கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழகம்

Page 1

*、
二、 置 エリ
| ||

Page 2


Page 3


Page 4

தமிழகம்
யாழ்ப்பாணத்து நவாலியூர் திரு. ந. சி. கந்தையா பிள்ளை
இயற்றியது
ஒற்றுமை ஆபீஸ்,
சைதாப்பேட்டை, மதராஸ்.
丑934 (விலை ரூ. 24

Page 5
FRNTED A.
HE ROYAL PRINTENG works, MoUNT RoAD, M A DRAS,

முன்னுரை
ー:(o):ー
தமிழகம் தொன்மை மிக்க நாடு. இதன் வரலாற்றினைத் தொடர்புறக் கூறும் நூல்கள் மிகச் சில. சிறியவும் பெரிய வுமாகிய புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் ஆராய்ச்சி அறிஞர் தமிழகத்தைப்பற்றிய பொருளுரைகளைக் காலங் தோறும் வெளியிட்டுள்ளார்கள். அன்னேர் முடிபுகளை இயன்றவரையிற் ருெகுத்துக் கோவைப் படுத்தியதே எமது உழைப்பாகும். தமிழ் மக்களின் மொழி, சமயம், நாகரீகம் ஆதியவற்றை ஆரியரின் வழிப்படுத்திக் கூறுதல் தற்காலக் கலைவாணருக்குச் சகசமாய்விட்டது. இப்பிழை யான கோட்பாடே பெரும்பாலோ ருள்ளத்தில் பசுமரத் தாணிபோல் வேரூன்றியுள்ளது. தமிழ் நாட்டின் நாகரீகம் பரந்து வேறுநாடுகளுக்குச் சென்ற தென்பதைத் தடங்கை நெல்லிக்கனிபோல் இந்நூல் விளக்குகின்றது. அச்சிடுங்கால் இந்நூலகத்துப் பல அச்சுப்பிழைக ளேறியுள்ளன. நீரை நீக்கிப் பாலை அருந்தும் அன்னத்தை நிகர்க்கும் பெரியோர் இதன் கண் காணப்படும் குறைகளைக் கண்டு எள்ளாது, குணத்தையே பொருட்படுத்துவார்களென்பதே எமது நம் பிக்கை.
நவாலியூர் யாழ்ப்பாணம்,
தமிழ் நிலையம்,
பூரீமுகடு மார்கழிமீ 11வ.
ந. சி. கந்தையா.

Page 6

பொருளடக்கம்
விஷயம் கடவுள் வணக்கம் தமிழ்த் தெய்வ வணக்கம் தமிழ் நாட்டின் தொன்மை கி
மரிகண்டம் ,
குமரி நாடு என்னும் பெயர்க் காரணம் .
குமரி கண்டம் கடல் வாய்ப்பட்டதன்
காரணம்
இந்தியா மக்கள் தோற்றம்
குமரி நாட்டில் தமிழ் வழங்கிய தென்பதி
தமிழர் பிற நாடுகளிற் குடியேறுதல் முதற் கட்டோன்றிய மொழி மொழி
தமிழ்
திராவிடம்
தென்மொழி தமிழின் வழிமொழிகள் தெலுங்கு t
மலையாளம்
கன்னடம்
அதுளு
மணிப்பிரவாளம்
தமிழ் நாட்டின் எல்லை
செந்தமிழ் கொடுந் தமிழ்
பாண்டி நாடு :
சோழ நாடு சேர நாடு தொண்டை நாடு சிற்றரசர் நாடுகள் பல்லவர்சாளுக்கியர்
பக்கம்

Page 7
ii
பாடம் விஷயம் பக்கம் 50. தமிழின் சிறப்பு 8.
ஐ1. தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள் 82 82. எழுத்து 84
33. சொல் 90 34. வழக்கு so è 92 ஐ5. செய்யுள் 8 92 36. -oy6ooft 哆 豪 涉 97 ஐ7. பொருள் 99 ஐ8. எண்வகை மணம் , . . . . . 100 39. அகம் IOS 40. களவு 04. 41. கற்பு O6 42. புறம் ... .08 48. வீாக்கல் ... ll4 44. இயற்றமிழ் .... 1 | 5 • 45. இசைத் தமிழ் I6 46. இசைவகை ... ll 47. இசைக் கருவிகள் ... ll ... 123
48. நாடகத் தமிழ் 49. தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பு ... lis 50. சொற்முெடரழகு >ኦ ... 34 51. இலக்கண நூல்கள் 35 52. சங்கம் 136 53. அகத்தியர் 143 54. தொல்காப்பியர் ... l46
55. தொல்காப்பியம் 146 56. வடசொல் ... 149 57. தொல்காப்பியர் கூறும் மறை ... 152 58. மந்திரம் ... lis5 59. தமிழ் நூல்களின் அழிவு ... 156 60. தமிழில் பிறமொழிக் கலப்பு . 158
61. அரசாட்சியார் தமிழுக்குக் காட்டுமா தரவு 160 62. தமிழர் நாகரிகம் ... 1.68

iii
விஷயம் நிலப்பாகுபாடும் திணைமக்களும் சாதி அந்தணர்
TfL அறிவர் தாபதா தவத்தினியல்பு தமிழர்சமயம் கானமறை வாணிகம் கைத்தொழில் ஓவியம் சிற்பம் வான ஆராய்ச்சி சோதிடம் போர்க்கருவிகள் முதலியன அரண் மகிற் பொறிகள் முதலியன வீரத் தாய்மார் காவல் மரம்
பத்தினிப் பெண்டிர்
மதுபானம்
உணவு
D60) பெண்களனிவகை ஆடவர் அணிவகை அரசன
புறநானூற்றிற் காணப்படும் சில பழைய
வழக்கங்கள் பொழு ஆதி போக்கு சிறுவரின் பொழுதுபோக் பெண்கள் கல்வி
தாலி தரித்தல்
பக்கம் 163 164 67 168 169 169 7. 17 177 88 86 88 89 189 190 90 19. 198 194 198 199 20 202 205 20 208 208
210 22 213 214 214

Page 8
iv
பாடம் விஷய்ம் பக்கம் 95. மனைகள் 214"، ...ه 96. பொறிகள் . 5 21 ، عدة ه 97. படுக்கை ... , 26 98. விளக்குகள் so 27
99. பட்டங்கள் . 217 مع 100. வெள்ளணி நாள் ... 217 101. தமிழரின் பழக்க வழக்கங்கள் ... 28 O2. பெரும்பாணுற்றுப்படை . . . . 224 103. சிலபிரதான திகதிகள் ... , 233 104. ஒழிபியல் ・・・ 、235 105. நால்வகை எழுத்து ... , 235 106. மடலேறல் ... , 237 107. கிராம பரிபாலனம் ... 238 108. சங்க நூல்கள் : . . . ... , 238 109. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் . . . 240 110. ஐம்பெருங் காப்பியங்கள் . ... , 241 111. ஐஞ்சிறு காப்பியங்கள் ... , 24. 112. திருக்குறள் . . . . 24. 113. திருவள்ளுவ மாலை ... . 243 114. மகளிரைச் சிறை பிடித்தல் ... 248 115. கடற்போர் ... , 248 116. தமிழரசர் மாலைகள் ... , 248 117. படைகளின் அணி வகுப்பு முதலியன . 248 118. அகழிகள் ... 248 119. போர் முரசு ... , 249 120. இலவந்திகைப்பள்ளி ... , 249 121. அரசனைத் தெரிவு செய்யும் நூதன முறை. 24 122. அரச தண்டனைகள் ... ... 249 128. கிராமச் சங்கம் ... 250 124. துறவிகள் தோற்றம் ... 250 125, மகளிர் அழகு ... , 25l. 26. தமிழர் வியாபாரம் ... 251
2. ਪਰ I ... 252

பாடம்
28.
129.
šs.
140. 141. 142. 143.
144.
145. 146. 147. 48. 49. 50. 151. 152.
V.
விஷயம்
தமிழ் ஆராய்ச்சியிற் காணப்படும் சில
கவனிக்கத்தக்க குறிப்புகள் பழைய மணமுறை பேய் மகள் சில நம்பிக்கைகள் தலைக்கோல் பரத்தையர் பத்துப்பாட்டி லறியப்படுவன அகநானூரு லறியப்படுவன குறுந்தொகையி லறியப்படுவன நற்றிணையி லறியப்படுவன
பரிபாடலிற் காணப்படும் தமிழர் 575
ரிகத்தை உணர்த்தும் செய்திகள் பெருங் கதையில் காணப்படும் அக்கால
நாகரிகத்தை உணர்த்துஞ் செய்திகள்.
ஐங்குறுநூற்றி லறியப்படுவன சிலப்பதிகாரத்தி லறியப்படுவன
மதுரை 2000 வருடங்களுக்கு முன்
1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் o a
என்னும் நூலிற் காணப்படும் கவனித்
தற்குரிய சில பொருள்கள்
கி.பி.150-க்கும் 150-க்கு மிடையில்’ செய்யப்பட்ட நூல்களும் அவற்றி
லடங்கிய அடிகளும் -9, Մ Յ | }ն ւrւ 160 մ சோழ மன்னர் பாண்டிய மன்னர் நாயக்க அரசர் சேர மன்னர் அரசாட்சி பைசாச மொழி
சதி
பக்கம்
253
271
272 274, 1274. 275 278 279 281 282 282

Page 9
TA MIL AHAM
FIRsT cENTu RY.A.'
y s
e VENKACAM
critortun
ARyA چي
T
肆
O
.ያህKጳኪ'ዞኦ9ያሪ
る。 KAVIR PATT NAM
NAGA PATTNAM ܝܠ ܐܚܝ܂ ܙܙܬܝܬܵܬ̇
as w .ዩኳፍት
• MYATWIRA - PA) Ol Ao ره*
| ( «Y ÂÒMANIPPALLavan
MuSRua Va:
3
R.PERvAR
WAk KA A A :
k MMAR
 
 
 
 
 
 
 
 

பக்கம் வரி 6 12 6 25 O 22 2 S3 5 16 34, 21. 36 5 44. 12 46 24 6O 9 62 5
16 lT 63 7 64 3 68 8 77 78 83 6 22 103 9
04 I06 26 117 20 19 7 20 17 22 9 23
9.
பிழை திருத்தம்
பிழை
கோட்டுக் கொண்டதுணும் புராண்காார் பயிலோனியர் காணப்படும். பஃறுளி ஏள்தெங்கநாடு 3e3O
moral
uniform
இண்னெரு
கட்வென்
திட முறுத்திய மொழிக திட-முறுத்தியம்
மடம்மகட் நாடன்றே நூற்றளவிற்முன் செறை conspcuous மந்தமிழே வெளளறது. ஒங்கவிடை தாங்கநீர் லொரு சிறை தனியாளாய்
ஆண்டுகளும்
பாவனா agai lu மாலை
குடககை
துணைக்கருவி
திருத்தம் கோட்குக் கொண்டது புராணகாரர் பபிலோனியர் காணப்படும் பஃறுளி எழ்தெங்கநாடு arians mural cuniform இன்னெரு
கட்வெல்
மொழிக் 4.DLL DEL - , நிள்டன்றே நூற்முண்டளவிற்முன்
சனற conspicuous
மத்தமிழே
வள்ளாறது ஓங்கலிடை தாங்கரீர் வொரு சிறை தனியளாய் ஆண்டுகளுள்ளும் வாணனர்
gøØTulu மலை குடுக்கை துளைக்கருவி

Page 10
பக்கம் வரி
127 30 185
9 37 138 167 72 174: 76 180
82 83 194 198
206 208 225 226 228
לל 237 260 262 265 280
99
281
l 26 4. 6 20 7 27 5 10 19 1. 27
9 l 7
7 19 14 8 10 2
9
17 7 9 5
viii
பிழை
யியல் நிவய கார்த்த பண்டதோ முத்திரனுல் நூல்களுள்ளும் பrணடTEகனும நவழில் which long தன்னர் முதலியவற்றுடன் வழி பாடென்று
சிவத்தியாநாநந்த அமா
சிம்ஹமும் பெற்றுதலாலே வாற்றுக்கு வீரத்தாய் காவல் மரமென்பது
பண்டை Lull-st-Gup86) ஆடவர் அணிகவகை தளிம்பு பேனை
பார்கள்
לל அவேளை நறவுல சாஅய் முதலைத் அாணம வெண்கே
வீழ்த்து
திருத்தம் யிலய கிலய கூர்த்த பணடிதே புத்திரனல் நூல பாண்டரங்கனும் நல்வழி which was long தண்ணுர் முதலியவற்றுட் வழிபாடென்றுஞ்
அமரசிம்ஹமும் பெற்றுய்தலாலே வற்றுக்கு வீரத்தாய்மார்
பண்டை
படா அமுலை
ஆடவர் அணிவகை
தழும்பு Luit &T
IIT
99
அவளை 15po! . சாஅய முதலை அரண்மனை வெண்கோ
வீழத்து

G
தமிழகம் .
கடவுள் வணக்கம்
அரியசடை முடிபோற்றி யருள்பொழிசெம் முகம்போற்றி விரையிதழி மலாணிநூல் விளங்கியமார் பகம்போற்றி மருவுமுயர் பேரழகு வளருசா கிலைபோற்றி திருவளர் செந்தமிழ்ச் சொக்கன் திருவடித்தா மரைபோற்றி,"
தவளத் தாமரைத் தாதார் கோயி லவளைப் போற்றுது மருந்தமிழ் குறித்தே.??
தமிழ்த் தெய்வ வணக்கம்
6 மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி
இறைவர்தம் பெயாைசாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே அறைகட்ல் வாைப்பிற் பாடையனைத்தும் வென்முரியத்தோ டுறழ்தருதமிழ்த் தெய்வத்தை யுண்ணினர் தேத்தல் செய்வாம்?
-சீகாளத்தி புராணம்
6 பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பாம்பொருள் முன்னிருந்தபடி யிருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும் உன்னுதாத் துதித்தெழுந்தே யொன்றுபல வாயிடினும் ஆரியம்போ லுலகவழக் கழிக் தொழிந்து சிதையாவுன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே.?
-மனுேன்மணியம்

Page 11
இயல்-க.
தமிழ்நாட்டின் தொன்மைநிலை
l. குமரி கண்டம்
இக்கிலவுலகம் இன்று நமக்கு எப்படிக் காணப்படுகின் றதோ அப்படிப் பல்லாயிர மாண்திகளுக்குமுன் காணப்பட் டிலது; அப்படியே பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் காணப்படாது. பல்வேறு ஊழிகளிற்முேன்றிய கடற்பெருக்கு களால் கிலப்பரப்பு நீர்ப்பரப்பாகவும், நீர்ப்பரப்பு நிலப்பரப் பாகவும் மாறுதலடைந்ததுண்டு. இம்மண்ணகம் பல்வேறு காலங்களில் அடைந்திருந்த வடிவங்களை நிலநூலார் தமது ஊகைகளைக்கொண்டு படங்களமைத்துக் காட்டியிருக்கின் றனர்.
gosl' ataeul (W. Scott Elliot) என்பவர் இவ் வுலகில் ஐந்து பெருங்கடற் பெருக்குகள் உண்டாயின வென் றும், அவற்றுள் முதலாவது பதினுயிரம் நூற்றண்டுகளுக்கு முற்பட்டதென்றும், இரண்டாவது எண்ணுளருயிரம் ஆண்டு களுக்கு முற்பட்டதென்றும், மூன்றுவது இருநூறுயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும், காலாவது எண்பது ஆயி ரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென்றும் ஐந்தாவது கி. Clp. 9564-ல் உண்டானதென்றும் குறிப்பிட்டிருக்கின்றனர். இப் போது அட்லாண்டிக் சமுத்திரம் அலைகொழிக்கின்றஇடத்தில் முன் ஒரு பூகண்டம் விளங்கியது. அப்பூகண்டம் கடலுள் மூழ்கிப்போக அதின் மிச்சமாக விளங்கிய பொசிடோனிஸ் (Posedonis) என்னும் தீவு கி. மு. 9564-ம் ஆண்டில்
உண்டான வெள்ளத்தால் மறைந்ததெனச் சொல்லப்படுகின்

3
றது. இதற்குச் சான்று லண்டன் நூதனசாலையிலே உள்ள தும் 8500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டதுமாகிய (Troano M. S.) என்னும் கையெழுத்துப் பிரதியில் இருப் பதை ஸ்கட் எலியட் என்பவர் எடுத்துக் காட்டியிருக்கின்ற னர். அது வருமாறு :-
“ In the year 6 kan, on the llth muluc in the month Zac there occurred terrible earthquakes which continued without interruption until the l8th chuen. The country of the hills of mud, the land of mu, was sacrificed: being twice up-heaved it suddenly disappeared during the night, the basin being continually shaken by volcanic forces. Being confined, these caused the land to sink and to rise several times and in various places. At last the surface gave way and ten countries were torn asunder and scattered. Unable to stand the force of the convulsions, they sank with their 64,000,000 of inhabitants 8060 years before the writing of this book.'
இவ்வுலகில் ஒன்பது கண்டங்களும் எழு கடல்களும் 6TCup தீவுகளும் உண்டெனப் புராணங்கள் அறைகின்றன. இது ஒருகாலத்து இவ்வுலகம் அடைந்திருந்த வடிவினைக் குறிப்பதா யிருக்கலாம். தயிர்க்கடல் பாற்கடல் எனச் சொல் லப்பட்ட பெயர்கள் இக்காலம் கருங்கடல் (Black sea) Qgr/i351-áo (Red sea) ola ait ag L-ái) (White sea) arsar வழங்கும் பெயர்களை மானுதல் கூடும். மேலே காட்டியன

Page 12
4.
இவ்வுலகம் காலத்துக்குக் காலம் பல்வேறு மாறுதல்களடைந்து வருகின்றதென்பதை வலியுறுத்தும்.
இந்தியா நாடு இன்று காணப்படும் வடிவினை முன் அடைந்திருக்கவில்லை. கன்னியா குமரிக்குத் தெற்கே காணப் படும் இந்துமா கடல் முன் ஒரு பெரிய நிலப்பரப்பாக விளங்கியது. அது கிழக்கே பர்மா தொடக்கம் தெற்குச் சீன வரையிலும் மேற்கே ஆபிரிக்காவின் கிழக்கு தெற்குக் கரைகள் வரையிலும் வடக்கே விந்தியவரை வரையிலும் விசா லித்திருந்தது * அங்கிலப்பரப்புக்கு ஆங்கில பெளதிக நூலார் லெமூரியா, (Lemuria) என்னும் பெயர் இட்டனர். தமிழ் முன்னேர் இதனை குமரி கண்டம் என வழங்கினர்.
ஒருகாலத்துக் கடல் பொங்கியெழுந்து அதன் பல பாகங்களைத் தன்னகப்படுத்திக்கொண்டது. முன் ஒன்மு யிருக்த ஆஸ்திரேலியா, சீன, ஆபிரிக்கா, இந்தியா முதலிய நாடுகள் அக்காலத்திலேயே பிளவுபட்டிருத்தல் வேண்டும். ஸ்கொற் எலியெட் கூறும் ஐந்தாவது கடற்கோட் காலமே அவ்வெள்ளப் பெருக்கின் காலமெனக் கருதப்படுகின்றது.
குமரி கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியாவின் தொடர்ச்சியாக இலங்கை சுமத்திரா யாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருங் தீவு விளங்கியது. அதன்கண்
as "There is Geological evidence to prove that in very early time south India formed part of a huge continent which extended from Burma ‘and south China in the east' to east and south Africa on the west and from the Windya hills on the north to Australia on the south' (Rig Vedic India P.9l.)

5
ாவன் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்தமையான் அது நாவ லங் (சம்புத்) தீவு என்னும் பெயரை பெறுவதாயிற்று. கும ***ఎ' குமரி நாடு' என்றும் அது வழங்கப்பட்டது. குமரி ாாட்டின் வடக்கெல்லை விந்திய மலையாக விருந்தது. இமய மலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் அக்காலத்திற் தோன்ற வில்லை. ஆகவே, குமரிநாடு அல்லது பழைய தமிழகம் ஆசியாக் கண்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. தெற்கே கிடந்த நிலப் பரப்புகளிற் பெரும்பாகம் கடலுள் மறைந்தது. அப்போது இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் கடலாழ்த்தி னின்றும் மேற்கிளம்பின. இமயமலைச் சாரல்களில் நீர்வாழ் உயிர்களின் என்புக்கூடுகள் காணப்படுகின்றன. அதனல் இமய மலை ஒரு காலத்தில் நீரின் மூழ்கிக் கிடந்ததெனத் துணியப் படுகின்றது. இமயமலையும் அதனைச் சார்ந்த கிலங்களும் மேற் கிளம்பிய பின்னும் விந்திய மலைக்கு வடக்கே நிலவிய கடல் முற்றக மறைந்து விடவில்லை. அதன் ஒரு சிறு பாகம் வட இந்தியாவைத் தென் இந்தியாவினின்றும் பிரித்தது.நிலநூல்ார் அதன் ஒரு பகுதிக்குக் கிழக்குக் கடலென்றும், மற்றப் பகு திக்கு இராசபட்டினக் கடலென்றும் பெயரிட்டனர்.*
குமரி காட்டின்கண் வடக்கே குமரியாறும் தெற்கே பஃறுளி (பல + துளி) ஆறும் ஒடிக்கொண்டிருந்தன. பஃறுளி யாறு வடிம்பலம்ப நின்றபாண்டியனுக்கு உரியதாக புறம் 9-ம் பாட்டால் விளங்குகின்றது. குமரியாறு கன்னியா குமரிக் குத் தெற்கே சிறிது தூரத்தில் இருந்திருத்தல் கூடும். * “The result of Geological investigation shows that in a remote age a sea actually covered a large portion of Modern Rajaputana extending as far as South and East as Aravalli mountain
which Geologists have designated by the name of Rajaputana sea” (Rig ved India P. 7.)

Page 13
6.
அதனை யடுத்து அதன் பெயரால் ஒர் மலைத்தொடரும் விளங் கியது. பிற்காலத்தோர் அதற்கு மகேந்திரம் எனப் பெயரிட் டனர். இரண்டு ஆறுகளுக்கு மிடையே எழுநூறு காவகம் கிலப்பரப்பிருந்தது. * ஒரு காவதமென்பது எண்ணுயிர முழங்கொண்ட தூரம். எழுநூறு காவதம் கிலப்பரப்பும் நாற்பத்தொன்பது சிறு நாடுகளாக பகுக்கப்பட்டிருக் தது. இவ்வாறு விளங்கிய பஃறுளி குமரி என்னும் ஆறு க்ளையும் அவற்றினிடையே கிடந்த நாற்பத்தொன்பது நாடு களையும் கடல் கொண்டமையை, 8 பஃறுளியாற்றுடன் பன் மலை யடுக்கத்துக் குமரிக்கோடுங் கொடுங்கடல் கொள்ள” என்று கூறுவதுட்ன் அமையாது டிவேலறிந்த வான்பகை பொருது’ என்று இக்கடல் கோட்க்ே காரணமுங் கூறுவர் ஆசிரியர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரத்துக்கு உரைகண்ட அடியார்க்கு நல்லார், நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் என்புழி," அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளி யென்னும் ஆற்றுக் கும் குமரி யென்னும் ஆற்றுக்குமிடையே எழுநூற்றுக்காவத ஆறும் அவற்றின் நீர் மலிவானென மலிந்த (1) ஏழ் தெங்க நாடும் (2) ஏழ் மதுரை நாடும் (3) ஏழ் முன்பாலை நாடும் (4) ஏழ்பின்பாலை நாடும் (5) ஏழ் குன்ற காடும் (6) ஏழ்குண காரை நாடும் (7) ஏழ் குறும்பனை நாடுமென இந் நாற்பத் தொன்பது நாடும் குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும் காடும் நதியும் பதியும் தடநீர்க் குமரி வடபெருங்கோட்டின்
காறும் கடல் கொண்டொழிதலால்" எனக் கூறிய உரையில்
* விாற் பன்னிரண்டு கொண்ட துனுசோணும் சாண் இரண்டு கொண்டது முழமாம். முழம் நாலு கொண்டது கோலாம் ; கோல் 500 கொண்டது கூப்பீடாம். சுடப்பீடு நான்கு கொண்டது காத மாம் (யாப்பருக் கலவிருத்தி ப-473.

7.
கடல் கொண்ட நாடுகளும் பிறவும் இவை இவை என விரித் துரைத்தார்.
இனி குமரி யாற்றிற்கும், பஃறுளி யாற்றிற்கும் இடை யேயுள்ள பெருவள நாட்டாசனகிய செங்கோவை முதலூழித் தனியூர்ச் சேர்ந்தன் பாடிய செங்கோன் தரைச் செலவு' என்னும் ஒரு சிறு நூல் உளது. இந்நூலினும் உரையினும் உள்ள ஏழ்தெங்க நாட்டு முத்தூரகத்தியன், பேராற்று நெடுங் துறையன் முதலிய புலவர் பெயர்களும் பெருவள நாடு மணி மலை முதலிய இடப்பெயர்களும் அடியார்க்கு ஈல்லார் உரை யிற் கண்ட நாடுகள் கடல் கொள்ளப்படுவதற்கு முன்
உள்ளன என்பதை வலியுறுத்தும்.
குமரி நாடு என்னும் பெயர்க் காரணம்
மனு என்பவன் ஓர் தமிழ் வேந்தன். இவனுக்கு இழை என்னும் ஒரு பெண் மகவும் இயமன் என்னும் ஒரு ஆண் மகவும் இருந்தனர். மனு தான் ஆண்டுவந்த நாட்டின் தென் பாகத்தை யமனுக்கும் வடபாகத்தை இழைக்கும் அளித் தான். இயமன் ஆண்ட தென்னடு கடல்வாய்ப்பட்டது. இதுபற்றியே இயமனுடைய உலகம் தெற்கில் உள்ளது என் னும் ஐதீகம் இன்று வரையும் உள்ளது. கூற்றுவணுகிய இய மனும் இவனும் ஒருவணுகப் பிற்காலத்திற் கருதப்பட்டமையி ணுற்போலும் இறந்தவர்கள் இயமனுட்டில் (தெற்கில்) வாழ்கின் முர்கள் எனக் கருதப்பட்டு அவர் தென் புலத்தார் என வழங்கப்படலாயினர். வடக்கே இருந்த நாடு பெண்ணுல் ஆளப்பட்டமையின் குமரி நாடு என்று வழங்கப்பட்டது. தமிழகத்தின் ஒரு பகுதியாகிய மலையாளத்தில் பெண்களுக்கே ஆண்களிலுங் கூடிய அதிகாரமுண்டு. அரசுரிமையும் சொத்

Page 14
8
துரிமையும் பெண் வழியையே சாருகின்றன. தமிழ் நாட்டில் பெண்களே நெடுங்காலம் ஆட்சிபுரிந்திருக்கிருரர்கள். தீர்த்த யாத்திரையிற் சென்ற அருச்சுனன் பாண்டி நாட்டில் பெண் ணாசு செலுத்திக்கொண்டிருந்த சித்திராங்கதை (அல்லி)யை மணந்து பப்புரவாகனப் பெற்ருன் என்று பாரதம் கூறு கின்றது.
“ The puranas relate that Manu, the Lord of the Dravidas divided the country into two halves giving southern portion to his son Yama and the rorthern where his capital was situated to his beloved daughter Ela. To this day the southern land now submerged under the sea. is known to the masses as the dominion of Yama, the Lord of the south. The land of Ela was . kumari nadu, ruled and presided by queens. Even today in Malabar a portion of the Tamilagam the queen is the owner of the kingdom , and the brother who governs the people is her representative. The succession descends in the female line; and women in Malabar are heiresses and owners of property and are treated with greater regard and consideration than men (Tamilian Antiquary No. 1)
* ஆராய்ச்சியில் இத்தாை (குமரிநாடு) குமரிக்கு நேர் தெற்காகக் காணப்படவில்லை. சற்று சரிந்து தென்கிழக்காக விருக்கலாம். ஆசியாக்கண்டத்தின் ஒர்படம் எடுத்துப் பார்த் தால் நான் கூறுவது எளிதிற் புலப்படும். குமரிக்கும் இலங்

9
சிகையின் வடபாலுக்கு மோர்வாைகீறி அவ்வரையிலிருந்து தென்கிழக்காகப் போகிறதாயிருந்தால் இலங்கை, மலேய துவிபகற்பம், சாவா, சுமத்திரா, பண்டா, செலிபிஸ், போனியோ புதுக்கினி நியுசீலண்ட் முதலான எண்ணிறந்த தீவுகளைக் காணலாம்.
* தெளிந்த வானத்தில் உடுக்கூட்டங்கள் விளங்குவன போல் நீருக்கிடையில் இவ்விதமாக ஆங்காங்குகிலத்துண்டுகள் பல அளவினும் இருப்பதைப்பற்றி எண்ணும்போது, தென் னித்தியா முதல் கியுசீலண்ட் வரைக்கும் ஒருகாலத்தில் கடுக் தரையிலிருந்ததாகவும் ஏதோகாரணத்தால் அது பிளப்புண்டு, பலவிடத்திலும் பள்ளம்விழுந்து கடலுடன் சம்பந்தப்பட்டு கடல் நீர் ஏறினதாகவும் கருதவேண்டியிருக்கின்றது. இக் கருத்தை ஐரோப்பிய கலைஞர்களும் சரித்திர ஆசிரியர்களும் உறுதிப்படுத்துகின்றர்கள். கடலின் கண்ணுள்ள, மண் கல் முதலியவற்றை மேற்படி சாத்திரிகள் ஆராயும்போது மேற் குறித்த கருத்தை நிலைநாட்டுகின்றர்கள்.
* இக்கொள்கையை நிலைநிறுத்த வேறு காரணங்க ளுண்டோவென ஆராய்வாம்: மேற்கூறிய யாவா முதலிய தீவுகளில் நடைபெற்றுவரும் மொழிகள் தமிழ் மொழிக்கு அதிக உறவுள்ளனவாகக் காணப்படுகின்றன.
ஐரோப்பிய பாதிரிமார் தமது கவனத்தை நியுசீலண் ،، و டில் செலுத்திய காலத்தில் அவர்களுடைய நாட்டம்மேஜரிஸ்’ (Maoris) என்த்ம் பண்டுள்ள அத்தேசத்தவரின் மொழியிற் சென்றது. அதை அவர்கள் ஆராய்ந்து பார்த்ததில் அது தமிழுக்கு எவ்வளவோ அடுத்ததாகக் காணப்பட்டது. அது பற்றி Taylor' என்னும் பாதிரியார் முப்பது வருடங் களுக்கு முன்னே வெளியிட்டிருக்கின்முர்.

Page 15
O
8 மேற்கூறிய காரணங்களால் தென்னிந்தியாவின் மேற் குக் கரையிலிருந்து நியுசீலண்டு வரைக்கும் பண்டு ஒரே மொழி கடைபெற்று வந்ததாகக் காணப்படுகின்றது. இதில் ஆஸ்திரேலியாவும் உட்பட்டிருக்கலாம்.'
(திருவாளர் T. பொன்னம்பல பிள்ளை M.R.A.S.)
'Geology and Natural History make it alike certain at a time within the bounds of human knowledge, southern India did not form part of Asia. A large continent of which this country once formed part has ever been assumed as necessary to account for the different circumstances. The Ceylon Budhists and the Puranic Writers and the local tradition of the West coast all indicate a great disturbance of the point of the Peninsula and Ceylon within recent times' (Topinard)
* மனிதனுடைய அறிவு எட்டிய ஒரு காலத்தில் தென்னிந்தியா ஆசியாவின் பகுதியாக விளங்கவில்லை யென் பதை நில நூல் சீவப்பிராணிகள் சரித்திரம் முதலியன உறுதிப்படுத்துகின்றன. பல நியாயங்களால் தென்னிந்தியா தெற்கேயிருந்த பெரிய கண்டத்தின் மிச்சமெனக் கருதப்படு கின்றது. இலங்கைப் புத்தர், புராண்காரர் முதலியோர் எழுதி யுள்ள வரலாறுகளும் மேற்குக்கரையில் உள்ளவர்களின் கன்ன பரம்பரையும் இலங்கையும் தென்னிந்தியாவும் சமீபத் தில் பல குளப்பங்களுக்குள்ளாயின வென்பதைக் குறிப்பிடு கின்றன.

India, South Africa and Australia were connected by an Indo-oceanic continent in the "Permian Epoch” (H. F. Blanford)
6 முதலாம் காலப் பகுதியின் கடைக்கூறில் இந்து சமுத்திரத்தினூடே விளங்கிய ஒரு கண்டம், இந்தியா தென் ணுபிரிக்கா, ஆஸ்திரேலியா முதலிய நாடுகளை இணைத்துக் கொண்டிருந்தது."
"Peninsular India or the Deccan (literally, the country to the south) is geologically distinct from the Indo-Gangetic plain and the Himalaya. It is the remains of a former continent which stretched continuously to Africa in the space now, occupied by the Indian ocean. The rocks of which it is formed are among the oldest in the world and show no traces of having ever been submerged. In many parts they are overlaid by a sheet of black "trap' rock or basalt, which flowed over them as molten lava. In the Deccan we are therefore, in the first days of the world. We see land substantially as it existed before the beginning of life.
"The Indo-Gangetic plain stretches without a break from the Indus on the west to the Delta of the Ganges on the east, a distance of twelve hundred miles. When the world was still in the making and before the elevation

Page 16
2
of the Himalaya, the space now occupied by this plain was a sea. The southern shore of this sea was what is peninsular India. With the rise of the Himalaya the sea disappeared and the rivers draining the Himalaya flowed, into the depression bringing with them the silt which is now the soil of the plain.
(Sir T. W. Holderness, G.C.B., Peoples and Problems of India P. 28, 24.)
* இந்தியாவின் தென்பகுதி கங்கையாறு பாயும் நிலப் பரப்புக்கும் இமயமலைக்கும் வேரூனது. இது இப்போது இந்து சமுத்திரம் இருக்கின்ற இடத்தில் ஆபிரிக்கா வரையில் தொடர்ச்சியாக நீண்டிருந்த பழய கண்டத்தின் மிச்சமாயிருக் கின்றது. இதிலுள்ள குன்றுகள் உலகத்திலுள்ள் மிகப் பழையவற்றுட் சேர்ந்தன. இவை ஒருகாலத்திலும் நீருள் மூழ்கியிருந்த குறிகள் இல்லவேயில்லை. இக்குன்றுகளின் பலவிடங்களிற் கருங்கற்பாறை தகடாகப் பரவியிருக்கின்றது. ஆகையால் அஃது உலகில் முற்காலத்தில் உயிர்கள் தோன் றும் முன்னர் இருந்தபடியே தெற்கில் இருக்கின்றது. சிந்து கங்கைச் சமவெளி சிந்துநதி தொடங்கிக் கங்கைக் கழிமுகம் வரையில் ஆயிரத் திருனு று மைல் தூரம் இடைவெளி யின்றி நீண்டிருக்கின்றது. மண்ணுலகு வளர்ந்துகொண்டிருக் கும்போது இமயமலை கிளம்பும் முன்னர் கங்கை நிலவெளி யிருக்கும் இடம் கடலாயிருந்தது. அந்தக் கடலின் தெற் குக்கரையில் தென்னிந்தியா விருக்கிறது. இமயமலை கிளம் பியபோது கடல் மறைந்தது. இமய்மலையிலிருந்து ஓடும் ஆறு

13
ாள் வாரிக்கொண்டு வந்த மண்ணினுல் இப்போதுள்ள வெளி
லம் உண்டானது." t
f 'தென்னிந்தியா ஆபிரிக்கா தொடக்கம் இந்தியாவரை பும் அகன்றிருந்த ஒரு பூகண்டத்தின் கிழக்குப் பகுதியாகும். மக்கட் கூட்டத்துக்குப் பிறப்பிடமாகிய அக்கண்டத்தினின் ஹம் மக்கள் வேற்றிடங்களுக்குச் செல்லத்துவங்கியபோது தென்னிந்தியா மேற்கே மடகாசிகரோடும், கிழக்கே மலாயாத் தீவுகளோடும் இணைக்கப்படாமல் இருக்கவில்லை. மக்கள் தென் னிந்தியாவினின்றும் பெயர்ந்து பிறவிடங்களுக்குச் செல்லத் தொடங்கிய காலத்தில் மாத்திரமன்றி அதற்குப் பின்னும் இந்தியா ஆசியாவின் வடமேற்கு நாடுகளோடு இணைக்கப்பட் டிருக்கவில்லை. அக்காலம் மத்திய ஆசியாவில் கிலவிய கடல் இந்தியாவின் வடமேற்கெல்லையாயிருந்தது. முன் பிறநாடு களிற் குடியேறிய மக்கள் (தமிழர்) வட இந்தியாவை அடைய வில்லை. அக்காலத்து இந்தியாவின் தென்பாகம் வடபாகத் தோடு முற்முக இணைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழர் வடக்கே Lair at Jit Surfa) (Tribes of Northern countries) வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அவர்கள் (தமி ழர்) தாம் இப்போ வாழ்வதும் தமது முன்னுேர் பல தலை முறைகளாக வாழ்ந்ததுமாகிய தென்னிந்தியாவுக்குத் தொடர் பில்லாதவர்கள் எனக் கூறுதல் பொருந்தாது. ஒருகாலம் வங்காளத்தின் கீழ்ப்பாகம் தமிழர் அதிகாரத்தின்கீழ் இருந் தது. புத்தருடைய காலத்துக்குமுன் தமிழர் அனம் (Annum) 676örgpluh (5 tu 60- வென்று அதற்கு பொங் லொங் (Bong Tong) என்னும் பெயரிட்டார்கள். வங்கா ளாத்தில் 6 லக்லம்' உடைய சந்ததியார் கி. மு. ஏழாம் நூற் முண்டு தொடங்கி கி. பி. 258 வரை நீண்டகாலம் அரசுபுரிந்

Page 17
14
திருக்கிறர்கள். சரித்திர காலத்தில் இந்தியாவுக்குப் புதிதாக வந்தவர்கள் எனச் சொல்லப்படும் ஆரியர், மக்கள் இனத் தைக் குறித்த ஆராய்ச்சியால் தமிழரிலிருந்து வித்தியாசப்பட வில்லை. திராவிடர் முற்காலத்தில் தோற்றத்திலாவது மன வலிமையிலாவது ஆரியருக்குக் குறைந்தவரல்லர். தமிழர் பழமைதொட்டு தென்னிந்தியாவில் வாழ்ந்தார்கள் என்று ஒப் புக்கொண்டால் புதிதாக வேறு சாதியார் கூட்டங் கூட்டமாக வந்தபோது முன்னிருந்த மக்கள் என்ன செய்தார்கள் என் னும் கேள்வி எழுவது இயல்பு: அக்காலத்தில் வட இந்தியா வுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையே கிடந்த கடல் தரையாக மாற இருநாடுகளும் தொடுக்கப்பட்டன. தெற்கே இருந்தவர்கள் வடக்கே சென்ருர்கள். இந்தச் செழிப்பும் செல்வமும் பொருந்திய நாட்டை அடைய முடியாதவர்களா யிருந்தால் அவர்கள் (தமிழர்) புதிதாக வந்தவர்களைத் துரத்தி யிருப்பார்கள். தெற்கே இருந்த தமிழர் இயற்கைக்கு மாருக நடந்துகொண்டார்களென்று சொல்வதற்கு இடமில்லை. -B.C. mazumdar. The Madras Review July 1922
இந்திய வானசாத்திரப்படி இலங்கையில் இராவண னுடைய இராசதானிக் கூடாகச் சென்றதாகச் சொல்லப் படும் கிரட்சரேகை (meridian) இலங்கைக்கு மேற்கே 400 மைல் தூரத்திலிருக்கும் மாலை தீவுக்கூடாகச் செல் கின்றது.
* இக்கரைப்பாகத்தில் அமிழ்ந்திப்போய்க் காட்டின் பகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்ட குறிகள் இன்னும் இருக் கின்றன. இப்பகுதி அமிழ்ந்திப்போன லெமூரியாக் கண்டத் தின் பகுதியோ அல்லது பிந்திய காலத்ததோ என்பது மயங் கக் கிடக்கின்றது'-கதிர்காமவேலவர்-Sir P. அருணுசலம்.

15
6இலங்கையிலே இருந்த தெய்வங்கள் வெகுண்டு ஒரு கடல்கோளை உண்டுபண்ணின. 400,000 தெருக்களும் 25 அரண்மனைகளும் இராவணனுடைய கோட்டைகளும் இருந்த தூத்துக்குடி முதல் மன்னர் வரையுமுள்ள கிலத்தைக் கடல் அடித்துக்கொண்டு போய்விட்டது. இது துபாவா ஊழியில் கிகழ்ந்தது, அப்படியே களனி இராசாவாகிய திசராசன் 'காலத்தில் 100,000 பட்டணங்களையும் 970 மீன் பிடிகாரர் குப்பங்களையும் 400 முத்துக்குளிகாரர் குறிச்சிகளையும் கடல் விழுங்கிவிட்டது.” -இராசாவளி * 'பாஸ்காாசாரியர் எழுதிய வானநூற்குறிப்பில் மத்திய ரேகை (Equator) பழைய இலங்கைக் கூடாகச் செல்கின் றது. இதனுல் இராவண இலங்கை இப்போதுள்ள சுமத்திரா வாக இருக்கலாமெனக் கருதுகின்றனர்.”
፳ -Ravana of Lanka by N. S. Adhikari. “The Lemurian or Sclater's Theory. g)d கொள்கையின்படி தமிழரின் உற்பத்தித்தானம் இமயமலை உண்டாவதன்முன் இந்து சமுத்திரத்தில் மூழ்கிப்போன லெமூரியாக் கண்டமாகும். இப்பூகண்டம் மேற்கே மடகாசிகர் வரையும் கிழக்கே மலாய தீவுகள்வரையும் பரந்து தென்னிங் தியா ஆஸ்திரேலியா என்னும் நாடுகளையும் தொட்டுக்கொண் f டிருந்தது. அப்படி யிருந்தால் இங்கிலப்பாப்பு நீருள் மறைவ தன்முன் தமிழர் தெற்கினின்றும் இந்தியாவை அடைந்திருத் தல் வேண்டும். -Tamil Studies P. 2. ‘சாவா’ என்னும் தீவின் வடகரையில் மதுரை நீரிணை யென்னும் ஓர் சிறிய நீரிணை உளது. அதற்கு வடக்கே மதுரை % இவர் கி. பி. 1114-ல் பிறந்து 1150-ல் சித்தாந்த சிரோமணி என்னும் நூல் இயற்றியவர்.

Page 18
16
யென்னும் ஒரு சிறு தீவும் உண்டு. போணியோவின் கிழக்குக் கரையிலும் மேற்படி பெயருடன் ஒரு தீவு இருக்கின்றது. இது முற்ருக அல்லது சிறிதாகக் கடலாற் சூழப்பட்டது. இவ் விடங்களிலொன்று பழைய மதுரையாயிருத்தல் கூடும்’ --திருவாளர் T. போன்னம்பல பிள்ளை M. R. A. S. ** Madura-(Dutch madorea) an island of the Dutch East Indies separated by the shallow strait of Madura from the N. E. Coast of Java. —Encyclopaedia Britannica * மூன்ரும் காலப் பகுதியின் பெரும்பகுதியில் இலங்கையும் தென்னிந்தியாவும் வடக்கே கடலை எல்லையாகப் பெற்றிருந்தன. தெற்கேயிருந்த கண்டம் அல்லது பெரிய தீவின்பகுதியாக அவை இருந்திருத்தல் கூடும்.’
—Alfred Russel Wallacer “At one time the Himalaya mountains were at the bottom of the sea and were slowly lifted out of it - “once with the whales now with the eagle skies' “and at one time there was almost certainly a great continent in the middle of the Atlantic Ocean. Ab
(Book of Knowledge Page 518.) "In the light thrown by recent researches on the structure and the origin of mountain chains the explanation of these facts is no longer difficult. From early Palaeozic times the peninsula of India has been dry land, a part, indeed of a great continent which in mesozoic

17
imes extended towards the Indian ocean
wards South Africa. Its Northern shores were washed by the sea of Tethys, which at (east in Jurassic and cretaceous times, stretched cross the old world from West to east, and in sea were laid down the marine deposits of
ihe Himalaya.'
"In the Himalaya the geological sequence, from the ordovician to the Eocine, is most bntirely marine.' --Encyclopaedia Britannica
' தற்கால ஆராய்ச்சி அறிவினல் மலைத்தொடர்களின் உற்பத்தி அமைப்பு முதலியவற்றைக் குறித்த உண்மைகளை அறிந்து கொள்ளுதல் வில்லங்கமல்ல ; இரண்டாம் காலப் பகுதியில் தென்னிந்தியா கடுந்தசையாக விருந்தது. அது மூன்றும் காலப் பகுதியில் இந்து சமுத்திரத்துக் கூடாக தென் ஆபிரிக்கா வரையில் அகன்றிருந்த கண்டத்தின் பகுதி பாகும். அதன் வடக்குக் கரையில் Tethys கடல் இருந் தது. அக்கடல் யூருசிக், கிறிரேசஸ் காலங்களில் கிழக்கு மேற்காக ஆசியாவுக் கூடாகப் பரந்திருந்தது. இங்கேதான் இமயமலையின் தளம் இருந்தது.
ஒடோவிசியன் தொடக்கம் எஒசின்’ காலம் வரை
இமயமலை இருக்கும் இடம் கடலாயிருந்தது'
கில நூலார் பூமியின் வயசை% ஐந்து காலப் பகுதிகளாக வும் பின் ஒவ்வொரு காலப் பகுதியையும் பல கூறுகளாகவும் பிரித்திருக்கின்றனர்.
2

Page 19
Y
S
குமரி கண்டம் கடல்வாய்ப்பட்டதன் காரணம்
* இது (ஆஸ்திரேலியா) விக்கை மிக்க நாடு; இங்குள்ள மரஞ்செடிகளிற் பல இயற்கையாய் வேறெந்த நாட்டிலும் வளர்வதில்லை. அவ்வாறே வினப்பறவை, சுவர்க்கப்பறவை, ஏமு முதலிய பறவைகளிற் பலவும், கங் காரு முதலிய விலங்கு களிற் சிலவும் உலகில் வேறெங்கும் இயற்கையிற் காணக் கிடைப்பனவல்ல. மக்களும் அவ்வாறே. இவற்ற7ல் கொள் ளக்கிடப்பது யாதெனில், ஆஸ்திரேலியா முதலில் உலகொடு
w -- w சார்பு பெற்றிராத ஒரு கில உருண்டை என்பதே. உண்மை
; அவை வருமாறு :-
Eras. Epochs. Archaean o'r Eozoic Fundamental Genessis
Cambrian ' Sirian . Devonian and old red
imarv or Palaeozoic : ') Primary or Palaeoz : Sand stone
Carboniferous Permian
{ Triassic Secondary or mesozoic Jurassic
(Cretaceous
Eocene 举 Oligocene tiar v or Cainozoic حمت< Tertiary Or | မုံ့ဖြုံဖုံ
Pliocene
Post Tertiary Or Pleistocene (glacial)
quaternary Recent (Post glacial)

யில் இதுவோர் விண்வீழ்மீன் (Comet). இது விசும்பினின்று யாதோ காரணத்தால் இம் மண்ணுலகின் மீது வீழ்ந்திருக்க வேண்டும். இருவகை இயக்கத்தோடு கூடிய உலகின்மேல் வீழ்ந்தபோதுதான், லெமூரியா கடல்வாய்ப்பட்டது; சிந்து, கங்கைவெளி, இமயமலை, மத்திய ஆசியா முதலிய நிலப்பகுதி கள் வெளிக்கிளம்பின. ஆஸ்திரேலியாவின் வரலாற்றை இவ் வாறு கொள்ளுமிடத்து இப்போது பூகோள நூல4 ராய்ச்சி யில் காரணங் காட்ட முடியாவாறு நம்மை மலைவுறத்தும் இரு பத்தி மூன்று இடையூறுகள் விலகிவிடுகின்றன. அத்தடை கட்கெல்லாம் தக்க விடை ஏற்படுகின்றன. இவற்றையெல் லாம் இங்கு விரித்துரைக்க இயலாது. ஒன்றுமட்டும் கூற லாம். விரைவாய்ச் சென்றுகொண்டிருக்கும் டம்பரத்தின்மீது ஒரு கல் தாக்குமாயின் அது வளைவாய்ச் சாய்ந்து சுற்றிப் பின் S னர் ஒய்ந்துவிடும், அதுபோன்ற இவ்வுலகம் பண்டை நாளில் செங்குத்தாய்ச் சுழன்றுகொண் டிருக்கிருக்க வேண்டும். அது காலை மேற்குறித்த வண்ணம் ஆஸ்திரேலியா வானத்தினின் றும் தவறிப் பூமியின்மேல் தாக்கி யிருக்க வேண்டும். அத குல் மேற்குறித்த கில நீர் மாறுதல்கள் உண்டானதோடு, பூமி யும் சாய்ந்து சுழலலாயிற்று. இற்றைக்கு நூாருண்டுகளுக்கு முன்னர் 26 டிக்கிசி சாய்வோடு சுழன்றது. அதற்கு முன்னர் இன்னும் அதிக சாய்வுற்றிருந்திருக்க வேண்டும். இப்போ துள்ள சாய்வு 233 டிக்கிரிகளுக்கு மேலில்லை. இவ்வாறு சென்ருல் நாளடைவில் இச்சாய்வு அடியோடு மறைந்தொழிய லாம். அந்நாளில் இருவகை அயனங்களும் பட்டொழியும்; பருவ வேறுபாடுகளும் சுருங்கிவிடும். உயிர்த்திரள்களின் வாழ்க்கை நிலையும் பெரிய மாறுதலடையும். இன்னும் தொடர் ந்து இது குறித்து நாமிப்போது எண்ணிப் பார்க்கவேண்டிய

Page 20
2O
தில்லை. இங்கு குறிக்கத்தக்கதெல்லாம் ஆஸ்திரேலியா இப்
புவியின்மீது வீழ்ந்து தாக்கிய ஒரு விண்மீன மென்பதே,
திருவாளர் பா. வே. மாணிக்க நாயகரவர்கள் B. E. M.
C. I.--செ.செல்வி. சிலம்பு 1. பரல் 3.
முன் கடலாயிருந்த சகரா வனந்திரத்திலிருந்த நீர் வற். றத் தொடங்கி கிலனுக மாறியதே குமரிநாட்டின் அழிவுச்கு எது என்பது பிறிதோர் கொள்கை.
'சகரர் வேள் விக் குதிரை நாடித் தொட்டகலகந்துட் பட்டு குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்' என குமரியாற்றக்கும் அதனை அடுத்த கிலத்தின் அழிவுக்கும் காரணங் கூறுவர் பேராசிரியர். சகாகுமாரர் தோண்டிய தாற் கடலுண்டானதென இராமாயணங் கூறுகின்றது. இது ஒரு காலத்து நேர்ந்த எரிமலைக் குளப்பத்தைக் குறிப்பதா யிருக்கலாம். புராணகாரர் அதனைக் கற்பனைக் கதையால் புனைந்து கூறியிருத்தல் வேண்டும்.
1. இந்தியா. இந்தியா என்பது சிந்து நதிக்கு இரு பக்கங்களிலுமுள்ள நாடுகள் என்று பொருள்படும். இது பரசீகரால் (Persians) சிந்து நதிப்பக்கங்களிலுள்ள நாடுகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இப் பெயர் t கொடோரஸ் (Herodotus) என்னும் சரிதா சிரியராலும் அலெக்சாந்தர் படையெழுச்சிக் காலத்திலி
“The Indian OC6a). formed a continent which extended from Sunda Islands along the coust of Asia to the east coast of Africa. This
1 கி. மு. 5-ம் நூற்முண்டின் பிற்பகுதியில் விளங்கியவர்.

2.
ருந்த சரிதாசிரியர்களாலும் கிரேக்க தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டது. இப்பேர்து இந்தியா என்பது இமயமலைக் கும் கன்னியா குமரிக்கும் இடையிலுள்ள நாட்டைக் குறிக் கின்றது. இது பிறநாட்டார் பரத கண்டத்துக்குக் கொடுத்த பெயராகும்.
2. மக்கள் தோற்றம்.
மக்கட்படைப்பு முதற்முேன்றியஇடம் இப்போது இந்து சமுத்திரத்துள் மூழ்கிக் கிடக்கும் கண்டமாகுமென ஐரோப் பிய பண்டிதர்கள் பலர் ஆராய்ந்து கூறுகின்றனர்.
'இந்து சமுத்திரம் ஆசியாவின் கரையை ஒட்டிச் சங் தாத் தீவுகள் முதல் ஆபிரிக்காவின் கரைவரை நீண்ட ஒரு பூகண்டமா யிருந்தது. இந்தப் பூகண்டம் ஆதியில் மக்கள் முதலிற் முேன்றினரென்னுஞ் சிறப்புடையதாயிருக்கின்றது'. (ஹேக்கல்) புதிய ஆராய்ச்சிகளால் மக்களினம் முதற்றேன்
large continent is of great importance from being the possible cradle of the human race.'
“There are a number of circumstances (specially chronological facts) which suggest that the primeval home of man was a continent now sunk below the surface of the Indian Ocean which extended along the South of Asia as it is at present (and probably in direct connection with it) towards the east as far as further India, and the Sunda Islands, towards the west as far as the Madagascar and the south shores of Africa.

Page 21
22
றியவிடம் இப்போது இந்து சமுத்திரத்தில் மூழ்கிக் கிடக்கும் நிலமெனத் தெரிகிறது. (மக்கனூல்)
* மக்கள் இனத்தைக் குறித்த ஆராய்ச்சியால் வடக்கே யுள்ள சாதிகளும் மத்தியதரைக் கடற்பக்கங்களிலுள்ள சாதி களும் தென்னிந்தியாவினின்றும் சென்றனவாகக் காணப்படு கின்றன. கிழக்குக் கரைகளில் மக்கள் என்பு முதலிய சின் னங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவை இவ்வளவு காலத் துக்கு முற்பட்டனவென்று அறிந்து சொல்லமுடியாத பழ மையுடையன வாயிருக்கின்றன. தென்னிந்தியாவிலிருந்த பெரிய சாதியார் தமது அறிவையும் உயர்ந்த குணங்களையும் மாத்திரமல்ல, தமது தோற்றம், வடிவம் (Physical qualities) முதலியனவற்றையும் உலகம் முழுவதிலும் பரப்பிய வர்களாக்கக் காணப்படுகின்றனர்” என Dr. மக்லீன் என்ப
வர் கூறுகின்றனர்.
'ஆதி மாலமல நாபிக் கமலத்த லுதித்
தவன் மரீசி யெனு மண்ணலை யளித்த பரிசும் காதல் கூர்தருமரீசி மகனுகி வருமகன்
காசிபன் கதிரருக்கனை யளித்த பரிசும்
'This large continent of former times Sclater, an English man has called Lemuria from the monkey like animals which inhabited it and it is at the same time of great importance from being the probable cradle of the human race which in all likelihood here first deveoped out of anthropoidapes' (Prof. Ernest Haeckel.)

28
அவ்வருக்கன் மகனகி மனுமே திணிபுரக்
தரிய காதலனை யாவினது கன்றுநிகரென்
றெவ்வருக்கமும் வியப்ப முறை செய்த பரிசும்
மிக்கு வாகுவின் மைந்தனென வந்த பரிசும்’
: The locality of the origin of the earliest race from recent researches appears to have been on lands now submerged beneath the Indian Ocean (science of man Australia Dec. 1900.)
“Investigations in relation to race show it to be by no means impossible that southern India was once the passage ground by which the ancient progenitors of northern and mediterranean races proceeded to the parts of the globe which they now inhabit. Human remains and traces have been found on the east coast of an age which is indeterminate but quite beyond the ordinary calculations of history. Antiquarian research is only now beginning to find means of supplementing the deficiency caused by the absence of materials constructed or collected by usual historical methods. These results are specially to be regretted as without doubt, the people who have for many ages occupied this portion of the peninsula are a people influencing the whole world not perhaps

Page 22
24
by moral and intellectual attributes to a great extent by superior physical qualities.'
(Dr. E. Maclean.) என்னும் கலிங்கத்துப் பரணி மக்கட் படைப்புத் தமிழகத்தில் உற்றதாகவே கூறுகின்றது. இங்கு கூறப்பட்ட இராச பரம் பரையிலுள்ளோர் தமிழ் மக்களாகவே காணப்படுகின்றனர்.
* வழங்குவதுள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி, பண்பிற் றலை பிரிந்தற்று” என்னும் திருக்குறள் உரையில் பரிமேலழகர் * பழங்குடி தொன்றுதொட்டு வருகின்ற குடி ; தொன்று தொட்டு வருதல் சேர சோழ பாண்டிய ரென்முற்போலப் படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருதல்" எனப் பொருள் கூறினர்.
தமிழர் தென்னிந்தியாவை வென்று குடியேறினர்களோ அல்லது பூர்வமே அங்கு வாழ்ந்து வருகின்ருர்களோ என்று அறியக்கூடாத அவ்வளவு பழமை தொட்டு இந்தியாவில் உறைகின்ருரர்கள் என்றும், அவர்களுடைய உற்பத்தி மதுரை அல்லது தஞ்சாவூருக்குச் சமீபத்தில் இருக்கலாமென்றும் அவர்கள் பிறநாடுகளிலிருந்து இந்தியாவை அடைந்தார்க ளென்பதற்கு யாதும் வரலாறு காணப்படவில்லையென்றும்
Dr. வெர்கூசன் என்பவர் கூறுவர். t
iTheir The Dravidans' settlements in India extend to such prehistoric times that we cannot even feel sure that we regard them as immigrants or, at least, as either conquerors or colonists on a large scale but rather as abc riginal in the sense in which that term is usullay understood.

25
* விவிலிய நூலின் கூற்றை நம்பி பலஸ்தீன் நாட்டிற் முன் மக்கட்படைப்பு முதற்றேன்றியதென்பது சிலர் கருத்து. யெகோவாவால் ஒரு ஆண் மகனும் பின் அவன் என்பு கொண்டு ஒரு பெண்மகளும் திடீரென்று உண்டாக்கப் பட்டமை விவிலிய நூலிற் சொல்லப்படுகிறது. இத்தகைப் "படைப்பு வரலாறு உடல் வளர்ச்சி முறை நன்கு ஆராய்ந்து காட்டப்பட்ட இந்நாளில் அறிஞரால் ஒத்துக்கொள்ளப்பட மாட்டாது. நடுக்கோட்டுப் பகுதியிலேயே முதல் உயிர்கள் தோன்றுவதற்கேற்ற வசதிகள் உண்டு என்பது ஆராய்ச்சி யாளர் துணிபு' 'புரோடாஜ (Protozoa) என்னும் (வருண மும் உருவமுமற்ற) நொய்ய நீர்வாழுயிர்களிலிருந்து பஞ் சைப் போன்ற (sponges) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பவளக்கொடி யாக்கும் (Coral Builder) பிராணிகள் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து வெள்ளி
The hypothesis, that would represent what we know of their history most correctly, would place their original seat in the extreme south, somewhere probably not far from Madura, or Tanjore and thence spreading fan-like towards the north. They have no traditions which point to any seat of race out of India, or of their having migrated from any country whose inhabitants they can claim any kindred so far as they know they are indigenous and aboriginal. -Dr. Fergussion quoted in Tamilian
antiquary No. 1.

Page 23
26
மச்சங்களும் (Star fish) நத்தை நண்டு புழு பூச்சி களும் தோன்றுகின்றன. அவைகளிலிருந்து பட்சிகளும் வெளவால்களும், அவைகளிலிருந்து மிருகங்களும், அவை களிலிருந்து வான ரங்களும், அவைகளிலிருந்து வாலில்லாக் குரங்குகளும் தோன்றின. கடைசியில் மனிதர் தோன்றினர் என்றும் குரங்குக்கும் மனிதனுக்கு மிடையில் உள்ள ஒரு வகைப் பிராணி இருந்திருக்கவேண்டுமென்றும் கருதப்படு கிறது, இதுவே தொல்லுயிர் நூலார் படைப்புக் கிரமங்களைக் குறித்துக் கூறும் முறையாகும். இச்சாத்திரிகள் கொள்கை யோடு விவிலிய நூற் கூற்றுச் சிறிதும் ஒத்துப்போகவில்லை. மக்கட்படைப்பு இவ்வுலகில் 300,000 வருடங்கள் வரையில் தோன்றியிருக்க வேண்டுமென சாத்திரிகள் கருதுகின்றனர். மனுவின் காலத்தில் ஒரு சலப் பிரளயம் உண்டானதென்றும் அச் சலப்பிரளயத்துக்குப் பிழைத்திருந்த மனுவினின்றும் மக்கட் சந்ததி உலகில் பெருகிய தென்றும் புராணங்கள்
நுவல்கின்றன.
சலப்பிரளயத்துக்குப் பின் மக்கட் சந்ததி இந்தியாவி லேயே பல்கியது என சேர்வால்டர் றலி என்னும் மேல் காட்
டறிஞர் கூறுகின்றனர். *
மனு கிருதமாலை என்னும் ஆற்றங்கரையில் தவஞ்செய்து கொண்டிருந்த ஒரு முனிவரென மச்சபுராணங் கூறுகின் றது. மனு சத்திய விரதனென்னுமோர் தமிழ் வேந்தனெனப்
% According to Sir Walter Raleigh India was the first planted and peopled country after the flood. (Dravidian India.)

2
பாகவத புராணம் புகலும், வையை நதிக்குக் கிருதமாலையென் லும் பெயர் ஆலாசிய மான்மியத்திற் காணப்படுகிறது*
தமிழ்நாட்டுப் பழைய வேந்தர்களாகிய முசுகுந்தன், சிபி முதலானேர் மனுவழித் தோன்றியவர்களெனச் சொல்லப் படுகின்றனர்.
பழைய புராண வரலாறுகளிற் சொல்லப்படும் அரசர் முனிவர்களும் தென்னுட்டினராகவே எண்ணப்படுகின்றனர். காசிபர் பழைய இலங்கையை ஆண்ட சூாபன்மாவுக்குப் பிசா. இவர் தக்கன் புதல்வியர் பதின் மூவரை வதுவை அயர்த்து அவர்கள்பால் அசுரர், அமரர், கருடர், முனிவர், யக்கர்,பூதர், நாகர், கந்திருவர், சித்தர் முதலிய பதினெண் கணங்களுட் பலரைப் பிறப்பித்தவராகக் காணப்படுகின்றனர். பதினெண் கணங்களெனப் பகாப்படுவோர் பழந்தமிழருக்குட் காணப் பட்ட பதினெண் குழுவினர் எனக் கருத இடமுண்டு. கி. மு. 543-ல் விசயன் இலங்கையை அடைந்தபோது அங்கு வாழ்ந் தோர் இயக்கர் நாகர் என்னும் சாதியார்களே. இலங்கையை சூரன் முதலிய அசுரரும், குபேரன் முதலிய தேவரும், இரா
வணன் முதலிய இராக்கதரும் ஆண்டார்கள்.
*Manu is spoken of in Bhagavada-purana as the ford of Dravida.'
“In the XII Chapter of the alas ya mahatmya a portion of the Skandha purana where Suta-muni addressing Rishis says as follows:- 'I have described to you the Origin of the river Vaigai. This river is also named as SivaGangai, Vegavathi, Siva Gnanam vilambiti and Kritamalai.” (Tamilian antiquary No. 1.)

Page 24
2S
இந்திரன் வருணன் யமன் இராமன் கண்ணன் அருச்சு -னன் முதலானேர் கார்கிற முடையவர்களாகக் கூறப்படுகின்ற னர். தருமபுத்திரனை கெளதமனுர் என்னும் புலவர் பாடி மகிழ்வித்த பாடலொன்று புறநானூற்றில் காணப்படுகின்றது. அதில் தருமபுத்திரர் அறன்மகன் எனக் கூறப்படுகின்றனர். அறன்மக னென்பதே பிற்காலத்தில் தருமபுத்திரன் எனச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருத்தல் கூடும். தரு மன் (யமன்) தருமபுத்திரன் முதலானேருக்குரிய மொழி தமிழென்பது புலனுகின்றது. வருணன் தென் தேசத்தின் ஒரு பகுதிக்கிறை. மாருதி (அனுமந்தன்) பிதா. நெய்தல் கிலத் துத் தெய்வத்துக்கும் பெயர் வருணன். இவ்வருணனே வடக்கே உள்ளவர்களின் வழிபாட்டுக் குரியவனுகவும் இருந் திருத்தல் கூடும், மால்கரிய மேனியன்; முல்லைநிலத் தெய்வம். இந்திரன் தென்னட்டு அரசன் அருச்சுனனுக்குப் பிதா, இவன் இராசதானி கிருஷ்ணுருதியின் முகத்துவாாத்திலுள்ள அமாாபதி யென்ப. சிவபெருமான் வீரஞ்செலுத்திய எட்டு இடங்களும் தென்னுட்டிலுள்ளன. பிரம விட்டுணுக்கள் அடி முடி தேடியது திருவண்ணுமலையில். புராணங்களில் திரிலோ
* வடமதுரை ஏறுமுன்னே வந்த வடிவென்றது திருமா லின் மச்சாவதாரத்தை. சத்தியவிரகன் என்னும் பாண்டியன் வையை நதியில் அர்க்கியங் கொடுத்தற்காக நீரைக் கையில் எடுத்தலும் திருமால் அங்கீரில் மீன் வடிவமாக அவதரித்து வளர்ந்தனர். இவ்வரலாறு பூரீபாகவதம் 8-ம் கந்தம் மச்சாவ தாரமுரைத்த அத்தியாயத்தால் நன்கு விளங்கும். பாண்டியர் களுக்கு மீன்கொடி யமைந்தது இதுபற்றிப் போலும்’ (தமிழ் விடு தூது பக். 24. குறிப்புரை)

29
கங்கள் என்று சொல்லப்படுவன தமிழகத்துள்ள சேர சோழ பாண்டிய மண்டலங்களென்று கருதப்படுகின்றன.
மனுவை மீன் வடிவினதாகிய ஓர் தெய்வம் சலப்பிரள யத்தினின்றும் தப்பவைத்தது என்றும் அம்மனுவின் மரபி னின்றும் ‘பண்டையர்'களாகிய தாம் (பாண்டியர்) தோன்றி ஞர்களென்னும் பொருள்பட அவர் மீன் வடிவினதாகிய இலச்சினையை தமது கொடியிற் பொறித்து வந்தனர். மீன் பிடிக்கும் பாதவர் குலத்திற்றேன்றின படியாற்றன் அவர்கள் ஆமீன் கொடியை யுடையவர்களா யிருக்கின்றன ரென்பது சில ஆராய்ச்சியாளர் கருத்து. அது பொருந்துவதாகத் தெரிய
வில்லை.
* சாலடியர், பயிலோனியர், எகிப்தியர், கிரேக்கர், அசீரியர் முதலிய எல்லாச் சாதியாரும் ஒரு சலப்பிரளயத் தைக் குறித்த வரலாற்றைக் கூறுகின்றனர். எபிரேயர் நாற் பது நாள் விடாமழை பொழிந்து நேர்ந்ததாகச் சொல்லும்
% The marvellous uniformity of the flood legends of all parts of the globe, alone remains to be dealt with. Whether these are some arctic versions of the story of the lost Atlantis and the submergance or whether they are echoes of a great cosmic parable once taught and held in reverence in some common centre whence they have reverberated throughout the world, does not immediately concern us. Sufficient for Our purpose it is to show the universal acceptation of these legends.

Page 25
3{}
சலப்பிரளய வரலாறும் மனுசம்பந்தமானதே. மக்கள் வெவ் வேறிடங்களிற் பிரிந்து சென்று தங்கினபோது ஒரு சலப் பிரளய வரலாற்றினேயே சிறிது வேறுபடுத்தி வழங்குவாரா
யினர்.
இந்தியர், பாரசீகர், கிரேக்கர், ரோமர், சிலாவியர், கெல் திடர் சேர்மனியர் முதலானுேர் ஒரு காலத்தில் ஒரே இடத் தில் வாழ்ந்தவர்கள் என மாக்ஸ் மூலர் என்னும் பண்டிதர் கூறுகின்றனர்.
நாங்கள் பூர்வகுடிகள் என்பதில் குறைவான எண்ணம் வைத்திராவிட்டாலும் நாகரிகத்தை எல்லா திசைகளிலும் பரப்பியதும் மக்கட் சாதியார் தோன்றிப் பெருகி வேறு நாடு களிற் செல்வதற்கு ஏதுவாயிருந்ததுமாகிய ஒரு கண்டம் கன்னியா குமரிக்குத் தெற்கே இருந்ததென நம்பினலும் தமிழர் ஊழிக்காலத்துக்கு முற்பட்டவர்கள் என்பதில் சங்
தேகம் தோன்றமாட்டாது.
இப்போ துள்ள நூல்கள் மூன்றுமுறைகளில் தமிழகத்தின் தென் பகுதியை கடல்கொண்டதாகக் கூறுகின்றன. பழைய சாலடியா பபிலோனியா முதலிய நாடுகளில் பழைய நாகரிகத் தின் அறிகுறிகள் பழய நூல்களில் காணப்படுவன போல தென்னிந்தியாவிலேன் காணப்படவில்லை யென்பதற்குச்
・、、、frö , * e
சமாகாணஞ் சொல்லவேண்டியிருக்கிறது. தமிழர் எழுதுவ 5i)(5 உபயோகித்த பனையோலை காலத்தில் ஒடிந்து அழிந்து ^d • , s ar ze 2 .ܡܶܝܵ h-rr 2: . . V போவதற் கேதுவா யிருந்தது எனபதை அதறகு ஒரு சமா
தானமாகக் கூ றலாம்.
(Prof. J. Bạ.HLồ (Schoolf M. A)

தமிழர் தோன்மை அகவல்
* ஒண்மை யறிவு மோர்வு மிக்கோரே
உண்மை கேண்மின்! உண்மை கேண்மின்! மீன்கொடி படைத்த மேன்மை மனுக்கள்
ஆன்ற பாண்டிய ரனைவருங் தமிழர்.
தெற்கட் பஃறுளி யாறு சீர்சால் 5.
“it would be needless waste of time and space to go over these flood stories one by one; suffice to say, that in India Chaladia, Babylon, Media Greece, Scandinavia, China among the Jews and the Keltic tribes of Britain the legend is absolutely identical in a lessentials. Now turn M to the west, and what do we find? The same story presented in its every detail-presented among the Mexicans (each tribe having in its version) the people of Gualemala, Honduras, Peru and amongst every tribe of north American Indians; it is puerile to suggest that mere coincidence can account for this fundamental identity.--(The story of Atlantis-W. Scott Elliot p-16.)
“When the ancestors of the Indians, the Persians, the Greeks, the Romans, the siaves, the Celts and the Germans were living together within the same enclosures may under the Name roof' (Lectures on the science of languaage delivered in 1861. Maxmuller.)

