலங்
கார வேலையும் நுண்ணுக்கமான வேலைப்பாடுங் காணப்படுகிறது.
பொலனறுவையிலே சேதவனராம விகாரத்திற் பல சுவர்ச் சித்திரங்கள் தீட்டப்பட்டிருக்கின்றன. இவற்றுட் சில சசசாதகம் போன்ற சாதகக்கதைகளைக் குறிக்கின்றன.

恕”
@。°C
'p
f
&
حج
-ඉදං ܀
*^ }8
C <少g% ·
്മr - énggapig
ரிேடித்தன 琴ーズ
ܫܝ
*
” ༣
•
晏
Mai ・ ଽଧଃ ཡི་

Page 76
34 இலங்கையின் பூர்வ சரித்திரம்
14. அயல்நாட்டுத்-தொடர்பு
இக்காலத்தில் இலங்கை அந்நிய நாடுகளுடன் நேர்முகமாகத் தொடர்பு பூண்டிருந்தது. முதலாம் விசயபாகு காலத்தில் இலங்கையின் அயல்நாட்டுக் கொள்கை சோழமன்னரை எதிர்ப்ப தையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்தது. சோழருக்கு எதிரான நாடுகளோடும் அவர்களால் அச்சுறுத்தப்படும் நாடுக ளோடும் விசயபாகு நட்புப் பூண்டிருந்தான். சோழரை இலங்கையி லிருந்து கலைப்பதற்காகப் பர்மிய அரசனுன அனேரதனு (10441077) டைய உதவியை நாடினன். அம்மன்னனும் புத்தசமயத்தி லிருந்த பற்றினல் இலங்கையோடு நட்பாயிருக்க விரும்பினன். யுத்தம் முடிந்ததும், சோழனுக்கு விரோதியான கலிங்க மன்ன னின் மகள் திரிலோக சுந்தரியை வதுவை செய்து அதன்மூலம் கலிங்கனேடு தொடர்புகொண்டதுமன்றி முதலாம் குலோத்துங்கன் (1070-1120) என்ற சோழனுக்குப் பகைவனன மேலைச்சாளுக்கிய மன்னன் ஆருவது விக்கிரமாதித்தனுடனும் நட்புரிமை பூண்டான்.
பெரிய பராக்கிரமபாக அரசு கட்டிலேறியதும் இத்தகைய உடன்பிடிக்கைகட்கு அவசியமில்லாமற் போய்விட்டது. சோழர் பயந் தீர்ந்தது. இலங்கை தனது சொந்த நன்மைக்கான விடயங்களைச் சுதந்தரத்துடன் செய்யக் கூடியதாயிருந்தது. இத்தருவாயில் புவன தித்திய அலாங்சிது (1112-1167) என்ற வலிமைமிக்க பர்மிய அரசன் யானைவியாபாரத்திற் றலையிட்டுத் தனக்கே ஏகபோக உரி மையை உண்டாக்கினன். அதனுல் விலை அதிகரிக்கவே இலங்கைக் கும் பர்மாவுக்குமிடையிற் சண்டைமூண்டது. பர்மிய அரசன் தன் ணுட்டிலிருந்த சிங்கள தானிகர்களைக் கைதுசெய்ததுமன்றிக் கம் போடியாவுக்குச் சென்று கொண்டிருந்த சிங்கள இளவரசி யொருத்தியையுங் கைதுசெய்தான். 1164 வரையில் பராக்கிரமபாகு பழிவாங்கும் நோக்கமாகக் கீர்த்திநுவரகல், என்ற தளபதியின் தலைமையில், பர்மாவைப் பிடிக்குமாறு ಆಳ್ವ.: அனுப்பி னன். வயோதிபனுயிருந்த அலர்ங்சிது எதிர்த்துச் சண்டைசெய்ய வில்லை. சிங்களச்சேனை குசுமி என்ற பசினைக் கைப்பற்றி ஐந்து மாதமாக மேலுஞ் சண்டையை நடத்தியது. ஈற்றில் அலாங்சிது திருப்திகரமான சமாதானத்துக்கு இணங்கினன். இதன் பின்னர் இருநாடுகட்குமிடையில் நேசபான்மையான தொடர்பு இருந்து வந்தது. இரண்டாம் விசயபாகுவும், நிசங்கமல்லனும் பர்மிய

பொலனறுவைக் காலம் 35
அரசர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். நிசங்கமல்லன் பர்மாவுடன் மாத்திரமல்ல கூர்ஜரம், மைசூர், பாண்டி, சோழம், வேங்கி, கலிங்கம், வங்கம் ஆகிய தேசங்களோடும் தொடர்பு பூண் டிருந்தான்.
பராக்கிரமபாகு காலத்தில் தென்னிந்தியாவுடனும் சிங்களர் சண்டை தொடுத்தனர். இரண்டாம் இராசராசளுேடு (1150-1173) சோழர் வலிதொலையவே, பாண்டியர் இடத்து அவர்களாதிக்கம் குன்றியது. இதன் பயனக திருநெல்வேலியைச் சேர்ந்த குலசேகர பாண்டியன் அரசுரிமைகோரி பராக்கிரம பாண்டியனேடு சண்டை யிட்டான். பராக்கிரம பாண்டியன், பெரிய பராக்கிரமபாகுவிடம் உதவிகேட்கவே சிங்களச் சேனையொன்று இலங்காபுரனென்ற சேன பதி தலைமையிற் சென்று இராமேசுவரம், மதுரை ஆகிய இடங்களைப் பிடித்தது. அப்பொழுது மதுரையில், பராக்கிரம பாண்டியனைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டு குலசேகர பாண்டியன் இருந்தான். இலங்காபுரன் இறந்த அரசனின் மகனன வீரபாண்டியனைச் சிங்காசனமேற்றுவித்தான். பின்னர் குலசேகரன் போருக்காற்ருது இரண்டாம் இராசாதிராச (1173-1182) சோழனிடம் சரண்புகுந்து அவனுடைய துணையோடு மதுரையை மறுபடியும் மீட்டான். இவன் இலங்காபுரனைக் கொன்று அவனது தலையை மதுரைநகரத்து வாயிற் கதவிற் ருெங்கவிட்டான்.
இந்த அவமானத்தினுற் பெருங்கோபங்கொண்ட பராக்கிரம பாகு ஊர்காவற்றுறை, மட்டுவில், புலைச்சேரி, மாதோட்டம் வலி காமம் ஆகிய துறைகளிற் படைதிரட்டி மறருெரு கடற்சண்டைக்கு ஆயத்தஞ் செய்தான். இத்தருணத்தில், மானபரணனைத் தோற் கடித்த சமயத்தில் பராக்கிரமபாகு கைதுசெய்த மானுபரணன் மகளுனை பூரீ வல்லபன் இலங்கையிலிருந்து தப்பியோடிச் சோழ இராச்சியத்தில் சரண்புகுந்தான். இரண்டாம் இராசாதிராசன் இவன் இலங்கை அரசுக்குரியவனென அறிந்து படைத்துணையோடு பராக்கிரமபாகுவுடன் சண்டைசெய்யுமாறு அனுப்பினன். பூரீ வல் லபன் படையுடன்வந்து துறைகளிற் றிரண்டுநின்ற சிங்களர் சேனையை அழித்து மாந்தையையும் மற்றும் பல கிராமங்களேயுஞ் சூறையாடிப் பராக்கிரமபாகுவின் சூழ்ச்சி நிறைவேற மற் சிதைத்து விட்டான்.

Page 77
36 இலங்கையின் பூர்வ சரித்திரம்
மதுரையைக் கைப்பற்றும் வரையும் குலசேகர பாண்டியன் சோழரின் ஆதிக்கத்தை அங்கீகரித்தான். ஆனல், மதுரை தன் கையிற் கிடைத்ததும் சோழரின்கீழ் அடங்கிவருவதைக் கைவிட்டு விட வேண்டுமென எண்ணினன். இந்நோக்கத்துடன் தனது பழைய பகைவனன இலங்கையரசன் பராக்கிரமபாகுவுடன் உடன் படிக்கை செய்தான். நன்றிகெட்ட இச்செய்கையைக் கண்டு கோபங் கொண்ட சோழர் குலசேகரன்மீது போர்தொடுத்தனர். சிங்கள ரின் படைத்துணையைப் பெற்றபோதிலும் குலசேகரன் இச்சண்டை யிற் ருேல்வியுற்ருன். இதன்பின்னர் சிங்களரின் பழைய நண்ப னகிய பராக்கிரமபாண்டியன் மகன் வீரபாண்டியனைச் சோழர் மறு படியும் சிங்காசனத்தில் ஏற்றினர்கள்.
/1182-இல் இரண்ட்ாம் இராசாதிராசன் இறந்ததும் சிங்களர் துணையுடன் வீரபாண்டியன் தனி ஆதிக்கஞ்செலுத்த எண்ணினன். உடனே சோழர் அவனைக் கலைத்துவிட்டு விக்கிரமபாண்டியனென ஒருவனே அரசுகட்டிலேற்றினர். சிங்களப்படையையுந் தென்னிந் தியாவிலிருந்து கலைத்துவிட்டனர். சில வருடங்களின் பின் சேர மன்னன் துணையோடு வீரபாண்டியன் தனது அரசைக் கைப்பற்ற முயன்றன். அதிலும் தோல்வியே எற்பட்டது. இத்தருணத்தில் நிசங்கமல்லன் தென்னிந்தியாவுக்கு ஒரு சிங்களப் படையை அனுப்பினனெனக் கூறப்பட்டிருப்பதால் அப்படை இந்தச் சண்டை யிற் பங்குபற்றியிருக்கலாம்.
இச்சண்டையில் இலங்கைக்குக் கிடைத்தது இராமேசுவரம் மாத்திரமே. நிசங்கமல்லன் இங்கேயுள்ள தேவாலயத்தைப் புதுப் பித்து அதற்கு நிசங்கேசுவரம் என்ற பெயரைக்கொடுத்தான்.

ஐந்தாம் அத்தியாயம்
தென்மேற்கில் ஆதிக்கம்
2றன்றம் விசயபாகுவின் ஆட்சிக்காலந் துவங்கி (1232-1236) எட் டாம் பராக்கிரமபாகு (1484-1509) காலம்வரையுள்ள இலங் கைச் சரித்திரத்தை இந்த அத்தியாயத்திற் கூறுவோம். போர்த் துக்கீசர் இலங்கைக்கு வந்தது இந்த எட்டாம் பராக்கிரமபாகுவின் காலத்திற்றன். இலங்கைச் சரித்திரத்தில் இதுவும் தென்னிந்திய காலப்பகுதியெனவே கூறவேண்டும். ஆனல், சோழரின் ஆதிக்கம் பெருகியிருந்த பொலனறுவைக் காலத்தைப்போலல்லாது இக்காலப் பகுதி புதிதாகத் தென்னிந்தியாவில் எற்பட்ட பாண்டிய, விசயநகர இராச்சியங்களின் செல்வாக்கினற் பாதிக்கப்பட்டிருந்தது.
இக்காலப்பகுதியில் வடஇலங்கையில் ஒரு புதிய தமிழரசு ன்ற் பட்டது. சிங்கள அரசிருக்கை மெல்லமெல்லத் தென்மேற்குப் பக்கமாய்ப் பின்வாங்கிச் சென்றது. மாகனுக்குப் பின்னரண்ட சிங்கள அரசருள் ஒருவனைத் தவிர மற்றெவரும் பொலனறுவையி லிருந்து அரசு புரியவில்லை . மேற்கேயுள்ள நகரங்கள் சிலவற்றி லிருந்து அவர்கள் அரசு செய்தார்கள். ஏனெனில், அங்கே பாது காப்பாயிருக்கலாமென்ற எண்ணத்தினலாகும். சிங்கள அரசர் வடக்கே தோன்றிய தமிழரசை அடக்க வலிமையில்லாதவராகவும், தென்னிந்தியாவிலிருந்து அடிக்கடி படையெடுத்துவந்த பாண்டியர் சேனையையும் விசயநகரப் படையையும் திறமையோடு அடக்க முடியாதவராயுமிருந்தார்கள். அன்றியும் தமக்கெதிராயெழுந்த சிங்கள கலகக்காரரைக்கூட நிர்வகிக்க அவர்களால் முடியவில்லை.
அனுராதபுரி, பொலனறுவை ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள விளைபூமிகளைத் திருத்தி விவசாயஞ்செய்து அவற்றின் பண்டைய செல்வநிலையை அடைவதற்கு இக்காலத்து அரசரிடம் போதிய
137

Page 78
38 இலங்கையின் பூர்வ சரித்திரம்
வசதியில்லாதிருந்தபடியால், பழைய அரசர்கள் தானியவரி மூலம் பெற்ற ஏராளமான வருவாயை இவ்வரசர்களும் பெறமுடியாமற் போயிற்று. அதனல், வெளித்தேசங்களுக்கு எற்றுமதி செய்து வருவாயைப் பெறக்கூடிய கறுவா முதலிய விளைபொருட்களிற் கவனஞ் செலுத்தினர்கள். இவ்வாறு ஏற்பட்ட ஏற்றுமதி வர்த்த கத்தை மேற்பார்வை செய்வதற்காக, அனுராதபுரி, பொல னறுவை, மாகமம் ஆகிய இடங்களேவிட்டுக் கோட்டையைத் தமது இராசதானியாகக் கொண்ட்ார்கள்.
இக்காலத்து அரசருள் இரண்டாம் பராக்கிரமபாகுவும், ஆரும், பராக்கிரமபாகுவுமே முக்கியமான அரசர்களெனலாம். இரண்டாம் பராக்கிரமபாகு அர்சியற்றுறையிலும் பார்க்க இலக்கியத்துறை யிலுஞ் சமயத்துறையிலுமே புகழ்பெற்றவன். பொலனறுவை யையும் அனுராதபுரியையும் இவன் வென்றபோதிலும், யாழ்ப் பாணத்தை இவன் அரசாண்டதாகத் தெரியவில்லை.
1. பாண்டிய விசயநகர இராச்சியங்கள்
தலாவது மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1217-1238) பாண்டி நாட்டைத் தனி இராச்சியமாக்கிச் சுதந்தரத்துடன் ஆண் டதுமன்றி சோழரையும் தன்னுணைப்படுத்தினுன் என முன்னர் கூறினுேம். இவனுக்குப்பின் ஆண்ட அரசருள் ஜடாவர்மன் சுந் தரபாணடியன் (1253-1270) காலத்தில் பாண்டி நாட்டெல்லை மிக வித்தரிக்கப்பட்டது. அது வடக்கே நெல்லுர்வரையுந் தெற்கே இலங்கை வரையும் பரந்திருந்தது. இலங்கைமீது படையெடுத்த ஜடாவர்மன் வீரபாண்டியன் இலங்கை அரசர்கள் இருவருள் ஒரு வனைக்கொன்று அவனது சைனியத்தையும் இரதங்களேயும் செல் வத்தையுங் கைப்பற்றித் தனது மீனக்கொடியைக் கோணமலையில் (திருக்கோணமலை) யில் நாட்டி, மற்ற அரசனிடமிருந்து யானைகளைத் திறையாகப் பெற்றன்.
மாறவர்மன் குலசேகரன் (1270-1310) என்ற அடுத்த அரசன் இரண்டுமுறை இலங்கைமீது படையெடுத்து வந்து இலங்கையைத் தன்னுணைக்குக் கீழ்ப்படுத்தினன். இவனே இவன் மகனன சுந்தர பாண்டியன் கொன்றன். அதன் பயனுகச் சுந்தரபாண்டியனுக் கம் சகோதரனன வீரபாண்டியனுக்குமிடையிற் போர் மூண்டு உள்

