கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பணம் பந்தியிலே

Page 1


Page 2


Page 3
津
2
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விபரம்
உரிமை
தாளின் தன்மை
(நூல் விபரம் 事记
சி பணம் பந்தியிலே
சி விக்னா பாக்கியநாதன்
* தமிழ்
a 2000
* முதல் பதிப்பு
* ஆசிரியருக்கு
S° 11,6 Z.
நூலின் அளவு "ே கிரெளன் சைஸ் (12% X18% செமீ)
அச்சு எழுத்து அளவு 3 10 புள்ளி
மொத்த பக்கங்கள் తా 100
நூலின் விலை eb. 20.00
炸
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
Qəbu6fu$hu"GCALMTür
Qe Tu
* லேசர் சிஸ்டம்ஸ், சென்னை-17
* எம்.கே.எண்டர்பிரைசஸ்
* தையல்
"ே மணிமேகலைப் பிரசுரம், 事、
சென்னை - 17

3
=
சிவமயம்
அமரர் திருமதி. நல்லம்மா விஸ்வலிங்கம் அவர்கள்
*Lafrt IL I60OILð
என்னை இவ்வுலகிற்கு ஈந்து, அன்போடு அறிவையும் தந்து, தன்னனுபவத்தை என்னுள்ளே விதைத்து, இந்நூலினை எழுதிட வைத்தே இரண்டாயிரத்தில் இரண்டாம் மாதத்தில் அரனடி இணைந்த என்னன்னைக்கு இது அர்ப்பணம். ار

Page 4
பதிப்புரை
விக்னா பாக்கியநாதன், மணிமேகலைப் பிரசுரத்தில் தொடர்ந்து பல வெற்றிப்படைப்புகளைப் படைத்து முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார். இவருடைய இன்னொரு வெற்றிப் படைப்புதான் பணம் பந்தியிலே.
பணிவென்பது பயந்த கபாவம் அல்ல, மனித நேயம் அது மனதைத் திறக்கும் மார்க்கம், தாய்நாட்டுப்பற்றும் தாய்மொழிப்பற்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் அடங்கிய கட்டுரைத் தொகுப்பே இந்நூல்.
ஆசிரியரின் கல்விப் புலமையும், அறிவாற்றலும், உற்றுநோக்குத்திறனும் நூலெங்கும் மலிந்திருக்கக் காணலாம். இந்நூலைப் படிக்கும் வாசகர்களுக்கு தன்னம்பிக்கையும், தாய்மொழிப்பற்றும், தேசப்பற்றும் ஊற்றெடுத்துப் பெருகும் என்பது உறுதி.
உறவுகள் என்ற தலைப்புக்கட்டுரையில் நம் தமிழகத்திற்கும், மேலைத் தேயத்திற்குமுள்ள உறவுகளில் உள்ள, பண்பாடு, கலாச்சார நிறைகுறைகளைத் தெளிவாக ஆராய்ந்துள்ளார், ஆசிரியர். இக்கட்டுரையைப் படிக்கும்போது நம் தமிழ்க் கலாச்சாரம் எத்தனை உயர்ந்தது என்பதைக் கோடிட்டுக் காட்டும்போது, தமிழராகிய நாம் நெஞ்சை நிமிர்த்தி பெருமைப்படாமல் இருக்கமுடியாது.
இன்று நாட்டுக்குத் தேவை நல்ல பிரஜைகள். நல்ல பிரஜைகளை உருவாக்க திட்டமிட்டு எழுதப்பட்டுள்ள இந்நூலை வெளியிடுவதில் மணிமேகலைப் பிரசுரம் பெருமை கொள்கிறது. வாசகர்கள் வழக்கம்போலவே இந்நூலை வாங்கிப்படித்து எங்கள் பணிக்கு ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.
- பதிப்பகத்தார்.

துறைதோறுந் துறைதோறுந் துடித்தெழுந்தே
என்று சொன்ன பாவேந்தன்
ஏற்றமிகு ஆணைதனைத் தலைமேலேற்றுப்
பண்டிருந்த தமிழ்மொழியின் பெருமையெலாம்
பாங்காகப் படிப்பதற்கும் இன்றிருக்கும் இளஞ்சிறுவர் எழுதுதற்கும் இந்நூலைப் படைத்துத் தந்தீர்! அன்றிருந்த ஒளவையெனும் பெரும்புலவர்
ஐரோப்பாக் கண்டந்தனில்
இன்றுவந்து வாழ்கின்றார் என்றநிலை
தந்துவிட்டீர் வளர்க வாழ்கவே!
பேராசிரியர் சக்திப்புயல்
M.A. Dip.ijling..... Dip.in. French Franch

Page 5
பொருளடக்கம்
தலைப்பு பக்க எண்:
பணம் பந்தியிலே 7
உலக நியதி 18
முயற்சி வெற்றிக்கு வழி 28 ஒற்றுமையே உயர்வு ... 33 பணிவென்பது பயந்த தன்மையல்ல!. 37
அளவான வார்த்தைகள் 41
நீர்க்குமிழிகள் S1
சில்லறை - செல்லாக்காசு. 58
உறவுகள் 61 இல்லற இணைவு W 70
வயோதிபத்தில். 74 به
மனிதநேயம் அது மனதைத் திறக்கும் மார்க்கம். 81
முயற்சி திருவினையாக்கும்.w6osovsvooooooooooooooooooossovsw80•osovo 83
நன்கு ஆராய்ந்து நட்புக்கொள்!.86
பெற்றோர்களும் பிள்ளைகளும். 88
தாய்நாட்டுப் பற்றும் தாய்மொழிப்பற்றும். 91
பொறுத்தார் பூமியாள்வார்.98
 

பணம் பந்தியிலே
பணம் பந்தியிலே ,
<
ஜைக்குப் பணம், பிரசாதத்துக்குப் பணம், சுவாமி தரிசனத்துக்குப் பணம், ஒன்றை உருவாக்கவும் பணம், அழிக்கவும் பணம் பணப்புழக்கம் எப்படி, எங்கெல்லாம் செல்வாக்கு உலகிலே. பணமிருந்தாற் போதுமடா உலகிலே, பாசமென்ன? நேசமென்ன? பணத்தாலே ஆகாதது எதுவும் இல்லை. தெய்வத்தால் ஆகாதது ஒன்றுமில்லை என்பது போல இது. பணம் கொலையும் செய்யும் புதைத்த பிணத்தைத் தோண்டி எடுக்கவும் செய்யும்.
கருமிக்குக் கண் பணம் மேலே; நோயாளிக்குக் கண் குணமாகுவதிலே,

Page 6
8 స్ట్రేణి பணம் பந்தியிலே!
இல்லறப் பிரிவினைக்குரிய மூலகாரணமாகப் பணமும் இடம் பிடிப்பதுண்டு. குழந்தைகளே குடும்பத்தை இணைக்கும். இன்று பணமே குடும்பத்தை இணைக்கும். பணத்தோடு வந்தால் பெறுமதி3 பாசத்தோடு வந்தால் கொடுக்குமதி. ஒருவரின் தராதரமதிப்பீடு இன்று பணத்திலே தான.
படிப்புக்குப் பெறுமதி இல்லை. புகழுக்குப் பெறுமதி குறைவு5 குணத்துக்குப் பெறுமதி இல்லை. அறிவுக்குப் பெறுமதி இல்லை. பணந்தான் பந்தியில் முந்தி நிற்கிறது. குணம் குப்பைக்குத் தள்ளப்படுகிறது. கணவான்கள் எல்லாம் பணம் படைத்த தனவான்களுக்கு முன்னிற்க முடியாது.
பசிவந்தால் பத்தும் பறந்துவிடும் என்பது போல பண ஆசை வந்தாலும் இப்போது பத்தும் பறந்து விடும். பணத்துக்காக எதையும் இழக்கத் துணிகிறது இன்றைய உலகம்.
பணமற்றவன் நடைப்பிணம் என்பதுண்மை. ஒருவருக்கும் பயனற்றவன், மற்றவரில் தங்கி வாழ்பவன் பிணத்துக்கு ஒப்பு. பிணம் தானாக எதையும் செய்யமாட்டாது. இயக்குவோர் தேவை. ஒருவரிடத்தில் உள்ள பணம் என்ற சில்லு உருண்டோடும் தன்மை வாய்ந்தது என்பதை அறியாதார் மூடர்.
வண்டி உருண்டோட அச்சாணி தேவை
வாழ்க்கை உருண்டோட காசு தேவை.
நீதியோடு கூடிய நிதி வேண்டும் நிதி என்ற பதத்தில் உள்ள நி’ என்ற உயிர்மெய் எழுத்து நீ’ என உயிர்மெய் நெட்டெழுத்தாக நீண்டு விட்டால்
 

விக்னா பாக்கியநாதன் 9
நீதியாகிவிடும். நீதியான முறையில் நிதி இருக்கவேண்டும். நாணயமான முறையில் நாணயம் இருக்கவேண்டும். ஆனால் இன்று நீதியாக, நாணயமாகப் பணக்கொடுங்கல் வாங்கல் இருக்கின்றதா? நீதி வழங்கலிலும் பணம் லஞ்ச உருவில் முன்னிற்கும் காலம் இன்று?
நாணயமற்றவனாக ஒருவன் இருப்பதனால் அவன் தானுண்டு, தன் வேதனையுண்டு என நாணயமாக வாழ முடிவதில்லை. நாணயத்தை நாநயத்தைக் காப்பாற்ற அவனுக்கு இன்றைய உலகில் நாணயப் புழக்கம் அதிகமாகத் தேவை. வேண்டிய நாணயத்தைத் (பணத்தை) திருப்பிக் கொடுக்க வழியின்றி தன் சொல் நாணயம், தவறிவிடுகின்றான் ஒருவன். தனது இச் செயலால் நாணிக்கோணி விடுகிறான்.
ஆளுங்கு இல்லை இங்கே மரியாதை, பணத்தாளுக்கே பல கோடி மரியாதைகளும் மாலைகளும் வருகின்றன. கற்றோர். செய்ய முடியாத சிலவேளைகளை “கரன்ஸி நோட்டுக்காரர்’ நொடியில் செய்துவிடுகிறார்கள். ஏனெனில் பணக்காற்று அவன்பக்கம் வீசுகிறது. பணக்காற்றில் பட்டம் (கல்வியில்) வாங்கிப் பறக்க விடும் காலமும் இப்போது உண்டு.
கருத்து ஒருமித்து கடிமணம் செய்திடும் இருவரைப் பிரிக்க வருவது காசு. இங்கே காசில்லை என்றால் ஒருவன் காசிக்குத் தான் போக வேண்டும்.
காதலைப் பிரிக்கும் காசு
காதலை அன்பு நிர்ணயம் செய்யவில்லை. அறிவு நிர்ணயம் செய்யவில்லை. குடும்பச் சூழல் நிர்னயம் செய்யவில்லை. காதல் அலுத்துவிட அதை இறுதியில்

Page 7
O $2 பணம் பந்தியிலே!
காசுத்தாள்கள் நிர்ணயஞ் செய்கின்றன. நாய் கூட மோப்பம் பிடித்துப் பார்க்காத, நாய்தின்னாக் கடதாசிக் காசு “செம்புலப் பெயர்ந்த நீர் போற் கலந்த’ அன்புடை நெஞ்சங்களைப் பிரித்துவிடுகிறது. “செல்வோம் செல்கின்றோம்’ எனச் சதா சொல்லிக்கொண்டிருக்கின்ற பணத்துக்காக ஒரு புனித பந்தம் பிரிகிறது இங்கே.
கோபுரங்கள் குடிசை ஆவதும், பணமுதலைகள் மண்புழு ஆவதும், ஏவலாள் முதலாளியாவதும், ஏழை முதலாளியாவதும் உருளும் உலகில் நடக்கும் நிகிழ்வுகள். இயற்கையின் நியதிகள். “உறங்குவது போல் சாக்காடு; விழிப்பது போல் பிறப்பு’ என்ற மானிட வாழ்க்கையில், (உயிரினவாழ்க்கையில்) பணம் தான் இயக்குகோலா? பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலுள்ள ST 69 இடைவெளிக்குள் மனிதனுடன் ஒட்டி உறவாடுவது பறக்க நினைக்கும் பணம்தான் மனிதன் தன் வாழ்வில் எந்தச் துழநிலையிலாவது, எக்காலத்திலாவது மனம் விரும்பிப் போதும், வேண்டாம், தேவை இல்லை, என்று கூறாத ஒரே ஒரு பொருள் பணம் ஒன்றே. கட்டாயத்தின் பேரில் யாராவது அப்படிச் சொல்லலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாகக் காணும் என்று சொல்லலாம். ஆனால் உள்மனரீதியாகச் சொல்பவர் எவருமே இருக்கமாட்டார்கள்.
வெறும் கடதாசித்தாள் மனிதனை என்ன பாடுபடுத்துகிறது? குடும்பத்தைப் பிரிக்கும்3 அன்பையும் பிரிக்கும்; அமுதூட்டிய அன்னையையும் பிரிக்கவைக்கும். அன்புடைப் பாசம் பணத்தின் முன்னே தோற்றுவிடுகிறது. பிள்ளைப் பாசமும் பணத்தின் முன்னே மங்கலாகத் தோன்றும். நட்பு நலிந்து விடுகிறது. உறவுகள்

விக்னா பாக்கியநாதன்
உருக்குலைகிறது. பணக் கொடுக்கல் வாங்கிலால்சந்ண்பர்கள் எதிரிகளாவார்கள். உதறித் தள்ளுவார்கள். பழம் இருக்கும் மரத்தை நாடிப் பறவைகள் அதிகமாக வருவதுண்டு.
பணமுள்ளவனை நாடி எல்லோரும் வருவர். எடுபிடி வேலை செய்து சேவகராகவும் மாறி நிற்பர் சிலர். குளத்து நீர் வற்றியவுடன் மீனை உண்ண வரும் கொக்குகள் அந்தப் பக்கமே திரும்பிப் பார்க்காமல் பறந்து செல்லும். அதே போல் பணம் வற்றியவுடன் கூட நின்ற நண்பர்கள், உறவுகள் எல்லாம் கொக்குப் போல பறந்து அப்பாற் சென்று விடுவர்.
பணத்தால் வரும் பிரச்சனைகள்
இப்பரந்த உலகில் எந்தவொரு இடத்திலும், ஏதோ ஒரு பொருள் இல்லாவிட்டால் பிரச்சினை ஏற்படும். ஆனால் ஒரே ஒரு பொருள் மட்டும் இருந்தாலும் பிரச்சனை இல்லையென்றாலும் பிரச்சனை அதனால்3 நிம்மதியற்ற வாழ்வு, அந்தப் பொருள் தான் பணம்.
பணமிருப்பவர் அப்பணத்தை எப்படிப் பேணிக் காப்பது? வீட்டில் வைத்தால் திருடர்கள் வந்து விடுவார்கள்; எம்மைக் கொலை கூடச் செய்துவிடலாம். வங்கிகளில் போட்டால் அரசுக்கு இவ்வளவு வரிகட்ட வேண்டும் எனப் பல யோசனைகள். சிலவேளை நான் திடீரேன இறந்துவிட்டால் இப்பணம் எங்கு போய்ச் சேர்வது? யார் யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பது? யாருக்குக் கூடிய சலுகைகள் காட்டுவது? என்று நித்திரையின்றிப் பல யோசனைகள்.
இன்னும் பணம் இவ்வளவு வங்கியில் வைப்பாக வைத்தால் மொத்தமாக வட்டியுடன் எவ்வளவு வரும்? மொத்த முதலுக்குக் கிடைக்கும் வட்டியை எடுப்பதா? அல்லது

Page 8
12 $2 பணம் பந்தியிலே!
முதலுடனே சேரவிடுவதா? வட்டியும் முதலும் சேர்ந்தால் எவ்வளவு காலத்தில் இவ்வளவு தொகை கூடவரும்? என்று சதா மனம் எண்ணி உழலும்.
பணம் இல்லாத ஏழைகளுக்கோ நாளை மத்தியான உணவுக்கு என்ன வழி? எதைக் கொண்டு உணவோ, உணவுப் பொருட்களோ வாங்குவது? ஒரு நேரம் சும்மா கிட என்றால் ஏற்றுக்கொள்ளும் வயிறா இது? அல்லது உணவு அதிகமாகக் கிடைக்கும் போதில் (ஒரு கிழமைக்கு) அல்லது ஒரு மாதத்திற்குப் போதுமான உணவை உண்டு வயிற்றிலே சேமித்து வைக்கும் ஒட்டகத்தின் வயிறா மானிடர்க்குP இல்லை, அன்றாட உணவுக்கும் அதைப் பெறுவதற்கும் பணம் இல்லையே என்ற ஏக்கமும், பிரச்சினையும், நிம்மதியற்ற வாழ்வும் பணமற்ற ஏழைக்கே உண்டு.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
என்றார் வள்ளுவர்.
இந்த “எண்’ணிலே அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் விடயம் எது? பணம்.
பணக் கணக்கு
நான்கு தேங்காயும் மூன்று மாங்காயும் எத்தனை என்பது ஒரு கணக்கு. ஒரு தேங்காய் பத்துரூபா எனில் 3 தேங்காயின் விலை என்ன? என்பது பணக்கணக்கு.
கொள்விலை, விற்றவிலை, வரவு-செலவு, பங்கும் . சரக்கு முதலும், வட்டியும் - முதலும், எனப்படும் கணக்குகள்
 

விக்னா பாக்கியநாதன் 13
எல்லாம் என்ன? பணத்தையே அடிப்படையாகக் கொண்டவை. முகத்தில் கண்கள் கற்றவர்களுக்கு மட்டும்தானாம். கல்லாதவர்களுக்கு அவை இரண்டும் புண்களே என்பது வள்ளுவர் கருத்து.
அப்படியெனில் முகத்தில் கண் எனப்படுபவை எண்-எழுத்து. எண் என்பதற்குள் கணக்கு அடக்கம். கணக்கிற்குள் பணம் அடங்கும். ஆதலால் பணத்தை மனிதர்க்குக் கண் எனலாமோ?
அறிவுக்கண் உள்ளோர்க்கு தன்னலப் பார்வை குறைவு. பணக்கண்ணுள்ளோர்க்கு தன்னலப் பார்வை அதிகம்.
பணத்தின் மேலே வைத்த ஆசை மனிதனுக்குத் திராது என்பதாலே இறந்தும் அவனுக்கு நெற்றியில் நாணயம் வைக்கப்படுகிறது. இறந்தவர் நினைவாக பிராமணர்களுக்கு, அந்தியேட்டிக்கிரிகைகளில், பணம் கொடுக்கப்படுகிறது. தானம் வழங்கப்படுகிறது. இப்படி வழங்கப்படுபவை இந்தந்த ஆத்மாவைப் போய்ச்சேரும், திருப்திப்படுத்தும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
உதவிக்கு நிதி, அத்தாட்சிக்கு நிதி, உறுதிப்பத்திரத்துக்கு நிதி, பொறுப்புக்கு நிதி, எனப் பல விடயங்களில் பணம் தொழிற்படுகின்றது. ஆட்களுக்கு இல்லா மதிப்பு, பணத்துக்கு, அதாவது ஒன்றிற்குப் பெறுமதியாகப் பணம் பொறுப்பு வைக்கப்படுகிறது.
கட்டுப்பாட்டு வேகத்தை மீறிய மோட்டார் கார்ச் சாரதியை வெருட்டியோ, அடித்தோ, ஏசியோ தண்டனை அளிக்கப்படுவதில்லை. பண அபராதம் மூலம் அவர்களுக்குத் தண்டனை. கடவுளுக்கு 100M கொடுத்துச் செய்யும்

Page 9
14 قڑیخ பணம் பந்தியிலே!
பூசையிலும், 100DM கொடுத்துச் செய்யும் பூசையில் கூடிய பலன் உண்டாம். அருளுண்டாம். இது மானிடர் வகுத்து வைத்த மதிப்பீடு. கடவுள் அல்ல, கடவுள் இதைப் பார்த்துச் சிரிக்கிறார். அது மனிதருக்கு வேதனை தரும் என்பதற்காகத் தான் கல்லாகவே காட்சியளிக்கிறான்.
ஒரு புதுக்குறள்
கடவுளைச் சாட்டிப் பணம் சேர்ப்பவர்க்கும் இறைவன் ஒரு பக்கம் துணைபுரிகின்றான். காரணம் வாய்பேசாத கல்லாக அவன் காட்சியளிப்பதால் ஏதோ எல்லாம் செய்கிறார்கள். ஆனால் அவன் நின்று கொல்வான்; அரசன் அன்றே கொல்வான் என்பதை மறந்துவிடுகிறார்கள் என்பது பரிதாபம்.
பணம் சேர்க்க என்றும் அஃதின்றேல்
மணமற்றிடும் மானிடப் பூக்கள்
என்பது பணம் பற்றிய புதுக்குறள் எனலாம். மணம், நறுமணம் ஒருவரிடமிருந்து மணந்தால் அது எல்லோரையும் கவரும், அப்பொருட்கள் மதிப்புப் பெறும்.
ஆனால் பணமற்ற பூக்கள் போன்று பணமற்ற மனிதர் வாழ்வு உண்டு, மணமற்ற மலர்களால் பயனில்லை. மகளிரின் கூந்தலிலும் இடம் பிடிப்பதில்லை. பணம் இருக்கும் இடத்தில் புகழ் என்ற வண்டுகள் மொய்க்கும். அறிவும் தலை சாயும். பணம் படைத்தவர் ஒரு இடத்தில் இருந்து கொண்டே பல காரியங்களைச் செய்யக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள். பதவி ஒன்றில் உள்ளவர்களுக்கு அதிகாரம் இருப்பது போல பணம் படைத்தவர்களுக்கும் ஒரு விதத்தில் ஏதோ விடயத்தில் அதிகாரம் உண்டு.

விக்னா பாக்கியநாதன் 15
பணம் பத்தும் செய்யும் பணத்தால் எதையும் வாங்கலாம் என்பர். இக்காலத்தில் பாசத்தையும் பணத்தால் வாங்க முடியும். ஒருவருக்கு தேவையறிந்து இன்னொருவர் போலி நட்புடன் அவருக்கு பணம் கொடுத்து, உறவாடுவது போல் நடித்தால், பணம் வாங்கியோருக்குக் கொடுத்தவர் மீது மதிப்பும் பாசமும் ஏற்படுகின்றன.
சகோதர பாசங்களையும், பணம் தான் வளர்க்கிறது. அதுவே பிரிவினைக்கும் காரணமாகிறது.
தாய்ப்பாசம் வேறுவிதமானது; அது எவ்வித பிரதி பலனையும் எதிர்பாராதது; தாய்ப்பாசத்தைத் தான் தோன்றித் தனமாக விமர்சிக்க முனைபவன் தறுதலைகளுள் ஒருவனாவான். தாய், தாயன்பைத் தவிர பணத்தால் இன்று எதையும் வாங்கிவிட முடியும். பட்டப்படிப்பு - பட்டங்கள், பதவிகள், பொய்யாகத் தயாரான, அரசு சார்பான உறுதிப்பத்திரங்கள், அனுமதிப்பத்திரங்கள், சான்றிதழ்கள் என்பன சில இடங்களில் பணத்துக்கு விற்கப்படுகின்றன என்பதும் கசப்பான உண்மையாகும்.
பணத்துக்குப் புதுப் பெயர் லஞ்சம்
பணத்துக்குப் பொருட்களை வாங்குவது போல் அறிவு சார்ந்த தகைமைப் பத்திரங்கள், பதவிகள், பதவி உயர்வுகள், போன்றவற்றைத் தமதாக்கிக் கொள்ள இருவருக்கு இடையே ஒரு கொடுக்கல் - வாங்கல் நடக்கிறது. இது லஞ்சம் என்ற புதுப்பெயர் பணத்துக்குச் சுட்டப்படுகிறது. லஞ்சம் சிலவேளை வேறு பொருட்களாகவும் இருக்கலாம். இந்தியாவிலும் நமது தாயகத்திலும் லஞ்சம் உட்புகாத இடம் எதுவுமில்லை என்பதை நினைக்க வேதனைதான்.

