கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வளமான வாழ்வைத் தேடி

Page 1


Page 2

வளமான வாழ்வைத் தேடி e , e
எஸ். அரசரெத்தினம்

Page 3
வளமான வாழ்வை எனக்கு
அமைத்துத் தந்திட்ட
எனது அன்னைக்கே இது சமர்ப்பண்ம்

வளமான வாழ்வைத் தேடி.
ንቋ நூலாசிரியர் - எஸ். அரசரெத்தினம்
女 முகவரி “ராஜ் பதி”
V. V. (GMTÜ கல்முனை - 2, இலங்கை.
女 தொழில் இலங்கை வங்கி உத்தியோகத்தர்
女 முதல் பதிப்பு - ஏப்பிரல் 1994
女 பதிப்புரிமையுடையது
வடிவமைப்பும் படங்களும் - திரு. எஸ். ருத்ரா,
கல்முனை
அச்சிப்பதிவு - யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடட்,
கொழும்பு
* இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் வரும் கதாபாத்திரங்கள் யாரையும் குறிப்பிடு வனவல்ல.

Page 4
கிடைக்குமிடங்கள் -
பூபாலசிங்கம் புத்தகநிலையம் 340, செட்டியார் தெரு, கொழும்பு - 11.
அன்பு ஸ்டோர்
புத்தக விற்பனையாளர், கல்முனை.
தொலைபேசி இல
422321
O67 - 2540
விலை ரூபா 80/-

ஆசியுரை
டாக்டர் எம். முருகேசபிள்ளை M.B, B.S, (Cey)
கல்முனையில் வசிக்கும் திரு. எஸ். அரசரெத்தினம் எழுதிய "வளமான வாழ்வைத் தேடி' என்னும் இப் புத்தகத்திற்கு ஆசியுரை வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன்.
குடும்ப வாழ்வைப் பற்றி ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் பல்வேறு நூல்கள் வெளிவந்த போதும் தமிழில் இன்னும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான நூல்கள் வெளிவரவில்லை யென்பது பெருங் குறைபாடாகும். பிரச்சினைகள் நிறைந்த இக்காலகட்டத்தில் இல் வாழ்வைச் சிறப்பாகக் கொண்டு நடாத்த அனுபவசாலிகளான பெரியவர்களின் வழிகாட்டல்களும், சிறந்த புத்தகங்களில் கூறப்படும் ஆலோசனைகளும் பெரிதும் உதவக் &sago: Lu6OT.
தமிழ்ப் பிரதேசத்தில் இப்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலைகளிலும் கிழக்கு மாகாணத்தில் கல்முனையிலிருந்து இவ்வாறான புத்தகமொன்று வெளிவருவதை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அரசரெத்தினத்தின் பணிகள் மேலும் தொடர எனது நல்லாசிகள்.
15-02-1994. ம. முருகேசபிள்ளை.
M. B. B. S. (Cey)
பிரதான வீதி கல்முனை

Page 5
முன்னுரை.
கலாநிதி . சி. மெளனகுரு அவர்கள்
வளமான வாழ்வு, மனித இனத்தின் குறிக்கோள் அது.
துெ வளமான வாழ்வு? அது, அவரவர் கருத்தோட்டத்தைப் பொறுத்தது. ஒருத்தருக்கு வளமாகத் தெரியும் ஒன்று இன்னொருத்தருக்கு வளமற்றதாகத் தெரியும். மனிதர்கள் எத்தனை, உலகம் அத்தனை. ஒரு உலகத்துள்ளே பல உலகங்கள். பல உலகங்கள் இருப்பினும் ஒரு உலகமாகத்தான் மனித வாழ்வு தோற்றமளிக்கின்றது. குடும்பம் அதன் தோற்றங்களில் ஒன்று. குடும்பம் என்பது பொதுவான கருத்தில் ஒரு ஆணின் ஒரு பெண்ணின் இணைப்பு. இது குடும்பத்தின் ஒரு தோற்றம். குடும்பத்தில் இன்னும் பல தோற்றங்களுமுண்டு. ஒருத்தனும் ஒருத்தியும் இணைந்து குடும்பம் குடும்பமாக வாழும் வாழ்வு என்ற அலகு மனித இனத்திற்கு வரலாற்றுப்போக்கின் ஒரு காலகட்டத்திலேயே ஏற்பட்டது. குடும்பம் என்றதற்கான வரைவிலக்கணம் சமூகங்களின் தன்மைகளிற்கேற்ப மாறுபடும். நாம் காணும் குடும்ப அமைப்பு உறவு சிதைந்து வேறு வகையான குடும்ப வாழ்வு வாழும் காலமும் வரக்கூடும். ஆய்வுகள் இதனை உறுதி செய்கின்றன. வரலாற்றோட்டத்தில் எது நிகழுமோ நாமறியோம்.
குடும்பம், மனித உறவுகள் வாழ்க்கை என்பவற்றை அவ்வச் சமூகத்தின் கலாச்சாரம் வரலாறு என்பன நிர்ணயிக்கின்றன. இவ்வகையில் கீழைத்தேய மக்களுக்கெனச் சில கலாச்சார விழுமியங்களுள. அவற்றின் கருத்தோட்டங்களுக்கமையவே அவர்கள் வாழ முயல்கிறார்கள்.
வரலாற்றுப் போக்கில் கலாச்சாரப் பரிவர்த்தனை, உள்முக வளர்ச்சி என்பன ஏற்படுகையில் விழுமியங்கள் கேள்விக்குரியனவாகின்றன. மரபு மரபாக எம்மிடமிருந்த

கருத்தோட்டங்களும் புதிதாக அறிந்த கருத்துக்களும் மோதுகின்றன. வாழ்க்கையில் இடம் பெறும் இம் முரண் நம் மூளைக்குள் கருத்துப் போராக நடைபெறுகிறது. பழைய விழுமியா? புதிய விழுமியா? இத்தகைய போருக் கூடாகத்தான் மனிதர் வளமான வாழ்வைச் சிந்திக்கின்றனர். பொதுவான கருத்தோட்டம் ஒன்று வாழ்வு பற்றி இருக்கும். பொதுவானதும் பெரும்பாலானோரால் ஏற்கப் பட்டதுமான மேலாதிக்கம் வகிக்கும் கருத்தோட்டத்தையே பெரும்பாலோர் ஞாயப்படுத்துவர். அக்கால கட்டதிற் செல்வாக்கு மிக்கதாயிருக்கும் சட்டம், சமயம், நிறுவனங்கள்"யாவும் அதனையே ஞாயப்படுத்தும்.
இந்தப் பின்னணியில் திரு. அரசரெத்தினத்தின் "வளமான வாழ்வைத் தேடி' என்ற நூலினைப் பொருத்திப் பார்க்கையில் அரசரெத்தினம் பொதுவானதும் பெரும்பாலோரினால் ஏற்கப்பட்டதுமான வாழ்வு பற்றிய கருத்தோட்டத்தையே தமது நூலிற் பிரதிபலிப்பது தெரியவரும்.
தாய், தந்தை என்ற குடும்ப அலகுகள் சிதைந்து விடாமல் அந்த அலகுக் கூடாக இந்தப் பொருளாதார அமைப்புக்குள் செளகரியமாக உடல், உள பாதிப்பின்றி வாழ்வது எப்படி என்று கூற வருகிறார் அரசரெத்தினம்.
சின்னக் கவலைகளால் பீடிக்கப்படுகின்ற, பிழை என்று தெரிந்தும் அதனை மீண்டும் மீண்டும் செய்கின்ற சாதாரண மனிதர்களின் பிரச்சினைகள் சிலவும் அதற்கான பரிகாரங்களும் இந்நூலில் கூறப்படுகின்றன. பொதுவான விழுமியங்கள் அழுத்தப்படுகின்றன. மரபு சார் கருத்துக்களே அரசரெத்தினத்தின் கருத்துக்களாயுள்ளன. உதாரணமாக ஆண் பெண் உறவில் இருவரும் சமமானவரே என்று அரசரெத்தினம் கூறவரினும் விட்டுக்கொடுக்க வேண்டியவளும் பணிந்து போக வேண்டியவளும் பெண்ணே என்ற கருத்தோட்டமே மேலோங்கி நிற்கிறது. இன்றைய ஆணாதிக்க உலகின் கருத்தோட்டம் இது.
குறிப்பாக ஆங்கில மொழியிலும் சிறப்பாக மேற்குலக மொழிகளிலும் வாழ்வின் பிரச்சனைகள் யாவை? அவற்றைத் தீர்ப்பது எப்படி என்ற இது போன்ற நூல்கள் நூற்றுக்கணக்கில் வெளிவந்துள்ளன; வருகின்றன. இவற்றை இரண்டு வகைக்குள் அடக்கலாம்.
1. விஞ்ஞான ரீதியிலான ஆய்வின் பின் எழுதப்படுபவை. 2. பொதுவான கருத்தோட்டங்களின் அடிப்படையில் எழுதப்படுபவை.
பொருளாதார வளர்ச்சி, சமூக மாறுதல்கள், தொழினுட்ப வளர்ச்சி காரணமாக வேகமாக மாறிவரும் மேற்குலக மனிதகுலம்

Page 6
பல்வேறு பிரச்சினைகளை முகம் கொள்கிறது. எனவே இத்தகைய நூல்கட்கு அங்கு தேவையும் அதிகம், மவுசும் அதிகம்.
கீழைத்தேயங்களிலும் இன்று அந்நிலை ஆரம்பமாகி விட்டது. வேகமான வளர்ச்சிக்கான சமூக மாற்றத்திற்கான அறிகுறிகள் இங்கு காணப்படத் தொடங்கிவிட்டன. இங்கும் இத்தகைய நூல்களுக்கான தேவையுண்டு.
இவ்வகையில் தமிழில் அப்துற்றஹீம் இத்தகைய நூலாசிரியர்களில் முக்கியஸ்தராகக் காட்சிதருகிறார். டாக்டர் மு. வரதராசன், கவிஞர் கண்ணதாசன், டாக்டர் எஸ். உதயமூர்த்தி *என நூலாசிரியர் பட்டியல் நீளும். இவர்கள் அனைவரும் மரபு வழிச் சிந்தனையாளர்களும், பொதுவான கருத்தோட்டங்களினடியில் எழுதியோருமாவர். அவ்வழியில் அரசரெத்தினமும் ஒருவராக நம்மத்தியிற் காட்சி தருகிறார்.
அன்றாடம் குடும்பங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சிலவற்றைத் தெரிந்து அவற்றை விளக்கி, அதற்கான பரிகாரங்களையும் கூறும் அரசரெத்தினம் நிஜ உதாரணங்கள் சிலவற்றைத் தருவது அவர் கருத்துகட்கு வலிவும் வனப்பும் தருவதாக அமைகிறது. (உதாரண புருஷர்களினாலும், பெண்களினாலும் அரசரெத்தினத்திற்கு என்ன கஷ்டங்கள் நேரிடுமோ தெரியாது.) வளமான வாழ்வு என்ற பூட்டைத் திறக்க அரசரெத்தினம் விட்டுக் கொடுப்பு புரிந்துணர்வு என்ற இரண்டு திறவு கோல்களை இந்நூலில் முன்வைக்கின்றார்.
எளிமையான நடையும் இலகுவான உதாரணங்களும் நூலைச் சுவையாக வாசிக்கப் பெரிதும் உதவுகின்றன.
அரசரெத்தினத்தின் நூல் வாசிப்பும், சிந்தனை வளமும் நூலிற் தெரிய வருகிறது. சிறுகதை, கவிதை, நாவல் எனத் தமிழில் நூல்கள் வெளிவருமளவு நடைமுறை வாழ்வு பற்றிய சிந்தனை ரீதியான நூல்கள் வெளிவருவது குறைவு. இந்நிலையில் வரும் இந்நூல் வரவேற்கப்பட வேண்டிய தொன்று.
இவ்விடயம் சம்பந்தமாக வரும் விஞ்ஞான ரீதியான ஆய்வுகளைக் கற்று, ஆழமாகச் சமூகத்தையும், சமூக முரண்பாடுகளையும் பார்பதன் மூலம் மேலும் சிறப்பான நூல்களைத் தரும் ஆற்றல் அரசரெத்தினத்திற்கு உண்டு. இந்நூலில் அதற்கான வித்துக்கள் காணப்படுகின்றன. இத்துறையில் மேலும் தொடர்ந்து உழைக்க அரசரெத்தினத்திற்கு என் வாழ்த்துக்கள்.
கலாநிதி. சி. மெளன குரு 15. O2, 1994 பீடாதிபதி / கலை பண்பாட்டுப் பீடம்,
கிழக்குப் பல்கலைக் கழகம், மட்டக்களப்பு

10.
11,
12,
உள்ளே உள்ளவை
வளமான வாழ்வைத் தேடி
பொருளாதாரப் பிரச்சினைகள்.
சீதனப்பிரச்சினைகள்.
விரும்பாத திருமண வாழ்க்கை .
வீட்டில் உறவினர்கள் தங்கியிருத்தல்
பிள்ளைகள் இல்லாப் பிரச்சினைகள்
பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினைகள் .
கல்வி வேறுபாடும் தொழிலும்
கணவன்/மனைவி வேறொரு தொடர்பு
மறுமணம் செய்திருத்தல்
மிதமிஞ்சிய குடி/போதைப்பொருட் பாவனைகள்
பயணத்தின் முடிவில் விடைபெறும் வைபவம்
பக்கம்
14
19
22
27
39
45
54
܀
3
18
21
26
38
44
53
58
63
65

Page 7

வளமான வாழ்வைத்தேடி. பயணத்துக்கான ஏற்பாடுகள்
உலகமெல்லாம் இயந்திரமயமாகி; பயங்கரவாதப் பிரச்சினையுட்படப் பல்வேறு பிரச்சினைகளும் மக்களைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. போட்டிகள், பொறாமைகள் நிறைந்த இவ்வுலகில் பலர் தங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கொண்டு செல்வதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளனர். இக்காலத்தில் நாம் சந்திக்கும் அதிகமான குடும்ப அங்கத்தவர்கள் மன அமைதியற்ற வாழ்வையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கணவனோ மனைவியோ வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்து அதனை வெல்ல முடியாதவராக அல்லது வெல்ல விரும்பாதவராக வாழ்க்கையைத் தொடருகின்றனர்.
பலர் தங்கள் கடந்தகால இளமைப் பருவங்களையும், அப்போது அவர்கள் விட்ட தவறுகளையும் நினைத்துக் கவலைப்படுகின்றனர். காலங்கடந்து விட்டதென்பது தெரிந்தபோதும், தங்கள் வாழ்வை வளமாக அமைத்துக் கொள்ளாததையிட்டுச் சிலர் இப்போதும் கண்ணிர் விடுகின்றனர். பெற்றோர்களுடன் செல்வச் செழிப்பில் வளர்ந்த பலர் அவர்களின் புத்திமதிகளைக் கேளாமல் தாங்களாகவே விரும்பி அமைத்துக் கொண்ட வாழ்க்கையில் பல கஷ்டங்களை இன்னமும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Page 8
தாங்களாகவே விரும்பிக் காதல் திருமணம் செய்துகொண்ட குடும்பங்கள் மட்டுமன்றி, பெரியோர்களால் பெற்றோர்களால் பொருத்தம் பார்த்து உரிய சடங்குகள் ஒழுங்காக முடிக்கப்பட்டு வாழ்வோரது திருமண வாழ்விலும் தீர்க்கமுடியாத பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. பிரச்சினைகள் இல்லாத குடும்பங்களே இல்லையெனலாம். ஆனாலும் அதுவே குடும்ப வாழ்க்கையாகிவிடக் கூடாது. எனவேதான் பலரது குடும்ப வாழ்விலும் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளையும், அவற்றிற்கு என்னால் முடிந்த தீர்வுகளையும் குறிப்பிட்டு இளைய தலை முறையினரின் இல்வாழ்க்கைக்கு உதவும் பொருட்டு இதனை நூலுருவில் கொண்டு வந்துள்ளேன்.
என்னால் உள்ளே குறிப்பிடப்பட்டுள்ள பல சம்பவங்கள் பிறரது வாழ்வில் உண்மையில் நடந்தனவாகும். இடங்களையும் வருடங்களையும் மாற்றியும், படிப்பதற்குச் சுவைசேர்க்கும் நோக்குடன் சிறிது கற்பனையுடனும் அவற்றை இங்கு நான் தந்துள்ளேன். இவை யாரையும் குறிப்பிட்டு என்னால் எழுதப்படவில்லை. இச்சம்பவங்கள் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒருபடிப்பினையாக அமைய வேண்டுமென்ற விருப்பினால் தேவையான இடங்களில் அவற்றை நான் கையாண்டுள்ளேன். சமுதாயத்திலுள்ள பலரும் படித்துப் பயனடைய வேண்டுமென்ற ஒரே காரணத்தினால் மிகவும் இலகுவான தமிழ் நடையில் இதனை நான் எழுத வேண்டியதாயிற்று.
இப்புத்தகத்தை வாசிப்பதன் மூலம் அமைதியற்ற ஆயிரக்கணக்கான குடும்பங்களில் ஒரு குடும்பத்திலேனும் மகிழ்ச்சியான வாழ்வு மீண்டும் துளிர்விடுமாயின், இம் முயற்சியில் எனக்குப் பூரன வெற்றி கிடைத்துள்ளதென நான் பெருமிதமடைவேன்.
'இராஜ்பதி W. W. (3 mpTi", அன்புடன், கல்முனை - 2. எஸ். அரசரெத்தினம்


Page 9

வளமான வாழ்வைத் தேடி.
".பள்ளமும் மேடுமாய் அமைவதுதான் வாழ்க்கை
பாதை எனப் புரிவோம்! - வாழ்ந்து பார்த்திடும் போதினில் உண்மை! இது எனும் பட்டறிவும் தெரிவோம்."
நெல்லை. ஆ. கணபதி கலைமகள் 1992
திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன வென்று கூறப்படுகின்றன. ஆனால் இக்காலத் திருமணங்கள் எங்கெல்லாமோ நிச்சயிக்கப்படுகின்றன. எங்கு நிச்சயித்து நடைபெற்றாலும் நாம் அவற்றையிட்டுக் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை. கால மாற்றங்கள் காரணமென்று பலவற்றிற்கும் நாம் கூறுவது போல் இதையும் பொறுத்துக் கொள்ள வேண்டியதுதான். திருமணம் முடிந்தவுடன் எல்லோரும் தங்கள் ாதிர்கால வாழ்வு நன்றாக அமைய வேண்டுமென்றுதான் விரும்புகின்றனர். ஆனாலும் எல்லோருக்கும் அவ்வாறான இன்பமான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை.

Page 10
எமது நாட்டைப் பொறுத்தவரை அண்ணளவாக எழுபது வீதமான குடும்பங்களே மகிழ்ச்சியான அல்லது ஓரளவு மகிழ்ச்சியான இல்லற வாழ்வைக் கொண்டுள்ளதாக நாம் கருத முடியும். இருபது வீதமான குடும்பங்கள் சிறுபிரச்சினைகளும் சண்டைகளுமாகக் குடும்பத்தை நடாத்துகின்றன. மிகுதிப் பத்துவீதமும் சண்டையும் அடிதடியுமாய்ப் பிரிவதும் சேர்வதுமாகக் காலத்தைக் கடத்துகின்றன. அமையப் போகும் குடும்ப வாழ்வை இயன்றவரை ஒரே முறையில் நன்றாக அமைத்துவிடவேண்டும். நன்றாக அமையாத குடும்ப வாழ்வை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வசதி மேலை நாட்டவரைப் போல் எமது நாட்டவருக்கில்லை.
ஒவ்வொரு மனிதனும் தானும் துன்பப் படாமல் பிறரையும் துன்பப்படுத்தாமல் வாழ்வதே உயர்ந்த வாழ்வாகும். தானும் துன்பப்பட்டுக்கொண்டு பிறரையும் துன்பப் படுத்துவது மனித வாழ்வே அல்ல; அது அசுர வாழ்க்கையென்று அறிஞர்கள் கூறியுள்ளனர். குடும்பம் என்பது கணவன் மனைவி ஆகியோருடன் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் இரத்தத் தொடர்பான வாழ்க்கைப் பிணைப்பே ஆகும்.
இல்லற வாழ்வில் கணவனுக்கும் மனைவிக்குமிடையே ஏன் பிரச்சினைகள் உருவாகின்றன? பல குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைக்கும் போது சில குடும்பங்கள் மட்டும் ஏன் மகிழ்ச்சியின்றித் தத்தளிக்கின்றன? குறுகிய காலத்துக்குள்ளே இல்வாழ்க்கை கசந்து விடுவதால் பல குடும்பங்கள் எதிர்காலத்தை இழந்து ஏன் தடுமாறுகின்றன? இவற்றையெல்லாம் நாம் ஆழமாகச் சிந்தித்தால் பின்வரும் காரணிகளிலொன்றே இப்பிரச்சினைகளின் தோற்றுவாயாக அமைந்திருப்பதை நாம் காண முடியும்.
பொருளாதாரப் பிரச்சினைகள் சீதனப் பிரச்சினைகள் விரும்பாத திருமண வாழ்க்கை வீட்டில் உறவினர்கள் தங்கியிருத்தல் பிள்ளைகள் இல்லாப் பிரச்சினைகள் பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினைகள் கல்விவேறுபாடும் தொழிலும் கணவன்/மனைவி வேறொரு தொடர்பு மறுமணம் செய்திருத்தல் மிதமிஞ்சிய குடி / போதைப் பொருட்பாவனைகள்

உலகில் பிரச்சினைகள் எழுவதற்குக் காரணமே ஒருவர் இன்னொருவரிடமிருந்து ஏதோ ஒன்றை எதிர்பார்ப்பதுதான். இந்த அடிப்படையிலேயே, கணவனோ அல்லது மனைவியோ மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும் விடயம் அவருக்குத்திருப்தியாக நிறைவேறாத போது அவர்களிடையே ஒவ்வாத நிலை (Conflict) ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இருவரும் அனுசரித்து, தேவையான வழிமுறைகளைக் கண்டு பிரச்சினைகளைத் தீர்த்துக் கொண்டால் எல்லோர் வாழ்வும் மகிழ்ச்சியானதாக அமையும்
LSLLLLLLLYYYYLLLLLLLLLYYYYLLLLLYYLLLLLLLLLYYYLLLLLLLL
". வாழ்க்கையில் உயர்ந்த இலட்சியத்தை அடைவதற்குக் கணவனுக்கு உறுதுணையாக இருப்பதுடன், அந்த இலட்சியத்தைத் தானும் அடைய முயலுபவளே மனைவி எனப்படுகிறாள். ஒரு ஆணும் பெண்ணும் கணவனும் மனைவியுமாக ஒரே குறிக்கோளுடன் இணைந்து வாழ முயலுதலே வாழ்க்கையின் இலட்சியம்."
(அன்னை) யூரீ சாரதா தேவியின்
அன்பு மொழிகள்

Page 11
பொருளாதாரப் பிரச்சினைகள்
"....... அருள் என்னும் அன்பின் குழவி பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
- திருக்குறள்
இலங்கையில் மட்டுமின்றி உலகில் பல பாகங்களிலும் பல குடும்பங்களின் தலைவிதியைப் பொருளாதாரப் பிரச்சினையே தீர்மானித்து அவற்றை அழித்துள்ளது. மனித வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவது பொருளாதாரமாகும். பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை என்பதை நாம் அனுபவரீதியிலேயே உணரமுடியும். எனவே நாம் இல்வாழ்க்கையை ஆரம்பிக்கும் போதே எதிர்காலப் பொருளாதாரத்தை நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். நமது வாழ்க்கைத் துணையுடன் கலந்துரையாடி எதிர்காலத்தில் மேற்கொள்ளவிருக்கும் செயல்பாடுகளையும் பொருள் சம்பந்தமான நல்ல திட்டங்களையும் சரியான முறையில் அமுல் நடத்த வேண்டும்.
எமது நாட்டைப் பொறுத்தவரை விவசாயிகள், மீனவர்கள், வேறு சுயதொழில்கள் செய்வோர், சிறு தொகையான அரச ஊழியர்கள் ஆகியோரே மண வாழ்க்கையில் ஈடுபடுபவர்கள். இவர்களில் மிகச்சிலரே பரம்பரைப் பணக்காரர்களாக உள்ளனர். மிகுதியாகவுள்ள பெரும் பகுதியினரும் நாளாந்த வாழ்க்கையைத்


