கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகத்தியர்

Page 1

__ 활 남
Weg asiraz,

Page 2

அகத்தியர்
ஆசிரியர் : ந. சி. கந்தையாபிள்ளை

Page 3
முதற் பதிப்பு: மார்ச் 1948
அகத்தியர் (கல்லூர்) அகத்தியர்
(சிதம்பாம் கிழக்குக் கோபுரம்)
Printed at the Progressive Printers, Madras-l
Q. E. MS. 84-For Q, H. MS. 58-March, 1948
 

முன்னுரை
இன்று அகத்தியர் வரலாறு என வழங்குவன கற் பனைகளாகத் தோன்றும் சில பழங்கதிைகளே. இவை தான் அகத்தியரின் உண்மை வரலாறுகள் என்று கூற எவரும் துணியமாட்டார். கற்பனைகள் போன்ற"பழங் கதைகளும் காலந்தோறும் வளர்ச்சியடைகின்றன. சாத் தன் உவாந்தி எடுத்தான். அதனைப் ப்ார்த்திருந்த ஒரு வன் சாத்தன் கறுப்பாக உவாந்தி எடுத்தான் என ஒரு வனிடம் கூறினன் ; அவன், “ சாத்தன் காகம்போல் கறுப்பாக உவாந்தி எடுத்தான்’ என்று மற்ருெருவனுக் குக் கூறினன். அவன் ‘* சாத்தன் காகம் உவாந்தி எடுத் தான் ’ என்று இன்னுெருவனிடம் கூறினன். இச்செய்தி ஊர் எங்கும் பரவிற்று. பலர் இவ்வியப்பைக் காணச் சென்றனர். இதன் உண்மையை ஆராய்ந்தபோது சாத்தன் உவாந்தி எடுத்தான் என்பதே உண்மையா யிற்று ; மற்றவை எல்லாம் பொய். இன்று பழங்கதை வடிவில் வழங்கும் வரலாறுகள் பல சாத்தன் காகம் உவாந்தி எடுத்த கதைபோன்றனவே; ஆயினும் பயனற் றனவென்று பழங் கதைகளைத் தள்ளிவிடுமாறும் இல்லை. அவை தம்முள் சிறிய உண்மைகள் இருத்தலும் கூடும். அகத்தியரைப்பற்றிய வரலாறும் இவ்வகையினதே. அகத் தியர் வரலாற்றைக் குறித்துப் பலர் ஆராய்ந்திருக்கின் றனர். சிலர் அகத்தியர் தமிழ் நாட்டில் இருந்தவரல்லர் எனக் கூறினர். சிலர் அவர் வடநாட்டினின்றும் வந்து தென்னட்டை ஆரியமயமாக்கியவர் எனக் கூறினர். வேறு சிலர் வேறு பலவாறு கூறினர். அவை தம்மை எல்லாம் கருத்திற் கொண்டு ஆராய்ந்து இந்நூல் அமைவ தாயிற்று. புராணக் கதைகளைத் தனித்தனி விரிக்கின், நூல் அளவு கடந்து விரியுமென வஞ்சி அவற்றைத் தவிர்த்துள்ளோம்.
சென்னை
15-2-1948 島 箱 5.

Page 4
பொருளடக்கம்
ο αραδε
தோற்றுவாய் அகத்தியர் கம்போதியாவில் அகத்தியர் மலாய தீவுகளில் அகத்தியர் அகத்தியர் பலர் சிற்றகத்தியமும் பேரகத்தியமும் சின்ன ஆசியாவில் அகத்தியர் பழைய தமிழ் நூல்களில் அகத்தி
யரைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறும் பகுதிகள்
பக்கம்
10
21
34
39
41

அகத் தியர்
தோற்றுவாய் தமிழ் ஆராய்ச்சி செய்யும் ஒவ்வொருவரும் அகத்தியரைப்பற்றிய வரலாற்றை ஆராயவேண்டி யிருக்கின்றது. தமிழ் மொழிக்கு முதன் முதன் இலக்கணம் செய்தவர் அகத்தியர் என்றும்
1 * தமிழெனு மளப்பருஞ் சலதி தந்தவன்’
* என்றுமுள தென்றமிழியம்பி யிசைகொண்டான் ??
* நீண்டதமிழ் வாரி கிலமேனிடமிர விட்டான் ??
* உழக்குமறை நாலினு முயர்ந்துலக மோதும்
வழக்கினு மதிக்க வினினும் மரபினடி நிழற்பொலி கணிச்சிமணி நெற்றியுமிழ் செங்கட் டழற்புரை சுடர்க்கடவு டந்ததமிழ் தந்தான்”
-கம்பன்
தேனர் கமழ் தொங்கல் மீனவன் கேட்பத்தெண் ணீரருவிக் கானுர் மலயத் தருந்தவன் சொன்ன கன் னித்தமிழ்’
-அமிர்தசாகரர் ஓங்க விடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி ஒங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனயது தன்னே ரிலாத தமிழ்
-பழம்பாடல்

Page 5
2 அகத்தியர்
அவருடைய மாணவர்களுள் ஒருவர் தொல்காப் பியர் என்றும் கூறும் பழங்கதைகள் வழங்கு கின்றன. தமிழ் ஆராய்ச்சி செய்வோர் பலர் அகத்தியரும் தொல்காப்பியரும் வடநாட்டவ ரென்றும், அவர்கள் வடநாட்டு வழக்குகள் பல வற்றைத் தமது நூல்கள் மூலம் தமிழ் நாட்டிற் புகுத்தினர் என்றும் கூறிவருகின்றனர். டாக்டர் போப் தமிழில் இலக்கணம் செய்தாரென் ருரல் அவர் ஆங்கில வழக்குகளைத் தமிழிற் புகுத்தினர் என நாம் கூறமுடியாது. இதனை ஒப்பவே அகத் தியரும் தொல்காப்பியரும் ஆரியராயினும் அவர் கள் தமது நூல்கள் மூலம் ஆரிய வழக்குகளைத் தமிழ் நாட்டில் நிலை நாட்ட முடியாது. அகத்தியர் என்பார் யார் ? அவர் ஆரியரா ? தமிழரா ? அவரைக்குறித்து வழங்கும் பழங்கதைகள் நம்பத் தகுந்தனவா ? நம்பத்தகாதனவா ? என்பவை போன்றவற்றைத் தமிழ் மாணவரும் பிறரும் ஆராய்ந்து தெளிதல் வேண்டும். அவ்வகையில் ஆராய்வதே இச்சிறிய நூலின் இலக்காகும்.
தமிழ் பொதிய மலையில் தோன்றியதெனப் பொருள் பட வரும் இப்பழம் பாடலும் தமிழ் பொதிய மலையிடத் திருந்த அகத்திய முனிவரிடத்திற் பிறந்த தென்பதையே குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.

அகத்தியர்
உருவச்சிலைகளை ஆராய்ச்சி செய்வதில் வல்ல வராகிய காங்குலி என்பார் அகத்தியரைப்பற்றி ஆராய்ந்து எழுதியுள்ள கட்டுரை ஒன்றின் சுருக் கத்தை ஈண்டு தருகின்ருேரம். -
ஆரிய வர்த்தத்தினின்றும் தென் தேசத்தை ஆரிய மயமாக்கும் பொருட்டு விந்திய மலையைக் கடந்து சென்றவர்களுள் கும்பத்தில் பிறந்தவ ராகிய அகத்தியர் முதன்மை யுடையவர். ஆரியர் குடியேறுவதற்குப் புதிய வயல்களையும் மேய்ச்சல் நிலங்களையும் பெறுவதற்கு வழி காட்டியவர் இவரேயாவர். புராணங்களில் சொல்லப்படும் பழங்கதைகளைக்கொண்டு ஆரியரின் நாகரிகம் ஆரியவர்த்தத்துக்கு வெளியே எவ்வாறு பரவிற்று என நாம் உய்த்து அறிதல் கூடும். அகத்தியர் சிவ வழிபாட்டினர். காசி அவருடைய பிறப்பிடமும் இருப்பிடமுமாகும். அவர் தினமும் கங்கை யாற்றில் ரோடுவதற்குச் செல்வார் என்றும் அப்போது அவர் நிலத்தில் கோடாங் கற்கள்போன்று கிடக் கும் சிவலிங்கங்களை மிதிக்காது விலகி மிதியடி தரித்துச் செல்வாரென்றும் புராணங்கள் கூறு கின்றன. அவர், வடிவழகில் ஒப்பில்லாத உலோபா முத்திரை என்னும் விதர்ப்ப அரசனின் மகளைத் திருமணஞ் செய்தார். அவர் வடக்கே நீண்ட காலம் வாழவில்லை. அவர் தென் திசைக்குப் போகவேண்டி யிருந்தது. இவரது முன்னேர் பலர்
1. O. C. Gangoly.

Page 6
அகத்தியர் 4ے
இவரைப்போலவே மீண்டு வராதிருக்கும் தென் தேச யாத்திரை செய்தார்கள். போய் மறுபடியும் திரும்பிவராத யாத்திரைக்கு அகத்திய யாத்திரை என்னும் பெயர் வழங்குகின்றது. அகத்தியர் தெற்கேயுள்ள காட்டை அழித்து நாடாக்கினர். இராமாயணம் இதைக்குறித்துத் தெளிவாகக் கூறி யுள்ளது.
* (அகத்தியர்) தனது புண்ணிய கருமங்களால் கொலைத்தொழிலுடைய அசுரரைத் தொலைத்துத் தென் பூமியை மக்கள் உறைதற்கேற்ற இடமாக மாற்றினர்’- ஆரணிய காண்டம். சருக்கம் 11, சுலோகம் 81.
இராமர் இராவணனைக் கொன்று சீதையை மீட்டுக்கொண்டு வந்த செயல் அகத்தியர் மக்கள் நுழைய முடியாத தென் தேசத்தை வென்றதோடு உவமிக்கப்பட்டுள்ளது. (இலங்க காண்டம் 117வது சருக்கம், 13-14 சுலோகம்.)
அவர் தென் தேசத்தில் திரிந்து தங்கிய இடங் கள் ஆச்சிரமங்கள் எனப்பட்டன. தண்ட காரணி யத்துக்குச் சில மைல் தூரத்திலுள்ள காசிக் என் லும் இடத்தில் அவர் தங்கி யிருந்தாரென இராமா யணம் கூறுகின்றது. ஆனல் அவர் அவ்விடத்தில் அமைதியுற்றிருக்க முடியவில்லை. அங்குமிங்கும் குடியேறியிருந்த ஆரியரை அரக்கர் தாக்கினர்கள். அவர்களை அழிக்கும்பொருட்டு அகத்தியர் தனது தவவலியைப் பயன்படுத்தினர். அரக்கர், இராக் கதர், அசுரர் என்பன ஆரியக் கொள்கைகளை எதிர்த்து கின்றவர்களுக்கு இடப்பட்ட பெயர்கள்.