தென்மேற்கில் ஆதிக்கம் 18)
நாட்டிற் குழப்பமுண்டாயிற்று. சுந்தரன் இச்சண்டையிற் றேல்வி யுற்று ஒடி முஸ்லிம்களிடம் சரண் புகுந்தான். மல்லிக்கபூர் தலை மையில் முஸ்லிம் படை, வீரபாண்டியனைத் தோற்கடித்துச் சுந் தரனைச் சிங்காசனத்தில் ஏற்றியது. இத்தருணத்தில் சேரமன்ன? ஞன குலசேகரன் சோழநாட்டையும் பாண்டிநாட்டையும் 1815-இல் வென்றன். பெரிய பாண்டிய இராச்சியமும் இவ்வாறு வீழ்ச்சி யுற்றது.
மகமதிய படையெழுச்சிகள் காரணமாகக் குலசேகரன் அரசு நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. ஆனல், பழைய இந்து நாகரிகத் தைப் பாதுகாக்கும் இன்னுெரு இந்து சாம்பிராச்யம் ஏற்பட்டது. இது 1565-இல் தக்கிணத்தில் நிலவிய மூன்று இஸ்லாமிய இராச் சியங்களால் வீழ்ச்சியுற்றது. இவ்விசயநகர சாம்ராச்சியத்தை ஐந்து கன்னட அதிபதிகள் (இவர்களைக் கோசாலர் என்றுங் கூறுப) எற் படுத்தினர்கள். விசயநகர சாம்பிராச்சியம் கிருஷ்ணு நதியிலிருந்து துங்கபத்திரைவரை தெற்குநோக்கிப் பரந்து 1377-இல் பாண்டி நாட்டையும் உள்ளடக்கி இரண்டாம் ஹரிஹரன் (1379-1406). காலத் தில் இலங்கையையும் சேர்த்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
விசயநகர அரசருட் டலைசிறந்தவன் இரண்டாவது தேவராயன். (1421-1448) இவன் தனது இராச்சியத்தின் சேனயைத் திருத்தி யமைத்து விசயநகரை ஒரு சாம்பிராச்சியமாக உலகம் மதிக்கச் செய் தான். இவனுட்சிக காலத்தில் 1438-இல் இலங்கைமீது படையெடுத் தான். இலங்கையின் வடக்கே இருந்த தமிழரசர் இதன்பின்னர் விசயநகரத்தின் ஆதிக்கத்தை அங்கீகரித்தார்கள். தேவராயன் இறந்த பின் முஸ்லிம் இராச்சியங்களோடு பல யுத்தங்கள் கிளம்பிய தால் இலங்கையைப் பற்றி விசயநகர மன்னர் அக்கரை கொள்ள வில்லை.
2. அரசியற் பிரிவுகள்
வடக்கே தமிழரசு உண்டானதும் பழைய அரசியற் பிரிவுகள் மாற்
றப்பட்டன. அரசரின் படையெடுப்புக்கேற்றவாறு எல்லேகள் மாறின. தமிழரசின் எல்லை எறக்குறைய இக்காலத்து வட மாகாண எல்லையென்று கூறிவிடலாம். இதன் தலைநகர் சிங்கை நகரை (சிங்கநகரம்) என்பதாகும். யாழ்ப்பாணத்துக்குக் கிழக்கே யுள்ள நல்லுரே இப்பட்டினமாயிருந்திருக்க வேண்டும். ஆரும்

Page 79

தென்மேற்கில் ஆதிக்கம் 4.
பராக்கிரமபாகுவின் காலம்வரை தமிழரசு தனியரசாகவேயிருந்தது. மேற்கூறிய அரசனும் அவனுக்குப்பின் ஆண்ட இரண்டாம் சயபாகு வும் ஆரும் புவனேகபாகுவும் தம்மாணையை அங்கே பரவச் செய்த னர். பிந்திய அரசன் காலத்தில் தலைநகர் யாழ்ப்பாணப்பட்டினத் துக்கு மாற்றப்பட்டது. இதுவே இக்காலத்து யாழ்ப்பாண நகர்.
இக்காலத்தில் சிங்கள இராசதானி அடிக்கடி மாற்றப்பட்டது. மாயாரட்டையை ஆண்ட மூன்ரும் விசயபாகு தம்பதேனியாவி லுள்ள மலைக்கோட்டையைத் தனது இராசதானியாகக் கொண் டான். பாண்டியர் படையெடுத்த காலம்வரை இதுவே இராச தானியாயிருந்தது. இதன்பின்னர் பாண்டியராதிக்கத்தை அங்கீ கரிப்பதற்குப் போலும், மூன்றம் பராக்கிரமபாகு பொலனறுவை யைத் தனது இராசதானியாக்கினன்.
இவனுக்குப்பின்னுண்ட அரசர்கள் யாப்பகுவா, குருளுணுக்கல், கம்பளே, இரயிகம, கோட்டை ஆகிய இடங்களே இராசதானியாய்க் கொண்டனர். கண்டியைப்போலக் கம்பஃ யும் மலையினுற் சூழப்பட் டிருக்கிறது. கோட்டை இக்காலத்தில் நீர்சூழ்ந்த ஒரு பட்டின மாகவேயிருந்தது. இவ்வாறு இராசதானிகளே மாற்றியமை, இவர் கள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையிலிருந்தார்களென்பதைக் காட்டுகிறது. முந்திய அரசரைப்போலச் சமவெளிகளில் இருந்து குடிகளைப் பரிபாலிப்பது இவர்கட்குப் பாதுகாப்பைக் கொடுக்காத படியால் தற்காப்பளிக்கக்கூடிய மலைகளையும் கோட்டைகளையும் நாடினர்கள்.
ஆரும் புவனேகபாகு காலத்தில் அரசியல் எல்லைகளிற் பெரிய மாறுதலேற்பட்டது. தமிழரசு மறுபடியும் சிங்கள ஆதிக்கத்தி லிருந்து விடுபட்டுத் தனியரசானது. கண்டியரசும் முதன்முறை யாகத் தனியரசானது. கண்டியின் புதிய அரசன் ஹரிஸ்பற்றி லுள்ள கந்த உடபஸ்ரட, தும்பரை, எட்டி நுவரை, உடுநுவரை, ஹேவஹேத ஆகிய இடங்களே ஆட்சிசெய்தான். இவை பழைய மாயரட்டையைச் சேர்ந்த இடங்கள். இவற்றேடு மாத்தளே, பிந்தனை. ஊவா, வெல்லஸ், பானமா, திருக்கோணமலை, மட்டக்களப்பு, ஆகிய பகுதிகளும் இவனுட்சிக்குட்பட்டன.

Page 80
42 - இலங்கையின் பூர்வ சரித்திரம்
3. தம்பதேனியா, குருணுக்கல் அரசர்கள், சந்திரபானுவின் படையெழுச்சி
@॰ சரித்திரத்தைச் சரிவரக் கூறுவதற்குப் போதிய ஆதா ரங்கள் கிடையா. ஆதலால் பல இடங்களில் சரித்திர வரலாறு மறைவாகவேயிருக்கிறது. சில இடங்களில் அரச வமிசாவளியே கிடைக்கவில்லை. சில அரசர்கள் விடயத்தில் அரச பரம்பரையைக் கூட அறிய முடியவில்லை. சில சிங்கள அதிகாரிகள் எறுவதற்கு அரிதாகிய யாப்பகுவா, கோவிந்தஹெல*, கந்தனிகலர் என்ற மலேக்கோட்டைகளிற் சுதந்தரத்துடன் (பொலனறுவையை மாகன் ஆட்சிநடத்திய காலத்தில்) வாழ்ந்துவந்தனர்.
வடமாகாணத்துக்கும் வடமத்திய மாகாணத்துக்கும் எல்லை யாயுள்ள பிரதேசத்தைச் சுற்றியமைந்த வன்னிப்பகுதிக்கு விசய பாகு என்ற சிங்கள அதிகாரி சென்று, மாயாரட்டையிலிருந்த தமிழரைக் கலைத்தான். அதன் பின்னர் இப்பகுதிக்கு அவனே அரசனகித் தம்பதேனியாவை இராசதானியாக்கி அதை அரண் செய்தான். புசல்லாவைக்குச் சமீபத்திலுள்ள கொத்தமலைக்கு அப்புறப்படுத்தப்பட்ட தந்ததாதுவையும் பாத்திர தாது வையும் எடுத்துக்கொண்டுவந்து தம்பதேனியா அவ்வளவு பாதுகாப்புள்ள இடமல்லவென எண்ணி அவற்றை பெலிகல என்ற இடத்தில் வைத்தான்.
மூன்றவது பராக்கிரமபாகு (1232-1236) பொலனறுவை அர சர்கட்குத் தொடர்புள்ளவனல்ல. இவன் தானே ஒரு அரச பரம் பரையை ஏற்படுத்தினன். 1325-இல் அரசுகட்டிலேறிய நாலாவது பராக்கிரமபாகுவரை இவனுக்குப்பின் ஆண்ட அரசர்களெல்லாம் இவனது பரம்பரையைச் சேர்ந்தவர்களே. இவர்களாட்சியில் ஒரு வித தலையீடுமேற்படவில்லை. ஆனல், முதலாம் புவனேகபாகுவின் ஆட்சிக்காலத்தில் (1273-1284) பாண்டியர் இருபது வருடமாக இலங்கையில் ஆட்சி நடத்தினர்கள்.
*திருக்கோவிலுக்கு மேற்கே 20 மைல் தூரத்தில் கீழ்க்கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே என்றழைக்கப்படும் உயர்ந்த பாறை,
f இது எந்த மலைப்பாறை என இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

தென்மேற்கில் ஆதிக்கம் 43
விசயபாகுவின் மூத்த மகனன இரண்டாம் பராக்கிரமபாகு (1236-1271) அக்காலத்தில் ஒரு பெரிய கல்விமானகக் கருதப்பட் டான். இவனைக் கலிகால சாகித்ய சர்வஞ்ஞபண்டிதன் என்னலாம: இவன் மாயாரட்டையுடன் உருகுணையையும் ஆண்டான். பிஹிடி ரட்டையி லாட்சிசெய்த தமிழரை நாட்டைவிட்டுக் கலைக்கவும் முயற்சி செய்தான். வன்னியை அடிப்படுத்தி, பொலனறுவையைவென்று, காலவீவைக்குச் சமீபத்தில் தமிழரைத் தோற்கடித்தான். ஆனல், வன்னிக்கு வடக்கேயுள்ள பகுதியை வெற்றிபெற இவனுல் முடிய வில்லை. இவன் மகஞன விசயபாகு அனுராதபுரத்தைக் காப் பாற்றுமாறு வன்னிக்கு வடக்கிலுள்ள அதிகாரிகளை எற்படுத்தி ஞன். m
இதன் பின்னர் வாகிரிகலை குருனுக்கல் ஆகிய இடங்களை அவன் அரண்செய்வித்தான். பொலனறுவையைப் புனருத்தார ணஞ் செய்யுமாறும் கட்டளையிட்டான். பல கட்டிடங்களும் புதுப் பிக்கப்பட்ட பின்னர், முடிசூட்டு விழாவை அங்கேயே கொண்டாடி ஞன். பினனர் தம்பதேனியா மலைக்கோட்டைக்கு மறுபடியுஞ் சென்று அங்கேயே இருந்துவந்தான். பாண்டியர் ஆதிக்கம் வலு வடைந்து வந்ததால் பொலனறுவையிலிருந்து அவர்களது படை யெடுப்பை நிர்வகிக்க முடியாதென எண்ணியே தம்பதேனியாவுக்கு அரசிருக்கையை மாற்றினன். ஆனல், 1-ஆம் பராக்கிரமபாகு காலந்தொட்டே மாயரட்டை, கறுவா முதலிய வாசனைச்சரக்கு வியா பாரத்தை அந்நிய நாடுகளுடன் நடத்தியதால் முக்கியமான நாடாக விளங்கிவந்தது.
1244-இல் மலாய தேசத்தைச்சேர்ந்த சந்திர்பானு என்னும் ஒரு பெளத்த மன்னன் இலங்கைமீது படையெடுத்தான். மலாய தீப கற்பத்தில் பாண்டன் குடாக்கடலுக்குச் சமீபத்திலுள்ள தாமிரலிங்க மென்னும் இராச்சியத்துக்கு இவன் அரசன். அற்புதங்களைச் செய் யும், சக்திவாய்ந்த ஒரு புத்த விக்கிரகத்தைக் கைப்பற்றுவதற் காகவே சந்திரபானு இலங்கைமீது படையெடுத்தான். பராக்கிரம பாகுவின் மருமகனன வீரபாகு படையெடுப்பைச் சித்திகரமாக
* கலிகால இலக்கியங்களெல்லாவற்றையுங் கரை கண்டவன் என்பது அர்த்தம். ஹிந்துக்கள் காலத்தை நான்கு யுகமாகப் பிரித்தார்கள். இக் கான்கு யுகங்களுட் கடைசியானது சலியுகம்.

Page 81
144 இலங்கையின் பூர்வ சரித்திரம்
எதிர்த்தான். உடனே சந்திரபானு தென்னிந்தியாவுக்குச் சென்று சோழபாண்டிய போர்வீரரின் துணையுடன் மறுபடியும் இலங்கைமீது படையெடுத்தான். அப்பொழுது விசயபாகு இராசப்பிரதிநிதியா யிருந்தான். இப்படையெழுச்சியில் சந்திரபானு தந்ததாதுவையும், பாத்திரதாதுவையுங் கேட்டான். இவனது படை யாப்பகுவாவரை எதிர்த்துவந்தது. ஆனல், வீரபாகு இவலைத் தோற்கடித்து விட்டான்.
ஜடாவர்மன்வீரபாண்டியனது சாசனமொன்று இவ்வரசன் இலங்கை மன்னன் ஒருவனைக் கொன்று மற்றெருவனிடம் திறை பெற்று வந்தானெனக் கூறுகிறது. ஆனல், இரண்டாம் பராக்கிரம பாகு பாண்டிய மன்னருக்குத் திறைசெலுத்தியதாகச் சூளவமிசம் கூறவில்லை. ஆனல், பாண்டியர் படையெடுப்பைத் தடுப்பதற்காக இவன் விசேட நடவடிக்கை எடுத்தான். யாப்பகுவா விற் றனது மகனன புவனேகபாகுவையும் கடற்கரையைப் பாதுகாத்துக் கடற் படையெடுப்பைத் தடுக்க கொழும்புக்கணித்தாயுள்ள வத்தளையில் மற்ருெரு மகனையும் இருத்தினன். w, இரண்டாம் பராக்கிரமபாகுவின் மகனன நான்காம் விசயபாகு வை இரண்டாம் வருட ஆட்சியில் அவனது சேனபதி கொன்று விட்டான். தன் சகோதரன் கொலையுண்டதும் புவனேகபாகு யாப் பகுவாவுக்கு ஓடினன். மேலேகூறிய சேனபதியின்கீழ்ச் சேவை புரிந்த இராசபுத்திர வீரர் அச்சேனபதியைக் கொன்றுவிட்டுப் புவனேகபாகுவை அரசனுக முடிசூட்டுவித்தனர். முதலாம் புவ னேகபாகுவும் (1273-1284) தம்பதேனியாவையே தனது இராச தானியாகக் கொண்டான். நாட்டிலே குழப்பமுண்டாகுங் காலங் களில் தனியரசு செலுத்தமுயன்ற வன்னி அரசர்களையெல்லாம் இவன் அடக்கி, குலசேகரபாண்டியன் சிங்காசனமேறிய சிறிது காலத்துக்குள் இலங்கைமீது படையெடுத்துவந்த பாண்டியரையும் தோற்கடித்தான். இருந்தும் பாண்டியர் தொல்லை முற்றக நீங்க வில்லையென அறிந்து இவன் யாப்பகுவாவையே தனது இராசதானி யாக்கினன். ஏனெனில், தென்னிந்திய படையெடுப்பை அங்கிருந்து தடுப்பது சுலபம். ஆனல், ஆரியச் சக்கரவர்த்தியுடன் வந்த பாண் டியர் யாப்பகுவாவைக் கைப்பற்றித் தந்ததாதுவை எடுத்துச் சென்று குலசேகரனிடம் கொடுத்தார்கள்.

