கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பிரபஞ்ச மகிழ்ச்சி

Page 1


Page 2


Page 3


Page 4

பிரபஞ்ச Dipdf
சி. அருணகிரிநாதன்

Page 5
நூல் ஆசிரியர்
பதிப்பு
பதிப்புரிமை :
L5.5LD
ിഞസേ & அச்சுப்பதிப்பு :
பிரபஞ்ச மகிழ்ச்சி
சி. அருணகிரிநாதன்
முதலாவது ~ 1993
செப்டெம்பர்
ஆசிரியருக்கு
60 - 4 se 64
ரூபா 65/-
கூட்டுறவுப் பதிப்பகம் (யாழ்பாணம் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கம் )
127, காங்கேசன்துறை வீதி,
யாழ்ப்பா n !,

என்னுரை
பிரபஞ்ச மகிழ்ச்சி காண்பதற்கு இரு அம்சங்களை இணைத்து இக்கட்டுரைத் தொகுதியை ஆக்கியுள்ளேன். ஒற்றுமையையும் கொல்லாமையையும் ஒன்றோடு ஒ ன் று பிணைத்துப் பிரபஞ்ச மகிழ்ச்சி காணலாம் என்பதைத் தற்காலச் சூழ்நிலைக்கு ஏற்ப இந்நூலை எழுதியுள்ளேன். ஏற்கனவே என்னால் வெளியிடப்பட்ட மூன்று நூல்களுக்குத் தந்த ஆதரவைக்காட்டிலும் இந்நூலுக்கு , வாசகர்களின் பேராதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு வாசகர்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். இந்நூலைச் சிறந்த முறையில் அச்சேற்றித்தந்த யாழ்ப்பாண பல நோக்குக் கூட்டுறவுச்சங்க பதிப்பகத்தினருக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
பரிதி அகம் ” சி. அருணகிரிநாதன் சிவன்கோவிலடி, வட்டுக்கோட்டை,
12 - 9 - 98

Page 6
பொருளடக்கம்
வேற்றுமை மலிந்த உலகம் agաn
. ஒற்றுமையின் மூலம்
அடிப்படையில் ஒற்றுமை காணல் ஜீவகுடும்பம் உயிர்க் கோளத்தின் அல்லல் எண்ணம், செயல், மகிழ்ச்சி
ஒருமித்த கருத்தைப் பெறல்

வேற்றுமை மலிந்த உலகம் ஐயா
தினகரனை விநாடிக்கு 20 மைல் வேகத்தில் பூமி ஒரு தரம் சுற்றி வரும் காலத்தை ஒரு வருடம் என்றும் பூமி தன்னைத்தானே சுற்றும் நேரத்தை 24 மணித்தியால்மென் றும் இப்புவியில் வாழும் நாம் காலத்தைக் கணக்கிடு கிறோம். சூரியனின் வெப்பம் (ஒளி) தாக்குவதைக் கொண்டு நாம் பூமியை கடகக் கோடு, மத்திய கோடு, மகரக்கோடு என்றும் நெட்டாங்கு, அகலாங்கு எ ன் றும் வகுத்து சீதோஷ்ண நிலை மூலம் நாடுகளை வேறுபடுத்தி விடுகிறோம் அல்லவா? இதனை அடிப்படையாகப் பார்ப்போமானால் இயற்கையே கண்டத்துக்கு கண்டம், நாட்டுக்கு நாடு வேறுபட்டு இருக்கிறதே! குளிரும் வெப்பமும் நாடு பூரா கவும் ஒன்றாக இல்லாது வேறுபட்டு நிற்பதை நாம் அறி வோம் அன்றோ !! வேறு கோள்களுக்குக் கிடையாத அரிய வாய்ப்பாக உயிரினங்களைப் பெற்றிருப்பவள் நமது பூமித் தாயன்றோ. சீதோஷ்ண நிலையைப் பொறுத்து இயற்கைச் செல்வங்களான காடு, பறவை, மிருகம், மனிதர், பூச்சிபுழு மற்றும் ஜீவராசிகளும் பிற மூலவளங்களும் (தங்கம், வெள்ளி இரும்பு, யூறேனியம், எரிபொருள்) நாட்டுக்கு நாடு வேறு வேறாகத் தோன்றி எம்மை வியப்பில் ஆழ்த்துகிறதே!
அண்டை நாடான இந்தியா மீது ஒருதரம் திரும்பிப் பார்ப்போம். இந்திய வடமா நிலங்களில் சோனாவாரி யாகப் பெரும் மழை பெய்து பெருவெள்ளத்தால் மக்களின் வதிவிடங்களும், பொருட்சேதமும் உண் டா கி மக்களும் நீரா ல் அடித்துச்செல்லப்பட்டு மாண்டுவிடுகிறார்கள். அதே சமகாலப் பகுதியில் தென்மாநிலங்களில் வெய்யோனின்

Page 7
-4-
வெயிலால்-வெப்பக் கதிர்வீச்சால் மக்கள் மரிக்கிறார்கள். ஒரு நாட்டிலேயே இரு வேறு சுவாத்தியங்கள் உள்ளன . இச் சுவாத்திய வேறுபாட்டால் இரு வேறு சூழ் நிலைகளால் உயிரினம் அழிவதை ஆண்டாண்டு தோறும் கேட்கிறோம்.
எமது நிலம் கூட மலைசார்ந்த பகுதியாக, காடு சார்ந்த நில மா க , கடல் சார்ந்த கரையாக, பாலைநிலமாக, சமவெளியாக; பனி படர்ந்த நிலமாக அமைந்திருக்கிறது. ஈழவள நாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் கன்னியா என்னும் கிராமத்தில் கன்னியா வெந்நீர்க் கிணறுகளைத் தெரியுமா? ஏறத்தாழ 500 சதுரஅடி பரப்பில் வெந்நீர் ஊற்றுகள் 7 இருக்கின்றன. அந்த 7 கிணற்றிலும் கூட வெப்ப நிலை வித்தியாசமாகவே உள் ளது. கிணற்றிக்கு கிணறு வெப்பம் உயர்ந்து கொண்டு செல்கிறதே! குறிப்பிடப்பட்ட இப்பகுதிக்கு அணித்தாக உள்ள இடங்களில் த ண் ணிர் (குளிர்மையான) ஊற்றுகளே கிடைக்கின்றன. வெந்நீர் ஊற்றுக்கள் தோன்றுவதற்குக் காரணம். மண்ணில் மிகக் கூடுதலான கந்தகம் (Sulphur) கலந்திருப்பாதகக் கருது கிறார்கள். அந்த இடத் தி ல் மட்டுந்தான் கந்தகம் மண்ணில் கூடுதலாகக் கலந்திருக்க வேண்டுமா? ஒரு கிரா மத்திலேயே இரு வேறு மண்தன்மைகளைக் காட்டி இயற்கை (பன்னை தமது புதல்வர்களாகிய எம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறாளே! என்ன ஐயா மண் வாசனை? ஏன் ஐயா இந்த வேறுபாடு. உலகரீதியாகப் பார்க்கும்போது வித்தியா சமான மண்ணுக்கு ஏற்ப அங்கு வாழும் ஜீவராசிகளும் தங்கள் உடல் அமைப்பைப் பெற்று வாழ்கிறதே. துல்லிய மாகப் பார்க்கப்போனால் குறித்த சூழ்நிலையில் குறித்த உயிரினம் தோன்றுகிறது. த குந் த சூழ்நிலைஇல்லையேல் உயிரினம் தோன்றவாபோகிறது? சூழலுக்கேற்ப உயிரினமும் தகுந்த இசைவாக்கத்தைப் பெற்று இன்பமாக வாழுகின்றன டாவினிஷத்தின்படி தக்கது வாழ, தகாத உயிரினம் மடிகின் றனவே! தகாத சூழல் ஏற்பட்டதால் தானே 70 மில்லியன் ஆண்டுகளுக்கு, முன்னர் வாழ்ந்த, டயனசோர் என்ற விலங் கினம் அழிந்தது.

--5-
பலவகை இன மரங்க ள் உள்ள நிலத்தைகாடு என அழைக்கிறோம். ஒரு காட்டில் இருக்கும் தாவரவகைகள் இன்னொரு காட்டில் இருப்பதில்லை. வெப்ப மண்டல அட வியில் உண்டாகும் மர இனங்கள் குளிர் வலைய வனத்தில் தோன்றுவதில்லை. இடைவெப்ப வலையக் காட்டிலுள்ள தாவர இனங்கள் வெப்ப மண்டலத்தில் இருப்பதில்லை. அமேசான் வெப்ப மாண்டல காட்டின் 1.7 சதுர கிலேய மீற்றர் அளவிலிருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் 250 க்கும் அதிகமான தாவர வகைகள் உலகின் வேறெந்த இடத்திலும் வளர்வதில்லை எனக் கூறுகிறார்கள் (தகவல் விழிந்தெழு என்னும் சஞ்சிகை), தாவரம் என்னும் ஒரு மா பெ ரும் வட்டத்திற்குள்ளேயே செடி, கொடி, பாசி, ஒரு வித்திலைத் தாவரம், இரு வித்திலைத்தாவரம், 'நீர்த்தாவரம், என்று பல பல கோத்திரங்கள், குடும் பங்கள் இருந்து தாவர சங்கமத்தை அலங்கரிக்கிறதே. ஒருதாவரம் இன்னொரு தாவரத்தைப் போன்று இருப்பதில்லையே! வண்ண, வண்ண் நிற மலர்கள், கமகம என வாசனையை வீசும் பூக்களும் மரத்துக்கு மரம் வித்தியாசப்படுகிறது. ஏன் ஒரு புளியமரத் தின் இலை தானும் இன்னொரு இலையைப் (அதேமர இலை) போன்ற வடிவம் இல்லையே! இயற்கையின் ஒரு அங்கத்தவரான தாவர வர்க்கத்திற்குள்ளே ஏன் இந்த வேறுபாடு? எதற்காக இந்த முரண்பாடு?
மேற்குறிப்பிட்டது போன்றே மிருக இனங்களும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழுவது போன்று இன்னொடு பகுதியில் அவற்றைக் காண முடியாது என சூழலியல் நிபுணர். கள் கூறுகிறார்கள். 'வெள்ளை - ரீ-சேட் ஒன்றை அணிந் திருப்பது போல காணப்படும் சிறிய அழகான குரங்கினம் ஒன்று மத்திய அம்ேசானுக்கு அருகில் உள்ள சிறிய காட்டுப் பகுதியில் மட்டுமே வாழ்கிறதாம். கங்காரு மிரு கத் தின் த்ாயகம் அவுஸ்திரேலியா என்றும் வளைய வால் என் ற வகைக் தேவ்ர்ங்கு ம்பிகஸ்க்ா'தீ விலும், கரடிகளில் புகழ் பெற்ற பழுப்பு நிற்க்கிர்டி கிழக்கு ஐர்ோப்ப்ா மற்றும் ஆசியர் பீேட அம்ெரிக்கா'அல்ால்க்ா வின்ளகுட்ா 'ர்ே ன்ற் பகுதிகளி

Page 8
--6-
அலும், துருவக்கரடிகள் பனிப்பகுதிகளிலும் வாழ்கின்றது. இதுபோன்றே பறவைகளும் வேறுபட்ட சூழ் நிலைகளில் மாறுபட்ட வடிவம், நிறம், சத்தம் போன்றவற்றில் வாழு கின்றன. சைபீரியன் டக் என்னும் வாத்து இனத்தைச் சேர்ந்த பறவை ஐரோ ப் பாக் கண்டத்தில் தோன்றி வளர்ந்து வாலிபப் பருவத்தை எய்தியபின் இப்பறவைகள் ஆசியாக் கண்டத்தை நோக்கி ஏறத்தாள 8000 மைல்கள் வரை பறந்து வந்து கடற்கரையோரங்களில் பருவச்சல்லாபங் களில் ஈடுபட்டுப் பெண்வாத்து இங்கேயே முட்டையிட்டு, அடைகாத்து குஞ்சாக்கிய பின் குடும்பசமேதராக மீண்டும் த மது தாயகம் நோக்கித் திரும்புகிறது. இந்தப்பறவை இனம் தனது வாழ்க்கை வட்டத்தையே ஒருமுரண்பட்ட முறையில் அமைத்துக் கொண்டனவே. மற்றும் அரிய உயிரி னங்களும் உலகின் மாறுபட்ட பகுதிகளிலேயே தோன்று கிறது, வளர்கிறது, வாழ்கின்றது. எல் லா உயிரினங்களும் பூமியின் மேற்பரப்பெங்கும் ஒரே சீராக உண்டாவதில்லையே. பூமிக்கோளில் இயற்கைக்குள்ளேயே எத்தனை எத்தன்ை வேறுபாடு இருப்ப  ைத க் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்கள்தாம் இப்படி என்றால் மனித வர்க்கத்தில் ஆயிரக் கணக்கான வேற்றுகள் மலிந்து காணப்படுகின்றனவே! மனிதனிடமுள்ள வேற்றுமைகளைப் பட்டியல்போட முடி டிம்ா! என்ன?
இயற்கை தன் ஒரு அங்கமான மனித இனத் ைத த் தொகுதி தொகுதியாகப் பிரித்து வேடிக்கை பார்க்கிறது. இயற்கை மனிதனைக் குழு ரீதியாகப் பிரிக் க மனிதன் தனக்குள்ளே பல பல வேலிகளைப் போட்டு தன்னைத் தானே அழித்துக்கொள்கிறானே. இதனைத்தான் ஆங்கிலத் தில் கனிபோலிசம் என்கிறார்களோ ? பெரும் பாலான சோவியத் மானிட இயல் அறிஞர்கள் மனித குலத்தை (இயற்கை பிரிந்த வண்ணம்) மூன்று பெரிய இனங்களாகப் பிரிக்கிறார்கள். மனித நிறத்தை, முக அமைப்பை, ஆள் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு மங்கோலிய வகை (மஞ்சள் நிறம்) இனம், ஐரோப்பிய வகை (வெள்ளை

-- 7 -
நிறம்) இனம், நீக்ரோ - ஆஸ்திரேலிய வகை (கறுப்பு) இனம் என மூன்று பெரிய இனங்களாகச் சோவியத் மானிட இயல் அறிஞர்கள் பிரித்திருக்கிறார்கள். இப்பிரிவுகளில் இருந்து கிளை இனங்கள் தோன்றியுள்ளன. இப்பெரிய இனங்கள்
நாட்டில், மொழியால் சமயத்தா ல் , கலாச்சாரத்தால், உணவால், உணவுப் பழக்கத்தால், அரசியலால், இன்னும் பல அம்சங்களால் அணு அணுவாகத் தன்னைப் பிரித்துக் கொண்டு இப்பூமியை நிம்மதியற்ற பிரதேசமாக ஆக்கிக் கொண்டுள்ளானே? முன்னைய சோவியத்யூனியனில் 145 மொழிகளும்அம் மொழிக்குரியவர்களும் உள்ளனர். எதியோப் பாவில் 299 மொழிகளும் அதனைச் சார்ந்தவர்களும் இருக் கின்றார்கள். இந்தியாவில் அனேக மொழியும் அதற்குரிய வர்களும் உள்ளனர். இப்படியே அநேக நாடுகளில் அனேக மொழிகள் உண்டு.பெரும்பாலான நாடுகளில்மொழி ரீதியாக மனித குல ம் பிரிந்து வேறுபட்டு நிற்கிறதே. இதனால் பிரச்சினையின் பரிணாமம் எ ல் வளவு இருக்குமென்று சிந்தித்துப் பாருங்கள் - வேற்றுமைகளை எல்லாம் சிந்திக்கப் போனால் கையில் தலைவலி நீக்கி மருந்தான அஸ்பிரின், பனடோல், போன்றவற்றைக் கையில் வைத்திருக்க வேண் டுமே என நினைக்கிறீர்களா? மனித வாழ்வில் வேற்றுமைகள் இல்லாம்ல் இருக்குமா? A
மிருகத்தில் இருந்து பரிணமித்த மனிதனை மனத்தால், பண்படையச் செய்து இப்பாரினில் உயர்ந்த மனிதர்களாக், கும் பணியைத்தான் மதங்கள் செய்யவேண்டும். ஆனால் சமயங்கள் மனிதர்களைக் கூறு கூறாக்கிவிட்டதே. ஒவ், வொரு நாட்டிலும் பெரியார்கள் தோன்றி தத்தம் சித்தாந் தங்கள்தாம் சிறந்தது என்று வாதிட்டுத்தம் பின்னால் மனிதக் கூட்டத்தையும் திரட்டி இன்னொரு மதத்தையும் அதனைச் சார் ந் த மக்களையும் சாடுகிறார்கள். த ம் மதத்தை மக்களிடையே பரப்பும் நோக்கோடு ஒரு குழுமக்களை இன் னொரு குழு மக்களோடுமோத விடுகிறார்களே . சில சந்தர்ப் பத்தில் பிற மதத்தைச்சார்ந்த மாந்தர்களைத் துன்புறுத்துவ தோடு கொன்றும் விடுகிறார்கள், பிற சமயத்தைச் சார்ந்தி

Page 9
-8-
வழிபாட்டு நிலையங்களையும் அதனைச் சேர்ந்த சின்னர்
களை உடைத்தும் சிதறடித்தும் சின்னாபின்னப்படுத்தி விடுகிறார்களே! ஒரு மதத்தைச் சார்ந்த சடங்கு முறைகளுக் கும் இன்னொரு மதத்தைச் சேர்ந்த சடங்கு முறைகளுக்கும் அதிக வேறுபாடுகள் உண்டு. சடங்கு முறைகளைக்கொண்டு மதத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், தூய்மையையும், மேன்மை களையும் எடுத்துக்கூறி மக்களிடையே பிணக்கும் சண்டை பும் ஏற்படுகிறதே, சில நேரங்களில் இரத்தக்களரியும் ஏற் படத்தான் செய்கிறது. ஏன் இந்த அவலம் இந்த அகிலத்தில்? உலகில் தோன்றிய மதங்களின் வரலாற்றையும் அதன் வளர்ச்சியையும் உற்று நோக்கிப்பாருங்கள், உ ன் மை விளங்கும். எ ன் ன நோக்கத்தை அடையச் சமயங்கள் தோன்றியதோ? அக்குறிக்கோளுக்கு மனிதரைச் சமயங்கள் அழைத்துச் செல்கிறதா என ஒரு கண நேரம் சிந்தியுங்கள். நாம் எங்கு நிற்கிறோம் என முக்காலத்தையும் சீர்தூக்கிப் பாருங்கள், எ மது நிலை புரியம். எம்மத்தியில் வேற்றுமை மலிந்து எமது சி ன் ன வாழ்நாளைச் சுருக்கிவிடுகிறதே! அந்தோ பரிதாபம்!! ஐயகோ என்னே துன்பம்!!!
மனிதனால் கைக்கொள்ளும் கலாச்சாரமும் மக்களுக்கு மக்கள் மாறுபட்டுத்தான் காணப்படுகிறது. நாட்டின் தட்ட வெப்பம், இடத்துக்கு ஏற்ப மூலவளம், சமூக மரபொ ழுக்கம் முதலியவற்றின் அடிப்படையில் கலாச்சாரங்களும் ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டு நிற்கின்றது. சமூக கலாச்சாரம், நாட்டுக் கலாச்சாரம் என ஒவ்வொரு இனத்தின் அடையா ளச் சின்னங்களாக மு த் தி  ைர இடப்பட்டு வருகின்றது. ವ್ಲಿಗಿ: ಙ್ಗಹಾಂಗ್ಲಿ தேசிய ஐரோப்பியூ மக்க ன் கே சி உடைக்கம் á,6utréFLi: ge Göst (A). ଜଳୌ'N'6 காரி"க்கும். oż పెనీ ఆ வேற் றுமை உண்டு. முஸ்லீம் மக்களின் உடைக்கு இந்தியரின், உடைக்கும் வித்தியாசமுண்டு. தமிழரின் தேசிய உடைக்கும், சிங்களவரின் தேசிய உடைக்கும் வேறுபாடு உண்டு. சர்வு தேசிய மகா நாடு ஒன்று நடைபெறும் போது அங்கு வருகை தரும் பிரதிநிதிகளின் உடையில் இருந்து அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று ஓரளவு ஊகித்து கொள்ளலாம்.