Page 26
፵፰
கற்புகழ் வடக்கண் ஒளிரிமை பார்மலே உாைதமிழ் நாடா வயங்கிய முற்கால் திருவிட மெனும் போதற்குச் சிறந்தது பின்னு ரியர்கள் பிறங்கின் னுட்டில் உன்னி வந்து குடியுறுமுன மிங்குத் LO.
தமிழ்மொழி வழக்குங் தகையொண் அணுாலும் இமிழிசை யைக்திணே இனமுங் கேவும் போற்றவர் பார்க்கும் பொதுச்சிவக் கோளும் ஆற்றருக் களியு மகக்தெண் ணெழுத்தும் நயமிகு மொழுக்கமும் நினிச்சீர் தேற்றமும் l6. உயிர்க்கிருங் கனவற முயற்றா சிருக்கது மற்றிவை யாவும் வான்ற மிழ்ப் புலவர் சொற்ற மொழிகள் தொகைப்படு வேகம் ஆகமம் புராணம் மவரிகி காசம் வாகயலார் சொல் மருனி லாங்கிலங் 2. கற்றவர் கற்பொறி கவின் பங் தாக்கர் தக்கர் முன்னேயர் தம்முரை வழியால் துணியப் பட்டன-தோன் ரினத்தில் இனங்கா நாற்குல மியற்றினர் பின்னுேம் என்று மொருதலே விவையுண்
5
மன்னியுணர்ந்து மயக்கொழி விசே." 2岳。 (விருதை, சிவஞான யோகிகள். 3. குமரி நாட்டில் தமிழ் வழங்கியதேன்பது.
'முன்னிருந்த பாலி மொழியுங் கீர்வாணமும் துன்லுங் கருப்பையிலே தோய்வதற்கு-முன்னரே
 

忠器
பண்டைக்காலத்தே பாவைகொண்ட முன்னாழி மண்டலத்திலே பேர்வளநாட்டின்-மண்டுநீர்ப் பேராற் றருகில் பிறங்கு மணிம&லயில் சீராற்றுஞ் செங்கோற்றிறற் சேங்கோ-கோாற்றும் பேரவையிலே நூற்பெருமக்கள் குழ்ந்தேத்தப் பாராசு செய்த தமிழ்ப் பைங்கேவி' என்னும் தமிழ்விடு நூதினுல் பாலிர்ேவாணம் (ஆரியம்) முத லிய மொழிகள் தோன்றுவதற்குமுன் குமரி நாட்டில் சீரும் திருத்தமும் பெற்று விளங்கியது செந்தமிழ் மொழியெனப் புலஞகின்றது. இறையனூர் அகப்பொருளுரை சிலப்பதிகாரக் துக்கு அடியார்க்கு நல்லாரெழுதிய உரை குமரிநாடு கடல் வாய்ப்படுவதன்முன் பாடப்பட்ட சில புறநானூற்றுச் செய் யுட்கள் பஃறுளியாற்றிற்கும் குமரியாற்றிற்கும் இடையே யுள்ள பெருவள காட்டரசனுகிச தனியூர்ச் சேர்ந்தன் பாடிய செங்கோன் தரைச்செலவு அதன்கண் காணப்படும். பஃறுளி யாற்றுத் தலைப்பாய்ச்சல் எள்கெங்க காட்டு முத்தார் அகத்தி பன் பாட்டு முதலியனவும் குமரி காட்டகத்தும் பண்டு வழங் கிய மொழி தமிழ் என்பதை வலியுறுத்துகின்றன.
4. தமிழர் பிறநாடுகளிற் குடியேறுதல், இத்துசமுத்திரத்தினூடே விளங்கிய பெரிய கண்டத் தின் பலபகுதிகள் கடல்வாய்ப் படுதலும் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் பலதிசைகளேநாடிச் செல்வாராயினர். இங்கினம் ஒரிடத்தினின்றும் பிரிந்துசென்று ஆசியா ஐரோப்பா ஆபிரிக்காமுதலிய நாடுகளிற்றங்கிய ஓரின மக்களே தமிழர் தொடர்பும் கூட்டுறவும் இல்லாமற்போக தாமுறைந்த நிலத்தியல்பு வெப்பம் குளிர் நடை உடை ஊண் தொழில்
路

Page 27
34
வேற்றுமை முதலியவற்றல் பழக்கவழக்கங்களும் அவைபற் றிய சமயக்கோட்பாடுகளும் மாறி நாளடைவில் வேற்றுமொழி யினர் போலவும் வேறு கூட்டத்தினர்போலவுங் கருதினர். தாம் சென்று உறையும் நாடுகளின் வெப்பதட்பங்களுக்கேற்ப கறுப்புகிறமுள்ள சாதியார் வெண்ணிறமாகவும் வெண்ணிற முள்ளசாதியார் கறுப்பு நிறமாகவும் மாறுதல்கூடும்.
இவ்வுலகில் ஆங்காங்கு நாகரீக வாழ்க்கையிற் சிறந்து விளங்கிய பண்டைமக்கட்சாதியாரின் சமயம், பழக்கவழக்கம் முதலியன பெரும்பாலும் ஒத்திருத்தலின் அச்சாதியார்களின் முன்னேர் ஓரிடத்தினின்றுஞ் சென்று வெவ்வேறிடங்களிற் குடி யேறினர்களென்பது தெற்றெனத் துணியப்படுகின்றது. எகிப்திய நாட்டில் தெறல்பஃறி (Der-el-Bahri) என்னும் ஊரின் கண்உள்ள அஷ்தாப் (Hastap) அரசியின் கோயிற் சுவரிற் பொறிக்கப்பட்டிருக்கும் ஒவிய எழுத்துக் கல் வெட்டுகளில் இவ் எகுப்தியர் தென்கடலகந்துக் குமரிநாட்டி லிருந்த பாண்டி 2 (Punt) தேயத்திலிருந்து சென்று நீலாற்
It is believed that under certain circumstances fair races may become dark, and dark races bright, the enticle however being effected sooner than the hair or the iris of the eyes.' (Origin of the Ariano-Taylor.)
மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார்-பக் கம்-33,
* This part of India could have been no other than the Malabar coast peopled by the Pandias which was probably called the land of the Pandias afterwards corrupted in Egypt into

35
றங்கரைக்கட் குடியேறினர் என விளக்கமாகச் சொல்லப்பட்டி Quis Saðr (Dg7. (see Olcot's lecture on India; and Prof. G. Ramalson's ancient Egypt) syldilidsstaarth தென்னமரிக்காவிலும் ஏழாயிரமாண்டுகட்குமுன் உயிர் வாழ்ந்த மக்களும் தமிழ் நாட்டிலிருந்து சென்றவர்களே என் பதற்கு வேண்டுஞ் சான்றுகள் புலனுய் வருகின்றன. (See Prof. Konrod Heable's article in Harmsworth History of the world) o GTÉRŮ Atlâd (up56 g) ITTF LI IT Lò பரையைத் தாபித்து அரசு செலுத்திய மேன்ஸ்' என்பவர் கி. மு. 4,400 வரையில் இருந்தவர். எகிப்து அமரிக்கா முத லிய நாடுகளிலுள்ள பழைய கோயிற் சுவர்களிற் காணப்படும் சித்திர வேலைப்பாடுகள் இந்தியாவிலுள்ள கோயிற்சுவர் களிலுள்ள சித்திர வேலைப்டாடுகளுடன் ஒத்திருக்கின்றன. வட அமரிக்காவிலுள்ள ஜனங்கள் தம்முன்னேர் சூரியன் உதயமாகும் ஒரு தீவினின்றும் வந்தார்களெனக் கூறுகின் றனர். 4ஞாயிற்றுக்குப் பகலவன் என்னுஞ் சொல்லும் மாங்
the land of Punt. It would be interesting to note here that among the earlier students of the subject of the origin of the Egyptians *Heeran was prominent in pointing Out an alleged analogy between the form of the skull of the Egyptians and that of Indian races he believed in the Indian Origin of the Egyptians. (Rigvedic India.) ஞானசாகரம்
* The vast remains of cities and temples in Mexico Yucaton also strangely resemble those

Page 28
36
தர் வாழுமிடத்திற்கு 'ஊர்' என்னுஞ் சொல்லும் இவை போன்ற பிறவும் பாபிலோனியர் அசீரியர் "சால்டியர் என்னும் பண்டைத் தமிழ்மக்களில் ஒரு சாரார் அந்நாடு கடல் கொள்ளப்பட்ட ஞான்று ஆண்டுகின்றும்போய் பாபிலோ னியா சாலடியா முதலான நாடுகளில் குடியேறினர் என்பது உம் புலனகா கிற்கும். அஃதன்றியும் சாலடியர் வழங்கிய மற் ருெரு கடவுட் பெயரான முருகன் என்னுஞ் சொல்லும் தமிழ்க்கடவுளான முருகன் என்பதனேடு ஒற்றுமையுடை: தாய்க் காணப்படுதலும் உற்றுணர்தற் பாலதாம். அல்லது உம் பகலவனை வழிபட்டுவந்த ஏதுவானே அந்நாடு பபிலோ னியா என்னும்பெயர் பெறுதலானும் அது பண்டைத் தமி
ழர் உறைந்தநாடு என்பதைப் புலப்படுத்தும்.
of Egypt. The very carving and decoration of the temples of America, Egypt and India have much in common; which some of the moral decorations are absolutely identical. Amongst the Indians of North America there is a very general legend that their fore-fathers came from a land toward the sunrise.' Iowa and Dacola, Indians according to Major J. Tind believed that all the tribes of Indians were formerly one and dwelt together on an island toward the sunrise.-(The story of Atlantis.)
* அலக்சாந்தர், ஆசியாவுக்குச் சென்றபோது சாலடிய குருக்கண்மார் டயடோரஸ்" (Diadoras) என்பவருக்கு தங்கள் நாகரீகம் 470,000 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கூறினர். அலக்சாந்தரின் காலம் கி. மு. 350 வரையில்,

37
* பினிசியரது பழயகடவுள் வழிபாடும் தமிழரது சிவ வழி பாட்டோடு மிக ஒற்றுமையுற்றிருக்கின்றது. அவர் ஞாயிற் முக்குச் சாலப் பழயபெயராக இட்டுவழங்கிய, எல்' என்னுஞ் சொல் செந்தமிழ்ப் பழஞ்சொல்லாதல் கவனிக்கற்பாலது. அவர் சிவலிங்கம்போன்று நீண்டு தலைகுவிந்த கற்களை மலை முகடுகளில் வைத்து வழிபட்டுவந்தனர். மகமதியர் தம் கடவு ளுக்கு இட்டு வழங்கும் பெயராகிய 'அல்லா' என்னுஞ் சொல்லும் “எல்’ என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபே யாகு மென இதனுண்மையை ஆராய்ந்து கண்டார் கூறுகின்றனர். கிரேக்கர் ஒலிம்பஸ் என்னும் மலைமுகட்டின்மேல் வைத்து வணங்கிய சியஸ் என்னும் தெய்வம் சிவபிரானேடு பெரிதும் ஒத்திருக்கின்றது. சியஸ் என்பது சிவம் என்பதன் திரிபு என் பது ஆராய்ச்சி வல்லோர் கருத்து. சடைமுடி யுடையராயும் முத்தலை வேல்கையில் ஏந்தியவராகவும் சியஸ் என்னுங் கடவுள் கூறப்படுதல் இவ்வுண்மையை நிறுவும். அவர்கள் அமைத்த கோயில்களின் வடிவமும் இத் தென்தமிழ் காட்டிலுள்ள கோயில் வடிவத்தைப் பெரிதொத்து கிற்றலும் கருத்தில் பதித்தல் வேண்டும்.
வரிசை வரிசையாகக் கற்றாண்கள் கிறுத்தி அமைத்த அவர்கடம் கோயிலுள் கிணறு குளங்களும் கோயிலின் வெளியே ஒரு பலிபீடமும் (வேள்வி மேடையும் உள்ளே
திருவுருவங்களினெதிரே ஒரு பலிபீடமுமாக இரண்டு தெற்றி
* கி. பி. மூன்ரும் நூற்முண்டின் முற்பகுதியில் விளங் Cш “ ц68шоп) су 9ija. Tapisio" (Julius Africanus) атог னும் சரிதாசிரியர் 65 பொனீசியரின் 30,000 வருடங்களின் சரித்திரத்துக்கு ஆதாரமாகிய நூல்களிருந்தன" வென்று கூறி யிருக்கின்றனர்.

Page 29
B8
கள் தமிழ்நாட்டுக் கிருக்கோயில்களிலுள்ளவாறே அமைக் திருக்கின்றனர். ரோமருடைய சூபிதர்வழிபாடும் சுமிழர்களது சிவவழிபாட்டையே பெரும்பாலும் ஒத் கிருக்கின்றது. ஆங் கிலர் பர்மனியர் என்னும் இருகிறத்தாருக்கும் முன்னுேரான மக்கள் செய்துபோந்த தெய்வவழிபாடும் தமிழ்மக்கள் செய்து போதரும் வழிபாட்டோடு ஒப்புடைத்தாதலும் ஒருசிறிது ஆராய்ந் திணர்தல் இன்றியமையா தாகின்றது. ஆங்கிலர் பர் மனியர்களுக்கு முன்னுேர் புேதோனியர் (Teutons) இவர் “Woden' at a 'r Quitu fill is a 2.1t இனறஞ்சிவந்தனர். இக்கடவுள் எல்லாக் கடவுளர்களுக்குக் காயான ஒரு பெண் செய்வத்தைத் தமது பக்கத்தே வைத்திருப்பவ ரென்றும் ஞாயிற்றினேக் கண்ணுகவுடையராயும் உள்ளவரென்றும் சொல் லப்படுகின் கனர். . இனிக் தெய்வங்கனே அவர்கள் காடுகளிலும் தோப்புகளிலும் வைத்து வணங்கி வந்தனர். الثة كـ &ùዛT - ስIll வழிபடுங்கால் cupcaecypj jjii கடவுளின் குறியாக සිග්‍රී பெரிய மரத்தூணே கிறந்தவெளியிலே நிறுத்தி அகனெதிரிற் பலிபீடமமைத்து தீவளர்த்து வழிபாடாற்றிவந்தன சென் பதூஉம் அவர்கம் பழைய வரலாறுகளாற் புலனுகின்றது. இங்கினமே நம் முன்னுேரும் சிறந்தவெளியாகிய அம்பலத்தே இறைவனருட் குறியாகிய தூண்வடிவான ஒருகறியை நிறுத்தி அகினெ கிரே ஒருபவிபீட மெழுப்பி வழிபட்டுப் போந்தா ரென்பதற்கும், கம் முன்னுேரும் காடுகளிலும் தோப்புகளிலும் இத்தகையவாம் பல அம்பலங்களில் இறைவணேப் பண்டு தொட்டுக் கொழுது போக்காரென்பதற்கும் கிருமறைக்காடு, திருவாலங்காடு, கில்ஃவனம், கடம்பவனம், திருவானேக்கா என்றும் பெயர்களும் உறசான்ருமென்க. துரண் வடிவு தறி வடிவு கற்குழவி வடிவு குவிக்க புற்றின் வடிவு முதலியன
வெல்லாம் சிவலிங்கவடிவமே யாதலு முனாற்பாற்று.

89
கிறித்த மறையின் முதற்புத்தகத்தில் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளுக்கு, சுலோகிம்' என்னும்பெயரே தனி சிறந்ததாய் சாலப்பழையதாய் எடுத்தாளப்பட் டிருக்கின்றது.
இச்சொல் எல்' என்னுஞ் சொல்லிலிருந்து வந்ததெனக்
ஒது
கிறித்துவேக ஆராய்ச்சி வல்லபுலவோர் உரை கூறுகின்றனர்.
.கிறித்து சமயத்துக்கு முன்னுேரும் முதல்வனே எல்'
என்றும் சுலோகிம் என்றும் எல்சடையென்றும் ஒரோவிடங்
களில் எல்எலியன் என்றும் வழங்கிவந்தமையினே உற்றுநோக் குங்கால் அவருங் கடவுளே ஒளிவடிவினன் என்றே கருதிவழி பட்டமை புலனுகா நிற்கும்.ஈண்டு காட்டிய இவ்வரலாற் றில் கால்சடை என்னும் பெயரிற்கண்ட சடையென்னுஞ் சொல்லுஞ் சிவபெருமாற்குச் சிறப்புப்பெயராகத் தமிழ்நாட் டில் வழங்கும் சடையன் என்னுஞ் சொல்லும் ஒன்ருயிருக் தல் பெரிதும் நினேவுகூறற் பாலதாகும்'.
* மேலும் பாக்கோப்பு என்னும் ஆடியவர் இறைவனருளே நேரே பெற்று அவனேத் தொழுகுறியாக ஒரு குவித்த கல் லினே நிறுத்தி அதன்மேல் எண்ணெயைச் சொரிந்து அத னேப் பீக் தெல்' அல்லது முதல்வனிருக்குமிடம் (கோயில்) என்று பெயரிட்டு வழிபாடாற்றி வந்தமையும், ஆன் a tät லும் ஊரிலிருக்க பகலவன் கோயிலின்கண் ஆன் கன்றினே (நந்தியை) இரசவேல் மரபினர் வழிபட்டமையும், Lug is களின் மேலே குன் ரூத் தீவேட்டு வழிபட்டமையும் இாசவேல் மரபினர் குமாரர் ஒளிவடிவின் அடையாளமான குவிக்க மணிக்கற்களே மார்பிற் கட்டிக்கொண்டு இருந்தமையும் (சிவ லிங்கதாரணம்) ஆராய்ந்துபார்க்கும் ஈடுகிலேயாாரெல்லாம் கிறித்துவ சமயத்தினர் தம் முன்னுேர் செய்து போங்கி முதற்

Page 30
40
கடவுள் வழிபாடும் தமிழ்நாட்டினர் செய்து போதரும் சிவ வழிபாடும் ஒன்றேயாமென்பதும் உணராமற்போவரோ F%
* ஒரு காலத்தில் நமது தமிழ்மொழி ரோமாபுரி முத லான தேசங்களிலும் பரவியிருந்தது போன்று சைவசமய மும் அன்னிய நாடுகளிலெல்லாம் பரவியிருந்ததாகத் தெரி கின்றது. கீழ்க்காணும் தேசங்களில் சிவாலயங்கள் இன்னுங் காணக் கிடைப்பதால் தகுந்த சாட்சியமாகின்றது.
வட ஆபிரிக்காக் கண்டத்துள்ள ஈஜிப்ட் தேசத்தி லுள்ள மெம்பீஸ் நகரத்தில் நந்திவாகனன் திரிகுலன் சாம்ப வாக்ர சர்ப்பாம்பரதாரியான பரமேசுர விக்கிரகமும், பாபி லோன் பட்டணத்தில் 1200 அடி உயரமுள்ள சிவலிங்கமும், ஹைட்டோ போலீஸ் என்னும் பட்டணத்தில் 600 அடி யுள்ள சிவலிங்கமும், மெக்காவில் ஸகமக்கேஸ்வர நாமமுள்ள ஒரு சிவலிங்கமும் ஸம்ஸம் என்னும் கிணற்றில் ஒரு சிவ லிங்கமும் இருக்கின்றன. ப்ரஜில் (பிரேசில்) தேசத்தில் அநேக சிவலிங்கங்களும், விக்னேசுர மூர்த்தங்களும், காரிந்த் பட்டணத்தில் பார்வதி தேவியின் ஆலயமும், கிளாஸ்கோவில் சுவர்ண கவசத்தினுல் போர்க்கப்பட்ட ஒரு சிவலிங்கமும், பிரிஜியன் தேசத்தில் ஏடன் என்னும் சிவலிங்கமும், வினியா, யகோதி, சிதரால், காபூர், பலக்டகார் முதலான இடங்களில் அநேக சிவலிங்கங்களும் இருக்கின்றன. அங்குள்ள சனங் கள் பஞ்சாட்சர பஞ்சவீர என்னும் பெயரால் அழைத்தும் அர்ச்சித்தும் வருகின்ருரர்கள் என்று வீர சைவம் என்னும் மாதாந்தப் பத்திரிகை கூறுகின்றது.” (சித்தாந்தம் மலர் - 3. இதழ் 3)
% சிவஞானபோத ஆராய்ச்சி-ஆசிரியர் மறைமலை அடி
கள்.

4l
“Passing through the Churches and Cathedrals of Tondon and meditating on the many semblances and traces of saivaism that present before me in every nook and corner of England, it is impossible to think of England as anything else except a saivite country.'-(Siddanta Depika.)
இங்கிலாந்திலுள்ள கிறித்த ஆலயங்களையும் மூலை முடுக்குகளையும் கவனித்து நோக்கும்போது அது ஒரு சைவ ாடு அல்ல என்று கருத இடம் தரவில்லை என்று சித்தாந்த தீபிகை என்னும் பத்திரிகையில் ஒருவர் எழுதியுள்ளார்.
லிடியா என்னும் நாட்டில் ஒர் சமாதியின்மேல் ஒன்ப நடிக் குறுக்களவுள்ள ஒரு சிவலிங்கம் இருக்கிறது. தமிழ் ாாட்டில் சமாதியின்மேல் லிங்கம் தாபிக்கும் வழக்கினையே அந்நாட்டவரும் கைக்கொண்டனர்போலும்,
பாபிலோனிலே உள்ள கோயில்களில் தமிழ் நாட்டில் ஆலயங்களிலே காணப்படுவதுபோலத் தேவதாசிகள் இருக் தார்கள் எனச் சரிததிராசிரியர்கள் கூறுகின்றனர், தமிழகத்தி னின்றும் பெயர்ந்து சென்று பபிலோனிற் குடியேறிய தமிழர் இவ்வழக்கத்தையும் உடன்கொண்டு சென்ருர்கள்போலும்,
வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகிய மெக்சிகோ நக ாத்தில் சந்திர சூரியர்களுக்கு ஆலயங்கள் இருந்தனவென் றும் மொண்டி குமா அரசன் காலத்திலும் அக்கோயில்களில் ஆராதனை, திருவிழா முதலியன நடந்து வந்தனவென்றம் சரித்திரங்களிற் படிக்கின்றுேம்.
* சுமேரியரின் உடற்கூறு முதலியன அவர்களைச் சூழ இருந்த மக்கட்சாதியாரினும் வேறுபாடுடையதா யிருந்தன

Page 31
42
அப்படியே அவர்களுடைய மொழியும் செமெடிக்ஸ் ஆரியர் அல்லது மற்றவர்களுடைய மொழிகளோடு சம்பந்தமில்லா திருந்தது. அவர்கள் தீர்மானமாக இந்தியரின் இனத்தைச் சேர்ந்தவர்கள். பொதுவாக தற்கால இந்தியனின் முகவெட்டு இற்றைக்கு ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னிருந்த திராவிட சாதி முன்னேரின் வடிவை ஒத்திருக்கின்றது. இன் றும் தக்கணத்தில் திராவிட மொழிகளைப் பேசுகின்ற இந்தி யரை சுமேரியர் ஒத்திருக்கின்றனர். இந்தியாவினின்றம் தரை மார்க்கமாக அல்லது கடல்மார்க்கமாகச் சென்று பா சீகத்துக்காடாக (ரைகிரஸ் யூபிறரஸ்) என்னும் இரு நதி களின் பள்ளத்தாக்குகளை அடைந்த மக்களே சுமேரியராவர். இந்தியாவிலேயே அவர்களது நாகரிகம் வளர்ச்சியுற்றது. அங்கே அவர்கள் எழுதும் முறையை அறிந்திருத்தல் கூடும். முதல் சித்திர முறையாகவும் அதிலிருந்து இலகுவாகவும் சுருக்கமாகவும் எழுதும் முறையை அவர்கள் பயின்றனர்.
அவர்கள் பபிலோன் நாட்டை யடைந்தபோது சதுரமா கிய எழுதுகோலினல் மிருதுவானகழிமண்ணில் எழுதிவந்தார் கள். இதனுல் எழுத்துக்கள் கூர்நுதி வடிவினவாகக் காணப் பட்டன. மக்கள் முதலில் நாகரிகம் அடைந்தவிடம் இந்தியா என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சுமேரியர் இந்தியரினத்தைச் சேர்ந்தவர்களாகக் காணப்படும்போது கிழக்கிலிருந்து மேற்கை நாகரிகப்படுத்துவதற்குச் சென்ற செமட்டிக்ஸ், ஆரியர் அல் லாத சாதியார் இந்திய உற்பத்தியிலுள்ளவர்களே யெனத் தெரிகின்றது. இந்திய நாகரிகம் ஆரியருக்கு முற்பட்டது : ஆகவே இந்திய நாகரிகமென்பது ஆரியருடையதல்ல x என
%The ethnic type of Sumerians, so strongly marked in their statures and reliefs. was sc

43
Dr. ஹோல் என்னும் பண்டிதர் கூறுகின்றனர். இதனச் பழைய நாகரிகமக்களாகிய சுமேரியரும் தமிழ்நாட்டினின்றும் சென்றவர்களே யென்பது ஐரோப்பிய பண்டிதர்களுக்குக்
கருத்தாகல் கவனிக்கற்பாலது.
different from those of the races which surrounded them, as was their language from those of the Senetics, Aryans or others. The face type of the average Indian of to-day is no doubt much the same as that of his Dravidian race ancestors thousands of years ago. Among the modern Indians, as amongst the modern Greeks or Italians the ancient pre-Aryan type of the land has (as the primitive of theland always does) survived, while that of the Aryan conqueror died out long ago and it is to this Dravidian ethnic type of India that the Sumerians bear most resemblance, so far as we can judge from his monuments. He was very like a southern Hindu of the Dekkan (who still speaks Dravidian languages) and it is by no Imeans impossible that the Sumerians were an Indian race which passed certainly by land, perhaps also by sea through Persia to the valley of the two rivers. It was in the Indian Home (perhaps the Indus valley) that their Writing may have been invented and progressed from a purely pictorial to a simplified and ab

Page 32
44
“The resemblances between the several heads of the statues discovered at Telloh or Tell-loh in Chaladia and the facial type of the Dravidians resemble.-(Rig Vedic India, p. 207.)
18 சாலடியாவில் "ரொல்ரோ’ என்னுமிடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட சிலைகளின் தலைகள் தமிழர்களின் முகச்சாயலை ஒத்திருக்கின்றன.”
P. T. சீனிவாச அய்யங்கார் கூறுவது:-
இந்தியாவிலே புதியதற்கால நாகரிகம் 20,000 ஆண்டு களுக்குமுன் தொடங்கி எல்லா ஆற்ருேரங்களிலும் பாம்பி
breviated form, which afterwards in Babylonia, took On its peculiar uniform appearance Owing to its being written Within a square ended stilus On soft clay. On the way they left the seeds of culture in Elam................ there is little doubt that India must have been One of the earliest centres of civilization and it seems natural to suppose that the strange unsemetic, unaryan people who came from the east to civilise the west were of Indian origin, specially when we 'see with our eyes how very Indian the sumerians were in type "F. N.' The civilization was not Aryan. The culture of India is preAryan in Origin as in Greece the conquered civilized the conquerors. The Aryan India cowed his civilization and his degeneration to the Dravidians as the Aryan Greek did to Mycenaeans.-(Dr. Hall.)

45
யது. தமிழில் முதற்பருவத்திலுள்ள சொற்களெல்லாம் ஒரசை 9a07. Fitzstair unitiará) (Sir John Marshall) at 6irl Jai ஹறப்பா மொகென்யோடாரோ (Harappa and Mohenyo Daro) என்னுமிடங்களில் அகழ்ந்து கண்டுபிடிக்கப் பட்ட சித்திர எழுத்துக்களைக்குறித்து எழுதி இருந்தவாறு இவ் வோரசைச் சொற்களை சித்திர எழுத்துக்களாக அமைத் தல் கூடும். இந்தியாவின் புதியகற்கால நாகரிகம் இந்தியாவி னின்றும் கடல் வழியாகச்சென்ற சுமேரியநாகரிகத்துக்கு ரேதுவாக அசீரியாவில் தங்கினது. சுமேரியருக்கும் தமிழருக் கும் முகவெட்டு ஒருவகையாக விருத்தல் தற்செயலாக ஏற் பட்டதல்ல.”*
6 நாகரிகம் முதற்ருேன்றிய விடம் தென்னிந்தியா வென்று சொல்வது ஆதாரமற்ற கட்டுக்கதையல்ல. ஹால் (Dr. Hall) என்பவர் சுமேரியரின் உற்பத்தியைக் குறித்துக் கூறுவது உண்மையாக விருந்தால் நாகரிகம் முதல் இந்தியா விற்றேன்றி பழந் தமிழர்களுக்கிடையே பழகினதென்பது ாாட்டப்படும். பின் அது பபிலோனின் நாகரிகத்தை உதய மாக்குவதற்குக் கொண்டுபோகப்பட்டது. மக்கள் நூல் வல் லார் ஒருவர் முற்பட்ட மக்கள் இந்து சமுத்திரத்துள் மறை S கண்டத்தில் உற்பத்தியானர்கள் எனக் கூறுகின்றனர். Pii aJITổiol —i (M768 (Sir Walter Raleigh) 67 Går Øyth L uair டிதர் சலப்பிரளயத்துக்குப்பின் மக்கள் பல்கிய விடம் இங் தியாவென நவில்கின்றனர். ஜர்யோன் எவான்ஸ் (Sir John Evans) தென்னிந்தியா ஆகிமனிதனுக்குப் பிறப்பிடமாகி இடமென அறைகின்றனர். (திராவிட இந்தியா. பக்கம் 69-60).
* Dravidian India, pp. 58, 59.

Page 33
46
சுவாமி விவேகானந்தர் சொல்வது:- The Madras Presidency is the habitat of a Tamil Race whose civilization was the most ancient. A branch of Tamil Race spread a vast civilization on the Euphrates in very ancient times whose astrology religion, love, morals and rites etc., furnished the foundation of the Asyrian and Babylonian civilization and whose mythology was the source of the Christian Bible. Another branch of them spread from the Malabar coast and gave rise to a wonderful Egyptian civilization and the Aryans are indebted to the race in many respects. The colossal temples in south India proclaim the Engineer. ing Art of the Tamil race.-(Prabuddha Bharatha Sep. 1921.)
மிகவும் புராதன நாகரிகமுடைய தமிழருடைய வாசஸ் தானமே சென்னை நகரமாகும். தமிழரின் ஒரு பிரிவினர் மிகப் பழய காலத்தில் யூபிருட்டிஸ் நதிப் பக்கங்களில் தங்க ளுடைய நாகரிகத்தைப் பரப்பினர். அவர்களுடைய சோதி டம், சமயம், காதல், நீதி, கிரியை முதலியன அசீரிய பபி லோனிய நாகரிகத்துக்கு அடிப்படையா யிருந்தன. அவர்க ளுடைய பழங்கதைகள் விவிலிய நூலுக்கு ஆதாரமாக விருந் தன. தமிழரில் இண்னெரு பிரிவினர் மலையாளக்கரை வழி யாகச் சென்று நூதனமான எகிப்திய நாகரிகத்தை எழுப்பி' ஞர்கள். ஆரியர் இந்த சாதியாருக்குப் பலவகையில் கடமைப் பட்டவர்களா யிருக்கின்றனர். தென்னிந்தியாவிலுள்ள பிர

47
மாண்டமான கோவில்கள் தமிழர்களின் கட்டிடமமைக்கும் திறமையைத் தெரிவிக்கின்றன.”
இன்னும் பூரீமத் சுவாமி விவேகானந்தர் தமது இரண் "டாம் மேற்றிசைப் பிரயாணத்தைக் குறித்து எழுதிய ஆங் கில நூல் ஒன்றில் ‘கருகிறமும் நீண்டமயிரும் நேரிய மூக்கும் சரிவில்லாத கரியகண்களும் உடைய ஒரு சாதியார் பூர்வ எகிப் திலும் பபிலோனியத்திலும் வசித்தார்கள். அச்சாதியார் இந் ாள்களில் இந்தியா முழுமையிலும் விசேஷமாகத் தெற்குப் பக்கத்திலும் வசித்து வருகிருரர்கள். ஐரோப்பாவின் சிலபாகங் ரளிலும் இவர்களைக் காணக்கூடும். இவர்களே திராவிடர் எனப்படுவர்' என்று எழுதியிருக்கின்றர். (தமிழ்-தொகுதி-1 பகுதி 3. ப. 19)
*எகிப்தியருடைய நாகரிகம் மிகவும் பூர்வீகமானது அசுர்என்னும் பட்டணத்தைத் தலைநகரமாகக்கொண்ட அசு ரேயநாட்டின் (Assyria) நாகரிகம் எகுப்திய நாகரிகத்துக்கு முந்தியது. இவ்வசுரேய நாகரிகந்தானும் பாபிலோனிய நாக ரிகத்தைப் பின்பற்றியது. பாபிலோனிய சீர்திருத்தம் சுமே ரிய அக்கேடிய நாகரிகத்தின் வழிவந்தது. இங்கு கூறியன யாவும் ஆராய்ந்து ஸ்தாபிக்கப்பட்ட உண்மைகள். சுமேரிய அக்கேடிய நாகரிகத்துக்கும் தமிழ்நாட்டுப் பூர்வீக நாகரிகத் முக்கும் ஒற்றுமை காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட விஷ யத்தைப்பற்றிப் பிரபல டண்டிதர்களாகிய ஸர். எச். எச். ஜான் ஸ்டன், எச். ஜீ. உவெல்ஸ், உவில் விறடஸ்காவேன் பிளன்ற், ஹக்ஸ்லி இவர்கள் சொல்வதை மொழிபெயர்த்து எழுதுவாம். முன்னையோர் இருவரும் சொல்வது முன்னைய ஆராய்ச்சி முறையின் முடிபாகக்கண்டது. பிஷப்கால்டுவெல் பண்டித குடைய கொள்கைக்கு மாறுபட்டது; யுத்திக்கு ஏற்றதாகத்

Page 34
48
தோன்றுகிறது. அதுவருமாறு:-உலகத்தில் முதன் முதற் கட்டிடங்களையும் பட்டணங்களையும் உண்டாக்கியவர்கள் சுமேரிய சென்னும் சாதியார். இவர்கள் யூதவகுப்பு ஆரிய வகுப்பைச் சேர்ந்தவர்களல்லர் ; எங்கிருந்து வந்தார்களோ தெரியவில்லை. இவர்களுடைய பாஷை பலுக்கிஸ்தானத்தின் சிலபாகங்களிலும் காக்கேசிய மலைநாட்டிலும் உள்ள பாஷை களையும் ஸ்பானியாவில் ஒருபக்கத்திற் பேசப்படுகிற பாஸ்க் என்னும் பாஷையையும் ஒத்திருக்கின்றது. இப்பாஷைக ளெல்லாம் திராவிடமொழிகளொடு நெருங்கிய சம்பந்தமு டையன. சுமேரியர் கோபுரத்தோடுகூடிய கோயிலைக் கட்டி ஞர்கள், கிப்பூர் என்னுமிடத்திலே தமது பிரதான தெய்வமா கிய எல்-லில் என்னுஞ் சூரியதேவனுக்கு ஒரு கோயிலைக் கட்டியிருந்தார்கள்,
பின்னர் ஹக்ஸ்லி இவர்கள் சொல்வது:-எகுப்தியரும் திராவிடரும் ஒரே குலமுறையில் வந்தவர்களாக விருத்தல் வேண்டும். முன்னுளிற் கறுப் பென்றும் வெள்ளையென்றுஞ் சொல்லக்கூடாத மங்கல கிறந்தினராகியவரும் மிகவும் சீர் திருத்த மெய்தியவருமாகிய ஒருசாதியார் ஐரோப்பாவில் இங் கிலாந்து பிரான்சு ஸ்பானியா என்னுமிவற்றிலும் மத்திய தரைக்கடலின் இருபக்கத்திலும், எகிப்திலும் இந்தியா முழுமையிலும், சீனதேசத்திற் பசுபிக் சமுத்திரக் கரையிலும் அமெரிக்காவிற் பீருமெக்சிகோ ஆகிய இரண்டு காட்டிலும் பரவியிருந்தார்கள். இவர்கள் சூரியனையும் சர்ப்பங்களையும் சமயக்கொள்கைகளிற் சம்பந்தப்படுத்தியும் இன்னும் இந்திய வில் வழங்குகிற சுவஸ்திக அடையாளத்தையும் அங்வனே சமயக் கொள்கைகளிற் கொண்டும் வந்தவர்கள். இவர்கள்
கிறிஸ்த வாப்தத்துக்குப் பதினுயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்

49
டவர்கள். அது முதல் கி. மு. ஆயிசம் ஆண்டுவரையும் அதா வது பதினுயிரம் வருடத்துக்கு இவர்களுடைய நாகரிகம் விலைபெற்றிருந்தது; வடக்கிலிருந்து வந்த வெள்ளைநிறமுள்ள ஒரு சாதியார் இவர்களைத் துரத்திவிட்டார்கள். ஐரோப்பா வின் தெற்குப் பாரிசங்களிற் புதிய கற்காலத்தினராகிய இவர் ாள் குறைந்தபடி பத்தாயிரம் வருடங்களுக்குத் தமது பாஷை யைப் பேசிக்கொண்டு வந்தார்கள். ஆரியபாஷை வருதலும் இவர்களுடைய மொழி அருகி மறைந்துபோயிற்று. சென்ற வருஷத்திற் கிறீற்’ என்னுந் தீவிலகப்பட்ட கற்சாசனங் களை யாராய்ந்த ஸர். எச். எச். ஜான்ஸ்டன் என்னும் பண்டி தர் கிறித்தவாப்தத்துக்கு மூவாயிரம் வருஷத்துக்கு முன் றுள்ள அச்சாசனங்களில் எழுதப்பட்ட மொழியும் திரா விட மொழியோடு தொடர்புடைய தென்கின்ருர்,
'உற்றுநோக்கும்போது எகிப்தின் பிரதான நதியாகிய லேநதி சுமேரிய தலை நகராகிய கிப்பூர் எல். வேல் என்னுங் 'கடவுட் பெயர்கள் தமிழ் மொழியாக விருக்கின்றன. பின்னும் *யவனமொழி எழுத்துக்களின் வடிவம் தமிழ் எழுத்துக்களோ திம் கிரந்த விபியிலுள்ள எழுத்துக்களோடும் தொடர்புடைய தாகக் காணப்படுகின்றது. (செந்தமிழ் xx. 10)
'பாபிலோனியத்தில் எல், முமார்த்துக் என்னும் பெயர் களையுடைய சூரியதேவன் அசுரேயத்தாரால் அசூர் என்னும் பெயரால் துதிக்கப்பட்டான். (அசூர் என்னும் பதத்திற் சூரியன் என்னும் பதத்தின் பிராதிபதிகந் தோற்றுவதும், ரு ரன்னும் பதத்தில் ரவிதொனிப்பதும் எல்லென்னும் மொழி தமிழிற் பரிதியங்கடவுளுக்குரிய பெயராதலும் உற்று கோக்கற் பாலன) இச்சூரிய தேவனேடு ஒப்புடைய தேவர்
4.

Page 35
50
மூவருளர். அவர் அது, வேல், எயா என்னும் பெயரினர். மேலும், சின், ஷாமஸ், உல் என வேறு திரிமூர்த்திகளும் உளர். சின் மற்றெல்லாத் தேவர்களினுஞ் சிறந்து விளங்கினர் இவர்கட்கு ஊர், போசிப்பா, பாபிலோன் கலா, துரர்சர்க்கின முதலிய இடங்களிலெல்லாம் பெரிய கோயில்க ளமைந்திருக் கின்றன. ஆண்டின் மூன்மும் மாதமாகிய சிவன் என்னும் மாதம் இவருக்கு உரியதாயிருந்தது. இளம்பிறைச் சந்திரன் இவருடைய இலச்சினை. இவ்வடையாளத்தினல் குறிக்கப்படு வர் அன்றேல் நீண்ட அங்கியணிந்த மானிட வுருவமும் சிரசில் மும்முடியும் முடியின்மீது பிறைச் சந்திரனுமுள்ள உருவம் இவருடைய உருவமாகும். ஆசுரேய பாபிலோனிய கால தேயமனத்தினும் படைத்தற் கடவுளுக்கு வேல் என்று பெய ருண்டு. (செந்தமிழ் xx. 12.)
வட இந்தியாவுக்கும் தென்னிந்தியாவுக்கு மிடையில் கடல் கிடந்தபோது இரு நாடுகளுக்கும் தொடர்ச்சி ஏற்பட் டிலது. அக்காலத்துத் தென் இந்தியாவினின்றும் மரக்கல வழியாக வட இந்தியாவை அடைந்த வணிகர் அங்கே தங் குவாராயினர். இவர்களிடமிருந்து ஆரியர் மரமாக்கலஞ் செய் யும் முறையைக் கற்றுக்கொண்டனர். இருக்கு வேதத்திலே சொல்லப்படும் பாணிஸ் (Panis) என்பவர்கள் தமிழ் வியா பாரிகளே. இவர்கள் தமிழ்ப்பாணர்களென்பது சிலர் கருத்து. வடநாட்டிற் றங்கியின் அவர்களாற்றுரத்தப்பட்ட பாணிஸ் சோழமண்டலக் கரையிற்றங்கி அங்கிருந்து மாக்கல வழியாக பொனீசியாவில் குடியேறினர் இவர்களே (Punicrace) a7627 மேற்றிசைச் சரித்திரக்காரராற் குறிப்பிடப்படுவோர். சோழ மண்டலக் கரையினின்றும் சாலடியாவிற் றங்கினுேர் சாலடி யர்களென்றும் பாண்டிய நாட்டினின்றும் சென்று எகிப்திற்

5.
றங்கினேர் எகிப்தியர்களென்று சரித்திரவல்லார் மொழிகின் rறனர்.
'ஆரியரின் மிகப் பழைய நூலெனக் கருதப்படும் இருக்கு வேதத்திலும் பாணரைப் பற்றிக் குறிப்பிடப்பட் :: து. அவர் கடலிலுங் காலிலுஞ் சென்று வாணிகஞ் சய்பவரென்றும் வகுப்பு வேற்றுமை பாராட்டாதவராயினும் ஆரியர் கொள்கைக்கு உடன்படாதவரென்றும் கூறப்பட் டிருக்கின்றது. அவரைப் பாணிஸ் (Panis) என்று இருக்கு வேதங் கூறும். மேல்நாட் டிலக்கியங்கள் அவரைப் புயூ *னிக்குழுவினர் (Punicrace) என்று கூறுகின்றன. அவர் ள்தான் சிரியாவின் (Syria) பக்கத்திற் குடியேறியபின்னர் பொனீசியர்கள் Phoenicians) என்றழைக்கப்பட்ட னர். 'பாணர் காந்தார கபூலிஸ்தான் வழியாக மேலாசியா விற்கும் போண்டஸ் (Pontus) மாகாணம் பாஸ்போரஸ் a Qait diasih (Isthmus of Bosphorous), gavalaiafair வழியாக ஐரோப்பாவிற்கும் பல பிரிவுகளாகச் சென்றனர். ாந்தார கபூலிஸ்தான் வழியாகச் சென்ற பாணர் கீழ் அரேபி பாக் கரையையும் பாபிலோனியாவையுந் தாண்டிச் சிரியாவின் வழியாகச் சென்று கிலத்த நாட்டுக்கு பொனீஷியா என்று. பெயர் பாணருடைய நாடு பொனீசியா எனப்பட்டது. பேர்சி டின் குடாக்கரையி லிருந்தோர்கள் அவரைக் கடற் கடவு ளென்று கினைத்து வணங்கினர்.
பின்னும் பாணர் டைகிரிஸ்யூப்ரெட்டிஸ் (The Tigris hnd the Euphrates) - ji pů HAD iš SOFiRGU53s (5g. யேறி நாகரிகமாகிய விளக்கை ஏற்றினர். அவ்வாறேற்றபட்ட விளக்கிலிருந்து வட ஆசியாவெங்கு மொளி பாவிற்று. பாணர் குடியேறுவதற்கு முன் பொனிஷியா லெபெனன் (Leba

Page 36
52
non) என்ற பெயர் பெற்றிருந்தது. பொனிஷிய ரென்பவர் கிறித்து பிறப்பதற்கு முற்பட்டவரென்பது குலியர் அபிரிக் கானவRன் முடிவு. ஆகவே பாண்டியரின் வரலாறு அதற்கு முற்பட்டதென்பது தெரிய வரும்,
*இதற்குள்ளாக நிலத்தினமைப்புச் சிறிது மாறிற்று. பஞ்சாப்பிற்குத் தெற்கே இருந்த கீழ்கடலும் அரச பட் டணத்தை ஒட்டியிருந்த அரசப்பட்டணக் கடலும் நாடு கட லாகும் ; கடல் நாடாகும்; என்பதை யொட்டி மேடாயின. மரக்கல மோட்டப் பாணரிடங் கற்றுக்கொண்டும் போதிய மரமில்லாததால் கடல் கடக்க முடியாதிருந்த ஆரியருக்கு அப்பொழுது தென்னடு நோக்கிப் போக முடிந்தது. ஆத லால் தமிழரது நாகரிகத்தைக் கற்றுக்கொண்டு மென்மேலும் பெருகுவதற்கு அவரால் முடிந்தது. சோழமண்டலக் கரையி லிருந்த தமிழர் வடகாடு போந்த கடற்பாணரை ஒத்த நாக ரிகத்தினர் அச்சோழர்கள் பாணருடன் சென்று ஒரு நாட் டிற் குடியேறினர். அக்குடியேற்ற நாட்டிற்கு சோழநாடு அல்லது சாலிதியா (Chaldia) என்று பெயர் * அந்நாட் டையே வைsனர் நாடென்றும் (Shinar Land) பாபி
* As the Cholas had been Aryanised they probably went there with their gods and Aryan priests and called, their colony. "Chola-deca, which word through corrupted pronunciation came to be known as Chaldea ie the land of Cholas. This land was the Shinar land of Semites and the Babylonia of the Greeks. (Rig Vedic India P. 20.)

58
லோனியா என்றுங் கூறுப. அங்குக் குடியேறியவருக்குச் சமேரியா (Sumerians) என்று வேறு பெயருமுண்டு பாபி லோனியாவிலேயே சுமேரியர் பிறந்தவர் என்று கூறுவதற்கு அங்காட்டு மண்ணும் நிலமும் இடந்த ரா. சாலிதியாவிலுள்ள டெல்லா (Telloh) என்ற விடத்திலிருந்து அகப்பட்டுள்ள சில உருவங்களின் தலைகள் தமிழரின் தலைகளை ஒத்திருக்கின் றன. தமிழரது மொழியைப் போன்ற சுமேரியாது மொழி யும் ஒட்டுச் சொற்களையுடையது. அச்சுமேரியர்தான் பாபி லோனியாவிலும் அசீரியாவிலும் நாகரிகத்தை வளர்த்தவ ராவர். இருக்கு வேதத்தில் சந்தன மரத்தைக் குறித்து யாதொரு குறிப்புங் காணப்படாததாலும், சந்தனமரம் மலை யாளக்கரையின் தனிப்பொருளாகையாலும் பாபிலோனியா இலக்கியங்களிற் காணப்படும் சந்தனம் தமிழராகிய சாலிதிய ராலேதான் கொண்டுபோகப்பட்டதென்று கினைக்க இட முண்டு. மொழிபற்றிய இலக்கணமும் மண்டையோடு பற் றிய செய்திகளும் தமிழர்களுக்குஞ் சுமேரியர்க்குமுள்ள தொடர்ச்சியை வலியுறுத்துகின்றன. பாபிலோனியாவிலும் பாம்பைத் தெய்வமாகக் கொண்டாடுவதினின்று அத்தொடர் ச்சி பசுமரத்தாணி யாகின்றது. சோழர்கள் சாலிதியர்க்குச் சிற்ப வேலைகளைக் கற்பித்தனர். தென்னிந்தியாவினின்று சென்ற சேத்துக்கள் அல்லது சிரேஷ்டிகள் (Seths or Shrestis) என்போரே சாலிதியாவில் சேட்டுகள். (Saits),
* என்றழைக்கப் பட்டனர். அச்சேட்டுகள் இன்றேல்
* சேட்டுகள் என்போர் வியாபாரிகள் என்று சொல்லப் படுகின்றனர். ஆகவே செட்டிகள் என்னும் தமிழ்ச்சொல் சேட்டுகள் எனத் திரிந்திருத்தல் கூடும்.

Page 37
54
சாலிதியாவின் கலைப்பெருக் கவ்வளவு மிகுந்திராதென்பது திண்ணம், மெசப்பட்டேமியாவி லெழுந்த இந்தச் சாதி யாரின் நாகரிகம் பதினுேராயிரமாண்டுகளுக்கு முற்பட்ட தென்ப. 4 பாண்டியர்கள் பெர்சியா அரேபியா வழியாகச் சென்று எகிப்தில் (Egypt) குடியேறினர். அவர்கள் பண்டு நாட்டிலிருந்து (Land of Punt) வந்தவராக அங்காட்டு வரலாற்றிலுங் கூறப்பட்டுள்ளது. பண்டு நாடென்பது பாண்டி நாடாகிய தமிழ் நாடே எகிப்தியருடையவும் தமிழருடைய வும் மண்டையோடுகள் ஒத்திருப்பதே போதியசான்று. தமிழரைப்போலவே எகிப்தியரும் ஒவ்வொரு திங்களிலும் மலக்கழிவு மருந்தருந்தினர் பெரியோரை வணங்குதல் இரு பாலாரிடத்து முண்டு. உயிரினழிவிலாத் தன்மையில் இரு பாலார்க்கும் நன்னம்பிக்கையுண்டு. துன்பகாலத்திலும் பிரி வாற்ருமை நிகழ்ந்துழியும் தலைமயிரைக் களையாது வளரவிடும் வழக்க மிவரிடமுமுண்டு. அம்மை அப்பன் என்ற பகுப்பு எகிப்தியரிடமுமுண்டு. புறவழுக்கு மிகுந்த உயிரென்று பன்றி தமிழராலுமெகிப்தியராலும் பன்னளாக இகழப்பட்டு வரு கிறது. இவையெல்லாம் எகிப்தியருக்கும் தமிழருக்குமுள்ள
புணர்ச்சி யுண்மையைக் காட்டுகின்றன.
6இவ்வாறு தமிழராகிய பாண்டியரின் தொடர்பால் வந்த எகிப்தியருடைய நாகரிகமே உலகிற் பெரும்பாலும் பாவிற்று. எகிப்தியர் நாகரிகமே முதலிலெழுந்ததென்று சில ரும் பாபிலோனியரின் நாகரிகமே முற்பட்டதென்று சிலரும் கூறி வாதிப்பர். அவ்விருவர் நாகரிகமும் தமிழரான் வந்ததே யன்றி வேறல்லவென்பது பாண்டியர் குடியேறிய நாடே எகிப் தென்றும் சோழர் குடியேறிய நாடே சாலிதியாவென்றும்

55
ராலிதியர் குடியேறிய மெஸ்ப்பொட்டேமியாவாகிய நாடே பாபிலோனியாவென்றும் வழங்கப்பட்டன என்று முற்
*றிப் போந்தவற்ருல் விளங்காகிற்கும். பாணருடைய நாடே பானீஷியாவென்றும் மேலே கூறப்பட்டது. இவ்வெகுப்தி பரும் பாபிலோனியரும் பொனிஷயருமே கிரேக்கருக்கு நாக கங் கற்பித்தவர். கிரேக்கருக்குக் கற்பிக்கப்பட்டதை கிரேக்க டமிருந்து உரோமர் அறிந்தனர். பின்னர் உரோமர் தாங் சற்றுக்கொண்டவற்றை ஐபீரியர், கெல்த்கள், தியூதர்கள்
Gagiaisir (Iberans) Celts, Teutons and the lavs) முதலானேருக்குத் தெரிவித்தனர். இவ்வாறே உல கெங்கும் தமிழரிடமிருந்து நாகரிகம் பரவிற்று. (செந்தமிழ்ச் செல்வி சிலம்பு-7-பரல் 1.)
இதுகாறும் கூறியவற்றல் தமிழகத்தினின்றும் சென்ற மக்கள் இப்பூவுருண்டையின் பல பாகங்களிற் சென்று தங்கி பற்பல சாதியினர் என்னும் பெயரினைப் பெற்றர்களென்பது தெளிவுற விளங்கும்.
5. முதற்கட்டோன்றிய மொழி
s தமிழ் காட்டிலேயே மக்கட் படைப்பு முதற்கணுற்ற தென தக்க பிரமாணங்களால் மேலே நிறுவப்பட்டது.ஆகவே மக்கள் முதற் பேசிய மொழி தமிழ் என்பது தானே பெறப் படும். ஒரு மொழியின் அடியாகவே உலகில் உள்ள பல மொழிகள் தோன்றியிருக்கின்றனவென்று மொழி ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் துணிகின்றனர், மொழி ஆராய்ச்சி வல்ல கல்லூர் Rew ஞானப்பிரகாசர் தமிழ்ச் சொற்கள் இந்து ஐரோப்பிய மொழிகளில் கிரிந்து வழங்கியிருக்கும் வகை யினே யாவரும் எளிதிற்கண்டு மகிழுமாறு பத்திரிகைகள் வாயி

Page 38
56
லாகவும் புத்தக வாயிலாகவும் விளக்கியிருக்கின்றனர். சுமே ரிய மொழிக்கும் தமிழுக்கும் உற்பத்திக்கானம் ஒன்று என் பது அவர் கருத்து + ஆரியமும் அம் மொழியிலுள்ள நான்
#" That the roots of a large majority of Indo-European words are to be found in ancient Tamil is not a mere theory but a fact ascertained by extensive induction. It is not from the similarity of sounds and meanings alone that the radical identity of words in the socalled Drawidian and Aryan languages Was deduced." (Pedigree of words.) Rev S. G.
"These first words of Tamil are also the long forgotten roots of most words in all the Indo-European languages Tamil first words or roots take us back, thus to the remotest period of human history when only a few scores, Ol' perhaps a few hundreds, of monosyllabic words without inflection, formed the sole language of what are known as the Aryan and Dravidian races (Tamil roots in other languages. Rev. S. G.)
"The primary monosyllabic words of Tamil carry us back to the very roots of language. The Sumerian speech old as it is, appears comparatively young when viewed in the light of the earliest word forms which

மறைகளும் தோன்றுவதன்முன் உலக முழுமையும் தமிழ் மொழி வழங்கியதென்பது Prof சுந்தரம் பிள்ளை அவர்கள் கருத்து.
' சதுபாறை ஆரியம் வருமுன் சகமுழுது கினதாயின் துமொழி நீ பணுதியென மொழிவதும் வியப்பாமோ எனத் தமது கருத்தை பிள்ளை அவர்கள் மனுேன்மணிபத்தில்
ளங்கக் கூறியிருக்கின்றனர்.
* ' சாவகம் முதலிய ஐவகைத் தீவிலுள்ள மொழிகளும் இமயமலைச் சார்பில் ஒருவகைச் சாதியார் பேசுகின்ற மொழி யும், விக்கிய மலேயின் கிழக்கு முனேயிலுள்ள குடிய நாகபுரி
Tamil displays and of which Sumerian forms are a later development". "An unbiassed study however, will bear out the contention that both (Tamil and Sumerian) streams are from the same fountain head (Sumerian and Tamil. Rev. S. G.)
4 Java is rightly famous for its Hindu temple. Great care is bestowed on the decoration on the walls and again sculptures of heroes and half Gods. mentioned in the ancient Hindu poems the Ramayana and Mahabharata, are to be found. Most of them (People of Bali) are worshippers of Shiva (Slayters monthly Aug 1921.)
The language spoken now at Kamschatka, the north eastern corner of Asia, is considered

Page 39
58
யில் ஒருவதைச் சாதியார் பேசுகின்ற மொழியும் அம்மலேயில் அம்பாமென்னுஞ் சிகரத்தில் (Mt. Abu) வசிப்பவர்தம் மொழியும் கிபெக் நாட்டு மொழியும், பெலுஜீஸ்டான் தேசத் தில் கவுத்புத்தி என்னுஞ் சாதியார் பேசுகின்ற மொழியும், ஐரோப்பாகண்டத்துள் ஆஸ்டிரியா காட்டு மொழியும் பிறவும் தமிழின் சிதைவெனச் சரித வாராய்ச்சியில் வல்ல பெரி யோர் கூறுவர். தவக்புக்கிர என்பது திராவிட புத்தி என்பதன் சிதைவு' ' ஆப்கானஸ்தான் என்னும் மகம்மதிய காட்டில் ஒர் நகருக்கு தமிழக் என்னும் பெயர் வழங்குவ கோடு அந்நகரில் குடியேறிய மகம்மதியரும் திமதி பாழை யோடு தமிழையுங் கலந்து பேசுகிருர்கள்."
ஆசியாவில் சைபீரியா நாட்டில் ஆக்ன்ே சாதியார் மொழியும், வட ஐரோப்பாவில் பின்சாதியார் மொழியும், to be a dialect of Tamil (Sir T.W. Hunter) 'The language spoken by the maories in far off New Zealand which denotes the utmost southern limits of the 700 kathams of the Tamil land from Cape Comorin, and the language spoken in the numerous groups of islands between these two boundaries are allied to Tamil'(Indian Antiquary Wol x) " The language spoken in Tascany in Italy is a dialect of Tamil (J. R.A.S) "It is said that the Chinese has some affinity to it, T. P. P. 1913). "The three classic languages of the world viz, Sanskrit, Hebrew and Greek contain Tamil words in the Wocabulary' (Rhys. Davids: Tamil India P. 38.)

59
ட்டியா நாட்டிலுள்ள பிஹிஸ்டன் சாசனங்களில் எழுதி புள்ள மொழியும், கிராவிட சம்பந்தம் பெற்றுள்ளன; பால்டிக் ாடல் முதல் மலேயாளம் வரையில் கிராவிட சம்பந்தமாம்.
ாவிடம் சொன்றுதொட்டுள்ளதொன்று; ஆரியருக்கு முன் கரிகமடைந்தவர் கிராவிடர் ; வடபால் மேல்பாலுள்ள ாஸ்டிராலியா தேசத்தாாது, மொழியுள் கான், நாம், ரீ, |ங்கள் அவனென்னுஞ் சொற்களொத்துள்ளன : மலேயாளம் தெலுங்கு, கன்னடம் துளுவம், குடகுதோடம், கோட்டம், ாண்டி, ஊரான் முதலிய பாஷைகள் தமிழ்ச்சிதைவு என்று சரித்திரப் புலவர் ஹண்டர் என்பவர் கூறுவர்.
' இன்னும் வடமொழிக்குத் தமிழ் முற்பட்டது எனவும் இத்தாலியா தேசத்திற் பல நூற்றுண்டுகளுக்கு முன்னே தமிழர்களுக்குச் சம்பந்தமான சாதியார்கள் இருந்தார்களென வும், அறிஞர் கால்டுவெல் கூறுவர். எட்வார்ட்கனார்டு (Edward Claud) என்பவர் தாம் எழுதிய யூதருடைய சரித்திரத்தில் மங்கோவியர், பீனிஸ் இச்சாதியார்களுக்குமூல புருடர்களாக இருந்தவர்கள். ஈழ நாட்டிலிருந்து பாசீக வளே குடாவைச் சூழ்ந்து குடியேறி யிருந்தார்கள் எனவும், சுமேரிய ரென்னும் சாதியாருக்கு முன்னும், எகிப்து தேசத்தார் தலே யெடுப்பதற்கு முன்னும் அவர்கள் நகரங்களேயும் இராசதானி
ளேயும் உண்டாக்கினுர்களெனவும்; அவ்விராசதானிக்கு. ாரெனவும், அவ்வூர் சோமசுந்தாக் கடவுளுக்கு உறையு ளெனவும் வெற்றிவேற் குமான் அவர்தங் கடவுளெனவுங்
புறுவர். (மொழிநூல்)
* தென்னுட்டுத் திராவிட மொழியிலிருந்து ஜப்பான் மொழி தோன்றியகென்று புங்கி உத்தமர் கூறுகின்ருர்(லோகோபகாரி Oct, 9, 1930)

Page 40
60
Lia; 3)iguita air g3 flurrgu Prof. Rhys. Davi என்பவர் வேத பாடல்களில் தமிழ்ச் சொற்கள் கலந்திருக் கின்றன’ எனக் கூறுவர்.
வேதபாடல்கள் செய்யப்படுகின்ற காலத்தில் ஒலி வேறு பாடுடைய வேறு மொழி ஒன்று இருந்திருக்க வேண்டுமென் றும் அம்மொழியிலுள்ள பல சொற்கள் வேதபாடல்களிற கலந்திருக்கின்றனவென்றும் (A. A. Macdonel) மாக் டெனெல் என்னும் பண்டிதர் கூறுவர்.
Dr. கட்வென் என்பவர், அக்கா, அத்தை, அடவி, அம்மா, ஆணி, கடுகு, கலா, குடி, கோட்டை, கீர் பட்டணம், பாகம், பலம், மீன், வள்ளி முதலிய சொற்கள் சமஸ்கிருதத் திற் கலந்திருக்கின்றன எனக் கூறுவர்.
பெஞ்சாப் சிந்து பழமையை நோக்கியபின் P. T. பூரீனி வாச ஐயங்கார் கொண்டுள்ள அனுமானம் உருசிகரமானது. தனித் தமிழ்ச் சொற்களின் ஆராய்ச்சியால் இந்தியாவின் புதிய தற்கால நாகரிகத்தை நன்கு அறிந்துகொள்ளலாமென் றும், முதற்பருவத்துள்ள தமிழ்ச் சொற்கள் ஒரசையினவா யிருத்தலின் ஜேர்யோன் மாசல் குறிப்பிட்ட ஒவிய எழுத்துக் களை இப் பழந்தமிழ்ச்சொற்களால் எழுதிக் காட்டலாமென் றும், 20,000 வருடங்களுக்குமுன் இந்தியாவில் வழங்கிய மொழிகள், தமிழ்ச் சம்பந்தமானவை யென்றும், கோதாவரிக் குக் கீழ்ப்புறத்து வழங்கும் மொழி பழந்தமிழ்ச் சம்பந்தமான தென்றும் அவர் கருதுகின்றனர். தற்காலம் வடஇந்தியா வில் வழங்கும் வடமொழி சம்பந்தமாகிய மொழிகள் பழந் தமிழ் வழிவந்தனவும் மிகுதியும் சமஸ்கிருதப் போக்கைத் தழுவியனவுமாகிய மொழிகளே யென்பது ஐயங்காரவர்கள் கருத்து. (திராவிட இந்தியா P. 78, 79.)

61.
இயல்-2
மொழி
1. தமிழ்
தமிழ் என்னுஞ் சொல் இனிமை என்னும் பண்புணர்த் ம் தேனுறை தமிழ்’ ‘தமிழ் தழி இயசாயல்' ‘தமிழெனு ய தீஞ சொற்றையல்" எனப் புலவர்கள் தமிழ் என்னுஞ் சால்லை % இனிமை என்னும் பொருளில் ஆண்டிருக் நின்றனர்.
'இனிமையு நீர்மையுந் தமிழெனலாகும்'
என்னும் பிங்கலச் சூத்திரமும் தமிழுக்கு இனிமை யென்பது பொருளெனக் கூறுகின்றது. தமிழ் என்னும் சொல் பிறமொழி வழியாக வந்ததென சில சரித்திராசிரியர்கள் கூறி யிருக்கின், றனர். தொல்காப்பியம் முதலிய பழைய செந்தமிழ் நூல் களில் தமிழ் என்னுஞ் சொல் காணப்படுகின்றமையின் அன்
னர் உரைகள் ஏற்றுக்கொள்ளற்பாலன வல்ல. தமிழர் தமது மொழிக் குரிய பெயரைத் தம் மொழியால் வழங்காது பிற மொழிச் சொல்லால் வழங்கினர்கள் என்பது பொதறிவுக்கு பற்றதன்று.
தமிழும் சமஸ்கிருதமும் சகோதர மொழிகளென்றும் அவற்றைச் சிவபெருமான் முறையே அகத்தியருக்கும் பாணி ணிக்கும் அருளிச் செய்தனர் என்றும் காஞ்சிபுராணம் திரு விளையாடற் புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன.
* தமிழினெழுகு நறுஞ்சுவையே (மீ. பி. தமிழ்)

Page 41
62
* வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளியதற் கிணையாத் தொடர்புடைய தென்மெலாழியை யுலகமெலாங் தொழுதேத் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனிற்தும் கடல்வரைப் பினிதன் பெருமை யாவரே கணித்தறிவார்' என்பது காஞ்சிபுராணச் செய்யுள். முற்காலத்தில் வடமொழி யைப் பாணினிக்கு அருளிச் செய்ததுபோல (பிற்காலத்தில்) சிவபெருமான் தமிழ் மொழியை அகத்திய முனிவருக்கு அரு விச் செய்தாரென இச்செய்யுள் கூறுகின்றது. பாணினி முனி வர் கி. மு. 4-ம் நூற்றண்டில் விளங்கியவர். அகத்தியர் இரா மாயண காலத்திலும் அதற்கு முன்னும் இருந்தவர். ஆகவே சிவபெருமான் பாணினிக்கு முன் வடமொழியை அருளிப் பின் அகத்தியருக்குத் தமிழை அறிவுறுத்தாரென்பது அசம்
Jirofos LDTL.
6 விடையுகைத்தவன் பாணினிக் கிலக்கண மேனள்
வடமொழிக்குரைத் தாங்கியன் மலையமா முனிக்குத் திடமுறுத்திய மொழிக்கெதி ராக்கிய தென்சொல் மடம்கட்காங் கென்பது வழுதிநாடன்றே " என்பது திருவிளையாடற் புராணம்.
காஞ்சிபுராணம் திருவிளையாடற்புராணம் என்னும் இரு நூல்கள் செய்த ஆசிரியருள் திருவிளையாடற்புராணம் இயற் றியவரே முன் விளங்கியவர். ஆகவே காஞ்சிபுராணப் பாட்டு திருவிளையாடற் புராணத்தின் எதிரொலியாகவே காணப் படுகின்றது.
* ஆதியிற் றமிழ்நூலகத்தியற் குணர்த்திய மாதொரு பாகன்' எனச் சேனவரையர் கூறியிருக்கின்றனர். இவர்
காலம் கி. பி. 12-ம் நூற்முண்டு வரையில் என்று கருதப்படு

63
basıpது. சேனவரையர் சிவபெருமான் பாணினிக்கு இலக் par முபதேசித்ததைக் குறித்துக் கூறவில்லை.
பன்னிரு படலப் பாயிரமாக தொல்காப்பிய உரை
ற் காட்டப்பட்ட பாடலிலாவது புறப்பொருள் வெண்பாப் ாயிரத்திலாவது சிவபெருமான் அகத்தியர்க்குத் தமிழ் டிரைத்த வரலாறு சொல்லப்படவில்லை. கி. பி. ஏழு அல் து எட்டாம் நூற்றளவிற்முன் இவ்வகையான கதைகள் தோன்றியிருக்க வேண்டுமென M. சீனிவாச ஐயங்கார் м. A. அவர்கள் கருதுகின்றனர்.
தமிழ்ப் பிரயோக விவேக நூலாசிரியர் 'மயேச்சுரன் பாணினிக்காசிரியன்’ என அந்நூலின் முதற் குத்திர உரை எழுதியிருக்கின்றனர். மயேச்சுரன் என்னும் ஆசிரிய هُ هم னேக் கடவுளாகக்கொண்டு பிற்காலத்தார் சிவபெருமான் வட மொழியைப் பாணினிக்கு அருளிச்செய்தார் எனக் கூறினர் போலும், தமிழிலே உள்ள இறையனாகப்பொருள் கடவு ளால் அருளப்பட்டதென வழங்குகின்றது. அறிஞர்கள் அந்நூல் சங்க காலத்திருந்த இறையனர் என்னும் புலவ ரால் செய்யப்பட்டதெனக் கருதுகின்றனர். 'இறையனர்
அகப்பொருள் என்னும் நூலை இயற்றியவர் சிவபெருமான் க்ருகிய இறையனுர் என்னும் புலவர் பெருமான்' என *ஹோமேஹா உபாத்தியாய உ. வே. சுவாமிநாதையரவர்கள் கூறுகின்றனர். முருகக் கடவுள் தமிழ் மொழியை அகத் திய முனிவருக்கு அறிவுறுத்தியதாக அருணங்தி சிவாசாரியர் அருணகிரிகாதர் சிவஞான முனிவர் முதலியோர் கூறியிருக் கின்றனர்.
& பதினோாம் நூற்றண்டு வரையில் இயற்றப்பட்ட வீர சோழியத்தின் பாயிரத்தில்,

Page 42
64
ஆயுங்குணத் தவயோகி தன் பக்கல் அகத்தியன் கேட் டேயும் புவனிக் கியம்பிய தண்டமிழீங்குரைக்க நீயுமுளையோ வெனிற் கருடன் செறை நீள் விசும்பி லீயும் பறக்குமிகற் கென்கொலோ சொல்லு மேந்திழையே எனக் கூறப்பட்டிருக்கின்றது.
திராவிடம் திராவிடமென்பது தமிழுக்குப் பிறிதொரு பெயராக வழங்குகின்றது. தமிழ் ழகரத்தை உச்சரிக்க வறியாத ஆரியர் தமிழ் என்னுஞ் சொல்லை திராவிடம் என வழங்கினர். நகைச் சுவைக்குப் பொருளாவன ஆரியர் கூறுங் தமிழுங் குருடரும் முடவருஞ் செல்லுஞ் செலவும்.போல்வன என்னும் பேராசிரியர் உரை ஆரியர் திருத்தமுறத் தமிழ் பேச அறியார் எனப் புலப்படுத்துகின்றது.
“Sanskrit Pandits however think Dravid: as a corruption or sanscritised form of Tamil (Tamil studies P. 6)"
'திராவிடமென்பது தமிழ் என்பதின் திரிபு. அல்லது சமஸ்கிருத ரூபமாக்கப்பட்ட சொல் எனச் சமஸ்கிருத பண் டிதர்கள் கருதுகின்றனர். என 'தமிழ்' ஆராய்ச்சி என்னும் நூலார் கூறுவர். ' திசைச் சொல் பன்னரென்பது வேறு மொழியில் ழகரம் இன்மையின் தமிழென்னும் பெயரைச் சொல்ல இயலாமைபற்றி திராவிடம் முதலிய பெயர்களால் தமிழைக் குறிப்பது இதுபற்றிப் போலும்” (தமிழ் விடுதூது மஹோ மஹோ உபாத்தியாய உ.வே. சாமிநாதையர் குறிப்பு.) தென்னுடு திருக்கோயில்களும் செல்வமும் மலிந்தவிட மாதலின் அது திருவிடமென்னும் பெயரைப் பெற்றதென்

65
லும் பின் திருவிடம் திராவிடமாயிற்றென்றும் கூறுவர். ரமிழ் இந்தியா’ என்னும் நூலாசிரியர் திருவாளர் பூர்ணலிங் ம் பிள்ளை அவர்கள்.
தென்மொழி.
இந்தியாவின் வடபாகத்தில் சமஸ்கிருதமும் தென்பாகத் நில் தமிழும் வழங்கின. வடக்கே வழங்கிய மொழி வட மொழி எனப்படவே தெற்கே வழங்கிய மொழிக்குத் தென் மொழி என்னும் பெயர் உண்டாயிற்று.
அழகும் இனிமையும் உடைய மொழியாதலின் தமிழ் தென்மொழி என்னும் பெயர் பெற்றது என்பர் திராவிடப்
பிரகாசிகைகாரர்.
2. தமிழின் வழிமொழிகள். தெலுங்கு,
கண்ணுவர் என்ற முனிவர் இம்மொழிக்கு முதல் இலக் கண நூலாசிரியரென்று சொல்லப்படுவதுண்டு. இவரைப் பற்றி ஒன்றும் தெளிவாய் அறியக்கூடவில்லை. அவர் இலக் கணமும் மறைந்துபோயிற்று. இக்காலங்களில் வழங்கிவரும் தெலுங்கு இலக்கணங்களில் முந்தியது நன்னயப்பட்டாது. அவர் காலம் கி. பி. 12-வது நூற்முண்டு. தெலுங்குப் பாரத மும் இவரையே நூலாசிரியராகக் கொண்டிருக்கின்றது. பதினன்காவது நூற்றண்டுக்குப் பிற்பட்டுத்தான் இம் மொழியில் நூல்கள் பல்கின. ஏறக்குறைய இரு நூருண்டுகளுக்கு முன்னிருந்த வேமன்ன என்ற கவி அநேக நீதி நூல்கள் செய்திருக்கின்றர். தென்னலிராமன் கதையும் இம்மொழியினின்றே மொழி பெயர்க்கப்பட்டது.
5

Page 43
66
* ஆந்திரருடைய சந்ததிகள் வட நாடுகளை விட்டுத் தக்கன தேசக்கில் முதல் முதல் குடியேறிய இடக்கிற்குக் திரிலிங்கமென்று பெயர். கிரிவிங்கமென்ருல் பூரீ சைல TE வதம் (2) காளேசுவரம் (8) பிரீமேசுவரம் என்னும் மூன்றிடங் களில் சிவெ ருமான் மல்லிகார்ச்சுனன், காலநாதன், பிரீமேசு வான் என்ற முப்பெயர்களால் மூன்று லிங்கங்களாக வமைக்தி, அம்மூவிடங்களுக்கும் திரிலிங்கானம்' என்று பிரபலமான பெயர் பெற்றுப் பிரகா சிக்கிறபடியால், உறுப் படிப் பிரகாசிக்கும் மூன்று காட்டெல்லேகளுக்குள் வந்து குடியேறிய ஆந்திரர்களுக்கு திரிலிங்கர் என்ற பெயரிட்டு அழைக்கப்பட்டு வர, அந்தத் திரிலிங்கர் என்னும் வார்த்தை யானது, காளாவட்டத்தில் தெலுங்கரென்று மருவியதனுல் அந்தத் தெலுங்கர் வழங்கிவந்த பாஷைக்கும் தெலுகு துல் லது தெனுகு அல்லது தெலுங்கு என்று பிரசித்தியாகிவிட் டது" (தக்கண இந்தியா சரித்திரம் பக்.98)
தெலுங்கு என்பது தெற்கு என்னும் சொல்லிலிருந்து தென்கு என்று வந்து பின் தெனுகு தெலுங்கு எனத் திரிக்க தென வும் திரிலிங்கமென்பது தெலுங்கு என்பதன் திரிபு என் றும் திரிலிங்க மென்பதிலிருந்து தெலுங்கு என்னுஞ் சொல் வந்த தெனக் கூறுதல் பிழையெனவும் இந்துப் பத்திரிகை யில் ஒருவர் எழுதியுள்ளார்.
"Telugu is one of the great Drawidian languages. The Word is probably derived from Trilinga (the threelingas of siva) a name for the old kingdom of Andhra. It was at one time called by Europeans "Gentoo' from a portuguese word meaning gentle. The Telugu speaking

67
people are partly subjects of Nizam of HyderaC and partly unider British rule beginning North of Madras city, extending N. W. to Bellary where Telugu meets Kanarese and N. E. near Orissa. They are taller and fairer thanamils, otherwise they are of typical Drawidian features. They are of an enterprising people good farmers and skilful seamen. . . . .
In l90l the number of speakers in Telugu in India was nearly 21 millions."
(Encyclopaedea Britannica)
மலேயாளம்.
மலேயாளம் சில நூற்ருண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு மொழி. அம்மொ ழிக்கு எழுத்துக் கற்பித்தவர் ஏறக்குறைய முன்னூற்றி யாண்டுகளுக்கு முன்னிருந்த எழுத்தச்சனென் பார். அவர் வமிசத்தினர் இன்னும் அப்பெயரால் அழைக் கப்படுகின்றனர். இம்மொழியிலுள்ள விசேட காவியங்களும் பாடல்களும் இராமாயண பாரத பாகவத கதைகளைப் பற்றி பவை. புராண காவியங்களை மிகுதியாகச் செய்தவர் துஞ்சத்த எழுத்தச்சன். கிளிப்பாட்டென்றும் துள்ளல் என்னும் ஒரு வகைப் பாட்டுகள் இம்மொழியில் வழங்குகின்றன.
இவைகளெல்லாம் புராணக் கதைகள் சம்பந்தமானவை. ளிெப் பாட்டென்பது சாதாரணமாய் யாவரும் பாடவும், துள் ால் என்பது சில சமயங்களில் குகித்துப் பாடவும் ஏற்பட் டவை. இப் பாட்டுகளை விசேடமாகச் செய்தவர் குஞ்சகம்பி யார். சென்ற நூற்ருண்டின் கடைசியில் வாழ்க்க அஇந்தி

Page 44
6S
சயனம் ராமவர்மா மகாராசாவினுல் சில நாடகங்கள் இயற்றப் பட்டிருக்கின்றன. இம்மொழியில் மணிப்பிரவாள சுலோகம் அதிகம்.
Malayalam, a language of Drawidian family spoken on the west coast of southern India. It is believed to hawe developed out of Tanill as recently as the 9th century. It possesses a large literature in which words borrowed from Sanskrit are conspcuous. In 190l the total number of speakers of Malayalam in all India was justabout six millions. (Encyclopaedea Britannica) கொடுங் தமிழும் பிராகிருத சமஸ்கிருதமும் கலந்து கி. பி. 13-ம் நூற்ருண்டின் முற்பகுதியில் மலேயாளம் என்னும் பெயர் பெற்றது என்பர். 'தமிழ் ஆராய்ச்சி (Tamil Studies) என்னும் நூலாசிரியர் M. சீனிவாச ஐயங்கார் அவர்கள்.
கன்னடம், முதன் முதல் இம்மொழியில் நூல்கள் எழுதத் தொடங் கியவர்கள் சமனர்கள் (Jains) இவர்கள் சோழபால சரித்தி ாம் முதலிய சரித்திரங்களையும், பிரபோத சந்திரோதியம் முத விய தத்துவ நூல்களையும், ஜினமுனி தயை முதலிய சமனக் கொள்கைகளை விளக்கும் சில நூல்களையும் எழுதியிருக்கிருர் கள். சப்தமனிதர்ப்பணம் என்ற இம்மொழியின் பிரதான இலக்கண ரால் இவர்களில் ஒருவரான கேசிாாசாவாலியற்றப் பட்டது. பிறகு வீர சைவமதித்தோரால் வசவ புராணம் பிரபுலிங்களிலே இராசசேகர விலாசம் முதலிய பல காவியங் களும் சரித்திரங்களும் இம்மொழியில் எழுதப்பட்டன.