Page 10
6 °ޗަބީ பணம் பந்தியிலே!
அச்சடித்த தாளுக்கு இத்தனை மதிப்பா
ஆயிரங்காலத்துப் பயிர் என்று இணைத்து வைத்த துணைகளை , 1000 ரூபா பணம் கூட பிரித்து வாழாவெட்டிகளாக விட்ட வரலாறுகளும் எம் சமுதாயத்தில் உண்டு. மணப்பந்தலில் கூட பணம் பந்தாடி இணையவிருந்த பந்தத்தைப் பிரித்து ஜெயிக்கின்றது.
கல்யாணச் சந்தையிலே, சீதனம் என்ற மாப்பிள்ளை வீட்டாரின் கொள்முதலுக்குள் ரொக்கம் என்ற பெயரில் பணம் தனக்குரிய தனியிடத்தைப் பிடிக்கிறது. பணரொக்கத்துடன் சேர்ந்த சீதன ஆஸ்திகளுக்கும், மணமகளுக்கும் திருமணம் நடக்கிறது. இது தொடர்ந்து இனிமையைச் சுமந்து கொண்டு வளரலாம் அல்லது இவ்விருவருக்கிடையே பணம் என்ற சாத்தான் குறுக்கிட்டினால் அவர்களின் பாதை இருவேறாகி விடும். இங்கே பணம் தான் இருவரின் தாம்பத்திய வாழ்வை நிர்ணயம் செய்கிறது. அச்சடித்த தாளுக்கு அப்பப்பா! இத்தனை சக்தி! உலகில் உள்ள அதிசயமான விந்தை என்னவெனில் சடப் பொருள் ஒன்று குட்டி ஈனுதல் அந்த அபூர்வப் பொருள் எது? என்று யோசிக்கிறீர்களா?
குட்டிபோடும் அபூர்வப் பொருள்
மக்கள் குழந்தை பெறுகிறார்கள்; மாடு ஆடு கன்று-குட்டி ஈனுகின்றன. யானை குட்டி ஈனுகின்றது. பாம்பு முட்டையிட்டு குட்டியாகிறது. இவையே குட்டி எனப் பெயர் பெறுகின்றன. முட்டையிலிருந்து பிறப்பனவெல்லாம் குஞ்சு எனப் பொதுவான பெயருடன் அழைக்கப்படுகின்றன.
இப்போது நாம் கூறிய குட்டி போடும் அபூர்வப் பொருளுக்கு வருவோம். ஒருவனின் குணத்தை, தரத்தை,

விக்னா பாக்கியநாதன் 17
மாற்றும் “பணம்’ என்ற உயிரற்ற ஜடம் தான் குட்டி போடுகின்றது என்பது விந்தையல்லவா?1000 ரூபா 1100 ரூபாவாக மாறம். இத்தொகை காலம் செல்ல 1500 ரூபா என வட்டி குட்டியுடன் வளர்ந்துவிடும். அதாவது வங்கி ஒன்றில் பணத்தை வைப்பாக குறிப்பிட்ட காலத்துக்கு போட்டு வைத்தால் வட்டி வளரும், வட்டி வளர்ந்து பின் அது குட்டி போடும். இது பொதுவாக வட்டிக்குப் பணம் கொடுப்பார்களுக்கு வட்டியும் குட்டியும் போடுகின்றன. பணத்தின் வட்டியே அதன் குட்டி.
பணப்பண்ணை வைத்து வட்டி என்ற குட்டிகள் மூலம் அதைப் பெருகச் செய்வதற்கு எத்தனையோ மனிதர்கள் ஆவலாய்ப் பறக்கிறார்கள். அது எல்லோரும் செய்ய முடியாத ஒன்று. சடப் பொருள் ஒன்று இனப்பெருக்கம் செய்வதற்கு ஒப்பாகவே, முதற்பணம் வட்டியுடன் சேர்ந்து தொகையில் கூடுவது என்ற காரணத்தால் பணம் குட்டி போடுகிறது எனக் கூறப்படுகிறது.
வட்டிக்குப் பணம் வாங்குதல் என்பது மற்றவரின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பானது என்றெல்லாம் கூறியது அந்தக் காலம். பணவட்டி வாங்குவோர் குட்டிச்சுவராவர் என்பது மலையேறிவிட்டது.
பணத்தை வட்டிக்குக் கொடுப்பதால் ஒருவரின் அத்தியாவசிய தேவையை உடன் நிறைவேற்றி அவரின் மனநிம்மதிக்குத் துணை புரிகிறோம் என்பது வட்டிக்குக் கொடுப்போரின் கருத்து. இந்தக் கருத்து அத்தனை சரியாகப் படவில்லை. வட்டிக்குக் கொடுப்போர் . வாங்குவோர் நோக்கம் எதுவாக இருந்தாலும் இந்த இருவருக்கும் இடையே பணம் ஊடகமாக நிற்கிறது என்பது உண்மை.

Page 11
18
உலகநியதி
IDITனிடராகப் பிறந்த எல்லோருக்கும் மரணம் எவ்வாறு நிச்சயமானதோ, பொதுவானதோ, அதைப் போன்றே கவலைகளும் பொதுவானவை. கவலைகள் இல்லாத மனிதர்களே இல்லை; உயிரினங்களும் இல்லை. ஒட்டைக் குடிலில் வாழும் ஏழைமுதல் அடுக்கு மாளிகையிலே பஞ்சணையில் துயிலும் பெருங்குடிச் செல்வந்தன் வரை கவலைகள் சுதந்திரமாகத் தமது கைவரிசைகளைக் காட்டி வருகின்றன.
கவலைகள் பலவிதம்
தமக்கு விதிக்கப்பட்டுள்ள கால எல்லைக்குள் தம் வாழ்க்கையை இப்புவியிலே வாழவேண்டும் என்பது இறைவனின் நியதி. பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட ஒரு இடைவெளிக் காலத்துக்குள் வாழும் மனிதனின் மன ஆசைகளுக்கோ எல்லை இல்லை. தம் வாழ்க்கைக்கான உயிரியத் தேவைகளை நாடி ஆதியில் அலைந்த மனிதன் தற்போது ஆடம்பரத் தேவைகளுக்காக மன உலைச்சற் பட்டு, கவலைக்குள்ளாக வேண்டியவனாகிவிட்டான். ஒருவன் தனது வாழ்வியற் தேவை கருதி ஒரு பொருளில் அல்லது ஒரு செயலில் நம்பிக்கை வைத்து, அதில் வெற்றி கிடைக்கும் என எதிர்பார்த்திருக்கும் போது, மாறாக அது நிறைவேறாமற் போகும்போது அங்கே அவனைக் கவலை பீடித்து, அவனது
 

விக்னா பாக்கியநாதன் 19
மன உந்துதலை, உடலியக்கத்தை, தளர்ச்சியடையச் செய்துவிடுகின்றது.
சில வேளைகளில் இக்கவலைகள் இன்னொரு விதமாகவும் வருவதுண்டு. அதாவது தாம் மிகப் பிரியமாக நேசித்த ஒரு பொருளோ அல்லது நெருங்கிய உறவுகளோ அவர்களை விட்டு நழுவி விடும்போதும், பறிகொடுத்துவிடும்போதும் அவர்களுடைய மனமாளிகையில் கவலைப்பேய்கள் குடிகொண்டு விடுகின்றன. அப்பேய்களை விரட்டியடிக்க அவர்கள் எவ்வளவுதான் முயற்சி செய்தாலும் சில காலங்கள் வரை அவை அவர்களுடன் ஒட்டிக் கொண்டே இருக்கும்.
கவலைகளால் மனம் சோர்வடைகின்றது. செய்ய வேண்டிய அன்றாடக் கருமங்கள் தேங்கிக் கிடக்கும் நிலை ஏற்படும். எதிலும் பற்று ஏற்படுவதற்குப் பதிலாக எங்கேயும் வெற்றுத் தோற்றமும் வாழ்வியிலில் நிலையற்ற தன்மையும் உருவாகும். மனதிலே கவலைகள் குடிகொண்டிருக்க வயிற்றிலே உள்ள பசி இறக்கை கட்டிப் பறந்துவிடும். பசித்தன்மை இல்லாமற் போகவே உடலிற் சோம்பல் ஏற்பட்டு நிலையான வாழ்க்கை’ என்று நினைத்து இவ்வளவு காலமும் வாழ்ந்த வாழ்க்கை நிலையற்றது; என்ன வாழ்க்கை3 என்ற தன்மையை அடிக்கடி மானிடருக்குக் கற்பித்துக் கொண்டிருப்பது இந்தக் கவலைகள் என்னும் போதனையாளர்களே.
கடச்சுட ஒளிரும் பொன்போல.
தீயில் சுடச்சுட, தங்கம் ஜொலிக்கின்றது கண்களைக் கவர்கின்றது. நெருப்பிலே எரியுண்டு பட்டை திட்டும் போது தங்கத்தின் தரம் உயர்கின்றது. இதே போல “மனம்’ என்ற தங்கமும் கவலைகள் என்ற கனலினால் சுடப்படும்போது

Page 12
20 స్ట్రేణి பணம் பந்தியிலே! -سنسـســـــــــــــســت
மனம் பண்பட்ட தன்மை’ என்னும் ஜொலிப்பைப் பெறுகின்றது. அதாவது கவலையால் ஆக்கிரமிக்கப்பட்டு அதன் கொடும்பிடிக்குள்ளாகி, செயற்றிறன் அற்று, நடைப்பிணமாய்த் திரியும் மானிடர் வாழ்வு வறண்ட நிலத்து மரங்கள் போலாகிவிடுகின்றது. ஆனால் கவலைகள் என்பது வாழ்வின் ஒரு அங்கம்; அதை நாம் எவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமோ? அவ்வளவு சிக்கிரத்தில் மறந்துவிட வேண்டும்.
கவலைகளை வென்று மனத்தை வேறு நடவடிககைகளில் நாடச் செய்யும் வண்ணம் எமது மூளை என்னும் தேரோட்டிக்கு அந்த மனமே வழிகாட்ட வேண்டும். மனம் இரண்டு வகைப்படும் என்று சொல்வார்கள். அவை உள்மனம், வெளிமணம் என்றோ, அல்லது மனம்-மனச்சாட்சி என்றோ சொல்வார்கள். ஒரே நேரத்தில் இருமணமும் செயற்படும். மனம் ஒன்றைச் செய்ய நினைக்கும்போது, மனச்சாட்சியாகிய அடிமணம் மனத்துக்கு முன்னே தோன்றி நீ செய்வது சரியா? பிழையா? அதனால் வரும் விபரீதம் என்ன? என்பதை விசாரிக்கும். இந்த விசாரணைகளுக்கேற்ற தகுந்த பதில்களை மனம் அளிக்கும் பட்சத்தில் ஒருவருடைய வாழ்க்கை சிராக இருக்கும் என எண்ண முடியும்.
மனச்சாட்சி பேசட்டும்
கவலைகளா ற் பீடிக்கப்பட்டு, இவ்வுலகில் வாழத்திராணியற்ற ஒரு மனிதர் தமது அடிமனத்தையோ, அல்லது மனச் சாட்சியையோ கேள்வி கேட்க இடம் கொடுக்கமாட்டார்கள். இதனால் கவலைகள் அவரைச் சுலபமாகப் பீடித்திருக்கும்! இந்த நிலைக்கு ஆளாகாமல் அவருடைய மனச்சாட்சி "நடந்தது நடந்துவிட்டது. உயிரா போய்விட்டது? எனது உடம்பிலுள்ள உறுப்புக்கள்

விக்னா பாக்கியநாதன் 21
அத்தனையும் ஒழுங்காக இருக்கின்றன. ஏன் மீண்டும் முயற்சி செய்து இழந்தவற்றைப் பெறமுடியாது?’ என்று கேள்வி கேட்க, மனம் பதில் சொல்லும் போது மனத்திலே ஒரு தெளிவு பிறக்கின்றது
உயிராக நேசித்தவர்கள் மரணமடையும்போது, அதைத் தாங்க முடியாமல் தாமும் உயிர் நீத்துவிடவேண்டும் என்ற நிலைக்கு மனம் ஒருவரைத் தள்ளி விடுகின்றது. உண்மைதான். திடீரெனக் கேள்விப்படும் துக்க செய்திகள் இவ்வாறான மனத்தாக்கத்தை ஒருவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தும், அது சில மணித்தியாலங்கள் சொல்ல, அவர் அனுபவித்த அதிர்ச்சியிலிருந்து மெல்ல மெல்ல விடுபடுகின்றனர். ஆனால் அக்கவலை அப்படியே தானிருக்கும். இன்னும் சில மணித்தியாலங்கள் செல்ல, சில தினங்கள் செல்ல, அவருடைய மனம் பூமியில் பிறப்பவர்கள் யாவரும் இறப்பது இயற்கை தானே, நாமும் நாளைக்கு இருப்போமோ? இல்லையோ? ஏன் கவலைப்படுகிறாய்? என அறிவுரை சொல்கின்றது. இத்ன் பின்னர் இறப்பால் வருந்தும் மனிதருக்கு ஒரு சாந்தம் ஏற்படுகிறது.
மறதி தரும் மகிழ்ச்சி
ஒருவரின் கவலைகளை மறக்கச் செய்துவிடும் உத்தம நண்பன் மறதி என்றால் சிலருக்கு வியப்பாக இருக்கலாம். மறதி என்ற ஒரு மனச் செயற்பாடு அல்லது மூளைத் தொழிற்பாடு இருப்பதனாற்தான் மனிதன் சிலகாலம் என்றாலும் சந்தோஷமாக வாழ்கின்றன. மறதிகள் மனித வாழ்க்கையிலே எல்லா இடத்திலும் இருக்குமேயானால் அவன் பூரண மனிதனாக வாழமுடியாது. மனிதனுக்கு, அவனது வாழ்க்கைக்கு ஆதாரமான தேவைகளில், செயற்பாடுகளில், முன்னெடுப்புகளில் மறதியின்மையும், தேவையற்றன வற்றில்,

Page 13
22 亨浚 பணம் பந்தியிலே!
மனஉற்சாகத்தைத் தடை செய்யும் விடயங்களில் மறதியும் இருக்க வேண்டும். கவலைகளை வென்று துன்பங்களையும் இன்பங்களையும் ஒரே பார்வையில் நோக்கினால் நிம்மதியாக வாழ முடியும். இனிய நினைவுகளால் ஏற்படும் மனக்கிளர்ச்சியை ஒருவரின் சிரிப்பும், முகபாவங்களும் காட்டிக் கொடுக்கும்.
கவலைகள் எல்லோருக்கும் பொதுவானவை 3 எல்லோருடனும் உறவாடக் கூடியவை, ஆனால் அக்கவலைகளின் தன்மைகள் தான் வேறுபட்டனவாக இருக்கும். பணம் நிறைந்த இலட்சாதிபதியோ தான் சேமித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? எந்த வங்கியில் போட்டு வைப்பது? எந்தப் பிள்ளைக்குக் கொடுப்பது? என்ற பல கவலைகளால் மனம் உலைகின்றான். மேலும் பணமிருந்தும் உண்ணமுடியாமல் நோயும் இருக்கின்றதே, பணத்தால் என்ன செய்வது? என்று ஏக்கமுற்றுக் கவலை கொண்டு நிம்மதியிழந்து வாழ்கின்றான்.
இவை எல்லாம் எமக்குத் தேவைதானா? ஏன் நாம் வேறு வேறு உதாரணங்களைத் தேடிப் போகவேண்டும்? எம்மைச் சுற்றியே பல உதாரணங்கள் இருக்கின்றன. சிந்தனை ஆற்றல் உள்ளவன் அவற்றைக் கண்டுபிடித்து உணர்கின்றான். ஏனையோர் ஏனோ தானோ என்று புரியாது வாழ்வைக் கழிக்கின்றனர். இன்று ஜெர்மனியிலோ ஏனைய மேலைநாடுகளிலோ வாழ்கின்ற எம்மையும், தாயகத்தில் வாழ்கின்ற எம்மினத்தவர்களையும் நோக்குவோம்!
எல்லாம் இரண்டு
பொதுவாக மேல் நாடுகளில் வாழ்வோருக்கு அவர்கள் விரும்பியவையும். விரும்பியவற்றுக்கு மேலானதுமான பலதரப்பட்ட, பல்சுவைப்பட்ட உணவு வகைகள்
 

விக்னா பாக்கியநாதன் 23
இருக்கின்றன. ஆனால் அவற்றை உண்பதற்கு மனமும் வயிறும் இடம் கொடுப்பதில்லை. துரியன் உதயமாகி நிலம் வெப்பமடையும்போது காலை ஏழு மணிக்குச் சுடச்சுட' தோசை, பிட்டு, ரொட்டி என்று சாப்பிட்ட ஆசையும் அவாவும் ஜெர்மனியில் உள்ள எமக்கு எங்கே போய்விட்டன? பொருட்கள் இருக்கின்றன. ஆனால் அதை உண்ணவேண்டும் என்ற மனம் இல்லையே!
மாறாக, எமது தாயகத்தில் எம்மினத்தோருக்கு காலையானதும் தேநீருக்கும் காலையுணவுக்கும் வகையில்லாமல் ஆலாய்ப்பறக்கும் நிலையே உண்டு. பசியும் தாகமும் அங்கே இருக்கின்றன. பாண் துண்டுக்கும் வழியில்லை, பழைய சோற்றுக்கும் வழியில்லை. இங்கே ஜெர்மனியிலே எம்மிடம் விரும்பிய உணவுப் பண்டங்கள் உண்டு. மேலை நாடுகளில் உடலழகுக்கும், சினிவருத்தத்துக்கும் என, பசிக்காமல் இருப்பதற்கு மாத்திரை சாப்பிடுகிறார்கள். ஆனால் வளர்ச்சி குன்றிய நாடுகளில் உணவுப்பஞ்சம் காரணமாகப் பசிக்காமல் இருப்பதற்குத் தான் மாத்திரை வழங்கப்பட வேண்டும். இதுதான் பொது நியதி. ஆனால் இங்கு மாறி நடக்கின்றது. எம்மிடம் இங்கே தாராளமான உணவு உண்டு. ஆனால் பசி இல்லை. ஆனால் வளர்ச்சி குன்றிய நாடுகளில் பசி உண்டு5 உணவு இல்லை, இதுதான் உலகநியதி, ஒரு இடத்தில் இரவு இருந்தால் இன்னோர் இடத்தில் பகல் இருக்கும். இது உலகப் புவியியலின் நியதி.
அணிவதற்கு விதவிதமான அழகான ஆடைகள் கிடைப்பது அரிது தாய்நாட்டிலே, அவ்வாறு இருப்பனவும், விரைவில் பழுதாகிவிடும் காலைநிலைத் தன்மைகளும் எம் தாயகத்திலே உண்டு. அரிதாக உள்ள உடைகளையோ காயப்போட்ட இடத்தில் கறையான் அரித்துவிடும் அல்லது

Page 14
24 స్క్రిణి பணம் பந்தியிலே!
களவு போகும்3 மாடும் தின்றுவிடும். மழைபெய்தால் கரும்பேன் பிடித்துவிடும். ஒரிரண்டுதரமான உடைகளுடன், காலம் கழிப்போம் என்றால் இப்படியான அவலங்கள் மாறிக் கட்டத் துணி இல்லையே, கந்தலும் இல்லையே என்ற வேதனைகள், ஆனால் மேலை நாடுகளில் வாழும் எம்மவர்க்கோ எதை இன்று அணிவது என்ற யோசனைகள், உடைகள் கிழியாமல் பழுதாகாமல் அப்படியே இருக்க, பாவித்தது போதும், இனி அதை எப்படி அப்புறப்படுத்துவது என்ற சிந்தனை ; அழகான தரமான சட்டைகள், சிறுவர்களுக்கு அளவில்லாமற் போக, வீசி எறியும் நிலைமைகள், தையலூசி எடுத்துத் தைக்க வேண்டிய தேவையற்ற நிலை , தாயகத்திலோ உடைகள் பழுதாகிவிட்டதென்றால் மாற்றுடை வாங்க வேண்டும் என்ற யோசனை ஆனால் இங்கோ மாதத்துக்கு மாதம் “மார்டல்” மாறும் போது உடை மாற்றங்கள், இவை எல்லாம் இயற்கையின் படைப்பு.
கொட்டிச் சிந்தும் உணவுகள் இங்கு கழிவுப் பொருட்களோடு சேர்ந்து மண்ணோடு மண்ணாகின்றன. ஏதாவது ஒரு ஜீவனின் வயிற்றுப்பசியை நீக்கிவிடாது குப்பை வாளிக்குள் போய் முடங்கிவிடுகின்றன. சிந்துகின்ற உணவுகளை உண்ண கோழியோ காகமோ இங்கில்லை, நாயோ பூனையோ இவ்வகை உணவுகளை உண்ணும் நிலையில் இல்லை, இவை இங்கு உயர்தினை உயிர்கள், இவைக்கென தயாரிக்கப்பட்ட விஷேட உணவுகள் உள்ளன. மனிதர்களுக்குச் சமமான மதிப்பு மேலை நாடுகளில் வளர்ப்புப் பிராணிகளுக்கு உண்டு. மேலை நாட்டில் நாய்க்கு உள்ள மதிப்பு ஏழை ஒருவனுக்கு இல்லை, தாயகத்திலோ சிந்துகின்ற உணவுக்காக, வீசப்பட்ட எச்சில் உணவுக்காகத் தவங்கிடக்கும் ஜீவன்கள் எத்தனை எத்தனையோ? அது
 
 

விக்னா பாக்கியநாதன் 25
மட்டுமா? பச்சைப் பசேல் என்று பசுமையுடன் இருக்கும் புற்றரையை மேயப் பிராணிகள் இன்மையால் பசும்புற்கள் வெட்டிக் கழிக்கப்படுகின்றன. மரத்தின் இலை குழைகள், எல்லால் மண்ணோடு மண்ணாக காற்றோடு காற்றாகப் பறந்து அழிந்துவிடுகின்றன இவற்றுக்காக ஏங்கி வாடும் ஆத்மாக்கள் தாய்நாட்டில் பற்பல. இவ்வாறன தன்மைகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது, பல உண்மையான தத்துவங்களை அறிய முடியும்.
இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் உலகம் மகிழ்ச்சியும் துக்கமும் நாணயத்தின் இருபக்கங்கள்
போன்றவை, இயற்கைத் தரையிலே வானுயர்ந்த மலை இருக்கும்; அதற்கு எதிர்மாறாக இன்னோர் இடத்திலே பயங்கர பள்ளத்தாக்கு இருக்கும் உலகில் எந்த ஒரு சக்திக்கும், எந்த ஒரு பொருளுக்கும் ஒரு எதிர்ப்பொருள், எதிர்ப்பியல்பு என்பன இருக்கின்றன என்பதே ஆணித்தரமான முடிவு.
தெய்வசக்தியில் கூட அதை எதிர்க்கும் எதிர்ச்சக்தியும் உண்டு. கிறிஸ்தவர்கள் அச்சக்தியை “சாத்தானின் செயல்” என்கிறார்கள், இந்துக்களோ அச்சக்தியை “பழைய ஊழ்வினை, கர்மவினை, முன் செய்த பழி,” என்றும் அதுதான் தமது முயற்சியை எதிர்த்துத் தடை செய்கிறது என நம்பிக்கை கொள்கின்றார்கள், இதைச் சிலர் “விதி” என்றும் சொல்கின்றனர், எது எவ்வாறு இருப்பினும், இறைசக்தியுடன் சவால்விடும் சக்தியும் உண்டு என்பது தெளிவாகிறது. இதை நாம் நம்பமுடியுமா? எனச் சிலர் அபிப்பிராயப்படலாம், கடவுள் ஒரு ஆக்கசக்தி . பரி பாலிக்கும் சக்தி என்று ஒன்று இருக்கும் என நாம் நம்பும்போது, அதை எதிர்க்கும் சக்தி என ஒன்று இருக்கலாம் அல்லவா? என்ற ஒரு கேள்வியை நமக்குள்ளேயே கேட்டால்

Page 15
هاسکند:
26 %2 பணம் பந்தியிலே!
அதற்கான விடைகளை ஒவ்வொரு மனத்துக்கும் ஏற்றபடி கண்டுபிடித்து விடலாம்.
எதிர்ப்புச் சக்தி நன்மையும் தரும்
எதிர்ப்புப் பொருள் திமைகளைத் தான் கொடுக்கும் எனக்கூற முடியாது. தீமையுடன் நன்மையும் அளிக்கவல்ல எதிர்ப்புச் சக்தியும் உண்டு. உதாரணமாக நோயால் பீடிக்கப்பட்டு வருந்தும் ஒருவரின் நோயை வைத்தியர் கண்டுபிடித்துவிடுகின்றனர். உடனே அந்த நோயை எதிர்க்கும் அல்லது அழிக்கும் சக்தி வாய்ந்த ஊசி மருந்தை ஏற்றி நோயாளியைக் குணப்படுத்திவிடுகின்றார். இங்கே வைத்தியர் பாவித்த எதிர்ச்சக்தி நன்மையையே அளித்துள்ளது எனலாம். சில வேளைகளில் சில நடவடிக்கைகளில் மனித முயற்சிக்கு எதிர்ச்சக்திகள், தடையும் சோர்வையும் ஏற்படுத்தி விடுவதும் உண்டு, இவற்றை மனத்துணிவுடன் வென்று வெற்றிகாண வேண்டும்.
எதிர்ப்புகளுக்கு அஞ்சி எடுத்த காரியத்தினை பாதியில் விடுவது பின்வாங்குவது; என்பது ஒருவனது ஆற்றலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது போலாகிவிடும். எதிர்ப்புகளுக்கு அஞ்சி மனம் சோர்வடையும் தன்மை மனிதர் எல்லோருக்கும் இருந்திருந்தால் எத்தனையோ மகான்கள், அறிஞர்கள், தேசபி தாக்கள், போர் வீரர்கள், தியாகிகள், தோன்றியிருப்பார்களா? ஆறுமுக நாவலர் கைக்கொண்ட கிறிஸ்தவ எதிர்ப்புணர்ச்சியாலே யாழ்ப்பாணத்தில் சைவ சமயம் பாதுகாக்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் நம்பிக்கைப்படி ஆதாம் - ஏவாள் என்ற முதல் மனிதர்களைப் படைத்த அன்றே தீயசக்தியாகிய சாத்தான் எனும் பாம்பும் படைக்கப்பட்டது. ஆகவே உலகம் தோன்றிய நாள்தொட்டு நல்லசக்தியும் தீயசக்தியும் ஆரம்பமாகியுள்ளன. இதனாலே தான் உலக இயக்கங்களில் இரு சக்திகளும் இணைந்து
 

விக்னா பாக்கியநாதன் 27
செயற்படுகின்றன, என்பதை நாம் நம்பவேண்டியுள்ளது.
எதியோப்பிய நாட்டில் கடும்பஞ்சம், பட்டினி ஐரோப்பிய நாடுகளின் மிகையுணவு. ஒரு நாட்டிலோ பயிர்ச்செய்கைக்கு நீர் இன்றியிருக்கும்போது உலகின் எங்கோ ஓர் இடத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து, குடிசைகளையும் பயிர்களையும் அழிக்கின்றது. ஒரு வீட்டில் பிறப்பின் கொண்டாட்டம் இன்னோர் வீட்டில் இறப்பின் அவலம். இறைவனால் உருவாக்கப்பட்டுள்ள இத்தன்மைகளுக்கு ஏற்ப வாழவேண்டியவர்கள் மனிதர்கள், ஏனைய உயிரினங்களும் அவ்வாறே தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கின்றன.
மனிதன் தனது ஆறாவது அறிவினால் இயற்கையின் சிற்சில தன்மைகளைத் தனக்கு அடிமையாக்கி வாழத் தெரிந்துவிட்டான். ஆனால் அனைத்தையும் அவனால் அடக்கி வாழ முடியாது என்பதும் உண்மை.
ஒரு தராசுத் தட்டைச் சமப்படுத்தும் சக்தி மனிதனுக்கு உண்டு. ஆனால் உலகின் ஏற்ற இறக்கம், நன்மை தீமை, உயர்வு, தாழ்வு, வறுமை, செல்வம், நோய், ஆரோக்கியம், பிறப்பு, இறப்பு எனப்பட்ட தராசுத்தட்டுக்களை அவனால் சமப்படுத்த முடியாது, ஏனெனில் அவனை மிஞ்சி ஒரு சக்தி இருக்கின்றது. அச்சக்தியே உலகெலாம் வியாபித்துள்ளது. அதுவே இறை சக்தி என்பது எல்லோரும் ஏற்றுக் கொண்ட உண்மை. அஞ்ஞானிகளும் மெய்ஞ்ஞானிகளும் எடுத்துக்கொண்ட ஏகோபித்த முடிவும் இதுவாகும். எனவே எதற்கும் “நான் நான்’ என்ற ஆணவத்தைவிட்டு, எமக்கு மேலுள்ள சக்தியால் தான் நாம் செயற்படுகின்றோம், வெற்றி பெறுகின்றோம் என்பதை எண்ணிவாழும் போது தெய்வபலம் என்றும் துணையாக இருக்கும்.

