கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குறுகிய காலத்தில் தமிழை எப்படிக் கற்பிக்கலாம்

Page 1


Page 2


Page 3

குறுகிய காலத்தில் தமிழை
எப்படிக் கற்பிக்கலாம்
விக்கினா பாக்கியநாதன் பி. ஏ.
கலைவிளக்கு"வெளியீடு.
மேற்கு ஜெர்மனி,

Page 4
முதற்பதிப்பு ஆண்டு
உரிமை
பொருள்
வெளியீட்டாளர் முகவரி :
Jář89 GLitř
விக்னா பாக்யநாதன்
ஆய்வுக் கட்டுரை
கலைவிளக்கு வெளியீடு S. PACKYANATHAN '''KALAIVILAKKU** DROOTE 18 4600 DORTMUND 14 WEST.GERMANY
சதுர்வேந்தன் அச்சகம், 3. சிவன்கோயில் தெற்குத்தெரு, கோடம்பாக்கம், சென்னை.

பதிப்புரை
"குறுகிய காலத்தில் தமிழை எப்படிக் கற்பிக் கலாம்" என்ற, இந்த ஆய்வுக் கட்டுரையை கனடா நாட்டில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க மகாநாட்டில் தமிழறிஞர் விக்னா பாக்ய நாதன் அவர்களால் வாசிக்கப்பட்டதாகும். இக் கட்டுரை நூல் அந்தந்த நாட்டவரின் தாய் மொழியைக் கற்பிக்க உதவும் வகையில் எடுத்துக் காட்டாக நம் தாய்த் தமிழில் உருவாக்கித் தந்த பெருமை இவர்களையே சாரும்.
இக்கட்டுரை நூலின் வாயிலாக அன்னைத் தமிழை அரங்கேற்றவும் வருங்காலச் சிற்பிகளின் பிஞ்சு மனங்களில் தமிழைப் பதிய வைத்து ஆர்வம் செலுத்தவும், பெற்றோரின் உரிய பங்கைப் பதிய வைப்பதிலும், சுற்றுச் சூழலைச் செம்மையாக உருவாக்கி, சிறுவர்களின் தமிழார்வத்தைப் பெருக்கி அவர்களைத் தமிழ் தெரிந்தவர்களாகவும், படிப் பறிவு பெற்றவர்களாகவும், எழுதத் தெரிந்தவர் களாகவும் உருவாக்கி, ஆக்கப்பூர்வமான சுய சிந்தனை வளத்தைப் பெருக்கவும் வழிகாட்டுகிறது இக்கட்டுரை நூல்.
பொதுவாக வெளிநாடுகளில் வாழும் தமி ழர்கள் கலப்படமில்லாத தூய தமிழில் பேசு

Page 5
வதையும் எழுதுவதையும் நாம் இன்றும் கண் கூடாகப் பார்த்து வருகின்றோம். அவர்களின் தமிழார்வம் நம் தாய்த்தமிழக மக்களுக்கு என்றும் கற்றுக் கொள்வதற்குரிய பாடமாக அமைந்து வருகிறது.
தமிழ்ப் பண்பாட்டு கலாச்சாரங்களை என்றும் நினைவுறுத்திக் கொள்ளும் வகையில் கலை விளக்கு வீடியோ பத்திரிகை மூலமாகவும், ஜீனியர் கலை விளக்கு மலர் மூலமாகவும் தொலைக்காட்சி மூலம் தமிழர்களின் பெருமைகளை ஒலிபரப்பி வரு கின்றனர். இவர்களது அயராத உழைப்பும், தமிழ்ப்பற்றும் இவர்களை என்றும் வாழ வைக்கும். திரு. பாக்யநாதன் அவர்களை அறிமுகம் செய்த பெருமைக்குரிய திரு. S. பாலச்சந்தர் அவர் களுக்கும், இந்நூலை நல்ல முறையில் அச்சிட்டுத் தந்த சதுர்வேந்தன் அச்சகத்தாருக்கும் மற்றும் உதவியாக இருந்த அனைவருக்கும் இதயப்பூர்வ மான நன்றி.
இவண், ஆ. அருணகிரி பி.காம், பதிப்பாசிரியர்.

குறுகிய காலத்தில் தமிழை எப்படிக் கற்பிக்கலாம்
குறுகிய காலத்தில் தமிழை எப்படிக் கற்பிக்கலாம்? என்ற எச்சவினையில் அமைந்துள்ள தலைப்பை அடிப்படையாக வைத்து இக்கட்டுரை எழுதப்படு கிறது. “குறுகியி காலம்? என மகா நாட்டுக் குழுவினர் கருதுவது, குறிப்பிட்ட காலம் கொண்ட ஒரு பயிற்சி நெறியையா? அல்லது பிள்ளைகளுக்குக் கிடைக்கும் குறுகிய காலத்தையா? என்பது ஐயத்துக்கிடமா யுள்ளது. காரணம் குறுகிய காலத்தில் எவ்வளவோ ஆழமுள்ள தமிழைக் கற்பித்துவிட முடியாது. உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத்தின் ஆறாவது மகா நாட்டில், இப்படி ஒரு தலைப்பில் ஆராய இடமளிக் கப்படுவதனால் பிள்ளைகளுக்குக் கிடைக்கும் அருகிய நேரம்; அந்த நேரத்துக்குள் தமிழைக் (இலகுவாக) குறுகிய காலத்தில் கற்பிப்பது என்ற அடிப்படையிலே இக்கட்டுரையில் ஆராயவுள்ளோம். அத்துடன் ஆரம்பத் தமிழ் அறிவையா? அல்லது அதற்கு மேற்பட்ட தமிழறிவையா? எவ்வெவ் வயதினர்கள் இதற்குள் அடங்குவார்கள்? எது வரையும் தமிழைக் கற்பிப்புது? போன்றதேள்வி

Page 6
6
களும் எழுகின்றன. குறுகிய காலத்தில் கற்பித்து விடக்கூடிய மொழியா? நம் தமிழ்மொழி? இல்லையே. ஆகவே மகாநாட்டினர் கருதியது ஒரு பிள்ளையின் ஆரம்பத் தமிழ் அறிவையே, அடிப்படைத் தமிழறி வையே கற்பிப்பது, என்றே நாம் கருத்திற் கொண்டு ஆய முற்படுகின்றோம்.
ஒரளவு பேசத் தெரிந்த, பெற்றோருடன் அன்றாடம் தமிழில் உரையாடி ஓரளவு சொல்வளம் பெற்ற, அதே நேரம் பாடசாலை செல்லும் வயதை எய்திய ஐந்து, ஆறு வயதுக்கு மேற்பட்ட பிள்ளை களையே எமது ஆய்வுக்கு எடுத்துக் கொள் கின்றோம். அத்துடன் ஒரு பிள்ளை எம் தாய் நாட்டைவிட்டு, அந்நிய நாட்டில், அச்சூழலில் வாழும் நிலைமையிலே அப்பிள்ளைக்கு ஆரம்பத் தமிழைக் குறுகிய காலத்தில் எவ்வாறு கற்பிக்கலாம்? கற்பிக்க முயற்சிக்கலாம்? அதேவேளை இப்பிள்ளை வேற்று மொழிப் பாடசாலைக்குச் சென்று வரும் பிள்ளை என்பதையும் அடிப்படையாக வைத்து ஈண்டு ஆராயவுள்ளோம். ஒரு பிள்ளை தன் ஆரம்ப அறிவைப் பெறும் வகையை, அல்லது அப்பிள்ளைக் குத் தெரிந்தோ தெரியாமலோ அறிவுகள் உருவாகும் தன்மையை முதலில், பெற்றோர், உடன்பிறந்தோர் வீட்டுச்சூழல், என்பனவே நிர்ணயம் செய்கின்றன. பெற்றோர் உடன்பிறந்தோர், மற்றவர்களுடனே ஒரு பிள்ளை தனது கருத்துத் தொடர்பு ஊடகமாகத் தமிழையே வைத்துக் கொள்கிறது என்ற தன்மையி லும், ஏற்கனவே தமிழில் ஒரளவு பரிச்சயம் உள்ள நிலையிலும் எவ்வாறு ஆரம்பத் தமிழறிவு, பேச்சறிவு,