Page 12

திட்டமிட்டு நடாத்தி முன்னேற முயற்சிப்பவர்கள். இவர்களுடைய முயற்சியில் இடையூறுகள் ஏற்படும் போது பொருளாதாரப் பிரச்சினை இவர்களை வாட்ட ஆரம்பிக்கின்றது. இதனால் கணவன் பொறுமையிழந்து மனைவியுடன் சண்டையிட நேரிடுகின்றது. வீட்டில் தேவையான சாமான்கள் இல்லாத போது அல்லது பணத்தட்டுப்பாடு ஏற்படும் போது மனைவியும் கணவனுடன் சண்டைக்குக் கிளம்பி விடுகிறாள். இவ்வாறான சண்டைகளால் ஒருவருக்கும் எதுவித பலனும் ஏற்படப் போவதில்லை. இருவரும் ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்துக் கலந்து பேசியே பிரச்சினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிய வேண்டும். இதைவிடுத்து, கணவனின் உழைப்புப் பற்றி மனைவி பிரஸ்தாபிப்பதோ அல்லது மனைவி கொண்டு வந்த சீதனம் பற்றிக் கணவன் குறை கூறுவதோ வருமதிக்கு வழி ஏற்படுத்தப் போவதில்லை. மாறாக, குடும்பத்தில் அமைதி கெடுவது மட்டுமின்றி நாளடைவில் நிரந்தரப் பிரிவுக்கும் அது வழி வகுக்கும்.
இந்தியாவின் சில பகுதிகளிலும், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் வறுமையைக் காரணம் காட்டி அதிகமான குடும்பப் பெண்கள் முறையற்ற வழிகளில் பணத்தைத் தேடுவது அவர்களின் தவறுமட்டும்தான் என நாம் கொள்ளக் கூடாது. பெண்களின் வாழ்க்கை சீரழிந்து கீழான நிலைக்குச் செல்ல ஆண்கள் ஒருபோதும் வழி வகுக்கக் கூடாது. காரணம் எதுவாக இருந்தாலும் ஒழுக்கம் தவறிய ஆண்களையிட்டு அலட்டிக் கொள்ளாத சமூகம் பெண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு வேண்டாத பட்டங்களையும் சூட்டித் தண்டனையையும் வழங்கி விடுகின்றது.
கணவனும் மனைவியும் அவர்களது குடும்பத்தைப் பிடித்துள்ள வறுமையை விரட்ட ஒன்றுபட்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கணவனுக்கு ஒரு கஷ்டமான நிலை உருவாகும் போது மனைவி அவனுக்குப் பக்க பலமாக இருந்து அவன் தொழில் ரீதியாகப் பொருளாதாரத்தில் மீட்சி பெற அவனுக்கு ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். ஆண்களில் பலர் தங்கள் குடும்பத்தில் தமது மனைவியரைத் தம்க்கு ஆலோசனை சொல்லக் கூடிய ஒருவளாக ஏற்றுக் கொள்ளுவதே இல்லை. இவ்வாறான நிலையை ஒரு போதும் நாம் டிக்க விடக் கூடாது. எமது வாழ்க்கையைக் கொண்டு நடாத்துவதில் மனைவியும் ஒரு பங்காளி (Life Partner) என்னும் உண்மையை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். தனது குடும்பத்தில் நடைமுறைப் படுத்தப் பட வேண்டிய தீர்மானங்களை எடுக்கும் அதிகாரத்தில் அவளுக்கும் பங்கு இருக்க வேண்டும். என்றோ ஒரு நாள் அவள்

Page 13
கூறும் புத்தி மதியால் பொன்னும் புகழும் எமக்கு வந்து சேரலாம். வாழ்க்கையில் வெற்றியடைந்த பெரியவர்கள் ஒவ்வொருவருக்கும் பின்னால் ஒரு பெண்ணே அதற்குக் காரணமாய் இருந்துள்ளதை வரலாறுகள் முலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.
சில வீடுகளில் கணவனின் பொருளாதார நிலை தெரிந்தோ தெரியாமலோ பக்கத்து வீட்டுப் பெண்கள் வாங்கியதைப் போல், அல்லது அதை விட விலை கூடிய ஆடம்பரப் பொருட்களைத் தமக்கு வாங்கித் தரும்படி தங்கள் கணவனை நச்சரிக்கும் பெண்களும் உண்டு. இக் காலத்தில் நாடுகள் துரித அபிவிருத்தியடைவதும் கிராமங்கள் நகரங்களாக மாறிக்கொண்டு வருதலுமே இதற்கான காரணங்களாகும். வாழ்க்கையில் வசதிகளைக் கூட்டும் நவீன கண்டுபிடிப்புகள் சந்தைக்கு வந்துள்ளதால் அவற்றை அனுபவிக்கும் ஆர்வம் அனைவருக்கும் எழுதல் இயல்பே ஆகும். பழைய வாழ்க்கை முறையிலிருந்து மீண்டு, நவீன கண்டுபிடிப்புக்களைப் பயன்படுத்தி இந் நூற்றாண்டுக் கேற்றவாறு வாழக் குடும்ப அங்கத்தினர்கள் முயல்வதில் தவறொன்றுமில்லை. ஆனாலும் கணவன் பொருளாதாரத்தில் கஷ்டப்படும் போது மனைவி தனது விருப்புக்களைத் தியாகம் செய்து கணவனுக்கு உதவவேண்டும். ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பதுடன் ஆக்க பூர்வமான ஆலோசனைகளையும் அவனுக்கு வழங்க வேண்டும். மனைவி மனம் வைத்தால் பொருளாதாரக் கஷ்டமுள்ள குடும்பத்திலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடச் செய்யலாம்.
எல்லாக் குடும்பங்களும் ஒரு விடயத்தைக் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும். அதாவது கணவனும் மனைவியும் வீட்டிலிருக்கும் சந்தர்ப்பங்களில் ஒவ்வொரு நாளும் பிள்ளைகள் நித்திரையான பின்னர் அரை மணித்தியாலமேனும் தம்மிடையே கலந்துரையாடவேண்டும். அன்றாட நிகழ்வுகளையும் அடுத்த நாளைய வேலைகளையும் இதய சுத்தியுடன் தம்மிடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். வீட்டில் சமையல் விடயம் தொடக்கம் பிள்ளைகளின் பாடசாலை விடயம் வரை இதில் அலசப்படவேண்டும். இருவராலும் இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒழுங்காக அமுல் நடாத்தப் படவேண்டும். இதனைப் பழக்கமாக வைத்திருக்கும் கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் நாளடைவில் இல்லாமலேயே போய் விடும்.
அதிகமான வீடுகளில் கணவனும் மனைவியும் வெவ்வேறாகப் பணத்தை வைத்திருந்து தொடர்பில்லாமல் செலவு செய்து கொண்டிருப்பர். இது தவிர்க்கப்பட வேண்டிய செயலாகும். வீட்டிலுள்ள பணம் எல்லாம் ஒருவரிடமே, அதுவும் மனைவியிடமே இருக்க வேண்டும். தேவையான போது கணவன் மனைவியிடமிருந்து

பெற்றுச் செலவு செய்யலாம். இது பரஸ்பர நம்பிக்கையை இருவருக்குமிடையே தொற்றுவிக்கின்றது. அதுமட்டுமின்றி, மனைவி தனது மதிநுட்பத்தால் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதுடன், தனது கணவனுக்குத் தெரியாமலேயே சிக்கனமாகச் செலவு செய்து குடும்பத்தைச் சிறப்பாக நடாத்த முடியும். சிறந்த குடும்பப் பெண்ணொருவள் குடும்பத்தின் நன்மைகருதி, கணவனுக்குத் தெரியாமலேயே பெருமளவு பணத்தைச் சேமிக்க முடியும். ஆனால் அமைந்த மனைவி ஊதாரியானால், பணத்தைப் பாதுகாத்துச் செலவிடும் பொறுப்பைக் கணவனே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். அத்துடன், நாளடைவில் மனைவிக்கும் இதனை விளங்கச் செய்து பணத்துடன் குடும்பப் பொறுப்பில் பெரும் பகுதியையும் அவளிடம் ஒப்படைக்கவேண்டும். சில வகையான பெண்களிடம் பணத்தைக் கொடுத்தால் எவ்வளவு அவசர தேவையானாலும் கணவனால் திரும்பப் பெறவே முடியாது. எல்லாம் அமையும் மனைவியைப் பொறுத்தது. ஏனவேதான் மனைவி அமைதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று பாடியுள்ளார்கள். அதிகமான குடும்பங்களில் கணவனின் மாதாந்த வருமானம் மனைவிக்குத் தெரியாது. அவ்வாறே தொழில் புரியும் மனைவியின் சம்பளமும் கணவனுக்குத் தெரியாது. இவ்வாறான போக்குத் தொடருமானால் நிச்சயம் அவர்களுடைய வீட்டில் ஒரு நாள் பிரச்சினை வெடித்தே தீரும். ஒருவரின் வருமானம் கண்டிப்பாக மற்றவருக்குத் தெரியவேண்டும். முவாயிரம் ருபா மாதாந்தச் சம்பளம் பெறும் கணவன் பத்தாயிரம் இருபதாயிரம் என வீட்டிலும் வெளியிலும் பணத்தைச் செலவு செய்யும் போது மனைவி அது பற்றி விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். சாதாரண வருமானமுள்ள கணவன் விலையுயர்ந்த உடைகள் தொடக்கம் ஆடம்பரச் சாமான்கள் வரை வீட்டிற்கு வாங்கிக் குவிக்கும் போது மனைவி அது பற்றி அறிய முற்பட வேண்டும். அப் பெருந் தொகைப் பணம் தனது கணவனுக்கு எங்கிருந்து கிடைக்கிறதென ஆராய்ந்தறிய முயல வேண்டும்.
1986 இல் வாழைச்சேனையில் பெரும்பாக உத்தியோகத்தர் பதவி (Divisional officer) வகித்த ஒருவர் மது அருந்தும் பழக்கமுடையவர் அவ்வேளையில் அவரது ஆகக் கூடிய மாத வருமானம் 3000/- ரூபாவாகும். குடும்பத்தில் மனைவியும் நான்கு பிள்ளைகளும் ஆடம்பர வாழ்வை விரும்பி ஏங்கியிருப்பவர்கள். திடீரென இருந்தால் போல் வேலை முடிந்து வீட்டிற்கு வரும் போது அவர் காரில் வரத் தொடங்கினார். தொலைக்காட்சிப் பெட்டி உட்படப் பல சாமான்களும் வீட்டிற்கு வந்து குவியத் தொடங்கின. பெரும்பாலும் அவர் 24மணி நேரமும் மதுவிலேயே நிதானமின்றிக் கழித்தார். இவ்வாறு மிகச் சந்தோசமாக ஒரு வருடம் அக்குடும்பம்

Page 14
காலத்தைக் கழி(ளி)த்தது. இக்காலத்தில் அயலவர்கள் இவர்களின் செல்வச் செழிப்பைப் பற்றி வழமையான கிசு கிசுக்களையும் பரப்பி இருந்தனர். இக்கதைகள் இவர்கள் வீட்டையும் எட்டியிருந்தது. ஆனால் அந்த வீட்டுக்கார அம்மாளோ பிள்ளைகளோ இதைப்பற்றி அலட்டிக் கொள்ளவேயில்லை.
ஒருநாள் எல்லாம் தெரிய வந்தபோது, அவர் தனது திணைக்களத்திலிருந்து பெருமளவு பணத்தைக் கையாடி விட்டிருந்தார். விசாரணைக்குட்படுத்தப்பட்ட அவர் விரைவில் தனது சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டார். இதனால் அவர் மது அருந்துவதைக் கூட்டி, வீட்டுக்கு வருவதைக் குறைத்திருந்தார். இழந்த வேளையை மீண்டும் பெறுவதற்கு அவர் பெருமளவு பணத்தை திரும்பக் கட்டவேண்டியுருந்தது. இந்நிலையில் துரதிஷ்டவசமாக, வறுமையான நிலையில் ஒருநாள் அவர் காலமாகி விட்டார். பதினைந்து வருடங்கள் சேவையாற்றியும் கூட, அவருடைய ஒய்வூதியத்தை மனைவியோ பிள்ளைகளோ எடுக்கமுடியாததற்குக் காரணம், அவர் மட்டுமல்ல, இன்னும் கஷ்டப்படும் அவரது மனைவியும் பிள்ளைகளும் கூடத்தான்.
மனித வாழ்க்கைக்கு எல்லா வழிகளிலும் அத்தியாவசியமாகப் பொருளாதாரமிருப்பதால், திருமண வாழ்விலும் அது பாதிப்பை ஏற்படுத்துகின்றது. திருமணம் செய்த பின்னர் பொருள் சம்பந்தமாக ஏற்படும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டே ஆரம்பத்தில் மணமக்களுக்கு அன்பளிப்புக்கள் கொடுக்கப்பட்டன. இதுவே நாளடைவில் சீதனமாக மாறியிருக்கவேண்டும். இச் சீதனக் கொடுக்கல் வாங்கல்களினால் இக்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகளின் எண்ணிக்கை சொல்லிலடங்காது.
责****紫炎资责典**决责赏费费欢***费亥费费如***演安费***
". வாழ்க்கையாய் தொடங்கிய இல்லறம் வாணிகமாய் மாறுகின்றது காதலாய் தொடங்கிய இல்லறம் காசு நாட்டமாய் மாறுகின்றது வாழ்க்கைத் தொடக்கத்தில் ஒரு நல்ல அடிப்படையில் ஆரம்பிக்கின்றது. பிறகு மெல்லமெல்லுப் பொருள் பற்றிய போராட்டம் அதனை கெடுத்துவிடுகின்றது."
- டாக்டர் மு. வரதராசன் "திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்"

சீதனப் பிரச்சினைகள்
"...அருள் இலஞ்சி வேலர் தமக்(கு) ஒரு பெண்ணைக் கொடுத்தோம்; ஆதீனத்து மலைகள் எல்லாம் சீதனமாகக் கொடுத்தோம்."
- திருக்குற்றாலக் குறவஞ்சி
சீதனப் பிரச்சினைகள் மனித வாழ்வில் இன்று நேற்றுத் தொடங்கியனவல்ல. சீதனப் பிரச்சினையால் சீரழியும் குடும்பங்களின் எண்ணிக்கை விகிதம் இந்தியாவைப்போல் எமது நாட்டில் பெருமளவில் இல்லாத போதும் ஆங்காங்கே சலசலப்புகளும் இல்லாமலில்லை. சிறு தொகையான குடும்பங்களின் அமைதியான வாழ்வு கெட இச்சீதனப் பிரச்சினையும் காரணமாய் அமைகின்றது. குடும்பத்தில் பொருளாதாரக் கஷ்டம் ஏற்படும் போது மாற்று வழிகள் தெரியாத கணவன் சீதனப் பிரச்சினையை அடிப்பெட்டியிலிருந்து எடுத்துத் தூசி தட்டி மனைவிக்கு முன்னால் வைக்கிறான்.
பொருளா-தாரம்? என்னும் தலைப்பில் கிட்டத்தட்டப் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் கல்கி வாரப் பத்திரிக்கையில்

Page 15
கவிஞர் கண்ணதாசன்ஒரு கட்டுரையை எழுதியிருந்தார். அதில் அவர் மிக அழகாக எமது சமூகத்தைப் பீடித்துள்ள சீதனப் கொடுமை பற்றிச் சுருக்கமாக விளக்கியிருந்தார். அதிலுள்ள கருத்துக்களை விட, அவர் அத்தலைப்பைக் கையாண்ட விதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கட்டுரையை வாசியாமலேயே ஒருவர் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதைத் தலைப்பு மிக நாசூக்காக வெளிப்படுத்துவதுடன் சீதனம் தானா மனைவி என்ற கேள்வியையும் எழுப்புகின்றது.
பொன்னையும் பொருளையும் வீட்டிற்கு அள்ளிக் கொண்டு வராத போதும் நல்ல மனைவி வாழ்க்கைக்கு அமைந்தால் அதுவே ஒரு ஆணுக்குப் பெரிய சீதனமாக அமைந்து விடுவதும் உண்டு. அழகான பெண் கண்களுக்கு ஆனந்தத்தைத் தருகின்றாள், பண்புள்ள பெண் இதயத்திற்கு ஆனந்தத்தைத் தருகின்றாள். நல்லதொரு பெண் வீட்டிற்கு மனைவியாக வரும்போது அன்பையும் அழகிய தாய்மையையும் கொண்டு வருகின்றாள். இன்பத்தைக் கொண்ட இனியதொரு வாழ்க்கையை அமைத்துத் தருகின்றாள். இவ்வாறெல்லாம் இருந்தபோதும் ஆண் பெண் சமத்துவம் பற்றிப் பேசப்படும் இந்த இருபதாம் நூற்றாண்டிலும் கூடத் திருமணங்கள் சீதனத்தின் மூலம் தீர்மானிக்கப்படுவது விந்தையான செயலே ஆகும்.
சீதனம் வாங்கித் திருமணம் செய்வது தவறு என்பது எல்லோரும் அறிந்த விடயமாகும். ஆனால் உலகளாவிய முறையில் அதனை நடைமுறைப் படுத்துவதில் பல கஷ்டங்கள் எதிர் நோக்கப்படுகின்றன. எனவே தான் இக்காலத்திலும் அது தொடர்ந்து வரும் செயலாகவே உள்ளது. சில பெற்றோர் தங்கள் பெண் பிள்ளைகளுக்குச் சீதனம் கொடுக்காமல் திருமணம் செய்து வைப்பதைக் கெளரவக் குறைவாக நினைப்பதையும்; இன்னும் சில ஆண்கள் சீதனம் வாங்கித் திருமணம் செய்வதைக் கெளரவமாக நினைப்பதையும் இங்கு குறிப்பிடமுடியும்.
விரும்பியோ விரும்பாமலோ சீதனம் தான் குடும்ப வாழ்வைக் கொண்டு நடாத்துவதற்குப் பலருக்கு அடிப்படைப் பொருளாதாரமாக அமைந்துவிடுகின்றது. சீதனத்தின் மூலம் ஒரு திருமணம் தீர்மானிக்கப்படும் சந்தர்ப்பத்தில் அதில்சம்பந்தப் பட்டவர்கள் தங்கள் படிப்பு, பதவி, குடும்பநிலை என்பவற்றிற்கு அவர்கள் எதிர்பார்க்கும் சீதனத்தை ஒரேமுறையில் ஒழுங்காகப் பெற்றுக் கொள்ளவேண்டும். திருமணமான பின்னர் இதனால் பிரச்சினைகள் ஏற்படக் கூடாது. சீதனத்தைக் கடன் சொல்விச் செய்யும் திருமணங்களில் அதிகமானவை பிற்கால வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றன. கீழே குறிப்பிடப்படும் இரண்டு சம்பவங்களும்
1()

慧『W』||| -|||||||
子|*|WA**력많혁"|| si| |]]| "......|| i |

Page 16

எமது சமூகத்தினிடையே இன்னும் காணப்படும் பல குறைபாடுகளும் எடுத்துக் காட்டானவை ஆகும்.
1984இல் கல்முனையில் குடியிருந்த எங்கள் குடும்ப நண்பரொருவர், தனக்கும் மனைவிக்குமிடையே ஒரே பிரச்சினையென்றும் இதனால் வீட்டில் நிம்மதியில்லையென்றும் பேச்சுவாக்கில் என்னிடம் குறிப்பிட்டார். ஒரு நாள் நானும் எனது மனைவியும் குறிப்பிட்ட நண்பரின் வீட்டிற்கு அவர் இல்லாத சமயம் பார்த்துச் சென்றோம். நாங்கள் போனதும் அவருடைய மனைவி எங்களை வரவேற்றுத் தேனிர் தந்து உபசரித்தார். இவற்றிற்கிடையே எனது மனைவி அவர்களின் குடும்ப நிலை பற்றியும் அவர்களின் இப்போதைய பிரச்சினை பற்றியும் கேட்டறிந்தாள்.
அவருடைய திருமண வேளையில் வங்கியொன்றில் சாதாரண இலிகிதராகவே அவர் கடம்ையாற்றினார். இதனால் அவருக்குக் குறைந்தளவு சீதனமே அவ்வேளையில் கொடுக்கப்பட்டது. இப்போது அவரின் மனைவியின் தங்கைக்கு வங்கி முகாமையாளர் ஒருவரைத் திருமண ஒழுங்கு செய்துள்ளார்கள். இவருக்குக் கூடிய சீதனம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னர் இலிகிதராக இருந்த மேற்குறிப்பிட்டவர் இப்போது பரீட்சைகள் சித்தியடைந்து பதவியுயர்வு பெற்றுள்ளார். இதனால் மிகுதிச் சீதனத்தை வீட்டிலிருந்து பெற்றுவரும்படி மனைவியை அவர் வற்புறுத்திக் கொண்டிருப்பதுதான் இப்போது அந்த வீட்டிலுள்ள பிரச்சினை ஆகும். அவருர்களுடைய வீட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைப் பகீரதப் பிரயர்த்தனப் பட்டு நாங்கள் ஒரு வாறு நீக்கி விட்டோம். ஆனாலும் இன்னும் இவ்வாறான கணவர்கள் எம்மிடையே இருப்பதையிட்டு நாம் வெட்கித் தலை குனியத்தான் வேண்டும்.
1984இல் மட்டுநகரில் ஆசிரியத் தொழில் புரிந்து வந்த ஒருவர் தனது முறைப் பெண்ணை வீட்டாரின் விருப்பத்திற்கு மாறாகச் சீதனம் எதுவுமின்றித் திருமணம் செய்து கொண்டார். பொருளாதாரத்தில் மத்திய நிலையிலிருந்த பெண்ணின் தகப்பனார் மகளுக்கு மூத்த குழந்தை பிறந்தவுடன் பழைய பகையெல்லாம் மறந்து அவர்களை அழைத்து அவர்களுக்கு ஒரு வீடு கட்டித் தருவதாகக் கூறினார். ஆனால் அந்த வீட்டைக் கட்டிக் கொடுப்பதற்கு முன்னால் துரதிஷ்டவசமாக அவர் காலமாகிவிட்டார். பின்னர் அக்குடும்பம் பல கஷ்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்ததால் பெண்ணின் தாயால் அதனைச் செய்து கொடுக்கமுடியவில்லை. மூன்று பெண்பிள்ளைகள் பிறந்து அவர்களில் இருவர் வயது வந்த நிலையிலும் அவர்கள் சொந்தத்தில் ஒரு சிறு வீடு கூடக் கட்டிக் கொள்ளவில்லை. வாடகை வீட்டிலேயே குடியிருந்தார்கள்.
11

Page 17
அவர்களுடைய வீட்டிலும் கணவனுக்கும் மனைவிக்குமிடையே பிரச்சினைகள் தொடங்கிவிட்டன. பெண் வீட்டார் தனக்கு வீடு கட்டித்தருவதாகச் சொல்லித் தன்னை ஏமாற்றி விட்டார்களென்று அவர் போவோர் வருவோரிடமெல்லாம் முறையிடத் தொடங்கினார். இவ்வாறே ஒரு நாள் என்னிடமும் இதனைச் சொல்லிக் கவலைப்பட்டார். நான் அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னேன்.
"நீங்கள் திரும்பத் திரும்ப மற்றவர்களிடம் இதனைச் சொல்லிக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. உங்கல் மாமா தந்திருந்தாலும் உங்களுக்கு ஒரு வீடு தான் தந்திருப்பார். உங்களுக்கோ மூன்று பெண் பிள்ளைகள். அப்படிப்பார்த்தாலும் இன்னும் இரண்டு வீடுகள் நீங்கள் கட்டவேண்டும். ஆனால் நீங்கள் இன்னும் ஒரு வீடு கூடக் கட்டவில்லை. அதைவிட, உங்கள் மாமனார் உங்களுக்கு வீடு தரவில்லையென்பதை நீங்கள் வரப்போகும் உங்கள் மாப்பிள்ளைகளுக்குச் சொல்லித் திருமணம் செய்ய முடியாது. எல்லாவற்றையும் மறந்து நீங்கள் உங்களால் முடிந்த அளவு ஒரு வீட்டைக் கட்டி முடிக்கப் பாருங்கள்” என்பதாகும்.
இரண்டு வருடங்களாகத் திருகோணமலையில் இருந்த அவர்களுடன் எனக்குத் தொடர்பில்லாமல் போய்விட்டது. ஆனால் அன்று வந்த ஒரு கடிதம் அவர்களுடைய வீட்டிலிருந்து வந்திருந்து. அவர்கள் வங்கியின் உதவியுடன் ஒரு வீட்டைக் கட்டிமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு மாதத்திற்கு முன்னர் நான் அவர்களுடைய வீட்டிற்குச் சென்றபோது, அவர்களின் மூத்த புதல்விகள் இரண்டு பேர் இப்போது திருமணம் செய்து விட்டதாகவும் இரண்டாவது மருமகன் தங்களை நன்றாகக் கவனிப்பதாகவும், கடவுள் தங்களைக் கைவிடவில்லையென்றும் அந்த ஆசிரியரின் மனைவி என்னிடம் நன்றியுணர்வுடன் கூறினார். அமெரிக்காவில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கட்டுரைப் போட்டி நடந்தது. அதில் கட்டுரைக்கான தலைப்பு “ஒருவனின் வாழ்நாளில் அவனுக்கு மிகவும் மகிழ்ச்சியான நேரம் எது?” என்பதாகும். பலரும் பலவிதமான கட்டுரைகளை எழுதினார்கள். ஆனால் முதல் பரிசு பின்வரும் கருத்துக்களைக் கொண்ட ஒரு கட்டுரைக்கே ஏகமனதாக வழங்கப்பட்டது. ஒருவன் தன் மனதுக்குகந்தவள் ஒருவளை மணம் முடித்து வீட்டுக்கு வரும்போது தன் வீட்டைத் காட்டி “கண்ணே இந்த வீடு என்னுடைய சொந்த முயற்சியினால் கட்டப்பட்டது. அதோ தெரிகிறதே தொழிற்சாலை நான் உழைத்து எனது பணத்தைக் க்ொண்டு வாங்கப்பட்டது. நாம் வந்திறங்கிய கார் (Car) எனது ஊதியத்தினால் நான் வாங்கியது" என்று கூறும் சமயமாகும்.
12

