கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கட்டுரை இயல்

Page 1


Page 2

கட்டுரை இயல் (Essay Writing

Page 3

ழ் மொழி மலர் 1.
கட்டுரை இயல்
கட்டுரை எழுதுதல்பற்றி உயர்தர வகுப்பு மாணவர்களின் உபயோ கத்திற்காக எழுதப்பெற்றது.
米
This book has been written spetially for the use of students preparing for higher Examinations such as J. S. C., S. S. C. University Entrance, H. S. C., Etc.
"ጎስኦ
-பண்டித வி. சீ. கந்தையா.

Page 4
முதற் பதிப்பு ஆடி 1950
பிரதிகள் 3000
விலை ரூபா 1-50.
.
பதிப்புரிமை ஆசிரியருக்கே Copyright reserved by the Author.

Cls)56/30) pr r பொன்னுரை iii அணிந்துரை V கட்டுரை விளக்கம்
1. குறிக்கோள் 2. கட்டுரை வகை 8. பத்திரிகை படித்தல் 4. தமிழின் மறமலர்ச்சி i5. பத்திரிகைத் தமிழ் 6. செந்தமிழ் 7. கிராமியச் சொற்களும்
கடுங் தமிழ்ப் பதங்களும் 8. அறிவு நோக்கமும்
ஆழ்ந்த சிந்தனையும் 9. குறிப்புகள் எடுத்துக்கொள்ளல் 10. முகவுரையும் முடிவுரையும் 11. இலக்கண மரபு முதலியன 12. குறியீடு
R. முக்கிபமான எழுத்துப் பிழைகள் 14. ஒரோசை எழுத்துக்கள் 15. திருப்பி வாசித்தல் 16. பிற மொழிச் சொற்களை
எடுத்தாளுதல் 17. கட்டுரை தெரிதல் வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
1. ஆலமரமொன்று என்னிட்ம்
கூறியவை 2. நீலவானம் 3. விளைந்த வயற் காட்சி 4. வகுப்பறை கூறியவை 5. ஒரு பட்டமரம் 6. பூரணை இரவில்
பொருளடக்கம்.
பக்கம்
24 25 26 28 29 30

Page 5
பக்கம்
7. ஒரு மாம்பழக் குலே 8. 8. ஒரு வாய்க்கால் 32 9. வேறுசில மேற்கோள் : 33
புலரிக்காலை, காவேரிதிரம், காலைநேரம், மருதநிலம், மாலே நேரம் அருவிக்கரை, ரணகளம், சிவனடியார். 84-89 மாதிரிக் கட்டுரைகள்
1. நோக்கமும் பயனும் 40 2. பரீட்சைகளில் வினவுக் கேற்ப
விடை தரல் 4l 3. பெரியோர் வரலாறு 43 4. கடிதம் எழுதுதல் 45 5. கட்டுரைகள்: 47 1. தமிழின் சிறப்பு 47 2. பெண்கள் கல்வி 53 3. விபுலாநந்த சுவாமிகள் 57 4. விஞ்ஞானக் கலை வளர்ச்சி 6. 5. உழவுத் தொழில் 66 6. இலங்கையின் பொருளாதாரம் , 70 7. (இலங்கையில்) சமீபத்தில் வந்த
வெள்ளப்பெருக்கு 76 8. தேசீய சேமிப்பு இயக்கத்தின்
நோக்கமும் பயனும் 79 IV. பயிற்சி அப்பியாசங்கள்
1. கற்பனையும் வருணனைகளும் 83 2. சொல்லுதல் 85. 3. சுகாதாரம் 86 4. தொழில் 5. அரசியல் 87 6. கல்வி 89 7. விஞ்ஞானம் 8. ஒப்பு நோக்கல் 9. 9. பழமொழிகள் போன்றவை 92 10. பெரியோர் வரலாறு 93

முகவுரை
கட்டுரை என்ற சொல் பேச்சினை யும் எ முத் தினை யு ம் குறிப்பிடுவது. இரண்டிற்கும் பொதுவான சொல் வன்மையும், பொருளமைதியும், பிழை நீக்கம் முதலியனவும் மனக் கருத்தை மற்றையோர்க்கு நன்கு புலப்படுத்தற்கு இன்றியமையாத க ரு வி கள். தமிழ் Gudfryful LIT Liseår (Tamil Language) ஒரு அம்சமான இது எழுத்து மூலம் பரீட்சைகளிற் பரிசோதிக்கப்படுகின் றது. கட்டுரை எழுதும் ஆற்றலே நன்கு வளர்க்கும் ஒரு வழி எழுதும் பயிற்சியே யாகும்.
கட்டுரைகளை கன் முறையில் எழுது தற்கு அடிப்படையான சில குறிப்பு களை இச்சிறு நூலின் மூலம் மாணவர் களுக்குக் காட்ட முயன்றிருக்கிறேன். இப்பொருள் சம்பந்தமாகத் தமிழில் இதுவ்ரை வெளிவந்த நூல்களுக்குப் புறம்பான முறையில் இது எழுதப் பெற்றிருப்பதைக் காணலாம். எனது சிறு அநுபவக் குறிப்புகள் சில புதிதா கப் புனையப்பட்டிருக்கின்றன. காலத் தையொட்டித் தமிழ் மொழி வளர வேண்டும் என்ற நற் கருத்தைத் தமிழ் அறிவாளிகளும், ஆசிரியர்களும் விரிந்த மனப்பாங்குடன் ஏற்றுக்கொள்வார்க ளென்பது எனது நம்பிக்கை. இவ் வகையில், பிறமொழிச் சொற்களைத்
i

Page 6
தமிழில் எடுத்தாளுதல் பற்றிப் பெரி யோர் பலருடைய இன்றைய அபிப்பி ராயத்தை அநுசரித்து எழுதப்பெற்றி ருக்கும் பகுதி சரியானதென்றே கருது கின்றேன். இந்நூலில் இன்னும் சேர்க் கக்கூடிய முக்கியமான குறிப்புகளையோ, திருத்தங்களையோ அறிஞர் எமக்கு அறி விப்பின் அவை அ ன் புட ன் ஏற்றுக் கொள்ளப்படும்.
இந்நூல் வெளிவருவதற்கு உறு துணையாயிருந்த எனது நண்பரும், ஒரு சாலை உடனுசிரியருமாகிய திரு. வெ. திருநாவுக்கரசு (B. A.) அவர் க ஞ க் கு யான் பெரிதும் கடப்பாடுடையேன். கன் முறையில் அழகுற இது அச்சுப் புெறுவதற்குதவிய சுதந்திரன் அச்சகத் தார்க்கு எனது நன்றி உரியது.
தமிழ் மாணவர்களுக்கு, கட்டுரை எழுதுவதில் இந்நூல் நற்பயன் தருமேல் அதுவே எனக்கு மகிழ்வு தருவதாகும். தமிழ் மொழிப் பாடத்தின் "மற்றைய அம்சங்களை இதன் தொடர்பாகப் பின் னர் வெளிப்படுத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். ஆசிரிய உலகம் எனது முயற்சியை ஊக்கப்படுத்தி இதிற் அணை புரியுமென்று நம்புகிறேன்.
வி. சீ. கந்தையா.
சிவாநந்த வித்தியாலயம், மட்டக்களப்பு.
36-1-50

பொன்னுரை.
Mahavidsvan,
Pandit. E. Periyathambipillai,
Government College,
Batticalloa,
பொருள் பொதிந்த சொற்களை நிரல்பட அமைத் துச் சொல்லுதலும், எழுதுதலும் வல்லாரை உலகம் விரைந்து பின்பற்றுமாதலின், கட்டுரை வன்மையுடை யராதல் மக்கள் யாவர்க்குஞ் சிறந்ததோர் அணிகலன கும். இவ்விரண்டனையும் இலக்கண முறையில் விரித் துரைக்குக் தமிழ் நூல்கள் மிகச் சிலவே உள்ள்ன. இத்துறையில் ஆக்கப்படும் நூல்களும் காலப்போக்கிற் கும் நோக்கிற்குமேற்பச் சற்று நெகிழ்ச்சியுடையன வாகவும் அமைதல் இன்றியமையாததாகும்.
தமிழ் நடை கைவரப்-பெற்ற நல்லறிஞர் பலர் வசன நூல்கள் எழுதினுரன் றிக் கட்டுரை வகையியல் வகுத்தாரல்லர். இதனுல், பிற்காலத்து உரை கடை எழுதப் புகுந்தோர்பலர் தத்தம் போக்கிற் சென்று வரையறைக் குட்படாராயினர். மரபு கடந்த பல வசன நடைகள் தமிழில் இடம் பெறுவனவாயின.
இக் குறைபாடுகளை யெல்லாங் களைந்து கட்டுரை வன் மைக்கு ஒருவரையறை காட்டி வழி செய்தற் கெழுந்தது இந்நூல். இதனை இயற்றியவர் கலைபயிலறிவு கட்டுரை வன்மை முதலிய நல்லியல்புகளமைந்த பண் டிதர் திரு. வி. சீ. கங்தையா என்பார்.
iii

Page 7
ஆசிரியர் இந்நூலகத்தே, கட்டுரை என்பது இன்ன தென்பதையும், சிந்தனைக் கட்டுரை, வருணனைக் கட்டு ரை, வரலாற்றுக் கட்டுரை யென்னும் அதன் வகை களையும், இக்காலத் தமிழ் குடைகளிற் கொள்ளத்தக் கன எவை தள்ளத்தக்கன எவை என்பதையும் இனிது விளக்கியுள்ளார். அன்றியும், கட்டுரை யெழுதுவோர் சிந்தனை செய்தற்குரிய வாயில்களையும், குறிப்புகள் எழு திக்கொள்ளுவதற்குரிய வழிகளையும், நெறிப்பட வரை தற்குரிய படிமுறைகளையும் வகுத்-துரைத்துள்ளார்; இலக்கண மரபுகளைக் கைக்கொள்ளல், குறியீடுகளிடு தல், எழுத்துப் பிழை களைதல், இன்றியமையாதபோது பிற மொழிச் சொற்களை அமைத்துக்கொள்ளுதல், முதலியவற்றை மிகவும் அழுத்தமாக வற்புறத்தியுள் ளார். கட்டுரையாளர்கள் தத்தம் கலைத் தொடர்ச் சிக்கேற்ற விடயங்களைத்தெரிந்து கொள்ளல் வேண்டும் என்பதும் ஆசிரியரின் உள்ளக் கிடக்கை. நூலின் இறுதியில் மாதிரிக் கட்டுரைகளும், பயிற்சி அப்பியா சங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. நூலாசிரியரது தமிழ் நூற் பயிற்சியும், ஆங்கில அறிவும் இந்நூலை இயற்று தற்குப் பெரிதும் உபகாரமாயிருந்திருக்கின்றன. ஆசி ரியரது சேவையை யான் நன்கு பாராட்டுகின்றேன்.
நிகழ் காலத்திலும், எதிர் காலத்திலும் ஒப்ப வழங் குதற்கேற்ற இந் நூலானது கட்டுரை யெழுதப் பயில்வார்க்கோர் சிறந்த கருவியாயமைந்து, அவர்தம் சிங்தனு சக்தியையும், க ரு த் து வெளியீட்டையும் விருத்தி செய்து,
" விரைந்து தொழில் கேட்கு ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின் '
என்னுக் திருக்குறளுக்கு அன்னரை இலக்கியமாக்க வல்லதென்பது எனது அபிப்பிராயம்.
ஏ. பெரியதம்பிப்பிள்ளை. 27-4-50.
ν

அணிந்துரை
K.Kanapathipillai, B. A., F. R. G. S. Trained First,
Vice Principal,
Sivananda Vidyalaya, Baticaloa.
“பண்டிதத் தமிழ்’ என்ருல் எவரும் பயந்து ஒட் டம் பிடிக்கின்ற இக்காலத்தில், பரீட்சைகளிற் சித்தி யெய்தும் அவாவுடைய மாணவருக்கும், தமிழ்மொழி உரைநடையில் பயிற்சி பெற்றுத் திருத்தமாகவும் தெளிவாகவும் தங்கள் எண்ணங்களை இலகுவான தமிழில் வெளியிட விருப்பமுடைய தமிழ் மொழிப் பற்றுடையவர்களுக்கும் பயனளிக்கக்கூடிய முறையில் மிகவும் எளிய தூய நடையில்; மதுரைத் தமிழ்ச் சங் கம், யாழ்ப்பாண ஆரிய கிராவிட பாஷாபி விருத்திச் சங்கம் ஆகிய இரு சங்கங்களின் பண்டித பரீட்சை களிலும் தேறிய ஒருவர் கட்டுரை எழுதுதல் என் னும் பொருள் பற்றி ஒரு நூல் எழுதியுள்ளார் என் பது உண்மையில் ஆச்சரியப்படத் தக்க ஒரு விஷ யமே. ஆனல் பண்டித வி. சீ. கந்தையா அவர்களை அறிந்தவர்களும், அன்னரால் ஆக்கப் பெற்ற பாடல் களையும், கட்டுரைகளையும் படித்தவர்களும் அவரு டைய பாண்டித்தியத்தை அவரின் தூய எளிய இனிய உரைநடை, பொருட்செறிவின் ஆழம் என்ப வைகளின் வாயிலாக அறிந்துகொள்வர். சமீபத்தில் நம் மத் யிலிருந்து பரகதியடைந்த பூரீமத். சுவாமி விபுலாநந்தரின் பிரிய மாணவர்களில் இந்நூலாசிரியரும் ஒருவர் என்பது, இவருடைய கட்டுரைகளை ச் செக் தமிழ்’, ‘குமரிமலர்', 'கலைமகள்', 'ஈழகேசரி, போன்ற
V

Page 8
வெளியீடுகளில் படித்தவர்களுக்குத் தெற்றென்ப் புலப்பட்டிருக்கும். " பாண்டியன் தமிழ்’ (Kings’ English) என ஒரு சிறந்த உரைநடை தமிழில் தோன் றுவதற்கு மிகவும் உதவியாக இந்நூல் இருக்குமென் பதில் சந்தேகமில்லை. இக்காலத்தில் தமிழை இனிக்கச் செய்யும் பண்டிதர்கள் வெகுசிலரே. அவர்களுள் ஒருவராக இன்று சிறந்து விளங்கும் வி. சீ. கந்தையா அவர்களின் இம் முயற்சி தமிழ்க் கலை பயிலும் மாண வரனைவருக்கும் மிகமிகப் பயனளிக்கும் என்றே நான் திடமாகக் கருதுகிறேன்.
தமிழறிவும் ஆங்கில அறிவும் ஒருங்கே அமையப் பெற்று, அநேக மாணவர்களை S. S. C, H. S. C, போன்ற பரீட்சைகளில் உயர் (Distinction) தரத்தை அடையச் செய்த படிப்பித்தல் அநுபவ முதிர்ச்சியினும் போலும் பண்டிதரவர்களின் இவ்வரிய பயிற்சி நூல் 'மூன்’ ‘மக்கே’ (Moon and Mackay) போன் ரு?ரது அரிய ஆங்கிலமொழிப் பயிற்சி நூலை ஒத்திருக்கின் நிறஅத.
சொல்லாட்சி, நடை, பொருட் பொதிவு, ஒசை உடைமை, அலங்கார அமைப்பு, கற்பனைச் செறிவு. பாவம் இவையாவும் செய்யுளுக்கு மாத்திரமன்றி உரை நடைக்கும் உரிய சீரிய, இலக்கணங்கள், இவற் றைத் தமது வியாசங்களுட் செலுத்தி உரைகடைப் பயிற்சி பெறுவதற்கு மாணவருக்கும், ஏனைய தமிழபி மானிகளுக்கும், இளம் எழுத்தாளர்களுக்கும் இங் நூல் மிகவும் பயனளிக்குமாகையால், இதனை யாவரும் மனமுவந்தேற்று, இதிலிருந்து பலனடைவார்களென் றம், தமிழில் நல்ல கட்டுரைகளை (Essays) புனைவதற்கு இந்நூல் மிக உதவியாக இருக்குமென்றும் நான் நம்பு கின்றேன்.
28-4-50 க. கணபதிப்பிள்ளை.
vi

1. கட்டுரை விளக்கம்
சிட்டுரை எழுதுதல் எல்லாப் பாடசாலைகளிலும் ஒரு கட்டாய பாடமாகும். பாஷையும் வியாசமும் எனும் டாடத்தில் முக்கிய பகுதியாக இது அமைதல் எல்லாப் பாஷைகளுக்கும் பொதுவானதொன்று. ஒரு பாஷையில் உள்ள அறிவைப் பரிசோதிக்கும் சிறந்த ஒரு வழியாக இதைப் பரீட்சகர்கள் கொள்கி முர்கள். எழுதும் விஷயத்தைப்பற்றிய அறிவு ஒரு பாலாக, பாஷை நடை, எழுதும் ஆற்றல், இலக்கண அமைதி, சொல்லாட்சி எனும் பல மொழித்திறம் காட்டும் அம்சங்கள் கட்டுரை எழுதுதல்மூலம் பரீட்சிக் கப்படுகின்றன. இதஞல் இலக்கணக் கேள்விகளைக் கேட்டு மாண வர்ை மடக்குவதிலும், சிறந்த கருவி யாக இதை இலங்கை வித்தியாபகுதியார்கண்டு அதிகப் படியான புள்ளிக%ளயும் இதற்கு அளித்து வருகிருர்
GT,
எனவே பாஷையிற் சித்திபெறவேண்டிய மாணவர் கட்டுரை எழுதுவதிற் தம்மை நன்கு பயிற்றிக்கொள்ளு தல் அவசியமாகின்றது. தமது வகுப் 1. குறிக்கோள் புக்கேற்ற மொழிகடை முதலிய அம் சங்களையும், விஷயத்தை அ ல சி விளக்கும் முறைகளையும் மாணவர் நன்கு அறிய வேண்டியவர்களாகின்றனர். தரப்படும் பல விஷயங் களிலிருந்து எழுதுவதற்காக ஒன்றைத் தெரிவு செய்

Page 9
கட்டுரை எழுதுதல்
வதிலும் மாணவர்கள் அவதானிக்கவேண்டிய குறிப்பு கள் சிலவுண்டு. இப்படியானவற்றில் மாணவர்களுக் கும், இன்னும் எழுதப் பயில்வோர்க்கும் உதவியான குறிப்புகளைத் தொகுத்துக் கூறுதலே எமது நோக்க மாகும். மாணவரைக் கட்டுரைகள் எழுதுவதில் திற இடையச் செய்து பகிரங்கப் பரீட்சைகளில் இலகு வாகச் சித்திபெறுவிப்பதே இந்நூலின் முக்கிய நோக்க மாகக் காணப்படினும், தொடர்ந்து அவர்கள் இன் னும் எழுதுவதை விடாது வளரவும் இது அத்திவார மாயிருக்குமென்பது இவ்வகையில் எம்மனுபவபூர்வ மான எணணமுமாகும.
கட்டுரைகள் சிந்தனைக் கட்டுரை யென்றும், வருணனைக் கட்டுரை யென்றும், வரலாற்றுக் கட் டுரையென்றும் பலதிறமுடைய 2. கட்டுரை வகை ன வாயினும், அ வை யொவ் வொன்றின் இலக் கண மும் விளக்கமும் மாணவர்கள் இங்கு அறிந்திருப்பது மிக அவசியமான தொன்றல்ல. கட்டுரைப் பொருள்பற்றி மட்டுமன்றி எழுத்தாளர்களுடைய கொள்கைக்கேற் பவும் மாறுபடும். அவற்றை அதிகம்.இங்குச் சிந்தியாது, அதிலும் மிக முக்கியமான சிலவற்றை மட்டும் குறிப் பிட்டுச் செல்ல விரும்புகின்றேன். m
நிறைந்த வாசினை, கட்டுரை எழுதுவதற்கு வேண் டிய முன்னறிவைத் தருவது. பல வேறு எழுத்தாளர் களுடைய கட்டுரைகளும்,
3. பத்திரிகை படித்தல் புத்தகங்களும் படிக்கவேண் டும். வெளிவருகின்ற பத்திரி கைகளில் சிலவற்றையாவது தெரிவுசெய்து மாணவர் படித்துவருதல் அவசியம், உலகியல் நடைமுறைகள், அரசியற் புரட்சி, மாற்றம், போர் முதலியவைகள்,
2
జ్ఞr

கட்டுரை விளக்கம்
இலக்கியக் கட்டுரை 8ள், இலக்கிய விமரிசனங்கள், சிறு கதைகள், கவிதைகள் என்பனவெல்லாம் அவசி யம் கொஞ்சம் கொஞ்சமாவது ஒழுங்காக வாசித்து வரவேண்டும். பழைய இலக்கியக் காலம் போலன்றி இப்போது புதுப் புது மலர்ச்சிகளெல்லாம் நம் மொழி யிடைத் தோன்றியிருக்கின்றன. சரளமான நடை, விறு விறப்பான போக்கு, சவர்ச்சிகரமான வருணனை கள், காரசாரமான கண்டனங்கள், புதுமையான தலே யங்கங்கள், தெள்ளத் தெளிந்த மொழி, ஆழமும் இல குவுமான கருத்துக்கள் இவையெல்லாம் டொருந்திய பிரபல எழுத்தாளர்கள் பலர் நம் இலங்கையிலும், இந்தியத் தமிழகத்திலும் இப்புதுயுகத்தில் தோன்றி யிருக்கிருரர்கள். அவர்கள் தமிழ் வசன நடைக்குப் புத்துயிர் கொடுத்து வருகிறதைப் பத்திரிகைகள், புது வெளியீடுகள் எதுவும் படியாதவர்கள் உணர முடி யாது. இத்தகைய சேவையே இன்றையத் தமிழ் இடைக்கு வேண்டியதுமாகும்.
சங்க காலமெல்லாம் செய்யுள் நடை வளர்ந்தது. பின்னும் தொடர்ந்து, தமிழில் வெளியான நூல் களெல்லாம் செய்யுள் ரூபமானவையே. 4. தமிழின் அதனுலேதான் இ ன் று பழந்தமிழ் மறுமலர்ச்சி அருமையைப் பலர் அறியமுடியாமலும், அறிய முயற்சியாமலும் இருக்கிறர்கள். கவிதையையும், கனிந்த நடை வசனத்தையும் ஒன் முகக் கண்டுசென்ற பாரசியின் காலம் தமிழுக்கு ஒரு மதிப்புக் கல்லாக இருக்கிறது. அதன் பின்னரே தமிழ் வசன நடை வளர்ந்தது எனலாம். ஆறுமுக காவலர், சாமி5ாதையர், போன்ற பெரியோர் தமிழ் வசன நடைக்கு உயிர் கொடுத்தனர். தொடர்ந்து சிறு கதைகளும், கட்டுரைகளும், நாவல்களும் நல்ல தமிழில் வெளிவரத் தொடங்கின. மாத வெளியீடு
3

Page 10
கட்டுரை எழுதுதல்
களும், ஆண்டு மலர்களும், வார வெளியீடுகளும், தினக் கதிர்களுமாக வெளிவரத் தொடங்கிய பல தமிழ் மலர்களும் வெவ்வேறு வகையில் வசன கடைக்கு மறுமலர்ச்சி தந்தன. புதுப்புது எழுத்தா ளர்களின் தோற்றமும், கன்முறையில் நூல் பதித்து வெளியிடும் அச்சகங்களும் உண்டாயின. நல்ல காவல் கள் தமிழில் இல்லையென்ற குறையைப் புதிய சில சரித்திரத் தொடர்பான கற்பனை நூல்கள் தீர்த்துத் தமிழ் வசன நடைக்கும் சிறந்த எடுத்துக்காட்டு களாகியிருக்கின்றன. புது முறையில் கவிபாடும் புரட்சிக் கவிகளும் தோன்றி மொழியை வளமபடுத்து கின்றனர். சிறுகதைக் காலமென்றும், $15ாவல்”கால மென்றும் அறிஞர் கூறும் இந்நூற்றுண்டு, தமிழ் வசன நடைக்காலமாக விளங்கித், தமிழின் சரித்தி ரத்திலும் ஒரு முக்கிய இடம்பெறப் போகின்றது. காலத்துக்கேற்ப 15ாம் வாழ வேண்டுமல்லவா! ஆத லால் எவரும் வசன கடையின் கயத்தையும், பலத் தையும் உணர்ந்து தம்மையும் இதில் வல்லுநராக ஆக்கி தம் கருத்தை இலகுவில் மற்றையோருக்கு வெளிப்படுத் தும் ஆற்றலைப் பெறுதல்வேண்டும் என்பது குறித் துப்போலும், 5ம் வித்தியா பகுதியினர் கட்டுரை எழு தலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றனர். இலங் கைப் பல்கலைக் கழகப் பிரவேச பரீட்சைக்கும், H. S. C. பரீட்சைக்கும் ஆன விசேஷ் வினுப்பத்திர மொன்று-தமிழ், சிங்களம், ஆங்கிலம் இவற்றுள் விரும்பும் ஒரு மொழியில்-கட்டுரை எழுதுதலாக இருத்தல் குறிப்பிடத்தக்கது. எனவே இன்றையப் பத்திரிகைகள், நூல்கள் இவற்றில் கூடியவரை வாசித்து, அறிவோடு மொழி (5டையையும் மாணவர் விருத்திசெய்ய வேண்டுமென்று இதனுல் அறிவுறுத்து கின்றேன். -
4.

