கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாசனமும் தமிழும்

Page 1
ICFGOIC
(Inscriptions a
 

سی = F_N_y
poss
Í Hlfss
nd Tamil Studies)
வேலுப்பிள்ளே

Page 2


Page 3

சாசனமும் jöld
வரிவடிவம், மொழி, இலக்கியம், பண்பாடு,
வழக்காறுகள், இலங்கை.
கலாநிதி ஆ. வேலுப்பிள்ள்ை. சிரேஷ்ட விரிவுன்ரயாளர், தமிழ்த்துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை.

Page 4
முதற் பதிப்பு: ஏப்ரில், 1971. பதிப்புரிமை ஆசிரியருக்கு.
inscriptions and Tamil Studies
— Palaeography, - Language, - Culture, - Literature, - Usages, - Ceylon.
B A. VELUPPLLA, prိb. (Cey.); D. Phil. (Oxon.),
W Senior Lecturer in Tamil,
University of Ceylon,
Peradeniya (cEYoN).
அச்சிட்டோர்:- நெஷனல் பிரிண்டர்ஸ், 241, கொழும்பு வீதி, கண்டி,

சாசனத் தமிழ்மொழி ஆராய்ச்சியில் முதல்வராக விளங்கியவரும் இலங்கைப் பல்கலைக்கழகத்திலே சாசனத்
தமிழை முதலிலே கற்பித்தவரும் என் ஆசிரியருமான
காலஞ்சென்ற Cy Tsfulf 5. 5600 until 26,36
சமர்ப்பணம்,

Page 5
ஆசிரியரின் பிறநூல்கள்:-
1 தமிழ் வரலாற்றிலக்கணம் (1966)
2. தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் (1969)

முகவுரை
"பழமை பழமையென்று
பாவனைபேச லன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே
பாமர ரேதறிவார்"
- சுப்பிரமணிய பாரதியார்
"கல்வி கரையில கற்பவர் நாள் சில” என முன் ஞேர் கண்ட உண்மை, காலப்போக்கிலே, இன்னும் இன்னும் வலுப்பெற்று வருகின்றது; கல்வியின் பரப்பு விரிந்து விரிந்து செல்லக் கற்பவர் ஒருவரி கற்கக்கூடிய கலைகள் எண்ணிக்கையிலே குறுகிக் குறுகிச் செல்லுகின் றன. திறமைபெறவேண்டுமானுல் ஒருவர் ஒரு கலை மட் டுமே கற்கவேண்டும் என்ற நிலை தோன்றுகிறது. ஒரு கலையிலுள்ள பலதுறைகளிலே தானும் ஒருவர் சிறப் பான திறமை பெறமுடியாது என்ற நிலை தோன்றியுள் ள்து. சிறப்பான திறமையை நாடிச் செல்பவர் குறுகிய நோக்குள்ள கல்வியைப் பெறும் அபாயம் இன்று தோன்றி யுள்ளது பரந்த கல்வியைப் பெறுபவர் எதிலும் திறமைசாலியாக விளங்குவது வில்லங்கம். இற்த இரண்டு நிலைகளுக்குமிடையில் அமைதிகாணவேண்டும். சிறப்பான திறமை ஒரு கலையில் அல்லது அதன் ஒரு துறையில் மட்டுமே ஏற்படக் கூடுமாயினும் அறிவு வளர்வதற்குப் பல கலையறிவும் பல துறையறிவும் அவசியம் தமிழ் அல்லது தமிழோடு தொடர்புடைய கலைகளைக் கற்ப வருக்கு இந்த நூல் பயன்படும்;

Page 6
தமிழ்க்கல்வி தமிழ்ச் சாசன அறிவு இன்றிப் பூரணத்துவம் பெருது: தமிழ் இலக்கிய வளத்துக்குத் தமிழ்ச்சாசன வளம் குறைந்ததன்று தமிழ் இலக்கிய இலக்கண நூல்கள். தமிழ்ச்சாசனங்கள், தமிழ்நாட்டுதி தொல்பொருட் சின்னங்கள் என்பன பண்டைக்கால, இடைக்காலத் தமிழகத்தை அறிந்துகொள்வதற்கு வேண் டிய முக்கியமான மூன்றுவகை மூலாதாரங்களெனலாம்: சாசனம் என்பது வடமொழிச் சொல் சாசனம் என் பதற்குப் பதிலாகக் கல்வெட்டு என்ற தமிழ்ச்சொல் வழங்கப்படுவதுண்டு. சாசனங்களில் மிகப்பெரும்பா லன, கல்லில் வெட்டிப்பட்டனவாதலால் இப்பெயர் வழக்குக்கு வந்திருக்கவேண்டும் கல்லில் வெட்டப் படாத செப்புப் பட்டயம் முதலியனவற்றையும் உள் ளடக்கக்கூடிய தமிழ்ச் சொல் வின்மையால், சாசனம் என்ற வடசொல் இங்கே எடுத்தாளப்படுகிறது. தமிழ்ச் சாசனங்கள், சில ஆயிரக் கணக்கில் வெளிவந்துள்ளன. சில ஆயிரக்கணக்கில் வெளிவர வேண்டியுள்ளன. இது வரை கண்டுபிடிக்கப்படாத தமிழ்ச் சாசனங்களும் பல இருக்கலாம்:
கடந்த பதினைந்து ஆண்டுகளாக நான் சாசனக் கல்வியில் ஈடுபட்டு வருகிறேன். 1957 ம் ஆண்டு, காலஞ் சென்ற தமிழ்ப் பேராசிரியர் க கணபதிப்பிள்ளையிடம் சாசனம் பயிலத் தொடங்கினேன். பேராசிரியர் கண பதிப்பிள்ளையின் மேற்பார்வையிலே, பிற்காலப் பாண் டிய மன்னர் சிலரி காலத்துத் தமிழ்ச்சாசன ங் களின் மொழிநடையை ஆராய்ந்து இலங்கைப் பல்கலைக்கழகத் தின் கலாநிதிப்பட்டத்திற்கான ஆராய்ச்சி நூலை 1962 ல் எழுதி முடித்தேன். இன்னெரு கலாநிதிப் பட்டம் பெற் றுக்கொள்வதற்காக அரசாங்க உபகாரப்பணம் பெற்று நான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் சென்றபோது திராவிடமொழியியலிலே துறைபோகியவர்களில் ஒருவ
Wi

ராக மதிக்கப்படும் பேராசிரியர் ரி. பருே (T. Burrow) இன்னெரு காலத் தமிழ்ச்சாசனங்களையும் ஆராய்வது பெரும் பயனளிக்கும் என்று கூறி அத்துறையிலே என்னை ஊக்கிஞர். எனவே அவருடைய மேற்பார்வையிலும் சாசனங்களின் மொழிநடையை ஆராயும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று பேராசிரியர் கணபதிப்பிள்ளை 1965 ம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து இளைப்பாறியபோது தமிழ்ச் சிறப்புக்கலை மாணவருக் குச் சாசனங்களைப் பயிற்றும் பொறுப்பு எனக்குக் கிடைத்தது. இலங்கைத் தமிழ்ச் சாசனங்களைப் பதிப் பிப்பதற்குச் சாசனவியலிலே சிறப்பான பயிற்சி வேண் டும் என்பதை உணர்ந்த இளைப்பாறிய தமிழ்ப்பேராசிரி யர் வி3 செல்வநாயகம் 1967 ம் ஆண்டு மைசூரிலுள்ள இந்திய அரசாங்கச் சாசனவியலாளர் அலுவலகத்துக்கு என்னைப் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்.
1968 ம் ஆண்டு இலங்கை அரசாங்கப் புதை பொருளாராய்ச்சித் திணைக்களத்தோடு தொடர்பு கொண்டு இலங்கைத் தமிழ்ச் சாசனங்களைப் பதிப்பிக் கும் முயற்சியைத் தொடங்கினேன். சில சாசனங்களை ஆராய்ந்து கட்டுரைகள் எழுதினேன். 1969 அக்டோப ரில், அரசாங்கப் புதைபொருளாராய்ச்சித் திணைக்களம் அக்கட்டுரைகளை இலங்கைச் சாசனவியல் (Epigraphia Zeylanica) என்ற சஞ்சிகையில் வெளியிட உடன் பட்டது. அச் சஞ்சிகை வெளிவரக் காலதாமதமாகியது: சாசனங்களைச் சொந்த முயற்சியாகப் பதிப்பிப்பதிலும் சில வில்லங்கங்கள் இருந்தன. பதிப்பு வெளியிடுவதனுல், அது தக்கமுறையில் அமையவேண்டும் என்று விரும்பி னேன் சாசனங்களைப் புகைப்படம் முதலியவற்ருேடு வெளியிடுவதேமுறையாகும். சாசனங்களிலே காணப்படும் கிரந்த எழுத்துக்கள், தமிழ் எண்கள் என்பனவற்றுக்கும் அச்செழுத்துக்கள் பெற்றுக்கொள்வது இலங்கையிலே
Wii

Page 7
சிரமமானது சுருக்கமாகக் கூறுவதாஞல், சாசனங்களை நல்லமுறையிலே பதிப்பிப்பதற்குப் பெரும்பொருட் செலவும் பெருஞ்சிரமமும் ஏற்படும் சாசனங்களைப் பதிப்பிப்பதிலுள்ள சிரமங்கள் புலப்படத்தொடங்க, எனக்கு இலங்கைச் சாசனங்களை ஆராய்வதிலுள்ள ஈடு பாடு குறையத் தொடங்கியது. 1970 ம் ஆண்டுத் தொடக்கத்தில், இந்த நூலை எழுதத் தொடங்கினேன்.
இந்த நூல் எழுதுவதில் என்னுடைய நோக்கம் தமிழ்ச்சாசனக் கல்வி எவ்வெவ்வகையிலே தமிழ்க் கல் விக்கு உதவுகிறதென்பதை எடுத்துக்காட்டுவதேயாகும் வரிவடிவம், மொழி, பண்பாடு, இலக்கியம் வழக்காறு கள் என்ற பகுதிகள் சாசனங்கள் எவ்வெவ்வகை ஆராய்ச்சிகளுக்கு இடந்தந்து நிற்கின்றன என்பதை எடுத்துக்காட்டுவன. இலங்கையராகிய எமக்கு இலங் கைத் தமிழ்ச்சாசன ஆராய்ச்சி முக்கியத்துவம் வாய்ந் ததால், அதனைப்பற்றியும் ஒரு தனிப்பகுதி இந்த நூலிலே இடம்பெறுகிறது:
இந்த நூலிலே கிரந்த எழுத்துக்களும் தமிழ் எண்களும் இயன்றவரை தவிர்க்கப்பட்டுள்ளன; கிரந்த எழுத்துக்களுக்குப் பதிலாக அவற்றுக்கினமான தமி ழெழுத்துக்கள் தரப்படுகின்றன; பழைய தமிழெண் களுக்குப் பதிலாக இன்றைய தமிழில் வழங்கும் அரபு எண்கள் கையாளப்படுகின்றன. கிரந்த எழுத்துக்களில் தமிழில் பிறமொழிச் சொற்கள் சிலவற்றை எழுதும் போது சிலரால் வழங்கப்பட்டுவரும் ஷ, ஜ, ஸ, கூடி முதலியன மட்டுமே சாசன உதாரணங்களிலே எடுத் தாளப்படுகின்றன. கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத் தாத தமிழ்ச் சாசனங்கள் மிகச் சிலவே அச்செழுத் துக்கள் கிடையாமையால், இந்நூல் இவ்வாறு ஆக்கப் பட்டுள்ளபோதிலும் கிரந்த எழுத்துக்களை வழங்க முடி
viii

யாமை சாசனத்தின் உண்மையியல்பையும் சங்கத மொழிச்சொல் தமிழில்வந்து அமையுமாற்றையும் தெளி வாக விளக்கமுடியாமற் செய்கிறதென்பதை நான் உணருகிறேன். ر*
இந்த நூலின் முதற்பகுதியாக அமைந்துள்ள வரிவடிவம் என்ற பகுதி தமிழ்நாட்டிலிருந்த வரிவடி வங்களைப் பற்றிய பொதுவான குறிப்புகளைக் கொண் டது தொல்வரிவடிவவியல் என்பதற்குப் பதிலாகத் தொல்லெழுத்தியல் என்ற சொற்ருெடர் வழங்குவ துண்டு எழுத்தியல் என்பது எழுத்திலக்கணத்தைக் குறிக்க வழங்குவதுண்டு எழுத்து என்பது ஒலிவடிவம், வரிவடிவம் என்ற இரண்டையும் குறிக்கும். நன்னுர லில், எழுத்தியல் என்பது ஒலிவடிவத்தின் இலக்கணத் தையே உணர்த்துகிறதெனலாம். எனவே, இங்கு தொல்வரிவடிவவியல் என்ற சொற்ருெடர் வழங்கப்படு கிறது. வரிவடிவத்தைப்பற்றிய பகுதியிலே கூறப்படு கிற குறிப்புகள் பல, எழுத்துக்களின் பல்வேறுகால வரிவடிவங்களை நோக்கும்போதே தெளிவாக விளங்கும்; எழுத்துக்களின் வெவ்வேறுகால வரிவடிவங்களை உணர்தி தக்கூடிய அச்செழுத்துக்களின்மையால், அவற்றை இந் நூலிலே வெளியிடும் முயற்சி பெரும் பொருட் செலவுக்கு ஏதுவாகும் அதனல், அவை இந்நூலிலே தரப்பட வில்லை. இவ்வகையில் ஈடுபாடுடையோர், தமிழ்நாட் டுத் தொல்வரிவடிவவியலைப்பற்றி எழுந்த நூல்களை இந்த நூலோடு சேர்த்துப் பயன்படுத்த வேண்டும். தமிழ் நாட்டு வரிவடிவங்களின் தோற்றம், வளர்ச்சிபற்றிய கருத்துக்கள் விமர்சனஞ் செய்யப்பட்டுள்ளன. தமிழ் நாட்டு வரிவடிவங்களிலே காணப்படும் வடஇந்தியச் செல்வாக்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. தமிழ்வரி வடிவத்திலே காலப்போக்கில் எவ்வெத்தகைய கார னங்களாலே எவ்வெம்மாற்றங்களேற்பட்டனவென்பது சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
ix

Page 8
மொழி என்ற இரண்டாவது பகுதியிலே என் னுடைய கலாநிதிப்பட்டங்களுக்கான ஆராய்ச்சி நூல் கள் பயன்படுத்தப்பட்டுள்ளன: மொழி காலப்போக்கில் மாற்றமுற்றுச் செல்வது என்ற உண்மையை உணர்த்த வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்துள்ளேன். இங்கு முந்திய சாசனங்களெனப்படுவன, சோழப்பேரரசு காலத்தின் நுழைவாயில் எனத் தக்க காலத்துக்கும், பிந்திய சாசனங்களெனப்படுவன, சோழப் பேரரசுகாலத் தின் கடைவாயில் எனத் தக்க காலத்துக்கும் உரியன: இரண்டு காலச் சாசனங்களுக்குமிடையே முன்னுாற்று முப்பது ஆண்டுகள் இடைவெளி உண்டு. தமிழ் இலக் கியம் பல துறைகளிலும் வேகமாக வளர்ச்சி பெற்ற காலம் சோழப் பெருமன்னர் காலமாதலால், மொழி யிலும் மாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டுமென்பதை எதிரி பார்க்கலாம். பேச்சுவழக்கு மொழி வடிவங்களின் தொன்மையை உணர்த்தக் கூடிய பகுதிகளையும் இக்கட் டுரையிலே சேர்த்துள்ளேன். பேச்சு வழக்கு வடிவங்கள் தரப்பட்டபோது அவை பேச்சு வழக்கு வடிவங்களென்று சுட்டிக் கூறப்படவில்லை. வாசகர்களின் பொது அறிவு பேச்சு வழக்கு வடிவங்களை இனங்கண்டுகொள்ளப்போது மானது இப்பகுதியிற் கூறப்படும் விடயங்கள் சில, என் னுடைய முதல் நூலாகிய தமிழ் வரலாற்றிலக்கணத்தில் இடம்பெற்றுள்ளன. அங்கு எடுத்தாளப்படாத சாசன மொழி பற்றிய விடயங்களும் இப்பகுதியிலே இடம் பெறுகின்றன. மேலும் இந்நூலிலே சாசனமொழி உதா ரனங்களுக்கு அடிக்குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
பண்பாட்டைப் பற்றிய பகுதியிலே சாசனங்கள் கூற எடுத்துக்கொண்ட பொருளை ஆராய்வதையே நோக்கமாகக்கொண்டேன். வரலாறு எழுதப்படும்முறை இங்கு பின்பற்றப்படவில்லை. பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரி "சோழர்" என்ற தம்முடைய வரலாற்று ஆங்
X

இல நூலிலே, அரசியல் வரலாறு, ஆட்சிமுறை, சமூக வாழ்க்கை என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டுள் டுள்ளார். சாசனங்களை முக்கிய ஆதாரமாகக்கொண்டே இந்த நூலை யாத்துள்ளார். இடைக்காலத் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர் பெயர்கள், அவர் அருஞ்செயல்கள் என்பன சாசனங்களிலிருந்தே அறியவேண்டியுள்ளன: ஆனல் அரசியல் வ்ரலாறு பண்பாட்டின் அமிசமாகக் கொள்ளப்படுவதில்லை. ஆட்சிமுறை, சமூக வாழ்க்கை என்பன பண்பாட்டின் அமிசங்களாகக் கொள்ளப்படு கின்றன. இந்த முறையிலே பல்லவர் ஆட்சிமுறை , சமூகவாழ்க்கை என்பனவற்றை டாக்டர் மீனுட்சியும் விசயநகரின் கீழ் ஆட்சிமுறை, சமூக வாழ்க்கை என்பன வற்றைப் பேராசிரியர் மகாலிங்கமும் ஆராய்ந்துள்ளனர். இந்த வரலாற்ருசிரியர்கள் தங்களுக்குத் தேவையான செய்திகளைப் பெற்றுக்கொள்ளச் சாசனங்களைப் பயன் படுத்தியுள்ளனர். நான் சாசனம் கூற எடுத்துக்கொண்ட பொருளையே வகுத்துக் கூறியுள்ளேன்; சாசன மொழியை ஆராயப்பயன்பட்ட சாசனங்கள் இங்கும் பயன்பட்டன: சோழப் பேரரசின் புகழ்மிக்க மன்னர் இருவரின் சாசனங் கள் சிலவும் ஆராயப்பட்டுள்ளன. முந்திய பகுதியிலும் இப்பகுதியிலும் தேவையான அடிக் குறிப்புகள் யாவும் தரப்படவில்லை. சாசனச் செய்திகளைப்பற்றிய அடிக் குறிப்புகள் பெருந்தொகையின. சாசனச் செய்திகளை எடுத்துத் தருவதே இந்நூலை எழுதியதன் நோக்கமாகும். எனவே அடிக்குறிப்புகளின் எண்ணிக்கையைக் குறைப் பதற்காக அவசியமான இடங்களிலே சாசனங்கள் பற்றிய அடிக்குறிப்புகளே பெரும்பாலும் தரப்பட்டுள்ளன:
இலக்கியத்தைப் பற்றிய கட்டுரையொன்று "இளங்கதி"ரில் வெளியிடுவதற்காக 1970 மார்ச்சு மாதம் கொடுத்துள்ளேன். அக்கட்டுரை இங்கு விரிவாக எழுதப் பட்டுள்ளது. சாசனங்களில் மட்டும் இடம்பெறும் மெய்க்
Xi

Page 9
கீர்த்தியிலக்கியம் ஒரளவு விரிவாக ஆராயப்படுகிறது; மெய்க்கீர்த்தி தவிர்ந்த பிற செய்யுள்கள் மண்டல ரீதியிலே அறிமுகப்படுத்தப்படுகின்றன; இலக்கிய வர லாற்றுக்குத் தேவையான செய்திகள் சாசனங்களிலிருந்து அறியப்படுமாற்றைக் காட்டியுள்ளேன். உரைநடை வர லாற்றிலே சாசன உரைநடையின் முக்கியத்துவம் உண ரப்படாமை எடுத்துக்காட்டப்படுகிறது
இலக்கிய வழக்கிலிருந்தல்லாமல் சாசன வழக்கி லிருந்து மட்டும் தெரியவரும் வழக்காறுகள் பல உள அவற்றுட் சிலவற்றின் பொருள் தெளிவாக அறியக்கூடிய தாயுள்ளது; வேறு சிலவற்றின் பொருள் இன்னும் தெளி வாகவில்லை. சிலவற்றின் பொருள் தக்க காரணமின்றி ஊகிக்கப்படுகின்றது "சாசன வழக்காறுகள்" என்பதும் தமிழாராய்ச்சிக்குரிய ஒரு பகுதியாக இருக்கிறது. இப் பகுதியிலே தரப்பட்ட வழக்காறுகளுட் பெரும்பாலன "Indian Epigraphical Glossary,' 'South Indian Temple Inscriptions, Volume III, Part II' 676örgith gift å& Giff லிருந்து எடுத்தாளப்பட்டுள்ளன. சாசன வழக்காறுகள் சிலவற்றின் வடிவம், அமைப்பு, பொருள் என்பன இப் பகுதியிலே விளக்கப்படுகின்றன.
8
இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் என்ற பகுதி யிலே தமிழ்ச் சாசனங்கள் காணப்படும் பகுதிகளும் அச் சாசனங்கள் எழுந்த சூழலும் மாவட்ட ரீதியிலே ஆரா யப்படுகின்றன. சாசன ஆராய்ச்சி இன்றுள்ள நிலையும் இதுவரை நடந்த ஆராய்ச்சியும் இனி நடக்கவேண்டிய பணியும் எடுத்துக்கூறப்படுகின்றன:
xiii

இந்நூலிலே மிகச் சில இடங்களிலே "கூறியது கூறல்" இடம்பெறுகிறது. "கூறியது கூறல்” ஆவ்வவ் விடத்துப் பொருள் விளக்கத்துக்கு உதவுவதால், அதை நான் நீக்க முயலவில்லை.
அகரவரிசை, பிழைதிருத்தம் என்ற பகுதிகளும் சுருக்கமாக அமைந்துள்ளன. பக்கங்களை அதிகரித்துச் செல்ல விரும்பாமை சுருங்கிய அகரவரிசைக்குக் காரண மாகிறது; இந்த நூலைச் சில மாதங்களிலே அச்சிற் பதிப்பித்துவிடவேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தி ஞலே அச்சுக் கோரிக்கப்பட்ட தாள்களின் பிழைதிருத் தத்தை ஒருமுறையே என்னல் பார்க்கமுடிந்தது. எழுத் துப் பிழைகள், சில காணப்படுகின்றன. பிழைகள் சில நூலிலே திருத்தட பட்டுள்ளன; சில பிழைதிருத்தத்தில் இடம்பெறுகின்றன. சாசன வழக்காறுகளிலே காணப் பட்ட அச்சுப் பிழைகள் யாவும் திருத்தப்பட்டுள்ளன.
இந்த நூல் ஒருவகையில் ஒரு அறிமுக நூல் மட்டுமே. இந்த ஆறுவகை ஆராய்ச்சிகளையும் தமிழ் ச் சாசனங்களைக்கொண்டு நடாத்தி விரிவான நூல்கள் வெளியிட என்னல் இயலும். பல்கலைக் கழகத் தமிழ்த் துறையினர் சிறந்த ஆராய்ச்சி நூல்களை வெளியிடவேண் டும் என்ற குரல் கேட்கின்றது. இக்குரல் நான் பல்கலைக் கழகத்தில் உதவி விரிவுரையாளரானபோதே எனக்குக் கேட்டது. 1961-ம் ஆண்டு, நான் என்னுடைய தொழில் பற்றி ஒரு முடிவுக்கு வருவதற்கு இந்தக் குரல் காரண மாக இருந்தது. 1960-61ம் ஆண்டு நடந்த இலங்கைச் சிவில் சேர்வீசு போட்டிப் பரீட்சையில் இலங்கை முழு வதிலுமிருந்து தெரிவுசெய்யப்பட்ட ஐவருள் நானும் ஒருவன். அக்காலத்தில் சிவில் சேர்வீசு நியமனம் பெற்ற வர்கள் பொருள்வருவாய், அதிகாரம், அந்தஸ்து என் பன மிகுந்த பதவிகளை இன்று வகிக்கின்றனர். தமிழ்க்
xiii

Page 10
கல்வியிலும் தமிழாராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபடுவ தற்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவி உதவும் என்ற நம்பிக்கையே என்னைச் சிவில் சேரி வீசு நியமனத்தை நிராகரிக்கச் செய்தது. சிறந்த ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட வழியில்லை என்ற கவலை எனக்கு உண்டு.
சிறந்த ஆராய்ச்சி நூல்களை நாம் வெளியிட வில்லை என்று குறை கூறுபவர்கள் ஆராய்ச்சி நூல்களை வெளியிடுவதில் மூன்று பெரும்பணிகள் அடங்குகின்றன என்பதை உணர்வதில்லை. நூல்களை எழுதுவது; நூல்களை அச்சிடுவதிலுள்ள பொருட்செலவு, நேரக்கழிவு முதலி யன நூல்களை விற்பனை செய்வது என்பனவே அவை, தமிழ் ஆராய்ச்சியாளர் இம்மூன்று பணிகளையும் ஒருங்கே ஆற்றக்கூடியவராக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க் கக்கூட்ாது. நூல்களை எழுதுவதே ஆராய்ச்சியாளரின் பணியாக இருக்கவேண்டும். பிற பணிகளைப் பொருள் வசதியும் பிற வசதியுமுள்ளோர் ஏற்க முன்வருவராயின், இந்த ஆறுவகை ஆராய்ச்சிகளிலே எதிலும் ஈடுபட்டு விரிவான ஆராய்ச்சி நூல் எழுத என்னல் இயலும்.
இந்த நூலை எழுதும்போதே எனக்குப் புலப் பட்ட குறைகளிலே சிலவற்றை மேலே எடுத்துக்காட்டி 4ள்ளேன். எனக்குப் புலப்படாத குறைகளும் பல இருக்க லாம். அவற்றை அறிஞர்கள் எனக்கு அறிவிப்பாராயின் அவர்களுக்கு நன்றியுள்ள வணுக இருப்பேன். இந்த நூலின் அல்லது இந்த நூற் பகுதிகளின் இரண்டாவது பதிப்பு வெளியிடக்கூடிய நிலைதோன்றுமாயின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்கள் கூறும் திருத்தங்களில் ஏற்றுக் கொள்ளக் கூடியனவற்றை ஏற்று நூலைத் திருத்தி வெளி யிடுவேன்.
2-4-71 용)• வேலுப்பிள்ளை
Xiv

பொருளடக்கம்
I சாசனத்துத் தமிழ் வரிவடிவம் . 1 - 46 1. வரிவடிவம் பற்றிய நூல்கள் ve o 2 2. பண்பாடும் வரிவடிவமும் a 24 3. வரிவடிவத்தில் மாற்றங்கள் s ov v 42 11 சாசனத்துத் தமிழ்மொழி 47 - 138 1. எழுத்தியல் 53 2. பெயரியல் 85 3. வினையியல் ... 105 4. இடையியல் ... 134 III சாசனத்துத் தமிழர் பண்பாடு 39 - 232
1. பல்லவர் - பாண்டியர் கால இறுதி,
சோழர் காலத் தொடக்கம் ... l 4l 2. முதலாம் இராசராசன், முதலாம்
இராசேந்திரன் காலம் ... 79 3. பிற்காலப் பாண்டியர் காலம் ... 202 IV சாசனத்துத் தமிழ் இலக்கியம் 233 - 294 1. சாசனச் செய்யுள் ... 234 2. இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் . 279 3. தமிழ் உரைநடை ... 285 W சாசனத்துத் தமிழ் வழக்காறுகள் 295 WI சாசனத்துத் தமிழ் இலங்கை 328
மேற்கோள் ... 356 அகரவரிசை V ... 359
பிழை திருத்தம் ... 368

Page 11

சாசனத்துத் தமிழ் வரிவடிவம்
திமிழ் வரிவடிவம் பற்றிய ஆராய்ச்சி தமிழ்ச் சாசனங்களைக்கொண்டே நடத்தப்படவேண்டியுள்ளது; பழந்தமிழ்நாட்டிலே பனையோலையே எழுதுவதற்குப் பெரிதும் பயன்பட்டது. பனையோலை விரைவில் அழிந்து போகும் தன்மையது; சில நூற்றண்டுகள்தானும் தக்க வாறு பாதுகாக்கப்பட்டாலன்றி நிலைபெறக்கூடியதல்ல; மிகப் பழைய பனையோலைச் சுவடிகள் தஞ்சாவூர்ச் சரசு வதி மகாலிலும் சென்னை கீழைத்தேயக் கையெழுத்துப் பிரதிகள் நூல் நிலையத்திலும் ஆதீனங்கள் மடாலயங் களிலும் காணப்படுகின்றன. இச்சுவடிகள் யாவும் கடற்த நான்கு அல்லது ஐந்து நூற்ருண்டுகளுக்குக் காலத்தால் மேற்படாதவை தமிழெழுத்து ஏறத்தாழ தற்கால வரிவடித் தையடைந்த பின்னரே இச்சுவடிகள் யாவும் எழுதப்பட்டன் ஏட்டில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கும் அச்சுப் புத்தகத்தில் இடம்பெற்ற தமிழ் எழுத்துக்களுக்கும் சிற் சில வேறுபாடுகளுண்டு; எனினும், தமிழ் எழுத்தின் பழைய வரிவடிவத்தை யறிய, ஏட்டுச் சுவடிகள் உதவமாட்டா. பழைய தமி ழிலக்கண நூல்களுள், வரிவடிவத்தைப்பற்றி யறிந்து கொள்வதற்கு உதவக் கூடியனவாக மிகச் சில குறிப்பு களே உண்டு. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் மொழியை எழுதுவதற்கு வரிவடிவம் இருந்திருக் கிறது என்பது உண்மையாகும். பனேயோலைச் சுவடிகள் காலத்திற்குக் காலம் பிரதிசெய்யப்பட்டபோது பிரதி செய்யப்பட்ட காலத்திற்குரிய எழுத்திலேயே புதிய பிரதிகள் ஆக்கப்பட்டன சாசனங்கள் அவ்வக்காலத்

Page 12
திற் பொறித்தபடியே இன்றும் காணப்படுகின்றன. எனவே சாசனவியலின் துணைகொண்டே, தமிழின் பழைய வரிவடிவத்தைப் பற்றி அறிந்து கொள்ளமுடி யும். வரிவடிவம் பற்றிய நூல்கள், பண்பாடும் வரிவடி வமும், வரிவடிவில் மாற்றங்கள் என மூன்று கூறுகளாக இவ்விடயம் ஆராயப்படுகிறது;
1. வரிவடிவம்பற்றிய நூல்கள்
காலத்துக்குக்காலம் வரிவடிவங்கள் சிறிது சிறி தாக மாற்றமுற்று வந்தவற்றைப்பற்றிக் கற்பது தொல் வரிவடிவவியல் எனப்படுகின்றது. இந்தியத் தொல்வரி வடிவவியலைப் பற்றிய ஆராய்ச்சி, கல்கத்தாவில், பதி னெட்டாம் நூற்ருண்டு இறுதியில் இடைக்காலச் சாச னங்கள் சிலற்றை ஆராய்வதுடன் தொடங்கிற்று. பத் தொன்பதாம் நூற்ருண்டில், பழைய இந்திய வரிவடி வங்களைப் பற்றிய அறிவு விரைவாக வளர்ச்சியடைந்து இந்திய உபகண்டம் முழுவதிலுமுள்ள எல்லாச் சாசனங் களையும் வாசிக்கக்கூடிய நிலைதோன்றியது. நூறு ஆண்டு களுக்கு மேலாக வளர்ந்த இந்திய வரிவடிவங்களைப் பற்றிய அறிவு 1896 ம் ஆண்டில் "இந்தியத் தொல் வரிவடிவ இயல்" என்ற பெயரில் பூலர் என்பவரால் நூல்வடிவில் வெளியிடப்பட்டது. 1918 ல் ஜி. எஸ். ஓஜா என்பவர் இந்திமொழியில் "பாரதீய லிபிமாலா" என்ற நூலின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டார். பூலர், ஒஜா என்பவர்கள் காலத்தில் அறியப்படா திருந்த பல சாசனங்களைப் பயன்படுத்தி, ஏ. எச். தானி என்பவர் "இந்தியத் தொல்வரிவடிவவியல்" என்ற புதிய ஆராய்ச்சி நூலொன்றை 1963 ல் வெளியிட்டுள்ளார். தானி ஒரு புது முறையில் ஆராய்ச்சி நிகழ்த்தியுள்ளார்: பண்பாட்டுவளர்ச்சியின் ஒரு அமிசமே வரிவடிவமாற்றம் என்று அவர் கொண்டுள்ளார் அவ்வாறு கொள்ளாத
2

போது, எழுத்துக்கள் வடிவங்களை அவ்வாறும் இவ்வா றும் காரணமின்றி மாற்றிக்கொள்வன போலத் தோன் றும் என்றும் எழுத்துமுறை எதுவும் அவ்வாறு அமைவ தில்லை என்றும் தம்முடைய நூலின் முகவுரையில் மேலும் கூறுவர். இப்புதுமுறை ஆராய்ச்சி போற்றப் படவேண்டியது, கி. பி. எட்டாம் நூற்ருண்டு வரையி லான காலப்பகுதியைச் சேர்ந்த வரிவடிவங்களை அவர் தம்முடைய நூலில் ஆராய்ந்துள்ளார். அவருடைய முடிபுகள் சில கருத்து வேறுபாடுகளுக்கு இடந்தருகின் றன. இந்தியத் தொல் வரலாறுபற்றிய கருத்து வேறு பாடுகள் சில நீங்கும்வரை, அந்த முடிபுகள் அவ்வாறே கருத்து வேறுபாடுகளுக்குரியனவாக இருக்கும். ஆனல் அவருடைய ஆராய்ச்சிமுறை, "இந்தியத் தொல்வரிவடி வவியல் ஆராய்ச்சியில் ஒரு வளர்ச்சிப்படியாகும் எனத் துணிந்து கூறலாம். பிற இந்திய வரிவடிவங்களின் பின் னணியில் வைத்து கி. பி. எட்டாம் நூற்றண்டு வரை யிலான தென்னிந்திய எழுத்துக்களைத் தானி ஆராய்ந்துள் ளார். ஆணுல் அவருடைய கூற்றுக்கள் சில, ஏற்கக்கூடி பணவல்ல.
இந்தியத் தொல்வரிவடிவவியலைப் பற்றிய ஆராய்ச்சி வங்காளத்திலே தோன்றியபோதிலும் கடந்த நூற்ருண்டிலே தென்னிந்திய வரிவடிவங்களும் ஒரளவு கவனிக்கப்பட்டன. 1834 ல் பபிங்டன் என்பவர் மாமல்லபுரத்திற் காணப்பட்ட சாசனங்களிலுள்ள எழுத்துக்களை அட்டவணை செய்தார். 1837 ல் கப்டன் எச். ஹார்க்கின்ஸ் என்பவர் தென்னிந்தியத் தீபகற் பத்திலுள்ள மொழிகளின் பழைய வரிவடிவங்களையும் புதிய வரிவடிவங்களையும் தொகுத்தார்; ஜேம்சு பிரின்
1. Babington - Journal of the Asiatic Society of Bengal
(1837), pp. 219-20, Plate XIII.

Page 13
செப் என்பவர் "கி; மு: 543 லிருந்து கி. பி. 1200 வரை சங்கத மொழி நெடுங்கணக்கு அடைந்த மாற் றங்கள்" என்ற தலைப்பில் அட்டவணை ஒன்று தயாரித்து, காலம் தெரியாத சாசனங்களின் காலத்தை நிர்ணயிப் பதற்கு இந்த அட்டவணை உதவக்கூடும் என்ற கருத்தை வெளியிட்டார்.2 இந்தியத் தொல்வரிவடிவவியல் இந் தக் கருத்தை மையமாகக் கொண்டே வளரத் தொடங் கிற்று அக்காலத்திலிருந்து இந்தத்துறையிலெழுதப்பட் டவையாவும், எழுதப்பட்ட காலம் தெரியவராத பெருந்தொகையான சாசனங்களின் காலத்தை நிர்ண யிப்பதற்குப் பயன்படக் கூடிய கால அட்டவணையைத் தயாரிப்பதையே நோக்கமாகக் கொண்டன; 1874 ல், ஏ. சி. பர்ணல் என்பவர் வெளியிட்ட "தென்னிந்தியத் தொல் வரிவடிவவியலின் மூலாதாரங்கள்" என்ற நூல் அத்தகையதே,22 தென்னிந்தியச் சாசனங்களையும் சுவடி களையும் கற்பதற்கு ஒரு முன்னுரையாக அமையக்கூடிய வகையில் இந்நூல் எழுதப்பட்டதாக நூலாசிரியரே கூறியுள்ளார் ஒப்பியல் மொழிநூல் அறிஞரான கால்டு வெல் தென்னிந்தியச் சாசனங்களிலும் ஈடுபாடு உள்ள வராதலினுல் பர்ணலினுடைய கருத்துக்கள் சிலவற்றைப் பற்றிய தம்முடைய விமரிசனத்தை வெளியிட்டுள் ளார், பர்ணலின் நூல் வெளிவந்ததற்கு அடுத்த ஆண் டில் கால்டுவெல்லின் விமரிசனம் அவருடைய திராவிட மொழி ஒப்பிலக்கண நூலின் இரண்டாவது பதிப்பில் வெளிவந்தது, கால்டுவெல்லின் அபிப்பிராயங்கள் பிற் காலத்தில் வந்த தொல்வரிவடிவவியலாரால் ஏற்கக் கூடியனவாயுள்ளன.
2. Prinsep. J. - Essays on Indian Antiquities, Edited by
E. Thomas, London, 1858. 2a. Burnell, A. C. - Elements of South Indian Palaeography.
3, Caldwell is Comparative Grammar of the Dravidian ம:

தமிழ்த் தொல்வரிவடிவவியலைப் பற்றி இருப தாம் நூற்ருண்டு ஆராய்ச்சிகளை நோக்குவது போது மானது இந்த நூற்றண்டில் முதன்முதல் ஆராய்ச் சியை வெளியிட்ட ரி. ஏ கோபிநாதராவ் என்பவரி இந்தியத் தொல்வரிவடிவவியலாரிடம் தென்னிந்தியா தனக்கு உரிய கவனத்தைப் பெறவில்லையென்று குறைப் பட்டுக்கொள்கின்ருர். இந்தியாவைப்பற்றியும், இந் திய வரலாற்றைப் பற்றியும் ஆராய்பவர்களைப் வற்றித் தென்னிந்தியாவில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் குறை பாடுதான் இது வட இந்தியா அல்லது வட இந்தியப் பண்பாட்டோடு தொடர்பு ஏற்படும்போது மட்டுமே தென்னிந்தியா குறிப்பிடப்படுகிறது. பூலருடைய நூலில் தென்னிந்தியாவிற்குக் கி  ைட த் த முக்கியத்துவம் போதாது என்பதையே கோபிநாதராவ் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கவேண்டும். திருவாங்கூர் புதைபொரு ளாராய்ச்சி வெளியீடு முதலாம் தொகுதியில் "தமிழ்கிரந்த நெடுங்கணக்கின் வளர்ச்சி பற்றி ஒரு அத்தியா யம்" என்றும் "வட்டெழுத்துச் சாசனங்களின் மாதிரி கள்" என்றும் இரண்டு கட்டுரைகள் கோபிநாதராவ் எழுதியுள்ளார்; தமிழ்-கிரந்த எழுத்துமுறை பற்றியும் எண்கள் பற்றியும் ஆராயும்போது, அவர் பிராமிச் சா சனங்களிலிருந்து ஓர் எழுத்தை அல்லது எண்ணைத் தற்து அது பிற்காலங்களில் எவ்வாறு மாறிவந்தது எனக் காட்டுகின்ருர் கிரந்தம், தமிழ் என்பவைகளை அவர் தனித்தனியே ஆராய்கின்ருர், அந்த அத்தியாயத்தின் இறுதியில், வெவ்வேறு காலக் கிரந்த எழுத்துக்களின் அட்டவணைகளையும் தமிழ் எழுத்துக்களின் அட்டவணை களையும் தருகிருர், வட்டெழுத்தைப்பற்றி ஒரு முன் னுரை தந்து அதன் பின்பு வட்டெழுத்துச் சாசனங்க
4. Gopinatha Rao T. A. - Travancore Archaeological Series
Vol. I, p. 20. -

Page 14
ளின் மாதிரிகளேத் தருகிறுரீ6 நீண்ட காலமாக வட் டெழுத்து வழங்கிய பிரதேசம் திருவாங்கூரேயாதலால் அப் பிரதேசத்துப் புதைபொருளாராய்ச்சி வெளியீட் டில் இடம்பெறவேண்டிய வட்டெழுத்துச் சாசனங்கள் பல, அவருக்குக்கிடைத்திருக்கும். ரி என். சுப்பிரமணி யம் தமிழ்த் தொல்வரிவடிவ இயலைப்பற்றி ஆராய்ந்து கலைமகளில் தமிழ்க்கட்டுரைகள் எழுதிவந்தார். சிறிது காலத்தின் பின் அக் கட்டுரைகள் நூல் வடிவத்தில் வெளி வந்தன. சிவராமமூர்த்தி தென்னிந்தியத் தொல்வரி வடிவவியலை ஆராய்ந்து "இந்தியச் சாசனவியலும் தென் னிந்திய வரிவடிவங்களும்" என்ற நூ ை1957 ல் வெளி யிட்டார். இந்திய வரிவடிவங்கள் யாவற்றிலும் ஒவ் வோர் எழுத்தும் பெற்றுவந்த வளர்ச்சிப் படிகளை இந் நூலிலே தந்துள்ளார். ஒவ்வோர் எழுத்தின் பல்வேறு வடிவங்களையும் ஒவ்வோர் அட்டவணையிற் காட்டமுய லும் இவர் ஒவ்வோரி அட்டவணைக்கும் நூலில் ஒவ் வொரு பக்கம் ஒதுக்கியுள்ளார். ஒவ்வோர் அட்டவணைக் கும் எதிர்ப்பக்கத்தில் அவ்வவ்வெழுத்து வெவ்வேறு வரிவடிவங்களில் வெவ்வேறு காலங்களில் அடைந்த மாற்றங்களை விளக்கியுள்ளார்; வடிவ மாற்றங்களுக்குக் காரணங்கள் கூருது வடிவ மாற்றங்களை மட்டுமே அவரி கூறிச் சென்றுள்ளதால், அவருடைய நூல், எழுத்துக் களின் வடிவங்கள் மாறிவந்ததைப் பழம்பொருட்காட் சிச்சாலையில் வைத்துக்காட்டுவதற்கு மட்டுமே உதவக் கூடியது என்று தானியாற் கண்டிக்கப்படுகின்றது: ரி என். சுப்பிரமணியம் தென்னிந்தியக் கோவிற் சாச னங்களைப் பற்றிய தம்முடைய வெளியீட்டில், தம்மு டைய கருத்துக்களே வளர்த்து "தமிழ்த் தொல்வரிவடிவ
5. asahul Dasair (Qafaraar) in the late 1830's. 6. பண்டைத் தமிழ் எழுத்துக்கள்.
6

வியல்" என்ற பகுதியை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.7 இவ்வாங்கிலப் பகுதி அண்மையில் வெளியிடப்பட்ட தாதலால், அதுவே இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது; தமக்கு முந்திய தொல் வரிவடிவ வியலாரைப்போல ஒள்வோரெழுத்தாக ஆராயாமல், ஒவ்வொரு வரிவடிவமாக ஆராய்ந்துள்ளார். ஒவ்வொரு வரிவடிவத்தின் வளர்ச்சியையும் தென்னிந்திய அரசியல் வரலாற்றுக்காலப் பிரிவுகளோடு ஒத்த காலப் பிரிவுக ளாகப் பிரித்து ஆராய்கிருர் கடைசியாக, தானியின் நூல் 1963 ல் வெளிவந்தது; அதற்கு ஒரு விமர்சனம் எழுதும் சந்தர்ப்பம் அப்பொழுது இந்நூலாசிரியருக்குக் கிடைத்தது.8
தமிழ் வரிவடிவத்தின் தோற்றம் இந்துவெளி வரிவடிவத்திலிருப்பதாகக் கூறப்படுவது உண்டு இஸ் பெயின் நாட்டிலிருந்து கத்தோலிக்க மதம் பரப்பவந்த பிதா எச், ஹீராஸ் என்பவர் இந்துவெளி மக்கள் திரா விடரெனக் கொண்டு அங்கு வழங்கிய மொழி பழந் திராவிடமெனக் காட்டமுனைந்தார். ஆனல் இந்துவெளி வரிவடிவம் இன்னும் திருப்திகரமாக வாசிக்கம்படவில்லை; அந்த மொழியும் அறியப்படாததாகவே இருக்கிறது. இந்துவெளி மக்கள் இந்திய ஆரியரெனக்கொண்டு அந்த வரிவடிவத்தை அதற்கேற்ப வாசிப்பவர்களும் இருக்கின் ருர்கள் ஆரியரும் சுமேரியரும் ஓரினத்தார் என்று கொண்ட எல். ஏ. வாட்டெல் என்பவர் சுமேரிய வரி வடிவத்துக்கும் இந்துவெளிவரிவடிவத்துக்கும் சில ஒற்று மைகளைக் கண்டு மிகுதியை ஊகித்து வாசித்துள்ளார் பரணவிதான என்பவர் இந்து வெளியில் வழங்கிய மொழி பழைய சிங்களம் என்று கொண்டு வாசிக்க முயன்றுள்
7. South Indian Temple Inscriptions, Vol. III, Part I. 8. Oriental Art. Oxford. Volume X, p. 190.

Page 15
ளார்; தெரியவராத வரிவடிவத்தில் தெரியவராத மொழியை வாசித்து உணர்தல் அரிது; இதுவரையிலான வாசிப்புகள் யாவும் தகராறுக்குரிய வாசிப்புகளாகக் காணப்படுகின்றன; இதை வாசித்துப் பயன் பெற முடி யுமா என்ற நிலையே தோன்றிவிட்டது; இங்கு ஆராய்ச் சிக்கு எடுத்துக்கொண்டுள்ள தமிழ்த் தொல் வரிவடிவ வியல் பற்றிய நூல்களில் ஒன்றும் இந்துவெளி எழுத் துத் திராவிட எழுத்து என்று குறிப்பிடாமை போற் றத்தக்கது. கோபிநாதராவ் காலத்தில் இந்து வெளிச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. சிவராமமூர்த்தி இந்துவெளி எழுத்தைப் பற்றி ஆராயவில்லை, ரி. என்? சுப்பிரமணியம் இந்து வெளி எழுத்தை வாசிக்கமுடிய வில்லை என்று உடன்பட்டுள்ளார். தானியும் இதே கருத்தினரே. ஆனல், தானியும் சிந்தித்திராத புது முறைகளால், இந்து வெளி எழுத்து வாசிக்கப்படக்கூடும் என்ற நிலை தோன்றியுள்ளது, இஸ்காந்தினேவிய ஆசிய கல்விக் கழகம் இந்து வெளி எழுத்தின் இரகசியங்களைக் கண்டறிவதற்காக "கணனி' முறையைப் பயன்படுத்து கிறது. அக்கழகத்தின் வெளியீடுகளிலிருந்து சில பிழை களைக் கண்டறிந்து கூறலாம். இந்துவெளிமொழி பழந்` திராவிடமாகவே இருந்திருக்கவேண்டும் என அது ஊகித் துள்ளது.? அது இந்திய ஆரிய மொழியாக அல்லது இந் தியாவில் இருந்து பிற்காலத்தில் மறைந்துவிட்ட மொழி யாக ஏன் இருந்திருக்கக்கூடாது? அந்த ஊகத்தை வைத்துக்கொண்டு அதற்கேற்றமுறையில், அதன் வாசிப்பு நடைபெறுகிறது. ஒரே வடிவம் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேருக வாசிக்கப்பட்டுள்ளது.
9. Decipherment of the proto-Dravidan Inscriptions of the Indus Civilization. Three Announcements 196970. Copenhagen.

திராவிட மொழியின் கிறப்பியல்புகள் என்று கூறமுடி யாத கில வழக்காறுகள் அது பழந்திராவிட மொழி யாக வாசித்த பகுதியிற் காணப்படுகின்றதி0 இந்த வாசிப்பிற் குறைகாணப்படுகிறபோதிலும் "கணனி" முறை நன்கு விடுத்தியடைந்து தக்கமுறையிற் பயன் படுத்தப்பட்டால், இந்துவெளி எழுத்தினது இரகசியங் கள் புலப்படக்கூடும் என்ற நம்பிக்கை இன்று காணப் படுகின்றது:
இந்துவெளி வரிவடிவம் பழைய திராவிட வரி வடிவம் என்று உடன்படும் நிலை அறிஞரிடையே ஏற் படுமானல், பிராமியின் தோற்றம் இந்துவெளி வரிவடி வத்திற் காணப்படுகின்றது என்று கூறத்தக்க நிலை வர லாம்; பிராமி வரிவடிவத்தின் தோற்றம் அபிப்பிராய பேதத்துக்கு இடமாயிருக்கிறது; பிராமி இந்தியாவி லேயே தோன்றியிருக்கவேண்டும் என்று இந்திய அறி ஞர்கள் பொதுவாக நம்புகிருர்கள்; பிராமி மேற்காசி யாவிலிருந்து பெறப்பட்டிருக்கவேண்டும் என்று ஐரோப் பிய அறிஞர்கள் பொதுவாகக் கூறுகிருர்கள் வட செமிதிக் வரிவடிவங்களிலிருந்து அதிலும் சிறப்பாக ஆர மெய்க் வரிவடிவத்திலிருந்து பிராமி பெறப்பட்டதாக வேண்டும் என்று டேவிட் டிறிஞ்சர் கருதுகிருர். பிரா மியின் தோற்றம் பற்றித் தானியும் இதே கருத்துடை யவர்; ஆனல், பிராமி செமிதிக் வடிவங்களை அப்ப டியே பின்பற்றவில்லை; செமிதிக் தூண்டுதலால் தோன் றியிருக்கலாம் என்று தானியும் உடன்படுகிருர் பிராமி
10. B.B. Lal, Director General of Archaeology, India,
made these observations at the Second International Conference Seminar on Archaeology, Colombo 1969.
11. David Diringer - The Alphabet, pp. 336-37.

Page 16
சங்கத மொழிக்கென்று வகுக்கப்பட்ட வரிவடிவம் அல்ல என்றும் சங்கத மொழிக்கு என்று எடுத்துக் கொள்ளப்பட்ட வரிவடிவம் மட்டுமே என்றும் தானி யும் சுப்பிரமணியமும் சுட்டிக்காட்டியுள்ளனர்; பிராமி ஒரு திராவிடமொழிக்குரிய வடிவமாக இருந்து பாதுதம் அகில இந்திய மொழியான போது அம்மொழிக்கு ஏற் றுக்கொள்ளப்பட்டிருக்கவேண்டும் என்று சுப்பிரமணியம் கூறுவர் பிற்காலத்திற் புகுந்த சங்கதமொழிச் செல் வாக்காலேயே அவ்வரிவடிவ முறையில் எகர ஏகாரங்க ளுக்கும் ஒகர ஒகாரங்களுக்கும் வேறுபாடு இல்லாமற் போனது என்பரி இந்தச் சந்தர்ப்பத்தில், வரலாற்றுக் காலத்துக்கு முந்திய சித்திர எழுத்து முதலியவற்றுக் குத் தமிழ் நூல்களிலுள்ள சான்றுகள் என்று தாம் கருதுவனவற்றைத் தொகுத்துக் கூறியுள்ளார்.? இந்திய உபகண்டத்திலுள்ள மக்கட்குழுவினருள் தமிழரிடம் மட்டுமே இத்தகைய சான்றுகளைக் காணமுடியும் என்று மேலும் சுட்டியுள்ளார். இந்துவெளி எழுத்துக்கள் "கணனி முறையில் ஆராயப்படும் நிலை வரும்வரையில் இந்த வாதங்களில் இந் நூலாசிரியருக்கும் நம்பிக்கை ஏற்படவில்லை. இந்துவெளிவரிவடிவம் திராவிட் வரிவடி வம், என்பது நிரூபிக்கப்பட்டால், இந்தியத் தொல்வரி வியலையும் தமிழ்த் தொல்வரிவடிவவியலையும் முறை யாகக் கற்பதற்குச் சுப்பிரமணியத்தின் வாதங்கள் பெருந்துணை புரியலாம்.
இந்தியத் தொல்வரிவடிவவியலில் பட்டிப்புருே லு சாசனமும் தமிழ் நாட்டுக்குகைச் சாசனங்களும் பெறும் இடமும் அபிப்பிராயபேதங்களைத் தோற்றுவித்துள்ளது:
12. T.N. Subramaniam-South Indian Temple Inscriptions Vol. III, Part II, History of the Art of writing and the Antiquity and origin of the Brahmi.
O

தென்னிந்தியக்குகைச் சாசனங்களைப் பற்றிய அபிப்பி ராயபேதங்கள் இருவகையிற் காணப்படுகின்றன. சாச னங்கள் கூறும் பொருளைப்பற்றியும் எழுந்த காலத்தைப் பற்றியும் வேறுபாடுகள் உள. இவற்றை ஒத்த சாசனங் கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இலங்கையிலும் காணப்பட்டபோதிலும் அச் சாசனங்கள் சிரமமின்றி வாசிக்கப்பட்டன பாண்டிநாட்டுக் குகைச்சாசனங்களிற் பாக தம் தவிர்ந்த பிறிதொரு மொழி எழுதப்பட்டிருப் பதாகத் தெரிவதாலும் இச் சாசனங்களுக்கும் பல்லவர் காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் காணப்படும் தமிழ் நாட்டுச் சாசனங்களுக்குமிடையே பெரிய கால இடை வெளி இருப்பதாலும் இச் சாசனங்களை வாசிப்பது சிரம மாகிறது. எச். கிருஷ்ணசாஸ்திரி 1919லும் கே. வி. சுப் பிரமணிய ஐயர் 1924 லும் சி நாராயணராவ் 1936லும் இச்சாசனங்களை வாசித்து விளக்கமுயன்றனர். இச்சாச னங்களின் மொழி பாகதமும் பழந்திராவிடமும் கலந் தது என்று கிருஷ்ணசாஸ்திரி கருதினர்; சில பாகதச் சொற்கள் கலந்த தமிழ்மொழி என்று சுப்பிரமணிய ஐயர் கருதினர் பைசாச பாகதம் என்று நாராயணராவ் கருதி ஞர் ஐராவதம் மகாதேவன் உலகத் தமிழாராய்ச்சி மகாநாடு முதல் இரண்டிலும் இச் சாசனங்களைப்பற்றி ஒவ்வொரு கட்டுரை வாசித்துள்ளார் குசைச்சாசனங்கள் சிலவற்றைத் தமிழ்ச் சாசனங்களாக அவர் கொண்டுள் ளார்; சங்க இலக்கியத்துச் செய்திகள் சில, இச்சாசனங் கள் சிலவற்றிலும் இடம்பெறுவதாக அவர் காட்டியுள் ளார். அவருடைய வாசிப்புகள் அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டால், தமிழ்த் தொல்வரிவடிவவியலில் ஒரு முக்கிய அத்தியாயமாகத் தென்னிந்தியக் குகைச் சாச னங்கள் விளங்கும் இச் சாசனங்களின் காலத்தைப்பற்றி யும் அபிப்பிராயபேதம் உண்டு அசோகனுடைய சாச னங்களின் காலமாகிய கி. மு. மூன்ரும் நூற்ருண்டே குகைச் சாசனங்களின் காலம் என்று முடிவுகட்டினரி
1

Page 17
சுப்பிரமணிய ஐயர். கி3 பி: முதலாம் நூற்ருண்டின் முற் பாதிக்கு முன்பு இச்சாசனங்கள் பொறிக்கப்பட்டிருக்க முடியாது என்பர் தானி கி. பில் இரண்டாம், மூன்ரும் நூற்றண்டுகளுக்குரியன இச்சாசனங்கள் என்பர் இளைப் பாறிய இந்திய அரசாங்கச் சாசனவியலாளரான டி சி; சேர்க்கார்? சாசனங்களிலுள்ள தமிழ் சங்க காலத் தமி ழின் நிலைக்கு வளரவில்லையென்ற கருத்தினுற்போலும் சிவராமமூர்த்தியும் சுப்பிரமணியமும் கே: வி: சுப்பிர மணிய ஐயருடைய காலக்குறிப்பை ஏற்றுக்கொண்டனர்; ஆனல், ஐராவதம் மகாதேவனுடைய விளக்கங்கள் ஏற் றுக்கொள்ளப்பட்டால், குகைச் சாசனங்களும் சங்க இலக்கியமும் சம காலத்தன எனக்கொள்ளலாம். சங்க காலம் கி. பி. மூன்ரும் நூற்ருண்டில் முடிகிறது என இன்றைய தமிழறிஞர்கள் கொள்வர். அப்படியானல், வரிவடிவ ஆராய்ச்சி மூலமாகத் தானி கூறிய காலம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாகலாம்3
இந்தியப் பண்பாடு எப்பொழுதும் வட இந்தியா விலிருந்து தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் சென்றது என்ற தமது நம்பிக்கையோடு தென்னிந்தியாவும் இலங் கையும் மிகப்பழமையான பண்பாடுடையன என்ற நிலைமை முரணியதால் தென்னிந்தியாவையும் இலங்கை யையும் குறிக்கும்போது தானி கடுமையான வாரித்தை களைக்கூறியுள்ளார்; இவ்விரு பிரதேசங்களைப் பற்றித் தானி கூறுவன, யாவரும் உடன்படத்தக்கனவாக இல்லை. தென்னிந்திய வரிவடிவம், பிராமியிலிருந்து வேறுபட்ட தால், மேற்காசியாவிலிருந்து வந்திருந்தது என்று பர்னல் கூறியதைத் தானி நிராகரித்தது ஏற்றுக்கொள்ளக்கூடிய தாக இருக்கிறது; திராவிடி என்று பெயரிடப்படக்கூடிய
13, D.C. Sircar - Indian Epigraphy, p. 46, 12

தென்னிந்திய வரிவடிவம் ஒன்று - முதல் பூலரால் கூறப் பட்டுப் பின்பு சிவராமமூர்த்தியாலும் சுப்பிரமணியத் தாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது - தானியால் நிராகரிக் கப்படும்போது, அது நியாயமாகத் தோன்றுகிறது. இலங் கைச் சாசனவியல் என்ற சஞ்சிகையைக் குறிக்கும்போது அது இற்தியச் சாசனவியலின் "போலி'யாகச் செய்யப் பட்டது என்று கூறும் தானி பர்மாச் சாசனவியலைப் பற்றிக்கூறும்போது "போலி" என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை. தானி குறிப்பிடும் இலங்கையின் "பழமை போற்றும் எழுத்து'ச் சில வடிவம்கேளில் அசோ கனுடைய பிராமி எழுத்தை ஒத்துக்கிானிப்படுகின்றது: அசோகனுடைய காலத்தில் அந்த வடிவங்கள் வற்து சேர்ந்திராவிட்டால் இலங்கையர் எவ்வாறு அந்தப் பழைய வடிவங்களைப் போற்றியிருந்திருக்கலாம்? மரபு வழி இலங்கை வரலாற்றைக் கவனியாது தொல்வரி வடிவவியல் முறையில் மட்டும் இலங்கைப் பழைய சாச னங்களைப் பற்றிக் கூறுவதாகத் தானி சொல்வர் இலங் கைக் குகைச் சாசனங்களின் காலம் தென்னிந்தியக் குகைச் சாசனங்களின் சமகாலம் அல்லது பிற்காலம் என்று தானி கொள்வர் வடஇந்திய எழுத்துவடிவங்களை ஒத்த சில வடிவங்கள் சித் தண்ணவாசற் சாசனத்தில் வந்தமைந் திருத்தலால் அந்த வடஇந்தியச் சாசனங்களின் கால மாகிய கி. பி. முதலாம் நூற்ருண்டைச் சேர்ந்தது சித் தண்ணவாசற் சாசனம் என்பர் தானி, சில எழுத்து வடிவங்களை "ஒழுங்கற்ற முறையில் வரையம்பட் டன" என்று தானி குறிப்பிடுவர் பட்டிப்புருேலு சாசனத்தில் "பிழைகள்" இருப்பதாகக் குறிப்பிடுவர். இலங்கைப் பழைய சாசனங்களைப் பற்றிக் குறிப்பிடும் போதும் இந்தச் சொற்பிரயோகங்களை வழங்குவர். தென் னிந்திய வரிவடிவங்களினதும் இலங்கை வரிவடிவத்தின தும் தொன்மையைத் தானி இவ்வாறு தட்டிக்கழித்து விடுகின் ருர் ஒருவகைச் சான்றைமட்டும் கொண்டு ஒருண்
13

Page 18
மையான மதிப்பீடு செய்வது சில சமயங்களிற் சிரமமாக இருக்கும் அதுவும் மூலாதாரங்கள் அருகிக் காணப்படும் பண்டைக்கால வரலாற்றைப்பற்றி இவ்வாறு செய்யப் படும் மதிப்பீடு பெரும்பாலும் தவருகவே அமையும் மரபுவழியிற் சங்க இலக்கியம் என்று கூறப்பட்டுவந்தது இன்று முற்சங்க இலக்கியம் என்றும் பிற்சங்க இலக்கி யம் அல்லது சங்க மருவிய கால இலக்கியம் என்றும் பாகுபடுத்தப்படுகின்றது. முற்சங்க இலக்கியம் வீரயுகம் அல்லது இயற்கை நெறிக்காலத்தைப்பாடும் இலக்கிய மாகும். அக்காலத்திலேயே சிறந்த பண்பாட்டோடு விளங்கிய தமிழ்நாட்டுமக்கள் வாழ்க்கையில் வடஇந்தியச் செல்வாக்கு அதிகம் இருத்திருக்கவில்லை. ஆகவே பண் பாடு எப்போதும் வடக்கிலிருந்து தெற்குக்கு வந்தது என்று தானி கொள்வதை ஏற்கமுடியாது. தானிக்குத் தமிழ் மூலாதாரங்களிலும் மரபுவழி இலங்கை வரலாற் றிலும் பயிற்சியிருந்திருந்தால், அது அவருக்கு ஒரு பரந்த நோக்கைக் கொடுத்திருக்கும்.
தானி தென்னிந்திய வரிவடிவத்தின் தொன் மையை நிராகரிக்கிருர், ஆனல், உண்மையைக் கூற விரும்புகிருர் அதனல், அவருடைய நூலில் முரண் பாடுகள் காணப்படுகின்றன. 53 ம் பக்கத்தில் அவர் கூறுவது, "மேற்குத் தெக்கணத்திலிருந்து பண்பாடு தெற்கு நோக்கிச் சென்றதை அமராவதியிலும் அதன் சுற்ருடலிலும் காணலாம்; இந்த இடத்திலிருந்து எழுத்து முறை தென்னிந்தியாவின் மிலேச்சனத்தனமுள்ள மலைக் குகைகளுக்குள் புகுந்தது". கிறித்தவ ஆண்டுத் தொடக் கத்துக்குரியதும் தென்னிந்தியச் சாசனங்கள் மிகப் பழையவற்றுள் ஒன்றும் என்று தானி கருதிய ஒரு சாச னத்தைப் பற்றிக் கூறும்போது 73 ம் பக்கம், "அமரா வதியிலும் அறியப்படாத வட இந்திய எழுத்து வடி 2ங்கள், சில தென்னிந்தியாவிலுள்ள சித்தண்னவாசற்
14

சாசனத்தில் இடம்பெறுகின்றன. இந்தச் சாசனத்திற் காணப்படும், இரண்டு பக்கங்களிலும் புள்ளி கொண்ட நேர்கோட்டையுடைய இகர வடிவம் அக்காலத்திலே தென்னிந்தியாவுக்கு வெளியில் எங்கும் காணப்பட வில்லே இந்த வடிவம் ஈகாரமாக வட இந்தியாவிலும் மேற்கிந்தியாவிலும் வழங்கத் தொடங்குகிறது; இது தெற்கிலிருந்து வடக்குக்கு வந்திருக்கலாமா? பண்பாட் டுப் பரவுதல் இரு வழிகளிலும் நிகழ்ந்தது என்று அவர் கருதினல் தெற்கை "மிலேச்சத்தனமான" என்று அவர் ஏன் குறிப்பிட்டார்? 171 ம் பக்கத்தில் அவர் கூறுவது "வட இந்திய வடிவங்கள் கீழைமால்வா என்ற பாதை யினுாடாக வந்து கோதாவரி கிருஷ்ணு என்ற ஆறுகள் வழியாகப் பரவித் தென்னிந்தியாவினுட் புகுந்தன: தெற்கிலிருந்து வடக்குக்கு வந்த வடிவங்கள் நேர் எதிர் வழியில் வந்தன." தானியின் கருத்துப்படி பார்த்தால், தெற்கிலிருந்து வடக்குக்குச் சென்றது "மிலேச்சத் Ag56asv LDnT?ʼ
தமிழ் நாட்டிலுள்ள குகைச்சாசனங்களுக்கும் பல்லவர்காலச் சாசனங்களுக்கும் இடையே காலஇடை வெளி காணப்டுகின்றது. குகைச்சாசனங்களுள் மிகவும் பிந்தியன கி. பி. நான்காம் நூற்ருண்டுக்குரியதாகக் கொள்ளப்படும் திருநாதரி குன்றுச் சாசனமும் கி. பி. இரண்டாம் நூற்ருண்டைச் சேர்ந்ததாகக் கொள்ளப் படும் அரச்சலூர்ச் சாசனமுமாகும் பெரும்பாலான குகைச்சாசனங்களின் காலம் கி; பி. மூன்றும் நூற்ருண் டாகக் கொள்ளப்பட்டதால், அவற்றிற்குப் பிந்தியன வாகவும் பல்லவர் காலச் சாசனங்களுக்கு முந்தியனவா கவும் இவை இருந்திருக்கவேண்டுமாதலால், இவை யிரண்டு பகுதிகளுக்கும் இடைப்பட்டனவாக இவற்றின் காலம் நிர்ணயிக்கப்பட்டன: பழைய குகைச் சாசனங் களின் காலம் இன்று பின்னுக்குக் கொண்டுவரப்படுவ
15

Page 19
தால், இந்தச் சாசனங்கள் இரண்டினது காலமும் இன் னும் பின்னுக்குக் கொண்டுவரப்படவேண்டும் பல்லவர் காலம் என்பது கி பி. ஆரும் நூற்ருண்டினிறுதியிலே தொடங்குகிறது என்று கொண்டால், அக்காலத்திற்கு முன்பே பல்லவர் வெளியிட்ட பாததச் சாசனங்கள் சிலவும் சங்கதச் சாசனங்கள் சிலவும் ' கிடைத்துள்ளன வெனக்கொள்ளவேண்டும். கி. பி. ஏழாம் நூற்றண்டி லிருந்து தமிழ் வரிவடிவத்திலும் கிரந்த வரிவடிவத் திலும் எழுதப்பட்ட சாசனங்கள் கிடைத்துள்ளன கி. பி. எட்டாம் நூற்றண்டிலிருந்து வட்டெழுத்துச் சாசனங்களும் கிடைத்துள்ளன. இந்த மூன்றுவகை வரிவடிவங்களும் தமிழ் நாட்டுக்கே பிரத்தியேகமாக உரியவை இந்த மூன்று வரிவடிவங்களுக்கிடையிலான உறவும் பிற வரிவடிவங்களோடு அவற்றுக்குள்ள உறவும் ஆராயப்படவேண்டும்
இந்த மூன்று வரிவடிவங்களோடு தெலுங்கு கன் னட வரிவடிவங்கள் மிக நெருங்கிய உறவுள்ளவை யாகும்; இவற்றுக்கிடையிலான உறவை இன்றைய எழுத்து வடிவங்களிலும் காணலாம். தமிழ் வரிவடிவத் துக்கும் கிரந்த வரிவடிவத்துக்குமிடையிலான தொடர்பே மிக நெருக்கமானது; உ, ஊ, க, ங், த, ந, ய, வ என் பன இரண்டு வடிவங்களிலும் ஒரே விதமாக எழுதப்படு கின்றன. அ, ஆ, ஈ, ஓ, ஒள, ட, ற, ர, ல, ள என் னும் எழுத்துக்கள் இரண்டு வரிவடிவங்களிலும் மிகச் சிறிதளவே வேறுபடுகின்றன; கி. பி. பதிஞேராம் நூற் முண்டுவரையில் இவ்விரு வரிவடிவங்களும் பல்லவ ருடைய நாட்டிலேயே வழங்கப்பட்டன. எனவே, இன் றைய அறிஞர் சிலர் இவ்விரு வரிவடிவங்களும் தோற்றத்தில் ஒன்முக இருந்திருக்கலாம் என்பர். கிரந்த மும் தமிழும் அடைந்த வளர்ச்சிகூட கிட்டத்தட்ட ஒரே வகையினது; எனவே, இவையிரண்டையும் சேர்த்து
16

’கிரந்தத் தமிழ் வரிவடிவம்” என்பது உண்டு; சாசனதி தின் சங்கதப் பகுதியைக் கிரந்தத்திலும் தமிழ்ப் பகு தியை வட்டெழுத்திலும் எழுதிய பாண்டியர் சங்கதப் பகுதிக்கு இடையில் வந்த தமிழ்ச் சொற்களை எழுதத் தமிழ் வரிவடிவத்தையே பயன்படுத்தினரிS இவ்வழக் காற்றைப் பாண்டிய மன்னன் இராச சிம்மனுடைய பெரிய சின்னமன் னுரர்ச் சாசனத்திற் காணலாம். எனவே, அந்தக் காலத்திலும் கிரந்தமும் தமிழும் ஒரே வரிவடிவ மாகக் கணிக்கப்பட்டிருக்கவேண்டும். பல்லவ மன்னன் பரமேஸ்வரவர்மனுடைய கூரம் சாசனத்திலுள்ள கிரந்த வரிவடிவத்தையும் தமிழ் வரிவடிவத்தையும் ஒப்பிட்டால், உ, ட, ண, த, ந, ய, வ என்பனவும் உயிர் மெய் வடி வங்களில் வரும் ஆ, இ, ஈ, ஏ, ஓ என்னும் எழுத்துக்க ளின் குறிகளும் வரிவடிவங்கள் இரண்டிலும் ஒத்திருக்கக் காணலாம். க. ர என்ற திாழுத்துக்களும் உகர உயிர்மெய்க் குறியும் மிகச் சிறிதளவே வேறுபடுகின்றன; நகர மெய் கொள்ளும் வடிவங்களும் ஓகார உயிரும் ஒத்திருக்கின் றன8 கிரந்த வரிவடிவம் தமிழ்ப்பகுதிகளில் சங்கத மொழியை எழுதுவதற்குப் பயன்படுத்தப்பட்டது. இவ் விரு வரிவடிவங்களுக்குமிடையிலான மிக நெருங்கிய தொடர்பு பல்வேறு கருத்துக்களைத் தோற்றுவித்தது. ஆரியர் தமிழ் வரிவடிவத்தை ஏற்று, சங்கத மொழிக்குப் பிரத்தியேகமாக வேண்டிய புதிய எழுத்துக்களையும் அதனேடு சேர்த்துக் கிரந்தம் என்று பெயரிட்டனர் என்ருர் எல்லீசு பல்லவர் கிரந்த வரிவடிவத்தையும் தமிழ் வரிவடிவத்தையும் தென்னிந்தியாவிற் புகுத்தினர் என்று கொண்டார் ரி, என்: சுப்பிரமணியம்
கி. பி, எட்டாம் நூற்றண்டில் வட்டெழுத்து நல்லமுறையில் அமைந்திருந்தது. வடிவத்தில் ஒப்புமை யுள்ள பகரத்துக்கும் வகரத்துக்குமிடையிலான வேறு 4ாடும் ங்கரத்துக்கும் லுகரத்துக்கும் இடையிலான வேறு
17

Page 20
பாடும் விளக்கமாகத் தோன்றின; பினீசிய எழுத்து, அரமெய்க் எழுத்து என்ற மேற்காசிய எழுத்துக்களி லிருந்து வட்டெழுத்துத் தோன்றியிருக்கவேண்டும் என்று பர்ணல் கொண்டார். அசோகனுடைய எழுத்து வேறு, வட்டெழுத்து வேறு என்ற கொள்கை அவரது "தமி ழெழுத்திலும் வட்டெழுத்து மிகத் தொன்மையானது. தமிழெழுத்து வட்டெழுத்தைக் காலப்போக்கில் ஒதுக்கி விட்டது" என்பது அவர் அபிப்பிராயமாகும். இந்த அபிப்பிராயத்தைக் கால்டுவெல் கண்டித்துள்ளார் கோபிநாதராவ் கால்டுவெல்லோடு உடன்படுகிருர், கோபிநாதராவின் காலத்திலே தமிழ் நாட்டிலிருந்த குகைச்சாசனங்கள் அறியப்படவில்லை. வட்டெழுத்துப் பிந்திய காலத்ததாயிருப்பினும் அது குகைச்சாசன எழுத் திலிருந்து வளர்ச்சியடைந்திருக்கலாம், தென்னிந்தியாவி லுள்ள பிறவரிவடிவங்களைப்போல, வட்டெழுத்தும் அசோகன் காலப் பிராமியிலிருந்து வளர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று கோபிநாதராவ் கருதினர். பல அமி சங்களில் வேறுபாடு இருந்தபோதிலும் வட்டெழுத்துத் தமிழெழுத்தை அடிப்படையாகக் கொண்டெழுந்த ஒரு செவ்வையற்ற வடிவம் என்று சிவராமமூர்த்தி கருதினர். தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில் வட்டெழுத்துத் தமிழெழுத்தை ஒதுக்கிவிட்டது என்பது அவர் கூற்று. ரி. என். சுப்பிரமணியத்தின் நோக்கு வேரு கும் வட் டெழுத்தும் தமிழெழுத்தும் கலந்து எழுதப்பட்ட சாச னங்களை அவர் துணைக்கொள்கிறர். கி. பி. 950க்கு முற் பட்ட இத்தகைய சாசனங்கள் கங்கபாடி, வாணகப்பாடி, வடகொங்கு ஆகிய பிரதேசங்களிற் காணப்பட்டுள்ளன. பாண்டியர் அல்லது சேரரின் செல்வாக்குக்கு அப்பாற் பட்ட பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்தவையாக இத்தகைய சாசனங்கள் காணப்படுவதால், வட்டெழுத் துத் தமிழ்நாடு முழுவதும் முந்திய காலத்தில் வழக்கி லிருந்திருக்கவேண்டுமென்றும் பல்லவர்கள் தம்முடைய
18

பிரதேசத்திலே கிரந்தத் தமிழைப் புகுத்திய பின்பு இது வழக்கொழிந்திருக்க வேண்டுமென்றும் பல்லவருடைய நேரடி ஆட்சிக்குட்படாத கங்கபாடி, வானகப்பாடி, வடகொங்கு என்னும் பிரதேசங்களில் கிரந்தத் தமிழ் சிறிது சிறிதாக மேனிலையடைந்தபோதும், இதுவும் வழங் கியதென்றும் முடிவுகட்டுகிருர் ஆஞல், கிரந்த வரிவடி வம் தமிழ்நாடு முழுவதும் வழங்கிவந்தது என்பதை ஞாபகத்திலிருத்தல் வேண்டும்; கிரந்த எழுத்துத் தமிழ் நாட்டிலேயே தோன்றியிருக்கவேண்டும் என்று தானி கூறுவர்; எனவே, கிரந்தத் தமிழும் வட்டெழுத்தும் தமிழ் நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலே தோன்றியிருக் d. i 6) ПГ i D.
கி. பி. ஏழாம் நூற்றண்டிலிருந்து, கிரந்தத் தமி ழின் வளர்ச்சி, ஆராய்ச்சியாளர் யாவராலும் விபரமாகக் கூறப்படுகிறது; தமிழ்த் தொல் வரிவடிவவியலிலுள்ள அபிப்பிராயபேதங்கள் அக்காலத்திலிருந்து ஆற்றுப் போகின்றன; ஆனல் ஒவ்வொருவரும் ஒவ்வொருவகை யில் ஆராய்ந்துள்ளனர். கோபிநாதராவ் தமிழ் வரிவடி வத்திலுள்ள ஒவ்வோரெழுத்தையும் எடுத்து அது அசோகன் காலப் பிராமியில், திருநாதர் குன்றுச் சாசனத் இல், பல்லவர் காலத்தில், சோழர் கால முற்பகுதியில், சோழர் காலப்பிற்பகுதி - பாண்டியர் காலத்தில், இக் காலத்தில் எவ்வெவ் வடிவங்களில் வழங்கியுள்ளன எனச் சுட்டிக்காட்டுகிருர் பல்லவர் காலத் தொடக்கத் தமி ழெழுத்து (கி. பி. ஏழாம் நூற்ருண்டு), நந்திவர்மன் பல்லவ மல்லனுடைய சாசனங்கள் (கி பி எட்டாம் நூற்ருண்டின் இறுதிப்பகுதி), பல்லவர் காலப் பிற்பகுதி சோழர் கால முற்பகுதிச் சாசனங்கள் (கி. பி ஒன்பதாம் பத்தாம் நூற்றண்டுகள்), முதலாம் இராசராசன், முத லாம் இராசேந்திரன் காலத்துச் சாசனங்கள், (கி. பி. பத்தாம் நூற்றண்டின் இறுதியும் பதினேராம் நூற்றண்
9

Page 21
டின் தொடக்கமும்). பிற்காலப் பாண்டிய சாசனங்கள் (இ, பி. பதின்மூன்ரும் நூற்ருண்டு) என வெவ்வேறு காலத் தமிழெழுத்துக்களை வரிசைப்படி தொகுத்துத் தருகிருர், கிரந்தத் தமிழ் வரிவடிவத்துக்கும் தெலுங்கு கன்னட வரிவடிவத்துக்கும் உள்ள ஒற்றுமைகளைச் சுட்டி யுள்ளார். இவருடைய கட்டுரையின் வளர்ச்சியே சிவ ராமமூர்த்தியின் நூல் எனலாம். ஒவ்வோர் எழுத்தின் வளர்ச்சியையும் ஒவ்வொரு பக்கத்திலே காலமுறையிலே தந்துள்ளார். அனைத்திந்தியப் பின்னணியில் வைத்து ஒவ்வோரெழுத்தின் வளர்ச்சியையும் அறிந்து கொள்ளச் சிவராமமூர்த்தியின் முறை உதவுகிறது, ரி. என்: சுப்பிர மணியத்தின் நூல் ஒருவகையில் இன்னும் சிறந்தது; சுப்பிரமணியம் வரிவடிவ மாற்றங்களைத் தமிழ் நாட்டு அரசியல் வரலாற்ருேடு தொடர்புபடுத்த முயல்கிறர் அவர் தமிழெழுத்துக்களின் வளர்ச்சியைப் பல்லவர் காலத்துக்கு நிகரான பழையகாலம் (கி. பி. 900க்கு முந் தியது) சோழர் காலத்துக்கு நிகரான இடைக்காலம் (கி. பி. 10-ம் நூற்ருண்டிலிருந்து 1250 வரை), இக் காலம் என மூன்று காலப் பிரிவுகளாகப் பிரிக்கிருர் தமிழெழுத்து வளர்ச்சியை இரண்டாகப் பிரிப்பதே பொருத்தமானது எகரத்தை ஏகாரத்திலிருந்தும் ஒக ரத்தை ஒகாரத்திலிருந்தும் பிரிப்பதற்கான புள்ளி பதி னேராம் நூற்றண்டுவரை சாசனங்களிற் காணப்படுவ தைக் கோபிநாதராவ் சுட்டிக்காட்டுகிருர் பதினேராம் நூற்ருண்டுக்குப் பின் இப்புள்ளி காணப்படவில்லை; குறு மையும் நெடுமையும் சந்தர்ப்பத்தை நோக்கியே கணிக் கப்படவேண்டியுள்ளன; தமிழ்க் கிரந்த வரிவடிவங்களின் மாற்றங்கள் இருவகையில் நடைபெற்றன என அவர் மேலும் குறிப்பிடுவர் நேர்கோடுகளுக்குப் பதிலாக வ&ளகோடுகளும் வளைகோடுகளுக்குப் பதிலாக நேர்கோடு களும் எழுதப்பட்டமையே அவையிரண்டுமாகும் சிவ ராமமூர்த்தியின் கூற்றுக்களிலிருந்து முதல் வகை மாற்றம்
20

கி. பி. பதினேராம் நூற்ருண்டுவரையிலும் இரண்டாம் வகை மாற்றம் கி. பி. பதினேராம் நூற்றண்டிலிருந்தும் நடைபெற்றன என்பது தெளிவாகத் தெரியவருகிறது; 'நந்திவர்மனுடைய திருவெள்ளறைச் சாசனத்திலுள்ள தமிழெழுத்து சோழர் கால முற்பகுதியில் வளர்ச்சி யடைந்திருந்த தமிழ் வரிவடிவத்தின் வளர்ச்சிப் படிகளுள் ஒன்ருகும் (பக்கம் 228) 'உத்தம சோழனுடைய சென்னை நூதனப் பொருட்காட்சிச்சாச்ை சாசனம் பிற்காலம் பல்லவக் கிரந்தத் தமிழெழுத்து பெருமாற்றங்களின் றியே சோழர்கால முற்பகுதி எழுத்தாக வளர்ந்ததைக் காட்டு கிறது," "எட்டாவது நூற்ரூண்டிலிருந்து கிரந்த எழுத் தில் ஏற்பட்ட முக்கியமான மாற்றம் எல்லா எழுத்துக் களின் வலப்பக்கக் கோணங்களும் வட்டங்களாக மாறி யமையே, (பக்கம் 233) "முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து எழுத்துக்கள் அதிக அளவில் கோணங் களைப் பெற்று நீள்சதுர வடிவம் கொள்ளத்தொடங்கின." (பக்கம் 234), "கிரந்தத் தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் கோணங்களைப்பெற்ற நிலையில் விசயநகர்ப் பேரரசுச் சாசனங்களில் வளர்ச்சியின் கடைசி நிலையையடைந்தன". சிவராமமூர்த்தி இந்தக் கருத்துக்களை வளர்த்துச் சென்று பண்பாட்டுப் பின்னணியோடு தொடர்புபடுத்தியிருப் பாரேயானல், அவர் தமிழ்நாட்டு வரிவடிவவியலுக்குப் பெருந்தொண்டாற்றியிருந்திருக்கலாம்:
கோபிநாதராவ் வட்டெழுத்தைப் பற்றிக் கூறும் போது, எட்டாம் நூற்ருண்டிலிருந்து அது சீர்கே டடைந்து வந்ததும் பதினேராம் நூற்ருண்டில் அது பாண்டிநாட்டிலிருந்து மறைந்ததும் கிரந்தத்தை மாற்றி யெழுதிய மலையாள எழுத்துக்கு எதிர்நிற்கலாற்ருது கேரளத்தில் ஒடுங்கி வந்ததும் விளக்கியுள்ளார். ரி. என். சுப் பிரமணியம் தமிழெழுத்தை ஆராய்ந்தமாதிரியே, வட்டெழுத்தையும் ஆராய்ந்துள்ளார்:- பழைய முறை,
2.

Page 22
கி. பி; 700-950 வரை (முதற் பாண்டிய அரசு காலம்), இடைக்கால முறை, கி. பி. 950-1350 வரை (மலையாள வரிவடிவத்தின் தோற்றம் வரை கேரளத்தில் வழக்கு மிகுதி), பிற்கால முறையும் சீர்கேடும். சிவராமமூர்த்தி வட்டெழுத்து உதாரணங்களைக் கி. பி. எட்டாம் நூற் ருண்டுக்கும் வட்டெழுத்துப் பாண்டி நாட்டிலிருந்து மறைந்த பதினேராம் நூற்ருண்டுக்கும் மட்டுமே தந்துள் ளார். சிவராமமூர்த்தி பதினேராம் நூற்ருண்டோடு ஏன் நிறுத்தினரி என்பது விளங்கவில்லை. கேரளத்தில், கி; பி. பதினன்காம் நூற்றுண்டுவரை வட்டெழுத்து முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்த வரிவடிவம் இன் ணும் விரிவாக ஆராயப்படவேண்டும் தானியின் புது முறையும் பயன்படுத்தப்படவேண்டும்:
இந்திய வரிவடிவங்கள் இலங்கையிலும் தென் கீழ் ஆசியாவிலும் உள்ள வரிவடிவங்களைத் தோற்றுவிக் கவும் உதவின. கி. பி. 8-வது நூற்ருண்டுவரையிலே ஆராய்ச்சி நடத்தியுள்ள தானி இந்திய வரிவடிவங்களுக் கும் இப்பிரதேசத்திலுள்ள வரிவடிவங்களுக்கும் இடையி லான உறவை ஆராய்வதற்குத் தனித்தனி அத்தியா யங் கள் ஒதுக்கியுள்ளார். கோபிநாதராவும் ரி. என்; சுப்பிர மணியமும் தமிழ்த் தொல் வரிவடிவவியலின் இந்த அமி சத்தைப்பற்றி எதுவுமே கூறவில்லை. சிவராமமூர்த்தி இந்தியச் சாசனவியலின் செல்வாக்குப் பிறநாடுகளிற் காணச்படுமாற்றை ஆராய்ந்து இத்துறையிலே தென் னிந்தியாவின் தொண்டுக்கு முக்கியத்துவம் வழங்குகிருர், பெரிய அளவிலான ஒரு பக்கத்தில் இந்தியா, இலங்கை, தென்கீழ் ஆசியா, மத்திய ஆசியா என்பனவற்றிலுள்ள பழைய வரிவடிவங்கள் அனைத்தையும் தருகிருர், பண் பாட்டு இயக்கம் சென்ற வழியே வரிவடிவமும் சென்
22

றிருக்கவேண்டும். ஆதலால், தமிழ்த் தொல் வரிவடிவ வியலின் இந்த அமிசத்துக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும்
"ஆரம்பகாலத் தென்னிந்தியத் தொல் வரிவடிவ வியல்" என்ற புது நூலொன்று சமீபத்தில் வெளியாகி யுள்ளது.' ஆறு அத்தியாயங்களும் ஆறு அனுபந்தங்க ளும் கொண்டதாக அந்நூல் வெளிவந்துள்ளது. இந்தி யாவில் எழுத்தின் தோற்றுவாய், இந்தியாவில் எழுத் தின் தொன்மை, தென்னிந்தியாவில் எழுத்தின் தொன்மை என முதல் மூன்று அத்தியாயங்கள் பொது வி. யங்களைப்பற்றிக் கூறுகின்றன. இந்தியாவில் பாறை ஒவியங்களும் வரைவுகளும், இந்து வெளி எழுத்து என முதலிரண்டு அனுபந்தங்களும் இத்தகைய விடயங்க ளேயே கூறுகின்றன. பிராமிச் சாசனங்கள் எழுதப்பட்ட மொழியைப் பற்றி ஓர் அத்தியாயமும் அச்சாசனங்களை எழுதியவர்களைப்பற்றி இன்னேர் அத்தியாயமும் கூறு கின்றன இப்பகுதிகளில் முன்ஞேர் கருத்துக்கள் சில வற்றை இவர் விமர்சித்துள்ளார். ஆருவது அத்தியா யத்திலும் அதனைத் தொடர்ந்து வரும் அனுபந்தங்களி லுமே தமிழ் நாட்டுப் பிராமிச்சாசனங்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார்: கே. வி. சுப்பிரமணிய சாஸ்திரியிடம் இரண்டு குறைகளை இவர் கண்டாரி3 பழைய சாசனங்களை வாசித்தபோது பழந்தமிழில்க்கியங் களை அவர் பயன்படுத்தவில்லை என்பது ஒன்று. குகைச் சாசனங்களில் இரண்டுவித எழுத்து முறைகள் இருப் பதை அவர் கவனிக்கவில்லை என்பது இரண்டாவது. குகைச்சாசனங்களின் காலத்தைக் குறிப்பிடும் அனுபந்
14. T. V. Mahalingam - Early South Indian Palaeo
graphy. Madras 1967.
23

Page 23
தத்தில் தானி குறிப்பிட்ட காலத்தைக் கண்டித்து கி. மு. 3 ம் நூற்றண்டிலிருந்து கி. பி. 3ம் அல்லது 4ம் நூற்ருண்டுவரை அவற்றின் காலம் என்று கூறுகிருர்; இந்த வகைகளில் மகாலிங்கத்தினது ஆராய்ச்சி தமிழ்த் தொல்வரிவடிவவியல்பற்றி முன்னெழுந்த நூல்களிலும் சிறப்பானது எனலாம். குகைச்சாசனங்களின் முன்னேர் வாசிவிபுகளையும் தந்து விரிவாகத் தான் ஆராய்ந்ததே ஒரு தனித்தொண்டு எனலாம். ஆளுல் அவருடைய வாசிப்புகள் யாவும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியனவா என்று இப்பொழுது கூறமுடியாதுள்ளது:
தானியின் புதுமுறையைக் கடைப்பிடித்தால் தமிழ்த் தொல்வரிவடிவவியல் சிறப்பதற்கு இடமிருக் கிறது. காலம் தெரியாத தமிழ்ச் சாசனங்களுக்குக் காலம் குறிப்பதிலுள்ள சிரமம் தெரியவருவதற்கும் தானியினுடைய முறை உதவக்கூடும்.
2. பண்பாடும் வரிவடிவமும்
தமிழ் நாம்டுத் தொல் வரிவடிவங்களின் வளர்ச் சிப் படிகளுக்கும் தமிழ் நாட்டுப் பண்டிாட்டு இயக்கங் களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு இதுவரை ஆராயப்படாத ஒன்ருகவே இருக்கின்றது. தானி தென் ணிந்தியத் தொல்வரிவடிவவியலின் பழைமை பற்றி ஆராய்ந்தது திருப்தியாக இல்லை. எனவே, தமிழ்நாட்டு வரிவடிவங்களின் ஆரம்பகாலத்திலிருந்தே வரிவடிவ வளர்ச்சிக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்பை நோக்கலாம்.
தொல்லிந்திய வரலாற்றின் காலமுறை அபிப் பிராயபேதத்துக்குரியதாகவேயிருக்கிறது. தொல்லிந்திய வரலாற்று முக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றின் காலம் அறி
24

ஞர்களிடையே மிகப் பெரிய அபிப்பிராயபேதங்களைத் தோற்றுவிக்கின்றன. இந்திய இலக்கியங்கள், சாசனங் கள், தொல்பொருட் சின்னங்கள் என்பவற்றுட் பல, தோன்றிய காலம் எதுவெனக் குறிக்கமுடியாமலுள்ளன. இந்தியா ஓர் உபகண்டமாக இருப்பதால், நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகவாவது தனித்தனியே வளர்ந்த பிரதேசப்பண்பாடுகள் பல காணப்படுகின்றன. பிரதேச உணர்ச்சி இந்தியாவில் வலுவுள்ளதாகக் காணப்படுகின் றது. பல விடயங்களில் ஆரிய வடக்குக்கும் திராவிடத் தெற்குக்கும் இடையிலான தொடர்பு பிரச்சினையை உண்டாக்குகின்றது; திராவிட மொழிகளுள் மிகத் தொன்மையான இலக்கியச் செல்வமுள்ளது தமிழான தால், திராவிடத் தெற்கின் கட்சியைத் தமிழறிஞரே பெரும்பாலும் வற்புறுத்துவர். இந்தியப் பண்பாடு திராவிடரிடையே தோன்றியதென்றும் ஆரியர் அதைத் தமிழரிடமிருந்து பெற்றுவளர்த்து வந்தனரென்றும் தமிழறிஞர் சிலர் கூற, வட இந்திய அறிஞர் சிலரி இக் கருத்துக்களை முற்ருக ஒதுக்கி இந்தியப் பண்பாடு ஆரியரிடையே தோன்றியதென்றும் திராவிடர் அதைத் தழுவிவந்தனரென்றும் கூறுவர். இந்த விவாதத்தில் ஒவ்வொரு சாராரும் தம்முடைய கட்சியை நிலைநிறுத்த வேண்டுமென்ற நோக்கில் உண்மைகளை மறப்பதுண்டு; கவனியாமல் விடுவதுண்டு அல்லது திரித்துக் கூறுவ துண்டு பாகிஸ்தானத்தைச் சேர்ந்த தானி வட இந் திய அறிஞர்களுடைய நோக்கைக்கொண்டவராகக் காணப்படுகின் ருர் பண்பாட்டிலும் மொழியிலும் ஒர ளவு தனித்தன்மையைத் தென்னிந்தியா, அதிலும் சிறப் பாகத் தமிழ்நாடு பேணி வந்துள்ளதால், தென்னிந்தி யாவுடைய, விசேடமாகத் தமிழ்நாட்டினுடைய தொன் மைச் சிறப்பை நிராகரிக்கும்போது, வெறுப்புமிக்க வார்த்தையைத் தாணி பயன்படுத்துகிருரி3 தமிழ்நாட் டுக்கு மிக அண்மையிலுள்ள இலங்கையிலே திருந்திய
25

Page 24
பண்பாடு தொன்மையானதாக இருந்ததென்பதைத் தானி ஏற்ருல், தம்முடைய வாதத்துக்கு எதிர்வாதம் தோன்றிவிடுமாதலால் அவர் இலங்கைச் சாசனங்களின் தொன்மையை மறுத்து அவற்றின் காலத்தைக் கி; பி. வரும் ஆண்டுகளாகக் கொள்வர். இவ்வாறு கொண் டிால், அவற்றின் காலம், இலங்கை மரபுவழி வரலாற் றுக் காலங்களோடு முரண்படும் தமது நோக்குத் தொல் வரிவடிவவியல் மட்டுமே சம்பந்தமானதென்றும் மரபு வழி வரலாருே காலமுறையோ சம்பந்தப்பட்டதல்ல வென்றும் தானி சமாதானம் கூறுவரி,15 "பண்பாட்டின் ஓர் அமிசமே தொல்வரிவடிவவியல்" என்ற புதுமுறை யில் ஆராய்ச்சி செய்யப் புகுந்த ஒருவர் இவ்வாறு 3an Ghill நகைப்புக்கிடமானது, பழந்தமிழிலக்கியம் இலங்கையின் மரபுவழி வரலாறு என்பவற்றை அறிந்து கொள்ளாமல் தமிழ் நாட்டினதும் இலங்கையினதும் தொல்வரிவடிவவியலின் பழைமையை அகில இந்திய உபகண்டப் பின்னணியில் வைத்துக் கற்று மதிப்பீடு செய்யவியலாது;
காலத்துக்குக் காலம் எழுத்துவடிவங்களில் ஏற்
பட்ட மாற்றங்களை மட்டும் கற்கும்போது தென்னிந்தி யாவை மட்டும் தனியே நோக்கும் இயல்பு வளர்ந்து ஆராய்ச்சி ஒரு தலைப் பட்சமானதாக அமையும் நிலை தோன்றுகின்றது. மனம் விரும்பியவறெல்லாம் கற்பனை செய்யும் போக்குக்கு உதாரணமாகச் சென்னை அரசாங் கத் தொல்பொருட்காட்சிச்சாலை அறிக்கையாக வி. கண் ணையன் என்பவரால் வெளியிடப்பட்ட "இந்தியாவிலும் அதனைச் சுற்றிலும் உள்ள வரிவ்டிவங்கள்" என்ற நூலைக் குறிப்பிடலாம் அவ்ருடைய கருத்துக்களில் மாதிரிக்கா
15. A. H. Dani - Indian Palaeography - pp. 216, 217.
26

கச் சில:- "இந்தியாவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட் டுள்ள எழுத்துக்களில் மிகப் பழையவை தமிழ் நாட்டுக் குகைச் சாசனங்கள்", "இந்தியாவின் தென்கோடியி லிருந்தே அசோகன் தன்னுடைய வரிவ் டிவத்தைப்பெற் முன்", "இந்தியா முழுவதையும் வென்றவன் என்று கூறத்தக்க அசோகன் தமிழ்நாட்டை வெல்லத் துணி யாததற்கான காரணம் தமிழ்நாடு அடைந்திருந்த நாக ரிக வளர்ச்சியாகும்". இத்தகைய கருத்துக்கள் எடுத் துக்காட்டுகளாகப் பயன்படுமேயன்றி நுண்ணிய ஆராய்ச் சிக்குப் பயன்படமாட்டா. எழுத்துமுறை உட்படப் பண்பாட்டுக் கூறுகளை வட இந்தியா தமிழ் நாட்டி லிருந்து பெற்றிருக்கவேண்டும் என்று கண்ணையன் நம்பு கிருர். இவரோடு ஒப்பிடும்போது, ரி.என். சுப்பிரமணியம் நிதானம் உள்ளவராகக் காணப்படுகிருர் பிராமி வரி வடிவம் இந்தியாவிலேயே தோன்றியதென அவர் வாதிக் கிருரி. இந்துவெளி எழுத்துக் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு இவ்வாறு வாதிப்பதற்கு ஓரளவு இடமிருக்கிறது: ஆரியமொழியும் திராவிட மொழியும் கலந்தே பாகத மொழி உருவாகியதெனவும் பாகதமொழி பிராமி வரி வடிவத்தைத் தமிழிடமிருந்து பெற்றுக்கொண்டதென வும் அவரும் கருதுகிருர், இன்று ஆராய்ச்சியுள்ள நிலை யில், பாகத மொழியின் தோற்றம் பற்றியும் பாகத மொழி தமிழிடமிருந்து பிராமி வரிவடிவத்தைப் பெற் றுக்கொண்டது பற்றியும் சுப்பிரமணியம் கூறுவன வற்றை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று இத் துறை யிற் கடைசி நூலின் ஆசிரியரான ரி. வி. மகாலிங்கம் கூறுகிருர்,17 பிராமியின் தோற்றம்பற்றி அபிப்பிராய
16. T.N. Subramaniam-South Indian Temple Inscriptions
Vol. III, Part II, p. 1607.
17. T.V. Mahalingam-Early South Indian Palaeography
pp. 80-81 , .
27

Page 25
பேதம் இன்னும் நிலவுகின்றது; இந்தியாவிலேயே பிராமி தோன்றியதென்றும் செமிதிக் மூலமாயே பிராமி உருவாகியதென்றும் வாதிப்பவர் இன்றும் பலர் உளர். கிறித்தவ ஆண்டுக்கு வெகுமுன்பும் இந்தியப் பண்பாடு பிற நாட்டார் தொடர்பின்றி ஏகாந்தமாக இருந்த தென்று கொள்ளவேண்டியதில்லை. இந்துவ்ெளிநாகரிக காலத்திலும் இந்தியாவுக்கும் மேற்காசியாவுக்கும் தொடர்பு இருந்திருப்பதால், இதில் ஆச்சரியப்படுவ தற்கு எதுவுமில்லை செமிதிக் செல்வாக்கும் தூண்டுத லும் இருந்திருக்கலாம். பிராமி வரிவடிவம் வடஇந்திய இலக்கணகாரராலேயே உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை இன்றைய அறிஞர் பொதுவாக ஏற்றுக்கொள் கின்றனர். இன்று ஆராய்ச்சியுள்ள நிலையிலே, செமிதிக் செல்வாக்கு இல்லை என்று கூறமுடியாது;
இந்துவெளிச் சித்திரங்களைத் தவிர இந்தியாவில் இத்துறையிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ள காலத்தால் மிகப் பழைய சாசனங்கள் யாவும் பிராமி வரிவடிவத்திலேயே எழுதப்பட்டுள்ளன. அதிட்டவசமாக, அசோகனுடைய சாசனங்களின் காலம் நிர்ணயிக்கப்படக்கூடியதாக இருக் கிறது. ஆகவே, இந்தியாவிலும் இலங்கையிலும் காணப் படும் மிகப்பழைய பிராமிச் சாசனங்கள் அசோகனுடைய சாசனங்களுடன் ஒப்பிடப்பட்டு வரிவடிவங்களிலுள்ள ஒப்புமை வேற்றுமைகளை அடிப்படையாகக்கொண்டே கால நிர்ணயம் செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டுக்குகைச் சாசனங்களின் காலம் கி. மு மூன்ரும் நூற்ருண்டு என்று முதன் முதலிற் கூறியவர் கே. வி. சுப்பிரமணிய ஐய ராகும், பண்பாட்டின் பிற கூறுகளிலிருந்து ஆதரவான
18. K.V. Subrahmanya Ayyar-Proceedings and Trans. options of the Third all India Oriental. Conference p. 280

சான்று கிடையாத வரையில் இந்த முறை திருப்தியற்ற தென்பது தெளிவாகப் புலப்படும். இம் முறையிலிருந்து பெறப்பட்ட ஊகங்களை அடிப்படையாகக்கொண் டெழுந்த வாதங்கள், இந்தியத் தொல் வரிவடிவவியலின் பழைமை பற்றிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உதவாமல் குழப்புவதற்கே உதவுகின்றன. தானி இந்த முறையை நிராகரித்தது சரியே ஆனல் தானியும் பண்பாட்டின் பிற கூறுகளைக் கவ்னியாத பிழையைச் செய்கிருர் குகைச் சாசனங்களின் காலம் கிறிததவ ஆண்டுக்குப் பிற்தியது என்று தானி வாதிக்கும் வரையில், சுப்பிரமணிய ஐயர், ஊகித்த காலமாகிய கிமு 3-ம் நூற்ருண்டு அறிஞர்க ளால் ஏற்கப்பட்டுவத்திருக்கிறது புதைபொருளாராய்ச் சிச் சான்று கொண்டு அரிக்கமேட்டுச் சாசனங்கள் கி. பி. முதலாம் நூற்றண்டைச் சேர்ந்தவை யெனத் தீர்மானிக் கப்பட்டுள்ளது குகைச் சாசனங்களுக்கும் அரிக்கமேட்டுச் சாசனங்களுக்குமிடையிலான ஒற்றுமைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டிய தமனி அவை சம காலத்தனவாகலாம் என்று முடிவுசெய்தனர்.19 இதனல், குகைச்சாசனங்க ளைப் பற்றிய விரிவான புதிய ஆராய்ச்சிக்குத் தானி தூண்டுகோலாக விளங்கினரி எனலாம்; குகைச்சாசனங் களை விரிவாக ஆராய்ந்த மகாலிங்கம் தானியின் கூற்றி லுள்ள நியாயத்தை ஏற்றுக்கொள்ள வேண்டியவராகின் ருர் குகைச்சாசனங்களுக்குப் புதிய காலமுறையை வகுக்கும் மகாலிங்கம் அவற்றுள் மிகப்பழையவை கி. மு; 3-ம் நூற்ருண்டினவென்றும் மிகப் பிந்தியவை கி. பி. மூன்ரும் அல்லது நான்காம் நூற்றண்டினவென்றும் கூறியுள்ளார்.49 ஆனல், அசோகனுடைய பிராமியே
19. A. H. Dani - Indian Palaeography - p. 73.
20. T.V. Mahalingam - Early South Indian Palaeography
p. 200.
29

Page 26
குகைச் சாசனத்தை எழுதுவதற்குப் பயன்பட்டது என்று மகா லிங்கம் கூறவில்லை. அசோகன் பிராமியிலிருந்து தமிழுக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டதே குகைச்சாசன எழுத்து என்ற தானியின் கருத்து ஏற்கப்படக்கூடியது போலத்தெரிகின்றது5 அசோகனுடைய வரிவடிவத்துக் கும் குகைச்சாசன வரிவடிவத்துக்கும் இடையிலான வேறுபாடுகளிற் சில, தானி கூறுவதுபோல "எழுதிய வரின் "தவறுகளாகவும் "பிழைகளாகவும் மட்டும் இருக்கவேண்டியதில்லை; பிரதேச வளர்ச்சியாலேற்பட்ட மாற்றங்களாகவும் இருக்கலாம்:
கி. பி. ஏழாம் நூற்ருண்டிலிருந்து தமிழ் நாட்டு வரிடிஷிங்களின் தொடர்ச்சியான வளர்ச்சியை ஆராய் வதற்குப் போதிய அளவு சான்றுகள் கிடைக்கின்றன: கிரந்த வரிவடிவம் தமிழ் வரிவடிவம், வட்டெழுத்து என்பனவற்றின் தொடர்பான வளர்ச்சியைக் காட்ட உதவக்கூடிய சாசனங்கள் பெருற்தொகையாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன: கண்ணையன் பாண்டி மண்டலத்தில் வழங்கிய வரிவடிவம் கோலெழுத்து எனக் கூறுவரி 21 சேர நாட்டு எழுத்து வட்டம் என்று கூறும் அவர் சோழ நாட்டு எழுத்து இந்த இரண்டு வரிவடிவங்களின் கலப் பாக இருக்கலாம் என்ற கருத்துடையவர்; மூவகை வரி வடிவங்களும் இவ்வாறு வழங்கியதற்குச் சாசனச் சான் றுகள் கிடைத்துள்ளன என்பர் அவர். ஆஞல், பாண்டி யச் சாசனங்களிற் கோலெழுத்து வழங்கியதற்குச் சாச னச் சான்றில்லை. கி. பி எட்டாம் நூற்ருண்டு நடுவி லிருந்து பாண்டியர் சாசனங்களும் கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு முடிவிலிருந்து சேரர் சாசனங்களும் காணப்
Es 21. W. Kannaiyan - Scriptin and around India - Intro
duction page five.
30

படுகின்றன. தென்னிந்தியாவில் அந்தக்கால எழுத்துக்கள் பெற்றுவந்த மாற்றத்தினை நோக்கும்போது, சேரருடைய மிகப் பழைய சாசனங்களிலுள்ள எழுத்துக்கள் பாண்டிய ருடைய மிகப்பழைய சாசனங்களிலுள்ள எழுத்துக்களி லும் வட்டமாக இருந்ததில் வியப்பதற்கு எதுவுமில்ல. எனவே, வடிவத்திலுள்ள வேறுபாடு காலத்தாலேற் பட்ட வேறுபாடாகவேண்டும் பழைய வட்ட்ெமுத்துச் சாசனங்கள் சிலவற்றில், வளைகோடுகள் சிலவாகவும் நேர்கோடுகள் பலவாகவும் காணப்படுகின்றன வென்றும் அத்தகைய சாசனங்கள் காலத்தால் முந்தியனவென்றும் தொல்வரிவடிவவியலாளர் சிலரி கொள்வரென்றும் கோபிநாதராவ் கூறியுள்ளார். 22 அத்தகைய சாசனங்கள் கோலெழுத்திலுள்ளவையென்றும் அக்கோலெழுத்துப் பாண்டிய ராட்டுக்குச் சிறப்பாக உரியதென்றும் கண்ணை யன் கருதியிருக்கலாம். கோபிநாதராவ், சிவராமமூர்த்தி, ரி. என்; சுப்பிரமணியம், மகாலிங்கம் ஆகியோரி சேர நாட்டுவரிவடிவமும் பாண்டிநாட்டு வரிவடிவமும் வேறு என்று கொள்ளவில்லை. இத்தொல் வரிவடிவவியலாளர் அனைவரும் இரு நாட்டெழுத்துக்களும் வட்டெழுத்தே என்று கூறும்போது, அதை நிராகரிக்க இடமில்லை; பாண்டி நாட்டில் வழங்கி வந்த வரிவடிவம் வட்டம் என்பதற்குத் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குற்ருலச் சாசனம் ஒன்று சான்று பகருகின்றது.23 சேரநாட்டிலிருந்த வரி வடிவம் வட்டம் என்பதில் அபிப்பிராயபேதமில்ல்.
22. T. A. Gopinatha Rao - Travancore Archaeological
Series, Vol. I, p. 286.
23. T. A. Gopinatha Rao a Travancore Archaelogical
Series, Vol. I, p. 286,
3.