தென்மேற்கில் ஆதிக்கம் -45
இதன்பின் 20 வருடமாக இலங்கை பாண்டியராணைக் குட்பட் டது. நான்காம் விசயபாகுவின் மகனன மூன்றம் பராக்கிரமபாகு பாண்டிநாட்டுக்குச் சென்று பாண்டி மன்னனுடன் சமாதானஞ் 4ெ ய்துகொண்டு தந்ததாதுவையும் மீட்டுக்கொண்டு 1302-ல் இலங் கைக்கு வந்தான். வந்து உடனே அரசனுனன். பாண்டிய மன்ன னின் ஆதிக்கத்தை அங்கீகரித்ததோடு அவனது பாதுகாப்பையும் பெற்றன். இவன் 1310 வரை பொலனறுவையில் ஆண்டான். பின்னர் முதலாம் புவனேகபாகுவின் மகனன இரண்டாம் புவ னேகபாகு அரசனனன். இவன் இந்தியாவிலே பாண்டிய அரசுரி மைப் பிணக்குண்டானதையும், மல்லிக்கபூர் படையெடுப்பையும் பார்த்திருந்து உடனே மூன்ரும் பராக்கிரமபாகுவைக் கலைத்து அவனது அரசிருக்கையைக் கைப்பற்றினன். இவன் குருனுக்கலி லிருந்து 1325 வரை இலங்கையை பாண்டியராட்சியிலிருந்து விடு வித்து ஆண்டுவந்தான். அரசனவதற்குமுன் இவன் குருணுக் கஃபயே வாசத்தலமாகக் கொண்டிருந்தான். இவனுக்குப்பின் இவன் மகனன நான்காம் பராக்கிரமபாகு ஆண்டான். இவனே சிங்கள இலக்கியத்திற் சிரத்தை காட்டியவன். இவன் சிங்காசன மேறிச் சிறிதுகாலத்தில் இவஞட்சிக்கெதிராக ஒரு குழப்பமுண்டா யிற்று. இக்குழப்பத்தோடு இவனட்சியும் முடிவுற்றது.
4. கம்பளை மன்னரும் தமிழரசரோடு அவர்கட்கிருந்த தொடர்பும்
ரலாம் பராக்கிரமபாகுவுக்குப்பின் மூன்றம் புவனேகபாகு அரச ஞளுன்ை. இவன் யார், எங்கிருந்து ஆண்டான் என்பன தெரியவில்லை. அடுத்த அரசனுன ஐந்தாம் விசயபாகு (1333-1344) சிவனுெளிபாதத்துக்குச் சமீபமாயுள்ள ஒரு பட்டணத்திலிருந்து ஆனை செலுத்தினன். இவன் மகன் கம்பளேயிலிருந்து ஆண்ட நாலாம் புவனேகபாகு (1344-1353) என்ப. இவனுக்குப்பின் இவன் சகோதரனன 5-ஆம் பராக்கிரமபாகு ஆட்சிநடத்தினன். இவனும் நாலாம் புவனேகபாகு காலத்திலேயே ஆட்சி நடத்தியதாகக் கூறு கிருன்* ஐந்தாம் பராக்கிரமபாகு முதல் தடிகமத்திலிருந்து
*இக் காலத்த ரசர் பலர் தமது ஆட்சியில் வேறு பலருடைய பெயரையம் இஃனப்பது வழக்கம். இதஞல் ஒரே காலத்தில் பல அரசர் ஆட்சிசெய்த தாகக் காணுகிமுேம்,

Page 82
46 இலங்கையின் பூர்வ சரித்திரம்
ஆட்சிநடத்தித் தன் தமையனிறந்ததும் கம்பளேக்கு வந்தான். இவன் காலத்திற்றன்போலும் வடக்கேயிருந்த தமிழர் மேற்குக் கரைப்பட்டினங்களைக் கைப்பற்றினர்கள்.
பாளியிலும் சிங்களத்திலும் எழுந்த வரலாற்று நூல்கள் சிங்கள அரசரின் ஆட்சியைப் பற்றியே கூறுகின்றன. சாசனங்களும் அநேகமாக சிங்கள அரசரைப் பற்றிய குறிப்புக்களையே உடையனவா யிருக்கின்றன. எனவே, வடக்கே நிலவிய தமிழரசின் வரலாற்றைப் பற்றி ஒரு திருப்திகரமான சரித்திரத்தை எழுதுவது இலேசான விஷயமல்ல. பெரிய பராக்கிரமபாகுவின் காலம்வரை வடஇலங்கை யும் சிங்கள அரசரின் ஆணைக்குட்பட்டிருந்தது. தமிழரசு அங்கே எப்பொழுது எற்பட்டதென்பது தெரியவில்லை. கலிங்கமாகன் ஆட்சி யிற்றன் தமிழரசு எற்பட்டிருக்கலாம். பொலனறுவை தொட்டு மாதோட்டம் வரையுள்ள முக்கியமான நகரங்களும், இவற்றுக்கு வடக்கேயுள்ள பகுதிகளும் உருகுணையின் வடகோடிப் பகுதியும் இவனுட்சியிலேயே இருந்தன. மாகனுக்குப்பின் ஆண்ட அரசர்கள் வட்மாகாணத்திலும் ஆணை செலுத்தினர்கள். இரண்டாம் பராக் கிரமபாகு பொலனறுவையையும் அனுராதபுரியையுங் கைப்பற்றிய போதிலும், இக்காலத்து வடமாகாணம் முழுவதும் அவன் ஆட்சி யின்கீழ் வரவில்லை.
1255-ஆம் ஆண்டுவரையில் ஜடாவர்மன் வீரபாண்டியன் என்ப வன் இந்தத் தமிழ் இராச்சியத்தின்மீது படையெடுத்தான். இப்படை யெடுப்பில் யாழ்ப்பா600 அரசன் கொல்லப்பட்டானெனக் கூறப்படு கிறது. இப்படையெடுப்பின் விளைவு என்ன என்பது தெரியவில்லை. இக்காலத்தில் வடஇலங்கையிலேற்பட்ட தமிழரசு பாண்டியராணைக் குட்படாவிட்டால் 1284-இல் சிங்கள அரசு பாண்டிய மன்னராட்சிக்
ட்பட்ட பொழுதேனும் அது பராதீனப்பட்டிருக்கவேண்டும்.
1310-இல் பாண்டியநாட்டை முஸ்லிம்கள் கைப்பற்ற அதன் பயனகப் பல தொல்லைகளுண்டாயின. அவ்வாறே சிங்கள நாட்டி லும் குழப்பங்களேற்படவே வடபகுதித் தமிழரசர் தமது ஆணையைப் பெருக்கி இராச்சிய எல்லையையும் விஸ்தரித்தார். 1344-இல் இலங் கைக்கு வந்த இயன்படுட்டா என்ற இஸ்லாமிய யாத்திரீகர் ஆரியச் சக்கரவர்த்தி என்ற தமிழரசனைப் பற்றிக் குறிப்பிடுகிருர். இவ்வா சன் மிக வலிமையுடையவனென்றும் பல கொள்ளைக் கப்பல்களை வைத்திருந்தானென்றும் இவனது அரசவையில் பாரசீக மொழி

தென்மேற்கில் ஆதிக்கம் 47
யைப் பேசும் ஒரு அறிவாளியிருந்தானென்றும் அந்த யாத்திரீகர் குறிப்பிட்டிருக்கிருர், மேலும் இவனுடைய இராசதானி ஒரு சிறிய அழகிய நகரமென்றும் அதைச் சுற்றி மரத்தாலியன்ற மதிலும் கோட்டைகளுமிருந்தன என்றுங் கூறுகிருன்.
ஐந்தாவது பராக்கிரமபாகுவுக்குப்பின் ஆண்ட மூன்றம் விக்கி ரமபாகுவினட்சிக் காலத்தில் சிங்கள நாட்டிலிருந்து திறையைப் பெறக்கூடிய முறையில் தமிழரசர்கள் தெற்குநோக்கி முன்னேறி வந்தார்கள். விக்கிரமபாகு திறமையற்ற ஒரு அரசன் எனவே, இவனது ஆட்சியினரம்பத்திலே சேனைத்தலைவனன சேன இலங்கா அதிகார என்பவனே உண்மையில் ஆட்சியை நடத்திவந்தான். இவனுக்குப்பின் நிசங்க அழகக்கோனான் சேனபதியாகி தமிழரின் முன்னேற்றததைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டான். இவன் கோட்டைக்காட்டில் ஒர் அரணமைத்து அங்கே வசித்துவந்தான். இதையறிந்த ஆரியச்சக்கரவர்த்தி கடல்மார்க்கமாக ஒரு சேனையை யுந் தரைமார்க்கமாக ஒரு சேனையையும் அனுப்பினன். தரை மார்க்கமாகச் சென்ற படை மாத்தளையில் தோற்கடிக்கப்பட்டது. கடல்மார்க்கமாகச் சென்ற படை பாண்டுறை என்ற இடத்திலிறங் கிற்று. 1368-இல் இப்படையை அழகக்கோனான் தோற்கடித் கது மன்றி கொழும்பு, வத்தளே நீர்கொழும்பு, சிலாபம் ஆகிய இடங்களி லிருந்த தமிழ்ப்பாசறைகளையும் கைப்பற்றினன்.
இதன்பின்னர் தமிழ் அரசுவலி குன்றிற்று. விசயநகர அரசர் கள் படையெடுத்தார்கள். இரண்டாம் ஹரிஹரன் (1379-1406) என்ற விசயநகர அரசன் மகனன விரூபாட்சன 1385-இல் அதைக் கைப்பற்றினன். 1438-இல் இரண்டாவது தேவராயன் ஆட்சியில் மறுபடியும் தமிழரசு வெற்றிகொள்ளப்பட்டு விசயநகர சாம்ராச்சி யத்தின் ஆணையிலடங்கித் திறையுங் கொடுத்துவந்தது.
தமிழரசு எற்பட்டதனுல் இலங்கையிற் சில புதிய பிரச்சினைகள் கிளம்பின. இதுவரை இலங்கையிற் சிங்களமே பிரதானமான மொழியாகவும் புத்தசமயமே முக்கியமான சமயமாகவும் இருந்து வந்தது. ஆனல், தமிழரசு ஏற்பட்டவுடன் தமிழ் இராச்சியத்தில் தமிழே பிரதானமான மொழியாயிற்று. இந்து சமயம் முக்கிய மான சமயமாயிற்று. பொருளாதாரம் சம்பந்தமாகவும் ஒரு வித்தியாசம் உண்டானது. தமிழ் இராச்சியம் வரண்ட பிரதேசத்தை

Page 83
4S இலங்கையின் பூர்வ சரித்திரம்
அடக்கியிருந்ததால் இப்பிரதேசத்துக்கு ற்ேறமுறையில் தமிழர் விவசாயஞ் செய்தார்கள். சிங்களர் வரண்ட பிரதேசத்தைவிட்டு விளேவு அதிகமாயுள்ளதும், நெல்லுமாத்திரமன்றி வேறுபல விளை பொருட்களும் உண்டாகக்கூடியதுமான குளிர்ந்த பிரதேசங்கட்கு மெதுவாகச் சென்றாகள். இதனுல் இவ்விருசாகியாரிடையிலும் பெரிய வித்தியாசங்க ளுண்டாயின. இப்போது இவர்களிடையே யுள்ள வித்தியாசத்திற்கும் ஒரளவுக்கு இதுவே கார:ைமெனலாம்.
5. கோட்டை இராயகம அரசர்கள்
வரை பேரளவில் விக்கிரமபாகு ஆட்சி நடத்தினன். ) இவனுக்குப்பின் 1405 வரை ஐந்தாம் புவனேகபாகு ஆண்டான். இவ்வரசர்கள் பேரளவில் ஆட்சி நடத்தினர்கள். ஆனல், உண்மையான அரசியல் நிருவாகத்தை நிசங்க அழகக் கோனராவும் அவனுக்குப்பின் வந்தவர்களுமே நடத்தினர்கள். இவர்கள் பாணந்துறைக்குக் கிழக்கேயுள்ள இராயகமத்திலிருந்து ஆண்டனர். இவர்களுள் ஒருவன் ஐந்தாம் புவனேகபாகுவின் மைத்துனனும் நிசங்க அழகக்கோஞராவின் மருமகனுமான இரண்டாம் வீரபாகு (1391 1397) வாகும். இவன் தன் சகோதர ஞன வீர அழகேசுவரனே (1387-1391) த் தோற்கடித்து ஆதிக்கம் பெற்றன். இவன் மலையாளிகள், தமிழர் முஸ்லிம்களாகியோருக் கெதிராய் வெற்றிகரமாகப் போர்செய்தானெனக் கூறப்படுகிறது. தோல்வியுற்று இந்தியாவுக்கோடிய வீர அளகேசுவரன் 1397-இல் இலங்கைக்குத் திரும்பி மறுபடியும் அரசனணுன்.
சந்திரபானுவைவிட வேறு பல அரசர்கள் கூட இலங்கையி லிருந்த தந்ததாதுவைக் கைப்பற்ற முயன்றர்கள். யுவான் வம் சத்தை உண்டாக்கிய (1280-1368) குப்ளாகான் என்ற சீனச் சக்கர வர்த்தி 1284-இல் அதைப் பெற்றுவருமாறு துதரை அனுப்பிஞன். வேறு மிருமுறை சீனத்துதர் இதைப் பெறுவதற்கு இலங்கைக்கு வந்தார்கள். மிங்வமிசத்தைச் சேர்ந்த (1868-1644) யுங்கோ என்ற சீனச்சக்கரவர்த்தியின் விருப்பப்படி தந்ததாதுவை எடுத்துச் செல்வதற்காக சிங்ஹோ என்ற அலி 1405-இல் இலங்கைக்கு வந்தான். வீர அழகேசுவரன் இவனே மரியாதையுடன் வரவேற்க வில்லை. 1410-இல் மறுபடியும் இவன் வந்து வீரஅழகேசுவரனையும் அவனது அரசியையும் உத்தியோகஸ்தரையுஞ் சிறைப்படுத்திச் சீனு,

தென்மேற்கில் ஆதிக்கம் 149
வுக்கு இட்டுச்சென்றன். பின்னர் இவ்வரசன் விடுதலை பெற்ற போதிலும், மறுபடி அரசுரிமையைப் பெறவில்லை. இவனுக்குப் பின் சேனபதி சேனலங்காதிகாரனின் பேரனுகிய பராக்கிரமபாகு ஆட்சிசெய்தான். இவன் காலந்துவங்கி 1459 வரை இலங்கை சிணு வுக்குத் திறைகொடுத்து வந்ததாகவே தெரிகிறது.
இவ்வரசனுக்குப்பின் ஐந்தாம் பராக்கிரமபாகுவின் வழித் தோன்றலாகிய ஆரும் பராக்கிரமபாகு ஆண்டான். இவன் முதலில் 1412-இல் இராயகமத்திலிருந்து ஆட்சிநடத்திப் பின்னர் 1415-ல் நன்கு பாதுகாக்கப்பட்ட கோட்டையை இராசதானியாகக் கொண் டான். அன்றியும், உள்நாட்டுக்குள் செல்லும் பாதை கழனி கங்கையை இக்காலத்துப் பாலத்துறை என்னுமிடத்திற் சந்தித்தது. வடக்கேயிருந்து கொழும்புக்கு வரும் பாதையும் வத்தளை என்ற இடத்திற் கழனியைச் சந்திததது. எனவே, கோட்டையை இராச தானியாகக் கொண்டதால் இப்பாதைகளை மேற்பார்வை செய்யவும் கொழும்பிலிருந்து ஐரோப்பாவுக்கு எற்றுமதியாகும் கறுவா வர்த்தகத்தை மேற்பார்வை செய்யவும் முடிந்தது.
இக்கால அரசருள் இலங்கை முழுவதிலும் ஆணை செலுத்திய வன் ஆரும் பராக்கிரமபாகு ஒருவனே. இவனுட்சியில் வன்னி நாடும் தமிழரசும் வெற்றிகொள்ளப்பட்டன், மலைநாட்டிலுண்டான ஒரு கலகத்தையும் அடக்கினர்கள்.
இவ்வரசன் அரசுகட்டிலேறியதும் தனது பலத்தைப் பெருக் கிக்கொண்டு விசயநகரப் படையெடுப்பொன்றைத் தடுத்தான். சில வருடங்களின் பின்னர் தமிழரசின் ஆணைக்குட்பட்டிருந்த வன்னியதிகாரிகளுடன் போர்செய்து வென்றன். பின்னர் தனது சுவீகார புத்திரனன சபுமால் குமாரய்யாவை, தமிழாசை வெற்றி பெறுமாறு அனுப்பிஞன். இக்காலத்தில் தமிழரசு விசயநகர மன்னரின் ஆதிக்கத்திலிருந்தபோதிலும் இரண்டாம் தேவராய மன்னனுட்சியின் கடைசிக்காலத்தில் எவ்வித பாதுகாப்பையும் பெருமலிருந்திருக்க வேண்டும். சபுமால் குமாரய்யன் முதல் முறையில் வெற்றிபெறவில்லை. இரண்டாவது முறை தமிழ்ப்படை களை முறியடித்துத் தமிழ் இராச்சியத்தைப் பராக்கிரமபாகுவி ஞனேக்குப் பணியச்செய்தான்.

Page 84
50 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இவ்வாறு சிங்ளர் தமிழரசுடன் சண்டை செய்ததனற்றன் விசயநகர அதிகாரி ஒருவன் கறுவா எற்றிச்சென்ற சிங்களக்கப்ப லொன்றைக் கைப்பற்றினன். உடனே பராக்கிரமபாகு ஒரு படையை அனுப்பி ஆதிரியம்பேட்டை என்ற விசயநகரத் துறையைத் தாக்கினன்.
இக்காலத்தில் சந்த உடபஸ்ரட்டையென வழங்கிவந்த மலேய ரட்டையை கம்பளை மிளவரசன் பேரளவில் ஆண்டுவந்தான். அவ னதுமந்திரியான லங்காதிகாரசோதிசிட்டானுவே உண்மையில் ஆட்சி நடத்தினன். 1463-இல் இவன் பராக்கிரமபாகுவுக்குச் செலுத்த வேண்டிய திறையைச் செலுத்தாமல் குழப்பஞ்செய்யவே இவனே அடக்குமாறு அம்புலுகலகுமாரய்யனைப் பராக்கிரமபாகு அனுப்பி ன்ை. அம்புலுகல சோதிசிட்டானவை அடக்கி அரசை கம்பளே இள வரசனிடம் ஒப்படைத்தான்.
ஆறவது பராக்கிரமபாகுவுக்கு மக்களில்லாதபடியாற் போலும் அவனுக்குப்பின் அவன் பேரப்பிள்ளையான இரண்டாம் சயபாகு (1467-1473) அரசனனன். ஆனல், யாழ்ப்பாணப் பட்டினத்தி லிருந்துகொண்டு தமிழ் இராச்சியத்தை ஆண்டுவந்த சபுமால்குமா ரய்யா சயபாகுவைக் கொன்று புவனேகபாகு என்ற பெயருடன் கோட்டைக்கு அரசனஞன். சபுமாலும் அவனது தம்பியான அம்புலுகல குமாரய்யாவும் இந்திய இளவரசர்களெனவும், பராக் கிரமபாகு இவர்களைச் சுவீகார புத்திரராக வளர்த்து வந்தானென வும், சயபாகுவைக் கொன்று சபுமால் தானே சிங்காசனமேறிய தைச் சிங்களவர் விரும்பியிருக்கமாட்டார்களெனவும் ஒரு ஆசிரியர் கூறுவா.
1476 வரையில் காலுகங்கைக்கும் வளவைகங்கைக்கு மிடைப் பட்ட பிரதேசத்திலுள்ள குடிகள் சபுமாலுக்கெதிராகக் குழப்பஞ் செய்தார்கள். இவர்களையடக்க நான்கு கோறளையை ஆட்சிசெய்த தன் தம்பியான அம்புலுகலையை சபுமால் அனுப்பினன். இத் தருணத்தில் நான்கு கோறளைக் குடிகளும் குழப்பஞ் செய்தார்கள். குழப்பக்காரர்களை அடக்க நாலு வருஷம் எடுத்தது. அதுவும் சமாதானமான முறையை அனுட்டித்துக் குழப்பக்காரத் தலைவர் கட்கு சிறை விதிப்பதுடன் நின்றபடியாற்றன் ஆரும் புவனேகபாகு குழப்பத்தை அடக்க முடிந்தது.

