கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அ.ந.க ஒரு சகாப்தம்

Page 1


Page 2

அ.ந.க ஒரு சகாப்தம்
அந்தனி ஜீவா

Page 3

Ᏸ5fᎢᎧvdsub 97.45.45
ஒரு சகாப்தம்
அந்தனி ஜிவா
மலையக வெளியீட்டகம் த.பெ.எண் 32 கண்டி

Page 4
நூல்
ஆசிரியர்
வெளியீடு
வெளியாகும் திகதி
அச்சுப் பதிப்பு
estleto
பின் அட்டை ஓவியம்:
Title
Author
Publication
Date of Publication
Printer
Price
அ.ந.க ஒரு சகாப்தம் அந்தனி ஜீவா
மலையக வெளியீட்டகம் கண்டி,
14.02.2009
டெக்னோ பிரிண்ட்
ஒவியர் எஸ்.டி.சாமி
ஒவியர் புகழேந்தி
AA.NA. KE. Oru Shagaptham
Antony Jeeva
Hill Country Publishing House, Kandy.
14.02.2009
Techno Print, Colombo-06
100/=
ISBN 978-955-9084-23-5

சமர்ப்பணம்
அறிஞர் அ.ந.க.வை எனக்கு அறிமுகப்படுத்திய இலக்கிய ஜாம்பவான், அமரர் தான்தோன்றிக் கவிராயர் சில்லையூர் செல்வராசன் அவர்கட்கு.

Page 5
முன்னிடு
அறிஞர் அ.ந.க.வை ஐம்பதுகளின் இறுதியில் முதன் முதலில் சந்தித்தேன்.அவர் அம்ரர்"ஆகும்வரை அவரது பாசமிகு நட்புத் தொடர்ந்தது. அவரது அறிவூட்டல்கள் எனது முன்னேற்றத்திற்குப் படிக்கற்களாக அமைந்தன.
அந்த இலக்கிய மேதைக்கு நான் செலுத்தும் அஞ்சலியே இச் சிறு நூல். இந்தக் கட்டுரைகளைத் தினகரனில் "சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகன்" பிரசுரித்த தினகரன் பிரதம ஆசிரியரான அமரர் திரு. ஆர். சிவகுருநாதன் அவர்களுக்கும் இதனைப் "பதிவுகள்” இணையத்தளத்தில் வெளியிட்டவர்களுக்கும் இந்தக் கட்டுரையை நூலாக வெளியிடத் தூண்டிய கவிஞர் மேமன்கவி அவர்கட்கும் நூலின் அட்டைப்பட அமைப்புக்கு உதவிய கலைஞர் கலைச்செல்வன், இந்நூலின் திருத்தி உதவிய பெரியார் மா. பாலசிங்கம் அவர்களுக்கும், கணனியில் பதிப்பித்த சுதர்ஷினி எனது இதயபூர்வமான நன்றிகள், எனது இதய நன்றிகள்.
அந்தனி ஜீவா

அ.ந.க ஒரு சகாப்தம்
“வாலிபத்தின் வைகறையில் பள்ளி மாணவனாக யாழ்ப்பாணத்து நகரக் கல்லூரிக்கு வந்து விட்டு மாலையில் கிராமத்தை நோக்கிப் புகைவண்டியில் செல்லுகையில் சில சமயம் தன்னந் தனியே அமர்ந்திருப்பேன். அப்பொழுது எண் கணிகள் வயல் வெளிகளையும் தூரத்துத் தொடு வானத்தையும் உற்று நோக்கும். உள்ளத்திலும் உடம்பிலும் சுறுசுறுப்பும் துடிதுடிப்பும் நிறைந்த காலம். உலகையே எண் சிந்தனையால் அளந்து விட வேண்டுமென்று பேராசை கொண்ட காலம்.”
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் அமரராகிவிட்ட எழுத்” தாளரும் சிந்தனையாளரும் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் தன் இளமைக்" கால நினைவலைகளை மேற்கண்டவாறு எழுதியுள்ளார். எழுத்தாளர்களின் இளமைக்கால நினைவலைகள் இவ்வாறாகத்" தானிருக்கும்.
அமரர் அ.ந.க.வின் எழுத்துகளை மீண்டும் மீண்டும் படிக்"
கும் பொழுது அவரது துள்ளும் தமிழும் துடிப்புள்ள நடையும் எம்மை மீண்டும் படிக்கத் தூண்டும்
இலக்கியவானில் சுடர் நட்சத்திரம்.
சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக, ஈழத்து இலக்கிய வானில் சுடர் நட்சத்திரமாகத் திகழ்ந்த அறிஞர் அ.ந.கந்தசாமி அவர்கள் 1968 ஆம் ஆண்டு பெப்ரவரி 14 ஆம் திகதி அமரரானார். ஈழத்தின் சிறந்த சிறுகதை ஆசிரியரும் பிரபல

Page 6
நாவலாசிரியரும் ஒப்பற்ற சிருஷ்ட்டிகர்த்தாவுமான அ.ந.கந்த" சாமி அவர்களின் மறைவு கேட்டு இலக்கிய உலகமே நிலை கலங்கியது. அ.ந.க.வின் மறைவு இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
மரபு - முற்போக்கு - நற்போக்கு சலசலப்பிற்கிடையே அமைதியாகத் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டு, இலக்கியத்திற்காகப் பாடுபட்ட அ.ந.கந்தசாமி தனக்குப் பின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்காகப் பாடுபடத் தேசிய இலக்கியப் பரம்பரையை உருவாக்கியுள்ளார். ஏழை, பணக்கார பேதம் சாதி, சமயப் பாகுபாடு, முதலாளி - தொழிலாளி பிரச்சினை ஆகிய விவகாரங்களில் சமதர்ம சமத்துவத்தை மூலக் கருவாக வைத்து யதார்த்த இலக்கியம் படைத்த அ.ந.கந்தசாமி கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிபெயர்ப்பு ஆகிய இலக்கியத் துறைகளில் சாதனை படைத்தார். அந.க. வின் வானொலிப் பங்களிப்புப் பேசப்படத்தக்க காத்திரமானது. நாடகம், சித்திரம், விமர்சனம் ஆகிய துறைகளில் காத்திரமான வானொலிப் பங்களிப்புச் செய்தார். இலக்கிய அலைகளை ஓடவிட்டு வானொலி நிகழ்ச்சிகளுக்கு இலக்கியத் தரத்தை ஏற்படுத்தினார். பத்திரிகைத் துறையிலும் அவரது முத்திரை தமிழ் வாசகரை பிரமிக்க வைத்தது. தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் பங்களிப்புச் செய்தார்.
இத்தகைய பன்முக எழுத்து ஆளுமையை தன்னகத்தே கொண்டிருந்த அ.ந.க வின் எழுத்துக்கள் புதிய பரம்பரைக்கு புதிய தேகத்தைக் காட்டும் எனபதில் ஐயமில்லை.
துள்ளி விளையாடும் பள்ளிப் பருவம்.
சிறுவயதில் தனது பெற்றோரை இழந்த அ.ந.க. யாழ்ப்பாணம் அளவெட்டியில் தனது பால்ய காலத்தின் சிறு பகுதியைக் கழிக்க நேர்ந்தது. அதன் விளைவாக அம்மண்ணின் மேல் கொண்ட பற்றுதலினாலும் - அளவெட்டியைச் சேர்ந்த நடராஜா என்பவரைக் குறிப்பதற்காகவும் தனது பெயருக்கு முன்னால் "அ"வையும், "ந”வையும் சேர்த்துக் கொண்டார். இவரது குடும்பத்தவர்களுக்குச் சொந்தமான கே.கே.எஸ்.வீதியில் அமைந்திருந்த நாற்சார் வீடுகளிலொன்றே (கடையுடன் கூடியது
8

கில்னர் கொலிஜிற்கு முன்பாக உள்ளது) பலரது கை மாறிப் பின்னர் பேராசிரியர் கைலாசபதியின் சகோதரர் பூரீபதியின் கைக்கு மாறியது.
அ.ந.கந்தசாமியவர்கள் சிறு வயதில் தாய் தந்தையரை இழந்து - பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். இவரது தந்தையாரான நடராசா யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் வைத்தியராகக் கடமை புரிந்தவர். யாழ்நகரில் கே.கே.எஸ். வீதி யில் உள்ள பல சொத்துகளுக்கு அதிபதியாகவிருந்தவர். இவற்றில் பலவற்றின் பராமரிப்பாளராகவிருந்த உறவினர்கள் சிலர் - பாட்டியின் மறைவுக்குப் பின்னர் அவைகளை அபகரித்துச் சீரழித்து விட்டனர். இதற்கு உடந்தையாகவிருந்த - பிரபலமான சட்டத்தரணியொருவர் பின்னர் தற்கொலை செய்து கொண்டார். இந்தச் சட்டத்தரணி இது போல் பல மோசடிகளைப் புரிவதற்கு உடந்தையாகவிருந்தாரென்றும் அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டாரென்றும் கேள்வி மன்னாரிலும் இவருக்கும் சகோதரர்களுக்கும் நிலபுலன்கள் இருந்தன. அதனை அப்படியே அதில் வசித்து வந்த முஸ்லிம் குடியானவரிடமே விட்டு விட்டார்கள். சிறுவயதில் பாட்டிக்கு விகடனில் வெளிவந்த கல்கியின் "தியாகபூமியை" வாசித்துக் காட்டுவது இவரது முக்கியமானதொரு பொழுதுபோக்கு. இவரது ஒரே தங்கையான தையல்நாயகி என்பவர் ஈழகேசரி சிறுகதைப் போட்டியொன்றில் முதற் பரிசு பெற்றதாகவும் அறியப்படுகிறது. அதன் பின் அவர் ஏதுவும் எழுதியதாக அறியப் படவில்லை. இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் பற்றி ஆய்வு செய்பவர்கள் இது பற்றியும் ஆய்வு செய்வது நல்லது.
அ.ந.க பதினேழு வயதில் தனியாகக் கொழும்பு வந்து விட்டதாக அறியப்படுகிறது. கொழும்பில் இவரது ஆரம்பகால உற்ற நண்பனாகவிருந்தவர் கவிஞர் சில்லையூர் செல்வராசன். இறுதிக் காலத்தில் பெரிதும் துணையாக இருந்தவர் பிரபல தமிழ் எழுத்தாளர் செ.கணேசலிங்கன். இறுதிக் காலம் வரையில் அ.ந.க.வுக்கும் அவரது குடும்பத்தவர்களுக்குமிடையில் நேரடித் தொடர்புகள் ஏதும் இருந்ததாகத் தெரியவில்லை. உடன் பிறந்தவர்கள் ஒரு சகோதரனும் சகோதரியும். எஸ்.எஸ்.ஸி. வரை கல்வி பயின்ற அ.ந.க. தன் சுயமுயற்சியால் ஒரு பட்டதாரியை விட அதிகம் கற்றிருந்தார். "கண்டதும் கற்கப் பண்டிதனாவான்"
9

Page 7
என்ற ஆன்றோர் வாக்குப்படி கண்டதையெல்லாம் கற்றதால் பண்டிதர்களையும் பட்டதாரிகளையும் மிஞ்சும் அளவுக்கு அ.ந.கந்தசாமி புலமை பெற்றிருந்தார். அதனால் தான் மறுமலர்ச்சிக் குழுவுக்கே தலைமை தாங்கும் அளவுக்குத் தகுதி பெற்” றிருந்தார். கதைகளையும் கவிதைகளையும் கட்டுரைகளையும் விரும்பிப் படித்தார். பழைய இலக்கியங்களையும் ஆர்வத்துடன் ஆழ்ந்து கற்றார். இளமையிலிருந்து இலக்கியத்திலிருந்து வந்த ஆர்வந்தான் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடி இவர், என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு இவருக்கு மகிமையைத் தந்தது.
அ.ந.க. ஆரம்பகாலத்தில் "ஈழகேசரி" இலக்கியப் பண்ணையில் வளர்ந்தவர். சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரி ஆசிரியராகவிருக்கும் பொழுது அ.ந.கந்தசாமி அ.செ.முருகா" னந்தம் போன்றவர்கள் பள்ளிப் பருவத்தினராயிருந்தனர். ஈழகேசரி மாணவர் பகுதி நடத்திய போட்டியில் கந்தசாமி எழுதிப் பரிசில் பெற்று, இலக்கியத் துறையில் நிலையான ஈடுபாடு கொள்ள ஆரம்பித்தார்.
எழுத்துத்துறையின் ஆரம்ப காலம்.
இலக்கிய விமர்சகர்களின் கூற்றுப்படி 1930 ஆம் ஆண்டளவில்தான் ஈழத்து இலக்கிய உலகில் இளைஞர் பலர் தோன்றினர். இவர்கள் இளமைத் துடிப்பின் காரணமாக ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்கள். அ.ந. கந்தசாமி இந்த இளைஞர் வரிசையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். அ.ந.கந்தசாமி காலத்தில், எழுத்துலகில் ஈடுபட்டவர்களில் முக்கியமானவர்களாக அ.செ.முருகானந்தம், தி.சா.வரதராசன் (வரதர்), சு.இராஜநாயகன், தாழையடி சபாரத்தினம் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
இந்தக் காலத்தைத் தொடர்ந்து இளைஞர் பலர் ஒன்று கூடி "மறுமலர்ச்சி” என்ற இலக்கிய இதழினை வெளியிட்டனர். இஃது ஈழத்து இலக்கிய வட்டத்தின் "மணிக்கொடி" ஆகத் திகழ்ந்தது. இந்த மறுமலர்ச்சிக் குழுவினர் இலக்கியத்தின் எல்லாத் துறைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். மறுமலர்சிக் குழுவில் பிரபல்யம் பெற்ற அ.ந.கந்தசாமியை, முற்போக்கு இலக்கிய வட்டம் தம் முன்னோடி என்று
10