Page 27
இடைக்காலத் தமிழ்நாட்டில் வழங்கிய மூன்று வரிவடிவங்களுள், கிரந்த வரிவடிவமும் தமிழ் வரிவடிவ மும் மிக நெருங்கிய உறவுள்ளவை இரு வரிவடிவங்களி லும் சில எழுத்துக்கள் ஒரே மாதிரி எழுதப்படுகின்றன. இவ்வுண்மைகளை இவ்வாறு நிகழ்காலத்தில் எழுதுவதிலே சிறப்பான பொருள் உண்டு. இவ்வரிவடிவங்களுக்கிடை யில், கி. பி. ஏழாம் நூற்முண்டில் ஒற்றுமைகள் இருந்த மாதிரி இன்றும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இவ் வரிவடிவங்களின் வளர்ச்சிகூட ஒரே நெறியிலே சென்றது என்பதற்கு இக்கூற்றே சான்றுபகரும். இவ்விரு வ்டிவங் களும் வேறுபட்டன என்று கொள்வதற்கு தமிழ் வரிவடி வம் தமிழ் மொழியை எழுதப் பயன்பட்டதும் கிரந்த வரிவடிவம் சங்கத மொழியை எழுதப் பயன்பட்டதும் முக்கிய காரணமாகும். சங்கதமொழிக்குரிய எல்லா ஒலி களுக்குமான எழுதுக்கள் கிரந்த வரிவடிவத்திற் காணப் படுகின்றன. இந்தியத் தொல்வரிவடிவவியலாளர் இவ் விரு வரிவடிவங்களுக்குமிடையிலான ஒற்றுமையைக் கவ னித்து அவை இரண்டுக்கும் சேர்த்துக் கிரந்தத் தமிழ் வரிவடிவம் என்று பெயரிட்டனர். கிரந்தப் பகுதியில் வந்த தமிழ்ப் பெயர்களை எழுதுவதற்கு வட்டெழுத்துப் பயன்படுத்தப்படாது தமிழ் வரிவடிவம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றமை, இடைக்காலத்திலேயே இவ்விரு வரி வடிவங்களும் ஒரே வடிவமாகக் கொள்ளப்பட்டிருக்கலாம் என்பதற்குச் சான்ருகும்,24
தமிழ் வரிவடிவமும் வட்டெழுத்தும் தமிழ் மொழியை எழுதுவதற்கே பயன்பட்டன. இவையிரண் டுக்குள்ள தொடர்பு அபிப்பிராய பேதத்துக்கு உரிய
24. T.N. Subramaniam-South Indian Temple Inscriptions
Vol. III, part II, p. 1536,
32

தாகக் காணப்படுகின்றது; கடந்த நூற்ருண்டில் தமிழ்த் தொல்வரிவடிவவிய ைஆராய்ந்த ஐரோப்பிய அறிஞர்க ளுக்கிடையிலேற்பட்ட இந்த அபிப்பிராயபேதம் இந்த நூற்ருண்டில் தமிழ் நாட்டு அறிஞர்களுக்கிடையே தொடர்கிறது. வட்டெழுத்துப் பிராமியிலிருந்து வேறு பட்ட தோற்றமும் வளர்ச்சியுமுடையதென்று கலாநிதி பர்னல் கருதினர். 25 சங்க இலக்கியத்தின் தொன்மை பற்றி அக்காலத்தில் வழங்கிய கதைகள் அவரை அவ் வாறு நம்பச் செய்திருக்கவேண்டும். கிரந்தத் தமிழ் பல்லவரோடு நெருங்கித் தொடர்புபடுத்தப்பட்டதாலே பாண்டிநாட்டில் வழங்கிய வட்டெழுத்து மிகவும் தொன் மையானதாக இருக்கவேண்டும் என்று அவரி கொண்டி ருப்பர் பர்னலின் காலத்தில் இந்தியத் தொல்வரிவடிவ வியல் வளர்ச்சிபெருத நிலையிலிருந்ததால் அவரைக் கண் டிப்பது பொருந்தாது இந்தியத் தொல்வரிவடிவவியல் பற்றிப் பர்ணல் நூலின் பின்வந்த நூல்களை அறியாத தமிழறிஞர் சிலர் பர்னல் கூற்றுக்களையே போற்றி வரு கின்றனர்; வட்டமே மிகப் பழைய தமிழ் வரிவடிவம் என்பர் பர்னல் பூலர் இக்கருத்தை நிராகரித்து வட் டெழுத்துத் தமிழ் வரிவடிவத்தின் செவ்வையற்ற வடி வம் என்ற புரட்சிக் கருத்தை வெளியிட்டார்.23 இது விடயத்தைப் பற்றிய புதுச் சிந்தனையை ஊக்கியது; கோபிநாதராவ் வட்டெழுத்துப் பிராமியிலிருந்து வேறு
25. Burnell - Elements of South Indian Palaeographypp. 49-52. His views were refuted by Dr. CaldwellComparative Grammar of the Dravidian Languagesp, 9 and Prof. P. Sundaram Pillai - Some Milestones in the History of Tamil Literature.
26. Built-Indian Palaeography, Vol. XXXIII, Appendix
•כו •p
SS
*,

Page 28
பட்ட தனித்தோற்றமுடையது என்ற கொள்கையை நிராகரித்தார். வட்டெழுத்தும் தமிழ் வரிவடிவமும் ஏனைய இந்திய வரிவடிவங்களைப்போலப் பிராமியிலிருந் தேதோன்றினவாயினும், இரண்டும் தனித்தனி வளர்ச்சி யுடையன என்று அவர் கொண்டார்; தென்னிந்திய வரிவடிவங்களின் வளர்ச்சியைச் சுட்டும்போது வட் டெழுத்துக்குத் தனித்துவம் வழங்கும் சிவராமமூர்த்தி, தமது குறிப்புகள் மூலம், வட்டெழுத்துத் தமிழ் வரி வடிவத்தின் செவ்வையற்ற வடிவம் எனத் தெரிவித்துள் ளார். ரி. என்ற சுப்பிரமணியம் கோபிநாதராவின் கரு த்தை ஏற்றுக்கொள்கிருரி பல்லவர்களோடு நெருங்கிச் சம்பந்தப்படுத்தப்பட்ட கிரந்தத்தமிழ் வடஇந்தியத் தோற்றம் உடையதாகலாம் என்று அவர் கருதினர்; அதனல் அவருடைய கருத்து ஒரளவுக்குப் பர்னலின் கருத்தையும் ஒட்டிச்செல்கிறது. வட்டெழுத்தே தமிழ் நாடு முழுவதும் வழங்கிய பழைய தமிழ் வரிவடிவம் என்று கொள்ளும் அவர் தமிழ் வரிவடிவம் சிறிதுசிறிதாக அதை ஒதுக்கிவிட்டதென்பர்,27 வட்டம் பிராமியிலிருந்து தோன்றி வடஇந்தியத் தொடர்பு அதிகமில்லாமல், தென் னிந்திய இயற்கைச் சூழலுக்கேற்ப வளர்ந்த ஒரு வ்ரி வடிவம் என்ற கருத்தே ஏற்கக் கூடியது. இவ் வரிவடி வத்திற் சில எழுத்துக்கள் தமிழ் நாட்டுக்குத் தெற்கி லுள்ள சிங்கள வரிவடிவ எழுத்துக்கள் சிலவற்ருேடும் தமிழ் நாட்டுக்கு வடக்கிலுள்ள தெலுங்கு கன்னட வரி வடிவ எழுத்துக்கள் சிலவற்முேடும் ஒத்துள்ளன.
இவ்வரிவடிவங்கள் யாவுமே பிராமியிலிருந்து தோன்றியவை அந்நிய மூலாதாரத்திலிருந்து அமைத்துக்
27. T.N. Subramaniam-South Indian Temple Inscriptions,
Vol. III, Part II, p. 1562,
34

கொள்ளப்பட்டபோதும் பெரும்பாலும் தமிழ் நாட்டுச் சூழலுக்கேற்ப வளர்ந்த வரிவடிவமே வட்டெழுத்தென லாம். தமிழ்க்குல மன்னரான சேரரும் பாண்டியரும் இவ் வரிவடிவத்தைக் கையாண்டமைக்கு இதுவே காரணமாக லாம். தமிழ்மொழிக்கு வ்ரிவடிவம் இருந்ததற்குத் தொல் காப்பியத்திலும் சங்க இலக்கியத்திலும் சான்றுண்டு; இந் நூல்களின் காலத்தைப்பற்றி அபிப்பிராயபேதம் இருந்த போதிலும், இவை கிறித்தவ ஆண்டுத் தொடக்க காலத்து நூற்ருண்டுகளைச் சேர்ந்தவை என்று பொதுவாகக் கொள்ளலாம். தமிழ் மொழியை எழுதுவதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வரிவடிவம் இருந்ததற்குச் சான்று இல்லை; பழைய வட்டெழுத்தின் முன்னேடி எனத் தக்க தமிழ்ப் பிராமியைக் குறிப்பனவே பழைய சான்றுகளாகவேண்டும்.
கிரந்த வரிவடிவம் தென்னிந்தியப் பிராமணர் களோடு நெருங்கிய தொடர்புடையது. சங்க கால இலக் கியத்திலேயே தமிழ்நாட்டு அந்தண்ர்களைப் பற்றிக் குறிப்புகள் காணப்படுகிறபோதிலும் தமிழ் நாட்டில் வைதிக சமய மறுமலர்ச்சி தொடங்கிய கி. பி. ஏழாம் நூற்ருண்டிலிருந்து சங்கதப் பெயர்களுடைய பெருந் தொகையான பிராமணர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களிலும் குடியேற்றப்பட்டமைக்குச் சாசனச் சான்று காணப்படுகின்றது. பல்லவர் தம்முடைய பழைய சாச னங்கள் சிலவற்றில் பழைய நாகரி வரிவடிவத்தைப் பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் தங்களுடைய பழைய சாசனங்கள் சிலவற்றில், சில வட்டெழுத்து வடிவங்களை யும் பயன்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.28 தமிழ்ப் பிராமி அல்லது பழைய வட்டத்துக்கும் பழைய நாகரிக்
28. T.N. Subramaniam-South Indian Temple Inscrip
tions, Vol. III, Part II p. 1561.
35

Page 29
கும் இடையிலான ஓர் இணக்கமாகவே கிரந்தத்தமிழ் பல்லவர் நாட்டிலே தோன்றி வளர்ந்தது என்றுகொள்ள மனம் உந்துகின்றது; தமிழ்மொழிக்கு வழங்கிய பழைய வட்டத்தோடு சங்கத மொழிக்குரிய சிறப்பொலிகளுக் கான எழுத்துக்கள் சேரிக்கப்பட்டிருக்கவேண்டும். கோன மான வடிவங்களையுடைய பழைய நாகரி எழுத்துக்கள் வளைவான வடிவங்களையுடைய பழைய வட்டெழுத்துக் களைச் சிறிது மாற்றப் பல்லவர் நாட்டில் புதிய கிரந்த வடிவம் தோன்றியிருக்கவேண்டும் கிரந்த வரிவடிவத்தை வழங்கியோரே பழைய வட்டத்தையும் வழங்கிவந்தனர்; அதனல், கிரந்த வரிவடிவ எழுத்துக்களைப் போலவ்ே பழைய வட்டெழுத்துக்களும் எழுதப்படத்தொடங்கி யிருக்கவேண்டும். கிரந்தத் தமிழ் வரிவடிவம் இவ்வாறே தோன்றியிருக்கவேண்டும்:
இவ்வாறு நோக்கும்போது, பழைய வட்ட மும் பழைய தமிழ் வரிவடிவமும் ஒன்ருகவும் கிரந்தம் பெரும்பாலும் பழைய வட்டத்தின் தழுவ லாகவும் தெரியவருகின்றன; கிரந்த வடிவம் தென்னிந் தியாவிலேயே விருத்தியடைந்திருக்கவேண்டும் என்று தானியும் கூறுகிருர் பல்லவர் நாட்டு வரிவடிவத்துக்குத் தமிழ் வரிவடிவம் என்ற பெயர் ஏற்பட்டதற்குக் கார ணம் ஊகத்தால் மட்டுமே அறியமுடிகின்றது; சங்கத மொழியை எழுதப் பயன்பட்ட வரிவடிவத்திலிருந்து தமிழ் மொழியை எழுதப்பயன்பட்ட வரிவடிவத்தை பிரித்துணர்வதற்காகத் 'தமிழ் வரிவடிவம்" என்ற பெயர் கையாளப்பட்டிருக்கவேண்டும் தமிழ் நாட்டிற் பெரும் பகுதியை உள்ளடக்கிய பல்லவர் நாட்டில், பல்லவமன்னர் ஆதரவுடன் கிரந்தத்தமிழ் முதன்மை பெற்றிருக்க வேண்டும்; வைதிக சமய மறுமலர்ச்சி பல்லவர் நாட்டிலே தொடங்கிச் சேர நாட்டுக்கும் பரவியது. வைதிக மறு மலர்ச்சியோடு கிரந்தத் தமிழ் வரிவடிவமும் இப் பகுதி
86

களுக்குச் சென்றிருக்கவேண்டும்; ஆகவே பாண்டியரும் சேரரும் சங்கத மொழியை எழுதக் கிரந்தத்தையும் தமிழ் மொழியை எழுத வட்டத்தையும் பயன்படுத்தினர்.
கி. பி பதினேராம் நூற்ருண்டுவரையில், கிரந் தத் தமிழுக்கும் வட்டத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது. பனையோலையில் எழுத்தாணிகொண்டு எழுதும் போது ஒலை கிழியாமல் இருப்பதற்காக நேர்கோடுகளைக் குறைத்து வளை கோடுகளைப் பெருக்கியே எழுதுவது வழக்கமாதலால் வட்டெழுத்தின் வளைவுத் தன்மை அதி கரித்துக்கொண்டு வந்தது. இதே காரணத்தினு லும் வட்டெழுத்தின் செல்வாக்கினுலும் கிரந்தத் தமிழும் இதே மாதிரியான மாற்றத்தைப் பெற் றுக்கொண்டு வந்தது. பல்லவர் காலத்தில், đJ0Aồ தடுத்துள்ள இரு பிரதேசங்களில் இரு வரிவடிவங்கள் ஒரு மொழியை எழுத வழங்கப்பட்டன; மேலும் அக் காலப் பல்லவர் நாட்டினதும் பாண்டிய நாட்டினதும் எல்லை நன்கு வரையறுக்கப்பட்டதாக அமையவில்;ை ஈர் அரசுகளுக்குமிடையே பல போர்கள் நடைபெற்று ஒவ்வொரு போர்க்காலத்திலும் ஆட்சி எல்லை மாறிக் கொண்டிருந்தது; கிரந்த வரிவடிவம் இரு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டுவந்தது. ஆகவே ஒன்றின் செல்வாக்கு மற்றதிற் காணப்படுவதில் வியப்பில்லை3 கிரந்தத் தமிழ் வரிவடிவமும் வளைவான கோடுகளைப் பெற்றுவந்தது.
11-ம் நூற்ருண்டின் நடுப்பகுதியிலிருந்து இப் போக்கு மாறுகிறது. இந்நூற்றண்டின் தொடக்கத்தி லேயே, சோழப் பேரரசு நன்கு அமைக்கப்பட்டுத் தமிழ்நாடு முழுவதும் சோழருடைய வலுவுள்ள ஆட்சிக் குக் கீழ்வந்துவிட்டது. சில நூற்ருண்டுகளாகப் பல்லவ ருக்குக் கீழ்ச் சிற்றரசராக வாழ்ந்த சோழர் கிரந்தத் தமி
37

Page 30
ழையே வழங்கிவந்தனர். கிரந்தத் தமிழ் வரிவடிவமே G8 ug prašir வரிவடிவமாதலால், பாண்டிநாட்டிலும் அதுவே வழக்குக்கு வந்தது. தமிழ் நாட்டின் பிற பகுதி களிலிருந்து மலைகளாற் பிரிக்கப்பட்டுத் தனித்துவம் பெற்றுவிளங்கிய சேர நாட்டில் மட்டும் வட்டம் வழங் கப்பட்டு வந்தது. அடுத்து வந்த சில நூற்ருண்டுக் கேரளச் சாசனங்களில் இவ்வரிவடிவமே பெருவழக்குப் பெற்றிருந்தது; மலையாள மொழியின் தோற்றம் இந்த வட்டெழுத்துச் சாசனங்களிற் காணப்படுகின்றது. மலை யாள மொழியிற் பெருந்தொகையான சங்கத மொழிச் சொற்கள் வழக்குப் பெற்றுள்ளன; காலப்போக்கில் இந்த இயல்பு மலையாள மொழியில் அதிகரித்து வந்திருக்கின் றது; சங்கதமொழிச் சொற்களை எழுதுவதற்கு வட்டம் ஏற்றவடிவமல்ல. அதனல், கி, பி. 13-ம் நூற்றண்டிலி ருந்து கிரந்த வரிவடிவம் மலையாள மொழியை எழுது வதற்கு வழங்கப்படத்தொடங்கியது. வைதிக சமயத்த வர்கள் அநேக சங்கதச் சொற்களை வழங்கியதால், அவர் கள் கிரந்த மலையாள வரிவடிவத்தை ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டனர். கி. பி. 18-ம் நூற்றண்டு வரையில் கேரள மூஸ்லிம்கள் வட்டெழுத்தை வழங்கிவந்தனர்; வட்டெழுத்து அதனுடைய ஒடுக்ககாலத்தில் கோலெழுத் தாக மாறியது. வட்டெழுத்து வழக்குக் குறையக் குறைய அவ் வரிவடிவம் சீர்கேடடையத் தொடங்கிற்று. 15-ம் 16-ம் நூற்ருண்டுச் சாசனங்களில் வட்டெழுத்திலுள்ள வெவ்வேறு எழுத்துக்கள் ஒரே வரிவடிவத்தில் எழுதப் படத்தொடங்கியதால், அச்சாசனங்களை வாசிப்பது சிரமமாக இருக்கிறது. இச்சிர்கேடு வட்டெழுத்தை விரைவாக வழக்கொழியச் செய்தது:
கி. பி. பதினேராம் நூற்ருண்டுவரை, வட்டதி தின் செல்வாக்குக் கிரந்தத் தமிழ் வரிவடிவ மாற்றத் திற்கு உதவியிருக்கவேண்டும் என்ற ஊகம் பிறிதோர்
38

உண்மையால் உறுதிப்படுகின்றது; பதினேராம் நூற் ருண்டின் பிற்பகுதிலிருந்து கிரந்தத் தமிழெழுத்தில் மறு படியும் கோணங்கள் தோன்றத் தொடங்குகின்றன.? முதலாம் குலோத்துங்களுேடு புதிய சோழ - சாளுக்கிய அரசகுலம் சோழர் சிம்மாசனத்துக்கு வருகின்றது, கீழைச் சாளுக்கியர் நாட்டில் வழங்கப்பட்ட தெலுங்கு வரிவடி வம் வட்டவடிவமான எழுத்துக்களைக்கொண்டிருந்த போதும் தெலுங்கர்கள் சங்கத மொழியை எழுதுவதற்கு நாகரி வரிவடித்தையும் பயன்படுத்தினர். சங்கதமொழி, அக்காலத்தில் அகில இந்திய மொழியாக வளர்ந்துவிட் டது. முதலாவது குலோத்துங்கன் சோழ மன்னனை காலந்தொடக்கம், சோழப் பேரரசில், நாகரி வரிவடிவத் தின் செல்வாக்கு அதிகரித்து வந்திருக்கவேண்டும்: ஆனல், பேரரசின் வரிவடிவமாக நன்கு நிலைபெற்று விட்ட கிரந்தத் தமிழ் வழக்கு வீழ்வதற்கு இடமில்லை. இந்த மன்னனுடைய காலத்திலேயே, வளைவுகளுக்குப் பதிலாகக் கோணங்களை எழுதும் இயல்பு மறுபடியும் தொடங்கியதாகக் கூறப்படுகின்றது; தமிழ் நாட்டில் சோழப் பேரரசு வீழ்ச்சியடைந்து பாண்டியப் பேரரசு எழுச்சிபெற்றபோது, தலைநகரமும் அரசகுலமும் மட் டுமே மாறின எனக்கொள்ளலாம். அந்தக் காலத்தில், கிரந்தத் தமிழ் பாண்டி நாட்டில் நன்கு நிலைபெற்றுவிட் டது; பண்பாட்டில் எவ்வாறு மாற்றமெதுவும் ஏற்பட வில்லையோ அவ்வாறே அதன் ஒரு கூருகிய வரிவடிவத் திலும் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. தமிழ் நாட்டில் விசய நகரப் பேரரசின் ஆட்சியும் நாயக்கர் ஆட்சியும் ஏற்பட்டபோது மாற்றம் ஒன்று ஏற்படுகின்றது. சாச னகிகள், சிறப்பாகச் செப்புத் தகடுகள், நாகரியின் ஒரு
29. C. Sivaramamoorti-Indian Epigraphy and South
Indian Seripts p. 233.
39

Page 31
வகையான நந்தி நாகரியில் எழுதப்படுகின்றன; கிரந்த எழுத்துக்களும் கிரந்த எழுத்துக்களால் எழுதப்பட்ட சொற்களும் தமிழ்ச் சாசனங்களுள் மட்டுமே இடம் பெறத்தொடங்குகின்றன: தமிழ் நாட்டில் கிரந்தத்தின் முக்கியத்துவம் குறைய நந்தி நாகரியின் முக்கியத்துவம் கூடுகிறது. கி. பி. 18-ம் நூற்றண்டில் தஞ்சாவூர்ப் பகு தியை ஆண்ட மராட்டியரும் சங்கத மொழியை எழுத நாகரியையே பயன்படுத்தினர். கிரந்தம் தமிழ்ப் பிரா மணரிடம் மட்டுமே சிலகாலம் வழங்கிவந்தது ஆளுல் இன்றைய இந்திய அரசாங்க மொழியான இந்தியும் இக் காலச் சங்கதப் பாடப்புத்தகங்களும் தேவநாகரி எழுத் தையே வழங்கிவருவதால், கிரந்த வரிவடிவம் ஒடுங்கி வருகிறது எனலாம்:
இடைக்காலச் சாசனத் தமிழின் இயல்புகளுள் ஒன்று, தமிழிலக்கணகாரரின் படி புள்ளி பெறவேண்டிய எழுத்துக்கள், நூற்றுக் கனக்கான ஆண்டுகளாகப் புள்ளி யில் லாது எழுதப்படுவதாகும் தமிழிலுள்ள தனிமெய் யெழுத்துக்கள் யாவும் புள்ளிபெறவேண்டும்; புள்ளி யென்ற பெயர் மெய் யெழுத்தைக் குறிக்க வழங்குவ துண்டு ஆணுல் உயிரெழுத்துக்களாகிய எகர ஒகரக் குற் றெழுத்துக்கள் புள்ளிபெற வேண்டும் என்று கூறப்படு கின்றது. சங்கதமொழியில், எகர ஒகரக் குறில்கள் இல்லை சங்கத மொழிக்கு வழங்கப்பட்ட பிராமி வரிவடிவத் தைத் தமிழுக்கு அமைத்துக்கொண்டபோது, தனி மெய் யெழுத்துக்களுக்கும் சங்கத மொழியில் வழங்காத எகர ஒகரக் குறில்களுக்கும் புள்ளியிட்டு எழுதும் வழக் கம் தொடங்கியது. ஆகவே, இடைக்காலச் சாசனங்கள் பெரும்பாலானவற்றுள் வடிவத்தில், எகார ஏகாரங்களுக் கிடையிலும் ஒகர ஓகாரங்களுக்கிடையிலும் வேறுபாடு காண இயலாது. தமிழ் நாட்டில் சங்கத மொழிச் செல் வாக்கு முதன்மை பெற்றிருந்தவரையில், மெய்
40

யெழுத்தை உணர்த்தப் பயன்படும் புள்ளி இரண்டு உயி ரெழுத்துக்களை உணர்த்துவதிற் காணப்படும் பொருந் தாமை கவனிக்கப்படவில்லை. ஆனல் தமிழுக்கு மேனுட்டு மொழிகளின் தொட்ர்பு ஏற்பட்டபோது, பழைய ஏகார ஓகார வடிவங்களை எகர ஒகரக் குறில் வடிவங்களாகக் கொண்டு பழைய வடிவங்களின் கால்களில் சிறிது மாற் றஞ்செய்து நெடில்களாகக்கொண்டு வரிவடிவம் திருத் தப்பட்டது. வீரமாமுனிவரே இந்த மாற்றத்தைச் செய் தவர் என்று பொதுவாக நம்பப்படுகின்றது. ஆனல், கோபிநாதராவ் இந்த மாற்றம் வீரமாமுனிவருக்கு முந் திய தமிழ்ச் சாசனங்களிற் காணப்படுவதாகக் கூறியுள் ளார்,30 இந்த மாற்றம் எந்தச் சாசனங்களிற் காணப் படுகின்றதென்பதனை அவர் குறிக்கவில்லை;
தமிழ்நாட்டில் நான்கு வரிவடிவங்களை வழங்கி வந்தது, தமிழருடைய விவேகத்துக்கு அறிகுறி என்பர் கண்ணையன்; ஆனல், தமிழருடைய வரிவடிவத்தின் வர லாற்றையும் பண்பாட்டின் வரலாற்றையும் இணைத்துப் பார்க்கும்போது, அங்கு பெருமைப்படுவதற்கு எதுவு மில்லை. அரசியல் ஒற்றுமையில்லாமையாலே தமிழர் தமிழ் மொழியை எழுத வெவ்வேறு வரிவடிவங்களைப் பயன்படுத்தினர் சோழப் பெருமன்னரின் கீழ் அரசியல் ஒற்றுமை ஏற்பட்டபோது, தமிழ்மொழிக்கு ஒரு வரிவடி வமே வழங்கத்தொடங்கியது. இடைக்காலத் தமிழர் பண்பாட்டில் வட இந்தியாவின் செல்வாக்குச் சிறப்பிடம் பெற்றது. சங்கத மொழி மூலமாகவே அச் செல்வாக்குத்
30. T. A. Gopinatha Rao - Travancore Archaeological
Series, Vol. I, p. 202, footnote 3. He rejects the view of Burnell -- South Indian Palaeography - pp. 4, 5, footnote 4.
'4

Page 32
தமிழரிடையே இடம்பெற்றது. தமிழ் நாட்டிற் சங்கத மொழியை எழுதுவதற்காகக் கிரந்தம் தோற்றுவிக்கப் பட்டது; இக்காலச் சூழ்நிலையிற் பண்பாட்டு முக்கியத்து வத்தை இழந்துவிட்ட கிரந்தம் ஒடுங்கிவருகிறது;
3. வரிவடிவத்தில் மாற்றங்கள்
தொல் வரிவடிவவியலாளர்கள் வரிவடிவம் காலப் போக்கில் மாறிச் செல்வதற்கான பொதுக் காரணங்களே ஆராய்ந்திருக்கின்ருர்கள் அக்காரணங்களே எடுத்துக் காட்டுவதில் அவர்களுக்குள் அதிக வேறுபாடு இல்லை எழுதும்முறை, அலங்கார விருப்பு, எளிமையான போக்கு என அவற்றை மூன்முகக்கொள்ளலாம் எழுதும் முறை என்பதற்குப் பதிலாக எழுது கருவிகள் என்பதும் எளி மையான போக்கு என்பதற்குப் பதிலாக கைலாவகம் என்பதும் கூறப்படுவதுண்டு. பிறநாட்டார் தொடர்பை யும் ஒரு காரணமாக எடுத்துக்காட்டுவரி. தி. நா. சுப் பிரமணியம் காரணங்களைக் கூறிச் சில உதாரணங்கள் தந்துள்ளார். தமிழ் எழுத்துக்கள் காலப்போக்கில் அடைந்துவந்த மாற்றங்களை வகைப்படுத்தி அம்மாற்றங் களுக்கு என்ன காரணங்களாக இருக்கலாம் என்ற முறை யில் இதுவரை யாரும் ஆராய்ந்ததாகத் தெரியவரவில்லை. காரணங்கள் கூறுவதிற் கருத்து வேறுபாடுகள் ஏற்படு மென்ற அச்சம் ஒரு காரணமாகலாம்; எனினும் மாற் றங்களை வகைப்படுத்தி மிகவும் பொருற்தக்கூடிய கார னத்தைக் கூறுவதிலே தவறில்லை
கி5 பி ஏழாம் நூற்ருண்டுதி தமிழ் எழுத்துக் களையும் கி; பி; பதினேராம் நூற்ருண்டுத் தமிழ் எழுத் துக்களையும் முதலில் ஒப்பிட்டு நோக்கலாம் முதலில் மெய்யெழுத்துக்களை நோக்கிஞல், அவற்றுட் சில மேலே கிடைக்கோடும் இடது பக்கம் குத்துக்கோடும் பெற்றமை
42

வதைக் காணலாம்; இத்தகைய மாற்றம் ஏழாம் நூற் ருண்டு வரிவடிவத்திலிருந்து பதிஞேராம் நூற்ருண்டு வரி வடிவம் பெற்ற எழுத்துக்களாக க, க, ச, த, ந, ர என்பனவற்றைக் கூறலாம். பதினேராம் நூற்ருண்டில் சில எழுத்துக்களின் கால் அல்லது கீழ்ப்பகுதி நீண்டமை யத் தொடங்குகின்றன: பதிஞேராம் நூற்முண்டிலே, ஞ, ண, ல, ள என்ற எழுத்துக்கள் சுழிகளோடு காணப் படுகின்றன. ள, ண என்ற எழுத்துக்களில், வளைவுகள் தேவையான இடங்களில், வளைவுகள் தெளிவுற அமைற் துள்ளன. இவை யாவற்றுக்கும் அலங்கார விருப்பே காரணம் என்று கூறலாம் எழுதும் முறை அல்லது எழுது கருவிகள் காரணமாகத் தமிழ் வரிவடிவமாற்றம் பெரிய அளவில் நிகழ்ந்ததாகக் கூறமுடியாது; தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் எழுது கருவிகளில் மாற்றம் நிகழவில்லை. அச்சுயற்திரம் வரும்வரையில் எழுதுகருவி கள் மாறியதற்குச் சான்றில்லை. எனவே தமிழ் வரிவடிவ மாற்றங்களுக்குக் காரணங்களாக அலங்கார விருப்பை யும் எளிமையான போக்கையுமே கூறலாம்; எழுதும் முறையால் மாற்றம் ஏற்பட்டிருக்கக் கூடுமானல் அகரம் ஆகாரம் என்பவற்றில் அக்காலத்தில் ஏற்பட்ட மாற்றம் அப்பிரதட்சினமாக எழுதிவந்ததை மாட்றிப் பிரதட்சிண மாக எழுதியதனுல் ஏற்பட்டவை எனலாம். வ, ங், ய என்ற மெய்யெழுத்துக்களிற் காணப்படும் மாற்றமும் அத்தகைய எழுத்து முறையினலேற்பட்டதே யெனலாம்.
எளிமையான போக்கினலும், வரிவடிவத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன அ, ஆ, இ என்ற உயிரெழுத் துக்களிலும் ட, ப, ம என்ற மெய்யெழுத்துக்களிலும் வளைவுகள் நீக்கி எழுதப்பட்டது எளிமையான போக்கி னல் என்றும் கூறலாம். ஏழாம் நூற்ருண்டிற் புள்ளி யோடு எழுதப்பட்ட மெய்யெழுத்துக்கள் முதலியன பதினேராம் நூற்றண்டிலே புள்ளியின்றி எழுதப்பட்ட
43

Page 33
தற்கும் எளிமையான போக்கே காரணம் எனலாம்: து, னு, லு, டை என்ற உயிர்மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஏழாம் நூற்றண்டில் இரண்டு வடிவங் களைப் பெற்றுப் பதினேராம் நூற்ருண்டில் ஒரே வடிவத் தைப் பெறுகின்றன; இங்கும் எளிமையான போக் கையே காரணமாகக் கூறலாம்;
கி. பி3 பதினேராம் நூற்ருண்டுத் தமிழ் எழுத் துக்களையும் கி. பி. பதினைந்தாம் நூற்ருண்டுத் தமிழ் எழுத்துக்களையும் இனி ஒப்பிட்டு நோக்கலாம். இடப் பக்கத்தில் ஒரு குத்துக்கோட்டுடன் தொடங்கும் க, ங், ச, த, ந, ர என்பன - பதினுராம் நூற்ருண்டில் குத்துக் கோட்டைச் சிறிதளவு வளைவாகப் பெற்றிருந்தவை பதினைந்தாம் நூற்ருண்டில் நேரித்தன்மையுள்ள நீளமான குத்துக்கோட்டைப்பெற்றன; இந்த மாற்றத்திற்கும் அலங்கார விருப்பே காரணம் என்று கூறவேண்டும் குத்துக்கோடுகளுக்குமேலே ஒரு கிடைக்கோட்டினைப் பெற்று விளங்கும் இம் மெய்யெழுத்துக்களும் ஏகார உயி ரெழுத்தும் - பதினேராம் நூற்ருண்டிலே கிடைக்கோட் டினை வளைவாகப் பெற்றனவாகவும் அதனை வலப்பக்கக் குத்துக்கோட்டுக்கப்பால் நீட்டாது வலப்பக்கக் குத்துக் கோட்டோடு முடிவடைவனவாகவும் இருந்தவை-பதி னைந்தாம் நூற்ருண்டில் நேரான கிடைக்கோட்டைக் கொண்டனவாகவும் அக்கிடைக்கோட்டினை வலப்பக்கக் குத்துக்கோட்டுக்கப்பால் சிறிது நீட்டி அமைத்துகொண் டனவாகவும் காணப்படுகின்றன; இந்த மாற்றத்துக்கும் அலங்கார விருப்பையே காரணமாகக் கூறலாம்.
அலங்கார விருப்பால் ஏற்பட்ட மாற்றம் என்று இன்னென்றையும் கூறலாம்; கீழே வளைவுகள் பெற்ற மையும் எழுத்துக்கள் பதினைந்தாம் நூற்ருண்டிலே தெளிவான வளவுகளை உடையனவாக அமைந்துள்ளன:
44

க, ச, த ஆகிய எழுத்துக்களின் வளைவுகளும் க, ந, ம, ழ ஆகிய எழுத்துக்களின் வலப்பக்க வளைவுகளும் பதி ஞேராம் நூற்ருண்டிலும் பார்க்கப் பதினைந்தாம் நூற் ருண்டிற் செம்மையாக அமைந்துள்ளன; அதாவது, சிறிய வளைவுகளின்றி ஒரே வளைவாகத் தெளிவாக அமைந்துள்ளன.
அலங்கார விருப்பு அல்லது எழுதுவோர் கைலா வகம் அல்லது இவையிரண்டும் காரணம் என்று கூறத் தக்க மாற்றமும் காணப்படுகின்றது. தொடக்கத்தில் சுழியைக்கொண்டு ஆரம்பமாகும் எழுத்துக்கள் பதினே ராம் நூற்றண்டிலே சிறிதளவாகப் பெற்றிருந்த சுழிக் கும் தன்மையினைப் பதினைந்தாம் நூற்ருண்டிலே தெளி வாகப் பெற்றமைந்துள்ளன; அ, ஆ, எ, ஞ,  ைல ள என்ற எழுத்துக்கள் உதாரணங்களாம்; ணகரத்தில் உள்ள சுழிகள் யாவும் தெளிவாகச் சுழிக்கப்பட்டுள்ள மையையும் பதினைந்தரம் நூற்றண்டிற் காணமுடிகிறது:
எளிமையான போக்கும் ஒருவித மாற்றத்திற் குக் காரணமாகின்றது பதினேராம் நூற்ருண்டுச் சில எழுத்துக்களிற் காணப்பட்ட வளைவுகள் சில, நீக்கப் பட்டமையைப் பதினைந்தாம் நூற்றண்டு எழுத்துக் களிற் காணமுடிகின்றது; அ, ஆ, உ, ய, ள, ட என்ற எழுத்துக்களில் இந்த மாற்றத்தினை அவதானிக்கலாம்: இவ்விதமான எழுத்துக்கள், சில வளைவுகள் நீக்கப்பட்டு அமைந்தமை எழுதுவோர் நுணுக்கமான வளைவுகளைக் கவனிக்காது எளிமையை விரும்பி எழுதியமையால் ரற்பட்டிருக்கலாம்3
இன்னும் சில மாற்றங்களைக் குறிப்பிட்டுக் கார ணங்களை ஊகிக்கலாம்; ஐகார உயிர் எழுதப்படும் முறையிலும் ஐகார உயிர்மெய் எழுதப்படும் முறையி
45

Page 34
லும் ஏற்பட்டுவந்த மாற்றத்திற்கு அலங்கார விருப்பே காரணம் என்று கூறவேண்டும் ஐகார உயிர்மெய்யிலே வரும் சங்கிலிக் கொம்பில், முதலிலும் நடுவிலும் சுழி கள் அமைந்து காணப்பட்டது பதினைந்தாம் நூற்ருன் டிலேதான். உயிர்மெய் இகரத்தின் அடையாளம் பதி னுேராம் நூற்றண்டில் அரைப்பிறை வடிவமாக மெய் யெழுத்துக்குமேலே தனித்து எழுதப்பட்டது. பதினைந் தாம் நூற்ருண்டில், இன்றுள்ள மாதிரி எழுதப்படத் தொடங்கிவிட்டது. விரைவாக எழுதும்போது, எளிமை கருதி இந்த மாற்றம் தோன்றியிருக்கலாம்:
தமிழ்மொழியைக் கன்னித் தமிழ் என்று அதன் இளமை மாருத இயல்பைச் சுட்டிக்காட்டுவதுண்டு: தமிழ்மொழி காலப்போக்கில் வேகமாக மாறிச் செல்லா ததுபோல, தமிழ் வரிவடிவமும் காலப்போக்கிலே சிறிது சிறிதாகவே மாறிச் சென்றிருக்கின்றது.
46

சாசனத்துத் தமிழ்மொழி
திமிழ்மொழி வரலாறு இன்னும் திருப்திகர மாக எழுதப்படவில்லை; சென்னைப் பல்கலைக்கழகத்திலே தமிழ் வரலாற்றிலக்கணத்தைப் பற்றி விரிவுரைகள் நிகழ்த்திய கமீல் சுவெலிபில் தமிழ்மொழி வரலாறு இதுவரை நன்கு அமையாததற்கான காரணங்களையும் தாமும் தம்முடைய ருஷ்ய நாட்டுச் ககாக்களான ஆண்ட்ரநோவ், கிளாசோவ் என்போரும் தமிழ் வரலாற் றிலக்கணம் அமைப்பதற்கு எவ்வெவ்வகைகளிலே திட்ட மிட்டனரெனவும் தங்களுடைய ஆராய்ச்சி நெறி எத் தகையதெனவும் விளக்கியுள்ளார் உத்தேசத் தமிழ் மொழி வரலாற்றிலக்கணத்திலே சாசனத்துத் தமிழ் மொழி பற்றிய ஆராய்ச்சிக்குப் பொறுப்பேற்றுள்ள கமீல் சுவெலிபில் சிறு பழந்தமிழ்ச் சாசனமான திரு நாதர் குன்றுச் சாசனத்தை ஆராய்ந்து தம்முடைய ஆராய்ச்சி முறையை விளக்கியுள்ளார். கி. பி. 550 ஐச் சேரிந்ததாகக் கருதப்படும் பள்ளன்கோவிற் சாச னத்தை ஆராய்ந்து ஒரு சிறு நூல் வெளியிட்டுள்ளார். பேராசிரியர் தெ. பொ: மீனுட்சிசுந்தரஞர் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள சிக்காகோப் பல்கலைக்கழகத்திலே தமிழ்மொழி வரலாறு பற்றி ஆங்கிலத்தில் நிகழ்த்திய
1. Kamil Zvelebil-Lectures on the Historicah Grammar
of Tamil Madras.
47

Page 35
விரிவுரைகளைத் தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளார்.2 தமிழ்மொழி வரலாற்றுக்கான மூலாதாரங்களிலே சாச னத்துக்கு உரிய இடத்தை விளக்கிச் சாசனத் தமிழைத் தம்முடைய நூலிற் பயன்படுத்தியும் உள்ளார்;
தென்னிந்தியாவிலும் இலங்கையிலும் யோேைய நூல்கள் எழுதப்பயன்பட்டுவந்தது. இப்பிர தேசங்களிலுள்ள சுவாதிதியம் ஒலைச் சுவடிகள் நீண்ட காலம் நிலைப்பதற்கு ஏற்றதல்ல. குறுகிய கால இடை வேளையில் நூல்கள் புதிய ஓலைகளிற் பிரதிகள் செய்யப் படாவிட்டால், அற்நுால்கள் அழிந்துவிடும்: எனவே, இரண்டாயிரம் ஆண்டு வரலாறுடையனவாக இன்று கிடைக்கும் பழந்தமிழ் நூல்கள் யாவும் இவ்வாறு காலத் துக்குக் காலம் பிரதிசெய்யப்பட்டுவந்தனவே; பிரதிசெய் பவர் தவறுமிடங்கள் சில இருந்திருக்கும்; வேண்டு மென்றே காலத்துக்கேற்ற மாற்றங்களைப் புகுத்தலும் நிகழ்ந்திருக்கும். பழந்தமிழ்ச் சுவடிகள் பத்தொன்பதாம் நூற்ருண்டுப் பிற்பாதியிலிருந்து அச்சு வாகனமேறுகின் றன. ஒலைச் சுவடிகள் இருந்த சீர்கெட்டநிலையைப் பதிப் பாசிரியர்கள் பலர் குறித்துச் சென்றுள்ளனர்; பதிப்பாசி ரியர்கள் திருத்தம் செய்தபோது பழைய வழக்குகளை முழுவதாக உணர்ந்து திருத்தஞ்செய்தனர் என்று கொள் ளக்கூடவில்லை. ஆனல், தமிழ்ச்சாசனங்களில் இந்த நிை யில்லை. அவ்வக்காலத்து எழுதப்பட்ட சாசனங்கள் அவ் வவ்வாறே அமைந்துள்ளன; எனவே, காலமுறையிலே தமிழ்மொழி வரலாற்றை உணர்ந்து கொள்வதற்குச் சாச னங்கள் பேருதவி புரிகின்றன.3
2. T. P. Meenakshisundaram-A History of Tamil Langu
age, Poona 1965.
3. S. V. Shanmugam - Seminar on Inscriptions, 1966, Madras l968 e Epigraphy and Tamil Linguistics,
48

தமிழ்மொழி வழக்கை இலக்கிய வழக்கு பேச்சு வழக்கு என்று பகுத்து நோக்கும்போது சாசன வழக்குப் பேச்சு வழக்கோடு ஒத்தியல்வது தெரியவருகின் றது. தமிழ்மொழியின் இலக்கிய வழக்குக்கு இரண்டா யிரம் ஆண்டுகால வரலாறுண்டு. இலக்கிய வழக்கில் காலத்துக்குக்காலம் ஏற்படும் மாற்றம் மிகச் சிறிய அள விலேயே ஏற்பட்டு வந்திருக்கின்றது; மக்களுடைய நாவில் வழங்கிய உயிர்த் துடிப்புடைய மொழியாகிய பேச்சு வழக்கில், காலத்துக்குக்காலம் மாற்றம் ஏற்பட்டே வந் திருக்கின்றது. மொழி வழக்கு மாற்றமும் சமுதாய மாற் றமும் நெருங்கிய தொடர்புட்ையன தமிழ்ச் சமுதாயம் வேகமாக மாற்றமுற்றுச் செல்லாமையால், தமிழ்மொழி வழக்கும் வேகமாக மாற்றமுற்றுச் செல்லவில்லை. பழமை போற்றும் இயல்பைத் தமிழ்ச் சமுதாயமும் தமிழ்மொழி யும் பிரதிபலித்துவந்துள்ளன; இலக்கிய வழக்குத் தமிழ் கற்றவராலே போற்றப்பட்டுவந்தது. கற்ருே?ர் இலக்கிய வழக்குத் தமிழினைக் கற்று அதனைக் கையாண்டே பெரும் பாலும் இலக்கியம் செய்துவந்தனர். சோழப்பெரு மன் னர்கால முடிவு வரையிலான இலக்கியங்களில், பேச்சு வழக்குச் சொற்கள் மிக அருகியே காணப்பட்டன. பத் தொன்பதாம் இருபதாம் நூற்ருண்டு இலக்கியங்களி லேயே பேச்சுவழக்குச் சொற்கள் சிறப்பிடம் பெறுகின் றன. தமிழிலக்கியங்களிலும் மரபுவழித் தமிழிலக்கணங் களிலும் மட்டும் பரிச்சயமுள்ள தமிழறிஞர்கள் பலர் இலக்கிய வழக்கே தமிழ் வழக்கென்றும் பேச்சு வழக்குச் சமீபகாலத்தில் இலக்கிய வழக்கில் ஏற்பட்ட திரிபென் றும் தப்பாகக் கருதிவந்தனர். சாசன்த்துத் தமிழ்மொழி ஆராய்ச்சி பேச்சு வழக்குத் தமிழின் நீண்டகால வர லாற்றை அறியத் துணைபுரிகிறது. இன்றைய பேச்சு வழக்கிலுள்ள வடிவங்கள் சில, இலக்கிய வழக்கிலுள்ள மிகப்பழைய வடிவங்களைப்போன்ற தொன்மையுடை யவை என்பது சாசன ஆராய்ச்சியாலே தெரியவருகின்
49

Page 36
றிது பேச்சுவழக்கும் இலக்கிய வழக்கும் தனித்தனி வர லாறுடையவை, ஒன்றன் செல்வாக்கு மற்றதில் உண்டு என்ற உண்மைகள் இன்று நிரூபணமாகித் தமிழ்மொழி வரலாறு தெளிவுறும் நிலை இன்று காணப்படுகின்றது
தமிழ்மொழிக்கு அயல்மொழிகளான சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் இன்று கிடைக்கும் அவ்வம்மொழி இலக்கியங்களை விடப் பழமையான அவ்வம்மொழிச் சாசனங்கள் உள் ளன. எனவே, இம்மொழிகளின் வரலாற்றுத்தொடக்கம் சாசன வழக்கிலே காணப்படுகின்றது கால ஆராய்ச்சி யிலே தோன்றிய கருத்து வேறுபாடுகள் தமிழ்மொழி யைப் பற்றியவரையில் இன்னும் மறையவில்லை. தமிழ் மொழியிலுள்ள மிகப் பழைய இலக்கியம், மிகப் பழைய இலக்கணம், மிகப்பழைய சாசனம் என்பவற்றுள் முந்தி யது எது, பிந்தியது எது என்பதில் இன்றும் கருத்து வேறுபாடு உண்டு. தமிழ்நாட்டிலுள்ள குகைச்சாசனங் களே காலத்தால் மிகவும் முந்தியவை என்பதை வர லாற்ரு சிரியர் வற்புறுத்திவர மொழியியலறிஞரும் இன்று ஏற்கின்றனர்; மீனுட்சிசுந்தரனுரி குகைச் சாசனம், தொல்காப்பியம், சங்க இலக்கியம் என்ற முறையில் வைத்து மொழி வரலாற்றை ஆராய்ந்துள்ளாரி மீனுட்சிசுந்தரஞருடைய குகைச்சாசனம் பற்றிய மொழி யாராய்ச்சி சாசனவியலாளரான கே: வி. சுப்பிரமணிய ஐயரின் வாசகங்களையும் விளக்கங்களையும் அடிப்படை யாகக் கொண்டது, சுப்பிரமணிய ஐயரின் வாசகங்களும் விளக்கங்களும் முடிநித முடிபாக அமையவில்லை. பேராகி ரியர் மகாலிங்கம் குகைச் சாசனங்களின் திருத்திய பதிப்பு ஒன்று சமீபத்தில் வெளியிட்டுள்ளார். ஐராவதம் மகா தேவன் குகைச்சாசனங்களைப் புதிய முறையில் வாசித்து வருகின் ருர்; எனவே குகைச்சாசனங்களின் மொழியை, இன்று அச் சாசனங்களின் ஆராய்ச்சி உள்ள நிலையில்,
50

ஆராயகியல் வது பயன்படாது குகைச்சாசனங்கள் தெளி வாக வாசிக்கப்பட்டுள்ளன என்ற நிலை ஏற்பட்ட பின் னரே, அவற்றின் மொழியை ஆராயப்புகவேண்டும்
மீனட்சிசுந்தரஞரின் தமிழ்மொழி வரலாறு சங்க இலக்கிய மொழி ஆய்வுக்குப்பின் மூன்று விரிவுரை களையே கொண்டிருந்தது: கடைசி விரிவுரை இருபதாம் நூற்றண்டுத் தமிழைப் பற்றியதாகும்; அதற்கு முந்தி யது தமிழுக்கும் பிறமொழிக்குமிடையிலான தொடரி பாகும். சங்க இலக்கியத் தமிழுக்கும் இருபதாம் நூற் ருண்டுத் தமிழுக்கும் இடையே காலப்போக்கில் ஏற் பட்டுவந்த பிறமொழிக் கலப்புத் தவிர்ந்த மாற்றங்கள் யாவும் ஒரு விரிவுரையில் அடக்கப்பட்டுள்ளன. இவ் விரிவுரை பல்லவர் காலம், சோழர் காலம், நாயக்கர் காலம் என மூன்முகப் பகுக்கப்பட்டுள்ளது. நாயக்கர் கால மொழியாராய்ச்சிக்கு அச்காலப் பகுதியிற் பேச்சு வழக்கைத் தழுவி எழுந்த ஒரு நூலை ஆதாரமாகக் கொண்டுள்ளார். பல்லவர் காலம், சோழர் காலம் என் பனவற்றின் மொழியை ஆராய்வதற்குச் சாசனங்களையே துணைக்கொண்டுள்ளார். அவ்வாறு கொள்வதில், நியாயம் இருக்கிறது. தமிழிலக்கியங்களின் பரப்பு மிகவும் விரிற் தது. தமிழில் எழுந்துள்ள நூல்கள் அனைவற்றையும் ஆராய்ந்த பின்பே தமிழ்மொழி வரலாறு எழுதுவது எனத் தீர்மானித்தால், தமிழ் மொழிவரலாற்றை எப் பொழுது எழுதலாம் எனக் கற்பனையே செய்யலாம்: தமிழில் எழுதப்பட்டவை யாவற்றையும் மொழியியல் முறையில் ஆராய்வது எனத் தீர்மானித்தால், அவ் வாராய்ச்சியைச் செய்துமுடிக்கச் சில தலைமுறைகளாவது
5.

Page 37
செல்லும் இக்காலத்தில் விருத்திசெய்யப்பட்டுவரும் கனணியைத் துணைக்கொண்டாலும் இந்நூல்கள் யாவ்ற் றையும் ஆராய நீண்ட காலம் செல்லும். இந் நூல்கள் முழுவதையும் ஆராய்ந்தாலும், மொழிமாற்றம் மிகச் சிறிய அளவிலேயே நிகழ்ந்துசென்றதைக் கணிக்கமுடியும். ஆனல், சாசனங்கள் பேச்சுவழக்கைதி தழுவிச் செல்வ தால், சங்க இலக்கிய வழக்குகளிலிருந்து வேறுபட்ட வழக்குகளைச் சாசனங்களிற் காணக்கூடியதாக இருக்கும் எனவே, வளர்ச்சி - மாற்றம் - வரலாறு என்ற கண் ணுேட்டத்திலே சாசனி வழக்காறுகள் முக்கியத்துவம் வழங்கவேண்டிய நிலையிலுள்ளன:
கி5 பி. ஏழாம் எட்டாம் நூற்ருண்டுகளைச் சேர்ந்த சாசனங்களின் மொழியை ஆராய்ந்து தமிழ்ச் சாசனமொழி ஆராய்ச்சியில் முதல்வராக விளங்கியவர் காலஞ்சென்ற பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளை யாவரி அவருடைய ஆராய்ச்சி நூல் சுமார் முப்பதி தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் பல்கலைக்கழகத் திற் சமர்ப்பிக்கப்பட்டது. மொழியாராய்ச்சியும் சாசன ஆராய்ச்சியும் தமிழகத்தில் விருத்தியடையக் காலம் பிற்தியதால் அவருடைய ஆராய்ச்சியின் பெருமை உண ரப்படக்காலம் சென்றது. அவருடைய மேற்பார்வையில், பிற்காலப் பாண்டியர்களாகிய சடாவர்மன் சுந்தரபாண் டியன், மாறவர்மன் குலசேகரன் ஆகியோர் காலத்துச் சாசனங்களின் மொழியை ஆராயும் வாய்ப்பு இந்நூலா சிரியருக்குக் கிட்டியது.* ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத் துப் பேராசிரியரி ரி பருே என்பவரி திராவிட மொழி
4. A. Veluppillai - A Study of the Language of Tamil Inscriptions of the reigns of Gatavarman Cuntara Pandya and Māravar man Kulacēkara, 1962, un published Ph. D, thesis,
52

ஆராய்ச்சியிலே தலைசிறந்து விளங்குபவர்; அவருடைய மேற்பார்வையில், கி. பி. 800-920 என்ற காலப்பகுதிக் குரிய சாசனங்களின் மொழியை ஆராயும் வாய்ப்பும் கிட்டியது, இவ்விரு காலப் பிரிவுகளுக்குமுரிய சாசனங் களின் மொழிவழக்குகளைக்கொண்டே இக்கட்டுரை எழு தப்படுகின்றது:
1. எழுத்தியல்
சாசனத் தமிழிலுள்ள ஒலியன்களை நோக்கும் போது இவ்விரு காலச் சாசனங்களிலும் அ, இ, உ, எ, ஒ என்ற உயிரொலிகளும் அவற்றின் நெடில் ஒலிகளும் ஐகாரம் என்ற கூட்டொலியும் உயிரெழுத்துக்களாகக் காணப்படுகின்றன. மெய்யெழுத்துக்களில் க, ச, ஞ, ட, ண, த, ந, ப ம ய, ர, ல, வ, ழ, ள, ற என்ற பதினறும் ஒலியன்களாகக் காணப்படுகின்றன. ஒளகாரம் என்ற கூட்டொலி எச்சொல்லிலும் இடம்பெறவில்லை. நுகரம் சொல்லுக்கு இடையில் மட்டும் ககர வெடிப் பொலிக்கு இன மூக்கொலியாக வருகிறது. சொற்கள் புணரும்போது வருமொழியிலுள்ள ககர மெய்க்கு இன ஒலியாகத் திரியும் மகர மெய்யே நுகர மெய்யாக வழங்கு கின்றது எனலாம்; எனவே, மகர மெய்யின் மாற்ருெ லி யணுக நகர மெய்யைக் கொள்ளலாம்; பிற்காலப் பாண் டியர் சாசனங்களில் ஞகர மெய்யும் இந்நிலைக்கு வந்து விட்டது, ஞகர மெய்யை முதனிலையாகவோ இறுதிநிலை யாகவோ கொண்ட சொற்கள் எதுவும் கிடைக்கவில்லை: நகர மெய்யையும் னகர மெய்யையும் வெவ்வேறு
5. A. Veluppillai - A Study of the Language of Tamil
Inscriptions af-the-eigns of the period 800 - 920 A. D., 1964 unpublished D. Phil ... thesis,
53

Page 38
ஒலியன்களாகக் கொள்ளவும் முடியவில்லை; பழைய தமி ழில் இவ்விரு ஒலிகளும் ஒலியன்களாக வழங்கிவந்த நிலை மாறிவிட்டது; சொல்லுக்கு முதலில் நகரத்தையும் இடை யிலும் கடையிலும் னகரத்தையும் எழுதும் மரபு தோன்றி விட்டது. இரண்டு ஒலிகளுக்கும் இடையிலான வேறுபாடு மறைந்துவந்தது, சாசன வழக்குகளில் இவ்விரு ஒலி களும் மயங்கி வந்ததிலிருந்து அறியக்கூடியதாயுள்ளது: எனவே, மொழிக்கு முதலில் வரும் நகரத்தின் மாற் ருெ லியணுக னகரத்தைக் கொள்ளலாம்:
சாசனங்களிற் காணப்படும் நகரனகர மயக்கம் தமிழ்நாட்டு வடபகுதிச் சாசனங்களிலேயே ஆரம்பத் திற் கானப்படுகின்றது. நகர னகர வேறுபாடு தமிழ் மொழிக்கு இன்றியமையாததாக அமைந்திருந்திருக்க வேண்டும். ஆதித் தமிழிகின எழுதப் பயன்பட்ட பிராமி எழுத்து, பாதக மொழி முதலிய வடமொழிகளுக்கு உரிய தாக இருந்தது; வடமொழியில் ழ, ள, ற, ன என்ற தனியொலிகள் இல்லை. அதனுலேதான் தமிழ் மெய் யெழுத்துக்களைக் ககர வரிசையில் ஒழுங்குபடுத்திய இலக் கண ஆசிரியர் தமிழுக்கும் வடமொழிக்கும் பொதுவான மெய்யெழுத்துக்களை வடமொழி ஒழுங்கு முறைப்படி கூறித் தமிழுக்குச் சிறப்பாக உரிய நான்கு எழுத்துக் களையும் கடைசியிலே அமைத்தனர். ளகரம் வட மொழியை எழுதத் தென்னுட்டார் பயன்படுத்திய கிரந் தத்திலும் இடம்பெற்றதால், ழ, ற, ன என்பனவே தமிழுக்கு உரிய சிறப்பெழுத்து எனப்படுவதுமுண்டு: பல்லவர் காலத்திலே தமிழ்நாட்டிலே வடபகுதியிலே கிரற் தத் தமிழ் எழுத்தும் தென்பகுதியிலே வட்டெழுத்தும் வழங்கின. பாண்டியராட்சியிலே தமிழ் தூய்மையைப் பேணிப் பழைய வேறுபாட்டைக் காட்டிவந்தது. பல்லவ ராட்சியிற் செல்வாக்குப்பெற்ற கிரந்தத்தில் னகர மெய் இடம்பெறவில்லை. கிரந்த எழுத்தும் தமிழ் எழுத்தும்
54

நெருங்கிய ஒற்றுமையுடையனவாக விளங்கியதால் இரண்டு எழுத்து முறையையும் பயன்படுத்தியோருக்குத் தமிழ் எழுத்துமுறையிற் சிறப்பாகக் காணப்பட்ட னக ரம் மிகை எழுத்தாக இருந்திருக்கும். அதஞல் அவை யிரண்டையும் மயங்க எழுதியிருக்கவேண்டும். சோழப் பெருமன்னர் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் ஒராட் சியின் கீழ் வந்தது. பாண்டிநாட்டு வட்டெழுத்து வழக்கு வீழச் சோழ நாட்டுத் தமிழெழுத்துத் தமிழ்நாடு முழு வதும் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. பிற்காலப் பாண்டிய ராட்சியிலே, தொண்டை மண்டலம், சோழ மண்டலம், கொங்கு மண்டலம், பாண்டி மண்டலம் ஆகிய தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சாசன வழக்குகளில் நகர னகர மயக்கம் காணப்படுகின்றது;
தனித் தமிழ் எழுத்துக்களில் வரையப்பட்ட சாசனங்கள் மிகச் சிலவாம். பெரும்பாலான தமிழ்ச் சாசனங்களிலுள்ள சங்கத மொழிச் சொற்கள் கிரந்த எழுத்தில் வரை யப்பட்டுள்ளன. சங்கத மொழிச் சொற் கள் சங்கத மொழியொலிப்போ டு கிரந்த எழுத்தில் எழுதப்படுவது ஒரு வகையாகும். சங்கத மொழிச் சொற்கள் தமிழ் விகுதிகளைப்பெற்ற பின்பும் முழுவதும் கிரந்த எழுத்தில் எழுதப்படுவது இன்னெரு வகையாகும்: சங்கத மொழி ஈருகிய ஆகாரம் முதலியவை தமிழில் ஐகாரம் முதலியவையாகத் திரிந்த பின்பும் கிரந்தத்தில் எழுதப்பட்ட இடங்கள் சில உள. சங்கதச் சொற்கள் தமிழ்ப் பாலறி கிளவிகளைச் சேர்ந்த பின்பும் சங்கதப் பகுதியைக் கிரந்தத்திலும் தமிழ்ப் பகுதியைத் தமிழிலும் எழுதும் வழக்குப் பயின்று காணப்படுகின்றது. வட மொழிச் சொற்கள் சொற்ருெடர்களில் சில ஒலிகளைக் கிரந்தத்திலும் சில ஒலிகளைத் தமிழ் எழுத்திலும் எழு தும் வழக்கம் பயின்று காணப்படுகின்றது; இவற்றுட் சில இடங்களில் வடமொழிக்குரிய சிறப்பொலிகளை
55

Page 39
அவற்றுக்கினமான தமிழ் ஒலிகளாக மாற்றவிரும்பாது கிரந்தம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது போலத் தெரிகின் றது; சாசன மொழியிற் கிரந்த வழக்காற்றை ஆராய் வது சங்கத மொழிச் சொற்கள் தமிழில் வந்து கலந்த போது உச்சரிக்கப்பட்டவாற்றை உணர்த்துகின்றது. சங் சதம் கற்ற தமிழர் சங்கதச் சொற்களைச் சங்கதமாக உச்சரித்துத் தமிழ் ஒலி மரபுக்கேற்ற மாற்றங்களையும் இடையிடையே புகுத்துவதைக் காணலாம். இந்த வகை யில் இது பேச்சு வழக்கைத் தழுவியது என்றே கொள்ள வேண்டும். வடமொழிச் சொல் வந்து தமிழில் அமையு மாற்றை ஆராய்ந்து கூறுவதற்கு வீரசோழியத் தாருக் கும் நன்னூலாருக்கும் சாசனத்தமிழ் உதவியிருக்கவேண் டும். தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அல்லது தமிழ்ச் சொற்கள் சிலவற்றின் சில ஒலிகளை எழுதுவதற்கும் கிரந்த எழுத்து மிக அருகிய வழக்காகப் பயன்படுத்தப் பட்டது. அக்காலத்திற் கிரந்த எழுத்துக்கு இருந்த செல்வாக்கு அல்லது தமிழ்ச் சொற்கள் தவறுதலாக வட சொற்களாகச் சிலராற் கருதப்பட்டமை இதற்குக் கார ணமாகவேண்டும்;
மொழி வரலாற்றில் எழுத்தொலி மாற்றங்கள் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. எழுத்தொலி மாற்றங்கள் இலக்கிய வழக்குத் தமிழில் அருகியே இடம் பெறுகின்றன. பேச்சுத் தமிழிற் காலத்துக்குக் காலமும் இடத்துக்கிடமும் எழுத்தொலி மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. இன்னுெருவிதமாகக் கூறுவதாஞல், பேச் சுத் தமிழில் இந்த மாற்றங்கள் எப்போதும் இருந்து வந்தனவென்றும் ஒரு பிரதேசப் பேச்சுத் தமிழே செம்மை செய்யப்பட்டுச் செந்தமிழாக்கப்பட்டு இலக் கிய வழக்காகியதென்றும் கூறலாம் சாசனத் தமிழில் இலக்கிய வழக்காறுகளிலிருந்து எழுத்தொலி மாற்றங் கள் பெற்ற பல வழக்காறுகளைக் காணலாம்; அவ்வாறு
56

ாணப்படும் எழுத்தொலி மாற்றங்கள் யாவும் பேச்சு வழக்கிற் காணப்பட்ட மாற்றங்களா அல்லது எழுதுப வரின் அறியாமையால் ஏற்பட்ட தவறுகளா என நிச்ச யிக்கமுடியாதுள்ளன. இவ்விரு வகையிற் சாசன வழக்கு களிற் காணப்படும் எழுத்தொலி மாற்றங்கள் ஏற்பட் டிருக்கலாம் பிற்காலப் பேச்சுவழக்கை ஒத்தியல்கின்ற மாற்றங்களை அக்காலப் பேச்சு வழக்கிற் காணப்பட்ட ஒலி மாற்றங்களெனவும் பிற்காலப் பேச்சுவழக்கை ஒத்தி யலாத மாற்றங்களை எழுதுபவரின் தவறுகள் என்றும் பிரிப்பது ஒருவகையாகும்.8 பேராசிரியர் மீனுட்சி சுந்தர ஞர் ஒலி மாற்றங்களையும் தவறுகளையும் எவ் வகையாக வேறுபடுத்தியுள்ளார் என அறியக் கூட வில்லை. உயிரொலிகள் அளவிலும் தன்மையிலும் வேறு படுகின்றன எனக்கூறும் அவர் உயிரொலிகள் அளவில் வேறுபடுவதற்கான காரணத்தை விளக்குவது வில்லங்க மாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார். உயிரொலிகள் தன்மையில் வேறுபடுமிடங்களில் இகரம் எகரமாகவும் Bl-aprtb esTuo Tas Galb மாறுபடுவதைக் கால்டுவெல் விளக்கியுள்ளதை எடுத்துக்காட்டும் அவர் பிற உயிரொலி கள் இகரமாகவும் உகரமாகவும் மாறுவதை விளக்க முனைந்துள்ளார். கால்டுவெல் பேச்சுவழக்கை ஆராய்ந்தே விதிகள் வகுத் தாரி கால்டுவெல் கூழுததாக மீனுட்சி சுந்தரஞர் புதிதாகக் கூறும் விதிகளையுள்ளடக்கிய உதா ரணங்கல் தவறுகளாக இருக்கலாமா என்பது ஆராயப் படவேண்டும். பிற்காலப் பேச்சுவழக்கை மட்டும் கொண்டு தவறுகளைக் கணிப்பதிற் குறை கூறுவதற்கு இடமிருக்கிறது. ஒலிமாற்றங்கள் சில, மொழி வரலாற் றில் ஒரு காலத்தில் நிகழ்ந்து இன்னெரு காலத்தில் நிகழாதிருப்பது உண்டு இங்கு முடிந்த முடிபாகக்கூறு வதற்கு எதுவுமில்லை
6. A. C. Sekhar - Evolution of Malayalam - p. 15.
57

Page 40
எழுதுபவரின் தவறுகளாக இருந்திருக்கக் கூடிய வற்றை முதலில் எடுத்துக்கொள்ளலாம்; ஆகாரத்துக்குப் பதிலாக அகரம், ஈகாரத்துக்குப் பதிலாக இகரம் ஊகாரத்துக்குப் பதிலாக உகரம் எழுதப்பட்ட இடங் கள் பல காணப்படுகின்றன; அகரத்துக்குப் பதிலாக ஆகாரம் உகரத்துக்குப் பதிலாக ஊகாரம் எழுதப்பட்ட இடங்கள் சில காணப்படுகின்றன பண்டைத் தமிழிலும் இடைக்காலத் தமிழிலும் புள்ளியினல் வேறுபடுத்தப் பட்ட எகர ஏகாரமும் ஒகர ஓகாரமும் இடைக்காலத் தமிழ்ச் சாசனங்களிற் புள்ளியிடும் வழக்கமில்லாததால், வேறுபாடின்றியே சாசனங்களில் எழுதப்பட்டுள்ளன: இவற்றை நோக்கும்போது இடைக்காலத் தமிழ்ச் சாச னங்களிலே குறில் நெடில் வேறுபாடு நன்கு பேணப்பட வில்லையென்றே கூறலாம். எகர ஏகாரங்களையும் ஒகர ஒகாரங்களையும் எழுதும்போது குறில் நெடில் வேறுபாடு பேணப்படாமையால் ஏனைய குறில் நெடில் வேறுபாடு களையும் பேணுத இயல்பு வளர்ந்திருக்கவேண்டும்.
ஒருயிர் மெய்யெழுத்துக்குப் பதிலாக இன்னேர் உயிர் மெய்யெழுத்தை எழுதும் இடங்கள் சில, தவறுகள் என்றே கொள்ளப்படவேண்டியன. தரத்து (தரித்து), தற்திபுரத்த (நந்திபுரத்து), நல் (நெல்), திரா (திரு), வேம்பனிட்டு (வேம்பனட்டு) முதலிய உதாரணங்கள் அடைப்புக் குறிக்களுக்குள் உள்ள சொற்களைக் குறித்து வரும்போது தவறுகள் என்றே கொள்ளவேண்டும் அ ஆயின் (ஆயின்) ஆ அடுக்கு(அடுக்கு), இ இட்டு (இட்டு) நெஇல்லால் (நெல்லால்) என அமைவன கல்வில் அல் லது செம்பில் படி எடுக்கப்பட்டபோது தவறுதலாக எழுதப்பட்டவற்றை அழிக்கமுடியாமையால் விடப்பட்ட னவாக இருக்கவேண்டும்;
58.

இரண்டு உயிரெழுத்துக்கள் உடம்படுமெய்யில் லாது எழுதப்படும் முறை சாசனங்களிற் காணப்படு கின்றது. திசை ஓர்", இறைஇலி8, வழிஇலார்? என்பன ஒரே சொல்லில் அமைந்துகானப்படும் உதாரணங்க ளாம். கரை இன் 10, குறிஇல், தளிஉடைய 12, முடிஒடு", நெற்றிஇல் 14 முதலியன பெயர்ச் சொல்லுக்கும் வேற் றுமையுருபுக்குமிடையில் உடம்படுமெய் அமையாமைக்கு உதாரணங்களாம். இத்தகைய சொற்கள் ஒலிக்கப்படும் போது உடம்படுமெய் அமையவேண்டிய இடத்தில் விட்டிசை இருந்திருக்கவேண்டும். தமிழ் இலக்கணகாரர் சொல்லுக்கு விரிவான வரையறை கொண்டுள்ளனர்: இடைச்சொல், உரிச்சொல் யாவற்றையும் சொல்லாகக் கொண்டுள்ளனர். எனவே சொல், சொல்லும் உருபும் என மேலே காட்டியனபோன்ற வடிவங்களில் வெவ் வேறு சொற்களுள்ளன என்ற கருத்து நிலவியிருக்க வேண்டும். உயிரொலிகளுக்கிடையே உடம்படுமெய் வர வேண்டியது கட்டாயமில்லை என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்:
எழுதுபவரின் தவறுகள் மெய்யெழுத்துக்களை எழுதுவதிலும் காணப்படுகின்றன. சதையம்த்து (சதை யத்து), பதினஞ்ங்கழஞ்சு (பதினங்கழஞ்சு) முட்டால்
7. S. I. I., Vol. III, p. 454, line 79. 8. S. I. I., Vol. XII, p. 42, line, 6. 9. S. I. I , Vol. III, p. 224, line 5. 10. S. I. I., Vol. XII, p. 48, line 6. ll. S. I. I., Vol. XII, p. 48, line 42. 12. S. I. I., Vol. XII, p. 21, line 5. 13. S. I. I., Vol. III, p. 454, line 86 / 87.
14. S. I. I , Vol III, p. 454, line 98.

Page 41
மல் (முட்டாமல்), கொன்ட்டு (கொண்டு), காகங்க் முதல் (காசும்முதல்) முதலிய உதாரணங்கள் கல்லிலே அல்லது செம்பிலே தவருக ஒரு மெய்யெழுத்தை எழுதி அதை அழிக்கமுடியாமையால் தொடர்ந்து சரியாக எழுத்தை எழுதிக்கொண்டுபோனமையால் ஏற்பட்டன இதேமாதிரியான பிழை உயிர்மெய்யெழுத்து எழுதப் பட்ட இடங்களிற் காணப்படுவதற்கு உதாரணங்கள்:- இருரண்டாவது (இரண்டாவது), பரிசசு (பரிசு), பபா வம் (பாவம்) என்பன சத்திராதித்தர் (சந்திராதித் தர்), தொந்தா (தொந்தா), துரற்றில் (துரவில்), கொட்ட (கொண்ட) முதலியன. ஓர் மெய்யெழுத்துக் குப் பதில் இன்னேர் மெய்யெழுத்து தவறுதலாக எழு தப்பட்டதற்கு உதாரணங்கள் என்றே கொள்ளத்தச் கன எழுத்துக்கள் மட்டுமன்றி அசைகளும் இவ்வாறு எழுதப்பட்டுள்ளன. நந்தாந்தா (நந்தா), பொப்பொன் (பொன்), கந்டுண்டு (கண்டு) என்பன உதாரணங்களாம்; சொற்களை எழுதும்போது சில எழுத்துக்களைத் தவறுத லாக விட்டு எழுதுவதும் உண்டு ஆடு (ஆண்டு), நாகு (நான்கு), பன்னிண்டு (பன்னிரண்டு) என்பன சில உதர ரணங்களாம்
எழுத்தொலிமாற்றங்களை ஆராயும்போது உயி ரொலி மாற்றங்கள் மெய்யொலிமாற்றங்கள் என இரண்டாக வகுத்து ஆராயலாம் உயிரொலி மாற்றங் கள் இரண்டு வகைப்படும், ஒலியைச்சேர்ப்பது ஒருவகை சொற்களுக்கு இடையிலும் சொற்களின் இறுதியிலும் யகர மெய் சேர்க்கப்படுகின்றது; முந்தியகாலச் சாச னங்களில் இ, ஈ, ஏ, ஐ என்ற நான்கு எழுத்துக்களை யும் தொடர்ந்து உயிரி மெய், கிரந்தம் என்ற வேறு பாடின்றி என்ன எழுத்து வந்தாலும் இடையில் யகர மெய் எழுதப்படும் வழக்குக் காணப்படுகின்றது; பிற் காலச் சாசனங்களில் இ, ஏ, ஐ என்ற மூன்று எழுதி
60

துக்களையும் தொடர்ந்து வல்லெழுத்துக்களும் மெல் லெழுத்துக்களும் வந்தபோது யகரமெய் எழுதப்பட்ட தற்கு மட்டும் உதாரணங்கள் கிடைத்துள்ளன: குறிப் பிட்ட சூழலில் யகரமெய் எழுதப்படாமைக்கும் உதா ரணங்கள் உள முன்னண்ண உயிர்களாகிய இகரம் முதலியவை அண்ணச்சாயல் பெறுவதை இந்த யகரம் உணர்த்துவதாகக் கொள்ளவேண்டும்;
உயிரொலியொன்று பிற உயிரொலியாக எழு தப்படுவதைப் பல இடங்களிலே காணலாம்; இலக்கிய வழக்கில் அகரம் வருமிடங்களிலே சாசன வழக்கில் இகரம் வருகிறது: பிடலிகை (பட.லிகை),15 மிலாட்டு 16 (மலாட்டு), விளாகத்தின் 17 (வளாகத்தின்) முதலியன முந்திய சாசனங்களிலுள்ள உதாரணங்களாம் நாயி ஞர் 18 (நாயனர்), பழிம்பதி19 (பழம்பதி), ஐப்பிசி 20 (ஐப்பசி) முதலியன பிந்திய சாசனங்களிலுள்ள உதா ரனங்களாம்; இலக்கிய வழக்கில் அகரம் வருமிடங் களிலே சாசன வழக்கில் உகரம் வருவதுமுண்டு தேவன் கேசுவன்?1 (தேவன் கேசவன்), திருமழுவாடி 22 (திரு மழபாடி) என்பன முந்திய சாசனங்களிலும் மாறுபன் மf23 (மாறபன்மர்) ஆவுது24 (ஆவது) என்பன பிந்திய சாசனங்களிலும் உள்ள எடுத்துக்காட்டுகளாம்; அகர
15. 3. I. I., Vol. XII, p. 50 line 4.
. II., Vol. VII, p. 139, Line 1 / 2. . II. I., Vol. XIII, p. 48 Line 27. . II. II.. Vol. VIII, p. 82 Line 9.
I., Vol. IV, p. 128, Line 6. I., Vol. VIII, p. 107, Line 1. I., Wol. V, p. 226, Line 4. 22. S I., Vol. XIII, p. 172 Line 2, 23. S. I. I., Vol. V, p. 380. Line 1. 24. S. I. f., Vol. IV, p. 107, Line 7.
8
I. , I. I. . II. I. . I. I.
9
6.

Page 42
வுயிர் ஒலிப்பதற்குச் சிரமமான தென்றும் பிற உயிர்க ளாக மாற்றி ஒலிக்கப்படுவதென்றும் கால்டுவெல் கூறு வர். அகரம் கெட்டுவிடுகிறதென்றும் அவ்வாறு கெடும் போது மெய்யெழுத்துக்கள் தொடர்ந்து ஒலிக்கப்படும் நிலையேற்படுகிறதென்றும் கூட்டெழுத்துக்களை ஏற்காத தமிழ் "ஸ்வர பக்தி'யாக இகரம் அல்லது உகரத்தைப் புகுத்துகிறதென்றும் மீனுட்சிசுந்தரஞர் விளக்குவர். அகரம் ஐகாரமாக மாறி ஒலிக்கும் இடமும் உண்டு, தமிழ் இலக்கணம் ஐகாரம் அகாரமாக ஒலிக்கப்படும் ஐகாரக் குறுக்கத்தைப்பற்றிக் கூறும். ஐகாரம் அகர மாக ஒலிக்கப்படுவதைக் கண்டவர்கள் அகரத்தை ஐகார மாகவும் ஒலித்திருப்பர். குவலையம்23 (குவலயம்), மதி குதன் கலையன் 26 (மதி சூதன் கலயன்) அரை சர்27 (அர சரி) முதலியன முந்திய சாசனங்களிலும் ஐஞ்சா தான் 28 (அஞ்சா தான்), திருக்கானைப்பேர் 29 (திருக்கானப்பேர்), தவமழைகியார்'0 (தவமழகியார்) முதலியன பிந்திய சாசனங்களிலும் காணப்படுகின்றன. ஆகாரம் செய்யு ளில் ஓகாரமாக மாறலாம் என இலக்கணம் கூறும் ஆஞல், பேச்சு வழக்கில் இந்த மாற்றம் காணப்படுகின் றது. இந்தியத் தமிழையும் யாழ்ப்பாணத்தமிழையும் ஒப்பிடும்போது இந்த ஒலி மாற்றம் யாழ்ப்பாணத் தமிழிற் பயின்று வழங்குவதனைக் காணலாம். பெற் முேன் 31 (பெற்றன்), என்முேம்82 (என்றும்) என்பன
25. S. l. II., Vol. III, p. 454, Line 1 14. 26. S. I. I, Vol. V, p. 226, Line 6. 27. S. I I., Vol. III, p. 454, Line 113. 28. S. I. II,. Vol. III, p. 36, Line 5. 29. S. I. I., Vol. VIII, p. 86, Line 3. 30. S. I. I., Vol. VIII, p. 76, Line 39. 31. S. I. I., Vol. III, p. 454, Line 153. 32, E
. II., Vol. XI, p. 227, Line 30.

முந்திய சாசனங்களிலும் நாட்டோரோம்33 (நாட்டா ரோம்) என்பது பிந்திய சாசனங்களிலும் காணப்படு கின்றன;
6&7 su உயிரொலிகளில், இகரம் eyapur LD nr 4 ஒலிக்கப்படுவதுண்டு. ஞாயற்று4ே (ஞாயிற்று) காவதிப் பாக்கம்33 (காவிதிப்பாக்கம்) என்பன முந்திய சாசனங் களிலும் புரசை38 (புரிசை) கழான் 37 (கிழான்) முதலி பன பிந்தின சாசனங்களிலும் உள்ள உதாரணங்களா கும்; இகரம் உகரமாக ஒலிக்கும் இடமும் உண்டு: அமுர்துக்கு 38 (அமிர்துக்கு), பருசு9ே (பரிசு) என்பன முந்திய சாசனங்களிலும் முகுழ்த்து 40 (முகிழ்த்து), பண் டுதர்41 (பண்டிதர்) என்பன பிந்திய சாசனங்களிலும் உள்ள எடுத்துக்காட்டுகளாம். இங்கு மாற்றமடையும் இகரத்துக்கு முன்பு அல்லது பின்பு வரும் உயிரெழுத் தின் செல்வாக்கால் இம்மாற்றம் ஏற்பட்டிருக்கவேண் டும், வீதியில் என்பது "வுதியில் 42 என எழுதப்பட்டுள் ளது. வகரமாகிய இதழின எழுத்து ஈகாரத்தை ஊகார மாக மாற்றியிருக்கும். ஊகாரத்துக்குப் பதிலாக உக ரம் இங்கு எழுதப்பட்டுள்ளது. உகரம் அகரமாக ஒலிப் பதற்கு நந்தா43 (நுந்தா) என்பது முந்திய சாசனங்களி
ܫܝ
33. S. I. I., Vol. V, p. 248, Line 5. 34. E. I., Vol. XXIII, p. 42, Line 5. 35. S I., Vol. XII, p. 48, Line 1. 36. S. I. I., Vol. V, p. 179, Line 10. 37. S. I. I., Vol. V, p. 192, Line 1. 38. E. I., Vol. VII, p. 192, Line 3.
9. E. I., Vol. XL, p. 226, Line 39. 40. S. I. I. Vol. V, p. 179, Line 16. 41. S. I. I., Vol. V, p. 191, Line 1 / 2.
42. S. II, II., Vol. V, p. 362, Line 2. 43. S. I, II., Vol. XII, p. 45, Line 5.
63

Page 43
லும் ஊரணி44 (ஊருணி) என்பது பிற்திய சாசனங்களி லும் இடம்பெறும் உதாரணங்களாம்; ஊரணி என்பது திசைச் சொல்லாது இன்றும் வழங்குகிறது: உகரம் இகரமாக எழுதப்பட்ட இடங்களும் உண்டு ஒன்றி நிக்குக்க (ஒன்றினுக்கு), பிரட்டாதி48 (புரட்டாதி) என் பன முந்திய சாசனங்களிலும் சதிர தீது? (சதுரத்து) அரிளிச்செயல்48 (அருளிச்செயல்), எழுந்தருளிவித்த*9 (எழுந்தருளுவித்த), திருவிள்ளம் 50 (திருவுள்ளம்) என் பன பிந்திய சாசனங்களிலும் உள்ள எடுத்துக்காட்டுக்க ளாம். நொந்தா (நுந்தா) என்பதில் உகரம் ஒகரமா கதி திரிந்துள்ளது பூதூர் 52 (புதுரர்) என்பதில் உகரம் ஊகாரமாகியுள்ளது உகரம் இகரமாகத் திரிவதற்கு எடுத்துக்காட்டுகள் முந்திய சாசனங்களில் மட்டும் காணப்படுகின்றன; அவை பியர் 53 (பெயர்), சிலவு54 (செலவு), பிருதோம்33 (பெருதோம்) என்பன இந்த ஒலிமாற்றத்துக்குப் பிற்காலச் சாசன வழக்கில் உதா ரணம் கிடைக்கவில்லை. இந்த ஒலிமாற்றங்களுட் பெரும் பகுதி, முன்பு அல்லது பின்பு அயலிலே வரும் உயிரொ லிகளுக்கேற்ப அடைந்த மாற்றங்களாம்;
44. S. I. I., Vol. VIII, p. 87, Line 18. 45. S. I. I., Vol. VI, p. 7, Line 7.
46. S. I. I., Vol. XIII, p. 169, Line 28. 47. S. I. II., Vol. VII, p. 255, Line 9. 48. S. I. 1., Vol. VIII, p. 226, Line 15. 49. S. I. I., Vol. VIII, p. 226, Line 7. 50. S. I. I. Vol. V, p. 320, Line 9. 51. E. I, Vol., VII, p. 139, Line 4. 52, S. I. I., Vol. XII, p. 46, Line 4, 53. S. I. I., Volo III, p. 221, Line 6. 54. S. I. I, Vol. XIII, p. 160, Line 32, 55. S. I. I., XIII, p. 160, Line 35.
64

ஐகாரம், ஒகரம் ஆகிய உயிரொலிகளும் மாற் றங்களைப் பெற்றுள்ளன. ஐகாரம் ஒரு மூல உயிரொலி அல்ல. இது சந்தியக்கரம் அல்லது கூட்டெழுத்து எனப் படுகின்றது: அகர இகரம் அல்லது அகர யகரம் ஐகார மாகும் எனப்படுகின்றது; இகரமும் யகரமும் அண்ணத் திலிருந்து பிறப்பவை; இதஞல், ஐகாரத்திற்குப் பதி லாக அய் என்பது எழுதப்படுவதுண்டு அய்ஞ் நூறு56 (ஐஞ்ஞாறு), அய்ம்பத்திரண்டாவது57 (ஐம்பத்திரண்டா வது) என்பன முந்திய காலச் சாசனங்களிலும் வயிராக் கிய தேவன்58 (வைராக்கியதேவன்) வய்த்த59 (வைத்த) முதலியன பிற்காலச் சாசனங்களிலும் உள்ளன5 ஐகா ரம் ஒரு மாத்திரையும் பெறுவதுண்டு அவ்விடத்தில் அது அகரமாகவே ஒலிக்கும் குறத்தலை60 (குறைத் தலை), அம்பத்தொன்ருவது1ே (ஐம்பத்தொன்ருவது) என்பன முந்திய சாசனங்களிலும் அம்பது52 (ஐம்பது), வத்த63 (வைத்த) என்பன பிந்திய சாசனங்களிலும் வழங்கியுள் ளன. அகர இகரம் ஏகாரமாக ஒலிப்பதுண்டு. அத ஞல், ஐகாரத்துக்குப் பதில் ஏகாரம் வழங்குவதுண்டு. ஊட்டாமே04 (ஊட்டாமை) வழுவாமே65 (வழுவாமை)
. II., Vol. III, p. 8, Line 2.
56. S. I 57. S. I. I., Vol. I, p. 130 Line 3. 58. S. I. I., Vol. V, p. 192, Line 7. 59. S I. I., Vol. V, p. 380, Line 5. 60. S. I. I., Vol. III, p. 454, Line 101. 61. S. I. I, XII, p. 17 Line 1. 62. S. I. I., Vol. VIII, p. 76, Line 33. 63. S. I. I., Vol. V., p. 320, Line 7. 64. S. I. I., Vol. III, p. 2, Line 10.
65. S. I. I. Vol. XII, p. 45, Line 23.
65

Page 44
கெடாமே66 (கெடாமை) எனப் பல உதாரணங்கள் முற்திய சாசனங்களிற் காணப்பட இற்றே வரை7ே (இற் றைவரை) என ஒருதாரணம் மட்டும் பிந்திய சாசனங் களிற் காணப்படுகின்றது. இந்த மாற்றம் முற்திய சாசனங்கள் காலத்தில் பெருவழக்காக இருந்து பிற்திய சாசனங்கள் காலத்தில் அருகியிருக்கவேண்டும். ஒகரம் அகரமாக மாறுவதற்கு இரண்டு காலங்களிலும் பலிசை98 (பொலிசை) என்ற ஒருதாரணமே கிடைத்துள்ளது. ஒகரம் உகரமாக வழங்குவதற்கு குடு69 (கொடு) என் பது இரண்டு காலத்திற்கும் பொது குணந்து70 (கொணர்ந்து) என்பது முந்திய காலச் சாசனத்திற் காணப்படுகின்றது:
மெய்யெழுத்தொலிகளின் மாற்றங்களைச் சொல் வின் முதலில் மாற்றம், சொல்லின் இடையில் மாற் றம் என இரண்டாக வகுக்கலாம். சொல்லின் முத லில் ஞகரம் வந்த இடங்களில் நகரம் வரத்தொடங் கியது. முந்திய காலச் சாசனங்களில் நான்று 71 (ஞான்று) நெகிழ்த்து? (ஞெகிழ்த்து) என்ற வடிவங்கள் காணப் படுகின்றன. சில சொற்கள் ஞகர முதல் வடிவமும் நகர முதல் வடிவமும் பெற்றுக்காணப்படுகின்றன.
. II., Vol. XIII, p. 162, Line 2.
66. S. 67. S. I. I. Vol. V, p. 320, Line 4. 68. S. I. I., Vol. V, p. 320, Line 5.
S. I. I., Vol. III, p. 227, Line 8. 69. S. I. I., Wol. V, p. 223, Line 4,
S. I. I., Vol. VII, p. 312, Line 11. 70. S. I. I, Vol. XII, p. 34, Line 3. 7. E. I. Vol. XIX, p. 81, Line. 6. 72. S. I. I., Vol. III, p. 454, Line 112.
66

எடுத்துக்காட்டுகள்:- ஞாயற்று73 - தாயற்று?4 ஞாட்டு?5 நாட்டு;78 Dலம்77 - நிலம்;78 ஞெய்79 - நெய்80 பிந்திய காலச் சாசனங்களில் நாயிற்று51 முதலிய வடிவங்களே காணப்படுகின்றன. அண்ணமெய் பல்லின மெய்யாகி
பதை இது உணர்த்துகின்றது.
சொல்லின் இடையிலேற்பட்ட மெய்யெழுத் தொலி மாற்றங்களை நோக்கும்போது, ககரம் யகரமாக மாறுவதை இரண்டு காலங்களிலும் காணலாம்; பதி யம்82 (பதிகம்) என்பது முந்திய சாசனத்திலிடம் பெறத் நியதி83 (திகதி) பிந்திய சாசனத்திற் காணப்படுகின்றது. ககரம் நிலை கொள்ளாது கெட யகரம் அண்ண மெய் பாக இடையில் வருகிறது. யகரத்துக்குப் பதிலாகக் சகரம் வருமிடங்கள் என வாரிகம்84 (வாரியம்), நிகதிS5 (நியதி) என முற்திய சாசன உதாரணங்களைச் சுட்ட லாம். ககரம் மகரமாக மாறியதற்குப் பிந்திய சாச னங்களில் "சந்திவிக்கிரமப்பேறு6ே (சற்திவிக்கிரகப்பேறு) ான ஒருதாரணம் கிடைத்தது நிகதி நிசதி8 எனவும்
73, E. I., Voł. XXIII, p. 42, Line 5. 74. E. I, Vol. XX, p. 52, Line 1. 75. S. I. I., XII, p. 25, Line 2. 76. E. I., Vol XXI, p. 109, Line 48. 77 E. I., Vol. XX, p. 53, Line 12. 78. E. l., Vol. XX, p. 53, Line 1 1. 79. E. I., Vol. XX, p. 52, Line 6. 80. E. I., Vol. IX, p. 88, Line 23. 8. S. I. I., Vol. V, p. 223, Line 1. 82. S. I. I., Vol. III, p. 93, Line 33. 83. S. I I, Vol. V, p. 149, Line 4. 84. S. J. I, Vol. III, p. 231, Line 2. 85. E. I, Vol. XXI, p. 109, Line 23. 86. S. I. I., VIII, p. 86, Line 20. 87. S. I. I., Vol. XII, p. 25, Line 4.
67

Page 45
வருகின்றது. இதுவும் அன்னமெய்யாக மாறுதலாகும்: கோற்சட்ைபன்மர்83 (கோச்சடைபன்மர்) என்பதில் பல்லின மெய்யாகிய சகரம் அண்பல் தடை யொலியாகிய றகரமாக மாறுகிறது; பல்லின ஒலியாகிய - ந்த்-அண்ண ஒலியாகிய ஞ் - ச் - ஆக மாறுவதற்கு உதாரணங்கள் ஒழிஞ்சி89 (ஒழிந்து) இசைஞ்ச90 (இசைந்த), ஐஞ்சா வது9 (ஐந்தாவது) என்பன லகரம் நாமடி ஒலியா கிய ளகரமாகியதற்கு மதிள் 92 (மதில்) துளை93 (து)ை என்பன முந்திய சாசனங்களில் உதாரணங்களாம் இவையும் நிலம் - நிலன் 94 முதலிய அக்கால வழக்கா றும் தமிழ் இலக்கணத்திற் போலி எனப்படுகின்றன. ளகர, ழகர மெய் மயக்கமும் சாசனங்களிற் காணப்படு கின்றது. களஞ்சு35 (கழஞ்சு) என்பது முந்திய சாச னத்தில் வருகின்றது. வேழ்வி90 வீரப்புலி நாடாழ் வார்க்கு97 (வீரப்புலிநாடாள்வார்க்கு), திருவாய்க் கேழ்வி08 (திருவாய்க்கேள்வி) என்பன ளகரத்திற்குப் பதில் ழகரம் எழுதப்பட்டுவந்தமைக்குப் பிந்திய சாச னங்களிலுள்ள உதாரணங்களாம்; செவ்வித்த99 (செய் வித்த) என்பதில் தொடர்ந்து வரும் வகரத்தின் செல்
88. S. I. I , Vol. VIII, p. 137, Line 1. 89. E. I , Vol. XXVIII, p. 91, Line 31. 90. S. I. I., Vol. V, p. 151, Line 18. 91. E. I. Vol, VII, p. 140, Line 1. 92. S. I. I., Vol III, p. 454, Line 93. 93. S. I. I., Vol. III, p. 95, Line 13. 94. S. I. I, Vol XII, p. 48, Line 59. 95. E. I., Vol. VII, p. 139, Line 5. 96. S. l. II., Vol. V, p. 179, Line 4. 97. S. I. I., Vol. VIII, p. 217, Line 5 / 6. 98. S. I. I., Vol. V, p. 138, Line 1. 99. S. I. I., Vol. IV, p. 18, Line 6.

வாக்கால் அடிச்சொல் யகரம் வகரமாகத் திரிந்திருக் கிறது; கோ + இல் என்பது கோயில் 100 எனவே சாசன வழக்கில் வருகின்றது. கோயில் என்பதில் இகரத்தின் செல்வாக்கால் யகரமெய்யும் கோவில் என்பதில் ஒகாரத் தின் செல்வாக்கால் வகர மெய்யும் வந்தனவாகக் கொள்ளவேண்டும். னகர மெய் தொடர்ந்து வரும் வல் லொலிக்கு இனமான மெல்லொலியாக மாறுவதற்குப் பிந்திய சாசனங்களிற் காணப்படும் உதாரணங்களாவன:- நஞ்செய்10 (நன் செய்), அம்பிலுடையார் 102 (அன்பி லுடையார்); இன்றைய இந்தியத் தமிழிற் காணப்படும் ரகர றகர மயக்கம் பிந்திய சாசனங்களிலே காணப்படு கின்றது. நாச்சியாற்க்கு,103 பிறிந்த 104 (பிரிற்த), பயிற் (பயிர்)105 முதலியன எடுத்துக்காட்டுகளாம்;
மெய்யொலிகள் சேர்ந்தொலிக்கும்போது ஒரு மெய்யொலியை ஒத்ததாக மற்ற மெய்யொலி மாறுவ துண்டு. - ர்க்க் - என்பது - ற்க் - ஆகமாறுகிறது:- நாய ஞற்கு 106 (நாயனரிக்கு), கண்ணனூற் கொப்பம்107 (கண்ணனுார்க்கொப்பம்) தேவற்கு 108 (தேவர்க்கு) முத லியன - ரிப்ப் - என்பது - ற்ப் - ஆக மாறுகிறது:- னப்
100. S. 1. II., Vol. III, p. 221, Line 4. 101. S. I. I , Vol. IV, p. 152, Line 6. 102. S. I. I., Vol. VIII, p. 95, Line 5. 103. S. I. I., Vol. V, p. 166, Line 2. 104. S. I. I, Vol. V, p. 273, Line 2. 105. S. I. I., Vol. VIII, p. 217, Line 11. 106, S, I. I., Vol. VIII, p. 82, Line 12. 107. S. I. I., Vol. V, p. 179, Line 9. 108. S. I.
I., Vol. VIII, p. 76, Line 2.
69

Page 46
பேற்பட்ட09 (எப்பேர்ப்பட்ட), கற்பூரம் 110 (கர்ப்பூரம்) முதலியன - ர்த்த் - என்பது - ற்த் - என மாறியுள்ளது:- ஊற்தெற்கு 111 (ஊர்த்தெற்கு), இவற்றை நோக்கும் போது றகரம் ஆண்பல் தடையொலி என்ற தொல்காப் பியர் கால நிலையை இழந்து இடைக்காலத்தில் உரப் பொலியாக மட்டும் வருகிறது எனக்கொள்ளவேண்டும். - ற்க் - என்பது - க்க் - என மாறுகிறது:- தெக்கு112 (தெற்கு), மேக்கு113 (மேற்கு), - ங்க் - என்பது பல்லின - ஞ்ச் - ஆக மாறுகிறது:- கவிஞ்சு 114 (கலிங்கு). - ட்க் - என்பது - கிக் - என மாறியுள்ளது:- திருநாக்கள் 115 (திரு நாட்கள்) - ன்ம் - என்பது - ம்ம் - ஆக தேவகம்மி116 (தேவகன்மி) என்பதிற் காணப்படுகின்றது - ர்ப்ப் - என் பது - இப்ப் - என நலிந்து கைப்பூரவிலை117 (கர்ப்பூரவில்) வந்திருக்கிறது. அழைப்பிச்சு 118 (அழைப்பித்து), எடுப் பிச்ச119 (எடுப்பித்த) என்பன பல்லினமெய் அண்ணமெய் யாக மாறியமைக்கு முந்திய சாசனங்களில் எடுத்துக் காட்டுகளாம். விடுவோம் என்பது உடுவோம் 120 என வந் துள்ளது. யகரத்துக்கான இதழ் முயற்சியில் உகரத்தின்
109. S. I. I., Vol. VII, p. 254, Line 30. 110. E. I., Vol. XX, p. 109, Line 146. 111. S. I. I., Vol. V, p. 138, Line 7. 112. S. I. I , Vol. IV, p. 154, Line 2l. 113. S. I. I., Vol. V, p. 380, Line 5. 114. S. I. I., Vol. XI, p. 27. Line 6. 115, S. l. II., Vol. V, p. 320, Line 8. 1 16. S. I. I , Vol. IV, p. 128, Line 16. 1 17. S. I. I., Vol. IV, p. 107, Line 3. 118. S. I. I., Vol. XIII, p. 163, Line 2. 1 19. S. I. I., Vol. III, p. 228, Line 5. 120. E. I., Vol. XI, p. 226, Line 38.
70

ஒலிப்பு முயற்சி சம்பந்தப்படும்போது உகரம் முதனில் யாக வந்துவிடுகின்றது. எய் என்பது ஐ என்பதுபோல ஒலிக்கப்படுகின்றது. முந்திய சாசனத்தில் எண்ணெய் என்பது எண்ணை121 என எழுதப்பட்டுள்ளது; பிந்திய சாசனங்களில் அந்த உதாரணத்தோடு நஞ்சை122 (நன் செய்), புஞ்சை123 (புன்செய்) என்பனவும் காணப்படு கின்றன: ஐகாரம் ஏகாரமாக ஒலிக்கப்படுவதால், எய் என்பதும் ஏயென எழுதப்படுகின்றது. புன்சே124 (புன் செய்), சேது125 (செய்து), சேஇல் 128 (செய்யில்) என்ற எடுத்துக்காட்டுகள் யாவும் முந்திய சாசனங்களில் மட் டுமே காணப்படுகின்றன;
ஒலி இடம் மாறிநிற்றல், சொல்லின் முதலில் புது ஒலி தோன்றல், ஒலி கெடுதல், சொல்லின் இடை யில் புது ஒலி தோன்றல், சொல்லின் முடிவில் புது ஒலி தோன்றல் முதலியனவும் சாசனத் தமிழில் இடம்பெறு கின்றன. மரதகம் 127 (மரகதம்), செவ்விய்த்தான் 128 (செய்வித்தான்) முதலியன ஒலி இடம் மாறிநிற்கும் உதாரணங்களாம் ய, ர, ழ, முதலிய ஒலிகள் நலிவொலி களாகக் கெடுகின்றன. இரண்டுக்கு மேற்பட்ட மெய் யெழுத்துக்கள் மயங்கிவருவதை ஏற்காத தமிழ் ய, ர, ழ என்ற மெய்யெழுத்துக்களைத் தொடர்ந்து அள்வாறு
121. S. I. I., Vol. III, p. 95, Line 10. 122. S. I. I., Vol. VII, p. 10 Line 3. 123. S. I. I., Vol. IV, p. 107, Line 4, 124. S. I. I., Vol. V. p. 288, Line 6. 125. S. I. I., Vol. III, p 227, Line 2. 126. S. I. I., Vol. V, p. 226, Line 7. 127. S. I. I, Vol. XIII, p. 170, Line 12. 128. E. I. Vol. VII, p. 192, Line 4.
7.

Page 47
வர மட்டும் விதிவிலக்கு வழங்குகின்றது: யாப்பிலக்கணத் திலும் வேண்டிய இடங்களில் இந்த ஒலிகள் இடம்பெற் றனபோலவும், வேண்டாத இடங்களில் இடம்பெருதன போலவும் அசைசீர் வகுக்கும்போது கொள்ளப்படுகின் றன. போது 129 (போழ்து) என்பதில் ழகரமும் குணந்து180 ெேகாணர்ந்து) என்பதில் ரகரமும் ஆண்டு181 (யாண்டு) என்பதில் யகரமும் முந்திய சாசனங்களிலே கெட்டுள்ளன. பிந்திய சாசனங்களில் ழகரமெய் கெடுவதற்கு உதா ரணம் கிடைக்கவில்லை. கீத்தி132 (கீர்த்தி), காத்திகை13 (கார்த்திகை) என்பனவற்றில் ரகர மெய்யும் வாக்கால்184 (வாய்க்கால்) சேதருளி135 (செய்தருளி) என்பனவற்றில் யகரமெய்யும் கெட்டுள்ளன: சொல்லின் முதலிலே புது ஒலி வருவதற்கு ஆ, இ, ஏ, முதலிய ஒலிகள் யாளும்136 (ஆளும்), யிறையான்சேரி137 (இறையான்சேரி), யேத்து வோம்138 (ஏத்துவோம்) என யகர மெய் பெற்றுவருவன வற்றையும் வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங் கும்போது தமிழொலி மரபுக்கேற்ப இகர உயிரை முதலிற் பெற்று இர கூைr189, இரகத்தார் 140 என வருவனவற்
129. E. I. Vol. XXI, p. 109, Line 78. 130. S. I. I., Vol. XII, p. 34. Line 3. 131. E. I., Vol. V, p. 42, Line 3 132. S. I. I., Vol. IV, p. 107, Line 1 . 133. S. I. I., Vol. VIII, p. 137, Line 10. 134. S. I. I., Vol IV, p. 133, Line 5. 135. S. I. I., Vol. VIII. p. 107, Line 2. 136. S. I. I., Vol. XIII, p. 156, Line 4. 137. S. I. I., Vol. III, p. 96, Line 1. 138. E. I., Vol. XI, p. 226, Line 32. 139. S. I. I., Vol., XIII, p. 110, Line 9. 140. S. I. I., Vol. XII, p. 43, Line 32.
72

றையும் முந்திய சாசனங்களிலிருந்து காட்டலாம். பிந்திா சாசனங்களிலே இகரம் பல்லினச் சார்புபெற்று யிப்படி 141 (இப்படி), யிற்றே வரை 142 (இற்றைவரை) என வருவதை யும் உகரம் இதழினச் சார்புபெற்று வுலகுணிமங்கலத்து 143 (உலகுணிமங்கலத்து) என வருவதையும் காட்டலாம். தற்கால இந்தியப் பேச்சுவழக்கிலும் இவ்வியல்பு நிலை பெற்றுள்ளது. வடமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது தமிழொலி மரபுக்கேற்ப இராமன் 144, இரேபதி145, என எழுதப்பட்டுள்ளன. யகர மெய்யிலே தொடங்கும் சொல் இகரத்தை முதலெழுத்தாகப்பெற்று இயாண்டு148 என வருகின்றது, யகரம் கெடுவதைத் தடுப்பதற்காக இகரம் முதலில் ஒலிக்கப்படுகின்றது. ஆமைதவழி 47 (ஆமை எய்த வழி) என்பதில் எப் என்ற அசை கெட்டுள்ளது. ஐ, எய் என்ற ஒலிகள் நெருங்கிய தொடர்புள்ளனவாதலால் ஒரொலியை ஒலித்ததும் pyG 525 ஒலியையும் ஒலித்துவிட்டதாக மனத்தில் தோன்றிவிடுகின்றது. செயிது 148 (செய்து), செயிவித்து 149 (செய்வித்து) என்ற முந்திய சாசன உதாாணங்களில் யகாம் இடையிலே கெடுவதைத் தடுப்பதற்காக இகரம் சேர்த்து வலியுறுத்தப்படுகிறது. சொல்லின் இறுதியில் உகரத்தைச் சேரிக்கும் இயல்பு திராவிட மொழிகளுக்
141. S. I. I., Vol. VII, p. 9, Line 5. 142. S. I. I, Vol. V, p 320, Line 4. 143. S. I. II., Vol. IV. p. 107, Line 10. 144. S. I. I., Wol, V. p. 18, Line 26. 145. S. I. l., Vol. VIII, p. 76, Line 3. 146. S. I. I., VIII, p. 76, Line 2. 147. S. I. I., VIII, p. 87, Line 24. 148. E. I., Vol. XX, p. 53, Line 12. 149. S., I, II., Vol. XII, p. 56, Line 6.
73

Page 48
குப் பொதுவானது; வல்லின ஈறு கொண்டசொற்கள் திராவிடமொழிகளில் இல்லை. சொல்லின் இறுதியிலுள்ள வல்லொலியை உச்சரிப்பதற்காகவே குற்றியலுகரம் என்ற சார்பொலி தோன்றியது. இடையின, மெல்லின ஈறுகளுள்ள சொற்களுக்கும் உகரம் சேர்க்கப்படுவதனைச் சாசனங்களிலே காணலாம். நெல்லு150 (நெல்), எள்ளு51 (எள்), திருக்கானப்பேரு152 (திருக்கானப்பேர்) என்பன உதாரணங்கள். மெய்யீறுகள் பல, உகர ஈருவதைக் கண்டவர்கள் உயிரீறுகளுக்கும் உகர ஈற்றைச் சேரிக்கின் றனர். காவு153 (கா), செறுவு154 (செறு) என்பன உதா ரனங்களாம்.
ஒரே சொல் சிறிது வேறுபட்ட இரு வடிவங்களை உடையதாயிருப்பதுண்டு வெள்ளிலை155 - வெற்றிலே 158 வென்றி157 - வெற்றி, ஆண்டு - ஆட்டு - ஆட்டை15 முத லியன எடுத்துக்காட்டுகளாம். வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு வடிவம் வழங்கிப் பின் இரு வழக்காறுகளும் எழுத்துவழக்கிற் புகுந்திருக்கவேண்டும்,
சொல்லும் சொல்லும் புணருமிடத்து வருமொழி முதலொலியும் நிலைமொழி ஈற்ருெ லியும் பலவிகாரங்களை
150. S. I. I., Wol, V, p. 320, Line 5. 151. S. I. I., Vol, VIII, p. 217, Line 14. 152. S. I. I., Vol, VIII, p. 82, Line 3. 153. S. I. I., Vol, II, p. 507, Line 59. 154. S. I. I., Vol. XII, p. 19, Line 4. 155. E. I., Vol. IX, p. 88, Line 26. 156. S. I. I., Vol, III, p. 222, Line 7. 157. S. I. I., Vol, III, p. 454, Line 88.
158. S. I, I, Vol, XII, p. 34, Line 5.
74

அடைவதுண்டு விகாரங்களை அடையாத நிலையை இயல் புப் புணர்ச்சி என்றும் விகாரங்களை அடையும் நிலையை விகாரப் புணர்ச்சி என்றும் தமிழிலக்கணகாரர் வகுப்பர்; உடம்படுமெய் புகுதல், மெய்யிரட்டுதல், மெய்திரிதல், மெய்கெடுதல் என நான்குவகையாக விகாரங்கஆள SUNT LI லாம்; நிலைமொழியீற்று உயிரொலியும் வருமொழிமுதல் உயிரொலியும் விகாரமின்றி நிற்க அவற்றுக்கிடையே
அவற்றை உடன்படுத்த வல்ல உடம்படுமெய்யா இய யகரம் அல்லது வகரத்தை எழுதுதல் உடம்படுமெய் வழங்குதல் எனப்படும். முன்னண்ண உயிர்களைத்
தொடர்ந்து உயிரொலிகஜ் வரும்போது யகரமும் அகர ஆகாரங்களையும் பின்னண்ண உயிர்களையும் தொடர்ந்து உயிரொலிகள் வரும்போது வகரமும் உடம்படுமெய்க ளாகின்றன. உடம்படுமெய்யின் வடிவத்தை հ7 (Լք 51ճա தைத் தவிர்க்கமாட்டார். என்று மட்டும் உடம்படுமெய் பற்றி எதிர்மறை வாய்பாட்டாலே தொல்காப்பியர் கூற உடம்படுமெய்யிலக்கணத்தை முதலில் ஆராய்ந்து வீர சேழியத்தார் கூறினுர். எவ்வெவ் வெழுத்துக்களைத் தொடர்ந்து எவ்வெவ் வெழுத்துக்கள் உடம்படுமெய்ய வரும் என்பதைப்பற்றிச் சாசன வழக்குக்கும் வீரசோழி யத்துக்கும் வேறுபாடில்லை. ஆனல் உடம்படுமெய்யில்ல மலே உயிரொலிகள் தொடர்ந்து வரும் முறை தொல் காப்பியச் சூத்திரத்தை நினைவூட்டுகின்றது. உடம்படு மெய் எழுதப்படாத இடங்களை இலக்கணமுறையில் வகுத்துப் பார்த்தால், இறந்தகால வினையெச்சம், இறந்தகாலப் பெயரெச்சம், செயவெனெச்சம், எழுவாய், செயப்படுபொருள், பண்புச் சொல், பெயரடை, தொழிற்பெயர், இடப்பொருள் என்பனவற்றை நிலை மொழியாகக்கொண்ட சொற்களாகவும் அளவுப்பெய ரைத் தொடர்ந்து வரும் அளவுப் பெயராகவும் என். இடு, ஆ என்னும் வினையடிகளாலான சொற்களை வரு மொழிகளாகக் கொண்ட சொற்களாகவும் காணப்படு
75

Page 49
கின்றன; இவையாவற்றுக்கும் பொதுத் தன்மையாக் ஒன்று கூறவேண்டுமானல் நிலைமொழியீற்றுக்கும் வரு மொழி முதலுக்குமிடையே விட்டிசை ஏற்படுகின்றது என்று கொள்ளவேண்டும் நிலைமொழியை உச்சரித்து இடைவிட்டு வருமொழியை உசிசரிக்கும்போது உடம் படுமெய் தேவையில்லாது போகின்றது:
நிலைமொழியீற்றுக் குற்றியலுகர ஈறு வருமொழி முதலில் உயிர் வரும்போது உயிரேற இடம்கொடுத்து நிற்கும். இத்தகைய புணர்ச்சி ஏற்படாத இடங்களும் பல வாம். அத்தகைய இடங்களே இலக்கண முறையில் வகுத் துப் பார்த்தால் பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து எண்ணுப் பெயர் வரும்போதும் எண்ணுப் பெயரைத் தொடர்ந்து பெயர்ச்சொல் வரும்போதும் பெயர்ச் சொல் டகர மெய் றகர மெய் யிரட்டி உருபேற் கும் நிலையை அடையும்போதும் குசரவுருபு, அத்துச் சாரியை, இறந்தகால வினையெச்சம், தொழிற்பெயர் முதலிய பெயர்ச்சொல் ஆகியவற்றின் முன் உயிரொலி வரும் போதும் என எடுத்துக் கூறக்கூடியதாயுள்ளது: இங்கும் நிெைமாழியையும் வருமொழியையும் கூட்டி ஒலிக்காது ஒன்றை ஒலித்து இட்ைவிட்டு மற்றதை ஒலிப்பதாலேயே குற்றியலுகர ஈறு உயிரேற இடம் கொடுக்கவில்லை என்று கூறவேண்டும் சாசன வழக்கில், குற்றியலுகர ஈறு வருமொழி முதலில் யகர மெய் வரும் போது குற்றியலிகர ஈருகத் திரிவதுண்டு இயல்பாக நிற்பதும் உண்டு. குற்றியலுகரம் மொழியின் ஈற்றில் வல்லின மெய்யை ஊர்ந்து வருவது என்று இலக்கணம் கூறும், வகர மெய்யை ஊர்ந்து வருவதுண்டு என்றும் கூறவேண்டியுள்ளது. இரவும்,? ஒழிவின்றி,180 செல
159. E. I. Vol, VII, p. 139 Line 4. 160. S., I, II., Vol, XII, p. 48 Line 30,
76

'வாசு, கைச்செலவற," பொருட்செலவோ9ை9 முத லிய பல வழக்காறுகள் சாசனங்களிற் காணப்படுகின் றன. வாழ்கென 104 (வாழ்க என) என்பதில் அகரம் குற்றியலுகரத்தைப் போல வருமொழி உயிரேற இடம் கொடுத்துள்ளது. இது என்பதிலுள்ள முற்றியலுகரமும் சில இடங்களில் குற்றியலுகரம்போல விளங்குவதால், இதில்,165 இதென்று,166 இதிறக்குவான் 157 முதலியூ எடுத் துக்காட்டுகள் காணப்படுகின்றன. குற்றியலுகத்தைத் தொடரிந்து யகரம் வரும்போது அக்குற்றியலுகரம் குற்றியலிகரமாக மாறும் என்பது தமிழ் இலக்கணவிதி: யகர மெய்யின் செல்வாக்கால், ஒலித்துணை உகரம் இகரமாக மாறுகின்றது. சாசன வழக்கில் இவ்விதி எல்லா இடங்களிலும் பின்பற்றப்படவில்லை;
மெய்யிரட்டுதலும் இரண்டு வகைப்படும் வரு மொழி முதல் இரட்டுவது நிலைமொழியீறு இரட்டுவது என்பனவே அவையாகும் வருமொழி முதலாக இரட்டு வன க, ச, த, ப என்ற வல்லின மெய்களாம். நிலை மொழியீற்றில் உயிரி அல்லது ய, ர, ழ என்ற எழுத் துக்கள் வரும்போது, வருமொழி முதல் வல்லினம் இரட்டுகின்றது; இந்தச் சூழலில் இவ்வொலிகள் வரும் போது இரட்டும் இடமும் உண்டு இயல்பாக வரும் இடமும் உண்டு. இரட்டும் இடம் எது, இயல்பாக
161. S. I. I., Vol, XII, p. 24. Line 5. 162. S. I. I., Vol, VIII, p. 87, Line 30. 163. S. I. I., Wol, V, p. 118, Line 18. I64. S. I. I., Wol, V. p. 179, Line 13. 165. S. I. I., Wol, p. 83, Line 19. 166. E. I., Vol, XI, p. 227, Line 30. 167. A., R., on S. I. E., 1936, p. 73, Line 6,
77

Page 50
வரும் இடம் எது என்பதை வேறுபடுத்திக் காட்டுவ் தற்காக இலக்கணகாரர் வேற்றுமைப்புணர்ச்சி அல்வழிப் புணர்ச்சி என்ற பாகுபாட்டைத் துணைக்கொண்டுள்ள னர். சாசன வழக்கை நோக்கும்போது இந்தப் பாகு பாடு இயல்புப் புணர்ச்சி விகாரப் புணர்ச்சி என்பன வற்றை விளக்க உதவுவதாக இல்லை. அதனுலேதான் வீரசோழியமும் புணர்ச்சி இலக்கணம் கூறும்போது இப்பாகுபாட்டைக் கூறவில்லை; வேற்றுமைப் புணர்ச்சி யில் இயல்பும் இரட்டுதலும் பயின்று வழங்குவதுபோல அல்வழிப் புணர்ச்சியிலும் இயல்பும் இரட்டுதலும் பயின்று வழங்குகின்றன. ய, ர, ழ எழுத்துக்கள் பெறும் புணர்ச்சியை அனுசரித்துப்போலும் சாசனங்களிலே லகர எழுத்தும் வல்லினம் வந்து இரட்ட இடம் கொடுத்து நிற்கிறது. மேல்ப்படி, 168 பல்க்குளத்து, 169 சொல்க்குற்றம்,170 கோயில்த் திருநடை மாளிகையில் 171 என்பன பிந்திய காலச் சாசனங்களிலும் பால்க்கருகா வூர் 172 முதலியன முந்திய காலச் சாசனங்களிலும் காணப் படுகின்றன. ளகர மெய்யின் பின் வல்லினம் இரட்டு வதற்கு நாள்த்திருவமுது173 என்ற எடுத்துக்காட்டு முந் திய சாசனத்திற் காணப்படுகின்றது.
மகர வீற்றுச்சொற்களின் முன்பு வல்லினம் வரும் போது மகரம் கெட வரும் வல்லினம் இரட்டுகின்றது: புணர்ச்சியில் மகர வீறு நிலைபெருமற் போவதை நோக்கும்
168. S. I. I., Vol VII. p. 9, Line 2. 169. S. I. I., Vol, VIII, p. 87, Line 14. 170. S. I. J., Vol, VIII, p. 87, Line 39. 171. S. I. I, Vol, V, p. 380, Line 2, 172. S. I. I., Vol, III, p. 233, Line 2. 173. S. I. I., Vol, III, p. 96, Line 2.
.78

போதுமகரம் ஆதிவடிவங்களில் இடம் பெருமலிருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றது. மகரம் அற்ற எஞ்சிய வடிவமே ஆதி வடிவமாகலாக், சங்கத மொழியில் மகர வீறு பெருத பல சொற்கள் தமிழில் வந்து வழங்கும்போது மகர வீறு புதிதாகப் பெறுவதும் அஃறிணைச் சொற்கள் பல தமிழில் மகர வீற்றனவாக விளங்குவதும் கவனிக்கப்படவேண்டியன, பலர் பாலைக் குறிக்கும் ரகர வீறும் புணர்ச்சியில் மகர வீறுபோலக் கெடுவதை, சன்டாளப்பேறு, 174 தண்டேசுவரப்பெரு வி,ை175 மாசேசுவரக் கண்காணி178 என வரும் பிற்திய காலச் சாசன வழக்காறுகளிலே காணலாம்.நிேலைமொழி யீறு வெறும் பெயர்ச்சொல்லிலான போதிலும் வேற் றுமையுருபேற்ற பெயர்ச்சொல்லிலான போதிலும் இயல் புப் புணர்ச்சி இரட்டுதல் என்பனவற்றைப் பெறுவதில் எவ்வித வேறுபாடுமில்லை. அவ்வழித்தொடரில் வினைத் தொகை, எழுவாய்த்தொடர் என்பன இயல்புப் புணர்ச் சியே பெறுகின்றன. வினையெச்சத்தொடர், பெயரெச் சத்தொடர், பண்புத்தொகை, உம்மைத்தொகை, இடைச்சொற்ருெடர் என்பன சில இடங்களில் இயல் பாயும் சில இடங்களில் இரட்டியும் உள்ளன; வரு மொழி முதல் நகரமெய்யும் மகர மெய்யும் ஐகாரவுயி ருக்குமுன் அருகிய வழக்காக இரட்டுகின்றன:- கைம் மாட்டாண்மையால்,177 கைந்நிலம்,178 கைம்மாட்டாங் சானகையால்,179 தைம்மாதம், 189
174.
, Vol, V, p. 138 Line 21.
S. I. I. 175. S. I. I., Vol I, IV, p. 128, Line 10. 176. S. I. I., Vol, IV, p. 107, Line 1. 177. S. I. I., Wol, XII, p. 48, Line 44. 178. S. I. I., Vol, III, p. 454 Line 1 17. 179. S. I. I., Wol, VII, p. 9, Line 7. 180, S I. I., Vol, IV, p. 128 Line 7.
79

Page 51
சுட்டு, விஞ முதலிய ஒரெழுத்தொரு மொழியின் முன் மெய் முதன் மொழி வரும் போது அம்மெய்யிரட்டுகிறது. சுட்டு, விஞ என்ப வற்றைத் தொடர்ந்து உயிர்முதல் மொழி வரும் போது இடையில்வரும் உடம்படுமெய் இரட்டுகின்றது ஜவ்வுழக்கு,8 கைய்யெழுத்து182 என இரண்டு உடம் படுமெய்யுள்ள வடிவங்கள் காணப்படுகின்றன. கைய் யெழுத்து என்பதில் "ஐகாரத்தின் செல்வாக்கால் யகரம் உடம்படுமெய்யாக வர ஐவ்வுழக்கு என்பதில் உகரத் தில் செல்வாக்கால் வகரம் உடம்படுமெய்யாக வரு கிறது; நிலைமொழியீற்றுமெய் இரட்டுமிடங்கள் சிலவே யுள்ளன. வல்லினம் குற்றியலுகரம் பெற்றே நிலை மொழிக்ற்று ஈரு கவரும். புதுஏரி என்பது புத்தேரி18 என வரும்.பொதுவாக இநிெைமாழியீற்று மெல்லின இடையின ஈறுகள் வருமொழி முதலில் உயிரி வரும் போது இரட்டும் எனக்கூறலாம். குற்றெழுத்தைத் தொடர்ந்து மெய்யெழுத்துவரும் ஒரசைச் சொற்களி லுள்ள மெய், உயிர் வரும்போது இரட்டும் என்பது இலக்கண விதி. அவ்வாறு இரட்டும் உதாரணங்கள் இரண்டு காலங்களிலும் கிடைத்துள்ளன. பல அசைக ளாலான சொற்களுக்கு முன் உயிர்வரும்போதும் இத் தகைய மாற்றம் ஏற்பட்டுள்ளதைச் சாசனங்களிலே காணலாம். 184
181. S. I. I., Vol, III, p. 2, Line 7.
182. S. I. I., Wol, XII, p. 36, Line 6.
183. A.R. on S. I. E, 1936, p. 73, Line 3/4
184. எரிப்போம்மானுேம், தண்டம் மிடப்பெறுவது, புரவும் மடங்க, கோயில்லெடுப்பித்தார் எல்லேயுள்ளும், அவன்னே, மகன்னுடைய முதலியன முந்திய சாசனங்களிலும் தேவதானம்மாக, தானம் மும், தட்டான் சூரியன்மூன என்பன பிந்திய சாசனங்களிலும் காணப்படுகின்றன,

மெய்யெழுத்துத் திரிதல் நிலைமொழியீற்றில் அல்லது வருமொழி முதலில் அல்லது இரண்டிடங்களி லும் நடைபெறலாம். நிலைமொழியீற்றில் மெல்லின மும் இடையினமுமே மெய்யிருக வரும். மெல்லின எழுத் துக்களுள் மகரமே மிகப்பல சொற்களுக்கு ஈருக வரு கின்றது. மகர வீறு வருமொழி முதல் க, ச, த, என்ற வல்லெழுத்துக்கேற்ப அவ்வெழுத்தின் இனவெழுத்தாக ங, ஞ, ந என முறையே திரியும். பகரத்துக்கு மகரமே இன எழுத்தாதலால் பகரம் வருமொழி முதலில் வரும் போது மகரம் திரியாது அல்வழிப் புணர்ச்சிக்கு இத் திரிபு தொல் காப்பியத்திற் சொல்லப்படுகின்றது; பெயர்ச் சொல்லும் விளைச்சொல்லும் தொடர்ந்துவரும் போது வினைச் சொல்லுக்குப் பெயர்ச்சொல் செயப்படு பொருள் அல்லது இடப்பொருள் என்ற வேற்றுமைப் பொருள்களாக வரும்போது இத்தகைய திரிபு வேற்று மைப் புணர்ச்சியிலும் இடம்பெறுகிறது. ஆனல் அல் வழியிலும் வேற்றுமையிலும் சில இடங்சளில் இயல்புப் புணர்ச்சியும் நிகழ்ந்துள்ளது னகர வீறு வல்லினம் வரும்போது வேற்றுமையிலே றகரமாகிறது. ஆனல் வேற்றுமையில் எல்லா இடங்களிலும் இப்புணர்ச்சியில்லை. ணகர வீறு வல்லினம் வரும்போது வேற்றுமையில் டகரமாவதற்குப் பல உதாரணங்கள் முந்திய சாசனங் களிலே காணப்படப் பிந்திய சாசனங்களில் எதுவும் காணப்படவில்லை
இடையின எழுத்துக்களில் ல ள, ழ, வ என்பன சொல்லின் ஈற்றில் வந்து திரிபுகளுக்கு இடந்தந்து நிற்கின்றன. லகரம் வல்லெழுத்து முதல் மொழி வரும்போது வேற்றுமையில் றகரமாகிறது. லக ரத்தின் முன் தகரம் வரும்போது லகரம் றகரமாகினல் தகரமும் றகரமாகும் என்பது இலக்கணவிதி, லகரம் றகரமாகியதும் தகரம் இயல்பாக நிற்றலுக்கு ஒருதார
8.