கட்டுரை விளக்கம்
பத்திரிகை வாசித்தலைக் குறிப்பிடும்போது மாண வர்கள் அவசியம் கினைக்கவேண்டியதொன்று, பத்திரி கைத் தமிழை ஒருபோதும் பின் 5. பத்திரிகைத் தமிழ் பற்றக் கூடாதென்பது. தமி ழுக்கு பட்டுமன்றி, மற்றைய மொழிகளில் எழுதும் மாணவருக்கும் இக்குறிப்புப் பொதுவானது. பத்திரிகை மொழி ஒரு குறித்த தரத் தில் ஒருபோதும் இருப்பதில்லை. கிராமியப் பேச்சு களில் கதை, கட்டுரைகளை அப்படியே பல பத்திரி கைகள் வெளியிடுகின்றன. இயற்கை நிகழ்ச்சிகளை எடுத்து அப்படியே பாமர மக்களுக்கும் காட்டும் நோக் கமே அக்கதைகள் கட்டுரைகள் கொண் டன் வன்றி மொழி நடையைத், தரப்படுத்துவதல்ல. பத்திரிகாசி சியர்கள் தெளிந்த நடையில் எழுதும் பகுதி நோக்கி, அப்பத்திரிகை முழுவதையும் மொழி நடைக்கு நோக்க வேண்டா மென்பதே மாணவர்களுக்கு காம் இதனுல் எச்சரிப்பது. இக்காலத்தில் வெளிவரும் டத்திரிகை கள் சில நம்தமிழ் 15டைக்குக் கேடுதரும் முறையி லுள்ள கட்டுரைகளையும் வெளியிடுகின்றன. அவற் றைப் படித்து அங்குக் காணும் தமிழுக்கே புதியன வான சொற்களை எடுத்தாண்டு மாணவர் சிலர் தம் கட்டுரைகளைக் கெடுத்துக்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். இந்தியவெளியீடுகளில் குமரிமலர், கலை மகள், கல்கி, சக்தி இவைபோன்ற இன்னும் ஒரு சில சஞ்சிகைகளிலேயே குறிப்பிடத்தக்க எழுத்தாளர் களது நல்ல நடைகளைக் காண்கின்ருேம். அவர்றைத் தனித்தனி காட்டல் இங்கு ஒவ்வாதாதலால் மாணவர் தம் ஆசிரியர் அணையுடன் அவ்வாருனவைகளைத் தெரிவுசெய்து வாசித்துப் பயனடைவாராக.
நம் நாட்டில் நல்ல தமிழ்ச்சொற் பிரயோகங் களைக் கிராமப்புறங்களிலே பரக்கக்காணலாம். பல்
5

Page 11
கட்டுரை எழுதுதல்
வேறிடமிருந்தும் வருகின்ற மக்கட் கூட்டத்தால் கலப்புற்று மாறுபட்டு வழங்கும் வியாபாரப் பாஷை
கள் மொழிநடைப் பயிற்சிக் கொவ் .ே செந்தமிழ் வாதவை. இத்தகைய கலப்பு மொழி ஓரிடத்து வழங்குவது இன்னேரிடத்து வழங்காதாதலால், பொதுவான செந்தமிழ் கடை யையே நல்ல எழுத்தாளர்களும், ஆசிரியர்களும் கொள் கிருர்கள் ‘செந்தமிழ்’ என்றவுடன் கடுந்தமிழ் என்று விளங்கிக்கொள்வது பிழை. ஆனல் செந்தமிழ் என்பது தமிழர் யாவர்க்கும் பொதுவான மொழி. மட்ராஸ் தமிழ், திருநெல்வேலித் தமிழ், யாழ்ப்பாணத் தமிழ், மட்டக்களப்புத் தமிழ் என்ற வேற்றுமை எதுவுமின்றித் தமிழர் எல்லோர்க்கும் விளங்குகின்ற எளிய இனிய பொதுத் தமிழே நாம் குறிப்பிடுகின்ற செந்தமிழ் மொழியாகும். இத்தமிழி லேயே மாணவர்கள் கட்டுரைகளை எழுதவேண்டியது அவசியமாகின்றது.
சிறந்த தமிழ்ச் சொற்களெல்லாம் உருத்திரிந்து நாட்டுப்புறங்களில் வழக்குகின்றன. இவற்றை நன்கு கூர்ந்து அவதானித் துக் 7. கிராமியச் சொற்களும் கிராமப்புற மக்களுடைய கடுந்தமிழ்ப் பதங்களும் பேச்சுக்களிலிருந்து அவர் றைப் பெற்றுப் புதுக்கி காம் உபயோகத்துக்குக் கொண்டுவரவேண்டும். கிரா மிய மொழித் தொடர்கள் அப்படியே எழுதப்படுதல் பரீட்சைகளில் சண்டிப்பாக நீக்கப்படவேண் டு ம். இன்றியமையாத சந்தர்ப்பங்களில் இவற்றை உப யோகித்தால், அடைப்புக்குறியுள் அத்தகைய தொடர் களுக்குரிய கற்றமிழ் குறிக்கப்படுதல் அவசியமாகும். கிராமிய மொழிகளைப் போலவே, மிகக் கடுந்தமிழ் நடையும் பின்பற் றக்கூடாததொன்று. கடுஞ்சொற் பிர
6

கட்டுரை விளக்கம்
யோகித்தலைச் சில மாணவர் பெருமையாகக் கொள் கிருரர்கள். கால நோக்கில் அது பயன்பெருததென் பதை உணர்ந்து ஆன்னர் நீக்கி இலகுவான நடை கொள்ளுதல் சிறந்த வழியாகும்.
கட்டுரை எழுதுதலில் பாஷை நடையைவிட முக்கியமான இன்னென்ற பொருளமைவு ஆகும். *எழுத எடுத் கொண் ட
8. அறிவு நோக்கமும் பொருள் ಅನfg எழுதப்பட்டி ஆழ்ந்த சிந்தனையும் ருக்கிறதா?’ என்ற வினவுக்கு *ஆம்’ என்ற விடையைப் பெறக்கூடியவரை முயற்சி செய்யவேண்டியது மாண வர் கடமை. குறித்த விஷயத்தைப்பற்றி க்ன்கு சிங் தித்துக் குறிப்புகள் எடுத்துக்கொள்ளுதல் இதில் வெற் றியை அளிக்கும் வழியாகும். கிறைந்த சிந்தனை பழைய நினைவுகளை மீட்டு எண்ணங்களைக் கிளறிப் பொருஃத் தருகின்றது. ரசிக்கும் தன்மையை விருத்திசெய்து அறிவுக்கண்கொண்டு எவற்றையும் கோக்கவேண்டும். அப்போது செயலற்றுக்கிடக்கும் கற் துண்டுகளும், சிறு துரும்பும் எல்லாம் நமக்கு எழுத எழுத விரியும் பெரும் பொருள் பொதிந்த கட் டுரைத் தலைப்புகளாகும். பெரிய பெரிய எழுத்தா ளர்களையெல்லாம் இயற்கை தோற்றுவித்தது, அன்னர் தம் ரசிகத்தன்மையும், அறிவுக் கண்ணுேக்கும் கொண்டேதான். கவிஞன் பாரதியினுடைய கட்டுரை களிற் பல நமக்கு இதில் சான்று பகரும். ஒரு பந்த வில் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுத் துண்டுகள் அவனுடைய அகக்கண்ணில் சம்பாஷித்தன. ஒன்று கந்தன், மற்றது வள்ளி என்கிருன் அவன். அவை காற்றில் ஊசலாடுவது, ஒன்றையொன்று கட்டியணைக் கத் துரத்துவதாக அவன் 15ம்முன் காட்டுகின்ற போது, நமது சிந்தனைச் சக்தி ஏன் அப்படிப்போக
7

Page 12
கட்டுரை எழுதுதல்
முன் வராது? பாரதியாரது கட்டுரைகளிலிருந்து இப் பகுகியை ஒரு வகுப்பில் நான் ஒர்முறை படித்து விளக்கினேன். பின்பு, பக்கத்துப் பூஞ்செடியின் கிளை பொன்றில் சிலந்தி நூலில் தொங்கி ஊச லாடிக்கொண் டிருந்த சருகு ஒன்றைக் காட்டி அது சொன்னதாகக் கற்பித்து எழுதும்படி கேட்டபொழுது மாணவர்களிற் ப்லர் ஆச்சரியப்படத்தக்க முறையில் திறம்படக் கற் பித்து வரைந்திருந்தனர். இதனுல் சிக்தணு சக்தியின் பலம் விளங்குகின்றது.
சிந்திக்கும்போது ஒன்றைச் சார்ந்து மட்டும் அன்றி, எகிர்ப்பக்கத்து நின்றும் ஆராய்தல் மேலும் அறிவைப் பெருக்குவது. உயர்தர வகுப்பு மாணவர் கள் இதில் அவசியம் கவனமெடுக்கவேண்டும். உதா ரணமாக மறதி - என்று ஒரு தலையங்கத்தை எடுத் துக்கொள்வோம். எல்லோரும் சொல்வது போல் "மறப்பெனும் பகைவன் வாரிக்கொண்டனன்’ என்று மறதியைப் பகைவகை கினைந்து அதன் தீமைகளை மட் டும் எழுதாது; அதன் நன்மைகளையும் எழுத முயற் சிக்கவேண்டும். 'மறப்பு இன்றேல் உலகம் இல்லை, என்த் தக்கதாய் மறதி அவ்வளவு கன்மையையும்
நமக்குச் செய்கின்றது. ஒருவன் கமக்குச் செய்த தீமையை நாம் மறக்கமுடியாவிடில் நாம் அதனல் பாவச் செயலுக்காளாவோம். அரசர்கள் தமக்குள்
கோபத்தை மறந்து வாழமுடியாவிடில் உலகில் சமா தானமில்லை. ஒருமுறை காம் கேட்ட இசைக்கீதம் மறதியில்லாமலிருப்பதானுல் இசைத் தட்டுக்களேன்? ஒரு முறையிலேயே பார்க்கும் சினிமா நினைவுகளை 5ாம் மறக்கமுடியாமலிருப்பதேல் சினிமாக் கலை வள
ருமா? ஒருமுறை கேட்ட பாடம் மறக்கமுடியாமலிருக் குடானல் அச்சியந்திரங்களும், பாடபுத்தகங்கள் அச்
சுப் போடுதலும் அவசியமற்றனவாகின்றன’-இப்
8

கட்டுரை விளக்கம்
படியாக எழுதிக்கொண்டே போனல் மறப்பும் இயற் கையாய் அவசியமானதொன்று என்று காண வரும். இப்படி விமரிசன ரீதியில் எழுதும் பயிற்சியை மாணவர், தம் படிவளர வளரக் கூட்டிக் கொள்ளவேண்டும். எதற்கும் ஆழமான சிந்தனை அவசியமென்முகின்றது.
பொருளை 5ன்கு சிந்தித்த பின்னர் அவ்வப் போது வேண்டிய குறிப்புக்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். முறையான ஒரு ஒழுங்கில் தலைப்பு விளக் கப்படுவதற்கு இதுவே ஏற்றவழி. பாகம் பாகமாகப் பிரித்து எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றையும் பற்றி வெவ்வேறு பந்திகளில் ஒழுங்காக எழுதவேண்டும். *தென்னை மரம்’ என்று ஓர் கட்டுரை தந்தால் அது பின்வருமாறு பகுக்கப்படலாம் :
1. மரம்.
1. அடி, 2. நடு, 8. வட்டு அல்லது முடி,
I. மரம் உண்டாக்கல் 9. குறிப்புகள்
எடுத்துக்கொள்ளல் 1. சுவாத்தியம், 2. நிலம், 8. பாதுகாப்பு, 4. பிரயோசனம் பெறல், 5. நாம் அடையும் பயன்கள்.
வகுப்புநிலை நோக்கி மேல் வகுப்பு மாணவர் பின் வருவனவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம். 1. தென்னைப் பிரயோசன வியாபாரம்.
1. உலகின் தென்னை விளை தேசங்கள்.
2. வியாபார நாடுகள். 3. வியாபார முறைகள்.
1. கைத்தொழிற் பொருட்கள்.

Page 13
கட்டுரை எழுதுதல்
1. தம்பு, 2. சிரட்டை, 3. ஈர்க்கில் என்பவையும் அவற்றல் பெறும் பொருட்களும்.
I. தென்னைபற்றிப் பண்டை நூற் குறிப்பு களும், மேற்கோள்களும்.
1. “வளர்தெங்கு தாளுண்ட நீரைத் தலையாலே தருதல்’.
2. இடையாயார் நட்புக்குவமையாதல் முதலி Gof.
கேட்கப்பட்ட அளவு நோக்கி இக்குறிப்புக ளொவ்வொன்றும். சுருக்கியோ விரித்தோ எழுதப் படல் வேண்டும். ஒரே விஷயம் எல்லா வகுப்பு மாண்வர்களாலும் எழுதப்படலாமாதலால், தரத்துக் கேற்பப் பொருட்செறிவு வேண்டும். பசு ’ என்ப தைப்பற்றி எழுதக்கேட்டால், ஆரம்ப வகுப்பு மாண வர்கள் போல் ‘பசுவுக்கு நாலு கால்’ என்று ஒரு 5டுத் தர வகுப்பு மாணவரோ உயர்தர வகுப்பு மாண வரோ எழுதுதல் பொருந்தாது. 'இரட்டைக் குளம்புடையனவாய் சற்றுக் குறுகிய முன் காலி ரண்டும், நீண்டு பலம் பொருந்திய பி ன் கா லி ரண்டும் பசுவின் பெரிய உடலைச் சுமந்து நிற்கின்றன’ என் ருே, அன்றி ஏற்றவேறு அடையும், சிறந்த பொருளமைவும் கொண்டோ அதே வசனம் எழு தப்படலாம் நல்ல அடைமொழிகளும், உவமைகளும் கையாளப்படுதல் விஷயத்தை நன்கு விளக்க வழியா கும். ஆயினும் இவை அளவுகடந்து கிறைந்திருத்தல் சிறப்பாகாது அடைமொழிகளை அனவசியமாகத் திணிக்க முயற்சிப்பதும், ஒன்றை விளக்கவேண்டாத பல சொற்களைக் கையாடலும் நீக்கப்பெறுதல் வேண் டும்.
O

கட்டுரை விளக்கம்
பொருளடக்கத்தைப் போலவே; முகவுரையும் முடிவுரையும் கட்டுரையில் முக்கியமானவையாகும். '、 எந்த ஒரு விஷயத்தைப்பர்றியும் 10. முகவுரையும் எழுதப் புகுமுன், அதை அறிமுகப் முடிவுரையும் படுத்தி வைப்பது போன்று சில கூறவேண்டும். பின்னல் விளக்கப் படும் பொருளைச் சுருக்கி அடக்கமாக முன்னுரைத் துப் பின்னுல் விஷயத்துள் இறங்குதல் வாசிப்போர்க் குக் கவர்ச்சியையும், ஆர்வத்தையும் கொடுக்கும். வருணனைக் கட்டுரைகளிலும், கதைகளிலும் திடீ ரென்று ஆரம்பிப்பது ஒரு புதுமுறை. அவ்வாறு திடீரென்று தொடங்கிச் சில கூறி நிறுத்திப், பின் விஷயத்தை முதலிலிருந்து தொடங்கிப் போகலாம். அப்போது, முன்னுல் நாம் விட்டபகுதியே முகவுரை யாகி விஷயத்தை ஆர்வமாகப் படிககச்செய்யக்கூடிய வகையில் இருக்கவேண்டும். இதுபோலவே சிறந்த முறையில் முடிவும் அமைதல் அவசியமாகும். கட் டுரையில் விவரித்த வெல்லாம் அடக்கி, எழுதுவோரது அபிப்பிராயத்தையும் வேண்டுமிடத்துக் காட்டி நன்கு முடிக்கவேண்டும். படித்ததைப் பதிப்பது போல் திரட்டிமுடிப்பதும், சம்பாஷணை போன்றவற் றில் முடிவை விளக்கிக்காட்டல்போல் முடித்தலும், செய்யுள் பழமொழி மேற்கோள் வாக்கியம் என் பவை கொண்டு முடித்தலும், வாழ்த்தி முடித்தலு மாகக் கட்டுரைக்கேற்ப முடிவுரையும் பொருத்தமா யிருக்கக் கவனிததல் ஏற்புடைத்து. முகவுரையி லிருந்து விஷயத்துள் எவ்வாறு தொடர்பாக இறங் கினேமோ, அப்படியே விஷயத்திலிருந்து முடிவுரை மூலமாக மெல்ல நாம் வெளியேறத்தக்கதாக முடிவு அமைதல் சிறப்பாகும்.

Page 14
கட்டுரை எழுதுதல்
இனிக், கட்டுரை எழுதும்போது சிறு சிறு வாக் கியங்களாக எழுதக் கவனிக்கவேண்டும். இது மாண வர் இயல்பாக விடுகின்ற பல 11. இலக்கண மரபு பிழைகளிலிருந்து திருத்தி இல் முதலியன கடைகல்கும், தொடர்களில் எழு வாய் பய னிலை முடிபுகள் பொருத்தமாயிருத்தல் வேண்டும். நீண்ட வசனங்கள் எழுதுவதால் தொடக்கத்துக்கேற்ப முடிவுசெய்ய முடியாமல் பல மாணவர் முட்டுப்படுகின்றனர். எழு வாயினுடைய திணை, பால் முதலியன மாருவகை வினை முடிவு பெறவேண்டும். அவைகள் வந்தது' என் பதுபோன்ற ஒருமை பன்மை மயக்கக்கள் ஒரு போதும் எழுதல் கூடாது. கட்டுரையில் எழுதும் காலம் நெடுக மாருமலிருக்கவேண்டும். தொடர் நிகழ்ச்சி ஒன்றைக் கூறுகையில், தொடக்கத்தில் இறந்த காலத்தில் குறிப்பிட்டுத் தொடங்கினல் அதி லேயே தொடர்பாகப் பேசல் இலக்கண மரபு. இலக் கண நியதி தவருமல் கட்டுரைகள் எழுதுவதற்குக் கூடியவரை முயற்சி செய்யவேண்டும். முன்னல் கூறிய அதே பொருளைப் பின்னேரிடத்தில் அணுவசியமாக எழுதுவது ‘கூறியது கூறல்” என்னும் குற்றத்தின் பாற்படுத்தும். கூடியவரை சுருங்கச்சொல்லி விளங்க 6061&Guh (Short and Sweet) (Lp60)pr60) uå 60æut GT வேண்டும். ஒரு குறித்த அடைமொழிகளையே அதி கம் உபயோகித்தல் கூடாது. ஒரு பொருளுக்குப் பல் வேறு சொற்களிருப்பின், ஒன்றையே பலமுறை கூருது வெவ்வேறு சொற்களைக் குறித்தல் மாணவ ரஅது சொல்லாட்சியைக் காட்டும். மற்றையோருடைய கருத்துக்களை அவர்களுடைய வார்த் ைத  ைய க் கொண்டே கம்மதுபோற் காட்டல் பெருங் குற்ற மாகும். ஈமக்கும் உடன்பாடானல் அக்கூற்றுக்களைக்
2

கட்டுரை விளக்கம்
காட்டி கிளை நிறுத்தலாம். அல்லது நமது சொந்த வசனத்தில் அக்கருத்தை எழுதி விளக்கலாம்.
மாணவர்கள் கவனிக்கவேண்டிய இன்னென்று குறியீடு செய்வது (Punctuation). எழுத்தாளனுடைய மனக்கருத்தை, அழுத்திக்காட்ட உதவு 12. குறியீடு வது குறியீடுகள்தாம். 'பாரதியார்’ என்னும் பெயர்ச் சொல்லுக்கு ம், 'பாரதி யார்?’ எனும் அதே சொல்லாலாகிய வினத் தொடருக்கும், விணு அடையாளமே வித்தியா சம் காட்டுகிறதல்லவா? நிறுத்தவேண்டிய இடங்களில் அவசியம் நிறுத்தி வாசிப்பதுதான் பொருளைத் தெளி வுபடுத்தும். இவற்றுக்கான குறிகளை மாணவர் ஒரு போதும் மரக்கக்கூடாது. அவ்வாறன குறியடை யாளங்களை முன்னேர் கருத்துப்படி இங்குக் காட்டு கின்றேன் .
(1) , -காற்புள்ளி (Comma)- இங்கு ஒரு மாத்திரை கிறுத்தவேண்டும். (ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கை நொடிக்கும், அல்லது கண் இமைக்கும் நேரம்).
(2} ; --2, GorủLịcirofi (Semi colon)— Gg) g 6ööT G6
மாத்திரை நேரம் கிறுத்தவேண்டும்.
(8) : -முக்காம் புள்ளி (Colon)- இங்கு மூன்று
மாத்திரை அளவு நிறுத்தவேண்டும்.
(4) , -முற்றுப்புள்ளி (Full Stop)- நான்கு மாத்
திரை நேரம் நிறுத்தவேண்டும்.
3

Page 15
கட்டுரை எழுதுதல்
” (5) P -6969)ả31ỹ (Question mark or mark of interrogation)- கேள்வியைக் குறிக்கும். இங்கும் கான்கு மாத்திரை நிறுத்தம் வேண்டும். 6) -afull 960) a digas (Mark of Exclamation) அதிசயத்தினைக்காட்டும். இவ்விடத்துச் சந்தர்ப்பம் நோக்கி இரண்டு மாத்திரை முதல் ஆறு மாத்திரை வரை நிறுத்த லாம். (7) ‘.’-மேற்கோள் அடையாளம் (Quotation Marks)- பிற கூர்றை எடுத்தாளும் போதும், பிறர் கூறுவதுபோற் கூறும் போதும் இவை இடப்படவேண்டும் (‘.’ மேற்கோட் குறியின் ஒர்றை யான இப்பாகம், பிறபாஷைச் சொற் களை நாம் உபயோகிக்கும் போதும் பிறர் சொல்லை நம்மதாக உபயோகிக் கும் போதும் இடுதல் வழக்கம்)
எழுதிக்கொண்டு போகும்போது புள்ளியெழுத்துக் க்ளுக்குப் புள்ளியிடுதல் போன்று வசனப் பொருட் பொருத்தம் காட்டுதற்காய் இக்குறியீடுகளை இட்டுப் போம் பழக்கத்தையும் மாணவர் பயிற்சியிற் கொண்டு வர வேண்டும்.
எழுத்துப் பிழைகள் வசனத்தை அலங்கோலப் படுத்திப் படிப்போர்க்கு அலுப்பைத் தருவதாதலால், அப்பிழை நீக்கத்துக்கு மாணவர் உடலுக்குடன் முயற்சி செய்யவேண்டும். ஆசிரியர்களிடம் காட்டித் திருத்தம் செய்தபின், பிழைகளையும் அவற்றின் திருத் தங்களையும் கன்கு அவதானித்து மனதிற் பதித்துக்
4.

கட்டுரை விளக்கம்
கொண்டால் விரைவில் இக்குற்றம் நீங்கலாம். எழுத் துப் பிழைகள் குறித்த பொருளை மாற்றிவிடும் தன்
மையனவுமாம். ' அவர் க் கு க் 13. முக்கியமான கொடுத்தான் என்பதை 'அவற் எழுத்துப் குக் கொடுத்தான்’ என்றெழுதினுல்,
பிழைகள் சில ‘அவற்கு என்னும் பதம் ‘அவ அனுக்கு’ என்று ஒருமைப் பொரு ளைக் குறித்து எண்ணத்தை மாற்றிவிடுகின்றது. *அளித்தான் எனும் பதம் (கொடுத்தான், காப்பாற் றினுன்), அழித்தான்’ (இல்லாமற் செய்தான்) என்று எழுதப்படும்போது பொருள் கேர்மாமுக இருக்கிற தல்லவ! இதுபோலவே "கொண்டுவா’ என்பதற்குப் பதில் கொன்றுவா ’ என்று அரசன் தடுமாறிச் சொன்னதால் சேவகர் கோவலனை வெட்டிவிட்டு வங் தார்களென்று கோவலன் கதையில் படித்திருக்கி ருேம். சமயம், சமையம் இரண்டும் மாருட்டமாக எழுதப்படுகின்றன. ‘சமயம்’- (சைவம், கிறிஸ்து முத லிய) மதங்களைக் குறிக்கும் சொல், "சமையம்’-நேரம் அல்லது தருணம் எனும் பொருளில் வரும் சொல் என்பதை அவதானித்து அப்பிழையை நீக்கவேண்டும். * அதற்கு ’ எனும் பதத்தைப் பல மாணவர்கள் * அதர்க்கு ’ என்றும், அதற்க்கு’ என்றும் எழுதுகிறர் கள். ‘பாற்க்குடம்’, ‘காட்ச்சி ஏற்ப்புடையது' என்பது போன்ற பிழைகளும் சகசமாயிருக்கின்றன. ற், ட், போன்ற வல்லெழுத்துக்களின் மிகுந்த சத்தம் அடுத்து வரும் மெய்யெழுத்துக்களை ஒலிபெற வழியில்லாமற் செய்கிறதென்பதை மாணவர் மனதிற்கொள்ள வேண்டும். * பால்க்குடம் ' அவைகளில்ச் சில ’, "தோல்ப்புரை', 'வாள்த்தடங்கண்' போன்ற புணர்ச் சிகள் இலக்கண முடிபு பெருதன. சாதாரணமாகப் பேசும்போது இப்படித்தான் இச்சொற்களைப் பேசு கின்முேமென்பதற்காக, வலிந்து இப்படியேதான் எழு
15

Page 16
கட்டுரை எழுதுதல்
தவும் வேண்டும் என்று கூறுவோர் சிலரும் இன்று உளர். ‘பண்டை இலக்கண மரபையேன் கட்டிக் கொண்டு அழவேண்டும்' என்று அவர்கள் கேட்கிருர் கள். ஆயினும் எழுத்துச் சிக்கனமும், ஒசை கயமும் இலக்கண அமைதியும் பெறுதல் நோக்கிப் 'பாற்குடம் 'அவைகளிற் சில', 'தோற்புரை', 'வாட்தடங்கண்', (வாட்டடங்கண்) என்பனபோன்றே எழுத வேண் டும். "புதியன புகுதலும், பழையன கழிதலும் வழு வல’ என்பதன்றி: "புதியன புகுத்தலும் பழையன கழித்தலும் வழுவல“ என இல்லையல்லவா! இத்த கைய புணர்ச்சிச் சொற்களை உபயோகத்திற் காணு தல் பழைய இலக்கியங்களைப் பொருள்கண்டு ரசிக்க வும், பாட்டுக்களைப் பதச்சேதம் செய்து இலகுவில் விளங்கவும் மாணவர்களுக்கு மிக உதவி செய்யும்.
சொற்களில் ர, ற, ல, ள, ழ, ன, ண, ந என் பன போன்ற கிட்டத்தட்ட ஒரே சத்தமுள்ள எழுத் துக்களின் உபயோகமும், பொருட் 14. ஒரோசை பேதமும், நன்கு கவனிக்கப்பெற எழுத்துக்கள் வேண்டும். ஒன்றனிடத்தில் ஒலி யொப்புமை (ே5 r க் கி இ ன் னென்றை எழுதுதல் பொருட் சிதைவுக்கு வழியாக் கும். இத்தகைய எழுத்துக்களின் மாற்றத்தைத் தெளிவுபடுத்தச் சில கூட்டுப் பதங்களையும், அவற்றின் பொருட்டேதங்களையும் காட்டுவோம்.
1. அரம்-அராவும் கருவி 2. அரி-சிங்கம், திருமால் அறம்-தருமம் அறி-அறிந்துகொள் .ே அரை-பாதி, இடுப்பு 4. இர-இரந்துகேள்
அறை-வீட்டின் அறை, இற-செத்துப்போ
(கன்னத்தில் அடி)
6.