Page 16
28
முயற்சி வெற்றிக்கு வழி
இருவகை முயற்சிகள்
ஒன்றைச் செய்ய விரும்பும் எண்ணம் ஆனது இதயத்திலி ருந்து மூளை நரம்புகளுக்கு மின்சக்தியாகச் சென்றடைகிறது. உடனே மூளை தயாராகி, அதைப்போய்ச் செய்! என உடலுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றது. உடனே உடல் எழும்பிப்போய் அதைச் செய்துவிடுகிறது. இங்கே அந்த உடலியக்கமான செயற்பாடு முயற்சியாகின்றது. இந்த முயற்சியானது உடம்பு முயற்சி, அறிவு முயற்சி என இருவகையாகப் பகுக்கப்பட்டுள்ளது. அறிவு முயற்சியில் உணர்வோடு தொடர்புடைய அறிவு, இசை, இலக்கியம், மெய்யுணர்வு, கலை. என்பவை அடங்கும். உடலின் முயற்சி தொழிலாக உருப்பெறுகிறது. உடலுக்கு ஆதாரமான அடிப்படை முயற்சிகள், வாழ்க்கையை வளம்படுத்த விரும்பும் முயற்சிகள் என்ற இருபிரிவுக்குள் மனிதனது தொழிற்பாட்டை உள்ளடக்கிப் பார்க்கலாம்.
ஒருவருக்குத் தண்ணிர்த்தாகம் ஏற்படுகிறது. போகும் வழியில் கிணறும் வாளியும் காணப்படுகின்றன. தண்ணிரோ தெளிந்த நீராகச் சுத்த்மாகக் காணப்படுகின்றது. உடனே அவர் தண்ணீரை அள்ளி அருந்துகிறார். இங்கே அள்ளிப் பருகுதல் என்ற தொழிற்பாடு அல்லது முயற்சியை இவர் செய்து, தனது தாகத்தைப் போக்கிக்கொண்டார்.
 

விக்னா பாக்கியநாதன் 29
இந்தவகையான தொழிற்பாடுகள் உடலியக்கத்துக்குத் தேவையான மூலாதாரமான அடிப்படைச் செயல்பாடுகள் ஆகும்.
வாழ்வியல் ஆதாரங்களை விட வசதியான வாழ்க்கை வாழ ஒருவன் முயற்சி செய்து, அதாவது தொழில் செய்து சிவியம் நடத்த வேண்டியவனாகின்றான். மனிதனைத் தவிர்த்து மிருகங்களோ, ஏனைய பிராணிகளோ, தமக்குரிய உணவைத் தம் தேவைகளை இயற்கையிலிருந்தே ஏதும் உழைப்பின்றிப் பெற்றுக் கொள்கின்றன. மிருகங்களோ பறவைகளோ விதைகளை விதைப்பதும் இல்லை; விளைச்சலைப் பெறுவதும் இல்லை3 பழமரங்களை நாட்டுவதும் இல்லை, ஆனால் புற்களையோ, காய்களையோ, கனிகளையோ விரும்பிய மட்டும் உண்டு வாழ்கின்றன. ஆனால் சிந்தனை படைத்த மனிதன் தனக்கு வேண்டிய உணவுப் பொருளைத் தேட உடலுழைப்பைச் செலவழிக்கின்றான். விதை விதைத்து அறுவடை செய்கிறான். இருப்பிடங்களை உருவாக்குகிறான். இயற்கைச் சக்திகளைத் தனக்குச் சாதகமாக்கி, அல்லது தனக்கு அடிமையாக தனது சக்தியையும் இணைத்து வாழ முற்படுகிறான். இத்தகைய வாழ்க்கை சிறப்பாக அமைய அவனுக்கு வேண்டிய உணவு, உறையுள், உடை, மற்றும் ஆடம்பரத் தேவைகள் அவசியமாகின்றன. இவற்றைப் பெறுவதற்கும், நல்ல முறையில் பொருள் சேர்ப்பதற்கும் உழைப்பு, அல்லது முயற்சி தேவைப்படுகிறது.
முயற்சி செய்தால் கிடையாதது எதுவும் இல்லை எனலாம். ஒரு பொருளை எண்ணி அல்லது செயலை எண்ணித் திட்டமிட்டு இருப்பதனால் மட்டும் வெற்றிகிடையாது. முயற்சி செய்யவேண்டும்.

Page 17
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் முயற்சி திருவினையாக்கும். முயற்சியுண்டேல் இகழ்ச்சி இல்லை விடாமுயற்சி வெற்றிக்கு வழி. முயற்சி திருவினை ஆக்கம் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்
30 %2 பணம் பந்தியிலே!
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை அதாவது முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயற்பாடுகளுக்குக் காரணமாக அமையும், என்பதாகும்.
இக்கருத்தை விளக்கும் இன்னொரு குறள் 3
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும். கடவுளே! என்று கடவுளைக் கூப்பிட்டாலும் நடக்காத காரியம், ஒருவர் ஓயாத முயற்சியுடன் உழைக்கும்போது அது வெற்றியையே தரும் என்பதே இக்குறள் செப்பும் கருத்து.
வெற்றி-தோல்வி எனும் இரு மரங்கள்
உடலை வருத்தி உழைத்தால் நிச்சயம் வெற்றி உண்டு. வெற்றி தோல்வி என்பது மாறி மாறி வரும் தன்மை கொண்டது. ஒருமுறை தோல்வி வந்தால் மனம் சோர்வடையக்கூடாது. மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அதை அடைந்தே தீரவேண்டும் என்ற இலட்சியத்துடன் முயன்றால் வெற்றி நிச்சயம்.
தோல்வியையே தழுவுகிறோம் என இருந்துவிட்டால் வாழ்க்கையிலே முன்னேற முடியாது. வெற்றி-தோல்வி என்ற இரு மரங்கள் எல்லோரும் அடையக்கூடியதாக,
 

விக்னா பாக்கியநாதன் 31
எல்லோருக்கும் பொதுவாக, இறைவனால், பூமியிலே நாட்டப்பட்டுள்ளன. அந்த வெற்றி மரத்தை நாடி வேகமாக ஒடி முதலில் யார் தொடுகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.
இங்கே வெற்றி பெற்றவர் தன்னால் இயன்ற மட்டும் தனது சக்தியைப் பயன்படுத்தி முயன்றுள்ளார். எதிர்பார்த்தது கிடைத்தது. முயற்சியின்றி சோம்பி இருப்பவர் தோல்வி எனும் மரத்தைத்தொட்டுச் சோம்பேறித் தன்மையை அடைகின்றார். எனவே வெற்றி தோல்வி என்பது அவரவரது ஆற்றல், தன்மை, முயற்சி என்பவற்றைப் பொறுத்தே அமைகின்றன. so
ஒரு முறை வெற்றி பெற்றவர் மறு முறை தோல்வி அடையலாம். இவை எல்லாம் சாதாரணமானவை. முயற்சி செய்வது, செய்யாமல் விடுவது என்பது மனிதனுடைய மனத்தையும் சக்தியையும் பொறுத்தது. மனமிருந்தால் இடமுண்டு என்பது ஆன்றோர் மொழி. உடற்சக்தியும் சிந்தனைச் சக்தியும் மனிதனிடம் இருப்பதனால் முயற்சி செய்து வெற்றிபெற முடியும். எமக்குத் தெரியாது, எமக்கு அத்துறையில் நாட்டம் இல்லை என ஒதுங்கி இருந்தால் அப்படியே எல்லாம் ஒதுங்கிவிடும். ஏன் என்னால் முடியாது? ஒரு முறை செய்து பார்ப்போம். மனிதனால் முடியாது எதுவும் இல்லை, என்று இப்பூமியில் எதுவும் உண்டா? எனக் கேள்வி கேட்கும்போது சிந்தனை வெளிப்படுகின்றது. எனவே நம்மால் முடியும் என நினைத்து செய்ய வேண்டிய துறையில் மனம் நாட்டம் அடைய முயற்சிகள் செய்யும்போது பயன் கிடைக்காமற் போகாது. Lu (TG பட்டால் tu Gu)6öT உண்டு , 6! oổi t_1^\! முயற்சியுடையவனாகவே வாழ்! என்று போதிக்கின்றது.

Page 18
32 x2 பணம் பந்தியிலே!
சிலந்தியும் நொபின்சனும்
பிறந்த குழந்தை பேசாமல் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தால் எழும்பி நடக்க முடியமா? அது தவழ்ந்து பின் விழுந்து எழும்பி நடக்க முயற்சிக்கிறது. அதன் பின் அடிக்குமேல் அடி எடுத்து தளிர்நடை போட்டு, மெல்ல மெல்ல நடக்கிறது. பின்பு அது கைவந்த கலையாகி விடுகின்றது. பிறந்த அன்றே கன்றுக்குட்டி எழும்பி நடக்க முயற்சி செய்யவில்லையா?
முன்னொருநாள் எதிரணியுடன் தோல்வி தழுவிய ரொபின்சன் குரூஸோ என்ற மன்னன் சோர்வடைந்து ஒரு மரத்தின் கீழே இருந்தார். அவருக்கு மேலே சிலந்தி ஒன்று வலை பின்ன ஆரம்பிப்பதைக் கண்டார். சிலந்தி ஒரு கரையிலிருந்து பக்கக்கரையில் இணைத்து வலையைப்பின்ன முயன்றது. பல முறை தவறித் தவறிக் கீழே விழுந்தது. பின்னர் அச்சிலந்தி தொடர்ந்து முயன்று முதல்தரம் இரண்டாம்தரம் - மூன்றாம்தரம் என முயன்று ஏழாவது முறையாகவே அது வெற்றி பெற்று தான் நினைத்தபடி வலையைப் பின்னத் தொடங்கியது. இதைப் பார்த்த ரொபின்சன் குரூஸோ சிந்திக்கத் தொடங்கினார். இந்த அஃறினைப் பொருளான சிலந்தியே இப்படி முயன்று வெற்றி பெற்றதென்றால் நமக்கு ஏன் முடியாது? என்று கேள்வியைக் கேட்கத் தொடங்கினார். போருக்கான அணிகளைத் திரட்டினார். போரிட்டார்; 'வெற்றி பெற்று தன்னாட்சியை நிறுவினார் என்பது வரலாற்றுப்பாடம். இவையே எமக்குப் பாடமாக இருக்கிறதல்லவா? எனவே முயற்சி செய்து அதன் வழி எமது நோக்கத்தை நிறைவேற்றுவதில் வெற்றி நடைபோடுவோம்.
 

விக்னா பாக்கியநாதன் 33
/~7ട്ട്ല
ge
Daofg, சமுதாயத்துக்கு ஆதாரமான ஒரு பண்பாக
ஒற்மையே உயர்வு
ஒற்றுமை இருந்தால் அங்கே போட்டிகள், பொறாமைகள், ஈண்டைகள் , உயிரிழப்புகள் 6 ۔۔۔۔۔۔۔J gib Lu L— fT , g5 fr uiu சகோதரர்களிடையே ஒற்றுமை, குடும்பங்களிடையே ஒற்றுமை, சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, நாடுகளுக்கிடையே ஒற்றுமை, என்பன இருக்கும்போது, மனிதசமுதாயம் வளமான வாழ்க்கையே வாழும்.
ஒற்றுமையே இருவருக்குப் பலத்தைக் கொடுக்கிறது. ஒற்றுமையாக வாழ்வதால் நாம் பல நன்மையான காரியங்களை வெற்றியுடன் சாதிக்கலாம். காக்கை இனம் நமக்கு ஒற்றுமையின் தன்மையைப் போதிக்கின்றது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வு. ஒற்றுமையே உயர்ந்த பலம். என்றெல்லாம் அவை ஒற்றுமையின் முக்கியத்துவத்தை எடுத்தியம்புகின்றன.
நாடுகளிடையே பூசல்கள், அரசியற் போட்டிகள், விடுதலைப் போர்கள் , என்பன ஏற்படுவதற்கு அவற்றுக்குள்ளே சமரச ஒன்றுமையின்மையே காரணம்

Page 19
34 s స్ట్రేణి பணம் பந்தியிலே!
எனலாம். நாம் எங்கு வாழ்ந்தாலும் ஒற்றுமையுடன் வாழும்போது தான் நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும். சிறுவர்களாயினும், பெரியவர்களாயினும் ஒற்றுமையுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு துறையிலும் மக்களிடையே, அனைத்துப் பங்காளரிடையே ஒற்றுமை இருக்கும்போது அவர்களை எந்தச் சக்தியாலும் அழிக்க (pigtlist g5).
ஒற்றுமைக் குலைவு வாழ்க்கையின் சிதைவு
ஒற்றுமை என்ற செயற்பாடு எந்த ஒரு நடவடிக்கையிலும் இருக்கும்போது அந்த நடவடிக்கை ஸ்திரமானதாக அமையும். ஒற்றுமைப் பண்பின் வழியாக சமாதானம் என்ற சகிப்புத்
தன்மை என்ற குழந்தைகள் பிறக்கின்றன.
ஒற்றுமையை எல்லா இடத்திலும் கடைப்பிடிப்பது என்பது இன்று இயலாத காரியமாகிவிடுகின்றன. காரணம் மானிடர்களுக்குள்ளே ஒவ்வொரு மன இயல்பு, பண்பு படைத்தவர்கள் இருக்கிறார்களே. இவர்களை எல்லாம் ஒருமுகப்படுத்துவது கடினம். இருந்தும் ஒவ்வொருவரும் தத்தம் சிந்தனைகளால் உண்மைத் தன்மைகளை உணர்ந்து, வேற்றுமைகள் இருந்தாலும் அவற்றுக்குள்ளேயும் ஒற்றுமை காணுதலே சிறந்தது. -
உதாரணமாக நாம் வெளிநாடுகளில் ஐரோப்பியர் மத்தியில் வாழ்கின்ற போதிலே எம்மவரிடையே ஒற்றுமைப் பண்பு காலால் மிதிபடுவதைக் காண்கின்றோம். எம்மிடையே வேற்றுமைகள் இருந்தாலும் நாம் “ஈழத்தமிழர்” என்ற ஒற்றுமைக்குடைக்குள் வாழவேண்டும். இனம் இனத்தைச்

விக்னா பாக்கியநாதன் 35
சாரும் என்பதை நாம் மறக்கக் கூடாது. ஒற்றுமைக்குலைவு வாழ்க்கையின் சிதைவு என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளவேண்டும்.
ஐந்து விரல்களும் ஒன்றாக இணையும் போதுதான் ஒரு பொருளையோ, ஒரு வேலையையோ நாம் செய்யமுடியும். கட்டை விரலின் ஒற்றுமை, அதன் வலு, அதன் தொழிற்பாடு இல்லாவிட்டால் அக்கையால் ஒன்றும் செய்ய முடியாது.
ஒற்றுமையைக் கண்டு எதிரிகளும் அஞ்சுவார்கள். ஒற்றுமை மனிதநேயத்தை வளர்க்கிறது; ஒருவர் மீது ஒருவர் அன்பு கொள்ள வைக்கின்றது. உதவி செய்யவும், உதவியைப் பெறவும் ஒற்றுமை வழிவகுக்கிறது.
ஒற்றுமைப் பலத்தால், ஏகோபித்த ஒரே முடிவால் சாம்ராஜ்யத்தையே தம் காலடிக்குக் கொண்டு வரலாம். ஆயுதத்தால் ஒற்றுமையை வளர்க்க முடியாது. ஆதாரவால், பண்பட்ட அறிவால், அன்பால், பொறுமையால், சகிப்புத்தன்மையால், ஒற்றுமையை வளர்க்க முடியும்.
ஒற்றுமை மக்களிடையே உள்ள ஏழை-பணக்காரர், படித்தவர்-படியாதவர், உயர்வு-தாழ்வு என்ற பேதங்களை அகற்றிவிடுகின்றது. நாம் எல்லோரும் மனிதர்கள், தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற கருத்தை முன்வைத்த பாரதி ஒற்றுமைக்காகவும், தேசியத்துக்காகவும், மனித நேயத்துக்காவும் பாடுபட்டுப் பாட்டெல்லாம் எழுதிக் குவித்தமை நாமெல்லோரும் அறிந்ததே,

Page 20
36
பணம் பந்தியிலே ދޯނޑީ
சிறுவர்களுக்காக எழுதப்பட்ட ஒரு குட்டிக்கதையிலேயே பெரியவர்களுக்குப் போதனைகள் காணப்படுகின்றன. இதற்கு உதாரணமாக உள்ள ஒரு கதையை நோக்கின், ஒரு விறகுத்தடியை முறித்துவிட்ட ஒரு பிள்ளையைப் பார்த்து தந்தையார் ‘கெட்டிக்காரன், வெகு சுலபமாக முறித்துவிட்டாய்” எனக் கூறினார். பின்னர் ஐந்து, ஆறு தடிகளை ஒன்றாகக் கட்டி ஒரு கட்டாக்கிவிட்டு அதை முறிக்கும் படி கூறினார். அப்போது அவரது மகன் எவ்வளவு முயற்சி செய்தும் அந்த விறகுக்கட்டை அவன் முறிக்க முடியாமற் சோர்ந்து இருந்துவிட்டான். இந்தக் கதையிலே நாம் புரிந்து கொள்வது ஒற்றுமையின் அத்தியாவசியம் என்பதாகும். “அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்ற பழமொழி ஒற்றுமையின் தாற்பரியத்தை வெளிப்படுத்துகின்றன.
米米米

விக்னா பாக்கியநாதன் 37
LJaosfia, சகிப்புத்தன்மை, செருக்கற்ற தன்மை, போன்ற பண்புகளுடைய மனிதனின் மனம் எனும் விளைநிலத்திலே நல்ல சிந்தனைகளே, உயர்வான கொள்கைகளே முளைகொள்கின்றன.
பணிந்து நட! மனத்தால் துணிந்து செய்! இதனால் நன்மையான பலனையே எதிர்பார்க்கலாம்.
பணிபவனிடத்திலே துணிவு இல்லை என்பதல்ல. பணிவும் அவசியம் அதே நேரம் துணிவும் இருத்தல் வேண்டும். பணிவும் துணிவும் இருக்கும் ஒருவனின் எந்தக்காரியமும் தோல்வியடைய வாய்ப்பில்லை.
பணிவு என்ற பண்பு ஒருவனுக்குத் தன்னம்பிக்கையை வளர்த்துவிடுகிறது. பணிவினால் பல செயல்சனில் வெற்றி காணும் போது என்னால் எதையும் செய்ய முடியும் என்ற மனத்துணிவும் தன்னம்பிக்கையும் ஏற்படுகின்றன. ஆதாம் - ஏவாள் இறைவனின் கட்டளைக்கு கீழ்ப் படிந்து நடவாமையால் மரணத்துக்கு ஆளாவீர்கள் என்ற கருத்தின்படி தண்டிக்கப்பட்டார்கள் என்பது கிறிஸ்தவ சமயத்தின் தத்துவம்.

Page 21
هی
38 %2 பணம் பந்தியிலே!
翌
முதுமையின் அடையாளங்கள்
தன்னில் நம்பிக்கை இல்லாதவன் செய்ய முற்படும் எந்தச் செயல்களும் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. தன்னிலே நம்பிக்கை கொள்ளாமல் முதலில் எந்த ஒரு செயலிலும் இறங்கக்கூடாது. எண்ணித் துணிய வேண்டும். ஒன்றைச் செய்ய முற்படும்போது பல கோணத்திலும் சிந்தனையைக் கிளறிவிட்டு, அதனால் வரும் தாக்கங்கள் என்ன? என்பவற்றை ஆராய்ந்து, பின் ஒரு உறுதியான முடிவு எடுத்த பின்னரே அச்செயலில் இறங்கவேண்டும். அப்படியின்றி செயலில் இறங்கிய பின் பாதியில் முடியவில்லையே, எவ்வளவு கஷ்டங்கள் இன்னும் இருக்கின்றன என்று மனம் பயந்து, செய்த காரியத்தை அப்படியே விட்டுவிடுவதனால் ஏற்பட்ட நட்டம் பற்பல. மனக் குழப்பம், பொருள்நட்ட நேரவிரயம், எனப் பல.
துணிந்த பின் துயரம் கொள்ளாதே என்பது போல் பின்னால் ஏங்கி மனம் புண்ணாகி வாழ்வதனால் குறுகி ஆயுளோ இன்னும் மிகக்குறுகியதாகிவிடும். எனவே ஒருவனுக்குத் தன்னம்பிக்கை மிகவும் அவசியம். தன்னம்பிக்கை தான் ஒருவனுடைய மன ஊக்கத்துக்கு உற்சாகமூட்டும், ஒரு விற்றமின் மாத்திரையாக இருக்கின்றது.
தன்னம்பிக்கை மனதைத் தளர விடாது. இந்த தன்னம்பிக்கை வயது ஏற, ஏறக் குறைந்து வருவது இயல்பு என்று பொதுவாக எல்லோரும் நினைக்கின்றோம். காரணம்} தன்னம்பிக்கையை மனம் வளர்த்தாலும், ஒரு செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் உடலுக்கு இல்லை என்பதே பலரின் கூற்றாகும். இது முற்று முழுக்க உண்மை எனக் கூறமுடியாது.
 