Page 52
னமும் தகரமும் றகரமாவதற்கு எட்டு உதாரணங்க ளும் முந்திய சாசனங்களிற் கிடைத்துள்ளன. பிந்திய சாசனங்களிலே மொழி வழக்கிலே மாற்றம் காணப்படு கின்றது. தகரம் றகரமாவது ஓரிடத்திலும் தகரம் இயல்பாக நிற்பது மூன்று இடங்களிலும் காணப்படு கின்றன. அவ்வழியிலும் லகரம் வல்லினம் வரும்போது றகரமாக மாறுகிறது. வேற்றுமையிலும் அல்வழியிலும் லகரம் வல்லினம் வரும்போது இயல்பாக நிற்கும் இடங் களும் பலவாம் வகர வீற்றுச் சொல்லாகிய தெவ் என்பது முரசு என்ற சொல் முதன் மொழியாக வரத் தெம்முரசு என மாறுகிறது. 185 வகரம் மகரமாக மாறு கிறது. வருமொழி மகரமெய்ச் செல்வாக்கால், இதழ் முயற்சியுடைய வகரம் அதே முயற்சியுடைய மகரமாக மாறுகிறது; எகர வீறு வருமொழி முதலில் வல்லினம் வரும்போது வேற்றுமையில் டகரமாக மாறும்; இத் திரிபு மிகச்சில இடங்களிலேயே, இரண்டுகாலச் சாச னங்களில் இடம்பெற்றுள்ளது; அல்வழியிலும் வேற்று மையிற் பெரும்பாலான இடங்களிலும் இத்திரிபு இல்லை ளகரம் நகர முதன் மொழி வருமிடத்தில் ணகரமாக உண்ணிலம் என ஒரிடத்தில் மட்டும் திரிந்து காணப் படுகின்றது.186 முகரவீறு ளகர வீற்றை ஒத்த திரிபுகளைப் பெறுவதை வீரசோழியம் கூறியுள்ளது; ழகர வீறு பகர முதன் மொழிக்கு முன்னே டகரமாகத் திரிவதற்கு புகட் படர87(புகழ் படர),கலுட்பெரும் பிணக்குன்றம் 188 (கலும்பெரும் பிணக்குன்றம்) என இரண்டு எடுத்துக் காட்டுகள் பிந்திய சாசனத்திற் கிடைத்துள்ளன:
185. S. I. I., Wol, V, p. 179, Line 3. 186. E. I, Wol, XX, p. 53, Line 12. 187. S. I. I, Vol, V, p. 179, Line 2. 188. S. I. I., Wol, V, p, 179, Line 7,
82

உயிரீற்றுக்கு முன் வல்லினம் வேற்றுமையில் வரும்போது வரும் வல்லெழுத்தின் இனமெல் லெழுத்தான மூக்கொலி வருகின்றது. மாந்த ளிர் 189 பூம்புனல் 190, புளிங்கறி19 என வரும், இதே அமைப்பில், கமுகந்தோட்டம்,192 ஆற்றங்கரையில் 193 என்பன வருகின்றன: இவற்றிலிடம்பெறும் அகரம் உடைமைப் பொருளை யுணர்த்துவதாகக் கொள்ளவேண் டும். லகர ளகரமும் ளகர ணகரமும் புணரியவில் ஒரே வித மாற்றங்களைப் பெறுவதைக் காணலாம். னகர வீற்றினேக்கொண்ட சொற்கள் லகர வீற்றினையும் னகர வீற்றிக்னக்கொண்ட சொற்கள் ளகர வீற்றினையும் கொள் வனவாகத் தமிழ்மொழி வரலாற்றில் மாறிவந்தமையே அதற்குக் காரணமாகும்: வருமொழி முதலெழுத்து மாற்றங்களை ஆராயும்போது லகர ஈற்றைத் தொடர்ந்து வரும் தகர முதல், றகர முதலாக மாறுகின்றது; அவ் வாறு திரியாத இடங்களும் உண்டு னகர வீற்றைத் தொடர்ந்து வரும் நகர வீறு னகர வீருக மாறுகின்றது, முந்தின சாசனங்களில் இத்திரிபுக்கு g?0.57 probagpub இயல்புக்குப் பல உதாரணங்களும் கிடைத்துள்ளன. பிந்திய சாசனங்களில் திரிபு பயின்று கானப்படுகின் றது. னகர வீற்றைத்தொடர்ந்து வரும் தகரமுதல் டகரமுதலாக மாறுகின்றது. இத்திரிபுக்கு ஓரெடுத்துக் காட்டு மட்டும் முந்திய சாசனங்களிற் காணப்பட நான்கு எடுத்துக்காட்டுகள் பிந்திய சாசனங்களிற் கிடைத்துள்ளன. தந்தையும் மகவுமான உறவுகொண்ட
189. S. I. I. Vol, V, p. 179 Line 15. 190. S. I. I., Vol, III, p. 454, Line 136. 191. E, I., Vol, IX, p. 88, Line 20. 192. S. I. I, Vol, V, p. 27, Line 4. 193. S. I. I., Vol, VIII, p. 300, Line 15,

Page 53
இருவர் பெயர்கள் தொடர்ந்துவரும்போது தந்தையின் பெயரிறுதியிலுள்ள அன் ஈறுகெட அவவிடத்து அம் மென்னும் சாரியை வரும் என்று தொல்காப்பியம் கூறும், ளகர மூக்கொலி, வரும் வல்லெழுத்துக்கு இன மான முக்கொலியாகத் திரிவதே இந்த மாற்றம் என லாம் நக்கங்காடன்?" (நக்கன் காடன்), சாத்தம்பழி யிலி* (சாத்தன் பழியிலி) என்பன முந்திய சாசனங் களிலுள்ள உதாரணங்களாம். பிந்திய சாசனங்களின் காலத்தில் இத்திரிபு நிகழவில்லை.
மெய்யெழுத்துக்கள் கெடுதல் நிலைமொழியீற்றில் நிகழ்கின்றது. ம ன முதலிய மெல்லெழுத்துக்களும் ர, ல, ள, ழ முதலிய இடையெழுத்துக்களும் கெடும் எழுத்துக்களாம். ஈரசைச் சொல் அல்லது பல அசைச் சொல்லின் சற்றில் வரும் மகரம் வருமொழி முதலில் மகரம், நகரம் அல்லது வகரம் வரும்போது பெரும் பாலும் கெடுகின்றது. உயிரெழுத்து முதன்மொழி வரு மிடங்களிலும் இது கெடுவது உண்டு, அவ்வாறு கெடும் போது சில இடங்களில் உடம்படுமெய் எழுதப்படுகின் றது; சில இடங்களில் இயல்புப் புணர்ச்சி காணப்படு இன்றது. னகர ஈறு நகர சற்றுக்கு முன்னலே கெடுகின் றது. அப்பொழுது வருமொழி முதலிலுள்ள நகரம் னகர மாகத் திரிகின்றது. முந்திய சாசனங்களில் னகர வீறு கெட்ட பின் நகர வீறு னகர வீருகத் திரிதல், எல்லா இடங்களிலும் காணப்படவில்லை. பிந்திய சாசனங்களில் இத்திரிபு எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. னகர வீறு கெட வருமொழி வல்லினம் இரட்டும் அபூர் வப் புணர்ச்சி உடப்பிறந்தார் (உடன் பிறந்தார்) என
194. S. I. II., Vol, III, p. 454, Line 165. 195, S. I. I. Vol, XII, p. 26, Line 4.
34

முந்திய சாசனத்திற் காணப்படுகின்றது,196 ரகர வீறு வருமொழி முதலில் பகரம் அல்லது மகரம் வரும்போது கெடுவதைப் புத்திர புத்திரர்197 கைக்கோள முதலி களில், 198 சண்டாளப்பேறு 199 என்ற பிந்திய சாசன எடுத்துக்காட்டுகள் புலப்படுத்துகின்றன. ல, ழ என்பன வருமொழி முதலில் நகரம் வரும்போது மேனேக்கிய200 (மேல்நோக்கிய) கீழ்னுேக்கிய20 (கீழ் நோக்கிய) நசை யான்ைனிலை202 (நசையால் நன்னிலை) புனனுட்டை203 (புனல் நாட்டை) என நிலைமொழியீறுகெட வருமொழி முதல் நகரம், ஏற்ற திரிபு பெற்றுவருவதை உணர்த்து கின்றன; வருமொழி முதல் நகரம் திரியாது இயல்பாக நிற்கும் எடுத்துக்காட்டுகள் சில, முந்திய சாசனங்களிற் கிடைத்துள்ளன, ல, ள என்பன வருமொழி முதலில் தகரம் வரும்போது நாடோறும்204 (நாள்தோறும்) திங்கடோறும்20 (திங்கள் தோறும்) கோறிசை206 (கோல் திசை) என நிலைமொழியீறு கெட வருமொழி முதல் தகரம் ஏற்ற திரிபுபெற்று வந்துள்ளது:
2. பெயரியல்
சாசனத் தமிழிற் பெயர்ச் சொல்லாக்கம் பல வகையாக நடைபெறுகின்றது; அடிச் சொற்களில் ஒரு
196. E. H., Vol, XX, p. 53, Line 2. 197. S. I. I, Vol, VI, p. 136, Line 3. 198. S. I. I, Vol, V, p. 380, Line 3. 199. S. II, I, Vol, V, p. 138 Line 21, 200. S. I. I, Vol, VIII, p. 82, Line 20. 201. S. I. I, Vol, VIII, p. 82, Line 21. 202. S. I. I, Vol, V, p. 179, Line 12. 203. S. I. I, Vol, V, p. 179, Linc 9. 204. S. I. I, Wol, V, p. 149, Line 15. 205. S. I. l, Wol, XII, p. 30 Line 23. 206. S. I. II, Wol, II, p. 454, Line 138.
85

Page 54
பகுதி பெயர்ச்சொல்லாக விளங்குகின்றன. ஆஞல் அவை சாசனப் பெயர்ச்சொற்களில் ஒரு சிறு பகுதியேயாகும்: பெரும்பாலான பெயர்ச்சொற்கள் அடிச் சொற்களிலிருந் தும் வினைச் சொற்களிலிருந்தும் பிறபெயர்ச்சொற்களி லிருந்தும் அமைகின்றன3 வினையிலிருந்து அமையும் பெயர்ச்சொற்களை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர், தொழிற்பெயர், வினையடிப் பெயர், வினையாலணையும் பெயர் எனப் பலவாகப் பகுத்து ஆராயலாம். வினையடி வடிவமே பெயராகவும் வழங்குவது முதனிலைத் தொழிற்பெயரெனப்படுகின்றது, முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்பதை ஓரசை வினையடியின் உயிர்நீளல், வினைப்பகுதியின் ஈற்றுமெய் யெழுத்து இரட்டல், வினையடியின் நெடில் குறுகல் என மூன்ருக வகுத்து ஆராயலாம்:
வினைப்பகுதிக்குத் தொழிற் பெயர் விகுதி சேரிக் கத் தொழிற்பெயராகும் எனத் தமிழிலக்கணக்காரரி கூறுவர் தொழிற்பெயரைத் தொழிற்பெயர் வினைய டிப்பெயர் என இரண்டாக வகுத்துக்காட்டியவர் கால்டு வெல்லாவர் தொழிற்பெயர் தொழிலை மாத்திரம் உணர்த்துவது என்றும் வினையடிப் பெயர் வினைப்பகுதி LIT 60Tg விகுதிபெறுவதாலே தோன்றுவதாயினும் தொழிலை உணர்த்துவதில்லை எனவும் அவர் காட்டியுள் ளார். தல்விகுதி தொழிற் பெயருக்குச் சிறப்பாக உரி யது அல் விகுதி தொழிற்பெயருக்கும் வரும்; வினையடிப் பெயருக்கும் வரும். தொழிற் பெயர் விகுதிகளெனப்படும் பிற விகுதிகள் யாவும் வினையடிப்பெயர் விகுதிகளாக வருகின்றன. வினையாலனையும் பெயர் வினைமுற்றின் அமைப்பை உடையதாகப் பெயராக வருவதாகும்: பெயரெச்சவடிவங்களுக்குப் பாலறிகிளவி அல்லது சுட்டுப்பெயரைச் சேர்க்க அவை தோன்றுகின்றன. தொழிற்பெயரோடு ஒப்பிடும்போது இவை காலத்தையும்
86

கருத்தாவையும் சிற்ப்பாக உணர்த்தும், வினைமுற்றுக்கும் வினையாலணையும் பெயருக்கும் இடையே வடிவ ஒற் றுமையால் ஏற்படும் மயக்கத்தைத் தீர்ப்பதற்காக, பாலறிகிளவிகள் சேர்ந்துவருமிடத்தும் குறுகிய உயிரு டைய பாலறிகிளவியை உயர்திணை வினைமுற்றுக்கும் நீண்ட உயிருடைய பாலறிகிளவியை உயர்திணை வினையா லணயும் பெயருக்கும் மொழி பெரும்பாலும் பயன் படுத்துகின்றது எடுப்பார்,207 உள்ளிட்டார்,208 செய் வார்கள்,209 வேண்டுவது,210 எப்பேர்ப்பட்டன211 என் பன பாலறிகிளவியுடைய வினையாலணையும் பெயர் களுக்கு எடுத்துக்காட்டுகளாம் து, மை என்ற விகுதி த%ளயுடைய பெயர்கள் சில, பெயரெச்சங்களைக் கொண் 1.மை வன. இவை அமைப்பில் வினையாலணையும் பெயரை ஒத்தன. ஆனல் இவை கருத்தாவை உணர்த்த வில்லை. தொழிற் பெயரைப்போலன்றி இவை காலத்தை உணர்த்துகின்றன. இவை காலங்காட்டும் தொழிற் பெயரெனத் தமிழிலக்கணகாரரால் வகுக்கப்படும்,
பெயர்ச் சொற்களுக்கும் பெயரடைகளுக்கும் விகுதிகள் சேரிப்பதாலும் பாலறிகிளவிகள் சேர்ப் பதாலும் பெயர்ச் சொல்லாக்கம் நிகழும் விகுதி கள் என்று இங்கு கொள்ளப்படுவது பாலறிகிளவி கள் தவிர்ந்த விகுதிகளையாகும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற அறுவகைப் பெயருக்கும் பாலறிகிளவியைச் சேர்ப்பதன் மூலம்
207, S. H. I, VoII, IV, p. 128 Line 9. 08. S. I. I, Wol, V, p. 328, Line 1 1. ’9, S. I. I, Vol, VIII, p. 226, Line 4. 20. S I. I, Vol, V, p. 66, Line 2.
11. S. I. I, Vol, V, p. 27, Line 22/23.
87

Page 55
பெயர்ச் சொல்லாக்கப்படும் அவ்வாறு ஆக்கப்பட்ட பெயர்ச் சொல்லைத் தன்மைப் பெயராக்குவதற்காகத் தன்மை விகுதியைத் தொடர்ந்து சேர்ப்பதுண்டு,212 பெயரையும் பெயரையும் சேர்ப்பதன்மூலம் மேற்படி, கோயில், வாய்க்கால்213 முதலிய பெயர்ச்சொற்களும் பெயரையும் வினையடியையும் விகுதியையும் சேர்ப்பதன் மூலம் மணுளன்,214 காராண்மை,213 மன்ரு டி216 என் னும் பெயர்களும் பெயரையும் இடப்பொருளுருபையும் பாலறிகிளவியையும் சேர்ப்பதன் மூலம் வழியிலார்217 என்னும் பெயரையும் தொழிற்பெயரையும் எதிர்மறை இடைச்சொல்லையும் பாலறிகிளவி அல்லது விகுதியையும் சேர்ப்பதன் மூலம் விரவலர்,218 இறையிலி219 முதலிய பெயர்ச்சொற்களையும் வினையடியையும் பெயரையும் சேரிப்பதன்மூலம் வெண்பா,220 வெள்ளிலை முதலிய பெயர்களையும் சாசனத் தமிழ்மொழி அமைத்துக்கொள் கின்றது. செய்பவர் என்று பொருள்படும். க்ரு என்னும் சங்கதமொழிச் சொல் மூலத்திலிருந்து வந்த "காரர்" என்பதைப் பெயர்ச்சொல்லோடு சேர்த்து நிவந்தக் காரர்,221 வேட்டைக்காரர்222 முதலிய பெயர்ச்சொற்களை ஆக்கும் மரபு பிந்திய சாசனங்களிலே காணப்படுகின்றது.
212. நாட்டோரோம் , கணக்கரோம், அனைவரோம் என்பன பிந்திய
சாசனங்களில் மட்டுமுள்ள உதாரணங்கள்.
213. S. I. I, Vol, V, p. 288, Line 7.
214. S. I. I, Vol, XII, p. 24 Line 8. 215 S. I. I, Vol, III, p. 454, Line 159. 216 S. I. I, Vol, V, p. 276, iline 3. 217. S. I. I, Vol, II, p. 224. Line 5. 218. S. I. I, Vol, III, p 454, Line 88/89, 219. E. I, Vol, XX, p. 53, Line 12. 220. S. I. I, Vol, XII, p. 42, Line 2 221. S. I. I, Vol, V, p. 151, Line 13/14. 222. S. I. I, Vol, VIII, p. 137, Line 13.

சாசனங்களிலுள்ள பெயர்ச்சொற்களைப் பாலறி கிளவிகள் உள்ள பெயர்ச்சொற்கள், பாலறிகிளவிகள் இல்லாத பெயர்ச்சொற்கள் என இரண்டாக வகுக்க லாம். பாலறிகிளவிகள் இல்லாத பெயர்ச்சொற்களும் இரு திணை ஐம்பாற் பாகுபாட்டினுள் அடங்குகின்றன: உயர்திணை அஃறிணை என்ற பாகுபாட்டைக் கூறும் தொல் காப்பியர் மனிதர் உயர்திணையென்றும் பிற யாவும் அஃ றிணை யென்றும் கொண்டுள்ளார். நன்னுரலார் தேவர், நரகர் என்போரையும் உயர்திணையாகக் கொள்வர். உயர்திணையில் மட்டுமே ஆண்பால், பெண்பால் என்ற வேறுபாடு உண்டு. அஃறிணை மிருகங்கள், பறவைகள், மரங்கள் என்பன ஆண் பெண் எனப் பிரித்துக் கூறப் படுகின்ற இடத்திலேகூட, ஆண்பால் பெண்பால் என்று கொள்ளப்படாது அஃறிணையாகவே கொள்ளப்படுகின் றன. அஃறிணைச் சொற்களிற் பெரும்பாலானவற்றில் ஒன்றன்பால், பலவின் பால், விகுதிகள் இடம்பெறுவ தில்லை; ஒரே வடிவம் ஒன்றன்பாலாகவும் பல வின் பாலாகவும் அமைந்து பால்பகா அஃறிணைப் பெயர்க ாாகக் காணப்படுகின்றன. பாலறிகிளவிகள் திணைபால் எண் இடம் என்பனவற்றைத் தெளிவாக உணர்த்து கின்றன. திணைபால் எண் இடம் கூறல் பொருளைப் பொறுத்ததன்றி வடிவத்தைப் பொறுத்ததல்ல. ஆனல் பாலறிகிளவிகள் உள்ள வடிவத்திலிருந்து திணை பால் எண் இடம் முதலியனவற்றைச் சுலபமாக அறிந்து கொள்ளமுடியும். மூவிடப் பெயரிகள் அல்லது அவற்றின் உறுப்புகளே. பாலறிகிளவிகளென்றும் ஆதித்திராவிடப் பெயர்ச்சொற்கள் பாலறிகிளவிகளில்லாத நிலையிலிருந் நனவென்றும் காலப்போக்கிலேயே பாலறிகிளவிகள் அப்பெயர்ச் சொற்களோடு சேர்ககப்பட்டன வென்றும் கால்டுவெல் கூறிஞர். தொல்காப்பியர் பாலறிகிளவி யாக ஈற்றெழுத்தாகிய னகரம் முதலியவற்றை மட்டும் கூறுவதால் கால்டுவெல் கருதிய அள் முதலிய மூவிடப்
89

Page 56
பெயர் ஈறுகள் ஏற்றுக்கொள்ளத்தக்கன அல்ல என்பர்? ஆனல், தொல்காப்பியம் வினையியலில் அன் முதலியன கூறப்பட்டுள்ளன; மேலும் உயர்திணை விகுதிபெருத, பொருளால் உயர்திணையான சொற்கள் அஃறிணைபோல வழங்குமெனத் தொல்காப்பியர் சூத்திரம் செய்துள் வார். திணைப் பாகுபாடு, சொல்லின் பொருளால் அறி யப்படும் நிலைக்கும் சொல்லின் வடிவத்தால் அறியப் படும் நிலைக்கும் இடையே ஒரு மயக்கநிலைக் காலத்தை இச் குத்திரம் சுட்டுகின்றது எனக் கூறலாம். எனவே கால்டுவெல் கூறுவது ஏற்கத்தக்கது.
ன், அன், ஆன் என்பன ஆண்பால் விகுதிகளா கவும் அள், ஆள், இ என்பன பெண்பால் விகுதிகளாக வும் காணப்படுகின்றன. கிழத்தி, மணவாட்டி என்ற எடுத் துக் காட்டுகளிலுள்ள அத்தி, ஆட்டி என்பன பெண்பால் விகுதிகளென்று வீரசோழியத்தார் கொள்வர்; இவற் றுள் உத்தி என்பதே விகுதி யென்றும் ளகர மெய்யீற்றுச் சொற்களின் முன் - த்தி என்பது புணர்ந்து - ட்டி என்பது தோன்றுகிறதென்றும் கொள்ளலாம். ஒன்றன் பாற் பெயர்களுட் பெரும் பகுதிக்குத் தணிவிகுதியில்லை. து, று, டு என்பனவே அதன் விகுதி என இலக்கணம் கூறும்; அம்மீற்றுச் சொற்களும் ஒன்றன் பாலையே பெரும்பாலும் உணர்த்துகின்றன. மரியாதைப் பன்மை, பலர்பாற் பன்மை, பலவின்பாற் பன்மை என மூன்றுவிதமான பன்மையைக் காணலாம் பலவின்பாற் பன்மைக்குத் தணிவிகுதி உண்டு. பலரிபாலே தொல்காப்பியம் நன் னுால் முதலிய நூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளது. வீர சோழியத்தில் மட்டுமே மரியாதைப் பன்மை வழக்கா றுகள் கூறப்பட்டுள்ளன மரியாதைப் பன்மையென்பது மரியாதை காரணமாக ஒருமையைப் பன்மையிலே கூறு வது. உயர்திணையிலேயே இது வரும், அஃறிணையில் ஏது தேசமாக இழிவுசிறப்பாக இது வழங்கப்படுவதுண்டு.
O

பன்மை விகுதிகள் மரியாதைப் பன்மைக்கு வழங்கப்படத் தொடங்கப் பலர் பால் உணர்த்து வதற்கு இரட்டைப் பன்மை வடிவங்கள் தோன் றின: பழைய பலர் பால் வடிவங்களோடு பலவின் பாலுக்குக் கூறப்பட்ட கள் விகுதியை இணைப்ப தன் மூலம் இரட்டைப் பன்மை வடிவங்கள் பெறப்பட் டன, ஆளுல் இரட்டைப் பன்மை வடிவங்கள் தோன் றிய பின்பும் பழைய பன்மை வடிவங்களும் பன்மை யைக் குறிக்க வழங்கப்பட்டுள்ளன; சாசனத் தமிழில் இந்த நிலையே காணப்படுகின்றது. நன்னூல் மரியாதைப் பன்மையையும் இரட்டைப் பன்மையையும் ஏற்கவில்.ை பழைய தமிழில் இவை இடம்பெறவில்லை. இடைக் காலதி தமிழ்ச் சமுதாயத்திலேற்பட்ட மாற்றத்தின் பிரதிபலிப்பாகவே, மரியாதைப் பன்மை இடம்பெறத் தொடங்கியது. பலரிபாலும் ஆண்பன்மை, பெண் பன்மை, பலர் பன்மை எவ மூன்ருகப் பிரிக்க இடந்தரு கின்றது ஆணுல் இவையாவும் ஒரே வகை விகுதிகளைக் கொள்ளுகின்றன. அ, அவை என்ற பலவின் பால் விகுதி களையுடைய பெயர்ச் சொற்கள் கிடைத்துள்ளன. பல ான்பதும் காணப்படுகின்றது; தன்மை ஒருமை விகுதி பாக ஏன் என்பதும் தன்மைப் பன்மை விகுதியாக ஒம் என்பதுமே சாசனங்களிலே காணப்படுகின்றன.
பெயர்ச் சொல்லுக்கும் மிகுதி வாக்கியத்துக்கு முள்ள தொடர்பைச் சொற்ருெடர் முறை, பின்னிணைப் புகளின் பயன்பாடு என இரு கூருக விளங்கிக்கொள்ள லாம், சொற்ருெடர் முறையை எடுத்துக்கொண்டால், கருத்தா வினேக்குமுன் வருவதை அவதானிக்கலாம். சில இடங்களில் எழுவாய் இறுதியில் வருகிறது. வினை முன் றும் பெயரி பின்னும் வரும்போது வினை பாலறிகிளவி பெற்றேவரும், "குடுத்தோம். பட்டர்களுக்கு இவ்
91.

Page 57
வ்னைவோம்,223 "சொன்னேம் சோழகுலவல்லி ஊர்வ ரோம்",224 "இவ்வூர் விற்றுக்குடுத்தோம் பூரீல சுஷ்மணச் சதுர்வேதிமங்கலத்துப் பட்டர்களுக்கு. . . . நாட்ட வ ரோம்"225 என்பன சில எடுத்துக்காட்டுகளாம். பழைய திராவிடமொழிச் சொற்ருெடர்முறை இதுவாகவே இருந்திருக்கவேண்டும். இன்றைய தமிழ் வினைமுற்றுத் தொழிலையும் காலத்தையுமன்றிக் கருத்தாவையும் உணர்த்துகின்றது. வினையின் இயல்பு தொழிலையும் காலத்தையும் உணர்த்துவதாக இருக்கவேண்டும். பெயர்ச்சொல்லே கருத்தாவை உணர்த்தவேண்டும். வினைமுற்று விகுதிகள்ே கருத்தாவை உணர்த்துகின்றன: வினைமுற்று பெயர்ச்சொல்லைக் கொண்டு முடியும் என்று தொல்காப்பியரும் நன்னூலாரும் கூறுவர். உரையாசி ரியர் தரும் உதாரணங்கள் சாசன உதாரணங்களை ஒத் தன; திராவிட மொழி வினமுற்றுகளில் பாலறிகிளவிக ளில்லாதவை சில, இன்றும் உண்டு. மலையாள வினைமுற் றுகளில் பாலறிகிளவிகளில்லை. தமிழ் வினையெச்சங்களை ஒத்த வடிவங்களே, அம்மொழியில் வினைமுற்றுகளாக விளங்குகின்றன. சங்க இலக்கியம் முதலியவற்றில் காணப்படும் வினையெச்சவடிவங்கள் சில, இடைக்காலத் தில் வாழ்ந்த உரையாசிரியரால் உரை கூறப்படும்போது வினைமுற்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. எனவே மலை யாள வினைமுற்றை ஒத்த வடிவங்கள் பழைய தமிழி லும் வினைமுற்றுகளாகக் கொள்ளப்படுகின்றன. சொற் களைப் புணர்த்தி எழுதுவதே பழைய தமிழ் முறையா கும். பழைய வினைமுற்றுகளும் அவற்றைத்தொடர்ந்து வற்த பெயர்ச் சொற்களும் புணர்த்தி எழுதப்பட்டுவந்
223. S. I. I, Vol, VII, p. 9, Line 4. 224. S. I. I, Vol, VII, p. 10, Line 3/4. 225. S. I. I, Vol, VII, p. 386, Line 12.
92

திருக்கவேண்டும்; வடமொழி மரபைத் தழுவிக் கருத் தாவை முதலிற் கூறும் மரபு தோன்றியிருக்கலாம்: விளைமுற்றுப் பெயர்ச்சொல்லாக அமைந்த பழைய வாக்கியம் ஒரே சொல்லாகக் கருதப்பட்டுப் புதியவினை முற்ருக ஏற்கப்பட்டிருக்கவேண்டும்;
பெயர்ச்சொல்லே பயனிலையாக அமைந்த, வினைமுற்று இடம்பெரு த வாக்கியங்களும் சாசனத் நில் உண்டு. வினையின் தொழிலை விளக்கிநிற்கும் செயப்படுபொருள், கருவிப்பொருள், எவ்விதம் எனச் சுட்டும்பொருள் என்பனவும் வினைக்கு முன்பேயே கூறப்படும் உடைமைப்பொருளைத் தொடர் பாக உடைய இரண்டு பெயர்ச்சொற்கள் பக்கத்திலே வரும்போது, முதலாவது பெயர்ச்சொல் உடையவன உணர்த்தும் அல்லது மற்றப் பெயர்ச்சொல்லுக்கு அடை யாகவரும். முதலாவது பெயர்ச்சொல் பாலறிகிளவி உள்ளதாகவும் இருக்கலாம் இல்லாததாகவும் இருக்க லாம்; ஆனல் அளவுப் பெயரும் பொருளுமாக அமைந்த தொடர்களில் அளவுப்பெயர் முதல்வரப் பொருள் பின் வருவதை உரிநெய்226 நாழிபால்,227 மாச்செய்228 முத லியவற்றிற் காணலாம். முதற்பெயர் ஈறு குற்றியலுகர மாக அமைந்து டு, று என்றிருந்தால், அவை வரு மொழிக்குமுன் இரட்டும் முதற்பெயர் மகர வீற்றை யுடையதாயிருந்தால், மகரவீறுகெடும்; அது உருபேற்கு முன்பு அத்துச் சாரியையைப்பெறும் திணைபால் எண் என்பவற்றுக்கேற்பப் பின்னிணைப்புகள் தமிழில் வேறு படுவதில்லே மகர வீறு தவிர்ந்த மெய்யீற்றுமொழியும்
226. S. I. I, Vol, VII, p. 36, Line 8. 227. S. l. I, Vol, VII, p. 36, Line 7. 228. S. I. I, Vol, VIII, p. 86, Line 25.
93

Page 58
உயிரீற்று மொழியும் எவ்வித வேறுபாடுமடையாமலே பின்னிணைப்புகளை ஏற்றுக்கொள்ளுகின்றன.
நான்காம் வேற்றுமை உருபாகிய குகரம் ரகரத்துக்குப் பின் - க்கு என்றும் றகரத்துக்குப் பின் -கு என்றும் வரும் சாசனங்களில் ரகர றகர மயக்கம் நிகழ்வதால், ரகரம் வரவேண்டிய இடத்தில் றகரம் வர அதைத்தொடர்ந்து-கு எழுதப்படுகின்றது. முந்திய சாசனங்களில் ஓரிடத்தில் இப்படி வந்துள்ளது. பிந்திய சாசனங்களில் ஐந்து இடங்களில் இவ்வாறு காணப்படுகின் றது. றகரம் எழுதப்பட்ட் பின்பும்-க்கு என்று வருவது நான்கு இடங்களிலே குறிக்கப்பட்டுள்ளது. டு, று என்ற குற்றியலுகர வீறுகள் இரட்டிய பெயர்ச்சொல் வடிவங் களே வேற்றுமை உருபை ஏற்கின்றன. மகர வீற்றுப்பெயர் கள் மகரம் கெட்டபின் வேற்றுமை உருபேற்பதற்குமுன் - த்து (அத்து) பெறுகின்றன. அத்துச் சாரியையின் அக ரம் கெட்டுவிடுகிறது என்று தமிழிலக்கணக்காரர் கூறு வர் -த்து, -ட்டு ~ற்று என்பன தொடர்புடையன உடைமைப் பொருளைக்குறிக்கும் அது என்பதுடன் இவ் வடிவங்கள் தொடர்புடையனவாக இருக்கவேண்டும்: ஒன்றுக்கு மேற்பட்ட பின்னிணைப்புகளைப்பெறும் பெயரி களும் உண்டு. பெயர்ச் சொற்களும் எண்ணுப்பெயர் களும் -இன் என்ற பின்னிணைப்பை முதலிற் பெற்று அதன்பின்பு பிற பின்னிணைப்புகளைப் பெறுகின்றன. -இன் என்பதும் -த்து, -ற்று, -ட்டு என்பனவற்ருேடு பொருளில் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது; -இற்று என்னும் ஒரு வடிவம் உள்ளன வயிற்றுக்கு, உட்பட்டவையிற்றில், இவையிற்றுக்கு எனப் பிந்திய சாசனங்களில் மட்டும் காணப்படுகின்றது. இன் என் பதுபோல, அன் என்பதும் முக்கியமான பின்னினைப் பாகப் பழைய தமிழில் இருந்தது. ஒன்றன்பாற் பெயர்ச் சொற்கள் அன்னைப் பின்னிணைப்பாகப் பெற்று அதன்
94

பின் பிற பின்னிணைப்புகளைப் பெறுவதை முந்திய சாச ணங்களில் ஒன்பது இடங்களிலே காணலாம்; பிந்திய சாசனங்களிலே ஓரிடத்திலே மட்டும் காணலாம்; ஒன் றன் பாற் சுட்டுப்பெயர்கள் மட்டும் பிந்திய சாசனங் களிலும் அன் என்பதைப் பின்னிணைப்பாகப் பெறும் மரபைப் பேணுவதைக் காணலாம்:
பின்னிணைப்புகள் சிலவற்றின் வடிவத்தில் வேறுபாடு ஏற்பட்டுவந்தது. தொல்காப்பியத்தில் ஆன் என்பது வேற்றுமை உருபாகக் கூறப்பட வீரசோழியத்தில் ஆல் என்பது கூறப்படுகின்றது இது காலப்போக்கில் ஏற்பட்டுவந்த வேறுபாட்டைக் குறிக்கிறது; முந்திய சாசனங்களில் ஆன் உருபுக்கு இரண்டு எடுத்துக்காட்டுகள் கிடைக்கப் பிந்திய சாசனங்களில் எதுவும் கிடைக்கவில்லை. ஆல் உரு புக்கு முந்திய சாசனங்களில் ஒன்பது உதாரணங்கள் கிடைக்கப் பிந்திய சாசனங்களில் பன்னிரண்டு உதா ரணங்கள் கிடைத்துள்ளன. தொல்காப்பியத்தில் இன் என்பது வேற்றுமை உருபாகக் கூறப்பட வீரசோழியத் தில் இல் கூறப்பட்டுள்ளது. இன் உருபுவரும் ஐந்து உதாரணங்கள் முந்திய சாசனங்களிலும் நான்கு உதா ரணங்கள் பிந்திய சாசனங்களிலும் வந்துள்ளன. இல் உருபு வரும் ஏழு உதாரணங்கள் முந்திய சாசனங்களி லிடம் பெற ஒன்பது உதாரணங்கள் பிந்திய சாசனங் களிலிடம் பெற்றுள்ளன. இற் - , ஆற் - எனப் புணர்ச்சி யிலிடம்பெறும் வடிவங்கள் எவ்வுருபைக் குறிக்கின்றன வெனப் பிரித்துக்காட்ட முடியாதுள்ளன3 -கு உருபு தான் சேர இடங்கொடுத்து நிற்கும் பெயர்ச்சொல்லின் ஈற்றுக்கேற்ப -கு -க்கு, -உக்கு என மூன்று வடிவங் களைக் கொள்ளுகின்றது. ஐகாரம் செயப்படுபொருளை உணர்த்துகின்றது. செயப்படுபொருளும் பயனிலையும் தொடர்புடையன. வாக்கியத்தை எழுவாய், பயனிலை
95

Page 59
என இரண்டாகப் பிரித்தால், செயப்படுபொருள் பய னிலையில் அடக்கப்படுகின்றது. இரண்டு செயப்படு பொருள்கள் வருகின்ற வாக்கியத்தில் ஐகாரம் சேர்ந்து வரும் செயப்படுபொருள் மற்றச் செயப்படுபொருளும் வினையும் சேர்ந்து ஒன்றுபட்ட பயனிலைக்குச் செயப்படு பொருளாக வருகின்றது. சென்னியைத் திறை கொண்டு,229 இலங்கை காவலனை இறைகொண்ட ருளி230 என்பன உதாரணங்களாம்; தொல்காப்பியத் தில் ஒடுவென்பது வேற்றுமை உருபாகக் கூறப்படுகின் றது. இடைக்காலச் சாசனங்களில் ஒகரத்துக்கும் ஓகா ரத்துக்கும் வடிவத்தில் வேறுபாடில்லையாதலால் அங்கு வழங்குவது ஒடுவா அல்லது ஒடுவா எனக் கூறமுடியா துள்ளது. நன்னூலில் ஒடு, ஓடு இரண்டும் கூறப்பட் டுள்ளது. பழைய நூல்களைப் பதிப்பித்தவரிகள் மெய் யீற்றுப்பெயர்ச்சொற்களுக்கு முன் ஒடு வென்பதையும் உயிரீற்றுப் பெயர்ச்சொற்களுக்கு முன் ஒடு என்பதை யும் குறித்துள்ளார்கள். தொல்காப்பியத்தில் ஆரும் வேற்றுமை உருபாகக் கூறப்படும் "அது ஓரிடத்தில் முந்திய சாசனத்தில் மட்டும் காணப்படுகின்றது. திரா விட மொழிகள் பலவற்றில் ஆரும் வேற்றுமை உரு பாக வழங்கப்படுவதும் நன்னூலாரால் ஆரும் வேற் றுமை உருபுகளுள் ஒன்ருகக் கூறப்படுவதுமான அகரம் பிற்திய சாசனங்களில் இரண்டிடங்களில் வந்துள்ளது; உடைய என்பது சாசனத் தமிழில் ஆறும் வேற்றுமை உருபாக வழங்கிவந்துள்ளது,
இடப்பொருளைக் குறிக்கும் சொற்களாக வழி, வாய், இடை, உழை, கண், உள். மேல், கீழ், பக்கல்
229. S. I. I, Vol, V, p. 179, Line 6. 230. S. I. I, Vol, V, p. 179, Line 10,
96

என்பனவும் காலப்பொருளைக் குறிக்கும் சொற்களாக முதல், வரை என்பனவும் பிந்திய சாசனங்களிற் காணப் படுகின்றன. தொல்காப்பியத்தில் ஏழாம் வேற்றுமைப் பொருக்ள யுணர்த்துவதாகக் கூறப்படும் "கண்" முந்திய சாசனமொன்றில் மட்டும் வழங்கி வழக்கற்றுப்போய் விட்டது. சாசனத் தமிழில் பக்கல் என்பது பக்கம் இடம் என்ற பொருளிலே பயின்று வழங்குகின்றது. வீரசோழியம் ஒன்றே இந்த உருபைக் கூறியுள்ளது. ஐந்தாம் வேற்றுமையும் ஏழாம் வேற்றுமையும் நொதங் கிய தொடர்புடையன. ஐந்தாம் வேற்றுமை நீக்கம் பொருள் இடப்பொருளோடு சம்பந்தமுடையது" நின்று, இருந்து எனவரும் சொல்லுருபுகளே நீக்கம் பொருளை யுணர்த்துவன. சாசனத்தில் நின்று என்ற சொல்லுருபு காணப்படுகின்றது.281
பெயரடை என்பது பழைய தமிழ் இலக்கண காரராற் கூறப்படவில்லை. பெயரடை என்று ஒன்று தமிழில் உண்டா என்பது பற்றி இன்றைய திராவிட மொழியறிஞரிடையேயும் கருத்தொற்றுமை இல்லை: பெரும்பாலான அறிஞர் பெயரடை என்று ஒன்று வகுக்கப்படவேண்டுமென்கின்றனரி, சாசனங்களிலுள்ள பெயரடைகளை மூன்முக வகுக்கலாம். சில சந்தர்ப்பங் களில் மட்டும் பெயரடையாக விளங்கும் வினைப்பகுதி கள், பெயரடைகள், சிறப்பு ஈறுகளையுடைய பெயரடை கள் என்பனவே அவை. விரிபொழில்,232 விளைநிலம்,283
231. S. I I, Vol, XII, p. 48. 232. S. I I, Vol, III, p. 454, Line 104.
233. S., I, I, Vol, XII, p. 46, Line 7.
97

Page 60
குரைகடல்,234 வருபுனல்235 என்பனவற்றிலுள்ள வினைப் பகுதிகள் பெயரடைகளாக விளங்குகின்றன5 வினைப் பகுதிகளின் தொழிலை விளக்கும் பெயர்ச்சொற்கள் அவ் வினைப்பகுதிகளுக்கு முன்பு வருகின்றன. அன்று ஆள் கோவுக்கு236 மாகந்தோய் குடை,237 நீர் ஒடுகால், 288 மடைப்பகர்நீர்239 முதலியன உதாரணங்களாம், வெம் முனை,240 வெள்வளை,241 தண்புனல்,242 நல்விளக்கு 248 என்பனவற்றில் வரும் அடைகள் பெயரடைகளாம். வட, கீழ், தென், மேல் என்பன, திசைகளைக் குறிக்கும் பெயரடைகளாம்: பெரும்புகழ்,* நெடுங்காலம்245 நறும் பூ,248 பழங்காசு?" என்பவற்றிலும் பழவரிசி,248 பெரியஏரி,249 உள்ள அளவு250 என்பவற்றிலும் உள்ள அடைகள் சிறப்பு ஈறுகளையுடைய் பெயரடைகளாம்.
234. S. I. I, Vol, III, p. 454, Line 131. 235. S. I. I, Vol III, p. 454, Line 147. 236. S. I. I, Vol, XII, p. 50 Line 9. 237. S. I I, Vol. III, p. 454, Line 161. 238. S. II, I, Vol, XII, p. 48 Line 32. 239 S. I. I, Vol III. p. 454, Line 129. 240. S. I. I, Vol, III, p. 454, Line 90. 241. S. I. J, Vol, III, p. 454, Line 87. 242. S. I. I, Vol, III, p. 454, Line 157. 243. S. I. I, Wol, XII, p. 41, Line 8. 244. S. I. I, Vol, III, p. 454, Line 150. 245. E. I, Vol. IX, p 88, Line 79. 246. E. I, Vol, XXI. p. 109, Line 111. 247. E. I, Vol, VII. p. 139, Line 4. 248. S. I. 1, Vol. III, p. 228, Line 12. 249. S. I. I, Vol, III, p. 231, Line 3. 250. S. I. I, Vol, XIII, p. 136, Line 7,
98

பலமுறை,431 பல்யானை252 என்பனவற்றிலுள்ள அண்ட கள் அளவைக்குறிக்கும் பெயரடைகளாகக் காணப்படு கின்றன:
சாசனங்களில் வழங்கிய இடப்பெயர்களைத் தன்மைப் பெயர், சுட்டிடப் பெயர், தற்சுட்டுப் பெயர் என மூன்ருக வகுக்கலாம். தன்மைப் பெயரில் ஒருமை பன்மை உண்டு. தன்மை ஒருமையிடப்பெயராக நான் யான் என்பன முந்திய சாசனங்களில் வழங்கப் பிந்திய சாசனங்களில் நான் என்பது மட்டுமே வழங்கியது; யாம், யாங்கள் என்பன பன்மையாக முந்திய சாசனங் களில் வழங்கப் பிந்திய சாசனங்களில் நாம், நாங்கள் என்பனவே காணப்படுகின்றன. உருபேற்கத் திரிந்தவடிவ மாக என் என்பதே ஒருமையில் வழங்கிவருகின்றது; பன்மையில் எம், நம், எங்கள் என்பன காணப்படுகின்றன. யான், யாம், யாங்கள் என்பனவே என், எம், எங்கள் எனத் திரிந்தன; நாம் என்பது நம் எனத் திரிந்தது.
சுட்டிடப் பெயரே படரிக்கைப் பெயராக வழங்கு கின்றது. அகரச் சுட்டடியாகப் பிறந்த பெயர்கள் தூரத்தி லுள்ள பொருளையும் இகரச் சுட்டடியாகப் பிறந்த பெயர்கள் அண்மையிலுள்ள பொருளையும் உணர்த்து கின்றன. அது என்பது உருபேற்கத் திரியும்போது அதன் பின்னிணைப்பாக அன் என்பதே முந்திய சாசனங் களிலே காணப்படுகின்றது. அவன், இவன் என்பனவே ஆண்பாற்படர்க்கை ஒருமைப் பெயர்களாம்; இவர் என்பது மரியாதைப் பன்மையாகவும் இவர்கள் என்பது பன்மையாகவும் காணப்படுகின்றன. வீரசோழியம் கூறு
251. S. I. I, Vol. III, p. 454, Line 88. 252. S. T. I, Vol. III, p. 221, Line 1/2.
99

Page 61
வது இங்கும் பொருத்தமாகக் க்ாணப்படுகின்றது. இவன் என்பது பெண்பாற்படர்க்கை ஒருமைப் பெயராம். இது என்பது திரியாமலே உருபு ஏற்ற இடங்கள் உண்டு, திரிந்தபோது இதன் என்பதே பெரும்பாலும் வழங்கி யிருக்கிறது. இதின் என்ற வடிவமும் சாசனங்களில் வழங்குகிறது. இவை என்ற பலவின் பால் வடிவம் உருபேற்றபோது இவற்றுக்கு இவைத்தில்?" எனழுந்திய சாசனங்களிலும் இவையிற்றுக்கு.? இவற்றுள் எனப் பிந்திய சாசனங்களிலும் வழங்கியுள்ளன. இவற்றில் என்பதன் மாற்றுவடிவமாக இவைத்தில் என்பது வழங்கி யிருக்கவேணடும். இந்த என்ற சுட்டிடப்பெயரடை வடிவம் பிந்திய சாசனங்களில் மூன்றிடத்திற் காணப்படு கின்றது.2* அனைத்தும் என்ற வடிவம் அகரச் சுட்டி லிருந்தும் ஏதும் என்ற வடிவம் எகர விஞவிலிருந்தும் தோன்றி முந்திய சாசனங்களிலேயே வழங்கின.
பழந் திராவிடமொழியில் படரிக்கையிடப்பெய ராக வழங்கியவை தான், தாம் என்பன சுட்டிடப்பெயர் கள் திணைபால் சுட்டும் இயல்பினல் படர்க்கையிடத்திலே போற்றப்பட, பழைய படர்க்கையிடப்பெயர் தற்சுட்டுப் பெயராக மாறியது. தான், தாம், தாங்கள் என்ற வடிவங்களும் உருபேற்கத் திரிந்த வடிவங்களான தன், தம், தங்கள் என்பனவும் சாசன வழக்கிலே காணப்படு கின்றன. இச்சொற்கள் சில இடங்களிலே தற்சுட்டுப் பொருளையும் இழந்து தேற்றப்பொருளில் வழங்குகின் றன. சில சந்தர்ப்பங்களிலே இவை இரண்டுபொருளும்
253, S. I. J, Vol, XII, p. 29 Line 8.
254. S. II, I, Vol, VIII, p. 300, Line 35.
255, S. I. I, Vol, VIII. p. 82, Line 31; S.I.I. Vol, VII,
p. 386. Line 8; S. I. I, Vol, IV, p. 128 Line 15.
100

கொள்ளக்கூடியனவாக அமைந்துள்ளன. உங்-கள் என்பதி லுள்ளதிலும் கூடிய அளவு மரியாதையைக் குறிப்பதற் காகத் தங்கள் என்பதை முன்னிலையில் கூறும் வழக்கு முந்திய சாசனத்திலேயே காணப்படுகின்றது.235
சாசனங்களிலுள்ள எண்களை எண்ணுப்பெயர் கள், எண்ணுமுறைப் பெயர்கள் என இரண்டாக வகுக் கலாம் முதன் மூன்று எண்ணுப் பெயர்களுக்கும் ஒவ் வொன்றுக்கும் இவ்விரண்டு எண்ணுப்டெபயரடைகள் காணப்படுகின்றன. ஒன்று என்பதற்கு ஒரு ஓர் என்ப னவும் இரண்டு என்பதற்கு இரு, ஈர் என்பன~வும் மூன்று என்பதற்கு மு, மூ என்பனவும் பெயரடைகள் ராம். உயிர் முதல் மொழிக்குமுன்னர் நெட்டெழுத்தையுடைய பெய ரடையும் மெய்முதன் மொழிக்கு முன்னர் குற் றெழுத்தை யுடைய பெயரடையும் வழங்குகின்றன; நால் என்ற பெயரடையிலிருந்து நாலு நான்கு என இரண்டு எண்ணுப் பெயர்வடிவங்கள் தோன்றியுள்ள ன3 நாலு என்பதே பேச்சுவழக்கு பிற திராவிட மொழிகளிலும் நாலு என்பதே வழங்குகின்றது. நான்கு என்பது நால் என்பதுக்குக் குசரவிகுதிசேர்க்கவந்த அஃறினை  ைஒன்றன் பாற்பெயராகும் தமிழ் இலக்கிய வழக்கில் இவ்வடிவமே போற்றப்படுகின்றது; முந்திய சாசனங்களில் இரண்டு வடிவமும் காணப்படப் பிந்திய சாசனத்தில் நாலு என்பதே காணப்படுகின்றது ஐ என்பதும் எண் என்ப தும் ஒன்றன்பால் ஈருகிய துவைப் பெற்றுப் பெயர்க ளாகின்றன. ஐகாரத்தைத் தொடர்ந்து தகரத்தின் இனவெழுத்தான மூக்கொலி ஒலித் துணையாகத் தோன்று கின்றது. ஐந்து, அஞ்சு என்ற வடிவங்கள் முந்திய சாசனங்களிலும் அஞ்சு ஜஞ்சு என்ற வடிவங்கள் பிந்
256, S., I, I, Vol, III, p. 224.
0.

Page 62
திய சாசனங்களிலும் காணப்படுகின்றன; அறு, எழு என்ற பெயரடை வடிவங்கள் முதல் நீளப்பெற்று ஆறு ஏழு என்ற எண்ணுப்பெயர்களாகின்றன:
கூட்டெண்கள், பெருக்குதலாலும் கூட்டுத லாலும் உண்டாகின்றன. பெருக்குதலால் முப்பது, எழு நூறு, இரண்டாயிரம் என்பனவும் கூட்டுதலால் முப்பத் தொன்று, அறுபத்தேழு என்பனவும் தோன்றுகின்றன. ஒன்பதுக்கும் எண்பத்தொன்பதுக்கும் இடையிலான எண் கள் பத்து, பது என்பனவற்றைக் கொள்வதில் மூவகை யினவாகக் காணப்படுகின்றன. இருபத்தைந்து முப்பத்து நாலு என்பனவற்றில் பத்து இடம்பெறுகின்றது. பதி னென்றுக்கும் பதினெட்டுக்கும் இடையிலான எண்கள் பது என்பதுடன் பின்னிணைப்பாக இன் என்பதையும்பெறுகின் றன. ஒவ்வொரு பத்துக்களின் ஈற்றிலும் பது என்பது வருகின்றது; பத்து என்பதன் திரிபே பது; பதின் என்ற அமைப்புப் பிந்திய வழக்காக இருக்கவேண்டும் பத் தொன்பது என்ற வழக்கை ஒப்பப் பத்தொன்று, பத்தி ரண்டு என்பன ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும்; எண்ணுப்பெயரடைகளைத் தொடர்ந்து இந்த வடிவங் கள் இன்றும் வழங்குவது இந்த வடிவங்கள் தனியேயும் வழங்கியிருக்கலாம் என்ற கருத்துக்கு அரண் செய்கின் றது; மேலும் சாசன வழக்கில் இருநூற்ருெருபத்து நான்கு,27 நானுாற்ருெருபத்தொரு25 என்ற வழக்கு களும் காணப்படுவது கவனிக்கத் தக்கது. கூட்டெண் ணுப்பெயரடை ஒன்று முதல் எட்டுக்கான பெயரடை ஆளப் பத்து அல்லது பதின் முதலியவற்றேடு சேர்ப்ப தால் உண்டாகின்றது; பதினறு, இருபத்தெண், ஐம்பத்
257. E. I, Vol, XXI, p. 109, Line 183, 258. S. I. I, Vol, V, p. 105, Line 5.
102

தெழு என்பன உதாரணங்களாம் பன்னிரு என்பதில் பன் என்பது பத்தைக் குறிக்க வருகின்றது. பதின் என்பதிலிருந்து பன் என்பது வந்திருக்கவேண்டும். பதி துக்குப் பதிற்று என்ற பெயரடையும் உண்டு;
என்ணுப்பெயர்கள் பெயரடையியல்பின. அவை பெயருக்கு முன்புவரினும் பின்புவரினும் பெயரை விசேடிப்பதே அவற்றின் செயல் எனலாம்; ஒன்று என்ற எண், பெயருக்கு முன்பு வரமாட்டாது; ஒரு அல்லது ஓர் என்பதே பெயருக்கு முன்புவரும் ஏனைய எண்கள் பெயருக்கு முன்பும் பின்பும் வரலாம். பெயருக்குப் பின்னுல் வரும்போது எண்ணுப் பெயர்களே வேற்றுமை யேற்கின்றன. எனவே இவற்றைப் பெயர்களாக வழங்கு பவை எனவும் பெயர்களுக்கு முன்புவரும் எண்ணுப் பெயர்களைப் பெயரட்ைகளாக வழங்குபவை எனவும் இரண்டு வகைப்படுத்தலாம் அடைக்காய் பத்து பழம் பதினறு,360 விளக்கு இரண்டுக்கு,29 தடி நான்கு ஞல்?8 எனவும் மூன்று மா?83 பதினேழுகழஞ்சு, ஆயிரற்தலேயால்,395 ஆயிரம் வாழைப்பழத்தினுக்கு" எனவும் சாசன எண்ணுப்பெயர் வழக்காறுகள் அமைந் துள்ளனg
259. E. I., Vol, IX, p 88 Line 26. 260. E. I, Vol, IX, p. 88 Line 45. 261. S. I I, Vol, XII, p. 28, Line 3. 262. E. I, Vol, XX, p. 53, Line 11. 263. E. I, Vol, XX, p. 53, Line 8. 264. S. I. I, Vol, XII, p. 28, Line 3. 265. S. I. I, Vol, III, p. 454, Line 125. 266. E., I, Vol, XXI, p. 109 Line 31/32.
108

Page 63
அரை அல்லது பாதி, கால் என்பன பின்னங்க ளாக வழங்கின. இரண்டரை ஒன்பதரை என்பன வற்றில் எண்ணுப்பெயரைத் தொடர்ந்து பின்னம் வருகின்றது. கால் என்ற பின்னத்துக்கு முன் ஏகாரம் வருகின்றது: "ஒன்றேகால், நாலேகால் என்பன உதாரணங்களாம் எட்டிலொன்றைக் குறிக்க அரையை யும் காலையும் சேர்த்து அரைக்கால் என எழுதப்படு கின்றது. காலே அரை என்ற வழக்கும் முந்திய சாச னத்தில் உண்டு287 அரைக்கால் என்பதற்கு முன்வரும் எண்ணுப்பெயருக்கும் ஏழே அரைக்கால், நாலரையே அரைக்கால்268 என ஏகாரம் சேர்க்கப்படுகின்றது. காலை நாலில் ஒன்று என்று கூறும் வழக்கமும் பிந்திய சாசனத் திற் காணப்படுகிறது." பின்னங்கள் எட்டரைக் காணம், காலே அரைமா, ஒன்றரை வேலி எனப் பெயர்ச்சொற் களுக்கு முன்புவரும் சில இடங்களில் எண்ணுப்பெயரி கள் முதலிலும் பிற பெயர்கள் தொடர்ந்தும் அவற் றைத் தொடர்ந்து பின்னங்களும் வருவதுண்டு பதின் கழஞ்சரை,28? இருகழஞ்சேகால்,270 SUBS Dimr (p) è காணி271 என்பன உதாரணங்களாம். சாசனங்களிலுள்ள எண்ணுமுறைப்பெயர்கள் எண்ணுப்பெயர்களுக்கு ஆம் அல்லது ஆவது என்பதனைச் சேர்ப்பதால் உண்டாகின் றன. ஆம் என்பதைச் சேர்ப்பதால் 2 l-esiāar Lmr கும் எண்ணுமுறைப்பெயர்கள் பெயர்ச் சொற் களுக்கு முன்னும், ஆவது என்பதைச் G3Friu தால் உண்டாகும் எண்ணுமுறைப்பெயர்கள் பெயர்ச்
267. S. I. I, Vol, V, p. 288, Line 6/7. 268, S. I. , Vol, V, p. 151, Line 25. 269. S. I. I, Vol, XII. p. 25, Line 3. 270. S. I. I, Vol, XII, p. 37, Line 15. 71. S. I, I, Vol, V, p. 105, Line 7.
104

சொற்களுக்குப் பின்பும் வருகின்றன யாண்டு இருப தாவது எனவும் ஒன்பதாம் யாண்டு, இரண்டாந் தியதி எனவும் வந்துள்ளன; பெயர்ச் சொல்லாகிய எதிர் என்பதற்கும் இதே முறையில் ஆம் அல்லது ஆவது என்பதைச் சேர்த்து பதினருவதுக்கு 675prnrub ஆண்டை272 யாண்டு பதிஞலாவதுக்கெதிராவது 273 என வழங்குவதைப் பிந்திய சாசனங்களிலே கான லாம். எண்ணுப்பெயர்களுக்குப் பாலறிகிளவிகளைச் சேர்ப்பதால், பன்னிருவர், நாற்பத்தொண்ணுயிரவரி, ஐஞ்நூற்றுவர் முதலிய வடிவங்கள் தோன்றி உயர்திணை யில் வழங்குகின்றன. எண்ணுப்பெயர்களை அங்கமாக வுடைய நாற்பத்தெண்ணுயிர நம்பி,274 நாற்பத்தெண் ஞயிரபட்டர் ,275 நாற்பத்தெண்ணுயிரத்தொல்லாண் டான் 276 முதலியவை பிந்திய சாசனங்களில் வழங்கி யுள்ளன. இவ்வெண்களுக்கும் இவ்வெண்ணுப்பெயர்களை அங்கமாகவுடைய பெயர்களைத் தரித்தவர்களுக்கும் ஏதா வது விசேட தொடர்பு இருக்குமா என்பதைத் தீர்மா னிக்கமுடியவில்லை
3. வினையியல்
சாசனங்களிலுள்ள வினைச்சொற்களில் இரண்டு வினையாக்க முறைகளைக் காணலாம். இறந்தகால வினை யெச்ச வடிவங்கள் கொண்டுமுடியும் உகர வீறு, இகர வீறு என்பனவற்றைக்கொண்டு இவ்வாறு வகுக்கலாம்
272. S. I. I. Vol, VII, p. 255, Line 2. 273. S. I. I, Vol, VII, p. 9 Line 1. 274 S. I. I, Vol, W, p. 192, Line 14. 275 S. I. 1, Vol, IV, p. 128, Line 17. 276, S, I, J, VQl, V, p. 192, Line 21.
105

Page 64
உகரவீற்றில் முடியும் வினையமைப்புக்கள் முதலாம் வினையாக்க முறையைச் சேர்ந்தனவாகும். உகர வீறு டைய இறந்தகால வினையெச்சங்கள் இரண்டு வகையின. தகரவிடைநிலை அல்லது அதன் மூக்கொலிபெற்ற வடிவ மான -ந்த்- அல்லது அதன் இரட்டிய வடிவமான -த்த்- என்பனவற்றை இறந்தகாலம் காட்டுவதற்கு ஏற்கும் வினையடிகள், இறுதிமெய்யிரட்டி இறந்த காலம் காட் டும் ஒரசை வினையடிகள் என்பனவே அவையாம். முத லாம் வினையாக்க வினையமைப்போடு உயிர் முதன் மொழி சேரும்போது உகரம். கெடுகின்றது. இந்த வினேயாக்க முறையின் தனித்தன்மை எதிர்வு, நிகழ்வு - எதிரிவு முதலிய காலங்களை வெளிப்படுத்தும் முறையிலும் புலப்படுகின்றது. செயப்படுபொருள் குன்ருவினைகளுட் பெரும்பாலன இந்த வினையாகிகமுறையைச் சேர்ந்தன. உத்த்- என்பதனைக்கொண்டு இறந்த காலம் உணர்த்தும் வினையடிகள் -க்க்- என்பதைக் கொண்டு நிகழ்வு- எதிர் வையும் -ப்ப்- என்பதைக்கொண்டு எதிர்வையும் உணர்த்துகின்றன. இறந்த காலத்தைக் காட்டுவதற்கு இகர இடைநிலையைச் சேர்த்துக்கொள்ளும் வினைப்பகுதி கள் இரண்டாம் வினையாக்கமுறையைச் சேர்ந்தன. இகர இடைநிலையே இறந்த காலத்தைக் காட்டுவதாதலால், இது கெடுவதில்லை: இறப்பு நிகழ்வு - எதிர்வு, எதிர்வு என்பனவற்றை உணர்த்தும் கால இடைநிலைகளை இந்த வினையாக்கமுறை வினைப்பகுதிகள் முதலாம் வினையாக்க முறை வினைப்பகுதிகளைப் போலன்றி ஒரே வடிவத்தில் ஏற்றுக்கொள்கின்றன. வினைப்பகுதியினுள் ஏற்படும் மாற்றமே பெரும்பாலும் செயப்படுபொருள் குன்றிய வினையிலிருந்து செயப்படுபொருள் குன்ரு வினையைப் பிரித்து நிற்கிறது. வினைப்பகுதியில் மூக்கொலி யிடம் பெறும்போது அது பெரும்பாலும் செயப்படுபொருள் குன்றிய வினையாகவும் மூக்கொலிக்குப் பதிலாக வல் லொலியிடம்பெறும்போது அது பெரும்பாலும் செயூப்
106

படுபொருள் குன்ரு-இயக்குவினையாகவும் அமைகின்றன. முதலாம் வினையாக்கமுறை இறந்தகால வினையமைப்பு களில் நான்கு பிரிவுகள் உள. வினைப்பகுதியின் ஈற்று மெய்யை இரட்டி -க்கு, -ட்டு, -ற்று எனவரும் வினே யமைப்புகள், வினைப்பகுதியும் தனிக் கால இடைநிலையா கிய தகரமும் சேர்ந்து ~து என்ற ஈறுகொள்ளும் வினை யமைப்புக்கள், வினைப்பகுதியோடு மூக்கொலிபெற்ற தகரத்தைக் கொண்டு -திது என்ற ஈறுகொள்ளும் வினை யமைப்புக்கள், வினைப்பகுதியோடு இரட்டிய தகரத் தைப் பெற்று -த்து என்ற ஈறுகொள்ளும் வினையமைப் புக்கள் என்பனவே அந்த நான்கு பிரிவுகளாம்;
இவற்றுள் முதலாவது பிரிவு, இரண்டாவது பிரிவு வினையமைப்புக்களைச் செயப்படுபொருள் குன்றிய வினை, செயப்படுபொருள் குன்ரு வினை எனச் சுலபமாகப் பிரித்துவிட முடியாது; மூன்ருவது பிரிவு வினையமைப்புக் கள் பொதுவாகச் செயப்படுபொருள் குன்றிய வினேக ளாகவும் நான்காவது பிரிவு வினையமைப்புக்கள் பொது வாகச் செயப்படுபொருள் குன்றவினைகளாகவும் காணப் படுகின்றன. முதலாம் பிரிவில் ஒரசைச் சொற்களின் ஈற்றிலுள்ள -கு, -டு, -று என்பன மிக்கு, புக்கு, விட்டு, உற்று, பெற்று என ஈறிரட்டி இறந்த கால வினை யமைப்புக்களாகின்றன. புகு என்பது புகுந்து எனவும் இறந்தகாலம் காட்டும் வினையமைப்பைப் பெறுவதுண்டு. இரண்டாம் பிரிவில் ன், ல், ய், ண், ள், ர், ழ் என்ற ஈறுகளையுடைய வினைப்பகுதிகள் தனித் தகர இடை நிலையைப் பெற்று இறந்த காலம் காட்டுகின்றன. இப் பிரிவை மூன்று உபபிரிவுகளாகப் பிரிக்கலாம், ன், ல், ள், ண் என்ற சறுகளோடு தகர இடைநி ைசேரும் போது ல் + த் - ன் ற், ல் + த் - ற்ற், ன் + த் - ண்ட் ள் + த் - ட்ட் என்ற திரிபுகள் ஏற்பட்டு பூண்டு, விற்று, உண்டு, கேட்டு, என்று என்ற வினையமைப்புகள் தோன்
107

Page 65
றுகின்றன. கண்டு என்பதில் விண்யடியிலுள்ள நீண்ட உயிர் குறுகியுள்ளது இரண்டாம் உப பிரிவில் யகர வீற்றேடு தகர ஈறு சேரும்போது செய்து, உய்து என இயல்பாக அமையும்; மூன்ருவது உபபிரிவில் ர, ழ வீற்ருேடு தசர இடைநிலை சேரும்போது இடையிலே உகரம்பெற்று அழுது, பொருது என அமையும் ஆனல் இரு என்ற வினைப்பகுதியிலிருந்து இருந்து என்ற வடி வமே அமைகின்றது. வினைப்பகுதிக்கு மூக்கொலி கலந்த தகரமெய்யைச் சேர்ப்பதால் உருவாகும் மூன் ருவது பிரிவில் நான்கு உபபிரிவுகள் உண்டு. அகர வீறு கொண்ட வினைப்பகுதிகள் இறந்த காலத்தில் -ந்த்- கொண்டு நிகழ்வு. எதிர்வில் -க்க்- உம் எதிர்வில் -ப்ப்- உம் கொள்ளுகின்றன. அளந்து, பயந்து, சிவந்து என்பன உதாரணங்களாம். இரண்டாம் உபபிரிவில் இ, ஐ, ர், ழ், ய் என்ற ஈறுகள் எறிந்து, பிரிந்து வரைந்து, ஆராய்ந்து, சூழ்ந்து என இறந்தகால விக்னயமைப்புக் களைப் பெறுகின்றன. எதிர்ந்து, நிறைந்து, வீழ்ந்து என்பனவற்றிற்கு நேரிடையான -த்து- வடிவங்களும் உண்டு மூன்றுவது உப பிரிவில் ல், ள் ஈறுகள் -ந்தி- என்பது சேரும்போது ல் + ந்த் = ன்ற் எனவும் ள் + ந்த்ண்ட் எனவும் மாற்றமடைந்து ஆண்டு, கொன்று, நவின்று, கொண்டு முதலிய இறந்தகால வினையமைப் புக்களைப் பெறுகின்றன. நான்காவது உபபிரிவாக தா/ தர், வா/வர் என்ற இரண்டு வடிவங்களையுடைய ஒரசை யடிச் சொற்கள் தந்து வந்து என்ற வினையமைப்பு களைக் கொள்வதைக் கூறலாம் இரட்டிய தகரத்தை வினைப்பகுதிக்குச் சேர்த்து இறந்த கால வினையமைப் பைப்பெறும் நான்காவது பிரிவில் மூன்று உபபிரிவுகள் காணப்படுகின்றன. உகர வீற்று வினைப்பகுதிகள், இகர, ஐகார ரகர, ழகர யகர வீற்று வினைப்பகுதிகள், நீண்ட உயிரொலிகளையுடைய ஒரசை வினையடிகள் என்பனவே அம்மூன்று உபபிரிவுகளாம் முதலாம் உப பிரிவில்
08

எடுத்து, வகுத்து, அடுத்து என வருவனவும் இரண் டாம் உபபிரிவில் குறித்து வீழ்த்து பிழைத்து, முகிழ்த்து என வருவனவும் மூன்ரும் உபபிரிவில் காத்து, மூத்து, என வருவனவும் தமக்கு நேரிடையான -ந்த்- வடிவங் களைப் பெறுவதில்லை. முதலாம் உபபிரிவிலுள்ள அறுத்து என்பதும் இரண்டால் உபபிரிவிலுள்ள தீர்த்து, ஒழித்து, நெகிழ்த்து, மீட்டு என்பனவும் , தமக்கு நேரிடையான -நீத்- வடிவ்ங்களையுடையன
நினைத்து என்பதற்கு நேரிடையான ரினேந்து என்ற வடிவம் காணப்பட்டபோதும் இவ்விரு வடிவங் களுக்கும் பொருளில் வேறுபாடில்லை. இரண்டாம் வினை யாக்கமுறையைச் சேர்ந்த வினைப்பகுதிகள் சொல்லின் இறுதிநிலையாக வரக்கூடிய மெய்யெழுத்துக்கள் எவற் றையும் இறுதிநிலையாகக்கொள்ளும் இயல்பின -த்தி, -ப்பி, -ட்டி -ற் தி, -ச்சி என்றுமுடியும் இறந்தகால வினையமைப்புகள் இயக்குவினைகளாம். ஒரே சொல், சிறிது வேறுபட்ட இரு வடிவங்களையுடையதாய், ஒன்று செயப்படுபொருள் குன்றிய வினேயையும் ஒன்று செயப் படுபொருள் குன்ரு வினையையும் உணர்த்திவருவதைச் சாசனங்களிலே காணலாம். ஒரே வினைச்சொல்லில் -ந்த்- என்பது அமையும்போது செயப்படுபொருள் குன்றிய வினையாகவும் உத்த்- என்பது அமையும்போது செயப்படுபொருள் குன்ரு வினையாகவும் காணப்படுகின் றது. -ங்க்-/ -க்க் என்பனவும் -ம்ப்/ -ப்ப்- என்பனவும் இவ்வாறு வேறுபட்ட பொருளைத் தருவதுண்டு இரண் டாம் வினேயாக்கமுறை வினைப்பகுதிக்குள் ஏற்படும் வடிவ மாற்றமும் இவ்வாறு பொருள் மாற்றம் தரு கின்றது. வடிவத்தில் மிகச் சிறிதே வேறுபட்டுள்ள இவ்வினைச்சொற்கள் மொழிவழக்கில் ஒரே பொருளில் வெவ்வேறு பிரதேசங்களில் இடம் பெற்றிருந்த இலக் கிய வழக்கிற் புகுந்திருக்கவேண்டும். அவற்றின் பொருளை
109

Page 66
வேறுபடுத்தும் இயல்பு அதன்பின்பே தோன்றியிருக்க வேண்டும்.
இறந்தகால எச்சங்கள் பெயரெச்சம், வினை யெச்சம் இன இரண்டு வகைப்படும். முதலாம், இரண் டாம் வினையாக்கமுறைக்குரிய இறந்தகால வினையமைப் புக்களே எச்சங்களாக வழங்குகின்றன. இறந்தகாலப் பெயரெச்சம் அகரவீறு கொள்கின்றது. முதலாம் வினை யாக்கமுறை இறந்த கால வினையமைப்புக்களுக்கு அகரத் தைச் சேரிக்கும்போது நிலைமொழியீற்றுக் குற்றியலுக ரம் அகரம் ஏற இடங்கொடுத்து நிற்பதால், விகாரம் எதுவும் நிகழ்வதில்லை. இரண்டாம் வினையாக்கமுறை வினையமைப்போடு அகரம்சேரும்போது, இடையில் யகர உடம்படுமெய் தோன்றுகின்றது. ஆளுல் சாசனங்களில் -இய- என்பதற்குப் பதிலாக -இன- என இறும் வடி வங்களே பெரும்பாலும் வழங்குகின்றன. இரண்டாம் வினையாக்கமுறை இறந்தகாலத் தெரிவிவிைனைமுற்றுகளி லுள்ள ஈற்றெழுத்தை நீக்குவதன் மூலம் இவ்வடிவங் கள் பெறப்பட்டிருக்கலாம்;
ஒழிஞ்சு277 என்பது ஒழிந்து என்பதன் அண்ணச் சாயல் பெற்ற பேச்சுவழக்கு வடிவமாகும் ஆரா தித்து278 என்பது வடமொழி வினைப்பகுதியிலிருந்து தோன்றிய இறந்தகால வினையெச்சமாக முந்திய சாச னத்தில் வழங்கச் சம்மதித்து,279 அனுபவித்து280 என் பன பிந்திய சாசனங்களில் வழங்குகின்றன. செய்வித்து,
277. E. I., Vol, XXVIII, p. 91, Line 31 . 278. S. I. I, Vol, III, p. 93, Line 25, 26. 279. S. I. I, Vol, VII, p. 9, Line 5. 280. S. I. I, Vol. VIII, p. 107, Line 2.
110

எடுப்பித்து, அமைப்பித்து, புதுக்குவித்து என்பன இயக் குவினைப் பகுதிகளிலிருந்து முந்திய சாசனங்களில் அமைய அறிவித்து, செய்வித்து, பண்ணுவித்து, வெட்டுவித்து என்பன பிற்திய சாசனங்களில் அமைகின்றன. ஆய் போய் என்ற வடிவங்கள் இரண்டுகாலச் சாசனங்களி லும் காணப்படுகின்றன. வீரசோழியம் மட்டுமே இந்த யகர வீற்றைக் குறிப்பிடுகின்றது. இவரவீற்றின் திரிபே யகரவீருகும். இறந்தகால வினையெச்சம், கொண்டுமுடி யும் வினையின் எழுவாயையே தானும் கொள்ளுகின்றது. இது வினைமுற்று, தொழிற்பெயர், இறந்த காலப் பெய ரெச்சம், இறந்ததால வினையெச்சம், செயவெனெச்சம் என்பவற்றைக்கொண்டு முடிகின்றது. இது வினையெச் சத்துக்கு வினையடைபோலவும் வீற்றிருந்து281 முதலிய இடங்களில் வழங்குகின்றது. தமிழில் காலத்தைச் சுட்டி வரும் வினையெச்சங்கள் சில உண்டு. பெயரெச்ச வடி வங்களைத் தொடர்ந்துவரும் பெயர்கள் சில, ஒரு சொற் றன்மை பெற்று வினையெச்சப்பொருளைத் தருவதைத் தொல்காப்பியரும் குறித்துள்ளார்; இகந்தபின், 282 அ  ைட ந் த பின்,283 புகுந்தபோது,284 முட்டின பொழுது285 என்பன எடுத்துக்காட்டுகளாம்: 69) வித்த286 என்ற இறந்தகாலப் பெயரெச்சம் சங்கத மொழிப் பகுதியிலிருந்து தோன்றியதாக முந்திய சாச னத்திற் காணப்பட நிற்செயித்த287 என்பது பிந்திய
281. E. I, . Vol, IX, p. 88, Line 6. 282. S. II, I, Vol, IV, p. 454 Line 104. 283. S. I. J., Vol, III, p. 454, Line 123. 284. E. J. Vol. XX, p. 53, Line 15. 285. S I. I, Vol, XIII, p. 160, Line 37. M86. S. I. I, Vol, III, p. 454, Line 140.
S
287. s. I. II, Vol, VII, p. 87, Line 28.
11

Page 67
சாசனத்திற் காணப்படுகின்றது. செய்வித்த, எழுந்த ருளுவித்த, எடுப்பித்த, குடைவித்த என்பன இயக்கு வினைப்பகுதிகளிலிருந்து தேரின்றியனவாக முந்திய சாச னங்களிலே காணப்பட எழுந்தருளிவித்த செய்வித்த, நாட்டுவித்த என்பன பிந்திய சாசனங்களிலே காணப் படுகின்றன: ஆகிய, எய்திய என்பன இரண்டாம் வினை யாக்க முறையைச்சேர்ந்த -இய வடிவமாக முந்திய சாசனங்களில் வழங்க நோக்கிய, ஆகிய என்ற வடி வங்கள் பிந்திய சாசனங்களிலே வழங்கின. ஆகிய என் பது ஆய எனத் திரிந்தும் வழங்கியுள்ளது. -இன வடி வங்கள் எட்டு முந்திய சாசனங்களிலே காணப்படப் பத்துப் பிந்திய சாசனங்களிலே காணப்படுகின்றன. ஆ என்பதற்கு ஆஇன, ஆன என்ற வடிவங்களும் போ என்பதற்குப் போன என்ற வடிவமும் காணப்படுகின் றன. ஆயின, போயின என்பதன் திரிபுகளே இந்த வடிவங்கள் என்று கொள்ளவேண்டும். இந்த வடிவங் களும் வீரசோழியத்திலே குறிப்பிடப்பட்டுள்ளன சொல்லின என்பது சொன்ன?88 எனத் திரிந்து வந்துள் ளதை முந்திய சாசனத்திலேயே காணலாம்; இகரம் உச்சரிக்கப்படாதபோது -ல் ல்- தொடர்ந்து வரும் னக ரத்தின் செல்வாக்கால் -ன்ன்- என மாற மூன்று மெய் கள் தொடர்ந்து வரும் இயல்பு தமிழில் இல்லையாத லால், ஒரு னகரம் கெடுகின்றது. வேண்டும்/வேணும் 289 என்ற வடிவங்கள் போல வேண்டின வேண2893 என்ற வடிவங்கள் வழக்கிலிருந்திருக்கின்றன. இறந்தகாலப் பெயரெச்சம் பெயரடைபோல வழங்குகின்றது.
288. S. I. 1, Wol, XII, p. 46, Line 26. 289. S. I. I, Vol, VIII, p. 300, Line 35. 289a. E. I, Vol, IX, p. 88, Line 75.
2

இதனைத் தொடர்ந்து இதனற் சிறப்பிக்கப்படும் பெயர்ச்சொல் வருகின்றது. கருத்தா தெரியாத போது, இறந்தகாலப் பெயரெச்சம் செயப்பாட்டுவினைப் பொருளைத் தருகின்றது என நம்பப்பட்டு வந்தது: மொழிபெயர்ப்பில் ஏற்பட்ட தவறுதலே இந்த நம்பிக் கைக்குக் காரணம் என்பது இப்போது தெளிவாகக் காட்டப்பட்டுவிட்டது.289b கூட்டுவினை வடிவங்கள் சில பெயரெச்சவடிவங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன: பெயர்ச்சொல்லும் படு என்பதும் சேர்ந்தமைந்த வடி வங்கள் விசேடமாகக் குறிப்பிடத்தக்கவை. பள்ளிப் படுத்த290 எப்பேர்ப்பட்ட,291 முற்பட்ட,292 அகப் பட்ட,293 மேற்பட்ட,294 உட்பட்ட295 என்ற வடி வங்கள் பழைய சாசனங்களிலும் தென்கரை வ்டகரைப்பட்ட,296 நடுவுட்பட்ட,297 எப்பேர்ப்பட்ட உள்ப்பட்ட,298 என்ற வடிவங்கள் பிந்திய சாசனங்களி லும் பயன்படுத்தப்பட்டுள்ளன:
நிகழ்கால வடிவங்களாகப் பெயரெச்சங்கள் மட்டுமே சாசனங்களிலே கிடைத்துள்ளன. முந்திய
289b. S. Ages thialingam and N. Kumaraswami Raja - Dravidian Linguistics (Seminar Papers) 1969 - Passive in Dravidian. h− 290. E. I, Vol, VII, p. 192, Line 4. 291. E. I, Vol, XX, p. 53, Line 13. 292. E. I, Vol. XX, p. 53, Line 15.
293. S. I. I, Vol, III, p. 50, Line 4. 294. S. I. I, Vol, XII, p. 45, Line 22. 295. S. I. I, Vol, XIII, p. 173, Line 9. 296. S. I. I, Vol, V, p. 179 Line 17. 297. S. I. I, Vol, V, p. 192, Line 5. 298. S. II, I, Vol, IV, p. 154, Line 31,
3

Page 68
சாசனங்களிலுள்ள வடிவங்கள் அத்தனையும் கின்று என்ற இடைநிலையை வினைப்பகுதிக்குப் பின் சேர்ப்பதால் உண் டானவை. செய்கின்ற, அட்டுகின்ற, வருகின்ற, விற் கின்ற, அருளுகின்ற என்ற வடிவங்களே அவையாம்? பிந்திய சாசனங்களிலுள்ள வடிவங்கள் அத்தனையும் சிறு என்ற இடைநிலையை வினைப்பகுதிக்குப் பின் சேர்ப் பதால் உண்டானவை. போகிற, செய்கிற, வைக்கிற, பாய்கிற, கிடக்கிற நிற்கிற, எழுந்தருளுகிற, கட்டுகிற, போருகிற, பண்ணுகிற, அனுபவித்துப்போதுகிற என்ற வடிவங்களே அவையாம்: கின்று என்ற வடிவத்தின் திரிபே கிறு என்பதற்கு இதுவும் ஒரு சான் முகும். வினை முற்றின் காலத்தோடு சமகாலத்தில் நடந்த நிகழ்ச் சியை இது உணர்த்துகின்றது. நிகழ்கால வடிவங்கள் காலப்போக்கிலே பெருகிவந்தமையையும் இது காட்டு கின்றது.
நிகழ்வு - எதிர்வு வடிவமான செய்யும் என்பது பெயரெச்சமாக மட்டுமே சாசனங்களில் வழங்கப்பட் டுள்ளது. இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என் பனவற்றிலும் பார்க்க, நிகழ்வு - எதிர்வு வடிவம் எளிமை யானது. காலத்தை உணர்த்தும் தனி அமைப்பு இந்த வடிவத்தில் இல்லை. வினைப்பகுதியோடு உம் என்ற விகுதி நேரே சேர்க்கப்படுகிறது. சில வினைப்பகுதிகள் - க்க் - என்பதைச் சேர்த்துக்கொண்டபோதும், அந்த - க்க் - என்பதற்கு எவ்வித பொருட்சிறப்புமில்லை. இரண்டாம் வினயாக்கமுறைக்குரிய வினைப்பகுதிகளுள் மிகப்பெரும் பாலனவும் வினைப்பகுதியோடு உம்மையை நேரே சேர்க் கின்றன. முதலாம் வினையாக்க முறையில் இறந்த காலத் தைக்காட்ட - த்த் - பெறும் வினைப்பகுதிகள் நிகழ்வு எதிர்வுக்கு - க்க் - கொள்ளுகின்றன. ஒக்கும், அரைக்கும் என்பன முந்திய சாசனங்களிலும் எடுக்கும், இறுக்கும் என்பன பிந்திய சாசனங்களிலும் காணப்படுகின்றன:
14

மூன்ரும் பிரிவு முதலாம் உபபிரிவு வினைப்பகுதி யும் - க்க் - கொண்டு நிகழ்வு - எதிர்வாகவே வரு வதை அளக்கும், நடக்கும் என்ற எடுத்துக்காட்டுகளி விருந்து அறியலாம் உபாசரிக்கும்,298* ஆராதிக்கும்,299 என்பன சங்கத மொழிச் சொல்லை வினைப்பகுதியாகக் கொண்டு நிகழ்வு - எதிர்வு வடிவங்கள் முந்திய சாசனங் களில் வழங்கிய மைக்கும் பூசிக்கும்300 என்பது பிந்திய சாசனத்தில் அவ்வாறு வழங்கியமைக்கும் எடுத்துக் காட்டுகளாகும். இறந்தகால, நிகழ்காலப் பெயரெச்சங் களைப்போல, இதுவும் பெயரடைபோல வழங்கியுள்ளது; இது தன்னைத் தொடர்ந்து வரும் பெயரை விசேடிக்கிறது;
பாலறிகிளவுகளைச் சேர்க்கப்பெற்ற வினையமைப் புக்கள் வினைமுற்றுகளாகின்றன. பாலறிகிளவிகளை இரண்டாக வகுக்கலாம். முதல் வகைப் பாலறிகிளவியில் குற்றெழுத்து உண்டு. முதலாம் இரண்டாம் வினயாக்க முறை வினையமைப்புகளுக்கு னகரத்தை அல்லது அன் என்பதைச் சேர்த்து அதன் பின் இவ்வகைப் பாலறி கிளவி சேர்க்கப்படுகின்றது. இவ்வகைப் பாலறிகிளவி களே தொன் மையானவையாம்; இரண்டாம் வகைப் பாலறிகிளவிகள் நெட்டெழுத்தை உடையவையாம்: முதலாம் வினையாக்கமுறை வினையமைப்புகளுக்கு இவை நேரே சேர்க்கப்படுகின்றன. இரண்டாம் வினையாக்க முறை வினையமைப்புகளுக்கு னகரத்தைச் சேர்த்தபின் இவ்வகைப் பாலறிகிளவிகள் சேர்க்கப்படுகின்றன; அஃறிணைப் பாலறிகிளவிகள் யாவும் குற்றெழுத்தை மட்டுமே கொண்ட ன, வினைமுற்று வடிவம் இயல்பாய்
298a. S. I. I, Vol, III, p. 93, Line 26, 299. S. I. I, Vol, III, p. 96, Line 5. 300. S., I, I, Vol, V, p. 191, Line 1.
15

Page 69
நின்றும் திரிந்து நின்றும் வினையாலணையும் பெயராவ துண்டு. வினே முற்ருக அமைந்துள்ள வடிவங்களை மட்டுமே இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளலாம். உயர்திணை ஆண்பால் இறந்தகால வடிவங்களுள் அன் ஈறு ஓரிடத்திலும் ஆன் ஈறு ஐந்து இடங்களிலும் ஒன் ஈறு ஓரிடத்திலும் முந்திய சாசனங்களில் வர ஆன் ஈறு பிந்திய சாசனத்தில் ஓரிடத்தில் வந்துள்ளது; பெண் பாலையுணர்த்துவதற்கு ஆள் ஈறே இரண்டிடங்களில் முந்திய சாசனங்களிலே வந்துள்ளது. மரியாதைப் பன் மையை உணர்த்துவதற்கும் பலர் பாலையுணர்த்துவதற் கும் ஆர் விகுதியே முற்திய சாசனங்களில் வழங்கப் பிந்திய சாசனங்களில் அவற்றேடு ஆர்கள் 301 என்பதும் பலர் பாலை உணர்த்த வழங்கியுள்ளது;
இறந்தகால வினைமுற்றுகள்போல, எதிர்கால வினைமுற்றுகளும் எதிர்கால வினையமைப்புக்களுக்குப் பாலறிகிளவிகளைச் சேர்ப்பதால் உண்டாகின்றன. வ், ப் அல்லது - ப்ப் - என்பதை வினைப்பகுதியோடு சேர்க்க எதிரிகால வினையமைப்பு தோன்றுகின்றது. வினேப்பகுதி யோடு வ், ப் என்பன சேரும்போது செயப்படுபொருள் குன்றியவினையாகவும் - ப்ப் - என்பது சேரும்போது செயப்படுபொருள் குன்ரு வினை அல்லது இயக்குவிக்ன யாகவும் அமைகின்றன. இரண்டாம் வினையாக்கமுறை வினைப்பகுதிகளும் முதலாம் வினையாக்க முறை வினைப் பகுதிகளிற் பெரும்பாலனவும் வகர மெய்யைக் கொள்ளு கின்றன. முதலாம் வினயாக்கமுறை இரண்டாம் பிரி வைச் சேர்ந்த வினைப்பகுதிகளுட் பெரும்பாலன பகர மெய்யைக்கொள்ளுகின்றன. வகர மெய்யின் திரிபே இப் பகரமாகும் முதலாம் வினையாக்கமுறை மூன்ரும் பிரி
301, s. I, I, Vol, IV, p. 38, Line 7.
116

வில் முதலாம் உபபிரிவும் நான்காம் பிரிவும் . ப்ப் - என்பதைக் கொள்ளுகின்றன. தன்மை ஒருமையில் ஏன் என்ற ஈறும் தன்மைப் பன்மையில் ஓம் என்ற ஈறும் மட்டுமே முந்திய சாசனங்களிலும் வந்துள்ளன. உயரி திணை ஆண்பாலில் ஆன் என்ற ஈறும் பலரீபாவில் ஓரிடத்தில் அர் என்ற ஈறும் நான்கு இடங்களில் ஆரி என்ற ஈறும் முந்திய சாசனங்களில் வந்துள்ளன; எனவே பிந்திய வழக்காகக்கொள்ளப்படும் நெட்டெழுத்துடைய வடிவங்களே சாசனத் தமிழ் வழக்கிற் பெரும்பாலன எனலாம் எதிர்கால வினையெச்சவடிவம் விற்பான் 302 என ஒன்றே பிந்திய சாசனத்தில் இடம்பெற்றுள்ளது.
செயவெனெச்சம் அகர ஈற்றினல் ஆவது; பழைய தமிழிலக்கியத்தில் - அ. - ப - ப்ப என்ற ஈறுகளை வினைப் பகுதிகள் பெற்றுள்ளன. சாசனங்களில்-அ, - க, - க்க என்ற வடிவங்களே பெரும்பாலும் காணப்படுகின்றன: எதிர்காலத்தைக் காட்ட வகர மெய் பெறும் வினைப்பகுதி கள் அகரத்தை நேரே சேர்த்துக்கொள்ளுகின்றன; இ, ஐ என்ற ஈறுகளையுடைய வினைப்பகுதிகளோடு அகரம் சேரும்போது இடையில் பகர உடம்படுமெய் தோன்று கின்றது; ஒரசை வினைப் பகுதிக் குற்றெழுத்தைத் தொடர்ந்துவரும் மெய்யெழுத்து, இரட்டிய பின்பே, அகரத்துடன் சேர்கிறது. எதிர்கால வினை வடிவங்களை யாக்கப் பகர மெய் பெறும் வினைப் பகுதிகளில் னகர வீறுள்ளவை தவிர்ந்தவை ககரம் பெறுகின்றன. நிற்க என்ற வடிவம் முந்திய சாசனத்திலும் கேள்க303 என்ற வடிவம் பிந்திய சாசனத்திலும் காணப்படுகின்றன;
302, S. I. I, Vol, V, p. 118, Line 4. 303. S. I. I, Vol, IV, P. 139, Line 2, இதன் மாற்றுவடிவம்
கேட்க என்பது.
117

Page 70
எதிர்காலத்தைக் காட்ட - ப்ப் - என்பதைப்பெறும் வினைப்பகுதிகள் செயவெனெச்சத்தை யாக்குவதற்கு-ப்ப்- அல்லது - க்க் - பெறுகின்றன. முந்திய சாசனங்களில் குளிப்ப என - ப்ப் - உடைய ஒரு வடிவம் காணப்படப் பிந்திய சாசனங்களில் எடுப்ப, களிப்ப, சிறப்ப, கலப்ப, நடப்ப, இருப்ப என ஆறு வடிவங்கள் காணப்படுகின்றன: முந்திய சாசனங்களில் இறைக்க, பிழைக்க, துமிக்க, பொரிக்க, பணிக்க, வைக்க, ஒக்க, அரிக்க, அளக்க, குடுக்க எனப் பத்து வடிவங்கள் வழங்கப் பிந்திய சாச னங்களில் இறுக்க, கழிக்க வைக்க, குடுக்க, அளக்க, சுமக்க என ஆறு வடிவங்கள் மட்டுமே வழங்கியுள்ளன இக் கணக்கில் வடமொழிச்சொல்லை வினைப்பகுதியாகக் கொண்டு உருவான செயவெனெச்சத்தையும் இயக்கு வினைச்செயவெனெச்சத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை; நிவேதிக்க304 என்பது வடமொழிச் சொல்லை வினைப்பகுதி யாகக் கொண்ட முந்திய வழக்கு; சேவிக்க305 அனுப விக்க,305 பூசிக்க,307 என்பன அவ்வாறன பிற்திய வழக் குகள். அட்டுவிக்க, ஊட்டுவிக்க என்பன இயக்குவினைச் செயவெனெச்சமாக முந்திய சாசனங்களிலேயே வழங்கிய னவாம். இவற்றை நோக்கும்போது பழந்தமிழில் -ப்/ப்ப்- என்றிருந்த வடிவங்கள் - க்/க்க் - என முந்திய சாசனங் களிற் பெரும்பாலும் மாறிப் பிந்திய சாசனங்களில் இரு வகையாகவும் வழங்கப்படுவதைக்காணலாம்g -க்க்க் வடி வங்கள் ஒரு பிரதேசப் பேச்சுவழக்காக இருந்து சாசனங் கள் மூலமாக எழுத்துவழக்கிற் புகுந்திருக்கலாம்; பிந்திய சாசனங்களில் இருவகையமைப்புகளும் சமமாகப் போற்
I, Vol, IX, p. 88, Line 17. . . , Wol, V, p. 273, Line 2. S. I. I, Vol. VII, p. 9, Line 5. 307. S. I. I, Vol, V, p. 191, Line 3.

றப்படும் நிலைதோன்றியது. செயவெனெச்சம், எழுவாய், செயப்படுபொருள் என்பனவற்றைத் தனியாயும் சேர்த் தும் கொள்வதுண்டு. இது முடிக்கும் சொல்லோடு தொடர்புறுத்திப் பார்க்கும்போது முக்காலங்களில் எதையும் காட்டவல்லது செயவெனெச்சமாகிய ஆக என்பது வாக்கியக்கூறுகளை இணைப்பதற்குச் சாசனங்களிற் பயன்பட்டுள்ளது.
சாசனத் தமிழில் மூன்றுவகை வியங்கோள் விண்வடிவங்கள் காணப்படுகின்றன; முதலாவதாக, வியங்கோள் வினை விகுதிகளைப் பெற்ற வடிவங்களைக் கூறலாம். வீரசோழியம் ககரம் இசைவுப்பொருளை உணர்த்திவரும் என்கிறது. நன்னூல் இய, இயர் என்பன வற்றையும் சேர்த்துக் கூறுகின்றது. முந்திய சாசனங் களில் வளர்க, நிற்க, வாழியர் 308 என க, இயர் வடிவங் கள் காணப்படப் பிந்திய சாசனங்களில் வெட்டிக, வெட்டிக்கொள்க, அனுபவித்துப்போதுக என்ற ககர வடிவங்களே காணப்படுகின்றன. பிந்திய சாசனங்களிலே துணைவினைகொண்ட வடிவங்கள் பெருகிவருவதை அவ தானிக்கலாம். இரண்டாவதாக, கடவன், கடவர் முத லியனவாக அமையும் வடிவங்களைக் கூறலாம். செய வெனெச்சத்தைத் தொடர்ந்து கடவன், கடவர் முதலிய வடிவங்கள் வரும்போது வியங்கோள் வினைப்பொருள் வெளிப்படுகின்றது. அட்டக் கடவான் 309 என்பது படர்க்கை ஆண்பால் ஒருமையிலும் அட்டுவிக்க கடவார்10 என்பது பலரி பாலிலும் செலுத்தக்கடவது 311 என்பது
308. S. I. I, Vol III. p. 454, Line 83. 309. S. I. I, Vol, VI, p. 7, Line 8/9. 31 Ü. S. I. J, Vol, III, p. 8, Line 3. 311. B. I, Vol, XXI, p. 109, Line 196,
19

Page 71
ஒன்றன் பாலிலும் செலுத்தக் கடவன் 32 என்பது பல வின்பாவிலும் முந்திய சாசனங்களிலே கானப்பட அளக்கக்கடவேன் 313 என்பது தன்மையொருமையிலும் இறுக்கக் கடவோம் 34 என்பது தன்மைப் பன்மையிலும் அனுபவிக்கக் கடவர்கள்815 என்பது Laori UT Ga ay ib செல்லக் கடவது 310 என்பது ஒன்றன் பாவிலும் பிந்திய சாசனங்களிலே காணப்படுகின்றது; செயவெனெச்சம் இல்லாது வழங்கிய வடிவங்கள் பழையனவாக வேண்டும். முந்தி சாசனங்களில் கடவோம்?17 என்ற தன்மைப் பன்மை வடிவமும் கடவர் 318 என்ற பலர்பால் Gugglu மும் காணப்படுகின்றன. பின்னர் பொருட்டெணிவு நோக்கிச் செயவெனெச்சம் சேர்க்கப்பட்டிருக்கவேண்டும்: செயவெனெச்சம் சேர்க்கப்பட்ட வடிவங்கள் மட்டுமே பிந்திய சாசனங்களிலே கிடைத்துள்ளன. மூன்ருவதாகப் பாலறிகிளவிகளே அங்கமாகவுடைய வினேமுற்றுகள் ஆக என்பதனுேடு சேர்ந்து வியங்கோள்வினேப் பொருளே உணர்த்துகின்றன; ஆக என்பது ககர வீற்று வியங்கோள் வினே வடிவமாகத் துண் வினயாகிறது என்று கொள்ள வேண்டும் ஊட்டுவிப்போ மாக3 என்பது தன்மைப் பன் மையிலும் தண்டப்படுவானுக0ே என்பது ஆண்பா
312. E. II, Wol, XXI, p. 109, Line 13, 313. S. II, II, Wol, WII, p. 36, Line 81). 34. S. T., II, Wol, W, p. 179, Linc 22. 315. S. I. II, Wol, WII, p. 9, Line 5. 3ls. S. I. I, Wol, WII. p. 12, Line 3. 317. E. I, Wol. WII, p. 139, Line 5. 3 18. S. I. I, Wol, WII, p. 456, Line 12. 3 19. S. I. I, Wol, III, p. 231, Line 4. 320. S. I. II, Wol, XX, p. 54, Line 2/3.
120

விலும் ஊட்டுவிப்பாராக,321 எய்துவாரா ர322 என் பr பலர்பாவிலும் இழித்திடப்பெறுவதாக 2: கொள் வ தாக2ே4 என்பன ஒன்றன் பாவிலும் முந்திய சாசனங் களிலே வழங்க, 20 -kier = „r TFT 325 இரப் சாராக 325 கொள்வார்களாக327 என்பன பலரீபாவிலும் குடுப்போ மாக? என்பது தன்மைப் பன்மையி எது ந் r சாசனங்களிலே வழங்கியுள்ளன.
நிபந்தனேப்பொருளே உணர் + , கள் சாசனங்களிலே காணப் இ. ;臀 திக்கு இல் என்பதைச் சேர்க் , சுருங்கில், மு
செய்யில் ஏறில், குத்துக்காற்படில் முதலி நிபந கஃன வடிவங்கள் தோன்றியுள்ளன. வினேமுற்று ஈளுக்கு ஆகில் அல்லது ஆயில் என்பதனேச் சேர்ப்பது மூலமும் நிபநீ தனேவினேகள் தோன்றியுள்ளன. ஆகில் அல்லது ஆயில் என்பதும் நிபந்தண் வினேவடிவமேயம்: அது துனே வினேயாக வழங்குகிறதெனலாம். குடோ மாகிள், சூடோ மாயில், அஞ்சானுயில், அளவோ மயில் முட்டுவதாயில், செய்வோமா பில், ஆராயோமாயில் என்பன முத்திய சாசனங்களிலும் உண்டாகில் என்பது பிந்திய சாசனத் திலும் காணப்படுகின்றன: நிபந்தனே வினேயோடு நெருங்கிய சம்பந்தமுடையது காரணவிக்னயாகும். நிபந்
21. S. I. II, Wol, III, p. 23, Line 5. 22. S. II, I, Wol, III, p. 231, Line 5. 323. S. I. I, Wol, II, P. 507, Line 60. 324. S. I. II, Wol, III, P. 223, Line 3233. 325. S T II, Wol, W, p. 118, .nr. 7.
26. S. I. I, Wol, WIII, p. 217, Line 13. 27. S. L. I, Vol. VIII, p. 86, Line 28. 28. S. l. I, Wol, W, p. 320, Line 8.
2.

