கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ்ச் சொற்பிறப்பாராய்ச்சி

Page 1
:
D  ܼ ܘ .
| वा।
 ܼ ܼ ܼ ܼ ܼ
鷺
*
 


Page 2

STUDIES
N TAMIL ETYMOLOGY
தமிழ்ச்சொற் பிறப்பாராய்ச்சி
ஆக்கியோன்
கல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்
- திருப்பனந்தாள் பூரீகாசிமடத்துத்தலைவராகிய
கெளாவம்பொருந்திய
பூநீலபூரீ. காசிவாசி ஸ்வாமிகாதஸ்வாமிகளது அருள்மேய பொருளுதவிகொண்டு அச்சேற்றப்பட்டது
1932

Page 3
Permissu Superiorum.
JAFFNA, ST. JoSEPH's CATHOLIC PRESS CEYLON

FOREWORD
DECENT word-studies in ancient Tamil, as V compared with its sister dialects, have made it possible to identify with precision the 'roots' of what is commonly known as the Dravidian group of languages. These roots are not mere vocal elements artificially put together by a comparison of analogous forms, as is the case with most of the hypothetical “roots” constructed by Indo-European philologists for their languages. The Dravidian roots are real words in their primitive stage, still to be met with here and there in current writings, but most commonly used in early Tamil literature. They number but a few scores, and, by a patient investigation of the laws of Tamil word-building, the conclusion is arrived at, that it is from these scanty early forms that the entire vocabulary of the Dravidian languages (excepting, of course, a handful of onomatopoetic terms) was derived. The identification of these original words, coupled with the ascertaining of the laws which govern the evolution of their derivatives, furnishes us with the necessary data for a scientific study of Dravidian etymology.
On further examination of the laws of the evolution of Dravidian derivatives from their germinal or root stage, it has been found that the vocabularies of Sanskrit and the other members of the Indo-European group were also evolved from the same roots, by the operation of some additional laws occasioned by the physiological tendencies of the peoples who made use of the common word-materials for building up their own speeches. This fact, I am aware, will not be recognised at once by scholars who have hitherto discovered no more connexion between the two groups than the accidental one of the mutual borrowing of a number of stray words. The publication of my proposed Etymological and Comparative Lexicon, it is hoped, will enable impartial students to discover the common origin of both the groups for themselves,

Page 4
IV
The laws governing the formation of derivatives from the original roots are set forth and fully discussed in a work entitled AN ESSAY ON THE PRINCIPLES OF "TAMIL ETYMOLOGY which is now in course of preparation. The present Tamil treatise gives the substance of the former, and is, mainly, a reprint of a series of articles which appeared in some Tamil journals of South India and Ceylon.
Here is a brief summary of the principles of Tamil etymology as discussed in the following pages:-
I. Primary roots are early words composed of one of the four demonstratives a, u, i, and e and a formative consonant. They are all grouped under four classes corresponding to the aforesaid demonstratives, and semantically represent the root-ideas of Near, Far (or hidden from view.) Beneath and Above, respectively. These roots, essentially monosyllabic, are, in most cases, rendered dissyllabic by the addition of an enunciative for facility of pronunciation. e. g. pisogy, be near; e-air, hidden away, within; 34A, get beneath ; arap, arise.
II. Primary roots become diversified into other analogous ones by
(1) Sense-differentiating enunciatives. e.g. 3)AS, to get beneath, becomes 3Gyp, to drag down, 9p, to lay down &c.
(2) Variation of the formative. e. g., gap be
comes g(8, to set down; 3)CD, to sit down.
(3) Variation of the radical vowel. e. g., எல், "the riser' the sun, becomes 36, to be lightsome, d. 60-i, to burn.
III. Secondary and tertiary roots are formed in the following ways:
(1) By introducing an initial intensive consonant. e. g., gyss, to get beneath, becomes 6ts to dig into the ground; 666 to be lightsome, becomes G3 it 66, to shine,

v
(2) By additional formatives. Thus: gap, drag
down, 3.Qp-(5, lag behind, glp, lay down, 9)at-g5, become loose.
(3) By lengthening ( guna ) and flattening
(vrddhi) the radical vowel. Thus: gif, fall down, iFi, drag down; sitte, bend, 56/6, to slip, tumble over.
IV. Among the laws for the formation of derivatives are :
(1)
Reduplication and euphonic nunnation, e.g., ?aITG35, to be loose, MaTiC5, to loosen ; sy@, to be near, gjLG, to put near (by reduplication) and gyanāt (6, to get near, (by euphonic nun nation). The use of suffixes which are no other than variations of original root-words such as: J/g), 'the'; dair, "having'; .96), "that which is'; 'where a thing is'. Thus: gopal, "the thing that is sticky' i. e. grease, butter; guajai, 'having power to move', a leader; GoliuSá, "what possesses heat', sunshine. Prefixes are but seldom used in the Dravidian group, unlike the Indo-European which has a great fondness for them.
V. Of the many (and rather complicated) phonetic laws governing dialectal corruption within the Dravidian group, only the chief ones can be noticed
here:
(1)
(2)
Vowel changes.--), gy become 67, as and 3, 9 and vice versa. So too all and 9) are interchanged. Again initial D - has a pronounced tendency to become 6 (= w ). This is most patent in the Indo-European group, wherein a great many Tamil roots having initial are found with initial v or w.
Consonantal changes.- a changes into g, and this into LJ, G, and is and vice versa. Again F becomes 5; and also is is changed into 6) and LJ, The last is often represented

Page 5
VI. A
V!
by Aro in Kanarese. Lu is also changed into ay and Ld. This last becomes 60t, while 15 is also changed into D. Again a and T interchange as do 6), p, is and L-. Likewise, als, l-, air and 6), p, GT, A, 607 are found to change places. In Tulu & often stands for so.
mong the cases of dialectal corruption
peculiar to the Indo-European group the following may be noted as the earliest ones:
(1)
Initial vowels are easily elided and many words are now found with their original formatives as initials. e. g. Tam. (Dai Skt. lul.; Tam. Gad) 3:fi:j F Lb Lat. luar etc. Other phonetic phenomena such as syncope, meta
thesis, anaptyxis, haplology etc. are also
(2)
(5)
(4)
The late
frequent.
A sibilant is often introduced before the initial consonants of secondary roots. e. g., Skt. spas for bas, Tam. L17 å (LJ T-a) Gr. strepho for trepo, Lat. tremo, Tam.“ ÁF(5ÜLH, திருமு. ۔۔۔۔ Similarly, a guttual (sometimes palatalised) is introduced before initial vowels Thus Tam. 2o - tiu, po uiiiii Lat. uiuius, Goth. uuvius, A. S. cvic (quick), Skt. jiv. There is a tendency to add ari r (trill) to certain consonant sounds. Thus: Skt. droni, for Tam. G335 a 60øf?; vrdh, for Tam. GDJ GM7 i.
r vowel gradations and consonental changes,
through which the various Indo-European speeches passed, are not taken into consideration here, as they can be found in the works of the philologists of Europe.
An appendix presents some of the many ramifica
tions of a
single secondary root, as an illustration of
the principles set forth in the body of the work.
Nallur,
S. Gnana Piakasar, O. M. I.
Jaffna, Ceylon,
30-1-32.

அான்முகம்
~~
சென்ற வருடம் இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் யான் தமிழ்ச் சொற் பிறப்பு ஆராய்ச்சி சம்பந்தமாய்ப் புதினப் பக்திரிகைகளில் வெளியிட்ட சில விடயங்களை ஒருங்கு திரட்டி, அவற்றேடு பல துறைகளே நவமாய்ச் சேர்த்தும், அநுபந்தத் தில் ஓர் வழியடிச் சொல்லின் வியுற்பன்னங்களை விரித்துக் காட்டியும் இந்நூலை இப்போழ்து அரங்கத்தில் விடுகின்றேன். இது 'தமிழ்ச்சொற் பிறப்பகராதி” எனும் நாமத்தோடு என் ல்ை இயற்றப்பட்டு வருகின்ற பெரிய நூலினுக்கு ஒர் முகவுரை போன்றதாம். தமிழ்ச் சொற்களெல்லாம் ஒரு சிறு தொகை யான அடிகளினின்று பிறந்திருக்கலையும், அவ் அடிச் சொற் களே வடமொழியாதியப் வேறநேக மொழிகட்குங் தாதுக்களாய் நிற்றலையும் விளக்கி, தமிழையும் பிறமொழிகளையுங் கற்போர்க் கெல்லாம் அருமந்த துணைக்கருவியாக நிலைபெறத்தக்க அவ் அகராதியின் வேலையை நிரப்பி வெளியிட எனக்கு உதவி செய்தல் தமிழ் அபிமானிகளது குன்ருத கடமையாகும்.
அவ் அகராதியின் இயல்பைக் தெரிவிக்கின்ற இச்சிறு ஆராய்ச்சி நூலை அச்சு வாகனம் ஏற்றித் தமிழுலகில் உலவிவா விடுதற்குப் பொருளுதவி புரிந்தருளிய திருப்பனந்தாள் மகா சங்கிதானம் பூரீலபரீ காசிவாசி ஸ்வாமிநாத ஸ்வாமிகளது அளப்பருங் கருணையை உயிருள்ளளவும் மறவேன். மகா சங்கி தானம் தமிழ் வளர்ச்சியின் பொருட்டுச் செய்து வருகின்ற பெரு முயற்சிகளை இறைவன் மேன்மேலும் கைகூடச் செய்யு மாறு அவன் அமல அடியிணையைச் சிக்கிக்கின்றேன்.
கல்லூர், சுவாமி ஞானப்பிரகாசர்

Page 6
II.
III.
IV.
V.
WI.
CONTENTS உள்ளுறை
அடிச்சொல்இயல்பு - நிகண்டுகளும் அகராதிகளும் - தமிழ்த் தாதுக்கள் - அடிச்சொற்களே ஆதிப்பாஷை - தாதுக்களின் அகத்தியல்பு-சுட்டுதலே பெயரீடு-சொல்லெல்லாம் இடச் சார்புபற்றிப் பிறந்தனவே 1-10
வழிச்சொல்லாக்கக்கட்டளைகள்-(1) கருத்தை வேறுபடுத்தும் உச்சாரண உயிர்கள்-(2) வேறுபடும் வியஞ்சனங்கள்-(8) மேல்வந்துறும் வியஞ்சனங்கள்-(4) வியஞ்சனம் இரட்டலும் மெல்லொற்று அணைதலும் 11-18
மேலும் நான்கு கட்டளைகள்.-(5) வலியுறுத்துகின்ற முதனிலை மெய்கள்-(6) அடிச்சொல்லை நீட்டலும் மடக்கலும்-(7) வேறுபடும் அடியுயிர்கள்-(8) பிறிதொரு ஆதிச்சொல்லோடு கூட்டுதல்-வேறு சில இறுதிநிலைகள் 15-32
சொற்சிதைவு-உயிர்மாற்றும் மெய்ம்மாற்றும்-மெல்லொற் றும் உடம்படுமெய்யும்-உருத்திரிபாற் சிதைவு 33-42
பொருள்வேறுபாட்டுமுறை-(1) சொற்களின் அடிப்பொருள்(2) சிறப்பியல்பு சுட்டல்-(3) சார்புபற்றிவிரிதல்-(4) இனங்கழுவல்-(5) இயைபுடைமை-(6) எதிர்நிலை-(7) வழக்காறிழிதல் 48-50
ஆரியமொழிகளில் வழிச்சொல்லாக்கம்-அடிப்படையிற்சொல் லொற்றுமை- தமிழும் ஆரியமும்- வடமொழிச்சொல்லாக் கச்சிறப்புவிதிகள் 51-60
அநுபந்தம்-ஒர்வழியடிச்சொல்லிற்பிறந்தவை 61-98
பிழைத்திருத்தம் 99

STUDIES IN TAMIL ETYMOLOGY தமிழ்ச் சொற்பி றப்பாராய்ச்சி
முதல் அதிகாரம்
NATURE OF TAMIL ROOTS தமிழ் அடிச்சோல் (இயல்பு
உலகின்கண் சொற்பொலிவில் தலைசிறந்த மொழிகளுள் தமிழும் ஒன்று. ஒரு பொருட்கு ஒரு செயற்கு ஒரே ஒரு சொல்மாத்திரமன்று, பலசொற்கொண்டது எங் தமிழ். க்னித்தமிழில் ஒருசொல்லால் எடுத்து விளக்கக்கூடாத உள்ளக்கிடக்கைகள் மிகச்சிலவேயாம். தமிழ்ச்சொற் கணக்கு பல்லாயிரமென்பது வேர்க்குங் தெரிந்ததொன்று. இனி நாடோடி வழக்கிலுள்ள கொடுந் தமிழ்ச் சொற்கள் ஒரு திறம். பழைய இலக்கியங்களுட் பயிலும் செங் தமிழ்ச் சொற்கள் ஒரு திறம். இவை இரண்டு திறத்தனவான தொகுதிகளும் ஒன்றிற்கொன்று எவ்வளவு மாற்றமுடையவையெனின், இரண்டையும் இருவேறு பாஷையெனச் சொல்லினும் சொல்லலாம். கொடுந்தமிழ் மட்டும் பேச்சிலும் எழுத்தி லும் தனித்து வழங்குமாயின், அல்லது, செந்தமிழ்தான் தனித்து வழங்குமாயின், இரண்டுள் ஒரு தமிழினைக் கற்றுக்கொள்ளுதல் எளி தில் அமைவதாகும். தமிழ்நாட்டிலோ அவ்வாறன்று. பேச்சிலெல் லாம் கொடுந்தமிழ் இயன்றுவா, எழுத்தில் இதற்கும் இலக்கியத் தமி முக்கும் இடைகின்ற ஒரு தமிழ் வழங்குகின்றது. இதனுல் முன்னைய செந்தமிழ், கொடுந்தமிழ் எனும் பாகுபாட்டோடு 'புத்தகத்தமிழ் ' எனவும் ஒரு பகுப்பு ஏற்படுவதாயிற்று. கொடுந்தமிழை விலக்கிப் புத் தகத் தமிழ் வழங்கும் நூலாசிரியர்களும், தத்தம் அறிவாற்றலுக்கு ஒப்பச் செந்தமிழிலிருந்து சொற்களைத் தொடர்களை ஆங்காங்கு எடுத்து வழங்க ஏவப்படுவோராகின்றனர். செந்தமிழ்ச் செய்யுட்களையும் ஒரோ விடத்து மேற்கோளாக எடுத்தாளுகின்றனர். இதஞல் தமிழ் மொழி யில் வல்லுநராக விரும்புவோரெல்லாம் முத்திறப்பட்ட தமிழ்ச் சொற் களையும் அறிந்திருத்தல் வேண்டப்படுகின்றது.

Page 7
2 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
நிகண்டுகளும் அக ராதிகளும்
முற்காலம் தமிழ்ச்சொல் கற்போர்க்கு உதவியாக வாய்த்தன பிங்கலங்தை, திவாகரம், சூடாமணி நிகண்டு முதலிய சொற்ருெகுதிக ளாம். இவை செய்யுள் உருவமாய் அமைந்தன. இவற்றைப் பன்ஞள் முயன்று நெட்டுருப்பண்ணிக்கொள்வோர் தமிழ்ச்சொற் பெரும்பாப்பில் ஒருபாகத்தை அறிவோராவர். அவ்வொரு பாகத்தினுக்குச் சொற்குச் சொல்லாகப் பொருளறிதற்கு இந்நூல்கள் உதவினும், அவ்வச்சொல் வெவ்வேறு நிலையிலும் தொடர்பிலும் கொள்ளுகின்ற புதுப் புதுப் பயன்களை முற்றத் தெரிந்துகொள்ள ற்குப் பெரும்பாலும் உதவமாட்டா. இக்குறைபாட்டினை இற்றைக்கு இரண்டுநூற்முண்டுகளின் முன் தென் னிந்தியாவில் எழுந்தருளியிருந்த கத்தோலிக்கு சமயாசாரியராகும் வீரமா முனிவர் எனும் கொன்ஸ்தன்சியு பெஸ்கி (Rev. C. Beschi) அகற்ற உன்னி, ஐரோப்பையர் தம்மொழிகளின் நெடுங்கணக்கு வரிசையில் அக ராதி வகுக்கும் முறையைத்தழுவி, தமிழுக்கும் சொற்ருெகுதிகள் நான்கு செய்து சதுரகராதி எனும் பெயரோடு வெளிப்படுத்தினர். வீரமா முனிவர் வழிகாட்ட, அவ்வழியைப் பின்பற்றி, மானிப்பாய்த் தமிழ்ச் சொல் அகராதி, கதிரைவேற்பிள்ளை தமிழ்ச்சொல் அகராதி ஆதியன பல அகராதிகள் ஒன்றைவிட ஒன்று அதிக திருத்தமாய் வெளிப்பட் ள்ெளன. இன்றைக்குச் சென்னைச் சர்வகலாசாலையின் ஆதரவோடு பிரசுரிக்கப்பட்டுவருகின்ற பெருந் தமிழ்ச்சொல்லகராதி, யாவற்றிலும் காட்டில் அதிக விசேடம்பெற்றது. நிகண்டுகள் மட்டும் நிலவிய காலத் திற்போலன்றி, அகராதிகள் மலிந்து விளங்கும் இக்காலம் தமிழ்ச் சொல்லுணர்ச்சி மிக்க இலேசாய்ப் பெறப்படலாமென்பது ஒருதலை, ஆயின் அகராதிகளின் துணையோடேயும் சொற்குச்சொல்லாய் ஒவ் வொரு பயனையும் வாய்ப்பாடமாக்கும் தொல்லை ங்ேகிற்றன்று. தமிழ்ச் சொற்களைப் பாடம்பண்ணிக்கொள்ளும் முயற்சி ஒருவரது வாழ்நாள் முழுவதும் ஒழுங்குபெற நிகழுமிடத்தும் முற்றுப்பெருததாகிக் கிடப் பது நாமெல்லாம் பட்டறிந்ததொன்று.
தமிழில் இக்காலம் வழங்கும் அகராதிகளைக்கொண்டு சொற்பயன் களை அரிதிற் பாடமாக்கும் முறையில் யாதேனும் திருத்தத்திற்கு இட முண்டா? தனித்தனிக் தமிழ்ச்சொற்களை மனதில் கரித்துக்கொள்ளுத லாகிய பெருமுயற்சியை எளிதாக்கிவைத்தற்கு யாதாவது சூழ்ச்சியான வழியுண்டா? ஆரியம் முதலிய சில பிறமொழிகளை நோக்குவோமாயின், அவற்றிற் சொல்லர்த்தங்களைச் சுலபமாய் மனதில் கரித்து நெட்டுருப் பண்ணிக் கொள்ளற்கு வாய்ப்பான ஒரு உபாயம் இருத்தலைக் காண் போம். அவ்வுபாயம் யாதெனில்: சொற்கள் கூட்டங்கூட்டமாய்த் தம் முட் பிறப்பொற்றுமை கொண்டு நிற்றலை ஆராய்ந்தறிந்து, ஒவ்வொரு கூட்டச் சொற்கட்கும் பொதுப் பிறப்பிடமாயுள்ள அடியை அன்றேல் தாதுவைக் கண்டுபிடித்து வைத்தமையாம். இவ்வாறே.ஆரியமென்னும்

தமிழ்ச் காதிக்கள் 3
வட மொழியின் செர்ற்களை இயன்றவரை கூட்டங் கூட்டமாய் வகுத்து ஒவ்வொரு கூட்டத்தினும் அடிகளைத் தங்காலத்து அறிவுகொண்டள வில் நிச்சயித்துப் போயிஞர் கிருக்தம் என்னும் ஆாலை இயற்றிய யாஸ்கர் என்பவர். தற்காலம் மேஞட்டிலும் பிருண்டும் விளங்குகின்ற சொற்பிறப்பு ஆராய்ச்சியாளர்க்கெல்லாம் கங்தையாகும் இச் சமஸ் கிருத மொழி வல்லுநர் வாழ்ந்தகாலம் கி. மு. அறுநூறு ஆண்டுவரை யில் என்ப. அந் நாட் தொட்டு இங்காள் வரையில் வடமொழியா ராய்ச்சி, முக்கியமாய் ஐரோப்பையர்களது தளரா முயற்சியைத் துணைக்கொண்டு, மேன் மேலும் வளர்ச்சி பெற்று வந்தமையினுல் தற்காலச் சமஸ்கிருத அகராதிகளில் ஏறக்குறைய ஒவ்வ்ொரு சொல்லினுக்கும் பெரும்பான்மை சரியான தாது குறிக்கப்பட்டிருத்தலைக் காணலாம். இத் தாதுக்களை ஒருதரம் மனத்திற் பதித்துக்கொள்வதுண்டாயின், அவ்வவற்றினின் றும் பிறந்து கிளைத்துவரும் பற்பல சொற்களேயும் ஒருங்கே மனனம் பண்ணிக்கொண்டதாகும். அடிச் சொல் உணர்ச்சியால் கிளைச் சொற் களைப் பாடின்றிப் பயின்றுகொள்ளும் செளகரியம் கங் தமிழுக்கே இது காறும் இல்லாததாயிற்று.
தமிழ்த் தாதுக்கள்
வடமொழியிலும் தமிழ் திருத்தங் குறைந்ததா? பொலிவுகுன்றி யதா? கியகமான கட்டளைகட்கேற்ப ஒழுங்குபடக் கிளைத்த சொற்கூட் டங்கள் இன்றியதா? அல்லவெனில், சமஸ்கிருதத்திற்குப் போலத் தமிழி னுக்கும் அடிச் சொற்கள் தெரிக்கப்பட்டிராமைக்குக் காரணம் யாது? தமிழைப் போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலுஞ் சொற்பரப் பைக் கொண்ட ஒரு பாஷை நாம் அறிந்தவற்றுள் வேறின்ற, புதி யன புகவிடாது பெரும்பான்மை பண்டை உருவங்களையே காத்துக் கொள்ளும் சார்பொன்று தமிழகத்துக் காணப்படுவது. இச்சார்பினல் ஆரியத்தின் கண்ணும் இல்லாத நிரைப்பட்ட சொல்லொற்றுமை தமி ழுக்குரியதாகும். ஆயின், தமிழ்ச்சொற்கள் ஒற்றுமைப்பட்டு ஒருசில அடிகளினின் அறும் கிளைத்தெழுந்து நிற்கும் பெற்றி அரிதின் உணரக் கிடத்தல் எங்நனமெனில், தமிழ்ச் சொற் பிறப்புக் கட்டளை "ளை வரை யறுத்து நாட்டிவைக்க யாவரேனும் இதுவரையில் வெளிப்படாமையி ஞலாம்.
தொல்காப்பியர் தமது உரிச்சொல்லியல் ஆதிய சிலவிடங்களிலும், கச்சிஞர்க்கினியர் ஆதியாம் உரையாசிரியர்கள் ஆங்காங்கும் ஒருசில சொற் கட்குப் பிறப்புக்காட்டிப் போயினுர் அன்ருே எனின், அது உண் 66 மயே. ஒரு சில சொற்கள் பிறந்தமை பல நூலாசிரியர்களால் ஆங்காங்கு தனித்தனியே காட்டப்பட்டிருப்பினும், சொற்கள் யாவும் பிறந்து வேற் ஆறுருப்பட்டு நிற்றற்கு விதிகளாய் அமைந்த கட்டளைகளை ஆராய்ந்து காட்டுவோர் இல்லாதொழிந்தனர். சொற்பிறப்புக் கட்டளைகளை முறைப் படி எடுத்து விளக்குதலே இந்நூலின் நோக்கமாம்.

Page 8
4 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
தமிழ்ச்சொற்கள். சமஸ்கிருதத்திற்போல அடிச்சொற்களினின்று கிளைத்தெழுந்தமையை இரு எடுத்துக் காட்டுக்களால் விளக்குதும். முன்வருவது தலையடிச் சொற்கு எடுத்துக்காட்டு; பின்னது வழியடிச் சொற்காம். இங்கு காட்டுவன அவ்வச் சொற்களின் ஆதி அர்த்தங் களேயெனக் குறித்துக்கொள்க.
1. எழ எனும் தலையடிச் சொல் எழ-தல்-மேற்கிளம்புதல் எல்-எழுவது-சூரியன்: எழுவானும் அது. எல்-லு, என்-று, என்-றுாழ்-குரிய ஒளி, பகல் எனும் பொருளுள்ள
சொல் விகற்பங்கள்.
எல்-லை, எல்-மை-பகல், கால வரம்பு. ஏல, ஏற்-க, ஏற்-கென-வெளிச்சத்தோடு, நேரத்தோடு, எல்-லே-வெளியே بد எல்-லார்-விளங்குவோர், தேவர் எழி-ல்-விளக்கம், நிறம் எழி-லி-நிறம்பொருந்தியது, மேகம் எழி-னி-நிறந்தீட்டியது, திரைச்சீலை எழ-த் து-நிறந்தீட்டல் இலக்-கித்தல், இலக்கம்-எழுதல், எழுதியது இல-குதல், இலங்குதல்-இலக்கம் இல-கு, இலேசு-ஒளி பொருந்தல், இறுக்கமற்றிருத்தல்
2. துழ எனும் வழியடிச் சொல் துழ-த்தல்-உழன்றுவரச் செய்தல் துழ-தி-உலைவு துழ-வுதல், துழா-தல், துழா-வுதல், துரு-வுதல்-உழன்று வரு மாடி செலுத்துதல்
துழ-வை-துழாவியிட்டது, கூழ் துடு-ப்பு-துழாவுவது, அகப்பை (தோண்டிகாண்க) துளை-த்தல்-உழன்றுவருங் கருவியால் குழிபண்ணல் துளை, தொளை, தொள்-கு, தொண்-டை-ஓட்டை, குழி தொழ-வை-மே தொள்-ளல்,தொடு-தல், தோண்டு-தல்-துளைத்தல், குழிபண்ணல் தோட்-டி-துளைப்பது, துளை (வாயில்) தோண்-டி-துழாவுவது, (துடுப்புக்காண்க) தோணி-ஈடுவிடம் அகழ்ந்தெடுத்தது, மரக்கல்ம் தோள-ல், தோளுதல்-துளைத்தல் தோல்-துளையுள்ளது, மூங்கில் கண்ட இரு தொகுதிகளிலுமுள்ள காற்பத்துநாலு சொற்களும் முறையே எழு, தாழ எனும் அடிகளினின்றும் பிறந்தன என உணர் தற்கு இதனை வாசிப்போர்மாட்டு மொழிநூல் வன்மை வேண்டப்

அடிச்சொற்களே ஆதிப்பாஷை 5
படாது. இச் சொற்களை ஒன்றன்பின் ஒன்முய் ஆராய்வோடு படித்து அவற்றின் உருவம் சிறிது சிறிதாய் மாறி வருதலையும் அவ்வவற்றின் பொருளும் அம்மாற்றத்திற்கேற்பப் படிமுறையாய்த் திரிந்து வருதலை யும் கவனிப்போர், இளம்பாலரேயாயினும், முற்முெகுதி எழுவின் கூட் டமெனவும் பிற்ருெ குதி துழவின் கூட்டமெனவும் தெள்ளிதின் அறிக் துகொள்வார். ஆயின் எழு என்பது இலங்குதல் என வந்தமை எவ் வாறு? துழ எனுஞ் சொல் துடுப்பு எனும் உருவங் தாங்குதல் கூடுமா? எனுங் கேள்வியும் பிறக்கும். அடிச் சொற்களினின்றும் கிளைச்சொற் கள் ஆகும் ஆற்றினை ஆளும் கட்டளைகளை எடுத்துக் கூறுவதே இக் நூலின் நோக்கமாதலால், அவற்றை மேல்வரும் பிரிவுகளைக் கருத்துடன் ஆராய்ந்து கண்டுகொள்க.
அடிச்சோற்களே ஆதிப்பாஷை
எழு எனுஞ் சொல்லை தலையடி எனவும் 'து'ழ'வை வழியடி எனவும் குறித்தோம் அன்ருே? அது யாது பற்றியோ? எனில், முக் தியது அப்பால் தனக்கு ஒரு பிறப்பு இல்லாமல் தானே ஓர் அடி யாய் நிற்பது, பிந்தியது தனக்கப்பாலும் அப்பாலும் ஒவ்வோர் அடி யைத் தாயகமாய் உடையது. ஆதியில் கிற்பதுதான் தலையடியாம். 'து'ழ'வுக்கு நேரே முற்பட்டது உழ-ல் எனுஞ் சொல். இது உலை, உழை, உளை எனவும் நின்று ஒருசிறிது வேறுபட்ட பொருள் தரும். மீண்டும் உழ-ற்று, உழ-ன்றி ஆதியன வழிச்சொற்களாகியும் இயலும். இத்துணை வியுற்பன்னங்களை யுடைய உழ-ல் தானும் உள் எனும் தலை யடியினின்று தோன்றியதாம். உள் விழுந்து விழுந்து வருதலே, அதாவது சுற்றுதலே, உழலுதல் எனக் கண்டு மகிழ்க.
இவ்வாறு ஆதி அடிச் சொற்களைத் திருவித் துருவி ஆராய்ந்து காணுங்கால், அவையே தமிழ்ச் சொற்கட்கெல்லாம் தாதுக்களாமெனல் புலப்படும். தாதுக்கள் தனித்துப் பயின்றகாலமும் ஒன்று உளதா? உளதாயின் தமிழ் மக்களின் ஆதிப்பாஷை எத்தகைத்தது? எங்காலத் தும் இடைக்காலத்தும் வழங்கும் சொற்கள் யாவும் தமக்கு முற்பட்ட ஆதிகாலத்துத் தாதுக்களின் திரிபென்பது ஒரு தலையாதலால், பண்டை நாளில் தமிழர் பேசியது ஒரசை ஈரசைகள் கொண்ட ஆதிச்சொற்க ளாகும் தாதுக்களை மட்டும் கொண்டதோர் பாஷையே என்பது திண் ணம். உலகினிலுள்ள சர்வ பாஷைகளும் முதற் கண் ஒரு கைம்மண் ணளவு ஓரசை ஈரசைச் சொற்கள் மாத்திரம் கொண்டியன்றன என் பதூஉம், காலச் செலவில் அச் சிறு தொகைச் சொற்கள் தாம் உல களவாய் எண்ணிறந்து பெருகி வந்திருக்கின்றன என்பதூஉம் மொழி நூல் விற்பன்னர்கட்கெல்லாம் ஒத்ததுணிபு. இன்றைக்கும் சீனம் முதலிய சில மொழிகளில் ஒரசை ஆதிச்சொற் பருவம் நீங்காதிருத்த அலும் நோக்கற்பாற்று. தமிழில் ஆதிச்சொற்கள் உருத்திரிந்து அச்

Page 9
6 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
சொற்களோடு ஒற்றுமைப்பட்ட புதுப்புதுப் பொருள்தரும். சீனத்தில் ஆதிச்சொற்கள் உருத் திரியாமலே சொல் நிலையாலும் சொற்கூட்டா வாலும் மட்டும் புதுப் புதுப் பொருள்தரும். இங்ங்னமே "லி' எனுஞ் சீனச்சொல் தன் நிலைக்கேற்ப உழுதல், கலப்பை, உழவு மாடு எனும் பொருள் கொள்ளும். 'த' என்பது பெரிய, மேன்மை, மிக என்றர்க் தம் கொள்ளும். ‘வு" எனுஞ் சொற்கு 'மனிதன் என்பது பொருள், த வு எனின் பெரிய மனிதன், சான்றேன் எனவும், வு த எனின் மணி தன் பெரியன் எனவும் அர்த்தமாகும். (Max Muler, Science of Language 11380) தமிழிலும், ஆதிச்சொற்கள் மட்டும் நிலவியகாலை யில், இவ்வாறே சொல்நிலையும் சொற்கூட்டரவுங்கொண்டு பொருள் விளங்கப்பெற்றதாகலாம் என உய்த்துணர்க.
பரவை வழக்கிலும் பழந் தமிழ் நூல்களுள்ளும் இன்று யாம் சுழியோடிக் காண்கின்ற தலையடிகள் எல்லாம் ஒரு நூற்றுக்கு மேற் பட்டனவல்ல. இவையிற்றையன்றிப் பல வழக்கொழிந்து இறந்து பட் டனவுமாகலாம். நூற்றுக்குட்பட்டனவும் பெயர், வினை, இடை, உரி எனும் பாகுபாடற்றனவுமான சொற்களைக்கொண்டும் உள்ளக்குறிப் புக்களை வெளிப்படுத்தல் கூடுமா? நூற்றுக்குக் குறைந்த சொற்களின் தொகுதியையும் ஒரு பாஷை என்னலாமா? எனும் கடா எழுவதுண் டாயின், சீனத்தில் இன்றைக்கும் சொற்பாகுபாடு அவ்வச் சொல் லோடு பொருந்திய குறியீட்டாலன்று சொல் நிலையாலேதான் பெறப் படுதலையும், பாலர்களும் அந்நியர்களும் ஒரு சில சொற்களைக்கொண்டு தம்மனக் குறிப்புக்களை ஒருவாறு வெளியிட்' த் தீருதலையும் நோக்கி விடைசொல்லிக்கொள்க. மக்கள் சிறுதொகையினராய், கிருஷிகம், வர்த்தகம், தக்துவ ஆராய்ச்சி முதலிய துறைகளில் பயிலாதோராய், காற்றைப்போலும் சுயாதீனமுள்ளோராய், ஆடு மாடு மேய்த்துத் தான் ருேன்றி கிலப் பயன்களை உண்டு தோலையோ மரவுரியையோ உடுத் ஆதிக் கட்டுமட்டாய் வாழ்ந்துவந்தகாலையில், அன்னுேர்க்குச் சொல் வளங்கொண்ட பாஷையொன்று வேண்டப்படாது என்பதனையும் நுனித்துக்காண்க.
தாதுக்களின் அகத்தியல்பு
யாஸ்கரைப்போலும் சொல்லுணர்ச்சி வல்லுநர்கள் அவ்வப் பாஷைச் சொற்கட்குத் தாதுக்களை ஆய்ந்து கண்டிருப்பினும், அக் தாதுக்கள் தாம் எவ்வாறு உண்டாயின? அவை எக்காலத்தாதல் அவ் வம் மொழியின் சொற்களாய் வழங்கினவா? எனும் இவ்வினுக்கட்கு விடைகாணுது போயினர். அன்ஞேர் கொள்கைப்படி தாதுக்கள் சநா தனமாய் எங்கோ மறைந்து கிடந்து மக்கள் வாய்ப்பட்டு சொற்கட்கு அடி யாயின. அன்றேல் அவை இயற்கை ஒலிகள் என்ப. இவை பொருந்தா. உண்மையில் அடிச்சொற்கள் எல்லாம் மக்களாக்கமாம். இது எமது

சுட்டுதலே பெயரீடு 2. 17
தமிழ்ச் சொல்லாராய்ச்சியால் இனிது முடிந்த முடிபு. சமிழ்த்தாதுக் கள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது மேல் வருவனவற்ருல் விகசிதமாகும்.
தமிழ் அடிச்சொற்களெல்லாம் உள்ளபடி ஒாசைகளே. இவ் ஒர சைச் சொற்கள் உச்சாரணம் நோக்கி பெரும்பான்மை ஈரசைகளாய் நிற்கும். எங்ஙனம்? எல் என்பது ஒரசை, இது எழுகின்ற அக்கினிக் கோளத்தை, சூரியனைக் குறிக்கும். எழ என்பது ஈரசை, இது மேற் கிளம்புதலாகிய வினையைச் சுட்டும். எழ் என்பதே ஈற்றுயிர்கூட்டி எழ எனவாயிற்றெனக் கொள்க. தமிழ் அடிச்சொற்கள் பெரும் பான்மை ஈரசையேயாய் நிற்றல், தமிழ் மக்கள் வாய்கூட்டிச் சொல்லு தற்கு இதமாய் மெய்களோடு ஒவ்வோருயிரைச் சேர்த்தி வழங்கும் பான்மையுடையோராயினமை பற்றியே என்க. இனி அடிச்சொற்கள் யாவையும் கிரைப்படுத்தி நோக்குமிடத்து, அவை, தம்முள் உருவமும் பொருளும் ஒத்த நான்கு தொகுதிகளாக வகுக்கப்படும். இந்நான்கும் முறையே அ, உ, இ, எ எனும் சுட்டுயிர்களை முதல்நிலையாகவும், பெரும் பான்மை, ஒவ்வோர் மெய்யை (ஈற்றுயிர் ஒன்றேடு சேர்த்தியோ சேராமலோ) வியஞ்சனமாகவும் கொண்டனவாம். வியஞ்சனம் எனும் பெயர் வடமொழியில் “விளக்குவது' எனும் பொருளுள்ளது. யாம் ஈண்டு அதனைச் சொல்லுருப்படுத்தும் உறுப்பு எனும் பொருளில் வழங்குகின்றனம். உதாகாணம்: (1) 'அடு'. இதில் 'அ' என்னும் சுட்டோடு உ என்னும் ஈற்றுயிர் சேர்ந்த டகர வியஞ்சனம் பொருந்தி, கிட்டவைத்தல் எனும் பொருளுள்ள சொல்லாயிற்று. (2) 'உள்'. இதில் 'உ' என்னும் சுட்டோடு ஈற்றுயிர் பெருத ளகர வியஞ்சனம் பொருந்தி அகப்பக்கம் எனும் பொருளுள்ள சொல்லாயிற்று. இரு வியஞ்சனங்கள் ஒட்டி ஆக்கப்பெற்ற அடிச் சொற்களும் உள. உதா கரணம்: 'அண்-ணு', இதில் ணகர வியஞ்சனத்தோடு உகரமூர்ந்த வேருெரு வியஞ்சனமும் பொருந்திற்று. பிற்றைஞான்றெழுந்த இலக் கணநூல்களுள் அ, உ, இ, எனும் இம் மூன்றுமே சுட்டெனப்படி னும், எகரமும் முதற்கண் சுட்டுப்பொருள் கொண்டுதான் பின் விணு வர்த்தம் பொருந்திற்றென அறிக. (தமிழ் அமைப்புற்ற வரலாறு 11-ம் பக்கங் காண்க.)
ஓர் சுட்டுயிரும், பெரும்பான்மை அச்சுட்டுயிரோடு உயிரூர்ந்த, அன் றேல் ஊராதமெய்யும், சிறுபான்மை இரட்டித்தமெய்யும் கொண்டனவே அடிச்சொற்களாம். இனிஇவைlஎவ்வாறு ஆக்கப்பட்டன எனஜாாய்வாம்.
சுட்டுதலே பேயரீடு
சொற்கள் எல்லாம் பெயரே என்பது ஒருதலை. இங்கு நாம் வியாகரணத்தில் ஒதப்படும் பெயர்ச்சொல்லையன்று; பொருள், வினை, குணம், ஆகிய எதற்கும் நாமமாய் நிற்பதையே பெயர் என்கின்முேம்,

Page 10
8 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
குரங்கு, ஆல், கல், என்பன பொருளின் பெயர். எடு, பற, கிட, என் பன வினையின் பெயர். தண், கள், பெரும் என்பன குணத்தின் பெயர். இவ்வாறு எவ்வெச் சொல்லை எடுத்து நோக்கினும் அவ்வது ஒவ்வொன்றின் பெயரே ஆமாறு காண்க. ஒரோர் பொருள், வினை, குணங்கட்குப் பெயர் இடும் முகத்தாலேயே சொற்கள் எழுந்தன. இனி ஒரு பொருட்குப் பெயரிடுவது எனின் அது யாது? அப்பொரு ளைப் பிறவ்ற்றினின்றும் பிரித்து உணரவைத்தலேயாம். குரங்கு, ஆல், கல், இம் மூன்றும் பொருள்; மூன்றையும் வேறுபடுத்து இது குரங்கு, இது ஆல், இது கல் என உணரவைப்பதே அவ்வப் பெயர் எழுந்த நோக்கமாம். வேறு படுத்து உணருதல்தான் அறிவுமாம். வேறுபடுத் தல் எனினும் பிரித்துச் சுட்டுதல் எனினும் இரண்டும் ஒன்றே என உய்த்துணர்க. பெயர் எனுஞ் சொல்லேயும் பிரித்தலினின்று எழுந்தது. எங்ங்ணம்? பிரி> பேர்> பெயர் என்பது அதன் வரலாரும். பிரித் ததே பெயர். இவ்வரலாறு மேல் விளக்கப்பெறுவது. அன்னணமே அறிவு எனுஞ் சொல்லின் பிறப்பும் இப் பிரித்துச் சுட்டுதலை நயம் பெறக் காட்டும். வெட்டுதல் எனும் பொருளுள்ள அறு எனுஞ் சொல் தான் அறவு எனவும் அறிவு எனவுங் திரிந்து கிற்கும். இரண்டும் அறுத் தது, பிரித்தது எனும் பொருளையே தருவன. பிரித்துக் கண்டது அறிவு. பிரித்துக் காணுதவிடத்து அறிவின்மையாகிய மயக்கமே விர வும் என்றபடி.
ஆயின் குரங்கு, ஆல், கல் என்பன, தாம் வழிச்சொற்கள் ஆத லால், ஒவ்வோர் பொருளை மிகத் துளக்கமாய்ச் சுட்டும் பெயரீடுகளா கின்றன. அடிச் சொற்கள் எல்லாம் அவ்வாறல்ல. அவை ஆதியில் பெரும்பான்மை மங்குளமாகவே பொருளாதிகளைச் சுட்டிப் பின் படிக் கிரமமாய் உருத்திரிந்து அதிக துளக்கமடைந்தன என்பது மேல்வரு வனவற்ருல் வெளிப்படும். உண்மையில் முதற்கண் சொற்களாய் வாய்த்தன முறையே 'அண்மையில்' 'சேய்மையில்' 'கீழே’ ‘மேலே’ எனும் நால்வகை இடவேறுபாட்டை மட்டும் சுட்டிக்காட்டிய அ, உ, இ, எ, எனும் பேச்சொலிகளாம். இவ்வுண்மை சுட்டொலிகளையே முன் னிலையாக்கொண்ட நால்வகைக்கூட்டத் தமிழ்ச் சொற்பரப்பினுல் ஊகிக் கக்கிடக்கின்றது. . தமிழ் அகராதியின் கண்ணுள்ள உயிர்வருக்க முத் னிலைச் சொற்களெல்லாம் அ, உ, இ, எ எனும் நாலுயிர்களையும் தலை யெனக்கொண்ட அடிகளினின்றுதான் பிறந்தனவெனவும், அவ்வகராதி யின் ஏனை மெய்வருக்க முதனிலைச் சொற்களும் அவற்றினின்றே பிறக் தனவெனவும் இந்நூலினுட் பின்னர்க் காட்டுதும். ஆதி மானுடர் கைப் பயிலாற் பொருளாதிகளைக் காட்டித் தம் உள்ளக்கிடக்கைகளை ஒருவர்க் கொருவர் தெரிவித்து உளார் என்பதூஉம், கைப் பாஷையே வாய்ப் பாஷைக்கு முன் வழங்கிற்று என்பதூஉம், மொழி நூலாளர் சில்லோ ாது அபிமதம். இது முழுதும் பொருத்தமற்றதன்று. வாய்ச் சொல் லாலான பாஷைகள் நன்முய் வளர்க்கப்பட்டிருக்கும் எங்காலத்திலும்