விக்னா பாக்கியநாதன் 39
உடல் சோர்வடைய, உள்ளம் சோர்வடைய, தன்னில் நம்பிக்கை குறைய, ஞாபகசக்தி நரம்புகளின் வலிமை நலி வடைய ஆரம்பிப்பது வயது முதிர்ச்சியின் ஆரம்பம்.
எதிலும் பற்றற்ற தன்மை, ஒதுங்கிவிடும் தன்மை, தன்னில் நம்பிக்கைக் குறைவு, என்பன முதுமையின் அடையாளங்கள் தான். ஆனால் இவற்றை மனவலுவால் வெற்றி கொள்ளலாம் என்பது மனவியலாளரின் கருத்தாகும்.
உடல் தளர்ந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் உழைத்து இலட்சிய வெறியுடன் வெற்றி கண்ட மகாத்மா காந்தியை, இந்த உலகம் அறியாததல்ல, அதற்காக எல்லோரும் காந்தித் தாத்தாவாக வரமுடியும் எனக் கூறவில்லை. வயது சென்றாலும் ஏன் தன்னில் உள்ள நம்பிக்கையை இழக்க வேண்டும்? எனச் சிந்தித்து வாழ்க்கையிலே வெற்றி பெறவேண்டும்.
தன்னம்பிக்கையும் வயது வளர்ச்சியும் ஒன்றில் ஒன்று தங்கியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஏனெனில் இருபத்தெட்டு வயதில் ஒரு இளைஞன் தன்னம்பிக்கையுடன் செய்த செயல் ஒன்றை அறுபத்தெட்டு வயதில் அதே நம்பிக்கையுடன் அதே உற்சாகத்துடன் செய்து முடிக்க முடியுமா? என்பது கேள்விக்குறி. எனவே வயது ஏற ஏற உடலின் முதிர்வுக்கு ஏற்ப உடலின் இயக்கம் மாறுபடுவது போல் மனத்தில் உள்ள தன்னம்பிக்கையும் மாறி மாறி வரும் என்பது உடற்கூற்றின் இரகசியம் எனலாம்.
வயது வளர்ச்சிக்கு ஏற்ப தேவைகள் மாறுபடுகின்றன அத்தேவைகள் அந்தந்த வயதில் அத்தியாவசியமானவையாக

Page 22
40 3 பணம் பந்தியிலே!
இருக்கும். எனவே அத்தகைய தேவைகளில்
தன்னம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.
உடல் மூப்புக்கு ஏற்ப செயற்பாடுகளின் தீவிரம் குறைவடைகின்றது. இவ்வாறு தீவிரம் குறைந்த செயற்பாடுகளில் தன்னம்பிக்கை கொண்டு செயற்படுத்த முனைவது வயது சென்றோர்க்குக் கடினமாக இருக்கின்றது. கடினம் என எண்ணாமல் எதனையும் தன்னம்பிக்கையுடன் செய்ய வேண்டும். இவ்வாறான மனப்பான்மை இருக்கும்போது மற்றவர்களின் கையையே எந்நேரமும் எதிர்பார்க்கும் ஒரு இக்கட்டான நிலை எமக்கு ஏற்படாது.
பணிவு பயம் அல்ல
பணிவு என்பது பயந்த குணம் என எண்ணுதல் கூடாது. அதாவது தன்னம்பிக்கை இல்லாமல் ஒருவருக்கு கீழ்ப்படிந்து அவர் தலைமேல் பொறுப்பையோ வேலையை ஒப்படைப்பதுவும் பணிவுக்குச் சமமாக அமைகிறது. ஆனால் ஆண்டவனுக்குப் பக்தன் பணிவது, ஆசிரியருக்கு மாணவன் பணிவது, முதலாளிக்குத் தொழிலாளி பணிவது, பெற்றோர்க்குப் பிள்ளை பணிவது, கணவனுக்கு மனைவியும் மனைவிக்குக் கணவனும் பணிவது, குருவுக்குச் சீடன் பணிவது என்பதெல்லாம் மரியாதை கலந்த சகிப்புத்தன்மை கொண்ட ஒரு உயர்ந்த குணமாகும். பணிவுக்கும் பயத்துக்கும் தொடர்பே இல்லை. பணிவு எங்கு இருக்கிறதோ அங்கு குணம் இருக்கும். குணம் இருக்கும் இடத்தில் ஆண்டவன் குடியிருப்பான்.
米米米
 

விக்னா பாக்கியநாதன் 41
6) ITTர்த்தையை அளந்து பேசு! இனியசொற்களைப்பேசு! என்று எத்தனையோ பெரியவர்கள், அறிஞர்கள் வலியுறுத்திச் சென்றுள்ளனர். அவற்றை இன்றைய உலகம் கடைப்பிடிக்கின்றதா?
யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பார் சொல்லிழுக்குப்பட்டு என்றார் வள்ளுவர்,
நன்கு காக்கவேண்டிய எவற்றையுமே பாதுகாக்காது விட்டாலும் அவரவர்கள் தத்தம் நாக்குகளை, அதாவது வார்த்தைகளைக் காத்துக்கொள்ளத் தவறினால், சொற்குற்றத்துக்கு அல்லது கொட்டிய வார்த்தைக்கு குற்றவாளியாகத் துன்புறுவர் என்பதே மேற்காட்டிய குறளின் சுருக்கமான பொருளாகும்.
வாபஸ் பெறமுடியாத வார்த்தைகள்
நாவ்ை அடக்கு! அளந்துபேசு! எதிர்வார்த்தை பேசற்க! நாக்கு நீளுதல் கூடாது, நாக்குப் பிறழ்தல் கூடாது, வாக்குப் பி சகாதே! வார்த்தை தவறாதே என ஆன்றோரும் அனுபவப்பட்டோரும் கூறுவதெல்லாம், ஒருவர் பேசும் வாக்கு, பேச்சு என்பவற்றையே குறிக்கின்றது.

Page 23
42 స్ట్రేణి பணம் பந்தியிலே
ஒருவரின் வாக்கால் அதாவது வார்த்தைகளால் வாழ்க்கையே சீர்குலையும் நிலைமையும் உண்டு. அவதானமின்றிக் கொட்டிய வார்த்தைகளும், அவதானமின்றி விழுந்து சிதறிய கண்ணாடியும் ஒன்றே. சிதறிய கண்ணாடித் துண்டுகளால் ஆபத்துண்டு. அவற்றை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர முடியாது. அதே போல் கொட்டிய வார்த்தைகள் கூரிய கத்தி போன்றது. இந்த வார்த்தைகளை மீள உள்வாங்க முடியாது. நடந்தது நடந்தது தான் உள்ளத்தைச் சுட்டது சுட்டதுதான். அந்த வார்த்தைகளுக்காக ஒருவர் மன்னிப்புக் கோரினாலும் வார்த்தைகளை வாபஸ் பெற முடியாது. தீயினாற் சுட்ட புண் காலஞ் செல்லச் செல்ல ஆறிவிடும் ஆனால் மனித நாவினால் சுட்ட தழும்பு உயிருள்ளவரைக்கும் இருக்கும். அது ஒரு போதும் மாறாது. இதனையே வள்ளுவர்,
“தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாது நாவினாற் சுட்டவடு’ என்றார் வள்ளுவர் பெருமான்.
அடி, உதைகளை ஒருவர் ஒருவாறு தாங்கிக் கொள்ளலாம். அவைமூன்று நாட்களுக்குள் மாறிவிடக்கூடும். ஆனால் வார்த்தைகளால் அடிக்கும் அடி இருக்கிறதே? அது உள்ளத்தையும் பாதித்து அதன்வழி உடலையும் பாதித்து விடும்.
ஒருவரைப் பற்றித் தூற்றல், இழித்துரைத்தல், அவதூறாக ஏ சுதல் 6 T 6ö7 LJ 6:07 இன்னொருவரின் மனதைக் கொடியமுறையில் புண்படுத்துகின்றன. கடிய வார்த்தைகள்,
 

விக்னா பாக்கியநாதன் 43
கடுஞ்சொற்களை நாளாந்தம் ஒருவர் கேட்டுக் கொண்டே வந்தால் அவரது மனம் அடுப்பில் வைத்த குழம்பாகக் கொதித்துக் கொண்டிருக்கும். தன் சுயமரியாதை அகன்று ஊரினின்றும் கடத்தப்பட்ட நிலை போன்ற உணர்வு ஏற்படும்.
குடும்பங்களுக்கு இடையே பலத்த வாக்கு வாதங்கள், கடுஞ்சொற்கள், மிரட்டல் வார்த்தைகள் என்பன நாளாந்தம் தொடர்ந்து கொண்டே இருந்தால் அது நரகம் ஆகும்.
கிரியையும் பாம்பையும் ஒரு கூட்டில் அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்?
வாழ்க்கையில் இடி முழக்கம் air மழை போலக்கண்ணிர், வார்த்தையும் வாழ்வும் அதுபோலவே.
ஒரு சிறிய வார்த்தையால் அறிஞர்களும் மன்னர்களும் தடுமாறித் தலை கவிழ்ந்த சரித்திரம் உண்டு.
நீதிபதியின் வார்த்தையிலே தான் குற்றவாளி - நிரபராதி என்ற தீர்ப்பு அமைந்துள்ளது.
நீதிபதியின் வாக்கில் நீதி வாழ்கிறது. நீதி தவறினால் யாவும் நிர்மூலம். வைத்தியர் ஒருவர் கடும்நோயாளியைப் பார்த்து இப்போது பரவாயில்லை என்று கூறிய இருவார்த்தை அந்நோயாளிக்கு ஆரோக்கியத்தை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
அன்பான வார்த்தைகளால் அனைத்தையும் செய்யலாம். தாயின் அன்பான வார்த்தை சேய்க்கு ஆனந்தத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கின்றது.

Page 24
44 %2 பணம் பந்தியிலே
స్త్ర
தட்டிக்கொடு
ஆசிரியரின் வார்த்தை மாணவனின் மனோநிலையை நிர்ணயம் செய்யும். “ஒன்றும் புரியாதமொக்கு’ என்று ஆசிரியர் நாளாந்தம் திட்டினால் மாணவன் ஒருவன் பாடசாலைப் பக்கம் போகவே விரும்பமாட்டான். தனக்கு ஒன்றும் தெரியாது என்ற தாழ்வு மனப்பான்மை நிற்கும்போது, ஆசிரியனின் அந்தக் கடுஞ்சொல்லே மாணவனின் எதிர்காலத்தைத் தீர்மானித்து விட்டதல்லவா? மந்த புத்தியான பிள்ளையைத் தட்டிக் கொடுத்து, இன்னும் முயற்சி செய்ய வேண்டும், கெட்டிக்காரப் பிள்ளையாக வருவாய்! என்று ஒரு மாணவனுக்குச் சொன்னால் அம்மாணவன் காலஞ்செல்ல செல்ல திறமையான மாணவனாக மாறிவிடுகின்றான். இதைத்தான் தட்டிக்கொடு என்று சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன? அவனது முதுகைத் தட்டி விடுவதா? இல்லையே, அன்பான வார்த்தைகளால் அவனது மனதைத் தட்டி உற்சாகப்படுத்துவது ஆகும். ஆசிரியர் மாணவர்களுக்கு மட்டும் தான் இது பொருந்தும் என்பதல்ல.
கணவன் - மனைவி, தாய்-பிள்ளை, தந்தை-பிள்ளை, விரோதிகள் நண்பர்கள், முதலாளி-தொழிலாளி, வைத்தியர் - நோயாளி அரசியல்வாதி - குடிமகன் என எல்லோருக்கும் அவசியம்.
கடுஞ்சொல் கலக்கிவிடும்
கண்ணம்மா என் காதலி என்னும் தலைப்பின் கீழ் “வார்த்தை தவறிவிட்டாய் கண்ணம்மா! என் மார்பு துடிக்கிறது” என்று பாரதியார் காதல் ஏக்கத்தை
 
 

விக்னா பாக்கியநாதன் 45
வெளிப்படுத்துவதை ஒரு கணம் நோக்குக. மார்பு வேகமாகத் துடித்தால் மரணத்தில் போய் முடியும். வார்த்தையைக் காப்பாற்றாமையால் வந்தவினை இது என்றல்லவா? கூறமுடியும்.
ஏன்? ஒரு ஐந்தறிவுள்ள மிருகமான நாயைக் கடுஞ்சொல்லால் மிரட்டினால் எப்படி பயந்து சோர்ந்து, பதுங்கி ஒதுங்குகிறது? என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. அதே நாய்க்கு அன்பான வார்த்தைகளால் அமைதியான, அன்பான தொனியில் சொல்லும்போது, வாலை ஆட்டிக் கொண்டு இனிய இராகத்தில் ஊளையிட்டு எஜமானின் மேல் துள்ளிக் குதிக்கின்றது.
இந்த ஐந்தறிவுள்ள நாய்க்கே கடுஞ்சொல் கலக்குகிறது என்றால் ஆறறிவுள்ள சிந்திக்கத் தெரிந்த மனித மனதுக்கு எப்படி இருக்கும்? ஒருவர் வாயிலிருந்து பிறக்கும் இனிமையான வார்த்தைகளுக்கும், கடுமையான வார்த்தைகளுக்கும் காரணம் என்ன?
நாக்கு ஒன்றுதான். அது ஏன் மாறி மாறி இரண்டு பக்கமும் பிறழ்கிறது?
பேசுவோனின் மனோநிலையே இதற்குக் காரணம்
கோபம், பொறாமை, வெறுப்பு, சகிப்புத்தன்மை இன்மை என்பவை ஒரு மனதில் இருந்தால் வன்சொற்களே வாயிலிருந்து உதிர்கின்றன. சந்தோஷம், அமைதி, நிம்மதி, பொறுமை, அன்பு என்பன ஒருவரின் மனதில் இருக்கும்போது இதமான இன்சொற்கள் இதயத்தில் ஊற்றெடுத்து வாய்வழி வெளிப்படுகின்றன.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப்பிற

Page 25
46 ¥ޖޯޑް பணம் பந்தியிலே!
எனும் குறள் அடக்கமான பண்பும், இனிய பேச்சுமே ஒருவனின் அணிகலன் என விளக்குகிறது. நிதானம் இருந்தால் நியாயங்கள் மனதில் தோன்றும். கோபம், ஆத்திரம், என்பன மூளையையும் உடலுறுப்புகளையும் அதிரச் செய்கின்றன. நரம்புகள் புடைக்கின்றன. மனத்துக்குள்ளே பூகம்பம் உருவாகின்றது. அதனாலே வன்சொல் என்னும் திக்குழம்புகள் வார்த்தைகளாகப் புறப்பட்டு, கேட்போனைத் தாக்கி, அவன் மனதைச் சுட்டெரித்துவிடுகின்றன. அது பின்பு அடி-பிடி, வெட்டுக்கொத்து - கொலை என்ற முடிவினுக்கே போய் தான் குளிர்வடைகின்றன. இந்த நிலை அறிவு படைத்த மனிதனுக்கு அவசியமா?
தனது அறிவாலே தன்னைத்தானே பாதுகாக்க ஒருவனுக்குத் தெரியாதா? பகுத்தறிவு என்பதை ஆண்டவன் மனிதனுக்குத்தானே கொடுத்தான்! ஏன் கொடுத்தான்?
எண்ணித் துணிவதற்கு, வருமுன் காப்பதற்கு, எல்லோரும் இன் புற்றிருப்பதற்கு, தன்னைத்தானே உணர்வதற்கு என்றல்லவா? மனிதனுக்கு மட்டும் இந்த மகத்தான அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான்.
இந்த அறிவைச் சரியாகப் பயன்படுத்தி வாழ்பவனே மனிதன். மற்றவர்கள் மனிதருள் மிருகம். ஏனெனில் உருவத்தில் மனிதனேயொழிய செயலால் அவன்மிருகமே.
இன்றைய இராட்சதர்கள் மனித உருவத்தில் தான் உலவுகிறார்கள். அவர்களை இனங்காண்பது ஒவ்வொருவரின் தன்மையையும், அறிவையும் பொறுத்தது என்றார் ஒர் அறிஞர்.

விக்னா பாக்கியநாதன்
கோபத்தை அடக்கு சினத்தைத் தணி!
ஆத்திரக்காரனுக்குப் புத்திமட்டம்
என்றெல்லாம் கூறுவது ஏன்? கோபம் ஒருவனின் மதியை மறைத்து விடுகிறது. கோபத்தினால் எல்லாக் காரியங்களும் தவிடு பொடியாகின்றன. ஒருவனின் கோபம் அவனையும் பாதித்து, மற்றவனையும் பாதிக்கச் செய்கிறது.
திடீர்க்கோபத்தினால் குலைந்த இராச்சியங்கள் பல3 அவசரப் புத்தியால் உளறிய வார்த்தைகளால் உருக்குலைந்த மகான்கள் எத்தனை பேர்? இருபாதையில் கலைந்து சென்ற குடும்பங்கள் பற்பல. கொலைகள் பல. முனிவர்களின் சினத்துக்கு ஆளாகிச் சாபம் பெற்றவர் பலர், இதற்கு இந்து சமயப் புராணக்கதைகளே சான்று பகர்கின்றன.
குணமெனும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேனும் காத்தல் அரிது
என்கிறது திருக்குறள்.
ஒரு முனியின் கோப, சாப வார்த்தையால் பாண்டு கலவியின் போது உயிர்துறந்தான் என்கிறது பாரதம். வசிட்ட முனிவரின் கோபத்தால் அகலிகை கல்லானாள். கெளசிகனின் கோபத்தால் கொக்கு சாம்பலானது என்று முனிவர்களின் கோபவார்த்தைகளால் ஏற்பட்ட பரிதாப நிலைகள் பலவுள.
கோபம் தொடர் பகையாகும்
கோபத்தால் ஏற்படும் அதிர் நடவடிக்கைகளால் மனவிரோதம், வெறுப்பு, ஏற்படுமேயன்றி நன்மையான

Page 26
48 >2 பணம் பந்தியிலே!
காரியங்கள் எதுவும் ஏற்படா. கொழுந்துவிட்ட நெருப்பு பின் அனைதல் வேண்டும். அணைந்த பின் கிடைப்பது வெண்சாம்பல். ஏதோ சில மணிகளில் நெருப்பு அணைந்தே திரும்.
கொதித்தெழுகின்ற கோப உணர்வு பேயாட்டம் ஆடி, தட்டிக் கொட்டி, கூத்தாடிய பின் இறுதியில் அமைதி யடைகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தின், அட்டகாசத்தின் விளைவால் மிஞ்சுவது மனக்கசப்பு, பொருட்கள் சேதம், பகை, கொலை இப்படிப் பட்டியல் நீளும்.
நெருப்பினால் கிடைத்த சாம்பல் பின் மண்ணோடு மண்ணாகிறது; மறைந்துவிடுகின்றது.
ஆனால் கோபம் தொடர் பகையாக சந்ததிக்குச் சந்ததி வளர்ந்து வரும். அதாவது தாத்தாவுக்குப் பகையாளி பேரனுக்கும் பகையாளி ஆவது உண்மை.
கோபத்தால் செய்யக்கூடாதவற்றைச் செய்துவிட்டு, பின் அதற்காக மனம் வருந்தி, நிம்மதியற்று வாழும் நிலையும் ஏற்படும். எனவே கோபம் ஒருவருக்கு ஏற்பட்டால் அதைத் தனக்குத்தானே அடக்கி நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். கோபம் என்பது மனிதனை மிருகமாக்கிவிடும் ஒரு உணர்வு. கோபத்தால் ஒருவர் ஆக்ரோஷம் கொள்ளும்போது, மற்றவரும் பதிலுக்குப் பதில் சாடினால் அது எரிகிற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றுவது போலாகும்.
ஒருவர் கோபத்தை மற்றவர் பொறுத்துப் பொறுமையாக இருக்கும் பெருந்தன்மை இருந்தால் கோபம் கொழுந்துவிட இடம் இருக்காது.
 

விக்னா பாக்கியநாதன் 49
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்
இல்லறத்துணைகளுக்குள்ளே கோபம், பிரச்சினைகள் காணப்பட்டால் அது போர்க்களம். கடிவாளம் இல்லாக் குதிரை போன்றது. குடும்பம் குடும்பமாக இராது. குழந்தைகளும் திசை மாறிப் போக வாய்ப்புண்டு.
வளமான மண்ணிலே, பாதுகாப்பான துழலிலே, நல்ல பராமரிப்பிலே தான் இளஞ்செடிகளை, தாவரங்களை, பூங்கன்றுகளைச் செழிப்பாக வளர்த்து நல்ல பயனைப் பெறலாம். அது போன்ற நல்ல குடும்பச் சூழலில் ஆதரவான அன்புச்சூழலில், வளர்க்கப்படும் பிள்ளைகளே பிற்காலத்தில் பிறர் போற்றும் படி வாழ்ந்து, பெற்றோருக்கும், பிறந்தநாட்டுக்கும் புகழைத்தேடிக் கொடுப்பார்கள். நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம். இது எவ்வளவு
gd GöOT GOLD.
எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் இல்லாமையின் கொடுமை தெரியாது. உள்ளவன் இல்லாதவனாகும் போது தான் வறுமையின் கொடுமையை உணர்வான். நிழலின் அருமை வெயிலிற் தெரியும். அனுபவம் தரும் படிப்பைவிட வேறு எந்த அறிவும் மேலானதல்ல. சொல்லித் தெரிவதைவிட அனுபவப் பட்டுத் தெளிவது உயர்ந்தது. தனக்கு வந்தால் தெரியும் , என்பதெல்லாம் அனுபவ அறிவையே சொல்கின்றன.
கடும்வார்த்தைகளைச் செவிமடுக்கும் ஒருவனின் மனநிலை எப்படி வேதனைப்படும் என்பதை அனுபவித்தால்தான் அறியமுடியும். எனவே அளவான வார்த்தை இனிமையான பேச்சு, கனிவான சொல், என்பன கடுங்கோபக்காரனையே

Page 27
50 قیچ பணம் பந்தியிலே
--سســـــــســــــــسسســـــــــــــــــــــــــــــــــــــــــــ سمعیشت
கட்டுப்பாட்டுக்குக் கீழ் கொண்டுவரும் ஆற்றல் பெற்றவை. நல்ல இனிமையான சொற்கள் இருக்கும் போது கடுஞ்சொற்களைப் பேசுவது, பழத்தை ஒதுக்கிவிட்டுக் காயையே விரும்பி உண்ணுவது போன்றதாகும். இதனையே வள்ளுவர்.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய் கவர்ந்தற்று
என்றார்
முகம் மலர்ந்து இனிய சொற்களை ஒருவருடன் பேசுவது. அகம் மகிழ்ச்சியோடு ஏதோ ஒரு பரிசை அன்பளிப்பாகக் கொடுப்பதைவிட மேலான மகிழ்வையே கேட்போருக்குக் கொடுக்கும். இனிய பேச்சு கேட்போனுக்கு இன்னுணர்வைக் கொடுக்கும்போது, உடலிலுள்ள எல்லா அணுக்களும் அதை அனுபவிக்கின்றன. இதனால் அகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியின் உந்துதலை முகம் பளிச்சிட்டுக் காட்டுகிறது. முகம் பிரகாசம் பெறுகிறது. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இதை அடிப்படையாக வைத்தே தோன்றியிருக்க வேண்டும். உள்ளத்திலே உவகை உண்டானால் உடலரோக்கியம் உறுதிபெறும் என்பது மாறாத உண்மை.
அளவான பேச்சு வளமான வாழ்க்கைக்கு வழி!
米米米

விக்னா பாக்கியநாதன் 51
நீர்க்குமிழிகள்
சேகவும் பிலாத்துவும் இங்கே!
உண்மைக்கும் நேர்மைக்கும் இன்று காலம் இல்லை. உத்தமனாக வாழ்வதற்கு இடம் இல்லை. உத்தமனாக வாழவேண்டும், நேர்மையாக வாழவேண்டும் என்று நினைப்பவன் உபத்திரவப்படுகின்றான். ஏனெனில் இவ்வுலகம் பொய்களையும் , ւյU` 6ff) * 60) 6T պւb ஏமாற்றுவித்தைகளையும், சுயநலத்தையும், தற்பெருமையையும் இன்னும் பல இழிவான செயற்பாடுகளையும் கொண்டே இயங்குகிறது. இந்த கொடும்பிடிக்குள் அகப்பட்ட உலகத்தில் ஒருவன் உத்தமனாக நீதி-நேர்மையுள்ளவனாக எப்படி வாழமுடியும்?
கோவில், அலுவலகங்கள், பதவி வாய்ப்பு, கல்வி நிலையங்கள், என்பவற்றில் ஊழல்கள், பொய்மை நிலவும் போது உத்தமனாக வாழ நினைப்போரும் உண்மைக்கு மாறாக நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படிகிறது.
நெற்பயிருக்குள்ளே பயனற்ற களைகளும் வளர்கின்றன.
ஜேசுவின் தீர்க்கதரிசிகளுக்கு இடையே தான் ஜேசுவைக் காட்டிக் கொடுத்த பிலாத்துவும் இருந்தான்.

Page 28
52 %2 பணம் பந்தியிலே
நன்மைக்குள் தீமையும் இருப்பது உலகநியதி.
பிறருக்குத் தீமை செய்யாமல் வாழ்வோம் என்று வாழ்வோரை உலகம் வாழவிடாது. உதவி செய்ய நினைப்பவருக்கு உபத்திரவங்கள் வந்து சேர்கின்றன.
அபலைப் பெண்ணென்று ஏதும் இயன்ற உதவிகளை அவளுக்குச் செய்ய நினைக்கும் ஆடவருக்கு அவப்பெயர் துட்டிவிடும் இவ்வுலகம். அவன் பணக்காரனாயின் அது அற்பமாகிவிடும். ஆதரவற்ற குழந்தை ஒன்றை ஒரு கன்னி பராமரித்து வளர்த்து, அதற்கு உதவி செய்தால், தப்பாகப் பெற்ற பிள்ளை என்றொரு பட்டம் அவளுக்குக் கிடைக்கும். உதவி செய்யப்போய் கிடைக்கும் சாபக்கேடு இவை. நம்பி ஒருவனுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்தால் இன்று நம்வீட்டு விடயங்களும், காரியங்களும் ஊர் முழுவதும் அம்பலமாகிவிடும்.
கடன் கொடுத்தவன் படும்பாடு
பல நாட்களாகப் பண உதவி கேட்டுத் திரிந்து, ஒருவாறு பணத்தைக் கடனாகப் பெற்றபின் ஒருவர் திருப்பி அதைக் கொடுப்பதில் நூறுகேள்வியும் வெறுப்புக்குணமும்; அதனால் காலதாமதம். பணம் கொடுத்தவர் பயந்து ஒதுங்கித் தானே கடனாளி போல் மாறி, தான் கொடுத்த பணத்தை வேண்டிட பணிவுடன் பல நாள் அலைச்சல்.
இது தான் இன்றைய நிலை பணம் வாங்கியோருக்கோ
இன்று தென்பு வந்துவிடுகிறது. “அடிக்கடி பணத்தைக் கேட்டு வருகிறீர். தருவேன் என்று சொன்னாற் தருவேன் தானே,’

விக்னா பாக்கியநாதன் 53
என ஒரு சமாதானப் பேச்சு. மேலும் தொந்தரவு கூடினால் பணம் வாங்கியதற்கான பற்றுச் சிட்டு, அல்லது அத்தாட்சிப் பத்திரம், பொறப்புகள் எதுவும் இல்லை என்றால் கொடுத்தவர் பாடு திண்டாட்டம் “எப்போ பணம் தந்தீர்? தராவிட்டால் என்ன செய்வீர்?’ என்று பலமான மிரட்டலான கேள்விகள்.
பணம் கொடுத்தவர் வாய்மூடி மெளனியாக, பணத்தை இழந்து, வாங்கியோருக்கு வசதி எப்போது வருமோ? அது வரைக்கும் பொறுமையைக் கடைப்பிடிப்பதே, தன் சொந்தப் பணத்தை மனமிரங்கி இன்னொருவருக்கு கொடுத்தமைக்குரிய இன்றை பிரதிபலன் இது, மேலும் சிலர் கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெறுவதற்காக, கோபத்தை அடக்கி அவர்களுடன் அன்புடையவர்கள் போல் பழகி, அவர்களுடைய சுக துக்கங்களில் பங்குகொண்டு பணத்தை மீளப் பெற முனைகின்றனர். இவ்விடயத்தை நோக்கும்போது ஒரு நல்லவன் போலி அன்புடன் அவர்களோடு அளவளாவி வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஏனெனில் சூழ்நிலை அப்படி.
பணம் கொடுத்தவரோ அதை வேண்டுவதற்கு நாளாந்தம் அலைகின்றார். பணம் வேண்டியவரோ வீட்டிலிருந்தவாறே பதில் சொல்லி அனுப்புகிறார்.
கொடுத்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்கு இக்காலத்தில் பொறுமை, மெளனம் என்பதைத் தவிர வேறு ஆயுதங்கள் இல்லவே இல்லை.