Page 72
தனை வினை செய்தால் என்ற வாய்பாட்டில் வரக் காரண வினை செய்தமையால் என்ற வாய்ப்பாட்டில் வரும்; முந்திய சாசனங்களில் இரண்டு வினைகளும் பயின்று வரப் பிந்திய சாசனங்களில் காரணவினையே பெரும்பா லும் காணப்படுகின்றது. தொழிற் பெயருக்கு இல் என்பதைச் சேர்ப்பதஞல் வரும் கொண்டமையில், கொள்ளாதமையில், ஆதினமையில், ஆதனமையில், ஆதலில் என்பன முந்திய சாசனங்களிலும் வருகையில், குடுக்கையில், கழிக்கையில், ஒண்ணுமையில் என்பன பிந்திய சாசனங்களிலும் காணப்படுகின்றன: தொழிற் பெயருக்கு ஆல் என்ற உருபைச் சேர்ப்பதனல்வரும் முட்டியதனல், முட்டியமையால் என்பன முந்திய சாச னங்களிலும் வருகையால், குடுக்கையால், கிடக்கையால் ஆகையால் என்பன பிந்திய சாசனங்களிலும் வழங்கி யுள்ளன; மையீற்றுத் தொழிற்பெயரை ஒத்த வடிவம் மையீற்றுக்குப் பதிலாகப் படி என்பதைப்பெற அதனைத் தொடர்ந்து ஆல் சேர வரும் வடிவம் காரணவினையா கிறது. கடமை செல்வாக்காதபடியால்,329 ஓடிப்போன படியால்30 தன் மங்கள் செய்தபடியால் 331 என்ற பிற் திய சாசன எடுத்துக்காட்டுகளில் இந்த வழக்கை உண ரலாம்.
சாசனத் தமிழிலே செயப்பாட்டுவினை வடிவங் கள் மிகச்சிலவே கிடைத்துள்ளன. செயவெனெச்சத் தைத் தொடர்ந்து படு என்பதும் அதன்த் தொடர்ந்து பாலறிகிளவியும் வருவது கர்மகாரகம் என்று வீரசோழி யத்தினுற் குறிக்கப்பட்டுள்ளது. முற்திய சாசனங்களிலே
329. S. I. I, Vol, VIII, p. 300, Line 7. 330. S I. I, Vol, VIII, p. 300, Line 10. 331. S. I. I, Wol, VII. p. 386, Line 9,
122

சொல்லப்பட்ட332 என்ற இறந்தகாலச் செயப்பாட்டு வினைப் பெயரெச்சமும் ஸ்துதிக்கப்பட்டது983 என்ற இறந்தகாலச் செயப்பாட்டுவினை ஒன்றன்பால் வினை முற்றும் வழங்கியுள்ளன. பிந்திய சாசனங்களிலே சுடப் பட்ட,334 கூவப்பட்ட335 பேசப்பட்ட,338 கூறப்பட்ட337 என்ற இறந்தகாலச் செயப்பாட்டுவினைப் பெயரெச் சங்களும் பேசப்பட்டவை,338 என்ற இறந்தகாலச் செயப்பாட்டு வினேயாலணையும் பெயர் வடிவமும் வழங் கியுள்ளன:
சாசனங்களில் எதிர்மறை வடிவங்களிற் பல வகையின காணப்படுகின்றன. எதிர்மறைப்பெயரெச் சம், எதிர்மறை வினையெச்சம், எதிர்மறை வினைமுற்று என்பன இரு காலங்களிலும் வழங்கப்பட்டுள்ளன; வினைப்பகுதியோடு எதிர்மறை ஆகாரம் சேர்ந்துவரும் வடிவங்கள் எதிர்மறைப்பெயரெச்சங்களாக வழங்கியுள் ளன. மேற்படி வடிவம் தகர எழுத்துப்பேற்றேடும் இரண்டு காலங்களிலும் அவ்வாறு வழங்கியுள்ளது: பெயரெச்சவிகுதியாகிய அகரத்தைத் தகர எழுத்துப் பேற்முேடு கூடிய வடிவங்களிலே காணலாம்; வினைப் பகுதியோடு ஆகாரம் சேர்ந்த எதிர்மறை வினை வடிவம் ஒன்று வினையெச்சமாக முந்திய சாசனத்திலே காணப் படுகின்றது. ஆது, ஆமல் என்பவைகளைச் சேர்த்த
332. S. I. I, Vol XII, p. 46, Line 29/30. 333. S. I. I, Vol, III, p. 454, Line 80. 334. S. I. I., Vol, VIII, p. 82, Line 19. . 335. S. I. I, Wol, V, p. 272, Line 5. 336. S. I. I, Vol, VIII, p. 107, Line 4. 337. S. I. I, Vol, VII, p. 9, Line 3. 338. S. I. I, Vol, VIII, p. 82, Line 22.
123

Page 73
வினையெச்சவடிவங்கள் இரு காலங்களிலும் பயன்படுத் தப்பட்டுள்ளன; வினைப்பகுதியோடு ஆகாரம் சேர்ந்த வடிவம் ஒன்று வினைமுற்முகப் பயன்படுத்தப்பட்டுள் ளமையையும் முந்திய சாசனத்திலே காணலாம் அள வோம், குடோம், செய்யோம், ஆராயோம் என்பன வினைப்பகுதியோடு தன்மைப்பன்மை விகுதியை நேரே சேர்க்க உருவான எதிர்மறைத் தன்மைப் பன்மைவினை முற்றுக்களாக முந்திய சாசனங்களிலே காணப்பட்டுள் ளன. அஞ்சான் என்பது ஆண்பால் எதிர்மறை କff & i ! முற்ருக வினைப்பகுதிக்கு ஆண்பால் விகுதியைச் சேர்த் தலினல் ஆக்கப்பட்டது? குடுத்திலோம் என வினைப் பகுதி இறந்தகால இடைநிலையோடும் எதிர்மறையிடைச் சொல்லோடும் தன்மைப்பன்மை விகுதியோடும் இணைந்து ஆகிய வினைமுற்று வடிவம் பிந்திய சாசனத்தில் காணப் படுகின்றது.839 எதிர்மறை வினையாலணையும் G tu uurî ளாக இருதது 340 என்ற ஒன்றன்பாற் பெயரும் காட் டாதோம்,341 குடாதோம்342 என்ற தன்மைப் பன் மைப்பெயரும் இறக்கா தான்9423 என்ற ஆண்பாற் பெய ரும் கருதாதவர்843 என்ற பலரியாற்பெயரும் கூட்டு வினயலமப்பாலான வினையாலணையும் பெயர்களாகக் நாட்டப்பெருதோம்.*** புள்ளி குத்துவிக்கப்பெரு ஏறப்பெரு தார்,349 புள்ளிகுத்துவிக்கப்பெரு ق34 , GBgnrib
339. S. 1. I, Vol, VIII, p. 300, Line 36/37. 340. E. I, Vol. XX, p. 53, Line 13. 341. S. I. I, Vol, XIII, p, 161, Line 9, 10 342. S. I. I, Vol, XII, p. 43, Line 3l. 342a S. I. I, Vol, XII, p. 24, Line 7. 343. S. I. I, Vol, II, p. 454, Line 119. 344. S. I. I, Vol, III, p. 50 Line 9. 345. S. I. I, Vol, XII, p. 39, Line 12/13. 346. S. I. I, Vol, II, p. 507 Line 61/62.
124

த்து,347 தடுக்கப்பெருதது4ே8 என்பனவும் முந்திய சரச னங்களிலே காணப்படுகின்றன; இவற்றை நோக்கும் போது எதிர்மறை ஆகாரத்தோடு கூடிய வினைப்பகுதி எல்லா வகை எதிர்மறைவடிவங்களுக்கும் பயன்பட்டுப் பின் வினையெச்சம், பெயரெச்சம், வினைமுற்று என்பன தனிவடிவம் பெற்று அதன்பின் காலங்காட்டும் எதிர் மறைவினை தோன்றியதை உணரமுடிகின்றது;
சாசனங்களிலுள்ள தமிழில், தன்வினை பிற வினைப் பாகுபாடே இயற்கையாக அமைந்துள்ளது: அது செயப்படுபொருள் குன்றியவினை செயப்படு பொருள் குன்ருவினை என்ற பாகுபாட்டை ஒரளவு ஒத்துள்ளது தமிழிலே, செயப்படுபொருள் குன்றிய வினையையும் செயப்படுபொருள் குன் ருவினையையும் சுலபமாக வேறுபடுத்த இயலாது. சொல்லமைப்பையும் அது வழங்கும் சந்தர்ப்பத்தையும் நோக்கியே அது எந்த வகை என அறிந்துகொள்ளலாம்: முதலாம்வினை யாக்க முறையில் முதலாம் தொகுதி வினைப்பகுதிகள் இறந்தகாலத்துக்கு -ற்த்- என்பதையும் எதிர்காலத்துக்கு - வ்- என்பதையும் கொள்ளுகின்றன. இவை நிகழ்வுஎதிர்வுக்கு இடைநிலையாக எதையும் கொள்வதில்லை; செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படுபொருள் குன்குழவினை என்ற இரண்டும் இப்பகுதியில் வரும்: இரண்டாம் தொகுதியை மூன்று உப தொகுதிகளாகப் பிரிக்கலாம் முதலாம் உபதொகுதி இறந்தகாலத்துக்கு -த் கொள்ளுவதிலே தவிர, ஏனைய அமிசங்களில் முத லாம் தொகுதியை ஒத்தது. இவற்றுட் பெரும்பகுதி செயப்படுபொருள் குன்றிய வினைகளாகும் இரண்டாம்
347. S. I. I, Vol. XII, p. 46, Line 24/25. 348. E. I, Vol, XXVIII, p. 91, Line 36/37,
125

Page 74
உபதொகுதி வினைப்பகுதிகள் எதிர்காலத்துக்குப் பகரத் தைக் கொள்ளுகின்றன. இவற்றுட் சில, நிகழ்வு-எதிரி வுக்குக் ககரத்தைக்கொள்வதும் உண்டு. இறந்த காலத் தைக் காட்டுவதற்கு இவை முதலாம் உபதொகுதியைப் போலத் தகரத்தைக் கொண்டபோதும் புணர்ச்சியிலே தகரம் டகரமாகவும் றகரமாகவும் மாறுகின்றது. இவை பெரும்பாலும் செயப்படுபொருள் குன்ரு வினைகளாக வருகின்றன; மூன்றவது உபதொகுதி வினைப்பகுதிகள் குற்ருெற்றிரட்டி இறந்தகாலம் காட்டுவன. இவை செயப்படுபொருள் குன்றிய வினையாகவே பெரும்பாலும் அமைகின்றன. மூன்ரும் தொகுதி வினைப்பகுதிகள் -ற்த்- என்பதை இறந்த காலத்துக்கும் -ப்ப்" என்பதை எதிர் காலத்துக்கும் -க்க்- என்பதை நிகழ்வு - எதிர்வுக்கும் கொள்ளுகின்றன. செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படுபொருள் குன்ரு வினை என்ற இருவகையும் இவற்றுள் உண்டு. நான்காவது தொகுதி வினைப்பகுதி கள் இறந்தகாலத்துக்கு -த்த்~ எதிர்காலத்துக்கு -ப்ப்-, நிகழ்வு - எதிர்வுக்கு -க்க்- என்பனவற்றைக் கொள்ளு கின்றன. இவற்றுட் பெரும்பாலன செயப்படுபொருள் குன்ருவினையாம். இச்செயப்படுபொருள் குன்ரு வினை யில் ஒரு பகுதி இயக்குவினையாம். ஐந்தாம் தொகுதி வினைப்பகுதிகள் ஒவ்வொன்றும் செயப்படுபொருள் குன் றிய வினையாகவும் செயப்படுபொருள் குன்ரு - இயக்கு வினேயாகவும் வடிவங்கள் பெறும். இரண்டாம் வினை யாக்கமுறை வினைப்பகுதிகள் யாவும் இகரத்தை இறந்த காலத்துக்கும் வகரத்தை எதிர்காலத்துக்கும் கொள்ளு கின்றன. இவ்வினையாக்க வினைப்பகுதிகளுட் சில தவி ரப் பிற செயப்படுபொருள் குன்றியவினை, செயப்படு பொருள் குன்ரு வினை என்ற பாகுபாட்டை வடிவத்தில் உணர்த்துவதில்லை; 'பொருளைக்கொண்டே, இவ்வேறு பாட்டை உணரவேண்டியுள்ளது. வடிவத்தைக்கொண்டே உணரக்கூடியவற்றுட் சில, ஒரசை வினேப்பகுதிக் க, ட,
126

ற என்ற ஈற்ருெற்றிரட்டிச் செயப்படுபொருள் குன்ருஇயக்குவினை வடிவங்களைப் பெறுகின்றன; வேறுசில, வினைப்பகுதியின் ஈற்று மெய்க்கு அயலிலுள்ள மூக் கொலியை வல்லொலியாக்கிச் செயப்படுபொருள் குன்ரு இயக்குவினை வடிவங்களாகின்றன.
இயக்குவினை வடிவங்கள் செயப்படுபொருள் குன்ரு ~ இயக்குவினை யெனவும் தனி இயக்குவிணேயென வும் இருவகைப்படும் செயப்படுபொருள் குன்ரு - இயக்குவினையென்பது ஒரு சந்தர்ப்பத்தில் செயப்படு பொருள் குன்ரு - வினையாகவும் இன்னெரு சந்தர்ப்பத் தில் இயக்குவினையாகவும் வழங்குவதாம். ஒரே வடிவம் இரண்டின் பொருளையும் தரக்கூடியதாக உள்ளது. முத லாம் வினையாக்கமுறை முதலாம் தொகுதி வினைப்பகுதி கள் தமக்கு இயல்பான வினை வடிவங்களைவிட அறுஅறுத்து, படு - படுத்து, கெடு - கெடுத்து, உகு-உகுத்து என்ற முறையிலமைந்த வடிவங்களையும் கொள்ளுகின் றன. இத்தகைய வடிவங்களிலே இயக்குவினைப்பொருள் சிறந்துநிற்கின்றது. முதலாம் வினையாக்கமுறை வினை யடிகளுக்கு -த்த்- என்பதைச் சேர்ப்பதன்மூலம் சார் - சார்ந்து செல் - செலுத்து என்ற இரண்டாம் வினை பாக்கமுறை இயக்குவினையமைப்புகள் தோன்றுகின்றன: அகல் - அகற்று, இயல் - இயற்று என்பனவும் -த்த்- சேர்ந்தபோது திரிந்து இயக்குவினைப் பொருளைத் தரு வனவே. தனி இயக்குவினை வடிவம் வினைப்பகுதிக்கு -வி-, - ப்-, -ப்ப் - என்பனவற்றை எதிர்காலம் காட்டுவதற் காகக் கொள்ளும் வினைப்பகுதிகள் அதே முறையில் வி, பி, ப்பி என்பனவற்றை இயக்குவினையாக்கப்பெறு கின்றன; இயக்குவினையிலிருந்து பலவகை வினைவடிவங் களும் ஆக்கப்படுகின்றன.
சாசனங்களில் கூட்டுவின், துணைவின் என்பன வும் காணப்படுகின்றன. கூட்டுவினையில், இரண்டாவது
27

Page 75
கூறு பெரும்பாலும் கர்ல இடை நிலை, விகுதி முதலியன கொண்டதாகவும் துணைவினையாகவுமிருக்கும். முதலாவது கூறு பெயராக அல்லது வினைப்பகுதியாக அமைந்து கால இடை நிலை விகுதி முதலியவற்றைக் கொள்ளாமை யினுல் கூட்டுவினையின் உச்சரிப்பிலும் பொருளிலும் ஒருமை காணப்படுகின்றது. முதலாவது கூற்றின் இயல் பைக்கொண்டு கூட்டுவினயைப் பெயர் வழிக் கூட்டுவின, விரைவழிக் கூட்டுவினே என இரண்டாக வகுக்கலாம் வினவழிக் கூட்டுவினையில் முதற்கூறு தொழில் அல்லது பெயர்ச்சியைக் குறிக்கும் விடுதந்த949 என்ற இறந்த காலப் பெயரெச்சம் போத்தர350 என்ற செயவெனெச் சம் என்பன உதாரணங்களாம். பெயர்வழிக் கூட்டுவினை யில் முதற்கூறு பெயரடியாகவும் இருக்கலாம்; பெயராக வும் இருக்கலாம். வினைப்பகுதி பெயரோடு சேரும்போது பெயர்த்தன்மை வினைத்தன்மையாகக் கூட்டு வினையில் மாறிவிடுகின்றது. சில சந்தர்ப்பங்களில் பெயர்ச்சொல் லின் பொருள் வேறுபடுவது அல்லது பலப்படுவது உண்டு. செய், இடு, படு, குடு, கொள், காண், பெறு என்பன கூட்டுவினையில் இரண்டாவது கூருக வந்து துணைவினையாக அமைகின்றன; படு என்ற துணைவினை யைக்கொண்டு அமைந்த பெயர் வழிக் கூட்டுவினைகள் மிகப் பலவாகக் காணப்படுகின்றன. தண்டப்பட்டு391 என்றதன்வினை இறந்தகால வினையெச்சம் தமிழ்ப்படுத்து* என்ற பிறவினை இறந்தகால வினையெச்சம் முற்பட்ட அகப்பட்ட உட்பட்ட, துளைபட்ட? என்ற தன்வினை
349. E. T. Vol, XXIII, p. 42, Line 17/18 350. E. I, Vol, XXI, p. 109, Line 5/6. 35 l. S. I. I, Vol, III, p. 98, Line 4. 352. S. I. I, Vol, III, p. 454, Line 102. 353 S. I. II, Wol, XIII, p. 165 Linę 6.
128.

இறந்தகாலப் பெயரெச்சம் அடிப்படுத்த பள்ளிபடுத்த என்ற பிற வினை இறந்த காலப் பெயரெச்சங்கள் கனற் பட,354 விஸ் மயப்பட, 355 உட்பட836 என்ற செயவெ னெச்சங்கள் வ்ழிபடும்357 என்ற நிகழ்வு-எதிர்வு வடிவம் தண்டப்படுவோம்338 என்ற தன்மைப்பன்மை எதிர்கால வினைமுற்று தண்டப்படுவான் 359 என்ற ஆண்பால் எதிரி கால வினைமுற்று தண்டப்படுவார் 360 என்ற பலர் பால் எதிர்கால வினைமுற்று தண்டப்படுவது 334 என்ற ஒன்றன் பால் எதிர்கால வினைமுற்று வாரிகப்பட்டோம்362 என்ற தன்மைப்பன்மை இறந்தகால வினைமுற்று அகப்பட்டது 363 வழிப்பட்டது0ே4 என்ற ஒன்றன்பால் இறந்தகால வினை முற்றுக்கள் குத்துக்காற்படில்365 என்ற நிபந்தனை வினை எப்பேர்ப்பட்ட, எவ்வகைப்பட்ட,369 இவ்வகைப் பட்ட387 என்ற எகர விஞ இகரச் சுட்டு என்பன பெயர் ரடையாக வர வந்த இறந்தகாலப் பெயரெச்சங்கள் எவ்வகைப்பட்டது,36 எப்பேர்ப்பட்டது 389 என்ற எகர விஞ பெயரடையாக வர வந்த இறந்த கால ஒன்றவி
354. S. I. II, Vol, III, p. 454, Line 134. 355. S. I. I, Vol, III, p. 454, Line 85. 356, E. I, Vol, XXI, p. 109, Line 101. 357. S. I. I, Vol, XII, p. 34, Line 2. 358. S. I. I, Vol, III, p. 90, Line 14. 359, S. I I, Vol. XII, p. 34 Line 2/3. 360. S. I. I, Vol, XII, p. 50, Line 10. 361 S. I. I, Vol, XII, p. 46, Line 23. 362. S. I. I, Vol, XII. p. 17, Line 6 363 S. I. I, Vo), II, p. 507, Line 56. 364. S. I. I, Vol, III, p. 454, Line 79. 365. E. I. Vol XXI, p. 109, Line 46. 366. S. I I, Vol, XII, p. 26, Line 8. 367. S. I. I, Vol, II, p. 507. Line 62. 368. S I I, Vol, II, p. 507, Line 56. 369. S. I,
Vol, XX, p. 53, Line 13,
129

Page 76
பால் வினே முற்றுக்கள் முதலியன படு என்பதை இரண் டாவது கூருகக்கொண்டு ஆக்கப்பட்ட பெயர் வழிக் கூட்டு வினேக்கு உதாரணங்களாம். படு என்பதற்கு அடுத்ததாகச் செய் என்பதைக் கொண்டே பல வடி வங்கள் ஆக்கப்பட்டுள்ளன. துனேவிண் என்ற பெயரை யுடைய ஒரு தனிப் பிரிவும் உண்டு; துனேவினேயில் இஃனயும் வினேயின் இரு கூறுகளும் கால இடைநிலை விகுதி முதலியவற்றைக் கொள்வதனுல் இவை பெரும் பாலும் ஒருமைப்படுவதில்லே. இரு கூறுகளும் வினயாக மட்டுமே இங்கு அமையலாம் இறந்தகால வினேயெச் சத்தோடும் செயவெனெச்சத்தோடும் துனேவிஃனகள் இஃணக்கப்படுகின்றன. வா, கொள், அருள், இரு, குடு, செல் என்ற வினேப்பகுதிகள் இறந்தகால விஜனயெச்ச அமைப்புகளைத் தொடர்ந்து துனேவினப்பகுதிகளாக அமைந்துள்ளன. விற்றுக்கொண்டு,370 அழைப்பிச்சு கொண்டு? என்ற இறந்தகால வினேயெச்சங்கள் தண் டிக்கொள்ள? என்ற செயவெனெச்சம் விற்றுக்கொண் டேன்? என்ற தன்மை ஒருமை இறந்தவால வினைமுற்று என்பன கொள் என்ற துனேவினயைக்கொண்டு உரு வான இத்தகைய வினேகளுக்கு எடுத்துக்காட்டுகளாம். செயவெனெச்சம் பெறு என்ற துணைவிண் கொள்வதைச் சாசனங்களிலே சானலாம்; கொள்ளப்பெறுவது,374 மன்றப்பெறுவது,375 எடுக்கப்பெறுவது7ே6 முதலிய ஒன்
370. S. L. I, Wol, XII, p, 41, Line 17. 371. S. I. I, Wol XIII, p, 163, Line 2, 372, S. I. 1, Wol, XXI, p. 25, Line f. 373. S. l. I, Wol, XII, p. 48, Linc 41. 374, S. I. II, Wol, III, p. 222, Line 16, 375. S. II, I, Wol, III, p. 95, Line 17. 376 S I. II, Wol, II, p. 507, Line 58.
130

றன்பால் எதிர்கால விண்முற்றுக்கள் கொள்ளப்பெருது 377 என்ற எதிர்மறை வினேயெச்சம் புள்ளிகுத்துவிக்கப்பெரு தோம்378 என்ற தன்மைப்பன்மை இயக்கு வினே பாஸ்ஃன யும் பெயர் ஏறப்பெருதோர் 370 என்ற ஆண்பாற்பன்மை எதிர்மறை வினேயாலணேயும் பெயர் தடுக்கப்பெருதது 388 என்ற எதிர்மறை ஒன்றன்பால் வினையாலஃணயும் பெயரி புள்ளிகுத்து விக்கப்பெருதது என்ற எதிர்மறை இயக்கு வினே ஒன்றன்பால் வினேயாலஃனயும் பெயர் முதலியன பெறு என்ற துனேவினயைப் பெற்ற அமைப்புகளுக்கு உதாரணங்களாம்.
FTr57 il Garf di Isr al மயக்கமாக அமைந்த வழக்காறுகள் பல உள "இன்னும் இப்படி அறிவோம்,"8ே2 என்பது எதிர்காலத்தைச் சுட்டவில்லை. நிகழ்காலத்தை இந்த முந்திய சாசன வழக்குச் சுட்டுகிறது என்று கொள்ளவேண்டும் வகரம் எதிர்கால இடைநிலையாக மட்டும் வரத்தொடங்கியது பிற்கால வழக்கு. பழைய தமிழில் வகரம் இறந்த காலம் அல்லாக் காலங்கண் உணர்த்தி வந்தது; சாசனங்களில் நிகழ்காலத்துக்குரிய தனிவடிவம் காணப்படுகின்றபோதிலும் அது செல் வாக்குப் பெற்றிருக்கவில்லே. எனவே இந்த வடிவம் நிகழ்காலத்தைக் கட்டுகின்றது. நிகழ்காலத்தை உணர்த் துவதற்கு முந்திய சாசனங்கள் இன்னுமொரு புதுவழி யைக் கையாண்டுள்ளன. எதிர்கால வடிவத்தையும் இறந்தகால வடிவத்தையும் இணைப்பதன் மூலம் நிகழ்
377. S, I. l, Wol, ll, p1, 507, Line 57.
378. S. l. I Wol, Xll, P. 39, Li li c 1213 379. S. 1. l, Wol, 11, p, 507, Linc 62. 380. E. T., Wol, XXVIII, p. 91, Linc 36 37. 381. S., 1. I, Wol, XII, p. 46. Line 24/25.
382. S. II, I, Wol, XIII, p. 48, Line, 54.
181

Page 77
காலம் உணர்த்தப்பட்டிருக்கும் முறை முந்திய சாசனங் களிலேயே காணப்படுகின்றது; எரிப்போமாஞேம்,983 செலுத்துவோமாஞேம்,384 அளப்போமாஞேம்,885 அட்டு வோமாஞேம், 386 படுவோமாஞேம்,387 அட்டுவேனு னேன்,30 முடுப்பேணுனேன் 889 படுவாராணுர்,390 கடைக் காண்பாராஞர்,891 செய்வோமானேம்392 என்பன நிகழ் காலத்தை உணர்த்துவனவாகச் சாசனங்களில் வழங்கி யுள்ளன; இறந்தகால வினையாலணையும் பெயர்கள் எதிர் காலத்தைச் சுட்டிவருவதையும் முந்திய சாசனங்களிலே காணலாம். "என் முர் .படுவார்.393 "அழித்தான் - படு வான்,'94 "இறக்கினன் - புகுவான், "393 "நினைத்தார் - கொள்வாரி,396 "உய்தாரி - கொள்வாரி, "397 என்ற எடுத்துக்காட்டுகளில் எழுவாய் இறந்தகாலத்திலும் பயனிலை எதிர்காலத்திலும் அமைந்துள்ளன. எழுவாயும் எதிர்காலத்தில் நடக்கப்போவதையே உணர்த்துகின்றது. வினையெச்சம் காலங்காட்டுமாற்றிற்குக் கூறப்படும் விளக் கமே இங்கும் கொடுக்கப்படவேண்டும். இறந்தகால
Wol, XII, p. 22, Line 11.
383. S. I. I, 384, S. I I, Vol, III, p. 95. Line 14/15. 385. S. I. I, Vol, XII, p. 25, Line 5. 386. S. I. I, Vol, III, p. 98, Line 3, 387. S. I. I, Vol, XII, p. 30 Line 26/27. 388. S. I. I, Vol, XIII, p. 165, Line 6/7. 389. S. I. I, Vol. XIII, p. 163, Line 4. 390. S. II, I, Vol, XII, p. 48, Line 6. 391. S. I. I, Wol, XII, p. 48, Line 5. 392. S. I I, Vol, XII, p. 42, Line 14/15. 393. S. I. I, Vol, Xl III, p 50. 394. S., I, I, Vol, III p. 90. 395. A. R. on S. I. E, 1936, p. 73. 396. S. I I, Vol, III. p. 224.
397, S. I. I, Wol, II. P 2.
182

வினையெச்சம் என்பது முடிக்கும் சொல்லால் உணர்த்தப் படும் காலத்துக்கு முந்திய காலத்தை உணர்த்துவதே அன்றி நடந்துபோனதை மட்டும் உணர்த்துவதன்று; இங்கும் பயனிலை சுட்டும் காலத்தில் நடக்கப்போவதி லும் எழுவாய் சுட்டும் காலத்தில் நடக்கப்போவது முந்தியதென்றே விளக்கவேண்டும்
பெயரடையென்று ஒரு தனிப்பிரிவைக்கொள் ளாத பழைய தமிழ் இலக்கணம் வினையடையென்றும் ஒரு தனிப்பிரிவைக்கொள்ளவில்லை. எனினும் பிறமொழி வழக்குகளுடன் ஒப்பிடும்போது அங்கு வினையடையாகக் கொள்வதற்கு தேரிடையான வடிவங்கள் தமிழிலும் கானப்படுகின்றன; சில பெயர்ச்சொற்களோடு ஆய் அல்லது ஆக என்பது சேர்ந்துவரும் கூட்டு வடிவம் வாக்கியத்தில் வினையடைவழங்குமாறு வழங்குகின்றது; இடத்தைக் குறிக்கும் வினையடையாகப் பழைய சாசனங் களில் முன்பு, ஆங்கு என்பன வழங்கப் பிந்திய சாசனங் களில் அங்கு, இங்கு என்பன வழங்கியுள்ளன. காலத் தைக் குறிக்கும் வினையடையாக முந்திய சாசனங்களில் முன், பின், முன்பு, முன்னம், பின்னை, அன்று, என்றும் என்னும் வடிவங்கள் பயன்பட்டுப் பிந்திய சாசனங்களில் முன்பு, பின்பு, அன்ருடு என்பன பயன்பட்டுள் ளன. விதத்தை உணர்த்தும் வினையடைகளாக அனைத் தினல், நன்கு, ஒருங்கு முற்றும், அற, மிக நேர இனிது, மறையிலி என்பனவற்றை முந்திய சாசனங்கள் கொண்டிருக்க ஒராங்கு, பின்னும், இப்படி முதலியன வற்றைப் பிந்திய சாசனங்கள் கொண்டுள்ளன, அற, மிக நேர என்பன செயவெனெச்சமாக வழங்கியவை; சாச னங்களில் இவை வினையடையாகக் கொள்ளத்தக்க வகை யில் வழங்கியுள்ளன
33

Page 78
4. இடையியல்
சாசனங்களுள் இடைச்சொல்லாக வழங்குவன ஐந்தாக வகுக்கப்படலாம். இயல்பான இடைச்சொற் கள், இடைச்சொல்லாகப் பயன்படும் வினை வடிவங்கள், உவமையிடைச்சொற்கள், எதிர்மறையிடைச்சொற்கள், மரியாதையிடைச் சொற்கள் என்பனவே அவையாம்; உம், ஏ, மற்று/மற்றும் தோறும் என்பன இயல்பான இடைச்சொற்களாக இரண்டு காலமும் வழங்கியுள்ளன: உம்மையிடைச்சொல்லே சாசனங்களிலே பயின்று வழங் கியது. சிறப்புப்பொருள், எச்சப்பொருள், முற்றுப் பொருள், தெரிநிலைப்பொருள். அளவைப்பொருள், ஆணைப்பொருள் என்பவற்றுக்கான எடுத்துக்காட்டுகள் இரண்டு காலச் சாசனங்களிலும் காணப்படுகின்றன: ஆணைப்பொருள் பழந்தமிழிலக்கண நூல்களிற் குறிப் பிடப்படவில்லை. "சவையார் இறுப்பாராகவும் "999 "காவு தெங்கிடப்பெறுவதாகவும், "99 "தீர்த்துக்கொள்ளக்கட வோமாகவும்"400 என்பன எடுத்துக்காட்டுகள் எண் ணும் மை பெயர்ச்சொற்களோடு மட்டுமின்றி இறந்த கால வினையெச்சங்கள், செயவெனெச்சங்கள் என்பன வற்ருேடும் வந்துள்ளது. ஒரே கருத்தாவின் பல வினை களைக் கூறும்போது, இறந்தகால வினையெச்சங்கள் எண் ணும் மைபெறுவதைப் பாண்டியரி குலத்தின் பெருமை யைக் கூறும் பெரிய சின்னமனூர்ச் சாசனப் பகுதியிற் காணலாம். கொண்டுமுடியும் வினையோடு சமகாலத்து
நிகழ்ச்சிகள் செயவெனெச்சங்களாக்கப்பட்டு எண்
398. S. I. I, Vol, III, p. 93. 399. S. I. I, Vol, II, p. 507. 400. S. I. I, Vol, VII, p. 386.
134

லும்மை பெற்று விளங்குவது மாறவர்மன் குலசேகர gig), 60 t. மெய்க்கீர்த்தியிற் காணப்படுகின்றது. ஏகார இடைச்சொல் பிரிநிலை, தேற்றம், ஈற்றசை என்ற பொருள்களில் இரு காலத்துச் சிாசனங்களிலும் கான படுகின்றது; சொற்கள் உருபேற்று நிற்குமிடங்களில் உம்மையும் ஏகாரமும் உருபுகளைத் தொடர்ந்துவரும்: உம்மையும் ஏகாரமும் ஒரு சொல்ஜ ஒட்டி வரும்போது உம் முதலிலும் ஏகாரம் பின்னும் வ்ரும். மற்று மற் யம் என்னும் இரண்டு 4ெ வங்களும் முந்திய சாசனங் *ளிலே மற்றவனுக்கிளைன் மற்றதற்கு மதில் வகுதிது", "மற்றும் எப்பேர்ப்பட்டதும் அடங்க", "மற் றும் கிடந்து விற்பன" என வழங்கியுள்ளன. பிந்திய சாசனங்களிே மற்றும் என்பது மட்டும். "மற்றும் எப் பேர்ப்பட்ட சமத்தப்பிராத்திகளும்", ‘மற்றும் பலரால் பேசப்பட்ட மரங்கள்" என வழங்கப்பட்டுள்ளது. மட்டு, உடன் இன்னும், என்னும் இடைச்சொற்கள் முந்திய சாசனங்களில் மட்டும் காணப்படுகின்றன:
** ஆய் ஆவது என்னும் வினை வடிவங்கள் இடைச்சொற்கள் போலப் பயன்படுவதைச் சாசனங் களிலே காணலாம். ஆக என்பது இரண்டு வாக்கியக் கூறுகளை இணைக்கப் பயன்படுகின்றது. "முன்பு கூறப் பட்ட பல பொருட்கள் யாவும் சேர்ந்து" என்ற பொரு датј. சுட்டுவதற்கும் இது "இரண்டாயிரங் குழியும் . . இரண்டாயிரங் குழியும் ஆக நாலாயிரங் குழி"401 நெடு மாற்சாத்தல் சென்னிப்பேரயனும் இவன் தாயார் கோயினங்கையும் ஆக வைத்த நுந்தாவிளக்கு"402 என முந்திய சாசன எடுத்துக்காட்டுகளிற் L116ðuGást'ul'.
401, S. I. I, Vol, III, p. 50. 402 E. I. Vol, III, p. 280.
35

Page 79
டுள்ளது; ஆக, ஆய் என்பன, பெயர்ச்சொற்கள் சில வற்றை வினையடையாக மாற்றும் இடைச்சொற்களா கப் பயன்படுகின்றன: "துலா நாயிறு முதலாக நிகதி யாக நான்கு காலமுத் திருவமுது செலுத்தும்படி "403 "இப்பொன்னுக்குத் தலைச்செம்மாடாய் ஒரு நந்தா a6MTả Gosf'G3Lurr ub’404 67 Girty GOT உதாரணங்களாகக் கொள்ளலாம். ‘விளக்கம் தொடருகிறது" என்ற பொரு ளேக் குறிக்கும் இடைச்சொல்லாக ஆவது என்பது இரண்டு காலங்களிலும் வழங்கியுள்ளது; "ஊரார் வைத்த பரிசாவது",405 நாங்கள் குடுத்த கமுகந்தோட்ட மாவது"408 என்பன எடுத்துக்காட்டுகளாம்,
எதிர்மறைப்பொருளைத் தரும் இடைச்சொற் கள் என்று சிலவற்றைக் கொள்ளலாம். இல் என்பது பெயர்ச்சொல்லைத் தொடர்ந்து வருவதற்கு மூன்று எடுத்துக்காட்டுகள் முந்திய சாசனங்களில் மட்டும் கிடைத்துள்ளன. அசைவில், மறுகில், வசை இல் என் பனவே அவையாம். இன்றி, அன்றி, அல்லது என எதிர்மறை இல், அல் என்பன அடியாகப் பிறந்த வடி வங்கள் இரண்டுகாலச் சாசனங்களிலும் கிடைத்துள் ளன. இம்மூன்று வடிவங்களும் குறிப்பு வினையெச்சங் கள் எனத் தமிழிலக்கணகாரராற் கொள்ளப்படுகின் றன. அன்று என்ற வடிவம் அல் என்ற எதிர்மறை அடியாகப் பிறந்த குறிப்புவினை ஒன்றன்பால் வினைமுற் ருகும். இது "இதன்றென்ருர்" என முத்திய சாசனத் தில் வந்துள்ளது.
403. E. I, Vol. IX, p. 88. 404. S. II, J, Vol, XIII, p. 13 l. 405. S. I. I, Vol, XII, p. 50. 406. S. I. I, Vol, V, p. 27.
136

உவமையிடைச்சொற்கள் சாசனங்களில் அருகிய வழக்காகக் காணப்படுகின்றன. போல் என்பது பிந்திய சாசனங்களில் "பகீரதிபோல் துய்ய புகட் படர", "தேர் போல் அல்குல்" எனவும் முந்திய சாசனத்தில் "ஒலி கடல் போல் -- இராசசிங்கப் பெருங்குளக்கீழ்" எனவும் வந் துள்ளது. அனை என்பது பிந்திய சாசனத்தில் "உதைய வெற்பனைச் சிங்காசனமிசை" என வந்துள்ளது.
மரியாதையிடைச் சொற்கள் இடைக்காலத் தமி ழுக்குச் சிறப்பாக உரியன; அவை சாசனங்களிலும் வழங்கியுள்ளன. அவை பிற சொற்களுக்கு முன்பும் அமைவதுண்டு; பின்பும் அமைவதுண்டு. முந்திய சாச னங்களில் பூரீ என்பதும் அதன் திரிபுகளாகிய சிரி, திரு, சி என்பனவும் அடிகள் என்பதும் பெயர்ச்சொற்களுக்கு முன் வழங்கியுள்ளன. பிந்திய சாசனங்களில் பூரீ என்ப தும் அதன் திரிபுகளும் உடையார், தேவர், நாயனுர், நாச்சியார் என்பனவும் பெயர்ச்சொற்களுக்கு முன் வழங்கியுள்ளன. கோவிற்பெயர்களுக்கும் கோவிலோடு தொடர்புடைய பொருள்களுக்கும் அரசகுலத்தவருக்கும் சமயப்பெரியாருக்கும் உயர்ந்தோருக்கும் பெயர்களுக்கு முன்பு மரியாதையிடைச் சொற்கள் சேர்க்கப்பட்டன; முந்திய சாசனத்தில் பூரீ குழுவானை ஏரியால் என ஏரிப்பெயர் ஒன்றுக்கும் மரியாதை இடைச்சொல் சேர்க் கப்பட்டுள்ளது.407 சொற்களின் பின்னிணைப்புகளாக அடிகள், அமுது, அருள் என்பன முந்திய சாசனங்களி லிடம் பெறத் தேவர், நாச்சியார், அமுது, அருள் என் பன பிந்திய சாசனங்களிலிடம் பெற்றுள்ளன: கடவுளுக் கான உணவு சம்பந்தப்பட்டவை அமுது என்று குறிப் பிடப்படுகின்றன. கடவுளருடையவும் உயர்ந்தோருடை
407. B. II, Vol, XXVIII, p. 91, Line 18-20.
137

Page 80
யவுமான செயல்களைக் குறிக்கும்போது அருள் என்பது மரியாதையை உணர்த்தும் துணைவினையாகச் சேர்க்கப் பட்டுள்ளது
சாசனத் தமிழிலே தொகைநிலைத்தொடர்கள் காணப்படுகின்றன. பழந்தமிழிற் காணப்படும் அள வுக்கோ, செய்யுளிலக்கியத்திற் காணப்படும் அளவுக்கோ சமமான அளவில் அவை இல்லை. ஐவகைத் தொகை களும் சாசனங்களிற் காணப்பட்டபோதிலும் சாசனங் களிலுள்ள செய்யுட் பகுதிகளிலேயே தொகைநிலைகளுக் குப் பெரும்பாலான உதாரணங்கள் கிடைத்துள்ளன: வேற்றுமைத்தொகை, பண்புத்தொகை, 2 ம் மைத் தொகை என்பன செய்யுட்பகுதிகளிற் பெரும்பான்மை யாக இடம்பெற்ருலும் உரைநடைப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு இடம்பெற்றுள்ளன. இரு பெயர், பலபெயர், அளவுப்பெயர், எண்ணுப்பெயர், நிறைப் பெயர் என்ற ஐந்து வழிகளிலான உம்மைத்தொகை கள் காணப்படுகின்றன. பண்புத்தொகையில் இருபெய ரொட்டுப் பண்புத்தொகையே பயின்று காணப்படுகின் றது. வண்ணம், அளவு என்ற வகையிலான எடுத்துக் காட்டுகள் சிலவும் கிடைத்துள்ளன. வேற்றுமைத் தொகை அமைந்துள்ள இடங்கள் ஏனைய தொகைகள் அனைத்தும் அமைந்துள்ள இடங்களிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. மூன்ரும் வேற்றுமைப் பொருள் படத் தொக்க தொகைக்கு முந்திய சாசனங்களில் உதா ரணம் கிடைக்கவில்லை. நான்காம், ஐந்தாம் வேற்றுமைப் பொருள்படத்தொக்க தொகைகள் செய்யுட்பகுதிகளில் மட்டுமே கிடைத்துள்ளன. ஏழாம் வேற்றுமைப்பொருள் படத் தொக்க தொகைகள் செய்யுளிலும் உரைநடையி லும் ஒரே அளவினவாக வழங்குகின்றன. இரண்டாம் வேற்றுமை ஆரும் வேற்றுமை என்பனவற்றின் பொருள் படத் தெக்க தொகைகள் உரைநடையிலும் பெரு வாரி யாகக் காணப்படுகின்றன.
138

சாசனத்துத் தமிழர் பண்பாடு
திமிழர் பண்பாடு பற்றிய விரிவான பல செய் திகளைச் சாசனங்களிலிருந்தே உணரலாம். சங்ககாலத் திற்குப் பின்பு இக்காலம் வரையிலான இலக்கியங்களில் தமிழர்களுடைய வாழ்க்கையை நேரே சித்திரித்துக்கூறும் பண்பு அருகிக் காணப்படுகின்றது. இவ்விடைக்காலத் தமிழ் இலக்கியங்களுள் மிகப்பெரும்பாலன. வடமொழி யிலக்கியங்களின் தழுவல்களும் மொழிபெயர்ப்புகளுமாம். இந்த இலக்கியங்களிலிருந்து தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் பற்றிய சில தகவல்களைக்கூட, ஆராய்ச்சி மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம்
பல்லவர் ஆட்சிக்காலத்திற்கு முந்திய தமிழ்ச் சாசனங்கள் தொகையிற் சிலவாகவும் அளவிற் சிறிய னவாகவும் கிடைத்துள்ளன. அவற்றுள் மிகச் சிலவே திருப்திகரமாக வாசிக்கப்பட்டுள்ளன. மிகுதிச் சாசனங் கள் கூறும் பொருள் பற்றியும் அவை எழுந்த காலம் பற்றியும் கருத்துவேறுபாடுகள் காணப்படுகின்றன. சோழர், பாண்டியர் பேரரசுகள் வீழ்ந்த பின் எழுந்த சாசனங்களும் பல நூற்றுக் கணக்கில் வெளியிடப்பட் டுள்ளன. ஆனல் விசயநகர நாயக்கர் காலத்திலிருந்து தமிழர் வரலாற்றையும் ஆட்சிமுறையையும் பண்பாட் டையும் அறிந்து கொள்ளப் பிறநாட்டார் எழுதி வைத்த குறிப்புக்கள் விரிவாக உள்ளன. ஆணுல், பல்லவர், சோழர், பாண்டியர் காலத்துத் தமிழர் பண்பாட்டை அறிந்துகொள்ளச் சாசனங்களே மிகவும் உதவுகின்றன: இவ்வரச குலத்தினர் கால வரலாறுகளைச் சிறப்பாக
139

Page 81
ஆராய்ந்துள்ள பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி, டாக் டரி மீனுட்சி, திரு. கோபாலன் என் பாருடைய நூல் களை நோக்கினல், சாசனங்கள் பயன்படுமாற்றுக்கு அவர்களுடைய நூல்களே விளக்கமாக அமைந்துள்ளன Crow anth
இன்று வெளிவந்துள்ள சாசனங்களைக்கொண்டே, தமிழருடைய பண்பாட்டை ஆராய்ந்து பல நூல்கள் எழுதலாம். அதனுல் இக்கட்டுரையில், ஆசிரியருக்கு மிகவும் பரிச்சயமான இரு நூற்றைம்பது சாசனங்கள் மட்டுமே ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன: அவை மூன்று காலப்பிரிவுகளுக்குரியன:-
1. பல்லவர் பாண்டியர்கால இறுதி, சோழரி
காலத்தொடக்கம்
2 முதலாம் இராசராசன், முதலாம் இரர
சேந்திரன் காலம்,
3 பிற்காலப் பாண்டியர் காலம்
சாசனங்களை மூலாதாரமாகக்கொண்டு அரசியல், ச்மூக வியல், பொருளியல் வரலாறுகள் வரையப்பட்டு வரு கின்றபொழுதிலும், இங்கு அத்தகைய முயற்சி மேற் கொள்ளப்படவில்லை. சாசனங்கள் கூற எடுத்துக்கொண்ட பொருள் மட்டும் வகுக்கப்பட்டு ஆராயப்படுகின்றது; இவ்வாராய்ச்சி தமிழிர் பண்பாட்டின் சில அமிசங்களை அறிந்துகொள்ள உதவும். ஒவ்வொரு காலப் பிரிவுச் சாசனங்களையும் தனித்தனியே நோக்குவது காலப்போக் கில் ஏற்பட்டுவந்த மாற்றங்களைத் தெளிவாக உணர R56| lb
40

1. பல்லவர் பாண்டியர் கால இறுதி, சோழர்
காலத்தொடக்கம். கி. பி. 800 - 929.
இக்காலச் சாசனங்களிற் கூறப்படும் பொருளைச் சமயம், நீர்ப்பாசனம், வீரக்கல், பிற என நான்காக வகுக்கலாம் பிற என்பதில் அம்பலம், விருந்துண்ணல் முதலியவற்றை அடக்கலாம், சமயம் என்பதில் சைவம், வைணவம், சமணம் என்பன பற்றிய செய்திகளும் பிராமணர் பற்றிய செய்திகளும் அடங்கும். சைவம் என்பது சிவசம்பந்தமானது. எனினும் சைவர்கள் பல ராலும் வணங்கப்படும் தெய்வங்களான காளி, கணபதி முருகன், சூரியன் என்பார் பற்றிய செய்திகளும் சாச னங்களிலே காணப்படுகின்றன; பெருந்தொகையான சாசனங்கள் சிவன்கோவிற் பணியையும் பரிபாலனத் கதையும் பற்றிக் கூறுவனவே அச்சாசனங்களையும் அவை கூறும்பொருள்பற்றி விளக்கு, அர்ச்சனை, விழா, தேவ தானம், கட்டிடம், பொதுவருமானம் என ஆருக வகுக்கலாம். விளக்கு என்பதிலும் நுந்தாவிளக்கு, பகல் விளக்கு, சந்திவிளக்கு என்று மூவகையின கூறப்படுகின் றன; முதற்கண் நுந்தாவிளக்குப்பற்றிய செய்திகளை ஆராயலாம்3 அச்செய்திகளையும் விளக்குவைத்தோரி, விளக்குக்காக வைக்கப்பட்ட பொருள், விளக்கு எரிய வேண்டிய காலம், விளக்கு எரிக்கும் பொறுப்பு/பாது காக்கும் பொறுப்பு, விளக்கும் பிறபொருள்களும், ஓம் படைக்கிளவிகள் என ஆறு உபபிரிவுகளில் நோக்கலாம்;
நுந்தாவிளக்குவைத்தலாகிய அறத்தைச் செய் தோரை அரச குடும்பத்தினர் என்றும் அல்லாதோர் என்றும் இரண்டாக வகுக்கலாம் பதினன்கு சாசனங் கள் அரச குடும்பத்தினர் விளக்குவைத்ததையும் ஒன்பது சாசனங்கள் அல்லாதோர் விளக்கு வைத்ததையும் கூறு
141

Page 82
கின்றன. அரசகுடும்பம் என்பதில் முடியுடைவேந்தரும் சிற்றரசரும் அடங்குகின்றனர். அரசன் விளக்குவைத்தி தாகக் குறிப்பிடும் சாசனம் ஒன்றே கிடைத்துள்ளது. அவன் மாணிக்கவாசகசுவாமிகள் காலத்துப் பாண்டிய வேந்தனென, இன்றைய ஆராய்ச்சியாளர் கருதும் இரண்டாம் வரகுண பாண்டியனுவான்; அரச குடும் பத்தைச் சேர்ந்த பெண்களே விளக்குவைக்குந் தருமத் தில் முனைந்து நின்றிருக்கின்றனர். அரசி அல்லது அரச குமாரி விளக்கு வைத்ததைக் கூறுவதாகப் பத்துச் சாச னங்கள் வரையிலே கிடைத்துள்ளன.2 முதலாம் ஆதித்த ணுேடு உடன்பிறந்த தங்கையான நங்கை வரகுண பெரு மாளுர், வானர் குலத்துப் பிருதுவிபதி மகள் குந்தவை யாரை வானமாதேவியார், அபராசிதவருமர் தேவியார் மாதேவியடிகள், பெரும்பிடுகுமுத்தரையர் மணவாட்டி நங்கை தயாநிதியார், முதலாம் ஆதித்தனுடைய முதல் தேவி இளங்கோன் பிச்சி, முதலாம் ஆதித்தனுடைய இன்னுெரு தேவி காடுபட்டிகள் தமர்மேத்தியார் திரி புவன மாதேவி முதலியோர் அப்பெண்களுட் சிலர்: முதலாம் ஆதித்தனுடைய வைப்பாட்டியான நங்கை சாத்த பெருமானுரும் விளக்கு வைத்துள்ளார்.3 சிற்றர சனுடைய வைப்பாட்டியொருத்தி விளக்கு வைத்ததற் கும் சான்றுண்டு.வே அரசியின் தாய் விளக்குவைத்த
. Epigraphia Indica Wolume XXIII. page 42. 2. E. I., Wol. WII, p. 140; Wol. XX, p. 53.
South Indian Inscriptions Vol. III, p. 98, p. 100; Wol. XII, p. 39, 40; Vol. XIII, p. 154; Vol. XIII р , 172, 186. S. 1 I, Wol. XIII, p. J 19.
3.
a. E. I. Vol. VII, p. 139.
142

தைக் கூறும் சாசனங்கள் இரண்டு கிடைத்துள்ளன. விளக்கு வைப்பதனுல் வரும் புண்ணியம் தமக்கு நெருங்கிய உறவினர் ஒருவரைச் சாரவேண்டும் என்று எண்ணி விளக்கு வைத்தோரும் உனர். பெரும்பிடுகுமுத்தரையர் மணவாட்டி நங்கை தயாநிதியார் என்பவர் முத்தரை யர் நம்பி மான தொங்கலார் மகளார் நங்கை விக்கிரம கேசரியாரைச் சார்த்தி விளக்கு வைத்துள்ளார்.
அரச குடும்பத்தினர் அல்லாதோரில் பிராமணர் குறிப்பிடத் தக்கோராவர் பிராமனர் தம்முடைய உள் ளூர் நிறுவனமான சபையாகவும் தனிப்பட்டோராகவும் விளக்கு வைத்துள்ளனர். மூன்றும் நந்திவர்மன் காலத் தில் அன்பில்சபை அவ்வாறு விளக்கு வைத்துள்ளது. மாதவ கிரமவித்தன், பட்டர்நாகன், பிரமாதிராசன் என்போர் தனிப்பட்டமுறையில் விளக்கு வைத்த தரு மத்தைச் செய்த பிராமணராவர். வணிகருள், சாமுண் டன் மூர்த்தி விளக்குவைத்ததற்குச் சாசனச் சான்றுண்டு.* தாயும் மசனும் சேர்ந்து ஒரு விளக்கு வைத்ததற்குக் கோயினங்கையும் அவள் மகன் நெடுமாற் சாத்தன் சென்னிப்பேர யனும் உதாரணமாவர். சோழியவரையன் ஆன மாணு பரணன், அரையன் அரவிந்தன், விக்கியண் ணன் தேவியான கடம்பமாதேவி முதலியோர் விளக்கு வைத்த பிறராவர். 10
4. S. I. I. Wol. XII, p. 36; Wol. XIII. p. 162 5. S. I I, Wol. XIII. p. 154, 6. S. I. I, Wol. WII, p. 32. 7. S II, I, Wol. III, p. 95,; Wol. XIII, p. II (52, 178. 8. S. I I, Wol. III. p. 233. 9. E., II, Wol. Il II. p. 280, 10. S., I. II, Wol. III. p. 96, p. 221; E, I. Wol. W, p. 42,
14器

Page 83
சிவன் கோயிலில் விளக்குவைப்பதற்காகக் கொடுக்கப்பட்ட பொருளிலும் வேறுபாடு காணப்படு கின்றது விளக்குக்கு வேண்டிய நெய்யைப் பெற்றுக் கொள்வதற்காக ஆட்டை அல்லது பசுவைக் கொடுப்பது ஒருவகை. முப்பது பசு ஒரிடத்திலும் இருபத்தேழு பசு இன்னேரிடத்திலும் கொடுக்கப்பட்டுள்ளன. 11 ஆடு கொடுக்கப்பட்டதைப் பல சாசனங்கள் கூறுகின்றன.12 சில சாசனங்கள் சாவாமூவாப் பேராடுபற்றிக் குறிப்பிடு கின்றன. ஆடு, பசு என்னும் இரண்டையும் குறிக்கவும் இத்தொடர் சில சாசனங்களில் வழங்குகின்றது. விளக்கு வைப்பவர் கொடுக்கும் ஆடுமாடுகளை இன்னுெருவரி பெற்று விளக்குக்கு நெய் கொடுக்கும் பொறுப்பை ஏற் பரி. நெய் கொடுக்கமுடியாதபோது ஆடு அல்லது மாடு இறந்துவிட்டது, கிழமாய்விட்டது அல்லது வளரவில்லை என்ற சாட்டுகள் கூறப்பட்டிருக்கும். தருமம் செய்ப வருக்கு அத்தருமம் எப்பொழுதும் நிலைநிற்கவேண்டும் என்ற விருப்பம் இருப்பது இயல்பு. அதனலேயே, தெய் தடைபடாமல் விளக்குக்குக் கொடுபடவேண்டும் என் பதை வற்புறுத்தவே சாவாமூவாப்பேராடு13 என்று குறிப்பிடும் முறை வந்தது; சிறுபான்மையாகக் கொடுக் கப்பட்டுவந்த மாடும் இத்தொடரினுலேயே வழங்கப் Ull-SE
விளக்கு வைப்பதற்காகப் பொன் கொடுக்கும் ܚ முறையும் இருந்திருக்கிறது. பொன்னைப் பெற்றுக்கொள்
11. S. I. I, Vol. XIII. p. 167, Vol. VI. p. 7. 12. S. I. I. Vol. III. p. 221, Vol, XlII. p. 128,
p 132, 169. 13. E. I. Vol. V, p. 42; S. I. I. Vol. XII, p. 39,
Vol. III, p. 230,
144

பவர் விளக்குக்கு வேண்டிய நெய்யைக் கொடுத்துவர வேண்டும். பதினைந்து சாசனங்கள் வரையில் விளக்கு வைப்பதற்குப் பொன் கொடுக்கப்பட்டதை எடுத்துக் கூறுகின்றன.14 பொன்னுக்கு அடைமொழி வழங்கப் பட்ட சாசனங்கள் சில உள ஊர்க் தற்செம்மை, 15 தீப்போக்கு செம்பொன் 152 துளைபொன் 16 என்ற அடை மொழிகள் காணப்படுகின்றன. பொன் னில் உயர் தர மானவற்றை இவ்வடைமொழிகள் குறிப்பனவாக வேண் டும். ஊர்க்கற் செம்மை என்ற பதப்பிரயோகம் நான்கு சாசனங்களிற் காணப்பட்ட போதிலும் நான்கு சாசனங் களும் பல்லவ மன்னர் சாசனங்களாக இருத்கல் கவ னித்தற்குரியது; துளைபொன் என்ற பதப் பிரயோகம் சோழர் சாசனத்தில் வருகின்றது. பொன் என்பது ஒரு வகை நாணயம்,
பழங்காக என்னும் நாணயமும் அக்காலத்தில் வழங்கியிருக்கிறது. விளக்குவைப்பதற்குப் பழங்காசு கொடுத்ததுபற்றி மூன்று சாசனங்கள் குறிப்பிடுகின் றன.17 பழங்காசு என்பது காலத்தால் முந்திய மன்னர் களால் வெளியிடப்பட்டு நாட்டில் வழங்கிவந்திருக்க வேண்டும்; பாண்டியர் ஆட்சியில் அமைந்த பிரதேசங் களிலேயே இவ்விரு சாசனங்களும் காணப்படுகின்றன. பணம் போலப் பொருள் கொடுத்து விளக்கு வைப்பித்
14. E. I. Vol. VII. p. 139, 140, Vol. XX, p 53,
Vol. XXIII, p. 42, S. I. I. Vol. III p. 95, 96. 98 etc.
5. S. I. I. Vol. XII. p. 37. p. 39, 40, 45 15a. E. I. Vol. XXXIII, p. 101. 16. S. I. I. Vol. XIII. p. 116. 17, B. I. Vol. XX, p. 52, Vol. VIII, p. 139.
145

Page 84
தலும் இருந்திருக்கின்றது. நெல் கொடுக்கப்பட்டதை ஒரு சாசனம் கூறுகின்றது:18
விளக்கு வைப்பதற்கு நிலம் கொடுக்கப்படுவது முண்டு519 அவ்வாறு கொடுக்கப்பட்ட நிலத்திற்கு ஒரி டத்திலே தேவபோகம் என்ற பெயர் வழங்கியிருக் கிறது.20 கொடுபட்ட நிலத்தின் எல்லைகளை நுட்பமாக விவரித்துச்செல்வதால், ஒரு சாசனம் நீண்ட அளவின தாக ஆகிவிடுகின்றது.21 நிலத்தைத் தானம்செய்யும் போது ஒரு பிரச்சினை எழுகின்றது; நிலவரி அக்கால அரசாங்கத்தின் முக்கியமான வருமானமாகும்; எனவே, நிலம் கொடுத்தவர் தானம் செய்யப்பட்ட நிலத்திற் குரிய வரியை அரசாங்கத்துக்குக் கொடுத்து வருவதாக உடன்படவேண்டும்.2 அல்லது உள்ளூரி நிறுவனமாகிய சபை முதலியவற்றிடம் ஒரு தொகைப்பணம் கொடுத்து நிலத்தை இறையிலி நிலமாக மாற்றவேண்டும்.23 தான மாகக்கொடுக்கப்பட்ட பொருளைப் பெற்றுக்கொள்பவர் விளக்கு நெய்யின் பொருட்டு முதல்சி செலவிட்டால், முதல் கரைந்துவிடும். அதனல், முதல்ப் பேணிக்கொண்டு வட்டியை மட்டுமே செலவிடலாம் என்று சில இடங் களில் எடுத்துக் கூறப்படுகின்றது.24
18. S. 19.
I, I, Vol. XII p. 22. I, I, Vol. XII, p. 35, Vol. XIII, p. 173,
I
20. S. I. I, Vol. XII, p. 50. 2f. S. I. I, Vol. XIII, p. 160. 22. S. I. I, Vol. XIII. p. 163. 23. S. I. I, Vol. XII. p. 42, Vol. XIII. p. 172,
Vol. III. p. 238. E
24. E. I. Vol. XX, p. 52.
146

நுந்தா விளக்கு எரியவேண்டிய காலத்தை எடுத்துக் கூறுவன சாசனங்கள் பல. விளக்கு எவ்விதத் தங்குதடையுமின்றி எப்பொழுதும் எரிந்துவரவேண்டும் என்றே விளக்குவைத்தோர் விரும்பினர்: "எப்பொழுதும்" என்பதை எடுத்துக் கூறும் முறையிலே சில வேறுபாடு கள் காணப்படுகின்றன; 'சந்திரனும் நட்சத்திரங்களும் இருக்கும் வரை" எனப்படும் ஆசற்திர தார்ம் என்ற வட மொழித் தொடர் ஓரிடத்தில் வழங்கப்படுகின்றது.25 ஆசந்திர காலம்28 என்பது இத்தொடரின் திரியாக இருக்க வேண்டும்; அல்லது அது "சற்திரன் இருக்கும் வரை" எனப்பொருள்படவேண்டும்; சந்திராதித்யவத் என்னும் வடமொழித் தொடரே மிகப்பரவலாக வழங்கியுள்ளது.27 இது "சந்திரனும் சூரியனும் உள்ளவரை" என்று பொருள் படும். சோழரி சூரிய குலத்தைச் சேர்ந்தவர்களாதலால், சூரியனையும் உள்ளடக்கிய தொடர் வழக்குப் பிரபலமாகி யிருக்கலாம்; இரண்டாம் வரகுணபாண்டியனது சாசன மொன்று தவிர இத்தொடரை வழங்கும் ஏனைய சாச னங்கள் யாவும் சோழருடையனவாக இருத்தல் கவனித் தற்குரியது. நுந்தா விளக்கு எனக் குறிப்பிடப்பட்ட போதும் அதை இரவில் எரித்துப் பகலில் அணைக்கும் வழக்கம் இருந்திருக்கலாம்; அதனல் இரவும் பகலும் எரிக்கவேண்டும்28 என்று சாசனங்கள் சிலவற்றிற் கூறப் பட்டுள்ளது.
25. S. I. I. Vol. XII. p. 39.
26. S. I. I. Vol. XII. p. 38.
27. E. I. Vol. V, p. 42, Vol. XX, p. 52, S. I. I.
Vol. XIII, p. 1 19, 136, 167, 171; Vol. V, p. 246, Vol. III. p. 230.
28 E. I. Vol. VII. p. 140, Vol. XX, p. 52, p. 53,
Vol. XXIII, p. 42; S. I. I. Vol. XIII, p. 1 19, 162, 167. Vol, V, p. 246 etc.
147

Page 85
விளக்கு வைப்பதற்குப் பொருள் கொடுத்தோர் அந்தத் தருமத்தை மேற்பார்வையிடுவதற்கும் போறுப் பேற்பதற்கும் குறிப்பிட்டவரை நியமித்துச் செல்லும் வழக்கம் காணப்படுகின்றது: இங்கு உள்ளூர் நிறுவன மானசபை முக்கியத்துவம் பெறுகின்றது சபை அந் தணர்களின் கிராமிய நிறுவனமாகும். பொருள் அநேக மாகச் சபையிடமே கொடுக்கப்படுகின்றது.29 இதே தொடர்பில், பரடை சபை,30 மூல பருடை34 என்பனவும் குறிப்பிடப்படுகின்றன. பரடை என்பது பரிசத் என் னும் வட சொல் லின் திரிபாக இருக்கவேண்டும் பரிசத் என்பது வடமொழியில் உள்ளூர் நிறுவனத்தையே குறிக் கிறது. பதிபாத மூலம் என்பதும் சில சாசனங்களிலே காணப்படுகின்றது:32 கோவிலிலுள்ள இறைவனுடைய அடியார்களை இத்தொடர் குறித்திருக்கிறது. அமிர்த கணம் என்பது இரண்டு சாசனங்களிலே காணப்படு கின்றது,33 கோவிற் பொருளைப் பெற்றுக்கொள்ளும் குழு என இது விளக்கப்படுகின்றது. இவை யாவும் சபையோடு தொடர்புடையனவாக இருக்கவேண்டும். சபையின் பல் வேறு வாரியங்கள் அல்லது குழுக்கள் ஒரு சாசனத்திற் கூறப்படுகின்றன.**
29. E. I. Vol. XX. p 52, 53; S. I. I, Vol, III, p. 98;
S. I. I., Vol, XII, p. 23, 37, 39, 42, 51, Vol, XIII, p. 132, etc. 30 E. I. Vol, V, p. 42. 31. S. I. I, Vol, XIII, p. 167. 32. S. II, II. Vol, Xll.I, p. 149, Vol, V.
P. 246. p. 488. S. I. I, Vol. XII, p. 37, 40. S., I, I, Wol, XIII, p. 163.
33. 34.
148

பிராமணரல்லாதாரின் உள்ளூர் நிறுவனமான ஊர் ஓரிடத்திற் பொறுப்பு ஏற்கின்றது.33 சபையும் ஊரும் தேவகன் மியும் ஒருங்குசேரக் கூறப்பட்டுள்ளனர்.38 தேவகன்மி என்பது கோவிற் கருமம் செய்பவராக அல்லது பூசாரியாக இருக்கலாம் தேவகன்மி மட்டுமே குறிப்பிடப்பட்ட இடமும் உண்டு.37 ஊராரோடு இசை யாளர் சேர்ந்தும் கருமமாற்றியுள்ளனர்.38 கோயிலுடை யான் 39 என ஒரு சாசனம் கூறுவது கோயிலை நிர்வகிப் பவரையாகலாம். இன்னேரிடத்திலே சான்ருேர் என்ற வகுப்பினர் பொறுப்பேற்கின்றனர்.40 விளக்குவைப்பதற் காகச் சபைக்கும் பணம் கொடுபடுமிடங்களில், சபை பணத்தைத்தான் எடுத்துக்கொண்டு ஊர்மஞ்சிக்கம் என் னும் கிராமப் பொது நிலத்திலே கோவிலுக்கு நிலம் தானம் செய்வதுண்டு,44 இந்த வகையிலே சபை கிடைத்த பணத்தைக் கொண்டு கோவிலுக்குத் திருப்பணி செய்வ துண்டு; சோவிலொன்றுக்குத் திருமஞ்சனசாலை அமைக் பட்டது ஒருதாரணமாகும்.கி விளக்கு வைப்பதற்கு ஆடு கொடுபட்ட இடங்களில், சபை ஆட்டை இடையரிடம் கொடுத்து நெய்க்கு ஒழுங்குசெய்தது.48
சிவன் கோவிற் தருமத்தை மேற்பார்வையிடும் பொறுப்புச் சிவனடியார்த்துறவிகளான மாகேசுவரருக்
35. S I. I, Vol XII, p. 39. 36. S. I. I. Vol III, p. 227. 37. S. I. I, Vol III, p. 230. 38. S. I. I, Vol XII, p, 168. 39. S. I. I, Vol XII, p. 165. 40. S I. I, Vol XIII, p. 169. 41. S. I. I, Vol III, p. 96, 100, Vol, XIII. p. 171. 42. S. I. I, Vol XIII, p. 131. 43. S. I. I, Vol XIII, p. 132,
149

Page 86
குப் பெரும்பாலும் வழங்கப்பட்டது.44 மாகேசுவரர் நாற்பத்தெண்ணுயிரவர் பற்றிய குறிப்பு இரண்டு சாச னங்களில் இடம்பெறுகின்றது;கில் பெருந்தொகையான மாகேசுவரர் இருந்தனர் என்பதையே இந்த எண்ணி லிருந்து அறிந்துகொள்ளலாம், சாசனங்கள் சிலவற்றிற் சபை மட்டுமே குறிப்பிடப்பட சாசனங்கள் வேறு சில வற்றில் மாகேசுவரரி மட்டுமே குறிப்பிடப்படுகின்றனர் சபையையும் மாசேசுவரரையும் சேர்த்துக் கூறும் சாச னங்களும் பல வாம் விளக்கு எரிப்பதிலே தடைதாமதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்டவரைதி தண்டித்துத் தரு மத்தை நிலைநிறுத்தும் 'உரிமையையும் மாகேசுவரருக்கு வழங்கப்பட்டுள்ளது.40 சபைக்கு இந்த உரிமை இருந்த தாகத் தெரியவில்லை.
மாகேசுவரர் இல்லாத இடங்களிற்போலும் அக்காலச் சட்டமன்ற மெனத்தகும் தர்மாசனத்துக்கு அந்த உரிமை வழங்கப்பட்டுள்ளதுகி? ஆஞல், சில சாச னங்களிலே சபை, தர்மாசனம், மாகேசுவரர் என்ற மூன்றும் ஒருங்கே இடம்பெறுகின்றன. தருமத்தை நிலை நிறுத்துவதற்கு இன்னெரு வழியும் சில இடங்களில் உதவியது. தண்டமாக விதிக்கப்படும் பணம் அன்று ஆட்சி செய்கின்ற அரசனுக்குச் சேரவேண்டும் என்று
44. E. I. Vol, VI, p. 140; S. I. I. Vol. III. p. 95, 96, 221, Vol. VII, p. 312, Vol. XII, p. 22, Vol, XIII. p. 116. etc.
45. E. I. Vol, XX, p. 53, 52,
46. E. I. Vol, XX, p, 52, S. I I, Vol, III, p. 95, 98,
100 Vol, XIIl p. 173.
47. S. l. I, Vol, XII, p. 38, 39, 40. Vol, XIII,
p. 157, 160.
150

சில சாசனங்கள் விதித்துள்ளன,48 தருமம் தவறுமிடத்து மத்திய அரசாங்கமே நடவடிக்கை எடுக்கும்படி தூண்ட இது உதவியிருக்கும்; விளக்கு வைப்பதற்குக் கொடு பட்ட பொன்னை வட்டிக்குக் கொடுத்துக் கோவிலில் வட்டியைத் த வருது பெற்றுக் கணக்கு எழுதிவைப்பது இரண்டு சாசனங்களிலிருந்து தெரியவருகின்றது.49 வட் டியை வாங்கிச் செல்ல வருவோருக்கு விதிக்கப்பட்டுள்ள உணவு முதலிய உபகாரங்களைப் பற்றி அறியக்கூடியதா யுள்ளது.50 விளக்கு எரிக்கும் தருமத்தைப் பேணுவதற் காக எடுக்கப்பட்ட முயற்சிகளே இவையாம்.
நுர்தா விளக்கு எரிப்பதை மட்டுமே கூறும் சாசனங்கள் பல வாயினும் நுற்தா விளக்கோடு வேறு சில அறச்செயல்களையும் சேர்த்துக் கூறும் சாசனங்களும் பல காணப்படுகின்றன: நுந்தா விளக்கோடு பகல் விளக்கும் ஒரு சாசனத்திற் கூறப்பட்டுள்ளது.31 நுந்தா விளக்கு வைப்பதோடு பிராமணர் ஒருவருக்கு உணவும் படைக்க வேண்டும் என்று இன்ருெரு சாசனம்32 கூறும்; திரு விளக்கும் திருவமுதும் பல இடங்களிலே கானப்படுகின் றன,58 விளக்கோடு சந்தியாகால அமுது கூறப்பட்டுள் ளது,54 விளக்கு, கிடாரம், தடம் என அடுக்கிக் கூறும்
48. S. I. I, Vol, XII, p. 42, Vol. XIII p. 173. 49. S. I. I, Vol, XII, p. 39, 45. 50. S. I. I, Wol, XII, p. 38, 39, 45. 51. S. I. I, Wol, IHI, p. 230. 52. S. I. I, Vol, XIII, p. 171.
53. S. I
. I, Vol, III, p. 96, Vol. XII, p. 24, 36, 42, 51, Vol. XIII, p. 160
54. E. H, Wol, XII, p. 227,
151

Page 87
சாசனமும் உண்டு, விளக்குக்கு நெய்யும் கற்பூரமும் கொடுபடவேண்டுமென ஓரிடத்தில் எழுதப்பட்டுள்ளது.58
விளக்குவைத்தல் முதலிய தருமங்களேச் சாசனங் களாக எழுதிப் பொது இடங்களில் வைப்பதனுல், பொது மக்களும் அத் தருமங்களே நிைேநாட்டுவதில் ஊக்கம் ாாட்டக்கூடும். மேலும் தருமத்தைப் பேணிவரும்படி மக்களப் பணிவாகக் கேட்கும் சாசனங்களும் தருமத் தைப் பேணுவிடின் எத்தகைய இழிவு ஏற்படும் என்று கூறும் சாசனங்களும் இவ்விரு கூறுகளும் அமைந்த சாச ாங்களும் எனச் சாசனங்களே மூன்ருக வகுக்கலாம். திருமத்தைப் பாதுகாப்பவருடைய "அடி என் தலமேலன" என்று தானஞ் செய்தவர் பல இடங்களிற் கூறியுள் Tாரீ,?ே "பாததுரளி என் துலேமேலுன" என ஒரு சாசனத் திற் கூறப்பட்டுள்ளது.58 தருமத்துக்குத் தீங்கு செய்ப வன் தன் தாய்க்குக் கனவணுக இருப்பவன் என்று இக ழப்பட்டுள்ளான்." அவனுக்குக் கிடைக்கவேணடிய பாவம் "கங்கையிடைக் குமரியிடைச் செய்தார் செய்த பாவம்" எனப்பட்டுள்ளது,00 கங்கையும் கன்னியாகுமரி யும் சைவர்களுக்கு மிகவும் புனிதமானவை: புனித தீர்த் தங்களிலே புண்ணியங்கள் சிறப்பாகப் பயன் தருவது போலப் பாவங்கள் கொடிய துன்பத்தைத் தரும்,
55. S. II, II, Wol, XIII, p. 136,
56. S. I. I, Wol, III, p. 100.
57. S. I. II, Wol, III, p. 96, 95, 100; Wol, XII p. 24:
Wol. XIII, p. 160, 171
58. S. I. II, Wol, III, p. 233.
59. S. I I, Wol, XII, p. 24,
60, S. I. II, Wol, III, p 95, 98, 100; Wol. XIII, p. 1 60
B, II, XII, p. 227, 228,
Iñ፰

தஞல், அந்தப் பயம் தருமத்துக்கு இடையூறு செய்ய ர்களுக்குத் தடையாக அமையவேண்டும் என்ற நோக் கில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது:
நுந்தா விளக்கு அல்லாத விளக்கும் சிவன்சோவி ವೆ! வைக்கப்பட்டுள்ளது: தேவரடியாள் சேந்தன் செய்யவாய் மணி சந்தி விளக்குக்கும் ஆற்றுத்தண்ணிர் ஒரு குடத்துக்கு மாகப் பத்துக் கழஞ்சு பொன் வைத்ததைப் பற்றி ஒரு சாசனம் கூறியுள்ளது. சந்திவிளக்கு என்று இரு சாசனங்களிற் காணப்படுவது3ே சந்தியாகால விளக்காக இருக்கலாம்: ஒரு பகுதியே கிடைத்துள்ள ஒரு சாசனம் பகல் விளக்கைக் குறிப்பிடுகிறதென ஊகிக்கலாம் 63 நான்கு சாசனங்கள் பகல் விளக்கு எனத் தெளிவாசுக் கூறியுள்ளன.4 எரு மனம் பிடா ரஞ்செட் சன்னசரி மன், பிராமனி நாராயனன் பூண்டி, மன்ரு டி பவதாயன், கடம்பங்குடி ஊர்க்கிழத்தி சீராமன் மூத்தாள் என்போர் இவ்வினக்குகளே வைத்துள்ளனர்.
சிவன் கோவிலுக்கு விளக்கு வைப்பது பற்றியே பெரும்பாலான சாசனங்கள் காணப்படுகின்றபோதிலும் பூசை ஒழுங்காக நிலேபெறச்செய்வதை நோக்கமாகக் கொண்ட சாசனங்கள் சிலவும் கிடைத்துள்ளன. கோவி லுக்கு நிலம் கொடுத்தும் பணம் கொடுத்தும் இத்த கைய ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. கோவில் அர்ச்சனேயை
I. S. I. II, Wol, XIII, p. 42, 62. S.I. 1, Wol. XII, p. 44, Wol. XIII. p. 153. 63. S. L.I., Wol. XII, p. 28. 54. S., I, II, Wol. XIII, p, 153, 165, Wol. W, p. 276,
Wol, WII, p. 316,
153

Page 88
நடத்துவதற்கான செலவுக்காக விடப்பட்ட நிலம் என்ற பொருளில் அர்ச்சஞபோகம் கூறப்பட்டுள்ளது. 65 இவ் வாறு கூறுவன யாவும் பல்லவர்களுடைய சாசனங்க ளாகக் காணப்படுகின்றன: அரிச்சனுபோகம் என்று கூறப்படும் இடங்களிலே பூசையில் எவ்வகைச் சேவை களுக்காக நிலம் விடப்பட்டது என்ற தனிக் குறிப்பு இல்லை; இவ்வகைத் தானங்களேக் கூறும் சாசனங்களில் ஒன்று தவிர, ஏனையவை அளவிற் சிறியவை. ஒரு சாச னம் மட்டுமே பெரிய நிலத்தின் எல்ரேகள் யாவற்றை யும் விரிவாகக் கூறுவதால், அளவில் நீண்டுசெல்கின்றது.t அர்ச்சஞபோகம் என்று பெயர்பெருத நிலக்கொடை களிலே செலவுவகைகள் தனித் தனியாகக் சிறப்படு கின்றன.? சிவனுக்குத் திருவமுது ஒன்றுக்காக நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. 68 நந்தவனத்துக்குப் பொறுப் பாக உள்ளவர்கள் இருவர்க்கும் கண்காட்டிகள் இருவர்க் கும் பன்னிருவர் வேறு சிலரின் தேவைக்காகவும் நிலம் கோவிலுக்கு விடப்பட்டது தெரியவருகின்றது.69 இறை வனுக்குத் தினமும் திருவமுது படைக்கவேண்டுமென்றும் தவறினுல் தண்டம் செலுத்தவேண்டும் என்றும் இன் னுெரு சாசனம் கூறுகின்றது.? திருவமுதுக்கு நெல் இவ்வளவு, பூசை செய்யும் சிவப்பிராமணனுக்கு நெல் இவ்வளவு, பூரீபலி படைப்போருக்கு நெல் இவ்வளவு, பூமாலே கட்டுதல், திருப்பதிசம் பாடுதல் முதலிய பணி கஃளச் செய்வோருக்கு நெல் இவ்வளவு, திரு துந்தா
65. S. I. I, Wol, XII, p. 26, 35, 37, 48. óf. S. L. 1, Wol. XII. p. 48. 67. S. I. I, Vol. III. p. 93, Vol. XII, p. 34.
Wol. XIII, p. 157, 159. 68. S. I. II, Wol. XIII. p. 159. 69. S I, I, Wol. XIII. p. 157. 70. S. I I, Wol, XII. p. 34.
ــــــــ
4.

விளக்கு திருமெய்ப் பூச்சு முதலிய நற்காசியங்களுக்குப் பொன் இவ்வளவு என்று ஒரு சாசனம் நிலத்தானத்தி லிருந்து பூசை நடக்கவேண்டியவாற்றை விரிவாக வகுத் துக் கூறியுள்ளது.1
கோவிற் பூசைக்குக் காசாகவும் பொன்னுகவும் பணம் வழங்கப்பட்டுள்ளது. பொன் வழங்கப்பட்ட தைச் சில சாசனங்கள் எடுத்துக் கூறுகின்றன.72 இச் சாசனங்கள் யாவும் பல்லவ மன்னருடைய பெயரில் இருந்தாலும், இவற்றுள் ஒன்றிலே பெருந்தொகையான ஐஞ்நூற்றெழுபது கழஞ்சு பொன் வழங்கித் திருவீரட் டானத்துச் சிவபெருமானுக்குப் பூசைக்கு ஒழுங்குசெய்த வன் இரண்டாம் வரகுணபாண்டியனுவன். திருவீரட் டானம் பல்லவருடைய ஆட்சிக்குட்பட்ட நடுநாட்டைச் சேர்ந்ததால் நிருபதுங்கவர்மனுடைய ஆட்சியாண்டே இச் சாசனத்திற் கூறப்பட்டுள்ளது. நான்கு நேரத் திரு முதுக்கு வேண்டிய அரிசி, பச்சப்பயற்றுப்பருப்புக்கும் மாயம் முதலிய ஐந்து கறி, புளிங்கறிக்கு வேண்டிய பிரி, கறிக்கு வேண்டிய காயம், கறி துமிப்பதற்கான நெய், நிவேதிக்கவேண்டிய நெய் முதலியன வட்டியாக வந்து சேரும்படி இரு நூற்றுத்தொண்ணுாறு கழஞ்சு பொன் கொடுபட்டது பற்றி அதே சாசனம் கூறும்.? ருபதுங்கனுடைய மஃனவி வீரமாதேவியார் இரணிைய கருப்பமும் துலா பாரமும் புகுந்து புண்ணியம் தேடிக் காண்டவளாய் அப் பொன்னில் ஐம்பது கழஞ்சு திருக் காடிகாவில் இறைவனுக்குக் கொடுத்தாள். அதில் பாதி பட்டிக்குக் கொடுபட்டு அர்ச்சகருக்கு இரு நாழி அரிசி
71. S. I. I, Wol. lll, p. 93. W2. S. I 1, Wol, XII, p. 30, 32, 51: 73. S. 1. I, Wol, XII, p. 30
155

Page 89
யும் ஒரு பிடி நெய்யும் நுந்தா விளக்குக்கு உழக்கு நெய்யும் தினசரியாகப் பெறப்பட்டது. 74 கோவிலுக்குத் தண்ணீர் எடுத்துக் கொடுப்பதற்காகப் பதினெரு கழஞ்சு பொன் வட்டிக்குக் கொடுபட்டது,75
காசு கொடுத்துப் பூசைக்கு ஒழுங்கு செய்யப் பட்ட செய்தி வரகுண பாண்டியனுடைய இளங்கோக் குடித் திருப்போத்துட்ையார் கோவிற் சிக்ாசனத்திற் காணப்படுகின்றது.78 அரசன் இருநூற்றுத்தொண்ணுாறு காசு இளங்கோக்குடிச் சபையிடம் கொடுத்தனன். சபை ஆண்டுக்கு ஐஞ்நூற்றெண்பது கலம் நெய் அளக்கவேண் டும். கோவிற் பணியாளரும் சபை வாரியரும் கோவி லுக்கு நான்கு நேரமும் திருவமுது செலுத்தவேண்டும். ஒரு நேரத் திருவமுதுக்கு வேண்டிய அரிசி, பயிற்றுப் பருப்பு, நெய், தயிர், வாழைப்பழம், சர்க்கரை, காய்க் கறி, புளிங்கறி, புழுக்குக்கறி, பொரிக்கறி, வெற்றிலை, பாக்கு என்பன எவ்வளவு என முதலிற் கூறப்பட்டிருச் இன்றன. நான்கு நேரதி தேவைக்காகப் பின்பு யாவும் நாலாற் பெருக்கிக் கூறப்படுகின்றன; ஒவ்வொரு நாளும் அந்தந்தப் பொருளைப் பெற்றுக்கொள்வதற்காக, வட்டி யாக வந்த நெல்லில் ஒவ்வொரு பகுதி ஆண்டாண்டு தோறும் பிரித்துக் கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு தவ ருமல் நடந்து வரவேண்டுமென்று வரகுண மகாராசர் விதித்தார் எனச் சாசனமுடிவிற் கூறப்பட்டுள்ளது.
சிவன்கோவிலில் விசேட பூசைகளுக்கான ஒழுங் குகளும் செய்யப்பட்டுள்ளன; புண்ணிய தினங்களில்
74. S. I. I, Vol, XII, p. 32. 75. S. I. I, Vol, XII, p. 51, 76, E. I, Wol, IX, P. 88,
156

விசேட பூசைகளுக்கான ஒழுங்குகள் செய்யப்பட்டதை எடுத்துக் கூறும் சாசனங்கள் சில கிடைத்துள்ளன. 77 சூரியன் ஓர் இராசியிலிருந்து இன்னேர் இராசிக்குச் செல்லும் மாதத்தொடக்க காலமாகிய சங்கிராந்தியில் விசேடபூசை நடைபெற்றதை இரண்டு சாசனங்கள் கூறுகின்றன.78 கொடும்பாளுர்த் தேவி பூதி அறிந்திகை திருவொற்றியூர் மகாதேவருக்குச் சங்கிராந்தி தோறும் அரிசி, மா, வாழைப்பழம், சர்க்கரை, வெற்றிலை, பாக்கு முதலியன கிடைப்பதற்காக இருபத்தேழு கழஞ்சு பொன் கொடுத்தாள், வைக்காட்டூரி பொன்னைப் பெற்று அரை ஆண்டுதோறும் வட்டிசெலுத்திவந்தது.? அதே கோவி லுக்குப் பல்லவரையர் தேவியாகிய பழியன் பில்லி ஐந்து கழஞ்சு பொன் தானம் செய்தாள்: மணலிச்சபை அப் பொன்னைப்பெற்றுக்கொண்டு, சங்கிராந்திதோறும் அரிசி, நெல், வெற்றிலை, பாக்கு, பழம் என்பன வட்டியாக எப்பொழுதும் கொடுத்துவருவதாக உடன்பட்டது மனலிச்சபை அவ்வாறு கொடுக்கத் தவறினல் தர்மா சனத்துக்குக் குறிப்பிட்ட பணம் தண்டம் கொடுத்துப் பின்னும் வட்டியைத் தொடர்ந்து செலுத்தவேண்டியிருந்
80. تن 5
சங்கிராந்திகளிலும் மேடத்திலும் துலாத்திலும் சூரியன் நுழையும் தினங்கள் "விஷ" என்னும் பெயரில் விசேட புண்ணிய தினங்களாகக் கொள்ளப்படுகின்றன; ஐப்பசி, சித் திரை என்பனவற்றில் வரும் அப்புண்ணிய
77. S. I. I. Vol. XIII. p. 169, 110; Vol. XII, 47, 30,
19, Vol. III. p. 227. 78. S. I. I. Vol XII, p. 47, 30. 79. S. I. I. Vol XLII, p. 47. 80. S. I. I. Vol XII. p. 30,
157

Page 90
தினங்களுக்கு ஒரு கோவிலில் விசேட பூசை நடைபெறு வதற்காக மூன்றம் நந்திவர்மனுடைய மனைவி அடிகள் கண்டன் மாறம்பாவையார் ஐந்து கழஞ்சு பொன் கொடுத்தார். திருவமிர்துக்கான நெய், பால், தயிர், பரி வாரத்துக்கான திருவமுதுக்கு அரிசி, கோவில் ஊழியர்க ளுக்கும் இருபது பிராமணர்களுக்கும் உணவு என்பன இப் பணத்தின் வட்டியிலிருந்து வழங்கப்படவேண்டும் என்று பல்லவ மாதேவியார் விதித்தார்.81 பகைச் சந்திர விசை யரையர் திருவாதிரைத் தினத்தில் நூறு பேருக்கு உணவு அளிப்பதற்காக இருநூறு நாழி அரிசிவைத்தார்,82 விழுப் பேரரையர் அய்யக் குட்டி அடிகள் தாயார் புகழ்த்துணை யடிகள் நூறு காடி நெல் கொடுத்தார். அதற்கு வட்டி இருபத்தைந்து காடி.நெல். அதைக் கொண்டு திருக்காற் கற்றளிச் சிவபெருமானுக்குச் சித்திரையில் வரும் சித் திரை நட்சத்திரத்திலும் புரட்டாதியில் வரும் திரு வோன நட்சத்திரத்திலும் அபிசேகம் செய்யப்பட வேண்டும் என்று ஒரு சாசனம் கூறியுள்ளது. 83
திருவிழா நடத்தும் செலவுக்காக விடப்பட்ட லம் திருவிழாப்புறம் என்று பெயர் பெற்றுள்ளது.84 6。 பவித்திரம் இந்த நிலத்தை இருவருடமிருந்து வாங்கித் திருவிழாப்புறமாகச் சபையினதும் மாகேசுவர ரினதும் பாதுகாப்பில் விட்டார். சபை இந்த நிலத்தை றையிலியாக்கியது. திருப்பெருந்துறை மகாதேவருக்கு இந்த நிலம் விடப்பட்ட்து தாயார் நினைவாக, மகன் ஒரு விசேட பூசைக்கு ஒழுங்கு செய்ததை ஒரு சாசனம்
.-് - --■ .
. Vol. III. p. 227.
S. I. I 82. S. I. I. Vol XII. p. 19. 83. S. I. I. Vol. XIII. p. 169. 184. S. I. I. Vol XIII, p. 110.

கூறுகின்றது; பூதிகண்டன் சித்திரை விஷ"வன்று திரு விழாவுக்குப் பத்தரைக் கழஞ்சு பொன் கொடுத்தான் முத்தையிற் சபை அதனை ஏற்றுத் திருவிழாக்காலத்து ஏழு நாளைக்குப் பத்தெட்டுக்குத்தல் எனப்படும் நன்கு குற்றித் தீட்டிய அரைக்கல அரிசி நாள் ஒவ்வொன்றுக் கும் கொடுத்துவர உடன்பட்டது. வட்டி கொடுக்கத் தவறினல், மாகேசுவரருக்குத் தண்டம் விதிக்கும் உரிமை வழங்கப்பட்டது,89
தான் பிறந்த நட்சத்திரத்தில் விசேட பூசை நடத்துவதற்கு ஒருவர் ஒழுங்கு செய்ததைக் குறிக்கும் சாசனம் ஒன்றும் கிடைத்துள்ளது; காட்டுருடையான் பைதாங்கிகண்டன் பொன் ஊர்க்கற் செம்மை அறுபது கழஞ்சு தானம் செய்தான் திருல மிரித்துக்கு வேண்டிய பத்தெட்டுக்குத்தற் பழவரிசி, அபிசேகத்திற்கும் திருவ மிர்துக்கும் தேவையான நெய், வாழைப்பழம், சர்க்கரை, கறியமிர்து, அடைக்காயமிர்து (வெற்றிலை, பாக்கு) இளநீர், பஞ்சகெளவியங்கள், சந்தனம் தூபம் கற்பூரம் முதலியனவற்றுக்கு வேண்டியன, நந்தாவிளக்குக்குரிய நெய் முதலியவற்றுக்காக இப் பணம் வைக்கப்பட்டது. 86
காரணம் எதுவும் சிறப்பித்துக் கூழுமல் கோவி லுக்குப்பொதுவாக விடப்பட்ட நிலம் தேவதானம் எனப்பட்டது. பாண்டிய மன்னர் எண்ணிறந்த தேவ தானங்களைச் சிருட்டித்தனர் என்ற குறிப்புப் பெரிய சின்னமனூர்ச் சாசனத்திற் காணப்படுகின்றது.87 தேவ தானம், தேவர்போகம் என இரண்டு, சாசனங்களிற்
85. S. I. I. Vol. XII, p 25. 86. S. II, II. Vol. XIII. p. 40. 87. S. I. I. Vol. III. p. 454.

Page 91
கூறப்படுகின்றன.88 சிகரக்கோவில் ஒன்றைப் புதுக்கு வித்த தட்டான் மாதன் மகன் அரிதீரன் அழிஞ்சிற் களம்பட்டி என்ற நிலத்தை விலைக்குப் பெற்று அக் கோயிலுக்கே தேவர்போகமாக விட்டான்; ஆயிரவன் ஏணுதி சேந்தன் கல்லையிடம் மூன்று கழஞ்சு பொன்னுக்கு நிலம்வாங்கித் திருமழபாடி மகாதேவருக்குத் தேவதான மாக விட்டான்,89 தேவதான நிலத்துக்கும் அரசனுக்குச் சில சில வரிகள் கொடுக்கப்படவேண்டும்:
தேவதானநிலம் , எவ்வெவ்வாறு பயன்படுத்தப் படலாம் என்றும் விதிக்கப்பட்டது: இவ்விபரங்கள் யாவும் ஒரு சாசனத்திற் குறிப்பிடப்பட்டுள்ளன. 90 நிலம் தேவதானமாக்கப்பட்டதால் மத்திய அரசாங்கத்துக்குச் சேரவேண்டில் வரிகளில் ஒரு பகுதி கோவிலுக்குச் சேர வேண்டும் என்று கூறப்படுகின்றது. அவ்வரிகளாவன:- நாடாட்சி, ஊராட்சி, புரவு பொன், திருமுகக் காணம், வட்டி நாழி, புதாழி, தட்டுக்காயம், ஈழம்பூட்சி, இடைப் பூட்சி, மன்றுபாடு, தரகு, தறிக்கூறை, கூலம், நல்லா, நல்லெருது, நல்லாடு, நாடு காவல், ஊடுபோக்கு கல் லானக் காணம், குசக்கானம், பறைக்காணம், பட்டின ச் சேரி முதலியன. இச்சாசனம் மூன்ரும் நந்திவர்மன் காலச் சாசனமாக இருப்பதால், பல்லவர்காலப் பிற் பகுதித் தமிழ்நாட்டில் இருந்த வரிவகைகளைப்பற்றி அறி வதற்கு உதவும் சாசனங்களுள் இதுவும் ஒன்ரு கும். சுட்ட ஒட்டால் மாடமாளிகை எடுக்கப்பெறுவதற்கும் தமனகம், இருவேலி, செங்கழுநீர், உள்ளி என்பன பயி ரிடுவதற்கும் தென்னை நடப்பெறுவதற்கும் துரவு கிணறு
88. S. I. I. Vol. III, p. 90; Vol XII. p. 42. 89. S. I. I. Vol. XIII, p. 160, 90. s. I. I. vol. II, p. 507
160

தோன்டுவதற்கும் செக்கு இடுவதற்கும் தெங்கு பண் என்பன ஈழவர் மரமேறுவதற்குக் கொடுப்பதற்கும் கோவிலுக்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. தேவதான நிலத்திலிருந்து அரசாங்கத்துக்குச் சேரும் வரிகளைக் குறைத்து அந்நிலத்துக்கு நீர்ப்பாசன வசதியும் செய்து ஆதரித்தான் மன்னன் ஒரு வன். பாண்டியன் பூணிமாற புரீவல்லபன் அவ்வாறு செய்தான்.?
சிவன்கோவில்களுக்குக் கட்டிடவேலைகள் பல, இக்காலத்தில் நடந்தன. பள்ளிப்படை என்றவகைக் கோவில்கள் பல இக்காலத்தில் புதியனவாக எழுந்தன. பெரியார் சிலருடைய உடலைப் புதைத்த இடத்து, சிவன் கோவில்கள் சில கட்டப்பட்டன. மன்னர் போர்க்களத் திற்பட்ட இடங்கள் சில, இவ்வாறு சிவன்கோவில்களாக மாறின. பிருதுவீபதி என்ற கங்க மன்னன் பல்லவருக் கும் பாண்டியருக்கும் இடையில் நடந்தபோரிற் பல்லவர் பக்கம் நின்று போரிட்டு மாண்டான். அவனைப் புதைத்த இடத்து அவனுடைய மகன் பள்ளிப்படைக் கோவிலும் அதிய்தகாரம் எனப்படும் சமாதியும் கட்டினன்.92 பர மேசுவரன் கோவிலுக்கு முன்றில் களத்தூர்ப் பெருமக்க ளால் அமைக்கப்பட்டது.93 மூன்றம் நந்திவர்மன் காலத் திலே சிவன்கோவிலொன்றுக்கு செல்வவாணராயன் முக மண்டபம் செய்வித்தான்,94
விடேல்விடுகுமுத்தரையன் என்ற சிற்றரசன் மகன் சாத்தன் பழியிலி சிவபெருமானுக்குக் குகைக்
91. E. I. Vol. XXVIII. p. 91. 92. E. I. Vol VII, p. 192. 93. S. II, II. Vol XII. p. 21. 94. S. I. I. Vol XII, p. 18.
16

Page 92
கோவில் குடைவித்தான். அக்கோவிலுக்குப் பல திருப் பணிகளை அவனுடைய மகள் பழியிலி சிறிய நங்கை செய்வித்தாள். அவள் செய்வித்த திருப்பணிகளாவன:- முகமண்டபம், இடபம், இடபக்கொட்டில், பலிபீடம் என்பன,95 இக்காலத்தில், கோவில்கள் பல, கருங்கற் கோவில்களாக மாற்றப்பட்டன; திருத்தணியிற் சிவ பெருமானுக்குக் கருங்கல்லாலான கற்றளியொன்று நம்பி அப்பி என்பவனல் அமைக்கப்பட்டுள்ளது. அதைப் பாராட்டிப் பல்லவ மன்னன் அபராசிதவர்மன் ஒரு வெண்பாப் பாடியுள்ளான். அந்த வெண்பாவும் அவன் பாடினன் என்ற குறிப்பும் ஒரு சாசனமாக அமைந்துள் 6ft 607.96
சிவன் கோவிலுக்கு வேறுபொருள்கள் சிலவும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலாம் ஆதித்தல் காலத்தில் மாற மரையர் மகனுராகிய பிருது வீபதியார் திருவூரல் மகாதே வருக்கு முன்னூற்றுப் பதினேழு கழஞ்சு நிறை யுள்ள வெள்ளிக் கெண்டியொன்றைச் சூரியகிரணத்தி னன்று தானஞ்செய்துள்ளார்.97 செம்பியன் பிருது விகங் கரையர் திருப்பழனத்து மகாதேவருக்கு நயபாளம் என்ற அணி கொடுத்துள்ளார். அந்த அணியின் நடுவில் உருத்திராட்சங் கட்டப்பட்டது; அந்த அணி இருபத்தாறு கழஞ்சுடைய மாணிக்கக்கல்லைப் பிறைவடிவிற்கொண் டது. அந்த அளவில் ஐம்பத்துநாலு வயிரம், இரண்டு மாணிக்கம், இரண்டு மரகதம் என்பனவும் இடம்பெற் றன.98 நான்கு கழஞ்சு நிறையுடைய பொற்பட்டம்
95. S I. I. Vol. XII, p. 26. 96. S. I. I. Vol. XII, p. 42. 97. E. I. Vol. XIX, p. 81. 98. S. I. I. Vol. XIII, p 170.
62

கன்னர தேவர் தேவியாராற் கொடுக்கப்பட்டது இன் னெரு சாசனத்திலிருந்து தெரியவருகின்றது.99
நாலூர்ச்சபை திருமயானத்து மகாதேவர் கோவி லிலிருந்து, இருபத்தைந்து காசு பெற்றுக்கொண்டு, அக் கோவிலுக்கு அங்காடிக் கூலியை விட்டுக்கொடுத்திருக் கிறது. அங்காடிக் கூலி விபரங்கள் இச் சாசனத்திற் காணப்படுகின்றன. புறவூர்களில் நின்று நெல், அரிசி முதலிய அளப்பனவற்றில் காசுக்கு நாழியும் கிடந்து விற்பனவற்றில் குவியலுக்கு நாழியும் நிறுப்பனவற்றில் நிற்ையால் ஒரு பலமும் வெற்றிவ கூடைக்கு ஒரடுக்கும் பாக்கு பெட்டிக்கு ஒன்றும் வசூலிக்கப்பட்டுவந்தது என் பது இச்சாசனத்திலிருந்து தெரியவருகின்றது,100 கோவி லுக்குப் பொன்னேக்கொடுத்து அதற்கு வட்டியாக இன்ன இன்ன பணி நடைபெறவேண்டும் என்று விதிக்கும் சாசனமும் கிடைத்துள்ளது,101 பெருமுளையூர்ச்சபையார் திருவாலங்காட்டுச் சிவன்கோவிலில் நூற்றெட்டுக்கழஞ்சு பொன் பெற்றுக்கொண்டு ஆண்டாண்டுதோறும் இரு நூறுகலம் நெல்லும் தினமும் உரி ஆழாக்கு தெய்யும் அளப்பதாக உடன்பட்டனர். 102
தமிழ்நாட்டிற் சைவம் செல்வாக்குமிக்கு விளங் கியபோதும் வைதிக சமயப் பிரிவுகளான ஆறனுள் ஏனைய ஐந்தின் முழு முதற் கடவுளரான திருமால், காளி, கணபதி, சூரியன், முருகன் என்போரும் வழிபடப்பட்டு வந்துள்ளனர். சைவசமயத்துக்கு அடுத்துச் செல்வாக்கு
99. S. I. I. Vol XIII, p. 17. 100. S. F. I. Vol II. p. 222. 101. S. I. I. Vol XII. p. 27, 28. 102. S. I. I. Vol XII. p. 27.
168

Page 93
மிக்க சமயமாக வைணவம் விளங்கியது: சைவக்கோவி லுக்கு வழங்கப்பட்ட தானத்தை ஒத்ததாகவே வைண வக் கோவிலுக்கும் வழங்கப்பட்டன. விளக்குவைத்தலைக் கூறும் சாசனங்கள் சில கிடைத்துள்ளன. அவற்றுள் இரண்டு நுந்தாவிளக்கைக் குறிப்பிடுகின்றன. திருமால் கோவில்கள் பல இடங்களில் விஷ்ணு கிருகங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன மன்முடிகள் தொண்ணுாறு சாவாமூவாப் பேராடுகளை விழுப்பெருந்தாய விஷ்ணு கிருகத்து நுந்தாவிளக்குக்காக விட்டனர். 103 திருமால் கண்ணனவதாரஞ் செய்தபோது கோகுலத்தில் ஆயர் பாடி யில் இடையரிடையே வளர்ந்ததால், மன்ருடிகள் எனப் பட்ட இடையர் அவரைச் சிறப்பாகப் போற்றினர்; காடுபட்டி முத்தரையர் மகனர் அரிகண்டப்பெருமானர் திருமுக்கூடலிலுள்ள திருமாலுக்குத் திருநூற்தாவிளக்கு எரிப்பதற்காகச் சியபுரத்துச் சபையிடம் முப்பது கழஞ்சு பொன் கொடுத்தார். ஒரு கழஞ்சுக்கு ஆண்டு வட்டி விகிதம் மூன்று மஞ்சாடியாகும். எனவே முப்பது கழஞ் சுக்கும் ஆண்டு வட்டி நாலரைக் கழஞ்சாகும். சபை ஒரு கழஞ்சுக்கு நாற்பது நாழி எண்ணெய் வீதம் ஆண்டு தோறும் நூற்றெண்பது நாழி எண்ணெய் கொடுத்து வரும் 104 நந்தாவிளக்கு என்று குறிப்பிடாது வெறுமனே விளக்கு என்று குறிப்பிடும் சாசனமும் கிடைத்துள்ளது:
திருவேங்கடத்துப் பெருமாள் திருப்பணி முத லியன கோவில் மூலத்தானத்தில் நடந்தமையால், அவ ருக்குத் தற்காலிக இருப்பிடமாகத் திருவிளங்கோயில் ஒன்று அமைக்கப்பட்டது. அவ்விளங்கோயிலுக்குச் சோழ நாட்டுச் சோழனர் உலகப் பெருமானர் விளக்குவைப்ப
SSLLLeSLASASqS SLLkSkSqMSMSMSSSLS LSLSSSMSL00 0MMMMAMSAAL S MLM qAMS M SASLSASqqqS SSSSeMS MMM
103. S. I. I. Vol. XII. p. 22. 104. S. I. I. Wol, XII, p. 32.
64

தற்காக முப்பது கழஞ்சு பொன் கொடுத்தார்; பணத் துக்கு நிலம் வாங்கி, நிலத்தின் வருவாய் மூலம் விளக்கு வைக்கப்பட்டது.105 சோழனர் எனவும் உலகப்பெரு மானர் எனவும் குறிப்பிடப்படுவதனல், கொடையாளி சோழர்குல அரசன சலாம். சாசனம் நந்திவர்மன் காலத்த தாகலாம், சோழ அரசன் அவனுக்குக் கீழ் அடங்கிய சிற்றரசனகலாம் விளக்குக்கும் திருவமுதுக்கும் ஒழுங்கு செய்யப்பட்டது ஒரு சாசனத்திலிருந்து தெரியவருகின் றது, திகைத்திறல் விஷ்ணுகிருகத்துக்கு முன்னூறு ஆடு கள் விளக்குக்கும் இறையிலி எனப்படும் வரியில்லாத இரண்டு வயல்கள் அமுதுக்கும் கொடுபட்டன. 100
விளக்கு அல்லாத பிறதேவைகளுக்காகவும் திரு மால் கோவிலுக்குக் கொடைகள் வழங்கப்பட்டுள்ளன: பரமேசுவர விஷ்ணு கிருகத்துக்குப் பெருந்தொகையான பணம் வழங்கப்பட்டுள்ளது. தந்திவர்மன் பத்தாயிரம் கழஞ்சு பொன் வழங்கியுள்ளான்; அவனிசந்திரர் மூவா யிரம் பொன் கொண்டுவந்து கொடுத்திருக்கிருர், 107 சாச னத்தின் தொடக்கம் மட்டுமே கிடைத் திருப்பதால், இந்தப் பணம் என்ன காரியத்துக்காகக் கொடுபட்டது எனத் தீர்மானிக்கமுடியவில்லை. சபை கோவிலுக்கு இறையிலியாக நிலம் விற்றிருக்கிறது. குறிப்பிட்ட எல்லைகளுக்குள் அடங்கிய இரண்டாயிரம் குழிகொண்ட துண்டு நிலங்கள் இரண்டு இறையிலியாக வழங்கப்பட் டன; இந்த நிலத்திற்காக இறை எச்சோறு, வெட்டி, வெயதிதானம் எப்பேர்ப்பட்ட்தும் கொடுக்கக்கூடாது கொடுப்பவர் இருபத்தைந்து காசு தண்டம்படவேண்
105. S. I. I. Vol. XII. p. 17. 106. S. I. I. Vel. XII. p. 19. 107. S. I. I. Vol. IV, p. 8,
65

Page 94
டும்.108 "மாகேசுவரர் ரகூைடி' என்று சைவருடைய சாசனங்களிற் காணப்படுவதுபோல, இச்சாசனத்தில் "பூரீ வைஷ்ணவ ர ைகூy" என்று காணப்படுகின்றது;
புண்ணிய தினங்களில் விசேட பூசை நடப்பதற் கான ஒழுங்கு ஒன்றை ஒரு சாசனத்திற் காணமுடிகின் றது. 109 கோவிலிற் பூசை செய்கின்ற சக்கர பாணி நம்பி விண்ணப்பத்தினலே சம்வத்சரவாரியம், ஏரிவாரியம் என்ற குழுக்கள் உள்ளிட்ட மகாசபை நிலதானம் செய் தது. வருமானத்திலிருந்து கோவிலில் அவியுணவும் திரு விழாவும் நடத்தப்படவேண்டும் எனவும் சூரியனுடைய வடதிசைப்பெயர்ச்சி, சூரியனுடைய தென்றிசைப் பெயர்ச்சி, சித் திரை விஷ", ஐப்பசி விஷ", சூரிய கிர கணம், சந்திர கிரகணம் என வரும் நாட்களிலே திரு மாலுக்குப் பிராயச் சித்த அபிசேகங்கள் நடைபெற வேண்டும் எனவும் சாசனம் விதித்துள்ளது காட்டுத் தும் பூர் தாராயணக் கடவுளுக்குக் கோவில் எடுக்கப்பட் டுக் கனகவல்லி விஷ்ணுகிருகம் எனப் பெயரிடப்பட்டு அக்கோவிலுக்கு மூன்று நேரப் பூசைசெய்வதற்கும் மூன்று நேரம் திருவமுது வைப்பதற்கும் நந்தாவிளக்குக்கும் பூசைசெய்பவனுடைய சீவியத்திற்கும் கனகவல்லி ஏரிக் கீழ் அமைந்த நிலம் விடப்பட்டது.110
திருமால் கோவிலிற் பூசை நடப்பதற்கு முன் னர், பிராமணருக்கு உணவு படைக்கவேண்டிய ஒழுங் தைப் பிராமணராகிய பிரமாதிராசர் செய்ததை ஒரு சாசனம் எடுத்துக் கூறுகின்றது; திருமாலுக்கு மத்தியா
108. S. II, II. Vol III. p. 30. 109. S. I. I. Vol III, p. 17. 110. E. I. Vol VII. p. 192.
166

னப்பூசை நடைபெறுவதற்கு முன்னர் பன்னிரண்டு பிராமணருக்கு ஒவ்வொருவருக்கும் ஆழாக்கு நெய் ஐந்து கறி, ஐந்து உழக்குத் தயிர், வெற்றில், இரண்டு பாக்கு உட்பட உணவு அவர்கள் திருப்திப்படுமளவும் கொடுக்கப்படவேண்டும். இப் பிராமணர்களுக்குச் சமைப் பவர்களுக்கும் சமைப்பதற்கு வேண்டிய விறகு கொடுப் பவர்களுக்கும் பிறவற்றுக்குமான செலவுக்குச் சபையே பொறுப்பேற்கின்றது. அதனல், பிராமாதிராசரி சபை யிடம் இருநூறு கழஞ்சு பொன்கொடுத்து இந்தத் தரு மத்தை ஆசந்திர தாரமும் நடத்திவரும்படி வேண்டினர்1 எனப்படுகின்றது:
தமிழ்நாட்டிலே சக்தி வணக்கமும் ஓரளவு செல் வாக்குடன் விளங்கிவந்துள்ளது. விண்ணகோ வரையர் ரற்றுக்குன்றனர் படாரிக்குப் பதினறு கழஞ்சுபொன் வைத்தார். அருவாகூரார் இப்பணத்தைப் பெற்றுக் கொண்டு தினமும் நாணுழி அரிசி கொடுக்க உடன்பட்ட னர். இவ்வாறு செய்யத் தவறிஞல் கால் நாழி கூட்டி, நாலேகால் நாழியாக விண்ணகோவரையர் வீட்டாரிடம் கொடுக்கவேண்டும் 12 சக்தி வணக்கத்தோடு உயிர்ப்பலி யிடுதல் மிக நீண்டகாலத்தொடர்புடையது. வீரர்கள் வெற்றி குறித்துத் தம்மையே பலியிடுவதாக நேரித்திக் கடன்செய்து அதை நிறைவேற்றுவதுமுண்டு; தம்மை ஒன்பது கூறுகளாக வெட்டி நவகண்டம் என்ற வகைப் பலியிடுதல் ஒருவகை ஒக்கொண்டநாகன் ஒக்கதித்தன் பட்டை பொத்தன் நவகண்டஞ்செய்து தன்னுடைய தலையை அறுத்துக் காளியின் பலிபீடத்தில் வைத்தான் இற்தச் செயலை மெச்சிய திருவான்மூர் ஊரார் பட்டை
111. S. I. I. Vol. III. p. 2. 112. S. I. I, Vol. XII. p. 17.
167

Page 95
பொத்தனுக்கு நிலக்கொடை செய்துள்ளார்கள்.118 நிலம் பட்டைபொத்தனுடைய குடும்பத்துக்குச் சேர்ந்திருக்கும் என ஊகிக்கலாம்;
படாரிக்கு ஒருவர் தானஞ்செய்த நிலத்தை அவ்வூர்ச்சபை காளிகோவில் நிரிவாகத்தர்களாகிய சாரித்திகைக் கணத்தாரிடை பொருள் பெற்றுக்கொண்டு இறையிலியாகச் செய்ததை ஒரளவு சிதைந்துள்ள ஒரு சாசனத்திலிருந்து அறிந்துகொள்ளலாம்.114 சப்தமாதரி கள் என்ற பெயரில் பிராமணி, நாராயணி, மகேசுவரி, கெளமாரி, வாராகி, உருத்திராணி, இந்திராணி என்னும் ஏழு பெண் தெய்வங்களைச் சேர்த்து நடத்தும் வழிபாடும் கூறப்பட்டுள்ளது. சபை சப்தமாதர்கள் கோவில் விமா னத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதற்கான செலவு களுக்காகக் காற்செய்நிலம் திருநந்தவனமாக வைத் துள்ளது. அந்நிலத்தின் ஓர் எல்லை படாரிகோவிலுக்குத் தெற்கு எனக் கூறப்பட்டுள்ளது.115
சூரியனுக்கான கோவில் ஒன்றே குறிக்கப்பட் டுள்ளது. அச்சாசனமும் "மாகே சுவர ர ைகூடி" என்று கூறுவதஞல், அக்கோவில் சிவனடியாரின் மேற்பார்வை யில் இருந்தது தெளிவு. தத்தன் செந்தி என்ற பிராம ணர் அக்கோவிலைக்கட்டி அவரே நிலதானமும் செய்துள் ளார். அமுதுக்கும் விளக்குக்கும் நெய்யமுதுக்குமாக நிலம் கொடுத்தார் நிலத்தை இறையிலியாக்குவதற் காகச் சபைக்கு இறைகாவல் என்ற பெயரில் பதின்
113. S. I. I Vol XII. p. 50. 114. S. I. I. Vol XIII, p. 161. 115. S. I. I. Vol XVIII, p. 167,
68

கழஞ்சு பொன்னும் கொடுத்தார்.116 ஒரு சாசனம் மட்டுமே கிடைத்திருப்பதும் அதுவும் ஒருவர் முயற்சி யையே எடுத்துக்கூறுவதும் அந்த ஒருவரும் பிராமணி யாக இருப்பதும் சூரியவணக்கம் அக்காலத் தமிழ்நாட் டிற் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாம்:
கணபதி வணக்கத்தைப்பற்றிக் கூறும் சாசன மும் ஒன்றே கிடைத்துள்ளது. அக்கோவிலையும் கட்டிய வரும் தானஞ் செய்தவரும் தேவச்சானி என்ற பிரா மணியாகக் காணப்படுகின்றர். கோவிலுக்கு நாற்பது காடி நெல் அர்ச்சஞபோகமாக வைக்கப்பட்டது. அந்தி விளக்கு, அர்ச்சனை முதலியவற்றுக்காக இந்த நிலம் வைக்கப்பட்டது. 117 கணபதி வணக்கமும் அக்காலத் தமிழகத்திற் செல்வாக்குப் பெற்றிருக்கவில்லை என்றே கொள்ளவேண்டும்;
முருக வனக்கத்தைக் கூறும் சாசனமும் ஒன்றே கிடைத்துள்ளது.18 முருகவனக்கம் பாண்டி நாட்டில் மிக நீண்டகாலமாகச் செல்வாக்குப் பெற்றுள்ளது. கிடைத்துள்ள சாசனமும் பாண்டிநாட்டுத் திருச்செந் தாருக்கு இரண்டாம் வரகுணன் செய்த பூசை ஒழுங் குகளை எடுத்துக் கூறுகின்றது. சோழப்பெரு மன்னரா கிய முதலாம் இராசராசன் முதலாம் இராசேந்திரன் காலத்துக்கு முன்பு எழுந்த மிகப்பெரிய தமிழ்ச்சாச மனம் இதுவே இருநூற்றுப்பத்து அடிகள் கொண்டதாக இற்தச் சாசனம் அமைந்துள்ளது. வரகுணபாண்டியன்
116. S. I. I. Vol. XIII, p. 154. 117. S. I. I. Vol. XII. p. 29. 118. E. I. Vol. XXI, p. 109,
69

Page 96
ஆயிரத்து நானூறு நிறை குறையாப் பழங்காசு கொடுத்தான். அக்காசு பல சபைகளிடமும் சில ஊர் களிடமும் பங்கிட்டுக்கொடுக்கப்பட்டன. ஒரு காசுக்கு ஓராண்டுக்கு இரு கல நெல் வட்டியாகும். கோவிலுக் குத் தேவையான பொருள்கள் யாவும் வகுக்கப்பட்டு ஒவ்வொருவகைப்பொருள் ஒவ்வொரு தலதாபனம் ஆண்டு வட்டி நெல்லுக்குப் பதிலாகச் செலுத்தவேண்டு மென்று விதிக்கப்பட்டுள்ளது. செலுத்தாவிட்டால் குறிப்பிட்ட தண்டம் கோவிலுக்குச் செலுத்துவதோடு செலுத்தாதுவிட்ட பொருளினை இரட்டித்துச் செலுத்த வேண்டும். மார்கழித் திருவாதிரை, மாசிமகம், வைகாசி விசாகம் ஆகிய விசேட தினங்களிலே தினசரி செலுத்து வதைப்போல இரண்டுமடங்கு செலுத்தவேண்டும். திரு வமுது வகைகள், அபிடேகத்திரவியங்கள், ஆடைவகை கள் முதலியனபற்றிய பல விரிவான செய்திகளை இந் தச் சாசனத்திற் காணலாம் திருச்செந்தூர் ஆலயம் அக்காலத்திலேயே "பெரிய கோயில்" என்ற சிறப்பைப் பெற்றுவிட்டதெனலாம்.
வைதிக சமயம் பிராமணியம் எனவும் கூறப் படுவதுண்டு. பிராமணரை ஆதரிப்பது பெரும் புண் ணியமாகக் கருதப்பட்டது. பிராமணருக்கு உணவு கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குகள் சில சாசனங் களிற் கூறப்படுகின்றன. சடையன் உட்கர்சபையிடம் நானுாறு காடி நெல் கொடுத்தான். அந்நெல்லின் வட் டியைக்கொண்டு, உட்கர் சபை நிலமும் ஞாயிறும் உள்ள வரை இரண்டு பிராமணரைத் தினமும் ஊட்ட உடன்பட்டது119 திருப்போந்தைச் சோமாசியார் சிவன் கோவிலில் மத்தியானம் ஒரு பிராமணர் எப்பொழு
119. S. I. I. Vol III. p. 13.
70

தும் உண்டுவருவதற்குத் தேவையான த்ானம் செய் தார்:120 பிராமணருக்காக நிலம் வழங்கப்பட்டதைச் சில சாசனங்கள் எடுத்துக் கூறியுள்ளன. நிருபதுங்கவர் மன் காலத்துச் சாசனம் ஒன்று பட்டவிருத்தியைக் குறிப்பிடுகின்றது.121
பிராமணருக்கு வழங்கப்படும் நிலம் பிரமதே யம் எனப்படும். பராந்தகன் வீரநாராயணன் என்ற பாண்டியன் பாஸ்கரன் என்ற பிராமணனுக்கு ஏக போக பிரமதேயம் வழங்கினன். மாறவர்மன் இராச சிம்மன் காலத்திலேயே இது அமுலாக்கப்பட்டுச் சாச னத்திற் பொறிக்கப்பட்டது; அழநாட்டில் நற்செய்கை புத்தூர் என்ற ஊரை மந்தர கெளரவமங்கலம் என்று தன் பெயரிட்டுக்காராண்மை, மீயாட்சி முதலிய உரி மைகள் அடங்கப் பாண்டியன் முறைப்படி கொடுத் தான், 122 காராண்மை என்பது பயிரிடும் உரிமையை யும் மீயாட்சி என்பது நிலஉடைமையாளர் உரிமை யையுமாகும்
அவைதிக சமயங்களிற் சமணசமயம் சம்பந்த மான சாசனங்களே கிடைத்துள்ளன. குமார மாத் தாண்டபுரத்துப் பெருநகரத்தவர் சமணப்பள்ளியைப் புதுக்குவதற்கும் நந்தவனச் செலவுக்குமாக, தமக்கு வந்து சேராத வரியாகிய வாராவைகலை ஒதுக்கிக் கொடுத் திருக்கின்றனர். 123 மெளனகுமாரமாத்தாண்டன் என்ற சுற்றுமாளிகையையும் கோபுரத்தையும் புதுக்கவேண்டி
120. S. I. I. Vol XIII. p. 156. 121, S. I. I. Vol XII. p. 33. 122. S. I. I. Vol III, p. 454. 123. S. I. I. Vol III, p. 223.
7.