தென்மேற்கில் ஆதிக்கம் 5
தமது இளவரசனணேயைச் சட்டைபண்ணுத கந்த உடபஸ்ரட்டை யதிகாரிகள் சோதிசிட்டானவின் ஆதிக்கத்தை ஆரும் பராக்கிரம பாகு அடக்கியதும், ஆரும் புவனேகபாகு காலத்திலே ஆதிக்கம் பெற்ற விக்கிரமபாகுவுக் கெதிராகக் கிளம்பினர்கள். புவனேக பாகு விக்கிரமபாகுவுக்குப் போதியதுணை செய்யக்கூடிய நிலைமையி லிருக்கவில்லை. எனினும், விக்கிரமபாகு குழப்பத்தை அடக்கிக் கம்பளையிலிருந்து பேராதனைக்குச் சென்று அங்கிருந்து கண்டிக்குப் போனன். பின்னர் கண்டியையே தனது ராசதானியாக்கினன். பின்னர் கோட்டை இராச்சியத்தின் ஆணையிலிருந்து விலகி மாத் தளைப் பகுதிக்கும் திருக்கோணமலை துறைமுகத்துக்கும் வளவை கங்கைக்குமிடையிலுள்ள கிழக்குப் பிரதேசத்துக்கும் தலைவனஞன்.
வடக்கேயுள்ள தமிழரும் இக்குழப்பத்தைத் தமக்குச் சாதகப் படுத்திக்கொண்டனர். சபுமால் குமாாய்யன் முடியிழக்கச் செய்த தமிழரசனின் மகனன பரராசசேகரன் (1478-1519) மறுபடியும் தனது அரசுரிமையைப் பெற்றுத் தனியாட்சி நடத்தின்ை.
ஆரும் புவனேகபாகுவுக்குப் பின் ஏழாம் பராக்கிரமபாகு (1480 -1484) வும் அம்புலுகல என்ற இளவரசனும் ஆட்சிநடத்தி னர். அம்புலுகல எட்டாவது பராக்கிரமபாகு என்ற பெயருடன் (1484-1509) ஆண்டான். இவனட்சிக் காலத்திற்றன் போர்த்துக் கீசர் இலங்கைக்கு வந்தார்கள்.
6. விவசாயமும் வர்த்தகமும்
ਉ பெரிய நீர்ப்பாசன வேலைகள் எதுவும் நடைபெற்ற
தாகத் தெரியவில்லை. மழை குறையாத குளிர்ப் பிரதேசத் திற் சிங்கள மன்னர் தமகதலைநகரை அமைத்து அரசாண்டபடியாற் ருன் நீர்ப்பாசன வசதிகட்குத் தேவையில்லாமற் போயிற்று. தென் மேற்குப் பகுதியில் தென்? எயும் பலாவும் பயிர்செய்யப்பட்டதாகச் சில இடங்களிற் கூறப்பட்டிருக்கிறது. தேங்காய், பலா ஆகிய விளை பொருட்களைப் பற்றி எற்கனவே கூறப்பட்டாலும் இக்காலத்திற்றன் அவை அதிகமாகப் பயிரிடப்பட்டன. ஏனெனில், முந்தியகாலத் தரசர்கள் ஆட்சிநடத்திய வரண்ட பிரதேசம் இப்பயிர்கட்கு ஏற்றதல்ல.

Page 85
52 இலங்கையின் பூர்வ சரித்திரம்
இக்காலத்தில் அந்நிய நாடுகளோடு இலங்கை வியாபாரம் நடத் திற்று. சிலுவை யுத்தத்தின் பின்னர் கீழைத் தேசங்கட்குவந்த ஐரோப்பியர் இலங்கையில் விளையும் முதற்றரமான கறுவாவை நல்ல விலைகொடுத்து வாங்கினர்கள். முதலாவது புவனேகபாகு, தனது இலாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக, 1283-இல் எகிப்து சுல்தானுடன் ஒரு உடன்படிக்கை செய்தான். இதன் பிர காரம் இவன் இலங்கையிலிருந்து கறுவா, விலையுயர்ந்த இரத்தி னம், யானை முதலியவற்றை எற்றுமதி செய்தான். இந்த வியாரக் கோஷ்டி, பாரசீகக் குடாக்கடல்வரை கடல்மார்க்கமாகச் சென்று அங்கிருந்து தரைவழியாக பாக்தாத், சீரியா வனந்தரமாகியவற் றைக் கடந்து கய்ரோவுக்குச் சென்றது.
வடபகுதியில் ஆட்சிநடத்திய தமிழரசன் 1344-ல் சோமண்டலக் கரைமிலும், மலையாளக்கரையிலுமுள்ள வியாபாரிகளுடன் கறுவா வியாபாரம் நடத்திஞனெனவும், பண்டமாற்றக அவர்களிடமிருந்து சீலை முதலிய சாமான்களைப் பெற்றனெனவும் இபின் பட்டுட்டா என்ற யாத்திரீகர் கூறுகிறர். இதே வருடத்தில் கொழும்பில் வவருேம் கடற்றலைவனுமான ஜாலஸ்தி என்ற முஸ்லிம் 500 அபிவனிேய வீரரோடு ஆட்சிநடத்தினன். கறுவா வியாபாரத்தை மேற்பார்வை செய்வதற்கே இவ்வாறு கொழும்பு கைப்பற்றப்பட்டது. சில வருடங்களின் பின் அங்கிருந்த முஸ்லிம்கள் அகன்றதற்குக் கார னம் வடக்கேயிருந்து கறுவா வியாபா' ம் நடத்தவந்த தமிழர் இவர் களே அங்கிருந்து கலைத்துவிட்டமையாற் போலும். இக்கறுவா வியா பாரத்தைக் கைப்பற்றுவதற்காகவே வியாபாரத்திற் சிரத்தையுள்ள அழகக்கோனான் தமிழரை அங்கிருந்து கலைக்க எண்ணினன். இரண்டாவது வீரபாகு தமிழர், மலையாளிகள் முஸ்லிம்களாகியவர்க ளோடு சண்டையிட்டதும், சீனர் வீர அழகேஸ்வரனைக் கைதுசெய்த தும், அழகக்கோளுரைனும் அவனுக்குப்பின் வந்தோரும் இராய கமத்தை இராசதானியாகக் கொண்டதும் ஆரும் பராக்கிரமபாகு தனது இராசதானியைக் கோட்டைக்கு மாற்றியதும் 1505-இல் போர்த் துக்கீசர் இலங்கைக்கு வந்ததுமெல்லாம் இக்கறுவா வியாபாரம் காரணமாகவே.
பலவகையில் இவ்வியாபாரம் முக்கியமானதா யிருந்தபோதி லும் பொதுசனங்கட்கு இதல்ை எவ்வித நன்மையுமேற்படவில்லை. கறுவா சாகுபடிசெய்யாமற் சுயமாகவே வளர்ந்தது. பட்டையைத்
தயார்செய்வதற்கு ஒரு பிரத்தியேகமான சாதியாரிருந்தார்கள்.

தென்மேற்கில் ஆதிக்கம் 53
இவர்கட்குக் கூலியாக நிலம் மர்னியமாய் வழங்கப்பட்டு வந்தது. கறுவாவில் வியாபாரஞ் செய்யும் உரிமை அரசனுக்கே உரியது. அந்நிய தேச வியாபாரிகள் வந்து கறுவாவை வாங்கிக்கொண்டு போவார்கள். எனவே, கறுவா உற்பத்திசெய்வதிலோ விலைப் படுத்துவதிலோ பொதுசனங்கட்கு எவ்வித பங்குங்கிடையாது. கறுவா விலை அதிகரிப்பதனல், அவர்களுக்கு எவ்வித இலாபமுங் கிடைப்பதில்லை. அதனுல் சனங்கள் வியாபாரத்திற் கவனஞ்செலுத் தாமல் விவசாயத்தையே நடத்திவந்தார்கள்.
கறுவா வியாபாரத்தின் பயணுக முஸ்லிம்கள் எராளமாக இலங்கையிற் குடியேறினர். கொழும்பிலும் பேருவளை முதலிய இடங்களிலும் உள்ளூரிலுங்கூட அவர்கள் குடியேறித் தாம் வசித்த இடங்களில் மசூதிகளைக் கட்டுவித்தார்கள். சிவனெளிபாதமலையி னுச்சியிலுள்ள பாதச்சுவடு விவிலியநூலிற் கூறப்பட்ட முதல் மனிதனுன ஆதாமின் சுவடென எண்ணி அதற்கு யாத்திரை செய்து வந்தார்கள். w
7. புத்த சமயமும் இந்து சமயமும்
@*... நாட்டின் நிலைமை குழப்பமடைந்திருந்ததால்
புத்த சமயத்தில் செல்வாக்குக் குறைந்தது. ஐந்து அரசர்கள் பிக்குகள்மீது ஒழுங்கு நடவடிக்கையெடுத்து தகாதவாழ்க்கை நடத்
தியவர்களைச் சங்கத்திலிருந்து நீக்கினர்கள். அயல்நாட்டுப் படை
யெழுச்சிகளினலும், உள்நாட்டுக் குழப்பங்களினலுமே சங்கத்திற் சீர்கேடுண்டானது. எனெனில், பிக்குகளுக்குரிய ஆசாரங்களை அனுசரிப்பதற்கு இக்குழப்பங்கள் பெரிதும் இடையூறயிருந்தன.
பொலனறுவைக் காலத்திலும்பார்க்க இக்காலத்தில் தந்த தாதுவை அரசர்கள் மிகக்கவனமாகப் போற்றிவந்தார்கள். அர சிருக்கையை மாற்றுங்காலங்களிலெல்லாம் அவர்கள் தந்ததாது வைத் தங்களோடு எடுத்துச்சென்று புதிய கோவிலொன்றை அதற் கென அமைத்தார்கள்.
மகாயானக் கொள்கைகள் மேலும் பரவின. சங்கத்தைச் சீர் திருத்தி பிணங்கிய கட்சிகளைச் சமரசப்படுத்தியதனுல் இக்கொள்கை கள் பாதிக்கப்படவில்?ல. விசேஷமாக ஆருவது பராக்கிரமபாகு காலந்தொட்டு நாத என்று சொல்லப்படும் அவலோகிதேஸ்வரரை

Page 86

தென்மேற்கில் ஆதிக்கம் 55
வழிபடும் கொள்கை வலுவுற்றது. இக்கால இலக்கியங்கள் பலவற் றில் இப்போதிசத்துவரைப் பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. மேலும், அவலோகிதேஸ்வரரின் விக்கிரகம் பல கோயில்களில் வழிபடப்பட்ட தாகச் சில சாசனங்கள் கூறுகின்றன. புத்த பூசைகளைப் பற்றியும் கூறப்படுகிறது. இவ்வழக்கம் மகாயான மதச்சார்பினலோ அல்லது இந்துசமயச் சார்பினலோ ஏற்பட்டதெனக் கூறலாம்.
புத்த சமயம் காரணமாக இக்காலத்தில் இலங்கை வேறுபல நாடுகளுடனுந் தொடர்புபெற்றது. தம்மசேதி என்ற பர்மிய அரசன் இலங்கைச் சங்கத்தில் ஆசாரியாபிஷேகம் பெற்று வருமாறு பர்மியப் பிக்குகளே இலங்கைக்கு அனுப்பியிருந்தான். இவ்ர்கள் அபிஷே கம் பெற்றுத் தம் நாடு திரும்பியதும் தாமே அங்குள்ள பிக்குக ளுக்கும் சியாமிலிருந்து வந்தவர்கட்கும் அபிஷேகச் சடங்கு செய் தனர். நாலாம் புவனேகபாகுவின் கால ஆரம்பத்தில் அவனது சேனதிபதி காஞ்சீபுரத்தில் ஒரு விகாரத்தைக் கட்டுவித்தான். இதேகாலத்தில் இருந்த தேரதர்மகிர்த்தி என்பவர் கிருஷ்ணுநதியி லுள்ள அமராவதியிலிருந்த இரண்டு மாடியுள்ள விகாரையைப் புதுப்பித்தார்.
இக்காலத்தில் இந்து சமயமும் செல்வாக்குற்றது. சில சிங்கள அரசர்கள் பிராமனைரை ஆதரித்ததுமல்லாமல் அரண்மனையில் சமய சம்பந்தமான கிரியைகளைச் செய்வதற்குப் புரோகிதரையும் ஏற்படுத்தி ஞர்கள். இரண்டாவது பராக்கிரமபாகுவினுட்சிக் காலத்தில் இரத் தினபுரிக்குச் சமீபத்தில் மகாசமன தேவாலயமொன்று கட்டப்பட் டது. கடுகண்ணுவைக்குத் தென்மேற்கே சிலமைல் துரத்திலுள்ள அலுத்துவரையில் நாலாம் பராக்கிரமபாகு ஒரு விஷ்ணு தேவால யத்தை நிர்மாணித்தான். கோட்டையை அரண் செய்தபொழுது அழகக்கோனான் அந்நகரின் பாதுகாப்புக்காக நாலு கோயில்களைச் சமைப்பித்தான். இவை விபீஷணன், கிஹிரெலிஉபுலுவன், ஸ்கந் தன், சமன் என நான்கு தெய்வங்களுக்கு அர்ப்பணஞ் செய்யப்பட் டன. சமன் என்ற தெய்வம் சிவைெளிபாதத்துடன் சம்பந்தப்பட் டிருந்தது. புத்தவிகாரங்களோடு இந்துக்கடவுளர்க்குத் தேவாலயங் களமைக்கப்பட்டு அங்கே வழிபாடு செய்துவந்தார்கள். சில சமயங் களில் விகாரங்களிலேயே இந்து தெய்வங்களும் வழிபடப்பட்டன. கம்பளைக்குச் சமீபத்திலுள்ள இலங்கி திலக விகாரத்தில் உட்சுவருக் கும் புறமதிலுக்குமிடையில் இந்து தெய்வங்களின் விக்கிரகங்கள்

Page 87
| ": , -
ت இலக்காசில விகாசையின் -- gli Ro...! FILU IHLJ Uf !...— dir', Ne ! filo ?"
 