Page 29
54 ¥> பணம் பந்தியிலே!
இன் னைறய உலகில் சிலர் புண்ணியவான்கள், தர்மதுரைகள் போல், பாரிவள்ளல் போல், ஏழை மக்களுக்கு வாரி வழங்குகிறார்கள். இவர்களுக்குப் பணம் எப்படி வந்தது? அது கறுப்புப் பணம். கறுப்புப் பணத்தில் கொஞ்சம் உதவு செய்தால் செய்த பாவத்தைச் சமப்படுத்தும் என்பதுதான். வழித்தேங்காயை எடுத்துப் பிள்ளையாருக்கு உடைத்தது போலத்தான் இது. ஆனாலும் எப்படிக் கிடைத்தால் என்ன? அது பிள்ளையாரின் தண்ணீர் தாகத்தைத் தீர்த்துவிடுகிறதாம். இது அவர் நம்பிக்கை. அதுபோல பணத்தை எப்படி உழைத்தாலும் அவற்றிற் சிறுபங்கை ஏழைகளிடம் போய்ச்சேரச் செய்வதும் ஒருவித பரோபகாரம் தான். ஏழைகள், அகதிகள், அனாதைகள் உதவிக்கெனப் பணத்தைச் சேகரித்து, தம் வீட்டுத் தேவையை நிறைவு செய்பவர் மகாபாதகர்கள். சும்மா இருந்து கொண்டு, போலி வேடம் போட்டுச் சொகுசாக வாழ நினைக்கும்
சோம்பேறிகள்.
62unciau6291 dô (Souss66) Unrif
வாயால் வீரம்பேசி, பணத்தில் மிதப்பதாகப் பறைசாற்றும் பேர்வழிகளும் எம்மிடையே இல்லாமல் இல்லை. வீட்டில் ஓர் வேளைச் சோற்றுக்குப் பணம் இல்லை. ஆனால் வாய்ப் பேச்சால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் கொடுப்பதாகப் பறைசாற்றுவர். குடிசைகளையே கற்பனைக் கதைகளால், வாய்வீரத்தால் மாளிகையாக்கிவிடுவர். அவர் பேச்சினால் வயிற்றில் உள்ள பிள்ளையும் தானாகப் பிறக்கும். ஏனெனில் வாய்வன்மை. இவர்கள் வீட்டிலே அல்லாடிக் கொண்டிருப்பார்கள் 3 தம்மதிப்பைத்

விக்னா பாக்கியநாதன் 55
தளரவிடாதவர்போல் தடல் புடல் பேச்சுக்கள் பேசுவர். நிலைமைக்கு மீறிய, தகுதிக்கு அப்பாற்பட்ட திட்டங்களையும் போடுவர். பின் பணப்பளு அழுத்த, கடன் கேட்டு வீடுகள் ஏறி இறங்குவர். இவர்கள் ஒரு வகை.
தம்மிடம் எதுவித வெள்ளைச் சல்லியும் இல்லாத போதிலும் அதைக் காட்டிக் கொடுக்காமல் கடன்பட்டாவது, வட்டிக்குப் பணம் எடுத்தாவது ஆடம்பரமாகத் தமது கெளரவத்தைக் காப்பாற்றும் நடிகர்கள். அதாவது போலிக் கெளரவத்தினர். இவர்கள் தம்மிடம் வேறொரு நண்பன் கடன் கேட்டு வந்தால், உண்மையிலே தம்மிடம் இல்லாதபோதிலும், தமது கெளரவத்துக்காக, பணக்காரன் என்ற தன்னை நினைக்க வேண்டும் என்பதற்காக, இவர் வேறொருவரிடம் வட்டிக்குப் பணம் எடுத்துக் கொடுக்கும் போலிப் பரோபகாரர் இவர்கள்.
வறட்டுக் கெளரவம், தன்னிலையைத் தக்கவைததல, என்பவற்றுக்காக தன்னை ஒறுத்து பிறர் பார்வைக்காக பிறருக்காக வாழும் மக்கள் இன்னொரு இரகம், வரவுக்கு ஏற்ற செலவு செய்யாமல் பணம் இருக்கும் போது தண்ணீர் போல் செலவு செய்துவிட்டு, மற்றவர்களிடம் பல்லிளித்து கடன் வாங்குவர் சிலர். வருவாய்க்குத் தக்க செலவு செய்யாதவர்களின் வாழ்க்கையில் என்றும் விடிவு கிடையா. அன்றாடப் பசிக்கு ஐயா! அம்மா! என போவோர் வருவோர்களிடம் கை நீட்டிப் பணம் வேண்டிய சில பிச்சைக்காரர்களை மாலையிலே படத்தியேட்டரில் பல்கனியில் சிலவேளை பார்க்கலாம். விலையுயர்ந்த

Page 30
56 ஜி பணம் பந்தியிலே!
சிகரட்டில் வளையமாய்ப் புகைபோகும். பணத்துக்காக
இவர்களது நாடகம் இப்படி நடக்கிறது.
நடிப்புச் சுதேசிகள்
சமூக உதவிப் பணம் வேண்டுவோர் சிலரிங்கே அது இல்லை; இது இல்லை3 என்று முறைப்பாடு செய்து பிடியாயிருந்து பணத்தை பெற்றிடுவர்.
தாம் பெற்ற பிள்ளைக்கு என பாடசாலைப் புத்தகத்துக்குப் பணமில்லை; வீட்டில் உடைந்த கண்ணாடியைப் போட பணமில்லை. அதற்கும் சமூக உதவியையே எதிர்பார்ப்பார். பின்னர் அவர்தம் கொண்டாட்டங்களில் அவர்களைப் பார்க்கும்போது நகைகளின் அலங்காரத்தால் மாரியம்மனும் தோற்றுவிடுவாள். தரமுயர்ந்த புடவை வகைகள், அணியலங்காரங்கள் பலவிதம். பணம், இருந்தாலும் அதை முக்கிய தேவைக்காகப் பயன்படுத்த விரும்பாமல் சும்மா வரும் பணத்தை எதிர்பார்த்து அதில் இன்பம் அடைந்து, பணத்தைச் சேர்த்து வரும் வகையினரும் எம்மிடையே உள்ளனர். இவர்கள் இருந்தும் இல்லாதவர் போல் வாழும் நடிப்புச் சுதேசிகள். பணம் படுத்தும் பாடுகளில் இவர்களும் ஒரு
வகையினர்.
பணம் என்று இரவு பகலாக அதையே எண்ணிச் சேர்த்து வங்கிகளில் போட்டு நிம்மதியடைவர். பணப் பேதலிப்பால் பாசமுள்ளோரிடையேயும் நுணுக்கமாகக் கணக்குப் பார்ப்பர். பணம் பெருகப் பெருக அவர்களுக்குக் குதூகலம். ஆனால் அப்பணத்தை எடுத்துத் தாம் விரும்பியவற்றுக்குச் செலவு செய்ய மனம் ஒருப்படார். பணம் வங்கியில் இருக்கிறது.
 

விக்னா பாக்கியநாதன் 57
ஆனால் அவர்கள் விரும்பும் பொருளை வாங்கி அனுபவிக்க  ைகயிற் பணம் இல்லை. இங்கே பணமிருந்தும் இல்லாதோராக வாழும் நிலையாகும். தமது தேவையை நிறைவேற்ற வேண்டிய நேரத்தில் பயன்படுத்தாத பணம் ஏன் இனி அவர்களுக்கு? அப்பணமோ அவர்களுடன் கூடப்போகாது. இறுதியில் அப்பணத்தை அனுபவிக்க இன்னொருவர் வருவார்.
சிறுகச் சிறுகச் சேர்த்த பணம் சிதறிப்போகும் என்பதை அவர்கள் கண்டார்களா? வைக்கோற் பட்டடை நாய் போன்றதே இவர்களின் தன்மை.
பாடுபட்டுத்தேடியப் பணத்தைப் புதைத்து வைத்தவர்கள் அதை அனுபவிக்காமலே மண்ணுக்குள் தாமே புதைந்த கதை எத்தனை? எத்தனையோ? கூடுவிட்டு உயிர் போனபின்
பணத்தால் என்ன பயன்?
கற்பாம். மானமாம்? பணத்துக்காகப் பதிவிரதைகளும் பாதை மாறிவிடுவதுண்டு. மழலையை வளர்க்க தாய்மை தவறுவது சிலவேளைகளில் பணத்துக்காகவே. இதை எமக்குச் சினிமாப் படங்கள் எடுத்துக் காட்டுகின்றன. பணத்தாலே தான் ஆலயங்கள் இயங்குகின்றன. காசேதான் கடவுளடா!
அந்தக் கடவுளுக்கும் இது தெரியுமடா!
米米米

Page 31
58
சில்லறை - செல்லாக்காக
LIGOTLð தான் மனிதன், மனிதன் தான் ப்ணம் என உருவகப்படுத்திப் பேசும் அளவுக்குப் பணம் மனிதனுடன் ஒன்றிவிட்டது. ஏழை ஒருவன் ஏதும் செய்ய வகையற்று, வசதியற்று, இருந்தானாகின் அவன் செல்லாக்காசு, சாதாரண மக்கள் பணமின்றி அந்தஸ்தில் ஒருபடி குறைந்திருந்தால் அவர்கள் எல்லாம் சில்லறைகள் ரொக்கப்பணம் அல்ல. இந்தச் சில்லறைகளுக்கு எல்லாம் நாம் நேரம் ஒதுக்க முடியாது, முதலிடமுடியாது என்பது பெரும்புள்ளிகளின் கணக்கு. ஆனால் சில்லறைகள் ஒருகாலம் பல்லக்கிலும் ஏறிவரும் என்பதை அறியாது நடக்கும் கொள்கையாளர்கள் பாவம் அறிவிலிகள். சில்லறைகள் எனப்பட்டோர் தன்னலம் கருதாது தியாக வாழ்க்கை வாழ்ந்து, பின் கல்லறையில் வாழ்ந்தும் வணக்கத்துக்குரிய பேறு பெற்றுள்ளார்கள். இப்பேறு பெரும்புள்ளிகளுக்குக் கிடையாது. சிலவேளை பெரும்புள்ளிகள் கரும்புள்ளிகள் குத்தப்பட்டு சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்டமைக்கும் சான்றுகள் உள்ளன.
ஏற்றமும் தாழ்வும் என்றும் ஒருபக்கமே இருப்பதில்லை. இளமையும் துடிப்பும் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே. இன்று ஒருவரிடத்தில் உள்ள பணம் இன்னொரு நாள் மற்றவரின் கைக்கு மாறும்.
பணம் பெட்டியிலிருக்கிறது. புட்டிப் பாலுக்கு அழும் குழந்தைக்குப் பணத்தைத் போத்தலுக்குள் வைத்து
 

விக்னா பாக்கியநாதன் 59
ஊட்டலாமா? இல்லை. பணம் பாலாக மாறவேண்டும். அது இன்னொருவரின் கைக்குப் போக வேண்டும். இப்படிச் சதா சுற்றிக் கொண்டு, கைக்கு கை மாறிக் கொண்டு இருக்கும் பணத்துக்கு மக்கள் படும்பாட்டுக்கு அளவே இல்லை. காரணம், மனிதனை இயக்குவது பணம் தான் என எண்ண வேண்டியுள்ளது.
பணம் மனிதனுக்கு, வாழ்க்கைக்கு அத்தியாவசியம்தான். ஆக் பணத்துக்காக வாழ்க்கை என்பதல்ல. வாழ்க்கை வாழ்வதற்கே பணம் தேவை. பணத்தைத் தேடுவதும், பாதுகாப்பதும், கணக்கு பார்ப்பதும், என ஒருவன் வாழ்வானேயாகில் அவனது வாழ்க்கையின் அர்த்தம்தான் என்ன?
பணப்பித்து நோய்
ஒருவன் கஷ்ட துன்பம் இன்றி தனது ஆதாரத் தேவைகளை நிறைவேற்றி, பிறர் பயன்படுமாறு வாழ்வதற்கு ஒரளவு பணவசதி அவனிடம் இருக்க வேண்டும். இதை யாவரும் விரும்புவது பிழை அல்ல. ஆனால் உலக வங்கிப் பணம் முழுவதும் தன் காலடிக்குக் கிழ் வரவேண்டும் என்று கனவு காண்பதும், காசு மரத்தில் காய்க்க வேண்டும் என ஏங்குவதும், அதன் நினைவாக வாழ்வதும் "பணப்பித்து" என்ற நோய்க்கு அகப்பட்ட ஒருவனாக மாறிவிடுகின்றான். அல்லது பணப்பேய் அவனைப் பிடித்து ஆட்டுகிறது என்பது வழக்கில் உள்ள மொழியாகும்.
பிறர் பழிக்காது நேர்மையான முறையில் பணத்தைத் தேட வேண்டும். தேடிய பணத்துக்கு ஏற்ப தமது செலவுகளை வகுத்துக் கொண்டால் வாழ்க்கைப் படகு இன்பமாகப் பயணம் செய்யும். பணத்தைப் பல வழிகளில் தேடலாம். நாம் குறிப்பிடப்படுவது மற்றவர்க்குப் பாதிப்பு இல்லாமல்,

Page 32
60 %2 பணம் பந்தியிலே!
تصنع
பழி பாவத்துக்கு அஞ்சி, நேர்மையான வழியிலே பணத்தை தேடவேண்டும். அவ்வாறான பணத்தைக் கொண்டு தான் மகிழ்ச்சியான, குதூகலமான இல்வாழ்க்கையை வாழ முடியும்.
இப்படியானவர்களுக்கு பகைவர்கள் இருக்க மாட்டார்கள். அடுத்துக் கெடுப்பவர்கள் அணுக மாட்டார்கள். இவர்களைக் காட்டிக் கொடுக்க முயலமாட்டார்கள். இவர்களைக் கண்டு பொறாமைப் படமாட்டார்கள். காரணம் நல்ல முறையில் பணம் தேடியமை, மற்றவர் புண்படாமல் பணத்தைத் தேடியமை என்பதாலாகும்.
போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.திருப்தியே நிறைந்த செல்வம்.
பணம் வாழ்க்கைக்கு அவசியம். ஆனால் வாழ்க்கையே பணமாகக் கூடாது. நல்ல மனத்துடன் நல்ல வாழ்க்கையாக மலர வேண்டும்; பணம் தம்மிடம் இருக்கும் போது நல்மனதுடனே நிலையான காரியங்களைச் செய்ய வேண்டும். ஏழைகளுக்குத் தருமம் செய்ய வேண்டும்.
“செல்வம் இல்லாதவர் வறுமைத் துன்பம் ஒன்றினால் மாத்திரமா, துன்பம்? அத் துன்பம் மூலமாகச் செல்வர்! வீட்டுவாயிலை நோக்கிச் செல்லுதற்றுன்பமும், அவரைக் காணுதற்றுன்பமும், கண்டாலும் அவர் மறுத்தபோது உண்டாகுந்துன்பமும், மாறாத விடத்தும் அவர் கொடுத்ததை வாங்குதற்றுன்பமும், அதனைக் கொண்டு வந்து போசனத்துக்கு வேண்டுமவைகளைக் கூட்டுதற்றுன்பமும் முதலிய பல துன்பங்களாலும் நாடோறும் வருந்துவர்" என்கிறார் நாவலர் பெருமான்.
 

விக்னா பாக்கியநாதன் 61
ഉ ഇഖ്ബt
உறவுகள் யாவும் ஒன்றி வாழ்வதும், ஒருவரில் ஒருவர் தங்கிவாழ்வதும், நம்பி வாழ்வதும் ஆகிய வாழ்க்கையும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையும் இன்று மலையேறிவிட்டது. விஞ்ஞான வளர்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, அறிவு முன்னேற்றம், தொழில் விருத்தி என்பன அபரிதமாக முன்னேறிவர, கூட்டுக்குடும்பங்களும், ஒன்றி வாழ்ந்த குடும்பங்களும், பிரிந்து, பரந்து வாழ வேண்டிய கட்டாயம் இன்று உருவாகியுள்ளது. கல்வி வசதி கருதியும், தொழில் வாய்ப்புக் கருதியும் இன்று தனிநபர்களும் குடும்பங்களும் பிரிந்து, பரந்து வாழ்வதை நாம் காணக் கூடியதாயுள்ளது. காலத்தின் தேவைகருதி இவை யாவும் இன்றைய எம் சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது.
புளியம்பழமும் அதன் ஒடும் போல
தாய் தந்தையர், பிள்ளைகள், சகோதரர்கள், பெரிய தாய், சிறிய தந்தை, மைத்துனர்கள் , என்ற இரத்த உறவுகளுள்ளேயும், விஞ்ஞானம், தொழில் நுட்பம், பொருளாதாரம், என்பன உட்புகுந்து உறவுகளுக்குள்ளே பெரும் பிளவை ஏற்படுத்துவது மனவேதனைக்குரிய விடயமாகும்.

Page 33
62 %2 பணம் பந்தியிலே!
எமது நாட்டைப் பொறுத்தவரை விடுதலைத்தாகம் காரணமாக நடந்து கொண்டிருக்கும் போராட்டம் நிமித்தம் பல உறவுகள் பிரிந்து சிதறி வாழ்வதெல்லாம் நாம் கண் கூடாகக் கண்ட உண்மைகள். இவ்வாறு புலம் பெயர்ந்து வாழும் 6ாம் மினத்தவர்களதும் அவர்தம் சந்ததியினர்களினதும் உறவுமுறைகள் இங்கு வெளிநாட்டைப் பொறுத்தவரை "புளியம் பழமும் அதன் ஒடும்" போலவே இருக்கின்றன. இதற்குக் காரணம் வெளிநாட்டுக் கலாச்சாரம், வாழ்க்கை முறைகள் என்பவற்றையே முக்கியமாகக் குறிப்பிடலாம்.
பணிவு, அடக்கம், பெரியோர் சொற்கேட்டு நடத்தல், பெற்றோரின் பேச்சுக்கு மதிப்புக் கொடுத்தல், என்பன மேலைநாட்டில் ஒரு குறிப்பட்ட வயது வரையுமே உண்டு. இப்படியான சூழலில் வாழும் எமது பிள்ளைகளுக்கும் இந்தப் பண்பு அவர்களுடன் ஒட்டிவிடுகின்றன. எனவே நாம் எமது பண்பாட்டையும், நாம் சிறுவயதில் வாழ்ந்த வாழ்க்கை முறைகளையும் பெரியோர்களுக்கு மதிப்புக் கொடுத்து, அவர்களுக்கு அடங்கி நடந்த பண்புகளையும் இன்று இங்குள்ள எமது சந்ததியினரிடம் எதிர்பார்க்கும் போது, எமக்கு ஏமாற்றமே கிடைக்கின்றது. இதனால் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் பெரிய விரிசல் ஏற்படுவதை எம்மால் ஜீரணிக்க முடியாமல் உள்ளது.
மேலைநாட்டில் வாழும் எமது இனத்தவர்கள் தம்மால் இயன்றவரை எமது கலாச்சாரப்படி வாழ்ந்து, தமது சந்ததியினரை அவ்விதமே பயிற்றுவிக்க விரும்புகிறார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்கான சிலரும் வாழ்கிறார்கள் என்பதையும் மறுக்க முடியாது. அவசர வாழ்க்கை,
 

விக்னா பாக்கியநாதன் 63
இயந்திர வாழ்க்கை, வெளிநாட்டுச் சட்டதிட்டங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள் என்பனவும் எம்மவர் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைப் பிடித்து, ஆக்கிரமித்துக் கொள்வதும், உறவுகளின் பிரிவுக்கும் காரணம் எனலாம்.
தாய் தந்தையர்களுக்கு அடங்கி வாழ்ந்து மதிப்பளிக்கும் பிள்ளைகளையும், மாமா, சிறிய தந்தை, ஒன்றுவிட்ட சகோதரர்கள் என இரத்த உறவுகளில் அன்பு கொள்ளும் சிறுவர்களையும் இங்கு காண்பது அரிதாகியுள்ளது. பொதுவாகவே பிள்ளைகள் பெற்றோர் சகோதரர்களில் வைக்கும் அன்புக்கே இன்று வறுமை ஏற்பட்டுள்ள தென்றால் இதைவிட வேறுதுன்பம் ஏது? எல்லாம் காலத்தின் கோலமா? அல்லது பைபிள் கூற்றுப்படி உலக அழிவின் இறுதிக் கட்டத்தின் அடையாளங்களா? என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.
தாய் ஸ்தானம் மட்டும் உண்டு.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், அன்னையே கண்கண்ட தெய்வம், என்று கடவுளுக்கு இணையாக உயர்வளிப்பதும், அன்னையைப் போலொரு தெய்வம் உண்டோ என்று எண்ணுவதும், தாயில்லாமல் நானில்லை; தாயன்பு கடைகளில் கிடைக்காது . என்றும் உள்ளார்த்தமாக மனதில் உருகி, தாயைப் போற்றுவதும், ஆகிய உயர்ந்த பண்பை இனிவரும் எம் சந்ததியினரிடையே காணமுடியாது. வெளிநாட்டைப் பொறுத்தவரை இப்படியான பேச்சுக்கே இடமில்லை. குழந்தை பெறும் பொறுப்பு, ஒரு பெண்ணிடம் மட்டும் இருப்பால் தாய் ஸ்தானம் மட்டுமே இங்கு உண்டு. தெய்வம், கடவுள் தன்னை ஒறுத்துத் தாய் வாழ்தல், தனக்கு இனி எல்லாமே பிள்ளைகள் என்று எண்ணாமை, குழந்தை

Page 34
64 *தி பணம் பந்தியிலே!
வளர்ப்பில் கணவனும் பங்கேற்றல், ஆண்-பெண் இருவரும் சரிநிகர் சமானம் என்ற நிலைமைகள் இங்கு இருப்பதால் அன்னைக்குரிய தனிப்பாசம், தனிமதிப்பு, என்பன அறவே கிடையாது எனலாம்.
இச்சூழலில் வாழும் எம்மினச் சிறார்களுக்கும் இத்தன்மைகள் அவர்கள் அறிந்தோ அறியாமலோ அவர்களிடம் தொற்றிக் கொண்டு விடுகின்றன. எனவே இப்படியான இப்புதிய சந்ததியினரிடமிருந்து, எமது அன்றைய பழக்கவழக்கங்களை எதிர்பார்க்க முடியாமல், சிறுவர்கள் பக்கமே தலைசாயும் பெற்றோர்களாக வாழும் கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
சிறுவர்களைக் கண்டிக்க முடியாது
சிறுவர்களை அடித்துத் திருத்தி, தண்டனை கொடுத்து எமது விருப்பப்படி வாழ வைக்கமுடியாது. சிறுவர்களுக்கு அடித்தல், தொந்தரவு செய்தல், வேதனைப்படுத்துதல், என்பன சட்டப்படி பெருங்குற்றமாகக் கருதப்படுகின்றது. ஒரளவுக்கு உலக அனுபவம் பெற்ற பன்னிரண்டு வயதுப்பிள்ளை தனது பெற்றோரின் துன்புறுத்துதல் பொறுக்காது ஊர்காவலருக்கு (போலீஸ்) முறைப்பாடு செய்யுமேயானால், பெற்றோர்களே குற்றவாளியாகக் கருதப்பட்டு அபராதம் கட்ட வேண்டி வரும்.
சிலவேளை இங்குள்ள குழந்தைகள் பராமரிப்பு நிலையத்தில் வளர்ப்பதற்கு அரசு பொறுப்பேற்று விடும். அதாவது பிள்ளையின் விருப்பம் அறிந்து அதன் வேண்டுகோட்படி அரசு நடவடிக்கை எடுக்குமே தவிர பெற்றோரின் வேண்டுகோளையோ விருப்பத்தையோ