சொல் லெல்லாம் இடச் சார்பு பற்றிப் பிறந்தனவே 9.
சொல்லுறுதியின்பொருட்டுப் பிரசங்கிகள் ஆதியோர் சைகைகளையும் நற்பயனேடு ஆங்காங்கு எடுத்தாண்டு வருகின்றமையால், ஆதியில் சைகைகள் மிகப் பயின்றனவாகலாம் என்பது உறுதி. ஆயினும் இயல் பில் ஆறறிவுள்ளவனுகிய மானுடன், நெறிப்படுத்திய தன் குரலாலே யும் பொருளாதிகளைச் சுட்டும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை ஏலவே உணர்ந்து, அக் குரலொலியை இயன்றவரை கையாண்டிருப் பான் எனத் துணிதற்குப் போதிய ஏதுக்கள் காணப்படுகின்றன. முதற் கண் எடுத்து வழங்கிய பேச்சொலிகளே நான்கு சுட்டுமாம் என்பது முன்னர் தெரிக்கப்பட்டது. ga
நான்கு சுட்டுமாகிய ஆதிப் பேச்சொலிகள் அண்மை, சேய்மை, கீழுமல், மேலுறல் எனும் இடவேறுபாட்டை மட்டும் தெரிக்கவாய்த் தன. ஆயின் பொருளாதிகளின் பெயரீட்டுக்கும் இதற்கும் எத்துணைத் தூரம் சுட்டுக்கள் தனிகின்றவிடத்துத் துளக்கமாய் எதனையும் பிரித் அக்காட்டும் வன்மை அவற்றிற்கின்று. ஆகலினன்றே அச்சுட்டுக்க ளோடு வியஞ்சனங்கள் (விளக்குகின்றவைகள்) எனப்படும் மெய்களைச் சேர்த்தி இவ்வுபாயத்தால் வரையறுத்த எண்ணங்களை விளக்கும் ஆதிச் சொற்கள் ஆக்கப்பட்டன என்க.
உண்மையில் நான்காய் நின்ற சுட்டுக்களோடு ஆக்கப்பெற்ற அடிச் சொற்களின் வரலாற்றினையும், அகர உகரங்கள் ஆதித் தமிழ்ச் சொல் லமைப்பில் முறையே அண்மையையும் சேய்மையையும் (உட்பட்டு மறை யுக் தன்மை சேய்மையுள் அடங்கும்) குறிக்கின்றபான்மையையும் முன் சுட்டிய எமது 'தமிழ்அமைப்புற்ற வரலாறு' நூலினுட் கண்டுதெளிக,
சொல்லேல்லாம் இடச் சார்பு பற்றிப் பிறந்தனவே
ஒலிக் குறிப்பு மாத்திரையான கறகற, சாசா ஆகிய ஒரு சில சொற்களை ஒழித்து, ஒழிந்த ஏனைத் தமிழ்ச் சொற்கள் அனைத்தும் அண்மை, சேய்மை, கீழுறல், மேலுறல் எனும் இடச்சம்பந்தம் பற்றியே பிறந்தனவாதல் மேல்வரும் பிரிவுகளில் விளக்கப்படும். ஈண்டு முன் எடுத்தோதிய குரங்கு, ஆல், கல், எனும் மூன்று பொருட்பெயரீடுகளை யும் உதாகாணமாகத் தந்து அப்பாற் செல்லுவாம். வானரத்துக்குக் குரங்குப்பெயர் வந்தமை எவ்வாறு? அப்பெயர் இடச் சார்புபற்றி எழுந்ததென்றல் ஒக்குமா? ஒக்கும் ஒக்கும். எங்ங்னமெனில் குர-ங்கு எனுஞ் சொல் கொடு-கு எனுஞ் சொல்லின் மரூஉ என்றும், கொடு-கு தலே குடங்-குதல், குரங்-குதல் என்றும் வழிச் சொல்லாக்கக் கட் டளைகளை விளக்குமிடத்துக் காட்டுதும். இக் கொடு-கு என்பது குட-கு எனும் சொல்லின் மரூஉ. குடகுச் சொற்கு உற்பத்தி குழை என்பது. குழைதல் உலைதலினின்றும் தோற்றுவது. உலைகல் உள் விழுந்து விழுந்து வருதலாம். வளைதலும் அது. அங்ங்ணமே உள் எனும் சொல்லே >குழை-தல் >குடங்-குதல் >குர-ங்குதல் என நின்று,

Page 11
O தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
- . வஃக்த குடங்கிய மேனியையுடைய மிருகத்தைக் குறிக்கும். உள்
என்பதே உகச் சட்டால் பிறந்த சேய்மைப் பொருளின் கிரிபாகிய மறைக்கவிடத்தின் பெயராம். உள்ளிடம் என்னும் இடச் சம்பந்தம் கிளேசத் பொருளேயும், அப்பாள் குடங்குகிற் பொருளேயும், அசன்மேல் குடங்கிக் கிரிகலேப் புறப்பாடாள இயல்பாக்கொண்ட விபரண ரத்தை யும் சுட்டுதல் காண்க.
இவ்வாரே வட விருட்சக்கிலுக்கு ஆல் எனும் பெயரீடு அக-லு எஓம் இடம்பற்றிய பெயரால் உண்டாயிற்று. அண்மையின் நீக்கிப் புறக்கே பாக்கல் அகலூசலாம். மிகப்பாக்கலேப் புறப்பாடான குண் மரக்கொண்ட மரம் খুলী, எனப்பட்டது.
கல் எனும் உருவம் ஆள் (அபி) என்பதினின்றும் எழுந்த வழிச் சொல். ‘அள்' நெருங்கியிருத்ரஃபும் அக்குணத்தின் கிரிபேயாகிய இதுக்கத்தையும் ஈட்லிம்தோர் கஃச்சொல். 'அன்' சான் கல் எலும் உருவர் அரங்கி, மிக இறுகிக் கடினமாயிருத்த&லத் தன் சிறப்பியல்பாக் கொண்ட ஆசுமத்துக்குப் பெயராயிற்று. இம்மாற்றங்களே ஆளும் மொழி
நூல் விதிகள் மேல்வரும் அதிகாாக்கினுள் விளக்கப்பஜேன.
- -
 

இரண்டாம் அதிகாரம்.
LAWS GOVERNING THE FORMATION
OF DEAR! WAT WES
வழிச்சோல்லாக்கக் கட்டளைகள்
திமிழ் மொழியில் ஃ அடிச் சொற்கள் ஆக்சுப்பெற்ற முறை முன் விளக்கப்பட்டது. அவ்வடிச் சொற்கள் பாம் பழந்தமிழ் இலக் பேங்களில் தேடிக் கண்டளவில் ஒரு தாய்லுக்குமேல் இ ைஎன்ருேம். கயேடிகளினின் வழிபடிச்சொற்களும், இவை இரண்டினோபுர் ரஜ்னக் கொண்ெேனல்வேறு வழிச் சொற்களும் சு: Rச் செலவில் படிப்படியே அமைக்கப்பட்டன. மூதில் அதிகாபத்திற் தரப்பட்ட சாட்டுக்கண் "ண்கி நினேக்தி*ொள். ஆங்கு எழு எறும் சஃலடியினின்தும் எல், எழில், *முக்த ஆகிய விழிச்சொற்கள் பிறந்தஸ் மயும், தி ஃப் எஜம் சீலேயடியினின்,ரம் அழ எலும் வழிபடியும், அப்பால் தொழுவை மீேரீனி ஆகிய வழிச்சொற்களும் பிறந்தமையும் கெரிக்கப்பட்டது. இனி, கலேபடிகள் வழிபடிகளாக மாறுதலும் இருவகை அடிகளினின் ஆம் வழிச் சொற்கள் கிஃாப்பதும் படிக்கிரமமாய் சுடப்பதொரு நிகழ்ச்சி பாம்; ஓர் பாஷையைப் பேசுவோரின் கண்டம், அண்ணம், லாய், இ#ழ்கள் ஆகிய பேச்சுதுப்புக்களின் தன்மைாயபம், நாப் பயிற்சியின் பின்மையையும் ஒட்டிப் பேச்றொலிபா ஜூது வேலுபகிேன்ற இயற்4ை விதிகளே அனுசரித்து ஏற்படுவதோர் விாற்பமரம், ஆகலின் இவ் விதி ஃ7 அன்றேல் ஈட்ட3:ள ீரம் ஆப்க். கிண்ெேகாள்வதுண்டா பின், எவ்வெச் சொல்லேயும் அசீனசன் பிறப்பிடமாகிய ச2லயடிவரை யில் துருவிக் திருவிச் சொடர்ந்துசென்று, அவ்வச்சொன்ஜின் உண்மை உற்பத்தியை முறைப்படி கிச்சயித்தக்கொண்டதாகும் அன்ருே? •£ጁ,* லால் விழிச்சொல் ஆக்கக் கட்டண்கள் இனி ஆராயப்படும் என்க.
1-ம் கட்டளை
கருத்தை வேறுபடுத்தும் உச்சாரன உயிர்கள்
சொல்லுதற்கு எளிதா தற்பொருட்டு வியஞ்சனத்தோடு சேர்த்து வரும் உயிரே உச்சாாண் உயிர் எனப்பம்ே. முன் அதிகாரத்திற் கண்ட Fள் எனும் உதீாகாணத்தில் உஈரச்சட்டோபி னகர விபஞ்சனஞ்சேர்ந்து கின்றவிடத்தி, உள் எஐஞ் சொல்லே உச்சரித்தல் எளிதாகையால் உச் சாண உயிர் வேறென்று வேண்டப்படாததாயிற்று. ஆயின், அகரக் சுட்டோடேகாஞ் சேர்க்க வேறுெரு சொல் உண்டானவிடத்த அட் என உச்சரித்தல் தமிழ் சாவுக்குக் கடினமாதலின் உகர உயிரை ஈற்

Page 12
12 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
றிற் சேர்த்தி அடு என வைக்கப்பட்டது. இங்கு சொல்லுதற்கு எளி திாகும்பொருட்மி எழுந்த உகரம் உச்சW:ன உகரமெஜிம் பெயர் பெறு வது. இவ்வாறே அக-லு என்னுஞ் சொல்லில் இடை நின்ற அகரமும் ஈற்று கரமும் உச்சாான உயிர்களாமெனக் காண்க. உச்சாான உயி ரின்றி வல்லின மெய்களேச் சொல்லீற்றில் வரவிடுதலும் அம் மெய்கள் பல அடுக்கிச் சொல்லுதலும் ஆரியம் ஆகிய பாஷைகளிற் போலக் தமிழில் வழங்காமை தமிழ் மக்களது பேச்சுறுப்புக்களும் ாேப் பயிற்சி பும் அதற்கிடங்கொடாமையினுலாம் என உய்த்துணர்க. எங்ஙனம்? ஆரியத்தில் வாச் எனும் உருவம் ஒரு சொல். அது தமிழில் வாக்கு என உச்சான உகரம் பெற்றன்றி வழங்காது. ஆரியத்தில் சக்ரம் எலும் சொல் சமிழில் உச்சராண் அசாம் இடையிற்சேர்க் து சக்கரம் என்றுதலே மரபு.
சொல்லுதல் எளிதாகும்பொருட்வேழங்கும் உச்சரான உயிர்களே பன்றி, சோற்கருத்தை வேறுபடுத்தும் உச்சாான உயிர்களும் உள. அவையுண்மையையே வழிச் சொல்லாக்கத்தின் முதற் கட்டளேயாய் ாேம் இங்கு நிறுவுவது என அறிக. இக்கட்டளேனய இரு உதாகாணங் களால் விளக்குழம். இகாச்ஈட்டு முேறலேக் குறிக்கும் அன்றுே? இஃது ழகர வியஞ்சனத்தோடு பொருக்தி இழ் என்ருகி உச்சான இகரம் பெறும்போது இழி எலும் கல்லுபடிச்சொல் பிறக்கும். இழிதல்=ழ்ே ேோக்கி வால், இறங்குதல். "இழி"ச் சொல்லின் உச்சாரண இகரம் வேறு உயிர்களாக மாறுமிடத்து வெவ்வேறு கருத்திள்ள கலேபடிச் சொற்கள் ஆக்கப்படும். எங்ஙனம்?
இழி=கீழ் நோக்கிவர, இதங்கு. ஈண்கி உச்சாாண இகரம். இழு= கீழ் நோக்கி வரச்செய், விழுத்து. ஈண்டு இகம் உகர
மாயிற்று. இழ= கீழ்நோக்கி விழவிதி, கைவிடு. ஈண்டு இகரம் அகரமாயிற்து. இழை = கீழ்விழுத்தி அழுச்தி, பின்னு. ஈண்டு இகரம் ஐகார
மாயிற்று. இவை நான்கு சொற்களிலும் முேறுதலாகிய ஆகி அர்த்தமொன்றே, உச்சரான உயிரின் வேறுபாட்கிக்கெWப்ப, சிறிது சிறிது வேறுபட்ட பொருள் நீர்தி நிக்கின்ற விநோதத்தை தனித்துக்காண்க. இறங்கு தில் எறும் அர்க்விங்கொண்ட "இழி"ச் சொல்லின் உச்சாரண் இகரம் உஈரமாகுமிடத்தி விழுத்துதலும், அகரமாகுமிடத்துக் கைவிடுதலும், ஐகாரமாகுமிடத்தி அழுத்துதலும் எனும் அர்த்த விகற்பங்கள் பெறப் பட்டன.
இங்ஙனமே அண்மையில் எனும் அர்த்தமுள்ள அகச் சுட்டோபி டக வியஞ்சனஞ் சேர்ந்து உச்சரான உகரம் பெற்றுவந்த அலி எனும் தலைபடிச் சொல், உச்சாரண உயிர்வேறுபாட்டால் கருத்து வேறுபடு தில் பின்வருமாறு:-
 

வேறுபடும் வியஞ்சனங்கள் 18
அ=ேஅண்மையில் வை, இதுக்கு. ஈண்டு உச்சான உகரம். அடி = அண்மையாக்கு, இறுகச்செய், அடக்கு. ஈண்கி உகரம்
இகரமாயிற்று. அட-ச்=அண்மையாகு, நெருங்கு, ஈண்கி உகரம் அகாமாயிற்.ர். இச்சொல்லில் உறுதியின்பொருட்பி ரகர வியஞ்சனமும் கூட்பிற்றது. மேல் வருவனவற்றில் இதன் விளக்கங்காண்க. அடை=அண்மையாகு, சேர். ஈண்பி உகரம் ஐகாரமாயிற்று. அண்மையில் வைக்கலாகிய ஆதி அர்த்தமானது உச்சரான உயிர் மாற்றத்தால் இறுக்குதல், அடக்குதல், நெருங்குதல், சேர்தல் எனச் சிறிது சிறிது விகற்பித்து வருதலே கோக்குக. "காட்டிய உதிாகாணக் தொகுதிகள் இரண் ம்ே கஃ) அடிச் சொற்களாம். வழி அடிச் சொற் களிலேயும், அப்பால் இருவகை அடிகளிஜிரம் நின்றும் பிறக்கின்ற வழிச் சொற்களிலேயும் இவ்வாறு கருத்தை வேறுபடுத்து நிற்கின்ற உச்சாரணை உயிர்களேக் குறித்துக்கொள்க.
2-ம் கட்டளே
வேறுபடும் வியஞ்சனங்கள் சொற்கருக்தைச் சிறிது விகற்பித்து வேறசொல்லாக்குவிற்குக் தமிழில் மிகப் பயிலும் உபாயங்களூனொன்று தம்முள் பிறப்போத்த வியஞ்சனங்களே மாற்றிவைத்தலாம். வியஞ்சன மாற்றில் பிறப்பொத் தனவாகக் கொன்னப்படும் மெய்களது வரிசை பின்வருவது:-
1. ககரத்தினின்று சகரமும், சகாத்தினின்று சகரமும் பிரிக்கும், அப்பால் சகரத்தினின்று யகரமும், யசுரத்தினின்று ஞகாமும், ஞகரத்தி அணின்து நீக ஈசுரங்களும் பிரிக்கும். இவற்றுே ேககரம் வகரமாக த"உம், ஜிகாம் பகரமாவதூஉம், கேரம் லகாமாறுதூஉம் கொள்க.
2. ஜகாத்தினின்று ரகரமும் ளகரமும், னகரத்தினின்று ழகர மும் பிறக்கும். இவை நகர னகரமும், டகர ணகரமும் ஆவதாடிங் கொள்க.
8. மகாத்தினின்று டகரமும் பகாத்தினின்று வகரமும் பிறக்கும். மகரம் ஈகரமாவதூஉங்கொள்க.
ஆகவே வியஞ்சன மாற்றங்களே மேல்வருமாறு குசிப்பிக்கலாம்: In (6) و تا لت والا» (اقل ۴ (لا a) * .1 வி, ' வின் தி டனே ? ?" 3. ம; (ஈ) ப, வ, முன் எடுத்தாண்ட ஓர் தலைபடிச் சொல்லினின்று இக்கட்டளேக்கு உகாகாணங் காட்டுதிம், கீழ் நோக்கிவரச் செய்சலே உணர்த்துகின்ற இழு எனும் சொல் வியஞ்சன மாற்றத்தால் சிறிது சிறிது அர்த்தம் பேதப்பட்டுப் பின் வருமாறு புதிச்சொற்களாகும்.

Page 13
1d. கிமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
இரு = கீழ்நோக்னோச்செய்
இ=ேகீழே வை. ஈண்டு ழகரம் டகரமாயிற்று
இரு = கீழே மடங்கு முகாம் மீகாமாயிற்று
இது = கீழே சமாப்பி. முகாம் கிராபிந்து
அப்பால் 1-ம் கட்ட&ளப்படி இச் சொற்களின் உச்சா'ன உகரம் வேதிஅயிர்களாகுமிடத்துப் பின்னும் வேறு சொற்கள் பிறக்கும்:-
இ-ே
இட என உகரம் அகரமாகி எபிச்சிவை, கடந்தபோ எனப்
பொருள் கொள்ளும், இடி என உகரம் இராமாக *அக்தி வைத்தவேள் காட்டும். அவ்
i) ಸೆಟ್ಸ್ಕೇ?
இரு- -
இா என உகரம் அமார்ே கீழ்ப்ப,ே பிச்சை Kav II lii'35 fi Frar l
பொருள்கொள்ளும்
இரி என உகரம் இசுரமராக் கீழே விழு, அழி எனப் பொருள்
பல்ே
இg
இT என உகரம் ஆகாம கீழே تم مع الة رام التي جل وهي "نة பொருள்
கொள்ளும்
ಟಿಪ್ಶ” ವ|| ಹಾಳ, 2 # # # ஐகாரமாகி, கீழேயாப்பு எனப் பொருள்படும்
இவையெல்லாம் அடி ச்சொற்களின் பிரதம விகற்பங்கள். இவை விரும் டேட்டளேகளே விளக்குக்காற் پیٹ 9 تھی In Iray . تم * 80تھ شلالتھر ہمالیاف " *, நாட்டப்படும். ககர வரிசையிலும் மசா வரிசையிலும் இங்கு உதாகரி யாசொழிந்த வியஞ்சன துே பாகிளே மேல்விரும் அதிகாரங்களுட் - சி ரீ சுரண் ஆ.
3-ம் கட்ட8ள மேல்வத்துறும் வியஞ்சனங்கள்
ஆ, உ, இ, எ எஜம் சுட்யிேர்களோடு இன்வோர் மெய்யைத் விக்காதன் உயிரூர்விக்காதல், சொல்& உருப்பத்ேதுகின்ற வியஞ் **மாய்ச் சேர்க்கி அமைக்கப்பட்டன: #வேயடிச்சொற்கள் எனக் *ப்பட்டது அன்றுே? கடிேச் சொற்களி: சுருச்சைப் படிப்படி பாய் வேலுடந்ேதுப் تي ألماشي الأليافتة تفٹ/انا آئی اہا T 11% عشر உருவாக்கும் முகத் கால், இவற்றின் வியக்சனத்தோடு மேலும் ஒரு வியஞ்சனம் சேர்க் கப்படுகலாயிற்று. இவ்வியஞ்சனம் சிலகால் நீரினக்கினமான மெல் ஒற் gேம்ே, சிலகான் அள் ஒன்றின்றியும் இயலும், Eవ జM# nజా எர்ேகாண்ட தலேச்சொற்கள சில பின்னும் வழிச்சொற்களேப் பெரு கியபwன்மை பின்வருவது:
இழு= விழுத்து; இழு" கு=பின் வீழ்ச்ததில்
இழ=கைவிடு; இழ-கு = அதையலிடு

மேல்வந்திலும் வியஞ்சனங்கள்
இ=ேேேழவை; இ-ோன்கு= இமுக்திவிழுக்தி இர = கீழ்ப்ப;ே இா-ங்கு = கீழ்ப்படக் கண்ணுேக்கு இற = கீழே விழு; இற-ங்கு = கீழ்நோக்கிச்செல்
இவ் வழிச்சொற்கள் அஃனத்திலும் அடிச்சொல்லின் ஆதி அர்ச் சமே ஒருசிறிது கிரிந்து புதுப்புதி உள்ளக்கிடக்கையாய் கிற்றலேக் கவ ரிக்குக. அனேத்திலும் "கீழதல்" எனும் மனக் குறிப்பு விாவிநிற்கின் தி. இங்கிரீன பாஜி கால்வகைச் சுட்க்ேகளினின்றும் பிறந்த அடிகள் க்ரீம் தமிழ்ச்சொற்கட்தெல்லாம், அண்மைச் சார்பாலோ சேய்மைச் சார்பாலோ, உற்பக்திக் தாளமாயிருத்தல் அடைஜிலே வெள்ளிடை. விலங்கலாகும்.
சுட்டுக்களோடு சொல்லுருப்பர்ே.தும் விஞ்சரைச்தைச் சேராதி, அச்சுட்ன்ேகள்கம்மையே நீட்டி அமைக்கப்பட்ட ஆ, 1ா, முதலிய சே படிச்சொற்களும் சிலவுள. இவையும் மேலுறும் வியஞ்சனச் சேர்க் கையால் வழிச்சொல்லாகும். உகரகரணம்:
ஆ-கு= அண்மைகொள், கைகூடு
ஒ-ங்கு (ஊங்கு =சேய்மை கொள், உயர்
இவை இரண்டையும் அடிச்சொல்லேன்னுது வழிச்சொல் என்றல் பாதுபற்றியோ? எனின்; ஆ, ஊ, என்பன தாமே உண்மையில் அடிச் சொற்களாம்: ஈட்டுயிர்களோ? சொல்லுருப்பாட்ெேப் சேர்ந்தலுைகரம் சீலே அடிச்சொற்களா மென்பது பொது விதிபாயிஐம், சிறப்புவிகிய ல், ஒரோவிடக்தி அச்சட்யிேர்கள் மீண்டு வியஞ்சனக்கினிடமாய் நிற்றலுங் கொள்ளப்படும். மங்குளமான குறிப்புக்களே மட்ங்ே காட்டுகின்ற கட் இக்கள் அதி துளச்சமான பெயரீடுகளாய் வரும்பொருட்டே லியஞ் சனங் கூட்டப்பெேமன்பது இது காலும் சொல்லியவற்றுல் விாசிச மாயிற்றன்மூே? வியஞ்சனமானது ஈட்ட வலியுறுத்து விகிதவிஞல் ஆள்றே அதி தாளக்கப் பெயரீட்டைக் கருகின்றதோர் சொல் ஆக்கப்படுவ காகும். இனி சுட்டை விபஞ்சனத்தால் வ்ளியுறுக்கல் பொது விதியும், அச்சுட்டைத்தின் கீட்டஸ்ான் வலியுறுத்தல் சிறப்புஜிதியுமாமென்க, அர்ஜிகலின், 'அ' எனும் அண்மைப்பொருட் சட்ங் 'ஆ' என சீண்ட விடக்தி, அண்மைகொள்ளல் எனும் பொருளுள்ள சொல்லாயிற்று. 3.தி ரிலேயடிச்சொல் மேனொரு வியஞ்சனஞ் சேர்ந்ததால் "ஆ-கு" என வந்து கைனாற் பொருளே உணர்த்திற்று. இது வழிபடிச்சொல். இன்வாறே 'உ' எ ஐ ம் சேய்மைப்பொருட் சுட்டு 'ற' என நீண்ட விடக்த சேய்மை கொள்ளஃப் உண்ர்த்தித்து, இது கஃவயடிச் சொல். "ான்கு, ஊக்கு.கல் எனும் சொற்களில் இன் வர்த்தத்தை மண்ணறிவார் காண்க. "ஊ'தான் 'ஒ'வாகி ஓ-ங்கு என வந்து உயர்தலே உணர்த் கீற்று. இது வழிபடிச்சொல். உயிர்மாற்று விதிகள் பின் தெளிவி *ப்பம்ே.

Page 14
தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
அடிச்சொல்லாக்கத்தில் துணேபுரியும் ஆகி வியஞ்சனத்தின்பின், மேலும் வந்துறுகின்ற வியஞ்சனமென யாம் இதிகாலும் காட்டியது உகரம் ஊர்ந்த ககரம் மாக்கிரையேயாயினும், உகீழேர்ந்த பிறமெய்க ளூம் வரும், எங்ஙணம்?
*; சூசு, ,ே ீண்டு,
க்தி, ம்பு, وبية "تش (f) وتلقي والفك، وثيق என வரும். இம்மேலுறும் வியஞ்சனங்கள் இங்ரினம்பெரும் ஜிரிக் சீமை, பெரும்பான்மை *ாடோடி உச்சரான பேசந்தால் ஒன்று மற் முெ ன்று ய் மாறினமைபற்றியாம் என்பது வேறுேரிடத்தில் விளக்கப் படும். ஆயின் சிறுபான்மை, மேலும் வியஞ்சன பேதம் அர்க்க விகற்பக்தின் பொருட்டே எழுந்தது. ககரம் சகரமாயினமைக்குக் காட்பி பின் வருவது:-
இற-ங்கு = கீழ்நோக்கிச்செல் இறை-ஞ்சு = கீழ்சோக்கிவ3ள, கும்பிடு ககரம் வேறு பல மெய்களாயினமைக்குக் காட்டாக திருகு எனும் ஓர் வழிச்சொல்லேக் கருகுதும்: இது உண்மையில் திருகு எலும் உரு வக் காங்குகற்பாற்று, யாம் முதலதிகாரத்திற் காட்டிய திமு என்பது இற்ேகு வழிபடியும், உழ-ல் <உள் என்பன சீலேயடியுமாம். துழ என்பம்ே "திரு' என்றுகி திரு-கு, திரு-கு என மேலும் வியஞ்சனம் பெற்றுவரும் ஈண்கி "துரு'வின் முகலுகரம் இகரமாயிற்று இணி:
இரு-கு=உழற்று, முறுக்கு இரு-மி=சூழ்ந்தெடு, குறையாடு திரு-க்தி = சுற்றிவா, செறிப்பதி திரு-ம்பு= சுழன்றுவா, மீள் திரு-மு= 鸭 திரு”=ே சுழற்று, கடை, தேடிச்செல் இச்சொல்லனத்திலும்வந்த மேலுறும் வியஞ்சன் மாற்றம் அர்த்த வேறுபாட்டின் பொருட்டாயிற்று. இங்கு வாராத ஆர்க்க விகற்ப ஆர்வமான மேலுறும் வியஞ்சன் மாற்கிங்கட்குக் காட்டுக்க*னப் பின் ரூல் வந்திழிக் காண்க,
ஈண்கி வந்துற்ற வியஞ்சனங்கள் பாவும் உகாவுயிரூர்க்க மெய்க கிளாயின அன்ருே? வேருெரு உயிர் இன்றி உகரமே என்றும் இச்சொற் களில் வாக் காரணம் யாது? எனில், அக்னேயும் அனுமானித்துக் மிடறுதும்,
இசிவரை செரித்தி வழிச்சொல்லாக்கள் கட்டளைகளில் விண்ச் சொற்களே மட்டும் உதீாகரீனிங்களாகத் தந்துள்ளோம். எற்றுக்கெனில், அக்கட்டளேகளே வினைச்சொற்களால் விளக்குதல் எளிதாயினமையாலாம்.

வியஞ்சனம் இரட்டலும் மெல்லொற்று அன்னதலும் 17
பெயர்ச் சொற்களில் மேலும் வியஞ்சனங்கள்போற் தோன்றும் கடை சில்களுமுள ஆயின் இவை முதனிலேச் சொல்லோடு அடுக்கப்பெந்த பிறிதொரு சொல்லின் சிதைவேயன்றி வேறல்ல. இவற்றை 'விகுதி" + ஈ வகுப்பர் இலக்கண ஆலோர். உதரகரணம்:
படி-ப்பு பகர்-கர்
கவி-தை கா-ழம்
உறு-தி கட-வுள்
அரி-பல் في سانترنت
a T-is S5'-tSg-gsurt
இச் சொற்களிற் பு, கை, தி, அல், இல், நீர், அம், உள், இழ் இறு எனும் கடைகிலேகள் எல்லாம் ஆதிக் தமிழ்த் தனிச் சொற்க னின் விகாரங்களே என்பது மேல்வரும் எட்டாவது கட்டளையுட் தெளி யாக்கப்படும். பெயர்ச் சொற்களின் "விகுதி"களைப்போலன்றி, லினேச் சொற்களின் மேலுரம் வியஞ்சனங்களெல்லாம் உகாஅபிரூர்ந்த மெய்க ளாகின்றமையை நோக்கும்போது, அவ்வுகாம் வினைப்பொருள் மயமாய் இருக்கல் புலமாகும். அது எவ்வாறு? உகச்சுட்டு சேய்மையை விளக் குவதன்றுே? சேய்மையை ாேடத் தூண்பிகல் முகத்தால் அவ் உகரக் திக்கு வினயர்த்தம் பொருக்கிற்றுப்போலும். எங்ானம்? இழு-கு= விருக்திகலேச்செய், இழ-கு = கைவிடுதல்ச்செய் என்றபடி, பிற கா. விக்களேயும் உய்த்தனர்.
4-ம் கட்டளை
வியஞ்சனம் இபட்டலும் மேல்லோற்று அனேதலும்
சொல்லமைப்பில் கண் விளங்கும் அடிப்படையான கியமம் யாதெ எனில், புதுப்பு:து மனக்குறிப்புக்கஃா வெளியாக்குதல் வேண்டப்படுத் கோலும், முன்னிருக்க சொற்களே வலி/அத்து உச்சரித்து வேதபுதுச் சொற்களே ஆக்கிக்கொள்வதிாம். முன்னர் யாம் கந்த கட்டனேகளிலும், பின்வருவனவற்றிலும் இக்க சிபமமே சொலித்த&லச் சிங்டிகோக்காய்க் காண்க. முந்நிய சொற்களேப் பலவேறுவகையில் வலியுறுக்அப் புதுச் சொல்லாக்குதிலே பாண்ம்ே பெருவழக்காகின்றது. இனி நான்காங் கட்டளே, தன்வினேச் சொற்களில் வரும் முதலாம் அன்றேல் ஒரன் டாம் விபஜ்சனத்தை இரட்டித்தலினுல் அவற்றைப் பிறவினே ஆக்கு நஃப்ாம். வியஞ்சனத்தை மெலித்தலால் பிறவி?ன தன்வின 맨
லுங் கோள்க. உதரகாண்ம்:
强一@ ஆ-க்கு
இள-கு இள-க்கு
இற-ங்கு இதி-க்கு
ஒ=ங்கு ஊ-க்கு, ஒ-ச்சு. இன்கு, ககரம் சதாமா
மினமைக்கு 4-ம் அதிகாரம் காண்க. த. செர.-2

Page 15
8 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
திருந்து திரு-த்து திரு-ம்பு திரு-ப்பு அ-ட்டு அ-ண்டு
ஆகு ஆகிய சொற்கள் தன்வினையாயிருப்ப, அவற்றின் வியஞ்ச னத்தை இரட்டித்து ஆக்கு ஆதியனவாக உச்சரித்தலினல் பிறவினைகள் உருவான நுட்பம் நோக்கற்பாற்று. யாதோர் செயலை அதன் வினை முதலினின்று பிறிதொன்றிற் சேரச் செலுத்தும்போது மிகுத்த முயற்சி வேண்டப்படுமன்ருே? இம்மீசுர முயற்சியைக் காட்டுதற்கு, தனி வியஞ் சனத்தைக்காட்டில் அதிக கடினமான நா முயற்சியை வேண்டிசிற் கின்ற இரட்டித்த வியஞ்சனத்தை வேலைகொள்ளல் சொல்லமைப்பிற்கு எத்துணைப் பொருத்தமாகின்றதென உணக.
வியஞ்சனம் இாட்டித்தல் மெலித்தல்கள் பெயர்ச்சொல்லாக்கத் தில் மிகப் பயிலும். உதாகரணம்: ஆகு-ஆக்கம், இளகு-இளக்கம், திருடு-திருட்டு என்பனவாகி வருதலை முன்னர்த் தந்த சொற்களிலும் வைத்துக் காண்க. பிறவுமன்ன. முற்காலம் அடு, உடை, மறை, எரி, அழி, இடி, முதலிய சில சொற்கள், ஸ்வா டேதத்தால் தன்வினை பிற வினை என அறியப்பட்டன, தற்காலம் வியஞ்சனம் இரட்டித்தல் மெலித்தல்களினுல் அவ்வேறுபாட்டைத் தெரிப்பனவாகின்றமையையும் ஈண்டுக் குறித்துக்கொள்க. எங்ங்னம்? அ-டு என எடுத்துக்கூறுதல் சேர்தற்பொருளும், அ-டு எனப் படுத்துக்கூறல் சேர்த்தற்பொருளுமாய் நின்றது. இச்சுரபேதம் பின்வந்த வியஞ்சனங்களை இரட்டலாலும் மெலித்தலாலும் விளக்கப்படுவதாயிற்று. உதாகரணம்:
Gp33 260ar தன்வினை
அடு-அட்டு அண்டு உடை-உடைத்து உடைந்தி மறை-மறைத்து மறைந்து-பிறவுமன்ன
பெயர் உருவங்களில் அட்டல், அண்டல்; உடைத்தல், உடைதல் உடைப்பு, உடைவு; மறைத்தல், மறைதல்; மறைப்பு, மறைவு எனப் பலவாரு ய் வரும். இவற்றுளெல்லாம் சொல்லுறுதிகூடிய உருவம் பிற வினையும், குறைந்த உருவம் தன்வினையுமாய் நிற்றல் கண்கூடு.

மூன்றம் அதிகாரம்
FOUR MORE LAWS
மேலும் நான்கு கட்டளைகள்
5-ம் கட்டளை
வலியுறுத்துகின்ற முதனிலை மேய்கள்
பிரதம சொற்களை உறுத்து உச்சரித்தல் மூலமாய் வேறுபுதுச் சொற்களை ஆக்கிக்கொள்ளற்குச் சிறந்த உபாயமாய் அமைந்தன ழத னிலை மெய்களhம். இவ்வுபாயத்திஞனே தமிழ் வழிச்சொற்களில் பெரும் பங்கானவை உருவாக்கப்பட்டு நிற்கின்றன. உண்மையில், தமி ழகராதியின் மெய்வர்க்க முதனிலைச் சொற்கள் யாவும் இவ்வாறுதான் உற்பத்தியாயின. ஆகலின் இக்கட்டளையினைத் தெள்ளுற அறிந்துகொள் ளுதல் சொற்பிறப்பா ராய்ச்சிக்கு மிக வேண்டற்பாலது. வலியுறுத்தும் முதனிலை மெய்க் கட்டளைக்கு உதாகாணமாய் ஏலவே யாம் எடுத் தgண்ட 'உள்' எனும் தலையடியின் விகாரமாகிய “உழ' எனும் அடிச் சொல்லை வழங்குவாம். முதற்கண் அவ் "உழ' சொல், ஏலவே விளக்கப்பெற்ற நான்கு கட்டளைகளாலும் அடையும் திரிபுகளுட் சில வற்றை ஒருங்கு குசிப்பித்து அடியிற் காட்டுகின்றனம்: காட்டுச் சொற் களின் அர்த்தங்களெல்லாம் ஆதி அர்த்தங்களாமென அறிக.
1. வேறுபட்ட உச்சாாண உயிாாற் திரிபு
உழ= உட்படு, வருந்து
உழு= உட்செலுத்து, நிலத்தைக்கிளை
உழை= உட்படு, பிரயாசப்படு- ஆதியன 11. வேறுபட்ட வியஞ்சனத்தாற் திரிபு
உழ- -
உலை - உட்சாய்ந்து சாய்ந்துவா, சுழல்
உற= உட்செலுத்து, கிழி
உறு- உட்பொருந்து, நிலைகொள்
உடு - உட்சாயப் பொருத்து, சூழ்
உடை= உள்விழு, உள்ளழி
உண-ர்=உட்கொள், அறி-ஆதியன
III. மேல்வந்துறும் வியஞ்சனத்தாற் திரிபு
உழ உழ~று = சுழல், அளே உமு உள்-கு = உள்ளுக்கிழு, உள்ளழி உணர் உண-ங்கு- சுருங்கு- ஆதியன

Page 16
20 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
IV. வியத்சனம் இரட்டலாற் திரிபு
உழ-று உழ-ற்று
உள்-கு உளு-க்கு, ஒட்டு
లి. ఇrm మిణr T-59
முற்சென்ற நான்கு கட்டளைகளானும் 'உழ' எனுஞ் சொல் பிறப் பித்த வியுற்பன்னங்களுட் சிலவற்றை ஒருங்குவைத்துக் கண்டாம். இனி ஐந்தாம் கட்டளையினல் அவ் "உழ' சொல்தான், க், ச், த், ந், ப், ம், வ் எனும் மெய்களுள் ஒவ்வொன்றினைத் தலையிற்கொண்டு வலியுறுத்தப் பெற்று, மேலும் வெவ்வேறு சொல்லாகத் திரியும். எங்ஙனம்?
க்+உலை குழை (குலை) - வளை
ச் + உழ சுழ-ல் - சாய்ந்து சாய்ந்துசெல்
க்+உழை துளை = உட்செலுத்து, ஒட்டு
க்+உழு நுழு-ந்து நுழை =உட்செல்
ப்+உழு பொள்ளு, புள்= ஓட்டையாக்கு
ம் + உழு முழு-கு மூழ்கு = உட்புகு
வ் + உலை வளை - உள்நோக்கிச்செல், சாய்ந்து வா. வகா முத னிலையின் உண்மையியல்பு மேல் விளக்கப்படும்.
இவ்வாறு முதனிலை மெய் வலியுறுத்தற் பேற்றினல் ஆதி அர்க் தத்தைச் சிறிது சிறிது விகற்பிக்கும் வன்மைகொண்டு பிறந்த வழிச் சொற்கள், முந்திய நான்கு கட்டளைகளினும் ஆணையால் வேறுபல சொற்களையும் பிறப்பிக்கும். ஈண்டுக் காட்டாகத் தலைநின்ற “குழை' எனும் வினையினின்று தோன்றும் சில சொற்களை மட்டும் தருகுதும்:- குழை - வளை
1 குழ-ல் = உட்டுளை யுள்ள சுருள்வடிவம்
குழி = உட்சூழ்ந்தெடுத்தவிடம், பள்ளம் குழி - (வினை) உட்செல், ஊடறு குழு= வளையமாய்த் திரண்டது, கூட்டம் குழை - (பெயர்) சுருண்டது, சங்கு குழ-ல் எனும் பெயர்ச்சொல்லின் ஈற்று லகரமும் மேல்வரும் சில பெயர்ச் சொற்களில் பொருந்திய ஈற்று மகரம் ழகரமாதியனவும் இச் சொற்களோடு அடுக்குற்ற வேறு ஆதித் தமிழ்ச் செர்ற்களின் திரிபா மென்பதை எட்டாம் கட்டளையினுட் காண்க. இனி "குழை'ச் சொல் இரண்டாங் கட்டளைக்கொப்ப வியஞ்சன மாற்றங்களால் விகற்பித்தற்கு உதாகாணங்கள் சில வருமாறு: குழை = வளை
11 குழ-ல் - உட்டுளையுள்ள சுருள்வடிவம்
குட-ல் = இரைப்பையைச் சார்ந்தகுழல் விசேடம் குய-ல் = குழல்போலும் உறுப்பு, தொண்டை குர-ல், குழ-ல் = சுருட்டிமுடிக்கப்படுவது, கூந்தல்

வலியுறுத்துகின்ற முதனிலை மெய்கள் 2.
குட-ம்= வளைந்துதிாண்டது, மட்கல விசேடம் குடி-மேல்வளைந்து (கவிந்து) நிற்பது, சிறு வீடு குடை=மேல்வளைந்தது, ஆகபத்திரம் குண-ம்- வளைந்தது, மடிப்பு, சார்பு குந்து - (வினை) வளை, உடலைமடித்திரு குனி- 9 வளை, வணங்கு குன= வளைந்து ஒடுங்கியது, கூர் குல-ம்- வளையமாய்ச் சேர்ந்தது, குழு குற-=ெ வளைந்தது, இடுக்குவது குறு குறை இவ்வாறு இன்னும் பலவுள. அவற்றுள் முக்கியமானவையை அநுபந்தத்துட் காண்க. இன்னணம் விரிந்த சொற்ருெகுதி இதுவரை அன்று. அப்பால் மேல்வந்து மும் வியஞ்சனத்திரிபு எனும் மூன்முவது கட்டளையை அநுசரித்துப் பலவாகப் பல்கும். காட்டாகச் சிறிது காட்டுதும்.
= (வினை) உட்கோடச்செய், சுருக்கு
குழை = வளை
111 குழ-லு = சுருள்
குட-ங்கு = வளை, குறண்டு குண-ங்கு - வளை, சோர் குர-ங்கு = வளை, தாழ், குறை குல-வு = வளை, குவி, உலவு (சுழல்) குற-ண்டு - வளை, சுருள், வலிப்புக்கொள் குற-ழ் (குற-ழு) = வளை, குனி
பிறவற்றை அநுபந்தத்துட் காண்க. நான்காங் கட்டளையால் மேல்வரும் புதுப்புதுச் சொற்களையும் உய்த்துணர்தல் எளிதாகலின், ஈண்டு அவற்றை எடுத்தோதாது விடுகின்றனம்.
இதுகாறும் காட்டியவை உழ எனுஞ் சொல்லின் தலையில், வலி யுறுத்தலின் கண், ககர மெய்வந்துற்றமையால் பிறந்த வழிச்சொற்கள் அன்ருே? மற்று ச், த், ந், ப், ம், வ், எனும் மெய்கள் தலைப்பெய்யு மிடத்து வேறு வேறு சொற்கள் சிறிது சிறிது அர்த்த விகற்பத்தோடு தோன்றும். இவற்றுட் சகாமெய்) ககரத்தை ஒத்ததாக லின், இவை இரண்டும் தலைப்பெய்த சொற்களில் அர்த்த வேறுபாடு அதிகமாகாது. சொல்லமைப்பின்கண் ஆதியிற் சகாமின்றி ககரம் மாத்திரையே முத னிலை மெய்யாகி நின்றிருத்தல் சாலும் என்பதூஉ மொன்று. இதற்கு சகரம் தலைப்பெய்த தமிழ்ச் சொற்கள் தமிழின் பாகதமாகிய கன்ன டத்தில் ககர மெய்முதலாய் நிற்றல் ஒரு சான்முகலாம். சகாமின்றிக் ககரமே ஒருகால் தமிழிற் பயின்றிருந்ததினுற்போலும் ஆசிரியர் தொல் காப்பியனுர் காலத்தில் ‘சகரக்கிளவி' சொற்குமுதலாய் வாராது நின் றது. (தொல்காப். எழுத். 61-2) இனி தகா பகாங்கள் முதனிலை