----9.ن--
மணவாழ்க்கையை எடுத்துப்பார்த்தால் கூட அதுவும் வேறுபட்டுத்தான் காணப்படுகிறது. ஐரோப்பியரின் மணி வாழ்க்கைக்கும் ஆசிய நாட்டு மக்களின் மண்வாழ்க்கைக்கும் நிரம்ப வித்தியாசமுண்டு. ஐரோப்பியருள் ஒரு ஆண் அல்லது பெண் பலதாரம் மனம் செய்து கொள்ளலாம். ஆசிய நாட்டு ஆண் அல்லது பெண் பலதார மணத்தைப் பண்பாக் கிக்கொள்வதில்லை. முகமதியர் பொருளாதாரத்தைக் கருத்திற்கொண்டு சமகாலத்தில் மூன்று அல்லது ந் ர ன் கு பெண்ணை மணம் செய்யலாம். ஆபிரிக்க நாட்டு மக்களின் மணக் கலாச்சாரம் இன்னொரு விதத்தில் இருக்கிறது. ஒவ்வொரு சமூகமும் தமது மனப்போக்கிற்கு ஏற்ப ஒவ் வொரு பழக்கத்தையும் ஏற்று அதனையே மரபொழுக்க மாகக் கைக்கொள்ளுகிறார்கள், நாடுகளில் நிலவும் இல் வாழ்க்கை முறைகளை எடுத்துக்காட்டி எது சிறந்தது என்று கூறுவதல்ல. இக்கட்டுரையின் நோக்கம். இக்கட்டுரையின் நோக்கிம் நடத்தைக் கோலத்தின் வேற்றுமையைக் காட்டு வதாகும். ஐரோப்பியர் தமதுவாழ்க்கையைப் 5. "הם נזק זח{_ו எடுக் காமல் வெகு இலேசாக எடுக்கிறார்கள். ஆண் பெண் உறவு இன்பத்திற்காகவே என்ற மனப்போக்கில் உள்ளனர். ஆனால் அங்கு இல்வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சி, நம்பிக்கை, அன்பு, பாசம் முதலியனவற்றிற்கு இ ட மில்  ைல என்ற தோற்றப்பாட்டைத் தருவதுபோற் தோன்றுகிறது. இல் வாழ்க்கையின் முக்கிய அம்சமான ஆண் பெண் உற  ைவ. வெறும் இன்பத்திற்காகவே என்ற வடிவத்தைத் தருகிறது. ஆசிய நாட்டுத் திருமணங்களிலோ அதன் பெறுபேறான
இல்வாழ்க்கையை இலே சா க எடுப்பதில்லை. அதற்கு,
மிக முக்கியத்துவம் கொடுத்து வாழ்க்கையில் ஒரு சுமையை ஏற்றுவது போற் தோன்றுகிறது. ஆனால் இல்வாழ்க்கையில் பொறுப்புணர்ச்சி, நம்பிக்கை, அன்பு, பாசம், புரிந்துணர்வு போன்றவை துளிர்விடுவதைக் காணக்கூடியதாக இருக்கி றது. திரவியந்தேடி உலகெங்கும் உ ல புே ம் எம்மக்கள் ஐரோப்பிய மணவாழ்க்கைக்கும் ஆசிய நாட்டு மணவாழ்க் கைக்கும் உள்ள வித்தியாசத்தை மிகத் தெளிவாகப் புரிந்து' கொள்வர்.

Page 10
- 10
உணவும் உணவுப் பழக்கமும் கூட எல்லா இடங்களி லும் ஒரு சீராக அமைவதில்லை இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபட்டுத்தான் நிகழ்கிறது. உலகி ன் ஒரு மூலையில் றொட்டியும், இறைச்சியும் என்றால் இன்னொரு மூலையில் சோற்றுடன் இறைச்சி என்றும் ஒரு பிரதேசத்தில்  ைச வ உண்வு காரரும் இன்னொரு பகுதியில் அசைவ உணவுக்கார ரும் இருக்கிறார்கள். உலகில் 20 அசைவர்களுக்கு ஒரு சைவ உணவுக்காரரும் இருப்பதாகக் கணக்கெடுப்பு ஒன்று தெரி விக்கிறது. இவ். உணவுப் பழக்கத்திலும் சைவஉணவுக் காரர் தங்களை உயர்ந்தவர்களாகவும் அ  ைச வ உண வுக்காரரைத் தாழ்ந்தவர்களாகவும் எண்ணும் ஒரு தோற்றப் பாட்டைச் சிலர் கொண்டிருப்பதுவும் ஒரு விந்தைதானே! இவர்கள் ஒரு குறிகிய வட்டத்திற்குள் இருந்து நோக்காமல் ஒரு பரந்த மனப்பாங்கோடு சிந்திப்பது நன்மை பயக்கும். அன்சவ உணவுக்காரர் ஒரு சிலரின் உணவுப் பழக்கத்தையும் அவர்களின் ‘நா’ ருசியையும் மனத்திருக்தியையும் சிம்பிளா கப் பார்ப்போமே? அவுஸ்திரேலியா நாட்டின் சி ட் ணி என்ற நகரில் ஒரு பெரிய உணவகத்தில் எனது நண்பன் குமார் நேரில் பார்த்த விடயம் ஒன்றைக் கூறுகிறான் நீங்களும் கேளுங்கள் - இரு சீன தம்பதிகள் உணவகத்திற்கு வந்து உணவு ரக விபரப்பட்டியலைப் பார்த்துவிட்டு பரிசா ரகனை அழைத்து ஒரு வகை உணவைக் கேட்டனராம். முக்மலர்ந்த பரிசாரகன் தம்பதியினரில் ஒரு சாப்பாடு ராமரை அழைத்துச் சென்று உணவகத்தின் பின்னாலுள்ள பாம்புப்பண்னைக்குச் சென்றாராம். அங்கு சாப்பாட்டு ர்ாமர் ஒரு வகையைச் சேர்ந்த உயிர்ப்பாம்பைக் காட்டி அதனைச் சமையல் செய்து தரும்படி கேட்டுக்கொண்டா ராம் - வேலைகள் துரிதமாக நடைபெறத் தொடங்கியதாம் எப்படி " நா ருசி, அப்படித்தானே அவர்கள் உணவுப் பழக்கம் ஹி..ஹி. ஹி. நீங்கள் ஏன் விழி பிதுங் குகிறீர்கள். பர்மா நாட்டில் சமையல் (அறைகளில்) சில தொட்டிகளில் மீன் வகையை நனைத்து உலர வைத்து அம்மீன் வகையில் உண்டாகும் புழுக்களைப் பெரிதாக வளர்த்தெடுத்து அதனை உணவாகக் கொள்கிறார்களாம். சிலர்கோழி முட்டையை அரை அவியலாகவோ முழு அவியலா

-11
கவோ சாப்பிடுகிறார்க்ள். இன்னும் சிலர் கோழிமுட்டையை வேறு விதமாகச் சாப்பிடுகிறார்கள். டுனீசியா நாட்டில் கோழி முட்டையை அடைவைத்து, 19-ம் நாள் எடுத்து. அதனை அவித்து முட்டைக்குள் இருக்கும் குஞ்சைஎடுத்து அதன் இறகுகளை நீக்கியபின் உணவாக்கிக் கொள்கிறார் களாம் - பாருங்கள் மனிதனுக்கு மனிதன் உணவுப் பழக்கத் தில் எப்படி வேறுபடுகிறான் என்று- விந்தைமிகுந்த உலகம் ஐயா. உருவத்தில் எல்லோரும் மனிதர்கள்தாம், செயல் வடிவில்தான் எத்தனை மாற்றங்கள் C செயலைத் துண்டும் எண்ண அலைகள்தானே காரணம்? எண்ண அலைகளும்
மனித மூளையில் இருந்துதானே தோன்றுகிறது.
அரசியலை எடுத்துப் பாருங்கள், இக்காசினியில் எத்தனை எத்தனை கட்சிகள்; எத்தனை எத்தன்ை தலைவர்கள் நாட் எடையும் மக்களையும் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருப்பது வும் அரசியல் வாதிகள்தாம் நாட்டைக் குட்டிச்சுவரர்க்குவதும் அரசியல்வாதிகள்தாமே. இங்கர்சல் "மதம் ஒரு போதை வஸ்து என்றார்கள் ஆனால் அரசியல் மட்டும் அமிர்தமா? அவனியில் ஒரு சில நாடுகள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியா கவும் வாழ வேறு பல நாடுகளில் அரசியல் கொந்தளிப்பால் மக்கள் அ ன் றா டம் செத்துக்கொண்டிருக் கிறார்களே? முரண்பட்ட அரசியல் கருத்துக்களால் தலைவர்கள் வேறு பட்டு நின்று மக்களையும் வேறுபடுத்தித் தீராத துன்பத்தி லும் வேதனையிலும் , தள்ளிவிடுகிறார்களே. அரசியல் வேறு பாட்டால் ஆயுதக்கலாச்சாரம் பல நாடுகளில் அரசியல் கலாச்சாரமாக மாறிவிட்டது. அரசியல் தலைவர்கள் தமது இயக்கத்தைப் பிரபல்யப் படுத்துவதற்காகவே அ ப் பாவி மாந்தர்களைப் பொது இடங்களிலும் சுட்டுத்தள்ளி விடுகி றார்களே? ஒரு ப்ாவமும் அறியாத நிரபராதியான மககள் அவச்சாவை எந்நேரமும் எதிர்நோக்குகிறார்களே? இந்த மாறுபட்ட அரசியல் நோக்கால், குறுகிய புத்தியால், மதி நுட்பக்குறைவால் எவ்வளவு லட்சம். மக்கள் இறத்துபட் டனர், இறந்து கொண்டே இருக்கிறார்கள். மனிதர்களைக்

Page 11
- 13 -
கொன்று குவிப்பதற்காகவே நவீன ஆயுதங்களை உற்பத்தி செய்ப்பும் ஆயுத வியாபாரிகளும் இருக்கிறார்களே! இவர்கள் எல்லோரும் ஆற்றறிவு படைத்த மனிதர்கள் தாமோ!! பிரச்சினைக்கு மருந்துகாணமுடியாதவர்கள்தானா அரசியல் மேதைகள்? இந்த அரசியல் கொலைஞர்கள் மத்தியில் தானே அவதார புருடர் மகாத்மா காந்தியும் வாழ்ந்தார்? மாறுபட்ட தன்மையில் இருக்கும் இந்தப் பூமியில்தானே அகிம்சா மூர்த்தி காந்தியும் தோன்றினார், அவர் மறக்க முடியாத காலமாகிவிட்டாரே.
பல வகைக் கருத்துக்களை அள்ளி வீசும் மனித மனங் கள் தாம் வெவ்வேறாக இருக்கிறது என்று உணர்ந்தால் மனித உடலில் ஒ டு ம் இரத்தமும் 4 வகை இருப்பதாக ம ரு த் துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்களே, ம னி த உடலில் ஒடும் இரத்தத்தை A, B, AB, O என 4 வகை. யாகப் பிரித்திருக்கிறார்கள். இதில் என்ன விந்தை என்றால் ஒரு மனித உடலுக்கு இரத்தம் ஏற்ற வேண்டுமாயின் அவனது இரத்தத்தின் வகை அறிந்து பொருத்தமான வகை இரத்தமே ஏற்றவேண்டுமாம். இன்ன வகை, இர த் தம் உடையவருக்கு இந்த வகை இரத்தந்தான் செலுத்தப்பட லாம் என்ற மருத்துவ முறை உண்டாம். ஒருவகை இரத்தம் உடையவருக்கு அதேவகை இரத்தம் உடையவர் இரத்தம் அளிக்கலாம். இது தவிர A B வகை இரத்தம் உடையவ ருக்கு AB வகை இரத்தத்துடன் மற்ற மூன்று வகை O, A, B இரத்தமும் சேரும் A வ  ைக இரத்தம் உடையவருக்கு A வகை இரத்தம் அல்லது O வகை இரத்தம் அளிக்கப்பட லாம். அதே போல B வ ைக இரத்தம் உடையவருக்கு. B வகை இரத்தமோ O வகை இரத்தமோ செலுத்தலாம். ஆனால் O வகை இரத்தம் உடையவர் பெரும் யோக்கிய வான் போலும், 0 வகை இரத்தம் உடையவருக்கு O வகை இரத்தம் செலுத்தப்படல் வேண்டுமாம். இரத்தத்தின் இரத் தமே இயற்கை உன்னையும் விட்டுவைக்க வில்லையே, பகுதி பகுதியாகப் பிரித்து விட்டதே! என்ன செய்வோம்!!

-3-
நீண்டதூரம் சென்ற நாம் ஒரு குறுகிய வட்டத்திற்கு, வருவோமே. நண்பர் சோமுவின் கைரேகைக்கும் நண்பர், சிவாவின் கைரேகைக்கும் வித்தியாசம் இருக்கிறதே. இதனா லன்றோ அ நேக காரியங்களுக்கு அதிகாரிகள் வி ர ல் அடையாளம் (Finger Print) எடுக்கிறார்கள். ந ன் பர் கீரனுக்கு காரச்சாப்பாடு பிடிக்கிறது. ஆனால் அவரது காதலி பானுவுக்கு ஐஸ் கிறீம் விருப்பமாம். ஏன் நண்பி லதா காலை 8 மணிக்கு நல்ல மனோ நிலையில் வாயெல் லாம் பல்லாக சிரித்துக் கதைத்தாள் இரு மணி நேரம் களித்து ( 10-00 மணிக்கு) முகத்தை இருட்டாக்கிப் பேச்  ைச க் குறைத்துக் காணப்படுகிறாளே! இப்படி அவள் இருந்தால் கிட்ட நெருங்க முடியுமா? காரணம் அவள் மனோ நிலை மாறிவிட்டது. இவ்வுலகில் எங் கும் எதிலும் வேறுபட்ட தன்மை, முரண்பட்ட நிலையைத்தானே காண முடிகிறது, உணரக்கூடியதாக உள்ளது. அப்படியாயின் மனிதர்களாகிய நம்முள் ஒன்றுபட்டு வாழ முடியுமா? நாமும் பிற ஜீவன் களும் ஒன்றுபட்டு வாழ முடியுமா? என்பதே சிந்தனைக்குரிய விடயமாக உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டால் தானே நாம் யாவரும் மகிழ்ச்சி அடையமுடியும்.
இவ்வளவு வேற்றுமைகள் இருந்தும் உலகம் முற்றாக அழிந்து விட்டதா? இல்லை. நுணுகிப் பார்த்தால் உலகில் எத்துறையை எடுத்துப்பார்த்தாலும் அங்கு ஒரு வளர்ச்சியை, முன்னேற்றத்தையே காண முடிகிறது. வளர்ச்சியின் பயன் உயர்ந்ததாகவும் நன்மையாகவும் இருத்தல் வேண்டுமே. முன்னேற்றத்தின் பயன் தீமை தருவதாக அமையுமாயின் விரும்பத்தக்கதன்று. த ம் பி உரித்திரமூர்த்தியின் பிரேதப் பெட்டி செய்யும் கைத்தொழில் நிறுவ ன ம் ந ன் கு வளர்ச்சி பெற்று அவர் செல்வந்தராகி விட்டார் என்றால் என்ன அர்த்தம்? எமது நாட் டி ல் பெருந்தொகையான மருத்துவர்கள் தொழில் புரிகிறார்கள் என் ற ர ல் என்ன பொருள்? எமது மாவட்டத்திற்கு நிறைய நீதிமன்றங்களும் வக்கீல்களும் தேவை என்றால் என்ன அர்த்தமென்று சிந்தி யுங்கள். அணுக்குண்டு தயாரிப்டு வளர்ச்சியில் நாட்டுகிே

Page 12
-14
நாடு போட்டியிடுகின்றன. உலகில் வல்லரசு நாடுகள் ஒன் றுக்கு ஒன்று போட்டியிட்டு அணுகுண்டுகளைத் தாயாரித் துவைத்திருக்கின்றது. வல்லரசுகளைப் பார்த்த மற்றைய நாடுகள் சும்மா கைகளைக் க ட் டி பார்த்துக்கொண்டி ருக்குமா? ஆட் பலமும் செயற்திறனும் கொண்ட இந்தியா சும்மா இருக்குமா? என்ன? ஆட் பல ம் குறைந்தாலும் மூளைப்பலமும் வீரமும் கொண்ட இஸ்ரேல் நாடு வெறுமனே இருக்குமா? ஆட் பலமும் பண வசதியும் கொண்ட இஸ்லா மிய நாடுகள் பாரா முகமாக இருக்குமா? பெரும் கொடை யான பகுத்தறிவு படைத்த ஒரே உயிரினமான மனிதன் மனிதனையே அழிக்கும் அணுகுண்டுப்போட்டியின் வளர்ச் சியைப் போற்ற முடியுமா? மனிதனை மட்டுமா, பிறஉயி ரினங்களையும் அணு குண்டும் ஏவு கணையும் கம்மா விடுமா? இரண்டாம் மகா யுத்தத்தின்போது அமெரிக்கா யப்பான் நாட்டில் நாகசாகி, ஹிரோசிமா போன்ற நகரங் களில் அணுகுண்டைப் போட்டு 40000 மக்களையும் பிற பிராணிகளையும் கொன்றதை மனிதகுலம் மறந்துவிட்டதா? இதே நேரம் எ மது நாட்டில் பொறியியலாளர்களும், விவசாய நிபுணர்களும், கலைஞர்களும் பெருகிக்கொண்டு வருகிறார்கள் என்றால் வளர்ச்சி எங்கு சென்றுகொண்டிருக் கிறது எ ன் ப  ைத உற்று நோக்குங்கள். ஒரு காப்பியம் நாட்டு மக்களுக்குக் கிடைக்கமுடியாத பொக்கிசம் என்பார் கள் சிலர். ஆனால் லேறு சிலர் குறித்தகாப்பியம் நஞ்சிற் குச் சரி எ ன் று வாதிடுவர். இந் நிலையில் இருபக்கமும் குறித்த காப்பியத்தை நுணுகி நுணுகி ஆராய்ந்து அக்கு வேறு ஆணிவேர் வேறாக்கிச் சொல்லம்புகளை விடும் போது அக்காப்பியத்தின் நன்மை தீமைகளை அறிய முடிகிறது. சில சமயம் காலத்துக்கு ஏற்ப காப்பியமும் மாற்றமடைந்து தரத்தில் உயர வாய்ப்பு ஏற்படும். இதனால் இலக்கியத் துறையும் வளர்ச்சி கொள்கிறது,துடுப்பாட்டத்தை (Cricket) எடுத்துப் பார்ப்போமே. A என்ற குழுவில் உள்ள தலைவர் மட்டை வீசுவதில் (batsmen) வல்லவர் B என்ற குழுவினுல் Aத்தலைவரை இரு முறை விளையாடியும் வீழ்த்தப்பெரும்

---, 5
கஸ்ரப்பட்டனர் .அட்டடியே விளையாடவிட்டுத் தோல் வினய அடுத்தடுத்துச் சந்திக்க முடியுமா? A குழுவில் தலைவரை சுழல் பந்து மூலம் அல்லது மிக வேகமாகப் பந்தை விசும்
போது வீழ்த்தலாமென தீர்மானித்தால் அப்படிச் செய்து
பார்க்கும்போது அத்தலைவர் மண் கவ்வினார். அடுத்த
கட்டமாக A குழுத்தலைவர் த ன து யுத்தியை மாற்றிச்
சிறந்து விளங்க எத்தனிப்பார் . இப்படியே துடுப்பாட்டத்
துறை மு ன் னே ற வழிபிறக்கும். இம்முறையில் நல்ல) விளைவை ஏற்படுத்தும் வளர்ச்சியே நாட்டுக்குத் தேவை.
தரணியில் மேற்றுமைகள் நிலவுவதற்குச் சூழல்தான் அடித்தளமாக இருப்பதை நாம் உணரமுடிகிறது. இயற்கைச் சூழலாக இருக்கலாம் சமூகச் சூழலாக இருக்கலாம் இப்பூமி யில் நிலவும் வேற்றுமைகளுக்கு சூழலும் குறித்த சந்தர்ப்ப மும்தான் பொறுப்பாகும். எனவே சூ ழ ல் நல்லவளர்ச் சியைத்தந்தால் அதனை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கு ஏற்ற விதத்தில் சூ ழ  ைல மாற்றியமைக்கவும் நாம் தெரிந்து கொண்டால் இப் பிரபஞ்சத்தில் பிரச்சினை ஏது? நாம் மட்டும் இப்பிரபஞ்சத்தின் பிரதிநிதிகள் அல்ல. பிற ஜீவன் களும் பிரபஞ்சத்தின் அங்கத்தவர்களேயாகும். நாம் வேறு பிற உயிரினங்கள் வேறு அன்று, மனிதர்களும் மற்று ம் உயிர்வகைகளும் தோற்றத்தில் ஒரு மூலத்தில் இருந்து வந்தவர்கள் என எண்ணிச் செயல்படும்போது பிரபஞ்ச மகிழ்ச்சி காணமுடியும்.
米