69
இவற்றுள் இராசசேகா விலாசம் என்பது இராசசேகரன் ான்ற சோழன் சரித்திரம். இஃது இம்மொழியின் கவி சிரேட்டரான ஷடாக்ஷரி தேவராலியற்றப்பட்ட பல சைவ வைணவ கிரந்தங்களும் இம்மொழியில் உண்டு.
*கன்னடமும் தெலுங்கை யொட்டிப் பெரிதும் இயங் னமையான் அதுபோலவே பல்லாற்ருனும் தன்னேச் சீர்ப் : இதனுலன் ருே “பழங் கன்னடம்" என் றம் புதுக் கன்னடம்' என்றும் அஃது இருவேறு பிரிவின நாகி யியங்குகின்றது. பழங் கன்னடத்தைத் தமிழினின்றும் பிறந்ததெனக் கூறும் கன்னடப் புலவர் இன்றுமுளர்'
"Kanarese, a language of Dravidian family spoken by about ten millions of people. in South India chiefly in Mysore, Hyderabad and the adjoining districts of Madras and Bombay. It has an ancient literature written in an alphabet losely resembling that employed for Telugu. ince the l2th century the Kanarese speaking eople hawe largely adopted the Lingay at form of faith which may be described as an anti rahmanical sect of siva worshippers; most of em are agriculturists but they also engage Actively in trade. (Encyclopaedea, Britannica).
"Telugu does not take its awalable literature much anterior to the eleventh century A. D., and this literature seems to be modelled upon Sanskrit entirely. Kanarese has certainly a more ancient literature a work of the 9th cen

Page 45
()
tury undoubtedly is the KawiTraja marga of Nirpatungu...Malayalam seems to have grown out of Tamil in the early centuries of the Christian era”.
(Prof. S. Krishnaswami Ayangar)
துளு, இது தெற்குக் கன்னடத்தில் வழங்கும் மொழி. இம் மொழியிற் பழய இலக்கியங்கள் இருப்பதாகத் தெரியவில்லே, இம்மொழியை வழங்குவோர் ஐங்கிலக்கம் மக்கள் வரையில்,
"Tulu or Tuluva, a language of the Drawidian family, found chiefly in the south Kanara District of Madras. It has no literature, nor it has been adopted for official use even where it is spoken by the majority of the population. In 190l the total number of speakers of Tulu' exceed half a million'.
(Encyclopaedia, Britannica) பதினுேராம் நூற்ருண்டுவரையில் இயற்றப்பட்ட திவா கரத்தில் துளுவம் பதினெண்பாடையின் ஒன்ருகக் கூறப்படு கின்றது. ஆகவே துளு பதினோாம் நாற்குண்டுக்கு முற்
பட்ட மொழியாதல் வேண்டும்.
மணிப்பிரவாளம். இது சமஸ்கிருதமும் தமிழும் சரிக்குச்சரி கலந்த கடை. உதாரணம்:-'பும்ஸ்பர்சக்லேச ஐம் "Firs) ஊக்க விதி மாய் ப்ரத்யசுநாதிப்ாமான வில:ணமா யிருந்துள்ள நிகில
வேசுஜாதத்துக்கும் வேதோப ப்ரம்மணங்களான ஸ்ம்ருதீதி

71.
ஹாஸ புராணங்களுக்கும் க்ருத்யம் ஸகல ஸம்சாரி சேதனர்க்கு நத்வஞானத்தை ஜனிப்பிக்கை. (தத்துவசேகரம்)
3. தமிழ் நாட்டின் எல்லே, முற்காலத்தித் தமிழ் நாட்டின் வடக்குத் தெற்கு எல்லே கள் வேங்கடமலேயும் குமரியாருகவும் கிழக்கும் மேற்கும் di i - லாகவும் இருந்தன.
* வடவேங்கடங் தென்குமரியாயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து ' எனப் பணம்பாாஞரும் 'வேங்கடங் குமரி தீம்புனற் பெளவமென்
நின்னுன் கெல்லே தமிழதி வழக்கே" எனச் சிகண்டி யாரும்,
'குமரி வேங்கடங் குணகுட சுடலா
மண்டினி மருங்கிற் றண்டமிழ் வரைப்பில்" என இளங்கோவடிகளும் தமிழ் காட்டின் பழைய வெல்லே யைக் குறிப்பிட்டிருக்கிறனர்.
* பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டின் வடவெல்லே கிஷ்ணுககியென்று சிற்பசாஸ்திரம் கூறுகிறதென்று கேட் டிருக்கின்றேன்' என மஹா மஹோ உபாத்தியாய உ. வெ. சாமிநாதையரவர்கள் சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் என் லும் நூலிற் கூறி யிருக்கின்றனர். ஒருபோது விக்கியமலே தமிழ்நாட்டின் வடவெல்லேயாயிருந்ததெனத் தெரிகிறது.
1 தொல்காப்பியஞ் செய்யப்படுகிறகாலத்தில் கெல்லூர் ஜில்லாவின் தென்கோடியும், சித்தூர், வடஆற்காடு, செங்கற் பட்டு, தென்ஆற்காடு, தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, சேலம், கோயமுத்தூர், திரிசிராப்பள்ளி, மலே

Page 46
72
யாளம், நீலகிரியென்னும் ஜில்லாக்களும், தென்கன்னடம் ஜில்லாவின் முக்காற்பங்கும், மைசூர் இராச்சியத்தின் தென் பாதியும், திருவாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை என்னும் இராச்சியங்களும், கடலின் வாய்ப்பட்ட குமரியாற்ருேடு கூடிய பனே நாடுகளும், தமிழ் வழங்கு நிலங்களாகவே இருந்தன என்பதும், அக்காலத்து இங்கிலங்களில் வேறு மொழிகள் வழங்கியதில்லேயென்பதும் நன்கு விளங்குகின் றன" (சங்கநூல் கா. ச. கோவிந்த ராஜ முதலியார்)
' வடதிசை மருங்கின் வடுகுவரம் பாகக்
தென்றிசை யுள்ளிட் டெஞ்சிய மூன்றும் வரைமருள் புணரி'
எனச் சிறு காக்கை பாடினியார் தமிழ்நாட்டுக்கெல்லே கூறி யிருக்கின்றனர். இது, தெற்குக் குமரியன்றிக் கடலெல்லையா கிய காலத்துச் சொல்லப்பட்டதெனப் பேராசிரியர் கூறு கின்றனர். சிறு காக்கை பாடினியாாை ஒழிந்து பனம்பார ஞர் சிகண்டியார் இளங்கோவடிகள் கன்னூலார் முதலாயி னுேரெல்லாம் வேங்கடத்தையும் குமரியையுமே வடக்குக்கும் தெற்குக்கும் எல்லேயாகக் கூறியிருக்கின்றனர். கன்னூலார் காலத்தில் குமரிஆறு இருக்கவில்லை. சிலப்பதிகாரத்தில், குமரி யம் பெருந்துறை (15-15) என்பதற்கு அடியார்க்கு கல்லார் குமரி ஆறு எனப் பொருள் கூற'மாற்ருனும் மணிமேகலையில் 'குமரியம் பெருந்துறை" (5-37) *தென்றிசைக் குமரி" (1 8-ፐ) என வருவனவற்றிற்கு மஹா மஹோ உபாத்தியாய உ. வே. சாமிநாதையரவர்கள் குமரியாறு எனக் கூறிய உரையா அலும், அடியார்க்கு நல்லார் காலத்திற் குமரியாறு கடல் வாய்ப்படவில்லே எனக் கொள்ளவேண்டி யிருக்கின்றது. அக்காலத்துக் குமரியாற்றைக் கடல்கொள்ளவில்லேயாயின்

73
1 பஃறுளியாற்றுடன் பன்மலே யடுக்கத்துக் குமரிக்கோடும்
கொடுங்கடல் கொள்ள " எனக் கூறப்பட்டதினுள்ள குமரிக்கோடு என்பது மலேயே
ாயிருத்தல் வேண்டும்.
1 நெடியோன் குன்றமும் கொடியோள் பெளவமும்
தமிழ்வரம் பறக்க தண்புனல் நாடு' என்னும் சிலப்பதிகார அடிகளால் குமரியாறு கடல் கொள் ளப்பட்டதென விளங்குகிறது. ஆகவே குமரிக் தீர்த்தமென் பது குமரி முனேக்கு அணிக்கிலுள்ள கடற்தீர்த்தமாயிருக்கல் வண்டும். ஆகவே பழய நூல்களில் கூறப்படும் குமரி கடல் ல்லது முனே எனப் பகுத்துணரக் கூடாவகை யிருக்கின்றது.
சேந்தமிழ் கோடுந்தமிழ் 'செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்
தங்குறிப் பினவே திசைச் சொற்கிளவி' என்னும் தொல்காப்பியச் சூக்கிாத்துக்கு உாை ஆசிரியர்கள் செந்தமிழ்நாடு ஒன்று அதனேச் சூழ்ந்த கொடுங் தமிழ் நாடு பன்னிரண்டென உரை கூறினர். அப்பன்னிரண்டு கொடுங் தமிழ் நிலங்களாவன.
** தென்பாண்டி குட்டங் குடங் கற்கா வெண்பூழி
பன்றியருவா வதன் வடக்கு நன்குய சீதமலாடு புனனுடு செந்தமிழ்சேர் ஏதமில் பன்னிரு நாட்டெண்'
(யாப்பருங்கலம் பழய உரைமேற் ; ஈன், மயிலே 275 மேந்) ச்சினுர்க்கினியர் சேருவனாயர் இளம்பூரண வடிகள் முதலி போர் இவ்வெண்பாவிலுள்ள புனல்நாடு, வேணுடு, என்பவற் றுக்குப் பதில் பொதுங்கர் நாடு ஒளிநாடு என்பவற்றைக் கூறி
ருக்கின்றனர்.

Page 47
7
தொல்காப்பிய உரையாசிரியர்களும் யாப்பருங்கல உரை யாசிரியர் குணசாகரரும் செந்தமிழ் நாட்டின் எல்லேனய * செந்தமிழ் நிலமாவது வையையாற்றின் வடக்கும் மருத யாற்றின் தெற்கும் கருவூரின் கிழக்கும் மருவூரின் மேற்கு '+ மாமெனக் கூறுவர்.
* முன்னுறுக்தென் பாண்டி முதற்புண்ணுடீரூன
பன்னிரண்டு காமேப் பானுடோ-துர்நாட்டுள்
வையை கருவைமரு காறுமரு ஆர்கவே
ஐயவோழு மாண்மனேயோ " (தமிழ் விடு தூது)
செந்தமிழ் காடு சோணுடென்பதற்கு,
ர் * மன்றவாணன் மலர்திரு வருளாற்
றென்றமிழ் மகிமை சிவணிய செய்த
* 'செந்தமிழ் நிலமாவது. மருவூரின்மேற்குமா கிய சோ ணுனென்று காரிகை உரையில் மாத்திரம் காணப்படுகின்றது.
ர் இப்பாடல் யாப்பருங் கலஉரை பகிப்பிக்கிவரால் பாடு வித்துச் சேர்க்கப்பட்டதெனச் சங்கத் தமிழும் பிற்காலத் தமி ழும் என்னும் நூலிற் கூறப்படுகின்றது. காரிகை உரை முதற் பதிப்பில் 'அமுதசாகரென்னும் ஆசிரியராற் செய்யப்பட்ட யாப்பருங் கலக்காரிகை மூலமும் அதற்கு குணசாகரராற் செய்யப்பட்ட உரையும் கிருவாவடு துறையாதீன வித்வான் காண்டவராய சுவாமிகள், இயற்றமிழாசிரியராகிய கிருத்தணி չելի է: விசாகப்பெருமா ளேயாவர்கள், துஷ்டாவதான வீராசா மிச் செட்டியாரவர்கள் இவர்கள் முன்னிஃலயில் கில்லேயம் பூர்ச் சந்திரசேகர கவிராஜ பண்டிதரால் பிழையறப் பரிசோதிக்கப் பட்டு முத்தமிழ் விளக்க அச்சுக்கூடத்தில் பகிப்பிக்கப்பட் டன்" என்று காணப்படுகின்றது. பின் 1903-ம் ஆண்டில் ஆம் மூலமும் உரையும் தமிழ்ப்பண்டிசர் கா. ம. கோவிந்த ராஜ முதலியாரால் பரிசோதிக்கப்பெற்ற வெளிவந்தது. இன் விரு பதிப்புகளிலும் மன்றவாணன் மலர் திருவருளால்" என் லும் பாட்டுக் காணப்படுகின்றது.

அடியவர் கூட்டமு மாதிச் சங்கமும் படியின்மாப் பெருமை பாவுறு சோழனுஞ் 配们宁函l门 மாதவருங் தழைக்கினி திருக்கு
மையறு சோழ வளநாடென்ப என்னும் சூத்திரம் மேற்கோளாகக் காரிகை உரையிற் காட்டப் படுகின்றது. நன்னூல் விருத்தி உரை காார்.
*சக்கனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
செனந்தா பாண்டிய னென்னுர் தமிழ்நாடனுஞ் சங்கப் புலவருந் தழைக்கினி தோங்கு மங்கலிப் பாண்டி வளநாடென்ப" என்று பாண்டி காட்டையே செந்தமிழ் நாடெனக் கூறுவர்.
பாண்டி நாடே சேர சோழ நாடுகளிலும் செத்தமிழ் ஆராய்ச்சிக்குரிய தெனக் கூறுவர் கிராவிடப் பிரகாசிகைகாரர். சமயாசாரியர்களும் தமிழ்ப் புலவர்களும் பாண்டி காட்டையே செந்தமிழ் காடெனக் கூறுவர். *சென்னிநாடு குடகொங்கநாடு திறைகொண்டு தென்னனுறை
செந்தமிழ்க்-கன்னிகாடு உறவுடன் புகுந்து ' எனக் கூறுவர் வில்லிபுத்தூார்.
தொல்காப்பியர் காலத்து செந்தமிழ் கொடுந்தமிழ் என் லும் வழக்கு இருந்ததற்குப் பிரமாணமில்லே ' செந்தமிழ் கொகிங் தமிழென்றிரு பகுதியில் ' எனனும் சிலப்பதிகாரத் தான்.அக்காலத்து 'செந்தமிழ் கொடுத்தமிழ்"என்னும் வழக்கு இருந்ததாகத் தெரிகின்றது.
'தாயைக் தள்ளே என்ப குட்டநாட்டார் நாயை ஞமலி யென்ப பூழிநாட்டார்" எனக் கொல்காப்பிய உரையிற் காட் டப்பட்ட உதாரணங்களால் தமிழகத்தின் பல பாகங்களில்
அவ்வவங்நாடுகளில் மாத்திரம் வழங்கும் சில சொற்கள் திசைச்

Page 48
76
சொற்கள் எனப்படும் எனத் தெரிகின்றது. குளிர், கரைதல், நுன், ஒள்ளியன், இதா, சிக்க, ம்ே முதலிய சொற்களைத் திசைச் சொற்களெனக் காட்டுவர் நச்சினர்க்கினியர். ஆங்கில மொழியில் (Provincialism) எனப்படுவதே இத்திசைச் (ogist dia)ig 2-3, it Tao)TLDirgili. “This does not mean that the dialect of the Pandya country is superior to the dialect of the other twelve districts as it is usually understood to mean, for one dialect is just as good or as bad as another, but that the literary dialect was first fashioned in the Pandya country and when this dialect was adopted for poetry in other tracts they allowed local words to find a place there in'
(History of the Tamils P. lbl.) தமிழ் நாட்டைச் சூழ்ந்து பதினேழு பிறநாடுகளும் உண்டு என முன்னேர் கூறியிருக்கின்றனர். இதை ;
* 6 சிங்களஞ் சோனகஞ் சாவகஞ் சீனந்துளுக்குடகங்
கொங்கணங் கன்னடங் கொல்லங் தெலுங்கங்கலிங்கம் கங்கமகதங் கடாரங் கவுடங் கடுங்குசலங் (வங்கம் தங்கும் புகழ்த்தமிழ்சூழ் பதினேழ் புவிதாமிவையே.” என்னும் செய்யுள் அறிவிக்கின்றது. அரேபியா வங்காளம் பர்மா சீன யாவா ஒரிசா முதலிய நாடுகளைத் தமிழ்நாட்டைச்
* 'அங்கம் வங்கம் கலிங்கங் கெளசிகம் சிந்து சோனகம் திராவிடஞ் சிங்களம்-மகதங் கோசலம் மராடங் கொங்கணம் துளுவஞ் சாவகம் சீனங்காம் போசஜம் பருணம்பப் பரமென பதினெண் பாடை’ எனப் பதினெண் பாடைகளின் பெயர் கள் திவாகரத்திற் காணப்படுகின்றன. பிற நிகண்டுகள் வேறு
படவும் கூறுகின்றன.

77
குழ்ந்த நாடுகளாகக் கூறுவது பொருத்தமாகக் காணப்பட ado%).
சோழவந்தான் வித்துவான் அரசன் சண்முகனாவர்கள் கொடுந்தமிழ் என ஒன்று தொல்காப்பியர் காலத்தில் இல்லை. யெனவும், செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலம்’ என்றது செங் தமிழ் வழங்கிய பன்னிரண்டு நிலமென வுங் கூறுவர். அது
வருமாறு :-
8 செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்துங்
தங்குறிப் பினவே திசைச் சொற்கிளவி,"
என்றாாகலிற், கொடுந்தமிழ் நிலம் பன்னிரண்டுளவெனவு மந்தமிழே திசைச் சொல்லாமெனவும் பெறப்படலானே தமி ழிருவகையென லு, மவை யிரண்டிற்கும் பொதுவெல்லை வேங்கடங் குமரியெனலுஞ், செந்தமி ழெல்லை வேறு கூறலு மமையுமெனி, சிைரியர் பன்னிரு நிலமென்றதன்றிப் பன்னிரு கொடுந்தமிழ் கிலமெனக் கூருமையானும் பிருண்டுங் கொடுங் தமிழ் எனல் காணப்படாமையானும், செந்தமிழ்சேர்ந்த பன் னிருகில மென்றமையானது செந்தமிழ் வழங்கிய பன்னிரு தமிழ் நாடெனப் பொருள்படுமன்றிச் செந்தமிழ் நிலத்தைச் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நிலமெனப் பொருள் படா மையானுடஞ், செந்தமிழினின்றுஞ் சிதைந்து வழங்கு மொழி யே கொடுந்தமிழெனி, னஃகிழிந்தோர் வழக்காகலிற் கொள் ளப்படாமையானு மத்தமிழினின்றும் பிறந்த பிறிதொரு மொழியெனினது, துளுக்கன்னடங் தெலுங்கு மலையாளம் என்றற்போல வேறு பெயர் பெறலன்றிக் கொடுந்தமிழெனல் கூடாமையானு, மாண்டுச் செந்தமிழ் நிலமென்றது. செந்தமி ழியற்கையுந் திரிபுஞ் சேர்ந்த பன்னிரு நாடாகலானு மவ் வுரை பொருந்தாதென்ப"

Page 49
78
பண்டு இந்தியநாடு முழுமையும் ஐம்பத்தாறு நாடுகளா கப் பகுக்கப்பட்டிருந்ததெனவும் அங்கு பதிணெண் மொழி கள் வழங்கினவெனவும் முன்னேர் கூறியிருக்கின்றனர். தேச மைம் பத்தாறிற் திசைச்சொற்பதினேழும் (தமிழ் விடுதூது). பாண்டிநாடு. இது காவிரிக்குத் தெற்கே மதுரை இராமநாதபுரம் திருநெல்வேலி இந்த மூன்று பற்றுகளும் (ஜில்லாக்கள்) அடங்கிய தேசம் இது வெள்ளாற்றுக்குத் தெற்குகன்னியா குமரிக்கு வடக்கு பெருவழிக்குக் கிழக்கு கடற்கரைக்கு மேற்கிலுள்ள நாடு என்று சொல்லப்படுகின்றது.
6 வெளளாறது வடக்கா மேற்குப் பெருவழியாங் தெள்ளாற் புனற்கன்னி தெற்காகும் உள்ளார ஆண்டகடல் கிழக்காமைம் பத்தறு காதம் பாண்டி நாட்டெல்லைப் பதி" இதன் தலைநகரம் மதுரை. தாம்பிரபர்ணி (பொருனை) யின் முகத்துவாரத்தில் துறைமுகப் பட்டினமாகிய கொற்கைநகரம் சில காலம் இதன் பிரதான பட்டினமாயிருந்தது.
ઉampiblાઉ, சோழநாடு காவிரிக்கரையிலுள்ளது. அதன் தலைநகரம் திருச்சிராப்பள்ளிச் சில்லாவிலுள்ள உறையூர். காவிரியாறு கடலோடு சந்திக்குமிடத்திலுள்ள காவிரிப்பூம் பட்டினம் அதன் துறைமுகமாக விருந்தது. கடலிலிருந்து பல கப்பல் கள் காவிரியில் வந்து தங்கினதாகத் தெரிந்ததால் கடலோடு கலக்குமிடத்தில் அக்காலத்தில் அங்கதி மிகவும் அகலமா யிருந்திருத்தல் வேண்டும். அதன் பழைய எல்லைகள்வடக்குத் திருப்பதி தெற்கு வெள்ளாறு கிழக்குக் கடல் மேற்கெல்லை காலத்துக் காலம் மாறியதுண்டு. பெரும்படியாக பழனிக்கும்

79
ரூருக்கும் நேராகவும் மேல் வடக்கே மைசூர் பீடபூமியின் : பாதியை வெட்டும்படியாகவும் ஒரு கோடு இழுத் ால் அதன் மேற்கெல்லையாகும்.
'கடல்கிழக்குத் தெற்குக்கரை பொரு வெள்ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம்-வடதிசையில் எணட்டுப் பண்ணே யிருப்பது நாற்காதஞ் சொணுட்டுக் கெல்லையெனச் சொல்” கோட்டைக் கரைக்குக் கிழக்கு கடற்கரைக்கு மேற்கு வெள் ளாற்றிற்கு வடக்கு ஆகிய எல்லைக்குட்பட இருபத்து நான்கு காதம் நிலப்பரப்புள்ள நாடு சோணுடென இப்பாடலறிவிக் கின்றது.
ઉag [BIT(B. தற்காலத்துத் திருவனந்தபுரம் கொச்சி மலையாளம் கோயமுத்தூர் என்று வழங்கப்படும் ஊர்களும் சேலத்தினெரு பாகமுஞ்சேர்ந்து திரண்ட பகுதியே அக்காலத்துச் சேரநாடா கும். வடக்கிற் பழனி கிழக்கில் திருச்செங்கோடு, மேற்கில் கள்ளிக்கோட்டை, தெற்கிற் கடலாகிய எல்லைக்குட்பட்ட பூமியாகிய இந்நாட்டுக்கு இராசதானியாக விருந்தநகரம் வஞ்சியென்றும் திருவஞ்சைக்களமென் றுங் கூறுவர்.
‘வடக்குத்திசை பழனிவான் கீழ் தென்காசி
குடக்குத்திசை கோழிக்கோடாம்-கடற்கரையின் ஒாமே தெற்காகுமுள் ளெண்பதின் காதம் சேரனுட் டெல்லையெனச் செப்பு' பழனிக்குத் தெற்கு தென்காசிக்கு மேற்கு கோழிக் கோட்டிற்கு கிழக்கு கடற்கரைக்கு வடக்கு ஆகிய இந்த எல்லைகளுட்பட்ட எண்பது காதம் நிலப்பரப்பு சேரதேச மென்பது இப்பாட்டால் விளங்குகின்றது.

Page 50
SO
தோண்டைEா.ே
'ஆ தொண்டைச் சோழன். இவர் கங்தையாகிய மணி கண்ட சோழன் அல்லது குலோத்துங்க சோழன் ஒரு நான் வேட்டைக்கேகிய வனத்தில், ஒரு ரிஷி கன்னிகையாகிய நாக கன்னிகையை ஆ தொண்டைப் பூமாலே சாத்தி காந்தர்வ விவா கஞ் செய்து கொண்டதனுல் பிறந்தவர். இவர் தந்தை தனது இராச்சியத்தின் தென்பாகக்கை மகரிஷியான குமாரனுக்குக் கொடுத்தும் வடபாகத்தை ஆ தொண்டருக்குக் கொடுத்தும் ஆனச் செய்தாாாம். இவர் ஆண்ட பாகத்திற்கு தொண்டை மண்டல மென்று பெயராகியது. இவர் தமது நாட்டில் வேளா னரைக் குடியேற்றிச் சிறப்பித்த படியால் அவர்கள் தொண் டைமண்டல வேளாளர் என்னும் பெயர் பெற்ருர்கள்" (தக் கண இந்தியா சரித்திரம்)
அத் தொண்டை மண்டலத்தின் எல்லேயாவன,
மேற்குப் பவளமலே வேங்கடகேர் வடக்கா
மார்க்கு முவரி பணிகிழக்கு-பார்க்குளுயர்
தெற்குப் பினுகி நிகழிருபதின் காத
ஈற்ருெண்டை நாடெனவே நாட்டு."
இக்கொண்டை மண்டலத்திற்கு காஞ்சிபுரம் தலேசுகாம், * நாகபட்டினத்துச் சோழன் பிலத்துவாாத்தால் நாக லோகத்தே சென்று நாககன்னிகையைப் புணர்ந்தகாலத்து அவள் யான் பெற்ற புதல்வனே என் செய்வே னென்ற பொழுது கொண்டையை (தொண்டை ஒர் கொடி) அடை. யாளமாகக் கட்டிக் கடலிலே விட அவன் வந்து கரையேறின் அவற்கு யான் அரசுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்ப னென்று அவன் கூற அவளும் புதல்வனே வரவிடத் திரை தருதலின் திரைபனென்று பெயர்பெற்ற #ಇಸ್ಕ್ಲೆ: கூறினூர் (எச்சி ஞர்க்கினியருாை பெரும்பாணுற்றுப் படை)
 

Sl
சிற்றரசர் நாகேள்.
சேரசோழ பாண்டியர்களே பன்றிக் குன்றதோரங் சாட்டைகளே வளைத்துக் கட்டி மூவேந்தருக்குக் கீழ்ப்பட் ம்ெ படாதும் சிற்றரசு புரிந்த பல அரசர்களேக் குறித்துச் சய்திகள் பல புறநானூற்றிற் கானப்படுகின்றன. அவ்வாசர்க் குரிய நாடுகள் சிற்றரசர் நாடுகளாம்.
பல்லவர் சாளுக்கியர்.
பல்லவர்கள் காஞ்சி நகரைத் சுலோகா மாகக்கொண்டு Yi's T.T. ஆண்டுவரையில் ஆண்டிருக்கிyர்கள். இவர்கள் காலத்தில் துப்பர் சம்பந்தர் சிறுக்கொண்டர் முசுலிய சைவ துடிபார்கள் விளங்கிஞர்கள். தொண்டைமான் என்பதற்குச் சரியான சமஸ்கிருத மொழி பெயர்ப்பே பல்லவர் என சரிக் கிரகாரர் கூறுகின்றனர். பல்லவர்களே வென்று காஞ்சியைக்
கைப்பற்றிச் சிலகாலம் சாளுக்கிபர் அரசு செய்தார்கள்.
4. தமிழின் சிறப்பு.
கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோடமர்த்து பண்ணுறத் தெரித்தாய்த்த விப்பசுக்தமிழ்வானே மண்ணிடைச் சிலஇலக்கண வாம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ '
ன்று ஆன்ருேர் கூறியபொருள் சிற்சில மொழிகளே ஒப் Gl's கோக்குவார்க்கும் இனிது விளங்கும். பண்டைக்காலக் காட்டு நூல் வழக்கினும் உலக வழக்கிலும் கிருக்கமடைந்து க்களறிவின் முதிர்ச்சிக்குப் பெரிதும் உதவி செய்வன வாய்ப் போகரும் பழய மொழிகள் சிலவேயாம். இப்பழய மொழிக ளுள் தமிழ் மொழியை ஒழிக் து ஒழிந்தவற்றிற் பெரும்பாலன
柠

Page 51
82
உலகவழக்கின்றி இறந்தொழிந்தன. தீஞ்சுவை விளைக்கும் முப் பழத்தினும் மினிய மெல்லிய ஓசை இன்பம்வாய்ந்த செந்தமிழ் மொழியோ எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் கழிந்தும்தன்னி ளமை கெடாதாய்க் கழிபெரு மகிழ்ச்சியோடு உலவி வருதலை உற்று நோக்குங்கால் அதனை வழங்கிவந்த நன்மக்கள் எவ் வளவு நுண்ணறிவும் எவ்வளவு அமைதியான தன்மையும் எவ் வளவு நாகரிகமும் உடையவர்களாய் இருந்திருக்க வேண்டு மென்பதை அறிகின்முேம், பழையநாட்களில் வேறு பல மொழிகளைப் பேசிவந்த மக்கள் நுண்ணறிவிலும் அமைந்த குணத்திலும் நாகரிகச் சிறப்புற்றவர்களா யில்லாமையினல் அவர்கள் வழங்கிய மொழிகள் எல்லாம் ஆண்டுகடோறும் மாறுதல்கள் பல எய்தி இலக்கண வரம்பில் அகப்படாவாய்ப் பயனின்றிக் கழிந்தன. தமிழைச்சூழ இஞ்ஞான்று நடை பெறும் பல மொழிகளை ஆராய்ந்து பார்ப்பவர்க்கும் அம்மொ ழிகள் ஒர் இலக்கண வரம்பில்லாமல் பலபடச் சிதறி ஒழுங் கின்றிக் கிடத்தல் தெள்ளிதிற் புலனுகும் ”
* தமிழ் கிரேக்கமொழியினும் நயமான செய்யுள் நடையுடை லத்தீன் மொழியினும் பூரணமானது" (வின்ஸ்லோ) (யது * மனிதராற் பேசப்படுகின்ற மிகப் பொலிவும் திருத்த மும் சீருமுடைய மொழிகளுள் தமிழும் ஒன்று' (டேய்லர்) தமிழின் சிறப்பை உணர்த்தும் செய்யுட்கள் பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்துசங்கத் திருப்பிலே யிருந்து வைகையேட்டிலே தவழ்ந்தபேதை நெருப்பிலே நின்று கற்றேர்கினைவிலே நடந்தோரேன மருப்பிலே பயின்ற பாவைமருங்கிலே வளருகின்றுள் "
(வில்லிபாரதம்)

S3
4 கடுக்கவின் பெறு கண்டனுக்கென்றிசை நோக்கி
அடுக்கவந்துவந் தாடுவா டைலி னிளைப்பு விடுக்கவாரமென் காறிரு முகத்திடை வீசி மடுக்கவுந்தமிழ் திருச்செவி மாந்தவு மன்ருே) "
4 தொண்டர் காதனைத் தூதிடை விடுத்தது முதலை
உண்டபாலனை யழைத்தது மெலும்பு பெண்ணுருவாக் கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னிக் தண்டமிழ்ச் சொல்லோ மறுபுலச்சொற்களோசாற்றீர் ”
(திருவிளையாடற் புராணம்)
'தமரர்ேப் புவன முழு தொருங்கீன்ருரடடாத காதேவி யென்ருெருபேர் தரிக்கவந்ததுவுக் தனிமுதலொருசேவுந்தர மாறனனதுவுங்-குமரவேள் வழுதியுக் கிரனெனப் பேர் கொண்டதுந் தண்டமிழ் மதுரங்-கூட்டுண வெழுந்த வேட் கையா லெனிலிக் கொழிதமிழ்ப் பெருமை யாசறிவார்.
(மதுரைக் கலம்பகம்) 4ஓங்க விடைவந்துயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிகீர் ஞாலத்திருள் கடியு-மாங்கவற்றுள் மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனேயது தன்னே ரிலாத தமிழ்” (தண்டி-உாை-மேற்கோள்) வேலையில் வீழ்த்தகல்லு மென்குடம் புகுத்தவென்புஞ்
சாலையிற் கொளுவுந் தீயுந்தாங்கர்ே வைகையாறுஞ் சோலையாண் பனையும்வேதக் கதவமுக் தொழும்புகொண்ட வாலையாங் தமிழ்பூஞ் செல்வி’.
(திருக்குற்முலத் தலபுராணம்-திரிகூட சாசப்ப கவிராயர்)

Page 52
84
5. எழுத்து 'எண்ணென்ப வேனே யெழுத்தென்ப விவ்விரண்டுங்
கண்ணென்ப வாழு முயிர்க்கு (குறள்)
எழுத்து, சுவடி முதலிய பழந்தமிழ்ச் சொற்கள் தமிழ் மொழிக்கு வரிவடிவில் எழுதப்படும் எழுத்துக்கள் தொன்மை யே உண்டு என்பதை விளக்குகின்றன. இஞ்ஞான்று தமிழில் விளங்கும் நூல்களுள் தொல்காப்பியம் பழமையுடையது. இதன் காலம் கி. மு. 350-க்குப் பிற்பட்டதல்ல வென்பது சரித்திராசிரியர்களது கருத்து; வேதங்கள் வியாசரால் நான்கு கூறுகளாகச் செய்யப்படுவதன்முன் இயற்றப்பட்ட தென்பர். ஈச்சினுர்க்கினியர் ஆப்படியாயின் தொல்காப்பியர் காலம் ஐயாயிரமாண்டுகளுக்கு முன்னுகும். தொல்காப்பியத்தில் எழுத்ததிகார மென ஒரு பகுதி உள்ளது. அதன்கண் எழுத்துகளின் பிறப்பு வடிவு முதலியன கூறப்படுகின்றன. ஆகவே தொல்காப்பியருக்குப் பன்னெடுங் காலத்துக்குமுன் தமிழில் எழுத்துகள் ஏற்பட்டிருத்தல் வேண்டும்.
இற்றைக்கு ஆயிர வருடங்களுக்கு முன் வழங்கிய எழுத்துகள் இன்று வழங்கும் எழுத்துக்களைப் போன்றன வல்ல. கி. பி. பதினுலாம் நூற்ருண்டு வரையில் அவ்வெழுச் துக்கள் கிரிபடைந்து வந்தனவாகத் தெரிகின்றன. இதனே உேருவு திரிந்து உயிர்த்தலாவது மேலுங் கீழும் விலங்குபெற் றும் கோடு பெற்றும் புள்ளி பெற்றும் புள்ளியுங் தோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி-முேதலியனமேல் விலங்கு பெற்றன. குசு முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ, கே முதலியன கோடு பெற்றன. கா, கா முதலியன புள்ளி பெற் றன. அருகே பெற்ற புள்ளியை இக்காலத்தார் காலாக எழுதி

85
ர், மகரம் உட்பெறு புள்ளியை வளேத்து எழுதினுர், கொ, a5 q", Q, F7,T., (@F" t" முதலியன புள்ளியுங் கோடும் உடன் பெற் மன' என்னும் கச்சினுர்க்கினியர் உரையால் அறியலாகும். ற்காலத்து கொல்காப்பியம் முதலிய நூல்கள் எழுதப்பட்
து வட்டெழுத்திலேயாம், பழய வட்டெழுத்து கோலெழு
த்து என்னும் பெயருடன் மலேயாளக்கில் மிகச் சமீப காலத்
தில் வழங்கியுள்ளது. துங்கு இது கி. பி. 17-ம் நூற்றுண்டு
வரையிலும் உபயோகிக்கப்பெற்றது. மலேயாளத்திலும்மாப்
பிளைமார் கோலெழுத்தை இன்றைக்கும் வழங்குகின்றனர்
TT :
கிருவனந்த புரத்திலுள்ள நூதன சாலேயில் சேகரித்து
வக்கப்பட்டிருக்கும் சில சாசனங்களால் தமிழ் வட்டெழு த்து கி. பி. 18-ம் நூற்குண்டின் பிற்பகுதி வரையும் வழங்கிய
ாகக் கெரிகிறது.
*ஆக்காலத்திலே வழங்கிய தமிழ் எழுத்துக்கள் இக்கா ம் வழங்கும் எழுத்துக்களேப் போன்றனவல்ல. மதுரைக்கு டகிழக்கே -ெமைலுக்கப்பால் இரண்டு மைல் தொடர்ச்சி стат ஆக்னமலே யென்னும் ஒரு மலேக்தொடருள்ளது. அம் மலேயின் மேற்குப்பக்கத்தில் ஒரு குகை யிருக்கின்றது. ஆக் கையின் சுவரில் பழைய தமிழெழுத்து வெட்டப்பட்ட சாசனமொன்று காணப்படுகின்றது. இதுதான் வட்டெழுத்து அல்லது பழய தமிழெழுத்து. எழுத்துகள் எழுதப்பட்ட தன் வடிவிலிருந்து அவற்றுக்கு வட்டெழுத்து என்னும் பெயர் வழங்கப்பட்டது.
இச்சாசனத்தின் காலம் கி. பி. 770, கிறித்துவுக்குச் சில நூற்ருண்டுகளுக்கு முன் தென்னிந்தியாவில் வழங்கிய
Tamil studies P. 120.

Page 53
S5
எழுத்து இதுவேயாகும். கிறித்துவுக்குப்பின் எட்டாம் நூற்ருண்டில் வட்டெழுத்துடன் வேறுவகையான எழுத்து களேயுங் கலந்து எழுதப்பட்ட சாசனங்கள் காணப்படுகின் றன. சில நூற்றுண்டுகளுள் வட்டெழுத்தின் இடத்தைப் புதிய எழுத்து எடுத்துக்கொண்டது. ஆரியருடைய சமய மும் சாஸ்திரங்களும் தென்னுட்டிற் பரம்பத் தொடங்கிய எதுவினுல் சமஸ்கிருதச் சொற்கள் பல தமிழிற் கலக்க 5ேர்க் தகே இதற்குக் காரணம். இப்போதைய வடிவத்தை தமிழ் எழுத்துக்கள் பதினுலாம் நூற்ருண்டில் அடைந்தன."
(Dr. Chandler.) இப்பொழுது வழங்குகின்ற கிரந்த எழுத்துக்கள் வட் டெழுத்தினின்றும் தோன்றினவேயாம்.
போர் முனேயில் இறந்த வீரனுக்கு கல் ஈட்டு அதில் அவனுடைய பெயரும் பீடும் எழுதுவது பழக்கமிழர் வழக்கு gూడీగా
'நல்லமர் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பிடும் எழுதி அதிர்தொறும்
பீலிகுட்டிய பிறங்குகிலே நடுகல்" (அகம்) * பட்டோர் பெயரு மாற்றலு மெழுதி
நட்டகல்லு மூதூர் ஈக்கமும், (சேரமான் பெருமாள்)
girer வருவனவற்ருலறிக. இவ் விரக்கல் கிறுத்தும் வழக்கும் பழங் தமிழர்கள் எழுத்தெழுதும் முறையினே அறிந்திருக்கார் கள் என்பதை வலியுறுத்துகின்றது.
தமிழ்மொ ழியில் நெடுங்கணக்கு மிகவும் அழகுபெற அமைந்துள்ளது. ஒரே எழுத்துக்குப் பல ஒலியில்லே. ஒரொ விக்குப் பல எழுத்துக்கள் வேண்டா கூட்டெழுத்துகள்

8
கிடையா. மயங்கா மரபின் எழுத்து முறைகாட்டி' என் லுக் தொல்காப்பியச் சூத்திரம் இதனே வலியுறுத்தும், எல்லா எழுத்திகளும் மொழிக்கு முதலில் வாரா. எல்லா எழுத்து களும் மொழிக்கிடையில் மயங்கா. முன் எத்தனே எழுத்து களிருந்தனவோ அத்தனேயே இன்று வாையு முள்ளன.
ஆரிய மொழிக்குரிய நெடுங்கணக்கு தமிழர் முறையைப் பார்த்துச் செய்யப்பட்டதென்பது ஆராய்ச்சியாளர் துணிபு. 'காங்கள் செல்லு மிடங்களுக்குக் கக்கபடி புதியலிபிகள் ஏற் படுத்திக்கொள்ளும் இயல்புடைய ஆரியர் தமிழ்நாட்டிற் கேற்றபடி தமிழிலிபியை ஒட்டிக் கிரந்தம்' என்னும் பெயரிற் புதியதோர் லிபி வகுத்தனர்." (தமிழ் மொழியின் வரலாறு)
தமிழ்மொழியிலுள்ள முதலெழுத்துகள் முப்பதுமே குறைபாடில்லாக உறுப்புக்கள் அமைக்க மக்கள் குறைபாடில் லாத முயற்சியால் வாயாற் பிறப்பிக்கும் ஒசைகளாகும். சமக் கிருத மொழிக்கட் காணப்படும் தமிழிலில்லாத சில எழுத்துக் கள் குறைபாடுடைய முயற்சியாற் பிறப்பிக்கப்படும் எழுத்துக்
களாம். தமிழுக்குரிய ஆய்த எழுத்தின் உதவியைக் கொண்டு எம்மொழியிலுள்ள எவ்வகை எழுத்தோசைகளையும் பிறப்பித் தல் எளிதில் அமையும்.
இம்முறையினே விளக்கிக் காட்டிரூேர் ஆசிரியர் மறை மலையடிகள் திருவாளர் பா. வே. மாணிக்க நாயகர் முகவியோ
J门á山”。
'அகர முதல் ஒளகார இறுவாயாகக்கிடக்க பன்னீரெழுக் துக்களுமே உயிரெழுத்துகள் எனப்படுவதற்கும் இவை தமிழ் மொழியின் ஒன்ருத அடைவுபடுத்து நிறுத்தப்பட்ட முறை யே முறையெனப் படுதற்கும் உரிமை யுடையனவாம். இஃது

Page 54
SS
இவ்வாருகவும் வடநூலார் தமிழின் நெடுங் கணக்கைப் பார் த்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களே அடைவு படுத்திக் கொண்ட அளவில் நுமையாது தமிழினிலும் தமக்கு உயிரெ ழுத்துக்கள் மிகுதியாய் உண்டென்று காட்டுவதற்குப் புகுந்த பொருங்காப் பேரவாவால் உயிரெழுத்துக்களல்லாத ரு ரூலு, அம் அஃ என்னும் உயிரெழுத்துக்களேயும் அவற்ருேடு கலந்து இழுக்கினர். இவ்வாறு எழுத்துக்களிற் கலந்த குற்றியலுகர ஊகாரங்களேயும் அகரங்களேயும் நீக்கினுல் எஞ்சி கிற்பன ர் ல் ம் ஃ என்னும் மெய்யெழுத்துகளும் ஆய்தமுமேயாகவின் அவர் உயிரெழுத்துக்களேப் பன்னிரண்டின் மேலாகப்படைக் திட்டுக்கொண்டது வெறும் போலியா மென்க',
'பதினெட்டு மெய்யெழுத்துகள் மட்டுமே செவ்வையா கப் பொருந்தப்பட்ட உறுப்புகளுடைய மக்கள் குறைபாடில் லாத முயற்சியால் தம் வாயாற் பிறப்பிப்பனவாகும். விந்துவி னின்றும் மேலெழுந்தவித்து காரண வொலியை தன்னிலையில் நேரே இயங்கவிடாது மக்கள் கமது நிறைந்த முயற்சியால் தலே மிடறு கெஞ்சு என்னும் மூவிடங்களிலும் அதனே கிறுக் திப், பல், 5ா, மூக்கு, அண்ணம் என்னும் ஐந்துறப்புகளோடு அதனைப் பலவேறுபடக் கிரித்துப் பல ஒலிகளாக வெளியிடு கின்றனர். இவ்விந்து காரண வொலி குறைபாடில்லாத உறுப் புகளாலும் குறைபாடில்லாத முயற்சிகளாலும் இயக்கக் கூடும் வரை இப்பதினெட்டெழுத்தின் மேற்பட்ட ஒலிகள் தோன் ஆறுதற்குச் சிறிது மிடமே யில்லே, மற்று இவ்வாறன்றிக் குறை பாடுடைய உறுப்புகளும் குறைபாடுடைய முயற்சிகளுமிருந் தால் விக் து காரண வொலி செவ்வனே இயங்கப்படாமற் பலவாருய் இயங்கி அளவுக் கடங்காப் பலதிற வொலிகளே யெல்லாம் தோற்றுவிக்கும்.

S9.
'தமிழில் இல்லாமல் வடமொழி நெடுங்கணக்கில் மட் ம்ெ காணப்படும். சில ஒற்றெழுத்துக்கள் அத்துனேயும் கமி ழின்கண் கிறைந்த முயற்சியாற் பிறப்பிக்கும் ஒற்றெழுத்துக் கள் சிலவற்றைக் குறைந்த முயற்சியால் ஆய்தவொலியைக் நடைப்படாது செல்லவிடுத்துப் பிறப்பிக்கத் தோற்றுவனவே ாகுமல்லாமல் உண்மையாக கோக்குங்கால் gண்ட் தனித்தனி மெய்யெழுத்துகள் ஆகமாட்டா வென்பது தெற்றெனப் புலப்படும்.' தமிழில் ஒலி எழுத்துக்கள்-ஆசிரியர் மறை
லேயடிகள்.
ஆரியமொழியிற் காணப்படும் எழுத்துகளும் பிறவும் அம்மொழிக்கினமாகிய இலக்கின்' கிரீக், எபிாேயம் முதலிய
ரங்குறைந்த தொல்குடிகளாகிய தமிழரின் எழுத்து முறை
மாழிகளில் இல்லாமையால் இந்தியாவை அடைக்க ஆரியர்
களைப் பின்பற்றியதுடன் லிபிகளையும் ஆக்கிக்கொண்டார்க
ளென்பது. வெள்ளிடை விலங்கல்.'
Prof Rapson bears testimony to the fact that the aboriginal languages in the south of India were associated with a high degree of Culture, and hence it is not Surprising to note the presence of the Drawidian element in Sanskrit. It can be easily maintained that much, that is not found in Latin and Greek but peculiar to Sanskrit alone is due to the contact of the Aryans with the Dravidians. (Dravidian India P. 75.)

Page 55

91
னெவென்றும் சொல் ஆராய்ச்சிவல்ல Rev. ரூானப்பிரகாச வர்கள் தமது தமிழ் மொழி அமைப்புற்ற வரலாறு star
லும் நூலில் விளக்கிக் காட்டியுள்ளார்.
* கதரு பமவெலு மாவைக் கெழுத்து
மெல்லா வுயிரொடுஞ் செல்லு மார்முதலே' சகரக் கினவியு மவற்றே நற்றே ஆ ஐ ஒள வெலு மூன்றலங் கடையே என்னும் தொல்காப்பியச் சூக்கிரங்களால் அக்காலத்து ச, செள முதல் மொழிகள் வழங்கவில்லேயெனத் தெரிகிறது 'சகாக்கிளவி' என்னும் சூத்திரத்தினிாண்டாமடி "அவை ஒள வென்று மொன்றலுங் கடையே " என்றிருக்க வேண்டும் என்றும், அது எவ்வாருே " அ ஐ ஒள வெலு மூன்றலங் கடையே ' என்று திருத்தப்பட்டதென்றும் கிருவாளர் அடைக்கலம் பிள்ளே அவர்கள் மெய்கண்டான் பத்திரிகை ல் வெளியிட்டுள்ளார். இது ஆராய்ச்சிக்குரியது. அகராதிக ல் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட சகா முதன் மொழிகள்
* யாழ்ப்பாணத்திலே எழுதக் தொடங்கி சென்னேயில் பூர்த்தியாக்கப்பட்ட வின்ஸ்லோ (Winslow) அகராதி மிகச் சிறந்ததாகும். இது அறுபத்தேழு வருடங்களுக்கு bன் இயற்றப்பட்டது. அவ்வகராதியில் 67,000 சொற்கள் காணப்படுகின்றன. 1913-ம் ஆண்டில் புதிய தமிழ்ப் போக ராதி மதுரையில் தொடக்கப்பட்டது. அது இப்போது
ாப்பட்டு வருகின்றது. சென்னே அரசாங்கத்தார் இம்முயற் க்கு ஒரு லட்சம் ரூபா உ தவியிருக்கின்றனர். இப்புதிய

Page 56
92
17 வேண்டிய aria gr ydy 35air ஆகராதிகளிலும் வேறு பலவகைகளிலும் சேகரிக்கப்படுகின்றன. வின்ஸ்லோவால் யாழ்ப்பாண வழக்கில் பாக்கிரம் உள்ளனவென்று காட்டப் பட்ட 3000 சொற்கள் குமாரசுவாமிப் பிள்ளை, முத்துக் Flfirför 13:257 27 FyS) í Fjö37 f" (Jaffna college) Prof. ஹட்சன் முதலானவர்கள் அடங்கிய ஒரு சபைக்கு ஆசா ய்ச்சிக்கு விடப்பட்டன. அவற்றுள் தூற்றுக்கு 37 சொற் கள் இன்றும் பாழ்ப்பான வழக்கில் உள்ளனவென்று ஒப்புக்கொண்டனர். புதிய பேரகராதி (lexicon) foi S3,000- அல்லது 84,000-ம் சொற்கள் வரையில் கான்
(S) offå fasch, (Dr. J. S. Sandler M. A.)
- 7. வழக்கு
'தமிழ் மொழி' வழக்கு எனவும் செய்யுள் எனவும் இரு கூறுபட்டு இயங்குகின்றது. சாத்தாவா, சீ பொருளேக் தேடினுய், அவன் மிக பசித்தான், யான் சோறு கொடுத்தேன். என்ருற்போல யாவரும் வழங்குதற் பொருட்டு பெறுஞ் சொற்ஒெடர்கள் வழக்கு எனப்படும். இழித்தோர் | laնirl I (11 சிதைவுபடக் கூறுவனவும் ஒருவாற்ஜல் வழக்கே பாயினும்,
· ಪೌ೪೩! அறிவுடையோரால் மேற் கொள்ளப்படாவாகும்.
8. GaLLLei
* நல்லறிவுடையோாால் பலவகைச் சொற்களாலும் அமைதி பெறச் செய்யப்படுவன செய்புள் எனப்படும். பாட்டுக் களே பன்றிச் குத்திரம் உரை முதலாயினவும் செய்புள்
* விழக்கே எளிலும் உரை யெனினும், ஈடை யெனிலும் ஒச்
கும். தமிழ் மொழியார் உரை மாத்திரையே உலகியல் வழக்கென் பர். (திரா விடப் பிரகாசிசை.)

만
ன்னும் பெயரால் குத்திரச் செய்யுள் என்று இங்ானம் பண்டு வழங்கின. யாம் இப்பொழுது செய்யுள் என்னும்
பெயரைப் பாட்டுக்கே உரித்தாக்கிச் குத்திரம் அல்லாதவை
உரையெனவும், பாட்டு எனவும் இருவகைப் படுத்திக் காள்கின்ருேம். உரையினேயும் பல்வகைப் படுக்கிக் கூறு ன்டூர் தொல்காப்பியனுர், செய்யுட்களின் இடையே விரவி In F3J சிலப்பதிகாரத்திற் காணப்படுவது. செய்யுள் ல்லது குத்திரப் பொருளேக் தெளிவுறுத்தும் உரைகள் ழில் மிக்குள்ளன. பாகானுமொரு வரலாறு அல்லது ண்மையினேச் செய்யுளின்றிக் கொடர்ச்சியாகக் கூறும் டரை நடைபானியன்ற நூல், உரை நூல்' என்று வழங் ாற்குரியது. அத்தகைய நால் பண்டைச் சான்ஒேர் செய்ததாக மக்கு ஒன்றுங் கிடைத்திலது. உரை நடை பானது பயில்வாாது அறிவு நுணுகி நின்று ஆராய்தற் கேற்ற திட்பமும் கூறும் பொருளுக்கேற்ற ஒசையும் உடைய ான்று. ஆதலின் பாட்டுகள் போல, உணர்வினே எழுப்பி இன் பஞ் செய்வதாகாது. ஒர் வரையறையின்மையின் சிதைவின்றி
பெறுவதுமாகாது. எனினும் எளிதிற் பொருள் விளங்கு தாய்ச் சுருங்கிய அறிவினர்க்குப் பயன்தருவது உரை கடை ாகலின், ஒவ்வொரு மொழிக்கும் உரை நூல்கள் இன்றி மையாதன வென்பதிற் றடையில்ஃப், அவ்வகையில் கமிழ்
ழி வளர்ச்சியுறுகிருந்தது இரங்கத்தக்க கொன்றே,
"தமிழ் மொழியிலுள்ள பாட்டுக்களின் மாட்சி அள ற்பாலன வல்ல. பிறமொழிச் செய்யுளே யெல்லாம் தமிழ்ச் Fய்யுட்கள் வென்ற விட்டன என்னலாம். நமது முன்னே பார் தம் நுண்ணறிவானும், உழப்பானுங் கண்டறிந்த அரும் பாருண் மணிகளே யெல்லாம் மேக்கு உதவுமாறு தொகுத்து

Page 57
94.
வைத்த களஞ்சியங்கள் பாட்டுக்களேயாகும். பல்லாயிர மாண்டுகளின் முற்பட்ட நம் பெரியோர், என்பு, தோல் நரம்பு களால் யாக்கப்பட்ட உடம்பினே யெடுத்து நமக்கெதிரில் வீற் நிருக்க, நாம் அவர்களோடு, அளவளாவியும், அவர்கள் கூறும் உறுதி மொழிகளைக் கேட்டும், அறிவும் ஆண்மையும் உடைய ராய் இன்புற்றிருத்தலினும், பெறுதற்கரிய பேறு பாதுளது. எத்தனேயோ ஆயிரம் ஆண்டுகளின் முன்பு விளங்கி யிருக் து பின் மாறுதலுற்று மறைந்து போன மலே, கிலன் கடல் பாறு முதலியன வெல்லாம் புலவருடைய பாட்டுகளின் தம் பண் டைய வுருவுடன் விளங்குகலேக் காணுமிடத்து, ஈமக்குண் டாகு முணர்ச்சியை யாதென்று கூறலாம். உலகமென்னும் காட்சி மன்றத்தில் உயர்வற வுயர்ந்த ஒருவனுல் காலக் தோறும் அமைத்து வைக்கப்படும் எண்ணில் பேதமான பொருள்களேயும் அவற்றின் பண்புகளேயும், மொழிகளென் னும் வரைவு கோல் கொண்டு, உள்ளமென்னும் கிழியில் ஒழுங் குறத் தீட்டி வைக்க ஒவியராகும் கல்விசைப் புலவர்கள், அவ் வோவியக் காட்சியில் உறைந்து நிற்குங்கால் உண்டாய உணர்ச் சியே வடிவாக, அன்னவர் தம் செக்காவினின்றெழுத்த ! τι - டுக்களினும் நமக்கின்பம் விளேப்பன யாவையுளP உருகிப் பெருகி புளங் குளிர முகந்து கொண்டு, பருகற்கினிய ו_Jו עEז கருனேத் தடங்கல் போன்று பருகுக்தோறும் பருகுக் தோறும் வற்ருத பேரூற்றுய் கழி பேரினிமை சுரந்தூட்டுவன பாட்டுக்களேயாமென்க.
* இக்காலத்தே பொருட்பொலிவு சிறிதுமின்றி, எதுகை, மோனேயமையச் சொற்களேத் தெற்றிவைப்பதே பாட் டென்று கருதிக்கொண் டிருப்பாரும் உளர். மடக்கும் கிரிபு
பாகச் சொற்களே مشق إلى வைத்து, இரண்டொரு போலிப்

95
ட்டியற்றினுரைப் புலவர் வரிசையிற் சேர்த்தெண்ணுவாரு गौTा. அங்தோ! இவற்றுக்கெல்லாம் காரணம், பாட்டின் மை இன்னதென்று அறியாமையேயாகும். தொல்காப்
ஞர் கூறிய நோக்கு முதலிய இன்றியமையாச் செய்யு
|ப்புகளே பொழித்துவிட்ப்ே பிற்காலக்கார் யாப்பிலக் ண்ம் வகுத்ததும், பாட்டின் றன்மையறியாது, பிழைநெறி பிற் பிறர் செல்லுவதற் கேதுவாயிற்றென்க. இவற்றை ல்லாம் ஒதுக்கிச், சுருங்கிய சொற்களில் ஆழ்ந்து அகன்ற பாருள்களே புடையனவாய், இயற்கைகெறி வழாதனவாய், ணர்விண் யெழுப்பி, மெய்ப்பாடு தோற்றுவிக்கும் சான்ருேர் சய்யுட்களேயே அறிவுடையோர் 'பாட்டு' என்று கொள்வா வர். அத்தகைய பாட்டுகள் காம் எண்ணிறந்தனவுள'
கபிலர் - பக். 34-87. பண்டிதர் - மு. வெங்கடசாமி நாட் டார்).
' தமிழ்மொழியிலுள்ள செய்யுளோசை அமைதியே
வென்று பெயர் பெறுவதாம். ஒருவன் கொலேவிடத் துே ஒரு பாட்டுப்பாட அப்பாட்டின் சொற்பொருள் ன்னவென்று புலப்படாவாயிலும் அவ்வோசை வருமாற் ற உய்த்துணர்ந்து காண்பானுக்கு அவன் பாடுஞ் செய்யுள் ன்ன பாவென்று அறியக் கிடக்கும். இங்கினம் நுண்ணிய சும்பின்கண் ஆஃப்யலேயாய் எழும்பி ஓர் ஒழுங்காக வரும் சையே பாவாகுமெனத் தொல்காப்பியச் செய்யுளுரையிலே பராசிரியரும் கன்கு விளக்கினுர், இவ்வாறு தோன்றிப் ரம்புஞ் செய்யுளோசையைத் தமிழாசிரியர் வெண்பா, ஆக வற்பா, கலிப்பா, வஞ்சிப்பா என கால்வகைப்படுத்தினுர், பின்னும் இங்சால்வகைப் டாவி னுேசையை கோக்குமிடத்து வெண்பாவிற் கலிப்பாவும் அகவற்பாவில் வஞ்சிப்பாவும்

Page 58
9:
அடங்குவனவாம். இஃது ஆசிரிய நடைத்தே வஞ்சியேண் -வெண்பா நடைத்தே கலியென மொழிப' (தொல், செப் 208) என்றும், பாவிரு மருங்கினேப் பண்புறத் தொகுப்பின், ஆசிரியப்பா வென்ப வெண்பாவென்மூங், காயிருபாவிலுள டங்குமென் ப' (செப். 107) என்றும் ஆசிரிப்ர் தொல்காப்பிய ஒனர் கூறுமாற்ருன் விளங்கும் (பட்டினப்பாலே ஆராய்ச்சி ஆசிரியர் மறைமலையடிகள்)
செய்யுளாவது 'பாட்டுரை நூலே (செய் - 78) 7 ei இணுஞ் செய்யுளியற் குக்கிரத்தாற் கூறிய எழு நிலமும் அறம் முதலிய மூன்று பொருளும் பயப்ப நிகழ்வது" (நிச்சிஞர்க் கினியர்).
' வேற்று நாட்டுச் சொற்களும் பொருள்களு ùù" É ኸ! ஆடை அணிகலன்கள் தன்னே வந்து அணுகப் பெகுல்ே தன் தெய்வ வளநாட்டு ஆடை அணிகலன்களேயே நமது தண்டமிழ்த் தாய் தன் மேற்கொண்டு பொலித்தாள் ஆங்காளில் அவளது ஆம்பற் செவ்வாயினின்றும் அமிழ்கம் ஒழுகினும் போற் புறம்போக்க வெண்பா அகவற்பா கலிப்பா என்னும் இயற்கைச் செந்தமிழ்ப் பாக்கள் பாவினங்களின் ஆரிய பெரிய அமைதிகளையெல்லாம் முற்றவெடுத்து முடிய விளக்கும் அரும் தமிழ் ரால் ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பிய மொன் றமேயாம்.
‘இனி அங்காட் கழிந்தபின் இடைப்பட்ட காலத்தே விளைபொருள் வளணில்லா வெற்று நாட்டவர் வறுமை கூர்ந்து செந்தமிழ்த் தனி வளநாடு புகுந்தார். புகுதர எல்லா மக்களிடத்தும் அன்புடையவளான செக் தமிழ்ச் தாய் அம்மக்கள் தம்மையும் அகம் கனிந்து முகம் மலர்ந்து
ஏற்று அவர் வறுமைசேத் தன்பாலுள்ளவைகளே பெல்லாம்

97
ளங்குழைத்து உதவியூட்டி அவரை மகிழ்வித்தனள், கிழ்விக்க அவரும் தமது மிடி தீர்ந்து தாம் தமது வறங் ர் நாடுகளினின்றுங் கொணர்ந்த பன்மொழிச் சில்பணி ளேத் தமது நன்றிக்கு அறிகுறியாக அன்னே கைக்கொடுத் ார். தக்தமிழன்னே அவை இயல்பானும் அளவானும் கச் சிறியவாயிலும் அன்புற மக்கள் தங்தனரென்பதனுல் வராது ஏற்றுக் தன் விலே வரம்பற்ற மணிக்கலன்களோடு வற்றைக் கலந்தணிக்தாள். இம்முறையால் வடமொழி ாளர் கொணர்ந்த சில சொற்களும் பாப்பு வகைகளுமாம் |ணிகலன்களும் நம் தமிழன்னேயின் புனித மேனியின்கட் ாண்ப்படலாயின.
* இன்னும் இவ்விடைப் பட்ட காலக்கே வடமொழி மக்கள் திரள் திரளாகக் தமிழ் வளநாடு புகுந்து செந்தமி நன்னே பாலிடைக்கலம் புகவே, கந்தமிழன்னே தன் மக்கள் பால் வைத்த அன்பினும் மிடிபட்டு வந்த அவ்வயற்புதல்வர் பால் அன்பு மிக வைத்து அவரை மகிழ்விப்பான் வேண்டி அவர் மாற்றிக் தந்த விருத்தப் பாக்களாம் அணிகலன் ளேத் தனக்கு இசைந்தவாற்ரும் பலவகைப்படத் திரித்துச் றக்கச் செய்தணிந்திவொளாயினள். இதனுலன்ருே பிெ. மூன்ரும் நூற்றண்டில் திகழ்ந்த சைவ சமயாசாரிய ான மாணிக்கவாசகர் காலங்கொட்டு இற்றைநாள் வரை பும் காவியங்கள், புராணங்கள், இதிகாசங்கள் முதலாயின வல்லாம் பலதிறப்பட்ட விருத்தப் பாக்களிஞலேயே பாக்கப்படுவதாயின. (யாப்பருங்கல விருக்கி முகவுரை.)
அணி அணி பயிலக்கணமென வொன்று கொல்காப்பியத்தில் யாகக் கூறப்படவில்லை. கொல்காப்பியத்திற் கூறிய வமப் பகுதியே எல்லாப் பகுதிகளையும் தன்னுளடக்கி நிற்

Page 59
குஞ் சிறப்புடையது. தண்டியலங்காரம், வீரசோழியம் முதலிய பிற்றைஞான்றை நூலுடையார் வடராலார் மதமே பற்றி உவமமொன்றனேயே םlIהוחהה"וו L_Iלהק பெயர்களா ற் பெருக்கி ஆற்ருலு மவையடங்காமை கண்டு இளே ப் LHY)? T.
பேராசிரியர் உவமவியலூரையில் “ இனி இவ்வோக்கி
ணுட் கூறுகின்ற உவமங்களுட் சிலவற்றையும், சொல்லதி
காாத்துள்ளும் செய்யுளியலூள்ளும் சொல்லுகின்ற சில பொருள்களேயும் வாங்கிக்கொண்டு, மற்றவை ரெப்யுட் கண்ணே அணியாமென இக்காலத்து ஆசிரியர் நூல் செய் தாருமுளர். ஆன ைஒரு ਲੈਂਡ ( II செய்யுட்கு ஆணி யென்று கூறப்படா * x * , பொருளதிகாரத்துள் (வரும்) GLI ருட்பகுதி யெல்லாம் செய்யுட்கணியாகவான், -டிவி பாடலுட் பயின்றன என்றதனுல், ஆவற்றைக் கொருத்து அணியென்று ሖi-(፪፻፹...﷽] ; 8.1.1. சிலவற்றை உரைத்து ஆணி யென்று கூறுதல் பயமில் கூற்ரும் ’ என்று பிற்காலத்தணி களே மறுத்துக் கூறுதல் காண்க.
* இப்பொருளணிகளிற் பல உவமமென்ற ஓரணியி னடியாகவே தோன்றின வென்பது பல்லோர் துணிபு ஆசிரியர் தொல்காப்பியரும் இத்துணியினர்போலும், இது வடமொழி ஜப்பை தீக்ஷிதசவர்களுக்கும் உடன்பாடாதல்
* உவமை யென்னுத் தவலருங் கூத்தி
பல்வகைக் கோலம் பா ங்குறப் புனேங்து காப்பிய வாங்கிற் கவினுறக் தோன்றி பாப்பறி L E1 القتة ரிசபம்
ப்ேபறு மகிழ்ச்சி பூப்ப ஈடிக்குமே
என்ற அவரது சிக்கிர மீமாம்சைக்கூற்றன் விளங்கும் (தமிழ் மொழியின் வரலாறு)
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

99.
* ஆயினும் உலகில் வழங்கும் மொழிகளெவற்றிலும் வமையொன்றே அடிப்பட்டு நடந்தியல்வது வெள்ளிடை லங்கலாம். ஏனேய அவ்வொன்றில் கின்றே கிளேப்பன. துபற்றி பன்ருே தொல்காப்பியனுரும் உஙமவியலொன் றே கூறிப் போர்தார் (தமிழ் - செல்வக் கேசவசாய முதலி
τη).
போருள் பொருட் பகுகியில் அகம் புறம் என்னும் இரண் டாழுக்கங்களின் இலக்கணங்கள் கூறப்படுகின்றன. க்காலத்து ஆண் பெண் என்னும் இருபான்மாக்களின் Lily முறைகளேயும் அவர் இல்லறவொழுக்கங்களேயும் ܪ݇ܬ- HIT து அகம். அக்காலத்து அரசர் செய்த போர் முறைகளே ம் அவர்களது பிற ஒழுக்கங்களேயும் கூறுவது புறம், ஆகவே பொருளதிகாரம் பழக் தமிழ் மக்களின் cuira TO75 மைந்துள்ளது. பொருளிலக்கணத்திற் கானப்படும் பொருள்கள் வடமொழியில் என்றென்றைக்குங் கிடைக்கக்
டாத தனித் தமிழ் விஷயங்களாகும்.
'தள்ளாப் பொருளியல்பிற் றண்டமிழாய் வங்கிலார்
கொள்ளாரிக்குன்று பயன் ' (பரிபாடல்) “இலேபுறங் கண்ட கண்ணியின் றமிழியற்கையின்:
'தேவர் பண்ணிய தீத் தொடையின் சுவை
மேவர் தென்றமிழ் மெய்ப்பொ குளாதலின் "
(சிக்காமணி)
பாடல் சிந்தாமணி என்னும்பழந்தமிழ்ப்பனுவல்களினின்
ம் காட்டப்பட்ட ேெடி பிரமாணங்கள் பொருள் இலக்கணம்
ழ் மொழிக்கே சொக்தம் என்பதை வலியுறுத்தும்.

Page 60
LOC)
எண்வகை மணம்
மறையோர் கேளத்தி மன்றவிெட்டனுள் ' (கொ - கள் - க) என்னும் தொல்காப்பியச் குக்கிாத்தால் அக்காலக் துத் தமிழ் நாட்டில் வழங்கிய மன முறைகள் ଶ୍til "_ହି ଶt...');
శా__T __+ அறிகின்ருேம்.
44 ஆறநிஐல பொப்பே பொருள்கோ டெய்னர்
yr? CE யாழோர் கூட்ட மரும்பொருள் பிராக்கதம் பேய்கிலே பென்றிக் கூறிய
மறையோர் மன்ற லெட்டிவை །
என்னும் இறையன ாகப்பொருளுரை மேற்கோளால் ஆம் மன்றல்கள் எட்டின் பெயர்கள் புலனுகின்றன. இம்மண முறைகள் தமிழ்நாட்டிற்கே உரியன. இவற்றை ஆரியர்க் குரியனவாகக் கொள்வர் சிலர் பேதைமையால்,
(l) ಙ್ಞråನಿ (பிராம்) Lரீதிபதி ! ஒரிருது கண்ட கன்னியை மற்றையிருதுக்காணுமே கொளற்பால மரபி ஞேர்க்கு கீர் பெய்து கொடுத்தல், என்னே
ஒப்பாருக் கொப்பா ரொருபூப் பிரிந்தபி அளின்பான் மதிதோன்கு வெல்லேக்க-னப்பாற் நருமமே போல்கென்று தக்கார்க்குச் சேர்க்கல்
பிரபமாம் போலும் பெபர்’
என்ரூ ராகவின்
'பிரமமாவது ஒத்த கோத்திரத்தாளுய் நாற்பக்கெட்டி பாண்டு பிரமசாரியங்காக்காலுக்கு பூப்பெய்கிய Luisir sır:" நாட்டைப் பிராயக்க ளே அணிகலனணிந்துமுத்தீமுன்னர்க் கொடுப்பது' என உரையாசிரியர்கள் கூறுவர். நாற்பத்
தெட்டியாண்டுப் பிராயத்தாலுக்குப் ப ன்னீராட்டைப்

101
பண்ணே மணமுடிப்பது தகுதியான மணமுறையாகக் ாணப்படவில்லை. இம் மனத்தைப்பற்றிக் கூறும் பழய பாடல் நாற்பக்கெட்டியாண்டு பிரமசாரியங்காத்தல் முத பவற்றைப்பற்றி பாதும் கூருமையால் அப்பொருந்தா மண்முறை ஆரிய நாட்டார் வழக்காதல் கூடும். இம்முறை னேயே அவர்கள் தமிழ் நாட்டு அறநிலை வழக்கோடு ஒப்ப் வத்துப் பிரமம் என்னும் பெயரால் வழங்கிஞர்கள் போலும்,
ஒப்பு (விதிமணம் அல்லது பிரசாபத்தியம்) ஆவதி: ' கொடுத்த பரியத்தின் இருமடங்கு மகட் கொடுப்போன்
காடுத்தல், என்னே
' கொடுத்த பொருள் வாங்கிக் கொண்டபேர்
ဆီးမီပီ
மப்ெபர் மடுத்தற் கமைங்கா -டுைப்பே' னிரண்டா மடங்கு பெய்வே கதுவே
பிரண்டா மனத்தி னியல்பு ' என்ரு ராகவின்,
பொருள் கோள் (ஆரிடம்) ஆவது : “எறும் ஆவும் காணர்ந்து கிறீஇ, அவற்றின் முன்னர்க் கைக்கு நீர்பெய்து காடுத்தல், என்னே?
'இற்குலத்தோ டொப்பானுக் கொப்பா னிமிலிேருப் பொற்குளம்பிற் பொற்கோட்ட வரப்பு:னந்து- முற்பதித்து
Tlift LFGB u III முஃலயை வாழ்க் கைக்கண் வைப்பதுரை
ஆரி டம் போா மதற்கு
ன்ரு ராகலின், *
தெய்வம் ஆவது ! வேள்வி ஆசிரியன் ஒருவற்கு List
னிகலனணித்து அவ்வேள்வித் தீ முன்னர்க் கொடுப்பது.
siriot P '- "Tio, 3

Page 61
LO E
*மெய்ப்பாலேப் பெண்டன்மை பெய்தியபின் மெல்லியல்
பொப்ப புனர்ந்த பொழுதுண்ட-லொ ப்பார்க்கு நெய்தயங்கு தீமுன்னர் கேரிழையை பீவதே தெய்வப்பே ராகுங் தெரிந்து'
என்ரு ராகவின்,
யாழோர் கூட்டம் (கக்கருவம்) ஆவது: "ஒத்த குல அனும், குணனும், அழகும், அறிவும், பருவமும் உடையார் யாருமில் ஒரு சிறைக்கண் அன்புமீ தூரத் தாமே புணர்ந்து ஒழுகும் ஒழுக்கம். என்னே ?
'ஒத்த குலத்கார் கமியாா யோரிடத்துக்
விக்கமிற் கண்டகம் மன்பினு-லுய்த்திட வந்தா மின்றிப் புணர்வ ததுவரோ
கக்கருவி மென்ற கருத்து எனவும் முற்செப் வினேபது முறையா வுண்மையி னுெக்க விருவரு முள்ளக நெகிழ்ந்து காட்சி யையங் தெரிக றேற்றலென
நான்கிறங் கிட்ைகு காணு மடலும் ஆச்சமும் பயிர்ப்பு மவற்கு முயிர்த்தகக் கடக்கிய, வறிவு நிறைவு மோர்ப்புக் தேற்றமு மறையவர்க்கு மாண்டதோ ரிடத்தின் மெய்யுறு வகையும் முள்ளல்வி துடம்புறப்படாக் தமிழியல் வழக்கமெனக்
தன்னன்பு மிகைபெருகிய
கனவெனப் படுவது கங்கருவ மனமே"
■ ·
STSS ரூர் அவிநயனுர்’

103
அரும் பொருள் வினே (அசுரம்) ஆவது : இன்னது சய்தார்க்கு இவளுரியள் என்ற இடத்து அன்னது செய் ய்துவது. அவை வில்லேற்றுதல், திரிபன்றியெய்தல்
கால்லேறு கோடன் முதலிய. ’
இராக்கதம் ஆவது : “ ஆடைமேலிடுதல், பூமேலிடு ல், கதவடைத்தில் முதலியவற்ருல் வலிதிற் கோடல்,'
* பேய்கிலே யாவது : துருஞ்சி ஒரோம்ெ, மயங்கினு ரோடும், சரித்தாரோடும், செக்காரோடும், விலங்கிரூேம்ெ, இழிதகு மரபில் யாருமில்லா லொரு சிறைக்கண் புணர்ந்து ஒழுகு மொழுக்கம்
கொல்காப்பியர், மறையோர் கேளத்துமன்றல் எட்டு, Eraiari; கூறினமையின் எண் வகை மணங்களும் ஆரிய /15 Ty டார்க்குரியனவெனச் சிலர் கூறுகின்றனர். அது அறியா கார் கூற்ருகும். தொல்காப்பியர் தமிழ்நாட்டு வழக்கே பன்றி ஆரியநாட்டு வழக்குக் கூறப்போக்தா ரல்லர். மறை
மறையவர் என்னும் சொற்களேக் கண்ட மாத்திரக்கே இவை ஆரிய வேதத்தையும் ஆரியப் பிரா மணரையும் குறிக்கும் என நம்மவரின் பிழையான விளக்கமே இம்மயக்கத்திற்குக் காரணம் பண்டைக் தமிழ் நூல்களிற் கூறப்படும் மறை மறையோர் என்பன தமிழ் மறைகளும்
∎ኻህ "
தமிழ் அந்தணரும் என்று ஒர்தல் வேண்டும். இதனேக்
குறித்துப் பிறிதோரிடத்தில் ஆராயப்படு
In.
அகம் * அகமென்பது, கலேவலுங் கலேவியும் தம்முளொத்த துன்பினராய்க் கூடுங் கூட்டத்தின் கண் பிறந்த இன்பம் ஆக்கூட்டத்தின்கண் ஆண்டனுபவிக்க அக்காலத்தில் இன் பம் எவ்வாறிருந்ததென் நவ்விருவரிலொருவரை யொரு
வர் கேட்கின், தமக்குப் புலப்படாதாய் உள்ளத்துணர்வே

Page 62
104.
நுகர்வதாய் அகத்தே நிகழ்கவின் அகமெனப் பெய ாாயிற்று, றுகமெனினும் காமப் பகுதி யெனிலும் ஒக் கும். அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப் பொருளாம்.
EET)
உருவுக் திருவுங் குலமும் முதலியவற்ருல் ஒப்புபர் வற்று விளங்குக் கலைமகனுெருவன் வேட்டையாடிக் கொண்டு மலேச்சாால் ஒன்றன் பக்கத்தே தனியணுய் வந்தா ශ්‍රිෂ්ණී ஆங்குக் தினேப்புணங்காத்துக் தோழியரோடு கிளே யாடுபவளும் உருதிரு முதலியவற்ருல் ஒப்புயர்ஸ்ற்றஞை Lns su Lråd Arif SFIT f மகனொருக்கி வினோபாட்டு விருப்பாற் ரூேனிபர் தனிக் கனி பிரிக்க கிலேயில் கானுக் கணியாளாய் ஆத்தலேவன் முன்பு எதிர்ப்பட்டனள். எதிர்ப்பட்ட இரு வரும் ஊழ் வயத்தால் உள்ளங் கர்ைந்து ஆன்விடக்கே மகிழ்க் து ਜਨ ஒருவர்க்கொருவர் பிரிவாற்ருது ஒரு பொறு ஆற்றுவித்துக்கொண்டு கம்மிடம் ரோ க்ர்ே ரென் றனர். இவ்வாறு விகியாற் கூட்டப்பட்டுப் பிரிந்த :hi) மகன் தான் காதலுற்ற கலேவியைக் கிரும்பக் காணு மவாவினுற் நூாண்டப் பட்டு, முன்னுட் #·ಗ್ಗಿ-L! இடக்கை நாடிச் செல்ல ஆங்கினமே அன்பு துண்ட ஆங்கு வக்க கலேவியை கலேமகன் எதிர்ப்பட்டுக் கண்டு மகிழ்ந்து
காதலால் முன்போல கலர்தான். இம்முறை மூன்ரும் முறை கூடும்போது தன் பாங்கனுல் கலேவி புருேப்பிட
மறிந்து சென்று அவளேச் சேர்வன். இனிக் கோழி பால் எப்பொழுதுஞ் குழப்பட் இன்ன கலேவியை இங் பங்னமே பலகாலுக் கனியிடக்கெதிர்ப்பட்டுக் கூடுதல் அருமையாயிருத்தல் பற்றிக் கலேவியைத் தடையின்றி அலு பவிக்கக் கருதியவனுய் அதற்குக் தக்க தாணேயாவாள் அவள் காதற்ருேளியே என்பதை யறிந்து கொண்டு அவள் பார்

105
சென்று குறிப்பாகவும் வெளிப்படையாகவும் தன் குறை Aறி வேண்ட அவள் பல படியாக ஆராய்ந்து இருவர்க்குங் பட்ட முண்மையுணர்ந்து, இனி நாமும் இதற்கு உடன் படலே ஈலம் என்று அவ்விருவனாயுங் கூட்டுவதற்கு முயல் இங்ஙனம் தோழியால் Ji on ಜಿಳ್ಳಿ!? கூடிவருமிடையில் த&வியால் காக்கப்பட்டு வருக்கினேப் புனம் முற்றிக் கதிர் கொப்தலேனும் பிற காரணமேனும் நிகழத்தலேவிக்கு ஆக் காவல் நீங்கி மனேயகத்தேகங்கும்படி நேர்தலும்.அக்காலத்து இாவில் கோழி அவ்விருவரையுங் கூட்ட முயல்வள். இங் நனம் நிகழும் களவொழுக்கம் சிறுகச் சிலர் பலர்க்குத் தெரிய வந்து நாளடைவில் ஊரில் போலாாய் எழும்ப, அது காரணத்தாற் பெற்ருேர் தலைவியை இற்செறித்துக் தக்க படி காவற் பதித்துவர். அதனுல் த&லமகனேக் காணப் ெ பகுதி ஆப்ருமை த&லவி மாட்டுப் பெருகுதல் கண்டு, கோழி, இனிக் கற்புநெறிப் பட்ட இவள் இறந்துபடவுங் கூடுமென்று கருதி இதற்கு வேறு உபாயமொன்றுங்காணுத கிலேயில், அவள் தலைவனே шза, — 5.5) * இனி இவளே
உடன்கொண்டு சென்று மணந்து கொள்வதே காரியம்’ ன்று கூறிஒருவரும் அறியா வகை தலேவியை வெளியேற்றிக் கலேமகன்டாற் சேர்ப்பிக்க, அவன் அவளே உடனழைக் துக் கொண்டு, தன்னூர் நோக்கிச் செல்வான் ; செல்லு நிடையில், தல்வியின் சுற்றக்கார் அக்களவறிந்து வந்து கலேவனே மேற் செல்லாவாறு கடுத்தும், அவள் தன் காதல் முழுதும் தலைவன்பாற் சார்த்தி நிற்பது கண்டு இவள் கற்பு நெறிப்பட்டாள் ' என்று அறிந்து கொண்டு அவ்விரு வர்க்குங் கிங்கு செய்யாது திரும்பிப் போவர். போகக் த&லவனுடன் மகிழ்ந்து சென்று தலைவி அவனுராடைக் து
வாழ்வளென உணர்க',
(தொ.பொ. - ஆ. - மு. ராகவ ஐயங்கார்)

