கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கணினியை விஞ்சும் மனித மூளை

Page 1


Page 2


Page 3


Page 4

கணினியை விஞ்சுக் கணித மூளை
ஆசிரியர் :
கா. விசயரத்தினம்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447 7 (ப.எ.4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24342926 தொலைநகல் : 0091-44-24346082 L6lci selej5ás : manimekalaiGDeth.net WebSite : www.tamivanan.com

Page 5
நூல் தலைப்பு
ஆசிரியர்
மொழி
பதிப்பு ஆண்டு
பதிப்பு விவரம்
םLתfl6_פ
தாளின் தன்மை
நூலின் அளவு
அச்சு எழுத்து அளவு
மொத்த பக்கங்கள்
அட்டைப்பட ஓவியம்
லேசர் வடிவமைப்பு
அச்சிட்டோர்
நூல் கட்டுமானம்
வெளியிட்டோர்
疑名 இந்திய விலை : ரூ. 65.00 澳
நூல் விவரம்
为复
கணினியை விஞ்சும் மனித மூளை
* நுணாவிலூர் கா. விசயரத்தினம்
丸
冷
丸
为塞
தமிழ்
2005
முதல் பதிப்பு
ஆசிரியருக்கு
மேப்லித்தோ
கிரெளன் சைஸ் (12%x 18% செ.மீ)
11 புள்ளி
XX + 240 = 260
ஐஸ் கிராஃபிக்ஸ் கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ் சென்னை - 26. () 23725639 ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட் சென்னை - 94.
தையல்
மணிமேகலைப் பிரசுரம் சென்னை - 17.

ர் ஆசிரியனாய், கிராமசபை அங்கத்தவனாய், கூட்டுறவுச் சங்க இயக்குனராய், பாம்புக் கடி வைத்திய நிபுணனாய், மிருக வைத்திய நிபுணனாய், நாட்டு வைத்தியனாய், நாள், கோள், சாதகக் கணிப்பாளனாய், வீடு, கிணறு, கட்டட நிலைய அமைப்பாளனாய், மக்கள் பிணக்குத் தீர்ப்பாளனாய், பல்வேறுபட்ட விடயங்களின் ஆலோசகனாய், சமூகத் தொண்டனாய், ஆலயப் பணியாளனாய், மக்கள் மத்தியில் பல பணிகள் ஆற்றி, எங்களுக்கு என்றும் வழிகாட்டும் அணையா தீபமாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் எண் தகப்பனார் அமரர் திரு. வேலுப்பிள்ளை கார்த்திகேயன் நுணாவில், சாவகச்சேரி, அவர்களுக்கும், என் அருமை அன்னை அமரர் திருமதி. தங்கமுத்து கார்த்திகேயன் அவர்களுக்கும் , என் துணைவியாரின் தாய், தந்தையரும், என் மாமா மாமியாருமாகிய அமரர் திரு. பெரியதம்பி இளையதம்பி அளவை வடக்கு, அளவையூர், அவர்களுக்கும், அமரர் திருமதி. அன்னப்பிள்ளை
இளையதம்பி அவர்களுக்கும் இந் நுால
VI/ N
N

Page 6
iv
உள்ளே.
ஆசியுரை. vi
ஆய்வுரை . viii வாழ்த்துரை. xiv என்னுரை. XV
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது
மயில் முறைக் குலத்துரிமை. கலிங்கப் போரில் பேய்கள் சமைத்த கூழ். 7 பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் . 14 பாதாதி கேசமா? கேசாதி பாதமா?
மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தும் முறை 20 தமிழன்னையின் அணிகலன்களில்
ஒன்றான குண்டலகேசி. 25 மாதர் கருவுற்றிருக்கும் காலம் ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?. 29 மனம் விரும்பும் மகவைப் பெற்றெடுக்க
மந்திரம் சொல்லும் தந்திரம் . 35 பெண்ணழகை உண்ணும் பசலை. 42
இன்றைய அணைப்பு நடனத்திற்கு அன்றைய
துணங்கைக் கூத்து ஊற்றா? . 52

10.
11.
12.
3.
14.
15.
16.
17.
18.
19.
20.
2.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
SO.
பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்
ஒரு சூரிய குடும்பம். 59 கணினியை விஞ்சும் மனித மூளை . 84 எட்டுக்கோடி ஆண்டுகளாக மக்களைக் கொன்று குவித்து வரும் பாம்பினம் . 88 சூரியன் கிழக்கில் உதித்து
மேற்கில் மறைகின்றானா?. 102 மனித உறுப்புகளின் ஒருநாள் நிகழ்வுகள் . 106
தவஞானி திருமூலர் தந்த தீந்தமிழ்த் திருமந்திரம் 108 உடம்பார் அழியின் உயிரார் அழிவர்;
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!. 137 அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும். 143 பால் நீர் உறவு. a 194 அழகின் அந்தம் 197 அரசாள வயதெல்லை உண்டா?. 201
மெழுகுத்திரியை அணைத்து பிறந்த நாள் விழாவா? 204 தண்டனை வழங்குவது சட்டமா?
மனச்சாட்சியா? கடவுளா? . 2O7 தமிழர் கலாசாரத்தில் தனித்துவமான பொட்டு. 212 பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!. 215 பேராசைகளான மூவாசைகள். 217 மரம் இல்லையெனில் மண் பாலைவனமே!. 220 உயிர்க் கொலை புரியா மனிதன் உலகில் உளனா? 225 முகம் காட்டும் முகபாவனை. 231 கோடிக்கு முன். பின். 233
மிகுதியாக அழுவதும் சிரிப்பதும் யார்? ஆண்களா? பெண்களா?. 237

Page 7
vi
பேராசிரியர் கோபாலபிள்ளை (கோபன்) மகாதேவா M.Sc., Ph.D. (Birm), Hon. D.Litt., C. Eng., FIMfghE, FCMI அவர்களின்
ஆசியுரை
இந் நூலுடன் இணைந்து இதற்கு இவ் ஆசியுரையை அளிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இந் நூல் தமிழகத்துக்கும் தமிழீழத்துக்கும் சுமார் ஆறாயிரம் மைல்கள் தூரத்தில் இருக்கும் லண்டன் மாநகரிலிருந்து சென்னையின் முன்னணிப் பதிப்பகமாகிய மணிமேகலைப் பிரசுரத்தினுாடாக வெளிவருவதைக் கண்டு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி பொங்குகிறது.
தேமதுரத் தமிழோசை இன்று உலகமெல்லாம் கேட்கின்றது. பாரதியின் பழைய கனவு இன்று நனவாகிக் கொண்டிருக்கிறது. மண்ணுடன் மண்ணாகிவிட்ட அம் மகாகவியின் ஒவ்வொரு அணுவும் இதைக் கண்டும் கேட்டும் விம்மிப் பெருத்துக் கூடிக் களித்து ஆனந்தத் தாண்டவமாடும் எனக் கற்பனை செய்கிறேன்.
நூலாசிரியர் கார்த்திகேயன் விசயரத்தினம், தமிழீழத்தில் நான் பிறந்து வளர்ந்த மட்டுவில் தெற்கு, கைதடி நுணாவில் கிராமங்களுக்குக் கிட்டிய நுணாவில் மேற்கைச் சேர்ந்தவர். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கும், யாழ் மத்திய கல்லூரிக்கும் மாறுமுன்னர் நான் ஓராண்டு ஆங்கிலக் கல்வியில் அத்திவாரம் பெற்ற டிறிபேக் கல்லூரியில் அவரும் கற்றவர். நாம் கிட்டத்தட்ட ஒரே வயதினர்.

Vii
எனினும் லண்டனிலேயே முதன்முதலில் சந்தித்து
இப்போது சில ஆண்டுகளாக அன்னியோனியமாகி சமூக,
இலக்கியப் பணிகளில் கூடி உழைத்து வாழ்க்கையில் இருவரும் நிறைவைக் காண்கிறோம்.
இந் நூலில் ஆசிரியர் தான் அண்மை ஆண்டுகளில் எழுதி வீரகேசரி, வடலி முதலிய பத்திரிகையில் வெளிவந்த கட்டுரைகள் உட்பட வெவ்வேறு துறைகளைச் சார்ந்த முப்பதுக்கும் மேலான சிந்தனை, ஆராய்ச்சிக் கட்டுரைகளைத் தெளிவுடன் மெருகூட்டி, மிகவும் கரிசனையுடன் திறமையாகத் தொகுத்து வெளிக் கொணர்ந்திருக்கிறார். விஞ்ஞான உண்மைத்துவம் அவர் கட்டுரைகளில் பிரதிபலிக்கின்றது.
அவற்றை வாசித்து மகிழ்ந்து பலன்பெற்று, இவர் இன்னும் பல நூல்களை எழுத ஊக்குவிக்குமாறு எம் வாசகர்களை வேண்டி, ஆசிரியருக்கும் குடும்பத்தினருக்கும் முக்கியமாக இந் நூலின் வெற்றிக்கும் என் மனமார்ந்த ஆசிகளை வழங்கி ஆண்டவனை வணங்கி விடை பெறுகிறேன். நன்றி. வாழ்க தமிழ்!
அன்பும் ஆதரவுமுள்ள, கோபாலபிள்ளை மகாதேவா, 35, HA 1 2JU,
Harrow, U.K.,
05-06-2005

Page 8
Viii
எஸ். கருணானந்தராஜா (யுகசாரதி) அவர்களின்
ஆய்வுரை
ஐயா விசயரத் தினம் அவர்களின் நூலின் மூலப்பிரதியைப் பார்வையிட்டபோது எனக்கு ஒருவகையில் மகிழ்வாகவும் இன்னொரு வகையில் பிரமிப்பாகவும் இருந்தது. அறிவியலின் பல திக்கிலும் புகுந்து தரமிக்க விடயங்களைத் தேடித்தரும் இவரின் நூலுக்கு ’கணினியை விஞ்சும் மனித மூளை' என்னும் அழகான பெயர் மிகவும் பொருத்தமாய் அமைந்துள்ளது.
இலக்கியத்தில், மருத்துவத்தில், சித்தவைத்தியத்தில், சமூகவியலில், பழந் தமிழர் கணக்கியலில், அவர்தம் பண்பாட்டியலில், விண்வெளி இயலில், உயிரியலில் என்று எல்லாத்திக்கிலும் விசயம் செய்திருக்கும் ஐயா திரு. விசயரத்தினம் அவர்கள் எமது எதிர்காலச் சந்ததியினருக்காக எண்ணரிய பல விசயங்களை இந்நூலிலே பதித்து வைத்திருக்கிறார். அவை விடயரத்தினங்களாய் ஆங்காங்கே பதிந்து கிடக்கின்றன.
ஆரியக் குடும்பம் பற்றிய அவரது கட்டுரையில் அனைவரும் புரிந்து கொள்ளும் படியா யப் அட்டவணைப்படுத்தப்பட்ட தரவுகளுடன் விடயங்களைக்

İX
குறித்திருப்பது ஓர் பண்பட்ட ஆய்வாளரின் அணுகுமுறையை வெளிக்காட்டுகின்றது. பாம்புகளைப் பற்றிய அவரின் பிறிதோர் கட்டுரை இன்றைய நவீனகாலத்தின் பாம்புகளைப் பற்றிய அறிவியல் ஆய்வுகளுடன் பண்டைய கால பாம்புக்கடி வைத்தியத்தில் பாம்புகளைப் பற்றிய அறிவு எவ்வாறு இருந்ததென்பதையும் ஒப்பீட்டு ரீதியில் நோக்குகின்றது.
துணங்கைக் கூத் தைப் பற்றியவோர் அரிய கட்டுரையில் அக்கூத்தைப்பற்றிய பல செய்திகளோடு மேற்கு நாட்டவரின் இன்றைய பேய்க்கூத்துக்களைப்போல் நாமும் அன்று ஆடியிருக்கிறோம் என்ற செய்தியையும் ஆசிரியர் சொல்லிவைக்கிறார். பழந்தமிழ் நூல்கள் அனைத்தினுள்ளும் சென்று துணங்கைக் கூத்தைப் பற்றியும், மாதர்தம் பசலை நோய் பற்றியும் மேற்கோள்களை எடுத்தாண்டு ஆசிரியர் எழுதியுள்ள இரு கட்டுரைகளும் அவரது ஆய்வின் பரப்பைப்பற்றிய பிரமிப்பை ஏற்படுத்துகின்றன. நிறைந்த விடாமுயற்சியும் பொறுமையும் ஆர்வமும் உடையவர்களாலேயே இத்தகைய அரிய வழியிலி ஆய்வுகளைச் செய்து பல பயன்தரும் செய்திகளைத் தரமுடியும்.
திருமூலர் திருமந்திரத்தில் காணப்படும் பல அரிய செய்திகள், இன்றைய நவீன உலகில் மருத்துவ விஞ்ஞானம் மிகவும் வளர்ச்சியடைந்துள்ள காலகட்டத்தில் அறிவியலுக்குப் பொருந்தாதனவாக இருந்தாலும் அத்தகைய நம்பிக்கைகள் அக்காலச் சித்தர்களிடம் இருந்துள்ளமையை நூலாசிரியரின் திருமூலர் திருமந்திரம் தொடர்பான கட்டுரை வாயிலாக அறிகிறோம்.
உற்பத்தியாகும் குழந்தையை ஆணா, பெண்ணா எனச் சம்போக முறைகளால் தீர்மானிக்க முடியுமெனத்

Page 9
X .
திருமந்திரம் கூறுவது எந்தளவுக்கு உண்மை என்பது புரியவில்லை. ஆனால் அத்தகையவோர் செய்தி திருமூலரால் கூறப்பட்டுள்ளமையை ஆசிரியர் மிகத் தெளிவாக விளக்கிச் செல்கிறார்.
அதேபோன்று சிறுநீர் அருந்துவதையும் ஓர் மருத்துவ முறையாகத் திரும நீ திரம் ඊග 0]60185] குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய மருத்துவ முறைகளை எந்த அளவில், எவ்வாறு, எப்போது செய்யவேண்டுமென்ற விளக்கங்களையும் திருமந்திரத்தில் உள்ளவாறே ஆசிரியர் காட்டியிருப்பது பலருக்கும் பயன்படக்கூடியதாயுள்ளது.
உடலுக்கும் உயிருக்கும் இடையே நிகழும் உரையாடல் மிகச் சுவாரசியமானதும் அறிவு சார்ந்ததும் ஆகும். இக்கதையில் ஆசிரியரின் கற்பனைத்திறன் கொடிகட்டிப் பறப்பதோடு, ஆரோக்கிய அறிவுசார்ந்த விடயங்களையும் எப்படிக் கற்பனைத் திறனுடன் அணுகலாமென்பதற்கு முன்னுதாரணமாகவும் இக்கதை காணப்படுகின்றது.
இது போன்றே 'பால் நீருறவு’, ‘அழகின் அந்தம்’ என்னும் இரு கதைகளும் முறையே தலைவன், தலைவி உறவின் அர்த்தத்தையும், இறுமாந்தவர் இறுதியில் அழிவர் என்னும் அர்த்தத்தையும் கொடுக்கும் உருவகக் கதைகளாக அழகிய முறையில் பின்னப்பட்டுள்ளன.
"அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும்’ என்னும் நீண்ட கட்டுரை தமிழர்தம் அறவாழ்வை நாலடியாரும் திருக்குறளும் எவ்வாறு நெறிப்படுத்துகின்றன என்பதை மிக அழகாகவும் விரிவாகவும் விளக்கிச் செல்லுகின்றது.
மேலும், தமிழர்தம் வாழ்வில் பொட்டுக்குள்ள முக்கியத் துவமி , பிற நீத நாளில் தமிழர் கேக்

xi
வெட்டிக்கொண்டாடும் பழக்கம், மணமக்களை அரிசி, அட்சதை தூவி வாழ்த்துகையில் தலையிலிருந்து கீழ்நோக்கிப் போடுவது சரியா அல்லது காலில் இருந்து மேல் நோக்கிப் போடுவது சரியா - அதாவது பாதாதி கேசமா? கேசாதி பாதமா? என்ற பலவாறான சர்ச்சைக்குரிய விடயங்களுள் ஆசிரியர் நுழைந்து துணிவோடு தன் கருத்துகளை தர்க்கரீதியாக முன்வைக்கிறார்.
தமிழன்னைக்கு அழகு செய்யும் ஆபரணங்களாய் ஐம்பெரும் காப்பியங்கள் போற்றப்படுகின்றன. இருப்பினும் அவற்றில் வளையாபதி, குண்டலகேசி போன்றவை வெறும் கதைகளாகவேயுள்ளன. முழுமையான காப்பிய வடிவில் அவை எம்மிடத்தில் இல்லை. பெளத்த ஜாதகக் கதையாக, தமிழருக்கு நன்கு அறிமுகமில்லாத தமிழர் காப்பியமான குண்டலகேசியை இந்நூலில் அறிமுகஞ் செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அவ்வாறே வளையாபதியையும் செய்திருக்கலாம். தமிழரின் காப்பியமான வளையாபதி பற்றிய விபரங்கள் தமிழரிடையே மிகக் குறைவாகவேயுள்ளன.
‘கலாபம் புனைந்த களிமயில் மூத்தது’ என்ற கட்டுரையில் ஆசிரியர் 1915இல் வெளிவந்த - ‘Scientific American’ சஞ்சிகையிலிருந்து ஆய்வுக் கட்டுரையொன்றை எடுத்து அதைக் கம்பராமாயணச் செய்யுளொன்றுடன் ஒப்பிடுவது, அவரது ஆய்வுகளில் தேடல் எந்த அளவிற்குப் போயுள்ளது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. எமது முன்னோர் இயற்கையை, அதன் நிகழ்வுகளை எவ்வளவு நுணுக்கமாக அவதானித்துள்ளனர் என்பதை எடுத்துக்காட்ட இக்கட்டுரை ஒரு சிறந்த சான்றாகும்.
சிறு சிறு துணுக்குச் செய்திகளாகப் பல கட்டுரைகள்
ஆங்காங்கே இடம்பெறுகின்றன. அவற்றில் மிகவும் சிலாகித்துக் கூறப்படவேண்டிய ஒரு கட்டுரை தமிழ் எண்கள் பற்றியதாகும்.

Page 10
xii
கோடிக்கு முன்னும் பின்னும் தமிழில் வழக்கிலிருந்த எண்களுக்கான சொற்களை ஆசிரியர் எங்கு தேடிப்பிடித்தார் என்று அதிசயிக்கத்தோன்றுகிறது. இவ்வளவு பெரிய எண்தொகைகளுடன் அக்காலத் தமிழர் பரிச்சயமானவர்களாய் இருந்துள்ளனரே என்பதை அறியும்போது பெருமையாகவும் வியப்பாகவும் உள்ளது.
ஏகம் என்னும் ஒன்றிலிருந்து மகாகோடி அல்லது மகாயுகம் வரை பத்தாம் அடுக்கில் பெருக்கப்பட்ட எண்களை ஓர் முக்கோண அட்டவணையில் தந்திருக்கும் ஆசிரியர் ஆதிகாலத்தில் தமிழரிடையே பூச்சியத்தின் பாவனை சார்ந்த கணிதமுறைகள் இருந்தனவா என்பதைத் தெளிவுறக் கூறாவிடினும், தரப்பட்டுள்ள செய்தி மிகவும் ஆச்சரியம் மிக்கதாகவே காணப்படுகின்றது.
கணிதகலையில் நுண்ணிய எண்களுக்கும் பெரிய எண்களுக்கும் விசேட ஆங்கிலக் கலைச் சொற்களைப் பாவிப்பதன் மூலம் அவற்றைக் கணித வல்லுனர்கள் பழக்கப்படுத்தி விளங்கிக் கொள்வதைப்போல தமிழ்க் கணித அறிஞரும் நவீன கணினியுகத்தில் இத்தகைய எண்களின் பெயர்களை பாவனைக் குக் கொண்டுவருவதன் மூலம் இலகுவாக அளவுகளைப் புரிந்துகொள்ள முடியும். ஆதலால் இத்தகைய எண்பாவனையை நாம் இனிவரும் காலங்களில் கைக் கொள்ளவேணி டிய அவசியம் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. தமிழிலே அறிவியலுக்கான போதிய கலைச்சொற்கள் இல்லை என்று வாதிடுவோருக்கு தக்கதோர் பதிலடியாக, எண்களிலேயே எம்மிடம் போதியளவு உண்டென்று காட்டியிருப்பதன்மூலம் தமிழில் பல புதிய அறிவியற் சொற்களை உருவாக்கி மிலேனியத்தில் எமது சுயவிஞ்ஞான வளர்ச்சிக்குக் கால்கோள் இடமுடியும் என்று ஆசிரியர் காட்டியிருப்பது மகிழ்வளிக்கிறது

xiii
இவற்றுடன் கலிங்கத்துப்பரணியின் போர்க்களக் காட்சிகள், ஆரியப் பார்ப்பனரின் வருகைக்குப் பின் தமிழரின் மணவினை நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மாறுதல்கள் பற்றிக்கூறும் தொல்காப்பியச் ஆத்திரங்கள் போன்ற இன்னோரன்ன அரிய செய்திகளைத் தாங்கி மிக எளிதான தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ள இந்நூல் தமிழை விரும்பும் ஒவ்வொருவர் வீட்டிலும் கட்டாயம் வைத்திருக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
பல செய்திகளையும் தன்னகத்தேயடக்கி ஓர் அவசரத்தேடலுக்குத் தமிழின் ஒரு கலைக் களஞ்சியமாக இந்நூல் பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை. ஐயாவின் இத்தகைய முயற்சிகள் மேலும் தொடர்ந்து தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவரது ஆக்கங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய தோன்றுதுணைகளாய் உதவவேண்டும் என்ற வேணவாவோடு அவரின் எதிர்கால முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
- எஸ். கருணானந்தராஜா

Page 11
Xiv
வாழ்த்துகின்றேன்!
அனுபவ முதிர்ச்சியோடும் பக்குவத் திரட்சியோடும் ஒரு பழம் இனிக்கிறது! எழுதிய கரங்கள் ஓய்வு பெறும் நேரம் வந்தும் ஓயாது நம் எதிர்கால சந்ததிக்காய் உழைக்கிறது. இளமைக் காலத்து அனுபவங்களையும் இலக்கியச் சுவடியில் கிடைத்த ஆதாரங்களையும் இன்னுமொரு சந்ததி படிக்கும் என்ற பேராசையோடு பதிவு செய்து வைக்க எண்ணும் ஐயா திரு. விசயரத்தினம் அவர்களது பெருந்தன்மை பாராட்டுதற்குரியது.
அவரது தமிழ்த் தொண்டும் கலாசார ஆளுமையும் இளையோரை ஆற்றுப்படுத்தும் ஒளி விளக்காய் பிரகாசிக்க வேண்டும்.
எம் இன மான உணர்வோடு அவரது இனி வரும் படைப்புகள் யாவும் விடியலின் வருகைக்காக பூபாளம் பாடும் என்ற எதிர்பார்ப்புகளோடு. வாழ்த்துகின்றேன்.
- கீர்த்தி
(புலம் பெயர் திரைப்பட இயக்குனர்.)
 

என் உரை
தமிழர் வாழ் ஈழத் திருநாட்டின் வட மாகாணத்தில் யாழ்பாடியை என்றும் நினைவு கூரும் யாழ்ப்பாண மாவட்டத்தில் ஆன்றோரும், சான்றோரும் நிறைந்த சாவகச்சேரி நகரத்தில் முக்கனிக்கும், பால் முருங்குக்கும், பனங்கிழங்குக்கும், ஒடியலுக்கும் சிறப்பு வாய்ந்த “நுணாவில்' என்னும் சிறிய கிராமத்தில் பாம்புக்கடி வைத்திய நிபுணரான திரு. வேலுப்பிள்ளை கார்த்திகேயன் அவர்களுக்கும், திருமதி. தங்கமுத்து கார்த்திகேயன் அவர்களுக்கும் 1931 ஆம் ஆண்டில் மூத்த புதல்வனாகப் பிறந்தேன். நாற்றிசையும் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன், வயிரவர், வீரபத்திரர், அண்ணமார் ஆகிய கோயில்களில் உறை தெய்வங்கள் நுணாவில் ஊரைக் காப்பாற்றி வருகின்றன.
என் தகப்பனார் என்னை வழி நடத்தி வந்தார். அவர்தான் என் வழிகாட்டி. அவரிடம் நான் கற்றது அதிகம். குறைந்த கதையும், விரிந்த செயற்பாடுமுடையவர். அவர் அன்று கூறிய கதைகள், நியாயங்கள், எடுத்துக் காட்டுகள்,

Page 12
XVi
சிந்தனைகள், தத்துவங்கள் சில அன்று எனக்குப் புரியாவிட்டாலும், அவை கணினிச் சேமிப்பாய்ப் பதியப்பட்டு, பின் நாட்களில் புரியத் தொடங்கியபொழுது அவர் என்னுடன் உயிரோடில்லை. ஆனால் அவர் கூற்றுகள் இன்றும் அவராய் என்னுடன் உறவில் உள்ளார். இது என்றும் எனக்கு ஊற்றாயமைந்துள்ளது.
தமிழ்க் கல்வியை மட்டுவிலி , சரசுவதி வித்தியாசாலையிலும், ஆங்கிலக் கல்வியைச் சாவகச்சேரி, டிறிபேர்க் கல்லூரியிலும் கற்று, மாவட்ட (யாழ்ப்பாணம்.) எழுதுவினைஞர் சேவையில் நான்கு பேர் தெரிவானதில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகள் யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியபின், கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டேன். அங்கு, கணக்காய்வு அத்தியட்சகர் பரீட்சையில் பதின்மூன்று பேரில் நானும் ஒருவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, கணக்காய்வு அதிபதித் திணைக்களத்தில் கணக்காய்வு அத்தியட்சகராகப் பதவியேற்று கடமையாற்றிய பின் 1991 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றேன்.
இலக்கியம், விஞ்ஞானம், சமயம், தத்துவம் போன்ற நூல்களை அதிகமாக வாசிப்பது என் பழக்கம். வாசிப்பு மனிதனை முழுமையடையச் செய்யும். இவ் வாசிப்பு மனத்தில் ஒர் ஊற்றைத் திறந்திருக்க வேண்டும். அரச சேவையில் இருந்தாலும் எழுதத் தொடங்கினேன். ஆக்கங்களைப் பக்குவப்படுத்தியும் வைத்திருந்தேன் கொழும்பில். 1983 ஆம் ஆண்டு சிறிலங்காவில் நடந்த இனக் கலவரத்தில் எங்கள் கொழும்பு வீடு இடித்து, உடைத்துக் கொள்ளை அடிக்கப்பட்ட பொழுது, என் அரிய

Xvii
ஆக்கங்களும் மாண்டு போயின. திறந்து கிடந்த வெறும்
வீடுதான் எங்களுக்கு மிஞ்சியது. வீட்டை எரிக்காது விட்டார்களே. அது தெய்வச் செயல்.
இதன் பின் எழுதிய சில ஆக்கங்களை இந்நூல் வடிவில் அமைத்துள்ளேன். கணக்கியல் நுட்பத்துக்கிணங்க அரச கணக்குகளை ஆய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பது போல், சில கட்டுரைகளை ஆய்வு செய்து எழுதியுள்ளேன். இந் நூலில் அடங்கிய அதிகமான கட்டுரைகள் கொழும்பிலிருந்து வெளியாகும் தரமான ‘வீரகேசரி’, 'தினகரன்' ஆகிய பத்திரிகைகளிலும், லண்டனிலிருந்து வெளியாகும் வடலி’ என்ற பத்திரிகையிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. சூரிய குடும்பம்', 'கணினியை விஞ்சிய மனித மூளை' என்ற விஞ்ஞானக் கட்டுரைகள் 'தீபம்’ தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட்டன.
மனக் கிடக்கை விரிவடையும் பொழுது ஆக்கம் சிறப்புற்றமையும். முயற்சி முதற்கண் வேண்டும். பின் திருவினை தானே வந்து நிற்கும். தமிழர் மத்தியில் தற்பொழுது வாசிப்புப் பழக்கம் அருகி வருவது ஓர் உண்மை. அதிலும் நம் இளஞ் சமுதாயத்தினரிடையே வாசிப்புப் பழக்கம் மிக மிகக் குறைந்து வருவது கவலைக்குரிய விடயம். இதில் நாம் தலையிட்டு அவர்களுக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்துதவ வேண்டும்.
நாம் என்றும் பிறந்த மண்ணையும் ஊரையும் மறக்கக் கூடாது. மண்ணிலிருந்து பிறந்த நாம் மண்ணில் மறைந்தாலும் மண் எம் உயிரென மதிக்க வேண்டும்.

Page 13
XViii
எனவே தான் பிறந்த மண்ணான நுணாவில் ஊரை என் பெயர் முன் வைத்து மதிக்கின்றேன். மனிதனாகப் பிறந்தவன் ஆகக் குறைந்தது இரண்டு காரியங்களை ஆவது செய்ய வேண்டும். ஒன்று அவன் ஒரு மரத்தையாவது நட்டு வளர்க்க வேண்டும். மற்றது அவன் ஒரு நூலையாவது எழுதி வைக்க வேண்டும். இது அறிஞர்கள் கருத்தாகும்.
பத்திரிகையில் வெளியிடப்படும் எழுத்து ஆக்கங்கள் நிலைத்து நிற்கா மண் எழுத்துப் போன்றவை. எனவே அவை புத்தக வடிவில் வெளிவந்தால், காலத்தை வென்று கல் எழுத்தாகி மக்கள் மத்தியில் தவழ்ந்து நிற்கும்.
மணமக்களை அறுகரிசி தூவி வாழ்த்தும் சரியான முறை எது என்பதை ஆதாரத்துடன் "பாதாதி கேசமா.? கேசாதி பாதமா?” என்ற கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை தடுமாற்றத்தைத் தடுத்து நிற்கின்றது. “கலாபம் புனைந்த களிமயில் மூத்தது” என்ற கட்டுரையில் ஒரு குலத்துரிமை பேசப்படுகின்றது. “பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்’ என்பது தொல்காப்பியர் காலத்தோடான கரணச் சிறப்பினை எடுத்துக் காட்டுகின்றது.
நாம் கூழ் சமைக்கும் முறை வேறு. பேய்கள் கூழ் சமைக்கும் முறை வேறு. சயங்கொண்டார் பரணி பாடும் மன்னன். கூழ்ப் பிரியரும் ஆவார். அவர் பேய்கள் மூலம் கூழ் சமைக்கும் முறை சாலச் சிறந்ததும், பாராட்டிற்குமுரியது. மாதர் கருவுற்றிருக்கும் காலம் “ஐயிரண்டு திங்களா..? ஆறிரண்டு திங்களா?” என்பது கேள்விக்கும் ஆய்வுக்குமுரிய விடயம். மந்திரம்

xix
தந்திரமாகச் சொல்லும். இதில் நாம் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
எங்களுக்குச் சில வேளைகளில் தலைச் சுற்று வருவதுண்டு. ஆனால் சூரிய குடும்பமோ என்றும் சுற்றிக்கொண்டேயிருக்கின்றது. எட்டுக் கோடி ஆண்டுகளாக நம்மைக் கொத்திக் கொண்டேயிருக்கின்றது பாம்பினம். இது ஓர் உலகச் சாதனை. நாலும் இரண்டும் சொல்லுக்குறுதியாய் உள்ளன. திருமந்திரம் நாட்டையும், வீட்டையும் காத்து நிற்கின்றது.
மனத்தில் சரியென உதிக்கும் எண்ணங்களை மற்றவர்களுக்கு அஞ்சி நாம் வெளியிற் கூறவோ, எழுத்தில் பதிக்கவோ தயங்கக் கூடாது. இதில் மற்றவர்கள் அணுகும் முறை அவரவர் களைப் பொறுத்த விடயம் . அபிப்பிராயங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபட்டதாக அமைவது நியதி. இது முன்னேற்ற ஏணியின் முதற்படியாகும். -
1957ஆம் ஆண்டு, திசெம்பர் மாதம், எட்டாம் திகதியன்று புகழ் பூத்த அளவெட்டி என்னும் ஊரைச் சேர் நித ஆசிரியை செல வி. சிவபாக்கியம் இளையதம்பிக்கும் இந்நூல் ஆசிரியர் அவர்களுக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்று 1958 ஆம் ஆண்டு மார்த்து மாதம் இருபத்தாறாம் திகதியன்று திருமணம் நடந்தேறியது. இதன் பயனாய் மும்மூர்த்திகளாக இரு புதல்வர்களும் ஒரு புதல்வியும் வந்துதித்தனர். இவர்கள் மூவரும் லண்டன் மாநகரில் கல்வி கற்று மணவாழ்க்கையில் ஈடுபட்டுக் குழந்தைச் செல்வங்களுடன் சீர் பெற்று வாழ்கின்றனர்.

Page 14
XX
இவர்கள் வற்புறுத்தலால் என் துணைவியாரும் நானும் லண்டன் வந்து அவர்களுடன் இணைந்துள்ளோம்.
நிறைவாக, ஆழிப் பேரலையால் பல லட்சக் கணக்கில் உயிர் நீத்த எம் உறவுகளின் நினைவாய் ஒரு கணம் மெளனிக்கின்றேன்.
நுணாவிலூர் 5T. விசயரத்தினம்
K. Wijeyaratnam, MAAT. Superintendent of Audit. (Rtd.) 86, Sangley Road,
Catford, London. SE6 2JP. U.K.

கணினியை விஞ்சுக் சனிகு மூளை
கலாபம் புனைந்த களிமயில் மூத்தது மயில் முறைக் குலத்துரிமை
மந்தரை மந்திரத்தால் மனந்திரிந்தனள் கைகேசி
இன்றைய நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும், சீரிய தத்துவக் கூற்றிற்கும், மாண்புற்ற மனித ஒற்றுமைப் பிணைப்பிற்கும், மனிதனுக்கு உறுதுணை நிற்பன இயற்கையும், மாக்களும், பறவை இனங்களுமெனின் மிகையாகா. பறவையைக் கண் டான் விமானம் அமைத்தான். கொதி நீராவியால் புகையிரதம் ஒட்டினான். இயற்கை அமைவு உதவ ஒலி பெருக்கி, தொலைபேசி, வானொலி, தொலைக் காட்சி போன்றவற்றை உருவமைத்தான். இப்படி நவீன உலகமைக்க முற்கூறிய இயற்கையும், மாக்களும், பறவையினமும் கருவுருவாகிய ஊற்றாயமைந்திருந்தன.

Page 15
2 கணினியை விஞ்சும் மனித மூளை
மயிலின் ஆய்வு
பட்சி சாத்திர ஆராய்ச்சி என்ற தலைப்பில் ஓர் ஆய்வுக் கட்டுரை ஒர் ஆங்கில சஞ்சிகையில் (Scientific American) 1915ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரு மயில் தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடன் ஓர் இடத்திலிருந்து இன்னோரிடத்துக்குப் போகுங்கால், கலாபம் விரித்து ஆட வேண்டிய சந்தர்ப்பம் வரும் போதெல்லாம் அந்தக் குஞ்சுகளில் மூத்த குஞ்சுதான் முதலில் கலாபம் விரிக்கும் என்றும் ஆய்வில் கண்டறியப் பட்டதாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால், இவ்வாராய்ச்சிக்கு எவ்வளவோ காலத்துக்கு முன் நம்முடைய புராணங்களிலும், கம்பராமாயணத்திலும் இந்த மயில் முறைக் குலம் என்பதைப் பற்றிச் சொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
“பலாவம் பொழிலுறை ஒருதாய் உயிர்த்த பலமயிற்கும் கலாபம் புனைந்த களிமயில் மூத்தது.”
என்று ஒரு தாய் மயிலின் குஞ்சுகளில் கலாபம் விரித்த
குஞ்சுதான் மூத்தது என்பதைத் தணிகைப் புராணத்தில் களவுப் படலத்தில் 244வது பாவிலிருந்து அறிகின்றோம்.
மயில் முறைக் குலத்துரிமை
இன்னும், கம்பராமாயணத்தில் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் வரும் பாவில்,
வெயின்முறைக்குலத் திறையவன் முதலிய மேலோர் உயிர் முதற் பொருள்திறம்பினும் உரைதிறம்பாதோர்

का: விசயரத்தினம் 3
மயில் முறைக்குலத்துரிமையை மனுமுதல் மரபைச் செயிருறப் புலைச் சிந்தையால் என்சொனாய்? தீயோய்?
என்று மயில் முறைக் குலம் பற்றிப் பேசப்படுகின்றது. இங்கு, மூத்தோனாகிய இராமனை விட்டு இளையோனாகிய பரதனுக்குப் பட்டாபிசேகம் செய்ய வேண்டுமென்று தசரத மன்னனைக் கேட்குமாறு மந்தரையாகிய கூனி கைகேசியை வற்புறுத் னாள். இதற்கு கடும் சினங் கொண்டெழுந்த கைகேசி கூனியைக் கடிந்து பேசிய பேச்சு இது.
“அடி கூனி! “உன் அற்ப புத்தியால் என்ன சொன்னாய்? இக் குலம் சூரிய குலம். அதில் தோன்றிய மன்னர்கள் தங்கள் உடல், பொருள், ஆவி மூன்றையும் இழந்துவிட நேர்ந்தாலும் முறை தவறிய காரியம் செய்யமாட்டார்கள.
அவர்கள் மயிலைப் போல் முறை தவறாக் குணமுடையோர். மனுவின் சந்ததியைச் சேர்ந்தவர்கள். இப்படிப்பட்ட சீரிய வம்சத்தின் பெருமையைக் கெடுக்க, மூத்தோனாகிய இராமனை விட்டு இளையோனாகிய பரதனுக்குப் பட்டாபிசேகம் செய்ய வேண்டுமென்று கேட்கச் சொல்லுகிறாயே, அடி கொடியவளே!”
கைகேசியின் பேச்சு அரச பரம்பரைக்கேற்ற உயர் நிலை தத்துவங்களடங்கியனவாய் அமைந்திருப்பதை மனமார மெச் சத் தானி வேணி டும் . தளரா ச் செங்கோலோச்சும் தசரத மன்னனின் மனைவியல்லவா கைகேசி.

Page 16
4. கணினியை விஞ்சும் மனித மூளை
மனந்திரிந்த கைகேசி
கைகேசி நல் மனத்தாள். ஆனால் மந்தரை என்பாள் கைகேசியிடம் சென்று, வஞ்சம் கூறி, கைகேசிக்கு தசரதின் முன் கொடுப்பதாக வாக்களித்திருந்த இரு வரங்களையும் நினைவுபடுத்தி அவற்றைப் பெற்றுப் பரதனுக்கே ஆட்சியைக் கொடுக்கும்படி மன்னனைக் கேட்குமாறு வேண்டி மீண்டும் புத்திமதி புகட்டினாள். நாளை விடிந்தால் இராமருக்குப் பட்டாபிசேகம்.
மந்தரையின் மந்திரத்தால் கைகேசி மனந்திரிந்தாள்; கட்டுண்டாள்; மகுடி முன் பாம்பானாள்; தலை விரி கோலமானாள்; தனியறை நாடினாள். இந்நிை மன்னன் கைகேசியைக் காணாது அரண்மனையில் தேடிய பின் தனி அறையில் தலைவிரி கோலமாகக் கிடந்த கைகேசியைக் கண்டார். அவரால் அவளைச் சமாதானப் படுத்த முடியவில்லை. “வேண்டுவன உனக்குத் தந்தேன். கேட்பாயாக’ என்று தசரதர் கூறியதும், இருவரங்களையும் கேட்டாள் கைகேசி. அதில் முதல் வரத்தால் இராமர் ஈர் ஏழ் ஆண்டுகள் காடாள வேண்டும்; மற்ற வரத்தால் பரதன் இந்நாடாள வேண்டும் என்பதாகும்.
இங்கு கைகேசி இரு வரங்களையும் முறை பிறழாது கேட்ட பக்குவம் தனிச்சிறப்பாய் அமைந்திருந்தமை நோற்கற்பாலது. அவள், பரதன் நாடாள வேண்டுமென்று முதற் கேட்கவில்லை. முதலில் அரசுக்குரிய இராமனை அப்புறப்படுத்தி அரசுக்கு ஓர் இடம் வகுத்தபின்பே பரதனுக்கு அரசு கொடுக்கும்படி கேட்கின்றாள். கைகேசியின் அணுகுமுறையில் ஓர் இராச தந்திரம் பொதிந்துள்ளது. அவளும் ஓர் அரசி தானே.
 
 

கா. விசயரத்தினம் 5
ஏழிரண்டாண்டில் வா!
அயோத்தி காண்டம் மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கைகேசி இராமனை அழைத்துக் கூறும் பாங்கினை இங்கு unt frC3Lustb.
“ஆழிசூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள, நீ போய்த் தாழ் இரும் சடைகள் தாங்கித் தாங்கரும் தவம் மேற்கொண்டு பூழிவெம் கானம் நண்ணிப் புண்ணியத் துறைகள் ஆடி ஏழிரண்டு ஆண்டில் வா என்(று) இயம்பினன் அரசன்” - (163)
என்றாள். வரங்கள் இரண்டையும் பெற்றுவிட்டால் போதாது. அவற்றை நடைமுறைப்படுத்த உரியவரிடம் கூறவேண்டும். தசரத சக்கரவர்த்தி இராமனை அழைத்துத் தன் வாயால் ஏழிரண்டாண்டு காடேகுமாறு பணிக்க மாட்டார் என்பது கைகேசிக்கு நன்றாகத் தெரியும். எனவே, ‘மன்னன் இயம்பினன்' என்று தானே இராமனை அழைத்துச் சொல்லி வைத்தாள் கைகேசி. இதற்குப் பதிலாய் இராமன் கூற்று இவ்வாறு அமைகின்றது.
“மன்னவன் பணிஅன் றாகில் நும்பணி மறுப்பனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்ற தன்றோ? என்இனி உறுதி அப்பால்

Page 17
6 கணினியை விஞ்சும் மனித மூளை
இப்பணி தலைமேல் கொண்டேன் மின்ஒளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்."-(165)
இவ்விரு வரங்களால் இராமனைக் காடாளவும், பரதனை நாடாளவும், தசரத மன்னனை விண்ணாளவும் செய்த ஓர் அழியா இழுக்கையும் பெற்றனள் கைகேசி. அவள் பல லாணி டு ஆற்றிய அரும் பெரும் பணிகளனைத்தையும் மூடி மறைத்து முந்தி நிற்கிறதே அவள் விட்ட ஒரு சிறு தவறு. இஃது உலகம் உயிருள்ள வரை அவளைத் தூற்றி நிற்கும்.
நம் தமிழ் இலக்கியங்களில் இவ்வாறு பொதிந்து நிற்கும் கணக்கிலடங்காப் பொக்கிசங்கள் யாவும் வெளிக் கொணரப்பட்டு மக்களை வந்தடையச் செய்வது நம் ஆன்றோரின் காலந்தாழ்த்தாக் கடமையாகும்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 28-01-1996)
(லண்டன் சஞ்சிகை மலரில் 17-11-2001),
宽

கா. விசயரத்தினம் - 7
கலிங்கப் போரில் பேய்கள் சமைத்த கூழ்
கலிங்கத்துப் பரணி பல்சுவைப் பெட்டகம்
உயிர் ஓவியம் ஆடிக்கொரு கூழ் : பரணிக்கோர் ஒரே கூழ்
கி. பி. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் தனிச் சிறப்புற்ற இலக்கியமாக விளங்கியது. சங்க இலக்கியமாகும். இதை அடுத்துப் பத்தாம் நூற்றாண்டு வரை வாழ்ந்தது சமய இலக்கியமாகும். அதன் பின்னர் பல வகைச் சிறு நூல்கள் வளர்ந்து வந்தன. அவற்றைப் பிரபந்தங்கள் என்று அழைத்தனர். இப் பிரபந்த இலக்கியங்கள் தொண்ணுாற்றாறு வகைப்படும். அவற்றுள் 'பரணி என்பது ஒன்று. களிறு ஒன்றினைக் களத்தில் எறிந்து பெயர்வோனே மிக்க வீரன். ஆயிரம் களிறுகளைப் போர்க் களத்தில் வென்ற மாவீரனின் வீரத்தினைச் சிறப்பித்துப் பாடிய நூலே பரணியாகும்.
“ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மாணவனுக்கு வகுப்பது பரணி.”
என்று இலக்கண விளக்க ஆசிரியர் கூறியுள்ளார்.

Page 18
8 கணினியை விஞ்சும் மனித மூளை
தமிழிற் பரணிகள் பல உள. ஆயினும் சயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியே எல்லாவற்றிலும் தலை சிறந்து விளங்குகின்றது. பரணி பாடுவதிற் கை தேர்ந்த ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணியை “தென் தமிழ்த் தெய்வப் பரணி’ எனச் சிறப்பித்துப் பாடியுள்ளார். சோழ மன்னனாகிய முதற் குலோத்துங்கனுக்கும் கலிங்க மணி னனாகிய அநந்தபதுமனுக்கும் நடந்த கலிங்கத்துப் போரில் சோழர் படை வெற்றியை எடுத்துக் கூறுவது கலிங்கத்துப்பரணி.
கலிங் கதி துப் பரணியைப் பாடியவர் சயங்கொண்டார் என்னுஞ் செந்தமிழ்ப் புலவர். கலிங்கத்துப் பரணியில் பாட்டுடைத் தலைவன் முதற் குலோத்துங்கன். சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியைப் பாடுவதற்குக் கருணாகரன் எய்திய கலிங்க வெற்றியே காரணமாம். கலிங்கத்துப் பரணியைக் கடவுள் வாழ்த்து, கடை திறப்பு, காடு பாடியது, கோயில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, இந்திர சாலம், இராச பாரம் பரியம், பேய் முறைப்பாடு, அவதாரம், காளிக்குக் கூளி கூறியது, போர் பாடியது, களம் பாடியது, எனப் பதின் மூன்று பிரிவுகளாகப் பிரித்துப் பாடியுள்ளார். இதில் 596 செய்யுள்கள் அடங்கியுள்ளன.
கடவுள் வாழ்த்தில் உமாபதி, திருமால், நான் முகன், நாமகள், முருகன், முதலியோரை வாழ்த்திப் பாடியுள்ளார். கடை திறப்பு மிகச் சிறப்பாகப் பாடப் பட்டுள்ளது.

கா. விசயரத்தினம் 9
கடை திறப்பு
போர் மேற் சென்ற வேந்தனும் படைஞர்களும் காலந் தாழ்த்தி வரக் கண்ட அவர் தம் மனைவியர் முனிவு கொண்டு கதவைத் தாளிட்டுக் கொண்டனர். இதைக் கண்ணுற்ற புலவர் ஒருவர் அம் மடந்தையரையணுகி, அவ் வீரர் தம் பெருமையைப் பாராட்டித் தாளிட்ட கதவைத் திறக்குமாறு வேண்டுதல் போல் புனைந்துரைத்தல் கடை திறப்பினிலக்கணமாகும்.
66
‘வருவார் கொழுநர்' எனத் திறந்தும், ‘வாரார் கொழுநர்' என அடைத்தும், திருகுங் குடுமி விடியளவும் தேயுங் கபாடம் திறமினோ.” - (69)
கணவர் வரவை நாடிக் கதவைத் திறந்தும், மூடியும் இரவெல் லாம் இருந்தமையால் கதவின் குடுமி தேயலாயிற்று எனச் சுவைபடப் பாடுகின்றார் புலவர்.
பேய்களைப் பாடியது
பேய்களைப் பாடியது, படிப்போருக்கு இன்பத்தை விளைவிப்பதாய் அமைந்துள்ளது. பேய்களைப் பாடியது என்னும் பகுதியில் காளி தேவியை விட்டகலாமல் அவ்வம்மைக்குக் குற்றேவல் புரியும் பேய்களின் உருவம், செயல் முதலியவற்றைப் பாடுகின்றார் புலவர்.
பேய் முறைப்பாடு என்னும் பகுதியில் பேய்கள் எல்லாம் ஒன்று திரண்டு தமது பசியைப் போக்குமாறு தேவியிடம் வேண்டிய காலை, “மிக்க விரைவில் கலிங்க நாட்டில் பெரும் போர் நிகழும். அதனால் நும் பசி முற்றுந்

Page 19
10 கணினியை விஞ்சும் மனித மூளை
தீரும்” என வியம்ப, உடனே பேய்கள் பெருங்களிப் பெய்தின. கலிங்க நாட்டிலிருந்து வந்த பேய் அங்கு நிகழும் போரினைத் தேவிக்குரைக்க அதைக் கேட்ட மற்ற பேய்கள் மகிழ்ச்சிப் பெருக்கால் கூத்தாடின. சில பேய்கள் தங்கள் கையிலுள்ள பிள்ளைகள் நிலத்தில் விழுந்து விடும் படி பெரிய துணங்கைக் கூத்தாடி மகிழ்ந்தன.
“பிள்ளை வீழ விழவும் பெருந்துணங்கை கொட்டுமே வள்ளை பாடியாடி யோடி வாவெனவழைக்குமே.”
- (310)
பரணிக் கூழ்
களம் பாடியது என்னும் பகுதியில், போர்க்களத்தைப் பார்வையிட்ட தேவி பேய்களிடம் “இனி நீங்கள் கூழ் சமைத்துப் பருகுங்கள்” எனக் கட்டளையிட பேய்கள் கூழ் சமைத்துக் கொண்டு குலோத்துங்கனை வாழ்த்தின. பேய்கள் கூழ் சமைத்த காட்சியைப் புலவர் நேரில் காண்பது போல் அழகுற எடுத்துக் கூறியிருக்கிறார்.
பேய்கள் யானைக் கொம்பால் பற்களை விளக்கி அவற்றின் விலாவெலும்பால் நாக்கை வழித்து, கூரிய அம்புகளினால் நகங்களைக் களைந்து, யானை மத நீராகிய எண்ணெயைத் தலையிற் தேய்த்து, குருதி வெள்ளத்தில் நீராடி, கொழுப்பாகிய ஆடையை உடுத்திக் கொண்டு, அணி அணிந்து, பரணிக் கூழ் சமைக்கின்றன.
யானையின் வயிற்றைப் பானையாகவும், வீரர்களின் மூளையையும் இறைச்சியையும் அப் பானையிலிட்டு, குதிரைகளின் இரத்தத்தை உலை நீராகவும், குதிரைப் பற்களை வெங்காயமாகவும், வீரர் நகங்களை உப்பாகவும்,

கா. விசயரத்தினம் y 11
இறந்த வீரர்களின் கோபத்தை நெருப்பாகவும், ஈட்டி முதலிய ஆயுதங்களை அடுப்பு விறகாகவும், கலிங்க வீரர்களின் பற்களை அரிசியாக இடித்து மாவாகவும் சேர்த்துக் கூழ் சமைத்த முறை பரணிக்கு உரிய ஒரு தனிச் சிறப்பு முறையாயமைந்திருக்கிறது.
இறந்த அரசர்களின் கேடயங்களையும் , மண்டையோடுகளையும் உண் கலங்களாகக் கொண்டு கூழ் அருந்தின. மடைப் பேய்கள் கூழைப் பங்கிடத் தொடங்கின. தலைகளை அகப்பைகளாகவும், வேல்களை அவற்றின் காம்புகளாகவும் பாவித்துக் கூழை அள்ளி அள்ளி வார்த்தன.
பேய் இனம்
பேய்களிலும் சாதி வேற்றுமை இருப்பதாக ஆசிரியர் கூறுகின்றார். பிராமணப் பேய்களும், சமணப் பேய்களும், புத்த மதப் பேய்களும் அவற்றுள் காணப்படுகின்றன.
“உயிரைக் கொல்லாச் சமண்பேய்கள் ஒரு போழ்துண்ணு மவையுண்ண மயிரைப் பார்த்து நிணத்துகிலால் வடித்துக் கூழை வாரீரே.” - (567)
சமணப் பேய்கள் பிறவுயிர்களைக் கொல்லாதவை. ஒரு நாளில் ஒரு வேளையே புசிப்பன. கூழில் மயிர் இருந்தால் ஒரு வேளை உணவைத் தானும் உண்ணாது போகலாம். ஆகவே, அக் கூழைக் கொழுப்பாகிய சீலையில் வடித்துக் கொடுக்கும்படி சொல்லப்படுகின்றது. ஆசிரியர்

Page 20
12 கணினியை விஞ்சும் மனித மூளை
பல உயிர்க் கொலையால் உண்டாகிய கூழைக் கொலை செய்யாத சமணப் பேய்க்கு ஊற்றச் சொல்லுவதில் நகைச் சுவை நிரம்பி வழிதலைக் காணலாம்.
கூழ் பருகும் பேய்கள்
கூழில், ஆசை மிகுதியால், ஒட்டைப் பாத்திரத்தில் ஊற்றிய கூழானது வெளிப் பக்கம் ஒழுக, அப் பாத்திரத்தைத் திருப்பிப் பார்த்து முழுக் கூழையும் கவிழ்த்து விட்டுத் திகைத்து நிற்கும் மூடப் பேயை ஆசிரியர் படம் பிடித்துக் காட்டுகின்றார். பிரமன் தனக்கு நான்கு வாய்களைப் படைத்துக் கொண்டு, தமக்கு ஒரு வாயைப் படைத்தானே என்று பேய்கள் வெஞ்சினம் கொண்டன. நான்கு வாய்கள் இருந்தால் இன்னும் அதிகமாகக் கூழைப் பருகலாமென்று அவை நினைத்தன போலும்,
தாம்பூலம் தரிக்கும் பேய்கள்
கூழ் குடித்துவிட்டு வாய் கழுவிய பேய்கள் வெற்றிலை போடுகின்றன. போரில் இறந்த குதிரைகளின் காதுகளாகிய வெற்றிலையையும், அவற்றின் காற்பரடாகிய பாக்குத் துண்டுகளையும், இறந்த கலிங்க அரசரின் கண்ணின் மணியாகிய சுண்ணாம்பையும் சேர்த்து மடித்துத் தின்கின்றன.
நாம் தற்பொழுது தாம்பூலம் போடும்பொழுது வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய நான்கினையும் சேர்த்துப் பாவிப்பது வழக்கமாகவுள்ளது. சயங்கொண்டார் காலத்தில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு ஆகிய முப்பொருள்களையும் சேர்த்துத்தான் தாம்பூலமாகப்

கா. விசயரத்தினம் 13
பாவித்துள்ளனர். புகையிலை போடும் பழக்கம் சயங் கொணர் டார் காலத்தில் நடைமுறையில் இருக்கவில்லை. மேலும் 17ஆம் நூற்றாண்டில்தான் புகையிலையின் பாவனை ஆசிய நாடுகளுக்குப் பரவத் தொடங்கியது.
இன்னும், புகையிலை போடும் பழக்கம் இடைக் காலத்திற்றான் புகுந்துள்ளமை இதனாற் புலனாகின்றது.
பேய்கள் கூழ் உண்ட களிப்பின் மிகுதியால் கூத்தாடி மகிழ்ந்தன. ஆடையையும் எறிந்து நின்றன. இரத்த வெள்ளத்தில் குதித்து விளையாடின. நிலத்திற் புரண்டன. முதற் குலோத்துங்கனை வாயாரப் போற்றிப் புகழ்ந்தன. கலிங்கத்துப் பரணி பல்சுவைப் பெட்டகமாகவும் உயிர் ஓவியமாகவும் திகழ்ந்து படிப்போருக்குக் குன்றா இன்பத்தையளிக்கின்றது.
(வீரகேசரி வார வெளியீட்டில் 14-04-2002)
责

Page 21
14 கணினியை விஞ்சும் மனித மூளை
பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம்
பண்டைத் தமிழ் அறிஞர்கள் திருமணத்தில் கையாண்ட கட்டுப்பாடுகள்
நம் பணி டைத் தமிழ் அறிஞர்கள் திருமணத்தை ஓர் அரிய விதை முளை எனக் கருதி C அது செழித்தோங் கிப் படர் Ευ கொடியாய் பற்றிப் பூத்துக் குலுங்கி, காய், கனிகளுடன், பயனுள்ளதாய் பல் லாண்டு வாழவேண்டுமென்று மனத்திடங்கொண்டு செயலாற்றினர். திருமணத்தின் பின்தான் மனிதன் முழுமையடைந்து பண்பாளனாகிறானெண் பதில் அசையா நம்பிக்கை வைத்திருந்தனர். இவ்வுந்தலினால் அவர்கள் திருமணத்தில் நெறி தவறாச் சில கட்டுப்பாடுகளை அமைத்துத் தந்துள்ளனர். இங்கு அதிற் சிலவற்றைக் கவனிப்போம்.
கரணம்
உலகில் மக்களிடையே உண்மையும், நேர்மையும் மிளிருங்கால் பிணக்குகள் எழமாட்டா. ஒருவன் ஒருத்தியை
 

கா. விசயரத்தினம் 15
அன்பினாற் கூடுவான். பின்னர் அவளை அறியேன் என்றொரு பொய் உரைப்பான். நின்னைப் பிரியேன் எனக் கூறிப் பின்னர் பிரிந்திடுவான். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி அவளை மயக்குவான். ஆசை வற்றியவுடன் அவளை ஒதுக்கிடுவான்.
இவ்வாறான தீய வழக்கங்கள் இந் நாட்டில் தோன்றிய பின்னரே சான்றோராகிய குடும்பத் தலைவர்கள், தலைவனும் தலைவியும் பிரிவின்றி இல்லற வாழ்வு வாழ்தற்குரிய திருமணச் சடங்காகிய கரணத்தை வகுத்தமைத்தனர். இதைப் பின்வரும் தொல்காப்பியச் சூத்திரம் நன்கு விளக்குகின்றது.
“பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப.”
- (பொருள். 143)
இங்கு ஐயர் என்னும் சொல் தலைசிறந்த பெரியோராகிய அறிஞர்களைக் குறித்து நிற்கின்றது. இதனால் தொல்காப்பியர் காலத்திற்கு முன்னர் பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்றிருந்தமை நன்றே புலனாகின்றது.
&յնւ
பண்டைக் காலத் தமிழர் கற்பின் முக்கியத்தை உணர்ந்து அதை மேன் நிலையில் வைத்து வாழ்ந்து காட்டியுள்ளனர். கற்புக்கு வரைவிலக்கணம் அமைத்த தொல்காப்பியர் கூற்றையும் இங்கு உற்று நோக்கின், அவர் தமிழ் இனத்தில் வைத்துள்ள இறுகிய பற்றுக்கு,

Page 22
16 கணினியை விஞ்சும் மனித மூளை
அவர் எடுத்தாண்ட கற்பு, கரணம், கிழவன், கிழத்தி, கொளற்குரி மரபின், கொடைக்குரி மரபினோர், கொண்டு கொடுத்து - ஆகிய பதங்களைச் சீர்படுத்தி மணவினை நிகழ்த்திய முறை சாலச் சிறந்ததாகும்.
“கற்பெனப்படுவது கரணமொடு புணரக் கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே."
- (பொருள் 140)
இன்னும், கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டென்றும் தொல்காப்பியர் கூறுகின்றார்.
“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே புணர்ந்துடன் போகிய காலையான.”
- (பொருள். 141)
மேலும் , கற் புடன் இணைந்த இல் லற வொழுக்கத்தைத் தொல்காப்பியர் ஐந்திணைக்குமுரிய பொருளுடன் எடுத்துரைக்கும் முறையையும் நோக்குவோம்.
“மறை வெளிப்படுதலும் தமரிற் பெறுதலும் இவை முதலாகிய இயல் நெறி திரியாது மலிவும் புலவியும் ஊடலும் உணர்வும் பிரிவொடு புணர்ந்தது கற்பெனப் படுமே.”
- (பொருள். 488)
மணவினை
நால்வகைப்பட்ட தமிழ் வகுப்பினராகிய அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோருள்ளும் கொண்டு

கா. விசயரத்தினம் 17
கொடுத்து மணவினை நிகழ்ந்த காலமொன்றிருந்தது. நாளடைவில் முதல் மூவரும் தம்மொடு தாமும், வேளாளர் தமக்குள்ளும் கொண்டு கொடுத்து மணவினை நிகழ்த்தினர். இதனைத் தொல்காப்பியர் மூலம் நாம் அறியக் கூடியதாய் இருக்கின்றது.
“மேலோர் மூவர்க்கும் புணர்ந்த கரணம் கீழோர்க் காகிய காலமும் உண்டே."
- (பொருள். 142 )
இன்று நால்வகை வகுப்பினரிடையே கொண்டு கொடுக்கும் மணவினை நிகழ்வுகள் முற்றாக அருகித் தத்தமக்குள்ளேயே மணவினை நிகழ்கின்றது.
ஒத்த பண்புகள் பத்து
மணவாழ்க்கை என்றும் நிறைவானதாக அமைய வேண்டுமென்ற குறிக்கோளுடன் நம் முன்னோர் கண்ணும் கருத்துமாயிருந்துள்ளனர். பத்து வகைப் பண்புகளில் தலைவன் தலைவியர் ஒத்திருக்க வேண்டுமென்று தொல்காப்பியம் கூறுகின்றது. அவையாவன: (1) ஒத்த பிறப்பும், (2) ஒத்த ஒழுக்கமும், (3) ஒத்த ஆண்மையும், (4) ஒத்த வயதும், (5) ஒத்த உருவும், (6) ஒத்த அன்பும், (7) ஒத்த நிறையும், (8) ஒத்த அருளும், (9) ஒத்த அறிவும், (10) ஒத்த செல்வமுமாம்.
இதையே தொல்காப்பியர்:
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டொடு உருவு நிறுத்த காம வாயில்

Page 23
18 கணினியை விஞ்சும் மனித மூளை
நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளர்ந்த ஒப்பினது வகையே.”
- (பொருள். 269)
என்று சூத்திரம் அமைத்துள்ளார்.
களவொழுக்கக் காலவரை
களவொழுக்கத்தில் இருக்கும் பொழுது தலைவன் தலைவியை விட்டுப் பிரியும் வழக்கம் இல்லை. தலைவன் தலைவியருள் தோன்றிய களவின் காலவரையறையை இரண்டு மாத காலந்தான் நிகழுமென்று இறையனார் களவியலில் இலக்கணம் அமைத்துள்ளார்.
“களவினுள் தவிர்ச்சி வரைவின் நீட்டம்
திங்கள் இரண்டின் அகமென மொழிப.”
- நூற்பா (32). (இளம்)
அம்பலும் அலரும்
அம்பல் என்பது சொல் நிகழா முகிழ் நிலைப் பரவாக் களவாகும். அலர் என்பது சொல் நிகழ்தலான பரவிய களவாகும். களவு வெளிப்படுதற்கு அம்பலும் அலருமே காரணமானவை. இவ்விரண்டிற்கும் தலைவனே பொறுப்பாவான் என்று களவியல் ஆசிரியர் கூறுகின்றார்.
“அம்பலும் அலருங் களவு வெளிப்படுத்தலின் அங்கதன் முதல்வன் கிழவனாகும்.”
- நூற்பா (49) (இளம்)

கா. விசயரத்தினம் 19 சிலம்பு கழி நோன்பு
இஃது ஒரு பண்டைய மரபாகும். பெண்ணின் காலில் அவள் பெற்றோர்கள் சிலம்பை அணிவது வழக்கம். இதை அவள் மணம் புரிவதற்கு முன்னர் நீக்குவதற்குச் செய்யும் சடங்கே சிலம்பு கழி நோன்பாகும்.
“நும்மனைச் சிலம்பு கழிஇ அயரினும் எம்மனை வதுவை நன் மணங் கழிகெனச் சொல்லின் எவனோ மற்றே வென்வேல் மையற விளங்கிய கழலடிப் பொய்வல் காளையை ஈன்ற தாய்க்கே."
- ஐங்குறுநூறு (399)
“சிலம்பு கழி இய செல்வம் பிறகுணக் கழிந்த என் ஆயிழை அடியே." - நற்றிணை (279)
எம் தமிழ்ச் சமுதாயம் எஞ்ஞான்றும் சீர் சிறப்புற்றிருக்க தமக்கென வாழாப் பிறர்க்கென வாழ்ந்து காட்டிய நம் பண்டைத் தமிழ் அறிஞர்கள் விட்டுச் சென்ற அரிய இலக்கியப் பொக்கிசங்கள் என்றென்றும் எமக்கு உயிர் நாடித் துடிப்பூற்றாய் அமைந்துள்ளன. இதற்காக நாம் அவர்களை என்றும் போற்றித் துதிப்போமாக.
(லண்டன் சஞ்சிகை மலரில் 17-11-2001)
་་

Page 24
20 கணினியை விஞ்சும் மனித மூளை
பாதாதி கேசமா? கேசாதி பாதமா? மணமக்களை அறுகரிசி தூவி
வாழ்த்தும் முறை
0ெண்டனுக்கு வந்து இரு திங்கள் கூட ஆகவில்லை. ஒரு திருமண அழைப்பிதழ் கதவினூடாக வந்து தட்டியது. இதையடுத்து நண்பன் தொலைபேசி மூலமும் கதைத்து அழைத்திருந்தான். குறித்த நாளில் திருமண விழாவுக்குச் சென்றிருந்தேன். லண்டனில் எனக்கு இதுவே முதலாவதாகப் பார்க்கப் போகும் மணவிழா என்றபடியால், ஆர்வம் மிகுந்திருந்தது. லண்டன் சிவன் கோயில் (லூயிசம்) திருமண மண்டபத்தில் இவ் விழா நடைபெற்றது.
திருமண வைபவங்கள் யாவும் இந்து சமய ஆசார
முறைப்படி மணவறை அமைத்து, கன்னிக்கால் நாட்டி,
ஓமம் வளர்த்து, அவி சொரிந்து, வேதம் ஒதி, அம்மி
மிதித்து, அருந்ததி காட்டி, மணமக்கள் கைப்பட நீரில்
மோதிரம் தேடியெடுத்து, இந்திரரும், சூரியரும், முப்பத்து முக்கோடி தேவர்களும் சாட்சியாக குறித்த முகூர்த்த
நேரத்தில் கொட்டு மேளம் கொட்ட மங்கல நாணை
மணமகளின் கழுத்தில் மணமகன் கட்ட மணவிழா இனிதே
நடந்தேறியது.