7
எழுத்தறிவைக் கற்பிக்கலாம்? அதற்கு ஏற்ப ஆசிரியரின் பங்கு எத்தகையது? என நோக்க வேண்டும். தமிழ் வாசனையே அறியாத ஒரு தமிழ்ப் பிள்ளைக்கு குறுகிய காலத்தில் தமிழைக் கற்பிப்பது சற்றுக் கடினம் என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. தமிழில் ஓரளவுக்குப் பேசத் தெரிந்த பிள்ளைகளுக்குக் கற்பிப்பதற்கு ஆசிரி யர்கள் மட்டுமல்ல, பெற்றோர்களும் குடும்ப உறுப்பினர்களும் தமது பங்கைச் செலுத்தவேண்டும். காரணம் அந்நிய மொழிப் பாடசாலைக்குப் பிள்ளை சென்றுவர வேண்டிய கட்டாயம் உண்டு. இதனால் வேற்று மொழியின் ஆதிக்கம், அழுத்தம், அக்கறை, தமிழைவிடக் கூடுதலாக இருக்கும். அதாவது அந்நிய மொழி அப்பிள்ளையை ஆக்கிரமிக்க முனையும். இந்நிலையிலேதான் பெற்றோருக்குப் பிள்ளை மேலுள்ள அவதானம் அவசியம் தேவைப் படுகின்றது. பிள்ளை தமிழ் வகுப்புக்கு, தமிழாலயத் துக்குச் செல்கின்ற நேரம் குறுகியது. வாரத்தில் 4, 6, 8, மணித்தியாலங்கள்தான். பொதுவாக, சராசரியாக ஒரு பிள்ளைக்குக் கிடைக்கிறது எனலாம். இந்நிலையில் தமிழை அன்றாடம் நிமிடத் துக்கு நிமிடம் தமிழை ஞாபகப்படுத்தப் பெற்றோரின் அக்கறை அவசியம் என்கின்றோம். இவ்வாறு பெற்றோர் அக்கறையுடன் செயற்படும்போது, 2C5 ஆசிரியரோ இந்தக் குறுகிய காலத்தில், குறுகிய நேரத்தில் எவ்வாறு ஆரம்பத் தமிழறிவைக் கற்பிக் கலாம்? அல்லது வளர்க்கலாம்? என்பதற்குப் ப
கோணங்களில் விடைகள் கிடைக்கின்றன, s

Page 7
குறுகிய காலத்தில் தமிழைக் கற்பித்தல்
ஆசிரியர் பங்கு
குறுகிய காலத்தில் தமிழைக் கற்பிப்பது என்ற முறைமையில் பெற்றோர் ஆசிரியர்களின் பங்கு ஒருமித்திருக்க வேண்டும் என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பின்னர் ஆசிரியரின் பங்களிப்பு, பெற்றோர்களின் பங்களிப்பு, என்ற இரண்டு தலைப்பில் ஆராய வேண்டிய நிலை உருவாகிறது. பெற்றோர்களின் பராமரிப்பிலிருந்து, வீட்டுச் சூழலிலிருந்து, தத்தம் பாடசாலைகளுக்கும், தமிழ் வகுப்புக்கும் என்று ஆசிரியர்களின் நேரடிக் கவனத்துக்குப் புதிய சூழலில் பிள்ளை காலடி வைக் கின்றது. அவ்வாறு வந்த பிள்ளைகளுக்கு ஆசிரியர் திடீரெனக் கற்பித்தலை ஆரம்பிக்கமுன்னர் பிள்ளை களுடன் இதமான முறையில், அன்பான முறையில், அச்சம் ஏற்படா வகையில் அவர்களுடன் உரை 'யாடலை நடாத்த வேண்டும். சக மாணவ மாணவி களுடன் சம்பாஷணைகளில் பங்கு பற்றக் குறிப்பிட்ட நேரம் அனுமதிக்கவேண்டும். அப்போது பிள்ளைகள் தத்தம் அனுபவத்துக்கு ஏற்றபடி தாம் பார்த்த,

கேட்ட, விடயங்கள் பற்றின கதைப்ப்ார்கள். உதாரணமாக; பிறந்த நாள் கொண்டாட்டம், புத்தாண்டு, பாடசாலை வரும்போது கண்ட காட்சிகள் என்பன பற்றி உரையாடுவார்கள். இந்த உரையாடல் சொல்லுதல்-கேட்டல் ஆர்வத்தைத் தூண்டும்போது, பிள்ளைகளின் பேச்சை வளம் படுத்தச் செய்கிறது. அத்துடன் ஆசிரியர் அடிக்க மாட்டார்; நல்லவர்; எனக்கு விருப்பமானவர் என்று ஆசிரியரைப் பற்றிய நல்ல ஒரு மதிப்பீடு பிள்ளை களின் உள்ளத்தில் ஆசிரியரே தோற்றுவிக்கும்படி யாக நடந்து கொள்ள வேண்டும். இது மிகவும் தேவையான ஒன்று என்று சொல்ல முடியும். ஒரு பிள்ளைக்கு ஆசிரியரில் பயம், படிப்பின்மை ஏற்பட்டால், ஆசிரியர் கற்பிப்பது பிள்ளையின் மனதில் புரிவது சிரமம்.
ஆரம்பக் கல்விய்ைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அப்பிள்ளைகளின் தாய்போல மாறி ஆசிரியப் பணி செய்தல் வேண்டும். தாயின் அரவணைப்பைத்தான் சிறு பிள்ளைகள் ஆசிரியர்களிடமும் எதிர்பார்ப் ப்ார்கள். எனவே ஆசிரியர்களுக்குப் பொறுமை மிகமிக அவசியமானது. தாம் ஒன்றைப் பற்றிச் சொல்லிக் கொடுக்க, பிழையாக ஒரு பிள்ளை சொன்னால் ஆசிரியர் பொறுமையை இழக்கக் கூடாது. காரணம் வேற்று மொழியின் செல்வாக்கு ' பிள்ளைகளில் தொற்றியிருப்பதால் உச்சரிப்புத் தவறுகள் ஏற்படக் கூடும். தாயகச் சூழலில் வாழும் போது, அங்கு நிலைமை வேறு கற்பித்தல் முறை