அகத்தியர் 5
வில்வலன், வாதாபி என்போர் இராக்ககத் த8ல வருட் சிலராவர். வடக்கே தண்டகாரணியத்தில் வாழ்ந்த ஆரியருக்கு இவர்கள் காலன் போன் றிருந்தனர். இவர்களே பாதாமியிலிருந்து மூன்று மைல் தூரத்திலுள்ள மலேகூடம் அல்லது தென் காசியில் உறைந்த அகத்தியர் அடக்கினர். கி. பி. 150-வரையில் வாழ்ந்த தாலமி, பாதாமி என்னும் இடத்தைக் குறிப்பிட்டுள்ளார். வாதாபி என்பதே பிற்காலத்தில் பாதாமி எனப்பட்டது. இது இந்திய ஆட்சியில் அரசியல் முதன்மை பெற்று விளங் கிற்று. வாதாபியிலிருந்து ஆட்சி நடத்திய சிம்மவிஷ்ணுவிட மிருந்தே முதலாம் புலகேசி என்னும் சாளுக்கிய அரசன் பாதாமியை கி. பி. ஆறும் நூற்ருரண்டின் நடுப்பகுதியில் கைப்பற்றினன். அய்கோலி, பாகாமி என்னும் இடங்களில் பழைய இந்திய கோவில்கள் காணப்படுகின்றன. அகத் தியர் அவ்விடங்களிலுள்ள குறுநில மன்னர்களி டையே பிராமண மதத்தைப் பரவச்செய்து அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர் ஆகலாம். அவர் தனது மதத்தைப் பரப்பும் பொருட்டு மாணுக்கரைச் சேர்த்துச் சபைகளைக் கூட்டியும் இருக்கலாம். செவிவழக்கிலும், பழங்ககை மூலமும் வந்த செய்திகள் பட்டையங்களிற் காணப்படு கின்றன. அகத்தியர் அரசர் பலருக்கு, சிறப் பாகப் பாண்டியருக்குக் குரு அல்லது புரோகிதரா கவும் இருந்தார். சின்னமண்ணுரர் பட்டையத்தில் அகத்தியர் அரசரின் ஆசிரியராயினரென்றும்
2

Page 7
6 அகத்தியர்
சுந்தரபாண்டியன் அகத்தியர் மாணுக்கன் என்றும் காணப்படுகின்றன. அகத்தியர் அரசர் பலருக்குக் குரு, அல்லது புரோகிதராக இருந்தார் எனப் பல பழங்கதைகள் உள்ளன. ஸ்கந்த புராணம் அவரை வச்சிராங்கதன் என்னும் பாண் டிய அரசனேடு தொடர்பு படுத்திக் கூறுகின்றது. அகத்தியர் சோணேஸ்வரர் என்னும் சிவலிங்கக் கடவுளுக்கு காணிக்கைகளைக் கொடுக்கும்படி அவனைப் பணித்தார். அவன் தனது செல்வம் முழுவதையும் அக்கடவுளுக்குக் கொடுத்து அகத் தியரதும் அவர் மனைவி உலோபா முத்திரையதும் அருளைப்பெற்றன். அகத்தியர் தென்னட்டை ஆரிய மயமாக்கும் தொழிலைத் தனியே செய் திருக்க முடியாது. அகத்தியர் கோத்திரம் ஒன்று தொடங்கி அக்கோத்திரத்திற் பலர் பெருகினர்கள். அகத்தியர் கோத்திரம் இன்றும் உள்ளது. அவரி டமிருந்து தோன்றிய புதல்வர்கள் பலரைப்பற்றி மச்ச புராணங் கூறுகின்றது.
தமிழ் மொழியை ஆரம்பித்து அதற்கு இலக் கணஞ் செய்தவர் அகத்தியரென்று இன்றும் பழைய பண்டிதர்கள் நம்பிவருகின்ருரர்கள். அவர் செய்த இலக்கணம் அகத்தியம் எனப்படுகின்றது. அவர் தமிழ்ச் சங்கத்துக்குத் தலைவரா யிருந்தார். கடவுள் உருவங்கள் அமைக்கும் விதிகூறும் அகத்திய சகலாதிகா என்னும் நூலின் ஆசிரியரும் அவராவர். அவருக்குப் பன்னிரண்டு மாணுக்கர் இருந்தார்கள். அவருள் தலைமை யுடையவர் தொல்

அகத்தியர் 7.
காப்பியர். அவருக்கு அமைக்கப்பட்ட பல கோவில் கள் உண்டு. அவர் பொதியமலையோடு சம்பந் தப்பட்டவர். இம்மலை கன்னியா குமரிக்கு அண்டையில் திருநெல்வேலி மாகாணத்திலுள்ளது. அகத்தியர் அங்கு மக்களின் கண்களுக்குத் தெரி யாமல் வாழ்ந்து வருகிருரர் எனப் பலர் நம்பி வரு கின்ருரர்கள். அவர் தெற்கே வானத்தில் அகத்திய நட்சத்திரமாக விளங்குகின்ருரர். அவர் தென்னிங் தியாவை அடைந்த பின் இடையிடையே சிலகாலம் சடுதியில் மறைந்து விடுவாரென்றும் அவர் எங்கு சென்ருரரென்று எவருக்கும் தெரியாமல் இருக்கும் என்றும் பழங்கதை உண்டு. அவர் பிராமண மதத் தலைவராகவும், சைவ சமயத்தைப்பற்றிப் போதிப் பவராகவும், தென்னிந்திய அரசர் பலரின் புரோ கிதர் அல்லது குருவாகவும் இருந்தமையால் அகத்தியர் வழிபாடு தொடங்கியது. பல ஆலயங் களில் அகத்தியர் வடிவங்கள் வழிபாட்டின் பொருட்டு வைக்கப்பட்டுள்ளன. அகத்தியரை வணங்கவேண்டிய முறை ஸ்கந்த புராணத்திலும் அக்கினி புராணத்திலும் காணப்படுகின்றன. அகத்தியர் வழிபாட்டுக்குப் பேர் போனவை இரண்டு கோவில்கள்: ஒன்று வட ஆர்க்காட்டில் புத்தூர் புகைவண்டி கிலையத்துக்கு அயலேயுள்ள அகத்தீசுவர சுவாமி கோவில்; மற்றது வேதாரணி யம். அகத்தியர் வழிபாடு தென்னுட்டில் இருந்தது போலவே வடநாட்டில் வசிட்டர் வழிபாடு இருந்தது. நேப்பாலில் கிடைத்த பட்டையத்தில் இது குறிப்

Page 8
8 அகத்தியர்
பிடப்பட்டுள்ளது. அகத்தியர் திரைமோதும் கடலைப்பற்றி அஞ்சவில்லை. அவர் தனது சித்தியி ல்ை கடற் கடவுளரைப் பணியவைத்தார். அகத் தியர் கடலைக்குடித்தார் என்று புலவர் இச்செயலை வருணித்துக் கூறுவாராயினர்.
கம்போதியாவில் அகத்தியர்
அகத்தியர் தென்னிந்தியாவில் சிவன் கோயில் களைக் கட்டித் தமது குடும்பத்தவர்களே அவற்றில் நிலை நாட்டுவதிலும் முயன்று வந்தார். அவர் தொலைவிலுள்ள குடியேற்ற நாடுகளில் சிவன் கோவில்களை அமைத்துத் தான் அவ்விடங்களில் இருந்தமையைச் சான்றுபடுத்தியு முள்ளார். அவர் சிலகாலம் கம்போதியாவில் இருந்தார். கம் போதியாவில் அங்கோவாற்றில் காணப்பட்ட பட்டையமொன்று இதற்குச் சான்று பகர்கின்றது. "ஆரியபூமியிற் பிறந்த பிராமணராகிய அகத்தியர் சிவவணக்கத்தில் சிறந்தவர். அவர் தனது சித்தியி னுல் கம்போதியாவிலுள்ள சிறீபட்டிரேஸ்வர என்னும் சிவலிங்கத்தை வணங்கும்பொருட்டு வந் தார். அவர் நீண்ட காலம் அச்சிவலிங்கத்தை வணங்கிய பின் முத்தியடைந்தார். இம்முனிவர் இவனை வணங்குவதில் மாத்திரம் நின்றுவிடவில்லை. இவர் யசோமதி என்னும் அழகிய பெண்ணே மணந்து ஒரு அரச பரம்பரயையும் தோற்று வித் தார். சக ஆண்டு 811-ல் வெட்டப்பட்ட பட்டையத் தில் அகத்தியர் யசோவர்மன் என்னும் அரசனின்

கம்போதியாவில் அகத்தியர் 9
சந்ததிக்கு முன்னேர் என்று காணப்படுகின்றது. கல்வெட்டில் சொல்லப்படுவது பின் வருமாறு: * வேதங்களில் வல்லவரும் பிராமணருமாகிய அகத் தியர் ஆரிய பூமியிலிருந்துவந்து மகிஷிட வமிசத்தி லுள்ள யசோமதியை மணந்து ஒரு மகனைப் பெற் ருரர். அவன் நரேந்திரவர்மன் எனப்படுவன்.”
இவ்வரச வழி வேறுபட்டையங்களிலும் கூறப் பட்டுள்ளது. அகத்தியர் தென்னிந்திய முறையைப் பின்பற்றிக் கம்போதியாவிலுள்ள சிவாலயத்தை எடுத்திருக்கலாம். அகத்தியரிலிருந்து தோன்றிய அரச பரம்பரையினர் அதனை நன்னிலையில் வைத் திருந்தார்களாகலாம். தென்னிந்தியாவில் காணப் பட்டவை போன்ற ஐந்து உலோகத்தினற் செய் யப்பட்ட திருவுருவங்கள் கம்போதியா, சியம் முதலிய இடங்களில் காணப்படுகின்றன. சிலவற் றில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இத்திரு வடிவங்கள் தென்னிந்திய தமிழச் சிற்பிகளால் செய்யப்பட்டவை என்று வெளிப்படையாகத் தெரி கின்றது. அவை தென்னிந்தியாவிற் செய்து சீயத் துக்கும் கம்போதியாவுக்கும் கொண்டு போகப் பட்டவை. அகத்தியருக்கு நெடுங்காலத்துக்கு முன் தென்னிந்தியாவுக்கும் அந்நாடுகளுக்கு மிடையில் போக்குவரத்தும் கருத்துக்களின் கலப்பும் உண் டாயிருக்கலாம். அகத்தியர் மீகாங்? ஆற்றங் கரையில் முதல் ஆரிய குடியேற்றத்தைத் தொடங்கி யிருக்கலாம். அவ்விடங்களில் காணப்
1. Siam. 2. Mikong.

Page 9
10 அகத்தியர்
படும் திருவுருவங்கள் தென்னிந்தியருக்கும் அங்காடு களுக்கும் கடல் வழியாகப் போக்குவரத்து இருந்த தென்பதை உறுதியாக வலியுறுத்துகின்றன. சோணமலையில் சிவன் கோயிலை அமைத்தா னென்று ஸ்கந்த புராணத்தில் கூறப்படும் பாண்டியன் கம்போதிய குதிரைமீது சென்றன். இவ்வாறு குறிக்கப்பட்டிருத்தலும் இரு5ாடுகளுக் கிடையிலிருந்த தொடர்பை வெளிப்படுத்துகின்றது. தென்னிந்தியரே இந்திய நாகரிகத்தை கம்போதி, யாவில் பரப்பியவர்கள் ஆகலாம். கம்போதியா, சீயம் முதலிய நாடுகளின் கலையிலும் நாகரிகத் திலும் இந்தியச் சார்புகள் காணப்படுகின்றன.
மலாய தீவுகளில் அகத்தியர் அகத்தியர் போர்னியோ, சந்தாத்தீவுகள்2, மலாயதீவுகளுக்கும், சாவகம்? முதலிய தீவுகளுக் கும் சென்ருரர் என வாயுபுராணம் கூறுகின்றது; அவர் மலாய தீவில் மலைய பர்வதத்தில் இருப்பவ ராகவும் குறிப்பிடுகின்றது. மலேய பர்வதம் என்பது தென்னிந்தியாவிலுள்ளதன்று; வேரு னது. இன் அறும் மலையம் என வழங்கும் முக்கிய மலை ஒன்று சாவகத்திலுள்ளது. போர்னியோவிலும் சாவ கத்திலும் பழைய சமக்கிருத பட்டையங்கள் கிடைத்தன. அப்பட்டையங்கள் பிராமண சமயத்தையும் புத்த சமயத்தையும் வேறுபடுத்திக் காட்டுகின்றன. அத்தீவுக் கூட்டங்களின் பழைய
. Malay Archipelago. 2. Sunda Islands. 8. Java.