கட்டுரை விளக்கம்
5.
7. உரை-சொல்.
உறை-வசி.
9. குரங்குகுரங்கு
1l.
13.
15.
7.
19. முந்நூறு-மூன்றுநூறு. 20.
கரி-யானை, அடுப்புக்கரி கறி (சாப்பிடும்) காய் கறி.
எனும் மிருகம். குறங்கு-தொடை.
பரவை-கடல். பறவை-பட்சி.
விரல்-கை விரல். விறல்-வலிமை.
உலை-கொல்லுலை. உளை-பிடரி மயிர். உழை-பக்கம், சம்பாதி. கலை-கல்வி ஞானம். களே-களைப் பூண்டு. கழை-மூங்கில், நீக்கு
முன்னூறு-முதல் நூறு
6.
. 10.
12.
l4.
16.
கரை-ஒரம். கறை-குற்றம்.
குரை-ஒலி அல்லது சத்தமிடு, குறை-குற்றம் அல்லது குறைவுபடுத்து
மரை-மரை எனும் மிருகம்,
மறை-வேதம், ஒளிந்து
கொள்.
பரி-குதிரை.
பறி-பறித்தெடு.
அலை- கடலலை அளே-சேறு, புற்று. அழை-கூப்பிடு.
அலகு-(பறவை) மூக்கு அளகு-சேவல்.
அழகு-எழில்.
. வாஃா - வாளை மீன்.
வாழை-வாழை மரம். வாலே-இளமை, இலக் குமி.
அங்காய்=ஆந்த நாய்
அன்னுய்-தாயே!
7

Page 17
கட்டுரை எழுதுதல்
2. மண்-பூமி. 22. கனி-பழம்.
மன்-அரசன். கணி-சோதிடன்
இன்னும் பொரு, பொறு; கருப்பு, கறுப்பு; பொரி, பொறி, கூரிய, கூறிய, கூரை, கூறை மரம், மறம்; பாரை, பாறை; பிரை, பிறை; பெரு, பெறு; சாரு, சாறு: பேரு, பேறு என்பனவும்; இலே, இளை, இழை; விலை, விளை , விழை; வலை, வளை, வழை; கில கம், கழகம்; காணம், கானம்; மனம், மணம், பனி, பணி என்பனவும் போன்ற பதக் கூட்டங்களின் பேதக் கருத்துகளை ஆசிரியரிடம் கேட்டும், வழக்கி லிருந்தும் அறிந்து வைத்திருத்தல் வேண்டும். இத்த கைய பதங்களை வைத்துத் தனித்தனி வசனங்கள் ஆக்குதலால் இவற்றை மதிக்கும் ஆற்றலை விருத்தி செய்யலாம். அப்போ இவ்வெழுத்துக்களினென்று எழுதும் இடத்தில் இன்னென்றுவந்து பிழையுறுத் தாது மாணவர் தப்பிக்கொள்ளுவர்.
பொதுவாக மாணவர்கள் எழுதுதலில் விடும் பிழைகளிற் சிலவற்றை இங்குக் காட்டினுேம். மறக் தேனும் பிழை விடுதல் மனித
15. திருப்பி வாசித்தல் இயற்கையேயாதலால் அதற் காகக் கவலைப்படுவதைவிட, அடிக்கடி ஆட்கொள்ளும் பிழைகளைத் திருத்த முய லுதல் நற்பயனளிக்கும். அவ்வாறு க வ லை யீ ன மாகவோ, தெரியாமலோ விட்ட பிழைகளையெல்லாம் மாணவர் தாமே ஒருமுறையாவது படித்துப்பார்த் துத் திருத்தவேண்டும். ஒருவர் தான் எழுதும் எதை யும் திருப்பி வாசித்துப் பார்க்காமல் இன்னுெருவர் கைக்குக் கொடுக்கக்கூடாது. ஆகவே எழுதுகின்ற கட்டுரைகளையும் அப்படித் தாம் படித்துப் பார்த்தல் பல கன்மைகளைத் தருவதொன்று, அப்போது வரும்
8

கட்டுரை விளக்கம்
பிழைகளைத் திருத்தம் செய்துகொண்டால் மேர்காட் டிய வாமுன பிழைகள் எவரையும் இலகுவிற் சேரா என்று கூறலாம். பெரும்பாலான மாணவர் கள் தீாம் எழுதுவதைத் திருப்பி வாசிக்கவேண்டும் எனும் கவலையில்லாதவர்களாயிருக்கிருரர்கள். இரண் டொரு முறைகளில், திருப்பி வாசித்தலின் கற்பய னைக் கண்டுகொண்டார்களானல், நிச்சயம் திரும்ப வாசிக்கத் தவறமாட்டார்கள். பகிரங்கப் பரீட்சைகளி லும் தாம் எழுதிய விடையாவும் திருப்பிப் படித்த பின்னரே பரிசோதகரிடம் கொடுக்கவேண்டும். தரப் பட்ட நேரத்தில் ஒரு பகுதியை ஏற்கெனவே இதற் காக ஒதுக்கிவைத்து அப்படியே செய்வார்களானல் தாம் குறைந்த வினக்களுக்கே விடை எழுதினுலும் எழுதியவற்றிலாவது நிறைந்த புள்ளிபெறப் பாத்திர ராவா.
இனி இன்றைய தமிழ் மொழியில் ஏற்படுகின்ற முக்கியமான கலப்பு ஒன்றைப்பர்றிக் கவனிப்போம். பிற பாஷைச் சொற்கள் பல 16. பிறமொழிச் தமிழில் இப்போது மிகுதியும் சொற்களை கலந்து வழங்கப்படுகின்றன. தமிழ் எடுத்தாளுதல் 15ாடு விரிந்து பரந்து வேறு படை யெடுப்புகளால் சேரா திருந்த காலம்போய், பல பாஷைச் குழல்களால் நெருக்கப் பட்டு, அங்கியராட்சியால் அடிமைப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனுல் தமிழ் மற்றைச் சொற். களும் தன்னுட் கலக்க இடம்கொடாமலிருக்க முடிய வில்லை. நன்னூலாசிரியர் காலத்தில் தமிழ் நாட்டில் பன்னிரண்டு கொடுந்தமிழ் நாட்டுச் சொற்கள் கொஞ் சம் கலந்தன என வரையறை கூறினர். இன்றைய இந்தியத் தமிழில் தெலுங்கு, கன்னடம், மலையாளம், பார்ஸி, அரபி, உருது முதலிய பல சூழற் பாஷை ச்
9.

Page 18
கட்டுரை எழுதுதல்
சொற்கள் வலிந்து புகுந்துகொண்டன. கடல் சூழ்ந்து இங்கியாவினின்றும் தனித்து இருக்கிற காரணத்தினுல் சம்மிலங்கைத் தமிழ் இத்தகைய கோரப் படை யெடுப்புகளுக்கு இலகுவில் ஆளாகாது தப்பியது கமது பாக்கியமே. இவற்றைவிட ஆங்கில மொழிக்கலப்பு ஒருபால் எங்கும் சேர்ந்திருக்கிறது. அதிலும் இந்தி யத் தமிழர் அாேக சொர் கஃவத் தம் உபயோகத்துக் கெடுத்துக்கொள்ள ஏற்பட்டது. ஏரோப்ளே ன (Aeroplane), 6Gg rursa v Taši (Gramaphone), Liß i 49. iš (Meeting), бол tih (Time), on 1 i ( Hat), a trg (Judge) ஸ்டாம்பு (Stamp) போன்ற சொர்களை அப்படியே பொது மக்களிற் பலர் அங்கு உபயோகிக்க, இலங்கை யில் இவை பெரும்பாலும் ஆகாயக் கப்பல், பாட்டுப் பெட்டி, கூட்டம், கேரம், தொப்பி, நீதிபதி, தபால் முத்திரை எனும் பதங்களால் குறிப்பிடப்படுகின்றன. பிறமொழிச் சொற்களை நாம் சேர்த்துக்கொள்ளுவ கால் நமது மொழி விரிந்து இன்னும் வளர்ந்து செழிப்புறம், ஆயினும் நம்மிடம் இல்லாதவற்றைச் சேர்த்துக்கொள்வதன்றி அணுவசியமாகச் சொல்லிர வல் வாங்குதல் நல்லதல்ல, மேனுட்டு மொழிகளி லேயே இன்றைய நாகரிக க;ை யாகிய விஞ்ஞான நூல் களெல்லாம் இருக்கின்றன. அவர்றக்கான சொற் களை நாம் அப்படியே உபயோகிப்பது இலகுவாக விளங்கிக்கொள்ள உதவியாகும். ஆதலால் அப்படி யானவைகளையும், இன்) வழக்கத்தில் பிரிக்கமுடி யாது புகுந்துகொண்ட சொற்களையும் நாம் எடுத் தாளவேண்டியிருக்கிறது. இவற்றுக்காகக் கஷ்டப் பட்டு மற்றையோர்க்கு விளங்காத கடும்பத உபயோ கத்தைக் கொள்வது பயன்படாது. ரேடியோ (Radio), ஸயன்ஸ் (Science), மைக் (Mike), மோட்டோர் (Motor, as it if (Car), Liev (Bus), Qul (3d Tai (Petrol) பைசிக்கிள் (Bicycle), மார்க்கட் (Market), போஸ்ற்
20

கட்டுரை விளக்கம்
5 T' (Post Card), Giv'Gổg ay Gör, (Station), (ởuuri L. IT 196 (Post office), Gustl. Gl-It (Photo), 60 có) (Mile), GT is if (Acre), L' (orth (Tram, aluaai (Violin), கோர்ட் (Court), பியன் (Peon), கோட் (Coat), ay iil ”. (Shirt), GBG 7 L. IT (Soda), G34. Tj. Go Giv (Talkies), யார் (Yard) போன்ற சொற்களெல்லாம் தமிழருக்கு நன்கு பழக்கமானவையாய்க் கலந்து போனவைகள். 'துவிசக்கர வண்டி’ எனும் வட மொழிபெயர்ப்பிலும், பார்க்க ‘பைசிக்கிள்’ என்பது சாதாரணமான சொல்லாயிருக்கிறபோது பின்னதை ஆள்வதில் அவ்வளவு தப்பில்லை. ஆகையால் இத்த கைய சொற்களைத் தடுக்கமுடியாதவாறு நாம் கட் டுரைகளில் அப்படியே எடுத்தாளும் படி ஏற்படலாம். அப்படி வரும்போது இவற்றை ‘பஸ்’ என்பதுபோல் ஒரு கோட்பினுள் காட்டுதல் இனம் கண்டு கருத் தறிய உதவியாகும்.
சொல்லாராய்ச்சியும் பொருளாராய்ச்சியம்டோல் கட்டுரை தெரிவுசெய்வதும் அவசியம் அவதானிக்கப் டெறவேண்டியது. பரீட்சைகளில், பல 17. கட்டுரை வகையிலும் எழுதக்கூடிய தலைப்புகள் தெரிதல் தரப்படுகின்றன. மாணவர் தமக்குத் திறமையுள்ள பொருள்பற்றி எழுது தற்கு இது உதவி செய்கிறதுபோல். எழுதுபவர்களி னுடைய திறமை சார்ந்திருக்கும் பகுதியை மட்டிடப் பரிசோதகர்களுக்கும் உதவியாகின்றது. உலக விவ காரங்கள், அரசியல் விஷயங்கள் போன்றவை பத்தி ரிகை வாசிப்பதில் கவனமுடையவர்க்கு இலேசான வையாகும். இலக்கிய ரசிகர் இலக்கியம் சம்பந்தமான வற்றை எழுதுவர். கர்பணுசக்தி மிகுந்தோர் கர் பனைக் கதை, வருணனைக் கட்டுரை என்பனவற்றை எழுதப் புகுவர். இவைகளில் எல்லார்க்கும் பொது
2.

Page 19
கட்டுரை எழுதுதல்
வானது கற்பணுசக்தி யொன்று. இதை மாணவர் விருக்கிசெய்து வைத்திருப்பது முன்னயத்தமின்றியே நல்ல கட்டுரைகளை எழுத உதவிசெய்யும். வாசினை யறி வும், கேள்வியறிவும்கொண்டு எழுதுவதுபோல, இவை யொன்றுமின்றி எழுத உதவிதரும் கற்பணு சக்தியை ஆளும் வகையையும், வளர்க்கும் முறையையும் மாண வர் நன்கு அறிந்திருத்தல் வேண்டும். ஆதலால் இதன் அவசியம், பயன், இதை விருத்திசெய்யும் வழி வகைகள் என்பனவர்றைப்பற்றித் தனியாக அடுத்த அதிகாரத்தில் விளக்குவோம்.

2. வருணனைப்பகுதிகளும் தழுவி எழுதுதலும்.
சிற்பனைக் கட்டுரைகள் எழுதுவோரது சொந்தத் தன்மை (Originality)யைக் காட்டுவன. இயற்கை யிலே எல்லார்க்கும் பொதுவான கற்பணுசக்தி :பானது சூழல், ரசித்து வாசித்தல் முதலியவற்முல் வெவ்வேருரின வகையில் வளர்வுறுகிறது. தொடர்ந்து எழுதுகின்ற பயிற்சியும் இதை வளர்க்கிறது. கற்பனைப் பகுதிக*ள மாணவர் எழுதப்பழகுவதற்கு கற்பித்து எழுதப்பட்ட வருணனைகளை வாசித்தலும், அவற்றை மாதிரியாகக்கொண்டு எழுதுதலும் உதவிசெய்யும், பெரியார்களுடைய நடை, வருணனை முதலியவற்றை நாம் தழுவி எழுதப்பழகுதலில் தப்பில்லை எனலாம். ஆரம்பத்தில் இவ்வாறு தழுவி எழுதுதல் (Imitating) மிகுந்த நன்மைதருமென ஆங்கில எழுத்தாளர் பலர் கருதுகின்றனர். கெடுகிலும் மற்றையோரைப் பிரதி செய்து எழுதுவது மிகப் பொருத்தமில்லாததே. ஆஞல் தொடக்கத்தில் காம் வருணிக்கும் ஆற்றல், கற்பிக்கும் சக்தி இவற்றைத் தூண்டித் துரிதப் படுத்துவதற்கு இப்படிப் பிரதிசெய்தலும், தழுவி எழுதுதலும் போன்றவை மிக உதவிசெய்யும், தங்கள் கற்பனையை மாணவர் விரித்துக்கொண்டபின் தழுவி எழுதுதலிலிருந்து மெல்லமெல்ல நீங்கிச் சொந்தத்துக்கு
23

Page 20
கட்டுரை எழுதுதல்
------- ས་ཁམ---ཨ་མ---ང་མཁ-མ─མཁན་མི་ས་ཡ་མང་ཁ་མཁས་མཚམས་ཟས་རྩམ་ཟན་ཡ
வரவேண்டும். நல்ல எழுத்தாளர்களுடைய வருண இனப்பகுதிகளையும், கட்டுரை கதை என்பனவற்றை யும் படிக்கும்போது அவ்வாசிரியருடைய சிந்தனை வேலை செய்துள்ள திறமையை மாணவர் அவதா னித்துக்கொள்வார்கள். படிப்படியாக இலகுவும், கடி னமுமான பகுதிகளேத் தெரிவு செய்துகொண்டு அவற் றைப்போன்ற வேறென்றையிட்டு மாணவர் எழுத வேண்டும். தெரிவுசெய்த பகுதியிலுள்ள தொடர் களையே ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் எடுத்தாள லாம். பின்னர் சொற்களையும், அப்படியே கருத்துக் களையும் ஆண்டு தனது சொந்தித் தன்மையை வளர்த்துக் கொள்வதற்கேற்ற அளவில் பெற்றுக் கொண்டு வெளியேறல் வழி. இப்படி மாதிரியாக எழுதக்கூடிய வருணனைப் பகுதிகள் சிலவற்றை இங் குத் தருகின்றேன். இவை போன்றவற்றைத் தம்
சிரியர் உதவிகொண்டு மாணவர் தம் தரத்துக்கேற் பத் தெரிவுசெய்து தழுவி எழுதிப் பழகிக்கொள்ள
6) (TLA :-
1. ஆலமரமொன்று என்னிடம் கூறியவை
தூரமிருந்து களைத்துவரும் பிராணிகளுக்கு இளைபபாறும் பாடி வீடாக வழியருகில் நான் வளர்ந் திருக்கிறேன். காலங்தோறும் இளந்தளிர்களும், பசிய இலைகளும், பொன்னிறமான பழுப்பிலைகளும் ஆகிய புதுப்புது உடைகளை மாற்றிமாற்றி உடுத்து மகிழ்கின் றேன். மிக நுண்ணிய ஒரு விதையுள் எனது இக் தப்பெரிய தோற்றம் எவ்வாறு அடங்கியிருந்ததென் பது எனக்கும் ஆச்சரியந்தான். படர்ந்து பருத்து விளங்குகின்ற எனது கிளைகள், பலவகைப் பிராணி களுக்கு உறைவிடமளிக்கின்றன. நான் பழுத்திருக் கும் காலம் பார்த்து காகம், குயில், அணில், குரங்கு
24

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
முதலிய எத்தனையோ விருந்தினர்கள் வருகிருர்கள். அவர்கள் யாவரும் என் வீட்டிற்கு அழையா விருங் தினரேயாயினும் நான் ஒப்புடன் முகமலர்ந்து உப சரித்து உணவு வழங்குகின்றேன். உருண்டையும் அழகுமான எனது சிவந்த பழங்களுள், சிறிய புழுக் கள் எப்படியோ புகுந்துகொண்டு உள்ளொன்று புறம்பொன்றனவர்களுக்கு, 'ஆலம் பழம் போல’ என்று மற்றவர்கள் குத்திக்காட்டும் வசைமொழிக்கு என்னை ஆளாக்கிவிட்டன. விழுதுகளாக நான் வைத் துக்கொண்டிருக்கும் ஆகாய வேர்கள் உங்களைப் போன்ற துடுக்கு நிறைந்த மாணவர்களுக்கு ஆடு கயிறுகளாகின்றன. இது எனக்கு நோவைக் கொடுப் பதேயாயினும், நீங்கள் உந்தி ஊஞ்சலாடும்போது உறும் மகிழ்ச்சியைக் கண்டு கோவை மறந்து ஆனக் தப்படுகின்றேன். எனது சந்ததியார் மற்றவர்களுக்கு நிழல் கொடுத்து உதவுவதில் பரம்பரையாகவே புகழ் பெற்றவர்கள். அதற்குக் கைம்மாமுக எவரிடமும் எதுவும் வேண்டாத எங்களின் லட்சியத்தை நீங் களும் அவசியம் பின்பற்றி வாழ முயலுதல் கல்ல தில்லையா ?
இதைத் தழுவி, 'உன் விட்டு மாமரம் கூறியவை’, "நாற்சந்தியில் நிற்கும் பழைய அரசமரமொன்று கூறி யவை’ போன்ற தலைப்புகளில் மாணவர் கற்பித் தெழுத முயற்சிக்கலாம். མ་
2. நீலவானம் வானம் நீலநிறமானது. எல்லையற்ற அகலமும் பாப்பும் உடையது. வானவெளியானது சூரியனிட மிருந்து கவர்ந்த நீல நிறத்தினலே நீல வானமாகிப்
25

Page 21
கட்டுரை எழுதுதல்
பூவுலகத்தினருக்கு ஒரு அழியாத கூரைபோன்று விளங்குகின்றது. 15மது தூண்டா விளக்கமாகிய கதிர வனும், இரவினிலே பால் பொழியும் மதியவனும் தன்னகத்தே சஞ்சாரம் செய்வதற்கு இடந்தந்து ஈமக்குப் பேருதவி செய்த இங்லே வானத்துக்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு யாது? நிறைந்த இராக் காலத்தே வைரக் கற்கள் போன்று அங்கங்கே இடை விடாது பிரகாசிக்கின்ற கட்சத்திரக் கூட்டங்கள் வானத்தின் நீலநிறத்தை இன்னும் மிகுதிப்படுத்த்வன வாகும். காலையிற் தோன்றும் கதிரவனின் பொற் கிரணங்களும், மாலையில் வரும் அவனது செங்கிர ணங்களும் லேவானம் என்கின்ற பட்டுச் சீலைக்கு வைத்துப்பிடித்த சரிகைக் கரை போன்று அழகு கருவன. சூரியனது கதிரொளியால் வேறு வேறு கிறங்கொண்டு பலவேறு தோற்றங்களில் காட்சியளிக் கும் மேகக் கூட்டங்கள் லேவானத்தினுடைய விளை யாட்டுப் பொம்மைகள். நமக்கு இனிய தென்றலை யும், குளிர்ந்த மழையையும் தந்து 15ம்மை வாழவைக் கும் இக்லேவானம் நமக்குச் செய்யும் பேருதவிகள் அளப்பில்லனவன்றே!
இப்பகுதியைத் தழுவி 'நீலக் கடல்’, 'பசிய மைதானம்’ எனும் தலைப்புகளில் வருணனைப் பகுதி கள் எழுதுக. இதுபோன்ற பகுதிகள் 'அந்திவானம்', 'மழைக் காலம்' என்பவற்றில் எழுதவும் உதவிதரும்.
3. விளைந்த வயற்காட்சி
மலையிலிருந்து ஓடிவரும், ஒரளவு அகலமும் ஆழ முமான ஒரு ஆறு. அதன் இருமருங்கிலும் காணப் படும் பரந்த செழித்த வயல், வயல் முழுவதும் கதிர்
26

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
பழுத்திருந்த காலம். எங்கும் பசிய பொன்னிறம். சுமைதாங்காமல் கதிர்கள் தலைசாய்ந்து நிலத்தைத் தொட்டுகின்ற காட்சி பக்திமான்கள் ஒருவரையொரு வர் தலை தாழ்ந்து வணங்கி கிற்பது போலிருந்தது. வயல் வெளியிலே இடையிடையே காணப்பட்ட உயர்ந்த வரம்புகளில் படர்ந்திருந்த பசிய பொன் ஞங் காணி, பால் அறுகு முதலியவற்றின் மிகுந்த பசுமை கிறம் கதிர்ப் பழுப்பின் டொன் னிறத்தை இன்னும் மிகுதிப்படுத்துவதாய் இருந்தது. வயலிலிருந்து வெளி யேற்றப்பட்ட நீரோடும் சிறிய வாய்க்கால்களில் துள்ளிக்
குதித்துத் திரியும் மீன்களைப் பிடிப்பதற்காக காரை கள் ஒற்றைக்காலில் தவம் செய்துகொண்டிருந்த காட்சி பார்ப்போர் மனதில் அமைதியையும் சாந்தி யையும் ஊட்டுவதொன்று. நெடுங் தொலைவில் உள்ள காடுகளிலிருந்து பாட்டம் பாட்டமாகப் பறந்துவந்து நென்மணிகளைத் திருடுகின்ற குருவியினங்களைக் கல் லெறிந்து ஒட்டும் சிறுவர்களதும் சிறுமிகளதும் இன் னிசைக் கீதம், நீர்க்கால்களிலிருந்து எழுகின்ற 'குளு, குளு’ சத்தத்தோடு சேர்ந்து தெவிட்டாத இன்பந்தருவதாய் இருந்தது. வயலில் அங்கங்கே உயர்ந்த பரண்கள் காணப்பட்டன. வயலைச் சுற்றிப் பார்வையிட்ட பின் ன ர், அப்பரண்களை நோக்கி விரைந்து 15டக் துசெல்லும் மள்ளர்களது அழகிய கம் பீரமான தலைப்பாகைகளும், தோள்களில் காணப்படும் மண்வெட்டிகளும் “உழவே சிறந்த தொழில்" என் னும் உயர்ந்த திடமான கருத்தை 5மக்கு ஞாபக மூட்டுவன. "
'பசும் பயிர் நிறைந்த வயலொன்றின் காட்சி’, *காய்கறித் தோட்டக் காட்சி' என்பவற்றை வருணித் தெழுத இப்பகுதி தழுவக்கூடியதாகும். , *ဂဲ
27

Page 22
கட்டுரை எழுதுதல்
4. வகுப்பறை கூறியவை
நெருப்பு வெயில் கொளுத்தும் மணல் வெளியில் அமைந்து நான் குளிர் நிழலை உங்கட்குத் தருகின் றேன். கடலிற் பிறந்து சோலையினூடே தவழ்ந்து வரும் இனிய கொண்டற் காற்று உங்கள்மீதுபட்டு உற்சாகமூட்டவும் வசதியான பலகணிகளோடு 6ான் அமைந்திருக்கிறேனே! என்னயலில் கிழக்குப் பக் கத்தே கிற்கும் முதிய வேப்புமரம் எனது நெருங்கிய நண்பன். பாடசாலை விடுதலை நாட்களிலும், மற்றும் நான் தனித்திருக்கும் வேளைகளிலும் காங்களிருவரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருப்போம். வேறு வேறு பாடங்களைக் கற்பிப்பதற்காக நேரங்தோறும் மாறிவருகின்ற ஆசிரியர்களெல்லாரும் எனக்கு அறிவு புகட்டி, உங்கள் பலத்த சத்தத்தினின்றும் ஆறுதல் தரும் எனது அன்பின் உறவினர்கள். நீங்கள் அனை வரும் எனது விளையாட்டுத் தோழர்களாயினும், பெரும்பாலும் நான் உங்கள் வளர்ச்சியிற் கண்ணுங் கருத்துமாயிருப்பதால் உங்கட்குத் தாயும் தங்தையும் ஆவேன். மிக ருசிகரமான பாடங்கள் 5.ட ங் து கொண்டிருக்கும் போதும், ஊக்கம் குன்றித் தூங்கி வழிந்துகொண்டிருக்கும் உங்களிற் சிலரைப் பார்த்து நான் பரிதாபப்படுவதுண்டு.
இதைத் தொடர்ந்து பத்து வசனங்கள் எழுதுக. பின்னர் இப்படியான கருத்துக்களமைத்து "உனது படிப்பறை", "உனது வீடு', 'உனது சட்டை', 'உனது குடை, பாடசாலை மணி', 'உன் வீட்டுத் தோட் டத்திலுள்ள ரோஜாச் செடி’, ‘ரீ வளர்க்கும் கிளி என்பவை கூறியவற்றைக் கற்பித்தெழு துக. aw
t".
28