கூறிக்கொள்ளும் அளவுக்கு பிற்காலத்தில் அவருடைய முற்போக்கு இலக்கிய வளர்ச்சி அமைந்திருந்தது.
“மணிக்கொடி" யுகத்தைத் தோற்றுவித்த சிறுகதைச் சிற்பி புதுமைப்பித்தன் தமிழக எழுத்தாளர்களின் போற்றுதலுக்கு உரியவராக விளங்குவது போல மறுமலர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்த அ.ந.கந்தசாமியும் ஈழத்து எழுத்தாளர்களிடையே முன்னோடியாக விளங்கினார்.
யாழ்பாணத்தில் மறுமலர்ச்சிக் குழுவின் முன்னோடி" யாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி கொழும்பு வந்தார். கொழும்பு வந்ததும் கொழும்பு வாழ்க்கையில் உறைந்து போகாது அமைதியை விரும்பினார். சமரச சன்மார்க்கக் கருத்துகளில் மனதைப் பறிகொடுத்த அ.ந.க. அன்பு மார்க்கத்தில் அவாக் கொண்டார். ஆனால் வாழ்க்கைப் பிரச்சினை காரணமாக அரசாங்க உத்தியோகம் ஒன்றில் அமர்ந்து விட்டுப் பின்னர் “ஒப்சேர்வர்" என்ற ஆங்கிலப் பத்திரிகையின் "புரூப் ரீடராக" தொழில் புரிந்தார். அங்கும் கொஞ்சக் காலமே கடமையாற்றினார்.
தமிழகத்துப் பெரியார் ஈ.வெ.ராவின் பகுத்தறிவுக் கருத்துகளில் ஈடுபாடு காட்டினார். அ.ந.க. மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையில் அக்கறை கொண்டவர். இதனால் இடதுசாரி இயக்கங்களால் கவரப்பட்ட அ.ந.கந்தசாமி இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கத்தவரானார். மார்க்ஸிய தத்துவ நூல்களை விரும்பிப் படித்தார்.
பத்திரிகைத் துறையினை மிகவும் நேசித்த அ.ந.க. "ஒப்சேவர்" பத்திரிகைப் பணிக்குப் பிறகு “வீரகேசரி" ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். வீரகேசரியில் பணியாற்றிய காலத்தில் அச்சகத் தொழிலாளர்கள் படும் துன்பத்தைக் கண்டு மனம் நொந்தார். அவர்களின் நலனில் அக்கறை கொண்டார். பொதுவுடைமைக் கருத்துகளில் ஊறிப்போயிருந்த அ.ந.க. அச்சகத் தொழிலாளர்களுக்காகப் போராடத் தயங்கவில்லை. அதனால் அச்சக முதலாளிகளின் வெறுப்பினைச் சம்பாதித்துக் கொண்டார். அதன் காரணமாக வீரகேசரியிலிருந்து விலக்கப்பட்டார்.
11

Page 8
தொழிலாளர் நலனில் அக்கறை.
அச்சகத் தொழிலாளர்கள் எப்பொழுதுமே அ.ந.க.வின் மேல் பெருமதிப்பு வைத்திருந்தார்கள். அவருடைய மரணச் சடங்கில் அச்சகத் தொழிலாளர்கள் சங்கம் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் - பிரேத ஊர்வலத்திலும் பெருந்தொகையானவர்கள் கலந்து கொண்டார்கள்.
பின்பு கம்யூனிஸ்ட் கட்சி முழுநேர ஊழியரானார். கம்யூ" னிஸ்ட் கட்சியின் தமிழ்ப் பத்திரிகையான “தேசாபிமானி"யின் முதலாவது ஆசிரியர் அ.ந.கந்தசாமியே. “தேசாபிமானி"யின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டார். அப்பத்திரிகையில் அவர் எழுதிய சிறுகதைகள், அரசியற் கட்டுரைகள் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தன.
கம்யூனிஸ்ட கட்சியின் முழுநேர ஊழியராகக் கடமை" யாற்றிய காலத்தில் அ.ந.கந்தசாமி தொழிற்சங்க இயக்கங்களில் பெரும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார். மலையகத்தின் எல்பிட்டிய என்னுமிடத்தில் சிலகாலம் தோட்டத் தொழி: லாளர்கள் பிரதிநிதியாகக் கடமையாற்றினார். உழைப்பையே நம்பி வாழும் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டித் தீவிரமாக உழைத்தார். அவர்களின் இன்பதுன்பங்களில் பங்கு கொண்டார். அ.ந.கந்தசாமி மலைநாட்டு உழைக்கும் தொழிலாளர்கள் மீது எப்பொழுதும் பெருமதிப்பு வைத்திருந்தார். தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னின்று உழைத்துள்ளார். அவர்களின் உரிமைக்காகத் தோட்ட நிர்வாகத்தினரிடம் நியாயம் கோரியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற பிரசித்தி பெற்ற ட்ராம் பஸ் வண்டி தொழிலாளர்களின் போராட்டம் வெற்றி பெற உழைத்த" வர்களில் முக்கியமான ஒருவராக அ.ந.கந்தசாமி கணிக்கப் படுகின்றார். தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட காலங்களில் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை வைத்து அமர இலக்கியங்களைச் சிருஷ்டித்துள்ளார்.
கம்யூனிஸ்ட கட்சிக்குள் நடந்த உட்கட்சிப் போராட்டத்" தின் காரணமாக அ.ந.கந்தசாமியும் அவரைச் சார்ந்த ஏழெட்டுப் உறுப்பினரும் வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இது
12

பற்றி அ.ந.க. என்னிடம் பல தகவல்களை நேரடியாக தெரிவித்தார். அங்கிருந்து வெளியேறிச் "சுதந்திரன்" பத்திரிகையில் சேர்ந்தார்.
தினசரிப் பத்திரிகையாக வெளிவந்த “சுதந்திரன்" வாரப் பத்திரிகையாக வெளிவரத் தொடங்கியதும் அ.ந.கந்தசாமி பிரதம ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். 2000 பிரதிகள் மட்டுமே விற்பனையாகிய அப்பத்திரிகையின் விற்பனையை 12,000 பிரதிகளுக்கு பெருக்கிய பெருமை அ.ந.க வையே சாரும். சுதந்திரனில் பணியாற்றிய காலத்தில் எமிலிஸோலாவின் "நானா" என்ற நாவலை மொழிபெயர்த்து வெளியிட்டு இலக்கிய உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை ஆராய்ந்து “பண்டிதர் திருமலைராயர்" என்ற புனைபெயரில் பிரச்னைக்" குரிய பல கட்டுரைகளை எழுதினார். சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரைகள் பெரும் சர்ச்சைக்குள்ளாயின. பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர் இலக்கிய உலகில் அடிபடலாயிற்று. சிலப்பதிகாரத்தைப் பற்றி அ.ந.கந்தசாமி, பண்டிதர் திருமலைராயர் என்ற பெயர்களில் வந்த கட்டுரைகளைத் தமிழகத்துப் பகுத்தறிவுச் சிங்கம் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் தனது குடியரசு பத்திரிகையில் மறுபிரசுரஞ் செய்தது. டன் மட்டுமல்லாது அதைப்பற்றி ஆசிரியர் தலையங்கமும் வரைந்தார். மலேசியாப் பத்திரிகையும் அவற்றை மறுபிரசுரஞ் செய்தது.
அ.ந.க. விற்குப் பின்னர் சுதந்திரன் பத்திரிகையில் ஆசிரியராகப் பணியாற்றிய எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் கீழத் தினபதி, சிந்தாமணி பத்திரிகைகளில் நான் பணியாற்றிய பொழுது அ.ந.க. வின் சிறப்பியல்புகள் பற்றி என்னிடம் சிவநாயகம் கூறியுள்ளார்.
சுதந்திரனில் ஆர்.கே.சண்முகநாதன் ஆரம்பித்த "குயுக்தி யார்” கேள்வி-பதில் பகுதியை அவர் தொடராது விட்டதும், அ.ந.கந்தசாமி அதை ஏற்றுக் "குயுக்தியார்" மூலம் அளித்த பதில்கள் குயுக்தியாருக்கு மேலும் காத்திரமான மவுசை ஏற்படுத்தின என்பதனைப் பத்திரிகைத் துறையில் ஈடுபட்டுள்ள பழம்பெரும் எழுத்தாளர்கள் எவரும் மறுக்க மாட்டார்கள்.
13

Page 9
அ.ந.க சுதந்திரனில் பணியாற்றிய காலத்தை “சுதந்திரனின் பொற்காலம்" என்றே வர்ணிக்கலாம்.
தகவற் பகுதி.
சுதந்திரனிலிருந்து வெளியேறிய பின்பு அரசாங்கத் தகவற் திணைக்களத்தில் மொழிபெயர்ப்பாளராக அ.ந.கந்தசாமி கடமையாற்றினார். தகவற் பகுதியிலிருந்து வெளிவந்த "பூரீலங்கா" பத்திரிகையில் ஆசிரியராகவும் பணியற்றியுள்ளார். தகவற் பகுதியிலிருக்கும் பொழுதுதான் மணவாழ்க்கையில் ஈடுபட்டார். கொஞ்சக்காலம் மணவாழ்வில் திளைத்த கந்தசாமி பின்னர் தனியாக வாழ்க்கை நடாத்தினார். அவர் தமது துணவியைப் பிரிந்து தனிமரமானாலும் தொழிலாளர் தோழர்களுடன் இரண்டறக் கலந்து இனிய பண்புடன் பழகி வந்தார். பாராளுமன்ற அமைச்சர் முதல் பாட்டாளிகள் வரை அந.கவிற்கு நண்பர்களுண்டு. நண்பர்களைச் சந்தித்தால் அவருக்கு உற்சாகம் பிறந்து விடும். வீதியில் அல்லது ஹோட்டலில் "பிளேயின் ரீ”யை அருந்தியவாறு ஆயிரம் கதைகள் பேசுவார். நாடக கலைஞர்களை இளம் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிப்பதில் வல்லவர்.
தகவற்பகுதியில் 12, 13 வருட கால சேவையுடன் ஒய்வு பெற்றார். ஒய்வு பெற்றவுடன் இலக்கிய உலகை விட்டுச் சிலகாலம் "அஞ்ஞாதவாசம்" பண்ணிய அ.ந.க மீண்டும் புது வேகத்துடன் இலக்கியத் துறையிலிடுபட்டார். "டிரிபியூன்” என்ற ஆங்கி லப் பத்திரிகையில் சிலகாலம் பணியாற்றிய பின்னர் முழுநேர எழுத்தாளராகப் "பேனாவை" நம்பி வாழத் தொடங்கினார்.
ஆங்கில வார இதழான டிரிபியூனில் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலத்தில் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியதுடன் திருக்குறளைப் பற்றிப் புத்தகமாக்குமளவிற்கு நிறையக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அ.ந.கந்தசாமியின் ஆங்கில ஆராய்ச்சிக் கட்டுரைகள் காலஞ்சென்ற அறிஞர் ஆபிரகாம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகளின் பாராட்டுதலைப் பெற்றன.
14

பத்திரிகைத் துறை.
வீரகேசரி, தேசாபிமானி, சுதந்திரன், பூரீலங்கா, டிரிபியூன் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரிய பீடங்களிலிருந்த அ.ந.கந்த" சாமிக்குப் பத்திரிகைத் துறையில் நிறைய அனுபவமுண்டு. விரல்விட்டு எண்ணக் கூடிய சிறந்த பத்திரிகையாளர்களில் அ.ந.கவும் ஒருவர்.
தினசரிப் பத்திரிகை ஒன்றில் ஆசிரியராக இருப்பது கடினமான செயல். ஆனால் அஃது அ.ந.கந்தசாமிக்குக் கை வந்த கலை. அதில் அவர் மிகச் சுலபத்தில் வெற்றியீட்டினார். "செய்தி” போன்ற வார இதழ்கள் சிறப்பாக வெளிவந்ததற்கு அவர் வழங்கிய ஆலோசனைகளே காரணமாகும் என்பது மறைக்க முடியாத உண்மையாகும்.
அறிஞர் அ.ந.கந்தசாமியைக் கட்சிக் கண் கொண்டு பார்ப்பவர்களே அதிகம். இல்லாவிடில் அவரை ஆசிரியராகக் கொண்டு ஒரு சிறந்த தினசரிப் பத்திரிகை வெளிவந்திருக்கும். ஆனால் அந்தப் பாக்கியம் அவரைக் கட்சிக் கண்கொண்டு பார்த்ததால் கிடைக்காது போயிற்று. ஈழத்து இலக்கிய இரசிகர்கள் செய்த புண்ணியம் அவர் தானே ஒரு நிறுவனமாக எழுத்தைத் தொழிலாக மேற்கொண்டார். பத்திரிகை ஆசிரியராகியிருந்தால் அந்தப் பத்திரிகையின் வெற்றியில்தான் அவரது சிந்தனையைச் செலவிட்டிருப்பாரேயொழிய "மதமாற்றம்" போன்ற நாடகத்தையும்" "மனக்கண்" நாவலையும் தந்" திருக்கவே மாட்டார்.
முதல் சந்திப்பு.
பள்ளி மாணவனாக - எழுத்துத் துறையின் ஆரம்ப அரிச்சுவடியை மனனம் பணி னும் சிறுவனாக இருந்த வேளையில் அ.ந.கந்தசாமி அவர்களைத் தகவற் பகுதியில்தான் சந்தித்தேன். அப்பொழுது "ஷெல்" கம்பனியில் சில்லையூர் செல்வராசன் பணியாற்றினார். அ.ந.கவின் மூலமே சில்லையூர் செல்வராசனின் அறிமுகம் ஏற்பட்டது.
எனக்குக் கலையுலகின் நெளிவு சுழிவுகளை ஆரம்ப - காலத்தில் அறிமுகப் படுத்திய - கலைஞர் கலைதாசன் என்ற
15

