கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி

Page 1
லகத் தமிழாரா &Lh೩ "à:"
 
 


Page 2


Page 3

தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
முனைவர் பா. இறையரசன்
உலகத் தமிழாராயப்ச்சி நிறுவனம் INTERNATIONAL INSTITUTE OF TAMIL STUDIES C.I.T. CAMPUS, AIDAIYARU, T.T.T.I. POST, (THARAMANI) CHENNA - 600 1 13.

Page 4
தவத்திரு தனிநாயகம் அடிகளார் அறக்கட்டளைச் சொற்பொழிவு - 2
BIBLIOGRAPHICAL DATA
Title
Author
Publisher & C)
Publication No
Language
Date of Publication
Edition
Paper used
Size of the book
Printing types
No. of pages
Price
No. of copies
Printed by
Subject
Thaninayaga Adigalin Idhazhial Vazhi Tamizhppani
Dr. P. Iraiyarasan
International Institute of Tamil Studies, C.I.T. Campus, Tharamani, Chennai - 600 113.
246
Tamil
1997
First
TNPL 16 Kg Super Printing
1/8 Demy
10 Points.
V111+- 22 = 130
. Rs..30/-
1000
Shri Vignesh Prints 158/5, Lake View Road. West Mambalam, Chennai - 600 033. Ph: 48–48-486 Journalism
அரக்கட் களைச் சொற்பொழிவாளர் கருத்துகளுக்குநிறுவனம் பொறுப்பல்ல.

முனைவர் ச.சு. இராமர் இளங்கோ இயக்குநர் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னை - 600 113
அணிந்துரை
"தாயெழில் தமிழை, என்றன் தமிழரின் கவிதை தன்னை, ஆயிரம் மொழிகள் காண, இப்புவி அவாவிற்றென்ற, தோயுறும் மதுவின் ஆறு, தொடர்ந்து என்றன் செவியில் வந்து, பாயும் நாள் எந்நாளோ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ்க் கவிதைகள் ஆயிரம் மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று விரும்பிப் பாடினார். அம்மாபெரும் கவிஞரின் விழைவுக்குச் செயல் ஊக்கியாகப் பாடுபட்டவர் தனிநாயக அடிகள் ஆவார்.
தனிநாயக அடிகளார் யாழ்ப்பாணத்தில் உயர் கல்வி படித்து முடித்த பின்னர் ரோம் நகரில் திருமறைக் கல்வியைக் கற்று முனைவர் பட்டம் பெற்றார். அதன்பின் அவர் தமிழ் இலக்கியம் கற்க வேண்டும் என்ற ஈடுபாட்டின் காரணமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் gL6p gad. Sub uusairpits. “NATURE IN ANCIENT TAMIL POETRY 6tairp தலைப்பில் அப்பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்து ‘எம்.லிட்’ பட்டம். பெற்றார். பின்னர் லண்டன் பல்கலைக் கழகத்தில் "EDUCATIONAL THOUGHTINANCIENTTAMILLITERATURE GT6ãTp 5656'Lilão giG GSig முனைவர் பட்டம் பெற்றார்.
ஈழத்தில் பிறந்த தனிநாயக அடிகளார் தூத்துக்குடியில் ஆசிரியர் பணி புரிந்தார். கத்தோலிக்கத் திருச்சபையில் சேர்ந்து துறவியான தனிநாயக அடிகளார் தமிழ்ப்பற்றை மட்டும் துறக்கவில்லை.
“இனம் என்பது குறிப்பிட்ட பண்பை உடைய மக்கள் பிரிவைக் குறிக்கும். இன வளர்ச்சிக்கு மொழி வளர்ச்சியே காரணம். “மொழியை மறந்த இனம் உயர்வை இழக்கும், புகழை இழக்கும்' என்று பாரதிதாசன் குறிப்பிட்டதற்கிணங்க இனமும் மொழியும் ஒன்றையொன்றைச் சார்ந்தவை; பிரிக்க முடியாதவை” என்று தனிநாயக அடிகளார் கருதினார்.
அடிகளார் ஆங்கிலம், இத்தாலியன், லத்தீன், பிரெஞ்சு, ஸ்பானிஷ், செர்மனி, கிரீக்கு முதலிய மொழிகளை நன்கு கற்ற பன்மொழிப் புலவர் ஆவார். வடமொழி, ரஷ்ய மொழி போன்ற மொழிகளையும் அறிந்தவர்.

Page 5
தனிநாயக அடிகளாரின் பன்மொழிப் புலமை தமிழுக்குப் பெருமை சேர்ப்பதற்குக் காரணமாக அமைந்தது. இவர் தமிழ்த் தூதுவராக உலகெங்கும் பல முறை சென்று தமிழ் மொழியின் செழுமையையும் வளமையையும் தமிழின மாட்சிமையையும் உலகில் உள்ள அறிஞர் பெருமக்கள் அறியும் வகையில் செய்ததற்கு இவருடைய பன்மொழிப் புலமை துணை நின்றது.
இந்தியப் பண்பாட்டை அறிந்து கொள்வதற்கு வடமொழி ஒன்று மட்டும் அறிந்திருந்தால் போதும் என்ற ஐரோப்பிய அறிஞர்களின் கருத்தினை மாற்றி அமைத்தவர்; தமிழ் மொழி கற்றால்தான் இந்தியப் பண்பாடு முழுவதையும் அறிந்துகொள்ள இயலும் என்று அவர்களை ஆற்றுப்படுத்தியவர்.
உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதற்கு அடிப்படையாக அமைந்தவர். உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தையும், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தையும் உருவாக்கியவர்.
தமிழ் மொழியின் வளத்தைப் பிற நாட்டினர் அறிந்து கொள்வதற்குத் துணை செய்யும் வகையில் ஆங்கிலத்தில் TAMIL CULTURE என்ற முத்திங்கள் ஆய்வு இதழை நடத்தினார்.
இலங்கைப் பல்கலைக் கழகத்தில் 1952-இல் கல்வித்துறையில் விரிவுரையாளராக அடிகளார் பணியில் சேர்ந்தார். பின்னர் மலேசியப் பல்கலைக் கழகத்தில் உள்ள தமிழ் மொழித் துறையில் தமிழ்த் துறைத் தலைவராகப் பணி ஆற்றினார். அப்போது அடிகளார் எழுதிய 'TAMIL STUDIES ABROAD’ என்ற நூலை மலேசியப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் ‘REFERENCEGUIDETOTAMIL STUDIES" என்ற நூலையும் பதிப்பித்துள்ளார்.
தமிழ் இலக்கியம், இலக்கணத்தில் புலமைமிக்கவரும், சைவ சமயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவருமான ஆறுமுக நாவலர், முத்தமிழில் மறைந்திருந்த இசைத் தமிழை மீட்டு எடுத்து “யாழ் நூல்' தந்த விபுலானந்த அடிகளார், தமிழ் மொழியின் தொன்மை குறித்து உலக மொழிகளோடு தமிழ் மொழியை ஒப்பிட்டு “வேர்ச் சொல்' ஆய்வு செய்த ஞானப்பிரகாச சுவாமிகள் முதலியோர் ஈழத்தில் தோன்றிய சுடர்மணிகள் ஆவார்கள். அவர்கள் வழி வாழையடி வாழையாக வந்து உதித்த பெருமகனார் தனிநாயக அடிகளார் ஆவார்.
ஈழத்தில் தமிழ் மொழிக்கு இன்னல் வந்த போதெல்லாம் எதிர்த்துப் போராடியவர். “நாமும் உரிமையோடு வாழ்ந்து மற்றவர்களையும் உரிமையோடு வாழ வைக்க வேண்டும்” என்ற உயரிய கோட்பாட்டை அடிகளாரிடம் காணலாம்.

V
உலக அரங்கில் தமிழுக்குப் பெருமை சேர்த்த பெருந்தகைமையாளர் தனிநாயக அடிகளார் பெயரில் திருச்சி தமிழ் இலக்கியக் கழகத்தார் உருவாக்கிய அறக்கட்டளையில் இரண்டாவது சொற்பொழிவாக இந்நூல் வெளிவருகிறது.
பேராசிரியர் பா. இறையரசன் அவர்கள் 'தனிநாயக அடிகளார் இதழியல் வழித் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரை இன்று நூலாக்கம் பெற்றுள்ளது. பாரதியாரின் இதழ்களைப் பற்றி ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்ற இவரின் சிறந்த பயிற்சி தனிநாயக அடிகளார் இதழியல் வழித் தமிழ்ப்பணி’ என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றியதிலும் வெளிப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது.
‘கெடல் எங்கே தமிழின் நலம் அங்கெல்லாம் தலையிட்டுக் கிளர்ச்சி செய்க’ என்ற மனத்திண்மை படைத்த இறையரசன் அவர்கள் எழுதிய இந்நூலை நிறுவனம் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறது.
இந்நூலில் பா. இறையரசன் தவத்திரு தனிநாயக அடிகளார் தாமே முன்னின்று நடத்திய ஆங்கிலம் மற்றும் தமிழ் இதழ்களைப் பற்றியும் அவருடன் தொடர்புடைய பிற இதழ்கள் பற்றியும் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இந்த அறக்கட்டளைச் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்த முனைவர் ச. சிவகாமி அவர்களுக்கு நன்றி.
நிறுவன வளர்ச்சியில் ஆக்கமும் ஊக்கமும் காட்டிவருகின்ற நிறுவனத் தலைவர், மாண்புமிகு தமிழ் ஆட்சிமொழி - பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முனைவர் மு. தமிழ்க்குடிமகன் அவர்களுக்கும், தமிழ் வளர்ச்சி - பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர் திருமிகு த.இரா. சீனிவாசன் இஆப அவர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.
இந்த நூலின் மெய்ப்புகளைத் திருத்திய திரு. நீலகண்ட பிள்ளை அவர்களுக்கும் அதனை மேற்பார்வையிட்ட முனைவர் ஆ. தசரதன், திரு. மொ. மருதமுத்து, திரு. மூ. பரிமணன் ஆகியோர்க்கும், இந்நூலினைக் கவினுற அச்சிட்டுத் தந்த விக்னேஷ் அச்சகத்தார்க்கும் நன்றி.
22.07.1998 இயக்குநர்

Page 6
பொருளடக்கம்
அணிந்துரை
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
முன்னுரை 1. தனிநாயக அடிகளும் இதழ்களும்
2. இதழ் வெளியீடும் உள்ளடக்கமும்
3. கட்டுரை ஆசிரியர்கள்
4. தனிநாயக அடிகளின் இதழியல்பணி 5. இதழியல் வழித் தமிழ்ப்பணி
பின்னிணைப்பு
தனிநாயக அடிகள் பங்காற்றிய
இதழ்கள் விவரம்
கட்டுரை ஆசிரியர்கள்
அகரவரிசையும் கட்டுரைகளும்
கருவி நூல்கள்
iii
1
25
36
55
87
95
120

Vii
சுருக்கக் குறியீட்டு விளக்கம்
9...d5. - அண்ணாமலைப் பல்கலைக் கழகம் இ.ப.க. - இலங்கைப் பல்கலைக் கழகம். Gog.L.J. - சென்னைப் பல்கலைக் கழகம். திரு.வி.க. - திரு.வி.கலியான சுந்தரனார்.
s)...d5. - மலாயப் பல்கலைக் கழகம்.
66ST. - வணக்கத்துக்குரிய,
அடைப்புக் குறிக்குள் எண்கள் தரப்பட்டுள்ளவை, ‘தமிழ் கல்சர் இதழின் தொகுதி, இதழ் எண் பக்க எண் என்ற வரிசையில் உள்ளன. ஜே’ என்று முன்னால் இடப்பட்டிருப்பின் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழின் தொகுதி, இதழ்கள், பக்க எண் ஆகும்.
அடிக்குறிப்பில்
அமுத - தவத்திரு அமுதனடிகள் எழுதியுள்ள 'தனிநாயக
அடிகள்’ என்னும் நூல்
வேஅ. - முனைவர் வேஅந்தனி ஜான் அடிகள் எழுதியுள்ள
தனிநாயக அடிகள் வாழ்வும் பணியும்’ என்ற நூல்.
தனி.ஒ. - தவத்திரு தனிநாயக அடிகள் எழுதியுள்ள் ‘ஒன்றே
' 2.6) LO
தனி.த. தவத்திரு தனிநாயக அடிகள் எழுதியுள்ள தமிழ்த்தூது.
மொ.பெ. - மொழி பெயர்ப்பாளர்
தொ.ஆ - தொகுப்பு ஆசிரியர்
.. பக்கம்.
பக். - பக்கங்கள்.
Lpabñ -- தவத்திரு அமுதனடிகள் தொகுத்துள்ள 'தனிநாயக
நினைவு மலர்’
அடையாளம்
பி - B
- - D
மாதங்கள்
ஜன. - ஜனவரி
பிப். - பிப்பிரவரி
DITT. - மார்ச்சு
ஏப். - ஏப்பிரல்
* ஆக. '- ஆகஸ்ட்டு
செப். - செப்டம்பர்
அக். அக்டோபர்
நவம். - நவம்பர்
திசம். r திசம்பர்

Page 7
CupaäTg) 6o J
“என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே"
- திருமூலர் அன்னைத் தமிழுக்குப் பணி செய்தோர் எண்ணற்றோர். இலக்கிய அணி செய்தோர் பலர். உரை, திறனாய்வு, மொழிபெயர்ப்பு மேடைப் பேச்சு, இதழியல் ஆகியவற்றின் வழி மொழி, இலக்கியம், இனம், வரலாறு, கலை, பண்பாடு, நாகரிகம், சமயம், அறவியல், அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் தொண்டு செய்தோர் பலர். இவர்கள் பல ஊரினர், பல நாட்டினர், பல சமயத்தர், பல தொழிலினர், பல நிலையினர். பிறநாட்டார், பிற மொழியினர், பிற இனத்தர், புறச்சமயத்தர், தமிழுக்குச் செய்த தொண்டு அதிகம். கிறித்துவத் துறவோர் தனிநாயக அடிகள் இலங்கையில் பிறந்து இன்தமிழ்த் தொண்டில் நுழைந்து மேடைப்பேச்சாலும் இதழியலாலும் உலகமெலாம் தமிழோசை தமிழ்க்கலை, தமிழ்ப் பண்பாடு, தமிழர் நாகரிகம், தமிழ்இனப் பெருமை, தமிழ் மொழித் திறமை பரவத் தொண்டு செய்தார். தொண்டுப் பணியே இறைப் பணி.
தவத்திரு தனிநாயக அடிகளின் தமிழ்ப் பணிக்கு உதவிய பல இதழ்களில், அவர் ஆங்கிலத்தில் நடத்திய ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” என்ற இரண்டு தமிழியல் பன்னாட்டு ஆய்விதழ்கள் மட்டும் இவண் பரந்த பார்வையாக - பருந்துப் பார்வையாக - நோக்கப்பெறுகின்றன. பரப்பின் பெருமையும் பணியின் அருமையும் கருதிச் செய்திகள் குறிப்பாகவும் சுருக்கமாகவும் மாதிரிக்குத் தேர்ந்தும், இதழ்களின் பக்க எண்கள் அங்கங்கேயே அடைப்புக்குறிக்குள்ளும், அடிக்குறிப்புகள் சுருக்கியும் தரப்படுகின்றன. தவத்திரு தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப் பணி கூறுவது
"இதோ, காலம் கனிந்து விட்டது
இறையரசு நெருங்கிவிட்டது”
- இயேசு பெருமான் நற்செய்தி
事本事本事本率事事奉

1. தனிநாயக அடிகளும் இதழ்களும்
தவத்திரு தனிநாயக அடிகள் தண்தமிழ் வளத்தை எண்திசையும் பரப்பியவர், பைந்தமிழை ஆய்ந்தவர்; செந்தமிழில் தோய்ந்தவர், ஈழம் தந்த தமிழ்வேழம்; தனிநாயகம் என்னும் தமிழ் நாயகம்; உலகின்பத்தைத் துறந்தும் தமிழின்பத்தைத் துறக்காத தமிழ் மாமுனி, கிறித்துவமும் தமிழும் தம் இரு கண்களெனக் கொண்டவர்; உலகமெல்லாம் தமிழைக் கண்டவர்; பல நாடுகளிலும் தமிழைப் பரப்பிய தமிழ்த்துாதுவர்; பல நாட்டவரும் தமிழ்க் கலையையும் தமிழ்க் கல்வியையும் தமிழாய்வையும் பெற வித்திட்டவர்; தமிழ் இலக்கியக் கழகம் ஏற்படுத்தியவர்; உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் ஏற்படுத்தி அதன்வழி உலகத்தமிழ் மாநாடுகள் நடைபெறச் செய்தவர்; உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு வழிவகுத்தவர்; தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் நிறுவியதோடு தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆங்கில இதழும் (Tamil Culture) நடத்தியவர்; தமிழியல் Lubóluu siu6î5(upb (Journal ofTamil Studies) iš Savojĝio GS5TLŘI6 நடத்தியவர்; பன்மொழி அறிந்தவர்; பன்னாடு கண்டவர்; மிகச்சிறந்த பேச்சாளர்; எழுத்தாளர்; இதழாளர், இனிய பண்பாளர்.
1. வாழ்க்கை வரலாறு
11 இலங்கையில் ஊர்க்காவல்துறை என்றும், காவலூர் என்றும், ஆங்கிலத்தில் ‘கயிட்ஸ்’ (Kayts) என்றும் அழைக்கப்படும் துறைமுகத்தைச் சேர்ந்த கரம்பொன் (கரம்பன்) என்னும் சிற்றுாரில் 21-08-1913-இல் இவர் பிறந்தார். இயற்பெயர் சேவியர்; இவர் தந்தை ஹென்றி ஸ்தன்னிஸ்லாஸ் (Henry Stanislas) கிறித்துவ சமயத்துக்கு வரும் முன்னர் சைவ சமயத்தவராயிருந்தபோது இயற்பெயர் நாகநாதன் கணபதிப்பிள்ளை; தாய் சிசில் இராசம்மாள் வஸ்தியாம்பிள்ளை.(வேஆப0
12 யாழ்ப்பாணத்தில் தூய பத்திரிசியார் கல்லூரியில் (1923-1930) சேவியர் படித்து, "கேம்பிரிட்ஜ்’ தேர்வில் வெற்றி பெற்றார். இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், இலத்தீன், வரலாறு, புவியியல் முதலியன படித்தார். பின் துறவறத்தில் நாட்டம்கொண்டு பொறளையில் தூய பெர்நார்டு பெரிய குருத்துவக் கல்லூரியில் (1931-1934) மெய்மையியல் (Philosophy) பயின்றார். இக்கல்லூரியில் தமிழ், சிங்களம், மானிடவியல், சமய ஒப்பியல் (ComparativeReligion) பயின்றார். ஆயின் தக்க காரணமின்றிக் குருத்துவக் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டுத் துன்பம் உற்றார். பின்னர் யாழ்ப்பாணம் சென்று தூய பத்திரிசியார் கல்லூரியில் சில மாதங்கள் ஆசிரியப்பணி புரிந்தார்.

Page 8
2 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
13. திருவனந்தபுரம் பேராயர் மார் இவானியுஸ் (Marlvanios) இலங்கை வந்தபோது சேவியரோடு பழகியிருந்தார். அவர் அழைத்ததால் சேவியர் இந்தியா சென்று திருவனந்தபுரம் மறை மாவட்டத்தில் (Diocese) சேர்ந்தார். பேராயர் அவரை இறையியல் கல்வி பயில உரோம் நகருக்கு அனுப்பினார். அங்கு உரோம் உர்பன் பல்கலைக்கழகத்தில் (1935-1938) சேவியர் மறையியல் முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தார். அப்பொழுது இத்தாலியம், கிரேக்கம், எபிரேயம் முதலிய மொழிகளில் தேர்ந்தார். அவர் கத்தோலிக்கச் சமயக் குருவாக 19.3.1938 -இல் திருநிலைப் படுத்தப்பட்டார்.
14. மறையியல் முனைவர் பட்டம் பெற்று 1939-இல் திருவனந்தபுரம் திரும்பிய சேவியர், தூய ஞானப்பிரகாசர் சிறுவர் குருமடத்தில் ஆசிரியப்பணி பெற்று இலத்தீன் மொழி கற்றுக் கொடுத்தார். மேலும் உயர் கல்வி படிக்க விரும்பினார்; ஆயர் ஒப்புதல் தரவில்லை; அதனாலும் பிற காரணங்களாலும் உரோம் கிறித்துவ அதிகாரிகளிடம் கேட்டு மாற்றல் பெற்றுக்கொண்டு தூத்துக்குடி மறை மாவட்டத்துக்கு வந்தார். தூத்துக்குடி மறை மாவட்டத்தில் ஆயர் பிரான்சிஸ் திபூர்தியூஸ் ரோச் அவர்களின் கீழ், வடக்கன் குளம் என்னும் ஊரில் உள்ள தூயதெரசாள் உயர்நிலைப் பள்ளியில் அவர் துணைத் தலைமை ஆசிரியராகப் (19401945) பணியாற்றினார். “சின்ன உரோம்’ என்று புகழ்பெற்ற வடக்கன் குளத்தில்தான் வீரமாமுனிவர் தங்கிச் சமயப் பணியாற்றியதோடு தமிழ் கற்றுப் புலமை பெற்றார். அத்தகைய வடக்கன் குளத்தில் சமயப்பணியாற்றிய சேவியர், சிதம்பரத்திலிருந்து வந்து தங்கியிருந்த குருசாமி சுப்பிரமணிய அய்யரிடம் நான்கு ஆண்டுகள் தமிழ் கற்றார்.
15. சேவியர் தம் தந்தை பெயரோடு சேர்த்துச் சேவியர் ஸ்தன்னிஸ்லாஸ் என வழங்கப்பட்டு வந்தார். இவர் தம் தந்தை வழி முன்னோர் பெயராகிய தனிநாயக முதலி’ என்பதைக்கொண்டு, தம் பெயரைச் “சேவியர் ஸ்தன்னிஸ்லாஸ் தனிநாயகம்’ என ஏற்றார். ஆயர் பிரான்சிஸ் திபூர்த்தியூஸ் ரோச் கூறியதன் பேரில் தமிழ்ப் பெயரை ஏற்றார் என்று நிர்மலா இராசரெத்தினம் கூறுவார் (மலர்.ப.7). உரோம் நகரில் பயிலும் பொழுதே (1935-1939) தம் பெயரைத் தனித் தமிழில் மாற்றிக் கொண்டார் என்று வே.அந்தனி ஜான் அழகரசன் (ப.5) கூறுவார்.
16. மேலும் தமிழ் பயில ஆர்வமுற்ற தனிநாயக அடிகள் தம் ஆயரிடம் ஒப்புதல் பெற்றுச் சிதம்பரம் சென்று அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு விருப்பத்துடன் பயின்று தமிழில் கலைமுதுவர்(M.A) பட்டமும் (1945-47) இலக்கிய முதுவர் (M.Litt.) பட்டமும் (1947-1949) பெற்றார். அவர் இலக்கிய முதுவர் பட்டத்துக்குப் பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியாரை வழிகாட்டியாகக் கொண்டு, ஆய்வு செய்து "பழந்தமிழ் இலக்கியத்தில் இயற்கை (Nature in Ancient Tamil Poetry) என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வேடு அளித்தார்.
፶፭ ́} 4:r:, . fY:

தனிநாயக அடிகளும் இதழ்களும் 3
அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி, பேராசிரியர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம், பேராசிரியர் அ.சிதம்பரநாதன் செட்டியார் ஆகியோர் தனிநாயக அடிகளாரோடு நட்புணர்வு கொண்டிருந்தனர். பேராசிரியர்கள் வ.சுப.மாணிக்கம், அருணாசலம் பிள்ளை, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், பூவராகவன் பிள்ளை, மாணிக்கம் செட்டியார் முதலியோர் தனிநாயக அடிகளாரின் ஆசிரியர்களாவர். கத்தோலிக்கச் சமயக் குருவாக இருந்ததாலும் சற்று மூத்தவராக இருந்ததாலும் மாணாக்கர்கள் தனிநாயக அடிகளாரோடு அதிகம் நெருங்கிப் பழகவில்லை. ஆயினும்:அவரோடு அப்போது பயின்றுகொண்டு இருந்த முனைவர் வஅய்சுப்பிரமணியம் (பிற்காலத்தில் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தர்) வித்துவான் க.வேலன் முதலிய சிலர் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர்.
17. தூத்துக்குடியில் 1948-இல் தனிநாயக அடிகளார் தமிழ் இலக்கியக் கழகத்தைத் தோற்றுவித்தார். திரு.மைக்கேல், திரு. எஸ். நடராசன், திரு பால்நாடார் முதலிய பலரையும் இக்கழகத்தில் இணைத்துக்கொண்டு சமயப் பொறையைப் பரப்பியதோடு சமயப் பணியும் சமய இலக்கியப் பணியும் ஆற்றினார்; இக்கழகத்தின் வழி பல ஒப்பற்ற நூல்கள் வெளியிட்டார். இரண்டு ஆண்டுகள் (1949-1950) சீனா, ஜப்பான், அமெரிக்கா முதலிய பல நாடுகளுக்கும் பயணம் செய்து தமிழரின் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாறு முதலியவற்றைப் பற்றிச் சொற்பொழிவு செய்தார்.
18. இலங்கைப் பல்கலைக் கழகத்தில் தனிநாயக அடிகளார் கல்வித் துறை விரிவுரையாளராக 1952 முதல் 1961 வரை பணியாற்றினார். கொழும்பில் 1952 இல் தமிழர் பண்பாட்டுக் கழகத்தை ஏற்படுத்தியதோடு தமிழர் பண்பாடு பற்றித் ‘தமிழ் கல்சர்’ (Tamil Culture) என்னும் ஆங்கில இதழை வெளியிட்டார். இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விடுப்பு பெற்று இங்கிலாந்து சென்று கல்வியியல் துறையில் ஆய்வு செய்து (1955-1957) முனைவர் பட்டம் பெற்றார். 1956 ஆம் ஆண்டு சிங்கள மொழிச் சட்டத்தை எதிர்த்து ஈழத் தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய 1956, 1961 ஆகிய ஆண்டுகளின் அறப் போராட்டங்களில் தனிநாயக அடிகளார் கலந்து கொண்டார்.
19. தமிழ் மொழி உரிமை பற்றிய தனிநாயக அடிகளாரின் சொற் பொழிவுகளை அரசியல் உள்நோக்கம் கொண்டதாகக் கருதி இலங்கை அரசு, அவரை எதிரியாக நடத்தத் தொடங்கியது. அவர் சிறை செய்யப்படலாம் என்னும் சூழ்நிலை இருந்தது. எனவே, மலாயாப் பல்கலைக் கழகத்தில் இந்திய மொழிகள் துறையின் தலைவராகப் பணியேற்று 1961 இல் மலேசியா சென்றார்; அங்கு 1969 வரைப் பணியாற்றினார்.

Page 9
4 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
10. தனிநாயக அடிகள் முயற்சியால் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (International Association of Tamil Research) 6T6ðrgpjúb g6DDuo’UL, சென்னை மாநிலத் தமிழ் வெளியீட்டுக் கழகத்தின் துணையுடனும் தமிழறிஞர்கள் ஒத்துழைப்புடனும், புதுதில்லியில் நடந்த கூட்டத்தில் 71.1964 இல் தொடங்கப்பட்டது. இந்த அமைப்பைக்கொண்டு உலகத் தமிழ் மாநாடு மூன்றாண்டுகளுக்கொருமுறை நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. தனிநாயக அடிகளார் முதல் உலகத்தமிழ் மாநாடு மலேசியாவில் 1966 இல் நடைபெறப் பெருங் காரணமாவார். அடுத்து இரண்டாம், மூன்றாம், நான்காம் மாநாடுகள் தனிநாயக அடிகளாரின் கருத்துரைகளை ஏற்று நடத்தப்பட்டன. , *
11. இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடந்தபோது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நிறுவப்பட வேண்டும் என்ற கருத்தைத் தனிநாயக அடிகள் உருவாக்கினார். கூட்டு நாடுகளின் கல்வி, அறிவியல், மற்றும் பண்பாட்டு மன்ற (யுனெஸ்கோ) ஒத்துழைப்புடன் தமிழக அரசு சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை அமைக்கத் தனிநாயக அடிகள் இடைவிடாது முயற்சிகள்மேற்கொண்டார். உலகத் 25L6pt Tilds SpaigTib (International Institute of Tamil Studies) 21.11.70 இல் பதிவு செய்து அமைக்கப்பட்டது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR) சார்பில் 196970 ஆகிய இரண்டு ஆண்டுகளில் தனிநாயக அடிகள் வெளியிட்ட தமிழியல் பற்றிய ஆங்கில ஆய்விதழ் (Journal of Tamil Studies) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
1.12. மலாயாப் பல்கலைக் கழகத்திலிருந்து 1969 இல் விலகி இலங்கை வந்த தனிநாயக அடிகள் கண்டியில் 1972 வரை தங்கியிருந்தார். ஆசியா, அம்ெரிக்கா, ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களுக்கு அடிக்கடி வருகைப் பேராசிரியராகச் (Visiting Professor) சென்று வந்தார். வளவாயில் என்னுமிடத்தில் ஆயர் விடுமுறை இல்லத்தில் 1979 வரையும், பின்னர் பண்டத்தரிப்பு என்னுமிடத்தில் திய்ான இல்லத்திலும் தங்கியிருந்தார். மீளாத் தமிழ்க் காதலர் தனிநாயக அடிகள் 19.1980 இல் மீளாத்துயில் கொண்டார்.
2. தொடர்புடைய இதழ்கள்
20. தனிநாயக அடிகள் பல இதழ்களில் எழுதியுள்ளதோடு சில இதழ்களை நடத்தி அவற்றின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்; தம் பதினைந்தாம் அகவையிலேயே ‘பாட்டில்டு சன் ஷைன்' என்ற ஆங்கில இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்தியுள்ளார். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இதழ்கள் நடத்தியுள்ளார். கல்வி, சமயம், ஆய்வு தமிழ் ஆகிய நிலைகளில் உள்ள இதழ்களே இவர் தொடர்புடையன. இவை தொடர்பான கருத்துகளையே இவர் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள், நேர்காணல் விடைகள் ஆகியவை பொது இதழ்களிலும்

தனிநாயக அடிகளும் இதழ்களும் 5
சமய இதழ்களிலும் ஆய்வு இதழ்களிலும் பன்னாட்டு இதழ்களிலும் ஆண்டு மலர், நினைவு மலர், சிறப்பு மலர், மாநாட்டு மலர் ஆகியவற்றிலும் வெளிவந்துள்ளன. சிறுமலர், தமிழ் ஒளி ஆகிய தமிழ் இதழ்களும் ‘பாட்டில்டு சன் ஷைன்’, ‘தமிழ் கல்சர்’, ‘ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” முதலிய ஆங்கில இதழ்களும் தனிநாயக அடிகள் இதழாசிரியராக இருந்து நடத்தியவை.
2.1. தமிழ் இதழ்கள்
சிறுமலர், தமிழ்ஒளி ஆகிய தமிழ் இதழ்களின் ஆசிரியராக விளங்கிய தனிநாயக அடிகள் ஞானதுாதன், கத்தோலிக்கு சேவை, சத்திய வேத பாதுகாவலன், தமிழ் ஒசை, இளங்கதிர், சமூக மஞ்சரி, கலைப்பூங்கா, தமிழ் நேசன், ஈழநாடு, வீரகேசரி முதலிய இதழ்களிலும் எழுதியுள்ளார்.
2.1.1. சிறுமலர்
யாழ்ப்பாணத்தில் தூய பத்திரிசியார் கல்லூரியில் பயிலும்போது தம் பதினைந்தாம் அகவையிலேயே 'பாட்டில்டு சன் ஷைன்’ என்ற ஆங்கில இதழை நடத்திய தனிநாயக அடிகள், தூத்துக்குடி மறை மாவட்டத்தைச் சேர்ந்த வடக்கன் குள்த்தில் தூய தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப்பணி புரிந்த போது (1940-1945) தூயதெரசாளை முதன்மைப்படுத்திச் “சிறுமலர்' என்ற இதழை வெளியிட்டு அதன் ஆசிரியராகத் திகழ்ந்தார். இப்பள்ளியில் தனிநாயக அடிகளிடம் பயின்ற எம்.ஜி. வென்சஸ்லாஸ் பிற்காலத்தில் நடத்திய ‘வீரகேசரி’ இதழ் புகழ் பெற்றதாகும்.
2.12. தமிழ் ஒளி
மலாயாப் பல்கலைக் கழக இந்திய மொழித்துறையில் தமிழ்ப் பேரவை சார்பில் ‘தமிழ் ஒளி’ என்ற இதழ் வெளியிடப்பட்டது. இந்தியத் துறைத் தலைவராக 1960 இல் முத்து இராசாக் கண்ணனார் இருந்தபோது இவ்விதழ் தொடங்கப்பட்டது. தனிநாயக அடிகள் 1961 இல் இந்தியத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் ‘தமிழ் ஒளி' இரண்டாவது இதழைத் தம் வாழ்த்துரையுடன் வெளியிட்டார். அவ்வப்போது தமிழ்ப் பேரவை மாணவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளைப் பாராட்டி இவ்விதழில் வாழ்த்துரை எழுதினார்.
2.13. ஞானதுதன்
இவ்விதழ் 1928 இல் தூத்துக்குடியில் ஜேரோச் அவர்களால்
தொடங்கப்பட்ட கத்தோலிக்க மாத இதழ் ஆகும். தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் இருந்தபோது "ஞானதூதன்' இதழில் சமயக்

Page 10
6 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
கட்டுரைகள் பல எழுதியுள்ளார். இவ்விதழில் பணியாற்றிய திரு.மைக்கேல் (மிக்கேல்) என்னும் ஊழியர் தனிநாயக அடிகளின் தமிழ் இலக்கியக் கழகத்துக்கும் 'தமிழ் கல்சர்’ இதழுக்கும் பணியாளராக இருந்து மிகவும் உதவியுள்ளார். தனிநாயக அடிகள் இவ்விதழில் 1942 முதல் 1954 வரை எழுதினார் என்று முனைவர் வேஅந்தனி ஜான் அழகரசன் (ப.18) குறிப்பிட்டுள்ளார். தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் வாழ்ந்த காலமாகிய 1948 முதல் எழுதியிருக்க வேண்டும். ஞானதுாதன் இதழில் வெளிவந்த தூய பெலவேந்திரர் (St Andrew) வாழ்க்கையைக் கூறும் நாளங்காடி வீதியிலே' என்ற கட்டுரை குறிக்கத் தக்க ஒன்றாகும். (வே.அ.ப.18)
2.1.4. கத்தோலிக்கு சேவை
மதுரையிலிருந்து 1941 இல் வெளிவரத் தொடங்கிய மாதமிருமுறை இதழ் "கத்தோலிக்கு சேவை ஆகும். இதனை நடத்தியவர் வண.ஜி.வி. இக்னேஷியஸ் சாமா ஆவார். இவ்விதழில் சமயக் கட்டுரைகள் பல தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
2.15. சத்தியவேத பாதுகாவலன்
வார இதழாகிய இவ்விதழில் 1949, 1951, 1954 ஆம் ஆண்டுகளில் தனிநாயக அடிகள் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். இவ்விதழில் வந்த தம் கட்டுரைகளைத் தொகுத்துத் 'தமிழ்த்துாது’ என்ற நூலாக 1952 இல் தமிழ் இலக்கியக் கழகத்தின் வழியாகத் தனிநாயக அடிகள் வெளியிட்டார்.
2.1.6. தமிழ் ஓசை
இவ்விதழ் பற்றிய விவரம் தெரியவில்லை. இவ்விதழில் (தொகுதி
எண் 2) 1952 இல் தனிநாயக அடிகள் எழுதிய ‘மலரும் மாலையும்’
என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.
217. இளங்கதிர்
இவ்விதழ் பற்றிய விவரம் தெரியவில்லை. இவ்விதழில் (தொகுதி
10 1958-1959 இல் ஒற்றுமை அமெரிக்கா என்ற கட்டுரையைத் தனிநாயக
அடிகளார் எழுதியுள்ளார்.
2.1.8. சமூக மஞ்சரி
இவ்விதழ் பற்றிய விவரம் தெரியவில்லை. இவ்விதழில் 1960 ல் "முதிர்ந்தோர் கல்வியின் விரிவு' என்ற கட்டுரையைத் தனிநாயக
6) ந அடிகள் எழுதியுள்ளார்.