எனவே, எம்மிடம் எந்தச் சக்தியும் இல்லையென்பதை நாம் உணர வேண்டும். படைத்த இறைவன் வாழவைப்பான் என்ற நம்பிக்கையுடன், வாழ்க்கையை முயற்சியுடன் நாம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுக்கும் தியாக sa GOOTi&a (Sacrifice) GungjuLó5606T uriia 0 6Jfbpao (Charing of Responsibility) ஒத்துழைப்பு மனப்பான்மை (Corporation) ஆகியவற்றுடன் நாம் வாழ முற்படாவிட்டால் இல்வாழ்வு நல்வாழ்வாக அமைய மாட்டாது. அது நரக வாழ்வாகவே இருக்கும்.
சீதனப் பிரச்சினையோ அல்லது வேறு எவ்வகைப் பிரச்சினையோ கணவனும் மனைவியும் ஒருவரை விட்டு மற்றவர் பிரிந்துவாழ முயற்சிக்கக் கூடாது. திருமணப் பேச்சுக்கள் நடக்கும் போதே - சீதனக் கொடுக்கல் வாங்கல்களினாலோ அல்லது வேறு காரணிகளாலோ ஒருவரை மற்றவருக்குப் பிடிக்காமல் போகலாம். இவ்வாறான சம்பவங்களால் விரும்பாத திருமண வாழ்க்கையும் சிலருக்கு அமைந்து விடுவது உண்டு.
LLLLLLLYYYYLLLLYYYYYYYYYLLLLLYLLLLLYLLLLLYLLLLLYLLLLY YYLLLYLLL
".மகனே! திருமணம் செய்து கொள்வதில் இரண்டு குறிக்கோள்கள் உள்ளன. ஒன்று காதல்; மற்றொன்று பணம். நீ காதலுக்காக மணம் முடித்தாயானால் மிக மிக மகிழ்ச்சியான சில நாட்களையும் துன்பமான பல நாட்களையும் பெற வேண்டிவரும். நீ பணத்திற்காக மணம் முடிப்பாயானால் உனக்கு மகிழ்ச்சியான நாட்களே இல்லாமல் போய் விடும்.”
செஸ்டர் பீல்ட் பிரபு தனது மகனுக்கு எழுதிய கடிதம். அல்துற் றஹீம் - "இல்லறம்"

Page 18
விரும்பாத திருமண வாழ்க்கை
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்."
-மகாகவி பாரதியார் கவிதைகள்
இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் திருமணங்களைத் தீர்மானிப்பது மற்றைய நாடுகளிலும் பார்க்க வித்தியாசமான முறைகளிலாகும். அதிலும் இந்தியாவை விட, நமது நாடு இன்னும் சில விடயங்களில் வேறுபட்டு நிற்கின்றது. பெரும்பாலும் எமது நாடுகளில் பெற்றோர் பார்த்துத் தீர்மானிக்கும் மாப்பிள்ளையை, பெண்கள் கண்ணை மூடிக் கொண்டு கழுத்தை நீட்டி ஏற்றுக் கொள்ள வேண்டுமெனப் பலரும் எதிர் பார்க்கின்றனர். ஆனால் இக்காலத்தில் பெற்றோரால் ஒழுங்கு செய்யப்படும் திருமணமாக இருந்தாலும் ஓரளவுக்கேனும் மாப்பிள்ளையைப் பற்றி அறியப் பெண்ணும் முற்படுகின்றாள்.
இவ்வாறே, ஆண்களும் தங்கள் பெற்றோர் ஒழுங்கு செய்யும் திருமணங்களைப் பொதுவாகத் தட்டிக் கழிப்பதில்லை. வயது சென்ற பெற்றோரின் விருப்பம், பெண் வீட்டாரின் பொருளாதார வசதிகள், கெளரவமான சம்பந்தங்கள் ஆகியன ஆண்களுக்குச் சாதகமாக இருக்கும்போது இவ்வாறான திருமணங்கள் இலகுவில் நடந்துவிடுகின்றன.
14


Page 19

ஆனால் இரண்டு திறத்தவர்கள் சம்பந்தப்படும் இப்புனித சடங்கில் மாப்பிள்ளை அல்லது பெண் விரும்பாமலும் பல காரணங்களுக்காக இவ்வாறான திருமணங்கள் நடந்து முடிந்துவிடும். பொருளாதார வசதியின்மை, பெற்றோரின் கடைசி விருப்பம், பழைய குடும்பத் தொடர்புகள் ஆகிய காரணங்களுக்காகப் பெண் அல்லது ஆண் தான் விரும்பாத வாழ்க்கைத் துணையை அடைய நேரிடுகின்றது.
இவ்வாறு நடைபெறும் திருமணங்களில் கணவன், மனைவி தியாக சிந்தைகளைக் கொண்டவர்களாகவும், கடந்த காலச் சம்பவங்களை மறந்து விடும் மனோபாவம் உள்ளவர்களாகவும் இருத்தல் அவசியமாகும். தாம் விரும்பாமல் செய்த திருமணம் என்ற போக்கில் தொடர்ந்து நடந்தால் அவர்களிடையே வெகுவிரைவில் உறவுகள் பாதிப்படையும். அதுமட்டுமன்றி, ஒருவர் வேண்டா வெறுப்புடன் நடந்து தனது வாழ்வை அழித்துக் கொள்வதால் ஒருபாவமும் செய்யாத மற்றவரின் வாழ்வும் இதனால் பாதிக்கப்படுகின்றது.
இவ்வாறான திருமணங்கள் நடைபெற்ற பின்னர் கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ ஏற்படும் மனத்தைரியத்தை அவர்கள் திருமணம் நடக்க முன்னர் வெளிக்காட்டி அத்திருமணத்தையே நடவாமல் செய்தால் அது எல்லோருக்கும் இலாபகரமான செயலாக அமையும். ஆனால் பெண்கள் அநேகமாக அவ்வாறு செய்வதில்லை. பலர் தங்கள் விதியை நொந்து கணவனுடன் அனுசரித்து வாழப் பழகிக் கொண்டு விடுகின்றனர். மிகச் சிலரே தங்கள் கணவனை, அவன் பல நல்ல குண இயல்புகளைக் கொண்டிருந்தும் எதிர்க்கத் தொடங்கி விடுகின்றனர். ஆண் அல்லது பெண் ஒருவரைக் காதலிக்கும் போது அதற்கு வீட்டில் எதிர்ப்பு வரும் சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான திருமணங்கள் நடைபெறுவதுமுண்டு. பெற்றோர் தங்கள் சமூக, பொருளாதார அந்தஸ்தை நிலை நிறுத்தும் நோக்குடன், பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி அவர்களின் காதலைக் கைவிட வைப்பதுடன், விரும்பாத திருமணத்தையும் செய்து வைக்கின்றனர். இவ்வாறான செயல்களால் பெற்றோரை எதிர்த்துக் கண்டிக்கத் தைரியமில்லாத பிள்ளைகள், தமக்கு வாழ்க்கைத் துணையாக வரும் வேறு யாரையோ தண்டிக்கத் துணிந்து விடுகின்றனர். இதனால் ஒரு வித நோக்கமுமின்றி அவர்கள் தங்கள் வாழ்வைத் தாங்களே பாழ்படுத்தி விடுகின்றனர்.
சில வேளைகளில் பொருளாதார நெருக்கடிகளினால் அல்லது ஒருவர் மீதொருவர் காதல் கொள்வதன் மூலம் இரு வேறுபட்ட சமயங்களைச் சேர்ந்தவர்கள் மணவாழ்க்கையில் இணைந்து விடுகின்றனர். ஆரம்பத்திலேயே ஒருவர் மற்றவரின்
15

Page 20
சமயத்துக்கு மாறித் திருமணம் செய்யும் குடும்பங்களில் அமைதியான வாழ்வு காணப்பட்ட போதும், வேறுபட்ட இரண்டு சமயங்களில் திருமணத்தின் பின்னரும் தொடர்ந்து வாழ்க்கையை நடாத்துவோர் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியுள்ளனர். திருமண காலத்தின் ஆரம்பத்தில் இன்பமாக இருக்கும் இவர்களது வாழ்க்கையில் குழந்தை கிடைத்தவுடன் தடுமாற்றம் ஏற்படுகின்றது. இதனால் ஏற்படும் மனத்தாக்கங்கள் அவர்களை விரும்பாத திருமண வாழ்க்கையை வாழச் செய்கிறது. எனவே கூடியவரையில் இவ்வாறான திருமணங்களை நடைபெறாது தடுத்தல் நன்மையான செயலாகும். இவ்வாறான திருமணங்கள் நடைபெறுவதைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் திருமணத்தின் பின்னர் பிறக்கப் போகும் பிள்ளைகளின் எதிர்காலச் சமயத்தையும் கூடியவரையில் முன்னரேயே தீர்மானித்துக் கொள்ள வேண்டும். பிள்ளை பிறந்தபின்னர் அது எந்தச் சமயத்தைச் சேர்ந்தது எனத் தாங்களும் தடுமாறி மற்றவர்களையும் தடுமாற வைக்கக் கூடாது. ஒவுவருக்கொருவர் விட்டுக் கொடுத்து உறுதியான நிலையில் குறிப்பிட்ட ஒரு சமயத்தைப் பின்பற்ற, பிள்ளைகளுக்கு ஒழுங்குகள் செய்து கொடுக்க வேண்டும். மதங்கள் மனிதர்களை ஒன்று சேர்த்து நல்வாழ்வுக்கு வழி காட்டவந்தவையே தவிர அவர்களைப் பிரித்துவைக்கும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. எனவே வாழ்க்கையில் இருவர் மனமொத்தால் மதமொத்துவரும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இவை மட்டுமன்றிப் பல்வேறு காரணங்களுக்காகவும் திருமண வாழ்வையே வெறுத்துத் தங்கள் எதிர் கால வாழ்வைத் தனிமையில் கழிக்க விரும்பும் பிள்ளைகளைப் பெற்றோர் கட்டாயக் கலியாணம் செய்து வைப்பதுண்டு. இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஆண் அல்லது பெண்ணிடம். வெளியே தெரியாத உடல் ரீதியான சில குறைபாடுகளும் இருப்பதுண்டு. இச்செயல்களால் இவர்கள் வாழ்க்கையும் வளமாக அமையாதது மட்டுமின்றி, மற்றவருக்கும் ஆயுள் பூராகவும் வேதனை நிறைந்த வாழ்க்கையாகவும் அது அமைந்து விடுகின்றது.
சிலர் உடல் ரீதியாகத் தங்கள் வயதுக்கேற்றபடி வளர்ச்சியடைந் திருப்பதில்லை. வெளித் தோற்றத்தில் திடகாத்திரமானவர்களாக அவர்கள் தோற்றமளித்த போதும், அவர்களின் பாலுறுப்புகள் முதிர்வடையாததுடன் பாலியல் உறவில் ஈடுபட அவர்கள் விரும்புவதும் இல்லை. சில பெண்கள் பூப்படையாத நிலையிலும் இருப்பதுண்டு. இவர்களெல்லாம் பெற்றோரினால் அல்லது சமூகத்தினால் கட்டாயக் கல்யாணம் செய்து வைக்கப்படுகின்றனர். இப்படியானவர்களின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கமென்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்.
6

இன்னும் சிலரிடையே தன்னினச் சேர்க்கை (Homo sexy) எனக் கூறப்படும் ஒரேபாலார் சேரும் உறவு நாட்டம் கூடுதலாகக் காணப்படும். இவர்கள் திருமண வாழ்வில் அதிகம் நாட்டம் கொள்ளாது தம்மைப் போலொத்த இன்னொருவருடனேயே இன்பம் அனுபவிக்க விரும்புவர். இவ்வாறு ஆண் ஆணுடனோ அல்லது பெண் இன்னொரு பெண்ணுடனோ சேர்ந்து இன்பங்கொள்ளும் முறை பல காலமாக இருந்து வந்த போதும் அண்மைக் காலத்தில் தான் அது அம்பலத்துக்கு வந்துள்ளது. இதனைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும்படி மேலை நாடுகளிலுள்ள பலர் தமது நாட்டு அரசாங்கங்களுக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளனர் ஒரே பாலாரின் விடுதி வாழ்க்கை முறை (Hoste Life) அல்லது ‘ரீன் ஏஜ் வயதினர் ஒன்றாக அறைகளில் தொடர்ந்து தங்கியிருக்கும் சந்தர்பங்கள் ஆகியவற்றால் இவ்வாறான தன்னினச் சேர்க்கை உறவுகள் தொடர வாய்ப்பேற்படுகின்றது. ஆனால் இப்பாது தன்னினச் சேர்க்கையில் ஆர்வங் கொண்ட மேலை நாட்டவர்கள் பலர் சிறுவர்கைேளயும் சிறுமிகளையும் தங்கள் தேவைக்குப் பயன்படுத்திக் கெடுப்பதால் உல்லாசப் பயணத்தை நம்பிப் பணம் உழைக்கும் ஏழை நாடுகள் இதனால் பாதிப்படையத் தெர்டங்கியுள்ளன.
1982இல் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் தொழில் புரிந்து வந்த சாவகச்சேரியைச் சேர்ந்த ஒருவர், தனது பெற்றோரின் விருப்புக்கு மாறாக ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். சாதி வேறுபாடு பார்க்கும் பழமைவாதிகளான அவரது பெற்றோர் சீதனமும் பெருமளவில் கிடையாதென்ற நிலையில் அப் பெண்ணை வெறுத்தனர். ஆனால் அவர் தனதுகாதலைக் கைவிடாதது மட்டுமின்றி, அவளையே மணம் முடிப்பதாகவும் அப் பெண்ணுக்கு உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில் ஒருநாள் அவரது உறவினர்கள் சிலர் அவரை மதுவருந்தச் செய்து, அவர் சுயநினைவு இல்லாத நிலையில் ஒரு தொகைப் பணத்தையும் சீதனமாகப் பெற்று வேறு ஒரு பெண்ணை அவருக்கு மணம் முடித்து வைத்தனர். அந்நிலையில் சிந்திக்கும் செயலற்றிருந்த அவர் அன்றிரவு அப்பெண்ணுடன் தங்கினார். ஊரெல்லாம் அவருடைய திருமணச் செய்தியை அவர்கள் பரப்பியது மட்டுமன்றி, சட்டரீதியான திருமணப் பதிவுகளையும் முடித்து விட்டிருந்தனர். சில நாட்கள் கவலையுடனும் யோசனையுடனும் காணப்பட்ட அவர் ஒருவாரத்திற்குள்ளாகவே அந்த வீட்டைவிட்டு வெளியேறினார்.
தன்னை விவாகரத்துச் செய்யும்படி அப்பெண்ணையும் அவளது வீட்டாரையும் அவர் பலமுறை கேடடுக் கொண்டார். தனக்கு நேர்ந்த அவலம் பற்றி அவர் பலரிடமும் எடுத்துக்
17

Page 21
கூறினார். ஆனாலும் அவர்கள் விவாகரத்துக்கு இணங்கவே இல்லை. இறுதியில் ஏழு வருடங்களுக்கு மேல் அப் பெண்ணுடன் எதுவித தொடர்புகளுமின்றிக் காலத்தைக் கழித்த அவர் அவளுக்குத் தாபரிப்புப் பணமும் கட்டினார். அண்மையில் அவரைப் பற்றி விசாரித்த போது ஆரம்பத்தில் அவர் விரும்பிக் காதலித்த அதே பெண்ணை மீண்டும் மணம் முடித்து மகிழ்ச்சியாக இருப்பது தெரியவந்தது. அவரது விருப்பத்திற்கு மாறாக முதலில் அவரை மணந்த வசதியான அப்பெண் வாழ வெட்டியாக இருக்கும் கவலையான செய்தியும் கூடவே தெரியவந்தது.
விரும்பாத திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கிடையே எழும் பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே செல்வதை நாம் காண முடியும். கணவனும் மனைவியும் தங்களிடையே மகிழ்ச்சியற்ற வாழ்வைக் கொண்டிருப்பதை வீட்டிலுள்ள வேறு பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள். கணவனின் பெற்றோர்களோ, அல்லது மனைவியின் பெற்றோர்களோ வீட்டில் ஒன்றாக இருந்தால், தம்பதிகளிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி அவர்களின் மகிழ்ச்சியான வாழ்விற்கு வழிகாட்ட முயலுவார்கள். இவ்வாறான செயல்கள் சம்பந்தப்பட்டவர்களுக்குச் சில வேளைகளில் வெறுப்பை ஏற்படுத்தக் கூடும். எனவே இவற்றோடு வேறு காரணங்களும் சேர்வதால் வீட்டில் தங்கியிருப்பவர்களால் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்குகின்றன.
始演责责责费贵费责始***责条责责食会责责台责如始演责责责责麦责贵演始曲如演始者安会委变
". வெளித்தோற்றத்தைப் பார்க்கிலும் உட்புறத்தில் ஒருவன் எப்படிப்பட்ட ஆளாக இருக்கிறான் என்பதே அதிக முக்கியத்துவம் வாய்ந்த தென்று பைபிள் காட்டுகின்றது. கடவுள் மனிதனின் வெளித்தோற்றத்தைப் பார்த்தும் தீர்க்கிறதில்லை. நாமுங்கூட, எதிர்கால விவாகத்துணையின் வெறும் வெளித் தோற்றத்தால் தவறாகக் கவர்ந்திழுக்கப் படுவதற்கு எதிராக நம்மைக் காத்துக் கொள்ளுவதன் மூலம் அவருடைய முன் மாதிரியிலிருந்து நன்மையடையக்கூடும்.”
( 1 சாமுவேல் 16: 7)
18

விட்டில் உறவினர்கள் தங்கியிருத்தல்
“- அன்பு இலார் எல்லாம் தமக்குரியர், அன்புடையர்
என்பும் உரியர் பிறர்க்கு-"
- திருக்குறள்
மேலெழுந்த வாரியாகப் பார்க்கும்போது இதுவும் ஒரு பிரச்சினையா என நாம் கருதக்கூடும். ஆனாலும் சில குடும்பங்களில் கணவன் அல்லது மனைவியின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் ஒன்றாக வசித்து வருவதால் அவர்களிடையே தொடர்ந்து கருத்து வேற்றுமைகள் காணப்படும். வயது முதிர்ந்த இயலாத நிலையில் வேண்டாத விருந்தாளியாக இருக்கும் இவர்களால் வீ ட்டிலுள்ள ஒருவரையுமே திருப்திப்படுத்த முடிவதில்லை. இவர்கள் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களானால் கணவனாலும், கணவனின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களானால் மனைவியினாலும் அதிகமான பிரச்சனைகள் உருவாக்கப்படும்.
இந்தியாவில் சில மாநிலங்களில் நடக்கும் மாமி, மருமகள் சண்டைகள் உலகப்பிரசித்திபெற்றவையாகும். இந்திய)த அளவில் எமது சண்டைகள் பிரபல்யம் அடையாதபோதும் இங்கேயும் அவைகள்
স্কুল-কেল
19

Page 22
இல்லையென்பது கருத்தாகாது. சீதனக்கொடுமைகளால் குடும்பம் பிரியும் நிலை ஏற்படவும், குடும்பத்தகராறுகளால் கணவன் அல்லது மனைவி தற்கொலை(?) புரியவும் இந்த மாமி மருமகள் சண்டைகளே காரணமாய் உள்ளனவென்று பலரும் குறிப்பிடுகின்றனர்.
வயது முதிர்ந்தவர்கள் வீட்டில் தங்கியிருக்கும்போது அவர்களுக்குப் பென்சன் அல்லது வேறு வருமானங்கள் இருந்தால் இப்பிரச்சனைகள் ஓரளவு தணிந்த நிலையிலேயே இருக்கும். எதுவித வருமானமும் இல்லாதவர்கள் வெகுவிரைவிலேயே பலரது வெறுப்பையும் சம்பாதித்துக்கொள்வதுடன் வீட்டிலும் பூகம்பத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பணச்செலவு மட்டுமன்றி, அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்கு ஆட்பலமும் தேவைப்படுவதாகும்.
கணவன் தன்னுடைய வயது முதிர்ந்த பெற்றோரைப் பராமரிக்கும்படி, அல்லது அவர்களுக்கு அடிக்கடி வேலைகள் செய்யும்படி மனைவியை ஒரு போதும் வற்புறுத்தக்கூடாது. சட்டரீதியில் அவளுக்கு அவ்வாறான கடமைப்பாடுகள் எதுவும் கிடையாது. அவ்வாறே மனைவியும் தனது பெற்றோர்களுக்கோ அல்லது சகோதரர்களுக்கோ பண உதவி உட்பட வேறெந்த உதவிகளும் கேட்டுக் கணவனை நிர்ப்பந்திக்கக் கூடாது. இருவரும் தம்மிடையே கொண்டுள்ள அன்பினால் மட்டுமே அவற்றைச் சாதிக்க முடியும்.
வயதுமுதிர்ந்த பெரியவர்கள் வீட்டில் நம்முடன் ஒன்றாக வசிப்பதை நாம் அதிஷ்டமாகக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு மகப் பேறு, பிள்ளைகளுக்கு ஏற்படும் திடீர்ச்சுகயினங்கள் போன்ற வேளைகளில் அவர்கள் சிறந்த மருத்துவர்களாகச் செயல்படுவதை நாம் காண்கின்றோம். இதுமட்டுமன்றி; வீட்டிற்குச் சிறந்த காவலாளிகளாகவும் அவர்கள் செயல்பட்டுக் கொண்டு நம்மை வழிநடத்திச் செல்லக் கூடிய அனுபவங்களையும் கொண்டிருப்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். அவர்கள் வீட்டிலிருப்பதைச் சுமையாக நாம் கருதலாகாது. மனிதாபிமானத்துடன் அவர்களைக் கவனிப்பது மட்டுமன்றி, அவர்கள் தரும் தொல்லைகளையும் நாம் சகித்துக் கொள்ள வேண்டும். வயது முதிர்ந்த நிலையில் நாமும் நமது பிள்ளைகளுடன் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை மறந்து விடலாகாது.
1986இல் முதியவரொருவர் தனது ஒரே மகனுடனும் மருமகளுடனும் மன்னாரில் வசித்து வந்தார். மனைவி காலஞ்சென்ற நிலையில் நகரிலுள்ள தனது பெரிய வீட்டை வாடகைக்கு விட்டு, அதனால் வரும் வாடகையையும் பெற்றுக் கொண்டு மகனுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தார். அவரிடமிருந்த பொருளாதார வசதிகளுக்கு வேலைப்ாட்களின் உதவியுடன் அவர் வேறாக வே
2O


Page 23

இருந்திருக்கலாம். மருமகள் மிகுந்த சுயநலம் கொண்டவளாகவும், வேண்டாத விருந்தாளியைப் போல் தன்னை நடத்துவதையும் கண்டும் கூட மகனில் கொண்டுள்ள பாசத்தின் காரணமாகவே அவர் அவ்வீட்டில் குடியிருந்தார்.
இரண்டு வாரங்கள் தொடர்ச்சியாக அவர் நோயுற்றுப் படுக்கையில் இருந்த போது, மருகளின் சொல்லைக் கேட்டு மகனும் தன்னை ஒழுங்காகக் கவனிக்கத் தவறியதை அவர் உணர்ந்து கொண்டார். அது மட்டுமன்றி, தன்னிடமுள்ள சொத்துக்களுக்காகவே தன்னை அவ்வீட்டில் வைத்திருப்பதையும் அங்கு நடந்த உரையாடல்கள் மூலம் அறிந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
பிடிவாத குணங்களைக் கொண்ட அம் முதியவர் மகனின் வீட்டைவிட்டு வெளியேறிய சிறிது காலத்துக்குள் மரணமடைந்து விட்டார். இறக்கும் தறுவாயில் தனது சொத்துக்கள் அனைத்தையும் மத நிறுவனமொன்றிற்கு எழுதிவைத்ததுடன் தனது மகனுக்கு ஒன்றுமே கொடுக்காதது அவ்வூரவர்களையே வியப்புக் குள்ளாக்கியது.
இவ்வாறு குடும்பத்தில் சம்பந்தப்படும் மூன்றாவது நபரிகளின் வெளியேற்றம் நடைபெறும் போதுதான் வீட்டில் கணவனும் மனைவியும் தங்கள் தனிமையை உணரத் தலைப்படுகின்றனர். வீட்டில் தங்களைத் தவிர வேறு யாருமே இல்லாத போது இல்லற வாழ்க்கையின் பக்க விளைவான பிள்ளைச் செல்வமும் இல்லாவிட்டால் அவர்கள் வீட்டில் பிரச்சினைகளின் ஆரம்பத்திற்கு அதுவும் ஒரு காரணமாய் அமைகின்றது.
责费资兹变兹演兹费资窗费演演兹费费蜜窗窗资褒兹演兹变*杂缘费茨菇菇菇菇宏责费责
路露
எனக்குப் பிள்ளைகள் இருக்கிறார்கள் சொத்து இருக்கிறது, என்று முட்டாள்தான் நினைப்பான். இவன் இவனுக்கே சொந்தமாக இல்லாத போது மற்றவற்றிற்கு இவன் சொந்தம் கொண்டாடுவது அறியாமையாகும்."
-புத்தபிரானின் வாழ்வும் வாக்கும் “மணிமேகலைப் பிரசுரம்"
21

Page 24
பிள்ளைகளில்லாப் பிரச்சினைகள்
". குழவியும் ஆனாம் வலத்தது ஆகில்
குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவி இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.
- திருமூலர்
புத்திர பாக்கியமில்லாமையும் சில குடும்பங்களிடையே அமைதியான வாழ்க்கைக்குப் பங்கம் விளைவிக்கின்றது. இவ்வாறான குடும்பங்கள் வாழ்நாள் முழுவதும் மனச் சஞ்சலத்துடன் வாழ்வைக் கடத்துகின்றன. சாதாரணமாகத் திருமணம் முடிந்து இரண்டுமூன்று வருட காலத்துக்குள் குழந்தைகள் கிடைக்காவிட்டால், ஒரு குடும்பத்தைக் கவலை வாட்டத் தொடங்குகிறது. இவ்வாறான தம்பதியினரை "மலட்டுத் தம்பதிகள்" எனவும் ஊரவர் அழை க்கத் தொடங்குகின்றனர்.
உலகளாவிய ரீதியில் 15% மான மலட்டுத் தம்பதிகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக்காலத்தில் இவ்விதமான மலட்டுத்தன்மை விகிதம் அதிகரித்துக் கொண்டுவருவதும்
22