Page 10
நண்பருடன் நான் நடத்திய "தேசபக்தன்" என்ற பத்திரிகைக்கு, ஆலோசனையும் கட்டுரையும் கேட்பதற்காகவே அ.ந.க.வை சந்திக்கத் தகவற் பகுதிக்குச் சென்றேன்.
பிரபல எழுத்தாளரும் முற்போக்கு இலக்கியத்தின் முன்னோடியுமான அ.ந.கந்தசாமி எப்படியிருப்பாரோ? நம்மிடம் முகம் கொடுத்துப் பேசுவாரோ? அல்லது ஒரிரு வார்த்தைகளுடன் உரையாடலை முடித்துக் கொள்வாரோ? என்று அஞ்சியபடியே சென்றேன். ஆனால் அ.ந.க என்னை அகமும் முகமும் மலர வரவேற்று, என்னை பற்றி அதிக அக்கறையுடன் விசாரித்து என்னுடைய ஆரம்ப இலக்கிய முயற்சிகள் பற்றிக் கேட்டு அதற்குரிய ஆலோசனைகளையும் கூறியப் பின்னர் பத்திரிகைத்துறை பற்றி அவரின் சொந்த அனுபவங்களை எடுத்துக் கூறினார்.
அவரது நட்பு எனக்கு ஏற்பட்டது அறுபதுகளின் பிற்பகுதியில் அதன் பின் அவரின் அந்திம காலம் வரை அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தேன். அவரைச் சந்திக்கும் பொழுதெல்லாம் எழுத்துலக இடர்பாடுகளையும் பத்திரிகைத்துறை அனுபவங்களையும் அடிக்கடி கூறுவார். இலங்கை சமசமாஜக் கட்சியின் முழுநேரத் தொண்டனாக நான் பணியாற்றிய வேளையில் தொழிற்சங்கப் பிரிவில் வெளிவந்த “ஜனசக்தி" பத்திரிகையில் நான் ஆசிரியராகப் பணியாற்றியபொழுது பத்திரிகை அமைப்பு முறைகளைப் பற்றி அரிய ஆலோசனைகள் கூறி எனது வழிகாட்டியாக அமைந்தார்.
ஈழத்துத் தேசிய பத்திரிகைகளில் பணியாற்றும் பலர் அ.ந.க.வுடன் தொடர்புள்ளவர்களே. தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மாத்திரமன்றி ஆங்கில, சிங்களப் பத்திரிகையாளர்களுடனும் நல்ல தொடர்புடையவர் அ.ந.க என்பது நாடறிந்த உண்மை" யாகும்.
கவிதையும் கந்தசாமியும்.
கவிதையின் மூலம் இலக்கிய உலகில் சுவடுகளைப் பதித்த அ.ந.க. அத்துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஆரம்பத்தில் “கவீந்திரன்" என்ற பெயரில்தான் நிறைய கவிதை
16

எழுதினார். அவர் "இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க வெளியீடான" "புதுமை இலக்கியம்" இதழில் கவிதையைப் பற்றி எழுதியுள்ளது.
"எந்த மொழியை எடுத்துக் கொண்டாலும் முதலில் செய்யுள் தோன்றிய பின்னர் தான் வசனம் தோன்றியிருக்கிறது. தமிழ் இலக்கியம் இதற்கு விதிவிலக்கல்ல. வள்ளுவர், கம்பர் இளங்கோ வளர்த்த கவிதை தமிழின் மடியில் பிறந்ததுதான். இன்றைய வசனத் தமிழ் தென்னகத்தில் போலவே ஈழத்திலும் வசன இலக்கியத்தில் முன்னோடியாகப் பன்னெடுங்காலம் கவிதைத் தமிழ் முழங்கி வந்திருக்கிறது. வசன இலக்கியம் நேற்றுப் பிறந்த பிள்ளை. அதன் சரிதம் கைப்பிடிக்குள் அடங்கும், மிகச் சுருங்கிய சரிதம், ஆனால் இலக்கிய உலகின் அரசியாகிய கவிதைத் தேவியோ நீண்டகாலம் வாழ்ந்தவள். காவியத்தின் சரிதை காலச் சேற்றில் ஆழப் புதைந்து கிடக்கிறது. நீண்ட அதன் சரித்திரத்தை நிமிர்த்தி நிறுத்திக் கணக்கிடுவது இலகுவான காரியமல்ல. கடினமான அப்பணியை எதிர்காலத்தில் யாராவது நிறைவேற்றுவர்.
செந்தமிழின் பொற்காலம் எனப் புகழப்படும் சங்க காலத்தில் கூட ஈழத்துக் கவிதையின் நன்மணம் கடல் கடந்து பரவிருந்தமைக்குப் போதிய சான்றுகள் உள்ளன. தமிழ் கூறும் நல்லுகம் முழுவதிலும் நடைபெற்ற இலக்கிய முயற்சிகளின் போக்கை எடுத்து விளக்க நற்றிணை, குறுந்தொகை, அகநாநூறு ஆகிய நூல்களில் ஈழத்துப் பூதந்தேவனார் எழுதிய அழகிய பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.
ஈழத்துப் பூதந்தேவனார் காலத்தைக் கடந்து நிற்கிறார். தமிழ் இலக்கியத்தின் சுவையறிந்து போலும் ஆசை மேலிட்டு நீலக்கடல் அதனைப் பெரும்பாலும் உட்கொண்டு விட்டது. பெரியதொரு கவிஞர் பட்டியலில் எஞ்சியிருக்கும் ஒரு சில நூற்றுவரில் பூதந்தேவனார் ஒருவர். ஆனால் அவர் மட்டுந்தானா முன்னாளில் தமிழ்க் கவிதைச் சங்கூதிய பெருமகன்? இன்னும் பலர் இருந்திருக்கலாம். ஆனால் அவர்களைப் பற்றி நாம் இன்று ஒன்றும் அறிய முடியாதிருக்கிறது."
ஈழத்துத் தமிழ்க் கவிதையைப் பற்றிக் கூறிப் பெருமைப்படும் அ.ந.கந்தசாமி "உலகப் படத்தில் சிறு புள்ளியாக
17

Page 11
விளங்கும் இலங்கையில் - சிறுபான்மையினராக விளங்கும் தமிழ் பேசுவோர் கவிதையின் மீது கொண்டிருக்கும் ஆர்வமும் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு ஆற்றும் தொண்டும் வியக்கக் கூடியனவாகும்” என்று அடிக்கடி கூறுவார்.
கவிதையைப் பற்றிக் கதையளப்பதுடன் நில்லாது, கவிதை பாடுவதில் தன் கைவண்ணத்தையும் காட்டியுள்ளார். "எதிர்காலச் சித்தன் பாடல்" "துறவியும் குஷ்டரோகியும்”“சத்திய தரிசனம்" ஆகியவை பலரால் பாராட்டப்பட்டவை.
1966 ஆம் ஆண்டு பூரீலங்கா சாகித்திய மண்டலம் நடத்திய "பாவோதல்" நிகழ்ச்சியில் அ.ந.கந்தசாமி பாடிய "கடவுள் என் சோர நாயகன்” என்ற கவிதை பாவோதல் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. அந்தக் கூட்டத்தில் குறிப்புரையாற்றிய தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை “ஒரு நூற்றாண்டிற்கு ஒரு தடவைதான் இதைப் போன்ற நல்ல கவிதை தோன்றும்" எனப் பாராட்டினார். பல கவிதை அரங்குகளின் தலமைப் பீடத்தை அலங்கரித்துள்ளார் அ.ந.க.
தேசபக்தன் பத்திரிகையில் “கசையடிக் கவிராயர்" என்ற பெயரில் ஈழத்து இலக்கிய உலகில் நடைபெறும் திருகுதாளங்களையும் காசு கொடுத்து உண்மைப் படைப்பாளிகளின் படைப்புகளை வாங்கித் தம் சொந்தப் பெயரில் புத்தகமாகப் போடும் நபுஞ்சகத்தனத்தைக் கடுமையாகச் சாடினார்.
இதனால் இலக்கிய உலகில் அ.ந.கந்தசாமியைக் குறை கூறுவதைத் தொழிலாகச் சில உதிரிகள் மேற்கொண்டனர். "கசையடிக் கவிராயர்" என்ற பெயரில் எழுதிய கண்டனக் கவிதைகளில் கூடத்தன் இனத்தைச் சார்ந்த கவிஞர்களை மறந்துவிட்ட இலக்கிய விமர்சகர்களைப் பார்த்து "நற்கவிஞன் பீதாம்பரனை மறந்தாயோ?” என ஆத்திரங்கொண்டு ஆவேசத்துடன் அம்மானை பாடுகிறார்.
இதைப் போன்று தமிழகத்துப் புதுமை இலக்கியத்தின் விடிவெள்ளியாகிய புதுமைப் பித்தனும் கவிதைகளை எழுதியுள்ளார். அவர் பாடியதில் ஓரிரு வரிகள் பின்வருமாறு:
18

".மேல் நோக்கிக்
கொட்டாவி விட்டதெல்லாம்
கூறு தமிழ்ப் பாட்டாச்சே/
முட்டாளே/ இன்னமுமா பாட்டு?" என்று பாடியுள்ளார்.
இலக்கிய மலடர்
கசையடிக் கவிராயர் பெயரில் அ.ந.க எழுதிய பாடல்கள் இலக்கிய மலடர்களுக்குச் சாட்டையடிகளாக விழுந்தன. எழுத்தாளர் தேசிய கீதத்தை எழுதிய பெருமை இவரையே சாரும். அந்தக் கவிதை இலங்கை முற்போக்குச் எழுத்தாளர் சங்கத்தின் அகில இலங்கை எழுத்தாளர் மாநாட்டின்போது வெளியிடப் பெற்ற "புதுமை இலக்கியம்" சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளது. அந்தக் கவிதையைக் "கவீந்திரன்" என்ற பெயரில் அ.ந.க எழுதியுள்ளார். புதுமை இலக்கியம் மலர்களில் இதே கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது. அந்த எழுத்தாளர் கீதத்தின் சில வரிகளை இங்கு குறிப்பிடுவது சிறப்பாகும்.
"எழுத்தெனும் சங்கம்
ஒலித்திடுகின்றது
உழுத்திடும் உலகம்
ஒழிந்திடவே"
என முழங்கும் அ.ந.க
"சரணிடல் மிகுந்தது
துர்ச்சி நிறைந்தது
இருணிட இச்சமுதாயம்/
வறண்டு கிடந்திடும்
மக்களின் துண்ப
வதைகளி ஒழித்திடுவோம்
4.Asw JayamLoLÜLyub Asllovaníl@Gaulruð //...”
எனச் சுரணிடலும் சூழ்ச்சியும் நிறைந்த இச்சமூக அமைப்பைப் பேனா முனை கொண்டு ஒழித்துப் புது அமைப்பை அமைக்க அறைகூவி அழைத்திடும் கவிஞர் தமிழ்
19

Page 12
இலக்கியத்தின் மூத்த பரம்பரையைச் சேர்ந்த கம்பன், வள்ளுவனை இனங்கண்டு இப்படிக் கூறுகிறார்.
"கம்பன் - வள்ளுவனர்
காளமேகம் வழி
வந்தவர் தாமர்ைறோ..?
கிரண், ஒளவை
இளங்கோ பெற்ற
கீர்த்தி நமதன்றோ?
நாவலன் - பாரதி
சோமசுந்தரன்
தமது இனமன்றோ? அவர்
யாவரும் காட்டும்
வழியே நமது
இலக்கிய நல்வழியாம் அவர்
வழியே சென்று
ஒளிசேர் தமிழை
விழி போற் காத்திடுவோம்"
காவிய மன்னர்களின் பெருமையைச் செப்பிய அ.ந.க மீண்டும் பாடுகிறார்.
வானவில் வர்ணம் ஏழு
வளைவதைக் கண்டிடுவீர்.
காணகத்தில் கனிகள் ஆயிரம்
காற்றில் அசைவதைப் போல்
பூங்காவணத்தில் ஆயிரம் ஆயிரம்
பூக்கள் மலர்வதைப் போல்
புத்தம் புதிய கருத்துகள் ஆயிரம்
நித்தம் பெருகவென." எனக் கூறும் அ.ந.கந்தசாமி "நமக்குத் தொழில் கவிதை. நாட்டிற்குழைத்தல். இமைப்பொழுதும் சோராதிருத்தல்" என்று ஞாபகப் படுத்துகிறார்.
20