தனிநாயக அடிகளும் இதழ்களும் 7.
2.1.9. கலைப் பூங்கா
இவ்விதழ், இலங்கை இலக்கியக் கழகம் (CeylonLiterary Academy) வெளியிட்ட அரையாண்டு இதழ் ஆகும். இதில் தனிநாயக அடிகள் ‘திருக்குறளும் கிரேக்க ஒழுக்க இயலும்’ என்னும் கட்டுரை, எழுதியுள்ளார். தமிழ் கிரேக்க அறக்கொள்கைகள் ஒப்பாய்வு (Tamil and Greek Ethics Compared) 6T6ip g,656,otul (0.5, T(6551616Tg5Ts முனைவர் வே. அந்தனி ஜான் அழகரசன் (ப.132) குறித்துள்ளார்.
2.1.10. தமிழ் நேசன்
மலேசிய நாளிதழ் “தமிழ்நேசன்’ தனிநாயக அடிகளின் படைப்புகளுக்கு அவ்வப்போது இடங்கொடுத்து வந்தது. மலேசியத் தமிழ் எழுத்தாளர்சங்கத்தில் அவர் ஆற்றிய ‘மலேசியாவின் தமிழ் எழுத்தாளரும் அவர்களின் பணியும்’ என்னும் சொற்பொழிவு முழுவதையும் இவ்விதழ் 9.6.1963 அன்று வெளியிட்டது. உலகத் தமிழ் மாநாடு பற்றிய 'தமிழ்த் துறைகளின் உலகக் கருத்தவை' என்ற தனிநாயக அடிகளின் கட்டுரையைக் கருத்தரங்கச் சிறப்பு மலரில் இவ்விதழ் 16.4.1966 இல் வெளியிட்டது. மலேசியாவில் தனிநாயக அடிகள் நடத்திய முதல் உலகத்தமிழ் மாநாட்டுக்கு இவ்விதழ் மிகப்பெரிய தொகையை மாநாட்டு நிதியாக அளித்தது.
2.1.1. ஈழநாடு
இவ்விதழில் 1971 இல் ‘தமிழ் மொழியின் வேர் இயல்’ (Tamil Etymology) என்னும் கட்டுரையைத் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
2.1.12. பாதுகாவலன்
இலங்கையில் பிலிப்பையா என்பவரால் 1876 இல் மாதமிரு முறை இதழாகத் தொடங்கப்பட்ட "கத்தோலிக்கப் பாதுகாவலன்' என்ற இதழ் 1877 இல் வார இதழ் ஆகியது. தனிநாயக அடிகள் கத்தோலிக்க வார இதழாகிய பாதுகாவலனில் இலங்கையில் இருந்தபோது கட்டுரைகள் எழுதிவந்தார். அவர் 22.12.1973 இதழில் ‘புலவர் வேதநாயகம் பிள்ளை' என்ற ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
2.1.13. வீரகேசரி
இலங்கை ‘வீரகேசரி’ நாளிதழின் (5.10.1980) வார வெளியீட்டில், தனிநாயக அடிகள் இறந்தபின், அவருடைய வீரமாமுனிவர் தமிழாராய்ச்சிக்குப் பங்களிப்பு செய்த ஐரோப்பியரில் தலைமகன்' என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.

Page 11
8 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி 2.1.14. கல்கி தீபாவளி மலர்
சென்னையிலிருந்து வெளிவரும் கல்கி வார இதழ் வெளியிடும் தீபாவளி மலரில் 1956,1958 ஆம் ஆண்டுகளில் தனிநாயக அடிகளின் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
2.115. உலகத்தமிழ் மாநாட்டு மலர்
இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் தனிநாயக அடிகள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரை வந்துள்ளது. ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டு மலரில் தனிநாயக அடிகளின் மறைவுக்குப்பின் அவர் கட்டுரை வந்துள்ளது.
22. ஆங்கில இதழ்கள்
2.2.1. “umo q-á0) sei encheiro (Bottled Sun Shine)
இவ்விதழ், யாழ்ப்பாணத்தில் உள்ள தூய பத்திரிசியார் கல்லூரி (St. Patricks College)யின் மாத இதழ். இவ்விதழின் ஆசிரியராக, இக்கல்லூரியில் பள்ளிப் படிப்பு படிக்கும்பொழுது (1923-1930) தனிநாயக அடிகள் பணியாற்றினார். இவ்விதழில் பணியேற்ற பொழுது அவரது அகவை பதினைந்து.
222. 'தி மெசஞ்சர் ஆஃப் தி சேகரட் ஹார்ட் ஃபார் சிலான்"
(The Messenger of the Sacred Heart for Ceylon)
கொழும்பு சென்று தூய பெர்னார்ட் பெரிய குருத்துவக் கல்லூரியில் மெய்மையியல் படிக்கும்பொழுது (1931-1934), கொழும்பில் வெளியாகிய இவ்விதழில் தனிநாயக அடிகள் "மேக்ஸ் பெம்பர்டன்’ என்ற புனைபெயரில் எழுதியுள்ளார்; அக்டோபர் 1933 முதல் மே 1935 இதழ் வரை இவர் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. இந்தியாவில் வடக்கன் குளத்தில் இருந்தபொழுது தனிநாயக அடிகள் இலங்கை சென்று, தம் ஆசிரியர் வண. லோங் அடிகள் நினைவு நாளில் ஆற்றிய சொற்பொழிவு இவ்விதழில் 1945 இல் வெளிவந்துள்ளது.
2.23. SigisGssrofusir (The Anthonian)
ஊர்க்காவல்துறை தூய அந்தோணியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு வரை (1920-1922) தனிநாயக அடிகள் படித்தார். அவர் 1942-194 இல் தூய அந்தோணியார் பள்ளியின் "தி அந்தோனியன்’ என்ற இதழில், தாம் பிறந்து வளர்ந்து ஓடி விளையாடிப் படித்த மண்ணை மறக்காமல், ‘ஊர்க்காவல் துறைக் கவிதை” (Poetry of Kayts) என்ற கவின்த எழுதியுள்ளார்.

தனிநாயக அடிகளும் இதழ்களும் 9
224. ‘தமிழ் கல்சர்"
இவ்விதழைத் தனிநாயக அடிகள் தூத்துக்குடியில் இருந்த பொழுது 1952 முதல் 1966 முடிய முதன்மை ஆசிரியராக இருந்து நடத்தினார். இவ்விதழ் காலாண்டு இதழ் ஆகும். தனிநாயக அடிகள் இலங்கையில் கொழும்பில் 1952 இல் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தைத் (Academy of Tamil Culture) GgTLћ867пћ. Glasitemsотuild 1954 Gdo guépd &686) Loairplb (Academy of Tamil Culture) Spoilattir. g60TTá) “1961 ஆம் ஆண்டு வாக்கில் தமிழ்ப் பண்பாட்டுக் கழகம் (Academy of Tamil Culture) ஒன்று சென்னையில் நிறுவித் தமிழ்ப் பண்பாடு Tamil Culture) என்ற அரையாண்டு இதழை வெளியிட ஏற்பாடு செய்தார்” என்று வ.அய். சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார் (அமுத.ப.VI) தனிநாயக அடிகளின் தமிழ் இலக்கியக் கழகப் பொறுப்பில் 1952 முதல் வெளிவந்து கொண்டிருந்த இவ்விதழ் 1955 முதல் தமிழ்க் கலைமன்ற இதழாக வெளிவரலாயிற்று. 1960,1962,1965 ஆகிய ஆண்டுகளில் இதழ் வெளிவரவில்லை. 1966 இல் முதன்மை ஆசிரியராகத் தனிநாயக அடிகள் இருப்பினும் இலயோலா கல்லூரியைச் சேர்ந்த அருள்திரு இன்னாசி இருதய அடிகளை மேலாண்மை ஆசிரியராகக் கொண்டு இவ்விதழ் வெளிவந்தது. பின் இதழ் வெளிவரவில்லை.
225. "ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்”
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் (IATR) தொடங்கப்பட்ட பொழுது (71.1964), தமிழ் ஆராய்ச்சி பற்றிய தமிழ் கல்சர்’ (Tamil Culture) என்னும் காலாண்டு இதழ் வழியாகவும் செய்தி மடல் (News Letter) வழியாகவும் எழுதவேண்டும் என்று தனிநாயக அடிகளும் பிற அறிஞர்களும் முடிவு செய்தனர் வே.அ.ப.67). ‘தமிழ் கல்சர்’ இதழ் நின்று போனதால் சென்னையில் 1968 இல் நடந்த இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின் பொழுது, உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (IATR) சார்பில் ஆங்கிலத்தில் அரையாண்டு இதழ் தனிநாயக அடிகளை ஆசிரியராகக் கொண்டு தொடங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது (ஜே112). இதன்படி 1969 ஏப்பிரலில் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' ஆங்கில அரையாண்டு இதழ் வெளிவந்தது. நான்காம் இதழில் (அக்டோபர், 1970) இனி இவ்விதழ் புதிதாகத் தொடங்கப்பட உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடாக வரும் என்று தனிநாயக அடிகள் அறிவித்துள்ளார் (ஜே22V). உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மறுபடி 1972 செப்டம்பரில்தான் முதல் இதழை வெளியிட்டது. அதில் வெளிவந்த 'தொல்காப்பியம்' பற்றிய கட்டுரை (Tolkappiam - The Earliest Record) தனிநாயக அடிகள் இவ்விதழில் கடைசியாக எழுதிய கட்டுரை.

Page 12
10
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
23.0. பிற இதழ்கள்
அவ்வப்போது தனிநாயக அடிகள் ஆண்டு மலர், நினைவு
மலர், ஆய்வுக் கழகங்களின் இதழ்கள் ஆகியவற்றில் எழுதியுள்ளார். கட்டுரைகள் பற்றிய விவரம் பின்னிணைப்பில் உள்ளது. இதழ் பற்றிய விவரம் சுருக்கமாக வருமாறு:
முதலிய
“Su GSLs' (New Leader) '66żgń3,36 jęyńL'Giu” (Liturgical Arts) “5 6pLibGio gl' auri65r'(The Times of Ceylon) “up6avsTL6ăT 6So ibGho” (Malayan Times) “பெடகாக்கிகா ஹிஸ்டாரிகா' (PaedagogicaHistorica)
"FF6iuLfrait psf.FTair' (Eastern Horizon)
இதழ்களிலும்,
3aoré65)5, Gg55ui 566sili; 3p5ib (National Education Soci ety of Ceylon)
இலங்கை வரலாற்றியல் சமூகவியல் ஆய்வு (Historical and Social Studies, Ceylon)
கீழை இயலாளர் பன்னாட்டுக் கழகம் (International Congress of Orientalists)
சென்னைப் பல்கலைக் கழகக் கீழை இயல் ஆய்வு (Oriental Research of the University of Madras)
Gabait g,5u gival, guTub 3p3, b (South East Asian Studies, Sian Society)
LDGasud Saop guja).TGTs sp35th (The Malaysian Society of Orientalists)
இந்திய, ஈரானிய இந்தோ-ஐரோப்பிய ஆய்வு (Indian, Iranian and Indo-European Studies)
9DJ F Fuuji 35p5b, goloÈJ6D35 (Royal Asiatic Socity, Sri Lanka)

தனிநாயக அடிகளும் இதழ்களும் 11
ஆகிய அமைப்புகளின் இதழ்கள் அல்லது சிறப்பு வெளியீடுகள் அல்லது ஆய்வு மாநாட்டு வெளியீடுகள் ஆகியவற்றிலும் "கத்தோலிக் கிறிஸ்துமஸ் g696) ido' (Catholic Christmas Annual) 6Tairgjib 965TG ggsfleyb D 6.5i, 25LÓp Lost 5s' G 55p33d GasT65)al (Proceedings of the Conference Seminar) களிலும் தனிநாயக அடிகள் கட்டுரைகள் எழுதியுள்ளார். ‘ஸ்டிரெய்ட் டைம்ஸ்’ (StraitTimes) இண்டியன் எக்ஸ்பிரஸ்' (Indian ExpreSS) முதலிய இதழ்களில் நேர்காணலுக்கு விடையளித்துள்ளார்.
30. உலகத் தமிழ் மாநாட்டு மலரில் தனிநாயக அடிகள் கட்டுரை எழுதியுள்ளார். உலகத் தமிழ் மாநாட்டு நிகழ்ச்சிக் கோவை, கீழை இயலாளர் மலேசியக் கழகக் கருத்தரங்கக் கோவை ஆகியவற்றை இணைப் பதிப்பாசிரியராக இருந்து பதிப்பித்துள்ளார். ‘பெனுலிஸ்’ என்ற மலேசிய இதழில் மலாய் மொழியில் எழுதியுள்ளார்.
* 本 来 率率 本 冰 水

Page 13
2. இதழ் வெளியீடும் உள்ளடக்கமும்
தனிநாயக அடிகள் நடத்தி ஆசிரியராக இருந்து வெளிவந்த தமிழாய்வு பற்றிய பன்னாட்டு இதழ்கள் ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' என்னும் இரண்டின் வெளியீடும் உள்ளடக்கமும் இதழியல் நோக்கில் இவண் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன. இவை ஆங்கில மொழியில் வந்த இதழ்கள், ‘தமிழ் கல்சர்’ இதழில் அரிதாக ஒன்பது தமிழ்க் கட்டுரைகள் வந்துள்ளன. இதழ் வெளியிடப்பட்ட காலம், காலமுறை, எண்ணிக்கை, விலை, அமைப்பு வெளியிடப்பட்ட இடம், ஆசிரியர் குழு, வெளியிடும் பொறுப்பேற்றிருந்த அமைப்பு ஆகியவை பற்றிய விளக்கம் வெளியீடு என்றும், இதழில் வெளிவந்த ஆசிரியவுரைகள் (Editiorials), கட்டுரைகள் முதலிய படைப்புகள், அவற்றின் ஆய்வுப் பரப்பளவு செய்திப் பகுதி, அவற்றின் தன்மை, வாசகர் மடல்கள், நூல் திறனாய்வு, விளம்பரம் முதலிய பிற பகுதிகள் உள்ளடக்கம் என்றும் காணலாம்.
1. “தமிழ் கல்சர்
11 வெளியீடு
1.1.1. ‘தமிழ் கல்சர்’ இதழ் 1952 முதல் 1966 முடிய 16 ஆண்டு காலக்கட்டத்தில் வெளிவந்துள்ளது. இடையில் 1960, 1962, 1965 ஆகிய ஆண்டுகளுக்குரிய இதழ்கள் வெளிவரவில்லை. எனவே, மொத்தம் 12 ஆண்டுகள் இவ்விதழ் வெளி வந்துள்ளது. இவ்விதழ் காலாண்டு இதழ். இவ்விதழ் 1952 பிப்பிரவரியில் வெளிவந்தது. இரண்டாவது இதழ் ஜூன் மாதமும், மூன்றாவது, நான்காவது இணைந்து ஒரே இதழாக செப்டம்பரிலும் வந்துள்ளன. 1953, 1954 ஆம் ஆண்டுகளிலும் இவ்வாறே மூன்று பகுதிகளாக வந்துள்ளன. 1954 ஜனவரி 2 இதழில் “ஜனவரி, ஜூன், செப்டம்பர் மாதங்களின் இறுதி வாரத்தில் முறையே இவ்விதழின் எண் 1, எண் 2, எண் 3 & 4 இணைந்த இதழ் ஆகியன வெளிவரும் என்ற அறிவிப்பு உள்ளது. 1955 முதல் இக்காலாண்டு இதழ் ஜனவரிமார்ச்சு, ஏப்பிரலில்-ஜூன், ஜூலை-செப்டம்பர், அக்டோபர்-திசம்பர் ஆகிய நான்கு காலப் பகுதிகளுக்கு நான்கு இதழாக (பகுதியாக) வெளிவந்தது. 1966 இல் 23 எண்கள் இணைத்து ஒரே இதழாக வெளியிடப்பட்டுள்ளது.
1.1.2. வெளியிடப்பட்ட 12 ஆண்டுகளுக்கு மொத்தம் 48 இதழ்கள் வந்திருக்க வேண்டும்; ஆனால் முதல் மூன்று ஆண்டுகளும் இறுதி ஓராண்டிலும் இரண்டு காலாண்டுக்குரிய எண்கள்/இதழ்கள் இணைந்து ஒரே இதழாக வந்துள்ளன. எனவே, மொத்தம் 44 எண்கள்/இதழ்கள் வந்துள்ளன. இதழின் அளவு 24.5 செ.மீ x 16.5 செ.மீ ஆகும். மொத்த பக்கங்கள் 4522 ஆகும்.

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் 13
113. இவ்விதழின் விலை இதழ் தொடங்கிய 1952 ஆம் ஆண்டில்:
ஆண்டுக்கு தனி இதழ்
இந்தியா ரூ.5 1,8 இலங்கை --- -- பர்மா ! ----- -----
LLLLaLaLGGLLLLLL SS SS S SS SS SS SS SSSA யுகே ஷி 8 ----- யு.எஸ்.ஏ LT6)f 1.50 ------
1956 ஜனவரி-மார்ச்’ இதழ் முதல்:
ஆண்டுக்கு தனி இதழ்
இந்தியா இலங்கை e.7 2.- LuñToT 1 ------ - - -
LGLczzLLLLG S S SS SSSSSSS S SSSSS யுகே ஷி 12/6 4.- யு.எஸ்.ஏ டாலர் 2.00 0.75
1961 ஜூலை-செப்டம்பர்’ இதழ் முதல்:
ஆண்டுக்கு தனி இதழ்
இந்தியா இலங்கை ரூ.10 3.- UfromT , ------ I ----- OG 10 வெள்ளி 3.- யுகே ஷி 15 6. யு.எஸ்.ஏ. LLITraoñT 2.50 0.75

Page 14
14 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
1965 “ஜனவரி-மார்ச்சு' இதழ் முதல்:
ஆண்டுக்கு தனி இதழ்
இந்தியா ரூ.10 as இலங்கை ரூ.10 ---- LuñTLDT கியாத் 10 ----- tro G36a35;huj Tཁ་ཁ་ཡ- - - ཁ་ག་ཁཁཁཁ་ சிங்கப்பூர் 10 வெள்ளி ----- ஐரோப்பா, ஆசியா
யுகே, உட்பட பவு 1 -- யு.எஸ்.ஏ. பிற நாடுகள் டாலர் 5- ------
11.4 இதழின் மேலட்டை எப்போதும் வெளிர் மஞ்சள் நிறத்தில் அமைந்தது. மேலட்டையின் இடதுபுறம் ஆண்டு எண்ணிக்கையைத் தொகுதி (Volume) என்றும் காலாண்டுக் கணக்கின் எண்ணிக்கையை எண் (Number) என்றும் குறித்து ஒவ்வொரு இதழிலும் தொடர் எண் தரப்பட்டது. தொகுதி உரோமன் எண்ணிலும் (I, II), எண் என்பது அரபி எண்ணிலும் (1, 2.) இடப்பட்டன. வலதுபுறம் மாதமும் ஆண்டும் குறிக்கப்பட்டன. வெளிவரும் மாதம் முதலில் குறித்திருந்தது; பின்னர் 1959 முதல், எம்மாதம் தொடங்கி எம்மாதம் முடிய உள்ள காலப்பகுதிக்கான இதழ் என்பது குறிக்கப்படலாயிற்று. ‘தமிழ் கல்சர் என்ற பெயர் ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் (TAMIL CULTURE) 0.7 செ.மீ உயர அளவில் தரப்பட்டு வந்தது. அதன் கீழே 5L65ugdis.T60T 3, TalsTGTG gyp’ (A Quarterly Review dedicated to the Study of Tamiliana) 6Taipi 9)L'IL (6 6ubgg. 1954 93) சென்னையில் தமிழ்க்கலை மன்றம் தொடங்கி அதன் இதழாக வெளிவரத் தொடங்கியதும் பெயருக்கு மேலே வட்ட வடிவமான முத்திரையும், கீழே ‘தமிழ்க்கலை மன்றத்தின் இதழ்’ (Journal of the Academy of Tamil Culture) என்றும் தரப்பட்டது. வட்ட முத்திரையில் விற்கொடி, புலிக்கொடி, மீன்கொடி ஆகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் கொடிகளும் கீழே தமிழ்க்கலை மன்றம் என்று தமிழிலும் 9565, SGp gris Salisab (The Academy of Tamil Culture) g(Uá(5ub. இவற்றின் கீழே பொருளடக்கம் (Contents) தரப்பட்டிருக்கும். இடது புறம் தலைப்பும், வலதுபுறம் பக்க எண்ணும் தரப்பட்டன. அடியில் இடதுபுறம் உரிமைப் பதிவுடையது என்பதும், வலதுபுறம் ஆண்டுக் கட்டணமும் குறிக்கப்பட்டிருக்கும். மேலட்டையின் இந்த அமைப்பும் அச்சும் அப்படியே உள்ளே சாதாரணத் தாளில் முதற் பக்கமாக அமையும். பின் அட்டையில் இதழின் கட்டண விவரங்கள், வெளியிடுவோர், வெளியிட்ட முகவரி, அச்சு செய்த அச்சக முகவரி ஆகியன இருக்கும். முன்னட்டையின் உள்பக்கத்தில் 1955 முதல் ஆசிரியர்

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் 15
குழு விவரமும், தமிழ்க்கலைமன்றத் தலைவர், துணைத் தலைவர்கள், செயலர்கள், பொருளர்கள் விவரமும் குறிக்கப்பட்டிருக்கும். இறுதிப் பக்கத்தில் தமிழ் எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதும் முறையும் (Transliteration) தனி இணைப்புத்தாளில் தமிழ் எழுத்துக்களுக்கு இணையான ஆங்கில எழுத்துகளும் அளிக்கப்பட்டிருக்கும். இவ்விதழின் பதிவெண் 8253/57.
115. தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாய் 52, புதிய கிராமம், தூத்துக்குடி என்னும் முகவரியிலிருந்து 1952 இல் இவ்விதழ் தனிநாயக அடிகளால் வெளியிடப்பட்டது. மதுரை டி நொபிலி அச்சகத்தில் இவ்விதழ் அச்சாகியது. இலங்கையில் தனிநாயக அடிகள் பணியாற்றச் சென்றதால் அங்குக் கொழும்பு புத்தக நிலையம், 20, பார்சன் சாலை, கொழும்பு - என்ற முகவரியில் இவ்விதழ் கிடைக்கும்’ என்று அறிவிப்பு இவ்விதழில் வெளிவந்தது. 1955 இல் தமிழ்க்கலை மன்றத்தின் சார்பாய் இவ்விதழ் வெளிவரத்தொடங்கியதும், முனைவர் மு.வரதராசன் அவர்களை வெளியீட்டாளராகக் கொண்டு ‘தமிழகம்’, சேற்றுப்பட்டு, சென்னை 31. என்ற முகவரியிலிருந்து 'சாந்தி அச்சகம், சென்னை-1 இல் அச்சடிக்கப்பட்டு வெளிவந்தது. 1955 ஜூலை-செப்டம்பர்’ இதழ் (2, 3) முதல் "ஜூபிடர் அச்சகம், சென்னை-18 இல் அச்சிடப்பட்டது. 1957 முதல் 5-ஆ, அய்யாவு நாயுடு தெரு, சென்னை-30 இலிருந்து வெளிவந்தது. 1957 'அக்டோபர்-திசம்பர்’ இதழில் (4, 4) இலங்கையில் கொழும்பு புத்தக நிலையத்திலிருந்து மாற்றப்பட்டுக் கண்டியில் கலைவாணி புத்தக நிலையத்தில் கிடைக்கும்’ என்று அறிவிப்பு வந்துள்ளது. 1958 முதல் புதிய செயலாளர் திரு சி. அமிர்தகணேசன் அவர்களால், 13, கிளமென் சாலை, சென்னை-7 இலிருந்து வெளியிடப்பட்டது. அச்சகம் மாற்றி அவர்கள் புதிய எழுத்துகள் வாங்கிய பிறகு அச்சானதால் 1962 இல் இதழ் வெளிவராமல் 1962 நவம்பரில் தான் இதழ் அச்சாயிற்று; எனவே தொகுதி, எண், காலாண்டு எண்ணிக்கை முறையாக வர வேண்டும் என்று 1963 ஜனவரி-மார்ச்சு’ என்று குறிக்கப்பட்டது. 1963, 1964 ஆண்டுகளில் திரு சிஅமிர்தகணேசன் அவர்களால் ‘13/1இ, ஜெர்மியா சாலை, சென்னை - 71 இலிருந்து திருச்சிராப்பள்ளி புனித வளனார் அச்சுப் பயிற்சிப் பள்ளியில் அச்சாகி வெளிவந்தது. 1966 இல் மேலாண்மை ஆசிரியராகப் பொறுப்பேற்ற இலயோலா கல்லூரிப் பேராசிரியர் இன்னாசி இருதயம் அடிகளால் இலயோலாக் கல்லூரி, சென்னை-34 இலிருந்து "ஜி.எஸ் அச்சகம், சென்னை -34 இல் அச்சிடப்பட்டு வெளிவந்தது.
116. ‘தமிழ் கல்சர்’ இதழ் தனிநாயக அடிகளை முதன்மை ஆசிரியராகக் கொண்டு 1952 முதல் 1966 முடிய வெளிவந்தது. 1955 முதல் தமிழ்க்கலை மன்றத்தின் ஏடாக வெளிவந்ததால் தனிநாயக அடிகளை முதன்மை ஆசிரியராகக் கொண்டு ஆசிரியர்குழு அமைக்கப்பட்டது. இக்குழு 10 முதல் 15 பேர் வரை அவ்வப்போது கொண்டு செயற்பட்டது.