Page 17
22 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
பாம்போது, ககர மெய்முதல் பெற்ற சொற்களின் அர்த்தத்தைக்காட் டில் அதி வலியுறுத்தப்பெற்ற புத அர்த்தங்களைப் பெரும்பாலும் கரு தலை நுண்ணுணர்வால் அறிக. குழைத்தலான தி வளைத்தலாகிய எளி திற் பெறப்படும் தொழிலாகும். ஆயின் துளைக்கலும் பொள்ளுதலும் அதிகாடின்னியமான முயற்சியை வேண்டிநிற்றல் பிரசித்தம். வல்லின மெய் தலைப்பெய்த சொற்கள் இங்கனம் தம்முட் காயதம்மியமான கடின முயற்சியைக் குறிக்குமாபோல், மெல்லின மெய்களாம் நகர மகரங்களையும் மகரத்துக்கினமான வகரத்தையும் தலையிடத்துக்கொண்ட சொற்கள் மென்மையான முயற்சியை விளக்குவனவாகும். துளைக்த லோடு நுழைதலையும், வளை கலையும்; பொள்ளுதலோடு முழுகுதலையும் ஒப்பிட்டு இதனைக்காண்க. துளைத்தில் பெருமுயற்சியோடு உட்செல் லல். நுழைதல், மெல்லென உட்செல்லல். வளைதலும் சிறு முயற்சியே எனலாம். மீட்டும், நுழைத்தலும் சிறுதுவாரத்துட் செலுத்துதலைக் காட்டுமன்முே? நுண்மையும் அாலும் இச்சிறு துவார உட்பாட்டுக் கருத்தோடு சம்பந்தங்கொண்டன. தோண்டுதல் கோண்டுதல் எனும் இரண்டு வினையையும் ஒப்புநோக்குமிடத்து, இவ்வுண் மை மேலும் தெளிவாகும். தோண்டுதல் = வலிய ஆயுதத்தால் வெட்டிப்பிளந்து உள்ளிடங்காணல்; கோண்டுதல் - நகம் முதலியவற்ருல் மெல்லென உள்ளிடத்தைக் கிளைத்தலாம் அன்ருே? பொள்ளுதல் முழுகுதல்கட் கும் இவ்வித ஏற்றத்தாழ்ச்சியுண்டு. கடினமான பரப்பை வலிந்து துளையாக்குதல் பொள்ளுதலாகுமிடத்து, நீரைப்போலும் நொய்மை யான பரப்பினுள் மெல்லெனப் புகுதல் முழுகுதலாகுமன்றே. இத் காரதம்மியம் இஞ்ஞான்று எல்லாச் சொற்களுள்ளும் புலமாகாதபோ தும், ஆதிநாளில் வல்லின மெல்லின வேறுபாடானது காரணமின்றி எழுந்ததொன்றன்று என முடிக்கச் சில ஏதுக்கள் உள்ளன.
இவ்விடத்து வகரமெனும் இடையின மெய், பல சொற்களில், பிறி தொரு மெய்யாகவன்று உகரத்தின் வலியுறுத்த திரிபாகவே வருதலை எடுத்துக் கூறிவிடல் நன்று. உகரம் ‘இதழ்குவிந்தியலும்' தொல்காப்பியம். (எழுத். 87). வகரமும் அவ்வழியே பிறந்ததென்பது பிற பண்டை மொழிகளின் ஒப்புமையாற் பெறப்படும், ஆங்கிலத்தில் இன்றைக்கும் "உவ' என்றுச்சரிக்கப்படும் W ஆகிய வகரம் உளது. இவ் W ஒலியோெேதாடங்கும் ஐரோப்பைய பாஷைச் சொற்களுட் பெரும்பங்கு எமது 'உள்' அடியிற் பிறந்தனவே. பழந்தமிழோடு மிக ஒற்றுமைபூண்ட மொழியாகிய சிங்களத்தில் இஞ்ஞான்றும் வகா மெல்லாம் ‘உவ’ எனும் உச்சரிப்பே பெறும். இங்கனம் தமிழிலும் உகரமுதலாய்கின்ற சில அடிச்சொற்களில், வழிச்சொல்லாதற்கு வேண் டிய வலியுறுத்தலை நோக்கி முதனிலை உகரம் ‘வு' என்ருகி, பின் சொல்லுதற்கு எளிதாதற்பொருட்டு 'வி' எனவும் 'வ' ததுபோலும். உதாகரணம்:
என்பது
எனவும் வக்

அடிச்சொல்லை மீட்டலும் மடக்கலும் 23
அடிச்சொல்-உள், உழு (உள்ளு) = உட்செல் வலியுறுத்த உருவம்-விழு வுழு) - திடீரென உட்செல்
விழு-ங்கு - உட்செலுத்திக்கொள் அடிச்சொல்-உலை = சுழன்றுவா வலியுறுத்த உருவம்-வளை = உட்சாய்ந்துவா
தொல்காப்பியர் காலத்தில் எச்சொல்லையாதல் வுகரமுதலாய் உச் சரித்தல் வழக்கறுந்து நின்றமைக்கு “உ ஊ ஒ ஓ என்னு நான் குயிர் வ என்னெழுத்தொடு வருதலில்லை' என்ற குத்திரம் சான்று (எழுத் 63). ஆயினும் இழிசனர் வழக்கில் வீடு என்பதை ஆடு எனச் சொல்லலையும் ஆங்காங்கு செவியுறுகின்றனம். செந்தமிழினுக்கு அது அடாதென்றே கொள்க. வு, வூ வொ, வோ எனும் நான்கும் தணக் தொதுக்குற்றமையினல் வகரம் எவ்விடத்தும் இதழ் குவிந்தியலாது “பல்லிதழியைய வகாரம் பிறக்கும்' எனும் கட்டளைக்குட்படலாயிற்று என்க. (தொல், எழுத். 98)
6-ம் கட்டளை
அடிச்சோல்லை நீட்டலும் மடக்கலும்
அப்பால், சொல்லடிகளை நீட்டலானும் மடக்கலானும் புதுச் சொல்லினங்கள் சிறிது சிறிது வேறுண பொருளைத் தெரிப்பனவாய் ஆக்கப்படும். இது ஆருங்கட்டளையாம். சொற்களை ஒரோர் வகை யில் வலியுறுத்துவிடுதலே புதுச்சொல் ஆக்கத்தின் கண் பயிலுகின்ற பொதுச் சூழ்ச்சியன்ருே? குற்றுயிரை கெட்டுயிராய் உச்சரித்தலும் வலியுறுத்தலின் பாற் பட்டதன் ருே? ஆகலின் குற்றுயிரோடு இயன்ற ஆதி அடிகள் நெட்டுயிர் கொள்ளுங்கால், அவை உறுதிபெற்றனவாகித் தாம் முன்கொண்ட கருத்திற்கு ஒரு சிறிது வேறுபட்ட புதுக்கருத் தினைத் தந்து நிற்கும் எனக் காண்க. இங்கு யாம் குறிக்கின்ற டேட்டல், *செய்யுள் வேண்டுழி' வருகின்றதென வியாகரண நூலோர் கூறும் மீட்டலின் வேறு என்பது தானே போதரும். சொல்லாக்கத்தின்கண் வரும் நீட்டலிற்கு உதாகரணம்:
தலைபடி வழிச் சொல் அய் = நெருங்கியது ஆய் (வினை) = சுருங்கு, நுணுகு உறு-நிலைகொள் ஊ (ன்) ழ2 - 6ாட்டு இரி= விழு ஈர் - இழுத்துச்செல் எழு-கிளம்பு ஏறு = மேற்பெ
வழியடி வழிச்சொல் பர - விரிந்துசெல் பார் = நோக்கு
கொடு(கு) = வளைந்து சுருங்கு கோடு-வளை

Page 18
24 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
தொ=ெஒட்டையாக்கு தோள், தோ(ண்)டு = குழி
யாககு நுள்ளு (நுழை)-கிள்ளு நோ (ண்)டு = உட்செலுத்திக்கிளை தெளி- வெளிச்சமாகு தேர், தேறு -அறிவுதலைப்படு பிரி- வெவ்வேருக்கு பேர் = புரட்டிவை
இவை வினைச்சொல்லாக்கத்தின்கண் வரும் நீட்டலாம். வினைகளி னின்று பெயர்களும் பல மீட்டலாற் பெறப்படும், எங்கினம்?
ഖങ്ങ QLIHuẵ இடு-கீழேவை, சமர்ப்பி ஈடு - சமர்ப்பித்தது, பிணை க(ெகு) = நெருங்கு காடு = நெருங்கிய மரத்தொகுதி மின்(னு) - ஒளிகாலு மீன் - ஒளிர்வது, உடு திரி = உருள், உலவு தேர் - உருள்வது
அடியை நீட்டலின்கண் குற்றுயிர் நெட்டுயிராதலோடு இகர உக ாங்கள் முறையே தம்மினமாகிய எகர ஏகாரங்களும் ஒகர ஒகாரங்களு மாதலைக் குறித்துக்கொள்க. அகல், ஆல் எனவும், பகல், பால் எனவும் வந்ததுபோல விகாரத்தால் இரட்டைகளாகி வெவ்வேறு பொருள்தரும் சில சொற்களை ஈண்டு சுட்டுதல் வேண்டப்படாது, இவற்றிற் தோன் றும் நீட்டல், எளிதில் உச்சரித்து முடிக்கும் பொருட்டு இடைநின்ற ஒற்றை விடுத்து (இது ஒற்று நீக்கம் எனும் செய்தி) இரு குற்றுயிர்களை ஒருங்கே உச்சரிக்கும் முகத்தால் எழுந்தது. எங்ங்னம்? அ(க்)அல்ஆல், ப(க்)அல்-பால். ஆகலின், இவ்வித விகாரம் எமது நீட்டல் கட்டளையுள் அடங்காது. அங்ஙனமாயினும், ஒருசொல்லே உச்சரிப்புப் பேதத்தால் இரு சொல்லாயினபின், அவ் இரண்டும் வெவ்வேறுபொருள் குறிக்குமாறு வைக்கப்படுதலும் இயல்பே. இவ்வாருக, அய>அக-வு எனும் வரலாறுடைய அகல் எனுஞ் சொல்தான் ஆல் என வந்தவிடத்து, முக்தியது ஒரு சிறிது மாற்றத்தோடு அகழ் என உச்சரித்து விசால மாய்ப் பொறித்த கிடங்கினுக்குப் பெயராக்கப்படுவதாயிற்று. பிந்தியது விசாலமாய்ப் பரந்த மரவிசேடத்தைச் சுட்டுவதாயிற்று. இவ் அகல் எனுஞ் சொல்லே அடியாய்ப்பிறந்த பகல் எனுஞ் சொல் பிரித்தற் பொருள் கொண்டது. அதுதான் பால் எனவும் நின்று இரட்டையா யதற்பின், அவ்விரட்டைச் சொற்களுள் முந்தியது இருட்காலத்தின் வேருகப்பிரித்த ஒளிக்காலத்தின் பெயரும், பிந்தியது ஆண், பெண், அலியென்ற பிரிவிற்குப் பெயருமாயிற்று. பகுத்தல் பாத்தல் என வரு தலும் சொற்சிதைவால் எய்திய திரிபன்றி எமது கட்டளைக்குட்பட்ட தோர் மாற்றமன்றெனவறிக. சொற்சிதைவால் எழும் இத்தகைய விகா ரங்கள் பல நான்காம் அதிகாரத்தினுள் விளக்கப்படும்.
இனி அடிச்சொல்லை மடக்கல் எனும் விதியால் புதுச்சொற்கள் ஆமாறு கூறுதும். மடக்குதலின்கண் அடியின் நெட்டுயிர்கள் பின் வரும் முறைப்படி வளைத்து உச்சரிக்கப்படும்.

வேறுபடும் அடி உயிர்கள் 25,
ஆகாரம்-அய, அவ, அக, அல, அா, அள என மடங்கும்
ஊகார ஓகாரங்கள்-உவ, உக என மடங்கும்
ஈகார ஏகாரங்கள்-இய, இவ, இக, இள, எவ என மடங்கும்
சிறுபான்மை அடிச்சொற் குற்றுயிர்கள் மடங்கிவருதலும் கொள்க.
இக்கட்டளைக்கு உதாகாணமாய்ச் சில எடுத்தோதி அச்சொற்கள் அப்பால் அடையும் விகாரங்கட்குக் காட்டாக அவற்றுள் ஒரு சொல்லை. விரித்து விளக்குதும்:
தாழ்,-தவழ், தவல், தளர்
குளை,-(பெயர்)- சுவாலை (இது ஆரியம்
தோய்,-துவை
நேர்,-நிகர், நிமிர், நிவ
நீள்,--நெகிழ்
ஏறு,-இவர்
கொய்,-நுகை
வெளி,-விளர், மிளிர்
தெளி,-திகழ்
அடிமடக்குறுதலால் நிகழும் அர்த்தபேதத்தை ஆராய்ந்தறிதற் குக் காட்டாக தலையிடத்து நின்ற தாழ் எனுஞ் சொல்லை ஒரு சிறிது விளக்குதும். தாழ்தல், ஆழ்தலினின்று 5-ம் கட்டளையாற் பிறந்தது. ஆழ்தல், அகழ்தலின் மரூஉ. இனி தாழ்தலின் அர்த்தம் இறங்குதல், வீழ்சலாம். 6-ம் கட்டளையினல் தாழ்தல், தவழ்தல் என மடங்கி வரு மிடத்து படிதல், ஊர்கல், தத்துதல் எனும் பொருள் பெறப்படும். இத ஞனே தத்துதலைப் புறப்பாடான செய்தியாக்கொண்ட செந்து தவளை எனப்பட்டது. தவழ்வது = தவளை. தாழ்தலே தவலல் என்ருகி, இறங்குதல் விசேடமாகிய குறைதலைக் காட்டும். தவல் = குறைவு. தவ = குன்ற எனவும் வரும். அப்பால் தவலுதல்தான் தபுதலும், தப் புதலும், தவறுதலும், தவிர்தலும் என வந்தமையை நுனித்துக்காண்க. ஈற்றில் தளர்தலும் தாழ்தலாகிய இறங்குதற்பொருளை வேருெரு வித க் திற் கருதலை “மார்பிற்றளர்முலை' (கலித்தொகை 22) ஆகிய மேற் கோள்களான் அறிக. இறங்குதற் பொருளினின்றே தளர்தற் சொல்லி ணுக்கு, பலவீனப்படல், சோர்சல், சோம்பல், வருத்தம் ஆதியபொருள் கள் படிமுறையாய் வந்துற்றன என ஆராய்ந்தறிக.
7-ம் கட்டளை
வேறுபடும் அடி உயிர்கள்
அடிகளை மீட்டலும் மடக்கலும் எனும் கட்டளையால் அடிகளின் வியஞ்சனங்களல்ல முன்னின்ற சுட்டுயிர்களே மீட்டவும் மடக்கவும் பெற்று விகாரமடைந்தன. இவ்விகாரம் இனந்தழுவியதொன்று; ஆக லின் முறைப்படி நிகழ்வது. எங்ஙனம்? மீட்டலில், அகரம் ஆகாரம்

Page 19
26 தமிழ்ச்சொற்பிறப்பாாாய்ச்சி
ஆவதூஉம்; உகரம், ஊகார ஒகர ஒகாரங்களாவதூஉம்; இகரமும் எக ரமும் ஈகார ஏகாரங்களாவதூஉம் இனங்கழுவிய, முறைமையான விகார மாம். மடக்கலில், அகர உகர இகா எகரங்களோடு பின்னெரு அகாஞ் சேர்ந்துழி அய உவ இய ஆதிய உருவங்களும் ஒலிமாற்றுப் பொது விதிகட்கொப்பவே நிகழ்வன. ஆயின் அடியுயிர்களில் இவ்வாறு நிக ழம் விதிபூர்வமான விகாரத்தையன்றி, விநிதணந்த ஒரு விகாாழம் உளது. அதுதான் ஏழாம் கட்டளையாகும். உதாகரணம்: எல் எனும் பெயர் எழுகின்றதாகிய சூரியனையும் அதன் வெளிச்சத்தையும் காட்டு கின்ற ஓர் வழிச்சொல். இது முறைப்படி இல-கு என் முகி “பிரகாசி' எனும் அர்த்தத்தையும், ஏல என்முகி 'வெளிச்சத்தோடு' எனும் அர்த் தத்தையும் தரும். இவை இரண்டு மாற்றங்களும் முறையே 3-ம் 6-ம் கட்டளேகளாற் பெறப்படுகின்ற மேல்வந்துறும் வியஞ்சனத் திரிபும் அடிச்சொல் மீட்டலுமேயாம். ஆயின் எல் எனுஞ் சொல் மேலும் சொற்பெருக்கம் நோக்கி ஒலி என, ஒளி என தன் எகரத்தினை ஒகர மாக்கி கிற்றலும், வால் என ஆகாரமாக்கி நிற்றலும் முறைதவறிய விகாரமாம். ஒலித்தல் = வெண்மையாக்கல்; ஒளி- வெளிச்சம், வால்வெண்மை. இவ்வெளிச்ச, வெண்மைச் சொற்களும் எல் சொல்லினின்றே "வலியுறுத்துகின்ற முதனிலைமெய்ப்பேறு’ எனும் 5-ம் கட்டளையால் பிறந்தன ஆதலின், எல், ஒலி, ஒளி, வால், வெளிச்சம் வெண்மை என்பன ஆறு சொற்களும் ஒரு சிறிது பேதப்பட்ட கருத்தை விளக்குவான் ஒரே அடிவாயிலாய் எழுந்தனவே எனக்காண்க. விளக்குதல் என யாம் இப்போது எடுத்தாண்ட சொல்லும் வெளிச்சம் எனுஞ் சொல் லின் மரூஉ வாய் நிற்பது. எல்> இலகு) இலங்கு) விளங்கு) விளக்கு என்பது அதன் வான்முறை. அப்பால் “எல்’ ஒலி, ஒளி எனவும் வந்ததன் ருே? அவ் ஒலி, ஒளி எனும் சொற்கள் உலர் என, உணர் என, சொலி என, சுடு என, குடு என, துல-ங்கு என, துளங்கு எனப் பலப்பல சொற்களாய் விரிந்து விரிந்து பரந்து பரந்து வருதலை எமது சொற்பிறப்பகராதி வெளிப்படுங்காலையிற் கண்டு மகிழ்க. எல் லெனும் அடித்தாயின் நல்ல மகாரிற் சில்லோரை எம் 'தமிழமைப் புற்ற வரலாறு' நூலிலுங் காணலாம். (பக். 88-104)
8-ம் கட்டளை
பிறிதோரு ஆதிச்சோல்லோடு கூட்டுனல் இக் கட்டளை தொடர் சொற்களைச் சார்ந்ததன்று. தமிழில் இரு சொல் ஒட்டி இயலும் தொடர்கள் பலவுள. அணிந்துரை, ஆண்டகை, உண்கலம், கொவெரி, புழைக்கை, பொதுமகள், மண்ணுணி இவைபோல் வன தொடர் சொற்களாம். வியாகரணம் எடுக்கோதுகின்ற வேற்
றுமை, அல்வழிக் தொகைகளெல்லாம் தொடர் சொற்களே. இவற்றை ஒழித்து, பெயரின் ஐ, ஆல் முதலிய உருபுகளும், வினையின் காலம்

பிறிதொரு ஆதிச்சொல்லோடு கூட்டுனல் 27
இடம் பால்களைக் காட்டும் இடைநிலை விகுதிகளும் ஒவ்வோர் சொல் லின் சிதைவே என்றது இது காலம் நன்முக நிச்சயிக்கப்பட்ட உண்மை யாம். (தமிழமைப்புற்ற வரலாறு பக். 47-54; 64-76 காண்க) தொடர் சொற்களை வெவ்வேறு பிரித்துக்காணல் எளிது. உருபுகள் விகுதிகளும் இலக்கண விற்பன்னர்களாற் சொற்களின் வேரு கப் பிரித்து நோக்கப்படுவன. இவையல்ல 8-ம் கட்டளை யாற் சுட்டப்படுகின்ற ஆதிச சொற்கள். அவை, தாம் கூட்டுண்ட சொற்களோடு மருவிச் சேர்ந்து நிற்றலால், இப்பிந்தியவையை கூட்டுறுத் தனிச்சொல்லே போலத் தோன்றவைப்பன. தொகையிறந்த சொற்கள், இஞ்ஞான்று தனிச்சொற்களே எனக் கொள்ளப்படுகின்றவை, இவ்வாறு இரு சொல் அடுக்குதலாற் பிறந்தனவாம். இனி, புதுச்சொல்லாக்கத்திற்கு உதவி யாய்க் கூட்டுண்ட ஆதிச் சொற்களைப் பின்வருமாறு வகுத்து உதாகா ண முங் காட்டுதும்:-
S.
அது - அண்மைச் சுட்டாகும் அகரமும் தகர வியஞ்சனமுஞ் சேர்ந்து உச்சாரண உகரம்பெற்று கிற்கின்ற இச்சொல் கற்காலம் 'இது' என்றதற்கு எதிராய்த் தூரத்திலுள்ளதனைக் குறிக்கின்ற சுட்டுப்பெய ராய் வழங்கினும், பண்டைகாவில், சொல்லமைப்பின் கண், தூரத் தார தம்மியத்தைக் காட்டாது பொருளைப் பிரித்துணர்த்து தலையே தொழி லாகக் கொண்டியன்றது எனல் ஆராய்ச்சியால் நிச்சயிக்கப்படும். இச் சொல் ஆங்கிலத்தில் the என்றும், சர்மனியத்தில் der என்றும், அரா பியத்தில் அல் என்றும் வழங்குகின்ற சுட்டுறுப்புக்களை ஒத்தது. ஆயின் ஆங்கிலமாதிய ஐரோப்பைய மொழிகளுள் the, der ஆதியன பெயர்ச் சொல்லோ") ஒட்டுண்ணுது அதன் முன் சனித்து நிற்பன. அராபியத் தில் அல் எனும் சுட்டுறுப்பு பெயரின் தலையில் ஒட்டுண்டு திரிபின்றி நிற்பது. இவற்றிற்கெதிராய், தமிழில் அது எனுஞ் சுட்டுறுப்பு சொல் லீற்றில் ஒட்டுண்டு பெரும்பாலும் திரிபுபட்டதாய் நிற்கும். அது எனுஞ் சொல்லின் திரிபுகள் அடு, அற, அல், அம், அன், அர், அழ், அள், அண் எனவரும். அப்பால் ஈற்றுமெய் கெட்டு 'அ' என மலையாளம் ஆதிய பாகசங்களிலும், இவ் 'அ' தான் ஐ என மெலிந்து தமிழிலும் வரும். நிலைச்சொல்லின் ஈற்றுகா இகாங்களின் முன், அது எனும் உரு வத்தின் தலை அகரங் கெடுதலுமொன்று. இத் திரிபுகள் வாயிலாய்த் தமிழில் அர்த்த பேதத்தோடுக.டிய சொற்பெருக்கமும் நனி பெறப்ப ம்ெ. இவற்றை இனி உதாகாணங்களால் விளக்குதும்:
இழு-து =இழு(படும்)அதி-நெய், கொழுப்பு, குழம்பு, ஈண்டு நிலைச்சொல்லது ஈற்று கரத்தின் முன் அது என்பதன் தலை அகாங் கெட்டது. இழு + (அ)து = இழுது. அது எனுஞ்சொல் திரிபின்றி நிற் றற்குப் பெயர்ச்சொல் எடுத்துக்காட்டுக்கள் அரியனவாம். செய்தது என்ற வாய்ப்பாட்டுக் காலங்காட்டும் தொழிற்பெயர்களில் மட்டும் அதனை

Page 20
28 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
விளக்கமாய்க் காணலாம். செய்த + அது எனப் பிரிக்க. செய்தது எனும் உருவம் இருந்தபடியேயிராது செய்தல் என வந்திட்டமையில் அது எனும் சொல் அல்லெனத் திரிந்தமையையும் கண்டுகொள்க.
குற-டு = வளைந்த (வட்டித்த) அது.-சிறுமலை, ஈண்டு, 'அது' அடு என்ரு யிற்று. குறு + அது = குறடு. குன்று எனுஞ் சொல்லும் மேல் ஒரு விகாரமாம்.
கிண-மறு=கிண்டிய அது.-ஈண்டு 'அது' அறு என்முயிற்று. குட-ல் - குழைந்த (திரண்டு உட்டுளையுள்ள) அது.-ஈண்டு 'அது' அல், என்ரு யிற்று. 'அது' வினின்று அல் என மாறிய இவ்விறுதிச் சொல் முற்கூறியாங்கு தொழிற் பெயர்களில் மிகப்பயிலும். உதாகர ணம்: செய்த + அது - செய்தல். அப்பால் இவ் “அல்' ஓசை நயமும் உறு திப்பாட்டாற் பொருள் விகற்பமும் நோக்கி கல், சல், தல், பல், மல், வல் என முதனிலைமெய் பெற்று வருதலுங்கொள்க. உதாகரணம்: டேக்கல் - நடத்தல்; எரிச்-சல் = எரித்தல்; வரு-தல் = வால்; திரும்-பல் - திருமல்; செய்யா-மல்=செய்யாது; இர-வல் =இரத்தல்
ஆழ-ம்=அகன்ற அது.-ஈண்டு 'அது' அம் என்ரு யிற்று. கட-ன் - கட்டுவதாகிய அது.-ஈண்டு 'அது' அன் என்ருயிற்று. இதற்குத்தலையடி 'அடு'. அடுத்தல் - நெருங்கவைத்தல். கட்டுகல்இறுகப் பிணைத்தல்.
சுட-ர் = சுடுகின்ற அது. - ஈண்டு 'அது' அர் என்ருயிற்று. 'சடர்’ சொல்லின் வான்முறை எல்> ஒலி> சொலி> சுடு> சுடர் என்பது.
உற-ழ் = உறுகின்ற அது, இடையீடு.-ஈண்டு 'அது' அழ் என ஆயிற்று. உள்ளாய் நிற்றல் உறுதலாம், உளு என வால் வேண்டிய விடத்து உறு என்ரு யிற்று. ஊன்று என்பதூஉம் இதன் வலியுறுத்த வேருெரு உருவம்,
பாங்-தள் - பாய்கின்ற அது, பாம்பு.-ஈண்டு 'அது' அள் என ஆயிற்று. இது அய= அண்மையிலுள்ளது) அய-க்கு) பர> பாய்> பாய்த்து என வரும். பாம்பு எனும் உருவமும் இவ்வடியிற்பிறந்தது. இடுக்-கண் = இடுக்குகின்ற அ.து.--ஈண்டு 'அது' அண் என்ரு யிற்று.
அது எனுஞ் சொல் கடைக்குறையால் அ என் நின்று ஐ என மெலிந்ததற்கு உதாகரணம்: இலை - கீழே தூங்கும் அது. இச்சொல் மலையாளத்தில் இல என நிற்கும். இழி>இழ= கீழ்நோக்கு. செய்தது (செய்தல்) எனும் வாய்ப்ப்ாட்டுத் தொழிற்பெயர்கள் பல அது அல் என்பனவற்றை அ (ஐ) என மாற்றுதலோடு, காலங்காட்டும் இடை நிலையையும் திரித்து வேற்றுருவும் பொருளும் கொள்ளும். உதாகா ணம்: செய்கை. ஈண்டு (செய்தது) செய்தல் எனும் ஆதி உருவம் செய்கை

பிறிதொரு ஆதிச்சொல்லோடு கூட்டுணல் 29
என்று வராது செய்கை என்ருயிற்று. செய்தையாக வேண்டியவிடத்து செய்தி என வருதல் மேல்வரும் 'இல்' சொல்லின் திரிபெனப் பின் னர்க் காண்க. ஐ எனும் சிதை சொல் கை என வந்தவாறுபோல் சை, தை, பை, மை, வை என வருதலுங்கொள்க. உதாகரணம்: வரி-சை= வரும் அது, வரல்; குடந்தை = குழையும் அது, வளைவு; இடும்-பை= இடுக்கும் அது, இடுக்கல், இச்ெகண், பொறு-மை=பொறுக்கும் அது, பொறுத்தல்; 5ட-வை - கடக்கும் அது, நடத்தல். இவ்வுருவங்களின் அர்த்த பேதங்களைக் குறித்துக்கொள்க. யாமும் ஒருசில காட்டாகக் காட்டுதும்:
இழுது - நெய்
இழு-வல் - காலதாமசம்
இழு-வை -இழுக்கும் வடம்
இழு-மை-இனிமை-'தொண்டைக்குள் நிற்றல்'
'சீடுதோன்றினியர்' (நற்றிணை 1) என்ற மேற்கோளில் இனியர்
என்றதற்கு "நீடுதோன்று’ என அடைகொடுத்திருத்தல் காண்க.
குட-ல்-இரைப்பையைச்சார்ந்த குழல் -
குட-ம-கலயம
குடை- கவிகை
ஆழ-ம்-அகலம், தாழ்வு
ஆழ-ல்-அகழும்செந்து, கறையான்
கட-ன் - இறுக்கவேண்டியது
கட-ம் - கயிறு
கட-மை - செயற்பாலது
கட-வை - ஏணி
பிறவற்றையும் ஆராய்ந்து காண்க. இச்சொற்பகுதிகள்தாம் மேல் வரும் உள், இல் எனும் சுட்டுறுப்புக்களின் கூட்டாவால் பின்னும் வேறுபட்ட கருத்தோடு வேற்றுருவம் அடைதலையும் சிங்கசோக்காய்க் கவனிக்குக.
ဎ.ါr
மறைந்ததை (சேய்மையை)க் காட்டுவதாகின்ற உகரச் சுட்டோடு ளகர வியஞ்சனஞ்சேர்ந்து ஆன உள் எனுஞ் சொல், நிலைச் சொல்லி னுக்குத் துணையாய் வருங்கால், “பொருந்துவது' 'உடைமையாக்கொண் டது' 'தன்னகத்தே வைத்திருப்பது' எனும் அர்த்தத்தைத் தெரிக்கும். இவ் உள் சொல்லும் உல், ஊழ், உறு (இறு) எனப் பரிணமித்தலோடு, கடைக்குறைந்து பெரும்பாலும் 'உ' எனவும் நிற்கும். அப்பால் *உள்’ளின் கடைக்குறைந்த 'உ' எனும் உருவம், பொருள் வேறு பாட்டைத் தருகின்ற உறுதிப்பாட்டின் பொருட்டு, முதனிலை மெய் பெற்று கு, சு, ,ெ து, பு, று, எனவும் வரும். இவையிற்றிற்கு
உதாகரணம்:-

Page 21
30 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
இய-வுள் = இயக்குதலைப் பொருந்தியது, தலைவன், இறைவன்.-- தலையடி இழி = இறங்கு. இது இய-ங்கு = செல், இய-க்கு = செலுத்து, தலைமைபெறு எனவரும்.
அல்-குல்-சாய்தலை உடையது, இடுப்பு- ஈண்டு 'உள்' உல் என்ருயிற்று. தலையடி: அஃகு = அண்மையை நாடு, படிப்படியாய்க் குறை, சாய்.
என்-அாழ் = வெப்பத்தை அகத்திே கொண்டது, பொருந்தியது, பகலோன், கோடைகாலம்.-ஈண்டு “உள்" ஊழ் என்ரு யிற்று. தலைச் சொல் எல் = எழுவது, குரியன், அதன் வெப்பம். * யான 'உள்' எனுந் துணைச்சொல் பெற்று எல்லு என கின்று, ஒலிச் சிறப்பு நோக்கி என்று எனவாயிற்று. எந்தமிழில் லகர, ளகரங்கள் றகரமாகின்றமையும், னகர ஒற்றை முன்பெறுகின்றமையும் பெருவழக்கு. 'கால்' (ஊதை) காற்று எனவும்; “நால்' (கயிறு) நான்று எனவும்; நாள் ஞான்று எனவும் வருதல்காண்க.
'எல்' கடைக்குறை
ஞா-யிறு - நாளைக் காட்டுதலைப் பொருந்தியது, சூரியன்.-ஈண்டு *உள்’ உறு என்ருகி, நாவுக்கெளிதாதற் பொருட்டு இறு என மெலிங் தது, தலையடி அகல் - அண்மையின் நீங்கு, நீண்டிரு. வழியடி, நாள் = மீண்டது. *ஒருமீட்டு’ அன்றேல் ஒரு காலப்பகுப்பு. நாள் உறு - ஞாயிறு என்ரு யிற்று. கால-ம், 15ான்று, ஞால-ம் எனுஞ் சொற் களும் அகல் எனும் தலையடியினின்று 5-ம் கட்டளையாற் பிறந்து நீளத் தை, விசாலத்தையே காட்டுவன. காலம் = (கால்-அது) நீட்சியைப் புறப்பாடாகக்கொண்டது, நேரம். 5ான்று, (5ால்) கீட்டைப் புறப் பாடாகக்கொண்டது, கயிறு. நாண், ஞாண் என்பன “நால்' சொல் லின் வேற்றுருவங்கள். ஞாலம் = (நால்-அது) அகன்றதாகிய பூமி. நகரம் ஞகரமாதல் தமிழ் வழக்கு, காலம் என நின்று மீண்ட கோப்பகுதியைக் குறிக்கின்ற கால் எனுஞ் சொல் தானே, கடத்தலுறுப் பாகிய நீண்ட அவயவத்துக்கும் பெயராதலை நோக்குக. இவ்வாறு அடிச்சொல்லும் வழிச்சொற்களும் சார்புச்சொற்களும் பொருந்தியதாய் நிற்கின்ற 'காலம்' எனுஞ் சொல் ஆதித்தமிழ்ச் சொல்லேயன்றி ஆரி யச்சொல்லன்றெனக் கொள்க. வெளிவரப்போகின்ற எமது சொற்பிறப் பகராதியைப் படிப்போர், இதனைப்போலும் பன்னூற்றுச் சொற்கள் தமிழினுக்கும் ஆரியத்தினுக்கும் பொதுவாய் நிலைபெறுதலைக் கண்டு மகிழ்வர்.
'உள்' கடைக்குறைந்து 'உ' என நிற்புழி, பல நிலைச் சொற் கட்குத் துணையாவது. உதாகாணம் அடை-வு = சமீபித்தலைப் பொருந் தியது, முறை. தலையடி அடை= அண்மைகொள். ஈண்டு கடைக் குறைந்த உள் எனும் துணையோடு இயன்ற இச்சொல், அடைதல் அடை யல், அடைகை என 'அது' எனுந் துணையின் பேதங்களோடு இயலுங்

பிறிதொரு ஆதிச்சொல்லோடு கூட்ணெல் 3.
கால், கொள்ளும் அர்த்த விகற்பச்தை நுனிக்தக்காண்க. அடை-வு எனுஞ் சொல்லில் 'உ' எனுஞ் சிதைசொல் தனித்து நின்றது; வகரம் உடம்படுமெய், இனி, முதனிலை மெய்கள் பெற்று வரும் 'உ' எனுங் துணைச் சொல்லினுக்கு உதாகாணம் வருமாறு:-
கடு-கு = காரத்தைப்பொருந்தியது.--கலையடி: அடு கொலு-சு - வளை தலைப்பொருந்தியது.-தலையடி உழல் கவ-டு- பிரிதலைக்கொண்டது, கொப்பு.--கலையடி அய, அகவு =
நெருங்கிச் செல்லத்தேடு, பிரி கொழு-ந்து = இளமையைப் பொருந்தியது, இலை.--வழியடி குழ=
குறுகியது, இளமையானது குறு-ம்பு - வளைந்த மதிலுள்ளது, அரண், வலிமை.-வழியடி குறு கொடி-அறு = வளைந்து இடுக்குவது, குறடு-வழியடி: குட
@నీ
கீழுறுதலைக் குறிக்கின்ற இகரச் சுட்டோடு லகர வியஞ்சனஞ் சேர்ந்து இயல்கின்ற இல் எனுஞ் சொல், நிலைச்சொல்லினுக்குத் துணை யாய் வருங்கால், 'இருப்பது' 'இருக்குமிடம்’ எனும்பொருளைத்தரும். இவ் ‘இல்' இழ் என இர் என வருதலோடு, கடைக்குறைந்து *இ' எனவும் நிற்கும். முந்திய 'உ' எனுஞ் சிதை சொல்லேபோல இதுவும் ககரமாதிய முதனிலைமெய் பெற்று வருதலுங்கொள்க. உதா
கரணம்:
வெ-யில் = வெம்மையாயிருப்பது.-தலையடி எல். வெள்> வேதல் >வெம் >வெயில் எனவரும் ,
உவ-ரி = உவர் (உப்பு) இருக்குமிடம், கடல்.-தலையடி உவ = உயர், பொருமு.
கொளு-க்கி - வளைவாயிருப்பது, கொக்கை கொடி-ச்சி - வளைவாயிருப்பது, தேருறுப்பு இவை இரண்டு நிலைச்சொல்லும் குழ (தலையடி உழல்) எனும் அடியாய்ப்பிறந்து, பொருள் விகற்பம் நோக்கி ‘இல்' சொல்லின் வெவ்வேறு உருவத்தைத் துணையாய்ப்பெற்றன.
செய்-தி- செய்யப்பெற்றதாயிருப்பது. தலையடி எய் கு-ெம்பி = திரட்சியாயிருப்பது, மயிர்முடிச்சு. வழியடி குட
வேறு சில (இறுதி நிலைகள்
இவையிற்றையன்றி வேறு சொற்களும் பெரும்பான்மை சிதைக் தும், சிறுபான்மை சிதையாதும் பிற்காலத் தமிழ்ச்சொற்கட்கு இறுதி நிலையாவன. அவற்றுள் முக்கியமானவையை ஈண்டுக்குறிப்பிடுகின்ற
857 LO

Page 22
32
�0୪୫
காடு தலை மானம் வானம்
தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
ஆதியுருவம் அண்ணு (தல்)
9
ஆம்பு + அரவு
அடுத்தல்) அரவு (உறுதல்)
99
99 இய(அதல்)
92
2. ଉର୍ଦtଶ୪fi
உறுதல்) GT 6oTUga) கண் (அண்டு) கல் (அல்)
s படு (தல்) தலை ஆனஅதி
9.
உதாகாணம்
சிறுப்பனை செவ்வுனம் தூங்கணம் திண் ଶ୪୪୮ ଗ୧୮ଈy சிக்கெனவு திண்ணக்கம் உருவகம சீதளம் மண்டலம் கூட்டரவு பொல்லாங்கு பொல்லாப்பு சுண்ணும்பு அலாம்பரம், விளம்பரம் சிறுவாடு ஒய்யாரம் திடாரி துணிகரம் அவ்வியம், ஊழியம் சணடிகை தப்பிதம் வாரிதி தூக்குனி அப்புரவு அஃகேனம் இடுக்கண் சேதகம் திகிரிகை சாக்காடு சேர்ந்தலை சேர்மானம் சில்வானம்
இவற்றுட் சில ஆரியத்துக்கும் தமிழுக்கும்பொதுவென உணர்க.