 
 
 

H
தென்மேற்கில் ஆதிக்கம் 157
பிரதிட்டைசெய்யப்பட்டன. சிங்கள ஆசிரியர்கள் முதலிற் றமது நூல்களில் புத்தகவானேயும், தம்மத்தையும், சங்கத்தையும் வழிபட்டபின் சிவன், பிரம்மா போன்ற கடவுளருக்கும் வனக்கம் தெரிவித்து அவர்களின் அருளே வேண்டினுர்கள். போதிசத்துை ரான நாதனேயும், சமன் தெய்வத்தையும் சிண்ணுகவும், சாமானு: ஞன இலக்குமணனுகவும் இவர்கள் கூறியிருப்பதும் குறிப்பிடத்
,
8. இலக்கி II, II.
இக்காலத் தில் இலக்கியமொன்றுதான் பெரிதும் வளர்ச்சியுற்றது. 以 அரசர்கள் புலவர்களேயும் கல்வியையும் ஆதரித்தார்கள். சில அரசர் தாமே நூல்களே எழுதியிருக்கிருர்கள். மாகன் காலத்தில் பிக்குகளுக்குக் கல்வியூட்டுவதை அட்சியஞ் செய்தனர். ஆEல், மூன்றும் விசயபாகுவும் இரண்டாம் பராக்கிரமபாகுவும் இவ்விஷயத்தில் மிகவுஞ் சிரத்தை யெடுத்தார்கள். இம்மன்னன் காந்தொட்டு இக்காலப்பகுதியின் இறுதிவரை இடையீடின்றி நர்கள் பல எழுந்தன. ஆருவது பராக்கிரமபாகு காலத்திற்ருன் எாாளமான நூல் ளெழுதப்பட்டன. இம்மன்னன் இலங்கை முழுவதையுந் தன்னுணேப்படுத்தியமை இலக்கிய விருத்திக்கு ஒரு பெரிய துண்டுதாயமைந்தது. புத்த பிக்குக்களே அதிகமாக நூல்கள்ே எழுதினுள்கள். எனெனில், அவர்களுக்குப் போதிய அவ காரமிருந்தது. முந்தியகாலத்தைப் போலவே இக்காலத்திலும் சமய சம்பந்தமான நுகளே எழுதப்பட்டன்,
இந்தியாவில் புத்த சமயம் தளர்ந்தபோதிலும் பாவியிப்ெபு துப் பழக்கம் குறையவிஸ்வே. பொலனறுவைக் காலத்து நூல் கஃப்போலவே இக்காலத்திலும் நூல்களேயாத்தனர். நடை, பாஷை பொருள் ஆகியவற்றில் In ITCB) uit தினமிசமென்ற நூலுக்கு நிக ாக தாதுகோபங்களின் வரலாற்றைக் கூறும் துரபவரிசம் எழுதப் பட்டது. சூளவமிசததின் இரண்டாம் பகுதியில் சமஸ்கிருதச் சார்பு அதிகம் காணப்படுகிறது. ஹக்கவனகல்ல விகாரவமிசமென்ற நடிப்பது சங்கபோவின் திவ்விய சரித்திரத்தைக் கூறும். சத்தம்ம சங்க என்ற நாஸ் புத்த சமய வரலாறு கூறும் ைெகேஹகே என்பவர் நூற்றுமூன்று கதைகளடங்கிய ஸ்வாஹினி என்ற பாவிநூலேர் செய்தார். இவரே சிவனுெளிபாதத்தை வருணித்து
-

Page 88
158 இலங்கையின் பூர்வ சரித்திரம்
சமத்தகூடவண்ணணு என்ற நூலையுஞ் செய்தார். வனாதன மேதங்கரா என்பவர் புத்த சரிதத்தைக் கூறும் ஜினசரித என்ற நூலை இயற்றினர். புத்தர் ஆபரணமெனப் பொருள்படும் ஜீன லங்கார என்ற நூலும் எழுதப்பட்டது. இவைமூன்றும் காவியங் கள். கச்சார்பன என்பவர் இயற்றிய பாளி வியாகரணத்தைப் பின்பற்றி பாலாவதார என்றெரு இலக்கண நூலே தர்மகீர்த்தி இயற்றினர். பேஷஜ்ய மஞ்சூசா என்ற வைத்திய நூல் இரண் டாம் பராக்கிரமபாகு காலத்தது.
இக்காலத்தில் எராளமான சிங்கள நூல்களியற்றப்பட்டன. இந்தியாவில் புத்த சமயம் மறையவே பாளி பாஷையைப் பலர் கைவிட்டுவிட்டனர். இதற்குப் பதிலாகச் சமஸ்கிருத பாஷையை அவர்கள் அனுசரிக்கவும் இடையூறுண்டாயிற்று. அதாவது, இக் காலத்தில் முஸ்லிம்கள் இந்தியாவைக் கைப்பற்றிவந்ததால் சமஸ் கிருத பாஷையும் முக்கியமில்லாது போயிற்று. சமஸ்கிருதக் கலப்பால் வளம்பெற்றிருந்த சிங்கள பாஷையை இலங்கையில் ஆசிரியர்கள் பெரிதும் பழக்கத்திற் கொண்டுவந்தனர்.
சிங்கள நூல்கள் அநேகமாகப் பாளி நூல்களின் மொழி பெயர்ப்பாகும். ஆதலால், சுவதந்திரியமான அமைப்பு இவற்றில் கிடையாது. இரண்டாம் பராக்கிரமபாகு காலத்தில் பண்டித பராக் கிரமபாகு எழுதிய தூபவமிசமென்பது இவ்வாறெழுந்த வசன நூலாகும். அட்டராகஅலுவமிசமும், விலகம்மூலமகாதோ எழுதிய போதிவமிசமும், தாதாவமிசத்தைப் பின்பற்றி எழுந்த கலகா பூஜா வலியும், நாலாம் பராக்கிரமபாகு காலத்தில் தேவ ருத்தம்ப சங்கினவன் என்பவர் எழுதிய தலகாசிறித என்ற நூலும், இரண்டாம் வீரபாகு காலத்திலிருந்த கடலாதெனியா தர்மகீர்த்தி ரளவாஹினியிலிருந்து தொகுத்த கதைகளேக் கொண்ட சத்தர் மாலங்காரமென்ற நூலும், கம்பளே அரசர்காலத் தில் ஜாதகக்கதைகளே மொழிபெயர்த்துத் தொகுத்த பன்சிய பணஸ் ஜாதகமென்ற நூலும், மேலே கூறியவாறெழுந்த வசன நூல்களாகும். இரண்டாவது பராக்கிரமபாகு காலத்தில் ԼՐԱյ, T பாததேரபுத்த புக்கிார் என்பவர் எழுதிய பூஜாவளி என்ற நூலில் அதிகம் சரித்திர வரலாறு அடங்கியிருக்கிறது. கடலா
as a ܫ தெனியா இரண்டாவது தர்மகீர்த்தி இயற்றிய நிகாய சங்கிரக

தென்மேற்கில் ஆதிக்கம் 59
மென்ற நூல் புத்த சமயத்தையும் அதன் பலவேறு பிரிவுகளையும் பற்றிய வரலாற்றைக் கூறுகிறது. தம்மபதத்திற் கூறப்படும் ஒழுக்க நெறிகளுக்குத் திருட்டாந்தமாகப் பலபுத்தகக் கதைகளைத் தொகுத்துக் கூறும் நூல் சக்கர்ம ரத்னவளி என்பது. இதை தர்மசேன என்பவர் இயற்றினர். இரண்டாம் வீரபாகு காலத்தி லிருந்த தர்மகீர்த்தியின் சீடனன விமலகீர்த்தி சத்தர்மரத்ணு கரம் என்ற நூலை எழுதினர். இது புத்த சமயத்தை விளக்கும் ருவால்.
இக்காலத் கில் சமய சம்பந்தமான பல பாட்டுக்களுமியற்றப் பட்டன. இரண்டாம் பராக்கிர மபாகு குசஜாதகக் கதையைக் கூறும் கவிசிலுமின, குசதாவத என்ற பாடல்களே எழுதினர். இவை பாஷை, நடை ஆகியவற்றில் சசதாவகத்தை ஒக்கும். தோட்டக முவ பரீ இராகுலர் எழுதிய காவியசேகரம், செய்யுள் நடையி லெழுந்த ஜாதகக்கதை கூறும் நூலாகும். குட்டிலகாவியமும் அத்தகையதே. ஆரும் புவனேகபாகு காலத்தில் புதுகுணுலங் காரயர் என்ற நூலும், லோவாத சங்கராவ என்ற நூலும் வீடாகம மைத்திரேயதேரரால் எழுதப்பட்டன. ஆரும் பராக்கிரம பாகுவைப் புகழ்ந்து கூறுவது பாகும்பாசிரித என்ற நூல்.
சந்தேச காவியங்களின் தோற்றம் ஒரு புதிய அமிசமெனக் கூற லாம். இவை காளிதாசரின் மேகதூதத்தைப் பின்பற்றி எழுந் தன. இந்து இலக்கியங்களின் கலப்பை இச்சந்தேச காவியங்களிற் காணலாம். அரசன் அல்லது அவன் குடும்பத்தவர் தீதின்றி வாழவோ அல்லது போரில் வெற்றியுண்டாகவோ வேண்டி ஒரு பறவையை தெய்வங்களின் சேத்திரங்களுக்குத் தூதாக அனுப்பு வதே சந்தேசகாவியங்களின் இலக்கணம். இவ்வாறு தூதுசெல் லும் பறவை போகும் மார்க்கங்களைக் கவி கூறுவார். எனவே, அக்காலத்துப் பட்டினங்கள் கிராமங்கள், கட்டிடங்கள் முதலியவற் றைப் பற்றிக் காவியத்திற் பல விஷயங்கள் கூறப்படும். இவ்வா றெழுந்த சந்தேசகாவியங்களுள் எழு இப்பொழுதும் நிவைத்திருக் கின்றன. அவற்றிலிரண்டு தோட்டகமுவ பறீ ராகுலரால் இயற்றப் பட்டன.
சமஸ்கிருதக் கல்வியின் பயனக பொலனறுவைக் காலத்தில் பாளி வியாகரணங்களும், நிகண்டுகளும் வைத்திய நூல்களு

Page 89
roosoleeling, oqarnoj se sɔ ɖɩ-ɩ
 
 

தென்மேற்கில் ஆதிக்கம் 6.
மெழுந்தன. அவ்வாறே இக்காலத்திலும் சிங்களத்திற் பலநூல் கள் செய்யப்பட்டன. சிதத்வங்கராவ என்ற சிங்கள வியாகரண நூல் சிங்கள இலக்கியத்துக்கு இலக்கணம் கூறும் முகமாயெழுந் தது. இரண்டாம் பராக்கிரமபாகுவின் மந்திரி ஒருவனின் வேண்டு கோட்படியே இந்நூல் செய்யப்பட்டது. பியும்மாலா (தாமரை மாலை) என்ற நூல் ஒருபொருட் பல சொற்களைக் கூறுவது. இது 1410-க்கு முன் எழுதப்பட்டது. ரூவன்மாலா (இரத்தின மாலை) வும் நாமாவளி (நாமவரிசை) யும் ஆரும்பராக்கிரமபாகுவின் மந் திரியான நல்லூருட்டன்மினி என்பவர் எழுதியவை. முதலாம் புவனேகபாகு காலத்தில் மயூரபாதபிரிவேலுவின் அதிபதி எழுதிய யோகார்ணவம் என்ற நூலும் யோகரத்னகரமென்ற நூலும் இக்காலத்திலெழுந்த வைத்திய நூல்களாகும். s
1478-இல் தமிழ் இராச்சியத்துக்கு அரசனன பரராஜசேகரனின் மருமகன் அரசகேசரி காளிதாசரியற்றிய இரகுவமிசமென்ற நூலைத் தமிழ்ப்படுத்தினர். காளிதாசருடைய செல்வாக்குத் தமிழ் இலக்கி யத்திலும் பரவியதற்கு இது ஒரு உதாரணமாகும்.
9. சிற்பக்கலை
@ ಹಾ... அதிக கட்டிடங்கள் கட்டப்படவில்லை. நாட்டிலேற் பட்ட குழப்பமும், அரசர்களின் செல்வக்குறைவுமே இதற் குக் காரணம். இக்காலத்தில் கட்டப்பட்ட இரண்டு பெரிய கட்டிடங் கள் இலங்காதிலக விகாரமும், கடலாதேனிய விகாரமுமாகும். நாலாம் புவனேகபாகுவினுட்சிக் காலத்தில் (1344-1354) அவனு டைய சேனபதியாகிய சேன இலங்காதிகார கம்பளைக்குச் சமீபத்தில் ஒரு சிறு குன்றில் இலங்காதிலக விகாரத்தைக் கட்டுவித்தான். இது செங்கல்லினுற் கட்டுப்பட்டது. பொலனறுவைக் காலத்துக் கட்டிடங்களைப் போலவே இதுவும் அமைந்துள்ளது. ஆனல், இந்த விகாரத்தின் மூலஸ்தானத்துக்கு முன்னர் இரண்டு மண்டபங்க ளுண்டு. இதுவே இக்காலக் கட்டிடத்துக்கும் பொலனறுவைக்காலக் கட்டிடத்துக்குமுள்ள வித்தியாசம். மூலஸ்தானத்தைச் சுற்றி ஒரு புறச்சுவர் கட்டப்பட்டதால் கட்டிடம் நெடுஞ்சதுரமாய் இருப்பதற்குப் பதிலாகச் சதுரமாயிருக்கிறது. அந்தரங்கமாயுள்ள கோவிலே புத்த விகாரம். அதைச் சுற்றியுள்ள உள்வீதியில் பல தெய்வங்களுக்கும்
5562-G

Page 90
கடலாதேனியா விகாரம்-கம்பளைக் கருகிலுள்ளது
 

தென்மேற்கில் ஆதிக்கம் 63
கோவிலுண்டு. கடலாதேனியா விகாரமும் நாலாம் புவனேகபாகு காலத்திற்றன் கணேஸ்வராச்சாரி என்ற தென்னிந்திய சிற்பியின் துணைகொண்டு தேரதர்மகீர்த்தியினல் நிர்மாணிக்கப்பட்டது. இல் விகாரம் எட்டிநுவரைக்கும் உடுநுவரைக்குமிடையிலுள்ள சமபீட மான திக்கலை என்ற பாறையில் கட்டப்பட்டது. கல்லினல் கட்டப் பட்ட விகாரம் இது ஒன்றுதான். இதற்குமுன் இவ்வாறு கட்டப் பட்ட விகாரம் கிடையாது. விசயநகரச் சிற்பமுறையை இவ்விகாரத் திலுங் காணலாம். பொலனறுவையிலுள்ள முதலாம் இலக்கச் சிவாலயம் பாண்டியர் காலத்தது. இதுவும் கல்லினல் அமைந் தது. பதின்மூன்றம் நூற்றண்டுப் பாண்டிய சிற்பமுறையில் நிர் மாணிக்கப்பட்டது. இச்சிற்பமுறை சோழியமுறையிலுஞ் சிறிது வித் தியாசமுடையது. யாப்பகுவாவிலுள்ள படிக்கட்டு இந்து சிற்ப முறையிலமைந்ததாதலின் பிந்திய பாண்டிய சிற்பமுறையையோ அல்லது விசயநகர முறையையோ அனுசரித்துச் சமைக்கப்பட்ட தெனத் தெரிகிறது.

Page 91
T (ס5ןGy-7וTA) போர்ததுச்சோ இங்கேற்கு :ேற்கு முன்னுள்ள இலங்கைச் சரித்திரத்தின் கடக்சர்டற்றை சென்ற அதிதியாயத்திற்கூறினுேம், போர்த்துகீசர் இலங்கையிர் கரை ராகேயுேம் வடக்கேயிருந்த 高 13" гт бутаг тул 55'LI'''Lyri EGir. ப்வே நாடுகளில் அவர்கள் நுழையவில்லை. பின்வந்த விவிலாந்துக்காரரும் போர்த்துக்ே ரிடமிருந்து :நாடுகளே கைப்பற்றிஞர்கள். பினர் பிரித்தா னியர் இப்பகுதிகளே பிாந்தரிடமிருந்து கைப்பற்றியதுடன் ஆ புேம் பிடித்துச் சிங்கள 'பிரிக்கு முற்றுப்புள்ளியிட்டன.
இந்திய கார்த்து இலங்கைச் சரித்திரம் பேர் ந்துக்கீசர் வருகை புடன் முடிகிறது. இதன் பினனர் இங்ாக, இந்திய நாகரிகத்தை விட்டு, rேi நாட்டு நாகரிகத்தையே பின்பற்றத் தொடங்கிற்று. இந்து சமயத்துக்குப் பதிாகக் கிறிஸ்த சமயத்தின் செல்வாக்குப் துெகிற்று. மேல் நாட்டு பக்கவழக்கங்களே இலங்கையர் சரித்ததுடன், L-říž, TTD silně, முன்னேற்றத்துக்கும் அடிகோவினுர்கள்.
பிரித்தானிய இலங்கையைர் பெற்றிய காலந்தொட்டு இலங்கை பெரிதும் புற்போக்கடைந்திருக்கிற தென்பதிற் சந்தேக மில்.ே இக்கால வாழ்க்கையைச் சிப்பிக்கும் சிவ விசேஷ அம்சங்ான் சமீபகாலத்தி ஆரம்பமானவையே. இப்புதிய சக்திகள் சனங்களின் வாழ்க்கை முறையைப் பெரிதும் ம ற்றிவிட்டதால் இலங்கைச் சரித தித்தில் இக்காலம் ஒரு பெரிய மாறுதலேயுடைய காலமாகும்.
இத்தகைய பெரிய மா 'கல்களுக்கிடையில் பழைய பல சந்தி கள் இன்னும் இருந்து தொழிலியத்திக்கொண்டே ஆங்கில பாஷையையும் இக்கியத்தையும் கற்றதால்வா Lfica. Ericio ஒரு புதிய நோக்கம் எற்பட்டது. இருந்து நாடெங்கும் பெரிதும் பயிலப்படும் பாஷை சிங்களமுந் தமிழுமேயாகும். கிறிஸ்தவ சமயி கள் சொற்பமானுலும் கிறிஸ்தவ திருச்சபையின் ஆதிக்கம் அதிக
 

{t+1ւկ էմի3)մ
மென்றே கூறலாம். புத்த சமயமும் இந்து சமயமும் இன்றும் எாாளமான பக்தர்களேயுடையதாயிருக்கிறது. முஸ்லிம்கள் தொ கையும் கிறிஸ்தவர் தொகைக்கு அதிகம் குறைவானதல்ல. மியா ாரார்த்தமாக விவசாயம் நடந்தபோதிலும், ராளமான Tolštati நெற்சாகுபடியி லீடுபட்டிருக்கிறர்கள். ரயில், மோட்டார். தந்தி, டெலிபோன் முதலிய போக்குவரத்துச் Tafi சனங்களின் வாழ்க்கையேடு அதிநியோன்னியமாகச் சம்பந்தப்பட்டு, GJITĚJŠÍ SINT, பின் பதுறையிலும் சனங்கட்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொ டர்பு ஏற்பட்டபோதிலும், சில பழைய நிருவாக முறைகள் கூட இன் இறும் இருந்தே வருகின்றன. அன்றியும், பழைய சிற்பம், ஒவியம் முதலிய மலேகளிற் சனங்கட்கு ஒ உற்சாக மேற்பட்டிருக்கிறது. பழைய குளங்களே புங் கால்வாய்களேயும் திருத்துவதில் சிாந்தை புண்டாயிருக்கிறது. சிலர் மறுபடியும் இந்தியாவையே முன்மாதிரி பாகக்கொள்ளுகிாரர்கள்.
பழமை இந்நாட்டின் ஆழமாகவே வேரூன்றிவிட்டது. இலங் கைச் சரித்திரத்தைப்பாதித்த பூமியமைப்பு ஆதியன இப்பொழுதும் அம்மாதிரியே இருக்கின்றன. ஆதலால், பழைய பித்திரத்தைக் கைவிட்டு முற்றுகப் புதிய முறைகே கையாளுவதென்பது முடி பாத காரியம், சிவராசிகள் எல்லாம் அவ்வப்போது ஏற்படும் புதிய நீவேமைகட்குத் தக்கஸ்'து தமது வாழ்க்கை முறைகளே மாற்றி Lமைப்பதுபோரி இலங்கை வாசிகளும் அவ்வாறு மாற்றியதிை துக்கொள்ளவேண்டும். கிரந்தரமான பயனுடையiற்றைக் காப் பாற்றி, வழக்கிறந்து உபயோகமற்றுப் போனவற்றை நீக்கி, தமது வளர்ச்சிக்கு வெளியே இருந்து எடுக்கக்கூடியவற்றை எடுத்துக் கொள்வதே முக்கியமானது. இவையெல்லாவற்றுக்கும் மிக அல் சியமாபுள்ளது நமது பழமையை அறியதே. அந்நோக்கத்தோடு நான் இச்சிறிய நூல் எழுதப்பட்டது. இலங்கையின் பூர்ன்சரித்தி சந்தை அறிவதற்கு எட்டுனேயேனு மினல் உதவுமாறு: அதுவே இந்நூலெழுதியதனுல் எறLட்ட பயனென்று கூறலாம்.