கா. விசயரத்தினம் 21
இதன்பின், ஒருவர் பின் ஒருவராகச் சென்று மணமக்களை அறுகரிசி தூவிப் பேரின்பமும், பெரு வாழ்வும், அறநெறியும், நீண்ட ஆயுளும் வேண்டி ஆசீர்வதித்தார்கள். எல்லாரும் வாழ்த்தும் நோக்கு மாறுபடாதிருந்தது. ஆனால், அறுகரிசி தூவும் முறையில் மாறுபாடுகள் இருந்ததைக் கவனிக்கக் கூடியதாயிருந்தது.
சிலர் அறுகரிசியை எடுத்துத் தம்பதிகளின் தலையிலிருந்து பாதம் ஈறாகத் தூவி வாழ்த்தினார்கள். வேறு சிலர் தம்பதிகளின் பாதத்திலிருந்து தலை ஈறாக அறுகரிசியைத் தூவி வாழ்த்தினார்கள். இன்னும் சிலர், தம்பதிகளின் பக்கவாட்டில் அறுகரிசியைத் தூவி வாழ்த்தினார்கள். இன்னுமொரு சிலர், அறுகரிசியைத் தம்பதிகளின் தலையில் மட்டும் தூவி வாழ்த்தினார்கள். இம் முறைகளைச் சமய ஆசாரத்தில் ஊறித் திளைத்தவர்களும், ஆன்றோரும், படித்தவர்களும் கூடக் கையாண்டார்கள். இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த ஒரு சிலர் மத்தியில் ஒரு சிறு பரபரப்பும் மனக் குழப்பமும் உண்டானது. ஆனால் என் மன நினைவுகள் சங்க காலத்தை நாடி ஓடியது.
சங்க காலத்தில் நிலவிய முறைகள்
சங்க காலத்தில் அறுகரிசி தூவி மணமக்களை வாழ்த்தும் முறை இருக்கவில்லை. அன்று வதுவை மணம் புரிந்தனர். அப்பொழுது ‘நீரொடு கூட்டிப் பெய்த குளிர்ந்த இதழ்களையுடைய பூக்கள், மிக்க கரிய கூந்தலில் நெற்களுடன் விளங்க, நன்றாகிய வதுவை மணம் முடிந்த பின்பு என்று பின் வரும் பாவினால் தெரிய வருகின்றது.

Page 25
22 கணினியை விஞ்சும் மனித மூளை
“நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்.”
- (அகநானூறு. 86; 15-17)
இன்னும், இளங்கோவடிகள், மாமுது பார்ப்பான் மறைவழி காட்ட கோவலன். கண்ணகி திருமணம் தீவலம் வந்து முடிவுற்றதாகச் சிலப்பதிகாரத்தில் காட்டியுள்ளார்.
“வான்ஊர் மதியம் சகடனைய வானத்துச் சாலி யொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பென்னை”
- (சிலப்பதிகாரம் 1:50-53)
இவற்றால் அறுகரிசி தூவி மணமக்களை வாழ்த்தும் முறை இடையிட்டு வந்ததென்பது புலனாகின்றது.
பாதாதி கேச வருணனை
தெய்வத்தின் உறுப்புநலன்களைப் பாராட்டுங்கால் அடி முதல் முடி ஈறாகப் புனைந்துரைப்பது தொன்று தொட்ட ஓர் உலக மரபாகும். நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப் படையில் தெய்வப் பெண்களாகிய சூரா மகளிரைப் புனைந்துரைக்குங் கால் 'கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடி என்று அடியை முதலில் தொடங்கி ‘துணையோ ராயப் நீத விணையிரோதி’ என்று முடி ஈறாகப் புனைந்துரைக்கப்பட்டிருக்கின்றது. இது நம் தமிழ் நாட்டில் இம்மரபிருந்தமைக்குத் தக்க ஒரு சான்றாகும். இம் மரபினை வட நூலார் ‘பாதாதி கேச வருணனை' என்று வழங்குவர்.

கா. விசயரத்தினம் 23 கேசாதி பாத வருணனை
மக்கள் உறுப்புநலன்களைப் பாராட்டுங்கால் முடி முதல் அடி ஈறாகப் பாராட்டுதலும் தொன்று தொட்ட ஓர் உலக மரபாகும். முடத்தாமக் கண்ணியார் பாடிய பொருநராற்றுப்படையில் மானிடப் பெண்ணாகிய பாடினியின் மேனி நலத்தைப் பாராட்டுங்கால் ‘அறல்போற் கூந்தற் பிறைபோற்றிரு நுதல்’ என்று முடியை முதலிற் தொடங்கி வருந்து நாய் நாவிற் பெருந்தகு சீறடி என்று அடி ஈறாகப் புனைந்துரைத்துள்ளார். இம் மரபும் நம் தமிழ் நாட்டில் இருந்தமைக்குத் தக்கதொரு சான்றாகும். இம் மரபினை வட நூலார் ‘கேசாதி பாத வருணனை' என்றழைப்பர். மணநாளன்று மணமக்கள் தெய்வப் பிறவிகளா?
ஒரு சிலர் மணநாளன்று மட்டும் மணமக்கள் தெய்வப் பிறவிகள் என்று கூறி, அறுகரிசியை அடி முதல் முடி ஈறாகத் தூவி வாழ்த்துவதுதான் சரியான ஒரு முறை என்று வாதம் செய்ய முன் வரலாம். ஆனால், ஒரு நாள் மட்டும் மக்கள் எப்படித் தெய்வப் பிறவியாக மாற முடியும்? ஏன் மாற்ற வேண்டும்? இஃது எவ்வகையிலும் வாதத்திற்கு ஒவ்வாததாகும். எனவே இங்கு இம் முறையும் பொருத்தமானதன்று.
நாம் ஏற்கக் கூடிய சிறந்த முறை
மேற் காட்டிய இரு புலவர்களின் இரு வேறுபட்ட முறைகளிலிருந்து நாம் ஒன்றைக் கவனிக்கக்

Page 26
24 கணினியை விஞ்சும் மனித மூளை
கூடியதாகவுள்ளது. அஃதாவது, தெய்வப் பெண்களுக்கும் மானிடப் பெண்களுக்கும் வேற்றுமை காட்ட வேண்டியே இவ்விரு முறைகளையும் கையாண்டுள்ளனர் போலும். தெய்வப் பெண்களின் அடி முதல் முடி ஈறாகக் கூறி ஓர் உயர்வு நிலையை அவர்களுக்கு வகுத்துள்ளார். இன்னும், மானிடப் பெண்ணின் முடி முதல் அடி ஈறாகக் கூறி ஒரு தாழ்வு நிலையை அவர்களுக்குக் கொடுத்துள்ளார்.
மேலே காட்டிய இவ்விரு முறைகளையும், புதுமணத் தம்பதிகளுக்கு அறுகரிசி தூவி வாழ்த்தும் முறைக்கு ஒப்பிட்டுப் பார்த்தோமானால், அதில் ஒரு முறைதான் சிறந்ததும் பொருத்தமானதாகவும் அமையும் என்பது தெரியவரும். அஃதாவது, மானிடராகிய மணமக்களை நாம் வாழ்த்தும் பொழுது அறுகரிசியை மணமக்களின் முடி முதல் அடி ஈறாகத் தூவி வாழ்த்துவது தான் பழந் தமிழ் இலக்கிய மரபுக்கும் ஒத்ததாயமையு மெனலாம். s
இச் சிறந்த முறையை நாம் ஒரே முகமாக ஏற்றுக் கொண்டால், நம் பின்னவரும் தடுமாற்றத்துக்கு உள்ளாகாமலும், சமுதாயச் சீர்சிறப்பை உயர்த்தவும் ஏதுவாயமையும் என்பது திண்ணம்.
எனவே, இதில் ஆன்றோரும் சான்றோரும் தலையிட்டு ஆவன செய்து மக்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 03-03-2002) (லண்டன் வடலியில் பெப்ரவரி மாதம் 2002)
责

கா. விசயரத்தினம் 25
தமிழன்னையின் அணிகலன்களில் ஒன்றான குண்டலகேசி
ஐம்பெருங் காப்பியங்களான சிந்தாமணியும் மணிமேகலையும் சிலப்பதிகாரமும் குண்டலகேசியும் வளையாபதியும் தமிழர்களின் உயிரோட்ட இலக்கியக் கொத்தாய் அமைந்துள்ளன. இக் காப்பியங்களில் சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய மூன்றும் தான் இன்று நம்முடன் இருந்து நடமாடுகின்றன. மற்றைய இரு காப்பியங்களான குண்டலகேசியும் வளையாபதியும் நம்மிடமிருந்து அருகி மறைந்து விட்டன.
இங்கு ஓர் அறிஞர் ஐம்பெருங் காப்பியங்களை மகளிர் அணியும் அணிகலன்களாக்கித் தமிழன்னைக்கு அணிவித்து மகிழும் பாங்கினைப் பார்ப்போம்.
தமிழன்னைக்குக் காதில் குண்டலகேசியையும், கழுத்தில் சிந்தாமணியையும், கையில் வளையாபதியையும், இடுப்பில் மணிமேகலையையும், பாதத்தில் சிலம்பையும் (சிலப்பதிகாரம்) அணிவித்தார். அணங்குக்குப் பூட்டிய ஐவகை அணிகலன்களிலும் மனம் நிறையாத அவ்வறிஞர் இன்னும் மேலே ஒரு படி ஏறிச் சென்று அத் தமிழணங்கின் சிரசில் கணினி (கொம்பியூட்டர்) மகுடம் ஒன்று கட்டாயம் சூட்ட வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கின்றார். என்னே

Page 27
26 கணினியை விஞ்சும் மனித மூளை
அவர் ஆசை, அவர் விருப்பு; அவர் அவா. அவர் விருப்புக்கும் மேல் தற்பொழுது கணினி அவள் சிரசில் ஏறி நின்று நடைமுறையிலும் பாவனையிலும் வீறு நடை போடுகின்றது.
இனி குண்டலகேசியின் வரலாற்றைப் படிப்போம். நாதகுத்தனார் என்னும் புலவர் குண்டலகேசி என்ற நூலை இயற்றினார். குண்டலகேசிதான் காப்பியத் தலைவி. வட நாட்டில் புத்தர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவள்.
இராசகிருகம் என்னும் நாடாண்ட மன்னன் மந்திரி மகள் பெயர் ‘பத்திரை". அன்றொரு நாள் மாளிகையில் இவள் தோழியர்களுடன் உலாவிக் கொண்டிருந்தாள். அப்பொழுது வழிப்பறி செய்த குற்றத்திற்காக அரசால் கொலை தண்டனை விதிக்கப்பட்டான் ஒரு கட்டழகன்: அவனைக் காவலர்கள் வீதி வழியே இழுத்துச் சென்றனர் கொலைக் களத்துக்கு. இதைக் கண்ணுற்றாள் பத்திரை. அவன் மேல் தீராக் காதல் கொண்டாள். 'இவனை மணப் பேன்; அன்றேல் இறப்பேன்’ என்றாள் பத்திரை. மகள் மிகவும் பிடிவாதக்காரி. இதை அறிந்திருந்தார் தந்தை. காவலர்க்குக் கைக் கூலி கொடுத்து அக் கட்டழகனை அவளுக்குத் திருமணம் செய்து வைத்தார் தந்தை. வாழ்க்கை இனிதே ஒடிக் கொண்டிருந்தது.
அன்றொரு நாள் பத்திரை ஊடினாள். ஊடிய பத்திரை தன் ஆருயிர்க் கணவனைக் கள்வன்' எனக் கூறினாள். இக் கூற்றால் தன் மனைவிமேல் கடுங் கோபமடைந்தான். இருந்தும் தன் சினத்தை அடக்கிக் கொண்டான். ஆனால் தக்க தருணம் வரும் வரை பொறுத்தும் இருந்தான்.

கா. விசயரத்தினம் 27 இன்னொரு நாள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு, தன் உயிர் காத்த கடவுளை வணங்குவதற்கு உச்சி மலைக்குச் சென்றான். அங்கே தன் மனைவியை அழைத்து, ‘அன்று என்னைக் கள்வன் என்றாய். அதற்காக இன்று நான் உன்னைக் கொல்லப் போகின்றேன். எனவே உன் குல தெய்வத்தை நினைந்து வணங்கிக்கொள் என்றுரைத்தான். இதைக் கேட்டுப் பதை பதைத்தாள் பத்திரை. உயிர் துடி துடித்தது. தலை சுற்றியது. பாதாளத்தைப் பார்த்த பயம் ஒரு பக்கம். ஆனாலும் பதற்றமடையாது நிதானம் தப்பாது செயலில் இறங்கினாள். ‘தற் கொல்லியை முற் கொல்க' என்னும் மூதுரையை நினைவிலெடுத்துச் செயலாற்றத் தொடங்கினாள்.
‘நாதா! என் குலதெய்வமே! நான் வழிபடும் தெய்வம் வேறுண்டோ? தாங்களன்றோ அக் கடவுள்' எனக் கூறிப் பாசாங்கு பண்ணினாள் பத்திரை. அதன் பின், அவனை வலம் வந்து பின் சென்று அக் கொடியோனைப் பாதாளத்தில் தள்ளி வீழ்த்திக் கொன்றாள் பத்திரை.
அதன் பின், தன் செயலை நினைந்து மனம் உருகி, உள்ளம் சலித்தாள் பத்திரை. நிம்மதி கிடையாது சதா உருகி நின்றாள். அச் செயல் அவளை வாட்டி வதைத்தது. செய்வது என்னவென்றறியாது சமண மதத்தில் சேர்ந்து துறவு பூண்டாள்.
சமண சமயக் கொள்கையின் படி பத்திரையின் தலை மயிர் அகற்றப்பட்டது. மீண்டும் அவள் தலை மயிர் சுருண்டு சுருண்டு வளர்ந்தது. அவள் தலை மயிர் சுருண்டிருந்தமையால் “குண்டலகேசி’ என்றழைக்கப் பட்டாள்.

Page 28
28 கணினியை விஞ்சும் மனித மூளை
குண்டலகேசி என்பது சுருண்ட கூந்தலை யுடையவள் என்னும் பொருள் படும். குண்டலகேசி சமண மதத்தைப் பயின்றாள். அதில் பாண்டித்தியம் பெற்றாள். சமண வாதம் செய்யப் புறப்பட்டாள்.
அக் கால வழக்கப்படி சமண வாதஞ் செய்வோர் நாவல் மரக் கிளையை ஊர் நடுவில் நட்டு வாதுக்கழைப்பர். அவ்வாறே குண்டலகேசியும் நாவல் மரக் கிளையை நட்டு விட்டு, உணவுக்காக வீடு தோறும் சென்றிருந்தாள். அப்போது அவ் வழியே சென்று கொண்டிருந்த புத்தரின் மாணாக்கர்களில் ஒருவராகிய சாரிபுத்தர் என்பவர் மரக் கிளையைக் கண்டு பிடுங்கி எறிந்து விட்டுச் சென்றிருந்தார். இதைக் கேள்வியுற்ற குண்டலகேசி ஊரவையைக் கூட்டி சாரிபுத்தருடன் வாதஞ் செய்தாள். குண்டலகேசி தொடுத்த வினாக்களுக்கெல்லாம் சாரிபுத்தர் விடையளித்தார். ஆனால், சாரிபுத்தர் தொடுத்த எந்தொரு வினாவுக்கும் குண்டலகேசியால் விடையளிக்க முடியவில்லை.
பின் குண்டலகேசி சாரிபுத்தரின் காலில் விழுந்து வணங்கினாள். சாரிபுத்தர் குண்டலகேசியைப் புத்தரிடம் அழைத்துச் சென்று புத்த மதத்தில் சேர்த்து விட்டார்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 08-04-2001)
宽

29
கா. விசயரத்தினம்
மாதர் கருவுற்றிருக்கும் காலம் ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?
உயிரினங்களில ஆணினத்தை விடப் பெண்ணினத்துக்கே மகிமையும் சிறப்பும் ஆற்றலும் போற்றலும் தகுதியும் கொடுக்கப்பட்டு மதிக்கப் படுகின்றது. அதிலும் மனிதப் பெண்மைக்கு மக்கள் ஒரு சிறந்த - உயர் இடத்தை ஒதுக்கிக் கெளரவிக்கின்றனர். இதற்குக் காரணம், அவர்கள் இன விருத்தியில் ஆற்றும் பாரிய பங்களிப்புமாகும். இயற்கை அவர்களுக்குக் கொடுத்த இன விருத்திக்கேற்ற தேக அமைப்பு, அவர்களை இந் நிலைக்கு உயர்த்தியுள்ளமை ஒரு வரப் பிரசாதமாகும்.
மாதர் கர்ப்பம் தாங்கிக் குழந்தைகளைப் பெற்றெடுப்பதும், மிருகங்கள் கருவுற்றுக் குட்டிகளையும் கன்றுகளையும் ஈன்றெடுப்பதும், பறவையினங்களும் ஒரு சில மிருகங்களும் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சுகளைப் பொரிப்பதும் ஆகிய செயற்பாட்டினால் இன விருத்தி சீராக நடைபெற்று வருகின்றது.

Page 29
30 bങ്ങിങ്ങീങ്ങu விஞ்சும் மனித மூளை
இதில், மகளிர் குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கு ஓர் உன்னதமான நிலை கொடுக்கப்பட்டு அவர்கள் போற்றப் படுகின்றனர். அன்று, ஒரு பிரசவம் முடிந்தால், அது ஒரு மறு பிறப்பென்று கூறி அதிலேற்படக் கூடிய ஆபத்து நிலையை உணர்த்தி வைத்தனர். விஞ்ஞானத் துறை முன்னேறாத அக் கால நிலை அன்று அதுவாயிருந்தாலும், இந் நாள் நவீன உலகில் விஞ்ஞான வைத்தியத்துறை முன்னேற்றத்தால் மகளிர் பிரசவ ஆபத்துகள் மிகக் குறைந்துள்ளன. தற்பொழுது மகளிர்க்குப் பிரசவ அறிவும், விளக்கமும் வளர்ந்து பயமும் நீங்கியுள்ளது.
கருவுற்றிருக்கும் காலம்
இன விருத்தியின் போது கருவுற்றிருப்பது, குழந்தைகளைப் பெற்றெடுக்கும் மகளிர்க்கும், குட்டிகளையும், கன்றுகளையும் ஈன்றெடுக்கும் மிருகங்களுக்கும் பொதுவானதாகும். ஆனால், கருவுற்றிருக்கும் காலம் எல்லா உயிரினங்களுக்கும் வேறு பட்டனவாய் அமைந்துள்ளது. இது, பின்வரும் ஒரு சில மிருகங்களின் கருவுற்றிருக்கும் கால வேறுபாட்டினை உணர்த்தி நிற்கின்றது.
ULT606 660 நாள் ஒட்டகம் 406 நாள் குதிரை 345 நாள்
குரங்கு 235 நாள் சிங்கம் 120 நாள்
புலி 106 நாள்

கா. விசயரத்தினம் 31
முயல் 40 நாள் அணில் 35 நாள் சுண்டெலி 23 நாள்.
மகளிர் கருவுற்றிருக்கும் காலத்தை ‘பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த பிள்ளை' என்று வாய் நிறையச் சொல்லி மகிழும் மாதரைக் காண்கின்றோம். நாமும் அவர் மகிழ்வில் பங்கேற்று நிற்கின்றோம். ஆனால், அதன் உண்மை நிலை அறிய எவரும் முன் வருவதில்லை. நாம் அதனை இங்கு சற்றுச் சிந்திப்போம்.
ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா?
மகளிர் கருவுற்றிருத்தல் ‘ஐயிரண்டு திங்கள் என்றும் “முந்நூறு நாள் என்றும் பட்டினத்துப் பிள்ளையார் பாடலில் கூறப்பட்டுள்ளது.
“ஐயிரண்டு திங்களா வங்கமெலா நொந்துபெற்று பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - செய்யவிரு கைப்புறத்தி லேந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண்பே னினி.”
“முந்தித் தவங்கிடந்து முந்நூறு நாட்சுமந்தே அந்திபக லாச்சிவனை யாதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழன்மூட்டு வேன்.”
பட்டினத்தார், தாயார் இறந்த பொழுது தகனக் கிரியை செய்கையில் மனம் நொந்து, கசிந்து, கண்ணிர் மல்கிப் பாடிய வெண்பாக்கள் இவை.

Page 30
32 கணினியை விஞ்சும் மனித மூளை
மாதர் கருவுற்றிருக்கும் காலத்தைச் சாதாரணமாக ஒன்பது மாதங்களென்று வைத்திய நூல்கள் கூறுகின்றன. இதை மருத்துவத் துறையினர் 270 நாட்கள் முதல் 280 நாட்கள் வரை என்றும் கணித்துள்ளனர். இந் நாட்களுக்கிடையில் குழந்தைகள் பிறந்து விடுகின்றனர். அல்லது மருத்துவர் பிறக்க வைத்து விடுவர். முந்நூறு நாட்கள் வரை விட்டு வைக்க மாட்டார்கள்.
இனி, சற்றுப் பின் நோக்கிச் சென்று, சங்க கால இலக்கியம், மகளிர் கர்ப்பம் தரித்திருக்கும் கால எல்லையை எவ்வாறு கணித்துக் கூறப்பட்டுள்ளதென்பதைப் பார்ப்போம்.
மாதர் முந்நாற்றிங்கள் (பன்னிரண்டு மாதங்கள்.) கருவுற்றிருப்பதாக எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
“அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டும் துறக்குவர் கொல்லோ முந்நாற் றிங்க ணிறைபொறுத் தசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும்புளி வேட்கைக் கடுஞ்சூள் மகளிர் போல நீர்கொண்டு விசும்பிவர் கல்லாது தாங்குபு புணரிச் செழும் பல் குன்ற நோக்கிப் பெருங்கலி வான மேர்தரும் பொழுதே." - (287)
‘தோழி, தலைவர் நம்மை விட்டுப் பிரிந்தார் இனி வரமாட்டார்’ என்று தலைவி கலங்கினாள். இதற்குத் தோழி தலைவி, கலங்க வேண்டாம். இதோ கார்ப் பருவம் வந்து விட்டது. இனி, நிச்சயமாக வந்து விடுவார்.’ என்று தலைவிக்குக் கூறி ஆறுதற் படுத்துகிறாள்.

கா. விசயரத்தினம் 33
இப் பாடலைக் கச்சிப்பேட்டு நன்னாகையார் என்னும் புலவர் பாடியுள்ளார். இவர் ஒரு பெண்பாற் புலவர். மாதர் பன்னிரண்டு திங்கள் கர்ப்பம் தாங்குதலைப் பெண்பாற் புலவர் ஒருவர் பாடியுள்ளமை இங்கு நோற்கற்பாலது.
இன்னும், மகளிர் பன்னிரணி டு திங்கள் கருவுற்றிருப்பதாகப் பெரியாழ்வார் பாசுரம் கூறுகின்றது.
“பன்னிரு திங்கள் வயிற்றிற் கொண்டவப் பாங்கினால் என்னிளங் கொங்கை யமுத மூட்டி யெடுத்தயான் பொன்னடி நோவப் புலரியே காணிற் கன்றின்பின் என்னிளஞ் சிங்கத்தைப் போக்கினே னெல்லே பாவமே."
- (3.2:8)
தலை சிறந்த கரு பன்னிரு திங்கள் வயிற்றினுள் இருந்து முதிர்ச்சி அடையுமென்றொரு கொள்கையும் உண்டென அறியக் கிடக்கின்றது. இதை மருத்துவ நிபுணர்கள் எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எனினும், ஐயிரண்டு திங்களா? ஆறிரண்டு திங்களா? என்பது ஆய்வுக்குரிய ஒரு விடயம்.
மேலும் , பத் துப் பாட்டில் ஒனர் றான பொருநராற்றுப்படை நூலை முடத்தாமக் கண்ணியார் என்ற புலவர் பாடியுள்ளார். இதில் கரிகால் வளவன் என்பவனே பாட்டுடைத் தலைவன். இவன் ஒரு சோழ மன்னன். தாய் வயிற்றிருந்து தாயம் எய்தினவன். (பொருநராற்றுப் படை.132) என்பதனால் கருவிலேயே திருவுடையவனானான். தாயின் வயிற்றில் கருவாயிருந்த போதே அரசாளும் செல்வம் எய்தியவன். இதற்கு நச்சினார்க்கினியர்,

Page 31
34 கணினியை விஞ்சும் மனித மூளை
*தாயுடைய வயிற்றிலே இருந்த பொழுதே அரசவுரிமையைப் பெற்று' என்று கூறி மேலும் தான் பிறக்கின்ற காலத்துப் பிறவாது நல்ல முகூர்த்தம் வருமளவும் தாயுடைய வயிற்றிலேயிருந்து பிறக்கையினாலே அரசவுரிமையைப் பெற்று' என்றும் கூறப்பட்டுள்ளதை இங்கு கோடிட்டுக் காட்டினால் மிகவும் பொருத்தமாயமையும்.
மேற் காட்டிய சங்க கால இலக்கியங்களின் படி நம் பண்டைத் தமிழ் மாதர் பன்னிரண்டு மாதங்கள் வரை கர்ப்பம் தாங்கியிருந்தமை தெரியக் கிடக்கின்றது.
நம் பண்டைத் தமிழ்ப் புலவர்கள் நமக்கு அளப்பரிய சங்க கால உயிர் இலக்கியங்களைத் தந்து விட்டுச் சென்றுள்ளனர். அவற்றைத் துருவித் துருவி ஆய்வு மேற் கொண்டால் எத்தனையோ அற்புதமான அரிய தகவல்கள், சிந்தனைகள், பண்பாடுகள், செய்திகள், கலைகள், கலாசாரங்கள் ஆகியவற்றை வெளிக் கொணர முடியும். இவை யாவும் பாமர மக்களைச் சேர வேண்டிய பொறுப்பினை அறிஞர் குழாம் பொறுப்பேற்க வேண்டிய தருணத்தை இனியும் பிற் போடக் கூடாது.
宽

கா. விசயரத்தினம் 35
மனம் விரும்பும் மகவைப் பெற்றெடுக்க மந்திரம் சொல்லும் தந்திரம்
LDனிதன் பெறும் பேறுகளுட் பெறற்கரியது மக்கட் பேறு. எச் செல்வம் வாய்க்கப் பெறினும், இச் செல்வம் இல்லாதொழியின் மக்கள் வாழ்க்கை நிறைவுற்றதாக இருக்காது. எனவே தான் போலும்,
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற.” - (குறள் 61)
என்று பொய்யா மொழியாரும் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
மகவின் மகிமை
மக்கட் பேறு கிடைக் காதார் வேண்டாத தெய்வங்களில்லை; நோற்காத நோன்பில்லை; செய்யாத பாத யாத்திரைகளில்லை; அனுட்டிக்காத விரதமில்லை; செய்யாத் தான தருமங்களில்லை. இவற்றிலிருந்து மக்கட் பேற்றின் மகத்துவம் புலனாகின்றது. ‘மலடன் - “மலடி என்று ஊரார் சூட்டும் பழிச் சொற்கஞ்சி அவர்கள் பேசா

Page 32
36 கணினியை விஞ்சும் மனித மூளை
மடந்தைகளாய் நாணிக் கோணி வாழ்கின்றார்கள் இல்ல்ை மடிகின்றார்கள்.
இன்னும் மக்கட் பேறு கிடைத்தவர்களுக்கும்/ஒரு சில கவலை இருக்கத் தான் செய்கின்றது. ஆண் பிள்ளை இல் லையே எண் று பெணி பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்களும், பெண் பிள்ளை இல்லையே என்று ஆண் பிள்ளைகளைப் பெற்றெடுத்தவர்களும், படும் மனக் கவலை சொல்லுந்தரமன்று. “கொள்ளி/வைக்கத் தனையன் இல்லையே' என்று முன்னவரும், ‘குலத்திற்கொரு குல விளக்கில்லையே' என்று பின்னவரும், படும் மன வேதனையை நாம் என்றும் காண்கின்றோம்.
மேற் கூறிய குறைகள் யாவும் நம்ಆಳ್ವ வாட்டி வதைக்கின்றன. இவை நிறைவுற நம் பண்டைத் தமிழர் எவ்வெவ் வழிகளாற் பரிகாரங் கண்டார்களென்பதில் ஒரு சிலவற்றை ஈண்டுக் காண்போம்.
திருமூல நாயனார் திருமந்திரம்
திருமூல நாயனார் அருளிச் செய்த நூல் திருமந்திரம். இதில் 3,000 மந்திரங்கள் உள்ளன. நாயனார் மூவாயிரம் ஆண்டுகள் தவமிருந்து ஆண்டுக்கு ஒரு மந்திரமாகப் பாடினார். இவர் இற்றைக்கு ஏறக்குறைய 8,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஞானி. அவர் கூறிய சில மந்திரங்களை இனிக் கவனிப்போம்.
ஆண் மகவா? பெண் மகவா?
தலைவனும் தலைவியும் மருவிப் பொருந்துங்கால் ஆண் ஆகிய வலப் பால் மூச்சு மிகுந்து சென்றால்
 
 
 

கா. விசயரத்தினம் 37
கருவுற்றுப் பிறக்குமுயிர் ஆணாகப் பிறக்கும். பெண் ஆகிய இடப் பால் மூச்சு மிகுந்து சென்றால் கருவுற்றுப் பிறக்குமுயிர் பெண்ணாகப் பிறக்கும். இரண்டு மூக்கின் வழியாகவும் வரும் மூச்சு ஒத்திருந்தால் கருவுற்றுப் பிறக்குமுயிர் அலியாகப் பிறக்கும்.
ஆள் வினை முயற்சியில் கருத்து மிகுதியாகவிருந்தால், கருவுற்றுப் பிறக்குமுயிர் சிறப்புற்றுப் பிறக்கும். அச் சிறப்புடன் பிறந்த உயிர் இத்தரணி முழுதாளும். அகப் பயிற்சியால் விந்து கட்டுப்பட்டுத் திண்மை ஏற்படின், காதலரிருவரும் மருவி இன்புறினும், விந்து வெளிச் செல்லுவதில்லை. இதனாற்றான் பெண் வயிற்றிற் கருவுறுவதில்லை. இன்னும் மலக் காற்றாகிய அபானன் எதிர்த்து வருமானால் இரட்டைப் பிள்ளைகள் பிறக்குமென்றும் திருமூல நாயனார் திட்ட வட்டமாகக் கூறியுள்ளார்.
“ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரண் டொத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவ மிக்கிடில் பாய்ந்ததும் இல்லையே.”
(திருமந்திரம் 462)
“குழவியும் ஆணாம் வலத்தது வாகில் குழவியும் பெண்ணாம் இடத்தது வாகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்கில் குழவி அலியாகுங் கொண்டகாலி"ஒக்கிலே.”
(திருமந்திரம் 466)

Page 33
38 கணினியை விஞ்சும் மனித மூளை
அகவைக் கணிப்பு
இனி பிறக்கப் போகும் உயிர்க்குத் திருமூல நாயனார் வயதைக் கணிக்கும் முறையை நவிலுகின்றார்.
காதலர் இருவரும் மருவிக் கூடிய பின் உயிர்ப்பு ஓட்டம் ஐம்பூதங்களிலும் பரந்து ஓடினால் பிறக்கும் உயிர்க்கு அகவை நூறு என்றும், நான்கில் ஓடினால் அகவை எண்பதென்றும், இம் முறையாகச் செல்லும் மூச்சினைப் பகுத்தறிந்து கணிக்குமாறு கூறுகின்றார். இன்னும் யோக முறையில் கூடுபவர் உயிர்ப்பினை உணர்ந்து வேண்டியவாறு செலுத்திப் பயனும் பெறுவர்.
“பாய்ந்தபின் னஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் னாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் திவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.”
- (திருமந்திரம் 463)
பிறக்கப் போகும் மகவு எப்படியான அங்க அமைவுடனிருக்குமென்று முன் கூட்டியே அறியக் கூடியதாகத் திருமந்திரம் அமைத்துள்ளார் திருமூல நாயனார். தலைவனும், தலைவியும் புணருங்கால், தலைவன் மூச்சில் செல்கின்ற உயிர்க் காற்று அளவிற் குறைந்தால் பிறக்கும் மகவு குறுகிய வடிவமாகவும், அம் மூச்சு ஓடி இளைத்தவன் மூச்சுப் போல் இளைத்துப் போனால் பிறக்கும் மகவு முடமாகவும், அம் மூச்சு இடைநிலைப் பட்டிருந்தால் பிறக்கும் மகவு கூனாகவும் பிறக்குமென்று கூறியுள்ளார். இம் மூச்சின் ஆய்வு அனைத்தும் ஆண் பாலார்க்கே அன்றிப் பெண் பாலார்க்கு இல்லை.

கா. விசயரத்தினம் 39
“பாய்கின்ற வாயு குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயு மாதர்க்கில்லை பார்க்கிலே.
(திருமந்திரம் 464)
இன்னும், இருவரும் மருவுங்கால் மாதா வயிற்றில் மலம் தங்கி மிக்கிருந்தால் பிறக்கும் மைந்தன் மந்தனாகவும், மாதா வயிற்றில் சிறுநீர் மிகுந்திருந்தால் பிறக்கும் மகவு ஊமையாகவும், மாதா வயிற்றில் மலமும் சலமும் ஒப்ப இருக்குமாயின் பிறக்கும் மகவு குருடாகவும் பிறக்குமென்று மந்திரம் அமைத்துள்ளார் திருமூலர்.
“மாதா உதரம் மலமிகில் மந்தனாகும் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கில் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.”
- (திருமந்திரம் 465)
கருவுறாமை
குடும்பத்துக்குச் சிறப்பைத் தரும் மக்களைப் பெற்றெடுக்கும் முறையைக் கூறியுள்ள திருமூலர் குழந்தைச் செல்வம் கிட்டாதார்க்குரிய காரணத்தையும் எடுத்துக் காட்டியுள்ளார். மருவிப் புணருங்கால் காதலர் இருவருக்கும் எழுகின்ற உயிர்ப்பு ஒத்து எழுந்தால், கருவுற்றுத் தோன் றும் குழவியும் மிக்க அழகுடையதாகவிருக்கும். இம் மூச்சு இருவருக்கும் தடுமாறுமேயானால் காதலி வயிற்றில் கருத்தங்காதாம். மூச்சுப் பயிற்சியின்மையாலும், மூச்சின் அருமையினை

Page 34
40 கணினியை விஞ்சும் மனித மூளை
உணராமையாலும், காம மேலிட்டாலும், முறையற்ற மருவலாலும், உரனிழந்து சின்னாளில் மூப்பெய்தி அவதியுறும் குடும்பங்கள் பல உள்ளன.
“கொண்ட நல்வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்ட நல்வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாங் கோல்வளை யாட்கே.”
- (திருமந்திரம் 467)
விஞ்ஞானமும் மந்திரமும்
விஞ்ஞானத் துறையில் அதி உன்னத நிலை எய்தியுள்ள நவ நாகரிக உலகில் கணினி மயத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் நமக்குப் பிறக்கப் போகும் குழவி ஆணா? பெண்ணா? குறளா? முடமா? கூனா? குருடா? என்று கூற முடியாத நிலையில் நம் வைத்தியத்துறை இருக்கின்றது. ஆனால் இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூல நாயனார் தாம் அருளிச் செய்த திருமந்திர நூலில் கருவுறும் உயிர் ஆனா? பெண்ணா? அலியா? இரட்டையா? என்றும்; குறளா? முடமா? கூனா? மந்தமா? ஊமையா? குருடா? அழகா? என்றும் அவ்வுயிர் ஒவ்வொன்றின் அகவையையும், பெண் கருவுறாமைக்குரிய காரணத்தையும் எடுத்துக் கூறியுள்ளார்.
திருமூலரின் நுண்ணிய அறிவையும் ஆய்வுத்
திறனையும் நோக்குங்கால் அவரை ஒரு வைத்திய நிபுணரையும் விஞ்சியவராகக் கருத வேண்டியுள்ளது.

கா. விசயரத்தினம் 41
நம் பண்டைத் தமிழர்கள் விஞ்ஞானம், வைத்தியம் போன்ற துறைகளிலும் மிகவும் மேம்பட்டிருந்தார்களென்பது திருமூல நாயனாரின் திருமந்திரத்தால் அறிகின்றோம். இன்னும், நம் பண்டைத் தமிழர்கள் வேண்டிய காலத்தில் வேண்டியவாறு வேண்டிய மக்களைப் பெற்றெடுத்துச் சீரான குடும்ப வாழ்க்கை நடாத்தியுள்ளனர் என்பது உள்ளங் கை நெல்லிக் கனி. இதற்கு வழி வகுத்துக் காட்டிய திருமூலருக்கு அவர் காலத்துச் சமுதாயமும் இக் காலச் சமுதாயமும் சிலை எடுத்துப் போற்றினும் மிகையாகாது.
பழையன கழித்துப் புதியன நாடுவதில் சிரத்தை காட்டும் நாம் திருமூலர் சொன்ன திருமந்திரங்களுக்கு விதி விலக்கமைத்து அம் மந்திரங்களைப் படித்து அவ்வழி நின்றால் நம் சமுதாயம் சீரும் சிறப்புமுற்றுப் பெரு வாழ்வு கண்டிடலாமென்பது திண்ணம்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 07-07-2002)
宽

Page 35
42 கணினியை விஞ்சும் மனித மூளை
பெண்ணழகை உண்ணும் பசலை
LDதுரைத் தமிழ்ப் பேரகராதியில் பசலை என்ற சொல்லுக்கு “காம முதலியவற்றால் உண்டாகும் பசப்பு, தேமல், வருத்தம், காம நோய், மயக்கம், பொன்னிறம், வெளுப்பு, வெண்ணிறம்' ஆகிய கருத்துகள் தரப்பட்டுள்ளன. தலை மகனைக் காணப் பெறாது பிரிந்துறையும் மகளிர் தேக நிலையில் ஏற்படும் நிற வேறுபாடே பசலை எனப்படும்.
பசலை ஏற்பட்டதும் பெண்ணின் முன்னிருந்த அழகு குறைந்து விடுகின்றது. பசலை ஒரு நோயைப் போன்றது. இஃது அழியா நோயன்று; அழியும் நோய். நோய் வந்து மாறுவது போல் பசலையும் தோன்றுவதும் அழிவதுமாய் இருக்கின்றது. தலைவியைக் கூடிய தலைவன் அவளைப் பிரியும் பொழுது இப் பசலை நோயைக் கொடுத்து விட்டே பிரிகின்றான். இந் நோய்க்குப் பிற மருந்துகள் ஒரு பயனும் தரா என்பதை அவள் அறிவாள். எனவே வாளாவிருந்து நோயால் வருந்துவாள். பிரிந்த தலைவன் மீண்டும் அவளைக் கூடியதும் இப் பசலை இருந்த இடம் தெரியாது அழிந்து போகின்றது.
 

கா. விசயரத்தினம் 43
இந் நோயைக் கொடுத்த தலைவனே அந் நோய்க்கு மருந்து கொடுக்கும் வைத்தியனாக மாறி விடுகின்றான். '
இப் பசலை படர் கொடி போன்று பெண்களின் மேனியைப் பற்றிப் படர்கின்றது. பெண்களின் கண், நெற்றி, தோள் போன்ற இடங்களில் பசலை அதிகமாகத் தோன்றிப் படர்கின்றது. பசலை படர்ந்த கன்னிப் பெண்கள், தம் மேனி அழகு குன்றியமையாலும், தம் பசலை தந்த காதலரை மற்றவர்கள் அறியாதிருக்கும் பொருட்டும், தாம் இதுவரை கட்டிக் காத்த களவொழுக்கம் வெளிப்படா வண்ணமும், தம் அயலவர் அலர் தூற்றலுக்கஞ்சியும் ஒதுங்கி வாழ வேண்டியவர்களாயிருக்கின்றனர்.
காதலர் குறி வைத்துச் சந்திப்பது வழக்கம். எவ்வளவோ இன்னல்களுக்கிடையே அவர்கள் சந்திப்பு நிகழ்கின்றது. சில நாட்களுக்குத் தானும் இச் சந்திப்பு நடவாத விடத்து, காதலியை இப் பசலை நோய் பற்றிப் படர்ந்து வாட்டி வதைத்து விடுகின்றது. பொருள் ஈட்டச் செல்லும் தலைவன் எவ்வளவோ இத மொழிகளைக் கூறித் தலைவியைப் பிரிகின்றான். அவன் பிரிவு அவளுக்குப் பசலை நோயைத் தந்து விடுகின்றது. குறித்த காலத்தில் அவன் திரும்பி வராவிட்டால் அவள் உயிரே போய் விடும் போல் இருக்கின்றது. ஆனால், தலைவன் திரும்பி வந்து அவளை மருவியதும் அவள் பசலை பரிதிவானவன் முன் பனிபோல் மாயமாய் மறைந்து விடுகின்றது.
காம நோயெனச் செப்பாதே
‘தோழி, நம் தாய்க்கு நமது யாக்கையினின்றும் இனிய உயிர் பிரிவதாயினும் என் அழகிய மலரனைய

Page 36
44 கணினியை விஞ்சும் மனித மூளை
மையுண்ட கண்களிற் படர்ந்த பசலையானது காம நோயால் உண்டாயதென விளங்க உரையாதே' என்று பசலை படர்ந்த தலைவி ஒருத்தி தோழியைக் கெஞ்சிக் கேட்கின்றாள். தன் களவொழுக்கத்தைத் தாய் அறிந்து விட்டால் என்ன நடக்குமோ என்ற பயம் தலைவிக்கு.
“வாழி, தோழி ‘யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும் நின்மகள் ஆய்மலர் உண்கண் பசலை காம நோய்’ எனச் செப்பாதீமே.”
- (அகநானூறு. 52; 12-15)
இப் பாடலை நொச்சி நியமங்கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடியுள்ளார். இவரை மாற்றுார்கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் என்றுங் கூறுவர்.
பாசி அற்றே பசலை
பசலையின் தன்மையை உற்று உணர்ந்து இப் பாடலைப் பாடிய பரணர் ஒரு தலைவி வாயிலாகத் தரும் செய்தியைப் பார்ப்போம். இதில் ஊருணியில் படர்ந்துள்ள பாசி பற்றிய குறிப்பு மிக அழகு பெற அமைந்துள்ளது.
“ஊரண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடுவுமித் தொடுவுமி நீங்கி விடுவுமி விடுவுமிப் பரத்த லானே.”
- (குறுந்தொகை 399)
பசலை நோயானது நம் காதலர் முயங்குந் தோறும் முயங்குந் தோறும் விலகி, அவர் பிரியுந் தோறும்

கா. விசயரத்தினம் 45
பிரியுந் தோறும் பரவி நிற்கின்றது. ஊருணியில் படர்ந்திருக்கும் பாசி கை பட்டவுடன் அகல்வது போலத் தலைவன் வருகையால் படர்ந்திருந்த பசலை நீங்கி விடுகின்றது. கை எடுத்தவுடன் மீண்டும் பாசி பரவுவது போலத் தலைவன் பிரிந்தவுடன் பசலை பரவிப் படர்ந்து நிற்கின்றது. இன்னும், “பாசி படு குட்டத்திற் கல்லினை விட்டெறியப்படும் பொழுது நீங்கி அது விடும் பொழுதிற் பரக்கும் (291) என்று சிவஞான சித்தியாரும் கூறியுள்ளார்.
மாமை உண்ணும் பசலை
‘நல்ல பசுவின் பால் கன்றுக்கு உதவாமலும், கறக்கும் கலத்தினுள் விழாமல் தரையிற் சிந்துவது போல் எனது மாமையாகிய பேரழகு எனக்கு அழகைத் தந்து உதவாமலும், என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும், இப் பசலையானது தான் உண்ண விரும்புகின்றது என்று தலைவன் பிரிவால் அழகு அழியப் பசலை படர்ந்த தலைவி வாடுகிறாள். இப் பாடலைக் கொல்லனழிசி என்னும் புலவர் பாடியுள்ளார்.
“கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்துக் காஅங்கு எனக்கு மாகா தென்னைக்கு முதவாது பசலை உணிஇயர் வேண்டும் திதலை யாகத்தென் மாமைக் கவினே.” - (குறுந்தொகை 27)
தலைவன் தலைவியைப் பிரிந்தான். இப் பிரிவு தலைவிக்குப் பெரியதொரு நோயைத் தந்து விட்டது. அதனால் அவள் குவளை போன்ற கண்களிற் பசலை

Page 37
46 கணினியை விஞ்சும் மனித மூளை
படர்ந்து விட்டது. இச் செய்தியைப் பின்வரும் பாடல்களிற் பார்க்கலாம்.
“மாசறக் கழி இய யானை போலப் பெரும்பெயல் உழந்த இரும்பினர்த் துறுகற் பைதல் ஒருதலைச் சேக்கும் நாடன் நோய்தந் தனனே தோழி பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே."
- (குறுந்தொகை 13)
“காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே.”
- (நற்றிணை 35:12)
“தண்டுறை யூரன் றெளிப்பவு முன்கண் பசப்ப தெவன்கொ லன்னாய்.”
- (ஐங்குறுநூறு 21:34)
“சாயல் இன்மார்பின் கமழ்தார் குழைத்த நின் ஆயிதழ் உண்கண் பசப்பத் தடமென் தோள் சாயினும் ஏஏர் உடைத்து.”
- (கலித்தொகை 112; 23-25)
தலைவன் பிரிவுத் துயரால் தலைவிக்குப் படரும் பசலை நிறத்துக்குப் பீர்க்கம் பூவின் நிறமும், கொன்றை மலரின் வண்ணமும் உவமையாகப் பேசப்படுகின்றது பின்வரும் பாடல்களில்:
“திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
புதல்இவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி.”
- (அகநானுாறு 135; 1-3)

கா. விசயரத்தினம் 47
“மென்தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை ஊழுறு மலரி பாழ்பட முற்றிய பசலை மேனி நோக்கி நுதல்பசந்து.'
- (அகநானூறு 398:3-5) “கொன்றைப் பூவின் பசந்த உண்கண்.”
- (ஐங்குறுநூறு 500) தலைவன் பிரிவினால் தலைவியின் ஒளி பொருந்திய நுதலில் பசலை படர்வதைப் பின்வரும் அடிகள் எடுத்துக் காட்டுகின்றன.
“நன்னுதல் பசலை நீங்க வன்ன நசையாகு பண்பின் ஒரு சொல்
இசையாது கொல்லோ காதலர் தமக்கே.”
- (குறுந்தொகை 48:5-7)
“சுடர்புரை திருநுதல் பசப்பத் தொடர்புயாங்கு விட்டனை நோகோ யானே.”
- (நற்றிணை 108; 8-9)
“சுடர்நுதல் பசப்பச் சாஅய்ப் படர்மெலிந்து."
- (ஐங்குறுநூறு 107)
“பிறைநுதல் பசப்புஊரப் பெருவிதுப்பு உற்றாளை.”
- (கலித்தொகை 99:10)
“பிறையேர் சுடர்நுதற் பசலை.”
- (கலித்தொகை 125; 23)
இன்னும், பிரிவுத் துயரால் தலைவியின் மேனியும், தோள்களும் பசலை அடைந்து அவளை வாட்டி வதைக்கின்றது. இதைப் புலவர் இவ்வாறு கூறுகின்றார்.

Page 38
48 கணினியை விஞ்சும் மனித மூளை
“பசந்த மேனியொடு படரட வருந்தி.”
- (புறநானூறு 159:6)
“வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோ யுற்று.”
- (சிலப்பதிகாரம், 13:67-68)
“தாம்பசந் தனஎன் தடமென் தோளே."
- (குறுந்தொகை. 121:6)
“மெல்லிறைப் பணத்தோட் பசலை தீர.”
- (ஐங்குறுநூறு. 459:1)
இன்னோர் இடத்தில் தலைவியின் கண்களும், தோள்களும், மெல்லிய நறிய கூந்தலும் பழைய அழகு கெட்டுப் பசலை பாய்வதாகக் கூறப்பட்டுள்ளது.
“கண்ணுந் தோளுந் தண்நறுங் கதுப்பும்
பழநலம் இழந்து பசலை பாய."
- (நற்றிணை, 219:1-2)
குடிகளைப் பாதுகாக்கும் செங்கோலனான பாண்டியனின் சேனை, படைக் கலங்களை விட விடப் பகைவர்கள் ஓடி மறைவது போல, மாலையில் காம நோயால் வருந்தும் தலைவியை, அவளுடைய காதலன் வந்து தொடத் தொட அவளின் பசப்பும் நீங்கி விடுகின்றது.
“படுசுடர் மாலையொடு பைதல்நோய் உழப்பாளைக் குடிபுறம் காத்துஒம்பும் செங்கோலான் வியன்தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர்

கா. விசயரத்தினம் 49
தொடுவழித் தொடுவழி நீங்கின்றால் பசப்பே.”
- (கலித்தொகை.130: 18-21)
குறள் கூறும் பசலை
தெய்வத் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் ‘பசப்புறு பருவரல்' என்னும் அதிகாரத்திலும், ‘உறுப்பு நலன் அழிதல்’ என்னும் அதிகாரத்திலும் பசலையைப் பற்றி விரிவாக எடுத்து உரைத்துள்ளார். அவற்றில் சிலவற்றைக் காண்போம்.
“நயந்தவர்க்கு நல்காமை தேர்ந்தேன் பசந்தஎன் பண்பியார்க்கு உரைக்கோ பிற.”
- (குறள் 1181)
“சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா நோயும் பசலையும் தந்து.” - (குறள் 1183)
“விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன் முயக்கற்றம் பார்க்கும் பசப்பு." - (குறள். 1186)
“புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில் அள்ளிக்கொள் வற்றே பசப்பு.’ - (குறள். 1187)
“பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்." - (குறள். 1190)
“முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது பைந்தொடிப் பேதை நுதல்.” - (குறள் 1238)
“முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.” - (குறள். 1239)

Page 39
50 கணினியை விஞ்சும் மனித மூளை
பசலை ஊதாய்
தலைவன் பொருள் ஈட்டுவதற்காகப் பிற நாடு சென்று விட்டான். பிரிவில் வாடிய தலைவியின் மேனி பீர்க்கம் பூப் போற் பசந்தது. அந்நிலையில், மாலை நேரத்தே இல்லத்து வேலியிற் படர்ந்திருந்த பீர்க்கின் கொடியிலே மலர்கள் பூத்திருந்தன. அங்கு பறந்து வந்தது ஓர் ஆண் வண்டு. பீர்க்கின் தேனைப் பருகியது. இதைக் கண்ணுற்றாள் தலைவி. அந்தத் தும்பியிடம் பேசுகின்றாள் இப்படி: “ஏ! கொடிய தும்பியே! உன் உடம்பு தான் கரியதென்றால் நின் அறிவும் கரியது தானோ? எம் இல்லத்து வேலியிலே படர்ந்து பூத்துள்ள தாது நிறைந்த பீர்க்க மலரிலே தேன் குடித்தாயே, என் பசலைக்கும் அதே மலரின் நிறம் உண்டே. ஆனால், மணம் இன்மையாற்றானே என்னைப் புறக்கணித்து விட்டாய். மேலும், நின் பேடு மகிழப் புல்லிய மகிழ்ச்சிச் செருக்கால் தானே என்னைப் பிரிந்து சென்ற அவர்க்கு என் நிலையை நீ கூறவில்லை. எனவே, நான் படும் துன்பமெல்லாம் நீயும் அனுபவிக்க வேண்டும்.”
“கொடியை வாழி தும்பி இந்நோய் படுகதில் அம்ம யான்நினக்கு உரைத்தென மெய்யே கடுமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே மனையுறக் காக்கும் மாண்பெருங் கிடக்கை நுண்முள் வேலித் தாதொடு பொதுளிய தாறுபடு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய்

கா. விசயரத்தினம் 51
சிறுகுறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சுநெகிழ் செய்ததன் பயனோ, அன்பிலர் வெம்மலை அருஞ்சுரம் இறந்தோர்க்கு என்நிலை உரையாய் சென்றவண் வரவே.” (நற்றிணை 277)
இதைப் பாடியவர் கவிஞர் தும்பிசேர் கீரனார். இதில் தலைவியின் குரலே மேம்பட்டுக் கேட்கிறது. தும்பியும், தலைவியின் பிரிவுத் துன்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று சபிக்கின்றாள். “மெய்யே கருமை; அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ?’ என்பதில் தலைவி கொண்ட ஆத்திரம் தெரிகின்றது. இப் பாடலில் முழுக்க இயற்கைப் பிணைப்பு அமைந்தமையால் இஃது என்றும் ஓர் உயிர்க் கவிதையாகக் காட்சி தருகின்றது.
பசலை தோன்றும் தன்மை இயற்கையின் வழியாய் நிகழ்வது. சங்க நூல்கள் சிலவற்றில் பசலை பல கோணங்களிற் படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளதை மேலே பார்த்தோம். மாதர் மேனியில் ஏற்படும் நிற வேறுபாடான பசலையைப் பற்றிச் சில புலவர்கள் மிக உன்னிப்பாக உற்று நோக்கித் துருவித் துருவி, ஆழ்ந்து, ஆய்ந்து, எழில் பொங்கு நிலையான உயிர்ப் பாடல்களைப் பாடியமையால், அவை சங்க காலத்திலிருந்து இற்றை வரை சாகா வரம் பெற்று மக்கள் மடியிலும், மனத்திலும் தவழ்ந்து, புரண்டு, கொஞ்சிக் குலாவி, விளையாடிக் கொண்டிருக்கும் நிலையை நினைக்க, அப் புலவர்கள் நம் கண்முன் தோன்றி மறையா நிற்கின்றனர். அவர்களை நாம் போற்றித் துதிப்போமாக.
宽

Page 40
52 கணினியை விஞ்சும் மனித மூளை
இன்றைய அணைப்பு நடனத்திற்கு அன்றைய துணங்கைக் கூத்து ஊற்றா?
நிம் பண்டைத் தமிழர்கள் தம் பண்பாடு, கலை, கலாசாரம் போன்றவைக்கமையத் தாமனைவரும் களிப் புற்றிருக்கக் கூத்துக்கள் அமைத்து ஆடவரும், மகளிரும் ஒன்றிணைந்து ஆடிக் குலாவி மகிழ்ந்திருந்தனர். அக் கூத்துக்களில் துணங்கைக் கூத்துச் சிறப்புற்றிருந்தது.
துணங்கை என்பது ஒரு வகைக் கூத்து. இதனைப் பேய்க் கூத்தென்றும், சிங்கிக் கூத்தென்றும் கூறுவர். மகளிர் பலர் ஒன்று கூடி இரு கைகளையும் மடக்கி விலாவிடத்து அடித்துக் கொண்டு ஆடுவது தான் துணங்கைக் கூத்து. நிணந்தின் வாயள் துணங்கை தூங்க. (திருமுருகு, 56) என்னும் அடிக்கு 'பழுப்புடையிருகை முடக்கியடிக்க, துடக் கரிய நடையது துணங் கையாகும்’ என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். இதுதான்துணங்கைக் கூத்தின் இலக்கணமாகும்.
பின்வரும் அடிகளால் பேய்க் கூத்தைத் துணங்கைக் கூத்தென்றும் அறியலாம்.