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
5. ஒரு பட்டமரம்
பரந்த வெளியொன்றின் மத்தியில் தனித்து நிற் கும் ஒரு உலந்த மரம் அது. செழித்து அடர்ந்த பசிய இலைகட்கும், கெங்கிறமான இளந்தளிர்களுக் கும், கொத்துக் கொத்தான பூந்துணர்களுக்கும், முறையே பிஞ்சு, புளிக்காய், செந்தீம்பழம் ஆகிய வற்றுக்கும் காலக்தோறும் இடந்தந்து மகிழ்ந்து நின்ற அதன் கி%ளகள்; மொட்டையாய், மணமகனே யிழந்து தலைவிரிகோலமான வறு5ங்கைபோல் உலர்ந்த மிலாறுகளைக்கொண்டு அலந்து நிற்கின்றன. அத னுடைய பொலிவிழந்த தோற்றம் உலகின் கிலையா மையை 15ன்கு எடுத்துக்காட்டிற்று. கூடுகட்டி வாழ்ந்த பறவைகளும், கிளைமீதமர்ந்து கூடிக்குலாவிப் பறந்த பறவைகளும், பழுநிலைப் காடிப் பல திசை களிலுமிருந்து விருந்தினராய் வந்துசென்ற பறவை களும், குதித்து மகிழ்ந்த குரங்கு, அணில் முதலிய மற்றும் பிராணிகளும் கணக்கிறந்தவையாயினும் இன்று அவை செல்வம் அற்றுNவிட்டு நீங்கும் சீரில்லா நண்பினர் ஆயின. நறுந்தாது குடைந்து நாட் போதலர்த்திய நளினங்கள் "நறுந்தாதுண்டு நயனில் காலை வறும் பூந்துறக்கும் வண்டுகளே’யாயின. கடும் வெயிலால் சாறு வற்றிப்போய் வெடித்த பட்டை களின் இடைவெளிகள் சிறு பூச்சிகளுக்கும், தேள் பல்லி முதலான அற்ப பிராணிகட்கும் இடந்தந்து நின்றன. வசந்த காலம் தொடங்கியதும் அதை கோக்கிப் பறக் துவங்து ‘குக்கூ.’ என இன் குரற் தொடுத்துப் பாடிய குயில்களுக்குப் பதிலாக, நிறைந்த, பயங்கரமான இராக்காலத்தே அபசகுனமான குரல் கொடுக்கும் ஆக்தையும் கோட்டானும் வந்திருந்து அலறுகின்றன. வெயிற்போதில் அதனிடத்தே நிழல் தேடிச் செல்வார் இன்று இலராயினர். இவ்வாறு
29

Page 23
கட்டுரை எழுதுதல்
கியாமைக்கும், தனிமைக்கும், பொறுமைக்கும் உரு வாய் தான் செய்த நன்றியை மறந்தாரிடத்தும் தீங்கு பாராட்டாது நிற்கும் அந்தப் பட்ட மாமரம் 5மக் குப் பலவகையான பாடங்களைப் போதிக்கவில்லையா!.
இதைத் தழுவி, நன்கு தழைத்துச் செழித்த பசிய மரமொன்றை வருணித்தெழுதுக. இது போன்ற கருத்துக்களமைத்து ஒரு கொடையாளி, 'பழங் கோயிலொன்று', ‘நீர் நிறைந்த குளம்', ‘நீர் வற்றிய குளம்’ எனும் தலைப்புகளில் எழுதப் பயில் வது மாணவர்களுக்கு நல்ல பயிற்சியாகும்.
6. பூரணை இரவில்
களங்கமற்றிருந்த நீலவானத்தின் உச்சியை 5ோக்கிப் பூரண சந்திரன் ஊர்ந்து வந்துகொண்டிருந் தான். செடி கொடி முதலிய படைப்புகள் யாவும் அவனது வெள்ளி நிலவால் குளிப்பாட்டப்பெற்று ஒரு தனிச் சோபையுடன் விளங்கின. . சுமார் பத்து மணி இருக்கும். ஊர் மனதோறும் கிலாச் சோறு செய் யும் சிறுமிகளதும்; கிட்டி, கோலி விளையாடும் சிறுவர் களதும் கலகலப்பான ஒலி அந்த இரவை இன்னும் இனிமைப்படுத்தியது. எங்கள் பாடசாலையில் புறத்த்ே இருக்கும் பரந்த வயலிலிருந்து விட்டுவிட் டொலிக்கும் நீர்த்தாரா முதலிய பறவைகளின் சிற் முெலிகளும், மறுபுறத்தே இருக்கும் சிறு காட்டில் எங்கேயோ நெடுங் தொலைவிலிருந்து கேட்கப்படும் ஈரி களின் ஊளைச்சத்தமும் மாறி மாறி ஒலித்து இரவின் அமைதியை இன்னும் எடுத்துக்காட்டின. பளபள வென்று சொலிக்கின்ற பாஜ் கிரணக்கற்றை கடவும்
3O

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
பச்சிலைகள் இனிய தென்றலினல் கடலலைபோல் அசைந்துகொண்டு கின்றன. சந்திரனுடைய மேள தாளங்களாக ஒலிக்கும் கடலிரைச்சல் கல்லாமாந்த ரது கழறலே போன்று ஓயாது கேட்கப்பட்டது. தமது இரையான எலிக் குஞ்சுகட்கு அபயம் கொடுத் துத் தம்மை பட்டினிப்படுத்திய கொடுமைக்காக ஆங் தைகள் படுமரக் கொம்பர்களிலிருந்து இடை யிடையே மதியவனைத் தூஷித்தன. இவ்வலறல் ஒலி அபசகுன மென்று ஊரார் காதுகளிர்படாது தடுப்பன போலப் பாட்டுக் கச்சேரி பண்ணிய காய்களின் சத் தம், வழக்கத்துக்கு மாமுக பூரணை நிலவின் பத்தை மிகுதிப்படுத்தியது. வயற்புறத்தே ஒடும் சிற்முறு வெள்ளி உருக்கி வார்த்ததுபோலப் பிரகாசித்துக் கொண்டு இழும்' என்னுேசையோடு விரைந்து கடந்துகொண்டிருந்தது . . . - >
இதைத் தொடர்ந்து பத்து வசனங்கள் எழுதி முடிக்குக. அப்பால் இப்பகுதியைத் தழுவி நிறைந்த இராக்கால மொன்றில்’-எனும் தலைப்பில் ஒரு பந்தி வருணனை எழுத முயலுக. 'இளவேனிற் காலம்', "குரியோதய நேரம்’ எனும் பொருள்களில் மேற் காட்டிய பந்தியினைத் தழுவி எழுதப் பழகுதல் நல்ல
d
கற்பனைப் பயிற்சியாகும்.
7. ஒரு மாம்பழக் குலை
கெட்டித்து வரண்ட அங்கிலத்திலிருந்த பொற் பொடிகளையெல்லாம் மரமானது உறிஞ்சித் திரட்டிக் காட்டுவதுபோலக் கிளையொன்றில் தொங்கிக்கொண்டி ருந்தது ஒரு மாம்பழக் குலை. ஒன்று செம்பழம், இன் னென்று கரும்பழம், மற்றது ட்சும்பழமாக மூன்று
3

Page 24
கட்டுரை எழுதுதல்
பழங்கள் சேர்ந்தது அக்குலை. பாரக் தாங் கா து தாழ்ந்து நின்ற கிளையில், ஊஞ்சலாடிக்கொண்டிருந்த அக்குலை நீர்விட்டு மரத்தைப் பாதுகாக்த தோட்டக் காரனுக்கு நன்றியறிதலுள்ள மாத்தினுல் அளிக்கப்பட விருக்கும் கையுற்ை போன்று மிளிர்ந்தது. பொன் கிறத்தினல் கவரப்பெற்றுக் கொத்தித் தின்னவரும் காக்கைகளுக்கெட்ட தபடி காற்ருனது குலையை அங்கு மிங்கும் அலைத்துக்கொண்டிருந்தது, அடி பெருத்து, நுனி ஒடுங்கிக் கூர்ந்து வளைந்து நின்ற பழங்கள் மூன் றும் ஒன்றையொன்று கட்டித் தழுவி நின்ற அழகு இணைபிரியாச் சகோதரத்துவத்தை எடுத்துக் காட் டிற்று. அமிர்தம்போன்று சுவை நிறைந்து, சிவப் பூர்ந்த தசைப்பாகத்தைத் தோலானது மூடி மறைக்க முயன்றும் கமகம’ என்ற மணமாகவும், 'கொழு கொழு’ என்ற நிறமாகவும் பழத்தின் கபடமற்ற தன்மை பிரகாசித்தது. மாமர வர்க்கத்தை விருத்தி செய்வதற்காக இறைவன் இப்படி விதையை ம ை த் அச் சுவையால் மூடிய தந்திரத்தைப் பறவைகளோ, மள்ளிதரோ யார் அறிந்து ரசிக்கிறர்கள்! •.
இப்பகுதியைக் கொண்டு" வேறு பல பழக்குலே களையும் தனித்தனி வர்ணித்து எழுதுக. கடையில் தொங்கும் போதும், சொந்த மரத்திலோ, கொடி, செடிகளிலோ தொங்கும் போதும் அவை கூறும் கற் பனைகள் மாறியிருக்கலாம். அப்பகுதிகளை ககொண்டு பழங்கள் நிறைந்த மரமொன்று’ ‘பழக்கடை" என்ப வற்றை வர்ணித்துத் தாமாக எழுத முயலவேண்டும்.
8. ஒரு வாய்க்கால்
குளமொன்றிலிருந்து வயற் பரப்பை நோக்கி ஒடும் ஒரு சிறிய வாய்க்கால். அதிக ஆழமில்லாத
32

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
மாலை நேரம்
மேற்குத் திசையில் சூரியன் அஸ்தமனமாகிக் கொண்டிருந்த காட்சி அடி மரங்களின் வழியாகத் தெரிந்தது. மேல் வானம் முழுதும் பத்தரை மாற் றுத் தங்க விதானத்தைப்போல் தகதகவென்று பிர காசித்தது. பார்த்துக்கொண்டிருக்கும்போதே தங்க நிறத்தின் சோபை மங்கிக்கொண்டு வந்தது. அடி வானத்தில் சூரியன் மறைந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் மேல்வானம் முழுதும் ஒரே இரத்தச் சிவப்பாய் மாறிற்று இந்தக் காட்சி அருள்மொழித் தேவிக்கு ரணகளத்தையும், அங்கே இரத்த -Չեմ0) பெருக்கெடுத்து ஒடுவதையும் ஞாபகப்படுத்திற்று. ...காஞ்சி 15கர் அரண்மனையின் உப்ப ரிகை கிலா மாடத்தில் சக்கரவர்த்தியும், குந்தவிதேவி யும் அமர்ந்திருந்தார்கள். கிருஷ்ண பக்கத்து முன்னி ரவு வானத்தில் விண் மீன்கள் சுடர்விட்டு ஒளிர்ந்தன. கிழக்கே வெகு தூரத்தில் மாமல்லபுரத்துக் கலங்கரை விளக்கம் நட்சத்திரங்களுடன் போட்டியிட்டுப் பிர காசித்துக்கொண்டிருந்தது. காஞ்சி நகரின் பற்பல சிவாலயங்கள், விஷ்ணு ஆலயங்களிலிருந்தும் பேரிகைச் சத்தம், ஆலாட்ச மண்ணியோசை, யாழின் இன்னிசை யுடன் கலந்து பாடும் பக்தர்களின் குரலொலி-எல் லாம் கலந்து வந்துகொண்டிருந்தன. அரண்மனைப் பூந்தோட்டத்திலிருந்து செண்பகம், பன்னீர், பாரி ஜாதம் ஆகிய மலர்களின் சுகந்தம் குளிர் காற்றுடன் கலந்து இலேசர்க வந்துகொண்டிருந்தது.”
அருவிக் கரை
பள்ளத்துக்கு இடதுபுறத்தில் கொஞ்சத் தூரத் கில் அருவி 'சோ' என்று அலறிக்கொண்டு கீழே
37

Page 25
கட்டுரை எழுதுதல்
விழுந்தது. அருவி விழுந்த திக்கை எதிர்ப்புறமாகப் பார்த்தால், கண்கொள்ளாக் காட்சியாயிருந்தது. மூன்று பக்கமும் சுவர் வைத்தாற்போன்ற மலைத் தொடர்கள். நடுவில் விஸ்தாரமான சமவெளி. அங் தச் சமவெளியில் கண்ணுக்கெட் டிய தாரம் மஞ்சள் மலர்களால் மூடப்பட்ட காட்டுக் கொன்னை மரங்கள். எங்கே பார்த்தாலும் பூ 1 பொன்னிறப்பூ!
ரணகளம்
‘டுதியின் மேற்குக் கரையில் கண்ணுக்கெட்டிய தூரம் கொடும் போர் கடந்த ரணகளத்தின் கோர மான காட்சிதான். வீரசொர்க்கம் அடைந்த ஆயி ரக்கணககான போர் வீரர்களின் உடல்கள் அந்த ரண களமெங்கும் சிதறிக் கிடந்தன. சில இடங்களில் அவை கும்பல் கும்பலாய்க் கிடந்தன. கால் வேறு கை வேருகச் சிதைவுண்டு கிடக்த உடல்கள் எத் தனையோ மனிதர்க%ளப் போலவே போரி ல் மடிந்த குதிரைகளும் ஆங்காங்கே காணப்பட்டன. வெகு தூரத்தில் குன்றுகளைப்போல் சில கறுத்த உருவங்கள் கிடந்தன. அவை போர் யானைகளாகத் தான் இருக்கவேண்டும். D a .ஆஹா அந்த வெண்ணுற்றங்கரைப் போர்க்களம் இப்போதுகூட என் மனக் கண்முன்னல்நிற்கின்றது. என்ன யுத் தம் என்ன யுத்தம் வெண்ணுறு அன்று இரத்த ஆறுக அல்லவா ஒடிற்று பூரண சந்திரன் வெண்ணில வைப் பொழிந்த அந்த இரவிலே, அந்தப் போர்க் கள ந்தான் எவ்வளவு பயங்கரமாயிருந்தது!’
38

வருணனைப் பகுதிகளும் தழுவி எழுதுதலும்
சிவனடியார்
"தலையில் சடைமுடியும், நெற்றி நிறையத் திரு நீறும், அப்போதுதான் கரை தோன்றிய ன்ேட தாடி யும், கழுத்தில் உருத்திர சட்ச மாலையும், அரையில் காவி வஸ்திரமும், மார்பில் புலித்தோலுமாக அந்தச் சிவனடியார் விளங்கினர். அவர் கையில் கமண்டலம் இருந்தது. அவருடைய முகத்தில் அபூர்வமான தேஜஸ் திகழ்ந்தது. விசாலமான கண்களில் அறி வொளி வீசிற்று. தோற்றமோ வெகு கம்பீரமா யிருந்தது. கடையிலும் ஒரு பெருமிதம் காணப்பட் டது. இந்த மகான் சிவனடியார் தானே, அல்லது சிவபெருமானே இத்தகைய உருவம் பூண்டு வங் தாரோ என்று திகைக்கும்படியிருந்தது. . •

Page 26
3. மாதிரிக் கட்டுரைகள்
இதுவரை கட்டுரை எழுதுவது சம்பங்கமாய் முக்கியமான குறிப்புகள் சில காட்டினுேம், காலத்
தின் வேகத்தையும், நடையின் 1. நோக்கமும் மலர்ச்சியையும் புதுமையையும், எழு uuguh துதற்கு வேண்டிய அவசிய அவ
தானக் குறிப்புகளையும், பொதுவாக நம்மை ஆட்கொள்ளும் மலைவுகள் பிழைகளையும் அவற் றுள் கண்டோம். புதுமை எழுத்தாளர்கள் தமிழ் வசன நடைக்கு உயிர் கொடுத்துப், படிப்போரைக் கவரச்செய்து வருவதற்குக் கருவியான கதைகள், கடிதங்கள், சுய சரிதைகள் முதலியவை புனைவதற் காதாரமாயிருக்கும் வருணனைப் பகுதிகளை விரிவாகப் படித்தோம். அவற்றின் மூலம் கமது சிந்தணு சக்தி யைக் கிளர்ச்சிசெய்யும் ஆற்றலைப் பெறும் வழி கண் டோம். இனிப் பொதுவான பல கட்டுரைத் தலைப்பு களைப் பயிற்சிக்காக இங்குக் கவனித்து அவை யொவ் வொன்றைம் பற்றிச் சுய ஆற்றல்கொண்டு எழுதத் தூண்டுதல் எமது கோக்கமாகும். அப்படித் தனித் தனி கட்டுரைகள் எழுதுதற்குதவியாகவும் மாதிரியாக வும் இருக்கட்டுமென்று ஒரு சில பொருள்கள் பற்றி மாதிரிக் கட்டுரைகள் தருகின்றேன். தரப்படும் கட டுரைகளின் தரத்துக்கு எல்லா மாணவரும் எழுத வேண்டும் என்று எதிர்பாக்கப்படவில்லை. மாணவர் களது வகுப்பு நிலைக்கேற்ப விஷயம் ஒவ்வொன்றும் பொருளமைதியும், கடைப் பொருத்தமும் வேறுபட
40

கட்டுரை எழுதுதல்
லாம். எனவே உயர் வகுப்பு மாணவர்கட்கென்றே பெரும்பாலும் எழுதப்படும் இந்நூலில் உள்ள மாதி ரிக் கட்டுரைகள், அங்கிலையில் ஒருதரப்பட்ட நடை யில் இருகின்றன. கட்டுரைக்காகக் குறிப்புகள் சேகரித்த பின்னரே எழுதத் தொடங்க வேண்டு மென்று முன் கூறினேன். அப்படித் தொகுக்கப் பெற்ற குறிப்புகளை, பின்னல் தந்துள்ள கட்டுரை களில் புறம்பாகக் காட்டவில்லையாயினும், குறிப்புகள் கொண்டே பந்தி பந்தியாக அவை எழுதப்பெற்றுள் ளன என்பதை நன்கு படித்துப் பார்க்கும்போதறிய லாம். இம்மாதிரிக் கட்டுரைகளொவ்வொன்றுக்கும், எடுத்துக்கொள்ளப்பெற்ற குறிப்புகள் என்ன என்ன என்பதை மாணவர் கண்டு, அதே குறிப்புகளைக் கொண்டு தாம் அதே பொருளில் கட்டுரை எழுதுத அலும், அப்படி எழுதியவற்றையும், இவற்றையும் ஒத் துப் பார்த்தலும் ஒரு நற்பயன் தரும் பயிற்சியாகும். மாதிரிக் கட்டுரைகளின் முடிவில் தனிப் பயிற்சிக் காகத் தரும் தலைப்புகளெல்லாம் இக் காலத்துக்கேற்ற 15uadal) (Current Subjects.) as as LLDIra is G5 stair all பவற்றுக்குத் தம்மாசிரியர் உதவிகொண்டு, குறிப்புகள் பெற்று, கொடுக்கப்புடும் நேரத்துக்கோ, அளவுக்கோ உட்பட எழுதிப் பழக வேண்டுமென்று மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
கட்டுரைப் பொருளில் நன்கு வல்லுநராயினும், வினப்பத்திரத்துக் கேற்ப விடைதரத் தவறும் கார ணத்தால் பலர் பரீட்சைகளில்
3. பரீட்சைகளில் தோச்சிபெற முடியாது மிகவும் வினவுக்கேற்ப கஷ்டமுறுகின்றனர். ஈமக்கு மிக விடை தரல் மிகப் பிடித்தமானதும், நன்கு தெரிந்ததுமான கட்டுரைப் பொரு ளைத் தக்து எழுதும்படி நம்மைக் கேட்டால், அப்போ
4.

Page 27
un trafii as,*@como prassir
காம் அடையும் மகிழ்ச்சி அளவில்லாததே. ஆளுல் அம்மகிழ்ச்சியில் மற்றயவற்றை நாம் மறவாது பார்த் துக்கொள்ளவேண்டும். விணுப் பத்திரத்தில் உள்ள வினக்களின் தொகையும், ஒவ்வொன்றுக்கும் செல வழிக்கக்கூடிய நேரமும் தெரிந்துகொண்டே விடை எழுத முற்படல் நன்று. பெரும்பாலான பரீட்சை களில் கட்டுரைக்கு நேரம் அல்லது அளவுதரப் பெற் றிருக்கும். பின்வரும் விஷயங்களில் ஒன்றைப்பற்றி 40 நிமிஷங்கட்கு மேற் செலவிடாது ஒரு கட்டுரை வரைக' என்பது போலவோ ஒரு பொருளை விளக்கி 500 வார்த்தைகளுள் ஒரு வியாசம் எழுதுக' என்பது போலவோ வினுக்கள் இருக்கலாம். அப்படியான கேள்விக்கு விடையாக நாம் 'ஓயாமாரித்தனமாக எழுதிவைத்தல் தவறு, 15மக்கு நன்கு தெரிந்தவற் றைத் திரட்டி, வேண்டிய முக்கியமானவற்றை மட்டும் ஏற்ற ரீதியில், அளவுக்கும் நேரத்துக்கும் உட்படுத்தி எழுதவேண்டும். இப்படிப் பரீட்சைகளில் பொருத் தமான விடை எழுதுவதெல்லாம் கட்டுரை சம்பக் தப்பட்ட வரையில், மாணவரது தனிப்பயிற்சி வேலை களையே பொருத்திருக்கின்றது. அதற்காகவே தனி அதிகாரத்தில் இதைக்கூறி, பயிற்சிகளையும் முடிவில் சேர்த்துள்ளேன். இங்குதரும் விஷயங்களுட்ன், இன்னும் புதுப்புது விஷயங்களையும் தேடிக்கண்டு மாணவர்கள் எழுதிப் பழகித் தமது பேணு முனையை வலிமைப் படுத்திக்கொள்ள வேண்டும்.
இனிப் பெரியார் வரலாறு’ எழுதுதல் பற்றியும் கடிதம் எழுதுதல்பற்றியும் சில குறிப்புகள் கூறிப்பின் மாதிரிக் கட்டுரைகளைத் தருகின்றேன். பெரியோர் களைப்பற்றி எழுதுவதில், அன்னர் சீவியத்தை மட்டு மன்றி, அவர் பெரியார் ஆனதற்குக் காரணமாக அவர் செய்த வேலைகளையும் முக்கியமாய்க் காட்டு
42

கட்டுரை எழுதுதல்
தல் அவசியமாகும். 'ர்ே விரும்புகிற ஒரு தமிழ்ப் புலவர், நீர் மிக விரும்புகின்ற ஒரு பெரியார்' இப் படியாகவோ, அல்லது கவி தாகூர், 3. பெரியோர் மகாத்மா காந்தி, விபுலானந்த சுவாமி வரலாறு கள், ஆறுமுக 15ாவலர், சுப்பிரமணிய பாரதியார் என்பவைபோலப் பெயர் களைக் கொடுத்தோ எழுதும்படி கேட்டால் மேற்காட் டிய குறிப்பே அதிகம் கருதப்படுவதை மாணவர் கவ னித்தல் வேண்டும். இங்குப் பெயர்தந்த பெரியார்களு டைய வாழ்க்கை வரலாறும், அவர் செய்த அரும் பணிகளும் காலக் குறிப்புகளோடு நமக்குத் தெரிவ தால் அவற்றைப் பிணைத்து எழுதுவதில் அதிகம் கஷ்டமிராது. ஆணுல், திரு வ ள் ஞ வ ர், கம்பர், இளங்கோ போன்ற பேராசிரியர்களுடைய வாழ்க்கை பற்றி எழுத, கிட்டமான குறிப்புகள் நமக்குக் கிடைப்பதில்லை. வேறுபட்ட கர்ண பரம்பரைச் செய்திகளே நமக்கு இன்னர் சரிதங்களாகின்றன. எனவே இவற்றினைக் குறிப்பிடுவதில் அதிக சிரத்தை கொள்ளாது, அவர்தம் அழியா வேலைகளான நூல் களைக்கொண்டு அகச் சான்றுடன் இயன்றவற்றைக் கூறுதலும், அந்நூல்க்ளின் சிற்ப்பு முதலியவற்றை எடுத்து அவர் தம் பெருமையைக் கூறுதலுமே முக் கியமென்பதை உயர் வகுப்பு மாணவர் அவசியம் கவனிக்கவேண்டும். இன்னுருடைய காலத்தைக் குறிப்பிட்டுக்கூற இயன்றவரை ஆதாரம் காட்டுதல் பயன் தரும்.
உதாரணமாக, ஆறுமுக நாவலரைப்பற்றி எழுது மாறு கேட்டால் உயர் வகுப்பு மாணவர் ஒருவர் பின்வருவனப்போலக் குறிப்புகள் எடுததுக்கொள்ள லாம் :-
43

Page 28
மாதிரிக் கட்டுரைகள்
amann.
A, முகவுரை. B. விஷய விரி.
1. வாழ்ந்த காலமும் அப்போது நாட்டின் நிலையும்.
I. இவரது கலைத்திறனும் மதப்பற்றும்.
I. இவராற்றிய அரிய சேவைகள்.
1. இந்து சமயத்துக்குச் செய்தவை. 2. தமிழ் வசன நடைக்குச் செய்தவை.
3. அச்சில் கொணர்ந்தவும், புதிதாக எழு தியனவுமான இலக்கண, இலக்கிய, நூல்கள், கண்டனங்கள் என்பன. IV. தமிழுலகில் இவர்பெற்ற முக்கியத்துவம். C. முடிவுரை.
1. இவரைப் போற்றி, இவரைப் பின்பற்றி
நாம் செய்ய வேண்டுவன.
இக்குறிப்புகளைப் பூர்த்திப் படுத்தும்போது முக் கியமான செய்திகள் பெரும்பாலாக அடங்கக் காண லாம். இப்படியே மற்றும் பெரியோர் வரலாறுகள், வேலைகள் பற்றி ஏற்ற குறிப்புகள் கொண்டு எழுத முயலுதல்வேண்டும். 15டுத்தர வகுப்பினரும், மற்றும் கீழ் வகுப்பு மாணவரும் இதே குறிப்புகளைத் தொட் டுக்கொண்டே வாழ்க்கையைக் கதைபோல் எழுதக் கற்பிக்கப்படலாம்.
கடிதம் எழுதும் முறை முதலியன ஆரம்ப
வகுப்புகளிலிருந்தே கற்பிக்கப்படுகின்றன. காலத்
44