Page 8
10
ஆசிரியர்-மாணவர்களுக்கிடையே உள்ள தொடர்பு, கண்டிப்பு, எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை. அதே கற்பித்தல் முறையையே வெளிநாட்டிலும் கற்பிக்க முனைவதும், அதனால் பொறுமை இழப்பதும் வெறுப்படைதலும் கூடாது. இரு வேறுபட்ட சூழலின் கற்பித்தல் முறைமையினை இனங்கண்டு, ஆசிரியர்கள் சமயோசிதமாக நடந்து கொள்ள வேண்டும். பிள்ளையின் மனோநிலை புரிந்து, தன்மை புரிந்து, ஆர்வம் உணர்ந்து, அவர்களின் விவேகத் திறனை ஊகித்து, அவர்களுடன் ஒருவ ராகத் தாமும் மாறிக் கற்பிப்பதே நல்லது. ஒரு தாய்க்குப் பிள்ளையின் குணம், நடவடிக்கைகள், புரிவதுபோல ஆசிரியர்களுக்கும் தமது மாணவர் களின் தன்மை, ஆற்றல், குணநலன் என்பன புரியும் என்பதில் மறுப்பில்லை. அவ்வாறு ஒரு சிலருக்குப் புரியாமல் அபூர்வமாக இருந்தர்ல் அது ஆசிரியருக்கும் மாணவனுக்கும் உள்ள இடை வெளியை உணர்த்தும். எமது பிள்ளைகளுக்கு நாம் வேண்டிய இடத்தில் கண்டிப்பு வைக்கத்தான் வேண்டும். ‘அடியாத மாடு படியாது?? என்ற பழமொழிகள் எல்லாம் வெளிநாட்டில் வாழும் எங்கள் பிள்ளைகளுக்குப் பொருத்தமற்றதாகப் போய் விட்டது. மாணவர்களைக் கண்டித்தல் சட்ட ரீதியான குற்றம் என்ற நியதி வெளி நாடுகளில் உள்ளது என்பதை யாவரும் அறிவர். இருந்தாலும் வளர்ந்த பிள்ளையாயின், ஓரளவுக்கு விபரம் தெரிந்த பிள்ளையாயின் அக்கறையற்ற நிலையில்

11
காணப்பட்டால் கண்டிப்பையோ, மிரட்டலையோ தேவை கருதிப் பிரயோகிக்கலாம்.
கற்பித்தல் முறைமையை இனி நோக்குவோம். மூன்று படிமுறை நிலைகளில் கற்பித்தல் முறை மையை வகைப்படுத்தி நோக்கும்போது தெளிவான விளக்கத்தை ஏற்படுத்தும்.
அவையாவன:- 1. பேச்சு (சம்பாஷண்ை) (ஒலி வடிவம்) 2. எழுத்து (வரி வடிவம்) 3. சுயமான சிந்தனையில் பேச்சும், எழுத்தும்,
இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே ஆராயின் அதன் தன்மைகளை அறியலாம்.
பேச்சு
*பேச்சு 29 என்ற தலைப்பின்கீழ் பல விடயங்கள் அட்ங்குகின்றன. இங்கே பிள்ளைகளின் உரையாடல், உச்சரிப்பு, கருத்துப் பரிமாறும் வேகம், என்ப வற்றைக் கவனிக்கலாம். பிள்ளை ஒன்றின்
1. சுயமான பேச்சு ஆற்றல், சொல் உச்ச
ரிப்பு.
2. சொல் லி க் கொடுத்ததைத் திரும்பச்
சொல்லச் செய்தல்.

Page 9
5.
12
ஒன்றைக் கேட்டல்- பாடத்தில் உள்ள கதைகள், புத்திமதி, வானொலிப் பாடல். எழுத்துக்களின் ஒலிகளின் வித்தியாசங் களை உணரச் செய்தல். வானொலியில் ஒலிப்பதிவு நாடாவில் எழுத் துக்களைப் பதிந்து கேட்கச் செய்தல். மிருகம், பறவைகளின் ஒலிகளை அறியச் செய்தல். ண, ன, ந-ழ, ள், ல எழுத்துக்களின்உச்ச
ரிப்பு பேதத்தை உணர்த்துதல்.
உரையாடல் (சம்பாஷணை) பொதுவான கருத்துப் பரிமாற்றம், கேள்வி கேட்டுப் பதில் வரச் செய்தல்.
பாடல்கள் பாடுதல்-இலகுவான பாடல்
களை இசையுடன் கூட்டி, அபிநயத்துடன்
பாடிக் காட்டுதல், அவர்களையும் பாடச் சொல்லுதல், பயிற்றுவித்தல், நாடகம் நடித்தல்.
கதை சொல்லுதல்-உணர்ச்சி வெளிப் பாட்டுடன் பாத்திரங்களின் தன்மைக்கு ஏற்ற மாதிரி, தொனியை ஏற்றியிறக்கி
முக பாவனையுடன் (கோபம், பயம்,
சிரிப்பு, அழுகை) கதை சொல்லுதல்.
இவ்வாறு சொல்லும்போது, இடையில்

10.
13
கதையை நிறுத்தி, கதையில் வரும் சம்பவம் பற்றிக் கேள்வி கேட்டு, கதை யுடன் ஒன்றியுள்ளார்களா? என்பதை
ஆசிரியர் கவனித்தல்.
பாடப் புத்தகத்தில் உள்ள தமிழ் நெடுங் கணக்கு எழுத்துக்களைக் காட்டி, ஒவ் வொன்றாகச் சொல்லிக் கொடுத்து,
அவர்களைச் சொல்லும்படி பணித்தல்.
எழுத்து உச்சரிப்பையும் அவதானித்தல். ஞாபகத்தைப் பரீட்சிக்கும் அட்டைகள்
போல (Memory Cards) ஒரு குறிப்பிட்ட
அளவான அட்டைகளில் “தமிழ் எழுத்துக்
களை எழுதி ஒவ்வொரு பிள்ளையிடம் கொடுக்க வேண்டும். பின் ஆசிரியர் *புத்தகம்?? என்ற சொல்லைக் கரும் பலகையில் எழுதிவிட்டு, இந்த எழுத்துக் களை வைத்திருக்கும் பிள்ளைகள் முன்னுக்கு வரவும்; வந்து எழுத்துக்களைக் காட்டவும்; என்று ஆசிரியர் பணிக்கும் போது, இம்முறை விளையாட்டு ரீதியில் அறிவைப் பெறும் கல்வியாக மாறுகிறது. எழுத்துக்களை இனங்கண்டு, மனனம் செய்து விட்டால், இரண்டு மூன்று எழுத்துக்கள் சேர்ந்து வரும் சொற்களை, எழுத்துக் கூட்டி வாசித்துக் காட்டி, வாசிப்பைப் பயிற்று வித்தல்.