Page 63
ILO 5
இக்களவொழுக்கம் பற்றிய செய்திகள் கூத்தர் கூத் தியர்களால் வேத்தவையில் அபிநயித்து நடிக்கப்பட்டு வந்தன. 'வேத்தியல் அகம் பொதுவியல் புறமென்பாரும் பிறிது கூறுவாருமுளர்' (அடியார்க்கு நல்லார்) அக்கா லத்து நாடக வழக்கையும் உலகியல் வழக்கையும் தழுவிச் செய்யப்பட்டதே கொல்காப்பியக்கிற் கூறப்படும் களவிய லாகும். ' இத்தமிழ் நாடகக் கமிழ் எனப்படும்; கினவி ஒழுங்குபடக்கோத்துக் கதைபோஸ் வத்து நாடகத்துக் கேற்றலின் ' எனக் கூறுவர் தஞ்சைவாணன் கோவை உண்ாகாரர்.
கற்பு
தலைவியை உடன்கொண்டுபோய கலேவின் தன்னுரி லேனும் தலேவியின் சுற்றத்தார் சம்மதித்து வேண்ட அவ ளூரிலேனும் ஆவளே விதிப்படி மனந்து கோண்டு ஆள் விருவரும் இல்லிருந்து ஆற்றம் -ypકિો வாழுக்கம் கற்பெனப் படும். இங்ஙனம் இல்லிருந்து இல்லறம் நடாத்தி இன்பும் றிருக்கும் நாளில் சில காரணத்தை முன்னி ட்டு தலேவன் த&லவியை விட்டுப் பிரிந்து செல்வன். அங்ஙனம் கலே வியை விட்டுப் பிரிகல் ஆறதுரஃப் ஒதுகற்பொருட்டாவ ஆ நாடுகாத்தற் பொருட்டாவது, மாறுபட்ட ஒருவேந்தரைச் சந்து செய்தற்பொருட்டாவது, வேங்கர்க்குத் துனேயாய்ப் போர் செய்கற் பொருட்டாவது, பொருளீட்டும் பொருட் டாவது, பாக்கையர் பொருட்டாவது, நிகழும். * முந்நீர் வழக்கம் மகஉே வோடில்லே ' என்பதால் பெண் மக்களே மாக்கலத்தில் ஏற்றிச் செல்லல் பழயநாள் மாபன்று. ஒதற் பிரிவு மூன்று ஆண்டுகளும் மற்றப் பிரிவுகளெல் லாம் ஒர் ஆண்டுக்குள்ளும் முற்றுப் பெறவேண்டு
மென்ப,

O
சுலேமகன் பிரித்து செல்லுமிடத்துக் கலேமகள் அவன்
வாற்ருது இரங்குவாள். தலைமகனு மிசங்கி அவளேக் தேற்றி இன்ன இருதுவில் இன்ன கிங்களில் யான் மீண்டு
வேன் என்று கூறிச் சில குறிகளுஞ் செய்துவிட்டுச் சல்வான். கஃலமகளும் தலைவன் சொற்பிழையாது இல் ருந்து g) ili, Грд. அருவாள். அவன் குறிக்க பருவம் ந்தவிடக்து அவன் பிரிவினே ஆற்ருது வருந்துவாள். தோழி அவள் ஆற்றுமையைக் கண்டு வருங்கித் கலேவன் குறித்த பருவம் ஆஃகன்றேல் அவன் செய்த குறிகள் பங்கமையான் அவன் வாாா நிற்கின்ருன் என்றும் பிறவுங் கூறிக் கலேவியை ஆற்றுவிப்பாள். தலைப்பனுக் தான் குறிக் துச் சென்ற வினேமுடித்துக் குறித்த பருவம் வரவே நீண்டு வருவான். மீழும் வழியில் தான் செய்த குறிக ளெல்லாங் தோன்றும், ! துபொருட்டுக் தலைவி ஆற்கு ளென்று பாகற்குக் கூறி தேரை விரைவிற் செலுத்கச் செய்து நடுகிவந்து தலேமகளே பெய்தி விருந்தயர்வான். ன்னர் இருவரும் பிரிக்கிருந்த விடத்து நிகழ்ந்த செய்தி ளே யெல்லாம் ஒருவருக் கொருவர் சொல்விக்கொண்டு
ன்புறனர்.
இங்ஙனம் இல்லறம் நடாத்திக் கலேவனுங் கலேவியும் வறுக்கு மளவும் காமவின் பத் துய்த்து மக்களேப் பெற்று துமை பெப்தியபோது துறவு மேற்கொண்டு மெய் ாைர்த்து வீடுபெறுதலே இவ்வொழுக்கக்கின் முடிங்க
பாருளாம.
* கா மஞ் சான்ற கடைகோட் காலே
யேமஞ் சான்ற மக்களொடு துன்ைறி யறம்புரி சுற்றமொடு கிழவனுங் கிழக்கியுஞ் சிறந்த தியற்ற லிறந்ததன் பயனே '
(தொல், கற். 51)

Page 64
108
காதல் வழிச் செல்லுமுள்ளமும் இறைவனே நச்சு முள்ளமும் ஒருபான்மைய வாகலின், அன்பின் மாண்பினே விளக்கும் அகப்பகுதி விழுமிதென அறிஞர் உச்சிமேல் வைக்திப் போற்றுவர். இறைவன் பக்குவம் வாய்க்க கல் ஆயிர்களே ஆட்கொள்ளும் முறையினே மாணிக்க வாசக சுவாமிகள் “காமஞ் சான்ற ஞானப்பனுவ* லாகிய திருச் சிற்றம்பலக் கோவையார் என் லும் அகப்பொருள் நூலால் விளக்கி யிருத்கல் கருக்கில் ஊன்றத் தக்கது.
புறம்
* ஆசும்போல் ஒக்க அன்புடையார் காமே பன்றி எல்லாராலும் துய்த்து உணரப் டுதலானும் இவ்வாறிருந்த தெனப் பிறர்க்குக் கூறப்படுதலானும் இது புறமாயிற்று.
இகனே வெட்சி, வஞ்சி, உழிஞை, அம்பை, வாகை, காஞ்சி, பாடாண்டினே ஆகிய ஏழு கிஃணகளாக வகுத்துக் கூறுவர். பிற்காலத்தவர் கரந்தை நொச்சி முகவிய பல தினகளேயுங் கூட்டி இதனேயே பன்னிரண்டு ଛିଞata: atta, விரிக்கிருக்கின்றனர். இவ்வேழனுள் கா இத்சி பாடாண் டினே யிரண்டிலும் உலகின் கிலேயின்மையையும், கலேவ&னப் புகழ்தல் காரியத்தைப்பற்றியுங் கூறுவர். ஏனேய უფზ கிண்ணகளும் ஆக்காலப் போர் நீதிறனே விளக்கு iÙ!ጴrሻïïጏhዘTI r . பண்டைக் தமிழ் மாக்கள் போர் செய்தற்கு எகுங்கால் செய்யும் Fir, if சம்பந்தமான نص الفت ثقة بنت أي பூக்களேச் குடிப் பொருதல் வழக்கமா யிருந்தமையின் ஆவ்ப்பூக்களின் பெயரானே ஒழுக்கக்தையும் கூறினர் தொல்காப்பியர்.
"இரு பெருவேந்தர் தம்முள் பொருதுவது கருதியக் கால் ஒருவர் மற்றவர் நாட்டிலுள்ள ஆகிாையைக் கவர்தல் குறித்துத் தமது கண்டக் கலவர், முண்ப்புலங் காப்போர்

1 ()9 ,
గ ਮੈਂ ۔ تو بسا தவியோரை SI alalII. ஆனாணு படைகளோக கூடடி
வாய்ப்புள் முதலிய நற்சகுன மொழிகளேக் கேட்டு, ற்றறிய வல்லாரை முன்னர் ஏவி, அவர் எவியவாறே ரப்பறிந்து பின் சென்று கிரை நிற்கும் புலங்களுக்கருகே றைத் தொழுகிப் பின் ஒய்யெனக் கிளம்பி கிரை காத் தாரைக் கொன்று விழ்க்கி ஆநிரையை மெக்கனவாய் உடன்கொண்டு சும் நாடு செல்லுவார். செல்லுங்கால் ம்மைத் தொடர்ந்து பொருதவந்தாரைப் பின் அணி பத்தார் தாமே கின்று பொருது விழ்ந்த முன் சென்ருர் ஆகிரையை இன்புடன் நடத்திச் செல்வார். இங்ஙனம்
பார். கிரை பறி கொடுக்கோரும் இங்ஙனமே பொருது திரைமீட்டுப் போகலுமுண்டு. இவ்விரண்டும் வெட்சி பென்ருர் கொல்காப்பியர். பிற்றை நாட் போங்தோர் நிரை மீட்ட&லக் காங்தையெனப் பிறிதோர் பெயராற் கூறுவார்.
( ; இங்ஙனம் பகத்திாளேக் கவர்ந்தபின் பெருவேந்தன் ாடுகொள்ளும் உள்ளத்தனுப் நிமிக்கிகன் நல்லநாளென்று றிய நாளிலே கன் குடை, வாள் முதலியவற்றைப் புறப் படச் செய்து, எள்ளுருண்டை, தினேமா, பொரி, அவரை, துவரை, கிணம், குடர், உதிரம் முதலியன நிறைந்த காழி யைக் கொற்றவையின் பொருட்டு முன் எடுக் துச் செல்லப் னர்க் தன் சேனேயோடு புறப்பட்டு ம 1ற்ருள் தேசத் தின்மீது படையெடுப்பான். அப்போது விர முரசம் அதிரும்; பாக்னகள் விரிடும்; சேனேகள் ஆரவாரஞ் செய் பும். ஜாசன் தன் சேனேகட்கு வேண்டிய ஆயுதங்களேக் கொடுப்பான். மேலும் தன் படை முழுவதுக்கும் ஒருவனேக்

Page 65
TIO
தலேவனுக்கித் தன் படைவிார் யாவரும் அவன் சொற் படியே கேட்டு நடக்குமாறு பணிப்பான். போர் முடிவில் போரில் சிறந்து விளங்கிய விார்க்கு q] @)ଛି, காவிதி முதலிய சிறப்புப் பட்டங்களேச் சூட்டலுமுண்டு. அரசன் தன் படைவீரரோடு அமர்ந்து உண்டு களித்தலும் வழக்கமா யிருந்தது. ஆங்கிய நாட்டு அரசன் திறைகொடுக்கச் சம் மதிப்பானுயின் ஆக் திறையை வாங்கிக்கொண்டு மீண்டு விடுதலுமுண்டு. அன்றேல் காபதப் பள்ளிகள் ஆந்தனர் இல்லங்கள் கோவில்கள் நீங்கலாகப் பகைவர் காட்ர்ேகளே சுட்டெரிக் கழித்தலுமுண்டு தமக்குப் புறங்கா ட்டி ஒடு வோரைப் போர்வீரர் வெட்டாமல் விடுவார். 3. III rFix) புண்பட்ட if I got அரசனும் உடன் வீரரும் புகழ்ந்து கொண்டாடுவார். முடிவில் அரசன் தன் வீரருட் சிறங் தாருக்கு முத்தாரம் முதலியன கொடுப்பான். சிலருக்குப் பரம்பரை வாழ்க்கையாக மருதகில ஊர்கள் கொடுப்பது முண்டு. I
துக்கா லத்தில் rairia அரண் செய்யப்பட்ட கோட்டைகளு மிருந்தன. பகையரசர் இக்கோட்டைகளே எதிர்த்துப் பொருதலுமுண்டு. கோட்டைகள், மலே, காடு 副f முதலியன இல்லாத உள்நாட்டில் கல், செங்கல் முதலிய வற்ரு: ஸ்மைக்கப்பட்ட மதிலாலாக்கப்பட்டிருந்தன. கோட் டைக்கு வெனியே வெகுதூரம் வரை காவற்காடு பரந்திருக் கும். இக் காவற்காடானது வஞ்சனே பலவாய்த்துக் தோட்டி முள் முதலியவற்றுல் பதிக்கப்பட்டது. இக் காவற்காட்டை யகன்று சென்ருல் மதிலேயடுத்து அகன்று ஆழ்ந்த அகழ் உண்டு. இதில் காாக்களும் சுருக்களும் மிகுந்திருக்கும். இதை யடுத்து அமைக்கப்பட்டதே புற மதில். புறமதிலின் மேற்புறம் பல பொறிகள், பதனம், மெய்ப்புழை ஞாயில் முதலியனவமைத்து எழுவும் சிப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

நடைய வாயிற் கோபுரமுடைத்து. கோட்டை மதிலில்
வறும் பல பத்திரங்கள் உண்டு. இதற்கு உட்புறத்துள்ளதே
ர்மதில், சில கோட்டைகள் மலே அரண், நில அரண் முதலியன சூழ்ந்திருந்தன. மேலிருந்து அம்பு எய்யும்
துக்கிடங்கள் மகிலகக்கே அமைந்திருக்கும்
* இவ்வாறு காவல் செய்யப்பட்ட கோட்டையைப் பிடிப்பதற்கு எதிர் அரசன் சேனேகளோடு வருவான். சனேகளுக்குமுன் அரசனின் கொடி செல்லும் போர் தாடங்கும்போது штšir i t. j. - முன்னும், கேர் குதிரைப் படைகள் அவற்றின் பின்னும், காலாட்படை கடையிலு மாகச் செல்லும், காலாட்கள் மாட்டுத்தோலாற் செய்யப்
பட்ட கேடயத்தை இடக்காத்திலும் *Filiş. அல்லது கண்ட
ாேகிய வாள் தாங்கி நிற்பர்; குதிரை மறவர் காலாட்களி லும் பார்க்க லேசான ஆயுதங்களேயும் குறுகிய பரிசை ளேயுங் கொண்டு செல்வர். பாண்ேகள் எப்பொழுதும் படையின் பெரும் பகுதியா யிருந்தது. இவ்வகையான ாற்றாசனின் படை கேசட்டையை பனுகா முன்னரே கோட்டைமேலிருக்கும் கோட்டைக் காவலர் ஆம்புமாரி பொழிவார். அவ்வம்புமாரியைக் கிகுேப் படையாரும், கேடகப் படையாரும் கடுக் தும், தாங்கியும் எதிர்நோக்கிச் சென்று கோட்டையைக் கிட்டுவார். மதில் குழ்ந்த கிடங் < இரு கரையிலும் நின்று பெரும்போர் புரிவார். பெரும் கைகளே நீரில் மிதக்கவிட்டு அவற்றின் மீது ஏணிகளேர் ார்த்திக் கோட்டைமீதேறிப் பொருகலுமுண்டு. கோட் டக் காவலர் கோட்டையின் புறம்போந்து போர் செய்தலு

Page 66
2
முண்டு. புறமதிலைக் கைப்பற்றிய பகையரசன் உள் மதிலை யும் வளைத்து அவ்வாறே பொருது காவலாளரைக் கோட் டைக்குள் துரத்துவான். உள் மதிலும் பகையரசன் கைப் படவே போர் ஊரின்கண் நிகழும். அப்பொழுது ஊரி லுள்ள கோயிற் புரிசைகளிலும், மதில்களிலும் வீடுகள் மீதும் ஏறி நின்று போர் செய்வார். எதிர்த்து வந்த அரசன் வெற்றி பெறுவனேல் தோற்ற வேந்தன் பெயரால் தான் முடிசூடி மங்கல நீராடித் தன் வாளுக்கும் கிராட்டுச் சடங்கு செய்து, பரந்து கின்ற தன் படையாரை யெல்லாம் ஒருங்கு கூட்டி, அவரவர்க்குத் தக்க சிறப்புச் செய்தலு முண்டு. பகைவன் கோட்டையை முழுவதும் அழித்துக் கழுதை ஏரிட்டுழுது, உண்ணு வாகும் வேலும் விதைத்துத் திருப்புவதும் திறை வாங்கித் திரும்புவதும், அன்றேல் தன் அவ்விடத்தும் கிலைநிறுத்துமாறு சில மாதங் נg}%00T60) (L- தங்கி நாட்டைப் பண்படுத்திச் சீர் செய்துவிட்டுத் திரும் புவதும் வழக்கமா யிருந்தது.
தமிழ் அரசர்கள் தோற்றவர்களிடம் இரக்கமில்லா திருந்தனர். தோற்ற அரசனுக்குரிய செழிப்புள்ள வயல் களும் சோலைகளும் பாழ் கிலங்களாக்கப்பட்டன. அழகிய அரண்மனைகள் ஆந்தையும் பேயும் வாழிடங்களாக மாற்றப் பட்டன. அவற்றின் பெரிய தூண்கள் மதயானைகள் கட் டும் தறிகளாயின. விசாலித்த மடைப்பள்ளிகள், ஆந்தை மேலே இருந்த லறத்திருடர் கொள்ளை கொண்ட பொரு ளைப் பங்கிடும் இடங்களாயின. நாட்டிலுள்ளார் நான பக்கங்களிலும் ஒடிப் பிழைத்தனர். அழகிய ஓவியங் தீட்டப் பட்ட சுவர்களையுடைய அரண்மனைகள் தரைமட்டமாக்கப் பட்டன.
மதிலகத்தன்றிச் சமவெளி யொன்றில் இடங்குறித்து அங்கே இருபெரு வேந்தர் சேனையும் எதிரூன்றி நின்று

13
போர் செய்யும் வழக்கமு மிருந்தது. தானே, யானை, குதிரை,
தர் முதலிய நால்வகைப் படையும் அணி வகுத்து கின்று சண்டை செய்யும். அரசனும் சேனையுடன் சென்று உடன் கின்றே போர் செய்வது வழக்கமா யிருந்தது. இப் போரில் சேனைத் தலைவர் காட்டும் வீரம் வியக்கத்தக்கது. தன் சேனை முரிந்தோடும் சமயமா யிருப்பின் சேனைத் தலைவன் தானே சேனைக்கு முன்னின்று எதிரி படை (Մ) (էք II தையும் தானே தாங்கித் தடுத்து நின்று தன் படை பாளரை உற்சாகப்படுத்திச் சண்டைக்குத் தூண்டுவான். ன் அரசனே மாற்ருன் படைகுழக் காணின் யாண்டிருக் ம் படைத் தலைவர் ஓடோடியும் வந்து அவனை விடுவிப் ார். இருபுறமும் வாட் போரும் மற் போரும் வீரத் துடன் நடைபெறும். இவ்வாறுய சண்டையில் இருதிறத் நாரும் ஒக்க மடிதலுமுண்டு. சண்டை செய்யும் இரு வேந்தரும் மடிவாேல் அவர் மனைவியர் தீப்புகுவதும் வழக் *மா யிருந்தது.
மாற்ரு?ர்மீது போர் தொடங்கும்போது, ஆனனைய ந்தனர் குழந்தை பெண் முதலியோரைப் பார் நிலத்தினின்றும் விலகுமாறு அறிவுறுத்தி அன்னர் yவணிருந்து விலகிய பின்னர் அம்புமாரி சொரிவது தமிழ்
ரர்களது வழக்காயிருந்தது.
இதனே,
ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணியுடையீரும் பேணித் தென்புல வாழ் நர்க் கருங்கடன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெருஅ தீரும்
8

Page 67
4.
எம்மம்பு கடிதுவிடுதும் நம்மரண் சேர்மின் என ஆறத்தாறு துவலும் பூட்கை *
எனவளுஉம் புறப்பாட்டானறிக.
* வெட்சி நிரைகவர்தன் மீட்டல் காங்தையாம் வட்கார்மேற் செல்வது வஞ்சியா-முட்கா ரெகிருன்றல் காஞ்சி பெயில் காக்க னுெச்சி பது பிளேத்தலாகு முழிஞை-யதிரப்
பொருவது தும்பையாம் போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்'
(பிங் கலம்.)
வீரக்கல்
போரில் எவராலும் மகிக்கப்படும் விரஞய் விளங்
புயிர் 'Lബ് எக்காலமும் இது L Jari li படுத்துமாறு -*置 காலத்தவர் செய்திருந்த ஏற்பா கேளும் Fligitat, if அக்காலத்து அதிகமாய் மதிக்கப்பட்டு வந்தனர். வீரர் செயல்களில் விளங்கிய விாரை எக்காலமும் ஞாபகப் படும் தும் சாதனங்களே ஏற்படுத்துவதும் வழக்கமாயிருந்தது, இறந்த விானே நினேவுகூர்திற்காக கற்றானே கிறுக்கி ஆகிள் அவ்விானின் பெயரையும் அவன் செய்த வீரச் செயல்களே பும் வெட்டி அக் கல்லுக்கு நீராட்டி, எண்ணெயைப் பூசி, அதில் அம்மறவனேயே தெய்வமாக நாட்டிச் சிறப்புச் செப்
துன்னேக் தெய்வமாக வணங்கியதோடும் ஆன்மயாமல் = الك கல்லுக்குக் கோயிலமைத்து மதில், வாயில் முதலியன கட் ஆலயங்களாக்கி நூல்விானேப் போற்றியும் வந்தனர்.
 
 
 
 
 
 
 
 

15
என்னேமுன் நில்லன் நின் ஹெவ்விர் பலரென்னே முன்னின்று கன்னின் றவர் * (குறள்)
இரண்டாயிர மாண்டுகட்கு முன்னரே கம் வீரரை
நாடகப்படுத்துமாறு இங்ஙனம் கல் சுட்டுப் பேர் பொறித்து வைத்த நம்முன்னுேர் தன்மை எக்காலத்தும் அதிசயிக்கத்
க்கதாகவே யிருக்கின்றது.
இயற்றமிழ் ' கமிழ் இயல், இசை, நாடகம் என்னும் முக்கிறத்தின சாய் கொன் தொட்டு வழக்குகின்றது: இயற்றமிழென்
து தமிழர்யாவர் மாட்டும் பொதுமையி
உஸ்கவழக்கு Fப்புள் வழக்கு என்னும்
இருப்கை வழக்கினும் இயங்கு , lif 3 முஞ் செய்யுளுமா கிய துல்களின் தொகுகிய Tr; இதனுள் இலக்கணங்களும் இலக்கியங்களும் அடங்கும். சங்கச் செய்யுள்களும் உ ரைகளும், புராணம் முதலிய ஏனேய நூல்களும் இயற்றமிழேயம் இயற்திடமிழ் ஏனே இசைத் தமிழ் நாடகத்தமிழ் ஆகிய இரண்டங்கும் முன்னர்க் தோன்றின்மைபற்றி முதற்கண்
Τξατμ. இரண்டும் இயற்றமிழின்றி
. להקתiusד: 17-ra_ו. ו נ%LE
.ப்பட்டதா கும் تقي بقيادة تتبع
இயங்கும் all or still
“இயற்றமிழினுள்ளே எழுத்துச் சொல்ே ணிைகளு ,ே இசைக் தமிழினுள்ளே TCL
அவற்றிற் பிதக்கும் பண்களின் வகையும்
பாருள் யாப்
* TEifзіўtгі பிறவும், டகக் தமிழினுள்ளே கூத்து விகற்பமும் அபிரய விக ற்பமும் சுத்திய சிலக்கணமும் அசங்கிலக்கணமும் பிறவும் விளக்கப் LP "LIGJTaj "WLF.
(பாலிாமிர்தம்-சிவப்பிரகா பண்டிகர்)

Page 68
Ilt
* வழக்கியலும் வழக்கியலாம் செய்யப்பட்ட செய்யுளி பலும் பற்றி யெழுங்க இலக்கணம் இயற்றமி ழெனப்படும். அச் செய்யுளின் இன்றியமையாத இசை இசையிலக்கண மெனப் பெயசெய்தி அவ்வியற்றமிழ்ப் பின்னர் வைக்கப் பட்ட தெனப்படும்; இவ்விரண்டன் வழி கிகழ்த்துங் #, # திலக்கணமாகிய நாடகத் தமிழ் அவற்றுட் பின்னர்க் தாமென (LpSI'','FBLII கூறுதலும்.’
(பேராசிரியர் ፫l - (ጂù] I] ..)
இசைத்தமிழ்
* இயற்றமிழ் பண்ணுேடு கலந்து தர ௗக்கோடு நடை பெறின் இசைத்தமிழாம்.’ ஒர்கால் தமிழகத்து இசைக் கல்வி மிக உன்னத கில் அடைந்திருக்க தென்பதை பழைய நூல்கள் உணர்த்துகின்றன. அகக்கியர் இராவணனேக் கந்தருவத்திாற் பின்னித்த வாரிாறும் இதற்குச் சான்ருகும். இராவணனின் இசைக்கு உவந்து இறைவன் நீண்ட ஆயுளும் வாளும் அளித்தான்.
* இனி இசைக்தமிழ் நாலாகிய பெரு நாரை பெருங் குருகும் பிறவும் தேவ விருடி காாதன் செய்த பஞ்சபாா தீயம் முதலாயுள்ள கொன்னூல்கள் இறந்தன. ஈாடகக் தமிழ் நூல்களாகிய பாதம், அகத்தியம் முதலாயுள்ள கொன்னூல்களு மிநந்தன. பின்னர் முறுவல் சாபக்கம் குணநூல் செயிற்றியம் என்பவற்றுள்ளும் ஒரு சார் குக் திரங்கள் நடக்கின்ற அத்துனேயல்லது முதல் ஈடு இறுதி காணுப யின் ஆவையும் இதங்தனபோலும். இறக்கவரும் பெருங்கல ಟ್ವಿಸಿ: o: இவற்றுட் பெருங்கல பாப்து ட்டமிடப் அது:T-டி3ே கிளவு பன்னிரு
* காாத கீதக கேள்வி .تearبی قرا (பெருங்கதை,

17
பெற்றிக்கேற்ற ஆணிகளும், கிவவும், உந்தியும் பெற்று, சங்கோல் கொடுத்தியல்வது என்ஃன. *தல முதலுாழியிற்ீனவர் கருக்கப், புலமகளாளர் புரிநாப் ாயிரம், வலிபெறத் தொடுத்த வாக்கமை பேரியTழ்ச், சலவு முறை யெல்லாஞ் செய்கையிற் றெரிந்து, மற்றை ாழுங்கற்று முறையிற் பிழையான்' எனக் கதையினுள் கூறிஞராகஸ்ாற் பேரியாழ் முதலியனவும் இறந்தன வனக் கொள்க. ' இனிக் கேவ விருடியாகிய குறுமுனி ாத்கேட்ட மானுக்கர் பன்னிருவருட் சிகண்டியென்னும் ருக்கவமுனி, இடைச் சங்கத்து ஆகாகுல னென்னும் தெய்வ பாண்டியன், கேரோடு விசும்பு செவ்வோன் லோத்கமை என்னும் தெய்வ மகனேக் கண்டு தேரிற் டின்விடத்துச் சனித்தானேத் தேவரும் முனிவரும் சரியா ற்கத் தோன்றினமையிற் சார குமானென அப்பெயர் பெற்ற குமாான் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்க ம், பாாசமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திர யமும், அறிவனுர் செய்த பஞ்ச மரபும், ஆகிவாயிலார் செய்த பாத சேஞபதியமும், கடைச்சங்க பர ண்டியருட் வியாங்கேறிய பாண்டியன்மதி பாணனுர் செய்த முத ல்களிலுள்ள வசைக் கூக்கிற்கு மறுதலையாகிய புறக் த்தியன்ற மதிவாணனுர் நாடகக்தமிழுமென இவ்வைக் ம் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன்றேனும் புடை யொப்புமை கொண்டு முடித்தலேக் கருதிற்று பவுரையெனக் கொள்க : என்னும் அடியார்க்கு லார் உரையால் முற்காலத்து விளங்கிய இசைநாடக
கள் சிலவற்றை அறிகின்ளுேம்,
தமிழுக்குரிய எழிசைகளின் பெயர் குரல், துத்தம், கக்கிளே, உழை, இனி, விளரி, தாரம் என்பன இவ்விசை
ானும், வணஈளவுசாணும், பக்காளவு பன்னிருசாணும்,

Page 69
18
களின் ஒசைக் குவமை, வண்டு, கிளி, குதிரை, யானே, குயில், தேனு, ஆடு. இவற்றின் எழுத்தாவன: ஆ, ஈ, ஊ, 1ே ஐ ஒ, ஒள இசைகளின் சுவைக்குவமை தேன், தயிர், கெய், ஏலம், வாழைக்கனி, மாதுளங் கனி.
*பாலே குறிஞ்சி மருதம் செவ்வளி என்னும் பண்களே யாவது, அதோளி, மருள், குச்சரி, குரண்டி, சாதாரி முத விய திறன்களேயாவது இன்னதென்று பாடுவோர் இக் காலத்து எத்து&ணயர் உளர் பண் என்பது பண் u GiraXf.) மென இரண்டாகவும், திறன் என்பது திறன், திறத்திறன் என இரண்டாகவும் பகுக்கப்பட்டிருந்தன. அவையெல்லாப் இப்பொழுது ராகம் என்னும் பெயரைப் பெற்றுள்ளன செம்பாலேப் பண்ணென்று முன்னுேம் கூறியது இக்காலிக் அச் சங்கராபரணப் பெயரோடு வழங்குகின்றது. சாகா r என்று அக்காலத்திற் சொல்லப்பட்டது நீலாம்புரி என்று வழங்குகின்றது. இவ்வாறு பழைய பண்ணுக் திறனுக் தப் பெயரை யிழந்து ஏழிசையின் பெயர்களாகிய குரல், துக் தம், கைக்கிளே, உழை, இனி, விளரி, தாரம் என்றிருக்தன மாறி சட்சம் முதல் கிடாதம் வரையிலுள்ள சமஸ்கிருகப் பெயர்களேட் பெற்று ச, ரி, க, ம, ப, கி. நி என்று வழங்கு கின்றன.' (தமிழ் வரலாறு.) *குறவஞ்சி பள்ளு சிந்து முதலிய பிற்காலப் பிரபந்தங் களும் இசையைச் சேர்ந்தனவே. இசைத் தமிழ் நூல்கள் இவ்வளவு இருந்தன வென்பதஞல் அக்காலத்தில் இருக்க சையமைப்பின் விரிவுன ரப்படும். சிலப்பதிகாரம் முத வியவற்ருல் இசை பைப்பற்றிக் தெரிந்தவைகளிற் நி3 கூறுவேன்.
இசை வகை இசையில் பண்களென்றும் திறங்களென்றும் இரு
வகை உண்டு, பண்கள் 7 நரம்புகளுங் கொண்டன. நரம்பு
 

I9
என்பது இங்கே ஸ்வாம். எழு ஸ்வாமும் கொண்டவை, ம்பூர்ண ராகம். அதுவே பண்ணும். வடமொழியில் மளகர்த்தாவென்று கூறப்படுவதும் அஃதே. ஏழு ஸ்வரங்கள் வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், க்யமம், பஞ்சமம், தைவதம், கிஷாதம் என்று கூறப்படும். அவற்றையே, தமிழில் குரல், துத்தம், கைக்கிளே, உழை, இளி, விளரி, காரம் என வழங்குவர். யாவருக்கும் இயல் ான குரல் ஷட்ஜம் ஆகும். அதனேக் குரலென்றே வழங் கிய பெயரமைதி வியக்கற்பாலது. ஏழு ஸ்வரங்களுக்கும் சரி, க, ம, ப, த, நி என்று இப்பொழுது பயிலப்படும் ழுத்துக்களேப் போலவே தமிழ் முறையில் ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, ஒள என்ற ஏழு நெடிலேயும் ஸ்வாங்களுக்கு எழுத் தூக்களாகக் கொண்டு பயின்றனர்.
இந்த ஏழு நாம்புகளும் நிறைந்த பாகம் பண்ணென்று முன்னரே சொன்னேன். ஜனக ராகமென்பதும் அதுவே அப்பண்களிலிருந்து கிறங்கள் பிறக்கும். அவை இப் போது ஜள்ய ராகங்களென்று வழங்கப்படும். நிறைநரம் பிற்றே கிறமெனப் படுமே என்ற திவார குத்திரத்தால் ண்கள், கிறங்கள் முதலியவற்றின் இலக்கணம் விளங்கும். பண்ணுகளுக்கு இனமாகக் கிறங்கள் கூறப்படும். யாப் விலக்கணத் திற் ' பண்ணுங் கிறமும் போற் பாவுமினமு மாய், வண்ண விகற்ப வகைமையால்-பண்ணின், திறம் விளரிக் கில்வதுபோற் செப்பலகவ, விசைமருட்கு மில்லே பினம்’ என்று காணப்படும் இலக்கணத்தில் இது விளக்கப்
பட்டிருக்கல் காண்க.
இப்படிப் பிறக்கும் பண்ணுக் திறமுமாம் இசை வகை கள் ஒரு வழியிற் ருெகுக்கப்பட்டு 11,291 என்று கூறப் படுகின்றன. பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, பாலே, ல்லே, மருதம் எனப் பெரும் பண்கள் ஐந்து. இவைகளின்

Page 70
2O
வகையாகும் பண்கள் பல. இவைகளுள் பகற் பண்கள் முதலியவையும், அவ்வப்பொழுகிற் கமைந்த பண்களும், யாமங்களுக்குரியனவும், சுவைகட்குரியனவும் வணங்குதற் குரியனவுமெனப் பலவகையுண்டு. புறநீர்மை முதலிய பன் இரிாண்டு பண்கள் பகற்பண்களெனப்படும். தக்க ராக முதலிய ஒன்பது பண்களும் இராப்பண்களென்பர். செவ் வழி முதல் மூன்றும் பொதுப்பண்களாம். காலேக்குரிய பண் மருதம், மாலேக்குரியது செவ்வழி என்பாரு முனர்" இந்தப் பண்களால் இசைவல்லோர்கள் சில তে றிப்பினே அறிவிப்பதுண்டு. ஒருவர் தம் நண்பனே மாலேயில வர வேண்டி r. r&b - 537&artij பாடினுசென்று ஒரிடத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
* இரங்கற்பண் விளரி. அதைப் பாடிப் பிறர்பால் இாக்கம் உண்டாக்கினுக்கள். பரமசிவனுல் கைலேயின் கீழ் அமிழ்க்கப்பட்ட இராவணன் அவருக்கு இரக்க முண் டாக விளரியைப் பாடினுன் என்ற பொருள்பட ' விசாய் மலர்ப்பூங்குழலிபாகன் மகிழ் வினுேங்கும் வெள்ளி மாலேக் கீழ்க் கிடந்து விளரி பாடும், இராவணனுர்’ என்ற ஒரு கவி பாடியுள்ளார். இச் செய்யுட் பகுதி விளரி இரங்கம் பண் என்பதை நன்கு தெரிவிப்பது காண்க. பாடுங்கால் இவ்விலக்கணங்களோடு பாடவேண்டும் என்ற விஷயங்களே மிக விரிவாக இசை நூல்கள் கூறு. குற்றம் சில வகைப் படும். இக் குற்றங்கள் பாடுவோர்பால் இருத்தல் கூடா வென விலக்கியும் நூல்கள் கூறும்.
டாக்டர் (fl. வே. ராமிநாதய்யர்
- ribs). Liriki fi fr) ir உபாக்கியாயர்)
ஆரியப்பிராமணருடைய ஆதிக்கத்தால் தமிழர்க்குரிய
பண்கள் தாளேற நாளேறப் பயில்வாாற்று மங்கிப்போகவே

12.
பதிசை பிராகங்கள் வளர்ந்தோங்கி எங்கும் வழங்கக் இப்பட்டன. பழைய பண்கள் ஒய்ந்த காலம் இன்ன குறிப்பிடல் ஆசாத்திய மாயினும் மாணிக்கவாசகர் אZ).ז63ת, லக்கே அவை மங்கியிருக்கக் துவங்கி பிருக்கலாமென்றம், ருவிசைப்பா காலமாகிய கிறிஸ்தாப்தம் 10-அல்லது-11-ம் ாற்ருண்டில் தேவதாஸ் தோத்திரங்களுக்கு மாக்கிரம் ர்ஹமாக ஒதுங்கியிருக்க வேண்டுமென்றும் எண்ணுதல் |ழுகா காது. அஃது எப்படி ஆயினுமாகுக. இப்போது ம் காட்டில் பரவும் பூபாளம், மாளவி, பங்காளம், காம் பாதி, கல்யாணி, காந்தாரி முதலிய இராகங்கள் தங்கள்
பயராலேயே தங்கள் பிறப்பிடம் உணர்த்துகின்றன.
புறநாட்டு வாமென்று நிரூபிக்கல் ஆரிகன்று. இங்கினம் இசைகள் மாறவ புதிய ೩-ಹತ್ತು ವಿ. இராகங்களில் மைந்த சிற்சில பதம் கீர்த்தனே இவற்றுட் கலக்கக் கலக்க ಸಖಿ?!!! ஆட்டம் பாட்டு வடிவாய்க் தமிழ் நாடக நூல் இருங் நடப்பவாயின.
(நாடகக் கமிழ் ஆராய்ச்சி-இலக்குமி.)
* No one can now say what these pains and ances were like. Their places Were gradually Alken up by the Indley-Aryan Ragams and Natams.' (Tamil Studies.)
இசைக்கருவிகள்
இசைக்கருவிகள் ஐந்து. அவை தோற்கருவி, துளைக் ருவி, ஈரம்புக்கருவி, கஞ்சக்கருவி, மிடற்றுக்கருவி என் பன். தோற்கருவிகளாவன பேரிகை, படகம், இடக்கை,
டுக்கை, மத்தளம், சல்லிகை, கரடிகை, திமிலே, குட

Page 71
22
முழா, தக்கை, கணப்பறை, தமருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவளையம், மொந்தை, முரசு, கண் விடு தூம்பு, கிசாளம், துடுமை, சிறுபறை, அடக்கம், தகு ணிச்சம், விரலேறு, பாகம், உபாங்கம், நாழிகைப்பறை, துடிபெரும்பறை என்பன.
மத்தளம்-மத்து ஒசைப் பெயர் ; இசையிலைாகிய கருவிகட்கெல்லாம் தளமாதலால் மத்தளம் என்னும் பெய. ராயிற்று. சல்லிகை யென்பது சல்லென்ற ஓசை யுடைக்
றறு يBB{ 2) ஒ Jool
ベ حسیر தாதலாற் பெற்ற பெயர். ஆவஞ்சி யெனினும், குடக்கை
o ? --ғr– ; 7 - 2. யெனினும், இடக்கை யெனினும் ஒககும ; அதற்கு ஆவி னுடைய வஞ்சித்தோலைப் போர்த்தலால் வஞ்சியென்று பெயராயிற்று ; குடுக்கையாக வளைத்தலாற் குடுக்கை யென்று பெயராயிற்று ; வினைக்கிரியைகள் இடக்கையாற்
செய்தலின் இடக்கை யென்று பெயராயிற்று ;
ற்று ; கரடி கத்தி ணுற்போலும் ஓசையுடைத்தாகலாம் கரடிகையென்று
பெயராயிற்று.
(அடியார்க்கு நல்லார்.)
* தக்கை தண்ணுமை தாளம் விணே
தகுணிச் சங்கிணை சல்லரி
கொக்கரை குடமுழி ఐ3@) ty .300 Ꭿ
கூடிப்பாடி நின்முடுவீர்.”
(சுந்தரர்-தே.)
துனேக்கருவி-குழல். நரம்புக்கருவிகள் ஆகியாழ், மகாயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் முதலிய நால் வகை யாழ்களுமாம். இவற்றுள் ஆதியாமுக்கு ஆயிரம் நரம்பும்,பேரியாழுக்கு இருபத்தொன்றும், மகாயாழுக்குப் பத்தொன்பதும், சகோடயாழுக்குப் பதினுன்கம், செங்

23
கோட்டியாழுக்கு எழுமாம். வீணை வடதிசையாரியர் தென்னுட்டுக்குக் கொண்டுவந்ததோர் இசைக்கருவி. யாழ் வகையில் ஒன்றேனும் இக்காலத்திற் காணப்படவில்லை. யாழுக்கு வேண்டிய மாட்டு நரம்புகளை நந்தனர் வமிசத்தார் : என்று பெரிய புராணத்திற் சொல்லப்படு கிறது. யாழ் கை விரல்களினுல் தடவி ஒலிக்கப் பெறும்,
நாடகத் தமிழ்
* நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்-பாடல்
’ என்னும் * தொல்கா ப்பியச்
சான்ற பலனெறி வமக்கம் *T னற t-| 6 3 றி P κ. مسر சூத்திரம் அக்காலம் நாடக நூல்கள் மிக்கு வழங்கினவென் பதை விளக்குகின்றது. சிலப்பதிகாரம் அரங்கேற்று காதையானும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதய உரையானும் பழய இசை நாடகங்களேக் குறித்த பல அரிய செய்திகள் அறியக் கிடக்கின்றன. நாடகத் தமிழ் அழி நிலை எய்திய இக்காலத்து பண்டைய நாடகச் சிறப்பின்ன முற்ற உணர்த்தும் நூல்கள் கிடைத்தில.
* நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் །འི་ག་འི་ வந்தனவாகத் தொகுத்தக் கூறுதல்; அஃதா வது செல்வத்தாலும், குலத்தாலும், ஒழுக்கத்தானும், அன்பி ைம்ை இாவராய்க் கமரின் நீங்கிக் னி அனபஞணு ஒத்த இருவராயத் தமிரின் நீங்கித் தை
பிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்
・./? ና ལ།། V 8 பொரும அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணாந ாரெனவும், பின்னும் அவர்கள் களவொழுக்கம் நடத்தி
இலக்கண வகையான் வரைந்தெய்தினர் எனவும் பிறவும்
R
~.
闯所 நிகர னவாகிச் சுவைப்பட வருவன வெல்லாம் ஒருங்கு வந்தனவாகக் கூறுதல்.
இளம்பூரண வடிகள்)

Page 72
34.
* தமிழ் நாடகம் முதலிலுண்டானது மத விடய மாகவே யென்பது துணியப்படும். அது கடவுளர் கிரு விழாக்காலங்களில் ஆடல் பாடல்களிாண்டையுஞ் சேர நிகழ்த்துவதினின்றும் உண்டாயிற்று. சில காலத்தின் பின்னர்க் கதை தடையான மனப்பாடங்களும் உடன் கூடின ; அதன்மேல் முதலிற் பாடலாயுள்ள சம்பாஷணை ளுேம் அவற்றுடன் சேர்க்கப்பட்டன. பிற்பாடு நாடகக் தமிழ் வேத்தியல் பொதுவியல் என்ற பிரிவினதாகி அரசர் களாலும் ஏனேயோரானும் ஆதரித்து வளர்க்கப்பட்டது. கி.மு. மூன்ரும் நூற்றண்டினுதல் அல்லாக்கால் அதனி ஒனுஞ் சற்று முற்காலத்தினுதல் நாடகத் தமிழ் உயர்ங்ஃ) பெற்றிருக்கல் வேண்டு. ஈமுனர்ந்துள பழமையான ாேடகிக் தமிழ் நூல்கள் ஆக்னத்தும் அக்காலத்தே நின்று நிலவின வாகவினென்க. ஆகவே அது குற்றங் ୯୬ ଗ୍‌| இல்லாது உண்டான தொழிலென்றே ஆகியில் மகிக்கப் பட்டது. இனி நாடகத் தமிழ் உயர்நிக் விழ்கிலே அழி கிலே என்ற மூன்றுவகை கிலேயும் அடைந்து உருக் குலேந்து போன பின்னரேபார் அதனேக் கண்ணுறுகின்றனம்.
(நாடக வியல்)
'' is as Gnan, பொதுப்பெயர் சுத்தகுந்த பொழுது போக்கிலிருந்துதான் பல்வேறு ரூபமான எல்லா த நகலே " (Fine arts) களும் பிறப்பனவாயினும், பாட்டும் பண் அணும் ஆட்டமுமாகிய மூன்றும் அதனின்றும் கேரே உற்பவிக் கின்றன. கால விளம்பர த்தாலும் நாகரிகத் தேர்ச்சியா அலும் Tasri நடத்திக்காட்டும் தொழில்களே கன்கு விளக்கக் தக்க வசனங்களேத் காதிக்கினிமைபெறக் கோத்து மொ fo தலும், கண்ணுக்கினிமைபெறக் காசாணுகி அவயவங்க ளாலும் முகக்குறிகளாலும் அபிநயிக் துக்காட்டலும், வழக்

125
த்தில் வரவே, பாட்டும் அதனுடன் புணர்ந்த பண்ணும் வையிரண்டுடன் கலந்த ஆட்டமும் தனித்தனி பிறப்பன யின. பாட்டின் சீர், இசை, தளே, அடி முதலியவற்தை ம் அப்பாட்டால் விளங்கும் கவரசங்களேயும் மாத்திாம் கவ ரித்து அபிவிருத்தி பண்ணினுல் அது வித்துவத்ஜன பூஜித ான காவ்யம் என்னுஞ் சிறப்புப்பெயர் பெற்று நிற்கும். ப்படியே பண்ணே மாக்கிரம் விசேடமாகக் கவனித்துச் சாற்கோத்தல் சங்கீதமெனத் தனித்து வளரும். ஆட்டமே வ்வாறே சில சாதியாருள்ளும் தனிப்படத் தழைத்த தனும் முன்னவை பிரண்டுங் கலந்து வழங்கலே பெரும் ன்மை. ஆங்கினங் கலந்து வழங்கும்போது நாடகமென ர் சிறப்புப் பெயர் கூறுதல் வழக்கம்.
* தமது தமிழ் காட்டிலும் இம் முறையே இம் கலைகளும் தொன்றுதொட்டு எற்பட்டு வந்தமைபற்றியே ਨੂੰ ழ இயல், இசை, நாடகம் என்று மூன்று வகையாக முன்னுேச் வகுத்தனர். இம்மூன்றும் காளேற நானேற வெறு வேறு உருக்கொண்டு மாறுபாடு அடைந்துள்ள வன்பது பாவருக்குக் தெரிந்த விஷயம். காவ்யம் ஆடைத் ருக்கும் ஒரு சிறு விகற்பம் பத்துப்பாட்டையாவது கலித் கையையாவது இப்பொழுது வழங்கும் கம்பர் g) tit lit த்தோடோ பிரபுலிங்க ளிலேயோடோ ஒப்பிடுங்கால்
ாங்காதிராது. அவ்வாறே இப்போது போக்கியமாக
ாங்களே ஒப்பிடுங்கால் இசைக்கமிழ் அ டைக்கிருக்கும் றுமை தெரியலாகும். முன்னுேர் கேட்டு Lojaïa,
· · · · ܢ ܡ
சைக்கருவிகளும் பெரும்பாலும் மாய்ந்து போஒன பன்றே சொல்லலாம். இன்னிசை Gu யாழினர்

Page 73
136
ஒருபால்’ என்ற கிருவாசகத்தாலேயே இக்காலத்தில் வழங் கும் வினேயன்று சிலப்பதிகாரம் முதலிய பழைய நூல் களில் நமது மனத்துக்கு எளிதில் வாராவண்ணம் வர்ணிக் கப்பட்டிருக்கும் யாழென்பது வெளிப்பைடயாகும். யாழ் கிராவிடர்க் குரியதும் வீணே வடகிசை ஆரியர் தென் திசைக்குக் கொண்டு வந்த புகியதோர் இசைக் கருவியுமாம் இங்ஙனம் தமிழ் இசைகளும் tri TGRT ES UTGITT GJISTJONITIG I தமிழ் நாடகங்களும் பலவாறு வேற்றுமைப்பட்டு அணுகி வடிவம் இன்னதென்று ஊகித்தல் அருமையாம் படி இறந்து போயினதாகக் காணப்படுகின்றது.
* இப்போது தமிழில் வழங்கிவரும் நாடகங்கள் யாவும் அருணுசலக் கவிராயர் இயற்றிய இராம நாடகத்தைப் பின் ருெடர்ந்தனவா யிருப்பதினுலும் கீர்த்தனேச் சாயை பழைய நூல்களிற் காணுமையாலும் பூர்விக நாடக மென்று நிச்ச யிக்கத்தக்கது யாதொன்றும் இதுவரை வெளிப்படாமை யானும், கமிழ் மொழிக்கே புரிக்கான யாதேனும் நாடகம் இருந்தது தாலும் உண்டோ என்று சிலர் ஐயுறல் இயல்பே யாம். ஆணுல் அதைப் போலவே சங்கேகிப்பதற்கு முதற்காரணம் நாடகமென்பது வடமொழியிலும் ஆங்கி லேயத்திலும் நாம் கண்டு பழகும் நாடகத்துக்கே பெ' ராயிருத்தல் வேண்டுமென்னும் மயக்கமெனத் தோன்று கின்றது. நாடகமென்னும் வடமொழிக்குச் சரியான தென்மொழி கூத்து என்பதே. கிவாகரத்தின் Lly- கூத்தின் trăiel LITFair 16 ປີ ກ່ STL–55 கண்ணுண்ட்
டம் படிகமாட குண்டவம் பாத-மாலுத ஆராங்கல் வாணி
* நாடகம் என்னும் சொல் வடமொழி யென்பதற்கு ஆதாரம் இல்லே. தொல்காப்பியம் முதலிய பழய நூல்களில் நாடகம் என்னும் சொல் பயின்று வந்திருக்கின்றது. عواته وبية முதலிய தமிழ் மூல களே நோக்குவார் நாடகம் வட சொல்லெனக் கூற ஒருப்படார்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I 37
ாவை யியல் கிவய கிருத்தம், முதலியனவாம். ஆதலால் மிழர் கூத்து நாடகமென்று சிறப்பிக் துக் கொண்டவை பஃனத்தும் ஆடலோடமைந்தவையாக இருந்திருக்க வேண்டு மென்று கொ ள்ளுதல் க்ரெக்ாதி மேளதாளங்களுக் San FILI I II யாதேனு மொரு பாவினக்கில் கதையை பமைத்து ஆக்கக் ககையைப் பாடலோடோதி ஆபி யித்தலே ஆதிகாலக் கமிழ் நாடக ரீதியென்று பல காரணங்களாலு பெண்ணுதற் கிடமுண்டு. அவ்வித ஆடல் விகற்பங்கள் எண்ணிறக்கன என்பதற்குப் பழைய வியங்களுட்காணும்மா T. TTSS??) 5-ا சிவனு L-قii', குமரணு _ទាំង இக்கிராணியாடல், துர்க்கையாடல், சக்கமாக ராடல், காம குடல், வேலனுடல், வெறிபாடல் பிசாசுக் கைக்கூத்துக் குரவைக்கூத்தி என்பன ஆகியான மொழிகளே சாட்சியாக
நிற்கும் * மலடி, வரிக்கலுக்கு í rif á: குட்டல்' போல இல் லாக நாடகக் துக்கு இக்தனே பெயர் வகித்தல் இயல்பன்று. மேலும் மேற்கூறிய நடத்து வகைகள் பற் பல காரணக் சேர்க்கையால் தமிழ் நாட்டில் மாய்ந்து போயிருப்பினும் அழிந்தனைகட் கெல்லாம் ஆபயப் பிரதானங் கொடுத்து ஆதரிக்கும் எல்லேபோல் விளங்குகின்ற மலேயாளத்துள் ல கிராமாக்கரங்களில் இன்னும் வழங்குகிற ஐவர்களி, பரிசைகளி, ஒட்டத்துள்ளல் முதலான பல வேறு ஆடற் தைகளேக் காண்பவர்க்குத் தமிழ் நாடு முழுவதும் பூர்வத் கில் வழங்கி வங்க நாடக விகற்பங்கள் இந்தன்மைய வென்று ஊகித்தல் ஒருவாறு கூடியதாகவே யிருக் நின்றது. ஆட்டக் கதை பென்பது மலேயாளத்தில் ாடகங்களின் பெயராகவு மிருக்கின்றது. குறத்திப் ாட்டு உழக்கிப் பாட்டு முதலிய பழைய பிரபந்த ரீதி
ாய்ப் பாடி யாடும் பாவிகற்பங்கள் இன்னும் அகத்தம்.
தமிழ் நாட்டிலும் வில்லடிப் பாட்டு, உடுக்குப் Lil'

Page 74
12S
முதலியன ஆட்டத்தோடு கதை விரித்தலுக்கே உரிச் தானவை நொண்டிச் சிந்து முதலிய பல விகற்பங்களும் பற்பல தாழிசைகளும் ஆடலுக்கு மிக ஏற்றன, ஆதலால் பழைய 5ாடகங்கள் வில்லுப்பாட்டு துள்ளம் பாட்டு முகவி LJiāgā" (#LT sĩủ ஒருவர் தனியாயேனும், கும்மிப் rt's பரிசைகளி முதலியன போலப் பலர் கூடியேனும் jojot:೨ யைக் காள மேளங்களுடன் பாடி அபிநயித்துக் கூறும் ஒருவகைப் பாட்டாக இருந்திருக்கவேண்டுமென்று நிர்ண பிக்கவேண்டும்.
ஆப்படியானுல் தமிழ் சாடகங்கள் யாதொன்றும் இப்போது கிடையாமைக்கு விசேட காரண தேடவேண்டியதற் கவசியமில்லே.
படித்தறிந்து வியத்திலேயே பயணுகக் கொண்ட - ಹೌpo இயற்றமிழ்க் காவியங்களுக்குள் இக்காலம் நமக் கெட்டி னவை எத்தனே, இருக்க விடமே தெரியாது இறந்து போனவை எத்தனே எனக், கனக்கிடுவோமாதில் இப்போது சிவிக்கிற மனிதர்களேயும் இறந்தோரையும் ' என்னிக்
கொண்டற்று ' என வன்ருே மகிக்கத்தக்கதாக விருக்கின் ரது படித்த மாத்திரத்தில் சுவாசானுபவங்காத்தக்க இயற்ற மிழினது கதி இங்ஙனமாயின் ஆடிக்கண்டாலொழிய இன் பம்பபவாத காடகப்பாட்டுகள் கால விளம்பரத்தில் அழிந்து போனது ஒருதி yf FLItfit F மதாபிமானத்தால் ஆழ்வார் அருளிச் செய்த திருவாய் மொழியும் மூவர் தேவாரங்களும் ஒருவாறு அவற்றின் பண்ணும் பிற்காலத்தார் அறியும்ப கில்லாவிடில் பழைய இசைக் திமிழும் இ .iTair 15 ל உண்டாயிருந்ததோ இல்லேயோ என்னும் சந்தேகத்து கன்குே இடக் கருவதாக நிற்கும் F சுந்தவித்திய விஷயமான அபிமானம் க்ேகிக் கேவலம் சமயச் சச்சரவு
E 5TT IT- மூடப்பட்ட இண்ட க்காலத்தில், இயற்றமிழ்க்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

29
வியத் தலைமை பெற்ற சித்தாமணி சிலப்பதிகாரம் முதலிய ல்களே தப்பினது தாலிப்பாக்கியமாய் இருக்குமானுல், ான விஷயங்களாகிய இசைத்தமிழ் நூல்களும் ஆட்டப் ஈட்டான நாடக நூல்களும் மண்னு மாண்டு போனமை றுமே ஒரு ஆச்சரியமா P இசைக்தமிழும் ዖjTL_-öቃ மிழும் தம்முள் சுெருங்கிப சம்பந்தமுடையவையாக
லமுமிருக்க வேண்டுமென்பது எளிதிற் துணியக்
* துவக்கத்தில் புதியன சிறுபான்மையும் பழைய சிந்து ாழிசை முதலியன மிகுதியாக விருக்கிருக்க வேண்டும். லஞ் செல்லச் செல்லப் பழையன குறைந்தும் புதிய ர்ேத்த ங்கள் மிகுந்தும் வந்தன. அருணுசலக் கவிராயர் இராம டகத்திலும் குற்றுலக் குறவஞ்சி முதலிய பழமை பற்றிய ாடக வியல்களிலும், இவரின் இரண்டு வகைப்பட்ட ஆட்டப்
ட்டுகள் கலந்து கிடப்பன கா ணலாகும். =குேண்ட்
ருமைகளிற் சிறந்த அருணுசலக் கவிராயர் கமது ஒப்பற்ற டகம் ஆண்மத்த பின்னர் ஆகனேயே வாய்ப்பாடமாகக் ாண்டு பிற்காலத்தவர் பற்பல நாடகஞ் செய்தனர் வற்றுள்ளும் பழைய சிந்து முதலியவை இசான்னப் பாரில் விபீஷணன் போல இன்னும் இறவாமல் ஆங்காங்கு காட்டி கிற்றல் புலப்படக்கூடும். இவ்வாறு பழைய கப்பாட்டினியல்பு முற்றும்மா அறுகலடைந்துபோயினும் ரு விஷயத்தில் பழைய தமிழ்நாடக வியல்பு சற்றும் மாறு டாது கின்றுகொண்டது. இக்காலத்து நாடகங்கள் 3ாத்த த வடிவமாக இருந்தபோதிலும் -په تړافت بېل)J/i; if ஒன் றேனும் ட் டமின்றி நடந்தேறுதல் கிட்டியதன்று. இவ்வாட்டமே மற்கூறியபடி தமிழ்க் கூக்கிற்கும் இரனேய' டகங்களுக் கும் உள்ள தலேமையான வேற்றுமை பண், பா, அங்கு

Page 75
18 0
முதலிய யாவும் வேற்றுமைப்படும். தமிழ்க்கூத்துக் குரிய ஆடல் ஒன்றும் இதுவரைக்கும் பேதப்படவில்லை.
(நாடகத்தமிழ் ஆராய்ச்சி.)
* இவ்வாறு தோன்றி வளர்ந்த நாடகத் தமிழ் விழ் கிலே படைபப் புகுந்தது. அதற்குக் காரணம் பாது F ஒழுக்க கிலே வகுக்கப் புகுந்த ஆரியரும் சைனரும் நாடகக் காட்சிபாற் காமமே அறிவிலும் மிகப் பெருகுகின்றதென் ணும் (5. I stili, கொள்கையுடையரா ய்க் Jirgil நூல்களில் கடியப் படுபவற்றுள் நாடகத்தையுஞ் சேர்த்துக் கூறினர். அக்காலக்கிருக்க அரசர்க்குக் துர் ப்போதனே செய்து நாடகத் தமிழைத் தஃலயெழ வொட்டாது அடக்கி வந்த னர். ஒளவையாரும் கிருவள்ளுவரும் ஒருங்கே புகழ்ந்த இல்லற வாழ்க்கையைக் தீவினே யச்சத்தின்பாத் படுக்கிக் கூறுஞ் சைனர்கள் நாடகத் தமிழ் நாலேக் கடிக்ககோரச் Fரிய மன்று. இவ்வளவு கட்டுப்பாட்டுக் கிடையில் நாடகக்
தமிழ் எவ்வாறு கலேயெடுத்து ஒங்கப் போகின்றது. அதன் மேல் இயற்றமிழ்க் காப்பியங்கள் நாடெங்கும் மலிந்து சிறந்து நாடகத் தமிழை வளாவொட்டாது தடுப்பன Hirtuo817. இவ்வாறு நாடகக் தமிழுக்கு நாற்புற த்திலும் தடைக ௗமைக்கப்பட்டமையின் அஃது அழிகிலே எய்தக் த&லப்பட்டது. பண்டிதரானேர் கடிந்து நாடகக் தமிழைக் கைவிடவே ليلى للقت" Triff கையகப்பட்டு இழிவடைந்து தெருக்கூத் களவிலே கிற்கின்றது.
(தமிழ் மொழியின் வரலாறு.)
*rடத்தும் விழவும் மனமுங் கொலேக்கள்மு கார்த்த முனே புள்ளும் வேறிடத்து-மோத்து மொழுக்கு முடையவர் செல்லாமே செல்லி எளிழுக்கு பிழவுந்தரும் (ஏலாதி-3ே,

B
சிந்தாமணி சூளாமணி முதலிய கர பச்சுவை மலிக்க ஈசன காப்பியங்களே கோக்குமிடத்து சைனர்கள் 5ாடகத்
தமிழை வளாவொட்டாது தடுத்தார்கள் என்று கூற
தமிழ் இலக்கணத்தின் சிறப்பியல்பு. வடமொழி தமிழ் என்னும் இருமொழிப் புலமையும் ஒருங்கே கிசம்பிய சிவஞான சுவாமிகள் ' கமிழ் மொழிப் புணர்ச்சிக் கட்படும் குறியீடுகளும், வினேக்குறிப்பு வினேத் தொகை முகலிய சொல்லிலக்கணங்களும், உ பர்கினே அஃறிணே முதலிய சொற் பாகுபாடுகளும், குறிஞ்சி வெட்சி முதலிய கிணேப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுளிலக்கணமும் இன்னுேரன்ன
வும் வடமொழியிற் பெறப்படா * சுடறும் பொருட் பாகுபாடுகள் பொதுவாகாது தமிழிற்கே சிறந்து
என்றும் ' +ண்டு
வேருென்ருற் பெறப்படாமையின் இப்பொருள் பற்றிவரும் பரிபாடல், கலி, அகநானூறு, புறநானூறு, ஐங் குறுநூறு, ஈற்றினே, குறுக்கொகை, ஆற்றுப்படை, பதிற் ரப்பத்து முதலிய செய்யுள் ஆராயப் புகுந்தார்க்கு இப் பாருட் பாகுபாடு உனாாக்கால் குன்று முட்டிய குரி இப்போ ல இடர் ப்படுவர் ' என்றும் 'சோதிடம் முதலிய பிறகலேகளெல்லாம் ஆரியக்கிலும் தமிழிலும், ஏனே மொழி களினும் வேறுபாடின்றி ஒப்ப நிகழ்தலின், அவற்றை வேறு விதிக்கவேண்டாமையாலும், இயலிரை மென் ணும் மூன் ஆறும் தமிழ் நிலத்துச் சிறிது வேறுபாடுடை மையின் ஆவற்றை விதிக்க வேண்டுதலாலும் அதுபற்றி அகத்தியத்துள் மூன்றுமே யெடுக் கோதினுர்’ என்றும் தொல்காப்பியச் குக்கிர விருக்கியின் கண் ஆங்காங்கு உரைத்திருக்கி இன்றனர்.

Page 76
32
' ' தமிழ்மொழியில் எல்லாப் பொருள்களும் இரண்டு கிணேகளாகப் பகுக்கப்பட்டுள. பகுத்தறிவுடைய உயிர் களே உயர்கிணேயாகப்பகுத்து உயர்கினேயில் ஆணுக்கு ஆண்பாலும் பெண்ணுக்குப் பெண்பாலும் பலருக்குப் பலர்பாலும் பகுக்கறிவற்ற விலங்கு, பறவை, கீர்வாழ்வன முதலிய உயிர்களேயும், மரம், கொடி, செடி, பறவை, நீர் வாழ்வன முதலிய உயிர்களேயும் அஃறினோபாகப் பகுக்து, அவற்றுள் ஒன்றுக்கு ஒன்றன்பாலும், பலவற்றுக்குப் பல வின் பாலும் கூறப்படுகின்றன. தமிழில் விலங்கு, பறவை, ஆண் பெண்களுக்கும் வெவ்வேறு பெயர் கூறப் படினும், அவைகள் பகுக்கறிவற்ற காழ்க்க சாகியிற் பட் ட்ன் வாதலால் அஃறிஃணயாகவே கூறப்பட்டிருக்கின்றன. ஆங்கிலம் முதலிய பாஷைகளில் சில அஃறிணை உயிர்களுக் கும், பொருள்களுக்கும் ஆண்பால் பெண்பால் கூறினும் அங்ஙனம் கூறப்பட்ட ஒன்றையே பல பால்களில் கூறு வதும், உயர்திஃண ஆண்பாலுக்கு பெண்பாற் பெயரும், பெண்பாலுக்கு ஆண்பால் ஒன்றன்பால் பெயரும் மு:ன:
பிறழ்ந்து கூறுவதும் இல்லே.
1
வடமொழியிலோ பால் வரம் பின்றிப் பலவாறு கூறுவ
துண்டு. அவை வருமாறு :
Lm250T GLILLIT.
1. பார்யா - பெண்பால் (ஒருமை)
)ஆண்பால் (என்றும் பன்மை - "ות 7 לה, .2 3. களத்ாம் - ஒன்றன் பால்

丑岛路
கல்வின் பேயர்
1. பாஷாண - ஆண்பால் 2. நிலா - பெண்பால் 3. g. u Gilir. ஒன்றன்பா
தலால் தமிழ் பால்கினேயில் இனியது.
ჭწალე மொழியிலுள்ள சொற்களினுெவிகளே வரிவடி
ற் காண்பித்தற்குக் கருவியாயுள்ளது எழுத்து. அங் னமே தமிழ்மொழியின் ஒலியும், அதற்குரிய எழுத்தும், ற்றுமை பெற்றுள்ளது. வேறு சில பாழைகளைப்போல்
G72 Gall 537 TWA, கெ Tಫೌ7ಿ| 'ಘಷ್ರ?)]tನ?!riosa) L-LiTi/ಸೌನ'-
வடமொழியில் ப்ரஹ்ம என்றெழுதிப் ப்ரம்ஹ என்ருெவிக்கின்றனர். சிண்ம : לל சிம்ஹ : வஹ்கி வத்தறி לל விஜ்ஞானம் , விக்ஞானம் לל
வினேத் தேளிவு.
*வினேச்சொல் ஒருவன் ஒருக்கி ஒன்றன் செயல்களைக் றிக்குஞ் சொல். தமிழ்மொழியில் வினேகள் அவற்றைத் தெளிவுபெறக் குறிக்கின்றன. பிற மொழிகளிலுள்ள னேச்சொற்கள் ஆண் பெண் ஒன்றன் பால்களின் வேறு ாட்டை விளக்குகின்றில.
ஆங்கிலம் வடமொழி Qafi gairapair (He) goes (orv) as Faff செல்கின்குள் (She) goes (ஸா) கச்சதி செல்கின்றது (It) goes (கத்) கச்சதி

Page 77
1器4
ஆங்கிலம். இலத்தீன், 35 Si Rosi (He) loves (Ile) amat Goiádigalpair (She) loves (Illa) amat Ĝis ĝAdiĝGorgy (It) lowes (Illud) a Imakt
சோற்ருேடரழகு.
* சொற்ருெடர் - வாக்கியம். அது எழுவாய் பய னிலே, செயப்படுபொருள் என்பன கூடி ஒரு கருத்தை விளக்குவது. அவற்ருேடு அவற்றின் உரிச்சொற்களும், இடைப்பிற வரலாய் வரும் &ib)II க்கியங்களும் சேர்ந்து குழுச் சொற்ருெடராயும் வரும் பெயர் வினேகளின் இய)ே உரிச்சொற்களாலும், பல பெயர்களே இடைச்சொற்களா னும், பல வினேகளே எச்சத்தாலும், பெயர்க்கும் வினேக்கும் உள்ள சம்பந்தத்தை வேற்றுமை யுருபானும் புணர்த்திக் தமிழில் விளக்கப்படுகின்றது. ஆங்கிலக்கிலும், தமிழ் போலவே சொற்ருெடருளது.
:ேவடமொழி, இலத்தீன், கிரீக்கு முதலிய பாழைகளில் அங்கனம் அழகுபெருத விசேடணங்களுக்கும் அவை தழுவும் பெயர்களின் வேற்றுமை பால்களை யேற்றல், இடைச்சொல் இன்றிக் கூறல், முதலிய அழகின்மை
புள்ளதி
உதாரணம்.
(1) ' கரிய பெரிய குயிலே வஞ்சகமுடைய காக்கை
யாக எண்ணினுன் க்ருஷ்ணம் ப்ரஹத்தம் வஞ்சகி ir Tagli
BLfgు. கரியதை பெரியகை குயிலே வஞ்சகமுடையதை
காக்கையை எண்ணினுன்

35
(2) மதுரையிலிருக்கும் இராமன் மகன் புலவனுகிய சுமுகஞன இலக்குமணனுல் இது எழுதப்
--g மதுராவாசிகா ராம புக்திரேண பண்டகோ
சுமுகே டு லஷ்மனோ இயம் விக்யகே. மதுரையில் வசிப்பவனுல் இராமன் முக்கிானுல் சுமுகனுல் லட்சுமணனுல் இது எழுதப் பட்டது.'
(மொழிநூல் - மாகறல் கார்த்திகேய முதலியார்).
லக்கணநூல்கள். இ
அகத்தியர் தமிழுக்குச் சிற்றகத்தியம் போகத்தியம் என்னும் இலக்கண நூல்கள் செய்தாரென்ப. அவற்றுள்
ూ ஒன்றேனும் இக்காலத்துக் கிடைக்கவில்லே. சிதறுண்ட
స్ Γι ο ஒன்று அச்சடிக்கிருக்கின்றனர். அச்குக்கிரக் களின் சொன்னடையும், பொருணடையும் நோக்கும்இளஞ் ருரும் அவை பண்டைத் தமிழன்று என்ற துணிந்து கொள்வர். அகத்தியத்துக்கு முன் குமாம் என்னும் ஓர் இலக்கணம் இருந்ததாகக் கூறுப, பேராற்று நெடுந்துறையன் பெரு நூல் களுள்ளும்இடைக்கழிச் செங் கோடன் இயனூல் முதலிய இலக்கணங்கள் இருந்து மறைந்து போனதாக செங்கோன்கரைச் செவவு என்னும்
- | = - ը :  ܲܕ ܲܒ ܗ நூலால் அறிகின்ருேம். கொல்காப்பியத்திற் பலவிடங்
* முந்த துல் அகத்தியமும் மாபுசானாமூம் இசைதனுக்கமும் இவற்றுட் கூறிய இலக்கணங்களாவன எழுத்துச் சொற் பொருள் பாப்பும் சந்தமும் வழக்கியலும் அரசியலும் பார்ப்பனவியலும் சோ திடமுங் காக்கருவமுங் கூத்தும் பிறவுமாம். (நச்சிஞர்க்கினியர் )

Page 78
136
களிற் காணப்படும் ' என்ட, என்மஞர் புலவர், இபள் புணர்ந்தோர் மொழிப' என்பன போன்ற சொற்ருெடர் களால் தொல்காப்பியர்காலத்தும் முன்பும் பல இலக்கண் இலக்கியங்கள் இருத்தனவென்டது தெளிவு.
யாப்பருங்க லவிருத்தி பாப்பருங்கலக்காரிகை {Löpe உரை முதலியவற்றில் இக்காலத்துக்கிடையாக பல இனக் கண இலக்கியங்கள் மேற்கோள்களாக வங்கிருக்கின்றன.
இக்காலம் வழங்கும் இலக்கணங்கள், தொல்காப்பியம், விரசோழியம், பாப்பருங்கலக் காரிகை, கண்டியலங்காரம், மாறனலங்காரம், இலக்கண விளக்கம், இலக்கணக்கொத்து, கேமிராகம், நன்னூல் முதலியன.
பிறமொழிகளிலுள்ள இலக்கி னங்களும் பிறவுமாயுள்ள நூல்கள் முன்னிருந்தவற்றிலிருந்து விரித்து எழுதப்பெறும். தமிழ் நூல்களோ முன்னிருக்கவற்றைச் சுருக்கி எ Աե: கப்படுவனவாகும். உதாரணத்துக்கு தொல்காப்பியம், நன் அனுரல், இலக்கணச்சுருக்கம் முகலியவற்றை நோக்குக.
சங்கம்.
'கலேச் சங்கம் இடைச் சங்கங் கடைச் சங்க மென மூவகைப்பட்ட சங்கம் இ இயிஞர் பாண்டியர்கள். அவ ருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியணுரும், கிரிபுர மெரிக்க விரிசடைக் கடவுளுங், குன்ற மெறிக்க குமரவே ளும், முரஞ்சி யூர் முடி நாகராயரும் கிகியின் கிழவனு மென இத் தொடக்கத்தார் ஐஞ்ஞாற்று நாற்பத்தொன்ப கின்மர் பாடினு சென்ப. அவர்களாற் பாடப்பட்டன எத்துணேயோ பரிபாடலும், முதுகாரையும், முதுகுரு கும், களரியா விரையுமென இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தா

187
ரென்ப. அவர்களேச் சங்கநிf இயினும் காய்சின வழுதி
முதலாகக் கடுங்கோனீருக எண்பத்தொன் பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து சுமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப. அவர்க்கு நூல் அகத்தியம்.
‘இனி இடைச்சங்கமிருந்தார் அகத்தியனரும் தொல் காப்பியஞரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க் காப்பியனும், சிறு பாண்டாங்கனும், கிரையன் மாறனும், துவரைக் கோனும் ாேக்கையு மென இக்கொ க்கத்தார் ஐம்பக் தொன் பதின் மரென்ட, அவருள் ரிட்ட மூவாயிரக் தெழு நாற்றவர் பாடினுரென்ப, அவர் களாற் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், யாழமாலே பகவலுமென இத்தொடக்கத்தன என்ப. yவர்க்கு நூல் அகக்கியமுக் கொல்காப்பியமும், மாபுராண ம், இசை நுணுக்கமும், பூக புராணமுமென இவை யன்ப. அவர் மூவாயிரக் கெழுநூற்றியாண்டு சங்க மிருந்தாரென்ப. அவரைச் சங்கமிரி இயிஞர் வெண்டேர்ச் சேழியன் {ւn:Eտմ0 մ: முடத்திருமாற எனிருக ஐம்பத்தொன் பதின்மரென்ப. அவருட் Jeff Luti, கேறிஞர் ஐவர் பாண்டிய ரென்ட் அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்
கென்ட் ஆக்காலத்துப் போலும் பாண்டிய நாட்டைக் கடல் கொண்டது.
'இனிக் கடைச் சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு BLE&#" வியாரும் சேங்கம் பூகஞரும் அறிவுடையானுரும், பெருங்குன்றார்க் கிழாரும், இளங்கிருமாறனும் மதுரை LITŠryf? If நல்லத்துவரூரும் மருதனிள ஈர்பினுரும், கணக்காயனுர் மகனுர் நக்கிரணுரு மென இக்தொடக் நத்தார் நாற்பத்தொன்பதின் மரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினு ரென்ப.
வர்களாற் பாடப்பட்டன நெடுந்தொகை 西门அனுாறும்,குறுங்

Page 79
B8
தொகை கானூறும், நற்றிணே நானூறும், புறநானூறும் ஐங்குறு நூறும், பகிற்றுப்பத்தும், நாற்றைம்பதிகலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென்று இத்தொடக் கத்தன. அவர்க்கு துல் அகக்கியமுங் கொல்காப்பியமுமென்ப, அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ஆயிரக்கொண்ணுாற்றைம்பதிற்றி பாண்டு என்ப. அவர்களேச் சங்கமிரீஇயினுர் கடல் கொள்ளப்பட் டுப் போக்கிருந்த முடக்கிருமாறன் முதலாக உக்கிரப் பெரு வழுகி யிருக நாற்பக் கொன் பதின்ம ரென்ட அவருட் கவியரங்கேறினுள் மூவர் பாண்டிய சென்டர். அவர் சங்கமிருத்து தமிழாராய்ந்தது உத்தர மதுரை யென்ப.'
(இறையணு கப்பொருளுரை
களவியலுரையிற் கூதப்பட்ட சங்கப் புலவர்கள் LG) சங்கநூற் செய்யுட்களே இயற்றிய புலவர்களாகக் காணப் படுதலின் களவியலுரையிற் காணப்படும் சங்க au T&lווקו. הנ ஆகாரமற்ற கட்டுக்கதை என்று கருத இடமில்லே. பண்டை காளிற் சங்கமிருந்து தமிழ் வளர்த்தமையை,
* சிறைவான் புனற்றில்லேச் சிற்றம்பலத்து
மென் சிந்தை புள்ளும்
உறை வானுயர் மதிற்கூட லினுய்ந்த
விொண்டிங் தமிழின்-றுறை
(கிருக்கோவையார்) * ஞான சம்பந்த லுரை செய் சங்கமலி செந்தமிழ் ?
(Fir - )نقاش(
திருவால வாயில் எம்மைப் பவங்கீர்த்தவர் சங்கமிருந்து '
(பெரியபுராணம்)
* சங்கத் தமிழ் மூன்றுங் தர ? (நவழில்)