கட்டுரை எழுதுதல்
துக்கேற்பக் கடித எழுத்து ஈடை யும் மாறி வருகின்ற தெனினும் இன்றியமையாத சில கட்டளைகள் என் றும் மாமுதனவாம். பெரும் 4. கடிதம் எழுதுதல் பாலாக உறவினர்க்கு எழுதும் கடிதங்களும், உக்தி யோ க முறையான கடிதங்களும், வியாபாரக் கடிதங்களு மெனக் கடிதங்களை வகைப்படுத்தலாம். கடி த த் தொடக்கத்துக்கும், முடிவுக்கும் இந்தப் பிரிவு இன்றி யமையாது கவனிக்கப்பட வேண்டியதாகின்றது.
நம்முறவினர், நண்பர் முதலியோர்க்கு அன்னர் பெயர்களையோ, அன்றி உறவு முறைகளை மட்டுமோ குறித்து எழுதலாம். பெரியோர்களுக்கு வணக்கங் கூறித் தொடங்கல் அவசியமாகும். இக்கடிதங்களில் நாம் சுகசேதிகளைப்பற்றிய விசாரணைகள் மூலம் சாதாரணமாகவே தொடங்கலாம். சுகம் விசாரிப் பதைத் தொடக்கத்தில் எழுதுதல் நன்றல்லவென்று இக்காலத்துச் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர். சாதாரணமாக எச்சாதியினரும், எப்பாஷையினரும் தமக்கு அறிமுகமான ஒருவரை ஒருவர் காணும்போது கூட,இன்றும் சுகசேதிகளைக்கேட்டே பேசத்தொடங்கு கின்ற வழக்கம் இருக்கின்றது. அன்புப் பிணிப்பில் உள்ள இத்தகையோர், சுகசேதிகளையே முதலில் அறிய அவாவுவராதலில், எழுதும்போதும், அதைப் பற்றி முதலில் குறிப்பது அழகுக் குறைவாகாதென் னலாம். எழுதுவோரது விலாசம் திகதி என்பவற் றைக் கடித முடிவிலும் எழுதலாமெனக் கருதப்படி னும், தொடக்கத்தில் வலக்கை மூலையில் போடுவது தான் நல்ல முறை. உத்தியோகக் கடிதங்களில் முத லில் நமது விலாசமும், பின்னர் எழுதப்படுபவரது உத்தியோகப் பெயர் விலாசம் என்பனவும், பின் எழு தப்படும் விஷயத்தின் தலையங்கமும் கொடுக்கவேண்
45

Page 29
unit did; 35.(S60 Tassir
டும். இவ்வாங்கில முறைக் கடிதத்தையே நம் முன்னுேர்
வருமாறு எழுதி வந்தனர் :-
'வடக்கு மாகாண அரசினர் எஜண்டுத் துரை யவர்கள் சமுகத்துக்கு, யாழ்ப்பாணத்து 4ம் வட்டா ரத்து 16ம் இலக்க வீட்டில் வசிக்கும் கந்தப்பிள்ளைசரவணமுத்து ஆகிய நான் அதிக தாழ்மையுடன் எழு திக்கொள்ளும் விண்ணப்பமாவது.’ இதை நாம் ஒழுங்காக மாற்றி மேற்கூறிய முறையில் அமைப்பது நன்று. வியாபாரமுறையான கடிதங்களில் அதிகம் வரு ணனைகள் எழுதுதல் 15ல்லதன்று. நாம் எடுத்துக் கொண்ட விஷயம் தெளிவாகவும் சுருக்கமாகவும் இருப்பதே இவற்றிற் கவனிக்கப்படவேண்டும்.
'கட் குடித்தலின் தீமையை விளக்கி உமது கண் பன் ஒருவனுக்குக் கடிதம் ஒன்று எழுது’ என்பது போல உயர்வகுப்பு மாணவர்கள் கேட்கப்படுகின்ற னர். “கட் குடித்தலின் தீமைகள்’ என்னும் தலைப் பில் எழுதக்கூடிய கட்டுரைப் பொருளைக் கடித முறை யில்-ஒருவருக்குக் கூறுவதுபோல இங்கே எழுதுவது பொருத்தம் இப்படியானவர்றில் அங்கண் பரும் தானும் முன்னர் நேரிற்கண்ட உண்மைகள் சில வற்றை ஞாபகமூட்டியும், இன்னும் சக்தர்ப்பத்துக் கேர்ற குறிப்புகள் முதலியவற்றை இடையிடையே திணித்தும் கடிதத்தை இனிமைப்படுத்திக் காட்ட வேண்டும். அறிஞர்கள் எழுதிய கடிதங்கள் பல மற் றையோர்க்குப் பெருநூற் தொகுப்புகளாக மாறு வதை நாம் காண்கின்ருேம், சுவாமி விவேகானந்தர் தம் சீடர்களுக்கெழுதிய கடிதங்கள் வேதாந்தம், அர சியல் எல்லாம் பொலிந்த பெரிய கட்டுரைகளன்ருே. பண்டித ஜவகர்லால் நேரு தம் புத்திரிக்கெழுதிய கடி தங்கள் சிறந்த உலக சரித்திரமாகத் தொகுக்கப்பட்டி
46

கட்டுரை எழுதுதல்
ருக்கின்றதல்லவா? வாழைப் பழத்துள் மருந்தைத் தீற்றியளிப்பதுபோல் உயர்ந்த கட்டுரைப் பொருளை இனிய கடித முறையில் எப்படிப் புகுத்திக் காட்ட லாம் என்பதற்கு மாணவர்கள் இப்படியான தொகுப்புகளைப்பார்த்து அறிந்துகொள்வதும், தாம் அப்படி எழுதப் பயில்வதும் பெரும் பயன்தருவன.
மாதிரிக் கட்டுரைகள் ஒரு சில பின் வரும் முறையே காட்டப்பெறுகின்றன.
5. கட்டுரைகள் 1. தமிழின் சிறப்பு. 2. பெண்கள் கல்வி.
3. விபுலானந்த சுவாமிகள்.
4. விஞ்ஞானக் கலை வளர்ச்சி.
5. உழவுத் தொழில்.
6. இலங்கையின் பொருளாதாரம்,
7. (இலங்கையிற் சமீபத்தில் வந்த) வெள்ளப் பெருக்கு.
8. தேசிய சேமிப்பு இயக்கத்தின் கோக்கமும்
பயனும்,
1. தமிழின் சிறப்பு
தமிழ் நமது தாய்மொழி. தமிழ் -என்ருல் இனிமை என்று அறிஞர் கூறி மகிழுகின்றனர். ஆனல் உயர்ந்த உத்தியோகமும், வருவாயும் தருவதாக இருந்த அங்கிய ஆங்கில மோகம் தமிழ் மக்களைத் தமி ழில் பேசுவதே தாழ்வு எனக் கருதச் செய்தது. நல்லவேளையாக இந்நிலைமாறி “ தமிழ னென் று சொல்லடா தலை 5 மிர்ந்து கில்லடா ’ என்று தமிழர்
47

Page 30
மாதிரிக் கட்டுரைகள்
கள் கட்டி யெழுப்பப்பெற்றுத் தமிழர்க்குத் தமிழ் முதன்மையாகி வந்துகொண்டிருக்கிற இத்தருணத் தில் இதன் அருமை பெருமைகளை நாம் அறிவது அவ சியமாகும்.
தமிழின் சிறப்புகளை 15ாம் ஆராயும்போது இதன் பழமை முதன்மை பெற்று கிற்கின்றது மிகப் பழ மையான காலத்து இலக்கியங்கள் தமிழில் உள்ளன. ஆரியம், சீனம், லத்தீன், கிரேக்கு போன்ற ஒரு சில மொழிகளில் மட்டுமே தமிழிலக்கியங்களளவு பழமை யானவை உண்டெனெப் பன்மொழி அறிஞர் 'கூறு கின் முர்கள். மூன்று சங்கங்கள் முறையே ஆயிரக் கணக்கான வருடங்களாக நடைபெற்று வந்ததென அறிகிருேம். இவற்றுள் இடைச்சங்க கால நூல் என்று கருதப்படுவதும், இன்று கிடைக்கும் தமிழ் நூல்களுள் மிகப் பழமையானதுமான தொல்காப்பி யம் எனும் நூலின் சிறப்பையும், அது எழுந்த காலத்தையும் நாம் நோக்கினல் நம் தமிழ்மொழி எவ் வளவு பழங்காலத்தில் உண்டாகித் திருந்தியிருக்க வேண்டுமென்ம புலப்படும். அக்காலத்தேயே இம் மொழியைத் துருவித் துருவி ஆராய்ந்து பிழை நீக்கி வள்ர்த்து வந்தனர் 5ம் தமிழ் மூதாதையர். இத்த கைய சிறப்பினையே மாணிக்கவாசக சுவாமிகள் ‘கூட லிய்ைந்த ஒண்தீந்தமிழ்’ என்று மகிழ்ந்து கூறுகின் முர். “பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத், திருப்பிலேயிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை’ என்று இதன் வரலாற்றுப் பெரு மையைக் கூறி வாழ்த்துகிறர் வில்லிபுத்தூராழ்வார்.
'சங்கத்தமிழ்’ என்று அடை கொடுத்துப் பேசு கின்றனர் ஒளவையார். சங்கத்தமிழின் இனிமைக்கு ஈடு பாலுக், தெளிதேனும், பாகும், பருப்பும் கலங்
48

கட்டுரை எழுதுதல் தாலும் வராதென்பது அவரின் தீர்ப்பு, இவ்வுண் மையைச் சங்கநூல் டடியாதார் உணர மாட்டார். சங்கமிருந்து வளர்க்கப்பெற்ற பெருமை நந்தமிழ் மொழி ஒன்றுக்கு மட்டுமே உளது. அச்சங்க காலங் களில் எழுத்தவற்றுள் நமக்கு இன்று கிடைப்பன பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும், பதினெண் கீழ்க்கணக்கும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், தொல்காப்பியமும், இறையனர் அகப்பொருளும் ஆகிய 15ாற்பது நூல்கள் மட்டுமே. இந்நூல்களிலே தமிழின் சுவையை 15ாம் உள்ளவாறு காணலாம்" தமி ழிலக்கியங்களெல்லாம் காதலும், போரும், வெறும் வர்ணனைகளும் மட்டுமே என்று பிதற்றுவார் சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கல்லாதோர் என்றே கூற வேண்டும். உயர்ந்த கற்பனைகளோடு சுருங்கச் சொல் லல், பொருளாளமுடைமை, கவின்ருேர்க்கினிய நன் மொழி புணர்த்தல் முதலிய நல்ல பண்புகளை இவை கொண்டு விளக்குகின்றன. ஐம்பெருங் காப்பியங் களும், புராண இதிகாசங்களுமாகக் கடல்போற் பரந்த இலக்கியங்கள் தமிழில் உள. தேவார திரு வாசகம், கோவை, கிருமந்திரம் முதலிய சிறக்க பல சமய நூல்களும், தொல்காப்பியம், களவியல், நன் னுரல் முதலிய பல இலக்கண நூல்களும் நிறைந்து தனித்து கின்றியங்கும் வலிமைகொண்டு விளங்குவது (5ம் தமிழ் மொழி. இதனையன்றே சோமசுந்தரப் புலவா ;
" திரிபுரமெரித்த குறுநகைக் கடவுளும்
குன்றமெறிந்த வென்றிவேன் முருகனும் முறை முறையாய்த்து பிழைதப நிறுவியது அகத்தியன் முதலாத் தவத்தனி முனிவர் தொகுத்த விலக்கணத் தொல் வரம் புடையது பொய்தவிர் நாவிற் புலவர்க விருளிய
49

Page 31
மாதிரிக் கட்டுரைகள்
மெய் வளர் இலக்கிய விரிகட லுடைய்து தெய்வம் 'பராவிய திருமறை யுடையது. இளையது பழைய திருமையுந் தருவ தமிழ்தினு மினிய தயது பெரியது வழிவழியழியா முதுசொமாய் வருவது ' எனச் சிறப்பித்தார்.
பல பாஷைகட்கும் பிறப்பிடமாகியும் இது அழி யாத தெய்வத்தன்மை பொருந்தியது. இதனை
' கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந்துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும் ஆரியம்போல் உலக வழக் கழிந்தெfழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே '
என வியந்து மெய்ம ஃந்து வாழ்த்துகின்முர் பேராசிரி யர் சுந்தரம்பிள்ளையவர்கள்,
தமிழ் மொழியை நீதிநூற் களஞ்சியம்’ என்று மேல்நாட்டாசிரியர்கள் கூறுகின்றர்கள். தமிழ் நீதி நூல்களுள் முதன்மையான திருக்குறள் போன்று, உலகில் எந்த மொழியிலுமே ஒரு நூல் இல்லை யென்று உலகம் ஏற்றுக்கொள்கின்றது. இச்சிறப் பினல் திருக்குறள் இன்று பல பாஷைகளிலும் மொழி பெயர்க்கப் பெற்றுள்ளது இத்தகைய பெருஞ் சிறப்பு வாய்ந்த நூலைப்பெற்று விளங்கும் சிறப்பு நம் தமிழுக்கே தனித்ததன்ருே. இதுபோலவே மென்மையிலும், இனிமையிலும் தமிழ் சிறந்ததென் பதைத் தமிழ் கற்றுணர்ந்த மேட்ைடாரும் ஏற்றுக் கொள்ளுகின்றர்கள். பன்மொழியறிஞரான பாரதி யார் இம்மொழியின் ஆரா இனிமையில் திளைத்து
50

கட்டுரை எழுதுதல்
1 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணுேம் ' என்று எதிர் இன் றிக் கூறியுள்ளார். 'தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’-என்று தமிழின் இனிமையிற் சொக்கி ஈம் மையும் அதிற் சொக்கி மகிழவைக்கிருர் புரட்சிக் கவிஞர் டாரதிதாஸன்.
அகவிருள், புறவிருள் என இருள் வ ைக இரண்டே. இவற்றுள் புறவிருளை ஞாயிறு நீக்குவது போல, அகவிருளைத் தமிழ் நீக்கி விளக்கும் என்று ஒரு பழைய கவிஞர் கூறி வைத்திருக்கிருரர்.
" ஓங்கலிடை வந்துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருள்கடியும்-ஆங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனயது தன்னேர் இலாத தமிழ்,'
என்பது அவரது தீர்ப்பு, மக்கள் தமிழ் மொழி போல இனியபான்மையினர் என உவமைகாட்டி "தமிழ் தழிஇய சாயலவர்’ என்கிருர் சீவக சிந்தா மணியாசிரியர். இவ்வாறு, உவமைக்கும் கூட இதன் இனிமை காட்டப்பட்டுத் தமிழ் சிறந்து விளங்குகின் றது. இதுபோல் தமிழின் பெருமையும் சிறப்பும் காணும் பகுதிகள் தமிழ் நூல்களில் மிகப்பல.
இப்படிச் செல்வமும் சிறப்பும் வாய்ந்த தமிழ் மொழிக்குத் தமிழர்களாயுள்ள நாம் காலப்போக்கை ஒட்டிச் செய்யவேண்டிய கடமைகள் பலவுள. இவற் றுள் முக்கியமான வற்றை அமரகவி பாரதியாரின் கூற்றுப்படியே தங்துவிடுகின்றேன்.
5

Page 32
மாதிரிக் கட்டுரைகள்
(1) " பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற்
பெயர்த்தல் வேண்டும்." (2) " இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில்
இயற்றல் வேண்டும்.' (8) "தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை
செய்தல் வேண்டும்.'
விஞ்ஞானம் போன்ற புதுக்கலைகள் மேனுட்டு ஆங்கிலம் முதலிய மொழிகளில் உள்ளன. அவற் றைத் தமிழிற் கொணர்ந்து தமிழை வளம்படுத்தல் நம் கடமை. புதுப்புது முறையான சிறந்த நூல்கள், கம்பன், வள்ளுவன், இளங்கோ, இவர்களுடையவை போல இன்னும் வரவேண்டும். இத்துறையில் வசன நடையிலும், செய்யுள் நடையிலும் பல அறிஞர் முயற்சித்து வருவது போற்றத்தக்கது. சொல்லமுடி யாத தித்திப்பு வாய்ந்த இன் தீந்தமிழின் ஓசை உல கெங்கும் கேட்கவேண்டுமென்று பாரதியார் விரும்பு கிரு?ர். அரசியற் புரட்சிகளின் பயனுக 6ம் நாடு சுதந் திரமடைகிறது. தமிழர் சுதந்திரம் தமிழின் சுதந்தி ரம், சுதந்திர மொழிக்கும், சுதந்திர நாட்டானுக்கும் அரசியல் அரங்கில் செல்வாக்குண்டு. அப்போ ‘அடி மைப் பாஷை என்ற எண்ணம் நீங்கிச் சிறப்பியல் களின் ஒப்பு நோக்கத்தால் மற்ருே?ர் உள்ளத்தை 5ம் பாஷை தொடும். தமிழ் 15ாட்டின் இப்போதைய வேகத்தில் இத்தகைய பெருமைப்பாடு நம் மொழிக் குக் கிடைக்க அதிக காலம் பிடிக்காது எனலாம். தமி ழர் உணர்ச்சியும், வீறும் மிக்கவர். பல துறைகளி லும் வென்று முன் னின்று புகழ்பெற்றுவரும் தீரர் களின் முயற்சி தோல்வியுறப்போவதில்லை.
* திருமுடி சூட்டுவோம் தெய்வத் தமிழ் மொழிக்கே’’ என்று தமிழணங்கின் முடிசூட்டு விழா
52

கட்டுரை எழுதுதல்
விற்கு நம்மை நாமக்கல் கவிஞர் அழைக்கின்ருர். விரைந்து செல்வோம். சென்று விழாவைக்கூட்டி, முடிசூட்டி, ‘வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே' என்று தமிழன்னைன்ய வாழ்த்தி வணங்குவோம்.
2. பெண்கள் கல்வி
அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு ’ என்று வைதிகங்கள் பெண்களை மட்டந்தட்டிக் கொண்டிருந்த காலத்தில், "ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்தவர் மாண்டு விட்டார் வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போமென்ற விக்தை மனிதர் தலை கவிழ்ந்தார்’ என்று பெண் குலம் முழுவதையும் தட்டியெழுப்பி னுர் அமரகவி பார்தியார். அரசியலிலும், மற்றும் பல துறைகளிலும் பெண்கள் ஆண்களோடு சரிகிகர் சமானமாக முன்னேறு மிக்காலத்தே பெண்கள் கல் வியை 15ாம் புறக்கணித்துவிட முடியுமா !
நம் தமிழ் மக்களின் பழங்கால வாழ்க்கையைப் புரட்டிப் பார்ப்போமானுல் அங்கே பெண்களுக்குக் கொடுக்கப்பெற்றிருந்த கல்வியையும், பெருமையை யும் காணுவோம். சங்கநூற் பாடல்களின் ஆசிரியர் களாகப் பெயர் காணப்படுபவர் சுமார் 440 புலவர் கள். இவர்களுள் ஒளவையார், வெள்ளிவீதியார் முதல் 27 பேர் பெண் புலவர் திலகங்களாகக் காண் கிருேம். கல்வி நாகரீகம் மக்களிடை நன்கு பரவி யிருக்கவில்லை எனக்கருதப்படும் அக்காலத்தேயே இப் படிப் பெண்கள் கல்வியுலகில் முன்னின்றிருக்கின்ற
53

Page 33
மாதிரிக் கட்டுரைகள்
னர். கல்வி படிந்த நற்பண்பாடு அன்னரை ஊக்கிய தாலேதான், "காட்டு மானங் காத்த திடவே நம் முயிரை நல்குவோ'மென்று, தம் ஒரே மகனையும் போர்க்கலுப்பிய மறக்குல மகளிர் பெருமை இன்
றும் விளங்குகின்றது. ஒளவையின் ஆத்திசூடி முதற் புற5ானூற்றுப் பாடல்வரை யாவும் எல்லாத் தரத்தி னர்க்கும் ஏற்றனவாகி, நல்லறிவூட்டுகின்றன. இப் படியிருந்த போதிலும் வரவரப் பெண்களிற் பெரும் பாலோர் ஆண்களுக்குக் கட்டுப்பட்டு அடுப்பங்கரை வாசத்திலே வெளியுலகமறியாது தங்கியிருந்தனர். கல்வி கற்பது மானவீனம் என்று பல உயர் குடும்பப் பெண்கள் கருத வைக்கப்பெற்றனர். இவ்வேளை களில் தீவிர வாதிகள் சிலர் இடைக்கிடை தோன் றிப் பெரும் உணர்ச்சி புயல்விசி அவர்களைக் கிளர்த்தி வைத்தனர். அட்ங்கிக் கிடந்த தமிழ் மகளிர் பாரதி யினுல் வெளிக்கிளம்பினர். பட்டங்களாள்வதும் சட் டங்கள் செய்வதும், பாரினிற் பெண்கள் நடத்தவங் தோம்-எட்டு மறிவினிலானுக்கிங்கே டெண் ணிளைப் பில்லைக்கா’ணென்று கும்மியடித்தனர். உணர்ச்சியும், கலைப்பெருக்கும் அவர்களை நாகரீக உலகில் முன் நிறுத்திக் காட்டின.
உலக முழுவதும் இன்று பெண்கள் முன்னேறி வருகின் முர்கள். உயர்ந்த கல்வி, மாதர்களின் பதுங் கிக்கிடக்கும் தன்மையை அகற்றி அவர்களை முன்னுக் குக் கொணர்ந்தது. விமானச் சாரத்தியம், நீச்சுப் போட்டி முதலியவற்றில் எல்லாம் முதலாவதாக வெற்றிபெற்றிருப்போர் பெண்களென்று அறி கிருேம். விஞ்ஞான ஆராய்ச்சி, வைத்தியக்கலே, சட் டக் கல்விப் பயிற்சி முதலியவற்றிலும் பெண்கள் முன் னின்று பெரும் புகழீட்டுகின்றனர். சர்வகலாசாலை களெல்லாம் இவற்றில் பெண் பாலார்க்கும் சரிபங்கு
54

கட்டுரை எழுதுதல்
-von-rm-rm.- ... ... -- i. SLqSeiAiLTTeiSLSLSLSiSLrSSLSSSkSCSeSeLSLSSLLLSSLSSLLSSLSkMSMSMMAS
கொடுத்துவருகின்றன. இலக்கியம், சித்திரம், இசை முதலிய முக்கிய இன் பக்கலைகளும், தையல், விட்டுப் பணி, சுகாதாரம் முதலிய குடும்ப நிர்வாகக் கலைகளும் பெண்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. கிழக்கு 5ாடு களின் பெருமையை அகில உலகுக்கும் காட்டிய கவி யரசி சரோஜினி தேவியாரும், பூரீமதி விஜயலட்சுமி பண்டிட்டும் 5ாம் கண்ணுற்கண்ட பெண்கள் திலகங் களாயிருக்கின்றனர். பெண் கல்வியின் அவசியத்தை இன்னுருடைய பெருமை மேக்கு ஈன்கு காட்ட வில்கலயா !
இப்படிக் கண்ணுரக் கண்டும் மூட நம்பிக்கை களுக்குக் கட்டுப்பட்டுப் பெண்குல முன்னேற்றத் தைத் தடுக்கும் 'பிரகஸ்பதிகளும் நம்மிடை இல்லாம லில்லை. பெண்கள் பிரசவ யந்திரங்களென் று ம், சமையற்கூடத்து ராணிகளென்றும் இவர்கள் கூறு கின்ருர்கள். பெண்கள் வெளிச்செல்வதும், ஆண் களுடன் பழகுவதும் கற்புக்குப் பழுதாமென்று சொல்கிறர்கள்.
" சிறைகாக்குங் காழ் பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்குங் கசப்பே தல்ை." என்று வள்ளுவ 5ாயனர் கூறுவதைக் கூர்ந்து இவர் கள் நோக்குவதில்லை. வீரமும், அறிவும், பெருங் தன் மையும் நிறைந்தவர்களாக மக்களை வளர்க்கத் தாய்மார் கல்விகற்ருே?ராக இருத்தல் அவசியம் என் பகை இவர்கள் அறியார், பெண்களின் மிருதுத் தன் மையும், சகிப்புத் தன்மையும், சக்தர்ப்பத்துக்கேற்ப அவர்பால் தோன்றும் உயந்த புத்தி சாதுரியமும நல்ல உயர்ந்த கருமங்கள் பலவற்றைச் சாதிக்க மிக உதவியாயிருக்கின்றதை இவர்கள் நோக்குவதில்லை. பெண்கள் ஏழைமனக்கினர்’ என்றும், எண்ணறக்
55

Page 34
மாதிரிக் கட்டுரைகள்
கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்தி என்றும் பழமொழி காட்டிப் பெண்களை இழிவு படுத்துகின்றனர். அடக்கி ஒடுக்கப்பெறுகிற காரணத்தி ஞல் இவ்வாறு பெண்கள் பயந்து கோழைகளாக ஏற்படுகின்றதேயன்றி, உண்மையில் பெண்கள் அப் படித்தான் இருப்பர் என இக்காலத்தில் கூறமுடி யாது. அப்படிக் கூறுவோர், விஜயலட்சுமி பண்டிட் போன்ற பெண்ணரசிகளின் பேச்சுக்காற்ருது பின் கதவு வழியாகத் தப்பியோடிய அரசியற் புலிகளே அறிகிலார் போலும். கல்வி கற்ற எந்த ஒரு ஆணும் அல்லது பெண்ணும் இத்தகைய மூடக்கொள்கை வாதிகளுக்குப் புத்தி புகட்டிப் பெண்களுக்கு உயர்ந்த கல்வியளிப்பதில் உழைத்து 5ம் நாட்டு நலத்தைப் பேணவேண்டும். w
வெளி நாடுகளுக்குச் சென்று, சிறந்த பல்வகைக் கல்விகளும் கற்றுவரப் பெண்களை நாம் ஊக்கவேண் டும். படைப் பயிற்சி முதலிய உடற்பயிற்சிகளையும் கம் பெண்கள் கற்கவேண்டியவர்களாகின் ற ன ர். நூதனமான கைவேலைகளும், ஒவியம், கடனம் முத லியனவும் நம் பெண்கள் விசேஷமாகக் கற்கத்தக்க ஒழுங்குகள் செய்யப்பெறவேண்டும். இன்னும் இவை போன்று அவசிய கலைகளை ஊட்டத்தக்க ஏற்பாடுகள் செய்து பெண் மக்களின் கல்வி நிலையை உயர்த்தி, அதனுல் அறிவுச் சுடரை (5ாடெங்கும் கொழுவ வேண்டும்,
தாம் கற்பதனுல் கலையும், நாகரிகமும் சிறந்து நாடு நல்ல மனித சமுதாயத்துக்கிருப்பிடமாகிற தென்பதை நன்குணர்ந்து பெண்கள் யாவரும் வீறு கொண்டெழுதல் பெண் பாலர் கடமையுமாகும்"
56