மலாய தீவுகளில் அகத்தியர் 11
நாகரிகம் பிராமண மதம் சம்பந்தப்பட்டது. அகத்தியர் சந்தாத் தீவுக்குச் சென்ற ச் என்னும் பழங்கதை பிராமண நாகரிகம் அங்கு சென்றதைக் குறிப்பிடலாம். பிராமணர் குடி யேறியதற்குப் பின்னரே புத்த மதம் சம்பந்த மான பட்டையங்கள் காணப்படுகின்றன. இந்தி யரின் ஆட்சி கம்போதியாவில் கி. பி. 137-ல் ஆரம் பித்ததெனச் சீன வரலாறு கூறுகின்றது. இது இந்துச் சீனவில் மலையில் பொறிக்கப்பட்ட பட்டை யத்தால் நன்கு உறுதிப்படுகின்றது. அப்பட்டை யம் கி. பி. 2-வது அல்லது 3-வது நூற்ருரண்டில் எழுதப்பட்டது. அது சிறீமாறன் என்னும் அரச ટંOT ઝં குறிப்பிடுகின்றது. இந்துச் சீனவில் கி. மு. 400-ல் பொறிக்கப்பட்ட இரண்டு பட்டையங் களும் கவனத்துக்குரியன. முதல் பட்டையம் தரும மகாராசா பத்மவர்மன் செய்த யாகத்தைக் குறிப்பிடு கின்றது. இரண்டாவது பட்டையம் மகாதேவ வட்ரேசுவர சுவாமிக்குத் துதியாகவமைந்தது. இவைகளுக்குப்பின் ஒன்றன்பின் ஒன்ருரகப் பல பட்டையங்கள் காணப்படுகின்றன. அவை சிவன் கோயில்கள் பழுதுபார்க்கப் பட்டமையையும் அவை களுக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகளையும் பற்றிக் குறிப்பிடுகின்றன. சத்திரிய அரசன் ஒரு வன் போர்னியோவில் யாகம் செய்ததைப்பற்றி ஒரு பட்டையம் கூறுகின்றது. இந்தியாவில் கி. பி. 102-ல் நாட்டப்பட்ட பூபக்கல்லில் பொறிக்கப்பட் டிருப்பதுபோல் போர்னியோவில் காணப்பட்ட

Page 10
烈2 அகத்தியர்
கல்லிலும் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது அக்கல் லில் எழுதப்பட்டிருப்பது வருமாறு : பேரோங்கிய மூலவர்மன் என்னும் அரசர்க்க ரசன் பசுவர்ணக யாகத்தை முடித்தான். அந்த யாகத்தில் இரு பிறப் பாளருள் தலைவர் இக்கல்லை நிறுத்தினர். இக்கல் கிழக்கு போர்னியோவிலுள்ள கோஎற்றி என்னு மிடத்தில் கிடைத்தது. இது கி. பி. 400-ல் உள்ளது என்று கருதப்படுகின்றது. இன்னெரு பட்டையம் மேற்குச் சாவகத்திலுள்ள பூரண வர்மன் என் பவனைப்பற்றிக் கூறுகின்றது. இது கி. பி. 5-ம் நூற்ருரண்டில் பொறிக்கப்பட்டது. அப்பட்டையத் தில் கூறப்படுவது வருமாறு: ' இவ்வுலகத்தின் வலிய வேந்தனகிய பூரணவர்மன் கரும பட்டினத் தின் அரசன். அவனுடைய இரண்டு பாதங்களின் சுவடுகள் இவை. இவை விஷ்ணுவின் பாதச்சுவடு களை ஒப்பப் பெருமையுடையன.” இங்குக் காட்டப் பட்ட மூன்று பட்டையங்களும் பிராமண மதம் சம் பந்தமானவை; புத்த சமயம் சம்பந்தப்பட்டவை யல்ல. பிராமண நாகரிகத்தில் இரண்டு பட்டையங் களைக் காணலாம். ஒன்று வேத சம்பந்தம்; மற்றது புராண சம்பந்தம். பசிபிக்கடல் ஓரங்களிலுள்ளவை சிவன் கோயில்கள் எனக் காட்டியுள்ளோம். கி. பி. 732-ல் வெட்டப்பட்ட பட்டையம் ஒன்று திசாங்கல் என்னும் இடத்தில் கிடைத்தது. இது மத்திய சாவ கத்தில் குடியேறிய சன்யாய என்னும் அரசனைக் குறிப்பிடுகின்றது. குஞ்சர குஞ்ச என்னும் கூட்டத்
l. Tysangal. * 、

மலாய தீவுகளில் அகத்தியர் 13
தினரிலிருந்து இவர்களுக்குக் கைமாறிய சிவன் கோயில் ஒன்றைப்பற்றியும் அப்பட்டையம் குறிப் பிடுகின்றது. அது வருமாறு : “ சாவகம் என்னும் பெயருடைய தீவு, தீவுகளுள் சிறந்தது. அங்கு ஒப்பிட முடியாத தானியக் களஞ்சியங்களும் பொன் சுரங்கங்களும் உண்டு. இத்தீவில் புதுமை மிக்க சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. குஞ்சர குஞ்ச தேசத்திலுள்ள மக்களைச் சேர்ந்தவர்களால் அது கையளிக்கப்பட்டது.’ குஞ்சர குஞ்ச எனக் கூறப் பட்ட இடம் தென்னிந்தியாவிலுள்ள தென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. விசயநகர காலத்தில் குஞ்சா கோண என்னும் பெயர் காணப்படு கின்றது. இது ஆணிகண்டி என்னும் கன்னடப் பெயரின் சமக்கிருத மொழிபெயர்ப்பு. இது ஹம்பிக்கு எதிரே துங்கபத்திரை ஆற்றங்கரையி லுள்ளது. அரிவம்சம் என்னும் புராணம் குஞ்சர மலையில் அகத்தியர் ஆச்சிரமம் இருந்ததெனக் கூறுகின்றது. இப்பகுதியிலிருந்து சென்ற மக்களே சாவகத் தீவில் கோயிலமைத்திருக்கலாம். சாவகத் திலே முதல் முதலாகக் கட்டப்பட்ட சிவன் கோயில் குஞ்சர கோணம் என டாக்டர் கேண் என்பார் கருதியுள்ளார். இன்னெரு பட்டையம் சிவன் கோயில் ஒன்று அகத்தியரால் கட்டப்பட்டதெனக் கூறுகின்றது. அச்சாசனத்தில் கூறியிருப்பது வரு மாறு : “ எல்லா மக்களும் தாம் விரும்பியவற்றைப் பெறுமாறு அகத்தியர் வரதலோக என்னும் கோவில் திருப்பணியைச் செய்தார்’. அகத்தியரின்
3

Page 11
14 அகத்தியர்
பிற் சந்ததியினர் சிலர் அகத்தியர் கோத்திரத் தினர் என்று நமக்குத் தெரிகின்றது. அவர்கள் சைவ சமயத்தினர். அவர்களுள் ஒரு பிரிவினர் சாவகத்தில் குடியேறியிருந்தார்கள். ஆஸ்வலாயன கிரிகிய சூத்திரத்தில் சொல்லப்படும் 49 பிராமண கோத்திரங்களுள் அகத்திய கோத்திரம் காணப் படுகின்றது. * «,
சாவகத்திற் போலவே தென்னிந்தியாவிலும் அகத்தியர் பிராமண நாகரிகத்துக்குரியவராக விருந்தார். கி. பி. 1,524-ல் பொறிக்கப்பட்ட ஒரு பட்டையத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டு வித்த அயிலபட்டர், தான் அகத்திய கோத்திரத் தவர் எனக்கூறியுள்ளார். அகத்தியர் ஜாவானிய குடும்பங்களுக்குத் தலைவரும், கோயில்களைக்கட்டிய வருமாய் மாத்திரம் இருந்தாரல்லர். அவர் இந்தியா விலும் சாவகத்திலும் வழிபடவும் பட்டார். போலி நீசிய மொழியில் அகத்தியர் என்னும் பெயர் வாலிங் என மொழிபெயர்த்து வழங்கப்படும். சாவகத்திலும் பாலியிலும் சத்தியம் செய்வதற்கு உரிய வாசகங் களுள் அகத்தியரின் பெயர் பயன்படுத்தப்படு இன்றது. அது வருமாறு : “ சூரியர் சக்திரர் உள்ளளவும், உலகம் கடலால் குழப்பட்டு உள்ள ளவும், காற்று உள்ளளவும், வாலிங்கின் பெயர் கி2லபெறும்.” காவீ (Kawi) தீவு மக்கள் அகத்தியர் என்னும் பெயரை அரிச்சந்திரானு என வழங்குவர். கி. பி. 760-ல் வெட்டப்பட்ட பட்டைய மொன்று கிழக்கு சாவகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது

மலாய தீவுகளில் அகத்தியர் 15
சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியரின் திருவுருவத்தைப்பற்றிக் கூறுகின்றது. அச்சாச னம் கூறுவது வருமாறு : “ தனது முன்னுேரால் சந்தன மரத்தால் செய்யப்பட்ட அகத்தியர் திரு வடிவம் விழுந்தபோது கல்வி அறிவுள்ள அரசன் கருங்கல்லில் அவ்வடிவத்தை அமைக்கும்படி சிற் பிக்குக் கட்டளையிட்டான். அரசன் கும்பயோனி யாகிய அகத்தியர் திருவுருவத்தைக் குருமார், வேதம் அறிந்த முனிவர்கள் முதலியவர்களால் பிரதிட்டை செய்வித்தான்.” ܗܝ
சாவகத்தில் ஊன்றிய அகத்தியவழிபாடு ஏழாம் நூற்ருரண்டுக்கு முன் தென்னிந்தியாவினின்று சென்றிருக்கவேண்டுமெனக் கூறினேம். இந்தி யாவிற் காணப்படும் அகத்தியர் திருவுருவங்களின் சாயலாகவே இந்தியக் குடியேற்றத் தீவுகளிலும் அவர் உருவங்கள் காணப்படுகின்றன. சாவகத்தில் இருபதுக்கு மேற்பட்ட அகத்தியர் உருவங்கள் காணப்படுகின்றன. அவர் சடை, உருத்திராக்கம், கரகம் முதலியன உடையவராகக் காணப்படு கின்றனர். அவர் காசியிலேயே சிவ வழிபாட்டிற் சிறந்தவராக விளங்கினர். அகத்திய குண்டத்திலே உள்ள அகத்திய சிவன் அகத்தியரின் ஞாபகமாக விளங்குகின்றரர். அவரின் அடையாளமாக அங்கு குலம் உள்ளது.
சாவகத்திற் காணப்படும் அகத்திய விக்கிரகத் தின் உடை இந்தியாவிலும் இலங்கையிலும் காணப் படும் விக்கிரகங்களின் உடையை ஒத்தது. அகத்திய

Page 12
16 அகத்தியர்
உருவங்களை சாவக மக்கள் சிவ குரு, பாரத குரு என வழங்கினர்கள். அவருக்கு எப்பெயர்கள் வழங்கிய போதும் அவை அகத்தியரையே குறிக்கின்றன என்பது தெளிவு. அவர் சிவ சமயத்தைப் போதித் தமையால் சிவகுரு எனப்பட்டிருக்கலாம். கலசய, கும் பயோனி, சர்வஞ்ஞ, மித்திரவர்ணமுத்திர என் பவர் இவரேயென சாவக மக்கள் வழங்கும் பெயர் களைக்கொண்டு நன்கு அறியலாம். தென் சாவகத் தில் கெடோயிலே தஞ்சிபெனன் என்னுமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சிலை முதன்மையுடையது. இது கி. பி. 9-ஆம் அல்லது 10-ஆம் நூற்ருரண்டில் அமைக்கப்பட்டது. அகத்தியரின் வடிவம் எவ்வா றிருந்தது என்பதை அத்தீவிலுள்ளவர்கள் எவ் வாறு கற்பனை செய்தார்கள் என இவ்வடிவைக் கொண்டு அறிகின்ருேரம். பிற்காலங்களில் அகத் தியர் உருவங்கள் பலவாறு செய்யப்பட்டபோதும் கமண்டலம், உருத்திராக்கம், சடை என்பன விடு படவில்லை. சாவகத்தில் காணப்பட்ட அகத்தியர் உருவத்தைப் பலர் சிவன் வடிவம் எனக் குறிப்பிட் டுள்ளார்கள். சிவன் வடிவம் ஒருபோதும் தொந்தி வயிறும் தாடியுமுடையவராக எங்கும் அமைக்கப்பட் டிருக்கவில்லை. அகத்தியருக்கு பகையாயிருந்தவர் இரணபிந்து என்றும் அவர் சமதக்கினி புதல்வர் என்றும் ஒரு பழங்கதை உளது. வாயு புராணத் திலும், தேவி பாகவதத்திலும் சமதக்கினி துவாபர யுகத்தில் இருபத்து மூன்றுவது வியாசர் எனக் கூறப்படுகின்றர். திரணபிந்து சைவராயிருந்தார்.