39
கேன்பாட்டுப் புலவனுய் சங்கமேறி கற்கனகக்
கிழிதருமிக் கருளினுன் காண் ?
(கிரு. நா. தே. கிருப்புத்தூர்)
னவரும் தெய்வப்பெற்றியாளர் திருவாக்குகளா ஞேர்க.
* மதுரைத் தலபுராணம் குலசேகா பாண்டியன் முதல் துரேசுவா பாண்டியனிருக எழுபத்துநாலு பாண்டியசைப் நீறிச் சொல்லுகின்றது. இப்போதுள்ள மதுரையில் ரசு புரிந்த பாண்டியர்கள் இவர்கள்தான். கடைசிப் ாண்டியனுக்கு முதல் ஆண்ட கூன் பாண்டியன் அல்லது நடுமா தன் ஏழாம் நூற்குண்டின் முற்பகுதியில் இருந்த னென்பது துணியப்பட்டது. அவனது ஆட்சியில் சங்க மிருந்ததாக 5ק}T3לuיה שT_ית" ங் கானப்படவில்லே. கி.பி. காலாம் நூற்குண்டு வரையிலிருந்த மானிக்கவராக ஆவாமிகள் ாலத்தில் சங்கத்தைப்பற்றிய செய்தி இறந்தகால நிகழ்ச்சி |Ia காணப்படுகின்றது. கி. பி. இரண்டாம் நூற்ருண் டில் இயற்றப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை யென்னும் நூல்களில் சங்கத்தைப்பற்றிய குறிப்புக் காணப்படவில்லை. புன்ருஞ் சங்கத்தின் கடைசிப் பாண்டியன் உக்கிரப்பெரு பழுதி பென்பது கன்ன பரம்பரை. இப்பாண்டியன் காலக் R திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்று சொல்லப் படுகின்றது. இப்போது அப்பாண்டியன் தல புரா னத்திற் சொல்லப்படும் T4 பாண்டியருள் எவனென்று தீர்மானிக்க முடியவில்லே. புராணமெழுதியவர் தமிழ்ப் பெயர்களைச் சமஸ்கிருகத்தில் மொழி பெயர்த்து எழுதியதே இதற்குக் கார3ரர். كفyLنLپه لـ யிருந்தாலும் இப்பாண்டியனுடைய காலக்கை ஒருவாறு நிச்சயித்தல் கூடும். இவன் கரிகாற் சோழனின் கந்தையாகிய இளஞ்சேட் சென்னியின் காலக் நில் இருந்தவனென்று சொல்லப்படுகின்றது. அவன்

Page 80
140
காலம் கி. பி. 50-90 வரையிலாகும். ஆகவே சங்கத்தின் இறுதிச் காலம் முதலாம் நூற்ருண்டிலென்று துணிதல் வேண்டும். அதற்குப் பின் சங்கமிருந்ததற்கு உண்மைச் சான்றுகள் கிடைக்கவில்லை. சங்கம் ஒடுங்கியது முதல் நூற்றண்டின் முற்பகுதியிலாகும். இனிச் சங்கம் தொடங் கிய காலத்தைக் குறித்து ஆராய்வோம். 196 பாண்டியர்
கள் 8900 ஆண்டுகளாகச் சங்கம் கடத்தினுர்களென்று முன் ஒரிடத்தில் கூறப்பட்டது. ஒரு அரசனுக்குரிய காலம் இருபது என வைத்துக் கணக்கிட்டமையின் இக் காலக் கணக்கு ஏற்பட்டது. தென் மதுரையிலே நடந்த კgr:#; ჟEti; ხ.წ அரசர் ஆதரவின்கீழ் நடை பெற்றதென்றும் சொல்லப்படுகின்றது. அப்படியா யிருந்தால் 89 பாண்டி பருக்குரிய கால எல்லே 1780 ஆண்டுகளாகின்றன. 1780 ஆண்டுகளே 3900 ஆண்டுகளி னின்றும் எடுத்துவிட எஞ்சி நிற்பது 2120 ஆண்டுகளாகும். இதனேயே தென்மது ரையைக் கடல் கொண்ட காஸ்பெனக் கொள்ளுதல்
வேண்டும். சலப் பிரளய முண்டான காலம் கி. ፴ፆነ፡
2105 எனயூகர் குறிப்பிட்டிருக்கின்றனர். இக்காலக்கணக்கு தென் மதுரையைக் கடல் கொண்டதெனச் சொல்லப் படும் காலத்தோடு ஒத்திருக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் 3900 வரையில் சங்கக் தொடங்கியதெனப் பெரும்படி
யாகக் கூறலாம், பழைய தமிழகம் மிகவும் சீர்திருத்தம் பெற்றிருந்த தென்பதையும் அது பிற நாடுகளுடன் வியா பாரம் நடத்திய தென்பதையும் கினேவில் வைத்துக்கொண் டால் தமிழ்ச் சங்கம் அக்காலத்தில் கடை பெற்றிருக்கக் கூடா கென்ற ஒருபோதுங் கருத இடம் இருக்கமாட்
டTதி
ஹெகேசின் (Regozin) என்பவர் வேத இந்தியா
என்னும் நூலில் கூறியிருப்பது வருமாறு :-' 'ஊர்' என்
 
 
 

4.
ம் பட்டினத்தில் ஊர் எயா என்னும் வேந்தனுல் கி.மு. வாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டுவிக்கப்பட்ட பழ. ட்டிடங்களைம் கிளறிப் பார்த்தபோது தமிழகத்தில் மலே ாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமாத் ண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. விக்கியத்துக்கு டக்கே அவ்விதமான தேக்க மரம் காணப்படுவதில்லே. து ஐயாயிரமாண்டுகளுக்கு முன் தமிழர்கள் எவ்வளவு திருத்த மடைந்திருந்தார்கள் என்பதை விளக்குகின் ஆகவே உலக முழுமையிலும் பாண்டிய வமிசமே கப் பழைய தென்றும் தென் மதுரையில் அவர்களால் வப்பட்ட சங்கமே எல்லாச் சங்கங்களுக்கும் முற்பட்ட ன்றும் சொல்வதில் ஆச்சரியத்துக் குரியது ஒன்று லே, பழைய மதுரையின் அழிவுக்குப் பிற்பாடு ாண்டியருக்குக் கலேகாமாயிருந்தது கபாடபுர மென்று ராமாயணத்திற் படிக்கின்ருேம். இரண்டாவது நடத்திய 59 பாண்டியரின் காலம் | SO ஆண்டுகளாகும். 、 இரண்டாஞ் சங்கத்தின் இறுதிக் காலமும் ಗ್ರà: பஞ் சங்கத்தின் தொடக்கமாகிய (2120-180) கி. மு. 0-க்குக் கொண்டுவந்து விடுகின்றது. இரண்டாவது தலே rro. I, T – T கடற்பெருக்கிஐ ல் அழிக்கப்பட்ட நன்பதும் அவ்வழிவுக்குப் பிழைக்கிருந்த பாண்டியனே படியும் கூடலில் சங்கம் நிறுவினுனென்பதும் கன்ன பரம் ரை தலபுராணத்தின்படி மூன்றுவது சங்கத்தை நிறுவி வன் உக்கிரபாண்டியனுவன். மாபாரதத்தில் சொல்லப் ம் பப்புரவாகன் இவனே. இவன் மலேயக் துவச பாண் னின் போனென்றும் மலேயத்துவசனின் ஒரே குமாரி ச்சுனனே மணந்தாளென்றும் மாபாரதம் கூறுகின்றது.
புராணத்திற் கூறப்படும் சுங்கரன் என்னும் பெயர் ருச்சனக்னக் குறிக்கும். மலேயத்துவசனே அருச்சுனன்

Page 81
142
மணலூரிற் சந்தித்ததாக மாபாரதங் கூறுகின்றது. கூடலே தலைநகராகக் கொண்ட பாண்டியன் மணலூரிலிருந்து வக் தானென்று பழைய கிருவிளையாடல் சொல்லுகின்றது. இதனுல் கபாடபுரக்கின் அழிவுக்குப் பிறகும் கூடலேக் தஃலநகராகக் கொள்வதற்கு முன்னும் மனலூர் பாண்டிய னுடைய கலே தகராயிருந்ததெனச் சொல்லவேண்டும் , துல் லாவிடில் மணலூரும் கபாடபுரமும் ஒன்று எனக் கொள் ளல் வேண்டும். இராமாயணம் பாரதம் என்னும் இரண்டு நூல்களிலும் பாண்டியனுடைய கலேநகரமாகச் சொல்லப்ப
நிடங்கள் ஒரே பிடக்கைக் குறிக்கின்றன. இராமாயணத் தில் வான்மீகி சுக்கிரிபன் வானாவீரருக்குக் கூறிய கூகு வைத்துச் சொல்லுமிடத்து கபாடம் தாம்பிாபர்னி கட லோடு சங்கமிக்கு மிடத்தில் இருப்பதாகச் சொல்லபட் டிருக்கின்றது. அருச்சுனன் தெற்கே தீர்த்தயாத்தின செய்ததைச் சொல்லுமிடத்து அவன் கலிங்கநாட்டு
கூடாகச் சென்று கோதாவரியையும் கிழக்குக் கொட
பு:லயிலேயுள்ள மகேந்திரத்தையுங் கடந்து காவேரியைப் பின்புறமாக விட்டு கிழக்குக் கடலோரக்கிலேயிருந்த மன லூரை யடைந்தானெனச் சொல்லப்படுகின்றது.
மரபாரதத்திற் காணப்படும் மலூைரென்பது மண பட்டினம்’ என்னும் பொருள் கரும் கணித் தமிழ்ப் பெய ாாகும். LII Liro 3137 இராமாயணத்திற் காணப்படுவ, *அஃலவாய்' என்னும் தமிழ்ப் பெயரின் சமக்கிருத மொழி பெயர்ப்பாகக் காணப்படுகின்றது. அஃலவாய் துறைமுக என்பன ஒரு பொருட் சொற்கள். பழந்தமிழ்க் கடவுளாகிய முருகன் கோயிலுக்கு இருப்பிடமா நிய செந்தில்பலே -Y யோரத்தில் இருந்த துறைமுகப் பட்டினத்துக்கு - முகப் பட்டினமெனப் பெயருளது. அது இப்போதுன் திருச்செந்தூருக்குப் பக்கத்திலே யிருந்தது. பழைய
 
 
 
 
 
 
 

L4器
டுகின் றது. கபாடபுரம் அல்லது ஆலேவாய் அக்காலத்து ல்லாவிடங்களாலும் அறியப்பட்ட பாண்டிய அரச நடைய துறைமுகப் பட்டினமென்றும் அதனருகே அரச துடைய மாளிகையும் அரசிருக்கைபு மிருந்த ஒரு சிறு ட்டினமிருந்த தென்றும் கருதி இடமுண்டு. மணலூரி கிருந்த கடைசிப் பாண்டியன் ஆலேவாயைக் கடல் கொண்டகற்பின் தனது கலேககரை மதுரைக்கு மாற்றி |க்கவேண்டும். இம் மாற்றம் பாரதப் போருக்குப் பின்னுதல் வேண்டும். இதற்குப் பின் கூட்டப்பட்ட மூன் ரஞ் சங்கத்தை 49 பாண்டியர்கள் கடத்தியிருக்கிருர்கள். இச்சங்கட இடையீடின்றி 10 நூற்றுண்டுகளாக உக்கிரப் ருவழுதி காலம்வரையில் நடைபெற்றிருக்கின்றது. இவனுடைய காலம் கி. பி. 30-க்கும் 50-க்கும் இடையில் тәії.ду முன்னமே التسلل للبلاي செய்யப்பட்டது. கி. பி. 50 சங்கத்தின் இறகிக்காலமாகும்.
(Notes on Sanga In Age by Pandit. Sa wariraTan-Tamilian Antiquary, Wol. 2, No. 1.)
அகத்தியர்
அகத்தியரைப்பற்றிய செய்திகள் புராணங்களிலும் இதிகாசங்களிலும் மற்றும் நூல்களிலும் மலிந்து காணப் பெறுகின்றன. அப்படியிருந்தபோதும் அவரைக் குறித்த உண்மை வரலாறனேத்தையும் ஆராய்ந்து கோவைப்படுத் நிக் கூறுவது இலகுவன்று. அவருடைய பிறப்பைக் குறிக் துப் பலவகையான கதைகளுண்டு. அவற்றுட் பெரும் பாலன இயற்கைக்கு மாருகக் காணப்படுதலின் அவை பப்படத்தக்கனவல்ல. தென்னுட்டு முனிவருள் ஒரு i புலக்கியர். இவருடைய புதல்வருக்கு அகத்திய

Page 82
144
ரென்று பெயர். புலத்தியர் இலங்கை வேந்தணுகிய இரா வணனின் பாட்டன், அகத்தியர் கலசத்திற் பிறந்தா ரென் பதும், அவர் பெருவிரலினளவின ரென்பதும், கடலேக் குடித்தாரென்பதும், விங்கியமலையை அடக்கினுரென்பதும் புராணக் கதைகள். அக்கதைகள் நேராகப் பொருள் கொள்ளவியலா, சுவாமி திருக்கலி பாணத்துக்கு இருடி களும் முனிவருக் தேவரும் மேருவில் ஈண்டியபோது வட கோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்த கதைகளு மப்படியே. புராணக் கதைகளேக் கொண்டு ஒருவகையான முடிவுகளே பும் அடைதல் கூடாது. விருத்திரன் மழைமுகி லென்றும் இங்கிரன் Loop பெய்தற கிடமாயுள்ள விண்ணென்றும் தத்துவார்த்தம் பகர்கின்றனர். அது உண்மையாயின் அகக் தியர் நகுடக்ளச் சபிக்கது கடலேக் குடிக்கது முதலிய கதைகள் கற்பனேயாய் மாறுகின்றன. இப்படியே புராணக் கதைகளுக்குக் தத்துவப் பொருள் கூறப் புகுமிடத்து உண்மையென நம்பப்பட்டு வரும் பலகதைகள் கற்பஃனயாகக் கோன்றுகின்றன. ஆகத்தியர் இமயமைேய அடுக்துள்ள நாடுகளினின்றும் பெயர்ந்து தமிழ் நாடு போங்கரர் என்ப தற்குப் புராணக் கதைகளேயும் அவற்றைக் கழுவி சச்சி ஞர்க்கினியர் தொல்காப்பியப் பாயிரவுரையில் எழுகிய கதையையுமன்றி வேறு பிரமாணங்கள் இன்று. தமிழ் ஆரியப் போர் உண்டான காலத்து இவைபோன்ற கதை கள் முளைத்தல் இயல்பு: ஆகத்தியர் மிகப் பழைய காலர் தொட்டே பொதியின் மலேயில் வசித்தா ரென்பதற்கு அகத்தியன் என்னும் விண்மீனுக்கு பொதியின் முனிவன் என்னும் பெயர் பரிபாடலிற் காணப்படுதலே போதிய சான்று. 4 தெண்ணீரருவிக்கானுர் மலேயக்கருக்தவன் (யாப்பருங்கலக் காரிகை). அகத்தியர் குடகுமலையிற் றங்கி பொதியின் மலேக்கு வந்தமையின் அவர் குடமுனி யெனப்

145
பட்டார் என்றும் பின்னுள்ளார் இப்பொருளை மறந்து (குட னி), கலசயோனி என்னும் பெயரால் வழங்கினர் எனவும்
றுகின்றனர்.
'இராவணனேக் கங்கருவத்தாற் பிணித்து அவனே ண்டுவராமல் விலக்கி ' என ஈச்சிஞர்க்கினியர் கூறும்
நவரென்று விளங்குகின்றது. இளிக் கடைச் சங்கப் புலவரு னொருவராகிய மதுரைக் கூலவாணிகன் சாக்கஞர் காமியற் றிய மணிமேகலேக் காப்பியத்தில் காவிரிப்பூம்பட்டினத் நிருக்க காங்கனென்னும் சோழமன்னன், பரசுராமன் தன் ஞடு போர்குறிக் து வருகலேக் துர்க்காதேவியா லுணர்ந்து அவளேவற்படி கணிகை வயிற்றுப் பிறந்தமையால் -of ாளுரிமையில்லாக ககந்தனென்பானே நகரைக் கா க்குமாறு வைத்துவிட்டு அகத்திய முனிவரைச் சரணடைந்தானென் ம் அவன் வேண்டிக்கொள்ள, அகத்தியர் காவிரியைப் பருகச் செய்தாரென்றம் கூறுமாற்றல் ஆகத்தியர் இ" மன் காலத்தி தென்னுட்டில் உறைந்த செய்தி புலனுகின்
தி
ஆராய்ந்து பார்க்குங்கால் ஆகஸ்தியர் பரம்பரை
னர் என்பதும், அவருள் ஒருவரே ஆகத்தியம் என்னும் ா?லச் செய்தவரென்பதும், சில உரைகளில் அகக்கியம் ாள்ற காணப்படும் நூல் இயற்றிய ஆகக்கியஞர் கொல்
ாப்பியனுர்க்குப் பிங்கியவரென் பதும்."
(IF IT. 125 L ri-iġra III, IL முதலியா ї) அகத்தியரிடத்திற் கல்விகற்ரூேர் பன்னிருவரென்றும்
வர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வோர் படலமாகப் gro
II]

Page 83
14ն
பொருட் பன்னிருபடல மியற்றினுர்களென்றும் அவற்றுட் தொல்காப்பியர் வெட்சிப் படலமியற்றிரூரென்றும் கொல் காப்பிய உரை புறப்பொருள் வெண்பாமாலே முதலியவற்
ல் விளங்குகின்றன. ஆசிரியர் ளம்பூான வடிகள் பன் &W፻ Վ) 吕 ty. னிருபடலத்துள் அடங்கிய வெட்சிப்படலம் தொல்காப்பி பர் செய்ததன்னெப் பல காரணங்கள் காட்டி மறப்ப" ஆகவே இளம்பூரண வடிகள் காலத்தில் பன்னிருபடலக்கை ஆக்கியோர்களேக் குறித்துச் சங்கேகம் இருந்தகென விளங் குகின்றது.
தோல்காப்பியர்
தொல்காப்பியர் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரென். அவர் இயற்பெயர் யாதெனப் புலப்பட வில்லே. ஜபதக்கினி முனிவரின் புதல்வர் தொல்காப்பிய (T37 நச்சினர் க்கினியர் கூறுவர். ஜமகக்கினியைப் பற்றி எழுந்த புராணப் பகுதிகளில் அங்கினம் கூறப்படாமையான் அக்கூற்று வலியுடைய தாகாது. தொல்காப்பியர் அக த்தியத்தைப் பின்பற்றி நூல் செய்தா ரென்பது பாரம்பரியம். அவர் தமது நூலகத்து தாம் அகத்தியத்தைப் பின்பற்றி நூல்செய்தா ரென்றுவது அகத்தியர் தமது ஆசிரிய சென்ருவது குறிப்பிட்டிலர். தொல்கா பபியத்துக்குச் சிறப்புப்பாயிாஞ் செய்த பனம் பாரனுரும் இவ்வரலாறு ஒன்றனேயேனும் கூறிற்றிலர். இது ஆராய்ச்சிக் குரியது.
தோல்காப்பியம் தொல்காப்பியம் என்பதற்குப் பழமையைக் காப்பது
என்பது பொருள். தொல் என்பது பழம்ை. காப்பு +இயம்
காப்பதாகிய நூல். பழைய நூல்கள் பற்பல காானச்
I

]生了
செறிவால் மாண்டுபோதலும் இறந்தகால 3ission IL cam III Jii ாப்பதற்கு நால் எழுதல் வேண்டியதாயிற்று. தமிழ் ாட்டைக் கொடுங்கடல் கொண்டது. மக்கள் நாலொடு
ாண்டனர். எஞ்சியோர் எஞ்சிய உணர்ச்சி கொண்டு ால்களேப் புதுப்பிக்குங்கால் கொள்கைமாறு கொண்டு ாய்க்கனர். அவற்றிற்கெல்லாம் கலேகொடுத்து கிலத்து |ன்றது இந்நூல் ஒன்றே யாதலின் இது கொல்காப்பிய மனக் சுகுவதென்க. தொல்காப்பியர் செய்தமையின் தொல்காப்பியம் என்னும் பெயருண்டாயிற்ருே அன்றிக் தொல்காப்பியஞ் செய்தமையின் தொல்காப்பியர் என்னும் பருண்டாயிற்றுே வென்பது ஆழ்ந்து கருதி அறுதியிடற் ாலது. கொல்காப்பியம் என்னும் நூற் பெயரிலுள்ள ாப்பியம் என்னுஞ் சொல் காவியம் என்னும் வடசொல் ன் கிரிபாமென்பது பிற்காலத்தார் கற்பனே,
ஐயாயிரம் ஆண்டுகளுக்குமுன் இயற்றப்பட்ட கொல் ாப்பியத்துக்கு எண்ணுறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த |e ம்பூர் ாைர் பேராசிரியர் நச்சிஞர்க்கினியர் முதலியே Iሆ W
திய உரைகளே காணப்படுகின்றன. ::2rונLJ - -i::j}JEEזו
றையுங் காணுேம். இடையிட்ட இல ஆயி ரபாண்டு ரூக்குக் தொல்காப்பியம் உரையி பன்றி யிருக்கல் கூடுமோ? ரகளிருந்தன. அவைகளெல்லாம் சாதிச் சண்டை மயச் சண்டைகளால் அழிக்கப்பட்டன என்றே கொள்
ால் வேண்டும். வேறு காரணங் கூற வியலா. உரையாசி
பர்கள் பிற்காலத்து வழக்க ஒழுக்கங்களேயும் மிருதிகளே பும் பின்பற்றி உரை செய்திருத்தலின் உரைகள் நூலிலுள்ள
ன்மைப் பொருள்களேப் பலவிடங்களில் விளக்கா
ாழிந்தன.
சிந்தாமணி, GNLR புராணம், திருமந்திரம், En Trur முதலிய நூல்களில் இடையிடையே இடைச்

Page 84
48
செருகலாகப் பிற்காலத்துப் புலவர்கள் பலபாடல்களே பாடிச்சேர்த்திருக்கின்றனர். சில நாற்குண்டுகளுக்கு முன் கோன்றிய நூல்களுக்கு நேர்ந்த கதி பிதுவாயின் சில ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் தோன்றிய நூலின் கதி எதுவா யிருக்கல் கூடும். மரபியலுட் பல குக்கிாங் கள் இடைச்செருகலெனத் துணிவகற்குப் பல ஏதுக்கள் உண்டு. சிறப்புப்பாயிரக்கிற் கூறப்பட்ட ஐந்திரம் " தமிழுக்குரியதோ வடமொழிக்குரியதோ வென்று துணிகற் கிடமில்லே. சிலப்பதிகாரத்தில் ஒரிடத்தின் ' வின்ன வர் கோமரன் விழுநூல்' ஒர் விசன்துரல் சுட்டப்படு கின்றது. இதனே ஐக்கிச வியாகரணம் என்பர் அடியார்க்கு கல்லார். புத்த சமயத்துக்குப்பின் கோன்றிய சைனம நூலாகிய ஐக்கிரம் தொல்காப்பியப் பாயிரத்திற் குறிக்கப் பட்ட நூலெனக் கொள்ள இடமில்லே. இந்திரன் என்னும் பெயருடன் பல காலங்களில் விளங்கியபலர் ஆரங்கள் பாத்திருத்தல் கூடும்.
தொல்காப்பியம் கி. மு. முன்கும் நூற்றுண்டுக் @ முற்பட்டதெனக் கொள்வதற்கு அகனகக்கற்ருனே பல சான்றுகள் கானப் பெறுகின்றன. கொல்காப்பியம் எழுத் கதிகாரம் கு" 34, 27, 2s-களால் அக்காலத்து ஞ்ப, ங்ய, ம்ப, ம்வ என மொழிக்கிடையில் வருஞ் சொற்கள் உண்டு விளங்குகின் றது. இக்காலத்துள்ள தமிழ் நூல்கள் ஒன்றிலேனும் அவ்வகையான சொற்கள் கானப்படவில்: கி. பி. முதல் தாங்குண்டில் செய்யப்பட்ட கிருக்குறளிலும் ஆல்வகையான சொற்கள் ஆளப்பட வில்ஃ. அவ்வகையான சொற்கள் வழங்கிய காலம் குணதந்த பட்சம் திருக்குறளுக்கு மூன்று நூற்றாண்டு வரையிலிருத்தல் கூடும்.
கொல்காப்பியம் சொல் கு. 29, 82-க்கு மாருக
சமைத்து, சலம், சதுக்கம், சக்தி, யூகம், யவனர், சங்கு,

149
மம் முதலிய சகா முதற் சொற்களும் பிறவும் கடைச் ங்க நூல்களிற் காண்ப்படுகின்றன.
தொல்காப்பியர் கடைச்சங்க காலத்தில் நூலியற்றி விருப்பாாாயின்,
* சகாக் கிளவியும் அவற்ருே சற்றே
து, ஐ, ஒள வெனும் மூன்றலங் கடையே, ' ‘ ஆ, எ, ஒ வெலும் மூவுயிர் ஞகாாக்துரிய ஆவோ டல்லது பகா முதலாது ' ானச் குக்கிரஞ் செய்திருக்க மாட்டார். ஆகவே தொல் எப்பியஞ் செய்யப்பட்டு நீண்ட காலத்துக்குப் பின்னரே தவிர்க்கப்பட்ட சகா முதற் சொற்களும் பிறவும் நூல்களில் பழங்கப்பட்டிருக்கல் வேண்டும்.
*பாணினி முனிவர் குறிப்பிடுகின்ற 64. ஆசிரியர்களுள் இந்திரன் என்பார் ஒருவராகக் காணப்படுகின்றனர். பாணி க்குப் பின் பாசிைனியமே எவராலும் கைக்கொள்ளப் ட்டு வருகின்றது. தொல்காப்பியர் பாணினிக்குப் பின் னிருந்தவராயின் தொல்காப்பியக்கில் ஐந்திரம் என்பதற் குப் பதில் பாணினிடமே கூறப்பட்டிருக்கும். பாணினி எரிவர் .ே EP" நூற்ருண்டில் விளங்கியவர் என்று சிலரும், கி. மு. 4-ம் நூற்குண்டில் விளங்கியவரென வேறு i கூறுவர். ஆகவே கொல்காப்பியர் கி. மு. 4-ம் நூற்குண்டுக்குப் பிந்தியவால்லர்’ (Tamil Studies.)
6LG3 To
* வடசொல் ' என்பதற்கு இளம்பூரண வடிகள் "ஆரி பச் சொற்போலுஞ் சொல்' எனப் பொருள் கூறிஞர். தமி மின் பகுதியாகிய வடசொல் ஈன்றுகச் செய்யப்பட்டு +மக்
இருகம் என்னும் பெயர் பெற்றதென்பது சிலர் கருத்து.

Page 85
150
யாழ்ப்பாணத்துப் போகராதியில் வடசொல் கிரந்தம் எள் அனுஞ் ரொ ற்களுக்கு வடதமிழ் என்னும் பொருள் காணப் படுகின்றது. வடசொல் வடதமிழாயில் அது தமிழே யென் 'அ' துணிபு ஆரியர் பேசுக்கமிழை ஈகைச்சுவைக்கு உத ாணமாகப் பேராசிரியர் காட்டுகின்றனர். ஆரிடர் கிருக்கமில் லாக பேச்சுடையவராகவிஞலேயே அவரைத் தமிழர் திருச் ಚಿನ್ನ மொழியுடையவர் என்னும் பொருள்பட நிலேச்சர் என்னும் பெயராலழைத்தனர்.
கிருவாளர் பா. வே. மாணிக்க நாயக்கரவர்கள் வட சொல்லேக் குறித்துக் கூறுவது வருமாறு :-* வடசொல் ஆரியம், சமஸ்கிருதம் என்பன ஒரு பொருட் கிளவிகளாக அணித்தில் வழங்கிவருவது அறிவேன். ஆணுல், தொல் காப்பிய காலத்தில் வடசொல் தவிர மற்ற இரண்டு சொற் களும் உலகில் எங்கேனும் இருந்தனவா ? இருப்பின் தமிழ்
" " Dialects of the same family of languages were spoken throughout India, except in the Windhyan regions in the Neolithic Age; and that is what has been called the Dravidian family. The distinction between the spoken dialects of North India, to which the name Gaudian has been given by modern scholars and which have been held to be degenerations of Sanskrit or of Prakrit, and those of Southern India, to which the name Dravidian has been given, is, I hold, a distinction without a difference, except that the North Indian dialects have been very much more profoundly affected by Sanskrit than those of South India, The Neolithians of North India spoke languages of their own which, I hold, were structurally allied to the socalled Dravidian family of languages and not to Sanskrit or prakrit." (Stone age in India, p. 43.)

5.
நல்லுலகத்தில் வழங்கினவா P வழங்கின் மூன்று சொற்களும் ፵} ÖÖ பொருளினவாக வழங்கினவா என்பன இன்னும் ஆராய்ந்து தெளிதற்குரியன.
* தமிழில் வழங்கும் சொல் வகைகள் நான்கினுள் இயற்சொல் முதன்மையானது வடசொல் கடைப்படிபி லுள்ளது.வடசொல்லென்பது கமிழுக்குரிய சொல்லென்று கோாகவே பொருள்கொள்ள இடங்கொடுப்பது. உய்த்துப் பொருள் கோடல் வேண்டாதது.
* அத்தகைய வடசொல் என்னுங் தமிழ்ச்சொல்தான் என்னே F என்கிற ஆராய்ச்சிக்கு தொல்காப்பியத்தினி Bir'âr, ஆரியச் சொல்தான் அல்லது சமஸ்கிருகக்கான் என்று தெளிவிக்கக் கூடிய கூற்று எனக் கெட்டியவரையில்
டைக்கவில்லே.
"வடசொல் என்பதை வடக்குக் திசையிலிருந்து வந்த சாஸ் என்னல் எளிதாயினும் அளவைக் கிணங்க நோக்கின் வடசொல் லென்பது திசைச்சொல்லென்பதனுள் ஒருபகுதி பாக அடங்கும். அவ்வாருகக் கிசைச்சொல் லென்பதையுஞ் சொல்லி, வடசொல் லென்பதையுஞ் சொல்லவேண்டியதன் பொருட்டு விளங்க வில்லை. வடசொல்லென்பதைத் திசைப் பொருளில் வழங்கியிருத்தல் பொருங்காததாகத் தோன்று கிறது. கொல்காப்பிய காலத்தில் வடக்கு என்னுஞ் சொல் எவ்வெப்பொருளில் வழங்கிய தென்பது காட்ட
மக்கு நிகண்டுமில்லே அகராதியுமில்ஃ.
* வடக் கிருத்தல் என்னுஞ் சொற்றுெடரொன்று
உளது. அக்தொடரிலேனும் வடக்கென்பது திசையைக் க்காது. ஊண் துறந்திருத்தலேயே குறிக்கின்றது. அவ் வாறே வடசொல்லென் பகிலும் வட வென்பது
ଶuj; குறிக்குமேல், வடசொல்லென்பது *நூலே கரகம்

Page 86
I52
முக்கோல் மணையே உரியனவாகக் கொண்டிருந்த தமிழ் நாட்டங்தணர்களாகிய துறவொழுக்கமே மிகுதியாகக் கொண்டவர்கள் வழங்கிய தமிழின் பகுதியாகிய சொல்லா தல் வேண்டும். ஆனல் தீர்க்கமாகச் சொல்வதற்கேற்ற சான் அறுகள் இதுவரையிற் கிட்டவில்லை.’
தோல்காப்பியர் கூறும் மறை
தொல்காப்பியர் பல்லிடங்களிற் குறிப்பிட்டுள்ள மறை தமிழ் நூலே யெனக் கருத இட முண்டு. வியாசர் வேதங் களை நான்கு கூறு படுத்துவதன் முன் தொல்காப்பியம் இயற்றப்பட்டதென்பது நச்சினுர்க்கினியர் கூற்று. அதர் வணம் தலையாய வேதம் அன்று என்றும், பெளடிகம் தலவ ராகம் சாமம் என்பன ஏனைய மூன்று வேதங்களின் பெயர்க
ளென்றும் நச்சினுர்க்கினியர் கூறியுள்ளார்.
* திருவாளர் பா. வே. மாணிக்க நாயகர வர்கள்
மறையைக் குறித்து செய்துள்ள ஆராய்ச்சி வருமாறு :-
* தொல்காப்பியத் துட் சொன்ன மறை ஆரிய மறை யென ஒப்பினுங் கூட உரையாசிரியர்கள் கொள்கைப் படி, வியாசர் ஆரியவேதங்களைச் சிக்ககற்றித் தொகுப்பதற்கு நெடுங்காலத்துக்கு முன்னரே தொல்காப்பியம் இயற்றலா யின தென்றலின், வியாசருக்குச் சில ஆயிரம் ஆண்டுகளுக் குப் பின் வந்த உரையாசிரியர் காலத்து வழங்கிய, இப்போது வழங்குகிற, வுட்ராப் துரையோ, மாக்ஸ்முல்லரோ பதிப் பித்த நான்கு வேதங்களல்ல வென்பது உரையாசிரியர் கூற்றலேயே வெளிப்படை. வியாசருக்கு முந்திய ஆரியவேதமும், அவருக்குப் பிந்திய ஆரிய வேதமும் ஒன்றற் கொன்று படியாயின் வேதவியாச ரென்னும் பெரும் பெயர் பெற்றர் புரட்டியது தான் என்ன ?

153
வியாசருக்கு முந்திய தொல்காப்பியத்தில் வியாசருக் குப் பிந்தியதும் அவரால் திருத்தப்பட்டதுமான ஆரிய வேதங்களினின்று உய்த்துப் பொருள்கோடல் ஆர்க்கியலா ஜிகல் முறைக்கு ஒவ்வாது. தொல்காப்பியத்திற் சொன்ன மறை இத்தகைய தென்பது தெரிவதற்கு நூலாவது சுருதி யாவது இப்போதில்லை.
அந்தணர் மறை யைத் தழுவியே தொல்காப்பியம் எழுதப்பட்டிருக்கிற தென்பதும் தொல்காப்பியத் தட் காணுதது அந்த அந்தணர் மறையிற் காணலாகும்படியும், அவ்வந்தணர் மறையிற் காணுதவை இத் தொல்காப்பியத் திற் காணலாகும்படியும் தொல்காப்பியம் அமைந்திருக்கிற தென்பது எனது நம்பிக்கை.
* ஆணுல் அந்த அந்தணர் யாவர் ? அவர் மறை யாது என்பன தான் புலப்படாத வற்றுட் சில. வடவேங்கடங் தென் குமரி ஆயிடைத் தமிழ் உலகத்து அந்தணர் என்பா ரும் சிந்து நாட்டுப் பிராமணரென்பாரும் ஒன்றேயா ? தமிழ் நாட்டு அந்தணர் மறையும் சிந்து நாட்டுப் பிராமணர் வேதமும் ஒன்றேயா? நான் மறை சதுர் வேதம், அந்த ணர், அரசர், வணிகர், வேளாளர் ; பிராமண சஷத்திரிய வைசிய குத்திர என்னும் போலி ஒற்றுமை கொண்டு இரண்டும் ஒன்றென்பதா ? உட்கிடை வேற்றுமைகண்டு அன்றென்பதா ?
* தொல்காப்பியஞ் சொன்ன தமிழகத்து அந்தணர் மறை, வியாசருக்குப்பிந்திய ஆரிய வேதமன்றென்பதற்குச் சான்று தொல் காப்பிய நூலிற் பல்லிடங்களிற் காணலாம். சிற் சிலவே இம்முடங்கலிற் குறிக்க வியலும். தமிழகத் தந்தணர் மறையோ தெய்வம் அஃறிணை யென்பது ; மங் திரங்கள் மாந்தர் கிளந்தவை யென்பது ; அம்மந்திரங்க

Page 87
154.
இருக்கு ரிக்குகள் போன்ற அளவு முகலாகிய கடப்பாடில வென்பது கொடி, கிலே, கந்தழி, வள்ளி யென்ற சிறப்பின் மூன்றும் முகல வென்பது; மு, ற, ன, எ, ஒவ்வுமன்றி ஆய்தம் முதலிய மூச்சார்புவகை தொகையாகச் சாாவரும் எண்ணிறங்க எல்லா எழுத்துக்களுக்கும் அகத்தெழு வளி பிசை நூல்ைவது. இத்தகையான பல ஆடிப்படையான கொள்கையினுலேயே இப்போதைய ஆரிய வேகத்தினின் ரீம் முற்றும் வேற்றுமைப்பட்டிருக்கல் $.tଙr got li... ''
* ஆர்ய என்னுஞ் சொல் தொல்காப்பிய காலத்தி குப் பின்னும் திவாகர காஸ்க்திக்கு முன்னும் வந்து அழைக்கிருக்கல் கூடும். அப்போது ஆகற்கு மிலேச்சன் என்னும் பொருள் இருந்ததும் நமக்குத் தெரியுமல்ல: f இன்னும் பிற்காலக்கில் 'ஆர்ய என்பது மிலேச்சன் என் னும் பொருளே இழந்து ஆசான் என்னும் பொருளில் வந்ததும் தெரிக்கதே. ஆதலால் ஆர்பன் ஆசானு ன சில நாற்ருண்டுகளிற்குன் அந்த ஆர்பர் தமிழர்க்கு நெறி கற்பிக்கக் கூடுமேயன்றி ஆசியன் மிலேச்சனுயிருந்த காலக் தும் ஆரியன் Talir li u riat உண்டாயிராக தொல்காப்பிய காலத்தும் அதன் முற்காலத்தும் முக்தி ਸ਼ਲੋਕi ஆரியன் போய், வியாசருக்குப் பிங்கிய ஆர்ய வேகத்தை வைத்துக் கொண்டு பண்டைக் தமிழர்களுக்கு நெறி கற்பிக்கிருப் பானென்பது ஆர்க்கியலாஜிகல் ஆராய்ச்சிக்கும் பொருங் தாது. ஆவையல் கிளவிகள் அடுக்கடுக்காய்க் கிடக்கும் வேத வேதாங்கங்கள், வியாகரணங்களேயுடை ['.' : $.fia, it ଜୀ। சிங்து நாட்டு ஆர்பன், முந்திய கொல்காப்பிய காலத் தமிழ லுக்கு நெறி கற்பிக்கிருப்பானேல் அனவயல் கிளவிக்கு
" ': Award gf TIT f'Lirr'' (பிங்கம், திவாகரம்) "லேச்சரீேயா ரியர்க் காமலேச்சரும் விதித்த பெயரே' (சூடாமணி நிகண்டு)

15 5
மறுப்பு கொல்காப்பியத்திற் மூேன்றியிராது. ஆர்யன் ஆசாஞன சில நூற்ருண்டுகளில் அவன் நெறியைக்கடைப்
டிக்தித் தமிழரும் அவையல் கிளவிகளேப் பேச்சிலும் எழுத்திலும் வழங்கிவருவது வெட்டவெளியாகத் தெளி நின்றதன்ருே ? ஆயினும் அவையல் கிளவிகளே மாத்திரம்
ர்ய மொழியில்கான் வழங்குவார்கள்.’
''The hatred which existed between the early Dravidians and the Aryans is best preserved in the Kullrichchans, a hili tribe in Malabar, (corresponding to the Kur'avas of the Tamil country) custon of plastering their huts with cowdung Lo remove the pollution caused by the entralice of a Brahman."
(Tamil Studies, p. 90.)
மந்திரம்
'நிறைமொழி மாந்தர் ஆஃணயிற்கிளந்த மறைமொழி ானே மந்திர மென்ப" என மந்திரப் பண்பு தொல்காப் வியத்துட் கூறப்பட்டது. இதனுரை 'சொல்லிய சொல் பின் பொருண்மை பாண்டுங் குறைவின்றிப் பயக்கச் சொல்
妈 ୧୬୩, லும் ஆற்றலுடையார் ஆஃனயாற் கிளக்கப்பட்டுப் புறத் கார்க்குப் புலனுகாமல் மறைத்துச் சொல்லுஞ் சொற் ருெடர்' இளம்பூரண வடிகள் தமிழ் மங்கிரத்துக்கு
தசரணம்,
* திரி கிரி சுவாகா கன்று கொண்டு
கறவையும் வத்திக்க சுவாகா "
எனக் காட்டியுள்ளார்.

Page 88
| 5ք
* வச்சிரம் வாவி நிறைமதி முக்குடை ேெற்றிகேர் வாங்கல் விலங்கறுத்த லுட்சக்கர வடத்துட் புள்ளியென்பதே
புட்காஞர் கண்ட பண்பு'
“இது மக்கி நூலிற் புட்காஞர்கண்ட எழுத்துக் குறி வண்பா ' என்னும் பூ ப்பருங் கலவிருக்கியல் பக் காலத்து மந்திர நூல்கள் பல விருக்தனவென்று விளங்கும். சமஸ்கிருத Gade : Tifa (G,*) சொல்லப்படுவனவெல்லாம் மக் கிரங்களென் ஒர் பிழையான விளக்கம் நம்மவர் பெரும் _ff് உள்ளத்தில் வேரூ ஒன்றி யிருக்கின்றது. இது சமஸ் கிருத Gade : T LÉGIO) Jiji Eric மொழியாகக் கொண்டதினுல் 5ேர்ந்ததாகும்.
* மன்னியவித் தமிழ்க்கிளவி மந்திரங்கள் கணித்தடியேன்
Fਨੂੰ ਹਲ, ਲੇਕ ಐಸಿ? வாசிக்கிருக்காஞ்சி வரை ரப்பி இணுன்னணுக்க குயினிதுறைக்கிடவும் பெறவேண்டு மின்ன வாமெனக் ருேள" பெம்பெருமா னென்றிாந்தான்'
என ஆகக்கிய முனிவர் சிவபெருமானே வேண்டிர் கொண்டதாகக் காஞ்சிபுபானங் கூறும்.
தமிழ் நூல்களின் அழிவு 'தமிழுக்குக் காலாக்கரத்தில் இரண்டு பெரும் பூகங்
களால் இரண்டு பேரிடையூறுகள் நிகழ்ந்தன. குமரியாறும் அதன் தெற்கேயுள்ள காடுகளுஞ் சமுக்கிாக்கின் வாய்ப்பட் டமிழ்க்கியபோது தமிழ்ச் சங்கத்துக்கு ஆஸ்யமாய் சர்வ கிரந்த மண்டபமா (9.55a, as try டபுரம் ஆகன்கண்ணிருந்த எண்ணுயிரக் கொரு நூற்று நாற்பக்கொன்பது கிரந்தம் களோடு வருண பகவானுக்கு ஆசமனமாயிற்று, ! 'Ts:ởr lỵ L! காட்டின் வடபாலில் ஆங்காங்கு சிதறுண்டு குலாவிய சாதா
 

ாண் சனவினுேகார்த்தமான சில கிரங்கங்களும் பள்ளிக் படச் சிறுவர் தங்கல்விக் கேர்ச்சிக்குரிய வாய்வழங்கிய சில தால்களுஞ் சில்லறை வா கடாகிகளுமே பிற்காலத்தா
கைக்கு எட்டுவனவாயின.
எரண முருவம் யோகமிசை கணக்கிரசுஞ் சாலங் தாரண மறமே சங்கக் கம்பீர் நிலமுலோகம் மாரணம் பொருளென் றின்னமான ரால் யாவும்' 유 வாரணங் கொண்ட தக்கோ வழிவழிப் பெயருமான எனப் புலம்பிய நம்முன்னுே ரிடக்கிலிருந்து காமடைங்க
திரார்ச்சிதம் :ெறும் பெயரினுஞ் Gav Baul II r.
* இப்பால் வடமதுரைச் சங்கமேற்பட்டு இடமிடங் தோறும் நடைபெற்றுள்ள சுவடிகளேச் சேகரித்துப் புது நூல்களே ஆாங்கேற்றி இரத்தது. அதன் பின் சமண விக் துவான்கள் தலபெடுத்துப் பல பல நூல்களியற்றித் தமிா: வளர்ந்தனர். ஆதன்மேல் இதிகா புராணுகிகள் சமஸ்கிருத மொழியினின் வித்துவான்களால் மொழி பெயர்க்கப்பட்டு மறுபடியுங் கமிழ் கலேயெடுத்தபோது நாடு மகமதியர் கைப்பட அவர்கள் கோருலுக்கு ri "TMF «Ti வும் வீகுவதோ கிரங்கங்கள் மண் மேலென்று தவைராக்கி யங் கொண்டு ஆங்தோகமது நாம் சாலேகளஃனத்தும் நீருக துக்கினி பகவானுக்குக்கத்தஞ் செய்தனர். இவர்கள் கைக்குக் கப்பிய சின் ஒரல்களே நடக்குப் பெரிய ஆரிய ல்களாயின. அவையும் இக்காலத்து இன்னும் கமக்கு என்ன போவதி வருமோ வென்ற பபந்தார் போல பூங்கு மிங்கு மொளிக் துக்கிடங்து படிப்பாரும் எழுதுவரும் ரிபாவிப்பாருமின்றிச் செல்லுத்துளேத்த புள்ளி யன்றி மய்ப்புள்ளி விரவாத செந்தாளேட்டிற்-பல் துளேத்து
வண்டு மணலுழுக வரி யெழுத்து உடையவாய்ச் செல்லா

Page 89
15S
லரிக்கப்பட்டும் பானங்களாற் றுளேக்கப் பெற்றும் மூன்று வது பானமாகிய மண்ணின் வாய்ப்படுகின்றன ' (கலி தொகைப் பதிப்புரை. கிருவாளர் சி. வை. காமோதரம் பிள்ளே.)
'அறம் பொருள் இன்பம் வீடு பெறுமாறு சொன்ன நூல்களும் அவை சார்பாகவக்க சோகிடமும் சோகினமும் வக்கின கிரக மந்திரவாதமும், மருத்துவ நூலும் சாமுக் கிரியமும் கிலேக்தி தாலும் ஆயுத தாலும் பத்துவிச்சையும், ஆடை தாலும் ஆண்ணிகல தாலும் அருங்கல நூலும் முத லாயவற்றுள்ள மறைப் பொருளுபதேசமும் । பாப்பருங்கல விருத்தியால் இலக்கண இலக்கியங்களல்லாத பல தொழில்களைக் கற்பிக்கும் பல கருவி நூல்களும் இருக் கன வென்பது புலனுகின்றது. ஒர் காவிதன் ஆலங்காரம் என்னும் நாவித நூல் இயற்றி அரசனிடம் பரிசு பெற்ற தாக சிந்தாமணியிற் சொல்லப்படுகிறது. வீமனுந் செய்யப் பட்டமடை நூலொன்று உளதாக சிறுபாணுற்றுப்படை கூறுகின்றது. இன்ப சாகரம் முதலிய பல இன்ப நூல்கள் இறங்கன் என்பர். காமக்கணிகையர்க்கு ஆறுபக்திநான்கு கலேகள் உரித்தாக மணிமேகலேயிற் சொல்லப்படுகிறது. இன்னும் கந்தர்ன்நூல் கருடநூல் மந்திர நூல் கணக்குநால் முதலிய பல நூல்களேப்பற்றி யாப்பருங்கல விருக் தியிற் சொல்லப்படுகின்றது.
தமிழில் பிறமொழிக் கலப்பு
ஒருமொழி பேசும் மக்கள் இன்னுெருமொழி பேசும் மக்களோடு கலக்க நேர்ந்தால் ஒருவர் பேசும் மொழியில் மற் றவர் மொழிச் சொற்கள் சென்று கலத்தில் இயல்பு. தமிழ் பக்கள் பிறநாடுகளிற் சென்று வாணிகம் நடக்கினமைய லும் அரசரின் ம்ே பல தொழில்களில் அமர்த்தமையானும்

59
றமொழிச் சொற்கள் கமிழிலும் தமிழ்ச் சொற்கள் ஆரி ம் எபிரேயம் கிரிக் முதலிய மொழிகளிலும் புகுந்தன.
மொழிச் சொற்கள் தமிழிற் புகுங்கால் அவை கமிழின் மைதிக்கேற்பத்திரித்து வழங்கப்பட்டன. இம்முறையி
றிவது அரிதாயிருந்தன. பிற்காலங்களில் இம்முறை வளிக்கப்படாது விடப்பட்டது. ஆரியச் சொற்கள் கனக் ன்றிக் தமிழுடன் கலக்கப் புகுந்த பிற்காலக்கில் அவை முருவுடனேயே வழங்கப்படலாயின. அதனுல் தமிழின்
சொற்களால் வழங்கக் கலப்படுகல் தமிழில் அழிவுக்கு '' கும்.
*அநேக சமஸ்கிருத பதங்கள் தமிழில் வங்து கலந்தன ாயிலும் வண்டு கைக்கொண்ட கிருமிபோலவும் வேரின் ாய்ப்பட்ட எருப்போலவும் சமஸ்கிருத நிறமுங் ಕ್ರೆ ಪವಿತT (LP ன்றி ஆர்த்தபம், மயிடம், பகுகி, விகுதி முதலியன பாலச் சுத்த தமிழுருவாகவே கிரிங்து வந்தன. அப்பால் ன் எண்ணுாறு வருஷம் இதிகாச காலம். பற்பல புராண வியங்களும் கலைஞான நூல்களும் இக்காலத்தில் எழுதப் ட்டனவாயினும் கமிழிற் சிறந்த இதிகாசங்களாகிய நடதம், பாாகம், இராமாயணம், இரகுவமிசமென்பன தோன்றிய காலமாகவின் இதிகாசகாலமென்ரும். வட மாழியிலிருந்து புரானோதிகாசங்கள், சமய சாஸ்திரங்கள், லமான்மியங்கள்,கணிதசோதிடாதிகள் சுக்க சமஸ்கிருதா ாமாய்க் தமிழில் மொய்க்கக் கலேப்பட்டதும் வட மாழிப் பிரளயத்தைக் கண்டு தமிழ் சகிக்கலாற்ருது

Page 90
60
மூழ்கியதும் இக்காலத்திலேதான். பேசகர் முதலிய ஆயு ணு"லாரும் பிரமர் முதலிய கணித வல்லாரும் செந்தமிழ் அணங்கின்மேனியெல்லாம் வெந்தனல் கொளு க்தி வெதுப் பிய வாவெனக்-கொடுத்தமிழ் மலிந்து கொப்புளிக்தெழுந்து புண்படச் செய்ததிக்காலமே 4 + 4 + 4. பின்பு தமிழ் படிப்படியாகத் தமிழ்கல்விக்கு ஆக பரிபாலனங் குறைந்து, சமஸ்கிருதம் வல்லாருக்கு மேன்மையுண்டாயிற்று. தமிழ் தனிகில்லாது தக்களித்து வடமொழி வல்லார் கைப்பட்டு அம்மைவார்த்த உடம்புபோலத் தேகமெல்லாஞ் சமஸ்
கிருதத் தழும்பு எறியது. கொப்புளிக்க மேனியிற் கொடு
முள்ளு மேறியதெனக் திசைச்சொற்களும் வந்து
== மfஇன.’ (விரசோழியப் பகிப்புரை.)
* பட்டினப்பாலேயில் உள்ள வடசொற்கள் ஒன்று அல்லது இரண்டு என்றும், நெடு நல்வாடையில் 20 வரை பில் என்றும், 752 அடிகளுடைய மதுரைக் காஞ்சியில் 50-க்கு அதிகமில்ஃவி யென்றும், சங்ககாலத்தில் வடசொற் களே தமிழுடன் அதிகம் கலந்து செய்யுளியற்றல் புலமைக் குறைவாகக் கருதப்பட்ட தென்றும், ஒரு மொழியோடு இயைபில்லாக பிறமொழிச் சொற்களேக் கலந்து வழங்கு
|- է, ո ད། தல முகதுகளுடன மிளகுகளேக் கலந்து கோத்தல்போலாகு Grisar இரண்டு கன்னடப் புலவர்கள் கூறியுள்ளார்க ளென்றும் Prot, சுங்தாம் பிள்ளே அவர்கள் குறிப்பிட்டிருக்
கின்றனர்.” (Tamil Studies, p. 74)
அரசாட்சியார் தமிழுக்குக் காட்டும் ஆதரவ. ஆரசாட்சியாருங் கமது விக்கியாசாஃப் மானுக்கர் களுக்கு துவரவர் சொந்தப் பாஷையையும் கற்பிக்கும் விருப்புடையாா ய்த் தமிழ்ப் பிள்ளைகளுக்கும் அவர்களது சுயபாஷையாகிய தமிழை ஒரு அளவில் ஒதுவிக்கின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

| 6 ||
து எவ்வித மென்றல் ஒருவனே ந்ேதக் கற்பிக்கும் ஓர் சிரியன் அவனே ஏரி, கதி, கிணறு, குளங்களில் இறங்க டாது குடத்திற் றண்ணிசை மொண்டு சிறுகுழியில் விட் க் கால் மறையாத் தண்ணீரில் மா ாடிக்கவிட்டாற்போல ாம். கடல் நீரெனில் உடல் கசியும் உப்புப் பூக்கும் குளநீ
ரிற் சர்ப்பத்திண்டும் முதலே பிடிக்கும் என்றவிதமே ஒரோர் ாலுக்கு ஒரோர் குற்றஞ் சாற்றி ஒன்றிலு மிறங்கவிடாது ரு நூலில் ஒரு குடமும் இன்னுெரு நூலிற் பின்னுெரு தடமுமாக அள்ளி வைத்துப் படிப்பிக்கும் அவர்கள் நயற்சியாற் பெரும்பயன் விளைவதேயில்லே. நிகண்டு கற்று இலக்கிய வாராய்ச்சி இல்லாதவர்களுக்கு சிற்றிலக்கணங் ளே மாத்திரங் கற்பித்தல் ஆன்னுேர் வா வந்தானெனக்
காண்டு கா கந்தானென்றுஞ் சா செத்தானெனக் கொண்டு ா தெக்கானெனவும் கூறுவார் போலக் கமிழைப்பலவாறு பரிதப் படுத்துகின்றனர். இகணுற்றமிழுக்கு வருங் தெடு தியைக் குறித்து மிகவும் அஞ்சவேண்டியிருக்கிறது.
,)ப. உரை . آai)
1.

Page 91
இயல் (5. தமிழர் நாகரிகம் நிலப்பாகுபாடும் திணைமக்களும்
* தமிழர்கள் மிகவும் பழைய கா லத்தில் முல்லே, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்னும் நான்கு நிலங்களில் வசித்து வந்தார்கள். மலேயையும் மலேசார்ந்த இடத்தை யும் குறிஞ்சி நிலம் என்றும், காட்டையும் காடுசார்ந்த இடத்தையும் முல்லே கிலமென்றும், வயலேயும் வயல்சார்ந்த இடத்தையும் மருதநில மென்றும், கடலையும் கடல்சார்ந்த இடத்தையும் செய்கல் நிலமென்றும் தமிழர்கள் கிலக்கை நான்கு பகுதிகளாக வகுத்து வழங்கி வந்தார்கள். இவர் குல் பூமிக்கு நானிலம் என்னும் பெயர் தமிழில் வழங்குவ தாயிற்று. குறிஞ்சி நிலத்தினும், முல்லை நிலக்கினும் சில பகுதிகள் சூரியனது வெப்ப மிகுதியால் தம்மியல் பிழந்து மனல் வெளியாக மாறுதலுமுண்டு அதனேப் பா8 நில மென்ப, அவ்வங்கிலங்களுக்கு இவர் இவர் இன்ன இன்ன நிலத்தில் உறைபவர் என்பதைக் குறிக்கும் பெயர்களுண்டு அப்பெயர் ஆட வருக்கும் மகளிருக்கும் வெவ்வேருக வழங் னெ.
குறிஞ்சி நிலமக்களுள் கல்வி, கேள்வி, வீரம் முதலி பவற்ருல் ஒப்புயர் வற்றவனுகிய ஆடவன், பொருப்பன் வெற்பன், சிலம்பன் எனப்படுவன். இவனே இங்கிலமக்க ளின் சுலேவன். மற்ற ஆடவர் கானவர் எனப்படுவர்.
:கல்வி முதலியவற்றல் அங்ஙனஞ் சிறந்த பெண் குறத்தி, கொடிச்சி யெனப் படுவாள் ; இவள் இங்கிலத்

L临器
* முல்லே நிலமக்களுள் முற்கூறியாங்கு சிறந்த ஆட பன் குறும்பொறைகாடன் தோன்றல் எனப்படுவன் ; இவன் இங்கிலமக்களின் கலேவன். மற்றை ஆடவர் இடை 防, ஆபர் எனப்படுவர்.
முற்கூறியாங்குச் சிறந்த பெண் மனேவி, கிழத்தி ானப்படுவாள். இவள் இங்கிலத்தலேவன் niri. மற்றைப்
ண்கள் இடை ச்சியர், ஆய்ச்சியர் எனப் படுவார்கள்.
'மருதநிலமக்களுள் அங்ஙனம் உயர்க்க ஆடவன் ஊரன் ழ்நன் எனப்படுவன் ; இவன் இங்கிலமக்களின் தஃலவன். ற்றை ஆடவர் உழவர் கடையர் எனப்படுவர்.
முற்கூறி பாங்குச் சிறந்த பெண் கிழத்தி, மனேவி ானப்படுவாள் ; இவள் இங்கிலக் தஃலவன் இற்கிழக்தி, மற்
றப் பெண்கள் உழத்தியர், கடைச்சியர் எனப்படுவார் கள்.
* நெய்தல் நிலமக்களுள் முற்கூறியாங்கு சிறந்த ஆட பன் சேர்ப்பன், புலம்பன் எனப்படுவன் இவன் இங்கில க்களின் கலேவன். மற்றை ஆடவர் பாதர், அளவர், நுளே பர் எனப்படுவர்.
முற்கூறியாங்கு சிறந்த பெண் பாத்தி, நுளேச்சி எப்படுவாள் இவள் இங்கிலத்தலேவன் மனோவி, மற்றைப் ண்கள் பாத்தியர், அளக்கியர், நூளைச்சியர் எனப்படுவார்
பாலே கிலமக்களுள் முற்கூறியாங்குச் சிறந்த ஆடவன் டெலே, காளே, மீளி எனப்படுவன் இவன் இங்கிலமக்களின்
லேவன். மற்றை ஆடவர் எயினர், மறவர் எனப்படுவர்.

Page 92
1枚4
* முற்கூறியாங்குச் சிறந்தபெண் எயிற்றி எனப்படு வாள்; இவள் இங்கிலத்தலைவன் மனேயாள். மற்றைப் பெண் கள் எயிற்றியர், மறக்கியர் எனப்படுவார்கள்.
* தமிழர்கள் பண்டைக் காலத்தில் இங்ஙனம் நிலம் பற்றிய பகுப்பையே உடையவர்களா யிருந்தர ர்கள். இவர் களுள் ஒரு கிலத்தி ஆடவன் தன்னிலத்துப் (a för åkar மனந்து கொள்ளினுங் கொள்ளுவன் ; வேறு நிலத்துப் பெண்ானே மனந்து கொள்ளினும் கொள்ளுவான். கிலம்பற்றிய இப்பகுப்பு உயர்வு தாழ்வைக் குறித்து வந்த தன்று : இவர் இன்ன நிலமக்கள் என்பதை உணர்த்தும் அளவினதேயாகும். இப்பகுப்பு ? துபோன்றதெனில் இவன் கோஆசான், இவன் குன்றத்தா ரான், இவன் காஞ்சி புரத்தான் இவன் காவேரிப்பாக்கத்தான் என்பனபோன்ற
தாகும்.'
काg
பழைய தமிழர்கள் பிறப்பினுல் உயர்வு தாழ்வு கற் ஒத்ாவில்&ல. எல்லா நாடுகளிலும் எப்படி gyč, SITT if (priests அரசர் (Euler's), வணிகர் (merchants) Gaugiriter if (agriculturi sts), 5T-t, G5 ir f'GN TGT i (laboure's) ằCy Ti (menials); காணப்படுகின்றனரோ அப்படியே தமிழ்நாட்டிலு மிருக் தனர். ஒவ்வொருவரும் கம் சீவனக் தின் பொருட்டு மேற்கொண்ட தொழில்கள் பற்றியே சாதி ஏற்படுவதாயிற்று. தகப்பனுயுள்ள ஒருவன் தான் பிழைப் புக்காகச் செய்துவந்த தொழிலேயே தன் மகனும் பின் பற்ற வேண்டுமென விரும்புவதியல்பு இவ்விருப்பமே தொடக்கத்தில் தனித்தனி சாதி தோன்றுவதற்குக் கார ண்மா யிருந்தது. இப்போது ஒவ்வொரு சாதியினரைக் குறிக்கும் பெயரும் அவ்வவர் மேற் கொண்டிருக்கும்

丑65
தாழிலைப் பற்றியதாகவே காணப்படுகின்றது. பிற் லத்து ஒவ்வொரு குலமும் பிறப்பினுலே உண்டான
ன்னும் நம்பிக்கை உண்டாயது. * பிறப்பொக்கு மெல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான் ’ ன்னும் குறளும்,
°可品、 குலமென்றங் தீய குலமென்றுஞ்
சொல்லள வல்லாற் பொருளில்லே-தொல்சிறப்பி ஞெண்பொரு னொன்றே தவங்கல்வி யாள்விக்ன யென்றிவற்ரு ஞகுங் குலம்
ன்னும் நாலடியாரும் பிறப்பினுல் குலமுண்டு என்பதை
க்க எழுந்தனவாகும்.
ஆரிய நாட்டவர்க்குரிய சாகிக் கட்டுப்பாடு, சமயம், ழக்க வழக்கம் முதலாயின தமிழரினின்றும் புறம் னவை. முதற்கண் அவர்கள் சாகிப்பிரிவு நிறம்பற்றி ஏற் ட்டது. ' வருணம' என்னும் பெயரே அதனேப் புலப் க் துகின் றது. பிராமணர், ஒத்திரியர், வைசியர் எனக் ங் குழுவினேப் பிரித்துக்கொண்டு, காம் வென்று அடிப் த்ெதிய மக்களேச் குக்கிார் என்னும் நான்காம் பிரிவாகக் காண்டனர். இவர்களுக்கு ஆடிமைக் தொழில் மாத்திரம் சித்து. இவற்றின் விரிவு அவர்கள் கிே நூல்களாகிய ருதிகளிற் பரக்கக் காணலாம். மேற் காட்டப்பட்ட வெவ் வறு வருணத்துப்பெண்கள் ஆண்கள் சோரமாகவோசோர ல்லாமலோ ஒருவரை ஒருவர் மருவப் பிறந்த சங்ககியா க்கு ஒவ்வோர் தொழில் உரிமையாக்கப்பட்டது. உதா ம்-பிராமனுைக்கு வைசிய நங்கையிடக்கிற் பிறந்த ன அம்பஷ்டன். இவனுக்குக் தொழில் இரண வைத்தி த செய்தல், சந்தத்திரியனுக்குப் பிராமணப் பெண்ணி

Page 93
| tit)
டத்துப் பிறந்தவன் குகன். இவனுக்குக் கொழஸ் தேரோட்டுதல்.
ஆரிய மக்கள் தென்னுடடைந்து தமிழருடன் கலர் துறைந்த ஞான்று ஆரியக் கொள்கைகள் பல தமிழகத்திற் சுவறின. அகனுல் பிராமணர், கடித்திரியர், வைசியர், குத்திரர் என்னும் வடகாட்டாருக்குரிய பெயர்கள் தமிழ் நாட்டு அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் பெயர்களோடு ஒன்ருக வைத்துக் கருதப்பட லாயின. இக் கருத்தைக் கழுவியே பிற்காலத்து விளங் நிய இளம்பூான வடிகள், நச்சினுர்க்கினியர், பேராசிரியர் முதலாயிஞேர் நூல்களுக் குரை வகுக்கினர். ' ஒரு பொருளுக்குப் பல பெயர்களேத் தேடிக் கூட்டிக் கூறு கலேயே நோக்கமாகக் கொண்ட நிகண் டாசிரியர்களும் பிற்காலத்து இலக்கியஞ் செய்த சில ஆசிரியர்களும் தொல்கா [`rtኖù Jሻ முதலிய தொ ନୌ sitକify if களின் கருத்தினேக் கிருதிாழி, வேளாளர்க்குச் குத்திரர் என்னும் பெயரினேயுங் கூட்டிக் கூறிவிட்டார்கள். அது பெரும்பிழையாம். கவிச் சக்கரவர்த்தியாகிய கம்பநாடர் தொல்லாசிரியர்களின் கருத் தை நன்குணர்ந்தவராதலின் வேளாளரைச் சூத்திாரென
எங்குங் fria? I ir sī
(சங்க sii)
" The Hindu theory that mankind is divided into four Warnas, or groups of Castes—Brah Iman, Kshatriya, Waisya and Sudra was wholly foreign to the southerners" "I) ravida Cultura:–The Brahmaical ideaardisti tions, although universally diffused in every provinci have not been wholly victorious. Prehistoric for Ills of worship and many utterly un-Aryan social practices survive specially in the peninsula among the People speakin; Dravidian languages. We see there the strange spectacle of

I67
ny exaggerated regard for caste co-existing with sorts of weird notions and customs allied to Brahman tradition. While it is probable that the Dravidian civilization is ven older than the Indo-Aryan Brahmanical culture of he north which long regarded in the south as an unWelcome intruder to be resisted strenuously."
"The amount of Aryan blood in the people to the outh of the Narbada is extremely small in fact negligible." Oxford History of India-Vincent Smith, C. I. E.).
அந்தனர் திருக்குறள் நீத்தார் பெரு மை என்னும் அதிகா ாக் துள்,
* அந்தணரென்போ ரறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ்
செந்தண்மை பூண்டொழுகலான் '
ன அந்தணரென்னும் பெயர் நீக்காருக்குரித்தாகக் கிரு ள்ளுவ நாயஞர் கூறியிருக்கின்றனர். இதற்குப் பரிமே ழகர் விசேட வுரையில், 'அந்தனரென்பது அழகிய கட் புக்கினேயுடையாரென எதுப் பெயராகவின் அஃது அவ் பருளுடையார் மேலன்றிச் செல்லாதென்பது கருத்து ' என்று கூறினர்.
- * நூலேகாக முக்கோன் மணேயே
를
ஆயுங் காலே யந்தணர்க் குரிய ன்னும் கொல்காப்பிய மரபிற் குத்திரத்தானும் அக்கண ரென்போர் துறவிகளே யென்பது இனிது புலனுகின்றது. * அங்கத்தை ஆனவுவோர் அக்கணர் என்றது வேதாந்தத்தையே பொருளெனக் கொண்டு பார்ப்பார்,

Page 94
168
என்றும், அந்தணர்காவதாயம் போர்த்தகுழாங்கள் என் றும் நச்சிஞர்க்கினியர் உரைப்பர்.
* அந்தண்மை பூண்ட வருமறை யந்தத்துச்
சிங்தை செய்யத்தனர் என்னும் திருமந்திரமும் வேதாந்தத்தை அணவுவோர் அர் தணர் என்பதையே உணர்த்திற்று. வேதாங்கத்தையே பொருளெனப் பார்க்கலின் பார்ப்பனென்னும் பெயரும் அந்தணர்க்குரியதாயிற்று. அந்தணர் தமிழ் மக்களல்லாத பிறரெனச் சிலர் கருதுவது பிழையான கோட்பாடாகும்.
* எறித்தரு கதிர்காங்கி பெய்கிய குடை நீழ அறிக் காழ்ந்த காகமுமுாைசான்ற முக்கோலு நெறிப்படச் சுவலசைஇ வேரூேரா கெஞ்சத்துக் குறிப் பேவல்செய்மாலேக் கொளோடை யந்தணிர்'
(கலி-பாலே, 91) பார்ப்பான்
அகப் (3)_III ட்டுறையில் வாயில்களில் ஒருவராகச்
சொல்லப்படும் பார்ப்பான் வேறு ஆந்தணன் வேறு என் lig
கோழி தாயே பார்ப்பான் பாங்கன் பாணன் பாடினி பிளேயர் விருந்தினர் கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் பாத்த சிறப்பின் வாயிலக ளென்ப ? * காமகிலே யுரைக்கலும் கேர்கிலே புரைத்திலும்
கிழவோன் குறிப்பினே யெடுத்தனர் மொழிதலும் ஆவோடு பட்ட நிமித்தங் கூறலும் செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் அன்னவை பிறவும் பார்ப்பார்க்குரிய '
 

1.69
என்னும் கொல்காப்பியச் சூத்திரங்களால் புலணுகும். பார்ப் பான் என்பதற்கு நன்றும் தீதும் ஆராய்க்திரைப் போன்
ானப் பொருள் கூறுவர் பேசாசிரியர்.
அறிவர்
இவர்கள் இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் மூன்று
ாலத்தையும் அறிந்த பெரியோர். "யோகிகளாய் உபா
|ங்களால் முக்காலமுமுணர்ந்த மாமூலர் முதலியோர் இவ்
வறிவரில் ஒரு சாரார்
' என்று கூறுவர் நச்சினுக்
* மறு வில் செய்தி மூவகைக் காலமு
நெறியினுற்றிய வறிவன் நேயமும்'
என்பது தொல்காப்பியம்.
* மூவகைக்காலமும் நெறியில் ஆற்றலாவது பகலு ரெவும் இடைவிடாமல் ஆகாயக்கைப் பார்த்து ஆண்டு கழும் வில்லும், மின்னும், ஊர்கோளும், தாமமும், இன் ழ்வும் கோனிலேயும், மழை கிலேயும், பிறவும் பார்த்துக்
و به بیر در ۹ او கூறதல்' என்பர் இளம்பூான வடிகள்.
தாபதர் இவர் தவ வேடம் பூண்டு விரதவொழுக்கம் மேற கொண்ட பெரியோர். ' தவஞ் செய்வார்க்குரியன ஊண சையின்மை, நீர் நீசையின்மை, வெப்பம் பொறுத்தல் ஈட்டம் பொறுக்கல் இடம் வரையறுக்கல், a: Tiia on Tatri ான எட்டும்; இவற்றிற்கு உணவினும் நீரினுஞ் சென்ற மனத்தைக் கடுத்தலும், ஐக்தி காப்பனும் நீர் கிலேயினும் நிற்றலுங், கடலுங்காடும் மலேயும் முதலிய வற்றில் கிற்றலுக் தாமரையும் ஆம்பலும் யாமையும் முதலிய ஆசனத்திருக்

Page 95
170
தலும், உண்டற்காலை உரையாடாமையும், துறந்தநாட் டொட்டும் வாய்வாளாமையும் பொருளென்றுணர்க. “9)იჩ யோகஞ் செய்வார்க்குரியன, இயமம், நியமம், வளி நிலை, தொகை கிலை, பொறை நிலை, நினைதல், சமாதி, என எட்டும்
* பொய் கொலை களவே காமம் பொருணசை
யில்வகை யைந்து மடக்கிய தியமம்
பெற்றதற் குவத்தல் பிழம்பு நனியுணர்தல்
கற்பன கற்றல் கழிகடுங் தூய்மை’ பூசனைப் பெரும்பய மாசாற் களித்த லொடு
நயனுடை மரபி னியம மைந்தே’. * கிற்ற லிருத்தல் கிடத்தல் நடத்தலென் ருெத்த நான்கி னெல்கா நிலைமையோ டின்பம் பயக்குஞ் சமய முதலிய
y
வந்தமில் சிறப்பி னுசன மாகும்
* உந்தியொடு புணர்ந்த விருவகை வளியுங்
தந்த மியக்கங் தடுப்பது வளிகிலை ’
* பொறியுணர் வெல்லாம் புலத்தின் வாழாம
லொருவழிப் படுப்பது தொகை நிலைப்புறனே ?
* மனத்தினை யொருவழி நிறப்பது பொறையே
* கிறுத்திய வம்மன நிலை திரியாமற்
குறித்த பொருளொடு கொளுத்த னினைவே
* அங்ங்ணங் குறித்த வாய்முதற் பொருளொடு
தான் பிறனுகாத் தகையது சமாதி ’
(ந. உரை மேற்கோள்)

17.
தவத்தினியல்பு
* நீஇ ராட னிலக்கிடை கோட
முேஒ லுடுத்த முெல்லெரி யோம்ப லூரடை யாமை யுறுசடை புனேதல் காட்டி லுணவு கடவுட் பூசை
யேற்ற தவத்தி னியல்பென மொழிப
* மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் ’
என்னும் குறளால் சடைபுனேதலும் மழித்தலும் தாபத ருக்கு இயல்பு என விளங்குகின்றது. மழித்தல் புத்த சமய வழக்குப் போலும்.
தமிழர் சமயம்
தமிழ் மக்கள் தொன்மை தொட்டுக் கைக்கொண்டு வரும் சமயம் சைவமேயாம். புத்த சமயம் தலையெடுப்ப தன்முன் சைவ மதமே இந்தியா இலங்கை முழுமையும் பரவி யிருந்தது. கி. மு. 543-ல் வட தேயத்தினின்றும் இலங்கையை அடைந்த விஜயனின் மதம் சைவம் என இலங்கைச் சரித்திரத்திற் படிக்கின்ருேம். விஜயனுக்குப் பின் இராச்சியம் எய்திய மன்னர்கள் தம் பெயரோடு சிவன் என்னும் பெயரையும் வைத்துச் சிறப்பித்தனர். விஜய னுடைய வருகைக்குப் பன்னெடுங் காலத்துக்குமுன் நிகழ்ந்த பாரதம் இராமாயணத்திற் சொல்லப்படும் அருச்சுனன், அஸ்வத்தாமன், இராமர் முதலிய வீரர்கள் சிறந்த சிவபத்தர்கள் என அறிகின்முேம்.

Page 96
* ஏர்கரு மேழுல கேக்க வெவ்வுருவுக் கன்னுருவா
பார்கலி சூழ்கென் விலங்கை யழகர் வண்டோகரிக்கு போருளின்ப மளிக்க பெருக் துறை GELL AT ITF:
சீரிய வாயாத் குயிலே தென்பாண்டி Vir: " LITä5Tr-5, I7 | ''
என மானிக்கவாசக சுவாமிகள் கிருவாசகக்கிற் கூறியிருக் கின்ருர், இராமாயண காலத்துக்கு முற்பட்ட சிங்கன் குரன், தாருகன், காசிபர் முதலா னுேரும் சிவமகத்தவர்களே.
* தென்னுைெடய சிவனே போற்றி ' பாண்டி நாடே பழம்பதியாகவும் *பத்தி செய்யடியரைப் பாம்பரத் துய்ப்ப : ārī Erīni; ; ; r: L LIT 3: ❖ù! tጅዃ! தினணு தமிழனாககு கண பாணடி காடடான, orga r. Irafii, TFE I al II SI, gr அருளிச் செய்கிருக்கு மாற்ருன் தென்னுட்டிங் ருெ:ன்மையே தமிழ் மொழியும் சிவநெறியும் உண்டென விளங்கும்.
கலித்தொகை, அகநானூறு, புறநானூறு முதலிய சங்க விலக்கியங்களிற்கா னப்படும் கடவுள் வாழ்த்துகளால் இவ வழிபா ତ! தென்னுட் டில் வியாபித்திருக்கதென் வெளிச்சமாகின் لlf( لیتیi[ =
(էք குறிஞ்சி பருதம் நெய்தல் பாலே என்னும் ଶ ନା!!!!!!! களில் வாழ்ந்தோர் முறையே Luirir முருகன் வேந்தன் வருணன் காகிெழாள் முதலிய கடவுளரை வழிபட்டனர். Pಿಣಿ; வழிபா ட்டைக் குறிக் துக் திருமுருகாற்றுப்படை விரிவாகக் கூறுகின்றது.
* முல்லே நிலத்துக் கோவலர் பல்லா | || || 5,5 35,4,5,3, மாயோன் கி பயக்கும் ஆபல காக்கவெனக் குரவை பல தமிஇமடை பல கொடுத்தலின் ஆண்டு அவன் வெளிப்
படுமென்ீர்.

LT器
* குறிஞ்சி நிலத்துக்குறவர் முதலியோர் குழீஇ'வெறி பர்தற்கு வேண்டும் பொருள் கொண்டு வெறியயர்பவாக ஜின் ஆண்டு முருகன் வெளிப்படுமென் ருர், நெய்தல் லத்தில் நுளேயர்க்கு வ&லவளத்தப்பின் அம்மகளிர் Gr டன் குழீஇச் சுறவுக்கோடு கட்டு ஆண் பொவுக் கடன் கொடுத்தலின் ஆண்டுவருணன் வெளிப்படும் ,
(கச்-உரை).
இருக்கு முகலிய வேதங்களிற் சொல்லப்படும் விஷ்ணு ருணன் இந்திரன் முதலியோரும் தமிழ்நாட்டு மாயோன் வேத்தன் வருணன் முதலானுேரும் ஒருவரல்லர்
* கொடிங்லே கந்தழி வள்ளியென்ற
வடுநீங்கு சிறப்பின் முகலன் மூன்றும் கடவுள் வாழ்க்கொடு கண்ணிய வருமே ’
ன்னும் தொல்காப்பியக் குத்திரம் தமிழ் மக்கள் கடவுளே சந்திரன் சூரியன் முதலிய ஒளியுடைப் பொருள்கள் வாயி ாக வழிபட்டார்கள் என் தைப் புலப்படுத்துகின்றது. கொடி கிலே-குரியன் ; கந்தழி-ஒரு பற்றுக்கோடுமின்றிக் ானே பாய்த் தத்துவங்கடக்க பொருள். வள்ளி-சந்திரன். ஈர்கழி என்பது பற்றுக் கோட்டை அழிப்பது என்னும் பொருளில் அங்கியைக் குறிக்கும் எனச் சில விவேகிகள்
Lறுகின்றனர்.
கடவுளேக் குறிக்கும் தமிழ்ப்பெயர்களாகிய இறைவன், யவுள், கடவுள் முதலிய சொற்கள் தமிழ் மக்கள் கடவு குறித்து எவ்வகையான விளக்கம் உடையவர்களாய்
இருந்தார்களென்பதை வெளியிடுகின்றன.