Page 13
2 ஒற்றுமையின் மூலம்
வேற்றுமை மலிந்த உலகமாயினும் இங்குள்ள ஜீவராசி களுக்கும் உயிரற்ற வஸ்துக்களுக்கும் ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு இருப்பதைத் துல்லியமாகப் பார்க்கும் போது அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐதரசன், ஆக்சிசன் ஆகிய இரு மூலகங்களின் சேர்வையே நீர். இன்நீர் மிகவும் குளிர்ந்த நிலையில் (** c றிலும் அதற்குக் கீழேயும்) பனிக் கட்டியாகவும் அளவான வெப்ப நிலையில் தண்ணிராகவும் மிகவும் வெப்ப நிலையில் ( 100 C ரி லு ம் அதற்குக்கூடிய நிலையில்) நீராவியாகவும் தென்படுகிறது. தட்ப வெப்ப நிலையைக்கொண்டு நீரானது பல வடிவத்தை தருகிறது. ஆனால் அதன் மூலம் இரு மூலகங்களின் சேர்வையே. இது போலவே ஒன்றுக்கு ஒன்று வேற்றுமை இருந்தாலும் அதன் மூலக்தின் ஒற்று மை உண்டு. இப்பூமியில் வாழ்கின்ற மனிதனும் சரி மற்றும் ஜீவராசிகளும் சரி ஒன்றுக்கு ஒன்று ஒற்றுமையின் அடிப்படையில் ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர் வாழவிட்டு வாழ்ந்தால் யாவரும் மகிழ்ச்சியாகப் பூமியில் வாழலாம். இப்பூமியில் மனிதன் மட்டுந்தான் வாழ உரிமை
பெற்றவன் அ ல் ஒ' ன் மற்ற உயிரினங்களும் வாழ உரி:ை பெற்றவர்களே என்ற மனோநிலையில் மனிதன் வாழவேஸ் டும். மனிதரைப் பொறுத்த மட்டில் மனிதனுக்கு மனிதன் உதவியாக இருந்து ஒற்றுமையுடன் வாழப்பழகி எல்லோரும் மகிழ்ச்சியின் எல்லைக்குச் செல்வதே மனிதனின் குறிக்சோ ளாக இலட்சியத்தின் முடியாக இருக்க வேண்டும். g; தற் கான அடிப்படைக் காரணிகள் என்ன என்பதையும். அதன் மூலக்கரு என்ன என்பதைப் பகுத்து, தொகுத்துப் பார்ப்பது மிகவும் இன்றியமையாததாகும்.
உலகின் முக்கால் பாகத்தைத் தன்வசம் எடுத்துக்
கொண்டு பரந்து விரிந்து இருக்கும் இயற்கைப் பொருளான
நது ;ー ஜருககு Qり
த ண் ணி  ைர எடுத்துக்கொள்வோம். ஐந்து கல்லால்

- 17 -
(ஐம்பூதம்)ஆன கோட்டையாகிய எமது உடலிலும் முக்காற் பங்கு நீர்தானே உள்ளது. மேலே குறிப்பிட்டது போன்று நீர் என்பது ஆக்கிசன், ஐதரசன் வாயுக்களின் சேர்வை யாகும். எம்மை இன்பத்தில் ஆழ்த்தும் தென்றல் என்று சொல்லும் காற்று என்பது என்ன? பல வாயுக்களின் கலவை யாகும். நைதரசன், ஐதரசன், ஆக்சிசன், காபன் ஈர் ஒட் சைட், வேறு பல வாயுக்கள் கலந்து இருப்பதையே காற்று என்கிறோம். உப்பில்லாப் பண்டத்தை குப்பையில்போடு என்று கூறும் நா ருசியைக் கூட்டும் உப்பு - சோடியம், குளோரின் போன்ற மூலங்களின் கூட்டுப்பொருளாகும். மண் என்பது கூட ஒரு கூட்டுப்பொருளாகும் அதாவது கல்சியம், சோடியம், பொட்டாசியம், சிலிக்கா, பொஸ் பரசு, இரும்பு, குளோரின் போன்று இன்னும் அதிகமான மூலங்களின் கூட்டுப்பொருளால்ஆனதே மண் . இப்படியே நாமோ உலகில் உள்ள பொருட்கள்யாவும் இரண்டோ அல்லது மூன்றோ அல்லது அதற்கு மீேற்பட்ட மூலகங்கள் இணைந்து மூலக்கூறாகி - பல மூலக்கூறுகளால் ஆனவையே. உ ல கில் 110 வகையான மூலங்கள் இருப்பதாக விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது. அம் மூலகங்கள் திரவமாகவோ திண்மையாகவோ,வாயுவாகவோ, காணப்படுகிறது. இயற் கைப் பொருளாயினும் சரி செயற்கைப் பொருளாயினும் சரி இந்த 110 மூலங்களின் விளையாட்டால் உருவானதே யாகும். ஏன் நமது பூமியே இந்த 110 மூ ல ங் களி ன் திருவிளையாட்டில்தானே தங்கியிருக்கிறது.
மூலங்கள் ஒன்று சேர்ந்து மூலக்கூறாகி, மூலக்கூறுகள் ஒரு சூழ்நிலையில் ஒன்று சேர்ந்து ஒரு உருவத்தை அல்லது வடிவத்தைத் தருகிறது.அதே போன்று இன்னொரு சூழலில் ஒன்று கூடிய பொருட்கள் பிரிந்து உருவற்றுப்போகிறது கார் வண்டியை எடுத்துப்பாருங்கள், அத  ைன ஒருமுறை பகுதி, பகுதியாக பிரித்துப் போடுங்கள், அதில் எத்தனையோ பாகங்கள். அப்பாகங்கள் என்ன பொருளால் செய்யப்பட் டது என்று உற்று நோக்குங்கள். அப்பாகங்களில் எத்தனை மூலங்களின் கூ ட் டு இருக்குமென்று எண்ணிப்பாருங்கள், தலைசுற்றுகிறதா? தலைச் சுற்று நின்றதும் தெளிவுபிறக்கு

Page 14
-l. 8
மல்லவா? காரின் பாகத்தை கண்டபடி பிரித்தபோது அது எப்படி உருவற்றுப்போனது போன்று பாகங்களை ஒ ன் று சேர்க்கும்போது அழகான கார் என்ற உருவத்தைப் பெறு கிறது. இயற்கைப் பொருளாக இருக்கலாம் செயற்கைப் பொருளாக இருக்கலாம் யாவும் மூலகங்களின் கூட்டேயாகும் ஆதிமூலத்தைஆராயும்போது உயிர் வகைகளும் இந்த மூலகங் களின் கூட்டுப்பொருளேயாகும். உயிர்களுக்கிடையே உள்ள மூல ஒற்றுமையின் ஆரம்பம் தொடங்குகிறது எ ன் ப  ைத ஒரளவு அறியக்கூடியதாக உள்ளது.
சூரியனில் இருந்து பிரிந்த கோள்களில் ஒன்றான வெப்பக் கட்டியான பூமி பல இலட்சம் ஆண்டுகளாக குளிர்ந்தபின்பே பூமியில் ஒரு அதிசயம் நடந்தது. அதுதான் பூமித்தாய் கருவுற்றது. *6 பில்லியன் ஆண்டுகளுக்குமுன் கருவுறத் தொடங்கினாள் அன்னை, அதுதான் பூமியில் ஒரு கலமுடைய உயிரி கடலோரத்தில் தோன்றியது, தகுந்த ஒரு சூழ்நிலையில் மூலகங்களின் கூட்டால் தட்ப வெப்பத்தின் உதவியோடும் மின் காந்த அ  ைல க ளி ன் துணையோடும் இவ்வுயிரினம் தோன்றியது. இந்த உயிரினம் காலச் சக்கரத்தின் சுழற் சியால் பரிணாமம் பெறத் தொடங்கி பல வகை உயிரினங்கள் தோன்றலாயிற்று. ஒரு கிளையில் இருந்து தாவர வர்க்கமும் இன்னொரு கிளையில் இருந்து மிருகவர்க்கமும் தோன்றியது. இவை கள் யாவும் பலகலங்களின் கூட்டமைப்பில் உருவா னவையேயாகும்.
ஒரு உயிர்ப்பொருளின் ஒரு கலத்திலேயே அந்த உயிரி னத்தின் சகல குணநலங்களும் (மரபணுக்கள் மூலம்) அடங்கி ஒடுங்கி இருக்கின்றது. பல கலன்களின் கூட்டமைப்பினால் ஒரு உயிர்ப்பொருள் உருவாகிய போதும் இக் கலன்களின் கூட்டமைப்புக்கு ஏற்ப அதன் வடிவம் அல்லது உருவ ம் மாறுபட அந்த உயிரினத்தின் பெயரும் மாறுபடுகிறது. அது மயிலாக இருக்கலாம்,குதிரையாக இருக்கலாம். வடிவம் தான் மாறுபடுகிறதே தவிர மூலம் ஒரளவுக்கு எல்லாமே ஒன்றுதான் ஐயா. ஜீவர்ாசிகள் ஒன்று க்கு ஒன்று மூல

அம்சங்களில் ஒன்றுபடுகின்றன என்பதைச்சற்று சிரமத்தோடு கண்டு கொண்டோம். என்ன ஐயா ஏதே தோ எழுதி அலுப்புத்தட்டக் செய்கிறீரே என யோசிப்பது போ ற் தோன்றுகிறதே! ரசனை இல்லாமற் போகாது - மேலும் பார்ப்போமே,
ஒரு பொருள் எந்த எந்த மூலக் கூறுகளால் ஆனதோ அப்பொருளைப் போன்று இன்னொரு பொருள் தோன்று வதற்கும் அதே மூலக்கூறுகள்தான் தேவைப்படுகிறது. தேவையற்ற மூலக்கூறுகளைப் பொருத்தினால் வேறொரு பொருள்தான் தோன்ற முடியும். இதே விதியைத்தான் உயிரினங்களின் உணவைப் பொறுத்தமட்டில் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. உயிர் வகைகளின் உ ட  ைல ப் பொறுத்த மட்டில் கிட்டத்தட்ட ஒரேமாதிரியான மூலக் கூறுகளால்தான் ஆனது. உடல் டெருக்கம் ஏற்படுவதாக இருந்தால் அது என்ன மூலக்கூறுகளால் ஆனதோ அதே மூலக்கூறுகளால் ஆன பொருளைத்தான் ந.ா ம் வழங்க வேண்டும். கொழுப்பு, காபோகைற்றேற், புரதம், விற்ற மின் என்று நாம் விதம் விதமாக வகுத்தாலும் ந ம து உடலுக்குத் தேவையான மூலக் கூற்றையே நாம் வழங்கவேண் டும். உயிரினம் யாவற்றிற்கும் ஒரே வகையான உணவுதான் (மூலக்கூறுகளின் தொகுதி) தேவைப்படுகிறது. பறவையும் சரி, மிருகமும் சரி, ஏன் தாவரமும் சரி ஒரே வகையான உணவைத்தான் உட்கொள்ளுகிறது. நாம் பயிர்ச்செய்கை யில் ஈடுபடும்போது பயிருக்கு எவ்வகையான பசளையைப் பிரயோகிக்கிறோம் என்பதைச் சற்று யோசித்துப்பாருங்கள்? முற்காலத்தில் மனிதனும் வேக (ா த இறைச்சியைத்தான் உட்கொண்டான் சிங்கமும் புலியும் வேகாகஇறைச்சியைத் தான் தின்கிறது. நாம் மாம்பழத்தைச் சாப்பிட்டால் அணிலும் மாம்பழத்தைச் சாப்பிடுகிறது - ஏன் காகம்கூட மாம்பழத்தை உணவாகக் கொத்துகிறது. எமது குழந்தை கள் இனிப்புப் பண்டத்தை விருப்போடு வாயில் இரக்கம்ஸ் எறும்பும் இனிப்புப்பண்டத்ஆைர்தீஸ்யூ தமி போகிறது: எனவே ஒவ்வொரு உயிரினமும் உணவாக உட்கொள்வதும்

Page 15
--20
ஒரே மூலக்கூற்றைத்தான். உயிரினம் வடிவத்தால் மாறுபட் டாலும் அதன் மூலத்தேவை ஒன்று த ர ன். இப்படிப் பகுத்துப் பார்க்கும்போது மனிதன் மனிதனோடு அல்ல எல்லா ஜீவராசிகளோடும் சேர்ந்து ஒன்றுபட்டு வாழ்வது இயற்கையின் ஒரு அம்சமாக இருக்கிறது. இதுதான் இயற் கைச் சட்டத்தின் ஒரு அங்கமோ! உயிரினத்துள் சிறப்பான அம்சங்களைத்தன்னுள் கொண்ட மனிதன் தனக்குள் அதிகம் பிணங்கிக்கொள்கிறான்.
உயிர்களிடத்தே இருக்கும் ஒற்றுமைப் பண்புகளை ஆராய்ந்து கொண்டு செல்லும் நாம் இன்னொரு அம்சத் தையும் பார்க்க வேண்டியுள்ளது. அதாவது ஐம்புலன்களா கிய பார்த்தல்,கேட்டல், சுவைத்தல், முகர்ச்தல், உணர்த்தல் போன்ற இயல்புகளும் சராசரியாக உயிரினங்களிடையே பரவலாகக் காணக்கூடியதாக இருக்கிறது. நாம் முகர்வது போலவே இராக்காலங்களில் நறுமணத்தை அள்ளிவீசும் ம ல  ைர நாடி பூச்சிகளும் வண்டுகளும் செல்கின்றன. வண்ண வண்ணப் பூக்களைக் க ன் டு எம்மனத்தைப் பறிகொடுக்கின்றோமே அதே போன்று பூச்சிகளும் கவரப் படுகின்றன, பூக்களில் மொய்க்கின்றன. எங்கோ இருக்கும் பண்டத்தின் வாசனையை மோப்பம் பிடித்துசெல்லும் நாய்தான் விதிவிலக்கர்குமா? கிட்டத்தட்ட 200 அடி உயரத் தில் வட்டமிடும் பருந்து கீழே உணவைக் கொத்தித்தின் னும் கோழிக்குஞ்சைப்பார்த்து (கூர்மையான பார்வை) கபக்கென்று வந்து தூக்கிக்கொண்டு செல்கிறதே! ராடர் முறைத் தத்துவத்தை அறிமுகமாக்குவதற்கு உதவிய மிருகம் வெளவால் ஆகும் இரவில் ப ற ந் து திரியும் வெளவால் எதிரேஇருக்கும் பொருளோடு மோதாமல் த ன்  ைன ப் பாதுகாக்கப் பார்வை உணர்வை நம்பியிருக்கவில்லை. வெளவால்பறக்கும்போது தனது வாயால் ஒலியை உமிழ்ந்து கொண்டு செல்லும் போது அந்த மீ- ஒலி அலையானது எதிரில் இருக்கும் பொருளில் பட்டு வெளவாலின் காது களால் எதிரொலியை உணரும் போது எதிரில் பொருள் இருப்பதை உணர்ந்து விலகிச் செல்கிறது; எதிரில் பொருள்

- 2 l
களால் எதிரொலியை உணரும் போது எதிரில் பொருள் இருப்பதை உணர்ந்து விலகிச் செல்கிறது, எதிரில் பொருள் இல்லையேல் வெளவாலின் ஒலி திரும்பாதபடியால் லைன் கிளியர் என வெளவால் சுதந்திரமாகப் பறந்து செல்லும், வெளவாலுக்கு கேட்சம் நுண் உணர்வு இல்லையேல் வெள வால் இனத்தின் சரித்திரம் என்றோ முடிந்திருக்குமன்றோ ! நமக்கு மட்டுந்தான் ஐம்புலஉணர்வு உண்டு என எண்ணினால் நிச்சயம் ஏமாந்து போவீர்கள். புலன் உணர்வைப் பொறுத்த மட்டில் ஒவ்வொரு உயிரினங்களுக்கும் பொதுவாகக் காணப் படும் இயல்பாகும். சில புலன் இச்சைகள் சில சீவன்களில் சிறப்பாகக் காணப்பட்டாலும் பெரும்பாலான ஜீவராசி ளிடம் புலன் உணர்வுகள் ஒன்றாகவே உள்ளது. இந்த அகிலத்தில் காணப்ப்டும் உயிர்வகைகளுக்கு இந்த அம்சத்திலும் ஒற்றுமை உண்டு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.
பிரானை உடைய பிராணிகள் யாவும் சுவாசிப்பது பிராணவாயுவையேயாகும். அதாவது ஒட்சிசனைத்தானே சுவாசிக்கிறது. விலங்கினம் ஒட்சிசனையும் மரமோ வண்டி னமோசுவாசிப்பது ஐதரசனையா?அல்லவே அல்ல.அனவயும் சுவாசிப்பது ஒட்சிசனைத்தான். உயிர் எனப்படும் எதுவும் சுவாசமாகக் கொள்வதிலும் ஒற்றுமை மிளிர்கின்றது.
வேற்றுமை மலிந்த உலகில் ஒற்றுமைகளும் பலவுண்டு. ஆதலால்தான் இவ்வுலகம் இயங்கிக்கொண்டு இருக்கின்றது போலும்.உயிர்களின் தோற்றத்திலும்(தோன்றியமுறையில்), உயிர்களின் மூல அம்சங்களிலும் பல ஒற்றுமைகள் இருப் பதைக் காண்கிறோம். ஜீவன்களின் மூல அம்சங்களில் ஒற்றுமை இருப்பது போன்று அதன் வாழ்க்கைச் சுற்றுவட் டத்திலும் எத்தனையோ அடிப்படை ஒற்றுமைகள் இருக் கின்றது. இந்த அடிப்படை ஒற்றுமைகளையும் வைத்துக் கொண்டு எமது சூழலில் உள்ள உயிரினங்களையும் அதற்கு மேலாக மனிதவாழ்வையும் மேம்படுத்தலாமா என்பதைக் காண முயலுவோமா? ஒத்த இயல்புகள் இருப்பின் ஒற்றுமை பிறக்கும், ஒன்று பட்ட வாழ்வில்தானே மகிழ்ச்சி தங்கும்? '

Page 16
3 அடிப்படையில் ஒற்றுமை காணல்
பிரபஞ்சப் பொருட்களில் பூமியும் ஒன்று. சூரியனில் ஏதோ விதத்தில் தோன் றியதுதான் நமது கோள். தற்காலக் கருத்துப்படி பூமிக்கோளிலேயே உயிரி ன ம் இருப்பதாக முழுக்க முழுக்க நம்பப்படுகிறது. உயிரினத் தோற்றத்தில் சில வேறுபாடுகள் இருந்த போதும் மூலத்தில் யாவும் ஒன் றாகவே உள்ளது ஜீவனின் பிறப்பில் இருந்து மறையும் வரை உள்ள கால பகுதியை அந்த ஜீவனின் வாழ்க்கைக் காலம் எனலாம்.வாழ்க்கைக் காலத்தைச் சில பருவங்களாகப் பிரித்து ஒரு முழுமை காண்கிறோம் . அதாவது உயிரினத் தோற் றத்தைகு க்தை என்றும் பின்னர் இளம்:) என்றும் முதுமை என்றும் வகுக்ேேறா:, முதுபையின் பின் என்ன என்று என்னைககேளாதீர்கள் - அது யாவருக்கும் தெரிந்த விடய மாகும். இக்காலப்பகுதியில் உயிர் வகைகள் தமது குணத் தைக்காட்டுகிறது. ஜீவன்கள் யாவற்றுக்கும் அடிப்படைக் குணங்கள் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதுதான் இயற்கை விதி போலும், இவ்வியற்கை விதியில் சிறிது மாற்றம் இருக் கலாம். (மனிதன் தனது ஆயுட்காலத்தை தனது முயற்சி மூலம் கூட்டியது). ஆனால் இயற்கை விதியை முற்றாக மாற்ற இயலாமல் இருப்பதை நாம் அவதானிக்கக் கூடிய தாக இருக்கிறது. உயிரின் (ச.வைத்தை மூன்றாக வகுக் கிறார்கள் (ஆதாரம்: தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள் என்ற புத்தகம்-ஆசிரியர் ம. சிங்காரவேலு)
(1) அன்னிய பொருளை உணவாகக்கொள்ளல்.
(2) உணவாகக் கொண்டதை ஜீரணித்துக் கொள்ளல்.
(3) தன்னைப் போல வளரும் சீவர்களைப் பெறுதல். இத்தோடு இன்னொரு அம்சத்தையும் சேர்த்துக் கொள்ளல் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
(4) ஒவ்வொரு உயிரும் தன்னைத்தானே பாதுகாக்க முயலுதல்.