நாலாம் அதிகாரம்.
DIALECTAL CORRUPTION சோற்சிதைவு
இதுகாமம் தமிழ்மொழியின் ஆதிச்சொல்லுறுப்புக்களாகும் தலை யடிகளும், அவற்றினின்றும் பிறக்கும் வழியடிகளும், அப்டால், இருதிறத் தனவற்றினின்றும் எழும் வியுற்பன்னங்களும் முற்ைப்படி ஆக்கப்பெற்று இங்வனே சொற் தொகை விரிந்து பல்கும் ஆற்றினை விளக்கினம். இனி, ஒருகால் முறைப்படி ஆக்குண்டு நிலைபெற்ற சொற்களானவை, காலச் செலவில், சொல்வோரின் இயற்கையான சோம்புத்தனத்தினுல், நாப் பயிற்சிக் குறைபாட்டினுல், சிதைவுற்று வேற்றுருவங்கொண்டு பெரும் பாலும் வேறுபட்ட பொருளையுங் குறிப்பனவாய் வந்து ற்ற பான்மை யை எடுத்தோதுவாம். இச்சிதைவு ஒலித்திரிபாலும் உருத்திரிபாலும் நிகழும். அவற்றுள் முந்திய ஒலித்திரிபு மேல்வருவது.
உயிர்மாற்றும் மேம்பம் மாற்றும்
சொற் சிதைவு இயற்கையைச் சார்ந்து நிகழுவதோர் செய்தியாக லின், உயிர்மாற்றின்கண்ணும் மெய்ம்மாற்றின் கண்ணும், அவ்வுயிரும் மெய்யும் பிறந்தமுறையானே ஒலித்திரிபாற் சிதைவும் நிகழும். இனி அ, இ, உ எனும் மூன்றுமே ஆதி உயிர்களாம். அகரம் அங்காப்பு மாத்திரையாற் பிறக்கின்ற பேச்சொலி. இகரம் அங்காப்பிழிதலினுலும், உகரம் இதழ் குவிதலினலும் வருவன. அப்பால் இவ் ஆதி உயிரிக்ள் மூன்றும் ஏனைய உயிர்களினுக்குப் பிறப்பிடமாகும். எங்ஙனம்? -3, F", ஊ என்பன இவற்றின் கீட்டித்த ஒலிகளாம். எ, ஒ என்பன முறையே அ + இ, அ + உ எனும் சேர்க்கையாற் பிறப்பன. இவை தாம் ஆ+இ, ஆ+உ என வருமிடத்து, ஐ, ஒள எனச் சந்தியக்கரங்களாகும். மற்று ஊ, ஒ என்பன உகர ஒகரங்களின் நெடில்களாமென்பது சொல்லாமலே அமையும். இவ்வாருகலின், அகர ஆகாாவொலி தலையிற்கொண்ட சொற்கள், எகர ஏகார ஒலிபெற்றுச் சிதைவுறும். எதிர் நிரலாய், பின் னவை முன்னவையாதலுங் கொள்க. ஆதாகாணம்:
கல்லல் கெல்லல்
சாம்பல் செம்பல் (வாடியபூ) ஏவன, எவன யாவன்' செருக்கு தருக்கு
கேளல் களிறு
அப்பால், அகர ஆகாரச் சொற்கள் இனங்கழுவி ஒகர ஒகாரச் சொற்களாதலும், எதிர் நிரலாய், பின்னவை முன்னவையாதலுங் கொள்க. உதாகரணம்:
த.சொ.-3

Page 23
தமிழ்ச்சொற்பிறப்பராய்ச்சி
கறித்தல் கொறித்தல் ஒப كليتي. : " " : L: சுபோலம் (ஆரியம்)
* Tam கேடகம்
:ே الكويتي 8ته եւ քl ! :hi: சாம்பல் (வாடிய
உள்ாம் ஒகரமாக:ம் சொன்னாக்கத்தின் க :&#if பயிலும் பிரழா முறைபாாலின், அக்னேச் சிதைவின் பால் எகித்சோசல் ஆயிகள் இதழ் குவிக்கியலும் உகரம் சொன்னிற்குச் *பு:ாாசில் காரணமாய், அதனே அங்காப்பு இழிதனாற் பிரிக்கி அதற் கும் அகரத்துக்கும் இகரமாப்
சிறுபான்: இ*விச் சொற்கள், பொருள் விே'டாட்டே
இகரம் எாராத ஜிம்
வேண்டப்படாது.
இடைநின்ற மாற்றியமை சிதைவே :
சோக்ல், உ*ரச் சொற்களாப் மாறியமையும் கோள்க. த.கா கரணம்:
ஒட்ட} பிழை( ميك فتعد لما
೩|| ಸೌL* பிலம்
:Աք: C#్మగ్రి
குதும்பு இதும்பு சி:மலே) | წჭოფr Lడియో (డిణT##)
அய்யன்-ஐபன், கர்ப்பு-விைப்பு என்பன் பற்றிற்போல அகர *f ரங்கள் ஐகார மரசலும், சீயொல் - வசனெல் என்பதிற்போல இசுர ஈகாரங்கள் ஐகாரமாதலும், மீட்ம்ே ஆள்:-ஒ:ன்; பள்ம்ை-பெண்
3ம் rா அகரம் ஒன்" "மாதலும் எச்ேசோசின் :ேண்டா மாற்றங்க
*。 TT | 1
: #ள்: உரை-தல்
இனி, மெய்கள் இளம்பற்றி ஒன்று மற்மூென்று ப்சி
ககாத்தினின்று ச#ாம் பிறக்கலின், அ.தி இழிவாகும்.
நோக்குதும்.
ஈற்று ஐகாரம் ஆப் என இருகலும் ஒன்!
உதாக 3 ம்:
ܕܗ
குழாய் விழாப் உராய்-தல்
சிதிைதலே
தமிழ்க்குப்த்தைச்சர்ந்த பிராகூபி மொழியில் "கரம் ககரமானதுபோன்
சிறு டான்: தமிழிலும் நிகழும். எ.போலும்,
கவரி தாங்கல் தங்கள் விளக்கம் விே (தன்னடம்) கேடகம் (வட்டமானது) கொப்பூழ் குரு: ஸ்
இம்மாற்றம் சிகரத்திஜகிே பெறப்டமி
Ꮽr di1 Ꮬ!
தஞ்சம்
வெளிச்சம்
செவி
சேமம்
தொப்புள்
தாமுலம் (ஆரியம்)

உயிர்மாற்றும் மெய்ம்மாற்.ஆம் 翠岳
சேடகச் சொல்லின் ஆதிபுரூலம் சோட&ம் ஆசவ்வேண் ம்ே, என ஆராய்ந்து உணர்ந்துகொள்க. சோடாம் வளேந்தது, ட்றுேப்பானது. கிழிபடி குட. இனிசோடாம் கேடான்ெ ஆபதற்பின், அதுதான் நடாம் காகம், சிரம், கோம், சகடம், ச#,ே சட்டி, சாதாடு, சாகை எனப் பவிங்'க மாறிய விசோதத்தை உய்த்திரர்க. 'காமூர் கோசமும்
வள்ளமும் " கடமும், சிகாமூஞ் ... ; rÁ it டேடே என்பது
பிங்க லீக்கை. கடம் ஆகியன் குட "ஜிம் அடிாய்ப் பிறந்தமைபோல, வள்ளமும் பட்டிலும் வஃா (உள்) எ:ம் அடியாய் வரும் எனக் காண்க. இம் மாற்றங்கள் ஈன்பி முன் ஜூம் பின் ஜும் வரும் விதிகட்கு ஏற்ற காட்டுக்களாகின்றன. சடகம் சட்டம' பிரமை மேல்வரும் 'சிலே மாற்று' 'ஆ சிதைவுக்கும் F சாகா: கும்.
அப்பல் சத்தினின்ற பகWமும்
பே பிறத் தனி
தம்முட் பிரீழ்க் து சிற்கும். உதாரணம்:
அ.கிள் மீேஸ் புகாத்தினின்று.
'க' பகர இருக நகரங்கள்
ஆக நகரங்களும் மு:
ப்ேடம் F
வாயில் a stifi.
『 ፵ - ፶' "
TE it is fir ໘ ຄື: E. T : if fo', 'sy it ଈଶୀ { te&! فى
ቌ ፴ ፱ ፻ (÷sነነ ਸ . ੧
୪artially ஆா:ம் (ஆரியம்)
ாண்டு ஞெண்ே
ராஜம் ஞானம்
சகரமும் தீவிரமும் ஒக்க பிறப்புடையனவாசலின் இவை சம்முகள் மாறுபகிம், விடசொற்களேக் தமிழிக் கற்பம் ஆக்குங்கால் எகரம் சகா மாதல் பெருங்ழக்கு உச சீனம்:
முசலி முர்ே கேதல் சேது (ஈள்ளூ) 3ோக்கு :ொதுg; பெரி.ஜி |-l_fl:E
ஐங்கு .ಜಿ:-
ரளம் இசம்
ககரம் வகமும் பகரமுமா?ல் ஒக்சீபிறப்புடைமையிஜலன்று, பிறிதோர்வகை இனம்பற்றியாம். தமிழ் நுசரிஃப் பகலிச் சொற்கள்,
கன்னடத்தில் பெரும்பான்மை நீகம் கொண்டியலும். உகாகாணம்:
ப73ல் பாஃ1ல் (aதுக்கு) நேர 3 :ே 2 செப்வேன் செப்=ேள் அஃகு அம்பு
இருக்க இருப்பு
چي r= * حت- 5 )தறந்து கண னேடம் آنت تقرآن

Page 24
rari F' Lira
தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
பாம்பு சிலம்பு (சுலம்பு)
பகரம் மக விவசாங்களாகவும், அகரம் மகரமாகவும்
உநாகரணம்:
என்பர்
|L பகுப்பு
శాTL sai TArt vi. நிழலி
&-7 aE JI" r ri/:" 4E aiy fi, 25 aF E" lfb L. é#:
உசாகரணம்:
trF (ಘ್ರಣೆಗೆ à
வில் சிங்களும், 'ஈ' தூக,
ழகரம் பகமாசதம் ருகமாதலுங் கொள்க.
குடல்
¥# =့်'
്
தெரி மஞ்சன் Li'o வெளிறல் புழலே குழி (லிஃr) ፵ (ዖ,7!.....ጃi..
விகங்களும் சம்முள் மீது பட்வேரும்.
புகுத்தல்
, கப்ேபு அடித்தில்
fiso
(ჭfigჯ($5
First ள்ைாம்
காம்பு (மூங்கில்) சலங்கை
சிதைவுறும்.
என் ம-ஞர்
* iTiն վ է IT 3: குேப்பு வகை L:r Lş. மானம் (செம்ம"ண ம்)
الأم تي تقع
மோகவும் மாஆக ஆமொன்று.
trడ్ హౌF
கொலஜி (தெலுங்கு)
மீரு
88, டாங்களும் பிறழ்ந்து
உசாசுரனின் ம்:- ۴-با این
, ਮੀਰ)
୫ it ! சிெ கெலியு (தெலுங்கு) மஞசள பொளி, புரை
வி ခေါ်ရုံ
|-ā!
குயில் # (U,''..go : # L-ዶሾ..........]
அவ்வதே ககர, டக நீளம்மிங்கஜம், விச தகர, ளகர றகர
உத கண்ம்:-
-- கட்டல்
#நீர்ப்பு -ಜಿ.ಸಾಲ್ಮೀFಣೆ &rarr :
జ్, పf (PEகு (ஜன்னிடம்) ያ፻፹፰ሽኾና Šቖrዛ፧ኸ ாேட்டில்

மெல்லொற்றும் உடம்பெேமய்யும் 37
அணில் அளில் (கன்னடம்) திட்டை திண்ணே
திடம் திறன்
హిr(శాrఐ) பிடி
:fr?" மன்றல்
தோடு குன்:
நினக்கு ଶିକ୍ଷrafଞ (மலேயாளம்) ஆவி அள்வி அன் என ஒன்ம்
பேண்டு பெட்டை, பேபி
பாககங்களில் நகம் ஜகரமும் க்ககமும் ஆகலுக் கொள்க. உத கரணம்:-
முறு (மூன்று) மூஜி (துளுவம்) பூழி ந க்தி
மேல்லோற்றும் உடம்படுமேய்யும்
சொல்லாக்கத்தில், முறைப்படி மெல்லொற்றுப் பொருந்துதல் ஒழித்து, சிதைவால் பொருக்துதலுமுண்கி, எங்ஙணம்? பகல் எலுஞ் சொல் பக்கம் பாகம் என வருதலோடு பங்கு எனவும் சொல் வேறு பரீட்டின்பொருட்டு வரும் அன்றே, இது சொல்ஜாக்கத்தின்பாற் பட் டழி. சொல் சிதைவரல் மெல்லெ ற்ஐப் பெற்றி வருவனவும் உள். அவற்றிற்கு உதாசுரணம்:
அருகு மருங்கு அல்ஜி ஒரு அஞ்சு, ஒஞ்சி காப்: <ଳିଛ:#; கொய் (குவி) கொஞ்:
இனி ஒர் சொல்வில் ஈருயிர்கள் பொருந்துமிடத்து "அரையுயிர்க" சீரான பங்'ம் வள்வும் வருதலே பொதுக்கட்டண், இவை தாம் உடம் பகிமெட் எனப்பம்ே, ஆயின் ஒலித்திரிபால் இவையிற்றினிடமாப் ஈவ்வும், ஒவ்வும் ரீவ்வும் வர ஆறும். உதாரண்ம்:-
இருக்கின்ற அ(வன் இருக்கின்ற்னன் என் மார் (என்பார்) என் மரூர் இ&ணப(வன் இளேஞன் காவும *ாரும்
உருத்திரிபாற் சோற்சிதைவு
காலகதியில் சிதைந்து வேறுபட்ட சொற்களானவை ஒலித்திரிபா லன்றி உருத்திரிபாலும் சிஸ்சவை எய்கின. ஒலித்திரிபு ஒாோர் எழுத்து மற்குென்னூகப் பரிணமித்கமையாம். உருத்திரிபு ஒவ்வோர் சொல்லே (1) கடைகிலேக்கே,ே (2) இடைகிலேக்கேடு, (3) முக

Page 25
38 தமிழ்ச்சொற்பிறப்பா ராய்ச்சி
விஃக்கேடு, (4) இருகஃலச் சுருக்கம், (3) தலேயொற். சீக்கம், (8) கிஃப்மாற்றம், (?) ஒப்புமைச் சொல்லாக் Fம் எஜம் எழுவதையா ஐம் பெற்றுள்ள மாற்றமாம். ஈண் ேஇவ் எழுவலகத் திரிபையும் எரிக்ஜி விளக்குதும்.
1. கடைசிஃகூ க்ரேடு
தமிழிற் பல சொற்:ள், இலக்ாபங்களில் எலுமுன்னரே சிதைவுற்
நன, ஈ மீசை மூவசைபாய்ப் பண்டைகள் இன்றன, ஈற்றுப்பகுதியை
இழக்வி, இன்று ஒாகசச் சொற்களாய் கிற்கின்றன. ஒரு சில உசாகா
- . . . " . 『エ : ፡ I னேங்கள் அவற்றின் படிப்படியான கிரிபோடு மேல்வருவன:
8. ஒ: ஒ
பொத்-தி போது
Ea.-ay *" (Wiல்செய்) இழி இதி ஈ (கொ)ே
இவற்றுள் கடைச்சொல்லின் வரலாஜ வெளிப்படை. முற்பட்ட மூன்று சொல்லும் விரிக்தி சிதைந்து வக்கவாறு யாதெனில்: (1) உப், உய-ர், என்பன முக்திய சொல்லிஐக்குக் கல்படி பாம். உப்-கல் சேய்மை (மறைவிடம்) வினின்றும் வெளிப்பைே. உயர்-தல் = பொரு முதல், மேற்படல், உவ-ப்பும், உவ-கையும், படிமுறைபாய், உபர்சிலே (பொருமுதல்) மனம் நிாஜச,ே உள்ளப்பூரிப்பைக் காட்ம்ே. "உர்ே'ச் சொல்லும் அது, இவ் உவகையே, மேல் விளக்கப்படும் இடைங்ஃக் குறைபால், ஒகை என்றுக்ப் பின் 'கை' என்னும் கடைகிலேயையு மிழக்,து ஓ என்குயிற்று. (2) பொத்தி எலும் சொல் பொள் எஜம் வழியாப் (க்லே படி உள்) புசை, போர் என இங்கி, மூடியிருப்பது எலுங் கருக்கில் விரியாக மலரைக் குறிக்கும். பொத்தியே போது எனக் தலேமீண்? வேற்றுருவங்காங்கியது. பேர-திகை ஐம் ஆரியச் சொல்லுங் காண்க. 'போது' , வென்குயிற்று. பூலின விளக் கும் 'போது' வேறு; பொழுது (சஃவய: ஒளி~ எல்) என்னுஞ் சொல்லின் சிதைவாகிய 'போது' (8ே ம்) கே. போது எனும் உருவத்திலுக்கு இரு தோற்று வாப் உண்பமயை அறியாதோர், சில பண் டிசர்சள், பூக்கள் மலருகல் ஒவ்வோர் சேத்திலாகவின் போது எலும் பூப்பெயர்தான் கோத்திற்காலிற்து எா மயங்குவர். அற்றன்.து. கோச் தைக் காட்கிேன்ற 'போது" பொழுதினின்றும், மலரைக் காட்கிேன்ற "பே து' பொத்தியினின்ஜம், சிசைக்து வருமென உண்க. (3) கனவு தல் கவிகஸினின்து பிறப்பது. "கலிதல்" குவிதலின் மரூஉ. ஆவிதல் <கூம்பு <கொதி-கு <குட <குழ <உழ-ல் <உள் எனவரும், "கவி தல்' பாதொன்றை கோக்ச்ே சாய்தல் எனும் பொருள் உள்ளது. கவவு கலும் முதற்கண் அப்பொருகோ கொண்டதி. இதினின்று கிரேக்கெழும்
கவர், கவலே, கவனம் எனும் உருவங்கள் விருப்பை, யாகோன்றின்
 

முதEலேக்கேே 89
மேற் செல்லும் சிறந்த விாழவைக் குவிக்கும். வேர், கேைச் சொத் களினுக்கு பிரித்தற்பொருள் வந்திற்றமையும் இவ்வாயிலாகவோம். இனிச் சிறந்த விழைவையும் அதனுல் பாதொன்றைக் கைவிடாது பற் திக்கொள்ளும் சார்பையும் விளக்குகின்றதாய்க் கவவுச் சொல்வினின் த& சீன் பிேறந்தது, காவல் எஜஞ் சொல். காவல் = கைவிடாது பற் முதல், கன்னடைக்கலத்தில் வேத்துக்கோடன். அது சான் கடைக் குறைந்து கா, காக்கல் என விக்கிட்டது என்க. இவற்திை அறியக் சத்திற் பக்கக்காண்க.
2. இடைநிலக்கேடு மூவசை சரஸஇசச் சொற்களே உச்சரிப்பதிைக்காட்டில் ஒா"ை ஈரசைச் சொற்கனே விளம்புதல் சுலபம் அன்துே. இயல்பாகச் சொல் இலச் சுருக்கும் சார்புள்ளோராகிய மக்கள் பல்லசைச் சொற்களேச் சுருக்கி உரைக்கவே த&வப்பஇவர். இதஐரே கடைசிஃபிக்கேலிபோன் இடைநிவேக்கேடும் நிகழ்வதாயிற்று. இதன் கண், ஒழித்த இடைசிஃப் பினிடமாய் அடிபுயிர் நீட்டப்பன்ேலே மோக்குக. உதீாகாணம்:-
பொழுது பேர்தி
சிவப்பு சேப்பு, அெம்பு, அம்பு LJ M i பால்
_krit ஒர்
. !F);},cuf'?&ہ نمi:0غ LE
செய்யுட் தமிழில் தாமரைப்ப மரை என்றதுபோல சில சொற் கள் தண்டக்குறைந்து நிற்றல் உண்மையாயினும், உரை8டையில் முக னிஃகெட்டு சிற்பன காண்டல் அரிது. இவ்வரிய உதிாக மீண்ங்களுள் ஒன்று, தெரியாமை எனுஞ் சொல் கலேக்குறைக்தி எய்யாமை என சிற்றல் என்ப. 'எய்யாமையே அறியாமையே' எஜக் கொல்காப்பி பச் சூத்திரத்தினுக்கு உணர்கூதுமிடத்துச் சேணுவரையர்: "அறிவித் பொருட்டாப் எய்தல் என்றுயினும் எப்த்தல் என்குயிலும் சாள்மூேர் செய்யுட்ாண் வாராமையின் எய்யாமையென்பது எதிர்மறைபன்மை என்பர். இதனே மறைச் சொல் என்பர் ஈச்சினுர்க்கினியர், (மொழி "" = آیات நூல் பக். 142-3 காண்க) கெரிதல் : தஞ் சொல்விே எய்யா மைக்கு உடன்பாட்டுச் சொல்லன்றி, மத்தன். 'கேரிசல்" தெளிதிலின் மரூஉ: தெளிதல் 'எல்' எனும் தஜ்படியினின் முதனிஃமெய் பெற்றிப் (5-ம் கட்) பிறந்தது. எல்> எழி-ல்> செனி என வரும். தெளிதல் எஜஞ் சொல் வேறுபடும் வியஞ்சனக் கட்ட&னயால் (2) திெரிதல் என ஆயிற்து. தெரிதலே தேர்தல், கேதுதல், தெளித்தில், கோல் (தேன், கள்) சேறு, தேன் எனப் பல உருவங்காங்கிப் பலபொருள் தருவது. தெரிகலின் மறைபாபே “தெரியாமை" முதனிஃக்கேட் டால் எப்பாமை என மருவிற்றெனக் காண்".

Page 26
40 தமிழ்ச்சொற்பிறப்பாாய்ச்சி
முதன்சில்க்கேடு தமிழிலன்று, அதன் பாகசங்களிலும் ஆரியமொழி கனிலுமே மிக்குப்பயில்வது. இதற்குக் காரணம் தென்னுட்ச்ே சிமி ழர், பதமையாய்ப் பேசுவோர், அடிச்சொற்களே விழுங்கிவிடாத உச் சரித்திக்கொண்டிருப்ப, வடகாட்டார், சடபிடவெனக் துரிதமாய்ப் பேசுவோர், அடியுயிர்கரேச் சWப்பிட்டுக்கொண்அேறைகுறையாக உச் சரித்தமையே போலும், ாே முதலிய பேச்சுறுப்புக்களின் வன்மை யில் இயற்கையாயமைக்ச தராதம்மியமும் இதற்கு ஒர் எதிவாகலாம். ஒரு சில உதாசுரணங்கள் தருகுதம்:-
ஆசிரீ தி காது (தெலுங்கு) இலதி லாது (திஞவம்) துெளிச்சம் விஷ்ட் (சர்மனியும்) இலகு லங்க்ஹ-1 (ஆரியம்) எழுத்தி விக்தெத (லத்தீன்) உருவம் ரூப (ஆரியம்)
இவ்வாறு சின்னூற்றுச் சொற்களுள. விரிப்பிற் பெருகும் 4. இருதலேர் சுருக்கம் ஒருசில உருவங்கள், தனிச்சொற்போற் தோன்ற மவை, உண்மை பில் இருசொல், பல சொல் ஒன்றுகச் சேர்ந்து சுருங்கியவையாம். உதாகாணம்:-
இஃது 十 தான்று இன் ل" அரு(ம்) வந்த அருமக்க ந1ரை -- ஆே வருடை
புழைக் -- கை
பூட்கை = பாஃன, வலி
கொண்+ே வால் ଘୋଣ୍ଟୋଟ ଛr୮rtf । நிரல் + நாள் கிெருரல், ேேற்து இவற்றுள் இன்று என்பது இருசொல்லல்ல காற்சொல் அக்ேகித்
கோன்றியதாம். இ+அஃது + rாள் + அது, Wடைச்சொல் இரண்டும் 5ாக்' என, ஞான்ற என வந்தன. இ-+ அஃது எனும் இருசொல்லும் இது என்றுக, பின் கடைக்குறைவால் இஞ்ஞான்றுகி நின்று, மேலும் சுருக்கி இன்று எனBWயிற்று. அருமந்த எனும் இருசலேச் சுருக்கச்சொல்லே அருமருந்தன்ன என்பதின் மரூஉ என்பர் சில்லோர். ஆயின் வெரு வக்க (கலித்தொகை 100, 2) மடவந்த (குறுங். 100) என்பவற்றிற் போல இதனையும் அருவக்க அருமந்த எனக்கொள்ளலே சிறப்புடை பதி என்க. (யாழ்ப்பாணம் குமாரசுவாமிப் புலவர் இயற்றிய வினேப் பகுபதி விளக்கமும் காண்க)
5. தலே யோற்று நீக்கம்
இச்சிதைவு பெரும்பான்மை ஆரியத்தினின்று மேற்கொண்ட சொற் களிலும், மிகச் சிறுபான்மையே சான்மூேன்றிக் தமிழ்ச்சொற்களிலும் சிகழ்வது: உதாகரணம்:-

ஒப்புமைச்சொல்லாக்கம்
தொன்பது ஒன்பது arma ஆவி «Friuli شالايضا لإته FEL الثقة تتت التي சமர் ۔"L.D." AFL patř அமணர் & v &#Lh உகம்
.ே நிலைமாற்றம் இது ஒலி நிஃலமாற்றமும் சொல் நிமோற்றமு:மென இரு திறக்க தாகும். கிலேமாற்றத்தை ஆராய்ச்சிறிதல் எஇளிதன்று. பொருள் வேறு பாட்டுக் கட்டளேகளேயும் சொற்கள் உகங்களினூடு படிப்படி பாய் வர்த செய்தியையும் திறவுகோல்களெனக் கொண்டே இவ்வர ராய்ச்சி கிரம் பண்பாற்று. ஒலிங்லே மாற்றத்திலுக்கு உத்சகான்னம்:-
கடகம் (கோடகம்) கடம்
சதை பக ே(பிளப்பது) --திே கவுதாரி சு.துலாவி கொடி.து ಪ್ರಣತಿ இனி, சொல் கிலேமாது சற்கு உகாகாணம் மேல்வருவன:
இல்மு:ன் முள்தில்
டி3க்கானரி IT
7. ஒப்புமைச் சோல்லாக்கம் இச்சி#ைவினுக்கு முன்னரே எஇக்கோகப் பெற்ற எய்த்தல் (எட் கல்) எனுஞ் சொல் சிறக்க காட்டாகும். எய்க்கல் என ஓர் சொல் சான்றுேச் செய்யுட்ீண்வாரா என உரையாசிரியர் சேணுவரையர் குறிக் சிமையே எமக்கு ஈற்சான்.து. தெரியாமை எனுஞ் சொல் மருவி எப் யாமை என சிற்றலேக் கண்டோம். அச்செய்தியின் உண்மைச் சோத்து வார: உன் ராமே
அறிதல் அலிபாமை (எய்தல்) எய்யாமை என எதிர்மிேைபாப் கிங்பான்போன்று எப்யாமைக்கும் ஓர் உடன் பாட்டு உருவத்தினே ஆக்கிப்போக்கரர். இன்னணமே புழை, பு,ை போழ்தல், பொள்ளல் எனவரும் 'உள்' த&லயடியின் விபுற்பன்னக் தினே, பொள்ளா (பொஸ்லா)ப் பிள்ளே யார் எனும் தொடரின்கண் உற் பத்தியர்க்கம் கவருதி வழங்கியிருப்ப, பொள்ள" (பொல்லா) எஜம் அடைபிஜிக்கு திண்யாத குற்றமில்லாத என்றிருக்கும் உண்மை ஆர்க் சிக்கைக் கொச்ேசோதியிருப்ப, பொள்ளாதது, (பொல்லாதது) எனும் அவ்ருைவத்திஜிக்கே யேமனச்சார்பு எனும் அர்ச்சம் ஒன்று வக்

Page 27
42 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
தடைந்துள்ளதைக் காண்கின்றனம். குற்றமுள்ளது எனும் பொரு ளுள்ள பொள் (புழை) எனுஞ் சொல் பலப்பல கிளைச்சொற்களாகச் கிரிக்தி நின்றும் பூர்வ அர்த்தத்தோடு இயைபுடைப்பொருளே என்றும் கொள்வதாகும். அச்சொல் எதிர்மறை உருவந்தாங்குவதுண்டாயின், நல்லது, சிறந்தது என்றே பொருள்தரும். ஆகலின் இதற்கெதிரான பொருளை மேற்கொண்ட பொல்லாத (பொள்ளாக) எனும் இவ்வுரு வம், கூடாத (கல்லோர் வகுப்பிற் சேராத) ஆதிய சொற்களின் ஒப் புமையானே ஆக்கப்பட்டது எனக் கோடலாம்போலும். ஆயின் பொல் லாத எனுஞ்சொல் ‘புழை' எனும் அடியினின்றன்று ஒல்-லல் எனும் அடியினின்று வலியுறுத்தலின்கண் முதனிலை மெய் (5) பெற்றுவந்த தூஉம் ஆகலாம். ஒல்லாத> பொல்லாக - பொருந்தாத, அங்கின மாயின் இச்சொல் ஒப்புமைச் சொல்லாக்கத்தினுக்கு ஒர் காட்டாக மாட்டாதென அறிக.

ந்ேதாம் அதிகாரம்
SEANTC CHANGES போருள் வேறுப்ாட்டு முறை
சொற்களின் பிறப்பாராய்ச்சி செவ்வனே நடைபெறல் வேண்டு மாயின், அவை கலையடிகளினின்றும் திரிந்து வழியடிகளும் வழிச் சொற் ஞம் ஆயின முறையைத் தெரிந்துகொள்ளுதலும்; ஒலித்திரி பாலும் உருத்திரிபாலும் அன்னவை அடையும் மாற்றங்களைக் குறிக் அக்கொள்ளுதலும் போதா: சொற்களின் பொருள் படிமுறையாய் விரிந்து வருதலையும் நோக்குதல் வேண்டும். ஓர் சொல் எத்துணை மாற்றக்தை அடைந்துகொண்டு, தன் ஆதி உருவத்தினேகி ஒர் எழுத் திலாயினும் ஒப்புமையின்றி நிற்குமிடத்தும், அச்சொல் ஆதிச்சொல் லின் பொருளோடியைந்த ஓர் பொருளையே தருமாயின், அன்னதன் தோற்றுவாயைத் துருவி அறிதற்கு அப் பொருள் ஒப்புமை போதிய தோர் எழிலாகும். சாகை எனுஞ் சொல்லினுக்கும் கடகம் எனுஞ் சொல்லினுக்கும் உருவத்தளவில் யாதோர் ஒப்புமையுமின்று அன்றே? ஆயின் சாகைக்கு வட்டிற்பொருள் உண்மையை ஆதாரமாக்கொண்டு, உள் எனும் தலையடியினின்று பிறந்த குட எனும் வழியடியானது, கடகச் சொல்லினுக்குப் பிறப்பிடமாயதுபோல இச் சொல்லினுக்கும் பிறப்பிடமாயினமையை வழிச்சொல்லாக்கக் கட்டளைகளும் ஒலித்திரிபு உருத்திரிபு முறைகளும் துணைச்செய்யக் கண்டுகொள்கின்றனம். கோட கம் கடகமாகி (ஒலித்திரிபு); கடகம் சகடமாகி (நிலைமாற்று); சகடம் சாகாடாகி (மீட்டல்); சாகாடு சாகையாயிற்று (கடைநிலைக்கேடு). கடகத்தினுக்கும் சாகைக்கும் உள்ள பொருள் இயைபை ஆராய்க்கில மாயின், இரண்டும் ஒத்த பிறப்புடையன எனும் உண்மை வெளிப் பட்டிராது அன்ருே.
அப்பால் உருவத்தில் ஒன்றேயான இரு சொற்கள் வெவ்வேறு அடிகளினின்று பிறந்திருத்தலை அவற்றின் பொருள் வேற்றுமையே காட்டுவதாகும். போது எனுஞ் சொல் பூவையும், அதளுேடு எவ் வாற்ருனும் பொருளியைபில்லாத நேரத்தையும் குறிக்கின்றதாசலின், அதி இரு வேறு அடிகளினின்று பிறந்து உரு ஒத்திருத்தல் வேண்டு மென்னும் ஊகத்துக்கு இடனுண்டாம். உள்ளபடி பூப்பொருளுள்ள 'போது' எனுஞ் சொல் பொத்தி < பொள் < உள் எனும் வரலாறும், நேரப்பொருளுள்ள 'போது' எனுஞ் சொல் பொழுது < ஒளி* எல் எனும் வேருெரு வரலாறும் உள்ளவையா மென்றல் முன்னர் தெரிக் கப்பட்டதன்றே. இவ்வாறே கெழுமுதல் எனுஞ் சொல்லினுக்கு கூடு தல், நிறைதல் எனும் பொருளும், அப்பொருளோடு ஒரு சிறிதும்

Page 28
44 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
சார்பில்லாத பிரகாசம் நிறம், எனும் பொருளும் வழங்கலால், உருவத்தி லொன்ருன அச்சொல் பிறப்பால் இரு வேறு அடிகளை உடையது என நிச்சயிக்கப்படும். எங்ஙனம்? குழை (வளை) எனும் வழியடி குழு-மு என்ருகி (3 கட்.) அப்பால் கெழு-மு என நின்று (ஒலித்திரிபு) கூடுதற் பொருள்தந்தது. எழு? (எல்) எனும் தலையடி எழில் என நின்று, கெழு-மு எனவந்து (5, 8 கட்) பிரகாசப்பொருள் தந்தது. ஒரு சொல்லினுக்கு ஈரடியன்றிப் பலவடி உண்டாதலும் காணப்படும். தஞனே பல பொருள் ஒரு சொல் எனும் பாகுபாடு தமிழ்ச் சொற் களினுக்கு எழுந்ததென்க. இவற்முல் முடிந்த முடிபு யாதெனின், சொற்பிறப்பாராய்ச்சிக்கு சொல்லுருவப் பரிசோதனையோடு பொருள் விசாரணையும் மிக வேண்டற்பாலது என்பதாம்.
1. சோற்களின் அடிப்போருள்
தமிழ்ச் சொற்கள் யாவற்றினுக்கும் அடிப்படையான அர்த்தம் அண்மை, சேய்மை, கீழுறல், மேலுறல் எனும் இந் நால்வகை இடச் சார்புகளுள் ஒவ்வொன்றைப்பற்றியதே என்பது ஊன்றி நோக்கற் பாலது. இதனை வேருெருவகையாய் விளம்பவேண்டுமாயின்: மக்கள் ஆதியில் ஐம்பொறிகட்குமெட்டிய பொருள் செயல்கட்குப் பெயரிட்டு, அதன் பின்னரே, இயைபுபற்றி, மனே சம்பந்தமான பிறபொருட்களி னுக்கும் பெயரிடலானர் என்க. இதுதான் எண்ணங்கள் உருவாகி விரியும் முறையுமாம். நமக்கு அறிவெல்லாம் முதற்கண் ஐம்பொறி வாயிலாக வருவது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் பொறிக ளைந்தினும், நடுநின்ற கண்ணே சிறந்தது. கண்ணுல் சனிக்கும் பொருள் பற்றிய அறிவெல்லாம் தொடக்கத்தில், சமீபத்திலுள்ளது, தூரத்தி அலுள்ளது, கீழுள்ளது, மேலுள்ளது எனும் இடச்சார்பையே துணை யாக் கொண்டுவரும். செயல்பற்றிய அறிவெல்லாம், அண்மை கொள் வது, சேய்மைகொள்வது, இறங்குவது, ஏறுவது எனும் இடச்சார் பைத் துணைக்கொள்ளும். இஃதினும்வேருய்க் கட்புலனல் யாதையும் அறியுமாறில்லையென நுனித்துக் காண்க. கட்புலஞல் பெறும் அறிவை ஆரியர் ரூப (உருவம்) என்பர். உருவம் எனும்போது அகலம், நீளம், தாழ்வு, உயர்வு எனும் இடச்சார்பை உட்கொள்ளல்தான் கருதப்படும். நாம் கண்ணுற் காண்பன யாவும் அகலம், நீளம், தாழ்வு, உயர்வு என்னும் நால்வகை அளவின் உணர்வை நம் உள்ளத்திற் புகுத்தி, அத ஞனே நாம் தம்மை அறியச்செய்வன. மென்மை, கடுமை, இளக்கம், இறுக்கம் எனுங் குணங்களும் அளவின் விகற்பமேயாம். இக்நால்வகை அளவும் அண்மை, சேய்மை, கீழுறல், மேலுறல் எனும் இடச்சார்பும் ஒன்ரு?ய்த் திகழ்தலை நுண்ணறிவாற் காண்க. கண் எனும் விசேடித்த பொறியால் பெறப்படும் உருவ அறிவு இடச்சார்புபற்றியதாம் எனில், ஏனை சுவை, ஊறு, ஓசை, மணம் எனும் அறிவுகள் எத்தகையன? அவைதாமும் இடச்சார்புபற்றியனவே எனல் சிறிது ஆழ்ந்து நோக்

சிறப்பியல்பு சுட்டல் 45
குங்கால் வெள்ளிடைவிலங்கலாகும். சுவையிலும் ஒசையிலும் விளங் குகின்ற இனிப்பு உறைப்பு என்பனவும், ஊற்றிலும் மணத்திலும் தோன்றுகின்ற மென்மை கடுமை என்பனவும் இளகிய இறுகிய தன்மை களின் குறிப்பேயன்ருே? இனி இளகுதலும் இறுகுதலும் எனும் தன்மை யாது? அண்மையாதலும் (அணுகுதலும்) சேய்மையாதலு (அகலுதலு) மேயன்றே. இங்ஙனம் அறிவெல்லாம் சால்வகை அளவு மயமான இடச்சார்பால் தோன்றுவதாகலின், அவ்விடச்சார்பைமட்டும் காட்டி கிற்கின்றவைதாம் முதற்சொற்களாம். எச் சொல்லினுக்கும் இடச்சார்புபற்றிய பொருளே ஆதி அர்த்தமாய் நிற்ப, பிற அர்த்தங்கள் யாவும் (2) சிறப்பியல்பு சுட்டலால், (3) சார்புபற்றி விரிதலால், (4) இனங்கழுவலால், (5) இயைபுடைமையால், (6) எதிர்நிலையால், (7) வழக்காவிழிதலால் ஒன்றன்பின்னென்ரு ய் மேவின எனவறிக. இவ்வாராய்ச்சி தமிழ் அறிஞர்களால் இதுகாறும் முறைப்படி செய் யப்படாமையின், அகராதிகளுள் . சொல்லர்த்தங்கள் படிக்கிரமமின்றித் தாறுமாமுய்க் கிடக்கின்றன. கிரேக்கம் ஆதிய சில மொழிகட்கு அகராதி வகுத்திருக்கும் ஐரோப்பைய ஆறிஞர்கள், முக்ற்கண் சொற் களது அடிப்பொருளையும் அப்பால் அவ்வடிப்பொருளோடு இயை புடையனவாய் விரிந்த பிறபொருட்களையும் செவ்விதாய்க் குறித்திருத் தலைக் காண்கின்ருேம். தமிழிலும் சொற்பிறப்பாராய்ச்சி நிறைவுறுங் கால் சொல்லர்த்தங்களை வரன்முறையானே தெரிந்துணர்த்தும் அழகு தமிழகராதிகளிலும் அமைவதாகும். s
2. சிறப்பியல்பு சுட்டல் சொற்களின் அடிப்பொருளின் மேல் சிறப்பியல்பு சுட்டும் பொருள் பொருந்துவதாகும். அடிப்பொருள் கொண்டன அடிச்சொற்கள். இவ்வடிச்சொற்கள் காட்டும் பொருள் எல்லாம் அணுகிவரல் தூரச் செல்லல் மறைந்திருத்தல், இறங்கல் ஏறல், குறுத்திருத்தல் நெடுத் திருத்தல் உள்வாங்கி (வளைந்த) வால், கீழ்ப்படுதல் மேற்படுதல் எனும் ஆதி உள்ளக் குறிப்புக்களையும் இவற்றுள் அடங்கி கிற்கும் பிற குறிப் புக்களையும் சார்ந்தவையே. இவ்வடிப்படையான குறிப்புக்களைக் கைம் முதலாக்கொண்டு, பொருட்கள் செயல்கட்குப் பெயரிட நேருந்தோ அறும் அப்பொருள் செயல்களில் இக்குறிப்புக்கட்கினமாய்ப் புறப்பா டாய்த் தோன்றும் குணங்கள் வாயிலாய் ஒவ்வோர் பெயரை உருவாக்கி வைத்தனர் எம் முன்னேர். புறப்பாடாய்த் தோன்றும் குணங்களையே சிறப்பியல்பு என்றனம். இஃது ஒரு எடுத்துக்காட்டால் விளக்கமாகும். அழ எனும் வழியடி இதுவரையில் எமக்கு மிக அறிமுகமாய்ப் பொருங் தியதொன்றன்ருே? 'துழ-த்தல்' உழ-லல் எனும் தலையடியினின்று வருவது; உழன்றுவரச் செய்தல் எனும் பொருளுள்ளது. இனி தழ எனும் அடியால் விளக்கப்பெறும் உழன்றுவரல் எனும் உள்ளக்குறிப்பு சிறிது மாறி, உள்வாங்கிவால் அன்றேல் வளைந்துவரல், கூடல் எனும்

Page 29
46 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
பொருளையுங் தரும். இவ் வளைந்துவரலைப் புறப்பாடான குணமாய், அன்றேல் சிறப்பியல்பாய்க்கொண்ட பல பொருள் செயல்கட்கு அழ எனும் அடியைக் கைம்முதலாக்கொண்டு புதுப்புதுப்பெயர்கள் உருவாக் கப்பட்டன. எங்கினம்? சூழ்ந்துவரல் துழத்தல் எனப்பட்டது. கூடி வருதல் தொழநியாயிற்று. அச்சொல்தான் கூட்டம், திரள் இனம் எனும் குறிப்புக்களையும் உணர்த்தும். வேருெருவகைக்கூட்டம் தோடு எனப் பெயர் பெற்றது. இக் தோடு எனுஞ் சொல்லினின்றே தொகுதி, தொகை, தொகுத்தல் எனும் உருவங்கள் 6-ம் கட்ட%ளயாற் பிறந்தன போலும். அப்பால் குழவந்து நிற்கும் பசுக்கூட்டம் தொழ என, பின், இனம்பற்றி, அவை கிற்குமிடம் தொழவம் என, தொறு என வந்தது. பசுக்கூட்டத்தோடு நெருங்கிய இயைபுடையோன் தொறுவன் என, அவன் இல்லாள் தொறுவி, தொறுத்தி என வந்திட்டனர். ஆயின் வளைத்து உழுவோர் தொழவர் ஆயினர். உழவு செய்தல் தொழப்பு ஆயிற்று. உழவே சிறந்த முயற்சியாதலின் முயற்சி எல்லாம் தொழில் எனும் பெயர் அடைந்தது. இங்ங்னமே உழவினின்று ஊழியமும் வரு மெனக் காண்க. மேல், உழவு ஆகியன தொழில்கள் இழிதகைவு பெற்ற காலத்திற்போஅலும், தொழம்பு எனும் குறியீடு எவ்வெக் தொழி லினுக்கும் பொதுப்பெயராய் வாலுற்று, தொழில் செய்வோர் தொழம் பர் (அடிமைகள்) என அடக்கியாளப்பெற்றனர். இக்கொழும்பருக்கே, அன்னேர் மேலும் நெருக்குண்ட காலத்திற்போலும், தொறு எனத் தொறுவு என உயர்திணைப் பெயர்விகுதியில்லா நாமகரணஞ் செய்யப் பட்டது. இந்நாள் தமிழ் மக்களுள் மிக இழிந்தோராய்க் கிடக்கும் துரும்பர் தொறும்பரேபோலும். தொழில், தொழும்பு எனும் உருவங்க ளோடு இயைந்த தொண்டு எனும் உருவமும் அடிமைகள் ஆற்றும் ஊழி யத்துக்குப் பெயராகி இழிவுற்றதாயினும், தொண்டர் எனும் உருவம் கடவுளைச் சேவிப்போர்க்கு உரியதாகி உயர்வுற்றது. தொழதல், வளை தல் எனும் அர்த்தத்தில் வணங்குதல் எனும் பொருளடைந்தது. கட வுளைத் தொழுமளவில் இச்சொல் உயர்வுபெற்று நிற்பினும், ‘தொழு தூண்’ ஆகிய பிரயோகங்களில் இழிவுபெற்று வருதலையும் நோக்குக. இங்ஙனமே இடம்பற்றியனவான ஆதி மனக்குறிப்புக்களை மட்டுங் காட்டி நின்ற அடிச்சொற்களைக்கொண்டு பலவேறு பொருள் செயல்கட்குப் பெயரீடு செய்யப்பட்டது. பொருளின், செயலின் சிறப்பியல்பைச் சுட் டலே பெயரீட்டிற்கு வாயிலாயிற்று.
ஆயின் பொருள் செயல்களின் சிறப்பியல்புகள் பலராற் பலவகை யர்யும், ஒவ்வோர் காலத்தில் ஒவ்வோர் விதமாயும் நோக்குறலாம். ஆதலால் ஒரோர் பொருட்கு ஒரோர் செயலினுக்குப் பல பெயர்கள் இடப்படுதலுமாயிற்று. இதனுனே ஒரு பொருட் பல சொல் எனும் தமிழ்ச்சொற் பாகுபாடும் எழுந்தது என்க. உதாகரணம்: பன்றிக்குக் கேழல் எனவும் பெயர் உண்டன்முே. பன்றிப் பெயர் புறப்பட்ட பல் லினின்றும், கேழற் பெயர் நிலத்தைக் கிளைத்தலினின்றும் வருவன.