Page 97
174
முருகக் கடவுள், ஆலமர் கடவுளுக்கும் (சிவன்) கொற் தவைக்கும் புதல்வன் என இலக்கியங்கள் அறைகின்றன. கொற்றவையே உமையாம்.
முற்காலத்தில் மக்கள் இறைவனின் அடையாளமாகக் தறிகளே மரங்களின்கீழ் நிறுத்தி வழிபட்டு வந்தனரென்றும் அவ்விடங்களிலேயே பின் பெரிய கோயில்களெடுக்கப்பட் டன வென்றும் அதற்குச் சான்று, மூங்கிலடியில் கடவுள் விற்றிருந்தமையால், திருநெல்வேலி வேணுபுரமென்றும், குறுகிய ஆலமரத்தடியிலும் குறுகிய பலாமரத்தடியிலும் இருக்கமைய ால் கிருக்குற்ருலமென்னும், குறும் பலாவென் றும், தற்காலம் மதுரையில் கடம்பவனத்தடியில் இருந்தமை பால் கடவுள் கடம்பவனேசுவரர் என்றும், நாவல்மரத்தடி யில் இருந்தமையால் திருவாளேக்கா ஜம்புகேசுவாரென்றும், தில்லே வனத்தில் இருந்தமையால் சிகம்பரம் கில்லே யென் றும் அழைக்கப்பட்டதுமன்றி அதுபோன்ற மகிழடி முக லான மரத்தடிகள் கடவுள் இருப்பிடமாயிற்றென்றுஞ் சொல்லப்படுகிறது.
திருமங்கிரம், தேவாரம், திருவாசகம், சித்தாந்த சாத் திரம் பதினுன்கு முதலியவற்றுடன் காணப்படுகின்ற கோட்பாடுகளே தமிழர் சமயக்கொள்கைகளாகும். தேவா ாம் திருவாசகம் பாடியவர்கள் காலத்து விளங்கிய சிவால யங்களின் பெருக்கமே சைவமதம் தென்னுகெளிற் பழ மையே கிலேபெற்றிருக்க தென்பதற்குச் சான்ருகும்.
தமிழ் இலக்கணக்கிற் சொல்லப்படும், உயிர், மெய், உயிர்மெய், வேற்றுமை முதலிய சொற்களே தமிழ்மக்களின் உயரிய சமய உணர்ச்சிக்கு உறுசான்று.
* பழந்தமிழர்களது சமயம் ஆரியர் சம்பங்கம் பெற்றி ருக்கவில்லை. காலகதியில் தமிழர்களுடைய சமயம் ஆரியர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

卫75
Lr|Lrzi கோட்பாடுகளுடன் கலப்புற்று தற்கால ,$8juaנגr naונדL{ துடைக்கிருக்கின்றது. தென்னிந்தியருடைய சமய நூல்கள் சமஸ்கிருத மனம் பெற்றிருந்தாலும், தமிழ் நாட்டுக்கே சொந்தமான கொள்கைகள் உடையன வாயிருக்கின்றன வென்று மாக்ஸ் மூலர் போப்பைபர் முதலியோர் கூறுகின் மனர். ஆகமங்கள் தமிழருடைய பழக்க வழக்கம் சமயம் முதலியவற்றைத் தழுவிச் செய்யப்பட்டன வென்று Prof. சேஷகிரி சாக்கிரிபார் கூறுவர். ஆரியர் சமயக் கொள்கை தமிழ் நாட்டிற் பரம்புவதன் முன் அந்நாட்டுக்குச் சொந்த மான சமயக் கொள்கைகள் இருந்தன வென்பது உண்
பைே ■
* சரித்திர காலத்துக்கு முன் கொற்றவை முருகன், : : ருணன் முதலிய கடவுளர்களேக் தமிழ்மக்கள் வழி ul {
வத்தனர். ஆணுல் அவர்கள் ஒரே முழு முதற் கடவுள் உண்டென்னும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருக்கார்க ளல்லர், சிவ வழிபாடு ஆதியில் தமிழருக்குள் இருக்தி அது Т6ії ரெகோசின் (Riago zen) என்னும் பண்டிதர் கூறுவர். சிவவழிபாடு வட நாட்டிற் பார்க்கிலும் தென்னுட்டுக்கே உரிமை பூண்டது என வேர்கூசன் (Ferguson) என்னும் நிஞர் * மரமும் சர்ப்பவணக்கமும்’ என்னும் நாவில் கூறு கின்றனர். சிவபெருமான் தமிழ்க்கடவுளென்றும், அவர் தியானப் பொருளாகவும், புலனுக்ககப்படாததைக் கட்புலன் துவும்இலிங்கவடிவாகவும்பாவிக்கப்பட்டா ரெனஸ்டிவென் afsir(Dr. Stevenson)என்னும் அறிஞர் கூறுவர்பூவும் புகை புங் கொண்டு கடவுளேவழிபடுதலே பழந்தமிழர் மரபு. பூ இதயத்தையும் புகை அது உருகுவதையும் குறிப்பிடுவன. தென் ணுட்டவணுகிய இராவணன் சிவலிங்க 55, புரிபவ னென்றும் அவன் செல்லும் இடங்களுக்கெல்லாம் பொன் இலிங்கத்தை எடுத்துச் சென்று பூவும் புகையுங் கொண்டு

Page 98
176
வழிபட்டானென்று சொல்லப் படுகின்றது. சுவாமி விவே கானந்தர் சொல்வது போல இலிங்கம் ஆண்குறி சம்பந்த மானதல்ல. ஆநந்தக் குமார சுவாமி அது மக்கள் சம்பந்த மானதல்ல எனப் புகன்றதே பொருத்தமுடையது. தென் குமரி முதல் வடபெருங்கல் ஈருக இலிங்க வழிபாடு காணப் பெறுகின்றது. இவ்வழிபாடுகான் மிகவும் பழமையானது. சிவலிங்க வழிபாடுமா பாரதத்திற் சுறப்படுகின்றது. ஆக வக்காமா ஆருச்சுனனுக்குத் தோற்ருன், அருச்சுனன்வெற் நிக்குக் காரணம் அவன் கடவுளே இலிங்க வடிவில் பூசிக்க தும் அசுவத்தாமா மூர்த்திவடிவில் வழிபட்டது (Srir மென வியாசமுனிவர் கூறுகின்ருர், வேதங்களும் உபநிட கங்களும் இவ்வழிபாட்டைக் குறிப்பிடுகின்றன. தென்னிக் கியாவில் புதிய கற்கால லிங்கங்கங்கள் கண்டெடுக்கப்பட்
--- S AAAAA AAASAAA AA AAAA SeeeS S S S S S S SeLeeS0 eSeSSS AAAA டன. வேதகாலத்திக்கு முற்பட்ட இலிங்கவடிவில் சிவ வழி பாடு இருந்ததெனக் கூறும் P. T. ரீனிவாச ஐயங்கார் கூற் அக்கு இது சிறங்க சான்ருகும். (திராவிட இந்தியா)
ஆரியச் தமிழர்களோடு கலக்க நேர்ந்த ஞான்று ஆரியர் தமிழகத்துப் பரவியிருந்த சிறந்த பல கொள்கைகளேப் பின் பற்றிக் தமது சமயத்தைச் சீர்கிருத்தஞ் செய்துகொண்ட
দয়াrm.
"" The Wedic culture which resertibles that of the Horneric Greeks or the Celtic Irish at the beginning of the Christian era, or that of the pre-Christian Teutons and slaves becomes transfor Ined in the epics into the Hindu culture through the influence of Dravidians. The Aryan idea of worship during the earliest period was to call on the Father sky or some other shining one to look from on high on the sacrificer, and receive from him the offerings

77
of fat or flesh; cakes and drink. But soon Puja or worhip takes the place of Homa or sacrifice, Image worship hich was a striking feature of the Dravidian faith was ccepted by the Aryans. The ideals of vegetarianism and ci-violence (Ahimsa) also developed, The vedic tradition as dominated by the agamic and today Hindu culture shows the influence of the agama, as much as that of the redas. The Aryan and the Dravidian do not exist side by de in Hinduism. (Sir Radhakrishna)
" Contact with the highly civilized Dravidians led to the trasformation of Wedism into a theistic religion.'
"It need not be thought that the Aryan was always the superior force. There are occasions when the Aryan yielded to the non-Aryan and rightly too the epic relates he manner in which the different non-Aryan ones ristina's struggle with Indra, the prince of the Wedic gods, is one instance. The rise of the cult of Siva is Other.' (Sir Radhakrishna)
நான்மறை
தமிழர் சமயத்துக்குப் பிரமானநூல்கள் நான்மறை. நான்மறை முற்றிய வகங்கோட்டாசான்’ என்னும் தொல் காப்பியச் சிறப்புப் பாயிரத்தால் பண்டைமறைகள் நான்கு இருந்தன வென்பது புலனுகும். இன்னும் சங்கநூல்கள் ான்மறையைக் குறித்துப் பல்லிடங்களிற் கூறின. ' அள பிற்கோடல் அந்தணர் மறைக்கே ’ (தொல்-எ 02-) என்பதால் அம்மறை இசையுடன் பயிலப் படுவது என்ப irah : மறையோர் கேளத்து மறை லெட்டனுள் ? கொல்-கள-I) என்பதால் மண ஒழுக்கங்கள்போன்ற
1호

Page 99
S
உலகியல் ஒழுக்கங்களும் அதன்கட் கூறப்படும் என்பதும் விளங்குகின்றது. அந்தணர் மறை என்றதனுல் அம்மறை கள் அறவொழுக்கக்கின்பால் கின்றோாகிய அந்தணரால் பயிலப் பட்டன வென்பதும் அறியக் கிடக்கின்றன. துறவி களாகிய மறையவர்கள் வாக்கினின்றும் போந்த நிறை மொழி களே மங்கிாமெனப்படும்.
* விண்வெளிங்கிவி விளங்கிய .قتلكه الأسبق"
முனேவன் கண்டது முதனூலாகும்
எணமுதனூலுக்கிலக்கணம் தொல்காப்பியக்கிற் கூறப்பட் டுள்ளது.
ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து ?
(கலி-கடவுள்)
கல்லாலங் தண்ணிழற்கீழ்க் கவித்துறை பயந்த காமர்காட்சி தல்லானே நல்லா ளொருபாக மாகிய ஞானத்தானே (டாருக் யெல்லாரு மேக்கக் ககுவானே பெஞ்ஞான்றுஞ் சொல்லா கெல்லாக் துயரல்ல கில்லே கொழுமின் கண்டீர்.
(தொ. ਯ மேற்கோள்)
இன்னும் தேவார கிருவாசகங்களில் பல்விடங்களில் இறைவன் ஆலழேலில் அமர்ந்து பக்குவம் வாய்ந்த நான்கு தவத்தர்களுக்கு மறைகளே அருளிச் செய்த வரலாறு கூறப்படுகின்றது. 4 சங்க நூல்களில் ஆலமர் செல்வன் என்
* " ஆல் கெழு கடவுட் புதல்வ ' (முருகு) 4 சீஸ் நாக நல்கிய கலிங்க
மாலிமர் செல்வர்க் கமர்ந்தனன் கொடுத்த ' (சிறுபாண்) 'ஆலமர் செல்வனணி சால் பெருவிறல் ' (சவி) 'ஆலமர் செல்வன் மகன் ' (மணிமே)

L79
நம் பெயர் இறைவனுக்குப் பெயராக வந்திருக்கின்றது. கால்காப்பியர் * செந்தமிழியற்கைசிவணிய நிலத்து ? ழக்குக் கூறப் புகுந்தாராதவின் அவர் கூறிய மறைகள் ந்து நாட்டாருக்குரியதன் றென்பது தானே பெறப்படும்.
* சதாசிவங் கத்துவம் முத்தமிழ் வேதம்’
தங்கிமிதாமை வைத்தான் தமிழ் சாக்கிரம்
' ஈருன கன்னி குமரியே காவிரி
வேரு வதிர்த்த மிக்குள்ள வெற்பேளூள் பேருன வேதாகமமே பிறக்கலான் மாருன, தென்றிசை வையகஞ் சுத்தமே ’
* தமிழ்மண் டமைங்துங் தாவிய ஞான முமிழ்வது போல வுலகங் கிரிவர் ?
* அவிழு மனமு மெம்மாதி யறிவுக்
தமிழ் மண்டல மைக் துக் கத்துவமாமே
(கிருமந்திரம்)
ன வருவனவற்ருல் தமிழருக்குரிய முதனூல்களாகிய றைகள் தமிழில் இருந்தன வென்பது புலனுகும்.
வேதாகமங்கள் சதாசிவமூர்த்தி ahrirሀሣlaነ} TJ፫ କାଁଡୀ தன என்னும் ஐதீகமும்,
' சதாசிவங் கத்துவம் முத்தமிழ் வேதம் iனும் திருமங்கிரமும்
t மற்றவை தம்மை மகேந்திரக் கிருத்து
உற்றவைம் முகங்களாற் பணிக் கருளியும் ான்னும் திருவாசகமும்

Page 100
ISO
' சதாக்கிய மென்னுங் கத்துவத்தில் விற்றிருந்து
சதாசிவன மலன்முன்’ நயந்தாருயி னெல்லா கண்ண வறமாதி பியம்பினு னுகம நாலேழு’ என்னும் சைவ சமய நெறியும், தென்னுட்டுச் திரைப் பிரா மணர்கள் தங்கோத்திர முதல்வர்கள் சதாசிவமூர்த் தியின் முகங்களினின்றும் தோன்றிஞர்களெனக் கூறுகின்றமை யும், ஒக்க கருத்துடையனவாகக் காணப்பெறுகின்றன.
தமிழ்மொழியிற் காணப்பட்ட மறைகளும் ஆகமங்க ளும் அங்கங்களும் இறந்துபட்டன. திருமங்கிரம் ஞானு மிர்தம், சித்தாக்க சாஸ்திரங்கள் முதலியன பழய தமிழர் மறைப் பொருள்களே அடிப்படையாகக் கொண்டெழு தனவேயாம்.
இப்பொழுது ஆரிய மொழியிற் கா னப்படும் மறை களும் அங்கங்களும் பிறவும் பழங்கமிழர் கைக்கொண்ட நூல்களாக மாட்டா. இருக்கு முதலிய நூல்கள் ஆரிய இந்தியாவை அடைந்த பின்னர் அவர்களா ற் பாடிச் சேர்க் கப்பட்ட பாடற்ருெகைகளாகக் காணப்பெறுகின்றன. அவ் வேதங்கள் சிவபெருமானே முழு முதலாக ஒப்புக்கொள்ள வில்&ல. வேதங்கள் அக்னி, வாயு, குரியன் முதலியவர்களால் வெளியிடப்பட்டனவென்று மலுப் பிரசாபதி கூறுகின்கு
யாகங்கள் நிறைவேறும்ெ ருட்டு இருக்கு எக சாமம் என்னும் பெயர்களையுடைய அநாதியான வேதத்தை அக்னி, வாயு, குரியன் இவர்கள் மூவரிடத்தினின்றும் வெளிப்படுத்தினர் (பிரம்மா) (மனு-அத். ! = 2
வேதங்கள் மூன்றென்னும் பொருளில் வேகம் க்ரயி' என்று நெடுகிலும் வழங்கப்பட்டது; சிவத்தியாநாகந்ததுமா

IS1.
ம்ஹமும் மூன்றெனக் கூறுகின்றது: ஆரிய வேதங்களும் அங்கங்களும் பிறவும் மக்களாற் செய்யப்பட்டன வென்பது
வத்தியா நாதக்க மகரிஷி என்னும் அறிஞரால் தமிழில்
கூேறும். வேதமார்க்கக்கைக்கைக்கொண்டுஉஞற்றப்பட்ட காலை வேள்விகளைக் கண்டிப்பதற் கெழுந்ததே புத்தமதம். தக்கன் வேள்வித் தகர்கின்ற கஞ்சமஞ்சி ' (திருவாச ம்) என்பதால் பாகங்களிற் கொல்லப்படும் மிருகங்களின் ானே வேள்வி யாசிரியரும் பிறரும் பாதிடு செய்வது வழக் ாறெனத் தெரிகின்றது. நீதி நூல்களும் சைவ நூல்களும் கொல்லபாவமென விள்ளுகின்றன. ஆரிய மதம் தென்னுட்
*The Hynns of Rig Weda - The hy Ins which re collected in this work are I()28 in number and were omposed during several centuries. They are only the materials we have for the history of this early period, which is called the Vedic Age.
"" The people of lil dia recognise four Wedas, and this show they have grown up, some of the hy Illins by an ancient custom chanted at sacrifices instead of being ecited and a separate collection was made of these chanted hymns and called Sama Weda. Special sacrificial fornulas and rules also existed from ancient times for the perormance of rites, and these formulas and rules were colected under the form of Yajur Veda and a collection of the latter hymns often consisting cf charms and incantaions against evil influences grew up under the name of Atharva Weda. ' (The civilisation of India by Romesh C. Dutt, C.I.E.)

Page 101
183
டில் வேரூன்றிய பிற்கா லத்தில் சிறந்த அறிவாளிகளும் சிதார்க்கம் மகம் முதலியவற்றிற் செய்யப்படும் கொலே பாவமாகாதென நம்பத் தலைப்பட்டனர். இங்கம்பிக்கைக் குக் காரணம் கொலே வேள்விகளை வகுத்துள்ள வேதங்கள் கடவுள் வாய்ப் பிறக்கனன்ன அன்னுேர் விசுவாசித்தமையே
யாம்.
* சமிதை பெறும் பிக்குப் பிராயச் சிக்கத்தை
யவை யடைவே செய்யென் றறைந்தாய்-இமையோர் நசிக்கவரு நஞ்சுண்ட நாகா யாகத்திற்
பசுக்கொலே பேன்சொ ன்னுய் | Fir
(சிற்றம்பல நாடிகள்)
* பூசுரர்க் கிழிவிலே பாகத்துயிர் கொன்
றருந்தலின் விண்புகுதா நிற்பர் கோச மெடுத்துரை ஈவிற்குசிரியர் சிறர்க்கி
தமது முன் கொடுப்பான் முன்னர் ஆசுமிகு துயர்விளைத்தும் இதம் அதுவாப் பொருள் பெறலின் அரியவேத ஒசைமிகு மட்டாருலகை துவர் வதைக்க
சிவனும் பெற்றுத லாலே ' (கொலே மறுத்தல்) குழைமுகங் தூங்குஞ் இரம்பணிப் பசும்பொற்
குண்டல வேகியர் நாளும் அழன்முகக் காற்றும் அருமகத் தன் நிச்
செந்தசை அருந்தின ரில்லே' (காசி கா ண்டம்) *அருமகக் தன்றியூன் சுவைத்துடல் விக்குவோன்’ (மேற்படி) * மருத்தில் கிகியின் உயிருய்யும் வாயின் மிகமகனில்
அருங்கற் கியல்பத தெனினும்’
(அருட்பிரகாசம்).

183
மேற்காட்டியன முன் யாம் கூறிய வாற்றுக்கு எடுத்துக் காட்டுகளா கும்.
அப்பைய தீட்சிதர் தாம் வேள்வி ஆசிரியணுயிருந்து யற்றிய மகத்தில் வெட்டிக் குவிக்கப்பட்டிருந்த மிருகங் ளைப் பார்த்து ஒ வேதமே உன்னே நம்பினேன் எனக்
றி ஒலமிட்டனராம்.
வாணிகம்
தமிழ் மக்கள் காலிற் பிரிவதோடு கலக்கிற் பிரிந்துங் கடல் கடந்தும் வியாபாரஞ் செய்துவந்தார்கள். 'காலிற் பிரிதல், *கலத்திற் பிரிதல் எனவருஉம் பழந்தமிழ் நூல் களின் வழக்கும், ' கிரைகடலோடியுங் கிரவியங் தேடு ' ன்னும் பழமொழியும் தமிழர் கடல் கடந்து செய்த ணிைகப் பெருக்கத்தை உணர்ச்தும். " முங் நீர் வழக்கம் கஉே வோடில்லே ' என்னும் தொல்காப்பியச் சூத்திரமும் ழ்மக்கள் பொருளிட்டுவதற்கு கடல் கடந்து தூரதேசங்
க்குச் சென்ருர்களென்பதை நன்கு காட்டும்.
சலோமன் அரசனுடைய காலத்திற் பினிசிய நாட்டுக் ரசனுக டையர் என்னும் பட்டினக்கில் இருக்கோன் ராம். பினீசியர் மாலுமித் தொழிலிற் சிறந்தவர்கள்.
"The great Appaya Dikshithar horrified at the sight of the slaughtered animals at a vedic sacrifice he permed is said to have cried out, " Oh Ye Wedas I lieved you. " (Tamilian Antiquary No. 2.) "But there is evidence of its (bulls) having been led in Sacrifices and its cooked flesh offered to the ods, specially to Indra who seemed to have developed a
en taste and inordinate desire for it."
(Rig, Wedic. India.)

Page 102
184
இவர்களைத் துணேக்கொண்டு சலோமன் அரசனுடைய கப்பல்கள் கிழக்குத் தேசங்களுக்குச் சென்று ஒபீர் (உவரி) என்னுங் துறைமுகத்திற் றங்கி பொன், வெள்ளி, யாக்னத் தந்தம், மயில், குரங்கு, நவமணி முகலியவற்றை ஏற்றிக்கொண்டு கிரும்பின. எபிரேய அரசனுன சாலமன் கி. மு. 1000 வரையில் சிவித்தவன். தமிழ் நாட்டினின் றும் சென்ற ஒவ்வொரு பண்டங்களும் எபிரேய நாட்டில் தமிழ்ப் பெயர்களாலேயே அறியப்பட்டன. கமிழ் அகில் எபிரேயமொழி ஆஹல் , தமிழ் தோகை (மயில்) எபி ரேய மொழி துகிம் ; வடமொழி கவி (குரங்கு) எபிரேய மொழி கொவ். கிரேக்க மொழியில் ஒரிசா என்பது அரிசி என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. பெப்பரி என்பது கிப்பலி என்பதன் கிரிபு. கிரேக்கரும் தமிழ் காட்டிலிருந்து அரிசி, மிளகு முதலிய பொருட்களே வாங்கிச் சென்றனர்.
கி. பி. முதல் நூற்றுண்டில் விளங்கிய பிளினி என்னும் ரோமை ஆசிரியர் இந்தியாவிலிருந்து ரோமாாச்சியத்துக்கு ஏற்றுமதியாகுஞ் சாக்குகள் ஆண்டொன்றிற்கு 55,000,000 செஸ்டேர்ஷிகள் (987,000 பவுன்) பெறுமதியானவை என்று கணக்கிட்டிருக்கின்ருர், இன்னும் அகஸ்து ஜீசர் முதல் சேணுே ஈருகவுள்ள ஒவ்வொரு ரோம அரசரின் நாணயங்களும் தென்னிந்தியாவிற் பல விடங்களிற் கண் டெடுக்கப்பட்டிருப்பதனுல் ரோம நாட்டாருக்கும் தமிழ் நாட்டாருக்கும் கி. பி. 5-ம் நூற்றுண்டுவரையும் இடை விடாத தொடர் பிருந்தமை ஒரு கலேயாகும். அரேபி யநாட்டுக் குதிரைகளும் தமிழ் நாட்டுத் துறைமுகங்களில் இறக்குமதியாயின. இக்குதிரை வியாபாரங் காரணமாகவும் பின்னர் கப்பல் மீகாமன்களாகவும், அரேபியர் தென்னிங் தியா இலங்கைக் கரையோரங்களில் சில பாகங்களேத் கங்கு மிடமாக்கி காளடைவில் அங்குக் குடிபதிகளாய் விட்டனர்.
 
 
 

S5
பாபிலோனில் சுமேரிய அரசரின் தலைநகரமாகிய ஊரின் இடிபாடுகளில் மலேயாளக் கரைகளில் மாத்திரம் வளருகின்ற தேக்கமாத்தின் துண்டொன்று கண்டெடுக்கப் பட்டது. இதனுல்4000 ஆண்டுகளுக்குமுன் சுமேரியர் கமிழ கத்தோடு வியாபாரப் போக்குவரத்துடையவர்களா யிருக் நார்களெனப் புலனுகின்றது.
கி. மு. 1462-ல் பதினெட்டாவது தலேமுறையாக முடிவெய்திய எகிப்திய அரசரின் * மம்மீஸ்' என்னும் பிரேதங்கள் இந்திய மசிலின் துணிகளால் மூடப்பட்டி ருந்தன. எகிப்தியர் இங்கியாவில் கிடைக்கும் அவுரியிலி ருக்து எடுக்கப்படும் நீலக்கினுல் ஆடைகளுக்குச் சாய மூட்டிஞர்கள். இந்தியானின்றும் பிறநாடுகளுக்குச் சென்ற வியாபாரப் பொருட்களுள் பட்டு, மசிலின் முதலியன
Fr iff5﷽FùይLሶfféùIüü}Glሆ፡
தமிழர் சுமக்கிரா, சாவா, மலாயா முதலிய நாடுக
ளோடும் வியாபாரம் நடத்திவந்தார்கள். இதற்குச் சுன்று
பணிமேகலையிலுள்ளது.
அக்காலத்து காலினுங் கலக்கினும் வங்கிறங்கிய பண்
-ங்கள வருமாறு:
* நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காவின் வந்த கருங்கறி மூடையும் வடமலேப் பிறந்த மணியும் பொன்னும் குடமலேப் பிறந்த ஆரமும் அகிலும் கென் கடன் முத்தும் குணகடற் றுகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத் துணவும் காழகக் காக்கமும்
துரியவும் பெரியவும் தெளிய விண்டி "
(பட்டினப்பாலே)

Page 103
1S6
வியாபாரிகள் தாம் கொடுக்கல் வாங்கல் செய்யும் பண் டப் பொதிகளில், அவற்றின் நிறை, அளவு, எண் இவற்றை எழுதிச் சாலேகனில் அடுக்கிவைத்துப் பின்பு எடுத்துச்
செல்வர். இவ்வுண் ୍}}|Lit.
* வம்பமாக்கள் தம்பெயர் பொறித்த
கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பலபொகி கனடமுக வாயிலும் கருத்தாழ்க் காவலும் ’ என்னும் சிலப்பதிகார வடிகளால் விளங்கும்.
*" Kautalya was of opinion that the commerce with the south was of great importance than that with the north, because the Inore precious commodities came from the peninsula while the Northern Regions supplied only blankets, skins and horses. Gold, diamond, pearls, other gems and conch shells are specified, as products of the south '' (Oxford History of India, pp. 68, 69.)
கைத்தோழில்
தமிழ் நாட்டின் வளலும் தொழின்முறைகளும் இக் கட்டாார் பண்டை தாளில் பிற நாட்டாரோடு செய்து வந்த வாணிகப் பெருக்கை நோ க்குழி நன்கு புலனுகும். பட்டிலும் மயிரினும் பருக்தி நூலினும்-கட்டும் நுண்வினே கண்டவர்கள் தம்மக்கள். ஆக்காலத்தில் வழங்கிவக்க பட் டாடைகளின் பெயர் சிலப்பதிகாரத்திற் சொல்லப்படு கின்றன. அவற்றின் பெயர்கள் கேட்பதற்கு இன்பம் பயப் னவாம். அவை வருமாறு :-
F. N. Chanakya (Kalutalya), the great minister of "Chandragupta' Maura was a native of Dravida, that is ls anchi (History of the Tamils, p. 325.)
 
 
 
 

IST
* கோசிகம், பீககம், பஞ்சு, பச்சிலே, அாத்தம், நுண்டு ல், சுண்ணம், வடகம், இரட்டு, பாடகம், கோங் கலா, காபம், சித்கிாக்கம்மி, குருதி, கரியல், பேடகம், பரிபட்டக் ாசு, வேகங்கம், புங்கர்க்காழகம், சில்லிகை, தூரியம், ங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, துரல்யாப்பு, ருக்கு, கேவாங்கு, Q ான்னெழுத்து, குச்சரி, தேவகிரி, ாத்து லம், இறஞ்சி, வெண்பொத்தி, செம் பொத்தி |ணிப்பொத்தி:
* நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து ஆாவுரி பன்ன பதுவை நல்கி '
(ତ பாருனாாற்றப்பன (-)
(உரை) கண்ணிற் பார்வை, انایی مثبت இழைபோன வழி யென்: குறிக் துப் பார்க்க வாராத தாண்மை உடையவாய் த் தொழில் முற்றப் பெற்றமையால் பாம்பின் தோலே பொத்த துகிலேக்கொடுத்து
“காம்பு சொலித்கன்ன அறுவை' (சிறுபான்) (உரை) மூங்கிலாடையை உரித்தாலொக்க மாசில் - –L (77, בין E, "חי
*ஆவியன்ன அவிர்துற்கலிங்கம்’ (பெரும்ப ண்) 'புகைவிரிக்கன்ன பொங்கு துகிலு:இ’ (புறம்) தமிழ் அகத்தில் ஆடை நெய்யப்பட்டு பிற காடுகளுக் ப்பப்பட்டது. முற்காலக் து விடுகனி விருத்துகொண் ட அருமையான ஆடை வகைகள் நெய்தற்குரிய நுண்ணிய விழைகள் முழுதும் வீட்டுப் பெண்களால் நூற்கப் பட்டன. இதற்குச் சான்று, ' பருக்கிப் பெண்டின் பணு லன்ன ' (உரை பருக்கி நாற்கும் பெண்டாட்டியது
ாகிர்ந்த பஞ்சுபோல) என்னும் புறப்பாட்டாகும்.

Page 104
ISS
* பஞ்சிதன் சொல்லாப் பணுவ விை ழயாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாக கையே வாயாகக் கதிரே மதியாக மையிலா தான் முடி பு மாறு ' (நன்னூல்) மாம், இரும்பு, வெண்கலம், வெள்ளி, பொன் முதலி யவற்றில் நுட்பம் வாய்ந்த ெ தாழில் புரியும் கம்மியரும் பிற தொழிலாளரும் அக்காலத்து இருந்தார்கள் என்பது சிலப்
பகிகாரம், மணிமேகலை முதலிய நூல்களா லறியப்படும்,
ஓவியம்
கமிழ் மக்கள் ஒவியப் பெற்றியை விரித்துக் கூற வேண்டி யகில்லே. : الثانية تقذافي சோழக் கட்டிடங்களும், பழைய கோயில்களும், அமராவதி, மாவலிபுரம் முதலிய விடங்களி
அலுள்ள சிற்ப நட் 1ங்களும், பழக்தமிழ் மக்கள் அணிகலன் களும் அவர்கள் பாட்டுகளும் கமிழோவியத்தின் உயர் விற்கு கிலேக்களங்களா யிருக்கின்றன. காசுடர் முதலிய கவி வாணரும் தமிழர் ஓவியக்கைப் போற்றியிருக்கல் கவனிக் கக் கிக்கது. "நெடு கிலோ டக் கிடைகிலத் திருக்துழி வின் றும், கிரை கிலேமா டக் காமிய மேறி என்றும், வேயா மாடமும் என்றும், மான்கட் காலகர் மாளிகை யிடம் களும் என்றும் இளங்கோவடிகள் தமிழ்நாட்டுக் கட்டிடங் 4,27 j: சிறப்பித்கிருக்கல் காண்க
* தடு ணுேங்கிய நெடுகிலே மன்னகொறு ைேமயறு படிவத்து வானவர் முனிவர்
|1777; GT நி வெவ்வகை புயி பிளுே விமE காடடி வெண்சுதை விளக்கத்து விக்தக ரியற்றிய கண்கவ ரோவியங் கண்டு நிற்குநரும் ?
(மணிமேகஃ)

I89
மனிதர், மிருகங்கள், கடவுளர் முதலியோர் வடிவங்
கள் பலவகை நிறமைகளினுல் வீடுகள், அரண்மனேகள்,
கோயில்கள் முதலியவற்றின் சுவர்களில் தீட்டப்பட்
ருந்தன.
* இந்திரன் பூசை யிவளகலிகை யிவள்
சென்ற கவுதமன் சின்னுறக் கல்லுரு வொன்றிய படியிகென் றசைசெய்வோரு மின்னம் பலபல வெழுத்து நிலைமண்டபம்'
(பரிபாடல்)
சிற்பம் * கல்லு முலோகமும் செங்கலு மாமும்
மண்ணுஞ் சதையுங் கங்கமும் வண்ணமும் கண்டசர்க் கரையு மெழுகுமென்றிவை பக்கே சிற்பத் தொழிற் குறுப்பாவன: என்னும் திவாகரச் குத்திரமே தமிழர் சிற்பத் திறமைக்குச் 品=sT_立s,
வான ஆராய்ச்சி தமிழ்மக்கள் வான ஆராய்ச்சியில் வல்லுனராயிருக்கா ரென்பது
* செஞ் ஞாயிற்றுச் செலவுஞ் ஞாயிற்றப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிவமும் வளிதிரிதரு கிசையும் வறிது கிலேஇய காயமு மென்றிவை சென்றனர் தறிக்தோர் போலவென்று மினேத்தென் போரு முளரே'
எனவரும் புறப்பாட்டால் அறியப்படும். நிகண்டு நூல்களில்

Page 105
90
காள்கோள் ஒசை முதலியவற்றைக்குறிக்கக் கூறப்படும் பல பெயர்களே ஆராய்ச்சி செய்வதால் தமிழர் வா ணுராய்ச்சி யில் சிறந்து விளங்கினுள்கள் என்பது புலனுகும்.
சோதிடம்
மறைந்த ஒழுக்கக்கோாையு நாளுங்-துறந்த வொழுக் கங்கிழவோற் கில்லே. ' குடையும் வாளும் நாள் கோள் : என்னும் கொல்காப்பியச் குக்கிாங்கள் * கேடில் விழும் புகழ் நாடலேவக்கென' 'கிங்கட் சகடம் வேண்டிய துகறர் கூட்டக் து' எனவருஉம்றுகப் பாட்டுகள் முதலியன தமிழ ரின் சோதிட உணர்ச்சியை விளக்கும்.
* டாக்டர் தீபா தக்கணத்தில் தமிழ்ப் பாஷை வழங்கு மிடத்தில் செளா அல்லது வாக்கிய சித்தாந்தமே உப யோகப் படுத்தப்படுகின்றதென உவாான் ஆசிரியர் கூறி யுள்ளா ரென்றும், அது பிழையற்ற தென்றும் குறித்துள் ளார். மேலும் வேதாங்க சோதிடத்திற் கண்ட சாத்திர மான கணிதம் பிழை பட்டதெனக் கிவான் பகதூர் பரீமான் சாமிக்கண்ணுப் பிள்ளை அவர்களது 1916-ம் வரு டத்துச் சர்வகலா சங்க சோதிடச் சொற்பொழிவுகளே ஊன்றி நோக்கப் புலனும், தென்னுட்டில் தொன்று தொட்டு வழங்கி வந்தது புவீசனுல் இயற்றப்பட்ட வாக்கிய கணன முறை,’ (செந்தமிழ். * x No. 5.) போர்க் கருவிகள் முதலியன * அரசனுக்கு நால்வகைச் சேண்களுமிருந்தன. பல படைவீரர் பழகுவதற்காகத் தேரேறு மிடங்களும் குதிரை யேறு மிடங்களும் (செண்டுவெளி) வாட்டொழில் செய்யு மிடங்களும், விற்போர் செய்யு மிடங்களு மிருந்தன, வில் லும் வேலும் வாளுமே இவரது முக்திய ஆயுதங்கள்.
 
 
 
 

19
தங்கம், சக்கிரம் முதலிய ஆயுதங்களு மிருந்தன. தமது மெய் வாள் முதலிய படைகளால் ஊறுபடாம விருத்தற் க் கேடய மென்னும் மெய் காப்புக் கருவியும் உபயோகித் னர். இக்கருவி காடித்தோலாற் செய்யப்பட்ட தென்பது தெரிகிறது. புலித்கோலாற் செய்த கவசக்கை வீரர்க ாணித்துகொள்வது வழக்கம். வாகனங்களிலேழுத வீரர் வசம் பூணுதல் மாபன்று. விளையாட்டுகளுள்ளே யாசீனச் செண்டு குதிரைச் செண்டு என இரண்டு வகையுண்டு. இவை யாடும் முற்றவெளியைச் செண்டு வெளி யென்ப. ானப் போர் அக் காலத்து மிகச் சிறந்தது போலும், ானேகள் நெருங்கி வந்து போர் செப்யாம விருக் ஈற்கு இரும்பால் யானே நெருஞ்சி முள்ளாகச் செய்யப் பட்ட கப்பனமென்னுங் கருவியைச் சிதறுவார்கள். III IMI3mir li மருப்பை பறந்து கூர்மையிட்டு அது வளிகொள்ளும்படி ம்புரியென்னும் பூணிடுவார்கள். நகரின் மதிலேச் 卤F置凸 பானேக் கூட்டங்களிருந்தன. மகிலுக்கு உள்ளேயும் புறக் தேயும் ஆழமான அகழிகள் இருக்தன. புறத்தே அகழியி ன்றும் கோயில் அகழிக்கு வருவதற்காக கால்வா ப்கள் செய்யப்பட்டிருந்தன. விதியிற் செல்லும் யானேகள் அத லுள் விழாகிருத்தற் பொருட்டு இது மேலே மூடப்பட் ருக்கும். இக்காந்தகற் படை கரந்து படையெனவும் காங் ಪಕ್ಕಿ? பெனவும் வழங்கும். இம்மகிலிலே பலவகைப் பொறிகளிருந்தன வென்பதும் அவையவனாால் இயக்தி க்கப் பட்டனவென்பதும் கூறப்பட்டுள. யுக்கத்துக்குச் சல்வோர் பலவகை மாலே குடிக்கொள்வது வழக்க மென் தி மறிகிருேம் .ד. נ (செந்தமிழ்ச் செல்வி).
அரண் *அது வஞ்சனே பலவும் வாய்த்துத், கோட்டி முண் வியன பதித்து காவற்காடு புறஞ் சூழ்ந்ததனுள்ளே

Page 106
192
இடங்கர் முதலியன உள்ளுடைத்தாகிய கிடங்கு புறஞ் குழ்ந்து யவனரியற்றிய பல பொறிகளும் ஏனேய பொறி களும் பதனமும் மெய்புழை ஞாயிலும், ஏனேய பிறவு மமைந்து, எழுவுள் சிப்பு முதலியவற்றுல் வழுவின்றமைங்க வாயிற் கோபுரமும் பிற வெந்திங்களும் பொருந்த இயற்றப் பட்டதாம்.
* இனி ம&யரனும் நிலவாணும் சென்று குழ்க்தி நேர்தலில்லா ஆரதர் அமைந்தனவும் இட த்தியற்றிய மதில் போல வடிச்சிலம்பின் அரணமைந்தனவும் மீதிருந்து ਲਨ சொரியும் இடமும் பிற வெந்திரங்கள் அமைக்கனவும் அன்றிக் காட்டானும் அவ்வாறே வேண்டுவன அமைந்தன
TL i (நச்சி ஞர்க்கினியர் ..)
* மறனுடை மறவர்க் கெறவிட னின்றி இப்போ டையவி யப்பி யெல்வாயு மெந்திரப் பறவையியற்றின நிறீஇக் கல்லுங் கவனுங் கடுவிசைப் பொறியும் வில்லுங் கணேயும் பலபடப் பரப்பிப் பந்தும் பாவையும் பசிவரிப் புட்டிலு மென்றிவை பலவுஞ் சென்று சென்றெறிய முந்கை மகளிசை பியற்றிப் பின்றை பெய் பெரும் பகழி வாயிற் நூாக்கிச் சுட்டல் போயின் குயினும் வட்டத் திப்பாய் மகளிர் திகழ் நலம்பெற நோக்குநர் நோக்குநர் நொந்துகை விதிர்க்குங் தாக்கருங் தானே யிரும் பொறை பூக்கோட்டண்ணுமை கேட்டோறுங் கலும்க்கே"
(பொன் முடியார்)

93
அரண்மனே வாயிலில் பக்து பாவை முதலியன துர்க்கப் ட்டிருந்தன. 8 வரிப்புனே பங்தொடு பாவை தூங்க ?? முருகு) பகை அரசரைப் பெண்களாகப் பாவித்து அவர்
விளேயாடுதற் கென்றே அவை கட்டப்பட்டன.
மதிற் போறிகள் முதலியன
வளேவிற் பொறி (இது வளைந்துதானே எய்வது), ருவிரலூகம் (இது குரங்குப்ோலிருந் து சேர்ந்தாரைக் கொல்வது), கல்லுமிழ்கவண், கல்விடு கூடை (இடங்கணி யென்னும் பொறிக்குக் கல்லிட்டுவைக்குங்கூடை), தூண் டில் (இது தாண்டில், வடிவாகச் செய்து, அகழியிலிட்டு கிலேறுவார் அகிற் சிக்கியபின் இழுத்துக்கொள்வது), தொடக்கு (கழுக்கிற் பூட்டியிழுக்கும் சங்கிலி), ஆண்டலே ப்பு (சேவல் வடிவாகச் செய்யப்பட்டுப் பறக்கவிட உச் யைக் கடித்து மூளையை எடுப்பது), கலை (இது மதி லறின் மறியத்தள்ளும் ஆயுதம்), கழு, புகை (அம்புக் ட்டு) ஐயவித்துலாம் (இது கதவையணுகாதபடி அம்புகள் வத்தெய்யும் பந்திரம்) கைபெயர் ஊசி, (மதிற்றலையைப் பற்றுவாரைக் கையைப் பொகிர்க்குமூசி) எரி சிரல். (@@ ச்சிலி வடிவாய்க் கண்ணேக் கொத்துமாயுகம்) பன்றி இது கிற்றலேயில் ஏறினுருடலேக் கோட்டாற் கிழிக்க இரும் ாற் செய்தது, பனே (மூங்கில் வடிவாகச் செய்து அடிக் தற் கமைக்க பொறி), எழு சிப்பு, கணேயம், கோல், குக் ம், வேல், சதக்னி, கள்ளி வெட்டி, களிற்றுப் பொறி, கர்ப் பொறி, விழுங்கும் பாம்பு, கழுகுப் பொறி, தகர்ப் பாறி, அரி நூற் பொறி, ஞாயில் (குருவித்தல்), பிண்டி லம், எழு, மழு, வாள், கவசம், கோமாம், கதை, தண் ம், நாராசம், இருப்பு முள், கழுமுள், கூன் வாள், சிறு ள், கொடுவாள், அரிவாள், சுழல் படை ஈர்வாள், உடை 13 - -

Page 107
9.
வாள், கைவாள், கணேயம், கோடாலி, தோட்டி வேல், வச் சிரம், குறுங்கடி, ஈட்டி, கவண்; சிறுசவளம், பெருஞ் சவ ளம், சக்கரம், கன்னம், உளி, பாசம், தாமணி, சாலம், ஊசி முசுண்டி, முசலம், இடங்கணி, ஆள்பலகை முதலியன கடலோட்டுக் கதையில் ஆயுதங்கள் தொண்ணுற்று காறு
என்று சொல்லப்படுகிறது.
வீரத்தாய்
நமக்கு வெறுங்கட்டுக் கதைகள் போலத் தோன்றும் ஆக்செயல்களை பண்டைத்தமிழ்ப்பெண்களிடக்கிற் காண் கின்ருேம். தமிழ்த் தாய்டnாரே தம் புதல்வரை frji பெல்களில் ஊக்கிவிட்டார்களென விளங்குகின் ॥ பொன்முடியாரென்னும் பெண்புலவர் தாய் தந்தை அாசன் மகன் முதலியவர்க்குரிய கடமைகள் இன்ன வென்பதை அடியில் வருமாறு கூறுகின்ருர்,
சன்று புறந்தருதல் என்றலேக் கடனே சான்றே னுக் குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன்னடைதல்கல் வேங்கற்குக் கடனே
ஒகளிறு வா F1 CSSh-FLr முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளேக்குக் கடனே. (புறம்)
இப்பாட்டால் அக்காலத்து விரத்தாயாது மனநிே இத்தகைய தென்பது வெளிப்படும் மற்றொரு விரத்த யைப்பற்றிப் பூங்கணுக்கிாை என்னும் பெண்புலவர் பின் வருமாறு கூறுகின்ருர்,

195
மீனுண் கொக்கின் அராவியன்ன வானரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிதெறிந்து பட்டன னென்னு மூவகை யீன்ற ஞான்றினும் பெரிதே கண்ணிர்
தோன்கழையலம் வரும் வேதிாத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே (புறம்) இதன் பொருள்-கொக்கின் இறகுபோல இாைக்க கூக்தலே புடைய முதியவள் தன் புகல்வன் போரிலே யானேயை வீழ்த்திக் கொன்று தானும் மடிந்தானென்னுஞ் செய்தி கேட்டு கானவனேப் பெற்றபோது அடைந்த மகிழ்ச்சி பினும் அதிக மகிழ்ச்சியடைந்தாளென்பது. இதனுல் ஆக் காலக்கே வீரத்தாயாான பெண்டிர் காம்புதல்வரைப்பெறு வது ஒர் ஆற்ப வீரச்செயலேயேனும் அவரிடங் கண்டு
கிழ்தற்கே என்று கருதினரென்பதும் அவர் வீரச்செய வில் துப்பெண்டிர்க்கு மனமகிழ்ச்சியே யன்றித் துக்க |&&) பென்பதும் நன்கு விளங்கும், வீரத்தாய்
சியை ஒக்கூடர் மாசாத்தியார் என்னும் பெண் புலவர் வியர் தும் இாங்கியும் துடியில் வருமாறு கூறுகின்ருர்,
* கெடுக சிங்தை கடிதிவள் துணிவே
மூதிற் பெண்டி ராதல் ககுமே மேனுள் உற்ற செருவில் இவள்தன்னே யானே எறிந்து களத்து ஒழிந்தனனே நெருநெல் உற்ற செருவிற் இவள்கொழுநன் பொருநரை விலங்கி ஆண்டுப் பட்டனனே இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்றுமயங்கி வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇ மாறு மயிர்க் குடுமி எண்ணெய் விே ஒரு மகனல்லது இல்லோள் செருமுக நோக்கிச் செல்கென விடுமே " (புறம்)

Page 108
96.
இதன்பொருள்:-(ஒருகாய்) முன்பு அவள் தகப்பன்யுக்த களத்தில் யானேயை எறிந்து இறந்து போயிருப்பவும், சl பத்தில் நடந்தபோரில் தன் கணவன் பகைவரைக் கொன்று தானும் மடிந்து போயிருப்பவும், இவற்றிற்காக மனந்தனர் வின்றி பகைவரின் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டு மகிழ்ச்சி மிகுந்து, கன் சிறுவனுக்கு ஆடை பணிவிக் து அவன் குடுமியை எண்ணெயிட்டுச் சிவிமுடிந்து தான் ஒரே புத்திரனே யுடையளாயிருந்தும் சிறிதும் கலங்காது போர்க்களம் கோக்கிச் செல்க என்று அவனே அனுப்புகின் ருள். இச் செய்கையைக் கண்ட என் மனங் கெடுவதாக, இவள் துணிவு அஞ்சத் தக்கதாம். பழைய விரக்குடியிம் பிறந்தவளென்பது இவட்குக் ககுமென்பது.இதுபோல வ
வெண்பா a|a}} — Il JT QUE Lis.
* கன்னின் ரு னெக்கை கணவன் களப்பட்டான்
முன்னின்று மொய்யவிங்கா ரென்னேயர்-பின்னின்று கைபோய்க் கணேயுகைப்பக் காவலன் பின்னுேடி எப்போற் கிடாங்கானென் ஏறு '
அதாவது:-கல்விலே பொருக்தி நின்றன் என் தகப்பன் என் கணவன் போர்க்களத்திலே பட்டான். பகைவர் முன் னின்று எதிர்த்து யுக்கத்திலேவிழுக்கார் என்தமையன்மார் தன் சேனே அழியவுர்தான் அழியாமல் பின்னேகின்று, தன் கைசென்று அம்பைச் செலுத்தப் பகையரசன் மேலே பாய்த்து, பின் முள்ளம்பன்றி போலப்பட்டுக் கிடந்தான்என் லுடைய தல்வன்.
இதிலும் அகிசயமானவீாத்தன்மையைப் புறம் 278ம் பாட்டில் காண்கின்ருேம். அதன் காற்பரியம் யாதெனில் வயதுமுதிர்ந்த ஒருதாய் தன்சிறுவன் யுத்தத்தில் iiiiii (யழிந்து புறங் கொடுத்தோடினனென்று பலர் சொல்லக்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

197
, அவ்வாறு அவன் புறங்கொடுக் தோடினணுயின் வன்பாலுண்டுவளர்தற்குக் கா ரனமாயிருந்தஸ்தனங்களே றுத்திடுவேனென்று வாளேக்கையிற் கொண்டு போர்க்க ம் புகுந்து, வீழ்த்துகிடக்கும் பிணங்களைப் புரட்டித்தேடி ருபவன், இரு துண்டாய்க்கிடந்த கன்மகன் உட&லக்கண்டு வனேப்பெற்ற போதடைந்த மகிழ்ச்சியினும் அதிக கிழ்ச்சி யடைந்தாளென் பதாம்.
இவ்விாம் gy&xtail-ig. ஜீராவேசமாய் வெளிப்பட் தமிழ்ப் பெண்கள் தம் விர மக்கள் போர்க்
து முண்டு.
ா செபலேச்
குச் சென்று அங்கே சிறிதுமானக் தாழ்வா செய்துவரின் அம்மக்களேச் தினத்து வெறுப்பர் ஒருகாய ன் மகன் பகைக்களிற்றின் மேலே வே&லயெறிந்து அவ் வ8லக்கிரும்பப் பெறுமாற்றலில்லாது வெறுங்கையணுய்ப் றங்கொடுத்தது கண்டு,
* வாதுவல் வயிறே வாதுவல் வயிறே
நோகேன் துகக்கை நின்னின்றனனே பொருங்கா மன்னர் அருஞ்சம முருக்கி அக்களத்தொழிதல் செல்லா ய் நிக்க புகர் முகக்குஞ்சாம் எறிந்த எஃகம் அதன்முகத் தொழிய ே போக்தனேயே அதனுல் எம்மில் செய்யாப் பெரும் பழி செய்த
கல்லாக் காளேயை ஈன்றவயிறே?
ான்று கூறி மிகவும் வெறுத்தனள். இவ்வாறே தமிழகம் முன்னுளில் அறிவாற்றல் மிகுந்த வீரத் தாயர்களே உடைய ாகி அருமை பெருமை கொண்ட செயல்களுக்கு பரிய நிஜலக்களமா யிருக்கது.

Page 109
19S
காவல் மரம்
காவல் மரமென்பது பண்டைக் காலத்துக் கமிழரசர் ஒவ்வொருவரும் தங்கள் வெற்றிக் கறிகுறியாக ஒவ்வோர் மாத்தைத் தமதூர்ப் புறத்துச் சோலேகளில் வைத்து வளர்த்து அதனேக் குறிக்கொண்டு காப்பார்கள். படை யெடுத்துவரும் பகை வேந்தர்கள் அக்கடிமரத்தையே முதற்கண் தடிய முற்படுவார்கள் ; ஆங்கினம் அவர்கள் அதனேக் தடித்துவிடுவார்களானுல், அம்மாத்துக்குரிய அா சருக்குப் பெருங்கோல்வியும், போவமானமும் எய்திய தாகக் கருதப்படும். பகை வேந்தர்கள் அம்மாக்கில் கம் பானேகளேக் கட்டுதலும், அதனே வெட்டிக்கொண்டு போய் தங்கள் யானேகட்குக் கட்டுக் கறியாக நட்டு வைத்தலும், அம்மாத்தால் தங்களுக்கு வீரமுரசஞ் செய்தலும் மரபு.
தமிழ் வேந்தரின் போர் ஒழுக்கம் முதலியன
தமிழ் மூவேந்தரும் சிற்றரசரும் நெடுகிலும் போர் கொடுத்துக் கொண்டிருந்தனர். ஒருமுறை உறையூருக் கணித்தில் ஒன்பது சோழ இளவரசர்கள் சேரன் செங் குட்டுவனுல் தோற்கடிக்கப்பட்டனர். சேர நாட்டின் ஒரு Jg5 கியாகிய பூழிநாடு சோனுலும் பாண்டியனுலும் வென்று தோற்கப்பட்டது. கோட்டை காவற்காடு குழப்பட்ட அகழிகளால் வளைக்கப்பட்டன. அவற்றுள் ஒரு மரம் அரசனுல் மிகவும் பரிசுத்தமாகக் கருதப்பட்டது. அதற்
குக் காவல் மரமென்று பெயர் போரில் பகை வேந்தனின் முதல் வேலே காவல் மரத்தை வெட்டி அதனுல் முரசு இணக்குவதாகும். விடுகளுக்கு எரியிடுதல், ஆடு Let ()
முதலியவற்றைச் சூறையாடுதல், அகழிகளை யானேயால் துர்க்கச் செய்தல் முதலியன அவ்வரசர்களின் வேலே இளார்.
 

고
பகை அரசனுல் கோட்டை முற்றுகை செய்யப்பட்ட ாயின் கோட்டைக்குள் ஒளிருக்கும் வீரர் பலநாட்களுக்கு ணவில்லாமல் போர் செய்வர். அங்ஙனஞ் சென்ற நாட் ளே மகிலின் சுவர்களிற் குறித்து வைப்பர். தோற்ற விா ரின் கலேயில் நெய்பெய்து இரு காங்களையும் பின்புறம் நின்று பற்றியிழுப்பர். வென்ற வேங்கனும் விாரும் உயர்க் கிய வாளுடன் போர்க்களத்தில் துணங்கையாடுவர். இறந்த உடல்களும் சிரங்களும் உருண்டு கிடப்ப அரசன் பெருவிருங்கிடுவான். இதற்குக் களவேள்வி யென்று பெயர். போரில் வாள் வேல் முதலியவற்ருல் போழப்பட்ட காயங்களே நெடு வெள்ளூசியினுற் றைப்பர். அவர் தங்களுக்குச் சொந்தமான யுக்கப் பிரமாணங்களே எற்படுத்தி யிருந்தனர் மாரிகாலத்தையே பெரும்பாலும் அவர் போர் செய்வதற்கு ஏற்றதாகக் கொண்டனர்.
(Tallil Studies)
பத்தினிப் பேண்டிர் தமிழ்ப் பெண்கள் கற்புக்கணிகஸ்மாய் விளங்கினுர்கள். அவர்களைக் குறித்து இலக்கியங்கள் பலவாறு வியந்து கூறு கின்றன. பெண்கள் கற்பினுலேயே மழைபெய்கின்றதென் றும் அது கோடின் மழை வளங்கப்புகின்ற தென்றும் முன்னுேர் கருதினர். பத்தினிப்பெண்கள் சிலரின் வா லாறு சிலப்பதிகாாக்கிற் கூறப்பட்டுள்ளது. அக்காலத் துக் கணவரை இழந்தோர் உடன்கட்டை ஏறுவோர், உட
லுயிர் நீங்குவோர், விதவை நோன்பினர் என மூவகைப் பட்டனர்.
உடன்கட்டையேறுவோர் தம்கணவரிறந்ததும் தாமும் அவருடன் தீயிற் புகுந்து உயிர்துறப்போராவர்.

Page 110
2OO
உடனுயிர் துறப்போர், தம் கணவர் இறங்கமைகேட்ட பொழுகே கம்முயிர் நீங்கும் உக்கமிகள். இன்னேரையே * காதலரிறப் பிற்கனே பெரிபொத்தி-ஊதுலேக்குருகிலு யிர்க்க கத்தடங்காது-இன்னுயிரீவர் ' என்று சாம் தஞர் ஒகியது. கணவன் இறந்தால் கொல்லலுலேக் துருக்கி பெருமூச்சு விடாமல் தன்னடைவே உயிர் நீங்கு வர் என்பது இதன் கருத்து. இவ்வரிய பெரிய செயல் தொல்காப்பியத்தில் முதானந்தம் என்று கூறப்பட்டது.
(மூது-பெரிய, ஆனந்தம்-சாக்காடு
போன்பு பற்றி நிகழும் மானமென்பது பொருள். காயகனும் நாயகியும் ஒருயிரும் ஈருடலுமாயிருந்தாலன்றி இவ்வாறு ஒருங்கு உயிர் நீங்குங் தன்மை நிகழாது. இவ் வாறு கணவனிதந்த பொழுகே உயிர் திறந்த உதகமபக் கினி ஒருத்தி சிலப்பதிகாரத்துட் காணப்படுகின்ருள். ஆரி யப் படை தங்க நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கோவலன் என்ற வணிகனேக் கிருடனென்று கருகி ஆகி யாயமாகக் கொலேசெய்வித்தபோது, கண்ணகி பாண்டியன் முன் சென்று வழக்காடி அப்பா ண்டியனது கொடுங்கோன் மையை அவனுக்குக் கன் சிலம்பைக் கொண்டு மெய்ப்பிக் தனள். தான் செய்தது தவறென்றுணர்ந்த பாண்டின் சிங் 骷五草、F霍芷 த்திலிருந்தபடியே சோர்ந்து உயிர் விட்டான். ஆப் போது அவன் தேவியான பெருங்கோப் பெண்டு ஒரு கலக்கமு மின்றிக்கானும் உயிர் துறந்தாள். குர பதுமன் போரில் அழிவுற்ற செய்தி கேட்டவுடன் அவன்கேவிபதும கோமளே உயிர் துறந்தனாள் எனக் கந்தபுராணத்துள் கச்சி பப்பர் கூறுவர். விகவைதோன்பினர், கணவனிறந்தபின் உயிர் தங்கிகின்று, மறுபிறவியில் தம்நாயகருடன் வாழ்தற்குதோற் றுப் பட்டினி முதலியவற்றல் உடம்பை வருத்து வோராவர்.

2O1
இதனே நெளியெரி புகா அராயின் அன்பரொடு-உடனுறை வாழ்க்கைக்கு தோற்று உடம்பு ஆடுவர் என் பகனுல் அறிக. இவர்கள் இலே கிடந்த 岛) சோற்றையும் எள்ளரைத்தவி ழுதையும் புளி கூட்டிச் சமைக்கப்பட்ட வேளேயிலேயை பும் உணவாகக் கொண்டு கல்லழுத்தும்படி தரையிற்
பாயின்றிப் படுத்து, உலக இன்பங்களே ஒழித்தவர்.
மதுபானம்
அந்தணர், வேளாண் மக்கள் என்னும் இரு பகுப் பின ைஒழிக்க ஆண்களே யன்றிப் பெண்களும் பது வருங் தினர். பனே தென்னேகளிலிருந்து இறக்கப்படும் கள்ளு, வறியோர், தொழிலாளர், போர் மறவர், பாணர் முதலியோ ரால் பானஞ் செப்டப்பட்டது. பழச்சாறு, அரிசி, தாதகி மலர் முதலியவற்றி விருந்து இறக்கப்பட்ட வாரனோபோடு கூடிய மதுவர்க்கங்களைச் செல்வர் அருங்கினர். பவன தேசத்தினின்றும் கப்பல் மார்க்கமாகக் கொண்டுவரப்பட்ட உயர்த்த மது வினே அரசர் பருகினுள்கள். காரம் எறுதற் பொருட்டு கள்ளினே மிடாக்களிற் பெய்து நிலத்திட் புதைக்து வைப்பது முன் னுள்ளோர் மரபு. மதுபானஞ் செய்தல் இழிதகவாக முன்னுள்ளோர் மதித்திலர்
*_,甲 * கேட் கடுப்பன்ன நாட்டடு தேறல்' என்றும்
1 அரவு வெகுண்டன்ன தேறல் ' என்றும் கார
மேறிய கள்ளின் தன்மை புற நானூற்றிற் சொல்லப்
ட்டது.
* பொற்குெடி மடத்தையர் புதுமணம் புணர்ந்து
செம்பொன் வள்ளத்துச் சிலகிய ாேந்திய
(சிலப்ப திகாரம்)
வந்நீர் தேறன் மாந்தினர் rt Erg

Page 111
303
" யவனர் நன்கலங்கந்த தண் கமழ் தேறல்
பொன்செய் புனேகலத் தேங்கி சாளு மொண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறர் தாங்கினி கொழுகுமதி யோங்குவாண் மாற ??
(புறம்) யவனரால் கல்லகுப்பிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நூறு நாற் றக்கையுடைய தேறலைப் பொன்னுற் செய்யப்பட்ட புனேக்க கலத்தின்கண்ணே யேந்தி காடோறும் ஒள்ளியவளேயை யுடைய மகளிரூட்ட மகிழ்ச்சி மிக்கு இனிதாக நடப்பா பாக என்பது இதன் உரை.
* சிறியகட் பெறினே எமக்கியு மன்னே
பெரியகட் பெறினே
II.I, II L, LI IT டச் தான் மகிழ்ச் துண்ணுமன்னே என ஒளவையார் ஆகியமானப் பாடுகின்றமையின் அரசர் மாத்திரமல்ல புலவர்களும் கள்ளருங்துவதில் மிக்க விருப் புடையவர்கள்போல விளங்குகின்றது. கள் என்பதிவி ருங்கே களிப்பு என்னும் சொல் எழுந்தது.
2-ൽTഖ
அக்காலத்தி அந்தணர், வேளாண் மக்கள் என்னும் இருபிரிவினரை நீக்கி எஞேர் ஜானேப் பெரிதும் விரும்பிப் புசித்தார்களெனத் தெரிகின்றது. பெரும்பானுற்றுப் a Ira o பார்ப்பாருடைய இல்லங்களேக் காண்பீர்கள். பசுக்கள் பசும்புற்றறைகளேக் கேடி மேயச்செல்ல அவற்றின் செழிய கன்றுகள் பத்தர்க் கால்களிற் கட்டப்பட்டு கிற்கும். கோழி, நாய், மதவியன அவ்வில்லங்களைச் சேரமாட்டா
CEP
விடுகள் சாணியினுல் மெழுகப்பட்டிருக்கும். வழிபடு
தெய்வங்களின் உருவங்கள் அங்கே காணப்பெறும். கிளி
 

20
கள் வேதம் படிக்கும். அருந்ததியைப்போன்ற சிறந்த கற் Lf, கல்லொழுக்கமும் வ?ளயலணிக்க கைகளுமுடைய பார்ப்பனப் பெண்கள் நல்ல சுவையுள்ள உணவுகளேச் சமைப்பார்கள். அவ்வில்லங்களே அடைந்தால் இாாசான் னமென்னும் சோற்றினேயும் மாதுளங் காய்களே பில்லேக ாாக அரிக் து மிளகு துரள் பெய்து கருவேப்பிலே கூட்டி நெய் பில் வெதுப்பிய பொரியல்களேயும் மாங்காய் ஊறுகாய் முத வியவற்றையும் உண்ணும்படி பெறுகுவிச் (பெரும்பாண்
7-310) எனக்கூறப்படுவதால் ஆந்தனர் tirt air புசிப்பவர்
களெனப் புலப்படவில்லை. 'உப்புக் கண்டம் பறிகொடுத்த
கள் என்பதையே புலப்படுத்துகின்றன.
* மீன்திாளும் விலங்கின்திரளும் செருக்கி வ&லயாற் டிப்பாரையும், கொன்று இறைச்சி விற்பாரையும் கமக்
வழிபட்டும், பாகங்களைப் பண்ணி, அவற்றுன் ஆவுகிகளே அவர் நகரப் பண்ணியும், நல்ல பசுக்களோடு எருதுகளேப் பரிகரித்தும் அந்தணர்க்குண்டாம் புகழ்களைத் தாங்கள் வர்க்கு கிஃப் பெறக்தியும், பெரிதாகிய புண்ணியங்களைக் لك தாங்கள் பண்ணி அவற்றைச் செய்ய மாட்டாகார்க்குத் தானம் பண்ணியும்.வளேங்க மேழியால் உழவுக் தொழில் நச்சு தலுடைய உழவர் ' (பட்டினப்பாலே 196-208) என்னும் பட்டினப்பாலேயால் வேளாண் மாக்கள்
ஊன் உணவு அருந்துபவரல்லர் என்பது வெளிப்படை,

Page 112
204
அக்கணராகிய கபிலர்
* புலபு காற்றத்த பைங் துடி
go WAfдA585 (23) а. கொளிஇ யூன்றுவை கறிசோறுண்டு வருக்தி தொழிலல்லது பிறிது தொ ழிலறியா விாகவி னன்று மெல்ஜிய பெரும? (புறம்)
“* r ri" (?5)3ni sr fr கிறப்பவு மைவிடை வீழ்ப்பவு
ரிட்டார் குனுக் கொழுந்துவை யூன்சோறும் பெட்டாங் யுேம்: (l'horri) எனப்பாடியிருக்கல் கொண்டு தமிழ்நாட்டத்தனர் Լոմ" அண்ணும் இயல்பினர் எனச் சிலர் கூறுவர்.
"புலவர் முதலியோர் தங்களே அரசர்களாற் பெரிது விரும்பப்படும் பாணர் கூத்தர்போல் வைத்துச் செய்யுட் செய்தல் அக்காலத்து மரபாகலின். இங்ஙனமே சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பண்ணனேப் பாடிய 17 3-ஆம் புறப்பாட்டில் கன்ளேப் பாணனுகக்கூறிக் கொள்ளுகலேயும், கபிலர் முகவிய புல är i பெருமக்களும் புறத்தில் சிச்தம் பாடலுள் இங் கனமே கூறியிருக்கலேயும் சண்டைக்கு நோக்கிக் கொள்க:
- ", (நல்லிசைப் புலவர் பக். 60). * இவராற் சுட்டப்பட்டுள்ள கள்ளுண்டல், ஊனு ண்டல் முதலிய வழக்குகள் இவர் காலத்துப் பெரிதுத் စ္တိ' தென ஒதுக்கப் பட்டவையல்ல வெனினும் அவரைப் போருட் புலமைவாய்ந்த இவரது ஒழுக்கமெனக் கொள்ளற்க: (အင်္ဂီငှ.. ( J# | T’်)), கபிலர் ஒளவையார் முதலாயினுேர் கம்மைப் பாணர் டவ ரிசையில் வைத்து அரசரைப்பாடினமையின் பாண்குஸ்த்துக் குரிய ஒழுக்கங்களைக் சமக்குரியனவாக வைத்துப்பாடி

205
Ttք կ` பன்றி அவர் உண்மையில் கள்ளும் ஊனும் புசிப்பவர்க
ால்லரெனவும் கருதற் பாற்று.
E - EմֆԼ
தமிழர்கள் பழைய நாளில் அணிக்கிருங்க உடைகளைப் ற்றிச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன. உடை அவ்வவ் பகுப்பாரின் செல்வத்துக்கும் கொழிலாகிய விற்றுக்கும் பொருத்தப் பலவகைக்காயிருந்தது. செல்வரும் வறிஞரு
கொள்வர். மயிரை வெட்டாது வளர்த்து உச்சியிலோ
: - T. ତ! கன்னக்கிலோ கொண்டையாக முடிக் து கொள்வர். செல் வர்கள் நீலச் சங்கு மணிகள் கோத்தபட்டிழைகளால் ெ காண்டையை அவிழாது பிணித்து விடுவர். இவ்விழை
. . . ,sیہ - - . ܗ களின் இருகலப்புகளும் குஞ்சங்கள் போலவுக் தொங்கும்.
ཟ - ܗ போர்வீரர் பெரும்பாலும் இவ்வாறு கட்டுவர். கொண் டையில் மயிலிறகுகளைச் செருகுகின்ற வழக்கமும் இருக் தது. சிங்களவர் பழைய தமிழரிடமிருந்து தான் கொண் டை முடியும் முறையைக் கற்றுக் கொண்டார்களென் பதற்கு அவர்களுள்ளும் குடுமிக்கு கொண்டை என்னும் தமிழ்ச்சொல்லே வழங்கிவருகின்றமை போகிய சான்று. மதுரைக்காஞ்சியில் செல்வரைப்பற்றிக் கூறுமிடத்து 'சிவந்து நுண்ணிதாகும் வடிவாலே கண்களே மருட்டி சிங்கி விழுமாறு போன்ற ஒள்ளிய பூக்கொழிலேயுடைய சேலே
களே, பொன்னிட்ட உடைவாளோடே அழகுபெறக் கட்டி
கின்றது. சட்டைகரித்தல் அரசரிடத்தில் சேவுகஞ்செய் ம் தாழ்ந்த வருக்குரியதாயிருந்தது. அவர்கள் கஞ்சுகமாக்
கள் எனப்பட்டனர்.