மலாய தீவுகளில் அகத்தியர் 17
இவருக்கு நேர்ந்த குட்டநோயைச் சிவபெருமானே கலசத்தில் தோன்றி ஆற்றினர். இவருக்கு அகத் தியரே குருவாகவிருந்தார். அகத்தியர் தெற்கே வந்தபோது அவரையும் அழைத்துச் சென்ருரர். தெற்கே அவர் திரண தூமாக்கினி எனப்பட்டார். அவர் தொல்காப்பியர் எனவும் தமிழ்ப் பெயரால் அழைக்கப்பட்டார். அவர் தமிழ் இலக்கணத்தை ஒழுங்குபடுத்தி அமைக்க அகத்தியருக்கு உதவி புரிந்தார். திரணயிந்துவால் செய்யப்பட்ட தொல் காப்பிய மென்னும் இலக்கணம் தமிழ் இலக்கணங் களுள் முதன்மையுடையது. அகத்தியரோடு இவருக் குள்ள தொடர்பைக் குறித்து வியப்பான கதை ஒன்று கூறப்படுகின்றது. வடக்கேயிருந்து தனது மனைவியாகிய உலோபாமுத்திரையை அழைத்து
வரும்படி அகத்தியர் திரணபிங் துவுக்குக் கட்டளை யிட்டார். வருமிடத்து உலோபாமுத்திரைக்கும் திரணபிந்துவுக்குமிடையில் ஒரு கோல் தூரம் இருக்கவேண்டுமென அவர் கட்டளையிட்டார். அவர் வையை ஆற்றைக் கடக்கும்போது உலோபா முத்திரை ஆற்றில் அமிழ்ந்தி உதவிவேண்டிச் சத்த மிட்டார். ஆசிரியரின் ஆஃணயை மறந்து திரண பிந்து உலோபாமுத்திரையின் கையைப்பிடித்து அவரைக் காப்பாற்றினர். அகத்தியர் இந்நிகழ்ச்சி யைக் கேட்டவுடன் கோபங்கொண்டு திரணபிந்து வுக்குச் சுவர்க்கத்தின் கதவு அடைபட வேண்டு மெனச் சாபமிட்டார். திரணபிந்து அகத்தியருக்கும் சுவர்க்கக்கதவு அடைபடவேண்டுமென மறு சாப

Page 13
18 அகத்தியர்
மிட்டார். இவ்வாறு குரு மாணுக்கருக்குப் பகை நேர்ந்தது. அகத்தியர் திரணயிந்துவின் இலக் கணம் பிழையுடையதெனக் கூறினர். ஆனல் தொல்காப்பியம் பிழையில்லாத இலக்கணம் எனத் திரணயிந்துவால் நாட்டப்பட்டது. திரணயிந்து வுக்கு விசாலன், சூனியபந்து, தும்பிரபந்து என் னும் மூன்று குமாரரும் இலிபிளே என்னும் ஒரு புதல்வியும் இருந்தனர். இவர் காசியப்பாவுக்குப் பெண் கொடுத்த மாமனும் புலத்தியரின் தாய் மாமனுமாவர். சாவகத்தில் பகவான் திரணயிந்து 6T6 எழுதப்பட்ட பல கல் உருவங்கள் காணப்படு கின்றன. அகத்தியரோடு சம்பந்தப்பட்ட மரீசி என்னும் ஒரு முனிவரின் சிற்பமும் அங்கு காணப் படுகின்றது. மரீசி என்னும் பெயர் தேவநாகரி யில் எழுதப்பட்டுள்ளது.
மத்திய சாவகத்தில் இந்திய பிராமணர் குடி யேறி யிருந்ததற்கு அடையாளம் காணப்படு கின்றது. அங்கு துர்க்கை, விநாயகர் திருவுருவங் கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சஞ்சயப் பட்டை யத்தால், அகத்தியர் அல்லது அகத்தியர் கோத் திரத்திலுள்ள ஒருவரால் தென்னிந்திய கோவில் களைப்போன்ற ஒன்று சாவகத்தில் எடுக்கப்பட்ட கெனத் தெரிகின்றது. பிரம்பனம் (Prambanam) என்னும் அழிபாடுகளில் சிவலிங்கங்களும், சிவன், விஷ்ணு, பிரமா, திரிமூர்த்தி முதலிய கடவுளரின் திருவுருவங்களும் காணப்படுகின்றன. இவை பத்துப் பதினேராவது நூற்ருரண்டைய தென்னிங்

மலாய தீவுகளில் அகத்தியர் 19
திய சிற்பங்களே ஒத்துள்ளவை. மலாய தீவுகளில் காணப்பட்ட சமக்கிருத பட்டையங்கள் இந்திய பட்டையங்களின் மாதிரியில் வெட்டப்பட்டவை என்று நன்கு அறியப்படுகின்றன. தென்னிந்திய பட்டையங்களிலும் மலாய தீவுகளின் பட்டையங் களிலும் வெட்டப்பட்டுள்ள எழுத்துக்கள் ஒரே வகையின. சாவகத்தின் பழைய நாகரிகம் கலிங்க தேசத்திலும் பார்க்க தமிழ் நாட்டின் வடகரை யோடு சம்பந்தப்பட்டதென டாக்டர் பர்நெல்: (Dr. Burnell) Sin-m3u6ir GIT IT iii.
சிவன், விஷ்ணு, பிரமா முதலிய உருவங் களின் ஆபரணங்கள், நிலை, முத்திரை, ஆசனம், தாமரைப்பீடம் போன்றவைகளைக் கவனித்தால் இவை இந்திய சிற்பங்களைப் பின்பற்றிச் செய்யப் பட்டிவை என்று நன்கு தெளிவாகும். சாவகக் கோவில்களின் வாயில்காவலர் தென்னிந்திய கோவில்களின் துவாரபாலகரைப் பின்பற்றி அமைக்கப்பட்டவை. பாலித்தீவில் இன்றும் இந்தியக் கடவுளரின் வழிபாடுகள் காணப்படுகின் றன. பாரத குரு, பாரத பிரமா, பாரத விஷ்ணு, பாரத சிவன் முதலிய கடவுளர் அங்கு வழிபடப் படுகின்றனர். மகாதேவர் என்னும் பெயர் அவர் களின் சமய நூல்களில் காணப்படுகின்றது. அகத் தியர் சாவகம், பாலி முதலிய இடங்களில் மேலான கடவுளாக வழிபடப்பட்டார். சாவகத்தில் வழங்கும். பழங்கதைகளில் கலிங்க நாட்டினின்றும் மிகப் பல குடும்பங்களும் அரசரும், ஒருவர் 96r ଓଡ଼୯୭ ଦି) ராக அங்குச் சென்ருரர்கள் எனக்கூறப்படுகின்றது.

Page 14
20 அகத்தியர்
குறிப்பு : கான்குலி புராண சம்பந்தமாக வழங்கிய வரலாறுகளையும் பிற்காலத்தில் தென்னிந்தியாவினின்றும் மலாய தீவுகள், கம்போதியா முதலிய நாடுகளில் சென் றிருந்த அகத்தியர் வழிபாடு முதலியவைகளையும் கூறி யுளளார். கிறித்துவம், புத்தம், சைனம் என்னும் மதங் களைப் போலப் பிராமண மதமும் வடநாட்டினின்றும் தென்னுடுவந்த தொன்ருகும். சீனவில் சீன மக்களின் பழைய கொன் பியூசஸ் மதமும், புத்த மதமும் பின்னி ஒன்றுபட்டது போலத் தென்னுட்டிலும் பிராமண மதமும் தமிழர் மதமும் பின்னி ஒன்றுபடலாயின.2 பிரா மண மதம் பரவிய பிற்காலத்திலேயே அகத்தியர் வழிபாடு கம்போதியா, மலாய்த் தீவுகளிற் பரவுவதா யிற்று.
l. Confucius. 2. When the Aryans passed the Afghan passes, India was inhabited by a dark and short statured but civilized race called the Dravidians. These Dravidians had extensive commercial relations with Babylon, Phoenicia and the countries beyond the Arabian Sea. Their trade consisted of such articles of luxury as Indian cidar, muslin, precious stones, pea-cocks, aloes etc. The fact that a piece of Malabar teak was found in the palace of the king of Chaldea 8,000 B. C. and the similarity between the Hebrew Word for peacock via. Toki and the modern Tamil and Malayalam word viz. Tuki and such glaring similarity between many an Indian and a Greek or a Hebrew word is too striking to be over-looked as a mere matter of coincidence . . . . . . . . . During this long period, the Aryans, in their long struggle with the aborigiinal tribes, had adopted the policy of give and take.
-Outline of Economic History of India.
pp. 8 do 12-M. P. Lohana.

அகத்தியர் பலர்
*அகத்தியரைப்பற்றிய பழங்கதைகள் பல் வேறு வகையாக வளர்ந்து ஒன்று சேர்ந்து அகத்தியர் வரலாறக இன்று வழங்குகின்றன.
சமக்கிருதத்தில் இரண்டு அல்லது மூன்று அகத்தியர் பெயர்கள் காணப்படுகின்றன. வான் மீகருக்கு முற்பட்டவரும் வேத காலத்தவருமாகிய அகத்தியர் ஒரு வர் இருந்தார். இவர் கங்கைக் கரையில் வாழ்ந்த ஆரியக் கூட்டத்தினரின் தலை வரும் உலோபா முத்திரையின் கணவருமாவர். வேறு இரண்டு அல்லது மூன்று அகத்தியர்களைப் பற்றி இதிகாசங்கள் கூறுகின்றன. முதல் அகத் தியர் சுதர்சன இருடியின் அண்ணனவர். இவர் விந்தத்துக்குத் தெற்கே குடியேறச் சென்ற ஆரியக் கூட்டத்தினரின் தலைவரா வர். இவர் பஞ்ச வடிக்குத் தெற்கே அல்லது 15ருமதை ஆற்றின் வட மேற்குப் பள்ளத்தாக்கில் உள்ள காசிக்கில் ஆரிய ரல்லாத அநாகரிக மக்களிடையே போர் தொடுத் துக் கொண்டிருந்தார். இவர் இராமரை வரவேற்று அவரைத் தமது பகைவராகிய இராக்கதரோடு போர் செய்வதற்கு உடன்படும்படி செய்தார். வான்மீகர் ஆரியக் கொள்கைகளை காட்டும்
உலோபா முத்திரை யின் கணவர்
இராமர் காலத்து அகத்தியர்
*இது தமிழ்ப்பெரும் புலவர் சோமசுந்தர பாரதியா ரவர்கள் ஆங்கிலத்தில் வரைந்த ஒர் கட்டுரையின் சுருக்கம்.