சார்புபற்றி விரிசல் 47
அறிவானது உணர்வு எனவும், காட்சி எனவும் பெயர் பெறுமன்றே , பிரித்துக்காண்பது அறிவு; உள்ளத்திற் கொள்வது உணர்வு; நோக்கித் தெளிவது காட்சியாம். இனி ஒரே பொருளினுக்கு வெவ்வேறு நோக் கால் உண்டான பல பெயர்கள், சிறிது சிறிது வேறுபட்ட பொருள் விசேடத்தை விளக்குதலுங்கொள்க. இன்னணமே அறிவு பொதுவில் உண்மை கைவரலையும், உணர்வு அவ் அறிவின் முதிர்ச்சியையும், காட்சி அது கான் ஆராய்ந்து காணப்பெற்றமையுையும் தெரிக்கும் என்க.
3. சார்புபற்றி விரிதல் சிறப்பியல்புசுட்டி எழுந்த பெயரீடுகள், அப்பால், அதுவது குறிக் கும் பொருளினேடு சார்புபூண்ட வேறு பொருட்கட்கும் பொருந்து வனவாயின. உதாகரணம்: வேலி எனுஞ் சொல் தலையிடத்து எல்லை யைக் குறித்தது. மேல் அவ்வெல்லையைக் காட்டிநிற்கும் மதி2ல, அம் மதிலால் உறுங் கிாவலை, அக்காவலினுள் அடங்கியுள்ள ஊரை, அவ் ஆரின் பகுப்பாகிய நிலத்தை முறைமையிற் குறிக்கலாயிற்று. துெ தான் சார்புபற்றி விரிதலாம். இப் பொருள் வேறுபாட்டு முறையை, உளத்திற் தரித்துக்கொள்ளல் சொற்பிறப்பt !! ப்ச்சியினுக்கு மிக வேண் டற்பாலது. யாதிற்கெனின், சார்புபற்றி விரிந்த சொற்களுள் தலையாய் நிற்பதை ஆராய்ந்து கண்டுகொள்ளாவிடின் சொற்பிறப்பு நிச்சயம் நிறை வேருது என்றமையாலாம். என்ன? ஈண்டு யாம் உதாகரித்த சொல் லின் பொருள் வரிசையில், வேலி எனும் சொல்லைக் கடைநின்ற நிலப் பொருளோடுமட்டும் நோக்குவோர்க்கு அவ் வேலிச் சொல்லின் உண் மைத் தோற்றரவை ஆராய்ந்து காணல் அரிதாகும். அன்ஞேர் நிலம் எனும் அர்த்தங்கொண்ட வேலிச்சொல் எவ்வாறு எழுந்தது எனும் வினவிற்கு விடைகாண்டல் எளிதன்று. ஆயின் நிலப்பொருள் காவலி னின்றும், காவற்பொருள் மதிலினின்றும், மதில் எல்லையினின்றும் தோற் றியதைத் துருவி அறியுங்கால், வேலிச்சொல்லும் எல்லைச் சொல்லும் ஒன்றேயெனத் தெளியலாம். எல்லுைச்சொல்லின் வரலாறு இது:- எல் எனும் சொல் எழுகின்ற சிறப்பியல்புள்ள வணுகிய சூரியனையும், அப்பால், சார்புபற்றிய விரிவால் அச்சூரியனின் வெளிச்சத்தையும் சுட்டுவது, இதினின்று தோன்றும் எல்லு எனும் உருவம், குரிய ஒளி நிலைபெறும் காலமாகிய நாளைச் சுட்டும். எல்லை எனும் உருவம் வெளிச்சக்காலத் தின் முடிவாகிய வரம்பைச்சுட்டும். எல்லை எனும் சொல்லே உறுதிப் பாட்டின்கண் வேளை எனவும் வேலி எனவும் இரு உருவந்தாங்கி, முறையே வரையறுக்தகாலமாகிய நோக்தையும், வரையறுத்த இட மாகிய மதில் ஆதியனவையும் குறிக்கும் என உய்த்துணர்க.
சொற்பொருட்கள் தாந்தாம் சார்புபற்றி விரிந்த முறையானே அக ராதிகளுள் நிறுவிக் காட்டப்படுதலே தலைசிறந்த ஒழுங்காம் என முன் னருங் கூறினுேம். தமிழ்ச்சொற்கள் யாவற்றினும் உண்மைத் தோற்று

Page 30
48 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
வாய்களாகும் அடிகள் ஒருகால் வரையறுத்து வைக்கப்பட்டனவாயின், அகராதி நூலாசிரியர்கள் அவ்வச்சொல்லின் பல பொருட்களேயும் அவ் வaற்றின் வான்முறை பிதழாத எழுதிவிடுவர். கற்பாரும் பாடின்றிக் சொல் அர்த்தங்களே கினேவிற் பகித்துக்கொள்வர் அன்ஞே,
4. இனந்தழுவல்
ஒருசொல் தான் ஈட்டும் பொருள் ஒன்றிஞேடு சார்புள்ள பிற பொருட்களே பும் படிமுறையாய்ச் சுட்தேனேக் கண்டாம். இனி ஒரு சொல், சான் குறிக்கும் பொருளேச் சார்ந்திராவிடினும், அதனுேே யாதோர் சிறப்பியல்பளவில் இளம்பூண்டனவாயுள்ள வேறு பொருட் ஃளேயும் குறித்தல் இனக்கழுவில் எனப்பம்ே. எங்கனம்? புல் எனுஞ் சொல் பூண்டு விசேடக்கிஐக்கன்ஜி ஆங்கிலுக்கும், பஜுக்கும், சிங்க Tத்தில், தென்னேக்கும் பெயராகும் அன்றுே? தென்னேயைப் பண்பைப் புல்லெனக் பீடயலாமெனின், புல் எனுஞ் சொல்லின் உற்பத்தி tria அன்பிற்பக்தியை பூண்டு விசேடத்திலும் மூங்கிலிலும் வைத்துக் காண் டல் எளிதி. புல் எஜம் உருவம் புழை >பொள் எனும் வழியடிகளி னிேன்து வருவது. இவை உள் எனும் சீலேயடியாஜ் பிறந்தன. ஆகவே அனேயுள்ளது எது அது புல்லாம். பூண்டு ஜிசேடமும் முக்கிலும் உட் ளேபுடைமையால் புல் என்றழைக்கப்பட்டன. அதனுள்ே வெளியே வயிரமும் உள்னே மென்மையுங்கொண்பி, உட்குங்கால் துண் படைபன கிாகின்ஸ் பனே, தென்னேகளும் அப்பெயர் அடைந்தன. இதனே விளக்கி 'புறக்ச':னவே புல்லென மொழிப' என்று ர் ஒல்காப்புகழ்ச் சொல் காப்பியனூரும். புறக்காழ் = வெளியே வயிாம்.
உள் எனும் சீஃப்.டி யிரின்,து பிறந்து, தோள்> கோள்> தோம் எனும் வழியாய் தாம்பு என வரும் சொல்லினேயும் கோக்குக. தீம்புச் சொல்லும் சான் உருமாரு கிருத்து, துரே புடைமையாகிய சிறப்பியஸ்புப் பொதுமைகொண்ட பனி aேது பொருட்களே உார்த்தும். எங்ானம்? அம்பு உட்ேேளயாம். "தாம்புடைத்தடக்கை' என்றதிற்போல. இது தான் "ஜிம்பிக்கை”யின் துப் பியென"நிற்கும். ஆரம்பி, மேல்வரும் இயை புடைமை எஜம் பிரயிலாப், பாஃனக்கும் பெயராகி, பின் இனக் கழுவ லால் 1ண்டுக்கு, சுரக்குப்பெயராகும். அப்பால், தூம்புதான் த* புடைச் சிறப்பியல்பை போக்கி, லதாரை, மடை, மரக்கலம், ழங்கில், வாயில், அருதேறி, வழி எனும் இவற்றையும் குறிப்பதாகும். சிறப் பியல்பு ஈட்டலிற்கும் இனக் கழுஸ்லிஐக்கும் வேற்றும்ை யாதோ எனின், முக்கியதில் சொல் உருத்திரிக் து வெவ்வேறு பொருளே உண்ர்த்தும்; பிக்கியதில் ஒர் உருவமே பல பொருள் உண்ர்த்தும் என அறிக.
.ே இயைபுடைமை
இப் பொருள் வேறுபாட்டை வியாகாண ஆசிரியர்கள் ஆகுபெயர் என்ப. இஃது சிறப்பியல்பு ஒன்ற&"ச் சுட்டும் குறியீ ேபாசேறும்

எதிர்சிஃ: 49
ஓர் சொல்லில் அமைந்திருச்சலிஞல் அன்று, சொல்வோர்தம் உள்ளக் கில் வலிந்துகொண்ட பிறிசொரு இயைபுடைமையினுல் வருவது. உதா கானம்-தோகை எனுஞ் சொல்லேப் பெண்ணின் பெயரென வழங்கு வது, "தோகை'யது சொற்பொருளில் பெண் &arச் சுட்ம்ே குறியீடு யாதுமின்று. என்னே? "சோகை' கொங்கு <துங்கு< ஒழ* உழல், எனும் வரலாறுடையதோர் செல். அச் சொல்தான் தோகை என்ருகி வால் எனும் பொருள் கொண்டது. தூங்கும் அது=சோ லக. இக் தோ ைஇச்சொல் வW&ல; கொய்சஈச்தை; சிறப்புகோச்கி, மயிலின் வால்; சார்புபற்றி, அம்மயிலேக் குறித்தது. அப்பால் கவிவான கொண்ட தோர் உள்ள ச்டேச்தையல் மயில்பே ஓம் சாயலுடையாளெனப்பம்ே பெண்ணுக்கும் பெயராயிற்று. இதுதான் இயைபுடைமையாம்.
.ே எதிர்நிலை
முற்சென்ற பொருள்கோன் முறை பிளேக்காட்டில் இப் பொருள் கோள் வந்தவர் அ அரிதுணர்சிற்பாலது. ஒருசொல் தான் குறித்த பொருளிஐ க்கு சாலஜம் எகி: 'சார் டென : குறிக்கலாயினaம எவ்வாறென ஆபிரயவேண்டின், அச்சொல் இலக்கியங்களுட் படிப்பய அடைந்துகொண்ட மாற்றங்களேயெல்லாம் தருவி அறிதல் இன்றியமை யாதது. இதற்கு ஓர் காட்டைக்கருகுதம்:-நக்கீல் எனுஞ்செ'ல் தீண் திதல், சிரித்தல் எலும் ஒன்றற்கொன், சார்பில்லாப் பொருளோ,ே கெபித்தல், சுடுதல் எனும் எதிர்ப்பொருளே புக் கருமென அகராதிகள் தெரிக்கின்றனவே, இஃதி எவ்வாறு? சிரித்தற் பொருள் படைத்த அச் சொல்லே கெடுக்கற் பொருளேயும் கால் ஒக்குமா? ஒக்குமென்றல் அச் சொல்லது பொருள் விரிக்தி விரிக் த கிரிக்க முறையை ஆராயுங்கால் இனிது பெறப்பம்ே. இக்கல் எனுஞ் சொல் ஈக்கு, சகு எலும் முக்கிய உருவங்களே உடையது. இவ் இரு உருவங்களும் அஃகு எனும் கிலேயடி யினின்றும் முதனிக் மெய்பெற்றப் பிறர்ஹி, மிக அண்மைகொள்ளே பும் படிப்படியாய் அகலுதலேயும் உண்ர்த்திம். அ,ே அத்தி என்பன அஃகு எனும் சொல்லினுக்கும், ஈ,ே சுண்ணு, பித்து, கச்சு என்பன நீக்கு எலுஞ் சொல்லினுக்கும் இனமானவை. அகல், பகு என்பன குச் சொல்லினுக்கு இனமானவை. 'கரு' சொல்லினுக்கேயும் ஆதியில் கண் ஐதற்பொருளிருந்தமை ைேகவர் (கண்பர், அண்மையிலுள்ளோர்) என அதற்கோர் விற்பன்னம் உண்மையாற் பெறப்படும். ینہ 60 ھوناب۔, ஈக்கு என்பதன் மறு உருவமே "குே" எனக்கொள். இனி, கக்குதல், மிக அண்மைகொள்ளல் அன்றேல் சண்ணுசற்பொருளில் தீண்டுதல் உணர்க் தும். 'வான் நக்கிநின்று தடங்குங்கொடி' என்றதிற்போல (சிக்கா மணி), காவினும் தீண்மிதலும் ஊக்குதலாம். இனி, நிலத்தைத் தீண்டித் தீண்டிச்செல்லல் அன்றேல் ஊர்க் துபோசல் நகர்-தல் ஆயிற்று. இங் வாறு செல்லும் பிராணிகள் சில் இச்சொல்லாற் பெயரீதிபெற்றன, எங்கினம்? நாகம் = ஊர்ர்தி செல்வதி, பாம்பு, நகுலம் = ஊர்க்திசெல்
-- .T) علیا .g

Page 31
O தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
வது, ரிே. நக்காம் = ஊர்ந்துசெல்வது, முதலே. இவ்வாறே நத்தை, நந்து, ஆேண்டு ஆகியனவும் ஈத்திகள் எலும் இ&ணபுருவத்தினின்று பிறந்தன காண்க. அப்பால், 5க்குச் சொல்லிஐக்கு ஊர்ந்து செல்லத்
பொருளின்மேல் பாத்தல், பிரிகற்பொருள் பொருந்துவதாயிற்று "ஈக் கலர் துழாஅய்" (பரிபாடல்) என்றநிற்போல, விரிதற்பொருளில் குே
எஓரம் உருவமே பெருவழக்குடைக்தி. ஈகுகல் = கிரிகல், மலர்தல்,
அகற்பின், முகம் மலர்சலாகும் மகிழ்ச்சி, சிரித்தல், எலும் பொருள் வந்தற்றதி. சிரித்தற்பொருள் பரிசுசித்தலினுக்கும் வாயினாயிற்று, இக்கருச்கிஸ் நங்குதல், நFை எலும் உருவங்களும் வழங்கும். நீங்கு
தல் = பழித்தல். குேதல் = விரிவிலாகவே, ைேக = விரிக்கசாக்ய பூவி
ஜக்கு, அழஜேக்கு, அழகுசெய்யும் மணிவகைகட்கு சார்புபற்றிப் பெப் ாாயிற்து. ஈகுசல் = விரிசலென் ஆக்திட்ட இவ்வகைார்தில் விரிகின்ற, அன்தேல் வளர்கின்றமையைப் புறப்பாடான குணமாக்கொண்ட சிஸ் பொருட்கள் இன்னடியாய்ப் பெயர் அடைக்கன. எக்மினம்? நகம் =
உகிர், மலே, மாம். இது இனக் கழுவில், நகீலம் = வளர்ந்து பொருமும் வது, ஸ்தனம். முஃ எஓஞ்சொல் முளேக்கலிவின்து விருதஃபும் ஒப் பிகே, இனி, இவ்வாறு 'தீண்டுதல்' பற்றிப்பற்றிச் செல்லலாயும், விரிந்து பாத்திலாயும் வர்துற்றபின், முற்றுக அகன்றுவிடல், அகற்றி விடல், கிெர்ேகள் । பொருளும் உண்டாயிற்து: "பால் ஐக்கதீஞ்
சொல்' (சிந்தா) "$னக் கலேப்பேரூர்எரிமீ/நச்சு" (புறநா.) ாேலும் மேற்
கோள்களிற்போல. இன்னணமே நீங்கலோஒேத்த இ&னச்சொல்லா
கும் நீத்திசலும் வளர்கல், கெந்ேதல் எஜம் எதிர் அர்த்தங்கஃனப்
பொருந்துதலேக் குறித்துக்கொள்க. 'ாசை" விருப்பு, அன்பு ஆகலும்
'8ஞ்சு" கொல்லும்விடாதலும் இவ்வாறே கோக்கத்திக்கன.
7. வழக்காறிழிதல் சொல்லாட்சியில் கேர் எதிரான பொருட்கள் காலகதியில் பொருங் துசல்போல, முன்னுெருகால் சிறந்த அர்த்தங்கொண்டன பின் இழிக்க கருத்துக்கொள்ளலும் ஒன்று, அாலுகில், அகழ்தல் எனும் அடிகட் கினமான ஆள் (வினேசெய்) எனும் வழியடியWய்ப் பிறந்த ஆண்டவன் எனுஞ் சொல், ஆண்டை என நின்று எசமானேக் குவிக்கிக்ாகும். அச் சொல்லே ஆண்டி என மருவிய ஞான்று இரவல் கொள்கின்ற 2. வகுப்புச் சேவரையும், பாவை வழக்கில், யாருமற்ற பரகேசியையும் குறிக்கும். ஆண்டவனின் பெயரீடு பாதேசிக்காயினமை வழக்காறிழி தலாம். இவ்வாறே அவன் (அவ் ஆண்) அவள் (அவ் ஆள்) எனும் சரணச்சிறந்த உயர்திணேச் சட்ப்ேபெயர்கள் இக்காலம் சிறப்பில் குறி யீடுகளாயின. பிறவுங்காண்க.
 
 

ஆளும் அதிகாரம் FoRMATION OF DERVATIVES
IN SANSKRIT &c.
罹 ஆரிய மோழிகளில் வழிச்சோல்லாக்கம்
இதுகாறும் இWம் டோக்திப ஆராய்ச்சியால் தமிழ்ச் சொற்களா ாவை அனேத்தும் ஒருசிய ஆதி அடிச்சொற்களினின்றும் நியகமான கட்டளே சுட்கேற்பப் பிறக்தும், சிதைத்தும், பலவேறுவகையிற் பொருள் கோன் பெற்றும் கிரிக்கி விரிந்து வர்து தமிழ்மொழியென்றும் பெரும் சிொகுதியாய் நிற்றலைக் கண்ெேகாண்டனம். இனி ஆரிய மொழிகளுள் முக்கியமானவை என 8ோக்கப்படுகின்ற சமஸ்கிருதம், கிரேக்கம், லத் சீனியம், பழஞ்சர்மனியம், பழம் ஆங்கிலம் எனும் இவைகளின் சொற் ஜிெதேதிகளும், தமிழ்ச் சொற்கள் எவ்வடிகளினின்று பரிணமித்துப் பிறந்தனவோ அம்முதற் சொற்கeளினின் துதான் படிக்கிரமமாய்த் தோன் நியுள்ளன எஜம் எங் கொள்கையைச் சட்டிச் சிஸ் சொல்வாம்.
அடிப்படையிற் சொல்லோற்றுமை
மக்கள் பேசும் பல மொழிகளேயும் குலங்குலமாகப் பிரித்துள்ள மேனுட்டு மொழிநூல் வல்லுநர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், துளு வம், மலேயாளம் ஆகிய மொழிகனேக் கிராவிட குலமெனவும், சமஸ்கி ருதம், கிரேக்கம், லத்தீனியம், சர்மனியம், ஆங்கிலம் ஆகியனவற்றை ஆரியகுளம் எனவும் வகுக்கிஇவர். அன்ஞேர் அவ்வம் மொழியின் சொற்களுள் வெளிப்படச் சோன்றுகின்ற உருவ ஒத்துமையையும் இலக் கன இயைபுகளின் ஒற்று:பயும் நோக்கியே இம்மொழி இன்ன குலம் எனப் பிரித்துக்கூறுவர். ஆயின், வெளிப்பாடான சொற்சாபல் ஒற்.ஜூமையின் வேரூப் ஆதி அடிச்சொற்களில் ஒற்றுமையொன்று மவிக் திருப்ப, அன் வொற்றுமையினேக் துருவிாாாய்ந்த காட்டுவோர் இல் ஸ்ாமையால் அதுதான் மேனுட்பி மேதாவிகட்கு மறைந்திருத்தலும் சாறு மன்றுே? இலக்கணத்தைச் சார்ந்த கிரிபுகள் இருமொழிக் குலங்க ஞள்ளும் எழுதற்கு முன்னரே, அவையிரண் ம்ே ஒன்முய் ஒரே அடிச் சொற் தொகுதியிஃனக் கொண்டன ஆராய் நிெேபற்றrமயும் கூமேன்றுே? திராவிட மொழிக்குலத்தையும் ஜரிமொழிக் குலத்தையும் பொதுத்த உண்மைகிஃ இஃதே என்பது எமது கெடுகாட்பட்ட ஆராய்ச்சியால் வெளியாகின்றது. அடிப்படையில் ஆதிச்சொற்கள் இருமொழிக் குலக் துக்கும் ஒன்றுயிருத்தல், அன்னவைதாம் இஞ்ஞான்று வெவ்வேறு குலமாய் வகுக்கப்பட்டு நிற்றலிலுக்கு எவ்வாற்று ஐம் மதுதலேயன்று

Page 32
52 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
எனக் கொள்ளல்வேண்டும். தொடக்கத்தில் இரு குலங்கட்கும் ஒரு சொற்ருெகுதியே அடிப்படையாயிருத்தல் ஒன்று; காலச்செலவில் அவை தம்முட் பிரிவுபட்டு வேறுவேறுவகையில் வழிச்சொற்களாய் விரிந்த மையும், வேறுவேறுவகையில் இலக்கணத் திரிபுகளை அடைந்தமையும் பிறிதொன்று. அடிச் சொல்லொற்றுமை மொழிக்குலப் பிரிவைத் தாக் கிடாது. குலம் வேருயினும் பிறப்பொன்றே என்ற உண்மையளவில் வலி யுறுத்தப்பிடும் எனக் காண்க.
*ஆயின் மேனுட்டு மொழிநூலாளர் திராவிடமொழிகளும் ஆரிய மொழிகளும் ஒரே அடித் தொகுதியினின்று பிறந்திருத்தலை ஒப்பா திருக் கின்றனர் அன்ருே? விேர் அன்னுேர்க்கு மாரு ய், இருமொழிக் குலங் கட்கும் அடியொற்றுமையொன்று பேசுதல்தான் யாங்ஙனம்?' எனில், கூறுதும். மேனுட்டார் இதுகாறும் சமஸ்கிருதம் எனும் வடமொழியை ஆராய்ந்து, அதனே ேதம் முக்கிய மொழிகள் சொல்லுருவத்திலும் இலக்கண இயைபுகளிலும் மிக ஒத்திருத்தலை உணர்ந்துகொண்டதனுல், தம்மொழிகளும் வடமொழியும் ஒரு குலமே என முடிப்போராயினர். வடமொழியின் காதுக்களோ பெரும்பான்மை தலையடிகளல்ல, வழி யடிகளின் பண்டை உருவங்களுமல்ல. தலையடிகளும் தன்னுருவத் தோடு விளங்குகின்ற வழியடிகளும் தமிழிலே முத்துப்போற் தெள் ளத்தெளிய இருக்சல் மேஞட்டார்க்குப் புலமாகாமற்போயிற்று. இவ் ஆராய்ச்சி எம் நாட்டிலும் இப்போதே புது முகனையாய் எம்மாற் செய் யப்படுகின்றதன்றே? தமிழிற் பளிங்கென விளங்குகின்ற அடிச்சொற் களை யாம் கண்டுபிடித்த பின்னரே, ஆரியமொழிச் சொற்களெல்லாம் இவ்வடிகளினின்று ஒருகாலம் பிறந்து இற்றைஞான்று உருத்திரிந்து நிற்கின்ற உண்மையை யாமும் ஊகித்து அறியலாயினுேம்.
தமிழம் ஆரியமும்
தமிழ்தான் ஆரியமொழிகட்குப் பிறப்பிடமென்பது எமது கொள் கையா? அற்றன்று. ஆயின் தமிழ்ச்சொற்கள் எவ் ஆதி அடிகளினின் ஆறும் ஒருவகையிற் சிறிது சிறிதாய்த் திரிந்து உருவாயின, அவ்வடிகளி னின்றே ஆரிய மொழிச் சொற்களும் பிறிதொருவகையிற் திரிந்து உரு வாயின என்பதுதான் எம்மதம். மக்கள் பேசிய ஆதிப்பாஷை ஒரசை ஈசையளவிற் கொண்டனவும், நாம் இங்கு அடிச்சொற்கள் எனச் சிறப் பிப்பனவுமான சொற்பகுதிகளின் தொகுதியேயாயிற்று. அத்தொகுதி பிற்றைஞான்று சொற்கள் விரிந்து வேறுபட்டமையினல் பொருந்திய மீசுரமான விளக்கமும் பொலிவுமில்லாது, முக்கியமான எண்ணங்களைத் தெரித்தல்மட்டில் வன்மையுள்ளதாய் நிலைபெற்றது. ஆதிப்பாஷை எழு பது எண்பது அன்றேல் ஓர்வேளே நூறு இருநூறு சொற்கட்குமேற் கொண்டதன்று. அதனையே ஆதி மானுடர் பயின்றிருப்பர். பின்பு, மக்கள் தம்முட் பிரிவுபட்டு வேறுவேறு பிரதேசங்களிற் குடியேறினே

தமிழும் ஆரியமும் 53
ராய் வந்தகாலையில், தாம் ஆதிநாளில் ஒருங்கிருந்து வழங்கிய அவ் ஆதிச்சொற்களைக் கைம்முதலாக்கொண்டு புதுப்புதுச் சொற்களை யாக்கத் தலைப்பட்டார். படுதலும், பாஷைகள் வேருகத் தொடங்கின. திரா விடமொழிக் குலத்தார் ஒரு இரீதியாய்ப் புதுச்சொல் ஆக்கிட, ஆரிய மொழிக் குலத்தார் வேருெரு இரீதியாய் ஆக்கினர். இவ்விருகுல மக் களும் தம்முட் பிரிவுபட்டு வெவ்வேருய்க் குடியேறிய பிற்ற்ைஞான்றில் அவ்வக் குல மொழிதம்முள்ளும் விகற்பங்கள் ஏறுவனவாகி, பொதுச் சாயல்கள் சில மீந்திருப்ப, சிறப்பு வேறுபாடுகள் பல உண்டாயின. சரித்திரவரையறைக்கெட்டிய காலத்தினுள்ளே சிமிழானது தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுவம் ஆதியனவாய்ப் பிரிந்தமையும், லத்தீ னியமானது இத்தாலியம், பிராஞ்சியம், போத்துக்கேயம், ஸ்பானியம் ஆதியனவாய்ப் பிரிந்தமையும் போன்று, சரித்திரத்துக்கு" எட்டாக் காலத்திலும், திராவிட மொழிகளும் ஆரியமொழிகளும் ஒருதாய் வயிற் பிறந்து வெவ்வேறு பாஷைகளாயின என ஆராய்ந்தறிக.
திராவிட மொழிகளும் ஆரிய மொழிகளும் தற்காலம் வெளிப்பார் வைக்கு சொல்லுருவிலும் இலக்கணப்போக்கிலும் கம்முள் ஒரு சிறிதும் ஒப்புமையில்லாதனவெனக் தோன்றுகின்றன. ஆயின் இரண்டிற்கும் அடிப்படையானதோர் ஒற்றுமை 6யம் உண்டென்பர் கால்வெல் பண் டிகர். அது யாதெனின், திராவிட மொழிகளும் ஆரிய மொழிகளும் ஒருங்கொப்ப, உபசருக்கமும் விகுதியுமென நிற்கும் ஆதிச்சொற்களை ஒட்டுதலால் சொல்விகற்பங்களை ஆக்கிக்கொண்டமையாம். தமிழில் உபசருக்கமன்று விகுதியே ஒட்டுச்சொற்களின்கண் மிகப்பயிலும். இவை யிற்றை வழிச்சொல்லாக்கத்து 8-ம் கட்டளையாகத் தந்துள்ளோம். ஆரியத்தில் உபசருக்கமும் மிகப்பயிலும். உதா கரணம்:-கி-கட, சம்பவம்; இவற்றில் நி, சம் என்பன உபசருக்கம். வர-தம், சரோ-ருகம் இவற்றில் தம், ருகம் என்பன விகுதி. இருமொழிக் தொகுதிகளும் இங்ங்னே அடிச்சொற்களை வேறு சொற்களோடு ஒட்டிப் புதுச்சொல் லாக்குகின்றமையால் இரண்டும் தம்முள் மிக இனங்கொண்டன என் L.ğ, -eylül 16öT-95 U.ğı 5GBi.ğ7. (Comp. Gram. of Dravid. Lang. p. 19I.) தமிழ்ப்புலவர்கள் வடமொழிக்கும் தமிழ்மொழிக்கும் இலக்கணம் ஒன்றே என அதிசய உத்தியாய்க் கூறுவர்.
வடமொழி தமிழ்மொழி எனுமிரு மொழியினும்
இலக்கண மொன்றே யென்றே யெண்ணுக என இலக்கணக்கொத்துடையாரும்;
சாற்றருங் தெய்வப் புலவோர் மொழிக்குங்
தமிழ்மொழிக்கும் வேற்றுமைகூறில், திணைபால் உணர்த்தும்
வினை, விகுதி

Page 33
54 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
மாற்றருக் தெய்வமொழிக்கில்லை; பேர்க்கெழு
வாய் உருவும் தேற்றிய லிங்கம் ஒருமூன்றும் இல்லை செழுந்தமிழ்க்கே என பிரயோக விவேக நூலுடையாரும் எடுத்திசைப்பர். இரு மொழிக் கும் இலக்கண வேறுபாடு இவையளவில் அன்று, இன்னும் பலவுள. தென்மொழியிலக்கணம் தற்காலத்து வையாகாணர்களால் வடமொழி இலக்கணத்தின் சாயலாய் மிகத் திருத்தப்பட்டுள்ளது. மலையாள, தெலுங்கு இலக்கணங்கள் மேலும் வடமொழி இலக்கணமயமாய் நிற்பன. அதனல் ஒற்றுமை நயமும் மீசு ரமாம். ஆயின் லத்தீனியம் ஆதிய பிற ஆரிய மொழியிலக்கணங்கள் கமிழ் இலக்கணத்தினுக்கு மிக வேறுபாடானவை. சொல்லுருவங்களிலும் சிலர் சிலர் திராவிட சொற்கள் பல வடமொழியுள் ஏறிவிட்டன எனச் சாற்றி அவற்றை எடுத்தோதியிருப்பினும், இவற்றையொழிந்த தனி வடசொற்களினுக்கும் தனித் தமிழ்ச்சொற்களினுக்கும் அடிச்சொற்கள் ஒன்றே என இதுவரை யில் யாராதல் ஆராய்ந்து கண்டாரல்லர். காலஞ்சென்ற சுவாமிநா தய்யரைப்போலும் மொழியறிஞர்கள், வ்டசொற்கள் பலவற்றினுக்கும் தமிழ்ச்சொற்களினுக்கும் இடையேயுள்ள உருவ ஒற்றுமையைக் கவனிக் தோர், அவ்வடசொற்களே தமிழ்ச் சொற்கட்குப் பிறப்பிடமாயின எனக் கூறிப்போந்தார். இன்னேருள் ஒருவரேனும் சொற்களின் ஆதியுருவங் களைத் துருவியறிந்து இவைதாம் தலையடிகள், இவை வழியடிகள் எனக்காணமுயலாமையால் உண்மை வெளிப்படாதிருந்தது. தமிழின் தலையடிகளை யாம், நெடுநாள் முயன்று, முறைப்படி ஆராய்ந்து கண்டு கொண்டபின் அவ்வடிகளே தமிழ்ச் சொற்களினுக்கும் வடசொற்களி லுக்கும், அவ்வாறு சகல ஆரிய மொழிச்சொற்களினுக்கும், தனித்தனி பிறப்பிடமாயின என்றது விளக்கமாயிற்று. வடசொற்களும் தமிழ்ச் சொற்களும் உருவத்திலும் பொருளிலும் ஒரு பெற்றியனவாய் நிற்பவும், தமிழன்று வடமொழியே முந்தியதாதல் வேண்டுமென எழுந்தபடி அறுதியிட்டுக் கூறுவோர் யாது பற்றி அங்ஙனம் துணிகின்ருரர்? எங்கால வரையில் எட்டியிருக்கின்ற தமிழ் நூல்களைக்காட்டில் வடமொழி நூல்கள் அதிக பழமையுடையன என்பது முடிந்த முடிபாக்லான் அன்றே வடசொற்களே முற்பட்ட காலத்தன எனக் கூறிவிட்டார்? இவ்வாறு நியாயித்தல் பொருந்தாது. என்னை? இலக்கியங்களில் ஏறிக் கொண்ட சொல்லுருவங்கள்தாம் முற்பட்டவை என முடிக்குமாறில்லை. தமிழ்ப்பாக தங்க்ளாகிய தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, பிரா கூயி எனும் மொழிகளுள் தமிழே இலக்கிய இலக்கண வரையறைப்படு தலில் முக்தியது என்பது யாவர்க்கும் ஒப்பமுடிந்ததொன்று. தெலுங்கு ஆகியவற்றின் இலக்கியங்கள் எழுதற்குப் பலநூறுண்டுகளின் முன்னரே தமிழ் பலப்பல இலக்கியங்களுள்ளதாய்த் திகழ்ந்தது. ஆயினும் பிற் பட இலக்கிய இலக்கண வரையறைப்பட்டனவான தெலுங்காதிகளின்

வடமொழிச் சொல்லாக்கச் சிறப்புவிதிகள் 55
பல சொல்லுருவங்கள் தமிழ் உருவங்கட்கு முற்பட்டன என்பதில் மயக்கமின்று. உதாகரணம்: பேச்சொலிப்பிறப்பில் ககர மெய் சகா மெய்க்கு முற்பட்டது என்றல் நாம் முன்னரும் எடுத்தோதிய தொரு துறை. ஆகவே கெய் எனுஞ்சொல் செய் எனுஞ் சொல்லினுக்கு முற் பட்டதாதல் வேண்டும். கெம்பு எனுஞ் சொல் செம்புச் சொல்லிற்கு முற்பட்டதாதல் வேண்டும். கன்னடம் துளு எனும் மொழிகளில் இவ் வாறே நம் சகர முதனிலைச் சொற்கள் பல ககரமுதனிலையோடு நிற்கின் றன. தமிழிலும் ஈண்டு காட்டிய இரு சொல்லும் ஆகியுருவத்தோடு ஒவ்வோர் சிறப்புப்பொருளில்மட்டும் கிலைத்திருத்தலும் நோக்கற்பாலது. கை என்பது செய்சல் எனும் பொருளில் 'கையறுநிலை' ஆதிய பழைய
வழக்குக்களில் வருதல் காண் க. 'கையறியாமை'
எனவும் வருகின் றது (குறள் 925). கெம்புச் சொல்லும் பதுமாாசப் பொருளில் சிவப்பு எனும் அர்த்தத்தைக் காட்டுவது, காயா, காவி, காஞ்சனம், கொவ்வை, குவளை, எனும் சொற்களிலும் ஆதிக் ககரமுதனிலையுருவம் காப்பாற்றப் பட்டதாகின்றது. ஆயின் தமிழில் செப்பு சேப்பு சிவப்பு சே ஆதிய சகா முதனிலைச்சொற்களே மிகுதியாயின. தமிழ், இலக்கியப் பொலி வில் முற்பட்டதாயினும், சிற்சில சொற்கள் அளவில் அதன் பாகதங் களே பழமையான உருவங்களைக் காத்து வைத்திருக்கின்றன. இவ் வாறுதான் வடமொழி நூற்கள் முக்தியவையாயினும், தமிழ், தனக்கும் அதற்கும் பொதுவான பழைய சொல்லுருவங்களைக் கர்ப்பாற்றிக்கொண் டிருத்தலில் எவ்வாற்ருனும் இழுக்கில்லை என்க.
வடமோழிச் சோல்லாக்கச் சிறப்புவிதிகள்
ஆதியடிகளினின்று சமிழ்ச் சொற்களும் ஆரியச்சொற்களும் வேறு வேறு ஒலிம்ாற்று விதிகளையும் சொல்லாக்க விதிகளையும் துணைக் கொண்டு பிறந்தமையால், இருநிறச் சொற்களும் புறக்காட்சியில் வேருய் நிற்பன. முன்னர் யாம் தமிழ் வழிச்சொற்களின் ஆக்கக் கட்டளைகளை ஆராய்ந்து நிறுவியவாறு ஆரிய வழிச்சொல்லாக்கக் கட்டளைகளையும் எடுத்தோ துவோமாயின் இரு சொற்கூட்டங்களும் உடன் பிறந்தாரென் னும் இனங்கொண்டு விளங்குதல் கெற்றெனப் புலப்படும் அன்ருே. ஆகலின் ஆரியத்தின் வழிச்சொல்லாக்கக் கட்டளைகளுள் முக்கியமான வற்றையும் தெரிந்து கூறுதும். தமிழ்ப்பாராயணர்கட்கு லத்தீனி யம் ஆதிய பிற ஆரிய மொழிகளைக் குறித்துப்பேசுதல் விளக்கமாகா தாதலின், அன்னுேருட் பலர் சிறிதேனும் அறிந்திருத்தற்பாலதான வடமொழியைமட்டும் ஈண்டு எடுத்தாளுவாம். தமிழ் அரிவரியிலில்லா வடசொற் சப்தங்களை நாம் எழுதிக்கொள்ளும் முறையை இந்நூல் அழி பந்தத்தின் தலைப்பிற் காண்க.
தமிழ் வழிச்சொல்லாக்கத்திற் பயிலும் கட்டளைகள் எட்டும், வட மொழியிலும் சிறிதும் பெரிதுமாய்ப் பயில்வன. அவற்றை ஒழிக்க

Page 34
56 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
வேறுசில கட்டளைகள், ஆரிய மொழிகட்குச் சிறப்பாயமைந்தன, மேல் வருவன.
1. ရွှံ့ညာ့ဓလိင်္ခါun It jōgl
வழிச்சொல்லாக்கக் கட்டளைகளுள் ஏழாவதில் நாம் கண்டுகொண்ட வாறு, தமிழின்கண் அடியுயிர்களும் வியஞ்சனங்களும் சொல்விகற்பத் தின்பொருட்டு மாறிவரும். சொற்சிதைவாலும் இவை திரிவுபடுதலை நாலாம் அதிகாரத்தினுட், கண்டாம். வடமொழியில் சொல்விகற்பம் நோக்கி நிகழும் உயிர்மாற்றும் மெய்ம்மாற்றும் தமிழிற்போலவே பொது விதியினுள்ளடங்கும். அதற்குச் சிறப்பாயுள்ளன, தமிழ்ச்சொற் சிதை வோடொப்ப, அவ்வடமொழியாளர் ஆதிச்சொற்களைத் சம் பேச்சுறுப் புக்கள் திரித்துச்செலுத்தியவழி விகற்பித்து உச்சரித்தமையிஞல் எழுங் தனவாம். அன்ஞேர் உயிரொலிகளைச் சுருக்கியும் மெய்யொலிகளை மிக உறுத்துக்கனைத்தும் சொல்லுகின்ற இயல்புடையோராயினமை வட மொழி ஒலிமாற்று ஆராய்ச்சியால் வெளியாகின்றது. கண்டத்தினைத் துணைக்கொண்டு வலிந்து பிறப்பிச்கும் மெய்கள்தாம் அவர்க்கு மிக விருப்பைக் கொடுத்தன போலும்.
இங்கினமே அவர் அ, இ, உ, எ, ஒ, எனும் ஐந்து குற்றுயிர்களுள் ளும் பிந்திய இரண்டையும் மீக்கிவிட்டனர். வடமொழியில் எகர ஒக ரங்கள் இடம்பெருமை பிரசித்தம். இதனனே, அடிச்சொற்களுள் எகர ஒகரங்களை முதனிலையாக்கொண்டு வருவன வடமொழியில் தம்முட் கலந்து மாறுற்றன. இருவகைச் சொற்களும் மேலும் சுருக்கத்தை நோக்கி அகர முதனிலைகொண்டியங்கின. உதாகாணம்:
தமிழ் வடமொழி
செம் சோ ன எகரம் ஒகாரமாதல் பொறு ம்ப்ஹ ற-தி ஒகரம் அகாமாதல் அ ர் ச் எகரம் அகாமாதல் சிறை ச ற இகரம் அகரமாதல் உறை لیے D D உகரம் அகாமாதல் Siar ւ 661 մ இகரம் உகரமாதல்
தமிழிலும் அதன் பாகதங்களுள்ளும் சொற்சிதைவால் நிகழ்
கின்ற உயிர்மாற்றுக்களையும் வடமொழியினுக்கு உரைத்துக்கொள்க. தமிழில் உகர முதனிலைகொண்ட சொற்கள் வடமொழியில் வசர முக னிலைகொள்ளல் பெருவழக்கு. தமிழின் கண்ணும் வகரம்பெற்றுவரு கின்ற உகர முதனிலைச் சொற்கள் சில முன்னர் எடுத்தோதப்பட்டன. வடமொழியில் இத்திரிபுக்கு உதாகாணம்:-
தமிழ் வடமொழி
உழல், வாங்கு வ க், வ க்ற, வங் க், வ ஞ் ச்
ஊதை வா த