Page 97
யிருந்திருக்கிறது; பள்ளிக்குக் கிழக்கிலும் மேற்கிலும் நந்தவனம் இருந்திருக்கிறது. தானஞ் செய்தது வியா பாரிகளின் சங்கமான நகரமாகும், சமணசமயம் வியா பாரிகளிடம் எப்பொழுதும் விசேடமான செல்வாக்குப் பெற்றிருந்திருக்கிறது. சூரிய சந்திரரி உள்ளவரை, இத்தர்மம் நிலைபெறவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வைதிக சமயத்தவர் சாசனங்களில் "கங்கையிடைச் குமரியிடைச் செய்தார் செய்த பாவம்' என வரும் ஒம்படைக்கிளவி இச்சாசனத்தில் "கங்கைக்கரை ஆயிரம் குரால் ஆக்கொன்ருன் பர்வம்" என்று மாற்றப்பட்டுள் ளது. அகிம்சையை முதல் அறமாகக்கொண்ட சமண சமயத்தில், உயிர்க்கொலை மாபாதகமாகும் பசுக்கொலை கொடும் பாவம் என்பது இந்தியாவிலே தோன்றிய பெரிய சமயங்களுக்கெல்லாம் உடன்பாடாகும். ஆயிரம் பசு என்பது பாவத்தின் கொடுமை எவ்வளவு பாரதூர மானது என்பதை உணர்த்துவதற்காகும்
முதலாம் ஆதித்தன் காலத்திலே, தமிழ் நா. டிற்பெருந்தொகையான சமணத்துறவிகள் இருந்தது ஒரு சாசனத்திலிருந்து தெரியவருகிறது, சமணத்துறவி களில் பெண்களும் இருந்திருக்கின்றனர்: சீடர்களும் சிஷ்யைகளும் தங்களுடைய குரு அல்லது குரத்தியின் பெயரோடு தம்முடைய பெயரை இணைத்துக்கூறுவ துண்டு. குணகீர்த்திப் படாரர் என்பவர் சிங்கபுரநாட் டுக் கீழ்வழி விடால் மாதேவி ஆராந்தி மங்கலத்தைச் சேர்ந்தவர். அவருடைய மானக்கியார் கனகவீரம் குரத்தியாராகும். அக்குரத்தியின் மானக்கியராக ஐஞ்நூறு பெண்துறவிகள் இருந்திருக்கின்றனர். அவ்வூரி லுள்ள நானூறு ஆண் துறவிகளுக்கும் இப்பெண் துற விகளுக்கும் தகராறு ஏற்பட்டிருக்கின்றது; பாதிக்கப் பட்ட பெண்துறவிகளுக்கு உணவு அளிக்க ஒழுங்கு
172

நடந்துள்ளது. 124 சோழப்பெருமன்னர் காலத்தொடக் கத்தில் தமிழ்நாட்டின் சிற்சில பகுதிகளிலாவது சமணம் செல்வாக்குடன் விளங்கியிருக்கிறதென்பதற்கு இது சான்றுபகருகின்றது. சமணத் துறவிகளை ஆதரிப்பதற் காக ஏற்பட்ட தருமத்தை வேறு சாசனங்களும் எடுத் துக் கூறுகின்றன. ஏரன் புத்துகனும் சந்தயன் ஆயிர வனும் நான்கு கழஞ்சு பொன்னைத் திருமலைப் பள்ளி யில் கொடுத்தார்கள். பள்ளியை நிர்வகிப்பவராகிய பள்ளி ஆள்வார் இப்பொன் னின் வட்டிகொண்டு சந் திராதித்திர் உள்ள வரை சமணத்துறவி ஒருவருக்கு உணவு கொடுத்துவரவேண்டும்.125
சமணத்துறவி ஒருவருக்கு உணவு கொடுப்ப தோடு சமணத்திருமேனிகளைப் புதுக்குவதையும் அவற்றுக்கு அவிகொடுப்பதையும் இன்னுெரு சாசனம் கூறியுள்ளது. 128 திருவயிரைப்பள்ளியில் இருந்த பாரிசு வநாதத்தீர்த்தங்கரர் திருமேனியையும் இயக்கியவ்வை கள் திருமேனியையும் புதுக்குவிக்கவேண்டியிருந்தது: பார் சுவநாதரி மகா வீரருக்கு முன்பு வாழ்ந்த சமணரின் இருபத்து மூன்ருவது தீர்த்தங்கரராகும். இயக்கியவ் வைகள் என்பது தீர்த்தங்கரரின் பரிவாரத் தெய்வமாக அவருக்குப் பணியாற்றுவனவாகக் கற்பிக்கப்பட்டனவா கும். வடஇந்தியாவில் இயக்கி வணக்கம் தனிச்சிறப்பு என்றும் பெற்றதில்லை. தமிழ்நாட்டிலே பெண்தெய் வம் என்ற நிலைக்கு இயக்கி உயர்த்தப்பட்டுவிட்டது: அவ்வை, அம்மை என்பன போலி. குணவீரக்குர வடி கள் மாணுக்கராகிய காழத்துச்சந்திவீரக்குரவர் ஐஞ்
124. S. I. I. Vol III. p. 224. 125. S. I. I. Vol. III. p. 229. 126. E. I. Vol. XXXII., p. 337
173

Page 98
நூற்றைந்து காணம் கொடுத்து இந்தத் தருமத்தைச் செய்தார்; இந்தச் சாசனம் இரண்டாம் வரகுண பாண் டியன் பட்டத்துக்கு வந்த ஆண்டையும் அறிய உதவு ன்ெறது. "சகர யாண்டு எழு நூற்றுத் தொண்ணுாற்றி ரண்டு போந்தன வரகுணற்குயாண்டு எட்டு" என்று கூறப்பட்டுள்ளது சகர யாண்டு 792 என்பது கிறித்தவ ஆண்டு 870 என்பதற்கு நேரியது; எனவே வரகுணன் பட்டத்துக்கு வந்த ஆண்டு 862 - 63 எனல்வேண்டும்.
சமயத்துக்கு அடுத்ததாக அக்காலச் சாசனங் களிற் சிறப்பிடம் பெறும் விடயம் நீர்ப்பாசனமாகும்: தமிழ்நாடு வரண்ட நிலப்பகுதியாதலால், விவசாய விருத்திற்கு ஏற்ற இடங்களில் நீர்ப்பாசன வசதிகளை அமைத்துக்கொண்டனர். ஏரிகளை வெட்டி நீர்தேங்கச் செய்தனர். ஏரியிலிருந்து வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு மதகுகள் அமைத்தனர்; நிருபதுங்கவர்மன் காலத்தில் வளகூரில், அறமிளிப்பாறுழான் தூம்பு என்னும் மதகு அமைத்தான், 126 அதே மன்னன் காலத்தில், கொங்க ரையர் நின்ற பெருமான் மருதட்டேரிக்கு அணைகட்டித் தூம்பையும் புதுக்குவித்தான், 127 தூம்புகட்டப்பட்ட பின்பு, அதைப் புதுக்குவிக்கும் வேலையும் இடையிடை நடந்து வந்திருக்கிறது என்பதற்கு இது சான் ருகும்.
துரம்பைத் தேவையான போது திறந்து மூடு வதற்குக் கூலி கொடுபடவேண்டும் சடையன் சபை யிடம் ஆயிரக்காடி நெல் கொடுத்தான்; அதற்கு ஆண்டுவட்டி ஐஞ்நூற்றுக்காடி நெல்லாகும். அதைக் கொண்டு ஏரியைத் திருத்தித் தூம்பைத் திறந்து மூடும்
126 A S. I. I. Vol XII. p. 26. 127. S. I. I. Vol XII. p. 27.
74

வேலையைச் சபை செய்ய உடன்பட்டது; சம்வத்சர வாரியம் என்ற குழுவே இந்த வேலையைச் செய்வித்து வரவேண்டும் என விதிக்கப்பட்டது. 128 புதிய ஏரிவெட் டிய குறிப்பு ஒன்றே கிடைத்துள்ளது.129 அரிஞ்சிகை வேம்பன் அந்த ஏரியை அமைத்தான் அவனே அந்த ஏரியைத் திருத்துவதற்கும் ஏரிமதகு அடைப்பதற்கும் செலவுக்காக நிலக்கொடை வழங்கியுள்ளான். காற் செய் நிலத்தை வழங்கிய அவன் ஒரு போக விளைச்ச லில் மாநிலத்திற்குக் குறுணி நெல் வீதம் நீர்ப்பாய்ச்சப் பட்ட நிலத்திலிருந்து கொடுபடவேண்டுமென்று விதித் துள்ளான், ஏரிக்காடி என்ற பெயரில் நீர்ப்பாசன வரி யைப் பெற்று ஏரியை நல்ல நிலையில் வைத்திருப்ப தற்கு ஒருவர் ஏரியும் நிலமும் இருந்த ஊர்ச் சங்கத் துக்குப் பொருள் கொடுக்கிருர் ஊரானது பெரும் பாணன் சக்கடி அரையருக்கு அந்த உரிமையை விற் கின்றது. ஊரிலுள்ள விளைநிலங்கள் யாவும் ஒரு பட்டி நிலத்துக்கு ஒருகாடி நெல் வீதம் செலுத்தவேண்டியுள் ளன. விளைநிலம் ஆவது இறை வயல் நிலம், கடை நிலம், கரைநிலம், ஏற்றப்புலம், தேவபோகம், பள் ளிச்சந்தம், வைத்தியபோகம், பார்ப்பான் பட்டி முதலி யனவற்றை உள்ளடக்குவதாக இச்சாசனம் கூறுகின் றது. விவசாயிகள் ஏரிக்காடி கொடுக்கத் தவறினல் , தருமாசனத்துக்கு இருபத்து நான்கு காணமும் ஊர்ச் சங்கத்துக்கு நாற்பத்தெட்டுக்கானமும் தண்டம் கொடுக்கவேண்டும் எனவும் தண்டம் கொடுத்தபின்பும் ஏரிக்காடியை முறைப்படி கொடுத்துவரவேண்டும் என வும் நெல் எட்டு நாழி அளவுகொண்ட அளவையால்
128. S. I. I. Vql. III. p. 8. 129. Annual Report on South Indian Epigraphy,
1936, p. 73.
175

Page 99
அளந்து கொடுக்கப்படவேண்டும் எனவும் இத் தரு மத்தை அவ்வக் காலத்து ஆளும் அரசனே பாதுகாக்க வேண்டும் எனவும் இச்சாசனம் கூறியுள்ளது.130
பொற்போந்தைச் சபை மலைவெள்ளப் பெருங் குளத்துக்கு ஏரிக்காடி பெறும் உரிமையை விற்றது ஒவ்வொரு போகவிளைச்சவிலும் ஒரு பட்டி நிலத்துக்கு ஒரு காடி நெல் என்பதே இச்சாசனத்திலும் அளவு ஆகும். 18 இவ்வாறு கொடுக்கத் தவறுவோரி தருமா சனத்திலே இருபத்துநர்ன்கு காணம் தண்டப்பட வேண்டும். பல்லவ அரசன் கம்பவர்மன் காலத்தைய இச்சாசனம் ஏரிக்காடி கொடுக்கத்தவறுவோர் பல்லவ ரின் தநைகராகிய காஞ்சியை அழித்த பாவத்தைப் பெறுவர் என்று கூறுகின்றது. புதுவெள்ளம் மண்ணுேடு வந்து சேர்வதால், ஏரி தூர்ந்து போவதுண்டு. மேலும் ஏரியின் அடியில் மண் அடைந்தால், ஏரியில் தங்கக் கூடிய நீரின் அளவு குறையும்; எனவே ஏரியைத் துப் புர வாக்கிக் குழி தோண்டிவிடும் பணி நடைபெறும் . வயிரமேகத் தடாகத்தில் ஒவ்வொரு மாதமும் இப்பணி நடைபெறுவதற்குச் செட்டதரையர் தானவேந்தன் சபையிடம் இருபது கழஞ்சு பொன் கொடுத்தான் சபை பொன்னைப் பெற்றுக்கொண்டு ஊரில் உள்ள எல்லாத் தொறுநிலைகளிலும் கிடைக்கும் எருவை விற்று வரும்பொருளை இந்தப் பணிக்கு ஒதுக்கிற்று. இப் பொருளை வேறு வழியில் விர யஞ்செய்யாது இப்பணிக்கே செலவிடும்படி சபை பணித்தது.132
130. S. I I. Vol. XII. p. 46. 131. S. I. I. Vol. XII. p. 43. 132. S. I. I. Vol. VI, p. 167.
76

என்ன பணிக்கு என்று விசேடித்துச் சொல் லாது ஏரிக்குப் பொதுவாகவிட்ட நிலம் ஏரிப்பட்டி எனப்பட்டது. ஏரிப்பட்டி செய்வது தருமம் என்ற கருத்து நிலவியதால், விவசாயி அல்லாத பிறரும் ஏரிப் பட்டித் தருமம் செய்துள்ளனர். சயவல்லவ்ன் என்ற வாணிகன் சழையாப்பாறைச் செறு என்ற வயலை ஏரிப் பட்டியாக விட்டான்,133 நிருபதுங்க மங்கலப் பேரரை யர் மகனர் நம்பியமல்லனுரி என்பவர் மருதஞ்செறு, கொடுமாடி, கழுவல் என்னும் மூன்று நிலத்துண்டுகளை நெற்குன்றத்து ஏரிக்கு ஏரிப்பட்டியாக விட்டார்.134
இவ்வுலக வாழ்க்கைச் சிறப்பு விவசாய விருத் தியிலேயே அக்காலத்திற் பெரும்பாலும் தங்கியிருந்த தால், நீர்ப்பாசனத் தருமச் செயல்களைப் பெரிதும் பேணிவந்தனர். இத் தருமச் செயல்களுக்குக் கேடு விளைத்தால் அது சமுக விரோதச் செயலாகி மக்களுக் குப் பஞ்சத்தையும் பட்டினியையும் மிகுவிக்கும். அத (ல்ை, இத்தருமங்களுக்குத் தீங்கு நேராமற் பார்ப்பதற் காக ஒம்படைக்கிளவியாகத் தீமைசெய்பவர்களை அச் சுறுத்தும் வாக்கியங்கள் சாசனங்களிற் சேர்க்கப்பட்டுள் ளன. அவற்றுள் ஒன்று "ஏழா நரகத்துக் கீழா நரகம் புகுவான்' என்பது,185 நரகலோகங்கள் ஏழு என்று நம் பப்படுகின்றன. அவை பூவுலகத்துக்குக்கீழ் ஒன்றன்கீழ் ஒன்ருகத் துன்பவாழ்க்கை மிகுந்து செல்வதற்கு அளவு கோலாக அமைந்துள்ளனவாம் அந்த ஏழு நரகலோ கங்களுக்கும் கீழுள்ள நரகலோகம் கற்பனை செய்யப்
133. S. I. I. Vol XII. p. 52. 134. S. I. I. Vol III, p. 225. 135. S. I. I. Vol III. p. 225; A. R. on S. I. E. ቆ÷•
1936, p. 73
77

Page 100
பட்டு, இந்த நீர்ப்பாசனத் தருமத்துக்குத் தீங்கு செய் பவருக்கு அந்த நரகம்தான் கிடைக்கும் என அச்சுறுத் தப்படுகின்றது;
சில சாசனங்கள் வீரக்கல்லில் அமைந்து காணப் படுகின்றன. வீரம் விளங்கப் போர் செய்து மாண்டவர் களுடைய பேரும் பீடும் எழுதிக் கல்நட்டு வணங்கிய சங்ககாலத் தமிழர் சால் பின் தொடர்ச்சி இக் காலத் திலும் காணப்பட்டது. பசுவைக் கவர்ந்து செல்வதும் போரிட்டுப் பசுவை மீட்பதும் இக்காலத்தமிழகத்தி லும் ஆங்காங்கே நடந்துள்ளன. நிருபதுங்க வர்மன் காலத்தில் நுளம்பன் என்ற சிற்றரசனுடைய படை ஆமையூருக்கு வந்து தொறுக்கொண்டபோது, பிருது வீகங்கரையர் சேவகர் அகளங்கத்துவராயன் மகன் சனன் தளராமற் போரிட்டு வீழ்ந்துவிட்டான். 130 அதே போரில், அகளங்கத்துவராயர் மருமகன் கலியிராமன் பட்டான். 137 மேல் வேளுர் ஆளும் பறையமாளியார் அவ்வூர்த் தொறுக்கொண்ட ஞான்று பட்டார்.138 விச யாலய சோழன் காலத்தில், கலிதுடன் முக்கன் அணி யன் என்பவன் பகைவன் தொறுக்கொளத் தொறு மீட் டுப்பட்டான். 189 தெள்ளா றெறிந்த நந்திவர்மனுடைய சாசனம் ஒன்று, ஒரு படையெடுப்பைத் தடுத்து நின்ற வல்லுவ நாட்டானகிய சத்திமுற்றத்தேவன் துண்டு பட்டான் என்று கூறியுள்ளது.140 சில அடிகள் சிதைர்
துள்ள இச்சாசனம் தெளிவாகப் பொருள் கொள்ளமுடி யாமலுள்ளது.
136. E. I. Vol. IV p. 180. 137. E. I. Vol. IV, p. 180, 138. E. I Vol, XXXII, p. 1 11. 139. A. R on S. I. E. 1936, p. 72, 140. S. I. I. Vol, XII p. 23,
178

ச்மயம், நீர்ப்பாசனம், வீரக்கல் முதலியனவற் றைப் பொருளாகக் கொள்ளாத சாசனங்கள் இரண்டே கிடைத்துள்ளன; வயிரமேகம் பிடாரன் ஒர் அம்ப லத்தை அமைத்து அதற்கு ஒரு வேலி நிலம் அம்பலப் புறமாக விட்டுள்ளான் அந்த நிலத்தின் எல்லை கூறப் பட்டது. அவனும் சபையும் உடன்பட்டபொருளை அவன் சபைக்குக் கொடுக்கச் சபை அந்நிலத்தைச் சற் திராதித்தவற் இறையிலி அம்பலப்புறமாகச் செய்தது. அவ்வேலி நிலம் பணிபல செய்வார்க்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டது; கோடை காலத்தில் அம்பலத்துக் குத் தண்ணிரி எடுத்துக்கொடுப்பவனுக்கும் அம்பலம் மெழுகுவாருக்கும் விளக்கு எண்ணெய் கொடுப்பவனுக்கும் கலம் இடும் குசவனுக்கும் அம்பலத்தைப் புதுக்குவேலை செய்வதற்கும் என்று அந்நிலம் பிரித்துக்கொடுக்கப்பட் டுள்ளது.141 விருந்தினர் உண்பதற்கெனத் தானஞ்செய் ததை ஒரு சாசனம் எடுத்துக் கூறுகின்றது.142 திருவா னங்கமுடி தமக்கை நம்பிராட்டி அவனிநாராயணச் சதுர் வேதிமங்கலத்துச் சிற்றம்பலத்துப் பெருமக்கள் மேற் பார்வையில் எழுநூற்று முப்பத்தாறு கழஞ்சு பொன் வைத்தாள். அப்பொன்னின் வட்டியால் தினமும் ஒரு விருந்தினரைச் சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ள வரை தவருமல் உண்பிக்கவேண்டும் என்று கூறியுள்ளாள்.
2. முதலாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலம்
இராசராசன், இராசேந்திரன் என்ற பெயர்கள் சோழப் பெருமன்னர் காலத்திற் பலருக்கு வழங்கிய
141. S. I. I. Vol. XIII. p. 103. 142. S. I. I. Vol. XII. p. 48.
179

Page 101
தாலும், புகழ்பூத்த இம் மன்னர் இருவரும் தம்பெயர் தரித்த பிற மன்னருக்குக் காலத்தால் முற்பட்டன ராதலாலும், வரலாற்றில் முதலாம் என்ற அடையுடன் வழங்கப்படுகின்றனர். முதலாம் இராசராசன் முடிசூடிய காலம் கி. பி. 985 ஆகும்; கி. பி: 1970 ஆகிய இந்த ஆண்டுக்கும் கிறித்தவ ஆண்டுத் தொடக்கத்துக்கும் இடையே சரி நடுவில், இற்றைக்கு 985 ஆண்டுகளுக்கு முன் தமிழர் வரலாற்றில் முன்பும் பின்பும் என்றும் கண்டிராத பெருமைமிக்க காலம் தொடங்கியது. அந் தக் காலம் கி. பி. 1070 வரை, அதாவது இற்றைக்கு தொளாயிரம் ஆண்டுகள் முன்புவரை, தொடர்ந்தது: எனினும் முதலாம் இராசராசனுடைய மகன் முதலாம் இராசேந்திரன் காலத்தோடு சோழப்பேரரசின் வளர்ச்சி நின்று விடுகின்றது. அடைந்த பெருமையை நிலநாட்ட முயல்வதிலேயே இவனுக்குப் பின்வந்த சோழப்பெரு மன்னரின் கவனம் சென்றது; சோழப் பெருமன்னர் காலத்துச் சாசனங்கள் பல்லாயிரக் கணக்கிற் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன: அவற்றுள் ஒரு சிறு பகுதியே பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அவை முழுவதை யும் விரிவாக ஆராய்ந்தாலும் பல நூல்கள் எழுது வதற்கு இடமுண்டு.
அதனுல் இரு பெருமன்னர்களுடைய காலத் திற்குரிய சாசனங்கள் மட்டுமே இங்கு ஆராயப்படுகின் றன. இவ்விரு மன்னர்களுடைய சாசனங்கள் தாமும் பெருந்தொகையாகக் கிடைத்துள்ளன; இவற்றுள்ளும் சில, இம் மன்னர்களுடைய புகழ்போல அளவில் மிக வும் பெரியனவாகக் காணப்படுகின்றன. முதலாம் இராசராசன் கட்டி எழுப்பி, அவனுடைய புகழுக்கும் தமிழர் பண்பாட்டுக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் தஞ்சைம் பெருவுடையார் கோவிலில் முதலாம் இராச ராசன், முதலாம் இராசேந்திரன் காலத்துச் சாசனங்
SO

கள் சில கிடைத்துள்ளன; அவற்றுட் பதின்மூன்று சாச் னங்கள் இங்கு ஆராயப்படுகின்றன. இவை அவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம் உண்டு தஞ் சைப் பெருவுடையார் கோவிலும் அங்கு செய்யப்பட்ட ஒழுங்குகளும் அளவில் பெரியனவே தவிரத் தமிழ்நாடு முழுவதும் அக்காலத்திற் கோவில் எடுப்பதும் கோவி லுக்கு வேண்டிய ஒழுங்குகள் அமைப்பதும் பரவலாக நடைபெற்றன; எனவே சோழப்பெருமன்னர் காலத் திற் சைவம் பேணப்பட்ட முறையை அறிந்து கொள் ௗத் தஞ்சாவூர்ச் சாசனங்கள் உதவுகின்றன: தஞ்சா ஆர்ச் சாசனங்களில் இடம்பெருத சில முக்கியமான செய்திகளே ஆராய்வதற்காக, வேறு இடங்களிற் கண் டெடுக்கப்பட்ட மூன்று சாசனங்களும் இங்கு சேர்த்து ஆராயப்பட்டுள்ளன.
சோழர் காலக் கோவில்களேயும் கோவிற் சாச னங்களையும் நோக்கும்போது அக்காலச் செல்வப்பெருக் கமே எவர் மனத்திலும் முதலிடம் பெறும் சோழப் பெருமன்னர் கோவிலுக்குச் செய்துள்ள தானங்களே நோக்கும்போது, நாடு செல்வச் செழிப்புள்ளதாக விளங்கியது தெட் டத்தெளிவாகத் தெரியவருகின்றது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளோடு ஒப்பிடும்போது சோழ வளநாடு நீர்வளமும் நிலவளமும் மிக்கிருந்தது: எனி னும் சோழநாட்டுச் செல்வப்பெருக்கம் நாட்டின் இயற் கைவளத்தால் மட்டும் நிகழ்ந்ததன்று சாசனங்களிற் குறிக்கப்பட்டுள்ள நிறைகளைக் கொண்ட பொன்னும் இரத்தினமும் சோழநாட்டில் எவ்வாறு வந்து குவிந்தன என்று ஆராயவேண்டியுள்ளது: பிறநாட்டு வணிகம் ஒரு முக்கிய சாதனமாக இருந்திருக்கலாம்: சோழநாட் டினருக்கு மேற்கில் அரேபியாவுடனும் கிழக்கில் சீனு வரையிலான நாடுகளோடும் வணிகத் தொடர்பு இருந் தது; சோழநாட்டு மாலுமிகளின் கடற்செலவு அறி
181

Page 102
வினே அரேபிய அறிஞர்கள் சிலர் போற்றிப் பார்ாட்டி யுள்ளனர். சோழப் பேரரசு தமிழ்நாடு, கேரளம் என்ற இன்றைய மாநிலங்கள் முழுவதையும் மைசூர், ஆந்திரப்பிரதேசம் என்ற இன்றைய மாநிலங்களின் பகுதிகளையும் இலங்கையையும் அக்காலத்தில் உள்ள டக்கியிருந்தது; எனவே இப்பேரரசுப் பிரதேசத்தி விருந்து பிறநாட்டு வணிகத்தாற் கிடைத்த சுங்கம் முதலியன சோழப் பேரரசரைச் சென்று சேர்ந்திருக் கும் தென்னிந்திய வணிகக் குழுக்கள் சில, தென் கீழ் ஆசியா முழுவதும் பரவி வணிகம் செய்ததற்கான சாச னச்சான்றுகள் கிடைத்துள்ளன; உள்ளூர் வணிகத்தில் ஈடுபட்ட குழுக்களும் பல வாம். தலதாபனமாகப் பிரா மணருக்குச் சபையும் பிராமணரல்லாதாருக்கு ஊரும் இருந்ததுபோல, வணிகருக்கு நகரம் சோழப் பெருமன் னர் காலத்தில் இருந்திருக்கிறது. இவை யாவற்றிலு மிருந்து சோழப் பெருமன்னரது பண்டாரம் என்று கூறப்பட்ட திறைசேரிக்குப் பொருள் சென்றிருக்க வேண்டும் நில வரியாகவும் பிற தொழில்வரி முதலியன வாகவும் வந்த வருமானம் சோழர் காலத்துக்கு மட்டுமன்றிப் பிற்காலத்திற்கும் சோழமன்னருக்கு மட்டுமன்றிப் பிற மன்னருக்கும் பொதுவாதலால், அது விசேடமாகக் குறிக்கப்படவேண்டியதில்லை;
சிற்றரசரும் பிறநாட்டு மன்னரும் கொடுக்கும் திறையாலும் சோழநாட்டிற் செல்வப்பெருக்கம் மிகுந் தது. முதலாம் இராசராசன் முதலாம் இராசேந்திரன் காலத்திற் செல்வப் பெருக்கம் வேகமாக ஏற்றப்பட்ட தற்கு இன்னுெரு சிறப்புக் காரணம் இருந்தது. முத லாம் இராச ராசன் காலத்தில் அயல் நாடுகளில் நிகழ்ந்த போர்களோடு சோழப்பேரரசு வளரத்தொடங்கியது. முதலாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் கங்கையும் கடாரமும் கொண்டனர்; வடஇந்தியாவிலே கங்கை
182

வரையிலான நாடுகளிற் சோழர் படை வெற்றிபெற்றது; சோழர் வெற்றிபெற்ற கடாரத்தை உள்ளடக்கிய சைலேந்திரப் பேரரசு மலாயா, இந்தோனேசியா என்று இன்று கூறப்படும் நாடுகளிற் பெரும்பகுதியை உள்ள் டக்கியிருந்தது. இப்பகுதிகள் சுவர்ணதீபம், சுவரின பூமி எனப்பொன் கொழிக்கும் நாடுகளாக வடமொழிப் புராணங்களிற் கூறப்பட்டுள்ளன; படையெடுப்பும் வெற்றியும் என்று கூறப்படுமிடங்கள் பலவற்றில் சோழர் படை பெருந்தொகையான கொள்ளையையும் திறையை யும் பெற்றிருக்கும்; இது அக்காலப் போர் இயல்பு:
கங்கைப் படையெடுப்பு, கடாரப்படையெடுப்பு என்பனவற்றைக் கூறும் முதலாம் இராசேந்திரன் மெய்க் கீர்த்திகளிலே கொள்ளையைப் பற்றிய குறிப்புகள் சில காணப்படுகின்றன. மேலைச் சாளுக்கியருடைய நாட்டி லும் இலங்கையிலும் கொள்ளை நிகழ்ந்ததைப் பற்றிக் கூறும் அவ்வந்நாட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளன: இவ்வாறு கிடைத்தபொருளில் ஒரு பகுதி கோவிலுக் குத் தானமாகச் சென்றிருக்கவேண்டும் திடீரென்று வந்துசேரும் இத்தகைய செல்வத்தை வாரிவழங்கக் கூடிய மனப்பான்மை ஏற்படுதல் மனிதருக்கு இயல்பே. போரிலே, கொலையாலும் கொள்ளையாலும் வந்த பொரு ளைப் புனித கைங்கரியத்துக்குச் செலவழிப்பதன் மூலம் உள்ளத்திலும் ஆறுதல் பிறக்கும் எதிரியின் பெரும் படையெடுப்பை முறியடித்து வெற்றிபெற்ருல் "நேர்த் திக்குடில்" அல்லது "நன்றிக்கடன்" என்ற முறையிலே, திே தானம் செய்வதும் உண்டு.
சாசனங்களின் அமைப்பும் அவை கூறும் பொரு ளும் கோவில்களுக்குக் கிடைத்த பெருந்தொகையான தானங்கள் வந்தவழியைக் காட்டுகின்றன எனலாம். பொதுவாகச் சாசனங்களின் தொடக்கம் மெய்க்கீர்த்தி
83

Page 103
பாக அமைகின்றது. தானம் நிகழ்ந்த ஆண்டுவரை அரசன் பெற்ற வெற்றி எடுத்துக் கூறப்படுகின்றது: அந்தப் புகழையுடைய அரசன் அல்லது அரசன் காலம் என்று நினைத்துப்பார்க்கும்போது தானம் நிகழ்ந்த சூழல் நினைப்பவர் மனத்திலே தோன்றுகின்றது; முதலாம் இராசராசனே பொறிப்பித்த தஞ்சாவூர்ச் சாசனமொன் றிலிருந்து 48 இங்கு தேவையான சில சான்றுகளைப் பெற்றுக்கொள்ளலாம் நீண்ட சாசனமாக அமைந் துள்ள இதில், மூன்று இடங்களில் 'சேரமானையும் பாண் டியர்களையும் மலைநாட்டு எறிந்துகொண்ட பண்டாரங் கள்’ குறிக்கப்பட்டுள்ளன; தானங்களில் ஒரு பகுதியை அவற்றிலிருந்து எடுத்து வழங்கியதாக இராசராசனே கூறியுள்ளான். சோழப்பெருமன்னருக்குப் பெரும் பகை வராக இருந்தவர் மேச்ைசாளுக்கியப் பெருமன்னரா வர். மேலைச்சாளுக்கியப் பெருமன்னணுகிய "சத்யாசிர யனை எறிந்து எழுந்தருளிவந்து" இராசராசன் தஞ்சைப் பெருவுடையாரின் திருவடியைப் பொன்ஞலான பாத புஷ்பமிட்டுத் தொழுததை அதே சாசனம் எடுத்து மொழிகின்றது;
சோழரிகுலம் என்றும் சைவப்பற்றுமிக்கு விளங் கிய குலமாதலால், சோழப் பெரு மன்னர் தாம்பெற்ற பெருஞ் செல்வத்தைச் சைவப் பணிகளுக்கே செலவிட் டனர். நம்பியாண்டாரி நம்பிமூலமாகச் சைவத் திரு முறைகளைத் தொகுப்பித்துத் திருமுறை கண்டசோழன் என்ற பெயர் வாங்கிய முதலாம் இராசராசன் "சிவ் பாத சேகரன்" அதாவது சிவனுடைய திருவடிகளைத் தலயிலே தாங்கியவன் என்றும் பெயர் வாங்கியதை இந்தச் சாசனம் எடுத்துக்கூறியுள்ளது. தஞ்சைப் பெரு
43. S. I. I. Vol. II. p. 1.
B4

வுடையார் கோவிலைத் "தஞ்சாவூர் நாம் எடுப்பிச்ச திருக்கற்றளி' என்று இராசராசன் பெருமையோடு கூறிக்கொள்ளுகின் முன் கருங்கல்லே கிடையாத தஞ்சா வூரிலே அது தனியே கருங்கல்லாலான மாபெருங்கோயி லாத லின ற் போலும் அரசன் இவ்வாறு பெருமைப்படு கின்றன்.
கோவிலுக்குத் தானம் செய்வதில் அரசனும் அரச குலத்தவரும் அதிகாரிகள் முதலிய பிறரும் போட்டி (பிட்டுக் கொண்டு முன்னின்றனர். பெரிய கோவில்கள் உருவாகத் தொடங்கியதும் ஒரே கோவிலில் பிரதான மூர்த்தியைவிடப் பிறமூர்த்திகள், அடியார் படிமங்கள் என்பன இடம்பெறத் தொடங்கின. தஞ்சைப் பெருவு டையார் கோவிலில் திருமேனிகளும் பிரதி மங்களும் பலவாகப் பலரால் எடுக்கப்பட்டதைச் சாசனங்கள் குறிப்பிடுகின்றன. அக்கோவிலில் நடந்த தானங்களைப் பற்றி இராசராசன் "நாங் குடுத்தநவும் அக்கன் குடுத் தநவும் நம்பெண்டுகள் குடுத்தநவும் மற்றும் குடுத் தார் குடுத்தநவும்"144 என்று கூறுவது திருமேனிகள், பிரதிமங்களை எடுப்பித்ததற்கும் பொருந்துகின்றது. திருமேனிகள் என்பது கடவுளரின் உருவங்களும் பிரதி மங்கள் என்பது மனிதரின் உருவங்களுககுமாம். முத லாம் இராசராசன் எடுப்பித்த திருமேனிகள் பரம சுவாமி, தட்சிணமேரு விடங்கர், தஞ்சைவிடங்கர் எனக் குறிப்பிடப்படும் சிவபெருமானுடைய மூர்த்தங் a GTIT b .
இராசராசனுல் அக்கன் என மரியாதையாக அழைக்கப்படும் அவன் தமக்கை யார் தட்சிணமேருவிடங் கரின் தே வியாகிய உமாபரமேசுவரியாரையும் தஞ்சை
144. S. I. I. Vol. II. p. 1,
185

Page 104
விடங்கரின் தேவியாகிய உமாபரமேசுவரியாரையும் இறந்து விட்ட தம்முடைய தாய்தந்தையரையும் திரு மேனிகளாக எழுந்தருளுவித்தார். 145 அரசன், அரசிய ருடைய உருவங்கள் திருமேனிகள் என்று இந்தச் சாச னத்திற் குறிக்கப்படுவது கவனித்தற்குரியது. இராசராச னுடைய தமக்கையர் 'இராசராசதேவர் திருத்தமக்கை யார் வல்லவரையர் வந்தியத் தேவர் மகாதேவியார் ஆழ் வார் பராந்தகன் குந்தவையார் என்று சாசனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்;
இராசராசஞல் "நம் பெண்டுகள்" என்று குறிப் பிடப்படும் உலக மகாதேவியாரும் திரைலோக்கிய மகா தேவியாரும் திருமேனிகள் சிலவற்றை எழுந்தருளச் செய்துள்ளனர். உலகமகா தேவியார் பிச்ச தேவர் என்ற சிவபெருமானுடைய மூர்த்தத்தை எழுந்தருளுவித் தார். 148 திரைலோக்கிய மகாதேவியார் கலியாணசுந்தர ரும் தேவியும் எனச் சிவன் - சக்தி மூர்த்தங்களை எழுந் தருளுவித்தார். 14? அதிகாரிகள் காஞ்சிவாயிலுடையார் உதயதிவாகரன் தில்லையாளியாரான இராச ராசமூவேந்த வேளாரி கிராதார்ச்சுனிய தேவர் என்ற சிவபெரு மானுடைய மூர்த்தத்தை எழுந்தருளுவித்தார்,148 அதி காரிகள் என்பது அவருடைய பதவியையும் காஞ்சிவா யில் என்பது அவருடைய ஊரையும் இராசராசமூவேந் தவேளார் என்பது அவருடைய பட்டப்பெயரையும் உதயதிவாகரன் தில்லையாளியார் என்பது அவருடைய இயற்பெயரையும் குறிக்கிறது. அதனையும் உதயதிவா
145. S. I. I. Vol. II, p. 68. 146. S. I. I. Vol. II, p. 90
147. S. I. I. Vol. II, p. 95. 148. S I. I. Vol. II. p. 90,
186

கரனுடைய மகளுகிய தில்லையாளியார் என்று கொள்ள வேண்டும்;
தஞ்சைப்பெருவுடையார் கோவிலில் "பூரீ காரி யம் செய்கின்ற பொய்கை நாடுகிழவன் ஆதித்தன் சூரியனன தென்னவன் மூவேந்த வேளான்" திருமேனி கள் பலவற்றையும் பிரதிமங்கள் பலவற்றையும் எழுந் தருளச் செய்துள்ளான், 149 "பூரீ காரியம் செய்கின்ற" என்பது கோவில் நிர்வாகம் செய்கின்ற அதிகாரியைக் குறிக்கும். கிழவன் என்பது உரிமையுடையவன் என்று பொருள்படும். தென்னவன் மூவேந்த வேளான் என்பது பட்டப்பெயர். ஆதித்தன் சூரியன் என்பது இயற் பெயர், அவன் எழுந்தருளிவித்த திருமேனிகளாவன:- சந்திரசேகரர், சேத்திரபாலதேவர், பைரவமூர்த்தி முத லிய சிவபெருமானுடைய மூர்த்தங்கள். அவன் எழுந் தருளுவித்த பிரதிமங்களாவன:- நம்பி ஆரூரனர் என்ற சுந்தரர், நங்கை பரவையார், திருநாவுக்கரையர், திரு ஞானசம்பந்த அடிகள், பெரிய பெருமாள் என்ற முத லாம் இராசராசன், உலகமகாதேவியார், சிறுத்தொண்ட தேவர், திருவெண்காட்டு நங்கை, சீராளதேவர், மெய்ப் பொருளுயனர் என்போருடையவை. இங்கு அரசன் அரசி ஆகியோரின் உருவங்கள் பிரதி மங்கள் என்று குறிக்கப்பட்டுள்ளன. அரசனும் அரசியும் உயிரோடிருந்த காலத்து எழுந்தருளுவிக்கப்பட்டமையின ற் போலும் இவ்வாறு பெயர்பெற்றன:
கோவிலுக்குப் பாத்திரம் முதலிய உபகரணங் கள் பெருந்தொகையாக வழங்கப்பட்டதைச் சாசனங் களிலிருந்து அறியமுடிகின்றது. கோவில் என்பது தமி
149. S. I. I. Vol. II, Part, II, No. 38, 40, 43.
187

Page 105
ழில் அரண்மனையையும் வழிபாட்டிடத்தையும் குறிக் கின்றது. அரண்மனையில் அரசனுக்குக் கிடைத்த இராசோபசாரத்தைக் கோவிலில் இறைவனுக்கு அளிக்க முயற்சி நடந்திருக்கிறது. கோவில் அரண்மனை போலக் கட்டப்பட்டுக் கோவிலில் அரண்மனையிற் காணப்பட்ட பாத்திரம் பண்டம் முதலிய உபகரணங்கள் இடம் பெறச் செய்யப்பட்டன; இரும்புத் தண்டோடு கூடிய உலோகக் கலப்பாலான விளக்குகள் நான்கு ஆதித்தன் சூரியனல் தஞ்சைப்பெருவுடையார் கோயிலுக்குக் கொடுக்கப்பட்டன. தேவாரம் பாடிய மூவருக்கும் ஒவ் வொரு விளக்கும் இராசராசனுடைய பிரதிமத்துக்கு மூன்று விளக்கின் நிறையையும் சேர்த்து ஆக்கப்பட்ட பெருவிளக்கும் வெண்கல மடலும் வைக்கப்பட்டன.150
ஆனல், இராசராசனே பெருற்தொகையான உபகரணங்கள் வழங்கியுள்ளான்.15 "தஞ்சாவூரிக் கோயி லினுள்ளால் இருமடி சோழ நின் கிழைத் திருமஞ் சனசாலை தானஞ் செய்தருளாவிருந்து" என்று கூறுகின்றது, சாச னம் திருமஞ்சனசாலை என்பது அபிசேகமண்டபம்: "இருமடிச் சோழனின் கீழைத் திருமஞ்சன சாலை" என்பது தஞ்சாவூர்க் கோவிலிலிருந்த அபிசேகமண்டபம் ஒன்றின் பெயராகும். இந்த மண்டபத்தில் இருந்து இராசராசன் தானம் செய்தான். "யாண்டு இருபத்தைஞ்சாவது நாள் முன்னுரற்ருெரு பத்திரண்டினல்", அவன் அவ்வாறு செய்தான் யாண்டு என்பது ஆட்சியாண்டைக் குறிக் கும். அக்காலச் சாசனங்களில் மாதம் குறிக்கப்படுவ தில்லை. ஆண்டும் நாளுமே குறிக்கப்பட்டன. கொடுக் கப்பட்ட பொருள்கள் யாவற்றுக்கும் நிறைகள் குறிப்
150. S. I. I. vol. II, Part II, No. 41. 151, S, I, II. Vol, II, p, 1.
88

பிடப்பட்டுள்ளன; பொன் ஆடவல்லான் என்னுங் கல் லால் நிறையெடுக்கப்பட்டது; நடராசா என்பது ஆட வல்லான் எனத் தமிழாக்கப்பட்டது; இரத்தினம் தட் சிணமேரு விடங்கர் என்னுங்கல்லால் நிறையெடுக்கப் பட்டது. ஆடவல்லான், தட்சிணமேருவிடங்கர் என்பன தஞ்சைப் பெருவுடையாரின் பெயர்களாகும். அக்கோவி லில் வழங்கிய அளவுகளுக்கு அவருடைய பெயர்கள் இடப்பட்டன. பொன்னலாக்கப்பட்ட பொருள்களாக இரர் சராசன் கொடுத்தன - பூgபலி தேவர், பத்மாசன பூரீ பலித்தாலம், நான்கு மண்டைகள், மூன்று தளிகை, கெண்டி, தட்டம், இரண்டு காளாஞ்சி, நான்கு குடம், கறண்டிகைச் செப்பு, இலைச் செப்பு, இரண்டு கலசப்பானை, தாரைத்தாள்வட்டில், மூன்று ஈச்சோப்பிக்கை முதலியன. செப்புக்குடம், கிடாரம், ஒட்டுவட்டில், ஐந்து கலசம், படிக்கம், ஐந்து தட்டம் குறுமடல், மாநவட்டில், பதி னுேரு காளம், மூன்று குழல், இரண்டு கங்கில், இலைத் தட்டு என்பனவும் இராச ராசனற் கொடுக்கப்பட்டுள் ளன. வண்ணிகைத் திருக்கொற்றக்குடையும் கோவிலுக்கு வழங்கப்பட்டுள்ளது,
திருமேனிகளுக்கும் பிரதிமங்களுக்கும் அணிகலன் கள் பெருந்தொகையாகக் கொடுக்கப்பட்டுள்ளன; அணி கலன்கள் செல்வச் சிறப்புக்கும் அந்தஸ்துக்கும் அளவு கோல்களாகப் பயன்பட்டன. ஆண்களும் பெண்களும் அணிகலன்களைச் சூடினர்; சோழப் பெருமன்னர் காலத் திலே சமூகத்திற் பொன்னுலும் இரத்தினங்களாலும் முத்தாலும் ஆக்கப்பட்ட அணிகலன்களைச் சூடுவது இயல்பாக இருந்திருக்கவேண்டும். எனவே, அரசகுடும் பத்தினர் தாம் அணிவது போன்ற அணிகளை இறைவ னுக்கும் சூட்டி மகிழ்ந்தனர். இராசராசன் பெருவுடை யாரி கோவிலுக்குக் கொடுத்த பொன்னலான அணி கலன்கள்:- நான்கு பூ, தாமரைப் பூ, பதினன்கு திருப்
39

Page 106
பள்ளித் தொங்கல் மகுடங்கள், திருமுடி, கொடி, ஆறு திருப்பட்டம், திரள்மணிவடம், ஆறு ஒப்பன் திருக்கைக் காறை, திருப்பட்டிகை என்பன: பாத பீடம், சூலம், கபாலம் பாசம், த மருகம் என்பன உட்படச் சேத்திர பாலதேவர் ஒருவரையும் செய்துகொடுத்துள்ளான். 152
குந்தவையார் தம்முடைய தாயாக எழுந்தருளு வித்த திருமேனிக்குக் கொடுத்தன:- இருபது கம்பி" தாலி மணிவடம் என்பன. தட்சி ணமேருவிடங்களுக் கும் தேவி உமாபரமேசுவரியாருக்கும் குந்தவையார் ஏகாவல்லி எனப்படும் ஒற்றைப்பட்டுச் சங்கிலி ஒவ் வொன்று கொடுத்துள்ளார். ஒவ்வொன்றிலும் முப்பத் தைந்து முத்துக்கள் பதிக்கப்பட்டிருந்தன. இறைவ னுடைய ஏகாவல் லியில் இரண்டு இராசா வரித்தம் இடம்பெறத் தேவியின் ஏகாவல்லியில் இரண்டு பவழம் இடம்பெற்றன,153 இந்த விபரங்கள் நகையின் பெறு மதியை எடுத்துக்காட்ட உதவுவன குந்தவையார் உமாபரமேசுவரியாருக்குக் கொடுத்த அணிகளாய் வேருெரு சாசனத்திற் கூறப்பட்டுள்ளனவாவன:- திரு மகு டம், இரண்டு வாளி, இரண்டு உழுத்து, திரு மாலை, இரண்டு வாகுவலயம், அஸ்தம், இரண்டு திருக் கைப் பொட்டு, இரண்டு குடகம் என்பன. இரத்தின வகை கள், முத்து வகைகள், அவற்றின் குணமும் குறையும் என்பன விபரமாகச் சொல்லப்பட்டுள்ள இச்சாசனம் சோழப்பெருமன்னர் காலத்தில் அணிகலன்கள் ஆக்கும் தொழில் எவ்வளவு நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடியதாக வளர்ந்திருக்கிறது என்பதற்குச் சான்ருகக் காணப்படுகின்றது. 154
152. S. 1. l. Vol. II, p. 1. 153. S. I. I. Vol. II, p. 68. 154. S. l. I. Vol. II, Part I, No. 7.
190

ஆதித்தன் சூரியன் என்பவன் திருமேனிகளுக் கும் பிரதிமங்களுக்குமாகப் பல அணிகலன்களை வழங்கி யுள்ளான். தேவாரம் பாடிய மூவரையும் பரவையாரை யும் அரசன் அரசியரையும் பிரதிமங்களாக எழுந்தரு ளச் செய்த ஆதித்தன் சூரியன் அவையொவ்வொன்றுக் கும் பதுமமும் பீடமும் செய்வித்துள்ளான் சந்திரசேகர தேவரைப் பித்தளை யாலே செய்வித்த அவன் அவருக் குப் பிரபை என்ற திருவாசியையும் கொடுத்துள்ளான்: தேவாரம் பாடிய மூவருள் ஒவ்வொருவருக்கும் உருத்தி ராட்சத் தாழ்வடம், வைக்காறை, காற்காறை, பொற்பூ ான்பன வழங்கியுள்ளான்; பரவையிருக்குக் கைக்காறை காற்காறையோடு மோதிரமும் கொடுத்துள்ளான். ஆளுல் உருத்திராட்சத் தாழ்வடம் கொடுக்கவில்லை. திருஞான சம்பந்தருக்குத் திருப்பட்டிகையும் வைக்கப்பட்டது பரகேசரிபுர நகரத்தார் இவன் எடுப்பித்த மூவர் பிரதி மங்களுக்கு உருத்திராட்சமும் பரவையாருக்குப் பட் டைக்காறையும் வைத்துள்ளனர். வெண்ணிநகரத்தார் இவன் எடுப்பித்த நம்பியாரூரருக்கும் நங்கை பரவை யாருக்கும் மட்டுமே அணிகலன்கள் கொடுத்துள்ளனர். நம்பியாரூரருக்கு இரண்டு திருக்கம்பி, திரள் மணிவடம், இரண்டு கைக்காறை, காற்காறை என்பனவும் பரவை யார்க்குத் திருக்கம்பி இரண்டும் கொடுக்கப்பட்டன வாகக் குறிக்கப்பட்டுள்ளது. 155
ஆதித்தன் சூரியன் தான் எடுப்பித்த மெய்ப் பொருனயனர் பிரதிமத்துக்குப் பதுமம், பீடம் என்ப வற்ருேடு உருத்திராட்சமும் அளித்துள்ளான். 156 ஆதித்
155. S. I. I. Vol. II, Part III, No. 38. 156. s. I. I. Vol. II, Part III, No. 40
191

Page 107
தன் சூரியன் தான் இதே கோயிலில் எழுந்தருளுவித்த சேத்திரபாலதேவருக்குத் திரள் மணிவடம், சுருக்கின வீர பட்டம், இரண்டு திருக்குதம்பைத் தகடுகள் என்பனவும் பைரவமூர்த்திக்கு இரண்டு திரள்மணிமுத்துவடங்களும் சிறுத்தொண்டருக்குத் திரள் மணிவடம், உருத்திராட்சக் காறை என்பனவும் திருவெண்காட்டு நங்கைக்குப் பட் டைக்காறையிற் கோத்த தாலி, சீராளதேவருக்குச் சுருக் கின வீர பட்டம், இரண்டு திருக்கு தம்பைத் தகடுகள், பட்டைக்காறை, சூலம் என்பனவும் கொடுத்தான். 137
பூசை, விழா என்பனவற்றுக்கான ஒழுங்குகளும் சாசனங்களிற் கூறப்பட்டுள்ளன. உமா பரமேசுவரியார் என்ற பெயருடைய தேவியின் திருமேனிகள் இரண்டும் திருவிழாப் புறப்படும்போது அமைக்கப்படும் அரங்கை அழகாக அமைப்பதற்காக ஐயாயிரம் கழஞ்சு பொன்னை வட்டிக்குக் கொடுக்கும் படி குந்தவையார் கோவிலுக்கு அளித்தார். தேவியர் இருவரும் திருவிழா எழுந்தரு ளும்போது அமுதுக்கும் விளக்கெண்ணெய்க்கும் பூமாலை யாகிய திருப்பள்ளித் தாமத்துக்குமாகக் குந்தவையார் பணம் கொடுத்தார். அந்தணருடைய சபையும் அந்தன ரல்லாதாருடைய ஊரும் பணத்தைப் பெற்றுக்கொண்டு கோவிலின் திறைச்சேரியில் ஆடவல்லான் என்ற பெய ரில் வழங்கிய மரக்காலினலே குறிப்பிட்ட அளவுள்ள நெல்லை வட்டியாகச் சந்திரகுரியர் உள்ளவரை அளப்ப தாக உடன்பட்டன. குந்தவையார் தாய்தந்தையர் ஞாபகார்த்தமாக எடுப்பித்த திருமேனிகளுக்குத் திரு விழா வைக்கும் முறைமையில்லை. இவற்றுக்குப் படைக் கும் திருவமுதுக்குக் குந்தவையார் மேலே காட்டியது போன்ற ஒழுங்கினைச் செய்தாரி, பூமாலை மட்டுமன்றி
157. S. I. I. Vol II, Part II, No. 43.
192

ஆடைகள் பற்றியும் இவ்விரண்டுக்கும் வழிவகுத்துல் ளார்; இத்திருமேனி ஒவ்வொன்றுக்கும் பரிசட்டம், நான்கு நமணிகை, நான்கு ஒற்ரு டை, நான்கு மேற் கட்டி, பதினறு பாவாடை என்பன ஆண்டுவட்டியாக வந்து சேரக்கூடியவகையிற் பணம் வைத்துள்ளார். இவ் விரண்டு திருமேனிக்கும் சந்தி விளக்கு வைப்பதற்காக ஒவ்வொன்றுக்கும் முப்பத்திரண்டு காசு வைத்துள்ளார். ஒரு காசுக்கு மூன்று ஆடு என்று கணக்கிட்டுத் தொண் ணுாற்ருறு ஆடு விடப்பட்டதாகக் கொள்ளப்படவேண் டும். ஒவ்வொன்றுக்கும் தினசரி உழக்கு நெய் கொடுபட வேண்டும். பொலியூட்டு எனப்படும் வட்டிப் பெருக்கத் துக்கு வைத்த பணம் "பரமசுவாமிக்கு மூல பிருத்திய கிைய சண்டேசுவரர் பக்கல்" வைத்ததாக அக்காலச் சாசனங்களிற் கூறப்பட்டுள்ளது மூல பிருத்தியன் என் பது முதல் அடியணுகும். "தஞ்சைப்பெருவுடையாரின் முதல் அடியவராகிய சண்டேசுவரரிடம்" என்று இத் தொடர் பொருள்படும். சிவன்கோவில் அலுவல்களைக் கண்காணிப்பவர் சண்டேசுவரர் என்பது ஐதீகம். கோ வி லின் கொடுக்கல் வாங்கல் அலுவல்கள் சண்டேசுவரரின் பெயரில் கோவில் அதிகாரிகளால் நடத்தப்பட்டுவந்
5558
கொடுத்தார் - கொடுத்த காசு - வட்டிக்குக் கொண்ட ஊரி என்பனவற்றைக் கல்வெட்டொன்று எடுத்துக் கூறுகின்றது.159 குருக்கள் ஈசான சிவ பண்டிதர் கோவிலில் கற்பூரம் எரிப்பதற்காக நூற்றெண்பது காசு கொடுத்திருக்கிருர் ஒரு சந்தி அமுது செய்யும்போது ஒரு மஞ்சாடி கற்பூரம் எரியவேண்டுமானல் ஒரு நாளுக்கு
158. S. I. I. Vol II, p. 68. l 59. S. I. I. Vol II. p. 90.
193

Page 108
மூன்று மஞ்சாடி கற்பூரம் தேவையென்றும் ஒராண்டுக்கு ஐம்பத்து நான்கு கழஞ்சு கற்பூரம் தேவையென்றும் கணக்குப் பார்க்கப்பட்டது; கோவிலில் உற்சவத்திருநாள் ஒன்பதாகும்; உற்சவ நாள் ஒவ்வொன்றிலும் காற்கழஞ்சு கற்பூரம் கூட்டி எரிக்கவேண்டும். எனவே ஒன்பது நாளைக் கும் இரண்டே காற் கழஞ்சு அதிகமாகத் தேவைப்படும். ஒரு காசுக்கு இரண்டரைக் கழஞ்சு கற்பூரம் ஆண்டு வட்டி என்று கூறித் தம்முடைய காசை வைத்திருக்கிருர், உதையதிவாகரன் தில்லையாளியார் கிராதார்ச்சுனிய தேவருக்குத் திருவமுது உள்ளிட்டு வேண்டுவனவற்றுக் காகப் பதின்மூன்று காசுகள் வைத்துள்ளார். வலங்கைப் படையினர் பிச்சதேவருக்கு இருநூற்றைம்பத்திரண்டு காசுகள் கொடுத்துள்ளனரி தஞ்சைப் பெருவுடையாரு டைய திறைச்சேரியிலிருந்து எண்ணுாற்றைம்பது காசு கொடுக்கப்பட்டது. வட்டிக்குப் பணம்கொண்ட சபை கள் சில இடங்களில் "நெடுமணலாகிய மதன மஞ்சரிச் சதுர்வேதி மங்கலத்துச் சபை" எனவும் "இரும்புதலாகிய மனுகுலச்சூளாமணிச் சுதுர்வேதி மங்கலத்துச் சபை, என வும் கூறப்பட்டுள்ளன. சதுர்வேதிமங்கலம் என்பது "நான்கு வேதங்களை ஒதுகின்ற பிராமணருடைய கிரா மம்" என்று பொருள்படும். நெடுமணல், இரும்புதல் என்பன அக்கிராமங்கள் அந்தணவகுப்பினருக்குரியவை யாக மாற முன்பு பெற்றிருந்த தமிழ்ப்பெயர்கள் அந்த ணர் கிராமமாக அவை மாறிய பின்பு வடமொழிப் பெயர்களைப்பெற்றன
உதயதிவாகரன் தில்லையாளியார் என்பவர் கிரா தார்ச்சுனிய தேவருக்குத் திருவமுது உள்ளிட்டு வேண்டும் நிவந்தங்களுக்குத் தொண்ணுாற்று நான்கு காசும் சிறு தனத்துப் பணி மக்கள் என்ற கீழ்த் தர உத்தியோகத்தர் கள் மகாமேருவிடங்கருக்கும் தேவியாருக்கும் திருவமுது உள்ளிட்டுவேண்டும் நிவந்தங்களுக்கு ஐஞ் நூற்ருறு
194

காசும் வைத்ததையும் அவை வட்டிக்குக் கொடுக்கப்பட் டதையும் இன்னெரு சாசனம் குறிப்பிடும்,160 மகாமேரு விடங்கருக்கும் தேவியாருக்கும் சிறுதனத்துப் பணிமக்கள் இருநூற்றுத்தொண்ணுாற்று நான்கு காசும் கலியாண சுந்தரருக்கும் தேவியாருக்கும் கேரளாந்தகத் திருமெய் காப்பர் நூற்றுப்பதினெட்டுக் காசும் அணுக்கவாசலின் திருமெய்காப்பர் எட்டுக்காசும் கேரளாந்தகத் தெரிந்த பரிவாரத்தார் முப்பத்தைந்து காசும் சனநாதத் தெரிந்த பரிவாரத்தார் ஐந்து காசும் சிங்களாந்தகத்தெரிந்த பரி வாரத்தார் ஒரு காசும் தென்கரை நாட்டுப் பரிவார மெய்காப்பர்கள் முன்னூற்று முப்பத்தொன்பது காசும் நிவந்தங்களுக்காக வைக்க, இவை யாவும் கூடி வந்த எண்ணுறு காசு பன்னிரண்டரை விகித வட்டிக்குக் கொடுக்கப்பட்டது.161 மெய்க்காப்பாளர் என்று இன்று கூறப்படுவது மெய்காப்பர் என அக்காலத்தில் வழங்கப் பட்டது, கேரளாந்தகன், சனநாதன், சிங்களாந்தகன் என்பன அரசனுடைய பட்டப்பெயர்களாகும் அரச னுடைய பட்டப்பெயர்கள் படைப்பிரிவுகளுக்குப் பெய ராக அமைந்தமைக்கு இச்சாசனம் சான்று பகருகின்றது.
கோவிலுக்குத் தேவதானமாக நிலம் தானம் செய்யும் வழக்கமும் இருந்திருக்கிறது. முதலாம் இரா சேந்திரனுடைய திருவாலங்காட்டுச் சாசனம் நிலம் தேவதானமாக வழங்கப்பட்டதைக் கூறுவதற்கே வரை யப்பட்டது.162 பிரமதேயமாக இருந்த பழையனுரர் நாட்டுப் பழையனூரை வெள்ளான்வகையாக மாற்றித் தேவதானமாக விட்டதை இந்தச் சாசனம் எடுத்துக்
160. S. J. I. Vol II. p. 93. 161. S II. I. Vol. II, p. 95. 162. S. I. I. Vol. III. p. 383.
195

Page 109
கூறியுள்ளது. செப்பேடுகளாக அமைந்துள்ள இந்தச் சாசனம் தமிழிலுள்ள இரண்டாவது மிக நீண்ட சாசனமாகும். இது வடமொழிப் பகுதியும் தமிழ் மொழிப்பகுதியும் என இரண்டு பகுதிகளைக் கொண்டுள் ளது; வடமொழிப் பகுதி சோழர் குலவரலாற்றுச் செய் திகள் பலவற்றைக்கொண்டது; இராசேந்திரனுடைய ஆருவது ஆட்சியாண்டைச் சேர்ந்த இந்தச் சாசனத்தில், தமிழ் மெய்க்கீர்த்தி நீண்டதாக அமைய இடமில்லை; எனினும் இந்தச் சாசனத்தின் தமிழ்ப்பகுதியில் மட்டும் ஐந் நூற்றுப் பதினேழு அடிகள் உள்ளன. பிராமணருக்கு உரியதாக இருந்த நில்ம் வேளாளர் பயிர்செய்யும் நில மாக மாற்றப்பட்டது. பிராமணருக்கு வேறு நிலம் கொடுக்கப்பட்டது. வெள்ளான் வகை நிலத்திலிருந்து அரசாங்கத்துக்குக் கிடைக்கும் வருமானங்கள் யாவும் கூறப்பட்டு அவை கோவிலைக் சேரவேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. இதனுல் அரசாங்கத்துக்கு வெள் ளான்வகை நிலத்திலிருந்து எவ்வெவ் வருமானங்கள் அக்காலத்திற் கிடைத்தன என அறியமுடிகின்றது
கோவிலுக்கு நிலத்தில் என்ன என்ன உரிமை கள் உண்டென்று ஒரு பட்டியல் தரப்படுகின்றது; அர சன் வாய்மொழியாக இடும் கட்டளை எவ்வாறு செய லாக்கப்படுகின்றது என்பதை விரிவாக இச்சாசனம் கூறுவதால், அக்கால மத்திய அரசாங்கம் இயங்கிய முறையை அறிந்துகொள்ள முடிகின்றது. அரசாங்கத் திற் கடமையாற்றிய அதிகாரிகளைப் பற்றியும் அவர் களுக்கும் தலதாபனங்களுக்கும் இருந்த தொடர்பைப் பற்றியும் இந்தச் சாசனத்திலிருந்து ஓரளவு அறிந்து கொள்ளலாம் நிலங்களின் உரிமையும் எல்லையும் மாற் றமடைந்தபோது தலதாபனங்களும் அதிகாரிகளும் நடந்த முறையையும் கைக்கொண்ட சடங்கையும் இற் தச் சாசனம் கூறுகின்றது. நிலத்தினை அளக்கப் பயன்
196

பட்ட அளவுகோல் காலத்துக்குக் காலமும் இடத் துக்கிடமும் வேறுபட்டதால், நில எல்லையை வரை யறுத்துக் கூறுவதிற் கூடிய கவனம் செலுத்தப்படுகின் றது இந்தச் சாசனத்தில், நில எல்லையைக் கூறும் பகுதி இருநூறு அடிகளுக்கு மேற் சென்றுவிடுகின்றது;
தேவதான இறையிலியாக நிலம் விடப்பட்ட தைக் கூறும் சிறிய சாசனம் ஒன்றையும் பார்க்க லாம்,163 இராசராசன் தன்னுடைய தந்தையின் தந்தை யாகிய அரிஞ்சயராகிய ஆற்றுார்த் துஞ்சினதேவருக்குப் பள்ளிப்படையாக அரிஞ்சிகை ஈஸ்வரம் என்ற சிவன் கோவிலை மேற்பாடியாகிய இராசாசரியபுரத்தில் எடுப் பித்தான்; அந்தக் கோவிலுக்கு இறையிலியாக ஐயா யிரத்து நூற்று முப்பத்தாறரைக் குழிநிலம் பதினெண் சாண்கோலால் அளந்து அவ்விடத்து வணிகர் சங்கமான நகரத்தால் விடப்பட்டது; நிலம் தேவதானமாகவிடப் பட்டபோதும், அது கோயிலுக்கும் சுற்றலைக்கும் முற் றத்துக்கும் நந்தவனத்துக்கும் மட வளாகத்துக்குமாக விடப்பட்ட நிலம் என்று சாசனத்திற் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. நுகா ஆற்றின் கரையில் அமைந்த இந்நிலத்துக்கு நீர்ப்பாசன வசதியும் இருந்துவரும் என்று சாசனத்திலே கூறப்பட்டுள்ளது
அக்காலக் கோவிலிலே திருப்பதிகம் ஒதும் வழக்கம் முக்கியத்துவம் பெற்றுவந்ததால், தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் திருப்பதிகம் ஓதுவதற்கு இராசராசன் விரிவான ஒழுங்குகள் செய்துள்ளான்,164 இராசராசனே திருமுறைகளைத் தொகுப்பித்தவனுக
163. S. I. I. Vol. III. Part I, No. 15. 164. S. I. I. Vol. II, Part III, No. 15.
197

Page 110
இருந்ததும், திருப்பதிகம் ஓதுவதற்கு இவ்வளவு சிறப் புச் செய்ததற்குக் காரணமாகலாம் திருப்பதிகம் ஒது வது என்ற பிற்கால வழக்குக்குப் பதிலாகச் சாசனத் தில், "திருப்பதியம் விண்ணப்பம் செய்வது' என்பதும் ஒதுவார் என்பதற்குப் பதிலாகப் "பிடாரர்" என்பதும் இச்சாசனத்திற் கையாளப்பட்டுள்ளன. திருப்பதிகம் ஓத நாற்பததெட்டுப்பேரையும் கொட்டி மத்தளம் வாசிப்பதற்கு ஒரு வரைவும் உடுக்கை வாசிப்பதற்கு ஒரு வரையுமாக ஐம்பதுபேரைத் தஞ்சாவூர்க்கோவிலுக்கு மட்டும் இராசராசன் நியமித்தான். இவர்க்ளில் ஒவ் வொரு வருக்கும் ஒவ்வொரு நாளும் தஞ்சாவூர் அரண் மனையிலுள்ள இராசகேசரி என்னும் மரக்காலை அளவால் ஒத்த தஞ்சைக் கோயிலிலுள்ள ஆடவல்லான் என்னும் மரக்காலால் உள்ளூர்த் திறைச்சேரியிலிருந்து முக்குறுணி நெல் கொடுபடவேண்டும் என்று இராசராசன் விதித் தான். நாட்டில் வழங்கிய மரக்கால்கள் அளவால் வேறுபட்டமையால், மரக்காலின் அளவை வரையறுத் துச் சொல்லவேண்டியிருந்தது; மரக்காலுக்கு இறை வன்பெயர் வைத்தமையும் கவனித்தற்குரியது:
நியமிக்கப்பட்ட ஐம்பது பேர்களின் பெயர்க ளும் சாசனத்திற் கொடுக்கப்பட்டுள்ளன: சிவக் கொழுந்து சீராளனன தர்மசிவன், பட்டா லகன் சீரு டைக்கழலான பூர்வசிவன் என்பன தீட்சா நாமங்கள். ஐம்பது பேர்களுக்கும் தீட்சாநாமங்கள் இருப்பதால் தீட்சை செய்யப்பட்டவர்களே திருப்பதிகம் ஒதிவந்த னரெனக் கொள்ளலாம். இந்தத் திருப்பதிகம் ஒதும் பணி தொடர்ந்து எல்லாக் காலமும் நிகழவேண்டும் என்று இராசராசன் விரும்பியதாற் சில விதிமுகைகளை ஏற்படுத்தியுள்ளான்; இந்த ஐம்பது பேர்களில் இறந்த வர்களுக்கும் பிறதேசங்களுக்குப் போனவருக்கும் பதி லாக அவ்வவரிக்கு நெருங்கிய உறவினராய் இருப்பார்
98

அந்நெல்லுப்பெற்றுத் திருப்பதிகம் ஒதுவதென்றும் அவ்வாறு நெருங்கிய உறவினர் திருப்பதிகம் ஓதத் தகுதியுடையவராய் இல்லாவிடில் அவர்களே தகுதி யுடையராய் இருப்பாரை அமர்த்தித் திருப்பதிகம் ஒதுவித்து அந்நெல்லைப் பெறுவதென்றும் அவ்வவரிக்கு நெருங்கிய உறவினர் இல்லையானல் அந்தத் தொழில் செய்பவர்களே தகுதியுடையராய் இருப்பாரைத் திருப்பதிகம் ஒதத் தேர்ந்தெடுப்பதோடு அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவரே நெல்லுப்பெறுவதென்றும் இராசராசன் விதித்தபடி கல்லில் வெட்டப்பெற்றன
சோழப் பெரு மன்னர் காலத்துச் சைவம் தமிழ் நாட்டுக்குள் அல்லது சோழப் பேரரசுக்குள் மட்டும் அடங்கியிருக்கவில்லை. இந்தியாவின் பிற பகுதிகளில் விளங்கிய சைவத்துக்கும் தமிழ்நாட்டுச் சைவத்துக்கும் தொடர்புகள் இருந்தன. சோழநாட்டுச் சைவா சாரிய ரின் சீடர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்தனர் இது இராசேந்திரனுடைய சாசனமொன்றிலிருந்து தெரியவருகின்றது. 165 இராசேந்திரன் கங்கைகொண்ட சோழபுரத்துக் கோவிலில் முடிகொண்டசோழன் திரு மாளிகை என்ற பகுதியில் வடபக்கத்துத் தேவாரத்துச் சுற்றுக்கல்லூரி என்ற தமது இறைவழிபாட்டிடத்தி லிருந்து தானஞ்செய்தான். இந்தத் தருமம் சைவாசாரி யருக்குச் செய்யப்பட்டமையால் ஆசாரிய போகம் என வழங்குகின்றது இராசேந்திரன் சர்வசிவபண்டித சைவா சாரியரை நம் உடையார் என்று குறிப்பிடுவதால், இவர் குலகுரு நிலையில் இருந்திருக்கவேண்டும். இவருக்கும் இவருடைய சீடரும் சீடரின் சீடருமாக ஆரியதேசம், மத்தியதேசம், கெளடதேசம் என்னும் இடங்களில்
165. S. II, II. Vol. II, p. 106,
99

Page 111
வாழ்ந்து யோக்கியராய் இருப்பவர்களுக்கும் ஆண் டாண்டு தோறும் ஒவ்வொருவருக்கும் இரண்டாயிரக் சல நெல் சந்திர சூரியர் உள்ளவரை உள்ளூர்ப் பண்டா ரத்திலிருந்து ஆடவல்லான் என்னும் மரக்காலால் அளந்து கொடுக்கவேண்டும் என இராசேந்திரனுடைய கல்வெட்டுக் கூறுகின்றது
சோழப்பெருமன்னர் காலத்திற் சைவசமயம் முதன்மைபெற்றிருந்ததே தவிரத் தமிழ்நாட்டின் தனிச் சமயமாக இருக்கவில்லை. வைணவ சமயமும் ஓரளவு செல்வாக்குடன் விளங்கியது, புறச் சமயங்களான சம னம் பெளத்தம் என்பனவும் மன்னரின் ஆதரவு பெற்று மக்களிற் சிறுபான்மையினராற் போற்றப்பட்டுவந்தன. நாகபட்டினத்திலுள்ள குடா ம ணி வி கா ர த் துக் குப் பெளத்தனன சைலேந்திரப் பேரரசன் வேண்டுகோளுக் கிணங்கி ஆனைமங்கலம் என்ற கிராமம் இறையிலி பள் ளிச் சந்தமாக விடப்பட்டதை ஆனைமங்கலம் செப்பே டுகளிலிருந்து அறியலாம்.166 சைவத்திருப்பணிகள் பல செய்துள்ள குந்தவையார் சமண ஆலயம் கட்டிப் பள் ளிச் சந்தமும் விட்டது "பள்ளிச்சந்தம் வைகாவூர்த் திருமலை பூரீ குந்தவை ஜிநாலயத்து" என்று வருவதி லிருந்து அறியப்படுகின்றது.167 மல்லியூர் வியாபாரி நந்தப்பயன் மணவாட்டி சாமுண்டப்பை இப்பள்ளியில் நந்தாவிளக்குக்கு இருபது காசும் திருவமுதுக்குப் பத் துக்காசும் வைத்ததை அதே சாசனம் கூறுகின்றது; சமணசமயத்துக்கு எப்பொழுதும் சிறப்பாக ஆதர வளித்த வணிகர் குலத்தில் வந்தவளான ஒரு பெண்ணே தானம் செய்திருப்பது கவனிக்கத்தற்குரியது; திருகோ
166. E. I. Vol XXII p 213. 167. S. II, II. Vol. I, No. 67.
200

ணமயிைலிருந்த வெல்கம் விகாரையைப் புதுப்பித்த இராசராசன் அதற்கு இராசராசப்பெரும்பள்ளி என்று பெயர் வைத்ததும் சோழமன்னர் எல்லாச் சமயங்களை யும் போற்றிவந்ததற்குச் சான்ரு கும்3
முதலாம் இராசராசன் காலத்தில் அவன் பெய ரால் நடந்த ஒரு தண்ணிர்ப்பந்தற் றருமத்தை ஒரு சாசனம் கூறுகின்றது.168 இராசராச சோழனது பணி மகனும் ஆவூரைச் சேர்ந்தவனுமாகிய கண்ணன் ஆரூரன் தன் அரசன் பெயரில் விக்கிரமாபரணச் சதுர்வேதிமங் கலத்தின் மேலைப்பெருவழியில் ஒரு கிணற்றை அமைப் பித்து அதற்கு நிவந்தம் அளித்துள்ளான் இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருள் மொழித்தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இரு குறுணியாகத் திங்கள் ஆறுக்கு முப்பது கலமும் இராச ராசன் பெயரால் தண்ணிரி வாரி ப் பார் க்கு நாளொன்றுக்கு நெல் இருகுறுணியாகத் திங்கள் ஆறு முப்பது கலமும் இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்குத் திங்கள் ஒன்றுக்கு நெல் இருகுறுணியாகத் திங்கள் ஆறுக்கு நான்கு கலமும் இராசராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் பழுது ஏற்பட்டாற் புதுப்பிக்க ஆண்டு தோறும் இருகலனே இருதூணி நெல்லுமாக அறுபத் தாறு கலம் எட்டு மரக்கால் நெல் விளையக்கூடிய நிலத் தின் விலைக்குரிய பணத்தையும் வரிக்குரிய பணத்தை யும் கண்ணன் ஆரூரனிடமிருந்து மொத்தமாகப் பெற் றுக்கொண்ட அவ்விடத்துச் சபையார் நிலத்தை வரி யில்லாமற் செய்தனர் என அச்சாசனம் கூறும். பொருள், அளவு, எண் என்பவற்றைக் குறிக்க இடைக்காலத்தில் வழங்கிய அடையாளங்கள் சில, இச் சாசனத்தில்
翠、 168, S. II, II. Vot, III, Part II. No, 4.
20l.

Page 112
இடம்பெற்றுள்ளன. ஐ என்பது நெல் கள என்பது கலம். க என்பது குறுணிநெல் வத என்பது இரண்டு தூணி, உகளவத என்பது இருகலனே இரு தூணிக்கு அடையாளம். பழைய தமிழ்முறையில் இன்றுள்ளது போலக் கூட்டெண்களைக் குறிக்கும் வழக்கமில்லை. எத் தனை பத்து, எத்தனை நூறு, எத்தனை ஆயிரம் என் பதை முதலில் எழுதி அதன் பின்பு மற்ற எண் எழுதப் படும். உதாரணமாக அறுபத்தாறு என்பதை 66 என்ற முறையில் அக்காலத்தில் எழுதவில்லை; 6106 என்ற முறையிலேயே எழுதுவார்கள். இந்தச் சாசனத்தில் சுல்சு என்றே எழுதியுள்ளார்கள்:
3. பிற்காலப் பாண்டியர் காலம்
சோழர்குல மன் ன ரீ களின் வீழ்ச்சியைத் தொடர்ந்து பாண்டியர்குல மன்னர்கள் தலையெடுக்கின் றனர். சோழர் குல மன்னர் சோழப் பேரரசைக்கட்டி எழுப்ப முன்பு பாண்டிநாட்டில் ஆதிக்கம் செலுத்திய பாண்டியரை முற்காலப் பாண்டியரெனவும் சோழப் பேரரசு வீழ்ந்த பின் தமிழ்நாடு முழுவதும் ஆட்சிசெலுத் திய பாண்டியரைப் பிற்காலப் பாண்டியர் எனவும் கூறலாம் சோழப்பெருமன்னர் பெற்றிருந்த அளவு சிறப்பு பாண்டியர் என்றும் பெறவில்லே. எனினும், பிற்காலப் பாண்டியர் காலத்திலும் தமிழ்நாடு இரு மன்னர்கள் காலத்திலே தனிச் சிறப்புடன் விளங்கிய தெனலாம். சடாவர்மன் சுந்தரபாண்டியன், மாறவர் மன் குலசேகரன் என்போரே அம் மன்னர்கள். இவர் கள் ஆண்ட காலம் கி. பி. 1251 - 1311. பாண்டிய மன்னர் கி. பி. 1311 ல் திடீர் வீழ்ச்சி அடைகின்றனர். மாறவர்மன் குலசேகரன் மக்களுக்குட் சிம்மாசனத்தை அடைவதில் ஏற்பட்ட தகராறு முஸ்லீம் படையெடுப் பைத் தமிழ்நாட்டுக்கு வரவழைப்பதாக அமைகிறது.
202

இந்த முஸ்லீம் படையெடுப்பின் பின்பு பாண்டியர் தலையெடுக்க முடியவில்லை. பாண்டியர் சிறிது காலம் தொடர்ந்து ஆளுகின்றனர். சில ஆண்டுகளின் பின்பு மதுரையில் முஸ்லீம் ஆட்சி ஏற்பட்டுவிடுகின்றது. பாண்டியர் தென் பாண்டி நாட்டுக்குத் தப்பி ஓடிக் குறு நில மன்னராகின்றனர். அதன் பின்பு தென்பாண்டி நாட்டில் ஒரு பகுதியிலே தவிரத் தமிழ்நாட்டைத் தமிழரல்லாதோரே ஆண்டுவந்த்தனர். எனவே தமிழர் சிறப்பாக வாழ்ந்த காலத்துக் கடைசிக் கட்டத்தி லெழுந்த சாசனங்களே இங்கே ஆராயப்படுகின்றன.
இந்த இரு மன்னரிகளுடைய சாசனங்களை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வதிலே, பல சங்கடங் கள் காணப்படுகின்றன. பிற்காலப் பாண்டிய மன்னர் களுடைய குலமுறையை அறிந்துகொள்ள முடியவில்லை; அதை அறியக் கூடிய பிற சான்றுகளும் கிடைக்கவில்லை. சாசனங்களிலுள்ள வானியற் செய்திகளின் துணை கொண்டே சாசனங்களின் காலம், மன்னர்களின் காலம், மன்னர் குல முறை என்பனவற்றை அறிய வேண்டியுள்ளது; வானியற் செய்திகளை ஆராய்ந்த கீல் கோர்ண், யே கொபி, சுவாமிக்கண்ணுப்பிள்ளை, கிவெல் என்பவர்கள் வெவ்வேறு முடிவுகளுக்கு வந்துள்ளனர்; * சிங்கநாயற்று முப்பத்தொன்ருந் தியதியும் அபர பட் சத்து திருதிகையும் புதன்கிழமையும் பெற்ற ரேவதி நாள்," "மிதுன நாயிற்று பூர்வபட்சத்து பிரதமையும் வெள்ளிக்கிழமையும் பெற்ற அத்தத்து நாள்" முதலிய வானியற் செய்திகளே ஆராய்ச்சியாளருக்குக் கிடைக் கின்றன. பாண்டியர் சாசனங்களிலுள்ள ஆண்டு குறிக் கும் முறையும் புதிராக இருக்கிறது. உதாரணமாக, "யாண்டு இரண்டாவதின் எதிர் நாற்பத்திரண்டாவது" மன வரும். முதலாவது ஆண்டு முடி சூட முந்திய அர சனின் ஆட்சியாண்டு எனவும் இரண்டாவது ஆண்டு
203

Page 113
அந்த அரசனுக்கு முந்திய அரசன் முடிசூடிய காலத்தி
லிருந்து கணிக்கப்படுவதெனவும் கோபிநாதராவ் கூறி ஞர். ஆணுல் "யாண்டு பதின் மூன்ருவதுக்கு எதிர் இரண்
டாவது" என்று வரும்போது இவருடைய விளக்கம் பொருந்தாது போகின்றது. வெங்கையா என்ற சாசன வியலாளர் இரண்டாவது ஆண்டே உண்மையான ஆட்சி யாண்டெனவும் முதலாவது ஆண்டு பட்டஏகத்திளவரச ஞக வந்த காலம் அல்லது முடிசூடுவதற்கு முன்பு ஏதோ நிகழுங் காலத்தைக் குறிக்கிறதெனவும் கூறினர்: இது முன்பு காட்டிய உதாரணமாகிய இரண்டாவதின் எதிர் நாற்பத்திரண்டாவது என்பதற்குப் பொருந் தாது போகின்றது
பேராசிரியர் நீலகண்டசாஸ்திரி இரண்டு ஆண்டு களையும் கூட்டி வருவதையே ஆட்சியாண்டாகக் கூறுகின் ருர் . இந்தக் கட்டுரையிலும் அதே முறை பின்பற்றப் படுகின்றது; அவர் அவ்வாறு கொண்டதற்குக் கார ணம் உண்டு. பெரிய சின்னமனூர்ச் சாசனத்தில் வட மொழிப் பகுதி பதினரும் ஆட்சியாண்டைக் குறிப்பி டத் தமிழ்ப்பகுதி 'யாண்டு இரண்டாவதின் எதிர் பதி ஞன்காவது" என்று கூறியுள்ளது; பிற்காலப் பாண்டி யர் காலத்தில் ஒருவர் ஆண்டாரா அல்லது ஐவர் கூட் டாட்சி செய்தனரா என்பதிலும் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. முடி மன்னராகவும் முதல் மன்னரா கவும் ஒருவர் ஆண்டுவந்த காலத்தில் வேறு அரசகுமா ரர் தம்முடைய பெயரில் தம்முடைய புகழைக் கூறும் சாசனங்களை வெளியிட்டது மறுக்கமுடியாத உண்மை யாகும். ஒரே பெயர் பல அரசருக்கு வழங்கியதனல், வரலாறு இன்னும் குழப்பம் அடைகின்றது, சடாவரி மன் சுந்தரபாண்டியன் என்ற பெயரில் மூவர் ஆண்டுள் ளனர்; தனிச்சிறப்போடு ஆண்ட முதலாம் சடாவர் மன் சுற்தரபாண்டியன் "எம்மண்டலமும் கொண்டரு
204

ளிய" என்ற பட்டத்தைத் தாங்கியுள்ளான். எனினும் அவன் இப்பட்டத்தைப் பெறுமுன்பும் சாசனங்கள் எழுந்திருக்கும். பட்டம் பெற்றபின்பும் இப் பட்டமில் லாத சாசனங்களும் தான்றியிருக்கலாம். சடாவர்மன் வீரபாண்டியன் என்பவன் முதலாம் சடாவர்மன் சுற்தர பாண்டியன் காலத்தவனுய் அவனுடைய போர்களிலே பங்குகொண்டவன்; அவனுடைய பெயரில், அவனுக் குச் சிறிது பிந்தி இன்னெருவனும் இருந்திருக்கிருன். மாறவர்மன் குலசேகரன் என்னும் பெயரிலும் இருவர் கானப்படுகின்றனர், “எம் மண்டலமும் கொண்டருளிய" என்னும் பட்டத்தை இருவரும் தரித்துள்ளனர். அவரி கள் காலத்துச் சாசனங்களைப் பிரித்தெடுக்க முடியவில்லை; எனவே, இக்கட்டுரையில் ஆராய எடுத்துக்கொண்ட மூன்றுபேர்களின் காலத்துச் சாசனங்களும் கி. பி; 1251 - 1311 என்று வரையறுத்துச் சொல்லமுடியாது; எனினும் நீலகண்டசாத்திரி இந்த மூன்று பெயர்கள் தாங்கிய எழுவரின் காலத்தைப் பற்றிக் கூறுவதிலிருந்து இந்தச் சாசனங்கள் கி. பி. 1251 - 1350 என்ற காலப் பிரிவையாவது சேர்ந்தவை எனத் துணிந்து கூறலாம்;
பாண்டியர் குலமன்னர் சோழர்குல மன்னர்கள் அளவு சைவ சமயத்துடன் நெருங்கிய தொடர்புடைய வரல்லரி எனினும் பிற்காலப் பாண்டிய மன்னர் சைவ சமயத்தையே முதன்மையாக ஆதரித்து நின்றனர். எனவே, அக்காலத்திலும் சைவசமய சம்பந்தமான சாசனங்கள் பெருந்தொகையாக எழுந்தன; அவற் றுள் ஒரு பகுதி கோவிலுக்கு விளக்குவைப்பதைக் கூறு வன: பாண்டிய மன்னர் காலத்திலே பாண்டி நாட்டி லேயே செல்வப் பெருக்கம் ஏற்பட்டதால், lumreč7uq. நாட்டவர் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் அறச் செயல் களில் ஈடுபடுவதைக் காணலாம். பாண்டி மண்டலத்து மதுரையைச் சேர்ந்த காமன் அரசஞன அதிவருவான்
205

Page 114
தேவன் தொண்டைமண்டலத்துத் திருக்கழுக்குன்றக் கோவிலில் நுந்தா விளக்குச் சந்திர சூரியர் உள்ள வரை எரிய வேண்டுமென்று நூறு சாவா மூவாப்பேராடுகளை அக்கோவிலுக்குத் தானம் செய்தான். திருக்கழுக்குன் நக்கோன், அரசபுரந்தரக்கோன், சித்திரமேழிக்கோன், பெரியநாட்டுக்கோன் என்ற நான்கு மன்ரு டிகளான இடையர்கள் கோவிலதிகாரிகளிடம் அந்த ஆடுகளைப் பெற்றுக்கொண்டு மெய்ப்பூட்டுத் தீட்டுக் கொடுத்திருக் கிருர்கள்.169 முந்திய காலச் சாசனங்களில் இவ்வாறு தீட்டான ஆவணம் கொடுப்பதுபற்றிச் சாசனங்களிற் குறிப்பு இல்லை; இது 'அக்கால வளர்ச்சியாக இருக்க வேண்டும், அந்தத் தீட்டின் படி, இந்த நான்கு இடை யர்களும் அவர்கள் பரம்பரையினரும் தினசரி உழக்கு நெல் இராசகேசரியால் அளந்து கொடுத்து வரவேண்டும், சோழர்காலத்து வழக்கில் வந்த இராசகேசரி என்ற முகத்தல் அளவையே சடாவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் அவன் ஆட்சிக்கு உட்பட்ட தொண்டை மண்டலத்தில் வழங்கிவந்திருக்கிறது;
பல்லாபுரமான வானவன் மாதேவிச் சதுர்வேதி மங்கலத்திலுள்ள சிவபெருமானுக்கு முதலிவாணுண்டை யான தொண்டைமானுர் நுந்தாவிளக்கு ஒன்றுக்காக முப்பத்திரண்டு பசுக்களும் எருது ஒன்றும் விட்டிருக்கி ருர். கோயிலுரிமையுடைய பட்டர்கள் இவற்றை ஏற் றுச் சந்திர சூரியரி உள்ள வரை நுந்தாவிளக்கு வைப்ப தாகச் சாசனங்களிற் பொறித்தனர். மாகேசுவரர் இந் தத் தருமத்தைப் பாதுகாக்கவேண்டும் என்றும் குறிப் பிடப்பட்டுள்ளது,170 திருநெல்வேலி நெல்லையப்பர்
169. S. I. I. Vol. V, p. 190. 170. S. I. I. Vol. VII. p. 328.
206

கோவிலில் பொல்லாத பிள்ளையாருக்குச் சந்தி விளக்கு மாறவர்மன் குலசேகரன் காலத்தில் வைக்கப்பட்டுள் ளது, பெருந்தெருவில் இருந்த வணிக நகரத்தார் ஆட்கொண்டான் தனபாலர் அத்தருமத்துக்காகக் கொடுத்த பொருளை ஏற்றுத் தம்மைச் சேர்ந்தோரி சந்திரசூரியர் உள்ள வரை சந்திவிளக்கு எரிப்பதாகக் கல்வெட்டிக்கொடுத்தனர். 171
திருவொற்றியூர்ச் சாசனமொன்றில் பால் அமு துக்கும் நெய்யமுதுக்கும் ஒழுங்கு செய்யப்பட்ட குறிப்பு வருகின்றது. அமுது பொதுவாக உணவு அல்லது உண வோடு தொடர்புடைய பொருளையே சாசனங்களிற் குறித்து வந்தாலும் நெய் விளக்கு எரிப்பதற்கும் பயன் பட்டிருக்கலாம். அவ்வூரிலுள்ள மன்ருடிகளில் வெறுங் கைவென்ருன் அல்லாண்டை மகன் அஞ்சாதாணுன குழையாகரக்கோனும் அவன் தம்பி திருஞான சம்பந் தக்கோனும் பண்டாரம் எனப்படும், கருவூலத்திற் சாவா மூவாப்பசு அறுபத்துதான்கும் எருது இரண்டும் பெற்றுக்கொண்டு தினசரி ஆரணை தியாகி என்னும் முகத்தலளவையால் எட்டுநாழியாலும் உரி நெய்யும் அளந்து கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இந் தத் தருமமும் மாகேசுவரர் பாதுகாப்பில் விடப்பட் டுள்ளது. 172
தனி விளக்குக்குப் பதிலாகப் பல விளக்குகள் ஒருங்குசேர்ந்து கோவில் வாசலை அலங்கரிக்கும் தீப மாலைக்குத் தானம் செய்யும்வழக்கமும் இந்தக் காலத் தில் இருந்திருக்கிறது. திருவையாற்றுச் சிவபெருமானு
171. S. I. I. Vol. V. p. 149. 172. S. I. I. Vol. VII. p. 36.
207

Page 115
டைய வாசலில் தீபமால் நிறுவி அதில் விளக்கு எரிக்கப் பாம்புணிகிழான் எனப்படும் பாம்புணிக் கிராமத்தின் உரிமையானவனும் மல்லாண்டானுமான சேரகோன் நால்வரிடம் ஆறே மாகாணி முற்திரிகைக்கீழ் எட்டுமா முக்காணி நிலம் விலைக்கு வாங்கித் திருவிளக்குப் புற மாகவிட்டான்,173 அவன் திருமழபாடிச் சிவபெரு மானுடைய வாசலில் தீபமா ைநிறுவி அதற்கு வேண் டிய எண்ணெய்க்காக மூவ்ரிடம் நாலே காணிக்கீழரை நிலம் விலைக்கு வாங்கித் திருவிளக்குப்புறமாக விட்டதை இன்னெரு சாசனம் கூறும்.174
இக்காலக் கோவிலில் திருமஞ்சனத்துக்கான ஒழுங்குகள் பல செய்யப்பட்டன. திருமஞ்சனத்துக்குத் தானம் செய்ததை எடுத்துக் கூறும் சாசனங்கள் நான்கு கிடைத்துள்ளன. காளை யார்கோவிலில் திருமஞ்சனப் புற மாக நிலம் ஊரால் இறையிலி செய்யப்பட்டு அக்கோயி வில் ஆதிசண்டே சுர தேவகன்மிகளிடம் விடப்பட்ட தைச் சிதைந்துள்ள முற்றுப்பெருத சாசனம் ஒன்று எடுத்துக் கூறுகின்றது. 175 திருமழபாடிச் சிவபெருமானுக்கு எதிரொப்பிலாதா னன சுந்தரபட்டனும் பொன்னுர் மேனிபட்டனும் உமையாண்டாளும் கமுகந்தோட்டம் அரை மாநிலத்தைத் திருமஞ்சனப்புறமாக விட்டனர். இறைவனுக்கு அபிடேகம் செய்பவருக்குச் சீவனத்துக்கு வேண்டிய பங்கைக் கோயிற் காணி விளைநிலத்திலே விட்டுக் கல்லில் வெட்டும்படி கூறப்படுகின்றது. ஊரார் நில விலையாகவும் நிலவரியாகவும் மொத்தப் பணமாக எழுநூற்றைம்பது பணம் முதலியார் புற்பவன சிவரிடம்
173. S. T. T. Vol. v. p. 223. 174. S. I. I. Vol V. p. 273. 175. S. 1. l. Vol VIII. p. 82,

வாங்கிக்கொண்டு நிலத்தை இறையிலி செய்து கொடுத் தனர்.176
திரையனுாரான குலோத்துங்கசோ ழ ச் ச துரி வேதிமங்கலம் அனந்திச்சுரமுடைய நாயனருக்கு அபி டேகத்துக்கு ஒழுங்கு செய்தது. கோவிலை நிர்வாகஞ் செய்த சத்தியதேவர் நாற்பத்திரண்டு பாடகநிலங்களைக் கோவிலுக்கு விட்டார் இப்பாடக நிலங்களே விடுவதற்கு உடையார் அதியமானுர்முன்பு கூடிய நாடவரி உடன் பட்டனர் சபை நிலத்தைக் குடிநீங்காத்தேவதான மாகவிட்டது. குடிநீங்காத்தேவதானத்தில், நிலமும் நிலவருமானமும் கோவிலுக்கு உரியதாக இருப்பினும் குடி யேறியுள்ள அல்லது தொழில் செய்துவருகின்ற குடிகளை அப்புறப்படுத்தும் உரிமை மட்டும் மறுக்கப்பட்டது. இற் நிலத்திலிருந்து கிடைக்கும் நெய்யில் சிவபெருமானுக்குத் திருவாதிரையில் அபிடேகம் நடைபெறவேண்டும் என் றும் குறிக்கப்பட்டுள்ளது.177
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலிலும் இந்த ஒழுங்கு நடைபெற்றுள்ளது; நெல்லையப்பருடைய நிவந்தக்காரரில் வெட்டிக் குடி இடையரான சிறு யான் சேஞதிபதியான வேண்டவளந்தக்கோனும் கூத்தனும் பெரியானும் ஆகிய மூன்று சகோதரர்களும் அட்டமி நாள் ஒவ்வொன்றும் சிவபெருமானுடைய அபிடேகத் துக்கு நாழிநெய்யும் பொல்லாத பிள்ளையாருடைய அபி டேகத்துக்கு உரிநெய்யும் அளக்க உடன்பட்டனர். பிள் ளையார் வணக்கம் காலகதியில் முக்கியத்துவம் பெற்று வருவதை இங்கே கவனிக்கலாம் கோவிலிலிருந்து முப்
176, S. I. I. Vol. V, p. 27. 177. S. I. I. Vol. VII, p. 255.
209

Page 116
பது பசுக்களைப் பெற்றுக்கொண்டு நெய்யைச் சந்திர சூரியர் உள்ளவரை தாமும் தம்முடைய சந்ததியினரும் அளக்க உடன்பட்டனர். தாம் பசு நெய்யையே கோவி லுக்குக் கொடுப்போம் எனச் சிறப்பித்தும் சொல்லியுள் ளனர். இம்மூவரும் எழுத்தறிவற்ற தற்குறிகளானதினுல், இவரிகள் ஒவ்வொருவர் சார்பிலும் பிறர் கையெழுத் திட்டுள்ளனர்,178
சிவபெருமானுக்கு அலங்காரம் செய்வதற்காகத் தானம் செய்யும் முறைய்ம் இருந்தது, சார்த்துப்பணி யில் ஒன்றை எடுத்துச் சிறப்பித்துக் கூறி அதற்குத் தானம் செய்தமையை ஒரு சாசனத்திற் காணலாம்; வைத்தியபுரந்தரர் திருவானைக்கா இறைவனுக்கும் வடி வேயுமங்கை நாச்சியாருக்கும் நாச்சியார் அகிலாண்ட நாயகியாருக்கும் சார்த்துப்பணிக்கு நெற்றிப்பட்டம் செய்வதற்காக நானுாறு பணம் கொடுத்தார். கோவில் ஆதிசண்டேசுவரதேவகன் மிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு கோவில் நிலத்தில் ஒரு பகுதியை இப்பணிக்கு ஒதுக்கிக்கொடுத்தனர். அந்த நிலத்தைக்கொண்டு அந் தத் தருமத்தைச் செய்துவருவதாக அத் தேவகன் மிகள் சம்மதித்துப் பிரமாணம் செய்து கொடுத்தனர்.179
இறைவனுடைய தேவிக்குச் சார்த்துப்படி ஆடை யாகிய பரிவட்டம், அமுது முதலிய படிவிஞ்சனத்துக்கு வழியமைத்ததைக் கூறும் சாசனம் ஒன்றும் கிடைத்துள் ளது. காலகதியிற் பெண் தெய்வ வழிபாடும் தமிழ்நாட் டிலே பெருகிக்கொண்டுவந்தது. சிவன் கோவில்களிலே சக்திக்குப் பல இடங்களிலே தனிச் சன்னிதிகள் அமைக்
178. S. I. I. Vol V, p. 151. 179. S. 1. I. Vol. IV, p. 133.
210

கப்பட்டன. அவற்றுக்குக் காமக்கோட்டம் என்றபெயர் வழங்கியது. திருமிகைச் சூர்ச் சிவபெருமானுடைய திருக்கா மக்கோட்டமுடைய சிவகாமசுந்தரி நரச்சியா ருக்கு உடையார் காலிங்கராயரும் கடைக்கூட்டுபிள்ளை ஆதித்ததேவரும் சபையாரும் நாட்டாரும் சேர்ந்து சார்த் துப்படி முதலியவற்றுக்காக நிலம் விட்டனர். விடப் பட்ட நிலங்களிலிருந்து கார்த்திகை மாதவரை கொடு படாமலிருந்த வரிகளும் மார்கழி மாதத்திலிருந்து கொடுக்கப்படவேண்டிய வரிகளாகிய செட்டிகள் LG) பட்டடை, சேனைக்கடை வேட்டைக்காரர்க்கடை, தறி யிறை, தட்டார்பாட்டம், குளவாடை, ஒழுக்குநீர்மீன் பாட்டம், செக்காயம், வண்ணுர்கற்காசு, உப்புவழி வரி என்பனவும் சேர்க்கப்பட்டுச் சிவகாமசுந்தரி நாச்சி யாருடைய சார்த்துப்படி முதலியனவற்றுககாகச் சந்திர சூரியர் உள்ள வரை செலவிடப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது,180
கோவிலிலே பூசை அல்லது வழிபாடு நடப்ப தற்காகத் தானங்கள் விடப்பட்டுள்ளன. நிலம் விடப் பட்டதை ஒரு சாசனம் கூறுகின்றது. 184 திருப்பூந்துருத் திச் சிவ பெருமானையும் நாச்சிமார் இருவரையும் உய்ய வந்தான் இராசராசதேவர் கும்பிட்டு அவர்களுடைய அமுதுபடி, படிவிஞ்சனத்துக்காக நிலம் அரையே காணி கோவில் நிலத்தில் விலைக்குக் கொண்டுவிட்டுள்ளார். நிலம் தேவதான இறையிலியாக ஆதிசண்டேசுவர தேவ கன்மிகளால் விடப்பட்டது. நிலத்திற்குரிய வரிகள் யாவற்றையும் தேவகன்மிகள் செலுத்திவர உடன்பட்ட டனர். திருக்கழுக்குன்றக்கோவிலிற் பூசை நடைபெறு
180. S. I. I. Vol. VIII. p. 137. 181, S. I. I. Vol, V, p. 179.
211

Page 117
வதற்கு காமன் அரசஞன அதியமான் தேவரி பணம் கொடுத்து ஒழுங்கு செய்ததை இரண்டு சாசனங்கள் கூறு கின்றன. கோவிலில் பூசிக்கும் பட்டர்கள் உபயத்தீட் டுக்கொடுக்கிருர்கள். அதியமான் தேவரிடம் இருபத்தி ரண்டரைப் பணம் பெற்றுக்கொண்டு வட்டியாகத் தின சரி நாழி உரி அரிசி பூசைக்குச் செலவிடுவதாகப் பட் டர்கள் தீட்டுக்கொடுக்கின்றனர்.182
திருக்கழுக்குன்றக் கோவிலில் உரிமையுடைய நாற்பத்தெட்டு வட்டத்துச் சிவப்பிராமணரி உபயத் தீட்டுக் கொடுக்கின்றன்ர் அதியமான் தேவர் கொடுத்த அறுபத்தேழரைப் பணம் வட்டிக்குக் கொண்டு சிவப் பிராமணர் நான்கு நாழி உரி அரிசி கோவில் அமுதுக்குத் தினசரி அளப்பர்; அந்த அமுதை அப்பிராமணர் தம் முடைய பரிசாரப்பேற்றுக்குக் கூலியாகப் பெறுவர். 183 கோவில் நிலத்தைக் கற்பூரவில்க்கு விற்றுச் சீர்திருத்து வித்து கோவிலுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் வர வழிசெய்தனரி மதுரைச் சுந்தரேசுவரரி கோவி லுக்குரியதும் மாத்தூரிலிருந்ததுமான தேவதானம் வரம்பழிந்து காடுபற்றிக் காணப்பட்டது. கோவில் உரிமை யுடையவர்களும் தேவகன்மிகளும் மாகேசுவரக்கண்காணி களும் அந்த நிலத்தைக் கோவிற் கைக்கோளரில் மாதேவர் அழகிய சொக்கஞரான சுந்தரபாண்டியச் சோழ கோளுர்க்கு இரு நூற்றைம்பது புதுக்குளிகைக்குக் கற்பூர விலையாக விற்கின்றனர். அழகிய சொக்களுர் அந்த நிலத்தைத் திருத்திப் பயிர்செய்யவேண்டும். நில வரிகள் பட்டியல் ஒன்று தரப்படுகின்றது. பொன்வரி, வினியோகம், வெட்டிப்பாட்டம், பஞ்சுபிலி, சந்திவிக்
182. S. l. I Vol. V, p. 191. 183, S, I, I, Vol. V, p 191.
22

கிரகப்பேறு, ஒல் எழுத்துவினியோகம், இலாஞ்சினேப் பேறு, காணிக்கை, கார்த்திசைப்பச்சை, ஆனைச் சாலை, குதிரைப்பந்தி முதலிய வரிகளுக்குப் பதிலாக அழகிய சொக்கஞர் காடுவெட்டின ஆண்டில் பதினெட்டடிக் கோலால் அளக்கப்பட்ட் ஒவ்வொரு மாவுக்கும் நான்கு கலநெல்லும் அடுத்த ஆண்டு ஆறு கல நெல்லும் அடுத்த ஆண்டு எட்டுக்கலநெல்லும் அடுத்த ஆண்டு பத்துக் கல நெல்லும் அடுத்த ஆண்டு பன்னிரு கல நெல்லும் அதற்கு அடுத்த ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டுக்கும் பதினைந்து கலநெல்லும் கோவிலுக்குக் கொடுத்து வரவேண்டும். ஒவ் வோராண்டும் பயிரைப்பார்த்துப் பயிர்நின்ற நிலத்திற்கே இவ்வரிசைப்படி இறுத்து வர வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது.184
திருவிழா நடைபெறுவதற்கான ஒழுங்குகளும் நடந்துள்ளன; திருமழபாடிச் சிவனுக்கு நிலம் நாட்டா ரால் இறையிலிபண்ணிக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தைப்பூச விழாவுக்குத் திருப்பாவாடைக்கும் காவ்ேரியாற் றில் எழுந்தருளும்போது தங்குவதற்கு ஆற்றிலே மண்ட பமும் பந்தலும் அமைப்பதுக்கும் அமுதுபடி சாரித்துப் படி வெஞ்சனம் உள்ளிட்ட பலவற்றுக்கும் வேண்டிய பணத்துக்கும் நெல்லுக்குமாக நிலம் கொடுக்கப்பப்பட் டிருக்கின்றது. 185 பாண்டிமண்டலத்தவர் ஒருவர் தம்மு டைய பிறந்த நாளில் சிறப்பாகப் பூசை நடத்துவதற் குத் திருவானைக்காக் கோவிலில் ஒழுங்குசெய்துள்ளார்; முனையதரையருடைய பிறந்த நாள் பரணிநாளாம்: தானம் கொடுத்த தைமாதம் முதல் இந் நாள்கள் தோறும் சிறப்பாகத் திருவானைக்காக் கோவிலில் அமுது
184, S. I. 1. Vol. IV, p. 107. 185, S. I. I. Vol. V, p. 248.
23

Page 118
நடைபெறவேண்டும் அரிசி திருவெண்ணுவல் தேவன் காலால் சிவனுக்குக் குறுணியும் தூணியும் வடிவேயு மங்கை நாச்சியாருக்குக் குறுணியும் அகிலாண்டநாயகி யாருக்குக் குறுணிநாஞழியும் பொல்லாத பிள்ளையாருக்கு நாஞழியும் அவியுணவுக்கு முன்னழியும் அத்தியயனம் பண்ணும் பிராமணர் இருவருக்கு முன்ஞழியும் அபூரித் திருமேனிகளுக்கு இருநாழியும் ஆக அரிசி கலம் வேண்டி யிருந்தது விறகு, கறியமுது, உப்பு, மிளகு, சீரகம் நெய், தேங்காய், பழம் உள்ளிட்ட படிவெஞ்சனங்கள் வேண்டியிருந்தது. வழமையாக இரண்டு குடம் அபிடேக நீர் எடுத்து வருவதுக்கும், தினமும் இதனேடு இரண்டு குடம் அபிடேக நீரை எடுத்துவருவதுக்குமாக ஒருவருக் கும் நந்தவனம் வைத்துப் பூப்பறித்து மாலைகட்டுபவர் ஒருவருக்கும் தொண்டுக்கும் சீவனத்துக்கும் புடவை முத லுக்கும் தானம் செய்யவேண்டியிருந்தது, இவற்றுக்காக முனை தரையர் இருபதினுயிரம் காசு கொடுத்தார். இப் பணம் கோவில் நாலாம் பிராகாரத்து ஆதிச்செல்வன் போனகப் பழநெல் பண்டாரத்திலே திருப்பணிக்கு முத லாக வைக்கப்பட்டது. கோவில் ஒரு வேலி விளைநிலத் தையும் நந்தவனம் அமைப்பதற்கான இருநூறு குழி புன் செய் நிலத்தையும் சகல உரிமைகளோடும் முனையதரைப் ருக்கு விற்று விலைப்பிரமான இசைவு தீட்டுக் கொடுத் தது 186
சோழப்பெருமன்னர் காலத்தைப் போலல்லாது பிற்காலப் பாண்டியரி காலத்தில் கோவிலின் தேவை களுக்காக நிலதானமே பெரும்பாலும் நடைபெறுகின் றது. இன்ன காரியத்துக்காக நிலம் விடப்படுகின்றது என்று கூருமல் பொதுவாகக் கோவில்களுக்கு நிலம்
186. S. I. I. Vol. IV, p. 128.
24

கொடுக்கப்படுதலே மூன்று பந்தியிலே ஆராயப்படுகின் றது; அப்படிப்பட்ட நிலம் தேவதானம் அல்லது திரு நாமத்துக்காணி என்று வழங்குகின்றது. வைகாவி நாட் டுக் காரணவர் பழனிசுப்பிரமணியர் கோவிலுக்கு நிலம் விட்டிருக்கிருர்கள், காரணவர் ஒரு சாதியினர். தமிழ் நாட்டில் நாஞ்சில் நாடு முதலிய பகுதிகளில் நிலக்கிழார் களுக்கு இப்பெயர் வழங்கியிருக்கின்றது. இவர்களுடைய உடைமையான நன்னிலம் சாசனத்தில் நானூற்ருெரு பத்தொருமா எனப்படும் நானூற்றுப்பதினுேருமா வாகும். அதில் ஐந்து மாமுக்காணி முன்பே தேவதான மாக விட்டுவிட்டார்கள். இத்தேவதான நிலத்தை நீக்கி மிகுதி நிலத்தை, இதுக்கு அடைப்பான சுந்தரபாண்டிய நல்லூாருங் காடுகளும் புன்செய்களும் குடியிருப்புகளும் தோட்டங்களும் குளங்களும் மேனேக்கின மரமும் கீழ் நோக்கின கிணறும் உட்பட யாவற்றையும் சுப்பிர மணியருக்கு விடுதீட்டுமூலம் கொடுத்திருக்கிருர்கள் .187
நெல் விளைந்தபின் கோவிலுக்குப் புதிய நெல் எடுத்து அமுது படைப்பதற்காகப் புதியது வளாகம் என்ற பெயரில் நிலம் விடப்பட்டது. அன்பில் பிரேம புரீசு வரகோவிற் கைக்கோள முதலிகளில் ஆச்சிராமன் குலோத்துங்க பல்லவரையர் என்பவர் வரிக் காரியங்களுக் காகத் தரம் அதுவரை வகுக்கப்படாமலிருந்த தரமிலி நிலத்தில் மூன்று மாவுக்குக் கூடிய நிலத்தை அவ்வூர்ப் பிராமணர் ஒருவரிடம் விலைக்குப்பெற்றுத் திருப்புதியது வளாகம் எனத் திருநாமத்துக்காணியாக விட்டனர்,188 பிற்காலப் பாண்டியர் சாசனங்களிற் குறிப்பிடக்கூடிய ஒரமிசம் சகலவிதமான அளவைகளையும் அடையாளங்
187. S I. I. Vol, V, p. 105. 188, s. I. I. Vol VIII, p. 97.
25