Page 15
22 அகத்தியர் பொருட்டு அன்னிய நாட்டில் போர் செய்துகொண் டிருந்த முனிவரைக் குறித்துப் புகழ்ந்துள்ளார்.
கிட்கிந்தா காண்டத்தில் இன்னெரு அகத்திய ரைக் குறித்து வான்மீகியும் கம்பனும் கூறியுள் ளார்கள். இங்கு அகத்தியர் தென்
ರಾಷ್ಟ್ರಿಕೆ கடலுக்கு அண்மையிலுள்ள மலை யத்திலுறையும் சாந்தமான முனிவ
ராகக் கூறப்பட்டுள்ளார். கிட்கிங் தையில் சுக்கிரீவன் சீதையைத் தேடி வரும்படி வாணர வீரர்களை ஏவும்போது தென் பக்கமாகச் செல்லுதற்குரியாரை நோக்கிச் சொல்லியதாக வான்மீகி கூறியவை அடியில் வருமாறு : “.. பின்பூங் காதுக்கள் நிறைந்தும், விசித்திரமான சிகரங்களுடையதும், பலவர்ணமான பூக்கள் நிறைந்த சோலைகளை யுடையதும், சந்தன வனங் கள் செறிந்ததுமான பெரிய அயோமுக மலையைத் தேடுங்கள்; அதன்பின் தேவ அரம்பையர் வந்து நீராடுகின்ற திவ்வியமான தெளிந்த நீரையுடைய அழகிய காவேரி நதியை அங்கே காண்பீர்கள்; அந்த மலையமலையின் சிகரத்தில் ஆதித்தனுக்குச் சமானமான மிகுந்த ஒளியுடைய முனிவர்களுள் சிறந்தவரான அகத்தியரைக் காண்பீர்கள். பின்பு அம்முனிவரிடம் ஆண் பெற்றுச்சென்று முதலே கள் நிரம்பிய பெரிய தாமிரபர்ணியைத் தாண்டுங் கள். அங்கதி அழகிய சந்தனச் சோலைகளால் மூடப் பெற்ற திட்டுக்களை யுடையதாய், கணவனிடத் தன் புள்ள யுவதியானவள் புக்ககம் புகுமாறு போலக்

அகத்தியர் பலர் 23.
கடலுள் சென்றுவிழும். பின்பு பொன்னிறைந்த தாயும் அழகுடையதாயும் முத்து மயமான மணி களால் அலங்கரிக்கப் பெற்றதாயும் பாண்டியர்க் குரியதுமாகிய கவாடத்தைப் பார்க்கக்கடவீர்?
** தென்றமிழ் நாட்டகன் பொதியிற் றிரு
முனிவன் தமிழ்ச் சங்கஞ் சேர்கிற்பீரேல் என்று மவனுறை விடமா மாதலினுலம்
மலையை யிடத்திட் டேகி’ -கம்பன் பஞ்ச வடியிலிருந்த அகத்தியரே இவர் என்று எண்ணுதற்காவது சந்தேகிப்பதற்காவது இட o மில்லை. ஆரணிய காண்டத்தின் பஞ்சவடி அகத்தி பலவிடங்களில் வேதக்கிரியைக2ள
இயற்றிக்கொண்டு வடக்கே யுள்ள வெவ்வேறினர் காடுகளில் வாழ்ந்த அகத்தியரைப்
பற்றிக் கூறப்பட்டுள்ளது. தெற் கிலே பாண்டி நாட்டில் அகத்தியர் இருந்ததைப் பற்றிக் கிட்கிந்தா காண்டம் கூறுகின்றது. புலவ ரின் வாக்குக்களே இவ்விரு அகத்தியர்களும் வெவ் வேறினர் என்பதை விளக்குகின்றன. மலேயத்தில் இருந்த அகத்தியர் வேதக்கிரியைகளைச் செய்து கொண்டிருந்தார் என்று யாண்டும் கூறப்பட வில்லை. பொதியமலை, அகத்தியருக்கு நிலையானது எனக் கம்பரும் வான்மீகியும் கூறியுள்ளார்கள். ஒருமுனிவர் பஞ்சவடியில், ஆரியரல்லாத மக்க ளோடு பகைமை கொண்டிருந்தார். மற்ற அகத் தியர் பொதிய மலையில் அமைதியுடன் வாழ்ந்தார். இவர்கள் எண்ணுறு மைல் தூரத்துக்குமேல்

Page 16
24 அகத்தியர்
இடைத்தொலைவுள்ள இரு இடங்களிலும் வாழ்ந்த
வர்கள் என்பதை வான்மீகர் நன்கு உணரவைத் துள்ளார் என்பது நன்கு தெளிவாகின்றது.
தெற்கே வாழ்ந்த அகத்தியர் ஆரிய முனிவரா அல்லது ஆரிய அகத்திய கோத்திரத்தினரா ? வான்மீகர் புகழும் அகத்தியர் வடநாட்டிலும் தனது புகழைப் பரவச் செய்த தமிழ் அறிவரா? ? என்பன போன்றவை ஆராய்ச்சிக்குரியன.
சங்க நூல்கள் ஒன்றிலும் அகத்தியரைப் பற்றிய பெயர் காணப்படவில்2ல. பரிபாடலின் o பதினேராம் செய்யுளில் அகத் 守低}品 நூல்களில் தியன் என்னும் பெயர் வந்துள் அகத்தியர் பெயர் - O
இல்லை ளது. அது விண்மீன் ஒன்றைக் குறிக்கின்றது. இப்பாடலைச் செய் தவர் கலித்தொகையில் நெய்தற்கலியைச் செய்தவ ராகிய நல்லந்துவனர். அவர் காலம் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டு களுக்குமுன். அகத்தியரைப் பற்றிய வரலாறு அக்காலத்தில் பழங்கதையாக மாறியுள்ளதெனத் தெரிகின்றது. இம்முனிவர் பொதிய மலையில் இருந்தார் என்பதுதான் நாம் கவனிக்கவேண்டியது. இலக்கிய காலத்துக்கு முன் னும் அறியப்பட்ட அகத்தியர் ஒருவரைப்பற்றிய நினைவு சங்ககாலத்தும் இருந்ததெனத் தெரிகின் றது. இவருடைய புகழ் மிகப் பரவியிருந்தமையால் இவர் பெயர் தமிழ் நாட்டில் மறக்கப்படாமல் இருங் தது. இல்லையாயின் இவர் பெயர் பரிபாடலில்
1. முக்காலமும் அறியும் அறிஞர்.

அகத்தியர் பலர் 25.
தோன்றியிருக்க மாட்டாது. பெதுருங்கேரியரின் படம் என்னும் உரோமர் வரலாற்றுக் குறிப் பில் அகத்தியர் கோயில் ஒன்று தென்னட்டில் இருந்ததாகக் குறிக்கப்பட்டுள்ளது. பெதுருங் கேரியர் படத்தின் காலம் கி. பி. 100 வரையில், இதனலும் அகத்தியர் புகழ் சங்ககாலத்தும் மிகப் பரவியிருந்ததென விளங்கும்.
தொல்காப்பியம் என்பது இன்று தமிழில் காணப்படும் பழைய இலக்கணம். தொல்காப்பிய o இலக்கணம் செய்தவராகிய தொல் அகத்தியர் காப்பியர் அகத்தியரின் மாணவர் தொல்காப்பியரின் o
ஆல்வர் எனனும் பழங்ககை வழங்குகின் றது. தொல்காப்பியர் அகத்திய ரைப்பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. தொல்காப் பியத்துக்கு முன் பல இலக்கணங்களும் பல இலக் கியங்களும் இருந்தனவென்று தொல்காப்பியமே கூறுகின்றது. தொல்காப்பியர் அகத்தியரைக் குறித்து யாண்டும் கூருமையால் அவர் அகத்திய ரின் மாணவரல்லர் என்பது எளிதில் விளங்கும். இவர் அகத்தியர் மாணவராயின், மிகப் புகழ் படைத்த தனது ஆசிரியரைக் கூருது மறைக்கும் நன்றியில்லாக் குணத்தை இச் சிறந்த ஆசிரியர்மீது ஏற்ற நேரும். அகத்தியருக்கும் தொல் காப்பியருக் 1. அகத்தியர் என்பதே அகஸ்தஸ் எனத் தப்பாக வாசிக்கப்பட்டதென யோவுதுபிரில் என்பார் நன்கு at Gaiga aastá Guyoirotti-The Mythic Society Journal: XIX P. 180.

Page 17
26 அகத்தியர்
கும் பகை உண்டாயிருந்த தெனவும் ஓர் பழங்கதை உளது. அது உண்மையாயின் தொல் காப்பியத் துக்குச் சிறப்புப்பாயிரஞ் செய்த பனம்பாரனர் தொல்காப்பியரின் குற்றத்தை நியாய முடைய தாகக்கொண்டு தனது ஆசிரியரின் புகழை மறைக்கவேண்டிய காரணமுமில்லை. அகத்தியர், அவர்களின் ஆசிரியராக இருந்தாராயின், அவர் கள் அவர் புகழை எடுத்து உலகுக்கு நன்கு விளக்கி யிருப்பார்களன்றே ?
ஆரியர் விந்தத்தைத் தாண்டித் தெற்கே வரத் தொடங்கியது கி. மு. 1,000 வரையில் என வர லாற்று சிரியர்கள் கூறுகின்றனர். தமிழ் ஆசிரிய இதற்கு முற்பட்ட பழைய காலத் ராகிய அகத்தியர் : ۔“۔ ( / گ۔ سی۔ ٹی “
தமிழரே தில் ஆரிய வர்த்தத்தில் வாழருத ஆரியரொருவர் தெற்கே இருண்டு அடர்ந்து கிடந்த காட்டைக்கடந்து தன்னந்தனியே பொதிய மலையில் தங்கியிருந்தார் என்பது நம்பத் தகாதது. அவர் வேடரும் கொடிய விலங்குகளும் வாழும் காட்டைக் கடந்து தெற்கே வந்து அங்கு வழங்கிய மொழியையும் இலக்கியத்தையும் கண்டு அவைகளில் விருப்பங்கொண்டு அவற்றைக் கற்று இலக்கண ஆசிரியராய் விளங்கினராயின் அவர் நாகரிகத்துக்கு இருப்பிடமாகிய நகரில் வாழர் து விலங்குகள் வாழும் மரஞ்செடிகள் அடர்ந்த இடத் தைத் தமக்கு உறைவிடமாகக் கொண்டிருக்க மாட்டார். இருக்குவேத காலம் முதல் ஆரியருக் கும் தமிழருக்கும் (தேவருக்கும் அசுரருக்கும்)

அகத்தியர் பலர் 27
போராட்டம் மலிந்திருந்தன. அதனுல் தமிழ்நாட்ட வர் ஆரியரை மிலேச்சர் என வழங்கி வந்தனர் என்றும், அவர்மீது பகைகொண்டிருந்தனரென் பதும் நன்கு விளங்குகின்றன. தமிழை இகழ்ந்த வடநாட்டரசர்மீது சீற்றங்கொண்டு சேரன் செங் குட்டுவன் படை யெடுத்துச் சென்ற வரலாறு இதற்கு ஒரு சான்றகும். இதனுல் மிகமிகத் தொன்மையே தமிழ் அறிவு சான்றிருந்த தமிழ்ப் புலவர்கள் ஆரியர் ஒருவரைத் தமது தலைவராக ஒப்புக்கொண்டார்கள் எனக்கூறுவது இயலாத காரியம். அகத்தியர் தமிழாசிரியரா யிருந்தனரா யின் அவர் தமிழ் மக்களிடையே மதிப்புப் பெற்று விளங்கிய தமிழர் ஒருவராதல் வேண்டும். அவர் புகழ், மறந்துபோக முடியாத அவ்வளவு பெரிதா யிருந்தமையில் அவர் பெயரைச்சுற்றிப் பல கற் பனைக் கதைகள் வந்தடைந்தன. இக்கற்பனைப் போர்வையை ஊடுருவி நோக்கி அவருடைய உண்மை வரலாற்றை அறிந்துகொள்வது கடின மாகின்றது.
நாம் அவர் வரலாற்றைக் குறித்துப் பின் வருமாறு உய்த்துக் கூறலாம்: ஆரியர் வருகைக்கு முன் அகத்தியர் என்னும் பெயருடைய தமிழ் அறிஞர் ஒருவர் தமிழ் நாட்டில் விளங்கினர். இவர் சமக்கிருதத்தோடு தொடர்புபெற்ற அகத்தியரில்
1. பழைய ஐரோப்பிய மக்கள் அன்னியரை பார் பேரியர் (Barbarians) என வழங்கினர். அவ்வகை வழக்கையே மிலேச்சர் என்னும் சொல்லும் குறிக்கும்.