வடமொழிச் சொல்லாக்கச் சிறப்புவிதிகள்
ஊக்கு
உமிழ் உழு, உழுவை ஒலி, உற்கை
57
வா ஜ ஸ், உங்க் ற, ஒ ஜ ஸ் வ ம் (வ ம தி, வ மிதி) வ்று, வ முக வ ற்ச், (வ ற்ச தே)
இனி மெய்மாற்றில் வடமொழிக்குச் சிறப்பாயுரியனவற்றுள் முக் கியமானவை வருமாறு: தமிழ் டகர ழகரங்கள் வடமொழியில் ஷகர
கூஷ்கரங்களாகும.
கிழ, குழ, கழ, கட என்பனவும் க்ஷகரமாகும். தனிக்
ககரம் கூடிகரமாவதும் உண்டு.
தமிழ் கட்டை (கா)ெ
முழி (விழி) விழி
ஒழுகு கழுவு கழி கிழான் فاحتر கூர் குள்ளம்
வடமொழி GE sT @. Lமி ஷ் வீ கடி உ கீழ், க்ஷ ல் ಚಿಕ್ಕ! கூதி க் க்ஷ4762, D IT ab ap ܡ- ܡܘ̈ܩܐ
டகராதி மெய்கள் தமிழ் முறைப்படி தம்மோடு பிறப்பொத்த மெய்களாய்த் திரியுங்கால் வடமொழியில் ஒரோவிடத்து றகரத்தையும்
உடன்பெறும். வடமொழிக்
சனர் வழக்கில் வருமாறுபோல்.
தமிழ்
பல்லவம்
மெல், மெது
புள்ளை (பிள்ளை)
தோணி
துளை
வாழ்
மழை
தமிழ் இம்முறை சில தமிழ்ப்
தமிழ்
தள்ளு
கககு
தோல்
‘தேகம்' தமிழில் திரேகம் என இழி
எங்ஙனம்?
வடமொழி
பத்ற
புத் ற
ந்க்ருே னி
க்த்று
வற்க்
வ்று ஷ் ந்த்ற மி ள, ந்க்ரு விட பாகதங்களிலும் காணப்படும்: தெலுங்கு
க்ஹள்ளு
க்றக்கு
தோலு, க்ருே அலு
வாயை இறுகப்பிடித்துத் தொண்டைத் தொனியை மிகச்செய்யும் பான்மையினுற்போலும் வடமொழியாளர் என்றும் றகர ஒலியில் அதி

Page 35
58 தமிழ்ச்சொற்பிறப்பாாாய்ச்சி
விழைவு காட்டினுேராகின்றனர். தமிழ்க் ககரம் பலகால் சகரமாதலும், இது வடம்ொழியில் (UO) கரமாய்கிற்றலும் பிரசித்தம் அன்ருே? வடமொழியாளர் அடிச்சொற்களில் சகரத்தின் பின் ளகராதிகள் வருங் தோறும் அவ்விரு ஒலிகட்கும் இடைநின்ற உயிரை விழுங்கிவிட்டு மர என்றே உச்சரித்துப்போயினர்:-
தமிழ் வடமொழி சலி, சரி பற்று செழிப்பு, செறிவு "மரீ சிலாவு (சலவு) ஞரீ (த்ரீ ண தி)
கேள் (ப) லு
அப்பால் கண்டத்தொனியை மிகத் துணைக்கொண்டு பேசுகின்ற இவ் இயல்பினல், வடமொழியாளர் ஒவ்வோர் வர்க்கமேயான க, ச, ட, த, ப எனுமொலிகளைத் தனித்தனி நான்காக்கி வைத்தனர் என்னக் கிடக்கின்றது. அவை க, ச்ஹ, ங்க, ங்க்ஹ எனவரும். இவற்றுள் ஒவ்வொரு வருக்கத்தினும் மூன்றுவதான ங்க ஆதியன சிறிது. பதமை யையும் குறிக்கின்றன. மேலும், அடித்தொண்டையால் உறுத்துப் பேசும் வன்மையிஞல், யா என்பதை க்ய எனவும், உய் என்பதை க்யில் எனவும் உச்சரித்தனராகலாம் என்பது யா-து, யா-வன் எனும் தமிழ் உருவங்கள் அன்னவர் மொழியில் கஸ், (பழம் ஆங்கிலம் ஹ்வா, லத்தீ னியம் குயிஸ்) என நிற்றலாலும்; உய், உயிர் எனும் தமிழ் உருவம், அதில் ஜிவ், ஜீவ, (பழம் ஆங்கிலம் குயிக், லத்தீனியம் உவீவுஸ்) என கிற்றலாலும் பெறப்படும்.
2. முதனிலை உயிர் நீக்கம்
சொற்களெல்லாம் நால்வகைச்சுட்டான உயிர்களை முதனிலையாக் கொண்டு பிறந்தன என்றல் இந்நூலினுள் இதுகாறும் கிரம்பக் கூறிய வற்முல் கைவந்ததோர் உண்மையாமன் ருே? தமிழில் விளங்கும் மெய் முதனிலை எல்லாம் வலியுறுத்தும் முதனிலை எனும்வகையிற் சித்தித் தன. ஆயின் வடமொழியில் சொன் முதலாகும் பெற்றியில்லாதனவான டகா ரகாாதி மெய்களும் பல சொற்களினுக்கு முதனிலையாதல் எங்ங் னம்? இக்கடாவுக்கு விடை யாதெனில்: வலியுறுத்தும் மெய்களெனச் சொன் முதலில்வருந் தகைமையற்றனவான டகராதிகளைக்கொண்ட வட சொற்களெல்லாம், கேவலம் ஒலிக்குறிப்புச் சொற்களாகாவிடத்து, பெரும்பான்மை முதனிலை உயிர்களை இழந்து நிற்பனவாமெனக்கொள்க. சிறுபான்மை சொன்முதலாகுந்தகைமைபெற்ற வேறு மெய்கள் திரிந்து டகராதிகளாய் நிற்றலுமொன்று. இங்ஙனமே டாகினி எனுஞ்சொல் சாகினிச்சொல்லின் திரிபாம். லிஹ் எனுஞ் சொல் நக்கு (5ஸ்) எனுஞ் சொல்லின் விகாரமாம். (ஈண்டு அடி அகரம் இகரமாயினமை உயிர் மாற்று.) இவ் இரு சொல்லின் கண்ணும் டகரமும் லகரமும் சகா நகரங்

வடமொழிச் சொல்லாக்கச் சிறப்புவிதிகள் 59.
களெனும் பிறமெய்களின் திரிபாய் வந்தன. இனி, முதனிலை உயிர் கெட்டு நிற்றலினுக்கு உதாகரணம்:-
தமிழ் வடமொழி அாற்று 17 Ι .
இழு லி ஹ் இலகு, இலேசு ல ங்க்ஹ" உருள் ஆலு ல் உலகு Gait 5
ற வி
ஆயின் ‘அாற்று' ர ட் என வராது, ர ட் எனும் சொல்லே அாற்று ஆயிற்றென உரைத்தல் கூடாதா? "உலகு' லோ க என மாறி யதைக்காட்டில் லோ க எனுஞ் சொல்தான் உலக என மாறிற்றென்ற லாகாதா? நீவிர் மீட்டும் மீட்டும் காட்டியாங்கு, தமிழ்மக்கள் மெய்க ளைப் பெரும்பான்மை உயிர் கூட்டியே சொல்லும் வழக்குடையவர்; ஆரியரது உத்தண்டமும் பரபரப்புமான போக்குக்கு எதிர்கிலையாய் மெத்தென் மீட்டி நிமிர்த்தி உச்சரிக்கும் இயல்புடையவர். ஆகலின், ா ட் ஆதிய சொற்களை உயிர் கூட்டாது உச்சரிக்கமாட்டாமையி ஞல் தமிழர்தாம் அாற்று ஆதியனவாய்ச் சொல்லலுற்ருர் என்றல் அதிக பொருத்தமுடைக்சாகாதா? எனிற் கூறுதும். ஆதி அடிச்சொற் களனைத்தும் உயிர் முதனிலையாயெழுந்தன என்பது அடிச்சொல்லியல்பு எனும் அதிகாரத்தினுள் விளக்கப்பட்டதன்முே? பேச்சொலிப் பிறப்பு முறையிலும் உயிர்களே முந்தியவை என்பது ஒருதலை. அப்பால் வழிச் சொற்களுள் மெய்முதனிலை பெறுவன வெல்லாம் வலியுறுத்தற்கண் க, ச, த, ப, த, (ய, ஞ) ம, (வ) என்பவற்றுள் ஒரோவொன்று பொருந்தி நிற்பன. ஆகலின் இவ்வாறு உயிர் முதனிலையோம்ெ சுட்டிய மெய் முதனிலையோடும் விளங்குகின்ற சொற்களே சிதைவுருகனவும், முத னிலை மெய்யாய் வருந்தகைமை சாலாத டகராதிகளைப் பொருந்தி கிற் பன சிதைவுற்றனவுமாமெனக் கொள்ளுதல் வேண்டும். அன்றியும் ா ட் ஆதியன வடசொற்கட்குச் செவ்விதாய் அடிச்சொற்கள் காணக் கூடாதபடியும், அவற்றைச்சார்ந்து நிற்கும் கிளைச்சொற்கள் இல்லாம அலும் நிலைபெறுமிடத்து, தமிழின்கண் அரற்று ஆதியன தமக்கு அடிச் சொல் தெளிவுறக் காட்டற்குரியனவாய், தம்மைச் சூழ்ந்து பலப்பல சார்புச்சொற்கள் கிற்கப்பெற்றனவாய் இருத்தலால், தமிழ் உருவங்க ளின் கண் யாம் காண்கின்ற உயிர் முதனிலையே ஆதிநிலையாமெனவும், வடசொற்களில், அவ்வுயிர்கள் கெட்டுநிற்றல் சிதைவின் பாற்பட்டதா மெனவும் உய்த்துணர்க.
3. ஸ்கா முதனிலைப்பேறு வடமொழியில் பலசொற்கள், அவ்வவற்றின் முதனிலைமெய்க்கு முன்னும் ஓர் ஸகரம் பொருத்தி உச்சரிக்கப்படும். இது ஆங்கிலத்தில்

Page 36
60 தமிழ்ச்சொற்பிறப்பாராய்ச்சி
Plash எனுஞ் சொல் Splash எனவும் வந்திட்டமையையொத்தது. தமிழர் ஸகரத்தை எளிதிற் சொல்லும் வன்மையுடையோரல்லர். தற் காலம் ஆங்கிலம் கற்றேர் சிலர் தமிழ்ச் சகர முதனிலைச் சொற்களை ஸகரப்பட உச்சரித்சலைக் காண்கின்றனமே, அது மாபன்று. சோறு எனுஞ் சொல்லை " ச்சோறு' என உரையாது ஸோறு என்றல் தமிழ் முறையன்ரும். வடமொழியாளரது பேச்சுறுப்பமைதியும் காப்பயிற்சி யும் ஸகரத்தை எளிதில் பிறப்பித்தமையால் அன்னேர் பன்முறை தக ாத்தை ஸகரமாக்குதலோடமையாது, பல முதனிலை மெய்களின் முன் அதனைச்சேர்த்தியும் உச்சரித்தலில் இன்புற்றனர். உதாகரணம்:
தமிழ் GAJU—G. DIT 5ெய், நேயம் ஸ்கே ஹ மரி (மடி) ஸ்ம ற குவி øပ@g) தரி, தங்கு ஸ்தா தலை ஸ்த ல வேது ஸ்வே த
பா, பார் ஸ்ப ச்
வடமொழியறியாத் தமிழ்ப்பாராயணர்கட்கு இளைப்பையும் உவட் டலையும் கொடாமைப்பொருட்டு இருமொழிக்கும் பொதுவான அடிகளி னின்றும் வடசொற்கள் பரிணமித்துவந்த வரலாற்றை மேல்விரித்துக் காட்டாது விடுகின்றனம். யாம் இயற்றி உலகுக் குபகரிக்க விரும்பும் சொற்பிறப்பகராதி வெளிப்படுங்காலையில், அமிழ்தினுமினிய எந்தமிழின் கண்ணே மக்களின் ஆதிச்சொற்கள் மாறுபடாது காக்கப்பட்டுத் திகழும் திறத்தையும், அவ்வாதிச் சொற்களினின்றுதான் வடமொழியுட்பட ஐரோப்பைய ஆரிய மொழிகள் யாவும் விரிந்த நிற்கும் பெற்றியையும் கண்டுமகிழ்ந்து தமிழன்னையைப் போற்றுக; திருவனந்தைச் சுந்தரம் பிள்ளை செப்பிய மேல்வரும் சிறந்தபாவடிகளால் அவளை வாழ்த்துக:-
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் தடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமுந் துளுவும் உன்னுதரத்துதித்தெழுந்தே ஒன்று பலவாயிடினும் ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன் சீரிளமைத்திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்து துமே தமிழன்னையும் தமிழ் நாடும் தமிழ் மக்களும் நீடூழி வாழ்க! வாழ்க!

அநூபநதம
A SECONDARY ROOT WITH ITS DERWAVES
ஓர் வழிபடிச்சோல்லிற் பிறந்தன
சொற்பிறப்பாராய்ச்சிக் கட்டளைகளை நிச்சயம்பண்ணிய யாம், அக் கட்டளைகளைத் தழுவி, ஒர் தமிழ் அடியினின்றும் பலசொற்கள் பிறந்து வரும் ஆற்றினை உகாகாண முறையாய்த் தருதல் நன்று அன்றே. ஈண்டு உழ-ல் (உள்) எனும் தலையடியினின்றும் பிறந்த குழை (குழ) எனும் வழியடியைச்சார்ந்து வரும் சொற்களுள் முக்கியமானவற்றைக் காட்டுதும். யாம் இனி வளம்பட இயற்றப்போகின்ற சொற்பிறப்பக ராதி மேஞட்டார்க்கும் பயன்படுமாறு ஆங்கிலத்தில் புனையப்பெற்று வடமொழி ஆகிய பல பாஷைகளின் பெரு ச்,திால உயர் 30 சொற்கட்கு எந்தமிழடிகளே தாதுவாய் நிற்கும் பெற்றியை விளக்குவதாகும். அப் பெருமுயற்சிக்கு ஒர் தோற்றுவாயாகும் பொருட்டு முதற்கண் தமிழி லேயே வடமொழிச் சொல் ஒப்புமைகளையும் ஒரு சிறிது காட்டி ஒரு சுருங்கிய சொற்பிறப்பகராதி வெளிப்படுத்துவோம். வடமொழியோடு பிறமொழிகளும் அறிந்தோர், நாம் சுட்டும் வடசொற்களுடன் ஒப்பு மைகொண்டனவாய் மேதாவிகள் வரையறுத்திருக்கின்ற கிரேக்க, லக் தீனிய, சர்மனிய, ஆங்கிலச்சொற்களையும் உய்த்துணர்ந்துகொள்க. விரி வான சமஸ்கிருத அகராதிகளெல்லாம் வடசொற்களோடு ஒத்த பிறப் புடைய ஐரோப்பைய சொற்களையும் குறித்துப்போகும் அன்ருே,
ஆயின் யாம் மேல்வரும் பாகத்தில் தமிழ்ச்சொல்லும் வடசொல் ஆலும் உருவத்தால் பொருளால் ஒத்திருக்கும் ஆற்றைக்காட்டுமிடத்து தமிழ்ச் சொல் முந்தியதா வடசொல் முந்தியதா எனும் ஆசங்கைக்கு அறுதியிடுதல் எமது நோக்கமுமன்று; அஃது அரிதில் முடித்தற் கமைந்த ஒரு செய்தியும் அன்று. இரு சொற்கட்கும் அடியான ஆதிச் சொல் எமதுமொழியில் உள்ளதென்ற ஒன்றுமே ஆராய்ந்து அறியத்தக் கதாகும். ஒரு சொல் தனது உற்பத்தித்தானமான ஆதிச்சொல்லைத் தமிழிற்கொண்டதாய், தன்னேடு ஒத்த உருவும் பொருளுமுள்ள பல வேறு சொற்கள் அவ் ஆதிச்சொல்லினின்று பிறந்தனவாய்த் தன்னைப் புடைசூழ்ந்து நிற்கப்பெற்றதாய் விளங்குமாயின், அது தமிழ்ச் சொல் லேயாம், ஆதிச் சொல்லென யாம் குறியீடுசெய்வது: எண்ணங்களுக் கெல்லாம் அடிப்படையாயுள்ள இடச்சம்பந்தக் கருத்தினையே காட்டு கின்றதும், அதற்கப்பால் இனித் துருவித் துருவிச்சென்று வேறுெரு

Page 37
62 அநுபந்தம்
அடி காணக்கூடாததாய் நிற்கின்றதுமான ஒரசை ஈரசைச் சொல்லையே என அறிக. இனி ஒருசொல் வடமொழியில் தனக்கு ஏற்ற பெற்றியான அடி. இல்லாததாய், தன்னைப்போன்ற வேறு பல வியுற்பன்னங்களோடு கூடி நில்லாததாய் விளங்குமாயின், அது வடமொழிக்குரிய சொல் லன்று எனவே அறுதியிடுக. அப்பால் ஒரு சொல்லினுக்கு வடமொழிச் தாது உள்ள விடத்தும் அத்தாது வழியடியாய் மட்டில் நிற்ப, அத கப்பால் அம்மொழியில் தலையடி இல்லாது ஒழிய, தமிழில் அதற்குத் கலையடி காணப்படுமாயின் இருமொழிக்கும் பொதுவான சொல்லினுக் குத் தமிழே தலை படியைக் காப்பாற்றிக்கொண்டது என முடிக்க உற்றுநோக்குவார்க்கு தென் மொழியும் வட மொழியும் ஒரே அடியாய்ட பிறந்து வந்திருத்தல் புலமாகும். இவ் உண்மையை எமக்கு முன்னும் சிலர் மதிவல்லோர் சொல்லாமற் சொல்லிப்போயினர்.
இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப விருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பு மிருமொழியு மான்றவரே கழிஇஞ ரென்முலிவ் விருமொழியு நிகரென்னு மிகற்கைய முளதேயோ என்ருர் சிவஞானயோகியாரும். அவ்வப்பொருளின் சிறப்பியல்பு பற் மிப் பொருள்கட்கு ஒவ்வோர் பெயுரைச் சூட்டிப் பாஷையை அமைக் கும் ஆற்றலை இறைவனே மானுடருக்குக் கொடுத்துள்ளமையானும், வட தென்மொழிகள் ஆதி மானுடர் தெரிந்தேற்படுத்திய ஒரே தலை யடிச்சொற் கூட்டத்தினின்று பிறந்தமையானும் ' இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவர் ' என யோகியார் தம் வழிபடு தெய்வத் தின்மேல் வைத்துக் கூறிய கூற்று ஒக்கும். அவ் இருமொழிக்கும் பிறப்பிடமான தலையடிகளை உருப்பிறழாது காத்துவைத்திருக்கின்ற அருங் கலச்செப்பாய்ப் பிறங்குவது எந்தமிழே எனக்கண்டு கழிபேரு வகை அடைகின்றனம். பின்வரும் மாதிரிச் சொற்பாகத்தைக் கருத் தாய்ப் படிப்போர் தாமும் இவ் உவகையில் ஈடுபடாதிரார்.
இம் மாதிரிப்பாகத்தை அச்சிடுகின்ற இயந்திரசாலையில் கிரந்த அச் செழுத்துக்கள் இல்லாமையால் ஓர் குறை ஏற்பட்டது. அதனை ஒரு வாறு சீக்கும்பொருட்டு பின்வருஞ் சூழ்ச்சியைக் கையாடுகின்றனம். எங்ஙனமெனில், தமிழில் உபயோகிக்கப்படுகின்ற இரண்டொரு கிரந்த லிபிகளை மட்டும் வழங்கிக்கொண்டு, வடசொற் சிறப்பொலிகளைத் தமிழி லேயே மேல்வருமாறு குறிக்கின்றம்:-
கிரந்தம் தமிழ் கிரந்தம் தமிழ் 1 வது ககரம். க 1 வது ஜகரம். ஜ 2 வது sy க்ஹ 2 வது y ஜ்ஹ 3 வது sy ங்க 1 வது டகரம், ற்ற 4 வது s ங்க்ஹ 2 வது es ற்ற்ஹ 1 வது சகரம். ச 8 வது t
2 வது , ச்ஹ 4 வது ட்ஹ

ஒர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 63
கிரந்தம் தமிழ் கிரந்தம் தமிழ் 1 வது தகரம் த 1 வது பகரம். ப 2 வது . க்ஹ 2 வது s ப்ஹ 3 வது ந்த 3 வதி 罗罗 ம்ப 4 வது s ந்க்ஹ 4 வது y ம்ப்ஹ
ஏனைய பொது லிபிகளே
வேறு குறியீடுகள்
வி. - வினை ஒப். = ஒப்புநோக்கத்தகுஞ்சொல் த. வி. தன் வினை வட மாவடமொழி பி. வி. பிறவினை கெலு. - தெலுங்கு பெ. - பெயர் கன். = கன்னடம் உரி. = உரிச்சொல் மலை. - மலையாளம் வினையு. வினையுரிச்சொல் துளு, = துளுவம்
மேற்கோள் தந்த நூற்பெயர்களைச் சென்னைச் சர்வகலாசாலை அை
ராதியினுட் காண்க. எம் மேற்கோள்கள் பெரும்பான்மை ஆங்குக் கண்
டனவேயாம்.
குழை
குழ எனும் வழியடிச்சொல்
குழை <குழ <உழ-ல் <உள்
த. வி. (உள் நோக்கி வரல், உழன்றுவரல்) 1. வ%ளதல் 'திண்சிலைகுழைய' (குளாம. அரசி 319) 2. வாடுதல் (குறள் 90) 3. துவளல் “குழைந்தநுண்ணிடை' (கம்பரா. சித்திர, 9) 4. (திரளும் பதமாகல்) இளகுதல் ‘தொண்டரினங்குழையாத் தொழும்' (பதிஞெரு. பட்டினத். திருவே. 28) 5. நெருங்கி உறவாடல் 6. களைத்தல், தளர்தல் “கோதைகுழ் கொம்பிற் குழைந்து' (பு. வெ. 12, பெண்பாற். 14) 7. வருந்துதல் 8. (பி. வி.) உருண்டு திரளச் செய்தல் 'கருனையாற் குழைக்குங் கைகள்' (சீவக. 257) குழை எனும் இச்சொல் உழ-ல் எனும் தலையடியினின்று ககர முதனிலை பெற்றுவருவதோர் வழியடி. ஆதியில் குழ என கின்றதாதல் வேண்டும். என்ன? மலையா ளத்தில் எமது 'பனை' பன என, இலை' இல என நிற்றல் போல. உழ-ல் எனும் தலையடி ககர முதனிலைப்பேற்றல் குழை ஆனவாறு, சகரமாதிய பிற முதனிலைகளும் பெற்று வழியடிக; ளாகும். எங்ஙனம்? குழை, குலவு, குலாவு, குடை, கோடு, சுழல், சலவு, சுருள்; துளை, துழாவு, துருவு, திரள், திருமு, திரி; புழை, புழல் புசள்; நுழை, கோண்டு; முழை, முடை

Page 38
64 அநுபந்தம்
மூழ்கு எனவரும். ஒப். வட, ச க்ற: ஈண்டு 'குழ' க்ற என நின்று முதனிலையிாட்டலால் ச க்ற (=க-க்ற) என்ருயிற்று.
களை த. வி. (வாடித்தளர்தல்) 1. இளகுதல் (பிங்.) 2. இளைப் புறுதல். பெயர்ச்சொல்லுருவமும் இது. 8. (பி. வி.) கூட்டி முடித்தல் ‘குடுமிகளைந்தானெங்கோ’ (பு. வெ. 9, 21) ஈண்டு குகரம் ககரமாயிற்று.
குழ-ம்பு, த. வி. (உள்நோக்கிவரல்) 1. உழன்றுவரல் 2. கலங்குதல்,
ஒப். கலங்கு. வட, க ல ஹ
குழ-ம்பு பெ. (கலக்கிச் சேர்த்தது) 1. நீர்த்தன்மையான காய்கறி, குழை, ரி 2. சேறு.
கூம்பு, பெ. (முன்னது) சேறு. ஈண்டு இட்ைகெட்டுத் தலை நீண்டது’ குழை-யல், பெ. (கலங்கிக் திரளும் பான்மை) குழைந்தசோறு. குழை-வு, பெ. (முன்னதி) 1. நெகிழ்ச்சி, 2. இாக்கம்.
கொழ, த. வி. (குழம்பாயிருத்தல்) 1. இறுகியதன்மையாதல், 2.
உடல் தடித்தல், 3. செழித்தல் (நாலடி. 96)
கோழ-ப்பு, முன்னது) 1. நிணம் (பிங்.) 2. குழம்பாயிருக்கை, 8. செழிப்பு, 4. புஷ்டி (பெருங். மகத. 4,42) ஒப். கொழுங் குருதி (மலை) தெலு. கொ வ் வு, கன். கொம்ப் ம்பு, துளு கொம் ம ஒப். கொழுந்து, குழந்தை, கொம்மை.
கோழை, பெ. (முன்னது) 1. சளி (தேவா. 263, 1) 2. உமிழ்நீர், 3. இளக்கம், 4. குறைவுபடுகை 'கோழைபடாது' (கொன் றைவே.) 5. மனத்திடமின்மை, கூச்சம் 6. சிறுபிள்ளை (விநா யகபு. 72, 132) ஒப். வட, கோ ச
குளம் } பெ. (முன்னது) சர்க்கரை, கருப்புக்கட் வட, நீங்க ல குடம் 1 , Ֆ(5ւմւ| 9 . · &l୯୬
ಅಟ್ಟಿ"} த. வி. (வளைந்து ஒன்றுசேர்தல்) 1. கூடுதல், “மள்ளர் குழ-ழ குழீஇயவிழவினனும்’ (குறுங் 31) 2. கலத்தல் “கொன் றையுந் துளவமுங் குழுமத்தொடுத்த' (சிலப். உரைப். பின் செய். 10) ஒப், கூள், கூடு. வட, கு ல்.
5邬》 芭蜴一°》 பெ. (வளைந்து ஒன்று கூடியது) 1. மக்கள் கூட்டம், குழா-அல், 2.மங்கை, 8. தொகுதி. வட, கு ல
5p T-th,

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 65
குழ-மல், e 9 蠶} பெ. (வளைந்து திரளல்) 1. கூடுதல், 2. கூட்டம் குள-கம், பெ. (குழு) பல பாட்டுக்கள் ஒரே வினைகொள்ளும் அமைதி.
இது குழவடியாய்ப் பிறந்த வடசொல்: கு ல க
குழை, பெ. (வளைந்த பொருளின் உட்புறம்) 1. குழி, துளை 2. காது 3. குழல் 4. சங்கு. இச்சொல் துளை, புழை, வளை, குழி
என்பனவற்றை ஒத்தது. மேல்வருவன காண்க.
குழி, பெ. (குழையின் வேருெரு உருவம்) . வளைந்து ஆழ் தேதி, பள்ளம் 2. சீர் நிலை (திவா.) 3. வயிறு (அக. நி.) 4. பாத்தி 5, ஓர் நிலவளவு. இது குவிதல் சொல்லோம்ெ இனங் கொண்டது. ஒப். வட, கு கூதி, கோ UD
குழி, த. வி. (வளைந்து ஆழ்ந்திருத்தல்) 1. பள்ளமாயிருத்தல் 'குழிக் தாழ்ந்தகண்' (நாலடி. 45) , 2. (பி. வி.) உள்வளைத்துத் தோண்டுதல் ‘குழித்துழிநிற்பது நீர்' (நான்மணி. 30)
குளி, த. வி. (ஊடறுத்தல்) 1. துளைத்துச் செல்லல் ‘கூர்ங்கணை குளிப்ப" (பு. வெ. 10. சிறப்பிற். 10 கொளு) 2. உட்புகுதல் (புறநா. 6, 12) 3. மறைதல் (கலித். 98, 28) 4. தோல்வி யுறல் (சீவக. 2141) 5. மீராடுதல் (பரிபா. 6, 103) 6, (பி வி.) சிப்பி ஆதியன மூழ்கியெடுத்தல்
குடி, பி. வி. (உட்செலுத்துதல்) 1. பானம்பண்ணுதல் 2. உட்கொள் ளுதல். கன்னட மலையாள அகராதி ஆசிரியர்கள் இச்சொல்லை குகுெடு எனும் ஒலிக்குறிப்பினின்று தோற்றுவிப்பர். அதைக் காட்டில் ‘கொள்' கொடு என்முகியமைபோல் 'குளி' குடி என்றுகியமையே அதிக பொருத்தமுள்ளதென்க. தெலுங்கில் கொள்ளுதல் சொல்லின் திரிபாகிய க்ருே லு குடித்தல் அர்த் தத்தில் வருதலையுங் காண்க. ஒப். கன். கு ற்று கு = குடிச் தல், சோறு ஆதியன உட்கொள்ளல்
குயி-ல், பெ. குழியின் மரூஉ) உள்வளைந்ததின் உட்புறம், துளை (பிங்.) ஈண்டு ழகர வியஞ்சனம் யகரமாயிற்று, ஒப். குழி, குழை
குயி-ல், பி. வி. (உள்வளைத்துத் தோண்டுதல், வளைத்தல்) 1. துளைத் தல் 'வரைகுயின்றன்ன’ (அகநா. 93. 12) 2. பின்னுதல் 8. நெய்தல் “ஊசியொடு குயின்ற தூசும் பட்டும்' (தொல். சொல். 74 உரை) ‘குயிலுதல்', சார்புபற்றி, யாதொன்றைச் செய்தலு மாம் (பிங்.), உழுதலையே முதற்கண் குறித்த 'தொழில்' பின் எவ்வெவ் முயற்சிக்கும் பெயரானதுபோல.
குழி-வு, பெ. (குழி) பள்ளமர்யிருத்தல்
த. சொ.-5

Page 39
66 அநுபந்தம்
குள-ம், 2 பெ. (குழிந்தது) நீர்நிலை. குழி காண்க. வட கூ ல. 2. (வளைந்தது) நெற்றி 'இருக்குள முளைத்த கட்டாமரை” (கல்லா. 31, 9) குழி-சி, பெ. (வளைந்தாழ்ந்தது) 1. பானை “சோறடு குழிசி" (பெரும் பாண். 866 2 (திரண்டது) சக்கரத்தின் குடம் (சீவக. 2229) குழாய்த்தன்மையுள்ளது) 1. மதகு 2. பாத்திரத்தின்( . لا(o) و Lf - ارق
மூக்கு குழி-பல், பெ. (குழியுள்ளது) ஒருவகைப் பாத்திரம் குழ-ம்பு, பெ. (முன்னதி) குழி 'ஆழ்க்ககுழும்பிற்றிருமணிகிளர'
(மதுரைக். 278) குழ-ல் 1, பெ. (குழிந்தது) நெடுந்து வாரங் கொண்ட திரள் வடிவப் குழா-ய், ! பொருள். குளிகை காண்க. ತ್ರಿ!g-ನಿಸಿ 2, பெ. குழல் விசேடம்) ஓர் வாத்தியக்கருவி w ஆா-ல் 1, பெ. (குழல்போலும் உறுப்பு) தொண்டை. ‘மணிக்குரல் அறுத்து’ (குறுங், 263) மலையாளத்தில் குரல் குறள் இரண் டும் தொண்டைப் பெயர்கள். வட, நீங்க ல = தொண்டை. ங்க்நூறு - விழுங்குதல், ங்க்றி வா - கழுத்து கள-ம், பெ. (குழலின் திரிபு) கண்டம் 'பாடுகளமகளிரும்' (சிலப்.
6. 157) ஒப், கழுத்தி, கண்டம் வட, ங்க ல, ங்க்ஹா ற்ற குர்-ல் 2, பெ. (குழலாதியவற்றிற் பிறப்பது) 1. இசையொலி 'இடி குரன் முரசு’ (கம்பரா. எழுச். 1) 2. பேச்சொலி *சிறு குரல் கேட்டு' (நளவெண். சுயம்வ. 4) 3. (ஆகுபெயராய்) பேச்சுக் குமாம். "யாவருங் தண் குரல் கேட்ப" (கலித். 142, 9) ஒப். வட, ங்கி ர் - குரல். குர-வை, பெ. (முன்னது) 1. பெண்களின் கூக்குரல், மகிழ்ச்சியொலி 2. பெண்கள் கூத்துவகை. வட, குர வ = குழறும் ஒலி. இதனை கு+ர வ எனப்பிரித்தல் வேண்டப்படாது. குரை, த. வி. முன்னது) 1. குழறி ஆரவாரிக்கை (பதிற்றுப். குலை, ! 84, 20) 2. நாயின் குழறுகை. வட, கு ர் குக்-கன், பெ. குரைப்பது) (5ாய். இது கு க்கு ர எனும் வடசொல் லின் கற்பவம். அவ் வடசொல்லேயும் குர (குரை) எனும் சொல்லை இரட்டித்தலால் குறிகுர> குர்க்குர> குக்குர என வங்கதுபோலும். வடசொல்லை இவ்வாறு குரை எனும் அடியி னின்றன்றி கு க் (ா கொள்) எனும் தாதுவினின்று பிறப்பிக் தல் சிறப்பன்று. துக்கு-டம், பெ. (குழறுவது) கோழி. வட, கு க் குற்ற, முந்திய
சொல் காண்க. ஒப். கோழி

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 67
குலை, த. வி. (குரைத்தலின் மரூஉ) குழ-று, த. வி. (குழலால் ஒலி செய்தல்) குரலுயர்த்துக் கதறல் குள-று, ரீ " கூகை நன்பகற்குழற ' (பட்டினப். 268) வட,
ங்க்,நூண அழைத்தல், ங்க ர்ஜ்=ஒலித்தல் கூறு, பி. வி. (குழறுதலின் மரூஉ 1. சொல்லல் 2. பிரசித்தம்
பண்ணல்
கழலறு, பி. வி. (குழறுதலின் மரூஉ) 1. சொல்லுதல் 2. அவமதித் தல் (குளா. முத். 16) 2. கோபித்தல் , “கடிந்தது மிலையாய் நீ கழறிய வந்ததை" (கலித், 76, 13) 3. (த. வி. உறுதி சொல்லுதல் (நாலடி. 253) 4. இடித்தல் ' கடுஞ்சிலை கழறி' (பதிற்றுப். 81. 4) வட, கல் கோழி, பெ. (குழறுவது) குக்குடம். ஒப். தெலு, கோடி 骷意} பெ. (குழல் விசேடம்) இரைப்பையைச் சார்ந்த குழாய் குட-ர், y ஈண்டு ழகரவியஞ்சனம் பிறப்பொத்த டகரமாயிற்று' குட-லை, பெ. (முன்னது) 1. குழல் போலும் நெடிய கூடை 2 கதிர்ப்பொத்தி. குடலினுக்கும் பெயராம். ஒப. புடலை குர-ல் 3, பெ. (குழல் போல்வது கதிர் “வாகினிருங்குரல்" கொா-லி, (மதுரைக். 272) குழ-ல், த. வி. (உழலுதல்) சுருளுதல் "கடைகுழன்ற கருங்குழல்கள்'
(சிந்தா. 164) குழ-ல் 3, பெ. (சுருளுவது, சுருட்டி முடிக்கப்படுவது) பெண் கூந்தல்
"குழலுடைச்சிகழிகை' (சிந்தா. 1092) கூழை, பெ. (குழலின் வேருெரு உருவம்) 1. பெண்டிர் தலைமயிர் (தொல். பொ. 262) 2. (சார்புபற்றி) மயிற்றே கை, இறகு 3. வால் குரல் 4, பெ" (குழற்சொல்லின் வேறு இரு உருவங்கள்) பெண் கூந் త్n_T-సి தல் ‘நல்லார் குரல் நாற்றம்" (கலித். 88, 1)
குட <குழ <உழ-ல் <உள்
குட உரி. (உள்நோக்கிய) வளைந்த, திருமுரு. 229 உரையின் கண் 'குடவென்பது தடவென்பது போல வளைவையுணர்த்துவதோர் உரிச்சொல்' என்பர் நச்சிஞர்க்கினியர். இது குழவின் வேருெரு உருவம், ஈண்டு ழகரம் பிறப்பொத்த டகரமாயிற்று. வட. கு ற்ற்- வளைதல். இத்தாது நமது உழ-ல் எனும் தலையடியி னின்றே பிறந்திருத்தல் வேண்டும். வடமொழியில் இதன்
வியுற்பன்னங்கள் பலப்பலவுள.

Page 40
68 w அநுபந்தம்
குட-வு, த. வி. (முன்னதி) வளைதல், ஒப். குடங்கு, கொடுகு, குறங்கு,
குறண்டு, குறழ், குருவு, குரங்கு
குட-ம் 1, (முன்னது) வளைந்தாடும் கூத்து. ஒப். குடந்தம்
குட-வு பெ. (முன்னது) வளைவு
குட-ம் 2, பெ. (முன்னத) பொழுது வளைந்துபோம் திசை, மேற்கு
குட-கம், 'குடா அது தொன்று முதிர் பெளவத்தின் குடக்கும்' குட-க்கு, (புற நா. 6, 4) தமிழகத்தின் மேற்கு எல்லை குடகம் ტL— –ტა எனப்படும். ஒப். குணம் - கிழக்கு
கொங்-கணம், (குடகு + அணவு) மேற்குநாடு. மலை, கொங்ந=
குடகு, குடகு + அணம், கொங்கணமாயிற்று.
கோடை, பெ. (குடகம்) மேற்கிலெழுங்காற்று. "குடகம்' மீட்ட
லால் கோடையென்முயிற்று,
குட-ங்கு, த. வி. (உள்நோக்குதல்) வளைதல், ஒப். குடவு
குட-க்கம், பெ. (முன்னது) வளைவு “குடந்தையஞ்செவிய கோட் குட-ந்தை, டெலி’(புற நா. 32, 5) குட-ந்தம், பெ. (வளைத்தல்) 1. உடலைவளைத்தல் “குடந்தம் பட்டுக் கொழுமலர்சிதறி” (திருமுரு. 229) ஒப். குடம் 1, குடை, கொட்டி, குணலை, கூத்து. இவ் உருவங்கள் வட்டமாய் ஆடி வருமோர் நடனத்தைக்குறிக்கும் 2. மட்கலம் (பிங்.) ஒப். குடம் 3 கோடி-யர், (வளைந்து ஆடுவோர்) கூக்கர் “முதுவாய்க்கோடியர் முழ
வில்' (குறுங், 78, 2) ஒப். குடந்தம் குட-ம் 3, பெ. (வளைந்தது, திரண்டது) 1. கலயம். ஒப். குடங்கர், குண்டு, குடுகு, குடிகை. வட, குற்ற, குண்ட 2. உண்டை 3. பசு (பிங்) இவ்வர்த்தம் (வளைந்த) கொம்புடைமையினம் போலும். வட, ங்கோ. மலையாளத்தில் கொம்பி, கொம்பிச்சி எனப் பசுவுக்கு பெயரிருத்தலையும் நோக்குக. இச்சொல் சுமேரியத்தில் ங்கு ட், ங்கு ற் என நிற்கும். இதற்குச் சித் திரலிபி கொம்பு மிக நீண்ட ஒரு எருதாம். 'குடஞ்சுட்டு' (கலிக். 109, 8) என்பதினின்று பசுவினுக்குக் குடம் எனும் பெயர் வந்ததென்றல் பொருந்தாது. குடஞ்சுட்டு - “இன்ன தனைக் குடம்பால் போதுமென்று கருதப்படும் பசு' என்ப தன்று குடமெனும் சொல்லாற் சுட்டப்படுவதே எனக்கொள்க. கோ, பெ. (முன்னதி) பசு. இது வடசொல்லின் தற்சமம் போலும். அவ் வடசொல்லேயும் எமது குடச்சொல்லோடு ஒற்றுமை பூண்டிருத்தலை நோக்குக. 'குடம்' க்கு ட் என ங்கு எனச்

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 69
சுமேரியத்திலும் குறுகி நிற்கும். . "குடம்' தான் வடமொழி யில் ங்கோ என வந்ததாகக்கொள்க. கோ - அரசன், கோலு தலின் கீழ்க்காண்க. குட-வன், (திாண்டது) ஒற்றை விதைப் பனங்காய் குட-ம்பை, பெ. (வளைந்து திரண்டது) 1. கூடு “குடம்பைநூறெற்றி" (கல்லா. கணப. 26) 2. முட்டை 'குடம்பை தனித்தொழிய’ (குறள். 338) ஒப். கூடு. இதனுேடு முட்டையையும் ஒப்பு நோக்குக. முட்டை <முட்டி <மூடு குர-ம்பை, பெ. (முன்னது) 1. கூடு 2. குடில், ‘இலைவேய் குரம்பை" (மதுரைக். 310) 3. (ஒப்புமைபற்றி) ஆன்மாவின் கூடாகிய உடல் “பொருந்திய குரம்பைதன்னைப் பொருளெனக் கருத வேண்டா' (தேவா. 488) குட-ங்கர், பெ. (குடம்பைச் சொல்லின் வேருெரு உருவம்) 1. குடம் * குடங்கர் கொணர்ந்திடா. சொண்டு கொண்டனர் ' (கந்தபு. தேவகி. 24) வட, கு ற்ற ங் க, கு ற்ற ங் ங்க க = கூரை, 2. குடில் 'குடங்கருட் பாம்பொடு' (குறள் 890) குடா, பெ. (வளைந்ததி} 1. வளைவு 'குடாவடிக் குருளை' (மலைபடு. 50) இங்கு குடா + அடி = வளைந்த பாதம் 2. வளைந்தகரை.
கோடி காண்க. ஒப். வட, கூ ல-கரை குடா-ப்பு, பெ. (வளைந்து திாண்டது) கூடு குடா-ாம், பெ. (வளைந்த திரண்டது) 1. தயிர் கடைதாழி. குடை தல் காண்க. 2. கோடாலி. ஒப். கொத்துதல், கோதிதல். இது வடசொற்போலும். குற்ற ர
560)L <560)g <5g <2-p-do <2.6it
குடை பி. வி. (வட்டமாய்க் குளித்தல், துளைத்தல்) 1. கடைதல் ஒப். கொழுது, கொத்து, கொந்து, கோது. இவையெல்லாம் இக்கருத்துள்ளனவே. 2. மூழ்குதல் * புனல் குடைந்தாடி னுேம் ' (சிலப்.24 பாட்டுமடை) ஒப். குளி. வட. கு ட்ை மூழ்குதல். பெ. குடை, ஒர் கூத்து. ஒப். குடந்தம்
L=ଟ s 0. o
ਜ} பெ. (துளைக்கப்பட்டது) குகை, பிலம் குடா-ாம், பெ. (குடையும் கருவி) கொந்தாலி, கோடாலி "தறுகட் குடா-ரி, குடா ரமும்' (குளா. சீய. 72) 'குடா அரிக் கோவ
sy
லர்' (தொல், பொரு. 829 உரை) இவ்வுருவங்கள் தமிழடி யாய்ப் பிறந்த வடசொற்கள். கு ற்ற்ஹா