Page 15
16 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
இவர்களோடு தமிழ்க்கலை மன்றத்தின் பொறுப்பில் உள்ளவர்கள் புறநிலை ஆளும் உறுப்பினர்களாக (Ex-OfficioMembers) இருந்தனர்.
வர்களில் குறிக்கத் தக்கவர்கள் வருமாறு;-
@
முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் முனைவர் எஸ்.ஜி. மணவாள இராமானுஜம்
முனைவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை
முனைவர் வ.அய். சுப்பிரமணியம்
முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளை முனைவர் கே.கே. பிள்ளை
முனைவர் மு.வரதராசன்
திரு அ.சுப்பையா திரு கருமுத்து தியாகராச செட்டியார் திரு வி.எஸ். தியாகராச முதலியார் திரு சி.அமிர்தகணேச முதலியார் திரு புலவர் மே.வி. வேணுகோபாலப் பிள்ளை
(1961 ஜூலை-செப்டம்பர்’ இதழ் முதல்) திரு கமில்சுவலபில்
திரு அ.மு. பரமசிவானந்தம் (1963 ஜனவரி-மார்ச்சு' இதழ் முதல்)
9.5. - முன்னாள்
துணைவேந்தர், அட.கி. - மாநிலக்
கல்லூரி, சென்னை. - கேரளப்
பல்கலைக்
கழகம், திருவனந்தபுரம். - செ.ப.க. - வரலாற்றுத்துறை
GoF. u.s. - பச்சையப்பன்
கல்லூரி - சென்னை
- மதுரை - திருவாரூர் - சென்னை
- சென்னை - சார்லஸ் பல்கலைக் கழகம், பிரேகு செக்கோஸ்லோவாகியா - பச்சையப்பன்
கல்லூரி
1961 ஜனவரி-மார்ச்சு' இதழ் முதல் அ. சுப்பையா இணை ஆசிரியராகக்
குறிக்கப்பட்டுள்ளார்.
1964 ஜனவரி-மார்ச்’ இதழ் முதல் ‘அக்டோபர்-திசம்பர்’ இதழ் முடிய மலாய்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.சிங்காரவேலு உதவி ஆசிரியராகக் குறிக்கப்பட்டுள்ளார். தமிழ்க்கலை மன்றத்தின் மதிப்பு (கெளரவ)ச் செயலாளராகப் பொறுப்பேற்ற இலயோலா கல்லூரிப்

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் 仍
பேராசிரியர் இன்னாசி இருதயம்அடிகள் மேலாண்மை ஆசிரியராக 1966
ஜனவரி-மார்ச்’ இதழ் முதல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
117. தமிழ் இலக்கியக் கழகத்தின் சார்பாய் 1952 முதல் 1954 வரைத் ‘தமிழ் கல்சர்’ இதழ் தனிநாயக அடிகளின் முழுப் பொறுப்பில் வெளிவந்தது. பின்னர் 1955 முதல் தமிழ்க்கலை மன்றத்தின் ஏடாக வெளிவரலாயிற்று. 1966 ஆம் ஆண்டுடன் இதழ் நின்று போயிற்று.
12. "தமிழ் கல்சர்” உள்ளடக்கம்
12.1 இதழாசிரியர் (Editor) என்று குறிக்கப்பட்டு மொத்தம் ஏழு பகுதிகள் வந்ததுள்ளன. இவற்றில் நான்கு கட்டுரைகள் 1952 இல் முதல் இதழில் வெளிவந்துள்ள ஆசிரியவுரை ‘இக்காலாண்டு ஆய்விதழ்’ (This Quarterty Review) என்ற தலைப்பில் வந்துள்ளது. இப்பகுதி இவ்விதழின் தேவை, பண்பாடு ஆகியன பற்றி விரிவாகக் கூறுகிறது. 1957 ஜனவரிமார்ச்’ இதழில் (4, 10 ஆசிரியவுரையாக, ஆறாம் ஆண்டு வெளியீட்டில் இதழ் அடியெடுத்து வைப்பது தமிழ் மாநிலம் அமைந்த வரலாற்றுச் சிறப்புடைய நிகழ்ச்சியோடு இணைந்து வருகிறது: இலங்கையில் தமிழுக்கும் மனித உரிமைக்கும் இடமளிக்க வேண்டும்; இதழ் உறுப்பினர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி, இரா.பி. சேதுபிள்ளை சிறப்பு முனைவர் பெற்றமைக்குப் பாராட்டு’ ஆகிய கருத்துக்கள் கூறப்படுகின்றன. 1957 ஏப்ரல்-ஜூன்’ இதழில் (6, 2, 85) ஆசிரியவுரையாக, அடுத்து வரவுள்ள பாராட்டு (சிறப்பு) இதழ்களைப் பற்றிய செய்தி உள்ளது. ‘கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதியும் சென்னை பம்பாய் கல்கத்தா பல்கலைக் கழகங்கள் அமைக்கப்பட்டும் நூறாண்டுகள் ஆகியுள்ளன; சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் இரா.பி. சேதுப்பிள்ளை சிறப்பு முனைவர் பட்டம் பெறுவது மிகப் பொருத்தமும் சிறப்புமாகும். எனவே, *ஜூலை-செப்டம்பர்’ இதழ் இரா.பி. சேதுப்பிள்ளை பாராட்டு இதழாகவும், "அக்டோபர்-திசம்பர்’ இதழ் கால்டுவெல் நூற்றாண்டு விழா இதழாகவும் வெளிவரும் என்று இந்த ஆசிரியவுரை கூறுகிறது. ஆசிரியர் அல்லது ஆசிரியவுரை என்று குறிப்பிடாமல் முதற் பக்கமாக 1955 'getarf-Lorrid' g5di) (4, 1, 0 'gblocity gap' (This Journal of the Academy) என்ற தலைப்பில் வந்துள்ள பகுதியும் ஆசிரியவுரைத்தன்மை வாய்ந்ததே. நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அவ்விதழ் இனித் தமிழ்க்கலை மன்றத்தின் இதழாக வெளிவரும் என்பதை இந்தப் பகுதி கூறுகிறது.
122 தமிழ் கல்சர் வெளிவந்த 12 ஆண்டுகளில் அதன் 44 இதழ்களில் மொத்தம் 276 கட்டுரைகள் வந்துள்ளன. இவற்றில் 267 ஆங்கிலத்திலும் 9 தமிழிலும் உள்ளன. இவற்றில் வரலாறு 55, கலை பண்பாடு 27, சமயம் 25, மொழியியல் 43, இலக்கியம் தமிழியல் தொடர்பான பொது ஆய்வு 56 வெளிநாட்டுத் தொடர்பானவை 2, புலவர்கள் அறிஞர்கள்

Page 16
18 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
பற்றி 30, மொழி பெயர்ப்பு 6, தற்கால இலக்கியம் 8, பொது-15 உள்ளன. இவை 120 அறிஞர்கள் எழுதியவை. இவர்களில் தமிழ் அறிஞர்கள் 78 பேர்; வெளிநாட்டு அறிஞர்கள் 42 பேர்; வெளிநாட்டு அறிஞர்களில் பிற மொழியாளர் 18 பேர். இவர்களுள் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் இலங்கை), இராபர்ட் கால்டுவெல் (அயர்லாந்து) ஆகியோர் கட்டுரைகள் அவர்களது மறைவுக்குப் பின் எடுத்து வெளியிடப்பட்டவை. இவ்விதழில் எழுதியோருள் தனிநாயக அடிகளும் ஆசிரியர் குழுவில் இருந்தவர்களும்,
திரு ஜே.எம். சோமசுந்தரம்பிள்ளை (பதிப்புத்துறை, அ.ப.க) திரு ஈ.சா. விசுவநாதன் (மலாய்ப் பல்கலைக் கழகம்) முனைவர் என். சுப்பிரமணியன் (வரலாற்றுத் துறை, செ.ப.க) திரு சி.ஆர். மயிலேறு (ஆங்கிலத் துறை, அ.ப.க) முதலியோரும்
முனைவர் எம்.பி. எமனோ (கலிபோர்னியா) முனைவர் ஜே.ஆர். மார் (இலண்டன்) முனைவர் ழான்ஃபீலியோசா (பிரான்சு) முனைவர் கமில் சுவலபில் (செக்கோஸ்லோவாகியா) முதலிய வெளிநாட்டினரும் குறிக்கத்தக்கவர் ஆவர்.
123. செய்திப் பகுதிக்குச் செய்திகள் துணுக்குகள் (News and Notes) அல்லது தமிழியல் (Tamiliana) என்று தலைப்பிடப்பட்டது. உலகம் முழுதும் தமிழ் தொடர்பாக நடக்கும் தமிழ் வளர்ச்சிப் பணிகளைத் தெரிந்தெடுத்துத் தனிநாயக அடிகள் வெளியிட்டார். வரலாறு, கல்வெட்டு, பண்பாடு, நாகரிகம், கலைகள், கோயில்கள், இலக்கியம், திறனாய்வு, மொழியியல், மொழிபெயர்ப்பு, கருத்தரங்குகள், தமிழாய்வுகள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்க்கல்வி மொழி என்னும் கருத்துகள், பிற நாடுகளில் பல்கலைக் கழகங்களில் புதியதாகத் தமிழ்த்துறை அல்லது திராவிடவியல் துறை அல்லது இந்தியத் துறை தொடங்கப்பட்டமை, அவற்றின் செயல்பாடு முதலிய பல செய்திகள் மிகச் சுருக்கமாக இப் பகுதியில் வெளிவந்துள்ளன. செய்தி ஏதேனும் இதழிலிருந்து எடுத்தாளப் பெற்றதாக இருந்தால் எந்த இதழில் எப்போது வந்தது என்ற விவரம் சரிவரத் தரப்படவில்லை. மிக அரிதான நூல்களில் அல்லது இதழ்களில் உள்ள தமிழ் தொடர்பான சிறந்த கருத்துக்களை அப்படியே எடுத்துத் தருவதும் உண்டு (10, 2, 73) நூல் திறனாய்வுப் பகுதியும் இடம் பெற்றது; இப்பகுதியில் பிற இதழ்களில் வந்த நூல் திறனாய்வு கூட எடுத்துத் தரப்பட்டிருக்கிறது (10, 2, 10).
12.4. வாசகர் மடல்கள் பல நாடுகளிலிருந்தும் இவ்விதழுக்கு வந்தன. அவற்றின் இன்றியமையாத பகுதிகளைத் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்சர்’ இதழில் வெளியிட்டார், தொடக்கக்கால இதழ்கள் தங்களுக்கென்று செய்தியாளர்கள் (நிருபர்கள்) பெற்றிருக்கவில்லையாதலால் வாசகச் செய்தியாளர்களையே பெரிதும் நம்பியிருந்தன.

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் * 19
இக்காலத்தும் தனித்த செய்தியாளர்களைத் தங்களுக்கெனப் பெற்றிராத இதழ்களுக்குத் தகுதிவாய்ந்த வாசகர்களின் பொருள் பொதிந்த மடல்கள்மிகப் பயனுடையன. செய்திப் பகுதியில், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்தபோது முனைவர் எஸ்.ஜி. மணவாள இராமானுஜம் பூம்புகார் ஆழ் கடல் ஆய்வு செய்ய வேண்டுவது தொடர்பாகத் தொல்பொருள் துறையினர், இந்திய அரசு அதிகாரிகள் ஆகியோருக்கு எழுதிய மடல்கள் வந்ததுள்ளன. (1, 1, 8488). இதே போல் இலங்கைச் செய்தியாளர் கே. கணேஷ் என்பவருக்கு *யுனெஸ்கோ’விலிருந்து, திருக்குறளை மொழிபெயர்க்க இந்திய அரசோ இலங்கை அரசோ தங்கள் மடல்களுக்கு எவ்வித விடையும்தரவில்லை என்று எழுதிய மடல் வந்துள்ளது. (1, 3 & 4, 323). இலண்டன், உரோம், சிங்கப்பூர், மலாயா, செக்கோஸ்லோவாகியா, பாரீஸ், கனடா, வாஷிங்டன், வியன்னா, கலிபோர்னியா, அலபாமா, மொரீஷியஸ், இலங்கை முதலிய வெளிநாடுகளிலிருந்தும் இந்தியாவுக்குள்ளிருந்தும் வரும் மடல்கள் இடம் பெற்றன. ஆனால் 1952-1954 ஆண்டுகளில் இருந்த வாசகர் பகுதி (Readers Forum) 1955 முதல் இல்லை. மிகவும் குறிக்கத்தக்கவர்களின் ஓரிரு மடல்களின் சுருக்கம் மட்டும் எப்போதாவது இடம் பெற்றது.
125. குறிக்கத்தக்க மேற்கோள்கள் (Quotable Quotes) என்ற தலைப்பிட்டு மிகப் புகழ் வாய்ந்த தமிழ் ஆய்வியல் அறிஞர்களின் மிகச்சிறந்த சொற்றொடர்களை இதழ்தோறும் தனிநாயக அடிகள் தந்துள்ளார்.
*தமிழ்மொழி தன்னுடைய செய்யுள் வடிவில் கிரேக்கத்தை விட மிகுதியான மெருகு மற்றும் பொருந்திய தன்மை கொண்டும் மொழி, வடிவம் இரண்டிலும் இலத்தீனைவிடத் தான் எடுத்துக் கொண்ட கலைச் செல்வங்களோடு ஒத்து நிகழ் தன்மை கொண்டும் விளங்குகிறது என்று கூறுவது மிகையன்று. வாழும் மற்ற மொழிகளை விட ஆங்கிலம், ஜெர்மானியம் ஆகியவற்றோடு தமிழ்மொழி தன்னுடைய நிறைவு, வலிமை ஆகியவற்றால் ஒத்துக் காணப்படுகிறது’.
-முனைவர் வின்ஸ்லோ"
என்பது போன்ற பல மேற்கோள்களைத் தொகுத்துத் தந்துள்ளார். இப்பகுதி 1952, 1953 ஆம் ஆண்டு இதழ்களில் மட்டுமே உள்ளது.
* 1,4,14: "It is not perhaps extravagant to say that in its poetic form the Tamil is more polished and exact than the Greek, and both dialects, with its borrowed, treasures, more copious than the Latin. In its fullness and power, it more resembles English and Germanthan any other Living Language"
- Dr. Winslow

Page 17
20 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
12.6. தனிநாயக அடிகள் தம் முழுப்பொறுப்பில் 'தமிழ் கல்சர்’ இதழை வெளியிட்ட காலங்களில் (1952-1954) இதழ் நடத்தத் தேவையான பொருளை (பணத்தை) ஈட்டுவதற்காக வாசகர்களிடமிருந்தும் விளம்பரமளிப்போரிடமிருந்தும் பெறும் இதழியல் முறைப்படி, விளம்பரம் பெற்று வெளியிட்டார். தம் தமிழ் இலக்கியக் கழக நூல் வெளியீடுகளைப் பற்றிய விளம்பரங்களை வெளியிட்டதோடு வணிக நிலையங்கள், திரைப்பட வெளியீட்டகங்கள் ஆகியவற்றின் விளம்பரங்களையும் வெளியிட்டார்.
எஃப். எக்ஸ், பெரீரா சன்ஸ் (ஏற்றுமதி இறக்குமதி)
கொழும்பு, சென்னை, கொல்லம், திருவனந்தபுரம், ஐ.எஸ்.சி. மச்சாடோ, தூத்துக்குடி (பொது வணிகம்,
கடல்வணிகம்) “தமிழ்நாடு” நாளிதழ், மதுரை
ஜி.எம். நிறுவனம் (உந்துகள் விற்பனை) ஹால்டா தட்டச்சுக்கருவி விற்பனையகம், கொழும்பு சிலான் தியேட்டர்ஸ் லிட், (திரைப்பட வெளியீட்டகம்) சினிமாஸ் லிட், சர்க்யூட், (திரைப்பட வெளியீட்டகம்) குணசேனா கம்பெனி (புத்தக விற்பனை)
முதலிய விளம்பரங்கள் 1953, 1954 ஆம் ஆண்டுகளில் வந்துள்ளன. தமிழ்க் கலை மன்ற இதழாக 1955 முதல் தனிநாயக அடிகள் இவ்விதழை வெளியிட்ட போது பொருள் நெருக்கடி தீர்ந்ததால் விளம்பரங்களை நாடவில்லை. ஆயினும் பழனியப்பன் அன் கோ என்னும் புத்தக நிறுவன விளம்பரமும், கலை, பண்பாடு, கீழைநாட்டு இயல், தத்துவம் ஆகியனதொடர்பான ஒரு சில இதழ்களின் விளம்பரங்களும் (5,2214; 8,1,1; 10,3,319; 11,1,117) வெளியிட்டுள்ளார்.
127 நூல் திறனாய்வும் தமிழியல் நூற்பட்டியலும் இனி வெளியிடப் படும் என்று 1965 ஜன-மார் இதழின் இறுதிப் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் நூல்கள் திறனாய்வு இடம் பெறலாயிற்று. தமிழியல் நூற் பட்டியல் ஒருமுறை வெளியிடப்பட்டது. நூல் திறனாய்வு செய்யப்பட்டவை போகப் பிற நூல்கள் வந்தவை என்ற தலைப்பில் பட்டியலிடப்பட்டன. பெரும்பாலும் ஆங்கிலத்தில் வந்த தமிழியல் ஆய்வு நூல்கள் மட்டுமே திறனாய்வு செய்யப்பட்டன.
1.2.8. மிகப்பெரும் தமிழ்த் தொண்டர்களின் மறைவைப் பற்றி, இவ்விதழில் 'வருந்துகிறோம்’ என்னும் பகுதி இரங்கல் (Obituary) பகுதியில் தனியாகவும் சில நேரங்களில் செய்திப் பகுதியிலும் செய்தி வரும்.

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் 2
ஈ.டி இராஜேசுவரி 1.3.195S (Ꮞ,2,22ᎤᎠ ஹீராஸ் பாதிரியார் 14.2.1955 (5,1,98)
ஏ.வி. இராமன் 29.1.1958 (7,1,122) சர். ஜான் மார்ஷல் 18.9.1958 (7.4,407) ஏ.சி. பால் நாடார் 1.6.1960 (9,3,317) ஆதிலட்சுமி ஆஞ்சநேயலு 30.7.1963 (10,1,116) பாரதிதாசன் 23.4.1964 (11,3,291)
ஆகியோரில் பாரதிதாசன் தவிரப் பிறர் கட்டுரைகள் தமிழ் கல்சர்’ இதழில் வந்துள்ளன. தமிழ்க்கலை மன்றத்தின் தலைவராக இருந்து தமிழ் கல்சர்’ இதழுக்கு வழிகாட்டி வந்த இரா.பி. சேதுப்பிள்ளை மறைந்தபோது (25.4.196) அவர் நினைவாகத் தனிநாயக அடிகள் இதழின் முதற்கட்டுரை (9,13,217-229) எழுதினார்.
129 ‘தமிழ் கல்சர்’ இதழில் சிறு செய்திகள், சிறு தலைப்பில் கட்டுரைகள், சில மொழி பெயர்ப்புகள் இடம்பெறுவதுண்டு. புகைப்படங்கள், நில வரைபடங்கள் முதலியனவும் இடம்பெற்றன. ஒரு முறை கல்கத்தா பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் சுனிதி குமார் சட்டர்ஜி தம் கல்விப் பருவத்தில் (1910 வரைந்த தமிழ் இலக்கியக் காட்சி பற்றிய ஒவியத்தைத் தனிநாயக அடிகள் இவ்விதழில் வெளியிட்டுள்ளார். இதழ் காலத்தாழ்வு ஆவது பிழை திருத்தம் முதலியன தனிச்சிறுதாளில் ஒட்டப்பட்டன. பெரும்பாலும் தமிழ்மொழி மேற்கோள்களும், சிறு கட்டுரைகளின் ஆசிரியர் பெயர், நூற்பெயர் ஆகியனவும் தமிழ் எழுத்துகளிலேயே அச்சிடப்பட்டன. பிறமொழி மேற்கோள்கள், அந்தந்த மொழி (தெலுங்கு சிங்களம், இந்தி) எழுத்துகளில் அச்சிடப்பட்டன.
2. "ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்”
2.1 வெளியீடு
2.11. “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ் அரையாண்டு இதழாக ஆங்கில மொழியில் வெளிவந்தது. தமிழியல் பற்றிய ஆய்வு இதழாக இவ்விதழ் வெளிவந்தது. உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் ஏடாகத் தனிநாயக அடிகளால் 1969 இல் இவ்விதழ் தொடங்கப்பட்டது. ஏப்ரல் 1969 அக்டோபர் 1969, மே 1970 ஆக நான்கு இதழ்கள் வெளிவந்தன. பின் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன ஏடாக இவ்விதழ் வெளிவரலாயிற்று. நிறுவன இயக்குநரை ஆசிரியராகக்கொண்டு புதிய இதழ்போலத் "தொகுதி 1’ எனத் தொடங்கி வெளிவரலாயிற்று. தனிநாயக அடிகள் பொறுப்பில் வந்த நான்கு இதழ்கள் மட்டும் இவண் காணப்பெறுகின்றன.

Page 18
22 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
212 தனிநாயக அடிகள் நடத்திய 1969, 1970 ஆகிய இரண்டு ஆண்டுகளில் நான்கு இதழ்கள் வந்துள்ளன.
பக்கங்கள்
ஏப்ரல் 1969 : தொகுதி 1 எண் 1 பகுதி1 186 பகுதி2 137 அக்டோபர் 1969 : தொகுதி 1 எண் 2 பகுதி1 169
பகுதி2 38
Cup 1970 தொகுதி 2 எண் 1 பகுதி1 291
பகுதி.2 30 அக்டோபர் 1970 : தொகுதி 2 எண் 2 பகுதி1 57 பகுதி2 26
934
நான்கு இதழ்கள் மொத்தம் 934 பக்கங்களுடன் வந்துள்ளன. இதழின் அளவு 24.5 செ.மீ x 16.5 செ.மீ.
21.3 இதழின் மேலட்டை சிறிது கனமான தாளில் அமைந்திருந்தது. மேற்புறம் நடுவில் வட்ட முத்திரை இருக்கும். இதன் நடுவில் திருக்குறள் என்று எழுதப்பட்ட புத்தகம் படுக்கை வாக்கிலும் அதன்மேல் உலக உருண்டையும் அதன்மேல் கோயில் கோபுரமும், சுற்றிலும் ஒரமாக மேலே 'உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்’ (International Association of Tamil Research) gCp "urgth psiCJ uT6 (5th Casoff' (Every Country is my Country, Everyman is my Kinsman) 6Tairplgiisa) 6TQ9553,6flá) இருக்கும். பக்கத்தின் நடுப்பகுதியில் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” (Journal of Tamil Studies) என ஆங்கிலப் பெரிய எழுத்துக்களில் இருக்கும். இடது ஒரம் “தொகுதி” (Volume) வலது ஒரம் இதழின் ‘எண்' (Number) இவற்றின் கீழே நடுவில் மாதம் என்பன ஆங்கிலத்தில் தரப்பட்டிருக்கும். தொகுதி எண் உரோம எண்ணிலும் இதழின் எண், ஆண்டு ஆகியன அரபி எண்களிலும் குறிக்கப்பட்டிருக்கும்.
21.4. இவ்விதழின் விலை இந்தியாவில் தனியிதழ் ரூ.1250. ஆண்டுக் கட்டணம் ரூ.20 வெளிநாடுகளில் தனியிதழ் ரூ.1875 அல்லது அமெரிக்க டாலர் 250 ஆண்டுக் கட்டணம் ரூ.30 அல்லது அமெரிக்க டாலர் 4.
2.1.5. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் சார்பாய் இவ்விதழ் வெளியிடப்பட்டது. உதவி முதன்மை ஆசிரியராக (ASSociate Chief Editor) இருந்த திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வ,அய். சுப்பிரமணியம் சென்னை ஹோ அண்டு கோ (Hoe & Co) பிரிமியர் அச்சகத்தில் அச்சிட்டு வெளியிட்டார்.

இதழ் வெளியீடும் உள்ளடக்கமும் 23
216 “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழின் முதன்மை ஆசிரியராகத் தனிநாயக அடிகள் விளங்கினார். 1969 இல் இதழ் தொடங்கியபோது மலாயப் பல்கலைக்கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராக இருந்தார். 1970 இல் பணியை விட்டு விலகி இலங்கையில் தங்கியிருந்தார். உதவி முதன்மை ஆசிரியராகக் கேரளப் பல்கலைக் கழகப் பேராசிரியர் வ,அய். சுப்பிரமணியமும் ஒருங்கிணைப்பு ஆசிரியராக (Co-ordinating Editor) திரு அசுப்பையாவும் நூல் இதழ் திறனாய்வு செய்திப் பகுதிக்குத் ĝŝp6ST IT tiu 64 g, ŝarfluu U m 3, (Review & News Editor) uo6aynt uu ou பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ். சிங்காரவேலுவும் பணியாற்றினர். ஆசிரியர் குழுவில்,
முனைவர் எம். ஆந்திரனோவ் (அறிவியல் கழகம், இரஷ்யா) முனைவர் ஆர்.இ.ஆஷர் (எடின்பரோ பல்கலைக்கழகம்,
இங்கிலாந்து) பேராசிரியர் ஆல்பர்ட் பி. ஃபிராங்லின் (கான்சாஸ்
பல்கலைக்கழகம், அமெரிக்கா) பேராசிரியர் கே.எல். ஜானர்ட் (கொலென் பல்கலைக்கழகம்,
ஜெர்மனி) முனைவர் ஏ. ஜெயரத்தனம் (இலங்கைப் பல்கலைக்கழகம்) பேராசிரியர் கமில் சுவலபில் (சார்லஸ் பல்கலைக்கழகம்,
செக்கோஸ்லோவாகியா)
ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் தத்தம் பகுதிகளிலிருந்து கட்டுரைகளைப் பெற்றும் பிற உரிய செய்திகளை எழுதியும் அனுப்பினர்.
22 “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” உள்ளடக்கம்
2.2.1 ஆசிரியர் குழுவினர் எழுதிய “இவ்விதழ்’ (This Journal) என்னும் மிகச்சிறு - அரைப்பக்க அளவு - செய்தி முதல் இரு இதழ்களில் வந்துள்ளது. தமிழ் ஆய்வாளர்களும் அறிஞர்களும் இவ்விதழை ஆதரிக்கவேண்டும் என்று இப்பகுதியில் ஆசிரியர் குழுவினர் எழுதியுள்ளனர். மூன்றாம் இதழில், சிந்துவெளி எழுத்துக்களைப் பற்றிய சிறப்பிதழாக அவ்விதழ் வருவது பற்றிய விளக்கம் ஆசிரியர் குழுவின் உரையாக உள்ளது. நான்காவது இதழில் ஆசிரியர் குழுவின் உரைக்கு மாறாக, தனிநாயக அடிகளின் அறிவிப்பு வந்துள்ளது. ‘இவ்விதழ் இனி உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இதழாக வெளிவரும்’ என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுச் செயலாளர் என்ற பதவியின் அடிப்படையில் கொடுத்துள்ளார். முதன்மை ஆசிரியர் என்று குறிப்பிடவில்லை.

Page 19
24 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
222 நான்கு-இதழ்களில் மொத்தம் 31 கட்டுரைகளும் 1 நூல் திறனாய்வுக் கட்டுரையும் 1 நூற்பெயர்ப் பட்டியலும் உள்ளன. இவற்றை எழுதியோர் 31 பேர். இவர்களில் உள் நாட்டினர் 7 பேர்; வெளி நாட்டினர் 24 பேர். வெளிநாட்டினரில் பிற மொழியினர் 18 பேர். பிற இதழ்களில் வெளிவிந்த கட்டுரை 4. கருத்தரங்கில் படிக்கப்பட்ட கட்டுரை 1
223 முதற்பகுதி (Part) கட்டுரைப் பகுதி, இரண்டாம் பகுதியில் (Part I) நூல் திறனாய்வுகள், நூற் பெயர்ப்பட்டியல், சிறப்புச்செய்திகள், செய்திகள் துணுக்குகள் பகுதி, நிறுவனச் செய்திகள் முதலியன தரப்பட்டன. செய்திகள் பல இதழ்களிலிருந்து எடுத்துத் தொகுத்துத் தரப்பட்டடுள்ளன. குறிப்பாகச் சிந்துவெளி எழுத்து, கலை பண்பாட்டுத் தொடர்புகள், வரலாற்றுக் கண்டுபிடிப்புகள், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழியல் அல்லது திராவிடவியல் அல்லது ஆசியவியல் கல்வி தொடங்கப்பட்டமை முதலிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. முதல் இரு இதழ்களில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் பற்றியும் இரண்டாம் மூன்றாம் இதழ்களில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் பற்றியும் வெளிவந்துள்ளன. அவற்றின் அமைப்பு மற்றும் சட்ட விதிமுறைகள், அவற்றுக்கான வரைவுகள், அவற்றுக்கான குழுக்கள் முதலியனவும் விரிவாகத் தரப்பட்டுள்ளன.
2.2.4 மேற்கோள்கள் பகுதி, விளம்பரங்கள், வாசகர் மடல்கள், புகைப்படங்கள் முதலியன இவ்விதழில் இடம் பெறவில்லை.
k is is

3. கட்டுரை ஆசிரியர்கள்
தனிநாயக அடிகள் நடத்திய ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” இதழ்களில் உள்நாட்டு அறிஞர்களுக்கும் வெளிநாட்டு அறிஞர்களும் கட்டுரைகள் எழுதியுள்ளனர். உள்நாட்டுக்குள் தமிழ்நாட்டு அறிஞர்களும், தமிழகம் அல்லாத பிற மாநிலங்களைச் சேர்ந்த இந்திய அறிஞர்களும் வெளிநாட்டிலிருந்து இலங்கை மற்றும் மலேசியா நாடுகளின் அறிஞர்களும், பிற வெளிநாட்டு அறிஞர்களும் கட்டுரைகள் எழுதியோர் ஆவர்.
1. தமிழ்நாட்டு அறிஞர்கள்
ஆங்கிலத்தில் கட்டுரை எழுதித் தங்கள் தமிழியல் கருத்துக்களை - ஆய்வுகளை - ஆய்வு முடிவுகளை உலகுக்கு உணர்த்தத் தமிழ் நாட்டு அறிஞர்கள் பலரைத் ‘தமிழ் கல்சர்’ இதழிலும், பிற்காலத்தில் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழிலும் எழுத வைத்த பெருமை தனிநாயக அடிகளைச் சாரும்.
11. திரு எம். இரத்தினசாமி
இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த பொழுது தனிநாயக அடிகளுக்கு அவர் முடித்திருந்த படிப்புகளுக்கேற்பச் சலுகை தந்து முதுகலைத் தமிழ் வகுப்பில் சேர்த்துக் கொண்டார். தனிநாயக அடிகளின் அகவை முதிர்ச்சியையும் அறிவுத் திறனையும் கண்டு அவரை மாணவர் விடுதியில் தங்க வைக்காமல் விருந்தினர் விடுதியில் தங்க வைத்தார். இவர் சட்டக்கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி ஆகியவற்றின் முன்னாள் முதல்வர்; சென்னை மாநிலச் சட்ட மன்றத்தின், முன்னாள் தலைவர்; அமுத ப. 9) தமிழ் பற்றி மேலை நாட்டார் அறிதல்’ என்ற இவரது கட்டுரை ‘தமிழ் கல்சர்' முதல் இதழிலேயே (19-13) வந்துள்ளது.
12. திரு எஸ். வையாபுரிப்பிள்ளை
இவர் சென்னைப் பல்கலைக் கழகத்திலும் பின்னர் திருவனந்தபுரம் கேரளப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர்.

Page 20
26 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
"பேராசிரியர் வையாபுரிப் பிள்ளையின் ஆய்வு முடிவுகளை அடிகள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அவருடைய ஆய்வுத் திறமையையும், வாதத் திறமையையும் மிகவும் அடிகள் மதித்தார். அவர்களிடையே நடந்த உரையாடல் மிகவும் மதிப்பைத் தெரிவிப்பதாக இருந்தது. லக்னோவில் நடந்த கீழ்த்திசை மாநாட்டுத் திராவிடப் பிரிவில் நிகழ்த்திய தலைமை உரையைத் தமிழ் கல்சரில் வெளியிடுவதற்கு எஸ். வையாபுரிப் பிள்ளையிடம் அனுமதி பெற்றார்”.
என்று முனைவர் வ.அய். சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார் (அமுதப. XI) அக்கட்டுரை ‘அண்மைக்கால ஆய்வியல் வளர்ச்சி பற்றியது. அதனை முதல் இதழிலேயே (11:16-26) தனிநாயக அடிகள் வெளியிட்டார். மேலும் ‘தமிழ் கல்சர்’ 1954 அக்டோபர் இதழில் (3, 3 & 4, 331-358) ‘தமிழ் மொழி இலக்கிய வரலாறு' பற்றிய கட்டுரையை வெளியிட்டார்.
13. முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளை
இவர் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராக விளங்கினார். “சொல்லின் செல்வர்’ என்று புகழப்பட்டவர். இவர் 18.9.1954 அன்று தனிநாயக அடிகளைச் செயலாளராகக் கொண்டு தொடங்கப்பட்ட தமிழ்க்கலை மன்றத்தின் துணைத் தலைவராகவும், 1960-61 இல் அதன் தலைவராகவும் விளங்கினார். ‘தமிழ் கல்சர்’ ஆசிரியர் குழுவிலும் இருந்தார். இவ்விதழில் இவரது 3 கட்டுரைகள் வந்தன. இவற்றில் ஒன்று (3,2,82-91) “ஊரும்பேரும்’ என்ற நூலில் வெளிவந்துள்ள கட்டுரையின் ஆங்கில மொழிபெயர்ப்பு. இதனை மொழி பெயர்த்தவர். எம்.எஸ். தாயப்பப்பிள்ளை. 1957 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறப்பு முனைவர் பட்டம் பெற்றமைக்குப் பாராட்டாகத் 'தமிழ் கல்சர்’ தன் மூன்றாவது இதழை இரா.பி. சேதுப்பிள்ளை சிறப்பிதழ்' என வெளியிட்டுள்ளது.
1.4. முனைவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம்
இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழத்தில் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராக இருந்தபோது தனிநாயக அடிகள் இவரிடம் படித்தார். இவர் மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராக இருந்துள்ளார். தமிழ்க்கலை மன்றத்தின் துணைத்தலைவராக 1961-62 முதல் விளங்கியதோடு ஆசிரியர் குழுவிலும் இருந்தார். 'தமிழ் கல்சர் இதழில் எட்டுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
15. திரு ஏ.சி. பால்நாடார்
தனிநாயக அடிகளுடன் இணைந்து தூத்துக்குடியில் தமிழ் இலக்கியக் கழகம் அமையவும், தமிழர் பண்பாட்டுக் கழகம் அமையவும்,

கட்டுரை ஆசிரியர்கள் 27
‘தமிழ் கல்சர்’ இதழ் தொடங்கவும் உதவியவர். 14.11.1955 இல் இவர் கம்பர் விழாவில் பேசிய தலைமையுரை ‘தமிழ் கல்சர்’ இதழில் வந்துள்ளது.
16. முனைவர் அ.சிதம்பரநாதன் செட்டியார்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியர். தனிநாயக அடிகளின் ஆசிரியர். இவரது ஆறு கட்டுரைகள் ‘தமிழ் கல்சர்’ இதழில் வந்துள்ளன.
17. திரு அ. சுப்பையா
QbSusir Saff86†v 6YÉ15uflair (Indian Overseas Bank) இயக்குநராக இருந்தார். தமிழ்க்கலை மன்றத்தின் துணைத்தலைவர் (1954-55 முதல் 1960-6) முடிய ஆகவும், 1963 முதல் ‘தமிழ் கல்சர்" இதழின் இணை ஆசிரியராகவும் விளங்கினார். உலகத் தமிழ் மாநாடு சென்னையில் நடக்கவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமையவும் தனிநாயக அடிகளுடன் மிகவும் பாடுபட்டவர். இவர் உலகத்தமிழாராய்ச்சி மன்றத்தின் (IATR) சார்பில் தனிநாயக அடிகளை முதன்மையாகக் கொண்டு வெளிவந்த “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ் இதழின் ஒருங்கிணைப்பு ஆசிரியர் (Co-ordinating Editor) ஆகவும் இருந்தார். ‘தமிழ் கல்சர் இதழில் இவர் கட்டுரை இரண்டு வந்துள்ளது.
18. முனைவர் கே.கே. பிள்ளை
சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத் துறைத் தலைவராக விளங்கியவர். தமிழ்க்கலை மன்றத்தின் மதிப்புச் செயலாளராக 1954-55 இல் இருந்தார்; பின் ‘தமிழ் கல்சர்’ ஆசிரியர் குழுவில் இருந்தார். இவர் ‘தமிழ் கல்சர்’ இதழில் 4 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
19. முனைவர் மு.வரதராசன்
பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராக இருந்தார். பிற்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைமைப் பேராசிரியராகவும் (1961-1971), மதுரைக் காமராசர் பல்கலைக் கழகத் துணை வேந்தராகவும் (1971-74) விளங்கினார். 1971 இல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன முதல் இயக்குநராகவும் விளங்கினார். இவர் தமிழ்க்கலை மன்றத்தின் மதிப்புச் செயலாளராகவும் (1954-55 முதல் 1956-57 முடிய), பின்னர் ஆசிரியர் குழு உறுப்பினராகவும், 1965-66 இல் மன்றத் தலைவராகவும் இருந்தார். ‘தமிழ் கல்சர்’ இதழில் இரண்டு கட்டுரைகள் தமிழிலேயே எழுதியுள்ளார்.