கா. விசயரத்தினம்
“குழிகட்பேய் துணங்கை யெறிந்து.”
- (காரைக்கா. மூத்ததிரு)
“பிணம் பிறங்கழுவத்துத் துணங்கையாடி.”
- (பதிற்றுப்பத்து 5-12)
“பிணப்பறைக்குரலு வந்து வந்து சில பேய் துணங்கையிடு தொறும்.”
- (565uUT 53) “பிள்ளை வீழ விழவும், பெருந் துணங்கை கொட்டுமே.”
- (கலிங்கத்துப் பரணி 310)
இன்னும், மகளிரும் ஆடுகளத்தில் துணங்கைக் கூத்தாடுவதைப் பின் வரும் பாக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
“இலங்குவளை மடங்கையர், துணங்கையஞ் சீர்த்தழுஉ மறப்ப." - (மதுரைக்கா.)
“மகளிர் தழிஇய துணங்கையானும் யானுமோ ராடுகள மகளே என்கைக்.”
- (குறுந்தொகை 31)
“வணங்கிறைப் பணைத்தோள் எல்வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன அவ்வரைக்.” - (குறுந்தொகை 364) மேலும்,
“துணங்கை பாடிய வலம்படு கோமான்
- (பதிற்றுப்பத்து 57) எனவும்,

Page 41
54 கணினியை விஞ்சும் மனித மூளை
“குறும்பைந் தொடியன், விழவர் துணங்கை தழுஉவகஞ் செல்ல.”
- (நற்றிணை 50)
எனவும்,
“தணந்ததன் தலையும், நீ தளர்இயல் அவரொடு துணங்கையாய். ”
- (கலித்தொகை. மருதக்கலி 1-17-18)
எனவும்,
வருமாற்றான் மைந்தரும் துணங்கைக் கூத்தாடுவது புலனாகின்றது. இதனால் மகளிரும் மைந்தரும் ஆடுங் கூத்தையும் துணங்கை எனக் கூறுவர்.
விழாக் காலங்களில் மகளிர் சேர்ந்து துணங்கை ஆடுவதும், ஆடவர் அவர்களுக்கு முதற் கை கொடுத்தலும் பண்டைய வழக்கம் ஆகும்.
“நிரை தொடி நல்லவர் துணங்கையுள்
தலைக் கொள்ள..”
- (கலித்தொகை. மருதக்கலி. 8-16)
எனவும்,
“மெல்லினர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூ உந்து”
- (புறநானூறு 24-8-9) எனவும், கூறியவற்றால் ஆடவர் மகளிர்க்கு முதற் கை தருதலையும் விளக்கி நிற்கின்றது.

கா. விசயரத்தினம் 55 யாண்டுங் காணேன் மாண்தக் கோனை
அவள் ஒரு காதற்றலைவி. ஆடுகளத்தில் துணங்கை ஆடும் இயல்பினள். அக் களத்தில் ஒரு தலைவனின் நட்புப் பெற்றிருந்தாள். சில நாளில் அவன் பிரிந்து விட்டான். அவன் பிரிவு அவள் கைவளையல்களைக் கூட நெகிழச் செய்து விட்டது. அவள் அவனைத் தேடுகின்றாள். வீரர்கள் கூடும் விழாவிடங்களிலும், மகளிர் சேர்ந்து துணங்கை ஆடும் இடங்களிலும், மற்றைய எல்லா இடங்களிலும் தேடியும் அவனைக் கண்டிலள். குறுந்தொகையின் ஒரு பாவின் மூலம் அத் தலைவியின் கூற்றினைப் பார்ப்போம்.
“மள்ளர் குழி இய விழவி னானும் மகளிர் தழிஇய துணங்கை யானும் யாண்டுங் காணேன் மாண்தக் கோனை யானுமோ ராடுகள மகளே என்கைக் கோடீ ரிலங்கு வளை நெகிழ்த்த பீடுகெழு குரிசிலுமோர் ஆடுகள மகனே.”
- (31)
தளர் இயல் அவரொடு துணங்கையாய்
‘என்னைப் பிரிந்தாய். யான் வருந்திக் கிடந்தேன். அப்பொழுது தளர்ந்த இயல்பினரான பரத்தையரோடு நீ துணங்கைக் கூத்தாடிக் கொண்டிருக்கிறாய் என்றொரு பறந்து வந்த செய்தியையும் கேட்டேன். இப்போது, நீயோ ஒளிபூத்த நுதலினரான அவரோடு ஒன்றாகி மகிழ்ந்த களிப்பு வழிந்த அழகு கலையுமுன் என்முன்

Page 42
56 கணினியை விஞ்சும் மனித மூளை
வந்துள்ளாய்' என்று தன் மனக் குமுறலை வெளிக் கொணர்ந்தாள் இன்னொரு தலைவி.
“தார் கொண்டாள் தலைக்கோதை தடுமாறிப் பூண்டநின் ஈர் அணி சிதையாது எம்இல் வந்து நின்றதை தணந்ததன் தலையும் நீ தளர் இயல் அவரொடு துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பன்றோ ஒளி பூத்த நுதலாரோடு ஓரணிப் பொலிந்த நின் களிதட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை."
- (கலித்தொகை. மருதக்கலி. 1-15-20)
கரையிடைக் கிழிந்த நின் காழகம்
‘என் முன் வந்து அடிபணிகிறாய். என்னை உன் வசமாக்க முனைகிறாய். நிரை தொடியுடைய பரத்தையரோடு நீ ஆடிய துணங்கைக் கூத்தினால், கரை கிழிந்துள்ள உன் ஆடை உன் னைக் காட்டிக் கொடுக்கிறதே' என்று தன் கணவனின் வேண்டாச் செயலைத் தடயத்துடன் நிரூபிக்கின்றாள் அவன் துணைவி.
“முன் அடிப்பணிந்து எம்மை உணர்த்திய வருதிமன்
நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைக் கொள்ளக்
கரையிடைக் கிழிந்த நின் காழகம் வந்துரையாக் கால்”
- (கலித்தொகை. மருதக்கலி. 8-15-17)
பேய்ப் பெருந் துணங்கை
மேலும், பேய்களும் துணங்கைக் கூத்தாடுவதாகச் சயங்கொண்டார் கலிங்கத்துப் பரணியில் குறிப்பிடுகின்றார். கொடும் பசியால் வாடிய பேய்களுக்கு முதற் குலோத்துங்கச் சோழ மன்னன் போர் தொடுத்துள்ள செய்தி

கா. விசயரத்தினம் 57
ஒன்று கிட்டுகின்றது. பிணம் தின்னும் பேய்கள் உணவு கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியடைந்தன. சில பேய்கள் தம் கைப் பிள்ளைகள் கீழே விழுந்து விடும் படியாகப் பெரிய துயங்கை என்னும் கூத்தை ஆடிக் கைகளைக் கொட்டின. வள்ளைப் பாட்டைப் பாடியும், ஆடியும், ஒடியும் மற்ற பேய்களைத் தம்மோடு விளையாட வருமாறும் கூப்பிட்டன.
“பிள்ளை வீழ விழவும் பெருந் துணங்கை கொட்டுமே வள்ளை, பாடி, ஆடி, ஓடி வா என அழைக்குமே.”
(கலிங்கத்துப் பரணி 310)
இதுகாறும் துணங்கைக் கூத்தைப் பற்றியும் அதனால் ஏற்படும் சில நிகழ்வுகள் பற்றியும் பார்த்தோம்.
அணைப்பு நடனம்
இனி, மேல்நாட்டார் ஆடும் அணைப்பு நடனத்தைப் பற்றிப் பார்ப்போம். அணைப்பு நடனமென்பது ஆணும், பெண்ணும் ஒருங்கு சேர்ந்து ஓர் ஆடு களத்தில் அணைத்து ஆடும் நடனமாகும். ஆண் பெண்ணின் ஒரு கையை இறுகப் பற்றிக்கொண்டு, மற்ற கையால் பெண்ணின் இடுப்பை இறுக அணைத்துக் கொண்டும், பெண்ணின் மற்ற கையால் ஆணின் தோளைப் பற்றிக்கொண்டும் ஆடும் நடனமாகும். இது இருவர் சேர்ந்து ஆடும் ஒரு குழு நடனம். இதில் கணவனும் மனைவியும் சேர்ந்தும் ஆடுவர். வந்தவர்கள் எல்லாருடனும் இருவர் இருவராகச் சேர்ந்து

Page 43
58 கணினியை விஞ்சும் மனித மூளை
மாறி மாறியும் ஆடுவர். இசைக்கேற்றவாறு அசைவு போட்டுத் துள்ளிக் குதித்தும் ஆடுவர்.
தற்பொழுது இந் நடனத்தைத் தமிழர்கள் சிலரும் ஆடுவதை நாம் பார்க்கக் கூடியதாகவுள்ளது. ஆசை யாரைத்தான் விட்டு வைக்கின்றது? இதனுடன் நாகரீக மோகமும் சேர்ந்துவிட்டால் நடப்பதை என்னவென்று கூறுவது.?
துணங்கைக் கூத்தும் அணைப்பு நடனமும் மனித உடல் நலன் கருதித் தேகாரோக்கியத்துக்காக ஏற்படுத்திய கூத்தும் நடனமும் எனலாம்.
அந் நாளில் சிறப்புற்றிருந்த துணங்கைக் கூத்து இந் நாளில் அருகி வந்தாலும், அவை வேறு பல புதிய கூத்துகளும், நடனங்களும் உருவாக ஏதுவாயிருந்துள்ளன.
எனவே, அணைப்பு நடனம் உருவாவதற்கு நம் பண்டைத் தமிழர் கைக் கொண்டிருந்த, ஆடவர் மகளிர்க்கு முதற் கை கொடுத்துதவிய துணங்கைக் கூத்துதான் கருவாய் அமைந்துள்ளதெனத் துணிந்து கூறலாம்.
责

கா. விசயரத்தினம் 59
பரந்து விரிந்த பிரபஞ்ச வெளியில்
ஒரு சூரிய குடும்பம்
Tெனம் பரந்து விரிந்த எல்லையற்ற ஒரு பெரும் வெட்ட வெளி. இதில் சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், ஒன்பது கிரகங்கள் முதலிய கோளங்கள் அந்தரத்தில் ஒவ்வொன்றின் இழுப்புச் சக்தியால் மிதந்தவண்ணமுள்ளன.
ஒவ்வொரு பொருளும் மற்ற பொருள்களைத் தன்னிடம் ஈர்க்கின்றன. பொருள் பெரிதாயிருந்தால் ஈர்ப்பு விசையும் பெரிது. பூமி சந்திரனை இழுக்கப் பார்க்கிறது. சந்திரன் பூமியை இழுக்கப் பார்க்கிறது. இவ்விரண்டையும் சூரியன் மற்றும் கிரகங்களும் இழுக்கப் பார்க்கின்றன. இப்படியே ஒவ்வொன்றின் விசைகளின் தன்மையால் எல்லாக் கோள்களும் சூரிய மண்டலத்திலிருந்து பிரிந்து போகாமல் இருக்கின்றன. இக் கோள்கள் யாவும் சுழன்ற வண்ணமே உள்ளன.
இனி, சூரியன், சந்திரன், சூரிய குடும்பத்திலடங்கிய ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுறெனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவற்றைப் பற்றித் தனித் தனியே ஆராய்வோம்.

Page 44
60 கணினியை விஞ்சும் மனித மூளை
சூரியன்
வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள் அனைத்தும் சூரியன்களே. நமது சூரியனை விடப் பெரிய நட்சத்திரங்களும் வானத்தில் உள்ளன. சூரியனிலிருந்து மற்றைய கிரகங்களிலும் பார்க்க புளுட்டோ கிரகமே அதிக தூரத்திலுள்ளது. இக் கிரகத்திலிருந்து பார்த்தால் நமது சூரியனும் ஒரு சிறிய நட்சத்திரமாகவே தோன்றும். நம் சூரியன் பூமிக்கு மிக அண்மையில் இருக்கும் ஒரு நட்சத்திரம். எனவே தான் சூரியன் நமக்குப் பெரியதாகத் தோன்றுகிறது. சூரியன் உட்பட ஒளிவிடும் தன்மை நட்சத்திரங்களுக்குத் தான் உண்டு. சூரியன் ஓர் அணு உலை போல் இயங்கிப் பிரம்மாண்டமான சக்தியையும், ஒளியையும் தந்தவண்ணம் இருக்கின்றது. இவ்வணு உலையில் ஐதரசன் அணுக்கள் ஹீலியமாக மாற்றப்பட்டு, பல வகைக் கதிர்களாய் நாலா பக்கமும் சக்தியாகவும் வெளிச்சமாகவும் பரவி உலக உயிரனைத்தையும் காத்து வருகின்றது. ஒவ்வொரு வினாடியும் 60 கோடி தொன் ஐதரசன் ஹிலியமாக மாற்றப்படுகின்றது.
சூரியன் பூமியைவிட மிகப் பிரம்மாண்டமானது. சூரியனில் 10 இலட்சம் பூமிகளை அடக்கலாம். சூரிய குடும்பத்திலடங்கிய அத்தனை பொருட்களையும் சூரியனில் வைத்தாலும் அஃது ஒரு சதவிகித இடத்தையே நிரப்பக் கூடியது.
நாம் வாழும் பூமி ஒரு காலத்தில் சூரியனின் ஒரு பகுதியாக இருந்ததாம். இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்த பொழுது பூமி தெறித்துப் பிரிந்து எரிந்து

கா. விசயரத்தினம் 61
கொண்டிருந்தது. காலக் கிரமத்தில் மேற்பகுதி சூடு தணிந்து மனித வாழ்வுக்கு இடமளித்தது.
சூரியனின் விட்டம் 863,040 (1,380,864 கி.மீ.) மைல்களாகும். பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலுள்ள தூரம் சுமார் 9.3 கோடி (14.3 கோடி கி.மீ.) மைல்கள். ஒளியின் வேகம் ஒரு செக்கனுக்கு 186,000 மைல்கள். இதன்படி பார்த்தால் சூரியனிலிருந்து புறப்படும் ஒளிக் கீற்று பூமியை வந்தடைய எட்டு நிமிடங்களாகும்.
சூரியன் நடுவில் (மையம்) வெப்ப நிலை 1.4 கோடி சென்டி கிரேட் பாகையாகவும் மேற்பரப்பில் வெப்ப நிலை 6,000 சென்டி கிரேட் பாகையாகவும் உள்ளதெனக் கணிக்கப்பட்டுள்ளது.
பயங்கர வெப்பத்தைக் கக்கி வரும் நமது சூரியன் 500 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்க வேண்டு மென்பது விஞ்ஞானிகளின் கணிப்பாகும். இது நம் சூரியனின் நடு வயதாகும். எனவே மேலும் 500 கோடி ஆண்டுகளுக்கு நம் சூரியன் ஒளி விட்டுப் பிரகாசிப்பானென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
சூரியன் கடைசிக் காலத்தில் சக்தியை இழப்பான். அப்பொழுது அணையப் போகும் விளக்கு பிரகாசித்து எரிவது போல் சூரியனும் விரிவடைந்து தோற்றம் பல மடங்காகிப் பெரிதாகித் தாங்க முடியாத வெப்பத்தால் சூரிய குடும்பம் அனைத்தும் தாக்கப்படும். இதனால் சூரியனுக்கு மிக அண்மையிலுள்ள புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்கள் நீராவியாகிக் கரைந்து விடும். அப்பொழுது நமது பூமியும் எரிந்து சாம்பலாகி விடும். இவை இன்னும்

Page 45
62 கணினியை விஞ்சும் மனித மூளை
500 கோடி ஆண்டுகளின் பின்னரே நடக்கும். இக் காலப் பகுதியில் இயற்கை என்ன மாற்றத்தைக் கொண்டு வருமோவென்பதை இருந்துதான் பார்க்க வேண்டும்.
பூமியும் ஏனைய கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதே போல் சூரியனும் தான் இருந்துவரும் பால் வெளி எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் ஒரு மிகப் பெரிய சுற்றாகச் சுற்றி வருகின்றது. 25 கோடி ஆண்டுகளில் இப் பெரிய சுற்று வட்டத்தை ஒருமுறை சுற்றி வருகின்றான் சூரியன். இதுவரை 20 தடவைகள் இப்படிச் சுற்றி வந்துள்ளான் சூரியன். அதாவது 500 கோடி ஆண்டுகள் சென்றுவிட்டன. இன்னும் சூரியன் 20 தடவைகள் சுற்ற வேண்டும். அதன்பின் சூரியனின் கதை முடிந்துவிடுமென்பது கணக்கு. இதற்குக் காலம்தான் பதில் கூற வேண்டும். சந்திரன்
பூமிக்கு மிக அண்மையில் இருந்து வலம் வந்து கொண்டிருப்பவன் தான் சந்திரன். நாம் வாழும் பூமி ஒரு காலத்தில் சூரியனின் ஒரு பகுதியாய் ஒன்றாயிருந்ததாம். இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்தபொழுது பூமி அதிலிருந்து பிரிந்து வேறானது. பூமி தோன்றியது போலவே சந்திரனும் பூமியிலிருந்து தோன்றினான். சந்திரன்
பூமியிலிருந்து பிரிந்ததால் ஏற்பட்ட ஆழ்ந்தகன்ற குழியே பசிபிக் மகா கடல் எனப் பெயர் பெற்றது.
சந்திரன் பூமியைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறான்.
இரவில் எங்களுக்கு நிலாவைத் தருகின்றது. அது குளிர்ச்சி கரமாகவும் இன்ப கரமாகவும் இருக்கும். காதலர்கள் இதை

கா. விசயரத்தினம் 63
முறையாகப் பயன்படுத்திக் கொள்வர். சந்திரன் மக்களின் செல்லப் பிள்ளை மாதிரி. “நிலா நிலா வா வா!” என்று குழந்தைகள் விளையாடுவார்கள். சந்திரனைக் காட்டிக் கதை சொல் லித் தாய் மார் பிள்ளைகளுக்கு உணவூட்டுவார்கள். பாவலரும், நாவலரும், புலவரும் சந்திரனை விட்டு வைக்க மாட்டார்கள்; சந்திரனை இழுத்து வந்து தாம் விரும்பிய இடங்களில் கட்டி வைத்து விட்டு வேடிக்கை பார்ப்பார்கள். ஆதி காலம் தொட்டு பெரும் பாலான நாட்டு மக்கள் சந்திரனைக் கடவுளாக வணங்கி வருகிறார்கள். திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்' என்று இளங்கோ அடிகள் சிலப்பதிகாரத்தில் சிறப்புறக் கூறியுள்ளார்.
இப்படித் தெய்வமாக மதித்து வந்த சந்திரனில் அமெரிக்க விண்வெளி வல்லுனரான நீல் ஆம்ஸ்ரோங் 1969ம் ஆண்டு யூலை மாதம் 20ம் திகதி அப்பொலோ 11ல் சென்று முதல் முதலாகக் காலடி எடுத்து வைத்தார். அங்கு அமெரிக்கக் கொடியைப் பறக்க விட்டார். உலாவித் திரிந்தார். சந்திரனின் மண், கல் போன்றவற்றை அள்ளிக் கொண்டு வந்து ஆய்வுக் கூடத்துக்குக் கொடுத்தார். சந்திரனில் மனிதன் கால் பட்டுவிட்டதே என்று மனமுடைந்து போன சில சமயவாதிகளும் உளர். ダ
சந்திரன் தோன் றிச் சுமார் 4,600,000,000 ஆண்டுகளாகின்றன. பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள இடைத்துரம் சுமார் 238,857 (384,403 கி.மீ) மைல்களாகும். சந்திரனின் விட்டம் 2,160 (3,476 கி.மீ.) மைல்கள். இது பூமியின் விட்டத்தில் நாலில் ஒரு பகுதியாகும்.

Page 46
64 கணினியை விஞ்சும் மனித மூளை
சந்திரனின் சுற்றளவு சுமார் 6,790 (10,927 கி.மீ) மைல்களாகும். சந்திரனின் பரப்பளவு சுமார் 14,670,000 (38,000,000 சதுர கி.மீ) சதுர மைல்களாகும்.
சந்திரனின் சுற்று வேகம் மணித்தியாலத்துக்கு 2,300 (3,700 கி.மீ.) மைல்கள். இவ் வேகத்தில் பூமியை ஒரு முறை சுற்றி வர 27 நாட்கள், 7 மணித்தியாலங்கள், 43 நிமிடங்களை எடுக்கின்றான். சந்திரன் 1.4 மில்லியன்(2.3 மில்லியன் கி.மீ.) மைல்கள் நீள் வடிவமான சுற்றுப் பாதையில் சுற்றி வருகின்றான்.
பூமியைப் போல் சந்திரனில் உயிரினங்கள் வாழ முடியாது. அங்கு தண்ணிர் இல்லை. காற்று இல்லை. சந்திரனில் கடும் வெப்பமும் (260f பாகை 127C) கடும் குளிரும் (-280f பாகை -173C) காணப்படுகின்றது. சில இடங்களில் -400f (240C) பாகையாகவும் உறைந்த நிலையில் உள்ளது.
சந்திரனின் ஈர்ப்புச் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்தியை விட ஆறு மடங்கு குறைவானது. பூமியில் 5 அடி தாண்டும் மனிதன் சந்திரனில் 30 அடி பாயலாம். ஆறு நாட்களில் பூமியிலிருந்து ரொக்கட் மூலம் சந்திரனுக்குப் போய்த் திரும்பி வரலாம். பூமிக்கு மிக அண்மையில் சந்திரன் இருப்பதனால் நம் கண்களுக்கு நட்சத்திரங்களிலும் பார்க்கப் பெரிதாகவும், சூரியன் அளவிலுமாய்த் தோற்றமளிக்கின்றான்.
நம் பூமிக்கு ஒரே ஒரு சந்திரன் உள்ளான். புதன், சுக்கிரன் ஆகிய கிரகங்களில் சந்திரன் இல்லை. மற்றைய ஆறு கிரகங்களான சனி, வியாழன், யுறேனஸ், நெப்டியூன்,

கா. விசயரத்தினம் 65
செவ்வாய், புளுட்டோ ஆகியவற்றில் முறையே 18, 16, 15, 08, 02, 01 (ஒருமித்து 60) சந்திரன்கள் உள்ளன. இவற்றில் நம் பூமிச் சந்திரன் ஆறாவது பெரிய சந்திரனாகும்.
சூரிய வெளிச்சத்தால் பூமியினதும், சந்திரனதும் நிழல்கள் பரந்த வெளியில் வீசப்படுகின்றன. சந்திரன் பூமியின் நிழலைக் கடக்கும் பொழுது நாம் சந்திர கிரணத்தைப் பார்க்கிறோம். இந்த நேரத்தில் சூரியன், பூமி, சந்திரன் ஆகியன ஒரு நேர் கோட்டில் வந்தமையும்.
1. புதன் கிரகம் (மேர்குரி)
சூரியனுக்கு மிக அண்மையிலிருந்து முதலாவது கிரகமாகச் சூரியனைச் சுற்றி வரும் கிரகம்தான் புதன். மற்றைய கிரகங்களிலும் பார்க்க புதன் சிறியது. சூரியனுக்கு அருகில் இருப்பதனால் புதன் கிரகம் பயங்கர வெப்பம் உடையது. எனவே அங்கு உயிர் வாழும் வாய்ப்பு இல்லை. புதன் சந்திரனை விடக் கொஞ்சம் பெரியது. பூமியை விடக் கொஞ்சம் சிறியது.
பூமியை விட வேகமாகச் சுற்றும் கிரகம் புதன். இதன் வேகம் செக்கனுக்கு 30 (48கி.மீ.) மைல்களாகும். இக் கிரகம் சூரியனிலிருந்து 3.6 கோடி (5.7 கோடி கி.மீ.) மைல்களுக்கு அப்பால் உள்ளது. புதன் கிரகத்தின் சராசரி விட்டம் 3,030 மைல்கள் (4,848 கி.மீ.) ஆகும். புதன் கிரகம் 88 நாட்களில் சூரியனை ஒருமுறை சுற்றி வருகின்றது. இக் காலம் புதனுக்கு ஒரு ஆண்டாகும். பூமியில் 10 வயது புதனில் 40 வயதாகும். புதன் கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்றிவர 176 நாட்களை

Page 47
66 கணினியை விஞ்சும் மனித மூளை
எடுக்கின்றது. புதனிலிருந்து சூரியனைப் பார்த்தால் இப்போது நமக்குத் தெரிவதைவிட மூன்று அல்லது நான்கு மடங்கு பெரிதாகத் தெரியும்.
மரினர்-10 என்ற செயற்கைக் கோள் 1975ஆம் ஆண்டில் புதனுக்கு அருகே சென்று படங்களை எடுத்துத் தந்துள்ளது. இதன்படி பூமியில் உள்ளவாறு புதனில் வாயு மண்டலம் இல்லை. சூரியனின் ஈர்ப்பு புதனில் அதிகம். இன்னும் அங்கு கடும் வெப்பம் உள்ளது. இதனால் புதனில் வாயு, நீர் என்பன இல்லை. ஆனால் மிகக் குறைந்த காந்த மண்டலமும், ஓரளவு ஹரீலியம் வாயுவும் காணப்படுகின்றன.
சூரிய வெப்பம் எட்ட முடியாத ஆழமான பல குழிகள் காணப்படுகின்றன. இவ்வாறான இடங்களில் தண்ணிர் உறை நிலையில் காணப்படலாமென விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இக் கிரகத்தில் ஒரு சந்திரனும் இல்லை. சூரியனிலிருந்து புறப்படும் ஒளிக் கதிர் மூன்று நிமிடங்களில் புதனை வந்தடைகின்றது.
2. சுக்கிர கிரகம் (வீனஸ்)
சுக்கிர கிரகத்தை வெள்ளி, வீனஸ் என்றும் அழைப்பர். புதனுக்கு அடுத்ததாகச் சூரியனைச் சுற்றும் இரண்டாவது கிரகமிது. இக் கோள் சூரியனிலிருந்து 6.7 கோடி (10.7 கோடி கி.மீ) மைல்களுக்கு அப்பாலுள்ளது. இங்கும் சந்திரன் ஒன்றும் இல்லை. சூரிய ஒளிக் கதிர் சுக்கிரனை வந்தடைய ஆறு நிமிடங்களாகின்றன.
இக் கிரகம் 225 நாட்களில் சூரியனை ஒரு சுற்று சுற்றி வருகின்றது. இக் காலம் சுக்கிரனுக்கு ፴9®

கா. விசயரத்தினம் 67
வருடமாகும். பூமியில் 15 வயது, சுக்கிரனில் 24 வயதாகும். இது தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 243 நாட்களை எடுக்கின்றது. சுக்கிரனின் சராசரி விட்டம் 7,516 மைல்கள் (12,025 கி.மீ.) ஆகும்.
இக் கிரகம் பூமியின் அளவைக் கொண்டது. பூமியும், சுக்கிரனும் சகோதர கிரகங்கள் என்று கூறுவர். சூரிய குடும்பத்தில் மிகப் பிரகாசம் பொருந்திய கிரகமிது. சந்திரனுக்கு அடுத்ததாக இரவில் வானத்தில் பிரகாசம் தருவது சுக்கிரன்தான்.
மேகங்களும், வாயுக்களும் இக் கிரகத்தை சதா மூடிய வண்ணம் இருக்கின்றன. ஆகவே சூரிய ஒளி இக் கிரகத்தில் படுவதில்லை. 77 சதவிகிதமான சூரிய ஒளி மேகக் கூட்டத்தில் பட்டுத் தெறிப்பதால் எம் கண்களுக்குப் பிரகாசமான ஒரு நட்சத்திரமாகத் தெரிகின்றது. சூரியன் மறையும் பொழுதும், விடியற் காலையிலும் ஆகாயத்தில் பிரகாசமாகத் தெரியும் நட்சத்திரம்தான் வீனஸ். இக் கிரகத்தில் அமுக்க விசை கூட. எனவே, இங்கு தண்ணிர் இல்லை. வீனஸ் சூழல் அதிக வெப்பமான அமுக்கம் கொண்டது. எனவே, மனிதன் இங்கு காலடி வைக்க (plquung.
3. பூமி
பூமி சுக்கிர கிரகத்துக்கு அடுத்து மூன்றாவதாகச் சூரியனைச் சுற்றி வருகின்றது. மற்றைய கிரகங்களுக்கு இல்லாத இயற்கை அற்புதங்கள் நிறைந்ததுதான் பூமி. உயிரினங்கள் வாழக்கூடிய கிரகம் பூமி ஒன்றுதான். மற்றைய எட்டுக் கிரகங்களிலும் உயிர் வாழ முடியாது.

Page 48
68 கணினியை விஞ்சும் மனித மூளை
தோண்டத் தோண்ட வற்றாக் கனி வளங்கள் நிறையூப் பூமியில் நிறைந்துள்ளன.
நாம் வாழும் பூமி ஒரு காலத்தில் சூரியனின் ஒரு பகுதியாயிருந்ததாம். இயற்கை மாற்றத்தால் சூரியன் வெடித்தது. அப்பொழுது பூமி சூரியனிலிருந்து தெறித்து வேறானது. இது 500 கோடி ஆண்டுகளுக்கு முள் நிகழ்ந்த தென்பது விஞ்ஞானிகளின் கணிப்பு. அன் O நெருப்புக் கோளமாகச் சூரியனைப் போல் எரிந்து கொண்டு தான் இருந்தது. நீண்ட காலத்தின் பின் பூமியின் மேற்பரப்பு குளிர்ச்சியடைந்தது. ஆனால், பூமியின் நடுப்பகுதி இன்றும் அனலாகவே இருக்கின்றது. பூமி குளிர்ந்தது; மேகங்களும் குளிர்ந்தன; பெரு மழை பெய்தது; நீர் குழிகளில் பாய்ந்து, தேங்கி, கடல்கள் தோன்றின.
பூமி சூரியனிலிருந்து தோன்றியது போல், சந்திரனும் பூமியிலிருந்து தெறித்துத் தோன்றினான். இதனால் பூமிக்கு ஏற்பட்ட ஆழ்ந்தகன்ற குழியே பசிபிக் மகா சமுத்திரம் எனப் பெயர் பெற்றதென்பர்.
கடைசி 50 கோடி ஆண்டுகளின் பின்பே பூமியில் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன. முதலில் உயிரினங்கள் நீரில் தோன்றின. முதற்றோன்றிய உயிர் கண்ணுக்குத் தெரியாத அணுவாயிருந்தது. அதன் உடல் இறுகிய திரவமாயிருந்தது. அதற்குத் தலை, கால் இருக்கவில்லை. அது செடியென்றோ, விலங்கென்றோ, ஆணென்றோ, பெண்ணென்றோ கூற முடியாதிருந்தது. அவற்றால் நீரிற் றான் உயிர் வாழ முடிந்தது. காலக்கிரமத்தில் இவ்வணுவிலிருந்து உயிர்கள் தோன்ற
 
 

கா. விசயரத்தினம் 69
ஆரம்பித்தன. நாளடைவில் உயிர்கள் தரையிலும் தோன்றின. 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு தான் மிருக நிலையிலுள்ள மனிதன் மானிடனாக மாறினான். சூரிய குடும்பத்தில் மற்றைய கிரகங்களுக்கு இல்லாத இந்த அற்புத நிகழ்வு பூமியில் மட்டுமே நிகழ்ந்துள்ளது. பூமியில் மட்டும்தான் உயிர் வளர்ச்சிக்குரிய சூழ் நிலை அமைந்துள்ளது. பூமி உயிர் வாழ்வது சூரியனாற்றான்; சூரியனின்றேல் பூமியுமில்லை; மனித இனமுமில்லை; புல் பூண்டுமில்லை.
சூரியனுக்கும் பூமிக்குமுள்ள இடைத் தூரம் 9.3 கோடி (14.8 கோடி கி.மீ.) மைல்களாகும். பூமியின் விட்டம் 7,921 (12,673 கி.மீ.) மைல்களாகும். பூமி 23 மணி, 56 நிமிடம், 04 செக்கனில் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வருகின்றது. இக் காலம் பூமிக்கு ஒரு நாளாகும். பூமி 365.25 நாட்களில் ஒரு தடவை சூரியனைச் சுற்றி வருகின்றது. இது பூமிக்கு ஒரு வருடமாகும்.
பூமியில் ஒரு சந்திரன் உள்ளான். இச் சந்திரன் பூமியைச் சுற்றி வருகின்றான். சூரிய ஒளி பூமிக்கு வந்து சேர 8 நிமிடங்களாகின்றது. பூமியைச் சுற்றிச் சுமார் 300 மைல் (480 கி.மீ.) உயரத்துக்கு வாயு சூழ்ந்துள்ளது. பூமியின் ஆழம் 8,000 (12,800 கி.மீ.) மைல்களாகும். பூமியின் சுற்றளவு 25,000 (40,000 கி.மீ. ) மைல்களாகும். பூமியில் மூன்றில் ஒரு பங்கு மேட்டுத் தரையாகவும், மூன்றில் இரண்டு பங்கு உப்பு நீராகவும் உள்ளது.
பூமியின் சுற்று வேகம் வினாடிக்கு 18.5 (29.6 கி.மீ) மைல்களாகும். மணித்தியாலத்துக்கு 66,000 (105,600

Page 49
70 கணினியை விஞ்சும் மனித மூளை
கி.மீ) மைல்களுமாகும். பூமி ஒருமுறை சூரியனைச் சுற்றி வர 60 கோடி (96 கோடி கி.மீ.) மைல்களைக் கடந்து செல்கின்றது. பூமியானது 6 இலட்சத்து 60 ஆயிரம் கோடி தொன்கள் நிறையுள்ளது. பூமியின் மேற் புறத்திலிருந்து 1,800 (2,880 கி.மீ.) மைல் ஆழத்தில் கற்பாறைகள் உருகி மலைக் குழம்பான நிலையில் காணப்படுகின்றன. இவை சில வேளைகளில் பூமித் தரையைப் பீறிக் கொணர் டு பூகம் பமாகவும் எரிமலையாகவும் சீறிப் பாய்ந்து மனித உயிர்களையும் நாட்டையும் அழித்து விடுகின்றன.
பூமியில் ஈர்ப்புச் சக்தி கூட. நாம் பூமியில் கால் பதிய வைத்து நடப்பது இந்த ஈர்ப்புச் சக்தியால் தான். இந்த ஈர்ப்பு விசையிலிருந்து விடுபட வேண்டுமாயின் நாம் வினாடிக்கு 7 மைல் (11.2 கி.மீ.) வேகத்தில் உயரச் செல்ல வேண்டும். இல்லாவிடில், ஈர்ப்புச் சக்தி எங்களைப் பூமிக்கு இழுத்துவிடும். கிரகங்களில் அடர்த்தியானது பூமி தான். தண்ணிரை விட 6 மடங்கு அடர்த்தி கொண்டது.
நாம் வாழும் இந்த உலகம் இன்று ஏழு கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இப் பிரிவுக்கு நகர்வுத் தன்மையே காரணமாகும்.
உலகில் கண்டங்கள் ஆதியில் ஒன்றாகவே இருந்ததென்று விஞ்ஞானிகள் கருதுகின்றார்கள். அன்றைய இராட்சத மிருகமான டைனோசர் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்கு தங்கு தடையின்றி நடமாடியுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. இவற்றின் எலும்புக் கூடுகளே இதற்குச் சாட்சி.

5. விசயரத்தினம் 71
ஒரு கோடியே இருபத்தைந்து இலட்சம் ஆண்டுகளுக்கு முன் அந்த அகன்ற நிலப் பரப்பில் முதன் முதலாக ஒரு பெரும் பிளவு ஏற்பட்டது. இஃது இரண்டு அமெரிக்க கண்டங்களையும் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து பிரித்து அட்லாண்டிக் மகா சமுத்திரத்தைத் தோற்றுவித்தது. இதன் பின் ஆறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு வேறொரு பிளவால் ஆபிரிக்காவை இந்தியாவிலிருந்தும் ஆஸ்திரேலியாவை அட்டார்ட்டிக்காவிலிருந்தும் பிரித்தது. இன்னும், இந்தியாவின் நகர்வு ஆசியாவுடன் மோதி, நொருங்கி, மண் திரண்டு இமயமலை தோன்றியது.
பூமியில் பூகம்பம், எரிமலை, நடுக்கம் நிகழ்வதுண்டு. இதன் காரணமாக அடர்ந்த காடுகள் மண்ணால் புதைக்கப் பட்டு, மண்ணின் பார அழுத்தத்தால் நிலக்கரிப் பாறையாக மாறுகின்றது. இப் பாறைகளே பெற்றோலி , மண்ணெண்ணெய் ஆகிய எண்ணெய் ஊற்றுக்களின் உறைவிடமாம்.
4. செவ்வாய்க் கிரகம்
பூமிக்கு அடுத்து நான்காவதாகச் சூரியனைச் சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் கோள் தான் செவ்வாய்க் கிரகம். இது பூமியை விடச் சற்றுச் சிறியது. செவ்வாய்க் கிரகம் சூரியனிலிருந்து 14.1 கோடி (22.5 கோடி கி.மீ) மைல்கள் தொலைவில் உள்ளது. இதன் சராசரி விட்டம் 4.220 (6,750 கி.மீ.) மைல்களாகும். இக் கிரகம் 24 மணி. 37 நிமிடம். 30 செக்கனில் தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருகின்றது. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 687 நாட்களாகின்றன. எனவே பூமியில் 30 வயது செவ்வாயில் 16 வயதாயிருக்கும்.

Page 50
72 கணினியை விஞ்சும் மனித மூளை
சூரிய ஒளிக் கதிர் செவ்வாய்க் கிரகத்தை வந்து சேர 12 நிமிடங்கள் ஆகின்றது. பூமியை விட, செவ்வாய்க் கிரகத்தில் ஈர்ப்புச் சக்தி குறைவானது. பூமியில் 50 இறாத்தல் நிறையானது செவ்வாயில் 19 இறாத்தல் நிறையாயிருக்கும்.
செவ்வாய்க் கிரகம் சூரியனிலிருந்து வெகு தொலைவில் இருப்பதனால் அங்கு குளிர் அதிகம். அங்கு பிராண வாயு இல்லை. எனவே அங்கு உயிரினமும் இல்லை. உயிரினம் அங்கு வாழவும் முடியாது. அங்கு கரியமில வாயுவே அதிகமாகக் காணப்படுகின்றது. இன்னும், அங்கு பிரம்மாண்டமான எரிமலைகளும் உள்ளன. அங்கு நீர்த் தன்மையும் இல்லை. எனினும், சில துருவப் பகுதிகளில் தண்ணிர் உறை நிலையில் உள்ளது.
சூரிய குடும்பத்தில் நான்காவது கிரகமான செவ்வாய்க்கும், ஐந்தாவது கிரகமான வியாழனுக்கும் இடையே காணப்படும் நீண்டகன்ற வெளியில் சின்னஞ் சிறு கிரகங்கள் காணப்படுகின்றன. இவை ஒரு பாதையில் சூரியனைச் சுற்றி வருகின்றன. இவற்றில் சில சிறியவை; சில பெரியவை.
ஒரு கிரகத்துக்குப் பதிலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாறைத் துண்டுகள் ஒரு பாதையில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன என்று 1801 ஆம் ஆண்டு சனவரி மாதம் முதலாந் திகதி இத்தாலியைச் சேர்ந்த வானசாத்திரி பியட்ஸே என்பவர் கண்டுபிடித்தார். சில சமயம் இப் பாறைத் துண்டுகள் ஒன்றோடொன்று மோதிச் சிதறுவதுமுண்டு. இன்னும் விண்வெளியில் சிறு சிறு துண்டுக் கற்களும் நிறைந்துள்ளன.

கா. விசயரத்தினம் 73 5. வியாழன் கிரகம் (யூபிட்டர்)
செவ்வாய்க் கிரகத்துக்கு அப்பால் சூரிய குடும்பத்தில் ஐந்தாவது கிரகமாகச் சூரியனைச் சுற்றி வலம் வரும் கிரகம்தான் வியாழன். இது கிரகங்கள் அனைத்திலும் மிகப் பிரம்மாண்டமானது. இதில் 1,300 பூமிகளை வைக்கலாம்.
இது சூரியனிலிருந்து 48.3 கோடி (77.3 கோடி கி.மீ.) மைல்களுக்கு அப்பால் உள்ளது. இதன் சராசரி விட்டம் 88,700 மைல்கள் (141,920 கி.மீ.) ஆகும். வியாழன் தன்னைத் தானே சுற்ற ஒன்பது மணித்தியாலங்களும் ஐம்பது நிமிடங்களும் (09 மணி. 50 நிமி.) எடுக்கின்றது. மணிக்கு 29,400 மைல்கள் (47,040 கி.மீ.) வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. இது சூரியனை ஒருமுறை சுற்றி வர 11 ஆண்டுகள் 317 நாட்கள் ஆகின்றன. இது வியாழனில் ஓர் ஆண்டாகும்.
வியாழனில் 16 சந்திரன்கள் வலம் வருகின்றன. சூரியக் கதிர் வியாழனை வநீ தடைய 43 நிமிடங்களாகின்றன. பூமியிலிருந்து ஒரு செய்தியை வியாழனுக்கு அனுப்பி அங்கிருந்து பதில் எடுப்பதாயின் நாம் ஒன்றரை மணித்தியாலம் காத்திருக்க வேண்டும். வியாழனில் அடர்த்தி குறைவு. எனினும், பூமியை விட வியாழனில் ஈர்ப்புச் சக்தி கூட. எனவே, பூமியில் 100 இறாத்தல் எடை வியாழனில் 264 இறாத்தலாயிருக்கும். வியாழனின் பாரம் பூமியின் பாரத்தை விட 300 மடங்கு அதிகம். வியாழனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்காகும்.

Page 51
74 கணினியை விஞ்சும் மனித மூளை
செவ்வாய்க் கிரகத்துக்கும் வியாழ கிரகத்துக்கும் இடையில் நீண்ட இடைவெளியில் சுமார் இரண்டு கோடியே இருபது இலட்சம் ( 02 கோடி 20 இலட்சம்.) பாறைத் துண்டுகள் காணப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இப் பாறைத் துண்டுகள் வியாழ கிரகத்தின் பயங் கர ஈர்ப் புச் சக்தி அமுக்கத் தாலி தோன்றியவையென்பதும் அவர்கள் கருத்தாகும்.
இவற்றில் பெரிய பாறைத் துண்டுகளுக்கு மட்டும் ஹிபுல்கோ, வெஸ்டர், ஈரோஸ், ஜூனோ என்ற பெயர்களை வைத்துள்ளனர். இவை பல்வேறு நீண்ட நெடிய பாதைகளில் சூரியனைச் சுற்றி வருகின்றன.
ஹிபுல்கோ என்ற பெரும் பாறை செவ்வாய்க்கருகில் சென்று மீண்டுமொரு சுற்றுச் சுற்றிச் சனிக் கிரக பாதை வரை சென்று திரும்புகிறது. இது மிக நீளமானதொரு பாதை. வேறு சில பாறைத் துண்டுகள் பூமிக்கருகில் வந்து செல்கின்றன. ஈரோஸ் என்ற கற்பாறை 1931ம் ஆண்டில் பூமிக்கருகில் வந்து சென்றது. இன்னும், 1968ல் வேறொரு பாறை பூமியின் ஆகர்ஷண சக்தியில் அகப்பட்டுச் சிதறுமென எதிர்பார்க்கப்பட்டு மக்கள் பீதியடைந்தனர். ஆனால், அப்படி ஒன்றும் நடக்கவில்லை. மேலும் 1972ம் ஆண்டு ஆகத்து மாதம் 10ம் திகதி 1,000 தொன் நிறை கொண்ட ஒரு கற்பாறை பூமியின் சூழலுக்குள் பிரவேசித்தது. ஆனால், பூமியில் விழவில்லை. விலகிச் சென்று விட்டது. இது விழுந்திருந்தால் கனடாவில் விழுந்திருக்குமாம்.
என்றோ ஒரு நாள் இக் கற்பாறைகளில் சில பூமியில் மோதிப் பெரும் அழிவை விளைவிக்கக் கூடுமென்பது விஞ்ஞானிகளின் கருத்தாகும்.

கா. விசயரத்தினம் 75
6. சனிக் கிரகம்
சனிக் கிரகம, வியாழ கிரகத்துக்கு அப்பால் சூரிய குடும்பத்தில் ஆறாவது கிரகமாகச் சூரியனைச் சுற்றி வருகின்றது. சனிக் கிரகம், வியாழ கிரகத்துக்கு அடுத்து சூரிய குடும்பத்தில் இரண்டாவது பெரிய கிரகமாகும். இது சூரியனிலிருந்து 88.6 கோடி (141.7 கோடி கி.மீ) மைல்களுக்கு அப்பாலிருந்து சூரியனைச் சுற்றி வருகின்றது. இதன் விட்டம் 74,000 (118,400 கி.மீ.) மைல்களாகும்.
சனிக் கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 10 மணி, 14 நிமிடங்களை எடுக்கின்றது. இக் காலம் இக் கிரகத்தின் ஒரு நாளாகும். இக் கிரகம் மணிக்கு 21,700 (34,720 கி.மீ.) மைல்கள் வேகத்தில் சூரியனை ஒரு தடவை சுற்றி வர 29 ஆண்டும் 167 நாட்களையும் எடுக்கின்றது. இதுவே இக் கிரகத்தின் ஓர் ஆண்டாகும். சனிக் கிரகத்தில் பூமி மனிதன் மூன்று ஆண்டுகள் வாழ்ந்தால் குடு குடு கிழவனாகி இறந்தும் விடுவான்.
சனிக் கிரகத்தில் 18 சந்திரன்கள் பவனி வருகின்றன. மற்றைய கிரகங்கள் அனைத்திலும் பார்க்கக் கூடிய சந்திரன்கள் சனிக் கிரகத்தில் தான் உள்ளன. 16 சந்திரன்கள் உள்ள வியாழ கிரகம் இரண்டாம் இடத்தையும், 15 சந்திரன்கள் அடங்கிய யுறேனஸ் கிரகம் மூன்றாம் இடத்தையும் வகிக்கின்றன. சூரிய ஒளிக் கதிர் சனிக் கிரகத்தை வந்து சேர 79 நிமிடங்களாகின்றன.
இங்கு பவனி வரும் 18 சந்திரன்களில் பெரிய சந்திரனை டைடான் என்றழைப்பர். இது நம் பூமிச்

Page 52
76 கணினியை விஞ்சும் மனித மூளை
சந்திரனை விடப் பெரியது. இன்னும், சூரிய குடும்பத்தில் இதுவே மிகப் பெரிய சந்திரனாகும்.
சனிக் கிரகம் வெகு தூரத்தில் இருப்பதனால் சூரிய வெளிச்சம் மிகக் குறைவாகவே இக் கிரகத்துக்குக் கிடைக்கிறது. ஆகவே, இங்கு குளிர் அதிகம். இது பூமியை விடப் பல மடங்கு பெரியது. சனிக் கிரகத்தில் 750 பூமிகளை அடக்கலாம்.
இங்கு அடர்த்தி குறைவு. கிரகங்களில் மிக அடர்த்தி குறைவானது சனிக் கிரகமே. எனவே இக் கிரகத்தைச் சமுத்திரத்தில் தூக்கிப் போட்டால் மிதக்கக் கூடியது. இங்கு உறை நிலையில் மெதென், அம்மோனியா, ஐதரசன் ஆகிய இரசாயனப் பொருட்கள் உள்ளன.
சனிக் கிரகத்தில் பூமியை விடச் சற்று ஈர்ப்புச் சக்தி கூட. பூமியில் 50 இறாத்தல் எடை சனிக் கிரகத்தில் 60 இறாத்தல் எடையைக் காட்டும்.
7. யூறேனஸ் கிரகம்
சூரிய குடும்பத்தில், சனிக் கிரகத்துக்கு அப்பால் ஏழாவது கிரகமாகச் சூரியனைச் சுற்றி வருவது யூறேனஸ் கிரகமாகும். இக் கிரகத்தை 1781 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் திகதி வில்லியம் ஹெர்ஷல் என்ற விண் வெளி விஞ்ஞானி கண்டுபிடித்தார். இது வியாழன், சனி கிரகங்களுக்கு அடுத்து மூன்றாவது பெரிய கிரகமாகும்.
யூறேனஸ் கிரகம் சூரியனிலிருந்து 178.3 கோடி (285.3 கி.மீ.) மைல்கள் தொலைவில் சஞ்சரிக்கின்றது. இதன் சராசரி விட்டம் 32.500 (52,000 கி.மீ) மைல்களாகும்.

கா. விசயரத்தினம் 77
இது பூமியின் விட்டத்திலும் பார்க்க நாலு மடங்கு கூடியது. இக் கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 17 மணித்தியாலங்களை எடுக்கின்றது. இதுதான் இக் கிரகத்தின் ஒரு நாள். யூறேனஸ் கிரகம் 84 ஆண்டுகளில் சூரியனை ஒரு தடவை சுற்றி வருகின்றது. இக் காலம் யூறேனஸ் கிரகத்துக்கு ஓர் ஆண்டாகும்.
பூமி வாசி ஒருவர் யூறேனஸ் வாசியாக மாறினால் அக் கிரகக் காலண்டரில் ஓர் ஆண்டினுள் கிழடு பத்தி இறந்தும் விடுவார்.
இக் கிரகத்தில் 15 சந்திரன்கள் உலா வருகின்றன. இன்னும் இங்கே பல சிறிய சந்திரன்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். சூரிய ஒளிக் கதிர் யூறேனஸ் கிரகத்தை வந்து சேர 159 நிமிடங்களை (2 மணி 39 நிமிடம்) எடுக்கின்றன. இதன் சுற்றளவு 32,000 (51,200 கி.மீ.) மைல்களாகும். இக் கிரகத்தில் 64 பூமிகளை அடக்கலாம்.
இக் கிரகம் ஒரு மணித்தியாலத்தில் 15,310 (24,496 கி.மீ.) மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. இங்கு பூமியை விட ஈர்ப்புச் சக்தி குறைவானது. பூமியில் 50 இறாத்தல் எடை இங்கு 46 இறாத்தலாயிருக்கும்.
அமெரிக்கா 1977ஆம் ஆண்டில் வொயேசர்-2 என்ற விண்கலத்தைக் கிரகங்களின் புகைப் படங்களை எடுத்துப் பூமிக்கு அனுப்புவதற்காக விண் வெளிக்கு அனுப்பியது. இது 1986 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் யூறேனஸ் கிரகத்தைச் சென்றடைந்து, இக் கிரகத்தின் படங்களைப் பூமிக்கு அனும்பியுள்ளது.

Page 53
78 கணினியை விஞ்சும் மனித மூளை
இக் கிரகம் சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பதனால், சூரிய வெளிச்சம் மிகக் குறைவாகவே இங்கு கிடைக்கிறது. எனவே, இங்கு கடும் குளிர் காணப்படுகின்றது. யாவும் உறை நிலையிலேயே உள்ளன. மனிதன் காலடி வைப்பது சாத்தியமில்லை. இக் கிரகத்தில் மிதென், அம்மோனியா போன்ற விச வாயுகள் காணப்படுகின்றன.
யூறேனஸ் கிரகத்தின் பாரம் பூமியின் பாரத்தை விடப் பதினைந்து (15) மடங்கு கூடியது.
8. நெப்டியூன் கிரகம்
நெப்டியூன் கிரகம், யூறேனஸ் கிரகத்துக்கப்பால் எட்டாவது கிரகமாகச் சூரியனைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. இக் கிரகத்தை 1846ஆம் ஆண்டு செப்தெம்பர் மாதம் 23ஆம் திகதி யேர்மனியைச் சேர்ந்த ஜோன்கால் என்ற விண்வெளி விஞ்ஞானி கண்டுபிடித்தார். இக் கோள் சூரியனிலிருந்து 279.4 கோடி (446.5 கோடி கி.மீ.) மைல்களுக்கப்பால் உள்ளது. இதன் சராசரி விட்டம் 30,000 (48,000 கி. மீ) மைல்களாகும். இது பூமியின் விட்டத்தைப் போல் நாலு மடங்கு கூடியது. இக் கிரகம் தனி னைத் தானே ஒருமுறை சுற்றி வர 18 மணித்தியாலங்களை எடுக்கின்றது. இக் காலம் இக் கிரகத்துக்கு ஒரு நாளாகும். இது சூரியனை 164.8 ஆண்டுகளில் ஒருமுறை சுற்றி வருகின்றது. இக் காலம் நெப்டியூன் கலண்டரில் ஒரு வருடமாகும். நாம் நெப்டியூன் வாசியாக மாறினால், அக் கிரகக் கலண்டரில் ஆறு மாதத்தில் கிழவனாகி இறந்தும் விடுவோம்.

கா. விசயரத்தினம் 79
இக் கிரகத்தில் எட்டுச் (08) சந்திரன்கள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் பெரிய சந்திரனின் பெயர் 'டிரைடன்'. இது நெப்டியூன் கிரகத்தை எதிர்த் திசையில் சுற்றி வருகின்றது. ஒரு காலத்தில் "டிரைடன்’ தனிக் கிரகமாயிருந்ததென்றும், நெப்டியூன் கிரகத்தின் ஈர்ப்பு விசையில் சிக்கி இப்பொழுது சந்திரனாக மாறி இக் கிரகத்தைச் சுற்றி வருகின்றதென்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
சூரிய ஒளிக் கதிர் நெப்டியூன் கிரகத்தை வந்து சேர 250 நிமிடங்களாகின்றன. அதாவது 4 மணி 10 நிமிடம். சூரிய குடும்பத்தில் இது நான்காவது பெரிய கிரகம், இக் கிரகம் நீல நிறமானதால், ரோமானியர்களின் சமுத்திரக் கடவுளின் பெயரை இக் கிரகத்துக்கு இட்டனர். இக் கிரகம் பூமியை விட மூன்று மடங்கு பெரியது. அதாவது, இக் கிரகத்தில் மூன்று பூமிகளை அடக்கலாம்.
சூரியனுக்கும் பூமிக்குமுள்ள இடைத் தூரத்தை விட 30 மடங்கு அதிக தூரத்தில் இக் கிரகம் சஞ்சரிக்கின்றது. எனவே, பயங்கரக் குளிருள்ள கிரகமிது. ஆகவே, ஐஸ் கிரகமாகச் சூரியனைச் சுற்றி வருகின்றது. மனிதனை உறையச் செய்யக் கூடிய குளிருள்ளது. இது 12,240 (19,585 கி.மீ.) மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. இதன் ஈர்ப்புச் சக்தி பூமியினது சக்தியை விடச் சற்றுக் கூடுதலானது. பூமியில் 50 இறாத்தல் எடை இக் கிரகத்தில் 56 இறாத்தலாகும்.
இக் கிரகத்தின் சுற்றளவு 27,700 (44,320 கி.மீ.) மைல்களாகும். இக் கிரகத்தின் தரைப் பகுதியை 6,000

Page 54
80 கணினியை விஞ்சும் மனித மூளை
மைல் (9,600 கி.மீ) உயரமான உறை பனி மூடியுள்ளது. இன்னும் 2,000 (3,200 கி.மீ) மைல்களுக்கு அம்மோனியா, மெதென் வாயுக்கள் இக் கிரகத்தை முடியுள்ளது. மேலும், ஐதரசனும், கீலியமும் ஆகிய வாயுகளும் காணப்படுகின்றன. இங்கு 1,500 (2,400 கி.மீ.) மைல் வேகத்தில் சூறாவளி வீசுவதாகப் பதிவுகள் கிடைத்துள்ளன.
9. புளுட்டோ கிரகம்
நெப்டியூன் கிரகத்துக்கு அப்பால் சூரிய குடும்பத்தின் ஒன்பதாவதும் கடைசிக் கிரகமுமாய்ச் சூரியனைச் சுற்றி வருகின்றது புளுட்டோ கிரகம். சூரியனிலிருந்து மற்றைய எட்டுக் கிரகங்களிலும் பார்க்கக் கூடிய தூரத்தில் இருப்பதுவும் இக் கிரகமே. புளுட்டோ கிரகத்தை 1930ஆம் ஆண்டில் ‘கிளைட்டொமபா' என்ற வானியல் விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
இது சூரியனிலிருந்து 370 கோடி (592 கோடி கி.மீ) மைல்கள் தூரத்தில் நீண்ட ஒரு வித்தியாசமான சுற்றுப் பாதையில் சஞ்சரித்து வருகின்றது. இதன் சராசரி விட்டம் 1,400 (2,240 கி. மீ) மைல்களாகும். இக் கிரகம் தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வர 6 நாள். 9 மணித்தியாலங்களை எடுக்கின்றது. இக் காலப் பகுதி இக் கிரகத்துக்கு ஒருநாள் ஆகும். புளுட்டோ கிரகம் சூரியனை ஒருமுறை சுற்றி வர 248 ஆண்டுகளை எடுக்கின்றது. இதுவே இக் கிரகத்தின் ஓர் ஆண்டாகும். பூமி வாசி ஒருவர் புளுட்டோ கிரகக் கலண்டரில் மூன்று அல்லது நான்கு மாதங்களில் முதியோனாகி இறந்தும் விடுவர்.