Page 18
28 அகத்தியர்
வேருனவர். அவர் தமிழர் மதிப்பு அளித்த அறிவர் களுள் ஒருவர். தொல்காப்பியருக்குப் பிற்பட்ட மக்கள் ஆரிய சம்பந்தமான பல கற்பனைகளை அகத்தியரோடு சம்பந்தப்படுத்திக் கட்டிவைத்தார் கள். தமிழ்ப்பெயர்களை ஆரியர் தம்முடையவை களாகத் தமது பழங்கதைகளில் எடுத்து வழங்கு வது இயல்பு. தமிழ் முருகன் சுப்பிரமணியராகவும், தமிழ் மால் விஷ்ணுவாகவும் வழங்கப்படுகின்ற மையை நாம் அறிவோம். தமிழ்க் கருத்துக்களை ஆரியமாக்கு மிடத்துத் தமிழ்க் கடவுளர் ஆரியராக மாறினர். தமிழ் நாட்டிலுள்ள இடங்கள், ஆறு கள், மக்களுக்கு ஆரியப்பெயர்கள் இடப்பட்டன. வெண்காடு சுவேதாரணியமாகவும், தண்பொருடுை தாம்பிர பர்ணியாகவும் மாறின. ‘பண்டை என்னும் அடியாகத்தோன்றிய பாண்டிய பரம்பரைப்பெயர் பாண்டவ அல்லது பாண்டு வமிசமாக மாறிற்று. இவ்வாறே தமிழ் அகத்தியர் சமக்கிருத அகத்திய நாக மாறியிருத்தல் வேண்டும். தமிழ் நாட்டில் வழங்கும் அகத்தியர் வரலாற்றுக்கு அடிப்படை பொதிய மலையில் இருந்த ஒருவராதல் வேண்டும்; இல்லையேல் அகத்தியரைப்பற்றிய பழங்கதைகள் அந்த ரத்தில் எடுத்த கோட்டையாக மாறிவிடும். தமிழ்ப் புலவர்கள் ஆரியரொருவரைத் தமிழ்க் கல்விக்குத் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டார் கள் என்பதினனும் அகத்தியர் தமிழராவர் என்பது வலியுறுகின்றது. புராண காலத்தில் அகத்தியரைப்பற்றி ஆரியப்போக்கான கற்பனைக்

அகத்தியர் பலர் 29
கதைகள் வளரத்தொடங்கின. அகத்தியர் என்னும் தமிழ்ப்பெயர் அகத்திய என்னும் ஆரியப் பெய ரோடு ஒற்றுமை காணப்பட்டமைகொண்டு அவர் ஆரியராக்கப்பட்டனர்.
அவர்கள் இவரைப் பஞ்ச வடியில் இருந்த அகத்தியராகக் கொண்டதோடு அமையாது அவ a ரைக்குறித்த பல கற்பனைக் கதை முதது களையும் எழுதி வைத்தனர். தமிழ் அகத்தியன் P. P. M is * • بربر * மக்களும் ஆராய்வின்றி அக்கட்டுக் கதைகளை நம்பத்தலைப்பட்டனர். இவர் பஞ்சவடி யிலிருந்த அகத்தியர் ஆக்கப்பட்டதல்லாமல் இருக்கு வேத காலத்தவரும் உலோபா முத்திரையின் கண வருமாகிய அகத்தியருமாக ஆக்கப்பட்டார். அகத் தியரைப்பற்றி இன்று வழங்கும் பழங்கதைகள் இன்று ஆராய்ச்சிக்கு நிற்கவில்லை. செங்கோன் தரைச்செலவில் முத்தூர் அகத்தியர் என்னும் தமிழ்ப்புலவர் ஒருவர் பெயர் காணப்படுகின்றது. அவரை ஒப்ப மதிப்பைப் பெற்றிருந்த ஒருவழே அகத்தியராவர். முத்தூர் கன்னியா குமரிக்குத் தெற்கேயிருந்து மறைந்துபோன பாண்டிநாட்டின் பகுதியில் உள்ளது. இதனல் ஆரியர் தென்னடு வருவதன்முன் அகத்தியர் என்னும் தமிழர் ஒருவர் இருந்தாரென்பது செங்கோன்தரைச் செலவு என்னும் நூலால் தெரியவருகின்றது. தமிழ் காட்டில் அகத்தியர் என்னும் பெயருடன் பலர் விளங்கியிருத்தல் கூடும். அவர்களுள் ஒருவரே மிகப் புகழ் படைத்தவர். இவருடைய பெயரைச்

Page 19
30 அகத்தியர்
சுற்றி அவர்புகழை விளக்கும் பல கதைகள் வந்து திரண்டன. இவ்வாறே ஆரிய
நச்சினுக்கினியர் அகத்தியரைக் குறித்த கதைகளும் அவர் பெயரைச் சுற்றித் திரண் பழங்கதை டன. சங்ககாலத்துக்குப்பின் ஆரி
யக் கதைகளும் தென்னுட்டு அகத் தியர் கதைகளோடு வந்து கலந்தன. நச்சினர்க் கினியர் அகத்தியரைக் குறித்துக் கூறியுள்ள கதையே இதற்குச்சான்று. அவர் கூறியிருப்பது வருமாறு:. * அவரும் (அகத்தியரும்) தென் திசைக்கண் போதுகின்றவர், கங்கை யாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக்கொண்டு, பின்னர், யமதக்கினியாருழைச் சென்று அவர் மாணுக்கர் திரண தூமாக்கினியாரை வாங்கிக்கொண்டு, புலத்தி யருழைச் சென்று அவருடன் பிறந்த குமரியார் உலோபா முத்திரையாரை அவர் கொடுப்ப நீரேற்று இரீஇப் பெயர்ந்து, துவராபதிப்போந்து நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழிக்கண் அரசர் பதினெண்மரையும், பதினெண்கோடி வேளிருள் ளிட்டாரையும் அருவாளரையும் கொண்டு போந்து காடு கெடுத்து நாடாக்கிப் பொதியிற் கண்ணிருந்து இராவணனை கந்தருவத்தால் பிணித்து இராக்க தரை ஆண்டு இயங்காமல் விலக்கி. y
இவ்வகைப் பழங்கதைகள், வடநாட்டு அகத் தியரை தமிழ் இலக்கியங்களின் தந்தை ஆக்குவதல் லாமல், அவர், கிருஷ்ணனின் துவாரகையிலிருந்து யாதவர் கூட்டத்தினர் பலரைத் தெற்கே கொண்டு

அகத்தியர் பலர் 31
வந்து குடியேற்றினவராகவும் கூறுகின்றன. மத்தியகால உரையாசிரியர்களுள் ஒருவராகிய நச்சினர்க்கினியர் அகத்தியர் இரா
அகத்திய இராவு வணஐன இசையில் வென்முர் என ணன் காலத்தவரும் வும் கூறியுள்ளார். நச்சினர்க் கண்ணன் காலத்த
கினியர் உரைகள் ஒன்றை ஒன்று
வருமாதல் முடியாது மறுப்பனவா யுள்ளன. அகத்தியர் இராவணன் காலத்தவராயின் அவர் இரண்டாவது திரேத உகத்தில் வாழ்க் தவராவர். ஆகவே அவர் துவாரகைக்குப்
போயிருக்க முடியாது. துவாரகை கண்ணனுல் மூன்றாவது துவாபர உகத்தில் அமைக்கப்பட்டது. அவர் துவாரகையிலிருந்து மக்களை அழைத்து வந்தவராயின் அவருக்கும் இராமரின் பகைவனகிய இராவணனுக்கும் யாதும் தொடர்பு இருக்க முடி யாது. இவ்வில்லங்கத்தைத் தடுப்பதற்கு வேளிர் வரலாறு எழுதியவர் அகத்தியரால் இசையில் வெல்லப்பட்டது இராவணன் இராமரின் பகைவ னகிய இராவணனல்லன் என்றும், அவன் இராவ ணப் பெயர் தாங்கிய இன்னுெருவனென்றும் கூறுவாராயினர். இங்நியாயம் நிலைபெறுமாறில்லை. அகத்தியரோடு இராவணன் நிகழ்த்திய இசைப் போரைப்பற்றிக் கூறும் பிறவரலாறுகள் வான் மீகி கூறும் இராவணனையே குறிக்கின்றன. அகத் தியர் தொல்காப்பியரின் ஆசிரியர் என்றும் நச்சி னர்க்கினியர் குறிப்பிட்டுள்ளார். அகத்தியரின் மாணுக்கணுகிய தொல்காப்பியர் சமதக்கினியின்

Page 20
82 அகத்தியர்
புதல்வனும் பரசு இராமனின் உடன் பிறந் தானுமாகிய திரணதுரமாக்கினி எனவும் அவர் கூறி யுள்ளார். பரசு இராமர் இராமருக்கு முன் பட்ட ரென்பது வால்மீகியின் கூற்ருரல் விளங்குகின்றது. திரண தூமாக்கினியும் வால்மீகி கூறும் இராமரும் பரசு இராமர் காலத்தில் வாழ்ந்திருக்க வேண்டும். இதனுல் திரண தூமாக்கினியின் ஆசிரியராகிய அகத்தியர் இராமரின் பகைவனுகிய இராவணனைச் சந்திக்க முடியுமெனத் தெரிகிறது. இக்காரணத் தினுலும் அகத்தியர் தமிழரின் முன்னேராகிய வேளிரைத் துவாரகையிலிருந்து அழைத்துவர முடியாதெனத் தெரிகின்றது. இக்கதைகள் இவ் , வாறு ஒன்றோடு ஒன்று மாறுபடுவனவா யிருக் கின்றன. இராமருக்கும் கிருட்டிணனுக்கும் இடையிலுள்ள காலம் ஒரு இலட்சம் ஆண்டுகள் வரையில், இராமாயணத்துக்கும் பாரதப் போருக் கும் இடைப்பட்ட இவ்வளவு நீண்டகாலம் யாரும் வாழ முடியாது. இதனல் அகத்தியரைப்பற்றிய கதைகள் சங்ககாலத்திற்குப் பின் ஆராய்வின்றிக் கட்டப்பட்டவை எனக்தெரிகின்றது.
(தொல்காப்பியம் கி. மு. மூன்ருரம், அல்லது நாலாம் நூற்ருரண்டில் செய்யப்பட்ட நூல் என இற்றை ஞான்றை ஆராய்ச்சியாளர் முடிவு செய் கின்றனர். அவ்வாருரயில் இராமர் காலத்திலோ, கண்ணன் காலத்திலோ தொல்காப்பியர் இருந்தார் எனக்கொள்வது சிறிதும் பொருத்தமற்றதாகும்.)