Page 21
28 10. பிறர்
திரு சி.இராஜகோபாலாச்சாரியார்
திரு ஜி.வன்மீகநாதன்
முனைவர் மா.இராசமாணிக்கம்
திரு மயிலை சீனி.வேங்கடசாமி திரு சோம.லெட்சுமணண்
செட்டியார்(சோமலெ)
திரு ஜே.எம். சோமசுந்தரம்
முனைவர் வ.சுப. மாணிக்கம்
முனைவர் என்.சுப்ரமணியன்
முனைவர் முருகரத்தனம்
2. இந்திய அறிஞர்கள்
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
- முதல் இந்திய கவர்னர் ஜெனரல்
பின் சென்னை முதல்வர்.
- ஓய்வு பெற்ற அரசு அதிகாரி, திருவாசகத்தில் தேர்ந்தவர்.
- வரலாற்றுப் பேரறிஞர், மதுரை, தியாகராசர் கல்லூரித் தமிழ்த் துறைப் பேராசிரியர்.
- வரலாற்றறிஞர்.
- இதழியலாளர்; பயண இலக்கியங் கள் எழுதியவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலர். - அண்ணாமலைப்பல்கலைக்கழகப் பதிப்புத்துறை மேலாளர். சோழர் கோயிற் பணிகள் பற்றி ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இவர் தமிழ்ப் பேராசிரியராக இருந்தபோது தனிநாயக அடிகள் படித்துக் கொண்டிருந்தார். காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பணியாற்றும்போது ‘தமிழ் கல்சர்' இதழில் எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர். மதுரைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர். தமிழியல் ஆய்வேடுகளின் நூலடைவு தொகுத்து “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழில் தந்துள்ளார்.
‘தமிழ் கல்சர்’, ‘ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழ்களில் தமிழக அறிஞர்கள் மட்டுமல்லாமல் இந்தியாவின் பிறபகுதி அறிஞர்களும் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.

கட்டுரை ஆசிரியர்கள் 29
21. முனைவர் பி.சி. அலெக்சாண்டர்
இவர் தமிழக ஆளுநராகப் பிற்காலத்தில் விளங்கியவர். இவர் எழுதிய "அசோகரும் சேரநாட்டில் புத்த மதம் பரவியதும் பற்றிய கட்டுரை ‘தமிழ் கல்சர்’ இதழில் (1,2125-13) வந்துள்ளது.
22. முனைவர் ஜே.டி. கார்னெலியஸ்
ஒய்வு பெற்ற மருத்துவரான இவர் 1955-56 இல் தொல் பொருளியல் துறையின் துணைத் தலைவராக இருந்தபோது ‘தமிழ் கல்சர்’ இதழில் ‘திராவிடர்கள் யார்?’ என்ற வினாவைத் தொடுத்து ஒரு கட்டுரையும் (32.92-102), விடையாக ஒரு கட்டுரையும் (43263-275) எழுதியுள்ளார்.
23. திருசுனிதி குமார் சட்டர்ஜி
இவர் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் மதிப்புப் பேராசிரியராக ஒப்பு மொழியியல் துறையில் பணியாற்றினார், கல்கத்தா ஆசியவியல் கழகத்தின் தலைவராக இருந்தார். மேற்கு வங்காளச் சட்டசபைத் தலைவராக இருந்தார். ‘தமிழ் கல்சர்’ இதழில் இவரது 3 கட்டுரைகளும் ஒரு மடலின் சுருக்கமும் வந்துள்ளன.
24. திரு பி.ஜோசப்
இவர் ஹீராஸ் அடிகளிடம் பம்பாய் தூய சேவியர் கல்லூரியில் பயின்றவர். பல இதழ்களில் தொடர்ந்து இந்திய வரலாற்றியல் தொடர்பாகவும், குறிப்பாகச் சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாகவும் எழுதினார். “ஸ்பெயினிலிருந்து வந்த திராவிடர்” என்று ஹீராஸ் அடிகளைப் பற்றித் ‘தமிழ் கல்சர்’ இதழில் (7:14-8) எழுதியுள்ளார். ‘தமிழ் கல்சர்’ இதழில் 9 கட்டுரைகளும் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழில் ஒரு கட்டுரையும் எழுதியுள்ளார்.
25. முனைவர் எஸ்.எம். காத்ரே
இவர் பூனா தெக்கணக் கல்லூரியின் சமஸ்கிருத அகராதித் துறை இயக்குநர் மற்றும் பதிப்பாசிரியர். தென்கன்னட மொழியின் பேச்சு வழக்கு பற்றிய மிகச் சிறிய கட்டுரை ஒன்று ‘தமிழ் கல்சர்’ இதழில் (6,3,246-247) எழுதியுள்ளார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைப்பதற்குக் கல்வியியல் மற்றும் நிர்வாகத் திட்டமிடல் அடிப்படையில் ஒரு கட்டுரையை இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டுக்கு (சென்னை, 1968) எழுதியிருந்தார்; அவர் வர இயலாததால் முனைவர்

Page 22
30 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
பி.எஸ். பிலிகிரி அதனைப் படித்தார் (அமுதப.18). அக்கட்டுரையே தனிநாயக அடிகள், அ.சுப்பையா முதலியோர் தொடர்ந்து உழைத்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் உண்டாகக் காரணமாயிற்று.
2.6. பிறர்
திரு கே. சேஷாத்திரி - திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி மெய்ம்மையியல் பேராசிரியர்.
திரு கே.பி.எஸ். ஹமீது - திருவனந்தபுரம் வானொலி
நிகழ்ச்சி அமைப்பாளர்.
திரு ஜான் ஸ்பையர்ஸ் - பெங்களுர் “வேல்யூஸ்”
இதழாசிரியர்.
திரு கே.ஆர். இராஜகோபாலன் - பம்பாய் தூய சேவியர் கல்லூரி
ஆய்வாளர்.
3. இலங்கை மற்றும் மலேசியா அறிஞர்கள்
இலங்கையில் பிறந்து வளர்ந்து, பின்னர் இந்தியாவிலும், மலேசியாவிலும் பிற வெளிநாடுகளிலும் பணியாற்றித் தம் இறுதிக் காலத்தில் இலங்கையில் இருந்தவர் தனிநாயக அடிகள். எனவே, இலங்கை மற்றும் மலேசிய அறிஞர்கள் தனிநாயக அடிகள் நடத்திய இதழ்களில் எழுதினர்.
3.1. சுவாமி ஞானப் பிரகாசர்
தனிநாயக அடிகள் தமக்கு முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசரைக் (1875-1947) கருதி வந்தார். அவர் மறைவுக்குப் பின்னர், அச்சேறாமல் இருந்த இலங்கையின் அரசர்கள்-இலங்கைத் தமிழர்களின் தொல் பழங்காலத்திலிருந்து GigsstLig5b 6.jjarg (The Kings of Ceylon with sidelights on the History of the Tamils from the earliest era) 6Tailgjib giisa) TaSait கையெழுத்துப் படியிலிருந்து முதல் இயலை எடுத்துத் ‘தமிழ் கல்சர் முதல் இதழில் (11:27-35) தனிநாயக அடிகள் வெளியிட்டுள்ளார். மேலும் 4 கட்டுரைகள் பின்வந்த இதழ்களில் வெளியிட்டார்.
32. சுவாமி விபுலானந்தர்
இவர் ஈழத்துக் காரைத்தீவைச் சேர்ந்தவர், “யாழ்நூல் யாத்தவர்; இராம கிருஷ்ண இயக்கத்தில் இருந்தவர்; அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலும், பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி உள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் யாழ்நூலைப் பற்றி விபுலானந்த அடிகள்

கட்டுரை ஆசிரியர்கள் 31
சொற்பொழிவாற்றிய பொழுது தனிநாயக அடிகள் மாணவராக இருந்தார். (வே.அ.ப.12) அண்ணாமலைப் பல்கலைக்கழக இதழில் விபுலானந்த அடிகள் எழுதியிருந்த ‘தமிழர் மதச் சிந்தனை வளர்ச்சி’ பற்றிய ஆங்கிலக் கட்டுரையை அவர் மறைவுக்குப் பின்னர் தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்சர்’ இதழில் (5,3,251-266) வெளியிட்டார்.
33. பண்டித கே.பி. ரத்தினம்
இவர் கொழும்பு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியின் விரிவுரையாளர். இவர் எழுதிய “பழங்காலத் தமிழகத்தில் கல்வி' பற்றிய கட்டுரை இரு பகுதிகளாக (1,4254-268) (23 & 4, 324-333) ‘தமிழ் கல்சர்’ இதழில் வந்துள்ளது.
34. வித்துவான் எஃப். எக்ஸ்.சி. நடராஜா
இவர் இலங்கை ஆட்சிமொழிக் குழுவில் ஆய்வாளர். இவர் சைமன் காசிச் செட்டியின் அறிவாண்மை பற்றி எழுதிய கட்டுரையைத் ‘தமிழ் கல் சர்’ இதழில் (1,4,269-274) தனிநாயக அடிகள் வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த சைமன் காசிச் செட்டி, இதழ்களில் எண்ணற்ற கட்டுரைகளும் பல நூல்களும் எழுதியவர்; அவரது ‘தமிழ் புளுடார்ச்’ என்னும் ஆங்கில நூலை, மறுபதிப்பாக முனைவர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம் எழுதிய குறிப்புகள் திருத்தங்களுடன் தமிழ் இலக்கியக் கழக வெளியீடாக முன்னரே தனிநாயக அடிகள் வெளியிட்டுள்ளார்.
35. திரு கே.எஸ். அருள்நந்தி
இவர் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்வித் துறையின் விரிவுரையாளர். இவர் “யாழ்ப்பாணம் நாவலியூர் சோமசுந்தரப் புலவர்' பற்றிய கட்டுரை ஒன்றைத் ‘தமிழ் கல்சர்’ இதழில் (3,1,47-60) எழுதியுள்ளார்.
3.6. வன.எச்.எஸ். டேவிட்
இவர் தூய பத்திரிசியார் கல்லூரியில் கீழை இயல் மற்றும் வரலாற்றுத்துறை இயக்குநராக இருந்தார். தமிழ் கல்சர்’ இதழில் 10 கட்டுரைகள் எழுதியுள்ளார். சுமேரியா எகிப்திய நாகரிகங்களும் ஆரப்பா நாகரிகமும் பற்றிய மிசச் சிறந்த கட்டுரைகள் இவருடையன. பழந்தமிழ் இலக்கியம், குறுந்தொகையின் தொகுப்புமுறை, தமிழ்ப் பழமொழிகள் முதலியன பற்றியும் திராவிடவியல் ஆய்வு பற்றியும் எழுதியுள்ளார்.

Page 23
32 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
37. முனைவர் எஸ். அரச ரத்தனம்
இவர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத்துறையிலும், 1961 முதல் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்தியவியல் துறையிலும் தனிநாயக அடிகளுடன் பணியாற்றியவர். ‘தமிழ் கல்சர்’ இதழில் 4 கட்டுரைகள் எழுதியுள்ளார்.
3.8. ஜெயதேவி வேலுப்பிள்ளை
இவர் மலாயப் பல்கலைக்கழக இந்தியத்துறை விரிவுரையாளர். 1954 முதல் 1963 முடிய 'தமிழ் கல்சர்’ இதழின் 10 தொகுதிகளுக்கு ஆசிரியர். பொருள் அகரவரிசை தொகுத்துள்ளார். இவை 1964 ஆம் ஆண்டில் ‘தமிழ் கல்சர்’ இதழில் இணைப்புகளாக (1,1, i-XII) (11,2, XIV-XXXII) வந்துள்ளன.
39. பிறர்
வண. முனைவர் எட்மண்ட் பெய்ரிஸ் - சில்லா ஆயர்
திரு முகமது உவைஸ் - இ.ப.க. தமிழ்த்துறையின் வருகை விரிவுரையாளர்.
திரு எல்.ஜே. குணசேகரம் - இலங்கைத் தமிழர் பண்பாட்டுக் கழக
உறுப்பினர்.
முனைவர் ஏ.ஜெயரத்தனம் வில்சன் - இ.ப.க. அரசியல் துறை
விரிவுரையாளர்.
முனைவர் கே.கைலாசபதி - இ.ப.க. தமிழ்ப்
. . - பேராசிரியர்.
திரு எஸ்.சிங்காரவேலு ம.ப.க. தமிழ்ப்
பேராசிரியர்.
திரு எம். பழனி - ம.ப.க. தமிழ்ப்
பேராசிரியர்.
திருமதி தேவபூபதி நடராஜா - ம.ப.க. தமிழ்ப்
பேராசிரியர்.
திருமதி ராஜேஸ்வரி அம்பலவாணர் - ம.ப.க. தமிழ் ஆய்வாளர்.
4. வெளிநாட்டு அறிஞர்கள்
தனிநாயக அடிகள் வெளிநாடுகளில் வாழ்ந்திருந்ததாலும் பலநாடுகளுக்குப் பயணம் செய்து தமிழியல் பற்றிச் சொற்பெருக்காற்றியிருந்ததாலும் பன்னாட்டு அறிஞர்கள் அவருடன் தொடர்பு கொண்டிருந்தனர். ‘தமிழ் கல்சர்" பன்னாட்டு இதழாக உருவாகிப் பலநாடுகளைச் சென்றடையத் தொடங்கியதும் வெளிநாட்டார்

கட்டுரை ஆசிரியர்கள் 33
அவ்விதழில் கட்டுரைகள் எழுதலாயினர். “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் ஏடாக வரத்தொடங்கியதாலும், தனிநாயக அடிகள் தாம் முதன்மையாசிரியராக இருந்தாலும் தமக்கு அந்தந்தப் பகுதி நாடுகளிலிருந்து கட்டுரைகளை வாங்கியனுப்ப ஆசிரியர் குழுவில் பல நாட்டினரை இணைத்திருந்தார். எனவே, ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழ்களில் வெளிநாட்டினர் பலர் கட்டுரைகள் எழுதினர்.
41. திரு கமில் சுவலபில்
இவர் 1949 இல் தம் இருபத்திரண்டாம் வயதில் தாமே சில நூல்களின் உதவியுடன் கற்றார் (2,2,200). இவர் செக் மொழி மட்டுமல்லாது, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பார்சி, வடமொழி, கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளும், தேர்ந்தவர். பிரேகு நகரிலுள்ள சார்லஸ் பல்கலைக் கழகத்தில் திராவிடவியல் துறைத் தலைவராக விளங்கிய இவர் 'தமிழ் கல்சர்’ இதழில் திரு சி.ஆர். மயிலேறு எழுதிய ‘ஆங்கிலத்தில் சில திராவிடச் சொற்கள்’ (1,2143-153) என்ற கட்டுரையைப் படித்த பின்னர், ஒர் மடல் தனிநாயக அடிகளுக்கு எழுதினார். அம்மடலில் செக் மொழியில் அரிசி "ரைஸ்" என்றும், பிப்பிலி “பெப்பர்’ என்றும் வழங்குகின்றன என்று எழுதியிருந்தார். அம்மடல் ‘தமிழ் கல்சர்’ இதழில் (32-3) வெளிவந்தது. இந்தத் தொடர்பு படிப்படியே நீடித்து ‘தமிழ் கல்சர்’ இதழில் மொத்தம் 17 கட்டுரைகளைக் கமில் சுவலபில் எழுதியுள்ளார்.
42. முனைவர் எம். ஆந்திரனோவ்
இரஷ்ய நாட்டுத் தமிழறிஞர் எம். ஆந்திரனோவ் 'தமிழ் கல்சர்' இதழில் 3 கட்டுரைகளையும் 1 ஆய்வடங்கலையும் எழுதியுள்ளார். மூன்று கட்டுரைகளும் மொழியியல் தொடர்பானவை. இவர் திராவிட மொழியியல் ஆய்வடங்கலுக்கான விவரங்கள் (1,1,3-50) என்னும் தலைப்பில், 626 கட்டுரைகளையும் 50 நூல் மதிப்புரைகளையும் 67 அகராதிகளையும் தொகுத்துத் தந்துள்ளார். அவற்றுள் இவரே ஆங்கிலத்திலும் இரஷ்யன் மொழியிலும் எழுதியுள்ள 13 கட்டுரைகளும் ஒரு நூல் மதிப்புரையும் வேறு இருவரோடு சேர்ந்து எழுதியுள்ள இரஷ்யன் தமிழ் அகராதியும் அடங்கும். இந்த ஆய்வடங்கல் திராவிட மொழியியலுக்கு மிகவும் பயனுடைய பணியாகும். ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழில் எம். ஆந்திரனோவ் 'பிராகூய் பற்றிய குறிப்புகள்’ என்னும் தலைப்பில் ஓர் சிறு கட்டுரை (1,2,1-6) எழுதியுள்ளார். இது அவர் எழுதவிருந்த பிராகூய் மொழி பற்றிய நூலுக்கான முன்னோடிக் கட்டுரை ஆகும்.

Page 24
34 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
43. திரு ழான் ஃபீலியோசா
பிரான்சு நாட்டினர்; மருத்துவம் பயின்றவர்; பின் தமிழ் படித்தார். 1954 இல் புதுச்சேரி இந்தியவியல் பிரஞ்சு நிறுவனத்தின் முதல் இயக்குநர். ‘தமிழ் கல்சர்’ இதழில் ‘தென்னிந்தியாவில் தமிழும், சமஸ்கிருதமும், (44,285-300) ‘தென்கிழக்காசிய தொலை கிழக்கு நாடுகளில் ஆய்வு (12.2 & 3, 109-16) என்னும் இரு கட்டுரைகள் எழுதியுள்ளார்.
44. திரு எம்.பி. எமனோ
இவர் கலிபோர்னியப் பல்கலைக் கழகத்தின் சமஸ்கிருதம் மற்றும் பொது மொழியியல் பேராசிரியர். இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் டி.பர்ரோவுடன் இணைந்து ‘திராவிட மொழிகளின் சொற்பிறப்பியல் அகராதி செய்துள்ளார். எம்.பி.எமனோ ‘தமிழ் கல்சர்’ இதழில் (5,130-55) இந்திய மொழியியல் தொல் வரலாறு பற்றி எழுதியுள்ளார். “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழில் இவர் ‘கோதா மொழியில் உயிரெழுத்து மாற்றம்’ (AKotaVowelShift) பற்றி ஒரு கட்டுரை (1,121-34) எழுதியுள்ளார்.
45. திரு ஜே.ஆர். மார்
இவர் இலண்டனில் உள்ள கீழை இயல் மற்றும் ஆப்பிரிக்க இயல் பள்ளியில் தமிழ் மற்றும் இந்திய இசைத்துறை விரிவுரையாளர். சங்க இலக்கிய மொழி பெயர்ப்பு பற்றி ஒரு கட்டுரை (12.2 & 3, 223229) எழுதியுள்ளார்.
4.6. திரு எம்.எஸ்.எச். தாம்ப்ஸன்
இந்தியக் கல்வித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற பின்னர் தம் சொந்த நாடாகிய இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டு தமிழ்ப்பணி செய்தவர்; முத்தொள்ளாயிரம் பற்றிய சிறப்பான கட்டுரை (9,4235-242) எழுதியுள்ளார்.
47. பிறர்
ஹீராஸ் அடிகளார், மார்டிமர் வீலர், ஜான் மார்ஷல் முதலிய வெளி நாட்டினரின் கட்டுரைகளைப் பிற இதழ்களிலிருந்தும் நூல்களிலிருந்தும் தனிநாயக அடிகள் எடுத்து வெளியிட்டுள்ளார். ஹிராஸ் அடிகளார் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்சொற்பெருக்காற்றியபொழுது தனிநாயக அடிகள் அங்குப் படித்துக் கொண்டிருந்தார்; எனவே ஹீராஸ் அடிகளாருடன் தனிநாயக
அடிகளுக்கு இலக்கியத் தொடர்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று

கட்டுரை ஆசிரியர்கள் 35
முனைவர் வேஅந்தனி ஜான் அழகரசன் (ப.12) குறிப்பிட்டுள்ளார். திரு இ.சி. நோல்டன் தனிநாயக அடிகளுடன் இணைந்து ‘புரயன்சாவின் தமிழ் போர்ச்சுகீசு அகராதி' யின் பதிப்புரையை மொழி பெயர்த்து எழுதியுள்ளார். இந்த மொழிபெயர்ப்பு 'தமிழ் கல்சர்’ இதழில் (1,2,128134) வந்துள்ளது. திரு வி.ஏ. மக்கரென்கோ, திரு எஃப். லீகிராண்டு. திரு ஆர்னோ லெஃமான், திரு ஆலிஸ்டர் லாம்ப், வண. லியோ பாட்பாசு திரு யூஆர். ஏரென்ஃபெல்ஸ் முதலிய வெளிநாட்டினரும் தனிநாயக அடிகளின் இதழ்களில் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
5. தமிழக அறிஞர்கள் தமிழியலை உலகுக்கு உணர்த்தவும் உலக அறிஞர்கள் தமிழியலில் தங்கள் கருத்துக்களைத் தமிழகத்துக்குத் தரவும் இவர்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளவும் ‘தமிழ் கல்சர்’ இதழ் உதவியது.
"... . பல பேராசிரியர்கள் தமிழில் மட்டுமே எழுதிக்
கொண்டிருந்தவர்கள் அடிகளாரின் இதழில் ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கியதன் மூலம் தங்கள் புலமையை உலகறியச் செய்தார்கள்” (ப.100)
,பல வெளிநாட்டு அறிஞர்களும் தமிழ் பற்றி ஆராயவும் ייוויזי:"..." ஆய்வுக் கட்டுரைகள் எழுதவும் அடிகளாரின் ஆங்கில இதழ் தூண்டுதலாகவும், கட்டுரைகளை வெளியிடக் கருவியாகவும் இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை." (ப.103)
என்று அமுதன் அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
k is k k k is ak

Page 25
4. தனிநாயக அடிகளின் இதழியல் பணி
தனிநாயக அடிகள் பள்ளியில் படிக்கும் பொழுது, தம் பதினைந்தாம் வயதிலேயே "தி பாட்டில்டு சன் ஷைன்' என்ற பள்ளி இதழின் ஆசிரியராக இருந்ததோடு அவ்விதழில் 17 கட்டுரைகள் எழுதினார். ‘தமிழ் கல்சர்”, “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” என்ற பன்னாட்டு இதழ்கள் தொடங்கி நடத்தியதில் அவரது இதழியல் முதிர்ச்சி நன்கு வெளிப்படுகிறது. இவ்விரு இதழ்களின் வழி அவரது இதழியல் பணியின் சிறப்பை உணரலாம்.
1. காலச் சூழல்
இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழ்க்கல்வியும் ஆங்கிலக் கல்வியும் பொதுவாக வளர்ந்திருந்தன. பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் தமிழ்த் துறை, வரலாற்றுத்துறை ஆகியவற்றில் தமிழ், தமிழினம் பற்றிய அறிதல் படிப்படியே மிகுந்தது. தேசிய எழுச்சியால் இந்தியா முழுதும் ஏற்பட்டிருந்த இனம், மொழி ஆகியவை பற்றிய விழிப்புணர்ச்சியும் தமிழக மக்களிடம் ஒர் எழுச்சியை ஏற்படுத்தியிருந்தது. தென்னாட்டில் தோன்றிய இந்தி எதிர்ப்பும், திராவிட இயக்கங்களின் வளர்ச்சியும் மக்களிடம் தமிழ் உணர்ச்சியை ஊட்டியிருந்தன. தமிழக அரசு ஏற்படுத்தியிருந்த தமிழ் வளர்ச்சிக் கழகமும், ஆண்டுதோறும் நடைபெற்ற ‘தமிழ் விழா” என்னும் விழாக்களும் தமிழுக்கு ஏதேனும் ஆக்கப் பணி செய்ய வேண்டும் என்னும் உணர்வை உண்டாக்கியிருந்தன.
2. ஆய்வுச்சூழல்
வீரமாமுனிவர், கால்டுவெல், ஜியூ போப் முதலிய மேலை நாட்டினர் தமிழ் மொழியின் பெருமையை வெளி உலகுக்கு உணர்த்தியிருந்தனர். சர். ஜான் மார்ஷல், மார்டிமர் வீலர், ஹிராஸ் அடிகள் முதலியோர் சிந்துவெளி நாகரிகத்தைத் திராவிட நாகரிகம் என்று நிறுவினர். ஜி.யூ.போப் ஆல்பர்ட் ஸ்வைட்சர், ஏரியல், கிரவுல், எல்லிஸ் முதலியோர் திருக்குறளை மொழிபெயர்த்தும் பேசியும் எழுதியும் பரப்பி வந்தனர். கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் பற்றிய ஆங்கில நூல் தமிழின் பெருமையையும், திராவிட மொழிகளின் ஒருமையையும் உணர்த்தியது. கில்பர்ட் ஸ்லேட்டர் எழுதிய ‘இந்திய நாகரிகத்தில் திராவிடப் பண்பு' பற்றிய ஆங்கில நூல் தமிழ் மொழியும் நாகரிகமும் தென்னிந்தியாவில் மட்டுமல்ல சிந்துவெளிவரை பரவியுள்ளவை என்ற உண்மையை உலக அறிஞர்களும் ஆசியவியல், திராவிடவியல் ஆய்வாளர்களும் வட இந்திய அறிஞர்களும், ஏன்,

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 37
தமிழ்நாட்டு அறிஞர்களும் ஓரளவு உணர்ந்தனர். வி.கனகசபைப்பிள்ளையின் 1800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம், பி.டி. சீனிவாச ஐயங்காரின் ‘தமிழர் வரலாறு', வி.ஆர். இராமச்சந்திர தீட்சதரின் ‘தமிழர்களின் மூலத்தோற்றமும் பரவலும் பற்றிய ஆங்கில நூல்கள் தமிழர் வரலாற்றுத் தொன்மையை நிறுவின. ஞானப்பிரகாசர், ஞானியாரடிகள், ஆறுமுக நாவலர், மறைமலையடிகள், திரு. வி.க. முதலியோர் இலங்கையிலும், தமிழ் நாட்டிலும் சொற்பெருக்காற்றியும் எழுதியும் தமிழ்ப் பெருமையை வலியுறுத்தி வந்தனர். ஆயினும் இந்தியா முழுவதும் பரவியிருப்பது சமஸ்கிருதமும் ஆரிய நாகரிகமும் மட்டுமே என்று கருதிவந்த வெளி உலகினரிடம் தமிழியற் கருத்துகள் சரிவரப்போய்ச் சேரவில்லை.
3. இதழியல் சூழல்
தமிழகத்தில் 1831 இல் வெளிவந்த ‘தமிழ் மாகசின்’ மாத இதழ் முதல் இதழாகும். இலங்கையில் யாழ்ப்பாணத்திலிருந்து 1841 இல் 'உதய தாரகை” என்னும் மாத இதழ் முதன்முதல் வெளிவந்தது. இவ்விதழை அடுத்து அதே ஆண்டில் 'உதயாதித்தன்' என்னும் இதழ் கொழும்பிலிருந்து திரு சைமன் காசிச் செட்டியால் வெளியிடப்பட்டது. (மா.சு. சம்பந்தன்.ப.30) இலக்கியத் தொடர்பான இதழ்களாகச் ‘செந்தமிழ்’ (1902), “செந்தமிழ்ச் செல்வி’ (1923). தமிழ்ப் பொழில் (1925) ஆகிய இதழ்கள் வரத் தொடங்கின. வெளிநாட்டார் தமிழ்பற்றி அறிய, ஆங்கில மொழியில் சில இதழ்கள் வந்தன. "தி ஒஷன் ஆஃப் விஸ்டம் (The Ocean of Wisdom) “rfuu6ðsr6ão Lólaivą iš 60 Lo6HTIT” (Oriental Mystic Myna) என்று இரு இதழ்கள் ஆங்கிலத்தில் மறைமலையடிகள் நடத்தினார். இவையும் அவர் ஆசிரியராக இருந்த இதழ் “சித்தாந்த தீபிகையும் சமயம், சைவ சித்தாந்தம் என்னும் நிலைகளில் கருத்துகளைப் பரப்பின (அ.மா.சாமி.ப.185) தமிழியன் ஆண்டிகுயரி" (Tamilian Antiquary) என்னும் ஆங்கில இதழ் (1907-1914) தமிழின் பழமை, கல்வெட்டு ஆகியன பற்றிய செய்திகளைத் தந்தது. தமிழ் பற்றி மற்ற மாநிலத்தவரும் மற்ற நாட்டினரும் அறிய உதவும் வகையில் ஆங்கிலத்தில் இதழ்கள் இல்லாத சூழலில் ‘தமிழ் கல்சர்’ என்ற இதழைத் தொடங்க முன் வந்தார் தனிநாயக அடிகளார்.
4. இதழின் பெயர்
"தமிழ் கல்சர்’ என்ற இதழின் பெயர் தனிநாயக அடிகள் விரும்பிச் சூட்டியது ஆகும். "தனிநாயக அடிகள் பிறர் அன்பைப் பறைசாற்றிய பண்பாளர். தமிழ்ப் பண்பாட்டின் தூதுவர்” என்று முனைவர் வே.அந்தனி ஜான் அழகரசன் (ப.24) கூறுவார். நல்ல பண்பாளர் ஆகிய தனிநாயக அடிகள் தமிழ்ப்பண்பை - பண்பாட்டை நாகரிகத்தை உலகெங்கும் பரப்ப விரும்பினார். தமிழ் இலக்கியங்களில்

Page 26
38 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
காணும் உயர்ந்த அறப் பண்புகளைப் பற்றித் தமது வெளிநாட்டுப் பயணங்களின் போது - தமிழ்த்துாது சென்றபோது - சொற்பொழிவாற்றினார். உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள்தாய் மொழியாகிய தமிழை மறந்தாலும் தமிழ்ப் பண்பை மறவாத தன்மை கண்டார் (தனி.ஒ.பக்.58,200). எனவே, ‘தமிழ் கல்சர்’ என்று தம் இதழுக்குத் தனிநாயக அடிகள் பெயர் சூட்டினார். தூத்துக்குடியிலும் கொழும்பிலும் ‘தமிழர் பண்பாட்டுக் கழகம்’ (Academy of Tamil Culture) தொடங்கி நடத்தினார். தமிழ்மொழி, இலக்கியம், கலைகள், நாகரிகம், வரலாறு அனைத்திலும் ஊடுறுவி நிற்பது தமிழ்ப்பண்பாடு தானே, புறநானூற்றில் வருகிற ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற வரியில் வருகிற உயர்ந்த பண்பாட்டில் மனம் பறிகொடுத்த தனிநாயக அடிகள் அச்சொற்களை உலக மொழிகளிலெல்லாம் பரப்பி வந்த போது, உலகெங்கும் தமிழ்ப் பண்பாடு ஊடுருவிப் பரந்திருக்கக் கண்டார். எனவே, பன்னாட்டு இதழாகத் தொடங்கிய தம் இதழுக்குத் ‘தமிழ் கல்சர்’ என்று பெயர் வைத்தார். இந்தோ ஆசியன் கல்சர் (Indo Asian Culture) என்று காலாண்டு இதழ் ஒன்று வெளிவரும் முன் தமிழ்ப்பண்பாட்டை உலகுக்கு உணர்த்திய தனிநாயக அடிகளின் ‘தமிழ் கல்சர்’ முன்னோடியாக விளங்குகிறது. உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் சார்பாய் இதழ் தொடங்கியபோது “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” என்று பெயரிட்டார். அதன் அட்டை முத்திரையில் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரியை ஆங்கிலத்தில் பொறித்திருந்தார். ‘தமிழ் கல்சர்’ இதழ் மூலம் பரப்பிய தமிழர் பண்பாட்டை இவ்விதழ் மூலமும் தனிநாயக அடிகள் பரப்ப முனைந்தமை இதனால் புலப்படுகிறது.
5. இதழியில் தொடர்பு
தனிநாயக அடிகள் தூத்துக்குடி அருகில் உள்ள வடக்கன் குளத்தில் ஆசிரியப் பணியாற்றிய பொழுது இவரிடம் படித்த திரு எம்.ஜி. வென்சஸ்லாஸ் பிற்காலத்தில் ‘வீரகேசரி’ என்னும் புகழ் மிக்க நாளிதழை இலங்கையில் நடத்தினார். “ஞானதுாதன்’ இதழில் பணிபுரிந்த பணியாளர் திரு மைக்கேல், தனிநாயக அடிகளின் ‘தமிழ் கல்சர்’ இதழிலும் பணிபுரிந்தார். மலாயாவில் தமிழர் திருநாள் விழாவிற்குத் தனிநாயக அடிகளை அழைத்து 1954, 1955 ஆண்டுகளில் பேசச் செய்த திரு கோ. சாரங்கபாணி தமிழ் முரசு’ இதழாசிரியர் ஆவார். தனிநாயக அடிகள் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்றபோது அங்குப் பல இதழ்களில் எழுதியுள்ளார். நேர்காணல் (பேட்டி) அளித்துள்ளார். மலேசியாவின் ஆங்கிலச் செய்தித்தாள் ‘ஸ்டிரெய்ட் டைம்ஸ்’ (Strait Times) இதழுக்கு நேர்காணல் விடை அளித்துள்ளார். அப்போது, கற்பித்தல் முறையிலான மலாய் மொழி நூலை வைத்துத் தாம் மலாய் மொழி கற்பதாகக் கூறியுள்ளார். வே.அ.ப.38-39) தனிநாயக அடிகள் மலாயப் பல்கலைக் கழகத்தில் இந்தியத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், சென்னையில் 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 39
நாளிதழுக்கு அளித்த நேர்காணல் விடை 28.10.1961 இதழில் வந்துள்ளது. (வே.அ.ப.70) முதல் உலகத்தமிழ் மாநாடு சென்னையில் 1964 இல் நடத்த வேண்டும் என்று தனிநாயக அடிகள் திட்டமிட்டுள்ளார் என்று அவரை நேர்காணல் புரிந்த (பேட்டி) கட்டுரையாக மலேசிய நாளிதழ் ‘தமிழ் நேசன் 177,1963 இல் வெளியிட்டுள்ளது. இதே போல் உலகம் முழுதும் சுற்றுப் பயணம் செய்த பொழுது பலமொழி இதழ்களுக்கும் வானொலி, தொலைக்காட்சி முதலியவற்றுக்கும் நேர்காணல் விடை புரிந்துள்ளார். 1963 இல் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் தனிநாயக அடிகள் ஆற்றிய “மலேசியாவில் தமிழ் எழுத்தாளரும் அவர்களின் பணியும்” என்னும் சிறப்புச் சொற்பொழிவு மலேசிய வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இச்சொற்பொழிவு கட்டுரையாகத் தமிழ்நேசன் 9.6.1963 நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் 1964 இல் உலகத்தமிழ் மாநாட்டை நடத்த முடியாமற் போனதால், மலேசியாவில் 1966 இல் முதல் உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றபொழுது தென்கிழக்காசியாவின் செய்தித் தாள்களெல்லாம் மாநாட்டுக்குத் தலைமை கொடுத்து எழுதின.
6. இதழியல் ஈடுபாடு
இலங்கைப் பேராதனைப் பல்கலைக் கழகத்தில் தனிநாயக அடிகள் கல்வியியல் துறையில் பணியாற்றியபொழுது, 22.1.1958 அன்று பேராதனைத் தமிழ்ச்சங்க விழாவில் தம் மாணவர்கள் ஒத்துழைப்புடன் ‘தமிழ் நூல் கண்காட்சி ஒன்று அமைத்திருந்தார். அதில் பல்வகை நூல்களொடு இலங்கையில் வெளியான இதழ்களும் தமிழகத்து இதழ்களும் இடம் பெறச் செய்திருந்தார் (அமுதபக்.42-43). நாள், மாத இதழ்களில் வரும் சிறந்த கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் ஆகியவற்றை வெட்டி ஒட்டி வைத்துப் பாதுகாப்பது தனிநாயக அடிகளின் வழக்கம் (அமுத, ப,449. தமிழ் இதழ்களாகிய “சிறுமலர்’, ‘தமிழ் ஒளி’ ஆகியவற்றிலும், ஆங்கில இதழ்களாகிய ‘பாட்டில்டு சன்ஷைன்’, ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' ஆகியவற்றிலும் ஆசிரியராக இருந்து நடத்திய தனிநாயக அடிகள் ஏறத்தாழ 15 தமிழ் இதழ்களிலும் ஏறத்தாழ 25 ஆங்கில இதழ்களிலும் ஒரு மலாய் மொழி இதழிலும் எழுதியுள்ளார். கருத்தரங்க ஆய்வு மலர்களின் பதிப்பாசிரியராக இருந்தார். சிங்கள - தமிழ்ப் பண்பாட்டினைப் பற்றிய ஆய்வு இதழ் ஒன்றினைத் தொடங்க வேண்டும் என்றுகூட அவர் ஒரு சமயம் திட்டமிட்டார் என்று தெரிகிறது. (9(pg5.L.4) ܗܝ
7. கருத்தரங்கக் கட்டுரைகளை வெளியிடல்
இதழியல் பணியில் இதழின் உள்ளடக்கத்தைச் சிறப்புறவும் தகுதியுறவும் உருவாக்குவது கடும் பணியாகும். பன்னாட்டு ஆய்விதழாகத்