Page 119
களாலே குறிக்கும் இயல்பு வளர்ந்து காணப்படுகின்றது; இவ்வாறு குறிக்கும் முறை அக்காலத் தமிழ்நாட்டிலே செல்வாக்குப் பெற்றிருந்திருக்கலாம். சாசனம் நீண்டு செல்வதைத் தவிர்ப்பதற்கும் இவ்வடையாளங்கள் உதவி யுள்ளன. சோழப்பெருமன்னன் முதலாம் இராசேந்திரன் கட்டி எழுப்பிய கங்கைகொண்ட சோழீச்சுரப்பெருவுடை பார் கோவிலுக்கு முதலாம் மாறவர்மன் குலசேகரன் காலத்தில் நிலம் திருநாமத்துக்காணியாக வாங்கிவிடப் பட்டது; தெல்லிபுத்தூரி என்னும் அந்நிலத்தின் நான் கெல்லையும் விரிவாகக் கூறப்பட்டு அவ்வெல்லைகளுக்கு "உட்பட்ட ஊர்நத்தமும், மனைகளும் நன்செய்யும் புன் செய்யும் தோப்புக்களும் ஏரி நீர் வாங்கு நிலமும் ஊருணி குளமும் பொதுவும் பொதுவாதியும் மேனேக்கிய மரமும் கீழ்நோக்கின கிணறும் திருநாமத்துக்காணியாக விலைக்கு வாங்கப்பட்டது எனப்பட்டுள்ளது. தெல்லி புத்தூரின் நான்கு எல்லைகளுக்கும் சிவன் கோவிலில் எல்லைகளில் வழமையாக இடப்படும் குலக்கல் நாட்டப் பட்டது . 189
கங்கைகொண்ட சோழீச்சர கோ வி லு க் கு த் திருநாமத்துக்காணி விற்றுக்கொடுத்த செய்தி இன்னெரு சாசனத்தில் இடம்பெறுகின்றது. நாட்டவரும் ஊர வரும் சேர்ந்து இக்கோயில் ஆதிசண்டேசுவரதேவகன் மி கள், கோயிற்கணக்கரி, மாசேசுவரக் கண்காணிகள் ஆகியவர்களிடம் விலைபெற்றுக்கொண்டு கோவிலுக்குத் திருநாமத்துக்காணியாக நிலம் விடப்பெற்றது இந்த நிலம் பல்வேறு துண்டுகளாக அமைந்திருந்தது ஒவ் வொரு துண்டு நிலத்தின் பெயரும் அளவும் இந்தச் சாச னத்திற் குறிப்பிடப்பட்டுள்ளன. நிலத்தை விற்பவர்கள்
189. S. I. I Vol. IV, p. 152.
216

"நாங்கள் இறை ஆற்ருமல் பல இடங்களிலும் விற்றுக் குடுத்த" என்று கூறியுள்ளார்கள். 190 வரிகளை மக்கள் கொடுக்கமுடியாத நிலையும் ஏற்பட்டிருக்கிறதென்பதற்கு இந்தச் சாசனம் சான்ரு கும் சாசனம் மாறவர்மன் குலசேகரன் காலத்ததாதலால், பகைவரது சோழநாட் டுப் பகுதிகளில் வரி அதிகரிக்கப்பட்டிருக்கலாமா அல் லது பொதுவாக வரிகள் ஏறிவிட்டனவா எனக் கூற முடியாதுள்ளது. மக்களுக்கு இக்கட்டான நிலை ஏற் பட்டபோது கோயில்கள் அவர்களுக்கு உதவியுள்ளன என்பதற்கும் இந்தச் சாசனம் சான் ருகும்; தனிப்பட்ட வர்களுக்கு நிலத்தை விற்பதிலும் பார்க்கக் கோவி லுக்கு நிலத்தைவிற்பது சமய நம்பிக்கையுள்ள மக்கள் மனத்திற்கு இதமாக இருந்திருக்கும்; கொங்குநாட்டு இளமீசுவரசர் கோவிற் சிவபெருமானுக்கு "பூதானகர தான இறையிலி" கிடைத்துள்ளது; பூதானம் என்பது நிலக்கொடை, கையினற்கொடுக்கப்படுவது எள்ளும் நீரும் இறைத்துக்கொடுப்பதாகும்: "உதகபூர்வமாக" அதாவது தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. கண்டியதே வரும் பூவாணிய நாட்ட வரும் "பெருமான் திருமேனிக்கும் தேவர் கண்டிய தேவர் வாளுக்கும் தோளுக்கும் நன்ரு க” இத் தானம் செய்யுப்பட்டுள்ளது. 191 கண்டிய தேவரின் வாள் வலி யும் தோள்வலியும் மிகுந்து விளங்கவேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டு இத் தானம் செய்யப்பட் டுள்ளது:
கோவிலுக்கு நிலம் தானம் செய்யப்படும்போது பயிர் செய்யும் உரிமையாகிய காராண்மையைச் சாச
190. S. I. I. Vol. IV, p. 154. 191. S, I. I. Vol. VII. p. 12.
27

Page 120
னத்திற் குறிப்பிட்டவருக்கும் நிலவருமானத்தைக் கோவி லுக்கும் என்று பிரித்து எழுதிவைக்கும் முறை யிருந் திருக்கிறது. காளை யார் கோவிற் சாசனமொன்றில் இதற்கு எடுத்துக்காட்டுக்காணப்படுகின்றது. முடக் காரை ஊரார் சோமனததேவரான் வைத்தியச்சக்கர வர்த்திக்கு இறையிலி பிடிபாடு செய்து கொடுத்துள்ள னர். புற்பவனசிவர் ஒரு துண்டு நிலத்தை ஊரில் வாங்கினர்; அந்த நிலம் வைத்தியச்சக்கரவர்த்தி கையில் இருந்தது; அந்த நிலத்திலிருந்து பதினைந்து அச்சு என்ற நாணயமும் பிற வருமானமும் உண்டு. இந்த வருவாயை ஊர் வரவிலிருந்து நீக்கி, வருவாய் இறை வனுக்குத் திருமஞ்சனப்புறமாகச் சேரும்படியும் பயிர் செய்யும் உரிமை வைத்தியச் சக்கரவர்த்தி அகோர சிவமுதலியாருக்குத் தொடரும்படியும் திருமுகம் என் னும் அரசனனே வந்தது. இந்த நிலத்தோடு அவ்வூர் அந்தரிசுரமுடைய சிவனுக்கு நான்கு மாநிலம் அமுது படிக்குத் திருநாமத்துக்காணியாக இவரால் வாங்கி விடப்பட்டது. இந்த இரண்டாவது நிலப்பகுதிக்குப் பொன் வரி இருந்தது. இந்நிலத்தையும் வரியையும் நீக்கி முன்பு குறிப்பிட்ட நிலத்துக்கே இறையிலி பிடி பாடு எழுதப்பட்டது. ஊரார் எழுநூற்றைம்பது பணம் பெற்றுக்கொண்டனர். இப்பணம் கோவிலுக்குத் தேவை யான ஆடைகள் வாங்கப் பரிவட்டச் சிறப்பாகப் பயன் படும். 192
திருப்புனவாசலிலுள்ள சிவபெருமானுக்கும் இதேபோல நிலம் விடப்பட்டுள்ளது. அச் சிவனுக்கு ஒருருடையான் அழகிய மணவாளப்பெருமாளான காலிங்கராயர் தம்முடைய பெயராற் காலிங்கராயன்
192. s. I. I. Vol VIII, p. 76.
28

சந்தியை அமைத்துள்ளாரி காலிங்கராயருடைய அர்ை யத்தூர் நிலத்தைக் காணியாகக் காலிங்கராயரி அனுப வித்துக் கோவிலுக்கு வருவாயை அளித்துவரவேண்டும் என்று வீரபாண்டிய மன்னனுடைய திருமுகம் வந்தது. இந்நிலம் இறையிலியாகச் செய்யப்பட்டது: இந்நிலத் தில் இரண்டுமா ஒரூரில் இவர் எழுந்தருளுவித்த இளைய பிள்ளையாருக்குத் தேவதானமாக விடப்பட்டது; பிராம ணரைக் கோவிலின் திருச்சுற்றிற் குடியேற்றிய இவர் அவர்களுக்கு இந்நிலத்தில் ஆறுமா தருமதான இறை யிலியாக விட்டுள்ளார். அரையத்தூரில் இந்நிலங்களைக் அழிக்க எஞ்சிய நிலம் இரண்டே நாலரை மாகாணியா கும். இந்நிலம் திருமுகத்திற்கண்டபடி எல்லைகளுக்குச் சூலத்தாபனம்பண்ணி விடப்பட்டது.198
குடிநீங்காத்தேவதானம் என்ற தொடர் இரண்டு சாசனங்களில் இவ்வாறு நிலம் விட்டதைக் குறிப்பிடும் G3L u Tags வழங்கப்பட்டுள்ளது. திருவனந்திசுரமுடைய சிவபெருமான் திருமேனி ஆடித்திருநாளிலே சந்திரசூரி யர் உள்ள வரை எழுந்தருளச் செய்வதற்கான செலவு களை உதவக் கூடிய முதலாக நாட்டவரால் தேவதான நிலம் விடப்பட்டது. நான்கு எல்லை கூறப்பட்டு அதற்கு உட்பட்ட நிலத்தில் உன் ஞர்த் தெய்வங்களின் தேவதா னம் திருவிடையாட்டம் திருவமுதுக்கு நீக்கி எஞ்சிய நிலமே இறையிலி குடிநீங்காத் தேவதானமாக விடப் பட்டுள்ளது. நிலத்துக்குரிய வரிகளை நாட்டவரே கொடுத்துவருவார்கள். நில எல்லைகளுக்குச் சூலத்தாப னம் பண்ணினுர்கள். 194 அச்சேசுவர கோவிலில் ஆதிசண் டேசுவர தேவகன்மிகளுக்கு அக்கோவில் தேவரடியாரில்
193. S. J. I Vol. VIII. p. 1071. 194 S. I. I. Vol. VII, p. 254.
219

Page 121
பெரியசானிநங்கை மகன் ஆண்டான் கண்டியதேவன் என்பவன் தேவசநாயன் அருளாளப்பட்டனிடம் நிலம் வாங்கிக் குடிநீங்காத் தேவதானமாக விட்டுள்ளான்,195
கோவிலிற் செய்யப்படும் திருப்பணிகளைக் கூறும் சாசனங்கள் சில உள. காமன் வரதன் மாகறல் அகத் திசுரமுடைய சிவனுக்குச் சன்னிதியில்திருவீதிகளும் மடை பாவும் மேடையும் ஏற்படுத்தினன்,196 திருவொற்றி யூர்ச் சிவனுக்குத் திருவொற்றியூரிற் பொன் வரியால் வந்த பொன்னை வியாக்தியான மண்டபத்துக்கும் மற்றும் திருப்பணிகளுக்குமான செலவுகளுக்குவேண்டிய முதலாக அமையும்படி நாட்டவரிவரி நீக்கம் செய்தனர்; மத்திய அரசுக்குப் பொன் வரி மூலமாகச் செல்லவேண்டிய பொன்னே நாட்டவர் நாட்டிலே வேறுவழியிற் பெற்றுக் கொண்டு கொடுப்பர். இவ்வாறு சந்திர சூரியர் உள்ள வரை நடைபெறவேண்டும். இந்தத் தருமத்தைத் தடுக்க நினைந்தவர் கங்கையிலே பசுவை வதை செய்த பாவம் பெறுவர் எனப்படுகின்றது.197
கோவிலையும் மடங்களையும் அரசர் ஆதரித்த செய்திகளும் காணப்படுகின்றன. திருப்பராத்துறைச் சிவன்கோயில் ஆதிசண்டேசுர தேவகன்மிகளுக்கு நாட் டாரும் அகர பிரமதேயங்களாரும் நிலவிலைப் பிரமான இசைவு தீட்டுக்கொடுத்துள்ளார்கள். கேரளாந்தக விழுப் பரையர் தம்முடைய கடமைகளில் நின்று வழுவிவிட் டார். அரசருக்குச் சேரவேண்டிய பணம், திருவானைக் காக் கோவிலுக்குச் சேரவேண்டிய பொருள், காவிரிக்
195. S. I. I. Vol. VII. p. 289. 196. S. I. I. Vol VII, p. 272. 197. S. I. I. Vol V, p. 492,
220

கரையை அடைப்பதற்காக உதவவேண்டிய ஆள் என் பனவற்றில் அவர் தவறிவிட்டார். இதனல், இவர் மருமக்கள் இருவர் சிறையில் வைக்கப்பட்டனர். அவர் கள் தப்பி ஓடிவிட்டனர்; எனவே விழுப்பபேரரைய ருடைய நிலங்களை விற்று அபராதங்களைப் பெற்றுக் கொள்ளும் படி அரசனுடைய திருமுகம் வந்தது. விற்ற நிலங்களின் விபரங்கள் கூறப்பட்டுள்ளன. நிலத்தை விற்றவர் நிலச் சொந்தக்காரராயில்லாது பிறராக இருந்தமையால், இந்தத் தீட்டே பிரமாணமாகும் என் பதும் வேறு ஒலை வேண்டியதில்லையெனவும் வற்புறுத் திக் கூறப்படுகின்றன.198
உடையார் வில்லவராயர் திருவயிந்திர புரத்துச் சிவபெருமான் திருமேனிகளான தெய்வநாயகனுக்கும் ஏழிசைநாதப்பெருமாளுக்கும் திருவிளக்குப்புறமாகவும் திருமாலைப்புறமாகவும் இரண்டாயிரவன் மடத்துக்கு மடப்புறமாகவும் இவரே ஏற்படுத்திய அகரம் புத்து ழான் பிரமதேசத்துக்கு அகரப்பற்ருகவும் பல ஊர்க ளில் நிலங்கள் கொடுத்துள்ளார்; சுந்தரபாண்டியன், விக்கிரமபாண்டியன், வீரபாண்டியன் என்னும் அரசர் சடாவர்மன் சுந்தரபாண்டியனது பத்தாவது ஆண்டு வரை தமக்கு வரிசெலுத்தி வந்த நிலங்களை இறையிலி யாக ஒதுக்கிவிடும்படி திருமுகம் அனுப்பியுள்ளனர். மூன்று அரசர்களின் பெயர் ஒருங்குசேரக் கூறப்பட் டுள்ளது. மூன்று பாண்டியரும் சமகாலத்து ஆண்டவ UT mT s இருக்கவேண்டும் திருவயிந்திர புரத்து ஊரே தருமத்தை நடத்திக்கொடுக்கவேண்டுமெனவும் கோவி லைச் சேர்ந்தவர் தருமத்துக்கு விரோதியாக மாறினல் ஊரே தீர்த்துக் கொடுக்கவேண்டுமெனவும் ஊரவர் எவ
198. S. I. I. Vol. VIII. p. 300,
22

Page 122
ராவது விரோதியாக மாறினல் அவ்ர் ஊரிலிருந்து விலக்கப்படுவரெனவும் கூறப்பட்டுள்ளன. 199
கோவில்களிலே புதிய திருமேனிகளை எழுந்தரு ளச் செய்து அவற்றுக்கு வேண்டியன யாவற்றுக்கும் ஒழுங்கு செய்வது சில சாசனங்களிற் கூறப்பட்டுள்ளது? பிரான் மலைக்கோவிலிலே திருவம்பலப்பெரு மா ளா ன பெருஞ்சதிர குபேரர் தம்முடைய பேரால் திருவம் பலப் பெருமாள் என்ற திருமேனியை எழுந்தருளுவித்தார். இந்தத் திருமேனிக்குத் திருப்படி மாற்றுக்கும் திருமஞ்ச னம் திருவிளக்குச் சாத்துப்படி பூச்சுப்படி உள்ளிட்ட வியஞ்சனங்களுக்குமாக எழுபது சோழியநற்பழங்காசு கொடுத்தார். கோவிலைச் சேர்ந்த தேவகன்மி, மாகே சுரக்கண்காணிசெய்வாரி, கோயில் நிர்வாகம் செய்வார், கோயிற் கணக்கர் ஆகியோர் பணத்தைப் பெற்றுக் கொண்டு தினசரி நாஞழி அரிசியும் கறியமுதுள்ளிட்ட வியஞ்சனங்களும் கோவிற்பண்டாரத்திலே செலுத்துவ தாக உடன்பட்டனர்.200 காமன் அரசனன அதியமான் தேவர் திருக்கழுக்குன்றச் சிவன் கோவிலில் பொனிட் டிசுரமுடைய நாயனருக்குச் சிவலிங்க பிரதிட்டை செய் தார். இந்நாயனுர்க்குத் திருக்கோவிலுக்கும் திருநந்த வனத்துக்கும் திருமடைவளாகத்துக்குமாக நிலம்விடு வதற்கு இரண்டாயிரம் நற்காசு வைத்தார். ஆதி சண் டேசுரதேவகன்மிகள் காசைப் பெற்றுக்கொண்டு கோவி லுக்கு நிலம் ஒதுக்கின்ர் 201
நெல்லையப்பர் கோவிலிலே கூத்தன் வாளிபிள்ளை பெரியதேவ முதலியாரையும் நாச்சியாரையும் எழுந்தரு
199. S. I. I. Vo VII, p. 386. 200. S. L. I. Vol VIII. p. 226. 201. S. l. I. Vol V, p. 192.
222

ளச் செய்தார். அமுதுபடி, சார்த்துப்படி முதலியனவற் றுக்கு நிவந்தம் விடும்படி திருமுகம் வந்தது. சாசனம் சிதைந்துள்ளது. எனினும் அமுதுபடி சம்பந்தப்பட்ட அரிசி, பருப்பு, மிளகு, அடைக்காய், வெற்றிலை, கறி, பண்ணியாரம் ஆகியனவற்றுக்கும் சார்த்துப்படி சம்பந் தப்பட்ட மேற்பூச்சு, எண்ணெய்க்காப்பு, நெல்லிக் காப்பு, மஞ்சள் ஆகியனவற்றுக்கும் அளவுகள் முதலி யன குறிப்பிடப்பட்டுள்ளன. சிவராத்திரி, திருக்கார்த் திகை, சித்திரை விஷகு என்ற புண்ணிய காலங்களில் நடக்கவேண்டிய ஒழுங்குகள் தனியே குறிப்பிடப்பட்டுள் ளன.202 திருவெண்காட்டுச் சிவன் கோவிலில் பாண்டி மண்டலத்துக் கைக்கோளமுதலிகளில் விரதமுடித்த பெருமாள் மகன் திருநெல்வேலியுடையான் என்பவன் விரத முடித்த பாண்டீசுவரமுடைய நாயனரையும் புவ (பைதி நாச்சியாரையும் எழுந்தருளச் செய்தான். இவன் மூவரிடம் நிலம் விலைக்குக் கொண்டு அமுதுபடி, கறிய முது, திருப்பணி என்பனவற்றுக்கு முதலாக, நிலத்தை இறை நீக்கிக் கொடுத்தான்.203
கோவிலில் நடக்கும் முக்கியமான அலுவல் களில் எத்தகைய அதிகாரிகள் சம்பந்தப்படுகிறர்கள் என்பதை அறிவதற்குச் சிதம்பரத்துச் சாசனம் ஒன்று உதவுகின்றது. சைவக்கோவில்களிலே தனிச் சிறப்பு வாய்ற்தது சிதம்பரமாகும். எனவே அக்கோவிலில்ே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போன்றவர்கள் ஏனைய கோவில் அலுவல்களையும் கவனித்து வந்தனர் என்று கூறமுடியாது. எனினும் வேறுபாடு அளவில் இருக்கக் கூடுமே தவிர முறையில் இருக்காது. தென்னவன் பிரம
202. S. I. I. Vol, V, p. 166. 203. S. II, II. Vol. V, p. 380,
223

Page 123
ராயரி, குலசேகர பிரமராயரி, விக்கிரமசோழப்பிரமரா யர், விக்கிரமபாண்டியப்பிரமராயர், மாகேசுவரக்கண் காணிசெய்வார்கள், கோயில் நிர்வாகஞ் செய்வாரிகள், சமுதாயம் செய்வார்கள், நாயகம் செய்வார்கள், மாளி கைக்கூறுசெய்வார்கள், தில்லைநாயகம் பெரும்பண்டா ரத்தார், திருமடைப்பள்ளிப்பண்டாரத்தார், திருக்கர கக் கள்ளியார், கணக்கர் என்போர் அனைவரும் சேர்ந்து விடுதீட்டுக் கொடுத்தது பற்றிக் கூறப்படுகின்றது. 204 சாசனம் சிதைந்துள்ளமையால் அதன் பொருளைத் தெளி வாக அறியமுடியவில்லை. பிரமராயர் என்பது பிரா மணமந்திரியாகும். தென்னவன் பிரமராயர் பாண்டிய னுடைய முதன் மந்திரியாகும் அரையர் என்று குறிக் கப்படுவோர் சிற்றரசராகலாம் சமுதாயஞ் செய்வார் கள், நாயகம் செய்வார்கள், திருக்கரகக் கள்ளியார் என் பன யாரைக் குறித்தனவென அறிந்துகொள்ளக் கூட வில்லை.
நிலத்தை விற்றுக்கொடுக்கும்போது விற்பவர் வாங்குபவருக்கு விலைப்பிரமாணம் பண்ணிக்கொடுப்பாரி. அதனை விட்டு விலையோலை, பொருட்செலவோலை என்ப னவும் எழுதப்படுவதுண்டு, சாசனங்களில் சில, பின் னவை வேண்டியவையில்லை எனவும் முன்னதே போதும் எனவும் கூறுகின்றன. ஒயிைற் காணப்படும் குற்றங் களைக்காட்டி, ஓலை செல்லாது என வாதிப்பதும் உண்டு. அதனல் ஒயிைல் என்ன குற்றமிருந்தாலும் ஒ ைசெல்லு படியாகும் என்று குறிப்பது உண்டு. அதனுலேயே "ஒரு காலாவதும் இரு காலாவதும் முக்காலாவதும் ஒலைக் குற்றம் சொற்குற்றம், எழுத்துக்குற்றம்,பொருட்குற்றம்
204. S. I. I. Vol IV, p. 38.
224

மற்றும் எக்குற்றமும் குற்றமன்றியே" என ஒரு சாசனம் கூறியுள்ளது.205
வைணவ சமய சம்பந்தமான சாசனங்கள் சில கிடைத்துள்ளன. சைவசமய சம்பந்தமான சாசனங்களிற் கூறப்படும் செய்திகளே வைணவ சமய சம்பந்தமான சாசனங்களிலும் கூறப்படுகின்றன, ஆனல் வைணவ சமய சம்பந்தமான சாசனங்கள் எண்ணிக்கையிற் குறைந் தன. சேர்மா தேவி அப்பன்கோவிற் சாசனம் திருவிழா வுக்கு நடந்த ஒழுங்கைக் கூறுகிறது. அப்பன் கோவிற் பண்டாரிகளும் திருப்பதிவெங்கடேசுவரர் கோவில் வைணவர்களும் நம்பிமாரும் இரங்கநாத பட்டரான இரா மானுசதாசருக்குப் பிடிபாடு கொடுத் திருக்கின்றனர். பண்டாரிகள் அப்பனுக்குத் தனிசு தண்டுகள் வாங்கிக் கொடுத்து எஞ்சியுள்ள பொருள் இருபது அச்சாகும். இந்த இருபது அச்சுக்கும் ஆண்டு வட்டி நாற்பது கல நெல்லாகும் அப்பன் விசேட சமாராதனம் பூண்டருளித் திருப்பதிக்குச் செல்வதற்கு அமுது படி சாத் துப்படிக்குப் பத்துக் கலநெல்லும் பங்குனித் திருநாளுக்குக் திருப்பணி செய்யும் சனங்களுக்கு முப்பது கல நெல்லுமாக நாற்பது கலநெல்லையும் ஆண்டாண்டு தோறும் கோவிற் பண்டா ரத்திலே பண்டாரிகள் செலுத்தி வரவேண்டும். அப்ப னுக்குத் திருநாட்களிற் சார்த்தியருளிய பரியட்டம் சார்த்தி முடிந்ததும் இராமானு சதாசருக்குக் கொடுக்கப் படவேண்டும். திருநாட்களிலும் அப்பன் திருவுலாப் புறப்பட்டருளுமிடங்களிலும் இராமானு சதாசருக்கு மிசுடுகளுங் கொடுக்கப்படவேண்டும்,200
205, s. I. I. Vol. VIII, p. 87. 206, S. I. I. Vol. V, p. 320,
225

Page 124
கோவிற் கட்டிடம் சம்பந்தப்பட்ட FIFFer மொன்றும் உண்டு; சேலம் செளந்தரராசப் பெருமாள் கோவிலிற் கம்மாளரில் அண்ணுமலைத் தட்டான் சூரிய ஞன நூற்றெண்மத்தட்டான் போதிகை செய்வித்துள் ளான்.207 குடிநீங்காத் தேவதானமாக விடப்பட்ட நிலம் ஒன்றும் கூறப்பட்டுள்ளது. திருச்சுனை அகத்தியே சுவர கோவிற் சாசனத்தில், நிலம் வைத்தியாதிராசர்க்குக் காராண்மைக் காணியாகவும் அழகப்பெருமாள் விண்ண கர்ப்பெருமாளுக்குத் தேவதானமுமாக விடப்பட்டது: விண்னகர் என்பது விஷ்ணு நகர் அல்லது திருமால் கோவிலெனப் பொருள்படும்; நிலம் பதினெட்டடிக் கோலால் அளக்கப்பட்டு இருநூற்று ஐம்பத்தாறு குழி கொண்டதாகக் கணிக்கப்பட்டது. ஒரு மாநிலத்தில் கரும்பு முதலிய பயிர்களிடப்படும்போது கடமை, அந்த ராயம், வினியோகம், சில்வரி, பெருவரி, பொன் வரி, தறியிறை, தட்டொலி பாட்டம், பஞ்சு பிலி, சந்திவிக் கிரகப்பேறு, வெட்டி, முட்டாள் முதலிய சகல வரிகளும் நாட்டுக்காலால் அறுகல நெல்லும் ஒரு பணமும் இறுத்து வரவேண்டும். கோடை காலத்திலே, குறுவையான வரகு, தின நின்ற நிலத்துக்கு ஒவ்வொரு மாவுக்கும் முன்பு கூறப்பட்டவற்றில் நான்கில் ஒன்றை இறுத்துவரவேண் டும். வழுதுணை, பூசணி, வெள்ளரி, செங்கழுநீர், மஞ் சள், இஞ்சி, கருணை, எள் உள்ளிட்ட பயிருக்கு ஒரு மாவுக்கு ஒரு பனம் வீதம் கொடுத்துவரவேண்டும்; எல்லைகள் நான்கிலும் திருமாலுடைய சக்கர அடை யாளமுடைய கல்லாகிய திருவாழிக்கல்லை நாட்டிச் சந் திர சூரியர் உள்ளவரை இப்படி நடக்கவ்ேண்டுமெனப் பிரமாணம் பண்ணப்பட்டது.208 திவன் கோவில் எல்லேக்
207. S. I. I. Vol. IV, p 18. 208. S. I. I. Vol. VIII. p. 217,
226

குத் திருச்சூலக்கல் நாட்டப்பட்டதுபோலத் திருமால் கோவில் எல்லைக்குத் திருகீழிே கல் நாட்டப்பட்டது.
கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட அணிகலன் ஒன்றை விற்று நிலம் வாங்கித் திருநாமத்துக் காணியாக விட்ட செய்தி சாசனமொன்றிற் காணப்படுகின்றது. மணிமங்கலம் இராசகோபாலப் பெருமாளுக்கு அழகப் பெருமாள் மாணிக்கம் இரு கழஞ்சு நான்கு மஞ்சாடி ஏழரை மாற்றுப்பொன்னலான பட்டம் ஒன்று சார்த்தக் கொடுத்தான், அதை விற்றுவந்த பதினெட்டுப் பணத் துக்குச் சேபைதிப் பெருவிலையாகத் திருநாமத்துக் காணி வாங்கப்பட்டது.209 சிவன்கோவிற் சாசனங்களில் சண்டே சுரப்பெருவில் காணப்படுவது போலத் திருமால் கோவிற் சாசனங்களிற் சேனபதிப்பெருவிலை காணப்படு கின்றது. மடப்புறமாக நிலம் விட்டதையும் சாசனம் ஒன்று கூறுகின்றது. பிள்ளையார் நிலகங்கையர் எண் ணுாறு குழியும் எழுநூறு குழியும் கொண்ட இரு தோட் டங்களை மணிமங்கலம் வைகுந்தப்பெருமாள் கோவில் மடத்துக்கு மடப்புறமாக விட்டார். அதை இறையிலி மடப்புறமாக விடும்படி சபைக் குத் திருமுகம் வந்தது. சபை அந்த நிலத்தை அவ்வாறே மடத்து முதலியா ருக்குக் கொடுத்தது,210
திருநெல்வேலி நெல்லையப்பரி கோவிற் சாசன மொன்று வைணவப் பிராமணர்களுக்கு அக்ரகாரம் எனப்படும் அகரம் கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றது. திருநெல்வேலியான குலசேகரச் சதுர்வேதிமங்கலத்துச் சபைக் குப் பண்ணைவேலை செய்வார்கள் தர்மதானத்தை
209. S. J. I. Vol. V, p. 362, 210. S. I. I. Vol. VI, p. 138,
227

Page 125
ஏகப்பிரமாணமாக்கிக் கொடுத்துள்ளார்கள்: பாண்டிய விண்ணகர் அனவரததானப் பெருமாள் திருநாமத்தில் ஆளவந்தான் தெய்வச் சிலையாண்டான் அனவரதானச் சதுர்வேதிமங்கலத்துப் பட்டர்களுக்கு அகரம் விட்டுள் ளான். பண் ஃணவேலை செய்வார்கள் அந்தப் Lu L - L - ti களுக்குக் கொடுத்த குடியிருப்புகளுக்கும் வயல்களுக்கும் பல பிராமணங்களிருந்ததாலே, கல்வெட்டுவது வில்லங் கமாக இருந்தது. அதனலே, தானங்கள் யாவும் சேர்த்து ஏகப்பிரமாணம் செய்யப்பட்டது. அகரத்தின் எல்லைகள் கூறப்படும்போது, "வடவெல்லை முன்பு காளிகணத்து வெஜ்ளாளர் குடியிருந்த இடம் அகரமாகையால் பின்பு காள்கிகணத்து வெள்ளாளர் குடியிருப்பான கேசவன் கணபதி உள்ளிட்டார் எடுத்த மனைக்குத் தெற்கு" என்று வருவதிலிருந்து பிராமணரல்லாதார் குடியிருந்த இடம் காலப்போக்கில் பிராமணர் குடியிருப்பாக மாறிவந்த தும் பிராமணரல்லாதார் வேறு இடங்களுக்குச் சென்று குடியிருக்க நேர்ந்ததும் தெரியவருகின்றன. அகரத்தைத் தர்மதானமாகப் பெற்ற பிராமணர்கள் அகரத்துக்கு வெளியிலுள்ள கன்று நிலைமரம், புறப்பாடு, சுடுகாடு, படுதுறை என்பனவற்றில் ஏனைய ஊராரைப் போன்ற உரிமைகளைப் பெறுகின் ருர்கள் பண்ணைவேலை செய் வார்கள் கொடுத்த நிலத்தின் எல்லை கூறப்படும்போது உடுக்கை வாசிப்பவனுக்காக விடப்பட்ட உடுக்கைப் புறம் என்ற நிலத்தின் குறிப்பு வருகின்றது.
கொடுக்கப்பட்ட நிலத்திற் பிராமணர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளின் பட்டியல் வருகின்றது; நத்தமாகிய குடியிருப்பும் சேத்திரமாகிய வயலும் கார்பசானம் குறுவை பயிர் செய்யும் நிலம் பயிர் செய் தும் செய்வித்தும் காடுவெட்டிக் கட்டை பறித்துக் கள ரும் சுடுகாடும் மேடும் பள்ளமும் வரம்பிட்டு வெட்டித் திருத்திப் பதினெட்டடிக் கோலால் பதினறுக்குப் பதி
228

ஞறுகொண்ட ஒவ்வொரு மாநிலத்துக்கும் சதுரம் அமைத்து நன்செய் புன் செய் தோட்டக்கூறு திருத்திப் பயிர் செய்தும் செய்வித்தும் நத்தம் செய்து குடியிருந் தும் குடியிருத்தியும் மற்றும் தங்களுக்குச் செளகரிய மான படிகளில் நிலத்தை அனுபவித்துவரலாம் எனப் படுகின்றது. நீக்கப்பட்ட வரிகளின் பட்டியல் ஒன்று வருகின்றது; அப்படிப்பட்ட பட்டியலில் குறிப்பிடத் தக்கன: நெல் கடமை, திருவாசல்வினியோகம், திருமுக எழுத்துவினியோகம், கைக்காணி, நித்தற் பச்சை, ஆனைச் சாலை, குதிரைப்பந்தி, கோயிற்கட்டணத்தேவை, கொற் றிலக்கை, கடைக்கூட்டிலக்கை. சண்டாளப்பேறு, நாட்டு வினியோகம், ஏரிவரி, ஆள்வரி, சாட்டுவரி என்பன ஆணுல், திருமுகத்திற் குறிப்பிடப்பட்ட சில வரிகள் திருநெல்வேலி இறைவனுக்குக் கொடுத்து வரப்படவேண் டும். அதனுலேயே சாசனம் நெல்லையப்பர் கோவிலிற் பொறிக்கப்பட்டிருக்கவேண்டும் நிலம் இருபத்தெட்டுப் பங்குகளாகப் பிரிக்கப்பட்டு இருபத்து நான்கு பங்கு பட்டர்களுக்கும் இரண்டுபங்கு வாழவல்ல பாண்டீசுர முடைய நாயனருக்கும் இரண்டு பங்கு வாழவல்ல பாண்டிய விண்ணகர்ப் பெருமாளுக்கும் வழங்கப்பட்டன. பட்டர்களும் அவர்கள் பரம்பரையினரும் சந்திர சூரியர் உள்ள வரை கல்லிலும் செம்பிலும் வெட்டிக்கொண்டு இந்நிலத்தை அனுபவித்து வரவேண்டும்.211
கோவிலோடு நெருங்கிய சம்பந்தப்படாத சா ச னங்கள் சிலவும் சிடைத்துள்ளன. மணிமங்கலம் வைகுந் தப்பெருமாள் கோவிற் சாசனங்களில் ஒன்று அத்தகை யது; வாணராயதேவர் விண்ணப்பஞ் செய்ய இளையபெரு மாளான இளவரசன் கட்டளையிட்டபடி, வாணராயதேவ
21 1. S. I. I. Vol. V, p. 138.
229

Page 126
ருக்காக முதலிகள் பற்றுக்கேட்க வ்ந்திருக்கிருர்கள். அம் முதலிகளின் ஒருவரான மணலக்குடையார் கொங்க ராயர் வில் தடியையும் நாராயணன் என்றிட்ட பதினறடி அளவு கோலையும் வாணராயதேவர்பேரால் அமைத் தார்.212 வில் தடி என்பது என்னவென்று தெரியவில்லை; மதுரைச் சுந்தரேசுவரர் கோவிற் சாசனம் ஒன்று, பிரம தேயம் அதனைச் சேர்ந்த நிலத்தை மகாதேவர் அழகிய சொக் கணுருக்கு விற்றதைப் பற்றிக் கூறியுள்ளது மாதி தூரில் தேவதானமாக இருந்த அரைவாசி நிலம் காடு பற்றியிருந்ததால் அதைத் திருத்தியெடுத்துக் கொண்டு குறிப்பிட்ட வருமானத்தைக் கோவிலுக்குக் கொடுக்கும் படி பிரமாணம் செய்யப்பட்டது. பிரமதேயத்துக்குரிய அரைவாசி நிலமும் அவ்வாறே காடுபற்றியிருந்ததால், பிரமதேயம் அந்த நிலத்தை அயற் காணி வாங்கிய வருக்கே விற்றுவிடுகின்றது.213
வியாபாரிகள் மடத்துக்கு நிலம் விற்றுக்கொடுத் ததை இன்ருெரு சாசனம் கூறுகிறது. விக்கிரம சோழ புரத்து நகரத்தார் திருப்பரங்குன்றத்துக் கீழை மடத்து முதலியார் சீடர்களில் அழகிய சிற்றம்பலமுடையாருக்கு நிலம் விற்றுக்கொடுத்தனர். குறிக்கப்பட்ட நான்கு எல் லைகளுக்குள் அடங்கிய "குளமிரண்டும் குளப்பரிப்பும் நீர் கோவையும் நீர்நிலமும் புன்செய்கருஞ்செய்களும் நத்தமும் நத்தப் பாழும் களரும் திடலும் மேனேக்கிய மரமும் கீழ் நோக்கின கிணறும் மீன் படுபள்ளமும் தேன் படுபொதும்பும் புற்றும் தெற்றியும் ஆமை தவழ் வழியும் உடும்போடியும் சுடுகாடும் படித்துறையும் இவ்வூருக்குப் போகிற சிறுவழி பெரு வழிகளும் இப்பற்றில் காடும்
212. S. I. I. Vol. VI, p. 139. 213. S. I. I. Vol. IV, p. 107.
230

ஒடைகளும் வெள்ளமும் வெள்ளச்சாய்வும் இக் குளத்தில் நீர்வாரிகளும் நீர்கோவைகளும் மற்றும் எப்பேரிப் பட்ட சமத்தப் பிரார்த்திகளும், என்பனவற் று க் கா க நகரம் ஆயிரம் பணத்தை விலையா வணக் களரியிலே கொடுக்க, அக்களரி அதை ஏற்றுக்கொண்டு விலைப் பிர மாணம் பண்ணிக்கொடுத்தது. இவ்வாறு விற்கப்பட்ட தற்கு இந்தப் பிரமாணம் ஒன்றே சாலும் எனவும் வேறு ஒலை வேண்டியதில்லை எனவும் கூறப்பட்டுள்ளன. "ஒரு காலாவதும் இருகாலாவதும் ஒலைக்குற்றம், எழுத்துக் குற்றம், சொற்குற்றம், பொருட்குற்றம், மற்றும் எப் பேர்ப்பட்ட குற்றமும்" குற்றமாகா எனப்படுகின்றது,211
நாட்டார் பட்டfகளுக்கு நிலம் விற்றதைத் தார மங்கலம் இளமீசுவரர் கோவிற் சாசனங்கள் கூறுகின்றன. தாரமங்கலத்து முதலிகளில் ஒருவனன நீருணி இளையான் நல்ல உடை யப்பன் தன்னுடைய தந்தையின் பெயரில் இளைய பெருமாள் பூரீ இலக்குமணச் சதுர்வேதிமங்கலத்தை ஏற்படுத்தியுள்ளான். அந்தக் கிராமத்துப் பிராமணர் களுக்குப் பூவாணிய நாட்டார் "நான் கெல்லைக்குட்பட்ட புன் செயும் நத்தமும் சேமப்பள்ளி ஏரி உள்ளிட்ட ஏரி களால் நீர் பாயும் நன் செயும் இவ்வூர்ப்பற்றில் நீர்நிலை, மர நிலை, உள்ளிட்ட சமத்தப்பிராத்திகளும் உட்பட்ட  ைவயிற்றில் தேவதானம், திருவிடையாட்டம் உள் ளிட்ட நிலம் நீங்கலாக" விற்றுக்கொடுத்துள்ளார்கள்: நாட்டார் ஆயிரத்தைஞ்நூறு பணம் பெற்றுக்கொண்டு உத கபூர்வமாக விலைப் பிரமாணம் பண்ணிக்கொடுத்தார் கள்.215 அந்தப் பட்டர்களுக்கு அதே நாடு, இன்னுெரு நில தானம் செய்துள்ளது; கொங்குநாட்டில் நீர்ப்பாசன வசதியுள்ள நிலம் மிகக் குறைவானதால், நீர்ப்பாசனத் துக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகின்றது. குளம் உதக பூர்வ தர்மதானமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. குளத்
214. S. I. I. Vol. V, p. 18. 215. S. I. I. Vol. VII, p. 10,
231

Page 127
தால் நீர் பாயும் எல்லைவரையுள்ள நிலம் பிராமணரைச் சேர்கின்றது. பிராமணர் உடைகுளங்களைத் திருத்திக் காட்டைவெட்டித் தாம் வேண்டுமனைத்துப் பயிர்களும் சந்திர சூரியர் உள்ள வ்ரை செய்யும் உரிமைபெற்றுள்ளார் கள். நிலம் எந்தவித வரியுமில்லாத சரி வமானிய இறை யிலியாக வழங்கப்பட்டது.213
அந்தப் பட்டர்களுக்கு அதே நாட்டுத் தாரமங்க லத்து முதலிகள் சிலர் சேர்ந்து நிலதானம் செய்துள் ளார்கள், அவர்கள் உத கபூர்வதானப் பிரமாணம் பண் ணிக்கொடுத்த நிலத்திலுள்ள குளம் உடைகுளமாய்ப் பாழாய்க் கிடந்திருக்கின்றது. உடை குளத்தை அடைத் து நீர்காட்டிக் கொள்ளத்தக்க நிலத்தைத் திருத்தி இந்நில மும் இக் குளத்தில் நீர்கோவையும் உட்படக் கொடுக்கப் பட்டிருக்கின்றன. வேண்டிய பயிர்களைச் செய்தும் வேண் டிய மரங்களை நட்டும் சந்திரசூரியர் உள்ள வரை பூதான இறையிலியாக இந்த நிலத்தைப் பிராமணர் அணுப வித்துவரலாம். இந்நிலத்தைக் கொடுக்கவும் வைத்திருக் கவும் விற்கவும் பிராமணருக்கு உரிமையுண்டு,217 நெல்லே யப்பர் கோவிற் சாசனங்களில் இரண்டு ஒன்றுபோலப் பதிப்பிக்கப்பட்டுள்ளன,218 சுத்தமல்லிப் பெருந்தெரு வணிகர் நாராயணன் நாராயணஞன வீரமழகிய பாண்டி தேவருக்குப் பிடிபாடு கொடுத்துள்ளனர். அவர்கள் தம்முள் இசைந்த பொன் கொண்டு வில்லவராய நல்லூர் நாற்பத்தெண்ணுயிரப் பிள்ளை யாருக்குச் சந்தியா தீபத் துக்கு நித்த நிவந்தமாக உழக்கு எண்ணெய் பெரும்படி யோடு அளப்பதாக உடன்பட்டனர். மற்றது, அனவரத தானத்துச் சதுர்வேதிமங்கலத்துப் பட்டர்கள் நெல்லே யப்பருக்கு வழமையாகக் கொடுத்துவந்த நான்கோடு எட்டில் ஐந்து அச்சுக்களைக் கொடுத்துத் தாமும் தம் சந்ததியாரும் முன்புபோல அங்கு குறிப்பிட்ட நிலங்களை அனுபவித்து வரலாமென்பது
216. S. I. I Vol VII. p. 9. 27. S. I. I. Vol VII, p. 9. 218. S. I. I. Vol. V, p. 151.
232

சாசனத்துத் தமிழ் இலக்கியம்
இலக்கியம் என்ற சொல் செய்யுள் இலக்கியம், உரைநடை இலக்கியம் என்ற இரண்டையும் உள்ளடக்கு மாயினும் சாசனத்திலே செய்யுள் இலக்கியம் மட்டுமே இடம்பெறுகின்றது. இலக்கியச் சிறப்புள்ளன என எடுத் துக்காட்டத்தக்கன சாசனச் செய்யுள்களில் ஒரு பகுதி மட்டுமே இலக்கியம் என்ற சொல் இங்கு பரந்த கருத் திலே கொள்ளப்படுகின்றது: அது சாசனத்திலுள்ள செய்யுட் பகுதிகளையும் உரைநடைப்பகுதிகளையும் உள் ளடக்குகின்றது. மயிலை சீனி. வேங்கடசாமி சாசனங்களிற் காணப்படும் செய்யுள்களில் அக்காலம் வரையில் வெளி யிடப்பட்டனவற்றுட் பெரும்பகுதியைத் தொகுத்துச் “சாசன செய்யுள் மஞ்சரி" (மார்ச்சு, 1959) என்ற நூலை வெளியிட்டுள்ளார்; சாசனச் செய்யுள் என்னும் பெய ரில் மெய்க்கீர்த்திகளை மட்டும் பிறர் வெளியிட்டுவருவ தால், சானங்களிற் காணப்படும் பிற செய்யுள்களைத் தொகுத்துத் தம்முடைய நூலிலே தருவதாக, அந் நூலாசிரியர் தம்முடைய முகவுரையிற் குறிப்பிட்டுள் ளார் வித்துவான் சுந்தரேசவாண்டையார் முப்பது சாசனங்களைக் "கல்வெட்டு: மூலமும் விளக்கவுரையும்" (ஜனவரி 1958) என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். சாசனங்களுட் காணப்படும் தமிழ்க் கவிஞர்களைப் பற்றிய செய்திகள் பல, பேராசிரியரி மு. இராகவையங்காரு டைய "சாசனத் தமிழ்க் கவி சரிதம்" (1-9-37) என்ற ஆராய்ச்சி நூலில் இடம்பெற்றுள்ளன. இந் நூல்கள் யாவும் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. சாசனச் செய் யுன், சாசன உரைநடை என இரண்டு கூருக இவ் விடயத்தை நோக்கலாம்:
233.

Page 128
1. சாசனச் செய்யுள்
சாசனம் பலரும் அறிந்த துறையாக, தமிழ் கற்கும் யாவரும் கற்குந் துறையாக இல்லாததால், சாசனத்திலே செய்யுளிலக்கியம் இடம்பெறுகிறதென் பதே பலருக்குத் தெரியாது தென்னிந்திய வரலாற்று மானவர் மெய்க்கீர்த்தியிலக்கியம் பற்றியும் வரலாற் றுண்மை பொதிந்துள்ள பிற சாசனச் செய்யுள்கள் பற் றியும் ஒரளவு அறிந்திருப்பர். இன்று பிரசித் திபெற்று விளங்கும் தமிழ்க் கவிஞர்கள் சிலரைப்பற்றியும் மறைந்து போன தமிழ் நூல்கள் சிலவற்றைப்பற்றியும் சாசனங்க ளிலே குறிப்புகளுண்டு. தமிழ் இலக்கிய நூல்கள் சில வற்றின் காலநிர்ணயத்துக்குச் சாசனக் குறிப்புகள் உதவுகின்றன. எனவே, தமிழிலக்கிய வரலாற்றுணர்ச்சி சிறப்பதற்குச் சாசனப்பயிற்சி பயன்படும். தமிழ்நாட் டிற் கண்டெடுக்கப்பட்ட சாசனங்களுள் ஒரு சிறு பகு தியே இதுவரையில் வெளியிடப்பட்டதால், வெளியிடப் படாது எஞ்சிக்கிடக்கும் சாசனங்களுள் அருமையான செய்யுள்கள் எத்துணையோ பொதிந்து கிடக்கலாம். இது வரையில் வெளியிடப்பட்ட சாசனங்களிலிருந்து கிடைக் கும் செய்யுள்களையும் செய்யுள்கள் பற்றிய செய்திக% யும் அறிமுகப்படுத்துவதே இங்கு நோக்கமாகும். சாச னச் செய்யுள்களை மெய்க்கீர்த்திகள், மெய்க்கீர்த்தி தவிர்ந்த பிற செய்யுள்கள் என இரண்டாக வகுக்கலாம்.
மெய்க் கீர்த் திகள்
சாசனச் செய்யுள்களுட் சிறப்பாகக் குறிப்பி டத்தக்க பகுதி மெய்க்கீர்த்தி என்னும் இலக்கிய வகை யாகும். தமிழிலுள்ள தொண்ணுரம்ருறுவகைப் பிரபந்தங்
களுள் மெய்க்கீர்த்தி என்பது ஒன்ருகும்; பிரபந்த இலக் கணங்களை எடுத்துக் கூறும் பாட்டியல் நூல்களில் மெய்க்
234

சீர்த்திக்கு இலக்கணம் காணப்படுகின்றது; பாட்டியல் நூல்களிற் காலத்தால் மிகவும் முந்தியதான பன்னிரு பாட்டியல்:-
சீர்நான்காதி யிரண்டடித் தொடையாய் வேந்தன் மெய்ப் புகழெல் லாஞ் சொல்லியு மந்தத்தவன் வரலாறு சொல்லியு மவளுட்ன் வாழ்கெனச் சொல்லியுமற்றவ னியற் பெயர்ப்பின்னர் சிறக்க யாண்டெனத் திறப்படவுரைப்பது சீர்மெய்க் கீர்த்தி1 நிலைபெறு சீர்மெய்க் கீர்த்தி யினந்த முரையாய் முடியுமென வுரைத்தனரே?
பிற பாட்டியல் நூல்கள்:-
சிறந்த மெய்க்கீர்த்தி யரசன் செயல்சொற் றவையாயச் செய்யுள் அறைந்ததோர் சொற் சீரடியாம்3 தொழிலார்ந்த மெய்க்கீர்த்தி சொற் சீரடியால் எழிலரசர் செய்தி யிசைப்பர்.4
கிர்த்தி என்னும் வடசொல் புகழ் என்னுந் தமிழ்ச் சொல்லிற்கு நேரான பதமாகும் அரசன் புகழ்பாடும் மரபு தமிழில் மிகவும் நீண்ட காலத்தது. புறநானூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு என்னும் மிகப் பழைய நூல்களுள், பெரும்பாலான செய்யுள்கள் அரசரைப்புகழ் வன அரசரைப் புகழ்வதற்கு அகத்திணை மரபு ஒரு
1 & 8 பன்னிரு பாட்டியல், 311, 312 3, நவநீதப்பாட்டியல். 58 4, வச்சலாந்தி மாலே 14
235

Page 129
கருவியாகக் கொள்ளப்படுவதனைப் பிற சங்க இலக்கியம் களிற் காணலாம்: சங்க காலத்துப் பிந்திய செய்யுள் களுள் அரசரைப் புகழ்வனவாகக் களவழி நாற்பது, நற் திக் கலம்பகம், பாண்டிக்கோவை, முத்தொள்ளாயிரம் என்பனவாக மிகச் சிலவே, இன்று அறியப்படுகின்றன; பன்னிரு பாட்டியல் தோன்றிய காலம் பற்றிக் கருத்து வேறுபாடு உண்டு. சோழப் பெரு மன்னர் காலத்துக்கு முன்பு அது தோன்றியிருக்க வேண்டுமெனப் பொது வாகக் கொள்ளப்படுகின்றது. மெய்க்கீர்த்தி என்பது தமிழ்ச்சொல்லொன்றும் வடசொல்லொன்றும் கலந் தமைந்த தொடராகக் காணப்படுகின்றது. புகழ் என்ற சொல்லே பழைய தமிழ் இலக்கியங்களுட் பரவலாக வழங்குகின்றது. கீர்த்தி என்ற வடசொல் பல்லவரி காலத்திலேயே தமிழ்மொழியிற் பெரு வழக்காகியிருக்க வேண்டும் மெய்ச்கீர்த்தி பல்லவர் காலத்திலிருந்து வழங்குகின்றது என்பர் ஒரு சாரார். அது சோழப்பெரு மன்னர் காலத்து முதலாம் இராசராசன் காலத்திலேயே தொடங்கியிருக்கவேண்டும் என்பர் இன்னுெரு சாரார் மெய்க்கீர்த்தி என்னும் பிரபந்தத்துக்குப் பாட்டியல் நூல்களில் கூறப்படும் இலக்கணம் முதலாம் இராச ரரசன் காலம் தொடக்கம் தோற்றம்பெறும் செய்யுள் வகைக்கே பொருந்துவதால், உதாரணங்களை அக்காலத் திலிருந்தே எடுத்துக்காட்டலாம்
சோழப் பெருமன்னன் முதலாம் இராசராச னுடைய மெய்க்கீர்த்தி வருமாறு:-
திருமகள் போலப் பெருநிலச் செல்வியுற் தனக்கே யுரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக்கலமறுத் தருளி வேங்கை நாடுங் கங்கபாடியுந் AJ 49,RDaB LutT u9. u ub JBI 6N7 lib Lu Lub749 uH ub
286

குடமலை நாடுங் கொல்லமுகி கலிங்கமும் முரட்டெழிற் சிங்கள ரீழமண்டலமும் இரட்ட பாடியேழரை யிலக்கமும் முத்ரீர்ப் பழந்தீவு பன்னிராயிரமுற் திண்டிறல் வென்றித் தண்டாற் கொண்டதல் னெழில்வள ரூழியு ளெல்லா யாண்டுற் தொழுதக விளங்கும் யாண்டே செழியரைத் தேசுகொள் கோராச கேசரி வர்மரான உடையார் பூரீராச ராச தேவர்க்கு யாண்டு
நவநீதப் பாட்டியல், வச்சணந்திமாலை என்பவற்றிற் கூறப்படும் மெய்க்கீர்த்தியிலக்கணம் மேற்காட்டிய சாச னப் பகுதிக்குப் பொருந்துகின்றது. பன்னிருபாட்டியலிற் கூறப்படும் மெய்க்கீர்த்தியிலக்கணத்தின் சில அமிசங்கள் இங்கு இடம்பெறவில்லை; இதற்குப் பின் தோன்றிய மெய்க்கீர்த்திகளிலும் இடம்பெறவில்லை. அரசியுடன் வாழவேண்டுமெனவும் நீண்டகாலம் வாழவேண்டுமென வும் வாழ்த்தும் பகுதிகளை இம் மெய்க்கீர்த்திகளிற் காணக்கூடவில்லை இலக்கணம் இலக்கியத்தைப் பின் தொடர்ந்தே தோன்றும். எனவே, பன்னிருபாட்டியலிற் காணப்படும் மெய்கீர்த்தியிலக்கணம் தோன்றுமுன்பே, அவ்விலக்கணத்திற்குத் தோற்றுவாயான மெய்க்கீர்த்தி யிலக்கியம் இருந்திருக்கவேண்டும் அத்தகைய மெய்க் கீர்த்திகள் கல், செம்பு முதலிய நிலையான பொருள் களிற் பொறிக்கப்படாமையால் மறைந்துபோயிருக்க வேண்டும் அல்லது அவை இன்னும் வெளிப்படாம லிருக்கவேண்டும்.
மேலும் மெய்க்கீர்த்தி என்னும் பெயருக்கு முழு உரிமையுடையதாக இந்த மெய்க்கீர்த்தி அமைந்திருக்
5. South Indian Inscriptions Vol. II, p. 68.
237

Page 130
கின்றது; முதல் இரண்டடிகளில் உருவக அணிகானப் படுகின்றது; வளர்ந்து சென்ற பேரரசும் பொலிந்து சென்ற செல்வச் செழிப்பும் பெருநிலச் செல்வியென் னும் பூமாதேவியாகவும் திருமகளென்னும் இலக்குமி யாகவும் கற்பிக்கப்பட்டு இராசராசன் மனைவியராக உருவகிக்கப்படுகின்றனர். பிற செய்திகள் பெரும்பாலும் தன்மையணியிற் கூறப்படுகின்றனவெனலாம். சோழ நாட்டுக்கு அயலிலிருந்த பாண்டிநாட்டை அடக்கித் தனித்தமிழ் மன்னராக விளங்குவதிலே சோழர் தனிப் பெருமை பாராட்டினர் பாண்டி யருடைய ஒளியைப் பறித்து கொண்ட பெருமை தனியே எடுத்துக்காட்டப் படுகின்றது. பாடி என்பது கன்னட நாட்டுப் பகுதி களுக்கு வழங்கிய பெயர் எழில் - புகழ், தண்டு-படை ஈழத்திலும் இரட்டபாடியிலும் இராசராசன் வெற்றி பெற்றன். ஆனல் அவற்றை அடக்கமுடியவில்லை. இங்கு பொய்யும் புனைந்துரையும் இடம்பெறவில்லை. பரிசிலுக் காக மன்னரைப்பாடும் புலவர் உள்ளது விரித்தும் இல்லது புணர்த்தியும் பாடுதல் மரபு. அந்த மரபை மறுத்து எழுந்ததனலேயே, இப்பிரபந்த வகை மெய்க் கீர்த்தியென மெய்யென்னும் அடைபெற்று வழங்கி யிருக்கவேண்டும்
சோழப் பேரரசு வளர்ந்துசென்ற காலமான முத லாம் இராசராசன், முதலாம் இராசேந்திரன் காலத்துத் தோன்றிய மெய்க்கீர்த்திகளுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு; இவ்வரசர்களுடைய மெய்க்கீர்த்திகள் இவர்கள் வென்ற நாடுகளை வரிசைப்படுத்துகின்றன. முதலாம் இராசேந் திரன் காலமே சோழப்பேரரசு மிகப் பரந்துபட்டிருந் தது. இவ்வரசனுடைய வெற்றி கங்கைக்கரையிலிருந்து கடாரம் வரை சென்றது. இராசேந்திரன் காலமே தமிழ் நாட்டு வரலாற்றில் மிகச்சிறப்பான காலமாகும் தமி ழரின் புகழ் அக்காலத்திற்கு முன்பும் பின்பும் அந்த
238

அளவுக்கு என்றும் இருந்ததில்லை; அதனல் அவனுடைய மெய்க்கீர்த்தி முழுவதும் இங்கே எழுத்தாளப்படுகின் றது. இவன் வென்ற வேந்தர்களில் முக்கியமானவர்களும் இவன் மெய்க்கீர்த்தியிற் குறிப்பிடப்படுகின்றனர். மெய்க் கீர்த்தியின் சிறப்புகளுள் ஒன்று, அது மன்னனுடைய ஆட்சித் தொடக்கத்தில் ஆரம்பித்துக் காலப்போக்கில் வளர்ந்துசென்று அம்மன்னரின் ஆட்சி முடிவடையும் காலத்தில் முற்றுப்பெறுகின்றது. ஒரு மன்னனுடைய வெவ்வேறு ஆட்சியாண்டுகளில் மெய்க்கீர்த்தி வெவ்வேறு அளவில், அந்த அந்த ஆட்சியாண்டுகள் வரையில் மன் னன் சாதனைகளைக் கொண்டு விளங்கும். உதாரணங்க ளாக முதலாம் இராசேந்திரனுடைய பன்னிரண்டாம் ஆண்டு மெய்க்கீர்த்தியையும் பத்தொன்பதாம் ஆண்டு மெய்க்கீர்த்தியையும் பாரிக்கலாம்.
திரு மன்னிவளர விருநில மடந்தையும் போர்ச்சயப் பாவையுஞ் சீர்த்தனிச் செல்வியுந் தன் பெருந் தேவியராகி யின் புற நெடிதிழியு லூாளிடை துறை நாடும் தொடர்வண வேலிப் படர்வன வாசியும் சுள்ளிச் சூழ்மதிற் கொள்ளிப் பாக்கையும் நண்ணற் கருமுரண் மண்ணைக் கடக்கமும் பொருகட லீழத் தரசர்த முடியும் ஆங்கவர் தேவிய ரோங்கெழின் முடியும் முன்னவர் பக்கற் றென்னவர் வைத்த சுந்தர முடியு மிந்திர ஞரமும் தெண்டிரை யீழ மண்டல முழுவதும் எறிபடைக் கேரளன் முறைமையிற் குடும் குலதனமாகிய பலர் புகழ் முடியும் செங்கதிர் மாலையும் சங்கதிர் வேதிை தொல்பெருங் காவற் பல்பழற் தீவும் செருவிற் சினவி யிருபத்தொருகால்
239

Page 131
240
ayur sas&aar as "- upra rmr uddå? மேவருஞ் சாந்திமத் தீவரண் கருதி இருத்திய செம்பொற் றிருத்தகு முடியும் பயங்கொடு பழிமிக முயங்கியில் முதுகிட் டொளித்த சயசிங்க னளப்பரும் புகழொடு பீடிய லிரட்ட பாடி யேழரை யிலக்கமு நவநெதிக் குலப்பெரு மலைகளும் விக்கிரம வீரர் சக்கரக் கோட்டமு முதிர்பட வல் ைமதுரை மண்டலமும் காமிடை வள நர்மணக் கோணையும் வெஞ்சின வீரர் பஞ்சப் பள்ளியும் Lumr «F60)L— tʼi tup6RT uomr 35 60of G3Ag55F(yp tib அயர்வில் வண்கீர்த்தி யாதிநக ரவையில் சந்திரன் ருெல்குலத் திந்திர ரதனை விளையமர்க் களத்துக் கிளையொடும் பிடித்துப் பலதனத் தொடு நிறை குலதனக் குவையும் கிட்டருஞ் செறிமிளை யொட்ட விஷயமும் பூசுரர் சேர்நற் கோசல நாடும் தன்ம பாலனே வெம்முனை அழித்து வன்டுறை கோசலைத் தண்ட புத்தியும் இரண சூரனை முரணுகத் தாக்கிதி திக்கணை கீர்த்தித் தக்கண லாடமும் கோவிந்த சந்தன் மாவிழிற் தோடதி தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்கு வொட்டல் மகி பாலனே வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித் தருளி ஒன்டிறல் யானையும் பெண்டிர் பண்டாரமும் நித்தில நெடுங்கட லுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் சங்கைபு மாப்பொரு தண்டாற் கொண்ட சோப்ட்சசரி

வன்மரான பூரீராஜேந்திரசோழதேவருக்கு யாண்டு யஉ ஆவது?
பத்தொன்பதாம் ஆட்சியாண்டுச் சாசனத்தில், பன்னி ரண்டாம் ஆட்சியாண்டுச் சாசனத்திற் கூறியது நாற் பத்தாரு வது அடி வரையிற் றிருப்பிக் கூறப்பட்டுப் பின்பு பத்தொன்பதாம் ஆண்டுவரையில் நடந்தவையும் எடுத் துக்காட்டப்படுகின்றன. எனவே, நாற்பத்தாருவது அடியிலிருந்து எஞ்சிய பகுதி கீழே தரப்படுகின்றது:
வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும் அலைகடல் நடுவுட் பலகலஞ் செலுத்திச் சங்கிராம விசையோத் துங்க வர்ம ஞகிய கடாரத் தரசனை வாகையம் பொருகடல் கும்பக் கரியொடு மகப்படுத் 50 துரிமையிற் பிறக்கிய பெருநிதிப் பிறக்கமும் ஆர்த்தவ னகநகர்ப் போர்த்தொழில் வாசலில் விச்சாதிரத்தோ ரணமு மொய்த் தொளிர் புனைமணிப் புதவமும் கனமணிக் கதவமும் நிறைசிர் விசயமுந் துறை நீர்ப் பண்ணையும் வன்மலை யூரெயிற் றென்மலை யூரும் ஆழ்கட ல்கம் சூழ் மாயிரு டிங்கமும் கலங்கா வல்வினை இலங்கா சோகமும் காப்புறு நிறை புனல் மாபப் பாளமும் காவலம் புரிசை மேவுலிம் பங்கமும் 60 விளைப்பற் தூருடை வளைப்பந்துTரும் கலைத்தக் கோர் புகழ் தலைத்தக் கோலமும் தீதமர் வல்வினை மதமா லிங்கமும் கலாமுதிர் கடுந்திறல் இலாமுரிதேசமும்
6, South Indian Inscriptions, Vol. I, p. 95,
24

Page 132
தேனக்க வார்பொழில் மாநக்க வாரமும் தொடுகடற் காவற் கடுமுரட் கடாரமும் மாப்பொரு தண்டாற் கொண்ட கோப்பரகேசரி
வன்மரான உடையார் பூரீ ராசேந்திர சோ ழ தேவர்க்கு யாண்டு ல்சின் ஆவது?
முதன் மூன்று அடிகள் உருவகமாக அமைகின் றன. இராசராசனுடைய தேவியராக உருவகிக்கப் பட்டவைகளுடன் போர்வேற்றியும் இங்கு சய இலக்கு மியாக உருவகிக்கப்பட்டு இணைக்கப்படுகின்றது. மூவரும் இராசேந்திரனுடைய தேவியராகி இன் புற்றனரெனப் படுகின்றது. தேவியர் மூவர் இராசேந்திரனையடைந்து இன் புற்றனர் என்று கூறப்படுகின்ற தேயல்லாமல் இராசேந்திரன் தேவியர் மூவரையடைந்து இன் புற்முன் என்று கூறப்படாமை இராசேந்திரனுக்குப் பெருமிதத் தைக் கொடுக்கின்றது. இராசேந்திரன் வென்ற இடங் களேயும் கைப்பற்றிய பொருள்களையும் குறிக்கும்போது அவற்றின் தன்மையை விளக்கும் அடைமொழிகள் வழங்கப்படுகின்றன. இது இராசராசனுடைய மெய்க் கீர்த்தியிலிருந்து புதிய வளர்ச்சியெனலாம்.
முதலாம் இராசேந்திரனுடைய 24-வது அடி வரையுள்ள மெய்க்கீர்த்தி முதலாம் இராசராசன் வெற்றி பெற்றதாகக் கூறும் இடங்களையே பெரும்பாலும் திருப் பிக் கூறுதல் கவனிக்கத்தக்கது. தந்தை பெற்ற வெற்றி தோற்ற நாடுகள் யாவற்றையும் நிரந்தரமாகப் பணிய வைக்கவில்லை. இராசராசன் வெற்றிபெற்ற சில இடங் களிலே பூரண வெற்றிபெறவில்லை, இலங்கை முழுவதை
7. South Indian Inscriptions, Vol. II, p. 105.
242

யும் வென்றவன் இவன் என்று முற்றும்மையாற் சொல் லப்படுவதனை நோக்க, இராசராசன் இலங்கையின் ஒரு பகுதியையே வென்றிருக்கவேண்டும் என்ற பொருள் தொனிக்கின்றது; பாண்டியர், கேரளரி, சிங்களவர் என்ற அனைவருடைய அரசுச் சின்னங்களும் இராசேந்திர னுடைய கையிலேயே சிக்கின. இத்தகைய காரணங்க ளால் மைந்தன் போராடித் தன்னுடைய வெற்றியை நிலைநிறுத்தவேண்டியிருந்தது
25-வது அடியிலிருந்து 46-வதி அடிவரை கங் கைப் படையெடுப்புக் கூறப்படுகின்றது. கங்கைக்கரை வரை சென்றபோது பெற்ற வெற்றிகள், இந்த அடிக ளிற் கூறப்படுகின்றன. கங்கைக் கரை வரையி லிருந்த நாடுகளும் அவை சிலவற்றின் இயல்பு, அவற்றுட் சில வற்றை யாண்ட மன்னர்கள், அம்மன்னர்கள் மேற் பெற்ற வெற்றியின் இயல்பு என்பனவும் இங்கு இடம் பெறுகின்றன. இவ்வளவு கூறியபின்பும் இராசேந்திரன் கங்கைக்கரைக்குத் தீர்த்த யாத்திரை மட்டுமே செய்தான் என்று வெங்கையா என்ற சாசனவியலாளர் வருணிப் பர். இந்த் விபரங்கள் இடம்பெரு விட்டால் இராசேந் திரன் படை கங்கைக்கரைக்குப் போகவில்லையென்று சாதித்திருப்பார்: இராசேந்திரனுடைய பன்னிரண்டாம் ஆட்சியாண்டுவரையில், அவன் சாதனைகள் இவையாகும். அதன் பின்பு கடாரத்துக்குப் படையெடுத்திருசுகிருன் . இன்றைய மலேசியா, இந்தோனேசியா என்னும் நாடு களில் அவன் கடற்படைகொண்டு வெற்றிபெற்றிருக்கின் முன்.
முதலாம் இராசேந்திரனுடைய மக்கள் மூவர் ஒரு வர் பின் ஒருவராக அரசாண்டனர், முதலாம் இராசாதி
243

Page 133
ராசன், இரண்டாம் இராசேந்திரன், வீரசோழன் என் னும் மூவர் வரலாற்றிலும் ஒரு பொதுத் தன்மையுண்டு இவர்களுடைய காலத்தில், சோழப் பேரரசு பரந்து செல்லவில்லை. சோழப் பேரரசின் பெருமையும் புகழும் பரப்பும் தந்தை விட்டுச்சென்ற நிலையிலிருந்து குறைவு படாதிருக்க இம்மூவரும் உழைத்தனர். ஒரு மன்னருக்கு ஒரு மெய்க்கீர்த்தி என்ற நிலை மாறுகின்றது. முதலாம் இராசாதிராசனுக்கு "திங்களேர்தரு", திங்களேர் பெற வளரி", "திருக்கொடியொடு தியாகக் கொடி’ என மூன்று மெய்க்கீர்த்திகள் உண்டு: தமையனுக்கு மூன்று மெய்க் கீர்த்திகள் இருந்தமையால், தம்பிக்கும் மூன்று மெய்க் கீர்த்திகள் இருக்கவேண்டும் என்ற நி ைதோன்றியிருக்க லாம். இரண்டாம் இராசேந்திரனுக்கும் "திருமாது புவி யெனும் பெருமாதர்', "இரட்டபா டி ஏழரையிலக்கமுங் கொண்டு', 'திருமகள் மருவிய செங்கோல் வேந்தன்றன் முன்னுேள் சேனை' என மூன்று மெய்க்கீர்த்திகள் உண்டு: மூன்று மெய்க்கீர்த்திகளைக் கொண்ட தமிழ் மன்னர்கள் இவர்களுக்கு முன்பு இருந்ததில்லை. சோழப் பேரரச ருடைய பெருவெற்றிகள் தமிழ்ப்புலவர்களுடைய உள் ளத்தை எவ்வாறு தூண்டின என்பதற்கு இவை எடுத் துக்காட்டுகள். மெய்க்கீர்த்திகள் அரசரைப் புலவராற் பொருள் கருதிப் பாடப்பட்டனவெனக் கொண்டாலும் அவையும் சூழலை மீறி இல்லாதவற்றைப் பாட முடி uuto •
ஒவ்வொரு வேந்தருக்குமுரிய ஒவ்வொரு மெய்க் கீர்த்தியை இங்கே ஆராயலாம் போரில் நாடுகளை வெல்வது ஒன்று அந் நாடுகளே அடக்கி ஆளுவது இன் ஞென்று என்பன இம் மெய்க்கீர்த்திகளிலிருந்து தெளி வாகத் தெரியவருகின்றன. பேரரசுக்குட்பட்ட நாடுகளை அரச குலத்தவருடைய நேரடி ஆட்சியில் விட்டுவைத் தாலே, பேரரசில் அமைதியையும் ஒழுங்கையும் நிலை
24.

நிறுத்தலாம் என்ற நிலை ஏற்படுகின்றது. முதலாம் இர ரீதிராசனுடைய "திங்களேர் தரு’8 என்ற மெய்க்கீர்த்தி இந்த அரசனுடைய குடும்பத்தவர் வானவன், வில்ல வன், மீனவன், கங்கன், இலங்கையர்க்கிறைவன், பல்ல வன், கன்னகுச்சியர் காவலன் என நியமிக்கப்பட்டு மகு டம் சூட்டப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. இரண்டாம் இராசேந்திரனுடைய "திருமாது புவியெனும் பெரு மாதர் 9 என்னும் மெய்க்கீர்த்தியும் அதன் தொடக்கத் தில் அரச குடும்பத்தவரைச் சிற்றரசராக்கிய செய்தியை விரிவாக எடுத்துக் கூறுகின்றது.
இம் மெய்க்கீர்த்திகளிலேயுள்ள சொற்சுவை, பொருட்சுவை என்பன முதலாம் இராசராசன், முத லாம் இராசேந்திரன் என்போருடைய மெய்க்கீர்த்திகளி லுள்ளனவற்றிலும் அதிகமாகக் காணப்படுகின்றன. இம் மெய்க்கீர்த்திகளிலே வெற்றியின் இயல்பு வருணிக்கப் படுகின்றது. போர்க்களத்தில் இம் மன்னர்களிடம் எதிரி கள் பட்டபாடுகளைக் கூறும் பகுதிகளிலே வீரச் சுவை காணப்படுகின்றது. எதிரிகள் வீரம், புகழ், சினம் என் பன மிக்கவர்களெனக் கூறி அவர்கள் இம்மன்னர்களிடம் படுதோல்வியடைந்து கொல்லப்பட்ட்னர் அல்லது துரத் தப்பட்டனரெனக் கூறும்போது மன்னர்களுடைய வீரம் விளங்கித் தோன்றுகின்றது. முதலாம் இரரீதிராசனப் பாண்டியர் மூவர் எதிர்த்துத் தோல்வியடைந்ததைப் பற்றிய பகுதி ஓர் எடுத்துக்காட்டு:-
தென்னவர் மூவருள் மான பரணன் பொன்முடி யானப் பருமணிப் பசுந்தலை
8. South Indian Inscriptions, Vol. ill, part I, No. 28. 9. South Indian Inscriptions, Vol. III. part I, No. 29.
245

Page 134
பொருகளத் தரிந்து வாரள வியகழல் வீரகே ரளனே முனை வயிற் பிடித்துத் தனது வாரணக் கதக்களிற்ரு னுதைப்பித்தருளி அந்தமில் பெரும்புகழ்ச் சுந்தர பாண்டியன் கொற்றவெண் குடையுங் கற்றைவெண் கவரியும் சிங்கா தனமும் வெங்களத் திழந்துதன் முடிவிழத் தலைவிரித் தடிதளர்த் தோடத் தொல்லை முல்லையூர்த் துரத்தி. . . (12-21/
இரண்டாம் இராசேந்திரனுடன் போர்செய்து தோற்ருேடியதைப்பற்றிய பகுதி இன்னேரி எடுத்துக் காட்டு:-
வெஞ்சின வீரோ டஞ்சிச் சளுக்கி குலங்குலை குலேந்து தல்மயிர் விரித்து வெற்நுற் ருெளித்துப் பின்னுற நோக்கிக் கால் பரிந் தோடிமேல் கடல் பாயத் துரத்திய பொழுதச் செருக்களத் தவன்விடு (59-63)
கலகம் விளைவித்த பகைவர்களை யடக்கித் தம் ஆட்சியை நிலைப்படுத்த முயன்ற சோழமன்னர் பகைவர்களுக்குக் கொடுமைகள் இழைத்ததைப் பற்றிய சில குறிப்புகள் மெய்க்கீர்த்திகளிலே காணப்படுகின்றன. பகைவர்கள் யாவரும் கொடுமைகளுக்கு ஆளாகியபோதிலும் சாளுக் கியரும் சிங்களவரும் அதிக கொடுமைக்கு ஆளாகினர் போலத் தெரியவருகின்றது. சோழர் படையெடுப்பாலும் ஆட்சியாலும் சேர்ந்த கொடுமைகள் இவ்விரு பகுதி யினருடைய நாடுகளிலும் எழுந்த நூல்களும் ஆவணங் களும் பல படக் கூறுகின்றன. இக்கொடுமைகளாலே தமி ழர் மேலே தீராத வெறுப்புணர்ச்சி இந்நாடுகளிலே தோன்றியது. சாளுக்கியரையும் சிங்கள வரையும் முழுவ தாக அடக்க முடியாமையினல் ஆத்திரமடைந்த சோழப்
246

பெருமன்னர் இவ்வாறு செய்தனராக வேண்டும், முத லாம் இராசா திராசன் வீரசலாமேகன் என்னும் இலங்கை மன்னன்மேற் பெற்ற வெற்றியை வருணிக்கும் பகுதி:-
விளங்குமுடி கவித்த வீரசலா மேகன் போர்க்களத் தஞ்சித்தன் கார்க்களி றிNந்து எவ்வையுற் ருேடக் காதலி யொடுந்தன் றவ்வையைப் பிடித்துத் தாயை மூக்கரிய ஆங்கவ மானம் நீங்குதற் காக மீட்டும் வந்து வாட்டொழில் புரிந்து வெங்களத் துலந்தவச் சிங்களத் தரசன் (47-53)
வீரசோழன் சாளுக்கிய மன்னனுடைய சேஞதிபதியாகிய சாமுண்டராயனை அவமானப்படுத்தியதை ெய டு த் து க் கூறும் பகுதியாக, அவனுடைய 'திருவளர் திரள் புயத் திருநிலவலயம் 10 என்று தொடங்கும் மெய்க்கீர்த்தியிற் காணப்படுவது :-
தாங்கரும் பெரு வலித் தண்டுகெடத் தாக்கி மாதண்ட நாயகன் சாமுண்ட ராயனைச் செற்றவன் சிரத்தினை யறுத்து மற்றவ னுெரு மது ளாகிய விருகையன் றேவி நாகலை யென்னுந் தோகையஞ் சாயலை முகத்தொடு மூக்குவே ருக்கிப் பகைத்தெதிர் (12-17)
சோழநாட்டின் செல்வம் இரு வகையிலே பெருகியது. தோற்ற மன்னரும் சிற்றரசரும் திறை செலுத்தியதை முதலாம் இராசா திராசனுடைய மெய்க்கீர்த்தி எடுத்துக் கூறுகின்றது:-
10. South Indian Inscriptions, Vol. III, Part I, No. 30
247

Page 135
வில்லவர் மீனவர் வேள் குலச் சளுக்கியர் வல்லவர் கெளசலர் வங்கணர் கொங்கர்ே சிந்துர ரையனர் சிங்களர் பங்கரிே அந்திரர் முதலிய வரைசரிடு திறைகளும் (64-67)
இரண்டாவது வகை, போரில் வெற்றிபெற்றதும் பகை வர் நாட்டிலிருந்து கொள்ளையடித்து வருவது, இரண் டாம் இராசேந்திரன் மேலைச் சாளுக்கியரை, வென்று கரு நடதேசத்துப் பெண்களையும் பெரு நீ தொ  ைக ப பொருள்களையும் கொள்ளை கொண்டு வந்ததைக் கூறும் பகுதி -
சத்துரு பயங் கரன்கர பத்திரன் மூல பத்திர சாதி பகட்டரை சநேகமும் எட்டுநிரை பரிகளு மொட்டக நிரைகளும் வராகவெல் கொடிமுத லிராசபரிச் சின்னமும் ஒப்பில் சத்தி யவ் வைசாங் கப்பையென் றிவர் முதல்
தேவியர் குழாமும் பாவையரிட்டமும் இன யன பிறவு முனை வயிற் கொண்டு (64-79)
வீரசோழன் மேலைச் சாளுக்கியரை வென்று அவ்வாறு கொள்ளைகொண்டுவந்ததைக் கூறும் பகுதி:-
248
அங்கவர் தாரமு மவர் குல தனமுஞ் சங்குந் தொங்கலுந் தாரையும் பேரியும் வெண்சா மரையு மேகிடம்பமும் சூகரக் கொடியும் மகரதோ ரணமும் புட்பகப் பிடியும் பொருகளிற் றீட்டமும் பாய் பரித் தொகையொடும் பறித்துச் சேயொளி (41-46)

வீரசோழனுடைய வீரத்தை உணர்த்தும்பகுதிகள், அவ னுடைய மெய்க்கீர்த்தியிற் காணப்படுகின்றன. போர்க் கள வருணனை வீரச்சுவை மிகுந்து காணப்படுகின்றது. வடவெல்லையிலிருந்து வந்ததும் நன்கு வகுக்கப்பட்டது மான மேலைச்சாளுக்கியனுடைய பெரும் படை வடகட லுக்கு உவமிக்கப்படுகின்றது; வீரசோழனுடைய யானை யொன்று இப்படையைக் கலக்கிவிடுகின்றது. எதிர்ப் படைதி தலைவர் சிலர் சின்னபின்னஞ் செய்யப்பட்டன ரெனவும் ஏனையோரும் மன்னர் ஆகவமல்லனும் உயி ரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக ஒருவரை முந்தி ஒரு வர் ஓடினரெனவும் கூறுவதனல் வீரசோழனுடைய வெற்றி மிகவும் இலகு விற் பெறப்பட்டது என்று புல வரி உணர்த்த முற்பட்டுள்ளார். இச் செய்தியை வர லாற்றுப் பின்னணியிலே வைத்துப்பாரிக்கும்போது, சாளுக்கியருடைய தோல்வி மிகைப்படுத்தப்பட்டிருக் கிறது போலத்தெரியவருகின்றது. மேலைச்சாளுக்கியனுேடு கூடல் சங்கமத்திலே நடந்த முதற் போரிலே வீரசோழன் சாளுக்கியப் படையைக் கலக்கி அழித்ததையும் சாளுக்கிய னும் படைத்தலைவரும் அஞ்சியோடியமையையும் கூறும் பகுதி ;-
கூட்ல் சங்கமத் தாே மல்லன் மக்க ளாகிய விக்கலன் சிங்கன னென்றிவர் தம்மொடு மெண்ணில்சா மந்தரை வென்றடு தூசிமுனை விட்டுத் தன்றுணை மன்னருந் தானும் பின்னடுத் திருந்து வடகட லென்ன வகுத் தவத் தானையைக் கடகளி ருென் ருற் கலக்கி யடல்பரிக் கோசலைச் சிங்கனைக் கொடிபட முன்னர்த் தூசிவெங் களிற்முெடுந் துணித்துக் கேசவ தண்ட நாயகன் தார்க்சேத் தரையன்
249

Page 136
திண்டிறல் மாராயன் சினப்போத் தரைய னிரேச்சய னிகல்செய்பொற் கோதைமூ வத்தி யென் ருர்த்தடு துப்பி லநேகசா மந்தரைச் சின்ன பின்னஞ் செய்து பின்னை முதலியான மதுவன னேட விரித்த தலையோடு விக்கல ஞேடச் செருத்தொழி லழிற்து சிங்கன ஞேட அண்ணல் முதலிய ரனவரு மமரிபோரிப் பண்ணிய பகடிழிற் தோட நண்ணிய ஆகவ மல்லனு மவர்க்கு முன்னுேட (20-39)
கூடல் சங்கமத்திலேற்பட்ட அவமானத்தைப் போக்கிக் கொள்ள இன்னுெரு போருக்கு வரும்படி ஆகவமல்லன் தூதனுப்பியபோது வீரசோழன் "சிந்தையு முகமுந் திருப்புய மிரண்டு மேந்தெழி லு வகையொ டிருமடங்கு பொலிய நின்ருன் என்று மெய்க்கீர்த்தி மேலும் கூறும்.
முதலாம் குலோத்துங்கன் காலத்திலிருந்து சோழப்பேரரசு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகின்றது. சோழப்பேரரசின் பரப்பு ஓரளவு குறைகின்றது. இலங்கை சோழராட்சியிலிருந்து நீங்கிவிடு கின்றது. முதலாம் குலோத்துங்கானது ஆட்சித் தொடக் கத்தில் மேலைச்சாளுக்கியரோடு மோதுதல் ஏற்பட்ட போதும் அவனுடைய அரைநூற்ருண்டு கால ஆட்சியுட் பெரும்பகுதி அவரோடு போரில்லாமலே கழிந்தது. குலோத்துங்கன் வேங்கி நர்ட்டு அரசகுலத்தையும் சேர்ந் தவனதலால், அங்கும் சோழராட்சியை நிலைநிறுத்துவது வில்லங்கமாக இருக்கவில்லை. இவனுடைய மெய்க்கீர்த்தி கள், "புகழ் சூழ்ந்த புணரியகழ் சூழ்ந்த புவியில்", "புகழ் மாது விளங்கச் செயமாது விரும்ப", "திருமன்னிவிளங்கு இரு குவடனைய தன்" என மூன்று தொடக்கங்களையுடை
250

யன இம்மன்னனே சோழப் பெருமன்னர்களுள் மிக நீண்ட காலம் ஆட்சிசெய்தவனுவான், இவனுடைய ஆட்சி சுமார் அரைநூற்ருண்டு காலம் நெைபற்றது. இவனைப்பற்றிய பல மெய்க்கீர்த்திகள் எழ இது ஒரு காரணமாகலாம்.
இவன் ஆட்சிக்கு வந்தபோது ஆட்சியுரிமை பற்றித் தகராறு இருந்திருக்கிறது. ஆட்சியிலே தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக இவன் புலவர் தன்னைப் புகழ்ந்து பாடும்படி தூண்டியிருக்கலாம். அவற்றுள், "புகழ் சூழ்ந்த புணரியகழ் சூழ்ந்த புவியில்"11 என்பது இங்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது; ஆட்சிப் பரப்பு முன்பு இருந்ததிலும் குலோத்துங்கன் காலத்திலே குறைந்த போதிலும் பூமி முழுவதும் தன்னுடைய ஆட்சி யில் இருந்ததென்ற குறிப்பு இவனுடைய மெய்க்கீர்த்தி யிலும் இவனுக்குப் பின் வந்தோர் மெய்க்கீர்த்திகளிலும் காணப்படுகின்றது. முதலாம் குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தி "புகழ் சூழ்ந்த புணரியகழ் சூழ்ந்த புவியில் பென்னேமி யளவுந் தன்னேமி நடப்ப" என்று கூறுகின் றது: விக்கிரமசோழன் "பூமாலையடைந்து பொன்மாலை திகழ", "பூமாது புணரப் புலிமாது வளர" என இரண்டு மெய்க்கீர்த்திகள் கொண்டவன். அவனுடைய முதலாவது மெய்க்கீர்த்தியில், 12 "அகில புவனமுங் கவிப்பதொரு புதுமதிபோல வெண்குடை மீமிசை நிற்ப" என வருகின் றது; இவ்வாறு கூறுவது உண்மையோடு தொடர்பு பட்டதாக இருக்கவேண்டுமென்ற நிலைமாறி மரபுவழிக் கூற்ருக மாறிவிடுகின்றது. மெய்க்கீர்த்தியும் பொய்க் கீர்த்தியைத் தான் பாடுகின்றதென்றும் புலவர்கள் ஏனைய
11. South Indian Inscriptions, Vol, II, p. 168. 12. South Indian Inscriptions, Vol. II, p. 307.
25

Page 137
கவிதைகளைப்போலவே மெய்க்கீர்த்தியையும் Lunt guyah ளனரென்றும் அறிஞர்கள் கூறும் நிலை ஏற்படுகின்றது;
சோழராட்சி வலிகுன்றப் பாண்டியர் தல் யெடுத்தனர். பாண்டியர் சுய ஆட்சிபெற்றுப் பாண்டிய அரசு வளரத் தொடங்கிய காலத்தில் ஆட்சிசெய்த சடாவர்மன் குலசேகரனும் உலகம் முழுவதையும் ஆண் டான் என்ற பொருளில் 'எண்கிரி சூழ்ந்த எழுகட லெழு பொழில் வெண்குடை நிழற்ற"13 என்று அவனுடைய மெய்க்கீர்த்தி கூறுகின்றது. தமிழ்நாட்டு மன்னரிகளுள் *மூவுலகுக்கும் மன்னர்' என்று பொருள்படும் "திரிபு வனச் சக்கர வர்த்தி யென்ற பட்டம் முதன்முதல் குலோத்துங்கஞலேயே சூடிக்கொள்ளப்படுகின்றது. மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட தமிழ் மன்னர்களுக்கு இப் பட்டம் வழங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. பிற் காலத்திலாண்ட பெருமை குறைந்த மன்னருக்கே இப் பட்டம் வழங்குகின்றது. குலோத்துங்கனைத் தொடர்ந்து வந்த விக்கிரம சோழனும் "திரிபுவனச் சக்கரவர்த்தி" யென்று கூறப்படுகின்ருன், பாண்டியன் சடாவர்மன் குலசேகரன் திரிபுவனச் சக்கரவர்த்தியென்று மரபுவழி யாகக் கூறிக்கொள்வது உண்மையிலிருந்து வெகுதூர மாகக் காணப்படுகின்றது; ஒருவனைத் திரிபுவனச் சக்கர வர்த்தியென் ருல் அவன் தன்னுடைய நாட்டைச் சுய மாக ஆட்சிசெய்பவன் எனப்பொருள் சுருங்கிவிட்டது போலத் தெரியவருகின்றது.
முதலாம் குலோத்துங்க சோழன், விக்கிரம சோழன் முதலியவரிசளுக்கும் நீண்ட மெய்க்கீர்த்திகள்
13. Pudukkottai State Inscriptions No 246.
இவனுடைய மூன்று மெய்க்கீர்த்திகளுள் ஒன்றன 'பூவின்கிழத்தி' இக்கட்டுரையில் எடுத்தாளப்படுகின்றது.
252

உண்டு; ஆனல் இம்மெய்க்கீர்த்திகளை இவர்களுக்கு முன்புள்ள மன்னர்களுடைய மெய்க்கீர்த்திகளுடன் ஒப் பிட்டால், நீண்ட மெய்க்கீர்த்தி பாடவேண்டுமென்ற எண்ணத்தை வைத்துக்கொண்டு புலவர்கள் பாடியிருக்க வேண்டுமெனத் தெரியவருகின்றது. புறநானூற்றிற் காணப்படும் போர் பற்றிய பாடல்களுக்கும் பதிற்றுப் பத்திற் காணப்படும் போரி பற்றிய பாடல்களுக்கும் உள்ள வேறுபாடு முற்கால, பிற்கால மெய்க்கீர்த்தி களுக்கிடையிலான வேறுபாடுபோலத் தோன்றுகின்றது. குலோத்துங்கன் முதல் வெற்றி பெற்ற விபரம் "விளங்கு சய மகளை யிளங்கோப் பருவத்துச் சக்கரக் கோட்டத்து விக்கிரமத் தொழிலாற் புதுமணம் புணர்ந்து" எனக் கூறப்படுகின்றது. சோழப் பேரரசுக்குத் தாய்வழியால் உரிமை பூண்ட குலோத்துங்கனுடைய ஆட்சி யாவருக் கும் உடன்பாடான வழியில் அமைதியாகத் தொடங்க வில்லை. வேங்கிநாட்டாட்சி தானும் குலோத்துங்கனுக் குக் கிடைக்கவேண்டிய காலத்திற் கிடைக்கவில்லை: தொடக்கத்தில் மேலைச் சாளுக்கியரும் பின்பு வீரசோழ னும் வேங்கி நாட்டரசனகப் பிறனெருவனை அங்கீகரித் தனர். இச் செய்திகளைக் குலோத்துங்கனுடைய மெய்க் கீர்த்தி பூசிமெழுகுகின்றது:-
புதுமணம் புணர்ந்து மத வரை யீட்டம் வயிரா கரத்து வாரி யயிர்முனைக் கொந்தள வரசர் தந்தள மிரிய வாளுறை கழித்துத் தோள்வலி காட்டிப் போர்ப்பரி நடாத்திக் கீர்த்தியை நிறுத்தி வடதிசை வாகை குடித் தென்றிசைத் தேமரு கமலப் பூமகள் பொதுமையும் பொன்னி யாட்ை நன் னிலப் பாவையின் தனிமையுந் தவிரப் புனிதத் திருமணி மகுட முரிமையிற் குடி (5-14)
253

Page 138
"கீர்த்தியை நிறுத்தி, "உரிமையிற் சூடி" என்னும் பகுதிகள் குலோத்துங்கனுடைய விருப்பத்துக்கியைய அவனை மகிழ்விக்கும் வண்ணம் புகுத்தப்பட்டிருக்கவேண் டும். சோழருடைய புலி மேருவில் விளையாடுகின்றதென்று இம்மெய்க்கீர்த்தி கூறுவது உயர்வு நவிற்சியாகக் காணப் படுகின்றது. கங்கைக்கரைவரை படையெடுத்த முதலாம் இராசேந்திரனுக்குக் கூரு த புகழுரை முதலாம் குலோத் துங்கனுக்கு வழங்கியிருக்கின்றது. மீனம் கனகாசலத்து விளையாடுகின்றதென்று சடாவர்மன் குலசேகரன் மெய்க் கீர்த்தி கூறுவது பொருள் சிறிதுமில்லாத மரபுவழிக் கூற்றேயாகும். குலோத்துங்கனுடைய மெய்க்கீர்த்தியில், சோழராட்சிக்கு எதிராகக் கலகஞ்செய்த பாண்டியரை யும் சேரரையும் வென்றடக்கியமை விரிவாகக் கூறப் பட்டு அந்நாடுகளிற் கலகங்கள் ஏற்படுவதனைத் தடுப்ப தற்காக நிலைப்படைகள் வெவ்வேறிடங்களில் நிறுவிய செய்தி குறிக்கப்பட்டுள்ளது;
முதலாம் குலோத்துங்கன், விக்கிரமசோழன் முதலியோர் தாம் தம் தேவியரோடு எவ்வாறு வாழ்ந் தனரென்பதையும் தம்முடைய மெய்க்கீர்த்தியாகக் கொண்டுள்ளனர். முதலாம் குலோத்துங்கனுடைய மூன்று தேவியரை உமைக்கும் கங்கைக்கும் திருமகளுக்கும் உவ மித்துக் கூறும் மெய்க்கீர்த்திப் பகுதி:
பார்மிசைச் சிவனிடத் துமை யெனத் தியாகவல்லி உலகுடையாளிருப்ப வவளுடன் கங்கைவிற் றிருந்தென மங்கையர் திலதம் ஏழிசை வல்ல பி ஏழுலக முடையாள் வாழி மலர்ந்தினி திருப்ப வூழியுந் திருமா லாகத்துப் பிரியா தென்றும் திருமக ளிருந்தென வீரசிம் மாசனத்து உலகமு டையாளொடு வீற்றிருந் தருளிய (66-73)
254

விக்கிரமசோழனுடைய தேவியரைப்பற்றி வரும் மெய்க்கீர்த்திப் பகுதி
தொல்லையே முலகுந் தொழுதெழத் தோன்றிய முல்லை வாணகை முக்கோக் கிழானடி உமையொடுஞ் சங்கரன் இமையத் திருந்தெனப் பொருற்தி இனி திருப்ப தெரிவையரி திலதம் தியாக பதாகை புரிகுழல் மடப்படி புனிதகுண வணிதை திரிபுவன முழு துடையா விவன்திரு வுள்ளத் தருள்முழு துடையா ளெனவுட னிருப்ப (30-38)
விக்கிரமசோழன் காலத்திலிருந்து மெய்க்கீர்த்தி யின் பொருளடக்கம் விரிவுபடுகின்றதெனலாம். முந்திய மன்னர்கள் காலம் போலப் போர் வெற்றிகள் இவர்கள் காலத்திற் சிறப்பிடம் பெருமையால், கீர்த்தியாக வேறு விடயங்கள் கூறவேண்டிய நிலை ஏற்படுகின்றது. இம் மன்னர்களுடைய ஆட்சிச் சிறப்பு, கோவிற் றிருப்பணி என்பன விரிவாகக் கூறப்படுகின்றன. விக்கிரமசோழ னுடைய மெய்க்கீர்த்தி14 சிதம்பரம் கோவிலிற் செய் யப்பட்ட திருப்பணியை விரிவாகக் கூறுகின்றது:-
தன் குல நாயகன் தாண்டவம் பயிலுஞ் செம்பொனம் பலஞ்சூழ் திருமா விரிகையும் கோபுர வாசல் கூட சா லைகளும் (32-44) பசும்பொன் வேய்ந்த பலிவளர் பீடமும் விசும் பொலி தழைப்ப விளங்குபொன் வேய்ந்து (37-38)
do
14, South Indian Inscriptions, Vol. III, p. 182.
255

Page 139
திருத்தேர்க் கோயில் செம்பொன் வேய்ந்து பருந்திரண் முத்தின் பயில் வடம் பரப்பி நிறை மணி மாளிகை நெடுந்திரு வீதிதன் திருவளர் பெயராற் பெய்துசமைத் தருளிப் பைம்பொற் குழித்த பரிகல முதலாச் செம்பொன் கற்பகத் தொடுபரிச் சிந்ந மும்
அளவில் லாதன வொளிபெற வமைத்து (44-50) விக்கிரமசோழன் "தென்றிசைத் தருமமுந் தவமுந் தான முந் தழைப்ப வேதமும் மெய்ம்மையு மாதியுகம் போலதி த லேத் தலை சிறப்ப" ஆட்சி செய்தவனென மெய்க்கீர்த்தி, கூறும். பாண்டியர் தமிழோடு நெருங்கிய தொட! புடையவரென்று கூறப்பட்டு வந்ததனற்போலும், சடா வ்ர்மன் குலசேகரனுடைய மெய்க்கீர்த்தி, "இன்னமு தாகிய இயலிசை நாடகம் மன்னிவளர" என்றும் மாl) வர்மன் கந்தரபாண்டியனுடைய "பூ மருவிய திரு மடந்தையும் புவி மடந்தையும் புயத்திருப்ப" என்று தொடங்கும் மெய்க்கீர்த்தி15 "மூவகைத் தமிழும் முறை மையின் விளங்க" என்றும் கூறுகின்றன. மாறவர்மன் சுந்தரபாண்டியனுடைய மெய்க்கீர்த்தி அவன் நல்லா . சியை வருணிக்கும் பகுதி:-
நால்வகை வேதமு நவின்றுடன் வ்ளர ஐவகை வேள்வியுஞ் செய்வினை யியற்ற அறுவகைச் சமயமு மழகுடன் றிகழ எழுவகைப் பாடலு மியலுடன் பரவ (Ꮽ - 12 )
பதினைந்தாம் நூற்ருண்டிலே தென் பாண்டி நாட்டை ஆண்ட சிற்றரசன் அரிகேசரி பராக்கிர
15. Pudukottai State Inscriptions, No. 250,
256

பாண்டியனவான். அவன் பகை மன்னரை வென்ற இடங் களாகச் சில இடங்களின் பெயர்கள் தரப்படுகின்றன: பகைவர் யார் என்ற குறிப்பு இல்லை. பதினெட்டு மொழிபேசும் மன்னரும் திறைகொடுத்ததாகக் கூறப் படுகின்றது. மெய்க்கீர்த்தியிற் கூறப்படும் விடயத்துக்கு உண்மையோடு சம்பந்தம் இல்லாமற் போய்விட்ட நிலை காணப்படுகின்றது. இவன் நல்லவன் என்பதைக் குறிக் கும் மெய்க்கீர்த்திப் பகுதிகள்:-
சந்திர குலத்து வந்தவ தரித்து முந்தையோர் தவத்து முளை யென வளர்ந்து மன்பதை புரக்க மணிமுடி புனைந்து சங்கர சரண பங்கயஞ் சூடி (5-9) மறக்களை பறித்துநல் லறப் பயிர் விளைத்து (13) உலக முழுது முடையா ஞடன் இலகு கருணை யிரண்டுரு வென்ன அம்மையு மப்பணு மாயனைத் துயிர்க்கும் இம்மைப் பயனு மறுமைக் குறுதியும் மேம்பட நல்கி வீற்றிருந் தருளிய (43-47)
அவன் செய்த சைவப் பணிகள் விரிவாக மெய்க் சீர்த்தியிலிடம் பெறுகின்றமை:
அந்தன ரனேகர் செந்தழ லோம்ப விந்தைமுத லகர மைந்திடத் தியற்றிச் சிவநெறி யோங்கச் சிவார்ச்சனை புரிந்து மருதூ ரவர்க்கு மண்டப மமைத்து முன்னெரு தூறு மூங்கில்புக் கிருந்த சிற்பரர் தம்மைத் திருவத்த சாமத்துப் பொற்கலத் தமுது பொலிவித் தருளிச் சண்பக வனத்துச் சங்கரர் தமக்கு மண்டப மமைத்து மணிமுடி @ہا۔ ات
257

Page 140
விழாவணி நடாத்தி விரைப்புன லாடல் வழாவகை நடாத்தி நின்மன்னரு ளதஞல் (22-32) தென்கா சிப்பெருங் கோயில் செய்து நல்லா கமவழி நைமித் திகமுடன் எல்லாப் பூசையுமெக்கோ யிலினும் பொருண்முத லனைத்தும் புரையற நடாத்தி (38-41)
மெய்க்கீர்த்தி காலப்போக்கில் அடைந்த மாற்றம் இத்த God as Lu 25 nr g5 h
மெய்க்கீர்த்தியை ஒத்த பகுதியொன்று சோழர் காலத்துக்கு முந்திய தமிழ்ச் சாசனங்களுட் காணப்படு கின்றது; இது வடமொழிச் சாசன்ங்களிற் காணப்படும் "பிரசஸ்தி" என்ற வகையைச் சேர்ந்தது. மன்னனு டைய செய்திகளை மட்டுமன்றி அவன் குலமுறையை யும் குலப்பெருமையையும் முன்னேர் அருஞ்செயல்களை யும் எடுத்துக் கூறுவது அப்பகுதி, வேள்விக்குடி ச்சாக னம், சின்னமன் னுார்ச்சாசனம், பராந்தகன் வீரநாரா யணனுடைய செப்பேட்டுச் சாசனம் என்பனவற்றில் பாண்டிய மன்னர்களுடைய தமிழ்ப் பிரசஸ்தி காணப் படுகின்றது. சின்னமனூரிச் சாசனத்தில் வரும் "மஹா பாரதந் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்" என்ற பகுதி பாண்டி நாட்டிற் பண்டைக் காலத்திற் சங்கமிருந்ததென்பதற்குச் சான் ருசுப் பலராலும் எடுத் துக்காட்டப்படுவது, பராந்தகன் வீரநாராயணனுடைய செப்பேடு16 இங்கு எடுத்தாளப்படுகிறது. வரலாற்றுக்கு எட்டாத இதிகாச புராணச் செய்திகள் இங்கு குறிப் பிடப்படுகின்றன. அகத்திய முனிவரி புரோகிதராக வந்தது இமயமலையிற் கயலிணை பொறித்தது, தேவா
16. மயிலே. சீனி.வேங்கடசாமி - சாசனச் செய்யுள் மஞ்சரி - பக். 140
258

சுரச் செருவென்றது, அசத்தியரோடு தமிழாராய்ந் தது, துரியோதனதிையரி படைமுழுதும் அழியும்படி பாரத யுத்தத்திற் பகடோட்டியது என்பன அவற்றுட் சில. "மண்ணதிராவகை வென்று தென் மதுரா புரஞ் செய்தும் அங்கதனில் லருந்தமிழ்நற் சங்கம் இரீஇத் தமிழ் வளர்த்தும்" என்று சங்கம் பற்றிய கதைக் குறிப்பு இங்கும் வருகின்றது தலையாலங்கானத்துச் செருவென்றது. களப்பாளர் குலங் களைந்தது முதலிய பழைய வரலாற்று நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன,
முதலாம் வரகுணன் காலத்திலிருந்து வர லாற்று நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. அவன் பல்ல வன் மேற்பெற்ற பெருவெற்றி கூறப் படு கி ன் ற து: அவன் மகன் பூரீவல்லபன் கரைகடலீ ழங்கொண்டும் விண்ணுள வில்லவற்கு விழிஞத்து விடைகொடுத்தும் காடவருக்கடலானூர்ப் பீடழியப் பின்னின்றும் பெற்ற வெற்றிகள் ஒரளவு விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இரண்டாம் வரகுணன் 'பிள்ளை பிறை சடைக்கணிந்த விடையேறி எம்பெருமானை உள்ளத்திலிணிதிருவி உல சுங் காக்கின்ற நாளில்" என்று கூறப்படுகின்ருன் இவனே மாணிக்கவாசகர் காலத்து அரிமர்த்தன பாண்டி யஞ வான் என்பது அறிஞர் சிலர் முடிபு: இவன் மகனே இச்சாசனத்துக்குரிய பராந்தகன் வீரநாராயணனுவான். இவன் 'நிலமோங்கும் புகழாலும் நிதி வழங்கு கொடையாலும் வென்றிப் போர்த் திருவாலும் வேல் வேந்தரில் மேம்பட்டவன், சோழர் காலத்துக்கு முந் திய பிரசஸ்தியிலிடம் பெற்ற செய்திகள் இத்தகை யன; சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி தோன்று வதற்கு இப் பிரசஸ்தி வழிகாட்டியிருக்கவேண்டும்
259

Page 141
மெய்க்கீர்த்தி தவிர்ந்த பிற சாசனச் செய்யுள்கள்
மெய்க்கீர்த்தி வகையிலிருந்து வேறுபட்ட சாச னச் செய்யுள்களை மயில். சீனி. வேங்கடசாமி மாவட்ட ரீதியிலே தொகுத்துள்ளார். இங்கு இச்செய்யுள்கள் மண்டல ரீதியிலே தொண்டைமண்டலத்துச் செய்யும் கள், சோழமண்டலத்துச் செய்யுள்கள், பாண்டி மண் டலத்துச் செய்யுள்கள், தமிழ் நாட்டுக்கு வெளியி லுள்ள பிரதேசத்துச் செய்யுள்கள் என்ற முறையில் அறிமுகப்படுத்தப்படும். 'தொண்டைமண் ட ல த் தை ச் சேர்ந்த காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரி கோவிலில் மூன்று செய்யுள்கள் 17 திருமால் மாவலிவாணன் என்ற சிற்ற ரசன் வீர மாறன் என்ற பாண்டியனைத் தோற்கடித்த தைப் பற்றிக் கூறுகின்றன; அவற்றுள் ஒன்று:-
அடுகயலை முன்ஞளி ல்ாடகக் குன்றிட்ட வடுமறைந்து போயும் மறையா - முடுகுசமர மாற்ருேரி தொழுந்திருமால் மாவுதைப்ப வேல் வழுதி தோற்முேடிப் போன சுவடு
இமயத்திற் பாண்டிய குல இலச்சினையாகிய கயலைப் பொறித்தது பாண்டியருக்குப் பெருமைதந்த கதை யாகும். பாண்டியருடைய வீரம் பழங்கதையாகிவிட் டது போரிலே திருமால் மாவலிவாணனுடைய குதிரை யின் உதைப்புக்கு அஞ்சிப் பாண்டியன் தோற்முேடிப் போய்விட்டான். தோற்ருேடிய அவன் சுவடுகள் இன்னும் பசுமையாக இருக்கின்றன. பாண்டியனுடைய பழம்பெருமையையும் அக்காலச் சிறுமையையும் எடுத்
17. South Indian Inscriptions, Vol. IV, p. 98.
260

துக்கூறும் முகமாக அவனே வென்ற மாவலிவாணனின் சிறப்புப் புலப்படுத்தப்படுகின்றது. அதே மண்டலத் தைச் சேர்ந்த திருவண்ணுமலை அண்ணுமலையார் கோவி லிலே பல சாசனச் செய்யுள்கள் கிடைத்துள்ளன; சோழருக்குக் கீழ்ச்சிற்றரசனக இருந்த மகதைப் பெரு
Dr Gir 6T 6ăr u auðkow ' Lumt rmr LG9aj 67 66) :- 18
தாரு முடியு முரசுந் தமக்குரிய பாரு முடன் பெறுவர் பார்வேந்தர் - வீரப் பெருமாள் மகதேசன் பேரெழுதித் தற்தம் திருமார்பி லாளோலை செய்து
வேந்தர்கள் மகதைப் பெருமாளோடு போர் செய்து யாவற்றையும் இழக்கின்றனர். அவர்கள் இழந்தவற் றைத் திருப்பிப் பெறுவதற்கான வழி இங்கு கூறப்படு கின்றது ஆளோலை என்பது அடிமையோலையாகும்; மகதைப் பெருமாளுக்கு அடிமை என்ற நிலையை அவர் கள் ஏற்பாராயின் இழந்தன யாவற்றையும் திரும்பவும் பெறலாமெனப்படுகின்றது.
வன்மதுரை விட்டு வடகடலான் மால்வழுதி தென் மதுரை பட்டின்று தென்கடலான்
- நன்னுதலாய் மல்லார் தோள் மாகதர் கோமான் முனிந்தால்
மன்னருக் கெல்லாங் கடலோ விடம்.
மதுரை, மாகதர்கோன் என்ற பெயர்களால் ஏற் பட்ட ஒப்புமையாக இரண்டு வேறு நிகழ்ச்சிகள் இங்கு
18. South Indian Inscriptions, Vol. VIII, p. 50.
தமிழ் மூன்ரும் தொகுதி பக். 338
26

Page 142
பிணைக்கப்பட்டு பொதுத்தன்மை விஞவாக அமைக்கப் பட்டிருக்கின்றது; மாகதர்கோளுகிய எதிரிக்கு அஞ்சிக் கண்ணன் வடமதுரையை விட்டுக் கடலுக்கு அருகிலுள்ள துவாரகையைத் தலைநகராக்கி வாழ்ந்தானென்பது இதி காசக் கதையாகும்; இங்கும் மாதகர்கோளுகிய மசதைப் பெருமானுக்குப் பாண்டியன் அஞ்சித் தென்மதுரையை விட்டுத் தென்கடல் நோக்கி உயிரைப் பாதுகாக்க ஒடினனென்று கூறப்படுகின்றது; எனவே, மாக த ரி கோனுக்கு அஞ்சும் மன்ன்வரி எல்லாரும் ஓடிச்செல்லு Altb al-Guri 676 Lugi edet):
தென்னர் முதலா வுலகாண்ட செம்பொன் முடி மன்னர் பெருவாழ்வும் வாள்வலியு - மின்னு முருவத் திகிரி யுயர் நெடுந்தேர் வாணன் புருவக் கடைவளையப் போம்.
மாசதர்கோனுடைய பெரு வீரம் அவனுடைய புருவம்
சிறிது வளைந்தாலே பாண்டியர் முதலிய மன்னருடைய வாழ்வு வலியெல்லாம் அழிந்துவிடுமென்று கூறுமுகத் தாற் புலப்படுகின்றது;
தீய்ந்து பொழிலாகா சிந்தி நகராகா தூர்ந்து மணிநீர்த் துறையாகா - வேந்துமுல்ப் பூணுகா மாறி விழவாகா பொன்னெடுத்தேர் வாணுகா வென்ஞதார் மண்
வாணு எம்மைக் காப்பாயாக" என்று அபயம் புகா தவரின் நாடு அழிந்துவிடும் என்று கூறப்படுகின்றது. பொழில் தீய்ந்து விடும். நகர் சிந்திவிடும் நீர்த்துறை) தூர்ந்துவிடும். வீரர் இறந்து துன்பம் மிகுமாதலால் பெண்கள் மார்புக்கு அணிகிடையாது. நாட்டில் விழா இராது எனப்படுகின்றது,
262

மண்ணுள் திகிரிக்கை வாணன் வடுகெறிந்த எண்ணுயிரஞ்குழ்ந்த எண்டிசையும் - புண் வடிந்த
நீரே நீர்காக நிழலே நிழல் நெடும்பெய்த்
தேரேதேரி செஞ்சேறே சேறு
வாணனுடைய போர் வீரம் அவன் ஆந்திரரை வென்ற களத்தை வருணிப்பதன் மூலம் புலப்படுத்தப்படுகின் றது. களத்தையும் களத்தின் எண்டி சையையும் அவன் முற்முக அழித்துவிட்டான், போர்க் காயத்தால் ஏற் பட்ட புண்ணில் இருந்து வடிந்த நீரே அங்குள்ள நீர். காகம் பறக்கும்போது தோன்றும் நிழலே அங்குள்ள நிழல், கானல் நீராகிய பேய்த்தேர் என்னும் பொய்த் தோற்றமே அங்குள்ள தேர். இரத்தம் முதலியன மண்ணுடன் கலந்து ஆன சேறே அங்குள்ள சேறு.
மேருவின்மேல் வென்று கயல்பொறித்த
வார்த்தையிலும்
வாரிப. வேலெறிந்த வார்த்தையிலும்
- கார் விலங்கு
முன்னிட்ட வார்த்தையிலுந் தென்னவர்
மாகதிற்குப் பின்னிட்ட வார்த்தை பெரிது,
மகதைப் பெருமாள் பாண்டியனை வென்றது கூறப்படு கின்றது. பாண்டியருடைய பெளராணிகப் பெருமை ள் கூறப்படுகின்றன. மேருமலையிற் கயல் பொறித்த கதை, கடல் வற்றும்படி வேலைச் செலுத்திய கதை, முகிலுக்கு விலங்கிட்ட கதை என்பன நினைவூட்டப்பட்டு அத்தகைய குலப்பெருமைகளை யுடையவன மாக த ர் கோன் வென்மு னென்று பின்னவன் பெருமை பேசப் படுகின்றது. அண்ணுமலையார் கோவிலிலே கோப்பெருஞ் சிங்கனும் அவன் மகன் ஆட்கொண்ட தேவனும் செய்த
268

Page 143
திருப்பணிகள் 136 அடிகள் கொண்ட அகவற்பாவில்10 விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. வாயலூர் ஏரிக் கரையிலுள்ள கல்லிற் காணப்படும் கோப்பெருஞ்சிங்க னைப் பற்றிய செய்யுள்கள்20 சிறியனவாகவும் சுவைமிக் கனவாகவும் காணப்படுன்றன:
பொன்னி நாடனு முரிமையு மமைச்சரு மிருப்பதுன் சிறைக்கோட்டம்
பொருப் பிரண்டென வளர்ந்த தோள் வலியினுற் கொண்டுசோணுடு கன்னி காவிரி பகீரதி நின்பிரியா தெண்டுறை வாவி காவல் மன்னவர் திறையுட னுணங்குவ துன்பெருந் திருவாசல் வென்னி டாத போர்க் கன்னடர் வென்னிடப் பொருததுன் பெருஞ்சேை
விளங்கு செம்பொணி னம்பலக் கூத்துநீ விரும்பிய தேவாரம் பின்னி காவல அவனி நாராயண பேணு செந்தமிழ் வாழப்பிறந்த
காடவகோப் மெருஞ்சிங்க நின் பெருமையார் புகழ்வாரேய்,
பதின்மூன்ரும் நூற்ருண்டிற் சோழப் பேரரசு வலிகுன் றத் தெற்கிலே பாண்டியரும் வடக்கிலே பல்லவர்குல பரம்பரையைச் சேர்ந்த காடவராயரும் தலையெடுத்த னர், பாண்டியருக்குத் தோற்ருேடிய சோழனைக் காடவ ராயனுன கோப்பெருஞ்சிங்கன் சிறையிட்டான் தென் பெண்ணை யென்னும் பின்னி பாய்ந்த நாட்டுக்கு அவன் அரசஞவான். கன்னியா குமரி, காவிரி, கங்கை யென்பன அவனுடைய ஆட்சியிலிருக்கவில்லை. அவன் சோழனேச் சிறைப்பிடித்ததால், அவனைச் சோழனுடைய காவிரி நாட்டுக்கு அதிபதியெனக் கொண்டிருக்க வேண் டு ம்: சோழர்குல ஆட்சி கங்கையிலும் கன்னியா குமரியிலும் ஒரு காலத்தில் உரிமைகொண்டாடியதால், சோழனைச் சிறைப்பிடித்த கோப்பெருஞ்சிங்கன் ஆற்றல் உயர்வு ரவிற்சியாகக் கற்பனை செய்யப்பட்டிருக்கலாம். தோல்
19. South Indian Inscriptions, Vol. VIII, p. 38.
264

வியை அறியாத கன்னடப் போசளரைத் தோற்கச் செய்த கோப்பெருஞ் சிங்கன் வீரம் குறிப்பிடப்படுகின் றது. ஆனல், போசள ரே பாண்டியரையும் காடவ ராயரையும் தோற்கடித்துச் சோழருக்கு மறுவாழ்வு அளித்தனர்.
திறையிட் டிருமின்கள் தெவ் வேந்தர் செம்பொன் திறையிடாப் பூம்புகார்ச் சோழன் - சிறைகிடந்த கோட்டந்தனை நினை மின் கோப்பெருஞ்சிங்கன் கமல நாட்டங் கடைசிவந்த நாள்.
பகை வேந்தருக்கு அறிவுரை வழங்கப் படு கி ன் றது - கோப்பெருஞ்சிங்கனுக்குத் திறை கொடுக்கும்படி, பூம்பு கார்ச் சோழன் எனப்படுகிறது; பூம்புகார் காவிரிப்பூம் பட்டினமாகும். சங்ககாலச் சோழர் பூம்புகாரிலிருந்து ஆண்டமையால், இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன். சோழன் திறைகொடாமையாற் சிறையிலிருந்தான் திறைகொடாத சிற்றரசருக்கும் அதே கதியென்று கூறப் படுகின்றது. சோழன் திறைபெற்ற மரபிலும் கோப் பெருஞ்சிங்கன் திற்ைகொடுத்த மரபிலும் வந்தவர்க ளென்பதை நினைவுகூரும்போது காலம் மாறிப்போய்விட் டது தெரியவருகின்றது. கோப்பெருஞ்சிங்கனின் கண் சிவந்ததும் சோழன் சிறைப்பட்டான் என்பது உயர்வு நவிற்சி. சோழமன்னர்கள் திரிபுவனச் சக்கரவர்த்திகள் என்று தம் மைக் கூறிக்கொண்டதால், அக் குல மன்னன வென்ற கோப்பெருஞ் சிங்கன் 'திரிபுவனத்திராசாக்கள் தம்பிரான்" எனப்படுகின்றன்.
அகத்திணை மரபைப் பயன் படுத்திப்பாடப் பட்ட பாட்டு ஒன்றும் காணப்படுகின்றது. தாய் அல் லது தோழி தலைவனை விளித்துத் தலைவி நிலை எடுத் துக்கூறுவதாக அமைகின்றது, அச்செய்யுள் தலைவனை
20. Epigraphia Indica Vol. XXIII, p. 174
265

Page 144
விளிக்கும்போது கோப்பெருஞ்சிங்கனுடைய புகழும் பெருமையும் எடுத்துக் கூறப்படுகின்றன:-
ஒரு நாளும் விடியாத நெடிய கங்கு லூழியென
நீண்டுவர உலகிற் புன்கண் மருண்மாலை யிதுமுன்னே வந்ததென் ருல் மடந்தை யிவளாற்றுவளோமல்லை வேந்தே
பொருமாலை முடியரசர் கன்னிமாதர் போற்றி
செயும் புவனமுழு துடையார் தாமுந் திருமாதும் புணர்புயத்து மிண்டன் சீய திரிபுவனத்
திரரசாக்கள் தம்பிரானே
சோழமண்டலத்துச் சாசனச் செய்யுள்களுட் பல, சிதம்பரம் நடராசர் கோவிலிற் காணப்படுகின்றன. சோழ !ப்பேரரசு வலிகுன்றிய காலத்துச் சோழ மன்ன னைத் தோற்கடித்துச் சிதம்பரத்திலே தரிசனஞ் செய்த சடா வர்மன் சுந்தரபாண்டியனைப்பற்றி:-
காரேற்ற தண்டனைக் காவிரி நா டனைக் கானுலவுந் தேரேற்றி விட்ட செழுந்தமிழ்த் தென்னவன்
சென்றெதிர்ந்து தாரேற்ற வெம்படை யாரியர் தண்டுபடத் தனியே போரேற்று நின்ற பெருவார்த்தை யின்றும் புது வார்த்தையே,21
பாண்டியப் பேரரசர்களுக்குள்ளே தன்னிகரற்றவன் முத லாம் சடாவர்மன் சந்தரபாண்டியனவான். சோழனைக் குறிப்பிடும்போது அவன் நாட்டுவளம் புகழப்படுகின்றது. பாண்டியனைக் குறிப்பிடும்போது செந்தமிழுக்கும் அவன்
21, South Indian Inscriptions, Vol. IV, p. 189.
266

குலத்துக்கு முள்ள தொடர்பு புலப்படுத்தப்படுகின்றது: சோழன் நாட்டிலிருந்து காட்டுக்கு ஒடி ஒளித்துப் புகலி டம் தேடச் செய்தமை "கானுலவுந் தேரோடி விட்ட" என்பதஞலே கூறப்படுகின்றது. பெருவார்த்தை - புகழ் புதுவார்த்தை - பசுமையாக விளங்கும் கதை ஆரியர் படையைத் தனியே நின்று எதிர்த்து வென் ருனெனப் படுகின்றது. சடாவர்மன் சுந்தரபாண்டியன் ஆந்திர ரைத் தோற்கடித்த போர்க்களம் கடலிலே தோன்றும் சூரிய உதயத்துக்கு உவமிக்கப்படுகின்றது:?
வட்ட வெண்குடை மன்னர் தம்புகல் கொண்டு மாமுடி கொண்டுபோர் மாறுகொண்டெழு போசளன் தடைகொண்டு வாணன் வனம்புகழ் தொட்ட வெம்படை வீரன் வெற்றி புனைந்த சுந்தர மாறன் முன்
சூழிவிட்ட தெலிங்கர் சேனே துணித்துவென்ற களத்துமேல் வீடட வெம்பரி பட்ட பொழுதெழு சோரி வாரியை யொக்கு நீர்
மேல்மிதந்த நினைப் பெருந்திரள் வெண்ணுரைத்திர ளொக்குமுன பட்ட வெங்கரி யந்த வீரர் படிந்த மாமுகி லொக்கும்வீழ்
பருமணிக் குடையங்கு வந்தெழு பருதி மண்டல மொக்குமே,
குதிரைப்படை சிந்திய இரத்தம் கடலையொத்த தென் றும் கொழுப்பு முதலியனவற்ருலான பெருந்திரள் கட லிலே தோன்றும் வெண்மையான நுரையை ஒத்ததென் றும் இறந்த யானைகள் கடல்நீரைப் பருகும் மேகங்களை ஒத் தனவென்றும் தோற்ருேடிய அரசனுடைய வெண் கொற்றக்குடை கடலிலே உதயமாகிய சூரியனை ஒத்த தென்றும் கூறப்படுகின்றன. இவன் இன்னெரு செய்யு ளில் "அவனிமுட்ட வாளால் வழிதிறந்தான் வடவேந் தரை மார் திறந்தே"23 என்று கூறப்படுகின்ருன்; மார் திறந்து - மார் பைப் பிளந்து, வடவேந்தர் - வடபுலத்து
22. South Indian Inscriptions, Vol. IV, p. 189. 33. செந்தமிழ், நான்காம் தொகுதி. பக்கம் 492
267

Page 145
வேந்தர் பாண்டியன் தென்னவனதலால், பகைவ்ேந்தர் பெரும்பாலும் வடவேந்தராகின்றனர். பகை வேந்தரை அழித்து என்பது பொருள்;
கொங்க ருடல் கிழியக் குத்தியிரு கோட்டெடுத்து வெங்க ணழலில் வெதுப்புமே - மங்கையர்கள் சூழத் தாமம்பு னேயுஞ் சுந்தரத்தோள் மீனவனுக் கீழத் தானிட்ட இறை.
பாண்டியனுக்கு ஈழநாடு யானையைத் திறையாகக் கொடுத்திருக்கின்றது. அந்த யானைகள் பாண்டியனுக் காகக் கொங்கரை எதிரித்துப் போரிடுகின்றன. அந்த யானைகளின் கோபம் கூறப்படுகின்றது. யானையின் கொம் புகள் கொங்கரின் உடலைக் கிழித்தன கோபத்தாற் சிவந்த கண்களைப்பற்றி அழகாகக் கூறுகின்ருர், கண்கள் நெருப்பைக் காலுகின்றன; அந்த நெருப்பில் கொங்கரி உடல்கள் வேகுகின்றன. இந்த மன்னனுடைய காலத் தில் ஆற்திர நாட்டிற் செல்வாக்குப் பெற்று விளங்கியது காகதீய அரசாகும். அந்த நாட்டரசனன வீரகண்ட கோபாலனைக் கொன்று, பின் அவன் தம்பியர் வேண் டிக்கொள்ள அந்த அரசினைச் சுந்தரபாண்டியன் திருப் பிக் கொடுத்தான்; அந்தப் புகழ் பதினன்கு உலகத்தி லும் பரவியதென இன்ணுெரு செய்யுள் கூறும் முதலாம் குலோத்துங்கனின் சேனைத் தலைவனகிய நரலோக வீரன் தில்லையிற் செய்த திருப்பணிகளை முப்பத்தெட்டு வெண் பாக்கள் எடுத்துக்கூறுகின்றன24. ஒவ்வொரு வெண்பாவி லும் நரலோகவீரனுடைய வீரத்தைச் சுட்டும் பகுதி யும் இடம்பெறுகின்றது விக்கிரம பாண்டியனுடைய வீரத்தைப் பாராட்டும் செய்யுள்கள் சிலவும் சிதம்பரத் திற் கிடைத்துள்ளன:
24, South Indian Inscriptions, Vol. IV, p. 31.
268

வெங்கண் மதயானை விக்கிரம பாண்டியனே பொங்கி வடதிசையிற் போகாதே - யங்கிருப்பாள் பெண்ணென்று மீண்ட பெருமாளே பேரிசையாழ்ப் பண்ணுென்றும் வேய்வாய் பகை.25
விக்கிரமபாண்டியன் தமிழ்நாடு முழுவதையும் வென்று தமிழ்நாட்டுக்கு வடபாலிருந்த காகதீய மன்னணுகிய ருத்திரதேவ மகாராஜாவை எதிர்க்கச் சென்ருன் ஆனல் இடையிலே சென்ற காரியத்தை விட்டுத் திரும்பிவிட் டான் காரணம் கூறப்படுகின்றது; பெண்னை எதிர்த் துப் போர் செய்வது ஆண்மகனுக்கு அழகன்று. ருத்தி ராம்பா என்னும் பெண்ணே ருத்திரதேவ மகாராஜா என்ற ஆண் பெயர் பூண்டு காகதீயநாட்டை அரசுபுரிந் தாள். புவனேகவீரன் என்னும் சிறப்புப்பெயர் பூண்ட விக்கிரமபாண்டியனுடைய வெள்ளாற்றுப் போ  ைர ப் பாடும் செய்யுள்களுள் ஒன்று:-26
சீர்கொண்ட வெள்ளாறு குருதிப் பெருக்கிற்
செவ்வாறு பட்டோட வவ்வாறு சென்றப் போர் வென்று வனப்பேய் நடக்கண் டதற் பின்
புலியூர் நடங்கண்ட புவனேக வீரா பார்பண் டளந்துண்டோ ராலிற் கிடக்கும்
பச்சைப் பசுங் கொண்ட லேபத்ம நாபா கார் கொண்ட நின் கையில் வேலுக்கு வற்றுங்
கடலல்ல வென்பேதை கண்டந்த கடலே
அகத்திணை மரபில் அமைந்தது இப்பாடல். தோழி தலை வன விளித்துத் தலைவி நிலையைக் கூறுவதாக இப்பாடல்
25. செந்தமிழ் நான்காந் தொகுதி பக், 493, 26. South Indian Inscriptions, Vol. IV, p. 37.