حس--م 23 --س--
இந்த அடிப்படை அம்சங்கள் உயிரினத்தில் அடங்கும்.
மனிதனுக்கும் பொருந்தக்கூடியதாகும். மனிதனுடைய செயற்பாடுகள் யாவும் இந்த அடிப்படையில் இருந்தே பரி ணாமம் பெறுகிறது. மனிதனின் செயற்பாட்டில் 6கிதம்
விதமான ரூபங்கள் இருக்கலாம், எத்தனையோ சிலி விலுப்
புக்கள் காணப்படலாம், ஆனால் மேற்சொன்ன குணங் களையே அடிப்படையாகக் கொண்டு விளங்குகிறது -
அதுதான் உயிரின் குணமாச்சே!
அன்னிய பொருளை உணவாகக் கொள்ளல் என்தும் போது ஒரு உயிரானது நேரடியாகவோ மறைமுகமாகவோ, இன்னொரு பிரில்தான் (தாவரத்தைத் தவிர) தங்கியுள் ளது.நாமோ மற்ற உயிர்வகைகளோ உண்ணும்உணவு எப்படி யானது என்று ஒரு தரம் யோசித்துப்பார்ப்போம்-பு:தாத் தமாகச் சித்தித்துப் பார்த்தால் உண்மை விளங்கும். தாவு ரத்தைத் தவிர்ந்த மற்ற ஜீவராசிகள் அனைத்தும் மூல உணவுக்கு தாவரத்தையே நம்பியிருக்க வேண்டும். எக்கக் தேவையான உணவை ஒவ்வொரு மூலகங்களாக நாம் ,ெ !ற இலயாது. உணவுக்குத் தேவையான மூலகங்களை முக் கூறாக்கித்தருவது தாவரவர்க்கமேயாகும். முதல் சபைய6ங்லி. தாவரம் செய்து தர இரண்டாவதோ மூன்றாவதோ ச43ம யலை மிருகமோ, பறவைகளோ, பூச்சி புழுவோ, மனிதரோ செய்கிறார்கள். இயற்கை அன்னையின் மந்திர ஜாம் எப்படி இருக்கிறது, தாவரத்தின் முக்கியத்துவம் எத்தகை யது என்பதை நாம் உணரவேண்டும்,
தாவர வர்க்கத்தை மான், முயல், முதலியன G1, .. , புலி சிங்கம் மானையும் முயலையும் சாப்பிடுகிறது. ரு உயிரின் உணவுக்கு (தாவரத்தைத் தவிர) இன்னொரு உயிர் பலியாக வேண்டியிருக்கிறது. பூச்சியைத் தவ்ளை சாப்பிட-தவளையைப் பாம்பு விழுங்க-பாம்பை பLஆன் புசிக்கிறான். புல் பூண்டை ஆடு மாடு மேய - மனிதன் சாமானியவனா , அவன் தாவரஉணவையும் ஊனையும4ல6:ா உண்டு தொலைக்கிறான். உணவைப் பொறுத்த, ட்ெடில் இதுதான் இயற்கையின் சட்டம் போலும். இதனை இயற்

Page 17
:பிஜா, அங்கத்தவர்களான நாமோ வே . சந்த உயிரி னமோ. மீற இயலாது, முன் அத்தியாயத்தில் கூறப்பட்டது போல யாவும் 110 மூலகங்களுக்குள் நிகழும் விளையாட்டுத் தானே? இதற்கு அப்பால் வேறு என்ன ஜ. ஸ் ளது ? சில மதங்கள் கொல்லாமையைப் பற்றிப் பேசுகிறது. அம்மதங் களின் கருத்துக்கள் நடைமுறைச் சாத்தியமானதுதானா என்று சிந்தியுங்கள். மச்ச மாமிசத்தைப் புசிக்காதே, தாவ, ரத்தை மட்டுமே சாப்பிடு என்று போதிப்பதில் ஏதும் ஆாத்கல் உண்டா? சென்ற அத்தியாயங்களில் என்னால் ዶ• "o , ஆதாரங்களை வைத்துக்கொண்டு யோசித்தால் நீங்களே பக்கச் சார்பற்ற முடிவுக்கு வரலாமன்றோ. “மாட் டி 3றச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர் மாட் டிறைச்சி (நெய்) அல்லவோ தாவரத்திற்கிடுவது (கறிக்கு) என்று ஒரு சிதீதர் கேட்டது ஞாபகத்திற்கு வருகிறது.
தமது உணவைத்தேடுவதில் பிற உயிர்களிடத்தே இருக்கும் ஒற்றுமையைப் போல் மனிதனும் உணவுக்காக ;லைகிறான். யாவருக்கும் பசியுண்டு, பசியைத்தீர்ப்பதற் குத்தானே மனிதன் போட்டிபோடுகிறான், திட்டங்கள் 13) தீட்டுகிறான், அதனைச் செயற் படுத்துகிறான். உணவுப் பண்டங்களை கொடாது பட்டினிபோட்டு மக்களை வதைத் துத் தமது காரியத்தைச் சாதிப்பதற்கு அரசியல் ஆயுதமாகச் சிவு நாடுகளே முன்னிற்கின்றனவே! தனி ஒருவனுக்கு உணவு இல்லையேல் யகத்தினை அழித்திடுவோம் என உணர்ச்சிக் கவி பாரதியும் முழக்கிட்டாரே, உணவின் பெறுமானம் எத்தகையது. என்று பார்த்தீர்களா? மனிதன் உணவை உட்கொள்ளுவதற்கு எங்கிருந்தென்றாலும் பெற்றேயாக ைோடும். பசியாத மனிதரும் உண்டா?
'ஒரு நாள் உணவை ஒழி என்ற7 ல் ஒழியாம்
ஒரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும் என் நோவு அறியாய் இடும் டை கூர் என் வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’’ s
- ஒளவையார். ஒரு நாளைக் கேலென்றால் ஏலாய் இடும்பகர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அரிது’ என்று பகன்றார் ஒளவைப் பிராட்டியார் ஒரு சாண் வயிற்றை நிரப்புவதற்குத்தானே
 

மனிதன் பொருள்தேடத் தொடங்கினான். இதிலிருந்து ஆரம்பமாகிப் பரிணாமம் பெற்றுப் பொருள் ஆசையாகிப் பொனனாசையாக மாறி மனிதனைக் கீழ்த்தரமானவனாக
O
,
மாற்றிவிட்டதே இக்காலம்
தமது இயல்பான உடல் தேவையைப் பூர்த்தி செய்யவே ஜீவன்கள் உணவை உட்கொள்கின்றன. தனக்குத் தேவை யான சக்தியைப் பெற்றுக்கொள்வதற்கும் உடல் வளர்ச்சி யைப் பெருக்கவும் உணவை எடுக்கின்றது. ஜீவனால் எடுக்கப் பட்ட உணவு ஜீரணிக்கப்படும் போதே அதன் தேவை பூரணமாகிறது. ஆதலால் ஜீவன் என்றால் உட்கொண்ட பிறபொருள் ஜீரணிக்கப்படலும் வேண்டும். உணவு ஜீரணித்து சக்தி வெளிப்படாமல் உயிர் தனது வாழ்க்கை வட்டத்தை முடிக்க இயலாது. இதற்கு மனிதனும் விதிவிலக்கல்ல ஆகவே இக்காரணத்தாலும் உயிர்களுக்குள்ளே ஒற்றுமை உண்டல் லவா? உயிர்களின் குண இயல்புகளில் ஜீரணமும் ஒன்று என்று முன்பே கூறி விட்டேனல்லவா?
பிரபஞ்சப் பொருட்கள் எண்ணற்றவையாக இருந்தும் பூமியில்தானே ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் உயிரினம் தோன்றியது. இவ்வுயிரினம் சங்கிலித்தொடர் போலத் தொடர்ந்து வருவதற்குக் காரணம் உயிர் வகைகள் தம்மைப் போல வளரும் ஜீவர்களைப் பெறுவதால்தானே? தன்னைப் போல வளரும் ஜீவர்களைப் பெறாவிட்டால் மேலும் உயிரி னம் தோன்றாமல் ஸ்தம்பித்து விடுமே? அப்படியாயின் நமது பூமியிலுமல்லவா உயிர்ப்பூச்சி அற்றுப்போயிருக்கும்? இனவிருத்தி நடைபெறுவதால்தான் உயிரினம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. ஜீவன்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு என்னென்ன பாடுபடுகின்றன? சொல்லில் அடங்குமா? மனிதன் சந்ததியைப் பெருக்குவதற்கு எத னையும் தியாகம் செய்யக் காத்திருச்கிறானே? இது தொடர் பாக எத்தனை போராட்டம், எவ்வளவு பூசல், ஆட்கடத்தல் கொலை கூட ஏற்படலாமல்லவா? உயிர்களின் இவிைருத்தி என்ற இயற்கையான உணர்வு காதல் என்ற பெயரில் அன்பு

Page 18
-2 -
என்ற போர்வையில் காலம் காலமாகச் சரித்திரம் படைத் துக்கொண்டேயிருக்கிறது.
இன விருத்திக்கு உகந்த காலம் இளம் பராயமேயாகும். இப்பருவத்திற்கு இயற்கையன்னை மிகவும் முக்கியத்துவம் கொடுத்திருக்கிறாள் என்றே கூற வேண்டும். ஆண் பெண் இருபாலாரும் உட்ல் ரீதியாக அ ழ கால் மெருகூட்டப் படுகின்றனர். அதோ துள்ளி ஓடும் கலை மானைப்பாருங்கள் -அதன் கொம்பின் கம்பீரமும், தோலில் எண்ணை தடவி யது போன்று மினு மினுப்பும் அதில் உள்ள புள்ளிகள் அளவு, .ொருத்தம், இயைபு, ஒழுங்கு ஆகிய ஓவிய இலக் கனங்களுக்கு ஏற்ப அடுக்கப்பட்டுள்ளனவே, அதன் வாலிப மிடுக்கு இன்னொருபுறம். இவ்வளவையும் அக்கலைமானுக்கு இயற்கையன்னை ஏன் வழங்கியிருக்கிறாள்? இனக் கவர்ச்சிக் காகவே இத்தனை கொடைகளும் மனிதரைக் கவர்வதற் காகவல்ல. பெண்மான் கலையைக் கண்டதும் காதல்கொள் ளவேயாகும். இதே நேரம் இளம் பிணை நார் உரித்த தடியாகவா இருக்கும்? பெண்மான் பொங்கிப் பூ ரித்து , மொள மொள வென்ற உடலோடுதுள்ளிஓடி 'உனக்குநானே பொருத்த மென கலைமானின் அண்டையில்வரும், இத்தனை கவர்ச்சியும் இருபாலரிடையே இனிய உடல் உறவை உண் டாக்கவேயாகும். இதே போன்று ஆண் மயிலைக் கற்பனை செய்து பாருங்கள், கார்முகில் பரவும் வேளையில்ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும்போது தோகையின் பொற் பையும் அதன் நீட்சியையும் கண்ட பெண்மயில் சும்மாவா இருக்கப்போகிறது? மாந்தோப்பில் சங்கீதக் குரலால் கூவும் ஆண் குயிலைக் கவனியுங்கள். மாரிகாலத்துத்தவளைகளின் குரலைக் கேளுங்கள். ஹம்பேக் திமிங்கிலங்கள் அழகாய்ட் பாடுமாம். சில சமயங்களில் ஒருநாளைக்கு 22 மணி நேரம் கூட இவை மகா ஜாலியாகப் பாடுமாம். இவைகளும் தமது குரல் மூலம் து  ைண  ைய அழைக்கவேயாகும். ஒணான் வர்க்கத்தைக் கண்டீர்களா?ஆண் ஓணான் தனது உடலை வண்ண வண்ண நிறத்தால் அலங்கரித்து பெண் ஒனானை மயக்குகிறதே! ஆண்சிங்கத்தின் பிடரிமயிரின் கம்பீரமும்

۔۔--س۔ 27 سمت ۔۔۔۔
அழகுநடையும் கெம்பிய பிடரி மயிரற்ற பெண்சிங்கத்த்ை என்ன பாடுபடுத்தும், இயற்கை யன்னையைத் தாயாக நாம் கற்பனை செய்தும் அவள் ஆண் வர்க்கத்திற்கு அழகைக் கொடுத்து மயக்குபவனாகவும் பெண் வர்க்கத்தை மயங்குப வளாகவும் ஆக்கிவிட்டாளே. இயற்கை அன்னை இந்த ஒரவஞ்சனையை ஏன் செய்த ரா ளே (ா புரியவில்லை. பகுத்தறிவுள்ள மனிதன்தான் விதி வி லக் கா? அவன் பெண்ணைக் கவருவதற்கு எத்தனையோ தந்திரங்கள்புரிகின் றான்? அவளை மயக்குவதற்குத் தே கை மயில் என்றும் குரலைக் குயில் என்றும் (ஆண்வர்க்கத்தின் அழகை பெண்ணுக்குச்சேர்த்து) பொய்யாகப் புகழ்ந்து கொட்டுகி றான்-இன்னும் எத்தனையோ விதங்களில் வர்ணிக்கிறான் -யாவும் எதற்காக என்று ஊகிக்க முடியும்தானே-யாவும் உடல் உறவுக்கான அழைப்புக்களே - சகலதும் இன விருத் திக்கான ஆணி வேர்களே சொல்லித் தெர்திேல்லை மன்மதக்கலையை - இயல்பாகவே நடந்தேறும் இயற்கை யின் கோலங்களே.
மனிதனை ஒரம் கட்டிவிட்டுப் பிறgவராசிகளைப் பார்த்தால் அது சந்ததியைப் பெருக்குவதற்காகவே இனச் சேர்க்கையில் ஈடுபட்டுப் புதிய பிறப்பை உண்டுபண்ணி அவற்றைப் பராமரித்து, எதிரிகளிடமிருந்து காப்பாற்றி அதனைத்தன் சொந்தக்காலில் விட்ட பின்னரே மறு பருவத் தில் உறவு கொள்கிறது, பிற ஜீவன்களில் ஒவ்வொரு இனவகையும் தத்தமக்குரிய பருவகாலத்தில் இன உறவு கொள்கின்றது, தெருவில் நாம் 1 கிலோ மீற்றர் பயணம் செய்யும் போது வீதியில் 4 அல்லது 5 சோடி நா ய் க ள் சேர்க்கையில் ஈடுபட்டு, படாப்பாடு படுவதை அவதானிக் கலாம். நமது வீட்டு வளவிலுள்ள வேப்பமரத்தில் 3 அல்லது 4 அணில் சோடிகள் புணர்ச்சியில் இருப்பதைக் காணமுடி யும். சித்திரை மாதமானால் குயில்களின் கூவும் சத்தத் திற்குக் குறைவே இல்லை. இப்படி இப்படி ஒவ்வொரு உயிரினமும் தமக்கு இசைந்த பருவகாலத்தில் மட்டுமே பாலியல் வினைகளில் ஈடுபடுகின்றன. ஆனால் மனிதன்

Page 19
-28
பாலியல் உறவுகளை இரு நோக்கோடு புரிகிறான் அவன் தானே இக்கோளின் சக்கரவர்த்தி. ஒரு புறம் சந்ததியைப் பெருக்குவதற்கும்மறுபுறம் மனமகிழ்ச்சிக்காகவுமாகும். அத் GS TG ( i : a time is any time) 6T6öru 15) Gl 176}sva)6)}ir உ1 ல் சேர்க்கையில் ஈடுபட்டு மகிழ்கிறான். மேல் நாட்டினர் பலர் சட்டதிட்டத்தின் வரம்பிற்குள்ளும் வெளியிலும் பல தார மணம் செய்து மகிழ்ச்சிக்காகவே சேர்க்கையில் ஈடுபடு கின்றனர், அவர்களில் சிலர் இனவிருத்தியை நோக்கமாகக் கொண்டு இல்லறத்தில் தோல்வி காண்கின்றனர். போதாக் குறைக்கு ஓரினச் சேர்க்கையையும் சட்டபூர்வமாக்கிப் பொருந்தாத உறவில் ஈடுபட்டு இயற்கையின் குறிக்கோளை யு: கேலிக்கூத்தாக்கிவிட்டார்களே! கீழைத் தேசங்களில் பெரு:பாலும் மேற்சொன்ன குறைகள் மிகமிகக் குறை வாக வே காணப்படுகின்றன. கீழ்த்தேசங்களில் சந்ததியை விருத்தி செய்வதோடு மனமகிழ்ச்சிக்காகவும் உறவு கொள் கின்றார்கள். உடல் உறவின்போது மனமகிழ்ச்சியை ஏற்ப டுத்துவதில் ஆணுக்குப் பெரும்பங்குண்டு-இல்லக்கிழத்தியை உணர்ச்சியின் உச்சக்கட்டத்திற்குக் கொண்டு சென்று ஐம்பு லலும் ஒடுங்கச் செய்து ஒரிரண்டு நிமிடம் சும்மா நிலைக்கு (Qgasm) இட்டுச்சென்ற பின்னரே ஆண் தனது புலன்களை ஒடுங்கச் செய்தல் வேண்டும் - இதன் மூலம் இல்வாழ்க் கையில் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் உண்டாகும். இயற் கையையும் அனுசரித்து ஆரோக்கியமான ஒரு சமூக அமை ப்பை அமைப்பதற்கான குறிக்கோளை நாம் கொள்ளல் மனித வாழ்வை மேம்படுத்துமல்லவா? பாலியல் துறையில் புரியும் குற்றச்செயல்களை மிருகத்தனமானது என்று சிலர் இகழ்வதுண்டு. ஆனால் விலங்குகள் மனித மிருகத்தைப் போல் டாலியல் குற்றங்கள் புரிவதில்லை என்பதைச் சிந்தித் தால் வெளிச்சமாகும்.
ஒவ்வொரு உயிரினமும் இயற்கைக் காரணிகளிட மிருந்தும் தன்னைத்தானே பாதுகாப்பதற்குரிய இசைவாக் கங்களைப் பெற்றிருக்கின்றன. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளாத ஜி விகள் நிலைத்து வாழமுடியாது

-س-239--
அழிந்து போகும். பறவைகள் பறக்கும் தன்மையினால் அனேக எதிரிகளிடமிருந்து தப்பக் கூடியதாக இருக்கிறது, கோழிகள், மயில்கள் முதலியன ஒடியும் பறந்தும் எதிரி களிடமிருந்து தப்புகின்றன, முயல், மா ன் போன்றவை வேகதீட்டத்தினால் தங்களைத் தாங்களே பாதுகாக்கின் றன. மாடு, மரை, கலை மான், ஆடு (மதலிய மிருகங்கள் தமது கொம்பைப் பாவித்து சண்டித்தன மூலம் விரோதி களிடமிருந்து தப்புகின்றன. முள்ள ம் :ன்றிகள் தமது முட்களைப்பாவித்தும், தேள் பாம்பு முத லிய ன தமது உடலிலுள்ள விஷத்தைப் பாவித்தும் மாற்றானிடமிருந்து தங்களைப் பாதுகாக்கின்றன. கடல் நீரில் வாழும் ஜீவிகளும் எதிரிகளிடமிருந்து தப்ப ஒவ்வொரு இசைவாக்கத்தைப் பெற்றுள்ளன. கணவாய் மீனினம் கரிய மையைத் தண்ணீரில் களித்துவிட்டு எதிரியை ஏமாற்றித் தப்பித்துக் கொள்கின்றது. திருக்கை மீன் தனது வாலால் அடித் து விட்டுச் செல்கிறது. தாவரங்கள் முட்கள் மூலமும் சகிக்க முடியாத மணத்தை வீசுவதன் மூலமும் தங்களைப் பாது காத்துக் கொள்கின்றன. பூசணி வகைக் கொடிகளில் இயற்கையாகவே சயனைட் விஷம் உண்டாம். சில பூச்சி வகைகள் மரப்பட்டை போன்ற நிறத்தை ஒத்ததாக மரத் தோடு மரமாக இருந்து எதிரிகளிடமிருந்து தப்பிக்கொள் கின்றன. இன்னும் சில பூச்சிவகைகள் தொட்டதும் விரும் பத்தகாத மணத்தை வீசுவதன் மூலம் தப்பிக்கொள்கின்றது ஹெலி கோனியஸ் எ ன் ற பட்டாம் பூச்சியின் உடலில் சயனைட் விஷம் உண்டாம். ஹெலி கோனியாவை எந்தப் பறவையும் தீண்டுவதில்லையாம். இப்படியே உயிரினம் ஒவ்வொரு இசைவாக்கங்களின் மூல ம் தங்கள் \ உயிரைப் பாதுகாத்துக் கொள்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பமுடி யாத உயிரினம் மிகக் கூடுதலான இனப்பெருக்கத்தாலும் தமது இனம் அழிந்துவிடாது காத்துக்கொள்கின்றன. தாவர விதைகள் காற்றில் மிதந்தும், தண்ணீரில் நீந்தியும், விலங்கு பறவைகளில் ஒட்டவைத்தும் தங்கள் இனத்தைப் பரப்பு கின்றன. விதைகள் அதற்கேற்ற இசைவாக்கங்கமைப் பெற்றுள்ளன. இந்த அடிப்படைஒற்றுமைகள் உயிரினங்களில்