Page 92
அனுபந்தம்
ஆதாரங்கள்
1. மகாவமிசம்-இது பாளி பாஷையில் எழுதப்பட்ட இதி காசம். இலங்கையின் புராதன சரித்திரத்தையும் மத்தியகால சரித்திரத்தையும் ஆராய்வதற்கு இது மிக முக்கியமான ஆதாரமா யுள்ளது. இதன் முதற்பகுதி, இலங்கையின் ஆதி ,வரலாறு முதல் மகாசேனன் ஆட்சிக்காலம் வரை (கி.பி. 362) யுள் சரித்தி ரத்தைக்கூறும். இதனே அனுராதபுரியிலுள்ள மகாவிகாரத்தைச் சேர்ந்த பிக்கு ஒருவர் கி.பி. ஆருவது நூற்ருண்டு வரையில் எழுதினர். மிகப்பழைய எட்டுச்சுவடி இருநூறு ஆண்டுகட்கு முற் பட்டதாய்க் காணப்படவில்லை. பன்னிரண்டாவது நூற்றண்டில் எழுந்த ஒரு வியாக்கியானத்தின்* பயனக மூலம் ஒரளவுக்கு நிர்ண மிக்கப்பட்டுவிட்டது. மகாவமிசத்தின் இரண்டாம் பகுதியான குள வமிசம் மூன்று பிரிவுகளே உடையது. இதில், 1-ம் பராக்கிரமபாகு வின் ஆட்சி முடிவு (கி.பி. 1186) வரையிலும் நடைபெற்ற சம்பவங் களைக்கூறும் முதற் பிரிவு தர்மகீர்த்தி என்னும் பெளத்த பிக்கு வினலே, அநேகமாய்ப் பொலனறுவையிலே 13-ம் நூற்றண்டின் முற்பகுதியிலே இயற்றப்பட்டது. 4-ம் பராக்கிரமபாகுவின் ஆட்சிக் கால இறுதிவரையிலுள்ள சரித்திரத்தைக்கூறும் இரண்டாம் பிரிவு எக்காலத்தில் எவரா லியற்றப்பட்டதென்ற விஷயங்கள் தெரியவில்லை. ஆனல், கி.பி. 1333-ம் ஆண்டு வரையில் நடை பெற்ற நிகழ்ச்சிகளைக் கூறுவதினலே இக்காலத்துக்குப் பின்னர் தான் இப்பகுதி எழுதப்பட்டிருக்கவேண்டும். மூன்றம் பகுதி கீர்த்தி பூரீ இராசசிங்கன் காலத்தில் (1747-1781) திப்பொட்டுவாவே சித்தார்த்த புத்தாகூஜித என்ற பெளத்த பிக்குவினல் எழுதப் பட்டது. இவர் இச்சரித்திரத்தைத் தமது காலம் வரைக்கும் எழுதி ஞர். எனவே, இலங்கையின் ஆதிவரலாறுதொட்டுப் பதினெட்
*மகாகாமன் என்ற பெயருடைய ஒருவர்தான் வியாக்கியானம் எழுதியவர்.
66

ஆதாரங்கள் 16
டாம் நூற்ருண்டின் மத்திவரையிலுள்ள சம்பவங்களை மகாவமிசம் கூறுகிறது. இவ்வாறு தொடர்பான ஒரு சரித்திரக் குறிப்பை உடைய நாடுகள் சொற்பம். இந்தியாவிற்கூட எந்தப்பகுதியிலுங் காணமுடியாது. அப்படியிருந்தும் மகாவமிசத்தை ஒரு சரித்திர நூலாக ஏற்றுக்கொள்ள முடியாது. அதிற் கூறப்பட்ட ஆதாரங் களைச் சரித்திரக்கண் கொண்டு துருவி ஆராய்ந்த பின்னரே சரித் திரமாயுள்ளவற்றைக் கொள்ளவேண்டும்.
2. விசயன் முதல் துட்டகெமுனு வரை, -பெளத்த சமய நூல்களின் சிங்கள வியாக்கியானங்கள் அட்டகதை எனப் படும். இவை மகாவிகாரத்து நூல்நிலையத்தில் இருந்தன. இவற் றில் அடங்கிய சரித்திர சம்பந்தமான கர்ணபரம்பரையின் ஒரு பகுதியே மகாவமிசத்தின் முதல் பாகத்தை எழுதுவதற்கு ஆதார மாயிருந்தது. கி.பி. ஏறக்குறைய நாலாவது நூற்றண்டிற் ருெகுக் கப்பட்ட பாளிச் செய்யுள் நூலாகிய தீபவமிசத்தில், துட்-கெமுனு வின் சகோதரனுன சத்தாதீசனே (கி.மு. 77-55) மகாவிகாரத்தைக் கட்டுவித்தானென ஒரு வரலாறு இருக்கிறது. இந்த சத்தாதீசனின் மகன் வலகம்பா. இவனை வட்டகாமினி அபய என்றுங்கூறுப. கி.மு. முதலாம் நூற்றண்டின் கடைசிப் பகுதியில் இவன் வாழ்ந் தான். இவன் காலத்திற்றன் அட்டகதை எழுதப்பட்டதென மகா வமிசமும் தீபவமிசமுங் கூறும். சத்தாதீசன் காலந் தொட்டு நிகழ்ந்தவற்றைக் கூறுமிடத்துத்தான் மகாவமிசங்கூறுஞ் செய்தி கள் ஒரளவுக்கு நம்பத்தக்கவையாயிருக்கின்றன. எனவே, வல கம்பா காலந் துவங்கியே சரித்திர சம்பந்தமான குறிப்புகளேச் சேக ரித்தார்களென்று கூறுதல் சாலும்.
சத்தாதீசனுக்கு முன்னிருந்த அரசரைப்பற்றி எழுதிய சம்ப வங்கள் புனைந்துரையும் கன்னபரம்பரைக் கதையும் பொருந்தின. இவர்களில் மிகப்பழைய அரசர்களாகக் குறிப்பிடப்படுவோர் சரித் திரபூர்வமான பேர்வழிகள்தான என்று சந்தேகங்கொள்ளவு மிட முண்டு. இவற்றைச் சரித்திரக் கண்கொண்டு நுணுகி ஆராய்ந்து அடிப்படையான மெய்ப்பொருளைக் காணுவது இலகுவான காரிய மல்ல. எனவே, இக்கதைகளையும் ஆராய்ச்சியின்றிப் பலர் சரித்திர மாகவே கொள்ளத் துணிந்தனர். விசயன், பாண்டுகபாயன் என்ற அரசரைப்பற்றிச் செவியாறலாக வந்த கதைகள் கட்டுக்கதைக

Page 93
(58 இலங்கையின் பூர்வ சரித்திரம் கொன்று தள்ளி தேவானம்பிய தீசன் காலம் முதல் வழங்கும் மகாவமிசக் கதையை ஏற்றுக்கொள்ள இக்காலத்திற் சிலர் ரும்புகிறர்கள். ஆனல் இதற்கும் போதிய சான்றுகள் கிடையா. தேவனம்பியதீசன் காலந்தொட்டுக் கூறப்படும் மகாவமிச வரலாற் றில் அநேக சரித்திர உண்மைகளடங்கி யிருக்கின்றன. அநேக கற்பனைக் கதைகளுமுண்டு. வெளிப்படையாகக் கற்பிதமெனக் காணப்படுபவற்றை நீக்கி மற்றெல்லாவற்றையும் சரித்திரபூர்வ மானவை யெனக்கொள்ளுவதும் முடியாது. மகிந்தன் அசோக னுக்கு மகன் என இலங்கையில் வழங்கும் ஐதீகத்தை உறுதிப் படுத்த வேற்று நாட்டுச் சரித்திரக் குறிப்புக்களில் ஆதாரங்கிடை யாது. ஒல்டன்பேர்க் என்ற ஜெர்மன் பேராசிரியர் இது ஒரு கட்டுக்கதை யென்று பல ஆண்டுகட்கு முன்னர் கூறியிருக்கிருர், சமீபகாலத்தில் அசோக சரித்திரத்தை ஆராய்ச்சி செய்துள்ள ஆசிரி யர் பலரும் அந்த முடிவுக்கே வந்திருக்கிருர்கள். ரூவான்வெலி சாயா, லோவமகாபாய (பித்தளை அரண்மனை) என்ற கட்டிடங்களே துட்டகெமுனு கட்டுவித்தானென் மகாவமிசம் கூறும் ; ஆனல், தீபவமிசக் குறிப்புக்களோடு இவற்றை நுணுகி ஆராய்ந்தால் இக் கூற்றைச் சந்தேகிக்க இடமுண்டு. இவ்வாறே கிறிஸ்தாப்தத்திற்கு முன்னர் எழுந்த கட்டிடங்களே நிருமாணித்தவர்களுடைய பெயரைக் கூறும்பொழுது மகா வமிசமும் தீபவமிசமும் முரண்படுகின்றன. அன்றியும் இக்காலத்து எழுந்த கட்டிடங்களின் பெயர்களே மகாவமி சம் முற்றப்க் கூறவில்லை. புராதன காலத்துத் தாதுகோபங்களுள் களனித் தாதுகோபம் மிகவும் டேர்போனது. ஆணுல், இதை யார் கட்டினர்கள், எப்போது கட்டினர்கள் என்ற விபரத்தை மகா வமிசம் கூறவில்லை. நிலநூலாராய்ச்சி, பிராணி ஆராய்ச்சி, மனிதர் வரலாற்ருராய்ச்சி முதலியவற்றின் துணைகொண்டு இங்கு குறிப் பிட்ட காலத்துச் சரித்திரத்தை ஆராய முயற்சி செய்திருக்கிருர்கள். ஆனல், இதுவரை அதிக பயனுண்டாகவில்லை. வேடரைப் பற்றிய ஆராய்ச்சி ஒரளவுக்கு முன்னேறி யிருக்கிறதேயன்றி மற்றவகையில் மேலே கூறிய ஆராய்ச்சிகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின் பன.
3. சத்தாதீசன் முதல் மகேசன் வரையில்.--கி.பி. முத லாம் நூற்ருண்டு துவக்கம் திட்டமான விஷயங்கள் நமக்குக் கிடைக் கின்றன. சத்தாதீசன் (கி.மு. 7759) முதல் மகாசேனன் (கி.பி. 334 362) வரை ஆட்சிபுரிந்த மன்னரின் வமிசாவழிகள் பொது

ஆதாரங்கள் 16{}
'வாகச் சாசனங்களினல் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளன. மிகப்பழைய சரித்திரக்குறிப்புக்களில் இவையும் ஒரு பகுதி எனலாம்.
இக்காலந் துவங்கி நிருமாணிக்கப்பட்ட கட்டிடங்களைப்பற்றிய வரலாறுகள் முன்னேயிலும் பொருத்தமுடையனவாயிருக்கின்றன. இவற்றைக் கட்டுவித்தவர்களைப்பற்றி மகாவமிசத்துக்கும் தீபவமிசத் துக்கும் முரண்பாடு கிடையாது. ஒவ்வோர் அரசனுடைய ஆட்சிக் காலம் குறிக்கப்பெற்ற வமிசாவளிகள் முதலிற் சேமிக்கப்பட்டும், மன்னரைப் பற்றியும் கட்டிடங்களைப் பற்றியும் செவியஈறலாக வழங்கி வந்த கதைகள் பின்னர் சேர்க்கப்பட்டுமிருக்கலாம்.
4. கீர்த்தி பூரீ மேவன் முதல் 1-ம் பராக்கிரமபாகு வரையில்.--சூளவமிசத்தின் முதற்பாகத்திற்கூட ஆலையமெடுத் தல் முதலிய தரும கைங்காரியங்களையும் சரித்திரச் சார்பில்லாத கட்டுக் கதைகளையும், ஐதீகங்களையும் பெரிதும் காணலாம். மக்க ளுக்கு நல்லறிவூட்டும் நோக்கமாகவே இவை கூறப்பட்டன. ஆனல், சூளவமிசத்துச் சரித்திரக் குறிப்புகள் முக்கியமானவற்றைப் பொ றுத்தவரையில் உண்மையென உறுதிப்படுத்துவதற்கு இலங்கைச் சாசனங்களும் இந்திய சாசனங்களும் உதவிபுரிகின்றன. அவற் றுடன் பாகியான் ஹியன்திசாங் ஆகிய அந்நியதேச யாத்திரீகரின் சரித்திரக் குறிப்புக்களும் உதவுகின்றன.
சூளவமிசத்தில் முதல் ஐம்பத்து நாலு அதிகாரங்களும் சரித் திரபூர்மானவையென்று துணிந்து கூறலாம். இவை அனுராத புரத்தில் சேமிக்கப்பட்ட குறிப்புக்களைக்கொண்டே இயற்றப்பட்டன. ஐம்பத்தைந்தாம் ஆறம் அதிகாரங்கள் அவ்வளவு நம்பத்தகுந்த வையல்ல. இலங்கையிற் சோழராட்சியைப்பற்றிய சரித்திரத்தை இவை கூறுகின்றன. இக்காலப் பகுதியைப்பற்றிய வேறு குறிப்புக் கள் சேமிக்கப்படவில்லையெனத் தெரிகிறது. சோழ சாசனங்களி லிருந்து இக்காலப் பகுதி சம்பந்தமான மிகப்பயனுள்ள சில விஷ யங்களே அறிகிருேம். சூளவமிச சரித்திரக் குறிப்புகளுக்கு இவை மிக அனுகூலமாயிருக்கின்றன. முதலாம் விசயபாகுவின் ஆட்சி சம்பந்தமாகப் பல குறிப்புக்கள் இருந்தபடியால் அக்காலப் பகுதி யின் சரித்திரத்தைக் கூறும் ஐம்பத்தேழாவது அத்தியாயம் துவக் கம் அறுபதாம் அத்தியாயம் வரை மிகவும் திருப்திகரமாயிருக்கின் றன.