Page 25

கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இக்காலச் சமுதாய வேறுபாடுகள், பழக்க வழக்கங்கள், கர்லநிலை மாறுபாடு, சூழல் மாசடைதல் போன்ற பலவற்றை இதற்குக் காரணமாக நாம் கொள்ளலாம். என்னதான் காரணம் இருந்த போதும், தாம்பத்திய வாழ்வின் பிரதி பலிப்புக்களான குழந்தைகள் இல்லாமையினால் அவர்கள் படும் துன்பம் மற்றவர்களையும் மனமுருகச் செய்யும். குழந்தைகள் கிடையாத போது கணவன் மனைவிக்கு வேறு சிந்தனைகளும் பொழுது போக்குகளும் இல்லாமையால் நாளடைவில் வாழ்க்கையில் விரக்தி ஏற்படுவடுடன் அவர்களிடையே சிறு பிரச்சினைகளும் எழத் தொடங்குகின்றன.
மருந்துவ விஞ்ஞானம் மிகவும் முன்னேறியுள்ள இக்காலத்தில் இவர்கள் உடனடியாக வைத்தியர்களை நாடித் தங்களுக்கிடையேயுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க முயல வேண்டும். மனைவி மட்டுமின்றிக் கணவனும் இவ்வாறான சோதனைகளுக்குட்படுத்தப்படுவது அவசியமாகும். ஏனெனில் பிள்ளைகள் இல்லாவிட்டால் அதற்குப் பெண்கள் தான் காரணமென்னும் அறியாமை இன்னும் பலரிடையே காணப்படுகின்றது. உலகத்தில் பிள்ளைகள் இல்லாத குடும்பங்களில் 30 முதல் 50 வீதமான குடும்பங்களில் ஆண்களின் மலட்டுத் தன்மையே இதற்குக் காரணமாய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்போதைய மருத்துவ முன்னேற்றத்தால் குறைபாடுள்ளவர்களில் அதிகமானவர்களுக்குச் செயற்கை முறைகளினால் குழந்தைகள் கிடைப்பதற்கு வழி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. தம்பதியர் மனக் கவலைகளை மறந்து தாம்பத்திய உறவின் போது மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அத்துடன், பெண்களுக்கு மாதவிலக்கு நின்று பன்னிரண்டு நாட்கள் வரை கருத்தரிக்கும் காலமாதலால், அக்காலத்தில் கணவனும் மனைவியும் கூடியிருந்தால் பிள்ளைகள் பிறக்கும் எனவும் எமது பண்டைய நூல்கள் குறிப்பிடுகின்றன. சிலர் தங்கள் மதரீதியான சடங்குகள் மூலமும், வழிபாட்டு முறைகள் மூலமும் கருத்தரிப்பதாகக் கூறுகின்றனர். இவ்வாறு எவ்வழிகளிலோ குழந்தைகள் அவர்களுக்குக் கிடைக்கும்போது சொல்லொணா
ன்பத்தை அவர்கள் அடைகின்றனர். ነ.'' எவ்வழியிலும் குழந்தைப் பேறு கிடையாதவர்கள், குறிப்பிட்ட யாயமான காலம் வரை குழந்தைகள் கிடைக்குமென்ற எதிர்பார்ப்புடனேயே தங்கள் இளமைக் காலத்தைக் கழிக்கின்றனர். காலங்கடந்தும் குழந்தைகள் கிடையாத போதுதான் தங்கள் பிற்காலம் வெறுமையாக உள்ளதை அவர்கள் உணரத் தொடங்குகின்றனர். இந்நிலையில் அவர்களில் பலர் சமய, சமூகப் களில் தங்களை ஈடுபடுத்துவதை நாம் காண முடியும். சிலர்
23

Page 26
தங்கள் தொழில் துறைகளில் கூடிய கவனமெடுத்து, அவற்றை மேலும் முன்னேற்ற முயற்சிக்கின்றனர். இவ்வாறான செயல்கள் மூலம் கணவன் மனைவிக்கிடையேயுள்ள பிரச்சினைகள் இல்லா தொழிக்கப்படுவதுடன், புதிய பிரச்சினைகளும் அவர்களிடையே உருவாவது தவிர்க்கப்படுகின்றது.
அதிகமானர்கள் தங்கள் பிற்கால வாழ்க்கையில் உதவிக்காகவும், தங்கள் பாசத்தைப் பொழிந்து வளர்ப்பதற்காகவும் வேறு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்ப்பார்கள். இது மிகவும் பாராட்டவேண்டிய செயலாகும். இன்னொரு ஏழைக் குழந்தைக்கு நல்வாழ்வு கிடைப்பதுடன் அவர்களின் குறைபாடும் நீங்க இதனால் வழி ஏற்படுகின்றது. இன்றைய காலகட்டத்தில் ஏராளமான குழந்தைகள் தகுந்த பராமரிப்பின்றி நாட்டில் உள்ளனர். இவர்களின் வாழ்விலும் விடிவைக் கொண்டுவர இச் செயல்கள் உதவும்.
பிள்ளைகள் இல்லாத வீட்டில் கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் கூடிய அனுதாபத்தையும் அன்பையும் கொண்டிருக்க வேண்டும். இது இருவருக்குமேயுரிய பிரச்சினையாதலால் ஒருவர் மற்றவரை வார்த்தைகளால் மனம் நோகச் செய்யக் கூடாது. அயல் குடும்பங்களில் காணப்படும் வேறு பல குறைபாடுகளையும் நாம் ஒப்பிட்டு நமது வாழ்க்கை எவ்வளவோ நல்லதெனத் திருப்தியடைந்து வாழ்க்கையை முன்னேடுத்துச் செல்லவேண்டும். ஒருவருக்கு மற்றவர்தான் குழந்தை என்ற மனப்பாங்குடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
கல்வியறிவு குறைந்த சில குடும்பங்களிடையே பிள்ளைகள் இல்லாமைக்கு மனைவியே காரணம் என முடிவெடுத்துக் கணவனுக்கு வேறு திருமணமும் ஒழுங்கு செய்து விடுகின்றனர். இது இக்காலத்துக்கு முற்றிலும் பொருத்தாத செயலும் ஏற்றுக் கொள்ள முடியாத செயலும் ஆகும். இவ்வாறு கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் மறுமணம் புரிவது தான் தீர்வென்றால் உலகமே இயங்க முடியாத நிலை ஏற்படும்.
குழந்தைகள் இல்லாத மாவீரன் நெப்போலியன் தனக்கு ஒரு குழந்தை வேண்டுமென்ற காரணத்திற்காகத் தன்னிலும் 6 வயது கூடிய தனது மனைவியை விவாகரத்துச் செய்தான். தன்னில் உயிரையே வைத்திருந்த தன் மனைவியை விவாகரத்துச் செய்த அவன் தன்னை விரும்பாத ஆடம்பர வாழ்வை விரும்பும் அழகி மேரிலூசியை மணந்தான். அன்றே அவனது தோல்விப்படலம் தொடங்கியது. சிறிதுகாலத்தில் மேரிலூசி அவனை விட்டே ஒடிவிட்டாள். வாழ்வின் கடைசிக் காலத்தில் அமைதியற்றிருந்த அவன் இறப்பதற்கு முன்னர் கடைசியாகச் சொன்ன வார்த்தை
24

“ஜோஸப்பைன்’ என்பதாகும். அது அவன் மீது உயிரையே வைத்திருந்த அவன் முதல் மனைவியின் பெயர்.
வேறு சில குடும்பங்களுக்கோ இன்னொருவகைப் பிரச்சினை உண்டு. தொடர்ந்து ஆண், அல்லது பெண் குழந்தைகள் கிடைப்பதாலும் அவர்களிடையே சலிப் பேற்படுகின்றது. தங்களுக்குப் பின், வீட்டில் விளக்கேற்ற ஒரு பெண் வாரிசு இல்லையெனச் சிலரும், தள்ளாத வயதில் தங்களைக் கவனிக்க ஒரு ஆண்பிள்ளை இல்லையென வேறு சிலரும் அங்கலாய்ப்பர். மருத்துவர்களின் ஆலோசனைப்படி; இல்லாவிட்டால் பண்டைய நூல்களில் கூறப்படும் ஆலோசனைகளின் படி நாம் முயற்சிசெய்தால் தேவையான குழந்தைகளைப் பெற முடியுமெனப் பலர் நம்புகின்றனர்.
எம்மிடையுள்ள அனுபவசாலிகளின் கருத்துப்படி, பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்படும் முதல் மூன்று நாட்கள் விலகியிருக்கும் நாட்களாகும். நான்காம் நாள் பெண்கள் குளித்துத் தூய்மையடைந்தாலும் அன்றைய தினமும் ஆண்கள் விலகியே இருக்க வேண்டும். ஐந்து முதல் பதினாறு முடியவுள்ள மீதி நாட்களில் பதினொராவது நாளும் பதின்மூன்றவது நாளும் ஆண் பெண் சேரத்தகாத நாட்களாகும். மிகுதியாயுள்ள நாட்களில் ஒற்றைப் படை நாட்களில் சேர்ந்தால் புதல்வியும் இரட்டைப்படை நாட்களில் சேர்ந்தால் புதல்வனும் கிடைப்பார்களென்று கூறப்படுகின்றது.
இக்காலத்தில் பலர் பல்வேறு காரணங்களுக்காகவும் கர்ப்பத்தடை செய்து கொள்வதை நாம் அவதானிக்க முடிகிறது. பலவீனமான அல்லது நோய்களைக் கொண்ட பெண்கள், பொருளாதாரக் கஷ்டங்களைக் கொண்ட குடும்பங்கள் சாதாரணமாகக் கர்ப்பத்தடை செய்து கொள்வதை இங்கு குறிப்பிட முடியும். கர்ப்பத்தடை செய்து கொள்வதைப் பற்றிப் பலரும் கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்த போதும் பல நாடுகளில் அரசாங்கமே அதனை ஊக்குவிக்கின்றதென்பது உண்மை நிலையாகும்.
பிறக்கும் போதே சில குழந்தைகள் குறைபாடுகளுடன் பிறப்பது முண்டு. இக் குறைபாடுகள் அவர்கள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களுடைய பிற்கால வாழ்க்கையையும் பாதிக்கக்கூடும். இவ்வாறான செயல்களும் பெற்றோருக்கு ஆயுள் தண்டனை போல் அமைந்துவிடுகின்றன. இப்படியான குழந்தைகளாலும் மனம் சஞ்சலப்படும் பெற்றோரிடையே அமைதியற்ற வாழ்க்கை காணப்படுகின்றது.
பிள்ளைகள் இல்லாத குறையோ அல்லது ஆண், பெண் குழந்தைகள் இல்லாத குறையோ அல்லது வேறு எதுவாக இருந்தாலும் விஞ்ஞானத்தையும் கடந்து நிற்கும் மெய்ஞானப் பொருளான ஆண்டவனின் சோதனை என்றே நாம் கொள்ள வேண்டும். அமெரிக்க விஞ்ஞானிகள் சந்திரனில் இறங்கிய போதும் அதில் இறங்கிய மூவரும் பூமியிலிருந்து தங்கள் பயணத்தைத் தொடங்க முன்னர் தேவாலயத்திற்குச்
25

Page 27
(Church) சென்றுவிட்டே தங்கள் பயணத்தைத் தொடங்கினர். எனவே கணவன் மனைவியின் வாழ்க்கைக் காலத்துக்குள் எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வை நாம் கண்டு விட முடியாது. எனவேதான் பிரச்சினைககுடன் போராடி இயன்றவரை எமது வாழ்வை மகிழ்ச்சியானதாக அமைத்துக் கொள்ள நாம் முயலவேண்டும்.
30 வயது மட்டுமே நிரம்பிய ஆசிரியை ஒருவர் தனது கணவனை இழந்த நிலையில் ஒரே மகனுடன் 1980இல் அக்கரைப்பற்றில் வாழ்ந்து வந்தார். உறவினர்கள் ஒருவரும் கவனியாத நிலையிலும் தங்களிடையேயுள்ள சொத்துக்களைக் கொண்டு வசதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வந்தனர். அக்காலத்தில் நடந்த இனக்கலவரமொன்றில் பெற்றோரை இழந்த ஒரு ஏழைப் பெண்குழந்தையை எடுத்து இவர்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆரம்பத்தில் பெருமளவு பாசத்தைக் கொட்டி அக்குழந்தையை அவர்கள் வளர்க்காத போதும் நாளடைவில் இரண்டு பிள்ளைகளும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடன் இருந்தனர்.
47 வயதில் அந்த ஆசிரியைக்கு ஏற்பட்ட நோயொன்றினால் கண்பார்வை இல்லாமல் போய் விட்டது. இறக்கும் வரைக்கும் அவரைத் தாயாகவே கவனித்துப் பணிவிடை செய்த அந்த வளர்ப்புப் பெண், இப்போது வளர்ந்து பெரியவளாகி அவர்களின் சொத்துக்களுக்கும் உரிமையுடையவளாக மாறியுள்ளாள்.அவளை உடன் பிறந்த சகோதரியாகவே கருதும் அவ்வாசிரியையின் மகன் இப்போது அவளுக்கு வசதியான இடங்களில் வரன் பார்ப்பதில் ஈடுபட்டுள்ளான். அரசில் உயர் பதவியில் இருக்கும் அவன் தனக்கு வந்த பல வசதியான திருமணப் பேச்சுக்களையும் இப்போது தனது தங்கைக்காகப் பிற்போட்டுள்ளான்.
இவ்வாறு குழந்தைகளின்றிப் பல கஷ்டங்களையும் மனக்கவலைகளையும் தாங்கிக் கொண்டு வாழும் தம்பதிகள் ஒரு புறமிருக்க, குழந்தைகள் இருப்பதாலும் பெற்றோர்களிடையே சண்டைகள் ஏற்படும் சுவாரசியமான நிகழ்வுகளும் இடம் பெறுவதுண்டு.
演费责费命命责演演责索鲁鲁费表演费*责会**麦会费始资杂台典参费食执责象如*隶查
".காசி, இராமேசுவரம் முதலிய இடங்களுக்குச் சென்று பிள்ளை வரம் கேட்பது அதற்கேற்ற ஆகம வைதிகச் சடங்குகளைச் செய்வது ஆகிய கிரியைகளை இக்காலத்தில் காணலாம். இச்சடங்குகள் தாமாகவே பெருநன்மையை உண்டுபண்ணிவிடமாட்டா. தம்பதிகளின் பரிபாகமும் தூய எண்ணமும் தெய்வபக்தியும் பிள்ளைவரமாக வடிவெடுக்கின்றன."
- நன்மக்களைப் பெறுதல்
பூரீமத் சுவாமி சித்பவானந்தர்
26

பிள்ளைகளால் ஏற்படும் பிரச்சினைகள்
"-அளிய தாமே சிறு பசுங்கிளியே குழலும் யாழும் அமிழ்தும் குழைத்ததின் மழலைக் கிளவிக்கு வருந்தின-"
- சிலப்பதிகாரம்
பிள்ளைகளாலும் வீட்டில் கணவன் மனைவியிடையே பிரச்சினைகள் எழுவதுண்டு. பிள்ளைகள் தனித்துவமான அபூர்வ குண இயல்புகளைக் கொண்டவர்கள். அவர்களுடைய செயல்கள் ஒவ்வொன்றின் மூலமும் தங்கள் உள்ளுணர்வுகளை அவர்கள் வெளிப்படுத்துகிறார்கள். சிரித்தல், அழுதல், ஓடுதல், ஆடுதல் போன்ற எல்லாச் செயல்பாடுகளும் அவர்களுடைய உணர்ச்சிகளின் வெளிப்பாடே ஆகும். குழந்தைகளைப் பற்றிப் பிரபல எழுத்தாளர்களும், ஆய்வாளர்களும், மனோவல்லுனர்களும் இக்காலத்தில் பல புதிய கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு பலரும் தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் கூறியுள்ள போதும் வீட்டில் கணவனும்
27

Page 28
மனைவியும் பிள்ளைகளை வளர்க்கும் போது ஏற்படும் பிரச்சினைகளைச் சமாளிப்பதிலேயே அவர்களின் திறமை தெரியவருகின்றது. பிள்ளைகளால் பெற்றோரிடையே எந்த வேளையில் என்ன காரணத்துக்காகச் சண்டைகள் ஏற்படும் என்பதைத் திட்டவட்டமாக யாருமே வரையறுத்துக் கூறமுடியாது. எனவே இவ்வத்தியாயத்தில் பிரச்சினைகளையும் தீர்வுகளையும் அதிகமாக ஆராய முற்படாமல் குழந்தைகளின் குண இயல்புகளையும் நமது நாட்டில் அவர்களின் போக்குகளையும் பற்றியே பெரும்பாலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றை வாசிப்பதன் மூலம் குழந்தைகளைக் காரணமாகக் கொண்டு பெற்றோர்கள் பிரச்சினைப் படுவதைத் தவிர்த்துக் கொள்ளவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
உடல் வளர்ச்சி, சிந்தனை வேறுபாடு, வயது வித்தியாசம் போன்ற பல்வேறு காரணங்களையும் ஆதாரமாகக் கொண்டு பிள்ளைகளை நாம் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கமுடியும். ஐந்து வயதுக் குட்பட்ட குழந்தைகள் (Infancy) முதலாவது பிரிவாகவும், ஐந்திற்கும் பதின்மூன்று வயதுக்குமுட்பட்ட சிறுவர்களை (child hood) இரண்டாவது பிரிவாகவும், பதின்மூன்றிற்கும் இருபது வயதிற்குமிடைப்பட்ட கட்டிளம் பருவத்தினர் (Aholescence) மூன்றாவது பிரிவாகவும் நாம் கொள்ளலாம்.
ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் என அழைக்கப்படுவோர் சூதுவாது தெரியாதவர்கள். பெரியவர்களின் செயல்களை அப்படியே பிரதி பண்ணுபவர்கள். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் நித்திரை செய்ய விரும்புபவர்கள். கோபம் வந்தால் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு அப்பாவை வீட்டை விட்டு விரட்ட முயற்சிப்பவர்கள். இவ்வாறான வயதுப் பருவத்தில் அவர்களுடைய மனதில் நல்லவிடயங்களை மட்டும் பதியவைக்க முயற்சி எடுக்க வேண்டும். குடும்பத்தின் செல்வாக்குகள், குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு நடத்தைகள் ஆகியன குழந்தையின் ஒழுக்கவளர்ச்சியில் முக்கிய பங்கினைப் பெறுவனவாகும். பண்புள்ள குடும்பச் செல்வாக்கு, சூழ்நிலை, பாடசாலைப் பண்பாடு என்பன ஒரு மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைகின்றன வென்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.
எனவே இந்த வயதுகளில் இறை நம்பிக்கையையும் ஊட்டி நல்ல அடித்தளமிட்டு, நல்வாழ்வு வாழ அவர்களைத் தயார் செய்ய வேண்டும். சுவரிருந்தால் தான் சித்திரம் கீறலாம் என்னும் முது மொழிக்கிணங்க, பிள்ளைகள் நல்ல ஆரோக்கிய முடையவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய சிறப்புமிக்க கல்விக்கும், ஆரோக்கிய வாழ்வுக்கும் அது எதிர்காலத்தில் உதவி செய்யும். அறிவுப் பெருக்கம், நல்லோழுக்க வளர்ச்சி, ஆன்மீக வளர்ச்சி
28

!== ---_
死海邝参 锅炉(*/

Page 29

எல்லாவற்றிற்கும் உடலியலின் நல்வளர்ச்சி மிக முக்கியமாகும். "ஆளும் வளரனும், அறிவும் வளரனும் அதுதாண்டா வளர்ச்சி” என்று இப்போது சினிமாப் பாடல்களிலேயே பாடுகிறார்கள்.
குழந்தைகளின் ஆராய்வூக்கம் நசுக்கப் படலாகாது. இயல்பான விளக்கங்களை (Natural Questions) அவர்கள் நம்மிடம் கேட்கும் போது நாம் பதட்டமடையாது அவர்களுக்கு, அவர்கள் நிலைக்கேற்பப் புரியவைக்க முயலவேண்டும். வயதுக்கு மீறிய கேள்விகளைச் சில குழந்தைகள் கேட்கும் போதும் நாம் ஆத்திரமடையக்கூடாது. எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவரவர்கள் வழிபாட்டு இடங்களுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்லவேண்டும். சமய வழிபாடுகளில் ஈடுபடுவது குடும்பத்திற்கு ஒவு நல்ல முயற்சியாகும். மனிதனுக்குப் காப்புணர்ச்சியைத் (security) தருவது சமயத்தின் கடமையாகும். நன்மை தீமைகளையும், பாவபுண்ணியங்களையும் வேறுபடுத்தி அவர்கள் அறியும்படி செய்யவேண்டும். வளர்ந்து வரும் புதியதொரு சமுதாயத்தில் நமது பிள்ளையும் ஒரு நற்பிரசையாக இருக்க நாம் வழிகளைச் செய்திடவேண்டும்.
வேலையிலிருந்து களையுடன் வீட்டிற்கு வரும் போது வாசலில் நம்மை வழி மறிக்கும் பிள்ளைகள், தங்கள் பாடசாலைச் சாதனைகளைச் சொல்ல ஆரம்பிப்பார்கள். தங்களுக்குப் பாடசாலையில் கிடைத்த ‘பாஸ்' களின் எண்ணிக்கையையும் பக்கத்து வீட்டு ரமேஸ் நாலும் மூனும் எட்டு என்று போட்டுப் பிழை வாங்கியதையும் அவ்விடத்திலேயே ஒப்படைப்பார்கள். அங்கேயே சிறிது நேரம் நின்று அவர்களின் சாதனைகளை நாம் கேட்கத்தான் வேண்டும். அவ்வாறில்லாமல் அவர்களிடம் நமது களையைச் சொல்லி கடும் சொற்களால் அவர்களை ஒருபோதும் திட்டக்கூடாது. வீட்டில் தங்கி வேலைக்குச் செல்லும் வசதிபடைத்தவர்கள் பிள்ளைகளுடன் போக்குவதற்கென ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கவேண்டும். பெற்றோர் தமக்கு எவ்வளவு வேலைகள் இருந்த போதும் பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியுடன் போக்க நேரத்தைக் கண்டறிய வேண்டும். இந்த வேளையில், அவர்களுக்குக் கதை சொல்வது, பட்டம் விடுவது, “கிரிக்கட் விளையாடுவது போன்ற அவர்கள் விரும்பும் எதையாவது நாமும் செய்யவேண்டும்.
என்னுடைய ஆறு வயது மகனுடன் நான் இடையிடையே "கிரிக்கட் விளையாடவேண்டும். இல்லாவிட்டால் அவன் சண்டையை ஏற்படுத்தி வீட்டையே இரண்டு படுத்தி விடுவான். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் அவன் ஒரு தடவையும் அவுட்" ஆகக் கூடாது. அதற்கேற்ற படி நான் விளையாடவேண்டும். இது சிறுவர்களின் இயல்பாகும். அவர்கள் வெற்றியையே எப்போதும்
29

Page 30
விரும்புகிறார்கள். சாப்பிடும் போது, குளிக்கும் போதும், உடையணியும் போது போன்ற எல்லா வேளைகளிலும் மற்றவர்களை விடத்தாங்களே முதலாவதாக வர விரும்புகிறார்கள். இதுவே அவர்களுக்கு எதிர்காலத்தில் தலைமை தாங்கும் (Leader ship) உறுதியான மனநிலையை ஏற்படுத்துகின்றது.
அவ்வாறே, அவர்களின் படிப்பிலும் நாம் அக்கறை காட்டவேண்டும். வீட்டில் பெற்றோர்கள் எந்த நேரமும் பிள்ளைகளைப் படி, படி என்று உயிரை வாங்குவார்கள். காலை 6 மணியிலிருந்து இரவு 6 மணிவரை ‘ரியுசன்” வகுப்புகள்ை ஒழுங்கு செய்து கொடுப்பதுடன் தங்கள் பொறுப்பை முடித்துக் கொள்ளும் பெற்றோரும் சிலர் உள்ளனர். இவையெல்லாமே தவறான அணுகு முறைகளாகும். பிள்ளைகளின் வயதுக்கேற்ப அவர்களின் படிப்பையும் பெற்றோர் ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும். அது அவர்களுக்கு வெறுப்பான தொரு சுமையாக மாற இடமளிக்கக் கூடாது. படிப்பு விடயத்தில் மட்டுமன்றி எந்தவொரு விடயத்திலும் தாயொரு வழியையும் தந்தை வேறொரு வழியையும் பிள்ளைக்குக் காட்டி அவர்களைத் தடுமாறச் செய்வதுடன் தாங்களும் தடுமாறக் கூடாது. வேலைப்பளுவும், குடும்பத்தைப் பற்றிப்பிற சிந்தனைகளையும் கொண்ட கணவனுக்கு இவையெல்லாம் சாத்தியப்படுவது உண்மையில் கஷ்டமேயாகும். இதற்கு மிக இலகுவான செயல் அவன் தனது மனைவியின் உதவியையும் பெற்றுக் கொள்ளுவதே ஆகும். வீட்டில் பிள்ளைகள் சம்பந்தமாக நடந்த சண்டைகள், சாப்பாட்டுப் பிரச்சினைகள், வகுப்பில் பிள்ளையின் நிலை போன்றவற்றைப் பற்றி மனைவியிடம் ஓரளவு தேவையான தகவல்களை நாம் பெற்றுவிட வேண்டும் அதனை அவர்கள் அறியாமல் இருக்கவேண்டும். சிறிது நேர இடைவெளியின் பின்னர் நாம் பிள்ளைகளை அழைத்து
“மகள் இந்த முறை கணக்கில் நீங்கள் குறைவாமென்று உங்கள் ரீச்சர் சொன்னார். உங்கள் கணக்குக் கொப்பியைக் கொண்டு வாருங்கள்."
என்றோ "மகன் நீங்கள் பக்கத்து வீட்டுப் பிரசாந்துக்கு அடித்ததாக அவனுடைய அப்பா சொன்னார். அது உண்மையா? " என்றோ அல்லது
"மகள், இந்த முறை நீங்கள் தானாமே வகுப்பில் முதலாம் பிள்ளை. உங்கள் ரீச்சர் சொன்னதைக் கேட்க எனக்கு மிகவும் பெருமையாக
இருந்தது."
என்றோ
3O

நாம் சொல்லும் போது பிள்ளைகளுக்கு உண்மையில் மனதில் ஒருவிதமான பய உணர்வு ஏற்படுகின்றது. தான் செய்யும் சிறிய செயலையும் அப்பா கண்காணித்துக் கொண்டிருப்பதாகப் பிள்ளை நினைப்பதுடன், தீய செயல்களை விடுத்து நல்லவற்றைச் செய்ய ஆரம்பிக்கின்றது. அத்துடன் தன்மீது பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை என்னும் நினைப்பிலிருந்தும் பிள்ளைகள் விடுபடுகின்றனர்.
வாரத்தில் ஒரு நாளாயினும் மேற்குறிப்பிட்டவாறு அவர்களுடைய செயல்களை நாம் விசாரிக்க வேண்டும். பிள்ளைகள் துப்பரவாக இருக்கிறார்களா என்பதையும், அவர்களுடைய நகங்கள், தலைமுடி என்பன ஒழுங்காகக் கத்தரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும் நாம் இடையிடையே கண்காணித்துக் கொள்ளவேண்டும். இவற்றிற்கு முன் மாதிரியாகப் பெற்றோர் எந்த வேளையிலும் தூய உடையணிந்து உயர்வான சிந்தனைகளுடன் காணப்பட வேண்டும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சிரமங்களைப் பாராது, மனைவி கணவனுக்குக் கூடுதலான ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும், அவ்வாறின்றி, வீட்டு வேலைகளுக்கிடையே பிள்ளைகளைப் பார்க்க முடியாத்ென்று தட்டிக் கழிப்பதோ, பிள்ளைகள் விடும் தவறுகளைக் கணவனுக்கு மூடி மறைப்பதோ அவர்களிடையே மனக் கிலேசத்தை உண்டாக்கும்.
தாய்மார்களில் சிலர் பிள்ளைகளின் தொல்லைகளிலிருந்து விடுபடுவதற்காகப் பாடசாலைக்குச் செல்லும் போது அவர்களுக்குச் செலவு செய்யப் பணம் கொடுத்து அனுப்புவார்கள். இது தவறான, தவிர்க்கப் படவேண்டிய நடைமுறையாகும். இதனைத் தந்தை கண்டிக்கும் போதும், தாய் அளவுக்கதிகமாகச் செல்லங் கொடுத்துப் பிள்ளை தவறுகளைத் தொடர்ந்து செய்யத் துணியும் போதும் பெற்றோரிடையே மனஸ்தாபம் உண்டாக வழி ஏற்படுகின்றது.
சிறியவர்களானும் அவர்களுக்கும் வீட்டில் வேலைகளை ஒதுக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய படுக்கை விரிப்புக்களை மடித்து ஒழுங்காக வைக்கவும்; கதிரை மேசைகளைத் துடைப்பதுடன், அவர்களின் புத்தகங்களை ஒழுங்காக அடுக்கி வைக்கவும் நாம் அவர்களைப் பழக்கி எடுக்க வேண்டும். இதே வேலைகளை நாம் மீண்டும் செய்ய வேண்டியிருப்பினும்; வீட்டு வேலைகளில் அவர்களுக்கும் பொறுப்பிருப்பதை நாம் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவர முடியும். வீட்டில் அவர்களுக்கிளைய சகோதரர்களுடன் சேர்ந்து விளையாடவும், சூழலிலுள்ள நல்ல நண்பர்களுடன் சேர்ந்து பழகவும் நாம் அவர்களை அனுமதிக்க வேண்டும்.
3.