கா. விசயரத்தினம் 81
இக் கிரகத்தில் ஒரு சந்திரன் உள்ளான். சூரிய ஒளிக் கதிர் இக் கிரகத்தை வந்து சேர 332 நிமிடங்களாகின்றன. அதாவது 5 மணித்தியாலங்களும் 32 நிமிடங்களும் பூமியிலிருந்து புளுட்டோ கிரகத்துக்கு ஒரு செய்தி அனுப்பிப் பதில் பெற வேண்டுமெனில் நாம் 11 மணித்தியாலங்கள் காத்திருக்க வேண்டும். புளுட்டோ கிரகம் மணித்தியாலத்துக்கு சுமார் 10,800 ( 17,280 கி.மீ.) மைல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகின்றது. இதன் சுற்றளவு சுமார் 4,000 (6,400 கி.மீ.) மைல்கள் ஆகும்.
சூரிய குடும்பத்தில் இக் கிரகம் இரண்டாவது சிறியது. நமது சந்திரனை விடச் சிறிது பெரியது. இது மிகவும் தூரத்தில் இருப்பதனால் இருண்ட வானத்தில் ஒரு சிறு புள்ளியாகத் தோன்றுகின்றது. இக் - கிரகத்திலிருந்து பார்த்தால் சூரியனும் ஒரு சிறு புள்ளியாகத்தான் தோன்றும். இக் கிரகத்தில் மிகக் கடுங் குளிர் காணப்படுகின்றது. இதன் மேற்புறம் எங்கும் உறை நிலையில் பனிப் படலமாயிருக்கின்றது. இங்கு உயிர்
6 TP (DLULITg5.
இஃது ஒரு கிரகமல்ல என்பது விஞ்ஞானிகளின் கருத்து. இஃது ஒர் உடைந்த கிரகமொன்றின் துண்டுகளே ஒரு வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன என்பதும் அவர்கள் கருத்தாகும். இன்னும், புளுட்டோ கிரகத்துக்கப்பால் மேலும் ஒரு பத்தாவது கிரகம் சூரியனைச் சுற்றி வரலாமென்பதும் விண்வெளி ஆய்வாளர்களின் கருத்தாகும்.

Page 55
82 கணினியை விஞ்சும் மனித மூளை
தொகுப்புரை
நாம் இதுவரை சூரியனைட் பற்றியும் சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களாகிய புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், வியாழன், சனி, யூறேனஸ், நெப்டியூன், புளுட்டோ ஆகியவை பற்றியும் ஆராய்ந்தோம். இந்த ஒன்பது கிரகங்களிலும் 61 சந்திரன்கள் உள்ளன. இவை அதனதன் தாய்க் கிரகங்களைச் சுற்றுவதுடன் சூரியனையும் சுற்றி வருகின்றன.
இனி, குறிப்பிட்ட ஒன்பது கிரகங்களைப் பற்றிய முக்கியமான விபரங்களை ஒரே பார்வையில் பின் வருமாறு அமைத்துப் பார்ப்போம்.
(1) (2) (3) (4)
கோள் சூரியனிலிருந்து சராசரி சுழற்சிக் காலம்
g5/TULb. 6h"Lub (அல்லது
பூமியில் ஒரு நாளுக்குச் சமமான காலம்)
கோடி கோடி
மைல். கி.மீ. மைல். கிமீ. நாள். மணி. நிமி. செக்
1. புதன் 3.6 5.7 3,030 4,848 176 - 2. சுக்கிரன் 6.7 10.7 7,516 12,025 243 - 3. பூமி 9.3 14.8 7,921 12,673 - 23 56 04 4. செவ்வாய் 14.1 22.5 4,220 6,750 24 37 30 5. வியாழன் 48.3 77.3 88,700 141,920 - 09 50 - 6. சனி 88.6 141.7 74,000 1 18,400 - 10 14 - 7. யூறேனஸ் 178.0 284.8 32,500 52,000 . 17 - 8. நெப்டியூன் 279.0 446.4 30,000 48,000 - 18 - 9. புளுட்டோ 370.0 592.0 1,400 2,240 06 09 -

கா. விசயரத்தினம் 83
(5) (6) (7) (8)
சுற்றுக் காலம் சந்திரன்களின் சூரிய ஒளி கிரகத்தில் (அல்லது ஒரு தொகை. வந்து சேர அடக்கக்
பூமி வருடம்) எடுக்கும் கூடிய பூமி
நேரம் களின் தொகை.
(நிமிடம்)
புதன்
. சுக்கிரன்
Ալճ செவ்வாய் வியாழன் சனி யூறேனஸ்
. நெப்டியூன் . புளுட்டோ
88 நாள் O 3. பூமியிலும் சிறியது. 225 நாள் O 6 பூமியளவு 365 நாள் 01 8 -
687 நாள் 02 12 பூமியிலும் சிறியது.
11.9 வருடம் 16 43 1,300 29.5 வருடம் 18 79 750 84.0 வருடம் 15 159 64 164.8 வருடம் 08 250 03 247.7 வருடம் 01 332 பூமியிலும் சிறியது.
(தீபம் தொலைக்காட்சியில் 27-04, 03.05, 04:05, 25-05, 29-05, 30-05, 10-09, 2001.)
(லண்டன் வடலியில் ஏப்ரல் முதல் நொவம்பர் மாதம்
வரை 2002)
宽

Page 56
84 கணினியை விஞ்சும் மனித மூளை
இன்று நாம் கணினி உலகில் வாழ்கின்றோம். ஒரு நிமிடம்தானும் கணினிகள் இயங்காவிடின் விஞ்ஞான நாடுகளில் மனிதச் செயற்பாடு இயங்க முடியாது போய் விடுகின்றது. கணினியைக் கண்டுபிடித்ததும் ஒரு மனித மூளையேதான். ஆனால் கணினியை விட மனித மூளையும் அதன் செயற்பாடும் மிக மிக அற்புதமானதும், விசித்திரமானதும், சிறந்த விந்தையானதுமாயப் அமைந்துள்ளது. கணினியைக் கண்டுபிடிப்பதற்குக் கருப்பொருளாயிருந்தது மனித மூளையின் அமைப்பும் ஆற்றலும் தான்.
மனித மூளையின் ஆற்றலோ, திறனோ, பகுத்தறிவோ ஒன்றுமே கணினிக்கு இல்லை. கணினி மூளையற்றதோர் இயந்திரம். ஆனால், கணினி மனிதன் அமைத்துள்ள ஒரு சில தொழில்நுட்ப உதவியுடன் நாம் இடும் பணிகளுக்கு விடை தந்துதவுகின்றது. ஒரு சில தரவுகளைத் தந்துவிட்டுச் சும்மா இருந்துவிடும். சில வேளைகளில் அடம்பிடித்தும் நிற்கும்.
 

கா. விசயரத்தினம் 85
மூளை சாம்பல் இளம் சிவப்பு நிறமுடையது. இது 1,400 கிறாம் (1.4 கிலோ அல்லது 03 இறாத்தல்) நிறையுள்ளது. மண்டை ஒடு மூளையைப் பாதுகாக்கின்றது. தள தள என்று மினு மினுக்கும் மூளை மடிப்பு மடிப்பாய் அமைந்துள்ளது. இதில் ஒன்றுக்கொன்று தொடர்பான 14,000 மில்லியன் நரம்புக் கலங்கள் உள்ளன. மூளையின் கன பரிமாணம் 1,400 கன. சென்ரி மீற்றராகும். இதை நேராக்கினால் ஒரு மேசை விரிப்பளவில் வரும். இது 2,090 சதுர சென்ரி மீற்றர் பரப்பளவாகும்.
உடல் உறுப்பு அசைவு , பார்வை, பேச்சு, கேட்டல், உணர்தல், நுகர்தல் ஆகியவற்றை இயக்குவது மூளையே. நாம் பிறந்த நாள்தொட்டு எங்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ நடைபெறுகின்ற எல்லா நிகழ்வுகளும் நம் மூளையில் பதிவாகி விடுகின்றன. இதன் அடிப்படையிற்றான் கணினியையும் அமைத்துள்ளனர். எனவே தான் எமக்கு வேண்டிய விடயங்களைக் கணினியில் நாம் சேமித்து வைத்து, வேண்டிய நேரத்தில் அவற்றை மீளவும் பெற்றுப் பார்க்கின்றோம்.
நம் மூளையில் பதிவான நிகழ்வுகள் அழியத் தொடங்குங்கால், பின் பதிவுகள் முதலிலும், முன் பதிவுகள் பின்பும் அழிகின்றன. உதாரணமாக, அண்மையில் நடந்தேறிய நிகழ்வுகள் ஞாபகத்தில் வருவதில்லை. ஆனால், பள்ளிப் பருவத்தில் அதிபரிடம் முதற் பரிசு பெற்றதையும், மாற்றான் தோட்டத்தில் மரமேறி மாங்காய் பறித்ததையும், இன்னும் இவை போன்ற நிகழ்வுகள் என்றும் மனதை விட்டகலாதிருக்கின்றன.

Page 57
86 கணினியை விஞ்சும் மனித மூளை
பெருஞ் சிதைவின்றி மனித மூளை மனித வாழ் நாள் மட்டும் இயங்கிக் கொண்டேயிருக்கின்றது. அதாவது, தொடர்ந்து நூற்றாண்டுகளுக்கு மேலும் சாகாது இயங்கிக் கொண்டிருப்பது மனித மூளையே. ஆனால், கணினி சில வருடங்களில் மங்கிச் செயலிழந்து விடுகின்றது. மூளையில் பதிவான நிகழ்வுகளை நூறாண்டின் பின்பும் மூளை ஞாபகத்தில் எடுத்து விடுகின்றது. ஆனால், கணினியால் இது முடியக் கூடிய விடயமல்ல.
பிறந்தவுடன் குழந்தைக்கு ஓர் இறாத்தலிலும் (0.5 கி.கி.) குறைவான மூளையே இருக்கும். குழந்தை ஆறு வயதை அடையும் பொழுது 03 இறாத்தலாக (1,400 கிறாம்) மூளை வளர்ந்து விடும். ஆணுக்கு 1,400 கிறாம் நிறையுள்ள மூளையும், பெண்ணுக்கு 1,200 கிறாம் நிறையுள்ள மூளையும் அமைந்துள்ளது.
மனித மூளையானது உடம்பின் ஓர் உன்னத நிலையிலிருந்து கொண்டு, ஆதிக்கம் செலுத்திக் கொண்டும், ஓர் அரச வாழ்வையமைத்துச் சிங்காசனத்தில் அமர்ந்துள்ளது. சாதாரண மனிதன் நிறையில் கிட்டத் தட்ட 2 சதவிகிதம் தான் மனித மூளையின் நிறை. ஆனால், மனிதனுக்குத் தேவையான பிராணவாயுவில் 20 சதவிகிதமான வாயுவை மூளை தன் பாவனைக்கு எடுத்துக் கொள்ளுகின்றது. இன்னும், தனக்குத் தேவையான குருதியையும் உறிஞ்சிக் கொள்கின்றது.
மூளையானது மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே பிராணவாயு இல்லாமல் உயிர் வாழும். அதற்கு மேற்பட்டால் மூளையின் நரம்புக் கலங்கள் இறக்கத்

கா. விசயரத்தினம் 87
தொடங்கி விடும். மனிதன் 20 வயதை அடையும் பொழுது ஒவ்வொரு நாளும் சில நரம்புக் கலங்கள் இறந்தோ அல்லது மறைந்தோ போய் விடுகின்றன. இவை மனித வாழ்வில் திரும்பவும் உண்டாவதில்லை. மனித வாழ்வில் இந்த இழப்பீடுகள் முழு நரம்புக் கலங்களின் தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைந்தவையே.
மூளைக்கு நோவை உணரும் உணர்வுகள் இல்லை. எனவே மூளை நோவை நேரடியாக உணராது. ஆகவே தான், நோயாளி உணர்வுடனிருக்க டாக்டர்கள் மூளையில் சத்திர சிகிச்சை செய்யக் கூடியதாகவுள்ளது. மூளைக்குத் தேவையான இரத்தோட்டம் பாயாவிடின் மூளைத் தாக்கம் உண்டாகும். இதனால் சில வேளைகளில் பாரிச வாதம் உண்டாகி, உடம்பின் ஒரு பக்கம் செயலிழந்து, பேச்சும், சிந்தனையும் பாதிப்படையும். எனவே தான், நாம் நம் தலையைக் காப்பது நம் தலையாய கடமையாகும்.
(தீபம் தொலைக்காட்சியில் 27-04-2001)
(லண்டன் சஞ்சிகை மலரில் 17-11- 2001)
宽

Page 58
88: கணினியை விஞ்சும் மனித மூளை
re
எட்டுக் கோடி ஆண்டுகளாக மக்களைக் கொன்று குவித்து வரும் பாம்பினம்!
நா தர் முடி மேலிருக்கும் நாகப் பாம்பே, நச்சுப் பையை வைத்திருக்கும் நாகப் பாம்பே', ‘பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது கருடா செளக்கியமா?, ‘பாம்பென்றால் படையும் அஞ்சும்’, ‘கண்ணபிரான் துயிலும் ஐந்து தலை நாகம்’, ‘மந்தர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் பாற்கடலைக் கடைந்தனர் தேவர்கள்’ ‘நாகர்கோயில், நாக தம்பிரான் கோயில், நாகம்மாள் கோயில்' போன்ற சொற் பதங்கள் நம் அனைவர் மனத்திலும் ஊற்றெடுத்து அருவியாய் ஓடிக்கொண்டிருக்கின்றன.
பாம்பைக் கண்டால் போதும், நம் மனம் திகிலடைந்து விடும். சிலர் சுருண்டு வளைந்து கிடக்கும் கயிற்றைக் கண்டாலே ஒடி ஒளிந்து கொள்வதையும் பார்க்கிறோம்.
 

கா. விசயரத்தினம் 89
பாம்பின் தோற்றம்
பாம்பு ஊர்வனவற்றைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இது பல்லி இனத்தைச் சேர்ந்தது. பல்லி இனத்திலிருந்தே Lu mT Lfö L{ 10 G8 aÉ5 [T Lq ஆணர் டுகளுக்கு முனர் தோன்றியிருக்கலாமென்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆதியிற்றோன்றிய பல்லி, பாம்பு போன்றன பெரிய உருவத்தையுடையனவாய் இருந்தன. 100 அடி நீளமுள்ள பல்லி, பாம்பு அக்காலத்தில் இருந்தன. இதைக் கற்படிப் பொருள்களிலிருந்து அறியலாம்.
பாம்பு தோன்றிய பின்பே மனிதன் தோன்றினான். மனிதன் எட்டுக் கோடி ஆணி டுகளுக்கு முன் பூமியிற்றோன்றினான். அப்பொழுது மூத்த பிறப்பான பாம்பு ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. மனிதனைக் கண்டதும் அவனைப் பாய்ந்து சீறிக் கொத்தி நஞ்சூட்டிக் கொன்று குவித்து வந்தது. எனவே, மனிதன் பாம்புக்குப் பயந்தும், அதனை வணங்கியும் வாழ்ந்து வந்தான். பாம்புக்குக் கோயில் அமைத்துப் பூசை செய்தும் தெய்வ வழிபாட்டினை நடாத்தியும் வந்தான்.
பின் காலம் செல்லச் செல்லக் காட்டை அழித்து நாடாக்கினான் மனிதன். நாட்டில் நடமாட முடியாத நிலை பாம்புகளுக்கு ஏற்படக் காட்டை நாடி நகர்ந்தன. ஆனால், மனிதன் துயிலப் பாம்பு விழித்துக் கொண்டது. மனிதனை நாடிச் சீறிப் பாய்ந்து கொத்தி மரணத்தை ஏற்படுத்தியது. மனிதனும் பாம்பைக் கண்டதும் அடித்துத் துரத்தியும், கொன்றும் வந்தான். பகை இப்படியே வளர்ந்து தொடர்கின்றது.

Page 59
90 கணினியை விஞ்சும் மனித மூளை
பாம்புகள் எல்லா நாடுகளிலும் உள்ளன. இவை காடு, பாலை வனம், சமுத்திரம், அருவி, ஏரி ஆகிய இடங்களில் வசிக்கின்றன. அதிகமான பாம்புகள் நிலத்தில் வாழ்கின்றன. சில நிலத்தின் கீழ் சீவிக்கின்றன. சில மரத்திலும், இன்னும் சில நீரிலும் வாழ்கின்றன.
பாம்புக்கு வளைந்து கொடுக்கக் கூடிய உடலமைப்புண்டு. எனவே இவை பந்து போல் சுருளக் கூடியன. இவற்றின் கண்கள் என்றும் திறந்த வண்ணமே உள்ளன. இவற்றிற்கு கண் இமைகள் இல்லை. ஆனால் செதிள்களால் மூடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. இவற்றிற்கு மெல்லிய நீண்ட நாக்குண்டு. இடைக்கிடை நாக்கை வெளியில் நீட்டிக் கொள்கின்றன.
பாம்பினங்கள்
பாம்புகளில் 2,700 இனங்கள் உள்ளன. இவற்றில் பல வகையானவை வறண்ட பிரதேசத்தில் வாழ்கின்றன. தென் அமெரிக்காவில் உள்ள அனகொண்டா' என்ற பாம்பினமும், ஆசியாவில் காணப்படும் ‘றெரிகுலேற்’ என்னும் மலைப் பாம்பினமும் 30 அடி வரை நீண்டு வளர்கின்றன. வறண்ட பிரதேசத்தில் காணப்படும் 'ப்ராமினி' என்னும் குருட்டுப் பாம்பினம் மிகச் சிறியவை. இவை ஆறு (06) அங்குலம் வரை வளரக் கூடியவை. இவ்வினப் பாம்புக்குக் கண்கள் உள்ளன. ஆனால், அவற்றின் கண்கள் தலைச் செதிள்களால் மூடப்பட்டுள்ளன.
கொடிய நச்சுப் பாம்புகள்
15 சதவிகிதமான பாம்புகளினி நஞ சு மனிதர்களுக்குக் கெடுதலைத் தரக் கூடியது. இன்னும்

கா. விசயரத்தினம் 91
25 வகையான பாம்புகளின் நஞ்சு மிகவும் கொடியது. இவற்றால் ஏற்படும் பாம்புக்கடி அதிகமான மனித இறப்புகளை ஏற்படுத்துகின்றது. இன்னும் இந்தியா, இலங்கை நாடுகளிலுள்ள நாகப் பாமி பு, ஆபிரிக்காவிலுள்ள கறுப்பு 'மம்பா பாம்பு, விரியன் பாம்பு, அவுஸ்திரேலியாவிலுள்ள புலிப் பாம்பு போன்றவை தீண்டினால் உயிர் தப்புவது கடினம்.
ஆதி காலந் தொட்டுப் பாம்பைப் பற்றிய புராணக் கதைகளாலும், மூட நம்பிக்கையாலும் மனிதன் பயந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளான். நாதர் முடியிலும், பரமசிவன் கழுத்திலும் நாகப் பாம்பு போய் அமர்ந்து படம் விரித்து ஆடுகின்றது.
நாகப் பாம்பைத் தெய்வமென வணங்கிப் புத்தருகே பால் வைத்து வணங்குவதை இன்றும் நாம் காண்கின்றோம். அதிகமான பாம்புகள் மனிதனுக்குத் தீங்கு புரிவதில்லை. தற்பாதுகாப்புக்காகவே அவை கடிக்கின்றன. நமக்குப் பாம்பைப் பற்றிய அறிவு இல்லாத காரணத்தால் அதிக பயம் அடைகின்றோம்.
பாம்புகளுக்கு 150 முதல் 430 வரையிலான தொடர் முதுகெலும்புகள் உள்ளன. பாம்பு செட்டை கழற்றி விடும். மூக்குப் பக்கத்தை கரடு முரடானவற்றில் உராய்ந்து தோலைக் கழற்றி விடுகின்றது. பாம்பின் பற்கள் இரையைச் சப்பிச் சாப்பிடக் கூடியதானவையல்ல. எனவே இரையை உயிருடன் முழுமையாக விழுங்கி விடுகின்றன. சில மலைப் பாம்புகள் 100 இறாத்தலுக்கு மேற்பட்ட இரையைக் கூட விழுங்கி விடுகின்றன. அவற்றின் வாய் அதற்கேற்ற மாதிரி

Page 60
92 கணினியை விஞ்சும் மனித மூளை
அமைந்துள்ளன. இவை சில மிருகங்களை அரை மணித்தியாலத்தில் விழுங்கி விடுகின்றன. விழுங்கப்பட்ட எலும்புகள் கூட 72 மணித்தியாலத்தில் சீரணித்து விடுகின்றன. இறகுகள், தலை மயிர் போன்றன சீரணிக்காது வெளியேற்றப்பட்டு விடுகின்றன.
பாம்பைப் பற்றிய முக்கிய குறிப்புகள்
பத்துக் கோடி ஆணி டுகளுக்கு முனி பல்லியிலிருந்து தோன்றியது பாம்பு இனம்.
நஞ்சை 10 அடி தூரம் வரை எதிரிகள் மேல் சீறிப் பாய்ச்சும் நாகப் பாம்பு.
பாம்பு, விழுங்கிய மிருகங்களின் எலும்புகளைக் கூட 72 மணித்தியாலங்களில் சீரணித்து விடும்.
3 மாதம் கருவுற்றிருந்து 100 குட்டிகளை ஈனும் வட அமெரிக்கப் பாம்புகள்.
பின்னிப் பிணைந்து மருவிய பின், பெண் சாரைப் பாம்பைத் துண்டாடிக் கொன்றுவிடும் ஆண் செட்டி நாகம்,
6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை உணவின்றி வாழக் கூடிய சில பாம்புகள் உள்ளன.
மிருகக் காட்சிச் சாலையில் சில பாம்புகள் 6 மாதம் முதல் 3 வருடம் வரை உணவின்றி வாழ்வதாகக் கணக்கெடுத்துள்ளனர். 'கபூன்' என்றழைக்கப்படும் விரியன் பாம்பை இதற்கு உதாரணம் காட்டலாம்.

கா. விசயரத்தினம் 93
சில பாம்பினம் விரைவாக ஓடக் கூடியன. ஆபிரிக்காவிலுள்ள கறுப்பு 'மம்பா' என்ற பாம்பு மணிக்கு 7 மைல் வரை ஓடக் கூடியது. இன்னும் அதே நாட்டைச் சேர்ந்த "பந்து மலைப் பாம்பு தலையை நடுவில் வைத்துப் பந்து போல் சுருண்டு, தன்னைப் பாதுகாக்கும்.
பாம்பு மேல் வாயிலுள்ள ஊசி போன்ற இரு பற்களால் கொத்தி நஞ்சைப் பாப் ச்சி விடும். ஆபிரிக்காவிலுள்ள நாகப் பாம்பு 8 அடியிலிருந்து 10 அடி வரை நஞ்சை எதிரிகளின் கண்களைக் குறி பார்த்துச் சீறிப் பாய்ச்சிக் கண்களைக் குருடாக்கி விட்டுத் தப்பிக் கொள்கின்றது.
அதிகமான பாம்புகள் மறைந்து வாழ விரும்புகின்றன. பாம்புகள் 6 முதல் 30 முட்டைகளை ஒரு நேரத்தில் இடுகின்றன. ஆனால், பெரிய மலைப் பாம்புகள் ஒரு நேரத்தில் 100 முட்டைகளை இட்டு அவற்றின் மேல் சுருண்டு படுத்து 85 ‘பாரென்ஹீட்" வெப்பத்தைக் கொடுத்து அடை காத்து வரும். 8 முதல் 10 கிழமைகளில் இம் முட்டைகள் பொரித்து விடும்.
சில இனப் பாம்புகள் முட்டைகளை உரிய நேரத்தில் இடாது தங்களுடன் சில கிழமைகளுக்கு வைத்திருந்த பின்பே அவற்றை இடுகின்றன. இதனால் அந்த முட்டைகள் நல்ல முறையில் முதிர்ச்சி அடைந்து விடுகின்றன. இப்படியான முட்டைகள் 2 முதல் 4 கிழமைக்குள் பொரித்து விடும். மேல் அலகில் வளரும் விசேடமான பல்லால் முட்டையை உடைத்துக் கொண்டு குட்டிப் பாம்பு வெளியே வந்து விடும். குட்டிப் பாம்பு

Page 61
94 கணினியை விஞ்சும் மனித மூளை
முட்டையிலிருந்து வெளியே வந்ததும் அப் பல் விழுந்து விடும்.
கருவுற்றுக் குட்டி ஈனும் பாம்பு
பாம்பினங்களில் அண் 7ளவாக ஐந்திலொரு பங்குப் பாம்புகள் கருவுற்றுக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. இப்படியான பாம்புகள் வட அமெரிக்காவில் அதிகமாகக் காணப்படுகின்றன. 2 முதல் 3 மாதங்கள் வரை இவை கருவுற்றிருக்கும் காலமாகும். இவற்றிற் சில இனங்கள் ஒரு நேரத்தில் 100 பாம்புக் குட்டிகளை ஈன்றெடுக்கின்றன. குட்டிப் பாம்புகள் தாங்களே தம் உணவைத் தேடிக்கொள்கின்றன.
பாம்புகள் 68 முதல் 95 ‘பாரென்ஹீட் வெப்ப நிலையில் சுறுசுறுப்பாயிருக்கின்றன. கூடிய குளிரில் அவற்றின் நடமாட்டம் குறைந்து விடும். ஆனால் 104 ‘பாரென்ஹீட் வெப்ப நிலையில் அவை இறந்து விடுகின்றன. பறவைகள், மீன்கள், தவளைகள், பல்லிகள், முயல்கள், எலிகள் போன்றவற்றைப் பாம்புகள் பிடித்து உணவாக விழுங்கி விடுகின்றன.
பாம்புக்குப் பாம்பு இரை
ஆசியாவிலுள்ள நாகப் பாம்புகளும், வட அமெரிக்காவிலுள்ள இராச பாம்புகளும் மற்றைய பாம்புகளைத் தங்கள் உணவாகப் பிடித்து விழுங்கி விடுகின்றன. சில நீண்ட நெடிய பாம்புகளும், மலைப் பாம்புகளும் மிருகங்களைச் சுற்றி, இறுக்கி, நெரித்துக் கொன்று விட்டு அவற்றை விழுங்கி விடுகின்றன.

கா. விசயரத்தினம் 95
படம் விரித்துப் பயங்காட்டும் நாக பாம்பு
இலங்கை, இந்தியா போன்ற வெப்பமுள்ள நாடுகளில் வாழும் பாம்புகளுக்குக் கூடிய நச்சுத் தனி மை உள்ளதை நாம் அவதானிக் கக் கூடியதாகவுள்ளது. நம் நாட்டில் நாகம், புடையன், விரியன், கண்ணாடிப் புடையன் போன்ற பாம்புகள் கடித்தால் மனிதன் தப்புவது கடினம். நாகப் பாம்புகள் படம் விரித்து ஆடுவன. நாக இனத்தில் நால்வகைப் பாம்புகள் உள்ளன. அவையாவன: (1) நல் நாகம், (2) அழல் நாகம், (3) பறை நாகம், (4) செட்டி நாகம். நாகங்கள் ஓர் இராச பரம்பரையைச் சேர்ந்தவை.
நல் நாகம் மெலிந்த, நீண்ட உருவமுடையது. இதன் பேருக்கேற்றவாறு நாகங்களில் நல்லதொரு இடத்தைப் பிடித்துக் கொண்டு உலாவி வருகின்றது. இது தீண்டினால் நஞ்சை இறக்குவது சுலபம் என்று பாம்புக் கடி நிபுணர்கள் கூறுவர்.
அழல் நாகம் குள்ளமாயினும் உருவத்தில் பருமனானது. இது மறைந்து வாழும். எனவே இதைக் காண்பது கடினம். கோயில் மரமான மருத மரந்தான் அதிகமாக அழல் நாகத்தின் உறைவிடம். இது கடித்தால் அழற்சி அதிகமாயிருக்குமென நிபுணர்கள் கூறுவர்.
பறை நாகத்தின் அசைவு வேகம் கூடியது. இது பறந்து தீண்டுமென மக்கள் மத்தியில் ஒரு பயம் நிலவுகிறது. எனவே இதைப் பறக்கும் நாகம் என்றும் கூறுவர்.

Page 62
96 கணினியை விஞ்சும் மனித மூளை
செட்டி நாகம் உருவத்திலும், நீளத்திலும் சாரைப் பாம்பை ஒத்தது. இரண்டிற்கும் வித்தியாசம் காண்பது அரிது. இவ்விரண்டையும் சீண்டினால் சாரைப் பாம்பு ஒடும், படமெடுக்காது. செட்டி நாகமோ படம் எடுத்து நின்று ஆடும், சீறும், கொத்தும்.
சில சமயங்களில் ஆண் பாம்புகளுக்கிடையில் சண்டை மூண்டு விடும். உதாரணத்துக்கு நாகப் பாம்பையும், விரியன் பாம்பையும் கூறலாம். அதிகமாக பாம்புகள் 15 வருடங்கள் வரையும், ஒரு சில 20 வருடங்கள் வரையும், இன்னும் சில 30 வருடங்கள் வரையும் வாழ்கின்றன.
ஒரு நிகழ்வு
தரைக்கு மேல் சுற்றிப் படி கட்டாத ஒர் ஆழ்கிணற்றில் இரு பாம்புகள் மாலைப் பொழுதில் வந்து விழுந்து விட்டன. இது சாவகச்சேரி நகரத்தில், நுணாவில் என்ற கிராமத்தில் 1946 ஆம் ஆண்டில் நடந்தது. எனக்கு அப்பொழுது 14 வயது. என் தகப்பனார் ஒரு பாம்புக் கடி வைத்திய நிபுணர்.
கிணற்றுச் சொந்தக்காரன் என் தகப்பனாரிடம் வந்து விடயத்தைக் கூறி அவரையும் கூட்டிச் சென்று கிணற்றடிக்குப் போனார்கள். அயல் வீடு என்ற காரணத்தால் நானும் அவர்களுடன் அங்கு சென்றிருந்தேன்.
அங்கு கிணற்றைச் சுற்றிச் சனம் கூடி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றார்கள். அந்த இரு

கா. விசயரத்தினம் 97
பாம்புகளும் ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்த நிலையில் காதல் மயத்தில் கிணற்றினுள் ஒடித் திரிவதை உற்றுப் பார்த்து விட்டு “இப்பொழுது நீங்கள் அவற்றை ஒன்றும் செய்ய வேண்டாம். அவற்றைப் பிரிக்கவும் வேண்டாம். பொறுமையாக இருந்து நாளைக் காலை வந்து பாருங்கள். இதில் ஒரு பாம்பு இறந்து கிடப்பதைக் காண்பீர்கள் என்று தகப்பனார் கூறினார். இக் கூற்று மேலும் யாவர் மனத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் கேட்டபொழுது அவர், “இதில் ஒன்று சாரைப் பாம்பு, அது பெண். மற்றது செட்டி நாகம். அது ஆண், பெண் சாரை, மற்றது ஆண் சாரை என்று நினைத்து இதற்கு ஒத்துக் கொண்டது. இப்படியான நேரத்தில் செட்டி நாகம் தவறுதலாகக் கூடத் தன் படத்தை விரித்துத் தன்னை யாரெனக் காட்டிக் கொள்ளாது. படத்தை விரித்தால் தன் ஆசைக்கு இடர் ஏற்பட்டு விடுமென்று நாகத்துக்கு நன்றாகத் தெரியும். செட்டி நாகம் தன் காரியம் முடிந்த பின், சாரைப் பாம்பைக் கொன்று விடும். ஏனெனில், தங்களினத்தில் இன்னொரு புதிய இனம் வரப் போவதை நாகம் விரும்பாது என்று கூறி முடித்தார். கூடியிருந்தோர் கலைந்து சென்றனர்.
மறுநாட் காலை வந்து பார்த்தபொழுது, ஒரு பாம்பு இறந்து கிடந்தது.
மற்ற பாம்பு தண்ணிரில் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது. எந்தப் பாம்பு கிணற்றினுள் உயிருடன் இருக்கின்றது என்று பார்ப்பதற்காக நீண்ட தடிகளைக் கொண்டு ஒரு கொக்கை கட்டி கிணற்றினுள் பாம்புக்கு அருகில் கொண்டுபோனபொழுது, அப் பாம்பு படமெடுத்துச்

Page 63
98 கணினியை விஞ்சும் மனித மூளை
சீறிக் கொக்கையைக் கடித்தது. அப்பொழுது தான் அந்தப் பாம்பு நாகம் என்று அறிந்து கொண்டனர்.
பின் கிணற்று நீரை இறைத்து மிகுந்த சிரமப் பட்டு நாகப் பாம்பை வெளியில் எடுத்து, அதைக் கொல்லாது ஒட விட்டனர்.
நாகப் பாம்பை அடித்துக் கொல்லச் சிலர் விரும்புவதில்லை. நாகத்தைத் தெய்வமாகப் பாலூற்றி வணங்குகின்றனர். நாகத்தை அடித்துக் கொன்றால் நாக தோசம், சாபக் கேடு போன்றவை வந்துவிடுமென அஞ்சுகின்றனர்.
பாம்பாட்டிகள்
பாம்பாட்டிகள் அதிகமாக நாகப் பாம்பைத் தேடிப் பிடித்துப் பயிற்சியளித்துப் பெட்டியில் அடைத்து வைத்து நாடு, நகரங்களுக்குக் கொண்டு சென்று படமெடுத்து ஆடச் செய்து மக்களிடம் பணம் பெற்றுத் தம் வாழ்க்கையை நடாத்துகின்றனர்.
பாம்பைத் தம் கழுத்திலும், தலையிலும், கைகளிலும் வைத்து விளையாட்டுகளைக் காட்டிப் பணம் சேகரிக்கின்றனர். மகுடி ஊதிப் பாம்பை ஆட வைத்துப் பணம் பெறுகின்றார்கள்.
பாம்புக்குக் காது இல்லை. எனவே மகுடிச் சத்தம் அவற்றிற்குக் கேட்காது. பாம்பாட்டியின் கால் அசைவுகளுக் கேற்பப் பாம்பு அசைந்து ஆடுகின்றது.

கா. விசயரத்தினம் 99
பாம்பு உணவாகிறது
நஞ்சு இல்லாத பாம்புகளைச் சிலர் சமைத்து உண்கின்றார்கள். சீனர்கள் பாம்பில் கறி சமைத்து உண்கின்றனர். ஆப் செய்தும் குடிக்கின்றனர் இதற்காக அவர்கள் பாம்பை வளர்க்கின்றனர்.
பாம்பை உணவாக உட்கொண்டால் மனிதனுக்கு நோய் வராது தடுத்துவிடுமென்ற அசையா நம்பிக்கை சிலர் மனத்தில் படர்ந்து வருகின்றதை நாம் காண்கின்றோம்.
பாம்புக் கடி வைத்தியம்
பாம்புக் கடிக்கு வைத்தியம் செய்வதற்கு நம் நாட்டில் பல நாட்டு வைத்திய நிபுணர்கள் இருக்கிறார்கள். பாம்பு கடித்த இடத்துக்கு மேல் ஒரு துணியால் சுற்றிக் கட்டி விட்டு, கடித்த இடத்தைச் சுற்றி வட்டமாகச் சுண்ணாம்புப் பூசிவிட்டுத்தான் வைத்தியம் செய்யத் தொடங்குவார்கள்.
பாம்பு தீண்டியவருக்கு முதலில் வேப்பிலையை மென்று சாப்பிடக் கொடுத்து வேப்பிலை கசக்கிறதா என்று பார்ப்பார்கள். வேப்பிலை கசக்கவில்லையெனின், நஞ்சு அதிகரித்துள்ளது என்பது பொருள். மென்று சாப்பிட முடியாத மயக்க நிலையிலுள்ளவர்களுக்கு வேறு மாற்று மருந்து கொடுப்பார்கள்.
இத்துடன் சிறு நீர் அதிகமாகக் குடிக்கக் கொடுப்பார்கள். சிறு நீர் என்று சொல்லாது, தேநீர்

Page 64
100 கணினியை விஞ்சும் மனித மூளை
என்று சொல்லித்தான் குடிக்கக் கொடுப்பார்கள். இன்னும், வாழைப் பட்டையைப் பிழிந்து சாறு எடுத் தும் கொடுப்பார்கள்.
பின், பாம்பு கடித்த இடத்தில் ஒரு கல்- பாம்புக் கல்- வைப்பார்கள். இக் கல் அந்த இடத்தில் ஒட்டிக் கொள்ளும், அக் கல் நஞ்சை இழுக்குமாம். நஞ்சு உடம்பில் இல்லாதபொழுதுதான் அக் கல் தன்/பாட்டில் விழுந்து விடும். இப் பாம்புக் கல் நாகப் பாம்பிடமிருந்து பெறப்படுவதாகக் கூறுகிறார்கள்.
வேப்பம் இலையால் பாம்பு தீண்டியவரை அடித்து மந்திரம் கூறிப் பார்வை பார்ப்பார்கள். இதன்/பின் மூலிகை மருந்துகள் அவித்துக் கசாயம் கொடுப்ார்கள். பாம்பு கடித்தவரை நித்திரை கொள்ள விடமாட்டார்கள். நித்திரை செய்தால் விடம் கூடுவதாகச் சொல்வார்கள். பாம்புக் கடி நிபுணர்கள், பாம்பு கடித்த, பல்/பட்ட, இடத்தைப் பார்த்து விட்டு இன்ன பாம்புதான் கடித்ததென்று கூறி விடுவார்கள். இன்று நாம் பாம்பு கடித்தவரை அரச வைத்திய சாலைகளுக்குக் கொண்டு சென்று வைத்தியம் செய்விக்கக் கூடிய வசதிகளும் உள.
பாம்புக் கடி வைத்திய நிபுணர்கள் ஒவ்வொரு சந்திர கிரகண நாள் இரவும் குளத்தில் நீராடிவிட்டுக் குளங்கரையில் அமர்ந்து பூசைப் பொருட்கள் வைத்து அன்றிரவு முழுவதும் சந்திரனை நோக்கிப் பூசை செய்தும், மந்திரங்கள் ஒதியும், தவம் செய்தும் கருட பகவான் ஆசி வேண்டி நிற்பர். இப்படி வேண்டி நின்றால் தாம் செயலாற்றும் வைத்தியத் துறையில் நல்ல பலனைத் தரும் என்பது அவர்கள் கருத்தாகும்.

கா. விசயரத்தினம் 101
உயிரினங்கள் ஒவ்வொன்றையும் தனித் தனியே ஆய்வு மேற்கொண்டு அவற்றிற் பொதிந்துள்ள வேறுபட்ட தத்துவங்கள், உண்மைகள், அமைப்புகள் யாவையும் வெளிக் கொணர்ந்தால், மனிதனுக்குக் கற்க வேண்டியவை நிறையக் கிடைத்துவிடும். ஆனால், இதற்கு நம் வாழ் நாள் முழுவதும் கானுமோ என்பது கேள்விக் குறியாகி விடும்.
(குறிப்பு: காலஞ் சென்ற எண் தகப்பனார் சொல்லக் கேட்டதும், செய்முறைகளைப் பார்த்ததும் ஆதாரம்.)
(லண்டன் வடலியில் மார்த்து, ஏப்ரல், மே, யூன், யூலி மாதங்கள், 2003)
宽

Page 65
102 கணினியை விஞ்சும் மனித மூளை
சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில்
மறைகின்றானா? NS
குரியன் கிழக்கில் வந்து உதிக்கின்றான்; மேற்கில் போய் மறைகின்றான். இவை பாடசாலையில் படித்த, படிக்கின்ற, படிக்கும் பாடங்கள். பாடப் புத்தகங்களிலும் இவ்வாறுதான் எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர்களும் இப்படித் தான் சொல்லிப் படிப்பித்தார்கள்; படிப்பிக்கின்றார்கள். பாவலரும், நாவலரும், கவிதை, எழுத்து, இலக்கியம் ஆகியவற்றில் ஆக்கங்களை இவ்வாறே வடித்து வருகின்றனர். எவரும் இதை மறுத்துக் கூறியதில்லை. நம் கண் பார்வைக்கும் சூரியன் அவ்வாறுதான் தோற்றமளிக்கின்றான்.
இன்னும், ஆண்டாள் பாடிய திருப்பள்ளியெழுச்சியில் சூரியன் கிழக்குத் திசையில் வந்து உதிக்கும் செய்தியும் கூறப்பட்டுள்ளது.
“அருணன்இந் திரன்திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழஎழ நயனக்.”
(திருப்பள்ளியெழுச்சி - 2)
 
 

கா. விசயரத்தினம் 103
மேலும் , மணிவாசகர் அருளிப் பாடிய திருவெம்பாவையில் நோன்பு நோற்கும் பாவையர் எம் பெருமானை நோக்கி தாம் கேட்டபடி நல்கினால் சூரியன் எங்கெழுந்தாலென்ன? என்று வீராப்படைகின்றனர்.
“இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்.”
(திருவெம்பாவை - 19)
இனி, ஒரு தமிழ்ப் புலவர் சூரியன் மேற்குத் திசையில் போய் மறைவதைத் தன் பாணியில் எழுதிய செய்தி ஒன்றினையும் பார்ப்போம்.
“நனந்தலை யுலகில் தண் கதிர் சுருக்கிக் கதிரவன் குட திசை மாய முண்டகம் இதழ் குவிய முல்லை மலர் வாய் மலர யாண்டும் தண் கதிர் பம்ப விசும்பு மிசை இவர்ந்தது திங்கள்.”
தமிழ்ப் புலவர்கள் தம் பாண்டித்தியத்தைக் காட்ட இவ் வண்ணம் எழுதி மற்றவர்களைத் திணற வைத்து இன்பம் காண்கின்றனர்.
மேற் கூறியவற்றிலிருந்து சூரியன் ஆகாயத்தில் ஒடி ஒளித்து விளையாடுகிறான் என்ற ஒரு முடிவுக்கு வந்து விடலாமா என்றொரு ஐயப்பாடு சிலருக்கு எழக் கூடும்.
ஆனால், சூரியன் அசையாது ஓர் இடத்தில் நிலைத்து நிற்கிறானென்றும், பூமி தன்னைத் தானே சுற்றிக் கொணி டிருப்பதால் சூரியன் அசைவது போலி

Page 66
104 கணினியை விஞ்சும் மனித மூளை
தோன்றுகிறதென்ற உண்மையை விஞ்ஞான ஆய்வுகள் நமக்கு எடுத்துக் காட்டியுள்ளன.
மேலும், உற்று நோக்கின், சூரியன் நிலைத்து ஓர் இடத்தில் தரித்து நிற்பதில்லையென்றும், இப் பரந்த பால் நிலா வெளியில் நீண்ட ஒரு சுற்றுப் பாதையில் இருபத்தைந்து கோடி (25 கோடி) வருடத்தில் ஒரு சுற்றுச் சுற்றி வருகின்றானென்ற உண்மையையும் முதிர் நிலை விஞ்ஞான ஆய்வுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
இன்னும், இதுவரை சூரியன் இப் பாதையில் இருபது (20) சுற்றுகள் சுற்றி ஐந்நூறு கோடி (500 கோடி) ஆண்டுகளை எட்டிப் பிடித்து, நடு வயதை அடைந்துள்ளானென்றும், மேலும் 20 சுற்றுச் சுற்றி வந்தால் (அதாவது இன்னும் 500 கோடி ஆண்டுகள் சென்ற பின்) சூரியன் வாழ்நாள் முடிவுற்றுப் பயங்கர வெப்ப நிலையடைந்து வெடித்துச் சிதறி இறந்து விடுவானென்றும் விஞ்ஞானம் கூறி நிற்கின்றது. அப்பொழுது, புதன், வெள்ளி ஆகிய கிரகங்கள் நீராவியாகிக் கரைந்துவிடும். நமது பூமியும் எரிந்து சாம்பலாகிவிடும்.மற்றைய கிரகங்கள் உறை நிலையடைந்து விடும்.
சூரியனிலிருந்து பிறந்தவள் நம் பூமித் தாய். நமக்குத் தாய் பூமி, பூமிக்குத் தாய் சூரியன். பூமி தட்டையா? கோளமா? இவ் வினா நெடுங் காலமாய் மக்களிடையே தவழ்ந்து வந்துள்ளது. பூமி ஒரு கோளம் தான் என்று விஞ்ஞானி கலிலியோ கண்டுபிடித்ததன் பின் இவ் வினாவுக்கு விடை கிடைத்தது. ஆனாலும், தற்பொழுது கூட ஒரு சில படிப்பற்ற பாமர மக்கள் பூமி தட்டை என்ற

கா. விசயரத்தினம் 105
நினைப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கலிலியோ காலத்துக்கு முற்பட்ட மக்கள் தம் வாழ் நாள் முழுவதும் பூமி தட்டை என்ற நினைவிலும், நம்பிக்கையிலும் வாழ்ந்தும் மடிந்தும் உள்ளனர்.
மக்களிடையே நிலவும் எத்தனையோ ஐயுறவு விடயங்களில் தீர்வு காண் படலத்தில் விஞ்ஞானம் முன் னின்று அரும் பெரு நீ தொணி டாற்றிக் கொண்டிருக்கின்றது. இதன் பணி தொடர் பணியாயமைய வேண்டும்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 30-05-2004)
责

Page 67
106 கணினியை விஞ்சும் மனித மூளை
மனித உறுப்புகளின் ஒரு நாள் நிகழ்வுகள்
LDனிதன் ஓர் அற்புதமான இயந்திரம். அதன் அமைப்பு எத்தனையோ கண்டுபிடிப்புகளுக்குக் கருப் பொருள். அதன் இயக்கம் மிக மிக விந்தையானது. இவ்வியந்திரம் நூறாண்டுகளுக்கு மேலும் தொடர்ந்து இயங்கக் கூடியது. இப்படித் தொடர்ந்து நீண்ட காலத்துக்கு இயங்கக் கூடிய வேறொரு இயந்திரம் உலகில் இல்லை என்றே கூற வேண்டும்.
நாம் அறிந்தோ, அறியாமலோ நம் உறுப்புகள் சதா இயங்கிக் கொண்டே இருக்கின்றன. நாம் பிறந்த நேரத்திலிருந்து இறக்கும் பொழுது வரை நமது இருதயம் தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டேயிருக்கிறது. நாம் செயலின் றிச் சும் மா இருந்தாலும் அவை இயங்காதிருப்பதில்லை. இனி மனிதனின் ஒரு நாள் நிகழ்வுகள் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.
01. இருதயம் 105,120 தடவை துடிக்கிறது. அத்துடன் 3,000 கலன்களுக்கு மேற்பட்ட குருதியை வாரி இறைத்துக் கொண்டிருக்கின்றது. 02. 7,500,000 மூளை அணுக்களுக்கு வேலை
கொடுக்கின்றோம். 03. 12,000 மைல்கள் நீளமுள்ள இரத்தக் குழாய்களில்
குருதி ஓடுகிறது.

கா. விசயரத்தினம் 107
04.
OS.
06.
07.
08.
09.
10.
11
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
750 பெரிய தசை நார்கள் இயங்குகின்றன. 24,000 தடவை சுவாசிக்கிறோம். 3.5 இறாத்தல் உணவைச் சாப்பிடுகிறோம். 485 கன அடி காற்றை உள் வாங்குகிறோம். 72,000 முறை நாம் கணி இமைகளை வெட்டுகின்றோம். 86 டிகிறி பாகை சூடு உடலிலிருந்து வெளியாகிறது. 3 இறாத்தல் நீரைப் பருகுகிறோம். இரத்தம் 168,000,000 மைல்கள் ஓடுகின்றது. 5,000 வார்த்தைகள் பேசுகின்றோம். 8 இறாத்தல் கழிவுப் பொருள் உடலிலிருந்து வெளியேறுகிறது.
உடலிலிருந்து 1.5 பைனி ட் வியர் வை வெளியேறுகிறது.
30 - 40 தடவைகள் உறக்கத்தில் புரளுகின்றோம். 0.018 அங்குலம் தலை மயிர் வளர்கிறது. நகம் 0.000048 அங்குலம் வளர்கிறது. 700 செ.மீ. நீளமுள்ள சிறு குடல் இயக்கப்படுகிறது. 150 செ.மீ. நீளமுள்ள பெருங்குடல் இயக்கப் படுகிறது. கணக்கிலிட முடியாத எத்தனையோ எண்ணங்களை மனத்தால் நினைக்கின்றோம்.
(லண்டன் வடலியில் ஆகத்து மாதம், 2002)
资

Page 68
108 கணினியை விஞ்சும் மனித மூளை
தவஞானி திருமூலர் தந்த தீந்தமிழ்த் திருமந்திரம்
என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ்ச் செய்யுமாறே.”
- திருமந்திரம் (81)
சைவம், தமிழ் ஆகிய துறைகளில் சீரும் சிறப்புத் தத்துவங்களைக் கொண்டு விளங்குவன திருக்குறள், திருவாசகம், திருமந்திரம் ஆகிய நூல்களாகும். இவற்றை மும்மணிகள் என்று கூறுவர். இம் மூன்று நூல்களின் தெய்வத் தன்மை கருதி ‘திரு' என்ற அடைமொழி பெற்று உயிர் நூல்களாய் வாழ்கின்றன. இவற்றில் திருமந்திரம் காலத்தால் வென்ற தலை சிறந்த நூலாகும். சைவ சித்தாந்தக் கருத்துகளையும், யோக நிலைகளையும், ஒழுக்க நெறிகளையும் எடுத்தியம்பும் சிறந்த நூல் திருமந்திரம் ஆகும். இந் நூல் ஆகமப் பொருளைத் தமிழிற் கூறும் முதல் நூலாகும். இச் சிறப்பு வாய்ந்த திருமந்திர நூலை அருளிப் பாடியவர் திருமூலர் ஆவார்.
திருமுறைகள் பன்னிரண்டு. இதில் பத்தாம் திருமுறையாகத் திகழ்வது திருமந்திரமாகும். திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராவர். மேலும் பதினெண் சித்தர்களில் திருமூலரும் ஒருவராவர்.

கா. விசயரத்தினம் 109
திருமூலரின் இயற் பெயர் திருமூலரன்று. சுந்தரநாதன் என்பதுதான் அவரின் இயற் பெயர். திருமூலரின் வாழ்க்கை வரலாறு ஒரு விசித்திரமானது. இனி அவர் வரலாற்றைப் பார்ப்போம்.
சுந்தரநாதன் திருமூலரான வரலாறு
சுந்தரநாதன் கயிலை மலையில் தவம் செய்து கொண்டிருந்த ஒரு யோகி. நந்தியெம் பெருமானைக் குருவாகக் கொண்டு ஆகமம் பயின்றவர். அந்த யோகி கயிலையை விட்டுத் தென்னாடு வந்து, திருவாவடுதுறைக் காவிரிக் கரையில் உள்ள சாத்தனூர் வந்தார். இதைச் சேக்கிழார் திருத்தொண்டர் புராணத்தில்,
“கயிலாயத்து ஒரு சித்தர் பொதியில் சேர்வார் காவிரி சூழ் சாத்தனூர் கருதும் மூலன்.” என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு ஓர் இடத்தில் பசுக்கள் கூட்டமாக நின்று கதறிக் கொண்டிருப்பதைக் கண்டார் யோகி. அருகில் சென்று பார்த்தபொழுது அங்கே ஒரு மனிதன் இறந்து கிடப்பதையும், அவனே அப் பசுக்களை மேய்க்கும் இடையனென்றும், இறந்து கிடப்பவன் பெயர் ‘மூலன்' என்றும், அறிந்து கொண்டார். கதறும் பசுக்களின் துயர் துடைக்கத் துணிந்தார். யோகிகள் “கூடு விட்டுக் கூடு பாய்தல்' என்ற சித்து புரியும் ஆற்றல் பெற்றவர்கள். இதைப் ‘பரகாயப் பிரவேசம்' என்றழைப்பர்.
இதற்கு உடம்பிலுள்ள பத்து வாயுக்களில் ஒன்றை எழுப்பி விட்டால் செயல் பூர்த்தியாகி விடும். உடனே யோகி தன் உடம்பிலிருந்து உரிய வாயுவை எழுப்பி இறந்து கிடந்த இடையனின் உடலில் புகுந்தார். உடனே

Page 69
110 கணினியை விஞ்சும் மனித மூளை
மூலன் தூங்கி எழுவது போல் உயிர்ப் பெற்றெழுந்தான். மூலன் உடலில் புகுந்தவுடன், தம் உடலைப் பத்திரமாக ஓர் இடத்தில் மறைத்து வைத்து விட்டு வந்தார் யோகி. மூலன் எழுந்ததைக் கண்ணுற்ற பசுக்கள் துள்ளிக் குதித்து ஆரவாரஞ் செய்து மகிழ்ந்தன. அவை மேய்ச்சல் நிலத்திலிருந்து வீடு போகத் தொடங்கின. யோகியும் அவற்றுடன் சென்றார். பசுக்கள் எல்லாம் அதன் அதன் வீடுகளுக்குச் சென்றன. ஒரு பசு மூலன் வீட்டு வாசலில் வந்து நின்றது. எனவே, யோகியும் நின்றார். பசு குரல் கொடுத்தது. மூலன் மனைவி வந்து மூலனை வரவேற்றாள். யோகிக்கு அப்பொழுதுதான் நிலைமை புரிந்தது. உடனே யோகி 'உனக்கும் எனக்கும் ஒரு தொடர்பும் இல்லை' என்று கூறினார். மூலன் மனைவியோ தன் கணவனுக்குச் சிந்தை கலங்கிப் பித்தம் பிடித்து விட்டதென்று கலங்கிச் சாத்தனூர்ச் சான்றோரைக் கூவி அழைத்துச் சேதியைக் கூறி, நீதி கேட்டு நின்றாள்.
வருகை தந்த சான்றோரும் யோகியின் செயல், பேச்சு ஆகியன மூலனுடையதாக இல்லையென்றும், உடல் மாத்திரம் மூலனை ஒத்ததென்றும், இவர் மூலன் அல்ல வேறொருவர் எண் றும் , இவர் இனி உன் கணவரல்லவென்றும், அவரை இனி மறந்து விடுமாறும் மூலன் மனைவியிடம் கூறினர். மூலன் மனைவியும் செய்வதறியாது அழுது கவலையில் ஆழ்ந்திருந்து விட்டாள். யோகியும் எடுத்த கருமம் முடிந்து விட்டது என்று மறைத்து வைத்த தன் உடலைத் தேடிச் சென்றார். மறைத்து வைத்த தன் உடலைக் காணாது மறைந்துவிட்டதை உணர்ந்த யோகி, இதுவும் ஈசன் செயலென நினைந்து மூலன் உடலுடன் இருந்தார்.