அ.ந.கந்தசாமியின் கனவு பொய்த்து விடவில்லை. அவர் வாழ்ந்த காலத்திலே அது நனவாகிக் கொண்டிருந்தது. எத்தனை எத்தனை கவிஞர்கள் தோன்றி நித்தம் நித்தம் ஆயிரம் கவிதைகள் படைத் தவணிணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டுக் கவிஞர்களைக் கூட விஞ்சும் அளவுக்குக் கவிதை வானில் உலா வருகிறார்கள். பாரதிக்குப் பின் தமிழ்க் கவிதைகள் வளர்ச்சிக்கு ஈழத்தவர்களே சிறப்பாகப் பணியாற்றியுள்ளனர் எனத் தமிழகப் படைப்பாளிகளே பாராட்டுகின்றனர்.
ஈழத்தில் தீண்டாமைப் பேய் தாழ்த்தப்பட்ட குடிமகனொருவனை வில்லூன்றி மயானத்தில் பலி கொண்டபொழுது அதனை முதன் முறையாகக் கண்டித்து "வில்லூன்றி மயானம்" கவிதை படைத்தவர் அ.ந.க. என்பதையும் இத்தருணத்தில் நினைவு கூறுவது பொருத்தமானதே. வீரகேசரியில் "வெண்பா எழுவது எப்படி?” என்றொரு தொடரினையும் அ.ந.க எழுதி யுள்ளதாக அறிகின்றோம். அ.ந.க.வின் கவிதைகள் சிலவற்றை பின்வரும் பதிவுகள் இணையத்தளத்தில் வாசிக்கலாம்.
http://www.geotamil.com/pathivukal/poems ank.html
அ.ந.க.வின் கவிதைகள் சில.
சிந்தனையும் மின்னொளியும்
சாளரத்தின் ஊடாகப் பார்த்திருந்தேன் சகமெல்லாம் உறங்கியது அர்த்த ராத்திரி வேளையிலே வானம் நடுக்கமுற வையமெல்லாம் கிடுகிடுக்க மோனத்தை வெட்டி யிடியன்று மோதியதே "சட்” டென்று வானம் பெய்த்ததுபோல் பெருமாரி கொட்டத் தொடங்கியது. “ஹோ” ரென்ற இரைச்சலுடன் ஊளையிடு நரியைப் போல் பெருங்காற்றும் உதறியது. ஆளை விழுத்திவிடும் அத்தகைய பேய்க்காற்று சூறா வளியிதுவா உலகினையே மாய்க்க வந்த ஆறாத பெருஊழிக் காலத்தின் காற்றிதுவா? சாளரத்துக் கதவிரண்டும் துடிதுடித்து மோதியது. * ஆழிப்பெரும் புயல்போல் அல்லோலம் அவ்வேளை
21

Page 13
உலகம் சீரழிவுற்ற(து) அப்போ வானத்தில் மாயும் உலகினுக்கு ஒளி விளக்கந் தாங்கிவந்த காயும் மின்னலொன்று கணநேரம் தோற்றியதே. கொட்டுமிடித்தாளம் இசைய நடம் செய்யும் மட்டற்ற பேரழகு வான்வனிதை போல் மின்னல் தோன்றி மறைந்ததுவே சிந்தனையின் தரங்கங்கள் ஊன்றியெழுந்தன இவ்வொளிமின்னல் செயல் என்னே? வாழ்வோ கணநேரம் கணநேரம் தானுமுண்டோ? சாவும் பிறப்பும் கணநேரத் தடங்குமன்றோ? ஐனனப் படுக்கையிலே ஏழை மின்னல் தன்னுடைய மரணத்தைக் கண்டு துடிதுடித்து மடிகின்ற சேதி புதினமன்று அச்சேதியிலே நான் காணும் சோதி கொளுத்திச் சோபிதத்தைத் செய்துவிட்டு ஒடி மறைகிறது வாழும் சிறு கணத்தில் தேடி ஒரு சேவை செகத்திற்குச் செய்ததுவே சேவையதன் மூச்சு அச்சேவை யிழந்தவுடன் பிரிந்து அகல்வானில் கலந்ததுவே என்னே இம் மின்னல(து) எழிலே வென்றிருந்தேன். மண்ணின் மக்களுக்கு மின்னல் ஒரு சேதி சொல்லும். வாழும்கிறு கணத்தில் வைய மெலாம் ஒளிதரவே நாளும் முயற்சி செய்யும் நல்லசெயல் அதுவாகும். இந்த வாறாகச் சிந்தனையில் வீழ்ந்துவிட்டேன். புத்தி நடுங்கப் புரண்டதோர் பேரிடி நான் இந்த உலகினிற்கு வந்தடைந்தேன் என்னுடைய சிந்தனையால் இச்சகம்தான் சிறிதுபயன் கண்டிடுமோ? அறிஞர் அ.ந.கந்தசாமியின் ஆரம்பகாலக் கவிதையிது. ஈழகேசரியில் வெளிவந்தது:
எதிர்காலச் சித்தன் பாடல் எதிர்காலத் திரைநீக்கி அதற்கப் பால் யான் ஏகிட்டேன் ஏகிட்ட போதில் எண்முன் கதிர்போலும் ஒளிமுகத்தான் கருணையூறும்
22

கமலம்போற் கண்ணினையான் ஒருவன் வந்தான் "எதிர்கால உலகமிது மனிதா நீயிங் கேன்வந்தாய் இவன்காணும் பலவுமுன்னை அதிர்வெடி போல் அலைக்கழிக்கும் தனலாலே அப்பனே நிகழ்காலம் செல்க" என்றான்.
அறிவினிலே அடங்காத தாகம் கொண்டேன் அவ்வுரையால் அடங்கவில்லை அவனை நோக்கிச் “செறிவுற்ற பேரறிவின் சேர்க்கை வேண்டும் செந்தமிழன் யானொருவன் தனலாலே மறுவற்ற பேராண்மைக்கோட்டை என்னை மலைவுறுத்தா தெதிர்காலம்" என்று கூறிக் குறுகுறுத்த விழியுடையான் குழுத வியான் குணமென்ன பெயரென்ன என்று கேட்டேன்.
"எனக்குமுன்னே சித்தர்பலர் இருந்தா ரப்பா எதிர்காலச் சித்தன்யான் நிகழ்காலத்தவர் உனக்குமுன்னர் வாழ்ந்திட்ட சித்த ரல்லால் உன்காலச் சித்தரையும் ஏற்கா ரப்பா மனக்குறைவால் கூறவில்லை மகிதலத்தில் மடமையரு மயக்கத்தின் கட்சி என்றும் கனத்துளதிங் கென்பதையே கருதிச் சொன்னேன் காசினியின் பண்பிதனைக் காணப் பா நீ.
வருங்காலச் சித்தனுரை செய்த வார்த்தை வையகத்தார் அறிதற்காய் இங்கு சொல்வேன் "பெரும்போர்கள் விளைகின்ற நிகழ்காலத்தில் பிளவுறுத்தும் பலவகையாம் பேதமுண்டு ஒருமைபெறும் மனிதர்களை ஒன்றா வண்ணம் ஊடமைத்த சுவரனைய பேதம் யாவும் நோக்கிடுவாய் தூரனதிர் கால மீதே"
23

Page 14
அண்டுபவர் அண்டாது செய்வதேது அநியாய பேதங்கள் பெயரைச் சொல்வேன் துண்டுபட்டுத் தேசங்கள் என்றிருத்தல் தூய்மையாம் இனம், மொழிகள், மதங்களென்று அன்றுதொட்டிங் கின்றுவரை இருக்குமந்த அர்த்தமிலாப் பிரிவினைகள் எல்லாம் சாகும். ஒன்றுபட்டிவ் வுலகெல்லாம் ஒற்றையாகும் ஒருமொழியில் ஒரரசு பிறக்குமப்பா.
அரசெல்லாம் ஒழிந்துலகில் ஒரரசே யுண்டாம் அறங்கூறும் ஒருமதமே உலகெல்லாம் விரசமொடு விகற்பங்கள் வளர்க்குமொழி எல்லாம் வீழ்ந்துவிடும் ஒருமொழியே இவ்வுலகில் உண்டாம் சரசமொடு உலகத்து மக்களெல்லாம் தம்மைச் சமானர்கள் மனிதகுலம் என்ற இன மென்பார் அரசர்கள் ஏழைபணக்காரனென்ற பேதம் அத்தனையும் ஒழிந்து விடும் எதிர்கால உலகில்.
செந்தமிழும் சாமீழச் சிங்களமும் சாகும் செகமெல்லாம் ஒருமொழியே தலை தூக்கி நிற்கும். நந்தமிழர் இனம் இனஞ்சாகும் பிற இனமும் சாகும் நாடெல்லாம் மனித இனம் ஒன்றுதலை தூக்கும். எந்தமொழி இவ்வுலகில் நிலவுமெனக் கேட்பில் எண்ணிக்கை கொண்டமொழி எம்மொழியோ இங்கு அந்த மொழி தானப்பா அரசாகும் உண்மை அதுநன்று தானப்பா பிரிவினைகள் ஒழிதல்.
நிகழ்காலச் செந்தமிழர் இது கேட்டுச் சீறி நீசனுரை நிகழ்த்தாதே செந்தமிழே உலகின் புகழ்மொழியாய் உலகத்தின் பொது மொழியும் கும் புதுமைதனை காண்பீர்கள் என்றுபுகன் றிடுவார். இகழ்ந்திடுவார் எதிர்காலச் சித்தனுரை தன்னை
24

இம்மியள வேணும்பி மானமில்லா மூர்க்கன் நிகழ்காலத் திருந்திருந்தால் செய்வதறிந்திடுவோம். நெஞ்சுபிளந் தெறிந்திருப்போம் என்றுணிகழ்த்திடுவார்.
பிறப்பாலே யானுயர்வு தாழ்வுரைக்க மாட்டேன் பிறப்பாலே என்மொழியே சிறந்ததெனச் சொல்லேன். பிறப்பென்றன் வசமாமோ? பிரமத்தின் வசமாம். பீருவில் பிறந்திருந்தால் பீருமொழி பீடே வெறிமிகுந்த நிகழ்காலத் தீதுணரமாட்டார் விழழுக்கே பெருங்கலகம் விளக்கின்றார் அன்னார் அறிவற்றே துன்பங்கள் அனைவர்க்கும் விளைப்பவர் ஐய்யய்யோ இவர் மடைமை ஏனென்று சொல்வேன்.
புதுயுகத்தின் குரல்போல் எதிர்காலச் சித்தன் புகன்றமொழி கேட்டபின்னர் யானவனைப் பார்த்து "எதிர்காலச் சித்தா உன் இனியமொழி கேட்டேன். எண்ணங்கள் விரிவடையும் என்னுடன் நிவந்து மதி கெட்டார் வாழ்கின்ற வையகத்தில் புதிய வாழ்வேற்றிச்செல்வாயோ என்றிறைஞ்சி நிற்க மெதுவாகச் செவ்விதழ்கள் திறந்ததையுமங்கே மென்னிலவுக் குஞ்சிரிப்புப் பிறந்ததையும் கண்டேன்.
காலத்தின் கடல் தாவி நீஇங்கு வந்த காரணத்தால் ஏதறிவு என்பதை நீ கண்டாய் ஞாலத்தில் நிகழ்கால மயக்கத்திலுள்ளோர். ஞானத்தைக் காண்பாரோ? காணார்களப்பா காலத்தை யான்தாண்டிக் காசினிக்கு வந்தால் கட்டாயம் ஏனையவர்கள் ஏற்றிமிதித்திடுவார் ஆலத்தைத் தந்தன்று சோக்கிரதரைக் கொன்ற அன்பர்களுன் மனிதச் சோதரர்களன்றோ?
25

Page 15
ஆதலினால் நிகழ்கால மனிதா அங்கு யான்வரேன் நீபோவாய் என்றான் ஐயன் காதலினால் கால்களென்னும் கமலம் தொட்டுக் கண்ணொற்றி விடைபெற்றேன் திரை நீங்கிற்று. பாதகர்கள் முழுமடைமைப் போர்கள் சூழும் பாருக்கு நிகழ்காலம் வந்தேன் எங்கும் தீதுகளே நடம்புரியும் நிலைமை கண்டு திடுக்கிட்டேன் என்றிவர்கள் உண்மைகாண்டல்?
-வேலணையூர்த் தொல்காப்பிய மன்றில் நடைபெற்ற தமிழ்மறை விழாக் கவியரங்கில் அ.ந.கந்தசாமி பாடியவை:-
வள்ளுவர் நினைவு
வள்ளுவனார் செய்திட்ட நிறைநூலைப் போற்றி வாழ்த்தெடுக்க வந்திட்டேன் வன்கவிஞர் மன்றில் தெள்ளுதமிழ்த் தீங்கவிதைத் தேனமுதம் நல்கும் தெவிட்டாத நடராசர் கவியரங்கின் தலைவர் விள்ளுகவி கேட்டோம் பிறர்கவியும் கேட்டோம் வேலணையூர் வீசுபுகழ் தொல்காப்பிய மன்றில் வள்ளுவனார் புகழ்பாட வாய்த்ததொரு வாய்ப்பு வாய்ப்பளித்த பண்டிதர்க்கு என்னுளத்தின் வாழ்த்து.
பாட்டாலே உலகத்தைக் கவர்ந்திட்ட பேரில் பைந்தமிழர் தம்மிடையே வள்ளுவர்போல் யாரே? பாட்டாளிக் கவிஎனவே அன்னவனைப் போற்றி பரவிடுவேன் அதற்கும்பல் தாரம் சொல்வேன் நாட்டினிலே மிகச்சிறந்த நெசவென்னும் கலையை நற்றொழிலாய்க் கொண்டிட்ட கவியரசர் கோமான் பாட்டாக வடிவெடுத்தான் அநுபவத்தின் கோர்வை பாரெல்லாம் போற்றுததைத் தமிழ்வேதம் என்றே.
26