Page 146
அமைந்தது. பாண்டியஞெருவன் வேலைச் செலுத்திக் கடலை வற்றச் செய்தான் என்பது புராணக்கதை தலைவி யின் கண்ணிர்க்கடலை அவனுடைய வேல் வற்றச் செய்ய மாட்டா தென்பது கூறப்படுகின்றது. செய்யுளின் மூன் ருவது அடி பாண்டியனைத் திருமாலாகவே விளிக்கிறது: போர்க்களத்திற் பெருகிய இரத்தம் வெள்ளாற்றைச் செவ்வாருக மாற் றிவிட்டது போர்க்களத்திலே பினர் திண்ணும் பேய்கள் நடமாடுமென்பது அக்கால நம் பிக்கை. போர் வெற்றிபெற்ற பின் பாண்டியன் சிதம் பரம் நடராசப் பெருமானைத் தரிசிக்கச் சென்ருன்;
சுவரன் மாறன் என்னும் முத்தரையனைப் பாடிய செய்யுள்கள் இருபது உள்ளன; அவற்றுள் மாதிரிக்காக ஒன்று:-
எரிவிசும்பு மிருநிலமாய்த் தென்பவான் மாறன் செருவேன் மறங் கனன்று சீறக் கொடிமாடத் தன் கொடும் பைக் கூடாத மன்னர் நெடுமா மதிலிடிந்த நீறு,27
சுவரன் மாறனுடைய வீரம் கூறப்படுகின்றது அவ னுடைய கோபத்தாற் பகை மன்னருடைய மதில்கள் உடைந்து நீருகி, எரிகின்ற ஆகாயத்திற் பறப்பதால், ஆகாயமே பூமியாகத் தோன்றுகின்றது. உயர்வு நவிற்சி யணி, அரசரையும் சிற்றரசரையும் புகழுவதைப் பொருளாகக் கொள்ளாத சிறந்த சாசனச் செய்யுள்கள்
27. Epigraphia Indica Vol. XIII. p. 134.
270

பிறவும் சோழமண்டலத்திற் காணப்படுகின்றன. திருச் சிராப்பள்ளித் திருவெள்ளறையிலுள்ள கிணற்றுச் சுவ ரொன்றிலுள்ள செய்யுள் :28
கண்டார் காணு வுலகத்திற் காதல் செய்து நில்லா தேய் பண்டேய் பரமன் படைத்தநாள் பார்த்து நின்று
நையாதே ய்
தண்டாரி மூப்பு வந்துன்னத் தளரச் செய்து
நில்லாமு ன் னுண்டேல் லுண்டு மிக்கது உலகம் மறிய வைம்மி G36Ar ulu .
உலக நிலையாமை, இளமை நிலையாமை என்பன உப தேசிக்கப்பட்டுத் தானஞ் செய்தலாகிய அறவுரை வழங் கப்பட்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கிலுள்ள அற நூல்க ளின் பொருளை இது நினைவூட்டுகின்றது. திருச்சிராப் பள்ளிமலையின் மேலுள்ளதும் மகேந்திரவர்மன் அமைத் ததுமான குகைக்கோவிற் சுவர்களிலே சிரா மலையந்தாதி என்னும் முழுப் பிரபந்தம் ஒன்றே நாராயணன் என்ப வராற் பாடப்பட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது. இப் பிர பந்தத்தில் நூற்று நான்கு செய்யுள்கள் இடம்பெறுகின் றன. இவ்வந்தாதியைத் தருமபுர ஆதீனத்தார் புத்தக மாக வெளியிட்டுள்ளார்கள் மாதிரிக்காகச் சில செய் யுள்கள்:-
28. Epigraphia Indica, Vol XIII, p. 134.
271

Page 147
வேறு கண்டாய் நெஞ்சமே தளரேல் விளை மாங் WM கணியின் சேறு கண்டாருண் சிராமலை யாதிதன் செல்வஞ் சொன்னூல் யாறு கண்டா யவன் றேவியில் லம்பல மேற்பதைய மேறு கண்டா யவனேறிப் பல்காலம் மியங்குவதே
அகத்திணை மரபிற் பாடப்பட்ட செய்யுள் இது இறை வன்மேல் மனத்தைப் பறிகொடுத்த தலைவி இறைவனைப் பற்றிய விபரங்களை அறிந்து உள்ளத்தைத் திடப்படுத்து கிருள். தலைவன் சிரா மலை முதல்வனவான். சிரா மலை யின் வளம் கூறப்படுகின்றது. விளை மாங்கனி - நன்கு பழுத்த மாங்கனி. அந்தக் கனியைக் கவர் வாரின்மை யால், மாங்கனியின் சாறு நிலத்தைச் சேர்ந்து சேறு ஆகிறது. அந்தச் சேற்றைக் காண்பவர் உண்கின்றனர். ஆஞல் அத்தகைய செழிப்புள்ள மலைத் தலைவனுடைய செல்வம் புராணக் கதைகளுக்கேற்பக் கூறப்படும்போது முரண் அணி தோன்றுகின்றது. இறைவன் தேவி கங்கை யாகிய ஆறு ஆகும்; அவன் இல்லம் ஆகாயமாகிய அம்பலமாகும். அவன் தொழில் பிச்சை ஏற்பது அவ னுடைய வாகனம் எருது,
பணிமின்கள் பாதம் பகர் மின்க ணமங்கள் பாரகத்தீர் தனிமின்கள் சீற்றம் தவிர்மின்கள் பொய்ம்மை தவம்புகுநாள் கணிமின் க ளேனற் கிளிகடி மாதர்தங் கைவிசைத்த மணிமின்கள் போலொளிர் வான் ருேய் சிரா மலைப் பள்ளி வள்ளலுக்கே.
உலகத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இச்செய்யுள் அமைந்தது. சிராப்பள்ளிச் சிவபெருமான் திருமேனி யொளி, தினப்புணங் காக்கின்ற பெண்கள் கைகளை
272

அசைத்துக் கிளிகளையோப்பும்போது அவர்கள் கைகளி லுள்ள இரத்தினங்கள் ஒளிவீசுவதுபோலக் காண்கிறது: மலையில் உறையும் கடவுளைப் பற்றிய உவமையான தாற் போலும் குறிஞ்சி நிலக்காட்சி உவமிக்கப்படுகின்றது: சிவனடியாராவதற்கு எவ்வெவ் வகையில் உலகத்தார் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டுமென்று கூறப்படுகின்றது:
நெஞ்சம் துணையுண்டு நீர்நிலத் துண்டு நிழலுமுண்டு தஞ்சப் பெருக்குளதா னஞ்சிரா மலைச் சாரலுண்டு துஞ்சுந் துணையுஞ் சிவனேத் தொழுது துறக்க மெய் தார் பஞ்சந் நலியப் பலிதிரிவார் சிலர் பாவியரே;
சிரா மலைச் சிவனையடையாமையால், இம்மையிலும் மறு மையிலும் ஏற்படும் இழப்புகளைக் கூறுகின் ருர் சிரா மலைப்பகுதி வளமுள்ள நிலமாகும். அங்கு செல்லாமை யால், பஞ்சம் வருத்தப் பிச்சையேற்றுத் திரிவர்; சிசா மலைச் சிவனை வணங்கினல் முத்தி கிடைக்கும். அவனை வணங்காதார் பாவியராகும். அவர் நகரத்தை அடை வர். அவர்களுக்காக அனுதாபப்படுகின்றது இச்செய்யுள்
பாண்டி மண்டலத்துச் சாசனச் செய்யுள்கள் பாண்டிநாட்டிலும் புறக்கோட்டைச் சமஸ்தானத்திலும் கிடைத்துள்ளன. பாண்டியன் சோழனை வென்று அர சாண்டதைப் பழிப்பதுபோலப் புகழும் வஞ்சப் புகழ்ச்சி யணிச் செய்யுள்:-
30. Inscriptions of the Pudukottai State, No, 652.
273

Page 148
பொன்னி வளநாடு பாணன் பெறப்புரந்தான் சென்னி திருமார் பிற் சேல் தீட்டிஞன் - முன்னே புரமெறிவார் மண் சுமக்கப் பூபாரங் காத்தான் தரமறியான் மீனவர்கோன் தான்.
சோழனைத் தோற்கடித்த பாண்டியன் சோழநாட்டைப் பாணனுக்குக் கொடுத்தான். பாணன் சிறு பரிசிலுக் குரியவன். நாடாளத் தகுதியுடையவனல்லன் ; சோழ நாடு முழுவதையும் பெற்றுக்கொள்ள எவ்விதத் தகுதி யும் அற்றவன். அது பாண்டியனுடைய தரமறியாத செய்கைகளுள் ஒன்று. சென்னி புலிமுத்திரையுடைய வன். ஆனல் அவனுடைய மார்பில்ே பாண்டியன் தன் னுடைய சேல் முத்திரையைப் பொறித்தான். இது சோழன் பாண்டியனுக்கும் பணிந்ததற்கு அடை யாளம்,
ஆணுல் வெளிப் பார்வைக்குத் தர மற்ற செய்கைபோலக் காணப்படுகின்றது. பாண்டியனுடைய குல முன்னுேன் செய்தி ஒன்று இணைக்கப்படுகின்றது. பாண்டியன் அர சாண்டபோது, சிவபெருமானை மண் சுமக்கச் செய்தான். பாண்டியனுக்குத் தரமறிந்து நடக்கத் தெரியா தென்று கூறுவதன் மூலம் பாண்டியன் பெருமை கூறப்படுகின்றது. பாண்டியனுடைய வெற்றியைக் கூறும் இன்னெரு செய் uir:-31
கன்னிவள நாடன் காவேரி நாடாளச் சென்னி விழுந்தோடுஞ் சேவடிகள் - பொன் இறை பெரிகா லுங் கான நடந்திச் சென்னியையும் கரிகால ஞக்கிடவோ காண்.
31. Inscriptions of the Pudukkottai State, No. 655.
274

சோழ மன்னர்கள் சிலர், கரிகாலன் என்னும் பெய ருடையவர்களாக இருந்தனர். கரிகாலர்களுள் முதலாம் கரிகாலனுக்கு அப்பெயர் காரணப் பெயராக வந்தது என ஒரு கதையுண்டு: கரிந்த காலையுடையவன் கரி காலன் எனப்படுகின்றது. இச்செய்யுளின் படி, பாண் டியன் சோழ நாட்டைக் கைப் பற்றி ஆண்டு சோழனைத் துரத்தினன். சோழன் சுரத்தினுடாக ஒடிஞன். அத ன ல், அவனும் கரிந்த காஃலயுடையவனுக வந்துவிடு வான் எனப்படுகின்றது.
தென்காசி விசுவநாத சுவாமி கோவிற் சுவரிலுள்ள செய் யுள்களுள் ஒன்று:-32
ஏடியல் மாலையணிந்தாலும் வாடு மெனப்புலவோர் பாடிய வீர வெண்பா மாலையைப் பொன் னின்
um são quei Gurri தேடிய வேற்செழியன் குலசேகரத் தென்னனைப்
• போற் சூடிய வேந்தருண்டோ வொரு வேந்தரைச்
சொல்லுகிலே;
பதினரும் நூற்றண் டிலாண்ட தென் பாண்டி நாட்டுக் குலசேகர பாண்டியனைப் பற்றியது இச் செய்யுள். இச் சிற்றரசனுக்குரிய தனிப்பெருமை - வேறு மன்னர் எவ ருக்குமில்லாதது - இச் செய்யுளிற் கூறப்படுகின்றது: வாடாத பாமாலையைச் சூடினன் இவ்வேந்தன். அப் பாமாலை வெண்பாவால் வீரத்தைப் பாடிய வீரவெண்
umTuområD Unr 5 h.
32. Travancore Archaeological Series, Vol. I, p. 105.
275

Page 149
அரிகேசரி பராக்கிரமபாண்டியன் என்ற சிற்ற ரசன் தென்காசி விசுவநாதர் கோயிலையும் கோபுரத்தை யும் கட்டியதையும் அவனுடைய பிற சிறப்புக்களையும் அதே கோயிலிலுள்ள பதிஞன்கு செய்யுள்கள் எடுத்துக் கூறுகின்றன:-33
அவற்றுள் மாதிரிக்காகச் சில:-
சேலேறிய வயற் றென்காசி யாலையந் தெய்வச் செய லாலே சமைத்த திங் சென் செயலல்ல வதனையின் ன மேலே விரிவு செய்தே புரப்பாரடி வீழ்ந்தவர் தம் பாலேவல் செய்து பணிவன் பராக்கிரம பாண்டியனே. பூந்தண் பொழில்புடை குழுற்தென் காசியைப் பூத லத்தில் தாங்கிளை யுடனே புரப்பார்கள் செந்தா மரையாள் காந்தன் பராக்கிரமக் கைதவன் மான கவசன்
கொற்கை வேந்தன் பணிபவ ராகி யெந்நாளும் விளங்குவரே.
கோயிலைப் போற்றிப் பாதுகாப்பவர்களுக்கு மன்னன் தான் என்றும் அடிமை என்று கூறுகிருன். இவனுடைய வீரத்தைப் பற்றிச் சில குறிப்புகள் மரபுத்தொடர்களாக வருகின்றன; இவனுடைய உடலழகை வியக்கும் "வடி வெழுதொணுத பராக்கிரம மகிபன் முதலிய குறிப்பு கள் இடம்பெறுகின்றன. சமயப்பற்றையே புகழுக்கு வழியாக இம் மன்னன்கொண்டான். இவன் இறந்த தைப் பற்றிய பாட்டு இதற்குச் சான்று:-
33. Travancore Archaeological Series, Vol. I, p. 96,
276

கோதற்ற பத்தியறுபத்து மூவர்தங் கூட்டத்திலோ
தீதற்ற வெள்ளிச் சிலம்பகத்தோ செம்பொன்
னம் பலத்தோ வேதத்திலோ சிவ லோகத்திலோ விசுவ நாதனிரு பாதத்திலோ சென்று புக்கான் பராக்கிரம பாண்
டியனே
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சாசனச் செய்யுள்கள் கிடைக்கவில்லை. ஆனல் தமிழ் நாட்டைச் சுற்றிவர உள்ள கேரளம், மைசூர், ஆந்தி ரப் பிரதேசம், இலங்கை என்னும் நாடுகளிலிருந்து தமிழ்ச் சாசனச் செய்யுள்கள் கிடைத்துள்ளன. கேரளத் தைச் சேர்ந்த வாழ்விச்ச கோட்டம் பகவதி கோவிலின் முகமண்டபத்தில் உள்ள சாசனச் செய்யுள் ஒன்று, பதி னேழாம் நூற்ருண்டில் இர விவர்மன் காலத்தில் திரு விக்கிரமன் என்பவன் இக்கோவிலின் முகமண்டபத்தை ஒரே கல்லினற் கட்டினன் என்று கூறுகின்றது.34
ஆதியெழு நூற்றுடன் தொண் ணுரற்றையா மாண்டி லற்பசியேம் முற்றசமிய விட்டம் வெள்ளி மாதிசைசே ரின்ஞளி லிரவி வேந்தன் மனமகிழப் பகவதி
வாள்வைத்த கோட்டத் தோதிலுறு மிறைவியிருப் பதற்கு மேன்மை யுறும் முகமண்டப மாமதற்கு நாப்பண்
மூதறிவா லொருகலின் மண்டபஞ் செய்விக் தான் முல்லை
மங்கலன் திருவிக்கிரமன்தானே.
மைசூர் கோலார் தாலுகா விபூதிபுரத்திலுள்ள சாசனச் செய்யுளொன்று பன்னிரண்டாம் நூற்றண்டில் குவளால புரத்து ஏரியின் கீழ் நில தானம் செய்த பெரியான் என்ப வனைப் புகழ்கிறது; மாதிரிக்காக அச்செய்யுளின் பகுதி:-
34. Travancore Archaeological Series Vol. VI, p. 171.
277

Page 150
அருந்ததியே யனையாள் தந்தாய் திரு வயிற் றுதித்த துளங்குமணித் திருமார் பன் செங்கமலப் புனல் புடைசூழ் செழுந் தொண்டை வளநாடன் எங்கள் பெரியாற் கிளைய பெரியான் மற்றீண் டுலகில் 33 (I 0-14)
ஆந்திரப் பிரதேசத்துக் கோதாவரி மாவட்டத்துத் திராட்சாராமம் என்னும் ஊரிற் கிடைத்த செய்யுள்:
இம்பர் திகழ விளக்கிட்டான் இடர்க்கரம்பைச் செம்பொனணரி விமேச்சரற் தன்னில்-உம்பர் தொழ விண்ணுய்ய நின்றடு வானுக்கு வேலைசூழ் மண்ணுய்ய நின்றடு வான்,
திராட்சராமத்தின் பெயர் இடர்க்கரம் பையெனத் தமி ழாக்கப்பட்டிருக்கிறது; நின்ருடுவான் என்பவன் வீமேச் சரத்திலுள்ள இறைவனுக்கு நுந்தா விளக்கு வைத்திருக்கி முன், இவங்கைக் கேகாலையிற் கண்டெடுக்கப்பட்ட ஒரு சாசனம் சிங்கையாரியச் சக்கரவர்த்தியைப் புகழ்கின் றது. சிங்கையாரியச் சக்கரவர்த்திகள் யாழ்ப்பாணத்தை ஆண்ட தமிழ் மன்னராவர்; சேது என்பது இவர்க ளுடைய ஆணைப்பெயர்.
கங்கனம்வேற் கண்ணிணையாற் காட்டினர்
காமர் வளைப் பங்கயக்கை மேற்றில தம் பாரித்தார் - பொங்
கொலிநீர் சிங்கைநக ராரியனைச் சேரா வனுரேசர் தங்கள் மட மாதர் தாம்87
35. Epigraphia Carnatica Vol. X, Part II, Kolar
Taluga. No. 131.
36. South Indian Inscriptions Vol. IV, p. 337. 37. 99 s 99 99 s p. 496.
278

அநுரேசர் என்பவர் அநுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சிங்கள மன்னர். இச் செய்யுள் தோன் றிய காலத்தில் அநுராதபுரத்தில் மன்னர் இருக்கவில்லை. கி. பி. பதினேராம் நூற்ருண்டு வரையில் அநுராதபுரம் தலைநகராக இருந்ததால், பிற்காலச் சிங்கள மன்னரும் அனுரேசர் எனப்பட்டிருக்கவேண்டும். சிங்கைநகர் மன்ன னின் பகைவராகிய அநுரேசருடைய கவலை கூறப்படு கின்றது. இச் செய்யுளில் சிலேடைநயம் உண்டு; கங்கணம் - காப்பு. திலகம் - நெற்றிப்பொட்டு எனவும் கம், கணம் -கண்ணிர்த்திரள், தில, கம் - எள் நீர் எனவும் கொள்ள ου τιb .
2. இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள்
சாசனங்களிலே, சிறந்த தமிழிலக்கியங்களை இயற்றிய புலவர்களைப் பற்றிய குறிப்புகள் உண்டு: இக்குறிப்புகள் தமிழ்ப் புலவர்கள் சிலர் வாழ்ந்த காலத்தை அறுதியிட உதவுகின்றன. தமிழிலக்கிய வர லாற்றுணர்ச்சிக்குச் சாசனங்களிலுள்ள குறிப்புகள் உர மிடுகின்றன. ஆனல், சாசனங்களில் இடம்பெறும் குறிப் புகள் யாவும் உண்மையையே கூறுகின்றன வெனக் கொள்ள முடியாது. உதாரணமாகச் சின்னமன்னூர்ச் சாசனத்தில் 88 "மஹாபாரதந் தமிழ்ப்படுத்தும் மதுரா புரிச் சங்கம் வைத்தும்" என்று வருகின்றது. பாண்டிய குலம் "பொரு வருஞ்சீர் அகத்தியனைப் புரோகிதனகப் பெற்றது' என்று கூறப்படுகின்றது. இச்செய்திகள் யாவும் உண்மையென்று இன்று கருதப்படவில்லை. மேலும், இச் செய்திகள் வேறு பெளராணிகக் கதைக் குறிப்புகளுடன்
38. South Irdian Inscriptions, Vol. III, Part IV,
p. 454.
279

Page 151
கலந்தே காணப்படுகின்றன. இச் செய்திகள் யாவும் சமகாலச் செய்திகளாக இருந்திருந்தால், இவற்றில் உண்மையை எதிர்பார்க்கலாம். இவை யாவும் பாண்டிய குலத்தின் பழம் பெருமைகளாகவே கூறப்பட்டுள்ளன: எனவே, இவை அக்கால நம்பிக்கைகள் என்று கூறலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் காலத்து அரசர்கள் சிலர், சாசனங்களை விட்டுச் சென்றுள்ள போதிலும் அவற்றுள் அந்த இறைவனடியாரிகளைப் பற்றிய குறிப்புகளில்லை; ஆழ் வார்களுள் திருமங்கையாழ்வாரும் பெரியாழ்வாருமே தம்காலத்து அரசர்கள்ைக் குறிப்பிடுகிருர்கள். திருமங்கை யாரது அட்ட புயகரம் பரமேச் சுர விண்ணகரப் பதிகத் திலே இரண்டாம் நந்திவர்ம பல்லவனும் திருநாங்கூர்ப் பதிகத்திலே பல்லவ பரமேஸ்வரவர்மனும் பாடப்பட்டுள் ளனர். பெரியாழ்வாரி பாண்டியன் மாறவரிமனைப் பாடி யுள்ளார். ஆழ்வார்களுடைய பெயர்கள் மக்களுக்கு இட்டு வழங்கியதற்குச் சாசனச் சான்றுகள் ஆதித்த சோழனது ஆட்சிக்கால முதற் காணப்படுவதால், ஆழ் வார்கள் பிரபாவம் நாட்டி ற் பரவி வந்திருக்கிறதென லாம். முதலாம் இராசேந்திரசோழன் காலமுதல், கோயில்களிலே திருவாய்மொழி விண்ணப்பஞ் செய்தற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன. தேவாரம் பாடிய மூவர் காலத்தை நிறுவுவதற்குச் சாசனக் குறிப்புகள் காணப்படு கின்றன. திருஞானசம்பந்தர் காலத்துக் கூன் பாண்டியன் 'நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன்". வேள்விக் குடி, சின்ன மன்னுர்க் சாசனங்களிலிருந்து நெல்வேலிப் போர் வென்ற பாண்டியன் ஏழாம் நூற்றண்டுக்குரிய வன் எனத் தெரியவருகின்றது. வாதாபியை அழித்த பரஞ்சோதி என்னும் சிறுத்தொண்டர் முதலாம் நரசிம்ம வர்மன் காலத்தவராகவேண்டும். சம்பந்தரும் கிறுதி தொண்டரும் ஒரே காலத்தவர்கள். முதலாம் நரசிம்ம வர்மனின் தந்தையே முதலாம் மகேந்திரவர்மன். இவ கனக் குணபரன் என்று திருச்சிராப்பள்ளிச் சாசனம்
280

குறிப்பிடும் திருநாவுக்கரசரி காலப் பல்லவ மன்னன் குணதரன் என்று பெரியபுராணம் கூறும். திருநாவுக்கர சர் திருஞானசம்பந்தரிலும் சில ஆண்டுகள் மூத்தவர் எனவே சாசனச் சான்றுகள் இவ்விருவர் காலத்தையும் வரையறுக்க உதவுகின்றன: சுந்தரமூர்த்தி சுவாமிக வாாற் "காடவர்கோன் கழற்சிங்கன்" எனப்பட்ட வன் இராசசிம்மன் எனப்பட்ட இரண்டாம் நரசிம்மவர் மஞக இருக்கவேண்டும். முதலாம் இராசராசன் காலத்திலிருந்து தேவாரம் பாடிய மூவர் பற்றிய செய்திகள் சாசனங் களிற் பயின்று வந்துள்ளன. தேவாரப் பதிகங்களிற் சில, அவ்வக் கோயில்களிலே, அவை பாடிய நாயன்மார் காலங்களிலிருந்து ஒதப்பட்டு வந்திருக்கவேண்டும். ஒன் பதாம் பத்தாம் நூற்ருண்டுச் சாசனங்களிலே திருப்பதி கங்கள், சில கோவில்களில் ஒதப்பட்டு வந்தமைக்குச் சான்றுகளுண்டு.
சங்க காலத்துக்குப் பின்பு சோழப் பெருமன்னர் காலமே தமிழ் மொழி வளமுற்று ஓங்கிய காலமாகும். இவ்விரண்டு காலங்களுக்கும் இடைப்பட்ட காலத்திலே தமிழ் நாட்டின் பெரும்பகுதியைப் ப* லவர் ஆளத் தொடங்கினர். பல்லவ மன்னர் தமிழினத்தவர் அல்லர் என்பது இன்று பொதுவாக ஏற்கைப்படுகின்றது. u 6 a. வர்கால முடிவில் ஆண்ட பல்லவ மன்னர் தமிழில் ஈடுபாடுகாட்டித் தேர்ச்சியுற்றனர். தெ ஸ் எ ர ற் று ப் போர் வென்ற பல்லவனைப் புகழ்ந்து பாடுகின்றது அவன் காலத்திலெழுந்த பாரதவெண்பா. நந்திக்கலம் பகம் தெள்ளாற்றுப் போர் வென்றவன் நந்திவர்மன் என்று கூறி அவனுடைய தமிழறிவையும் தமிழ்ப் புல வரை ஆதரிக்கும் தன்மையையும் வியந்து கூறுகின்றது ே ஒன்பதாம் நூற்ருண்டு நடுப்பகுதியில் வாழ்ந்த மூன் மும், நந்திவர்மனே 'தெள்ளா றெறிந்து வென்று தொண்ட நந்திப் போத்தரையன்' என்று சாசனங்களிற் புகழப்
28l.

Page 152
பட்டுள்ளான். எனவே, இவ்விரு நூல்களும் மூன்ரும் நந்திவர்மன் காலத்தவை என்று நிறுவப்படுகின்றன. ஒன்பதாம் நூற்றண்டின் இறுதியில் ஆண்ட அபராசித வர்மன் என்ற கடைசிப் பல்லவ மன்னன் தமிழ்ச் செய்யுள் செய்யும் ஆற்றல் பெற்றிருந்தான் திருத்தணிகை வீரட்டானே சுவரம் கோயிலுக்குத் திருப்பணி செய்த நம்பி அப்பி என்பவனை இந்தப் பல்லவ மன்னன் பாடி யுள்ளான். அந்தச் செய்யுள் கோயிற் சுவரிற் சாசன மாக வரையப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டுள் ளது. எனவே, பல்லவர் கால இறுதியிலே பல்லவமன்ன ரும் தமிழ்மொழியில் ஆர்வமுடையோராயினர் என்ற வரலாற்றுண்மை தெரியவருகின்றது;
யாப்பருங்கலக்காரிகை இயற்றிய அமிதசாகரர் கி. பி பதினுேராம் நூற்ரு விண்டைச் சேர்ந்தவரென்பதும் வீரசோழியம் இபற்றிய புத் தமித்திரனர் அதே நூற் முண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவரென்பதும் கலிங்கத் துப்பரணி பாடிய சயங்கொண்டார் பதினென்று பன்னி ரண்டாம் நூற்றண்டுகளைச் சேர்ந்தவரென்பதும் பெரிய புராணம் பாடிய சேக்கிழார் பன்னிரண்டாம் நூற்ருண் டைச் சேர்ந்தவரென்பதும் நன்னூல் ஆக்கிய பவணந்தி முனிவர் பதின்மூன்ரும் நூற்றண்டைச் சேர்ந்தவரென்ப தும் சிவஞானபோதம் இயற்றிய மெய்கண்டதே வரும் அதே நூற்றண்டினரென்பதும் சேணுவரையர், பரிமே லழகர் முதலியோரும் அதே நூற்றண்டினரென்பதும் பெரும் பற்றப்புலியூர் நம்பி, இரட்டையர் முதலியோர் பதிஞன் காம் நூற்றண்டினரென்பதும் அருணகிரிநாதர், காளமேகப்புலவர் முதலியோர் பதினைந்தாம் நூற்ருண் டினரென்பதும் வாமன முனிவர், அதிவீரராம பாண்டி யன் முதலியோர் பதிஞரும் நூற்றண்டின் ரென்பதும் துறைமங்கலம் சிவப்பிரகாசர் பதினேழாம் நூற்ருண்டின
282

ரென்பதும் திருக்குற்ருலம் இராசப்பக்கவிராயர் பதி னெட்டாம் நூற்ருண்டினரென்பதும் சாசனச் சான்றுக ளாலேயே நிறுவப்படுகின்றன. 39
சாசனங்களிலிருந்து மட்டுமே அறியப்படும் தமிழ்ச்செய்யுள்கள், நூல்கள், புலவர்கள் பெயர்கள் உள பெயர் தெரியாப் புலவர்கள் பாடிய செய்யுள்கள் சில மெய்க்கீர்த்திகளைப் பாடிய புலவர் பெயர்கள் குறிப்பி டப்படவில்லை. வீரத்தையும் சமயத்தையும் பொருள்ாகக் கொண்ட செய்யுள்கள் சில, யாரால் இயற்றப்பட்டன என்பது தெரியப்படவில்லை. புலவர்கள் சிலரின் பெயர் கள் கிடைத்தபோதும் அவர்கள் காலத்தை வரையறுக் கத்தக்க பிற சான்றுகள் கிடைக்கவில்லை. சாசனங்களி லிருந்து கிடைக்கும் இலக்கியம் பற்றிய பிற குறிப்பு களையும் அரசர்களைப் பற்றிப் பாடியவை, சமயத்தைப் பற்றிப் பாடியவை என இருவகைப்படுத்தலாம். சிற்றரச ஞன பெரும்பிடுகு முத்தரையனைப் பாடிய பாச்சில் வேள்நம்பன், ஆசிரியர் அநிருத்தர், கோட்டாற்றிளம் பெருமானர், குவா வங்காஞ்சன் என்போர் பாடல்கள் ஒரு சாசனத்திற் கண்டெடுக்கப்பட்டன.40 வேள்விக் குடிச் சாசனத்திலுள்ள தமிழ்ப் "பிரசஸ்தி'யைப் பாடிய வன் ஏஞதி சாத்தஞ் சாத்தன் என்பது அச்சாசனத்தின் இறுதியிற் குறிக்கப்பட்டுள்ளது. சோழப்பெருமன்னர் காலம் காவியகாலம் என இலக்கிய வரலாற்றிற் குறிப் பிடப்படும்போது சோழப் பெரு மன்னருள் எவர் மேலும் காவியம் பாடப்படவில்லையா என்ற விஞ எழுவது இயல்பு. சோழப்பெரு மன்னருள்ளே தன்னிகரற்றவனுகக் கணிக்கப்படும் முதலாம் இராசராசனைப்பற்றி நாரா
39. பேராசிரியர் மு. இராகவையங்கார் - சாஸனத் தமிழ்க் கவி சரிதம்.
40. செந்தமிழ் தொகுதி 6 பக்கம் 6.
283

Page 153
யண்ல் பட்டாதித்தன் என்பவன் பூரீ ராஜராஜ விஜயம் என்ற காவியத்தை இயற்றினன் என்பது சாசனத்தி லிருந்தே தெரியவருகின்றது முதலாம் இராசேந்திர னுடைய மக்களுள் ஒருவனைப் பற்றிப் பூங்கோயில் நம்பி பாடிய வீரனுக்க விஜயம் என்ற நூலும் ஒரு காவிய மாகவே இருந்திருக்கவேண்டும், நாடகத் தமிழைப்பற்றிய பிரஸ்தாபம் தமிழில் நெடுங்காலமாக இருந்துவருகிற போதிலும் நாயக்கர் காலப் பிற்பகுதியிலேயே தமிழில் நாடக இலக்கியங்கள் தோன்றத் தொடங்கின என்ற கூற்றை மறுத்துச் சேர்ழப்பெருமன்னர் காலத்திலும் தமிழ் நாடகங்கள் இருந்தன என்று கூறுவதற்குச் சாச னச் சான்றுகளே துணையாக அமைகின்றன. முதலாம் இராசராசனைப் பற்றி இராஜராஜேசு வர நாடகம் தோன் றியிருக்கிறது.41 வீரைத்தலைவன் பரசமயகோளரி மாமுனி என்பவர் பூம்புலியூர் நாடகத்தைப் பன்னிரண்டாம் நூற்ருண்டில் இயற்றியிருக்கிருர், மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்து அவன் தலைமையதிகாரியாகிய கண்டன் உதயஞ் செய்தான் காங்கேயன் என்பவனைப் பாராட்டிச் சிறு பெருச்சியூர்க் கொடிக் கொண் டா ன் பெரியான் ஆதிச்சதேவன் பிள்ளைக் கவிப் பிரபந்தஞ் செய்தான் , 32 பதினன்காம் நூற்றுண்டிலே கப்பலூரி லிருந்த கருமாணிக்கன் என்ற பாண்டியனுடைய அதி காரியைப் பாராட்டிய கப்பற்கோவை அல்லது கருமாணிக் கன்கோவை எழுந்தது; காசிக்கலியன் கவிராயன் பதி ஞறு பதினேழாம் நூற்ருண்டைச் சேர்ந்த வரதுங்க
41. South Indian Inscriptions Vol. II, p. 306.
42. ரி வி. சதாசிவ டண்டாரத்தார் தமிழ் இலக்கிய வரலாறு, 13, 14.
15-ம் நூற்ருண்டுகள், 1955 என்ற நூலிலும் மயிலை, சீனி, வேங் கடசாமி மறைந்துபோன தமிழ் நூல்கள், 1959 என்ற நூலிலும் இதுபோன்ற சில நூல்களைச் சாசனச் சான்றுகளிலிருந்து காட்டி யுள்ளனர்,
284

ராமபாண்டியன் மேல் முடி குட்டுமங்கலப் பாடல்கள் பாடியுள்ளான். அனதாரியப்பன் என்ற சமகாலப் புல வரின் கற்பனை பெளராணிக உலகிற்குப் போகிறது. பாண்டிய நாட்டிலே தடாதகைப் பிராட்டி ஆட்சியைப் பற்றி எழுந்த அவரது நூல் சுந்தரபாண்டியமாகும்.
சமயத் தொடர்பான செய்யுள் செய்த புலவர் சிலர் பெயரும் சாசனங்களிலிருந்து தெரியவருகின்றது: தம்பிரான் ருேழர் மானக் கஞ்சாறர் என்ற ஒன்பதாம் நூற்ருண்டுப் புலவர் திருமுட்டத் திருப்பதிகம் பாடி யுள்ளார். திருப்பதிகம் என்ற பெயர் திருமுறைகளி லுள்ள பதிகங்களுக்கு மட்டும் வழங்கவில்லை என்பதற்கு இது சான்று. வீரத் தலைவன் பரசமயகோளரிமாமுனி என்பவர் அஷ்டதச புராணம், கன்னிவன புராணம் என்பனவற்றையும், 11, 12 ம் நூற்ருண்டைச் சேர்ந்த நெற் குன்றங்கிழார் களப்பாளராசர் என்பவர் புகலூரந் தாதியையும் பதின் மூன்ரும் நூற்ருண்டைச் சேர்ந்த அருணிலைவிசாகன் என்பார் தமிழ்ப்பாரதம் ஒன்றனையும் அதே நூற்ருண்டைச் சேர்ந்த திருவம் பலமுடையார் மறைஞானசம்பந்தர் ஒங்குகோயில் புராணம் என்பத னையும் பதினரும் நூற்ருண்டைச் சேர்ந்த திருமலை நாதன் சந்திரசேகரர் என்பவர் இறை வளரகுர்ப்புரா ணம் என்பதையும் உத்தண்ட வேலாயுத கவி என்பவர் திருவதிகைக்கலம்பகம் என்பதைவும் இயற்றியுள்ளார் கள். *
3. தமிழ் உரைநடை
தமிழ் உரைநடை வரலாற்றை அறிந்து கொள் வதற்கும் சாசனம் மிக முக்கியமான மூலாதாரமாகும்:
பேராசிரியர் செல்வநாயகம் எழுதிய 'தமிழுரை தடை
sig,
43. பேராசிரியர் மு. இராகரையங்கார் - சாசனத் தமிழ் கவிசரிதம்
285

Page 154
வரலாறு (1957) என்ற நூல் இந்த முக்கியத்துவத்தை ஓரளவு எடுத்துக்காட்டுகின்றது. தமிழு ரைநடை பற்றி யெழுந்த பிறநூல்களும் கட்டுரைகளும் சாசனத்தின் முக்கியத்துவத்தை அந்த அளவுக்குத் தானும் எடுத்துக் காட்டவில்லை இலக்கண நூலாகிய தொல் காப்பியத் தில் உரைநடைக்குச் சான்று கண்டுபிடித்து உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுளாகிய சிலப்பதிகாரத்தில் உள்ள உரையை உதாரணம் காட்டி, இறையனரகப் பொருளுரையையும் உரையாசிரியர்கள் இயற்றிய உரை யையும் விரிவாக ஆராய்ந்து இக்கால உரைநடைபற்றி மேலைநாட்டுச் செல்வாக்கை விளக்குவனவே பெரும்பா லான ஆராய்ச்சிகளின் பொருளடக்கமாகும். 44 ஒரு மொழியில் இலக்கியம் தோன்றும்போது முதலிற் செய் யுள் வடிவத்திலும் பின்பு உரைநடை வடிவத்திலும் தோன்றுகின்றதெனப்படுகின்றது, இலக்கியம் உரை நடையில் அமைவது செய்யுள் வடிவத்தில் அமைவதி லும் பிந்தியதாகலாம். ஆனல் வசனநடை செய்யுள் நடையிலும் பிந்தியதென்பதை நிரூபிக்கவியலாது. பல் லவர் காலத்துக்கு முந்திய தமிழ்ச்சாசனங்கள் அறியப் படுவதற்கு முன்னர், தமிழிலும் செய்யுள் நடையே முந்தியதென்றும் செய்யுளின் ஒரு வகையாகவே உரை தோன்றிவளர்ந்த தென்றும் தொல்காப்பியம், சிலப்பதி காரம் என்பவற்றிற் காணப்படும் குறிப்புகளைக்கொண்டு வற்புறுத்தப்பட்டுவந்தது.
தொல்காப்பியம், சிலப்பதிகாரம் என்பனவற் றுக்குக் காலத்தால் முற்பட்ட தமிழ்நாட்டுக் குகைச் சாசனங்கள் வசனங்களாக அமைந்துள்ளன. தொல்
44. அ. மு. பரமசிவானந்தம் - தமிழ் உரைநடை (1959) கல்வெட்டுக் களேப்பற்றி இவர் கூறியவற்றுட் பெரும்பகுதி உரைநடைபற்றிய ஆராய்ச்சிக்கு வேண்டாதது. சிறுபகுதி சாசன உரைநடையில் இவ ருக்குள்ள வென்றுப்பைப் புலப்படுத்துவது.
286

காப்பியம் நான்கு உரைநடைவகைகளைச் செய்யுளியலிற் குறிப்பிடுகின்றது. இடைக்கால உரையாசிரியர்களாகிய இளம் பூரணர், நச்சினர்க்கினியர் என்போர் இவ்வுரை நடை வகைகளை விளக்க முயன்றுள்ளனர். தொல்காப்பி யர் காலத்திற்கு மிகவும் பிந்திய உரைநடையிலக்கியங் களே இளம்பூரணர், நச்சினர்க்கினியர் என்போர் காலத் திற் காணப்பட்டமையால் இவ்வுரையாசிரியர்கள் அவ் விலக்கியங்களை உதாரணங்களாகக் கொண்டே உரை நடை வகைகளை விளக்கினர். எனவே உரையாசிரியர்க ளுடைய விளக்கங்கள் தொல்காப்பியர் கருதியவற்றைக் கூறுகின்றனவா என்பது பிரச்னை யாகின்றது:
குகைச் சாசனங்களிலுள்ள உரைநடை தொல் காப்பியத்திற் குறிப்பிடப்பட்டுள்ளதா வென்பதை நிச்சய மாகத் தீர்மானிக்க முடியவில்லை. தொல்காப்பியத்திற் குறிப்பிடப்படும் "பாவின் றெழுந்த கிளவி யென்பது பாக்களோடு தொடர்பற்ற தாய்த் தோன்றிய சொற் களாலான உரையைக் குறிப்பதாக வேண்டும். குகைச் சாசனங்களிற் காணப்படும் வசனங்கள் இவ்வகை உரை யைச் சேர்ந்தன. தொல்காப்பியம் செய்யுளியலில் உரை ஒரு வகைச் செய்யுளாகக் கூறப்பட்டுள்ளது. அப் படியானல், செய்யுள் என்ருல் என்ன என்ற வின எழுகிறது. செய்யப்படுவதே செய்யுள் என்ருல் வசனம் செய்யுளில் அடங்கும். தொல்காப்பியம் பாயிரத்தில் வழக்கும் செய்யுளும் வேருகக் கூறப்பட்டிருத்தலாலும் இலக்கணம் பிழையாமற் கூறப்படுவதும் ஒரு பொரு ளைக் குறித்துச் செய்யப்படுவதுமாக அமைவதே செய் யுள் என இளம்பூரணர் செய்யுளுக்குக் குறுகியபொருள் கூறியிருத்தலாலும் செய்யுள் என்பதில் குகைச்சாசன வசனங்கள் அமையா வென்று வாதிக்கலாம். குகைச் சாசனங்களிற் சிறு சிறு வாக்கியங்களே அமைந்துள்ளன. ரி, வி. மகாலிங்கம் அவர்கள் வாசித்தபடி,
287

Page 155
சந்தரிதன் கொடுபிதோன்---மாங்குளச்சாசனம், எடுயூர் அரிதின் பாளி--கருங்காளக்குடிச்சாசனம் வேண்கோசிபன் குடுபித கல்கஞ்சணம்--மருகால் தலைச் g IT F60 b, மத்திரைய்ப் பொன் குலவன் அதன் அதன்----அழகர்
மலைச் சாசனம்
விளக்கம்- சந்தன் அரிதன்-சந்தரிதன் சந்தனுடைய மகன் அரிதன் கொடு பிதோன்-கொடுப்பித்தோன் எடு யூர் எட்டியூர், பாளி - படுக்கை: குடுபித - குடுப்பித்த கம் சணம் - கஞ்சணம் சணம் - படுக்கை: மத்திரைய் மதுரை. குலவன் - வணிகன் அதன் - ஆதன்.
கி. பி. இரண்டாம் நூற்றண்டைச் சேர்ந்ததாகக் கணிக் கப்படும் அரிச்சலூரிக் கல்வெட்டு, இரா; நாகசாமி அவர் கள் வாசித்தபடி
எழுத்துப் புனருத்தான் மணிய் வண்ணக்கன் தேவன் சாத்தன்
கி. பி. நான்காம் நூற்ருண்டைச் சேர்ந்ததாகக் கணிக்கப்பம் திருநாதர் குன்றுச் சாசனத்து வாக்கியம்:-
ஐம்பத்தெழன சனந் நோற்ற சந்திர நந்தி ஆசி ரிகர் நிசீதிகை
விளக்கம்:- ஆசிரிகர் - ஆசிரியர் நிசீதிகை - சமாதி. அனசனம் - உண்ணுவிரதம்
குகைச்சாசனங்கள் அறிஞர்கள் யாவரும் உடன்
படத்தக்க வகையிலே திருப்திகரமாக வாசிக்கப்பட்டா
லும் வசனத்தின் அளவும் பொதுவியல்பும் மாற இட
288

மில்லை. எனவே, மேலே காட்டப்பட்ட சாசன வசனங் களை ஆராயலாம். இந்த வசனங்கள் பேச்சுவழக்கை ஒட்டியனவாம். மக்களின் பேச்சுவழக்கே இயற்கையான மொழியாகும். எழுதிது வழக்குக்கும் பேச்சுவழக்குக்கும் இடையிலான வேறுபாட்டிற் பெரும்பகுதி காலப்போக்கி லேற்பட்ட வளர்ச்சியாகும் பேச்சுவழக்கே ஒரு காலத் தில் இலக்கிய வழக்காக உருப்பெறுகின்றது இலக்கிய வழக்குக்கு இலக்கணம் வகுக்கப்படுகின்றது. கற்றவர் மரபு தழுவி எழுதிவந்திருக்கின்றனர். பொதுமக்கள் வழக்கு, சமகாலப் பேச்சுவழக்கு என்பவற்றிலில்லாத வழக்காறுகளைக் கையாள்வது கற்றமைக்கு அடையாள மாகவும் கொள்ளப்படுகின்றது; தொல்காப்பியர் "வழக் கும் செய்யுளும்' ஆராய்ந்து நூல் இயற்றியுள்ளார். இத் தொடரில் வழக்கு பேச்சுவழக்கையும் செய்யுள் எழுத்து வழக்கையும் குறிக்கின்றன செய்யுள் என்ற சொல்லும் செயற்கை என்ற சொல்லும் பொருளில் நெருங்கிய தொடர்புடையன. பழைய காலத்திலும் இடைக்காலத் திலும் நூல்களில் இடம்பெற்ற உரைகள் செயற்கைத் தன்மை வாய்ந்தன. சாசனங்களின் வாசகங்கள் கற்ற வரிகளால் மட்டும் வரையப்படவில்லை, கற்றவர்கள் மட்டுமின்றி மற்றவர்களும் விளங்கிக்கொள்ளவேண்டு மென்ற நோக்கம் சாசன வாசகங்களை வரைந்தவர்களுக்கு இருந்திருக்கிறது. அதனல், சாசனமொழிவழக்குப் பேச்சு வழக்கிலிருந்து அதி தூரம் விலகிச் செல்லவில்லை;
பல்லவர் காலத்திலெழுந்த களவியலுரையில் இருவகை நடைகள் அமைந்துள்ளன; அவற்றில் ஒன்று சிலப்பதிகாரப் பாட்டுகளிடையே காணப்பட்ட உரையி லிருந்து வளர்ந்த கவிதைப் பண்புள்ள நடை மற்றது, ஆசிரியர்-மாணுக்கருக்கிடையே நிகழும் கலந்துரையாடல் போன்ற வினவிடை நடை: இந்த நடைன்கள் கற்றவர் ளாற் போற்றப்பட்ட நடைகள் என்பது தெளிவு. முந்திய
289

Page 156
நடை உனர்ச்சியைத் தூண்டும் நோக்கமுள்ள போதிலும் பிந்தியநடை பொருளே விளக்க வேண்டியபோதிலும் சிறப் பாக அமைபவை சாசனங்களில் இந்த நடைகள் வேண்டியிருக்கவில்லே செய்யுனோசையில் அமைக்கப் பட்ட சாசனப்பகுதிகளும் செய்யுளோசை தழுவிய உரைநடையில் அமைக்கப்பட்ட சாசனப் பகுதிகளும் விவ Gr என்னும் பொதுவாக நோக்கும்போது சாசனங்க ளிற் கையாளப்பட்ட நடை பொதுமக்கள் பேச்சு வழக்கை ஆதாரமாகக் கொண்டெழுந்ததெனக் கூறலாம்,
இடைக்காலச் சாசனங்கள் நீண்ட வாக்கிாங் களேக் கொண்டமைந்தன வெனப்படுகின்றது. நீண் வாக்கியங்கள் பொதுமக்கள் பேச்சுவழக்கில் இயற்கை தடையாக அமையுமா என்ற ஐயம் எழுகின்றது, சாச னம் எடுத்துக்கொண்ட விடயத்தைத் தொடர்புபடுத்தி ஒரே வாக்கியமாக அணி மக்கும் இயல்பு சாமு னங்கள் படி வற்றிலே காணப்படுகின்றது மங்கல வார்த்தையும் அரச துடைய ஆட்சியாண்டும் ஓம் படைக்கிளவியும் தவிர இவற்றுக்கிடையே அமைந்த ஸ்ள பகுதி ஒரே வாக்கியம் என்று கொள்ளத் தக்க வகையிலான சாசனங்கள் பல உள. ஒரு நீண்ட வாக்கியம் தனித் தொடர்கள் பலவற்றைக் கொண்டதாக அமைகின்றது. மேலும் அது ஆற்றெழு காகப் பொருள் கொள்ளவும் இடம் தருகின்றது; நிறுதி தக் குறிகள் பந்தியமைப்பு என்பன சாசனத் தமிழில் நன்கு இடம்பெறவில்லே. இதனுல் வாக்கியத்தைப் பிரித் தறிவது வில்லங்கமாக இருக்கிறது. ஐரோப்பிய மொழி களின் செல்வாக்கினுலேயே பொருட்டெனிவுக்குப் பெரி தும் வேண்டப்படும் நிறுத்தக் குறிகள் பந்தியமைப்பு என் பன தமிழ்மொழியில் வழங்கத் தொடங்கின. குகை சாசனங்களிற் காணப்படும் வாக்கியங்களின் அமைப்பை யும் இக்காலத்தவர் சிலர் எழுதும் வாக்கியங்கள் சிவ வற்றின் அமைப்பையும் சாசனத்திற் காணப்படும்
29)

நிண்ட் வாக்கியத்தோடு ஒப்பிடும்போது, அந்நீண்ட வாக்கிம் சிறு சிறு வாக்கியங்கள் பலவற்றை உள்ளடக் கியதென்று கூறலாம்:
பல்லவர் காலத்துக் கம்பவர்மனுடைய காலச் சாசனம்:- ஸ்வஸ்தி பூg|கம்பவர்ம் மற்கு பாண்டு பத்தாவது உட்கர் சபையார்க்கு சடையன் குடுத்த நெல் நானுற்றுக்காடி நெல்லால் பொலியூட்டு ஆண்டுவரை நூற்றுக்காடி நெல்' பவிசையால் நிசதி இருவர் பிராமணரை நிலமும் நாயறும் உள்ள அளவும் ஊட்டுவோமானுேம் உட்கர்சபையோம் இவ்விருந்தூட்டு முட்டில் கங்கையிடைக் குமரி இட்ை எழுநூற்றுக்காதத் துள்ளும் செய்தார் செய்த பாவம் படுவோமானுேம் சபையோம்
சிறுசிறு வாக்கியங்களாகப் பிரிப்பதற்கு இடந் தராத நீண்ட வாக்கியமும் பல்லவர்காலச் சாசனங்க ளில் உண்டு. உதாரணமாக, மூன்றும் நந்திவர்மன் காலத்துச் சாசனம் ஒன்று:-
ஸ்வஸ்தி பூஜிநந்திவர்ம்மற்கு யாண்டு இருபத்திரண்டா வது திருவைக்காவுடைய மகாதேவற்கு திருநொந்த" விளக்கும் அமுது படிக்கும் உ ைபயம் ன வ ய்க்க சந்திப் பெலியார் திரிபுவனமாதேவிச்சருப்பேதி மங்கலத்து சபை பார் பக்கல் பொன்குடுத்துப் பொலிசு விக்குச் செலவாக காசு கொள்ள ஊற்கீழ் இறையிவியாக மனவி டில்வேலியாகக் கொண்டுவிட்ட வண்ணக்க விளாகம் நிலம் 14 இந்நிலம் ஒன்றரையும் இறக்கா தான் திருவடி இரண்டும் என் தலைமேலின இது இறக்குவான் தங்கள் அம்மைக்குந்தானே மினுளன்
45. South Indian Inscriptions, Wol. III, p. 15.
2.91.

Page 157
முதலாம் பராந்தக சோழன் காலத்துச் சிறு சாசன மொன்றிலுள்ள வாக்கியம் சிறுசிறு வாக்கியங்களாாம் கொள்ளப்பட இடந்தருகின்றது:-
ஸ்வஸ் திபூணூரீ/ மதிரை கொண்ட கோப்பரகேசரி பன்மரிகிற யாண்டு 12ஆவது/ தஞ்சாவூர்க் கூற்றத்து நாட்டமர் கலத்து மன்ரு டி பவதாயன் வைத்த பகல் விளக்கு ஒல் றினல் நெய் ஆழாக்கு/ விட்ட சாவா மூவாப் பேரா) 45 சந்திராதித்தவல்/ ப்ன் மாகேசுவரர ைகூஷி.
சோழப்பெருமன்னர் காலத்திலே சாசனங்கள் பெh h தொகையாகத் தோன்றின; அவற்றுட் பெரும்பாலவே நீண்ட சாசனங்களாகவும் அமைந்துள்ளன fBawl சாசனங்களில் மிக நீண்ட வாக்கியங்கள் காணப்படு கின்றன. நூற்றுக்கணக்கான அடிகளைக் கொண் . மிகநீண்ட வாக்கியம் திருவாலங்காட்டுச் செப்பேடுகC) முதலியவற்றிற் காணப்படுகின்றது; சாசனங்கள் சில வற்றிற் காணப்படும் மிகநீண்ட வாக்கியம் சிறுசிறு வாக்கியங்களாகப் பிரிப்பதற்கு இயலாதது. வேறு சில சாசனங்கள் மன்னரும் பிறரும் செய்த தானங்களின் நீண்ட பட்டியலைத் தருவன:
சாசனங்களில் நீண்ட வாக்கியங்கள் காணப்படு வது உண்மை. ஆணுல் நீண்ட வாக்கியங்களையுடைமை சாசன உரைநடையின் பண்புகளிலொன்று என்று கூறமுடி UTé. சாசன உல்ைநடையிலே சிறு வாக்கியங்கள் நீண்ட வாக்கியங்கள், மிகநீண்டவாக்கியங்கள் என்பன உள. சங்ககால இலக்கியத்திலே சிறுசெய்யுள், நீண்ட
as
46. South Indian Inscriptions, Vol. XII, р. 24. 47. South Indian Inscriptions, Vol. V, p. 2761.
292

செய்யுள், மிகநீண்ட செய்யுள் என்பன உள நீண்ட செய்யுள்களையுடைமை சங்ககால இலக்கியத்தின் பண்பு என்று கூற முடியாததுபோல நீண்டவாக்கியத்தையு டைமை சாசன உரைநடையின் பண்பு என்றுகூற (p tg lurgis
சோழப் பெருமன்னர் காலத்திலும் நாயக்கர் கால முற்பகுதியிலுமே இளம்பூரணர், பேராசிரியர், பரிமேலழகர், அடியார்க்குநல்லார், நச்சினரீக்கினியர் முதலிய உரையாசிரியர்கள் வாழ்ந்தனர். இவர்களுள் ஒவ் வொருவரும் கையாண்ட நடைக்குத் தனித்தன்மை இருந்தபோதிலும் இவர்கள் அனைவரும் கைக்கொண்ட உரைநடைக்குப் பொதுத் தன்மை மிகுதியாகக் காணப் பட்டது. இவ்ர்கள் கற்ருேரை மனதில் வைத்து வரைந்த ஒருவகைச் செயற்கை நடையே அப்பொதுத் தன்மை யென்று கூறலாம். சாசனங்கள் பே ச் சு வ ழ க்  ைக யொட்டிய இயற்கை நடையையே கொண்டுள்ளன5
தமிழுரைநடை வரலாற்றில் ஐரோப்பியர் ஆற் றிய பணியைக் குறைத்து மதிப்பிடுவது தக்கதன் ருயினும் அவர்களுக்கு உரியதல்லாத பெருமையை அவர்களுக்கு அளிப்பதும் அத்தகையதே; தத்துவபோதக சுவாமிகள் வீரமாமுனிவர், சீகன் பால் குஜயர் என் போர் தமிழுரை நடைவளர்ச்சிக்கு ஆற்றிய பணியை இலக்கிய இலக்கண உரைகளின் பகைப்புலத்தில் மட்டுமல்லாது சாசன உரைநடையின் பகைப்புலத்திலும் வைத்து நோக்கவேண் டும் சாசன உரைநடை மரபு ஐரோப்பியர் காலத்தி லும் வழக்கிலிருந்திருக்கிறது. எனவே அந்த உரை நடையை அறிந்துகொள்வதற்கு ஐரோப்பியர்கள் சாச னங்களைக் கற்கவேண்டிய அவசியம் இருக்கவில்லை. குத்தி ரங்களையும் செய்யுள்களையும் விளக்கும் வெறும் உரைக ளாக அமையாத தனிவசன நூல்களை முதலிலே தோற்று
293

Page 158
வித்தவர்கள் ஐரோப்பியர்களே சாசனங்களில் மட் டும் வழங்கியதாக இன்று தெரியவருகின்ற இயற்கை நடையை நூல் வழக்குக் கொண்டுவந்தவர்களும் அவரி களே. நூல்களைக் கற்பது சுலபம், நூல்களுக்கு எழுற்ற உரைகளை விளங்கிக்கொள்வது வில்லங்கம் என்ற நில் அவர்களாலேயே மாறியது.
தத்துவபோதக சுவாமிகளுடைய வசனநடை யின் பன்புகளான - பேச்சுவழக்கிற் காணப்படும் சொற் ருெடர்கள், இலக்கண அமைதிகள், பெருந்தொகை யான வடசொற்கள், நீண்ட வாக்கியம் என்பன,
அவர் காலத்திலும் அவர்காலத்திற்குச் சிறிது முன்பும் தோன்றிய சாசனங்களிலே காணப்படுகின்றன. வீரமா முனிவர் பேச்சுவழக்கிலுள்ள சொற்கள், சொற்ருெடரி கள் என்பவற்றேடு ஒசையையும் கையாண்டதை அவருடைய பரமார்த்த குருவின் கதையென்ற நூலிலே காணலாம். எனினும் வீரமாமுனிவருடைய நடையைப் பொதுவாக நோக்கும்போது சிறு சிறு வாக்கியங்கள் அமைந்திருப்பது உரைநடை வளர்ச்சியிலே குறிப்பிடக் கூடிய ஒர் அமிசமாகும் தமிழ் மொழியைக் கற்றுத் துறை போகிய வீரமாமுனிவர் இலக்கிய வழக்குக் குரிய இலக்கண அமைதியையும் அனுசரிக்க முயன்றுள் ளார். சீகன்பால்கு ஐயர் கையாண்ட உரைநடைக்கும் சாசன உரைநடைக்கும் அதிக பேதமில்லை. பேச்சு வழக் குக்குரிய இலக்கண அமைதியையே இவர் பின்பற்றிய தனல் வீரமாமுனிவர் இவருடைய வசனநடையை "வழுக்கள் நிறைந்த நடை யென க்கண்டித்துள்ள 7 ரி. இந்த ஐரோப்பியர்கள் கையாண்ட வசனநடையிலிருந்தே இன்றைய வசன நடை வளர்ந்த தென்பதனைப் பற்றிக் கருத்து வேறுபாடு இல்லை;
2.94

சாசனத்துத் தமிழ்
வழக்கா று கள்
முெத்துத் தமிழ் வழக்காறுகளில் ஒரு பகுதியை இலக்கியத் தமிழ் வழக்காறுகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காகச் சாசனத்தமிழ் வழக்காறுகள் என் னும் தொடர் வழங்கப்படுகின்றது. தமிழ்மொழி ஒரே மொழியாக இருப்பதால், பேச்சுவழக்குத் தமிழுக்கும் இலக்கிய வழக்குத் தமிழுக்கும் ஒற்றுமைகள் இருப்பது போல, சாசன வழக்குத் தமிழுக்கும் இலக்கிய வழக்குத் தமிழுக்கும் ஒற்றுமைகள் உள. தமிழ் இலக்கியத்துக்கு எவ்வளவு தொன்மையுண்டோ, தமிழ்ச் சாசனத்துக்கும் அவ்வளவு தொன் மையுண்டு. மிகப்பழைய தமிழ்ச் சாசனங்களாகிய பாண்டிநாட்டுக் குகைச்சாசனங்கள் இன்னும் திருப்திகரமாக வாசிக்கப்படவில்லை. அக்குகைச் சாசனங்களின் காலத்துக்கும் கி. பி. ஏழாம் நூற்ருண் டுக்கும் இடையிலே தோன்றிய தமிழ்ச் சாசனங்கள் மிகச் சிலவே. கி. பி. ஏழாம் நூற்றண்டிலிருந்து கடந்த நூற் ருண்டு வரையிலே தோன்றிய சாசனங்களிற் கானப் படும் வழக்காறுகள் சில, இலக்கிய வழக்கில் அனேக மாக இடம்பெருதவை என்று கூறத்தக்கவையே இக் கட்டுரையில் ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்
சாசன வழக்குப் பேச்சு வழக்கை ஒட்டி இயல் வது. அண்மைக்காலம் வரையிலான இலக்கிய முயற்சி ஈலே பேச்சுத் தமிழ் வழக்காறுகள் அருகியே இடம்
295

Page 159
பெற்றுள்ளன; இலக்கிய வழக்கிலே பழைமை போரி றும் பண்பு அதீத முக்கியத்துவம் வகித்து வந்தது. எனவே தமிழ் மொழியின் உண்மையான வரலாற்)ை உணர்ந்து கொள்ளச் சாசனத்தமிழ் பயன்படுகின்றது: இன்றைய பேச்சுத்தமிழ் வழக்காறுகள் சில, மிக நீண்டகால வரலாறுடையன என்பது சாசனத் தமிழி லிருந்து புலப்படுகின்றது:
மொழியில் நிக்ழும் ஒலிமாற்றம் மொழியாராய்ச் சியில் முக்கியத்துவம் பெறுகின்றது. ஒலிமாற்றம் தமிழ்ச் சொற்களிலும் காணப்படும்; பிறமொழிச் சொற்களிலும் காணப்படும். சாசனங்களில் எழுத்துப்பிழைகள் சில, இடம்பெறுவதுண்டு. எழுத்துப் பிழை எது, மாறி ஒலிக் கும் இடம் எது என்பன, சில இடங்களிலே தெளிவாகக் தெரியமாட்டா. எழுத்தொலிமாற்றங்கள் ஒழுங்கு முறைகளைத் தெளிவாக வகுத்துக்கொண்டால், ஒலி மாற்றத்தையும் எழுத்துப் பிழை யையும் பிரித்துக்கான லாம். மேலும் இக்காலப் பேச் சிற் காணப்படும் வழக் காறுகள் சாசனத்திற் காணப்பட்டால், அவை ஒலிமாற் றங்களே எனவும் பிழைகளல்ல வெனவும் முடிவுசெய்ய லாம். தமிழ்ச்சொற்களின் ஒலி மாற்றங்களை ஆராயும் போது இன் ஞெரு பிரச்சினை தோன்றுகின்றது. ஒலி வேறுபட்ட இரண்டு வடிவங்களில் முந்தியது எது, பிற் தியது எது என்பன அவை. இலக்கிய வழக்கு முந்தியது, பேச்சு வழக்கு அதன் திரிபு என்பதை இன்றைய மொழி யறிஞர் ஏற்பதில்லை. ஒரு சாராரின் பேச்சு வழக்கு அல் லது பேச்சுவழக்கின் திருந்திய வடிவமே இலக்கிய வழக் காக வந்திருக்கவேண்டும் என்று இன்று கருதப்படுவ தால், எந்த வடிவம் முந்தியது என அறிவியல் முறை யிற் கூறமுடியாதுள்ளது. எனினும் இக்கட்டுரையில், எழுதும் முறையைச் சுலபமாக்குவதற்காக இலக்கிய
296

வழக்கே பேச்சு வழக்கிலே திரிபுகள் பெற்றது c" dồi !) கருதத் தக்கமுறையிலே, ஒலி மாற்றங்கள் கூறப்படுகின்
றன
உயிர் எழுத்துக்கள் :
(1)
அ - இ:
அ  ைஎ
அ - ஐ:
<器“岛
g) - a
ஓர் ஒலி இன்னேர் ஒலியாக மாறுதல்3
மடவளாகம்-மடை விளாகம் (கோவிலைச் சூழ்ந் துள்ளதும் கோயில் பரிவாரத்தார் குடியிருப் பதுமான இடம்)
புதியது - புதியிது (அறுவடையானதும் புதிய நெல்லைக் கடவுளுக்குப் படைப்பது) மலாடு - மிலாடு (மலையமான் நாடு) நவரை - நவிரை (ஆடிமாதத்தில் அறுவடை யாகும் ஒரு வகை நெல்)
சண்டை - செண்டை- (வாத்தியவகை)
o Lenu arres b - LD 6PL- விளாகம்,
தஞ்சை - தைஞ்சை (தஞ்சாவூர்) கச்சோ லம் - கைச்சோ லம் (பாத்திரவகை) கழஞ்சு - கழைஞ்சு (ஒர் அளவு)
வெட்டி முட்டாவாள் - வெட்டி முட்டையாள் (கிராமத்தின் பொதுவேலைக்கு அது முடியும் வரையில் இடையமுமல் வேலை செய்வதற்கு அனுப்பப்பெறும் ஆள்)
அடியிறை - அடியறை
தூசுப்படை - தூசிப்படை (படையின் பகுதி களிலே முதலிலே செல்வது)
297

Page 160
AF-G7 (uit): உ - அ
உ - இ:
2 - - 29: D- - бэ:
67 r py:
எ - இ ஐ - அ; g - 67: ஐ-அ(ய்) ஒ - அ
(2) e용, - 욕: F - g:
2 br 2gô
298
மீயாட்சி - மெய்யாட்சி (மேலதிகாரம்) அச்சுத்தறி - அச்சதறி (தறிவகை) பதுவாரம் - பதவாரம் (நிலப் பரிவர்த்தனைக்காம அளிக்கப்பெறும் வரி) தலைச்சும்மாடு - தலைச் சம்மாடு (தலைப்பாரம் பொறுப்பு) நட்டுவம் - நட்டவம் (நாட்டியம் கற் று க் கொடுத்தல்) திருவுண்ணுழிகை - திரு வண்ணுழிகை (கர்ப்பம் கிருகம்) 8 நுந்தாவிளக்கு-நந்தா விளக்கு (தூண்டா விளக்கு) அடியுறை - அடியறை (பாத காணிக்கை) கருவி - கரிவி (நாவிதர் கத்தி) அடியுறை - அடியிறை, இரவு - இரவை: உபாதி - ஒபாதி (கடமை) குடவர் - கொடவர் (கோயிற் கொத்துக்களுள் ஒரு பகுதியார்) புத்தகம் - பொத்தகம். நுந்தா விளக்கு - நொந்தாவிளக்கு. வெள்ளான் வகை - வள்ளான் வகை. தெளித்தல் - தளித்தல் (நீர் தெளித்தல்) பெயர் - பியர். கைச்சாத்து - கச்சாத்து (கையெழுத்திட்ட ரசீது வைச்சமுது - வெச்சமுது,
தையான் - தய்யான் (தையற்காரன்) பொலிகை - பலிசை (வட்டி) ஒலியின் அளவு வேறுபடுதல். சாந்திக் கூத்து - சந்திக் கூத்து; சந்திக் குனிப்பம் స్త్రాలతో - பஞ்சு பிலி (பஞ்சின் மீது இறுக்கும்) வரி) குற்றரிசி - கூற்றரிசி குற்றுநெல்லு - கூற்றுநெல்லு,

மெய்யெழுத்துக்கள்:-
க் - ச்
дis - шr:
መ” – Aኝ : ச் - ய்த் ஞ் - ந்
ஞ்ச்-ந்த் த் - ச்
ma ' 3
ம் - ண்
ub - ଜର୍ଜୀ :
uji - ë:
ய்ச் உட் ; யி - ச:
6υ - ή ε.
ல் - ள்: ன் - ற் ற் - ச் ற் - த்
பொலிகை - பொலிசை (வட்டி) திருக்கைக்கோட்டி - திருக்கையோட்டி (கோயி லில் திருமுறை ஒதும் மண்டபம்)
பரிசு - பரிது
திருக்கொற்ற வாசல் - திருக்கொற்ற வாய்தல் ஞாழி - நாழி:
ஞாயிறு - நாயிறு.
ஞாடு - நாடு,
கழஞ்சு * கழைந்து நிறைந்தளவு - நிறைச்சளவு இழித்து - இழிஞ்சு (குறைத்து) பரப்பு - பரம்பு.
கம்மாளர் - கண்மாளர்,
கலம் - கலன்
வட்டம் - வட்டன் (வீதம்) ஈயோட்டி - ஈய்ச்சோப்பி (சாமரை) ஆராய்ச்சி - ஆராட்சி.
வாயில்-வாசல்.
திடல் - திடர். ஈரங்கொல்லி - ஈரங்கொள்ளி, வெள்ளிலையமுது - வெற்றியை முது. எற்சோறு - எச்சோறு (பகற்சாப்பாடு) ஏற்றம் புலம் - ஏத்தம் புலம் (ஏற்றம்போட்டு நீர் இறைத்துப் பயிர் செய்யும் நிலம்) ஏற்றபாடம் - ஏத் தபாடம் (ஏற்றம் புலம்) சிற்ரு யம் - சித் தாயம் (சிறுவரிகள்) சாற்று பட்டி - சாத்துப்பட்டி. குற்ற லரிசி - குத்தலரிசி.
சொற்கள் சொற்ருெடர்களிடையில் எழுத்துக்
கள் கெடுதலுமுண்டு; தோன்றுதலுமுண்டு.
299

Page 161
எழுத்துக்கள் மறைந்தமை:
பெயரெச்ச ஈருகிய அகரம் :
நிறைச்ச அளவு - நிறைச்சளவு சுட்ட ஒடு - சுட்டோடு மூத்த அதிகாரம் - மூத்ததிகாரம் சுட்ட இட்டிகை - சுட்டிட்டிகை வெச்ச அமுது - வெச்சமுது
இந்த ஈறுகளில் வரும் அகரம் உயிர் முதல் மொழிவர மறைந்துவிடுகின்றது; 'ர'கர மெய்:-
வர்த்தனை - வத்தினை (குறிப்பிட்ட அதிகாரிகள் ஊழியர் முதலியோருக்கு மானியமாக அளிக்க பெறுவது) மயிலார்ப்பில் - மயிலாப்பில் (மயிலாப்பூர்) துர்க்கை - துக்லக 'ர'கரம் மிகவும் நுண்ணிய ஒலியாகும்:
எழுத்துக்கள் புதியனவாகத் தோன்றியமை:
'ர'கரம் புதிதாக இடம்பெறுவதுமுண்டு :-
சதாசேவை - சதாசேர்வை, உயிரீற்றுச் சொற்கள் சிலவும் இறுதியில் உகரம் பெற்று உடம்படுமெய்யோடு "வு'கர வீறு பெறுகின்றன:-
நல்லா - நல்லாவு
செறு - செறுவு
தவனம் என்னும் சொல் இடையிலே ககரம் பெற்றுத் தவனகமென்றும் அண்ணுவி என்னும் சொல் ழகரம் பெற்று அண்ணழ்வி யென்றும் திருநல்யாண்டு என்னும்
800

தொடர் லகர இகர வுயிர்மெய்பெற்றுத் திருநல்லி யாண்டு எனவும் வந்துள்ளன:
வடமொழிச் சொல்லும் தமிழ்மொழிச்சொல்லும் சேர்ந்து தொடராக வழங்குவதற்கும் சாசனங்களிலே பல உதாரணங்கள் காட்டலாம்:-
சீவிதப்பற்று (சீவியத்துக்கு மட்டும் விடப்பட்டநிலம்) யக்கிப்பட்டி (யக்கிதேவிக்கு வரியில்லாமல் விட்ட நிலம்.) தீபமாலை (சரவிளக்கு), சரவிளக்கு லாஞ்சினைப்பேறு. மூத்ததிகாரம் (தலைமை அதிகாரம்). உதிரப்பட்டி (போரில் இறந்து பட்டோரின் வழிவந்
தோருக்கு வழங்கப்பட்ட நிலம்); விப்பிரவினுேதிவரி (பிராமண மாந்திரீகரிடமிருந்து
பெற்றவரி). விபூதிக்காணிக்கை (விபூதி வழங்கும்போது கோவி லுக்கு கொடுக்கவேண்டிய பணம்); கணவாரியம் (சபையின் குழு). அல்பமிறை (சிறுவரி). வழுதியச் சுவர்க்கம் (பாண்டியருக்கு அவர் காசிற்
கொடுக்கண்ேடிய வரிவகை), துலாக் கூலி (தராசுக்கு வரி) சூலவரி (ஒருவகை வரி) அதிகாரமேலெழுத்து (அதிகாரியின் உடன்பாடு). ஜன்மக்காணி (சீவிதப்பற்று?) கோபுர வாசல்: பிரசண்டக்காணிக்கை (இராணுவத்துக்குரிய ஒருவகை
.)வரி مر பரகேசரி நாழி (மன்னர் பெயரில் வழங்கிய ஓரளவு பரகேசரிக்கால் (மன்னர் பெயரில் வழங்கிய ஓரளவு)
301

Page 162
பட்டாடை ஆயம் நூலாயம் மூலவோலை, பண்டாரக்கண்காணி (திறைச்சேரியை மேற்பார்வை
செய்பவர்), ஜாதகக்குடி (கோவிலுக்கு வாழ்க்கை முழுவதும்
தொண்டுசெய்ய முன்வந்தோர்). நாட்டுவினியோகம் (நாட்டாரால் வரிவிலக்கு அளிக் கப்பட்ட நிலங்களால் குறைவு ’ பட்ட நிதியை நிரப்புவதற்காக தனிப்பட்டவர் வழங்கும்பங்கு). உபயபலிசை (பொருளாகவும் பணமாகவும் வரும்
வட்டி). சண்டேசுவரப்பெரு விலை (சிவன்கோவில் நிலத்தின்
a'a). ஏகபோக இறையிலி (தனியொருவர் பயன் பெற
வரியில்லாமல் வழங்கப்பட்ட நிலம்) தர்மவாரியம் (அறச்செயல்களை மேற்பார்வையிடும்
. (رLp) ژنت பிரமதேயக்கிழவர் (பிராமணர் குடியிருப்பு நில
வுடைமையாளர்). தேவகுடிமை (கோவிலின் குடிமை). கணப்பெருமக்கள் (சபைக் காரியங்களை நடத்தும் qpg)(3u 17 si). ஏரியாயம் (குளத்தை உபயோகிப்பதற்கான வரி). எழுத்துவினியோகம் (ஊர்க்கணக்கருக்கான வரியை
ஊரார் பங்கு பங்காக இறுத்தல்). சேஞபதி ஆள்வார் (திருமால்கோவில்களின் சேனை
(p5 GóuurTrî), சேஞபதிப்பெருவிலை (திருமால்கோவில்களின் நில
ගෝලීයිබ).
302

தமிழில் வந்தமைந்த பிறமொழிச் சொற்களில் ஏற்பட்ட ஒலி மாற்றங்களை ஆராய்வது பயனு ைடயது. பிறமொழிச் சொற்களின் மூலவடிவம் எதுவெனத் தெரியுமாதலால், எந்த ஒலி எவ்வாறு மாறியுள்ளதென நிச்சயப்படுத்திக் கூறமுடியும். தமிழ்ச் சொற்களின் ஒலி மாற்றங்களை முன்னேர் எப்பொழுதும் குறித்துவந் திருப்பரென எதிர்பார்க்கமுடியாது. தமிழ் நெடுங்கணக்கு காலப்போக்கில் மாறிச்செல்லாததால், முன்னேர் எழுதி வரும்போது பழைய எழுத்து மரபையே பெரும்பாலும் பின்பற்றியிருப்பர். இன்றும் பேச்சுவழக்கிற் காணப் படும் கிளை மொழி வழக்காறுகள் எழுத்துவழக்கில் அரு கியே இடம்பெறுதல் கவனிக்கக்கூடியது. தமிழ்மொழி பிறமொழிகளில் வடமொழிக்கே மிகவும் கடமைப்பட் டுள்ளது. சாசனங்களில் இடம்பெறும் வடமொழிச் சொற்கள் சொற்ருெடர்களில் ஒலிமாற்றங்கள் வெவ் வேறு அளவில் இடம்பெற்ற வழக்காறுகள் சில காணப் படுகின்றன. வீரசோழியம், நன்னூல் முதலிய இலக் கண நூல்களிற் குறிப்பிடப்படும் மாற்றங்கள் சிலவும் சாசன வழக்காறுகளில் இடம்பெற்ற மையைக் காணலாம் தமிழிலக்கண மரபின் படி, ரகரம் மொழிக்கு முதலில் வராது. ஆனல் வடமொழிச் சொற்கள் பலவற்றில் ரகரம் மொழிக்கு முதலில் வருகின்றது. அத்தகைய சொற்கள், சொற்ருெ டர்கள் தமிழில் வந்த மையும் போது இகரம் அல்லது உகரம் மொழிக்கு முதலில் வரும் என்று தமிழிலக்கண நூல்கள் கூறும் . சாசனங்க ளில் இருவகை வடிவங்களும் காணப்படும்:-
ராசகரம் - இராசகரம் (அரண்மனை).
ரத்தமானியம் - இரத்தமானியம் (இறந்த போர்வீர னுடைய குடும்பத்தினருக்கு விடப் ill-L- p56th)
303

Page 163
ரத்தக்காணிக்கை - இரத்தக்காணிக் கை (இர தீ க
Dmt Gofuuub). ருத்திரர் - உருத்திரர் (சிவனடி யார்). ருத்திரகணிகை - உருத்திர கணிகை (சிவன்கோவில்
தேவரடியார்) ருத்திரகணம் - உருத்திரகணம். டங்கசாலை என்பது இடங்கசாலை (நாணயம் அச்சி சிடும் இடம்) எனவும் எழுதப்படுகின்றது.
சங்கத மொழி ஆகார வீற்றுச்சொற்கள் ஐகார வீற்றுச் சொற்களாகத் தமிழிலே திரியும். அஃறிணை ஒன்றன் பாற் பொருளை யுணர்த்தும் சங்கத மொழிச் சொற்கள் தமிழிலே வந்த மையும்போது, அம்விகுதிபெறும்; எனவே ஒரு சங்கதமொழிச்சொல் தமிழில் இரண்டு வடிவம் பெறுவதுண்டு:-
வேதனம் - வேதனை (கூலி) சிராவணம் - சிராவணை (ஆவணம்); கலாபம் - கலபை (கலகம்).
ஆண்பாலையுணர்த்தும் சங்கதமொழிச் சொற்கள் தமிழில் வந்த மையும்போது ஆண்பால் விகுதி பெறும், இகர விகுதி வினைமுதற் கருத்தாவையுணர்த்த உதவும். எனவே, இங்கும் இரண்டு வடிவங்கள் அமைகின்றன:-
மகாவிரதன் - மகாவிரதி மகாப்பிரதான ன் - மகாப்பிரதானி(சேனைத்தலைவன்)
வடமொழிக்குச் சிறப்பாக உரிய எழுத்துக்களாலாய சொற்கள் தமிழில் வந்தமையும்போது ஒலித் திரிபுகளை அடைகின்றன. அவை பெரும்பாலும் தமிழ்நெடுங்கணக் கிலுள்ள எழுத்துக்களால் எழுதப்படுகின்றன. சில ஒலி கள் மட்டும் கில சற்தரிப்பங்களிற் கிரந்த எழுத்துக்க
304

ளால் தமிழ்மொழியிலும் எழுதப்படுகின்றன. இவ்விரு வகையிலும் தமிழில் அமையும் வடமொழிச் சொற்கள்:-
பரிவாரம் - பரிகாரம்: பிரமஸ்தானம் - பிரமத்தானம் (பிராமணர் குடி
யிருப்பு) மத்தியஸ்தன் - மத்தியத்த்ன். மஹா - மகா. ராஜகரம் - ராசகரம் (அரண்மனை): மரிஜாதி - மரிசாதி (எல்லை, வரம்பு, வீதம்); பிரம்மாதிராஜர் - பிரம்மாதிராயரி(பிராமணமந்திரி) ஜோடி - சோடி. Κα சோமயாஜி - சோமயாசி (ஒருவர் பெயர்); வித்துவஜனம் - வித்துவசனம் (வித் து வான் கள்
கூட்டம்) ஸ்தூபி - தூபி (கோயில் விமானத்தின் உச்சி). ஸ்நபனமண்டபம் - நடனமண்டபம் (குளிக்கும் மண்ட Lub ஸ்வாமி - சுவாமி.
ஸ்வரூவம் - சொரூபம் மோகூrம் - மோட்சம், மோக்கிழம்: பகrம் - பட்சம், பக்கிழம். ராஜக்ருகம் - ராசகரம்
சங்கத மொழியிற் கூட்டெழுத்து இடம்பெறுவது போலத் தமிழில் இடம்பெறுவதில்லை. கூட்டெழுத்துக் களையுடைய சங்கதமொழிச் சொற்கள் தமிழில் வந்தமை யும்போது, அக் கூட்டெழுத்துக்களிடையில் இகர அல்லது உகர உயிர் புகும். தமிழ் இலக்கண மரபுப்படி மெய் யோடு மெய் மயங்கமாட்டாத இடங்களில், அவை மயங்கி வ்ரத்தக்க வகையிலே திரிபு பெறும்:
305

Page 164
ப்ராப்தி - பிராப்தி, பிராத்தி. தர்மாசனம் - தருமாசனம் ஆ ஜ்ளுப்தி - ஆணத்தி (கட்டளை) வங்சம், வம்சம் - வங்கிசம், வம்மிசம், தயிரமிர்து, தயிரமுர்து.
பூரீ என்னும் சொல் சிரீ, சிரி, சீ, திரு எனப்
பலவகையாகத் திரிவதைச் சாசன வழக்காறுகளில் காணலாம் :-
பூரீ காரியம் - சீகார்யம் (கோயிற் காரியம்). பூரீ ருத்திரர் - சீருத்திரர் (சைவத்துறவிகள்). பூரீ பாதந்தாங்கி - சீபாதந்தாங்கி (விழாக்க ர ல ங்
களிற் சுவாமி காவுபவர்கள்) பூg பண்டாரம் - சீபண்டாரம் (கோயிற் பண்டங்கள்
வைக்குமிடம்). பூரீ வைணவர் - சிரிவைணவர். பூரீ முகம் - சிரிமுகம், சீமுகம் திருமுகம்,
மூலபரிஷத் என்ற சங்கத மொழித் தொடருக்கு
மூல பரிஷை, மூலபரு ைஷ, மூலபருடை, மூல பரிடை முதலிய திரிபுகள் வழங்கியுள்ளன. தமிழ் மொழியிலே தமிழொலிக்கேற்ப வந்தமைந்த வடசொற்கள் திரிந்து வழங்குவதற்கும் சாசனச் சான்றுகளுண்டு:-
306
மைத்துனர் - மைச் சுனர்.
வித்தியாதரன் - விச்சாதிரன்.
நாயனுர் - நயினர்.
கல்லாணக்காணம் - கல் லாலக்காணம் கண் ஞ ல க்
காணம் (கல்யாண வரி)
அகிதம் - அகு தம் (இடையூறு).
அவதானம் - அவசானம் (முடிவு)

நாவிதம் - நாவிசம் அங்கவைத்தியர் - அங்கவயிச்சியர் (ஆயுர்வேத வைத்
uuri). வாத்தியமாராயன் - வாச்சியமாராயன் (கோ யி ல்
மேளத்தலைவன்). அபரபசஷம் - அமர பசுஷ்ம் (தேய்பிறை) நிபந்தம் - நிவந்தம். நபன பண்டபம் - நமன மண்டபம். நிபந்தம் - நிமந்தம். தபசி - தவசி, தசபந்தம் - தசவந்தம் (பொதுக்காரியங்களுக்காகப்
பத்தில் ஒரு பங்கு வரி; நியதி - நிசதி சீவிதம் - சீவியம். நாராய நாழி - நாராசநாழி(இரும்பாலான ஓர் அளவு) வைத்திய விருத்தி - வயித்திய விருத்தி ( ைவத் தி ய
ருக்குக்கு விடப்பட்ட நிலம்); சம்படம் - சம்பளம், சம்மாதம் வியஞ்சனம் - வெஞ்சனம் (சோற்றுடன் வழங்கப் படும் கறி முதலியவை). சந்திராதித் தவத் - சந்திராதித்தவற், சந்திராதித் தவல் (சந்திர சூரியர் உள்ள வரை), s Lumraíðbo - F Gao Luaíðav. சாசுவதம் - சா சுவதியம் (நித்தியம்), தமனகம் - தவனகம் (மருக்கொழுந்து), பரிவட்டம் - பரிசட்டம், பரியட்டம் (ஆடை?). திகதி - தியதி, தேதி. உபத்திரவம் - உபத்திரகம் தர்மவாணிகர் - தர்மவாணியர் (வணிகர்). விகிதம் - விசதம், விசம் وهية பஞ்சாளர் - பஞ்சாளத்தார், பஞ்சலத்தாரி (கம்மா
ளர்),
307

Page 165
டங்கசால், தங்கசாலை (நாணயசாலை). சந்ததி - தந்ததி சண்டேசுரன் - தண்டேசுரன், தண்டீசுரன்;
வடமொழிச்சொற்கள், சொற்ருெடர்கள் தமி ழாச்கம் செய்யப்பட்டுள்ளன. சாசனங்களில் வடமொழி வழக்காறுகளையும் அவற்றின் தமிழாக்கங்களையும் கான லாம். பிறமொழிச்சொற்களைத் தமிழாக்கம் செய்ய வேண்டியது முக்கியத்துவம் பெற்றுள்ள இக்காலத்திலே சாசன வழக்காறுகளை உணர்ந்துகொள்வது பயனளிக்கும்
ஏகபோகம் - ஒரு பூ3 அந்தப்புரம் - அகம்படி வித்தியாத்தி, விச்சாத்தி - மாணவன், தாம்பூலம் - சுருளமுது திருமேனி - திருவுடம்பு தான் சாசனம் - திருவிடு. கோகுலம் - திருவாய்ப்பாடி கர்ப்பக்கிருகம் - உட்கோயில், அகநாழிகை, திருவுள்
(609A6Da தாமம் - தொங்கல்: R பரிவர்த்தன - தல்மாறு. மாரிக்காதாயம் - வழியாயம்; avFmrğ Spr rit — G3as u "G3umr ff. சுவர்ணுதாயம் - சுவர்ணவரி, சொனவரி சுவர்ணதண்டம் - தட்டார்பாட்டம் செக்காயம் - செக்கிறை, செக்குக் கடமை சிற்றயம் - சிறுவரிகள், சில்லாயம் - சில்லிறை, சில்வரி. பரிவட்டம்-சாத்துக்கூறை. திருத்தியபோகம் - சாக்கைக்காணி, சர்வமானியம் - முற்றுTட்டு
308

சபை - குறி: சபா மத்யமம், சபா மஞ்சிக்கம் - ஊர்ப்பொது, சந்தியா தீபம் - சந்திவிளக்கு. சக்கரக்கல் : ஆழிக்கல். உற்சவமூர்த்தி - எழுந்தருளும் திருமேனி அந்தராயம் - உள்வரி. அரசன் - உடையார், உலகுடைய பெருமாள், இறைதிரவியம் - இறைபொருள். பாலா லயம் - இளங்கோயில். சம் வத்சரவாரியர் - ஆட்டைவாரியர், தர்மசாசனம் - அறவோலை; நைவேத்யம் - அமுதுபடி3 − அவனிவேதனம் - பாடி காவல், ஊர்க்காவல், தவளசத்திரம் - வெண்குடை. அபயம் - அஞ்சினன் புகலிடம் கவசம் - திருக்கொள்கை. குமாரவிருத்தி - பிள்ளை வரி. குமாரவர்க்கம் - பிள்ளைகள்தனம். அபிசேகமண்டபம்-திருமஞ்சனசாலை,குளிக்கும் இடம் அகோவனம் - பாழ் பூமி, தரிசு நிலம். ஆசனம் - மெய்தாங்கி.
பத்திரம் - முறி.
நெல்லாயம் - நெற்கடமை. ஹவிர்பலி - தீயெறிசோறு. காலதோஷம் - காலப்பொல் லாங்கு. நஷ்டம் - உள்ளிட்டம். தகFணபுஜம் - வலதுகை. போதம், சீபாதந்தாங்கியள் - திருவிழா தூக்குவோர். கும்பாபிஷேகம் - கலசமாட்டுதல், குதிரை விலாடம் - குதிரைப்பந்தி, குதிரை மாற்று. ஆஜ்ஞாகிரயம் - ஆணைவிலை. திருநந்தவனம் - திருத்தோப்பு.
309

Page 166
திருப்பட்டம் - திருநெற்றித் திரனை துவஜ ஆரோகணம் - ஏறுசாத்து துவஜ அவரோகணம் - இறங்குசாத்து,
தமிழ் இலக்கணம் கூறுகின்ற புணர்ச்சி விதி
களைச் சாசனத் தொடர்கள் சில அனுசரிக்கவில்லைg
காசுகல் (தங்கம் முதலியவற்றை நிறுக்கும் எடை) கோல்கூலி (அளவு ‘கோலுக்கான கூலி). கோல்நிறைகூலி (கோலால் நிறுத்துவிற்கும் பொருள் கள் மீது வரி). கடமை காரியம் (அரசாங்கத்தின் நிர்வாக அலுவல்)
சாசனச் சொற்ருெடர்களிற் சில, சில சந்தர்ப்பங்
களிலே திரிபுவிகாரம் பெற்றும் வேறு சில சந்தர்ப்பங் களிலே திரிபுவிகாரம் பெருமலும் எழுதப்பட்டுள்ளன.
310
நல்கிடா - நற்கிடா. நல்பசு - நற்பசு. ஆடிறைப்பாட்டம் - ஆட்டிறைப்பாட்டம். கல்நாடு - கன்னடு (இறந்தவர் ஞாபகார்த்தமாகக் கல் எழுப்புதல்). முதல்திரமம் - முதற்றிரமம்3 நாடுவாரியம் - நாட்டுவாரியம். குரால்பசு - குராற்பசு (கபிலை நிறப்பசு), உள்நிலம் - உண்ணிலம். ஆள்நெல் - ஆனெல் (நெல்லாக இறுக்கும் வரிவகை), இருவகையாகப் புணர்ந்த தொடர்களும் சில உள தட்டார் பட்டம் - தட்டாரப்பட்டம். தண்டக்குற்றம் - தண்டங்குற்றம் (குற்றம் இழைத்த திற்கு அபராதம்.) காசாயம் - காசு ஆயம்.

வீரகல் - வீரக்கல் வலங்கை - வலதுக்கை
திருநாமக்காணி - திருநாமத்துக்காணி(சிவன் கோயில் நிலம்);
சொற்கள் தொடர்ந்து வந்து புணர்ந்து காணப் படும்போது சுலபமாகப் பொருள் புலப்படாது பொருள் மயக்கம் ஏற்படக்கூடிய இடங்களிலும் சொற் கள் புணர்ந்து காணப்படும் தொடர்கள்:-
நாட்டுபாதி - நாட்டு உபாதி (நாட்டுக்குச் செலுத்த
வேண்டிய கடமைகள்); நாட்டிருவமுது - நாள் திருவமுது. திருவிளக்குடையார் - திருவிளக்கு உடையார்: கரைக்கூறுசெய்வார் - கரை கூறு செய்வார்; தேசவாளி - தேச ஆளி (தேசத்தை ஆளும் அதிகாரி). திருவிருப்பு - திரு'இருப்பு (கோயில் அமைந்துள்ள
இடம், கோயில் கட்டிடம்). உல் கூட்டுச் சரக்கு - உல்கு ஊட்டுச்சரக்கு (சுங்கம்
வசூலிக்கக்கூடிய பண்டம்) நிலமடக்குதல் - நிலம் அடக்குதல். வரிசையிலிட்டபடி - வரிசையில் இட்டபடி, ஆட்டிறை - ஆடு இறை: வரிக்கூறுசெய்வரர் - வரி கூறு செய்வார்.
பொருள் மயக்கத்தை நீக்குவதற்காகக் கடைசியிலுள்ள இரு தொடர்கள் ஆட்டுக்கிறை, வரிக்குக்கூறுசெய்வார் என விரித்தெழுதப்படுவதும் உண்டு.
ஒரு பொருட் பன்மொழிகள் பல வழங்குவ தைச் சாசனங்களிலே காணலாம் வரிகளில் ஒவ்வொன்
31.