கட்டுரை எழுதுதல்
3. விபுலாநந்த சுவாமிகள்
இருபதாம் நூற்றண்டில் வாழ்ந்த தமிழ்ப் பெரி யார்களுள் முதற்கண் வைத்து எண்ணத் தக்க பெருமை உயர்திரு விபுலாநந்த சுவாமிகளுக்குண்டு. ஆங்கிலமும், அருந்தமிழும், ஆரியமும் தெளியக் கற் அறுணர்ந்த இச்சீரியர் இசைத் தமிழுக்கும், நாடகத் தமிழுக்கும் செய்த சேவைகள் மிகவும் பாராட்டத் தக்கன. நம்மீழத்துப் பிறந்து, எல்லோரும் போற்ற வாழ்ந்து, அண்மையில் நம்மைவிட்டு அகன்ற சுவாமி களது பெரும்பிரிவு தமிழுலகத்துக்கு ஈடுசெய்யமுடி யாத ஒரு 5ட்டமாகும்.
நீலக்கடல் நடுவண் நித்திலத்தீவமாக விளங்கு வதும், சுவாமிகளாலே :
" மாவலியின் பேரால் வயங்கு மணி நதியும் காவும் பொழிலும் கழிமுகமும் புள்ளணிந்த ஏரியும் மல்கி இரத்தினத் தீவமென ஆரியர் போற்றும் அணி சால் இலங்கை."
என வருணிக்கப்ப்ட்டதுமான ஈழத்தில் கிழக்கே பரந்து கிடக்கும் மட்டக்களப்பு என்னும் நிலப்பரப்பு மிகப்பழைய ஒரு தமிழகமாகும். இங்கே தென் பாலுள்ள வளஞ்சார்ந்த காரைதீவு’ என்னும் மூதூ ரில் கல்வியும் செல்வமும் சிறந்த சீர்சால் வேளாள மரபில் உதித்த சுவாமிகாதர் எனும் பெரியாருக்கு மகனக மயில்வாகனம் என்பார் 1892ம் ஆண்டு பிறந் தார். கல்விகளெல்லாம் உரிய பருவத்தே கற்றனர். ஆங்கில மொழியுடன் தமிழும் கற்றுவந்து 1920th ஆண்டு இலங்கையின் முதல் மணியாக மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டித பரீட்சையிற் சித்திபெற்றுப்
57

Page 35
மாதிரிக் கட்டுரைகள்
பண்டித மயில்வாகனனர் ஆனர். அரசினர் ஆசிரிய கல்லூரியிற் பயிற்றப்பட்ட ஆசிரியராவதே (ா டு, கொழும்புச் சர்வகலாசாலைக் கல்லூரியிற் கற்று லண் டன்மா நகரப் பல்கலைக்கழகப் பெளதிக சாஸ்திரப் பட்டப் (B. Sc. Lond.) பரீட்சையிலும் தேறினுர், கணிதம், விஞ்ஞானம், இலக்கியம் முதலிய பாடங் களில் இவர் இணையற்று விளங்கினர். தமது கல்விக் கேற்ப இளமையிலேயே ஆசிரியத் தொழிலிலமர்ந் தார். தளர்நிலையில் நின்ற மானிப்பாய் இந்துக் கல் லூரிக்கு அதிபராகி (Principal) திறம்படச் சேவை புரிந்தார். ஆசிரியர்களும், மாணவர்களும் இவர் திற மையைக் கொண்டாடினர்.
அப்பால் உலக நிலையாமையை உணர்ந்து மெய் யுணர்வுபெற இராமகிருஷ்ண சங்கம் சார்ந்து துறவி யாகி விபுலாநந்த அடிகளாரானர். மடத்திலும் கல் விப் பகுதியிலேயே அதிகம் உழைத்து, இராம கிருஷ்ண விஜயம், வேதாந்த கேசரி என்னும் பத்தி ரிகைகட்கும்; பிற்காலத்தே, உலகம் புகழும் பிரபுத்த பாரதம் என்னும், ஆங்கில மாத வெளியீட்டுக்கும் ஆசிரியராக இருந்துள்ளார். ' விவேகானந்த சம்பா ஷணைகள் முதற்பல நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமி ழாக்கினர். நடராஜர் திருவடிவம், மதங்க சூளாமணி எனும் அரிய நாடகத் தமிழ் நூல்கள் இக்காலத்தே மேலும் எழுதப்பட்டன. சமஸ்கிருத மும், ஆங்கிலமும் கிறையக்கற்ற புலமையுடைய சுவாமிகளன்றி, வேறெவரும் கினைக்கவும் முடியாத வகையில் செகசிற்பியார் (Shakespeare) எழுதிய ஆங் கில நாடகங்க%ளயும், தனஞ்சயனுர் வடமொழியிற் செய்த தசரூபகத்’தையும் மதங்க குளாமணியாகத் தமிழர்க்களித்தார்கள்.
58

கட்டுரை எழுதுதல்
துறவின் போது இலங்கையின் கல் விக் கா ன சேவைகள் செய்யச் சுவாமிகளுக்கு நிறையத் தரு ணம் கிடைத்தது. திருக்கோணமலை இந்துக் கல்லு: ரிக் கும், மட்டக்களப்புச் சிவாநந்த வித்தியாலயத்துக் கும் முறையே அதிபராகச் சிலகாலம் இருந்தார். இக்காலத்திலேயே சுவாமிகள் திருக்கைலாய யாத் திரை செய்துவந்தனர். இராமகிருஷ்ண பாடசாலை களு க்கு முகாமைக்காரராக (General Manager) இருந்து இவர் இந்து மதத்துக்கும், தமிழுக்கும் செய்த சேவை மிகப்பல. மட்டக்களப்பில் இவரால் ஸ்தாபிக்கப்பெற்ற இந்துமத பாடசாலைகள் பலவுள. " சிவாநந்த வித்தியாலயம்' எனும் உயர்தர ஆங் 6a)š asa) tafTâb) (A Grade High School) galu ga இலட்சிய ஸ்தாபனம். இவருடைய அருஞ் சேவை களுக்கான ஞாபக சின்னமாக அது இன்று விளங்கு கின்றது. 8 ممبر
சுவாமிகளின் பெருமை, பல பாகங்களிலும் அவர் செய்த அரிய சொற்பொழிவுகளில் கண்டு கொண் டாடப்பெற்றது. அண்ணுமலைச் சர்வகலாசாலைக்குத் தமிழ்ப் பேராசிரியரர்க இவரைச் சிலகாலம் பெற் றுத் தமிழ்நாடு நலமடைந்தது. ‘செந்தமிழ்’, ‘தமிழ்ப் பொழில்’, ‘கலைமகள்’ போன்ற மாத வெளியீடுகளில் சுவாமிகள் சிறந்த கட்டுரைகள் எழுதித் தமிழுலகை மகிழ்வித்தனர். 'மணிமலரிலே சுவாமிகள் எழுதிய *ஆங்கில வாணி அறிஞர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டாள். இத்தகைய பெருமைகளை வியந்தே
" இந்திய வாணியை ஆங்கில பீடத்தேற்றிய புதுமையினேன்
தோழமை கொள் வடமொழி மயமாகிய தொன்மையிசைத்
தமிழைத் தூய தனித்தமிழ் வடிவிற்தோற்றிய தந்தையெனுந் துணையான்'
59

Page 36
மாதிரிக் கட்டுரைகள்
என்றும்; "இமயத்தலையிற் தமிழ்முத்திரைவரை ஈழக் கரிகாலன், சீரேறுந்தமிழறிவர்க் காங் கில நூற்சுவை நிலைகூட்டித் தெருட்டும் புது மைக் கபிலன், கலியுக தெய்வ அகத்தியனும் பாரேறும் புகழாளன். பன்மொழி விபுலாநந்தன்’-என்றும் மட்டக்களப்பு மகா வித்துவான் பெரியதம்பிப் பிள்ளை அவர்கள் பாடி ஞர்கள்.
முத்தமிழ்ப் புலவராய அடிகள் இலங்கைப் பல் கலைக் கழகத் தமிழ்ப் பேராசிரியராக நான்கு வருட காலம் இருந்து பெரும்பணியாற்றினர்கள் தாம் பதி னெட்டு வருடமாகச் செய்து வந்த இசை ஆராய்ச்சி யின் பயணுகக் கிடைத்த 9 யாழ் நூல் இக்காலத் தின் கடைசிப் பகுதியில் (ஆனி 1947) கரங்தைத் தமிழ்ச் சங்கத்து ஆதரவில் அரங்கேற்றப்பட்டது. பழந்தமிழரது இசைப்பரப்பினைத் துருவி நமக்குக்காட் டும் அரும் பொக்கிஷமான இதைத்தந்ததும் தம் és t-60) 10 இவ்வுலகில் முடிந்ததென்றெண்ணினர் போலும் !
கொழும்பு இராமகிருஷ்ண மடத்தில் அவ்வாண்டு ஆடி மாதம் 19ங் திகதி எதிர்பாராதவிதமாய் விண் அணுலகேகிவிட்டார். தமிழ் தவித்தது. தமிழ்நாடு கலங்கியது. −
" சரிகமவும் பதநீசவும் தனித்தனியே வடித்தெடுத்துப்
புரிவுறநல் லிசையமுதாய்ப் புவிக்களித்தாய், புலவோர்கள் பரிவுறஇங் கழுதரற்றிப் படுதுயரம் தனிலாழப் பிரிவுறவு செய்தனையே! பெருமுனிவ வருவாயோ!" என அன்பர்களும் மாணவர்களும் அலறி நின்றனர். பயன் என்ன ! சுவாமிகளுடைய ஆன்மதலமான
60

way: கட்டுரை எழுதுதல் சிவாநந்த வித்தியாலயத்து அவரது திருவுடல் கொண்டுவர்து சமாதி வைக்கப்பட்டிருக்கிறது. "பொற்கால அகத்தியரும்’, மட்டக்களப்பின் 'ஆறு முக நாவலரும்', சிவாநந்த வித்தியாலயம் என்னும் சாந்திரிகேசனத்தின் தாகூரும் 'ஆன சுவாமிகள் போய்விட்டார். அவர் எழுதிய இறவாத புகழுடைய புது நூல்கள் மிஞ்சியிருக்கின்றன. படித்துப் பய னடைவதே அவருக்கு நாம் செய்யும் கைம்மாருகும்!
4. விஞ்ஞானக் கலை வளர்ச்சி
இது விஞ்ஞான உலகம். இன்று மனித வாழ்க் கையின் சக்ல அம்சங்களிலும் பங்குபெற்றுள்ளது விஞ்ஞானத்தின் சக்தி. இயற்கையின் தத்துவங்களை நுண்ணுணர்வினுல் ஆராய்ந்து அவற்றைத் தமக் கேற்ற உபயோகத்துக்கெடுத்தனர் விஞ்ஞானிகள். அவர்களுடைய சக்தியால் இன்றைய ம னி த ன் அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் அளவிறந்தன வாகும.
உலகின் சரித்திரத்தில் ஏற்பட்ட தீவிர மாறுதல் களுக்கெல்லாம் முக்கிய காரணம் விஞ்ஞானக் கலை யென்றே சொல்லவேண்டும். மனிதன் ஆதியில் கற் குகைகளிலும், மர நிழல்களிலும் வாழ்ந்தான். கற் க*ள ஆயுதமாக்கி வேடுவ வாழ்க்கை 5டத்தினன். பின்னர் முறையே இடையணுகவும், உழவனுகவும், கைத்தொழிலாளனுகவும் முன்னேறிவந்தனன் எனச் சரித்திரம் கூறும். இந்த மாறுதல்களிலெல்லாம் மனி தன் அறிந்தோ, அறியாமலோ விஞ்ஞானத்தைப் பயன் படுத்தியே இருக்கிமுன். ஆனல் இயற்கையின் தத்து வங்களை ஆராய்வதில் மக்கள் மிகத்தீவிரமாக உழைக்
6

Page 37
மாதிரிக் கட்டுரைகள்
கத் தொடங்கியது மிகப் பிற்காலத்திலேதான். 19ம் நூற்முண்டின் ஈடுப்பகுதியிலே இக்கலையின் முக்கியத் துவம் மக்களே க் கவர்ந்துகொண்டது.
கி. பி. 1564-1642ல் வாழ்ந்த கலிலியோ என் பார் வானமண்டலத்துள்ள உலகங்களைக்காண உதவி யான தொலை நோக்காடியை (Telescope) கண்டு பிடித்தனர். சந்திரமண்டலத்தில் மலைகள் ஆறுகள் உண்டென இக்கண்ணுடி காட்டியது. அரிஸ் தோத் தல் என்பார் எழுதியிருந்த பல தத்துவங்களை இவர் ஆராய்ந்து உண்மை பலவற்றை காட்டினர். நீராவி யினுதவியிஞல் யந்திரங்களை இயக்கலாம் என்று ஜேம்ஸ் வார்ட் கண்டார். ஜோர்ஜ் ஸ்ரீபென்ஸன் என்பார் ரோவி வண்டியைச் செய்து ஒடவிட்டார். ஓரிடத்திலிருந்து இன்னேரிடத்துக்கு மிக விரைவிற் செய்திகளனுப்பக்கூடிய தந்தியை மோஸ் காட்டித் தந்தார். இசைத் தட்டுகளையும், திரைச் சித்திரங்களை யும் மின்சாரத்தின் பல பயன்களையும் தோம் ஸ் ஆல்வா எடிஸன் காட்டிஞர். ஒரிடத்திலி ரு ந் து கொண்டே வெகு தூரமான இடங்களில் நடை. பெறும் நிகழ்ச்சிகளையும் மக்கள் காண உதவி செய் தது இவரது நுண்ணிய விஞ்ஞான மூளை, வில்பர் ரைட் சகோதரர்கள், அந்தரக்கில் மனிதர் பறந்து செல்ல வழிகாட்டினர். பூமியின் கவர்ச்சிச் சக்தியை ஐசக் கியூட்டன் கண்டுபிடித்தார். இப்படி மேனுட்டு மக்களெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு இதில் முனைந்து எத்தனையோ நூதனங்களைக் கண்டுபிடித தனா.
விஞ்ஞானம் என்பது பேரறிவு. கடவுளின் படைப்பு நுட்பங்களையெல்லாம் பெளதிகம் (Physics), ரசாயனம் (Chemistry) முதலிய சாஸ்திரங்களாக
62

கட்டுரை எழுதுதல்
ஆராய்தல் பேரறிவென மேனுட்டினர் முயற்சி செய்துவர, மனிதன் தன்னைத்தானே அறிந்துய்யும் வழியைக் காட்டுகிற ஆத்மீகஞானமே உண்மையான பேரறிவு எனக் கீழைத்தேச மக்கள் உழைத்துவந்த னர். எனினும், "நாங்களும் இந்த விஞ்ஞானம் அறி வோம்’ எனத் தாவர உயிரைக்கண்ட ஜகதீச சந்திர போஸும், விஞ்ஞான நோபல் பரிசுபெற்ற தமிழர் சி. வி. ராமனும் போன்றேர் உலகுக்குக் காட்டினர். இன்று நமது பிரயாணம், உணவு, உடை, வீடு, வைத்தியம், இசை கைத்தொழில், போர்முறை முத லிய பலவற்றிலும் விஞ்ஞானக்கலை பரிபூரண ஆட்சி செலுத்துகின்ற அவ்வளவு உச்ச நிலையை அடைந்தி ருக்கிறது.
கால் கடையும், கட்டை வண்டியும், கழுதை, ஒட்டகமும் மாறி இன்று வைசிக்கிள்’, ‘கார்', ‘பஸ்’, புகைவண்டி' என்பன தூரத்தையும் 5ேரத்தையும் குறைத்துள்ளன. பாய்க் கப்பல்களுக்குப் பதில், புகைக் கப்பல்கள்மூலம் மனிதன் எவ்வித பயமுமின்றி ஆழ்ந்த கடற்பரப்பைக் கடக்கின்றன். பறவைகளைப் போல மனிதன் வானத்தில் பறக்கக்கூடிய நூதன வண்டிகள், மலை, கடல், வனம், வனந்தரம் யாவற் றையும் ஒன்முக்கி மணிக்கு நானூறு, ஐந்நூறு மைல் வேகமாகவும் பிரயாணம் செய்ய உதவிபுரிகின்றன. நீர்மேல் மட்டுமன்றி மீன்போல நீருள்ளும் மனிதர் சஞ் சரிக்க விஞ்ஞானம் வழி காட்டியிருக்கின்றது. தந்தி, கம்பியில்லாத் தந்தி, பேசும் தந்தி முதலியனவெல் லாம் உடனுக்குடன் செய்திகளையனுப்பப் பயன்படு கின்றன. மனுேவேகத்தையும் மிஞ்சிய வேகத்தில் ஒலியலைகள் ரேடியோ’ மூலம் பரப்பப்படுகின்றன. உயர்ந்த மாளிகைகளை மிக விரைவில் நிறுவ யந்திரங் களை விஞ்ஞானம் தந்தது. நமது உணவு நெடுநாளைக்
63

Page 38
மாதிரிக் கட்டுரைகள்
欲 பழுதடையாமல் இருக்க விஞ்ஞானம் உதவிசெய் கிறது. அடுப்பெரிக்கவும், வீடு பெருக்கவும், விளக் கேற்றவும், காற்றுவிசவும் விஞ்ஞானம் முன்னிற்கின் றது. நூதன முறையில் துணிகளுக்குச் சாயமூட்ட வும், நூற்றல் நெசவு செய்தலாகிய வேலைகளைத் திறம் படச் செய்யவும், உடைகள் தைத்துக்கொடுக்கவும் விஞ்ஞானம் நமக்குச் சேவகனுயிருக்கக் காண்கிமுேம், விஞ்ஞானக்கலை இப்படிக் கைத்தொழிலிலே பெரும் புரட்சியையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கிவிட் டது. கோழியின்றி அடைகாக்கவும், பசு இன்றி வீட்டிலே பால் கிடைக்கவும் இன்று செய்கிறது விஞ்ஞானம்
ஈம்முடலுக்குள் இருக்கும் நோய்களைப் படம்பிடித் துக்காட்டும் “எக்ஸ்றே போன்ற கருவிகளையும், சத் திர சிகிச்சைக்கான எத்தனையோ நூதன கருவிகளையும் பெற்று நோயாளிகள் பயனடைகின்றனர். ‘பெனிவN லின்’ போன்ற அபூர்வ மருந்துகளையளித்து மக் களுக்கு ஆயுள் கொடுக்கிறது விஞ்ஞானம். யானை குதிரைகளில் ஏறி நடந்த யுத்தங்கட்குப்பதில் 'டாங்கி போன்ற அசையும் கோட்டை யுத்தங்களைக் கேட்கி முேம், நெருப்புக் குண்டுகளும், அணுக்குண்டுகளும், நச்சுப் புகைகளும், யந்திரப் பீரங்கிகளும் போன்ற நவீன யுத்த தளவாடங்களை விஞ்ஞானம் போர் வெறியர்களுக்குக் கொடுத்து யமனுடைய சக்தியையும் வென்றிருக்கிறது. அணுவைத் துளைத்து ’ என ஒளவையார் கூறிவைத்ததைச் செயற்கையில் இரண் டாவது உலக மகாயுத்தத்தின் போது விஞ்ஞானக் கலைவளர்ச்சி காட்டிவிட்டது. அணுசக்தியை மணி தன் ஆளமுடியுமானல் கிமிஷமொன்றக்குப் பதினேழா யிரம் மைல் வேகமாய் வானத்திற் பறந்து செல்ல முடியுமெனப் புது விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்
64

கட்டுரை எழுதுதல்
படி ஆக்கல் வேலைக்கும், அழித்தல் வேலைக்கும் விஞ் ஞானக்கலை மக்களுக்கு உதவிபுரிந்து வருகிறது. இந்த விஞ்ஞானத்தில் பெரும்பங்கைப் பெற்று கிற்கும் மின் சார சக்தியின் பெருமை நம்மால் நினைக்கவும் முடியா திருக்கின்றது.
V− இவ்வாறு முன்னேறிவரும் விஞ்ஞானக்கலையைப்
பலர் வெறுத்தும் கிற்கின்றனர். மனித வர்க்கத்தை அழிவுசெய்யும் கலை இது என அறியாது கூறுகின்ற னர். இறந்தோரை எழுப்பிவைக்க விஞ்ஞானம் உதவி செய்யுமா’ எனச் சோம்பற் கேள்விகள் கேட்கிருர்கள். உயிர்க்குலத்துக்குப் பேருதவி செய் யும் இக்கலையை, அழித்தற் தொழிலுக்குபயோகம் செய்பவர்கள் குற்றவாளிகளேயன்றி, விஞ்ஞானம் எப்படிக் குற்றவாளியாகலாம் என்று அவர்களைக் கேட்போம். மிருகப் பிறவியே பயம்கொண்டு வாழ்வ தென, 'விலங்கின் பிறப்பில் வெரூஉ' என்று முன் னுேர் கூறினர். இன்று மனிதர்போற் பிறந்தோரே இப்பயத்தால் ஆட்கொள்ளப்பெற்று ஒருவரை ஒரு வர் அழிக்கக் கருவி செய்வதில் முனைந்திருக்கின்றனர். அஹிம்ச மார்க்கத்தை மனிதன் கடைப்பிடிப்ப னேல் விஞ்ஞானத்தினுல் கெடுதல்புரிய நினைக்கவும் மாட்டானன் முே! எனவே இக்கலையின் ஈற்பயன் களை ஒர்க் து, இதன் வளர்ச்சிக்காக நாம் உழைத்து, வரவேண்டும்.
இப்போ நம் நாடெல்லாம் இக்கலைக்காகப் பாட சாலைகளில் இடம் கொடுத்திருக்கின்றனர். விஞ் ஞான நூல்கள் பல பாஷைகளிலும் மொழிபெயர்க் கப்பட்டு வருகின்றன. விஞ்ஞான ஆராய்ச்சிகளுக் காகப் பரிசுகள் எங்கும் அளிக்கப்பெறுகின்றன. விஞ் ஞானிகளே எல்லா அரசாங்கங்களும் ஆதரித்து விஞ்
65

Page 39
மாதிரிக் கட்டுரைகள்
ஞான மகாநாடுகள் கூட்டுகின்றனர். இன்றைய நாக நீக மனித வாழ்க்கைக்குக் காற்றையும், நீரையும் போல விஞ்ஞானமும் இன்றியமையாததொன்முகி யிருப்பதால், இக்கலையின் பெருமைகளைப்போற்றி இதை வளர்ப்பது 15ம் கடமை.
5. உழவுத் தொழில்
நிலத்தை உழுதுசெய்யும் தொழில்கள் யாவும் உழவு தொழிலேயாயினும், இத்தொடர் சிறப்பாக 5ெற்செய்கையையே குறிப்பிடுவதாயிருக் கிற து, மைக்கு உணவு இல்லையேல் உயிர் தங்கும் இவ்வுடல் இல்லை. ஆதலால் உணவு கொடுத்தோர் உயிர் கொடுக்தோராவர். இதனை 'உண்டி முதற்றே உண வின் பிண்டம், உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே” என்று முன்னையோருணர்ந்து, இதற்குக் கருவியான கமத்தொழிலை விருத்திசெய்து வந்தனர். இன்று உலகில் உள்ள மற்றெத்தொழில்களுள்ளும் இத்தொழிலே சிறந்ததாக மதிக்கப்படுகின்றது.
உழவுத் தொழிலுக்கு மிக இன்றியமையாது
வேண்டப்படுவன நீர்வளமும், நிலவளமுமாகும். இவையிருக்கும் , நாட்டில் உணவுப் பொருட்கள் கிறைய உண்டா க் க ப் பட லா ம். இக்கருத்துக்
கொண்டே ‘சோழவள நாடு சோறுடைத்து’ என நீர்வள, நிலவளங்கள் சான்ற சோழநாடு வர்ணிக்கப் பட்டது. நமது ஈழத்தின் இத்தகைய வளமும் ‘ஈழத் துணவு’ எனக் குறிப்பிடப்பெற்றது. நம் நாட்டில் காலபோகமென்றும் முன்மாரி என்றும் இருபோக மாக கெர்செய்கை நடைபெறுகிறது. வயலை உழுது புழுதியாக்கி, மழை காலத்துக்குமுன் விதைத்துச்
66

கட்டுரை எழுதுதல்
செய்வது முன்மாரியென்றும் களி நிலத்தை உழுது, மிதித்துச் சேமுக்கி நென்முளை விதைத்தோ, ஈெற் பயிர் ஈட்டோ செய்வது காலபோகமென்றும் கூறப் படுகின்றன. விதைப்பின் பின்னர் சீர்ப்பாய்ச்சல், களை கட்டல், காத்தல் என்பன முறையே நடை பெறுகின்றன. அப்பால் கதிரீன்று விளைந்த நெற் பயிர்கள் அறுவடையாகி, போர் குவித்து, வைக் கோல் வேறு, நெல்மணி வேறு, பதர் வேருக்கப் பெறுகின்றன. பின்பு மறுபோக விதைப் புக் கு வேண்டுவன போக மற்றைய நெல்லெல்லாம் மனித வர்க்கத்தின் உணவிலே முக்கிய பங்கைப்பெறச் செல்கின்றன,
எறும்பு முதல் யானையிருக உள்ள சகல உயிர் களும் இத்தொழிலால் உணவுபெறுகின்றன. இத் தொழிலிடமான மருத சிலம் எக்காலத்தும் எழில் கொண்டு விளங்குவது. பசும் பயிர் நிறைந்து மரக தக் கம்பளம் போன்று விளங்கும் காலத்து வயலின் னிய குளிர்மை கூறமுடியாதிருக்கும். சீர் மடை களிலெழும் இன்னேசைகளும், களை பிடுங்கும் மகளிர் தொடுக்கும் பாடல்களும், விளைவு காலத்துப் புள்கடி யும் ஒசையும், சூடு போடும்போது உழவர் கடாக்களை ஒட்டிப் பாடும் “பொலி’ப் பாட்டுகளும் கேட்போருக்கு, வயலிடத்தை இசையரங்கம் என்று எண்ணச் செய்து விடும். ஆங்காங்கு நீர் நிறைந்து, தெளிந்து காணப் படும் மடுக்களும், அவற்றுட் பரந்து கிடக்கும் ஒல்லி, தாமரை, கொட்டி முதலிய பூக்களும், நீர் நோக்கி இரைதேடும் பறவைகளும் தம்மழகால் தெவிட்டா இன்பந்தருவன. வேலை நடைபெறும்போது சுறு சுறுப்பாகவும், சுதந்தரமாகவும் உழைக்கும் உழவர் களின் உற்சாகம் எவரையும் பரவசப்படுத்துவது. உள்ளிடு முற்றிப் பாரந்தாங்காது தலை தாழ்ந்த கதிர்
67