மதங்களினை அடிப்படையாய்ப் பிறபுலவர் கொள்ள மன்னுலக வாழ்வைமட்டும் வள்ளுவனார் கொண்டார் விதவிதமாய் வீடென்றார் மோட்சமென்றார் மற்றோர் வீரமிகும் வள்ளுவனார் அறம்பொருளோ டின்பம் இதமாக இல்வாழ்வில் காணுமிவை மூன்றும் இனிமையுள முப்பால்நூல் எற்றியுரைத்திட்டார் இதுநல்ல மாற்றமென இங்கெடுத்துச் சொல்வோம் இவர்குறளைக் கைஏந்தி இவ்வுலகை வெல்வோம்.
வறுமையினை ஒழித்திடுதல் வேண்டுமெனும் நெஞ்சம் வள்ளுவனார் கொண்டிருந்தார் என்பதையார் இங்கே வெறுமொழிஎன் றியம்பிடுதல் கூடுமிதோ பாரீர் வேந்தரது அரண்சிறப்புச் சொல்லவந்தபோது "உறுபசியும் பிணிநோயும் செறுபகையும் சேரா(து) உற்றிடுதல் ஒன்றல்ல நா"டென்று கேட்டார் பெரும்பசியை முதற்குற்ற மெனஎடுத்துச் சொன்னார் பெரும்புலவர் வள்ளுவனார் ஏழைகளின் தோழன்.
வள்ளுவனார் வழிவந்த பாரதியார் சொன்னார் "வையத்தை அழித்திடுவோம் தனிமனிதன் ஒருவன் உள்ளநிறை வோடுண்ண உணவில்லை என்று உளம்வருந்து வானாயின்” என்பதவர் பாட்டு. வள்ளுவர் தாமும்பல் லாண்டுகட்கு முன்னர் வழுத்தினார் இதன் பொருளை வேகத்தோடு "தள்ளுவதோ வாழ்க்கையினைப் பிச்சை எடுத் திங்கே? அவிவிதமேல் சாய்காந்த ண்டவனும்” என்றார்.
நெசவுசெயும் தொழிலாளி நேர்மையுள நெஞ்சன் செய்திட்ட நிறைநூ லில் பெய்திட்ட எண்ணம் இசைவுடனே காலத்தை வென்றிங்கு வாழும் எல்லைகளைக் கடந்திங்கு உலகெல்லாம் சூழும்
27

Page 16
திசையெல்லாம் கேட்கட்டும் திருக்குறளின் கோஷம் தீரட்டும் ஒயட்டும் தீயர்வெளி வேஷம் இசைநூலை நாமிழந்தோம் நாடகமும் இழந்தோம் ஏதிழந்தாலுமிந்தக் குறளொன்று போதும்.
கடலெழுந்து விம்மியது காவிரியின் நீரில் கடல்வெள்ளம் கலக்கின்ற புகாரென்னுமூரில் கடலுண்ட தய்யாநம் கற்கண்டுத் தமிழை கணக்கில்லா நூல்கலெல்லாம் கடலோடு போச்சு கடலுக்குத் தமிழினிமை தெரிந்ததனால் வந்த காரியமோ யாமறியோம் செந்தமிழர் நாட்டுக் கடலன்றோ கவியமுதின் சுவைதெரிந்த தென்று கவிராயர் சொலக்கூடும் சத்தியமும் அதுவோ?
நீருண்ட இவைபோக இருப்பதெல்லாம் எச்சம் நெருப்போடு கறையான்கள் உண்டவற்றின் சொச்சம் பாரிடத்தே பைந்தமிழின் நூலெல்லாம் சேர்த்துப் பஷ்மீகர மானாலும் குறளென்னும் சொத்து ஊரிடத்தே எஞ்சிநின்றால் அதொன்று போதும் உற்றகுறை எங்களுக்கு இல்லை இவன் யாதும் நேரில்லா வள்ளுவனார் குறள்வாழ்க வாழ்க நிறைநூ லின் கருத்திந்த உலகெல்லாம் துழிக.
கலைக்காகக் கலைஎன்று கதறுபவர் உண்டு கருத்துக்கே முதன்மை தரும் வள்ளுவனார்கண்டு கலைஇந்தச் சமுதாய வளர்ச்சிக்கே என்று கருத்துடையார் உணரட்டும் காசினியில் அன்று விலையில்லாத் திருக்குறளைத் தந்திட்ட மேதை வியனுலகில் காட்டுகின்றார் பாதையதே பாதை, கலைஞர்களே எழுந்திடுங்கள் வள்ளுவனார் காட்டும் கவினுடைய பாதையிலே பேனாவை ஒட்டும்.
28

செந்தமிழர் நாட்டுக்குப் புகழ்தருமோர் நூலின் சிறப்புசில எடுத்துரைத்தேன் என் அறிவில் பட்ட பைந்தமிழ்நற் கருத்துக்களைப் பகர்ந்துள்ளேன் இங்கு பகர்ந்தவற்றில் கொள்வதனைக் கொள்வீர்கள் மற்ற நொய்ந்திட்ட கருத்துக்களை நோயென்று தள்ளிர் நுவலரிய புகழ்பெற்றாள் தமிழன்னை பெற்ற மைந்தர்களே மாநிலத்தில் குறள்புகழைப் பாடி மகிழ்ந்திடிவீர் நீவிரிங்கு நீடுழி வாழி.
நான் செய் நித்திலம் வானிலோர் முத்தினை வைத்திழைத் ததுபோல் வளர்மதி தவழ்ந்தது மாடியின் மீதுயான் சிப்பி ஒன்றில் முத்தொன் றிட்டனன் கழிந்தது கழிந்தபின் எண்மனை விளங்கக் கண்ணன் போலொரு கனிவாய்க் குழந்தை வந்தது வந்தபின் வானிலா முகத்தென் மனையாள் அதைஎன் மடியிடைக் கிடத்தி ஈரைந்து திங்களின் முன்னால் ஒருநாள் நீங்கள் செய்த நித்திலம் இதுவே. என்று கூறி மகிழ்ந்தனள் அவள் கண் ஒரம் கண்டேன் ஒளிமுத் தொன்று அங்கு துடித்ததும் கண்டனன் அவள் விழி தொட்டேன் முத்துத் தீய்ந்தது மகிழ்ச்சியில் உள்ளத்திப்பியில் உதித்துக் கண்வழி வந்தஅம் முத்தில் வையகத் தின்பம் யாவும் கண்டனன் அம்முத்தெனது மடியிடைக் கிடந்த மணிமிசை விழுந்திட மணியை எடுத்துநான் மலர்க்கரம் தடவி உச்சி மோந்தே உளம்மகிழ்ந் திட்டேன். நான் செய் நித்திலம் தேன் செய்ததுவே
29

Page 17
வில்லுன்றி மயானம்
நாட்டினர்நிர் அறிவீர் வில்லூன்றி தன்னில் நாம் கண்ட ஈமத்தீ வெறுந்தீ அன்று கேட்டினிலே உளயிணத்தை உண்பதற்குக் கிளர்ந்தெழுந்த தீயன்று நெடுநா ளெங்கள் நாட்டினிலே கிளைபரப்பும் சாதி என்னும் நச்சுமர வீழ்ச்சியினைக் காண்பதற்காய்க் வாட்டமுற்ற மக்களுளம் கனன்று பொங்கும் வல்லதொரு புரட்சித்தீ வாழ்க வது.
மக்கள்குல மன்றோநாம் மரமோ கீழாம் மாடுகளோ விலங்குகளோ கூறும் என்று திக்கற்றான் நெஞ்சினிலே பிறந்த வைரத் தீ அதுவாம் திசை எங்கும் பரவுதற்கு மக்கள்நாம் மறுப்பதெவர் என்று கூறி மாவுரிமைப் போர்தொடங்கி விட்டான் அந்தத் திக்கதனை வில்லூன்றித் திருத்த லத்தைச் சிரந்தாழ்த்தி வணங்குவோம் புனித பூமி.
கேளிர் ஓர் வீரமிகு காதை ஈது. கிளரின்பம் நல்குமொரு சேதி யன்றோ? பாழினிலே பயந்திருந்த பாமரர்கள் பலகாலந்துயில்நீங்கி எழுந்துவிட்டார் வாழியரோ வரப்போகும் நவயுகத்தின் வளக்காலை இளம்பருதி வரவுணர்த்தும் கோழியது சிலம்பலிது வெற்றி ஓங்கல் கொள்கைக்காதரவு நல்குவோம் நாம்,
பரம்பரையாய்ப் பேணிவந்த பழக்கமென்று பழங்கதைகள் பேசுகின்றார் மனிதர் பார்ப்பின் பரம்பரையாய்ப் பேணிடினும் தீயதான பழக்கமெனப் பகுத்தறிவாற் கண்ட பின்னும்
30

சிரங்குவிப்பதோ அதற்கு? மூடச் செய்கைச் சிறுமைஎன்று செகமெல்லாம் நகை நகைத்துச் சிரிப்பதற்குச் செவிதாரீர் தீண்டாய்ப் பேயின் சிரங்கொய்தே புகைத்திடுவோம் வாரீர் வாரீர்.
அன்னையார் பிரிவு
ஒப்பரிய காந்தியரி னொப்பில் லாத ஒர்மனைவி செம்மையறங் காத்த சீர்மைச் செப்பரிய பெரும்புகழாள் தேய மெல்லாம் தாயெனவே செப்பிடுமோர் இல்லின் தெய்வம் . இப்புவிதான் கலங்கிடவும் இந்தியத்தாய் அழுதரற்றிக் கூவிடவும் இறந்துபட்டாள் இப்பெரிய துன்பந்தான் இதயந் தன்னை ஈர்க்குதே இந்தியர்கள் வேர்க்கின்றாரே
பாரதத்தின் மக்களெல்லாம் காந்திதம்மைப் பண்புடைய பிதாவென்றும் அம்மையாரைச் சீருதவும் செவ்வியளாம் மாதாவென்றுஞ் சிந்தையிலே நினைத்திருந்தார் அந்தோ வின்று நீருகுத்து நிலைகலங்கல் னா ரன்னை தனைப்பிரிந்தே வாடுகின்றார் நீளுந் துன்பம் பாரிடத்தே கொண்டுவிட்டார் செயல்ம றந்து பரிதவித்துப் பதறுகின்றார் என்னே துன்பம்
மாரியினிலே பெருமழைதான் கொட்டுகின்ற காரிரவில் பல்லிடிகள் பின்னே வந்த பேரிடிபோல் வந்ததையோ அன்னை யாரின் பிரிவுதனை என்னசொல்வேன் காந்தியாரின் சீரினிய பத்தினியே சிறப்பின் மிக்க கஸ்தூரி யன்னாய எம் கருத்தே கண்ணே பாரினிலே யெமைவிட்டும் சென்றாய் இதோ பண்புடையார் செயல்? நம்மை மறந்தாய் கொல்போ?
31

Page 18
சீதையும் சாவித்திரியாம் தேவி மற்றும் சிறப்புள்ள நளாயினி என்போரெல்லாம் காதையிலே உலாவுகின்ற கன்னியர்கள் கடுகேனும் உண்மையங்கு இல்லை யென்று ஒதியவர் தலைநாணச் செய்து பெண்மைப் பெருங்குலத்தின் உயர்வுதனை நாட்டினாய் நல் மாதரசே மாதர்களை முன்னே வைத்தாய் உன்வாழ்வு மாதிரியை மறத்த லாமோ?
மாம்பொழிலாள் நடனம் மத்தள மெத்த முழங்க முழங்க மாங்குயி லோஎனக் கீதம் இசைக்க தத்தரி நெடுங்கண் திசைகளில் ஒடத் தாம்தீம் ததிங்கின தோம்தோம் என்று முத்தன மூரல் மென்மதி சிந்தி முனிவரும் தங்கள் யோகம் மறப்ப பத்தரை மாற்றுத் தங்கம் அனையாள் பாரத சாத்திரச் சதிர்பயின் றாளே.
கட்டிள மெல்லுடல் கைகள் அசைய கமல்பொற் பாதச் சலங்கை கிலுங்க மொட்டிள முலைகள் முந்திடக் கன்னி மோகன மெல்லிசை தானும் அசைய பட்டுடை காற்றில் விசிறி அலைய பார்ப்பவர் நெஞ்சினிற் காதலை மூட்டி கட்டுட லாளந்த மாம்பொழிலாள்தன் கண்களை வீசிச் சதிர்இடுகின்றாள்.
ஆடகப் பொன்னணி மன்னிடக் காலில் அழகு சிலம்பு புலம்பிட நங்கை நாடக மாடுதல் கண்டிடு நம்பியர் நங்கையின் வேல்விழி உண்டிடுகின்றார்
32

கூடுதல் வேண்டிக் குமைந்திடு கின்றார் குறிதவறாதே ஜம்மலர் மன்மத வேடுவன் வீசிடு வெங்கணை தன்னால் வெய்துயித் திட்டார் வெந்திடுகின்றார்.
கோல்வளை வேல்விழி கொன்றிட லாலே குமரர்கள் கோதையின் தாமரை போலும் கால்தனில் நூபுரக் கிண்கிணி யாகி கன்னியின் மெல்லுடல் தழுவ நினைந்தார்.
கன்னிகை யாளோர் கதிரொளி மின்னல் காசினி வந்தே டுதல் போல புன்னகைப் பூவினை அள்ளி எறிந்து புதுநட மிடுமக் காட்சியைக் கண்டு மன்னவன் விச்சவி மகிபனின் மைந்தர் மையலில் மூழ்கித் தனித்திட லானார் மின்னிடை யாளின் பொன்னணி மேனி முயங்கிட வேண்டி மயங்கிநின்றாரே.
சிறுகதைத் துறையில்.
வளர்ந்து வரும் சிறுகதைத்துறைக்கு வலுவூட்டும் சிறுகதைகளை அ.ந.கந்தசாமி சிருஷ்டித்துள்ளார். "நாயினும் கடையர்" "இரத்த உறவு" போன்ற சிறந்த படைப்புகளைத் தந்துள்ளார். மலை நாட்டுத் தொழிலாளர்களைப் பின்னணி வைத்து எழுதப்பட்ட “நாயினும் கடையர்" அ.ந.க. எழுதிய சிறுகதைகளில் அமர சிருஷ்டியாகத் திகழ்கிறது. தொழிலாளர்களைக் கருப்பொருளாக வைத்துக்கதை படைத்தவர்களுக்கு அ.ந.க முன்னோடியாக விளங்குகின்றார். தமிழ் நாட்டில் தொழி லாளியாக வாழ்ந்து இலக்கியகர்த்தாவாக மாறிய விந்தன் தொழிலாளர்களின் இன்பதுன்பங்களை, வர்க்க பேதங்களை அது தோற்றுவிக்கும் வறுமை நிலையைக் கண்டித்தார். அதன் அடியுண்மையை எடுத்துக் காட்டி யதார்த்தபூர்வமான கலை வடிவத்தை இலக்கிய வழக்கினுள் மீண்டும் புகுத்தினார்.
33