விக்னா பாக்கியநாதன் 65
எதிர்பார்ப்பதில்லை. இத்தகைய சுதந்திரம் இங்கு வாழ் பிள்ளைகளுக்கு இருக்கும் போது நாம் அவர்களிடமிருந்து எமது பண்பாட்டை எதிர்பார்ப்பது முயற்கொம்பே.
சிறுவர்கள் உலகம் இவ்வாறு ஒரு புறம் இருக்க, நமது நாட்டில் பண்பாடு, நம் மரபுகளுடன் ஊறி வளர்ந்த பெரியவர்களிடமும் உறவுகளின் விரிசல் இல்லாமல் இல்லை. இது மேலைநாட்டு வாழ்க்கை முறை படிப்பித்த பாடம் என்றும் சொல்லலாம். இங்கு கணவன்-மனைவி, பிள்ளைகள் என்ற மூன்று ஸ்தானங்கள் மட்டும்தான் உறவுகள். மற்றைய இரத்த உறவினர்கள் அந்நியர்களே.
குடும்பம் என்ற வட்டத்துக்குள் வாழும் தாய்-தந்தை. பிள்ளைகள், என்ற மூன்று உறவுகளும் தான் முக்கியம். இவர்களுக்குள் தகராறு, பிரச்சினை இல்லாமல் இருந்தால் சரி. மற்ற இரத்த உறவுகள் பற்றி அக்கறை இல்லை. அவர்கள் அந்நியர் போல மதிக்கப்படுவதால் உதவி செய்ய வேண்டுமென்றோ, அவர்களிடமிருந்து உதவிகள் கிடைக்கும் என்றோ எண்ணுவதே இல்லை. தான் தன் குடும்பம் வாழ்ந்தால் சரி. என்ற குறுகிய வட்ட வாழ்க்கைச் சக்கரத்தில் வாழ்க்கை ஒடிக் கொண்டிருக்கிறது. தனது வேலைகள், பிரச்சினைகள் தவிர மற்றவர்கள் பிரச்சினைகளில் ஈடுபட்டு, மற்றவர்களுக்காக நேரம் ஒதுக்கி, அவர்கள் துன்பத்தில் பங்கு கொள்வதற்கு இங்குள்ள அவசர வாழ்க்கை இடம் கொடுக்காமை, இப்படியான பண்பாட்டுப் பிறழ்வுக்கு மூலகாரணம் தான் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

Page 35
66 స్ట్రేణి பணம் பந்தியிலே!
„წ.
தாய் பிள்ளைக்குப் பாரமா?
ஒரு குடும்பத்தில் கணவனது பெற்றோரோ மனைவியினது பெற்றோரோ அவர்களுடன் இணைந்து வாழ்வது பெரிய பாரமாக உள்ளது. ஒரு குழந்தையைச் சராசரி 3400 கிராம் வரையுள்ள பாரத்தைப் பத்துமாதம் வரை சுமந்த தாய் வயோதிபமானதும் அப்பிள்ளைக்கே பெரிய சுமையாக, பாரமாக இருக்கிறாள் என உதாசீனம் செய்யப்படும் கொடுமையான ஒரு காலகட்டத்தில் வாழ்கிறோமே என நாளாந்தம் வேதனைக் கடலில் மூழ்கிடும் நிலையே உண்டு. பெற்ற தாயைப் பாரமாக நினைத்து, அச்சுமையைப் பிள்ளைகள் பங்கு போடும் கொடிய காலமிது. ஏன் இந்தக் கொடுமை?
தன் மனைவிக்குப் பயந்து பெற்ற தாயைப் பராமரிக்க அஞ்சுவதும், தாயின் கடமைகளைப் புறக்கணிப்பதும், தாயை ஒதுக்குவதுமான ஒரு பண்பற்ற தன்மையை இங்கு சொந்த அனுபவ ரீதியாகக் காணக்கூடியதாகவுள்ளது. இங்கு அகதியாக வந்து, பின் தஞ்சம் கோரியவர்கள், வதிவிட உரிமை பெற்று, வசதிபடைத்து, வீடுகள் வாங்கி இடாம்பீகமாக வாழ்கின்றனர். ஆனால் அவர்கள் வாங்கிய வீட்டிலே பெற்ற தாய் குடியிருக்க உரிமையில்லை. ஒருவர் கருவாக இருக்கும் போது தாயானவள் தன் கர்ப்பப் பையில் குடியிருத்திப் பத்துமாதம் பேணிக் காத்து, ஒரு மனிதனாக உலகுக்கு அறிமுகப் படுத்தினாள். இந்த மனிதனான மகன் வாங்கிய சொந்த வீட்டில் தாய்குடியிருக்க இடம் உரிமை கொடுக்காத கொடியவர்களும் எம்மத்தியில் வாழ்வதை எண்ணும்போதும் காணும்போதும் நெஞ்சம் குமுறுகிறது.
 

விக்னா பாக்கியநாதன் 67
அன்பு, பாசம், உரிமை, பொறுப்பு என்பன எல்லாம் இங்குள்ளவர்களைப் பொறுத்தவரையில செல்லாக் காசுகள். காலாவதியான சட்டங்கள் என்றே கூறலாம். ஒருவர் துன்பத்தை மற்றவர் கண்டு சகிக்காமை, தாய் சகோதரர் துன்பத்தில் தாமும் பங்கு கொள்ளாமை, நமக்கென்ன? அவரவர் சொந்த விடயங்கள்; அவர்களே அனுபவிக்கட்டும் என்ற கல்மணப் பண்பு, இரக்கமற்ற இதயம், தானும் தன் பாடும் என்று அழிவை நோக்கிச் செல்லும் மனித மற்ற, நிம்மதியற்ற, வாழ்க்கையே வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தோரின் அன்றாட வாழ்க்கைப் பாடமாகிவிட்டது.
பொருளாதாரம் பொங்கி வழியும் நாட்டில் வாழ்பவர்களுக்கு மற்றையோரை அண்டி வாழ வேண்டிய அசவசியம் இல்லை. மற்றவர்களை எதிர்பார்க்கத் தேவையில்லை. பணம் இருந்தால் எல்லாவற்றையும் வாங்கலாம். தாயன்பைத் தவிர சகலத்தையும் தனதாக்கும் உரிமை பணத்துக்கே உண்டு. இத்தகைய தாயன்பு கூட இங்கு வெறுப்புக்குள்ளாகின்றது என்றால் மனித சமுதாயத்தின் வளர்ச்சி எங்கே போய் கொண்டிருக்கின்றது? எனச் சொல்லத் தேவையில்லை. "தானாடாவிட்டாலும் தசையாடும்" என்று கூறுவதெல்லாம் இங்குள்ளோரைப் பொறுத்தவரையில் கேலிக்கூற்று ஆகிவிட்டது. ஒரு இளந்தாயின் துன்பம் கண்டு பதினெட்டு வயது, இருபது வயதுப் பிள்ளைகளோ தாமும் வேதனைப்படுவதைக் காண்பது அரிது. ஏனோ அம்மா கவலையாக இருக்கின்றார், கவலைப்பட்டு மனதைக் குழப்புவது அவரின் மடமை என்று தத்தம் அலுவல்களில் ஈடுபடுவதையே நாம் காண்கின்றோம். இதை எதிர்நோக்கிய அந்த இளந்தாயின் உள்ளக் குமுறல்

Page 36
68 x2 பணம் பந்தியிலே!
எப்படியிருக்கும் என்பது பற்றிச் சொலல வேண்டிய அவசியம் இல்லை. இந்த பிள்ளைகள் தாயான தான் வயோதிபப் பருவம் அடையும்போது எப்படி? தன்னைப் பராமரிப்பார்கள் என்று நம்பிக்கையினம் கொள்கின்றாள். தாமும் தங்கள் குடும்பம் வேலை என்று போய்விடுவார்கள் என்று இப்போதே அந்த இளந்தாய் மனம் எண்ணி, வயோதிபத்தில் பிள்ளைகளை எதிர்பார்க்காத அவர்களை நம்பி வாழாத மனப்பக்குவத்தை இப்போதிலிருந்து வளர்த்துக்கொள்ள ஆரம்பிக்கின்றாள். எதிர்பார்த்து ஏமாறுவதைவிட இப்போதே பிள்ளைகளை நம்பியிருக்கக் கூடாது என்று திடமான முடிவு எடுத்து, தன் பிற்காலத்துக்கு என்று சேமிப்புச் செய்ய முயல்கின்றாள். இது எமது பண்பாட்டுப் பாரம்பரியத்துக்கு ஒத்துவராவிட்டாலும் நிச்சயம் ஏற்றுக் கொண்டு, தம்மைத் தயார் படுத்த வேண்டிய இக்கட்டான ஒரு சூழ்நிலை இது. இங்குள்ள புலம் பெயர்ந்த எம்மக்களது அனுபவங்களைக் கொண்ட கணிப்பீடு இவை என்று சொல்வதில் மறுப்பில்லை.
பிள்ளைகளுக்கு இசைந்துவிடும் பெற்றோர்
எமது நாட்டுப் பழக்க வழக்கப்படி, அன்புத் தொடர்பின்படி, பாசப்பிணைப்பின்படி பிள்ளைகளே பெற்றோரின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் என்றும், அவர்களின் ஆதரவு நிழலிலே தமது வயோதிபக் காலத்தைக் கழிக்கலாம் என்றும் எண்ணிய காலமெல்லாம் இங்குள்ளவர்களைப் பொறுத்தவரை, எம்மவர்களைப் பொறுத்தவரை அருகி மறைந்து கொண்டே வருகின்றது எனச் சொல்லமுடியும்.
 

விக்னா பாக்கியநாதன் 69
பிள்ளைகளைத் தமது எதிர்பார்ப்பின்படி வளர்க்கும் வளர்ப்பு முறைகளும், தாம் நினைத்தபடியே பிள்ளைகள் செய்ய வேண்டும் என வற்புறுத்துவதும் , தமது விருப்பத்தையே பிள்கைகள் நிறைவேற்றவேண்டும் என எண்ணுவதும் இங்கே வழக்கொழிந்துவிட்டன. மாறாக பிள்ளை கனின் எண்ணங்களுக்கும், அவர்களின் அபிலாசைகளுக்கும், அவர்களின் நடவடிக்கைகளுக்கும் ஏற்ப பெற்றோர்கள் விருப்பமின்றி தம்மை இசைவாக்கிக் கொள்கின்றார்கள். தமது விருப்பத்துக்கு மாறாக, பிள்ளைகளின் விருப்புக்கு ஏற்ப, கையறுந்த நிலையில் சம்மதம் கொடுத்து, ஆதரவளிக்க வேண்டிய கட்டாய தழ்நிலையை இன்றைய உலகம் அறிமுகப்படுத்திவிட்டது. இங்கே இருசாராருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லையானால், குடும்பம் நரகமாக மாறிவிடும் என்பதையுணர்ந்த பெற்றோர்கள், பிள்கைளின் தீவிர உணர்வுகளுக்கும், முயற்சிகளுக்கும் முன்னிற்க முடியாது என எண்ணி அவர்களின் வழிக்கே தாமும் செல்வது விசித்திரமாகத் தோன்றுகின்றது.
ஆனால் இது காலத்தின் தேவை. விஞ்ஞானம் தந்த வளர்ச்சி, கணினியுகம் என்பவற்றால் மனித நேயம் மறைகின்றது. என்னால் எல்லாம் முடியும் என்ற தற்பெருமை வளர்ந்துவிட்டது. கடவுள் எங்கே இருக்கிறார்? என்ற நாத்திகக் கொள்கை முளைவிட்டுச் செடியாக, மரமாக வளர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நாத்திகம் என்ற மரநிழலில் இளைப்பாறும் இன்றைய மக்களுக்கு எங்கே மனிதாபிமானம், மனிதநேயம், என்ற பண்புகள் உருவாக முடியும்? "உலகே மாயம்; வாழ்வே மாயம்" என்ற திரைப்படப் பாடல் வரிதான் நிதர்சனம்.

Page 37
70 ¥9ދޯ பணம் பந்தியிலே, SL شk
இல்லற இணைவு
மேலை நாடுகளில் இல்லறம் என்பது தற்காலிக ஒரு ஒப்பந்தமே தவிர ஏழு பிறப்பும் தொடரும் பந்தம் அல்ல. விவாகரத்து, தாய் அல்லது தந்தையுடன் பிள்ளை வாழும் ஒற்றைப் பெற்றோர் பராமரிப்பு, என்பன எல்லா இடங்களிலும் மலிந்து கிடப்பதை இங்கே காணலாம். பெண் என்பவள் தெய்வம், தாய்க்குச் சமமாக மதிக்கப்படும் பண்பு, ஒருவன் ஒருத்தி கோட்பாடு என்பதெல்லாம் நம் பாரம்பரிய பண்பாட்டுச் செல்வங்கள். கலாச்சாரப் பண்புகள். ஆனால் இங்கு பெண் என்பவள் போகத்துக்குரியவள்; ஆண்-பெண் சரிநிகர் சமானம், பிள்ளை வளர்ப்பு, சமையற் பொறுப்பு, வீட்டு வேலைகள் என்பவற்றில் இருவருக்குமே சமபங்கு உண்டு. கணவன் மனைவியரிடையே ஏற்றத் தாழ்வு இல்லை. வாலிபன் - பருவப் பெண்ணிடையே ஏற்ற இறக்கம் இல்லை. சிறுவர் சிறுமியர்களிடையே பாகுபாட்டு வித்தியாசமே இல்லை. ஆண் பெண் இருவருமே சமம் இருவருக்கும் எல்லாவற்றிலுமே சமஉரிமை உண்டு என்ற கோட்பாடே இங்கு வேரூன்றியுள்ளது.
மேலை நாட்டாரின் வாழ்க்கை மந்திரம்
சமுதாயத்துக்காக தன் விருப்பு வெறுப்புகளை ஒறுத்தல், மற்றவர்களுக்காகத் தன் விருப்புகளை மறைத்தல், அழித்தல் என்பனவெல்லாம் இங்கு கிடையா. தான், தன் சுகம்,
 

விக்னா பாக்கியநாதன் 71
தன்வசதி, தன்விருப்பு, தன் தேவை, தன்திருப்தி என்ற நோக்குகளை நிறைவேற்ற இங்கு வாழ் மக்கள் முயல்வார்களே தவிர, "மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்” என்று சற்றுமே சிந்தித்துப் பார்க்க முயலமாட்டார்கள். தனக்கு எது சாத்தியம், பொருத்தம் என்று ஒருவரின் மனம் ஏவுகின்றதோ, அதையே அவரின் செயல்காட்டும். மற்றவர்கள் நினைப்பதைப் பற்றியோ, சமுதாயத்தைப் பற்றியோ அக்கறை இல்லை. இதுவே இங்குள்ளோரின் வாழ்க்கை மந்திரம். அதனால் அவர்களைப் பொறுத்தவரையில் நிம்மதியாக சந்தோஷமாக என்றும் இளமையாக வாழ்கிறார்கள்.
சமுதாயத்துக்குப் பயந்து சொந்த விருப்புகளை மனதுக்குள் பொசுக்கி வாழ்வதும், அதனால் மனம் புகைவதும், அதன் மூலம் வி ரக்தியுடன் வாழ்வதும், இளமையிலே முதுமையாகிவிடுவதும் எமது கீழைத்தேயக் கலாச்சாரம் எமக்குப் புகட்டிய பண்பாட்டுக் கோலங்கள். என்னத்தான் பிரச்சினைகள் இல்லறத்தில் வந்தாலும், அங்கே பெண்ணானவள் அதைச் சகித்துப் பொறுத்து, தன் விருப்பை வெறுத்து, நாலு பேருக்குக் காட்டிக் கொள்ளாமல், நாலு சுவருக்குள்ளேயே அடக்கி, குடும்பக் கப்பலைத் தளம்பாது செலுத்திச் செல்வதே எமது இல்லத்தரசிகளின் தலையாய பண்பு. அடக்கம், பாசம், பண்பு, இரக்கம், புன்னகை என்பன எமது பெண்களின் விலையுயர் ஆபரணங்கள்.
வெளிநாட்டுப் பெண்களைப் பொறுத்தவரையில் இவற்றை முழுமையாகக் காண்பது மிகமிக அரிது. இல்லறத்துணையில் தமக்கு பிடிப்பு இல்லையென்றால் உடனே விவாகரத்துச் செய்து, துணைகளை மாற்றிக் கொள்வார்கள். அவ்வாறு விவாகரத்துச் செய்து கொணட மாஜித்துணைகள்

Page 38
72 Sಳಿ பணம் பந்தியிலே!
பிள்ளைகளின் நிமித்தம் சந்திக்கவேண்டி நேரிட்டால், அவர்கள் மகிழ்ச்சியாகக் கதைத்து, விருந்துண்டு செல்வதும் சாதாரண ஒரு விடயம் ஆகும். இல்லற இன்பத்தில் மட்டுமல்ல, உணவின் சுவை, இரசனையின் சுவைகளில் கூட பேதங்கள் இல்லறத்துணைகளில் இருக்குமேயானால் அங்கே இல்லறத்தை இரண்டாக வெட்டும் விவாகரத்துக் கத்தி. இந்நிலையில் தம் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி யோசிப்பதே இல்லை.
காலஞ் செல்லச் செல்ல இப்பண்புகளைப் பார்த்து, அனுபவித்த பிள்ளையொன்று வளர்ந்ததும் தானே இப்பழக்கத்துக்கு அடிமையாவதும், கடைப்பிடிப்பதும் வி சித்திரமானதல்ல. இங்குள்ள இல்லறங்களைப் பொறுத்தவரையில் ஒரு இல்லறத்துணைகள் ஆகக் கூடியது பத்துவருடகாலம் இணைந்து வாழ்வதே பெரிய அபூர்வம். அடிக்கடி துணைகள் மூன்று, நான்கு என மாற்றிக் கொள்வதும், மணமாகாமலே நட்பாக இணைந்து வாழ்வதும் இங்குள்ள இல்லற இலக்கணம் எனச் சுருங்கக் கூறலாம்.
மேல்நாட்டாரின் வியப்பு எமது நாட்டைப் பொறுத்தவரையில் திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது. அன்பும் அறனும் உடையது, தெய்வீக பந்தம், பூர்வீகப் பயன், புனித உறவு, இறக்கும்வரை ஒருவன், ஒருத்திக் கோட்பாட்டை இறுகக் கடைப்பிடிப்பதுமே எமது இல்லறப் பண்புகள். இவை யாவும் எம்மவர் இரத்தத்தில் ஊறிய கலாச்சார நரம்புகள் . அழிக்க முடியாத அடையாளங்கள். எனவே எம்மவர் இல்லற வாழ்க்கை வெளிநாட்டவர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு ஈர்க்கின்றன. இல்லறத்தில் அன்பு விட்டுக் கொடுப்பு,

விக்னா பாக்கியநாதன் 73
சகிப்புத்தன்மை, பொறுமை, என்பவற்றைக் கடைப்பிடிக்கும் தாராள குணம், கீழைத் தேசத்தவர்களான இலங்கை-இந்திய மக்களின் பூர்வீக இல்லறப் போதனைகள், வெளிநாட்டினரிடையே அதாவது மேலைத் தேயத்தவரிடையே இவற்றை நாம் எதிர்பார்க்கவும் முடியாது5 ஒப்பிடவும் முடியாது.
எமது நாட்டினரின் இல்லறப் பண்பைப் பார்த்து வெளிநாட்டவர் மெச்சி வாயில் விரல் வைக்கின்றார்கள். இறக்கும் வரையில் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக எப்படி இணைபிரியாது உயிரும் உடலுமாக இணைந்து வாழ்கின்றார்கள் என ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியமாக பார்க்கிறார்கள். கீழைத் தேய மக்களின் இல்லற இணைப்பின் இரகசியம் என்ன? என அந்த இல்லறத்தை நாடி எமது கலாச்சாரத்தை நோக்கிப் படையெடுப்பது எமக்குப் பெருமைக்கு மேல் பெருமை சேர்க்கும் விடயம் அல்லவா?
எனவே எமது பண்பாடு, கலாச்சாரம், இல்லற வாழ்வு, குடும்ப அங்கத்தவர்களுக்கிடையேயான அன்பு, ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மை, பிறர் துன்பத்தைப் பார்த்துச் சகியாமை, என்பன எல்லாம் எமது நீதிநிலைகள் எமக்குப் போதித்தவை. இதை எண்ணும் போது தமிழரென்று தலைநிமிர்ந்து வாழும் பேறு எமக்குண்டல்லவா? எனவே என்றும் நாம் தமிழராக வாழ்வோம், மனித நேயத்தை வளர்ப்போம். அதற்கிடையூறான புல்லுருவிகளைப் பூண்டோடு அழிப்போம். நம் கலை கலாச்சாரந்தனை எங்கு வாழ்ந்தாலும் பேணுவோம்3 மற்றைய இனத்தவருக்கு வழிகாட்டியாக எம் கலாசசாரம் அமைய வழி சமைப்போம்.

Page 39
74 ¥ಳ பணம் பந்தியிலே
میل
வயோதிபத்தில்.
இப்பரந்த உலகில் தோற்றமும் மறைவும் எந்தப் பொருளிலும் எந்த உயிரிலும் இருப்பது இறைவன் நியதி. தோற்றம், வளர்ச்சி முதிர்வு மறைவு என்பவற்றைக் கொண்டு இவ்வுலகம் இயங்குகிறது. உதாரணத்திற்கு ஒரு பூவை எடுத்தால் அது மொட்டாகிப் பூவாகி பின் வாடி மண்ணுக்கு இரையாகிறது. இத்தன்மை தாவரங்கள் உயிரினங்கள் எல்லாவற்றுக்குமே பொதுவானவை. இந்தப் பருவம் சுழற்சி வட்டத்துக்குள் எல்லா உயிரினங்களும் அடங்குகின்றன. இறைவனின் அற்புதப் படைப்பு இவை.
ஒரு குழந்தை தாயின் பராமரிப்பில், தந்தை வளர்ப்பிலே ஆரோக்கியமாக வளர்கின்றது. அது வளர்ந்து வாலிபம் அடையும் போது பூரணத்துவமான மனிதன் ஆகின்றான். பின் வாலிபம் வயோதிபம் அடையும் போது மீண்டும் இன்னொருவரின் ஆதரவும் அரவணைப்பும் தேவைப்படுகின்றது. குழந்தையான நிலையே வயோதிபத்திலும் ஏற்படுகின்றது. சிந்திக்கத் தெரிந்த மனித இனத்துக்கே வயோதிபத்தால் ஏற்படும் வேதனை, தனிமை, என்பவற்றை உணர்ந்து முற்கூட்டியே ஏதாவது முன்னேற்பாடுகள் செய்து வைக்க முயல்கின்றனர். உதாரணமாக பிற்காலத்துக்குத் தேவை என பணம் சேர்த்து வைப்பார்கள். பிள்ளைகளில் அபார நம்பிக்கையே ஏற்படுத்த
 

விக்னா பாக்கியநாதன் 75
ஏதாவது செய்து வைக்க முனைவர். பணம் பொருள் இல்லாவிட்டால் தாம் ஒதுக்கப்பட்டுவிடுவோம் என எண்ணி தேட்டங்களைத் தம் பெயரிலே வைத்துக் கொள்ள விரும்புவதும் மனித இயல்பு.
முதுமை தரும் வேதனை
முதுமை தரும் வேதனையை எல்லோரும் எதிர்நோக்கியே திரவேண்டும். குறுகிய வயதில் இறந்து விடுபவர்களும் உண்டு. அது விதிவிலக்கு. முதியோர்களைப் பேணி, அவர்களும் சமூகத்தில் ஒரு அங்கத்தவர்கள் என்ற தன்மையை மற்றையோர், அவர்களைச் சார்ந்தோர் ஏற்படுத்த வேண்டும். ஒதுக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள், பயனற்றவர்கள், சுமையுள்ளவர்கள் என்று ஒரு போதும் எண்ணக் கூடாது. முதியோரைச் சற்றுத் தள்ளி வைத்தல், பயனற்றவர்கள் என்ற எண்ணங்கள் எம் நாட்டில் பரவலாக உணடு. ஆனால் மேலை நாட்டைப் பொறுத்தவரை முதியோர்கள் மதிக்கப்படுகின்றார்கள். அவர்களுடைய அபிப்பி ராயங்கள் அங்கிகரிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவற்றை நிர்ணயிப்பது பொருளாதார நிரம்பல் என்று கூடக் கூறலாம்.
முதியோர்கள் மதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை. ஆனால் அவர்கள் பிள்ளைகளாலோ உறவுகளாலோ என்றில்லாமல் முதியோர் இல்லங்கள் மூலம் அரசு பராமரிக்கின்றது என்றே கூறலாம். பிள்ளைகள் தம் கடமையை ஒரு வேலை போல் செய்துமுடிக்கின்றனர். ஆனால் முதிய தாய் தந்தையரின் அனைத்துத் தேவைகளையும் பூரணப்படுத்துவதில்லை. வயோதிப நிலையங்களே முதியோரை ஆதரித்து, வேண்டியன செய்து, அவர்களின் தனிமையை விரட்டி விருப்புடன்

Page 40
76 స్క్రి பணம் பந்தியிலே!
வாழவைக்கின்றன. பிள்ளைகளுக்கோ தத்தம் குடும்பம், வேலை மற்றும் தேவைகளுக்குத் தமது நேரத்தை ஒதுக்கவே நேரம் போதுமானதாக உள்ளது. இந்தச் சுமைகளுக்குள் முதியோரைத் தம்முடன் வைத்துப் பராமரிப்பது இயலாததாகிவிடுகின்றது. இங்கே ஒரு வகையில் அன்புக்குப் பஞ்சம் என்று கூறும் அதே வேளை முக்கிய காரணமாய் இருப்பது இங்குள்ள இயந்திர வாழ்க்கை என்பதையும் ஏற்றுக் கொள்ளவே வேண்டும். இத்தகைய இடுக்கிப்பிடிக்குள் இங்கு வாழ் சுதேசிகள் மட்டுமல்ல, விதேசிகளும் அகப்பட்டுவிடும் பயங்கர துழநிலை விஸ்வரூபமெடுத்துள்ளது.
முதிய பெற்றோர்களை வயோதிப மடத்தில் வைத்துப் பராமரிப்பதும், கிழமைக்குக் கிழமை மக்கள் போய்ப் பார்ப்பதுமான வழக்கங்கள் இங்குள்ள சுதேச மக்களுக்குப் பாரதூரமானதாகத் தோன்றாது. ஏனெனில் அவர்களும் தமது பெற்றோரை அவ்வாறு வயோதிபமடத்தில் விட்ட பட்டியலுக்குள் அடங்குவர். அதே வேளை தாமும் போவோம்3 என்று ஏற்கனவே திட்டம் போட்டிருப்பவர்கள். ஆனால் எமது நாடுகளில் இது இயலாத ஒன்று. ஏற்றுக் கொள்ள முடியாத நடவடிக்கை. பெற்றோர்கள் தம் பிள்ளைகளின் அரவணைப்பில் தங்கி அவர்களின் அனுசரணையில் மூழ்கி, இறுதிக் காலத்தை இன்பமாகக் கழிப்பதையே தாம் செய்த தவப் பயன் என்று ஆண்டவனுக்கு நன்றியுடையவர்களாக வாழ்கின்றனர். இவ்வாறு பெற்றோரைப் பேணும் பிள்ளைகள் தாம் வயோதிப நிலையை அடைந்ததும் இறைவன் நல்ல பராமரிப்பை பதிலுபகாரமாக அளிப்பான், என்ற சுயநலமும் சேர்ந்துவிட பெற்றோரைப் பேணும் பண்பு பொதுவாக எம் எல்லோரிடமும் உண்டு எனலாம். இதற்கு விதிவிலக்கான சிலரும் வாழ்கிறார்கள். எந்தப் பொருளிலும் எதிலும் விதிவிலக்கு உண்டு.