Page 41
70 く - அநுபந்தம்
கோழ-து <குடை <குழை <குழ <உழ-ல் <உள்
கொழு-து, (வட்டமாய்க் குளித்தல், துளைத்தல்) 1. குடைதல் “கொழுதிவண்டிமிருந்தாரன்' (நைட. சுயம்வ. 155) 2. கிழித் தில் ‘பெளவ நீர்ச்சாய்க்கொழுதி" (கலித். 70, 7)
கொழ, பெ. (துளைப்பது) 1. ஏர்க்காடி 2. துளையிடும் பெரியவூசி 'கொழுச்சென்றவழித் துன் அரசி யினிது சொல்லும்?? (தொல், பாயிர உரை)
கோது, பி. வி. (உட்செலுத்திப் பிரித்தல்) 1. தோண்டுதல் 2. மயிர்ச்சிக்கெடுத்தல் (பெருந்தொ. 1823) 3. இறகைக் குடைந்து நேராக்குதல் (தேவா. 1157, 6) 4. சிறிது கிறி Aாய்க் குடைந்தெடுத்தல் 5. ஒலை வ3ருதல்
கோது, பெ. (உட்துளைத்து எடுத்து வெறிதாயது) 1. குற்றம் (சீவக. 233) ஒப். பிழை <புழை< பொய் <(பொள்-ளல். 2. பழத் தின் உள்ளீடற்ற ஒடு, தோல், சக்கை 3. பூ முதலியவற் றின் நரம்பு. வட கோ க்ஹ கி. பயனின்மை "கோதுசெய் குணக்கோதினுட் கோதஞன்' (சீவக. 240) 5. நெறி தவ
ழ்கை
::::::::}} பெ. (முன்னது) 1. பழுது (பரிபா. பக். 175, 5) கோத-ம், 2. பொல்லாங்கு (வேக. 1583) ஒப். குத்தை,
கொத்து. வட, கோ ഴ്ചബ
கோதை 1, பெ. (முன்னத) பூகம் (திருப்பு. 137)
கொத்து, பி. வி. (உட்செலுத்திக் கிளைதல்) 1. கிண்டுதல் 2. குத்தி
யெடுத்தல் 3. வெட்டுதல் வட கு ற்ற்
கொத்து, பெ. (முன்னதி) 1. கிண்டுதல் 2. கொத்து வேலை 3. சிறு மண்வெட்டி 4. குடைந்தெடுத்த அளக்குங்கருவி. குலை எனும் அர்த்தத்தில் குவிதலின் கீழ்க்காண்க.
கொத்-தை, பெ. (உட்துளைத்து எடுக்கப்பட்டது) 1. பழுதானது. 2. ஈனம் 3. அறைகுறை 4. அஞ்ஞானம் 5. குருடன் (தேவா. 1040, 2) ஒப். சொத்தை வட கோ த்ஹ
குத்-து, பி. வி. (உட்செலுத்தி ஒட்டையாக்கல்) 1. துளையிடல் 2. கூரியனவற்ருல் பீறுதல் 3. தைத்தல் “பூம்புனனுரையும் புரையக்குத்தி' (பெருங். வத்தவ. 12, 48) 4. கிண்டுதல் (திருவிளை. விடை 10) 5. இடித்தல் 6. கொத்தித்தின்னுதல் (பொருந. 222) 7. ஊன்றுதல் (முல்லைப். 41) 8. தடை செய்தல். ஒப். குற்று

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 71
குற்று, பி. வி. (முன்னது) 1. ஊடுருவல் 2. இடித்தல் 3. தாக்கு
தல் (சந்தபு. சிங்சமு. 189)
கொட்டு, பி. வி. (முன்னது) 1. குத்துதல் 2. இடித்தல் 3. அடிக் தல் 4. குழிக்சவிடத்திற் சொரிதல் 5. அப்புதல் (திருமுரு.
35) 6. உதிர்த்தல்
குள-வி, பெ. (துளைப்பது) 1. கொட்டுமியல்புள்ள ஈ வகை 2. காட்டுமல்லிகை (குறஞ்சிப். 76) 3. மலைமல்லிகை (புறசா 168, 12)
குட்டு, பி. வி. (கொட்டுதல்) கைமுட்டியால் தலையில் இடித்தல். ஒப்.
வட. கு ற்ற்
கோ, பி. வி. (குத்திப் பிணைத்தல்) 1. நூலைப்புகுத்தி இணைத்தல் *கோத்தணிந்த வெற்பு மணி' (பெரியபு. மானக்கஞ். 22) 2. கைபிணைத்தல் (திவ். திருவாய், 6, 4, 1) 3. ஒன்று சேர்த்தல் 4, ஒழுங்குபடுத்தல் 5. புனைந்துரைத்தல் 6. உடுத்துதல் (தேவா. 509, 2) 7. எதிர்த்தல் (சீவக. 1290) கவிந்துகொள்ளுதல்" எனும் அர்த்தத்தில் குவிதலின் கீழ்க் காண்க. வட, நீங்க்ற க்ஹ்
கோப்பு, பெ. (முன்னது) 1. சூத்தியிணைக்கை 2. ஒழுங்கு (விநா யகபு. 62, 15) 3. அமைப்பழகு (திருக்கோ. 161) 4. உபா யம் (விறலிவிடு. 421) 5. (கோக்தெடுக்குஞ் சுமை (நாலடி. 828) 6. படித்தாம் 7. காய்கறிகள். கவிவு எனும் அர்த் தத்தில் குவிதலின் கீழ்க்காண்க.
கோ-தை 2, பெ. கோத்தது) 1. பூமாலை (பெருங். உஞ்சைக். 48) 77) 2. முத்தாரம் (பதிற்றுப். 88, 31) 3. ஒழுங்கு (பிங்.) 4. (கோதிமுடிப்பது) பெண்கள் தலைமயிர் 5. (ஆகுபெயராய்) பெண் 6. (?) சேரன். காற்று எனும் அர்த்தத்தில் ஊதை (

Page 42
72 அநுபந்தம்
குடி 8. பெ. (குடிக்கொள்வோர்) குடும்பம். இது ஆகுபெயர் 'ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும்’ (புறநா. 183, 5) ஒப். குடி 2. வட, கு ல, ங்கோ க்ற, இப் பிந்திய சொல் தமிழ்க் கோட் டத்தையொத்தது. வடமொழியளர் இதனை ங்கோ + த்ற எனப் பசுச் சம்பந்தமாய்ப் பிரிப்பது அத்துணைச் சிறப்பன்று.
குடி-கை, பெ. (கவிந்து நிற்பத) 1. கோவில், "முதியாள் குடி குடி-சல், கையும்' (மணி. 24, 161) 2. வீடு “உறையுட் குடி-சை, குடிகையும்' (மணி. 6, 63) 'து சக்குடிஞையும்' பெருங்க. இலா, 12, 43) வட, குற்றி கா( (ر. و 1 راع 600 - 5
குடி-கை, பெ. (குவிந்தது) குகுெ. வட, கு ன் டி கா
குடி-ஞை 2, பெ. (வளைந்த உறுப்பையுடையது அன்றேல் வளைந்து செல்வது) 1. கோட்டான் 'குடிஞையிாட்டு நெடுமலையடுக் கத்து' (மலைபடு. 141) 2, நதி ‘கொண் மூவரவொத்துளதக் குடிஞை' (கந்தபு. காளிக். 3) ஒப். கோட்டான்
குடி-லம், பெ. (வளைவு, புரிபோன்றது) இவை வடசொல், தமிழடி
.யாய்ப் பிறந்தன و نویل-_{gL
குளி-கை, பெ. (குவிந்து திரண்டது) மாத்திரை. இது வடசொல்.
டகர வியஞ்சனம் ளகரமாயிற்று.
குடு-கு <குட <குழு <உழ-ல் <உள்
குடு-கு, பெ. (வளைந்து திரண்டது) ஒட்டினலான கலயம். குடுக்-கை, குடிகை காண்க. குடு-மி, பெ. (வளைந்தது, திரண்டது) 1. கிரீடம் ‘குடுமிகொண்ட மண்ணுமங்கலம்' (தொல். பொ. 68) 2. கோழிச்சூடு, கொண்டை 3. மலையுச்சி *வடவரைக்குடுமி" (கம்பரா. திரு வவ. 8) ஒப். கோடு 4. தலையுச்சி ‘குடுமிக் கூந்தலில் நறு நெய் பெய்து' (இறை. 1 உரை) வட கி ரீ ட, கூற்ற, கு ற்கு ர, குற்றி ர, குடா, சோ ட. பிந்திய வடசொற்க ளில் ககரம் சகரமானமை ஒலித்திரிபு. குடை, பெ. (குவிந்தது, உட்கோலியது) 1. கவிகை 2. தலை 8. உண்கலம் 'இரும்பனங்குடை’ (புறநா. 177, 16) 4. ஓர் கூத்தி. ஒப். குடந்தம், குடம் 1 ly குட்-டை, பெ. (வளைந்தது, கவிந்தது) 1. குளம் 2. சிறுச் சிறுப்
பொள்ளல் கொண்டது 3. குறு காண்க. குண்டு, பெ. (வளைந்து திரண்டது, குவிந்தது) 1. வளையம் 2. உண்டை 3. குளம் “குண்டு நீரிலஞ்சி' (மணி. 8, 8) வட.
கு ன் ட- குளம், கலயம். குண் ட ல = காதுக் கம்பி

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 73
கோடு <குட <குழ <உழ-ல் <உள் கொடு, உரி. (வளைந்த) கோணலான, மடிந்த, கொடு-மை கொடும், கொடுங்-கை, கொடு-மரம், கொடு-வரி, கொறுக்காய் (கொடுக்-காய்) எனும் சமாசங்களிற் காண்க. கொடு எனுஞ்சொல் குட வின் விகாரமாம். வட, கு ற்ற்
கொடி, பெ. (வளைவது, அசைவது) 1. வல்லி ‘நுடங்கு கொடி மருங்கின்' (பெருங், உஞ், 41, 80) 2. துவசம் 'நுடங்குங் கொடிமாடமூதூர்' (சிங்கா, கனக. 310) ஒப். வளை (w/உழல்) வளைதலினின்றும் வளர்ந்து படர்வதாகிய 'கொடி’, வட. வ ல் லீ ச்சொல்லினுக்கு உற்பத்தி எமது வளை எனும் அடியே. குடங்குவது கொடி, வளைவது வ ல் லீ எனக் காண்க. 8. நீளம் 'பழனவெதிரின் கொடிப்பிணையலளே’ (ஐங்கு, 91) 4. வரிசை ‘கருங்கொடிப்புருவம்' (சிந்தா 658)
கொடி, பெ. (மீட்டு வளைந்து வருந்திசை) கிழக்கு 'கொடிக்கொண்ட கோடையால்' (கலித். 150, 15) குடக்கு எனும் மேற்குப் பொருளுள்ள சொல்லினை விகற்பித்து இச்சொல் எழுந்தது. ஒப். குணக்கு = கிழக்கு கோடையும் காண்க.
கோடி-ச்சி, பெ. (வளைந்தது, இடுக்குவத) இடுக்கி அலகு “கொடி
கொடி-று, அறும் பேதையுங் கொண்டது விடாது" (திருவா. கொறு-டு, 4, 68) கொடிறு எனுஞ் சொல்லே ஒலிமாற் .முல் கொறு,ெ குறடு என்ரு யிற்று ,1 05-رورق
கொடி-த்சி, பெ. (வளைந்தது, வட்டமானது) பூவடிவான ஓர் தேரு
+الLطے
கொடி-த்சில், பெ. (உட்கவிந்தது) மரத்தோண்டி
கொடு-கு, த. வி. (வளைதல்) ஒடுங்கிக் குவிதல் ‘கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்' (தேவா. 918, 1) இங்கு கொடுகுதல் வளை தலையும் தறுகண்மையையும் ஒருங்கு குறிப்பதாகலாம். ஒப். ஒடுங்கு, ஒதுங்கு, ஒருவு
கொடு-க்கி,
கொலுரு-க்கி, பெ. (முன்னதி) 1. கொளுவியிழுப்பது 2. பூட்டு கொக்-கி, வது. ஒப். குறங்கு - கொளுக்கி
கொக்-கை,
கொடு-க்கு, பெ. (வளைந்தது, குறடுபோன்றது) 1. கண்டின் ခို့ ငိဂျီ { இடுக்குங்கால் 2. அலகு 8 ஆதலால் கொப்ெபு கது-ப்பு, (= கதுப்பு) கன்னத்துக்குமாயிற்று. ஒப். கொடிறு
கொடு-க்கன், பெ. (கொடுக்குள்ளது) தேள்

Page 43
74 அநுபந்தம் கொடு-தி, பெ. (கொளுவிப்பிடிப்பதி மர ஆணி
கொடு-மை, பெ. (வளைந்திருத்தல்) 1. வளைவு 'எண்ணுட்டிங்க
கொடு-வை, ளனைய கொடுங்கரை... ... சிறுகுளம்’ (புறநா. 118, 2) 2. வன்மை. வட, க்று ர இவ்வடியினின்றன்று கடு என்பதினின்று பிறந்தது. அதன் கீழ்க்காண்க,
கோட-ணை. பெ. (கொடுமையின் வேருெரு உருவம்) கொடுமை (பிங்.)
கொடு-ம்பை, பெ. (திரண்டது, வளைந்த்து) 1, மலையுச்சி 2. குளம்.
ஒப். குடுமி
கூ-ம்பு 1, - பெ. (முன்னது) 1. தேர்மொட்டு (திவா.) 2. பாய்மரம் *கூம்புமுதன்முறிய வீங்கு பிணியவிழ்ந்து' (மணி. 4, 30). மலையாளத்தில் இது மலையுச்சியாதியனவற்றிற்கும் பெயர்.
கோட்-கு, த. வி. (வ்ளைந்தோடுதல்) 1. சுழலுதல் ‘வளிவலங் கொட்குமாதிரம்' (மணி. 12, 91) 2. அலைதல் “கொடும் புலி கொட்கும்வழி' (சிறுபஞ். 80)
கோகு, டெ, (வளைந்தது) 1. புயம் (சூளா. அரசி. 240) 2. அடைவு
கேடு 8. கபடம் ஒப். வட, ங்கு ஹ்
கொட்-பு, பெ. (முன்னது) சுழற்சி “கொட்பின்றி ஒல்லும் வாயூன்று
நிலை' (குறள் 789)
கொக்கு, பெ. (கொளுக்கிபோலும் நெஞ்ெசொண்டுடைய) பறவை. இச்சொல் ‘கொட்கு' எனும் உருவத்தின் திரிபாம் என்பது துளுவத்தில் இது கொற்ங்கு என நிற்பதால் விளங்கும். ஒப். கோட்டான், குடிஞை, கொக்கி (கொடுக்கி, கொளுக்கி)
கோக்-கட்டி, பெ. (சிறிது வளைந்தது) குறட்பனங்கிழங்கு
கோக்-கரை, பெ. (வளைந்தது) 1. சங்கு 2. வில் 3. பாம்பு
கொட்-டகை, சிறு மண்டபம். பாளி கொ ற்ற்ஹ க வட
Gò 35 IT U-LņKö, ங்கோ ஷ்ற்ற க. இவ்வடசொல்லை ங்கோ, பசு எனும் சொல்லோடு சம்பந்தப்படுத்துதல் பொருந்தாது. குடில், கொட்டகை, கொட்டில் என்பனபோல குட எனும் அடியினின்று பிறந்ததாகக் கூறுதலே சிறப்பாம்.
கொட்-டம், பெ. (கவிந்தது) 1. மாட்டுக்குடில், 2. வாயிலிற்
கொட்-டம். பெ. (திரண்டது) நூற்குங் கொட்டை
} பெ. கவிந்தது) 1. களஞ்சியம் 2. அரண்மனை கொட்டி, கோபுரவாசல் வட கோ ற்ற்ரு ர ஒப், வட.
கேர் ஷ்ற்ற ங்கா ர- களஞ்சியம்

ஓர் வழியடிச்சொல்ல்லிற் பிறந்தன 75
கொட்டி 2, பெ. உடலை வளைத்தல்) ஓர் கூத்து. கொடுகொட்டி, கொட்டிச்சேதம் எனவுமாம். ஒப், குடம் 1, குடங்தை, கூத்து கொட்டி, பெ. (சூழ்ந்துவரல்ல்) 1. கூட்டம் 2. மாட்டுமங்தை கொட்டி-யம், 3. எருது வபா ட. நீங்கோ ஷ்ற்- கூட்டல் ஆகவே ங்கோ ஷ்ற்ற எனும் மாட்டுப்ப்பட்டி அர்த்தங்கொண்ட சொல் ங்கோ எனும் மாட்டின் சார்ர்பாயன்று குட எனும் அடியாலே பிறந்ததெனக் காண்க. ஒப். கோட்டம்
கொட்டு, பெ. குவிந்தது, உட்டுளைெேகாண்டத) 1. நெற் கூடை 2. குழாயுள்ள மாத்துண்டம் 3 மேளம் (சிலப். 3, 14) வட, கோ ஷ்ற்ற-அடிவயிறு, குதழி
கொட்டை, பெ. (திரண்டது) 1. குகுமிழ் 2. விதை 3. தலைப்பா
கம் 4. சுருள்
கோளு-வு <குழை <உழல் <உள்
கொளு-வு, பி. வி. (தலைவளைந்த இதிண்ணிய பொருளால் பற்றுதல்) 1. பூட்டுதல் 'அறிவென்னுந்ததாள்கொளுவி' (திவ். இயற். 3, 12) 2. அகப்படுத்துதல் 33. சிக்குதல் 4. கொள்ளச்செய் தல் (புறநா. 55, 1) 5. தீமூடிமட்டுதல் (திருவாச. 6, 19) 6. தூண்டிவிடுதல் (கலிக். 144, 20) ஒப். வட, ங்க்நூறு ம்ப்ஹ் கொள், பி. வி. (முன்னது) 1. கைகயாற் பற்றுதல் (சீவக. 430) 2. முகத்தெடுத்தல் (மதுரைக். 2238) 3. பெறுதல் (குறள். 222) 4. விலைக்கு வாங்குதல் 5. உரிமையாக்குதல் (சீவக. 457) 6. உள்ளேகரிக்கச்செய்தல் 'சிதரரிக் கண் கொண்டர்ே' (நா லடி. 394) 7. கருதுதல் 8.8. நன்கு மதித்தல் (குறள் 699) 9. உற்சவமெடுத்தல் ‘தண்டபதங்கொள்ளுந் தலை நாட்போல' (சிலப். 6, 180) 10. மனம் பொறுத்தல் (தொல், பொ. 147 உரை) 11. ஒத்தல் “வண்டினம் யாழ்கொண்ட கொளை' (பரிபா. 11, 125) ஒப். கோலு
கொடு, பி. வி. (கொள்ளச்செய்தல்) 1, ஈதல் (குறள் 1005) 2. விற்றல் (திருக்கோ. 63), “ெெகாள்ளுதல்' கொடுத்தல் என வந்தமைபோல, "குளித்தல்" குடித்தல் என வந்தமையையுங்
巴苔丽丁@öT令。
கொள்ளை, பெ. (கொள்ளல்) 1. குஞ்றையாடிப் பற்றுகை 2. வாங்கும் விலை 'சில்பதவுணவின் கொள்ளைசாற்றி" (பெரும்பாண். 64)
3. அடையும் பயன் 4. பெருவாரிநோய் 5. மிகுதி 6. கூட்
L - lo

Page 44
76 அநுபந்தம்
கள், பி. வி. (கொள்ளுதலின் மரூஉ) 1. பறித்தல் (குடா.) 2. களை பிடுங்குதல் (குறள் 1038) 8. திருடுதல் ‘கட்போருளரெனின்’ (சிலப். 5, 115) 4. வஞ்சித்தல்
கள,
களர, பெ. (முன்னது) 1. திருட்டு ‘காமங்களவிட்டு’ (பரிபா.
q=a; } 11, 42) 2. வஞ்சனை
களவம்,
கள்ளம்,
கள்வன், பெ. (கொள்ளும் அவன்; கொடுக்காற் பற்றுமதி) 1. களவன், திருடன் 2. நடுச் சொல்வோன் (பிங்.) 3. நண்டு
(ஐங்குறு, 21) களவனும் அது (கலித். 88, 10) ஒப். கொடுக் கன் 4. முசு (பிங்.) 5. (?) யானை. ஒப். வட கல ம்ப்ஹ கா, பி. வி. (கள்ளலின் மரூஉ. கவர்தலின் திரிபுமாகலாம்) 1. கவர் தல் 2. மறைத்தல் (புறநா. 1, 8) 3. ஒடுக்குதல் ‘காத்தும் படைத்துங் கரந்தும் விளையாடி’ (திருவாச. 7, 12) 4. (த. வி. மறைதல் (மணி. 2, 26) 5. கெடுதல் (திருக்கோ. 218) கரவு, பெ. (= களவு; ?= கவர்வு) 1. களவு 2. வஞ்சனை கர வடம், வட. க ர வற்ற கொழு-தன், பெ. (கொள்ளும் அவன்) 1. கணவன் 2. இறைவன்
(குடா) கோபூ-ந்தன், பெ. (முன்னது) 1. கணவன் 2. கணவன் தம்பி கொற்-று, பெ. (கொள்வதி) உணவு
கோட்-பு, பெ. கொள்ளுதல்) 1. கொள்ளுகை 2. வலிமை. ஒப்.
கொற்றம்
கோட-ல், பெ. (முன்னது) 1. கொள்ளுகை 2. பாடங்கேட்கை
(நன். 40) 3. மனத்துக்கொள்கை
கோளை, பெ. (முன்னம்) 1. பிடிப்பு 2. கோட்பாடு (கலித். 34, 18) 3. பயன் (கலித். 34, 17) 4. இசை “புரி நரம்பின் கொளை' (பரிபா. 7, 77) 5. தாளமிட்டு ஒற்றறுக்கை (சிலப். 17. ஒன்றன் பகு. 2) 6. பாட்டு (பரிபா. 16, 12)
கோளுத்து, பி. வி. (பற்றச்செய்தல்) 1. கொள்ளுவித்தல் ‘புகை யைக் கொளுத்தி அமைத்த ஊன்’ (புறநா. 14 உரை) 2. அறிவுறுத்துதல் (பெருங். உஞ்சைக். 58,70) 8. விளக்குதல். 4. தீப்பற்றவைத்தல் 5. வீணையாதியனவற்றின் ஒலியெழச் செய்தல் 'நரம்பினுய கருவியைக் கொளுத்து மாக்கள்’ (குடா 2, 39) 8. நடப்பித்தல் (சிலப். 8, 17)

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 77
கொளுத்து, பெ. குலவுதலின் கீழ்க்காண்க.
கொள்-ளி, பெ. (கொளுத்துவது) 1. எரிகட்டை (ஐங்குறு. 295)
2. நெருப்பு (நெடுகல், 8)
கோழந்-து, த. வி. (கொளுத்துண்டெரிதல்) 1. சுவாலித்தல் 2.
வெயிலிற் கருகுதல்
கொழ-ந்து, பெ. (முன்னதி) சுவாலை, ஒப். வட, குஷ் கு ஷா கு.
கோள் 1, பெ. (கைக்கொள்வது) 1. பற்றுதல் ஏற்றல் (பரிபா. 4. 57) 2. துணிபு (குறள் 646) 3. மதிப்பு 4. வலிமை (பிங்.) 5. தன்மை 6. (கொண்டு சென்று சொல்லும்) குறளை 7. பொய் 8. (உயிரைக் கொள்ளல்) கொலை (சீவக. 264) 9. (வளைவுண்மையால்) பாம்பு 10. (சார்புபற்றி) விஷம். ஒப். வட, நீங்க்ஹோ ர. கிரகம் ஆதிய அர்த்தங்களில் குலவு தலின் கீழ்க்காண்க.
கோள-ரி, பெ. (முன்னது) சிங்கம்
கொளு, பெ. (கொளுவுவது) 1. உருவு திரையை மாட்டுங் கருவி.
2. கருத்து விளக்கும் சொற்ருெடர்
கோட்-பு, பெ. (கொள்ளுதல்) 1. பறித்தல் 2, ஏற்றல் 8. வலிமை 'விதியின் கோட்பால் வீடினன்' (கம்பரா. உருக். 81)
கோட-ல், பெ. (முன்னது) 1. கொள்ளுகை 2, பாடங்கேட்கை ܀
8. மனத்துக்கொள்ளுகை
கொல், பி. வி. (கைப்பற்றல்) 1. உயிர் கவால் 2. வெட்டுதல் 'மரங்கொஃறச்சர்' (சிலப். 5, 29) 3. கதிரமுறுத்தல் (தொல். பொ. 76 உரை) 4. அழித்தல் (திருவாச. 12, 16) 5. துன் பப்படுத்தல் (சீவக. 642)
கொலை,
கோற-ல், ! பெ. (முன்னது) 1. உயிர்வதை 2. இமிசை
கொற்றம், பெ, கொன்றழித்தலோடு சம்பந்தப்பட்டது) 1. வெற்றி (குறள் 583) 2. வீரம் "பெரும் படைக்கொற்றம் பீடழிந்து' (பெருங், மகத், 8, 90) 3. அரசியல் (பெருங். இலாவா. 5, 73)
4. வன்மை (குடா.) கொற்-றி, பெ. (கொல்வது) 1. கொற்றவை (வெற்றி செறிந்த ஐயை
எனும் தெய்வம் 'பெருங்காட்டுக் கொற்றிக்குப் பேய்
நொடித்தாங்கு'(கலித், 89, 8) 2. ஒருவகைக் கூத்து

Page 45
78 அழிபந்தம்
கோற்றவன், பெ. (கொற்ற முள்ளோன்) 1. வெற்றியாளன் ‘ஊர்
கொண்ட உயர் கொற்றவ' (மதுரைக். 88) 2. அரசன் (சீவக. 2544)
குல-வு <குழ <உழ-ல் <உள் குல-வு, த. வி. (வளைதல், கவிதல்) 1. வளைதல் ‘குலவுச்சினைப் stђcen-a. பூக்கொய்து’’ (புற6ா. 11, 4) 2. குவிதல் ‘குலவுமணல்' (ஐங்குறு. 153) 3. நெருங்கியுறவாடல் 4. உலாவுதல் ஒப். குடவு, குலம். வட, கு ல், கு ல குள-சு, பெ. (வளையமாடியது, குழிக் கதி) 1. கயிற்றுச் குழை-ச்சு, சுருக்கு 2. எலும்பின் சந்து. ஒப். குழை கொளு-த்து, பெ. (முன்னது) 1. உடற் சந்து 2. ஆபரணங்களின்
பூட்டு - கொளுக்கி (புறநா. 150 உரை) கொலு-சு, (வளையமாயுள்ளது) 1. கை கால்களில் அணியும் வ%ளந்த ஆபரணம் 2. ஓரளவுச் சங்கிலி, ஒப். சிலம்பு (சுலம்பு) இது சலவுதலினின்று பிறப்பது; இங்கு குலவுதலினின்று கொலுசு வந்ததுபோல. குல்-லம், பெ. (வளைந்தது, உட்கவிந்தது) முறம். ஒப். சுளகு, இஃது சுலவு எனுஞ்சொல்லினின்று பிறந்து முறக்தையே குறிச் கும். முறத்தையும் காண்க, முடங்கி வளைந்திருப்பது முறம். வட. கு ல் ய= முறம். பாளி கு ல் ல ஒருவகை மாக்கலம் g) on-ovđt, பெ. (சக்கரத்தோடுதொடர்புடையவன்) குசவன். மலையா ளத்தில் கு லா ல் என்பது சக்கரம். வட, கு லா ல குல-ம், பெ. (வளைந்து கூடிவந்தது) 1. கூட்டம், மந்தை 2. சாதி, இனம் 3. உயர் குடிப்பிறப்பு (குறள், 960) 4. வீடு, அரண் மனை, கோயில் 5, (துளையுள்ளது) மூங்கில். ஒப். குமு, குடி, கூட்டம். வட. கு ல்=சேர்த்தல், குவித்தல், கு ல = குலம் *
குலை, பெ. வளைந்தது) செய்கரை. வட, கூ ல
கோ-லு <குல-வு <குழை <உழ-ல் <உள்
கோலு, பி. வி. (வளைத்தல், கவித்தல்) 1. வளைத்தல் "நெடுங்க ழ்க் கண்டங்கோலி' (முல்லைப். 44) 2. உட்கவியச் செய்தல் *சிறுடை கோலிக் கீழிருந்தூட்டுபு' (குறுங். 60, 8) 3. திரட் டிவைத்தல் (திருக்கோ. 110) 4. முகந்து அள்ளுதல் (கலில் 28 உரை) ஒப். கொள். 5. விரித்தல், ஆலோசித்தல், தொடE குதல் 6. உண்டாக்குதல். வட, கு ல்=சேர்த்தல் ... ww. *******--

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 79
கோரு, பி. வி. (முன்னது) 1. தண்ணீர் முகத்தல் 2. விரும்புதல்
8. வேண்டிக்கொள்ளுதல் பெ. கோரிக்கை.
கோல-ம், பெ. (வளைந்திருப்பது, வளைந்துவருகை) 1. சுற்றிவருதல் *ஊர்க்கோலம்' 2. உருவம் 3. வேடம் , “உள்வரிக்கோ லத்து' (சிலப். 5, 216) 4. ஆபரணம் (சிலப். 30, 18) 5. அலங்காரம் 6. அழகு 'கோலக் தனிக் கொம்பர்" (திருக்கோ 45) 7 நிறம் 8. தன்மை 9. [வளங்கோடுவதாற் போலும்) சிறு நீரோட்டம் (பிங்.) 10. முயற்சி 11. உருண்டையா னது) பாக்கு, இலங்கை. பன்றி எனும் அர்த்தத்தில் கேழல் (= கிண்டுவது) எனும் சொல்லின் விகாரம்போலும். "கேழறி கழ்வரக் கோலமொடு பெயரிய' எனும் பரிபாடல் காண்க
(2, 16)
கோள-ம், பெ. (வட்டித்து உருண்டைய8 னது) 1. உருண்டை 2. பந்து 3. கட்டி வட, ங்கே ல, ங்கு ல, ங்க்லெள
கோள் 2, பெ. (முன்னது) 1. கிரகம் (பெருங். இலாவாண 11, 70) 2. இராகு (சீவக. 454) 3. மேகம் (சீவக. 820) 4, ஒளி 5. (வளைந்திருத்தலால்) பரிவேடம் (சீவக. 1098) 6. பாம்பு (சீவக. 360 உரை) கொழு (திவா) 8 = குலை. வட ங்கோ ல
கோல-கம், பெ. உருண்டையானது) 1. மிளகு 2. திப்பலி. கோள-கம், வட கோ ல க
கோல், பெ. (வளைந்தது, திரண்டது) 1. கொழு (பிங்.) 2. திரட்சி 'கோனிறவளையிஞர்க்கு ' (சீவக. 209) 3. மரக்கொம்பு (சூடா) 4. கம்பு (கலித். 82, 24) 5. செங்கோல், அரசு (குறள் 546, 558) 6. தூரிக்கை (பிங்.) 7. துலாக்கோல் (பிங்.) 8. பிரம்பு 9. குதிரைச்சம்மட்டி 10. அம்பு 11. யாழ் நரம்பு (சீவக. 459) 12. சித்திரவேலை (=கோலம்) (புறநா. 36, 2)
கோன்-மை, பெ. (கோல்செலுத்துகை) 1. அரசாட்சி 2. அரசன்
3. தலைவன். ஒப். கொலு 酸
கோன், பெ. (கோன்மையுடையது) 1. தலைமை (தேவாா. 997, 6)
Gan, 2. மலை 3.பெருமையிற் சிறந்தோன் 4. அரசன் (பிங்) 5. தகப்பன் (கலித். 116, 11) 6. குசவன் (புறநா. 256, 7) ஒப். வட, நிகோ மான் இதனை பசுக்களையுடையோன் என அர்த்தஞ் சொல்வர். அவ் அர்த்தமும் பொருந்தும்.

Page 46
SO அநுபந்தம்
கோடு <குட-கு <குழ <உழ-ல் <உள்
கோடு, த. வி. (வளைதல்) “செங்கோல் கோடியோ’ (மணி. 28, 188) ஈண்டு 'குட' குட-கு, கொடு-கு என நின்று கோடு ஆயிற்று.
கோடு, பெ. (வளைவு) 1. கொம்பு 2. மரக்கொப்பு 3. சங்கு 4.
மயிர்முடி 5. மலையுச்சி 6. மேலிடம் 7, ஆற்றங்கரை 8 வரி 9, பக்கம். ஒப். கோடி, குடுமி, குன்று, கொப்பு, கூம்பு, குவி. வட கூ ற்ற.
கோடி, பெ. (வளைந்தது) 1. வளைவு 'முளைத்திங்கட்கோடியென' (திருவாரூ. 134) 2. முடிமாலை (பிங்) 3. நுனி 4. முனை 5. மூலை 6. சேனையின் பிற்கூழை 'உரமுதற் கோடியிரு யின்' (குறள் 767 உரை) 7. எல்லை 8. புதியது 'கோடி யுடுத்தல்' 'கோடிகாய்த்தல்' 9. கடைசி எண்) நூறு நூறு யிரம் 10. பெரும்படை (பிங்.) 11. விவாதத்தில் மேன் மேல் நிகழ்த்தும் கடை. வட கோ ற்றி, கூ ற்ற.
கோட்-டம், பெ. (முன்னது) 1. வளைவு “மரத்தின் கனக்கோட்டங் தீர்க்குநூல்' (5ன். 25) 2. வணக்கம் “கோட்டங்தரு5ங்குரு முடி வெற்பன்' (திருக்கோ. 156) 3. தோட்டம் 4. கோ யில் (சிலப். 14, 10) 5. பாசறை (பிங்.) 6. அறை (மணி. 6, 59) 7. சிறைச்சாலை (சீவக. 262) 8 குளக்கரை ‘உயர் கோட்டத்து. வான்பொய்கை' (பட்டினப். 86) 9. யாழ் (வளைந்தது) (பிங்.) ஒப். கோடு, கூலம். வட கோ ஷ்ற்றமதில், ங்கோ ஷ்ற்ற்ஹ என மாட்டுக்தொழுவம்
嘎 -
கோட்-டு, பி. வி. (வளையச்செய்தல்) 1, வளைத்தல் (சீவக. 1568) 2. முறித்தல் 3. சித்திரம் முதலிய வரைதல் 'தன்னும மேரு வினுங் கோட்டினனே' (பாரத. சிறப்புப். 19) 4. கட்டுதல்
கோடி, பி. வி. (வளைத்து உருவாக்கல்?) 1. உருவாக்கல் "கடிமண் டப முன்கோடிப்ப' (காஞ்சிப்பு, திரும. 4) 2. உரூபிகரித்தல் 3. அலங்கரித்தல் “கோடித்தன்ன கோடுசால்வையம்' (பெருங். இலா, 8, 185) ஒப். சோடித்தல்
கோட்-டை, பெ. (வளைவானது) 1. அரண் ‘உலவாக் கோட்டை' (திருவாலவா. 50, 13) 2. பரிவட்டம் 'சந்திரனேர் கோட்டை கட்டிக்கொண்டிருந்த கோலம்' (கொண்டல் விடு. 72) கோட் டம் காண்க. வட, கோ ற்ற, கோ ற்ற்ற.
கோட்-டான், பெ, வளைந்த உறுப்புடையது கொக்கு. ஒப். குடிஞை

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 81
கூட-ம், பெ. (திரண்டது, கவிந்ததி) 1. மலையுச்சி "கூடக் கூம்பு" (பெருங், உஞ். 40, 72) 2. வீடு “மதலை காட்டமைத்த தன் பழங்கூடம்" (கல்லா. 60, 22) ஒப். கோட்டம். வட கு ற்ற = வீடு, கூ ற்ற = மலைச்சிகரம் ஆதியன
கோட-கம், பெ. (வளைந்தது) ஒருவகைச் சிகாம்பொருந்திய முடி 'கோடக மணிந்த கோல முடியிஞய்' (சிந்தா. 2989) வட. கோ ற்ற = வளைவு, குடில், கோ ற்ற ர = குகை -
GET血一旺fb。 பெ. (வளைந்தது, திரண்டது) அரும்பு முகை, டகா G5m T-am圧。 வியஞ்சனம் ரகரமாயிற்று. வட கோ ர, கோ
H &
கோரம், பெ. (முந்தியதன் திரிபு) வட்டில்
கேடகம், பெ. (வட்டாகாரமானது) 1. பரிசை 2. [6/%TuւoT
கேடயம், யமைந்த) பாசறை 3. மலைகள் அடுத்துள்ள ஊர் (பிங்.) இங்கு ஒகாரம் ஏகாரமாயிற்று. வட, க்கே ற்ற =
பரிசை, சிற்றூர்
கிடு-கு, பெ. (முன்னதன் திரிபு) 1. பரிசை'(சீவக. 2218) 2. சட்டப் பலகை (சீவக. 118) 3. (மறைப்பதினற்போலும்) முடைந்த ஒலைக்கீற்று 4. (வட்டவடிவான) பறைவகை
சேடகம், பெ. (கேடகத்தின் திரிபு) பரிசை 'மயிர்ப்புளக சேடகமு மேந்தி' (குளா. அரசி. 159) வட, க்கே ற்ற க. ஈண்டு அடிக் ககரம் சகரமாயிற்று
சிரகம், பெ. (சேடகத்தின் திரிபு) 1. தலைச்சீரா 2. சீர்க்கலயம் 'அடர்பொற் சிரகத்தால் வாக்கி" (கலித் தி1, 7) 8. திவலை (திவா.) •ጎ
சிகாம், பெ. (சிரகத்தின் திரிபு) 1. வட்டில் 2. (திரள்வடிவத்தின் பொருட்டு) மலையுச்சி 'சிகரமுயர்ந்த செடியமலை" (புறநா. 135 உரை) 3. மலை (குடா) 4. தலை 5. கோபுரம் 6. கமான்வளைவின் நடு 7, உயர்ச்சி 8. நீர்த்திவலை 9. (சார்பு பற்றி) அலை. ஒலிநிலைமாற்ருல் சிரகம் சிகரமாயிற்று. வட. Uபி க்ஹா, US க்ஹ ர
சிகரி, பெ. (சிகரத்தையுடையது) 1. மலை ‘கோலவருவியஞ்சிகரி' (பெருங். நாவாண. 1, 182) 2. கோபுரம் *மங்குமுேய்சிகரி' (பரத. பாவ. 29) வட. Uலி க்ஹ ரி ன்
சிகழி-கை, பெ. (தலையைச்சார்ந்தது, திரட்டிமுடித்தது) 1. தலைமயிர் முடிப்பு 'மேல் விரித்தியாத்த சிகழிகை' (கலித். 96,8) 2. சிரத் தைச்சூழ அணியும் மாலை. இது வடமொழி ரீதியைப் பின் பற்றி ஆக்கிய சிகரிகை எனுஞ் சொல்லின் மரூஉ த. சொ.-6

Page 47
82 அநுபந்தம்
சிகை, பெ. (சிகழிகையின் திரிபு) 1. தலையின் உச்சி 2. குடுமி 'மது மலர் தயங்கு பூஞ்சிகை' (சீவக. 195) 3. மயிற்கொண்டை 4. தீச்சுவாலை, வட. Uலி க்ஹா
சிகி, (சிகையுடையது) 1. மலை 2. மயில் 8. நெருப்பு. இது வட
சொல்: US க்ஹி ன்
கடகம், பெ. (கேடகத்தின் திரிபு) 1. வட்டம் (பிங்.) ஒப். குடகம். 2. வளையல் 'கடகஞ்செறிந்தகையை' (மணி. 6, 114) 3. பரிசை 4. (வளையமாய்ச் சூழ்ந்து நிற்கும்) படை 5. யானைக் திரள் 6, ஒர் எண் 7. மதில் (பிங்) 8. மலைப்பக்கம். கேட கத்தின் அடி ஏகாரம் அகரமாகி கடகம் என நின்றது. வட க ற்ற க - வளையல், ங்க்ஹ ற்ற = கலயம்
காகம், பெ. (கடகத்தின் திரிபு) 1. கமண்டலம் 2. ஆலங்கட்டி
3. கீர்த்துளி 4. நீர் (பிங்.). வட. க ர க
சகடம், ) பெ. (கடகத்தின் திரிபுகள்) 1. சில்லு 2. வண்டி 'பல் சகடி, கதிர் முத்தார் சகடம்' (சிந்தா. 363). கடகம் சகட சகடு, மானமை ஒலி கிலைமாற்று. வட ப0 க ற்ற, UU கற்றி 3 B560-, கா. ஒப். ச க்ற
சாகாடு, பெ. (சகடத்தின் திரிபு) 1. வண்டியுருளை "அச்சுடைச்சா காட்டாரம்’ (புறநா. 256, 2) 2. வண்டி "பீலிபெய் சாகாடு மச்சிறும்' (குறள், 475) வட, UU க ற்ற
377 .சகடியின் திரிபு) மட்பாண்டம். (பெரும்பாண்( ۰ لالاها و .at L
உரை)
டா-ரம், பெ. (கவிந்து நிற்பது) 1. படவீடு 2. வண்டிக்கூடு. இது குற்ற ரு எனும் வடசொல்லினின்று மீண்டெடுத்ததுமாகலாம். ஒப். கூடு, கூண்டு
கூடு, பெ. (கவிந்து மூடுவது) குரம்பை. ஒப். கூடை, ஒப். கூண்டு, வட, கூ ல் - மூடுதல், ங்கு ஹ் - மறைத்தல், ங்கு
ஹா = கெபி. ஒப். கூட்ாரம்
கூடை, பெ. கவிந்து மூடுவது) ஒலைக்கூண்டு, கூடு
கூரை, பெ. (கவிந்து நிற்பது) 1 இறப்பு 'குறுங்கூரைக் குடிாேப் பண்' (பட்டினப். 81) 2. வீடு (பு. வெ. 10. முல்லை. 9, உரை) ஒப். வட குற்ற ங் க

ஒர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 83
கூள் <குழ <உழ-ல் <உள் கூள், த. வி. (வளையமாய் ஒருங்கு சோல்) திரளல் ‘கூண்டன
கரிகள்' (இரகு, மீட்சி. 42) ‘கூடிய வண்டினங் காள்' (திவ். திருவாய். 6, 8, 3) இச்சொல் குழ (குழை) வின் நீட்டல் விகாரமாம். ஒப்.\ குழு. வட கு ல் = சேர்த்தல் கூட்டு, பி. வி. (முன்னது) 1. திரளச்செய்தல் 2. இணைத்தல் 3. அதி
கப்படுத்தல் குட்டினி, பெ. (கூடியிருந்தவள்) கற்பழிந்தவள். இது வடசொல்
கூடு,
குண்டணி, * e குண்டுணி, பெ. (கூட்டிச் சொல்வது) குறளைச்சொல்
கூளி 1, பெ. (ஒருங்கு திரண்டது) 1 சபை 2. இனத்தார் 3. di l-lth, குடும்பம், மங்தை, கூளியர் - (திரண்ட படையின்)
போர் வீரர். ஒப். கூலி, கூளி கூளி 2, பெ. (முன்னது) கூட்டுவோன், சேனபதி
கூலி, பெ. (முன்னது) 1. போர்வீரரின் வேதனம், 2. பணியா
ளர் வேதனம். 3' (சார்புபற்றி) பணியாளன்
குற-ழ் <குழ-ல் <உழ-ல் <உள் குற-ழ் த. வி. (வளைதல்) குனிதல், சுருளல் 'அவனுங்கே பாராக் குற-ண்டு, குறழா' (கலித், 65, 10) ஒப். கொடுகு, குறழ் எனுஞ் சொல் 'குழல்’ சொல்லின் மரூஉ. ஈண்டு ழகரம் றகரமாயிற்று 1. குற-வணவன், (குறண்டினது) வெண்புழு. *அணவன்' அணவு (அண்டு)
T எனுந் துணைச்சொல்லின் திரிபு (32-ம் பக்கங்காண்க) குற-ங்கு, பெ. (வளைந்து மடிந்தது, குறுகியது) 1. கொக்கி 2. துடை குரங்கு, த.வி. (வளைதல்) 1. தாழ்தல் 'இலைப்பொழில் குரங்கின’
(சிந்தா. 657) 2. குறைதல் 'குரங்கா வாற்றல்' (கம்பரா. பா சப் 5) ஒப். குறழ், குறண்டு, குடங்கு, சுருங்கு, சுருள் குர-ங்கு, பெ. முன்னதி) 1. கொடுகுதல் 2. கொக்கி 3. சாகா மிருகம். ஒப். குறங்கு. வட, குலங்ங்க, கு அலுங் ங்க. பாளி கு முறு ங் ங்க ക്ര-്, பெ. (வளைந்து மடிந்தது) 1. குள்ளமானது ' குண் குற-டு2, டைக்குறட்பூதம் ' தேவா. 944, ) 2. மரத் து ண்டம் * ஊனமர் குறடுபோல ' (சிந்தா. 2281), குறு காண்க. ' குறடு ' கொடிமின் மரூஉமாம்.