Page 19
தொழிலாளியாக வாழ்ந்த அவரது சொந்த அனுபவமே அவரது கதைகளுக்கு உயிரூட்டிற்று என்று விமர்சகர்கள் கூறுவது போல் தொழிற்சங்கவாதியாகச் சிலகாலம் இருந்த அ.ந.க. தோட்டத் தொழிலாளர்களுடன் இரண்டறக் கலந்து அவர்களின் துன்ப துயர்களை உணர்ந்ததால், தோட்டத் துரைமார்களின் அதி காரங்களை நேரில் கண்டதால் அவைகளைத் தமது சிறுகதை" களில் தத்ரூபமாகச் சிருஷ்ட்டித்தார் என்றே கூறவேண்டும்.
அ.ந.கந்தசாமியைப் பற்றி இலக்கிய விமர்சகரான பேரா. கா.சிவத்தம்பி குறிப்பிடும்பொழுது "அ.ந.கந்தசாமியின் கதைகளோ வண்மையாகச் சமூகத்தைத் தாக்குபவை. சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வை நன்கு புலப்படுத்துவதில் சமர்த்தர் இவர். "இரத்த உறவு முக்கிய கதைகளில் ஒன்று என்கிறார்" நூல்: "தமிழ் சிறுகதைகளின் தோற்றமும் வளர்ச்சியும்".
சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவரான அ.ந.கந்த" சாமி தமிழ்நாட்டுச் சிறந்த எழுத்தாளர்களின் வரிசையில் வைத்துக் கணிக்கப் பெற்றார். அ.ந.க. எழுதிய சிறுகதைகள் எண்ணிக்" கையில் குறைவாக இருந்தாலும் அவைகள் தரத்தில் உயர்ந்து நிற்கின்றன. மார்க்ஸிய அரசியல், இலக்கியக் கொள்கைகளைத் தழுவிப் புதிய உலகைப் படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் எழுதியிருக்கும் சிறுகதைகள் என்றும் அழியாத படைப்புகள். அவைகள் அச்சில் வெளிவருமானால் புதிய தலைமுறையினர் அவற்றைப் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும்.
நாவல் துறை
"முற்போக்கு எழுத்தாளர்களின் முன்னோடியாகக் கந்தசாமி விளங்குகிறார். அவர் தமது முழுச் சக்தியையும் ஒருங்கு கூட்டி நாவல், காவியம் இயற்ற வேண்டும். அப்பொழுதுதான் அவர் பெயர் நிலைத்து நிற்கும்” என்று “ஈழத்து இலக்கிய வளர்ச்சி" என்ற நூலில் கனக செந்திநாதன் குறிப்பிட்டுள்ளார். இலக்கியத்தின் எல்லாத்துறைகளிலும் தன் பெயரை நிலைபெறச் செய்த, அ.ந.கந்தசாமி நாவல் துறையிலும் "மனக்கண்" நாவல் மூலம் தன் முத்திரையைப் பதித்து விட்டுத் தான் சென்றுள்ளார். "மனக்கண்" நாவல் தினகரன் வாரமஞ்"
34

சரியில் தொடராக வெளிவந்தபொழுது ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆவலுடன் விரும்பிப் படித்து வந்தார்கள். இவர்கள் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகளில் வெளிவந்த தொடர்கதைகளை விரும்பிப் படித்தவர்கள் என்பது நோக்கத்தக்கது. ஈழத்து எழுத்தாளர்களின் கதைகளின் பக்கம் தலைவைத்துக்கூட படுக்காதவர்கள் கூட "மனக் கணி” நாவலைத் தொடர்ந்து விரும்பிப் படித்து வந்தார்கள்.
“மனக்கண்" என்ற நாவல் தொடர்கதையாக வெளிவந்ததால் அதன் இலக்கியத்தரத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. தொடர்கதை மூலம் வாராவாரம் வாசகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் அ.ந.க. இந்த நாவலை எழுதவில்லை. யதார்த்தமாக இருக்க வேண்டும் என்ற நோக்குடன் எழுதினார். "மனக்கண்" நாவல் இலக்கியத்திற்குக் கிடைத்த அரிய பொக்கிஷம்.
தினகரனில் அ.ந.கந்தசாமியின் "மனக்கணி" நாவல் தொடர்கதையாக வெளிவந்து முடிந்த வாரம். அடுத்தவாரம் நாவலாசிரியரின் குறிப்புரை வெளிவரும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. என்ன குறிப்புரை எழுதப் போகின்றாரோ என்று எண்ணியவாறு அ.ந.கந்தசாமியைப் பார்க்கப் போயிருந்தேன். இக்காலகட்டத்தில் வாராவாரம் அ.ந.க.வைச் சந்தித்து இலக்கிய உரையாடல் நடத்துவது வழக்கம்.
அ.ந.கந்தசாமி எழுதிக் கொண்டிருந்தார். மேல்நாட்டு நாவலாசிரியர்களைப் போலத் தினசரி எழுத வேண்டும் என்ற பழக்கத்தை அவர் கடைப்பிடித்தார். அ.ந.க. தாம் எழுதியதை எனக்கு வாசித்துக் காட்டினார். அது "மனக்கண்" நாவலின் குறிப்புரை. அந்தக் குறிப்புரையில் குறிப்பிடப்பட்டிருந்த சில ஆங்கில நாவலாசிரியர்களின் கருத்துகளைச் சுட்டிக் காட்டினார். அ.ந.கந்தசாமி நிறையப் படிக்கிறார். நிறைய எழுதுகிறார் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். அப்பொழுது நான் அவரிடம் தெரிவித்தேன் "இலக்கியதின் எல்லாத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள அ.ந.கந்தசாமி நாவல் துறையில் கவனத்தைச் செலுத்தத் தவறிவிட்டார் என்று இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிட்டிருந்ததை, ஆனாலும் அத்துறையில் "மனக்கண் மூலம் பெரும் சாதனையை நிலை நாட்டி விட்டீர்களே” என்றேன்.
35

Page 20
"இனிமேல் தான் நான் நாவல் துறையில் அதிக அக்கறை காட்டப் போகின்றேன்” எனக் குறிப்பிட்டார். மலையகத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிகழ்சிகளை உள்ளடக்கிய "களனி வெள்ளம்" என்ற நாவலை எழுதிக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார். "களனி வெள்ளத்திற்கு" முன்னால் கால வெள்ளம் அவரை அடித்துச் சென்று விட்டது. "நாவல் துறையில் காட்டப்போகும் அதே அக்கறையை உங்கள் உடல் நிலையிலும் காட்டுங்கள்” என்றேன். கடும் நோயின் பாதிப்புக்கிடையில் அ.ந.க கணிசமான அளவு எழுதியது வியப்புக்குரியதே.
அ.ந.க இன்னும் ஒரிரு ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் "மனக்கண்” நாவலிலும் பார்க்கச் சிறந்த நாவல்களை நமக்குத் தந்திருப்பார். ஈழத்துத் தமிழ் நாவல்களைப் பற்றி எழுதும் எந்த விமர்சகரும் அ.ந.க.வை மறந்துவிட முடியாது! அந்த அளவுக்கு ஒரே ஒரு நாவலின் மூலம் தன் ஆளுமையைக் காட்டிச் சென்றுள்ளார். கம்பனுக்கு ஒரு காவியத்தைப் போல் வள்ளுவனுக்கு ஒரு திருக்குறளைப் போல அ.ந.கந்தசாமிக்கு ஒரு “மனக்கண்” என்பதைத் துணிந்து கூறலாம்.
நாடகத்துறை.
கவிதை, சிறுகதை, நாவல் துறைகளில் மாத்திரமின்றி நாடகத் துறையிலும் அ.ந.க.வின் விசேட கவனம் சென்றுள்ளது. வீழ்ச்சியுற்றுக் கிடந்த நாடகத்துறையில் ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்று நினைத்தார். "மதமாற்றம்" என்ற நல்லதொரு நாடகத்தைத் தந்தார். "மதமாற்றம்" நாடகத்தைப் போல் அந்தக் காலகட்டத்தில் - ஈழத்து நாடக மேடையைப் பாதித்த வேறு எந்த நாடகமும் இல்லை எனலாம். கொழும்பில் தற்போது அரங்கேற்றப்படும் சில நாடகங்களைப் பார்க்கும் பொழுது பார்வையாளர்கள் "ஹோ" எனக் கைதட்டிச் சிரிப்பதைக் காண்கின்றோம். நாடகத்தைப் பார்த்து விட்டு வெளியே வந்ததும் எதுவும் மனதில் தங்கும்படியாக இல்லை. இப்படிப்பட்ட போலி இரசிகத்தன்மையை வளர்க்கும் நாடகங்களில் மாறுபட்டு நின்றது "மதமாற்றம்".
பேராசிரியர் கைலாசபதி அவர்கள் "ஒப்சேவர்” ஆங்கிலப் பத்திரிகையில் தமிழ் நாடகங்களைப் பற்றி எழுதியபொழுது
36

“இதுவே தமிழில் எழுதப்பட்ட நாடகங்களில் ஆகச் சிறந்த நாடகம்” எனக் குறிப்பிட்டார். ஆமை வேகத்தில் இயங்கிய ஈழத்துத் தமிழ் நாடகமேடை - அ.ந.க. "மதமாற்றம்" ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாகச் சிறிது துரித வேகத்தில் இயங்க ஆரம்பித்தது என்பது நாடக அபிமானிகள் ஒத்துக் கொண்ட உண்மையாகும்.
"மதமாற்றம்” முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதும் அதைப் பற்றிய காரசாரமான விவாதங்களும் விமர்சனங்களும் இலக்கிய உலகில் பெரும பரபரப்பை ஏற்படுத்தின. சில விமர்சகர்கள் அ.ந.க. முற்போக்குவாதி என்ற காரணத்தினால் அவரை வைத்தே நாடகத்தை எடை போட்டு நடுநிலை நின்று உண்மை கூறாது "மதமாற்றத்’தைக் குறை கூறினார்கள். "மதமாற்றத்'தைப் பிரசாரபலத்தினால் பிரபலப்படுத்த முனைகிறார்கள் என ஒரு விமர்சகர் நாடகத்தைப் பார்க்காமலே விமர்சனம் செய்தார். ஆனால் கண்டனங்களுக்குக் கலங்காத கந்தசாமி "மதமாற்றம்” தலை சிறந்த நாடகம் என்பதை நிரூபித்தார். அ.ந.க.வே "மதமாற்றம்" பற்றியதொரு விமர்சனக் கட்டுரையினை எழுதியுள்ளார். இது யூலை 3, 1967இல் வெளிவந்த "செய்தி”ப் பத்திரிகையில் வெளிவந்துள்ளது. அக்கட்டுரை பின்னர் "பதிவுகள்" இணையத்தளத்தில் வெளியானது.
எதிர்காலத்தில் ஈழத்து நாடகத்தைப் பற்றி விமர்சகர்கள் விமர்சிக்கும் பொழுது அ.ந.க.வின் மதமாற்றத்தை மைல்கல்லாக வைத்துத் தான் கணக்கிடுவார்கள். நாடகத்தை ஆங்கில அறிஞர் பெர்னாட்ஷாவின் நாடகங்களோடு ஒப்பிடலாம் என்று சில இலக்கிய விமர்சகர்கள் அபிப் பிராயம் தெரிவித்தனர். "அமரவாழ்வு" என்ற இன்னொரு நாடகத்தையும் அ.ந.க எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தாஜ்மகால் உதயம் பற்றிய "கடைசி ஆசை” என்றொரு குறு நாடகத்தையும் எழுதியுள்ளார். - “மனக்கண்” நாவலை நாடகமாக எழுதித் தருவதாக என்னிடம் குறிப்பிட்டார். அ.ந.க.வின் நெருங்கிய நண்பரான பல்கலைவேந்தன் சில்லையூர் செல்வராஜன் அ.ந.க.வின் “மனக்கணி” நாவலை வானொலி நாடகமாக வழங்கினார்.
37