Page 167
றின் பெயரைக் குறிப்பிடும்போதும், பெரும்பாலும்
இவ்
வழக்காறு அமைவதைப் பின்வரும் எடுத்துக்காட்டு
களிலிருந்து உணரலாம்.
312
வெட்டிக்காசு, வெட்டிவரி, வெட்டிப்பாட்டம் (கூவி இல்லாமற்செய்யும் ஊழியம் பற்றி ஊர்ச்சபைக்கு
இறுக்கும் கடமை) வாசல் காணிக்கை, வாசல் நிர்வாகம் வாசல் திரமம், வாசல் பணம், வாசல் வினியோகம் மனையிறை, மனப்பணம், மனைவரி, இரத்தமானியம், இரத்தக்காணிக்கை; Lué68)&Fushu.J 6007 b, tué 689&P'tit Tu". L-b: தறிக்கடமை, தறியிறை, தறிதளை, தறிக்கூறை, தறிப்புடைவை: தட்டுக்கானம், தட்டுக்காயம், தட்டொலி, தட்டாரி urru, Lub? குடிக்காசு, குடிப்பணம், குடிக்கானம் கார்த்திகைக்காசு, கார்த்திகைக் காணிக்கை, காரித் திகைப்பச்சை). காரித்திகை யரிசி (கார்த்திகையில் அறுவடைக்காலத்
தில் தானியமாகச் செய்யும் செலவு) ஓச்ைசம்படம், ஒலைச்சம் மாதம், ஒச்ைசம்பளம் நெல்லாயம், நெற்கடமை: as air Lintub, as LIT tub அச்சுவரி, பொன் வரி. தலையாரிக்காணி, தஸ்யாரிக்கம். கணக்கப்பேறு, கணக்கக்காணி. காணிக்கடன், காணிக்கூலி (நிலவரி): அந்த ரா யக் காசு, அந்த ராயப்பாட்டம்3 கடையிறை, கடைப்பாட்டம் ஏரிமீன்காசு, ஏரிமீன்பாட்டம், ஏரிமீன் வில்ப்பாட்
lib

eit 4s it (g, & if dist Goof46 s, systical irrat, tdallaoub மேலொடி, மேற்பாதி, மேல்வாரம் விவாகப்பணம், கண்ணுலக்காணம்; வெட்டிப்பேறு, வெட்டியாள், வெட்டிவரி: வண்ணுரப்பாறை, வண்ணுன் வரி, பாறைக்காணம்,
வண்ணுன்பாறை படைப்பணம், படைக்காணிக்கை. உப்பாயம், உப்புக்காசு ஆற்றுக்குலை, ஆற்றுப்பாட்டம், ஆற்றங்கரைதி
தேவை ஆடிப்பச்சை, ஆடி நவிரை, ஆடிக்குறுவ்ை: tu>o F lou Lu 6007 tib, Joéjo 60) go tut-unrulo - Lib. ஆட்டைச்சம் மாதம், ஆட்டைக்காணிக்கை (வருடந் தோறும் செலுத்தவேண்டிய காணிக்கை); ஆட்டுக்கிறை, ஆட்டுவரி, ஆட்டிறை அங்காடிக்கூலி, அங்காடிப்பாட்டம்; மீன்கடமை, மீன்பாட்டம், பாசிப்பாட்டம் நீர்க்கானம், நீர்வி:ை அதிகாரவர்த்தனை, அதிகாரப்பேறு, அதிகாரப் GQ Lurr 6iv . இடைப்பாட்டம், இடைப்பூட்சி, இடையர் வரி; தெண்டகுற்றம், தெண்டந்தீர்வை. கோட்டைக்கூலி, கோட்டைமகமை குசக்காணம், திரிகை ஆயம்.
கோவிலில் ஒரு பகுதியைக் குறிப்பிடத் திருச்சுற்றலை, திருச் சுற்றலயம், திருச் சுற்றுமாலை, திருச்சுற்றுமாளிகை, திருச்சுற்று மண்டபம் என ஐந்து பெயர்கள் வழங்கி யுள்ளன. அதே போல விலைச்சிராவணை, கிரயசாசனம், விலையாவணம், விலையோலை, விலைப்பிரமாணம், விலைத் தரவு என்பன ஒரு பொருட் பன்மொழிகளாகக் காணப் படுகின்றன;
313

Page 168
வரியைக் குறிக்கும் சொல் இடம் பெரும் சொற்ருெடர்கள் வரிகளைக் குறிக்க வழங்கியுள்ளமை யைச் சாசனங்களிலே காணலாம் சொற்ருெடருக்குப் பிறிதொரு சொல்லைச் சேர்த்து நீட்டிச்சொல்ல விரும் பாமை இத்தகைய தொடர்கள் வழங்கக் காரண uonTas6)T ub:-
gj6) (Turtu lb உறைநாழி சபா வினியோகம் உறுபாதை, கெடுபாதை 60s antg உழுகுடி, உழவு குடி3 பாடிகாவல் எற்சோறு
அருந்தோடு தூாசகத்தறி கொடை வடக்காய் தோலொட்டு பட்டிக்கால் பட்டிக்கா டி. உப்புக்கோச்செய்கை வட்டி நாழி
பழநெல் முத்த வாணம் சேவகத்தேவை பறைத்தறி
ஆற்றங்கரைத் தேவை ஆண்டெழுத்துத்தேவை எற்சோற்றுக்கூற்றுநெல் யானைச்சாலை, ஆனை ச்
ø*በräክ) குடநாழி முகம்பார்வை திரிகை பணிக்கொத்து நாடுகாவல் கூலம் A列灰「@ கையேற்பு எழுத்துவினியோகம் ஊடுபோக்கு
காலத்தால் மாருது என்றும் ஒரே நிலையிலிருக்கவேண் டும் என்ற பொருளை உணர்த்த வேண்டியதேவை சாச னங்களைப் பொறிப்பவருக்குப் பலமுறை ஏற்பட்டது: அத்தகைய சந்தர்ப்பங்களில், சந்திராதித்யவத், "சந்திர குரியர் உள்ளவரை ஆசந்திர தாரம், "சந்திரனும் நட் சத்திரங்களும் உள்ள வரை" என்னும் வடமொழித்
34

தொடர்கள் வழங்கப்பட்டுள்ளன; வாடு என்பதன் எதிர் மறை வடிவமான வாடா என்பது இப்பொருளை உணர்த் தப் பெயரடையாக வழங்கப்படுவதுண்டு
வாடாக்கடன் வாடாக்கடமை
உடை என்னும் சொல் ஓரிடத்தில் மட்டும் அடையாக உடைப்படை என வழங்கப்பட்டுள்ளது. ஆனல் பெரும் பாலும் நிலை என்ற சொல் அடையாக வழங்கியது:-
நிலையிறை நிலைப்பொலியூட்டு நிலையாள் நிலைப்பந்தம் நிலைப்படை
ஆகும் தொறுநிலை என்று வரும்போது Gastr gy அந்ைது திரியாது தங்கியிருக்கும் இடம் என்ற பொரு ளில் தொழுவத்தைக் குறிக்கிறது.
கல்வி, சமய, சமூகச் சேவைகளுக்கான வசதி கள் கொடைகள் மூலம் செய்யப்பட்டன. இச்சேவை களின் வளர்ச்சிக்காக நிலங்கள் விடப்பட்டதால், சேவை யின் வகையோடு விருத்தி என்பதைச் சேர்த்துக் கூறும் வழக்கம் காணப்பட்டது.
வேத விருத்தி விஷ விருத்தி வியாக்யான விருத்தி வயித்திய விருத்தி அத்தியயன விருத்தி
35

Page 169
தலவிருத்தி
தேவவிருத்தி
மகாபாரதவிருத்தி, பாரத விருத்தி
பூஜா விருத்தி
பாஷிய விருத்தி
பாட்டவிருத்தி, பட்ட விருத்தி, பட்டவிருத்தி
ம்ானியம்
அர்ச்சனவிருத்தி
சேவையின் வகைய்ோடு ஜீவிதம் என்பதைச் சேர்த்துக் கூறினர்;
தண்டிகை ஜீவிதம் ஊர்க்கணக்கரி ஜீவிதம்
சேவையின் வகையோடு போகம் என்பதைச் சேர்த்தும் கூறினர்;
இறைபோகம் வீரபோகம்
தல போகம் நிருத்தியபோகம்
விஷஹரபோகம் Sfu GóG3Lumrash, gjo u Gó) G3 Lumrash
வித்தியானுபோகம் வைத்தியபோகம், வைத்திய LitT is b
அரிச்சனுபோகம் ,
சாலாபோகம், அறச்சாலாபோகம்.
வடசொற்களை மட்டுமன்றி, பேறு, புறம், பட்டி, விளா கம், பாத்தி, பற்று, காணி என்னும் தமிழ்ச் சொற்களை யும் சேர்த்து வழங்கினர்:-
மருத்துவப்பேறு, சீகாரியப்பேறு சண்டாளப்பேறு, அட்டிற்பேறு அதிகாரப்பேறு, பாரதப்புறம் தயிற்
36

திரியக்கிடைப்புறம், மெழுக்குப்புறம், அடுக்கக்ளப் புறம், திருவிழாப்புறம், திருஞானப்புறம், கிடைப் புறம், பவிஷ்யக்கிடைப்புறம், திருமடைப்பள்ளிப் புறம், மடப்புறம், திருப்போனகப்புறம், அவல முதுப்புறம், அம்பலப்புறம், அர்த்த சாமப்புறம்: ஏரிப்பட்டி, யக்கியப்பட்டி, சீபலிப்பட்டி (பூgபலிப் பட்டி), பிடாரிப்பட்டி: ஐயன்பாத்தி (ஐயனர் கோவிலுக்கு விட்டமானி
ம் அகரப்பற்று, இராசகுலம் காணிப்பற்று աւb) பிடாரி வளாகம் அரிச்சணுவியாவக்காணி
சேவையென்று சுட்டிக்கூருமலும் சில தொடரிகள் வழங் ଈଭor:- V
புரோகிதக்காணியாட்சி சரோத்திரியம்
சேவைகள் நடைபெறுவதற்கான இடவசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.
வியாகரணத்தான மண்டபம் வக்காணிக்கு மண்டபம்
சொற்களிலிருந்து பிறசொற்கள் ஆக்கப்படுவதற்கும் சாசன வழக்காறுகள் பல உள.
பெயர்ச்சொல்லாக்கம்
கருத்தாப்பெயர்: வாரியம் - வாரியன் - வாரியப்பெருமக்கள் வாய்க்கேள்வி = வாய்க்கேள்வியார் - வாய்க்கேட் பார்
புரவுவரி - புரவுவரியார் (அரசாங்கத்து வரிக்கணக்கு
)நிர்வகிக்கும் அதிகாரி ی
317

Page 170
38
பதினறு - பதினறு மார் (கோவில் விசாரணைச்சபை) நிமந்தம் - நிமந்தகாரர் நம்பு - நம்பி - நம்புசெய்வார் (கோவில் பூசை செய் u6Qu rh ) அம்பலம் - அம்பலத்தார் (சபையாரி) நியாயம் - நியாயத்தார்; பாட்டம் - பாட்ட மாளன் (வரிவசூலிக்கும் அதிகாரி) திருமெய்காப்பு - திருமெய்காப்பான் எரிமருந்து - எரிமருந்தன் கடிகை - கடிகையார் திருக்கைக்கோட்டி - திருக்கைக்கோட்டியோதுவார் தலம் - தலத்தார் (கோவில் அதிகாரிகள்) உள்ளிட்டு - உள்ளிட்டார் (அந்த வமிசத்தவர்கள்) ஊர் - ஊரோம், ஊரவர், ஊராளர். உவச்சு - உவச்சன் (கோவில் மத்தளம் கொட்டு
Luau 6ây)
செம்மருதம் - செம்மருதர் (நல்ல விவசாயிகள்)
சவை - சவையார். சந்திவிக்கிரகம் - சந்திவிக்கிரகி கரணம் - கர ணத்தார், காரண வரி. கண்காண் - கண்காணி (சீகாரியக் கண்காணி) குரு - குரவடிகள், குரத்தி ஆள் (ழ்) - ஆழ்வார், ஆழ்வி பதி - பதியார் மண்டலமுதல் - மண்டலமுதலியார், தானம் - தானத்தார் சாத்த கணம் - சாத்த சணத்தார்; காளிகணம் - காளிகணத்தார் சமயமுதல் - சமயமுதலி (சமயத்தலைவர்) கேள்விமுதல் - கேள்விமுதலி (அரசன் வாய்மொழி யாக இடும் உத்தரவுகளை உரியவர் களுக்கு அனுப்பும் அதிகாரி)

மாணிக்கம் - மாணிக்கத்தார் (தேவரடியார்) ஆளும் கணம் - ஆளும் கணத்தார் அட்டகம் - அட்டகத்தார் ul *G3Lmr8ÄD - tumr L.G3 l mt 8bD தண்டு - தண்டல், தன்டாளர் (உப்பு) அளம் - அளவர் அகநாழிகை - அகநாழிகையார் (கர்ப்பக்கிருகத்தை
நிர்வகிப்பவரி)
உண்ணுழிகை - உண்ணுழிகையாரி (, ) அணுக்கம் - அணுக்கர், அணுக்கியர் (அந்தரங்க
ஊழியர்)
அழிவுசெய் - அழிவு செய்வான் அடைப்பம் - அடைப்பக்காரன் (அடைமானம் பிடிப் Lu avesår) தழையிடு - தழையிடுவார் (கோவிலில் வில்வம்,
திருத்துழாய் முதலிய பச் சிலைத் திருப் பணி செய்வார்) தருமாசனம் - தருமாசனத்தார்
நந்தவனம் - தந்தவனக்குடி விளக்கு - விளக்குக்குடி கைவினை - கைவினைக்குடி வகைசெய் - வகைசெய்கிறவர் (நிலத்தின் தரம் அளவு முதலியவற்றை ஒழுங்கு செய்து தீர்வை விதிக்கும் அதிகாரி) தண்டெடு - தண்டெடுப்பார் தண்டம் - தண்டாளர் பாட்டம் - பாட்டமாளன் (வரி வசூலிக்கும் அதி
asn f) சீபலி கொட்டு - சீபலிகொட்டுவார்
319

Page 171
தொழிற்பெயர், வினையடிப்பெயர்:
320
வா - வரவை வரத்து வாராவைகள்; (பல)
6 TRO DA
வரி - வரிசை,
மன்று - மன்றுதல், மன்றுபாடு (அபராதப்பனம்)
பகும்று - பகும்றுதல் (பங்கிடுதல்)
நீர்க்கோர் - நீர்க்கோர்வை; நீர்க்கோப்பு
நாடுகா - நாடுகாவல்
நாடுவகு - நாடுவகை
தூங்கு - தூக்கம்
தீண்டு - தீண்டல்
தீகரி - தீகரிப்பு (பயிர் முதலியன தீய்ந்துபோய்க்
கேடுறுதல்)
ஏற்று - ஏற்றுதல் ஏற்றம்
திருந்து - திருத்தம்
உழ - உழத்தல், உழப்பம்
கொள் - கொள்கை (கொள்கலம்)
கல்நடு = கல்நாடு;
தா - தரவு
ւյց - ւկՄa!
தண்டு - தண்டுதல், தண்டல்
உட்கொள் - உட்கொள்ளுதல்
இறு - இறை, இறுப்பு
காணியாள் - கானியாட்சி; தானியாண்மை (பரம்
பரையாக அனுபவிக்கும் உரிமை) அரக்கு - அரக்கல் (அரசாங்கத்துக்குச் செலுத்தும் இறையைச் சிறுபகுதிகளாகக் கட்டுவதற் கான தவணை) அடை - அடைப்பு (அடையாளர் பெற்றுள்ள நிலம்) அடைகொள் - அடைகொள்ளுதல் (ஒற்றியாகப்
பெறுதல்)

நாடுகண்காண் = நாடு கண்காட்சி. காடுகொள் - காடுகோள் (விளைநிலம் காடுமண்டிப் G3. u trá5 do)
பெயர்ச்சொற்கள் துணைவினைகொண்டு தொழிற்பெயர் விகுதியும் பெறுவதுண்டு:-
பிரசாதம் - பிரசாதம் செய்தல், பிரசாதப்படுதல் உதகம் - உதகம் செய்து, உதகம் பண்ணி
பாரிசம் - பாரிசஞ்செய்தல் (பொறுப்பாக்குதல்,
ஒப்படைத்தல்)
திருநிறம் - திருநிறஞ்செய்தல் (பொன்முலாம்
இடுதல்)
வகை - வகைசெய்தல், வகைந்த காசு என்பதில்
வகை வினைப் பகுதியாக வருகின்றது:
போகி - போகியார் (காதற்கிழத்தி, மனைவி),
மாமன் - மாமடி என்பன மரியாதையை உணர்த்து வதற்காக அடைந்த மாற்றங்கள் :
நல்ல, தூய பொன் என்பதை உணர்த்துவ தற்கு உலவி பொன், தீப்போக்குச் செம்பொன், இரா சிப்பொன், ரேகைப்பொன் என்னும் தொடர்கள் வழங் கியுள்ளன5 நன்கு குற்றித்தீட்டிய அரிசி என்பதை உணர்த்துவதற்குப் பூரிக்குத்த லரிசி, தூக்குத்த லரிசி, கூற்று நெல்லு, கூற்றரிசி, குற்றுநெல் என்னுந்தொடர் கள் வழங்கியுள்ளன:
பெயரைத் தொடர்ந்து ஏழாம் வேற்றுமைப் பொருளை உணர்த்தும் இல்லுருபும் அதனைத் தொடர்ந்து பலர் பால் விகுதியாகிய ஆரும் இடம்பெறும் சொற்கள் சில காணப்படுகின்றன
321

Page 172
வாளிலார் - வான்+இல் + ஆர் வழியிலார் (வழிக்கண்ணுர்) - வழி+இல் + ஆர் (வழி 4 கண் + ஆர்) வரியிலார் - வரி+இல் + ஆர் பதியிலார் - பதி+இல் + ஆர் நியாயங்களிலாரி - நியாயங்கள் + இல் + ஆர் நகரங்களிலர் - நகரங்கள் + இல் + ஆர் தளியிலார் - தளி+இல் + ஆர் குடியிலார் - குடி + இல் + ஆர்
பெயரைத்தொடர்ந்து எதிர்மறை இல் லும் இகர விகுதியும் இடம்பெறும் சொற்கள்:-
இறையிலி - இறை + இல் + இ தரமிலி - தரம் + இல் + இ
பெயரைத் தொடர்ந்து வினையும் இகர விகுதி யும் பெற்று ஒரு சொல்லைப்போல வழங்குவது:-
மன்ருடி (இடையன்) - மன்று +ஆடு+இ.
சொற்களும் சொற்ருெடர்களும் மரூஉ வாக வழங்கும் இடங்கள் பல, சாசனங்களில் முழுவடிவங் களும் மரூஉவடிவங்களும் காணப்படும் எடுத்துக்காட்டுக் களிற் சில வருமாறு:-
குன்றுமணி - குன்றி காராண் கிழமை - காராண்மை (பயிரிடும் உரிமை) (பொன்) மாற்று - மாறி.
ஜினநகரம் - சினகரம் தண்டிகை - தண்டு (பல்லக்கு) சாலிகைத்தறி - சாலியத்தறி (துணிநெய்யும் தறி) திருமந்திரபோனகம் - திருப்போனகம் ஊராண்மை - ஊரமை
ஒரு தடவை - ஒரு துடை உத்தரவாதம் - உத்தாரம்
322

சீபாதந்தாங்கிகள் - சிபாதம் உகப்பார் பொன் - உகவை (சந்தோஷக்காரியங்களுக் குச் செலுத்தும் வரி) ஈழக் கருங்காசு - ஈழக் காசு, கருங்காசு (ஒரு வகை நாணயம்) ஆதுலர் சாலை - ஆதுர சாலை (வைத்தியசாலை) அடைக்காயமுது - அடையமுது (தாம்பூலம்) காசாயவர்க்கம் - காசாயம், கரசு வர்க்கம் கொட்டகாரம் - கொட்டாரம் ஆசீவகர் காசு - ஆசீவக்காசு (ஆசீவகர் என்ற சமயப் பிரிவினரி மேல் விதித்த வரி): புதாநாழி - புதாழி (வரிவகை) திருவுண்ணுழிகை - திருவுண்ணுழி நிர்ணயம் - நின்றயம் சதுர்வேதிமங்கலம் - சதுர்பேதிமங்கலம், சருப்பேதி மங்கலம், மங்கலம், (நாலு வேதங்கள் அறிந்த பிரா மணர் இருக்கும் இடம்): பொலிகையூட்டு - பொலியூட்டு (வட்டிப்பெருக்கம்) புரவுவரி - புரவரி (நிலவரி) தண்டலிற்கடமை தண்டற்கடமை அபிஷேகக்காணிக்கை - அபிஷேகக் காணி, வாசல் காரியம் - வாசல் சிறு கூலவிசேஷம் - கிறுகுலம். பறைத்துடைவை - பறைமை(பறையருக்கு மானியம்) நாட்டாண்மை - நாட்டாமை. துளை நிறை செம்பொன் - துளை நிறைபொன், துளை நிறை (சுத்தமான பொன்). தலையாரிக்காணம் - தலையாரிக்கம் (தலையா ரிக் கு க் கொடுப்பதற்காக விதிக்கப்பட்ட வரி). செட்டியிறை - (வியாபாரிகள் இறுக்கும் வரி) குடி நற்கல் - குடிஞைக்கல், குடினை (நிரின்யிக்கப் பெற்ற நிறையுடைய நற்கல்);
323

Page 173
அள்ளாயம் - அள்ளு, அளு (சந்தை விற்பனைப் பொருள்களின் ஒரு அள்ளு). அபிஷேகக் காணிக்கை - அபிஷேகக்காணி பதிபாத மூல பஞ்சாசாரியர் - பதிபாத மூலப்பாடு டையர், பதிபாத மூலத்தார், பதிபாத மூலம் (சிவன் கோவிலை நிர்வகிப்பதற்காகப் பூசை செய்வோரைக் கொண்டசபை), பஞ்ச சலாகை அச்சு - பஞ்சால அச்சு (நாணயம்); பூரீயக்கி பழஞ்சலாகை - பழஞ்சலாகை, சலாகை: தேவரடியார், தேவடிமை - தேவடியார் அங்கரங்க வைபவ்ம் - அங்கரங்க வைபோகம் (சகல உபசாரங்களும் கூடிய பூசை). அபூர்வி - அபூரி (வேதம் வல்லவர்) உடன்படிக்கை - ஒடம்படி கோளகை - குளிகை (ஒருவகை நாணயம்)
சாசன வழக்காறுகளுள் அழகான சொற்ருெடரி கள் பல உள. அவற்றுள் நிலம் சம்பந்தப்பட்டன பல:-
செந்நீர்ப் பொதிவி (நல்ல நீர் ஒடும்கால்) தேன் பயில் பொதும்பு (தேன்கூடுகட்டும் சோலை) மேனடை நீர் (அதிகப்படியாக உள்ள நீர்) களர்ப்பாழ் (உப்புப் படிந்த பாழ்நிலம்) சன்றுமேய் பாழ் (கிராமத்தில் கால்நடை மேய்வதற் கான நிலம்) காரி மறுநிலம் (இருபோக சாகுபடி உள்ள நிலம்) குளக்கீழ்(அந்தக் குளத்தின் பாய்ச்சலில் உள்ள நிலம்) தலை, கடை என்னும் காலப்பெயர்களோடு ஈடு, ஊறு முதலிய சொற்கள் வந்த ை:-
தலையீடு கடையீடு (அரசனது முடிவான உத்தரவு) கடையூறு (முடிவாக வரும் தடை)
முற்பணம் என்று இன்று வழங்கும் தொடர்
824

முன்னிடும் பணம் என்று வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு என்பது முன் பிலாண்டு எனவும் வருகிற ஆண்டு என்பது எதிராமாண்டு எனவும் வருடவருமானம் என்பது ஆண்டு கள்ளடவு எனவும் பிரேரித்தல் அல்லது விற்பவன் விலை கூறுதல் முற்கூறுதல் எனவும் ஆமோதித்தல் அல்லது வாங்குபவன் விலை கூறுதல் பிற்கூறுதல் எனவும் வழங்கி யுள்ளன. கையெழுத்திடுதல் திருவெழுத்துச் சாத்துதல் எனவும் கோயிலுக்குக்கொடுக்கப்பட்ட அரிசி முதலியன திருப்படி மாற்று எனவும் கோவிலில் அமுது முதலியன படைத்தல் திருப்படி மாற்று என்றும் அரசனுடைய ஆட்சியாண்டைச் சாசனங்கள், பத்திரங்கள் முதலிய வற்றிற் குறித்தல் திருவாண்டெழுத்திடுதல் எனவும் சில சாசனங்களிற் குறிக்கப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய வேறு சில தொடர்கள்:-
சாவேறு (பகையரசனைச் சூழ்ந்து காக்கும் படை மீது ஊடறுத்துச் செல்லமுயன்று அந்நிலையில் உயிர் துறத்தலையே விரதமாகக்கொண்ட வீரர்)
வரியிலீடு (அர சிறைக் கணக்கிற் சேர்த்தல்) மெய்வேறு (தனித்தனியாய்) மெய்க்காட்டு (நேரில் வந்திருத்தல்) சாவா மூவாப்பேராடு, சாவா மூவாப்பேருரு (சாகாத முதுமையடையாத, இளமைப்பருவத்தைக் கடந்த
ஆடு) என்பனவாம்.
சாசனத் தமிழில் ஒருவருடைய விலாசம் குறிக் கப்படுமுறைக்கும் இன்றைய தமிழில் ஒருவருடைய விலாசம் குறிக்கப்படுமுறைக்கும் வேறுபாடு, உண்டு. ஆளைப் பற்றி இங்கு கூறப்படுவது கோயில் முதலிய இடங்களைப்பற்றிக் கூறப்படும் சந்தர்ப்பங்களுக்கும்
325

Page 174
பொருந்தும் ஒருவருடைய பெயர், அவர் செய்யும் தொழில், தொழில் நிலையம் உள்ள ஊர் என்ற முறை யில் அல்லது ஒருவருடைய பெயர், அவர் வாழும் வீதி, அந்த வீதி உள்ள ஊர் என்ற முறையில் விலாசமெழுது வதே இக்கால முறையாகும். சாசனத் தமிழில் ஆள் அல் லது இடத்தினுடைய பெயர் கடைசியாக வருகின்றது. கீழ்முக வெட்டிதேவன் கமலன் என்ற உதாரணத்தில், கமலன் என்பதே சம்பந்தப்பட்டவருடைய பெயராகும். தேவன் என்பது அவர் தற்தை பெயராகும்,
முகவெட்டி என்பது சோழப்பெருமன்னர் கால அதிகாரி ஒருவரின் தொழிற் பெயராகும் முகவெட்டி கள் முகவெட்டி, கீழ்முகவெட்டி என இரு வகையின ராவர். எனவே, இங்குக் குறிப்பிட்டவர் கீழ்மு கவெட்டி என்னும் தொழிலைச் செய்தவரும் தேவடி மகனுமான கமலனவர். அரு மொழி தேவ வளநாட்டு ஆர்வலக் கூற் றத்துக் கச்சிரமுடையான் பகவன் அங்கி என்னும் உதா ரணத்தில் அங்கி என்பதே சம்பந்தப்பட்டவருடைய பெயராகும். பகவன் என்பது தந்தை பெயராகும். அங்கி கச்சிரம் என்ற ஊரைச்சேர்ந்தவர் உடையான் என்பது ஆரும் வேற்றுமைப் பொருளில் வழங்குகின்றது; கச்சிரம் என்பது ஆர்வலக் கூற்றத்தைச் சேர்ந்த ஊராகும். ஆர் வலக் கூற்றம் அரு மொழி தேவ வளநாட்டின் ஒரு பகுதி யாகும். அருள்மொழித்தேவன் என்பது முதலாம் இராச ராசனுடைய இயற்பெயராகும். மன்னர்களுடைய இயற் பெயர்களும் பட்டப்பெயர்களும் சோழப் பெருமன்னர் காலத்தில் அவர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்டன; அவ்வக் காலச் சோழப்பெருமன்னர் ஆட்சிக்கேற்ப, இப்பெயர்கள் காலப்போக்கில் மாற்ற முற்று வந்ததற்கும் சாசனச் சான்றுகள் உண்டு, வளநாடு என்பது இன்று தமிழ்நாட்டிலுள்ள ஜில்லா அல்லது மாவட்டத்தை ஒத்தது. கூற்றம் என்பது இன்று தமிழ்
326

நாட்டிலுள்ள தாலுகா அல்லது வட்டத்தை ஒத்தது; வளநாடு என்பதற்குப் பதிலாக மண்டலம் என்பதும் கூற்றம் என்பதற்குப் பதிலாக நாடு, கோட்டம் என்பன வும் வழங்கின: "நம் ஒலை எழுதும் உய்யக்கொண்டாரி வளநாட்டுத் திருவழுந்தூர் நாட்டுத் துளாருடையான் நாராயணன் கற்றளியான உத்தமசோழத் தமிழதரையன்", "புரவுவரித்திணைக்களம் சயங்கொண்ட சோழமண்டலத்து எயிற்கோட்டத்து எயினுட்டு நகரம் கச்சிப்பேட்டு வெட்சி கிழான் சோல் குமரன்" என்னும் திருவாலங்காட்டுச் செப்பேடுகளிலுள்ள உதாரணங்களிருந்து இவ்வுண்மை களை உணரலாம்; வட்டத்தைக் கூறியபின்பு, ஊரை வேண்டிய இடத்திற் சிறப்பித்துக் கூறும் பகுதி இடம் பெற்றதையும் மேலே காணலாம். உத்தம சோழத் தமிழதரையன் என்ற பட்டப்பெயர் கற்றளியென்ற இயற்பெயரைத் தொடர்ந்து வந்துள்ளது. மாவட்டம் கூறப்படுவதற்கு முன்பே, "நம் ஒலை எழுதும்" எனத் தொழில் அல்லது புரவுவரித்திணைக்களம் எனத் தொழில் செய்யும் இடம் குறிக்கப்படுவதைக் கவனிக்கலாம்; நாள் - மாதம் - ஆண்டு என்ற முறையிலே திகதியைக் குறிப்பது ஆங்கில முறையைத் தழுவிய தற்காலத் தமிழ் முறையாகும் ஆண்டு - மாதம் - நாள் என்பதே பழைய தமிழ் முறையாகும். பிற்காலப் பாண்டியர் சாசனங் களிலே ஆட்சியாண்டு - மாதம் (ஞாயிறு) - நாள் என்ற முறை காணப்படுகின்றது.
327

Page 175
சாசனத்துத் தமிழ் இலங்கை
*ழநாடு தமிழ்நாட்டுக்கு அண்மையில் அமைந் துள்ளது. இந்தியாவின் ஏனைய பகுதிகளும் உலகின் ஏனைய பகுதிகளும் ஈழ நாட்டிலிருந்து தூரத்திலேயே அமைந்துள்ளன. தமிழ்நாட்டுக்கும் ஈழநாட்டுக்குமிடை யிலான தொடர்பு பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் பழமையுடையதாக இருக்கவேண்டும். நாகரிக வாழ் வில் மிகவும் பின்தங்கிவிட்ட இனமாக இலங்கையில் வாழும் வேடர், இலங்கையின் ஆதிப் பூர்வகுடிகளாக இருக்கவேண்டும் என்பது இன்று பொதுவாக ஏற்கப் படுகின்றது. வேடர் இந்தியாவிலிருந்து வந்தவர்களா என்பதைப்பற்றி ஒன்றும் நிச்சயமாகக் கூறமுடியாது; சிங்களவரும் தமிழரும் இலங்கையில் நீண்டகாலமாக வாழ்ந்துவருகின்றனர். சிங்களவர் பேசும் மொழி வட இந்திய மொழிகளின் இனமொழியாகும். கிங்களவர் தமிழரிலும் அதிக அளவு வரலாற்றுணர்ச்சியுடையோ ராக வாழ்ந்திருக்கின்றனர் மகாவமிசம், சூலவமிசம் என்பன சிங்களவருடைய இரண்டாயிரமாண்டுக்கு மேலான பாரம்பரியத்தைத் தொடர்ச்சியாக எடுத்துக் கூறும் வரலாற்றமிசம் பொருந்திய நூல்களாகும் காலத்துக்குக்காலம் பெளத்த பிக்குகள் மகாவிரையின் வரலாற்றைக்கூறும் நோக்கத்தை மையமாக வைத்துப் பாளி மொழியிலே பாடிவந்துள்ளார்கள். இரண்டா யிரம் ஆண்டுகளுக்கு மேலாகச் சிங்களச் சாசனங்கள் தொடர்ச்சியாகப் பொறிக்கப்பட்டுவந்துள்ளன. சிங்கள இனத்துக்கு இப்பெருமைகள் உண்டு. பெளத்த மதம் அது தோன்றிய நாட்டில் அழிந்து அங்கு இக்காலத்திலேயே
328

சிறிது மறுமலர்ச்சி பெற்றுவருகின்றது) பெளத்த மது மும் காலப்போக்கிலே தேரவாத பெளத்தம், மகா ஞான பெளத்தம் என்று இரண்டு பெரும் பிரிவுகளாக அமைந்தது. தேரவாத பெளத்தம் பழமையைப் பேணிவந்த பெளத்தம் எனவும் மகாஞான பெளத்தம் காலத்தால் ஏற்பட்டுவந்த மாற்றங்களை அனுசரித்து வந்த பெளத்தம் எனவும் சுருக்கமாகக் கூறலாம். தேர வாத பெளத்தத்தைப் போற்றிவந்த இலங்கை, பர்மா, தாய்லாந்து முதலிய நாடுகளிலே இலங்கையே அவ் வகைப் பெளத்தத்தை தூய முறையிலே பேணி வருகின் றது. இன உணர்ச்சி மிகுந்துள்ள இக்காலத்திலே சிங் கள மக்களிலே ஒரு சாரார் இலங்கை சிங்களவருக்கு மட்டும் உரிய நாடு என்று காட்ட முனைகின்றனர். தமிழருள் ஒரு சாரார் தமிழரே இலங்கையின் பூர்வ குடிகள் எனச் சாதிக்க முயல்கின்றனர்.
இலங்கை வரலாற்றைப் பற்றிச் சமீப காலத் திலே எழுந்துள்ள நூல்கள் கட்டுரைகள் என்பனவற்றி இம் அவற்றைப்பற்றி யெழுந்துள்ள விமரிசனங்களி லும் தமிழர் - சிங்களவர் பிரச்சினை தலைதூக்குவதைக் காணலாம். வரலாற்ரு சிரியர் ஏற்கமுடியாத சான்று களைக் காட்டி இலங்கையிலே தமிழருடைய தொன் மையை ஒரு சாரார் நிறுவ முயற்சிக்கின்றனர். சான் றுகள் வலுவற்றன எனக்காட்ட முயலும் அறிஞர்களைத் தமிழ்ப் பற்றற்றவர்களாக அவர்கள் இகழுகின்றனர். மறுபக்கத்தில், சிங்களவருக்குத் தமிழரோடு ஏற்பட்ட தொடர்புகள் சிங்களவருடைய பழைய நூல்கள் ஆவ ணங்களிற் குறிக்கப்பட்டபோதிலும், சிங்கள அறிஞர் கள் சிலர் தம்முடைய அறிவாற்றல்களைப் பயன்படுத் திப் புதிய விளக்கங்கள் தந்து தமிழருக்குத் தரவேண் டிய இடத்தையும் மறுக்கின்றனரி வரலாற்றுண்மை புதிய சான்றுகளைக் கொண்டு நிறைவெய்துதல் வேண்
329

Page 176
டும் என்ற நோக்கம் மறக்கப்பட்டுவிடுகின்றது; தம்ம வருள் ஒரு சாராரை மகிழ்விக்க வேண்டும் என்ற நோக் கத்திலே தாம் பிறருடைய நகைப்புக்கிடமாவதை அவர்கள் உணர்வதாகத் தெரியவில்லை
இவற்றைப் பற்றி ஆராய்வது, இங்கு நோக்க மன்று. சாசனச் சான்றுகளை மட்டும்கொண்டு இலங் கையிலே தமிழர் செல்வாக்குப் பெற்றிருந்தமையைக் கூறுவதே இங்கு நோக்கமாகும். இலங்கைச் சாசனங் கள் சிங்களம், பாளி, ‘சங்கதம், தமிழ் என்னும் மொழி களிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. பிறமொழிச் சாசனங்களிலே தமிழரைப்பற்றிய குறிப்புகள் உண்டு ஆனல் , இங்கு இலங்கைத் தமிழ்ச்சாசனங்கள் எவ்வெப் பிரதேசங்களிலே காணப்படுகின்றனவென ஆராயப்படு கின்றது. தமிழர் குறிப்பிட்ட தொகையினராகவாவது வாழாத பகுதிகளிலே தமிழ்ச்சாசனங்கள் காணப்படா. இவ்வாறு கூறுவதினலே தமிழர் குறிப்பிட்ட தொகை யினராகக் காணப்பட்ட இடங்களிலெல்லாம் தமிழ்ச் சாசனங்கள் இருந்திருக்கவேண்டுமெனக் கொள்ள முடி யாது. ஆஞல் தமிழ்ச் சாசனங்கள் காணப்படும் இடங் களிலே, தமிழர் ஒரளவு செல்வாக்குடன் அச்சாசனங் கள் எழுந்த காலத்திலாவது வாழ்ந்திருப்பரெனக் கூற லாம். சாசனங்கள் பலவாக, நீண்ட காலப் பிரிவுக்குரி யனவாகக் காணப்பட்டால், தமிழர் அப்பிரதேசத்தில் நீண்ட காலம் வாழ்ந்தனரெனக் கொள்ளலாம். இலங் கையின் எல்லாப் பகுதிகளிலும் சிங்கள மொழிச் சாச னங்கள் காணப்படுகின்றன. சிங்களவர் இலங்கையின் எல்லாப் பகுதிகளையும் ஒரு காலத்தில் ஆண்டிருக்கின் றனர் அல்லது இலங்கையின் எல்லாப் பகுதிகளிலும் ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கின்றனரெனக் கொள்ள வேண்டும். சிங்கள மொழிச் சாசனங்கள் ஆயிரக்கணக் கிலே கிடைத்துள்ளன? தமிழ்மெர்ழிச் stra 6g täaset
330

நூற்றுக்கு மேற்பட்டன, கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: எல்லாச் சாசனங்களும் இதுவரையிலே அறியப்பட்டுள் ளனவெனக் கூறமுடியாது. இந் நிலைமை சிங்களம் தமிழ் முதலிய அனைத்து மொழிச் சாசனங்களுக்கும் பொருந்தும். சாசனங்கள் சில, இன்றும் கண்டுபிடிக்கப் பட்டு வருகின்றன.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கைத் தமிழ்ச்சாசனங்களை ஆராயத் தொடங்கியபோது ஒரு பிரச்சினை தோன்றியது: இலங்கைப் புதைபொரு ளாராய்ச்சித் துறைத் திணைக்களத்திலேயுள்ள தமிழ்ச் சாசனங்களை அட்டவணைப் படுத்திப் பார்த்தபோது எண்பத்தைந்து சாசனங்களையே காணக் கூடியதாயிருந் தது. அங்கு தமிழ்ச் சாசனங்கள் தனியாகப் பிரித்து வைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்ச்சாசனங்கள் பல, கண் டெடுக்கப்பட்ட இடங்களைப் பற்றியும் குறிப்புகளில்லை, சாசனங்கள் எழுந்த இடங்கள் சிலவற்றைச் சாசனங் களிலுள்ள அகச் சான்றுகளைக் கொண்டே அறியவேண்டி யிருந்தது. சாசனங்கள் சிலவற்றில் அத்தகைய அகச் சான்று மில்லை. புதை பொருளாராய்ச்சித் திணைக்களம் குறித்து வைத்திருக்கும் இலக்கங்களைக் கொண்ட சாசனங் கள் எவையெவை அத்திணைக்களத்திலுள்ளனவெனக் கண்டுபிடிப்பதே வில் லங்கமாக இருக்கின்றது. இதுவரை யிலே வெளிவந்துள்ள சாசனங்கள் எவையெவை என் பதுதானும் சாசனங்களை வாசித்தே அறியவேண்டியுள் ளது .
முன்பு இலங்கையிலே கண்டுபிடிக்கப்பட்ட பழைய தமிழ்ச் சாசனங்கள் வாசிப்பதற்காக இந்தியா வுக்கு அனுப்பப்பட்டன. இவை, இலங்கையிலே கண்டு பிடிக்கப்பட்டதை இலங்கைப் புதைபொருளாராய்ச்சி
33

Page 177
ஆண்டறிக்கை குறிப்பிடுவதுண்டு: சில இலங்கைம் தமிழ்ச் சாசனங்களைச் சென்னைச் சாசனவியல் அறிக் கையே? குறிப்பிட்டுள்ளது. சில சாசனங்களைப்பற்றி இவையிரண்டும் குறிப்பிடுகின்றன. 1911 - 12 ல், பெல் என்பவர் நாற்பத்தெட்டு இலங்கைத் தமிழ்ச் சாசனங் களைக் குறிப்பிட்டுள்ளார்.3 தென்னிந்தியச் சாசனவிய லாளரான கிருஷ்ண சாஸ்திரி இச்சாசனங்களைப் பற்றி எழுதிய குறிப்புகளும் இப்பிரசுரத்திலே இடம்பெற்றன. தென்னிந்தியச் சாசனங்களின் நான்காம் தொகுதியை 1923 ம் ஆண்டு பதிப்பித்த கிருஷ்ணசாஸ்திரி அந்நூ லின் இறுதியிலே இருபத்தெட்டு இலங்கைத் தமிழ்ச் சாசனங்களை வெளியிட்டுள்ளார். இலங்கைப் புதை பொருளாராய்ச்சித்துறைத் திணைக்களத்திலே சாசனங் கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளைக் குறிப்பிடும்போது 1911 க்குப் பிந்திய ஆண்டுகளையே குறிப்பிடுகிருர்கள். பெல் குறிப்பிட்ட நாற்பத்தெட்டுச் சாசனங்களிற் சில, பிந்திய ஆண்டுகளிற் கண்டுபிடிக்கப்பட்டனவாக அவர் களாற் குறிப்பிடப்படுகின்றன. வேறு சிலவற்றுக்குக் கண்டுபிடித்த ஆண்டு குறிப்பிடப்படவில்லை பெல் குறிப்பிட்ட மிகுதித் தமிழ்ச் சாசனங்களைப்பற்றி அறிய முடியவில்லை; அந்த நாற்பத்தெட்டில் இருபத்தெட் டையே கிருஷ்ணசாஸ்திரி வெளியிட்டிருக்கக்கூடுமாயி 3' மிகுதிக்கு என்ன நடந்ததென நிச்சயிக்கமுடிய
6G).
புதைபொருளாராய்ச்சித் துறைத் திணைக்களத்
திலுள்ள சாசனங்கள் மட்டுமே இங்கு ஆராய்ச்சிக்கு எடுத்
1. Archaeological Survey of Ceylon, Annual Report.
2. Madras Epigraphical Report.
3, Bell, H. C. P. - Tamil Inscriptions, A. S. C. A. R.
1911-12,
832

துக்கொள்ளப்படுகின்றன. அங்கு சாசனங்களுக்கு வழங் கிய எண்களே இங்கும் வழங்கப்படும். தமிழ்ச் சாசனங் களை நன்கு பதிப்பித்தவர்கள், ஆராய்ந்தவர்கள் பற்றி யும் கூறப்படும். அதற்கு "இலங்கைச் சாசனவியல் பற்றி எழுதியவை' என்ற கட்டுரை பயன்படுத்தப்படு கின்றது. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் பெரும்பாலும் கல்வெட்டுக்களாகக் காணப்படுகின்றன. இலங்கைத் தமிழ்ச் செப்பேடுகளும் சில உள. புதைபொருளாராய்ச் சித் துறைத் திணைக்களம் இலங்கையின் பழைய வரலாற் றுச் சான்றுகளாகக் கிட்டதட்ட கி. பி. 1500 க்கு முந் திய ஆவணங்களிலேயே கருத்தைச் செலுத்துகின்றது: கி. பி. 1500 க்குப் பிந்திய ஆவணங்கள் இலங்கைத் தொல்லாவணக் களரியிலே* சேகரிக்கப்படுகின்றன. ஆணுல் கி. பி. 1500 க்கு பிந்திய கல்வெட்டுக்கள் பல, புதைபொருளாராய்ச்சித்துறைத் திணைக் களத் தி லே காணப்படுகின்றன.
தமிழ்ச் சாசனங்கள் தமிழரின் பாரம்பரிய பிர தேசம் எனப்படும் வடக்குக் கிழக்கு மாகானங் களிலேயே பெரும்பாலும் காணப்படுமென எதிரி பார்ப்பது இயல்பு, வட இலங்கை தமிழர் பிர தேசமெனவும் தென்னிலங்கை சிங்களவர் பிரதேச மென வும் கூறப்படுவதுண்டு. யாழ்ப்பாணத்திலே சில நூற் ருண்டுகளாகத் தமிழரசு நிலவியது. எனினும் யாழ்ப் பாணத்தில் மிகச் சில சாசனங்களே கிடைத்துள்ளன. 1967 வரையில் யாழ்ப்பாணப் பகுதியிலே கிடைத்துள்ள ஒரே தமிழ்ச்சாசனமாக நயின தீவு நாகபூசணி அம்மன்
4. Goonetilleke, H. A. I. Writings on Ceylon Epigraphy.
Ceylon Historical Journal 1960/61. 5, Ceylon Archives.
333

Page 178
கோயிற் சாசனம் விளங்கியது. யாழ்ப்பாணத்திற் காணப்படும் கற்கள் சாசனங்கள் பொறிப்பதற்கு ஏற் றவையல்ல. யாழ்ப்பாண அரசின் சாசனமாக இது வரையில் எதுவும் அகப்படவில்லை நயின தீவுச் சாச னம் இன்று இந்துக் கோவிலிலே காணப்பட்டாலும் அச்சாசனத்துக்கும் அந்த இந்துக் கோயிலுக்கும் சம்பந் தம் கிடையாது. அது முதலாம் பராக்கிரமபாகுவின் சாசனமாகும். இலங்கை முழு ைெதயும் ஒரு குடைக் கீழ் ஆண்ட முதலாம் பராக்கிரமபாகு ஊர்க்காவற்று றைப் பகுதியில் நடந்த வணிகத்தை நெறிப்படுத்து வதற்காக அச்சாசனத்தைப் பொறித்துள்ளான். காலம் மாறி எழுத்தை விளங்கிக் கொள்ளமுடியாத நிலையேற் பட்டபோது இச் சாசன மிருந்த தனிக்கல் கோவிலைப் பற்றிய செய்தி ஏதோ கூறுவதாகக் கருதப்பட்டுக் கோவிலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்கவேண்டும்.
மன்னர் மாவட்டத்திலுள்ள சில பகுதிகள் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. புதை பொரு னாராய்ச்சித்துறைத் திணைக்களத்திலே மூன்று சாசனங் கள் கிடைத்துள்ளன ? இரண்டு சாசனங்கள் மன்னர்க் கச்சேரி நிலத்திற் காணப்படுபவை, அவை இரண்டும் உடைந்த சாசனத் துண்டுகளாகும். அத் துண்டுகள் திருக்கேதீச்சரப் பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டன வாக நம்பப்படுகின்றன. அவை கூறும் பொருளை அனு மானிப்பதற்குத் தேவையான எழுத்துக்கள் அந்தச் சாச னங்களிலில்லை. மூன்ருவது சாசனம் முருங்கன் பகுதி யிலே கட்டுக்கரைக்குளத்துக்கு அண்மையிலே கண்டெடுக் கப்பட்டது. தென்னிந்தியச் சாசனங்கள் நான்காம்
6. 2067 of 1949. 7. 353 of 1926; 354 of 1926; 2024 of J947.
334

தொகுதியிலே8 மாதோட்டச் சாசனமொன்று வெளி யிடப்பட்டுள்ளது. மாதோட்டம் என்பது மன்ஞர் மாவட்டத்திலிருந்த பழைய பிரபலமான துறைமுகமா கும். திருக்கேதீசுவரம் இத்துறைமுகப் பட்டினத்தி லேயே இருந்தது. திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இத் தலத்தைப் பாடியுள்ளனர். சாசனத் தின் மேற்பகுதிமட்டுமே கிடைத்துள்ளது. முதலாம் இராசேந்திரசோழனுடைய மெய்க்கீர்த்தியில் ஒரு பகுதி ஒரு பக்கத்திற் காணப்படுகின்றது. கல்லின் மற்றப் பக் கத்திலுள்ள சாசனம் வரலாற்றுக்குப் பயன்படுகின்றது. மாதோட்டம் சோழப் பெருமன்னர் காலத்திலே இராச ராசபுரம் என வழங்கப்பட்டது, இச் சாசனத்திலிருந்து தெரியவருகின்றது. மாதோட்டத்துக்கோவில் இரா மீசு வரம் என்று இச்சாசனத்திற் குறிக்கப்படுகின்றது. இரா சேந்திரசோழனுடைய பணிமகன் காசு கொடுத்து நிவந் தத்துக்கான ஒழுங்கு செய்த நிகழ்ச்சி கூறப்படுகின்றது.
வவுனியா மாவட்டத்திலே பழைய தமிழ்ச் சாசனங்கள் அதிகமாகக் கிடைக்க வில்லை. வவுனியா மாவட்டம், திருகோணமலை மாவட்டம், அனுராதபுர மாவட்டம் என்பன சந்திக்கு மிடத்திலே பதவியாக் குளம் அமைந்து காணப்படுகின்றது. பதவியாக்குளம் இன்று திருத்தப்பட்டு பூஜீபுர என்ற ஊர் உருவாகி வரு கின்றது. அங்கு அண்மையிலே காணப்பட்ட ஒரு சின் னத்தைக்கொண்டு அவ்வூரின் பழைய பெயர் பூரீபதிக் கிராமம் என்று அறியப்படுகின்றது. அவ்வூரிலே ஒன் பது பழைய சாசனங்கள்? கண்டுபிடிக்கப்பட்டுள்ளன:
8. South Indian Inscriptions Vol. IV, No. 14 14.
9. 2240 of 1953: 224 of 1953; 2242 of 1953; 2234 of 1961 2435 of 1961, 2436 of 1961; 2437 of 1961; 2438 of 1961 and 2439 of 1961.
335

Page 179
புதைபொருள்கள் புதியனவாகக் கண்டுபிடிக்கப் படுவ தாக அண்மையிலும் செய்திவந்துள்ளது. புதைபொருள் களும் சாசனங்களும் பழைய சிவன்கோவிலுடன் பெரும் பாலும் தொடர்புடையனவாகக் காணப்படுகின்றன. சாசனங்கள் பொதுவாகப் பதினென்று, பன்னிரண்டு. பதின் மூன்ரும் நூற்ருண்டுகளைச் சேர்ந்தவையெனலாம். இந்த நூற்ருண்டுகளிலே பதவியாப் பகுதியிலே தமிழும் சைவமும் நல்ல நிலையிலிருந்திருக்கவேண்டும். இங்கு காணப்பட்ட சாசனங்களிலொன்று 10 வீரவலஞ்சியt எனப்படும் திசையாயிரத்து ஐந்நூற்றுவர தாகும். திசை யாயிரத்தை ஞநூற்றுவர் என்ற வணிக குழுவினர் இந்தி யத் தீபகற்பம், இலங்கை, கிழக்கிந்தியத் தீவுகள் என் பனவற்றின் பல பகுதிகளிலும் பரந்து வணிகம் செய் திருக்கின்றனர். அக்குழுவினருள் ஒரு சாரார் பூநீபதிக் கிராமத்திலுமிருந்து வணிகம் செய்தது, இச்சாசனத்தி லிருந்து தெரியவருகின்றது.
கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டம் , மட்டக்களப்பு மாவட்டம், அம்பாறை மாவட்டம் என்று மூன்று பகுதிகளை யுள்ளடக்கியது. யாழ்ப்பாண மாவட் டத்துக்கு அடுத்ததாக இலங்கைத் தமிழர் இன்று பெருந்தொகையாக வாழும் மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டமாகும். மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த தமிழ்ச் சாசனமெதுவும் இதுவரையில் வெளிவரவில் ஃ). மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இந்துக்கோவில் கள் சிலவற் ஹிலே செப்புப் பட்டயங்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனல் இதுவரையில் அவற்றுள் எது வும் வெளிவந்திருப்பதாக இந்நூலாசிரியர் அறியவில்லை. பழைய மட்ட க் களப்பு மாவட்டம் அண்மையிலேயே
10, 2240 of 1953,
336

அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது; இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்தனவாக வெளிவந்த அல்லது குறிக்கப்பட்ட சாசனங்கள் யாவும் இன்றைய அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தனவாகக் காணப்படுகின்றன. அக்கரைப்பற்றைச் சேர்ந்த திருக்கோவிற் சிவன் கோவி வின் முன்பிருந்த சாசனமும் அதே ஊரைச் சேர்ந்த சித்திரவேலாயுத சுவாமி கோவிற் சாசனமுமே 12 அம் பாறை மாவட்டத் தமிழ்ச் சாசனங்களாகப் புதை பொருளாராய்ச்சித் துறைத் திணைக்களத்தினராற் குறிப் பிடப்படுகின்றன:
கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் சந் திக்கும் கோணமாகத் திருகோணமலை மாவட்டம் விளங்கி வருகின்றது. இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் காணப் படும் பகுதிகளை ஆராயும்போது திருகோணமலை மாவட் டம் தனிச் சிறப்புப் பெறுகின்றது. திருகோணமலை மாவட்டம் சாசனங்களும் பிற புதைபொருள்களும் மிகுந்து காணப்படுகின்றது. சிங்கள மொழிச் சாசனம், சங்கதமொழிச் சாசனம், பெளத்த சமய சின்னங்கள் என்பன திருகோணமலையிலே கண்டெடுக்கப்பட்டுள்ளன; இன்றும் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன; எனவே திரு கோணமலை மாவட்டம் தமிழர் அல்லது இந்துக்கள் மட்டும் வாழ்ந்த பகுதியென்று நிரூபிக்கவியலாது. ஆனல் தமிழர் பல நூற்ருண்டுகள் காலமாகத் திருகோணமலை மாவட்டத்திலே செல்வாக்குடன் வாழ்ந்து வந்திருக்கி ருர்களென்பதைச் சுலபமாக நிரூபிக்கலாம்; கி. பி. ஏழாம் நூற்ருண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர்
11. 485 of 1929. 12. 2701 of 1967.
337

Page 180
கோணேசரைப் பாடும்போது "குடி களை நெரு க் கி ப் பெருக்கமாய்த்தோன்றும் திருகோணமலை நகரைப் பாடி யுள்ளார். திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் இரு பத்தைந்து தமிழ்ச் சாசனங்கள் கண்டெடுக்கப்பட்டுள் ளனவாகத் தெரியவருகின்றன. இவற்றுள்ளே பதினறு தமிழ்ச் சாசனங்கள் பெளத்த மதத் தொடர்புள்ளன வாக இருப்பது கவனிக்கப்படத்தக்கது. இந்தப் பதி ணுறும் இராசராசப் பெரும்பள்ளி சம்பந்தப்பட்டன. வெல்கம் விகாரை சோழப் பெரு மன்னன் முதலாம் இராசராசஞலே புதுப்பிக்கப்பட்டு இராசராசப் பெரும் பள்ளியென்று பெயரிடப்பட்டிருக்கின்றது; சோழப் பெரு மன்னர் நாகப்பட்டினம் சூடாமணி விகாரத்தைப் பேணியதுபோலத் திருகோணம ைஇராசராசப் பெரும் பள்ளியையும் பேணியிருக்கிருர்கள். சோழப்பெருமன்னர் காலத்திலே தமிழ் நாட்டிலே பெளத்தம் ஒடுங்கிவிட்டது. நாகப்பட்டினம் சூடாமணிவிகாரம் பிற நாட்டு வணிக ருடைய தேவைக்காகவே கட்டப்பட்டது, இராசராசப் பெரும்பள்ளி உள்நாட்டுப் பெளத்தருடைய தேவைக் காகவும் பிறநாட்டு வணிகருடைய தேவைக்காகவும் கட்டப்பட்டிருக்கவேண்டும். சைவராகிய சோழப் பெரு மன்னருடைய சமயப் பொறைக்கு இந்தப்பள்ளி ஒரு முக்கிய சான்று. இராசராசப் பெரும்பள்ளியின் சிதைந்த கட்டிடங்களிலே காணப்பட்ட சாசனங்களில் ஒரு சிலவே, இலங்கையிற் சோழராட்சி நிகழ்ந்த காலத்துக்குரியன
13, 2230 of 1953; 2232 of 1953; 2233 of 1953;
2234 of 1953; 2235 of 1953; 2236 of 1953 2.245 of 1953; 2246 of 1953; 2247 of 1953; 2248 of 1953; 2249 of 1953. 478 of 1929: 596 of 1929; 597 of 1929; 775 of 1932; 776 of 1932. *
338

வாகும்; ஏனைய சாசனங்கள் காலத்தாற் பிந்தியன. பள்ளியிருந்த பிரதேசத்திலே சோழப் பெருமன்னர் காலத்திலிருந்தாவது தமிழ் மக்கள் பெருந்தொகையாக வாழ்ந்து வந்திராவிட்டால், சாசனங்கள் தமிழில் எழுந் திரா. சாசனங்களுட் பெரும்பாலன, பள்ளிக்கு வழங்கப் பட்ட தானங்களைக் கூறுவன. தானங்களை வழங்கியவர் களுள் ஒரு சிலராவது தமிழ்ப் பெளத்தர்களாக இருந் திருக்கவேண்டும் பள்ளி நிர்வாகம் தமிழ்ப் பெளத்த பிக்குகளிடம் இருந்திருக்கவேண்டும். அல்லது தமிழிலே சாசனங்களைப் பொறிப்பதால் எவ்வித பயனுமேற்பட்டி ருக்காது. திருகோணமலையிலே முதல் முதலிற் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ்ச்சாசனங்கள் பிரெடெரிக் கோட்டை வாசலுக்கு வலப்புறமும் இடப்புறமும் மதிற் சுவரிலே காணப்பட்டனவாகும்.* அவை கோணேசர் கோவிலைச் சேர்ந்த மிகப் பழைய சாசனங்களின் பகுதிகள் என்று ஒரு காலத்திலே நம்பப்பட்டன. ஆனல் அவை மிகவும் தொன் மையுடைய சாசனங்களல்ல. தம்பலகாமம் வயல் நிலத்தில் ஒரு சாசனமும்15 அதே இடத்தைச் சேர்ந்த இடிந்த பல்மோட்டைச் சிவன்கோவிலுக்கு அண்மையில் இன்னெரு சாசனமும் 10 கானப்பட்டன. இரண்டாவது சாசனம் விசயராசேசுவரம் என்ற சிவன் கோவிலுக்கு வழங்கப்பட்ட சில தானங்களைக் குறிப்பிடுகின்றது. கந்தளாய்ப் பகுதியிலே பிராமணர் குடியிருப்பான அகரம் ஒன்று இருந்ததற்கும் இச் சாசனம் சான்றுபகரு கின்றது. இந்துக்கள் பெருந்தொகையாக வாழாத பகு தியிலே பிரமதேயம் இருந்திருக்க முடியாது. கந்தளா
14. 346 of 1911; 347 of 1911. 15, 599 of 1930. 16. 831 of 1933 17, 2028 of 1947.
339

Page 181
யில் இரண்டு சாசனங்கள் இருந்தன. ஒன்று 17 பெளத் தருடைய டகோபாவுக்கு அண்மையிலே இருக்கிறது. மற்றது 18 எழுத்துக்கள் தெளிவாக இல்லை. கொட்டி யாரம்பற்றைச் சேர்ந்த சாசனங்கள் இரண்டும் கிடைத் துள்ளன. ஒன்று 19 ஏரியதுவுமலையிலுள்ள பாறை யொன்றிலே காணப்படுகின்றது; திரிசூல அடையாளத் துக்குப் பக்கத்திலே சிவன்கோவிலொன்று குறிப்பிடப் படுகின்றது. மற்றது20 வெகு கலிலே சில நூற்ருண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட கோவிலிற் காணப்படுகின் AD35.
கிழக்கு மாகாணத்துக்கு அடுத்ததாக மிக அதிக சாசனங்கள் உள்ள மாகாணம் வடமத்திய LD fá f Gððf மாகும். இலங்கையிலே மிகவும் அதிகமான சாசனங்கள் உள்ள மாகாணம் இதுவேயாகும். இந்த மாகாணம் சிங்களவருடைய பழைய இராசரட்டையாகும். கிட்டத் தட்ட ஆயிரத்தைஞ்நூறு ஆண்டுகள் வரை, இலங்கை யின் தலைநகரமாக அனுராதபுரம் திகழ்ந்தது; கி. பி. பத்தாம் நூற்ருண்டு முடியும் வரையிலே அனுராதபுரம் சிங்களவருடைய தலைநகராக இருந்தவரையில் வட மாகாணத்திலே தமிழர் பெருந்தொகையாக இருந்திருந் தாலும் அவர்கள் தனியரசு அமைக்கத்தக்க வகையிலே தலையெடுத்திருக்க முடியாது. வடமத்திய மாகாணம் சிங் களவருடைய முக்கிய குடியிருப்பாக விளங்கிய காலத் திலே வடபகுதியிலே குடியேறியிருக்கக்கூடிய தமிழரைக் கட்டுப்படுத்துதல் அவர்களுக்கு வில் லங்கமாக இருந்திருக் காது. சங்க காலத்திலேயே கடற்செலவிலும் பிறநாட்டு
8. 2291 of 1954. 19. 896 of 1933 20, 897 of 1933,
840

வணிகத்திலும் ஈடுபட்டிருந்த தமிழர் தமிழ்நாட்டுக்கு இவ்வளவு அண்மையிலுள்ள இலங்கையிலே குடியேழுமல் இருந்திருப்பரெனக் கொள்ளமுடியாது.
அனுராதபுரக் கால இலங்கையிலே தமிழர் குடி யேற்றங்கள் இருந்திருக்கும். ஆனல் தமிழர் தனியரசு இருந்ததற்கு எவ்வித சான்றுமில்லை; இலங்கையிலே தமிழர் குடியேற்றங்கள் இரண்டுவகையான இடங்களிலே நடைபெற்றிருக்கும். தமிழ்நாட்டுக் கடற்கரைக்கு எதிர்ப் பக்கத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம், மன்னர், புத் தளம் கடற்கரைகளிலே தமிழ் மக்கள் குடியேறியிருப் பர். சிங்கள மக்கள் சிறப்பாக வாழ்ந்த பகுதிகளிலும் தமிழ் மக்கள் குடியேறியிருப்பர். வணிகம் முதலிய தொழில்கள் செய்வதற்கு இத்தகைய இடங்களே ஏற்ற னவாக இருந்திருக்கும் தென்னிந்தியப் படையெடுப் புகள் மிகப் பழைய காலத்திலிருந்தே இலங்கையிலே ஏற்பட்டுவந்தன, சோழ நாட்டவர்களும், பாண்டி நாட் டவர்களும் மாதோட்டத்தில் வந்து இறங்கி மல்வத்து ஓயா எனப்படும் அருவியாற்று வழியாக அனுராத புரத்தை அணுகிச் சிங்கள அரசை வீழ்த்தித் தம்மரசை ஏற்படுத்தினர். சிங்கள அரசை ஆள இவ்வாறு பலமுறை முயன்ற தமிழர் நிலையாகத் தம்முடைய ஆட்சியை நிறுவமுடியவில்லை. எனினும், தமிழர் இவ்வாறு படை யெடுத்து வந்தபோது தமிழ்ப்படைகளும் தமிழ்க் குடிக ளும் இலங்கைக்கு வந்திருக்கவேண்டும். சிங்களவர் தம் முடைய ஆட்சியைத் திரும்பவும் ஏற்படுத்திக்கொண்ட போது, தம்முடைய நாட்டிலிருந்த தமிழர் அனைவரை யும் அழித்துவிட்டனரெனக் கூறுவது உலக இயல்புக் குப் பொருந்தாது வந்துசேர்ந்த தமிழர்களுள்ளே ஒரு பகுதியினராவது எஞ்சியிருந்திருப்பர். இத்தகையோரி காலப்போக்கிலே சிங்களவராக மாறியிருக்க வேண்டும். உடற் கூறுகளைக்கொண்டு மக்களினங்களை வகுக்கும்
34.

Page 182
அறிஞர்கள் இலங்கைத் தமிழரும் சிங்களவரும் முற்றிலும் வேறுபட்ட இனத்தவர்கள் என்றுகூறமாட்டார்கள் ,பேசும் மொழியே தமிழரையும் சிங்களவரையும் பிரித்து நிற் கிறது. மொழியோடு பாரம்பரியம் பண்பாடு என்பன நெருங்கிய தொடர்புடையனவாதலாலே இவர்களுக் கிடையிலான வேறுபாடு பெரியது போலத் தோன்றுகின் றது. சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையிலே சிங்கள "பூரீ" எழுத்துக்கு எதிராகத் தமிழர் நடத்திய போராட் டம் ஒருவகையிலே வினேதமானது கிரந்த லிபி என்பது சங்கத மொழியை எழுதுவதற்காகத் தமிழ்நாட்டுப் பிரா மணர் முதலியோர் வழங்கிய எழுத்து முறையாகும். அது சங்கதமொழியைச் சிறப்பாக எழுதுவதற்குப் பயன் பட்டபோதும் தென்னிந்தியாவுக்கே சிறப்பாக உரியது. திருவாங்கூர்ப் புதைபொருளாராய்ச்சி முதலாம் வெளி யீட்டில், கோபிநாதராவ் அவர்கள் தமிழ் - கிரந்த எழுத்துமுறை பற்றிய தம்முடைய கட்டுரையிலே கி.பி. ஏழாம் நூற்றண்டுப் பல்லவ சாசனங்களிலே "பூரீ" எழு தப்பட்ட முறையைக் காட்டியுள்ளார். அதற்கும் சிங் கள "பூரீ"க்கும் பெரிய வேறுபாடு இல்லை. பல்லவர் காலத் தமிழ் நாட்டுச் "பூரீ" இலங்கைக்கு வந்து சிங்கள "பூரீ"யாக நிலைபெற்றுவிட்டது. தமிழ்நாட்டிலிருந்து சிங்களவரி பெற்ற "பூரீ’ வடிவத்துக்கெதிராகவே தமிழர் போராட்டம் நடத்தியுள்ளனர்,
அனுராதபுர மாவட்டத்திலே ஏழு தமிழ்ச் சாச னங்கள் கிடைத்துள்ளன,20ல் அவற்றுள் இந்து சமயம், பெளத்த சமயம் என்ற இரண்டு சம்பந்தமானவையும் உளe இவற்றுள் அனுராதபுரம் இந்து அழிபாடுகளி டையே காணப்பட்ட மூன்று தமிழ்ச் சாசனங்கள்
20a 1 12, 113; 418; 4.19; 420; 1408 of 1934; 2141 of 1950.
842

தென்னிந்தியச் சாசனங்கள் நான்காம் தொகுதியிலே வெளியிடப்பட்டுள்ளன. நான்கு நாட்டார் என்ற தென் னிந்திய வணிக குழுவினர் பெளத்தப்பள்ளியொன்றினை அனுராதப் புரத்திலேயமைத்து அதனை ஓம்புவதற்கு வச திகள் செய்துள்ளனர்.21 இந்தச் சாசனத்திலே தமிழ்ச் செய்யுளொன்று இடம்பெற்றுள்ளதை மயிலை. சீனி. வேங்கடசாமி "சாசனச் செய்யுள் மஞ்சரி"யென்ற தம் முடைய நூலிலே காட்டியுள்ளார். ஈழத்துப் பூதந்தே வ ஞர் என்ற சங்ககாலப் புலவர் ஈழநாட்டைச் சேர்ந்த வரெனக் கூறப்படுகிறது. அவ்ரை நீக்கிவிட்டால், இன்று நமக்குக் கிடைக்கிற மிகப்பழைய இலங்கைத் தமிழ்ச் செய்யுளென்று "போதிநிழலமர்ந்த புண் ணியன்" என்று தொடங்கும் இச்செய்யுளைக் கூறலாம் இ ல ங்  ைக யி லெழுந்த இச்செய்யுள் பெளத்த சமயத் தொடர்புடைய தாக இருப்பது கவனிக்கத்தக்கது. வணிகர் குழுவினர் பெளத்தராக இருந்திருக்கலாம். அல்லது அவர்கள் சிங் கள மக்களுக்குப் டெ ளத்த மதத்திலுள்ள ஈடுபாட்டைக் கண்டு இதை ஒரு "வணிக தந்திர "மாசச் செய்திருக்க வேண்டும். அனுராதப் புரத்திலுள்ள தமிழ்ச் சாசனங்க ளின் காலம் கி. பி. ஒன்பதாம், பத்தா ம் நூற்ருண்டு களாக இருக்கவேண்டும். சிங்கள மன்னர்கள் கூலிப் படைகளாகத் தமிழ்ப் படைகளை அனுராதபுரத்திலே வைத்திருக்கும் வழக்கம் தோன்றிவிட்டது. மேலும் தமிழ்நாட்டிலே வலிமை வாய்ந்த அரசுகள் தோன்றத் தொடங்கிவிட்டன. பழைய தென்னிந்தியப் படை யெடுப்புகளிலே தனிப்பட்டோர் படைதிரட்டிவந்து சிங்கள அரசைக் கைப்பற்றி ஆளமுயன்றனர். கி. பி. எட் டாம் நூற்றண்டில் நிலைமை மாறுகின்றது. பாண்டிய அரசு தன்னுடைய ஆட்சியை இலங்கைக்கு விஸ்தரித்
21. S. II, II. Vol. IV, No. 1405,
843

Page 183
துக் கொள்ள முயல்கின்றது. பூரீமாற பூரீவல்லபன் என்பவனே இலங்கைமேலே படையெடுத்த முதலாவது தமிழ் மன்னணு வான். பாண்டியர் செல்வாக்கு அயல் நாடான இலங்கையிலே பெருகிவந்தது. தமிழர் இலங் கையிலே பெருந்தொகையாகக் குடியேறினர். அதனலே தமிழ்ச் சாசனங்கள் தோன்றத் தொடங்கின. இந்து அழிபாடுகளிடையிலே காணப்பட்ட வேறு இரண்டு கல் வெட்டுகள் 22 குமார கணம் என்ற வணிக குழுவினர் பொலிசைக்குப் பொருள் கொடுத்துக் கோவிலிலே திரு வமுதுக்கும் நந்தாவிளக்குக்கும் ஒழுங்கு செய்ததைக் குறிப்பிடுகின்றன. பெளத்தப் பள்ளிக்கு நிலதானம் செய்யப்பட்டதை ஒருசாசனம் கூறுகின்றது?
புலத்திய நகரம் எனப்பட்ட பொலனறுவையை உள்ளடக்கிய மாவட்டத்திலும் தமிழ்ச்சாசனங்கள் பல கிடைத்துள்ளன. சோழப்பேரரசின் வளர்ச்சி அனுராத புரத்தின் அழிவுக்கு வழிகோலியது, தமிழ்நாட்டின் பிற பகுதிகளையும் பிற அயல்நாடுகளையும் வென்றுவிட்ட சோழமன்னர், பகைவராகிய பாண்டியருக்கு உதவிய இலங்கையின் மேலே கவனத்தைச் செலுத்தினர். முத லாம் இராசராசன் காலத்திலே சோழர் முயற்சி பய னளிக்கத் தொடங்கியது. அனுராதபுரத்தையுள்ளிட்ட இலங்கையின் வடபகுதியை இராசராசன் சுலபமாக வென்முன். சிங்கள மன்னர் தென்னிலங்கைக்கு ஓடி ஒளித்தனர். நாட்டின் இயற்கையமைப்புச் சிங்களவரை அடக்குவதற்குத் தடையாக அமைந்தது. முதலாம் இராசேந்திரன் அந்தத் தடையையும் மீறி வென்முன். இலங்கை முழுவதையும் சோழராட்சிக்குக் கீழ்க்கொண்டு
22. S. I. I. Vol. IV, No. 1403, 1404, 23, 1408 of 1934,
344

வந்தான்; எனினும் சிங்களவர் உறுகுணப் பகுதியிலே படைதிரட்டிச் சோழப் பெருமன்னருக்குத் தலைவலி கொடுத்துக்கொண்டிருந்தனர். சோழப்படைகள் இலங் கைக்குப் பலமுறை வரவேண்டியிருந்தது. சிங்களவரு டைய பழைய தலைநகரம் படையெடுப்புகளால் அழி யத் தொடங்கியது. உறுகுணைச் சிங்களவரை அடக்கு வதற்குத் தலைநகர் மாற்றம் உதவும் என்று கருதிய சோழர் அனுராதபுரத்துக்குத் தென்கிழக்குத் திசையிலே புலத்திய நகரம் என்ற தலைநகரைக் கட்டியெழுப்பினர்; இலங்கையிலே சோழராட்சி ஒழிந்த பின்பும் புலத்திய நகரமே பொலனறுவையென்ற பெயருடன் இலங்கை யின் தலைநகராக நிலவியது. கிட்டத்தட்ட இரண்டு நூற்ருண்டு காலம் பொலனறுவை தலைநகராக விளங் கியது. சோழப்பெருமன்னர் பொலநறுவையிலிருந்து சிலகாலம் ஆட்சிபுரிந்தனர். சோழராட்சிக்குப் பின்பும் இலங்கையிலே தமிழர் செல்வாக்குக் குறையவில்லை. சிங்களவரி சோழப்பெருமன்னரிடமிருந்து தமது ஆட் சியைப் பாதுகாத்துக்கொள்வதற்காகப் பாண்டியரின் நெருங்கிய நண்பராயினர். அரச குலங்களுக்கிடையிலே மணவினைத் தொடர்புகள் ஏற்பட்டன; அதனலே பிற தொடர்புகளும் வளர்ந்தன. பொலனறுவைப் பகுதி யிலே பத்துத் தமிழ்க் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட் டுள்ளன.24 சோழப்பெருமன்னர் காலத்திலே பொல னறுவையிலே சிவன் கோவில்கள் கட்டப்பட்டன. ஐந்து தமிழ்க் கல்வெட்டுகள் 25 சிவன் கோவில்களிலேயே காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள பெரிய தமிழ்க் கல்வெட்டுகளுள் ஒன்று வேளைக்காரருடைய சாசனமா
24. 2 of 1921; 263; 272; 273; 274; 446; 509 of 1929; 1280
of 1943; 283 of 1934; 2408 of 1960.
25. 272; 273; 274; 1280 of 1934; 1283 of 1934.
345

Page 184
கும்,28 வேளைக்காரரி என்ற படைப்பிரிவு சோழநாட் டைச் சேர்ந்தது. "உயிரையும் கொடுத்து மன்னனைக் sn't GLm b' என்று வீரசபதம் செய்த படையினரே வேளைக்காரரெனப் பட்டனர். இலங்கையிலே சோழ ராட்சி ஒழிந்த பின்பும் வேளைக்காரப் படை செல்வாக் குடன் விளங்கியது. முதலாம் விஜயபாகுவின் ஆட்சி முடிந்தபின்னர், இலங்கையிலே குழப்பம் மிகுந்தது. புத்தர் பெருமானின் புனித தந்தத்தை விலைமதிப்பற்ற பொருளாகப் பேணிவந்த பெளத்த பிக்குகள் அத்தொடர் பில் வேளைக்காரப் படையை வேண்டியதும் வேளைக்காரப் படை அவ்வேண்டுகோளை மனமுவந்து ஏற்றதுமாகிய விப ரங்கள் இச்சாசனத்திலே கூறப்பட்டுள்ளன. சிவன் கோவி லொன்றிலுள்ள நான்கு தூண்களிலே காணப்படும் சாச னங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வருடைய பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.27 ஏன் பொறிக்கப்பட்டதென்பது குறிக்கப்படவில்லை. ஒவ்வொரு தூணையும் ஒவ்வொரு வர் நாட்டியிருக்கவேண்டும். கற்பகம் என்னும் பெண் மணி ஒரு தூணை நாட்டியுள்ளாள். முதலாம் இராசேந் திரனுடைய மெய்க்கீர்த்தியின் ஒரு பகுதி ஒரு சாசனத் திற் கிடைத்துள்ளது.28 சிவன்கோவிலிலுள்ள கல்வெட் டொன்று அதிராசேந்திரனுடைய மூன்றுவது ஆண்டு மெய்க்கீர்த்தியைக் கொண்டுவிளங்குகின்றது. அவனு டைய மெய்க்கீர்த்தி "திங்களேர் மலர்ந்து வெண்குடை மண்டல மன்னுயிர் தொறும்" என்று தொடங்குகின்றது. மெய்ச்கீர்த்திக்குப் பின் புள்ள பகுதி நன்கு வாசிக்கப்
26. 2 of 1921. 27. S. I. I. Vol IV, No. 1393. 28. S. I. I. Vol IV, No. 1394.
346

படவில்லை. மாணிக்கம் என்ற சிறப்புப் பெயராலே குறிப்பிடப்படும் தேவரடியார் பலர் இடம்பெறுகின் றனர்.
வடமேல் மாகாணம் ஒரளவு வரலாற்று முக்கி யத்துவம் வாய்ந்தது. கலிங்கத்து மாகன், தமிழ்ப்படை கள் முதலிய இந்தியப் படைகளோடு வந்து வட இலங் கையைக் கைப்பற்றி ஆளத் தொடங்கியதும் இலங்கை வரலாற்றிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இடம் பெறுகின்றது. சிங்க்ள மன்னர்கள் இலங்கையின் தென்மேற்றிசையை நோக்கி இடம்பெயருகின்றனர். சிங்கள மன்னர் தலைநகரம் தென்மேற்றிசையிலே மாறி மாறிச் செல்கின்றது. சிங்கள மக்களும் தம்மன்னரோடு அத்திசைக்கே இடம்பெயர்ந்து செல்கின்றனர். தமிழர் படைகளின் தாக்குதல்களுக்கு எதிர் நிற்க முடியாமலும் தமிழர் படைகள் வட இலங்கையிலிருந்த நீர்நிலைகளின் அணைகளைச் சிதைத்து மலேரியா தோன்ற வழிவகுத்த தாலுமே சிங்களவர் தென்மேற்றிசைக்கு இடம்பெயர வேண்டி வந்த தென்று இன்றையச் சிங்கள வரலாற்றறி ஞர் சிலர் கூறுகின்றனர். நீர்நிலைகள் சிதைந்ததும் மலேரியா தோன்றியதும் சிங்களவர் தென்மேற்றிசைக்கு இடம்பெயரத் தொடங்குமுன்பா அல்லது இடம் பெயர்ந்த பின் பா என்று தீர்மானிக்கக்கூடிய சான்றுகள் இன்று கிடைக்கவில்லை. ஆணுல் அரசதானிப் பெயர்ச்சி மாகனுடைய படையெடுப்போடுதான் நிகழ்கின்றது, மாகனுடைய காலத்திற்கு முன்பு பல தமிழர் படை யெடுப்புக்கள் நிகழ்ந்துள்ளன. படையெடுத்து வருப வர்கள் அழிவுகள் செய்வது இயல்பு. முந்திய தமிழர் படையெடுப்புகளாலே சலிப்படைந்த சிங்களவர் மாக னுடைய படையெடுப்புக் காலத்திலே வடசி*இலங்கை யிலே வாழும் எண்ணத்தைக் கைவிட்டிருக்கவேண்டும்,
347

Page 185
ஆனல் மாகன் தமிழனல்லன் என்பது கவனிக்கப்பட வேண்டும்; வடமேல் மாகாணத்திலே குருனகல், புத்தளம் என்னும் இரு மாவட்டங்கள் உள
குருணுகல் மாவட்டத்திலே இயற்கையரண் பொருந்திய இடங்கள் சிங்கள மன்னர் தலைநகர்களாக வருகின்றன: குருனகல், தம்பதேனியா என்னும் இடங் கள் சிங்களவர் அரசதானிகளாக இருந்துள்ளன. இடம் பெயரிந்து சென்ற சிங்கள மக்களும் மன்னரும் தமிழ்த் துவேசிகளாக இருக்கவில்லையென்பது கவனித்தற் குரியது. தம்பதேனியாவில் ஆட்சிசெய்த பண்டித பராக்கிரமபாகு தமிழ்ப்புலவரை ஆதரித்துள்ளான்; குருணகல் மாவட்டத்திலே ஏழு தமிழ்ச் சாசனங்கள் கிடைத்துள்ளன:29 முதல் மூன்று சாசனங்களும் புது முத்தாவை என்ற இடத்திலே கிடைத்துள்ளன. சோழன் குலோத்துங்கன் மகளும் விசாகப் பெருமாள் மனைவி யுமானவள் திருநந்தாவிளக்கு வைத்ததைப்பற்றி இச் சாசனங்களுள் ஒன்று கூறுகின்றது. பண்டுவஸ்நுவர என்ற இடத்திலிருந்து இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் ஒன்று பராக்கிரமபாகு நிஸ்சங்கமல்லனுடைய ஐந்தாவதாண்டிலே மதிமான பஞ்சரனென்பவன் புத் தர் பெருமான் கோவில், இனிய உணவுச்சாலை, சயித் தியம், பராக்கிரம அதிகாரிப் பிரிவேணு என்பனவற்றை அமைத்ததைப்பற்றிக் கூறியுள்ளது. பிற்காலப் பாண்டி யர் சாசனங்களைப்போல, இச்சாசனமும் வானியற் குறிப் புகளைக் கொண்டது. இன்னெரு சாசனம் தமிழ் வணிக னெருவனைக் குறிப்பிடுகின்றது; இவற்றிலிருந்து சிங்கள வர் தென்மேற்றிசைக்குப் புலம்பெயர்ந்தபோது தமிழ
29, 473; 474; 475; 1980 of 1940, 2200 of 1951; 2653 of
1966, 2201 of 1951,
348

ருள் ஒரு சாராரும் அவருடன் புலம்பெயர்ந்து உடன் வாழ்ந்து வந்திருக்கின்றனரென்ற உண்மை புலப்படுகின்
D35
புத்தளம் மாவட்டத்திலே தமிழ்பேசும் மக் கள் குறிப்பிடத்தக்க பெருந்தொகையினராக வாழ்ந்து வருகின்றனர். தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலி மாவட்டம், கன்னியாகுமரி மாவட்டம் என்பனவற் றின் கிழக்குக் கரையிலிருந்து தமிழ்பேசும் மக்கள் புத்தளத்திலும் சிலாபத்தின் கரையோரப் பகுதிகளி லும் குடியேறியிருக்கவேண்டும்; ஆனல் இம் மாவட் டத்திலே தமிழ்ச் சாசனங்கள் சிலவே கிடைத்துள்ளன.30 கல்பிட்டியாவிலுள்ள கல்லறையொன்றின் மீது ஒரு சாசனம் காணப்படுகிறது. சிலாபத்திலுள்ள முன்னேசு வரம் கோயிலிலுள்ள சாசனம்31 கோட்டையை ஆண்ட பராக்கிரமபாகு மன்னர் அச்கோவிலுக்குச் செய்த தானங்களை எடுத்துக் கூறுகின்றது. கோவிற் பூசைக்காக எங்கெங்கு எவ்வளவு எவ்வளவு நிலங்கள் விடப்பட்டன வெனவும் பூசகருக்கு எவ்வெவ்வாறு பணமும் பொருளும் கொடுக்கப்பட்டன வெனவும் இச் சாசனத்திற் கூறப்பட் டுள்ளன. நிலம் சர்வமானியமாகவிடப்பட்டது. இவ் வொழுங்குசந்திராதித்தருள்ளவரை நிலைபெற வேண்
ülg.
மத்திய மாகாணத்திலே ஐந்து தமிழ்ச் சாசனங்
கள் கிடைத்துள்ளன.82 சிங்கள மக்கள் புலம்பெயர்தல் வரட்சி பொருந்திய வன்னிப் பகுதியிலிருந்து இயற்கை
30. 1916 of 1940; 281 of 1950; 2687 of 1967, 31. 21.81 of 1950.
32. 566 of 1930; 1207 of 1934; 1623 of 1934; 1629 of 1934;
1891 of 1940,
349

Page 186
வளம் மிக்க தென்மேல் இலங்கைக்குத் தொடர்ந்து சிங்கள மக்களுடைய முக்கிய இராசதானி மத்திய மாகாணத்திலுள்ள கம்பளைக்குப்போய் அங்கிருந்து கொழும்புக்கு அண்மையிலுள்ள கோட்டைக்குச் சென்று விட்டது. இயற்கையரண்கள் பல பொருந்திய மலை நாட்டிலே கண்டியைத் தலைநகராகக் கொண்ட தனியர சொன்று தோன்றியது. வட இலங்கையிலே நல்லூரைத் தலைநகராகக்கொண்ட யாழ்ப்பாணத் தமிழரசு தோன் றியது. இந்த மூன்று ஆரசுகளுக்குமிடையே வன்னிக் குறுநில மன்னர் தலையெடுத்தனர் போர்த்துக்கேயர், ஒல்லாந்தரி என்போர் கோட்டை, யாழ்ப்பாணம் என் பவனவற்றை அடிப்படுத்த பின்னர் கண்டியரசு ஒன்றே இலங்கையராகிய சிங்களவர் ஆதிக்கத்தில் எஞ்சியது. கண்டிச் சிங்கள மன்னர் மதுரை நாயக்க மன்னரோடு மணவினைத் தொடர்பு கொண்டனர். கண்டி அரசுரிமை நாயக்க மன்னர் பரம்பரையைப் பதினெட்டாம் நூற் ருண்டு பிற்பகுதியிலே சேர்ந்தது. கண்டிக்கடைசி மன் னர் தமிழ் பேசுவோராக அமைந்தனர். கண்டியிலே தமிழர் ஆதிக்கம் நிலவியது. கண்டி மாவட்டத்திலுள்ள உடுநுவரை இலங்கா திலக விகாரைச் சாசனம் அவ்விகா ரைக்கு அயலிலே பாறை ஒன்றிலே காணப்படுகின்றது. மாத்தளை மாவட்டத்திலுள்ள மொரகொல்லைக்கு அண் மையிலுள்ள விகாரகின்னையென்ற இடத்திலே கண் டெடுக்கப்பட்ட கற்பலகையிலே திசையாயித்து ஐந்நூற் றுவர் என்ற வணிகர் குழுவின் சாசனம் காணப்படு கின்றது. இலங்கையிலுள்ள இவ்வணிகர் குழுச் சாசனங் களுள் மிகவும் பெரியது இதுவே.
இச்சாசனங்களைவிட வேறு இன்னும் பதின் மூன்று சாசனங்கள் உள. இப்பதின் மூன்று சாசனங்க ளுள்ளே சில, இலங்கையின் பிற மாவட்டங்கள் சிலவற் றிலே ஆங்காங்கு காணப்படுகின்றன. சிலவற்றை எந்த
350

மாவட்டத்துக்குரியவையென நிச்சயப்படுத்த முடிய வில்லை. இரண்டு சாசனங்கள் இரத்தினபுரி மாவட்டத் தைச் சேர்ந்தவை.33 ஒன்று கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தது.34 எனவே, சப்பிரகமுவா மாகாணத்தைச் சேர்ந்தவையாக மூன்று சாசனங்கள் கிடைத்துள்ளன, இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள சிவனெளிபாத மலைக்கு அண்மையிலுள்ள பாறையொன்றில் வரையப்பெற்றுள்ள சாசனத்திலே சில எழுத்துக்களே வாசிக்கக்கூடியனவாயுள் ளன. கேகாலை மாவட்டத்துக் கோட்டகம என்ற இடத் தைச்சேர்ந்த தமிழ்ச்சாசனம் பிரசித்தமானது. யாழ்ப் பாண மன்னன் சிங்கள மன்னனைத் தோற்கடித்ததைப் பற்றி ஒரு புலவர் பாடிய செய்யுள் கல்லில் வெட்டப்பட் டுள்ளது. மேல்மாகாணத்திலே, நீரிகொழும்புக்கரையோ ரங்களிலே தமிழர் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்ற போதும் நீர் கொழும்பு மாவட்டத்திலே தமிழ்ச்சாசன மெதுவும் கிடைக்கவில்லை. கொழும்பு மாவட்டத்தில் ஒரு தமிழ்ச் சாசனமும்39 களுத்துறை மாவட்டத்தில் ஒரு தமிழ்ச் சாசனமும்39 கிடைத்துள்ளன. களுத்துறை மாவட்ட நீதிமன்றத்திலுள்ள கற்பலகையிலே காணப் பட்ட கல்வெட்டு காளி கோவிலுக்கு முதலிகள் நிலம் கொடுத்ததைக் கூறுகின்றது. கொழும்பு - கண்டி வீதி யில் ஏழாவது மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்ட கற்றுரண், அக்கற்றுாண் கந்தசாமி கோவிலுக்குக் கொடுக் கப்பட்ட தைக்கூறுகின்றது. தென்மாகாணத்திலே காலி மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கல்வெட்டும் மாத்தறை மாவட்டத்தில் இன்னெரு கல்வெட்டும் கிடைத்துள்ளன,
33. 580 of 1930, 2670 of 1967. 34, 42.
35. 547 of 1930. 36. 546 of 1929.
35

Page 187
காலிச் சாசனம் மும்மொழிச் சாசனமாகும்.37 பதினைந் தாம் நூற்ருண்டுத் தொடக்கத்திலே சீனுவில் ஆட்சி செய்த சீனப் பேரரசராற் பொறிக்கப்பட்டது. மத காரியங்களுக்காக இலங்கையிலே சீனப் பேரரசர் செய்த தானங்களை இச்சாசனம் கூறுகின்றது. பெளத்த விகா ரைக்குச் செய்த தானம் பாரசீக மொழியிலும் இந்துக் கோவிலுக்குச் செய்த தானம் தமிழ்மொழியிலும் பொறிக் கப்பட்டுள்ளன. மாத்தறையில் நைம்மன என்ற இடத்தி
லுள்ள ஹீங்கங்கொடவத்தை என்ற இடத்திலே கண் டெடுக்கப்பட்ட சாசனம்38 தேவுந்தர என்ற இலங்கை யின் தென்கோடி முனையிலுள்ள கோவிலுக்குத் தானம் கொடுக்கப்பட்டதைக் கூறுகின்றது. இத்தானம் அக் கோவிற் பிராமணர் பொறுப்பில் விடப்பட்டிருக்கின் றது. தமிழர் மிகவும் சிறுதொகையினராக இன்று காணப் படும் களுத்துறை, காலி, மாத்தறை மாவட்டங்களி லும் முன்பு தமிழர் செல்வாக்கு இருந்திருக்கிற தென்ப தற்கு இவ்விடங்களிலுள்ள சாசனங்கள் சான்று பகரு கின்றன. ஆறு சாசனங்கள் 39 இலங்கையின் எவ்வெம் மாவட்டங்களுக்குச் சேர்ந்தனவென இந்நூலாசிரியராலே தீர்மானிக்க முடியவில்லை.
1967ம் ஆண்டுக்குப் பின்பும் தமிழ்ச் சாசனங் கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. புத்தளம் மாவட் டத்தைச் சேர்ந்த சிலாபத்திலுள்ள இலாகத்து எப என்னுமிடத்திலே திசையாயிரத்து ஐந்நூற்றுவர் என்ற வணிக குழுவினர் சாசனமொன்று கண்டுபிடிக்கப்பட்
37. 41 of 91. 38, 598 of 1930.
39. 83; 663 of 1931; 638 of 1931; 2220 of 1952; 2345 of
1956; 234 of 1956.
352

டுள்ளது; யாழ்ப்பாணத்திலே ஆரும் பராக்கிரமபாகு வின் காலத்தைச் சேர்ந்த தமிழ்ச் சாசனமொன்று கண்டு பிடிக்கப்பட்டது. ஊர்காவற்றுறைக் கடற்கோட்டை யிலே முதலாம் இராசேந்திரசோழன் காலத்துக் கல்வெட் டொன்று கிடைத்துள்ளது. பொலனறுவை மாவட்டத் திலுள்ள மதிரிகிரிய என்னும் ஊரிலே சோழராட்சிக் காலத்திலிருந்த சிவன்கோவிலின் சாசனமொன்று தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைக் குள் முதலாம் இராசேந்திரசோழன் காலத்துச் சாசன மொன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது; ஆடுகள் தானமாக வழங்கப்பட்டதை இச்சாசனம் கூறுகின்றது: ஊர்காவற்றுறைக்கு அருகாமையிலுள்ள கரம்பனிலே தெரியவந்துள்ள கல்வெட்டு சிலாபம் அல்லது இந்தியக் கரையிலிருந்து கொண்டுவரப்பட்டதெனப்படுகின்றது: ஒரு மாநிலம் தானம் செய்யப்பட்ட விசயம் இச்சாசனத் திற் கூறப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து இரு செப்பேடுகளும் சமீபத்தில் வெளிக்கொணரப்பட்டுள் ளன. இப்புதிய சாசனங்கள் பற்றிய விபரங்களைப் பேராதனை இலங்கைப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளி வரும் சிந்தனை என்னும் சஞ்சிகை இதழ்களிலே காண லாம்
இந்நூலாசிரியர் அறிந்த வரையிலே ஊவா மாகாணம், தென் மாகாணத்து அம்பாந்தோட்டை மாவட்டம், மத்திய மாகாணத்து நுவரெலியா மாவட் டம் என்பனவற்றிலே தமிழ்ச் சாசனங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அம்பாந்தோட்டை மாவட்டத் திலும் ஊவா மாகாணத்திலுள்ள மொனராகலை மாவட் டத்திலும் தமிழர் செல்வாக்கு என்றும் அதிகமாக இருந்ததில்லை. நுவரெலியா மாவட்டத்திலும் ஊவா மாகாணத்திலுள்ள பதுளை மாவட்டத்திலும் சீமலைநாட் டுத் தமிழரி பெருந்தொகையாக இன்று வாழுகின்றனர்
353

Page 188
நுவரெலியா மாவட்டத்திலே மலைநாட்டுத் தமிழரே பெரும்பான்மைச் சமூகமாவரி,
இலங்கையிலே கண்டுபிடிக்கப்படாத சாசனங்கள் பல, இன்னும் இருக்கவேண்டும். கண்டுபிடிக்கப்பட்ட சாசனங்கள் யாவும் திருப்திகரமாக வாசிக்கப்படவில்லை. வாசிக்கப்பட்ட சாசனங்களுட் பெரும்பாலனவும் இன் னும் நன்கு பதிப்பிக்கப்பட்டு வெளிவரவில்லை. சாசனங் கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆரம்பகாலத்தில் அவை கிருஷ்ண சாஸ்திரி முதலிய இந்தியச் சாசனவியலாளருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவர்கள் இலங்கைச் சாசனங் களுட் சிலவற்றின் வாசிப்புகளை வெளியிட்டனரே தவிர அவற்றை முறையாகப் பதிப்பிக்கவில்லை. இலங்கைச் சாசனங்களை நன்கு பதிப்பிக்கத் தமிழ்ச் சாசனமொழி யுணர்ச்சியும் இலங்கை வரலாற்றுணர்ச்சியும் அவசியம். இரண்டும் ஒருங்கே பொருந்தப்பெற்றவர்கள் மிகவும் அருகிக் காணப்பட்டதால், இதுவரையில் இத்துறையில் போதிய முன்னேற்றம் ஏற்படவில்லை. இலங்கைச் சாசனங் களிற் சிலவற்றின் வாசிப்புகளை வாசித்து நல்லமுறையிலே பதிப்பித்து வெளியிட்டவர்கள் என்று டி.எம்.டி சற். விக் கிரம சிங்க, செனரத் பரணவிதான, க. கணபதிப்பிள்ளை, கா: இந்திரவாலா என்பவர்களைக் கூறலாம்.49 செனரத் பரணவிதானவும் க. கணபதிப்பிள்ளையும் தமிழ்ச் சாச னங்கள் பலவற்றை நன்கு பதிப்பித்துள்ளனர். ஹியூ நெவில், ஜி. எம். வவுலர், கே. டி. சுவாமிநாதன், ஆர்.
40. Epigraphia Zeylanica. Also now defunct Univer
sity of Ceylon, Review, etc.
354

சி. புரக்டரி, சி. இராசநாயகம் என்போரும் தமிழ்ச்சா ? னங்களைப் பற்றிக் கட்டுரைகள் வரைந்துள்ளனர்.4
தமிழ்ச் சாசனங்களை வாசிப்பதும் ஆராய்வதும் வில்லங்கமானது பொறுமையும் பெருமுயற்சியும் வேண்டும். அவற்றை ஆராய்ந்த பின் வெளியிடுவது இன்னும் கஷ்டமாக இருக்கிறது; அவற்றை வெளியிடு வதிலே பொருட்செலவு அதிகமாகும். இன்று இலங்கைத் தமிழ்ச் சாசனத் துறையிலே உழைத்து வருபவர்களுள்ளே கா. இந்திரபாலா தம்முடைய சாசன ஆராய்ச்சிகளைத் தாம் பதிப்பாசிரியராக இருந்து வெளியிடும் சிந்தனை யிதழ்களிலே வெளியிட்டு வருகின்ருர். இந்நூலாசிரியர் இலங்கைத் தமிழ்ச்சாசனங்களை வாசித்து ஆராய்ந்தெழு திய கட்டுரைகளை இதுவரையிலே வெளியிடும் வசதி கிடைக்கவில்லை. சி. பத்மநாதன், செ. குணசிங்கம் ஆகி யோர் சில செப்பேடுகளே நன்கு பதிப்பித்ததன் மூலம் இத்துறையிலே அண்மையிலே பிரவேசித்திருக்கிருர்கள் சாசனவியலிலே மூவகைப்பணிகள் உள. இதுவரை கண்டுபிடிக்கப்படாத சாசனங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். கண்டுபிடிக்கப்பட்டும் இதுவரை நன்கு பதிப்பிக்கப்பட்டுவெளியிடப்படாத சாசனங்கள் நன்கு பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்படவேண்டும். முன்னுேர் பதிப்பித்த சாசனங்களின் வாசிப்புகள், விளக்கங்களிலே பிழைகள் இடம்பெற்றிருக்கலாம். அவை திரும்பவும் ஆராயப்படவேண்டும்:
41. Journal of the Royal Asiatic Society (Ceylon Branch) Vol. 10, No. 35; Ceylon Historical Journal Vol. 10, pp. 44 - 47; Ceylon Literary Review Vol. II No. 1, No. 5, and No. 7; Taprobanian Vol. l, III and III.
355

Page 189
மேற்கோள்
Burnell, A. C. - Elements of South Indian Palaeography, 2nd
edition. London, 1878. Dani. A hamad Hasan -- Indian Palaeography, Oxford 1963" Kannaiyan, V. — ʼ Scripts in and around India, Government
Museum Bulietin, Madras, 1960. Mahalingam, T. V. - Early South Indian Palaeography, Madras,
1967. Meenakshisundaram, T. P. - A History of Tamil Language,
Poona, 1965. Nilakanta Sastri K. A. - Pandyan Kingdom, London, 1929.
The colas 2nd edition. Madras, 195s. Sircar, D. G. - Indian Epigraphy, Delhi, 1965.
w Indian Epigraphical Glossary, Delhi, 1966, Sivaramamurti, C. - Indian Epigraphy and South Indian Scripts,
Bulletin of the Madras Government Museum, Madras, 1952. Shanmugam, S. V. - Epigraphy and Tamil Linguistics,
Reprinted from Seminar on Inscriptions, 1966, Madras, 1968. University of Ceylon - History of Ceylon, Volume I. Two Parts.
Colombo. Veluppi laj, A. -- A study of the Language of Tamil Inscriptions of Catavarman Cuntara Pandya and Maravarman Kulacekaran Unpublished thesis. Submitted to the Ph. D. degree of the University of Ceylon in 1962. A Study of the Language of Tamil inscriptions of the period 800 to 920 A. D. Unpublished thesis. Submitted to the D. Phil. degree of the University of Oxford in 1964.
356

Adjectives in Tamil, Proceedings and Transactions of the First IATR ConferenceSeminar, Volume II, Kuala Lumpur, 1966; Viracoliyam as a grammar of the language of Tamil inscriptions, Paper to the Second IATR Conference-Seminar, Madras 1968, Forthcoming in the University of Ceylon Review; A Review of the Works of the Tamil Palaeography, Second International Conference-Seminar of Archaeology, Colombo 1969; North-Indian Influence on South Indian Scripts, Third IATR Conference-Seminar, Paris, 1970,
தமிழ் நால்கள்
இராகவையங்கார், மு. - சாஸனக்தமிழ்க்கவி சரிதம். இரண்டாம் பதிப்பு,
சென்னை 1958,
இராசமாணிக்கனுர், மா. - கல்வெட்டுக்களும் அரசியல் வரலாறும், Reprin
ted from the Journal of the Annamalai University 1959, 60. சைவசமயவளர்ச்சி, சென்னை, 1958. பல்லவர் வரலாறு, சென்னை, 1952.
பரமசிவானந்தம், அ. மு. - தமிழ் உரைதடை சென்னை, 1959.
சுந்தரேசவாண்டையார், வை. - கல்வெட்டு மூலமும் விளக்கவுரையும்,
சென்னை, 1958, சுப்பிரமணிய அய்யர், ஏ. வி. - தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி, சென்னை,
1959 செல்வநாயகம், வி. - தமிழ் உரைநடை வரலாறு, பேராதனை, 1957.
வேங்கடசாமி, மயிலை சீனி - சாசனச் செய்யுள் மஞ்சரி, சென்னை, 1959. வேலுப்பிள்ளை, ஆ. . தமிழ் வரலாற்றிலக்கணம், சென்னை, 1966.
357

Page 190
JO U R N ALS
Annual Report on South Indian Epigre phy (A.R. on S. I. E.). Archaeological Survey of Ceylon Annual Report (A. S. C. A. R ). Ceylon Historical Journal,
Epigraphia Indica. (E. I ).
Epigraphia Zeylanica.
South Indian Inscriptions (S.I. I.). South Indian Temple Inscriptions.
Taprobania n.
Travancore Archaeological Series. University of Ceylon Review.
சிந்தன.
செந்தமிழ்
358

அகரவரிசை
அக்கால இக்கால வழக்கு 324, 325.
gy G33Frrasciv 1 l, 1 3., 1 8, 19, 27, 28, 29. அணிகலன்கள் 189, 190, 19 1, 192. அம்பலப்புறம் 14 1, 179 . அமராவதி 14, அமிதசாகரர் 282. அர்ச்சனை 141, 153, 154, 155, 156. அரச்சலூர்ச் சாசனம் 15. அர மெய்க் வரிவடிவம் 9, 18. அரிக்கமேட்டுச் சாசனம் 29. அலங்கார விருப்பு 42, 43, 44, 45, 46 அனுராதபுரச் சாசனங்கள் 340, 341, 342, 343, 344. ஆச்சாரியபோகம் 199, 200 ஆரம்பகாலத் தென்னிந்தியத் தொல் வரிவடிவவியல் 23. ஆழ்வாரிகள் பிரபாவம் 280. இடைச்சொல் 134, 135, 136, 137, 138. இந்தியத் தொல் வரிவடிவவியல் 2, 3, 29, 32. இந்தியச் சாசனவியலும் தென்னிந்திய வரிவடிவங்களும் 6. இந்தியாவிலும் அதனைச் சுற்றிலும் உள்ள Ꮺ வரிவடிவங்கள் 26. இயக்குவினை 126, 127 இயற்கை நடை 293, 294 . இராகவையங்கார் மு. 233, 285. இராசராசப்பெரும் பள்ளி 338 இலக்கிய வழக்கு 49, 50, 295, 296. இலங்காதிலக விகாரைச் சாசனம் 350.
359

Page 191
இலங்கைச் சாசனவியல் 13: இலங்கைச் சாசனவியல்பற்றி எழுதியவை 333 இலங்கைத் தொல்லாவணக்களரி 333. இலங்கைப் பழைய சாசனம் 13. இலங்கையின் மரபுவழி வரலாறு 13, 26. உடம்படுமெய் 75, 76. உதசபூர்வதர்மதானம் 231, 232 உபகரணங்கள் 18 8, 189 مஉயர்வு நவிற்சி 251, 252, 257, 264, 270. உயிரொலி மாற்றங்கள் 60, 61, 62, 63, 64, 65, 66.
297, 298. எண்ணுப்பெயர் 101, 102, 103, 104, 105. எதிர்கால வினைமுற்று 116, 117 எதிர்மறைவினை 123, 124, 125. எல்லீசு 17. எழுத்தொலி மாற்றங்கள் 56, 57, 296 , 297, 303, 304 எழுதுபவரின் தவறுகள் 57, 58, 59, 60. எழுது கருவிகள் 42, 43. எளிமையான போக்கு 42, 43, 44, 45, 46: ஐராவதம் மகாதேவன் 11, 123 ஒருபொருட்பன்மொழி 311, 312, 313. ஒலி இடம்மாறிநிற்றல் 71. ஒலிகெடுதல் 71, 72 ஒலியன் 53, 54 கங்கைப் படையெடுப்பு 243, கடாரப்படையெடுப்பு 43 கண்ணையன், வி. 26, 27, 30, 31, 41 கணபதி 141, 163, 167, 168. கணபதிப்பிள்ளை, க. 52. கணனிமுறை 8, 9, 10 கந்தளாய்ச்சாசனம் 339 கமீல் சுவெலிபில் 47
360

கல்வி, சமய, சமூக சேவைகளுக்கான கொடைகள் 315,
31 6, 31 7
கல்வெட்டு: மூலமும் விளக்கவுரையும் 233,
&LDs 6ft 6
காடவர்கேரன் கழற்சிங்கன் 281
காரணப்பொருள் 121, 122
கால்டுவெல் 4, 18, 86;
காலமயக்கம் 131, 132, 133
காலி மும்மொழிச் சாசனம் 352.
காளி, சக்தி 141, 163, 167, 168.
கி.மு. 543 லிருந்து கி. பி. 1200 வரை சங்கதமொழி
நெடுங்கணக்கு அடைந்த மாற்றங்கள் 4.
கிருஷ்ணசாஸ்திரி, எச் 11, 332.
குணபரன் 280
குருளுகற் Firge Gorắias6î 3 4 8.
குற்ருலச்சாசனம் 31.
கூட்டுவினை 127, 128, 129, 130.
கூரம்பட்டயம் 17,
கேரளச் சாசனம் 38.
கொட்டியாரச் சாசனம் 340.
கோட்டகமச் சாசனம் 351.
கோபிநாதராவ் 5, 8, 18, 20, 21, 22, 31, 33.
கோவில் அதிகாரிகள் 223, 224.
கோலெழுத்து 30, 31 . 38
சங்கதம்-தமிழ்-கிரந்தம் 55, 56
சண்டேசுரப்பெருவிலை, தண்டே சுரப்பெருவிலை
222, 227
சந்திவிளக்கு 141, 153, 193, 207
சமணம் 141, 171, 172, 173, 200.
சாசனத்தமிழில் விலாசம் 325, 326, 327
சாசனச் செய்யுள் மஞ்சரி 233:
36.

Page 192
சாசனத் தமிழ்க்கவி சரிதம் 233, 285. சாத்துப்பணி 210, 21 1, 223, 225, சிங்களவர்-தமிழர் பிரச்சினையும் இலங்கை வரலாறும்
328, 329, 330. சிங்கள வரிவடிவம் 34. சித்தண்னவாசற்சாசனம் 13 சிந்தனை 353, 355 , சிவராமமூர்த்தி 6, 8 13, 18, 20, 21, 22. சிறுத்தொண்டர் 280. சுந்தரேச வாண்டையர் 233. சுப்பிரமணிய ஐயர், கே. வி; 11, 12, 23, 28, 29 சுப்பிரமணியம், ரி. என். 6, 8, 10, 13, 17, 18, 20, 21, 22, 27, 34, 42. சுமேரிய வரிவடிவம் 7. சூரியன் 141, 163, 168, 169, செமிதிக் வரிவடிவம் 9, 28. செயப்பாட்டுவினை 122, 123, செயவெனெச்சம் 1 17, 1 18, 1 19. செல்வநாயகம், வி. 285 சென்னைச் சாசன வியல் அறிக்கை 332 சேர்க்கார், டி. சி. 12. சேஞபதிப்பெருவிலை 227. சொல்லின் முதலில், இடையில், கடையில் புதுஒலி
தோன்றல் 71, 72, 73, 74, சொல்லுக்கு இரு வடிவம் 74, 3 10. சொற்ருெடர்முறை 91, 92. சோழமண்டலச் செய்யுள் 266, 267, 268, 269, 270, 27 1 , 27 2 , 2 7 8 . சோழர்காலச் செல்வப்பெருக்கம் 181, 182, 183, 184. தஞ்சைப் பெருவுடையார் கோவில் 180, 18 1, 182. தண்ணிர்ப் பந்தல் 20 1. தத்துவபோதக சுவாமிகள் 293, 2943
362

தம்பலகாமச்சாசனம் 339 தமிழ் உரைநடைவரலாறு 285. தமிழ்-கிரந்தம், கிரந்தம் 5, 16, 17, 19, 20, 21, 30,
32, 35. 36, 37, 38, 39, 42, 54. தமிழ்த் தொல் வரிவடிவவியல் 6, 11, 19, 24 தமிழ்நாட்டுக் குகைச்சாசனங்கள் 10, 11, 13, 15, 18,
24,27、 தமிழ்நாட்டுக்கு வெளியே தோன்றிய செய்யுள் 277,
278, 279. தமிழ்ப் புலவர்காலம் 282, 283 . தமிழ்மொழி வரலாறு 47, 5 1: தமிழ் வரலாற்றிலக்கணம் 47. தமிழ் வரிவடிவம் 5, 16, 18, 30, 32, 33, 36, 54, 55 தமிழிலே சித்திர எழுத்து 10. தன்வினை பிறவினை 125, 126, தானி 2, 3, 6, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 22, 24 ,
26, 29, 36. திசையாயிரத்து ஐந்நூற்றுவர் 336, 350, 352 திராவிடி 12. திரிபுவனச்சக்கரவர்த்தி 252, 265. திருக்கோவிற் சாசனங்கள் 387; திருநாதர் குன்றுச்சாசனம் 15, 19. திருப்பணி, கட்டிடம் 141, 16 1, 162, 220, 226. திருப்பதிகம் ஓதல் 197, 198, 199. திருமஞ்சனம் 208, 209 திருமேனிகள் 185, 186, 187. திருவாங்கூர் புதைபொருளாராய்ச்சி வெளியீடு 5. தீபமாலை 207. துணைவினை 127, 128, 129, 130, 131, தெலுங்கு, கன்னடவரிவடிவங்கள் 16, 20, 34, தெள்ளா றெறிந்த நந்திவர்மன் 281, தென்மேற்றிசைப் பெயர்ச்சி 347.
363

Page 193
தென்னிந்தியத் தீபகற்பத்திலுள்ள மொழிகளின் பழைய
புதிய வரிவடிவங்கள் 3
தென்னிந்தியத் தொல்வரிவடிவவியலின் மூலாதாரங்கள் 4
தேவதானம், திருநாமத்துக்காணி 141, 1 5 9, 160, 195,
196, 197, 212, 214, 215, 21 6, 21 7, 218, 2 19, 220.
226。
தொகைநிலைத்தொட்ர் 138
தொண்டைமண்டலச் செய்யுள் 260, 261, 262, 263,
264, 265, 2 663 斜
தொல்காப்பியம் 35, 50, 75, 84, 89, 90, 97.
நகரனகர மயக்கம் 53, 54, 55.
நவநீதப் பாட்டியல் 235
நயினுதீவுச்சானம் 333
நாகரிவரிவடிவம் 35, 39, 40
நாடகத் தமிழ் 284,
நாராயணராவ் 11,
நிகழ்கால வடிவம் 113, 114;
நிகழ்வு - எதிர்வு 114
நிபந்தனைப்பொருள் 121;
நிலையான பொருள் 314, 315
நீண்டவாக்கியம் 290, 29 1, 292.
நீர்ப்பாசனம் 14. 174, 175, 176, 177, 17.
நுந்தா விளக்கு 141, 142, 143, 144, 145, 146, 147,
148, 149, 150, 151, 152, 153, 20 6.
நெல்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் 280
tu at afatá (5 141, 15 E.
பகைவர் அவலச்சுவை 246, 249, 250.
பட்டிப்புருேலுச் சாசனம் 10.
பண்டைத் தமிழ் எழுத்துக்கள் 6.
பதவியாச் சாசனங்கள் 335.
பதினறடி அளவுகோல் 230,
பர்னல் 12, 18, 33, 34
864

பரணவிதான 7, 354 பழந்தமிழிலக்கியம், சங்க இலக்கியம் 14, 23, 28, 35, 50, 51, 52. பள்ளன்கோவிற் சாசனம் 47. LuGa?, f. 52. பன்னிருபாட்டியல் 235. பா கதம் 10, 11, 18, 27, டாண்டி மண்டலச் செய்யுள் 273, 274, 275, 27 6 பாண்டிய குலத்தின் பழம் பெருமை 280. பாண்டியர் காலமுறை 203, 204, 205. பாண்டியர் குலமுறை 203, 204, 205. பாரதீய லிபிமாலா 2. பாலறிகிளவி வகை 115, 1 16, 117. பாவின்றெழுந்த கிளவி 287. பிரசஸ்தி 258, 259. பிரதி மங்கள் 185, 187, 188. பிராமணர் 179, 17 1, 219, 227, 228, 231, 232. பிராமி 5, 9, 12, 13, 18, 19, 23, 27, 28, 29, 33, 34,
35, 40
, 27 7.
பிரெடெரிக் கோட்டைச் சாசனம் 339. பின்னிணைப்புகளின் பயன்பாடு 91, 93, 94, 95, 98, 97 புத்தமித்திரனுர் 282. புதைபொருளாராய்ச்சித் திணைக்களம் 331, 332, 333. புலவர் பெயர்கள் 283 . பூலர் 2, 5, 13, 33. பெண் தெய்வ வழிபாடு 210. பெயர்ச் சொல்லாக்கம் 85, 86, 87, 88, 317, 318 319, 320,381,522, பெயர்ச்சொற் பாகுபாடு 89, 90, 91. G. Lituut 60 L - 97, 98, 99. பெயரெச்சம் 1 10, 111, 112, 113, 114, 115, பெரிய சின்னமன்னுார்ச் சாசனம் 17, 280,
365

Page 194
பெல், எச் 5 சி; பி. 332. பேச்சு வழக்கு 49, 50, 56, 57, 295, 296. பொது வருமானம் 141, 162, 183 பொருள்மயக்கச் சொற்ருெடர் 311. பொலனருவைச் சாசனங்கள் 344, 345, 346, 347. பெளத்தம் 200, 201. மகாலிங்கம், ரி. வி. 24, 27, 29, 30. LoLü56ü 220,221,227,230。 மயிலை. சீனி. வேங்கடசாமி 233, மரபுவழித் தமிழிலக்கணம் 49. மரியாதையிடைச் சொல் 137, 138. மரூஉ 322, 323, 324. மலையாள எழுத்து 21, 22, 28 மன்னர் வீரச் சுவை 245, 246, 247, 248. மன்னர்க் கச்சேரி வளவுச்சாசனங்கள் 334. udst Gg fra l-& SFir & stor th 3 35. மாமல்லபுரச்சாசனம் 3 மீனுட்சிசுந்தரஞர், தெ. பொ. 47, 57, 62. முருகன் 14 1, 163, 189, 170. முருங்கன் சாசனம் 334. முற்றியலுகர வீற்றுப் புணர்ச்சி 76, 77. முன்னேசுவரம் கோவிற்சாசனம் 349. மூவிடப்பெயர் 99, 100, 101. மெய்கெடுதல் 75, 84, 85. மெய்திரிதல் 75, 81, 82, 83, 84, மெய்யிரட்டுதல் 75, 77, 78, 79, 80, மெய்யொலி மாற்றங்கள் 60, 66, 67, 68, 69, 70, 71, 2.99. வச்சனந்திமாலை 235. வட்டெழுத்து 5, 6, 16 17, 18, 19, 21, 22, 30, 31
32, 33, 35, 36, 37, 38, 54, 55. வடமொழி - தமிழ் சொற்ருெடரி 301
366

வடமொழி - தமிழ் : மொழிபெயர்ப்பு 308, 309, 310.
வடமொழியாக்கம் 56, 305, 306, 307, 308. வரிவகை 211, 21 2, 213, 226, 229 விகாரகின்னைச் சாசனம் 350. விகாரப் புனர்ச்சி 75. விசேட பூசை, விழா 141, 156, 157, 158, 159, 193, 194, 21 1, 2 12, 2 13, 214, வியங்கோள் வினை 119, 120, 121. விருந்தினர் உணவு 141, 179. விலைப்பிரமாணம் 220, 224, 231, aí807 uu Gao L. I 33 வினையமைப்பு 108, 107, 108, 109.
வினையாக்கமுறை 105, 106, 107, 109, 1 10, 116
126,
வினையெச்சம் 110, 11 1:
வீரக்கல் 141, 178:
வீரசோழியம் 56, 75, 78, 82, 90, 95, 97, l 19,
வீரமாமுனிவர் 41, 293, 294.
வேற்றுமை - அல்வழிப் புணர்ச்சி 78, 79, 81, 82,
வைணவம் 141, 164, 165, 166, 167, 200, 225, 227, 228, ஹீராஸ், பிதா எச். 75 "பூரீ" எதிர்ப்புப் போராட்டம் 342;
192, 223
125, 27.
99, 122
83.
226, 229.
367

Page 195
பிழை - திருத்தம்
பக் 2. வரி 13,
ué§. 23. , , 22,
Lu &š. 4 7 . , , 7, Lu &š. 82 , , , 6, Lu &š. 9 l , , , I, 6, uáš. l I4, ..., 6, Lă. 1 27 , , , 24, Ludi. Il 3 l , , , 21 , Lu iš. 2 l 8, , , il 5, பக், 239, , , 18,
சிலற்றை - சிலவற்றை சுப்பிரமணிய சாஸ்திரி .
省 சுப்பிரமணிய ஐயர் ககாக்கள் - சகாக்கள் அவ்வழியிலும் - அல்வழியிலும்
657.Y = 676R.ʻf
சிறு - கிறு வி - வ் நிகழ்காலத்தைக்-நிகழ்காலத்தைச் அரசனுனை - அரசனுணை நெடிதிழியு லூளிடை துறை -
நெடிதிய லூழியு ளிடைதுறை
பக். 261, அடிக்குறிப்பு தமிழ் - செந்தமிழ்
Ludi. 267, au fl 11,
Luè. 277, , , 24, Lu i . 278, , , il 5, Ludi 308, , , 5. Lu &š. 3 il 5, , , 14, Lud. 322 , , , 6, LuÈ. 328, , , 20,
புகழ் - புகத் மங்கலன் - மங்கலவன் இவங்கை - இலங்கை தமிழாச்கம் - தமிழாக்கம் ஆகும் - ஆனல் நகரங்களிலர் - நகரங்களிலார்
மகாவிரையின் - மகாவிகாரையின்
(சுலபமாக அறிந்துகொள்ளக்கூடிய நிறுத்தக்குறிகளின் பிழைதிருத்தம் இங்கு இடம்பெறவில்லை.)
368


Page 196


Page 197
o -