Page 10
14
உ-ம் : 1. அம்மா, அப்பா, அக்கா, அண்ணா, தம்பி, தங்கை என்ற உறவுப் பெயர்கள்.
2. வீடு, பசு, இலை, பால், மேசை போன்ற ஈரெழுத்துச் சொற்கள்.
மேற்கூறப்பட்ட தன்மைகள் வற்றுக்கும் கண், காது, வாய், மூளை என்ற உறுப்புகளோடு பார்த்தல், பேசல், கேட்டல், கிரகித்தல், ஞாபகப்படுத்தல், சிந்தித்தல் போன்ற தொழிற்பாடுகள் நடை பெறுகின்றன.
எழுத்து
கண், காது, வாய், மூளை என்ற உறுப்பு களோடு இப்போது கை என்ற உறுப்பும் இணைந்து செயற்பட ஆயத்தமாகின்றது. பார்த்ததை, கிரகித் ததை, ஞாபகத்தில் வைத்ததைச் சிந்தித்துப் பென்சில், பேனையைப் பிடித்து, பிள்ளையை எழுதுவதற்கு ஆயத்தப் படுத்தல் வேண்டும். பிள்ளை பென்சிலை எடுத்து, வலது கையாலே சரி வரப் பிடித்து, நேராக நிற்கும் வண்ணம் (பெருவிரல் -சுட்டு விரல் என்பன இறுகப் பிடித்துக் கொள்ளும் வகையில்) செய்து காட்ட வேண்டும். எழுத ஆர்வம் கொண்டுள்ள பிள்ளைகளுக்குத் தமிழெழுத்தின்

15
சுழிகள், வளைவுகள், கொம்புகள், கடினமாகத் தோன்றும். எனவே எடுத்ததும் முதலில் உயிர் எழுத்துக்களை எழுதப் பயிற்றுவிப்பதற்கு முன்பு, பென்சில் கைவிரல்களுக்குள் படிவதற்கான இலகு முறையைக் கையாள வேண்டும்.
உதாரணமாக,
1. சதுரங்கள், நீள்கோடு, குறுக்குக் கோடு, வட்டம், முக்கோணம், சக, சய, அடை யாளங்கள், இலகுவான வரி வடிவங்கள்
என்பவற்றைக் கீறிக் காட்டி, அவற்றைக் கீறச் சொல்லுதல் வேண்டும்.
Од + =
ப ட | பு ம ர பி உ
போன்ற உருவங்களை மீண்டும் மீண்டும் கீறப் பயிற்றுவித்தல், நிறந் தீட்டவும் பயிற்றுவித்தல் வேண்டும்.
2. விரும்பிய சித்திரங்களை மனம் போனபடி கீறவிடுதல். இவ்வாறு நானாந்தம் பழகப் பழகப் பென்சில் கைவிரலுக்கு இடையே சரியான இடத்தைப் பிடித்துவிடும்.

Page 11
16
அரிச்சுவடி எழுத்துக்களை மனனமாக்கிய பிள்ளையின் கையினைப் பிடித்து, அ. ஆ. இ. என்று எழுதப் பழக்குதல்.
ஆசிரியர் அப்பியாசப் புத்தகத்தில் அ. ஆ. இ. எனத் தொடர்ந்து பன்னிரண்டு உயிரையும், ஆய்த எழுத்தையும் எழுதிக் கொடுத்து, அவற்றின் மேல் பிள்ளையை எழுதச் செய்தல் வேண்டும்.
கரும்பலகையில் எழுத்துக்களை எழுதிவிட, அவற்றைப் பார்த்து எழுதச் செய்தல்.
வகுப்பறையிலே தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்களைப் பெரிதாக எழுதி,
பிள்ளைகளின் பார்வைக்கு வைத்தல்
அவசியம். பிள்ளைகளின் சொந்தப் பெயரை எழுது வித்தல், பெயரை எழுத ஒவ்வொரு பிள்ளைக்கும் ஆர்வம் இருக்கும். பிள்ளை எழுத்துக்களை இனங்கண்டு எழுதத் தொடங்கியதும் உறுப்பெழுத்துப் பயிற்சியைப் பயிற்றுவிக்கலாம். ஒரிரு சொற்கள் கொண்ட வசனங்களைக் கொடுத்து, இரட் டை க் கோடுடைய கொப்பியில் எழுதப் பயிற்றுவித்தல்.
பின் ஒரு கோட்டில் நேரே எழுதும் முறைமையையும் பயிற்றுவித்தல்.

17
10. ஒரு அட்டையில் படத்தைக் கீறுதல், இன்னோர் அட்டையில் படத்துக்குரிய பெயரை எழுதுதல், இவ்வாறு ஒரு குறிப் பிட்ட தொகை மட்டைகளைத் தயாரித்து, மூன்று, நான்கு பிள்ளைகளாக விட்டு, ஒரு பிள்ளை படம் கீறிய மட்டையை எடுக்க, மற்றப் பிள்ளை அப்படத்துக்குரிய பெயர் எழுதிய அட்டையை எடுக்க வேண்டும். பின்பு எ ல் லோ ரு ம் அப்பொருளின் (படத்தின்) பெயரைத் தமது அப்பியாசக் கொப்பியில் எழுதுவதற்கு ஆசிரியர்
பணித்தல்.
خيحيكها حة
ಸ್ಖಳ್೧ 盘 O
இ| வீடு LD DJLD པའི་དབང་བའི་ཚིག། །
11. தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக்கள் ஒவ்
வொன்றையும் ஒவ்வொரு சிறு சிறு மட்டையில் எழுதிக் கொடுத்து, தெரிந்த சொல்லை உருவாக்கிக் கொப்பியில் எழுதச் செய்தல். ۔۔۔۔۔۔۔

Page 12
18'
يينا | 5 | 6 | | | | نة | ق
இங்கே, கப்பல், கத்தி, ஆடு, பல், கல் போன்ற பிள்ளைக்குத் தெரியக் கூடிய சொல்லை உருவாக்கி, அப்பியாசப் புத்த கத்தில் எழுதப் பழக்குதல்.
இந்த வகையில் விளையாட்டுப் படிப்பும் என்ற முறை பிள்ளைகளுக்கு இலேசான, விருப்பமானதொன்றாக இருக்கும்போது, இச்சொற்கள் மனதில் பதிந்து விடும்.
12. வீட்டில் காணப்படும் பொருட்களைச்
சொல்லி எழுதுவித்தல்.
உதாரணம் : உங்கள் வீட்டில் உள்ள பொருட்கள் ஐந்து, காய்கறிகள் ஐந்து, பறவைகளின் பெயர் ஐந்து, மிருகங்கள் ஐந்து, வாக னங்கள் ஐந்து, என்று ஒவ்வொரு பொருட் களை எழுதுவிப்பதன் மூலம் பிள்ளையின் சொற் களஞ்சியத்தை விரிவு படுத்த வேண்டும்.
(எழுத்துக்கள் தெரியாவிட்டால் ஆசிரியர் உதவி செய்தல்.)