கா. விசயரத்தினம் 111
‘நந்தி அருளாலே நாதனாம் பேர்பெற்றோம்
நந்தி அருளாலே மூலனை நாடினோம்
நந்தி அருளாவது என்செயும் நாட்டினில்
நந்தி வழிகாட்ட நானிருந் தேனே.”
- திருமந்திரம். (68)
இறைப் பணிக்குத் தம்மை அர்ப்பணிக்க விரும்பி அந்த இடத்திலேயே ஓர் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்து ஆண்டுக்கு ஒரு பாடலாக மூவாயிரம் பாடல்களைப் பாடியருளினார். இப் பாடல்களின் நூலின் பெயர் ‘மந்திர மாலை' என்பதாகும். இதன் தெய்வத் தன்மை கருதி ‘திரு' என்ற அடைமொழியுடன் ‘திருமந்திர மாலை' என ஆன்றோர் கூறினர். கால வட்டத்தில் ‘திருமந்திர மாலை" சுருங்கித் ‘திருமந்திரம் ஆனது. இன்னும் யோகியின் சிறப்புக் கருதி 'திரு' என்ற அடைமொழியும் 'ஆர்' என்னும் சிறப்பு விகுதியும் பெற்று மூலன் உடம்பெடுத்த யோகி ‘திருமூலர்’ ஆகினார்.
திருமூலர் காலமும் வாழ்வும்
திருமூலரின் வகுப்புத் தோழர்களாக பதஞ்சலியும், வியாக்ரமரும் இருந்துள்ளனர். இதை அவர் கூறும் ஒரு மந்திரத்தில் பார்ப்போம்.
‘நந்தி அருள்பெற்ற நாதரை நாடிடின் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மன்று தொழுத பதஞ்சலி வியாக்ரமர் என்றிவர் என்னோடு எண்மரும் ஆமே.
திருழுந்திரம். (67)

Page 70
112 கணினியை விஞ்சும் மனித மூளை
வேதப் பொருள் கேட்டுணர்ந்த குருமார் எட்டுப் பேர்களாவர். அவர்களில் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நந்திகள் நால்வரும், சிவயோக மாமுனிவர், பதஞ்சலி, வியாக்ரமர், திருமூலர் ஆகிய நால்வரையும் சேர்த்துக் குருமார் எண்மராவர்.
வியாக்ரமர், வசிட்டரின் மைத்துனர். வசிட்டர் இராமாயண காலத்தவர். இராமாயண காலம் கி.மு. 6000ஆம் ஆண்டு என்று கணித்துள்ளனர். ஆகவே திருமூலர் காலமும் கி.மு. 6000ஆம் ஆண்டென்று கொள்ளலாம். இராமாயண காலம் தமிழுக்கு வட்ட எழுத்துக் காலம். எனவே திருமூலரும் வட்ட எழுத்துக் காலத்தவர். மேலும், திருமூலர் கி.மு. 6000 ஆம் ஆண்டு முதல் கி.மு. 100ஆம் ஆண்டு வரை 5900 ஆண்டுகள் உயிரோடிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறு நீண்ட காலம் உயிர் வாழலாமா என்றொரு கேள்வி யாவர் மனத்திலும் எழுவது இயல்பே. திருமூலர் கூறும் ஒரு மந்திரம் இது,
“இருந்தேன் இக்காயகத்தே எண்ணிலி கோடி இருந்தேன் இராப்பகல் அற்ற இடத்தே இருந்தேன் இமையவர் ஏத்தும் பதத்தே இருந்தேன் என்நந்தி இணைஅடிக் கீழே.”
- திருமந்திரம். (80)
‘தியானத்தில் இந்த உடலோடு எண்ண முடியாத பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து, இராப் பகல் தெரியாது தவத்தில் மூழ்கி, என்னை மறந்த நிலையில், தேவர்கள் வணங்கும் திருவடியை வணங்கித் துதித்து, என் தலைவன்

கா. விசயரத்தினம் 113
நந்தியெம் பெருமான் திருவடியே துணையென்று அதனைப் பற்றியபடி இருந்தேன்’ என்று கூறுகின்றார்.
இடப் பக்க மூச்சை உள்ளே இழுத்து, வலப் பக்கமாக வெளியே விட்டு, இரு பக்கமும் செய்து மூச்சுக் காற்றை உள்ளே நிறுத்தும் கால அளவும் கணக்கும் தெரிந்தவர்கள், எமனை எதிர்த்து வெற்றியும், முதுமைத் தடுப்பும் பெறுவரென்று திருமூலர் கூறுகின்றார். (திருமந்திரம், 571)
யோகி, சித்தர், முனிவர், துறவி ஆகியோரின் வாழ்க்கை நெறி சாதாரண மனிதன் வாழ்க்கை முறையை விடச் சிறந்ததும், தூய்மையானதும் ஆகும். அவர்கள் பற்றற்ற, சுயநலமற்ற, பரிசுத்தமான, தூய நோக்குடைய, கடவுள் சிந்தனையான, சமூகச் சீர்நோக்குடைய வாழ்க்கை நெறியைக் கடைப்பிடிப்பவர்கள். இயற்கையோடு இணைந்து வாழ்பவர்கள். மலை உச்சி, காடு, மரத்தடி நாடிச் சென்று யோக நிட்டை புரிபவர்கள். தியானத்தில் ஈடுபட்டால், அவர்களுக்கு இராப் பகல் கூடத் தெரிவதில்லை. யோக நிலையில், உணவின்றிக் கூட பல நாட்களோ, வருடங்களோ வாழக் கூடியவர்கள். உயிரற்றவர்கள் போல் அசைவின்றி உயிருடன் வாழும் வலிமை பெற்றவர்கள். இவர்கள் இயற்கை தரும் காய், கனி, பழம் போன்றவற்றை புசிப்பவர்கள். ஆனால், நாமோ நஞ்சு கலந்த கலப்பட உணவுகளைச் சாப்பிட்டு நம் வாழ் நாளைச் சுருக்கும் இக் காலத்தில் வாழ்ந்து மடிகின்றோம்.
இன்னும், அவர்கள் மூச்சுப் பயிற்சியை நன்கறிந்த சித்தர்கள். வலது மூச்சு, இடது மூச்சு, நடு மூச்சு என்று

Page 71
114 கணினியை விஞ்சும் மனித மூளை
வகுத்து, ஒவ்வொன்றின் பலன் அறிந்து, அவ்வாறு செயல் பட்டுப் பல்லாண்டு வாழ்ந்தவர்கள். அவர்கள் சுவாசித்த காற்று மாசற்ற இயற்கைச் சூழலோடானது. சுவாசிக்கும் காற்றைச் சித்தர்கள் உணவாக்கிக் கொண்டனர். ஆனால், நாமோ இன்று சூழலிலுள்ள மாசு படிந்த நச்சுக் காற்றை உட்கொணர் டு, நம் வாழ் நாளைக் குறுக் கிகி கொண்டிருக்கின்றோம். 8000 ஆண்டுகளுக்கு முன் இருந்த சூழ்நிலை வேறு, நாம் இன்று வாழும் சூழ்நிலை வேறு. சித்தர்கள் உள்ளத்தையும், உடலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்கள் உணவில் மிகக் கட்டுப்பாடாயிருந்து ஒருவேளை மாத்திரம் உண்டார்கள். நோயின்றிப் பல ஆண்டுகள் வாழ்ந்து காட்டினார்கள்.
“ஒரு முறை உண்பவன் யோகி இரு முறை உண்பவன் போகி மும் முறை உண்பவன் ரோகி அதற்கு மேல் உண்பவன் யார்? துரோகி”
மரங்களில் அரச மரம் 90 சதவிகிதமான பிராண வாயுவை வெளிப்படுத்துகின்ற ஓர் உண்மையைத் திருமூலர் அறிந்து வைத்திருந்து அரச மரத்தை நாடி யோக நிட்டை புரிந்து மூவாயிரம் திருமந்திரங்களை மூவாயிரம் ஆண்டில் பாடியருளினார். “சேர்ந்திருந்தேன் சிவ போதியின் நிழலில் என்பது அவர் மந்திரம். போதி என்பது அரச மரம்.
பின்வரும் மந்திரத்தில் யோகிகளின் வாழ் நாட் கணக்கு கூறப்பட்டுள்ளது. உலக மாந்தரின் வாழ் நாட் கணக்குகள் யோகிகளுக்கு அமையாவாம்.

கா. விசயரத்தினம் 115
“ஆறும் இருபது ஐயைஞ்சு மூன்றுக்கும் தேறும் இரண்டும் இருபத்தோடு ஆறிவை கூறும் மதிஒன்றினுக்கு இருபத்து ஏழு வேறு பதியங்கள் நாள்விதித் தானே.”
- திருமந்திரம் (746)
மனித வாழ்வில் ஆயிரத்து ஐந்நூறு (1500) நாட்கள், யோகிகளுக்கு ஆறு நாட்களாகும். இன்னும் சிலருக்கு இது 144 நாட்கள். வேறு சிலருக்கு 27 நாட்கள். இவ்வாறு அவர்களின் தவ நிலைக்கேற்ப வாழ்நாள் வகைப் படுத்தப்பட்டுள்ளது.
மனித வாழ்வில் ஆயிரத்து ஐந்நூறு நாட்கள் யோகிக்கு ஆறு நாட்கள் என்ற கணக்கின்படி பார்த்தால், யோகியின் ஓர் ஆண்டு, மனித வாழ்வில் 250 ஆண்டாகும். இது யோகிகளின் நீண்ட நாள் வாழ்வினை எடுத்துக் காட்டுகின்றது.
மேற் காட்டிய சான்றுகளைப் பார்க்குமிடத்து, திருமூலர் பல ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருந்தாரென்ற உண்மையை நாம் மறுப்பதற்கில்லை. திருமூலர் ஒரு தவ யோகி. உண்மைக்கு மாறுபட்ட கருத்தினை விதைத்திருக்க மாட்டார் என்ற உண்மையை நாம் ஏற்றுத் தான் ஆக வேண்டும்.
திருமந்திரமும் அதன் சிறப்பும்
ஒளவைப் பிராட்டியார் திருக்குறளையும், நான்கு வேதங்களின் முடிவாகிய உபநிடதங்களையும்,
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திநாயனார்

Page 72
116 கணினியை விஞ்சும் மனித மூளை
ஆகியோரின் தேவாரத் தமிழையும், வாதவூரரின் கோவை, திருவாசகம் ஆகிய நூல்களையும், திருமூலரின் திருமந்திரத்தையும் நன்கு கற்றறிந்து கீழ்க்காணும் பாவினைப் பாடியுள்ளார். இதில் திருமந்திரத்தின் சிறப்பும் பேசப்படுகின்றது.
“தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர்.”
திருமூலர் மூன்று நூல்களை எழுதியுள்ளார் என்று ஒரு மந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
“மூலன் உரைசெய்த மூவாயிரத் தமிழ் மூலன் உரைசெய்த முந்நூறு மந்திரம் மூலன் உரைசெய்த முப்பது உபதேசம் மூலன் உரைசெய்த மூன்றும் ஒன்றாமே.”
- திருமந்திரம். (3046)
திருமூலர், திருமந்திரம் மூவாயிரத் தமிழைப் பாடியபோது மூலன் உடலில் நின்று பாடினாரென்பதும், முந்நூறு மந்திரம் என்ற நூலையும், முப்பது உபதேசம் என்ற நூலையும் சுந்தரநாதனாக நின்று பாடினாரென்பதும் ஈண்டுக் குறிப்பிடத்தக்கது.
மேற்படி பாடலில் 3000 தமிழ்ப் பாடல்கள் என்று கூறப்பட்டாலும், திருமந்திர நூலில் ஒருமித்து 3047 பாடல்கள் உள்ளன. சில பாடல்கள் இரட்டித்துள்ளமையும், சில பாடல்களில் சில வரிகளும், சொற்களும் வித்தியாசப்

கா. விசயரத்தினம் 117
பட்டுள்ளமையும், அவற்றைச் சரி பார்த்து விலக்கப்படாது தொகுக்கப்பட்டமையும், முப்பது உபதேசமும் இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ளமையும் இவ்வாறான அதிகரிப்புக்குக் காரணமாகும். மற்றது 'முந்நூறு மந்திரம்' என்ற பாடல்கள் நூல் வடிவில் பதிப்பிலுள்ளது.
திருமந்திரத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் சாதாரண மக்களால் வாசித்துப் பொருள் புரியக்கூடிய எளிய முறையில் கொடுந் தமிழ், இலக்கணம், பண்டிதர் பாணி ஆகியவை தவிர்த்துப் பாடப்பட்டுள்ளமை இந் நூலின் ஒரு சிறப்பு அம்சமாகும்.
ஒன்பது தந்திரங்கள்
திருமந்திரம் ஒன்பது பகுதிகளைக் கொண்டது. ஒவ்வொரு பகுதியும் தந்திரம்' என்று பெயர் ஆட்டப் பட்டுள்ளது. ஒன்பது தந்திரத் தலைப்பின் கீழ் 221 உப தலைப்புகள், அவற்றின் கீழ் ஒருமித்து 3,047 பாடல்கள் என அமைந்துள்ளன. இந்த ஒன்பது தந்திரங்களையும் சுருக்கமாகப் பார்ப்போம்.
முதல் தந்திரம்
காரணாகமத்தின் சாரமாகும்: சைவ LD5356ft
கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் பலவற்றை எடுத்துக்
கூறுகின்றது.
இரண்டாம் தந்திரம்
காமிகாமத்தின் சாரமாகும் : இதில் சில புராண
வரலாற்றுக் குறிப்பு, கரு உற்பத்தி, சிவன் இயற்றும்

Page 73
118 கணினியை விஞ்சும் மனித மூளை
படைத்தல் முதலிய ஐந்தொழில்கள் ஆகியவை கூறப்படுகின்றன. மூன்றாம் தந்திரம் :
வீராகமத்தின் சாரமாகும்; இதிலே அட்டமா சித்தி, அட்டாங்க யோகம், ஆயுட் பரீட்சை முதலான பல செய்திகள் பேசப்படுகின்றன. நான்காம் தந்திரம்
சிந்தாகமத்தின் சாரமாகும் : இதில் பல வயிரவி மந்திரம், சக்கர அமைப்பு, இன்னும் பல மந்திரங்கள் கூறப்படுகின்றன. ஐந்தாம் தந்திரம்
வாதுளாகமத்தின் சாரமாகும்; இதில் சுத்த சைவம், அசுத்த சைவம், மார்க்க சைவம், கடுஞ் சுத்த சைவம் என்பன பற்றியும், சரியை, கிரியை, யோகம், ஞானம் பற்றியும், சன்மார்க்கம், சகமார்க்கம், சற் புத்திர மார்க்கம், காச மார்க்கம் பற்றியும், சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் ஆகிய முத்தி நிலைகள் பற்றியும் பேசப்படுகின்றன. ஆறாம் தந்திரம்
வியாமளாகமத்தின் சாரமாகும்; இதிலே சிவகுரு தரிசனம், திருவடிப் பேறு, திரு நீற்று மாண்பு, தவம் முதலான செய்திகள் கூறப்படுகின்றன. ஏழாம் தந்திரம்:
காலோத்தராகமத்தின் சாரமாகும்; இதில் இலிங்க வகைகள், ஆறு ஆதாரங்கள், மகேசுவர பூசை, சமாதி

கா. விசயரத்தினம் 119
அமையும் முறை, குரு பூசை விதி முதலான பல பொருள்கள் பேசப்படுகின்றன.
எட்டாம் தந்திரம்
சுப்பிராகமத்தின் சாரமாகும்; இதிலே பதி, பசு, பாச விளக்கம், “தத்துவ மசி வாக்கிய ஆராய்ச்சி,
முக்குற்றம், முப்பாழ் முதலிய பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. இதுவே மிக விரிவான பகுதியாகும்.
ஒன்பதாம் தந்திரம் :
மகுடாகமத்தின் சாரமாகும்; இதில் பஞ்சாக்கர விளக்கம், திருக் கூத்துத் தரிசனம், ஞானோதயம்,
சிவசொரூப தரிசனம், மோனசமாதி, அணைந்தோர் தன்மை முதலானவை பேசப்படுகின்றன.
திருமந்திரமும் திருக்குறளும்
திருவள்ளுவர் 1,330 குறுகத் தறித்த திருக்குறள் பாடல்களைப் பாடியருளினார். இவர் கி.மு. 31ஆம் ஆண்டில் அதாவது இற்றைக்கு 2036 ஆம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். திருமூலர் கி.மு. 6000ஆம் ஆண்டு முதல் கி.மு. 100ஆம் ஆண்டு வரை அதாவது 5900 ஆண்டுகள் உயிரோடிருந்தவர் எனவும் கூறுவர் ஆன்றோர். இன்னும், இவர் இற்றைக்கு 8000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்.
திருமந்திரத்திலுள்ள பல அதிகாரங்கள் திருக்குறளிலும் அமைந்துள்ளதைக் காணலாம். உதாரணமாக:- கொல்லாமை, புலால் மறுத்தல்,

Page 74
120 கணினியை விஞ்சும் மனித மூளை
வான்சிறப்பு, அன்புடைமை, வாய்மை, ஊழ், கல்லாமை, கள்ளுண்ணாமை, கல்வி, துறவு, தவம், புறம் கூறாமை, கூடாவொழுக்கம், நல்குரவு, நடுவுநிலைமை, பிறர்மனை நயவாமை போன்றவை இவ்விரு நூல்களிலும் பொது அதிகாரமாக அமைந்துள்ளன.
இருவரும் வாழ்ந்த காலங்களை ஒத்து நோக்கின் திருவள்ளுவர் திருமந்திரத்தைப் படிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதென்பதையும், திருமூலர் திருக்குறளைப் படித்திருக்க முடியாதென்பதும் புலனாகின்றது.
உடம்பின் மகிமை
நம் உடம்பினை மிகக் கீழ்த்தரமாக நினைந்து
எழுதியவர்களை ஒரு கரையில் ஒதுக்கி விட்டு, அவ்வுடம்புக்கு மிக முக்கியத்துவம் கொடுத்தவர் திருமூலர் ஒருவரேயாவார். 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர் என்றும், 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்றும் கூறி உடம்பின் மாண்பை மேன்னிலைப்படுத்தியவர் திருமூலராவார். இன்னும் ஒருபடி மேற்சென்று, இந்த உடம்பை முன்பெல்லாம் இழுக்கென்றும், பின்பு அதனுள் உறு பொருள் கண்டு, உத்தமனாகிய பரம் பொருள் கோயில் கொண்டுள்ளான் என அறிந்து இந்த உடம்பினைப் பேணிப் பாதுகாத்து வந்தேனென்றும் கூறுகின்றார்.
“உடம்பினை முன்னம் இழுக்குஎன்று இருந்தேன் உடம்பினுக்கு உள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று உடம்பினை யான் இருந்து ஓம்புகின் றேனே.”
- திருமந்திரம் (725)

கா. விசயரத்தினம் 121
மேலும், உள்ளத்தைப் பெருங் கோயிலாகவும், ஊனுடம்பை ஆலயமாகவும், பரம்பொருளைச் சென்று வழிபட கோபுரம் வாசலாகவும், தெளிவான மனநிலை உள்ளவர்க்குச் சீவன் சிவலிங்கமாகவும், ஐந்து புலன்களான மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியன கோவிலின் ஐந்து பெரிய அழகிய விளக்குகளாகவும் கண்டவர் திருமூலர். ;
“உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானாற்கு வாய் கோபுரவாசல் தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே.”
- திருமந்திரம் (1823)
ஆலய அமைப்பும், இறைவன் இருப்பும், நம் உடம்பிலேயே உளதெனக் கூறிய திருமூலர் மக்கள் மனங்களைக் கவர்ந்த ஒரு சிறந்த ஞானியாவார். ஞானிகள் உள்ளத்திலேயே சிவலிங்கத்துக்குப் பூசை புரிபவர்கள்.
பூசைக்குப் பூவுண்டு, நீருண்டு, இலையுண்டு
அறம், புண்ணியம், தவம் ஆகியன செய்யப் பொன், பொருள், பணம் வேண்டுமென்று ஏங்கத் தேவையில்லை. காடு சென்று கடுந் தவம் புரிய வேண்டும் என்றும் இல்லை. ‘பூசை செய்வதற்குப் பூவும், நீரும் போதும். ‘புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு என்கின்றார் திருமூலர். (திருமந்திரம் 1828 )

Page 75
122 கணினியை விஞ்சும் மனித மூளை
பூசைக்குப் பால், பழம், தேன், மலர் ஆகியன வேண்டாம். பச்சிலை போதுமானது. இதுவே பெரிய பூசை. பசுவுக்கு ஒரு வாய் கைப்பிடி புல் போதும். இதுவே சிறந்த அறம். இல்லை என்று வருவோர்க்கு ஓர் உருண்டைச் சோறு போதும். இதுவே சிறந்த தானம். எல்லோரிடமும் அன்பு சொரிந்து சிரித்துப் பேச வேண்டும். இதுவே உன்னதமான வாழ்க்கைச் சின்னம். பூசை, அறம், தானம், வாழ்க்கை ஆகியவற்றைச் சிறப்பித்துக் காட்டிய திருமூலர் மந்திரம் வருமாறு:-
“யாவர்க்கு மாம்இறை வற்குஒரு பச்சிலை யாவர்க்கு மாம்பசு வுக்குஒரு வாயுறை யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்கு மாம்பிறர்க்கு இன்னுரை தானே.”
- திருமந்திரம். (252)
ஆசை அறுமின்
பயனற்ற வீண் பேச்சினை ஒழித்து பொருள் மேல் வைத்துள்ள ஆசையையும், உற்றார் உறவினர் மேல் வைத் திருக்கும் அனி பையும் , ஆசையையும் அறுத்தெறிந்தால் இறைவன் உறையுமிடம் புலப்படும் என்று திருமூலர் மந்திரம் கூறுகின்றது.
“வாசியும் ஊசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றிப் பயன்இல்லை ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின் ஈசன் இருந்த இடம் எளிதாகுமே.”
- திருமந்திரம். (2613)

கா. விசயரத்தினம் - 123
மேலும் கடவுள் மேற் கொண்ட ஆசை ஆனாலும்
அறுத்தெறியுங்கள். ஆசை கூடக் கூடத் துன்பங்கள் அதிகரிக்கும். ஆசை குன்றக் குன்ற ஆனந்தம் பெருகும். இன்னும், கடவுளிடம் கூட ஆசை வைக்காது பக்தி செலுத்தி
அன்பு வைத்திருக்கலாம் என்றவாறு ஆசை புறப் பற்றின் ஊற்று, அன்பு, பக்தி அகப் பற்றின் ஊற்று; இதைத்
திருமூலர் திருமந்திரத்தில் மிக அழகாகக் கூறியுள்ளார்.
அப் பாடல் வருமாறு:-
“ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் ஆசைப் படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.”
- திருமந்திரம். (2615)
அணுவில் அணு
ஆயும் அறிவுங் கடந்தணு ஆரணி என்று திருமூலர் பராசக்தியைக் குறிப்பிட்டு மந்திரம் அமைத்துள்ளார். ஆராய்ந்தறியும் அறிவுக்கும் எட்டாத அணுவுக்குள் அணுவான நுண்ணணுவானவள் பராசக்தி என்பது பொருள். மேலும் அணுவை ஆயிரமாகப் பிரித்து அணுவுக்குள் அணுவாக உள்ள பரமாணுவான ஆதிப்பிரானைப் பார்க்கின்ற மூலரின் மந்திரமொன்றிது.
“அணுவில் அணுவினை ஆதிப் பிரானை அணுவில் அணுவினை ஆயிரம் கூறிட்டு அணுவில் அணுவை அணுக வல்லார்க்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.”
- திருமந்திரம். (2008)

Page 76
124 கணினியை விஞ்சும் மனித மூளை
பிரிக்க முடியாத நுண்ணிய அணுவை ஆயிரமாகப்
பிரித்துக் கூறுபோட்டுப் பார்த்த திருமூலர் காலத்து விஞ்ஞான வளர்ச்சியை மெச்சாதிருக்க முடியாது.
உறுதிக் குடிநீர்
உடலிலுள்ள சிறுநீரானது, உடலுக்கு உறுதி தருவது. ‘உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்’ என்றார் திருமூலர். நுரைத்து முதலில் வரும் சிறுநீரையும், தளர்ந்து முடிவில் வரும் சிறுநீரையும் விலக்கி விட்டு, இடையில் வரும் சிறுநீரைக் குடிக்குமாறு வேண்டுகின்றார் திருமூலர்.
“நுரைதிரை நீக்கி நுகர வல்லார்க்கு, நரைதிரை மாறும் நமனும் இங்கில்லையே’
(திருமந்திரம் 848)
என்பது அவர் மந்திரம். இச்சிறுநீரை நூறு மிளகு அளவு உட்கொள்ள வேண்டுமென்று பிரமான அளவும் கொடுத்துள்ளார்.
இந்தச் சிறுநீரைக் குடித்தால், ஓர் ஆண்டில் உடம்பில் ஒரு வகை ஒளி தோன்றும்; மனதில் மகிழ்ச்சி உண்டாகும்; உடம்பு பொன் போலப் பிரகாசிக்கும்; தலை மயிர் கருமையடையும்; முதுமையும் மூப்பும் மாறி எம பயம் இராது; பெண்கள் சிறுநீரோடு மிளகு, நெல்லிக் காய், மஞ்சள், வேப்பங் கொழுந்து ஆகியவற்றைப் பொடி செய்து சேர்த்துச் சாப்பிட்டால், உடம்பு இளைக்கும் தலை முடி கருக்கும் என்று கூறுகின்றார் தவமுனி, இந்தச் சிறு நீர் உடலுக்கு வீரியம் தரும் மருந்தென்றும், தேவர் மருந்தென்றும், பெண் தரும் பேரின்ப மருந்தென்றும், இது

கா. விசயரத்தினம் 125
ஒரு மூல மருந்து என்று யோகிகள் தெரிந்து கொண்டனரென்றும், எம் பெருமான் நந்திதேவன் அருளிச் செய்தான் என்றும் கூறுகின்றார் திருமூலர். - (திருமந்திரம் 845, 846, 847, 848,849, 850.)
சிறுநீர் குடிக்கும் பழக்கம் சிலரிடம் இன்றும் உள்ளது. இந்தியாவில் ஒரு பிரதம மந்திரியாய் இருந்தவர் இப் பழக்கத்தைக் கைக் கொண்டு சுக தேகியாய் வாழ்ந்தவரென்பது யாவரும் அறிந்ததே. மேலும், விசக்கடி வைத்திய நிபுணர்கள் பாம்பு தீண்டியவருக்கு நச்சுத் தன்மையைப் போக்க முதலுதவியாகச் சிறுநீரைக் குடிக்கக் கொடுக்கும் வழக்கம் தற்பொழுதும் நடைமுறையில் உள்ளது.
யோகிக்கு நீண்ட வாழ்வு
பத்தும், ஐந்தும், ஆறும், எட்டும் ஒருமித்த இருபத்தொன்பது நாட்களும், உலக மக்களுக்குத் துன்பம் தரும் நாட்களாகத் தோன்றினாலும், யோகிகளுக்கு இவை பத்து நாட்கள் போலத்தான் தோன்றும். இன்னும், இறையோடு அன்புறவுடன் தவமிருக்கும் யோகிகளுக்கு முப்பது நாட்களும், ஏழு நாட்களாகத்தான் தோன்றும் என்று மந்திரம் தந்தவர் திருமூலர். மக்களுக்கு முப்பது நாள் யோகிக்கு ஏழு நாள் என்றவாறு,
“ஈர்ஐந்தும் ஐந்தும் இருமூன்றும் எட்டுக்கும் பார்அஞ்சி நின்ற பகைபத்து நாளாகும் வாரம் செய்கின்ற வகைஆறஞ்சு ஆமாகில் ஓர் அஞ்சோடு ஒன்றொன்றென ஒன்றுநாளே."
- திருமந்திரம் (783)

Page 77
126 கணினியை விஞ்சும் மனித மூளை
உணர்வும் , நினைவும் ஒருங்கமைத்துத் தவயோகத்திலாழ்ந்த யோகிக்கு முப்பத்தொரு நாட்கள் மூன்று நாட்களைப் போல் தோன்றும். இறைவன் அருள் கூடக் கூட யோகிகளுக்கு நாட்பொழுது குறைவாகத் தோன்றும்.
“ஒன்றிய நாள்கள் ஒருமுப்பத்து ஒன்றாகிற் கன்றிய நாளும் கருத்துற மூன்றாகும்.”
- திருமந்திரம் (784)
தவம் புரியும் யோகிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்கள் என்பதை மேற்கூறிய இரு மந்திரங்களும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
கூடு விட்டுக் கூடு பாயும் விந்தை
யோகிகள் கூடு விட்டுக் கூடு பாய்ந்து வெளியேறும் சித்தி பெற்றவர்கள். இதைப் ‘பரகாயம்' என்றழைப்பர். திருமூலநாயனாரும், சுந்தரநாதனாக இருந்தபொழுது அவ்வுடம்பை விட்டு இறந்து கிடந்த மூலன் உடம்பில் புகுந்து கூடு விட்டுக் கூடு பாய்ந்து- திருமூலர் ஆனவர்.
அன்னை பராசக்தியின் கடாட்சம் பெற்றவர்களுக்கு, புலன் இச்சை, தீய குணங்கள் விலகி மன உணர்வு, புலன்கள் ஒருமித்துக் குவிந்து, அடங்கி ஓர் ஆண்டு இருந்தால் மிக உயர்ந்த கூடு விட்டுக் கூடு பாய்ந்து வெளியேறும் சித்தி பெறுவர் என்று மந்திரம் அமைத்துள்ளார் திருமூலர். அப் பாடல் வருமாறு:-
“அறிந்த பராசக்தி உள்ளே அமரில் பறிந்தது பூதப் படைஅவை எல்லாம்

கா. விசயரத்தினம் 127
குவிந்து அவை ஓராண்டு கூடஇருக்கில் விரிந்த பரகாயம் மேவலும் ஆமே.”
திருமந்திரம். (682) கண் நோய்
கண் மனிதனுக்கு மிக முக்கியமானது என்று எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் திருமூலர் அறிந்து நோயின் காரணத்தையும் அதற்குரிய சிகிச்சை முறைகளையும் எடுத்துக் கூறியுள்ளார். கண்ணில் உயிர்க் காற்றான தனஞ்சயன் மாறினால் பல நோய்கள் உண்டாகும். ஆனால், கண்ணில் பூ விழுதல், வெள்ளெழுத்து, திரை படர்தல் போன்ற நோய்கள் தனஞ்சயன் வாயு திரிவதால் வருவதன்று. கண் நரம்பில் கூர்மன் என்னும் வாயு பொருந்தாவிடில் கண்ணில் பல நோய்கள் உண்டாகிக் கண் பார்வை கெடும் என்று கண் நோய்க்கு மருந்தும் கூறுகின்றார். அவர் மந்திரம் வருமாறு:-
“கண்ணில் வியாதி உரோகம் தனஞ்சயன் கண்ணில் இவ்வாணிகள் காசம் அவனல்லன் கண்ணினில் கூர்மன் கலந்திலன் ஆதலால் கண்ணினில் சோதி கலந்ததும் இல்லையே.”
- திருமந்திரம். (656).
திருமூலர் காலத்தில் வைத்தியத்துறை விஞ்ஞானம் சிறந்து வளர்ச்சியுற்றிருந்தமை இம் மந்திர மூலம் தெளிவாகின்றது. நூறாண்டுகள் வாழ
நூற்று அறுபத்து ஆறு மாத்திரைப் பிராணன் வலப் பக்கமாகவும், இடப் பக்கமாகவும் சுற்றி வர, இப் பிராணன்

Page 78
128 கணினியை விஞ்சும் மனித மூளை
உடல் எங்கும் பரவி நின்று, பின் கழுமுனை வழியாக மேல் நோக்கிச் செல்ல, மனித உடம்பு நூறு ஆண்டுகளுக்கு மேலும் நிலைத்து வாழலாம் என்று கூறுகின்றார் திருமூலர் - பின்வரும் பாடலில்,
“நூறும் அறுபதும் ஆறும் வலம்வர நூறும் அறுபதும் ஆறும் இடம்வர நூறும் அறுபதும் ஆறும் எதிரிட நூறும் அறுபதும் ஆறும் புகுவரே."
- திருமந்திரம். (729) இறைவன் உள்ளத்துக்குள் ஆனந்தக் கூத்தை நிகழ்த்துகின்றானென்ற தன்மையை உணர்ந்து, ஒம் எனும் பிரணவ மந்திரத்தை உச்சரித்து, உள்ள உணர்வுடன் பரம் பொருளை உற்று நோக்கினால், எடுத்த பிறவியில் நூறாண்டு வாழலாம். (திருமந்திரம் (757).
உடலில் உள்ள வாயுக்கள் ஒன்பது. அவை தரித்திருக்கும் இடங்களாவன: (1) இடப் பக்க நரம்பு, (2) வலப் பக்க நாசி நரம்பு, (3) நடு நரம்பு, (4) உள் நாக்கு நரம்பு, (5) வலக் கண் நரம்பு, (6) இடக் கண் நரம்பு, (7) வலக் காது நரம்பு, (8) இடக் காது நரம்பு, (9) எருவாய் நரம்பு.
இப்படியான ஒன்பது வாயுக்களும் கூடிக் குறையாது ஒத்து இயங்குவன. சிறப்பான வாயு தனஞ்சயனும், ஒன்பது வாயுக்களும், ஒன்பது நாடிகளில் சீராக நின்று இயங்கினால், இவ்வுடம்பும், உயிரும் ஒத்து நீண்ட காலம் வாழலாம் எனக் கூறுகின்றார் திருமூலர். (திருமந்திரம். (653).

கா. விசயரத்தினம் 129
வாழ்நாள் வயது வரம்பு
மனிதன் வாழ்நாளை நான்கு கண்டங்களாக வகுத்துள்ளார் திருமூலர். முதலாம் கண்ட வயது வரம்பு இருபத்தைந்து முதல் இருபத்தெட்டு வயது வரையாகும். இரண்டாம் கண்டம் முப்பது முதல் முப்பத்து மூன்று வயது வரையாகும். இது தாண்டினால், மூன்றாம் கண்டம் அறுபது முதல் அறுபத்திரண்டு வயது வரையாகும். இம் மூன்று கண்டத்திலும் தப்பி வாழ்ந்து விட்டால், நாலாம் கண்டத்தில் நூறு ஆண்டுகளும் அதற்கு மேலும் வாழலாமெனக் கூறுகின்றார் திருமூலர். அப் பாடல் வருமாறு:-
“அழிகின்ற ஆண்டவை ஐஅஞ்சு மூன்று மொழிகின்ற முப்பத்து மூன்றுஎன்ப தாகும் கழிகின்ற கால(ம்) அறுபத்து இரண்டென்ப எழுகின்ற ஈர்ஐம்பது எண்ணற்று இருந்ததே."
- திருமந்திரம். (742)
திருமண வயது
திருமண வயது பெண்ணுக்கும், ஆணுக்கும்
ஒவ்வொரு கால கட்டங்களிலும் வேறுபட்டே இருந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. திருமூலர் காலத்தில், அதாவது இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருமணத்திற்குப் பொருத்தமான வயது பெண்ணுக்கு இருபதும், ஆணுக்கு முப்பதும் என்று திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
“எய்த பிராயம் இருபது முப்பதும்
வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்

Page 79
130 கணினியை விஞ்சும் மனித மூளை
வாய்ந்த குழலியோடு ஐந்து மலர்ந்திடச் சோர்ந்தன சித்தமும் சோர்வில்லை வெள்ளிக்கே.”
- திருமந்திரம். (833)
கி.மு. 5300 ஆம் ஆண்டளவில் வாழ்ந்த தொல்காப்பியனார் திருமணத்துக்குரிய தலைவன், தலைவியர் பத்து வகைப் பண்புகளில் ஒத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார். அதில், ‘ஒத்த வயது' என்பதும் ஒன்றாகும். அதை அவர் கூறும் சூத்திரத்தில் பார்ப்போம்.
“பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு உருவு நிறுத்த காம வாயில் நிறையே அருளே உணர்வொடு திருவென முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே.”
- தொல். பொருள். (268) மேற்குறிப்பிட்ட பத்து வகைப் பண்புகளாவன:- (1) ஒத்த பிறப்பு (2) ஒத்த ஒழுக்கம் (3) ஒத்த ஆண்மை (4) ஒத்த வயது (5) ஒத்த உரு (6) ஒத்த அன்பு (7) ஒத்த நிறை (8) ஒத்த அருள் (9) ஒத்த அறிவு (10) ஒத்த
செல்வம்.
இன்னுமொரு தொல்காப்பியச் சூத்திரத்தில் ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இளங்கோ அடிகள் ‘கண்ணகி ஈர் ஆறு ஆண்டு அகவையாள்' என்றும், “கோவலன் ஈர் எட்டு ஆண்டு அகவையான்' என்றும் கூறிக் கண்ணகி பன்னிரண்டு வயதிலும், கோவலன் பதினாறு வயதிலும் ‘மாமுது

கா. விசயரத்தினம் 131
பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை." என்று மணவிழாக் கோலத்தை நம் கண்முன் காட்டுகின்றார்.
நாம் தற்பொழுது திருமூலர் காலத் திருமண வயதெல்லையான பெண்ணுக்கு இருபது வயதும் ஆணுக்கு முப்பது வயதும் என்பதைப் பொருத்தமான திருமண வயதெல்லையாகக் கைக் கொள்வதை யிட்டுப் பெருமைப்பட வேண்டும். ஆண் மகவா? பெண் மகவா?
ஆண், பெண், அலி எவ்வாறு தோன்றுகின்றன என்று மந்திரம் அமைத்துள்ளார் திருமூலர். தலைவன், தலைவியர் உடலுறவின் போது ஆணிடம் உண்டாகும் சுக்கிலம் அதிகமானால் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கும். பெண்ணிடம் உண்டாகும் சுரோணிதம் அதிகரித்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும். இந்தச் சுக்கிலம், சுரோணிதம் இரண்டும் சமனாகத் தோன்றின் பிறப்பது ஆண், பெண் அற்ற அலியாகும்.
ஆண், பெண் கூடலின்போது ஆணின் முயற்சி அதிகமானால் பிறக்கும் குழந்தை உலகாளும் வல்லமையுடையதாம். ஆணின் விந்து திண்மையுறின் பெண்ணின் சுரோணிதத்துடன் சேர்ந்தும் பயன் இல்லையாம். “ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும் பூணிரண்டு ஒத்துப் பொருந்தில் அலியாகும் தாண்மிகு மாகில் தரணி முழுதாளும் பாணவம் மிக்கிடின் பாய்ந்ததும் இல்லையே.”
- திருமந்திரம். (478)

Page 80
132 கணினியை விஞ்சும் மனித மூளை
அகவைக் கணிப்பு
நூறாண்டு வாழக் கூடிய குழந்தையைப் பெற்றெடுக்கும் வழிமுறையைக் கூறுகின்றார் திருமூலர். உடலுறவின் போது விந்து கருப்பையைச் சேர்ந்த பின், ஐந்து மாத்திரைப் பொழுது பிராணவாயு ஓடினால் கருவுற்றுப் பிறக்கும் குழந்தை நூறாண்டு வாழும் என்றும், நான்கு மாத்திரைப் பொழுது ஓடினால் பிறக்கிற குழந்தை எண்பது ஆண்டுகள் வாழும் என்றும், இவ்வாறு பாயும் மூச்சுக் காற்றை அளவறிந்து செலுத்தக் கூடிய வலிமை யோகப் பயிற்சி உடைய யோகிகளுக்குக் கைவரக் கூடிய செயல் என்றும் கூறுகின்றார் திருமூலர். மாத்திரைப் பொழுது என்பது கைநொடி அளவு அல்லது கண் இமைக்கும் நேரம். ஒரு விநாடி.
“பாய்ந்தபின் அஞ்சோடில் ஆயுளும் நூறாகும் பாய்ந்தபின் நாலோடில் பாரினில் எண்பதாம் பாய்ந்திடும் வாயுப் பகுத்தறிந் தவ்வகை பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலு மாமே.”
- திருமந்திரம். (479). குழந்தை அங்க அமைப்பு
அழகிய அங்க அமைப்புள்ள குழந்தைகளைப் பெற்றெடுக்கத் திருமூலர் வழிமுறைகளைக் கூறுமிடத்து, மூச்சுக் காற்று கருப்பையில் நான்கு மாத்திரைப் பொழுதுக்குக் குறையப் பாயுமானால், பிறக்கும் குழந்தை குட்டையாக இருக்குமென்றும், இம் மூச்சுக் காற்று மேலும் குறைந்தால் பிறக்கும் குழந்தை முடமாகப் பிறக்குமென்றும், காற்றின் ஒட்டம் தடைப்படின் பிறக்கும் குழந்தை கூனாகப்

கா. விசயரத்தினம் 133
பிறக்குமென்றும் கூறியுள்ளார். இவ்வாறு பாயும் மூச்சுக் காற்று ஆணிகளுக்கு மட்டுமே உரியதன் றிப் பெண்களுக்குப் பொருந்தாதாம்.
“பாய்கின்ற வாயுக் குறையிற் குறளாகும் பாய்கின்ற வாயு இளைக்கின் முடமாகும் பாய்கின்ற வாயு நடுப்படிற் கூனாகும் பாய்கின்ற வாயுமா தர்க்கில்லைப் பார்க்கிலே.”
- திருமந்திரம். (480)
மந்த புத்தி, ஊமை, குருடு நீங்கிய குழந்தைகள் உண்டாக என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பின்வரும் மந்திரத்தில் கூறியுள்ளார் திருமூலர்.
“மாதா உதரம் மலமிகில் மந்தனாம் மாதா உதரம் சலமிகில் மூங்கையாம் மாதா உதரம் இரண்டொக்கின் கண்ணில்லை மாதா உதரத்தில் வந்த குழவிக்கே.”
- திருமந்திரம் (481)
இரட்டைக் குழந்தைகள்
இரட்டைப் பிள்ளைகள் பெற்றெடுக்கும் தந்திரத்தையும் திருமூலர் ஒரு பாடலில் தந்துள்ளார். உடலுறவின் போது ஆணுக்கும் பெண்ணுக்கும் மூச்சுக் காற்று வலது பக்கமாக வெளிப்பட்டால், பிறக்கும் குழந்தை ஆணாகும். மூச்சுக் காற்று இருவருக்கும் இடப் பக்கமாக வெளிப்படின் பிறக்கும் குழந்தை பெண்ணாகும்.
இனி னும் , மலக் காற் றாகிய அபானணி எதிர்கொண்டால் சுக்கிலம் சிதறி இரட்டைக் குழந்தைகள்

Page 81
134 கணினியை விஞ்சும் மனித மூளை
பிறப்பார்கள். இருவருக்கும் இடப் பக்க மூச்சுக் காற்றும், வலப் பக்க மூச்சுக் காற்றும் சமமாக இருந்தால் குழந்தை அலியாகப் பிறக்கும்.
“குழவியும் ஆணாம் வலத்தது ஆகில் குழவியும் பெண்ணாம் இடத்தது ஆகில் குழவியும் இரண்டாம் அபானன் எதிர்க்கில் குழவி அலியாகும் கொண்டகால் ஒக்கிலே.”
- திருமந்திரம். (482)
கருவுறாமை
உடலுறவில் இணையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் மூச்சுக் காற்று ஒத்து இயங்கினால் பிறக்கும் குழந்தை அழகுள்ளதாக இருக்கும். அந்த இணைவில் இருவருக்கும் மூச்சுக் காற்று தடுமாறுமானால், அப் பெண் கருத்தரிக்க uDTULT6st.
“கொண்டநல் வாயு இருவர்க்கும் ஒத்தெழில் கொண்ட குழவியுங் கோமள மாயிடுங் கொண்டநல் வாயு இருவர்க்குங் குழறிடில் கொண்டதும் இல்லையாம் கோல்வளை யாட்கே.” - திருமந்திரம். (483)
தொகுப்பு
இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருமூலநாயனார் தாம் அருளிச் செய்த திருமந்திர நூலில் கருவுற்றுப் பிறக்கும் உயிர் ஆணா? பெண்ணா? அலியா? இரட்டையா? கூனா? குருடா? குறளா? முடமா?

கா. விசயரத்தினம் 135
மந்தமா? ஊமையா? அழகா? என்றும் அவ்வுயிர் ஒவ்வொன்றின் அகவையையும், பெண் கருவுறாமைக்குரிய காரணத்தையும் தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.
விஞ்ஞான வளர்ச்சி மிக உன்னத நிலையிலுள்ள இந் நாளில் நம் வைத்தியத் துறையினர் இவ்வாறான கருத்தினைக் கூறமுடியாத நிலையில்தான் இருக்கின்றனர். எனவே, திருமூலர் ஒரு மிகச் சிறந்த வைத்திய நிபுணராகவும் செயற்பட்டுள்ளாரென்பது புலனாகின்றது. இன்னும், அக் காலம் விஞ்ஞானத் துறையிலும் மிக உச்ச நிலையடைந்திருந்தமையும் திருமூலரின் திருமந்திரத்திலிருந்து தெரிய வருகின்றது.
இது காறும் கூறியவற்றிலிருந்து, திருமூலர் ஒரு சித்தனாய், யோகியாய், முனிவராய், தத்துவ ஞானியாய், ஒழுக்கச் சீலராயப், வைத்திய நிபுணராயப், சைவ சித்தாந்தியாய், சிவ நெறியாளராப், மந்திர தந்திர வாதியாய், இன்னும் பல்வேறு துறைகளில் பிரசித்தி பெற்ற வல்லுனராய், பல் ஆயிரம் ஆண்டுகளாக மக்களுடன் இருந்து அவர்களுக்காகச் சேவை புரிந்த ஓர் உத்தமரென்று கூறினால் மட்டும் போதாது.
அவர் யாத்த திருமந்திரம் ஒரு ஞான நூல்; வேத நூல்; உயிர் நூல்; என்றும் சாகா நூல். ஆகவே, எங்கள் இல்லங்கள் தோறும் பொக்கிசமாகப் பேணிக் காத்து வைத் துப் படிக்க வேண்டிய ஓர் அரிய நூாலி திருமந்திரமாகும்.
காலத்தால் மூத்த இத் தெய்வ நூல் வீட்டில் இருந்தால், அது நம் வீட்டைக் காக்கும்; நாட்டைக்

Page 82
136 கணினியை விஞ்சும் மனித மூளை
காக்கும்; வீடு சிறக்கும்; பரிசுத்தமடையும்; ஞான ஒளி பரவும்; தெய்வ அனுகூலம் கிட்டும்.
திருமூலர் தெய்வங்களில் ஒருவர். அவரை நாம் என்றும் மறவாது, நம் மனத்திலிருத்தித் துதித்து வணங்குவோமாக.
“யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.”
宽

கா. விசயரத்தினம் 137
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்; உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!
அவன் உடல் பெற்றான். அன்றே உயிரும் பெற்றான். அவன் உடல், உயிர் ஆனான். ஆனால் உடம்பைப் பற்றியோ அல்லது உயிரைப் பற்றியோ அவனுக்கு ஒன்றும் தெரியாது, தெரிந்து கொள்ளவும் அவன் விரும்பவில்லை. கல்வியில் கவனமெடுத்துப் படித்துப் பட்டம் பெற்று, அரச வேலையில் சேர்ந்து, திருமணம் புரிந்து, பிள்ளைகள் பிறந்து, நல் நிலைக்கு வந்து விட்டான். காலம் ஓடிக் கொண்டது. வயது முதிர்வும், அநுபவமும் சேர்ந்து உடல், உயிர் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினான். நடந்தேறிய நிகழ்வுகள் யாவையும் பார்த்திருந்த உடலும், உயிரும் கண் விழித்தெழுந்தனர். உடலார் ஒரு பக்கமாகவும், உயிரார் இன்னொரு பக்கமாகவும் நடந்து சென்று ஒருவரையொருவர் சந்தித்தனர்.
உடல் : ஒரே வீட்டில் வாழும் நாம் இன்றுதான் முதல் முதலாகச் சந்திக்கிறோம். சந்தோசம். நான் தோன்றிய அன்றே நீரும் தோன்றினிர். எனவே நாம் ஒரே வயதினர். ஒருவரை ஒருவர் மதித்து நடக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

Page 83
138
உயிர்
உடல்
D-uîü
உடல்
உயிர்
sd L6)
p—ulј
கணினியை விஞ்சும் மனித மூளை
: சந்தோசம். ஒன்று சொல்லுவேன் கேள். நீ என்னை
மதித்துத் தான் ஆக வேண்டும். நான் பெரியவன். உன்னை ஆட்டிப் படைப்பவன். வேறு இருந்தால் என்னவேன் சொல்.
; என்ன சொல்லி விட்டாய்? சகோதரன் என்று
நினைத்தேன். நான் ஏன் உன்னில் அடங்கி நடக்க வேண்டும்? கோபத்தைக் கிண்டி விடாதே.
; கோபம் தணி. போகப் போகச் சொல்லுவேன்.
பின் ஒத்துக் கொள்வாய். அது சரி, நீ ஏன் இப்படிக் கடுமையாக வேலை செய்கிறாய் உன்னையும் பாராது? என்னைப் பார்த்தாவது நடக்கத் தெரியாதா உனக்கு.?
: நான் என்ன ஐயா செய்ய? வேலை செய்து
தானே ஆக வேண்டும். எனக்கு உணவு வேணர் டுமல் லவா? வேலை செயப் வேண் , சாப்பிடுவேன், பின் தூங்கி விடுவேன்.
; என்னவோ கனக்கக் கதைத்தாய். இப்ப ஐயா
போடுகிறாய். உன் வேலை, சாப்பாடு, தூக்கம்
ஆகிய வேதாந்தம் ஒன்றும் எனக்குத் தெரியாது. உன்னைப் போல் நான் ஒன்றும் செய்வதில்லை.
: ஐயா. நீங்கள் வேலை செய்வதில்லையா?
சாப்பிடுவதில்லையா? தூங்குவதில்லையா? இது என்ன மர்மம்? எனக்குத் தலை சுற்றுகிறதே.
; உன்னைப் போல் நான் இல்லை. நான் வல்லவன்.
வித்தியாசமானவன். நீ நம்பவில்லை. தலை

கா. விசயரத்தினம் 139
sd L6) :
உயிர்
உடல்
உயிர்
சுற்றுகிறதென்று கூறுகிறாய். என்னைப் பற்றி முழுவதும் அறிந்தால் நீயே சுற்றிச் சுழன்று விழுந்து விடுவாய்.
என்னை வெருட்டாதே. உன்னைவிட நான் பலவான். உலகம் எங்களால் தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. எங்கள் வீரத்தைப் பற்றி யார் தான் பேசவில்லை? உலக ஆட்சி எங்கள் கையிற்றான் இருக்கிறது. இதை மறந்து விடாதே. இன்னும்.
: நில். இதற்கு மேற் பேசாதே. உலக நடப்புத்
தெரியாது பேசுகிறாய். என்னை உன்னால் ஒன்றும் செய்து விட முடியாது. உன் உதவி ஏதுமின்றி என்னால் தனித்து இயங்க முடியும்.
: சகோதர. நான் ஒன்று சொல்வேன் கேள்.
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர் திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார் உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே.”
இதை நான் சொல்லவில்லை. இது திருமூலர் மந்திரம். உன்னையும் நான் வளர்க்கிறேன். புரிகிறதா?
திருமூலர் சரியாகத் தான் கூறியுள்ளார்.
உன்னாற்றான் புரிந்து கொள்ள முடியவில்லை. உன் உடம்புதான் அழிவது. அப்பொழுது நான் உன்னை விட்டுப் பிரிந்து விடுவேன்.

Page 84
140
foL6)
உயிர்
உடல்
p—ulў :
கணினியை விஞ்சும் மனித மூளை
உன்னைப் போல் சாவு எனக்கு இல்லை, அழிவு இல்லை, மூப்பு இல்லை, தளர்வு இல்லை. நான் என்றும் பதினாறு தான் . .
; உனக் குத் தானே உடம்பு இல் லை.
அதனாற்றான் உனக்குச் சாவு, அழிவு, மூப்பு, தளர்ச்சி இல்லை போலும்.
: இன்னும் நான் சொல்வதைக் கேள். என்னை
ஒம்பி நட. இல்லையேல் நான் உன்னை விட்டுப்
’பிரிந்து சென்று விடுவேன். நான் பிரிந்தால் நீ
இறந்து விடுவாய். சவம் என்றோ, பிணம் என்றோ பெயரிட்டுத் தீயில் எரித்து விடுவர். ஒரு பிடி சாம்பலாவாய். இத்துடன் உன் கதை முடிந்து விடும்.
: பரமசிவா. இதைக் கேட்க, நினைக்க என்
நெஞ்சு இடிக்கிறதே. ஏதாவது நடந்து விட்டால் ( சிவ, சிவா அப்படி ஒன்றும் நடக்கக் கூடாது) என் மனைவி, பிள்ளைகளின் கதி என்னாகும்? நான் சேர்த்து வைத் திருக்கும் பணம் , சொத்துக்கள். மனதாற் கூட நினைக்க முடியவில்லையே. நான் என் செய்வேன்?
என்னப்பா, பெரிய வீரம் பேசினாய். இப்ப இடி கேட்ட நாகம் போலானாய். நீ ஒரு சுயநலக்காரன் என்பது எனக்குப் புரிந்து விட்டது. நீயுண்டு, பிள்ளைகளுண்டு, மனைவியுண்டு, பணம் சொத்துக்களுண்டு. இத்துடன் உன் வாழ்வு சரி என்று நினைக்கிறாய். ஆனால் . .

கா. விசயரத்தினம் 141
உடல்
p—ulў
உடல்
உயிர்
உடல்
! ஐயா, இதற்கு மேல் ஒன்றும் கூறவேண்டாம்,
என்னை மன்னித்து விடு. நான் முழுமையாக உணர்ந்து விட்டேன். சகோதரன் என்ற முறையில் நீ எனக்கொரு வரம் தருவாயா?
: வரமா? என்ன வரம் வேண்டும் கேள். தர
முடியுமா என்று பார்க்கிறேன்.
: நீ என்னை விட்டுப் பிரியா வரமொன்று தந்தருள
வேண்டும். நான் என்றும் சாகாதிருக்க வேண்டும். அடுத்த வருடம் நான் எழுபது வயதை எட்டிப் பிடித்து விடுவேன்.
: நீ சுயநலத் தோடு மிகப் பேராசை
பிடித்தவனென்று இப்ப தான் புரிந்து கொண்டேன். உனக்கு ஒன்று கூறுவேன் கேள். நீ உன்னைச் சரியாகப் பேணிப் பாதுகாப்பதில்லை. உதாரணம் கூறுகிறேன் கேள். உன் உடம்பை உன் பெற்றோர்கள் உனக்கு இனாமாகத் தந்துள்ளனர். நீ பணம் கொடுத்து அதை வாங்கவில்லை. அதனால் உடம்பின் அருமை உனக்குத் தெரியவில்லை. இதோ பார் உன் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருக்கும் வாகனத்தைப் பணம் கொடுத்து வாங்கினாய். ஆனபடியால் அதைப் பராமரித்துக் காப்பாற்றி வைத்திருக்கிறாய். ஆனால் உன் உடம்பை நீ கவனிப்பதில்லை. என்னைப் பொறுத்தமட்டில் தளர்ந்த, மூப்படைந்த, நோய் பீடித்த உடலில் நான் நிலைத்து நிற்பதில்லை.
; சரி. எனக்கு ஒன்றுதான் புரியவில்லை. நான்
நல்ல நிலையில், ஆற்றலுடன், நோய் நொடியின்றி

Page 85
142
உயிர்
sd-L6)
உயிர்
உடல்
கணினியை விஞ்சும் மனித மூளை
இருக்கும் பொழுது என்னுடன் ஒட்டி வாழ்கிறாய். நான் முதிர்வடைந்து, நோய் வாய்ப்படுங்கால் ஏன் என்னை விட்டுப் பிரிந்து போகின்றாய்? நீ செய்வது உனக்கே சரி என்று படுகிறதா.?
கேள்வி கேளாதே. அதற்கு முன் சற்றுச் சிந்தித்துப்
பார். நீ தளர்வு நிலைக்கு வந்து விட்டாய். நான் நியாயப்படிதான் நடக்கிறேன். சரியான முறையில்தான் நான் எதையும் அணுகுகிறேன். நான் உன்னை விட்டுப் பிரிவதும் உன் நன்மை கருதித்தான். பயப்படாதே.
: இறுதியாக ஒன்று கேட்கிறேன். உனக்குக்
கோடி புண்ணியம் கிடைக்கும் எப்பொழுது என்னை விட்டுப் பிரியப் போகிறாய் என்றாவது சொல்லிவிடேன். நான் சில இறுதிக் காரியங்கள் செய்தாக வேண்டும்.
: அதெல்லாம் சொல்லக் கூடிய காரியமா என்ன?
சரி. எனக்குப் பல வேலைகள் தேங்கிக் கிடக்கின்றன. போய் வரட்டுமா?
: சரி. ( அழுது கொண்டே தலையை ஆட்டி) மன அழுத்தம், சிந்தனைக் குறைவு, உடல் தளர்வு
போன்றவற்றால் உடல் தாக்கம் கூடிக் கொண்டே வந்தது. இந் நிலையில் ஈராண்டு உருண்டோடி மறைந்தது. இதன் பின் இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவே இல்லை. ஒருவர் ஒரு பிடி சாம்பலானார். மற்றவர் மேலெழுந்து பறந்து விட்டார்.
宽

கா. விசயரத்தினம் 143
அறநெறி வாழ்வில் நாலும் இரண்டும்
முதற் சங்கம், இடைச் சங்கம், கடைச் சங்கம் ஆகிய முச் சங்கங்களிலும் பிறந்து, வளர்ந்து அதி உயர் நிலை எய்திய மொழி தான் தெவிட்டாத் தீஞ்சுவைக் கன்னித் தமிழ். இக் கன்னிக்கு அணிகலனாய் இம் முச் சங்கங்களிலும் எழுந்த நூல்கள் பற்பல. இவற்றுள் முதல், இடைச் சங்கங்களில் தோன்றித் தவழ்ந்த நூல்கள் அத்தனையும் கடற் கோளர் சீற்றத் தாலி இயற்கையன்னையுடன் இரண்டறக் கலந்து மடிந்தன. இருந்தும், இன்று அக் கன்னிக்கு மங்காப் புகழொளியைக் கொடுப்பது கடைச் சங்க காலத்தில் எழுந்த சிற்சில நூல்களே. இந் நூல்களைச் சங்க கால இலக்கியங்கள் என்று கூறுகின்றனர். இச் சங்க கால இலக்கியங்களை பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க் கணக்கு என்று முப் பெரும் பிரிவுகளாகப் பிரித்துள்ளனர் ஆன்றோரும் சான்றோரும்.
பத்துப் பாட்டாவன :-
(1) திருமுருகாற்றுப்படை, (2) பொருநராற்றுப்படை, (3)சிறுபாணாற்றுப்படை, (4) பெரும்பாணாற்றுப்படை,

Page 86
144 கணினியை விஞ்சும் மனித மூளை
(5) முலி லைப் பாட்டு, (6) மதுரைக் காஞ்சி, (7) நெடுநல் வாடை, (8) குறிஞ்சிப்பாட்டு, (9) பட்டினப்பாலை, (10) மலைபடுகடாம்.
“முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வடமதுரைக் காஞ்சி மருவினிய கோலநெடு நல்வாடை கூர்குறிஞ்சி பட்டினப் பாலை படுகடாம் பத்து. ”
என்று பத்துப் பாட்டையும் ஒரு வெண்பாவில் அமைத்துக் கூறப்படுவது ஒரு தனிச் சிறப்பாகும்.
இன்னும்,
எட்டுத் தொகை நூல்களாவன :-
(1) நற்றிணை, (2) குறுந்தொகை, (3) ஐங்குறுநூறு, (4) பதிற்றுப் பத்து, (5) பரிபாடல், (6) கலித்தொகை, (7) அகநானூறு, (8) புறநானூறு.
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ றொத்த பதிற்றுப் பத்தோங்கு பரிபாடல் கற்றறிந்தார் போற்றுங் கலியோ டகம்புறமென் றித்திறத்த வெட்டுத் தொகை. ”
என்ற வெண்பாவில் தொகை நூல்கள் எட்டும் அடக்கப் பட்டுள்ளன.
மேலும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களாவன :- (1) நாலடியார், (2) நான்மணிக் கடிகை, (3) கார் நாற்பது, (4) களவழி நாற்பது, (5) இனியது நாற்பது, (6) இன்னா நாற்பது, (7) ஐந்திணை ஐம்பது, (3) ஐந்திணை எழுபது,

கா. விசயரத்தினம் 145
(9) திணை மொழி ஐம்பது, (10) திணை மாலை நூற்றைம்பது, (11) கைந்நிலை, (12) திருக்குறள், (13) திரிகடுகம், (14) ஆசாரக் கோவை, (15) பழமொழி, (16) சிறுபஞ்சமூலம், (17) முதுமொழிக்காஞ்சி, (18) ஏலாதி.
இப் பதினெண் நூல்களையும் பின்வரும் நாலடி வெண்பாவிற் புகுத்திப் பாடியுள்ள திறனை மெச்சத்தான் வேண்டும்.
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணை முப் பால் கடுகங் கோவை பழமொழி - மாமூல மின்னிலை சொல் காஞ்சியுட னேலாதி யென்பவே கைந்நிலைய வாங் கீழ்க் கணக்கு.”
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சிலர் சங்க கால நூல்களென்றும், ஒரு சிலர் அவை காலத்தாற் பிந்தியவை எனக் கருதிச் சங்ககால நூல்களுடன் சேர்த்துப் பார்க்கவும் அஞ்சுகின்றனர். அவர்கள் கருத்து எதுவாயிருப்பினும், கீழ்க்கணக்கு நூல்களில் ஒரு சில பிற்காலத்தவை எனக் கருதப்பட்டாலும், பெரும்பாலான நூல்கள் மற்ற சங்ககால நூல்களுடன் இணைந்து வளர்ந்து சங்கப் பலகையில் இடம் பெற்றவையென நிச்சயமாகக் கூறலாம்.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறைந்த அடிகளுடையனவாயப் , வெணி பா முறையிலி அமைந்தனவாய், அறம், பொருள், இன்பம் என்ற முப் பெரும் பிரிவினவாய், சொல் நயம், பொருள் நயம் சிறந்து விளங்குகின்றன. இப் பதினெட்டு நூல்களுள், ஈண்டு இரு நூல்களான நாலடியாரையும், திருக்குறளையும், பற்றிச்

Page 87
146 கணினியை விஞ்சும் மனித மூளை
சற்று ஆராய்ந்து அவற்றிற் காணும் சிறப்புகளையும், தத்துவங்களையும், நீதி உரைகளையும், ஒற்றுமைகளையும் சேர்த்துப் பார்ப்பது தான் இக் கட்டுரையின் நோக்கமாகும். நாலும் இரண்டும்
‘பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்' எனவும் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி எனவும் பழமொழிகள் கூறுகின்றன. இங்கு 'நாலு என்பது நாலடியாரையும், ‘இரண்டு' என்பது திருக்குறளையும் குறிக்கின்றன.
நாலடியார் ஒருவராலன்றிப் பல்லோராற் பாடப்பட்டவை. நான்கு அடிகளைக் கொண்ட நானுாறு பாக்கள் இதில் அடங்கியுள்ளன. நானுறு பாக்கள் கொண்டவற்றை ‘நானூறு' என வழங்கி வந்தனர். இம் மரபு பற்றியே அகம், புறம் ஆகிய நூல்களையும் அகநானூறு', 'புறநானூறு' என்றழைத்தனர். இதைப் பின்பற்றியே நாலடியாரையும், முன்னர் ‘நாலடி நானூறு' என வழங்கினர். நாலடியாலான இந் நானுாறு பாக்களைக் கொண்ட நூலை ‘நாலடி நானுாறு' எனப் பெயரிட்டது மிகவும் பொருத்தமே. ஆனால் அது காலக்கிரமத்தில் சுருங்கி ‘நாலடி என்றாயிற்று. மீண்டும் உயர்வு சிறப்பு விகுதி பெற்று ‘நாலடியார் ’ என்று வழங்கப் பெறுகின்றது.
இந் நூல் சொல் நயமும், பொருள் நயமும் பெற்றுச் சிறந்து விளங்குகின்றது. இன்னும் இஃது ஒரு நீதி நூலாகவும் பொது நூலாகவும் விளங்குவதுமன்றி, சாதி, மத, பேதமின்றி யாவராலும் போற்றப்பட்டு வருகின்றது. இந் நூலின் சிறப்பினைப் பின்வரும் பாக்களால் அறியலாம்.