Page 20
-30
இருப்பதுபோலவே மனிதனும் எதிரிகளால் தாக்கப்படாமல் இருப்பதற்குப் பல வழிகளில் உபாயங்களைக் கண்டுபிடித்து செயலாற்றுகிறான். ஜீவராசிகள் தங்கள் உணவுக்காகவும் தாங்கள் மற்றவருக்கு உணவாகாமல் தடுப்பதற்கும் தம் உடல் ரீதியான ஆயுதத்தைப் பயன்படுத்துகின்றன. ஆதி மனிதனும் தனது பற்களையும் நகத்தையும் ஆயுதமாகக் கொண்டு உணவைத் தேடுவதற்கும் தன்னைப் பாதுகாக் கவும் பயன்படுத்தினான். இத்தன்மை நாளுக்கு நாள் வளர்ந்து மனிதன் தனது சிறந்த சிந்தனா சக்தி மூலம் தமது உடலைப் பயன்படுத்தாது பிறபொருட்களைப் பாவித்துத் தனது விருப்பத்தைப் பூர்த்திசெய்தான். முதலில் மரத்தடி களைப்பாவித்தும் பின் கூரிய பற்களைப் பாவித்தும் அதிலி ருந்து படிப்படியாக ஈட்டி, அம்பு வில்லு, துவக்கு எ ன் று பரிணாமம் பெறத்தொடங்கியது. ஏனைய உயிரினங்களைப் போலவே உணர்வுக்கும் தற்காப்பிற்குமாக ம னித ன் ஆயு தத்தை உபயோகிக்கும் நிலை மாறித்தனது மனம் ஆசையைப் பூர்த்தியாக்குவதற்கு மனிதன் விதம் விதமான ஆயுதங் களைப் பிரியோகிக்க எண்ணினான். தமது பொருட்களை, நாட்டை, மொழியை, மதத்தைக் காப்பதற்கு நவீன ஆயுதங்களை ஏந்தினான். தற்காப்பு நிலைமாறி தனக்குத் தேவையானவற்றையும், தனது விருப்பத்தை மாற்றானிடம் புகுத்துவதற்குமல்லவா ஆயுதத் தை உபயோகிக்கிறான்? மற்றவரை அடிமையாக்குவதற்கும், பிறர் நாட்டைப்பிடிப் பதற்கும் பிறர் பொருளைக் கொள்ளையிடவும், பிறர் மதத்தை நசுக்கவும், தனது அரசியலைப் பரப்பவும், தனது அரசியற் கொள்கைகளின் விரோதிகளை மடக்கவும், பிற இனத்தை அழிப்பது போன்ற இச்சைகளை நிறைவேற்றத் தான் தற்போது ம னித ன் விஞ்ஞான மயமாக்கப்பட்ட ஆயுதங்களை ஏவுகிறான். இப்போக்கு அவனது அடிப்பட்ைக் குறிக்கோளை விட்டு வேறு அழிவுப் பாதையில் செல்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்தும் அடிப்படைத் தன்மையில் ஒரே அமைப்பு வட்டத்தில் இயங்குகின்றன-- என்பதைப் பல ஆதாரங்கள் மூலம் கண்டோம். சிறப்பாக

- ! -
மனித கு லத்  ைத எடுத்துப்பார்த்தால் மனித வாழ்க்கை யானது யாவருக்கும் பொதுத் தன்மை கொண்டதாக அமைந்திருந்தும் ஒருவருக்கு ஒருவர் ஏன் பிணங்கிக்கொள்ள வேண்டும்? ஒருவர் தான் விரும்பியதை மாற்றானும் விரும்பு வதற்காகக் கோபப்படுகிறான்தான், சுதந்திரமாக எதனை யும் செய்யலாம்-மற்றவர் தனக்குக் கீழ்ப்படிந்து வாழவேண் டும் என்றல்லவா நினைக்கிறார். பிற உயிர்களை விட மேல் நிலையிலுள்ள மனிதன் தனது எண்ணத்தில், சிந்தனையில், நடத்தையில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி யாவரும் தீய உணர்வின்றி மேன்மக்களாக ஏன் வாழக்கூடாது என்று சிந்திப்பது நம் ஒவ்வொருவரது கடமையுமாகும்.

Page 21
4 ஜிவகுடும்பம்
பூமி என்னும் விளைநிலத்தில் சக ல ஜீவராசிகளும் தோன்றித் தத் தமக்குரிய வாழ்க்கையை மேற்கொண்டு தத் தமக்குரிய ஆயுட்காலத்தில் மடிகின்றன. ஒரு ஜீவ இனம் பிற உயிரினத்தோடு எதுவித தொடர்பும் இன்றி வாழமுடி யாத நிலை உள்ளது. மூலத்திலும் அடிப்படையிலும் ஒன்று பட்ட ஜீவர்கள் யாவரும் தொடர்ந்து வாழ்நாள் முழுதும் ஏதோ பல வழிகளில் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையதாக ஒன்று இன்னொன்றில் சார்ந்தே வாழ வேண்டிய நிர்ப்பந் தத்தில் இருந்து மாறமுடியாது தத்தளிக்கிறது. சற்று நுணுகி ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு சில உயிரினம் வேறு உயிரினத்தின் தொடர்பு இல்லையேல் அவ்வுயிரினம் தோன்றியிருக்கவே முடியாது, அப்படித் தோன்றினாலும் நிலைத்துநிற்க முடியாது அழிந்துபோயிருக்கும் பூமித் தொட் டிலில் சகல உயிர்வகைகளும் ஒன்றுக்கு ஒன்று கைகோர்த்து நின்று சக்கரம்போல் கழன்று கொண்டு இருக்கிறது.
பூமியில் தண்ணிர் தோன்றிய பின்னரே ஒட்சிசன்வாயு தோன்றியதாகக் கருதப்படுகிறது. மின்னல் இடி முழக்கம் போன்றவற்றினால் மின் ஏற்றம் ஏற்பட்டதன் மூல ம் தண்ணிர் ஐதரசனாகவும், ஒட்சிசனாகவும் பிரிந்துதான் காற்றில் ஒட்சிசன் என்ற வாயு தோன்றியதாம். எனினும் இவ் ஒட்சிசனை சுவாசித்த தாவரம் தனது உணவை த்யா ரிப்பதன் மூலம் ஒட்சிசனை வெளிவிடுகிறது. இவ்வொட்சிசன் காற்றில் கலந்தமையால் ஏனைய ஜீவராசிகளும் மனிதனும் தமது சுவாசத்திற்குப் பயன்படுத்த முடிகிறது. மனிதனும் பிற ஜீவன்களும் சுவாசத்திற்கும் உணவுக்கும் (மூல உணவு) தாவர உலகத்தையே நம்பியிருக்கின்றன; சார்ந்தும் இருக் கின்றன. தாவர உலகம் இல்லையேல் பெரும்பாலான சீவன் களும் இல்லை எனலாம்,

--سی-33۔-س۔
காடுகள் பரந்து விரிந்து ஒரு நாட்டில் இருப்பதால் மழை வீழ்ச்சியைக் கூட்டும் என்ற கோட்பாடு தற்காலத்தில் கேள்விக்குறியாகக் கருதினாலும், பெய்த மழைநீர் ஆவியா காமல் தடுப்பதற்கும், மண்ணில் சுவறி நிலத்தடி நீரின் மட்டம் உயர்வதற்கும் உதவியாக இருக்கிறது. காட்டைக் கூடாரமாகப் பாவித்து எத்தனை எத்தனை ஜீவ்ராசிகள் உயிர் வாழ்கின்றன. உலகில் சுமார் 50 முதல் 70 வீதம் வரையிலான உயிரினங்கள் காடுகளில்தான் வசிக்கின்றன என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. காடு இல்லையேல் இவ் ஜீவராசிகள் வாழமுடியுமா என்று சிந்திப்பதே முடியாத காரியமாக இருக்கிறது. மனிதன் கூட காட்டில் வேடனாய், இடையனாய் வாழ்ந்தகாலம் ஒன்று இருந்தது எ ன் ப ைத நாகரீகம் அடைந்த மனிதர்கள்யோசித்துப் பார்க்கிறார்களே? சிறு காடுகள், கூட்டமாக இருக்கும் மரங்கள், புயல்காற்றின் வேகத்தைக் குறைத்து காற்றுத் தடையாகவும் இருக்கின்ற தல்லவா? பகலவனின் வெப்பத்தில் இருந்து தம்மைக் காத்துக்கொள்ள உயிரினங்கள் எங்கு செல்வது? இயற்கைப் பொருட்களைச் சம நிலையில் வைத்திருப்பதற்கான காரணி களில் ஒன்றான காடுகள் இல்லையேல் பூமா தேவியின் நிலை சங்கடமாகவே இருக்கும்.
மனிதனும் சரி, மிருகம், பறவை போன்றவைகளும் சரி தாவர வர்க்கத்தை உண வுக் குப் பயன் படுத்துவதோடு மட்டும் நிறுத்திக்கொள்கிறதா? இல்லவே இல்லை. தமது நோய்களை, காயங்களை நீக்கி நீடிய ஆயுளைப் பெறவும், தாவர மூலிவகைகளையே நாடவேண்டியுள்ளது. மருந்துப் பொருட்களில் அனேகம் தாவரப் பொருட்களில் இருந்தே பெறப்படுகிறது. அதே ர! நமது நாய் தோட்டத்திலுள் புகுந்து ஒருவகைப் புல்லைக் கடித்து உள்வாங்கி வா ந் தி எடுத்ததும் நிம்மதிப்பெருமூச்சு விடுகிறதே!இதே முறையைத் தான் பூனையும் பின்பற்றுகிறது.
பிற ஜீவர்கள் தாவரத்தில் தங்கியிருக்கும் அதே வேளை தாவர இனமும் மறு உயிரைச் சார்ந்துதான் பெரும்பாலும் தன்னினத்தை விருத்தி செய்கிறது. தாவரம் தனது மண

Page 22
ܗ݈- 34 ܘܚܝ
வாழ்க்கையை நிறைவு செய்யவும், தனது வழித்தோன்றல் களைச் செம்மையாக்கவும் பிறரை நம்பியிருக்கிறது. தாவரம் நிறம் நிறமாகப் பூத்துக்குலுங்குவதும் விதம் வித மா ன மணக்தை வீசிப் பூப்பதுவும ஏதற்காக? தமக்குள் ஆண் பெண் உறவை ஏற்படுத்துவதற்கு த தோழர்களைக் கவர்ந்து இழுப்பதற்கேயாகும். பூச்சிகளிடையே மகரந்தச் சேர்க் கையை ஏற்படுத்த பூச்சி இனத்தையும், வண்டினத்தையும் தேன் குருவி போன்ற பறவையினத்தையும் கவர்ந்து இழுக் கின்றது. தங்களது ஆண் பெண் உறவைப் பிற உயரினங்கள் மூலம் செய்வித்துவிட்டு அவர்கள் செய்த வேலைக்குத் தனது தேனையும் ஊதியமாக வழங்கிவிடுகிறது. வேலைக்காரரும் தகுந்த் ஊதியத்தைப் பெற்று மகிழ்ச்சியுடன் செல்கின்றனர். எப்படி ஜீவர்களின் சங்கமம்? இன்னும் சற்றுத் துரம் நாம் போ வோமே. மகரந்தத்தை வாங்கிய பூவின் சூலகம் கருக் கட்டிப் பிஞ்சாகிக் காயாகிப் பழமாக வந்தபின் வ ர ம் இன்னுமொரு த ரம் பிற உயிர்வகைகளோடு தொடர்பு கொள்கிறது. தாவரம் தனது வழித்தோன்றல்களைச் சிரம மின்றி. வாழவைப்பதற்குரிய உபாயத்தைத் தேடிச கொள் கிறது. அதாவது விதை, உறைபோன்ற சதைப்பகுதியால் மூடப்பட்டுக் கணியாகிறது. பழங்கள் பெரும்பாலும் இனிப் பாகவும், குறைந்த அளவில் புளிப்பாகவோ வேறு சுவை யுடையதாகவோ இருக்கும். விதையைப் பரப்பும் நோக்கு உனேயே இத்தகைய இசைவாக்கங்கள் அமைந்திருக்கின்றன. விதையைக்கொண்டு சென்று பரப்பும் ஜீவன்களுக்கு கனியின் சதைப்பகுதி ஓர் அன்பளிப்பாகும். உணவுத்தேவையைப் பூர்த்திசெய்வதற்கு உயிர்க் கொலையின்றிக் கிடைக்கும் அற்புத பொக்கிசம் இக்கணிப்பகுதியாகும். இது போன்று விதயைப் பரப்புவதற்கு விதைகளுக்குப் பல இசைவாக் கங்கள் உண்டு. தாவர இனம் மடிந்து போகாமல் உலகில் நிலைத்துவாழப் பிறஉயிரினங்களையேசார்ந்து இருக்கின்றது.
பறவை வர்க்கத்தில் குயில் இனமே காகப் பறவையைச் சார்ந்து தன்னினத்தை விருத்தி செய்கிறது. குயிலுக்கு முட்டை இடத்தெரியும். ஆனால் அதை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கத் தெரியாதே! வசந்த காலத்தில் காகம் முட்டை யிடும் பருவகாலத்தில் குயிலும் முட்டையிட வேண்டிய

-35
இயற்கை நிர்ப்பந்தம் உண்டாகிறது. காகம் கூடு கட்டி, முட்டை இட்டு, அடைகாக்கும் நேர ம் அக்கூட்டுக்குள் குயிலும் கள்ளத்தனமாக வந்து முட்டை இட்டுவிட்டுச் சென்றுவிடும். ஏமாந்த காகமும், தன் முட்டையோடு குயிலின் முட்டையையும் அடைகாத்துக் குஞ்சு பொரித்து, குஞ்சிற்கு உணவூட்டிப் பாதுகாத்துப் பறக்க ஆரம்பிக்கும் காலத்தில் தான் காகம் தன் குஞ்சில்லை என்று குயில் குஞ்சின் குரலில், இருந்து கண்டு பிடிக்கிறது. அதன் பின்பே குயில் குஞ்சைக் கொத்திக் கலைக்கிறது. குயில் குஞ்சும் பறக்கத் தெரிந்த காலமாதலால் பறந்து தன்னினத்தைச் சார்கிறது. குயில் இ ன ம் பிற இனத்தின் உதவியின்றிச் சுதந்திரமாக வாழ முடிகிறதா என்று பாருங்கள்.
மாடு என்பது செல்வம் என்று அர்த்தம் கொள்கிறோம் அச்செல்வம்ான மாட்டுக்கும் ஒரு வ  ைக பக்ரீறியாவுக்கும் நெருக்கமான தொடர்புண்டு. மாடு உண்ணும் உ ண வு அதன் வயிற்றைச் சேர்ந்ததும் அங்கு மிக ஆவல்ோடு காத் திருக்கிறார்கள் பக்ரீறியாக் கூட்டம். பக்ரீறியாக் கூட்டம் மாட்டின் உணவில் சில கிரிகைகள் புரிவதால் உணவு சிதைந்து பிரிகை அடைந்து மாட்டின் குடலால் சத்துப் பொருட்களை, ஜீரணிக்க முடிகிறது. மாட்டினால் எடுக்கப் பட்ட உண்வுப் பொருளில் இப் பக்ரீறியாவின் செயற்பாடு இல்லாவிட்டால் மாட்டினால் உணவை ஜீரணித்துக்கொள்ள இயலாதாம். அப்படியாயின் மாட்டின் நிலை என்னவாகும்? உணவு ஜீரணிக்காவிட்டால் மாட்டினம் உயிர் வாழமுடி: யுமா? இதே நேரம் மாட்டின் குடலில் தங்கி மாட்டின், உணவை நம்பியிருக்கும் பகரீறியா, மாடு இல்லா விட்டால், உயிர் வாழமுடியுமா? அந்த இரு ஜீவன்களும் ஒன்றுக்கு. ஒன்று தொடர்பில்லாவிட்டால் இந்தப்பூமியில் நிலைத்து இருக்க முடியுமிா என்று யோசித்துப் பாருங்கள்.
பயற்றை விதை முளைத்து முதல் இலை விட்டதும், வேரிலிருந்து சுரக்கப்படும் சுரப்புக்களால் றைசோயியம் என்னும் பக்ரீறியாக்கள் கவரப்படுச் செடியின் நுண்ணிய வேர்களில் நுளைந்து தனக்கு ஒரு உறைவிடத்தை அமைத்

Page 23
جب۔ 36 حس۔
துக்கொள்கிறது. அவற்றின் உறைவிடமே வேர் முடிச்சுக்க ளாகின்றன. முடிச்சுக்களில் தங்கிப் பெருகி காற்றில் இருந்து நைட்டிரஜனைப் பெற்று நைரேட்டுக்களாகப் பதிக்கிறது, வளரும் செடி பக்ரீறியாக்களுக்குத் தேவையான மாச்சத்தைக் கொடுக்கிறது. பக்ரீறியாக்கள் செ டி க்கு நைரெட்டைக் கொடுக்கிறது. செடியோ அல்லது பக்ரீறியாவோ தனித்து நின்று நைட்டிரஜனைப் பெற இயலாது. இரு இ ன மும் ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் போதே இக்கிரியைகள் நடைபெறுகிறது. இக் கிரிகைகள் அவரைக் குடும்பப் பயிர்களிடையேதான் ஏற்படுகிறது.
அங்கிகள் என்று சொல்லப்படும் பெரும்பாலான பக்ரீறி யாக்களும், பெரும்பாலான பங்கள்களும் இறந்த உடலங்க ளைச்சிதைத்துப் பிரிப்பாக்கல் செய்வதில் பெரும்பங் கெடுக் கின்றது. பட்டமரமாக இருக்கலாம் இறந்த உடல்களாக இருக்கலாம். அவற்றின் மீது இவ் வங்கிகள் பரவி அவற்றில் உள்ள போசனைப் பொருட்களை உணவாகக் கொண்டு வாழும் நிலையில் இறந்த உடலங்கள் பிரிகை அடைந்து மண் ணுடன் கலந்து மண்ணின் வளத்தைப் பெருக்குகின்றது. இதனால் அவ்விடத்தில் தோன்றும் புதுத்தாவரங்களுக்கு மீண்டும் உணவாக அமைந்து உயிர் வட்டச்சங்கிலியைப் பலப்படுத்துகிறது. . ~&
மாரி காலமா-நுளம்புத் தொல்லை தாங்க முடியவில்லை என்று கூப்பாடு போடுகிறோம். எமக்குக் குத்துவது ஆண் நுளம்பல்ல - பெண் நுளம்பே குத்துகிறது. பெண் நுளம்பு தனது உணவுத் தேவையாகக் குத்தவில்லை. அது தனது இனவிருக்தியின் பொருட்டேமிருக வர்க்கத்தின் இரத்தத்தை உறுஞ் சி எடுக்கிறது. மிருக வர்க்கத்தின் இர த் தம் இல்லாவிட்டால் அதன் முட்டை விருத்தியடை வதில்லை யாம். அப்பாடா போனால் போகுது இ ரத் த த்  ைத உறுஞ்சி எடுத்துக் கொண்டு போகட்டும் என்று பார்த்தால் அது சில மனிதரில் இருக்கும் அனோபிலிஸ், போ ன் ற வைரஸ் கிருமிகளையும் இன்னொரு சுகமான மனிதருக்குக் கடத்தி விட்டல்லவா செல்கிறது. அந்த வைரஸ் கிருமிகள்

-37
குறிப்பிட்ட நுளம்பை நம்பி இருக்க, நுளம்பு மிருகத்தை நம்பி இருக்கிறது.
மான், முயல், குரங்கு, மயில், காட்டுப்பன்றி முதலியன ஒரு குறிப்பிட்ட சுற்றுப்புறச் சூழ்நிலையில் மிக நெருக்கமாக வாழ்கின்றன. அதே காட்டில் புலி, சிறுத்தை, ஒ நா ப் போன்ற பகை விலங்குகளும் வாழும் போது மான், முயல், குரங்கு, மயில், பன்றி போன்ற விலங்குகள் தமக்கு ஒரு பொதுவான பாதுகாப்பைத் தேடிக் கொள்கின்றன. மரக் கிளையின் உச்சியில் அமர்ந்திருக்கும் மயில் தூரத்தில் வரும் பகை விலங்கைத் தன் கூரிய பார்வை மூலம் கண்டறிந்து எச்சரிக்கைக் கு ர ல் எழுப்புகிறது. நி:ையைப் புரிந்து கொண்ட குரங்குக் கூட்டம் காடு திரும் டி கூச்சலிடும் போது கீழே அண்மையிலுள்ள மான், முயல், பன்றி, போன்ற விலங்குகள் பற்  ைற க் குள் ஒடிச் சென்று பதுங்கித் தப்பி விடுகின்றன. இப்படியான ஒரு மிருக சமூக பா துகாப்புமூலம் விலங்கினம் ஒன்றிணைந்து வாழ்வதாக விலங்கியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். (ஆதாரம் : கலைக்கதிர் )
இப்படி இப்படி, அப்படி அப்படி உயிர் கோளத்தினுள் ஒரு இணைப்பு - ஒரு பிணைப்பு - ஒரு தொடர்பில்லாமல் உயிர் வாழ்க்கை இல்லைப் போலும். எல்லா உயிர்வகைகளும் அடங்கிய உயிர்ர்க்கோளமேஜீவ குடும்பமாகிறது. இந்த ஜீவ குடும்பத்தின் அங்கத்தவர்கள் யாவரும் இப் பூமியில் சமநிலை பேணி, சுதந்திரமாக மகிழ்ச்சியோடு வாழ்கின்றனர். ஜீவர் களின் இம்மகிழ்ச்சியான வாழ்க்கையே பிரபஞ்ச மகிழ்ச்சி யாகும். இப் பிரபஞ்ச மகிழ்ச்சியானது சில காரணிகளால் சில சமயம் குலைக்கப்படுகிறது. சில சமயம் ஜீவகுடும்பத தின் அங்கத்தவர்களில்சிலர் மண்ணோடு மண்ணாய் அருகியும் போய்விட்டனர். 60 மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்து மறைந்த டைனாசர்களும் இந்த ஜிவகுடும்பத்தில் அ.வ்கு மல்லவா?