Page 31
வீட்டில் நடைபெறும் செயல்கள் ஒவ்வொன்றையும் பிள்ளைகள் மிக உன்னிப்பாக அவதானிப்பார்கள். அவர்களுக்குத் தெரியாமல் நாம் ஒரு செயலைச் செய்வது மிகவும் கஷ்டமாகும். மறைவாக ஒளித்து வைக்கும் ஒரு பொருளைத் தேடி எடுக்கவே அவர்கள் முயற்சிப்பார்கள். அதே போல் அம்மாவும் அப்பாவும் இரகசியமாகக் கதைக்கும் விடயம் என்னவென்று அறியவே அவர்கள் ஆசைப்படுவார்கள். இவற்றிற்கெல்லாம் நாம் ஈடுகொடுத்து அவர்களின் மனோநிலை பாதிக்கப்படாதவாறு அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்.
வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் பாலியல் சம்பந்தமான புத்தகங்களை வாசிப்பதிலும் ஆபாசமான பத்திரிகைகள் பார்ப்பதிலும் பெற்றோர் மிக அவதானமாக இருக்கவேண்டும். இதேபோல் இக்காலத்தில் வெளிவரும் "செக்ஸ்", வன்முறைக் காட்சிகள் அடங்கிய சினிமாப் படங்களைப் பார்க்கும்போதும் பிள்ளைகளை விலக்கிவைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அவரவர் வயதுக்குத் தக்க புத்தகங்களையும், சினிமாப் படங்களையும் தெரிவு செய்து அவர்களுக்குக் காட்டலாம். இதன் மூலம் அவர்களை நல் வழிப்படுத்துவதுடன் சிறந்ததொரு எதிர்காலத்தையும் அவர்களுக்கு நம்மால் அமைத்துக் கொடுக்க முடியும்.
சில வீடுகளில் பிள்ளைகளுக்கு முன்னிலையில் புகை பிடிக்கும் தந்தையரை நாம் காண்கிறோம். இவ்வாறே வேறு சிலர் பிள்ளைகளுக்கு முன்பாக மதுவருந்திப் போதையுடன் தள்ளாடுவதையும் நாம் அவதானிக்க முடியும். இன்னும் சிலர் பிள்ளைகளிடமே பணத்தைக் கொடுத்து அவர்களைக் கடைக்கனுப்பித் தமக்குத் தேவையான மேற்குறிப்பிட்ட பொருட்களையும் வாங்கிக் கொள்வர். இவ்வாறு, மது விற்பனை செய்யும் இடங்கள், சூதாட்டம் நடைபெறும் இடங்கள் என்பவற்றிற்குப் பிள்ளைகளை அனுப்புவதைப் பெற்றோர் முற்றாகத் தடைசெய்ய வேண்டும். அது மட்டுமன்றி அவர்கள் இருக்கும் போதாவது இவ்வாறான தீய பயனற்ற செயல்களைச் செய்வதையும் பெற்றோர் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்னும் சில பெற்றோர், குறிப்பாகப் பெண்கள் தங்கள் ஒய்வு நேரங்களில் ஏனைய பெண்களுடன் சேர்ந்து பயனற்ற விடயங்களைப் பேசி அரட்டையடிப்பதன் மூலம் தங்கள் பொழுதைக் கழிப்பர். இல்வேளைகளில் தங்கள் பிள்ளைகளையும் இவர்கள் உடன் வைத்திருப்பார்கள். பெண்கள் மத்தியிலிருக்கும் பிள்ளைகள் தேவையற்ற இப்பேச்சுக்களில் சில வற்றை மனதில் பதித்து வைப்பதும் உண்டு. எனவே, பெரியவர்கள் சேர்ந்து கதைக்குமிடங்களிலிருந்து கூடிய வரை பிள்ளைகளை விலக்கி வைத்திருக்க வேண்டும்.
32

பிள்ளைகள் இருக்கும் வீட்டில் ஒரே சண்டையும் சத்தமுமாகவே இருக்கும். ஒருவனுடைய பேனையை மற்றவன் எடுப்பான். தங்கையின் இடத்தில் அண்ணன் இருந்து படிப்பான். அப்பாவுடன் இரவில் நித்திரை செய்வது யார்? அம்மாவுடன் நாளை கடைக்குச் செல்வது யார்? போன்ற எல்லாப் பிரச்சினைகளுக்கும் அவர்கள் சண்டைமூலமே தீர்வைக் காண முயற்சிப்பார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள். இவ்வாறான சண்டைகளை நிறுத்துவது மிகவும் கஷ்டமாகும். பெற்றோர்களுக்குச் சில வேளைகளில் அடக்க முடியாத கோபமும் வரும். இதைக் காரணமாகக் கொண்டு சில வேளைகளில் அவர்களிடையேயும் சண்டைவரும்.
1992 இல் மருதமுனை ஆசிரியரொருவர், தனது சண்டையிடும் மூன்று பிள்ளைகளுக்கும் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லி அவர்களைச் சமாதானப் படுத்த முயன்றிருக்கிறார். ஆனால் அவர்கள் தங்கள் சண்டைகளை நிறுத்தவேயில்லை. இவர்களுடைய செயலால் பொறுமையிழந்த அவர் தனது வசதிகளைப் பயன்படுத்தி மூன்று பேருக்கும் தனித்தனி அறைகளை ஒதுக்கிக் கொடுத்தார். இப்போது திறப்பும் கையுமாக இருக்கும் இவர்கள் தனித்தனியே சாப்பிட்டு அவர்களுடைய அறைகளிலேயே படிக்கிறார்கள். ஒரே வீட்டில் இருந்த போதும் விடுதியில் வாழ்வதுபோல் இவர்களின் வாழ்க்கை முறை இருப்பதனால், இவர்களின் சகோதர பாசம் குறைவதற்கே வழி ஏற்படுகின்றது. சகோதரர்கள் தங்களிடையே சண்டையிட வேண்டும், பின்னர் சமாதானப்படவேண்டும், ஒன்றாய்ச் சாப்பிடவேண்டும், குறிப்பிட்ட வயது வரை ஒன்றாய்ப் படுத்துறங்கவும் வேண்டும். இதுவே அன்பையும் புரிந்துணர்வையும் சகோதர பாசத்தையும் அவர்களிடையே ஏற்படுத்துவதற்கு ஒரு வழியாகும்.
தவறு செய்யும் போது பிள்ளைகளைத் தண்டிக்கவும் நாம் தயங்கக் கூடாது. தண்டனை வழங்கித் திருத்துவதற்குப் பதின்மூன்று வயதுக்குட்பட்ட காலப்பருவமே மிகவும் சிறந்ததாகும். தண்டனை என்று குறிப்பிடும் போது பிள்ளைகளைக் கட்டைப் பிரம்பினால் அடி அடி என்று அடிப்பதோ, அல்லது சாப்பாடு கொடாமல் பட்டினி போடுவதோ அல்ல. அவர்கள் செய்த தவறுக்கு என்ன காரணம் என்று முதலில் நாம் ஆராய வேண்டும். அது தவறு என்பதை நாம் அவர்களுக்கு விளங்க வைப்பதுடன், தவறுகள் செய்வதைத் தவிர்க்கும் வழிமுறைகளையும் அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும். பிள்ளைகள் தொடர்ந்தும் அதே தவறைச் செய்யும் போது, அதற்கான காரணியைக் கண்டறிந்து பரிகாரம் காண நாம்
யல வேண்டும். இவையொன்றும் பலனளிக்காத விடத்துச் சிறிய ரம்பொன்றினால் அவர்களைத் தண்டிப்பதைத் தவிர வேறு
வழிகள் நமக்கில்லை.
33

Page 32
தாய் தந்தை இருவரில் தண்டனை கொடுப்பவர் ஒருவராகத்தான் இருக்க வேண்டும். குடும்பங்களில் தந்தையை முதன்மையாகக் கொண்ட (5Ghuth, (Patriarchal family) gift 6Du முதன்மையாகக் கொண்ட குடும்பம் (Matriarchal family) என இருவகையுண்டு. தந்தை தான் பெரும்பாலான குடும்பங்களில் தண்டனை கொடுப்பவராக இருப்பார். தாய் பிள்ளைகளுக்குப் பாசத்தை வெளிக்காட்டி அவர்களை வளர்க்க வேண்டும். அவ்வாறில்லாமல் இரண்டுபேரும் பிள்ளைகளை மாறிமாறி அடித்தால் அவர்களின் மனோநிலை பாதிக்கப்படும். ஒருவர் பிள்ளையைத் தண்டிக்கும் போது மற்றவர் சண்டையிட்டுக் கொண்டு குறுக்கே பாய்ந்து பிடிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. இதனால் கணவனுக்கும் மனைவிக்குமிடையே சண்டை ஏற்படுவது மட்டுமின்றித் தவறுசெய்த பிள்ளைக்கும் அது வெற்றியாய் அமைந்து விடுகின்றது. தண்டனை கொடுத்தவரை ஏளனமாகப் பார்க்கும் பிள்ளை தொடர்ந்தும் அதே தவறைச் செய்வதற்குத் தூண்டப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில், எங்கேயோ வாசித்த பின் வரும் ஆங்கில வாக்கியங்கள் சிந்தனைக்கு வருகின்றன.
There is no such a thing as a bad child, Only bad parents make the bad child, There is no such a thing as a bad child, Only Circumstances make the bad child.
பதின்மூன்று வயதுக்கும் இருபது வயதுக்கும் மிடைப்பட்ட பிள்ளைகளைப் பற்றியும் பெற்றோர் fingu கவனமெடுப்பதவசியமாகும். வாழ்க்கையில் அவர்கள் கெட்டுப் போவதோ நன்றாக இருப்பதோ இந்த வயதில் தான் தீர்மானிக்கப்படுகின்றது. பெண்பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்கள் “வயது வந்தவர்களாக" மாறும் காலப் பகுதியும் இதுவே ஆகும். எனவே அவர்களுடைய உடல் தோற்றத்தில் சில வெளிப்படையான மாறுதல்களும் காணப்படும். காரணமின்றிச் சிரிப்பதும், அடிக்கடி கண்ணாடி முன்பு நின்று தலையைச் சீவி அழகு பார்ப்பதும் அவர்களுடைய பொழுது போக்குகளில் சிலவாகும். இக்கால கட்டத்தில் சமூகம் அவளைப் பெரிய மனுசியாகவும் மதிக்கத் தொடங்குகின்றது.
ஆனால் ஆண் பிள்ளைகளைப் பொறுத்தவரை அவர்களுடைய உடல் ரீதியான மாற்றங்களுக்குச் சமூகத்தில் அவ்வளவு முக்கியத்துவம் தரப்படுவதில்லை. பெண்களைப் பெரிய மனுசி ஆக்கும் சமுதாயம் தன்னை மதிக்க வில்லையென்று அவனைக் குறைப்பட விடக்கூடாது. அவனுக்கும் உடல் ரீதியான
34

பெரிய மாற்றங்களும் சிந்தனை மாற்றங்களும் ஏற்படுகின்றனவென்பதே உண்மை நிலையாகும்.
இவ்வயதுகளில் இனம் புரியாத வெட்கமும் பெற்றோரை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதில் தயக்கமும் அவர்களிடையே காணப்படும். படிப்பறிவு குறைந்த, நாகரீகமற்ற பெற்றோரை மற்றவர்கள், குறிப்பாகத் தனது நண்பர்கள் அறிந்தால் தனது அந்தஸ்துக்குப் பாதிப்பேற்படுமெனவும் அவர்கள் கருதுவார்கள். இக்காலத்திற்கேற்ற நவீன உடைகள் அணிவதிலும், மேலை நாட்டு இசையை ரசிப்பதிலும் அவர்கள் கூடிய கவனம் செலுத்துவார்கள். ஒருவரைக் கண்டு இன்னொருவர் காதல் கொள்ளுவதும் இந்த வயதினரிடையேதான் பெரும் பாலும் காணப்படும். இது தெய்வீகக் காதலல்ல; வெறும் உடல் ரீதியான கவர்ச்சிதான் என்பதை அவர்களுக்குச் சொல்லி விளக்க வைப்பதற்குள் நமது பிராணனே போய்விடும். சில வேளைகளில் பிள்ளைகள் ஒருவரைக் காதலிப்பதற்கு வீட்டிலுள்ள பெற்றோர்களும் தவறுதலாக வழி அமைத்துக் கொடுத்து விடுவதும் உண்டு. இவ்வாறு பெற்றோர் விடும் தவறுகளால் எதிர்காலத்தில் பிள்ளைகளும் தங்கள் திருமண விடயத்தில் தவறச் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. சந்தர்ப்பங்களைப் பயன் படுத்தும் திறனும் விரைவில் உணர்ச்சி வசப்படும் பலவீனமும் மனிதர்களுக்கேயுரிய விசேட குணாதிசயங்களாகும். எனவே பிள்ளைகள் வாழ்க்கையில் தவறு விடும் சந்தர்ப்பங்களைப் பெற்றோர் ஒருபோதும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடாது.
சிலவீடுகளில், பிள்ளைகளை அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்வதற்குத் தந்தை அனுமதிப்பதில்லை. இவர்கள் தாய்மாரின் பலவீனத்தைப் பயன்படுத்தி, அவர்களைக் கெஞ்சி அனுமதி பெற்றுத் தாம் நினைத்தவற்றை நிறைவேற்றிவிடுவர். ஒருநாள் மட்டுமின்றித் தாய்க்குத் தெரியும் என்ற தைரியத்தில் பல நாட்களுக்குத் தந்தைக்குத் தெரியாமலேயே வெளியே கிளம்பி விடுகின்றனர். பெண் பிள்ளைகளைப் பொறுத்தவரை இது பெரும்பாலும் பெற்றோருக்குக் கெட்ட பெயரையே ஏற்படுத்துகின்றது. நாட்கள் கடந்து இதனை அறியும் கணவன், மனைவியுடன் கோபமடைவது மட்டுமின்றி அவர்களிடையே அமைதியின்மை ஏற்படவும் இச்செயல்கள் வழிவகுக்கின்றன.
பிள்ளைகளின் வளர்ப்புக்குத் தாயும் தந்தையும் பொறுப்பாக இருந்தாலும் அவர்கள் கெட்டவர்களாக இருந்தால் சமூகம் தாயையே திட்டுகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் ஒழுக்கம் தவறிக் கெட்ட வழிகளை நாடும் போது தாயின் வளர்ப்பையே ஊரோர் சுட்டிக் காட்டுவர். எமது சமுதாய அமைப்பின்படி, கணவன் ஊரோடி
35

Page 33
உழைத்துக் கொடுப்பவனாகவும், மனைவி வீட்டிலிருந்து குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டிய கடமையுள்ளவளாகவும் கருதப்படுகின்றது.
பிள்ளைகள் மிகவும் விசேடமாகக் கவனிக்கப் படவேண்டியவர்கள். பிறக்கும் போது யாருமே கெட்டவர்களாகப் பிறப்பதில்லை. வளர்ப்பிலேயே ஒருவன் நல்லவனா கெட்டவனா என்பது தீர்மானிக்கப்படுகிறது. எனவே பிள்ளைகளின் வளர்ப்பின் போது பெற்றோர்கள் பிரச்சினைப்படாது அவர்களை நல்லவர்களாக வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும். பெற்றோர் தமக்கிடையேயுள்ள வேறுபாடுகளை மறந்து நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு, தமது குழந்தைகளையும் நற்பண்புகளுடன் வளர்த்து ஆளாக்க வேண்டும். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பதை நாமும் உறுதி செய்யவேண்டும்.
எமது வாழ்க்கையை நாம் மூன்று படிகளாகக் பிரிக்க முடியும். இருபது வயதுக்குட்பட்ட முதலாவது படியான மாணவப் பருவம், இருபதுக்கும் நாற்பதுக்கும் இடைப்பட்ட இரண்டாவது படியான தொழில் புரிந்து திருமணம் செய்யும் காலப் பருவம்; நாற்பது வயதுக்கு மேற்பட்ட மூன்றாவது படியான மற்றவருக்கென வாழும் காலப்பருவம் என்பவையே அவை மூன்றுமாகும். இவற்றில் முதலாவது மாணவ காலப்பருவத்தில் நாம் நமது தாய் தந்தையருக்காக வாழுகின்றோம். அவர்கள் விருப்பு வெறுப்புக்கமைய உண்டு, உறங்கி, உடையணிந்து சொன்ன சொற்கேட்டு அவர்கள் தீர்மானங்களையே அமுல் நடாத்துகின்றோம். முற்று முழுதாக நாம் அவர்களையே நம்பி அவர்களுக்காகவே வாழுகின்றோம்.
ஆனால் இரண்டாவது காலப்பகுதியான இருபது நாற்பதுக்கிடைப்பட்ட வயதுகளில் நாம் எமக்காக வாழுகின்றோம். நாம் விரும்பிய உடையணிந்து, விருப்பமான இடத்தில் தொழில் புரிவதுடன் விரும்பிய வாழ்க்கைத் துணையைக் கூடத் தெரிவு செய்கின்றோம். எமது ஆசைகளில் பெருமளவை நிறைவேற்ற இந்தக் கால இடைவெளியையே நாம் பெரும்பாலும் நம்பியிருக்கின்றோம். மூன்றாவது காலகட்டத்தில் முக்கியமாக நாம் எமது பிள்ளைகளுக்காகவே வாழுகின்றோம். பிள்ளைகளின் எதிர்கால வாழ்வைச் சிறப்பாக அமைக்க நாம் முயற்சிக்க வேண்டும். இவைமட்டுமன்றி, நமது குடும்பக் கெளரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதுடன், எமது அந்தஸ்தைச் சமூகத்தில் நிலை நிறுத்தவும் இக்காலத்தில் நாம் முயற்சிக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட, இம் மூன்றாவது காலப்பகுதியை குடும்ப வாழ்வில் ஈடுபட்ட அனைவரும் திருப்திகரமாக நிறைவேற்ற வேண்டும். கணவன் மனைவி பிரச்சினைகளெல்லாம் பிள்ளைகளுக்காக மறைக்கப்பட்டு, மறக்கப்பட்டுவிடவேண்டும்.
36

அவர்களின் நல்வாழ்வு மட்டுமே எமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். பிள்ளைகளுக்காக வேனும், பிரச்சினைகளையுடைய பெற்றோர்கள் தங்கள் வாழ்வை வளமுள்ளதாக மாற்ற முயல வேண்டும்.
சில வருடங்களுக்கு முன்னர், ஆனந்த விகடன் வார இதழில் "ரீன் ஏஜ்" என்ற கதைகள் எனத் தொடர்ந்து பல தனிக் கதைகள் வெளிவந்தன. இந்தக் கதைகளில் வெளிவந்த பல விடயங்கள் பெற்றோருக்கு மிகவும் உபயோகமானவை. பிள்ளைகளின் குண இயல்புகளைப் படம் பிடித்துக் காட்டுவனவாக அக்கதைகளில் பல அமைந்திருந்தன. "ரீன் ஏஜ்" ஆணுக்கும் பெண்ணுக்குமாக வெளிவந்த எனக்குப் பிடித்த இரண்டு கதைகளின் சாராம்சங்களை மட்டும் கீழே தருகின்றேன். இவை சிறிது மாற்றப்பட்டுள்ளன.
மாணவன் ஒருவன் பக்கத்துத் தெருவில் புளியங்காய் பறிக்கத் தனது நண்பர்களுடன் செல்கிறான். அவர்களைக் கீழே நிற்க விட்டு, இவன் மட்டும் மரத்திலேறிப் புளியங்காய் பறிக்கத் தொடங்குகிறான். தற்செயலாகச் சிறிது தூரத்திலுள்ள கிணற்றடியில் ஒரு இளம் பெண் குளிப்பதைக் கானுமவன், அதனை உற்று நோக்குகிறான். குளிக்கும் போது “சோப்" போடும் அந்தப் பெண்ணின் கை, கால், முதுகுப் பகுதிகள் அவன் கண்களுக்கு நன்கு தெரிகின்றன. முன்னொரு போதும் இதையிட்டுச் சிந்திக்காத அவன் உள்ளத்தில் இனம் புரியாத ஒரு இன்பம் ஊற்றெடுக் கின்றது. தனது நண்பர்களிடம் கூட இதைப்பற்றிச் சொல்லாமல் வீடு செல்லுமவன்; தொடர்ந்து வந்த பல நாட்களிலும் அதே இடத்திற்கு வந்து மரத்திலேறி அம்மாதிரியான காட்சி மீண்டும் தென்படுகின்றதாவென ஆவலுடன் பார்க்கின்றான்.
பெற்றோரின் கஷ்டம் காரணமாக அவள் அங்கு வேலைக்குத்தான் விடப்பட்டிருந்தாள். தூரத்து உறவினர்களான எஜமானும் எஜமானியும் அவளை நன்றாகவே நடாத்தினர். அவளைப் பார்க்கிலும் இரு வயது குறைந்த அவர்களது மகனுடன் அவள் சீண்டுவதையும் கூட அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவன் அவளிடம் அதிக பிரியம் கொண்டிருந்தான். துருதுரு வென்ற அவளுடைய வளர்த்தியும், கவர்ச்சியான சிரிப்பும் அவனை இன்பத்திற்குள்ளாக்கின. நாளில் பெரும்பகுதியை அவளுடனேயே கழிக்க அவன் விரும்பினான். ஆனால் அவனிடமிருந்து விலகியிருக்க நினைக்குமவள் மறைவாக இருந்து அவனைப் பார்த்து ரசிப்பாள். அவனுடைய பொருட்களை வேண்டுமென்றே ஒளித்து வைத்துவிட்டு அவனைக் கோபமடைய வைப்பாள். இரண்டும் கெட்டான் வயதென்பதால் இவற்றைப் பற்றி வீட்டிலும் யாரும் அலட்டிக் கொண்டதாகத் தெரியவில்லை.
இந்நிலையில், வீட்டில் விடுமுறைக்கெனக் குற்றாலம் செல்லத் திட்டமிட்டனர். அவளுக்கு இருப்பே கொள்ளவில்லை. அவனுடன் சேர்ந்து குற்றாலம் போவதை நினைக்க அவளுக்குப்
37