Page 94
|TII இலங்கையின் பூர்வ சரித்திரம்
சூன்ாவமிசத்தின் முத ற்பாகத்தை எழுதிய ஆசிரியர் முதலாம்" பராக்கிரமபாகுவைக் கதாநாயகனுகக்கொண்டு காப்பியமெழுதத் துணிந்ததால் சூளவமிசத்தின் எஞ்சிய பாகம் முழுவதும் இம்மன் னேப்பற்றியே விசேஷமாகக் குறிக்கப்படுகிறது | TF 3JicLT,
மன்னருக்கு அணிகலமென்றும், சில அற்புதங்களேச் செய்யும் சக்தி
போய்ந்தவனென்றும் சூளவமிச ஆசிரியர் பீடதுவார். இவனது குளுதிசயங்களே எல்லே கடந்து புகழ்வதோடு அவனது புகழுக்கு இழக்கான விஷயங்களே இவ்வாசிரி கூருமலும் விட்டுவிடுகிருர், காவியம் எழுத முற்பட்ட ஆசிரியர் சமஸ்கிருத இலக்கியங்கவிலிருந்து தமக்குத் தேவையானவற்றையும் இந்ஆாலகத்தே புகுத்தியிருக்கி றர் எப்படியிருந்தபோதிலும், நடந்த சம்பவங்காேக்கொண்டே இந்நூலாசிரியர் தமது காவியத்தைப் புனேந்தாரென்பதற்கு இலங்கையிலுள்ள கல்வெட்டுகளும், இந்திய " " TG737WilsEst; f) Los Vyrir ஞாபக சின்னங்களும், இலக்கியங்களுங்கடக சிாவிறுபகரும். தென் விந்தியாவுடன் பராக்கிரமபாகு நடத்திய போரைப்பற்றித் தென் விந்திய சாசனங்களும் கூறுகின்றன. அவ்வரலா ஆறுகள் சூளவமிசக் கதையைச் சிலவிடங்களிற் தெளிவுபடுத்துவதோடு o್ನಿ, LPT 'கடலமாகவுமிருக்கின்றன.
5. இரண்டாம் வி சயபாகு முதல் எட்டாம் பராக்கிரம
பாகு வரை.-சூளவமிசத்தின் இரண்டாம் பாகம் பல விதத்தில் முதியிாம் பாகத்தை ஒத்திருக்கின்றது. ஆஜ்மி, டீப் அரசர்:ா பற்றிய குறிப்புக்களே இதிற்காணலாம். இதன் எண்பதாவது அத் நியாயத்தில் 14 அரசரின் ஆட்சியைப்பற்றிக் கூறப்படுகிறது. ஆணும், நிசங்கமல்லன்போன்ற ஒரு பெரிய அரஎேப்பற்றி பத்துப் பாடல் களே காணப்படுகின்றன. இக்காலத்தில் அடிககடி சண்டைகள் கடந்ததால் 50 வருடங்களுக்கும் சரியான குறிப்புக்களேச் சேகரிக்க முடியாமலிருந்தது ஒரு காரணமாயிருக்கலாம். ஆஞல், இன் ணுெரு வகையில் ਸੰਯੁੱi iறுகள் கிடைக் இன்றன. இக்கால அரசர் பலர் ஏராளமான கல்வெட்டுகளே விட்டு: சென்றிருக்கிருர்கள்.
மூன்ரும் விசயபாகுவைப் பற்றியும், இரண்டாம் பராக்கிரம பாகுவைப் பற்றியும், நாலாம் விசயபாகுவைப் பற்றியும் சிறந்த வரலாறுகளிருக்கின்றன சூபி மிேசத்தின் இரண் டாம் பதிவிாத எழுதிய ஆசிரியரின் கதாநாயகன் இரண்டாவது பாக்கி மடாகு

号芯mü凸而 17 வாதலால் அவனேப்பற்றிய சம்பவங்களே இந்நூலில் 9 திகமாளப் பட்டன. சரித்திர வரலாறென்ற முறையில் இப்பகுதி முதலாம் பகுதியைப் பார்க்கிலும் மோசமாயிருக்கிறதென்றே கூறலாம். நாலாம் விசயபாகுவின் பின் ஆண்ட அரசருள் முதலாம் புவனேசு பாகுமுதல் நாலாம் பராக்கிரமபாகு வரையுள்ள அரசர் பேரா التي மிகச் சுருக்கமாயிருக்கிறது. அந்நியர் படையெடுப்பும், உள்நாட்டுக் கலகமுமே இதற்குக் காரணமாயிருக்கலாம்.
சூளவமிசத்தின் மூன்ருவது பாகம் சுருக்கமாயிருக்கிறது. சில அரசரைப்பற்றி செய்திகள் கூடக் கூறப்படவில்வே பதிஞரும் நூற்றண்டி லெழுந்த ராஜாத்ணுகாம் என்ற நூலின் துனே கொண்டே கம்பனே அரசர் சிலரின் சரித்திரங் கூறப்படுகிறது. இந் நூலும் அவ்வளவு திருப்திகரமானதல்ல. நிகா பசங்கிரகம் என்ற நூலில் கம்ளே அரசரைப்பற்றியும் அழகக்கோனுளோப் பற்றியும் சிறந்த வரலாறு அடங்கியிருக்கிறது. மகாவமிசத்திற் கூறப்படாத புராதன புத்தசமய வரலாற்றைப்பற்றிய சில விஷயங் களேயும் இதிற்கானலாம். 17-ம் நூற்றண்டினிறுதியிற் செய்யப் шLгі — г/т -ғ, гагауR என்ற நூல் அவ்வளவு நம்பிக்கையுள்ள நூல் iாவிடினும் மற்ற நூல்களிற் காணப்படாத விஷயங்கள் சில இதிலுண்டு. இனி இக்காலக் கல்வெட்டுகளிலிருந்தும், முகமதி பாத்திரீகரான இபின் பட்விட்டா போன்ற அந்நிய தேச பாத்திக ரின் குறிப்புகளிலிருந்தும் சில விஷயங்களே அறியக்கூடிIதா பிருக்கிறது.
பழைய நானங்களும் சில ஞாபகசின்னங்களும் ஒரளவுக்கு உதவிபுரிகின்றன. அந்நிய தேசங்களுடன் இலங்கை கொண் டிருந்த தொடர்பை அறிந்துகொள்வதற்கு நாணயங்கள் துனே செய்கின்றன. பழைய ஞாபகச் சின்னங்கள் மூலமும் அவற்றை பெட்டி யெழுந்த நூல்கள் மூலமும் அந்நியர் தொடர்பைப் பற்றி பும் இலங்கையின் நாகரிகப்போக்கு, எண்னைப்பாங்கு முதலியவற் றைப்பற்றியும் அறிகிருேம்,
7. கால அட்டவனே. -புத்த பகவான் நிருவாணம் அடைந்த காலத்தை வைத்தே மகாவமிசத்தின் காலங்கள் எண் எனப்படுகின்றன. புத்தபகவாசன் பரமபதமடைந்த பேருடம் கி.மு. 483 என மகாவமிசமும், கிரேக்க, இந்திய சரித்திரக் குறிப்புக்களும் கூறுகின்றன. மத்திய காலத்தில் இலங்கைவாசிகள் புத்த பகவா

Page 95
| || 구 இலங்கையின் பூர்வ சரித்திரம்
னின் நிருவான காலம் பி.மு. 51: அல்லது 54+ எனர்ாண்டே னர். இவ்விரண்டு தேதிகட்குமுள்ள வித்தியாசம் 60 வருடமாகும். அவ்வாண்டுகளின் சிறுபின்னப்பகுதிகளேத் தவிருக்களித்தாiே அல்லது யாரோ ஒருவர்செய்த மாற்றத்தினுலோ இந்த வித்தியாசம் ாற்பட்டிருக்கரம்.
பதினுேசாம் நூற்றுண்டின் ஆரம்பம்வரை கி.மு. 483-ம் ஆண் டே இலங்கையின் கால அட்டவனேக்கு ஆரம்பமாகக் கொள்ளப் பட்டுவந்ததென்றும், அதன்பின்னர் கி.மு. 314 ஐ ரது 凸n、 கொண்டோ சரிந்திரங்ார வழங்கத் துவங்கினரென்றும் போ சிரியர் கைக் கூறுகிருர், இக்காரனதிர்த முன்னிட்டு சூளவமிர முதற் பாகத்தின் ஆசிரியர் இவ்வேறுபாட்டைச் சரிப்படுத்துதற்கு தமது அரசாநாமாவியில் முந்திய அரசரின் ஆட்சிக் காலங்கள் மாற்றினு'. 'தஞன் கீர்த்தி பர் மெகவர்ான், இரண்டாம் தேது நிசன், புதிதாசன் ஆகிய நாசருடைய ஆட்சிக் காங்கவில் இன் இறுபது வருடங்ககே கழித்து பேராசிரியர் கைகர் தாக்கிடவேண்டி யதாயிற்று.
இன்ணுெரு வியம் கவரிக்கவேண்டியிருக்கிறது. சூன் சத்தின் ஆப்ப காலத்து அரசன் ஆட்சிக் காலம் முழு ஆண்டு கள்ாக இருப்பதும், இக்கா விாபார நம்பத்தக்கதங் வென் பாதக் காட்டும். அத்துடன் இயாப் பகுபடு சந்ததின் :ே ill. J. J. கோதரனும் துட்டமுெது காலந்தொட்டே உண்மையெனக் கடறலாம், சத்தாதிசள் முதல் 1-ம் விசயப்பகு வாயிலும் ஆண்ட ந்ேதரின் ஆட்சிக்காலங்கள் கூட உத்தேசமாக :ே பைந்துக்கொள்ளவேண்டும். சூளவமிசத்தின் இரண்டாம் மூன்ரும் பாகங்களிற் குறிக்கப்பட்டாப் அட்டவிசேடத் திட்டமா பி.ே சில் அரசர்களின் ஆட்சிக்கரம் குறிக்கப்படவில்: ஒரே ாத்தி பீப் அபீர்கள் ஆண்டதாக கூறப்பட்டிருப்பதும் பெரிய சிக்கவே உண்டாக்கிறது.
 

அனுபந்தம் 2
= ق=
JI TI VIII fit 3) 12T {(نیلے
GLEITi 蠶
| .
+T) ឆ្នាញ ពួ_TLD 2. பாண்டு வசுதேவன் (விசயனுடைய மருமகன்) . . -
. । || || |
அரவிற்று காப்பம் L 4. L'oot (E,+ LF) trait (3-1957 LEC, LIII, si } .. 5. முதநசிவன் 4-இன் மகன்) 1. தேவரும்பியதீசன் (5-இன் 2-ம் புகவி' 17 7. தியன் -இன் சகோதரன்) 17 5. III:I f:Igi ); | կյT
(, G3. - |- குட்டிகள் தமிழர் 77ן 12. அசேன் (-ேஇன் சகோதரன்) | i )
1. துட்டகெமுனு) I ! ੭। ( 4-gal சகோதரன்) Iர். துல்தானன் (15-இன் மகன்) if(! 17. பூந் தீசர் (It-இன் சகோதரன்) էիll 18. கண்ட நாகன் (கலுன்னன் புெ .வித்ததாமனி |చ| స్టి I( חו ורץ וחי,531, לה) .11
ロ。ェ - 島ュエ . . ... ܕܗ பொழிபெயர்ப்பாரின் குறிப்பு -இல் பா டிரிபிள் குறிக்கிப்பட ட
பெயர்= சுபு வன பின், சிங்க-தமிழ் நாள்களிற் கறப்பட்ன்ேபதே குறிக்கப்பட்டுள்ா பார்களுக்குப் பல பெயர்களிருந்தார்:நட் சி: இந்நாளிற் குறிக்கப்பட்ர்ே:
L ஸ்என்-சீசன்)
| 7:

Page 96
174 இலங்கையின் பூர்வ சரித்திரம்
பெயர் கி.மு. 20-24. புலகத்தன், பாகியன், பணயமாறன்,
பிளையமாறன், தாதிகன் என்னும் தமிழர்
ஐவர் 43 19. வலகம்பா (மீண்டும் அரசு புரிந்தமை) δ. Φ 29 25. மகாசிலு மகா தீசன் (18-இன் மகன்) - O 17 26. சோர நாகன் (19-இன் மகன்) a 3
கி.பி.
27. தீசன் (“சின்ன தீசன்’) (25-இன் மகன்) 9
28. அனுலை (சிவன், வடுகன், தாருபாதிகதீசன்,
நீலியன் என்பவரை முறையே மணந்த சோர
நாகன் மனைவி) 2 29. மகலந் தீசன் (குடகப்ப திசன், குடகணன்,
காலகண்ணி திசன்) (27-இன் சகோதரன்) . . 6 30. 1-ம் பாத்தியன் (பாத்திகாபயன், பாதிக தீசன்)
(29-இன் மகன்) , 38 31. மகாதாலியமானன் (மகாதாட்டிக மகாநாகன்)
(30-இன் சகோதரன்) 67 32. அடகெமுனு (ஆமந்தகாபனி அபயன்) (31-இன்
மகன்) 79 33. கணிரஜானு தீசன் (கினிகிரிதளன்) (32-இன்
சகோதரன்) S9 34. சூளாபயன் (சின்னஅப, சூளுஅப) (32-இன் மகன்) 92 35. சீவலி (34-இன் சகோதரி) w 93
அரசனற்ற 3 வருட காலம் 93 36. இளநாகன் (எலுனன்) (35-இன் மருமகன்) . . 96 37. சந்தமுகுனு (சந்திரமுகசிவன்) (36-இன் மகன் . . ()3 38. (யசலாலக தீசன்) (யசசிளு) (37-இன் சகோதரன்) 12 39. SrL16ö7 (FLJGö7) 20 40. வசபன் (வாகாப்பு) የ 4 27 4. வங்கநாசிக தீசன் (40-இன் மகன்) a 7.
42. l-ம் கயவாகு (கஜபாகுக காமனி) (41-இன் மகன்) 74

43.
(14.
46.
47.
48.
49.
5.
52.
53.
54.
56.
57.
58.
59.
6().
6.
62.
63.
64,
65,
அரசர் நாமாவளி
பெயர் மகாலுனன் (மகல்ல நாகன், மகலுமான)
(42-இன் மாமன்) - 2-ம் பாத்திய தீசன் (பாத்திக தீசன், பாத்தியன்)
(43-இன் மகன்) கனிஷ்ட தீசன் (44-இன் சகோதரன்) குஹண்ணன் (குஜ்ஜ நாகன்) (45-இன் மகன்) . .
سyرC
குட்ட நாகன் (குஞ்ச நாகன், குடானன்) (46-இன்
சகோதரன்)
1-ம் பூரீ நாகன் (சிறீன குட சிறீன) (47-இன் மைத்
துனன்) வேர தீசன் (வோகாரிக தீசன்) (48-இன் மகன்) . . அபய நாகன் (அபாசேன், அபநா தீசன்)
(49-இன் சகோதரன்) 2-ம் பூரீ நாகன் (சிறீன) (49-இன் மகன்) விசயிந்து (விசய குமாரகன்) (51-மகன்) 1-ம் சங்க தீசன் பூரீ சங்கபோ (பூரீ சங்கபோதி) கோலு அபா (கோட்டாபயன், மேகவர்ணுபயன்) . . சேட்ட தீசன் (தெத்து தீசன், கலகன் தெத்த தீசன்,
மகலன் தேத்த தீசன்) (55-இன் மகன்) மகாசேனன் (56-இன் சகோதரன்) கீர்த்தி பூரீ மேகவர்னன் (57-இன் மகன்) 2-ம் சேட்ட தீசன் (58-இன் மருமகன்) புத்த தாசன் (புஜஸ்) (59-இன் மகன்) உப தீசன் (60-இன் மகன்) J மகா நாமன் (61-இன் சகோதரன்) சொத்திசேனன் (செங்கோத்து) (62-இன் மகன்) . .
சந்திர கிராககன் (சத்தாககன், லாமணிதிஸ்)
(62-இன் மருமகன்) v
மித்திர சேனன் (மித்தசேனன், கரல்சோரன்) .
175
கி.பி.
196
249
269
29
300
302
303
307
309
323 334
362
409
431
43
432

Page 97
79. 80.
81. S2. S3. 84. S5.
86.
87.
88.
89.
90.
9 kl.
இலங்கையின் பூர்வ சரித்திரம்
பெயர் பண்டு (தமிழன்) பாரிந்தன் (66-இன் மகன்) குட்ட பாரிந்தன் (67-இன் சகோதரன்) திரிதரன் (தமிழன்) தாத்தியன் ைெடி | பிதியன் டிை . தாதுசேனன், தாசன் காலியன் 1-ம் காசியபன் (கஸ்ஸ்பன், சிகிரிகாசுபு, கசுபு)
*காசியப்பன்’ (72-இன் ழகன்) 1-ம் முகலன் (மொக்கல்லனன்) \72 இன் மகன்) குமாரதாசன் (குமார தாதுசேனன்) (74-இன் மகன்) கீர்த்தி சேனன் (கித்திசேனன்) (75-இன் மகன்) . . சிவன் (மாடி சிவன்) (76-இன் சிற்றப்பன்) 2-ம் உபதீசன் (லாமானி உபதீசன்)
(72-இன் மருமகன்) சிலாகாலன் (சலமேவன்) ைெடி தாபுலுசேனன் (79-இன் 2-ம் மகன்) 2-ம் முகலன் (80-இன் மூத்த சகோதரன்) கீர்த்தி பரீ மேகன் (81-இன் மகன்) மகா நாகன் (சேனவிமானன்) 1-ம் அக்கபோதி (அக்போ) (83-இன் மருமகன்) . . 2-ம் அக்கபோதி (டிை, குடா அக்போ (84-இன்
மருமகன்) 2-ம் சங்க தீசன் من "" " தலமுகலன் (தல்லமொக்கலனன், லாமணிபோ
நாமுகலன், மாதிபோமுகலன்) சிலாமேகவர்னன் (சலமேவன்) 3-ம் அக்போ (அக்கபோதி, பரீ சங்கபோ)
(88-இன் மகன்) - 2-ம் தெத்து தீசன் (சேட்ட தீசன்)
186-இன் மகன்) e 3-ம் அக்போ (மீண்டும் சிங்காதனமமர்ந்தது)
1-ம் தாதோபதீசன் (தாதாசிவன்)
கி.பி.
433
6) 6
6 617
626