Page 21
இலக்கிய விமர்சனம்
இலக்கிய விமர்சனத் துறையில் “தேசிய இலக்கியம்" என்ற கருத்தைப் பற்றி அந்த இயக்கம் ஈழத்தில் வலுவடைந்த காலத்தில் அ.ந.கந்தசாமி பல அரிய கட்டுரைகள் எழுதியுள்ளார். அத்துடன் "சிலப்பதிகாரம்" "திருக்குறள்" "எமிலிஸோலா" போன்ற பரபரப்பான கட்டுரைகளையும் எழுதினார்.
அறிவுலகவாதியான அ.ந.கந்தசாமி எழுதும் கட்டுரைகள் புதுமை நோக்குடன் இருக்கும். சிலப்பதிகாரத்தைப் பற்றி எழுதிய கட்டுரைகள் பண்டிதர் முதல் பட்டதாரிகள்வரை பெரும்பாலோரி டையே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. 'தினகரன்” வாரமஞ்சரியில் வெளிவந்த "நான் விரும்பும் நாவலாசிரியர்" என்ற கட்டுரைத் தொடரில் எமிலிஸோலாவைப் பற்றி அ.ந.கந்தசாமி எழுதிய கட்டுரை திறனாய்வு மிக்க கட்டுரை என்று எல்லோருடைய பாராட்டையும் பெற்றதுடன் எமிலிஸோலாவைப் படம் பிடித்துக் காட்டியது.
தகவல் பகுதியினரால் வெளியிடப் பெற்ற "பூரீலங்கா" சஞ்சிகையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் சரித்திர நிகழ்ச்சி களையும் நிலைக்களனாகக் கொண்ட கதைகள் எழுதியுள்ளார். வானொலியில் மேல் நாட்டு நாடக ஆசிரியர்களைப் பற்றிச் செய்த விமர்சனங்கள் தினகரனில் தொடராக வெளிவந்த பொழுது நாடகத்துறையிலிடுபட்டவர்கள் அதனைவிரும்பிப் படித்தார்கள். ஹென்றிக் இப்சனின் அமர நாடகமான "பொம்மை வீடு" (The Doll House) என்ற நாடகத்தின் தழுவல்தான் “பெண் பாவை" என்ற தமிழ் நாடகம். தமிழ் வடிவம் கொடுத்தவர் அமரர் யாழ்ப்பாணம் - தேவன். வானொலியில் இப்ஸனின் பொம்மை வீட்டைப் பற்றி அறிஞர் அ.ந.கந்தசாமி செய்த நாடக விமர்சனம் “பெண்பாவை"யைப் பார்த்த நாடக அபிமானிகளுக்கு இப்ஸனின் “பொம்மை வீட்டை"ச் சரியாக இனம் கண்டு கொள்ள உதவியது.
அறிஞர் அ.ந.கந்தசாமி இலக்கிய விமர்சனத்துடன் நில்லாது ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியாரின் ஞானகுருவாகிய யாழ்ப்பாணத்துச் சாமியார் யார்? என்பதை ஆராய்ந்து, பாரதியாரின் ஞானகுரு யாழ்ப்பாணத்துச் சாமியார் அல்வாயூர் அருளம்பல தேசிகர்
38

என்ற உண்மையை நிலைநாட்டினார். அருளம்பல தேசிகர் பற்றிய விரிவான நூல் எழுதுவதற்குரிய குறிப்புகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார். மகாகவி பாரதியாருக்குப் "பாரதி” என்ற பட்டம் கொடுத்த இலங்கையர் யார்? என்பதை மரணமடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்னார் ஆராய்ந்து கொண்டிருந்தார். உலகப் பேரழகி கிளியோபட்றாவைப் பற்றிப் பல ஆங்கில நூல்களை ஆராய்ந்து அரியதொரு கட்டுரையை “ராதா" வார இதழில் வரைந்தார். ஆறுமுக நாவலரைப் பற்றி விரிவானதொரு நூல் எழுதப் போவதாகக் குறிப்பிட்டதுடன் அவ்வப்போது பல நாளிதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் ஒழுங்காகச் சேகரித்து வைத்திருந்தார்.
ஆங்கில எழுத்தாளர் ஓ ஹென்றியின் சிறுகதை உத்தி களையும் திருப்பங்களையும் பாராட்டும் அ.ந.க. அவற்றை இளம் எழுத்தாளர்கள் படித்துப் பயனடைய வேண்டும் என்பதற்காக அவற்றை மொழிபெயர்த்து வெளியிட்டார். அ.ந.க. அறிஞர் பெர்னாட்ஷா முதல் பேரறிஞர் பெட்ரண்ட் ரஸ்ஸல் வரை அறிந்து வைத்திருந்தார். பெட்ரண்ட் ரஸ்ஸலின் "யூத அராபிய உறவுகள்” என்ற கட்டுரைத் தொடர் ஒன்றை “இன்ஸான்” வார இதழில் தொடர்ந்து எழுதினார். எப்பொழுதும் தன் எழுத்துக்களால் பிறர் பயன் அடைய வேண்டும் என்று விரும்பும் அ.ந.கந்தசாமி "வெற்றியின் இரகசியங்கள்" என்ற தத்துவ நூல் ஒன்றினையும் எழுதியுள்ளார். இது தமிழகத்தில் பாரி நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இஃது எல்லா வகையிலும் சிறந்த வாழ்க்கையைப் படிப்பிக்கும் நூலாகும். இதே பாரி நிலையத்தினர் பின்னர் வெளியிட்ட அகிலனின் நூலொன்றிற்கும் “வெற்றியின் இரகசியங்கள்” என்னும் பெயரினை வைத்துள்ளதானது நேர்மையற்ற செயலாகும்.
சீர்திருத்தத் துறை
அ.ந.கந்தசாமி இலக்கியத் துறையோடு நிற்காது சமுதாயச் சீர்திருத்தத்துறைகளிலும் பகுத்தறிவுச் சிந்தனையைப் பரப்புவதிலும் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தார். சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்ட கந்தசாமி சுயமரியாதை இயக்கத்தின் தலைவருமாயிருந்தார். இவற்றை எல்லாம் எண்ணிப்
39

Page 22
பார்க்கும்பொழுது தமிழ் எழுத்தாளர்களிடையே அ.ந.கந்தசாமி பன்முகங்கொண்ட ஆளுமையாளராக காட்சியளித்தார். அவரின் திறமையையும் இலக்கிய ஆளுமையையும் மதித்த பேராசிரியர் க. கைலாசபதி தனது "ஒப்பியல் இலக்கியம்" என்ற நூலை அ.ந.கந்தசாமி அவர்களுக்குச் சமர்ப்பணம் செய்துள்ளார்.
அ.ந.க - வெற்றியின் இரகசியம்
இலக்கிய உலகில் ஈடு இணையற்ற ஜாம்பவானாக அ.ந.க திகழ்வதற்குக் காரணமென்ன? புதுமைச் சமுதாயத்தைக் காணத் துடித்த புதுமையாளனாக விளங்கினார். உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தின் உரிமைக்காகக் போராடினார். அந்தத் தொழி. லாளர் வர்க்கத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். தான் படைக்கும் இலக்கியத்தைக் கூட அந்தக் கண்ணோட்டத்துடன் தான் படைத்தார்.
கடும் நோயின் பாதிப்புக்குள்ளாகிய அ.ந.கந்தசாமி அதைப் பற்றியே கவலைப் படவில்லை. சிறுவயதிலிருந்தே "எக்ஸிமா” என்ற நோய்க்கு ஆளாகிய அவர் அந்த நோயைக் குணப்படுத்துவதற்குப் பல முயற்சிகள் செய்து தோல்வி கண்டு, தமிழ் நாட்டில் வேலூர் வைத்தியசாலையில் சில காலம் தங்கியிருந்தும் சுகப்படுத்த முடியாமல் மற்றும் பல்வேறு வைத்தியங்கள் செய்தும் பலனளிக்காது சில புதிய நோய்களின் பாதிப்புக்" குள்ளானார். ஆனால் மனத் தைரியத்தை மட்டும் விடவில்லை.
வாழவேண்டும்! வாழ்ந்து கொண்டு பேனா முனை கொண்டு பெரும் போராட்டம் நடத்த வேண்டும்! என்ற ஆவேச உணர்வின் காரணமாக நம்பிக்கை இழக்காமல் - ஊசிகளாலும் மருந்துக் குளிகைகளாலும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டு அவர் எழுத்துலகில் பல சாதனைகளை நிலை நாட்டியது பெருவியப்புக்குரியதாகும்.
அ.ந.கந்தசாமி அவரது “வெற்றியின் இராக்சியங்கள்" என்ற நூலில் "உங்களுக்கு இருக்கக் கூடிய நோய்களைப் பற்றி எண்ணுவதில் நேரத்தை செலவிட வேண்டாம். ஏனெனில் உங்களிடம் உணர்மையான நோய்கள் இல்லாவிட்டால் அவைகள் உங்கள் எண் ணத்தின் சக்தியால் தோன்றி விடக்கூடும்” என்ற எமில்கூ அவர்களின் கருத்தை எமக்கு
40

எடுத்துச் சொல்கிறார். இது போன்ற அரிய கருத்துகளைத் தேடிப் படித்ததால் தான் தனது நோயைப் பற்றிச் சிந்திக்காமல் தன்னால் முடிந்த அளவு சாதித்தார். தன்னைப் போல் மற்றவர்களும் இலட்சியத்துடன் வாழ வேண்டும் எனக் கருதியே "வெற்றியின் இரகசியங்கள்" என்ற நூலையும் தந்தார்.
அ.ந.க. ஒரு சகாப்தம்!
“எழுதுகோல் தெய்வம் - இந்த எழுத்தும் தெய்வம் என்ற பாட்டுகொரு புலவன் பாரதியின் வாக்குப் படி எழுத்தைத் தெய்வமாகப் போற்றி வந்தார் அ.ந.க. அந்த இலட்சியத்தின் நாயகனாக - அறிவுலக மேதையாகத் திகழ்ந்த அ.ந.கந்தசாமி "புதுமை இலக்கியம்” என்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட மாத ஏட்டில் "நான் ஏன் எழுதுகிறேன்?" என்ற தலைப்பில் தான் எழுத ஆரம்பித்த காலச் சூழ்நிலையைப் படம் பிடித்துக் காட்டினார். அதில் சில வரிகளைக் கீழே தருகிறேன்:
"இன்று நாம் வாழும் சமுதாயத்தில் நாம் புன்னகையைக் காணவில்லை. துன்பமும் துயரமும் அழுகையும் ஏக்கமும் கண்ணிரும் கம்பலையுமாக நாம் வாழும் உலகம் இருக்கிறது. ஏழ்மைக்கும் செல்வத்துக்கும் நடக்கும் போரும் - உயர்ந்த சாதியாருக்கும் தாழ்ந்த சாதியாருக்கும் நடக்கும் போரும் - அசுர சக்திகளுக்கும் மனித சக்திகளுக்கும் நடக்கும் போரும் - இன்று உலகையே கலங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. போர்களினால் வாழ்வே ஒரு சோக கீதமாகி விட்டது. இப்போர்களை எவ்வளவு விரைவில் ஒழித்து விட முடியுமோ அவ்வளவு விரைவில் ஒழித்து விட வேண்டும். அதன் பின் போரொழிந்த சமத்துவ சமுதாயம் பூக்கும். அதனைப் பூக்க வைக்கும் பெரும் பணியில் எழுத்தாளன் முன்னோடியாகத் திகழ வேண்டுமென்ற கருத்தைப் புகழ் பெற்ற பேனா மன்னர்கள் என் மனதில் தோற்றுவித்தனர்."
இவ்வாறு கூறியது மாத்திரமின்றி அ.ந.கந்தசாமி சமுதாயச் சுரண்டலை ஒழிக்கச் சமூகத்தில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகள் போன்ற கொடுமைகளைப் பேனா முனைகொண்டு சாடினார். அவரின் கனவை நனவாக்க அவரைச் சார்ந்த அணியினர் இயக்கமாக இயங்கினார்கள்.
41

Page 23
அ.ந.கந்தசாமியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட எமக்கு அவரின் பாடையைப் பார்த்தபொழுது புதுமைப் பித்தனின் பாடலொன்றுதான் நினைவிற்கு வந்தது. இதை அருகிருந்த எழுத்தாள நண்பரிடம் தெரிவித்தேன்.
"பாரதிக்குப் பினர் பிறந்தார். பாடை கட்ட வைச்சிட்டார். ஆரதட்டிச் சொல்வார். அவரிஷட நாரதனே" இந் நான்கு வரிகளையும் கேட்ட நண்பர், அ.ந.க.வின் இடத்தை நிரப்ப நீண்ட காலம் பிடிக்கும் என்றார். சாகாத இலக்கியத்தின் சரித்திர நாயகனாக அ.ந.க. என்ற ஆளுமைமிக்க படைப்பாளி"ஒரு சகாப்தம்" என்ற உண்மையை யாரும் மறக்க (ԼՔւգԱյո5].
42

அந்தனி ஜீவாவின் இலக்கியத்துறைப் பங்களிப்பு.
தேசிய பத்திரிகையொன்றில் இவரது ஆக்கம் பிரசுரமானது 1960 ஆம் ஆண்டிலாகும். 'பாட்டுக்கொரு புலவன்' எனும் தலைப்பில் "சுதந்திரன்' பத்திரிகையில் இவரது முதல் ஆக்கம் பிரசுரமாகும் போது இவருக்கு வயது பதினான்கு.
இதே காலகட்டங்களில் மாணவன், தமிழருவி, திருமகன், கலைமலர், மாணவமலர், மாலைமுரசு போன்ற பல சிறுவர் இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன. தமிழருவி, மாணவன், கலைமலர் ஆகிய இதழ்கள் நடத்திய சிறுகதைப் பேட்டிகளில் இவர் பரிசுகளை வென்றுள்ளார். வீரகேசரி, தினகரன் போன்ற தேசிய பத்திரிகைகளிலும் இவரது இளமைக்கால ஆக்கங்கள் பிரசுரமாகியுள்ளன.
அறுபதுகளின் ஆரம்பத்தில் இலக்கியப் பிரவேசம் செய்திருந்த போதிலும் அந்தனி ஜீவா இதுவரை 15 சிறுகதை" களை மாத்திரமே எழுதியிருக்கின்றார் என்று அறிய முடிகின்றது. இதுவரை இவரது சிறுகதைத் தொகுப்புகள் எதுவும் நூலுருவில் வெளிவரவில்லை. இருப்பினும் மலடு (ஈழநாடு), விதி (சிந்தாமணி), புருட்சலட் (சிரித்திரன்), தவறுகள் (அமுதம்), நினைவுகள் (தேசபக்தன்), ஆகிய சிறுகதைகள் அந்தணி ஜீவாவின் சிறந்த சிறுகதைகளாக கருதப்படுகின்றது.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ள அந்தனி ஜீவா தானாக எழுதியும், தொகுத்தும் இதுவரை 17 நூல்களை மலையக வெளியீட்டகத்தின் மூலமாகவும், பிற வெளியிட்டகங்கள் மூலமாகவும் இலங்கையிலும், இந்தியாவிலும் வெளியிட்டுள்ளார். இவரால் எழுதி வெளியிடப்பட்ட
நூல்கள் பின்வருமாறு சுருக்கமாக நோக்கலாம்.
43