Page 34
பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அவள் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவனோ இவளைப் போல் இரட்டை மகிழ்ச்சியிலிருந்தான்.
நீண்ட பயணத்தை முடித்துக் குற்றாலம் வந்த முதல் நாள் அவர்கள் ஒய்வெடுத்தனர். அவள் யாருடனும் அதிகமாகப் பேசவில்லை. மறுநாள் கூட யாரையும்; அந்த அவனையும் கூட அவள் ஏறெடுத்தும் பார்க்கவில்லை. பிரயாணத்தின் போது இருந்த கலகலப்பும் அவளிடம் காணப்படவில்லை. எஜமானி கேட்டதற்குத் தலைவலியென்றும் உடனே தனது தாயாரிடம் போக வேண்டுமென்றும் அடம்பிடித்தாள். நெடுந்தூரத்திலுள்ள ஊருக்கு உடன் செல்ல முடியாததைச் சொல்லி எஜமானும் கோபத்தில் சத்தமிட்டார்.அவள் ஒன்றாலும் சமாதானப் படவில்லை. இறுதியில் அவர்களுடன்கூட வந்த முதியவரொருவருடன் அவளைத் தாயாரிடம் ஊருக்கு அனுப்பிவிட்டார்கள்.
குற்றாலத்தில் விடுமுறையை முடித்து அவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது அவளின் தாயார் அங்கே நின்று கொண்டிருந்தாள். குற்றாலத்திலிருந்து வீட்டிற்கு வந்த மறுநாள் அவள் “பெரிய மனுஷி” ஆகி விட்டதை எஜமானியிடமும் எஜமானிடமும் அவளுடைய தாயார் சொன்னாள். அறைக்குள்ளிருந்த அவன் நன்கு விளங்காத ஆனால் சிறிது விளங்கிய அவ்வுரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தான்.
பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் அவர்களின் வேளைகளைச் செய்து முடிக்கவே பெற்றோருக்கு நேரம் போதுமானதாக இருப்பதில்லை. இந்நிலையில் கணவனுடன் மனைவியும் தொழில் புரியச் செல்லும் குடும்பங்களில் ஏற்படும் “ரகளை"க்குக் குறைவே இருக்காது. இதனாலும் சில வேளைகளில் கணவன் மனைவியிடையே அமைதியின்மை ஏற்படுகின்றது.
L LL L LLLYL L L YYYYLYYLLYYYYYYZY YYLLLYLLL LL YZ YYYLLY LLLLLL LLLLLLY
“...சில நேரங்களில் இரக்கம் என்பது கடினசித்தம் என்ற
உருவில் வெளிப்படுத்தப்படுகின்றது. ஆனால் யதார்த்தம் எப்போதும்
மாறுவதே இல்லை. சிறுவயதில் பள்ளிக் கூடம் செல்ல மறுக்கும்
பிள்ளைகள் அடித்தே பள்ளிக் கூடம் ஒட்டப்படுகிறார்கள். அவர்கள்
சற்றுக் கண்டிக்கப்பட்ட பின்னரே தங்களுடைய பாடங்களைக்
கற்கிறார்கள். பள்ளிப் பருவத்தில் சிறுவர்களின் விருப்பப்படி
நடப்பதுதான் கருணை என்றால் அவர்களின் எதிர்காலம் பாழ்பட்டே போகும்."
- முகம்மது அல் கஸ்ஸாலி
'இஷ்லாமிய ஒழுக்க மாண்புகள்" தமிழாக்கம் - மு. குலாம் முஹம்மது
38

கல்விவேறுபாடும் தொழிலும்
"...ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்; வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போமென்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்."
- மகாகவி பாரதியார் கவிதைகள்
ப0னைவி கணவனை விடக் கூடுதலாகக் கல்வி கற்று இருக்கும் குடும்பங்களில் பிரச்சினைகளும் கூடுதலாகவே இருக்கும். சாதாரணமாகச் சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் கணவனுக்குப் பொத்துக் கொண்டு கோபம் வரும். என்னதான் வெளிப்பேச்சுக்கு இருவரும் மகிழ்ச்சியாக இருந்தாலும் கூட, கணவனுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும். இதற்கு முக்கிய காரணம் கணவன் மனைவியைத் தன்னுடன் சமனாக அல்லது மேலாக நோக்க விரும்பாமையே ஆகும். எனவே திருமணம் செய்ய முன்னரேயே இவ்வாறான திருமணங்களை இயன்றளவு தவிர்க்க வேண்டும், அல்லது குறைத்துக் கொள்ள வேண்டுமென்பதே எனது கருத்தாகும்.
39

Page 35
  

Page 36

வேலை செய்யும் கம்பெனியில் வேலைகளை முடித்துவிட்டு இரவு எட்டு மணிக்கு மேல், மனேஜரின் காரில் வீட்டிற்கு வந்து இறங்கினால் அதனை ஏற்றுக் கொள்ளுகின்றோமா? இல்லை. அதேபோல் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கு அந்தரங்கக் காரியதரிசியாகக் கடமைபுரியும் திறமை வாய்ந்த எமது மனைவியை உத்தியோக அலுவல்களுக்கு அவருடன் வெளியூர் சென்று தங்கி வர அனுமதிக்கின்றோமா? இல்லவே இல்லை. ஏனென்றால், அங்குதான் எமது சமூக அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகள் எம்மைத் தடுக்கின்றன. உண்மையில் கணவன் தனது மனைவிமீதுள்ள நம்பிக்கையில் மேற்குறிப்பிட்டுள்ள செயல்களுக்கு அனுமதித்தாலுங் கூட, ஊரும் உலகும் அதனை அனுமதிக்காது. மேற்குறிப்பிட்டுள்ள நெருக்கடிகள் போல் எமது நாட்டில் இப்போது அதிகம் இல்லாவிட்டாலும் கூட, தொழில் புரியும் பெண்கள் பல சிரமங்களைக் கணவன் மாரிடமிருந்தும், வீட்டிலுள்ள ஏனையோரிடமிருந்தும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. கொழும்பு போன்ற சில பெரிய நகரங்களில் ஒரு சிறிய அறையினுள் இரண்டு பேர் மட்டும் தனித்திருந்து பல மணி நேரங்களுக்கு வேலை செய்ய வேண்டிய சந்தர்ப்பங்கள் வந்து விடுகின்றன. இவ்வேளையில் ஆண், பெண் இருபாலாரும் அங்கு கடமை புரியும் போது நாளடைவில் வீண் பிரச்சினைகளும் உருவாக வாய்ப்பேற்படுகின்றது. இவ்வாறே, இரவிலும் வேறு ஆடவர்களுடன் கடமை புரியவேண்டிய சந்தர்ப்பங்களும் பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களுடன் அளவு மீறிப் பழகுவதையோ, வீணாக அரட்டையடித்துப் பொழுது போக்குவதையோ பெண்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தன்னைத் தானே காத்துக் கொள்ள முடியாத பெண்ணை வேறுயாரும் பாதுகாத்துக் கொள்ள முடியாது என்பதை ஞாபகத்தில் இருத்திக் கொள்ள வேண்டும். முள்ளில் சேலை விழுந்தாலும் சேலையில் முள் விழுந்தாலும் நட்டம் சேலைக்கே யென்று அனுபவசாலிகள் கூறியுள்ளதை நாம் செவிமடுக்க வேண்டும்.
இக்காலத்தில் அலுவலக அமைப்பு முறைகளும் கடமை நேரங்களும் கூடப் பெண்களின் மனதில் சபலத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளன. அதிகமான அலுவலகங்களில் இரட்டை அர்த்தமுள்ள பேச்சுக்களையும், நகைச்சுவையென்ற பெயரில் சக ஆண் ஊழியர்கள் கூறும் ஆபாச “ஜோக்'குகளையும் கூடப் பெண் ஊழியர்கள் கேட்க வேண்டியே உள்ளது. இதுமட்டுமன்றி ஆண் அதிகாரிகளின் கண்டிப்புக்கும் (?) கட்டளைக்கும் (??) பெண் ஊழியர்கள் அனுசரித்தே நடக்க வேண்டியுள்ளது. இவ்வகையான பிரச்சினைகளையெல்லாம் ஆண்கள் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும். தொழில் புரியும் மனைவியை உடையவர்கள்
41

Page 37
அவர்கள் வேலை செய்யும் அலுவலகச் சூழ்நிலையையும் அவர்களின் பொறுப்புக்களையும் விளங்கி அவர்களுக்கு ஒத்துழைப்புக் கொடுத்து ஒத்தாசையாக இருந்திட வேண்டும்.
கணவனுக்கு உத்தியோகம் ஒன்றும் இல்லாத போது மனைவியின் உழைப்பில் தங்கியிருக்கும் சில குடும்பங்களும் உண்டு. இவ்வாறான குடும்பங்களில் கணவன் வீட்டிலிருந்து சிறிய வேலைகளையும் செய்து கொண்டு பிள்ளைகளையும் கவனிக்க மனைவி வேலைக்குச் சென்று வருவாள். இவ்விதமான வாழ்க்கை முறை கீழைத் தேசங்களிலும் வெற்றியளித்து வருவதாக அண்மையில் இந்தியாவின் பல பாகங்களிலும் ஆய்வு நடாத்திய பிரபல சஞ்சிகையான "இந்தியா ருடே” குறிப்பிட்டுள்ளது. ஆனால் இவ்வாறான தம்பதிகள் சந்தோசமாக இருப்பது போல் காணப்பட்டாலும் கணவனுக்கு நிரந்தர உத்தியோகம் இல்லையென்னும் கவலை இருவர் மனதிலும் இருக்கும் என்பதே உண்மை நிலையாகும். இங்கும் கணவனைத் திருப்திப் படுத்த மனைவி பல தியாகங்களைச் செய்ய வேண்டியிருக்கும். கணவனுக்கு ஏற்படும் சந்தேகங்கள் மனைவியிடம் கைநிறையக் காசு புழக்கும் போது அவனடையும் மனமாற்றங்கள் என்பன இவற்றிற்குக் காரணமாய் அமைகின்றன.
மனைவி வேலைக்குச் சென்று கைநிறையச் சம்பாதிப்பதால் கணவனை உதாசீனம் செய்யவும் கூடாது. வீட்டிலிருக்கும் போது கூடிய வரை அவனைக் கவர்ந்து அவனன்பைப் பெற முயற்சிக்க வேண்டும். கணவன் சுகயினமாக இருக்கும் போது அல்லது அவனுக்கு அத்தியாவசிய தேவை ஏற்படும் போது இயன்றவரையில் லிவு எடுத்து அவனுக்கு ஒத்தாசையாக வீட்டிலிருக்க முயல வேண்டும். தனது அலுவலக அதிகாரிகளைப் பற்றியோ அல்லது வேறு ஆண் ஊழியர்களைப் பற்றியோ அடிக்கடி வாயாரப் புகழ்வதைக் கட்டுப்படுத்த வேண்டும். கற்புள்ள பெண்ணாய் இருப்பது மட்டுமல்ல, அவதூறான வீண் வதந்திகள் வராமல் தடுப்பதிலும் ஒரு சிறந்த மனைவியின் வெற்றி தங்கியிருக்கின்றது. சந்தேகம் ஒரு தீராத புற்றுநோய். இந்நோய் பிடித்துச் சின்னா பின்னமான குடும்பங்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காது.
மனைவிக்கு மட்டுமின்றித் தொழில் புரியும் கணவனுக்கும் சில கடமைப்பாடுகள் உண்டு. அவன் தனது அலுவலகங்களிலோ அல்லது வெளியிலோ பெண்களுடன் பழகும் போது மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும். உடன் வேலை செய்யும் பெண்கள் வேறு ஆண்களின் மனைவிகள் அல்லது மனைவியாகப் போகிறவர்கள் என்னும் மனப்பாங்கு நமக்கு இருந்திட வேண்டும். மகிழ்ச்சியான ஒரு குடும்பத்தைச் சிதைத்த பாவத்தை நாம் தேடிக் கொள்ளக் கூடாது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல,
42

ஆணுக்குமுரிய தொன்றாகையால் வீணாண பிரச்சினைகளுக்கு இடம் கொடாமல் நமது மனைவி மீது விசுவாசமாக வாழ்ந்தால் எமது வாழ்க்கை வெற்றிகரமானதாக அமையும். எனவேதான் ஒருவனுக்கு ஒருத்தியென்று எம் முன்னோர்கள் குறிப்பிட்டுச் சென்றார்கள்.
இவை மட்டுமின்றிக் கணவன் மனைவி இருவருமே வீட்டிற்கு வரும் அலுவலக நண்பர்கள் உட்பட அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்க வேண்டும். உறவினர்கள் மட்டுமன்றி வீட்டிற்கு வரும் அனைவரையும் வெளிவாசல் வரை சென்று அழைத்து வருவதுடன் அவர்கள் விடைபெற்றுச் செல்லும் போதும் அதே வாசல் வரை சென்று வழியனுப்பி வைக்கவும் வேண்டும். எமது இருப்பிடத்தைத் தேடிவரும் எல்லோருடனும் அன்புடன் அளவளாவி அவர்களை அனுப்பிவைக்க முயல வேண்டும். இவ்வாறான செயல்களைச் செய்து கணவனிடமும் சமூகத்திடமும் நல்ல பெயரைப் பெறுவது வேலைக்குச் செல்லும் பெண்களைப் பொறுத்தவரை இலகுவான செயலல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.வீட்டில் பல்வேறு பிரச்சினைகளுக்கும் ஈடுகொடுத்து மனைவி செய்யும் வேலைகளைப் பாராட்டும் பணி ஒவ்வொரு கணவனுக்கும் கடமையாக அமைகின்றது. 24 மணி நேரமும் குடும்பத்தின் நல்வாழ்வொன்றையே குறிக்கோளாகக் கொண்டு இயந்திரமாக உழைக்கும் பெண்கள் ஈடிணையற்றவர்கள். அண்மையில் கீழைத்தேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒரு கணிப்பின்படி, மத்திய தரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குடும்பப் பெண் வருடாந்தம் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டுவேலைகளைச் செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வீட்டு வேலைகளுடன் அலுவலகங்களிலும் பணி புரியும் பெண்களின் வாழ்க்கை மிகுந்த சோதனைகள் நிறைந்ததாகவும் அமைந்து விடுகிறது. எனவே குடும்ப அங்கத்தினர்கள் அனைவரும் இவ்வாறான பெண்கள் மீது அனுதாபம் கொண்டு அவர்களைப் பெருமைப் படுத்த வேண்டும். இல்லாவிட்டால் காலப் போக்கில் அவர்களுக்குத் தங்கள் குடும்பத்தின் மீது வெறுப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.
இவ்வாறு வீட்டு வேலைகளுக்கும் அலுவலக வேலைகளுக்குமிடையே ஓய்வில்லாமல் ஈடுபடும் தம்பதிகளுக்கு மன ஆறுதல் தேவைப்படும் எதிர்பார்க்கும் நிம்மதியும் ஆறுதலும் வீட்டில் அவர்களுக்குக் கிடைக்காத போது தம்மீது அனுதாபம் கொண்ட வேறொருவருடன் தொடர்புகளை ஏற்படுத்த அவர்கள் விரும்புவர். இத் தொடர்புகள் சில வேளைகளில் முறையற்றதாக மாறும் போது விபரீத விளைவுகள் ஏற்படுவதுடன் குடும்பமும் பாழ்பட ஆரம்பிக்கின்றது.
43

Page 38
LLLLLLLLYLLLLLYYLLLLYYYYYYLLLLLLLYLLLLLL LL L YLYLYLLLLLL
".அந்த வேர் நன்றாக இருந்தால் தான் மரம் விழாமல் நிமிர்ந்து நிற்கும். நிலத்திலுள்ள ஈரத்தையும் உரத்தையும் உறிஞ்சி மரத்திற்கு உணவாக அளித்து, மரம் வளர்ந்து கிளைத்துப் பூத்துக் காய்த்துக் கனிந்து பயன் தரக் காரணமான வேர் போல, இல்லறமாகிய மரத்திற்கு வேராகி வாழ்பவள் மனைவி. அவள் மாண்புடையவளாக இருந்தால்தான் இல்லறம் சிறப்படையும்."
- "பெரிய புராணத்தில் சமுதாய நோக்கு"

தவத்திரு சுந்தர சுவாமிகள்
கணவன்/மனைவி வேறொரு தொடர்பு
"......... ஈண்டு நானிருந் தின்னுயிர் மாயினும்
மீண்டு வந்து பிறந்து தன் மேனியைத் தீண்டலாவதொர் தீர்வினை தீர்வரம் வேண்டினாள் தொழுதென்று விளம்புவாய்.
- கம்பராமாயணம்
5ணவன் அல்லது மனைவி வேறொருவருடன் பாலியல் ரீதியாகத் தொடர்புகள் கொண்டிருப்பது; அல்லது மிக நெருக்கமாகச் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பழகுவது பலகுடும்பங்களில் அமைதியின்மையை ஏற்படுத்தி இறுதியில் நிரந்தரப் பிரிவிற்கே வழி வகுத்திருக்கின்றது. இவ்வாறான நிலை ஏற்படப் பாலியல் குறைபாடுகள் மட்டுமின்றி வேறு சில நடவடிக்கைகளும் காரணியாய் அமைந்து விடுகின்றன. தம்பதிகரிடையே ஏற்படும் சந்தேகமும் வேறு ஒருவருடன் மற்றவரைத் தொடர்பு கொள்ளச் செய்யும் ஊக்கியாக இயங்குகிறது. ஒருவர் மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும் உச்ச இன்பத்தைத் தாம்பத்திய உறவின் போது பெறாமையும்
45

Page 39
இவ்வாறு வேறு தொடர்புகளைத் தேட அவர்களைத் தூண்டுகின்றது. குடும்பத்தில் இவ்விதம் ஏற்படும் முறையற்ற மூன்றாவது தொடர்புக்கு கணவன் மனைவி இருவருமே காரணகர்த்தாக்களாக இருந்து விடுகின்றனர்.
விரைவாக உணர்ச்சி வசப்படும் ஆண்கள் பெண்களை விட விரைவாகவே தாம்பத்திய உறவிலும் திருப்தி யடைந்து விடுகின்றனர். ஆனால் பெண்களைப் பொறுத்த வரை அவர்கள் மிக இலகுவில் தங்கள் கட்டுப்பாடுகளை இழந்து உணர்ச்சி வசப்படமாட்டார்கள். இதனை அறியாத பல ஆண்கள் தாம்பத்திய உறவின் போது பெண்களைப் பற்றி அதிகம் கவலைப் படுவதில்லை. இச் செயலால் ஏமாற்றமடையும் மனைவி தொடர்ந்தும் அவ்வாறு நடைபெறும் சந்தர்ப்பங்களில் தன்னைத் திருப்திப் படுத்தக் கூடிய வேறொரு ஆணை நாட முற்படுகின்றாள். இதனால் குடும்பத்தில் புயல் வீச ஆரம்பிக்கின்றது. மனைவி தன்னை எவ்வளவு திருப்திப் படுத்தினாலும் வேறு பெண்களையும் அனுபவிக்க வேண்டுமென்ற ஆசையுள்ள ஆண்களும் சிலர் எம்மிடையே கர்ணப்படுகின்றனர். இவ்வாறே கணவன் மூலம் மகிழ்ச்சியான் குடும்பத்தை நடாத்தும் சில பெண்களும் வேறு ஆடவர்களை நாடி அவர்களுடன் இரகசியத் தொடர்புகளை ஏற்படுத்தவும் விரும்புகின்றனர்.
நாள் முழுவதும் கடுமையாக உழைத்துவிட்டு மிகுந்த களைப்புடன் வீட்டுக்கு வந்து ஒய்வெடுக்க உறங்கும் கணவனை அல்லது மனைவியை மற்றவர் மதித்து நடக்க வேண்டும். ஒருவருக்கு ஒரு தினத்தில் உறவில் நாட்டம் இருக்கும் போது மற்றவர் அதற்கு ஆயத்தமாக இருக்க மாட்டார். இவ்வாறான வேளைகளில் தம்பதிகளிடையே புரிந்துணர்வும் கட்டுப்பாடும் இருக்க வேண்டும். மனைவியைக் கணவன் கற்பழித்தான் என்று குறிப்பிடும் செய்திகள் மேலை நாடுகளில் நடப்பதாகப் பத்திரிக்கைகளில் அன்றாடம் நாம் பார்க்கின்றோம். இருவரும் இணங்கி, இணைந்து கொள்ளுவதே தாம்பத்திய உறவு என்பது இதன் கருத்தாகும். சாதாரணமாக, சுகதேகியாக வாழவிரும்பும் குடும்ப அங்கத்தினர்கள் மாதத்தில் இரண்டு தடவைகள் மட்டுமே தாம்பத்திய உறவில் ஈடுபடவேண்டுமெனப் பண்டைய நூல்களில் குறிப்பட்டுள்ளது. ஆனாலும் எமது நாட்டுப் பெண்கள் கணவனுக்குத் தேவை ஏற்படும் போது அவர்கள் உடல் உளரீதியில் ஆயத்தமில்லாத போதும் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு கணவனுடன் ஒத்துப் போவதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
சில ஆண்களுக்கு எந்த வேளையிலும் பெண்கள் மத்தியிலிருந்து அவர்களைச் சீண்டிக் கொண்டிருக்கவே பிடிக்கும். ஒரு பெண்ணாவது அவர்களுக்குப் பக்கத்தில் எப்போழுதும் இருக்கவேண்டும். இவ்வாறே சில பெண்களும் ஆண்களுடன்


Page 40

தொடர்புகளை வைத்திருக்கவே விரும்புவர். திருமணமான வயதானபலரும் இவ்வாறு நடந்து கொள்வதை நாம் காணமுடியும். இதற்கு முக்கிய காரணம் இவர்களுடைய திருமண வாழ்வில் வெளியில் சொல்ல முடியாத சில குறைபாடுகள் உள்ளமையாகும். பல காரணங்களுக்காக முறையற்ற தொடர்புகளை இவர்கள் தங்களிடையே ஏற்படுத்திக் கொள்ளாத போதும், வதந்திகள் காரணமாக இவ்வாறான பல குடும்பங்களிடையே அமைதியின்மை ஏற்படுவதை நாம் கண்டிருக்கின்றோம். ஆங்கிலத்தில் ஒரு பழ மொழி சொல்லுவார்கள். அதாவது, உண்மை வாசற் படியைத் தாண்டு முன்னரே பொய் ஊரை வலம் வந்து முடித்து விட்டிருக்கும் என்பது அதன் கருத்தாகும். இது குடும்ப வாழ்வில் ஈடுபட்டிருக்கும் கணவன் மனைவியருக்கு மிகவும் பொருத்தமான தொன்றாகும். ஒருவரைப் பற்றி ஊரார் சொல்லும் கதைகளை மற்றவர் அலசி ஆராய வேண்டும். உண்மைகளைக் கண்டறிந்து பொருத்தமான முடிவுகளை எடுத்துச் செயல்படுத்த வேண்டும். இச் செயல்பாடுகள் கூடுமானவரை குடும்ப வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்துவனவாக அமையக் கூடாது.
சந்தேகம் ஒரு குடும்பத்தின் வாழ்வைக் கெடுத்து விட்டதற்கு 1987 இல் நடைபெற்ற ஒரு சம்பவத்தை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். வங்கியொன்றில் இலிகிதராகப் பணிபுரிந்த ஒருவர் தனது மனைவியுடனும் இரண்டு பிள்ளைகளுடனும் பண்டாரவளையில் குடியிருந்தார். கணவனுக்குச் சிறிது குடிப்பழக்கம் உண்டு. கண்ட பெண்களுடனும் கல கலப்பாகப் பேசுவார். வேறு தீய பழக்கங்கள் எதுவும் அவரிடம் இல்லை. பெண்களுடன் அவர் (5 தடவையேனும் முறையற்ற தொடர்புகளைக் கொண்டிருந்ததில்லை. சதாகாலமும் தனது குடும்பத்தைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியுமே கவலைப்பட்டுக் கொண்டிருப்பார். அவருடைய மனைவி ஒரு சந்தேகப் பேர் வழி. கணவனைக் கண்ணும் கருத்துமாக அவதானித்துக் கொண்டிருப்பவள்.
குறிப்பிட்ட உத்தியோகத்தர் வங்கியில் சேமிப்புக் கணக்குத்திறக்கும் பகுதியில் வேலை செய்யும் போது ஒரு இளம் பெண் வங்கிக்கு வந்தாள். சகல பத்திரங்களையும் ஒழுங்காகக் கொண்டுவந்திருந்த அவளுக்கு உடனடியாக வங்கிப் புத்தகம் தேவைப்பட்டிருக்கிறது. ஆனால் அவளிடம் தனது அடையாளத்தை உறுதி செய்ய ஆள் அடையாள அட்டை இருக்கவில்லை. அவள் கொண்டு வந்திருந்த போட்டோவும் தகுதி வாய்ந்தவர்களினால் உறிதி செய்யிப் பட்டிருக்கவுமில்லை. இயல்பாகவே அனைவருக்கும் உதவி செய்யும் குறிப்பிட்ட இலிகிதர் அந்தப் பெண்ணுக்கும் கணக்கைத் திறந்து புத்தகத்தைக் கொடுத்து அனுப்பியதுடன் போட்டோவை உறுதிப்படுத்திப் பிற்பகலில் அதனைக் கொண்டுவரும் படியும் அனுப்பி இருக்கின்றார்.
47