Page 113
306ל '
பெண்கள் பெரும்பாலும் அாைக்குமேல் உடை இல் லாகிருந்தனர். 'கடா அக் களிற்றின் மேற் கட்படா மாதர் படா-முஃ) மேற்றுகில்'; என்னும் குறளால் முதல் வகுப் பினர் முலைக்கச்சு அணிந்தார்கள் என விளங்குகின்றது. அக்காவிந்து முஃலக்கச்சு இக்காலத்து இறவக்கை டோல் கன்று. முலேகளே மாத்திரம் இறுகக்கட்டும் நீண்டகச்சுக் களேயாம். குங்குமம் சந்தனம் முதலிய பூச்சுக்களால் தமது மார்பை மறைத்தல் அக்காலத்துப் பெண்களுக்கியல்பு. கடைக்காமாஞேர் மார்பில் சங்குமணி யணிந்திருந்தனர். அமராவதிச் சிக்கிரங்களும் பழைய கோபுரங்களிற் காணப் படுகின்ற உருவங்களும் அக்காலத்துப் பெண்கள் அரைக்கு மேல் ஆடை அணியும் வழக்கமில்ல என்பதையே தெரிவிக் கின்றன. மலேயாள தேசத்தில் இன்றும் இவ்வழக்கம் காணப்பெறுகின்றது. 'சீர் காடு மாதர் தனக்குடங் தேடிக் கிரிவாற்கு-வார்ராடுங் தடை தீர்க்க ம&ல நாடு வாய்ந்த துவே ' என்னும் திரிகூடாாசப்பகவிராயர் பாடலாலும் இதனுண்மை ஒர்க. பெண்கள் ஒருவகைக் குழம்பினுல் முலையில் தொய்யிலும் தோழில் கரும்பும் எழுதுவர். * ருேண்மேற்-கரும்பெழுது தொப்பிற்குச்
செல்வ விங்காக ?? (கவி 116) * குெய்யில் பொறித்த வனமுலையாய்" (563)
இங்துக்கள் கோவிற் சுவர்களிலும் மாடங்களிலு கோபுரங்களிலும் மத சம்பந்தமான விக்கிரகங்கள் கானப் படுகின்றன. அவ்விக்கிரகங்களைப் பரிசோதிக்கால் ஆக் காலமாங்காது மனகிலே, ஒழுக்கம், நாகரிகம் முதலிய வற்றை நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாக மாமல்லபுரத்திலுள்ள விக்கிரகங்கள் அக்கால மாந்தர் ஆண் பெண் யாவரும் இடுப்பிற்குக் கீழேமட்டுந்தானே உடை

307
டுக்கா ரென்பதையும் அவ்வுடையும் காபிக்கு மூன்று
ங்குலத்திற்குக் கீழேதான் உடுத்தார்க ளென்பதையும்
ளக்கும் (செந்தமிழ் ** 5.—Dr. G. Jouvean Dubrenie).
QLGT35 €Tafa ISO2F
கால்விாலணி-மகரவாய் மோதிரம், பிலி, கான்
மோதிரம் முதலியன. காலணி-பாகசாலம், சிலம்பு, ண்டை கிங்கினி, தொடையணி, குறங்கு செறி. தோளணி ானிக்கவளை, முக்துவளே. கையணி-குடகம், பொன் ளே, நவரத்தினவளே, சங்கவளை, பவழவளே முதலியன. கவிரலணி-வாஃளப் பகுவாய் மோ கிரம் (முடக்கு மோதி Fம்) இரத்தினங்கட்டின அடுக்காழி, கழுத்தணி-வீரசங் ஜி, நேர் சங்கிலி, நுழைவினே நுண்ஞாண் சவடி சாப்பளி
རྐ Jل জয়ন্ত 무 க்காரம் பிடர் அணி--கொக்குவாய் (முக்கா TLC i SSசெய்ததில் நவாக்கினங்களைக் கோத்து முதுகு கிறைய ତith பிற்ருவி) காதணி-நிலக் குதம்பை, மகரக்குழை,
நாளுருவி, வல்லிகை, தோடு, தலையணி-சீதேவியார், வலம் புரிச் சங்கு, பூசப்பாளே, தென் பல்லி, ill ால்லி, புல்லகம், பொன்னரிமாலே, மகாப்பகுவாய், முஞ்சகம். அாையணி மேகலை காஞ்சி, விரிசிகை, கலாபம், பருமம்,
குறிஞ்சி நிலப் பெண்கள் இலைகுழைகளேயே ஆடை ஆபரணங்களாகப் பூண்டனர். இது மக்கள் சீர்கிருத்த (PFAU, காலத்தே பாகும். ஆக்காலத்து மார்செடி கொடி களிற் பிடுங்கி அணிந்த அரசிலே, குழைஒலே, கொந்திள வோலே, சீர்திருத்தகாலத்து ஆபரணங்களாக மாறிவந்தன வென்பது கவனிக்கக் கக்கது. பழைய தமிழாது பூவாப ாணம், சாந்தப் பூச்சு என்பனவற்றின் ஞாபகம் இந்து சமயக் கோவில்களிலே " பூவங்கிக் கோலம் சந்தனக் காப்பு * குங்குமார்ச்சனே என்னுங் கருமங்களிலே இங்

Page 114
2OS
நாள்வரையுங் காக்கப்பட்டு வருகின்றது. பெண்கள் தலே மயிருக்குப் பரிமள மூட்டுவர். மயிரை ஐந்து பிரிவாக வகுத்துப் பின்னி ஒன்ருக முடிந்து கொங்கவிடும் வழக்கம் அவர்களுக்குள் இருக்கது. இருபாலாரும் பரிமள வர்க் கங்களையும் கேகத்திற் பூசுவோராயிருந்தனர். பெண்கள் கண்ணுக்கு மை யெழுதுவர்.
ஆடவர் அணிகவகை
கலேயணி - முடி, தோளணி - பதக்கம், வாகுவலயம், காதணி-குண்டலம், கையணி - கங்கணம் விரவளே. அரை பணி - அரைஞாண். காலணி - விரக்கழல், விாகண்டை விாலணி - மோதிரம், கலித்தொகை 85-ம் பாட்டில் ஒர் கலேவனின் மகன் அணிககிருந்த ஆபரணங்களைப்பற்றிக் கூறப்படுகின்றது. அவை காலிற் பொன்னுலாய வாய் பிளந்த சதங்கையும், தரையிற் பொன்மணிகளே புடைய வடமும் அதன்மேல் பவழ வடமும் அவற்றின்மேல் ஐகாய் கழல்கின்ற ஒரு பூங்துகிலும், கையில் ஞெண்டின் கண் போல அரும்புவேலே செய்த கோற்ருெ:நிலவிர்கின்ற தொடி யும், இடையில் வெட்டாக வாளும் மழுவும் கொங்கவிடப் பட்ட இடபத்தையுடைய பூனும், மார்பில் கருமுத்தும் மணியும், சேர்த்தமுத்து வடம், அதின்மேலே நிலமணியாற் பண்ணின கண்டார் மருளும் பாலேயும் எணு மில்வாபரணங் கள் சொல்லப்பட்டிருக்கின்றன.
அரசன் வலிமையுள்ளவனு யிருக்தான். அவன் கையிலே விரவாளேயும் காலிலே வீரக் கழலையு மணிந்திருந் தான். அவனது சிங்காசனம் யானேக் கந்தத்தினுலும் பொன்னினுலும் நவமணிகள் குயிற்றிச் செய்யப்பட்டு ஒரு

09
செய்கைச் சிங்கத்தின் கலேயால் தாங்கப்பட்டது. அதன் மேல் வெண்கொற்றக்குடை விளங்கியது. அவன் யவன மெய் காப்பாளராலும் பரிசனங்களாலும் குழப்பட்டுக் காட்சிக் கெளியணு யிருந்தான். விசேஷ காலங்களில் மாக் திரம் அரசி ஆாசனுடன் இடம்பெறுவ ஸ். ஆணுல் அவள் 岐 ருே ாதும் முடிசூடுவதில்லை, ஆாண்டாஃனயின் ஆந்தப் ாக் ஆ உயர்குடும்பப் பெண்கள், கூன், குறள் ஊடர் முதலி ர்க்கு க்கிரம் இடமுண்டு. ஆண்கள் அங்கு நுழைதல் டாது. புலவர் களிடத்தில் ஆசசன் மிக வன்பாக விருங் தான். அாண் ஃனப் புலவன் ஆவன் பக்கவில் எப்போதும் இருப்பான். நியாயம் வீரம், கொடை என்னும் மூன்றும் அரசனுக்குப் பெருமை யளித்தன. இம்மூன்றினேயும் றிப்பிட மூன்று வகைப்பட்ட முரசுகளிருந்தன. gym
வினேஞர், தந்திர வினேஞர், பெருங்கணி என அரசியல் வகிக்குக் கஃலவருமிருந்தனர். கரும வினேகுரென்போர் தேசத்தின் ஆட்சியை நடத்துவோ ரென்றும், கணக்கியல் னேஞரென்போர் தேசத்தின் வரி வருவாய்களேக் கவனிக்கு மறிஞரென்றும்; தரும வினேஞர் காட்டினறங்களேப் பாது காப்போ ரென்றும், தங்கிர வினேஞராவார் படைகள்
துரசனது காரியங்கட்குரிய காலங்களேயும் நிமித்தங்களே பும் கணித்துரைப்போன் என்றும் அறியப்படுகின்றனர். நானத்தியலர் (கணக்கர்) கரும விதிகள் (ஆணேகிறை
வேற்று மதிகாரிகள்) கனகச் சுற்றம் (பண்டாரம் வகிப்
1H

Page 115
21()
போர்) கடைகாப்பாளர் (அரண்மனே காவலர்) iss, in Tit, if (நகரத்திலேயுள்ள பெரியார்) படைத்தலேனர், யானேவிார்,
போர் எண்பேராயத்துள் அடங்குவர்.
குதிரை வீரர் என்
புறநானூற்றிற் காணப்படும் சில பழக்க வழக்கங்கள்
" அஞ்ஞான்றினர் மிகவும் நெடிய ஆயுளுடைய வர்கள். வயதால் முகிர்ந்தும், உடல் தள ர்த்தும், 高山一 Lr. If சத்தியற்றம் உயிர் துறவாமலிருக்குங் கிழவன 草、 மட்பாண்டங்களில் வைத்து வழிபட்டு வருவார்கள். ஆப் பாண்டங்களே முதுமக் கட்டாழிபென்பர். எளியவராவி ணும் இழிகுலத்தோராயினும் கற்றவரை மிகவும் போற்றி மரியாதை செய்வர். கற்றவர்கள் பாண்டும் முதன்மை பெற் றச் சபையேறுவதற்குச் சாகி வேற்றுமை முதலிய @ಏ?” கள் தடைசெய்வனவல்ல, யுக்க முனேயிலே புற முதுகிட் டுப் பின்வாங்காமல் போர்புரிக்கிறப்பவர்கள் சுவர்க்கம் புகு வார்களென்ற நம்பிக்கை யிருந்தமையால் ஆ சர்கள் ஆகி பதிகளா னுேரில் யாவரொருவராயினும் அவ்வகைமடியாமல் பிணி மூப்பு முதலியவற்றலிறக்தால் அவரின் பிரேதத்தைத் கருப்பைமேற் கிடத்தி கெஞ்சைவாள் கொண்டு பிளப்பர். அங்ங்னஞ் செய்வதால் உயிர் சுவர்க்கம் புகுமென்பதே அவர்கள் கருத்து. மற்றவர் பிரேதங்களேத் காழி என் அறும் ஈமத்தாழி யென்றும் வழங்கப்பட்ட பா ண்டத்திவிட் த்ெ தகனஞ் செய்வர். தஃலவர்கள் துஞ்சுங்கால் அவரோடு தீமூழ்கி உயிர்விடல் மனே வியர்க்கியல்பாயிருந்தது. கிரை கவர்திலும், போர்புரிந்து அவற்றை மீட்டலும் அடிக் கடி நிகழும். யுத்தத்திற் கைவந்த வீரர்களே யாண்டுங் கனஞ் செய்து போற்றி வழிபடுவர். அன்னவரி லொரு வர் மடியுங்கால் அவர் பொருட்டு ஒரு கற்சிலேயை ஈட்டு அவரின் காமத்தையும் கீர்த்திப் பிரதாபங்களையும்

ELL
இதன் கட்டீட்டிப் பக்தரிட்டுக் கொடி விகானிக் துப் பூமாலைகளையும் மயிலிறகுகளையுங் தாக்கிப் பலிமுகவி பன செலுத்தி வழிபடுவார்கள். ஆயுதங்களுக்கு நெய் சிப் பூமாலே சாக்கிப் பூசனே புரிவர். மாற்றவரின் அரண் களே யுடைக் துத் தகர்த்துத் தரைமட்டமாக்கிக் கழுதை |ட்டி ஏர்கொண்டுழுது காட்டு வித்துக்களே விதைப்பார்கள். துரசர்கள் துயில்ரீக் கெழும்புமாறு சங்கம் முழக்கி எக் ாளமூ துவர். மலே சார்ந்த குறிஞ்சி நிலக்கார் கட்ட பயி நக்கிசைய மழை கூடவும் குறையவும் வேண்டிப் பலி செலுத்திக் தெய்வதம் பரவுவார்கள். வினேப்பயனே பிற விக்குக் காரணமென்றும், வேதா கமப் பொருள்கள் மெய்ப் பாருள்க ளென்றும் கடவுளொரு ೩yár சென்றும், கம்பி ஒப்புக்கொள்ளாதவர்களே மிகவும் இகழ்ந்து அருவ ருக்தி யா ண்டும் புறக்கணிப்பர். செல்வழிகனில் $תair נה זו பங்கள் கண்ணெதிர்ப்படின், அரசர் தாமும் வாகனமி ந்து தங்கள் வெண்கொற்றக் குடைகளேச்சாய்த்து வணங் கிச் செல்வார்கள். அரசர்கள் தம்பொருட்டுமாக்கிச மன்றித் தம்பிரசைக.ரின் சுய நலங்களேக்குறித்தும் அடிக் 町凸一 பற்பல வேள்விகளேயும் பாகங்களே. |35 செய்ாைர்கள். அங்ஙனஞ் செய்துழி அந்தணர் பாவலர்கள் முதலோ ரும் பலகிசை மன்னர்களுங் கூடிக்குழுமிக்களிப் பெய்துவர். ஈகையே தருமங்களெல்லாவற்றினும் மிகச் சிறந்ததென்று பாண்டும் பாவலர் வியந்து கூறுவர். செய்குன்றியற்றி, கழங்காடிப் போதுகொய்து புனல் விளேயாடிப் ப்ொழுது போ க்குவர். ஆ- வரைப்போற் பெண்களுங் கள் ாருங்கிக் கணிசுடர்வர். கள்ளின் காரமேறும்படி அதனே வேய்ங்குழல் முதலியவற்றிலடைத்தும் மட் பாண்டங்களிற் பெய்தடக்கியும் வைப்பார்கள்.
(தமிழ் வரலாறு பக். 83-84).

Page 116
22
போழுது போக்கு
பெண்களுக்கு வீட்டில் கிளிப்பிள்ளைகளைப் பேசப் பழக்குதல், வள்ளே அம்மானே என்னும் பாட்டுகளைப் பாடு தல், கழங்கு அன்றேல் பங்து விளையாதெல். முதலியன
h = می - ع - سے نئی சிறந்த பொழுது போக்குகளாகும்.
' கந்தாடு மாலியானேக் கார்வண்ணன் பாலை
கருமேகக்குழன் மடவார் கைசோர்ந்து நிற்பக்
கொங்காடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
கொய் பொலந்துகிலசைக்த கொய்சகக் தாழ்ந்தாட
வந்தாடுங்தேறு முரல் வரிவண்டு மாட
மணிவடமும் பொன்ஞானும் வார்முலே மேலாடப்
பந்தாடு மிாப்ட தின படை நெடுங்கணுடப்
பனேமென் ருேணின்னூடப் பங்காடுகின்றுள்."
(@ন্ত ளாமணி-சுயம்வரம் ).
மாலேக்காலத்தில் செல்வர்கள் குதிரைகள் பூட்டப் பட்ட தேர்களே விதிவழியே செலுத்திச் செல்வர். உப்பரிகை களினின்று வெளியே கோக்கும் அவர் மகளிரிடத்திருக் தும் வரும் நறுமணம் விதிகளில் வீசும், அழகாக உடுத் திய வாலிபர் அழகிய ஆபரணங்களேயும் பூங்காரையும் துணிந்த பாக்கையருடன் விதிவழியே உலாப்போவர். ஆடவர் பாக்தையருடன் நட்புக்கோடல் இழிவாகக் கருகப் படவில்லை. பரத்தையிற் பிரிதல் எல்லார்க்கு முரித்தே, என் பர் தொல்காப்பியர். சேவல் கவுதாரி கிடாய் முதலியவற்றை போர்க்கு விடுதலும் அக்காலப் பொழுது போக்கு னாகும.

泌卫器
சிறுவரின் போழுது போக்கு
சிருர், கச்சராற் செய்யப்பட்டுச் சிறிய குதிரைகள ழுக்கப்படும் தேர்களிற்செல்லும் இன்பச்தை எய்தாரா அனும் தமது கைகளினல் விளேயாட்டுக்கேனர் இழுக்தி ன்புறுவர்,
* கச்சன் செய்த சிறுமா வைய
மூர்க்கின் புகு அ "பிதுங் கையி
- - - : ::: - ա է: னிர்த்தின் புறா உ நிளேபோர் (குறுங்-61)
சிறிய பெண்கள் கடலிலே ரோடும்போது மணலிலே
• ሻII வீடுகள் இ:ைக்தி விஃளயாடுவர் (2-3}} B26) :பிர உலக்கையினுள் ஆவவிடிக்கும் பெண்கள் உலக்கையை எறிந்துவிட்டு எண்டவில் விளேபாடுவார்கள் (செடி-238)
உளஞ்சல் (உஞ்சால்) ஆடுவதும் சிறுவர்களின் பொ 、 போக்காகும்.
* பெருங்கயிறு காலு மிரும்பனம் பிஃனயற்
... f பூங்கணுய மூகக 《哑一母U)。
ன்னிக்குப் போகாதசிருர், வேப்ப நீழலில் கோடுகள்றிே நல்லிக்காய் கொண்டு கழங்கா நிவார்கள்.
* வெப்பின் புள்ளி கீழப்
கட்டஃபன்ன வட்டாங் கிழைத்துக் கல்லாச் சிரூ.ஆர் ரெஸ்லி வட்டாடும்’ பெண்கள் வீட்டின் முற்றக் கிலுள் (நற்-3).
ETT LIGJIT så siji கழங்கானெ" ர்கள் (நற்-7 Ꮰ) .

Page 117
24.
சிறர் குளங்களில் குதிக்த ஆழ்க்தி கல்மண் முதலிய வற்றை எடுத்து விளையாடுவார்கள். காயம் ஆடுகல் பெரும் பாலார் பொழுது போக்காகும். * ஈசைக்து பெற்ஞன் உள்ளம் போல் ?? (கவி).
பெண்கள் கல்வி
தமிழ் இலக்கியங்களில் பல பாடல்களைச் செய்தவர் கள் பெண்புலவர்களாகக் காணப்படுகின்றனர். ஆடவரைப் போலப் பெண்களும் கல்வியிற் சிறந்து விளங்கினர்கள். போர்க்கோலங் கொண்டு செல்லும் படைகளிலும் விதவி யர்’ என்னும் பெண்கள் இருந்தாரெனில் பெண்கள் கல்வி நிலை மிக எற்றம் பெற்றிருக்கதென்றே சொல்ல வேண்டி யிருக்கின்றது.
காவற் பெண்டு, பேய்மகள், இளவெயினி, nar Fir-igi யார், பூங்கணுருக்கிசையார், பொன்முடியார். ஒளவையார் முதலியோர் புறநானூற்றில் சிஸ்பாக்களேச்செய்தவர்களாவர்.
தாலி தரித்தல்
பழைய நாளிற் குறிஞ்சி நிலத்து இளைஞர் புவியை எய்துகொன்று தமது விாச்செயலேக்காண்பித்து மலேவானர் மகளிரை வதுவை செய்வர். புலியைக்கொன்ற ஆடவன் தனது வீரத்துக்கு அடையாளமாக புலியின் பற்களே நாணிற்கோத்துப் பெண்ணின் கழுக்கில் அணிவான். இவ் வழக்கமே காளடைவில் தாலி கரிக்கும் வழக்கமாக வந்தது. இது தமிழ் நாட்டுக்கே உரியது.
Lo:OTEeir
வறியவர் வீடுகள் மண்ணினுல் எடுக்கப்பட்ட சுவர் களுடையன ; புல்லினுல் அல்லது கென்னங்கீற்றுகளில்ை வேயப்பட்டன. வீட்டின் முன்புறத்தில் பக்தர் இருக்கும்.

3.
அதனேக் கலேவாயில் என்று வழங்குவர். சுனர்கள் சிவந்த மண்ணினுல் மெழுகப்பட்டிருந்தன. பட்டினங்களில் வீடு 5ள் செங்கல்லினுற்கட்டப்பட்டு ஒட்டினுல் வேயப்பட்டன. அவற்றில் மானின் கண் போன்ற சாளரங்கள் வெளிச்சம் புகுவதற்காக அமைக்கப்பட்டன. சில கோட்டை கொக் தளங்கள் செங்கல்லினுலும் சுண்ணும்பினுலும் எடுக்கப்
டடர் =
i புல்வேய்குரம்பை *சில்காற்றிசைக்கும் பல்புழை எல்இல்' " இல்வேய்குரம்பை ' எனப் பக்துப் பாட்டில்
சொ ல்லப்படுவ 531 # ரோ க்கு வி
போறிகள்
எங்கிரச் செய்கைகளால் மாட்சிமைப்பட்ட Pনয়। ঐ களும் பிறவும் இருந்தன. கார்நாற்பது 31-ம் பா ட்டில்
■ பொறிமாண் புனேதிண்டேர்' எனக் கூறப்பதெல் காண்க. இகனல் குதிரை முதலியவற்ருல் இழுக்கப்படாது இயக் கிரத்தினுல் இயக்கப்படும் கேர் இருந்ததென விள ங்கு கிறது. பொறிகளால் நீர் வற்றவும் நிறையவும் செய்யப்படும்
ணறகளும் வாவிகளுமிருந்தன. அவை, எங்கிரக் கிணறு எங்கிரவாவி என்னும் பெயர்களால் அறியப்பட் டன. பெருங்ககையில் பல பொறிகளின் விபரம் காணப் படுகின்றது. அவைகளாவன : கா ளேகளின்றி விரைந்து செல்லும் எங்கிரவண்டியும், பல வீரர்களே ஆயுதங்களுடன் தின் ஆள்ளடக்கிக் கொண்டு உயிருள்ளதுபோல் : 3
சென்று மயக்கும் யானேப்பொறியும், ஏற விரும்பியவர்களைத் தன்னுள் ஏற்றிக்கொண்டு பார்க்கவேண்டிய இடங்களே அவர்கள் பார்க்கும்படி ஆகாய, வழியே செல்லும் விமான
மும், காலத்தைக் காட்டும் எந்திரமும், கடிகையாாமும் (a ly

Page 118
216
காரமென இக்காலம் வழங்கும்) கழுத்தில் List: List யணித லின் ஆரமெனப்பட்டது (கடிகை+ஆரம்) காண் மீன் முக வியவற்றின் தோற்றத்தையும் அத்தமிக்கலேயும் புலப்படுக் தும் பொறிமண்டிலக்கை உள்ளே பெற்ற ஆாசமங்கையர் ஏறுதற் குளித்தாயிருந்த வண்டியும், பிடிகையும் (இப்போ துள்ள ஈருருளி) (Bicycle போன்றது) இன்னும் இவை போன்ற பல விசிக்கிரப் பொருட்களுமாம்.'
படுக்கை
* சிங்கக் கான்மேல் கைத்த தூங்கு கட்டிலின் இலங் கும் மாட்சிமை விளங்கும் அன்னத்து வியாற் செய்த மெல்
விய படுக்கை ' என கலித்தொகை 13-ல் ஒர் தலேவ னின் படுக்கையின் விபரங்காணப்படுகின்றது. நெடு நல்வாடையில் பானேக் கொம்பினுற் செய்யப் பட்ட
தும், நாடாவினுர் பின்னப்பட்டதும் பல்வேறு மெக் கைகள் போட்டு பூக்களினிதழ் பாப்பிக் துகிலின் துர மடி விரிக்கப்பட்டதுமாகிய கட்டில் என்றும், கட்டிலின் மேல் விதானத்தில் கிங்களும் ரோகிணியும் எழுதப்பட்டிருந்தன வென்று கூறப்படுகின்றது.
* புவிவடிவமைக்க காலேயுடைய கட்டிலில் எலிமயி ாாற் செய்யப்பட்ட பூக்தொழிலேயுடைய போர்வையை விரித்து, கப்பலிலே வந்த பல வகையான படுக்கைகளில் ஆராய்ந்து படுத்து ' எனப்பெருங்கதையில் கூறப்படு
கின்றது. இவை செல்வர்களுக்குரிய படுக்கைகளாகும்.
ஆயர் தடிகளினுல் வரிந்து கட்டப்பட்ட கட்டி வில் ஆட்டுத்தோலைப் பாயாகக் கொண்டு உறங்குவார் களென்றம், எயிற்றியர் மான்ரூேஃப் படுக்கையாகக் கொள்வார்களென்றுஞ் சொல்லப்படுகிறது.

217
விளக்குகள்.
வறியோர் மண்ணினுல் செய்யப்பட்ட விளக்குகளை உபயோகித்தனர். ஏனேயோர் இரும்பு, செம்பு, வெண் கலம் முதலியவற்ரூற் செய்யப்பட்ட விளக்குகளேப் Ly T asf?,ği தனர். யவனர்களாற் கொண்டுவரப்பட்ட அன்ன விளக்கு
TJ) čl s விளக்கு முதலியனவும் உபயோகிக்கப்பட்டன.
யவன ரோகிம விளக்கு ? (பெரும்பாண்) பாவை விளக்கிற் பரூஉச் சுடர் அழல
(முல்லேப்பா ட்டு) யவனப் பாவை அணி விளக்கு (பெருங் கதை)
பட்டங்கள் இக்காலம் அரசரால் அளிக்கப்படும் பட்டங்களைப் போல தமிழ் அரசர் போர் வீரருக்கும் பிறருக்கும் பல பட் டங்களை அளித்தனர். எட்டிப் பட்டம்-இது எட்டிப் வைப் போல் பொன்னுற் செய்து வணிகருக்குக் கொடுக் கும் பட்டம். எணுகிப் பட்டம்-சேனுபதியர் முதலாயி னுேர்க்கு அரசனுல் அளிக்கப்படும் பட்டம். காவிகிப்பட் ம்-உழுளித்துண் போர்களிற் சிறங்கோர் அரசனுற் பெறும் பட்டப் பெயர். எணுகிப் பட்டத்துக்கு மோகிர மளிக்கல் வழக்கு “ எணுகி மோகிரஞ் செறிக்குங்கிருவுடை யானுெருவன்’ என்பது இறையணு சகப் பொருளுரை.
வேள்ளணி நாள்
அரசர் காம் பிறந்த நாளில் வெள்ளணி அணிந்து கொண்டாடுவர். அவர் முடி குட்பிங் தினத்தையும் ெ ரு நாளாகக் கொண்டாடுதல் மரபு. இக்காளில் அரசன் சிறைக்
கோட்டத்துள்ளோரை விடுதலே செய்வான்.

Page 119
2S
தமிழரின் பழக்க வழக்கங்கள்
பாண்டிகாடு முக் துக்குப் பேர் போனது. மாக்கோ போலே ' என்பவர் முத்துக் குளிப்பைப்பற்றிக் கூறிய வரலாறு உண்மையா யிருக்கிறது. " சுந்தரபாண்டி தேவ ருடைய நாட்டில் முகற்றாமான பெரிய முக்துகள் காணப் படுகின்றன. அவை எப்படி எடுக்கப்படுகின்றன என்ப கைப்பற் if: சொல்லுகிறேன். முக்துக்குளிப்போ தும் சிறிதுமாகிய மாக்கலங்களேக் கொண்டு இலங்கைத் தீவுக்கும் இக்கியாவுக்கும் இடையிலுள்ள குடாவுக்குச் செல்கிரு:ர்கள். அவர்கள் முதலில் பெத்திலார் (Bettelt) என்னும் ஒர் இடக்கை அடைகிறர்கள். பின்குடாவுக்கு அறுபது மைல் தூரம் செல்கின்றனர். இங்கே அவர்கள் கோணிகளே தங்கூரமிட்டு சிறிய வள்ளங்களில் ஏறிக்கொள் கின்றனர். அங்கே வியாபாரிகள் பல கூட்டங்களாகப் பிரிந்து செல்கின்றனர். அவர்கள் முத்துக் குளிப்பவர்களே சிக் கிரை மாசங் தொடக்கம் வைகாசி மரசம் வரைக்கும் சம்ப ளத்துக்கு அமர்க்கிக் கொள்கின்றனர். அங்கு கிடைக்கும் முத்துக்களில் பக்கிலொன்றை அரசனுடைய காணிக்கை யாகக் கொடுக் துவிடல் வேண்டும் ; முத்துக்குளிப்போரை பெரிய மீன்கள் துன்பஞ் செய்யாகிருத்தற் பொருட்டு அவற்றை மந்திாத்தால் கட்டுகின்றவர்களுக்கு இருபகில் ஒன்று கொடுக்கவேண்டும் மற்சங்களே மந்திரங்களாற் கட்டுபவர்கள் பிராமணர்களாவர். அவர்களுடைய மந்திர வலி பகல்நேரத்தில் மாக்கிரம் பலிக்கும். இாவிலே மற்சங் கள் தங்கள் எண்ணப்படி கிரியும்பொருட்டு மக்கிரத்தை அவிழ்த்துவிடுகிறர்கள். முக் ஓ க்குளிப்போர் சிறிய வள் ளங்களில் எறியவுடன் காலுமுதல் பன்னிரண்டு பாகக் கண் னிருள் குகிக் துச் சுளியோடி அடியிற்சென்று மூச்சடக்

29
கக் கூடியவரையில் தங்குகிருதர்கள். கீழே காணப்படும் முக் துச் சிப்பிகளேப் பொறுக்கி ஆரையிலே கட்டியிருக்கும் வ&லபோன்ற ஒரு பைக்குட் போட்டுக்கொண்டு மேலே வத்து மறுபடியும் கீழே செல்கின்ஒர்கள். இவ்வகையாக பெருக் தொகையான சிப்பிகள் எடுக்கப்படுகின்றன. இச் ப்பிகளிலிருந்து உலகம் முழுமைக்கும்செல்கின்ற முக்துக் கள் எடுக்கப்படுகின்றன. முத்துக்குளிப்பினுல் அரசன் பெ ருங் தொகையான வருவாயடைகிஞன். ஆனாசாக்கியோ (Saggio) கிறைக்கு மேற்பட்ட முத்துக்களே ஒருவராவது -ಣ್ರ'ಪೌ ಪೌTಫಿ தேசத்துக்கப்பால் கொண்டுபோதல் கூடாது. அவ்வகையான முத்துகளேக் கான் பெற விரும்பியே ஆர சன் அவ்வகையான சட்டக்கை உண்டாக்கியிருக்கிரு:ன். நுண்னி டக்கிலுள்ள முத்துகள் எண்ணிக்கை யில்லாதன. பெரிய முக்திகள் அல்லது இாக்கினங்கள் வைத்திருப்பவர் கள் ஆவற்றைத் தன்னிடத்துக்குக் கொண்டு வந்தால் அது
துக் கொருமுறை giri முழுமையும் அறிவிக்கிரு:ன். அவ்
பெறும் வி3லயில் இரு Lř. L-řigy தான் கொடுப்பதாக வருடக்
வகையான முக்துகள் இரக்கினங்களே வைக்கிருப்போர் அவற்றை அரசனிடத்தில் கொடுத்து ဆffဒိခ¥ုဆေp1;ü Jr'၊ பெற்றுக்
கொள்கின்றனர்.
முத்துகளேக் கவிர வேறு Fலே உயர்ந்த பொருட்களே பும் அரசன் வைக்கிருக்கிமூன். அவன் பலவகை இரக்கி னங்கள் பதித்த ஆரங்களேக் கழுத்தில் அணிக்கிருக்கிருன். 104. பெரிய முக்துகளும் இாக்கினங்களும் கோக்கப்பட்ட リ@ பட்டு நூல் அவன் iriiii iii 'Fama கொ ங்குகின்றது. ஆவன் காலேயிலும் மாலேயிலும் 104 துகிகளே கடவுளுக்குச் சொல்லவேண்டி யிருப்பதா இங்கனம் அணிந்திருக்கிரு னென்ற சொல்லப்படுகின்றது. இவ்வகையாகவே இவனது

Page 120
23)
முன்ஞேரும் செய்து வந்தார்கள், முன்னுேர் வைத் கிருந்த ஆாக்கையே இவன் பெற்ஜன்.
(Pக்திகள் அழுத்திச் செய்யப்பட்ட மூன்று பொன் வஃளயல்களே அரசன் புயத்திலே பூண்டிருக்கின்ஞன், அrைபோன்ற வளையல்களேக் காவிலும் அணிந்திருக்கின் குன், கால் விாவில் அவைபோன்ற மோதிரங்களேயு மணிக்கிருக்கின்றன்.
இங்ஙனம் ஆாசன் அணிக்கிருக்கும் ஆணிகளின் qfဖါးဂိ;၊ ஒரு காட்டின் வருமா னக்கிலும் கூட இருக்கும். இவ்வகை !LT:յ: பொருட்கள் அவனிடத்திற் பல உண்டு’ என மாக்கோபோலோ கூறியிருக்கின்ருள்.
அவனிக்கும்போது அவனுடைய பிள்?ளகள் fata, சியக்கைக் தீண்டமாட்டார்கள். ' எங்கள் தக்கை என் வளவு சேகரிக்கிருக்கிருரோ அவ்வளவு நாங்களும் தேடி வைக்கிருக்க வேண்டுமெனச் சொல்லுகிருரர்கள். 3) IT G.i. (Wassaf y GT53 zali, மகமதிய ாரிகாசிரியர் கூறுகிலிருந்து fi Triażid, it-3 pur (Ġamar பாண்டியர்கள் கிரட்டி லைக்கிருந்த பொருள் கிலேயை சரியாக அறிக்கிருக்கா னென்பது விளங்குகின்றது. குலசேகரனது சுரு:லர் பொருளால் நிறைந்தது. அவனது கருவூலம் 12.00 (Crores) உள்ளதா யிருந்தது. இகைவிட முக்துப் பவழம் இரக் கினம் முகவிய பல போருட்கள் இருக்கன. ஆவலுடைய செல்லக்கை அளவிட்டுக் கூத மொழி இடங்கொடாது என அவன் கூறுகின்மூன். மார்க்கோபோலோ ی۔y!r +31 بنت ع யும் அவனது சபையையுங் குறித்துக் கேட்பதற் கின்ப மாகிய ரெப்தி:ள் கூறுகின்ஞன். இந்த அரசன் ஐஜ் ஒாறு மண்வியரை உடையவனு யிருக்கிரு:ன். ஆவலுக்குப் al பிள்ஃளகளுண்டு. ஆ'சனேச் குழ்ந்து பல பிரபுக்கள்

33
ருக்கிருரர்கள். அவர்கள் அவனுடன் கூடச் சவாரி செய் ஒர்கள். அவர்கள் எப்பொழுதும் அரசனுக்குச் சமீபத் ନୌ இருக்கிரு:ர்கள். அரசாங்கத்தில் அவர்களுக்குப் பரிய அதிகாரமுண்டு. அவர்கள் ஆபத்து உதவிகள் ன்று அழைக்கப்படுவார்கள். அரசன் இறந்தி எரியில் காளுக்கப்படும்போது அவ்வா பக்திக் குதவிகளும் lଦ୍r தத்ை தச் சூர்ந்து தீயில் விழுந்து இ றத்துபோகின்ருர்கள். ம்மையில் அரசனுக்குதவியாயிருக்க தாம் மறுமையிலும் வலுக்கு உதவியா பிருக்கவேண்டுமென்று அவர்கள் சொல்லிக் கொள்கின்றனர்.
மார்க்கோபோலோ பொது சனங்களின் சிவியக் தைக் குறித்துக் கூறுகின்ஞர். அவர்களு :?||-|| 3 - டை முதலியன ஆனா ஆச்சரியமுறச் செய்தன. Lituri (Between Quilon and Nellore) 6Toirs), if மாகா னக்கிலுள்ளவர்கள் அரைக்குமேல் கிரு வாணிகளா கவே யிருந்தனர். ஆகணுல் அங்கே தையற்காரர்கள் காணப் படவில்ஃப். அரசன் முதல் வறியவர்கள் ஈருக எல்லோரும்
துரையில் ஒர் ஆடைமாக்கிரம் தரித்துக்கொள்வர்
அக்காலத்தில் சகி" (உடன்கட்டை எறும் வழக்கம் இருந்ததென்றும் கொலேக்குத் தீர்க்கப்பட்ட குற்றவாளி கள் தமது விருப்பத்தின்படி பாகேலுமொரு கோயிலுக் குக் கம்மைப் பலியாகக் கொடுத்துவிடலாமென்ற பிா LTTT மிருந்ததென்றும், சனங்கள் பசுக்களே வணங்கினுள் களென்றும் மாட்டு மாமிசம் அக்காவிக்கிற் புசிக்கப்பட வில்&ல யென்றும் மார்க்கோப்போலோ கூறுகின்ரூன்.
இக்காட்டிலே உள்ளவர்கள் வீடுகளேச் சாணிபரல் மெழுகுவா ர்கள். பெரியவர்களும் சிறியவர்களுமாகிய எல் லோரும் தடுை பபிலேயே இருப்பார்கள்.

Page 121
233
- இந்நாட்டவர் வெறும் மேலுடனேயே சண்டைக்குச் செல்கின்றனர். அவர்கள் ஈட்டியும் கேடயமும் வைக்
திருப்பா ர்கள்.
ஆண்களும் பெண்களும் தினம் இருமுறை குளிப்பா கள். ஆப்படிச் செய்யாதவர்கள் தாழ்வாகக் கருதப்பட் டார்கள். அவர்கள் வலது கையால் உணவை எடுத்துப் சாப்பிடுவதே யன்றி இடதுகையாற் திண்டமாட்டார்கள்.
- - - ") = இவ்வாறே நீர் பருகுகிஞர்கள். ஒவ்வொருவரும் தனித்த an
வ்வோர் பாத்திரம் வைக்கிாக்கின்றனர். அவர்கள் நீர் ஒ3 ..::.. | | | | 芮凸 ಟd] ಪ†ಿ orporo у а அருந்தும்போது பா த்திரம் உதட்டில் முட்டுவதில்லே. எக் காரணத்திலாவது அவர்கள் ாேருக்தூம் பாக்கிரத்தை உதட் டில் முட்டவிட மாட்டார்கள், ஆன்னிய னுெருவன் F. ருந்துவதற்குப் பாக்கிாம் வைக்கிராவிட்டால் அவன் உண்
இணும்படி கீரைக் கையில் ஊற்றுவார்கள்.
அவர்கள் குற்ற வாளிகளுக்குக் கண்டனே இறுப்பதில் மிகவும் கவனஞ் செலுத்தினுள்கள். ஆவர்கள் மது உண் பகில்லே. மது பானஞ் செய்பவர்கள் நம்பிக்கையுள்ள வர்கள் (Sureties) ஆகக்கருதப்படமா ட்டார்கள் என்று சட்டஞ் செய்திருக்கார்கள். கடன் கொடுத்தவன் க்டன் காானேப் பலமுறையும் பணத்தைக் கேட்க அவன் கொடா விட்டால், அல்லது பலதவணேகள் சொன்னுல் அவன் ஒரு வட்டங் கிறி கடன் காானே அதற்குள் நிறுத்தலாம். கடன் பட்டவன் கடன் கொடுத்தவக்னத் திருப்கிப் படுத்தியபின் அல்லது அவனுக்குக் தகுந்த பொறுப்புச் செய்த பின் தான் அவ்வட்டத்தினின்றும் விலகலாம். அவன் இவ்வாறு செய்யாது வட்டத்தின் வெளியே செல்வானுயின் அவனுக் குக் கொலேக்கண்டம் விதிக்கப்படுகின்றது.

3
அவர்களில் சாமுக்கிரி கசலட்டனம் ஆறித்தவர்கள் லர் உண்டு. சகுனம் பார்ப்பதில் அவர்களுக்கு மிகுந்த எம்பிக்கை, பிள்ளே பிறந்தவுடன் அது பிறந்த tாகம் தேதி ாழிகை முதலியவற்றை எழுகிவைக்கிருரர்கள். அவர்கள் செய்யும் கரும் ஒவ்வொன்றும் சோதிட சம்பந்தமா
ருப்பதாலேயே இங்கனம் செய்கிருரர்கள்.
* இந்த சுகாத்திலுள்ள சனங்களும் இந்தியாவின் மறு இடங்களிலுள்ள சனங்களும் டெம்புல் (Tenbul) Ꭷ3Ꭲ Ꭼ,Ꮠr லும் ஒருளாக இலே யை எப்பொழுதும் வாய்க்குள் வைத்து மெல்லுகின்ஒர்கள். அவர்கள் அவ்விலேயை மென்று மிழ் நீரை வெளியே துப்பி விடுகின்றனர். அரசர்களும் செல்வர்களும் கர்ப்பூரம் முதலியன கலந்தவாசஃன L'roll" (15– களுடன் ஆகனே உபயோகிக்கிருர்கன். இவ்வழக்கம் சகக் துக்கு மிகவும் நல்லதெனச் சொ ல்லப்படுகிறது.
இங்கு குதிரைகள் கிடைப்பகில்லே. இதனுல் பிறநாடு விளிலிருந்து குதிரைகள் வாங்குவதில் இக்காடு பெருங் தொகைப் பணத்தைச் செலவிட்டது. கிஸ்(Ris)ஹோம்ஸ் (Hornes) LII air (IDofar) (Sargi (50er) GJ : ai gra,
விய நாட்டவர்கள் இந்த நாட்டு அரசனுக்கும் ஆவனது நாலு சகோதரருக்கும் விற்கும்படி குதிரைகள் கொண்டு வருவார்கள் ஒரு குதிரையின் விலே 500 சக்கி (Saggi) பொன்னுகும். அது 100 வெள்ளி மார்க்ஸ் (Marks) க்குச்
* ourိါး၊ * பின்வருமாறு கூறுகிருர்,
' குதிரைகள் இங்கு வந்ததும் பச்சைவாளி கொடுப் பதற்குப் பதில் வறுத்த வாளியையும், தானியங்களையும் நெய்யுடன் கலந்து கொடுக்கிருச்கள். குடிப்பதற்கு காய்ச்
சிய பசுவின் பாலேக் கொடுக்கிறர்கள். அவர்கள் 40 நாட்

Page 122
  

Page 123
226
பட்ட சுங்கங்கொள்வோர் விற்படையுடன் காத்திருப் பார்கள்.
அக்காட்டிலே எயினர்களுடைய சிறு குடிசைகள் காணப்பெறுகின்றன. அவை அணிலும் எலியும் துழை யாதபடி ஈந்தின் ஒலேயினுல் வேயப்பட்டு முட்பன்றியின் முதுகுபோன்ற புறக்கிண் புடையனவாயிருக்கும்.
பிள்ளையைப் பெற்ற எயிற்றியர் அக்குடிசைகளின் ஒருபுறத்தே மான்ருேரல்களில் முடங்கிக்கிடக்க,மற்றவர்கள் பாாையினுல் காம்பை நிலத்தைக் கிளறி எறும்பு சேர்த்து வைத்த புல்லரிசியை எடுத்துவத்து ஃபார்வைமான் கட்டப் பட்ட விளவின் கிழலையுடைய முற்றத்திலே தோண்டப் பட்ட நில உரலிலே பெய்து வயிர உலக்கையினுல் குற்றி, ஆழ்க்க கிணற்றில் உவர் நீரை மொண்டுவந்து, பழைய ஒறுவாய் போன பேனேயிலே உலேயை வார்த்து, முரிந்த ஆடுப்பிலே வைத்து ஆக்குவார்கள். அவர் குடிசைகளே அடைந்தால் இவ்வாறு சமைக்கப்பட்ட சோற்றை உப்புக் கண்டத்துடனே தேக்கிலேயில் உண்ணும்படி கொடுப்பார் கள்.
இக்குடி சைகளைக் கடந்து சென்ருல் எயினர் அரனேக் காணலாம். அங்கு மதில்களே யுடையனவும் ஊகம் புல்லி ஞல் வேயப்பட்டனவுமாகிய வீடுகள் உண்டு. அவற்றுள் பகைவரைக் குக்கியதால் கூர்மழுங்கிய வேல்கள் மணிகட் டின பரிசைகளோடு விற்களிற் சாத்தப் பெற்றிருக்கும்
* வேட்டையாடுவோர் மிருகங்களையோ பட்சி:ளயோ தங்கள் தொழிற்கிசைந்து கடக்குமாறு பழக்கி வலே முதலியன் கட்டுமிட நில் விடுவார்கள். இவற்ருல் நம்பிக்கைகொண்டு இவற்றின் இனம் ாள் வந்து கண்ணியில் மாட்டிக்கொள்ளும். இவற்றுள் பட்சியைப் பார்வைப் பட்சியென்றும் மிருகத்தைப் பார்வை மிருகமென்றும் சுடறுதல் மிபு.
 
 
 
 
 
 
 
 
 
 

227
லேவாயிலின் கிரண்ட கால்களில் அம்புக் கட்டுகளும் திடியும் தூங்கும். சங்கிலியிலே கட்டப்பட்ட நாய்கள் விட் டைக் காவல் காத்து நிற்கும். வீட்டைச் சுற்றி முள்வேலி ம் அதனேச் சூழ்ந்து காவற்காடும் காணப்படும். வாயிலின் உட்கதவுகள் கிரண்ட மரங்களால் காள் போடப்பட்டிருக் கும். இவ்வகையான எயினர் அரண்களில் தங்கினுல் காய் கள் கடித்துக்கொண்டுவந்த சங்குமணி போன்ற முட்டை ளேயுடைய உடும்பின் பொரியலாலே மறைக்கப்பட்ட சோற்றைவிடுகடோறும் பெறுவாய்.
அப்பாற் சென்ருல் குறிஞ்சி நிலத்தை அடைவாய், அங்கே வாட்டொழிலேச் செய்யும் குடியிற் பிறந்த புலியின் மீசையைப் போன்ற தாடியையுடைய குறவர் கலேவன் கொடிய வில்லையுடைய காவலருடனே காவலேயுடைய பகை வரது முல்லே நிலத்தை அடைவான். விடியற்காலேயிலே அவர்கள் பசுக்களே ஒட்டிக்கொண்டு போய் கள்ளுக்கு விலை யாகக் கொடுப்பான். பின் தனது விட்டிலே நெல்லாற்
செய்த கள்ளே உண்டு '
ஆட்டுக் கிடாயை முற்றத்தில் அறுத்து உண்டு மக்களங் கொட்ட நடுவே கின்று இடத் தோஃள வலப்பக்கத்தே வளைத்து பகற்ெ பாழுதிலே இவ்வகையினதாகிய குறிஞ்சி நிலக் தைக் கடத்தபின்பு முல்லே நிலத்தை அடைவீர்கள்.
மகிழ்ந்து ஆடுவான்.
அங்கே வீடுகள் குறுகிய கால்களிற் கட்டப்பட்டன. அக்குறுகிய கால்களில் ஆட்டு மந்தைகள் கின்பதற்கு தழை கள் கட்டப்பட்டிருக்கும். விட்டின் வாயில்களில் சிறிய ற்றைகள் உண்டு. கதவுகள் கயிற்றினுல் வரியப்பட்டன. கயிற்றினுல் வரியப்பட்டு வாகு வைக்கோல் பரப்பப்பட்ட படுக்கையில் கிடாயின் கோலேப் படுக்கையாகவுடைய முதி யோன் காவலாகத் துயிலும் பல குடிசைகள் அங்கு காணப்

Page 124
228
படும். முற்றத்திலே அறையப்பட்டிருக்கின்ற முளைகளில் தாமணிகளேயுடைய கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். சீழ்க் கை அடிக்கையினுலே இடையர் மிடிக்க வாயையுடையவர் களாயிருப்பார்கள்.
விடியற் காலத்திலே மாமை நிறத்தையும் காளுருவி அசைகின்ற காதினேயமுடைய ஆய்மகள் மத்து ஆரவாரிக் கும்படி தயிரைக் கடைந்து வெண்ணெயை எடுப் ார்கள், பின்புள்ளியாகத் தயிர் தெறிக்க மோர்ப்பாளேயை பூவார் செய்த சம்மாட்டின்மேல் வைத்து மோரை விர்பார்கள் ; விற்றதினுற் கிடைத்த நெல் முதலியவற்றைக் கொண்டு போய் கனது சுற்றத்தாரை உண்ணப்பண்ணுவாள். அவள் தான் நெய்யை விற்றவிலேக்குக் கட்டியாகிய பசும்பொன்னே வாங்காளாய், பாலெருமையையும், நல்ல பசுவினேயும், எருமை காகினேயும் கொள்ளுவாள். இவ்வகையின காகிய ஆயர் குடியிருப்புகளிற் தங்குவாயாயின் கினேயரிசியாலட்ட சிலுக்க சோற்றைப் பாலுடனே பெறுவாய்,
அப்பால் முல்லே நிலத்து ஊர்களே ஆடைவீர்கள். அங்கு வீடுகளின் முற்றத்தில் வாகு முதலியன போட்டு வைக்கும் கூடுகள் (குதிர்) கானாப்படும். வரகு திரிகைகள் தலேவாயிலில் நடப்பட்டிருக்கும். கொட்டில் வீடுகள் பின்கு வைக்கோ லினுல் வேயப்பட்டிருக்கும். அவ் விடுகளின் ஒரு புறம் அடுப்பெரித்ததினுல் புகைகுழ்ந்திருக்கும். வீடுகளின் சுவர்களில் வண்டிற் சில் ஆகளும் கலப்பைகளும் சார்த்தி வைக்கப்பட்டிருக்கும். அங்கே தங்கினுல் வாகு சோற்றைப் Guitar ய்,
முல்லே நிலத்தைச் சார்ந்த மருதத்தில் ଦ୍ଯୁତ கிறைந்த உணவினேயுடைய.ழவர் வயல்களை விதைப்பார்கள், ہیلئے ?lid கும் பருவத்தில் அதன் கட்டங்கும் குறும்பூழ் (காடை)

39
பறக்கலாற்ருத இளைய பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு மல்லே நிலக்கே செல்லும், வயல்களிலுள்ள கேனுறுகின்ற வை மாலேயாகக் கட்டிச்சூடி அதனே வெறுத்த தொழில் செய்வாருடைய பிள்ளைகள் முள்ளியின் கரிய பூவைப் பறித்து கோரையைப் பல்லாலே மென்று கிழித்த காாாற் கட்டிய மாலேயை ஈருடைய தலையிலே யணிந்து கடம்பின் காதை மார்பிலே அப்பு வார்கள். அவர்கள் பழஞ்சோற்றை வெறுத்து பன்றி முதலிய காத்திற்கு வரம்பிலே கட்டப் பட்ட புதியவைக்கோலால் வேய்ந்த சிறிய குடிலின் முற்றத் கே ஆவலிடிப்பார்கள். அவலிடிக்கும் உலக்கையினுேசை கிளிகளே வெருவச் செய்யும், வளேங்க கதிரினேயுடைய வயலினிடத்து விளக்க நெல்லே யறுப்போர் சிலந்தியினது நால்கள் பக்கக்கே சூழ்ந்த போர்களின் அடியை எடுத்து விரிப்பார்கள். பின் ஏர் கடா விடுவார்கள். வைக்கோலேயும் கூனந்தையும் அகனின்றும் நீக்கி மேல்காற்றிலே தூவிக் தூற்றின பொலிமலேபோலத் தோன்றும். இவ்வகையான மருதநிலஞ் சேர்ந்த குடியிருப்புகளில் விட்டின் பக்கத்தே தறிகளில் நெடிய தாம்புகளில் கன்றுகள் கட்டப்பட்டு நிற்கும். ஏணி எட்டாத உயரத்தையுடையதும் தலே கிறந்து உள்ளே சொரியப்பட்ட பழைய கெல்லினேயுடையதுமாகிய தானியக் கூடுகள் வீடுகளில் உண்டு. தச்சச்சிருர் செய்த சிறு தேர்களேப் பிள்ளைகள் உருட்டிச் சென்ற களே ப்பாலே செவிலிக்காயருடைய பாலே நிறைய உண்டு படுக்கையிலே துயில்வார்கள். இவ்வகையான வறுமை தெரியாக குடியிருப் பினேயுடைய ஊரிலே நல்ல நெற் சோற்றினே கோழிச் சேவலின் Fமைக்க பொரியலோடே பெறுவாய்.
| அங்கே புகைகுழ்க்க கொட்டில்களில் கருப்பஞ் சாற்றைக் காய்ச்சுவார்கள். அக் கொட்டில்களே அடைக்

Page 125
230
தால் முன் கருப்பஞ் சாற்றைக் கொடுத்துப் பின் கட்டியை உண்ணும்படி தருவார்கள்.
அப்பாற் சென்றல் வலைஞர் குடியிருப்பை அடை வீர்கள். அவர் விடுகள் காஞ்சி வஞ்சி முதலிய மரங்களின் கொம்புகளை கைகளுக்கு நடுவே தூணுக நட்டு மூங்கிற்றடி களை வரிச்சாக நிரைத்து தாழை நாராற் கட்டி தருப்பைப் புல்லால் வேய்ந்த பதிந்த இறப்பையுடையன வாகும். மீன்களை வாரி எடுக்கும் வலைகள் முற்றத்திலே காணப்படும் தலை வாயிலின் கூரையில் படர்ந்துள்ள சுரைக் கொடியில் காய்கள் தொங்கும். இளையவர்களும் முதியவர்களும் தலை வாயிலிடத்தில் கூடியிருந்து பின் இருவும் கயலும் பிறழும். ஆழ்ந்த குளங்களில் பிள்ளைகளோடே யுலாவி மீன்களைப் பிடிப்பார்கள். அவர்கள் குடியிருப்பில் தங்கினல், குற்முக கொழியலரிசியை கழியாகத் துழாவியட்ட கூழை அகன்ற வாயையுடைய தட்டுப்பிழாவிலே உலா வாற்றி பாம்புகிடக் கின்ற புற்மும் பழஞ் சோற்றினை யொக்கும் புறத்தினை யுடைய முளையினை யிடித்துச் சேர அதிலே கலந்து சாடி யின் கண்ணே முற்றின, விரலாலே அலைத்து அரிக்குக் தன்மையையுடையதாகிய வெவ்வியகள்ளை மீன் சூட்டுடன் பெறுவாய். நீர்த் துறையிலே விளையாடி மகளிர் போக விட்டுப் போன குழையினை நீலநிறமுள்ள சிச்சிலிப் பறவை தனக்கு இரையென எடுத்துக்கொண்டு பட்சிகள் நிறைந் திருக்கும் பனையிற் போகாது அந்தணர்யாகசாலையில் நட் டயூபத்தின்மேலிருக்கும். அது சோனகர் பாய்மரத்தின் மேலேற்றிய அன்னவிளக்கைப் போலவும் விடிவெள்ளி போலவும் ஒளிவிட்டுத் தோன்றும்.
கடற்கரை, மேற்றிசைக் கண்ணுள்ள குதிரைகளையும்
வடதிசைக் கண்ணுள்ள பொருட்களையும் கொண்டுவந்து

23.
தரும் மரக்கலங்கள் சூழப்பெற்றது. மணல் மிகுந்த தருக்களில் தொழிலாளராற் காக்கப்படும் பண்டசாலைக ம் பரதவர் வாழும் வானளாவிய மாளிகைகளும் உண்டு. டுகளில் விளைபொருட்கள் தேங்கிக் கிடக்கும். உழு கின்ற எருதுகளுடன் பசுக்கள் நெருங்காதபடி ஆட்டுக் டாய்களும் நாய்களும் சுழன்று திரியும். உயர்ந்த மாடத் துறையும் பேரணி கலன்களையுடைய மகளிர் பசிய மணி ள் கோத்த வடங்களையுடைய அல்குலினிடத்தே கிடக் கின்ற மெல்லிய துகிலசைய மலையிலே ஆரவாரிக்கின்ற தோகை மயில்போல் உலாவுவார்கள் ; காலிடத்தேயுள்ள P:#@လ(ဖ်(၂## ஒலிக்க நூலினல் வரிந்து செய்யப்பட்ட பந்தினை அடித்து விளையாடுவார்கள். முத்தையொத்த வார்ந்த மணலில் மெத்தென மெத்தென கையிற்றரித்தவ ளைகள் அசையும்படியாக பொற்கழங்கு கொண்டு விளையா
டுவார்கள்.
கள்ளுண்பார் பலரும் புகுகின்ற வாயிலில் பசிய கொடி கள் அசையும்படி கட்டப்பட்டுள்ளன. முற்றத்திலே தெய்வத்துக்குத்து வின சிவந்த பூவாடல்கள் இருக்கின்றன. அங்கே கள்ளைச் சமைக்கின்ற மகளிர் வட்டில் கழுவிய நீர் வடிதலின் நிலஞ்சேருயிருக்கும். அச்சேற்றில் புரளுகின்ற பெண் பன்றியுடனே புணர்ச்சிக் கருத்தால் போகாமல் குழியிலே நிறுத்தி நெல்லை இடித்த மாவாகிய உணவி னல் ஆண் பன்றி வளர்க்கப்படுகின்றது. இவ்வகையான பட்டினத்தில் தங்குவாயாயின் அப்பன்றியின் தசையோடு கள்ளை உண்ணும்படி பெறுவாய். துறைமுகத்தின் கண்ணே ஆகாயத்தை முட்டும்படி உயர்ந்ததும் கற்றை முதலியவற் முல் வேயாததுமாகிய கலங்கரை விளக்கம் உண்டு. இது மரக்கலங்கள் தாம் சேரும் இடத்தை யறிந்து செல்லும்

Page 126
233
படி கிறுவப்பட்டது. இதனேக் கடக்திசென்றல் கென்னங் கீற்றுகளால் வேய்ந்த வீடுகள் இருக்கின்றன. இவ்வகை யான விடுகளிலே சுங்கினுல் பலாப்பழத்தையும் இளநீரை யும், வாழைப்பழத்தையும், பனேயினது தூங்கோடே வேறு பண்டங்களையும் முற்றினவள்ளி முதலிய கிழங்குகளையும் உண்ணும்படி பெறுவாய்.
அப்பாற்சென்ருல் காந்தள் வளருகின்ற மலையில் பாளே படிந்தாற்பாலகிருவெஃகாவில் பாம்பிலே துயில்கொள்ளும் திருமாலேக் காண்பாய். திருவெஃகாவைக் கடந்து சென் குல் காஞ்சி நகரை அடைவாய். அங்கே சோலேகளுள் பரிக் கோலேக் கையிலே உடைய யாஃனப்பாகர் கவனமில்லாதிருக் கும்போது யானேகளுக்கு நெய்யுடன் கலந்து வைக்கப் பட்ட அரிசியைச்குலுடையமத்தி கிருடிக்கொண்டுசென்று உண்ணும். தேரோகெலினுல் தெருக்கள் தாழ்ந்திருக் கின்றன.
கடவுள் உறைவதும் சீதேவி வாழ்வதுமாகிய நூல்வா சனின் வியாகரை யடைந்து அவனேப் பலருன்மொழிகளாற் புகழ்ந்து யாழ் வாசிப்பின் அவன் அதனேக் கேட்டு மகிழ்ந்து உன்னுடைய துரையிற் கிடந்த கொட்டைப் பாசியின் வேரையொத்த கிழிக்க சிலேயைப்போக்கி பாலாவியை யொத்த விளங்குகின்ற நூலாற்செய்த துகில்களே உனது கரிய பெரிய சுற்றத்தாரோடே உடுக்கப்பண்ணி, வளைந்த அரிவாளைக்கொண்ட கையினேயுடைய மடையன் ஆக்கின இறைச்சியிற் கொழுவிய தசைகளையும் செங்கெல் அரிசியாலாக்கிய சோற்றையும், இனிய சுவையுடைய கண்ட சருக்கரை முதலியவற்றுடனே ஊட்டி சிறியவும் பெரியவு மாகிய வெள்ளிக் கலங்களை உங்கள் பிள்ளைகளுக்கிடையே
பாப்பி, கான் ஆசையுடனே அவர்களே உண்ணப்பண்ணி
 
 
 
 
 
 
 
 
 
 
 

2器器
பாற்ருமரையை நீண்ட மயிரிடக்கே அழகுபெறச்
சொருகி, நான்கு குதிரைகள் பூட்டிய கேரையும் பசிய பான்னுற் செய்த சேணத்தையும் பரிசிலாகத் கருவான்.
சில பிரதான திகதிகள்
கி. மு. 450 .வடிம்பலம்ப நின்ற பாண்டியன்
தி.மு. 350 .நிலக்கரு திருவிந் பாண்டியன்
கி. மு. 25 .பல் யாகாவே முதுகுடுமிப் பெரு
வழுதி ஆகஸ்டஸ் சீசருக்குக் தூதனுப்பிய பாண்டியன் இவ
ஞகலாம்) கி. மு. 4-ம் நூற்ருண்டு . கார்த்தியாயனர் E, է էլ. 50-25Ո .திருக்குறள், பத்துப்பாட்டு. சிலப்
பதிகாரம், மரிைமேக,ே எட்டுக்
தொகையிற் பெரும்பான
கி. பி. 125 (.ெபி. 50 வரையில்
எனக் கொள்வாரு முனர் .உக்கிரப்பெருவழுதி
கி. பி. 150 1.நெடுஞ்சேழியன்
|ჭრწ., . .). 1"T5 1.வெற்றிவேல் இளஞ்சேழியன்
கி. பி. 3-ம் நூற்ருண்டு .மாEங்கவாசகர் இவர் சங்கர ருக்குப் பின் 4-ம் நூற்ருண்டில் அல்லது 10-ம் ாற்றுண்டில் விளங்கியன ரெனக் கூறுவாரு முனர். தேவாரம் பாடியனர் கள் சிங் சி விடங்களில்
மாணிக்க வாமனர் பொருட்டு இறைவன் கிகழ்ந்திய திரு விளேயாடலேக் குறிப்பிடுகின்ற மையின் அலர் தேவாரம் பாடி LLužbrif களுக்குப் பிந்திய3 சல்வர். இதுவே பரீவாரீ ஆறுமுக பாவ
வரவர்கள் கருத்துமாகும்.

Page 127
:
பி
25) 250--500
470 7- நூற்றாண்டு
7-ம்
22
. 735
7-ம் நூற்ருண்டு
{Oک مدت
. 75.) . S-9 -th நூற்ருண்டு
9:06
9-ம் gTമറ്റ്ര7(6) 9-l;
9-lb
10.பம்
3 3
アう
. I 0 - 8
1118–1143
. 145-205
12-b நூற்ருண்டு
2-ti, 12-ւն 12-ம் 34. 35 O25 O75
. !!- நூற்றண்டு
12
22
. 13-ம் . I ി. 12-b
う%
234
..சோன் செங்குட்டுவன்
.பழந்தமிழ்ப் பாக்கள் தொகுத்து
முடிந்தது
..வச்சிராந்தி . அதிவீரராம பாண்டியன் .புறப்பொருள் வெண்பாமாலை
.அரிகேசரி பாராங்குசன் . சம்பந்தர் .திருநாவுக்கரசர்
காலடியார்
.ஆழ்வார்
பராந்தகசோழன் .திருத்தக்கத்தேவர்
சுந்தரர் .பாரத வெண்பா .பட்டினத்தடிகள் .கலிங்கத்துப்பாணி -ஒட்டக்கூத்தர் . கம்பன்
A « X பொய்யாமொழிப்புலவர் (தஞ்சை
வாணன் கோவை)
. ஒளவையார்
.மெய்கண்டார்
-பீத்திமுற்றப்புலவர்
. இராமானுசாரியர்
.சேக்கி ழார்
..நம்பியாண்டார் நம்பி
..வீாசோழியம்
. கந்தபுராணம் ..இளம்பூரணவடிகள்
... பவணந்தி .5ாற்கவிராச நம்பி

235
G. S. 12-1500 .உரையாசிரியர்கள், சித்தாந்த சாத்
திரங்கள்
கி. பி. 14-ம் நூற்றண்டு .தமிழெழுத்து மாறியது
. L.S. 1453 .காளமேகப்புலவ
日 பி. 13-ம் நூற்முண்டு புகழேந்தி
日 பி. 15-ம் ל ( .அருணகிரிநாதர்
S. 15-b ..வில்லிபுத்தூார்
.ெ பி. 16-ம் לל ... சூடாமணிநிகண்டு
கி. பி. 16-ம் .பாஞ்சோதி திருவிளையாடல்
கி. பி. 17-ம் לל ... குமாகுருபரர்
இ. பி. 1680-1746 . வீரமாமுனிவர்
G.L.1608一1644 ...தாயமானசுவாமிகள்
கி. பி. 1785 (தெய்வீகம்) .சிவஞானமுனிவர்
g). S. 1836.884 . மாம்பழக் கவிசிங்கநாவலர்
ஒழிபியல்
நால்வகை எழுத்து
* சீன பாஷையில் ஒவ்வோர் எழுத்தும் ஒவ்வோர் கருத்தைக் குறிப்பதாய் இன்றளவும் பல்லாயிரம் எழுத்து களை உடைய பாஷையாயிருக்கிறது. தமிழ்மொழி எழுத் துக்களின் ஆதி சரிதமும் அவ்வாறே. அவ்வாறென? காட்டுமுறைகள் பல தமிழ்ப்பூர்வ இலக்கணங்களுட் ტვენfT6ზშhir லாம். யாப்பருங்கல விருத்தியில் தேர்பத முதலிய நால் வகையெழுத்து உக்கிரவெழுத்து, முக்கிறவெழுத்து கதியெழுத்து, யோனியெழுத்து சங்கேத வெழுத்து, முதலியன வாய பலவித எழுத்துக்களின் பெயர்கள் கூறப்
பட்டுள்ளன.

Page 128
2器6
கிவாகரம் பிங்கலங்தை முதலிய நூல்களில் :- பெயரெழுத்து முடிவெழுத்து வடிவெழுத்துத் தன்மை எழுத்தென வெழுத்தின் பெயரியம் பினரே (கிவாகரம்)
* வடிவு பெயர் தன்மையுண் முடிவு நான்கா நடைபெற காவலர் காடிய வெழுக்தே
(இலக் கொக்).
உருவே புணர்வே Guirséin sai ali
எனவிரெழுத்து மீரிருபகுதிய.
(இலக். கொத்).
இவற்றுள் வடிவெழுக்கென்றது சித்திரக்குறிகளேயாம். மனிதனே மனிதனின் உருவத்தையேனும் அவனின் டாக மாகிய தலையையேனும் சிந்திரித்துக் காட்டல் பெய ரெழுக்கென்றது சங்கேதக்குறி. போரைக் குறிக்க மனித னின் புயங்களேக் காட்டுவது, தன்மை யெழுத்தென்றது குணம், சக்கி முதலியவற்றைக்காட்ட வரையும் அடையா ளங்கள். விவேகத்துக்குக் கண், வெற்றிக்குக் கருடன் முதலியனவரைதல், முடிவெழுக்கென்றது வினே கிகழ்ச் சியை உணர்த்தும் பாக்கியங்களேக் குறிக்க வழங்கிய வாக்கியங்கள்? | yi செந்தமிழ்ப் பத்திராசிரியராகிய பூரீ மு. இராகவ ஐயங்காரவர்கள். தமிழில் ஆராய்ச்சி மிக்குடைய சாய்க் கிராவிட விவகாரத்தில் தெளிந்த சில விஷயங்கள்' என்னும் வியாசமெழுதிய எப். ஜெ.ரிச்சர்ட்ஸ் பண்டிகர், ஆதித்தமிழ் எழுத்து சிக்கிரவுருவமாகவே உண்டாயிருக்கவேண்டும் எனக் கூறி அதற்குச் சார்பா ப் பல்லாரியில் மயில் மலேயில் பொறித்திருக்கும் சில சித்திரங் களேயும் படம் பிடித்து ஆச்சேற்றி வெளியிட்டனர்'
(தமிழ் இலக்கியம் ப. 18-19).
 
 
 

2器T
மடலேறல்
மடலேறலாவது, ஒருவன் ஒவ்வாக் காமக்கால் பனங் கருக்காற் குதிரையும், பணக்கருவி னுள்ளனவற்ருல் வண்டில் முதலானவுஞ் செய்து ஆக்குதிரையின்மேலேறு வது. மடலேறுவான் திகம்பானுய் உடலெங்கும் நீறுபூசிக் நிழி ஓவியர் கைப்படாது தானே தீட்டிக்கிழியின் கலேப் புறத்தில் அவன் பெயரை விரைந்து கைப்பிடித்து, ஊர் நடுவே காற்சந்தியில் ஆகாா கிக்கிரையின்றி, ஆக்கிழிமேற் பார்வையுஞ் சிங்கையுமிருக்கி, வேட்கை வயத்தனுப்வேறு ணர்வின்றி, ஆவூரினும், அழல் மேற்படினும் அறிதலின்றி, மழை வெயில் காற்ருன் மயங்காதிருப்புழி, அவ்வூரிலுள் ETT ITF பலருங்கூடி வந்து ே 1 r, L—ʼ35\}_izıv,5ß3ıLI T F அலேளேக் திரு தும், சோதனே கருகியோ ரி என்ற வழி இயைங்காணுயின், அரசனுக் கறிவிக் து, அவனேவலால் அவன் இனேந்து நையத்தந்து மடலேறென்றவழி, ஏறுமுறைமை-பூனே |பெலும்பு, எருக்கு இவைகளாற் கட்டிய மாலேயணிந்து கொண்டு அம்மாவிலேற, அவ்வடத்தை விதியி வீர்க்கலும், அவ்வுருளே யுருண்டோடும் பொழுது, பனங்கருக்கு அறுத்த விடமெல்லாம் இரத்தங் தோன்ருது வீரியக் தோன்றின் அப்போது அவளே அலங்கரித்துக் கொடுப் பது, இரத்தங் கண்டுழி அவனேக் கொலே செய்துவிடுவது. g) ಪಾಥ್ರ! புலவரால் நாட்டிய வழக்கென் ரனர்க .'
(கஞ். கோவை--உரை) * மாவென மடலு முர்ப பூவெனக்
குவிமுகி முெருக்கங் கண்ணியுஞ் சூடுப
மறுகி ஞர்க்கவும் படுப
பிறிது மாகுப காமங் காழ்க்கொளினே.
। (குறுக்-17)

Page 129
288
* விழுத்தலைப் பெண்ணை விளையன் மாமடன்
மணியணி பெருந்தார் மார்பிற் பூட்டி வெள்ளென பணிந்துபிற ரெள்ளத் தோன்றி யொருநாண் மருங்கிற் பெருநா னீக்கித் தெருவி னியலவுங் தருவது கொல்லோ கலிங்கவி ரசைநடைப் பேதை மெலிந்தில னம்விடற் கமைந்த தூதே.’
(၁ဝဲ)၄.—–182.)
* சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு நிறீஇக்
குறுமுகி ழெருக்கங் கண்ணி குடி யுண்ணு நன்மாப் பண்ணி யெம்முடன் மறுகுடன் திரிகருஞ் சிறுகுறு மாக்கள்’
(நற்றிணை-220)
கிராம பரிபாலனம்
* செங்கற்பட்டு ஜி ல் ல |ா வி ல், உத்தரமல்லூரில், வைகுண்ட பெருமாள் ஆலயத்தில் கி. பி பத்தாவது நூற் முண்டின் தொடக்கத்தில், பரகேசரிவர்மன் என்ற சோழன் ஏற்படுத்திய ஒரு சிலாசாஸனத்தில், உத்தரமல்லூரைச் சேர்ந்த கிராமபரிபாலன விதிகளைச் சீர்திருத்திய விபரம் கண்டிருக்கிறது. அதில் சபையாரை நியமித்தலான ஒழுங்கு விளக்கியிருக்கிறது. பெரியரும் சிறியருமான கிராமவாசிகள் ஒரிடத்தில் கூட்டங் கூடவேண்டும். ஆல யங்களின் அர்ச்சகர்கள் யாவரும் கூட்டத்தில் வந்திருக்க வேண்டும். சபையாக நியமிக்கத்தக்கவர்கள் பெயர்களை ஒவ்வொரு ஒலைநறுக்கில் எழுதி அந்தந்த நத்தம் வாரியாத் தனித்தனி கட்டுகளாகக் கட்டிவைக்கவேண்

239
டும். அர்ச்சகர்களில் @lեւ 1.5} முதிர்ந்தவர் வெறுங்குட மொன்றைக் கையிலெடுத்துக்கொண்டு கூட்டத்தின் மத்தி யில் கிற்கவேண்டும். ஒலைக்கட்டுகளை ஒவ்வொன்முகக் குடத் தைக் குலுக்கி ஒன்றுமறியாத ஓர் சிறுவன அழைத்துக் குடத்தில் கையிட்டு ஒர் நறுக்கை எடுக்கச் செய்து அதை மத்தியஸ்தர் கையிற் கொடுக்கவேண்டும். அந்த நறுக்கி லுள்ள பெயரை மத்தியஸ்தன் வாசித்தபிறகு மற்ற அர்ச்ச கர்கள் ஒவ்வொருவரும் வாசித்துக் காட்டவேண்டும். அதன்மேல் அந்தந்த பெயர் எல்லாருக்கும் அங்கீகாரமா கும். இங்ஙனம் நத்தத்துக் கொவ்வொருவராகக் கிராம பரிபாலன மகாசபை ஏற்படுத்துவதென்று மேற்படி சாஸ னத்தில் கண்டிருக்கிறது."
(செல்வக்கேசவராய முதலியார்.)
Pon, a gold coin valued at Rs 2-8-0 each (Tamil Studies P. 260).
சங்க நர்ல்கள்
பத்துப்பாட்டு எட்டுக் தொகை பதினெண்கீழ்க் கணக்கு முதலியன சங்கநூல்களென வழங்கப்படுகின்றன. பதினெண்கீழ்க் கணக்கிலுள்ள நால்களுட் பெரும் பாலனசங்ககாலத்துக்குப் பிற்பட்டன.
பத்துப்பாட்டிலுள்ள நூல்கள் :-
* முருகு பொரு நராறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல் குறிஞ்சி பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து”

Page 130
240
திருமுருகாற்றுப்படை,சிறுபாணுற்றுப்படை, பெரும் பாணுற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடு நல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலை படு கடாம் எனபன பத்துப்பாட்டில் அடங்கிய நூல்களாம். எட்டுத் தொகையில் அடங்கிய நூல்கள் :-
* நற்றிணை நல்ல குறுந்தொகை யைங்குறுநூ முெத்த பதிற்றுப்பத் தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் சொல்லுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை.’
புறநானூறு, பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு, கலித் தொகை, பரிபாடல், அகநானூறு, புறநானூறு குறுங்
தொகை என்பனவாம்.
பதினேண்கீழ்க் கணக்கு நூல்கள்
*நாலடி நான்மணி நானுற்ப தைந்திணைமுப் பால்கடுங் கோவை பழமொழி-மாமூல மெய்ங்கிலேய காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு”
நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவைநாற்பது, இன்னு நாற்பது, கார்நாற்பது, களவழி நாற்பது, திரி கடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறு பஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, ஐந்திணை ஐம்பது, திணை மொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணை மாலை, திருக் குறள் என்பனவாம்.
கடைசியிற் கூறப்பட்ட ஆறு நூல்களைப் பற்றிப் பல்
வேறு அபிப்பிராயங்கள் உள்ளன.

24
* கடைச் சங்க நூல்களில் பெயர் வழங்கும் புலவர் கிட்டத்தட்ட ஐந்நூற்றவர் எனக்கூறப்பட்டது. இவருள் பெரும்பாலார் இன்னுரென அறிதற்கிடமில்லை. ஒருவாறு இன்னரென 3گی{{ றியக்கிடந்தவர் இருதாறு புலவரே. இவருள் ஐம்பத்தொருவர் பெண்பாலார் முப்பத்தறுவர். அகதன: இருபத்தொன் பதின்மர், நாகா பதினெழுவர், எயினர் பதின் மூவர், கம்மாளர் எழுவா, வணிகர் எழுவர், மள்ளர் ஐவர், ஆயர் மூவர், குயவர் ஒருவர், பரதவர் ஒருவர் வள்ளுவர் ஒருவர். பாண்டிய மன்னர் பதின் மூவர், (59. It
மன்னர் எழுவர், சோழமன்னர் ஒருவர், தொண்டைமான்
ஒருவா
(தமிழ் இலக். t is 66).
ஐம்பெருங் காப்பியங்கள்
சிலப்பதிகாரம், சிந்தாமணி, மணிமேகலை, வளையா பதி,
குண்டலகேசி.
ஐஞ்சிற காப்பியங்கள்
KO ፲ነ ”Y) சூளாமணி, உகயன னக கை, நீலகேசி, யசோதா
காவியம், 5ாககுமார கா
திருக்குறள் திருக்குறள் உக்கிரப்பெருவழுதிகாலத்தில் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டதென்பது கன்ன பரம்பரை. இலங்கையை யாண்ட எளாறன் (எலேல சிங்கன்) காலத் தவர் இவர் எனச் சிலர் கூறுவர். அப்படியாயின் அவர் காலம் கி. மு. 204 ஆகும். திருவள்ளுவர் செய்துள்ள நூல் எல்லாச் சமயத்தாராலும் எச் சாதியாராலும் கொண்
16

Page 131
24
டாடப்பட்டு வருகின்றது. திருவள் ளுவர் கமது துளிற் கூறியுள்ள சமயமே தமிழர்கள் சமயம் என்று பலர் அபிப் பிராயப்படுகின்றனர். கிருவள்ளுவர், மனுநூலிலோ சாணக்கியர் செய்த அர்த்தசாக்கிரக்கிலோ விருத்து தமது நூலுக்கு வேண்டிய ஆகிா ரங்களேப் பெற்ருர் என்று ஒரு சிலரும், அற்றன்று, ப்ெடி நூல்களிலுள்ள பல வற்றையே மொழிபெயர்த்துள்ளாரென்று வேறு சிலரும் கூறுவர். சக்திாகுப்தலுக்கு மக்கிரியா யிருக்க சாண்க்கி பர் (கெளடலியர்) அர்த்த சாஸ்திரம், காமசாஸ்திரம், தர்ம சாஸ்திரம், மோட்ச சாஸ்திரம் முதலிய பல நூல்களே வட மொழியில் செய்துள்ளார் என்றும் அவர் தமிழ் நாட் டினா என்றும் அறிகின்ருேம். சாணத்தியர் தமிழ் நாட் டில் அறியப்பட்டதும் வடகாட்டில் அறியப்படாதது Lrrí. L பொருள்களேப்பற்றிய நூல்களே இபற்றின ୍]] ! [ பரல் அந்நூல்கள் Fil it - காட்டில் மிகவும் புக ழ்பெற்று விளங்க ஏதுவாயின. சாணக்கியர் செய்துள்ள நூல் களுக்கு ஆகாாம் தமிழிலேயே இருக்கிருத்தல்வேண்டு மென்பது வெளிப்படை. தமிழகக்கில் நூல் வழக்கிலோ செவி வழக்கிலோ உள்ள பொருள்களே ஆதாரமாகக் கொண்டு நூல் இயற்றிய சாணக்கியர் கிருவள்ளுவர் ఇ ஒரம் இருவர் நூல்களிலும் ஒரோ ரிடங்களில் ஒருமைப் பாடு கானப்படுதல் சகசமே. ஆகவே வள்ளுவர் சாணக் இபர் நூலிலிருந்து சிலவற்றை எடுத்து மொழி பெயர்த் துக் கொண்டார் எனக் கூறுதல் இயைபுடையதாகாது, மனு நூலுக்கும் கிருக்குறளுக்கும் ...ਕ விக்கியாசம் அணுவுக்கும் மாமேருவுக்கும் உள்ளதாகும். இதன் வேற் g51) LE3) III ஆசிரியர் சுந்தரம் பிள்ளேயவர்கள் : வள்ளுவர்
செய்திருக்குறளே வழுவற நன்குண்ர்ங்கோர்-உள்ளுவரோ

24器
ணுவசதி ஒரு குலத்துக்கொரு நீதி ' என்று தனிவிளக்கி ள்ளார். விளேபாட்டுச் சிகுரால் மனவிற் கீறப்பட்ட காடுகளிலும், ஈக்கை ஒட்டிலுள்ள கிறுகளிலும் ஒரோ டக் து ஆக்க வடிவம் காணப்படுவதுபோல மனு தாலி லுள்ள ஏதோ ஒரு வாக்கியம் கிருக்குறளிலுள்ள பாதானு Լոմ (այ பொருளோடு ஒற்றுமைப்படுமாயின் முன்னதின் மாழி பெயர்ப்பே பின்னது என்று வாதாடுதல் துமோ
பற்றியதாகும்
திருவள்ளுவமாலே
திருவள்ளுவரையும் அவர் நூலேயும் சிறப்பித்துப் ாடப்பட்ட வெண்பாக்கள் கிருவள்ளுவமாலே என வழங் 凸。 இப்பாடல்கள் கி. பி. எட்டாம் நூற்குண்டுவரையில் ாரோ ஒரு புலவரால் பாடப்பட்ட தெனச் சில அறிஞர்
or II படுகின்றனர்
கிருவள்ளு வாஃப் செய்தது குறள் அரங்கேற்றிய காலத்தென்றுவது, அகில் I, IT r II, ir இறையனூர் முகவிய வர்கள் பாடியனவாகக் காணப்படும் செய்யுள்கள். மெய்மை யாக அவர்களாற் பாடப்பட்டன வென்குவது கொள்ளம் டேமின்மையா ல், மேற்கூறிய மா மூவனுர் பா ட்டென்பது 邨 ள்ளுவரை இழிகுலக்கா னென்பதற்குக் சிக்க ஆகார மாகாது. திருவள்ளுவமாலே செய்தது குறள் அரங்கேற்றிய காலத்தன் றென்பதற்குக் காரணம் என்னே என்பிராயின், அசரீரியும், காமகளும் பாட்டுப் பாடுவது அனுபவ விரே ாத ம்ே அசம்பாவித மாதலுமேயாம். மற்றையோர்களாற் Mr L L L 337 al "Y Ti di Tsar l'illussa F. பாட்டுகளுட் பெரும் ாலன மெய்யாக ஆவர்களாற் பாடப்பட்டனவல்ல. எங்கன மெனின், ஒரு நூலுக்குப் பாயிரஞ் சொல்லவோ, ஆன்றி
|
கனே எடுத்துப் புகழவோ புக்கார் ஆங் நான் முழுவதையும்

Page 132
244
பற்றிப் பேசுவரேயன்றி அதன் ஒருபாகத்தை மாத்திரம் பற்றிப் பேரார். கிருவள்ளுவமாலேயிலோ ஆறத் துப்பாஃப் பற்றி
* Litur st ன்கில்லற மிருபான் பன்மூன்றே
தாய துறவறமொன் அாழா கீ-ஆய ஆறத்துப்பால் குரல்வகை யாராய்ந் துரைக்கார் தரவின் கிறித்துப்பால் வள்ளுவனுர் தேர்ந்து ? என்று எறிச்சலூர் மலாடனுரும், பொருட்பாஃப் பற்றி
" ஆாசிய லேயைத் தமைச்சிய விாைர்
அரு வல்லரணிரண்டொன்ருெண் கூழ்-இருவியல்
கிண்படை நட்புப்பதினேழ் குடி பதின்மூன்
ரெண்ெ பாருளேழர மிவை ? என்று போக்கியாரும், காமத்துப் பாஃலப்பற்றி
* ஆண்பாலேழா றிரண்டு பெண்பாலடுத்தன்பு
பூண்பா லிருடா Gisor Tyt-மாண்டாய
காமத்தின் பக்கமொரு மூன்முகக் கட்டுரைத்தார்
நாமத்தின் வள்ளுவனுர் நன்கு ཟླ་ என்று மோசிகீரனுரும் கூறினதாக வருகின்றது. இம் மூன்று பாடலும் குறளிலுள்ள ஒவ்வோரியனின் தொகை பையும் அதிகாரத்தின் தொ கையையும் கூறுகின்றன வள் றிக் குறளின் சிறப்பை அல்லது அகன் அருமை பெருபை களே எடுத்துரைக்கவில்லை; ஆன்றிக் செய்யுளழகு ruit will, தனவாயுமில்லே. இவைகளே இயற்றுவதற்கு மூன்று சங்கப் புலவர்கள் வேண்டியதில்லே ; காரிகைகற்றுக் கவிபாடும் ஒரு வர் போதும். இங்ஙனமே இவை மூன்றும் குறளின் இய லும் அதிகாசமும் இத்தக்னயென்று கனக்கிட விரும்பிய
ஒருவராலேயே இயற்றப்பட்டன விாதல் வேண்டும்.