Page 24
-38
ஜீவ குடும்பத்தின் மிக வல்லமையுடைய ம னித ன்
இருக்கிறானே - அவன் ஜீவகுடும்பத்தின் பிரபஞ்ச மகிழ்ச் சியைக் குறைப்பதில் பெரும் பங்கெடுக்கிறான். பிற உயிர் களின் இறப்புக்கும், பிறப்புக்கும் துணை போகும் மனிதன் தனக்குள்ளே செம்மையாக வாழ்கிறானா என்றால் அதுவும் இ ல்  ைல. தனக்குள்ளும் ஒரு நம்பிக்கையான தீர்வை அவனால் ஒரளவுக்காவது தரமுடியும் 6 ன்று நம்பலாம்.

-
உயிர்க் கோளத்தின் அல்லல்
பூமியில் ஒரு குறிப்பிட்ட சிறப்பான குழலில் உயிரினங்கள் ஆங்காங்கே தோன்றுவதும், மறு புற ம் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் சில காரணிகளால் உயிர்கள் அழிவதும் இயல்பே யாகும். நாணயத்தின் இரு பக்கம் போன்று, இயற்கைஉயிரி னத்தைத் தோற்றுவிப்பதுவும் அழித்து விடுவதுமாக இருபக்' கத்தைக் கொண்டுள்ளது. உயிரினம் இயற்கைக் காரணி களால் மட்டுமா அழிகிறது? மனிதனாலும் உயிர்கள் அழிக்கப் படுகின்றன. உயிர் வகைகள் மிகக் கூடுதலாகத் தோன்றும் இடங்கள் காடும் கடலுமாகும். இ ன வ இரண்டும் சர்வி வல்லமை படைத்த ஆறறிவுள்ள மனிதனின் செயற்பாங்கி, னால் அன்ற ர ட ம் தாக்கப்படுகின்றன. அத்தியாவசிய தேவைக்காகத் தனது உறவினர்களான உயிர்கள் மனிதனால் அழிக்கப்படுகின்றன என்பது உண்மையே; அது இயற்கையின் இயல்புக்கு மாறானதல்ல. ஆனால் எதற்கும் ஒரு வரை முறை வைத்து தானும் வாழ்ந்து தனது உறவினர்களையும் வாழ வைப்பதுதானே அறிவுபூர்வமான செயல். ஜீவ குடும் பத்தை அல்லல் படுத்துவது மனிதனுக்கு மட்டும் சொந்த மான உரிமையன்று.
காலத்துக்கு காலம் இயற்கைக் காரணிகளால் உயிர்க் கோளம் சிதைக்கப்படுவதைப் பரவலாகக் கானக்கூடியதாக வுள்ளது. மிக அண்மைக் காலங்களில் (1997 & 1998) நாம் பத்திரிகைமூலமும்,வேறு பொதுசனத்தொடர்புச்சாதனங்கள் மூலமும் காட்டுத் தீயினால் வனம் தீப்பிடித்து பற்றி எரிந் ததை அறிவோம். கடும் வரட்சி காரணமாக காட்டிலுள்ள மரங்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்து வெப்ப அலைகளால் மரங்கள் தீய்பிடித்து தீ பரவி முழுக்காடே அழிந்து போனதை நாம் அறிவோம். இந்தோனேசியா, அமெரிக்கா பே; ன்ற நாடுகளில் மிக அண்மைக் காலத்தில் காடுகள் பற்றி எரிந்து

Page 25
- 40
கொண்டிருக்கும் போது மனிதன் அயராத முயற்சியினால் இக்காட்டுத்தீயை அணைத்துக் காட்டையும், அதன் அடைக் கலப் பொருட்களான ஜீவராசிகளையும் காப்பாற்றினான்.
இது போன்று வெள்ளப்பெருக்கினால் காலத்துக்குக் காலம் உயிரினங்கள் அழிந்து போகின்றன. பங்களாகேஷ் போன்ற
நாடுகளில் அடிக்கடி கடல் கொந்தளித்து நாட்டினுள் புகுந்து
மனிதர்களையும், கால் நடைகளையும் வேறு உயிர் வ  ைக
களையும் அழித்துவிட்டு அடங்குகின்றது. கடும் ம  ைழ
காரணமாக மண் சரிவினாலும், நதி பெருச்கெடுத்தலாலும் மக்களின் வாழ்விடங்களையும், அவர்களது சொத்துக்களை யும் அழிப்பதோடு சகல ஜீவராசிகளையும் காவு கொள்கிறது.
நில நடுக்கம் மூலமும எரிமலை வெடித்து, வெப்பக் குளம்பு வெளிப்பாய்ந்து நாட்டின் சில பகுதிகளையே பி ர ள யம் ஆக்கிவிடுகிறது. இப்படி இப்படி அப்படி அப்படி இயற்கை அன்னை தனது சமநிலை குலைந்து தன்பிள்ளைகளை அழிப் பதை வழக்கமாகக் கொண்டுள்ளாள். இது அவளின் குணத் தின் ஒரு அம்சம் போலும். உயிர்க் கோளம் அடிக்கடி இயற்கை வால் பாதிக்கப்பட்டுத் தன் மகிழ்ச்சியை இழப்பது பூகற்ப வியல் ஐ.ண்மையாகும்,
சுமார் 100 வருடங்களுக்கு முன்பு உலகம் முழுமையும் இருந்த காடுகளின் அளவுக்கும், இன்று காசினியில் இருக்கும் காட்டின் அளவுக்கும் ஒரு மதிப்பீட்டுப் புள்ளி விபர ம் எடுப்பின் மனிதர்களாகிய நாம் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையை எய்த வேண்டும். பெருகி வரும் சனத்தின் உணவுக்காக வேளாண்மைச் செய்கைக்காக அரசின் உதவி யோடும் சட்டத்தை மீறியும் எவ்வளவு வனத்தை மனிதர்கள் அழித்திருப்பார்கள் என்று எண்ணிப்பாருங்கள். மனித ஒனுடைய உணவுக்காகக் காடு அழிக்கப்படுவதை வருத்தத்தோடு ஏற்றுக்கொண்டாலும் உணவுத் தேவையையும் மருத்துவத் தேவையையும் விட வேறு ஆடம்பரத் தேவைக்கும் கடுதாசித் ( Paper ) தேவைக்கும் மரங்களை வெட்டுவதை எ ப் படி நியாயப்படுத்துவது? கி. பி. 2000 ஆண்டில் 6 மில்லி

--سم،41ھ ----۔
மக்கள் தொகைக்கு ஏற்ப உணவுக்கும் வேறு தேவை களுக்கும் மீதமுள்ள காடுகள் எந்தளவு அழிக்கப்படும் என்று சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்காவில் ‘த நியூயோக் ரைம்ஸ்” என்ற நாளிதழ் பத்திரிகை வெளியாகிறது என்றும் அதன் ஞாயிறு மலர் வெளியீட்டுக்கு மட்டும் தேவைப்படுகின்ற காகிதத்தை உற்பத்தி செய்யக் கிட்டத்தட்ட 63000 மரங் கள் அழிக்கப்பட வேண்டியிருக்கிறது என புள்ளி விபர இயல் நிபுணர் கூறியதாக அறிய முடிகிறது ( ஆதாரம், கலைக் கதிர் ) மேலும் இந்தியாவில் நியூ டெல்கி நகர மாணவர் களின் அப்பியாசப் புத்தகம் தயாரிப்பதற்கு ஆண்டொன் றுக்கு 40000 மரங்கள் வெட்டப்பட வே ண் டு ம் என்ற விபரத்தையும் அந்நாட்டு வானொலி மூலம் கேட்க முடிந்தது. அப்படியாயின், உலகத் தேவைக்குரிய காகிதத்தைப் பெற எந்தளவு இலட்சம் மரங்களை வெட்டிச் சாய்க்க வேண்டும் என்பதை எண்ணிப்பாருங்கள். அத்தோடு இரத்தினக்கல் தேடுவோரும், கனிவளத்திற்காகத் தோண்டுவோரும் அபி விருத்தி நோக்கத்திற்காகவும் காடுகளை அழித்தால் காட்டின் நிலை எங்ஙனம் முடியும் என்றும் யோசியுங்கள்.
நாட்டின் பால் உற்பத்தியை அபிவிருத்தி செய்வதற்கு கால்நடைகளுக்கான கட்டணம் கட்டுவதற்கும், கால் நடை களுக்குரிய மேச்சற்தரை அமைப்பதற்கும், காடுகளை அழிக் கிறார்கள். இவ்வண்ணம் உலகெங் கும் பாற்பண்ணை அமைப்பதற்கு எவ்வளவு இலட்சம் ஏக்கர் காணி தேவைப் படும் என்று ஒரு பட்டியல் போட்டுப் பாருங்கள்
ஒரு சில நோக்கங்களை அடைவதற்காகக் காடுகளை அழிப்பதன் மூலம் பாரதூரமான விளைவுகளைப் பிற்காலச் சந்ததியினர் சந்திக்க வேண்டி வரும். மரங்கள் அழிவதால் ஏற்படும் தீமைகளை ஒருங்கிணைத்துப் பார்ப்போம். அவை பின்வருமாறு:-
1. உயிரினங்களின் சுவாசத்திற்குத் தேவையான ஒட்சி
சன் வழிமண்டலத்தில் குறைவடைதல். 2. வழிமண்டலத்திலுள்ள கரியமில வாயுவின் (CO2)
அளவு கூடுதல்.

Page 26
- 42 -
3. மரங்கள்அழிவதால் மூல உணவின் அளவு குறைதல். 4. காற்றிலுள்ள ஈரப்பதன் குறைவதால் கவாத்திய மாறுதலினால் மழைவீழ்ச்சி குறைதலும், வெப்ப நிலை அதிகரித்தலும்.
நாட்டில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் ஆபத்து. 6. மண் அரிப்பு ஏற்படுதல்.
7. காட்டிலுள்ள உயிரினங்கள் அற்றுப்போதலால், இயற்கையின் சமநிலை பாதிக்கப்படுதலும், அரிய உயிர்களை நாம் இழத்தலும்.
இன்னோரன்ன கெடுதிகளால் உயிர்க்கோளம் பாதிக் கப்பட்டு அல்லலுறும் . ஆதலால், காடுகளைப் பாதுகாப் பதற்குப் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது அரசாங் கங்களின் கடமையாகும். சட்டத்தால் மனிதர்களை அடக்கு வதிலும் பார்க்க ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து நடந்து கொள்வது மிகவும் நன்றன்றோ! தமிழ் நாட்டில் வாழ்ந்த அருட்கவி இராமலிங்க சுவாமிகள் ( 1823-1874) மழை யின்றி வாடிய பயிரைக் கண்டு கண்ணிர் உகுத்த காருண் னியப் பெரியவர்களும் இப்பூமியில் வாழ்ந்தார்கள் என்பதை நாம் மறந்துவிட முடியுமா? அதிகமான நாட்டு அரசுகள் கசட் டைப் பாதுகாப்பதற்குச் சட்டங்கள் இயற்றியும் காட்டுநிலங் 35606MTÜ LouibusTG5 S?.35736upuh (Forest Reservation ) g(biji கிறது. அத்தோடு சில வகை மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் தடையும் விதித்திருக்கிறது. அண்மைக் காலமாக அழிக்கப்பட்ட காட்டுநிலத்தில்மனித முயற்சியினால்புதுக்காடு ஆக்கும்பணியில் சில நாடுகள் ஈடுபட்டிருக்கின்றன. இச்செயல் மக்களுக்கு ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த உதவுமேயின்றி உடைந்த கண்ணாடியை ஒட்டும் முயற்சி போன்றதாகும். * வெப்ப மண்டலக் காட்டில் 17 சதுர கிலோ மீற்றர் அளவி விருந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் 1025 தாவர வகைகள் இருந்ததைக் கண்டனர். அவற்றில் 250 க்கும் அதிகமான வகைகள் உலகில் வேறெந்த இடத்திலும் வளரவில்லை ? ? (தகவல்: விழித்தெழு என்ற சஞ்சிகை) என தாவரவியல்

........................--41.3------
நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். இப்படியான தாவரவகைச் சூழலை புனரமைப்புக் காடுகளால் ஏற்படுத்த முடியாது ரன்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். உணவுத்தே வையைப் பூர் த் தி செய்வதற்காக மக்களுக்குப் பகிர்ந்து அழிக்கும் காணியின் பரப்பளவுக்கு ஒரு உச்சவரம் பொன்று இருத்தல் அவசியம். தனி மனிதன் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளுக்கு உரிமையாளனாக இருப்பதைத் தடை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். தேசிய நலன் கருதி மக்கள் தொகைக்கு ஏற்ப காட்டின் விஸ்தீரணத்தைக்கணக் கிட்டு மதிப்பீடு செய்து, அதற்கேற்ப காடுகளை ஒதுக்கிப் பேண நாடுகள் நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். வைக் கோல், கரும்புச் சக்கை போன்ற கழிவுப்பொருட்களில் இருந்துகாகிதம் செய்வதற்கு மக்களை ஊக்குவிக்கவேண்டும், மரத்தளபாடப் பொருட்களின் தேவையைக் குறைப்பதற்கு வேறு பொருட்களை அறிமுகம் செய்தல், தேவையற்ற தருசு நிலங்களில் மரங்களை நாட்டுவதற்கு மக்களை ஊக்குவித்தல் போன்ற பல திட்டங்களை முன் வைத்து பரந்த அளவில் செயற்படுத்துவதன் மூலம் காட்டு வளத்தைப்பேணி உயிர்க் கோளத்தின் அல்லலைக் குறைக்கலாம்.
காண்டா மிருகம், புலி, சிங்கம், சிவப்பு அணில், யானை போன்ற பலவகை மிருகங்களும், ப ற  ைவ இனங்களும், வண்ணாத்திப் பூச்சி வகைகளும் பூமியில் இருந்து அருகிப் போகும் நிலையில் உள்ளதாக விலங்கியல் விஞ்ஞானிகள் கவலைப்படுகிறார்கள். மிருக வர்க்கங்களும் பறவை இனங் களும் அழிவதற்குப் பெரும் பொறுப்பாளியாக இருப்பவர் கள் மனிதர்களேயாகும். உயிர்க்கோளத்தின் அங்கத்தவர் களில் மனிதனும் ஒரு பகுதியாகும். இயற்கைச் சூழ ல் மாறு பட்டாலும் உயிர் வகைகள் அருகிப்போவது உண்டு. இயறகைச் சூழல் மாறுபாடடைவதை மனிதன் த டு த் து நிறுத்த முடியாத காரியமாகும். உயிரினங்கள் மடிவதற்கு முக்கிய காரணியாக இருக்கும் மனிதன் தனது நடவடிக் கைகளை இனம் கண்டு தனது செயற்பாட்டில் த குந்த மாற்றங்களைச் செய்து உயிரினங்களை அதாவது தனது

Page 27
حس-4 4----
உறவினர்களைப்பாதுகாப்பதுஅவனது கையில் தங்கியுள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் தோன்றும் அ ரிய இனங்கள் மாறுபட்ட சூழலில் தோன்றமாட்டாது. உலக ம் பரந்து இருந்தாலும் சிறப்பான, தகுந்த ஒரு சூழலிலேயே சில இனங் கள் தோன்றுகின்றன. அச்சூழலைக் குலைக்கும் போது அவ்வினத்தை நாம் இழக்கின்றோம். காடுகளை நாம் அழிப்பதால் எமது உறவினரான பல பல வகையான உயி ரினங்களை நாம் பறிகொடுக்கிறோம். வேட்டைக்காரராலும் சில வகை ஜீவராசிகள் அற்றுப்போகின்றன. வேடைக்காரர் கள் தமது உணவுக்காக மட்டுமின்றி வாணிபத்துக்காகவும் வேட்டையாடுகிறார்கள். மனிதன் தன் ஆயுளை நீடிப்பதற் கான மருந்து வகைகளைத் தயாரிப்பதற்காகவும் விலங்கு களின் உயிரைப் பறிக்கிறான். பணம் படைத்தவர்கள் தங்கள் பணச் செருக்கின் அளவு காட்டியாக மிருகத் தந்தங் களையும், மிருகத்தோலையும் ஆடம்பரப் பொருளாகக் காட்டுகிறார்கள். மத நம்பிக்கையின் பேரால் மாடுகளையும், ஆடுகளையும், கோழிகளையும் பலியிட்டுமக்களின் உணவுத் தேவைக்கும் பயன்படுத்தாது வெறுமனே குழி தோண்டி புதைப்போரும் இப் பகுத்தறிவு செறிந்த காலத்திலும்
சிலர் உள்ளனர்.
கீரிஸ் மற்றும் மொசபட்டேமியா விலிருந்த சிங்கங் களையும், நியூபியாவிலிருந்தநீர்யானைகளையும், வட ஆபிரிக் காவிலிருந்த யானைகளையும், பிரிட்டனில் இ ருந்த கரடிகள் மற்றும் பீவர்களையும், கிழக்கு ஐரோப்பாவிலிருந்த காட்டெருமைகளையும் வேடர்கள் முற்றிலும் கொன்றுவிட்ட னராம். 1870-1880 களின் போது கிழக்கு ஆபிரிக்காவில் மட்டும் பத்து இலட்சம் யானைகளில் கால்பங்கை வேடர்கள் கொன்றொழித்தனராம். (தகவல்; விழித்தெழு ) சைபீரியா புலியின் மதிப்புமிக்க தோலுக்காக மட்டுமல்லாமல் பாரம் பரிய கிழக்கத்திய மருந்து தயாரிப்பதற்காக அப்புலியின் எலும்புகள், கண்கள், மீசைகள், பற்கள், உள்ளுறுப்புக்கள் மற்றும் பாலின உறுப்புகள் முதலிய வற்றிற்கும் புலியைப் பயன்படுத்தி அவ்வினத்தை மிகக் கூடுதலானஅளவில் அழித்து

- 45
விடுகிறார்களாம். இதே போன்று கிழக்குத்தேச மருந்துத் தயாரிப்புக்காக ஆசிய கருங் கரடியின் பித்த நீருக்காகவும், பித்துப் பைக்காகவும் அவற்றைப் பொறிவைத்துப் பிடிக்கி றார்களாம். யானைத் தந்தம், காண்டாமிருகக் கொம்பு, புலித்தோல், கோரோசனை மருந்துக்காக மாட்டின் ஏரியில் உள்ள கொழுப்புக்காகவும், வாசனைத் திரவியங்களுக்காக கஸ்தூரிமான். புனகு பூனை முதலிய விலங்குகளின் உயிரைக் கொல்கிறார்கள் மனிதர்கள்.
இப்படி இப்படி அப்படி அப்படி உயிரினங்களை மனிதர் கள் வதைப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது? இயற்கையின் இயல்புக்கு ஏற்ப உணவுக்காகப் பிற உயிரைப் பறிக்க லாம். அத்தோடு மருந்துக்காக பிற உயிரை வதைப்பதை ஒரளவுக்கு ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டி யிருக்கிறது. அது உயிர் வாழ்க்கை ந  ைட முறைக்கு எதிரானதல்ல. ஆனால் அதற்கும் ஒரு விதிமுறை ஒழுங்குகள் வே ண் டு மன்றோ!
ஒரு சில மதங்கள் கொல்லாமையைத் தமது மதக்கட மையாக ஏற்றுக்கொண்டுள்ளது. சமண சமயத்தை ஸ்தா பித்துக் கொல்லாமையை முழுக்க முழுக்க கடைப்பிடிக்கு மாறு மாவீரர் வற்புறுத்தியுள்ளார். இதே போன்று புத்தரும் பிற உயிர்களிடத்தே அன்புசெலுத்தும்படியும் கொல்லாமை யையும் போதித்துள்ளார். இவர்கள் இருவரும் ஏறக்குறைய கி.மு. 5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்கள். மிக மிகப் பழைய காலத்திலேயே உயிர்க் கொலையைக் கண்டித்துள்ளார்கள். ஏறக்குறைய கி. மு. 2-ம் நூற்றாண்டில் வாழ்ந்த அசோக சக்கரவர்த்தி புத்த மதத்தைத் தழுவி அக்கொள்கைகளின் வழியில் நடந்தும் காட்டியுள்ளார். அரச வேட்டையை விலக்கியும், அரண்மனை உண்டிக்காகக் கொலைசெய்வகை ஒழித்தும் பலவித விலங்குகட்கும், பறவைகட்குமென ஒரு வேட்டையாட முடியாக் காலத்தை அரச கட்டளையாகவும் விதித்தார். அத்தோடு அந்தப் பழைய காலத்திலேயே விலங்கு