19
பில்ளை தான் வாழும் சூழலில் அன்றாடம் காணும் பொருட்களைத் தமிழில் சொல்லிக் கொடுக்க வேண்டும். நம் தாயகத்தில் உள்ளதும் பிள்ளைகளுக்குத் தெரியாதவை யுமான பொருட்களின் பெயர்களைப் புரிய வைப்பது சற்றுச் சிக்கலானது. எனவே முதலில் தெரிந்த பொருட்களின் பெயரைக் கூறி, அதன் தமிழ்ப் பதத்தை எழுதிக் காட்ட வேண்டும்.
பிள்ளை வாழும் நாட்டு மொழி தெரிந்த ஆசிரியரானால் தமிழில் சொல்லிவிளங்காத ஒரு பெயரை, அந்நாட்டு மொழியில் கூறி, அதன் தமிழ்ச் சொல் இப்படி என்று சொல்லிக் கொடுத்து மனதில் பதித்து விடலாம். உதாரணமாக, தானியம் என்று சொல்லும்போது, பிள்ளைக்கு விளங்க வில்லை. அப்போது அது கற்கும் மொழி ஜெர்மன் மொழியாக இருந்தால் 68GETREIDE29 என்று சொன்னால், அதுவா? எனப் பிள்ளை புரிந்துவிடும். எல்லா நேரங்களிலும் இம்முறையைப் பயன்படுத்தாது பிள்ளைக்கு எப்படி விளங் கப்படுத்துவது? எனக் கஷ்டப்படும்போது இம்முறையைக் கையாளலாம்.
வசதி கிடைத்தால் தமிழ்த் திரைப்படங் களில் வரும் பொருட்களைக் காண்பிக்க

Page 13
20
லாம். விசேடமாக வீடியோப் படங்கள் எடுத்து, சில பொருட்களைக் காண்பிக் கலாம்.
கற்பித்தவை யாவும் பிள்ளையின் மனதில் எவ்வளவுக்குப் பதிந்துள்ளது? எவ்வளவு அறிவு பெற்றிருக்கிறது? என்பதை அறி வதற்குப் பரீட்சை வைத்து, ஊக்கம் கொடுக்க வேண்டும்.
சொல்வதெழுதுதலை வைத்து, எழுத்தறி வைச் சோதித்தல்? போன்ற பலவகைப் பட்ட பயிற்சி முறைகளை ஆசிரியர்கள் மேற்கொண்டு பிள்ளைகளுக்கு கற்பித்தல் வேண்டும். -
சுயமான சிந்தனையில்
பேச்சும் எழுத்தும்
இப்போது பேச்சு, எழுத்து, புரியுமாற்றல், சிந்தனை, என்பன பெற்றுவிட்ட பிள்ளையாக மாற்றியபின் இன்னொரு படிக்கு அறிவை உயர்த்துதல் என்பது இதில் அடங்கும்.
இப்போது ஆசிரியர்கள் ஒரு சில படங்களை கரும்பலகையில் கீறி விட்டு, அதன் பெயர் களை அவர்களாகவே யோசித்து எழுதச் செய்தல். அப்போது பிள்ளை சுயமாக

2.
21
எழுத்துக்களைச் சிந்தித்து, ஒரு சொல்லாக் கத்தைச் செய்யும் அறிவைப் பெறுகிறது.
சிறிய சிறிய ஏவல் வினைகளை எழுதப் பயிற்றுவிப்பதற்கு ஆயத்தப்படுத்துதல்.
உதாரணம் : தம்பி படி! நீ வா!
அக்கா வா! பாட்டுப்பாடு! மழை போ! பாடம் படி!
இவை போன்ற வேறு வினைகளைச் சொல்லும்படி பிள்ளைகளை வேண்டுதல்.
3. பாடப் புத்தகத்தில் படித்த ஒரு பாடத்தில் கீறிட்ட இடங்களில் உள்ள எழுத்துக்களைக் கண்டுபிடிக்கும் முயற்சி சுயமான ஆக்கத் துக்குரிய இன்னொரு வழியாகும்.
உதழ் ப - டம், புத் - -டு, மி - காய், தை-பொ- கல், க-தரித் தோ-ம் தெ-னை
4.
சொற்களை இடமிருந்து வலமாக எழுதி, அதன் உண்மையான வடிவத்தைக் கண்டு
பிடித்து எழுதச் செய்தல்.
60D6D6FTLust
றுற்கா பாப்அ

Page 14
22
ய்வா ம்கதத்பு ணாணஅ ண்க பிம்த துந்ப ԼՈTւԸ-9):
ஒரு எழுத்தைக் கொடுத்து, அதைக் கொண்டு ஆரம்பிக்கும் பல சொற்களை உருவாக்கப் பயிற்றுவித்து, பிள்ளையின் சொல்வளத்தைப் பெருக்கலாம்.
உ+ம்
, l. 56&T ண் 2. கப்பல் ப்பல் 3. கட்டில் ட்டில் 4. கடவுள் டவுள் 5. கதிரை திரை
இந்த அட்டவணையைப் பிள்ளைக்குக் காண்
பித்து, முதலெழுத்து 'க' எழுதிவிட்டு, எழுத்துக் கூட்டிக் காட்டி இன்னசொல் என்று அவர்கள் கூறிய பின் அப்படியே அப்பியாசப் புத்தகத்தில் அவர்களை எழுதச் செய்தல். -

இந்தச் சில்லு அமைப்பு மூலமும் சொற்களை எழுதப் பயிற்றுவிக்கலாம்.
இந்த முறைகளின்படி பிள்ளைக்குக் கற்பித்து, பிள்ளை இவை யாவற்றையும் கிரகித்துக் கொண் டால், இரண்டாம் ஆண்டுக்கான ஆற்றலைப் பெற்று விடுகிறது எனலாம். அந்த அறிவின் அடிப்படையில் சில பெயர்ச் சொற்களைக் கொடுத்து, பொருத்தமான வினைகளைத் தேடி இணைக்கச் செய்வதற்குப் பயிற்றுவிக்க வேண்டும்.
6. உதாரணம் :
1. மாம்பழம் x கரையும் 2. கிளி பேசும் 3. பால் நல்லவர் 4. காகம் குடிப்பேன்
5. அம்மா இனிக்கும்

Page 15
24
இந்த இலகுவான பயிற்சிகளைப் பிள்ளை களுக்குத் தெரிந்த சொற்களால் உருவாக்க வேண்டும். இது சுயமாகச் சிந்தித்து, மற்ற வினைகளுடன் ஒப்பீடு செய்து எழுதும் தன்மையை உருவாக்குகிறது. G
குறிப்பிட்ட விடைகளைக் கொடுத்து, அதற் கான கேள்விகளைக் கண்டுபிடிக்கக் கூறிச் சிந்தனையறிவை வளர்த்துவிடல்.
பொருட்களின் வித்தியாசங்கள், ஒலிகளின் வித்தியாசங்கள், நிற ங்க ளின் வித்தி
யாசங்கள் என்பவற்றுக்குரிய உதாரணங்
களைக் கூறிப் பிள்ளைகளை எழுதச் சொல்வது அவசியம்.
உதாரணம் :
- இலையின் நிறம் பச்சை - பாம்பு சீறும் - கண்ணால் காணக்கூடியது
(உருவப் பொருள்) - கண்ணால் காண முடியாது
(உணர்ச்சி, அல்லது அருவம்)

25
ஒரு சொற் கூட்டத்தைக் கொடுத்துப் பொருத்தமற்றதைத் தெரிந்து கீறும்படி பணித்தல்.
உதாரணம் : (அம்மா, ஆசிரியர், ஆடு, தம்பி, மாமா) இங்கே பொருத்தமற்ற சொல் ஒன்று உள்ளது. அதைக் கண்டுபிடியுங்கள் எனச் சுய சிந்தனை வளர்ச்சிக்கு வழி வகுத்தல். '
10. படங்களைக் கொடுத்து, அதற்குரிய கதை
11.
யைச் சொல்லச் செய்தல், பின் ஆசிரியர்
ஆசிரியர் உதவியுடன் அக்கதையை
அப்பியாசப் புத்தகத்தில் எழுதுவித்தல், பிள்ளை அப்படங்களில் உள்ள காட்சி களைப் பார்த்துச் சுயமாகச் சிந்தித்து
வசனங்களை ஆக்கிச் சொல்ல வைப்
பதற்கு இப்பயிற்சி முறையைக் கடைப் பிடித்தல் நன்று.
பிள்ளையின் தரம் படிப்படியாக உயரும்
போது, எழுத்து வளம், சொல்வளம்,
பேச்சுவளம் என்பவற்றைக் கவனத்துக்கு
கொண்டு வருதல் அவசியம். சொல்வ தெழுதுதல், கிழமை-மாதப் பரீட்சைகள் வைத்துப் பிள்ளையின் தரத்தைப் பரீட் சித்தல் வேண்டும்.