Page 27
40 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
தம் இதழை நடத்த விரும்பிய தனிநாயக அடிகள் பல கருத்தரங்குகளில் படிக்கப்பட்ட மிகச்சிறந்த கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்து வெளியிட்டார். மாதிரியாக முதல் மூன்றாண்டு (1952-1954) இதழ்களில் வந்தவை கொள்ளப்படுகின்றன. அவை வருமாறு:
1. அனைத்திந்தியக் கீழைஇயல் 16 ஆவது கருத்தரங்கு - லக்னோ - எஸ். வையாபுரிப்பிள்ளை - ஆய்வியலில் அண்மைக்கால வளர்ச்சிகள்’ (1,1,16-26)
2. அரச ஆசியவியல் கழகம் (இலங்கைக்கிளை) பொதுக்குழு 1946 - சுவாமி ஞானப்பிரகாசர் - திராவிடர்கள் இந்தோ - ஐரோப்பியர்கள் மூலத் தோற்றத்துக்கான மொழியியல் சான்றுகள்” (2:288-12) (கட்டுரை படித்தவர் சில்லா ஆயர் முனைவர் எட்மண்டு பெய்ரிஸ்)
3. பன்னாட்டு மானுடவியல் மற்றும் இனவியல் கழகம், வியன்னா, செப்.1952 - கிறிஸ்டோப் லான் ஃபியூரர் ஹெய்மண்டார்ஃப் - 'திராவிடச் சிக்கலில் புதிய பார்வைகள்” (2:2127-135)
4. அரச ஆசியவியல் கழகம் இலங்கைக்கிளை) - முனைவர் டபிள்யூ பலேந்திரா - 'திரிகோணமலை செப்புத் திருமேனிகள்’(22,176-198)
5. அனைத்திந்திய கீழை இயல் 17 ஆவது கருத்தரங்கு, அகமதாபாது - முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் - 'தொன்மைத் தமிழரசர்கள் - அவர்களது உயர்ந்த கோட்பாடுகள்' (32,103-109)
8. நூல்களிலிருந்து கட்டுரைகளை வெளியிடல்
மறைந்த அறிஞர்கள் அல்லது தம் காலத்து வாழும் அறிஞர்களின் மிகச் சிறந்த நூல்களிலிருந்தும் அச்சேறாத நூல்களிலிருந்தும் ஆய்வேடுகளிலிருந்தும் கட்டுரைகளை எடுத்துத் தம் இதழில் தனிநாயகம் அடிகள் வெளியிட்டுள்ளார். மாதிரியாக முதல் 3 ஆண்டு இதழ்களில் வந்தவை கொள்ளப்படுகின்றன. அவை வருமாறு.
1. யாழ்ப்பாணத்து அரசர்களும் இலங்கைத் தமிழர்களின் தொல் பழங்காலத்திலிருந்து தொடங்கும் வரலாறும் (அச்சேறாத நூல்) - சுவாமி ஞானப்பிரகாசர் - திராவிடர்களின் மூல இருப்பிடம் இலங்கை (1,1,2735)
2. மேற்படி நூலின் இரண்டாவது இயல் - சிங்களர்களாக மாறிய தமிழர்கள் (1,2132-142)

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 41
3. மேற்படி நூலின் மூன்றாவது இயலாக இருக்கலாம் - இலங்கையில் தமிழர் ஆட்சி (13,23-225)
4. நான்காவது இயல் - யாழ்ப்பாண வரலாற்றியலுக்கான சான்றுகள் (2,344,3O3.316)
5 தொன்மைக்காலத் தமிழர் நாடுகளில் கல்வி - பண்டித கே.பி. ரத்தனம் - (அச்சேறாத ஆய்வேடு) தமிழர் நூல்கள் (13,254-268)
6. கல்வியின் தலைமையும் பண்பும் (23 & 4,324-333)
7. மொஹன்சொதரோ - சர் மார்டிமர் வீலர் - மொஹன்சொதரோ (2,1,17-27)
8. ஊரும் பேரும் - இரா.பி.சேதுப்பிள்ளை - தமிழக ஊர்ப்பெயர்கள்’ மொழி பெயர்த்தவர் எம்.எஸ்.தாயப்பப்பிள்ளை (3,1,82-9) .
9. இதழ்களிலிருந்து எடுத்தாளுதல்
90. ஒரு மிகச்சிறந்த இதழாசிரியர், தம் காலத்தும், முன்னும் வந்த பல இதழ்களைப் பற்றி அறிவதோடு, அவற்றின் சிறந்த தன்மைகளையும் உள்ளடக்கத்தையும் நன்றியுடன் குறிப்பிட்டுத் தேவைக்கு எடுத்தாள வேண்டும். மிகச்சிறந்த இதழ்களிலிருந்து முதல் மூன்றாண்டுகளில் (19521954) தனிநாயக அடிகள் எடுத்தாண்ட கட்டுரைகளும் செய்திகளும் வருமாறு:
91. தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்சர்’ முதல் இதழின் ஆசிரியவுரையில் இந்தக் காலாண்டு இதழ்’ என்ற தலைப்பில் கூறிவருகையில் ‘தி தமிழியன் ஆண்டிகுயரி’ (எண் 6) இதழிலிருந்து, முனைவர் ஜி.யூ போப் அவர்கள், மிக உயர்ந்த பெருமையுடைய தமிழ்மொழியைப் பற்றி பிரிட்டிஷ் அரசும் இந்திய அரசும் உலகுக்கு அறிவிக்காமல் புறக்கணிக்கின்றன என்று கூறியுள்ள கருத்தை எடுத்தாண்டுள்ளார் (1,12). 1953 ஜனவரி இதழின் ஆசிரியவுரையில் “தி ஆர்யன் பாத்” (அக்.1952) இதழ் ஆசிரியர் ‘பல்கலைக்கழகங்கள் தரமுடைய உயர்ந்த கல்வியை அளிக்க வேண்டும்’ என்று எழுதியுள்ளதை எடுத்துக் an|u| TTរាំ. (2,i,li)
92. 'தி இண்டியன் ஜியாகிரபிகல் ஜேர்னல்’ இதழில் வந்த திரு. கே. இராமமூர்த்தியின் ‘தமிழ்நாட்டு மொழிவழி நிலப்பகுதி பற்றிய ஆங்கிலக் கட்டுரையைத் தனிநாயக அடிகள் எடுத்து வெளியிட்டுள்ளார் (126; 170) - * • & “ ነ ' ` '' ኣ. * ; , ፌጥ 'r

Page 28
42 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
9.3. செய்திகள் மற்றும் துணுக்குகள் (News & Notes) பகுதியில் பெரியனவும், சிறியனவுமாக 40 செய்தித் துணுக்குகள் பல இதழ்களிலிருந்து தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இவற்றின் கீழ், எந்த இதழ் என்ற குறிப்பு இல்லை. “மெட்ராஸ் மெயில்’, ‘டெமாக்ரசி’ என்ற இரண்டு இதழ்களின் பெயர்கள் மட்டும் இரண்டு செய்தித் துணுக்குகளின் கீழே உள்ளன. இலண்டன், நியூயார்க், பாரிசு, கொழும்பு, புதுதில்லி, பூனா, கல்கத்தா, சென்னை, காரைக்குடி, இராமநாதபுரம் முதலிய பல ஊர்களிலிருந்து இதழ்களில் வந்த செய்திகள் இவை. தமிழ்மொழி, கல்வி, வரலாறு, கலை, பண்பாடு முதலியன பற்றிய செய்திகளாகத் தேர்ந்தெடுத்துத் தனிநாயக அடிகள் தந்துள்ளார். 1954 இதழில் செய்திகள் மற்றும் துணுக்குகள் பகுதி இடம் பெறவில்லை.
94. ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி ஆஃப் இந்தியா', 'தி சண்டே இண்டியன் எக்ஸ்பிரஸ்’ ‘சிலான் டெய்லி நியூஸ் (21,4-5) 'தி ஹிண்டு’ (2,3,4,219) ஆகிய இதழ்களில் ‘தமிழ் கல்சர்’ இதழ் பற்றி வந்த மதிப்புரைகளைச் சுருக்கமாகத் தந்துள்ளார் தனிநாயக அடிகள், !
10. இதழியில் வளர்த்த நட்புறவு
10.0. தனிநாயக அடிகளின் நண்பர்கள் - நட்புக்குரிய அறிஞர்கள், பெரியோர்கள் - தமிழ் கல்சர்’ இதழில் எழுதியுள்ளனர்; ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியோர் தனிநாயக அடிகளின் நெருங்கிய நட்புக்கு உரியவர்கள் ஆயினர்.
10.1 தனிநாயக அடிகள் படித்தபோது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக இருந்த திரு எம். இரத்தனசாமி, தமிழ்த்துறை ஆசிரியர்களாக இருந்த திரு தெ.பொ. மீனாட்சி சுந்தரம், திரு அ.சிதம்பரநாதன் செட்டியார், திரு வ.சுப. மாணிக்கம், ஆங்கிலத்துறைப் பேராசிரியராக இருந்த திரு சிஆர். மயிலேறு, தத்துவத் துறைப் பேராசிரியர் திரு டி.ஐ. ஜேசுதாஸ் முதலியோர் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதினர்.
10.2. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தனிநாயக அடிகளுடன் பயின்ற திரு வ.அய். சுப்பிரமணியம் திருவனந்தபுரத்திலுள்ள பல்கலைக் கழகத்தில் இருந்தபொழுது ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதினார். மேலும் இவர், “திருவனந்தபுரத்தில் வாழும் அறிஞர்கள் சிலரிடமிருந்து கட்டுரைகளைப் பெற்று நான் அனுப்பினால் அவை தமிழ்க் கல்சரில் உடனே அடிகள் வெளியிடுவார்” என்று கூறியுள்ளார் (அமுதபX). திருவனந்தபுரத்திலிருந்து பேராசிரியர் எஸ்.வையாபுரிப் பிள்ளை, முனைவர் பி.சி. அலெக்சாண்டர், திரு சி. ஜேசுதாஸ் முதலியோர் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியுள்ள கட்டுரைகள் இவர் வாங்கி அனுப்பியிருக்க வேண்டும். ‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழ்களில்

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 43
ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்த முனைவர் வ.அய். சுப்பிரமணியம் தமிழ்க் கலை மன்றம், உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஆகியவற்றில் தொடர்ந்து தனிநாயக அடிகளுடன் இணைந்து நின்றார்.
103. தூத்துக்குடி, தமிழ் இலக்கியக் கழகத்தைத் தனிநாயக அடிகள் தொடங்கிய காலத்திலிருந்து இக்கழகத்திலும் தமிழர் பண்பாட்டுக் கழகத்திலும் இணைந்து பணியாற்றிய திரு ஏ.சி. பால்நாடார், தூத்துக்குடி சிதம்பரம் கல்லூரி முதல்வர் திரு சி.எஸ். இராகவன் ஆகியோர் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியுள்ளனர். தூத்துக்குடி ஆயர் திபூர்த்தியூஸ் ரோச், தனிநாயக அடிகளை வடக்கன் குளத்தில் பணியமர்த்திக் கொண்டவர், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் பயில அனுப்பியவர். தனிநாயக அடிகள் வடக்கன் குளம், தூய தெரசாள் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றியபொழுது ஆசிரியர்களும், குருக்களும் தங்கியிருந்த பகுதிக்குத் தாம் நெருங்கிய அன்பும் நட்பும் பூண்டிருந்த ஆயர் பெயரைச் சூட்டி, திபூட்சியானா’ என்று அழைத்தார். அந்த ஆயரையே தாம் தொடங்கிய ‘தமிழ் கல் சர்’ இதழுக்குத் தோற்றுவித்தவராகவும், புரவலராகவும் (Founder and Patron) ஏற்றார். இதனை, ஆயர் திபூர்த்தியூஸ் ரோச் ‘தமிழ் கல்சர்’ இதழை வாழ்த்தி அனுப்பியுள்ள 9.11.1953 நாளிட்ட மடல் வழி அறியலாம் (31/2).
104. தமிழ் கல்சர் தொடங்கிய காலத்தில் தனிநாயக அடிகள் கொழும்பு, இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வித் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். அங்கு ஆசிரியப் பயிற்சிக் கல்லூரியில் பணிசெய்த பண்டித க.ப. ரத்தனம், கொழும்பு ஆட்சி மொழிக் குழுவில் இருந்த திரு எஃப். எக்ஸ்.சி. நடராஜா, தனிநாயக அடிகளுடன் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய பல துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்களாகிய திரு கே.எஸ். அருள்நந்தி, திரு எம். முகம்மது உவைஸ், முனைவர் ஏ. ஜெயரத்தனம், முனைவர் எஸ்.அரச ரத்தனம், முனைவர் ஏ. சதாசிவம், திரு கே. நேசையா, முனைவர் கே. கணபதிப்பிள்ளை, திரு பி.பி.ஜே. குணசேகரம், நீதித்துறையில் பணியாற்றிய எச். டபிள்யூ. தம்பையா, தனிநாயக அடிகள் இளவயதில் படித்த தூய பத்திரிசியார் கல்லூரியைச் சேர்ந்த கீழை இயல் துறையின் இயக்குநர் வண.எச்.எஸ். டேவிட் முதலியோரும் ‘தமிழ் கல்சர்’ இதழில் தொடர்ந்து எழுதியுள்ளனர். திரு எஃப்.எக்ஸ்.சி. நடராஜா, தூத்துக்குடியில் தனிநாயக அடிகள் தொடங்கிவைத்த கத்தோலிக்க எழுத்தாளர் மாநாட்டில் இரண்டாம் ஆண்டுக் கூட்டம் கோயம்புத்தூரில் நடைபெற்றபொழுது, இலங்கையிலிருந்து வந்து கலந்து கொண்டுள்ளார். நீதிபதி எச்.டபிள்யூ தம்பையா இலங்கையில் நான்காம் உலகத் தமிழ் மாநாடு (1974) நடைபெற இருந்தபொழுது, கருத்து வேறுபாடு காரணமாக உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் இலங்கைக் கிளைத் தலைவர் பதவியை விட்டு விலகினார். (அமுத, ப-86), இலங்கைப் பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறையில் பணியாற்றிய முனைவர் எஸ். அரச ரத்தனத்தைத் தனிநாயக அடிகள்

Page 29
44 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
மலாயாப் பல்கலைக்கழக இந்தியத் துறையின் தலைவராகத் தான் பணியேற்றதும் அங்கு அழைத்துக் கொண்டுள்ளார்.
105. மலாயப் பல்கலைக் கழகத்தின் இந்தியத் துறையில் தனிநாயக அடிகளுடன் பணியாற்றிய முனைவர் எஸ்.அரசரத்தனம், திரு எஸ். சிங்காரவேலு முதலியோர் 'தமிழ் கல்சர்’ இதழில் எழுதினர். திரு எஸ். சிங்காரவேலு ஆசிரியர் குழுவில் உறுப்பினராக இருந்து நூல் மதிப்புரை வழங்கியுள்ளார். ஆயர் திபூர்த்தியூஸ் ரோச் அவர்கள் தம் வாழ்த்துரையில் குறிப்பிட்டுள்ளதுபோல், இந்திய இலங்கை இதழாக விளங்கி 'தமிழ் கல்சர்’ படிப்படியே பன்னாட்டு இதழ் என்னும் பெருமைக்கு வளர்ந்தது. இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இருந்தவரை, தனிநாயக அடிகளுடன் பணியாற்றிய அப்பல்கலைக் கழகத்தினர் அதிகம்பேர் எழுதினர். தனிநாயக அடிகள் 1961 இல் மலாயப் பல்கலைக் கழகத்துக்கு வந்ததும் அப்பல்கலைக் கழகத்தில் உள்ளவர்களும் எழுதினர். ‘தமிழ் முரசு’ இதழாசிரியர் கோ. சாரங்கபாணி தமிழர் திருநாள் விழாவுக்கு 1954 இல் தனிநாயக அடிகளை அழைக்கத் தொடங்கியது முதல் மலாயாவுடன் தனிநாயக அடிகளுக்கு நல்லுறவு ஏற்பட்டிருந்தது.
106. தமிழ் கல்சர் முதல் இதழின் ஆசிரியவுரையில் தனிநாயக அடிகள் சுனிதி குமார் சட்டர்ஜியின் "தி வேதிக்’ஏஜ்’ என்ற நூலைக் குறிப்பிட்டு, அந்நூலில் இந்தியப் பண்பாட்டில் திராவிடக் கூறுகள் முக்கால் பகுதிக்கு மேல் உள்ளன’ என்று கூறப்பட்டுள்ள கருத்தை எடுத்துக் காட்டியுள்ளார். திரு சுனிதி குமார் சட்டர்ஜி 1956 முதல் தமிழ் கல்சர் இதழில் தொடர்ந்து எழுதியுள்ளதோடு தனிநாயக அடிகளிடம் நட்பும் பூண்டார்.
107. ‘தமிழ் கல்சர்’ இதழ் தமிழ்நாடு, இலங்கை என்று பரவத் தொடங்கி, இந்தியா, இலங்கை, மலாயா நாடுகளில் நிலைத்துப் படிப்படியே வெளிநாடுகளையும் எட்டியது. உலகநாடுகளைச் சேர்ந்த அறிஞர்கள் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியதால் தனிநாயக அடிகளுடன் தொடர்பு பெறலாயினர்; அதே போல் தனிநாயக அடிகள் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின்போது அறிமுகமான தமிழியல் ஆய்வாளர்கள் தமிழ் கல்சர்’ இதழில் எழுதலாயினர். இ.சி. நோல்டன், ழான் ஃபீலியோசா, எம்.பி. எமனோ முதலியோர் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியதன் வழித் தமிழ்நாட்டுக்கு அறிமுகம் ஆயினர். திரு எம்.பி. எமனோ, திரு ழான் ஃபீலியோசா, திரு கமில் சுவலபில், திரு ஆர்.இ. ஆஷர் முதலியோர், ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதியதால் தனிநாயக அடிகளுக்கு அறிமுகம் ஆயினர். தனிநாயக அடிகளின் வெளிநாட்டுப் பயணங்களின் பொழுதும் மாஸ்கோவில் நடந்த கீழை இயல் 25 ஆவது மாநாட்டின் பொழுதும் அறிமுகமான வெளிநாட்டினர் ‘தமிழ் கல்சர்’ இதழில் எழுதினர்.

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 45
“கீழ்த்திசை மாநாட்டுக்குத் தமிழ்க் கலைகளைப் பற்றி அறிய விரும்பிய வேறு அறிஞர்கள் பலரும் வந்திருந்தனர். தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளையும், தமிழைப் பற்றிய ஆங்கில முத்திங்கள் வெளியீட்டையும் பெற விரும்பினர் பலர்".
என்று தனிநாயக அடிகள் (ஒ.ப.63) குறிப்பிட்டுள்ளார். அம் மாநாட்டில் தமிழில் தேர்ந்தவர்களாக விளங்கிய முனைவர் அர்னோலெஃமான் என்னும் ஜெர்மானியரையும், திரு கிளாசோ (கண்ணன்), திரு எம். ஆந்திரனோவ், திரு பியாதி கோர்ஸ்கி, திரு ரூதின் (செம்பியன்) என்னும் நான்கு இரஷ்யரையும் தனிநாயக அடிகள் சந்தித்தார். இவர்களில் முனைவர் அர்னோ லெஃமான், திரு எம். ஆந்திரனோவ் ஆகிய இருவரும் தமிழ் கல்சர்’ இதழிலும், பின்னர் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்" இதழிலும் எழுதினர். திரு எம். ஆந்திரனோவ் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுத் தனிநாயக அடிகளுக்குத் தன்நாட்டிலிருந்து கட்டுரைகள் பெற்று அனுப்பி உதவும் பணிபுரிந்தார். திரு ழான் ஃபீலியோசா, மூன்றாம் உலகத் தமிழ் மாநாடு (1970) பாரீசில் நடப்பதற்கு அப்போது அங்குப் பிரான்சுக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகத் தம்முடன் பணியாற்றிய தனிநாயக அடிகளுடன் சேர்ந்து பாடுபட்டார். திரு கமில் சுவலபில் (செக்கோஸ்லோவாகியா), திரு ஆர்.இ ஆஷர் (இங்கிலாந்து), திரு எஃப். பி.ஜே. கைப்பர் (ஆலந்து), திரு எம்.பி. எமனோ (அமெரிக்கா), திரு பர்ரோ (இங்கிலாந்து) முதலிய தமிழியல் அறிஞர்கள் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமையவும் உலகத் தமிழ் மாநாடுகள் நடக்கவும் தொடர்ந்து தனிநாயக அடிகளுக்கு உதவியவர்களும் பாடுபட்டவர்களும் ஆவர். திரு கமில் சுவலபில் ‘தமிழ் கல்சர்’ இதழில் வாசகர் மடல் எழுதிப் பின் தொடர்ந்து 21 கட்டுரைகள் எழுதித் தமிழியலுக்கும் தமிழ் நாட்டுக்கும் தனிநாயக அடிகளுக்கும் அறிமுகம் ஆனவர்.
* திராவிட மொழியியலில் ஈடுபட்டுள்ள அனைவரும் ஒரு பன்னாட்டு அமைப்பை ஏற்படுத்தி ஒருங்கிணைந்து தம்முள் தொடர்பு கொண்டு உழைக்க வேண்டும்”
எனத் திராவிட மொழியியல் உலக அமைப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை முதன் முதல் கமில் சுவலபில் ‘தமிழ் கல்சர்’ இதழில் 1955 இல் (41,54) அடிக்குறிப்பு) வெளியிட்டார். இவர் ‘தமிழ் கல்சர்’ இதழின் மூலம் திராவிடவியல் கருத்திலிருந்து தமிழியல் பக்கம் அதிகம் ஈர்ப்புற்றதால் 1956 இல்,
“உலக நாகரிகத்துக்குத் தமிழ்ப் பண்பாடு தந்துள்ளகொடையைப் பண்பாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டியது தமிழர்களுக்கும், தமிழின்பால் ஈடுபாடு கொண்டுள்ள பண்பாட்டு
ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகப்பெரும் கடமையாகும்”.

Page 30
46 s தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
என்று கூறித் தமிழ் மொழி, இலக்கியம், கலை, கட்டடம் பற்றியெல்லாம் உலக மொழிகளில் எழுதியும் மொழிபெயர்த்தும் தரப் பன்னாட்டுக் கல்வி சமூக பண்பாட்டுக் கழகம் (யுனெஸ்கோ) என்னும் அமைப்பிடமிருந்து உதவிபெற வேண்டும் என்று எழுதியுள்ளார் (4,5295297). இதனைத் தனிநாயக அடிகள் இதழின் முதற் பக்கத்திலேயே ‘வேண்டுகோள்’ என வெளியிட்டுக் கீழே அடிக்குறிப்பில் கமில் சுவலபிலை வாழ்த்தியுள்ளார். இக்கருத்தே தனிநாயக அடிகளை உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கவும், பன்னாட்டுக்கல்விச் சமூகப் பண்பாட்டுக் கழக (யுனெஸ்கோ) ஒத்துழைப்புடன் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க ஆவன புரியவும் தூண்டியுள்ளது.
10.8. ‘தமிழ் கல்சர்’ இதழின் வழி அறிமுகமானவர்களும் தமிழ்க்கலை மன்றத்தின் வழி அறிமுகமானவர்களும் தனிநாயக அடிகளிடம் நட்புறவுடன் இருந்ததோடு அவரது தமிழ்ப் பணிகளுக்குக் கைகொடுத்து உதவினர். நீதிபதி மகராசன், இரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை, திரு சி. இராஜகோபாலாச் சாரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் நட்பாக விளங்கினர், முனைவர் வ.அய். சுப்பிரமணியம், முனைவர் மு. வரதராசன், இந்தியன் ஒவர்சீஸ் வங்கியின் இயக்குநர் அ. சுப்பையா முதலியோர் தனிநாயக அடிகளுக்கு நட்டாகியதோடு தமிழ்க்கலை மன்றம், ‘தமிழ் கல்சர்’ இதழ், உலகத் தமிழாராய்ச்சி மன்றம், “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்’ இதழ், உலகத் தமிழ் மாநாடு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றுக்குத் தனிநாயக அடிகளுடன் இணைந்து தொடர்ந்து பாடுபட்டனர்.
“ஆட்களுடன் எளிதில் பழகும் ஆற்றல் அடிகளுக்கு வாய்ந்த பெருங்குணம். துறவு மேற் கொண்டிருந்ததால், பழகுபவர்கள் மிக மதிப்புடன் அவரோடு உரையாடினர். நீடிக்கும் நட்புறவைப் பலருடன் அடிகள் கொண்டிருந்ததற்கு அவைதாம் காரணம்”
என்று முனைவர் வஅய். சுப்பிரமணியம், எல்லாருடனும் இனிமையாகப் பழகும் தனிநாயக அடிகளின் நட்புறவை விளக்கியுள்ளார். (9(p5.LuxVIII).
1. மக்கள் தொடர்பியலில் மன்றங்கள்
11.1. தமிழ்த்துாது கூறமுற்பட்ட தனிநாயக அடிகள், மக்கள் தொடர்பியலில் மன்றங்கள் பெரிதும் உதவும் என்று உணர்ந்திருந்தார். உரோம் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது தம்மோடு பயின்று கொண்டிருந்த தமிழக மாணவர்கள் எண்மரைச் சேர்த்துக் கொண்டு ‘வீரமாமுனிவர் கழகம்’ ஏற்படுத்தியிருந்தார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது இலங்கை மாணவர்களை இணைத்து 'ஈழ நாட்டு இளைஞர் மன்றம்’ அமைத்துச் செயற்பட்டார்.

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 47
12. தூத்துக்குடியில் 1948 இல் தமிழ் இலக்கியக் கழகம் அமைத்தார். கிறித்துவராகிய தனிநாயக அடிகள் சமயப் பொறையும் தமிழ் இலக்கியப் பணியும் மேற்கொண்டமையைத் தமிழ் இலக்கியக் கழகம் அமைத்தது உணர்த்துகிறது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் எம்.இரத்தினசாமி எழுதிய ஆங்கில நூல் (India from the Dawn), g560fpsTus, 9|Lq.56fair 6th.65u' gli GoIG (Nature in Ancient Poetry), சைமன் காசிச் செட்டியின் நூல் (The Tamil Plutarch) முதலிய பல ஆங்கில நூல்களும் முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளையின் ‘தமிழ் விருந்து’, ‘தமிழர்வீரம்’, ‘தமிழின்பம் முதலியனவும் ஞா.தேவநேயப் பாவாணரின் "பழந்தமிழராட்சி, முனைவர் மு.வரதராசனின் ‘தமிழ் நெஞ்சம் முதலியனவும் தமிழ் இலக்கியக் கழகத்தின் பன்னாட்டுத் தமிழ் நூல் விற்பனை நிலையத்தின் மூலம் கிடைக்கும் என்று ‘தமிழ் கல்சர்’ இதழில் விளம்பரம் தரப்பட்டுள்ளது.
13. தூத்துக்குடி மறைமாவட்டத்தில் பணியாற்றிய பொழுது மாசி/ பிப்பிரவரி மாதத்தைக் கத்தோலிக்க இலக்கிய மாதமாகக் கொண்டாடச் செய்தார் தனிநாயக அடிகள். கத்தோலிக்க எழுத்தாளர் மாநாட்டை முதலாம் ஆண்டு தூத்துக் குடியிலும், இரண்டாம் ஆண்டு கோயம்புத்துாரிலும் நடத்தியுள்ளார்.
11.4. மலாயாவில் ‘தமிழ் முரசு’ நாளிதழின் ஆசிரியர் திரு கோ.சாரங்கபாணி 1954, 1955 ஆண்டுகளில் ‘தமிழர் திருநாள் விழா நடத்தித் தாம் மலேசிய நாடு முழுவதும் அமைத்த நூற்றுக்கணக்கான ‘மணிமன்றம்’ (Bell Club) என்னும் அமைப்புகளில் தனிநாயக அடிகளைப் பேசச் செய்தார். மலாயப் பல்கலைக் கழக இந்தியத் துறையில் தனிநாயக அடிகள் பணியாற்றியபொழுது, ‘தமிழ்ப் பேரவை நடத்தவும் அதன் சார்பில் ‘தமிழ் ஒளி' என்ற ஆண்டு இதழை வெளியிடவும் மாணவர்களை ஊக்குவித்தார்.
11.5 தமிழ் இலக்கியக் கழகம் தொடங்கியபொழுது, அத்துடன் ‘எழுத்தாளர் இல்லம்’ ஒன்றையும், “உயர்நிலைத் தமிழாராய்ச்சிக் கழகம்’ ஒன்றையும் நிறுவத் தனிநாயக அடிகள் திட்டமிட்டார் (அமுத.ப1). இத்திட்டங்களை உடனடியாகச் செயற்படுத்த முடியவில்லை என்றாலும், தனிநாயக அடிகள் படிப்படியே செயற்பட்டுத் தமிழர் பண்பாட்டுக் கழகம், தமிழ்க்கலைமன்றம், உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றை உருவாக்கியதன் மூலம் வெற்றி கண்டார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் வளர்ச்சிக்கு உதவியதோடு அவர்களது சிறப்புக் கூட்டத்தில் சொற்பெருக்காற்றினார்.
116. 5 6p/56ypi uajsTUTi' Gj, 5pasub (Academy of Tamil Culture) என்ற அமைப்பை 1952 இல் தூத்துக்குடியிலும், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பணியேற்றதும் கொழும்பிலும் நிறுவினார்.