Page 28
6 4 حس۔
களுக்கு மருந்தகமும் அசோகனால் நிறுவப்பட்டது. இப்படி யான அரசர்களல்லவா உயிர்க் கோளத்தின் அல்லலைக் குறைத்தவர்கள்.
அதிகமான நாடுகளில் குறித்த விலங்குகளையும் குறித்த பறவைகளையும் கொல்லுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள் ளது. ஆனால் நடைமுறையில் மக்களால் கடைப்பிடிக்கப் படுகிறதா என்பதேகேள்வி? யானைத்தந்தம், கண்டாமிருகக் கொம்பு, புலித்தோல் போன்றவைகளை ஆடம்பரப்பொருட் களாக ,அழகுப் பொருளாக வைத்திருப்பவர்கள் மீது கருணை எதுவுமின்றி விலங்குப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடும் தண்டனை அளித்து வனவிலங்கைப் பாதுகாக்க ஒவ்வொரு நாடும் முன்வர வேண்டும். பாரம்பரிய வைத்தியங்கள் விஞ் ஞான பூர்வமாக்கப்படாததால் அவ்வைத்திய முறை க ள் இன்னும் பழமையில் தோய்ந்து இருப்பதால்தான் இன்றைய காலகட்டத்திலும் மிருகங்களின் உறுப்புக்களைப் பயன் படுத்தி மருந்து தயாரிக்கிறார்கள். இதனால் விலங்குகள் கொல்லப்பட்டு கள்ளச்சந்தை வியாபாரமாக மாறி குறித்த விலங்குகளின் தொகை குறைவடைகிறது அல்லது அவ்வினம் அருகிப் போவதற்குச் சந்தர்ப்பம் ஏற்படுகிறது.
மாடு, ஆடு, கோழி, பன்றி, ஒட்டகம் போன்ற மிருகங்களை நாம் உணவாகக் கொண்ட போதிலும் அவை அருகிப்போகவில்லை - மாறாகப் பெருகிக்கொண்டு செல் கிறது. காரணம் நாம் அவ்விலங்குகளை பல வழிகளாலும் இனப்பெருக்கம் செய்து முதலும் வட்டியுமாகப் பதிலீடு செய்துகொண்டிருக்கிறோம். இதே அடிப்படையில் நாம் எ ந் த உயிர்வகைகளை அத் தி யா வ சி ய தேவைகசூப் பாவிக்கிறோமோ அவ்வுயிர்வகைகளை நாம் விருத்திசெய்து கொண்டே செல்லவேண்டும். ஒரு குதிரையைக்கொல்லலாம் ஆனால் குதிரைக் குடும்பத்தையே நிர்மூலமாக்கக் கூடா தல்லவா? அவ்வினத்திற்கு நாம் செய்யும் மிகப்பெரிய துரோ கமாகும். அருகிப்போகும் இனங்களை விலங்கியல் விஞ்ஞா னிகள் கண்டறிந்து அவற்றை மிருகக் காட்சிசாலைகளிலும் விலங்கு சரணாலயங்களிலும் இனப்பெருக்கம் செய் து

سس-47 ---
அவ்விலங்குகள் எந்தச் சூழலில் தோன்றியதோ அச்சூழல் உள்ள காடுகளில் விட்டு அவ் வினத்தை விருத்தி செய்து வெற்றியும் கண்டுள்ளனர். முற்றாக அருகிப்போகாமல் அவ் வினத்தைப் பாதுகாக்கின்றார்கள். சில நாடுகள் விலங்கு சரணாலயங்கள் அமைத்து விலங்கினம் அருகிப்போகாமல் பாதுகாக்கின்றனர். இவர்கள் எல்லோரும் ஜீவ குடும்பம் குலைந்து போகாமல் காக்கும் கருணை வாதிகள் அன்றோ!
ஜீவ குடும்பம் உருவாவதற்குக் காரணமாகவும் உயிர்க் கோளத்திற்கு ஜீவர்களைத் தருவதிலும் அரைவாசிப் பங்கை வகிப்பது சாகரமாகும். கடல் ஜீவராசிகளை நாம் உணவுக் காகவும், மருந்து தயாரிப்பதற்காகவும், கால்நடை உணவுக் காகவும் பயன்படுத்துகிறோம். நாட்டின் பொருளாதாரத் தைக் கூட்டுவதற்கு மீனினத்தை வாணிபப் பொருளாகவும் உபயோகிக்கிறோம். இதனால் கடல் வளம் குன்றுவதோடு சில மீனினங்களையே அழித்து வருகி றோ ம். பரிணாம வளர்ச்சியில் மனிதர்களாகிய எமக்கு அண்மைப் படியிலுள்ள டொல்பின் மீன் வகைகளை கொன்று அருகச்செய்கிறோம் மனிதனின் மூல மூதாதையர் கடலில் இருந்தே வந்ததாக லிஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இது போன்று சில ஆயிரம் வருடங்களின் பின் டொல்பின் மீன் வகையும் பரிணாமம் பெற்றுச் சிறப்பான இடத்தை வகிக்கலாமன்றோ! இந்த நிலைமையில் மனிதர்களாகிய நாம் கடல் வளத்தைச் சூறை யாடி அவ்வினங்களைப் பூண்டோடு ஒழிக்க எமக்கு என்ன அருகதையிருக்கிறது.?
பிலிப்பீன்ஸில் மட்டும் ஆண்டுக்கு மீன் வேட்டையில் ஈடுபடும் 6000 பேர் ஒன்றரை இலட்சம் கிலோ சயனைற்றை கடல் நீரில் கலக்கிறார்களாம். (பத்திரிகைச் செய்தி) இவ் வண்ணம் சயனைற்றை உண்ணும் கடல் ஜீவிகளின் நிலை என்னவாகும் என்று சிந்தித்துப்பாருங்கள். சரி அம்மீன்களை உண்ணும் மனிதனுக்கு என்னவாகும்? உயிரை வாணிபப் பொருளாக்கும் ஆ  ைசக் கு ஒரு எல்லையில்லையா? 1994-ல் பாரம்பரிய சீன மருந்து தயாரிப்பதற்கு இரண்டு

Page 29
-48
கோ டி கடல் குதிரைகளைக் கொன்றொழித்தனராம் (தகவல்: விழித்தெழு) 1962-ம் ஆண்டு 17க்கும் மேற்பட்ட நாடுகள் திமிங்கிலங்கள் வேட்டையில் ஈடுபட்டு 70000 திமிங்கிலங்களைக் கொன்று குவித்தன.இது போன்று உலகின் பல பாகங்களிலும் கடல் ஜீவ இனங்களை அற்றுப்போகச் செய்கிறார்கள் மனிதர்கள். இதனால் கடலில் ஜீவராசிகளின் சமநிலையையு மல்லவா இந்தப் பேராசை பிடித்த மனித வர்க்கம் குலைத்து விடுகின்றது.தனது மூல மூதாதையர்களை நன்றி கெட்டு இவ்வண்ணம் வதைப்பதா?
சில மீனினங்களைக் கொல்லுவதை அரசாங்கங்கள் தடைவிதித்த போதும் இரக்கமற்ற மனித ஜென்மம் செய் ய்ாமல் விடுகிறார்களா? தானும் வாழ்ந்து அவ்வினங்களும் வாழ்வதற்கு ஒரு மார்க்கத்தை மனிதன் வகுத்துச் செயற் பட்டால் என்ன? வருடத்தைப் பருவங்களாகப் பிரித்து குறிதத பருவத்தில் கடலின் ஒரு பிரதேசத்தில் மீன் வேட் டையாடவும், மறு பகுதியில் மீன் பிடிக்கத்தடை செய்தும், அடுத்த கட்டமாக, முன்பு பிடித்த இடத்தைத் தடைசெய்து மீன் பிடிக்காத பகுதியைத் திறந்தும் ஒரு கழற்சி முறையில் மீன் பிடித்தால் நாமும் வாழ்ந்து அவர்களும் வாழச்செய்ய லாமன்றோ! இது போன்று பல வழிகளில் செயற்பட்டு எமது மூல மூதாதயர்களைக் காத்துக் கொண்டால் ஜீவ குடும்பம் செழிப்படையுமல்லமா?
நாம் எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கையைச் சமைக் கிறோமோ அதுபோலவே பிற உயிரினங்களின் சந்தோசத் தையும் கருத்திற் கொண்டு பிரபஞ்ச மகிழ்ச்சியைக் காண வேண்டும். உலகம் பூராவும் வருடத்தில் இரு நாளுக்கா வது கனிவகைகளையும், பாலையும் உணவாகக் கொண்டு அன்றைய தினத்தில் உணவுக்காக உயிர்க்கொலை புரியாமல் இருந்தால் என்ன என்ற ஒரு சிந்தனையை ஏற்படுத்தினால் என்ன? ஐக்கிய நாடுகள் சபை சில விடயங்களுக்கு சில தினங்களை ஒதுக்கி சர்வதேசதினங்களாகக் கொண்டாடுவது போன்று உயிர்வதைக்கும் எதிராக நாட்களை ஒதுக்கிச் சர்வ தேச தினமாக்கி உயிர்களுக்கு ஒரு பாதுகாப்பு வழங்கலாம், இதனால் மக்களையும் விழிப்படையச் செய்யலாம்.

-سس-49 ----
மனிதனாலும் இயற்கையாலும் ஜீவ இனங்கள் அழிவதை மேற்பந்திகளில் கண்டோம். இனி மனிதன் மனித  ைன அழிப்பதையும் கடுகளவிலாவது பார்ப்பது பொருத்தமுடை யதாகும். மனிதர்கள் தங்களுக்குள் பல பல காரணங்களுக் காக வேறுபட்டு நிற்கின்றனர். ஆனால் பல கோணங்களில் நின்று சிந்தித்துப் பார்க்கும் போது, சகல வேறுபாடுகளுக்கும் காரணம் மேலாண்மைக் குணமே, அடிநாதமாக இருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. மனிதனின் பிரச்சினை பல பல ரூபங்களாக இருக்க லா ம் . ஆனால் ரூபங்களின் மூலம் மேலாண்மைக் குணத்தில் இருந்தே புறப்படுகிறது,கற்காலம் முதல் இன்றுவரை நாடுகளில் தோன்றும் பிரச்சினைக்கு கால் கோளாக இருப்பது இந்த மேலாண்மை இயல்பேயாகும். இனரீதியாக, மொழிtதியாக, மதரீதியாக, கலாச்சாரரீதியாக நோக்கிப் பார்க்கும் போது, எல்லாவற்றிற்கும் ஊடுருவி நிற்பது இந்த மேலாண்மைக் குணமேயாகும். இக் குணம் மனிதனிடம் மட்டுமல்லாமல் பிற உயிரினங்களிடையேயும் காணப்படுகின்றன. அவ்வுயிரினங்களுக்கு உணவும் இனவிருத் தியும் முக்கிய இயல்பான தேவையாகும். அத்தேவையைப் பூர்த்தி செய்யப் பிற உயிரினங்கள் போராடுகின்றன. ஆனால் மனிதன் தேவையைப் பெருக்கிக்கொண்டே செல் வதால் அவன் எண்ணற்ற விடயங்களுக்காகப் போரிடுகிறான். ஆனால் இவை யாவும் சுருக்கி மேலாண்மையில் வந்து ஒடுங்கி விடுகிறது. இக்குணத்தால் எத்தனை எத்தனை இலட்சம் மனித உயிர்கள் பலியாகின்றன என்பதைச் சிந்தித்துப் பார்க்க நாம் தவறக் கூடாது. தாம் ஆளப் பிறந்தவர்கள் மற்றவர்கள் அடிமையாக ஊழியம் செய்யப் பிறந்தவர்கள் என்றும், தமது இனம் பெருமை வாய்ந்தது பிறருடைய இனம் சிறுமை உடையது என்றும், உலகில் நாமே உயர்ந்தவர்கள் மாற்றான் தாழ்ந்தவன் என்றும், எண்ணும் ஒரு மனக் கற்பனையே மேலாண்மைக் குணமாகும். இவ் வெண்ணத் தைச் செயற்படுத்தும் போது பிணக்குகள் தானாகவே எழுகின்றன. இவை ஈற்றில் யுத்தத்தில் முடிவடைகிறது என்பதை யாரும் அறிவர்.

Page 30
- 50
முதல் 10 மில்லியன் மக்கள் தொகை உண்டாக 1830 வருடங்கள் ஆனதாம். அடுத்த 30 மில்லியன் மக்கள் தொகை 100 வருடங்களில் பெருகியது. 1975 - 87 இந்த 12 வருடங் களில் மாதம் 1 மில்லியன் என்ற அளவில் மக்கள் தொகை பெருகியது. கி.பி.2000ம் ஆண்டில் மக்கள் தொகை 6 (ஆறு) மில்லியன் பெருகும் என்று அஞ்சப்படுகிறதாம். (தகவல்: ஹெல்க் மாத இதழ்) இவை உலகின் சனப்பெருக்கத்தைக் காட்டும் புள்ளிவிபரமாகும் இதே நேரம் யுத்தத்தால் மக்கள் எவ்வளவு மடிகின்றனர் என்றும் ஒரு புள்ளி விபரம் எடுத்தல் வேண்டும். 1941 - 1945ம் ஆண்டு மே மாதம் வரை ஹிட்ல்ரால் 58 இலட்சம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர். 1939-ல் தொடங்கி 1945இல் முடிவடைந்த இரண்டாம். உலகப் போரில் 16 மில்லியன் போர் வீரர்களும் இதற்கு மிக வும் கூடுதலான பொது மக்களும் இறந்தனர். 1994-ம்ஆண்டு ஏப்பிரல்-மே மாதத்திற்குள் அதாவது 1 மாதத்தில் 5 இலட் சம் ருட்சி மக்களை ஹ"ட்டு இனத்தவர்கள் கொன்று குவித்தனராம். ( தகவல்: உலக உலா) இப்படி இப்படி, அப்படி அப்படி, காசினி முழுமையும் மனிதனின், மேலாண் மைக் குணமே இயல்பின் பிரதிபலிப்பாக எவ்வளவு மனித உயிர்கள் மாண்டிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு மனிதன் தான் என்னத்தை விரும்புகிறானோ அந்த விருப் பத்தை அதே விருப்பத்தை மாற்றான் விரும்பக்கூடாது என எண்ணுகிறான். மாற்றான் த மது விருப்பத்தை வலியுறுத்தினால் எழுவதுபோர்தான். ஒரு கோளில் இருந்து இன்னொரு கோளுக்குப் பாயும் அளவுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்து விட்ட போதும் மனிதனின் மனதில் ஒரு உயர்ந்த பண்பான, நாகரீகமான நடத்தை ஏற்படவில்லையே. மனிதனின் எண்ணத்தில், செயற்பாட்டில் அவனது மன முதிர்ச்சி தென்பட வில்லையே! ஆகவே மனிதன் அறிவில், பகுத்தறிவில் சிறந்து விளங்குகிறான் என்பதை அவனது நற்செய்கையில் வெளிப்படவேண்டு மல்லவா? எப்பொழுது மனிதன் தனது நடத்தையில் ஒரு விழுமியத்தைக் காட்டு கிறானோ அப்பொழுது உலகில் உள்ள அனைத்து ஜீவராசி களும் மகிழ்ச்சியாக வாழும் போதுதான் ' உயிர்க்கோளம் அல்லலுறாது-அப்போதுதான் பிரபஞ்ச மகிழ்ச்சி மலரும்.
QQQQ

6 எண்ணம், செயல், மகிழ்ச்சி
கற்கண்டுத் துண்டை வாயில் போட்டதும், மனதில் எழும் எழுச்சியை இனிமை என்கிறோம். அந்த இனிமை மனதுக்கு இன்பத்தைத் தருகிறது. திறமையான கலைஞன் நாதஸ்வரம் வாசிக்கும் போது காதிற்குச் சுகமான கானமாகி மனதிற்கு இன்பம் தருகிறது. ஒரிரு புலன் உணர்வால் மனதிற்கு சிறிது நேர நிறைவு தருதலையே இன்பம் என்று கூறுகிறார்கள், பல புலன் உணர்வால் மனதிற்கு நீடித்த நிறைவு தருவதை மகிழ்ச்சி அல்ல, ஆனந்தம் என்கிறார்கள் அறவியலாளர்கள். நண்பன் கோபிதன், மனைவி மக்களுடன் வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறான். அதில் பலவகை நீடித்த இன்பம் உண்டு என்றே அர்த்தம் கொள்ளலாம். இவ் அகிலத் தில் வாழும் மனிதர்களும் மற்றைய ஜீவன்களும் இப்பூமியில் எவ்வாறு மகிழ்ச்சியான வாழ்க்கையை மேற்கொள்ள முடி யும் ? மனிதன் முதலில் தா ன் மகிழ்ச்சியாக வாழ்ந்து ஏனைய உயிர்களையும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இடம் கொடுத்தல் வேண்டும்,
ஆதிகாலத்தில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்தும் போது, அங்கு அனுபவமும், பலமும் அறிவுமுள்ள முதியவரே தமது குழுவை வழி நடத்திச் செல்வார். அம் முதியவரான தலைவர் தமது கூட்ட மக்களைச் சிறப்பாக வாழ வைக்கவே முயற்சி மேற்கொள்ளுவார். இது போன்ற வாழ்க்கை அமைப்பைப் பறவைகளிடமும், விலங்குகளிடமும் நாம் காணலாம். மனித வரலாற்றின் ஊடே மனித வர்க் கத்தை மேம்படுத்துவதற்கு ஒவ்வொரு துறையிலும் அறிஞர் கள், மேதைகள் தோன்றிப் பல பல தத்துவங்களைப் படைத் துள்ளார்கள். மாறி வரும் உலகத்திற்கு ஏற்ப புதிய தத்துவங் களும், பழைய தத்துவங்களுக்குப் புதிய வியாக்கியானம்

Page 31
حس-23 5-سے
கொடுத்தும் மனிதனின் செம்மையான வாழ்க்கைக்கப் படிகள் அமைத்திருக்கிறார்கள் பெரியோர்கள். நவ யுகத்தில் வாழும் நாம் பற்பல கருத்துக்களை அறிந்து நமது சிறப்பான வாழ்க்கைக்கு வித்திடலாம். எ ன து குடும்பம் எப்படி மகிழ்ச்சியாக வாழவேண்டுமென விரும்புகிறேனோ அது போலவே மற்றவனும் மகிழ்ச்சியாக வாழ நாம் உதவி செய்ய வேண்டும் என்ற சிந்தனை, செயற்பாடு நமது மன தில் எழ வேண்டுமே, !
எனது நலன் என்ற மனப்பாங்கு மாறி, எல்லோர்து நலனும் சிறக்க வேண்டும் என்ற மனப்பக்குவத்தை வளர்ப் பதே உலக மக்கள் அனைவருக்கும் நலன் பயக்கும். அதற்காக தன்னைப் புறக்கணிப்பதாக அர்த்தம் கொள்ளக்கூடாது. ஒருவர் தன்னை நன்கு வளர்க்கட்டும். அதே போன்று மற்ற வரையும் வளர விடவேண்டும். மாற்றானை மிதித்து தான் வளரவேண்டும் என்ற மனப்போக்கே சிக்கலைத்தரும். எடுத் துக்காட்டாக ஒரு வல்லரசு நாடு, தமது மதமும் தமது ஆதிக் கமும் உலகம் பூராகவும் பரவ வேண்டும் என்று நினைத்தால் அங்கு ஒரு பொறாமைப் போட்டியே ஏற்படும். அவத சம காலத்தில் இன்னொரு வல்லரசு நாடும் எதிரும் புதிருமாக இறங்கும என நிச்சயம் எதிர்பார்க்கலாம். வல்லவனுக்கு வல்லவன் இருப்பான் என்பது உலக நியதி. இப்படித் தீங்கான மனப்போக்கு இறுதியில் யுத்தத்தில் முடிவடையும் என எந்த ஒரு அறிவாளியும் ஊகித்துக் கொள்ளுவான். இந்த மனப் போக்கு எங்கு நிலவுகிறதோ அங்கு உள்நாட்டுப் பூசலும், நாட்டுக்கு நாட்டுப் பூசலும் எழுந்து கொண்டே இருக்கும். பல மொழி பேசும் நாடாக இருக்கலாம், பல மதங்கள் நிலவும் நாடாக இருக்கலாம், பல இனங்களைக் கொண்ட நாடாக இருக்கலாம், பல வகைப்பட்ட மக்கள் வாழும் நாடொன்றில் ஒரு வகைப்பட்ட மக்களை உயர்த்துவதற்கு எடுக்கப்படும் முயற்சியானது, அந்நாட்டின் தற்கொலைக்கு ஒப்பானதாகும். எல்லா வகைப்பட்ட மக்களின் அபிலாசை களையும் நிறைவு செய்யும் நடவடிக்கைகளே அந்நாட்டு ஒற்றுமையின் பூங்காவாக, சமாதானத்தின் ஜீவ பூமியாக