Page 24
1) ஈழத்தில் தமிழ் நாடகம்
1978ம் ஆண்டில் தமிழ்நாடு - திருப்பூரில் நடைபெற்ற கலை இலக்கிய பெருமன்ற மகாநாட்டில் கலந்துகொண்டு இவர் நிகழ்த்திய ஆய்வுரை 'ஈழத்தில் தமிழ் நாடகம்' என்ற பெயரில் தமிழ்நாட்டிலிருந்து சிவகங்கை, அகரம் வெளியீடாக 1981 இல் நூலுருவில் வெளிவந்தது.
2) அன்னை இந்திரா
கல்ஹின்னை தமிழ் மன்றத்தின் 25வது வெளியீடாக இந்நூல் 1985 மே மாதத்தில் வெளிவந்தது. பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் 1984 ஒக்டோபர் 31ம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டதன் எதிரொலியாக அந்தனி ஜீவா தினகரன் வாரமஞ்சரியில் பல வாரங்கள் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் அமைந்துள்ளது.
3) காந்தி நடேசய்யர்
கண்டி, மலையக வெளியீட்டகம், நவம்பர் 1990இல் இந்நூலை வெளியிட்டது. 19ம் - 20ம் நூற்றாண்டுகளில் இலங்கையில் மலையக மக்கள் பட்ட அவலங்களிலிருந்து அவர்களை விடுவிக்கப் போர்க்குரல் எழுப்பிய முதல் வழிகாட்டியான கோதண்டராம நடேசய்யர் அவர்களின் வாழ்வும், பணியும் இந்நூலில் சுருக்கமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4) மலையகமும் இலக்கியமும்
மலையக வெளியீட்டகத்தின் மூலம் இந்நூல் நவம்பர் 1995 இல் வெளிவந்தது. மலையக இலக்கிய வரலாற்றை அந்தனி ஜீவா இந்நூலில் விரிவாக ஆராய்ந்துள்ளார். இந்நூலுக்கு 1996 ஆம் ஆண்டு அரசகரும மொழித் திணைக்களத்தினால் நடத்தப்பட்ட தமிழ்த்தின விழாவில் அரச இலக்கிய விருது கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. 5) அக்கினிப் பூக்கள்
"அக்கினிப் பூக்கள்" என்ற அந்தனி ஜீவாவின் புகழ்பெற்ற மேடை நாடகப் பிரதியாக்கம் கண்டி, ஞானம் பதிப்பகத்தினால் டிசம்பர் 1999 இல் நூலுருவில் வெளியிட்டது. இந்நூல் 1999 ஆம் ஆண்டிற்கான அரச சாகித்திய விருதினைப் பெற்றது.
44

6) சி.வி. சில நினைவுகள்
மலையக கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் பற்றி “நவமணி” வார இதழில் "மலைச்சாரல்" என்ற பகுதியில் “மலையக மக்கள் கவிமணி சி.வி சில நினைவுகள்" என்ற தலைப்பில் அந்தனி ஜீவா அவர்கள் எழுதிய கட்டுரைத் தொடரே இந்நூலாகும். இதுவும் மலையக வெளியீட்டகத்தின் வெளியீடாக 2002 இல் கண்டியில் வெளிவந்தது.
7) மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்
எழுத்தாளர்களின் பங்களிப்பு
இலங்கை முஸ்லிம் சமய பணி பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்திய உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு, கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் 22, 23, 24, ஒக்டோபர் 2002 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் அந்தனி ஜீவாவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையே இந்நூலாகும்.
8) மலையகம் வளர்த்த கவிதை
மக்கள் கலை இலக்கிய ஒன்றியத்தினால் இந்நூல் டிசம்பர் 2002 இல் வெளியிடப்பட்டது. இலங்கையில் மலையக இலக்கியத்துக்கு அடிப்படையாகத் திகழ்வது கவிதை என்பதே இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்தாகும். ஏனெனில் மலையக இலக்கியத்தின் முன்னோடியாக அமைந்திருப்பது மலையக மக்களின் வாய்மொழிப் பாடல்களே என்பது பொதுவான கருத்தாகும். இவ்வாய்மொழிப் பாடல்கள் இன்றும் மலையகத்தில் விருப்புடன் பாடப்பட்டு வருகின்றன. இத்தகைய பின்னணியில் எழுந்த மலையகக் கவிதைகளின் வளர்ச்சி பற்றி கடந்த கால நூற்றாண்டுக்கும் மேலாக அந்தனி ஜீவா அவர்கள் அவ்வப்போது எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
9) கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள்
2002ல் ஆண்டு நடைபெற்ற மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாவை முன்னிட்டு அந்தனி ஜீலா மூலம் தொகுக்கப்பட்ட 250 பக்கங்களைக் கொண்ட நூல் இது. கண்டி
45

Page 25
மாவட்டத் தமிழர்களின் அரசியல், பொருளாதாரம், சமூகம், சமயம், கலை, பண்பாடு, முதலான பல்துறை அம்சங்கள் வரலாற்று ரீதியில் இந்நூலில் ஆராயப்பட்டுள்ளது.
10) குறிஞ்சி மலர்கள்
மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்துவரும் மலையக பெண் படைப்பாளிகளின் பங்களிப்புக்கள் சரியான முறையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்ற ஆதங்கம் கொண்டுள்ள அந்தனி ஜீவா மூலம் 12 பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்து வெளியிடப்பட்ட நூலே இது. இந்நூல் 2000 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தில் மலையக வெளியீட்டகத்தின் மூலம் வெளிவந்தது.
11) குறிஞ்சிக்குயில்கள்
மலையக வெளயிட்டகத்தின் 21வது வெளியீடாக வெளி வந்துள்ள இந்நூலில் மலையகத்தைச் சேர்ந்த 21 பெண் கவி ஞர்களின் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. 2002 ம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 2002 இல் இந்நூல் வெளிவந்தது.
12) sylbLD/T
இந்நூலில் 25 இலங்கை பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் அந்தனி ஜீவாவினால் தொகுக்கப்பெற்று, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை கலைஞன் பதிப்பகத் தினரால் 2004 இல் வெளியிடப்பட்டது. 208 பக்கம் கொண்ட இந்நூலில் இலங்கையின் மூத்த பட்ைப்பாளிகள் முதல் இன்றைய இளைய தலைமுறை எழுத்தாளர்கள் வரை 25 பெண் எழுத்தாளர்களின் தேர்ந்த சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அந்தனிஜீவாவின் தாயாரின் நினைவாக அவரது மறைவின் 3ம் ஆண்டு நிறைவு தினத்தில் இந்நூல் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
13) மலைகயக மாணிக்கங்கள்
மலையகத்தில் தமிழ் வளர்த்தோரும், கலை வளர்த்" தோரும், மலையக மக்களுக்காக உரத்த சிந்தனையை விதைத்" தோரும் காலந்தோறும் அந்தனி ஜீவாவினால் பல்வேறு
46

ஊடகங்கள், மற்றும் நூல்கள் வழியாக மீள் அறிமுகம் செய்யப்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட மலையக மக்களின் முன்னேற்றத்துக்காக உழைத்த முன்னோடிகளில் பன்னிருவரைப் பற்றிய தகவல்களை இந்நூல் தந்துள்ளது. இந்நூல் கொழும்பிலிருந்து துரைவி வெளியீடாக செப்டெம்பர் 1998 இல் வெளிவந்தது.
14) முகமும் முகவரியும்
1997 இல் இந்நூல் வெளிவந்தது. இந்நூலில் 100 மலையக எழுத்தாளர்களின் விபரங்கள் காணப்படுகின்றன. எழுத்தாளரின் பெயர், புனைபெயர்கள், தொழில், பிறந்த திகதி, பிறந்த மாவட்டம், எழுதி வெளிவந்த நூல்கள், எழுதிய முக்கிய படைப்பு, சிறுகுறிப்பு, முகவரி என்பன ஒவ்வொரு பதிவிலும் இடம் பெற்றுள்ளன. இந்நூலில மத்திய மாகாண இந்து கலாசார கல்வி அமைச்சின் வெளியீடாகும்.
15) திருந்திய அசோகன்
அந்தனி ஜீவாவின் 60வது அகவையின் போது பேராசிரியர் எம்.சின்னத்தம்பியின், தலைமைத்துவ வழிகாட்டலில் மணிவிழா நடத்தப்பட்டது. அந்தனி ஜீவா சிறுவயதில் எழுதி தினகரனில் வெளியான திருந்திய அசோகன் என்ற சிறுவர் நாவல், மணிவிழாவையொட்டி அன்றைய தினம் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
16) நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம்
2003ம் ஆண்டு ஒகஸ்ட் மாதத்தில் அந்தனிஜீவா இலக் கியப் பயணம் ஒன்றை லண்டன், பாரிஸ் ஆகிய ஐரோப்பிய நகரங்களில் மேற்கொண்டிருந்தார். இவரது பயணக்கட்டுரை தினகரனில் பின்னர் தொடராக வெளிவந்தது. இப்பயணக் கட்டுரை "நெஞ்சில் பதிந்த ஐரோப்பிய பயணம்" என்ற பெயரில் சென்னை மணிமேகலைப் பிரசுரத்தினால் 140 பக்கங்களில் கறுப்பு, வெள்ளை புகைப்படங்களுடன் நூலுருவில் வெளி யிடப்பட்டது.
47 .

Page 26
17) மலையகத் தொழிற்சங்க வரலாறு
மலையக எழுத்தாளர் அந் தனி ஜீவா அவர்களின் “மலையகத் தொழிற்சங்க வரலாறு" என்ற சிறு நூல் நவம்பர் 2005 இல்வெளிவந்தது. இந்நூலில் மலையகத் தொழிற்சங்க வரலாறு என்ற தலைப்பில் இரண்டாண்டு முன்னர் வீரகேசரி வார வெளியீட்டில் இவர் எழுதிய கட்டுரையொன்று சற்று விரிவுபடுத்தப்பட்டு, 24 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
18) சிறகு விரிந்த காலம்
அந்தனி ஜீவாவின் கலை, இலக்கியப் பணிகளில் 45 ஆண்டு நிறைவினை முன்னிட்டு இந்நூலினை பிரித்தானியாவின் அயோத்தி நூலக சேவைகளும், கண்டி, சிந்தனை வட்டமும் இணைந்து 2007 மே 26ஆந் திகதி வெளியிட்டது. இந்நூலில் அந்தனி ஜீவாவினால் எழுதப்பட்ட அவரின் வாழ்க்கைக் குறிப்புகள் சுருக்கமாக பதியப்பட்டுள்ளன.
மலையக கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பில் சுமார் 25 ஆண்டு காலம் செயலாளராகப் பணியாற்றி வரும் அந்தனிஜிவா மலையக வெளியூட்டகம் என்ற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் பிற எழுத்தாளர்களினதும் நூல்களை வெளியிட்டு ஊக்குவித்து வருகின்றார்.
அந்தனி ஜீவாவின் கலை இலக்கியப் பணியினை கெளரவிக்கும் முகமாக தமிழகத்திலிருந்து வெளிவரும் "சிற்றிதழ் செய்தி” எனும் சஞ்சிகையும், "இனிய தந்தவனம்" எனும் சஞ்சிகையும் அதே போல இலங்கையிலிருந்து வெளிவரும் "மல்லிகை", "ப்ரிய நிலா" ஆகிய சஞ்சிகைகளும் இவரின் நிழல் படத்தை முகப்பட்டையில் பிரசுரித்துள்ளன.
கலை இலக்கியத் துறையில் எஸ்.ஏ. ஜீவா, கண்டியூர் கண்ணன், மாத்தளை கெளதமன், கவிதா ஆகிய புனைப்பெயர்களில் ஆரம்பத்தில் எழுதி வந்தபோதிலும் இவரது படைப்புக்" களின் வாயிலாக இறுதியில் அந்தனி ஜீவா என்ற பெயரே இன்று வரை நின்று நிலைத்து விட்டது.
கலாபூசணம் புன்னியாமீன்
நன்றி : “இவர்கள் நம்மவர்கள்" சிந்தனைவட்டம் வெளியீடு
48


Page 27
š,
கலைத்ே
h :ع 芒**_A,
is W.
T سے
*
is :ETE ME T T
res
22
ISBN: 978-955-9084-23-5
།
SSSSSS
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ம்ேபதாவது பிறந்ததினத்தை முன்னிட்டு
யூர் செல்வராசன்அவர்கள்
திசது25 ட
Ar L-ALUM 1 " €rጩትጫ¢”"”
جھلجاوے 登 ਉਨ੍ਹ
ਉਡਨੀ
سے==