Page 31
48 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
சென்னையில் 1954 இல் இம்மன்றத்தைத் ‘தமிழ்க் கலை மன்றம்’ (Academy ofTamil Culture) என்ற பெயரில் நிறுவி அதன் பொறுப்பில் ‘தமிழ் கல்சர் இதழை வெளியிட்டார். 1954 இல் புதுதில்லியில் உலகக் கீழை இயல் மாநாடு நடைபெற்றபொழுது தன்னைச் சந்தித்த முனைவர் வஅய். சுப்பிரமணியத்திடம் ‘தமிழ்ப் பண்பாட்டுக் கழகமும் அதன் வெளியீடான ‘தமிழ் கல்சரும் மிகவும் செயலிழந்து விட்டன” என்று கூறித் தனிநாயக அடிகள் வருத்தப்பட்டுள்ளார். அம்மாநாட்டின் பொழுதுதான் தனிநாயக அடிகள் முயற்சியால் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் அமைக்கப்பட்டது. அப்போது, ‘தமிழ் கல்சர்’ இதழின் மூலமும் செய்தி மடல் மூலமும் தமிழ் ஆய்வுகள் பற்றிய செய்திகள் வெளியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டுடன் ‘தமிழ் கல்சர்' இதழ் நின்று போனதால், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் சார்பில் “ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” இதழைத் தொடங்கினார் தனிநாயக அடிகள். மேலும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்க 1966 முதல் 1970 வரையில் தொடர்ந்து பாடுபட்டார்.
15. புனை பெயர்கள்
எழுத்தாளர்கள் தம் கருத்துகளை நேரிடையாகக் கூற முடியாத
பொழுதும், மறைமுகமாகக் கூற வேண்டிய கட்டாயம் நேரும்பொழுதும், நெருக்கடியான சூழ்நிலைகளாலும், மாறுபட்ட கருத்துக்களைக் கூற வேண்டிய பொழுதும், வாசகர்களிடம் தம் பெயரை வேறுவகையில் அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிற பொழுதும் புனை பெயர்களைக் கையாள்வார்கள். இந்தச் சூழல் இதழாசிரியர்களுக்கு அடிக்கடி நிகழ்வதாகும். பள்ளிப்படிப்பை யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் பயின்றபொழுது ‘பாட்டில்டு சன் ஷைன்' என்னும் கல்லூரி இதழின் ஆசிரியராக இருந்தபொழுது, “பிரான்சிஸ்கஸ் சேவியர் ஸ்தன்னிஸ்லாஸ்’ என்ற தம் சொந்தப் பெயரிலேயே எழுதியுள்ளார். பின்னர் கொழும்பு நகரில் தூய பெர்னார்டு இறையியல் கல்லூரியில் மெய்ம்மையியல் பயின்றபொழுது (1931-1934) அவருக்கு ஏதோ நெருக்கடி நேர்ந்துள்ளது; தக்க காரணமின்றிக் கல்லூரியைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். இச்சூழல் காரணமாகவோ, பிற காரணமாகவோ கொழும்பிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த "தி மெசஞ்சர் ஆஃப் தி சேகரட் ஹார்ட் ஃபார் சிலான்’ என்னும் ஆங்கில வார இதழில் ‘மேக்ஸ் பெம்பர்டன்’ என்னும் புனைபெயரில் 1 கட்டுரைகள் எழுதியுள்ளார். "மேக்ஸ் பெம்பர்டன்" என்னும் புனைபெயரை “எம்.பெம்பர்டன்' என்றும் குறித்துள்ளார். சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்னும் 1956 ஆம் ஆண்டுச் சட்டத்தை எதிர்த்துத் தனிநாயக அடிகள் 1956 முதல் ஆங்காங்கு நேரிடையாகவும் குறிப்பாகவும் பேசியும் எழுதியும் வந்தார். 1961 இல் இலங்கைத் தமிழ் மக்கள் மேல் சிங்களம் திணிக்கப்பட்டபொழுது தமிழ் மக்கள் கிளர்ந்தெழுந்தனர். தமிழர் தலைவர் தந்தை செல்வநாயகம் நடத்திய

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 49
'சத்தியாகிரகப் போராட்டத்துக்குத் தனிநாயக அடிகளின் சொற்பொழிவுகள் துணை செய்ததால் அவரைச் சிறைப்படுத்தச் சிங்கள அரசு திட்டமிட்டது. இச்சூழலில் மலேசியப் பல்கலைக்கழக இந்தியத் துறைத்தலைவராகப் பதவியேற்கும்படி அழைப்பு தனிநாயக அடிகளுக்கு வந்தது. அப்போது தனிநாயக அடிகள் தம் நண்பர் பேராசிரியர் குநேசையா அவர்களுக்கு எழுதிய மடலில் "ஏக் நாயக்கா’ என்று கையொப்பமிட்டிருந்தார். "ஏக் நாயக்கா’ என்றால் சிங்களமொழியில் தனிநாயகம் ஆகும் வே.ஆ.ப.36). "நேஷனலிஸ்ட்’ போன்ற பல புனை பெயர்களில் செய்தித் தாள்களுக்குத் தொடக்கக் காலத்தில் எழுதி இருந்தார் என்று முனைவர் வேஅந்தனி ஜான் அழகரசன் (ப.207) குறித்துள்ளார். எவ்விதழ்களில் என்ன கட்டுரைகள் எந்தக் காலத்தில் என்ற விவரம் கிடைக்கவில்லை. தமிழ் கல்சர்’ இதழில் ‘செந்தமிழன்' என்ற புனைபெயர் யாருடையது என்பது தெரியவில்லை. இப்புனைபெயர் தனிநாயக அடிகளுடையதாகலாம். பொதுவான கட்டுரைகளும் ஆட்சிமொழியைப் பற்றிய கட்டுரைகளும் இப்புனை பெயரில் வந்துள்ளன.
16. நூலாக்கம் பெறுதல்
16.1 இதழ்களில் எழுதுகிற செய்திகள், கட்டுரைகள் ஆகியன நூலாக்கம் பெறுவதற்குரிய வாய்ப்பு அதிகம். எழுதிய ஆசிரியர்கள் அவிற்றை மேலும் சிந்தித்து எழுதி நூலாக்குவர். தனிநாயக அடிகளின் தூண்டுதலால் தமிழ் கல்சர்’ இதழில் எழுதியோர் தம் ஈடுபாட்டால் மேலும் தொடர்ந்து தாம் எழுதிய அதே தலைப்பில் துறையில் எழுதித் தம்மை வளர்த்துக் கொண்டுள்ளதோடு அவற்றை நூலாக்கவும் செய்துள்ளனர். இதற்குரிய தூண்டுகோலாகத் ‘தமிழ் கல்சர்’ இதழ் அமைந்தது. மாதிரிக்குச் சில வருமாறு:
ஆசிரியர் கட்டுரை நூல்
சோம லெட்சுமணன் செட்டியார் (சோமலெ இக்கால உரைநடைப் போக்குகள் (22158-163) - தமிழ் இதழ்கள் வி.சச்சிதானந்தன், பாரதியும் வால்ட் விட்மனும், - விட்மனும் (9,4343-370) பாரதியும்
(ஆங்கில நூல்)
பி.எல். சாமி, குறிஞ்சி, (4.2132-189) - சங்க
இலக்கியங்களில் செடி, கொடி
இன விளக்கம்

Page 32
SO தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
க.கைலாசபதி, வீரயுகப்பாடல், - வீரயுகப் பாடல் (Gg. 1,1,184) (ஆங்கில நூல்)
எஸ். வையாபுரிப்பிள்ளை, தமிழ் மொழி - தமிழ்மொழி இலக்கிய வரலாறு, (3,3 &4,331-358) இலக்கிய
வரலாறு (ஆங்கில நூல்)
மார்க்கபந்து சர்மா, சிலம்பின் காப்பியம், - சிலப்பதிகார
(1,2,154-162) ரசனை
ஜே.எம். சோமசுந்தரம் பிள்ளை, - சோழர் கோயில் இராசராசனின் பிரகதீசுவரர் கோயில் பணிகள்.
(9,3,321 - 240)
இவ்வாறே கே.கே. பிள்ளை (வரலாறு), என்.சுப்பிரமணியன் (வரலாறு), அ.மு.பரமசிவானந்தம் (தமிழரும் பண்பாடும்), எஸ். மகராசன் (திருமூலர்), ஜிவன்மீகநாதன் (திருவாசகம்) முதலியோர் நூல்கள் எழுதத் ‘தமிழ் கல்சர்’ இதழில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தூண்டுதலாக விளங்கியுள்னன.
16.2. தனிநாயக அடிகள் ‘சத்திய வேத பாதுகாவலன்’ இதழில் எழுதிய தமிழ்த்தூது, சங்க இலக்கியத்தின் சிறப்பியல்பு, தமிழின் வளர்ச்சி, ‘தமிழ் ஓசை’ இதழில் எழுதிய 'மலரும் மாலையும் முதலிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 1952 இல் ‘தமிழ்த்தூது’ என்னும் நூலாக வெளிவந்துள்ளன. 'தமிழின் வளர்ச்சி’ என்ற கட்டுரைக்குச் ‘செந்தமிழ் வளர்ச்சி’ என்று நூலில் தலைப்பிடப்பட்டுள்ளது. ‘ஒன்றே உலகம்’ என்னும் நூல் 1966 இல் வெளிவந்தது. இதில் தமது வெளிநாட்டுப் பயணங்களில் தாம் கண்ட இயற்கைச் சூழலையும், கலை பண்பாடு ஆகியவற்றையும் ஆங்குத் தமிழோடு தொடர்புடையவற்றையும் விளக்கி எழுதியுள்ளார். ‘தமிழ் கல்சர் முதல் இதழில் 1952 இல் செய்தி மற்றும் துணுக்குகள் பகுதியில், தான் தொகுத்துத் தந்த நியூயார்க் நகரச்செய்தியை (1193) வைத்து 'ஒன்றே உலகம் நூலில் (ப.43) ஐக்கிய அமெரிக்கா பற்றி எழுதும் பொழுது, “நாகபுரியிலிருந்து வெளிவரும் செய்தித்தாளின் ஆசிரியரொருவர் அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள ஒர் ஊருக்குச் சென்றிருந்த பொழுது, அவரை நீக்கிரோவர் என்றெண்ணி, அவருக்கு ஒர் உண்வுச் சாலையில் உணவு பரிமாற மறுத்துவிட்டனர். அப்பொழுது அவர் ஆங்கிலம் அறியாதவர் போல் அவர்களுடன் தமிழில் பேசத் தொடங்கினார். அவ்வாறு அவர் தமிழில் பேசியதால் அவர் வேற்று நாட்டவரென உணர்ந்து அவருக்கு உணவு பரிமாற முன் வந்தனர்” என்று எழுதியுள்ளார்.

தனிநாயக அடிகளின் இதழியல் பணி SF
17.வாசகர் மடல்கள்
70. ‘தமிழ் கல்சர்’பற்றி வாசகர்கள் அனுப்பிய பாராட்டு மடல்களையும், இதழில் வந்த கட்டுரைகளைப் பற்றிக் கருத்துரைக்கும் மடல்களையும் தனிநாயக அடிகள் இவ்விதழின் 1953, 1954 ஆம் ஆண்டு இதழ்களில் வெளியிட்டுள்ளார். பின்னர் அரிதாக ஒரிரு மடல்களின் கருத்துச் சுருக்கங்கள் (Extracts) மட்டுமே வெளிவந்துள்ளன; இம்மடல்களில் குறிக்கத்தக்கன வருமாறு.
17.1. “எதிர்வரும் இதழ்களில் இந்த அளவு உயர்ந்த தரத்தை நிலைப்படுத்துவது கடினம் என்றாலும் தாங்கள் தொடங்கியுள்ள இச்செயலில் தொடர்ந்திடுவீர்கள் என்று நம்புகிறேன்” என்று இலண்டன்
பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.பிஃபாசெட் மடல் எழுதியுள்ளார். (214).
17.2. "உங்கள் காலாண்டு இதழ் என்னை மிகவும் ஈர்த்துள்ளது, புதிய கருத்து வாயில்களைத் திறந்து வைக்கிறது’ என்று ஹார்வர்டு பல்கலைக்கழக நூலகர் ஜேடயிள்யூ கார்டெல் மடல் எழுதியுள்ளார். (2,1,4).
173. ‘தமிழறியாத மக்களுக்கு ஆங்கில மொழியின் வாயிலாகத் தமிழ்ப் பண்பாட்டைப் பரப்பும் தங்கள் தொண்டைத் தொடர்வீர்கள் என்று நம்புகிறேன். நான் ஐரோப்பிய நாடுகளில் தங்கியிருந்த காலங்களில் மிகப்பழைய இந்திய இலக்கியங்கள் என்றாலே சமஸ்கிருதம், பாலி, பிராகிருத மொழி இலக்கியங்கள் மட்டுமே என்று பலர் அறிந்திருக்கக் கண்டேன்' என்று வியன்னாவில் வாழும் முனைவர் கே.பி.இராமசாமி மடல் எழுதியுள்ளார் (23 & 4216).
17.4. “நான் எவ்வளவு காலமாக இந்தியக் கலைகளைப் பற்றியும் பல்லவர்காலச் சிற்பங்கள், சோழர்காலச் செப்புத்திருமேனிகள் பற்றியும் அறிய வேண்டுமென்று ஏங்கியிருந்ன்ே.” என்று கனடாவிலிருந்து கே.அம்புரோஸ் என்பவர் 'தமிழ் கல்சர்’ இதழ் கிடைத்த மகிழ்ச்சியில் பாராட்டியுள்ளார் (2,3, & 4, 220).
7.5. எம்.பி.எமனோ (அமெரிக்கா), எச்.சி.பொப்பிலி (நீலகிரி), மிசிண்டியா (பெங்களுர்) (23 & 4217-218) முதலியவர்களின் பாராட்டுரைகளும் ஆயர் திபூர்த்தியூஸ் ரோச் உரோமிலிருந்து அனுப்பிய வாழ்த்து மடலும் (342) வாசகர் பகுதியில் வந்துள்ளன.
176 வாசகர் மடல்களில் சில புதிய யோசனைகளைத் தெரிவிக்கும் மடல்களும் வந்துள்ளன. இலண்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் சி.பி. ஃபாசெட் தம் மடலில், “தமிழர் வாழும் நாடுகள், பகுதிகள் ஆகியவற்றைக் காட்டும் நிலவரைபடமும், பழைய கற்காலச் சின்னங்கள்

Page 33
52 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
கிடைக்கும் இடங்களைக் காட்டும் நிலவரை படமும் இதழில் வெளியிட வேண்டும்’ என்ற கருத்தைத் தெரிவித்துள்ளார் (21,4). கொழும்பைச் சேர்ந்த எம்.எஸ். சீவரத்தனம் ‘நல்லூர் ஞானப்பிரகாசரின் சொற்பிறப்பியல் அகராதியையும் வண. கிளாசட் எழுதிய பேச்சுமொழி பற்றிய திராவிடவியல் தத்துவங்கள் பற்றிய நூலையும் அச்சேற்ற வேண்டும்’ என்று எழுதியுள்ளார் (22219), இலங்கையைச் சேர்ந்த பி.கே. சிவப்பிரகாசம் 'தமிழர் வாழும் நாடுகளின் நிலவரைபடம், இக்கால இலக்கியங்களின் மொழி பெயர்ப்பு, ஆங்கிலத்தின் மூலம் தமிழைக் கற்பிக்கும் பாடம் ஆகியவற்றை வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளைத் ‘தமிழ் கல்சர்’ இதழுக்கும், தமிழைச் செவ்வியல் இலக்கிய (Classic) மொழியாக இலண்டன் பல்கலைக் கழகம் ஏற்கவில்லை என்பதைத் தமிழறிஞர்கள் மாற்றவேண்டும் என்ற பொது வேண்டுகோளை மக்களுக்கும் முன் வைத்துள்ளார் (22,212,220). கமில் சுவலபில் முதல் இதழில் வந்த கட்டுரையை அடிப்படையாக வைத்து மேலும் சில தகவல்கள் எழுதியுள்ளார் (31,2-3). பிரஞ்சுநாட்டு அறிஞர் ழான் ஃபீலியோசா எழுதியுள்ள மடல் பிரஞ்சு மொழியில் வந்துள்ளது (3,15). சிங்கப்பூரைச் சேர்ந்த திகோபாலகிருட்டிணன் 'ஆங்கில மறியாத தமிழனும் அறியும் பொருட்டுத் தமிழிலும் வெளியிட வேண்டும்’ என்று எழுதியுள்ளார் (345). தனிநாயக அடிகள் தம் இதழில் நிலவரை படங்கள், ஒவியங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிடத் தொடங்கினார்.
18. இதழ்களின் கருத்துகள்
‘அச்சும் அமைப்பும் அவ்வளவு குறிப்பிடத்தக்கனவாக இல்லை’ என்று "தி சண்டே இண்டியன் எக்ஸ்பிரஸ்' எழுதியிருந்தது (2,15). ஆனால் 'இல்லஸ்ட்ரேடட் வீக்லி ஆஃப் இண்டியா மதிப்புரையில் "தரக் குறைவான அச்சில் பல ஆய்விதழ்கள் வந்து கொண்டிருக்கிற நிலையில் ‘தமிழ் கல்சர்’ கவர்ச்சியான பதிப்பிலும் மிக உயர்ந்த அச்சிலும் வெளிவந்துள்ளது' என்று பாராட்டியுள்ளது (2,14). தமிழ் இலக்கியத்தையும் தமிழ்ப் பண்பாட்டையும் பயில்கிற மாணவர்களுக்கும் விரும்பிகளுக்கும் இந்தப் புதிய இதழ் நிறைய செய்திகளை வாரி வழங்குகிறது; மிக உயர்ந்த இதழாகிய ‘தமிழ் ஆண்டிகுயரியன்’ மறைந்த நிலையில் உண்மையான தேவையை இவ்விதழ் ஈடு செய்கிறது’ என்று "சிலான் டெய்லி நியூஸ்' இதழ் பாராட்டியுள்ளது (2,15). 'தி ஹிண்டு’ நாளிதழ் தனது மதிப்புரையில், “மிக உயர்ந்த தமிழ்ப் பண்பாட்டைப் போதிய அளவுக்கு யாரும் பரப்பவில்லை என்ற குறையை இவ்விதழின் ஆசிரியரும் கட்டுரையாளர்களும் உணர்ந்துள்ளார்கள். இவ்விதழின் தொகுதி 2 எண் 1 இக்குறையை எடுத்துக்காட்டுகிறது. மேலும் “மொழி ஆதிக்கம் அல்லது வட்டாரத் தேசியப் பற்று அல்லது புராணிய ஆரிய மேலாண்மை'யை இவ்விதழாசிரியர் எச்சரித்துள்ளார். தமிழின் மேன்மையை உலகுக்கு உயர்த்திக் காட்ட மொழி ஆதிக்கமோ வட்டாரத் தேசியமோ தேவையில்லை என்பதை இவ்விதழாசிரியர் உணரவேண்டும்.

தனிநாயக அடிகளின் இதழியல் பணி 53
தமிழின் உயர்வு தன்னியற்கையானது, தன்முழுத் தகுதியால் உலக மதிப்பை அடையும், பண்பாட்டு ஒற்றுமைகளை விட்டுவிட்டுப் பண்பாட்டு வேற்றுமைகளை வலியுறுத்தினால் நாட்டுக்கோ, தேசியத்துக்கோ எந்த நன்மையும் விளையாது’ என்று எழுதியுள்ளது (2,3,&4,218).
19. பிறர் பாராட்டுகள்
தனிநாயக அடிகளை இதழாசிரியராகக்கண்டு முனைவர் வே.அந்தனி ஜான் அழகரசன்.(ப20),
".............. உலக மக்கள் அனைவரும் தமிழ்ப் பண்பாட்டின் மேம்பாட்டையும் சிறப்பையும் தமிழ் இலக்கியத்தின் இனிமையையும் அறியவேண்டும் என்பதற்காக அடிகளார் தமிழ்ப்பண்பாடு (Tamil Culture) என்னும் ஆங்கில முத்திங்கள் ஏட்டை உருவாக்கி அதன் நிறுவன ஆசிரியராகப் பணியாற்றினார். உலகில் உள்ள பல பல்கலைக் கழகங்களுக்கு இந்த முத்திங்களேட்டை அனுப்பித் தமிழின் புகழ் மணக்கப் பாடுபட்டார்” என்று பாராட்டி எழுதியுள்ளார். இலங்கையில் நடந்த நான்காம் உலகத்தமிழ் மாநாட்டின் (1974) தலைமை உரையில் பேராசிரியர் சு. வித்தியானந்தன் வேஅ.ப.90).
“ காலாண்டு இதழாகிய ‘தமிழ் கல்சர்’ இதழை நடத்தி
ஆசிரியராக இருந்து தமிழின் பெருமையைப் பரப்பினார்”.
என்று பாராட்டியுள்ளார்.
*தமிழ்ப் பண்பாடு உயர்தரமான ஆய்வுக் கட்டுரைகளைத் தாங்கி வந்ததால், தமிழ் ஆய்வில் ஈடுபட்ட பல உலக அறிஞர்களின் ஆர்வத்தை அது தூண்டியது.வடமொழியை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு தாங்கள் செய்துவந்த இந்தியவியல் ஆய்வுகளில் எழுந்த முக்கிய விடைகளுக்கெல்லாம் திராவிட மொழியையும்பண்பாடுகளையும் ஆராய்வதன் மூலமே விடை காண முடியும் என்பதை மேலைநாட்டு இந்தியவியல் அறிஞர்கள் தெளிவாக உணர்ந்தனர்”.
என்று திரு அசுப்பையா மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் தனிநாயக அடிகளார்க்குச் செலுத்தப்பட்ட அஞ்சலிச் செய்தியில் படித்தார் (அமுதப95).

Page 34
54 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
20. குறைகள்
“வாசகர் மடல்” பகுதி 1954 க்குப் பின் நீக்கப்பட்டது. இதனால் வாசகர்கள் தங்கள் கருத்துகளைக் கூற - புதிய உண்மைகளை முன் வைக்க - முடியாத நிலை ஏற்படுகிறது. சுவாமி ஞானப்பிரகாசரின் நூல், பண்டித க.ப. ரத்தனம் எழுதிய ஆய்வேடு ஆகியவற்றை அப்படியே வெளியிட முன்வந்து, சில பகுதிகள் வெளியிட்டுப் பின்னர், அவை நிறுத்தப்பட்டுள்ளன. சில கட்டுரைகள் “தொடரும்’ என்று போட்டு அடுத்த இதழ்களில் தொடர்ந்து வெளிவரவில்லை; சில, இடைவெளிவிட்டு வந்துள்ளன. “செய்தி மற்றும் துணுக்குகள்’ பகுதியில் செய்தி எடுக்கப்பட்ட இதழின் பெயர் நாள் குறிக்கப்படவில்லை. அரிதாகச் சில இதழ்களின் பெயர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. ஓராண்டில் வருகிற நான்கு இணைந்து வந்தால் மூன்று இதழ்களிலும் தொடர்ச்சியாகப் பக்கங்கள் ஆண்டிறுதிவரை எண்ணிடப்பட்டன. ஆனால் 1963 ஆம் ஆண்டில் மட்டும் ஒவ்வொரு காலாண்டுக்கும் தனியே எண்கள் இடப்பட்டுள்ளன. ஆசிரியவுரைப் பகுதி தனியே தரம்பிரித்தறியும் வண்ணம் அமைக்கப்படாததோடு தொடர்ந்தும் வரவில்லை. "ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழில் பகுதி இரண்டு தமிழ், தமிழாராய்ச்சி அமைப்பு பற்றிய செய்திகளைக் கொண்டிருந்தாலும் மிகவும் நீண்டு உள்ளது. அப்பகுதியில் கட்டுரை வடிவில் சில உள்ளன. தொண்டு அடிப்படையில் நிருவகிக்கப்பட்டது என்பதாலும், இலங்கையிலிருந்தும், மலாயாவிலிருந்தும் பிற வெளி நாடுகளிலிருந்தும் தனிநாயக அடிகள் இதழைக் கவனிக்க வேண்டியிருந்தது என்பதாலும் இத்தகைய சிறு குறைகள் நேர்ந்துள்ளன.
ze ik je te k (k klik te

5. இதழியல் வழித் தமிழ்ப்பணி
0. தனிநாயக அடிகள் உலகம் முழுதும் சுற்றிவந்து பல நாடுகளிலும் சொற்பெருக்காற்றித் தமிழ் இலக்கியம், வரலாறு, மொழி, கலை, பண்பாடு ஆகியவற்றின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகத் தமிழ் மாநாடுகள் ஆகியவற்றின் வழித் தமிழுக்கு நன்மைகள் விளையச் செய்தார். இவற்றுக்கெல்லாம் அவர் ஏற்படுத்திய தமிழ் இலக்கியக் கழகம், தமிழர் பண்பாட்டுக் கழகம் (தூத்துக்குடி, கொழும்பு), தமிழ்க்கலை மன்றம் (சென்னை), என்ற அமைப்புகளும், அவை சார்ந்து நடத்திய ‘தமிழ் கல்சர்’ காலாண்டு இதழும், அவ்விதழ் நின்ற பின்னர் நடத்திய ‘ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழும் காரணங்கள் ஆகும். ‘தமிழ் கல்சர்’ இதழில் ஆசிரியவுரை உள்ளிட்ட 30 கட்டுரைகளும், ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழில் 2 கட்டுரைகளும் வந்துள்ளன. இக்கட்டுரைகள் கூறும் இதழியல், தமிழறிஞர், வரலாறு, கல்வி, சுவடிகள், இலக்கியம், இயற்கை, பண்பாடு, ஆய்வு ஆட்சிமொழி என்னும் கூறுகளில் தனிநாயக அடிகளின் தமிழ்ப் பணியைக் காணலாம்.
1. இதழியல்
11. “தமிழ் கல்சர்’ முதல் இதழில் ‘இக்காலாண்டு ஆய்விதழ்’ என்ற தலைப்பில் முதல் ஆசிரியவுரையைத் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
‘தமிழ் இலக்கியத்தையும் பண்பாட்டையும் பயிலும் மாணவர்களும் விரும்பிகளும் ஆங்கில மொழியில் இவை பற்றிய ஆய்விதழ் வரவேண்டுமென்று வெகுகாலமாக விரும்பினர். அதன்மூலம் தமிழறியாத வெளி உலகத்துக்குச் சூழ்நிலையால் தமிழை விட ஆங்கிலமே நன்கு அறிந்தவர்களுக்கும் தமிழ் இலக்கியம், பண்பாடு பற்றிய செய்திகள் சென்றடையும்.”*
என்று ஆசிரியவுரையின் தொடக்கத்தில் எழுதியுள்ளார். தாம் முந்தைய ஆண்டில் (1951-இல் சென்ற நாடுகளாகிய ஜப்பான், கூட்டு அமெரிக்கா, ஈகுவேடர், பெரு, சிலி, அர்ஜெண்டினா, பிரேசில், ஐரோப்பா
* 1,1,1 "It has been for a long time the desire of many students and wellwishers of Tamil Literature and Tamil Culture, that there be some Review in English through the medium of which these subjects may reach the non-Tamil world, and reach also that class of Tamil Society which on account of various circumstances finds itself more proficient in English than in Tamil.”. ,

Page 35
56 தனிநாய்க அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
முதலியவற்றில் சந்தித்த பலரும், ஆங்கில மொழியில் தமிழ் இலக்கியம், பண்பாட்டைப் பற்றிய ஆய்விதழை வேண்டினர் என்றும் தன்னைவிடத் தகுதியான அறிஞரோ, தமிழ் இலக்கியக் கழகத்தைவிடப் பழமையும் மதிப்பும் மிக்க நிறுவனமோ யாரும் இதைச் செய்யாததாலும் உடனே கட்டாயம் கொண்டு வர வேண்டுமென்பதாலும் ‘தமிழ் கல்சர் இதழைத் தாம் கடமையாக ஏற்றுத் தொடங்கியதாகவும், தனிநாயக அடிகள் இந்த ஆசிரியவுரையில் கூறியுள்ளார்.
"வால்டர் எலியட், ஸ்டோக்ஸ், எல்லிஸ், கோவர், வின்ஸ்லோ, கால்டுவெல், போப், வில்சன் முதலியோர் தமிழியலுக்குத் தொண்டு செய்துள்ளனர் ஆயினும் திராவிடவியல், குறிப்பாகத் தமிழியல் புறக்கணிக்கப்படுகிறது என்று அவர்கள் மிக வருந்தினர் (1,1,2). ஆரியரல்லாதாரரின் நாகரிகத்தை வெளிப்படுத்த இந்திய அரசு விரும்பவில்லை என்ற உணர்வோடு அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் திரும்பினார் (1,13). இந்திய இலக்கியம், தத்துவம், சமயம் முதலியன பற்றிப் பயில்வோர் தமிழைப் பற்றித் தெரியாதவர்களாய்ஒதுக்கியவர்களாய் - உள்ளனர் என்று மேக்ஸ்மில்லர் கூடச் சொல்லியுள்ளார். (11,4). இந்திய நாகரிகத்தின் முக்கால் பங்கு திராவிட நாகரிகமே என்று சுனிதி குமார் சட்டர்ஜி எழுதியுள்ளார். ‘தமிழ் இந்தியா'வைப் பற்றிய ஆய்வுகளையும் உண்மைகளையும் ஒதுக்கினால் இந்திய வரலாறு தவறான முடிவுக்கு வழிவகுக்கும் (11.5). தமிழ்த் தாத்தா உவே.சாமிநாத ஐயர் அச்சேற்றிய நமது பழைய இலக்கியங்கள் இன்னும் வெளிநாடுகளைச் சென்றடையவில்லை (1,1,6). தமிழர்கள் சிறந்த வணிகர்களும் பேரரசுகளை அமைத்தவர்களும் ஆவர் (1,1,7) எகிப்தியர், ஈபுருக்கள், கிரேக்கர், உரோமானியர் ஆகியோர்க்கு நிகராக உயர்ந்த பெருமையும் வரலாறும் உடையவர்கள் தமிழர்கள் (18) என்று தமிழின் ஆய்வியல் சூழலையும் அதனை வெளிக் கொண்டு வரவேண்டிய தேவையையும் தனிநாயக அடிகள் விளக்கியுள்ளார்.
‘தமிழ்ப் பண்பாடு, மொழி, வரலாறு, இலக்கியம் ஆகியவை இந்த ஆய்விதழில் பொருளாக வரும். உண்மையை நிலைநிறுத்த இவற்றைப் பற்றிய விளக்கங்களை உலகில் உள்ள பலரையும் சென்றடையச் செய்வது கடமை. மறைந்து கிடக்கும் இவ்வுயர்வுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாத தன்மையாகும். எனவே, வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இத்தொண்டைச் செய்வதற்காக இவ்விதழ் வருகிறது.”*
* 1,1,8: "We need not insist further on the peculiar feautres of the culture, the Language, the history, and the Literature, that will form the subject matter of this Review. To bring these to light, to make them available to as many people in the world as possible, is a duty that must be done in the interest of truth. To have had some glimpse of these hidden beauties and not to have shared with others would be unpardonable selfishness. This Review therefore leaves the press with a mission to perform, and with the conviction that it must meet along-felt want."