Page 40
மாதிரிக் கட்டுரைகள்
களது பொன்னிறம் வயலைத் தங்கமயமாக்கிப் பார்ப்
போர் மனதைத் தன் வயப்படுத்தும். இப்படியான
பலவகை இயற்கை எழில் நிறைந்த சூழலில் தாம்
வாழ்க்கை நடத்துவதில் உழவர்கள் பெரு மகிழ் வடைகிறர்கள்,
உழவர்களுடைய வாழ்க்கை அசைவற்றது. எவர்க்கும் கட்டுப்படவேண்டாத சுதந்தர இன்பம் நிறைந்தது அவர்களுடைய தொழில். இதை நினைந்து இதன் பெருமைக்கு ஈடு வேறில்லை என்னும் பொருள மைய
" ஏற்றம், உழுதுண்டு வாழ்வதற்கொப்பில்லே கண்டீர்
பழுதுண்டு வேருேர் பணிக்கு ' என்று ஒளவையாரும் ;
* உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர் ' என்று வள்ளுவனரும் கூறினர். உழவு தொழிலின் இணையற்ற பெருமை குறிப்பிடப்பெருத தமிழ் நூல் இல்லையென்றே கூறலாம். " திருவள்ளுவர் தமிழ் மறையுள் இதற்குத் தனியதிகாரம் ஒன்று கொடுத்து,
" சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனல்
உழந்தும் உழவே தலே " என இத்தொழிலின் தலைமைக்கும் காரணம் காட்டு கின்றர். "உழவர் வைத்திருக்கும் உணவே உணவு, அதுதான் பிறர்க்கும் அறஞ் செய்தர்குரியது' என் பது 15ம் முன்னேர் கருத்து. இதனைப் “பகடு கடக்த கூழ் பல்லாரோடுண்க’ என நாலடியார் வற்புறுத்து கிறது. இரப்போர்க்கு உணவளித்தல் தொடக்கம் மன்னர்க்கு அரசு கடத்த உதவியாதல்வரை இக்
68

கட்டுரை எழுதுதல்
தொழில் எல்லாவற்றிலும் பங்குபெற்று முதன்மை யடைகின்றது. இப்பொருளை,
" இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
S-pafløL afla ÚGLII í ''
என இளங்கோவடிகளும் கூறினர். மன்னர் பெருமை யெல்லாம் உழவு தொழிலிலே தங்கியிருக்கிறதென்ப தைக் குறிக்கவே ஒளவையார் 8வரப்புயர'-என ஒரு அரசர்குக் குறித்துக் காட்டினர். எல்லாவற் றுக்கும் இத்தொழில் மூலகாரணமாவதையே கம்பரும்;
** அலகிலா மறைவிளங்கும், அந்தணராகுதி விளங்கும்,
பலகலையாம் தொகைவிளங்கும், பாவலர் தம் பாவிளங்கும், மலர்குலாம் திருவிளங்கும், மழைவிளங்கும், மனுவிளங்கும், உலகெலாம் ஒளிவிளங்கும் உழவர் உழும் உழவாலே "
என்று தொகுத்துரைத்தனர். இப்படியான பெரு மைகளை அறிந்து இத்தொழிலை 5ம் முன்னுேர் கண் போற் காத்து வந்தார்கள்.
இச் சிறப்புகளையெல்லாம் இன்று அனைவரும் ஒப்புக்கொள்ளுகிருேமாயினும், இத்தொழிலுக்கு ச் செய்கையில் முதன்மை கொடுத்துக் காக்க முற்படு ேெமுமில்லை. உழவர்களும், மற்றையோர்போற் கரு தப்படுவதில்லை. உழுதுண்டு வாழ்வோர் பெறும் ஊதியமும், தொழுதுண்டு வாழ்வோர் பெறும் ஊதி யத்திலும் பல மடங்கு குறைவாக இருக்கின்றது. இக்காரணங்களால், கற்ற வாலிபர் எவரும் கமத் தொழிலைக் கருதுவதில்லை. உழவன் சிந்தும் வியர் வையினுல் உணவுபெற்றுத் தாம் உண்டுகொண்டே *உழவன் தாழ்ந்த தொழிலாளன், நாட்டான், குடி மகன்' என்றெல்லாம் அவனைக் குறைவாகக் கருதிப் புறக்கணிக்கின்றனர். உழவு தொழிலை வளர்ப்பதற்
69

Page 41
கட்டுரை எழுதுதல்
காகக் கோடி கோடியாக ரூபாய் செலவழிக்க 5ம் மரசினர் பின்னிற்கவில்லையாயினும், கற்ற மக்கள் இக்தொழிலை மேன்மையாகக் கருதவோ, இதி வி'டுபடவோ, எவ் வழி யும் செய்யவில்லை. இத் தொழில் முதன்மைபெற்ற காடுகளே மற்றைய நாடு களுக்கு இன்று உணவனுப்பிச் செல்வத்தையும், செல்வாக்கையும் பெற்றுவரக் காண்கின் ருேம், உழவு கைவிடப்பெற்ற காரணத்தால் அரிசிப் பங் கீடு ஏற்படவும், மக்கள் அரை வயிற் று க் கும் போதாத உணவு பெறவும் நம் நாடு இலக்காயிற்று.
இக்குறைபாடுகளே உணர்ந்து இவற்றை நீக்கி உழவு சிறந்து, நாடு தழைக்க அரசினர் ஆவன செய்யவேண்டும். கற்றவர் யாவரும் இம்முயற்சியில் ஒத்துழைத்துக், கிருஷிகம் சிறந்த, செ ல் வம் செழித்து, மக்கள் டசிம! ), உயிருற்றுவாழ இயன்ற வரை முயற்சிக்கவேண்டும். உழவுத் தொழிலின் சிறப்புக்களைச் சொல்லாலும் செயலாலும் மற்முேர்க் குக்காட்டி, இதை இகழ்வாரை கன்னிலை சேர்த்து, * உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்ய 'ப் பண்ணவேண்டும். இயந்திர சாதனங்களையும், புது முறைகளையும் கையாண்டு விளைவைக்கூட்டி நிறைந்த பயனைப்பெற வழிகாட்ட வேண்டும். தரிசு நிலப்பகுதி யெல்லாம் உழவாற் தலைசிறந்து பொன்கொழிக்கும் பூமியாக எல்லோரையும் ஊக்கவேண்டும். உழவை மதிக்கும் தன்மைமட்டும் மக்கள் மனதில் ஊன்றச் செய்தால் அப்போ உழவுத் தொழில் தானே வளர்ந்து மக்கள் வளம்பெறவும் அதுவே காரணமாகுமன்றே !
6. இலங்கையின் பொருளாதாரம்
நீலக்கடலிடை ஒர் கித்திலத் தீவாக விளங்கும் கம் இலங்கையானது வயல்வளம், மலைவளம், கடல்
70

கட்டுரை எழுதுதல்
வளம் முதலிய பல வளங்களும் நிறைந்து அழகும், சிறப்பும் பெற்றிருக்கின்றது. விளை பொருள், கல்வி என்பவற்றிலெல்லாம் முன்னேறிவரும் ஈம் நாட்டின் பொருளாதார நிலையை நாம் நன்கு கவனித்துப் பார்ப்பதும், வேண்டிய திருத்தங்கட்கு முயல்வதும் அவசியமாகும்.
ஒரு 5ாட்டி ன் செல்வத்தையே அதன் பொருளா தார நிலையென் கிருேம். விளை பொருட்கள், சுரங்கப் பொருட்குள், கைத்தொழில், வியாபாரம் என்பன தேசத்துக்குச் செல்வம் கொடுக்கும் வழிகளாகும். எனவே இவைகளின் பெருமை, அளவு, சிறப்பு என்பவற்றைக்கொண்டு ஒரு நாட்டின் பொருளா தார நிலையை நாம் ஒரளவு அறியக்கூடும்
பண்டையிலிருக்தே இலங்கை ஒரு கமத்தொழில் நாடாகவே இருந்துவந்திருக்கிறது, செழித்த நில வளமும், நீர்ப்பாசனத்துக்கு அதிகமான நதிவளமும் இலங்கைக்கு இயற்கையின் கொடைகள். மத்திய மலை 5ாடுகளிலிருந்து கடலுக்கோடும் நதிகள் பல அணைக ளால் முற்காலத்தே தடுக்கப்பட்டன. பள்ளத்தாக்கு களெல்லாம் குளங்களாக்கப்பட்டன. வெட்டுவாய்க் கால்கள் வயல்களுக்கு இவற்றிலிருந்து வேண்டியபோது நீரளித்தன, "உண்டிகொடுத் தோருயிர் கொடுத் தோர்' எனும் கோட்பாடுகொண்ட சிங்கள அரசரின் குன்றமுயற்சியினுல் அப்போ இலங்கை தன் அயல் நாடுகளுக்கும் உணவனுப்பி சங்க நூல்களில் “ ஈழத் துணவு’ எனப்பெயரும் பெற்றது. நிறைந்த வயல் களும், நல்ல நீர்ப்பாசன வசதியும் இருந்ததாலும், இங் கிருந்தோரின் சாப்பாட்டுக்குவேண்டிய அளவிலும் மேலாக விளைவிக்கப்பட்டு அந்நாட்களில் நெற்பயிரால் இலங்கைக்கு நிறைந்த வருமானமிருந்தது. இலங்கை
7

Page 42
மாதிரிக் கட்டுரைகள்
reheramov
யின் பொருளாதாரத்துக்கு {{ تھیے[ ஒருவழியாயுமிருந்தது. இன்று அக்காரணங்கள் முற்றும் மறுபக்கம் மாறின படியால் அரிசிக்காக மற்முேரை எதிர்பார்க்கும் ஈன நிலையுடன், பெரும்பணத்தை வெளியில் அனுப்பிப் பொருள் குறையும் நிலையிலும் நாமிருக்கிருேம். தூர்ந்துபோன குளங்கள் திருத்தம் செய்யப்பட்டு, பாழான வயல்களும் திருத்தமுற்று, வயர்பரப்பையும் அதிகப்படுத்தி, இயந்திர சாதனங்களையும் கையாளத் தொடங்கினுல் இலங்கை தனக்குவேண்டிய அளவுக்கு மட்டுமன்றி வெளியிலனுப்பி விலைப்படுத்தவும் போதிய நெல்லை அளிக்கும் நாடாகி தன் செல்வநிலையிலும் நன்கு கூடிவருமல்லவா!
இலங்தைத் தேயிலை உலகச் சந்தையிலே மிகப் பெயர்பெற்ற ஒன்முயிருக்கிறது. இத்தகைய தேயிலை யும், றப்பர், கொக்கோவா, தென்னைப்பிரயோசனங் கள், கறுவா, புல்லெண்ணெய், காரீயம், முத்து, இரத் தினககர்கள் என்பனவும் இலங்கையின் வருமானத்துக் குக் காரணமானவையாம். இவற்றிற் பெரும்பாலான வற்றை அளித்துப் பொருளாதாரத்தை உயர்த்தக் காரணமாகும் மத்திய மலைநாட்டை இலங்கையின் பொக்கிஷ சாலையென்றே சொல்லவேண்டும்.
ஆண்டுதோறும் ஏராளமான தேயிலை ஏற்றுமதி யானபோதிலும், குறைந்த கூலியைத் தொழிலாளர்க்குக் கொடுத்து கிறைந்த ஆதாயத்தைப்பெறும் தோட்டச் சொந்தக்காரர்களாக வெளிநாட்டார் இன்னும் இருக் கிறதால் அப்பணத்தின் ஒருபகுதி எப்படியும் வெளிச் சென்று கொண்டேயிருக்கிறது உள்நாட்டவர் பலர் புதுப்புதுத் தோட்டங்களை, ஆக்கி இம்முயற்சியில் ஊக் கமாக உழைத்து வருகின்றமை இலங்கையின் பொரு ளாதாரத்தை கன்கு உயர்த்துமென்று நம்பக்கூடியதா
72

கட்டுரை எழுதுதல்
யிருக்கிறது. இப்படியே நம் செல்வத்துக்குக் காரண மான றப்பர், தென்னை என்பனவும் மற்றவையும் கூடிய கவனத்துடன் அரசினரால் விருத்திசெய்யப்பட வேண்டியவையாகும்.
இலங்கையிற்" கைக்தொழில் விருத்தி இல்லை யென்றே கூறலாம். இன்று உலகின் பொருளாதார நிலையை நாம் நோக்கினுல் நாடுகளே முன்னணியில் சிற்கின்றதையறிவோம். மனித வாழ்க் கையில் பெரும் பங்கு பெறுபவ்ை \கைத்தொழிற் பொருட்களேயாகும். ஆனல் நமது சீவியத்துக்கான பலகைத்தொழிற் பொருட்களுக்கு ஈர்ம் பிறநாடுகளை நோக்கிநின்று நம் பணத்தை வெளியிலனுப்புகின்முேம், இலக்கை முழுவதற்கும்ாக வெள்ளவத்தையில் உள்ள ஒரே ஒரு நெசவுயந்திரசாலே போதிய பலனை மேக்கு அளிக்கமுடியாது. பருத்தி விளையத்தக்க செழித்த பகு திகள் தரிசு நிலமாகக் கிடக்கின்றன. அப்பகுதிகளில் பருத்திச்செய்கை நடைபெற்ருல் வேண்டிய நூலுக்கும் காம் மற்முோைகோக்க வேண்டியிராது. உள்நாடுகளில் உள்ள கைத்தறிகள் பல, யுத்தகாலத்தில் மக்கட்குப் பெரு நன்மைபுரிந்தன. இவை நன்கு ஆதரிக்கப்படுதல் பொருள்நிலையை நாட்டுக்குக் கூட்டி மக்களின் வாழ்க் கைத்தரத்தை யுயர்த்துவதாகும்.
கண்ணுடித் தொழிற்சாலை, தோல்வேலே ஆலை, என்பன ஆரம்பிக்கப்பட்டு நர்பயனளித்து வருகின் றன மரமரைக்கும் சாலைகளும், பஸ் "களுக்கு கூடா ரம் செய்யும் சாலைகளும் இலங்கைக்குப் பணத்தைச் சேமித்து வருகிறதெனலாம், சீமேந்துத் தொழிற்சாலை யும் திறக்கப்பெற்று, 75ன்கு கடத்தப்படின், அதுவும் நிறைந்த வருவாய் தரும்; அரசினர் யோசித்தபடி சீனிசெய்யும் ஆலையும், கரும்புத்தோட்டங்களும் உண்
73

Page 43
மாதிரிக் கட்டுரைகள்
டாக்கப்படுவதும், றப்பர்த் தொழிற்சாலைகளை நிறுவு வதும் இன்னும் காட்டுக்கு ஈயம் தருவனவாகும். இங்கே கிண்டி எடுக்கப்படும் இரத்தினங்கள், கடலிற் குளிக்கப்படும் முத்துக்கள், காரீயம் என்பனவெல் லாம் தொழிற் பொருட்களாக்கப்பட்டு வெளியிலனுப் பப் படின் நாம் கூடியலாபத்தை யடையலாம். இது போலவே யாழ்ப்பாணச் சுருட்டுக் கைத்தொழில் யங் திர சாதனங்களால் விருத்தியாக்கப்படின் மற்றும் நாடு களுக்கும் சுருட்டுகளை அனுப்பி A་ཏུ་རྣོ་ཚ་ பணத்தை இலங்கை பெறமுடியும்.
முன்னர் நாம் காட்டிய பொருட்களே வெளிநாடு களில் விலைப்படுத்துவதில் இலங்கைக்குப் பொருள் கிடைக்கிரதெனினும், வியாபார உரிமை முழுதும் நம்மிடம் இல்லாமை ஒரு குறையாகும். இங்கிலாந்து, அமெரிகக்ா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு விதிக்கப்படும் தீர்வை வீதம் குறைவு. ஆதலால் சுங்கப்பகுதி மூலம் பெறும் பணம் மற்ற காடுகள் பெறுதல்போல் பெருங் தொகையாயில்லை. இந்தியாவிலிருந்து கிடைக்கககூடிய பொருட்களின் தீர்வை இன்னும் அதிகமாதலால் அவற்றை இறக்கு மதி செய்து மலிவாகப்பெற்று லாபமடையவும் மக்க ளுக்கு வழியில்லை.
குறித்த வருமானங்கள் வரவேண்டிய அளவுக்கு இல்லாதபோதிலும் இலங்கையின் பொருளாதாரம் இலங்கையின் கிரந்தர செலவுகளை நடத்தப் போதிய தாயிருந்து வந்தது, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கிருஷிகம் எனும் அரசாங்கப் பகுதிகள் ஏராளமான பணத்தைச் செலவுசெய்து தம் கடமையைத் திருப்திப் படுத்தி வருகின்றன. இலங்கையின் பொருளாதார நிலையே இன்றைய இலவசக் கல்வியை மக்களுக்கு
74

கட்டுரை எழுதுதல்
அளித்திருக்கிறது. பாடசாலைகளில் இலவச மதிய போசனத்துக்காகச் செலவாகும் தொகையும் பெரி யது. மலேரியாத் தடைபோன்ற வேலைகளிலும், நல்ல தெருக்களை அமைப்பதிலும், அதிக உணவு பயிரிடுக’ போன்றவற்றிலும் நிறையப் பணம் செலவாகியும் இலங்கை கடன்படாதிருக்க இதன் பொருளாதாரம் இடம் தக்திருக்கின்றது. ஆனல் இப்போ புதிய பாரா ளுமன்றம் வந்ததினுல் மேலதிகமான செலவு காட்டுக் குப் பெரும்பாரமாக எறியிருக்கிறதென்று அரசயல் வாதிகள் கூறுகின்றர்கள். யுத்தத்திற்குப்பின்னல் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருதலும், உள்ள உத்தியோகத்தர்களுக்குச் சம்பளம் அதிகமாக் கப் பெற்றிருத்தலும் 15மது இன்றையப் பொருளாதார கிலேக்கேற்றதல்ல என அவர்கள் கூறுவது சரியே. தினசரி வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் வழி களைக் கையாண்டும் ; கைத்தொழில், கமத்தொழில் களை உயர்ந்த நிலையில் ஆதரித்து வேலையில்லாத் திண் டாட்டத்தை நீக்கியும் நாட்டின் மானத்தை நமது அரசியற் தலைவர்கள் காக்கவேண்டும். '
நாட்டில் படித்தோர் வீதம் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ள்து. செல்வநிலையில் 5டுத்தரமா னுேர் தொகையும் கொஞ்சம் அதிகரித்து வருகின்ற . தெனலாம். இயற்கை வளத்தை கன்முறையில் பயன் படுத்தும் வழிவகைகளை அரசினர் மேற்கொள்ள முற் பட்டிருப்பது பொருளாதாரம் உயருமென்பதற்கு அறிகுறி. நம் நாட்டின் நாணயமாற்று ஒரளவு கன் முறையிலிருக்கின்றது. இக்காட்டின் பரப்பு சனத் தொகையும் கொண்ட மற்றை நாடுகளோடு நோக்கும் போது, இலங்கைத் தீவானது பொருளாதார நிலையில் மிகக் குறைவாயிருக்கிறது என்று சொல்வதற்கில்லை. அப்படிக் காணப்படின், பெரும்பாலும் அதன் காரணம்
75

Page 44
uorganfîd கட்டுரைகள்
அங்ங்யராட்சியென்றே கூறவேண்டும். அதிலிருந்து கூட இன்று காம் நீங்கி, நம்நாடு சுதந்திர நாடாகி யிருப்பதால் காலவரையில் இலங்கை மிகச்சிறந்த செல்வமான ஒரு நாடாகுமென்பதற்கையமின்று.
7. (இலங்கையில்) சமீபத்தில் வந்த வெள்ளப் பெருக்கு.
உயிர்க்குலத்துக்கு வரக்கூடிய கஷ்டங்கள் பலவற் றுள்ளும் வெள்ளப்பெருக்கு மிகக் கொடுமையான தொன்று. பயங்கரமான யுத்தங்களுக்கும், தீப்பிடிப் புக்கும் காம் ஒடித் தப்பிக்கொள்ளலாம்; ஆல்ை எவ் வித முன்னறிவித்தலுமின்றி வருதலும், மனிதபெலத் தால் எதிர்க்க முடியாததுமான வெள்ளப்பெருக்கை விலக்குவது மிகக் கஷ்டமாகும்.
சென்ற ஆவணி மாதத்தில் (August 1947) இலங் கையின் தென் பாகமும் மத்தியபாகமும் கொடிய வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டன. எதிர்பாராத விதமாக மத்திய மலைநாடுகளிலும், தென்மேல் சரிவிலும் சோணுவாரியாக மழைபொழிந்தது. இதனுல் அங் கிருந்து செல்லும் நதிகளெல்லாம் பிரவாகித்தன. தென்மேல் சரிவில் உள்ள களனிகங்கை முதலிய நான்கு நதிகளின் பெருக்கும் மகாவலிகங்கையின் பெருக்கும் மிகவும் குறிப்பிடக் தக்கதாயிருந்தன. இலங்கையின் தலைநகரமான கொழும்பும், மத்தியமலைக் கோட்டையான கண்டியும் மற்றைய பிரதேசங்களி லிருந்து துண்டிக்கப்பட்டன, எத்தனையோ கிராமங் களும், பட்டினங்களும் தரைமட்டமாயின. பிர மாண்டமான பாலங்களும், உயர்ந்த கட்டிடங்களு
76

கட்டுரை எழுதுதல்
மெல்லாம் இருந்த இடமே தெரியாமற் கொண்டு போகப்பட்டன. விதைத்த வயல்களும் விளைந்த வயல் களும் ஒன்முயின. உயர்ந்த மரங்களும் தாழ்ந்த செடி களும் ஒன்றுபட்டன. போக்குவரத்துகள் தடுக்கப் பெற்றன. வழிகளிலேயே புதைந்த ‘பஸ்’, ‘கார்’கள் சில. வழி இடிந்து சரிந்துபோன வண்டிகள் பல. பள்ள நிலங்கள் மேடாயின. மேடு பள்ளமாயிற்று. மலைகள் சரிந்தன. மதில்கள் இடிந்தன. எங்கும் அல் லோலகல்லோலம், V
சலப்பிரளயமோ என அதிசயிக்கத்தக்கவகையில் எங்கும் நீர்ப்பிரவாகம். வெள்ளத்தில் அள்ளுண்ட கால்நடை களெத்தனே! பால்மணம் மாமுப் பாலகரும், மடமகளிரும், மைக்தருமாய் வெள்ளத்துக் கிரையா னேர் எத்தனை பேர் 1 வெள்ளம் மேவாத உயர்ந்த மட்டிடங்கள் கிலச்சரிவினுல் பலரை யமனுக் கிரை யாக்கின. உயிர் கிடைத்தால் அதுவேபோதும் என்று ஒடி உயர்ந்த இடங்களை அண்டிய மக்கள் குளிரால் நடுங்கினர். உடுக்க உடையும், உண்ண உணவும், இருக்க இடமும் அவர்கட்கு இல்லை. எனவே வெள் ளத்துக்குத் தப்பினபோதும் மரணம் அவர்களை இவ் வகையில் தேடிவந்தது. அங்தோ! மரண தேவதை யின் ஊர்த்துவ தாண்டவத்தின் கோரம் இப்படி யிருந்தது. வெள்ளம் குறைந்தபோது எங்கும் டயங்கர மான நிசப்தம் நிலவியது. மரக்கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பிரேதங்கள் பல காணப்பட்டன. வீட்டுக் கதவுகள், கதிரை கட்டில்கள், ‘பைசிக்கிள்' 'கார்’ வண்டிகள் போன்ற சாதனங்கள் பல ஆற்றிலடை கரைப்பட்டுக் கிடத்தன. குடிசனம் நிறைந்து செல்வ மாயிருந்த பகுதியெல்லாம் வெறிச்சென்று, ஒளி யிழந்து, பரிதாபகரமான தோற்றத்தில் காட்சிதந்தன. ஆம்! வெள்ளம் ஈவிரக்க மற்றதேதான் ! இத்தகைய
77

Page 45
மாதிரிக் கட்டுரைகள்
iussis,
பெரு வெள்ளங்களாலன்ருே நமது பழந்தமிழ் நாடும், அதன் செல்வங்களும், தமிழர் கலைகளும் கொண்டு போகப்பட்டன என்று சங்க நூல்கள் கூறுகின்றன.
இத்தகைய கோர வெள்ளத்தினுல் நாட்டுக்கு நன்மையும் ஏற்படாமலில்லை. பெரிய பணக்காரரும், ஏழைக் குடியானவர்களும் ஒரே நிலைக்கு வந்தனர். மக்கள் கிறக்துவேஷமும், சாதித்துவேஷமும், கட்சித் துவேஷமும் மாறி இடர்Nபட்டோர்க் குதவினர். கொடை என்பதையே அறியாத எத்தனையோ பெரிய வியாபாரிகள் வள்ளல்களாகினர்கள். அண்மையில் கடக்கவிருந்த பாராளுமன்றத் தேர்தல் இடர்ப்பட்ட மக்களுக்கு இவ்வகையில் உதவியாயிற்ற. தெரிவுக்கு முன்வந்த அபேட்சகர்கள், இடக்தொறும், இடக் தொறும் சென்று உணவும் உடையும் கொடுத்து மக் களுக்கு உதவிசெய்தார்கள் தேசாதிபதியும், மந்திரி மாரும் அழிந்த இடங்களை நேரிற்சென்று பார்த்து நிவா ரணவேலைத் திட்டங்களைச் சிந்தித்தனர். வெள்ள நிதி எங்கும் திரட்டப்பட்டது; திரட்டப்படுகிறது. பண் டித ஜவஹர்லால் நேரு இந்திய அரசாங்கத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வெள்ள நிவாரண நிதியாக அனுப்பிவைத்தார். கஷ்டமுற்றேர்க்கு இக்கொடைகள் பேருதவி தந்தன. -
இத்தகைய நிலையில் செல்வம் வாய்ந்த மத்திய இலங்கையை அதன் ஒளியிழந்து தவிக்கச் செய்தது வெள்ளப்பெருக்கு. இதைத் தடுக்க நிரந்தரமான அணைக் கட்டுகள் போடவேண்டும். நிலச்சரிவுப் பாதுகாப்புகள் அமைக்கப் பெறவேண்டும். எதிர்பாராத இத்தகைய இன்னல்களிலிருந்து மக்கள் தப்புவதற்கு முன்னேற் பாடுகள் செய்து வைக்கவேண்டும். இவ்விதம் அர சாங்கம் நடவடிக்க்ை எடுத்தாலன்றி வெள்ளப்பெருக்
78