அகத்தியர் பலர் 38、
நச்சினர்க்கினியர் கூறும் சில சொற்ருெடர் கள் அகத்தியர் பொதிய மலையின் தெற்கிலிருந்து வேளிர்களுடன் வந்தாரென்பதை
நெடுமுடி விளக்குவன. நச்சினர்க்கினியர்
o:* நிலங்கடந்த நெடுமுடி அண்ணல்" நெடியோன் என்னும் பெயரால் கண்ணனைச்
சுட்டுகின்ருரர். கண்ணனின் கஜல நகரைத் துவாரகை எனவும் கூறியுள்ளார். மது ரைக் காஞ்சியில் வரும் கெடுமுடி அண்ணல் என்ப தற்கும் அவர் கண்ணன் எனப் பிழையான பொருள் கூறியுள்ளார். மதுரைக்காஞ்சி ஆசிரியர், மதுரையில் தமிழ்ச் சங்கத்தை அல்லது புலவர் குழுவை ஆகரித்த பாண்டியனைக் குறிக்க நிலந்தரு திருவில் நெடியோன் என்னும் பெயரை ஆண்டுள் ளார். தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது நிலங் தருதிருவிற் பாண்டிய னவையில்.
துவரை என்னும் பெயருடைய பல இடங்கள் தமிழ் நாட்டில் இருந்தன. கடல்கொண்ட நாட்டில் அவ்வகை இடங்கள் இருந்தன. பாண்டியரின் தலைநகராயிருந்த கபாடபுரம் கடலாற் கொள்ளப் பட்டது. துவாரபதி என்பதே கபாடபுரமென வட மொழிப் படுத்தப்பட்டிருத்தல்கூடும். பாண்டி நாட்டுக்குத் தெற்கே கிடந்த நிலத்தைக் கடல் கொண்டபோது மக்கள் வடக்கு நோக்கிச் சென்று (தமிழ் நாட்டில்) குடியேறினர்கள் எனக் கலித் தொகை கூறுகின்றது. ஆகவே அகத்தியர் தெற்கே கடல்கொண்ட பாண்டி நாட்டினின்றும்

Page 21
34 அகத்தியர்
வந்தவராகலாம். தெற்கிலிருந்து வந்து பாண்டியர் அவையிலிருந்த வேளிர் தமது அரசனை நெடுமுடி அண்ணல் எனக் கூறினராகலாம். நெடியோன், நெடுமுடி அண்ணல் என்பன பாண்டியப் பேரரச னைக் குறிப்பன. அகத்தியர், வேளிர்கள் சிலரோடு பொருநை ஊற்றெடுக்கும் இடத்தில் தங்கினராதல் வேண்டும். இவரே தமிழ்க் கல்வியிற் புகழ்பெற்று விளங்கினர். அகத்தியருடன் சென்ற வேளிர் அயலேயுள்ள மலைநாடுகளில் இராச்சியங்களை உண் டாக்கிக் குறுநில மன்னராயினர். ஆய், ஆவி முத லிய குறுநில மன்னர் பலர் வேளிர் மரபினர் எனப் படுகின்றனர்.
அகத்தியர் நிலங்கருதிருவிற் பாண்டியன் அல் லது நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் காலத்தவரா யின் தொல்காப்பியரும் அகத்தியரும் ஒரேகாலத் தவராகலாம். நிலங் தருதிருவிற் பாண்டியன் அவை யிலேயே தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது. அகத்தியரும் தொல்காப்பியரும் ஒரேகாலத்தவர் களாயினும் தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் என்பதற்குப் பழைய சான்றுகள் யாதும் காணப் படவில்லை.
சிற்றகத்தியமும் பேரகத்தியமும் அகத்தியர் சிற்றகத்தியம், பேரகத்தியம் என் னும் இரு இலக்கண நூல்கள் செய்தாரென்னும் கதை செவிவழக்கில் உள்ளது. அகத்தியம் என் னும் பெயருடன் மத்தியகால உரையாசிரியர்கள்

சிற்றகத்தியமும் போகத்தியமும் 85
எடுத்தாண்ட சில குத்திரங்களும் உள. இச் சூத்திரங்கள் இன்று வழங்கும் அகத்தியர் வாகடங் கள் போன்றவையே யாகும்.
தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலில் கூறப்படு வது வருமாறு :
- 'அண்மையில் போகத்தியத்திரட்டு என்னும் சிறு நூல் ஒன்று வெளியாயிற்று. அது அகத் தியம் என்னும் இலக்கணச் சூத்திரங்களின் திரட்டு எனக் கூறப்பட்டுள்ளது. அகத்தியருடையன என்பன வல்லாத வேறு சில சூத்திரங்களும் அங். நூலிற் காணப்படுகின்றன. அவை கழாரம்பர் என்னும் அவர் மாணவரால் செய்யப்பட்டன என்று தமிழ்ப் பண்டிதருள் ஒரு சாரார் 5ம்பி வருகின்றனர். இவ்விருவகைச் சூத்திரங்களும் எவராலோ செய்யப்பட்ட போலிகள் எனக் கொள் வதற்குப் பல கியாயங்கள் உள. V.
1. அச்சூத்திரங்களின் நடை மிகச் சமீப காலத்தது. அவைகளில் பல சமக்கிருதச் சொற்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியச் சூத்திரங் களையும் இவைகளையும் ஒப்பிட்டுப் பார்க்குமிடத்து இது நன்கு தெளிவாகின்றது.
2. அகத்தியர் காலத்தில் தமிழில் சமக்கிருதச் சொற்கள் அருகி வழங்கியிருத்தல் வேண்டும். புத்த மித்திரன் பவணந்தி காலங்களிற்போல வடசொற் களே தமிழில் ஆள்வதற்குரிய விதிகள் அக்காலத் தில் தோன்றியிருக்க மாட்டா. தொல்காப்பியர்
1. Tamil Studies, P. 397.

Page 22
86 அகத்தியர்
வடசொற்கள் தமிழில் வழங்குவதற்கு ‘சிதைந்தன வரினுமியைந்தன வரையார் ' எனப் பொது வகை யால் விதி கூறினரேயன்றிச் சிறப்பு வகையில் விதிகள் கூறிற்றிலர்.
பேரகத்தியத் திரட்டில் இருபத்தினன்கு சூத் திரங்கள் வடமொழிச் சந்தி, சொல்லாக்கங்களைப் பற்றிக் கூறுகின்றன. போகத்தியம் என்னும் நூல் கி. பி. 1,250-க்குப்பின் பெருவழக்கிலிருந்த நன்னூலுக்குப்பதில் சைவ மாணவர்கள் பயிலும் படி திருநெல்வேலி அல்லது தஞ்சாவூர்ப் பகுதி களில் இருந்த யாரோ மடாதிபதி ஒருவரால் செய் யப்பட்டிருத்தல் வேண்டுமெனத் தெரிகிறது.
தொல்காப்பியர் எங்காவது அகத்தியத் தையோ அகத்தியரைப்பற்றியோ ஒரு வார்த்தை தானும் கூறவில்லை. தொல்காப்பியப்பாயிரம் கூறு வது வருமாறு :
* .தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிருமுதலி னெழுத்துஞ் சொல்லும் பொருளுநாடிச் செந்தமிழியற்கை சிவணிய நிலத்தொடு முந்துநூல்கண்டு முறைப்பட வெண்ணிப் புலந்தொகுத் தோன்.' -என்பதாகும், இப்பாயிரத்தினல் தொல்காப்பியருக்கு முன் அகத் தியம் என்னும் இலக்கணம் ஒன்று இருந்ததோ என்பது சந்தேகத்துக்கு இடனுகின்றது. அகத்தி யரைத் தமிழ் மொழியோடு சம்பந்தப்படுத்திக் கூறும் கற்பனைக் கதைகள் கி. பி. ஏழாம் நூற்ருரண்

சிற்றகத்தியமும் பேரகத்தியமும் 37
டளவில் முளைத்திருத்தல்வேண்டுமென நான் கருது கின்றேன்.? a
பி. தி. பூரீனிவாச ஐயங்கரவர்கள் அகத்திய ரைப் பற்றிக் கூறியுள்ள குறிப்புக்கள் வருமாறு :
சமக்கிருத நூல்களில் இஷ்வாகு காலம் முதல் கிருஷ்ணன் காலம் வரையில் கூறப்படும் அகத்தி யர்கள், வசிட்டர்கள் ஒரு தனி அகத்தியர், விசுவா மித்திரர், வசிட்டர்களைக் குறிப்பனவல்ல. அவை குடும்பப் பெயராகப் பலருக்கு வழங்கிய பெயர் களாகும். அப்பெயர்கள் குடும்பப் பெயரேயன்றித் தனிப்பட்டவர்களுக்குரிய பெயர்களல்ல.
治 笼 治
முதல் அகத்தியர் விதர்ப்ப அரசன் புதல்வி யாகிய உலோபாமுக்திரையின் கணவன். இவர் இராமருக்கு இருபது தலைமுறைகளின் முன் வாழ்ந்த சவர்க்கன் என்னும் காசி அரசன் காலத் தவர். ஆதி அகத்தியர் விந்தியத்துக்குத் தெற்கே வாழ்ந்தார். அவர் விந்தத்தை அடக்கினர் என வழங்கும் பழங்கதையின் பொருள், அவர் விந்தத் தைக் கடந்து தெற்கே சென்ருரர் என்பது ஆக லாம். அவருடைய ஆச்சிரமம் சாத்பூரா மலைத்
l. One of the most illuminating suggestions of his (Partigers) is that the Agastyas, Vasisthas, and Viswamitras mentioned in the Sanskrit works were not each one man who baffles the reader by appearing and reappearing in every age from that of Iksvaku to that of Sri Krishna: History of the Tamil-P. liv-P. T. S. Iyengar.

Page 23
38 அகத்தியர்
தொடரின் மேற்குப் பகுதியிலுள்ள வைடூரிய மலையிலுள்ளது. அவர் தனது தவத்தின் மகிமை யால் தென் தேசத்துக்குத் தீமை ந்ே ராதபடி காத் தார். பஞ்சவடிக்கு இரண்டு யோசனை தூரத்தில், இராமர் சந்தித்த அகத்தியர் முதல் அகத்தியரா யிருத்தல் முடியாது; அவர் பிற்கால அகத்தியர் களுள் ஒருவராயிருத்தல் வேண்டும். இராமர் காலத்து அகத்தியர் கோதாவரிக்கு அண்மையில் வாழ்ந்தார். அவர் தெற்கு நோக்கிப் பயணஞ் செய்தபோது அகத்தியர் அவ்விடத்திலேயே தங்கி னர். இராமர் சீதையோடு புஷ்பக விமானத்தில் திரும்பி வந்தபோதும் அகத்தியர் ஆச்சிரமம் அவிட்டத்திலேயே இருந்தது. இராமர் அலைந்து திரிந்தகாலம் முழுமையிலும் அகத்தியர் ஆச்சிரமம் பஞ்சவடியிலிருந்து இரண்டு யோசனை தூரத்தில் இருந்த தெனத் தெரிகின்றது. சுக்கிரீவன் வானர வீரரை நோக்கிக் கூறியதாக வரும் பகுதியில் காவேரி ஆறு ஊற்றெடுக்கும் மலையமலையில் அகத்தியர் ஆச்சிரம் உள்ளதாகக் கூறப்பட்டுள் ளது. சீதையை இராவணன் மாயமாகத் தூக்கிச் சென்றதுபோல இராமாயணஞ் செய்த புலவரும் அகத்தியரைப் பஞ்சவடியிலிருந்து மலையமலைக்கு மாயமாகக் கொண்டுபோய் விடுகின்ருரர். அகத்தி யர் மலையமலையில் இருந்தார் எனவரும் பகுதியைப் பிற்காலப் புலவர் எவரோ எழுதினராகலாம் !
兴
I., lola-pp. 54, 55.