இதழியல் வழித் தமிழ்ப்பணி 57
என்று கூறியுள்ளார் தனிநாயக அடிகள், இந்த முதல் இதழில் முதல் ஆசிரியவுரையில் கூறிய கருத்துக்களை உணர்ந்து, தம் இதழை இறுதிவரை நடத்தினார்.
12. இரண்டாவது இதழில் (1297-103) தமிழ்ப் பண்பாட்டின் வாழ்வு' பற்றித் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். இது தம்முடைய இதழ் தன் பெயருக்கேற்ப எடுத்துக் கொண்டு பரப்ப முற்பட்டுள்ள அடிப்படைக்கருத்தை வாசகர் மனத்தில் விதைப்பதாகவும் எதிர்காலத்திற்குத் தம் இதழின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தி அறிவிப்பதாகவும் உள்ளது.
13. "தமிழ் கல்சர்’ 1953 ஆம் ஆண்டு முதல் இதழில் ‘தமிழுக்குரியதைத் தமிழுக்குக் கொடுங்கள்’ என்று ஆசிரியவுரை (217-13) எழுதியுள்ளார். ஒரு நல்ல இதழாசிரியர் தம்மைச் சுற்றிலும் நடப்பவற்றைக் கவனித்துக் கொண்டிருப்பார், இவ்வகையில் இதழ்களில் தமிழ்த் தொடர்பாக வருகிற செய்திகளைக் கண்டு தம் இதழில் தருபவர் தனிநாயக அடிகள். மானிடவியில் மற்றும் இனவியல் பன்னாட்டு மாநாடு 1952 செப்டம்பரில் நடந்தபோது முனைவர் ஃபியூரரீ ஹெய் மண்டாரீஃப் திராவிடர்கள் கி.மு.300 அளவில் வந்தார்கள்’ என்று கூறியதைப் பற்றி ஆங்கில இதழ்களில் வந்த செய்திகள், மடல்கள் அடிப்படையில், தனிநாயக அடிகள் மிகச்சிறந்த ஆசிரியவுரையை எழுதியுள்ளார். ‘இன்றியமையாத இக்கருத்தரங்கத்தில் தென்னிந்திய அறிஞர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது வருந்தத் தக்கது' என்று வியன்னா மாநாட்டில் கலந்துகொண்ட செய்தியாளர் எழுதியதைத் தனிநாயக அடிகள் குறிப்பிட்டுள்ளார்.
‘தமிழ் படித்தவர்களுக்குத் தமிழ் நாட்டில், பல்கலைக் கழகங்களில் வேலையில்லை. இலங்கைப் பல்கலைக் கழகம் வெளிநாட்டுக்கு அறிஞர்களை அனுப்பி இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் பயிற்சி பெறச் செய்வதுபோல் தென்னிந்தியப் பல்கலைக் கழகங்கள் செய்வதில்லை. தமிழ்த்துறையைக் கீழை இயல்துறை என்று கூறிக் கொண்டு இளநிலை (B.O.L) முதுநிலை (M.O.L) பட்டங்கள் இங்குக் கொடுக்கப்படுகின்றன. இந்திய, உலகப்புகழ் பெற்ற தமிழறிஞர்கள் இல்லை. இந்தியச் சட்டத்தில் 'இந்தியக் கலவை நாகரிகம்’ என்று ஏன் கூறப்பட்டுள்ளது என யாரும் கவலைப்படுவதில்லை. ‘இந்திய வரலாறு - வேதகாலம் முதல் தொகுதியில் சமஸ்கிருதமும் ஆரிய நாகரிகமுமே பேசப்படுகின்றன. ஆர்.சி.மஜூம்தார் “பழைய இந்தியா’ என்னும் நூலில் இந்து மதத்தில் இருப்பவை ஆரியரல்லாதாருடையன அல்ல. ஆரியர்கள் இந்துத்துவத்தைக் கட்டுமானம் செய்வதைத் திராவிடர்கள் தடுத்தார்கள் என்று எழுதியுள்ளார். மொழி ஆதிக்கம் அல்லது வட்டாரப் பற்று அல்லது புராணிய ஆரிய மேலாண்மையிலுள்ள ஈடுபாடு புதியவரலாற்றைத் தவறாக்கக்கூடாது. வெளிநாட்டவர் செய்யும் தவற்றை

Page 36
58 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
உள்நாட்டார் செய்யக்கூடாது' - என்று தனிநாயக அடிகள் உரிய சான்றுகளுடன் தமிழிக வரலாறும் பண்பாடும் ஒதுக்கப்படுவதைக் கண்டித்து ஆசிரியவுரை எழுதியுள்ளார். தம் கருத்தைக் கூறிவிட்டு அடுத்தவர் கருத்தை மறைத்துவிடுவது - கூறாமல் விட்டுவிடுவது - இதழியல் அறமல்ல, ஆய்வுக்கும் அழகல்ல; இவ்வகையில் அடுத்த இதழில் ஃபியூரரீ ஹெய் மண்டார்ஃபின் கட்டுரையை (2,2127-135) வெளியிட்டுள்ளார் தனிநாயக அடிகள்.
14. முனைவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் மறைவைப் பற்றியும் இலங்கையில் இருபது ஆண்டுகள் முன்பு மறைந்த திரு பொன்னம்பலம் அருணாசலம் பற்றியும் ஆசிரியவுரையாக அரசியலாரும் அறிஞர் தகைமையும்’ என்று எழுதியுள்ளார் (2,3&4,221-227). இந்த ஆசிரியவுரையில் இறுதியாக, 'நம் அரசியலார் அறிஞர் தகைமையுைம் பெற்றிருந்தால், தாம் சார்ந்துள்ள பாரம்பரிய பெருமையை உணர்வதோடு அடுத்த தலைமுறைக்குத் தம் பண்பாட்டுப் பழைய சாதனைகளை அளிக்கமுடியும்’* என்று அறிவுறுத்தியுள்ளார்.
15. இந்திய உயர்நிலைப் பள்ளிக் கல்விக் குழுவின் பரிந்துரைகளைப் பற்றி அறிந்ததும், அதைத் தமிழ் வளர்ச்சிக் கண்ணோட்டத்துடன் பார்த்த தனிநாயக அடிகள், ஆசிரியவுரையாகத் ‘தமிழ்ப்பயிற்றுவித்தல்’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
'இற்றைப் புதுமைக் காலச் சிந்தனைகளை வெளிப்படுத்தக்கூடிய மொழியாகவும், மக்களாட்சியில் குடிமக்கள் தகுதியோடிருக்க உதவும் சரியான கருவியாகவும் தமிழ் விளங்கவேண்டும் என்றால் நம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுவிப்பதிலும் தமிழாசிரியர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தவேண்டும்.”*
என்று தமிழுக்குச் செய்ய வேண்டியதைக் கூறியுள்ளார்.
* 23 & 4,227:
"It is necessary at this juncture of our history that our statemen be scholars as well for it is then that they will realise the greatness of their calling and the role they are expected to play in passing on the next generation the accumulation of our past cultural achievements.”
* 39:
"If Tamil is to become and effective medium of modern thought and an apt instrument for citizenship in a democracy, the teaching of Tamil in our schools and colleges, and the Training of teachers of Tamil should receive particular attention.”

இதழியல் வழித் தமிழ்ப்பணி S9
16. நான்காம் ஆண்டு (1955) முதல் இதழில் “மன்றத்தின் இந்த இதழ்" என்ற தலைப்பில் தமிழ்க்கலை மன்றத்தின் இதழாக வெளியிடுவது பற்றித் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார் (4,1,1-1). முதல் மூன்று பத்திகளைத் தவிரப் பெரிதும் முதலாம் ஆண்டு முதல் இதழில் முதல் ஆசிரியவுரையில் எழுதியவற்றை அப்படியே தந்துள்ளார்.
“தமிழ்மொழி, இலக்கியம், கலைகள், அறிவியல் வளர்ச்சிக்கான செய்திகளையும் மன்றத்தின் செய்திகளையும், தாங்கி வரும் இதழின் பரவல், ஆசிரியர் மாணவர்களை எட்டவேண்டும்; அப்படிப் பரவினால் இந்த ஆய்விதழின் கடமை சிறக்கும். தமிழிலும் பதிப்பு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. அரசியலும் குழு இனவாதமும் உட்புகாமல் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் மட்டுமே இடம் தரப்படும்”
என்று தனிநாயக அடிகள் அறிவித்துள்ளார்.
17. ஆறாவது ஆண்டு (1957), முதல் இதழில் புதிய சென்னை மாநிலம் அமைந்ததை மிகவும் மகிழ்ந்து வரவேற்றுத் ‘தமிழகம்’, ‘தமிழ், “கொடுத்த தண்டமிழ் வரைப்பகம்’ ‘பொதுமை கட்டிய மூவருலகம் என்றெல்லாம் பாராட்டப்பட்ட தமிழ்நாடு வாழ்க என்று வாழ்த்தியும், இலங்கையில் சிங்களக் கட்சி, மனித உரிமையைப் பறிப்பதால் தமிழுரிமைக்கும் தமிழர் உரிமைக்கும் போராடும் ஈழத்தமிழரைப் பாராட்டியும் ஆசிரியவுரை வந்துள்ளது.
18. "ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழ் தொடங்கியும் முதல் இதழில் ‘தமிழியலின் இருபதாண்டுகள்’ என்ற தலைப்பில் ஆசிரியவுரை எழுதியுள்ளார் தனிநாயக அடிகள். முதல் இதழிலும் நான்காவது இதழிலும் வந்த பல நாட்டிலும் தமிழியல் பற்றி ஆங்கிலத்தில் இதழ் வேண்டுவது, தமிழ் இலக்கியமும் பண்பாடும் இந்திய அரசால் புறக்கணிக்கப்படுகின்றன என்று ஜி.யூ.போப் கூறியது, கனகசபைப் பிள்ளையின் நூல், ‘தமிழியல் ஆண்டிக்குயரி’ இதழ் ஆகியவை வெளிவந்தது என்று கூறும் பத்திகளை மறுபடி அப்படியே எடுத்துக் கொடுத்துள்ளார்.
‘தமிழ் கல்சர்’ இதழின் 12 தொகுதிகள் தமிழியலை வளர்த்தன; உலகம் முழுவதும் உள்ள தமிழறிஞர்களை இணைக்கவும் நட்பாக்கவும் உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமையவும் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தவும் காரணமாயின; முதல் மாநாட்டிலும் இரண்டாம் மாநாட்டிலும் அறிஞர்கள் பன்னாட்டு ஆசிரியர்கள் குழுவால் ஓர் ஆய்விதழை முதலில் அரையாண்டு இதழாகவும் பின்னர் காலாண்டு இதழாகவும் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்தினர். இவற்றுக்கெல்லாம் மேலாக உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமைக்கப்பட உள்ளது. இந்தியவியல்

Page 37
60 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
ஆய்வில் தமிழியல் புறக்கணிக்கப்பட்ட வேறுபாடு படிப்படியே குறைந்து வருகிறது. தென் ஆசியவியல் நிறுவனம் இந்தியவியல் நிறுவனம், பிரெஞ்சு இந்தியவியல் நிறுவனம்முதலியன தோன்றியுள்ளன.
என்று கூறி உலக நாடுகளிலும் இந்தியப் பல்கலைக் கழகங்களிலும் தமிழ் பெற்றுள்ள ஆய்வு வளர்ச்சி பற்றியும் எழுதியுள்ளார். தமிழிலும் எதிர் காலத்தில் இவ்விதழ் வரும் என்று அறிவித்துள்ளார்.
2. தமிழறிஞர் வரலாறு
21. முனைவர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் மறைவின் பொழுது ‘அரசியலாரும் அறிஞர் தகைமையும்’ என்ற ஆசிரியவுரை எழுதினார் தனிநாயக அடிகள். ஆர்.கே.சண்மும் செட்டியார் சென்னை, மைய அரசுகளில் மேலவை உறுப்பினராகவும், சுயராச்சியக் கட்சியின் செயலாளராகவும் கொச்சி திவான் ஆகவும், குடியரசு இந்தியாவின் முதல் நிதி அமைச்சராகவும் இருந்தவர்; பன்னாடுகள் சென்றவர்; சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்தவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தரானதும் கம்பராமாயண ஆய்வுப் பதிப்பை வெளியிடச் செய்தார். தமிழிசை இயக்கத்தில் ஈடுபட்டார் என்று எழுதியுள்ளார்.
22. ஆர்.கே.சண்முகம் செட்டியாருக்கு இணையானவர் பொன்னம்பலம் அருணாசலம். அவர் மறைந்து இருபது ஆண்டுகள் ஆயின. அவரது நூற்றாண்டு விழா இவ்வாண்டு என்று குறிப்பிட்டு அவரைப்பற்றியும் ‘அரசியலாரும் அறிஞர் தகைமையும்’ என்ற ஆசிரியவுரையில் எழுதியுள்ளார். “பொன்னம்பலம் அருணாசலம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு, கிரீக்கு, இலத்தீன், சமஸ்கிருதம் முதலிய மொழிகள் அறிந்தவர். இலங்கைத் தமிழர்களுக்காகப் பாடுபட்டவர். அரச ஆசியவியல் கழகம், இலங்கைப் பல்கலைக் கழகக் கட்டமைப்பு ஆகியவற்றில் தமிழியல், தமிழ்ப் பண்பாடு பற்றிய ஆக்கங்களுக்கு வழி செய்தவர். புறநானூறு, திருவாசகம், தாயுமானவர் பாடல்கள் முதலியவற்றில் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்' - என்று பாராட்டியுள்ளார்.
2.3. தமிழ்க்கலை மன்றத் தலைவர் பொறுப்பிலும் ‘தமிழ் கல்சர்’ ஆசிரியர் குழுவிலும் இருந்த முனைவர் இரா. பி.சேதுப்பிள்ளை 25.4.1961 அன்று மறைந்ததை ஒட்டி முனைவர் 'இரா. பி.சேதுப்பிள்ளை’ என்ற தலைப்பில் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார் (9,3,217-229). ‘அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் சென்னைப் பல்கலைப் பேராசிரியராகவும் விளங்கினார், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவுக்காகச் சொர்ணம்மாள் அறக்கட்டளை ஏற்படுத்தினார். மகப்பேறு மருத்துவமனை கட்டினார். இவரிடம் இரஷ்ய நாட்டு எச்.ஆந்திரனோவ், இங்கிலாந்தின் ஜான்மார்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 61
முதலியோர் ஆய்வு செய்துள்ளனர். ஊரும்பேரும், திருவள்ளுவர் நூல்நயம் முதலிய நூல்களை எழுதியுள்ளார். மறைமலையடிகள், திரு.வி.க. ஆகியோரின் நடை பழைய உரையாசிரியர்களின் நடைபோலிருக்க, இவருடைய நடை கூட்டுவாக்கியமாக இல்லாமல் இனிய ஓசையோடு அமைந்திருக்கும்’-என்று பாராட்டியுள்ளார்.
3. கல்வி
தனிநாயக அடிகள் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் கல்வித்துறையில் விரிவுரையாளராகப் (1952-196) பணியாற்றியதாலும் இலண்டன் பல்கலைக்கழகத்தின் "தொல் தமிழ் இலக்கியங்களின் கல்வியியற் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து (1955-1957) முனைவர் பட்டம் பெற்றதாலும் ‘தமிழ் கல்சர்’ இதழில் கல்வியையும் தமிழையும் தொடர்புபடுத்தி நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார்.
3.1. “பழைய தமிழ் இலக்கியங்களும் இந்தியாவின் பழைய கல்வி முறையும்’ என்ற தலைப்பில் தனிநாயக அடிகள் ஒர் கட்டுரை (5,1,1-15) எழுதியுள்ளார். ‘இலக்கியம், மொழியியல், சட்டம், சமயம் ஆகியவற்றில் ஒப்பியல் வளர்ந்துள்ளதுபோல் கல்வி முறையிலும் ஒப்பியல் வந்துள்ளது. உலக நாடுகளின் கல்வி நிலையங்களைப் பற்றிய நூல்களைப் பயில்வோர் உலகின் மறுபாதியாகிய கீழை நாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதை உணர்வார்கள். நாடு, காலம் இவற்றை மீறி உலகம் முழுதும் ஒரே வகையான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளமை வியப்பளிக்கும் செய்தியாகும். சிந்துவெளி நாகரிகத்தில் தொன்மைத் தொடர்புகளைத் தேடினால் சுமேரிய எகிப்திய அக்காடிய நாகரிகங்களோடு உள்ள தொடர்பை உணரலாம். இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள கல்வி நிலையை ஒப்பியல் நோக்கில் முனைவர் ஹாமு குழுவினர் ஆய்ந்துள்ளனர்.
இந்தியக் கல்வியில் சமஸ்கிருத பாலி இலக்கியக் கல்வி மட்டுமே இருந்ததாகப் பலரால் கருதப்படுகிறது. முனைவர் சுனிதி குமார் சட்டர்ஜி திராவிட மொழி, நாகரிகம், அமைப்புகள் ஆகியன இந்திய நாகரிகத்தின் கூறாக விளங்குகின்றன எனக் கூறியுள்ளார். சங்ககாலத் தமிழகப் பண்பாடு பிற நாகரிக ஊடுருவல் இல்லாமல் இருந்தது. மேலை நாடுகளுடனும் கீழை நாடுகளுடனும் வட நாட்டுடனும் தமிழகம் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் மிக உய்ர்வான இலக்கியப் பாங்குடன் இருந்தாலும் மிகப் பழைமை வாய்ந்த பழக்க வழக்கங்களையும் பழங்குடியினர், போர் பற்றியும் கூறுகின்றன.
இந்தியா முழுதுமே சமஸ்கிருதமும் ஆரிய நாகரிகமும் மட்டுமே உள்ளன என்ற தவறான எண்ண்த்தால் தமிழ் இலக்கியங்களை இந்தியவியல் ஆய்வாளர்கள் பயிலவில்ல்ை, மேக்ஸ் முல்லர், கில்லியன்

Page 38
62 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
லெவி முதலிய அறிஞர்கள் மொழியிலில் மட்டும் ஆரியச் சார்பில்லாத கூறுகளை உணர்ந்தார்கள். ஆரிய இனப்பற்றால் மேலை நாட்டினர் சமஸ்கிருத இலக்கியங்களைப்படித்தனர். பழைய சமஸ்கிருத இலக்கியங்களைப் போல அல்லாமல் சங்க இலக்கியங்கள் கழகப் பொதுமையையும் தனி மனித உணர்வுகளையும் கொண்டவை. தமிழியலில் நம்பற்குரியரல்லாத கே.ஏ.நீலகண்ட சாத்திரியார் கூட ‘சங்க இலக்கியங்களின் சம காலத்தில் அவற்றுக்கு இணையாக இலக்கியங்கள் இல்லை’ என்று கூறியுள்ளார். சோர்கின், சாட்லிக்ஸ், டாயின்பி, புருபாக்சர், ஊடி ஆகியோரின் நூல்களின் முழுமையின்மைக்குச் சங்க இலக்கியங்ளைப் பற்றி அவர்களுக்குத் தெரியாததே காரணம் ஆகும். பழைய இந்தியக்கல்வியைப் பற்றிய ஆய்வில் சங்க இலக்கியங்கள் மிக ஆழமான கடல்போன்ற சான்றுகள் ஆகும் என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். தமிழ் மொழியும் இலக்கியங்களும் புறக்கணிக்கப் படுவதைப் பொறுக்கமுடியாத தனிநாயக அடிகள், அவை எந்த அளவிற்கு இந்தியக் கல்வியை அறிய உதவும் என்று சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.
32. ‘தமிழகத்தில் தொன்மைக் காலத்திய சமணர் பெளத்தர்களின்
கற்பித்தல்’ என்ற கட்டுரையில் (8,4,337-349) தனிநாயக அடிகள் திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றைக் கொண்டு
அக்காலத்திய கல்வியியல்பற்றி எழுதியுள்ளார்.
"திருக்குறளில் கவிதை மரபிலான கல்வி வளர்ச்சியும் மனிதன் பண்பியலும் உள்ளன. சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றில் சமயவியல் - கல்வியியல், தத்துவ வளர்ச்சியும் உள்ளன. மணிமேகலையில் அரசியல், தத்துவவியல், தருக்கவியல் ஆசிரியர்கள் குறிப்பிடப்படுகின்றனர். புத்தரை ‘புலவன்’ (மேகலை, காதை 25 வரி 45) என்றும், மகாவீரரை ‘அறிவன்’ (சிலம்பு, காதை 10, வரி 57) என்றும் வழங்குவது, கல்வியைத் தத்துவப் பொருளாக்கியதை உணர்த்தும். வடநாட்டுச் சமயங்கள் உருவாக்கப்பட்டவை, நிறுவனமயமானவை, ஆனால் தென்னகச் சைவமும், வைணவமும், பிற கடவுளர் வழிபாடும் இயற்கையானவை, அமைப்பு வடிவமாகாதவை, வடநாட்டைப் பின்பற்றிய வேதக் கல்வி தமிழ்நாட்டில் இருந்தது. அரசவையில் பிராமணர் இருந்தனர். “கடவுளரோ, பலியோ, ஒதுதலோ ஒருவனை உயர்த்துவதில்லை, காமத்தையும் ஆசையையும் வென்றால் உயரலாம். தன் வினைவின் விளைவிலிருந்து தப்பிக்க முடியாது’ என்று சமண, பெளத்தத் தமிழ் இலக்கியங்கள் கூறும். 'பள்ளி’ என்னும் சமணர் உறைவிடங்கள் கருத்துப் பரப்புமிடங்கள், சாரணர்கள் சமயப் பரப்புநர்கள்; சமயப் பரப்பு முறையைச் சிலம்பில் காவுந்தி ஐயையால் அறியலாம். மணிமேகலை பெளத்தமத இளையோர் கல்வி முறையைக் கூறுகிறது. மணிமேகலை ஹீணயான தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இக்காப்பியத்தில் மணிமேகலை, அறவண அடிகள் என்னும்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 63
இருவர் பெளத்தமதக் கருத்துகளைப் பரப்பும் ஆசிரியர்களாக உள்ளனர். சமண பெளத்த மதப்புனித நூல்கள் தமிழில் இருந்தனவா என்று தெரியவில்லை. சமண பெளத்தம் பற்றித் தெளிவில்லாத சில சான்றுகளும், வேதம் பற்றி உறுதியான பல சான்றுகளும் சங்க நூல்களில் உள்ளன. காவுந்தி ஐயை ‘பரமாகமம்' பற்றிக் குறிப்பிடுகிறார். வேத வேள்விகளை 50 ஆண்டுகளாக ஒதுக்கி விட்ட அரசனிடம் அவற்றின் பெருமையை மாடலன் கூறுகிறான். திருக்குறள் சமணம் பெளத்தம் கூறும் அறங்களைச் சொன்னாலும் இல்லறம், மனிதப்பண்பு ஆகியவற்றைக் கூறுகிறது. சிலப்பதிகாரம், திருக்குறள் ஆகியன சமயப் பொதுமையைக் காட்ட, மணிமேகலை சமணம், வேத மதம் ஆகியவற்றைவிட பெளத்தம் உயர்ந்தது என்று காட்டுகிறது’.
33 “தொல் தமிழ்ச் சமுதாயத்தில் கல்வியாளர்கள்’ என்ற தலைப்பில் (5,2,105-19) எழுதியுள்ள கட்டுரையில் சங்ககால அடிப்படையில் புலவர்களையும் பாணர்களையும் பற்றி எழுதியுள்ளார் தனிநாயக அடிகள்.
“பெற்றோர், பாணர், புலவர்கள் ஆகியோர் தொடக்கக் காலத்திலும், சங்க கால இறுதியில் வேத பிராமணர்களும் சமணர்களும் பெளத்தர்களும் கல்வியாளர்களாக இருந்தனர். கல்வி வளர்ச்சி வடஇந்தியா, கிரேக்கம், கெல்டிக் நாடுகளை ஒத்திருந்தது. சமய வழிபாடு, சடங்கு மந்திரம் ஆகியவற்றின் மூலம் சமயவாதிகள் கல்வி வளர்த்தது முதல் நிலை, தலைவர் புகழ்பாடும் பாணன் வழிக் கல்வி பரப்பியது இரண்டாம் நிலை; அரசன், தலைவன், கடவுள், தத்துவம் பாடும் புலவர் வழிக்கல்வி வளர்ந்தது மூன்றாவது நிலை. முதல்நிலையினர் பூசாரிகள், வெறியாடுபவர், அகவல் மகள், அகவலன் ஆகியோர் ஆவர்’ என்று தனிநாயக அடிகள் தொடக்கக் காலக் கல்வியாளர்களைப் பற்றி விளக்கியுள்ளார்.
“கோயில்களில் ஆண் பூஜகர்களும் பெண் பூஜகர்களும் இருந்தனர். எல்லாப் பூஜகர்களும் எழுதப் படிக்கத் தெரிந்திருந் தமையால் மற்றவர்களைவிட இவர்கள் அதிகம் அறிந்தவர்களாக இருந்தார்கள். ஆகையால் அரசர்கள் இவர்களைத் தங்களுக்கு யோசனை சொல்ல வைத்துக் கொண்டனர். அக்காலத்தில் புத்தகங்களை எழுதியவர்களும் இவர்களே. வேறு புத்தகங்களைப் பார்த்துக் கையெழுத்துப் பிரதிகளையும் செய்தார்கள். இவர்கள் கொஞ்சம் அறிவாளிகளாய் இருந்தமையால் ஜனங்கள் இவர்களை ஞானிகள் என்று எண்ணினார்கள். இவர்களுக்கு வைத்தியமும் தெரிந்திருந்தது. தாங்கள் அதிக அறிவாளிகள் என்பதை ஜனங்களுக்குக்காட்ட,
சில ஜால வித்தைகளையும் அடிக்கடி செய்தார்கள்”* .ܝ
* கிரா. வேங்கடராமன் (மொ.பெ) ஜவஹர்லால் நேருவின் கடிதங்கள், பக்கம் 124-12s.

Page 39
64 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
என்று ஜவஹர்லால் நேரு எழுதியுள்ளார். இரண்டாம் நிலை வளர்ச்சியாகப் பாணர்கள் தோன்றியதைப் பற்றித் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். உடல் வலிமையாலும் திறமையாலும் பெற்ற போர் வெற்றிகளைப் பாடப் பாணர்கள் தோன்றினர். “பாணர் என்போர் ஏதேனும் ஓர் இசைக்கருவியை இசைப்போர்’ என்று கூறும் தனிநாயக அடிகள், அடிக்குறிப்பில் பா+ஆடல்-பாடல் ஆடலோடு கூடிய பாடல் என்று விளக்கம் கூறியதோடு விளையாடல், உண்டாட்டு, கொண்டாடல், போராடல், நீராடல், கடலாடல் என்ற எடுத்துக் காட்டுகளையும் கூறியுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
“பாணர்கள் வாய்மொழி மற்றும் எழுத்து இலக்கியத்தை மட்டுமல்லாமல் இசை, நடனம் முதலிய கவின்கலைகளையும் வளர்த்தனர். பாரம்பரியக் கலை நிலையிலிருந்து குழு நிலையை இவை அடைந்தன. பாணர்கள் பெயர் சூட்டப்படாத (Anomimity) பொதுநிலை உற்றனர். மூன்றாம் நிலையில் புலவர்கள் உருவாயினர். கிரேக்க மற்றும் இந்தோ - ஆரியச் சமூகங்களில் இருந்ததைப் போன்ற வேறுபாடு தமிழகத்திலும் பாணர், புலவர் என்ற பிரிவினர்களிடம் இருந்தது. பாணர் மரபில் ஆற்றுப்படை இலக்கியங்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். "இளம் மாணாக்கன்’ என்று குறுந்தொகை 33ல் வரும் சொல்லாட்சி, முறையாக மாணவக் கல்வி முறையைத் தெரிவிக்கும். இந்தோ - ஆரியச் சமுதாயங்களைப் போலச் சமய, சாதி மரபுகள் தமிழ்ச் சமுதாயத்தில் ஏற்படவில்லை. மாகதர், சூதர் என்னும் சாதிகளைக் குறிக்கையில் மகத நாட்டுப்பாணர்கள் மாகதர்கள், மதத்தின் கீழை நாட்டுப் பகுதிப் பாணர்கள் சூதர்கள்’ என்று லிண்டர் நீட்ஸ் கூறியுள்ளார். கெல் திக், தெயுத்தாலிய மக்கள் சமுதாயத்திலும் பாணர்கள் கல்வியாளர்களாக - கல்வியளிப்போர்களாக இருந்தனர்.
என்று தனிநாயக அடிகள் தமிழகத்துப் பூசாரிகள், பாணர்கள் ஆகியோரைக் கல்வி வளர்ப்போராகக் கண்டுள்ளார். இக்கட்டுரையின் இறுதியில் “தொடரும்’ என்று இருந்தாலும் அடுத்து வரும் இதழ்களில் ‘தொடர்ச்சி’ என்று குறித்துக் கட்டுரை வரவில்லை.
34. மேற்குறித்த கட்டுரையின் தொடர்ச்சி என்று குறிக்கத்தக்க தொல் தமிழ்ப் புலவர்கள் - கல்வியாளர்கள் என்ற கட்டுரை பிறகு வந்துள்ளது (6,4273-285). புலவர்கள் அரசனின் விருந்தினராகவும் நண்பர்களாகவும் விளங்கியதோடு, அவனை நம்பி வாழ வேண்டியவர்களாகவும் இருந்தனர். பாணர், புலவர் வேறுபாடு உண்டு. பாணன் என்ற சொல் இசை நடனம், நாடகம் என்னும் வேர்ச் சொல்லிலிருந்தும், புலவர் என்ற சொல் பொது அறிவு பகுத்தறிவு, கல்வி எனும் பொருள்தரும் வேர்ச் சொல்லிலிருந்தும் தோன்றியன. சங்க காலப் புலவர்காலம்,

இதழியல் வழித் தமிழ்ப்பணி '65
பண்பாடு கல்விமிக்கது. சிலம்பு - மேகலை காலத்தில் புலவர்களின் இடத்தைச் சமயவாதிகளும் தத்துவவாதிகளும் பிடித்துக் கொண்டனர். புலவர்கள் பலதொழில், பல சமூக நிலைகள், ஆண், பெண் எனப் பல நிலையினர். புலவர்கள் பல நாடுகளின் அரசவைக்குச் சென்று வந்ததால் பண்பாடு, மொழி, இலக்கிய ஒருமையும் நாட்டின் நிலைத்த தன்மை, ஒற்றுமை அரசர்களிடையே நட்பு ஆகியன ஏற்பட்டன. வடநாட்டைப் போன்று மதத் தலைமையும் மதத்தலைவர்கள் தலைமையும் கல்வியிலோ அரசிலோ நுழையவில்லை. தமிழ்ச்சமுதாயத்தின் புலவர்கள் பெற்றிருந்த சிறப்பிடத்தைச் சங்க இலக்கியங்கள் கூறும். புலவர்களின் பெயர்கள் மூலமும், அவர்கள் ஆசிரியர்களாக இருந்தமையையும், மாணவர் பரம்பரையையும் அறியலாம். கல்விகேள்வி, அவை, மன்றம் ஆகிய சொற்களும் கல்வியின் பெருமையைக் கூறும் புறநானூற்றுப்பாடில்களும் அக்காலக் கல்வியை விளக்கும். "அறவிலை வணிகன் ஆய் அலன்’ என்று புறநானூறு கூறும். ‘தன்னை மறந்து - தன்னலமற்றுமற்றவர்களுக்குத் தொண்டு செய்தல்’ என்பது கிறித்துவச் சிந்தனையிலிருந்து தோன்றியது’ என்று ஏ.சி. புக்கே கூறுவது சான்றற்றது. மனிதப்பண்பு, அறம் ஆகியவற்றைத் தமிழ்ப் புலவர்கள் பாடியுள்ளனர். சங்க இலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை நோக்க கவுடில்யர், மனு, வாத்சாயனர் நூல்கள் அறம், ஒழுக்கம் ஆகியவற்றைத் தருவதில் சிறியவையாகவும் பொதுநிலையற்றவையாகவும் தாழ்ந்தவையாகவும் உள்ளன. சங்க கால உயரிய ஆக்கம் தரும் கவிதைச் சிந்தனைகள் கிரேக்க நாட்டில் தத்துவச் சிந்தனைகளாக மாறியதைப் போன்று உடனடியாக மாறவில்லை. சிலம்பு - மேகலை காலத்தில் இம்மாற்றம் நிகழ்ந்தது’ என்று தனிநாயக அடிகள் தமிழகத்துத் தொன்மைக் காலக் கல்வியியல் சிந்தனைகளைத் தந்துள்ளார். சங்க காலப் பூசாரிகள், பாணர், புலவர்கள் ஆகியோர் சங்காலத் தமிழகத்தில் கல்விப் பரப்புநர்களாக விளங்கினர் என்று தனிநாயக அடிகள் நிறுவுகின்றார். முனைவர் சு.வித்தியானந்தன் ‘தமிழர் சால்பு' என்ற தம் நூலில் (ப.290) சங்கப்பாடல்களை மேற்கோள்காட்டியபின்,
“சங்ககாலத்தில் மக்கள் கல்வி அறிவுபடைத்தவராய் விளங்கினர் என்பது மேலே கூறியவற்றிலிருந்து பெறப்பட்டபோதும் அக்காலக் கல்வி முறைகளைப் பற்றிய செய்தியொன்றும் கிடைக்கவில்லை”. என்று எழுதியுள்ளார். ஆனால் தனிநாயக அடிகள் சங்க காலக் கல்வி முறையைப் பற்றி மேற்கண்ட இரு கட்டுரைகளிலும் ஆய்ந்துள்ளார்.
35. ‘தமிழ் பயிற்றுவித்தல்’ என்ற தலைப்பில் ஒர் கட்டுரையை ஆசிரியவுரையாக எழுதியுள்ளார் (3,19-17).
“தாய்மொழி வழிக்கல்வி வேண்டும் என்கிறபொழுது தமிழாசிரியர்கள் இலத்தீன், கிரீக்கு அல்லது ஆங்கில மொழியாசிரியர்