விக்னா பாக்கியநாதன் 77
வயோதிய இல்லங்களும் தேவைதான்
வயோதிப இல்லங்களில் வயோதிபர்கள் வாழ்வதால் அவர்களை நாம் உதா சினம் செய்வதாகவே எண்ணுகின்றோம். ஆனால் நாம் சற்று ஆழச் சிந்தித்துப் பார்ப்போமானால், உளவியல் ரீதியில் உன்னிப்பாக நோக்கினால் வயோதிபர்களுக்கு வயோதிப மடம் ஆறுதலளிக்கும்3 நிம்மதியாக வாழ முடியும் என்றே கூறலாம்.
பொருளாதார நிரம்பல் பெற்ற மேலை நாடுகளில் வயோதிபர்களின் அனைத்துத் தேவைகளும் உறவுகளின் பாசம்-அன்பு தவிர நிறைவேற்றப்படும்போது அங்கு அவர்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்கின்றது. மற்றும் தம்மையொத்த வயதினர்கள் பலரைக் காண்கின்றனர்; பலரின் அனுபவங்களைக் கேட்கின்றனர். மனம் விட்டுப் பேசி தமது குறைகளை, கவலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். சிறுவர்களுக்குச் சிறுவர்களையே பிடிக்கும். வாலிப வயதுடையோருக்கு தம்மையொத்த வயதினரையே பிடிக்கும். அதே போல வயோதிபர்களுக்கு வயோதிபர்களுடன் விடயங்களைக் கலந்து பரிமாற ஆர்வம் ஏற்படும். தமது பழைய வரலாறு களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்ளும்போது பொழுது சுவாரஸ்யமாகக் கழியும் அல்லவா?
மனித மனம் ஒரு குரங்கு என்பார்கள். உதாரணமாக எழுபத்தைந்து வயதுடைய ஒருவர், எழுபத்தெட்டு வயதுள்ளவர் படும் உடல் வேதனையைப் பார்த்து, நல்ல காலம். இறைவன் அருளால் இவரைப் போல் நான் அவஸ்தைப்படவில்லை என்று எண்ணி, கடவுளுக்கு நன்றி கூறி, தான் முதுமைக்குள் இளமையாகத்தான் இருப்பதான மனப்பக்குவம் பெற்றுச் சந்தோஷமாக இருப்பார். இது அற்ப

Page 41
78 لکڑی பணம் பந்தியிலே!
சந்தோஷமாக இருந்தாலும் அவருக்கு மலையளவு இன்பத்தையே கொடுக்கும். வயதான ஒருவர் தனது பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் என ஒரு வீட்டில் ஒன்றாக வாழும் போது, அங்கே அவரது தேவைகள் நான்காவது அல்லது ஐந்தாவது இடமாகவே அங்கு வாழ் அங்கத்தவர்களால் நிறைவேற்றப்படுகின்றன. சில வேளைகளில் தட்டிக் கழிக்கப்படுகின்றன. வெறுப்புக்குள்ளாகும் நிலையும் ஏற்படலாம். "ஏன் இந்தக் கட்டை இன்னும் உயிர் வாழ்கிறது” என்ற ஏச்சுக்களும் ஏவுகணைகளாக வரும். வயோதிபப் பெற்றோர்கள் இறுதிக் காலத்தில் தம் பிள்ளைகளின் அன்பையும் ஆதரவையுமே பெரிதாக நாடி நிற்பர். ஆனால் அந்தப் பிள்ளையின் அன்பு கணவன், மனைவி, மக்கள், என்று பங்கிடப்படும் போது பெற்றோர்க்குக் கொடுக்கும் அன்பு, பொறுப்பு குறைந்த அளவிலேயே உள்ளது. வயோதிபர்கள் வீட்டுக்குப் பாரமாகவும் தமது வேலைக்குள் வேலையாக அவர்களைப் பராமரிக்க வேண்டியுள்ளது எனத் தப்பாக எண்ணி அவர்களை ஒதுக்கி வாழ்வதையும் எம்மிடையே காணலாம்.
மேலை நாட்டைப் பொறுத்தவரையில் வயோதிபர்கள் இளமைக்காலத்தில் செய்த வேலை காரணமாக ஒவ்வொருவருக்கும் ஊதியப் பணம் உண்டு. எனவே பிள்ளைகளையோ, மற்றவர்களையோ நம்பி வாழ வேண்டிய அவசியம் இல்லை. ஓரளவுக்கு, தமது இயலாமைப் பருவம் வரும் வரையும் வயோதிபச் சோடிகள், அல்லது விதவைகள், தபுதாரர்கள் தாம் தனியொரு வீட்டில் வாழ்வதையே விரும்புகின்றனர். ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு சுற்றுலாப் போவார்கள். வேறுநாடுகளுக்கு உல்லாசப் பிரயாணம் செய்வார்கள். பின்னர் தம் காலில் நிற்கத் திராணியற்ற நிலை வரும் போது, வயோதிப மடங்களை

விக்னா பாக்கியநாதன் 79
அவர்களாகவே விரும்பிச் செல்கிறார்கள் அல்லது வைத்தியசாலைகளுக்கு, பிள்ளைகள், பாதுகாவலர் அனுமதியுடன் வயோதிப மடங்களுக்குச் செல்லும்படி சிபார்சு செய்யும்.
வயோதிப நிலையங்களில் வைத்திய வசதிகளும், பராமரிப்புப் பணியாளர்களும், குரல் கொடுக்க ஓடிவரும் பராமரிப்புப் பணிப்பெண்களும், ஆதரவுடன் முதுகைத் தடவி , அவர்கள் தேவை அறிந்து நிறைவேற்றும் சகோதரிகளும் நிறைந்திருக்கும் வயோதிப மடம் வயோதிபர்களுக்கு உகந்த வாழ்விடமாக அமைந்துள்ளது. மற்றும் வயோதிப தாய் தந்தையர் மேலை நாடுகளில் மக்களுடன் ஒரே வீட்டில் தங்கி வாழ்வதே கிடையாது. அப்படியான வயோதிபப் பெற்றோரை எம்மறிவுக்கு எட்டியவரை இன்று வரை காணவே இல்லை.
ஒரு வீட்டுக்கு இரண்டு குடும்பப் பெண் எதற்கு?
பொதுவாக ஒரு இளந்தம்பதியினர் வாழ்கின்ற ஒரு வீட்டில் பெண்ணின் தாயோ அல்லது ஆணின் தாயோ வாழ நினைத்தால் ஒரு வீட்டுக்கு இரண்டு பெண்கள் ஏன்? ஒரு பெண்ணின் (மனைவி) வீட்டொழுங்கு முறை ஒருவாறு இருக்கும் போது இன்னொரு பெண்ணின் (மனைவியின் தாய் அல்லது கணவனின் தாய்) வீட்டொழுங்கு முறை இன்னொரு மாதிரி இருக்கவேண்டி வரும். எனவே தான் இங்கு சுருக்கமாகச் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு வீட்டுக்கு ஏன் இரண்டு குடும்பப் பெண்? என்பதாகும். இவ்வாறு இவர்களது எண்ணங்களும் வாழ்க்கை முறைகளும் அமைந்துள்ளன. இதிலும் சிறிய உண்மை இல்லாமல் இல்லை.

Page 42
80 இபேணம் பந்தியிலே!
இறுதியாக வயோதிபப் பெற்றோர்கள் தாம் எங்கு வாழ்ந்தால் தமக்கு வசதி, மனநிறைவு, பூரணத்துவம் என எண்ணுகிறார்களோ அந்த அவர்களது ஆசைகளை நிறைவேற்றுவதே பிள்ளைகளின் கடமை. எமது பண்பாட்டின்படி வயோதிபர்கள் வயோதிப மடம் பற்றி அறியாதவர்கள் தெரியாதவர்கள்; எனவே அவர்களுக்கு அனுசரணையாக நாம் இருந்து அவர்களின் தேவைகளை நிறைவேற்றி, இறுதிக்காலத்தை இன்பமாகக் கழித்து, தாம் பெற்ற பிள்ளைகளால் பயன்பெற்ற நிறைவான உள்ளத்தை அவர்களுக்கு ஏற்படுத்திவிடுவது பிள்ளைகளாகப் பிறந்த ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
வயோதிபம் என்பது வயதான பெற்றோருக்கு மட்டும்தான் எமக்கில்லை என்று எண்ணுதல் கூடாது. நாமும் அந்த வயோதிபம் என்ற தள்ளாமைக் கோட்டை நோக்கி நாளுக்கு நாள் நடந்து கொண்டிருக்கின்றோம். எல்லோருக்கும் தள்ளாமைப் பருவம் ஒன்றே ஒன்று. ஆனால் ஆண்டுகள் மட்டும் வித்தியாசம் எனலாம். இதை உணராத அறவிலி களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களை இறைவன் காப்பாற்ற வேண்டும்.
'தனக்கு வந்தால் தெரியும்' என்பது பலரைப் பொறுத்தவரை உண்மை. சிந்திக்கத் தெரிந்த அறிவாளிகளுக்கு பார்த்த அனுபவங்களே பாடமாக அமையும். எனவே வாழ்க்கையிலே ஒருவர் வயோதிபத்தைச் சந்தித்தே திர வேண்டும். எனவே வயோதிபர்களை ஒதுக்காது அவர்களும் சமூக அங்கத்தவர்களே எனக் கணித்து, அவர்கள் கருத்துக்களை ஏற்றும் மதித்தும் அவர்களுடன் கூடிச் செயற்பட்டால் வயோதிபம் வாலிபமாகவே கழியும்.

விக்னா பாக்கியநாதன் 81
மனித நேயம், அது மனதைத் திறக்கும் பnார்க்கம்
"அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன்குருடு செவிடு நீங்கிப் பிறத்தல்"
Tென அன்று ஒளவையார், முருகப் பெருமான் கேள்வி கேட்கப் பாடிவைத்தார் என்பது யாம் அறிந்ததே. இப்பாடலின் இரண்டாம் வரியை இன்றைய எமது காலகட்டத்தில் "அதனினும் அரிது மனித நேயத்துடன் வாழ்வது" என மாற்ற வேண்டிய ஒரு கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.” மனித நேயம், பகுத்தறிவு என்பனவே மக்களை மாக்களிடமிருந்து வேறுபடுத்துகின்றது. எனவே மனிதநேயம் அற்றவர்களை மனிதர்கள் என பகுப்புக்குள் அடக்க முடியாது. இவர்கள் மனித உருவில் உலவிடும் மிருகங்கள் அல்லது இராட்சதர்கள் என்றே சொல்லமுடியும்.
மனிதநேயம், எனும்போது அன்பு, மனிதப் பண்பு, மனிதாபிமானம், பொதுநலம், சகிப்புத்தன்மை, எனப்பட்ட உயர்தன்மைகளைக் குறிக்கின்றது. மார்க்கம் என்பது வழி, அலலது பாதை என்னும் பொருள்படும். மனிதர்களுக்குள் மனிதர் வைத்திருக்கும் நேசம், இரக்கம் என்பன

Page 43
82 స్త్రజ్ பணம் பந்தியிலே! εκ - ---
அவரவர்களின் மனக்கதவைத் திறக்கும் ஒரு வழியாகும். எனவே மனித நேயத்தினால் எதையும் சாதிக்க முடியும். அன்பினால் ஆகாதது எதுவுமே இல்லை. எப்படியான கொடூரகுணம் படைத்த கயவர்களைக் கூட அன்பினால், மனித நேயத்தினால் தத்தம் வழிக்குக் கொண்டு வரமுடியும் என்றால் மனிதநேயத்தின் மகிமை தான் என்னே!"
இன்றைய உலகு பொறாமை, பூசல், கொலை, அடுத்துக் கெடுத்தல், அன்புப் பஞ்சம், ஊழல்கள், பணிவற்ற பண்பு, எனப்பட்ட பெரும் புயலுக்குள் அகப்பட்டுச் சிக்கி, மனித நேயக் கதவு தாழிட்டுப் பூட்டிக்கிடக்கின்றது. மனிதர்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் எனவும், ஒருவனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினையே அழித்துவிடுவோம் என்று கூறுவதற்கு மனித நேயக்கதவு திறக்கப்பட வேண்டும். இவ்வாறு மனிதநேயம் இருந்து மனதைத் திறந்தால் இன்று எமது தாயத்தில் இவ்வளவு கொடூரமான போரும், பட்டினியும் இறப்பும் ஏற்படுமா? யோசித்துப் பாருங்கள்!
எல்லோரும் மனிதர்களே! எல்லோருக்கும் எல்லா உரிமையும் உண்டு என்ற மனித நேயம் ஒவ்வொருவரிடையேயும் இருந்தால் அது அவர்களின் நற்சிந்தனையுடைய மனதைத் திறக்கும் என்பதில் ஐயமில்லை'.
米米米

விக்னா பாக்கியநாதன் 83
88
னேயாக்கம் 43 திருவினையாக்கும் 2 <މުޙަ
《༼འོང་།།
ム一ーニー
2பெக்கம் உடையவர்கள் பொருட்களை இழக்க நேர்ந்தாலும் அதைப் பற்றிக் கவலை கொள்ள மாட்டார்கள். இடிப்பதும் பெறுவதும் உலக இயற்கை என்று மேலும் ஊக்கத்துடன் முனைந்து பாடுபட்டு வெற்றி பெறுவார்கள். வாழ்க்கையிலே முன்னேற்றம் அடைவார்கள். எனவே எவ்வளவுதான் இழப்புகள் வந்தாலும் ஊக்கத்தை மாத்திரம் இழக்கக்கூடாது. இந்த ஊக்கத்தை இழப்பவர்கள் ஆக்கத்தை இழப்பார்கள் என்பது உறுதி.
வருவதும் போவதும் இயற்கையாக இருக்கும் இந்த உலகத்தில் "இழந்துவிட்டோமே இழந்துவிட்டோமே" என்று வருந்துவதால் எவ்விதமான பயனுமில்லை. எனவே இழந்த பொருள்களை மீண்டும் பெற முயன்றிடவேண்டும். ஊக்கத்தை உறுதியாகக் கொண்டவர்கள் தாம் சம்பாதித்த பொருள் போய்விட்டதே என்று வருந்தவே மாட்டார்கள். இதையே வள்ளுவர்,
"ஆக்கம் இழந்தோம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத் துடையார்”
நமது வாழ்வின் உயர்வு நமது உள்ளத்து உயர்வைப் பொறுத்துத்தான் அமையும் எனபதில் ஐயமில்லை. உள்ளம்

Page 44
84
சோர்வுற்ற ஒருவனுக்கு முன்னேற்றம் இல்லை என்பதை விட வாழ்வே இல்லை என்று கூறலாம். குளத்தில் பூத்திருக்கும் பூக்கள் தண்ணீரின் அளவு ஏற ஏற அந்தப் பூக்களின் தண்டுப் பாகமும் நீண்டு செல்வது போன்று, மனித உள்ளத்தின் ஊக்கத்தைப் பொறுத்தே, அவன் முன்னேற்றம் அல்லது உயர்வு உள்ளது என்பதை உணரவேண்டும். இந்த உண்மையை வள்ளுவர் பெருமான்
வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத்து அணையது உயர்வு" எனக் கூறியுள்ளார்.
வாழ்வில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான் என்பதை உணர்ந்து, ஊக்கத்தை விடாது, இலட்சியத்தை எதிர்நோக்கி முன்னேற நினைக்கவேண்டும். இவ்விதம் உழைப்பவர்கள்தான் முன்னேறமுடியுமே தவிரச் சோர்ந்து போய், இனிமேல் தனக்கு வாழ்வே இல்லை என்று எண்ணுவது அறிவீனமாகும். முயற்சியால் முன்னேற்றமே தவிர , அதனால் கீழான நிலைக்கு சென்றோர் யாருமேயில்லை. எதையும் சாதித்துவிடலாம் என்ற உயர்ந்த பரந்த எண்ணம் கொண்டோர் சாதிக்காத எதுவும் இல்லை எனலாம். தன்னால் எதுவும் முடியும் என்ற உணர்வு எழுந்தால் நிச்சயம் வெற்றியே கிடைக்கும். இதுவே வாழ்வின் முன்னேற்றத்துக்கு முதற்படியாகின்றது.
எந்த ஒரு விடயத்திலும் இது முடியுமோ, முடியாதோ என்ற கேள்விக்குறியோடு பார்க்கவோ, கேட்கவோ கூடாது. இதை எவ்விதம் செய்வது என்று சோர்வுறாமல் துணிந்து முயன்றால் வெற்றி கிடைக்கும். அந்த வெற்றியைத் தேடித்
 

விக்னா பாக்கியநாதன் 85
தருகின்ற மாபெரும் பெருமையை இந்த முயற்சியானது உண்டாக்கும். முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும். முயற்சி இல்லாத ஒருவனை வறுமை நாடி வரும்.
முன் செய்த ஊழ்வினையால் ஒரு செயல் கைகூடாமல் போனாலும், அந்த முயற்சிக்கு ஏதோ ஒரு பலன் இல்லாமற் போகாது. குறைந்தது ஒருவருடைய உடம்பு வருத்தத்துக்கு அந்த முயற்சியானது கூலியைக் கொடுக்கும் என்பதில் ஐயமே இல்லை. இந்தத் தத்துவத்தைப் பின்வரும் குறளிலே விளக்குகிறார் வள்ளுவர்.
"தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” என்கின்றார்.
முயற்சிக்கு என்றுமே அழிவில்லை. LD 607 Lib சோர்வடையாமல் செயலாற்றும் எந்த ஒரு விடயமும் எமக்கு வெற்றியையே அளிக்கும்.
米米米

Page 45
86 ఫ్టేస్తో பணம் பந்தியிலே!
நன்கு ஆராய்ந்து நட்புக் கொள்!
இருவரின் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கு கொண்டு, நல்லன செய்யும் வாழ்க்கைத்துணை, மக்கள் இரத்த உறவுகளைப் போல் அல்லது இவற்றுக்கும் மேலான மற்றொரு அங்கத்தினர் உற்ற நண்பர் ஆவர். தம் அந்தரங்கத்தைக் கூறவும், தாம் வழி தவறிச் செல்லும் போது இடித்துரைத்துத் திருத்தவும் தோழமையான நல்ல நட்பை ஒருவன் தேடிக் கொண்டால் அவனுக்கு வேறு பாதுகாப்பு அதிகம் தேவையில்லை. அதாவது நண்பனே பாதுகாவலன் ஆகிவிடுவான் என்பதாகும். w
நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் வேறொன்றும் இல்லை என்பது அனுபவித்தோரின் அனுபவவாக்கு. இந்த நட்பை நன்கு ஆராய்ந்து ஒருவன் தேடிக் கொள்ள வேண்டும். நன்கு ஆராயாத நட்பு திரா இடும்பை தரும். அதாவது ஒருவனைப் பற்றி, அவன் குண நலம் பற்றி நன்கு ஆராயாமல், மேலெழுந்த வாரியாக அறிந்து அவனோடு நட்புக் கொண்டால் பலகேடுகளை ஒருவன் எதிர்நோக்க வேண்டிவரும். போலி நட்புகள், ஆராய்ந்து பார்க்காமல் ஏற்படுத்திக் கொண்ட நட்பு, இறுதியில் ஒருவரின் இறப்புக்கு காரணமாகும் அளவுக்குத் துன்பத்தை உண்டாக்கி விடும். இதையே வள்ளுவர்
 
 
 

விக்னா பாக்கியநாதன் 87
“ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்” என்றார்.
எனவே ஒருவன் நண்பனைத் தேர்ந்தெடுக்கும்போது திர ஆராய்ந்து, அவனுடன் நன்றாகப் பழகி, அவன் குணநலன்களை ஆராய்ந்து தன்னோடு ஒத்த உணர்வினனாக அவன் காணப்பட்டால் மட்டுமே அவனோடு நட்புக் கொள்ள வேண்டும். இவ்வாறு திர ஆராயாமல் ஒருவர் கொண்ட நட்பால் ஏற்படும் தீமைகளோ பற்பல. எனவே தான் வள்ளுவர் "ஆராய்ந்து நட்புக் கொள்க" எனும் கருத்துத்தொனிக்க நட்பாராய்தல்' என்ற அதிகாரத்தை ஒதுக்கிப் பத்துக் குறளிலே "ஆராயா நட்பின் ஆபத்தை" அச்சுறுத்தி வைத்துள்ளார்.
நன்கு ஆராய்ந்து நட்புக் கொண்டால் ஒருவன் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவே வாழ்வான். ஒன்றாக உறங்கி ஒரு கோப்பையிலே உண்டு இரண்டகம் செய்யும் போலி நட்புகள், உடனிருந்து குழிபறிக்கும் நட்புகள் பார்த்திருக்கப் பழிசுமத்தும் நட்புகள் நிறைந்த இன்றைய உலகில் உண்மையான நட்பைத் தேடிக் கொள்வது சிரமம்தான். எனினும் ஒருவன் உண்மையான ஒரு நட்பைத் தேடிக் கொண்டால் அவனது வாழ்வின் சுமை, மனத்துயரம் யாவும் துரியனைக் கண்ட பணிபோலாகிவிடும்.
எனவே நட்புக் கொளக! அதுவும் நன்கு ஆராய்ந்து, மீண்டும் ஆராய்ந்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, ஒருவனின் உயர்ச்சியிலும் வீழ்ச்சியிலும் சமபங்கு கொள்ளும் உத்தம நட்பே சாலச்சிறந்தது.