-53
மிளிரும். அங்கு எல்லா மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமைக் கீதம் பாடி ஆடிக் களிப்புறுவர். இப்படியான நாடுகள் இந்த உலகில் இல்லாமல் இல்லை. மேற்கு நாடுகளில் ஒன்றான சுவிட்சலாந்தை ஒரு முன்னுதாரண நாடாக எடுத்துக்கொள் ளலாம். பிணக்கு மலிந்து மனித உயிர்களை அன்றாடம் பறிகொடுக்கும் நாடுகள், மனித வாழ்வில் முன்னேற்றம் அடைந்த நாடுகளைப் பார்த்துத் தமது நாட்டுக்கு ஒத்துவரக் கூடிய தீர்வைக் காலம் தாழ்த்தாது எடுத்து எல்லா மனிதர் களையும் இன்புற்று இருக்க வழி தேடலாம். ஒரு குறுகிய வட்டத்திற்குள் நின்று மனித உயிரைப் பணயம் வைக்காமல் பரந்த மனப்பாங்கோடு பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு எல்லா மக்களின் இருதயங்களிலும் குறிப்பிட்ட தலைவர் வீற்றிருக்கலாம். யேசு கிறிஸ்துவுக்குப் பின் பெரும்பாலான உலக மக்களால் போற்றப்படும் அகிம்சா மூர்த்தி காந்தியடி கள் 19-ம் நூற்றாண்டின் மிகச் சிறந்த உத்தமர் அல்லவா? அவரது எண்ணங்களும் செயற்பாடும் தூய்மை நிறைந்தவை, நேர்மையானவை, பகைவனும் துன்பப்படக் கூடாது என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட அவதார புருடரை இனியும் மனித சரித்திரம் காணுமா? என்ற ஏக்கமே பலரிடம் உண்டு.
இரண்டாம் மகா யுத்தம் நடைபெறுவதற்கு மூல கார னகர்த்தாவாக இருந்த ஜேர்மன் நாட்டு அரசியற் தலைவ ரான அடால்ப் கிட்லர் எத்தனையோ இலட்சம் யூதமக்களை கொன்றழித்தானே; இவனையும் உலகமக்கள் மன்னிப்பார் களா? தனது இனமே மேலோங்கி வாழ வேண்டும் என்பதே இவனது நோக்கம். அவனுடைய தீய எண்ணம், கொடூர ச் செயலாகி அதன் விளைவு துன்பகரமானமுடிவையே தந்தது. 2.கண்டா நாட்டின் முன்னாள் அதிபரான இடி அமின் தனது இனப்பெண்களையே கற்பழித்து, சில பெண்களின் பச்சை இரத்தத்தையே குடித்துக் கொலை செய்தானாமே! இவனது சிந்தனை, செயற்பாடு, விளைவு என்ன மாதிரி இருந்திருக்கு மென்று சிந்தித்துப் பாருங்கள். இவர்களைப் போ ன் ற நாகரீக மனிதர்களின் கறைபடிந்த வரலாற்றை நாம் சரித்
திரத்தில் காணுகிறோம்.இவர்களும் மனிதர்கள் தாம், மானு

Page 32
- 54
டத் தெய்வமாகிய மகாத்மா காந்தியும் மனிதன் தானே! காந்திஜியின் எண்ணங்கள் செயற்படும் போது விளைவு மகிழ்ச்சிகரமான முடிபையே தரும். * அகிம்சா வாதியின் குறிக்கோள் எதிரியின் மனவலிமையை அழிப்பது அல்ல. அவனை (எதிரியை) புதிய கோணத்தில் இருந்து பிரச்சினை யைப்பார்க்கச் செய்து அவனுடைய ஆதரவுடன் முடிவு தேடு வதாகும்.இத்தகைய முறையில் முடிவு காண்பது கடினமான ஒன்றுதான் அதற்கு ஆழ்ந்த அறிவும் தொடர்ந்த ஆராய்ச்சி யும் தேவை' என்று காந்திஜி கூறிப்போந்தார். இவருடைய கூற்றை தற்காலத்து அரசியற் தலைவர்கள் மனதில் வைத்து தமது செயற்பாட்டை முடுக்கிவிட்டால் எத்தனை இலட்சம் மனித உயிர்கள் மாளாது உயிர் தப்புவர், மனித உயிர்களைக் கொல்லுவதற்கே நவீன யுத்தக் கருவிகளைத் தயாரித்து வாணிபம் நடாத்தும் நாடுகள் தாம் சிந்திக்குமா?
நல்ல கல்வி அறிவுள்ள ஒரு நாட்டின் குடிமகனும் போதிய அறிவுள்ளவராக இருப்பார் எ ன் றே எடுத்துக் கொள்ள வேண்டும். அக்குடிமகனுக்கு எது நல்லது எது கெட்டது என்றும், இன்பம் தரத்தக்கது துன்பத்தைத் தருவது எது என்ற அறிவையும் அவர் கொண்டிருப்பார். நல்லறிவின் துணையோடு தனது நல்வாழ்வுக்குத் தேவை யான மார்க்கத்தை அமைப்பதில் என்ன தடங்கல் உண்டு? புல்லாங்குழல் வித்துவான் தான் விரும்பும் இராகத்திற்கு ஏற்ப குழலில் துவாரத்தை மூடியும், திறந்தும் தேவகானம் இசைக்கிறார் -இது போலவே அறிவு படைத்த மனிதனும் தனது நல்வாழ்க்கைக்காகத் தனது புலனை அடக்கியும் திறந்தும் பரவவிட்டும் வாழ்வைச் செம்மையாக்கலாம். எவ் எண்ணத்தை எண்ணிச் செயற்பட்டால் இன்ன விளைவு ஏற்படலாம் என்று பகுத்தறிவு படைத்த ஒருவனுக்கு நன்கு தெரியவேண்டும். நற்செயல்களைப் புரிய வைப்பதற்காக எமது புலன் இச்சைகளையும் மனப்பயிற்சி மூலம் ஒழுங்க மைக்க வேண்டும். புலன்களை அடக்கியாளாவிட்டால் நாம் எண்ணிய கருமத்தைத் திறம்படச் செய்ய முடியாது தத்த ளிக்க வேண்டிவரும். எமது பெரியோர்கள் யாவரும் எந்த

-55
எந்தக் கோணத்தில் எப்படிச் சொல்ல வேண்டுமோ அப்படி யெல்லாம் எமக்குச் சொல்லித் தந்துள்ளார்கள். எமக்கு எதுவித சிரமமுமின்றி எமக்குத் தேவையான சிந்தனையைப் பின்பற்றி எமது வாழ்க்கையை நாம் இனிதே சமைக்கலாம். மகிழ்ச்சிக்குரிய விளைவைப் பெற எண்ணம், செயல் இரண் டையும் ஒழுங்கமைத்துத் திடமாக முடிவெடுத்து உறுதியாகச் செயற் படுத்தினால் மகிழ்ச்சியான வாழ்வு கிடைக்கும். இனிய எண்ணத்தை, நற்செயலை திரும்பத்திரும்ப நாம் செய்யும் போது அது 'பழக்கமாகிய பின் அது வழக்கமாகி நற்பண்பாக மலரும். ஒவ்வொரு நாடும் தமது மக்களைச் சிறந்த பண்புள்ள மக்களாக்கு வதற்குத் தேவையான கல் வியை ஊட்டிச் சீரிய கல்வியை உருவாக்குமா?
எங்கெங்கு இருந்தாலும் நாம் யாவரும் மனிதர்கள்ே என்ற நோக்கில் மனித நேயம், பொறுமை, சகிப்புத்தன்மை, புத்துணர்வு போன்ற நற்பண்புகளோடு நாம் முயற்சிக்க் வேண்டும். எந்த ஒரு மனிதனும் எமது செயற்பாட்டால் துன்புறக் கூடாது என்ற மனப்பான்மையுடன், நாம் எல்லோ ரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்ற நினைப்போடு, எமது உறவினர்களான மற்ற உயிர்களையும் தேவையற்ற முறையில் கொல்லாமல் அவர்களையும் ஜீவகாருணியத்தோடு நோக்கி, யாதும் ஊரே யாவரும் கேளிரே என்ற குறிக் கோளுடன் எமது வாழ்க்கையை அமைத்தால்-இப் பூமியில் ஜீவகுடும்பமாகப் பிரபஞ்ச மகிழ்ச்சி அடையலாம் என்பதில்
ஐயம் ஏது ஐயா?

Page 33
7 ஒருமித்த கருத்தைப் பெறல்
மனித வரலாற்றில் எண்ணற்ற வருடங்கள் சென்று விட்டன. மிகப் பழங்காலத்தில் அறிவுடைய பெரியோர் மிகச் சிலராகவே இருந்திருப்பர். அப்பெரியார்கள் தமது கருத்துக் களை, கொள்கைகளை, சித்தாந்தங்களை உலகிற்கு வழங்கி விட்டுச் சென்று விட்டனர். அவர்கள் வழங்கிய கருத்துக்கள் பலவும் மனித மேம்பாட்டுக்கு உதவக்கூடியதாகும். அக்கருத் துக்கள் பல விதங்களில் பல முனைகளில் இருந்து அளிக்கப் பட்டன. தற்காலத்தில் கல்வியானது மக்கள் மயப்படுத்திய ஒரு கருவியாக இருக்கிறபடியால் பல பல மேதைகள், கல்வி மான்கள், பகுத்தறிவாளர்கள், சிந்தனையாளர்கள் தோன்றி அவர்களால் இயன்றளவுக்கு கொள்கைகளையும், சித்தாந் தங்களையும் மக்களுக்கு அள்ளி வாரியிருக்கிறார்கள். அன்றும் இன்றும் பெரியோர்களால் வழங்கிய கருத்துக்கள் மக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றதா என்பதுதான் வினாவுக்குரிய விடயமாக இருக்கிறது. சிலருடைய கருத்துக்கள் மனித வாழ்விற்குப் பயன்படத்தக்கதாகவும் அது மக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்று மக்களின் நடைமுறைக்குச் சாத்திய மான தொன்றாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. மக்களின் நடை முறை வாழ்விற்கு உகந்ததாகவும் நடைமுறை வாழ் 60 )િ இருந்து அவர்களை ஒரு சிறப்பான இடத்திற்குக் கொண்டு செல்ல வல்ல தத்துவங்களே வாழும் வளரும் . மற்றைய தத்துவங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும் இது போன்றே,கொல்லாமையும் பிரபஞ்ச மகிழ்ச்சியும் மனித வாழ்வுக்கு அதாவது நடைமுறைக்கு உகந்ததாயின் அது வாழும்.அல்லாவிடில் வெறும் காகித பூச்சியாகவே இருக்கும்.

سسم-7 5-----۔
கொல்லாமையைப் பற்றி அருக்க சமயமாயினும் சரி திருவள்ளுவரும் சரி மிகக் கடிமையான போக்கைக் கடைப் பிடித்தபடியாலும் அது மக்களின் அன்றாட வாழ்விற்கு உகந்ததாக இல்லாதபடியாலும் மக்களின் ஒருமித்த கருத் தைப் பெறத் தவறிவிட்டது என்றே தோன்றுகிறது.
கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி எல்லா உயிரும் தொழும்.
என்ற குறள் மானுடர் பின்பற்றக்கூடிய கருத்துத்தானா என்பது சிந்திக்கவேண்டிய ஒரு பொருளாகும். ஒரளவுக்கு மேல் எத்தத்துவமும் கடினப் போக்கைக் கொண்டிருந்தால் அத்தத்துவத்திற்குச் சார்பாக மக்களின் ஒருமித்த கருத்தைப் பெறுவது கடினமாக இருக்கும். அருக்க சமயமும் வள்ளு வரும் கூறும் கொல்லாமைத் தத்துவம் இயற்கையின் போக் கிற்கு விரோதமானதாகத் தென்படவில்லையா? மனிதர்கள் உயிர்கள் எதனையும் கொல்லாமல் சீவிக்க முடியுமா என்று யோசித்துப்பாருங்கள்? தாவரங்களிலும் அவற்றின் விதைகளி லும் உயிர் இல்லையா அவறறிற்கு உணர்வில்லையா? இந்திய விஞ்ஞானி சந்திரபோஸ் என்பவரின் பரிசோதனை மூலம் -- தனக்குத் துன்பம் தரும் மனிதர் நெருங்கும் போது இலை களைச் சுருட்டி துரங்கப்போட்டு வாடியதாகக் காட்சி அளிக்குமாம் தாவரம் - என்று காட்டியுள்ளாரே, இசை யாலும் தாவரங்கள் மகிழ்ச்சியடைகிற தென்றும் பரிசோ தனை மூலம் விஞ்ஞானிகள் காட்டியுள்ளார்களே! தாவரங் களைக் கொல்லுவதும் கொல்லாமைக்குள் அடங்குமல்லவா? ஆகவே கோட்பாடுகள் வாழ்வியல் நடைமுறைக்கு உகந்த தாக அமைய மேண்டுமே.
ஜனநாயக நாடொன்றில் தேர்தலில் ஒரு கட்சி மிகப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுமாயின் ஜனநாயக முறையில் அக்கட்சியும் அதன் தலைவரும் மக்க ளின் ஒருமித்த விருப்பதைப் பெற்றிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டும். அம்மக்கள் அக்கட்சியிடமும் அதன்

Page 34
- 58
தலைவரிடமும் ஏதோ ஒரு நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றே அர்த்தம் கொள்ளலாம். பரந்துபட்ட மக்களின் ஆதரவைப் பெறும் போது அவ்விடயம் பாரட்டப்படும். அத்தோடு நீண்டகாலம் வாழக்கூடியதாகவும் இருக்கும். 1907 இல் பிக்காசோ தீட்டிய 'அவிக்ணோனின்மகளீர்’ என்ற ஓவியம் உலகளாவிய அந்தஸ்தைப் பெற்று மக்களின் பேரா தரவையும் பெற்றுள்ளது. அழியாத இசை மெட்டுக்களை உருவாக்கிய பிதோவனின் இசையைப் பாராட்டாத இசைக் கலைஞர்களும் உண்டோ. இத் தொடர்ச்சியில் பார்க்கும் போது கிரேக்கதத்துவ ஞானியான பிளேட்டோவின் (கி. மு. 427 - கி. மு. 347) தத்துவங்களும் மேனாட்டில் மிகவும் போற்றப்படுகிறது. பிளேட்டோவின் போதனையின் அடிப் படையிலேயே ஐரோப்பியதத்துவங்களும்,ஐரோப்பிய நாகரிக மும் உருவானதாக அறிஞர்கள் கருதுகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது பிளேட்டோவின் கருத்துக்கள். ஐரோப்பிய மக்களின் மனத்தை எந்தளவுக்குப் பாதித்திருக்கிறது என் பதை ஊகிக்க முடிகிறது. எமது அயல் நாடான இந்தியாவில் வடபகுதியில் தோன்றிய மிகப்பழைய இலக்கியங்களான இரா மாயணமூம், மகாபாரதமும் வடஇந்திய மக்களால் மட்டு மின்றி இந்தியா முழுவதும், இலங்கை, தாய்லாந்து போன்ற பிற நாடுகளிலும் பரவி மேலோங்கி வியாபித்து இருக்கிறது. இராமாயணத்தை ஆதாரமாகக் கொண்டு பல்வேறு மதங் களும் தங்கள் தங்கள் கொள்கைகளுக்கு இசைவாக தொகுத் திருப்பதையும், பல மொழிகளில் பல புலவர்கள் இராமா யணத்தை எழுதியிருப்பதையும் அறியமுடிகிறது. எமது வள்ளுவப் பெருந்தகையின் திருக்குறளும் தமிழர்களின் பொது மறையாக மட்டுமின்றி பல்வேறு மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டு போற்றிப் பாராட்டப்படுகிறது. ஆதலால் எத்துறையைச் சார்ந்ததாக இருப்பினும் சிறப்பானதுதான்" என்று மக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்றால் அது மேன்மையுடையதாக இருக்கும். பெரும்பாலான மக்களின் விருப்பை,அல்லது ஆதரவைப் பெறும் கருத்தை அல்லது செயலை மக்களின் ஒருமித்த கருத்தைப் பெற்ற ஒன்றாகக் கருதலாம்.

--59-سسه
ஒரு தத்துவமாயின் அது மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து அவர்களுக்கு நீண்ட நலனை விளைவிப் பதாக அமையவேண்டும். எமது அனேக கொள்கைகளும் தத்துவங்களும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சுழன்று கொண்டேயிருக்கும். அவற்றைத் தர்க்க ரீதியாகவோ, பகுத் தறிவு ரீதியாகவோ ஆராய முற்படும்போடு அது பிசு பிசுத் துப் போய்விடும். அத்தோடு மக்கள், செயல் முறையில் பின் பற்ற முடியாத நடைமுறைச் சிக்கலாக இருப்பின் மக்களின் கவர்ச்சியையும் இழந்துவிடும். எத்துறையைச்சார்ந்த கொள் கைகளாக இருந்தாலும் மக்கள் தெளிவாக விளங்கி அக் கொள்கைகளின் மூலம் தாம் நலம் பெறுவோம் என்ற நம்பிக்கை ஏற்படவேண்டும். கொல்லாமை மூலம் பிரபஞ்ச மகிழ்ச்சி எவ்வாறு கிட்டலாம் என்ற கருத்தும் மக்கள் மத் தியில் பரவி ஒரு விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். முழுமையான கொல்லாமையை மனிதனோ பிற உயிர்க ளோடு கடைப்பிடிக்க முடியாது என்பது மிகத் தெழிவாகப் புரிய வேண்டும். ஆனால் முன் அத்தியாயங்களில் கூறப்பட் டது போன்று தேவையற்ற முறையில் கொல்வதைத் தவிர்க் கலாம் என்பதில் சிரமம் ஒன்றுமில்லை. மனிதனை மனிதன் கொல்வதைக் கூடிய அளவில் கட்டுப்படுத்த அயராத முயற் சிகள் மேற்கொள்ள வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, பிரச்சினைகளை விலக்குவதற்கான தீர்வை தனது அங்கத்துவ நாடுகளின் ஒருமித்த கருத்தைப் பெற்று நடைமுறைப்படுத் தும் போது அனேக யுத்தங்களைத் தவிர்க்க முடியும். 1997 ம் ஆண்டு ஈராக் நாட்டிற்கும் அமெரிக்க நாட்டிற்கும் இடையில் ஏற்படவிருந்த அணுவாயுதப் போர் ஐ. நா. சபையின் செய ளாளர் நாயகம் திரு. கோபி ஆனான் என்பவரின் முயற்சி யால் தடுத்து நிறுத்தப் பட்டதால் எத்தனையோ இலட்சம் மக்களின் உயிர் க ள் அவர்களிடமே இருக்கிறதல்லவா? எத்தனையோ கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமுறாது ஆங்காங்கே பரவிக்கிடக்கிறதே! எனவே கொள்கைகள் மக்களுக்கு நன்கு விளக்கி அதன்படி செயற்பாட்டால் அக் கொள்கைகளின் வெற்றியால் மக்கொழுமிடிதமிழ்ச்சிர்
வெய்தலாம்.

Page 35
-60
கொல்லாமைத் தத்துவத்தை நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பதில் அதிகம் பிரச்சினை இருப்பதாகத் தெரிய வில்லை, சுற்றுப்புறச் சூழலைப் பேணும் கருத்தானது தற் காலத்தில் உலகமெங்கும் பேசப்படும் ஒரு பொருளாக மாறி வருகின்றது. இயற்கையின் சமநிலை கெடக்கூடாது என்றும் சமநிலையைப் பேணவேண்டும் என்றும் அகிலத்தின் பல பாகங்களிலும் சூழலியல் நிபுணர்களாலும் உயிரியல் விஞ் ஞானிகளாலும் மகாநாடுகள் கூட்டித் தீர்மானங்கள் நிறை வேற்றும் காலமாக இன்று நாம் கேட்கக்கூடியதாக இருக் கிறது. கெட்ட சூழலின் பாதிப்பை மக்களும் நன்கு உணரக் கூடியதாக உள்ளது. எனவே கொல்லாமைத் தத்துவத்தின் சார்பாக உலகமக்களின் ஒருமித்த கருத்தாகத் திரும்பு வதற்கு நீண்ட காலம் செல்லாது என்பது வெளிச்சமாக உள்ளது. இத்தத்துவம் இயற்கை வாழ்வோடு பின்னிப் பிணைந்தும் மக்களின் நடைமுறை வாழ்வோடு கலந்தும் இருப்பதால் வருங்காலத்தில் பெரும் வெற்றியை அடையும் என நம்பலாம். அதன் பலன் பிரபஞ்ச மகிழ்ச்சியேயாகும்என்று பூசிப் படையலாம்.


Page 36
ஆசிரியரின் பிற நிர்ணயிக்கப்பட்டவாறு உயிர்வா சுய அஞ்சல் - மலர்ந்த முகம் -

நூல்கள் ழ்கிறதா?. ரூபா 23-00 ரூபா 33-00
ரூபா 50-00