கா. விசயரத்தினம் 147
“நானூறும் வேதமாம் நானூறு நானுாறாம் நானூறுங் கற்றற்கு நற்றுணையாம் - நானுாறும் பண்மொழியாள் பாகம் பகிர்ந்து சடைக்கரந்த கண்ணுதலான் பெற்ற களிறு.”
“வெள்ளண் மரபுக்கு வேதமெனச் சான்றோர்கள் எல்லாருங் கூடி யெடுத்துரைத்த - சொல்லாய்ந்த நாலடி நானூறு நன்கினிதா வென்மனத்தே சீலமுட னிற்கத் தெளிந்து.”
இந் நூலை அறத்துப்பால், பொருட் பால், காமத்துப்பால் என மூன்றாகப் பகுக்கப்பட்டுள்ளது.
திருக்குறள் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனாரால் இயற்றப் பெற்றது. குறுகிய அடிகளைக் கொண்டமையால் ‘குறள்’ என்ற பெயரைப் பெற்றுள்ளது. இக் குறள்களின் சிறப்பும் உயர்ச்சியும் தெய்வத் தன்மையும் கருதி 'திரு' என்ற அடைமொழி “குறள் முன் சேர்த்துத் திருக்குறள்' என்ற பெயரால் வழங்கப் பட்டு வருகின்றது.
இஃது ஒரு சிறந்த நீதி நூலாய் உலகுக்கெல்லாம் பொது நூலாய் விளங்குகின்றது. எத் துறையிலும் உலகம் நாளுக்கு நாள் மாறிக் கொண்டிருக்கின்ற பொழுதிலும், இக் குறள்களின் கருத்து மாறாது, மாறிக் கொண்டிருக்கும் உலகுக்கு அன்றும் இன்றும் ஒரே தன்மையான நீதியளித்துக் கொண்டிருக்கின்றது. உலகத்திலுள்ள பிற மொழியாளர்கள் குறளின் சிறப்பை அறிந்து தத்தம் மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்துள்ளனர்.
திருக்குறளின் பெருமையைத் திருவள்ளுவ மாலை மிகவும் சிறப்பித்துக் காட்டுகின்றது.

Page 88
148 கணினியை விஞ்சும் மனித மூளை
“கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்." - (இடைக்காடர்) “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.”
என்று குறளுக்குக் குறள் கண்டுள்ளார் ஒளவைப் பிராட்டியார்.
“மும்மலையும் முந்நாடும் முந்நதியும் முப்பதியும் மும்முரசும் முத்தமிழும் முக்கொடியும் - மும்மாவும் தாமுடைய மன்னர் தடமுடிமேல் தார்அன்றோ பாமுறைதேர் வள்ளுவர் முப்பால்.”
என்று சீத்தலைச் சாத்தனார் மும் மூன்றாக அடுக்கிச் சிறப்பித்துக் கூறியுள்ளார்.
திருக்குறளையும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நாலடியாரிலும், திருக்குறளிலும், அறத்துப் பால், பொருட் பாலி , காமத் துப் பால ஆகிய முப்பாலும் அமைந்துள்ளமையைக் கண்டோம். இவ்விரு நூல்களிலும் முதற்கண்ணமைந்த அறத்துப்பால் அறநெறி வாழ்வுக்கு எவ்வகையில் உதவுகின்றதென்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கு.
அறத்துப்பால்
அறனாவது ஆன்றோர்களால் விதித்தன செய்தலும், விலக்கியன ஒழிதலுமாம். இம்மை, மறுமை, வீடு என்ற
மூன்றையும் அறம் தருதலான் இதை முதலிற் கூறப்பட்டுள்ளது.

கா. விசயரத்தினம் 149
நாலடியாரில் அறத்துப்பாலைப் பதின்மூன்று அதிகாரங்களாக வகுத்துக் கூறப்பட்டுள்ளது. அவையாவன: (1) செல்வம் நிலையாமை, (2) இளமை நிலையாமை, (3) யாக்கை நிலையாமை, (4) அறன் வலியுறுத்தல், (5) தூய் தன்மை, (6) துறவு, (7) சினமின்மை, (8) பொறையுடைமை, (9) பிறர் மனை நயவாமை, (10) ஈகை, (11) பழவினை. (12) மெய்ம்மை, (13) தீவினையச்சம்.
ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்துப் பாக்களாகப் பதின்மூன்று அதிகாரங்களில் ஒருமித்து நூற்றி முப்பது பாக்கள் அமைந்துள்ளன. இந் நூற்றி முப்பது பாக்களும் அறத்தை வலியுறுத்துகின்றன.
அறத்துப்பாலைத் திருவள்ளுவர் முப்பத்தெட்டு அதிகாரங்களாகப் பிரித்துக் கூறுகின்றார். அவையாவன: (1) கடவுள் வாழ்த்து, (2) வான் சிறப்பு, (3) நீத்தார் பெருமை, (4) அறன் வலியுறுத்தல், (5) இல்வாழ்க்கை, (6) வாழ்க்கைத் துணைநலம், (7) புதல்வரைப் பெறுதல், (8) அன்புடைமை, (9) விருந்து ஓம்பல், (10) இனியவை கூறல், (11) செய்ந் நன்றி அறிதல், (12) நடுவு நிலைமை, (13) அடக்கம் உடைமை, (14) ஒழுக்கம் உடைமை, (15) பிறன் இல் விழையாமை, (16) பொறை உடைமை, (17) அழுக்காறாமை, (18) வெஃகாமை, (19) புறங்கூறாமை, (20) பயன் இல சொல்லாமை, (21) தீவினை அச்சம், (22) ஒப்புரவு அறிதல், (23) ஈகை, (24) புகழ், (25) அருள் உடைமை, (26) புலால் மறுத்தல், (27) தவம், (28) கூடா ஒழுக்கம், (29) கள்ளாமை, (30) வாய்மை, (31) வெகுளாமை, (32) இன்னா செய்யாமை,

Page 89
150 கணினியை விஞ்சும் மனித மூளை
(33) கொல்லாமை, (34) நிலையாமை, (35) துறவு, (36) மெய் உணர்தல், (37) அவா அறுத்தல், (38) ஊழ்.
பத்துப் பத்துக் குறள்களாக இதில் ஒருமித்து முன்னுாற்றி எண்பது குறள்கள் அமைந்துள்ளன. இவையும் அறநெறிக்கண் நிற்கும் குறள்களே.
திருவடி
ஒரு கருமத்தைத் தொடங்குமுன் கடவுளைப் பணிந்து வாழ்த்தி நிற்பது மரபு. தாம் எடுத்த கருமம் செவ்வனே நிறைவேற வேண்டுமென்பது அதன் உட் பொருள். பொய்யாமொழியும் திருக்குறளை யாக்கு முன் கடவுள் வாழ்த்தாக ஓர் அதிகாரத்தை ஒதுக்கியுள்ளார். முதற் கடவுளின் உண்மையைத் திருவள்ளுவர் கூறும் முறை சாலச் சிறந்ததாய் அமைந்துள்ளது.
“அகர முதல எழுத்துஎல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு." - (குறள் 01) எடுத்த எடுப்பிலேயே ஆதிபகவனை நம் கண் முன் கொண்டுவந்து நிறுத்தி, பக்தி நிலையைப் பெருக்குகின்றார் வள்ளுவப் பெருந்தகை. மணிவாசகரும் 'ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதியை’ என்று அளவெல்லைகளைத் தாண்டிச் சென்று சோதியைப் பார்க்கின்றார்.
ஆகம அறிவுக்குப் பயன் இறைவன் தாளைத் தொழ வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.
“கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்." - (குறள் 02)

கா. விசயரத்தினம் 151
மலர் மிசை ஏகினான் மாண் அடி, வேண்டுதல் வேண்டாமை இலான் அடி, தனக்கு உவமை இல்லாதான் தாள், அற ஆழி அந்தணன் தாள், எண் குணத்தான் தாள்’ என்று சொல்லப்படுகின்ற இறைவன் அடியைச் சேர வேண்டுமென்று வள்ளுவர் ஆற்றுப்படுத்துகின்றார்.
“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்." -(குறள் 10)
இறைவன் அடி சேர்ந்தார் பிறவி ஆகிய பெரிய கடலை நீந்துவார், சேராதார் அக் கடலில் நீந்த மாட்டாராய் அதனுள் அழுந்துவர்.
நாலடியாரில் வரும் கடவுள் வாழ்த்தையும் ஈண்டுப் பார்ப்போம்.
“வான்இடு வில்லின் வரவறியா வாய்மையால் கால்நிலம் தோயாக் கடவுளை - யாம்நிலம் சென்னி யுறவணங்கிச் சேர்தும்எம் உள்ளத்து முன்னி யவைமுடிக என்று.”
பிறப்பின் தோற்றம், வருகை முதலியவற்றை நாம் அறிந்து கொள்ள முடியாது.
எனவே, எம் மனத்தில் நினைத்தவை நிறைவேற வேண்டுமெனக் கருதித் திருவடிகள் நிலத்தில் படிதலில்லாத அருட் கோல இறைவனை எம் தலை தரையிற் பொருந்தும்படி என்றும் தொழ வேண்டுமெனக் கூறப் படுகின்றது.
வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கும், தத்துவ அடிப்படைக்கும், இலட்சிய நோக்குக்கும், ஒற்றுமைக்கும்,

Page 90
152 கணினியை விஞ்சும் மனித மூளை
இறை வழிபாடு மிக முக்கியமானது என்பதை இக் கடவுள் வாழ்த்தில் கூறியதிலிருந்து அறியக் கூடியதாகவுள்ளது.
அறம் செய்வதற்கு ஏதுவாகிய மழையின் சிறப்பை வள்ளுவர் விளக்குகின்றார். மழை பொய்க்குமெனின் உணவின்றிக் கடும் பசியினால் மக்கள் வாடுவர். மழை குன்றின் உழவர் உழார். மழை குறைந்தால் நெடுங் கடலும் தன் நீர்மை குன்றிவிடும். வானோர்க்கு மக்களால் செய்யப்படும் பூசையும் விழாவும் நடைபெறாது, வானம் வறக்குங்கால் தானம், தவம் ஆகிய இரண்டு அறங்களும் நிகழாவாம். இதனைத் திருவள்ளுவர் “வான் சிறப்பு' எனும் அதிகாரத்தில் விபரமாகக் கூறியுள்ளார்.
நிலையாமை
நிலையாமையாவது தோற்றமுடையன யாவும் நிலையுதலிலவாந் தன்மை, மயங்கிய வழிப் பேய்த் தேரிற் புனல் போலத் தோன்றி மெய்யுணர்ந்த வழிக் கயிற்றரவு போலக் கெடுதலிற் பொய்யென்பாரும், நிலை வேறுபட்டு வருதலாற் கணந்தோறும் பிறந்திறக்குமென்பாரும், ஒருவாற்றான் வேறுபடுதலும், ஒருவாற்றான் வேறு படாமையுமுடைமையின் நிலையுதலும், நிலையாமையும் ஒருங்கேயுடைய வென்பாரு மெனப் பொருட்பெற்றிக் கூறுவார் பல திறத்தவராவர். எல்லார்க்கும் அவற்றது நிலையாமை உடம்பாடாகலின் ஈண்டு அதனையே குறளும் நாலடியாரும் கூறுவதை நோக்குவோம்.
நிலையில் லாதனவற்றை நிலையுள்ளதென
நினைத்து மக்கள் அவதியுறுவதை நாங்கள் காண்கின்றோம். செல்வமும் இளமையும் யாக்கையும்

கா. விசயரத்தினம் 153
மனித வாழ்வில் நிலையற்றவை. இதையறியாதார்க்கு
வள்ளுவர் பின்வரும் குறளால் உணர்த்துகின்றார்.
“நில்லாத வற்றை நிலையின என்றுணரும் புல்லறி வர்ண்மை கடை." - (குறள். 331)
இன்னும், செல்வம் நிலையாமையைக் கூறப் போந்த வள்ளுவர்,
“கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.” - (குறள் 332)
“அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால் அற்குப ஆங்கே செயல்.” - (குறள் 333)
என்று கூறியது சிந்திக்கற் பாலது.
யாக்கை நிலையாமையைச் சொல்லுமிடத்து, யாக்கைகட்கு வரைந்த நாள் கழிகின்றவாறும், கழிந்தால் உளதாய நிலையாமையும், அவை ஒரே வழிப் பிறந்த அளவிலே யிறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும் என்பது தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக் கிடக்குமாறும், அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறி வருமாறும், அவைதாம் உயிர்க்குரிய தன்மையும் என்று நிலையாமை என்னும் அதிகாரத்தில் கூறியுள்ளார் வள்ளுவர்.
செல்வம் நிலையாமையைப் பற்றி நாலடியார் வெகு சிறப்பாகக் கூறுகின்றது. அறுசுவையுணவை இல்லாள் இனிதமர்ந்துாட்ட மறுபிடி நீக்கியுண்ட செல்வரும் மறு நாள் கூழிரந்து பசிப் பிணி நீக்கும் நிலையை அடைவர். என்பதை "அறுசுவையுணி டி' என்ற பாடலாலி, விளக்கியுள்ளார் ஆசிரியர்.

Page 91
154 கணினியை விஞ்சும் மனித மூளை
ஒருவனுக்குச் செல்வம் எவ்வளவு விரைவில் வருகின்றதோ அதே வழி அழிந்தும் போவதால் செல்வம் வந்துற்றகாலை, தாமதியாது நிலையான வீட்டின்பத்தைத் தரக்கூடிய தான - தர்மத்தை விரைந்து செய்ய வேண்டுமென்பதை நாலடியார்ப் பாடல்களில் வலியுறுத்தப் பட்டுள்ளது.
செல்வம் வந்துற்ற பொழுது, மறு உலகத்தை எண்ணி வாழாதவர்களின் செல்வம் மின்னலைப் போலத் தோன்றி அழிந்துவிடும் (நாலடியார் 8)
ஒரு செல்வன் தனது செல்வத்தை அறவழிகளிற் செலவழியாது விட்டால், அவன் அதனையும் இழந்து வீடு பேற்றையும் இழப்பான். அறவழியிற் பொருளைச் செலவு செய்யாதவர் ஒரு காலத்தில் தேனியைப் போல அப் பொருளை இழந்துவிடுவர். (நாலடியார் 9, 10)
இளமை ஒருவன் வாழ்நாளில் ஒருமுறைதான் வரும். இளமைப் பருவத்தில் எவ்வளவோ உருப்படியான காரியங்களைச் செய்யலாம். ஏனெனில் அப் பருவத்திற்றான் உடல் வலிமையும், அஞ்சா நெஞ்சும், பயமறியா நிலையும் , சுறுசுறுப்பும் ஒருங்கே சேர்ந்தமைந்திருக்கும். ஆனால் இவ்விளமைப் பருவத்திற்றான் நம்மில் அநேகர் மிதமிஞ்சிய இன்ப போகத்தை நுகர்ந்து மயங்கி விடுகின்றனர். பின் எல்லாம் பார்ப்போமென்று தள்ளிப் போடுகின்றனர். ஆனால், ஏதாவது பின் செய்ய முடிகின்றதா? இல்லையே. காரணமென்ன வெனின் இளமை நிலையாது மூப்பு வந்து விடுகின்றது. பொருளும் கரைந்து விடுகின்றது. எனவே, இளமைப்

கா. விசயரத்தினம் 155
பருவத்தை அறன்வழி நின்று பயன்படுத்துமாறு நாலடியார் எடுத்துக் கூறுகின்றது. ( நாலடியார் 11, 12, 13, 15)
இளமைப் பருவம் எவர் மனத்தையும் பறிக்கும் அழகு வாய்ந்தது. அதிலும் மகளிர் அழகு பற்றி ஈண்டுக் கூறத் தேவையில்லை. இப்படி அழகான மகளிரும் இளமை கெட்டு மூப்படைந்ததும், உடம்பு கூனித் தலை நடுங்கும், இரக்கத் தக்க நிலைக்கு வந்து விடுகின்றனர். எனவே, இதைக் கண்ணுற்றும், இளமையை ஒரு பொருட்டாக எண்ணிக் காமத்தில் ஆழ்ந்து இதனால் அறச் செயல்களைக் கைநழுவ விடலாகாதென வற்புறுத்தப் படுகின்றது. (நாலடியார் 14, 17)
அறிவுடையவர்கள் இளமையெழுச்சிகளை அறவினைகட் கு ஊறு செய்வனவாகக் கருதி அஞ்சுவரேயல்லால் அவற்றை நுகர்ந்து களியார். (நாலடியார். 16, 18)
நம் உடம்பு நிலையாமை வரம் பெற்றுள்ளது. எவ்வளவு நாம் உடம்பைப் பேணினாலும் அஃது அழிந்தே விடும். ஆண்டி தொட்டு அரசன் ஈறாக உள்ள அனைவரும் இறந்தே ஆகவேண்டும். உயிர் பெற்ற அனைத்தும் இறந்தே விடும். இறப்பு ஒரு நியதி. இப்படியான உடம்புக்கு நாம் எவ்வளவு கவனம் செலுத்துகின்றோம். பேரம் பேசுகின்றோம். நான் என்ற அகங்காரம் கொள்கின்றோம். இவற்றை விடுத்து, நாம் உயிருடன் இருக்கும்போதே அறஞ்செய்தால் வீட்டின்பத்தை அடையலாம் என்று ‘நாலடியார் கூறுகின்றது. (நாலடியார் 21, 22, 23, 24, 26,
29, 30)

Page 92
156 கணினியை விஞ்சும் மனித மூளை
அறன் வலியுறுத்தல்
இதில் அறத்தின் நிலை பேற்றை உணர்த்துகின்றது. அஃதாவது முனிவரான் உணர்த்தப்பட்ட அம் மூன்றனுள் ஏனைப் பொருளும், இன்பமும் போலாது அறன் இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றனையும் பயத்தலான் அவற்றின் வலியுடைத்து என்பது பொருந்தும். ‘சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் - அறத்து வழிபடுஉம் தோற்றம் போல’ என்று புறநானூறு கூறுகின்றது.
அறனை வலியுறுத்த வள்ளுவர் எடுத்தாண்டுள்ள முறைகளையும் பார்ப்போம். மக்களுக்கு அறத்தால் வரும் ஆக்கம் மிகச் சிறந்ததாகும். அறம், வீடு பேற்றையும், செல்வத்தையும் தந்து உயிர்க்கு உயிராய் அமைந்து விடுகின்றது.
“சிறப்பு:ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினுTஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு’ -குறள் (31)
“அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு" - குறள் (32)
“ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்." -குறள் (33)
அறஞ் செய்யும் பொழுது நல்ல மனத்துடன் செய்ய வேண்டும். தீய சிந்தையுடன் பிறர் அறிய வேண்டுமென்ற எண்ணத்துடன் சொல்லளவில் நின்றுவிட்டால் அஃது அறனாகுமா? அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச் சொல் இந் நான்கும் சேராத அறம் சிறந்தது.

கா. விசயரத்தினம் 157
“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர் பிற" - குறள் (34)
“அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.” -குறள் (35)
நாளை, நாளை என்று பின் போடாது அறத்தினை
நாள்தோறும் செய்ய வேண்டும். அப்படிச் செய்த அறம்
இவ்வுடம்பினின்று உயிர் பிரியுங்கால் அழிவற்ற துணையாய் நிற்கும்.
“அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை' -குறள் (36)
“வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் வாழ்நாள் வழியடைக்குங் கல்." -குறள் (38)
அறஞ் செய்பவர்களே இம்மை இன்பமும், புகழும், எய்துவர் என்பது கூறப்படுகின்றது. ஒருவனுக்குச் செய்தற் பான்மையது அறனே; ஒழிதற் பான்மையது தீவினையே.
“அறத்தான் வருவதே இன்பம்மற் றெல்லாம் புறத்த புகழும் இல.” -குறள். (39)
“செயற்பால தோரும் அறனே ஒருவற்கு உயற்பால தோரும் பழி' -குறள். (40)
அறன் வலியுறுத் தலைப் பற்றி நாலடியார் கூறுவதையும் உற்று நோக்குவோம். அறஞ் செய்தால் அஃது உயிரோடு கூடவே நின்று வரு பிறப்பிலும் உதவும் என்று கூறப்பட்டுள்ளது. இப் பிறப்பில் அறஞ் செய்யாதவர் மறு பிறப்பில் வருந்தி இரந்து நிற்பர். பொருள் வாழ்வு

Page 93
158 கணினியை விஞ்சும் மனித மூளை
முதன் மையன்று. அறவாழ்வே முதன்மையானது. (நாலடியார் 31, 32)
துன்பம் வந்த இடத்து, மனம் நொந்து தம் வாழ்வையே அழிக்கின்ற பலரை நாம் காண்கின்றோம். துன்பம் வந்தால் மனஞ் சோராது அதன் காரணம் அறிந்து அதை நீக்க முயல வேண்டும். (நாலடியார் 33)
அடைதற்கரிய உடம்பை நாம் அடைந்து விட்டோம். இவ்வுடம்பிருக்குமட்டும் நம் ஆற்றலுக்கமையப் புண்ணியஞ் செய்ய வேண்டும். புண்ணியத்தைக் கருப்பஞ் சாற்றுக்கும், இவ்வுடம் பைக் கரும் பின் சக் கைக்கும் உவமை கூறப்பட்டுள்ளது. (நாலடியார் 34)
மிக்க இளமையிலிருந்தே அறஞ் செய்து வந்தால், இவ்வறனானது நாம் இறக்கும் பொழுது துன்பமணுக விடாது காத்து நிற்கும்.
நாம் இறக்கும் நாள் எமக்கு முன்னாடியே தெரிவதில்லை. அப்படித் தெரிந்துவிட்டால், நம் இறப்பிற்கு ஏற்றவாறு அறத்தைச் செய்து பயனை ஏற்படுத்திக் கொள்ளலாம். ஆனால் இறப்பு இன்றோ, நாளையோ, மறுநாளோ வரக்கூடும். ஆகவே, எந் நேரத்திலும் இறப்பு வரக்கூடும் எனக் கருதி உடனே பெரியோர் கூறும் அறச் செயல்களை இயன்றவகையில் தழுவிச் செய்ய வேண்டும். (நாலடியார் 35, 36)
இவ்வுடம்பு ஒரு கருவியாக வந்தது. வாழ்நாள் முழுவதையும் இவ்வுடம்புக்கே கருமங்கள் செய்து கொண்டிராமல், உயிருக்கான காரியங்களையே மிக

கா. விசயரத்தினம் 159
முக்கியமெனக் கருதிச் செய்ய வேண்டும். நல்லறங்கள் செய்தால், இறப்பின் பின் மேலுலகத்தில் எளிதாக இருந்து கொண்டு இன்பம் நுகரலாம். (நாலடியார் 37, 39)
பிரதி பலன் கருதாது நாம் உதவிகளைச் செய்ய வேண்டும். இதிலும், சான்றோர்க்குச் செய்யும் உதவி மிகச் சிறியதாயினும் அது பெரும் பயனைத் தந்து விடும். (நாலடியார் 38)
தூய் தன்மை
தூய் தன்மை என்பது தூயதல்லாமை. உடம்பின் அழுக்குடைமையை ஈண்டு உணர்த்தி நிற்கின்றது. மகளிருடம்பு அழகியதெனக் கருதப்படுதலின், அதன் அழுக்குடைமையை நாலடியார் விரித்துக் கூறுகின்றது. நாம் உடம்பைப் பேணிக் காத்து அலங்கரிப்பதில் வாழ் நாளில் அதிகமான பங்கைச் செலவழிக்கின்றோம். நிலையற்ற உடம்புக்கு இவ்வளவு கவனம் ஏன்? நிலையுள்ளதும், உறுதுணையாயிருப்பதுமான அறச் செயல்களுக்கு எவ்வளவு நேரத்தைச் செலவு செய்கின்றோம்? இதை உணர்த்த வேண்டியே நாலடியார் உடம்பிலுள்ள அழுக்கியல்பைக் கூறி, அறச் செயல்களுக்கு இவ்வுடம்பு எவ்வளவு முட்டுக்கட்டை போடுகின்றது என்பதை எடுத்துக் காட்டுகின்றது. ( நாலடியார் 41, 42)
செயற்கை மணப் பண்டங்கள் எவ்வளவை ஊட்டினாலும் அழுக்கு மணம் வீசிக் கொண்டேயிருக்கும். ஆகவே, உடம்பின் அழுக்கியல்பு அறிந்து அதன் கண் பற்றில் லாதிருக்க வேணி டும் என நாலடியார் எடுத்துரைக்கின்றது. (நாலடியார் 43, 44, 45, 46, 47, 48)

Page 94
160 கணினியை விஞ்சும் மனித மூளை
ՑID6N
உலகத்தின் நிலையாமை உணர்ந்து யான், எனது என்னும் இருவகைப் பற்றும் விட்டு மெய்யுணர்வில் ஒழுகுதல் உடம்பின் மேல் உள்ள பற்று, யான் என்னும் அகப்பற்று என்றும், செல்வம் முதலியவற்றின் மேல் உள்ள பற்று, எனது என்னும் புறப்பற்று என்றும் சொல்லலாம். இவ்விரு பற்றுகளையும் துறந்தால், இவற்றால் வரக்கூடிய துன்பம் இல்லை என்றவாறு. இச்சை துறந்தால் துறவறம் தானே உதித்து விடும். துறவு ஏற்பட்டால் வாழ்வு அறநெறிப் பாதையில் அமைந்து விடும். இப்படியமைந்த ஒருவன் வாழ்வு தானும், ஒரு சமுதாயத்தை நல்வழிப்படுத்தப் போதியது. (குறள். 341, 342, 343, 344)
அகப்பற்று, புறப்பற்று ஆகிய இரு பற்றினையும் துறந்தார்க்கே வீடென்னும் மோட்சம் கிடைக்கும். மற்றவர்களுக்குப் பிறந்திறத்தல் என்றும் நிலைத்து நிற்கும். அதனால் அவர்களுக்கு என்றும் துன்பமே சூழ்ந்து வருத்தும். (குறள் 346, 347, 348, 349)
இவ்விரு பற்றுகளையும் துறப்பதெப்படி? அதற்கும் ஓர் உபாயம் கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை,
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு." - (குறள் 350)
இனி, துறவைப் பற்றி நாலடியார் கூறுவதையும் பார்ப்போம். விளக்கொளியில் இருட்டு நீங்கி விடுவது போல், ஒருவனது தவ முயற்சியின் முன், அவன் அதற்கு முன் செய்த தீவினை நில்லாது அகன்று விடுகின்றது.

கா. விசயரத்தினம் 161
விளக்கின் நெய் குறைந்தால் மீண்டும் இருள் சூழ்ந்து விடுவது போல், நல்வினை நீங்குமிடத்தில் தீவினை மீண்டும்
சூழ்ந்து விடுகின்றது. இங்கு தவத்தின் பெருமை பேசப்படுகின்றது. (நாலடியார் 51, 52, 53, 54)
இளமைப் பருவமும் வீணே கழிந்து விட்டது. பின், நோயோடு கிழத்தனமும் வந்து விடும். என்னோடு கலந்து ஆலோசியாது துணிவுடன் புலன்களின் வழியிற் செல்கின்ற நெஞ்சமே, எனக்கு நல்வழி உண்டாக நீ என்னுடன் ஒத்து வருவாயா? என்று ஒருவன் தன் மனத்தையே தட்டிக் கேட்கின்றான். (நாலடியார் 55, 56)
மனிதனுக்கு இன்னல்கள் வருவது சகசமே. இதற்காக மனத்தை வருத்தக் கூடாது. எவ்விடர் வரினும் துறவொழுக்கத்தைக் கட்டிக் காத்துக் கொள்ள வேண்டும். தவ முயற்சியில் நிற்பவர், தம்மை இகழ்பவர்களை நிந்தியாது அவர் மேல் பொறுமையும் இரக்கமும் கொள்வார்கள். (நாலடியார் 57, 58)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து வழிகளாகச் செல்லுதலையுடைய பற்றுள்ளத்தால் உண்டாகும் அவாவை, தீய வழிகளில் நிலை மாறிச் செல்ல விடாது பாதுகாத்து, ஒழுக்க நெறியிற் செலுத்தும் வல்லமையுடையவனே தவறாமல் வீடு பேற்றினை அடைவான். (நாலடியார் 59)
வாழ்க்கையில் துன்பமே மேலும் மேலும் மிகுந்து
வருதல் உணர்ந்தும், பற்றில்லாமல் இருத்தலை நினையாராய், இடையே தினையளவாக உண்டாகும்

Page 95
162 கணினியை விஞ்சும் மனித மூளை
இன்பமே விரும்பி நிற்பார் மன வலிமையற்றோர். இச் சிற்றின்பத்தை மேலோர் விரும்பார். (நாலடியார் 60)
வெகுளாமை
ஒருவரிடத்தே கோபம் ஏற்பட்டபொழுதும் அதைச் செயல்படுத்தாது பொறுமையுடனிருத்தலே வெகுளாமை எனப்படும். கோபம் ஒருவனின் அறிவைக் கெடுத்து இம்மைக்குத் துன்பத்தையும், மறுமைக்குத் தீராப் பழியையும் ஏற்படுத்தி விடும். கோபம் செய்தவத்தையே அழிக்க வல்லது. அப்படிப்பட்ட கோபத்தை அதன் வழி விடாது அறிவைக் கொண்டு அடக்க வேண்டும் என்பதையே வெகுளாமை வற்புறுத்திக் கூறுகின்றது. எந்நேரத்திலும் எதற்கும் சினங் கொள்ளுவது சுலபம். ஆனால், இச் சினம் காப்பது மிகக் கடினம். இச் சினத்துக்கு ஆட்பட்ட ஒருவன் அறநெறியில் நின்று வாழ்க்கையை நடாத்த மாட்டான். இதன் காரணம் பற்றியே செந்நாப்புலவரும் இதற்கு ஒரு அதிகாரம் வகுத்துள்ளார். அதைச் சிறிது நோக்குவாம்.
“பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன். பலிக்காத இடத்தில் சினம் காத்தால் என்ன? காக்கா விட்டால் என்ன?’ என்றவாறு மேலும் சினத்தினால் ஏற்படும் தீமையைக் கூறப் புகுந்த ஆசிரியர்ஒருவன் தன்னிலும் வலிமையுடையவனிடத்தில் தன் சினத்தைக் காட்டுவானாயின் அது அவனுக்கே தீமையாகி விடும்.
தன்னிலும் வலிமை குறைந்தவனிடத்திலே காட்டுதல் தரீமையிலும் தமையாகி விடும் என்றதனாலி வலிமையுடையவரிடத்தும், வலிமை குறைந்தவரிடத்தும்

கா. விசயரத்தினம் 163
சினத்தைக் காத்தலே சிறப்புடையது என்றும், சினம் ஒருவரின் சந்தோசத்தையும், சிரிப்பையும் கெடுக்கும். ஆதலின், அதனினும் மேம்பட்ட பகை வேறின்று எனவும் கூறியுள்ளார். (குறள் 302, 303, 304)
வகுண்டார்க்கு வரும் தீமையை நோக்குமிடத்து, தன்னைத் துன்பத்தினின்றும் காக்க ஒருவன் விரும்பினால், தான் சினம் கொள்ளாமல் இருக்க வேண்டும். அப்படி அவன் காவாதவிடத்து அது அவனையே கொல்லும் துன்பத்தைத் தரும். நெருப்பானது தான் பற்றிய இடத்தையே அழிக்கும். ஆனால், சினம் என்னும் நெருப்பானது தனக்கு இடமானவரையேயன்றி அவருடன் சேர்ந்தாரையும் அழிக்கும் தன்மையுடையதாகலின் சினம் நெருப்பிலும் கொடியது என்றும், கையை ஒருவன் நிலத்திலே அறைந்தால் அது தவறாது நிலத்திலே பட்டுக் கை நோவது தவறாது. அது போலக் கோபத்தைப் பொருளென்று கொண்டவனுக்குக் கெடுதல் நிச்சயம் என்று கூறுகின்றார். (குறள். 305, 306, 307)
வெகுளாமையைக் கடைப்பிடித்து ஒழுகுபவனுக்கு ஏற்படும் நன்மைகளைக் கூறுமிடத்து, ஒருவனுக்கு அடுத்தடுத்துத் துன்பத்தை விளைவிக்குமிடத்தும் அதனைப் பொறுத்து வெகுளாமையைக் காப்பவனுக்கு நன்மையே ஏற்படும் என்றும், ஒருவன் மனதினாலேனும் ஒருகாலும் சினத்தை நினையானாயின், அவன் கருதும் பேறு எல்லாம் அடைவானென்றும், சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் இறந்தார்க்கு ஒப்பார் என்றும், சினத்தைத் துறந்தவர் சாதல் தன்மையராயினும் அதனை

Page 96
164 கணினியை விஞ்சும் மனித மூளை
ஒழிந்தார் அளவினர் என்றும் வெகுளாமையின் சிறப்புைக் கூறுகின்றார்.
“இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று" -(குறள் 308)
“உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ள்த்தால்
உள்ளான் வெகுளி எனின்." -(குறள் 309)
“இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.” -(குறள் 310)
வெகுளாமையைப் பற்றி நாலடியார் என்னென்ன கோணங்களில் ஆராயப்கிறார் என்பதைச் சிறிது நோக்குவோம். ஈ ஆனது ஒரு சிற்றுயிர். | அது எங்கள் தலையிலே இருந்தாலும் அதை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. அதே போல மற்றவர்கள் எங்களை மதித்து நடந்தாலும், மதியாமல் கீழ்ப்படுத்தி நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாது எரிந்து விழும் சினம் இல்லாமல் இருப்பதே நல்லது. துன்பம் தொடர்ந்து வந்தாலும், அதைப் பொறுத்துக் கொண்டிராமல் சினங் கொண்டு அழியாச் சிறப்பினையுடைய தமது உயிரைப் போக்கலாகாது. சினப்பது தன்னையே சுடும். ஆதலால் பண்பட்ட உள்ளமுடையோர் சினங் கொள்ள மாட்டார்கள். இதைப் பின்வரும் பாட்டுகளில் விவரித்துள்ளார். (நாலடியார் 61, 62, 63)
தகுதியில்லாத கீழ் மக்கள் தம்மைப் பெரியோராகக் கருதித் தகாச் சொற்களைச் சொன்னாலும் பெரியோர்கள் சினம் கொள்ள மாட்டார்கள். தமது சினம் செல்லக் கூடிய

கா. விசயரத்தினம் 165
இடங்களிற் பொறுத்துக் கொள்ளுதலே சிறந்த பொறுமையாகும். மந்திரித்து இட்ட திருநீற்றால் உடனே படஞ் சுருங்கி, சினம் ஒடுங்கிய நல்ல பாம்பைப் போல் தமது உயர் நிலையைக் கருதிச் சான்றோர், கீழ் மக்கள் சொற்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். கீழ் மக்களின் கோபம் தணியுங் காலம் இல்லாமலே பெருகிக் கொண்டு போகும். சான்றோர் கோபம் உடனே தணிந்து விடும். தாம் நன்மை செய்தும் தமக்குத் தீமை செய்வோருக்கும் நன்மை செய்தலேயல்லாது தீமை செய்ய மாட்டார்கள் சான்றோர் என்றும், வெகுளாமை சான்றோர் பால் செல்லாது என்பதையும் பின்வரும் பாடல்களால் அறியலாம். (நாலடியார் 64, 65, 66, 67, 68, 69, 70)
பொறையுடைமை
பொறை உடைமையாவது காரணம் பற்றியோ, மடமை பற்றியோ, ஒருவன் தமக்குக் குற்றஞ் செய்தக் கால் தாமும் அதனை அவனுக்குத் திருப்பிச் செய்யாது பொறுத்தலை உடையதாயிருப்பதாம். “பொறுத்தார் தரணி ஆள்வர்' என்பது பழமொழி. பொறுமை பெருமை தரும். பொறுத்தாரை என்றும் உலகம் புகழும். பொறுமையின் இருப்பிடமாய் அமைந்தவர் தருமர். அவர் ஒருக்கால் நாடிழந்தார், நகரிழந்தார். ஆனால் பொறுமை இழந்திலர். எனவே, இழந்த நாட்டையும், நகரையும் மீண்டும் பெற்றுத் தரணியாண்டார்.
பூமியானது தன்னை அகழ்வாரை வீழாமல் தாங்கி
நிற்கின்றது. அதைப் போல் தம்மை அவமதிப்பாரைப் பொறுத்தல் தலையாய அறமாம். பொறையுடைமையது

Page 97
166 கணினியை விஞ்சும் மனித மூளை
சிறப்பை வள்ளுவர் பின் குறள்களில் விவரித்துள்ளார். (குறள். 151, 152, 153, 154. )
பிறர் தமக்குத் தீங்கு செய்தவிடத்து அதனைப் பொறாது அவனை ஒறுத்தாரை அறிவுடையார் ஒரு பொருளாக மனத்துள் மதியார். அதனைப் பொறுத்தாரைப் பொன் போல் மதிப்பர். தமக்குத் தீங்கு செய்தவனை ஒறுத்தார்க்கு உண்டாவது ஒவ்வொரு நாளை இன்பமே. ஆனால் அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்.
பிறர் செய்யத் தகாத கொடிய செயலைத் தன்கண் செய்தாராயினும், அவர்க்கு அதனால் வரும் துன்பத்திற்காக வருந்தி, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருக்க வேண்டும். மனச் செருக்கால் தன்கண் தீயவற்றைச் செய்தாருக்குத் திருப்பி அதைச் செய்யாது, தம்முடைய பொறையான் வென்றுவிடலாம் என்று குறள் கூறுகின்றது. (குறள் 155, 156, 157, 158)
தன்னிலும் அறிவிற் குறைந்தவன் பேசும் சொற்களைக் கருத்திற் கொண்டு அவனுடன் ஒன்றும் பேசக் მი. L— IT ტნ]. அப் படியில் லாமல் அவனுடன் நன்மையானவற்றையே எடுத்துக் கூறினாலும் அதனையுணரும் அறிவின்மையால் முறைமை தவறி எதிர் பேசுவான் - அதைக் கேட்டு வீணாக மனம் வருந்த வேண்டி வரும். ஆனபடியால், அறிவில்லாதவன் அல்லன செய்தால், எதிர்வாதம் புரியாது கூடுமான வழிகளால் அவன் தொடர்பிலிருந்து தப்பி நீங்குதலே நல்லது.

கா. விசயரத்தினம் 167
தனக்குச் சமானமல்லாதவர்கள் தம்மை ஒன்று சொன்னால் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டும். அப்படிப் பொறுத்திராமலிருந்தால் இவ்வுலகத்தார் அறிவுடையவனையே பழிப் புக் குரிய இழி குணமுடையவனாகக் கருதி விடுவர். (நாலடியார் 71, 72)
மனத்திலே ஒன்றை வைத்துக் கொண்டு வெளியே இன் சொல் பேசி வஞ்சிப்பாரை நம் வாழ்க்கையில் காணக் கூடியதாகவிருக்கின்றது. ஆனால், உண்மையிலேயே உள்ளத்தில் அன்பு கொண்டு குற்றம் கண்டவிடத்துக் கடுஞ் சொல் கூறும் அன்புடையோரே மேலானவர்கள். ஆதலால், அதன்மேற் பொறுமை கொள்ள வேண்டும். (நாலடியார் 73)
அறிந்து, அடங்கி, அஞ்சி, நேர்ந்ததைச் செய்து, கிடைத்தது கொண்டு வாழ்வோருக்குத் துன்பமில்லை. நண்பனிடத்திற் பொறுக்குமளவும் பொறுமை கொள்க. பொறுக்கக் கூடாதவிடத்து அவனுக்குத் தீங்கு செய்யாமல் விலகிக் கொள்ள வேண்டும். அன்றியும் அவர்களைக் கைவிட்டு விடுதல் மக்கட்கு அழகன்று. சிறந்த நட்புக்கு அடையாளம் தம்மோடு பழகுபவர் செய்யும் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளுவதேயாம். (நாலடியார 74,75, 76, 77)
பிறன்மனை நயவாமை
பிறன்மனை நயத்தலாவது - காம மயக்கத்தால் பிறருடைய மனைவியை விழைதல் , பிறருடைய மனைவியை விழைபவனுக்கு இம்மையில் அச்சத்தையும், கலக்கத்தையும் கொடுப்பதோடு மறுமையில் நரகத்தையும் அளித்துவிடும். தேவருலக அதிபதியான இந்திரனே விதி வசத்தினால் காம மயக்கத்திலீடுபட்டு அகலிகையின் பாற்

Page 98
168 கணினியை விஞ்சும் மனித மூளை
கொண்ட மோகத்தினால் தீரா அவமானத்துக்கு உட்பட்டதே ஓர் எடுத்துக் காட்டாக அமைகின்றது. திருவள்ளுவர் பிறன் மனை நயவாமைக்கு ஓர் தனி அத்தியாயம் வகுத்துள்ளார்.
உலகத்தில் அற நூலையும், பொருள் நூலையும் ஆராய்ந்தறிந்தவர்கள் பிறனுக்குச் சொந்தமான தனி மையுடையாளைக் காதலித்து ஒழுகின்ற அறியாமையைக் கைக்கொள்ள மாட்டார்கள். காமம் காரணமாகப் பாவத்தின்கண் நின்றார் எல்லாருள்ளும், பிறன் இல்லாளை விரும்பி அவன் வாயிற்கண் சென்று நின்றார் போலப் பேதையர்கள் எவரும் இல்லை. எல்லாப் பாவத்தினும் மேம்பட்ட பாவம் பிறன்மனை விளைதல் என்பது இதனாற் பெறப்பட்டது. தன்னை நம்பும் ஒருவனின் இல்லாளின்கண்ணே பாவஞ் செய்தலை விரும்பி ஒழுகுவார் உயிருடையரேனும் இறந்தாரோடொப்பர். காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை உணராது பிறனுடைய இல்லின்கண் புகுந்தவன் எத்துணைப் பெருமை வாய்ந்தவனாக இருந்தாலும், இழிந்தவனேயாவான். பிறருடைய மனைவியை விரும்புவனின் மேல் ஏற்பட்ட பகையும், பாவமும், அச்சமும், குடிப்பழியும் ஒருகாலும் நீங்க மாட்டாது. ஆனபடியால், பிறன்மனை விழைவானின் குற்றம் கீழ்வரும் குறள்களினால் விளக்கப்பட்டிருக்கின்றது. (குறள் 141- 146)
பெண் என்பவள் தன்னை மணந்த கணவனுக்கே பூரண உருத்தாய் நிற்பவள். அப்படியான ஒரு பெண்ணை விரும்பாதவனே அறத்தோடு கூடிய இல் வாழ்வான் என்று கூறப்படுவான். பிறன் ஒருவனுடைய மனைவியின் தோளைச் சேராதவனே உலகத்து எல்லா நன்மைகளையும் எய்துதற்கு

கா. விசயரத்தினம் 169
உரியவன். மறுமையிலும் இன்பத்தை அனுபவிப்பதற்குத் தகுதியுடையவன். ஒருவன் அறத்தைத் தனக்குரித்தாகச் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும் அவனுக்குப் பிறன் எல்லைக் கண் நிற்பாளது பெண் மையை விரும்பாமையுண்டாயின் அது நன்று. (குறள் 147- 150)
இனி, இத் தொடரில் நாலடியார் கூறும் கருத்தினையும் பார்ப்போம். பிறன்மனை நயப்பவன் அடையும் இன்பம் சிறிதளவேயானாலும், அதன் பிரதிபலனாக அடையும் அச்சம் பெரியது. அத்துடன் அதற்கு ஏற்ற தண்டனை கொலைக் கட்டளையாதலாலும் நாடோறும் நரகுக்கே உருவாகிய செயலாதலாலும் பழி பாவங்கட்கு அஞ்சுபவர் அதைச் செய்யாமலிருக்க வேண்டும். (நாலடியார் 81)
நாலடியார் பிறன்மனை விழைவானின் அச்ச நிலையை வெவ்வேறு கோணங்களில் படம்பிடித்துக் காட்டுகின்றார். ஒருவன் பிறன் மனைவியை விரும்பிச் செல்லும் போதும் அச்சம், திரும்பி வரும்போதும் அச்சம், நுகரும் போதும் அச்சம், அதைப் பிறருக்குத் தெரியாது காப்பதும் அச்சம் இப்படியே அவனுக்கு முழுவதும் அச்சமேயல்லாது அதனால் அடையும் இன்பம் எதுவுமில்லை. (நாலடியார் 83, 84)
பிறன் மனையை விரும்புவார்க்கு புண்ணியம், புகழ், நல்லோருறவு, ஆண்மை என்பன சேரமாட்டாமல் பிறர் பகையும், பழியும், பாவமும், அச்சமும்தான் வந்து சேரும். நடுவு நிலைமை என்னும் குணம் சிறிதும் இல்லாமல் தமக்குள்ள இடம், பொருள், ஏவல் என்னும் வலிமையால்

Page 99
170 கணினியை விஞ்சும் மனித மூளை
முற் பிறப்பின் பிறன் மனைவியைச் சேர்ந்தவர்களே இப் பிறவியில் கூத்தாடி, இரந்து உண்பவர்கள். (நாலடியார் 82, 85)
பலரறியக் கைப் பிடித்த மனைவி இல்லத்திருக்க, ஒருவன் அயலான் மனைவியைக் கருதுவது எதற்காக? பிறர் மனைவியர் பால் நிகழ்த்தும் காமவொழுக்கம் எப்போதும் இடரானது. அது பாம்பின் மழ மழப்பான தலையை நாவினால் தடவி இன்புற்றதைப் போன்ற தன்மையுடையது. ( நாலடியார் 86, 87. )
அறிவுடையவர்கள் காம நோய்க்கு இடங் கொடுக்க மாட்டார்கள். ஒரோவொருகாற் பரவினாலும் அவை வெளிப்பட மாட்டா. அப்படி வெளிப்பட்டாலும் அவர்களுக்கு உரிமை மனைவியரிடத்தன்றி அயல் மாதர் வழிச் செல்லாது. தம் மனைவியரும் அந் நினைவு கலவாதவராயிருப்பின், அவ் வறிஞர்கள் வெட்கமடைந்து, சிறிதும் வெளிப்பட விடாது உள்ளத்தே அடக்கி விடுவர். (நாலடியார் 88)
காமம் நெருப்பிலும் கொடியது. வில்லம்பும், தீயும் ஒளிர்கின்ற கதிர்களையுடைய சூரியனும் வெதும்பிச் சுட்டாலும் வெளிப் பொருளையே சுடும். ஆனால் காமம் அழன்று கவலைப்படுத்தி உள்ளத்தையே சுடுவதனால் காமம் பொல்லாதது. அச்சம் மிக்க செந்தழலுக்கு அருகிலிருக்கும் நீருள் மூழ்கியும் பிழைத்தல் கூடும். ஆனால் நீருள் மூழ்கினாலும், மலையேறி ஒழித்தாலும் காமம் எரித்து விடும். எனவே காமம் தீயினும் கொடியது என்பது பெறப்படுகின்றது. (நாலடியார் 89, 90)

கா. விசயரத்தினம் 171
F6) is
உலகத்து மாந்தர் அனைவரும் செல்வராய் இருப்பதில்லை. அவ்வனைவரும் வறியவராயும் இருப்பதில்லை. ஒரு சிலர் செல்வராயும், பெரும்பாலானோர் வறியவராயும் சீவியம் நடாத்துகின்றனர். இதற்குக் காரணம் அவரவர் விடாமுயற்சி என்று சிலரும், அவரவர் தம் ஊழ்வினை என்று மறு சிலரும் கருதுகின்றார்கள். அஃது எப்படி அமையினும் ஈண்டு செல்வனாயிருக்கும் ஒருவன் கைம்மாறு கருதாது வறியவர்களுக்கு மனமுவந்து கொடுத்தலே ஈகை எனப்படும்.
நாம் இப் பிறவியிலே எவ்வளவு செல்வத்தைக் குவித்து வைத்திருந்தாலும் அதனால் அனுபவிக்கும் இன்பம் ஒரு சிறிதளவேயாம். மாறாக மனதிலே பயத்தையே கொடுக்கும் தீக்கும், கள்வர்க்கும் பயந்தே காலத்தைக் கழிக்க நேரிடுகின்றது. ஆனால், செல்வம் கிடைத்த காலை அதைத் தர்ம வழியிலே இரப்போர்க்குக் கொடுத்தால் அது மறுமையில் அழியாத பேரின்ப வீடாகிய முத்தியை எமக்குத் தரும். ஆகவே, ஈகை முத்தியென்னும் விருட்சத்திற்கு இடும் வித்தாகின்றது. எனவே செல்வர்களாக விருப்போர் ஈகை என்னும் தர்ம வழியிலே நிற்க வேண்டுமென்று பொய்யாமொழிப் புலவர் புகலுகின்றார்.
ஒருவன், வறியவர்களுக்குத் தேவையானதைப் பிரதியுபகாரம் கருதாமல் மனமுவந்து கொடுத்தலே உண்மையான ஈகை எனப்படும். தனக்குப் பிரதியுபகாரம் கருதிச் செய்யும் கொடையெல்லாம் ஈகையின் பாற்படமாட்டாது. வறியவர் தம்மிடம் வந்து தான் வறியன்

Page 100
172 கணினியை விஞ்சும் மனித மூளை
என்று கூறி இரக்குமுன்னர் அவனது குறிப்பறிந்து கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்ததைப் பிறரறியச் சொல்லவும் கூடாது. இவையிரண்டும் நல்ல குடிப்பிறந்த மேன் மக்களிடம் காணப்படும் சிறந்த குணங்களாம். (குறள் 221, 223)
பசித்து வரும் ஒருவனின் பசியைப் போக்குபவன், தான் தேடிய பொருளைக் கொண்டு மறுமைக்கு உதவ வேண்டிய வைப்பிடத்தை அறிந்தவனாவான். மற்றல்லாரது செல்வம் வீணானது. தாம் தம்முடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார். பசித்தவர்களுக்கு எப்பொழுதும் பகுத்துண்டு பயின்றவனைப் பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டுதல் இல்லை. இதனால் பசி நோய் தன்னைத் தீண்டாமல் காக்க வேண்டின் தான் மற்றவர்களுடன் பகுத்துண்டல் வேண்டும் என்பது பெறப்பட்டது. (குறள் 226, 227, 228)
இரத்தல் தொழில் சிறந்ததல்ல. ஆனால், தான் பொருள் சேர்க்க வேண்டி இரப்போர்க்கு ஈயாது தாமே தனித்து உண்டல், இரப்பதிலும் இழிந்த செயலாகும். ஒருவருக்குச் சாதல் போலத் துன்பம் தரக் கூடியது வேறொன்றுமில்லை. இருந்தாலும் வறியவர்களுக்கு ஒன்றும் கொடுக்க முடியாதவிடத்துச் சாதல் மிகவும் இன்பத்தைத் தரக் கூடியதே. இரப்போர்க்குக் கொடுக்க முடியாதவன் சாதல் சிறந்தது. பிறர்க்குப் பயன்படாத உடம்பை ஒழித்தலும் ஒரு வழி சிறந்ததேயாகும். இவை இரண்டு குறள்களாலும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது. (குறள் 229, 230)

கா. விசயரத்தினம் 173
இனி, நாலடியார் கூற்றையும் சற்று நோக்குவோம். ஒருவன் பொருளில்லாத காலத்திலும் கூடிய அளவு பொருளுள்ள காலத்தைப் போல மிகவும் மகிழ்ந்து கொடுத்தல் தொழிலோடு பொருந்திய அருட் குணத்தையுடையவனாயின் அவனுக்கு மோட்சக் கதவுகள் திறந்திருக்கும். (நாலடியார் 91)
வெறுத்தற்குரிய கிழப் பருவமும் இறக்கும் நாளும் எதிரிலேயே உள்ளன. அவையல்லாமல் வலிமையைக் குலைக்கும் நோய்களும் வரவிருக்கின்றன. ஆதலால் செல்வம் உண்டாகும் காலத்திலேயே வீணாக மேலும் செல்வத்தைத் தேடி அலையாதிருங்கள்; இறுக்கிப் பிடியாதிருங்கள், பலருக்கும் பகிர்ந்து உண்ணுங்கள்; என்று கூறுவது சாலச் சிறந்ததாகும். (நாலடியார் 92)
பிறர்க்குக் கொடுப்பதால் ஒருவனது செல்வ நிலை குன்றிவிடாது. ஒருவருக்கும் கொடாமல் பணத்தை இறுக்கிப் பிடித்தலால், ஒருவனின் செல்வ நிலை வளராது. செல்வம் வளர்வதும், அழிவதும் முன்வினை காரணமாக நிகழ்வன. இதைக் கருத்திற் கொண்டு பிறர்க்கு ஒன்று கொடுத்தலை மகிழ்வோடு நெகிழாமற் செய்து வரல் வேண்டும். (நாலடியார் 93)
ஒருவன் வறியவனாகவிருந்தாலும், தனக்குக் கிடைத்தவற்றில் இம்மியளவேனும் நாடோறும் பிறர்க்குக் கொடுத்துப் பின் உண்ண வேண்டும். இவ்வுலகத்தில் ஒன்றுக்கும் வழியில்லாமல் இரத்தல் தொழிலைச் செய்பவர்கள் முற்பிறவியிலே பிறர்க்கு ஒன்றும் உதவாதவர்கள் என்று சான்றோர் கூறுவார்கள்.

Page 101
174 கணினியை விஞ்சும் மனித மூளை
ஆனபடியால் இப் பிறவியில் கொடுத்துதவினால் மறு பிறவியில் இரப்போராக வரவேண்டிய நிலை ஏற்படாது என்பதை உறுதிப்படுத்துகின்றார். (நாலடியார் 94)
வறுமைக் காலத்தில் தான் பிறரை இரவாதிருத்தலும், தன்னிடம் இரந்து வந்தவர்க்கு இயைந்தன கொடுத்தலும் ஒருவனுக்குக் கடமையாகும். (நாலடியார் 95)
நம்மிடம் இருப்பது மிகவும் சிறியது என்று கருதாமலும், இல்லை என்று மறுத்துவிடாமலும், எப்போதும் பயனுடையதான அறத்தை அனைவரிடத்தும் செய்து வரவேண்டும். நாங்கள் இடும் சிறிதளவு பிச்சை, சிறுகச் சிறுக அவனுடைய பிச்சாபாத்திரம் நிறைவது போல் மெல்ல மெல்லப் புண்ணியமும் நிறைந்து விடும். (நாலடியார் 99)
குறுங்கோலால் ஒலிக்கப்படும் முரசினது ஒலியைக் காத எல்லை வரையிலுள்ளோர் கேட்பர். இடித்து முழங்கிய மேகத்தினொலியை ஓர் யோசனை எல்லை வரையிலுள்ளோர் கேட்பர். தக்கோரால் ‘இவர் உதவி செய்தவர்’ என்று மகிழ்ந்து கூறப்படும் புகழுரை அடுக்காகவுள்ள மூன்று உலகங்களில் உள்ளாரனைவருங் கேட்டு நிற்பர். இதனின்று கொடுத்தாரின் புகழ் எல்லாவிடத்தும் பரவி நிற்கும் என்பது பெறப்படுகின்றது. (நாலடியார் 100)
பலரும் தம் மை விரும்பி அணுகும் படி வள்ளண்மையுடன் வாழ்பவர்கள் ஊர் நடுவில் காய்த்தலையுடைய பெண் பனையை ஒப்பர். தமது குடி

கா. விசயரத்தினம் 175
செல்வ மிக்க காலத்தும் பிறர்க்கு வழங்கியுண்ணாத மக்கள் சுடுகாட்டுள் நிற்கும் காய்த்தலில்லாத ஆண் பனையை ஒப்பர். (நாலடியார் 96)
பெய்தற்குரியதான மழை பெய்யாத போதும் உயர்ந்தோர் பிறர்க்குச் செய்தற்குரிய உதவிகளைச் செய்யாவிட்டாலும் உலகத்துயிர்கள் பிழைக்கும் வகை எவ்வாறு என்றவாறு. (நாலடியார். 97)
D6ò
முற் பிறப்பிற் செய்த வினைகளின் விளைவே ஊழாய்த் திரண்டு வந்து இம்மையின் வாழ்வுக்கு வழி வகுத்து நிற்கின்றது. ஊழ், நியதி, பால், முறை, உண்மை, தெய்வம், விதி என்பன யாவும் ஒரு பொருட் கிளவி, ஒருவன் வாழ்வின் பொருள், இன்பம் இரண்டிற்கும், அவன் முற் பிறப்பில் செய்த வினைகளின் விளைவாகிய ஊழைப் பொறுத்தே அவன் வாழ்வமைகின்றது. முற் பிறப்பிற் செய்த நல்லனவும் ஊழாய் வந்து நன்மை பயக்கும். இன்னும் அல்லாதனவும் ஊழாய் நின்று துன்பம் தந்து நிற்கும். எனவே தான் சந்தர்ப்பம் கிடைக்கும் நேரங்களில் நல்லன. செய்து ஊழை நம் பக்கத்துக்குரியதாக்கின் வாழ்வு சிறக்கும்.
இம்மையில் அறநெறிக்கண் நின்று வாழ்க்கை நடாத்தும் எத்தனையோ மக்களுக்கு இன்னல், துன்பம், துயராகியன வந்து அவதியுறுவதை நாம் காண்கின்றோம். முற் பிறப்பில் அவர்கள் செய்த வினைகளின் காரணத்தால் இப் பிறப்பில் அவதியுறுகின்றனர்.