கட்டுரை எழுதுதல்
கிலிருந்து நமது வளம் கொழிக்கும் இலங்கையின் செழும் பகுதியானது காப்பாற்றப்பெற முடியா தல்லவா! அரசினருடைய கற்கவனத்துக்கு இதைச் சேர்த்து, இறைவனது ஈல்லருள் நாட்டைக்காப்பதாக!
8. தேசீய சேமிப்பு இயக்கத்தின் நோக்கமும் பயனும்.
சேமிப்பு அனைத்துயிர்க்கும் அவசியமானதொன்று தான். எறும்புகள் மாரிக் காலத்துக்கான உணவைக் கோடையிற் சேமிக்கின்றன. தேனீக்கள் பின் தேவைக்காகத் தேன் சேமிக்கின்றன. மரம் செடி கொடிகளும் தமக்கு வேண்டிய போதுதவுதற்காகக் கொஞ்ச உணவை வேரிலும், கிழங்கிலும், இலையிலும் எல்லாம் சேமித்து வைக்கின்றன-என்று படிக்கின் ருேம். ஆம். மனிதனும் சேமித்தல் செய்கின்றன்.
ஆயினும் அவனது சேமிப்பு முறை சரியாகவில்லை.
பொந்திலும் கிலத்திலும் முக்தையோர் புதைத்து வைத் தனர் பொருளை. திடீரென அவரிறக்கப் பின்னுேர்க்கு அது பயன்படாதொழிந்தது. இவ்வாறு சேமித்த மாங் தர் தமக்கும் பிறர்க்கும் கேடு செய்தார் ஆதலால் * பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்துக் கேடு கெட்ட மானிடர்’ என்று ஒளவையார் அவ
ரைப் பேசுகின்றர். இத்தகைய கேடின்றி, மறைவா யிருக்கவும், வேண்டும்போது 15மக்குதவவும், நமக்கு மரண மேற்படின் 15ம் பின்னேரைத் தானே அப் பொருள் தேடிப்போய்ச் சேரவும், லாபத்துடன் திரும் பக் கிடைக்கவும் கூடியதான ஒரு சேமிப்பை நமக்குக் காட்டுகின்ற இயக்கமே தேசீய சேமிப்பு இயக்கமாகும்,
79

Page 46
மாதிரிக் கட்டுரைகள்.
இன்றியமையாத் தேவைகளுக்கு நாம் செல வழிக்க வேண்டிய தெவ்வளவு அவசியமோ, அது போலவே கொஞ்சமாவது நாம் சேமித்து வைக்க வேண்டியதும் அவசியமாகும். இச்சேமிப்பை நாம் கடமையாகக் கருதிப் பழக்கத்திற் கொண்டுவர நமக்கு வழி காட்டுவது இவ்வியக்கத்தின் பயன் கருதாத முக் கிய நோக்கமாகும். சேமிப்புப் பழக்கம் சிக்கனமாக வாழ கம்மைப் பயிற்றுகிறது. சிக்கனப் பயிற்சி நம் மைச் சிறந்த செல்வக் கனக வழி கடத்துகிறது. இப் பெரு நிலைக்கு வழிகாட்டும் இயக்கத்தின் சிறந்த 6ோக்கமும், பயனுமறிந்து 15ாம் கன் மைபெறத் தவறக் கூடாது.
*தொட்டிலிற் பழக்கம் சுடுகாடு மட்டு”மாதலால் இளமையில் சேமிப்புப் பழக்கத்தை வளர்க்கவேண்டும். கடலையும், கச்சானும் வாங்கி மிச்சமாகிற சதத்தையும் நாம் சேமித்துப் பயனடையத் தக்கவாறு சேமிப்பு இயக்கம் வேலை செய்கிறது. ஐந்து சத முத்திரைகள், இருபது சத முத்திரைகளாகச் சேகரித்த்ே தபாற் கங்தோர் வங்கிப் புத்தகத்தில் போடலாம். அல்லது தபாற் கங்தோர்களிலிருந்து சேமிப்டப் பத்திரங்களே வாங்கிக் கொள்ளலாம். சில்லறைச் சதங்களை யும் நாம் சேமிக்க உதவுவதற்காக உண்டிப் பெட்டிகளும் தரு கிரு?ர்களாம். இப்படி நம் பணத்தை இலகுவாகப் பாதுகாத்து ஈமக்குத்தரும் தேசீய சேமிப்பு இயக்கம் அங்காட்களிலிருந்திருந்தால் நம் முன்னுேர் ' ஈட்டிய ஒண் பொருளைக் காத்தலு மாங்கே கடுங் துன்பம்' என்று பாடியிரார் எனலாம். பணத்தை மீதப்படுத்த 15ம்மைப் பழக்குவதோடு 15ம் முதலுக்குக் கொஞ்சம் வட்டியும் ச்ேர்த்து நயம் செய்யும் இத் தேசீய சேமிப்பு இயக்கத்தார்க்கு நாம் என்ன கைம்மாறு செய்யலாம்!
8O

கட்டுரை எழுதுதல்
இளமை தொட்டே சிறிது சிறிதாகச் சேமித்து நன்மையடைந்தால், அதுவே அவர்களுக்கு 5ாம் செய்யக் கூடிய கைம்மாருகும். சிறு துளி பெரு வெள்ளமன்ருே அற்ப சல்லியாக ஆயிரம் ரூபா சேர்த்து விடலாம். பணமில்லார் இவ்வுலகிற் பிண மாகவே கருதப் படுகிறர்கள். பணமென்ருல் பிண மும் வாய் திறக்குமாம். பணம் பங்கியில் குலம் குப்பையில்’-இப்படியெல்லாம் பணத்தின் பெருமை பற்றி அநுபவத்தில் அறிகின்றுேம். அரசனுக்கும் சரி, ஆண்டிக்கும் சரி பணம் அவசியமே. இப்படி யான பணம் நம்மிடம் இருக்கவேண்டாமா! நம்மிடம் வரும் பணத்தை இடாம்பீகமாகச் செலவழிக்கக் கற்ருல் நாம் கடன்காரராகவே வாழ ஏற்படுமன் ருே ! இராம பாணம் ஏறப்பெற்ற இராவணனது நிலையை,
"திடம் கொண்ட ராமபாணம் செருக்களத்துற்றபோது
கடன்பட்டார் நெஞ்சம்போலும் கலங்கினுன் இலங்கைவேந்தன்'
என்று கடன்பட்டார்க்கு ஒப்பிடுகிருர் கம்பர். கடன் படுவதைப் பார்க்கிலும் கடல் நஞ்சு நல்லது என்கிருர் ஒளவையார். ஐயோ! வேண்டாம் ! நாம் கடன்காரர் களாக வேண்டாம். இளமை தொட்டே கையில் காசு சேர்க்கப் பழகுவோம்
பணம் சேர்க்கும் வழி வகைகளை வேண்டியபோது இலவசமாகச் செய்துதர அரசாங்கத்தார் காத்து நிற்கிருரர்கள். தேசீய சேமிப்பு இயக்கம் நமக்குத் துணையாக நிற்கின்றது. கையைச் சுருட்டிக் காசைப் பொத்துவோம். முத்திரைகள் மூலம், பத்திரங்களை வாங்கி, வருமான வரியுமின்றி மிச்சப்படுத்துவோம். பணத்தைச் சேர்த்துப் பலத்தைப் பெருக்குவோம். சேமிப்பு இயக்கத்தைச் சேர்த்து வளர்ப்போம். நம்
8

Page 47
மாதிரிக் கட்டுரைகள்
முறவினர்க்கும் 'கண்பர்களுக்கும் தேசீய சேமிப்பு இயக்கத்தின் 5ோக்கமும் பயனும் எடுத்து விளக்கி அவர்களையும் இதிற் சேர்த்துச் சேமிக்கப் பழக்கு வோம். இப்படியே நமது சமுதாயத்தையும், கம் நாட்டையும் செல்வம் கொழிக்கச் செய்வோம். வாழ்க தேசீய சேமிப்பு இயக்கம்!
இP3ஒ
82.

4. பயிற்சி அப்பியாசங்கள்
மாணவர் தனித்தனி சிந்தித்து எழுதுவதற்காக பயிற்சிக்கான தலையங்கங்களை ஒரளவு வகைப்படுத்திக் கீழே கொடுக்கின்றேன் H. S. C., U. E. போன்ற வகுப்பு மாணவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய வகை யில் கட்டுரைத் தலைப்புகள் இங்கு ஆங்கிலத்திலும் காட்டப்பெறுகின்றன.
1. கற்பனையும், வருணனைகளும் : 1. உமது வீட்டில் கடந்த ஒரு கொண்டாட்டம்.
ANY HOUSE-HOLD CEREMONY .
2. நீர் செய்த ஒரு மலைநாட்டுப் பிரயாணம்
A JOURNEY TO A MOUNTAINOUS COUNTRY
3. நீர் செய்த ஒரு கடற் பிரயாணம்
A SEA VOYAGE
4. மருத நிலம்
THE SN1|LNG FELD
5. நீர் கண்ட ஒரு பிரசித்திபெற்ற கோயில் உற்சவம்
A TEMPLE FESTIVAL i i
6. உமது பாடசாலை YOUR SCHOOL
7. பட்டினத் தெருக்காட்சி A STREET SCENE y
8. கிராமப்புறச் சீவியம்
RURAL LIFE
83

Page 48
9.
10.
ll.
12.
18.
14.
l6.
16.
17.
8.
l9.
20.
84
பயிற்சி அப்பியாசங்கள்
உமது இளமைக்கால கினேவுகள் RECOLLECTION OF YOUR CHILDHOOD கடற்கரையில் ஒருகாள A DAY BY THE SEA SIDE நீர் செய்த ஒரு நிலாப்பிரயாணம் A MOON LIGHT WALK
பழமரச் சோலை
AN ORCHARD
மாலைக் காட்சிகள்
A SUNSET SCENERY பெரிய கல்வி ஸ்தாபனமொன்றில் ஒரு நாள் நீர் கண்டவை A VISIT TO A FAMOUS EDUCATIONAL INSTITUTION நான் ஒரு செல்வனுனல்
F BECOME RICH
ஒரு பெரிய தீ விபத்து
A FIRE ACC DENT உமது சட்டை கூறிய சுய சரிதை AUTOBIOGRAPHY OF A SHIRT
நான் கண்ட ஒரு கனவு
A DREAM
ஒரு பூம்பொய்கை
A LILY POND சூரியோதய வர்ணனை அல்லது காலக்காட்சிகள் SUN RISE OR A SCENERY AT DAWN

பயிற்சி அப்பியாசங்கள்
2.
22.
28.
24,
25.
26.
27.
28.
29.
30.
31.
மலை காட்டு மக்கள் வாழ்க்கை முறை THE LIFE OF MOUNTAIN DWELLERS
இலங்கையின் புராதன ககரம் AN ANCIENT CITY OF CEYLON
உமது ஊரில் கடந்த ஒரு பாராளுமன்றத் தேர்தல் A PARLAMENTARY ELECTION IN YOUR VILLAGE இலங்கையின் சுதந்திரதின விழா INDEPENDENCE DAY CELEBRATION OF CEYLON
உமது பொழுதுபோக்கு வேலை YOUR FAVOURTE HOBBY
உமது வீடு YOUR HOUSE
2. சொல்லுதல்
ஐக்கிய சங்கக் கடைகள் CO-OPERATIVE STORES
கிராமச் சங்கம் அல்லது நகரசபை VILLAGE COMMITTEE OR URBAN COUNCIL
தற்காலப் பிரயாண வசதிகள் MODES OF TRAVEL IN MODERN DAYS
அதிக உணவு பயிரிடுக GROW MORE FOOD
ஒய்வு நேர உபயோகம் MAKING THE BEST USE OF LESURE
85

Page 49
பயிற்சி அப்பிய சங்கள்
34.
86
82.
33.
35.
36.
37.
38.
39.
40.
41.
42.
புலாலுண்ணல்
NON VEGETARIAN. DET
யுத்தத்தின் பயய்ை 5ம் வாழ்க்கையில் உண்டான மாற்றங்கள்
CHANGES BROUGHT ABOUT BY THE WAR IN
OUR WAYS OF LIVING நல்லொழுக்கம் CHARACTER TRAINING
தேசிய சேமிப்பு இயக்கம் NATIONAL SAVING MOVEMENT
சாரண வாலிபரியக்கம் THE BOY SCOUTS
3. சுகாதாரம் மலேரியாச்சுரம் MALARA நீர் மிக விரும்புகிற ஒரு விளையாட்டு YOUR FAVOURITE GAME
சுத்தம் சோறிடும் О. CLEANLINESS IS ONES GREATEST WEALTH தேகப்பயிற்சிக் கல்வி PHYSICAL EDUCATION உணவுப் பொருட் சக்துக்கள் VITAMINS அளவு கடந்தால் அமிர்தமும் நஞ்சு
TOO MUCH OF ANYTHING IS GOOD FOR NOTHING i

பயிற்சி அப்பியா சங்கள்
43.
44.
45.
46.
47.
49.
50.
5l.
52.
53.
4. தொழில் நெற் செய்கை PADDY CULTIVATON குடிசைக் கைத்தொழில்கள் COTAGE INDUSTRIES ஒரு மரக்கறித் தோட்டம் A VEGETABLE GARDEN நெசவுக் கைத்தொழில் WEAVING INDUSTRY கற்ற வாலிபரும் கமத் தொழிலும் EDUCATED YOUTHS AND AGRICULTURE
. இலங்கையும் கைத்தொழிலும்
CEYLON AND HER INDUSTRIES மீன் பிடித்தற் தொழிலை கன்முறைக்குக் கொண்டு வருதல் 1MPROV1 NG THE F SHING N DUSTRY வேலை கிறுத்தம் செய்தல் STRIKES
5. அரசியல் தேசத் தொண்டு அல்லது சமூக சேவை SOCIAL SERVICE இலங்கையின் புதிய அரசியற் திட்டம் CEYLON'S NEW CONSTITUTION இலங்கையின் இலவசக் கல்வி முறை FREE EDUCATION IN CEYLON
87

Page 50
88
54.
55.
56.
i57.
58
59.
60.
6.
62.
63。
64.
பயிற்சி அப்பியாசங்கள்
கிராமச் சீர்திருத்தம் RURAL RE-CONSTRUCTION
ஐக்கியங்ாடுகள் சங்கம் UNITED NATONS ORGANISATION இலங்கையின் உள்நாட்டு வியாபாரம் CEYLON'S INTERNAL TRADE
இந்திய சுதந்திரப் போராட்டம் INDIA'S FIGHT FOR INDEPENDENCE
இங்கியாவுக்கும் இலங்கைக்குமுள்ள தொடர்பு
NDO-CEYLON RELATIONS இலங்கை சுதந்திரம் பெற்ற வரலாறு HOW CEYLON WON HER INDEPENDENCE
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் நடந்த உலக அரசியல் மாற்றங்கள்
CHANGES BROUGHT ABOUT IN THE GOVERNMENT OF VARIOUS COUNTRIES AFTER THE SECOND WORLD WAR
இலங்கைத் தமிழர் சிங்களவர் பிரச்சினைகள்
COMMUNAL PROBLEMS OF THE TAMLS AND THE SINHALEASE IN CEYLON
அரசியல் கட்சிகள் POLITICAL PARTIES ஜனநாயக ஆட்சி முறை DEMOCRACY சமதர்ம ஆட்சி முறை SOCIALISM

பயிற்சி அப்பியாசங்கள்
65.
66.
67°。
68.
'O.
71.
72.
73.
74.
6. கல்வி தாய்மொழி மூலம் கல்வி பயிற்றுதல்
MOTHER TONGUE AS THE MEDIUM OF |NSTRUCTON
பத்திரிகை படிப்பதன் பயன் ADVANTAGES OF NEWSPAPER READING நீர் விரும்புகிற ஒரு தமிழ் நூல் YOUR FAVOURITE WORK IN ΤΑΜΙL LITERATURE சமயக் கல்வி
REL|G|OUS EDUCATION
. தமிழ்ச் சங்கங்கள்
TAM || L. SANGAMS
பழந்தமிழர் காகரீகம் CVLSATION OF THE ANCIENT TAMLS பண்டைத் தமிழர் வாணிகம் TRADE OF THE ANCENT TAMLS கல்வியின் சிறப்பு GREATNESS OF EDUCATION
ஒரு நூல் நிலையம்
A LIBRARY
மாணவர் சங்கக் கூட்டமொன்றில் தலைவராக இருந்தபோது நீர் பேசியவை
YOUR ADDRESS AS THE PRESIDENT OF A STUDENTS’ LITERARY ASSOCATION
75. பெண்கள் முன்னேற்றம்
WOMEN'S SOCIAL PROGRESS
89

Page 51
பயிற்சி அப்பியாசங்கள்
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
90
இசைக்கலை
MUSIC
சிற்பக்கலே
ARCHITECTURE நீர் மிக விரும்பும் ஒரு தமிழ்ப்புலவர் YOUR FAVOURITE TAM POET இக்காலத் தமிழ்ப் பத்திரிகைகள் MODERN TAMIL JOURNALS
நாகரீகம்
C|VILISATION
நாட்டுப் பாடல்கள்
FOLK SONGS
இலக்கியச் சுவை LITERARY APPRECATION இன்றையத் தமிழ் மொழி MODERN TAM IL மொழியும் வரிவடித் தோற்றமும் EVOLUTION OF WRITTEN LANGUAGE
குழந்தையின்பம் THE DELIGHTS DERVED FROM CHILD FRIENDSHP விருட்சங்கள்
TREES
தேனி
THE HONEY BEE

பயிற்சி அப்பியாசங்கள்
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
7. விஞ்ஞானம் விஞ்ஞானக் கல்வியும் அதன் பயன்களும் ADVANTAGES OF SCIENCE மின்சாரத்தின் உபயோகங்கள் THE USES OF ELECTRICITY
சினிமாவின் நன்மை தீமைகள்
ADVANTAGES AND DISADVANTAGES OF THE CINEMA
வைத்தியத் துறையில் விஞ்ஞானத்தின் பங்கு APPLICATION OF SCIENCE TO MEDCNE அணு ஆராய்ச்சி ATOMiC RESEARCH விமானத்தின் விம்மிதங்கள் WONDERS OF AVIATION தேசாந்தரம் செல்லும் பறவைகள் MGRATION OF BRDS பூச்சி புழுக்களின் ஆச்சரியகரமான வாழ்க்கை WONDERS OF INSECT LIFE
8. ஒப்பு நோக்கல்
கலவன் பாடசாக்லக் கல்வி முறையின் நன்மை
தீமைகள்
ADVANTAGES AND DSADVANTAGES OF CO-EDUCATION
நாட்டுப்புற வாழ்க்கை சிறந்ததா, நகர்ப்புற வாழ்க்கை சிறந்ததா COUNTRY LiFE AND TOWN LIFE
9

Page 52
பயிற்சி அப்பியாசங்க்ள்
98. மேல்நாட்டு நாகரீகமும் கீழ்நாட்டு நாகரீகமும்
WESTERN AND EASTERN CIVILISATION
99. அஹிம்சையும் ஆயுதபலமும்
NON VIOLENCE VERSUS VIOLENCE
100. இலங்கையின் கிருஷிகம் - அன்றும் இன்றும் AGRICULTURE IN ANCIENT AND MODERN CEYLON t
101. பண்டைய யுத்த முறையும், இன்றைய யுத்த
முறையும V WARFARE-ANCIENT AND MODERN
102. கவிஞனும் ஓவியக் கலைஞனும்
THE POET AND THE PAINTER 103. கல்வியும் பண்பாடும்
CULTURE AND LEARNING
9. பழமொழிகள் போன்றவை 104. செய்வன திருந்தச் செய் AlN4 AT EXCELLENCE
105. காலத்துக்கேற்ற கோலம்
LIVE IN TONE WITH THE TIMES 106. வழக்கத்தின் வலிமை
INFLUENCE OF TRADITION 107. பெற்ற தாயும் பிறந்த பொன்னுடும் நற்றவ வானிலும் தனிசிறந்தனவே GLORY TO ONE'S MOTHER AND FATHER-LAND
108 முயற்சி திருவினையாக்கும்’
92
INDUSTRY BEGETS WEALTH

பயிற்சி அப்பியாசங்கள்
109. 'சேரிடமறிந்து சேர்?
TEST THE FRIEND AND BEFRIEND HIM 10. 'அன்பிற்குமுண்டோ அடைக்குந்தாழ்’
LOVE IS UN BOUNDED 11. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் MAKE HAY WHILE THE SUNSHINES 112. புயலுக்குப் பின் அமைதி
IF WINTER COMES CAN SPRING BE FAR BEHND
118. கன்றி மறவேல்
FORGET NOT ACTS OF GRATTUDE
10. பெரியோர் வரலாறு
114. ஆறுமுக நாவலர்
ARUM UGA NAVALAR 115. சுப்பிரமணிய பாரதியார்
SUBRAMANYA BHARAT 116. திருவள்ளுவர் "-
TRUVALLUVAR 117. கம்பர்
KAMBAR
118. ஒளவையார்
AUVAYAR
119. கவி தாகூர்
RABINDRANATH TAGORE
93

Page 53
பயிற்சி அப்பியாசங்கள்
120. மகாத்மா காந்தி ஒரு உலகம் போற்றும்
பெரியார்
MAHATMA GANDHI :- THE WORLD RENOWNED PERSONALTY
121. டாக்டர் உ. வே. சாமிநாதையர் DR. U. V. SVVAM] NATHAIYAR 122. கப்பலோட்டிய தமிழன் சிதம்பரப் பிள்ளை
V.U. SITHAMPARA PILLAI 128. கலை அறிஞர் ஆனந்த குமாரசாமி DR. ANANDA COOMARASANMY 124 அன்னி பெஸண்ட் அம்மையார்
DR. ANNEBESANT 125. வீரமாமுனிவர் செய்த தமிழ்ப் பணி
BESCHE’S CONTRIBUTION TO THE TAM || LITERATURE
கட்டுரைகளாக மட்டுமின்றி சம்பாஷணைகள், கடி தங்கள் என்பவை போலவும் இத்தலையங்கங்களை உட் பொருளாகக்கொண்டு எழுதிப் பயிற்சி செய்தல் நன்று. அப்பயிற்சிகளின்போது சம்பாஷணைகளுக்கும், கடிதங்களுக்கும் அமைந்த விதிகளைக் கவனித்துக்கொள் ளுதல் பயன்தரும். எதற்கும் தனிமுயற்சியும், பயிற்சி யும் அவசியமாதலால் மேலும் மேலும் எழுதித் தேரு மாறு மாணவர்களை இன்னேர் முறை ஞாபகமூட்ட விரும்புகிறேன்.
சுபம்
94

திருத்தி வாசிக்க.
J éi;
பிழை திருத்தம் திறமடைய திறமையடைய இபபுதுயுகத்தில் இப்புதுயுகத்தில் வழக்குகின்றன. வழங்குகின்றன. எடுத்கொண்ட எடுத்துக்கொண்ட கவனிததல் கவனித்தல் மயக்கக்கள் மயக்கங்கள் அழுததிக்காட்ட அழுத்திக்காட்ட, தருவதாதலால் தருவனவாகலால் இருக்கிறதல்லவ! இருக்கிறதல்லவா! (ԼԲւ9-Լմ முடி பு சேராத G3F UT ir சொற்களையம் சொர்களையும் வடமொழி பெயர்ப் வடமொழி மொழி
பிலும்
பெயர்ப்பிலும்
பொருளாராய்ச்சியம் பொருளாராய்ச்சியும்
செய்கிறதுபோல், பிரமணிகளுக்கு குளு, குளு’ உல5த ருெங்கிறமாrை கிளைகள்;
பூந்துறக்கும் ஒடும்
செய்கிறதுபோல்,
பிரயாணிகளுக்கு
'குளுகுளு
உலாகத
செங்கிறமான
(இதில்அரைமாத்திரை யை நீக்கிக்கொள்க)
பூத்துறக்கும்
ஒடும்
பொருத்தமாய்ப்த்
பொருத்தமாய்த்
95

Page 54
வரி பிழை திருத்தம்
23 பாக்கப்படவில்லை பார்க்கப்படவில்லை 19 (Current Subjects.) (Current Subjects 27 தோச்சி தேர்ச்சி
2 மற்றயவற்றை மற்றையவற்றை 20 பொருத்திருக்கின்றது.பொறுத்திருக்கின் 21 சிற்ப்பு சிறப்பு 29 பின்வருவனப் போலக் பின்வருவனபோல 26 நமிர்ந்து நில் லடா கிமிர்ந்து கில்லடா, 18 மெய் ம.ந்து மெய்மறந்து 29 கட்டுவோம் சூட்டிடுவோம்
2.காத்ததிடவே காத்திடவே 14 உணர்ச்சி புயல் உணர்ச்சிப்புயல் 27 உயக் உயர்ந்த
2 ஆசிரியராவதோடு ஆசிரியராயதோடு 17 தோம்ஸ் தோமஸ்
6 'புகைவண்டி’ புகைவண்டி 15 அமெரிகக்ா அமெரிக்கா
9 அரசயல் அரசியல் பரப்பு பரப்பும் 6 பெருகின்றன. பெறுகின்றன. 10 Saving Movent Savings Movement 11 ஒவியக் கலைஞனும் ஒவியக்கலைஞனும்
96


Page 55


Page 56