Page 46
88
பெற்றோர்களும்
பிள்ளைகளும்
இன்றைய உலகின் இயற்கைச் சூழ்நிலைகள் யாவும் மாற்றப்பட்டு, செயற்கைத் தன்மைகள் உட்புகுத்தப்பட்டு, சூழல் மாசுபடுத்தப்பட்டு வருகின்றது. நிலம், நீர், காற்று போன்றவை மாசுபட்டு, எமது ஆரோக்கியத்துக்குப் பங்கம் விளைவிக்கும் தன்மையில் நவீன உலகம் போய்க் கொண்டிருப்பதை நேரடியாகவும், செய்திகள் மூலமும், தொலைகாட்சி மூலமும் நாம் அறிகின்றோம் இந்த மாசுபடுந் தன்மைக்கு மாற்றீடாகப் பல வழிமுறைகள் இன்று கையாளப்பட்ட போதும் அவை உண்மையான இயற்கைத் தன்மைக்கு ஈடாக முடியாது. துரியமண்டலத்திலுள்ள “ஓசோன்" படலத்தில் ஏற்பட்ட துவாரத்திற்கு மனித நடவடிக்கைகளே காரணம் என்று கூறப்படுகின்றது. இந்தச் சுற்றுப்புறச் சூழல் மாசடைவதனால் உயிரினங்கள் பாதிப்புறுகின்றன. அவை மட்டுமா? மக்களும் பாரிய ஆபத்தான விளைவுகளை எதிர்நோக்குகிறார்கள். குழந்தைகளின் மனோ நிலைகளும் வாழ்க்கை முறைகளும் மாற்றிமைக்கப்படுவதுவும் பிரச்சினைக்குரியவையாக இருக்கின்றன.
இன்று உலகில் குழந்தைகளின் மனோநிலையைப் பாதிக்கும் வண்ணம் அல்லது திசைதிருப்பும் முயற்சியில் பல தழ்நிலைகள் காலவேகத்துக்கு ஏற்றவாறு உருப்பெற்று வளர்ந்து வருகின்றன. குழந்தை வளர்பு மிக முக்கியமான
 

விக்னா பாக்கியநாதன் 89
பொறுப்புணர்வு மிகுந்த கலையாக இருப்பதைப் பல பெற்றோர்கள் உணரத் தவறிவிடுகின்றனர். பெற்றோர் உரிய முறையில் குழந்தை வளர்ப்பை மேற் கொள்ளாமையே பிள்ளைகளின் உள வளர்ச்சி உடல் வளர்ச்சி என்பவற்றை நிர்ணயித்துவிடுகின்றன. உலகின் எதிர்காலச் செல்வங்களான பிள்ளைகளின் வளர்ப்பு முறை, அவர்தம் மனோநிலை பாதிக்கப்பட்டு வருமேயானால் எதிர்காலத்தில் ஒரு அமைதியற்ற சமூகம் பயங்கரமாக உருவெடுக்கும் என்று தீர்க்க தரிசனமாகக் கூறமுடியும்.
ஒரு பிள்ளையானது நல்ல பழக்கத்தையும் திய பழக்கத்தையும் இலகுவில் கற்றுவிடும் பலவற்றையும் கிரகித்துக் கொள்ளும் தன்மைகளுடன் அதைக் கடைப்பிடிக்கும் பண்பையும் கொண்டதே குழந்தையுள்ளம். எனவே நாம் இவர்களை ஆரம்பத்திலிருந்தே மிகுந்த கவனத்துடன் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு வளர்த்து, சமூகத்தின் நற்பிரசையாக்கி விடுவது பெற்றோர்களின் தலையாய கடமை என்றே சொல்ல முடியும். ஒரு பிள்ளை எதிர்காலத்தில் வசிக்கப் போகும் அதன் அந்தஸ்து பெறறோர்களாலேயே ஆரம்பத்தில் தீர்மானிக்கப்படுகின்றது எனலாம். முக்கியமாக, தாய் தந்தை - பிள்ளைகளுக்கிடையே உள்ள தொடர்பு அன்பு, அக்கறை என்பன முக்கியமாக கவனிக்கப்படல் வேண்டும்.
ஒரு பிள்ளையின் வளர்ச்சி, ஒரு செடியின் வளர்ச்சியைப் போன்றதாகும். ஒரு விவசாயி விதை விதைத்து, நன்கு அறுவடை செய்து, இலாபம் பெறுவதற்கு முதலில் என்னென்ன அவசியம் என்பதைக் காலமறிந்து, பருவமறிந்து, தழ்நிலையறிந்து, செய்தால்தான் நல்ல பலனைப் பெறமுடியும். பயிரை நல்லமுறையில் வளர்த்துப்

Page 47
90 பணம் பந்தியிலே!
பயன்பெறும் விவசாயி போன்றே, பெற்றோரும் பிள்ளைகள் என்ற பயிரை வளர்த்து, நல்ல பயனான புகழைப் பெற வேண்டும். பிள்ளைகளைப் பெறுவதல்ல முக்கியம். அப்பிள்ளைகளை வழிப்படுத்துவதுதான் முக்கியம்.
தற்போது உலகின் இயந்திரமயத்தால் எல்லாவற்றிலும் துரித மாற்றங்கள் ஏற்படுகின்றன. தாய் தந்தையரின் கடமையான உழைப்பும், பணத்தின் பேதலிப்பும் தம் பிள்ளைகளின் மேலுள்ள கண்காணிப்பைக் குறைப்பதற்கு வழிவகுத்துவிடுகின்றன. குறிப்பாக எமது சிறார்கள் ஐரோப்பிய நாடுகளில் பெரும் அவல நிலைக்கு உள்ளாகின்றார்கள். அவர்களின் மனோ வளர்ச்சி சிராகச் செல்ல முடியாமல் புறசீர் நிலைகள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
எமது பிள்ளைகளுக்கும் தாய் மொழிக் கல்வி இன்மையும், நிறவேறுபாடுகளும், மேல்நாட்டுக் கலாச்சார முறைமைகளும் அவர்களின் ஆரம்பக்கல்வி வளர்ச்சியில் தடைகளை ஏற்படுத்திவிடுவதில் செல்வாக்குப் பெறுகின்றன. இதனால் இங்கு எமது பிள்ளைகளின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன. இத்தகைய இடையூறுகள் எமது பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, ஏனைய இங்கு வாழ் அந்நிய நாட்டுப் பிள்ளைகளையும் பாதிக்கின்றன எனலாம். இவ்வாறாக பிள்ளை வளர்ப்புப் பிரச்சினை. அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் உலகலாவிய ரீதியில் பொதுப்பட்ட பிரச்சினைகளாகிவிட்டன. எனவே எமது பிள்ளைகளை நாம் நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்தெடுக்க, நாம்தான் முயல வேண்டும். அதை உரியகாலத்தில் செம்மையாகச் செயலாற்றப் பின்னின்றால் அதன் விளைவு எதிர்காலத்தில் பாரதூரமானதாகவே அமையும் என்பது தெளிவு.
 

விக்னா பாக்கியநாதன் 91
தாய்நாட்டுப்பற்றும் தாய்மொழிப்பற்றும்
உலகில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு தாய் உண்டு. இறைவன் படைத்த படைப்பின் நியதி இதுவாகும். அதே வகையிலே மானிடராய்ப் பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தாய் இருக்கின்றாள். குழந்தை தாய் மீது அளவில்லாத பாசமும் பற்றும் கொண்டிருக்கிறது. அதே போல தாயும் தன் குழந்தைகள் மீது பற்று வைத்திருக்கின்றாள். தாயின் வயிற்றிலே உதயமாகிய அக்குழந்தை எந்த இடத்தில் அல்லது எந்த நாட்டில் உதயமாகின்றதோ அந்நாடு அப்பிள்ளைக்குத் தாய்நாடு ஆகின்றது. தாயின்மீது ஒரு குழந்தை எத்தகைய பற்று வைத்திருக்கின்றதோ, அத்தகைய பற்று தாய் நாட்டிலும் அதாவது தான் பிறந்த மண்ணிலும் வைத்திருக்க வேண்டும். இதே போல் தாயின் மூலமாக உதிரத்துடன் சேர்ந்து ஊட்டப்படும் மொழி எதுவோ அது தாய்மொழி எனப்படும். எனவே தமிழர்களாகிய நாம் எமது தாய் நாட்டை விட்டு, எங்கு வாழ்ந்தாலும் இம் மூன்றையும் பேணிப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.
நாடோடி எனும் நாமம் தேவையா?
நமது சிறுவர்கள் வேற்று நாட்டில் வாழ்ந்து வேற்று மொழிக் கல்வியைக் கற்றாலும் அன்னை மொழி

Page 48
*
இ பணம் பந்தியிலே
அவர்களுக்கு ஒருபோதும் அந்நிய மொழி ஆகமாட்டாது. பெற்ற தாய் மூலம் அன்பையும் அன்னை மொழியையும் பெறுவது எந்த ஒரு குழந்தைக்கும் கடினமானதல்ல. தாய் மொழி தெரியாவிட்டால் எமது கலை, கலாச்சாரப் பண்புகளும் ஒருவனுக்குத் தெரியாமற் போகும். மொழி என்பது கருத்து வாகனம், பேச்சு ஊடகம், என்பது மட்டுமன்றி நாகரிகத்தின் பண்பாட்டின் சின்னங்களாகவும் விளங்குகின்றது. தாய் மொழியாம் தமிழ் மொழி தெரியாதவனால் எப்படி? தமிழ்க் கலாச்சாரங்களையும் பழக்க வழக்கங்களையும் அறிய முடியும்? எனவே ஒருவனுக்குத் தாய்மொழி மீது பற்றும் தாய்நாட்டின் மீது பற்றும் கட்டாயம் இருத்தல் வேண்டும். அவ்வாறு இல்லாதவனை வேறொரு நாட்டினர் பார்த்து “நாடோடி" என்ற நாமத்தைச் சூட்டி விடுவார்கள். இந்த நிலைமை எமது குழந்தைகளுக்கு ஏற்பட வேண்டுமா? சிந்தித்துச் செயற்பட வேண்டிய விடயமே.
தமிழர்களாகிய நாம் எமது தாய்நாடு மீது கொண்ட பற்றுக் காரணமாகவே நமக்கு என்றொரு சுதந்திரமண் வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கின்றோம். அதற்காக எத்தனையோ உயிர்கள், உடைமைகள், எல்லாம் பலியாகிவிட்டன. இன்னும் எத்தனையோ தியாகிகள் தாய் மண்ணை மீட்பதற்காகத் தம் உயிரைப் பணயம் வைத்துப் போர்க்களத்தில் நிற்கிறார்கள்.
இப்படி நம் தியாகிகள் போராளிகள் அங்குப் போராடும் போது அவர்களின் தாயகப் பற்றின் முன்னே எதுவும் முன்னிற்க முடியாது.
 
 
 

விக்னா பாக்கியநாதன் 93
தாய்நாடும் அந்நிய நாடாகலாமா?
தாயக சுதந்திரம் ஒன்றையே மனத்தில் வைத்துப் போராடுகிறார்கள். ஏன் அவர்களுக்குச் சுக போக வாழ்க்கை வாழத் தெரியாதா? தெரியும். ஆனால் அவர்கள் எம்மைவிட ஒருபடி மேலான மனநிலை படைத்தவர்கள். பிறருக்காகவே தம் வாழ்வை அர்ப்பணிக்கும் தியாகச் செம்மல்கள். இவ்வாறு அவர்கள் அங்கு தாயகத்தில் தாய் மண்ணுக்காகப் போராடும்போது, நிம்மதியாக அந்நிய நாடுகளில் தஞ்சம் கோரி வாழும் எமது சந்ததிகள் தாய்மொழியாம் தமிழ்மொழியை மறப்பதற்கு நாம் அனுமதிக்கலாமா?
தாய்மொழி அறிவின் அவசியம் புரியாமல் வளரும் பிள்ளைகளையும், தாய் மொழியைப் போதிக்க விரும்பாத பெற்றோர்களையும் எண்ணும் போது மிக வேதனையாக உள்ளது. இவர்கள் தமது தவற்றினை உணரும் காலகட்டம் வெகுதூரத்தில் இல்லை. தாய்மொழி தெரியாமல் ஒரு பிள்ளை தாய் மண்ணில் உலவும் போது தான் தாய்மொழியின் தாத்பரியம் புரியும்.
தாய்மொழி தெரியாத பிள்ளைக்கு தாய்நாடும் ஒரு அந்நிய நாடாகும். ஏனெனில் தாய்மண்ணில் தன் இனத்தவர்கள்பேசிக் கொள்ளும் தாய்மொழியைப் புரிந்து கொள்ள முடியாமல் பரிதவிக்கும். அதே நேரம் தனது கருத்தைத் தெரிவிக்க ஒரு மொழி பெயர்ப்பாளரின் உதவி யையே அது வேண்டி நிற்கும். இவ்வாறான நிலைமைகள் ஒரு பிள்ளைக்கு ஏற்படுமானால் தாய்நாடும் அந்நிய நாடாகவே மாறும் என்பதில் ஐயமில்லை.

Page 49
94. %2 பணம் பந்தியிலே!
எமது தாயைப் போன்று எமது உயிர் மூச்சு மொழியாகிய தாய்மொழியைப் போன்றே எமது தாய்நாடும் எமக்குப் புனித இடமாக உள்ளது. என்னதான் வசதி படைத்து வேற்று நாட்டில் வாழ்ந்து எமது மொழி கலை, கலாச்சாரம் என்பவற்றை மறந்தாலும், மறக்க முயன்றாலும் "பிறந்த இடம் எது?” என்ற கேள்விக்கான விடையை ஒருவரும் மறக்க முடியாது. மறைக்கவும் இயலாது. இத்தகைய தனித்தன்மை வாய்ந்த தியாகத்தை தாய்மண்ணைப் போற்றி பெருமை தேடிக் கொடுப்பது எம் கடனே. வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தாய் நாட்டை மறந்து விடாமல் நல்ல செயல்களைச் செய்வதன் மூலம், அதற்காகப் பாடுபடுவதன் மூலம் வெளிநாட்டவர்கள் மத்தியிலே எமது நாட்டுப் பெருமையையும் கலை, கலாச்சாரங்களையும் நிலை நாட்ட வேண்டும்,
“இந்த நாட்டு மக்கள் இப்படியான நற்பண்பு கொண்டவர்கள்" என்று மற்ற நாட்டினர் எம்மை மெச்சும்படி நாம் நடந்து கொண்டால் எமது நாட்டின் பெருமையை நிலைநாட்டிய மகிழ்ச்சி எமக்கு ஏற்படுகிறது. அந்நிய நாட்டிலே சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தாய் நாட்டை மறப்பதோ, தாய் நாட்டின் பெயரைச் சொல்ல வெட்கப்படுவதோ, நம் தாய் நாட்டை வெறுத்துப் பழிப்பதோ கூடாது. தாயகத்தைப் பழித்துரைத்தால் தாயையும், தாய்மொழியையும் பழித்துரைத்ததுக்கு ஒப்பான செய்கை
என்று கூறமுடியும்.
பெற்றோரின் தவறான முடிவு
ஒரு பிள்ளை எத்தனை மொழிகளைக் கற்றாலும் தாய்மொழி தெரியாவிட்டால் அந்தப் பிள்ளை முழு அறிவு
 

விக்னா பாக்கியநாதன் 95
பெற்ற பிள்ளை எனக் கூற முடியாது. உயீர்மூச்சு தாய்மொழி மணத்துடன் வெளிவரும் போது, அந்நிய மொழிகளைக் கற்று அறிஞராகிவிடலாம் என எண்ணுவதும் தவறு ஆகும். அந்நிய மொழிகளுடன் தாய்மொழி அறிவும் இருக்கும் போது, அப்பிள்ளையின் திறமை மேலும் ஒளிரும். அந்நிய மொழியைக் கற்று, அதல் தேர்ச்சி பெற்ற பிள்ளையை நோக்கின், அதன் அறிவு வளர்ச்சியை நோக்கின் "ஈன்ற தாயைப் புறக்கணித்து மாற்றாந் தாயுடன்’ வாழும் நிலைமையினை ஒத்ததாக அமையும். அப்பிள்ளையின் மனவளர்ச்சி ஏதோவிதத்தில் குன்றியதாகவே காணப்படும். ஒரு பிள்ளை எந்த நாட்டில் பிறக்கின்றதோ அந்த நாட்டு மெழியைப் பேசுவது இலகுவான விடயம். அது அதன் உயிர் ஆதாரத் தேவைகளில் ஒன்றாகி விடுகின்றது. ஆனால் தன் சொந்த நாட்டை விட்டு இன்னோர் அந்நிய நாட்டில் வாழும் அல்லது பிறக்கும் பிள்ளைக்கும் குடியேறிய நாட்டு மொழியைப் பேசுவது கடினமான காரியமல்ல. ஆனால் குடியேறிய நாட்டு மொழியுடன் தத்தம் தாய் மொழியை மறவாது கற்கும் பிள்ளையின் விவேகம் தான் பாராட்டக்கூடிய ஒன்றாகும். அந்நிய மொழியில் தம் பிள்ளை பேசுவதைப் பார்த்து, ஆனந்தம் கொள்ளும் பெற்றோர் இந்த உண்மையை உணர்வதில்லை. அதாவது எந்தவொரு அந்நிய நாட்டில் ஒரு பிள்ளை வளர்கிறதோ அந்நாட்டு மொழி அப்பிள்ளைக்கு கை வந்த கலையாகிவிடும். ஆனால் அந்நிய நாட்டில் வாழ்ந்து கொண்டு தாய்மொழியைப் பேச, எழுத, வாசிக்கத் தெரிந்த பிள்ளையின் அறிவே மேலானதாகும். அந்நிய மொழி தெரிந்திருந்தும் அதைப் பேசாது தாய்மொழியாம் தமிழில் பேசும் பிள்ளைகளைப் பார்த்த சில பெற்றோர்கள் கண்மூடித்தனமாக அப்பிள்ளைக்கு

Page 50
96 பணம் பந்தியிலே!
<ನಿ
نمی
அந்நிய மொழி அறிவு இல்லை என முடிவெடுத்து, தம்மை நினைத்துப், தம் பிள்ளைகளை நினைத்துப் பெருமிதம் கொள்வது எவ்வளவு தவறு?
இந்நிலையை நாம் இங்கே பரவலாகக் காணக் கூடியதாகவுள்ளது. தாய்நாட்டை விட்டு வெளியேறிய தமிழர்கள் அந்நிய நாடுகளில் வாழ்ந்து வந்தாற்போல தாய் நாடு அவர்களுக்கு அந்நிய நாடு ஆகிவிடாது. இன்று சிலர் தாய் மண்ணை மறந்து, சுதந்திரம் போராட்டத்தை மறந்து, தான்தோன்றித்தனமாக வாழ்கின்றனர். எவ்வளவுதான் வசதியுடன் வேற்று நாடுகளில் வாழ்ந்தாலும் அது தாயகத்தின் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துத் திரியும் இன்பத்துக்கு ஈடாகாது எனத் திட்டவட்டமாகக் கூற முடியும். எமது தாய் மண்ணிலே சுதந்திரமாக உலவிவர உரிமை இருக்கின்றது. நாடுகளின் தொல்லையோ, “வெளிநாட்டவரே வெளியேறு” என்ற கோஷங்களோ இல்லாமல், அதற்கு அஞ்சாமல் நிம்மதியாக உறங்க முடியும். அந்நிய மொழி தெரியாத பல இளைஞர்கள் , தமது மன உளைச்சலை வெளியிட முடியாதவர்களாய், வாயிருந்தும் மெளனியாக வாழும் நிலையை இந்த அந்நிய நாடு அவர்களுக்குக் கொடுக்கின்றது. இத்தகைய நிலைமை தாயகத்தில் ஏற்படுமா? இதனாலன்றோ தாம் பிறந்த நாட்டைப் “பொன்னாடு” என்று கூறுவர். இதையே “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே" எனக் கூறியுள்ளனர்.
நாம் பிறந்து, தவழ்ந்து, உருண்டு விளையாடி வளர்ந்த மண்ணின் மணம் நாம் எங்கு வாழ்ந்தாலும் வீசிக் கொண்டே இருக்கும். நாம் குழந்தையாய் இருந்த போது கைபிசைந்து விளையாடிய மண் எமது குழந்தைத்தனத்தின்
 

விக்னா பாக்கியநாதன் 97
குறும்பை எல்லாம் சகித்துப் பொறுத்து, எம்மை வளர்த்து விட்ட பூமாதேவி எமது தாய்மண் அல்லவா? இதை நாம் எங்கிருந்தாலும் மறக்க முடியுமா? இந்த மண்ணின் மீது கொண்ட பாசமும் அன்னை மீது கொண்ட பாசமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க முடியாதவை. தாய், தாய்மொழி, தாய்நாடு என்ற மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்த மலர்மாலையாய் எமது கழுத்துகளில் தொங்க வேண்டும். அதுவே எம் பிறப்பால் நாம் அனுபவிக்கும் சிறந்த இன்பம் எனலாம். இத்தகைய பண்பை நாம் மட்டுமல்ல எமது சந்ததியினருக்கும் ஊட்ட வேண்டிய மாபெரும் பொறுப்பும் எமக்குண்டு.
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!
என்ற பாடற் கூற்றில் தமிழனின் தனித்துவத்தையும், தன்மானத்தையும் புரிந்து கொள்ளக் கூடியதாயுள்ளது.
“எளிமையினால் ஒரு தமிழன் படிப்பில்லை என்றால் இங்குள்ள எல்லோரும் நானிடவும் வேண்டும்.”
என்று கல்வியின் சிறப்பை பாடிச் சென்றார் புரட்சிப் பாவலன் பாரதிதாசனார்.
“செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"
என்ற மகாகவி பாரதியாரின் அனுபவம் தமிழராகிய ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்.

Page 51
98.
பொறுத்தார் 4127/ܕܐ̄ܐܵ பூமியாள்வார் تحصحصے 髪づ。
10 Tணிடருக்கு LD 8s) 60) LD சேர்க்கும் ԼI 6ծճrւ! பொறுமையாகும். பொறுமைக்குப் பூமாதேவி என்பர். தன்னை வெட்டித் தோண்டும் போது பூமாதேவி பொறுமையாகச் சகித்துக் கொண்டு நன்மையையே அளிக்கின்றாள். இது போன்று எம்மை யாரும் இகழ்ந்து பேசினால் பொறுமையுடன் சகித்துக் கொள்ள வேண்டும். இதுதான் சிறந்த குணமாகும். இக்கருத்தினையே வள்ளுவர்
"அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை”
என்னும் குறள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
மற்றவர் எத்தனை திங்குகளைச் செய்தாலும் அவற்றை மன்னித்து மறந்து பொறுத்துக் கொள்ள வேண்டும். அறியாமல் செய்கிறார்கள் என நாம் அமைதியடைய வேண்டும்.
தீங்கு செய்தவர்களுக்கு நாமும் தீங்கு செய்து, எமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வது மிக எளிது. இவ்வாறு எமது ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்வ்தால் எமக்கு என்ன பயன் கிடைக்கிறது? எனச் சிந்திக்க விேண்டும். போனது
 

விக்னா பாக்கியநாதன் 99
« ---- திரும்பப் கிடைக்குமா? அல்லது நமக்கு ஏற்பட்ட தீமைகள் துடைபட்டு விடுமா? மாறாகப் "பழிக்குப் பழி” மீண்டும் மாறி மாறித் தொடர்ந்து கொள்ளும் வாய்ப்புத்தான் உருவாகும். எமக்குத் தீமை செய்தவரை மன்னித்துவிட்டோம் என்றால், அந்த எதிராளிகள் மனந்திரும்பி எம்மிடம் சரணடையலாம். அல்லது எமது பார்வையில் படாமல் அஞ்சி ஓடலாம்.
அறிஞர்கள் யாவரும் பொறுமைக்குணம் படைத்தவர்களைப் பொன் எனப் போற்றுகிறார்கள். பொறுமை கடலிலும் பெரியதாகும். பதறாத காரியம் சிதறாது, என்ற பழமொழியின் உட்கருத்தும் பொறுமையையே விளக்குகின்றது. எதற்கும் பொறுமையாக ஆற அமரச் சிந்தித்து எதிரிகளுக்கும் நன்மையையே கொடுக்கும் உத்தமர்கள் பொன்போன்று உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றப்படுவார்கள். இந்தக் கருத்தினை.
“ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர் பொறுத்தாரைப் பொன்போல் பொதிந்து"
என்னும் குறள் தெட்டத் தெளிவாக எடுத்தியம்புகின்றது.
தீமை செய்தவரை அல்லது கொடுமைகள் செய்பவரை நாம் பழிக்குப் பழி தீர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மையையே தரும். அவர்கள் அவசரத்தால், ஆணவத்தால், அறியாமையால் எமக்கு ஆத்திரமும் அவஸ்தையும் தருகிறார்கள் என்றால் நாமும் பதிலுக்குச் செய்வது தவறாகும் அல்லவா? அப்படிச் செய்தால் அவர்களுக்கும் எங்களுக்கும்

Page 52
OO பணம் பந்தியிலே!
என்ன வித்தியாசம் என யோசிக்க வேண்டாமா? எனவே
நாம் அமைதியுடன் பொறுமை எனும் நகையணிந்து பெருமை
கொள்ள வேண்டும்.
எமது பொறுமையானது துன்பம் செய்த வரை வெட்கித்
தலைகுனிய வைக்க வேண்டுமே தவிர அவர்களின்
தலையைப் பதம் பார்ப்பதற்கில்லை என்பதை உணர
வேண்டும். இதுவே வாழ்க்கையின் வெற்றிக்கு ஒரு வழியாகும்.
"பொறுமை என்னும் குணம் தரித்துப் பெருமை கொள்ள வேண்டும்.”
 


Page 53


Page 54
ஆசிரியைப் ப
1975-1978 வரை யா பல்கலைக் கழகத்தில் கன பட்டதாரியாகி பின்னர் சேர், வைத்திவிங்கம் து மத்தியமகா வித்திய -glélfleri|L|LIns á GL-FLOL
1981. ஜேர்மனிக்குப் புலம்
புவியியல் சிறப்பு அவர்கள் 1984-ல் சிந்திக்கத்தூண்டிய ே ஆய்வுநூலை இருவரும் இ 1987-1993 வரை கலைவி வெளியிட்டு வந்த கன செயற்பட்டமை, இன்று இ
பத்திரிகையாக வெளிவந்துே 1987 முதல் இன்றுவரை டோர் பகுதி நேர வேலையாக ஆ 1988 முதல் ஆசிரியை ஆதங்கம் அழிவின் சுவடுகள் கவிமலர்கள்
பாவர் பாடல் உறவுக்குப் போராட்டம் குறுகிய காலத்தில் தமிழை எவ்வாறு கற்பிக்கலாம்? மானவர் கட்டுரைகள் இலக்கணம் கற்போம் ஆண்டு-3 செயல்நூல் குறளின் நிழல்கள்
மலர் பிரிண்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ழ்ப்பாளப் வமாமணிப் *GAJ KAJ GT GREET.
Eரசுவாமி ாயத்தில் இந்நூலாசிரியை ாற்றியமை. விக்னா பாக்கியநாதன்
பெயர்ந்து திரு.சு.பாக்கியநாதன் பி.ஏ. ஈளத் துணைவராக்கியமை, ஜர்மனிய கலாச்சாரம் என்னும் ஒப்பீட்டு ணைந்து எழுதி வெளியிட்டமை, ாக்கு எனும் மாதாந்த சஞ்சிகையை வருக்குத் துனையாசிரியையாகச் ச் சஞ்சிகை கலைவினக்கு வீடியோப் கொண்டிருக்கிறது.
மூண்ட் கரிதாள் தமிழ்ப்பாடசாலையில் சிரியையாகப் பணியாற்றல். எழுதிய பிற நூல்கள்
புதுக்கவிதைகள்
புதுக்கவிதைகள்
மரபுக்கவிதைகள்
LL
சிறுகதைகள்
ஆய்வுக்கட்டுரை பாடநூல் இலக்கணப் பாடங்கள் பாடநூல் நவீன குறள்கள்
سمي
Tili O44-8224 303