Page 48
86 அநுபந்தம்
கூர், த. வி. (வளைந்து குறுகுதல்) 1. வளைதல் “மெய்கூர்ந்த பணி
யொடு” (கலித், 81, 6) 2. கொடுகுதல் (நெடுகல். 9. உரை) 3. மெல்லிய முனையாகுதல் ‘கூர்க்குநன் மூவிலை 'வேல்' (தேவா. 367, 8) 4. அறிவு நுட்பமாதல் ‘கூர்த்தவறிவு' 5. விரும் புதல் (திணைமாலை. 124) 6. சினத்தல் (நாலடி, 70) 7. மிகு "தல் “பெருவறங்கூர்ந்தகானம்’ (பெரும்பாண். 28). இச்சொல் கூர்தல் எனவும் கூர்த்தல் எனவும் நிற்கும். வட, க்ஹ-0 ர், கூடி" ச், க்ஷ ர = சவாக்கத்தி. பாளி க்ஹ 0 ர - சாணைக்கல்
குறை, பி. வி. (உட்கோடச்செய்தல்) 1. சுருக்குதல் 2. தறித் குறுக்கு தல். ஒப். வட, ச்ஹி ந்த்
குற்றம், பெ. (குறைந்தது) 1. பிழை 2. அவமானம். 'குற்றம்' ?Å} குற்றுதலினின்று வருவதுமாகலாம். குற்று = குழி (Vகுழ) ஒப். பிழை. இதன் சுயவுருவம் புழை என்பது. இப் பிழை “குழை' யோடினங் கொண்டது. குச்-சம், பெ. (முன்னதி) புறந்தூற்று மொழி. வட, கு க் ஸா கொச்-சு 1, உரி. (முன்னதி) சிறு கொச்சை, பெ. (முன்னதி) 1. இழிவு, 2. இழிந்தவன். வட.
கு க் ஸா குஞ்ச-ம் 1, பெ. (முன்னதி) 1. குறள் (திவா.) 2. கூன் (அக. கி.)
3. குறளைப்பேச்சு (திவா.) வட, கு ம்ப் ஜ குச-ம், (சுருங்குவது) பெண்கள் மார்பு, இது வடசொல். குஞ்ச~ாம், பெ. (? கூனுள்ளது) யானை. வட, குஞ்ஜா. ஒப்.மலை.
குஞ்சு கா கூம்புதல், குவிதல் குஞ்சி, உரி. (குறுகிய) சிறிய குஞ்சு, பெ. (முன்னது) பறவை ஆதியனவற்றின் சிறியவை
கொஞ்-சம், பெ. (முன்னது) சிறிது
தன், உரி. (குறுகிய) இது குஞ்சிரிப்பு ஆகிய தொடர்களில் புன் கொன், j எனும் சொல்லினுக்கிணையாய் வருவது. கொன் = பய
னின்மை (தொல், சொல். 256) குன்னின் மரூஉ போலும்.
கு, உபசருக்கம். (முன்னதி) இது வடசொற்களில் வருவது, குங்க்ரா ம, கு-த ர்க்க ஆதியவற்றிற்போல, குறு>குன் எனும் வழியாகவே இது கடை நிலைகெட்டு வந்ததுபோலும்.

ஒர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 87
குண-கு <குழ <உழ-ல் <உள்
குண்-கு த. வி. (உள்நோக்கிச் சாய்தல்) வளைதல், கோடுதல். ஒப்.
கூன்
குண-க்கு, பெ. (வளைவு) பொழுது மீட்டு வருந்திசை, கிழக்கு. ஒப். குடக்கு, கொடி, கொண்டல். வளைவு எனும் பொருளில் 'கா யின்வாலைக் குணக் கெடுக்கலாமா' எனும் பழமொழி காண்க.
கொண்-டல், பெ. (குணக்கின் மரூஉ 1. கிழக்கு. 2. கீழ்காற்று (புறநா. 34, 22) 3. மழைமேகம் 4. மழை 5. மாரிகாலத்தில் விதைக்கும் ஒரு பயிர்
கொண்-ழ, பெ. (முன்னதி) 1. மேகம் 'குணக்கேர்பு காலத்திற்றேன் றிய கொண்மூப்போல்" (கலித். 82, 1) 2. ஆகாயம். இச் சொல் கொண்மூ<கொண்ணு(குணகு என வந்திருத்தல் வேண்டும், ஒப். மலை. கொங்க
குண-கு, த. வி. (குவிந்து மெல்லென ஒலித்தல்) கொஞ்சிப் பேசுதல்
(திருப்பு. 20). ஒப். கொஞ்சு
குனை, பெ. (வளைந்தது. ஒடுங்கியது) கூர்
கொ?ன,
குந்-தம், பெ. (கூரியது) 1. வேல் (பு. வெ. 4, 7) 2. எறிகோல்
(சீவக. 1678) ஒப்" குத்து, கூனு. வட, கு ந்த
கோணு <குன-கு <குழு <உழ-ல் <உள்
கோனு, ச. வி. (வளைதல்) 1. வளைந்திருத்தல் 2. நெறிபிறழல்.
ஒப். கோடு
கோண-ம், பெ. (வளைந்து மடிந்தது) 1. முடக்கு 2. மூலை 3. மூஞ்
சி (பிங்). கோடு காண்க. வட. கோ ண, ங்க்ஹோ ண
தோணி, (மூஞ்சியுள்ளது) பன்றி. வட, ங்க்ஹோ னின் கோண-ல், பெ, (முன்னதி) 1. வளைவு 2. கூன்
கோண், பெ. (முன்னது) 1. வளைவு 2. மாறுபாடு *கோணக்க
ளிற்றுக் கொடித்தேர்' (சீவக. 28)
குண-ம், பெ. (வளைவு) 1. திரிப்பு 2. வில்ஞாண் 3. கயிறு 4. போக்கு
(வளைவுத்தன்மை). வட குே ண குண-லை, பெ. (உடலை வளைத்தல்) ஒரு கூத்து, ஒப். குடம், குடர்தம்,
கொட்டி, கூத்து குணு, பெ, (குறண்டுவது) புழு, ஒப். குறவணவன். வட, ங்க்ஹ" ண

Page 49
88 அநுபந்தம்
குனி(குண-கு<குழ<உழல்<உள்
குணி, த. வி. (வளைதல்) 1. வளைதல் “குனிவளர்சிலை' (சிந்தா. 486) 2. வணங்குதல் (குடா.) 3. தாழ்தல் (குடா.) 4. இாங்குதல் (சது.) 5. வீழ்தல் (சீவக. 2293) 6. ஆடுதல் 'அன்பரென்பூெ ருகக்குனிக்கும்' (திருக்கோ. 11) 7. குரல்நடுங்குதல் 8. (பி. வி.) வளைத்தல் ‘குனிந்தபுருவமும்’ (தேவா. 11. 4.) இது குனித லென்றும் குனித்தலென்றுமாம்.
குனி-ப்பு, பெ. ( முன்னது) 1. வளைகை 2. ஆடல் (திருவாச. 10, 3)
3. தாழ்வு
குந்து, த. வி. (முன்னதி) 1. வளைதல் “குந்துவன்னெடுஞ்சிலை" (கம் பரா. பிரமாத். 56) 2. மடிந்து உட்காருதல் 3. கொண்டி நடத்தல் - கெந்துதல் 4 தவறுதல்
குன்-ணு, வி. (முன்னது) உடல் வன்க் து ஒடுங்குதல். ஒப். கொடுகு,
(2-2)
கூனு, வி. (முன்னது) வளைதல், முதுகு கோடுதல். இதனல் ‘கூன்'
6த்தைக்கும் ஆக்கைக்கும் பெயராம். கூனி= வளைந்தவள்
கூத்-து, பெ. (உடலை வளைத்தல், வளையமாய் வருதல்) கடனம். ஒப்.
கூள், கூடு, கொட்டி, குடம், குடந்தம், கோடியர், குணி, வட. கூர் ந்த்-குதித்தல், விளையாடல். கூர்ந்த ந ம் - விளையாட்டு
கூப்பு <கோடு-கு <குழை <உழல் <உள்
.கூப்பு, பி. வி. (வளைத்துக் கவியச்செய்தல்) 1. கைகுவித்தல் (சீவக ــــــ 430) 2. உயர்ந்து கவிந்து நிற்கச் செய்தல் "கூப்பியகனகமாழை யால்' (சீவக. 918) 3. சுருக்குதல். ஒப். குப்பு
கூம்பு, த. வி. (முன்னது) 1. ஒடுங்குதல் (குடா.) 2. குவிதல் 'செய்ய கமல மலர் கூம்ப' (நைடத. சந்திரோ. 2) 3. ஊக்கங் குறை தல், ஒப். கும்பு, சோம்பு, சாம்பல்= கூம்பிய மலர்
கூவ-ல் பெ. (உட்கவிந்தது) 1. குழி 2. கிணறு. வட கூ ப. இதற் கு கு+அப் என வடநூலோர் சொல்லும் பிறப்புப் பொருங் தாத ஒப். மலை. கொப்பம் = யானை பிடிக்குங்குழி
கோம்பு, த. வி. (குவிந்து பொருமுதல்) சினத்தல் (பிங்.) வட. கு ப், க்ஷ- ம்ப்ஹ் ஒப். மலை. குப்பு - (பொருமு) அனல்

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 89
கோம்-பல், பெ. (முன்னது) 1. சினங்கொள்ளல். 2. (பி. வி.) கடி
தல். வ. கு ப், கிஷ்" ம்ப்ஹ் கோப-ம், பெ. (முன்னது) 1. சினம் 2. வெறுப்பு 3. மிகுத்தல்:
வட கோ ப. ஒப். மலை. கொம் பிக் க. தம்பலப்பூச்சி, ஒரு வகைத் துகில் எனும் அர்த்தங்களில் கெழுவின் கீழ்க் காண்க. உறைத்த நிறம் எனும் அர்த்தமுள்ள இக் கெழுச் சொல்லில் (கெழு <எல் <எழு) கின்று கெம்பு, செம்பு ஆதியனவும் கொவ் வை, சுவப்பு கோகம் கோபம் ஆதியனவும் பிறக்கும். இவற் றைப் பிருரண்டுக் கண்டு மகிழ்க. கோம்பை, பெ. (குவிந்தது, கூம்பியது) 1. தேங்காய் முதலியவற்
றின் மேற்கூடு 2. அறிவற்றவன் கோம்மை, பெ. (குவிந்து திரண்டது) 1. இளமுலை (பரிபா. 22, 30) 2. மார்பு 3. (சார்பு பற்றி) இளமை, அழகு, வலிமை 4. தி ரட்சி (சூடா) 5. வட்டம் (பிங்.) 6. பெரிதாங் தன்மை "அம்மையு மழகுங் கொம்மை யொடு கழுமி" (பெருங், உஞ் சைக். 40, 210) 7. கொத்தளம் 8. வீடு 9. அடுப்புக் குமிழ் 10. கதவுக் குடுமி 11. குவிந்து திரண்ட ஒரு காய்க் கொடி 12. கை குவித்துக் கொட்டுகை கொங்-கை, பெ. (முன்னது) 1. முலே (சிலப் 4, 49) 2. மரத்தின்
முருடு கொம்-மட்டி, பெ. (முன்னது) திரண்ட காயுள்ள கொடி வகை. ஒப்.
அதிம்மட்டி
பெ. குனிந்து கைகொட்டுவது) கைகொட்டிப் பாடியா Geba’-IG’, டும் விளையாட்டு 95ửb-ID[ISTử),
கோ-மாளம், பெ. (முன்னது) குதித்து விளையாடுகை. வட, குமா ல கும்-மட்டி, கோமா-வி, பெ. (முன்னது) நகைக் கூத்தாடுவோன். ஒப். கோணங்கி.
மலை, கோ டங்கி குமா-ான், பெ. (குவிந்து திரண்டு இளமை பொருந்தியது) 1. இளைஞன் 2. புதல்வன். ஒப். குழந்தை. இது வட, குமா ர என்பதின் தற்சமம். ஆயினுங் கமிழ் வழியடியாகிய குழையினின்றே பிறக் தது; குமாரன் <கொம்மை <குவி <கூம்பு <கொடுகு <குட <குழை என வரும். கு + மாரன் - எளிதில் சாவோன் 67607 6)jLநூலோர் கூறும் வரலாறு பொருங்காது. குமரி, பெ. (முன்னதி) 1. கன்னி 2. புதல்வி 3. துர்க்கை (சிலப்.
11, 214) 4. நித்திய இளமை) அழியாமை (சிலப். 10, 123)

Page 50
90 அநுபந்தம்
கோம-ளம், பெ. (முன்னது) 1. இளமை 3. அழகு (சூடா) 8. மென்மை கோமளக் கொழுந்து' (திருவா. 5, 68) 4. (கொம் மை பொருந்தியது) கறவைப்பசு (குடா). மாணிக்க வகை எ னும் அர்த்தத்தில் கெழுவின் கீழ்க் காண்க. வட கோ ம ல ஒப். கு மா ர
குலி <குமி <கூம்பு <கோடு-கு <குழை <உழ-ல் <හා-ග්r குவி, த. வி. யும் பி. வி. யும் (வளைந்து கூடுதல்) 1. கூம்புதல் 2. செ ருங்கக் கூடுதல் (திவா.) 3. திரண்டு உயருதல் 4 உருண்டு திரளுதல் 5. சுருங்குதல். ஒப். மலை குங்கு க = உள்விழல், பெருமிதங் கொள்ளல் குவி. பெ. (திரண்டு உயர்ந்தது) சுவர் (தனிப்பா. i, 131,331) குவை, பெ. (முன்னது) 1. கும்பவடிவாய்க் கிடப்பது 2. தொகுதி ,{ه-اته5 குவி-யல், குகை, பெ. (குவிந்து கவிந்தது) 1. மலைப் பொந்து (பிங்.) 2. சமாதி யறை (திருமங். 1913) 3 சிமிழ் (சீவக. 1906 உரை) வடங்கு ஹா, கு ஹ ர குமி, க. வி. (முன்னதி) 1. திரளுதல் 2. (பி. வி.) (திரட்டுதல்
குழைந்திறுகச் செய்தல் கும்பு, கும்பம் 1, பெ. (முன்னது) குவியல். ஒப். வட, ங்கு ம் ப்ஹ ونه لافة 35
கும்பம் 2, பெ. (குவிந்து திரண்டது) 1. குடம் 2. முதுகின் மேற்
பக்கம். வட, கும் ம்ப்ஹ குமை, த. வி. (? குவிந்து நெருங்குதல்) 1. குழையவேகுதல் 2. குழம் புதல் 3. இறுகுதல் 4. சேர்தல் 5. அழிதல் 6. (பி. வி.) அவைத்தல் (தேவா, 44, 6) 7. இடித்தல் 8. வருத்துதல் *ஆவி திகைக்க ஐவர் குமைக்குஞ் சிற்றின்பம்' (திவ். திருவாய். 6, 9, 9) குழ-க்கு, பெ. (குவியலானது) 1. மொத்தம் 2. பெருந்தொகை
3. கூட்டம் குழ-று, த. வி. (குமைந்து எழுதல்) 1. கோபித்துக் குமிழிகொள் தமி-று, ! ளல் 2. முட்டிப் பீரிடுதல் 3. வருந்துதல் 4. கு
ழம்பி ஒலித்தல் 5. எதிரொலித்தல் குமி-லம், பெ. (முன்னது) பேரொலி. ஒப். வட, து மு ல குமி-ழ், பெ. (குவிந்து திரண்டது) 1. திரள் வடிவம்*2. நீரில் உண்டா கும் புற்புதம் 8. எருத்தின் திமில் 4. ர்ே வடிக்கும் செடிவகை

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 9.
குமி-ழ், த. வி. (முன்னது) 1. குமிழியிடுதல் 2. மயிர் (?குவிந்து) சிலிர் த்தல் (பிங்.) 3. (பி. வி.) ஒலிக்கச் செய்தல். குமுறுதல் காண்க. குழ-தம், பெ. (? குவிவது, கூம்புவது) 1. மிகுதி 2. படைப் பிரிவு 8. ஆம்பல். இவ்வீற்றர்த்தத்தில் வட, கு மு க்க, இதனை *கு = எவ்வளவு மு ந்த - ஆகந்தகாம் ! ' என்னும் அர்த்தங் கொண்டு ஆம்பலுக்குப் பெயராயிற்று என்றலிலும், பகல் முழு தும் கூம்பியிருக்கலால் ஆம்பலைச் சுட்டிற்றென்பதே அதிக பொருத்தமுடைத்து. குப்-பை, பெ. (குவிந்தது) 1. குவியல் ‘குன்றெனக் குவைஇய குன் முக் குப்பை' (பொருடு 244) 2. கூட்டம் 8. மேடு (குடா) 4. சொத்தை. கும்பல் காண்க. குப்-பம், பெ. (முன்னது) 1. கூட்டம் 2, சிற்றூர். ஒப். வட. விகு.
ம் ப்ஹ - குப்-பி, பெ. (முன்னது) 1, ஒருவகைக் குடுவை (புறசா. 56. உரை)
2. சிமிழ் 3. ஒரு காதணி ܀ குப்-பாயம், பெ. (குவிந்து மூடுவது) சட்டை (சீவக. 431) வட, கு ர்ப்
பா ஸ, கூ, ர்ப் பா ஸ க
} பெ. (முன்னது) குமிழ் போன்ற பரு (பெருங், உஞ்
கொப்-புளம் சைக். 54, 59) கொப்-பளி, த. வி. (முன்னது) 1. குமிழி கொண்டு வருதல் 2. கொப்-புளி, கொப்பளங் கொள்ளல் 3. வாய் குமிழ்த்தல்
4. (பி. வி.) வாயை அலசி உமிழ்தல் 5. நீர் முதலியன பீரிட் டோடச் செய்தல் (சீவக. 1889) கொப்-பூழ், பெ. (முன்னது) 15ாபி. இது தொப்புள் எனவும் ஒலிமாற்
முல் பொக்குள் எனவுமாம். கொப்-டம், பெ. (உட்குழிந்தது) பெருங்குழி. வட, கூ ப கொப்-பரை, பெ. (முன்னது) பெரும்பாத்திரம் GBT Č-L, : பெ. (வளைந்தது) 1. மரக்கிளை (மணி. 24. 86)
கொம்-பு, 2. கோல் 8. விலங்கின் கோடு 4. ஊதுகுழல் கொம்-பர், 5. நீர் வீசுங் கருவி. ஒப். கோல், கோடு
கொப்-பரம், பெ. (முன்னதி) முழங்கை, வட கூர் பர
கோ 2, த. வி. (குவிந்து மூடுதல்) 1. கவிந்து கொள்ளுதல் 'வல்லி ருள் கோச்தது கருங் கடல் கொள்ளை கொண்டென' (கம்பரா. இலங்கை கேள்வி. 3) குற்றிப் பிணைத்தல் எனும் அர்த்தத்தில் கொழுதலின் கீழ்க் காண்க.
கோப்-பு 2, பெ. (முன்னது) கவிவு “ப்ேபருங் துயர் கோப்புக் கொள்
ளலும்” (விநாயகபு. 7, 3)

Page 51
92 அநுபந்தம்
கொத்-து 2, பெ. (குவிந்து நெருங்கியது) 1. குலை "கொத்துறு
போது' (திருவாச. 6, 30) 2. திரள் 8. குடும்பம்.
கலி <குவி <கூம்பு <கோடுகு<குழை <உழல் <உள்
கவி பி. வி. (வளைத்தல், குவிதல்) 1. வளைதல் 2. மூடுதல் 'வான் கவிந்தவையம்' (நாலடி. 8) 3. குட்டுதல் *இளையவற் கவித்த மோலி என்னையுங் கவித்தி யென்முன் ' (கம்பரா. விபீடண. 145) 4. (த. வி) கருத்தூன்றுதல் 5. சரிந்து விழச்செய்தல் 'அருங்கரை கவியக் குத்தி’ (பட்டினப். 228)
கவி. பெ. (கவிந்தது, ?கருத்தூன்றுமவன்) 1. குரங்கு. இக்குரங்குச் சொல்லுங் குடங்குதல் (வளைந்து) கவிதலையே காட்டுகின்ற மையை நோக்குக. வட, க பி இதனைக் க ம் ப் - நடுங்கு தல் எனும் அடியினின்று பிறப்பித்தல் அத்துணைப் பொருத் திமாகாது. 2. அறிஞன் ‘ஆவிகளாகுவார் காண்குவார் மெய்ப்பொருள்' (கம்பரா. இரணியன், 32) 3. மங்கல பாடகன் (குடா.) 4. பாவலன் (திவா.) 5. பாட்டு (பிங்.) வட, க வி இதனை கு= சத்தமிடல் எனும் தாதுவினின்றும் பிறப்பிப்பர் வடநூலோர். தமிழ்க் கவி- கருத்தூன்றுதல் எ ணும் அடியே அதிக பொருத்தமுள்ளது. ஒப். ஆ கூ த = கருத்து, அவ்ா, க வாரி - தன்னையே கருதுருவான்
கவி-ஆன், பெ. கருத்தூன்றுமவன்) 1. பாவலன் 2 சுக்கிரன்
} பெ. (வளைந்தது) கடிவாளம். வட, க விக
3,6S-F260s, பெ. (கவிந்து மூடுவது) 1. உறை 2. கோவணம் d, a-F2607, 3. சேணம். ஒப். வட, கெள பீ க. இச்சொல் கூ Hi, al-F GIT’o, ப= கிணறு எனும் அடியால் வருவதெனல் பொ கவு-சனம், ருந்தாது. வரினும் கூ ப எனுஞ் சொல்லும் தமிழ
டியாய்ப் பிறந்ததேயாம்.
கவ-சம். பெ. (கவித்த மூடுவது) 1. போர்ச்சட்டை "புலிநிறக்கவ சம் பூம்பொறி சிதைய’ (புறநா. 13, 2) 2 இரட்சா பர் தனம் 3. மருத்துப்பாண்டம் மூடுஞ் சீலைமண், ஒப். கா
வல். வட கவச
fba-605,
கவு-சி, பெ. (குவிந்து திரண்டது) வயிற்றுக்கட்டி
கவி-த்தம்- பெ. (முன்னது) 1. விளாங்காய் 2. கைம்முட்டி. வட க பி க் க்ஹ. இச்சொல்லினுக்கு 'குரங்குகள் நிற்கும் மரம் (க பி x ஸ்க்ஹா)' என வடநூலோர் சொல்லும் உற்பத்தி

ஓர் வழியடிச்சொல்லிற் பிறந்தன 93
அமையாது. விளாத்தியில் மட்டும் குரங்குகள் நிற்பனவல்ல அன்ருே? ጳ..
கவி-கை, பெ. (கவிந்தது, வளைந்திருப்பது 1. வளைவு 2. குடை
(குறள் 389) 3. கவிந்த கை (இருசொல்), தியாகம் (பு. வெ. 9, 29)
கவி-ப்பு, பெ. (முன்னது) 1. மூைெக 2. மேற்கட்டி 3. குடை
4. ஓர் இராசி .
கவி-ழ், த" வி. (கீழ் நோக்கிக் கவிதல்) 1 தீலை இறங்குதல் ‘குவ ளை கவிழ்ந்து நிலநோக்கும்’ (குறள் 1114) 2. குனிதல் (யாப். வி. 30) 3. தலை கீழாதல் 4. நிலை குலைதல் 5. அழி தல் 6. முழுகிப்போதல் 7. (பி. வி.) மூடுதல் 8. ஒழுக விடல் ' இரு கவுள் கவிழ்த்த ' (கல்லா. கண). ஒப்: வட. ஹ்வ்று = வளைதல் ஆதியன
கவு-ஸ், பெ. (கவிந்தது, திரண்டது) 1. கன்னம் (சீவக. 2050) 2. யானையின் உள்வாய் (புறநா. 308) 3. பக்கம் (சீவக. 2967) 4. முழங்காற் சில்லு, வட. க போ ல. இதற்கு கம் ப் - நடுங்குதல் எனும் பொருந்தாத் தாது கூறுவர் வட நூலோர்.
శ్LT-మే, பெ. (முன்னது) 1. மூடி 2. தலையோடு 8. இரப்
G
3H5Lu (1-@\)öib பார் கலம். வட, க பா ல. ஒப். கவுள்
கபோ-லம், பெ. (முன்னது) கன்னம். இதுவடமொழியுருவம். ஒப்.
மலை. க விள்
கவா-ளம்,
கவ-ணம், ரி பெ. (மூடிக்கட்டுவது) காயக்கட்டு
கவ-ளி, பெ. (கவித்துக் கட்டியது) வெற்றிலைக்கட்டு, புத்தகக்
கவ-விகை, கட்டு. வட, க வலி கா = புண்மூடிக் கட்டுஞ்
ைேல
56 - பெ. (கவிந்தது) 1. சிப்பி. 2. வெள்வரகு, வட க
856, T-eq, ப ர் ந்த உ. சிப்பி
கவா-டம், பெ. (கவிந்து மூடுவது, காவல் பண்ணுவது) . 1. கதவு 2. (திரட்டியது) பொதி. ஒப். கவச்ம், காவல். வட, க பா ற்ற, வடநூலோர் இச்சொற்கு தாதுகாட்ட அறியார்.
கவ-வு, பி. வி. (கவிந்து சாய்தல், உள்விழுத்தி மூடுகல்) 1. கை யால் தழுவுதல் ‘கண்ணு நுதலுங் கவளுங் கவவியார்க்கு' (க லித், 83, 17) 2. முயங்குதல் 8. அகத்திடுதல் (திருக்கோ.

Page 52
94. அநுபந்தம்
108) 4. விரும்புதல் (சீவக. 1658) 5. (த. வி.) பொருந்து தல் “பவபயங்கவவ’ (ஞான. 62, 21) 6. நெருங்குதல் (கம்பரா. மூலபல. 160) ஒப். அவவு <அகவு <அய. "தமிழ மைப்புற்ற வரலா' ற்றில் கவவு ஆகியனவற்றை அவ வினின் றும் பிறப்பித்துள்ளோம் (பக். 35), கவிதலினின்று பிறப்புக் கோடல் அதிக பொருத்தமுள்ளதென்பது ஊன்றிய ஆராய்ச்சி யாற் புலமாகின்றது
} த, வி. (கவிந்து சோர்தல், அங்குமிங்கும் சாய்தல்) மனம் ഖ-്, வருந்துதல் (சீவ. 1456) கவ-லை, பெ, (முன்னது) 1 சஞ்சலம் (மணி. 30, 65) 2. அச்சம் (திவா.) 3. (வளைந்து செல்வது) பிரிந்து போம்வழி, ஒப். கவர் 4. மரக்கிளை 5. (?குவிந்தது) செந்தினை 6. (?கவிந்தது) ஏறறம
கவ-ற்று, பி. வி. (முன்னது) அங்கலாய்க்கச்செய்தல் (நாலடி. 306)
கவ-ல்வு,
கவ-றல், பெ. (முன்னதன் பெயருருவங்கள்) 1. விருப்பம் 2. மன கவ-ற்சி, விசாரம்
கவ-ன்றல்,
கவ-ர், பி. வி. (கவிந்து சாய்தல், உள்விழுத்தி மூடுதல், பலவாகப் பிரி தற்கு இடமாயிருத்தல். இது குவிதலின் வேருெரு நோக்கு) 1. விரும்புதல் (திவா.) 2. அழைத்தல். ஒப். அகவு 8. வசப் படுத்தல் (தேவா. 61, 1) 4. நுகர்தல் (குறள் 100) 5. முயங் குதல் (கலித். 94, 33) 6. அகப்படுத்தல் (பதிற்றுப். 84, 12) ஒப். கவ்வு 7. கொள்ளையிடல் (பு. வெ. 3, 15, கொளு) 8. கடைதல் (திவா.) 9. (த. வி.) பலகாலாகப் பிரிதல் (புற நா. 35, 8) 10. (கவர்த்தல்) கவடு படுதல்
கவா-அன், பெ. (கவரும் அவன்) கள்வன் ’விண்ணுயர் விறல்வரைக்
கவாஅனெருவன்’ (இலக். வி. 580 உரை)
கவ-ர், பெ. (கவிந்து சாய்வது) பலவாகப் பிரிகை (சீவக. 1212) 2. பிரியுங் கிளை 3. சுவர்ச் சந்து 4 வஞ்சகம் (சேதுபு. விதூம. 118) ஒப். கவடம் 5. வாழை (பிங்.)
கவர்-வு, பெ. (முன்னது) 1 விருப்பம் (தொல். சொல். 362) 2. இ
ழுக்கை 3. துக்கம். ஒப். கவல்வு ஆதியன
சந்து 3. பிரிவு (மலைப.ெ 34) 4. அடிவைப்பு خوسيه ) وسا(65- اله56ة
sia -6, பெ' (முன்னது) 1. மாக்கிளே (சீவக. 1889) 2. து கள்-வை 1,

ஒர் வழியடிச் சொல்லிற் பிறந்தன 95
கவ-டம், பெ. (வளைந்த தன்மை, இரண்டாய் மடிந்து பிரிகை) வஞ் சனை. ஒப். கவர்வு, கரவு. வட, கப ற்ற = வஞ்சனை, - வஞ்ச் எனும் தாதுவும் வளைவு எனும் பொருளுள்ளதாய் தமிழடியிற் பிறந்ததாய் உள்ளதே என உய்த்துணர்க. வஞ்ச் <வாங் கு <வணங்கு <வளை <உழ.ல் <உள் என வரும்.
கவை, த. வி. (முன்னது) 1. கவடு படுதல் 2. உட்படுத்தல்) உள தாதல் ‘கவை இய கற்பினை' (கல்லா. 6, 22) 3. (பி. வி.) அ ணைத்தல் (குறிஞ்சிப், 185) 4. அகத்திடுதல் (புறநா 19, 18)
கவை, பெ. (முன்னது) 1. பிரிவு 2. மரக்களை 3. கவர்த்தடி (அகநா. 34) 4. கவர்த்த வழி (குடா.) 5. காடு (பிங்.)
6. கோட்டை
கவ-ணம், பெ. (கவித்தூன்றுகை, பிரிவுபடவிடுசை) 1. கவிபாடுகை. வட, க வ்ய 2. கருத்தூன்று கை ஃ. வேகம். ஒப். வட, க்க ம 5, 4. (குவிந்து நெருங்கியது) காடு (திவா.) ஒப். வட, நீங்க ஹ 5 5. படை (குடா.) ஒப். வட, க ந்த 15 6. கலக்கம்
(திவா.) 7. வெப்பம் (குடா.)
கவ்-வை 2, பெ. (முன்னது) 1. கவனித்தற்குரியது 2. கவலை 3. துன் பம் (கம்பரா. திருவா. 68) 4. பொருமை 5. பழிச் சொல் 6. ஒலி (பு. வெ. 12, பெண்ப்ாற். 10)
கா, பி. வி. (கவித்து உள்ளடக்குதல்) 1. தடுத்தல் ‘செல்லிடத் துக் காப்பான் சினங்காப்பான்' (குறள், 801) 2. செறித் அது வைக்கல் சிறை காக்குங் காப்பெவன் செய்யும்’ (குறள், 57) 3. தீமை விலக்கிப் புரத்தல் (மணி. 23, 17) 4. எதிர் பார்த்து அடங்கியிருத்தல்
கா 1, பெ. (முன்னது) 1. சோலை (புறநா 23, 9) 2. தீமையின்
விலக்குகை
கா-வல், பெ. (முன்னது) 1. வேலி (பிங்.) 2. மதில் (பிங்.) 3. சிறை 4. செறித்து வைப்போன் 5. நாடு (புறநா. 5, 6, 6. கவசம் (சீவக. 798) 7. எதிரின்றி வைத்தல் (மணி. 22) 209.)
கா-ப்பு, பெ. (முன்னது) 1. வேலி (பிங்.) 2. மதில் (பட்டினப். 41) 3. கோட்டையின் உட்திட்டி (பிங்.) 4. கதவு. ஒப். கவாடம் 5. காவலான இடம், ஊர் (கலித். 110, 1) 6. சி றை 7. அரச முத்திரை (கலிச், 94, 43) 8, அரசன் நகர்தற்கு ரியபொருட்கள் (சீவக. 1873) 9. கையிற் கவசமாயணி யும் சாண், வளையல் 10. நூலின் தலைப்பிற் கடவுள் துதி

Page 53
96 அநுபந்தம்
காவு 1, பி. வி. (கவித்துக்கொண்டு செல்லல்) 1. சுமத்தல் (புற
நா. 208) 2. பொறுத்தல்
காவு, பெ. (சுமப்பது, காப்பது) 1. சிறுதெய்வங்களுக்கிடும் பலி.
ஒப். பிராகிருதம் ங்க்ஹா உ 2. காவற்பொட்டு மை
கா 2, . பெ. (சுமத்தலுக்குரியது) 1. காவடித்தண்டு (குறள், 1168)
2. துலாக் கோல் 8. பூப்பெட்டி (சீவக. 826)
காவு 2, பி. வி. (கவிந்து சாய்தல்) இச்சித்தல் (தேவா. 338, 1) ஒப்.
கவி. வட, க ம்
காம், பெ. (முன்னது) விருப்பம் ‘காம் உறுதல்', கலித். 80, 14 இல் ‘காமரு நோக்கின்' என வருவதை ' விருப்பம் மருவு கின்ற ' எனப் பொருள் கொடுத்தோதுகின்ற நச்சிஞர்க்கினி யர், இத்தொடரின் முதல் அங்கம் காமர் கடைக்குறைந்துகின் றதென்பர் (உரை). ஆயின் காமர் எனுஞ் சொல்லும் காமம் (= காம் + அது) எனப் பிரிதலால் காம் என்பதூஉம் ஒர் தமிழ்த் தனிச்சொல்லாம் என உணர்க.
காம-ம், பெ. (முன்னது 1. விருப்பம் 2. ஸ்திரிபோகம் (குறள், 1092) 3. விரும்பிய பொருள் (திவ். இயற். 2, 92) வட 65 ii )
காம-ர், பெ, (முன்னது) 1. விருப்பம் (கலித். 39, 1) 2. (விரும்பப்படு வது) அழகு (புறநா. 1, 1) இச்சொல்லை காமம் + மருவு எனக் கொண்டு கூட்டலன்று, காமம் எனும் சொல்லின் மரூஉ (களம்-களர் என ஆகியமைபோல) எனக் கொள்வதே சிறப்பிற்று. “காந்தம், பெ. (கவர்ந்திழுப்பது) 1. இரும்பைக் கவருங்கல் 2. (கவர்
வது) அழகு 3. மின்சாரம் காத-ல், பெ. (உள்ளத்தைக்கவருவதி) 1. வேட்கை ‘காதலாற் காம பூமிக்கதிரொளி யவருமொத்தார்' (சீவக. 189) 2. அன்பு (அகநா. 55) 3. பத்தி (திவ். திருமாலை, 26) காத-லி, பி. வி. (முன்னதி) 1. விரும்புதல் 2 அன்பு கூர்தல் க்வ்-வு, பி. வி. (கவித்து உட்செலுத்துதல்) 1. ஆவலோடு பற்றுதல் 'கவ்வித் தோறின்னுங் குணுங்கர் நாய் ' (நாலடி. 322) 2. கடித்தல் 3. தின்னல் (பொருந. 184)
கதுவு, பி. வி. (முன்னது) 1. பற்றிப் பிடித்தல் *காாவதன் காலி 'னைக் கதுவ' (திவ். பெரியதி. 2, 3, 9) 2. (த. வி). கலங்
குதல் 3. படிதல் (வேதா. கு. 107)

ஓர் வழியடிச் சொல்லிற் பிறந்தன 97
கவ-ளம், பெ. (கவ்வும் அளவு) 1. வாயளவு கொண்ட உணவு 2.
யானைத்தீன் 8. சோறு. வட, க வல
கோய் <குவி <கூம்பு <கோடு-கு <குழ<உழ-ல் <உள்
கொய், η 3. வி. (குவியச் சேர்த்தல், சேர்த்தெடுத்தல்) 1. சீலை
கொசு-வு, யைச் சுருக்கிச் சேர்த்தல் *கோடிப்பூந்துகில் கொய் து' (பெருங். இலாவாண. 5. 165) குவிந்து சிலிர்த்தல் (மலைபடு. 572) 3. சேர்த்துப் பிடுங்குதல் (பெருங். இலா வாண. 19. 161) 4. கூட்டியறுத்தல் (மதுரைக். 271) 5. தெரிந்தெடுத்தல்(கோயிற்பு. பதஞ்ச. 54)
கொய்-சகம்,
கொய்-யகம்,
烹 கொய்-சுவனம்,
பெ. (முன்னது) 1. குவியச் சுருக்கிய உடை 2.
கொச்-சம், அலங்காரத் தொங்கல்
கொச்-சகம்,
கொா-வம்,
(காசி-கம், பெ. (? முன்னது) 1 60سامة 7 ساكالا . 2 ساهகோசி-கம், * |_ک GED بازی و ال [القایی
கொசு-கு, பெ. (? குவிந்து மொய்ப்பது) தொங்குங் கயிருதியன கொது-கு, வற்றில் மொய்க்கும் ஈ. இச்சொல் குச்சு எனும்
அடியாய்ச் சிறுமையையும் காட்டுவதாகலாம். கோத்-து 2, பெ. குவிந்து ஒன்றுசேர்ந்திருப்பது) 1. குலை (திருவாச.
6, 30) 2. திரள் 3. குடும்பம் 4. கைப்பிடியளவு. வட ங்கு ச் ச்ஹ துளு, ங்கு ச் சு கொத்-களம், பெ. (?குவிந்தது) கோட்டை மதிலுறுப்புகளுளொன்று.
ஒப். பாளி, கொ ற்ற்ஹ க நொசீ-சு 2, பெ. (குவிந்தது) 1. குஞ்சம். வட, ங்கு ச் ச்ஹ துர்-சம், பெ. (முன்னது) 1. கொய்யகம் 2. கொத்து. வட ங்கு
g ச்ஹ 奉r, குஞ்ச-ம் 2 பெ. (முன்னதி) 1. கொய்யகம் 2. கொத்து 8. ஈயோட்
டி. வட, கூ ர் ச குஞ்சி, பெ. (முன்னது) 1 குடுமி (திவா.) 2. உச்சிமயிர் (சீவக. 2792) 8 கலை 4. சிற்றணுக்கனெனும் அரசவிருது (சீவக. 437) வட, கூ ர் ச குஞ்சி, பி. வி. (குவிய வளைத்தல்) 1. கால் தூக்கி வளைத்தல் (தேவா 521, 4) 2. காற்படங் குந்திநிற்றல் (குடா.) ஒப். குந்து. வட, கு ஞச்

Page 54
98 அது பங்கம்
கொஞ்சு, த. வி. (உதடுகளைக் குவித்து மெல்ல ஒலித்தல்) 1. மழலை பேசுதல் 2. இனிதாய் ஒலித்தல் *சிலம்பு கொஞ்சவே' (பா ாதி. அருச்சுனன்றவ. 148) 3. முத்தமிடல். வட. சு ம் ம்ப்.
ஈண்டு அடிக்ககாம் சகரமாயிற்று.
கொன்னு, த. வி. (முன்னது) தடக்கிப் பேசுதல். மல்ை. கொஞ் து
琴
கூசு, த. வி. (குவிந்து சுருங்குதல்) 1. அஞ்சிப் பின்வாங்குதல் (கம் பரா. பூக்கொய். 6) 2 நாணுதல் 3. நிலைகுலைதல் (பிங்.) 4. உள்ளிழுக்கச் செய்யும்படியான பரிசமுறல், மலையாளத் தில் கூ சு க எனுஞ் சொல் வளைதல், சுருங்குதல் எனும் தலையர்த்தம்பெறும். அதனைக் குஞ் சு (குவி) எனும் அடியிற் பிறந்ததென்பர். அஞ்சுதல் <அல்குதல்= சுருங்குதலினின்று வந்தவாறு, கூசுதலும் குவிதல்<கொடுகுதலினின்று வந்ததெ னக்கொள்க.
கூச்-சம், பெ. (முன்னது) 1. மயிர் சிலிர்த்தல் 2. நாணம் 3. لا யந்து நடுங்குகை. மலை. கூ ச் ச ல் - விாலாதியன உள்ளி ழுத்துச் சுரண்டிக்கொள்ளல்

பக்கம் 5
31
64
70
71
74
80
ഒith 27
2,10
11
24
11
9
இல்
99
49
9
yy
99
பிழைத் திருத்தம்
எத்தகைத்தது என்பதை எத்தகைத்து எனத் திருத்துக.
தலையடி அய. என்பதை வழியடி கவி எனத் திருத்துக.
உள்ள () அடைப்புக்களை நீக்குக. கூம்பு 1 எனக் கூட்டுக.
கொத்து 1 எனக் கூட்டுக.
கோ 1 எனக் கூட்டுக.
கூம்பு 2 என மாற்றுக.
அடியினின்று 2 இல் கோ ற்ற்ற என்பதைக் கோ
ற்ற்ஹ என மாற்றுக.

Page 55


Page 56