Page 16
26
12. வாசிப்புத் திறனையும் இந்தப் பயிற்சி
18.
களோடு இணைத்துப் பயிற்றுவிக்கத் தவறக் கூடாது. சொற்களை எழுத்துக் கூட்டி வாசித்து, பின் முற்றுப் புள்ளியில் தரித்து நிற்கவும், மீண்டும் தொடர்ந்து வாசிக்கவும், தொனியின் ஏற்ற-இறக்கம் காட்டி வாசிக்கப் பயிற்றுவித்தல். வாசிப்பில் உரத்து வாசிப்பு, மெளன. வாசிப்பு, என இருவகை உண்டு, உரத்து வாசிக்கச் சொல்வதனால் பிள்ளையின் உச்சரிப்பை
இனங்கண்டு ஆசிரியர் திருத்தமுடியும்.
அதேவேளை மற்றப் பிள்ளைகளும் கேட் பதனால் அவர்களுக்கும் அது பயனளிக்கும்
தாமும் அவ்வாறே வாசிக்க ஆயத்தமாக
இருப்பார்கள். மெளன வாசிப்பு என்று மனதுக்குள் வாசிக்கவிட்டு, அதிலுள்ள சிறிய சிறிய கேள்விகளை ஆசிரியர் கேட்பதன் மூலம் பிள்ளையின் வாசிப்பும்-கிரகிப்பும் ஒரே நேரத்தில் ஒன்றாக நடந்திருக்கின்றனவா? எனப் பார்த்து அந்த வழிக்கு மாணவரை நெறிப்படுத்துதல், சிறுவர் கதைப் புத்தகம், நல்ல வாக்கியங்கள் கொண்ட சித்திரக் கதைகள், என்பவற்றையும் பிள்ளைகள் வாசிக்கலாம்.
ඉෂ (பொருளை) விடயத்தைக் கொடுத்து,
ஐந்து - பத்து வாக்கிய்ங்கள் எழுதச்

14.
27
சொல்வது, எழுத்தறிவுக்கும், விடயங்கள் பற்றிய அறிவுக்கும் வழிவகுக்கும்.
உதாரணம்: அ) தபாற்கந்தோர் பற்றி ஐந்து வசனம் எழுதுதல். தாய்நாடு, தாய் மொழியைப் பற்றிப் பத்து வசனங்கள். பணிக்காலம் பற்றி ஐந்து வசனங்கள்.
ஆ) விரும்பினால் கடிதம் எழுதும் ஆர்வத் தையும் ஏற்படுத்தலாம்.
ஆசிரியர் பிள்ளைகளுக்கு வீட்டு வேலை களைக் கிரமமாகக் கொடுத்து, பிள்ளை பெற்றோருடன் வீட்டில் திரும்பவும் பாடங்கள்-பயிற்சிகளை ஞாபகப்படுத்திக் கற்பதற்கு வழிவகுத்தல் அவசியம். இவ் வாறு செய்வதனால் பிள்ளை படிப்பதற்கு மேலதிக நேரம் ஒதுக்கப்படுகிறது. மீட்ட லையும் மேற்கொள்ள வைக்கிறது.
இது காறும் கூறப்பட்ட பயிற்சி முறை களுடன் ஆசிரியர்கள் மேலும் பல உத்தி களைக் கையாண்டு, பயிற்றுவிக்கும்போது, குறுகிய காலத்தில் தமிழைக் கற்பித்துவிட முடியும் எனலாம். பேச்சு, எழுத்து, வாசிப்பு, என்ற மூன்றும் ஒரு மொழியைக் கற்பதில் அத்தியாவசியமானவை. பேசுப வர்கள் எல்லாம் எழுதவும் முடியாது; வாசிக்கவும் முடியாது. எனவே இம்

Page 17
28
மூன்று க்கும் தனித்தனிப் பயிற்சியும் ஊக்கமும் கொடுத்துப் பயிற்றுவித்தல் வேண்டும். ஒன்றுக்கொன்று சளைக்காத வண்ணம் இவ்வறிவை ஆசிரியர்கள் மாண வர்களுக்கு வழங்கத் தவறக் கூடாது. இந் நிலையில் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு பிள்ளை அடிப்படைத் தமிழறிவை ஓரளவுக்குப்
பெற்றுவிட்டது எனலாம். இந்த அத்தி
வாரத்தில் படிப்புடியாக மூன்றாம்நான்காம் வகுப்புத் தரங்களுக்குப் பிள்ளை வந்து விட்டால், மெல்ல மெல்ல சிறு சிறு இலக் கணத்தைப் புகுத்த முயற்சிக்கலாம்.
உதாரணமாக, 1) ஆண்பால் - பெண்பால்
2) 3)
4)
5) 6) 7) 8) 9)
ஒருமை - பன்மை தன்மை, முன்னிலை-படர்க்கை உயர்திணை - அஃறிணை ஒத்தகருத்துச் சொற்கள் எதிர்க்கருத்துச் சொற்கள் சேர்த்து எழுதுதல் பிரித்தெழுதுதல்
முக்காலங்கள்
10) வாக்கிய உறுப்புகள் (எழுவாய், பயனிலை
செயப்படு பொருள்)

இவற்றுக்கு உதாரணங்கள்
f(1) ஆண்பால் - பெண்பால்
(2) ஒருமை - பன்மை
அப்பா - 9lbuon GLD6F - மேசைகள் ஆசிரியர் - ஆசிரியை பெட்டி - பெட்டிகள் தம்பி - தங்கை கத்தி * கத்திகள் (3) தன்மை-முன்னிலை- (4) உயர்திணை-அஃறினை
படர்க்கை
நான் - நீ - அவன் தம்பி - பாவை தாங்கள். நீங்கள் - அவர்கள்வியாபாரி - , ஆடு யாம் - நீவிர் - அது, அவை மாணவன் - புத்தகம் (5) ஒத்தகருத்துச் சொற்கள் (6) எதிர்கருத்துச் சொற்கள் தாய் - அன்னை உண்மை - பொய் கடவுள் - இறைவன் குளிர் - சூடு மலர் பெரிது - சிறிது - يا (7) சேர்த்து எழுதுதல் (6) fžg sтGgg58
பணம் + பை பணப்பை நாய் + குட்டி = நாய்க்குட்டி கண் + இமை = கண்ணிமை
மழைக்காலம் - மழை+காலம் புகையிரம் - புகை+இரதம் இலையுதிர்-இலை+உதிர்