சின்ன ஆசியாவில் அகத்தியர் 39 ܀
கி. பி. முதல் ஆயிரம் ஆண்டுகளில் தோன்றிய இலக்கியங்கள் எவற்றிலாவது அகத்தியர் கடவுளிட மிருந்து தமிழைக் கற்ற ரென்ருவது, அவர் தமிழைத் தோற்றுவித்தாரென்ருரவது கூறப்பட வில்லை. அகத்தியர் தமிழுக்கு இலக்கணம் செய்தா ரென்றும், அவர் சிவபெருமானிடத்தும் சுப்பிர மணியக் கடவுளிடத்து மிருந்து தமிழைக் கற்ருர ரென்றும் வழங்கும் கதைகள் கி. பி. 1,000க்குப் பின் தோன்றின வாதல் வேண்டும்.
* 米 兴 அகத்தியரென்னும் பிராமண முனிவர் பொதியமலையில் சென்று தங்கித் தமிழ் இலக்கியங் களைச் செய்தார் என்னும் வரலாறு பிராமணரின் அதிகாரம் தென்னுட்டில் ஊன்றிய பிற்காலத்தில் தோன்றியிருத்தல் கூடும். இக்கதைக்கு ஆதாரம் சமக்கிருத நூல்கள் ஆகலாம்.?
光 兴 兴 சின்ன ஆசியாவில் அகத்தியர் இந்தியநாட்டில் மாத்திரம் அகத்தியர்கள் இருக்கவில்லை. மேற்குத் தேசங்களிலும் அகத்தி யர்கள் விளங்கினர்கள். சின்ன ஆசியாவில் அகத்தியாஸ் (Agathias) என்னும் ஒருவர் விளங்கி னர். இவர் சரித்திர ஆசிரியரும் புலவருமாகிய கிரேக்கர். இவர் கி. பி. 530-ல் பிறந்தார்.8
1. ibid p. 224. 2. Cambridge History of India, p. 596-L. D. Barnett. 3. Encylopaedia Britannica.

Page 24
40 அகத்தியர்
சித்திய மக்களிடையே (உள்ள) ஒரு குழுவி னர் அகத்திரிசிகள் (Agathyrse) எனப்பட்டார்கள் என எரதோதசு (Heradotus கி.மு. 480) என்னும் கிரேக்க வரலாற்ருரசிரியர் கூறியுள்ளார். இவர் கள் தமது சட்டங்களை ஒருவகைப் பாடல் மூலம் வாய்ப்பாடஞ் செய்து காப்பாற்றிவந்தனர். அரிஸ் டோட்டில் காலம் வரையில் இவ்வழக்கு இருக் தது. அகத்திரிசி என்னும் இடப்பெயரும் ஐரோப் பாவில் உள்ளது.2
வட5ாட்டு இருஷிகள் எனப்பட்டோர் பலர் திராவிட இரத்தக் கலப்புடையராயிருந்தனரென் அறும் வசிட்டர், அகத்தியர், விசுவாமித்திரர் முதலி யோர் அவ்வகையினரென்றும் இரங்காச்சாரியா அவர்கள் கூறுவர்.8
l. Scythians. Agathyrse, a people of Thracian origin, who in the earliest historical times occupied the plain of Maris (Maros) in the region now known as Transylvania. Like the Gallic Druids they recited their laws in a kind of sing-song to prevent their being forgotten, a practice still in existence in the days of Aristole-E. Britannica. 2. Atlas of Ancient and Classical Geography-Index p. 6, map 1. Everyman's Library, Edited by Ernest Rhys. 3. God Varuna himself was an Asura (Dravidian)-Vedic Kings and Rishis came to have Asura blood in them as is indicated by the colour. Sages like Washistha, Agastya and Viswamitra were given the same father Mitra Waruna-History of Pre-Musalman, India-p. 172.

பழைய தமிழ் நூல்களில் அகத்தியரைத் தமிழோடு தொடர்பு படுத்திக் கூறும் பகுதிகள்
* வீங்குகட லுடுத்த வியன்கண் ஞாலத்துத்
தாங்கா நல்லிசைத் தமிழுக்கு விளக்காகென வானே ரேத்தும் வாய்மொழிப் பல்புகழ் ஆணுப்பெருமை அகத்திய னென்னும் அருந்தவ முனிவ னக்கிய முதனூல் பொருந்தக் கற்றுப் புரைதப உணர்ந்தோர் ஈல்லிசை நிறுத்த தொல்காப்பியன் ??
-பன்னிருபடலப் பாயிரச் சூத்திரம்.
மன்னிய சிறப்பின் வானேர் வேண்டத் தென் மலை யிருந்த சீர்கால் முனிவரன் தன் பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப்பியன்
-புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம், மலி நாவன் மாமலைச் சென்னி ஈண்டிய விமையோர் வேண்டலிற் போந்து குடங்கையின் விந்த நெடுங்கிரி மிகை தீர்த் தலைகட லடக்கி மலையத் திருந்த இருந்தவன்றன்பா லியற்றமி ழுணர்ந்த புலவர்பன் னிருவருட் டலைவனகிய தொல்காப் பியன்,
-அகப்பொருள் விளக்கப்பாயிரம். மதிவெயில் விரிக்குங் கதிரெதிர் வழங்கர் துயர்வரை புடவியின் சமமாக்கிக் குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி
பாசமித் துயர்பொதி கேசமுற்றிருந்த

Page 25
42 - அகத்தியர்
மகத்துவ முடைய வகத்திய மாமுனி தன் பாலருந்தமிழின் பா லுணர்ந்த வாறிரு புலவரின் வீறுறு தலைமை - - யொல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி.’
-இலக்கணக்கொத்துரைச் சிறப்புப் பாயிரம்.
இவற்றுட் பன்னிரு படலமென்பது தொல்காப் பியர் முதலிய பன்னிருவர் தனித்தனி ஒவ்வோர் படலமாகச் செய்து சேர்க்கப்பட்ட நூல் எனப்படு கின்றது. இது தொல்காப்பியர் முதலியோர் செய்த தாகாதென இளம் பூரணர் தமது உரையில் காட்டி யுள்ளார். அதனல் பன்னிரு படலமென்பது பிற் காலத்தா ரெவரோ தொல்காப்பியர் முதலியோர் பெயரால் புனைந்த நூலெனத் துணியலாம். தொல் காப்பியப் பாயிரத்திற் காணப்படாத அகத்தியர் வரலாறு இந்நூலிற் காணப்படுதலும் ஆராயத் தக்கது. நூல்களுக்குப் பாயிரம் செய்யும் விதி தொல்காப்பியத்திற் காணப்படவில்லை. இறைய னரகப் பொருளுக்குப் பாயிரமில்லை. இறையனரகப் பொருளுரையில் நூலுக்குப்பாயிர மின்றியமையாத தெனக் கூறப்பட்டுள்ளது. இக்கருத்து வலிபெற்ற காலத்திலேயே தொல்காப்பியத்துக்குப் பனம்பார னர் என்னும் ஒருவரால் பாயிரம் செய்யப்பட்ட தெனக் கருதக்கிடக்கின்றது. தொல்காப்பியத்துக் குப் பாயிரம் செய்யும் காலத்தில் தொல்காப்பியர் அகத்தியரிடம் தமிழ் பயின்றவர் என்னும் கதை தோன்றவில்லை எனத் தெரிகின்றது. ஐந்திரம் கற்றவரெனத் தொல்காப்பியரைச் சிறப்பித்த

பழைய நூல்களில் அகத்தியரைக் கூறும் பகுதிகள் 43
பனம்பாரனர், இவர் அகத்தியரின் மாணவராயின் அதனை ஒருபோதும் கூற மறந்திருக்கமாட்டார்.
புறப்பொருள் வெண்பாமாலை கி. பி. ஏழாம் நூற்ருரண்டளவிற் செய்யப்பட்டது. இதனை ஒட்டிச் சிறிது முன் பன்னிருபடலம் செய்யப்பட்டதாக லாம். அக்காலத்தில் தொல்காப்பியர் அகத்தியர். மாணவர் என்னும் வரலாறு தோன்றி வழங்கி யிருத்தல் வேண்டும்.
திருமூலர் கி. பி. 5-ம் நூற்றண்டளவில் வாழ்க் தவராவர். இவர்,
நடுவுகில் லா திவ்வுலகஞ் சரிந்து கெடுகின்ற தெம்பெரு மானென்ன வீசன் நடுவுள அங்கி அகத்திய நீபோய் முடுகிய வையத்து முன்னிரென்றனே."
எனத் திருமந்திரத்துள் கூறியுள்ளார். அகத்தியர் தமிழோடு சம்பந்தப்பட்டதை அவர் கூறவில்லை. கி. பி. 5-ம் நூற்றண்டுக்கும் கி.பி. ஏழாம் நூற்ருரண் டுக்குமிடையில் அகத்தியரைத் தமிழோடு சம்பந்தப் படுத்தும் கதைகள் எழுந்தன எனக்கூறுதல் பிழை யாகாது. மணிமேகலை என்னும் சங்ககாலத்துக்கு அண்மையிலுள்ள இலக்கியத்தில் அகத்தியரைப் பற்றிக் கூறப்படும் இடங்கள் சில உள.
* உலகந்திரியா வோங்குயர் விழுச்சீர்ப் பலர் புகழ் மூதூர்ப் பண்புமே படீஇய ஒங்குயர் மலையத் தருந்தவ னுாைப்பத் தூங்கெயி லெறிந்த தொடித்தோட், செம்பியன்’

Page 26
44. அகத்தியர்
* மன்மருங்கறுத்த மழுவா ணெடியோன் றன்முன் முேன்ற றகாதொளி நீயெனக் கன்னி யேவலிற் காந்த மன்னவன் அமர முனிவ னகத்தியன் றனது துயர்நீங்கு கிளவியின் யாருேன் றறவும்.” * செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்சவேட்கையிற் காந்தமன் வேண்ட அரமமுனிவன் அகத்தியன் றனது கரகங் கவிழ்ந்த காவிரிப் பாவை செங்குணக் கொழுதிய சம்பாதி.”
-D aos 63 Dd5 2.- சீத்தலைச் சாத்தனர் காலத்தில் அகத்தியரைப் பற்றிய வரலாறு மிகப் பழங்கதையாக வழங்கிற்றே யன்றி அகத்தியர் தமிழோடு தொடர்பு பெறவில்லை. அக்காலத்தில் அகத்தியர் பொதியமலையில் இருந்தா ரென்னும் வரலாறு வழங்கிற்று. அகத்தியர் குடத்தில் பிறத்தல், பிரமதேவருக்கு ஊர்வசியிடம் பிறத்தல் போன்ற கதைகளை ஆராய்தல் மணல் சோற்றில் கல் ஆராய்தல் போலாகுமெனக் கருதி அவற்றை ஈண்டு ஆராய்ந்திலேம்.
00000 1. அகத்தியர் குடகு மலையிலிருந்து பின் பொதிய மலைக்கு வங்கா ராதலின் அவர் குடமுனி யெனப்பட்டா ரென்றும் இவ்வரலாற்றை மறந்த பிற்கால மக்கள் குடகு என்பதைக் குடம் எனக்கொண்டு பொருந்தாத பல கற்பனைக் கதைகளை அவர் பிறப்போடு சம்பந்தப்படுத்திக் கட்டி வழங்கினர்கள் என்றும் பண்டிதர் சவரிசாயன வர் கள் கூறியுள்ளார்,


Page 27
1. மறைந்த ஈர்கF
2. கிருவள்ளுவர்
B. ਹੈ।
4. அகத்தியர்
岛 ஆதிபனிதன்
(Pre-historic
.ே இந்தியாவும் ே
7 இந்தியாவும் கி
 
 
 
 
 

1ளியீடுகள் 凰
을
-
மூகமும்
man) ։ மற்கு உலகும்
(அச்சில்) 들 நிக்கு உலகும் 扈
{马á编á)