2.
93.
94.
95.
')(;.
97.
98.
99.
OO.
O.
O3. 104.
O5.
06.
O7.
O8.
O9.
().
2.
3.
அரசர் நாமாவளி
பெயர் 2-ம் காசியபன் (பாசுலுகசுபு) (89-இன் சகோதரன்) 1-ம் தப்புலன் (தாபுலு) (88-இன் மருமகன்) 2-ம் தாதோப தீசன் (ஹத்ததாதன்) (91-இன்
மருமகன்) 4-ம் அக்போ (பூர் சங்கபோ) (94-இன் சகோதரன்) தத்தன் ஹத்ததாதன் மானவர்மன் (மகலாபானுே) (92-இன் மகன்) . . 5-ம் அக்போ (98-இன் மகன்) 3-ம் காசியபன் (99-இன் சகோதரன்) 1-ம் மகிந்தன் (மிகுந்து, மிதிலராசன்) (99-இன்
சகோதரன்) 6-ம் அக்போ (அக்கபோதி சிலாமேகன், அக்போல
மேவன்) (100-இன் மகன்) 7-ம் அக்போ (101-இன் மகன்) 2-ம் மகிந்தன் (மகிந்த சிலாமேகன்) 2-ம் தப்புலன் (உதயன், தப் 55 (104-இன்
மகன்) 3-ம் மகிந்து (105-இன் மகன்) 8-ம் அக்போ (மாதி அக்போ) (106-இன்
சகோதரன்) 3-ம் தப்புலன் 106-இன் சகோதரன்) 9-ம் அக்போ (பசுளு அக்போ) 1-ம் சேனன் (சிலாமேகன், மர்வலசேனன், சல
மேவன்) (109-இன் சகோதரன்) 2-ம் சேனன் (முகையின் சேனன், அடா
பரீ சங்கபோ) (110-இன் மருமகன்) உதயன் (உத அபாசலமேவன்) (109-இன்
சகோதரன்) 4-ம் காசியபன் (கசுப் பூரீ சங்கபோ) (111-இன்
சகோதரன்)
SE

Page 98
7S இலங்கையின் பூர்வ சரித்திரம்
பெயர் g. t S}
114, 5-ம் காசியபன் (கஸ்ஸப கசுபு, பசுலு கசுபு, சல
மேவன் அபயன்) (111-இன் மகன்) 93. 115. 4-ம் தப்புலன் (தாப்புளு) (114-இன் சகோதரன்) 923. 116, 5-ம் தப்புலன் (114-இன் சகோதரன்) 923. 117. 2-ம் உதயன் (111-இன் மருமகன்) - 1934 118. 3-ம் சேனன் (117-இன் சகோதரன்) ... 937 119. 3-ம் உதயன் (113-இன் மகன்) p. 94活 120. 4-ம் சேனன் (பசுளூ) (114-இன் மகன்) 953, 121, 4-ம் மகிந்து (120-இன் சகோதரன்) 4 956 122. 5-ம் சேனன் (சலமேவன்) (121-இன் மகன்) . . 972 123, 5-ம் மகிந்து (மகிந்தன்) (122-இன் சகோதரன்) . . 9S
12 ஆண்டுகளுக்கு அரசனற்ற காலம் O7 124. *விக்கிரமபாகு (கஸ்ஸபன், காசியபன்) (123-இன்
மகன்) 1029 125. கீர்த்தி ()4 26. மகாலான கீர்த்தி (மகாலே) - 04 127. விக்கிரமபாண்டு (விகும்பண்டி) - 1044. 128. சகத்பாலன் (ஜகதிபாலன்) ()47 129. 1-ம் பராக்கிரமபாண்டு ().5 130. லோகேசுவரன் (லோகன்) 105.3. 131. காசியபன் 1059 132. 1-ம் விசயபாகு (124-இன் பேரன்) - 105$) 133. 1-ம் சயபாகு (132-இன் சகோதரன்) - Ill4. 134. 1-ம் விக்கிரமபாகு (132-இன் மகன்) 6, 135. 2-ம் கயபாகு (134-இன் மகன்) - 37 136. 1-ம் பராக்கிரமபாகு - - 53. 137. 2-ம் விசயபாகு (135-இன் மகன்) 186 138, 6-ம் மகிந்து 187
*124-131 இலக்கமிடப்பட்டவர் உருகுணே மன்னராவர். (127-இன் தலை: 5கர், கழுத்துறை ; 131-132-இன் தலை நகர், கதிர்காமம்.)

39. 140.
14, 142. 43.
44.
145.
146.
47.
143.
l48.
l43.
49.
150.
அரசர் நாமாவளி 79
டெயர் கி.பி.
கீர்த்தி நிசங்க மல்லன் 87 1-ம் வீரபாகு (139-இன் மகன்) - 1196. 3-ம் விக்கிரமபாகு (139-இன் சகோதரன்) - 196 சோடகங்கன் (139-இன் மருமகன்) a 196 லீலாவதி (136-இன் பட்டத்தரசி, சேனபதி
கீர்த்தி யென்பவனுடன் அரசு புரிந்தாள்) . . 97 சாகசமல்லன் (139-இன் சகோதரன்) 200 கல்யாணவதி (139-இன் பட்டத்தரசி, ஆயஸ்மந்த
சேனபதியுடன்) - 202 தர்மாசோகன் 1208 அணிகங்கன் (அணியங்கன்) 209 லீலாவதி (சேனதிபதி விக்கண்டசமூனக்கனுடன் 209 லோகேசுவரன் 20 லீலாவதி (பராக்கிரம சேனதிபதியுடன்) . . . 2. பராக்கிரமபாண்டு . 2. ԼԸ56ծ7 24-1235. 3-ம் விசயபாகு 232 2-ம் பராக்கிரமபாகு (கலிகால சாகித்திய சர்வஞ்ஞ
பண்டித பராக்கிரமபாகு (151-இன் மகன்) . . 236. 4-ம் விசயபாகு (போசத்விசயபாகு) (152-இன்
மகன்) 27 1-ம் புவனேகபாகு (லோகேகபாகு) (153-இன்
சகோதரன்) 273. அரசனற்ற காலம் 284 3-ம் பராக்கிரமபாகு (153-இன் மகன்) - 1302 2-ம் புவனேகபாகு (154-இன் மகன்) I3 (). 4-ம் பராக்கிரமபாகு (பண்டித பராக்கிரமபாகு) )
(156-இன் மகன்) - 325. 3-ம் புவனேகபாகு (வன்னி புவனேகபாகு) 5-ம் விசயபாகு (சயபாகு, சவூலு விசயபாகு) 1333-1344
4-ம் புவனேகபாகு (159-இன் மகன்) 1344-353

Page 99
180
6.
62.
63.
164。
165.
இலங்கையின் பூர்வ சரித்திரம்
பெயர்
5-ம் பராக்கிரமபாகு (160-இன் தம்பி) 3-ம் விக்கிரமபாகு 5-ம் புவனேகபாகு 2-ம் வீரபாகு (163-இன் மைத்துனன்) வீர அளகேசுவரன் (6-ம் விசயபாகு) (164-இன்
சகோதரன்) பராக்கிரமபாகு ஆபா a 6-ம் பராக்கிரமபாகு (161-இன் வமிசத்தவன்) 2-ம் சயபாகு (வீர பராக்கிரமபாகு) (167-இன்
பேரன்) *
6-ம் புவனேகபாகு (சபுமல் குமாரையன்)
(167-இன் மகன்)
7-ம் பராக்கிரமபாகு (பண்டித பராக்கிரமபாகு)
8-ம் பராக்கிரமபாகு (அம்புலுகல ராசன்)
S. S.
344-359
356-374
372-405 391-1397
1897 1410
40-45
42-46
星467–卫473
473-1480
480-484
484. 509

அனுபந்தம் 3 சிங்கள வரிவடிவின் வளர்ச்சியைக் காட்டும் சித்திரப்படத்தின் விளக்கம் 1. இந்தியாவின் மேற்குப் பகுதியிலுள்ள கிர்னர் என்னு. மிடத்திலே காணப்படும் அசோகனுடைய இரண்டாம் கற்சாசனத் தின் தொடக்கம் :-
மூலம் :-(1)ஸர்வக விஜிதம்ஹறி தேவாரும்பிரியஸ பிரிய தஸினே ராணுே (2) ஏவமபி பிரசந்தேக யதா சோடா பாடா சத்திய புதோ கேதல புதோ ஆ தம்ப (3) பண்ணி, மொழிபெயரர்ப்பு.--தேவர்களுக்குப்பிரியனன பிரியதர்சினி யின் இராச்சியங்களிலெல்லாம், அவனுடைய இராச்சியத்தின் எல் லைப்புறங்களிலேயுள்ள சோடர், பாண்டியர், சத்தியபுதர், கேரள புதர், தாம்பிரபர்ணியிலுங்கூட.
2. மிகுந்தலையிலுள்ள ஒரு குகையிற் காணப்படும் கல்வெட்டு. இதனை வலது புறத்திலிருந்து இடது புறம் வாசிக்கவேண்டும்; இரு எழுத்துக்கள் தலை கீழாக உள்ளன.
மூலம்-உபாஸிக திஸய லெண, மொழிபெயர்ப்பு-உபாரிசனன (இலௌகிக வாழ்க்கையி லிருக்கும் பக்தன்) தீசனுடைய குகை.
3. வடமத்திய மாகாணத்திலுள்ள ரிதிகலை என்னுமிடத் திலே ஒரு குகையிற் காணப்படும் கல்வெட்டு.
லம்.--தேவனபிய மகாராஜா கமிணி திஸஹ புத தேவனபிய திஸ அ (பயஹ) லென அகத அணுகத சது (தி) திஸ ஸகஸ,
மொழிபெயர்ப்பு.-மகாமன்னனன தேவனபிய கமிணி திஸ் னரின் மகன் தேவனபிய திஸ் அபனுடைய குகையானது நாற் றிசையிலுள்ளவர்களும், அங்கு வந்திருப்பவர்களும், வராதிருப்ப வர்களுமான பெளத்த குருக்களுக்கு (அளிக்கப்படுகின்றது). (தே. திஸஅபயன்= லஞ்சி தீசன், தே. கபிணி திஸ்ன்=சத்தா தீசன்.)
81

Page 100
182 இலங்கையின் பூர்வ சரித்திரம்
4. தமங்கடுவைப்பிரிவிலே திம்புலகலேக்கருகில் மோலகித்திய வேலகலையிலேயுள்ள பாதிகஅபயன் என்பவனுடைய கல்வெட்டின் ஆரம்பம்.
(ஸ்வஸ்திகையின் அடையாளம்) ஸித்தம் தெவனபிய கில மஹாராஜஹ மறுமனக குடகணராஜஹ ஜேத புத்த ராஜ அபய, ...’
மொழிபெயர்ப்பு :-குடகண மன்னனின் மூத்த புத்திரனன தேவனபியதிஸ் னென்னும் மகாராசனுடைய பேரப்பிள்ளையான
J94_1u JUIT5F6ö7.
محم
5. வெஸ்ஸ்கிரியிலே செதுக்கப்பட்ட 5-ம் தப்புலனுடைய கல்
வெட்டின் 9-ம் 10-ம் வரிகள்.
மூலம் :-மபுறும் புத்தஸ் அபகை சலமெவன் தாபுல
மஹாராஜூ ஸத் லெங்க- தெவன ஹவுருது யெஹி.
மொழிபெயர்ப்பு: - புத்தஸ் அபகைசலமெவன் தாபுலமஹா ராசன் குடையுயர்த்திய (சிம்மாசனமேறிய) தற்கு இரண்டா மாண்டிலே,
6. வட மத்திய மாகாணத்திலே பதவியக் குளத்தின் கரையி லுள்ள ஒரு தூணின்மேற் செதுக்கப்பட்ட கல்வெட்டு. மூலம் :-(1) பண்டா கங்க வெவ ஸி
(2) றி லகெத கெத் க(3) ரவா ஸியல் தியா (4) ரந்தவா பெறெகும்பா (5) நிருந்து கெலெமே.
இக்கல்வெட்டு செய்யுள் வடிவமாகவுள்ளது.
மொழிபெயர்ப்பு:-சிற்றறுகளையும், நதிகளையும், அணை போட்டுத் தடுத்தும், பரீ இலங்கையிலே ஏரிகள் (குளங்கள் அமைத் தும்) வயல்களிற் பயிர் செய்யச் செய்தும், (எரிகளில்) தண்ணிரை யெல்லாம் தங்கச்செய்துமான பின்னர், பராக்கிரமபாகு வரசன்
இதனைச் செய்தான்.

2.
3.
அனுபந்தம் 4 பயிற்சிக்கான வினக்கள்
1-ம் அத்தியாயம் பூமிசாத்திர சம்பந்தமாகக் கவனிக்குமிடத்து, இலங்கையுள்ள தானத்தை விவரிக்க. இதனலே அதன் சரித்திரம் பாதிக்கப் பட்ட தன்மையைக் காட்டுக. - * சரித்திரகாலத்துக்கு முன்’ என்ருலென்ன ? சரித்திரகாலத் துக்கு முன் இலங்கையின் வரலாற்றைத் தருக. வேடர், சிங்களர்-இவர்கள் ஆதியிலெங்கிருந்தனரென மகா வமிசம் கூறுகின்றது? அதிற்கூறப்பட்டவை உமக்குச் சம்மத ԼԸT 2 சிங்கள சாதியினர் கலப்பற்றவரா?
இலங்கைக்கு ஆரியரும் திராவிடரும் வந்தமை சரித்திரவகை
யிலே எவ்வாறு முக்கிய முடையது ?
பெளத்த சமயத்தின் முக்கிய கொள்கைகளென்ன ! இலங் கையில் அதஞலேற்பட்ட பலன்களை விவரிக்க.
2-ம் அத்தியாயம் இலங்கை, வட இந்தியா, தக்கிணம், தென்னிந்தியா என்பவற் அறுடன் கொண்டிருந்த தொடர்பை விவரமாகக் கூறுக. இந்தியாவின் தேசப்படமொன்று வரைந்து, வட இந்தியாவி லிருந்து இலங்கைக்கு வருதற்கு அனுகூலமாயிருந்த மார்க் கங்களைக் குறிக்க. இலங்கையின் புறவுருவப் படமொன்று வரைந்து, அதிலே பண்டையச் சிங்களனெருவன் மாகமத்திலிருந்து மாதோட்டத் துக்குச் செல்லும்போது கண்ட இடங்களைக் குறிக்க. பண்டைக்காலத்துத் தல ஆட்சி முறைக்கும் இக்காலத்து ஆட்சி முறைக்குமுள்ள வேறுபாடுகளென்னை ?
83

Page 101
2
5.
இலங்கையின் பூர்வ சரித்திரம்
நீர்ப்பாசனமென்ற லென்ன! பண்டைக் காலத்திலே இலங் கையிலிருந்த நீர்ப்பாய்ச்சல் முறையை விவரிக்க.
ஈனயான, மகாயான பெளத்தசமயப் பிரிவுகளுக்கிடையே யுள்ள வேறுபாடுகளென்னை !
(1) வலாக ஸ்ஸ சாதகம், (2) சிர்சியின் கதை-என்பவற்றேடு குவேனியின் சரிதையை ஒப்பிடுக. முதலிரண்டு கதிை க்ளி லிருந்துதான் குவேனியின் கதை உண்டாயதோ ? (சிர்சியின் கதைய்ை ‘நம்முன்னேரளித்த அருஞ்செல்வம்’ என்னும் நூலிற் படித்தறிக.) இலங்கையைப்பற்றி இந்திய நூல்களிற் கூறப்படுவனவற்றைக் கிரேக்க நூல்களிற் கூறப்பட்டவற்றேடு ஒப்பிடுக.
3-ம் அத்தியாயம்
இலங்கையின் இலக்கியம், சிற்பம், ஒவியம் என்பவற்றை இந்தியா எவ்வழிகளில் மாற்றியது! அதற்கிருந்த செல்வாக் கென்ன ?
இலங்கையின்மீது சோழர் படையெடுத்தமைக்கும், இறுதியில் வென்றமைக்குமான காரணங்கள் யாவை ?
இலங்கைத் தேசப்படத்திலே அரசியற் பிரிவுகளைக் குறிக்க.
காசியப்பனையும் சிகிரியாவையும் பற்றி சூளவமிசத்தி னசிரியர் கூறுவதென்ன ! அவர் இவ்விஷ்யத்தைச் சுருக்கிக் கூறுவ தேன் ? பொலனறுவைக்குக் ‘கந்தவூரு நுவரை ’ என்னும் பெயர் வந்ததேன் ! -- அக்காலத் தரசாட்சி முறையில் எந்த அம்சம் இப்போதும் நிலைத்திருக்கிறது ! இலங்கையின் தேசப்படமொன்று வரைந்து, அதிலே அக்
காலத்திலிருந்த பிரதான குளங்கள், எரிகள், வாய்க்கால்கள்
ஆதியவற்றைக் குறிக்க.


Page 102


Page 103

| | | | |-