Page 102
176 கணினியை விஞ்சும் மனித மூளை
ஒரு தவறும் புரியாத கோவலன், கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டுச் சிரச்சேதஞ் செய்யப்பட்டது, அவன் முற்பிறப்பிற் செய்த ஊழாலேயாம். இதனால் ஊழின் வலி தெளிவாகின்றது. இனி, வள்ளுவர் ஊழைப் பற்றி எடுத்துக் கூறுவதைப் பார்ப்போம்.
ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும் கைப் பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்ற விடத்து, அஃது அதனைப் பேதையாக்கும். ஆக்கும் ஊழ் அவன் அறிவையும் பெருக்கும். பேதையாக்கும் ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும் நூல் பலவற்றைக் கற்றானாயினும், அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய பேதைமையே மிகுந்து நிற்கும்.
அழிக்கும் ஊழ் உற்ற வழிக் காலம் முதலிய நல்லவாயினும் அழித்தே தீரும். ஆக்கும் ஊழ் உற்ற வழி அவை தீயவாயினும் ஆக்கியே தீரும். தமக்கு ஊழல்லாத பொருள்களை வருந்திக் காப்பினும், தம்மிடம் நில்லாவாம். ஊழால் தமக்காய பொருள்களைப் புறத்தே கொண்டு போய்ச் சொரிந்தாலும், தம்மை விட்டுப் போகாவாம். (குறள் 371 - 376)
ஓர் உயிர் செய்த வினையின் பிரகாரமே நுகர்தல் நடைபெறுவது. வெறும் முயற்சிகளால் பொருள்களைப் படைக்கவோ, நுகரவோ முடியாது. நல் வினை விளையுங்கால் அதன் விளைவாக இன்பங்களைத் துடைக்கும் திறன் நாடாது இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார். ஏனைத் தீவினை விளையுங்கால் அதன் விளைவாய் துன்பங்களையும் அவ்வாறு அனுபவியாது

கா. விசயரத்தினம் 177
துடைக்கும் திறன் நாடி அல்லல் உழைப்பது எனக் கருதி, ஒன்றற்கு இயைந்து அனுபவித்து ஏனையதற்கு அது செய்யாது வருந்துதல் அறிவன்று.
தன்னை விலக் குதற் பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும் தான் அவ் உபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து அச் சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும். அதனால் ஊழ் போல மிக்க வலியுடையன யாவை உள. (குறள் 377, 378, 379, 380)
பல பசுக் கூட்டங்களினிடையே இளைய பசுக் கன்று தன் தாய் ஆவினைத் தேடிச் சென்றடைதலில் வல்லதாம். அதே போலப் பிறப்புகள் தோறும் தொன்று தொட்டு வரும் பழவினையும் தன்னைச் செய்த உரிமையாளனைத் தேடி வந்தடைந்து விடும் ஆற்றலையுடையது.
உலகத்திலே பிறந்த மக்கள் யாவரும் ஒரேமாதிரி இருப்பதில்லை. தோற்றமும், இளமையும், மேன்மை வாய்ந்த செல்வமும், நன்மதிப்பும், எல்லாரிடமும் ஒரே வகையாகப் பொருந்துவதில்லை.
அதற்குக் காரணம் பழவினையே யென்றும், நல் வினைகள் செய்தால் மேற் பிறவிகளில் நன்நிலைமைகள் பொருந்தும் என்றும், தீவினைகள் செய்தால் தீய நிலை எய்துவது என்றும் அறந்தொழுகாமல் யாதேனும் ஒரு வகையால் நல்வினையையேனும் செய்யாதவனது உயிர் வாழ்க்கை உடம்பு தோன்றிச் சில காலம் பயனற்றிருந்து பின் இறந்து போகும் வீண் நிலையினையே உடையதாகும்.

Page 103
178 கணினியை விஞ்சும் மனித மூளை
ஆனபடியால் இயன்ற அளவில் ஆவது நல்வினையைச் செய்து பிறவியைப் பயனுடையதாக்குதல் வேண்டும். ஒருவன் தான் செழுமை பெற வேண்டும் என்பதையே விரும்புவான். அவனது இன்பம் அவன் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியத்தின் அளவினதேயாம். ஆனபடியால் வளம் பெற விரும்புவோர் அதற்கேற்ற நல்வினை செய்ய வேண்டும்.
மழை பெய்யாவிட்டால் அதைப் பெய்விப்பாருமில்லை. பெய்தவிடத்து அதைத் தடை செய்வாருமில்லை. அதே போல், ஒருவன் முற் பிறப்பில் செய்த நல்வினை, தீவினையின் வழி இன்பம் வருதலைத் தடை செய்யவும், துன்பம் வருதலைத் தடை ச்ெய்யவும் சான்றோராலும் முடியாது. (நாலடியார் 101, 102, 103, 104)
9 (5 காலத்தில் பனையளவினரான பெருமையுடையோர் சிலர் ஊழ்வினையின் பயனாக நாடோறும் பெருமை குறைந்து, தினையளவினராய்ச் சிறுத்துத் தமது மேன்மையை உள்ளத்தடக்கிக் கொண்டு உயிர் பொறுத்திருக்கின்றனர். முன்னைத் தீவினை எத்தகைய பெரியோரையும் வருத்தி நிற்கும்.
பலவகைப்பட்ட பரந்த நூற் கேள்விகளின் பயனை அறிந்தொழுகுங் கற்றோர் உலகில் விரைவில் இறக்கவும், கல்லாதார் நீடு வாழ்வது எங்ங்ணம் என்று கருதினால், அறிவில்லாதவர்கள் வெறுங் கோது எனக் கருதி அவர்களைக் கூற்றுவன் கழித்து விடுவான். மக்களிற் சிலர் எல்லாரும் காணும்படி வீட்டுக்கு வீடு பிச்சையேற்றுழல்வது அது அவரவர் செய்த பழவினையின் பாற்படும். (நாலடியார் 105, 106, 107)

கா. விசயரத்தினம் 179.
மக்களிற் சிலர் அறிந்து கொண்டும் பழியோடு கூடிய தீச் செயலைச் செய்கின்றனர். அதற்குக் காரணம் அவர்கள் முன் செய்த தீவினையேயாம். மக்கள் எல்லாரும் இன்பந் தரும் நல்லனவையே செய்ய விரும்புவர். துன்பம் தருபவற்றை விரும்ப மாட்டார்கள். ஆனால் அவர்கள் விரும்பினாலென்ன, விரும்பாவிட்டாலென்ன அவர்கள் பால் ஊழ்வினையின் பயனாய் வந்து சேரவேண்டியன சேர்ந்தே தீரும். ஆனபடியால் அறிஞராய் விளங்குவதோடு நல்வினைகளுஞ் செய்து புண்ணியப் பேறுடையராதல் வேண்டும். (நாலடியார் 108, 109, 110)
மெய்யுணர்தல்
மெய்ம்மையாவது வாயப் மையின் தன்மை. உண்மை பேசுபவன் என்றும் உயர்ந்தவன். அவன் நோக்குகள் யாவும் உயர்ந்தவை. உண்மை பேசுபவன் அறநெறியாளன். உண்மை வழியில் நிற்பவனுக்கு என்றும் கெடுதலில்லை. அரிச்சந்திரன் கதை சத்தியத்திற்கோர் எடுத்துக் காட்டு. “பொயப் சொன்ன வாய்க் குப் பொரியுமில்லை’ என்பது பழமொழி. இனி, குறள் கூறும் வாய்மையைக் கவனிப்போம். வாய்மைக்கு இலக்கணம் வரைந்த முனிவர், ‘தீங்கு பயவாத நிகழ்ந்தது கூறலும், நன்மை பயக்கும் நிகழாதது கூறலும் வாய்மை என்று கூறியுள்ளார். (குறள் 291, 292)
பொய் கூறின் ஒருவனுக்கு எந்த நாளும் பழியும் பாவமுமே கிடைக்கும். ஒருவன் தன் நெஞ்சறிவது ஒன்றினைப் பிறர் அறிந்திலர் என்று பொய் சொல்லாமல் இருக்க வேண்டும் . அப்படியில் லாமல் பொய்

Page 104
180 கணினியை விஞ்சும் மனித மூளை
பேசுவானாகில் அதனை அறிந்த தன் நெஞ்சே அவனை வருத்தி நிற்கும். "நெஞ்சை யொழித்தொரு வஞ்சக மில்லை என்பது பழமொழி. ஒருவன் தன்னுள்ளத்திற் கேற்பப் பொய் கூறாது ஒழுகுவானாயின் அவன் அறத்தின் அருமை நோக்கி உலகத்தாரின் உள்ளங்களில் இருப்பான். - (குறள் 293, 294)
ஒருவன் தன் மனத்தொடு பொருந்த வாய்மையைச் சொல்வானாயின் அவன் தவமும் தானமும் ஒருங்கு செய்வாரினும் சிறப்புடையன். ஒருவன் பொய் பேசாது வாழ்ந்தால் அது அவனுக்கு ஒரு புகழ் நிலை. அது அவனை அறியாமலே எல்லா அறமும் கொடுக்கும். (குறள் 295, 296)
புறத்தே தூய்மையாக விளங்குதல் நீராலே உண்டாகும். அது போல் அகத்தே தூய்மையாக விளங்குதல் வாய்மையால் உண்டாகும். இருளை நீக்கும் விளக்குகள் எல்லாம் விளக்கல்ல. சான்றோர்க்கு பொய்யாமையாகிய விளக்கே சிறந்தது (குறள் 298, 299)
இனி, உண்மை நிலையறிய நாலடியார் கூற்றையும் பார்ப்போம். கொடுக்க முடியாத பொருளை இரப்போர்க்கு இல்லையென்று கூறிவிடுதல் உண்மையின் பாற்படும். உதவுவார் போலத் தோன்றி காலம் நீடித்த பின் பொய்த்து விடுதல் தீதாகும். கருப்பங் கட்டி யார் தின்றாலும் கைக்காது; வேப்பங்காய் தேவரே தின்றாலும் கசக்கும். (நாலடியார் 111, 112)
ஒருவன் வசதியோடு கூடியிருக்குங் காலை பலரும் சூழ்ந்து நின்று, வறுமை வந்தக் கால் பிரிந்து போவது

கா. விசயரத்தினம் 181
உலகியற்கை. படியாதவராயினும் செல்வர்களாகவிருந்தால் அவர் வாய்ச் சொல் மதிக்கப்படும் கற்றவரேயாயினும் வறியவராயிருந்தால் அவர் சொல் மதிக்கப்படமாட்டாது. (நாலடியார் 113, 115)
மெய்ஞ்ஞான நூல்களைக் கற்பினும் இயல்பாக அமைந்தொழுகாதவர் என்றும் அமைந்தொழுகமாட்டார். உப்போடு நெய், பால், தயிர் விட்டுச் சமைத்தாலும் பேய்ச் சுரக்காயின் காய்கள் தம் கசப்பு மாறாது.
தம்மைப் புறக்கணிப்பாரைத் தான் முந்தி அவர்களைப் புறக்கணிக்க வேண்டும். அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கக் கூடாது. (நாலடியார் 116, 117)
பசுக்கள் பலவேறுபட்ட நிறத்தினவாயினும் அதன் பால் வெள்ளை நிறமுடையது. அது போல் எவ்வழி நின்றேனும் அறஞ் செய்க. கூற்றுவன் எமது உயிரைக் கொண்டு செல்லும் பொழுது நாம் செய்த நல்வினை, தீவினையே எம்முடன் துணைவரும். ஆனபடியால் எம் உறுதுணைக்காக நாம் நல்வினைகள் செய்ய வேண்டும். - (நாலடியார் 119, 120)
எனவே, மேற்கூறிய உண்மைகளை மனதிற் கொண்டு அறவழி நின்று பேரின்ப வீட்டை அடைய வேண்டும்.
தீவினையச்சம்
ஒருவன் இப் பிறவியிலே நன்மை செய்வானாயின் அவனி மறுபிறவியில இனி பத் தையளிக் குமி தேவருலகையடைந்து இன்பத்தை அனுபவிப்பான். தீமை

Page 105
182 கணினியை விஞ்சும் மனித மூளை
செய்வானாயின் நரகலோகத்தை அடைந்து பாவங்களை அனுபவிப்பான். ஒரு பிறவியிலே செய்யும் தீவினையோ அல்லது நல்வினையோ ஏழு பிறவியிலும் தொடரும். ஒருவன் நோய் வாய்ப்பட்டோ அல்லது வறியராயப் உழன்றோ துன்பப்படுபவனை அவன் முற்பிறவியில் தீவினை செய்தவன் என்று சான்றோர்கள் கூறுவர். தீவினை செய்தவன், எக்காலத்திலும், எத்தேயத்திலும், எப் பிறவியிலும் தான் செய்த வினையை அனுபவிக்கத் தவறமாட்டான். எனவே, தொடர்ந்து தீமையையே தரும் தீவினைக்கு வழி வகுக்கும் பாவங்களைச் செய்ய அஞ்சுதல் தீவினையச்சம் எனப்படும்
தீவினை என்று சொல்லப்படும் பாவச் செயல்களை முன் செய்த தீவினையுடையார் செய்வதற்கு அஞ்ச மாட்டார்கள். ஏனெனில் முன்செய்த வினை அவர்களைத் தூண்டிக் கொண்டேயிருக்கும். முன் தீவினை இல்லாதார் பாவஞ் செய்யப் பயப்படுவர். தனக்கு இன்பம் பயத்தலைக் கருதிச் செய்யும் தீவினைகள் பின் அஃது ஒழித்துத் துன்பமே பயத்தலான் அத் தன்மையவாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும் அஞ்சப்படும்.
தீயானது பொருந்திய இடத்தைத்தான் சுடும். ஆனால் தீவினை, செய்தவன் எவ்விடம் சென்றாலும் எப்பிறவியிலும் தொடர்ந்து சுடுமெனவே தீயிலும் அஞ்சப்படும் என்று கூறுகின்றார்.
தமக் குத் துன்பம் செய்தவர்களிடத்தும் தீவினைகளைச் செய்யாதிருக்கும் அறிவே எல்லா அறிவுகளிலும் மேம்பட்ட அறிவாகும். இதனால்,

கா. விசயரத்தினம் 183
தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்பது அறியக் கிடக்கின்றது. (குறள் 201, 202, 203)
ஒருவன் மறந்தும் மற்றவனுக்குக் கேடு நினைப்பானேயாயின், அவனுக்கே அது கேடாக வந்து முடியும். தான் வறியவன் என்று கருதி அது திருதற் பொருட்டுப் பிறருக்குத் தீவினைகளை ஒருவன் செய்வானாயின் திரும்பவும் அவன் வறியவனாவான்.
தனக்குத் துன்பம் விளைவிக்கும் பாவங்கள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தான் பிறருக்குத் துன்பம் விளைவிக்கக் கூடிய தீமையைச் செய்யாதிருக்க வேண்டும். செய்யின் அப் பாவங்கள் அவனை அடைவது திண்ணம்.
ஒருவன் நிழல் அவனை விடாது அவனடியில் வந்து தங்கி விடுதல் போலப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்தவர் தப்பாது கேட்டை அடைவர். பிறர்க்குத் துன்பம் செய்யாதவர் தாமும் துன்பம் அடையமாட்டார். தீவினை செய்பவன் அதைத் தானும் அனுபவித்தே தீருவான். “வினை விதைத்தவன் வினையறுப்பான்” என்பதை வற்புறுத்திக் கூறுகின்றார் வள்ளுவர். (குறள் 204 - 210) -
தீவினைகள் எவை என நாலடியார் ஆராயுமிடத்து புலாலுண்ணல், கொலை, களவு, கூடாநட்பு எனப் பலதிறப்பட்ட கோணங்களில் ஆராயப் கின்றார். உலகத்திலுள்ள சுடுகாடுகள் வாழ்க்கைத் துன்பங்களிற் கிடந்தழுந்தி அவற்றினின்றும் நீங்குதற்குரிய துறவற நெறியிற் சார் நீ தொழு காத கீழ் மக்களினி பிணங்களையுடையன. ஆனால் புல்லறிவாளர்களின்

Page 106
184 கணினியை விஞ்சும் மனித மூளை
வயிறுகளோ தொகுதியான விலங் குகட்கும் , பறவைகளுக்கும் இடுகாடுகளாயிருக் கினி றன. புலாலுண்ணும் மாந்தரது வயிறு சுடுகாட்டிலும் இழிந்தது.
சுதந்திரமாகப் பறந்து திரியும் பறவைகளைப் பிடித்துக் கொண்டுவந்து கூட்டிலடைத்து வைப்பவர்கள் மறுபிறவியில் விலங்குகளாற் பூட்டப்பட்டு உழல்வர். ஊனுண்ணும் ஆசையினால் நண்டின் கால்களை ஒடித்து உண்பவர்கள் பின்பு விரல்களெல்லாம் அழுகித் துன்பத்திற் கேதுவான தொழுநோய் உண்டாகப் பெறுவர். இன்ன இன்ன துன்பஞ் செய்தவர்கள் இன்ன இன்ன துன்பத்தை அடைவர் என்பதை அழகுறக் காட்டுகின்றார் ஆசிரியர். (நாலடியார். 121, 122, 123)
பெரியோரின் நட்பு பிறை போல வளரும். தீயோரின் நட்புத் திங்களைப் போல் தேய்ந்து போகும். எனவே தீயோரின் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும். எவரோடும் ஆராயாமல் நட்புகொள்ளக் கூடாது. ஆராயாமல் நட்பு கொள்ளுதல், சந்தனம் உள்ளே இருக்கிறதென்று கருதிச் சிமிழைத் திறந்து அதனுள் பாம்பைக் கண்டவன் நிலையை அடைவான். எனவே ஆராயாமல் நட்புகொள்ளுவதற்கு அஞ்ச வேண்டும். (நாலடியார் 124, 125, 126, 127)
/ மனதிலே வஞ்சகத்தை வைத்துக்கொண்டு, வெளியே உறுதியான நேயத்துக்குரிய செய்கைகளைக் கரவினால் நேயஞ் செய்தாரது நட்பு என்றும் மனதில் வேதனை தரும் குற்றமாய் முடியும். "உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாதிருத்தல் வேண்டும்' என்பது சான்றோர் வாக்கு.

கா. விசயரத்தினம் 185
கல்லாத மூடர் சேர்க் கை எப்பொழுதும் ஆபத்தையே விளைவிக்கும். எனவே அதற்கு அஞ்சு வேண்டும். ஒருவன் வாழ்க்கையிலே செய்யும் நல்வினையே அவனுடன் தொடர்ந்து செல்லும். ஆதலால், மனைவி மக்கட்கு நல்வாழ்வு அமையும் பொருட்டு மனம் ஏங்கித் திரிதல் பயனற்றது. எனவே, அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி நல்வழி ஒழுக வேண்டும். (நாலடியார் 128, 129, 130)
இதுகாறும் அறநெறி வாழ்வுக்கு நாலடியார் நவின்ற அத்தனை அதிகாரங்களுக்கும் திருவள்ளுவர் வகுத்த வழியினையும் ஒப்பிட்டு நோக்கினோம். இனி, திருவள்ளுவர் இதில் மேற்கொண்டு கூறும் சில நெறிகளைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.
இறைவனை அடையும் வழி இரண்டு. ஒன்று இல்லற வழி நின்று ஒழுகி மோட்சத்தை அடைதல். மற்றது துறவற வழி நின்று ஒழுகுதலி. துறவற வழியாவது பற்று நீங்கிய நிலை. துறவின் பெருமையைக் கூறப் போந்த வள்ளுவர் துறவறத்தை மேற் கொண்டொழுகுபவரின் மேலேற்றி ஆராய்கின்றார். இதுகாறும் இறந்தவர்களின் எண்ணிக்கையை நாம் அளந்து கணித்துக் கூற முடியாது. அதே போன்று துறந்தார் பெருமையை நாம் அளவிட முடியாது.
இல்வாழ்க்கை
இல்வாழ்க்கையைச் சிறப்பித்துக் கூறாதார் இல்லை. இன்பம் பயக்கும் வாழ்க்கையும் இதுவே. அறஞ் செய்வதற்கு இல்வாழ்க்கை மிகவும் அவசியம். நான், எனது என்று குறுகிய நோக்குடன் வாழ்கின்றவன்,

Page 107
186 கணினியை விஞ்சும் மனித மூளை
இல்வாழ்க்கையில் ஈடுபட்டவுடன் பெருநோக்குடன் வாழத் தொடங்குகிறான். தனியனாய்த் தன்னில் ஆசை வைத்திருந்தவன், மனைவி, பிள்ளை, சுற்றத்தார், அயலவர் ஆகியோருடன் அன்பு காட்ட்த் தொடங்குகின்றான். இவ்வன்பின் நிமித்தம் இவர்களுக்கு உதவியும் செய்ய முன்வருகின்றான். இம்மட்டில் நில்லாது, அறன்வழிச் செயல்களில் ஈடுபட்டுச் சமுதாயப் பிணைப்பும் ஏற்படுகினி றது. இச் சமுதாயப் பிணைப்பை உண்டாக்குவதில் திருவள்ளுவர் வெற்றியும் கண்டுள்ளார். இல்லறத்தோடு கூடி வாழ்பவன், பிரமச்சாரிய ஒழுக்கத்தினைக் கடைப் பிடிப்பவனுக்கும், தவஞ் செய்பவனுக்கும், யோகிகளுக்கும் உற்ற துணையாய் இருக்கின்றான். (குறள் 41, 42, 45, 46, 49, 50)
அன்பில்லாத வாழ்க்கை அற வாழ்க்கையாகாது. அன்புதான் அறஞ் செய்வதற்குத் திறவுகோலாக அமைகின்றது. இல்லறம் இனிது நடத்தலும் பிற உயிர்கள் மேல் அருள் பிறத்தலும் அன்பின் வழியாதலின் இல் வாழ்வானுக்கு அன்பு முக்கியமானது என்பது வெள்ளிடமலை. (குறள் 71, 72, 74, 77, 78, 80)
அன்புடையராய் அறத்தோடு கூடி வாழ்பவனுக்கு விருந்தோம்பல் மிகவும் அவசியம். (குறள் 82, 84, 86, 90)
இல் லறத்திற்கு அணி புடைமை போல துறவறத்திற்குச் சிறந்தது அருளுடைமை. எல்லாச் செல்வங்களிலும் மேலான செல்வம் அருட்செல்வம். பொருட்செல்வம் எல்லாரிடத்தும் உண்டு. ஆனால், அருட்

岛有。 விசயரத்தினம் 187
செல்வம் அறிவுடையோர்பால் காணப்படும். (குறள் 241, 243, 244, 247, 250)
புலால் மறுத்தல்
அறநெறி வாழ்வில் நின்று ஒழுகுபவன் பஞ்சமா பாதகங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றின் தலையாயதான புலால் உண்ணலைப் பற்றிச் சிறிது ஆராய்வோம். புலால் உண்ணல் கொலைப் பாவத்திற்கு ஏதுவாகவிருத்தலின், புலால் மறுத்தலின் முக்கியத்துவம் ஈண்டு சிந்திக்கற்பாலது. தன் உடம்பைப் பெருக்குதற்குத் தான் பிறிதோருயிரின் உடம் பைத் தின் பவன் அருளுடையவனாக மாட்டான். ஊன் தின்பவர்களுக்கு அவ்வுலகமில்லை. ஊன் உண்பவன் அப் பாவத்தால் நெடுங் காலம் நரகத்துள் அழுந்துவான். ஒருயிரையும் கொல்லாமலும், கொன்றதைத் தின்னாமலும் இருப்பவனை உலகத்திலுள்ள எல்லா உயிரும் தொழும். (குறள் 251, 252, 255, 256, 260)
கூடாவொழுக்கம் இழிவைத் தரும். இதுவும் அறநெறி வாழ்வுக்கு ஒவ்வாதது. வஞ்சம் பொருந்திய மனத்தையுடையவனது மறைந்த ஒழுக்கத்தை, உடம்பால் அவனோடு கலந்து நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். மனத்தைத் தன் வழிப்படுத்தும் வலிமையில்லாதவன் புலித்தோல் போர்த்த பசுவை ஒப்பான்.
வலிமையில்லாதவன் தவ வேடத்தினுள்ளே மறைந்து நின்று கூடா ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பது, வேட்டுவன் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாகும். (குறள் 273, 274, 278, 280)

Page 108
188 கணினியை விஞ்சும் மனித மூளை
கள்ளாமை
களவெடுத்தல் பஞ்சமா பாதகங்களுள் ஒன்று. களவெடுப்பவனுக்கு வீட்டின்பம் கிடையாது. நரகத்தினுள் கொண்டு போய் விட்டு விடும். வீட்டின்பப் பேற்றினை அடைய விரும்புபவன் யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ளக் கருதாமல் தன் நெஞ்சினைக் காக்க வேண்டும்.
பிறர் பொருளை வஞ்சித்தல் களவு. ஆனால் பிறர் பொருளை வஞ்சிக்க மனதால் நினைத்தாலும், செய்யாவிட்டாலும், செய்தவனின் பாவச் செயலுக்கு ஒப்பாவான். ஆனபடியால் பிறர் பொருளை வஞ்சித்துக் கொள்ளவும் நினைக்கக் கூடாது. களவினால் உளதாகிய பொருள் வளர்வது போலத் தோன்றித் தீவினையின் வழியாய் அழிந்து விடும்.
பிறர் பொருளைக் கவர்வதில் இன்பமடையும் ஒருவனுக்கு அப்பொழுது இன்பத்தைக் கொடுத்தாலும், அது பயன் கொடுக்கும் பொழுது தொலையாத துன்பத்தைக் கொடுத்து நிற்கும். களவின்கண் மிக்க வேட்கையுடையவர்கள் அறநெறி நின்று ஒழுக மாட்டார்கள். (குறள் 281 - 284, 287)
கொல்லாமை
அறங்களெல்லாவற்றிலும் தலையாய அறம் கொல்லாமையாகும். அவற்றைக் கொல்லுதல் பாவச் செயலாகும். மேல் வீடு பேறுகட்கு நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாதெனில் ஓர் உயிரையும் கொல்லாமை

கா. விசயரத்தினம் 189
ஆகிய அறத்தினைக் காக் கும் நெறியாகும் . கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது வாழ்நாளின் மேல், உயிர் உண்ணும் கூற்றுவன் கூடச் செல்ல மாட்டான்.
ஒருவன் தன் உயிர் நீக்க வேண்டி வந்தாலும் பிறிது உயிரைப் போக்கும் தொழிலைச் செய்யக் கூடாது. இப்பிறவியில் துன்பப்படுபவர்கள் முற்பிறவியில் கொலை செய்தவர்கள் என்று அறிவுடையோர் கூறுவர். கொல்லாமையின் சிறப்பு இவற்றால் விளங்குகின்றது. (குறள் 321, 323, 326, 327, 330)
(Լքլգ6N6ՓՄ
இதுகாறும் நாலும் இரணி டும் நவின்ற உண்மைகளை மேலே எடுத்துக் காட்டினோம். இனி, அவற்றின் உட்கருத்தினை ஈண்டுச் சுருங்க விளக்கி, அவை எவ்வாறு அறநெறி வாழ்வுக்கு உறு துணையாயமைந்துள்ளன என்று பார்ப்போம்.
செல்வமும், இளமையும், யாக்கையும் என்றும் நிலையாதென்பதை வலியுறுத்திக் காட்டப்பட்டுள்ளது. நம்மில் அனேகர் நிலையில்லாதனவற்றை நிலையுள்ள தென்று நினைத்து அவதியுறுவதை நாம் இன்றும் காணி கின்றோம் . நிலை தடுமாறுபவர்களுக்கு “நிலையாமை' என்ற அதிகாரம் ஒரு சிறந்த படிப்பனையாய் அமைந்துள்ளது.
அறன்- இம்மை, மறுமை, வீடு என்னும் மூன்றையும் பயக்குமென்று காட்டப்பட்டமையான், இதனை முன்னின்று

Page 109
190 கணினியை விஞ்சும் மனித மூளை
மக்கள் செய்ய வேண்டு மென்பது ஆசிரியர் நோக்காகும். மக்கள் தமக்கு மறுமைக்கு வித்தாகிய அறனைவிட்டு அழுக்கு நிரம்பிய உடம்பைப் பூசுவதிலும், புனைவதிலும் வீணே காலத்தைப் போக்குகின்றனர்.
அவர்களுக்குத் தூய் தன்மை ஒரு சிறந்த பாடமாக அமைகின்றது.பிறவிக்கேதுவாகிய பற்றைத் துறந்து பற்றற்ற துறவி வாழ்க்கையை மேற்கொண்டு அறநெறி வழி ஒழுகுவதற்கு துறவு என்னும் அதிகாரத்தில் சிறப்புறக் ding DLLILL-35.
எல்லா அழிவுக்கும் கோபம் வித்தாக அமைவதால் அதை நீக்கி வாழ வேண்டுமென்றும், அதுவே அறநெறியின் சிறந்த பயனென்றும், ‘வெகுளாமை' என்னும் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. பொறுமை என்றும் இன்பம் பயத்தலால் பொறுமையை மக்கள் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்தப்படுகின்றது.
பிறன்மனை நயத்தலால் சமூகத்தில் அழிவும் சீர்கேடும் ஒற்றுமையின்மையும் நிலவுமென்பதை முன்னமே ஞான நோக்கினாலுணர்ந்து, அதனின்றும் நீங்குதல் வேண்டுமென்று எடுத்துக் காட்டப் பட்டிருக்கின்றது. “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்பதற்கிணங்கச் செல்வம் வந்த காலை அதை வறியவர்களுக்கு அளித்து, மறுமைக்கு நல்ல பயனைத் தேட வேண்டும் எனக் கூறப்பட்டமையால் வறியவர்கள் அனைவருக்கும் நல்வாழ்வு அளிக்கும் பெருநோக்குடன் ‘ஈகை' என்னும் அதிகாரம் வகுக்கப்பட்டிருக்கின்றது.
பிறவியில் முற்பிறப்பு, இப்பிறப்பு, மறுபிறப்பு என மூன்றாக வகுத்து அறனாய ஊழை அதைப் பிணைக்கும்

கா. விசயரத்தினம் 191
சங்கிலியாக்கி, இப் பிணைப்பை நீக்கும் திறவுகோலாக அறநெறியைச் சிறப்பித்துக் காட்டியுள்ளார்கள்.
நாம் பேசும்பொழுது இரு வகையான பேச்சுகளைப் பேசலாம். ஒன்று உண்மைப் பேச்சு, மற்றது பொய்ப் பேச்சு, இதில் உண்மை பேசுவதால் உண்டாகும் நன்மைகளை ‘மெய்ம்மை' என்ற அதிகாரத்தில் எடுத்துக் காட்டி, அதுவே அறநெறிக்கு உகந்ததென்றும் கூறப்பட்டுள்ளது.
‘தீவினையச்சம்’ என்ற அதிகாரத்தில், பாவச் செயல்களைச் செய்தால் அவ்வினை ஏழு பிறவிக்கும் தொடருமென்றும், என்றும் இன்பம் பயக்காது துன்பமே பயக்குமென்றும், நல்வினையே செய்து நன்மையடைந்து அறப் பாதையில் நின்று ஒழுக வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.
இல்வாழ்க்கை இல்லாவிடின் உலகம் காலகதியில் அழிந்து விடும். இல்வாழ்க்கை தான் அன்பின் வாழ்க்கை, அன்பு வாழ்க்கை, பிணைப்பு வாழ்க்கை, அறவாழ்க்கை. இல்வாழ்வால் தானும் வாழ்ந்து, மற்றவர்களையும் வாழச் செய்து சிறப்பித்திருக்கலாம் என்பது பொய்யாமொழியார் கூற்று. நாலடியார் கூறத் தவறிய இல்வாழ்க்கையைத் திருவள்ளுவர் தயங்காது எடுத்துக் கூறிய தீரச் செயலை நாம் மெச்சத்தான் வேண்டும்.
அறநெறி வாழ்க்கைக்கு எவ்விதத்திலும், புலால் உண்ணுதலும், களவெடுப்பதும், கொலை செய்வதும், பிறன் மனை நாடலும் உறுதுணையாகாதென்பதை மிகவும் தெட்டத் தெளிவாகக் குறள் எடுத்துக் காட்டியுள்ளது.

Page 110
192 கணினியை விஞ்சும் மனித மூளை
ஒரு சமுதாயமோ, நாடோ அல்லது உலகமோ, சீரும் சிறப்புமுற வேண்டுமெனின், ஆங்குள்ள ஒவ்வொரு மனிதனும் சீர் பெற வேண்டும், சிறப்புற வேண்டும். இதற்குப் பலதரப்பட்ட சமுதாயங்களில் வெவ்வேறாகிய சமய வழிபாடு, கட்டுப்பாடுகளை ஆன்றோரும், சான்றோரும், அறிஞர்களும் ஆக்கித் தந்துள்ளனர்.
எல்லாச் சமயங்களிலும் நிரம்ப நல்லற நெறிகள் பொதிந்திருக்கின்றன. எந்த ஒரு நாட்டில் சமயக் கோட்பாடுகளுக்கமைய மக்கள் வாழ்கின்றார்களோ அந்த நாடு சுபீட்சம் பெற்று உன்னத நிலையில் இருப்பதை நாம் காணக் கூடியதாகவிருக்கின்றது. இதை அறிந்தே நல்நெறியாளரும், ஆன்றோரும் சமயங்களை வகுத்து மக்களின் நல்வாழ்வுக்கு உறுதுணையாய் இருக்கின்றனர்.
அறநெறிகள் கூறும் நூல்கள் எவ்வளவோ இருக்கின்றன. இவற்றை மக்கள் முன் வந்து படிக்க வேண்டும். யாவரும் அறநூல்களைப் படிக்காமலும் இல்லை. இவற்றைப் படித்த ஒரு சிலரும் படித்ததற்கமைய நடந்து பயன் பெறுவதில்லை. ஏதோ ஒரு சில தற்காலிக இன்பத்துக்காக அறநெறியை உதாசீனஞ் செய்து மாறாத் துயரத்துக்குள் ஆழ்கின்றனர். இவ்வறிவிலித்தனம் எப்பொழுது மாறுமோ தெரியாது.
நாலும் இரண்டும் சீரும் சிறப்பும் இணைந்த வாழ்வுக்கு வேண்டிய அத்தனை அறநெறிகளையும் கூறுகின்றன. இருந்தும் மக்கள் இதன்படி ஒழுகுவதில்லை. இப்படியான அறநெறிகள் இருந்தும் உலகில் பஞ்சமா பாதகங்கள் அத்தனையும் நடந்துகொண்டுதான்

கா. விசயரத்தினம் 193
இருக்கின்றன. இன்று இவற்றை நாம் பத்திரிகை மூலமாகவும், கேட்டும், பார்த்தும் அறிகின்றோம்.
அறவழிக்கு மாறான பஞ்சமா பாதகங்கள் அத்தனையும் மனித வாழ்க்கையில் இடம் பெற்று, அவன் சீரிய வாழ்வைச் சிதைக்கக் கூடாதென்பதில் கண்ணுங் கருத்துமாயிருந்து நாலும், இரண்டின் ஆசிரியர்கள் அறநெறிகளை வகுத்தளித்தார்களென்று நினைக்கும் போது அவர்களின் பெரு நோக்காய சீரிய பண்பட்ட தமக்கென வாழாப் பிறர்க்குரியதாய உள்ளங்களை ஏத்திப் புகழாதிருக்க முடியாது.
நாலும் இரணிடும் கூறும் அறநெறிகள் வாழ்க்கையின் உச்ச நிலைக்கு மக்களை ஆற்றுப் படுத்துவதாக அமைந்திருப்பது நம் கண்கூடாகலின் இவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து அவற்றால் வரும் இன்பமனுபவித்து மக்களுள் மாணிக்கமாகத் திகழ்வோமாக.
宽

Page 111
194 கணினியை விஞ்சும் மனித மூளை
பால் நீர் உறவு
ஆவின் பாலும் இயற்கை நீரும் அன்றிலிருந்து இன்றும் இணைபிரியா நண்பர்களாய், நெருங்கிய உறவினர்களாய், ஆசைமிகு அன்புச் சகோதரராய் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த சீரிய வாழ்வைக் கண்டவர்கள். மனிதனுக்கு ஊட்டச் சத்தைக் கொடுத்து அவன் வாழ்வை மேம்படுத்துவதே அவர்கள் மேலாய நோக்கு. கோயிற் பூசைகளிலும் முன்னிடம் இவர்களுக்கே. இவர்களின்றிப் பூசை நடப்பதில்லை. தமக்கென வாழாப் பிறர்க்கென வாழ்பவர்கள்.
அவள், இவற்றை நன்கறியாப் பேதைப் பெண். ஆனால், அவளோ ஒர் ஆரணங்கு. காதல் அவள் கடைக்கண் கதவைத் தட்டியது. காதல் கொண்டாள். கட்டிளங் காளை ஒருவனைக் கண்டாள்; கட்டுண்டாள்; படர் கொடியானாள்; அவன் கரம் பற்றினாள். திருமணம் முடிந்தது.
தலைவனைக் களிப்படையச் செய்வதுதான் அவள் புரியும் விந்தை. பல்சுவை உணவுகள் தயாரிப்பாள்; பரிமாறுவாள். அன்று தன் கைப்பட பசும்பாலை முறுகக் காய்ச்சி தலைவனுக்குக் கொடுக்கவிரும்பினாள். நெருப்பை

கா. விசயரத்தினம் 195
வளர்த்துப் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துக் காய்ச்சினாள். குய்ப் புகை கணிணில் புகுந்ததையும் அவள் பொருட் படுத் தவில் லை. பாலைக் காயப் சி சிக் கொண்டேயிருந்தாள். சூடு ஏற ஏற பாலிலுள்ள நீர் ஆவியாக மாறிப் பாலிலிருந்து பிரிந்து மேலே போய்க் கொண்டிருந்தது. தனது நண்பனாய் ஒன்றாயிருந்த நீர் தன்னை விட்டுப் பிரிந்து போய்க் கொண்டிருக்கிறானே என்று மிகவும் கவலையடைந்தது பால். ஆனால், அப் பெண்ணோ பால் முறுகக் காய்ச்சுப் படவில்லையேயென்று மீண்டும் மீண்டும் சுவாலையாக நெருப்பை எரித்தாள். நீர் மேலும் மேலும் ஆவியாகப் பிரிந்து சென்று கொண்டிருந்தது. ‘என் நண்பனான நீர் இல்லாமல் இனி எனக்கென்ன வாழ்வு? என்று பால் நினைத்து ஒரு முடிவுக்கு வந்தது.
‘நண்பன் என்னை விட்டுப் பிரிகின்றான். அவனின்றி என்னால் வாழ முடியாது. ஏன் வாழ்வான்? யாருக்காக வாழவேண்டும்? என்னை இக் கதிக்காக்கிய இப் பெண்ணுக்கும் இனி நான் உதவப் போவதில்லை. என் உயிர் மாய்ப்பேன். இஃது உறுதி என்று கூறிக்கொண்டு நெருப்பில் பாயப் பொங்கி எழுந்தது பால்.
இதைக் கண்ணுற்ற அப் பெண் பால் அவமாகப் போய் விடுமே என்றெண்ணி கொஞ்ச நீரை எடுத்துப் பொங்கியெழுந்த பாலில் ஊற்றினாள். பொங்கியெழுந்த பால் சிரித்த வண்ணம் அமைதி கொண்டு அடங்கி விட்டது. தன் நண்பனான நீர் மீண்டும் வந்துவிட்டானே என்று சந்தோசப்பட்டது பால். பாலும் நீரும் மீண்டும் உறவாகி விட்டனர். பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமோ?

Page 112
196 கணினியை விஞ்சும் மனித மூளை
தலைவனுக்குப் பாலைக் கொடுத்து நல்லதொரு சான்றிதழைப் பெற்றுக் கொண்டாள் தலைவி. நடந்தேறிய நிகழ்வுகள் யாவும் தலைவியின் கணினியில் ஒட, பால் நீர் உறவின் முழு அர்த்தத்தையும் அவள் நன்கு புரிந்து கொண்டாள்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 14-07-2002)
(லண்டன் வடலியில் பெப்ரவரி மாதம், 2003)
宽

கா. விசயரத்தினம் 197
அழகின் அந்தம்
அது ஓர் அழகான குளம். சுத்தமான நீர். அதில் தாமரை இலை, தண்டு, பூக்கள், காய்கள் ஆகியன நிறைந்திருந்தன. அக் குளத்தில் பலவகை மீன்கள் நீந்திக் குளித்துக் குடி கொண்டிருந்தன. அங்கு ஆண்களும், பெண்களும் குளித்து நீராடி மகிழ வருவர். குளத்துக்கு அருகில் ஓர் அழகிய முருகன் ஆலயம். அவ்வாலயத்தில் நேரம் தப்பாது நித்திய பூசைகள் நடைபெறும். குளத்தில் நீராடிய மக்கள் முருகனைத் தரிசித்துப் போவர்.
அது ஒரு வயோதிபத் தவளை. தள்ளாத வயது. அக் குளங்கரையைத் தவிர வேறொன்றும் அதற்குத் தெரியாது. பிறந்து, வளர்ந்து, சீவித்துக் கொண்டிருப்பதுவும் அங்குதான். இத் தவளைக்கு அங்குள்ள மீன்கள், நீராட வருவோர், குளநீர் குடிக்க வரும் ஆடு, மாடு, கன்றுக் குட்டிகள் போன்ற நண்பர்கள் அதிகம். ஒருவருக்கும் தீங்கு செய்யாத, நினைக்காத தவளை அது. மழை பெய்யப் போவதை முன் கூட்டியே கத்திக் கத்தி அறிவித்து விடும்.
இன்னும், இத் தவளை ஒரு முருக பக்தன். கோயில் மணி ஒலித்ததும் குளத்தில் பாய்ந்து குளித்து விட்டு முருகனைத் தரிசிக்கும். கோயிலை வலம் வந்து

Page 113
198 கணினியை விஞ்சும் மனித மூளை
தரிசிக்காவிட்டாலும், மனத்தால் எல்லாம் செய்து விட்டு நிற்கும் அத் தவளை.
அக் குளத்து மற்றைய தவளைகளுக்கு இத் தவளை தான் தலைவன். தலைவனிடம் புத்திமதி கேட்கவும், ஆலோசனை பெறவும் மற்றைய தவளைகள் வந்து போவார்கள். செவ்வாய், வெள்ளி ஆகிய புனித நாட்களில் தலைவன் நடாத்தும் பிரார்த்தனைக் கூட்டங்களிலும், சமய நற்சிந்தனை உரைகளிலும், அக்கம் பக்கத்திலுள்ள தவளைகள் பங்கு பற்றித் தம்மை ஆன்மீகத் துறையில் மேம்படுத்தின.
குளம் முழுவதும் தம் ஆதிக்கம் என இறுமாப்புற்ற மீன் கூட்டமொன்று வயோதிபத் தவளையை அண்டிப் பரிகாசம் பண்ணத் தொடங்கின. தவளை ஒன்றும் பேசவில்லை. மீன் கூட்டத்தில் மிடுக்கான அழகிய ஒரு நீண்ட பெரிய மீன் கதையை ஆரம்பித்தது.
மீன்; என்ன தவளையாரே! ஏன் மெளனம்?
தவளை: ஒன்றுமில்லை. இன்று வெள்ளிக்கிழமை. கதையைக் குறைத்துக் கொண்டேன். ஓம் முருகா; ஓம் முருகா என்று அவன் நாமம் கூறிக் கொண்டிருந்தேன்.
மீன்: ஆகா, என்ன பக்தி முருகனையும் விஞ்சி விடுவீர் போல் தெரிகிறதே. பெரிய தலைவன் என்ற எண்ணமோ? யாரை நீர் ஏமாற்றுகிறீர்? வயது ஏறி விட்டது. சாமி வேடம் போடுகிறீரா?

கா. விசயரத்தினம் 199
தவளை: நீஒரு சிறு பயல். இதுகளெல்லாம் உனக்கு
Lősi:
தவளை:
மீன்:
எங்கே புரியப் போகிறது? இள இரத்தம். இப்படித் தான் கதைப்பாய். சரி நீ சென்று வா. நான் ஆத்ம சிந்தனையில் இறங்க வேண்டும்.
என்ன பெரிய ஆத்ம சிந்தனை உனக்கு ? பார் என்னை. நான் உன் மாதிரியா இருக்கிறேன் ? எவ்வளவு சந்தோசமாக இருக்கிறேன் பார். அனுபவிக்கவல்லவா நாம் பிறந்தோம். உன்னிடம் அழகும் இல்லை. அவலட்சணம் தான் மலிந்து கிடக்கிறது உன்னிடம். உன் வண்டியென்ன.? தொந்தியென்ன? நிறமென்ன? உருவென்ன? பார்க்க அருவருப்பாய் இருக்கிறது. இன்னும் LJTJ.
ஏய் அற்பப் பதரே. உன் நோக்கம் எனக்குப் புரிந்து விட்டது. நீ அழகென்ற கர்வம் உனக்கு. அழகு இன்றிருக்கும், நாளை மங்கி விடும். அது நிலையற்றது. உன் போன்ற அழகிய எத்தனையோ மீன்களை என் வாழ் நாளில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஒரு மீனாவது இன்று உயிருடன் இல்லை. கர்வம் கொள்ளாதே. அமைதியாக உன் வீட்டுக்குச் சென்று உன் உயிரைக் காப்பாற்றிக் கொள். என் புத்திமதியைக் கேட்டு நடந்து கொணி டா லி உனக்கு நன்மையுண்டு. சென்று வா.
எனக்கு ஒன்றும் நடவாது. எங்களைப் புகழ்ந்து பாடாத புலவர்கள் இல்லை. பார் என் மேனியை.

Page 114
200 கணினியை விஞ்சும் மனித மூளை
பொன் போல் மின்னுகிறது. என் கண்ணைப் பார். அதன் அழகைப் பார். என்று சொல்லிக் கொண்டு நீரில் துள்ளிக் குதித்து நீந்தித் தன் அழகை மேலும் விபரித்துக் காட்டிக் கொண்டிருந்தது. இச் சம்பாசனை முழுவதையும் அருகிலிருந்து ஒடு மீன் ஓடி, உறு மீன் வருமளவும் வாடி இருந்த கொக்கொன்று ‘லபக்’ என்று அந்த மீனைக் கொத்தி விழுங்கிக் கொண்டது.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த தவளை தன் இரு கண்களையும் இறுக மூடிக் கொண்டது.
இருந்தும் அந்த மீனின் அழகின் அந்தம் தவளைக்குத் தெரிந்து விட்டது.
(வீரகேசரி வார வெளியீட்டில் 07-07-2002)
宽

கா. விசயரத்தினம் 201
அரசாள வயதெல்லை உண்டா?
ஆட்சிகளில் இரு வகைகள் உள. ஒன்று குடியாட்சி; மற்றது முடியாட்சி. குடியாட்சி என்பது மக்கள் தம்மைத் தாமே ஆளுவது; மக்களாட்சி, முடியாட்சி என்பது மன்னன் முடி சூடி மக்களை ஆளுவது. இது ஒரு பரம்பரைச் சொத்து. முடியுரிமை திணிக்கப்படுவது.
குடியாட்சியில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தனி நபரோ அல்லது ஒரு குழுவோ அன்றேல் ஒரு கட்சியோ பதவியேற்று குறிப்பிட்ட கால எல்லை வரை நாட்டையும் மக்களையும் அரசாட்சி புரிய ஆணை பெறுவர். இவர்கள் குறிப்பிட்ட வயதெல்லையைத் தாண்ட வேண்டும். மக்கள் அன்பையும் பெற்றிருக்க வேண்டும். சுமாரான அறிவாற்றலாவது பெற்றிருக்க வேண்டும். குணம், நடை, பண்பு, பொருள் போன்றனவும் நிறைந்திருக்க வேண்டும். அன்றேல் மக்களால் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட மாட்டார்கள்.
முடியாட்சி மன்னர் ஆட்சி. தகப்பன், மகன் என்று காய் உருண்டு கொண்டேயிருக்கும். இங்கு மூத்தோனுக்கே முடியுரிமை. இது ஒரு மரபு வழி.

Page 115
202 கணினியை விஞ்சும் மனித மூளை
சேர, சோழ, பாண்டியர் முக்கொடி நாட்டி மூவேந்தர்களாய் அரசாண்டனர். அவர்கள் மிக்க ஆற்றல் படைத்தவர்கள். அண்டை நாட்டுடன் போர் தொடுத்து நொடிக்குள் வெற்றி வாகை சூடினர். வேந்தர் ஆட்சி முடிவுற்று ஒரு சில மன்னர் ஆட்சி தான் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. மற்றவை யாவும் மக்களாட்சியாய் மாறிவிட்டன.
முடி சூடிக் கொள்ளும் அரசனுக்கு இன்ன வயதென்று வரையறை இருக்கிறதா? இல்லை என்ற பதிலே பொருத்தம்.
சங்க காலக் கரிகாற் சோழன் ஐந்து வயதில் முடி சூடினான் என்று பின்வரும் பாவால் அறியக் கிடக்கின்றது.
“அஞ்சின் முடிகவித் தைம்பதாம் ஆண்டளவில் கஞ்சிக் காவேரி கரை கண்டு.”
- (பெருந்தொகை)
இன்னும், பல்லவ மல்லன் பன்னிரண்டு வயதில் முடி சூடினான். இரண்டாம் இராசாதிராசன் இரண்டு வயதில் அரச பீடம் ஏறினான்.
மேலும், பொருநராற்றுப்படையில் சோழ மன்னனாகிய கரிகால் வளவனைப் பாட்டுடைத் தலைவனாக முடத்தாமக்கண்ணியார் பாடியுள்ளார். இதில் கரிகால் வளவன் தாயின் வயிற்றில் கருவாயிருந்தபோதே அரசாளும் உரிமையைப் பெற்றிருந்தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

கா. விசயரத்தினம் 203
“தாய் வயிற்றிருந்து தாயம் எய்தி."
(பொருந. 132)
இவை நமக்கு வரலாறளிக்கும் செய்திகள். இச் சிறு வயதினர் அரச பீடமேறிச் செங்கோலோச்ச முடிந்ததா? என்றொரு கேள்வியும் எழும் இந்நாளில். அந்நாளில் இக் கேள்வி எழவே எழாது. எழுந்தால் அவர் தலை தரையில் உருளும்.
ஆனால் இவர் களர் (p. 60) D தவறாச் செங்கோலோச்சினர். எப்படி? சிறு பிராய மன்னனைச் சூழ்ந்திருக்கும் ஒரு பழுத்த குழு- விவேக மந்திரி, அற நெறி உரைக்கும் துறவி, கடிந்துரைத்துக் கவி பாடும் புலவன், நாட்டு நடப்பறிந்துரைக்கும் நெறியாளர், தோல்வியறியாத் தானைத் தளபதி, படை, கொடி, குடை, முரசு, தானை, யானை, குதிரை, தேர் இன்னும் பற்பல. அன்று ஆட்சியாளர் சிந்தனை மேம்படச் செங்கோல் சிறப்புற்றது.
宽

Page 116
204 கணினியை விஞ்சும் மனித மூளை
மெழுகுத்திரியை அணைத்து பிறந்தநாள் விழாவா?
பிறப்பு என்பது ஒரு புத்துடலுடன் கூடிய ஒரு புத்துயிர்த் தோற்றம். உயிரினங்கள் அனைத்துக்கும் பிறப்பு ஒரு பொன் நாள். அதிலும் மனிதப் பிறப்புக்கு நிகர் வேறொன்றில்லை. “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்’ என்பது திருமூலர் திருமந்திரம். ‘பிறப்பது இறப்பதும், இறப்பது பிறப்பதும் ஓர் உலக நியதி. இருந்தும் பிறந்து விட்டோம், இறப்பு வரட்டும் என்று நாம் வாளா இருக்க முடியாது. பிறப்புக்கும் இறப்புக்குமிடைப்பட்ட காலப் பகுதியில் அமையும் வாழ்க்கை என்றொரு சங்கிலிப் பிணைப்பு நம்மைச் சுற்றிக் கொள்ளும். பின் என்ன? வாழ்ந்து தானே ஆகவேண்டும்.
நாம் பூமித் தாயிற் பிறந்து, உருண்டு, தவழ்ந்து, நடந்து, ஒடி, ஆடி, விளையாட அவள் தன்னைத் தானே மெத்தையாக்கித் தந்த ஒவ்வொரு ஆண்டினையும் நினைவு படுத்தி மாந்தர் அனைவரும் தம் பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
தம் அன்புக்கும் ஆசைக்குமுரிய குழந்தைகளின் பிறந்த நாட் கொண்டாட்டங்களை வெகு விமரிசையாக

கா. விசயரத்தினம் 205
நடாத்தி இன்புற்று மகிழ்வர். அன்றைய தினம் குழந்தைச் செல்வங்களைக் கோவிலுக்குக் கூட்டிச் சென்று கடவுளை வழிபட்டு, அரிச்சனை செய்து, கடவுள் ஆசி பெற்று வருவர். வீட்டில் தம் இனத்தவர், சுற்றத்தார் ஆகியோருடன் சேர்ந்து அந்நாளைக் கொண்டாடி வீடியோ படமுமெடுத்து மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்வர்.
புலம் பெயர்ந்து வாழ்பவர்கள் இத் தினத்தைப் பெரிய மண்டபத்தை வாடைக்கு எடுத்து, பெரும் விழாவாக, மிகச் செலவில், சிற்றுண்டி, இராப் போசனம், மது பானம், கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய பின் குத்துவிளக்கில் கணக்குப் பார்த்து இராப் பகலாக வேலை செய்து கவலைப்படுவர். இக் கொண்டாட்டத்தில் வயதுக்கேற்றபடி மெழுகுத் திரிகள் கொளுத்தி, அவற்றை அனைத்து, கேக் வெட்டி, அனைவருக்கும் கொடுத்து, உண்டு மகிழ்வர். மெழுகுத் திரி, கேக் இல்லாமல் பிறந்த தினக் கொண்டாட்டம் நடவாது.
எரியும் மெழுகுத் திரியை அணைத்து விட்டு, அதாவது ஒளி இல்லாது பிறந்த நாளைக் கொண்டாடுவது தவறான செயலாகும். இருளை எவரும் விரும்பார். ஒளியை உயிரினங்கள் யாவும் விரும்பி நிற்கின்றன.
எனவே, தமிழராகிய நாம் பிறந்த நாட் கொண்டாட்டத்தில் மெழுகுத் திரியைக் கொளுத்தி அணைப்பதற்குப் பதிலாக, தமிழர் பண்பாட்டிற்குரிய அகல் விளக்கேற்றி அதை அணையாது கொண்டாட்ட நிகழ்வுகளை நடாத்துவது சாலச் சிறந்ததாகும்.

Page 117
206 கணினியை விஞ்சும் மனித மூளை
இன்னும் அலங்காரக் கேக் வெட்டி இத் தினத்தைக் கொண்டாடுவதும் முறையாகாது. எனவே கேக்கிற்குப் பதிலாக, தமிழர் பண்பாட்டிற்கேற்ற மாப் பண்டங்களில் ஒன்றைச் செய்து வைத்து அதனை வெட்டித் துண்டுகளை வருகை தருவோருக் குக் கொடுத் து இக் கொண்டாட்டத்தினைச் சிறப்பிப்பது ஒரு சீரிய முறையாகும்.
மெழுகுத் திரி கொளுத்துவதும், கேக் வெட்டுவதும் ஓர் இரவல் முறை. நாம் இனியும் வான் கோழியாக இருந்துவிடக் கூடாது. நமக்குப் பின்னும், முன்னும் நிறைந்த கலை, கலாசாரம், பண்பாடு உள்ளதென்பதை உணர்ந்தாற் போதுமானது.
புலம் பெயர்ந்து பல நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, பிறந்த நாட்கொண்டாட்டம், அன்ன தானம், அரங்கேற்றம், விழாக்கள், ஆடம்பர வாழ்வு, உல்லாசப் பயணம், போன்றவற்றில் மிகக் கூடிய செலவு செய்து மகிழ்ச்சியுறுகின்றனர். இவர்கள், இவற்றைச் சிறுகச் செய்து இதில் மிஞ்சி வரும் பணத்தை “சுனாமி" ஆழிப் பேரலையால் ஏற்பட்ட கொடுரத் தாக்குதலில் தப்பி எஞ்சியுள்ள நலிந்த நம் உறவுகளுக்குக் கொடுத்துதவி அவர்களை ஆற்றுப்படுத்துவது இக் கால கட்டத்தின் நம் தலையாய கடமையாகும்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 24-04-05) (லண்டன் வடலியில் மார்த்து மாதம், 2005)
宽

கா. விசயரத்தினம் 2O7
தண்டனை வழங்குவது சட்டமா? மனச்சாட்சியா? கடவுளா?
“பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் ஐயர் யாத்தனர் கரணம் என்ப." - (143)
என்பது தொல்காப்பியர் சூத்திரக் கூற்று. பொய்யும் வழுவும் தோன்றாக் காலமொன்று தொல்காப்பியருக்கு முன் இருந்துள்ளமையை இச் சூத்திரம் எடுத்துக் காட்டுகின்றது. இவ்வாறே தொல்காப்பியர் காலத்துக்கு முன் குற்றம் புரியாக் காலமென்று இருந்துள்ளமையும் தெளிவாகின்றது. பின்னர், குற்றம் தோன்றிய பொழுது அரசு தண்டனைகளை விதித்தது. தண்டனை விதிப்பதற்குச் சட்ட திட்டங்கள் வந்தன. அன்று மன்னராலும் இன்று மக்களாலும் சட்டங்கள் உருவாகின.
தண்டனைகளிற் பல வகை உள. தண்டனைகளை வரிசைப்படுத்திக் கூறுவன சட்டங்கள். குற்றம் புரிந்தால் ஒரே ஒரு தண்டனைக்குமட்டும் தான் உட்பட வேண்டும் எனப் பரவலான எண்ணம் நம்மிடையில் நிலைத்துள்ளது.