Page 18
3U)
எழுவாய் பயனிலை செயப்படுபொருள்
நான் பாடினேன் பாட்டு
தங்கை குடித்தாள் தண்ணிர்
மாடு மேய்ந்தது புல்
இறந்தகாலம் நிகழ்காலம் எதிர்காலம்
நேற்று நான் இன்று நான் நாளை படிப்பேன்
படித்தேன் படிக்கிறேன்
நேற்நு நான் இன்று நான் நாளை குளிப்பேன்
குறித்தேன் குளிக்கின்றேன்
நேற்று அப்பா இன்று அப்பா நாளை
சொன்னார் சொல்கிறார் சொல்லுவார்
இன்று, நேற்று, நாளை எனக் காலப்பெயரை
முதலில் எழுதி, மூன்று காலங்களின் வித்தியாசத் தைப் புரியச் செய்தல் வேண்டும். இவ்வாறு பல ஆரம்ப இலக்கண அறிமுகத்தையும் பயிற்சிகளையும் கொடுத்து, எழுதும்போதும் உரையாடும்போதும் இவற்றுடன் ஒன்றிவிடும்படி கற்பித்தல் அவசியம் இதன்பின்னர் மேல்வகுப்பு இலக்கணங்களை கற் பிக்கத் தொடங்கலாம்.
இவ்வாறாக பேச்சு, எழுத்து, சுய ஆக்கத்துட னான பேச்சும் எழுத்தும், என்ற மூன்று நிலைகளும் ஒரு சேர அமைந்துவிட்டால் ஒரு பிள்ளை தமிழில்

3.
ஆரம்ப அறிவு பெற்றுவிட்டதற்குச் சமமாகும். இந்த அத்திவாரத்திலே தொடர்ந்து ஒழுங்காக மாண வனின் தமிழறிவு கட்டியெழுப்பப்படுமானால் மிகக் குறுகிய காலத்தில் அடிப்படைத் தமிழைக் கற்று முடித்தவனாக மாறி விடுவான்.
பெற்றோரின் பங்கு
பிள்ளைகளுக்குத் தமிழ்க் கல்வியைக் கற்பிப் பதில் அல்லது ஊக்குவிப்பதில் பெற்றோருக்கும் பாரிய பங்குண்டு. பெற்றோர்கள் எவ்வாறு தமது பிள்ளைகளின் தமிழறிவு வளர்ச்சிக்கு உதவி செய்ய 6DIT?
1. பாடசாலைக்குச் செல்லும் பருவத்தை அடையும் முன்னரே தமிழ்மொழி வேறு, இங்குள்ள மொழி வேறு என்ற வேறுபாட்டை உணர்த்தி வளர்க்க வேண்டும். வீட்டிலுள்ள சகல பொருட் களையும் தமிழிற் சொல்லிக் கொடுத்தல்.
2. வீட்டிலே பிள்ளைகளுடனோ, மற்றும் உறுப்பினர்களுடனோ முடிந்தளவு தமிழில் உரை யாடல். பிள்ளை ஆர்வத்துடன் கேட்டும் கேள்வி களுக்குப் பொறுமையுடனிருந்து தமிழில் பதி லளித்தல். தமிழிலேயே கேள்விகளைக் கேட்கப் பயிற்றுவித்தல்.

Page 19
82
3. பிள்ளை வேற்றுமொழிச் செல்வாக்கால் மொழிக்கலப்பு செய்யமுற்படும். இதை அவதானித்து திருத்த வேண்டும். h−
உதாரணமாக, அம்மா! T.V.யில் சிலாங்க வருகிறது குக் மால்! என ஜேர்மன் மொழியும் கலந்து (Mama! Im Fernsehen isteine Schlange, Kuck mal!) அதாவது தொலைக்காட்சியில் பாம்புவருகிறது அம்மா பாருங்கள்! என்ற தமிழ் வடிவத்தை இப்படிக் கலந்து பேசினால் திருத்திவிடுதல். முக்கியமாக இவ் விடயத்தில் அக்கறை அவசியம்.
4. தனது வயதையொத்த பிள்ளைகளுடன் தமிழில் உரையாடப் பெற்றோர் அனுமதித்தல். சில பெற்றோர்கள் வேற்றுமொழி மோகத்தால் தாய் மொழியைப் புறக்கணிக்கின்றனர். அத்துடன் கல்வி கற்கும் வேற்றுமொருக்குப் பாதிப்பு ஏற்படும் என்று தவறாக எண்ணுகின்றனர். ஒரு பிள்ளைக்கு ஐந்துக்கு மேற்பட்ட மொழியைக் கற்றுப் பேசக் கூடிய ஆற்றல் இயற்கையாக உண்டு என உளவிய லாளர்கள் கூறுகின்றனர். இந்த மனப்பான்மைக்கு பெந்றோர் ஆளாகாமல் தாய்மொழியைக் கற்பிக்க வேண்டும்.
5. தமிழ்வகுப்பில் கற்றவற்றையும் அனுபவ்ங் களையும் ஒரு பிள்ளை தன் தாயிடமோ, தந்தை யிடமோ கூறுவதற்கு ஓடிவரும். இவ்வ்ாறு வரும் போது பிள்ளையின் உளத்துடிப்பை மழுங்கடிக்கா

33
வண்ணம் கேட்போர் பொறுமையையுடன், ஆவ லுடன் தாம் இருப்பதுபோல் காண்பிக்க வேண்டும். 6 வேடிவாக இருக்கிறது. எப்படி எழுதினிர்கள்? கெட்டிக்காரப் பிள்ளை99 என ஊக்குவித்தல் அவசியம். மாறாக பிள்ளையை அசட்டை செய்யும் பெற்றோர்களாக இருந்தால் குறுகிய காலத்தில் தமிழைக் கற்பிப்பது, என்ற எமது நோக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும். -
6. பெற்றோர் தமிழ் நெடுங்கணக்கு எழுத்துக் களை ள்முதிச் சுவரில் தொங்கவிட்டு, அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்தல். ரேடியோவில் அ.ஆ.இ. என பதிந்து பிள்ளை அன்றாடம் போட்டுக் கேட்க விடல்.
7. பிள்ளைகளுக்கு ஏற்ற நல்ல தமிழ்த் திரைப் படங்கள், நாடகங்கள், பாடல்கள் என்பவற்றைக் காண்பித்தல். அக்காட்சியில் வருகின்ற பொருள்களுக் குரிய தமிழ்ப் பெயரைச் சொல்லிக் கொடுத்தல்.
8. தமிழில் உள்ள சிறுவர்களுக்கான கதைகள், நீதிக் கதைகளைச் சொல்லுதல், நித்திரைக்குப் போகும்போது கதை சொல்லித் தூங்க வைத்தல்.
9. விளையாட்டுப் பொருட்களை மனம் போன படி வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மூளைக்கு வேலையான அறிவு ரீதியான பொருட் களை விளையாடவேண்டிக் கொடுத்தல். Game boy Computer போன்ற விளையாட்டுச் சாதனங்கள்.