கிருவள்ளுவமாலே குறள் அரங்கேற்றப்பட்ட காலத்துச்
து ம். ஆம்மாலேயில் உக்கிரப் பெருவழுதியார் FTತೃ-ಪೌFFTಖಿ ரும் செய்யுளில் 'நான் மறையின் மெய்ட் பொருளே முப்
தந்துரைக்க நூல்' என்றும், காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணர்ை ( 3r செய்யுளில் “ဂ္ဂ! JT_IT)။
நுாறு மகிகா மூன்றுமா, மெய்யாப வேதப்பொருள்
விளங்கப்-டொ ய்யாது, தந்தானுலகுக்குக்கான் I ஞன் ணுகி, ஆங்கா மண்", மே லயன்" என்றும் வள்ளுவரைப் of Tri தேவனின் அவதாரமாகக் கூறப்பட்டுள்ளது. இவ் வாறு வள்ளுவரைப் பிரமதேவனின் அவதாரமாகக் நவந்தது அவர் உயி ரோடிருந்த போதன்று. p_lw', ரோடிருக்கும்போதே ஒருவரைக் கடவுளின் அவகாச n"#i கொண்டாடுவது எங்குமில்லே. ஒருவர் இறங்கியின் பல வருடங்கள் சென்று காலம் நீடிக்க டிேக்கத்தான் துவ நடைய பெருமை வளர்ச்சியுற்றுத் தெய்வத்தன்மை படையும். அப்போதுதான் அவர் கடவுளின் -ಣ್ಣ &#'TTಷಿ பாகக் கருதப்படுவார். அங்ஙனமே வள்ளுவரின் அறிவின் பெருமையைக் கண்டு அவரை ஒரு கடவுளின் அவகாச மாகக் கொண்டாட வந்தது அவர் குறளியற்றிப் பலவருடங் கள் சென்றபின்பேயாம். அப்படிச் சிறிது காலஞ்சென்று வள்ளுவர் பிரமதேவனுடைய அவதாரமென்ற கொள்கை வேரூன்றியதன் பின்னரே இக்கப்பாட்டுக்கள் பாடப் பட்டிருக்கல் வேண்டும். இங்ஙனம் இப்பாடல்கள் பாடப் பட்டது குறள் இயற்றி வெகு காலத்துக்குப்பின்ப ஒல், அவற்றை அடக்கியுள்ள கிருவள்ளுவமாலை குறளாங்கேற்றப் பட்டகாலத்து இயற்றப்பட்டதாகாது.

Page 133
2±t
இனி இறையஞர்களவியலுசையில் கடைச் சங்கப் புலவர் எண்மர் பெயர் கூறப்பட்டிருக்கின்றன. இன்வெண் மருள் கிருவள்ளுவமாலேயில் மூவர் பெயர் மாத்திரம் கானப்படுகின்றன : ஐவர் பெயரில்லே. ஆன்றியும் சிலப் பகிகாரத் கில் மகா கோபாத்தியாயர் சாமிநாத ஐயரவர் களால் எடுத்துக் காட்டப்பட்ட பழைய அகவலொன்ற கடைச்சங்கப் புலவரில் இருபக்கெழுழவர் பெயர் கூறுகின்றது. அவற்றில் பகினேழு பெயர் திருவள்ளுவ மாலேயில் இல்லே. இதல்ை திருவள்ளுவமாலே பாடினவர் கடைச்சங்கப் புலவர் கள் என்ற சொல்வதற்கிடமின்குகின்றது.
மேற்கூறியவற்ருல் கிருவள்ளுவமாஃல கடைச்ாங்க காலத்து நூலன்றென்பதும் அதிலுள்ள பாட்டொன் றேறும் அங்கே கூறப்பட்ட புலவராலேயே இயற்றப்பட்ட தென்பதாகுக் தக்க ஆகாரம் இல்லே என்பதும் நன்கு போக ரும். ஆயின் கிரு வள்ளுவமாலே எக்காலத்து பாாால் இயற்றப்பட்ட தெனின், காலங்தோறும் கிருக்குறளேப் பற்றிப் பல பாட்டுக்கள் பல புலவராலியற்றப்பட்டனவாக, பிற்காலத்து வந்த புல்வரொருவர் அவற்றை யெல்லாம் அன்றேல், அவற்றுட் சிறங்கவற்றை மாக்கிாம் ஒருங்கு சேர்த்து ஒழுங்குபடுத்தி ஒரு நூலாக்கியிருத்தல் வேண்டும். அவர் தாமும் சிலபாட்டுக்கள் பாடிச் சேர்த்திருக்கலாம். அல்லது நான்முற்றையும் ஒரு புலவரே செய்து மிருக்கலாம். வள்ளுவமாலேயில் வரும் பாட்டுக்கள் ஏறக்குறைய ஒரேவித மான நேரிசை வெண்பாவாக விருத்தலும், அசரீரி சொன்னதாக வரும் பாட்டு அசரீரியே தேரே சொன்னதா Irañas" (Tr.
* கிருத்தகு தெய்வக் கிருவள்ளுவரோ இருக்ககு நற்பலகை யொக்க-இருக்க

347
உருக்கிர சன்ம ரெனவுரைத்து வானில்
గ్రి க்கவோ வென்றதோர் af i'r
என அசரீரி சொன்னதாக மற்குெருவரால் பாடப்பட்
டிருக்கலும் இங்கக் கொள்கைக்குக் ககுங்த துணேயாகும்.
இன்றும் இந்தப் பாட்டு மதுரையில் தெய்வத்தன்மை பொருந்திய சங்கப்பலகை ஒன்றிருந்ததென்பதைக் குறிக்க லினுலும், ஆங்கப் பலகையில் திருவள்ளுவரோடொகக விருத்தற்கு உருந்திரசன் மரே ஏற்றவரென்பதனுல் குற ளாங்கேற்றிய காலத்தில் சங்கப் புலவர் நாற்பத்தெண் மரும் திருவள்ளுவரோடொக்க விருக்கத் தகுதியற்ற வாாய்ப் பொற்ருமரை வாவியுள் வீழ்ந்து முழுகின ரென்னுங் கனகக்குக் தோற்று மிடமா யிருக்கலினுலும் இது குறள் தோன்றி வெகுகாலத்துக்குப்பின் இயற்றப்பட் டிருக்க வேண்டுமென்பது தேற்றம். சங்கப் பலகையி லேற்றிய இந்தக் கதை கட்டுக்கதை. இதுபோன்ற தொரு கதை சடகோபரியற்றிய திருவா ப் G?r rimi பூமியைப் பற்றிய ம் வழங்குகின்றது.'
(கிருக்கோணமலே வித்துவசிரோமணி,
த. கனகசுந்தரம் பிள்ளே, B. A.)
**Thiral vallu vamalai or the ga, Irland of ThiruWallil war like every other account, relating to this famous moralist is a strange mixture of doubtful traditions and absurd fictions written by some later Ira Vidian author of the 9th century to popullarize the celebrated work of Thiruvalluvar.'
(Tamil Studies, p. 247).

Page 134
24S
- மகளிரைச் சிறை பிடித்தல்
முன்னுளில் ஒர் அரசன் பிறனுேர் அரசனுேடு பொருதுவென்ருல் அவன் நாட்டிலுள்ள மகளிரை சிறை பிடித்து வந்து அவரைக் கற்பழித்தும் மான பங்கஞ் செய் தும் வருத்தாமல் பாதுகாத்துக் கோயில்களில் கடவுளேக் தொழுதுகொண்டு அங்கு கடவுட்டிருப்பணி செய்யும்படி இருத்துவான்.
கடற்போர்
சேரலாதன் கடலிடத்தே தீ வொன்றில் வசிக்க தன் பகைவர்மேற் கப்பற்படையுடன் சென்று -ಖೈ ಸ೩!?"¢? காவின் மரமான கடம்பை வெட்டி பெறிந்து அவளேப் போர் கொலைக்கான். இவ்வாலாறு பதிற்றுப்பத்தில் கூறப்படு கின் T","ন্ত্রী-
தமிழரசர் மாலேகள் பாண்டியன் - வேம்பு, சோன் - பனே, சோழன் -
ஆக்கி. * போக்கை வேம்பே ஆரெனவரூ உம்மா பெருங் தானேயர்' (தொல்)
படைகளின் அணி வகுப்பு முதலியன அணி, உண்டை, ஒட்டு, ஆக்கம், கொடிப்படை, கார், தூசி, நிறை, கூழை.
அகழிகள் சில அகழிகள் 40 அடித்தாழ்வு இருந்தன. கி. பி. 781-லும் 977.லும் எழுகப்பட்ட சில சிலாசனங்கள் இதைக் குறிப்பிடுகின்றன.
(Studies in Tamil Literature and History, р. 23).

249
போர் முரசு
செங்குட்டு வன் கன கவிசயருடன் பு க்கத்துக்குப் புறப்பட்டபோது கொடும்பறை, நெடுவயிர், முரசம், பாண்டில், மயிர்க்கண்முரசம் முதலியன ஒலிக்கப்பட்டன என்று சிலப்பதிகாரத்திற் கூறப்பட்டுள்ளது.
இலவந்திகைப்பள்ளி அரசன் அரண்மனேயில் வாசஞ்செய்வது மாக்கிா மல்லாமல் சோலேகளின் மக்கியில் அமைக்கப்பட்டுள்ள குளிர்ச்சி பொ ருக்கிய மாளிகையிலும் கோடைகாலங்களில் வசிக்கான், அம்மாளிகை இலவங்கிகைப்பள்ளி என்று வழங்கப்பட்டது. அதன்கண் காற்று வசதியும் நீர் வச தியும் பொருந்த அமைக்கப்பட்டுள்ள மண்டபம் சோழி மண்டபம் எனப்பட்டது.
அரசனேத் தெரிவு செய்யும் நூதனமுறை ஒர் ஆரசனின் மரணத்துக்குப் பின் இராச்சியபாரம் ஏற்பவர் இல்லாத பொழுதும், இராச்சியக்கின் உரிமைக் குப் பலர் வாதாடும்பொழுதும் பட்டக் துயானே வாயிலாக அரசனேக் தெரிவு செய்தலும் முன்னுள் விழக்கு என்பது
கழுமலச் தியாத்த களிறும் கருஆர் விழுமியோன் மேற்சென் தஞல்-விழுமிய வேண்டினும் ரேண்டாவிடினும் உறற்பால நீண்ட விடுதல் அரிது " (பழமொழி 62) என்னும் பழமொழி வெண்பாவால் அறியக் கிடக் கின்றது.
அரச தண்டனைகள் களவு, வியபிசாரம், இராச துரோகம் முதலிய வற்றுக்குக் ககுந்த கண்டனே ஏற்படுத்தப்பட்டிருக்கது.

Page 135
3C)
உறுப்புகளே வெட்டுதல், சிறையில் அடைத்தல், கொலே செய்தல் எனக் கண்டம் மூன்று வகைப்பட்டது. இராச துரோகத் துக்குக் கொலேயும், வியபிசாரத்துக்கு கால் குதைக்க லுப் fn alim Tul il IT ċI விருந்தன.
* காளிைற் குடிப்பழியாங் கையுறிற்
கால் குறையும் (15 төхц 84) * கொலேயிற் கொடியாரை வேக் கொறத் கல்பைங் கூழ்-களே கட்டகணுேடு நேர்
(குறள்-550) திராமச் சங்கம் கிராமகாரியங்களே வயசின் முகியவர்கள் ஊர் நடுவி லுள்ள மரங்களின் கீழ்கூடி முடிவு செய்தார்கள். அங்ஙனம் கூடும் சங்கம் மன்றம் அல்லது பொதியில் என்று அறியப் பட்டது. இம்மன்றங்கள் பெரும்பாலும், ஆல், விளா, பலா, வேம்பு முதலிய மாங்களின்ம்ே கூடின. மரத்தைச் சூழ்ந்து நாற்புறமும் கிண்ணே அமைக்கப்பட்டிருந்தது.
துறவிகள் தோற்றம்
மரவுரியை உடையாகச் செய்த உடையினர். அழகா லும் வடிவாலும் கிறந்தாலும் வலப்புரிச்சங்கையொக்கும் நரைமுடியினர். எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கில்லாமல் விளங்கும் மேனியர். அடிக்கடி விரதமிருந்து பட்டினிகிடப் பதால் தசையில்லாத மார்பின் எலும்புகளின் கோவை வெளிப்படத்தோன்றி உலவும் உடம்பினேயுடையவர். எப் பொருளுங் நுகர்வதற்கு தன்முகிய பகற் பொழுதுகள் பல சேரக்கறிந்த வுணவினேயுடையார். நெடுங்காலம் மனதில் தங்கக்கூடிய கோபத்தைப் போக்கிய மனத்தினர். பல வற்றையும் கற்ற பெரும் கல்விமான்களும் சிறிதும் அறிய

251
மாட்டாக இயல்பான அறிவுடையவர். பலவற்றையும் கற். மூேர்க்குக் தாம் எல்லேயாகிய கலேமையை யுடையவர். ஆசையோடே கடிய சினத்தையும் போக்கின அறிவினே புடையவர். தவத்தால் உடலுக்கு வருக்கம் இருப்பது உண்மையெனிலும் தங்கள் மனகினுல் வருக்கம் சிறிதுமறி பப்படாத இயல்பினேயுடையவர்.
(கிருமுருகா ற்றப்படை).
மகளிர் அழகு
ஒர்பாடினியின் அழகின் விபரம் பொருநராற்றுப்படை யில் கூறப்படுகின்றது. அது வருமாறு:-கூந்தல் வார்க்க
geri ağ) söz artırılır:xaricisi 85, Tair II நெற்றி பிறைபோன்ற Sys','S). *('j', 3)'s SL-1'eð s' :p); " 'ನೌlog LIT53TAo; புருவம் விற்போன்றது, குளிர்ச்சிபொருங்கிய கண் அழகிய கடையைபுடையது, வாய் இலவிகழ்போன்றது, பற்கள் வெள்ளிய மத்துக்கள்போன்றன, காதுகள் கத்திரிகை
CAF'. Ara T. 瓦
போன்றன, அவை மகரக்குழை அணியப்பெற்ற அசையுங் தன்மையுடையன, கோள்கள் மூங்கில்போற் பெருமை புடையன; முன்கைகள் ஐதாகிய மயிரினேயுடையன, விரல்கள் சாந்தள் மலர் போன்றன, நகங்கள் கிளியினது வாய் போன்றன, முலேகள் ஈர்க்கிடைபோகாது பணேத்தன, கொப்பூழ் 帝 ர்ச்சுழி போன்றது, இடை சிறுமையை
யுடையது, அல்குல் பல மணி
கோத்த மேகலே அணியப் பட்டது, குறங்கு பிடியினது கைபோன்றது, அடிகள் ஓடி இளேக்க நாயினது காக்குப் போன்றன, கொண்டை
வாழைப்பூப்போன்றது.
தமிழர் வியாபாரம்
''Ancient Tamil literature and the Greek and Roman authors prove that in the first two

Page 136
centuries of the Christian era the ports of the Coromandel or Chola Coast er Joy ed the benefits of active commerce with both the West and the East. The Chola fleets did not confine the Inselves to coasting voyages, but boldly crossed to Bly of Bengal to the mouths of the Ganges and IrraWaddy and the Indian ocean to the Islands Malay Archipalago.” (Vincent Smith.)
fidiff 576).JGuñ இவர் புலிபோ லூகர் துதில் கொள்ளாத கண்னர், அஞ்சாரெஞ்சர். களவு கொழில் தந்திரங்களேக் கண்டறி பும் தண்ணிய அறிவினர். குறிகப்பா அம்பினர். தெருக் களில் மழை நீர் பெருக்கெடுத்தோடும் காரிருள் கவிந்த மாமங்களிலும் இவர் இளே ப்பின்றி ஊர் சுற்றி ருவார். கறுத்த உடலினராய்க் கருஞ் சேலே புகித்து வாள்கைள் கொண்டு மென்றாலேனி அசையிற் சுற்றி விழித்த கன் இமைக்கு முன் மறைக்கோடும் வலியுடைய கள்வரையும் கடிகிற் பிடித்துக்கொணரும் ஆற்றலுடையவர்.
(மதுரைக்காஞ்சி.) இன்ன புலவர் இன்ன பாவில் திறமையுடையாரேன்பது
萨、
வெண்பாவிற் புகழேந்தி பரணிக் கோர்
சயங் கொண்டான் விருக்க மென்னு Gr Faro. ..., so... -
1 մ եմմի է իր ஆயர் கிடபக்ச தர ಸೌಪtu :)"
விக்காதிக் கொட்டக் சிடக்கன் கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
all 3 F. J.T Lal artina பண்பாய பகர் சந்தம் படிக்காச
லாகொருவர் பகரொ ணுகே."

25器
தமிழ் ஆராய்ச்சி (Tamil Studies) என்னும் நூலிற் காணப் படும் சில கவனிக்கத் தக்க குறிப்புகள்
The existence of pure Tamil words like GTgj47, a „lig etc., before they (Aryans) came to south disproves the theory \gastya, brought the alphabet with him from Upper India. (P. 122).
* They had and still have their own terms pertaining to agriculture, a.natomy, architecture, astronomy, cominerce, domestic economy, family relations, fauna, and flora, language and literature, medicine, Illinerals, politics, religion, War, weight and measures etc., all of course in their prinitive stage. நாறு, செய், ஞாயிறு, கிங்கள், கை, கால், மாறு, கொள், நெல், பால், முற்றம், மிச்சு, காய், அப்பன், தெற்கு, தாழை, புலி, பூசை, எழுத்து, சொல், பா, தினே, கோ, வலி, வெள்ளி, பொன், இறை, உணர், கடவுள், அம்பு, „Aiii. fr. T, Eyes, Jr. are all plure T'a, mil words.”
og IT (E, *.rar), GT, IT LI L-ř. as administra, tive division of a country தெல்லாயம், கார்க்கிகைப் பச்சை, சின்மை, கறியிறை, செக்கிறை மகன்மை etc, as LLMaaaa LLLLaLL LLLS S CCTTTTTTST t LTTLSc ĝ3) liri, FLÈ Loĵfáĥo etc., as oficial teoriis, Gábor) 63aĥ, பதக்கு, தூணி, முத்திரி, காளிை, dipsis, and other words of native weight and neasures............. afra, Lisart, og LG, Ir Ter så and other den omination of old coinage.'

Page 137
25壶
ஏறு தழுவுதல் ‰I ... ሾ!' தழுவுதல் ஆயருக்கே உரியதாயிருந்தது. பிறைபோன்ற கோட்டினேயுடைய எற்றின் வலியை அடக் கிய சிறுவருக்கு ஆயர் தம் மகளிரை வதுவை குட்டினர். எறு கழுவுங்கால் அவ்வேறுகள் கங்கூர்ங்கோடுகளால் சிறுவர்களின் வயிற்றைப் பிளங்து அவரைக் கொல்வது முண்டு. இதன் விபரம் முல்லேக் கலியில் நன்கு கூறப் பட்டுள்ளது.
* அவ்விடத்து எறுகளைத் தழுவிப்போக்கும் படியை உட்கொண்டு வந்து வந்து கிரண்டு மழைமுழக்கென்ன இடியென்ன நடுவானிலத்தின் முன்னே ஆரவாரமெழப் புகையோடு புகையெழ ஏற கழுவிஞர்க்குக் கொடுத்தற்கு நல்ல மகளிர் கிரண்டு கிற்ப நீர்த் துறையிலும் ஆலமரக் தின் கீழும் வலியினேயுடைய மசசமாக்கின் கீழும் உறையுங் தெய்வங்கட்குச் செய்யும் முறைமைகளைப் பாவித் தொழு விலே பாய்ந்தார்.
* எருகினது நோக்கை அஞ்சாஞய் அகின்பேல் பாய்த்த இடையனேச் சாவக் குத்திக் கொம்பிடத்தே எடுத் துக்கொண்டு உடலைக் குலேக்கின்ற தோற்றாவைக்காணுய் அழகிய தலேமயிரினேயுடைய மனமசைந்த இயல்பினே யுடையளாகிய துரோபதையது துய்யகூந்தலிலே கையை நீட்டிய திச்சாதனனுடைய கெஞ்சைப் பிளந்து போகட்டுப் பகைவர் நடுவே தான் சொன்ன வஞ்சினக்கை வாய்க்கச்
செய்த விமசேன&னப்போலும்.' (at: 589. 101) * எருகிய எருமையை பேறுகின்ற கூற்றுவனுடைய
செஞ்சை வடிம்பாலே பிளந்து போகட்டுச் சினத்தோடே அரிய உயிரை வாங்கின அஞ்ஞான்றை யிறைவன் இத்தன்
 
 
 
 
 
 

ܚܙ -
25)
மையை உடையவன் கொலென்று கூறும்படியாகக் காற்றின் விசைபோல ஒடிவந்து விரைந்து எருகிய காரிய தனேப் பலரும் வந்து சேர்கலேயுடைய களக்கே வியடங் க் கழுவி வருக்கி அதன்மேலே தோன்றி நின்ற பொது வனது அழகைப் பாராய் ; ஆகனேக் கண்டு என் நெஞ்சு உட்கிற்றக் கானென்குள்.' (anal) 108) பழைய மன முறை சோறு நெய்யுடன் முதியோருக்கு அளிக்கப்பட்டது. பட்சிகள் தன்னிமித்தங் காட்டின. பெரிய வானம் களங்க மின்றி யிருந்தது. சந்திரன் குற்றமில்லாது ரோகிணியுடன் பொருந்தியிருந்தான். மனப்பந்தல் துலங்கரிக்கப்பட் டது. கெய்வத்தை வழிபட்டார்கள். பெரிய முழவு ஒலித்தது. நீராட்டி அலங்கரிக்கப்பட்ட மல்ை ப்பெண்ணே ஏனேய பெண்கள் இமைகொட்டாது நோக்கினுள்கள். விழு வப்பட்ட பூவிதழ்களாற் செய்யப்பட்ட வணங்குதற்குரிய தெய்வ வடிவம் வாகைப்பூவின் மேலும் அறுகம்புல்லின் மேலும் வைக்கப்பட்டது. அது பூ மொட்டுகளாலும் வெண்ணுாலா லும் அலங்கரிக்கப்பட்டு புனிதமாகிய P. н.; Iகரிக்கப்பட்டது. மழைத்துளிகள்போன்ற மணல் சிந்தப் பட்ட பத்தலின் கீழ் கலேவி விற்றிருந்தாள். ஆபரணப் பொறையினுல் சோர்வடைந்த மணப்பெண்ணின் வியர்வை காயும்படி சுற்றத்தார் விசிறியினுல் வீசி துவளைத் தலே வனுக்கு அளிக்கார்கள் (அகம்-138).
பலர் உண்டபின்னும் உழுங்துடன் சமைக்கப்பட்ட சோற்றுக்குவியல் இருந்தது. நிரைக்க கால்களின்மேற் கட்டப்பட்ட பந்தலின்கீழ் புகிய மணலைப் பரப்பினுர்கள். விட்டில் விளக்குகள் ஏற்றப்பட்டன. கஃலவனும் தலைவி யும் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டார்கள். நட்சத்திரங்

Page 138
2
கள் தீய பலகீனக்கொடாக நல்ல வளர்பிறைப் பக்கத்தே விடி யற்காலேயில் சில பெண்கள் குடங்களேத் தாங்கவும், மற்ற வர்கள் புதிய அகன்ற குடங்களை ஒவ்வொருவராக மாற வும், வயசின் முதிர்ந்த பெண்கள் பெரும் ஆரவாரஞ் செய் தார்கள். புதல்வரைப் பயந்த அழகிய ஆபரணங்களே யணிந்த பெண்கள் பூவிகழும் நெல்லும் இடப்பட்ட நீரை மணப்பெண்ணின் கரிய கூந்தல் பிரகாசிக்கும்படி பெய்து, கப்பு நெறியில் நின்று கணவனுக்குக் துணேயாய் வாழ்வா
பாக ' என்று வாழ்த்தினர். மனச் சடங்கு நிறைவேறிய இராக்காலத்திலே அயலிலே உள்ள பெண்கள் கூடி மண மகளே புதிய ஆடை முதலியவற்ரு விலங்கரித்துக் கலேவ னிடத்துய்க்க அவள் நாணத்தினு லொடுங்கினுள்
(அகம். Sö).
பேய் மகள்
காய்ந்த மயிரினேயும், கிரை ஒவ்வாத பல்வினேயும், பெரியவாயினேயும், கோபத்தாற் சுழலுகின்றகண்ணினேயும், கொடிய பார்வையினே யும், பிதுங்கிய கண்ணேயுமுடைய கூகையோடே கடிய பாம்பு தாங்குகையினுலே பெரிய முலேயை வருக்திகின்ற காதினேயும், குறைபாடுடைய உட வினேயும், கண்டார் துஞ்சும் கடையினேயுமுடைய வெரு வருங் தோற்றக்கையுடைய பேய் மகள் உதிரத்தையளேக்க கூரிய உகிரினேயுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றக்கையுடைய கரிய தலையை ஒளி பொருந்திய வளையலணிந்த கையிலே எடுத்து வெற்றிக் களத்தைப்பாடி கோளேயசைத்து நினக் தைத் தின்கின்ற வாயளாய் துணங்கைக் கூத்தாடுவாள்.
 
 
 

25了
சில நம்பிக்கைகள் காகங்கரைவது விருங்கினர் வருவதற்கறிகுறியெனக் கருதப்பட்டது. புட்காைதல் அல்லது அவை பறக்குக்
கிசைகள் காம் உன்னிச் செல்லும் கருமங்களுக்கு அது
?பிரதிகூலம் 品丁 ற்படுவதை E-ಪೌTT5_po! T à75 הצu%ה, un =syנה:_F,
நம்பப்பட்டது. தக்க பரிசில் பெyவிடத்துப் புலவர்கள்
?
புள்ளேயும் பொழுதையும் பழிப்பார்கள் (புறம்-204) பேய்
கள் மரங்களிலும் இடுகாடு சுடுகாடுகளிலும் உறைவார் கள். பேய்மகளிர் போர்க்களங்களிற் சென்று இறந்தவர் களின் காயங்களில் விரல்களே அளேந்து அவற்ருல் கங்கள் தலையிக்னக் கோதிச் செங்நிறமாய் விளங்கினுர்கள். அவர்கள் பிணங்களேக் கழுவிப் புலாவினப் புசித்தார்கள். பேய்களே ஒட்டுவதற்கு வெண்கடுகைப் புகைப்பித்தல் முன்னுள்ளோர் வழக்கு பேப்மகளிர் மனித கிணக்கிலும் இரத்தத்திலும் விருப்புள்ளோரா a 7. ஆகவே அவை புண்பட்ட போர் first it குழ்ந்து திரியும். அவை புண்ணேத் திண்டினுல் புண் ஆருது புண்பட்டோன் இறந்துவிடுவான். தனது கண வனின் புண்ணேப் பேய் திண்டாதபடி அவனது மனேவி வேப்பிலே இரவம் இலைகளே விட்டின் இறப்பில் செருகி யாழ் முதலிய இசைக் கருவிகளே ஒலிப்பித்து வெண்கடுகு சிதறி காஞ்சிபாடி வாசனேப் பொருட்களைப் புகைப் பிப்பாள்.
* சிங்கனி யிாவமொடு வேம்புமனேச் செரி இ வாங்கு மருப்பியா ழொடு பல்லியங்கறங்கக் கைபபப் பெயர்த்து மையிழுதிழுகி யையவி சிதறி யாம்ப லூதி பிசை மணி யெறிந்து காஞ்சிபாடி நெடுநகர் வாைப்பிற் கடிகறை புகைஇ
(Z ż—28l)

Page 139
258
தலேக்கோல் பொன் உறையிட்டு முத்துக்களும் நவமணிகளும் அழுத்தி அலங்கரிக்கப்பட்ட மூங்கிற்கோல் ஒன்று அாங் கின் மக்கியில் வைக்கப்பட்டிருந்தது. இம் மூங்கிற்கோல் பெரும்பாலும் பகை அரசனின் வெண்கொற்றக் குடை யின் காம்பாக விருக்கும். அது அரண்மனேயின் ஒர் அறை யில் வணக்கத்துக் குரியதாக வைக்கப்படும். கூத்து கிக ழும் நாளில் அது பொற் குடங்களில் நிறைக்கப்பட்ட நீரால் முழுக்காட்டிய பின் பூமாலேயாலும் முக்துமாலே களாலும் அலங்கரிக்கப்பட்டுப் பட்டத்து யானேயில் ஏற்றி ஊர்வலஞ் செய்யப்பட்டு அரங்கின் மக்கியில் நாட்டப் படும். ஆட்டங் தொடங்குமுன் கூத்தியர் கலேக்கோஃப் வணங்குதல் மரபு. தலைக்கோல் கூக்கியாக்கு அளிக்கப்படும்
பட்டமுமாம்.
பரத்தையர் பட்டினங்களில் பரத்தையர் சேரிகள் இருந்தன. கலித்தொகையில் எணுகிப்பாடி என ஒரிடத்திற் கூறப்படு கின்றது. இது எணுகிப் பட்டம்பெற்ரு ஞெருவனுல் <f றப்பட்ட பாத்தையர் சேரியென அதனுரையால் விளங்கு கின்றது. பாக்கையர் ஆடல்பாடல்களிற் சிறந்து கண் ணுக்கு மையெழுகிக் கண்டார் மயங்கும்படி தம்மை அலங் கரித்து விளங்குவார்கள். அவர்கள் ஆடவரைக் தம்முடன் ஏரிகளிலும் பொய்கைகளிலும் ஆடும்படி தூண்டுவார்கள். குறுக்தொகையில் ஒர் பாக்கையின் கூற்முகக் கூறப்படுவது
நாங்கள் ஆம்பலின் தழையைச் குடி நீராடச் செல்
அவள் (மனேவி) எங்களிடத்தில் அச்சங்
 
 
 
 
 
 
 
 

5)
கொள்வாளரயின் தானும் தனது சுற்றத்தாரும் எழினியின் டையைப்போல் அவனேக் காத்துக் கொள்ளட்டும். குறுக்-80) விழாக்காலங்களில் அவர்கள் ஆடவரை பக்குவதற்குக் கூடிஞர்கள். " ஆம்பல் இலேயினுல் துல் லே அழகு பெற அலங்கரித்து விழாவுக்குச் செல்வேன். க்கச் செழுமை மிக்க நாட்டின் தலைவன் கா ண்பாஞயின் ன்னே வரிக்காமல் விடுதல் அரிதாகும்.' (கற்-390). மனேவியர் தங் கணவரைப் பரத்தையர் மயக்கிக்கொண்டு
சல்லாதபடி காத்தார்கள்.
* மடக்கண் டகரக் கடந்தற் பஃனத்தோள்
வார்க்க வாலெயிற்றுச் சேர்ந்து செறி குறங்கிற் பினேய லந்தழைக் கைஇத் துனேயிலஸ் விழவுக் களம் பொலிய வந்து நின்றனளே எழுமினுே வெழுமி னெங்கொழு நற்காக்கும் "
(நற்-170) * அப்போதாவு பார்க்கிருந்த பாத்தையர் குழலூதியா முழி இத் தண்ணுமை யியக்கி முழவியம்பித் கலே மகனே ங்குக் கூத்துண்டென்பது அறிவிப்ப; என்னே
குழலெழீஇ யாழெழி இக் கண்ணுமைப் பின்னர் முழவியம் பலாமந்திரிகை
ன்று கூத்து நூலுடையாருஞ் சொன்னுரென்பது -ಣ್ಣುಮಿ கை அறிவிக்கப்பட்ட தலே மகன் நாம் இதனே ஒரு கால் நாக்கிப் போதுமென்று செல்லும், சென்றக்கால் துவர் 5ள் தங்கண் தாழ்விப்பரென்பது.
(இறை-அகப்பொருளுரை.)

Page 140
20
பத்துப்பாட்டில் அறியப்படுபவன :-
அறுகம்புல்லாற்றிரிக்க பழுகையைத்தின்ற செம் மறிக்கிடாயினது இறைச்சி, இரும்புக் கம்பியில் கோத்துச் சுட்ட இறைச்சி, பகலுமிசவும் இறைச்சியைத் கின்று பற் கள் முனே மழுங்குதல், நாலு குதிரைபூட்டிய தேர், ஏழடி பின் செல்லல், தேனுகிய நெய்யோடே கிழங்கையும் விற்ற வர்கள் மீனினது நெய்யோடே ஈறனையும் கொண்டு போகல், வாழைப்பூவெனப் பொலிக்கவோதி, உமனரோடு வந்த மங்கி சிறுபிள்ளேகளோடு கிலு கிலு விளேயாடுதல், அமிழ்துவிளே திங்கனி பெளவைக்கிக்க அதிகன், الته أما الكبد வெகுண்டன்ன நறவுல் கல்கல், ஆய் பாம்பு கொடுத்த நீலப் பட்டாடையை ஆலமர்செல்வர்க்குக் கொடுத்தது, கற் குேய்த் தடுக்கபடிவப்பார்ப்பான், பாவைவிளக்கு, (...) Laroir கொடிபாய் மாக்கிலே பாடுகின்ற மாக்கலம். புவி சுட்
டிலே ஆடைக்கப்பட்டிருக்கல், மாறு பாட்டையேற்றுக் கோதற்குெழிலயுடைய ஏற்றினது செவ்விக்கோலை மயிர் சீவாமற்போர்க்கமூரசம் ஒலித்தல், இலங்கு இழைமகளிர் பொலம் கலத்து ஏந்திய மணங்கமழ் தேறல் மடுப்ப மகிழ்க் துண்டல், இரும்பு செய்விளக்கு, கஞ்சிகோய்த்த துகில், நடுநிசியில் வேப்பிலேயைக் கலையிலே கட்டின வே&லயுடைய வேந்தன் பாசறையிற் புண்பட்டோரைப் பரிகரித்தல், காரி உண்டி கடவுள்.
அகநானூரு லறியப்படுவன -
குடுகல் வழிபாடு (51); புலி, தான் கொன்ற யானே இடப்பக்கம் வீழ்ந்ததால் மானத்திஞல் அதனே உண்ணுமை (29), Le 53ffr குறிஞ்சிப் பாட்டைக் கேட்டுத் தினே மேய வங்க யானே உரங்குவது (12), வேங்கைமலர் கொய்யும் மகளிர் புலி புவி என்ற ஒலியைக் கேட்டுப் புலியை ஒட்டு

2 ||
தற்கு ஆடவர் வில்லுங் கொம்பும் எடுத்துக் கொண்டு வத்து புலியைக் காணுமல் nl | ாதல் (92), கலேவன் பாக்கையோடு காவிரியில் நீர் விளையாடுதல் (166), $ଛନt ମif வரவைக் கருதிச் சுவரிற்கோடிட்டு நாள் எண்ணுதல் (51), rar ஆமையீன்ற முட்டையை ஆண் ஆமை பாது
காக்கல்.
குறுந்தோகையில் அறியப்படுவன -
ஆவின் கழுக்கில் மணி யணிதல், மகளிர் வண்டலயர் தல், குறச்சிருச் குறிசொல்லுதல், சிறு பின்ளேகள் சிறு தேகுருட்டி விளேயாடுதல், புவிப் பற்ருலிசிருர்க் கணிதல், பண்கள் துணங்கைக் கூத்தாடுதல், வண்ணுத்தி கஞ்சிப் பசை போடுகல், விளோபாட்டு மகளிர் மன்னல் வீடுகட்டுதல், துளேச்சியர் நெல் பெற்று உப்புக்கருதல், பாகவர் கட்டு மரத்திலிருந்து மீன் பிடித்தல், அலவன் தனது பெடையை நீராட்டுதல், ஆன்றில் பனேமடலிற் கூடுகட்டுதல், குயில் மூங்கிவிற்றங்குதல், குல் trafia புளிப்பை விரும்புக ၏), வாஃா மீனுக்குக் கொம்பிருக்கல், கிளி வேப்பம்பழக்கைக் கவ்வுதல், III at தனக்குச் செய்த தீங்கை மறவாடை, யானே வாழைக்கண்டால் மதமழிதல், துயரால் வருங்கண்ணீர் வெப்பமாதல்.
நற்றினபி லறியப்படுவன -
காதலி சுவரிலே கோடிட்டுப் பிரிந்த தலே மகன் வரு காள் எண்ணுதல், காலாற் பந்து விளேயாடுகல், காகலன் வரவைப் பல்லி கூறுதல், இரும்பு காய்ச்சிய உலேபிலே கொல்லன் பனேமடலிலுள்ள நீர் தெளித்து கெருப்பை அணேத்தல், எருமை மேய்ப்பான் அதன் மேல் ஏறிச் செல்லல்,

Page 141
23
கலித்தோகையிற் காணப்படும் பழைய சேய்திகள் முதலியன -
முக்கண்ணுன் மூவெயி% எரித்தது (பாலே-2), எறி கரு கதிர் தாங்கியேந்திய குடை நீழலுறித்தாழ்ந்த d7i 1"<7; gir), மு ைசான்ற முக்கோலு தெறிப்படச் சுவலசை இவேருே ரா கெஞ்சத்துக்குறிப் பேவல் செயன்மாஃக் கொள் தடை பர் கனர் (பாலே-9), பல்கஜலக்சில் பூக்கலிங் கக்கள் (குறி-56), * 3க நீராடிய தவம் (குறி-59), ஒத்துடை பந்தணன் எரி வலன் செய்வான் போல்’ (மா-6) *கிளர்மனியார்ப்பர்
ব্লয় orಿ ' அய்ச்சா அப்ச் செல்லுக்களர் நடை ச்சிறுர் (மரு-80), ஆலமர் செல்வன் ஆவணிசால் பெருவிறல் (Sl). ஆல்மர் செல் னெணிசால் மகன் விழா 83 சு?வெபுகினமோதிரம்
- * *ಿ'ಮಿ,'೭೬೧ಗ್ಸ್ (tnლტ. S4) தேரை வாய்க்கிண்கிணி (* rტუ5.8ნ). முகம் குதினா கமும் உடல் மக்களுடலுமா? ரண்டு பு:சிக்கப் பொருக்கிய சூரபன்மாவைக் கொ ன்ற சிவந்த வேலேயுடைய முருகன் (9 沙)。 குறும்பூழ்ப்போ (შ5), கொப்பில் பொறித்த வனமுலே (மரு.97), மீன் பூத் தவிர் விருமங்கிவான் விசும்பு போல்-வான் பொறிபரக் ள்ளி வெள்ளேயுங்-தெ:
... I - வான் குடிய குழவிக்கிங்கள்போ ல்-வளைபுமலிந்த கோடாரி சேய் (103), பெரும்பெயர்க் கரிைச்சிபோன் மணிமிடம் தனிபோல் (105). செருப்புக்கை கொட்டவர்போல விகிர் விகிர்த்திட்டு (l li), கர்புகழ் கேட்டார் போற்றலே சாய்க் து (119), முக்கோல் கொன ந்தனர் முதுமொழி நினைவார் போல் (126), உண் கடன் விழி மொழிந்திரங்குங்கான் முகலுங்கிாங்-கொண்டது கொடுக்குங் கான் முகிலும் வேருகுகல்-பண்டு மிவ்வுலகக்கியற்கை (22) இராவணன் மலேயை எடுத்தல் (38) நாற்றுவர் கலேவண்க் குதங்கதக் தள் (5 Ε), மல்லரை மதஞ்சா ய்க்க, மால் (184), குங்கிலிய

2
மெழுகின ஒளிவிரிந்த கொழில்களே யுடையவாகிய வாய் களேயுடைய மாக்காற் செய்த சிறுபானையாலும் பாளே பாலும் சிறு பெண்கள் விளையாடுதல் (39) கொக்குரிக் காப் போன்ற மதிப்பையுடையவன் (64) மரங்களிற் தெய்வ முறைகல் (101), துய்சாதனக்ன விமன் கொன்றது (IUl), சிகண்டி துரோணக்ளக் கொல்லல் (, .) l), ஆய்ச்சியர் தங் கணவர் கைகளேக்கோத்துக் குரவையாடுதல் (? L. Q6), liftop வினது பருப்பாய் செய்த பலகையைக் கோத்துப் புறவிக ழொ டிங்க நெய்தற் பூவை டிெய நாரிலே தொடுத்து تلتقيا لكل பெற சுட்டிக்கையாலே வர சித்தலேயுடைய பாழ் (131).
சிந்தாமணியிற் காணப்படும் பழைய சேய்திகள்
அருந்ததி காட்டல் (2869), ஆவியன்னதுகில் (67), எலி, மயிர்ப்போர்வை (2 BSU). ஏணுகி மோகிாஞ் செறிக்க சேனுதிபதி (267). கல்லூரி (395), குதிரையின் துடை F5. அவற்றின் பிறக்க இடப் பெயரை எழுதுதல் (3213) பானேயரசின் வலமருப்பீர்ந்து செய்த சிப்பு (3436), முழங் காளளவாக வீரருகிக்குமுடை (468), வலம் புரிவடிவச் செப்பு (2475), பொன் செய்தானிற் குஞ்சியைக் கட்டுதல் (2288)
பரிபாடலில் காணப்படும் தமிழர் நாகரிகத்தை
உணர்த்தும் செய்திகள் இந்திரன் சாபமேற்றது (19), இம்மையின் பங்குறிக் துக் கன்னியர் கை ரோடல் (9 l), இாகு கேதுகள் காணப் படுவன வல்லவென்பது (l2). இளேய மகளிருடைய அழுகை தீர்திற்குக் காயர் புலி புலி யென்று அச்சுறுத்தல் (14). நுகக்கிலும் கன்னத்திலும் செம்பஞ்சு எழுதுதல் (ნ), பழக்கேனுற் செய்ததேறல் (16), புண்ணிய தகியில்

Page 142
264.
சீராடுவோர் பொன் முகலிய வற்குரல் செய்வித்த பின் முதலியவற்றை அகில் செல்வவிடுதல் (16), பொன்னும் செய்க கண்டு இரவு வாஃாகளே ஆற்றில் விடுதல் (10), மகளிர் தேரை மகளிர் ஒட்டுதல் (ll). மகளிர் பிடியை ஊர்
கல் (l یا"(, பாக்கையர் மாவும் பிடியும் ஊர்தல் (10).
பேருங்கதையில் காணப்படும் அக்கால நாகரிகத்தை உணர்த்துஞ் சேய்திகள்
பசு வழிபாடு (1-34-16), பிரச்சோகனனுக்குகேவி யர் பகிரூஒயிரவர் (1-84-77), சிதேவி யென்னும் கஃக் as ini, (I-34- 21), பொ ன்னுாைகிய சிறு பாக்கிரம் (1-34-160). கலேக்கோர் பெண்டிர் (1-5-72). mar) போன்ற & Grafia ஆடை (1-36-64). 1( تمر التي كانت-ti-225. பொற்பூண் கட்டிய பிர ம்பு(1-37-9)பேப்பிடித்தாடுவோரின் பின் பறைகொட்டிச் செல்லல் (1-7-28), anarri, (l-BS-l23), பொறியொற்று (முக்கிசை) (1-38-28). மான் கண்போன்றசாளரம் (1-40-9), எட்டிப்பட்டம் பெற்ற அரசகு சன் (1-4-1 16) கொடிவடிவமெழுகின பார்பு (1-40-143), முலேக்கச்சு, (1-4-144), பஞ்சகெளவி யம்( -4 (-266), அரசனுக்குப் பிழைசெய்கோர் தம்முடைய அளவுள்ள பொற்பாவையொன்றைச் செய்வித்து அவன் சினத்தைப்போக்குதல் (1-40-8714), நெற்கதிரை மகளிர் குடுதல் (-42-68), காவிதிப் "ட்டக்திக் கறிகுறியாகக் கொடுக்கப்படும் பொற்பட்டம் (1-42-14). கயல்வடிவாகர் செய்த வெற்றி&லப்பை (1-44-329), புவிவடிவம் அமைக்க காலேயுடைய கட்டில்(1-47-175),எலிமயிராற்செய்யப்பட்ட பூக்தொழிலையுடைய போர்வை (1-47-179), தென்னங்கள் ளும் தேனுற் சமைத்தகள்ளின் தெளிவும் (2-2-177). அாசன் சிங்காசனத்தில் விற்றிருந்து முடிபுனேயுமிடத்துப்

கி
பட்டத்துக்கேவியும் உடனிருக்கல் (2-4-24). அரசிஃயைப் போல் பொற்றட்டாற் செய்யப்பட்ட ஆபரணம் 《2-7-23) மணிகள் இழைத்த மோதிரம் (2-|| 2-74). தன் பெயரெழு தின மோதிரம் (8-9-70), பவழக்காத்செய்த குமிழையுடைய பொன்னுலாகிய மிதியடி (3-22-202), சித்திரங்கள் எ ழுதப் பட்ட உயர்ங்கமாடங்கள் (4-3-35), கணவனேப் பிரித்துறை பும் மகளிர் கூந்தல் புனே பாமை (4-7-103), பாசனத்தந்தத் தாய் செய்த வெண்பூக் கோவைகள் (4-14-64), புவிமூக மாடம் (4-15-18).
ஐங்குறு நூற்றிலழியப்படுவன -
இடையர் கரும்பு குணிலாக் கனி புகுக்கல், இள மகளிர் தும்பைமாஃப் பணிதல், பொய்மைப் புனிகாவலுக்கு வைக்கப்படுதல், குரங்கு மூங்கிலிலேறி விளேபாடுதல், சுரஞ் செல்வோர் பலவின் கனியை அருங்கிச் செல்லல் பாக்கை வியக் தேரேற்றி வருதல், பரத்தையரோடு சுலேபகன் புன லாடல், மகளிர் இடையில் பொற்காசணிதல் : மகளிர் பங்காடுகள், மகளிர் எரிபுகுதல், முதலேக் கள் பிள்ளையைக் கின்னுதல்.
சிலப்பதிகாரத்திலறியப்படுவன :-
அங்கியில் மகளிர் மலரையும் அறுகையும் ெ கல்லேயும் மங்கலமாகச் சிந்துதல், ஆண்மேற் பறையறைதல், இரண் டாஞ் சாமக்கிற் கண்ட கணு எட்டுமாகத்தின் பலிக்கு மென்பது, கேலா சுரபுத்தம் பதினெட்டாண்டிலும், இTாம ராவணயதிதம் பதினெட்டு மாதத்திலும் முடிக்க தென்பது, இறந்தவர்களே உத்தேசித்துக் கா னஞ் செய் கல், இறைவன் குடிய பிறை இரண்டு கலேத்து என்பது, உயிர்ப் பலியுண்ணும் மயிர்க் கண்முரசு, எண்ணெண்கலே
போர் (வேசைபர்), 57gÉಷಿ! மாடம், கடையில் இன்ன

Page 143
266
சாக்கு ஈண்டுள்ளதென்று அறிவிக்கக் கொடிகளெடுத்தல், கலங்கரை விளக்கம், கற்புடைய மகளிர் இருக்கும் காட்டில் ம்ழை பெய்யுமென்பது, சஞ்சீவி நான்குவகை-சல்லிய காணி, சங்கான காணி, சமனிய கரணி, மிருத சஞ்சீவி, சந்திரன் கோயில், குரியன் கோயில், களவு நூல், தெய் வத்தைப் பூவும் புகையும் சாந்தும் கண்ணியும் கொண்டு வழிபடுதல், நூலேணி, புலிப் பல்லேக் தாவியாகக் கட்டுதல், பொகிகளினமேல் அளவு, எண், நிறை பொறிக்கப் பட்டி ருத்தல், யானேப் பிடரியில் மகளிரையேற்றி நகர்க்கு மணக்கை பறிவிக்கல்,
துன்) (2000 வருடங்களுக்குமுன்)
* கிருவழுதி நாடென்னுஞ் சிறப்புப்பெயர் பெற்ற பாண்டிமண்டலம் குறிஞ்சி, முல்லே, மருதம், நெய்தல், பாலே எனப் பெரியோரால் வரையறுக்கப்பட்ட ஐவகை நிலங்க ளும் பொருங்கி இனிது விளங்கும். குறிஞ்சிநிலத்திலே இஞ்சியும் மஞ்சளும் மிளகும் வெண்சிறுகடுகும் தோரை நெல்லும் ஐவன நெல்லும் வெகுவாய்ப் யிருக்கும். குறக்கியர் தினேக் கிளிகடியும் ஒசையும், கானவர் அவரைமேயும் ஆமாவைக்கடிகின்ற பூசலும், பூக்கொய்யும் மகளிர் புலி, புலியென்று கூறுமொலியும் மாறி மாறி ஒலியா கிற்கும். முல்லேயின் கண் எள்ளிளங்காயும் வரகின் கதிரும் ஒருபால் முற்றியிருக்கும். ஒருபால் சிறுதிக்ன கொய்வர். அங்கு மிங்கு மாழ்க்க குழிகளில் இரத்தினங்கள் கிடந்து விளங்கும். பசிய பயிர்களின் இடங்கடோறும் முசுண் டைப்பூவும் முல்லைப்பூவும் உகிர்ந்து பாக்து கிடக்கும். மருதநிலக்கில் கழனிகடோறும் யானே நின்ருல் மறையும் படியாக நெற்பயிர் பச்சைப்பசேலென வளர்ந்திருக்கும்.
 

367
தடாகங்களில் தாமரையும் நீலோற்பலமும் சேதாம்பலும் மலர்ந்து நறுமணம் விசும், கழனிகளிலும் குளங்களிலும் மக்ெகளிலும் வலேஞர் மீன்களேப் பிடித்து துவைகளேக் கொன்று குவிக்கும் ஆரவாரமும், கரும்பிற்கிட்ட ஆலேயிடக் கோசை யும், களேபவிப்பிடக் கோசையும், நெல்வரிகின்ற கினேயின் ஒவியும், ஆண்களும் பெண்களும் நீராடுகின்ற இரைச்சலும் ஆகாயத்தே சென்று முழங் கும். நெய்தபிாகிய கனலினிடக்கே முக்தும் வளேயும் பாதர் தங்க பல்வகைப் பண்டங்களும் விலே செய்யப் முகவி தோக்கினர் குதிரை முதலிய זניקI(bur. Jou_ן வற்றைக் கொணர்ந்து கொடுத்து, வெள்ளுப்பும் தீம் புளியும், கொழுக்க மீன்களேத் துணித்து உப்பிட் இலர்த்திய கருவாடுகளும் என்றிவை போன்றவற்றைக் கொண்டு போவர். குறிஞ்சிக்கும் முல்லேக்கும் இடை பிiேபுள்ள பாலே நிலத்தில், ஆலேக் கள்வர் வழிடோவாரை வருத்தா வண்ணம் அரசனுல் ஏவப்பட்ட வீரர் ရွှံ့)ိ\! வேய்ந்த குடிவில் மான்குேலாகிய பக்கையுடைய சாய்ப்
பொருங்கி பிருப்பு .
G. இவ்ன வங்கி 3- OT LI L IT ங்கும் அழகுறப்ெ பற்றுப்பாடல் கள் சான்ற ஈன்னுட்டு நடுவில், கிருவாலவாய, கிருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர் என்னும் நான் மாடக் கூடல் எனப் பெயர் பெற்ற மதுரை மா நகரமானது பூமாகின் ஆழ கிய முகம்போல் பொலிவுற்றிருக்கும். இந்நகரைச் குழ்க் திருக்கும் மகில் கற்படைகள் பலவுளகாய் விண்ணுற ஒங்க ஆகனேச் குழ்க்க அகழியானது நீலமணிபோலும் நீரை புடைத்தாய் மண்ணுற ஆழ்ந்திருக்கும். நெடிய கிலேயின் பும் கிண்ணிய கதவினேயமுடைய வாயிலின் மீதமர்ந்த
R ჭ-ურჭ =..." += ''; மாடமானது மிமவிமுலாவும மலிேச் பாவி ஓங்கியிருக்கும்.

Page 144
25
மாங்கரும் மாவும் இடையருமல் வழங்குகலால் வாயிலா னது இடைவிடாகோடுகின்ற வையையாற்றினேப் போன் றிருக்கும். வாயிலேக் கடந்த மாக்கிரத்தில், அகன்ற சுெருக் களும் அவற்றின் இருபுறத்திலும் சாளரங்கள் பல :மைக் கனவாய் உயர்ந்து தோன்றும் வீடுகளும், ஆறும் அதன் இருகரையும் போல விளங்கும்.
ஆங்காடிக் கெருவிலே, கோயில்களுக்கு விழாக்களே நடக்கிக் கட்டின அழகிய கொடிகளும், தண்டக்கலேவர் பெற்ற வெற்றியின் பொருட்டு எடுத்த சயக்கொடிகளும், கட்கடைகளில் கள்ளின்களிப்பு மிகுதியைச் சாற்றுகின்ற கொடி களும் இன்றும் பலவாப் வேறுபட்ட கொடிகளும் பெரிய மலேயிடத்து அருவிகள் ஆசையுமாறு போல அசையா நிற்கும். யாக்ளபுக் கேரும் புரவிப்பும் விரும் ஆகிய நாற்பெரும்படைகள் பல்காலும் வருவ: Il Fair angir ணுலே, பூவிற்பாரும் பூமாலே விற்பாரும் சுண்ணம் விர்பாகும் வெற்றிலேயும் பாக்கும் சுண்ணும்புடனே விக்கின்றவர்களும்
''' ம் இன் ஆயிரக்கி ஓரங்கி பார் பூங்காற்பட்ைபும் 高 لا تلقت" இது 'ரு'ஆ' ፥''ካ ሣ''ዶJL
叠 。* -- கன்ற பின்னர் வருக்க நீங்கி, பாடமாளிகை கூடகோபுரங்
கனின் குளிர் நிழலிலே இருக்தி இளேப்பாறுவார்கள். கிழப்டெண்டிர் பண்ளிையங்களே நறும் பூவுடனே ਨੂੰ திச் சென்று மக்னகடோறும் மனேகடோறும் உலாவி விற்பர்.
"மாலேப் பொழுதில் விழாக்கானச் செல்வர்கள் பட்டுடுத்து உடைவாள் தரித்து பாலேதாங்கித் தேர்களின் மீதேறிக் காலாட்கள் புடைசூழ்ந்து வாக் குகிரைகளேச் செலுக்கிச் செல்வர். அக்கிருவிழாக்களேப் பெண்கள் ஆா மியத்தலக்கினின்றங்காண்பர். அங்கே கட்டிய கொடிகளின்
மீது மருதமாருதம விசுதலால் அம்மகளிர் முகBகளானவை

மேகத்திலே மறையுஞ் சந்திரனேப்போல ஒரு காற்குேன்றி
ஒருகால் மறையும்.
* புக்க மதத்தினராகிய பேரிளம் பெண்டிர் சிறு பிள்ளேகளே எடுத்துக் கொண்டு, கங் கணவரோடு பூசைக்கு ைேண்டும் பூவினேயும் து பங்களேயும் கைகளில் எங்கிச் சென்று வணங்கும் பெனக்கப் பள்ளிகள் ஓரிடத்துக் கானப்படும். சிறந்த வேதங்களே ஒதி, யாகா கி கருமங் களேச் செய்து, பிரமங்காங்களேயாய், விட்டின்பக்கை இவ்வுலகிலே தானே அடைகின்ற பிரம வித்துக்களிருப் பிடம் ஒருபால் புலப்படும். ஒருபால், முக்கால ஒழுக்க மும் மூவுலகின் செய்கியும் முழுதுனரும் சமணமுனிவர் கள் உறைகின்ற அமனப்பள்ளிகள் கட்புலனும. அப்பால் அறங் கடறவையமும், அமைச்ச ரிருக்கையும் அழகுற விளங்கும்.
* சங்குவளே கடைவாரும் மணிகளைத் துளையிடு வரும் பொற்கொல்ல li (). Ta: வாணிகரும் سا لأتمتة الجي விற் பாரும் சிக்கிரகாாரும் பிறருங்கூடி ஆந்திக்கடையில் நெருங்கி கிங்பர். அறக்கூழ்ச்சாலேயில் பலாப்பழம் வாழைப் பழம் முக்கிரிகைப்பழம் முதலிய பழங்களேயும் பாகற்காய் வாழைக்காய் வழுதுணங்காய் முதலான காய்களேயும் இலே கறிகளேயும் கண்ட சருக்கரைக் நேற்றையும், இறைச்சி களேயுடைய சோற்றையும் கிழங்குகளுடனே பாற்சோறு பால் முதலியனவற்றையும் கொண்டுவந்து பசிதாகங் களிஞல் வருந்துவோர்க்கும் கரிக்கிார்க்கும் இடுவார்கள். இக்கூறிய பலவிடங்களிலும் எழுகின்ற ஒசையானது ஆங்கிக்காலக்கில் பல்வேறு பறவைகள் கூடிய இடக்தி எழுகின்ற ஒசையின் தன்மையதாகும்.

Page 145
2O
* பொழுது சாய்ந்தபின் ஆடல் பாடல் முதலிய பல் வகைத் துறைகளில் அவ்வவர் பொழுகைக் கழிப்பர். முதல் யாபஞ் சென்றபின் கடைவிற்பார் கடைகளே படைக் தும் பண்ணியம் விற்பார் அவற்றின் பாங்கரும் படுத்துறங்கத், கிருநாளின் கண்ணே சுத்தாடுங்கூக்கர் அஃதொழிந்து துயில் கொள்ள, ஒவிநிறைக்கடங்கின. கடலேயொக்கப் படுக் கையிலே துயில் கொள்வோர் இனிதாகக் கண்வளர்வர். .பின்பு வைகறையாமத்தில், அங்கணர் வேகம். ஒதுவர். யாழோர் காம்பைஇனிதாகக்தெறித்து மருதக்கை வாசிப்பர். பண்டம் விற்பார் தமது கடைகளே மெழுகு தலைச் செய்வர். கற்புடை மகளிர் துயிலுணர்க் கெழுங்து
* காட்டுக்களேந்து கலங்கரீஇ யில்லக்கை பாப்பிங் செங்குங் தெளித்துச் சிறுகாலே நீர்ச்சால் காக நிறைய மலரணிக்
தில்லம்பொலிய வடுப்பினுட் டீப்பெய்கர்
என்றபடி அக்காலத்து இல்லக்கிற் செய்யத் #குவன வற்றைச் செய்யா நிற்பர். கோழிச் சேவல்கள் விடியற் காலத்தை அறிந்து கூவா கிற்கும். சேவற் பறவைகள் தக்கம் பேடைகளே அழையா கின்று தீங்குரல் செய்யும். கூட்டிலே உறைகின்ற காடி புலி முதலிய வலிய விலங்குகள் முழங்கா கிற்கும். முதுகு காட்டிப் போந்த வீரரும் வெட்டுண்ட வீரரும் விடுத்த யாக்னகளும் குதிரைகளும் ஆனிரைகளும், தோல்வியடைந்த அரசர்கள் கிறையாகக் கொணர்ந்த கலங்களும், அவைபோன்றன பிறவும் அரண் மனேயை நோக்கிச் செல்லும். இங்கினம், கங்கையாறு கடலிற் கலங்காற்போல, உலகிற் பொருள்களெல்லாம்
மதுரையை அடையும்,

271
* இம்மா நகரில் கோயில் கொண்டு செங்கோல் செலுத்தும் பாண்டியன் வைகறையாமங் துயிலெழுந்து காலேக் கடனேக் கழித்துச் சங்கனம் பூசி, மார்பிலே மாலே தாங்கி கையிலே வீரவளையுடன் கணேயாழியைச் செறித்துக், கஞ்சியிட்டதுகிலேயுத்ெது, அதன்மேலணியும் அணிகலன் களே அழகுற வணிந்து, கொலு மண்டபத்தில்ே விற்றிருப் பான். இருந்த வளவிலே.எனுதிப் பட்ட முதலிய சிறப்புப் பெற்றபடைக் கலேவர்.அவனது வெற்றிக்கிறத்தை வாழ்த்து வர். பின்னர் அரசன், தான் நாடு நகர் பெறும்படியாகவும் தன் வெற்றி சிறக்கும்படியாகவும் உதவிய விரரை யெல்லா மழைக்திப், பாவலருடனே பானர் பாட்டியரையும் அழைத்து யானே கேர் என்பன போன்ற பரிசளிப்பான். அங்ஙனம் பல பல பொருள்களேக் கொணர்ந்து கொடுத்த ஸ்ால் அங்நாட்டில் ឯTទ្រធំ குடிமக்கள் செல்வம் பெருகி
யிருப்பர்.’ (மதுரைக் காஞ்சி).
1800 வருடங்களுக்கு முற்பட்ட தமிழர் என்னும் நூலிற் காணப்படும் கவனித்தற் குரிய சில போருள்கள்
கழாக் தலேயார் ... Ք. Կ. 30-5 () முடக்காமக் கண்ணியார் ti 0–4) கபிலர் ול ԳԱ-- | 30 நக்கீரர் ... 100-130 மாமூலனூர் lOO-IBO Filoso, IT, Liri? () ()-130 மாங்குடிமருகனுர் ། 9U-___18ሀ திருவள்ளுவர் UC-IBO கோஆர்கிழார் ... l00-13)
இறையனூர் . . . . وو lU كلا-l530

Page 146
பரஐார் .... یکl. G. I00-130 பெருங்கோசிகஞர் l00-18O ஒளவையார் 130--100 דה இடைக்காடஞர் . (10--B0 சிக்கலேச் சாக்தனுர் 10-40 இளங்கோவடிகள் is ll ()-140
அரிசில் கிழார் lil CJ-140 . . . ; lil O-140 பெரு ங்குன்றார்கிழார் . . . ; liO-150 F. S. 50-க்கும் |- மிடையில் செய்யப்பட்ட நூல்களும் அவற்றில் அடங்கிய அடிகளும்.
GM_r Tsar முடியார்
ஆடிகள் குறள் ... 2,660 மனிடோக: ... 4,857 சிலப்பதிகாரம் ... 4,957 கவிக்தொகை 304, 4 ۔۔۔ இன்னு காற்பது | fj () குறி ஞ்சி 26 குறிஞ்சி (கபிலர்-ஐங்குறுநூறு) if OC) கிருமுருகாற்றப்பட்ை 3. நெடுநல்வாடை SS பொரு 5ர் ஆற்றுப்படை பெரும்பாணுற்றுப்படை 50 C) பட்டினப்பாலே BO மதுரைக்காஞ்சி ፲ S3 மலேபடுகடாம் 5SB
“ ÈIT IT t r ii ġe?, q. 238-லும் முசிறியில் 84) முதல் 1200 விரரையுடைய படை ஒன்று வைக்கிருக்கார்களென்றும்,

278
அவ்விடத்தில் ஆகஸ்டஸ்க்கு ஒரு கோவில் கட்டப்பட் டிருந்ததாக Malabar Manual என்னும் நூல் கூறுவதாக கனகசபைப் பிள்ளை அவர்கள் 1800 வருடங்களுக்கு முற்
பட்ட தமிழர் என்னும் நூலிற் காட்டியுள்ளார்.
[Lu, 88.]
“It was from the Nagas that the Aryas first learnt the art of writing; and hence Sanskrit
characters are to this day known as Deva-nagari. (Tamils 1800 years ago p. 45)
“At Laboe Toewa, Paros, Sumatra, has been found a Tamil inscription dated in the Saka year 1010 = AD 1088. It records a gift by a body of
persons who are styled “ the one-thousand five hundred’. This epigraph proves that the Tamil
language was used in public documents on the Island of Sumatra, in the 11th century A. D. accordingly, the influence which the Tamils and their language exercised is much greater than the
traditional boundaries would warrant us to believe.
(Rai Bahadur V. Venkayya, M.A.,
Epigraphist to the Government of India) 18

Page 147
27.4
國후
卡g-h月5 h心月4日氫) L虎尼m瓜島區增切*員"凸eg &s則增占營日rme仁義信定5T) (UÇI-UŻI dĩ飞シg増にもコgĶŪE I-gŮ I*"g) %3Aes定的法學3 sae(府rgurzermorg :WrTris)』,『크
运中寻e点阅运每画卡尼恩叶图追电g
(gỜI—gg (F 5))
序&#***g현*** 43高光3니파學的)|- § (leiernig?????IITựloj|[137 selgewie) 日 : A5는學엘道Iso sos',T|-点与四川点培409与身心 压| § : ')')); 口习与卤%) 摩,虑自身段 (He浪滔岛n)与氨与胸潟日返e圆 汗3.4%e南地方地r 노환=r, %we명的)%「學的는定 : 정의ussungR% གེ་stūrīgs son (ç8–09 WT -5) ipsflaeg)?wogio (虎e坦噶尼m *日虎定ge)氫地Qr)(seqg@『『Q」「gg@シgrg) 丐谒曲g可与心吗透画漫75唱n习e司。- A%%%國高有意的rs) 너=月해T력地r려義的說) * - *| |_ _ _ _ _ _ , !::= |3 , !-i osoɛɛ?gorie:Noop sa gosodo: , , ,- 홍 so o aeNo , , , \bolșoi siseo! ! ! ! ! !No.
 

275
பாண்டிய மன்னர்
பெருவழுதி
மாறன் வழுதி
நெடுஞ்சேழியன் (கி. S. 75. 90)
ஆரியப்படை வென்றவன். சிங்கான்க்கிம் நஞ்சியவன்)
வெற்றிலுேந்சேழியன் (கி.பி. 5-40)
நெடுஞ்சேழியன் TI}&آ..L}', O-I 28) (கலேயானங்கானத்துச் செருவென்றவன் :
யானேக்கட்சேயைச் சிறை பிடிந்தவன்;
வெள்ளியம்பவத்திற் றுஞ்சியஜன்)
சீசன்சாக்கன் (குளமுற்றத்துக் துஞ்சியவின்,
:நிரப்பெருவழுதி (கி. பி. 123-140) (கானப்பேரெயிலே முற்றுகை யிட்டான். பெருநற்கிள்ளியின் ராசகுயத்துக்குச் சமுக மளித்தவன்)
ஈன்மாறன் (கி. 凸.140一150)
இலவந்திப்பள்ளித் துஞ்சியளின் 1:
(கி. பி. 7-ம் நூற்றுண்டு முதல் 9-ம் நூற்றாண்டு விரை)
1. கன்ேகோன் பாண்டியா கி ராசா
2. ஆதிராசா மாறவர்மன்

Page 148
276
. சேழியன் சேர்தன்
4. மாறவர்மன் அரிகேசரி ஆசமாசமன்
5. கோர்சடையன் ாணுதிராசா
.ே அரிகேசரி பாங்குகள் மாறவர்மன் ே தர்பாரன்
구. பாதில நெடுஞ்சடையன் பராந்தகன்
(வேள்விக்குடிச் சாம் அளிக்கான்)
(S. L.V. 769-70)
*, Träfin II
). விகுண மகாராசா
10. சிரீமாற சிறீவல்லப ஏகவீரன் பராசக்தி கோலுகல பல்லபபான்சன்
11 வகுணவர்மன் (மாறன் சடையன் 12 பாார்க்க
.ெ பி. 8629--363-لو، ویتنlezoogy( رات வீரநாராயனா
அரசாச்சி எய்தியனன்)
13. IT" + Glitror III.

(கி. பி. 1
III. i.
| {1,
幽77
器一ö நூற்ருண்டுக்கும் 17-ம் நூற்குண்டுக்கு கிடையில்)
பதவிர்மன் குலசேகரன் 1100-1214 மாறவர்மன் சுர்கான் பாண்டியன் 1 |2|{1-1
மாறவர்மன் சுந்தரன் பாண்டியன் IT 12:38-1251
யாருவர்மன் சுந்தான் பாண்டியன் |2|-|| | வீரபாண்டியன் 1252-1207 மாதவர்மன் குலசேகரன் 1 Loffታና –1 Hህ8 மடாவர்மன் சுந்தர | 75_| () மாறிவர்மன் குலசேகரன் 13|-|321 மாறவர்மன் புராக்கிரம பாண்டியன் 1፥ጓ84-__-185ይ ாடாவர்மன் பராந்திரம பாண்டியன் I :57_-172 பாாக்கிரமி-பாண்டிய தோன் 355
பராக்கிரம பாண்டிய 1381:
பதவர்மன் குலசேகரன் 1:15,
அரிகேசரி பாாக்கிரம பாண்டியன் 1422 மாறவர்மன் வீரபாண்டியன்
அழகன் பெருமாள் குலசேகரன் 13 () வீரபாண்டியன் 1437
பாக்கிரம பாண்டியன் குலசேகா தேவன் 1479 பராக்கிரம பாண்டியன் 15
* 14:-திேன் இனைய சகோதரன்

Page 149
1.
22.
24.
25,
26.
27.
28.
33],
78
யநில வர்மன் கிரீவல்லப
அல்லது அபிராமபராக்கிரமா மாறிவர்மன் கர்தர பாண்டியன்
குலசேகர அல்லது பெருமாள் வீரபாண்டியன் கோண் எறின்மை கொண்டான
குலசேகா தர்ம பெருமாள் சிரீவல்லப ஆகிவீரராமன் குலசேகர பாாக்கிரம அழகன் சொக்கன்
அபிராமவாதுங்காமி வீரபாண்டிய
சினாலமாறன்
நாயக்க அரசர்
விசுவாாதன் குமா கிருஷ்ணப்பு
கிருஷ்ணப்ப(மறுபெயர்)பேரிய வீரப்ப
விஸ்வநாத II
விங்கைய (மறு) குமாகிருஷ்ணப்ப
(மறு) விஸ்வநாத-III
முத்து கிருஷ்ணப்பு
முத்து வீரப்ப
திருமலே
முத்து அழகதிரி அல்லது முத்துவீரப்ப
சொக்ககாக அல்லது சொக்கலிங்க
நீங்க கிருஷ்னமுத்து வீரப்ப
மங்கம்மாள்
விசயரங்க சொக்கநாத
மீனுட்சி
153.
143
1550
|5|12
172
| h1-lii
11,
[55;}
1、
| 5:15,
| tit'2
|{{2}
5.
[ [if፳፰፥
1 [iኑና ኃ
| հ8ց
1704
73-73

279
(T*&T해행宮형um) 는地的地9해***3 | à :
恩e)员低沸点因信唱nm)
5.4%(5T니ns論.ராகிமியா)ே
齿骨牙目巨雷西海每画(951—06引限虎*Q*@
| _|| || ?
*1鬼白雪增醫用可Q&*95 *日 rme:AaAss액地主er (, 패홍學&高해평(建議3
虎r頂增Ah止自*၉ #ပ္:#ီဇိ* g:叔丁母司同ene虑唱n七世母n) **」e』シMQM-& 역할 정해) 11—高等學主義自意的) 해야3
| __ __----| |
| 虎rguh非自商引了Q989 **me句與占em *n
国占F8&&mieu地中道Afré니****) %령u國的) 행es** *******않)(çg-Uit 'T 'Ë) &se&니南5*g훈%3 %ww城r屯nTem匈* T@*Q
Use Ke** *wr**的) =虚电uner)
uug도용어n官學的)

Page 150
28C)
(oooooooooo sogaeo, gesogo-orie, -oo; 려r그義的}**):Ar騙爭戶白「@「自鳴叫보유rm와r-定ewF)
*****虎与自身)
(シ역「T&DE-pí 다.院연**r n-4%황r長安55%, Ascm{{INජ්当虚闾河Dng) 역 3Arkg 法學的Wew學.七曜赐坤局 (*Tw확그녀=ce 홍55355%*Q訓maugge&&la則與雪 [[IGI–gɛI ( 3) - -『s」「QョQQ『F*ggng 198:L「gz I AT 홍 (**않T學애2%Arm)卤望遏可将母通fg |

28.
*மலேமேன் மாங் கொணர்ந்து மாண்புடைத்தாய்ச் செய்ச
கிலேயொத்த விதி நெடுமாடக் கூடல் விலேத் தயிர் கொள்ளிரோ வென்பரண் முலேயிாண்டுஞ் சோழனுறங்தைக் குரும்பையோ தொண்டைமான் வேழஞ்சேர் வேங்கடத்துக் கோங்கரும்பே' விழ்த்துக் தச்சன் கடைந்த வினேச் செப்போ வச்சுற்று ளன்னமோ வாய்மயிலோ வாாஞர் நோய் செய்தாளே பின்னங் தெரிகிற்றிலம்
(யா ப்-விருத்தி-மேற்கோ ள்)
மேற்காட்டிய செய்யுள் ஈழத்துத் தச்சர் கைவினேயிற் சிறந்தவர்கள் எனப் புலப்படுத்துகின்றது. இராவணன் மயன் புதல்வியாகிய மங்கோதரியை மன்தல் புரிந்த Šú!ዛFÉùዕዞ
றும் உற்று சுே ாக்கற்பாலது.
அரசாட்சி
திருக் கொண்டு பெருக்க மெய்திவிற் றிருந்து குற்றங் கெடுத்து விசும்பு தைவாக் கொற்றக் குடையெடுப் பித்து நிலநெளிய படைபாப்பி யாங்காங்குக் களிறியாத்து நாடுவளம் பெருகக் கிளைகுடியோம்பி தற்குப் போல வுற்றது பரிந்து அகத்துக்குப் பகலாணி போலவும் மக்கட்குப் கொப்பூழ் போலவும் உலகத்துக்கு மந்தரமே போலவும் நடுவு நின்று செங்கோ லோச்சி யாறில்வழி Lil' FTA தோற்று வித்துக் குளணில் வழி குளங்கொடு வித்து

Page 151
38፰
முயல் பாய்வழிக் கயல் பாய்ப் பண்ணியும்
களிறு பிளிற்றும் வழி பெற்றம் பிளிற்றக் கண்டும் களிறூர் பலகாற் சென்று தேன்ருேயவும் கண்புனம் படைப்பைத் தாகியும் குழைகொண்டு கோழி யெறிந்து இழைகொண் டான்றட்டும் இலக்கங்கொண்டு ரெங்க ஆசை யெறிந்தும் உலக்கை கொண்டு வரளே யோச்சியும் தங்குறை நீக்கியும் பிறர்குறை தீர்த்தும் சாடாள்வதே யாசாட்சி :
(யாப்பருங்கல விருத்திடமேற் கோள்)
பைசாச மொழி என்பது பழைய தெலுங்கு மொழி என்பர் தமிழ் ஆராய்ச்சி என்னும் நூலார்.
சகி அல்லது விதவைகளைக் கணவருடன் தீயிலிட்டுக் கொளுக்தம் வழக்கம் குற்றச் சாட்டாக கி. பி. 1829-ல் சட்டம் உண்டாக்கப்பட்டது. கி.பி. 1832-ல் அச்சட்டம் நடபடிக்குக் கொண்டுவரப்பட்டது. இக்காலம் உயிரு டன் எரிக்கப்படாது இருக்கும் கைம்மைகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தாருக்கு வாழ்த்துக் கூறுவார்களாக,
* வாழ்க நம்மன்னவன் வாழ்கி வையக
மாழ்கரும் மரும்பகை யலர்க நல்லறம் விழ்க தண்புனல் பயிர்விளைக மாநிலங் தாழ்க மற்றருந்துயர் சாற்றக் கேண்மினே.”
முற் று ம் P
THE Roy AL PRINTING works, Mount Road. MADRs."
ܒ ܒ


Page 152


Page 153


Page 154