Page 118
208 கணினியை விஞ்சும் மனித மூளை
ஆனால் அது தவறு. புரிந்த குற்றம் ஒன்றுக்கு மூன்று வகையான தண்டனைகளை நாம் தொடர்ச்சியாக அனுபவித்தாக வேண்டும். அவையாவன: (1) சட்டம் வழங்கும் தண்டனை, (2) மனச் சாட்சி வழங்கும் தண்டனை, (3) கடவுள் வழங்கும் தண்டனை.
சட்டம் வழங்கும் தண்டனை
குற்றங்களைச் சிறு குற்றம், பெருங் குற்றம், கொலைக் குற்றம் எனப் பல வகைகளாகப் பிரித்துச் சட்டங்களுக்கமையத் தண்டனை வழங்கப்படுகின்றது. கொலைக் குற்றத்திற்குக் கூடுதலான தண்டனையாகத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.
கொலை செய்தவரின் உயிரைப் பறிப்பதுதான் இத் தண்டனையின் நோக்கம். இதைக் கேட்டு அறிந்த மற்றவர்கள் இப்படியான குற்றம் புரிய முன் வரார் என்று அரசு கருதுகிறது. உயிரைப் பறிப்பதற்கு அன்று தொட்டு இன்று வரை, தலையை வெட்டியும், தூக்கிலிட்டும், துப்பாக்கியால் சுட்டும், நச்சு வாயு செலுத்தியும், நச்சு ஊசி ஏற்றியும், மின்சாரம் பாய்ச்சியும் ஆகிய பல முறைகள் நடைமுறையில் உள்ளன. மனிதன் இதை அறிந்து இப்படியான கொலைக் குற்றம் புரியாதிருக்க இத் தண்டனைகள் உதவுவது உண்மைதான்.
ஆனால், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளி வருடக் கணக்கில் சிறையிலிருந்து தண்டனை நிறைவேறும் வரை நாளாந்தம் வாடி, வதங்கி, ஒதுங்கி, குறுகி, நடைப் பிணமாய் இறந்த வண்ணமுள்ளான். மேலும், தூக்குத் தண்டனை நிறைவேறும் பொழுது அவன்

கா. விசயரத்தினம் 209
படும் துடிப்பு, துன்பம், அவலம், அலறல் ஆகியவற்றைக் கண் கொண்டு பார்க்க முடியாது. ஏன் மனத்தால் கூட நினைக்க முடியவில்லையே.
தண்டனை நிறைவேற்றுமுன், “உன் கடைசி ஆசைகள் என்ன?’ என்று கேட்டுப் பால், பழம், கேக், நல்ல உணவு கொடுப்பதாகக் கேள்வி. 'உன் குல தெய்வத்தை நினைந்து, உருகி வேண்டுதல் பெற்றுக் கொள்’ என்று புத்திமதி கூறிப் புனிதமான தெய்வீக நிலைக்குக் கூட்டிச் சென்றபின் ஏன் அவனைக் கடைசி நேரத்தில் வருத்திக் கொல்ல வேண்டும்?
அவனை வருத்தாமல் கொன்றால் என்ன? இதற்குத் தற்பொழுது எத்தனையோ வழிமுறைகள் உள்ளனவே. ஒரு பல்லுப் பிடுங்கும் பொழுது கூட விறைப்பு ஊசி மருந்து செலுத்தி நோத் தெரியா வண்ணம் பிடுங்கி விடுகின்றார்கள். எனவே, இப் பாரிய கொடிய துன்பம் அவனைத் திருத்தி வைக்குமா? அவன்தான் இவ்வுலகில் இல்லையே.
மனிதனால் ஆக்கப்பட்ட சட்டத்தில் ஒட்டைகள் பல உள. எனவே, குற்றவாளிகள் சுலபமாகத் தப்பி விடலாம். இன்னும் ஆற்றல் நிறைந்த சட்டத்தரணிகள் சட்டத்தின் ஒட்டைகளைப் பாவித்துக் குற்றவாளியைச் சுற்றவாளியாக்கி விடுவர்.
மனச்சாட்சி வழங்கும் தண்டனை
குற்றம் புரிந்த நிமிடத்திலிருந்து மனச்சாட்சி தண்டனையளித்த வண்ணமேயிருக்கும். இதிலிருந்து தப்ப

Page 119
210 கணினியை விஞ்சும் மனித மூளை
முடியாது. சட்டம் தண்டனை கொடுக்கு முன், மனச்சாட்சி தண்டனை கொடுத்து விடும். இத் தண்டனை வாழ் நாள் முழுவதும் நீடித்து அணு அணுவாகக் கொன்ற வணிணமேயிருக்கும் . நிம்மதியைக் குலைத்து, யோசனையைக் கூட்டி, நித்திரையைக் கலைத்து, வாழ் நாளைக் குறைத்து, மனிதனைச் சின்னா பின்னமாக்கி விடுகின்றது மனச்சாட்சித் தண்டனை. இது ஒர் இயற்கைத் தண்டனை. சட்டம் இங்கு புகுந்து விளையாட முடியாது. மனக் கண்முன் நடக்கும் இத் தண்டனையை அனுபவித்துத் தான் ஆகவேண்டும்.
கடவுள் வழங்கும் தண்டனை
கடவுள் கொடுக்கும் தண்டனை மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்டது. பக்கச் சார்பற்றது. நேர்மை நிறைந்தது. மனிதன் வாழ்நாளிலும், மனிதன் இறந்த பின்னரும், மறு பிறவி வரை தொடர்ந்து தாவக் கூடியது இத் தண்டனை. இதை ஊழ்வினை என்று கூறுவர்.
“ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்" - (குறள் 380)
என்று கூறுகின்றார் வள்ளுவப் பெருந்தகை.
“அரசன் அன்றே கொல்லும்.
தெய்வம் நின்றே கொல்லும்."
என்பது பழமொழி.
குற்றத்திற்குச் சட்டம் வழங்கும் தண்டனை தான் ஒரேயொரு தண்டனை என்று நாம் கருதி விடக் கூடாது.

கா. விசயரத்தினம் 211
இதை விடக் கூடுதலாக மனச்சாட்சி வழங்கும் தண்டனையும், கடவுள் வழங்கும் தண்டனையும் அமைந்துள்ளது.
ஒரு குற்றத்திற்கு மூன்று தண்டனைகள் வழங்குவது நியாயமோவென்பது ஆய்வுக்கும் விவாதத்துக்குமுரிய விடயம். இம் மூன்று தண்டனைகளும் குற்றவாளியைச் சூழ்ந்து தண்டிப்பது மற்றவர்களின் கண்களைத் திறந்து அவர்களை நற் பிரசைகளாக்கி, ஒரு சிறந்த சமுதாயம் உருவாகினால் குற்றம் குறைந்து, கொலையற்று, தண்டனையின்றி, தண்டிப்பாரின்றி, சட்டம் வலுவற்று, நாடு முன்னேறி நடு நாயகமாய்த் திகழ்ந்து மக்கள் குதுகளிப்பரென்பது திண்ணம்.
(லண்டன் வடலியில் யூன் மாதம் 2005)
宽

Page 120
212 கணினியை விஞ்சும் மனித மூளை
தமிழர் கலாசாரத்தில் தனித்துவமான “பொட்டு’
தமிழர்கள் கலை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றுடன் ஒன்றக் கலந்து தனித்துவமாக வாழ்பவர்கள். பண்டைத் தமிழர் தமக்கென இவற்றை வகுத்து, வாழ்ந்து காட்டி, தம் பின்னவர்க்கும் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் நோக்கு, எண்ணம், தூய சிந்தனை, பரந்து விரிந்த ஒரு விருட்சம்.
பொட்டும், பூவும் இன்றித் தமிழ்ப் பெண்கள் இல்லை. பொட்டில்லா நெற்றி, கண் இல்லா முகம் என்பர். இவை இன்றி அவர்களுக்கு வாழ்வு இல்லை. பெண்களைப் போல் ஆண்களும் பொட்டணிவது வழக்கம். அதிகமாக ஆண்கள் சந்தனப் பொட்டிடுவர். பெண்கள் குங்குமப் பொட்டிடுவர். பொட்டிடுவது நம் நெற்றிக்குக் குளிர்ச்சியைத் தருகின்றது.
பெண்களுக்குத் தற்பொழுது பல வகை நிறத்தில் பொட்டுள்ளன. குங்குமப் பொட்டைத்தான் அவர்கள் அதிகம் விரும்புவர். குங்குமம் மங்களகரமானது. திருமணமான பெண்ணுக்குத் தாலியும், பூவும், பொட்டும் மிக முக்கியமானவை. இவை அவள் உயிர். இவை அவள்

கா. விசயரத்தினம் 213
உயிர்த் தெய்வங்கள். கணவன் இறந்தால் இவற்றை அவள் அணிய மாட்டாள். வெள்ளைச் சேலையுடன் ஒரு மூலையில் ஒதுங்கி விடுவாள். இது பெண்ணை, பெண்மையை அடக்கி ஒடுக்கும் கலாசார மூடி, ஆண் மகனுக்கு இல்லாத ஒரு விதி. ஆனால் அவளுக்கோ கை விலங்கு, கால் விலங்கு, வாய்ப் பூட்டு.
பொட்டிடுவதன் ஆதி என்ன? எப்படி? எவ்வாறு அமைந்தது? அறிஞர் பல பல சொல்வர். பெண்கள் முடிக்கு நறுமணமுள்ளதா? என்ற பாண்டிய மன்னன் கேள்விக்குச் சிவபிரான் தருமிக்கு ஒரு பாட்டெழுதிக் கொடுத்தார். தருமி, மன்னனிடம் பாட்டைப் பாடிக் காட்ட, அப் பாட்டில் தவறுண்டென்றும், பொற்கிழியைப் பரிசு கொடுக்க முடியாதென்றும், நக்கீரர் கூற சிவபிரான் தோன்றி நக்கீரருடன் வாதிட்டு, நக்கீரனைத் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து சுட்டெரிக்க, நக்கீரன் தடாகமொன்றில் வீழ்ந்து, சிவன் மேல் பா தொடுத்துத் தப்பினாரென்பது வரலாற்றுக் கதை.
சிவனின் மூன்றாம் கண்" நெற்றிக் கண். இதைத் தொடர்ந்துதான், நம் மூதாதையர் தம் நெற்றியில் பொட்டிட்டுத் தம் மூன்றாம் கண்களாகக் கற்பனை செய்து வந்தனர் போலும்.
பொட்டு நம் முகத்துக்கு அழகைக் கொடுக்கின்றது. ஆண்களை விடப் பெண்கள்தான் கூடுதலாகப் பொட்டிடுவர். பொட்டில்லா நெற்றியை அவர்கள் மத்தியில் காண்பதரிது. பொட்டென்றால் வட்ட வடிவானது அன்று தொட்டு. ஆனால் இன்று பொட்டு வட்ட வடிவோடு வெவ்வேறு உருவங்களில் வந்து விட்டது. சந்திரன், பிறை, அம்பு,

Page 121
214 கணினியை விஞ்சும் மனித மூளை
வில் லு போன்ற உருவங்களில் பொட்டணிந்து பார்ப்போரைப் பரவசப்படுத்தி நிற்கின்றனர் நம் தமிழ்ப் பெண்கள்.
இன்று நம் பெண்கள் நெற்றிப் பொட்டுடன் நின்று விடவில்லை. ஒரு படி மேலே சென்று நெற்றிப் பொட்டுக்கு நேர் மேலே தலை மயிரோடு ஒரு பொட்டையும் வைத்துள்ளனர். இதுவும் போதாதென்று நெற்றிப் பொட்டுடன் சேர்த்து மேலும், கீழுமாக இன்னும் இரண்டு பொட்டுகளையும் வைக்கின்றனர். எனவே அவர்கள் ஆறு கண் படைத்த பெண்களாகி விட்டனர். தம் இரு நிசக் கண்களுடன்.
காலக் கிரமத்தில் இன்னும் எத்தனை கண்கள் வந்து முளைக்குமோ? என்றொரு ஏக்கம். முகம் தான் இவற்றை அடுக்குமோ? என்றொரு தயக்கம். இருந்து தான் பார்ப்போமே!
(வீரகேசரி வார வெளியீட்டில் 24-04-2005)
宽

கா. விசயரத்தினம் 215
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க!
இது ஒரு வாழ்த்துச் செய்தி தான். திருமண நாளில் புதுமணத் தம்பதிகளை இவ்வாறுதான் வாய் நிறையச் சொல்லி வாழ்த்துவார்கள். இது வாழ்த்து மட்டும் தானே; வாயால் சொல்வது தானே: ஒன்றும் கையாற் கொடுப்பதில்லையே. எனவே ஆன்றோரும், சான்றோரும், யாவரும் ஒருமித்து வாய்முட்டச் சொல்லி வாழ்த்தி விட்டுச் செல்வார்கள். அறுகரிசியைக் கையில் எடுத்தால் மந்திரமாய் முந்தி நிற்பது இவ் வாழ்த்துத் தான்.
நாம் புது மணத் தம்பதிகளை இவ்வாறு வாழ்த்தும் பொழுது, அவர்களும் சிரித்து மழுப்பி விடுகின்றனர். சிலர் வாய்விட்டு டசின் கணக்கில் முடியாதப்பா என்று சொல்வது போல் தெரிகின்றது. நம் வாழ்த்தொலிகள் போய் அவர்கள் காதை எட்டவில்லை போலும். அவர்கள் கால எல்லைகளை வருடக்கணக்கில் வகுத்து விட்டு, விளையாடிக் கொண்டிருப்பது நம் கண்முன் காட்சி.
இன்னும் பதினாறு பெறுவதென்றால் இலேசா? அத்தோடு பெருவாழ்வும் வேண்டுமாம். ஆசைக்கோர் அளவில்லை போலும், நாம் என்ன குசேலர் பரம்பரையா..? அவர் பட்ட பாட்டை நாம் படித்திருக்கிறோம். மனம் வெதும்பி நொந்திருக்கிறோம். இன்னும் இப்படி நடந்தால் நம் நாடு தாங்குமா? மேலும், இப்பொழுது அரசு உசார்

Page 122
216 கணினியை விஞ்சும் மனித மூளை
நிலையில் நிற்கின்றது; அளவு குறித்து ஒன்று இரண்டு காணும் என்று அறிவுறுத்திப் பரிசில்களும் வழங்குகின்றது.
எனவே இந்தப் பதினாறில் ஏதோ ஒன்று பொதிந்திருப்பது போல் தென்படுகின்றது. பதினாறு பிள்ளைகளைப் பெற்றெடுப்பது என்ற கருப் பொருள் இல்லையென்ற ஒரு கேள்வியும் எழுகின்றது. பின் இந்தப் *பதினாறும்’ என்ற பதப் பொருளென்ன?
இதோ அப் பதினாறும்; படியுங்கள்.
(1) புகழ், (2) கல்வி, (3) வலிமை, (4) வெற்றி, (5) நன் மக்கள், (6) பொன், (7) நெல், (8) நல் விதி, (9) நுகர்ச்சி, (10) அறிவு, (11) அழகு, (12) பெருமை, (13) இனிமை, (14) துணிபு, (15) நோயின்மை, (16) நீண்ட ஆயுள்.
உண்மையில் இப் பதினாறும் பெற்றுவிட்டால் அது ஒரு பெரு வாழ்வு தான். இதில் ஒரு தீங்கான பதப் பொருளும் அமையவில்லை. அத்தனையும் தங்கக் கட்டிகள்; நம் பெரியோர் நமக்களித்த பொக்கிசங்கள்.
இப்படி எத்தனையோ விடயங்கள் மறை பொருளாய் மங்கிக் கிடக்கின்றன. அவை வெளிக் கொணரப்பட வேண்டும்; பாமர மக்களைச் சென்றடைய வேண்டும். எதிலும் அதனுள் பொதிந்துள்ள கருப் பொருளை வெளிக் கொணர்ந்தால் அவற்றின் அர்த்தமும் புரிந்து விடும்; அவை என்றும் இன்பம் பயக்கும்; வாழ்க்கையும் சீர் பெறும்.
宽

கா. விசயரத்தினம் 217
பேராசைகளான மூவாசைகள்
பDனித முன்னேற்றத்தில் ஆசைகள் முன்னின்று வழி நடத்துகின்றன. ஆசை இல்லா மனிதன் இல்லை. அவன் கண் விழித்ததும் ஆசைகள் முந்திரியங் கொட்டையாய் முன் வந்து நிற்கின்றன. ஆசை அவனை ஆட்கொண்டு விடுகின்றது. அவன் அடிமையாகின்றான். ஓய்வின்றி உழைக்கின்றான். எனவே, முன்னேறுகின்றான் என்றும் சொல்லலாம்.
ஆசைகளை முப் பெரும் பிரிவான மண் ஆசை, பொன் ஆசை, பெண் ஆசை என வகுத்துள்ளனர் அறிஞர். இம் முப்பெரும் ஆசைகளை அடைய, சிற்றாசைகள் பலதில் வெற்றி காண வேண்டும்.
மண் ஆசை அன்று மன்னரைச் சார்ந்திருந்தது. மண் ஆசை கொள்ளும் மன்னனிடம் படை வேண்டும், வீரம் வேண்டும், செல்வம் வேண்டும். மற்ற மன்னனுடன் போர் தொடுத்து, வெற்றி வாகை சூடி, நாட்டைக் கைப் பற்றவும் வேண்டும். இன்று மன்னராட்சி அருகி, சனநாயகம் மிளிர்ந்த இந் நாளில் குடும்பத் தலைவன் மண்ணில் ஆசை கொண்டால், பணம் கொடுத்து மண்ணை வாங்கி விடலாம்.

Page 123
218 கணினியை விஞ்சும் மனித மூளை
பொன் ஆசை மகளிரைச் சார்ந்தது. பொன் ஆசையில் பெண்கள் முன்னிடம் வகிக்கின்றனர். பொன் ஆபரணங்களைப் பூட்டிச் சீர் செய்து பார்ப்பதில் பெண்கள் முன்னோடிகள். ஏன் ஆண்களும், பல அணிகலங்களை வாங்கிக் கொடுத்து, அவர்களின் அழகை மேம்படுத்தி, அவர்தம் இசைவினைப் பெற்றுத் தாமும் இன்புறுகின்றனர்.
பெண் ஆசையில், ஆண்கள் முன் வரிசையில் உள்ளனர். பெண்ணில் ஆசை வைத்தால் மட்டும் போதாது. பெண்ணும் ஒருப்பட வேண்டும். இதற்கு முன்னோடிச் சிற்றாசைகளில் ஆண்கள் சித்தியடைய வேண்டும். அதாவது, அவர்கள் கல்வியில் , குணத்திலி , உத்தியோகத்தில் , பதவியில் , ஆணி மையிலி , பணவருவாயில் சிறப்புற்றிருந்தால்தான் பெண் ஆசை நிறைவேறும்.
பெண் ஆசையை அமைத்தவர்கள் ஏன் ஆண் ஆசையை அமைக்காது விட்டனரோ என்பது புரியாப் புதிராக இருக்கின்றதல்லவா? இது விடயத்தில் பெண்கள் தான் கொடி பிடிக்க வேண்டும். ஆண் ஆசை இல்லாமலுமில்லை. பெண் ஆசைக்கு ஏற்றவாறு ஆண் ஆசையும் உண்டு. ஆண் இன்றிப் பெண் இல்லை. பெண் இன்றி ஆண் இல்லை. பெண்ணை உயர்நிலைப்படுத்த விரும்பி ஆண் மனம் உருகி இளகியதோ தெரியவில்லை.
எது எப்படி இருப்பினும் இம் மூவாசைகள் நிரந்தரமானவையா? ஒரு சொற்ப காலத்தில் இவை யாவும் நிலையாது போய்விட்டாலும், கொடி வழி தொடர்ந்து படர்ந்து, நன்மைகள் அரும்பாகி, மொட்டாகி,

கா. விசயரத்தினம் 219
பூவாகி, காயாகி, கனியாகி மனித முன்னேற்றம் சீரும் சிறப்பும் பெறுகின்றது. இவ்வாசைகள் மனித வாழ்வில் சுழல் சங்கிலித் தொடராய்ச் சுழல்வதனால் இப் புவியில் நம் கற்பனைக் கெட்டாதவாறான ஒரு நவீன உலகம் அமைந்துள்ளது.
(லண்டன் வடலியில் சனவரி மாதம், 2005)
宽

Page 124
220 கணினியை விஞ்சும் மனித மூளை
மரம் இல்லையெனில் மண் பாலைவனமே!
மரங்கள் நமக்குத் துன்பம் தருவதில்லை! ஆனாலி நாமோ அவற்றைத் தறிக்கவே முயற்சி செய்கிறோம்.
புளியமரத்தில் பேய் என்பதெல்லாம் பொய்யான கதையே.
இப் பரந்த பூமியில் தோன்றிய உயிரினங்களில் மரமும் ஒன்று. பிறப்பால் மரம் மனிதனுக்கு மூத்தது. மண்ணுக்கும் மரத்துக்கும் மிக ஒட்டிய உறவுண்டு. மரம் வெட்ட வெட்டத் தழைக்கும். மண்ணை அகழ்ந்துவிட்டால் அது தானே தூர்ந்து விடும். மரத்தை வெட்டிச் சிதைப்பவன் மனிதன். இருந்தும், பழி வாங்கும் நோக்கமின்றி மனித வர்க்கத்துக்கு உதவிய வண்ணம் உள்ளன மரங்கள்.
மண்ணின்றி மரமில்லை. மணி மரத்தை வளர்க்கின்றது. மரத்துக்குரிய உணவையும், நீரையும் மண்தான் கொடுக்கின்றது. மரமும் மண்ணுக்கு உதவுகின்றது. மரம் தான் மண்ணுக்கு அழகைக் கொடுக்கின்றது. மரம் வளர்ந்து, செழித்து, பூத்து, காய்த்து

கா. விசயரத்தினம் 221
மண்ணுக்கு அழகையும், மகிமையையும் தந்துதவுகின்றது. மண்ணின் விலையும் மரத்தைப் பொறுத்தது. மரமின்றேல் மண் பாலைவனம் தான்.
இப்படியான மரம் மனிதனுக்கும் அளப்பரிய உதவிகளைப் புரிந்தவண்ணம் உள்ளது. மரங்கள் யாவும் சூரிய ஒளியைப் பெற்று, கரியமில வாயுவுடன் தமக்குரிய உணவைத் தயாரித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியே விடுகின்றது. இப் பிராண வாயுவை நாம் சுவாசிக்கின்றோம். பகலில் மரங்கள் கூடிய பிராண வாயுவை வெளியே விடுகின்றன. இது எங்களுக்குச் சுத்தமான பிராண வாயுவை உட்கொள்ள ஏதுவாக உள்ளது. இரவில் மரங்கள் கூடுதலான கரியமில வாயுவை வெளியே விடுகின்றன. எனவேதான் நாம் இரவில் மரங்களுக்குக் கீழ் நெடு நேரம் தங்கியிருக்கக் கூடாது. இதைச் செவிமடுக்காவிடில், கரியமில வாயுச் சுவாசம் நம் மேனிக்குக் கெடுதல் தரும்.
இன்னும், எல்லா மரங்களும் ஒரேயளவான பிராண வாயுவை வெளியே விடுவதில்லை. உதாரணத்துக்கு:- அரச மரம் 95 சதவிகிதமான பிராண வாயுவையும், வேப்ப மரம் 90 சதவிகிதமான பிராண வாயுவையும், புளிய மரம் 10 சதவிகிதமான பிராண வாயுவையும் வெளியில் விடுகின்றன.
இற்றைக்கு எண்ணாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தவயோகி திருமூலர் “சேர்ந்து இருந்தேன் சிவபோதியின் நிழலில்’ என்று திருமந்திர நூலில் கூறியுள்ளார். 'போதி என்பது அரச மரம். அரச மரம்

Page 125
222 கணினியை விஞ்சும் மனித மூளை
95 சதவிகிதமான பிராண வாயுவை வெளியே விடுகின்றது என்ற உண்மையை அன்றே அறிந்து வைத்திருந்த திருமூலர், அரச மரத்தடியில் நிட்டை புரிந்து, ஆண்டுக்கு ஒரு மந்திரமாக மூவாயிரம் ஆண்டு உயிரோடிருந்து மூவாயிரம் திருமந்திரங்களைப் பாடியருளினார்.
அரச மரம் ஒரு தெய்வீக மரம். அரச மரத்தடியில் பிள்ளையாரை வைத்து வணங்கி வருகின்றனர் சைவ மக்கள். பிள்ளையாரிடம் சென்று வணங்கி, அரச மரத்தைச் சுற்றி வந்து, ஆசீர்வாதம் பெற்று, அரச மரம் தரும் நல்ல பிராண வாயுவைச் சுவாசித்து, மனச்சாந்தியும் தேக சுகமும் பெற்று மகிழ்ந்திருப்பர் சைவப் பிரியர். இதனால் ஏற்படும் நன்மைகளை அன்றே அறிந்திருந்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்து வைத்த பண்டைத் தமிழ் ஆன்றோரைப் போற்றித் துதிப்பது நம் கடமையாகும். வேப்ப மரத்தின் மகிமையை அறிந்த நம் முன்னோர் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு வேப்ப மரமாவது வைத்திருக்க வேண்டுமென்று விதியமைத்ததை மெச்சாதிருக்க முடியுமா?
அந்தப் புளிய மரத்தில் புளியங்காய், புளியம் பழம் காய்த்துக் குலுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த சிறார்கள் அங்கு சென்று புளியங்காய், புளியம் பழங்களைச் சாப்பிட்டுப் புளிய மர நிழலில் விளையாடுவது வழக்கம். அதைக் கண்ணுற்ற பாட்டி “எடே பொடியள். புளிய மரத்தில் பேய் இருக்கு. புடித்து விடும். அந்த வேப்ப மர நிழலில் போய் விளையாடுங்கோ’ என்று கூறிக் கலைத்து விடுவாள்.
புளிய மரம் 10 சதவிகிதமான பிராண வாயுவைத் தான் வெளிவிடுகின்றது என்ற உண்மை பாட்டிக்குத்

கா. விசயரத்தினம் 223
தெரியாது. ஆனால், புளிய மரத்தின் கீழ் விளையாடக் கூடாது என்று மட்டும் பாட்டி அறிந்து வைத்திருக்கின்றாள்.
வயல் வேலை செய்து விட்டு மத்தியானம் வீடு வந்த ஒருவன் புளிய மரத்தின் கீழ் படுத்து உறங்கி விட்டான். பின் எழுந்து வந்தபொழுது, அவன் மிகவும் மந்த நிலையில் சோர்ந்திருப்பதைக் கண்டவர்கள் அவனைப் பேய் பிடித்துவிட்டது என்று கூறிப் பயங் காட்டி விட்டனர். அவனும் பயந்து விட்டான். பயம் மேலும் மனத் தளர்வு கூடிய வருத்தத்தைத் தந்து அவனைப் பாயில் கிடத்தி விட்டது.
புளிய மரம் 90 சதவிகிதமான கரியமுல வாயுவை வெளியே விடுகின்றது. இக் கரியமில வாயுவைத்தான் அங்கு படுத்திருந்தவன் சுவாசித்தான். அக் காற்றுத் தான் அவனை இவ்வாறு வாட்டி வதைத்தது. இதை அறியாதவர்கள் பேய், பிசாசு என்று சொல்லி வைத்தனர்.
மரங்கள் நமக்குத் துன்பம் தருவதில்லை. என்றும் நன்மையே தருகின்றன. அவை நம்மோடு ஒன்றி வாழ்கின்றன. ஆனால் நாமோ மரத்தை வெட்டித் தறித்துத் தொலைத்துக் கொண்டேயிருக்கின்றோம். மரமின்றேல் சூழல் மாசடைந்து நம் வாழ்நாள் குன்றிவிடும்.
மனிதனுக்கு உயிர் உள்ளது போல் மரங்களுக்கும் உயிர் உண்டு. நாம் மரங்களுடன் கதைக்க வேண்டும். கதைத்தால் அவை நம்மைப் புரிந்து கொள்ளும்; சந்தோசப்படும்; செழித்து வளரும். ஒருவர் கோடரியுடன் மரத்தடிக்குச் சென்றால் அம் மரம, தன்னைத் தறிக்க

Page 126
224 கணினியை விஞ்சும் மனித மூளை
வருகிறானே என்று கவலையோடு ஏறிட்டுப் பார்க்கும், வருத்தப் படும். இன்னொருவன், வெறுங் கையுடன் சென்று மரத்தடியில் படுத்து உறங்கினால், அதையும் மரம் அறிந்து கொண்டு சந்தோசப்படும். மரங்கள் மக்களை நன்கு புரிந்துகொண்டு வாழ்கின்றன. எனவே, இனியாவது நாம் மரத்துடன் சேர்ந்து ஒன்றிப் பழகத் தீர்மானம் எடுக்க வேண்டும்.
(வீரகேசரி வார வெளியீட்டில் 17-04-2005)
(லண்டன் வடலியில் யூலை மாதம், 2005)
宽

கா. விசயரத்தினம் 225
உயிர்க் கொலை புரியா மனிதன் உலகில் உளனா?
உலகில் உயிர் மேன்மையுடையது; போற்றத் தக்கது; விலை மதிப்பிற்கு அப்பாற்பட்டது. உயிரை எம்மால் ஆக்க முடியாது. எனவே உயிரை அழிக்கும் அதிகாரமும் எமக்கில்லை. உயிர்க் கொலை பஞ்சமா பாதகங்களில் ஒன்று. இதனை வள்ளுவனார்,
“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று." - (குறள் 259)
“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்." - (குறள் 260)
என்றும் உயிர்க் கொலை வேண்டாமென்றும் ஆணித்தரமாக உரைக்கின்றார். உயிர் தனித்தியங்காது. உயிருக்கு உடம்பு வேண்டும். உடம்புக்கு உயிர் வேண்டும். உயிரின்றி உடம்பியங்கா. உடம்பின்றி உயிரியங்கா. இது நியதி.
உயிர் அறுவகை
இற்றைக் கு இரணர் டாயிரத்து ஐநீ நுாறு ஆண்டுகளுக்கு முன்னரே, இன்றுள்ள விஞ்ஞான வளர்ச்சி இல்லாத அக் காலத்தில் தொல்காப்பியனார் உயிர்களை ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிர் வரை பாகுபடுத்திக் கூறியுள்ளமை இங்கு கூர்ந்து நோக்கற்பாலது.

Page 127
226 கணினியை விஞ்சும் மனித மூளை
“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே நான்கறி வதுவே அவற்றொடு கண்ணே ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே ஆறறி வதுவே அவற்றொடு மனமே நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே."
- (தொல், 571)
மற்றைய உயிர்களை விட மனித உயிருக்கு மிக முக்கியம் கொடுக்கப்படுகின்றது. மனிதனைக் கொன்றால் மகா பாவம் என்று சட்டம் முன் வந்து நிற்கின்றது. காவல் துறை, கைது, விசாரணை, நீதி மன்றம் போன்றவற்றுடன் தண்டனையும் கொடுக்கின்றது. ஆனால், மனிதன் மற்ற உயிரினங்களைக் கொன்றால் அது பாவமுமில்லை, ஒரு தண்டனையுமில்லை. இங்கு சட்டம் வாளாதிருந்து விடும். மனிதன் வரைந்த சட்டம் மனிதனுக்கு மட்டும்தான் போலும்,
மரம், செடி, கொடிகளும் உயிர்களே
அசையும் அணு, பிராணி, ஊர்வன, பறப்பன, விலங்கு போன்றவற்றுக்கும், மனிதனுக்கும்தான் உயிர்கள் உளதென நாம் நினைக்கின்றோம். அது தவறு. அசையா மரம், செடி, கொடி போன்றவற்றிற்கும் உயிர் உள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. விஞ்ஞான ஆய்வுகள் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வுண்மையை அன்றே மணிவாசகப் பெருமான்:-
‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்

கா. விசயரத்தினம் 227
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றவித் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்."
என்று தான் எடுத்த பிறப்பினை வரிசைப்படுத்திக் காட்டியுள்ளார்.
மரம், செடி, கொடிகளுக்கும் உயிர் உண்டு. மனிதனைப் போலவே இவையும் சுவாசித்து, உண்டு, வளர்ந்து, துயின்று, அழுது, சிரித்து, துன்புற்று, இன்புற்று, நோய்வாய்ப்பட்டு, செயல்பட்டு, வாழ்ந்து, இனப் பெருக்கம் செய்து, மடிந்து, வாழ்க்கை நடாத்தி வருகின்றன. உயிர் இருப்பதனால் இவையும் மனிதனைப் போல் வாழ்கின்றன. பட்ட மரம் வளர்வதில்லை. மடிந்த மனிதனும் வளர LDrt LIT6ö.
உயிர்க்கொலை
மனிதன் அறிந்தும், அறியாமலும் உயிர்க் கொலை செய்கின்றான். மேலும், புரிந்த உயிர்க் கொலையை சரியென நியாயங் காட்டித் தப்பிக்கவும் முனைகின்றான். கொலைத் தண்டனை பொல்லாதது. தப்பிக்க முடியாதது. சட்டம் துரத்திக் கொண்டேயிருக்கும்.
உயிர்க் கொலை புரியாத மனிதன் உளனா? என்றொரு கேள்விக்கு இல்லை என்பது நிதானமான, உறுதியான பதிலாகும். எல்லா மனிதரும் உயிர்க் கொலை புரிபவர்களே. ஏன் உலக உயிரினங்கள் யாவும் கொலை செய்தவண்ணமே வாழ்கின்றன. உயிரினங்கள்

Page 128
228 கணினியை விஞ்சும் மனித மூளை
தாம் உயிர் வாழ்வதற்காக மற்றைய உயிரினங்களைக் கொன்று தம் உணவாகப் புசித்து வாழ்கின்றன. மனிதன் தம் உணவுக்காக ஆடு, மாடு, மான், மரை, கோழி, மீன், பறவை போன்றவற்றைக் கொன்று உண்ணுகின்றான்.
மக்களில் மாமிச உணவருந்துபவர்களும், தாவர உணவருந்துபவர்களும் அடங்குவர். மரம், செடி, கொடிகள் மாமிச உணவருந்துவதில்லை என்றொரு எண்ணம் நம்மிடையில் நிலைத்துள்ளது. ஆனால், ஒரு சில மரம், செடி, கொடிகள் மாமிச உணவு மட்டும்தான் சாப்பிட்டு வாழ்கின்றன. இவற்றின் இலை, தண்டு, பூ ஆகியவை சிறு பிராணிகளைப் பிடித்து, அவற்றைக் கொன்று, மாமிசத்தை உறிஞ்சி உணவாக்கிய பின், இறந்த பிராணிகளின் எஞ்சிய பகுதிகளை வீசி விட்டு, மீண்டும் இரை பிடிப்பதற்குத் தயாராகி விடுகின்றன.
தாவர உணவருந்துவோர் உயிர்க் கொலை புரிபவர்களல்ல என்று நாம் நினைக்கக் கூடாது. ஓர் ஆட்டைக் கொன்று சமைத்தால் ஓர் உயிரைக் கொன்றதாகக் கணக்கு வைக்க வேண்டும். அதே நேரம் கத்தரிக்காய் ஒன்றை வெட்டிச் சமைத்தால் நூற்றுக் கணக்கான உயிர்களைக் கொன்றதாகக் கணக்கிட வேண்டும். கத்தரிக்காயில் உள்ள விதைகள் அத்தனையும் உயிர்களே. இவை யாவும் முளைக்கக் கூடியன. எனவே, தாவர உணவருந்துவோர், மாமிச உணவருந்துவோரை விடக் கூடுதலாக உயிர்க் கொலை புரிகின்றனரென்பது புலனாகின்றது.
எம் உடம்பில் ஒரு மனித உயிர் உள்ளது. மேலும், அவ்வுடம்பில் கணக்கிலடங்கா வேற்றுயிர்களான பக்ரீறியா,

5. விசயரத்தினம் 229
பூச்சி, புழு, ஒட்டுண்ணி போன்றவை ஒட்டி வாழ்கின்றன. இவை எமக்குத் துன்பம் தருவன. இவற்றை நாம் கொலை செய்த வண்ணமே இருக்கின்றோம்.
எம் உயிருக்குத் தீங்கு தரும் காட்டு மிருகம், பாம்பு, நச்சுப் பிராணி போன்றவற்றைக் கண்டதும் கொன்று விடுகின்றோம். அல்லது அவை நம்மைக் கொன்று விடும். இதில் நாம் முந்த வேண்டும். அல்லது அவை முந்தி விடும்.
பகைமை, ஆதிக்கம், ஆசை காரணமாக மனிதன் மனிதனை வெட்டிச் சரிக்கின்றான். அரசியற் கொலை, நாட்டு யுத்தம் என்று தொடங்கினால் நவீன ஆயுதங்கள், பயங்கர வெடி குண்டு, அணுகுண்டு பாவித்து ஆயிரக் கணக்கில் உயிர்கள் மடிகின்றன. இதனால் நாடழிந்து, மக்கள் அழிந்து, மக்கள் துயர், பட்டினியால் வாடி, வதங்கித் தாளாத் துன்ப நிலையடைவதுதான் கண்ட மிச்சம்.
நாம் பாதணி அணிந்துகொண்டு ஏகாந்தமாக வீறுநடை போடுகின்றோம். பாதணியின் கீழ் எத்தனையோ ஊர்வன அகப்பட்டு இறக்கின்றன. இவை எமக்குப் புரிவதில்லை. ஒருவரும் கவலைப்படுவதுமில்லை. ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடக்கின்றோம். எத்தனை அடிகள் வைக்கின்றோம். இதில் எத்தனை உயிர்கள் கொல்லப்படுகின்றன? இவற்றின் கணக்கை வைப்பார் எவருமில்லை.
இதில் இறப்பவை சிற்றுயிர்கள். இவை இறக்கும் பொழுது எழுப்பும் உரமற்ற கூக்குரல், அவல நிலை, துடி துடிப்பு, நம் செவியை வந்தடைவதில்லை. இந்த

Page 129
230 கணினியை விஞ்சும் மனித மூளை
இடத்தில் நாம் பாம்பொன்றை மிதித்துவிட்டால் அது சீறும், பாயும், துரத்தித் துரத்திக் கொத்தும். நாம் மயங்கி விழ வேண்டியதுதான். சில வேளை அப் பாம்பின் நஞ்சு எம் உயிரைக் குடித்தும் விடும்.
ஓர் அணு முதல் மனிதன் வரை உள்ள உயிரினங்களின் மரண அலறல் அந்தந்த உயிர்களின் ஆற்றலுக்கேற்றவாறு வித்தியாசப்பட்ட குரலோசையில் அமைந்துள்ளமை நம் கண்கூடு. இதைக் காரணப் படுத்திச் சில சிறு பிராணிகள் உயிரற்றவை என்றும், அவற்றைக் கொன்றாலும் பழி இல்லை என்ற முடிவுக்கு வருவது மிக மிகத் தவறு.
உணவு, அச்சம், பகைமை, ஆசை, ஆதிக்கம், யுத்தம், அரசியல், நாளாந்தச் செயற்பாடுகள் காரணமாக மனிதன் உயிர்க் கொலை புரிகின்றான் என்பதை இது காறும் அலசிப் பார்த்தோம்.
உயிரினங்கள் எல்லாம், மனிதனுட்பட, உயிர்க் கொலை புரிகின்றன. சில கொலைகள் தெரிந்தும், தெரியாமலும் நிகழ்கின்றன. எனவே, கூடிய வரை, உயிர்க் கொலைகளை ஆறறிவுள்ள மனிதன் குறைத்துக் கொள்வது தான் இன்றைய நிலையில் சிறந்ததொரு தெய்வீகத் தொண்டென நினைந்து செயல்பட்டால் அவனடி சேரும் ஏறுபடிகள் நம் கண்முன் தோன்றும்.
宽

5. விசயரத்தினம் 231
முகம் காட்டும்
முகபாவனை
Dனித அமைப்பில் தலை ஒரு முக்கிய முதல் இடத்தை வகிக்கின்றது. ஐம்பொறிகளில் நாற் பொறிகளான வாய், கண், மூக்கு, செவி ஆகியன தலையிற்றான் அமைந்துள்ளன. எனவே நாம் தலையைப் பேணிக் காக்க வேண்டும். தலை பிழைத்தால் வாழ்க்கை இல்லை. அரசர் காலத்தில் தண்டனையாகத் தலையைத் துண்டித்தனர். இன்றும் சில நாடுகளில் தூக்குத் தண்டனையாகக் கழுத்தில் சுருக்கிட்டு உயிரைப் பறிக்கின்றனர். இன்னும் துப்பாக்கியால் தலையில் சுட்டும் உயிரைப் பிரிக்கின்றனர். மேலும், தலையைக் கொண்டுவா என்றும் பேரம் பேசுகின்றனர்.
தலையிலும் முகத்துக்கு ஓர் அரிய சிறப்புண்டு. முகம்தான் மனிதனை அடையாளப்படுத்தி நிற்கின்றது. அகத்தின் அழகு முகத்தில் தெரியுமென்பர். மனச் சஞ்சலத்தை முகம் காட்டிக் கொடுத்துவிடும். எப் பாவனையாயிருந்தாலும் முகத்தால் செய்து காட்டி விடலாம். வாயாற் கூறுவதிலும் பார்க்க முகத்தால் பாவனை பண்ணுவது மனித உள்ளத்தைத் தொட்டு விடுகின்றது. இங்கு வாய்ப் பேச்சு தோற்றுவிடும்.

Page 130
232 கணினியை விஞ்சும் மனித மூளை
“அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்.” (குறள்- 706)
என்பது வள்ளுவனார் வாக்கு.
நாம் சிரிக்க, சிந்திக்க, கோபிக்க, அழ, மகிழ்ச்சியுற, வேதனைப்பட, துயில, பாட, நடனமாட, ஒட இன்னும் பல வேறுபட்ட செய்கைகளுக்கும் எம் முகம் அவற்றுக்கேற்ற முக பாவனையைக் கொடுத்து மன உள்ளுணர்வைக் காட்டி விடுகின்றது. ஒரேயொரு முகத்தால் வேறுபட்ட கணக்கிலடங்காச் செயல்களுக்கும் பாவனை பிடித்துக் காட்டுவது ஒரு விந்தையே,
எம் எலும் புக் கூடு 600க்கு மேற்பட்ட தசைநார்களினால் மூடப்பட்டு உடலுக்கு ஓர் உருவத்தைக் கொடுக்கின்றது. மேலும், நம் உடலில் பல கோடிக்கு மேற்பட்ட உயிரணுக்கள் நிறைந்துள்ளன.
மனித முகத்தில் 14 எலும்புகளும், 32 பற்களும், பல தசை நார்களும், இலட்சக்கணக்கான உயிரணுக்களும் உள்ளன. நாம் பல்வேறுபட்ட முக பாவனைகளைப் புரிவதற்கு ஏதுவாயிருப்பவை இத் தசை நார்களும், உயிரணுக்களுமாம்.
宽

கா. விசயரத்தினம் 233
கோடிக்கு முன். பின்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு." - (குறள் 392)
என்பது திருவள்ளுவர் திருவாக்கு. எண், எழுத்து ஆகிய இரு கலைகளும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று வள்ளுவர் கூறுகின்றார். எண்கள் எண்ணத் தெரிய வேண்டும்; எழுதத் தெரிய வேண்டும்; கணிக்கத் தெரிய வேண்டும். அன்றேல் சீர் வாழ்வோட்டத்தில் தடங்கலும், திணறலும் ஏற்பட்டு முன்னேற்றமற்ற பின்விளைவுகளைத் தரும். எண் கலையில் மனம் பதித்து, நிதானப்படுத்திப் படித்தால் கணித மேதையாகியும் விடலாம்.
நாம் எண்களை எண்ணும் பொழுது ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், இலட்சம், பத்து இலட்சம், கோடி என்று எண்ணிக்கொண்டே போகிறோம். ஆனால், தமிழில் இவற்றிற்குரிய பெயர்களைச் சொல்ல, எழுத முற்படுவதில்லை. இந்த எண்களுக்கு உரிய பெயர்கள் இல்லை என்றுதான் பலர் நினைக்கின்றனர். ஆனால், அது தவறு. எல்லா எண்களுக்கும் சங்க கால இலக்கிய நூல்களில் தமிழில் பெயர்கள் உள்ளன. இருந்தும் நாம் அவற்றை நடைமுறைப் பாவனைக்கு உட்படுத்துவதில்லை. ஏன் என்பது புரியாப் புதிர். இனியாவது முயற்சிப்போம்.
இனி, இந்தப் பூச்சியங்களின் அடிப்படையில் எண்களும் அவற்றுக்கான தமிழ்ப் பெயர்களும் வருமாறு:-

Page 131
234 கணினியை விஞ்சும் மனித மூளை
எணர் தமிழ்ப் பெயர்
1. ஏகம் 10 የ தசம் 100 சதம் 1,000 சகசிரம் 10,000 ஆயுதம் 1,00,000 நியுதம், 10,00,000 பிரயுதம் 1,00,00,000 கோடி 10,00,00,000 அற்புதம் 1,00,00,00,000 நிகற்புதம் 10,00,00,00,000 கும்பம் 1,00,00,00,00,000 கணம் 10,00,00,00,00,000 கற்பம் 1,00,00,00,00,00,000 நிகற்பம் 10,00,00,00,00,00,000 பதுமம் 1,00,00,00,00,00,00,000 சங்கம் 10,00,00,00,00,00,00,000 வெள்ளம் (சமுத்திரம்) 1,00,00,00,00,00,00,00,000 அந்நியம் 10,00,00,00,00,00,00,00,000 மத்தியம் (அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம் 10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (முக்கோடி) 100,000000,0000,0000000000,0000,0000,000 Dauab (மகாகோடி)

கா. விசயரத்தினம் 235
இவற்றில் பிரமகற்பம் என்பது கோடி கோடியே கோடியாகும். இன்னும், ஒன்றுக்குப் பின்னால் 33 சுழியம் அல்லது பூச்சியங்கள் இட்டால் மகாயுகம் அல்லது மகாகோடி வருகின்றது.
ஆங்கிலேயர் 'மில்லியன்’, ‘பில்லியன்’ என்ற அளவில் மட்டும்தான் கணக்குகளைக் கணித்து வருகின்றனர். ஆனால் பண்டைத் தமிழர்கள் அன்று எண்ணல் அளவை முறையை அமைத்து மகாகோடி அல்லது மகாயுகம் வரை சென்று கணக்குகளைக் கணித்துப் பாவனைக்கு உட்படுத்தியுள்ளனரே என்பதனையும், அதற்குரிய தேவைகள் அன்று இருந்துள்ளமையையும் பார்க்குமிடத்து அவர்களின் அறிவாற்றல், அறிவியல், விஞ்ஞான வளர்ச்சி, எண்களுக்கான தனித் தமிழ்ப் பெயர்கள் ஆகியன தனித்துவத்திற்கும் பெருமைக்குமுரிய சான்றுகளாகும்.
இன்னும், எண்களுக்குத் தனியான தமிழ் எழுத்துகளையும் பண்டைத் தமிழர்கள் அமைத்துச் சரளமாகப் பாவித்தும் வந்துள்ளனர். அவையாவன:
1 - க, 2 - உ, 3 - ங், 4 - ச4 5 - ரு, 6 - சு, 7 - எ, 8 - அ, 9 - கூ, 10 - ய, 50 - ருய, 100 - ள, 500 - ருள, 1.000 - சத .
இத் தமிழ் எண்களைச் சங்க காலத்தில் முழுமையாகப் பயன்படுத்தியுள்ளனர். ஏட்டுச் சுவடிகளில் இவ்வெண்கள் பாவிக்கப்பட்டுள்ளதை நாம் இப்பொழுதும் பார்க்கக் கூடியதாகவுள்ளது.
1, 2, 3, 4, 5 போன்ற வரிசை எண்கள் இந்துஅரேபிய எண்களாகும். இவற்றைத் தற்பொழுது உலக

Page 132
236 கணினியை விஞ்சும் மனித மூளை
எண்களாகக் கணிக்கின்றனர். இந்த எண்களை பண்டைத் தமிழர்கள் உருவாக்கியுள்ளனர் என்பது ஆய்வாளர் சிலரின் கருத்தாகும்.
‘0’ என்பதற்கு சூன்யம், பூச்சியம், சுன்னம், சுழியம் என்று பல பெயர்கள் உள்ளன. இன்னும், இதற்குப் பெறுமதியற்றது, எதுவுமற்றது என்னும் பொருள்களும் உள. பெறுமதியற் றதைத் தமிழனி பெறுமதியாக்க விரும்பமாட்டான். இதனைப் பாழ் என்று சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ளது.
எண் தமிழ் எழுத்துகளில் ‘0’ என்பது பாவனையில் இருக்கவில்லை என்பது மேற்காட்டிய தரவிலிருந்து புலனாகின்றது. 10 என்ற எண்ணுக்கு 'ய' என்பதுதான் தமிழ் எழுத்து. இந்த 'ய' என்பது காலக்கிரமத்தில் திரிந்து 10 என்ற எண்ணாக உருவெடுத்து மாறியிருக்கலாம் என்பது அறிஞர் கருத்தாகும்.
இவ்வாறான எணர் கலைகளின் பாவனை தற்பொழுது அருகி வந்துள்ள நிலைமையைக் காணத் தமிழ் மனங்கள் பதைபதைக்கின்றன. எனவே, இவ்வரிய தனித்துவமான எண் கலைகளை மீளவும் நடைமுறைக்குக் கொண்டு வரவேண்டிய தேவை எம்மனைவரின் முதற் கடமையாகும்.
(லண்டன் வடலியில் மே மாதம், 2005)
宽

கா. விசயரத்தினம் 237
மிகுதியாக அழுவதும் சிரிப்பதும் யார்? ஆண்களா? பெண்களா?
சிரித்து வாழ்ந்தால் உடல் நலனும் உறுதியாகும். மனிதன் சிரிப்பதும், அழுவதும் நியதி. அழாத, சிரியாத மனிதன் இல்லை. சந்தோசத்தில், இன்பத்தில் சிரித்து மகிழ்வதும்; துன் பத்தில் , துக் கத்தில் அழுது கவலையுறுவதும் மனித வாழ்வில் சதா நிகழ்வுகள். நாம் எத்தனை முறை சிரித்தோம்? எத்தனை முறை அழுதோம்? இவற்றை நாம் கணக்கிட்டு வைப்பதில்லை. கணக்கிடவும் முடியாது. இருந்தும், நாம் அழுது கவலையுறும் நாட்களைவிடச் சிரித்து மகிழ்ந்திருக்கும் நாட்கள் அதிகம். மேலும், இவை யாவும் ஒவ்வொருவர் மனத்தைப் பொறுத்த விடயமாகும்.
உயிரினங்கள் யாவும் சிரிக்கின்றன, அழுகின்றன. இதில் அசையும் உயிரினங்களான மனிதன், மிருகம், பறவைகள், மீன்கள், ஊர்வன யாவும் அடங்கும். இன்னும், அசையா உயிரினங்களான மரம், செடி, கொடி போன்றவையும் சிரிக்கின்றன; அழுகின்றன. இவற்றின் சிரிப்பு, அழுகை எம் கண்களுக்குத் தெரியாவிடினும், அவையும் சிரித்தும், அழுதும் வாழ்கின்றன என்பது, விஞ்ஞான ஆய்வுகளின் கருத்தாகும்.

Page 133
238 கணினியை விஞ்சும் மனித மூளை
“வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்பர். பெண்கள் மென் மனத்தினர்; கூடிச் சேர்ந்து கதைப்பர். கூடிச் சேர்ந்தும் மகிழ்வர்; ஆண்களை விட கதை என்றால் அவர்களுக்குக் கைலாயம். புன்சிரிப்பை வீசி மற்றவர்களை நெகிழச் செய்து விடுவர். சிரிப்பு அவர்களுக்கு ஒரு கலை. சிரித்துச் சிரித்து தாம் நினைத்த காரியம் சாதிப்பதிலும் நிபுணியர். மிகச் சந்தோச நேரத்தில் சிரிக்கும் பொழுது, கண்ணிர் மல்கி அழுவர். இது அவர் சந்தோசக் கண்ணிர். இக் கண்ணிர் மென்மையானது; குளிர்ச்சியானது.
பெண்கள் சிரித்து வாழ்வதனால் அவர்கள் வயது குறைகின்றது; நோயும் விலகிக் கொள்கின்றது. இவை நிபுணர் ஆய்வின் பெறு பேறுகள்.
ஆண்கள் திட மனத்தினர். பொறுப்புக் கூடியவர்கள். குடும்பப் பொறுப்பு அவர்கள் தலையில் விழுந்துவிடும். இன்னும், பொறுப்பு வாய்ந்த அரச பதவிகள் வகிப்பவர்கள். அவர்கள் பெண்களை விடக் குறைவாகவே கதைப்பர்; சிரிப்பர். இதனால் அவர்கள் மனம் சுமைதாங்கி ஆவதுமுண்டு.
மற்றது, அழுவது பெண்களின் இன்னொரு கலை. எதற்கெடுத்தாலும் அழுது விடுவர். அழுது நினைத்ததை முடித்து விடுவர். கவலை வந்தால் மனத்தில் வைத்திருக்க மாட்டார். மனப் பாரம் தாங்கார், கவலையை உடன் அழுது தீர்த்து விடுவர். தனி இடம் நாடி அழுது கவலை தீர்ப்பர். அழும் பெண்களைத் தடுத்து நிறுத்த மாட்டார்கள். அழுதால் கவலை தீரும், மன நிம்மதி கிடைக்கும் என்றொரு அசையா நம்பிக்கை. இவை அழும் கண்ணிரைப்

கா. விசயரத்தினம் 239
பொறுத்தது. கவலையால் மனம் குமுறி அழும்பொழுது பெருக்கெடுக்கும் கண்ணிர் கனமானது; சூடானது. கனமானது வெளியேறின் மனப் பாரம் குறைவதும், சூடானது வெளியேறின் குளிர்மை அடைவதும் இயற்கை வழியது.
இப்படியே பெண்கள் வாய் விட்டு, கண்ணிர் மல்க, முழு முகத்தால் அழுது மனப் பாரம் குறைப்பதனால், அவர்கள் முக அழகு கூடி விடுகின்றது. இதை அறியாதிருப்பர் பலர். அறிந்துவிட்டால் முக அழகைக் கூட்ட முயற்சி செய்து அழப் பலர் முன்வந்து நிற்பர்.
ஆண்கள் அழுவது குறைவு. ஒரு சிலர் அழுது விட்டால், பெண்களைப் போல் அழுகின்றாயே என்று பரிகாசம் பண்ணப் பலர் உளர். எனவே, ஆண்கள் கவலை வருங்கால் அவற்றைத் தங்கள் மனத்தில் அடுக்கி, அடுக்கி, அமுக்கி வைத்து மனப் பாரத்தைக் கூட்டிக் கொள்வர். கவலையை மற்றவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்ள மாட்டார். தாமே தம்முள் யோசித்துக் கொண்டேயிருப்பர். மனம் ஓர் எல்லை மட்டும்தான் தாங்கும். அந்த எல்லை கடந்துவிட்டால், அவர்கள் மதுபானம் அல்லது போதை மருந்து தஞ்சமென நாடி ஒடுவர். இவற்றால் ஏற்படும் அபாயம் அறியார். கவலை தீரத்தானே குடிக்கின்றேனென்று நியாயம் காட்டுவர். தம் குடும்பம், மனைவி, பிள்ளைகள் படும் துயர் கூட அறியார். குடிக்கத் தொடங்கிவிட்டால், அதை மறப்பது மிகக் கடினம்.
எனவே, ஆண்கள் குடிப் பழக்கத்துக்குப் போவதை
நிறுத்தி, பயனளிக்கும் மாற்று நடவடிக்கை எடுக்கப் பழகிக் கொள்ள வேண்டும். சிந்தித்துச் செயல்பட வேண்டும்.

Page 134
240 கணினியை விஞ்சும் மனித மூளை
மனப் பாரத்தை உற்ற நண்பனிடம் அல்லது அனுபவம் நிறைந்த அறிவுடையோரிடம் எடுத்துக் கூறி அவர்கள் புகட்டும் புத்திமதிக்கேற்றவாறு நடப்பது நன்மை பயக்கும். இதைவிடுத்து, எதற்கும் குடி தான் தஞ்சமென நினைப்பது மாபெரும் தவறு.
ஆண் களைவிடப் பெண்கள் கூடுதலாகச் சிரிப்பதனால் அவர்கள் வயது குறைகின்றது; நோயும் விட்டகலுகின்றது. இன்னும் கூடுதலாக அழுவதனால் அவர்கள் முக அழகு பெறுகின்றனர். ஆண்களும், பெண்களைப் போல் சிரித்து, அழுதால் அவர்கள் வயதும் குறையும். நோயும் பறந்து விடும். முக அழகும் பெற்று விடுவர் என்றொரு ஆதங்கம் எழாமலுமில்லை.
ஆனால், இப்படியே ஆண்களும் பெண்களும் கூடிச் சேர்ந்து கதைத்து, சிரித்து, அழுது கொண்டிருந்தால் குடும்ப நிலை என்னாகும்? கணவன் அழ, மனைவி அழ, பிள்ளைகள் அழ, குடும்ப மற்றவர்களும் அழ, நாம் காணும் நன்மை ஒன்றும் இல்லை. மிஞ்சுவது அழுகைதான்.
எனவேதான் ஆண்கள் அன்று தொட்டு இன்று வரை இது விடயமாக அழுது புலம்பாது மன உறுதியுடனிருந்து அழும் பெண்களுக்கு, ஆறுதல் கூறிக் குடும்பத்தைக் காப்பாற்றி வரும் அரும் பெரும் சேவைதனை மெச்சாதிருக்க முடியாது.
(வீரகேசரி வார வெளியீட்டில் 08-05-2005) (லண்டன் வடலியில் திசெம்பர் மாதம், 2004)
、演


Page 135


Page 136
நூலுருதிரியரைப் பற்ற
தமிழினத்தின் தாயகமாம் திருநாட்டின் வட மாகாணத்தில் நகரான சாவகச்சேரியில் கற்றோர் நிர் நுனாவில்' என்னும் ஓர் அழகிய கிராமத்தில் Lut J. Lb Lusu குடும்பத்தில் பல்துறை நிபுண திரு. வேலுப்பிள்ளை கார்த்திே அவர்களுக்கும், திருமதி, தங்க | கார்த்திகேயன் அவர்களுக்கும் 193 ஆண்டு மூத்த புதல்வனாகப் பிறந்: நுனாவிலூர் கா. விசயரத்தினம் அணி இவருக்குக் கல்வி அறிவூ சிந்தனையாளனாக்கிய பெருமை இ கல்வி கற்ற பின், பொது எழுது வி சேர்ந்து, படிப்படியாகப் பல ட கணக்காய்வுத் திணைக்களம்,
அத்தியட்சகராகக் கடமையாற்றி 1991 இவரின், பல கட்டுரைகள் பத்திரிகைகளான 'வீரகேசரி' 'தினகர வடலி பத்திரிகையிலும் பிரசுரிக்க "சூரிய குடும்பம்', 'கணினியை வி கட்டுரைகள் தீபம் தொலைக்காட்சிய
இவரின் கட்டுரைகள் சிந்த தெளிவுக்கும் உரியனவாய் அமை "பாத்ாதி கேசமா? கேசாதி பாதம "கலிங்கத்துப் பரணி - பேய்கள்
‘மந்திரம் சொல்லும் தந்திரம்', 'ஐய திங்களா?' 'திருமூலர் திருமந்திரம்" முத்தது 'சூரிய குடும்பம்', "அறநெ 'கோடிக்கு முன் பின்' ஆகிய க ஆசிரியரின் "கணினியை விஞ்சும் அரிய நூல் ஓர் அழகிய சிறந்த பை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தவர் தான் இந்நூல் ஆசிரியர்
LITT.
ட்டி நல்வழிப்படுத்தி, சீரிய வரின் தந்தையாரைச் சேரும், வினைஞராக அரச சேவையில் ரீட்சையில் சித்தியடைந்து, கொழும்பில் கனக்காய்வு ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். சிறிலங்காவின் முன்னணிப் ன் ஆகியவற்றிலும், லண்டனில் ப்பட்டுள்ளன. இவர் எழுதிய ஞ்சும் மனித மூளை ஆகிய பிலும் ஒளிபரப்பப்பட்டன. னைக்கும், மேல் ஆய்வுக்கும், ந்துள்ளன. உதாரணத்துக்கு ா?' 'ஐயர் யாத்த கரணம்' சமைத்த கூழ்', 'பாம்பினம்", பிரண்டு திங்களா? ஆறிரண்டு 'கலாபம் புனைந்த களிமயில் றி வாழ்வில் நாலும் இரண்டும்", ட்டுரைகளைக் குறிப்பிடலாம். மனித மூளை என்னும்-இந்த
டப்பாகும்.
பதிப்பகத்தார்.