Page 20
34
பிள்ளையின் அறிவையும், உடலுறுப்புக்களையும் பாதிக்கச் செய்யும். இந்த விளையாட்டுச் சாதனம் பிள்ளை-பெற்றோர் மற்றோர்களுடன் வைத்துக் கொள்ளும் உரையாடலையும் தொடர்பையும் குறைக்கச் செய்யும். இதைப் பெற்றோர் கவனத்தில் எடுக்க வேண்டும். ,
10. தொலைக்காட்சியை எந்நேரமும் பார்ப் பதற்கு அனுமதிக்கக் கூட்ாது. சிறுவர்களுக்கான நிகழ்ச்சி, இயற்கைக் காட்சிகள், பொது அறிவு, உட் பட்ட விடயங்களையே பார்க்கலாம் என்ற கட்டுப் பாட்டையும், நேரக் கட்டுப்பாட்டையும் விதித்தல்.
11. விளையாட்டுப் பொருட்கள்போல் தமிழ்ப் பாடப் புத்தகங்கள், (பல பதிப்புகள்) படங்கள், தமிழ்க்கலண்டர்கள், சஞ்சிகைகள், சிறுவர் పౌ60556ir, தமிழறிவை வளர்க்கும் சாதனங்கள் என்பவற்றை எந்நேரமும் கண்ணில்படும்படி வைத்து விடல், இவற்றைக் காணும் ஒரு பிள்ளை ஒரு பொழுது போக்குக்கு என்றாலும், அவற்றைப் புரட் பார்த்து, ஏதாவது கேள்விகள்எழுந்தால் தாயிடமோ, ஏனையோரிடமோ கேட்டு அறிந்து கொள்ளும், இதனால் தமிழறிவு வளர வாய்ப்பு உண்டு.
12. பிள்ளையின் தமிழறிவு வளரவும், அதன் வயது ஏறவும் பொழுதுபோக்கு முயற்சிகளில் ஒன்றாக வாசிப்பு ஆர்வத்தையும் பெற்றோர் ஏற் படுத்த முயல வேண்டும். வாசிக்கும்போது புதிய சொற்கள், வாக்கிய அமைப்புக்கள், பந்தியமைப்

35
புக்கள், போன்றவற்றைப் பிள்ளை காண்கிறது. தனியே இருந்து வாசிப்பதற்கு வசதியான தனி மேசை, தனிக்கதிரை என வைத்து, படிக்கக் கூடிய ஒரு அமைவிடத்தை ஏற்படுத்திவிடல், வாசிப்பு பொறுமையையும் வளர்க்க உதவுகிறது.
13. பிள்ளையின் வீட்டுப்பாட வேலைகளுக்குப் பெற்றோர் உதவி செய்தல், ஊக்கம் கொடுத்தல்.
பிள்ளையின் உடலாரோக்கியம், வளர்ச்சிக்கு ஒரு பெற்றோர் எவ்வளவு அக்கறை எடுக்கின்றார் களோ, அதே அக்கறை, பிள்ளையின் உள விருத் திக்கும் அறிவு விருத்திக்கும் எடுத்தல் அவசியம். பொதுவாக, தாயகத்தில் வாழும் பிள்ளையாயின் (அந்நிய மொழி ஆக்கிரமிப்பு இன்மை) இத்தகைய பாரிய பங்கு தேவைப்படாது. ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் ஆசிரியர்கள் குறுகிய காலத்தில் தமிழைக் கற்பிப்பதற்குப் பெற்றோரின் ஒத்துழைப்பும் ஆதரவும் நிச்சயம் தேவை எனலாம்.
எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாக நோக்கின் ஒரு பிள்ளைக்குக் குறுகிய காலத்தில் தமிழைக் கற் பிப்பதில், பின்வரும் விடயங்களில் இயன்றவரை தமிழ்மொழியே ஊடகமாக இருப்பது அவசியம். தமிழறிவுக்கு மட்டுமல்ல பொதுவாக எந்த அறிவைப் பெறுவதென்றாலும் இந்த அம்சங்கள் அடிப் படையாக அமைகின்றன எனலாம்.

Page 21
quoụIŲn-æ
qırı~ısĩqosfi u@to deco ĝi occoqsm@ :(H4—1 u@e))
Jer退占间上电曲齿曲即quo usos) je1997-1@unto) · 1994/190ĵqson · Iseseo@smrt@--ı umulegosyoTıfı9@-@–19@s@1,9€ presage ugi1994ırıldsso
· 1,9‰orți-Trı .1991/1990-lufto1,9o&T uso qøđi@ #0.909 uso-Turi1994/1999@fre
1ļesņiooșH €5-iljooaooo1/FO , șđoạa:HITIÚŤąĵo1994ırmų,5ță”les guarg)ąŤrī0)
|| || - | || | | |||-
|——- |
•••••ło opụusse firse qui@rıc)grotegiæ••••••

உலகத் தமிழ் அமைப்பினரின் பங்கு
வெளிநாடுகளில் குடியேறியுள்ள தமிழ் மக்களில் கற்றோர், சேவை மனப்பான்மை உடையோர், கல்விப்பணி புரிவோர், ஒன்றிணைந்து அந்தந்த நாடுகளுக்கு ஏற்ற வகையில், அங்கு வாழும் தமிழ் மாணவர்களின் தமிழறிவுத் தன்மைக்கு ஏற்ப, அவ்வச்சூழலில் உள்ள பொருட்களை, நிகழ்வுகளை, மாணவர்களுக்குக் கற்பிக்கும் பொருட்டு, புதிய முறையில், புதிய மாதிரியான பாடநூல்களை, பயிற்சிப் புத்தகங்களைத் தயாரிப்பதற்கு, அந்தந்த நாட்டுத் தமிழமைப்புகள், தமிழ் மன்றங்கள், ஊக்கு வித்து உதவ வேண்டும். பெரும்பாலும் வெளிநாடு களில் இயங்கும். தமிழ் வகுப்புகளில், தமிழாலயங் களில் இலங்கைப் பாடத் திட்டத்துக்கு அமைந்த, அங்குள்ள மாணவர்களுக்கெனத் தயாரிக்கப்பட்ட பாடநூல்களையே பாவித்து வருகின்றனர். இந் நூல்கள் அங்கு முழு நேரத் தமிழ்க் கல்வி கற்கும் மாணவர்களுக்கு எனத் தயாரிக்கப்பட்டவை.
凸ー3

Page 22
38
ஆனால் வெளிநாடுகளில் குறுகிய காலநேரத் தமிழ்க் கல்வியைக் கற்கும் மாணவர்களுக்கு இந்நூல்கள் கடினமானதாக இருக்கும். அத்துடன் இவர்களுக்கு
அப்புத்தகங்களிலுள்ள பாடங்களில் வரும்விடயங்கள் பொருட்கள் அறிமுகமில்லாதனவாகவும் இருக்கலாம். எனவே இவற்றை மனதிற் கொண்டு உலகநாடுகளில் உள்ள தமிழமைப்புகள் இலகுவான பாடத் திட்டங் களை இலகு நடையில் தயாரித்து நூல்களை எழுதினால் மேலும் நன்மை பயக்கும். இலங்கைப் பாடத் திட்ட நூல்களைப் பக்க நூலாக வைத்து, அதனையும் கற்பித்து மாணவர்களின் அறிவை வளம்படுத்துதலும் முக்கியமாகச் செய்ய வேண்டிய தொரு பணியாகும்.
குறுகிய காலத்தில் தமிழைக் கற்பிப்பது என்ற முறைமைகளை ஒரளவுக்கு இங்கு வெளிப்படுத்தி யுள்ளோம். இந்த முறைமைகளுக்கு ஏற்ப ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் செயற்படுவார் களானால் குறுகிய காலத்தில் (அடிப்படை) தமிழைக் கற்பிப்பதில் வெற்றி காணலாம் என்பதில் ஐய மில்லை.


Page 23


Page 24