Page 41
மேற்படி உத்தியோகத்தர் மதிய உணவை முடித்துவிட்டுக் கடமைக்குத் திரும்பிய வழியில் அந்த இளம் பெண்ணை மீண்டும் கண்டார். அப்பெண் குறிப்பிட்ட போட்டோவை வங்கிக்குக் கொடுப்பதற்காகவே வந்து கொண்டிருந்தாள். வழியிலேயே அப்பெண்ணிடமிருந்து போட்டோவைப் பெற்றுக் கொண்ட அவ் ஊழியர் அவளையும் வங்கிக்கு வரவேண்டிய தில்லையெனக் கூறித் திருப்பி அனுப்பிவிட்டார். வேலைப் பளுகாரணமாக அப் போட்டோவை தனது சேட் பையிலிருந்து எடுத்து உரிய ஆவணங்களுடன் அன்றைக்கே வைப்பதற்கு அவர் மறந்து அதனை வீட்டிற்குக் கொண்டு சென்று விட்டார். அன்றிரவு அவருடைய சேட் பையைப் பார்த்த அவருடைய மனைவி பத்திரகாளியானாள். கணவன் எவ்வளவு கூறியும் அவர்களிடையே பரஸ்பர உறவு இன்று வரை ஏற்படவே இல்லை. ஊர் உலகிற்காகவும், பிள்ளைகளுக்காகவும் அவர்கள் கணவன் மனைவியாக இன்னும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
சில சோடிப் பொருத்தங்கள் சரியாக அமையாததும் தவறான தொடர்புகள் ஏற்படக் காரணமாய் உள்ளன. பல்வேறு பிரச்சினைகளாலும் வயது முதிர்ந்த கணவனை அடையும் இளம் மனைவி அவனால் திருப்தியடைய முடியாத போது இவ்வாறான சந்தர்ப்பங்கள் உண்டாகின்றன. இவ்வாறே வயது சென்ற பெண்ணை மனக்கும் இளம் கணவன் தனக்கு அவளால் ஈடு கொடுக்க முடியாதெனக் கண்டால் வேறு பெண்களை நாட முற்படுவான். திருமண ஒழுங்குகள் மேற்கொள்ளும் போதே வயது வித்தியாசங்கள் உடல் பொருத்தம் பார்ப்பதெல்லாம் மிக முக்கியமென நாம் உணரவேண்டும். அவ்வாறு செய்யாத இடங்களில் ஆசைகளையும் எதிர்பார்ப்புக்களையும் கட்டுப்படுத்திக் கொண்டு அமைந்த வாழ்க்கையைத் திருப்தியுடன் வாழ்ந்து முடிக்க வேண்டும். ஆண்கள் தங்களை விட வயது கூடிய பெண்களுடன் உடலுறவிலான தொடர்புகளை ஒரு போதும் வைத்திருக்கக் கூடாதென அறிஞர்கள் கூறியுள்ளனர். அவ்வாறு தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் நாளடைவில் உடல் மெலிந்து களையிழந்து போவதாகவும் அனுபவங்கள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. கற்றோர்கள் கருத்துப்படி ஐந்திற்கும் பத்துக்குமிடைப்பட்ட வயது மனைவி கணவனை விட இளமையாக இருந்தால் உடல் ரீதியில் அது சரியான சோடி எனக் கொள்ளப் படுகின்றது.
கணவன் மனைவி இருவரும் இளமையில் நீண்ட காலம் தூர இடங்களில் இருப்பதும் முறையற்ற தொடர்புகளுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றது. இக்காலத்தில் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்லுமொருவர், தனது வாழ்க்கைத் துணையின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கவும் தவறக் கூடாது.
48

ஒருவர் வெளிநாடு செல்லும்போது மற்றவர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் செய்யும் தவறுகள் பெரும்பாலும் அவர்களின் அமைதியான குடும்ப வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தி விடுகின்றது.
தம் மனைவியரைத் தனிமையில் ஊரில் விட்டு, பொருள் தேடி வெளிநாடு செல்லும் கணவன்மார் இவ்விடயத்தை உணரத் தயங்கக் கூடாது. பலர் வெளிநாட்டிலிருந்து ஊர்திரும்பியதும், அழகான பெண்களைத் திருமணம் செய்து, அவர்களுடன் சிறிய காலம் மட்டுமே குடும்பம் நடாத்தி விட்டு மீண்டும் வேலை தேடி வெளிநாடு சென்றுவிடுகின்றனர். நல்லதொரு குடும்பப் பெண் தனது பாலியல் தேவைகளையும் உணர்வுகளையும் இன்னுமொரு ஆணிடம் அவன் கணவனாக இருந்தாலும் நேரடியாகச் சொல்லுவதற்குத் தயங்குவாள். இயற்கையாகவே பெண்களிடமுள்ள நாணம் அதனைத் தடை செய்யும். முன்னொருபோதும் ஆண்களின் வாசனையே அறிந்திராத அவ்வாறான பெண்கள் சிறிய தொருகாலம் கணவனின் அரவணைப்பிலிருந்து விட்டு, அவன் வெளிநாடு செல்லும் போது வேதனைப் பட்டுக் கொண்டே, வாழ்நாளைக் கடத்துவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் சூழ்நிலைகள் பாதகமாக அமையும் போது பெண்கள் தவறிழைக்கச் சந்தர்ப்ப மேற்படுகின்றது. எவ்வளவுதான் பொருளாதாரப் பிரச்சினைகள் இருந்த போதும், கணவனும் மனைவியும் வாழ்க்கையை இளமையில் முறையாக அனுபவிப்பதன் மூலமே தவறுகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். வாழ்க்கை ஒரு பருவ காலப் பயிர். அதனை உரிய வேளையில் முறைப்படி செய்தாலேயே நல்ல அறுவடையைப் பெற முடியும்.
அறிந்தோ அறியாமலோ ஒருவரின் தவறான தொடர்புக்கு இன்னொருவர் வழியேற்படுத்திக் கொடுக்கும் சந்தர்ப்பங்களும் எம்மிடையே உண்டு. உடன் பிறந்த சகோதரிகள் தவிர, ஏனைய பெண்கள் ஆண்களுடன் நெருக்கமாகப் பழகும்போது அதிகமானவர்களின் மனதில் அது சபலத்தை உருவாக்குகின்றது. இவ்வாறே, பெண்களின் விடயத்திலும் இருப்பதால் நாம் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லதாகும். இதற்காகப் புனிதமான உறவு முறைகளைக் கேவலப்படுத்துவதுடன், அவர்களை எப்போதும் சந்தேகம் கொண்டு பார்ப்பதும் தவிர்க்கப்படவேண்டும். மனைவியின் சகோதரிகள் ஒரே வீட்டில் தங்கும் போது கணவனுடன் அவர்கள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்கள், கணவனுடன் தனித்து விடப்படும் வேளைகளில் அவர்களிடையே ஏற்படும் தொடர்புகள் என்பவற்றால் சில வேலைகளில் கணவனைச் சகோதரிகளுக்குத் தாரைவார்க்கும் நிலையை மனைவிக்கு ஏற்படுத்துகின்றன. இவ்வாறே வீட்டில் இளம் பெண்களை வேலைக்கமர்த்தி கணவனின் வேளைகள் உட்பட எல்லாவற்றிற்கும் வேலைக்காரியை நம்பி வீட்டை அவளிடம்
49

Page 42
ஒப்படைக்கும் போது சில வேலைகளில் கணவனையும் அவளிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை மனைவிக்கு ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதை கூடுமான வரையில் புத்தி சாலியான மனைவி தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதே போல் நகரப் பகுதிகளில் வசிக்கும் பெரிய குடும்பங்கள் எனக் கருதப்படும் சிலவற்றில் சாரதியுடன் அல்லது வேலைக்காரனுடன் வீட்டு எஜமானி தகாத தொடர்புகளை வைத்திருப்பதும் சிலவேளைகளில் நடப்பதுண்டு. வேலைக்குச் செல்லும் கணவன் வேலை முடிந்து கிளப், பார் (Club, Bar) என்று சுற்றி விட்டு இரவு 10 மணிக்குப் பின்னரே வீடு திரும்புவான். வீட்டு வேலைகள் உட்பட மனைவியைக் கடைக்கு அழைத்துச் செல்லுவது எல்லாவற்றையும் கணவன் வேலைக்காரர்களிடமே ஒப்படைப்பதால் மனைவிக்கும் அவர்களுடன் முறையற்ற தொடர்புகளை வைத்திருப்பது இலகுவாகின்றது. இவ்வாறான தொடர்புகளில் அதிகமானவை வெளி உலகிற்குத் தெரியாமலேயே மறைக்கப்பட்டுவிடுகின்றன.
சில குடும்பங்களில் வளர்ந்த பிள்ளைகள் இருந்தபோதும் பெற்றோர் இளமையான தோற்றத்தையும் குறைந்த வயதையும் உடையவர்களாக இருப்பர். சிறிய வயதில் திருமணம் செய்து குறுகிய காலத்துக்குள் குழந்தைகளைப் பெற்றுவிடுவதால் இவ்வாறான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் கணவன், மனைவி இருவருக்குமே வாழ்க்கையை அனுபவிக்கும் காலப்பருவம் கடந்து விடுவதில்லை. இவ்வாறான குடும்பங்களில் கணவன் தனது தேவைக்காக மனைவியை அழைக்கும் போது பல காரணங்களுக்காக அவள் மறுத்து விடுவதுண்டு.
வளர்ந்த பிள்ளைகள் இருக்கும் வீட்டில் கணவன் மீது எவ்வளவு ஆசையைக் கொண்டுள்ள பெண்ணும் முதலில் சிறந்த தாயாகவே இருக்க விரும்புவாள். அதன் பின்னரே, பிள்ளைகள் அறியாதவாறு கணவனை நாட விரும்புவாள். பிள்ளைகளின் குண இயல்புகளைப் பெருமளவில் அறிந்திராத, புரிந்துணர்வற்ற கணவன் சில வேளைகளில் தனது மனைவியைத் தவறாக எடைபோடுவதும் உண்டு. இதனால் அவசரத்தில் சிலர் எடுக்கும் முடிவுகள் குடும்பத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துகின்றன. இவ்வாறு; நல்லதொரு குடும்பப் பெண்; கணவனுக்கு மனைவியாகவும் அவன் ஆசைகளைத் தீர்ப்பவளாகவும், பிள்ளைகளுக்குச் சிறந்த தாயாகவும், வீட்டிற்குச் சிறந்த மருமகளாகவும் தோற்றமளித்து எல்லோரையும் திருப்திப் படுத்துவது இலகுவான செயலென்று ஆண்கள் நினைத்தால் அது இமாலயத் தவறாகும். .
சில ஆண்கள் தங்கள் மனைவியரின் அலங்காரத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில் உடைகள் அணிவதில்லை. இதைத்
SO

தவிர, குடும்பத்தின் கெளரவம், உத்தியோகத்தின் மதிப்பு என்பவற்றையும் நாம் அவர்களின் உடைகளிலிருந்து மதிப்பிடமுடியாது. இவ்வேளைகளில் எடுப்பான மனைவிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களாக இவை அமைகின்றன.
இவ்வாறே, சில பெண்களும் தங்கள் தாம்பத்திய வாழ்வில் இரண்டு மூன்று குழந்தைகளைப் பெற்று முடிந்ததும் உடையலங்காரத்தில் தங்களைக் கவனிக்காமல் விட்டு விடுகின்றனர். இவர்கள் ஒழுங்காகக் குளிப்பதோ அல்லது பொருத்தமான உடைகளை அணிவதோ இல்லை. திருமணம் செய்ய முன்னர் அழகு தேவதையாகப் பவனி வந்த இவர்கள், திருமணம் முடிந்த பின்னர் இவ்வாறு மாறிவிடுவதுண்டு. இதுவும் நாளடைவில் கணவனின் மனதைப் பாதிப்பதுடன் அவனுடைய ரசனையிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தூண்டுகின்றது. இவ்வாறான வேளைகளில், அழகாக உடுத்தும் பெண்ணுடன் தொடர்புகளை ஏற்படுத்த அவனுடைய நிலையில்லா மனம் ஆசைப்படுகிறது. எனவே, குடும்பப் பெண்கள் அனைவரும் எந்த நேரமும் துப்பரவாகத் தூய உடையுடன் இருப்பதுடன், தங்கள் கணவனைக் கவரும் விதத்தில் அலங்காரமாகவும் இருப்பது அவசியமாகின்றது.
இன்னும் சிலர் வீட்டில் குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருந்து கொண்டே வேறு சிலருடனும் பாலியல் தொடர்புகளை வைத்திருப்பர். பலருக்கும் தெரியாத இவ்வித தொடர்புகளை ஆண்கள் மட்டுமன்றிப் பெண்களும் கொண்டிருப்பது அண்மைக் காலங்களில் தெரியவந்துள்ளது. இவ்வாறான செயல்களால் குடும்பபத்தின் புனிதத் தன்மை கெடுவதுடன் நோய்களும் பொருட் செலவும் ஏற்பட வழிகள் உருவாகின்றன.
இந்நூற்றாண்டின் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் சவாலாக உள்ள எயிட்ஸ் நோய் பலருடனும் பாலியல் தொடர்பு கொள்ளுபவர்களுக்கு ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. எனவேதான் விபசாரத்தில் சம்பந்தப்படும் இருபாலாரும் பாதுகாப்பு உறைகளைப் பயன்படுத்திக் கொள்வதை உறுதி செய்து கொள்ள வேண்டுமென உலக சுகாதார நிறுவனம் உட்படப் பல பொது நிறுவனங்களும் இப்போது ஓயாமல் முழங்கத் தொடங்கியுள்ளன. இதற்கெனப் பெருமளவு பணத்தையும் அவைசெலவிடத் தொடங்கியுள்ளன.
எவ்வளவுதான் வேளைப் பளுவோ அல்லது பிறகாரணிகளோ தடுத்தாலும் கணவனும் மனைவியும் தங்களிடையேயுள்ள இறுக்கமான தொடர்புகளைத் தளரவிடக் கூடாது. மனைவியைப் பொறுத்த வரை கணவனுக்குச் சில கடமைப் பாடுகள் உள்ளன. வாரத்தில் ஒரு தடவையேனும் நாம் அவளை வெளியில் அழைத்துச் செல்லவேண்டும். உறவினர்கள் வீட்டிற்கோ படக் காட்சிக்கோ அல்லது அவள் விரும்பும் வேறு இடத்திற்கோ நாம்
51

Page 43
அவளை அழைத்துச் செல்லலாம். இவ்வாறான சந்தர்ப்பங்களில் பலர் தங்கள் நேரமின்மையைக் கூறி, மனைவியை வேறொருவருடன் வெளியே அனுப்பிவிடுவர். வெளியில் சொல்லாவிட்டாலும் அதிகமான மனைவியர் இதனை விரும்புவதில்லை. அழகான உடையணிந்து தனது கணவனுடன் ஒன்றாக வெளியில் செல்லுவதையே ஒரு சிறந்த, நல்ல மனைவி பெருமையாகக் கருதுவாள்.
இது மட்டுமின்றி, உறவினர்கள் அல்லது தோழிகள் முன்னிலையில் நாம் மனைவிக்குக் கொடுக்கும் கெளரவம் இயல்பாகவே அவளைப் பெருமைக்குள்ளாக்கும். சில கணவன்மார் ஏனையோர் முன்னிலையில், தமது மனைவியரை அடிமைபோல் கூப்பிடுவதையும், வேலைகள் சொல்லுவதையும் நாம் அன்றாடம் காண்கிறோம். இவ்வாறான செயல்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். வேண்டாதவர்கள் தவிர, நண்பர்கள் உறவினர்கள் வீட்டுக்கு வரும் போது மனைவியையும் அழைத்து நம்முடன் சமனாக வைத்து உரையாட நாம் அனுமதிக்க வேண்டும். இதனால் கணவனின் மதிப்பு மனைவியின் உள்ளத்தில் உயர்வதுடன் கலகலப்பான வாழ்க்கையும் தெளிந்த மனமும் அவளுக்கு உண்டாகும். வாயாடிகளாக உள்ள மனைவிகளும், கணவனின் குறிப்பறிந்து நடக்காத மனைவிகளும் இச்சந்தர்ப்பத்தில் விலகி இருப்பதே நல்லது. இல்லாவிட்டால், ஒன்றை நினைத்துச் செய்ய இன்னொன்று நடந்த கதையாகிவிடும்.
கணவனைப் பொறுத்த வரை மனைவிக்கும் சில கட்டுப்பாடுகளும் கடமைகளும் உண்டு. அவற்றை மனைவி நிறைவேற்றி அவனன்பைப் பெற முயல வேண்டும். வீட்டில் எல்லா வேலைகளையும் முடித்துக் கடைசியாக நித்திரைக்குச் சென்று காலையில் எல்லோருக்கும் முன்னதாக எழும்பி விடவேண்டும். காலையில் கோப்பியுடன் சென்று கணவனை நித்திரையிலிருந்து எழுப்பும் மனைவி ஒருவனுக்குக் கிடைத்தால் அவனுடைய வாழ்க்கையில் வசந்தம் வீசும். அந்த வீட்டிலும் உண்மையாகவே இலட்சுமிகடாட்சம் இருக்கும். இதனைப் பல அறிஞர்கள் தங்கள் படைப்புக்களில் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
தனது கணவன் வேலைக்குச் செல்லத் தேவையான ஆயத்தங்களையும் செய்து, பிள்ளைகளையும் வெளிக்கிடுத்தி அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவதும் ஒரு சிறந்த தாயின் கடமைகளாகும். கணவன் வேலைக்குச் செல்லும்போது வீட்டுப் பிரச்சினைகளை மறந்து, இன் முகத்துடன் அவனை வாசல் வரை சென்று வழியனுப்பவேண்டும். உத்தியோகத்துக்குச் செல்லும் கணவனுக்கு மட்டுமல்ல, சாதாரண கூலி வேலைக்குச் செல்லும் கணவனுக்கும் இது பொருந்தும்.
இவ்வாறே, வேலை முடிந்து பிற்பகலில் களைப்புடன் வீடு

திரும்பும் கணவனுக்கு ஒய்வெடுக்கச் சிறிது கால அவகாசம் தரப்பட வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் இல்லாத சாமான்களின் பட்டியல்களையோ பிள்ளைகளின் சண்டைகள் பற்றியோ பணத்தட்டுப்பாடு பற்றியோ உடனேயே பிரஸ்தாபிக்கக் கூடாது. அவன் குளித்துக் களையாறியவுடன் சாவகாசமாகப் பேச்சைத் தொடங்கலாம்.
ஆனால் இப்போதைய நாகரீக உலகில் பெண்களும் வேலைக்குச் செல்லுவதால் நான் மேலே குறிப்பிட்ட பல கடமைகளை அவர்களால் நிறைவேற்ற முடியாமல் போகக் கூடும். இதனால் கணவன் வருத்தமடையக் கூடாது. இல்லறத்தை இன்பமாகக் கொண்டு நடாத்தத் தேவைப்படும் பணச் செலவில் ஒரு பெரும் பகுதியை அவளும் ஈடுசெய்வதால் நாமும் அவளுடன் அனுசரித்துச் செல்ல முயல வேண்டும். நமது நண்பர்களின் வேலைக்குச் செல்லாத மனைவிமார் வீட்டில் செய்யும் வேலைகளை நமது மனைவியும் செய்ய வேண்டுமென நாம் எதிர்பார்க்கக் கூடாது. நாமும் வீட்டு வேலைகளில் அவளுக்கு ஒத்துழைத்து அவளது வேலைப்பளுவைக் குறைக்க உதவி செய்ய வேண்டும்.
வீட்டு வேலைகளைச் செய்வது கெளரவக் குறைவாகப் பல ஆண்களால் கருதப்படுகின்றது. மனைவியின் உடல்நலக் குறைவின் போது அல்லது அவள் வீட்டில் இல்லாத சமயத்தில் இதனால் ஏற்படும் பிரச்சினைகளைக் கணவனால் சமாளிக்க முடியாமல் இருக்கும். மேலை நாடுகளில் ஆண்கள் சமைப்பது, துணிதுவைப்பது, வீட்டைப் பெருக்குவது போன்ற வீட்டு வேலைகளைச் செய்வதை நாமறிவோம். கணவனும் மனைவியும் ஒரு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைகள் எனத் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும். இருவரும் மனமொத்து ஒன்றிணைந்து வாழ்ந்தால் சொர்க்கம் இறந்த பின்னரல்ல; இப்போதே இவ்வுலகில் உண்டு என்பது தெரியவரும் மகிழ்ச்சியாகச் செல்லும் குடும்ப வாழ்க்கையில் விபத்தாக நுழையும் இன்னொருவரின் தொடர்புக்குக் கணவனோ மனைவியோ பலியாவதால், அது மறுமணம் செய்யவும் அவர்களைத் தூண்டுகிறது. இம் மறுமணத்தில் அவர்களிடையே பிரச்சினைகள் இலகுவில் ஏற்படவும் வழியுண்டாகிறது.
始意蕾演窗荡演窗费资穷费费史贸兹*演窗费始费费费资资资
". ஒரு ஸ்திரியை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளுடன் விபசாரம் செய்தவனாயிற்று. s
(மத் தேயு 5: 28)

Page 44
மறுமணம் செய்திருத்தல்
". துணைவி இறந்தபின் வேறு துணைவியைத்
தேடுமோர் ஆடவன் போல் - பெண்ணும் துண்ணவன் இறந்த பின் வேறு துணை தேடச் சொல்லிடுவோம் புவி மேல்.
- பாரதி தாசன் கவிதைகள்
Iெழ்க்கைத் துணையொருவர் இறந்த பின்னர் அல்லது உயிருடன் இருக்கும் போது அவர்களில் ஒருவர் வேறொரு பெண்ணையோ அல்லது ஆணையோ திருமணம் செய்தால் அது மறுமணம் செய்தல் எனப் பொருள்படும். பெண்கள் மறுமணம் செய்வதைப் பற்றிச் சில காலத்திற்கு முன்னர் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும், உள்நாட்டுப் போரில் சிக்கித்தவிக்கும் இலங்கை போன்ற நாடுகளில் தங்கள் கணவன் மாரை இழந்துள்ள பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் மீண்டும் மறுமணம் செய்து வாழ வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இல்லாவிட்டால் இவர்களது வாழ்க்கை கெட்டுச் சீரழிந்து போகக் கூடிய நிலைமையே இங்குள்ளது.


Page 45

இம் மறுமணச் சோடிகளில் பிரச்சினைகளும் மிக இலகுவில் உண்டாவதை நாம் காண முடியும். ஒருவருடையமுந்திய குடும்ப வாழ்வை மற்றவர் சுட்டிக் காட்டிக் கதைக்கும் போது இயல்பாகவே இவர்களின் குடும்பத்தில் அமைதி கெட்டுவிடுகிறது.
முந்திய குடும்பத்தில் பிள்ளைகளும் இருந்துவிட்டால் மறுமணம் செய்து கொண்ட பெண்ணின் வாழ்வு பெரும்பாலும் வேதனை நிறைந்ததாகவே இருக்கும். எனவேதான் ஆணோ, பெண்ணோ மறுமணம் செய்யும் போது வெறும் உடல் ரீதியான தேவையை மட்டும் கருத்தில் கொள்ளாது தங்களது எதிர்காலத்தைப் பற்றியும் திடமான முடிவுடன் இருக்க வேண்டும். ஓரளவிற்காயினும் ஒருவரைப் பற்றி மற்றவர் அறிந்திருக்க வேண்டும். இருவரினதும் போக்குகள் நடத்தைகள் பெருமளவில் ஒத்துப் போகக் கூடியனவாக இருத்தல் வேண்டும்.
இவை மட்டுமின்றி, மறுமணம் செய்யும் பெண்ணை மணக்கும் ஒரு ஆண் கண்டிப்பாகத் தியாக சிந்தை உள்ளவராகவும், பரந்த மனப்பான்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். இழந்த கணவனால் கிடைக்காத ஒரு நல் வாழ்வை இரண்டாவது கணவன் அவளுக்கு அமைத்துக் கொடுப்பானானால் அவள் மட்டுமன்றி, நாட்டுமக்களும் கூட உண்மையில் அந்த ஆண் மகனுக்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளனர்.
மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்வது சாதாரணமாகவே எமது நாட்டில் நடைபெறும் செயலாகும். சீதனப் பிரச்சினையால் திருமணம் செய்யாது சீரழிந்த வாழ்வைக் கொண்ட பல இளம் பெண்கள் உட்படப் பலரும் தாங்கள் விரும்பியோ விரும்பாமலோ இரண்டாம் தாரமாகவேனும் ஒருவருக்கு வாழ்க்கைப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன.
இவர்களும் கூடிய வரையில் முயன்று தனது கணவனைத் திருப்திப் படுத்தி இல்லற வாழ்வில் வெற்றி பெற வேண்டும். கணவனுடைய முன்னைய வாழ்க்கையை அது நல்லதோ கெட்டதோ அவனுக்கு ஞாபகமூட்டாத வாறு நடந்து அவனுடைய மனதை வெல்ல வேண்டும். அவ்வாறு வென்றால் அவள் வாழ்க்கையையும் வென்றதாக நாம் கொள்ள முடியும்.
மறுமணம் செய்பவர்கள் தங்களுக்கு முந்திய தார வாழ்வில் பிள்ளைகள் இருந்தால் கூடிய கவனத்துடன் தங்கள் வாழ்வைக் கொண்டு செல்லல் வேண்டும். இரண்டாம் திருமண வாழ்வில் பிறக்கும் பிள்ளைகளுடன் சமனாக வைத்து முந்திய பிள்ளைகளையும் பராமரிக்க வேண்டும். மூத்த பிள்ளைகளிடம் பேதம் காட்டி வேறுபாட்டுடன் அவர்களை வளர்க்க முற்பட்டால் குடும்பத்தில் அமைதி கெடுவதுடன் குழந்தையின் வளர்ச்சியும் உடல் உள ரீதியில் பாதிப்படைய நேரிடும். இதுவே எதிர் காலத்தில்
55

Page 46
குழந்தைகளை விபரீதமான வழிகளில் இட்டுச் செல்லத் தூண்டுகோலாக அமைகின்றது. இவ்வாறான குடும்பங்களில் கணவன் மனைவி இருவருமே “சர்க்கஸ்” வித்தைக்காரர்கள் கயிற்றின் மீது கீழே விழாமல் நடப்பது போல் மிகுந்த அவதானத்துடன் நடந்து வாழ்க்கையில் வெற்றியடைய வேண்டும்.
ஒரு மனைவி உயிருடன் இருக்கும் போது வேறு திருமணம் செய்ய வேண்டுமென்ற ஆசையும் சிலருக்கு வந்து விடுவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில், சிலவேளைகளில் ஒரு குற்றமும் செய்யாத மனைவியை வேண்டுமென்றே அவள் மீது பிழைகளைச் சுமத்தி அவளை ஒதுக்கிவிட்டு வேறு ஒரு பெண்ணை மணக்கவும் சிலர் துணிந்து விடுவர். இதுவும் உடல் மீது ஏற்படும் கவர்ச்சியினால் எடுக்கப்படும் அவசர முடிவினாலேயே பெரும்பாலும் நடைபெறும். இரண்டாவது மனைவிக்கு முதல் மனைவி இருப்பது தெரிந்தோ தெரியாமலோ நடைபெறும் இச்செயலில், இரண்டாவது மனைவி மிக அவதானமான வாழ்க்கையைக் கொண்டிருப்பது முக்கியமாகும். இது சம்பந்தமாக அண்மையில் இந்தியப் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த ஒரு நகைச்சுவைத் துணுக்கை உங்களுக்குத் தருகின்றேன். மிகவும் கருத்தாழமுள்ள இது எனக்கு வெறும் நகைச்சுவையாக மட்டும் தெரியவில்லை, வீட்டுக்கார எஜமானி வேலைக்காரியைக் கண்டித்து, "ஐயா வரும் வேளை, நீ இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்? அவருக்கு நான் செய்ய வேண்டிய பணிவிடைகளை நீ செய்ய வேண்டியதில்லை, கொல்லைப் புறம் போ” என அதட்டுகிறாள். அதற்கு வேலைக்காரி "என்ன இருந்தாலும் நீங்கள் இந்த வீட்டு எஜமானி அல்லவா? எனக்கு இங்கே என்ன உரிமை அம்மா இருக்கிறது? என்று பதில் கூற, மீண்டும் எஜமானி, "அப்படிச் சொல்லாதே, நானும் இந்த வீட்டில் உன்னைப் போல் ஒரு காலத்தில் வேலைக்காரியாக இருந்தவள் தான்’ என்று பதில் கூறுகின்றாள். இதிலிருந்து நாம் ஒன்றை விளங்கிக் கொள்ள முடியும். அதாவது தனது மனைவியை ஒதுக்கிவிட்டு வெறும்உடல் கவர்ச்சிக்காக இன்னொரு பெண்ணை மணம் முடிப்பவன் மீண்டும் வேறு பெண்களுடன் தொடர்பு கொள்ள மாட்டானென்பதை யாரும் உறுதி செய்யமுடியாது.
கணவன் அல்லது மனைவி உயிருடன் இருக்கும் போது, அவர்களிலொருவர் வேறொருவரைத் திருமணம் செய்து கொள்வது மிகவும் துரதிஷ்டமானது. அதிகமான இவ்வாறான செயல்கள் முன்னர் குறிப்பிடப்பட்டது போல் வெறும் வெளிக் கவர்ச்சி காரணமாகவே நடைபெறும். இருந்த போதும் ஒருவரின் தொல்லை தாங்கமுடியாமல் அளவு மீறிச் செல்லும் போதும் இவ்வாறான திருமணங்கள் நடைபெறுவதுண்டு. இவ்வகைத் திருமணங்கள் நடைபெறும் சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர் மிகுந்த

பொறுமையைக் கடைப்பிடிப்பதவசியம். வேண்டாத சண்டைகளோ அல்லது நீதி கேட்டு வழக்காடச் செல்வதோ வாழ்க்கைக்குப் பெரும்பாலும் உதவப் போவதில்லை. சிலவேளைகளில், இரண்டாவது திருமண வாழ்வில் சலிப்பேற்பட்டதும் அவர்கள் மீண்டும் முதலாவது துணையைச் சேர்வதும் நடைபெறுவதுண்டு. ஆனாலும் இக்காலத்தில் மனைவியுடன் பிள்ளைகளையும் கைவிட்டுச் செல்லும் பொறுப்பற்ற கணவனிடமிருந்து “கோர்ட்' மூலமே பெண்கள் நிவாரணத்தைப் பெற முடிகின்றது.
குடும்ப வாழ்வின் அடிப்படைப் பிரச்சினையான தாம்பத்திய இன்பத்தில் பூரண திருப்தியடையாத கணவன் அல்லது மனைவி ஆகிய இருபாலாரும் தங்கள் வாழ்வை வீணே கழிக்க விரும்பாமல் வேறொருவரை 19றுமணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் சிலவேளைகளில் நடைபெறுவதுண்டு. ஆனாலும் எமது கீழைத் தேசப் பெண்கள் இவ்வாறான செயல்களைத் துணிந்து செய்வது மிகக் குறைவாகும். வேறொரு தொடர்பை ஏற்படுத்தும் ஆண், தனது முதல் மனைவியையும் அவளுடன் சேர்ந்துப் பராமரிப்பதையும் நாம் சில இடங்களில் காண்கிறோம்.
இந்தியாவில் தமிழ் நாடு உட்படப் பல இடங்களில் “சின்ன வீடு” எனச் செல்லமாக அழைக்கப்படும் இரண்டாவது மனைவியைப் பிரபல்யமான பலரும் கொண்டிருப்பதை இவ்விடத்தில் நாம் சுட்டிக் காட்ட முடியும். ஆனாலும் எம் நாட்டைப் பெறுத்தவரை சட்டத்திற்குப் புறம்பான இச் செயல் அதிக அளவில் இன்னும் ஊடுருவி விடவில்லையென்பது வரவேற்கப்படவேண்டியதொன்றாகும். "என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்’ எனக் கூறும் அதிகமான எம் நாட்டுப் பெண்கள் தங்கள் கணவனை இன்னொருத்திக்குப் பங்கு போட ஒரு போதும் சம்மதிக்க மாட்டார்களென்பதே உண்மை நிலையுமாகும்.
1985 இல் களுவாஞ்சி குடியில் அரசாங்கத் திணைக்களமொன்றில் இலிகிதராகக் கடமைபுரிந்த ஒருவர் தனது நோயாளி மனைவியைத் தவிக்க விட்டு, இன்னொருவரின் அழகான மனைவியை அபகரித்துக் கொண்டு யாழ்ப்பாணத்துக்கு ஓடிவிட்டார். ஒடிய இருவரும் உண்மையில் அழகும் சோடிப் பொருத்தமும் உடையவர்களென்றே ஊராரும் கதைத்துக் கொண்டனர். அவர்களுடைய வாழ்க்கையும் இன்பகரமானதாக ஐந்து வருடங்கள் மட்டுமே போயிருக்கும். அவர்களின் இருப்பிடத்திலிருந்து 40 மைல்களுக்குகப்பால் கிளிநொச்சிக்குப் பதவி உயர்வுடன் அவருக்கு இடமாற்றம் கிடைத்தது. ஆறுமாதங்கள் கடந்தபின்னர்தான் பேரிடியான அந்தச் செய்தி அவருடைய அழகான மனைவியின் காதுக் கெட்டியது. மதியஉணவு அருந்தும் வீட்டில் இன்னொரு பெண்ணுக்கும் அவருக்கும் தொடர்பு ஏற்பட்டுப் பலமாதங்கள்
57

Page 47
கடந்து விட்டிருந்தன. முதலாவது கணவனுடன் நல்ல நிலையிலிருந்த அந்தப் பெண் இப்போது ஒரு குழந்தையுடன் எதிர் காலமே கேள்விக் குறியான நிலையில் அலைந்து திரிவது நமக்கும் மனதை வாட்டுகிறது.
பல்வேறு நிகழ்வுகளினாலும் மறுமணம் செய்து வாழும் பல குடும்பங்கள் மகிழ்ச்சியான வாழ்வையே வாழுகின்றன. பிரச்சினையான மறுமணங்களினால் நிம்மதியை இழப்பவர்கள், நாளடைவில் மதுவிலும் வேறு போதைப் பொருட்களிலும் அமைதியைக் காண ஆர்வம் கொள்ளுகின்றனர்.
LLLLYYY LLLLLLLLLYYLYYYYLLLLLLGLLGLLLLLLLLYYZZYLLLLLL
AA
svis ஒவ்வொரு மனிதனையும் ஆட்டிப்படைக்கும் அடிப்படை உணர்வு ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் இதனை "லிபிடோ' என்பார்கள். எல்லோருக்கும் புரியும்படி இதனைச் சொல்வதானால் "செக்ஸ் உணர்வு' என்று சொல்லலாம். இந்த உணர்வை நாம் வெறும் உடலுறவுக்காக மட்டும் செலவழிக்காமல் வேறு வழிகளிலும் திசைதிருப்பலாம். இப்படித் திசைதிருப்புவதைச் "சப்பிளி மேசன்' என்று அறிஞர்கள் குறிப்பிடுகிறார்கள்."
- வாசுகண்ணன் "உள்மன ஆற்றல்கள்"
58

மிதமிஞ்சிய குடி / போதைப் பொருள்
பாவனைகள்
“.உறவுண்ட சிந்தை யானும்
உரை செய்வான் ஒருவர்க்கு இன்னம்
பெறல் உண்டோ அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி, உற்றது,
இறல் உண்டோ? என்னின் தீர்வான்
இருந்த பேர் இடரை எல்லாம்
நறவு உண்டு மறந்தேன் காண
நானுவல் மைந்த என்றான்.
想證
— 85LibLugmTLomTLLu6orOTüib
"குடி குடியைக் கெடுக்கும்” என்னும் பழமொழி எப்போதோ வந்ததுதான். ஆனாலும் அதற்குப் பின்னரும் பல குடும்பங்களை இக்குடி அழித்துக் கொண்டுதான் இருக்கிறது. வீட்டில் கணவன் மது அருந்தும் போது அக்குடும்பம் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. பொருளாதாரப் பிரச்சினை, கெளரவப் பிரச்சினை, பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை, தாம்பத்திய உறவில் விரிசல் நிலை போன்ற பலவேறு பிரச்சினைகள் இருந்த போதும்; பொருளாதாரப் பிரச்சினையே இவற்றில் முதலிடம் வகுக்கின்றது.
59

Page 48
உழைக்கும் பணத்தையெல்லாம் கணவன் குடித்து முடிப்பதால், வீட்டுத் தேவைக்குப் பணம் இல்லாத போது குடும்பத்தில் அமைதி காணாமல் போய் விடுகின்றது. ஆண்கள் மட்டுமன்றிச் சிறு தொகையான பெண்களும் மது அருந்தும் பழக்கமுடையவர்களாக எமது நாட்டில் உள்ளனர். பெண்கள் பெருமளவில் மது அருந்திப் பிரச்சினைகளை ஏற்படுத்தாமையால் இவ்வத்தியாயத்தில் மது அருந்தும் ஆண்களைப் பற்றியே சொல்லப் படுகின்றது.
குடிப்பழக்கமும் ஏனைய போதைப் பொருட்களின் பாவனையும் முதலில் விளையாட்டாகவே ஒருவரால் ஆரம்பிக்கப்படுகின்றது. இதுவே கடைசியில் வினையாக முடியுமென ஒருவரும் எதிர்பார்க்க முடியாது. ஆரம்பத்தில் பாரதூரமாகக் கருதாமல் பொழுது போக்காகப் பாவிக்கத் தொடங்கும் ஒருவன் நாளடைவில் இவை இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாத நிலையை அடைகின்றான். பாவங்களுக்குள் மிகக் கொடிய பாவம் மது அருந்துவதே ஆகும். பலருக்கு இந்த உண்மை புரிவதில்லை. உலகிலுள்ள எல்லா மதங்களும் மது அருந்துவதைப் பாவமான செயலாகவே கூறியுள்ளன. மது அருந்துவதால் ஏற்படும் விபரீத விளைவுகளைப் பின்வரும் கதை மூலம் இலகுவாக விளங்கிக் கொள்ளமுடியும்.
கடவுள் ஒருவனை அழைத்து ஒரு அறையைக் காட்டி, "இவ்வறைக்குள் ஒரு குழந்தை, ஒரு அழகான கன்னிப் பெண், தேவையான அளவு மது என்பன உள்ளன. இவற்றில் குழந்தையைக் கொலை செய்தல், பெண்ணைக் கற்பழித்துக் கெடுத்தல், அளவுக்கதிகமான மதுவை அருந்துதல் போன்றவற்றில் ஏதாவது மிகக் குறைந்த பாவத்தை நீ செய்ய வேண்டும்." எனப் பணித்தார். அவனும் அறைக்குள் சென்று நன்கு யோசித்தான். குழந்தையின் பால் வடியும் முகத்தைப் பார்த்தான். அதன் கிட்ட நெருங்கவே அவன் மனம் இடம் தரவில்லை. இரண்டாவதாக அங்கிருந்த அழகிய பெண்ணைப் பார்த்தான். தன்னை ஒன்றும் செய்து விடவேண்டாமென்று அப் பெண் பார்வையாலேயே அவனைக் கெஞ்சினாள். பின்னர் மதுப் போத்தல்களைப் பார்த்தான். ஒரு நாளும் மது அருந்தியிராத அவனுக்கு அதுவே மிகக் குறைந்த பாவம் போல் தோன்றியது. உடனேயே அங்கிருந்த விதவிதமான மதுப்போத்தல்களையும் காலி செய்யத் தொடங்கினான்.
சிறிது நேரத்தில் போதை தலைக்கேறிய போது அவனுக்குப் பெண் தேவைப்பட்டது. எனவே அந்த இளம் பெண்னை அவன் பலவந்தமாக நாடினான். அவளைப் பிடித்திழுக்கும் போது குழந்தை பயத்தினால் அழுது கொண்டு அவளிடம் சென்றது. குழந்தையை ஒரு முறை தடுத்துப் பார்த்தான். ஆனால் மீண்டும் அக்குழந்தை


Page 49

அவனை அப்பெண்ணுடன் சேரவிடாமல் தொல்லை கொடுத்தது. தன்னை மறந்த நிலையில் குழந்தையை நிலத்தில் தள்ளி அதனை முதலில் கொன்றான். அதன் பின்னர் அந்தப் பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளைக் கெடுத்தான். ஆரம்பத்திலேயே குழந்தையைக் கொன்று அல்லது பெண்ணைக் கெடுத்திருந்தால் அவன் ஒரு தவறையே செய்திருப்பான். வீட்டில் ஏற்படும் பிரச்சினைகள் கவலைகள் என்பவற்றை மறக்கவும், செலவுக்குப் பணம் இல்லையென்ற காரணத்தாலும் பலர் மது அருந்த ஆரம்பிக்கின்றனர். இன்னொருசாரார் வீட்டில் மனைவியும் பிள்ளைகளும் தன்னை மதிப்பதில்லையெனவும், தனக்கு உத்தியோகம் இல்லையெனவும் கூறி மது அருந்துகின்றனர். இவ்வாறு காரணங்கள் எதைச் சொன்னாலும் ஒருவரால் தான் மது அருந்துவதை நியாயப்படுத்த முடியாது. ஒருவர் செய்யும் தவறு தன்னைப் பாதிப்பதாகக் கூறும் இவர்கள் அதனைத் திருத்த முற்படாமல் வேறொரு தவறைச் செய்யத் தொடங்குவதால் இரண்டு தவறுகளுக்கு இடமேற்படுகின்றது. இதனால் வீட்டில் மனைவி பிள்ளைக்ளிடமிருந்து கணவனின் இடைவெளி கூடிக் கொண்டே செல்லும்.
மதுபானம் அருந்தித் தங்கள் பெருமதிப்பையும் குடும்ப கெளரவத்தையும் இழந்த பெருந்தொகையானோரை நாம் கண்டிருக்கின்றோம். பரம்பரைக் குடும்பப் பெருமை கொண்டோர், அரசில் மிக உயர்ந்த பதவி வகித்தோர், செல்வச் செழிப்பில் வாழ்ந்தவர்கள் ஆகிய பலரும் இதில் அடங்குவர். “குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்பது போல் எம்மை யாரும் மதிக்கமர்ட்டார்கள். அதுமட்டுமன்றி, எமது குடும்ப அங்கத்தவர்களும் மதிப்புத்தரமாட்டார்கள். இதனால் எமது பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கையும் பாதிப்படையும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.
மதுவுக்கோ அல்லது வேறு போதைப் பொருளுக்கோ அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டெடுக்க வீட்டிலுள்ள அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும். முக்கிய்மாக மனைவி தனது கணவன் இவற்றில் ஈடுபடுபவதை ஆரம்பத்திலேயே தடை செய்ய முயலவேண்டும். இவ்வாறான பொருட்களின் பாவனையில் அவர்கள் ஈடுபட்டுத் தங்கள் வாழ்வைக் கெடுப்பதற்கான மூல காரணங்களைக் கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிவகைகளைத் தேட வேண்டும்.
இவ்வகையான பொருட்களுக்கு அடிமையானவர்களை நாம் நோயாளர்களாகவே கருத வேண்டும். நோயாளர்களுடன் எவ்வாறு அன்பாகப் பழகி அவர்களுக்குத் தைரிய மூட்டி இயல்பான வாழ்க்கைக்கு அவர்களை மீட்டெடுக்கின்றோமோ அவ்வாறே இவர்களது விடயத்தையும் அணுக வேண்டும். அவ்வாறில்லாமல்
61

Page 50
கடும் போக்கைக் கடைப்பிடித்து நாமும் அவர்களுடன் மோதலுக்குத் தயாரானால் வீடும் யுத்தகளமாகவே மாறிவிடும். இது மட்டுமின்றி,அமைதியைத் தேடிப்பிடித்துச் சமாதான வாழ்வைத் தொடரவைப்பதும் இயலாத காரியமாகப் போய்விடும்.
1972இல் மட்டுநகரில் எங்களுக்கு ஆங்கிலம் கற்பித்த ஆசிரியர் எந்த நேரமும் தூய வெள்ளை உடையுடன் காணப்படுவார். மிடுக்கான நடையும் கவர்ச்சியான தோற்றமும், தெளிந்த அறிவுமுடைய அவர் பாடசாலைக்கு வரும் போதே ஏனைய ஆசிரியர்கள் அவரைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். அந்த நாட்களில் தனியார் ரியூசன் நிலையங்கள் அதிகமாக இல்லாத போதும் இவர் தனது திறமையால் அதிகமான மாணவர்களை முன்னேற்றியது மட்டுமன்றிப் பெருந் தொகையான பணத்தையும் உழைத்தார்.
ஆனால் அவருடைய வாழ்க்கையில் என்ன மாற்றம் நடந்ததோ ஒருவராலும் அறிய முடியவில்லை. அளவில்லாமல் மது அருந்தி அதிக நேரம் குடி போதையிலேயே நடமாடத் தொடங்கினார். தனது சேவையிலிருந்தும் ஒய்வு பெற்ற அவர் கசங்கிய அழுக்கு உடைகளுடன் நகரெங்கும் திரிய ஆரம்பித்தார். பஸ்நிலையம், கச்சேரி, வங்கிகள் என்பவற்றிற்குச் சமீபங்களில் அடிக்கடி காணப்பட்ட அவர், 10/-ரூபா 5ரூபா அல்லது 2ளூபா என்றாலும் பரவாயில்லைத் தாருங்கள் என்று தனது நண்பர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் பணம் வாங்கிக் குடிக்கத் தொடங்கினார். நாளடைவில் அவரைக் கண்டாலே மற்றவர்கள் ஒளிக்க ஆரம்பித்தார்கள். கடைசியில் இவ்வாறான பரிதாப வாழ்க்கையை வாழ்ந்த அவர் ஒரு நாள் அளவுக்கதிகமாக மது அருந்திய நிலையில் இவ்வுலகை விட்டுப் போய் விட்டார். இப்பொழுதும் அவளுடைய பெயரைச் சொல்லும் போது பளிச் சென்ற வெள்ளை உடையுடன் அவர் என்னெதிரில் நிற்பது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகின்றது. மது அருந்துவது மட்டுமன்றி, பீடி, சிகரட், ஹெரோயின், கஞ்சா, அபின் போன்ற பல்வேறு போதைப் பொருட்களும் மனித நிம்மதியைக் கெடுக்கும் பொருட்களாகும். ஹெரோயினும் இது போன்ற ஏனைய பல போதைப் பொருட்களும் இந்நூற்றாண்டின் நிம்மதியைக் கெடுக்க வந்த நவீன கண்டுபிடிப்புகளாகும். இவற்றினால் நிம்மதியிழந்த குடும்பங்கள் ஏராளமாகும். எனவேதான் பல நாடுகளில் இவற்றிற்கெதிராகக் கடும் தண்டனைகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளார்கள்.
LLLYLLLYLLLYYYYLLLLLYYYYYLLLLYLYLLYYYYLYYLLYLLLLS
62

露爵
e gbe மனிதனிடம் இருக்கும் ஒரு பெரிய பலவீனம் என்னவெனில் ஏதாவது ஒரு ஆசை அவனைப் பிடித்துக் கொண்டால் அவன் அதற்கு அடிமையாகி விடுகின்றான். அதற்காக அறிந்தோ அறியாமலோ தனக்கே அதிக நஷ்டத்தை உண்டாக்கிக் கொள்ளுகின்றான். ஒருவன் போதையில் சுவை கண்டு விட்டால் அதன் மீதே பைத்தியம் கொண்டு அலைகின்றான். ஆரோக்கியக் கேடு, பணவிரயம், மான நஷ்டம் முதலிய பல்வேறு நஷ்டங்களை ஏற்றுக் கொண்டே போகிறான் என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.”
"-இது தான் இஸ்லாம்-"
மெளலானா சையித் அபுல் அஃலா மெளதுாதி
63.

Page 51
பயணத்தின் முடிவில் விடைபெறும் வைபவம்
". எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே.
உலகில் ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் ஒவ்வொரு நூலாக வெளிவரக் கூடிய அளவு சம்பவங்களைக் கொண்டதாக இருக்கும். கணவன் மனைவி என்னும் புனிதமான உறவிற்குள் வெளியே மூன்றாவது நபருக்குத் தெரியாத பல இரகசியங்கள் எல்லாக் குடும்பங்களிலும் புதையுண்டு கிடக்கும். சண்டையும் சமாதானமும், இன்பமும் துன்பமும் இல் வாழ்க்கையில் இடம் பெறுவது இயல்பே ஆகும். அனைத்தையும் எதிர் கொண்டு சிறப்பான வாழ்வை நடாத்தி முடிப்பதிலேயே எமது திறமை தங்கியிருக்கிறது.
குடும்பத்தில் ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து மகிழ்ச்சியான வாழ்வை உருவாக்கப் புத்தகங்களால் மட்டும் ஒருபோதும் முடியாது. அவை எமக்கு வழிகாட்டிகளாக மட்டும் தான் உதவ முடியும். இவ்வகையில் எனது இப்புத்தகமும் மற்றவர்களின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்விற்கு ஓரளவிற்கேனும் வழிகாட்டுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.
()


Page 52

இம் முயற்சியில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நான் நன்றி கூறக் கடமைப் பட்டுள்ளேன். முக்கியமாக, ஆசியுரை வழங்கிய வைத்திய கலாநிதி எம். முருகேசபிள்ளை அவர்களுக்கும், முன்னுரை வழங்கிய கலாநிதி. சி. மெளனகுரு அவர்களுக்கும், பிரபல எழுத்தாளர் உமா வரதராஜன் அவர்களுக்கும் படங்களுடன் இம்மலரை அழகாக வடிவமைத்துத் தந்த திரு எஸ். ருத்ரா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்துடையன.
இம்மலரை மிக அழகாக அச்சிட்ட கொழும்பு “யுனி ஆர்ட்ஸ் பிரைவேட் லிமிடட்" அச்சகத்துக்கும் எனது நன்றிகளை கூறி இதனை நிறைவு செய்கின்றேன்.
O
நன்றி
65

Page 53

7.
10.
11.
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22. "இந்தியா ருடே"
இந்நூலாக்கத்திற்கு உதவிய உசாத்துணை நூல்களில் சில
கம்பராமாயணம்
மகாபாரதம்
திருக்குறள்
மகாகவி பாரதியார் கவிதைகள் பாரதிதாசன் கவிதைகள் கல்வியில் தத்துவ சமூக அடிப்படைகள். - எஸ். சந்தானம். (எம். ஏ - பி. டி.) கல்வி உளவியல் - பேராசிரியர். ச. முத்துலிங்கம் இலக்கியத்திறன் - டாக்டர் மு. வரதராசன் இல்லறம் அப்துற் - றஹீம்
இது தான் இஸ்லாம். -மெளலானா சோயித் அபுல் அஃலா மெளதுரதி கிறிஸ்தவக் குடும்பம் - சாது செல்லப்பா கிருஷ்தவ மதம் காட்டும் நன்னெறிகள் -மணிமேகலை பிரசுரம்
சங்கர பொக்கிஷம் கவிஞர் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்துமதம் - - do - குடும்ப சுகம் - do - ஆன்றோர் அனுபவம் - எஸ். சங்கரன் உள்மன ஆற்றல்கள் - வாசு, கண்ணன் கலைமகள் - வார இதழ்கள் கல்கி - do - ஆனந்த விதடன் - do - குமுதம் - do -
இதழ்கள்

Page 54


Page 55
91ތް;29 )fلاش&00peچى قوق پیعیم ہیونین کے 器 荔 ஆதே ராதுமோ 2 gdyāgరిడాలై94) 92ના પer[Ö முற்சிப்ஸ்2ர்களுக்ே میکالے تو آئیے [کسی خشکلۓ تریل 4 سترک) بنی آrترک کے نام ترینتینے
ezar *
صحصے
Type Setting and Printec
48 B, Bloemendhal Road,

il by : Unie Arts (Pvt) Ltd. Colombo - 13. Tel: 330195 -