Page 40
66 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
களைப் போன்ற தகுதியும், மிகுதியான படிப்பும் நாகரிகமும் கொண்டு விளங்கவேண்டும். தமிழாசிரியர்கள் செயற்கை நடை, பண்பில்லாமல் நடந்து கொள்ளுதல், தற்கால நடைமுறைகளுடன் ஒத்துப் போகாமை, முன்னேற்றக் கருத்துகளுக்குப் பழமையைக் காட்டி முட்டுக்கட்டையாய் இருத்தல் முதலியவற்றை நீக்கவேண்டும். தகுதிவாய்ந்த நல்ல பாடநூல்கள் வரவில்லை என்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். அச்சு, கட்டடம், படங்கள் முதலியனவும் தரமாக அமைந்த நூல்கள் வரவேண்டும். புரியாத சொற்களையும் இலக்கணங்களையும் மாணவர்களிடத்தில் திணிப்பதைக் கைவிட்டு அவர்கள் ஆர்வத்துடன் படிக்கும் பகுதிகளைத் தரவேண்டும். நல்லநடையில் அமைந்த சுவையான மொழி பெயர்ப்பு நூல்களும் மூல நூல்களும் வரவேண்டும். தமிழ் இதழ்கள் பொதுவான, மிகையான தெளிவில்லாத மொழிபெயர்ப்புகளைத் தருகின்றன. மாணவர்களின் மொழியறிவை மேம்படுத்தத் தமிழ் இதழ்கள் இன்னும் பாடுபடவேண்டும். கலைச்சொல்லாக்கம், புதிய பாட நூல்கள் பற்றியே வற்புறுத்துவோர் ஆசிரியர்களின் மொழியாற்றலைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. “கற்பிக்கும் ஒரு பாடமாக இருப்பதைவிடத் தாய்மொழி வாழ்வியலின் கட்டாயமாக விளங்குகிறது’ என்று ஜார்ஜ் சாம்சன் கூறியுள்ளார். ஆங்கில வழி ஆசிரியர்களுக்குத் தமிழைப் பயிற்றுவிக்கவேண்டும். ஆறாவது வகுப்பு மாணவர்களுக்காக மொழிபெயர்க்கப்பட்ட பாடநூல் பல்கலைக் கழக மாணவனுக்குரிய நடையைக் கொண்டிருக்கிறது. விற்பனை ஆதாயத்துக்காகத் தரக் குறைவான நூல்கள் விற்பனையாளர்களால் பாடநூற்குழுவிடம் திணிக்கப்படுகின்றன. தகுதிவாய்ந்த பாட நூல்களும் தகுதி வாய்ந்த ஆசிரியர்களும் தமிழ் கற்பித்தலுக்குத் தேவை' என்று தமிழ்க் கல்வி முறை பற்றித் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
3.6. தமிழில் கல்வி வேண்டும் என்போர் அதற்கான வழிமுறைகளைச் செய்வதில்லை; ‘தமிழ், தமிழ்’ என்று வெறும் உணர்ச்சி அடிப்படையிலான கூச்சலிடுவதால் பயனில்லை. 'தமிழைப்பயிற்றுவித்தல்' பற்றிய கட்டுரையை முன்பு எழுதிய தனிநாயக அடிகள் 'பள்ளித் தொடக்க நிலை மற்றும் முதல் வகுப்புப் பாட நூல்களின் சொற்றொகையும் உள்ளுறையும்’ என்ற கட்டுரையைத் ‘தமிழ்நேசன்’ இதழில் எழுதியுள்ளார் (8,3,208-230). இக்கட்டுரை இலங்கையில் தேசியக் கல்விக் கழகத்தின் இதழில் (Journal of the National Education Society Vol.II. 1959) Gaigfabgj6T615.
ஆங்கில நாடுகளில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒலி, நெடுங்கணக்கு ஆகியவற்றைக் கொண்டு தொடக்கப்பள்ளிப் பாட நூல்களை அமைத்தார்கள். தமிழில் 247 எழுத்துக்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பார்த்தல்-கேட்டல்’ முறைப்படிக் கற்றுக் கொடுத்தல் தவறாகும். ஒலி-நெடுங்கணக்கு முறையால்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 67
எழுத்துகளைக் கண்டு பிடித்தலும் சொல்-சொற்றொடர் முறையால் பொருள் உணர்தலும் முடியும். இரண்டு முறையும் நல்லதே. தொடக்கநிலையில் ஒள, ஃ தேவையில்லை. ஊரக, நகர்ப்புறக் குழந்தைகளுக்குரிய பொதுச் சொற்றொகையைக் கையாள வேண்டும். ஐவர், ஒப்பந்தம் போன்ற சொற்கள் முதல் வகுப்புக் குழந்தைகளின் சிந்தனைக்கு அப்பாற்பட்டவை. ஈசன், ஓடம், ஒளவை ஒளடதம், எஃகு அஃது போன்ற சொற்களை முதல் வகுப்பிற்குப் பின்னர் தரலாம். பாடநூலில் பெயர்ச்சொற்களே உள்ளன; குழந்தைகளின் செயல் குறிக்கும் வினைச்சொற்கள் குறைவு; நீதி, நல்ல பழக்கவழக்கம் ஆகியவற்றை வெறும் பாடத்தில் சேர்க்காமல் சூழல் எடுத்துக்காட்டுகளால் தரவேண்டும். கதைகள், எதுகைமோனை அமைந்த எளிய கவிதைகள் குழந்தைகளுக்குப் பயன்தரும். பாரதி, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை ஆகியோரின் குழந்தைப் பாடல்கள் தரலாம் என்று தமிழ்த் தொடக்கக் கல்வி பற்றித் திறனாய்ந்துள்ளார்.
4. சுவடிகள்
40. கடந்த ஐம்பது ஆண்டுகளில் நிறைய தொன்மையான தமிழ் இலக்கியங்களைப் பதிப்பாசிரியர்களின் இளவரசர்’ மறைந்த சுவாமிநாத அய்யர் பதிப்பித்துள்ளார்.”*
என்று முதல் இதழ் முன்னுரையில் (1,1,6) தனிநாயக அடிகள் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யரைப் பாராட்டியுள்ளார். தொல் தமிழ் இலக்கியச் சுவடிகளை - ஏடுகளை - ஊர் ஊராகத் தேடிக் கண்டுபிடித்து அச்சேற்றிக் காப்பாற்றித் தமிழுக்குத் தந்தவர் உவேசாமிநாத அய்யர் ஆவார். நாடு நாடாகச் சென்று தனிநாயக அடிகள் அங்கே தமிழ்ச் சுவடிகளைத் தேடிக் கண்டுபிடித்துத் தமிழுலகுக்கு - தமிழ்நாட்டுக்கு - அறிமுகப்படுத்தினார்.
41. ‘ஐரோப்பிய நூலகங்களில் தமிழ்ச் சுவடிகள்’ என்று ஒர் கட்டுரை தமிழ் கல்சர்’ இதழில் 1954 இல் எழுதியுள்ளார் (33,4219-228).
‘இந்தியா, இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரிய கையெழுத்துச் சுவடிகளையும், அச்சு நூல்களையும் பட்டியல் தொகுக்கவேண்டும் என்று வெகு காலமாகக் கூறப்பட்டு வருகிறது. போர்ச்சுகீசிய மொழியில் எழுதப்பட்ட தமிழ் இலக்கண நூல் (160
* 1,1,6:"During the last fifty years a number of ancient Tamil works have been edited in print by the prince of editors, the Late Swaminatha Aiyer".

Page 41
68 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
பக்கங்கள்) லிஸ்பன் தேசிய நூலகத்தில் உள்ளது; ஹென்றிக்கு ஹென்க்குவன் (1520-1600) என்னும் பாதிரியார் எழுதியது. தாவீது என்பவர் எழுதிய ஞான சங்கீதங்களுடைய புத்தகம் இரண்டாம் பதிப்பு தரங்கம்பாடியில் 1747 இல் அச்சடிக்கப்பட்டுள்ளது. பெலம் அருங்காட்சியகத்தில் 38 பக்கங்களுடைய நூல் உள்ளது. அரசர் மூன்றாம் ஜான் ஆணையின்படி லிஸ்பனில் 1554 இல் அச்சிடப்பட்ட நூல் தமிழ்மொழி ஆங்கில எழுத்துக்களில் உள்ளது. மொழிபெயர்ப்பு போர்ச்சுக்கீசிய மொழியில் அடுத்த அடுத்த வரியாக அமைந்துள்ளது. ஜே. கோன் சால்வெஸ் எழுதிய ‘சுவிசேஷ விரித்துரையின் இரண்டு படிகள் அலட்ராமார் ஆவணக் காப்பகத்தில் உள்ளன’ என்று எழுதியுள்ள தனிநாயக அடிகள் பாரீசு, இலண்டன், வாட்டிகன் ஆகிய இடங்களில் உள்ள ஒலைச்சுவடிகளைப் பற்றியும் மிகப்பழைய அச்சு நூல்களைப் பற்றியும் விளக்கமாகத் தெரிவித்து, மேற்கொண்டு தேடிப் பாதுகாக்கவும், பட்டியல் புதியதாக உருவாக்கவும் வழிமுறைகளைச் சொல்லி இறுதியாக முதன்முதலில் அச்சாகிய நூல்கள் 1. கார்ட்டில்லா 2. டாக்டிரினா கிறிஸ்டியானா, 3. டாக்டிரினா கிறிஸ்டம், 4. ஃப்ளாஸ் சாங் டோரம் என்னும் நான்கு நூல்களைத் தமிழுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். இக்கட்டுரை தமிழுக்குக் கிடைத்த மாபெரும் கொடை ஆகும்.
42. மேற்குறித்த கட்டுரையில் குறிப்பிட்டுள்ள நான்கு நூல்களைப் பற்றி விரிவாகத் ‘தமிழில் அச்சேறிய முதல் நூல்கள்’ என்று 1958 இல் எழுதியுள்ளார். (7,3,288-308).
‘இந்தியாவுக்கும், இலங்கைக்கும் பதினாறாம் நூற்றாண்டில் வந்த கிறித்துவப் பரப்புநர்கள் கல்வி பரவவும், அச்சுக் கூடங்கள் ஏற்படவுங் காரணமாவர். இவர்கள் இந்தியாவில் அச்சுக் கலைக்கும் இலக்கியத்துக்கும் செய்துள்ள பணி உயரியது. சமயப் பணி செய்தார்கள் என்பதற்காக அவர்களது கல்வி இலக்கியப் பணிகளைக் குறைவாக எடை போடக்கூடாது. இந்திய மொழிகளுள் முதன் முதல் அச்சேறிய மொழி தமிழ். உலக மொழிகள் பலவற்றுள் முதலில் அச்சேறிய பெருமை தமிழுக்கு உண்டு. ஜப்பான் (1590), பிலிப்பைன்ஸ் (1593), ஸ்பெயின் (1584), ஆப்பிரிக்கா (1624), இரஷ்யா (1563), கான்ஸ்டாண்டி நோபிள் (1727). கிரேக்கம் (182) ஆகிய நாடுகளில் அச்சகம் வரும் முன், அச்சகம் வந்ததும் அச்சேறியதும் தமிழ். ‘காரிடில்லா’ என்னும் நூல் (38 பக்கங்கள்) 12:1554 இல் லிஸ்பன் நகரில் அச்சேறியது. இதில் தமிழ் மொழி உரோமன் எழுத்தில் அமைந்துள்ளது. 'தம்பிரான் வணக்கம்’ என்னும் நூல் (16 பக்கங்கள்) கொல்லத்தில் 20.21577 ல் அச்சேறியது. "கிற்சித்தியானி வணக்கம் 14.111579 இல் கொச்சியில் அச்சாகிய 120 பக்கங்கள் கொண்ட நூல். ‘அடியார்கள் வரலாறு’ (Flos Sanctorum) புன்னைக்காயலில் 1586 இல் அச்சேறிய 669 பக்கங்கள் கொண்ட நூல் என்று எழுதியுள்ளார் தனிநாயக அடிகள்.

இதழியல் வழித் தமிழ்ப்பணி 69
கீழ்த்திசை நாடுகளில் அச்சுகண்ட முதல் நூல்கள் தமிழ் நூல்களே என்று 1954 இலேயே ‘சத்தியவேத பாதுகாவலன்’ என்னும் மாத இதழில் தமிழில் கட்டுரை எழுதியுள்ளார். கல்கி தீபாவளி மலரில் (1958) ‘முதல் அச்சேறிய தமிழ் நூல்கள் என்று தமிழில் கட்டுரை எழுதியுள்ளார். மிகவும் அரிய இந்நூல்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தனிநாயக அடிகள் தந்ததனால்தான் முதலில் அச்சேறிய தமிழ் நூலைத் தமிழகம் அறியவும், பெறவும் முடிந்தது. அடியார் வரலாறு என்றும் திருத்தொண்டர் திருமலர் என்றும் கூறப்படும் இந்நூலைத் தான் தேடிக் கண்டபோது பெற்ற மகிழ்ச்சியை,
“நான் ஐரோப்பாவிற்குப் பன்முறை சென்றதால் ஏற்பட்ட பொருட் செலவிற்கும் எடுத்த முயற்சிக்கும் இந்நூ லொன்றைக் கண்டு கொண்டதே போதிய கைம்மாறாகும் என்று கருதுகிறேன். அப்பொழுது நான் அடைந்த மகிழ்ச்சியை ஆராய்ச்சியில் ஈடுபடுவோரே அறிவர்” (ஒ.ப.129)
என்று கூறியுள்ளார். இந்நூல் தூத்துக்குடித் தமிழ் இலக்கியக் கழகத்தின் வாயிலாக மீண்டும் திரு ச.இராசமாணிக்கம் அவர்களால் 1957 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.
43. 1679இல் அச்சிடப்பட்ட புரயன்சா அடிகளாரின் தமிழ் போர்ச்சுகீசிய அகராதியைத் தனிநாயக அடிகள் 1954இல் ‘ஐரோப்பிய நூலகங்களிலுள்ள கையெழுத்துச் சுவடிகள்’ என்ற கட்டுரையில் (3,3,4,223) குறிப்பிட்டிருந்தார். அதனைப் பற்றி 1964 இல் விளக்கமாக ஓர் அறிமுகக் கட்டுரை எழுதினார் (10,2,117-127). அதன் போர்ச்சுகீசிய முன்னுரையைப் பேராசிரியர் ஈ.சி.நோல்டன் என்பாருடன் சேர்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எழுதினார் (10,2128-134). இவ்வகராதியைத் தனிநாயக அடிகள் ஒளிப்பட அச்சில் 1966 இல் வெளியிட்டுத் தமிழுலகுக்குத் தந்தார்.
4.4. தனிநாயக அடிகள் முதலில் அச்சேறிய தமிழ் நூல்களைக் கண்டுபிடித்த அரிய பணி தமிழுக்கு ஏற்றம் தந்தது. ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரில் திரு ஜேரால்டு துவெர்டிர் என்பவர் (பக் BXVIXX) ஐரோப்பிய நாடுகளில் அரிய தமிழ் நூல்கள்’ என்ற கட்டுரை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். அதில் தனிநாயக அடிகளைக் குறிப்பிடுவதுடன் மேலும் பல நாடுகளிலும் தேடும் ஆய்வினை மேற் கொள்ள வேண்டும் என்று எழுதியுள்ளார். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டு ஆய்வுக் கோவையில் திரு டேவிட் பாக்கியமுத்து ‘தமிழில் அச்சும் வெளியீடும் 1700-1900' பற்றி ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையில் (பக். 21-22) தனிநாயக அடிகள் கண்டுபிடித்த நூல்களைக் கூறியுள்ளார். இவ்வாறு தமிழில் மேலாய்வுக்கும் தமிழின் மேலாண்மைக்கும் தனிநாயக அடிகளின் பணியும் கட்டுரையும் பயன்பட்டுள்ளன.

Page 42
70 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
5. இலக்கியம்
5.1 ‘சங்க இலக்கியங்களில் மெய்ம்மை நிலை வளர்ச்சி’ பற்றிய கட்டுரையில் (7.11-15) கி.மு.10 ஆம் நூற்றாண்டிலிருந்து பாடப்பட்ட பாடல்களில் தொகுப்பு சங்க இலக்கியம். சங்கம் வைத்து மொழி வளர்க்கிற மரபு பிற்காலத் தமிழிலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளதால், பழைய செய்திகள் உண்மையே. புலவர்கள் அறிவுப் பரப்புநர்களாக இருந்த நிலை படிப்படியே மாறி மெய்ம்மைவாதிகள் அறிவுப் பரப்புநர்களாக ஆயினர். சிலம்பு-மேகலை காலத்தில் மதுரை, வஞ்சி, காஞ்சி நகரங்களில் ஏதேன்சில் கிரேக்க மெய்ம்மையியலைப் போன்ற வளர்ச்சி ஏற்பட்டது. கோவலன் பாடவும், இசைக்கவும் செய்தது. பாணர்கள் நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆகியோரின் கலைகள் வளர்ந்து முறையாகி மேட்டுக் குடிகளைச் சென்றடைந்ததைக் காட்டும். பல வகையான சமயங்களும் மெய்ம்மையியல் கருத்துகளும் வளர்ந்திருந்ததை மணிமேகலை 25 ஆவது காதை காட்டுகிறது. இவற்றைச் சேர்ந்த கருத்து முதல் வாதிகள் ஒவ்வொரு ஊராகச் சென்று பரப்பினர். கவுந்தி அடிகள், மணிமேகலை இத்தகையோர். காஞ்சி புத்த மதக் கருத்துகளைப் பலநாடுகளுக்கும் பரப்பிய மையம். இக்காலத்திலும் மனிதப் பண்பைப்போற்றும் புலவர் காலத்துத் தன்மை வளர்ந்திருந்தது. இதனைத் திருக்குறள் வெளிப்படுத்துகிறது, என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். இக்கட்டுரை கல்வியியல் நோக்கில் பூசாரி, பாணர், புலவர் ஆகியோர் பற்றிய கட்டுரைகளின் (இவ்வியலின் 32, 33, 34 பத்திகள் காண்க) தொடர்ச்சியாகவே அமைகின்றது.
52. ‘சென்னை நகரத்துப் புதின ஆசிரியர்’ என்ற தலைப்பில் முனைவர் மு.வரதராசன் பற்றித் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார் (10-2-1-18). ‘ஆங்கில, ஐரோப்பிய மாதிரிகளைக் கைவிட்டு 1930, 1940 வாக்கில் தமிழ்ப் புதினங்கள் தம் தனித்தன்மையுடன் வளரலாயின. விடுதலைப் போராட்டமும், தனித்துவ சிந்தனையும், சமூகத் தீமைகளை எதிர்ப்பதும் இத்தகைய தனித்தன்மைக்குக் காரணங்கள். புதினத்தின் கரு, தன்மை ஆகியவற்றை இரு சூழல்கள் உருவாக்கின. 1. வார இதழில் புதினங்கள் தொடர்கதையாக வந்ததால் எதிர்பாராத்தன்மை (Suspense), கிளர்ச்சி ஆகியவற்றைக் காட்ட வேண்டியிருந்தது. 2. திரைப்படங்களின் கதைகளாகும் வாய்ப்பு வந்து கொண்டிருந்ததால் திரைப்படக் கதை போன்ற தன்மையை ஏற்படுத்தியது. மு.வரதராசன் நகரத்துப் புதின ஆசிரியராக விளங்குகிறார். மாதுங்கா, பம்பாய், கல்கத்தா, தில்லி, ஹரித்துவார் எனப்பல நகரங்களை அவர் எழுதினாலும் கடைசியில் அவற்றைச் சென்னையோடு தொடர்புபடுத்திக் கதையை எழுதியுள்ளார். சிற்றுார்களைக் குறித்தாலும் இவ்வாறே.
“சென்னைப் பச்சையப்பன் கல்லூரியிலிருந்து பாரிமுனைவரை
நடந்தால் வாழ்க்கையை உணர்ந்து கொள்ளலாம்”.

இதழியல் வழித் தமிழ்ப்பணி 71
என்பர் மு.வரதராசன். பிஜி, பர்மா, இலங்கை முதலிய நாடுகளில் தமிழகத் தொழிலாளர்கள் படும் துன்பங்களைப் பாரதியார் எழுதியுள்ளார். புதின ஆசிரியர்கள் கண்ணுக்கு நேரே நிகழும் ஏழைகளின் துன்பங்களை எழுதினர். ஏழைகளின் துன்பங்களை எழுதித் திருக்குறளும் பொருளியல் பங்கீடும் தீர்வு தரும் என்று மு.வரதராசன் எழுதினார். புதினத்தைத் தம் கலைப்படைப்பாகவும், மேடையாகவும் கருதினார். மேலும் அறம் அறிவுறுத்தல் (நீதி போதனை) செய்கிறார். சமுதாயத்தின் பல சிக்கல்களையும், பல துறைகளையும் பல பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் அலசுகிறார். இலக்கியச் செய்திகளையும் கூறித் தமிழின் மறுமலர்ச்சிக்கும் வழி செய்கிறார். கயமை அதிகாரத்தில் உள்ள 10 குறள்களின் விளக்கமாகக் கயமை’ புதினம் உள்ளது; ‘கயமை’ என்ற சொல்லுக்கு நிகராக ஆங்கிலச் சொல் இல்லை. சீர்திருத்தம், முன்னேற்றம் இரண்டும் கூறும் மு.வரதராசனிடம் திரு.வி.க. வின் எளிய நடை மேலும் வளர்ந்து அமைந்துள்ளது என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
6. இயற்கை
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் “தொல்தமிழ் இலக்கியங்களில் இயற்கை’ என்ற தலைப்பில் ஆய்வு செய்து இலக்கிய முதுவர்பட்டம் (M.Litt.) பெற்றவர் தனிநாயக அடிகள். 'கல்யாண சுந்தரனாரின் இயற்கையும் இயல்பும்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார் (10,4,1-20). பண்பாடு என்ற சொல்லைப் போலவே இயற்கை என்ற சொல்லும் இலக்கியங்களில் அடிக்கடி பயன்படுவதாகவும். சில நேரங்களில் தவறாகப் பயன்படுவதாகவும் உள்ளது என்று கட்டுரையின் தொடக்கத்தில் தனிநாயக அடிகள் எழுதியுள்ளதால் அவரது பண்பாட்டு அடிப்படையில் இயற்கையைப் பார்க்கும் தன்மை குறிப்பாக வெளிப்படுகிறது.
திரு.வி.கல்யாண சுந்தரனாரின் (1883-1954) வாழ்க்கையும் எழுத்தும், காந்தியடிகளின் கருத்துக்களை அடியொற்றி அமைந்தவை; வெஸ்லியன் பள்ளியில் பணியாற்றியதால் அவருக்கு மேலைநாட்டுச் சிந்தனைகளும், கிறித்துவமும் அறிமுகமாயின. இந்தியத் தத்துவங்களும், பல சமயக்கருத்துகளும் அறிந்தார். இயற்கையை உணர்ந்து வாழ்வில் இறுதிவரைப் புதிய கருத்துகளை உணர்ந்து அறிந்து ஏற்றார். அவர் எழுத்தாற்றலும் நடையும் தமிழ் நாட்டிலும், இலங்கை மலாயா நாடுகளிலும் செல்வாக்கு பெற்றன. இயற்கையைப் பற்றிய ஆய்வில் கல்வி, கடவுள் நகரங்கள் செயற்கை, உலகச் சமுதாயம் ஆகியவை பற்றியெல்லாம் ஆய்வு செய்து எழுதியுள்ளார் - என்று திரு.வி.க.வைப் பற்றி மதிப்பிட்டுள்ளார் தனிநாயக அடிகள்.

Page 43
72 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
7. பண்பாடு
71 இந்திய நாகரிகமும் சமஸ்கிருதமும் மட்டுமே இந்தியாவில் உள்ளன என்று அறிமுகப் படுத்துவோரையும், தமிழர் நாகரிகத்தையும், தமிழ்மொழியையும் வெளி உலகுக்குத் தெரிவிக்காத நம்மவரையும் கண்டு வருந்தியே 'தமிழ் கல்சர்’ என்ற இதழைத் தாம் தொடங்கியதாக முதலிதழிலும், மறுபடி நான்காவது ஆண்டு முதலிதழிலும், மறுபடி ‘ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடிஸ்’ எனப் புதிய இதழ் தொடங்கும்போதும் தனிநாயக அடிகள் ஆசிரிய உரைகளில் எழுதியுள்ளார். ‘தமிழ் கல்சர்” இரண்டாவது ஆண்டு முதலிதழிலும் எழுதினார். தமிழ்ப்பண்பாடு பற்றிய உணர்வு தனிநாயக அடிகளின் உள்ளத்தில் ஊறிப்போயிருந்தது.
72. ‘தமிழ் ஓசை’ என்ற இதழில் 1952-இல் எழுதப்பட்ட 'மலரும் மாலையும்’ என்ற கட்டுரை ‘தமிழ்த்தூது நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் கருத்துகளைக் கொண்டு ஆங்கிலத்தில் ‘தமிழ் கல்சர்" இதழில் 1953-இல் தனிநாயக அடிகள் எழுதியுள்ள ‘தமிழர்கள் பூக்களைக் கொண்டு எல்லாம் சொல்லிவிட்டார்கள்’ என்ற கட்டுரை (22,166-175) அவரது இயற்கை ஈடுபாட்டையும் பண்பாட்டு உணர்வையும் காட்டுகிறது. இதனை அவர், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவைக் கொண்டு "எனது வயது ஐந்து குறிஞ்சி” என்று தம் அறுபது அகவையைக் கூறியது உணர்த்தும். வே.அ.ப.19).
குழந்தை தன் தந்தை போருக்கான மாலை அணிந்திருப்பதைத் தான் பிறந்த நாளிலிருந்தே கண்டது. தலைவன் பிரிவிடைப் புறப்பட்டபோது தலைவி விட்ட ஏக்கப் பெருமூச்சு குழந்தையின் தலையிலிருந்த மலர்களை வாடச் செய்தது. இலைகளும் பூக்களும் சிறுவர்களுக்கு விளையாடவும், உடுக்கவும் பயன்பட்டன. இறையனார் அகப்பொருள் காதலுக்கான இயற்கைப் பின்னணியைக் கூறும். வேங்கைப் பூப் பறிக்கும் போது தலைவியைத் தலைவன் காண்கிறான். வேங்கை குறிஞ்சி நிலத்துக்குரிய மரம், வேங்கை பூத்துள்ளது. எனவே திருமணம் செய்ய வேண்டும் என்று தலைவனிடம் தலைவி அல்லது தோழி கூறுவர். காதலர்கள் வேங்கை மலர்களைக் கையுறையாக ஒருவருக்கொருவர் தருவர். திருமணச் சடங்கின் போது பூக்களையும், தானியங்களையும் தூவுவர். காதலில் தோல்வியடைந்த தலைவன் எருக்க மாலையை அணிந்து மடல் ஏறுவான். பயணிகளுக்கு ஊர் மக்கள் அன்பின் அடையாளமாகப் பூக்களைத் தருவர். மதுரையில் இருந்து திருப்பரங்குன்றம் வரை மலர்களால் அழகு செய்திருந்தனர். அரசர்கள் புலவர்களுக்கும் பாணர்களுக்கும் பொற்றாமரையைப் பரிசாகக் கொடுத்தார்கள். துன்பத்தில் மலர்கள் சூடுவதில்லை. சேர, சோழ, பாண்டியர்களின் அடையாளப் பூக்களாக முறையே பனம்பூ, அத்திப்பூ வேப்பம்பூ விளங்கின. இயற்கையின் மேல் கொண்ட இந்த

இதழியல் வழித் தமிழ்ப்பணி 73
அன்பால்தான் தங்கள் வீடுகளிலுள்ள பொருள்களின் மேல் செடி, கொடிகள், மலர்கள், விலங்குகள் ஆகியவற்றைத் தமிழர்கள் எழுதிவைத்துக் கொண்டனர் என்று பி.டி.சீனிவாச ஐயங்கார் கூறுவார்’ - என்று தனிநாயக அடிகள் தம் கட்டுரையில் எழுதியுள்ளார்.
73. கொழும்பில் தமிழ்/தமிழர் பண்பாட்டுக் கழகத்தின் விழாவில் தனிநாயக அடிகள் 2.8.1955 அன்று ‘தமிழ்ப் பண்பாடு-முன்பு, நிகழ்வில், எதிர் காலத்தில், குறிப்பாக இலங்கையில்’ என்று தலைமையுரை ஆற்றினார். அவ்வுரை ‘தமிழ் கல்சர்’ இதழில் (44341-364) வந்துள்ளது. ‘தமிழ் என்றாலே இனிமை, பண்பாடு. மகாவமிசம், எலாரா வரலாறு, தமிழ்தேவி, சோழர்கள் முதலிய வரலாற்றுக் கூறுகள் மிகப் பழைய காலத்திலிருந்தே தமிழர்களும் சிங்களர்களும் இலங்கையில் வாழ்ந்ததைக் கூறும். 1754 இல் அச்சிடப்பட்ட தமிழ் நூலில் மிகுதியான தமிழர்கள் இலங்கையில் வாழ்வதாகக் குறிக்கப்பட்டுள்ளது. புத்தமதத்தைத் தமிழர் பலர் பின்பற்றினர். தமிழர்கள் மூவாயிரம் ஆண்டுகளாக இங்கு வாழ்கின்றனர். ஆங்கிலம் வணிகமொழி, பிரஞ்சு, அரசியல் மொழி, இத்தாலியன் காதல் மொழி, ஜெர்மன் தத்துவமொழி, தமிழ் பக்தி மொழி, தமிழர் இலக்கியமும் வாழ்வும் இயற்கை பற்றியன. தமிழரின் உலகளாவிய பார்வையின் விளைவே இலக்கியங்கள். தமிழகத் துறைமுகங்களிலிருந்து கிரேக்க உரோமானிய நாடுகளுடன் வணிக உறவு இருந்தது. இலங்கைத் துறைமுகங்களும் அரேபியர்களுடன் உறவு கொண்டிருந்தன. தமிழர் பண்பாடு தென்கிழக்குஆசிய நாடுகளில் காணப்படுகிறது. வீரம், பக்தி, சான்றாண்மை ஆகியவற்றைத் தமிழர் போற்றினர். இப்பொழுது தமிழர்கள் தம் பழைய பெருமைகளை இழந்து நிற்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளாகத் தமிழ் உணர்ச்சியும், எழுச்சியும் பழைய தமிழ் இலக்கியங்களை வெளிக் கொண்டு வந்துள்ளன. அரசு ஆதரவு இல்லை. கல்வி, சமுதாய, வாழ்வியல் கூறுகளில் தமிழ்மொழி இடம் பெற்றால் தமிழ்ப் பண்பாடு தழைக்கும். பல்கலைக்கழகங்களில் தமிழ் இடம்பெறவேண்டும். இலங்கைப் பல்கலைக்கழகம் தமிழை ஒதுக்கினால் தமிழரை ஒதுக்குவது ஆகும். அரசு தமிழை, தமிழ்ப்பண்பாட்டை வளர்க்க ஆவன செய்யவேண்டும்; அதற்குத் தனிப்பட்ட மனிதர்களும் தனிப்பட்ட கழகங்களும் திட்டமிட்ட சில செயல்கள் மூலம் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் வளர்க்கவேண்டும்;~ என்று தனிநாயக அடிகள் கூறியதோடு அமையாமல் சில திட்டங்களையும் விளக்கமாகக் கூறியுள்ளார். மேலும் தமிழ்ப்பண்பாடு அல்லது சிங்களப் பண்பாடு இருந்தால் தான் இலங்கையில் உள்ள ஒரு மனிதன் இலங்கையன் ஆக முடியும் என்றும் கூறியுள்ளார்.
74. ‘தென்கிழக்கு ஆசியாவில் தமிழ்ப் பண்பாட்டின் செல்வாக்கு’ என்ற கட்டுரையை 1955 இல் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார் (43.203220),

Page 44
74 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
பிரெஞ், டச்சு, ஆங்கில அறிஞர்கள் ஒரளவுக்குத் தென்கிழக்கு ஆசியாவுடன் இந்தியப் பண்பாட்டுத் தொடர்பு பற்றி எழுதியுள்ளனர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி “தொலை கிழக்கு நாடுகளில் தென்னிந்தியச் செல்வாக்கு' பற்றிய தம் ஆங்கில நூலை ஜிகோ டெஸ், என்.ஜே. குரோம் என்போர் நூல்களை வைத்து எழுதியுள்ளார். ஆரிய பிராமணச் செல்வாக்குகளைக் கூறியுள்ளார்; தமிழ்ப்பண்பாடு பற்றிய உண்மைகளைச் சொல்லவில்லை. குவாரிச் வேல்ஸ் என்பவர் தம் நூலில் தாய்லாந்தில் நடக்கும் ஊஞ்சல் விழாவில் அரசர்க்கு முடி சூட்டப்படும் போது தமிழ் மந்திரம் ஒதப்படுவதைக் கூறியுள்ளார். அதை நீலகண்ட சாஸ்திரி கூறவில்லை. அப்போது பாடப்படும் பாடல்கள் திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்கள் ஆகும். சம்பாத் தீவுகளில் உள்ள கோயில்கள் திராவிடக் கலையைச் சார்ந்தவை என்பதை ஆர்.சி. மஜூம்தார் தம் நூலில் எழுதியுள்ளார். இக்கோயில்களில் திராவிடத் தன்மையை நீலகண்ட சாஸ்திரியார் எழுதவில்லை. தம் நாட்டில் இராமாயணம் உள்ளது. பாங்காக்கில் உள்ள சமஸ்கிருதக் கையெழுத்துச் சுவடிகள் தமிழர் பற்றிய செய்திகளைத் தரக்கூடும். மேலும் கம்போடியா, மலாயா, இந்தோனேசியா (சாம்பா) முதலிய நாடுகளிலும் ஆய்வு செய்யவேண்டும்’ என்று எழுதியுள்ளார்.
அனைத்திந்தியக் கீழை இயல் கழக மாநாட்டில் (1955) முனைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் தம் தலைமையுரையில், 'தாய்லாந்து - தமிழகப் பண்பாட்டுத் தொடர்பை முதன்முதல் தெரிவித்தவர் தனிநாயக அடிகள்’ என்று பாராட்டியுள்ளார். (5,2143). தனிநாயக அடிகள் தம் கட்டுரையின் இறுதியில் “மலாயப் பல்கலைக் கழகம் விரைவில் தொடங்கவுள்ள இந்தியத் துறையில் தென் கிழக்காசியாவில் தமிழ்ப்பண்பாடு பற்றிய பாடப்பகுதி வைக்க வேண்டும்' என்று எழுதினார். நீலகண்ட சாஸ்திரி மலாயப் பல்கலைக்கழகத்துக்குச் சென்ற பொழுது ‘இந்திய மொழித் துறையில் சமஸ்கிருதத்துக்கே முதலிடம் தரப்படவேண்டும்’ என்று எழுதினார். மலாயத் தமிழர்கள் போராடித் தமிழுக்கு முதன்மை பெற்றனர். 1960 இல் இந்தியத் துறை தொடங்கப்பட்டது. 1961 இல் இந்தியத்துறைத் தலைவராகத் தனிநாயக அடிகள் பொறுப்பேற்றார். தாய்லாந்தில் உள்ள தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகளை அறிந்துவர முனைவர் எஸ்.சிங்காரவேலுவைத் தாய்லாந்திற்கு அனுப்பினார் (வே.அ.ப.44).
8. ஆட்சிமொழி
சிங்கள மொழிச்சட்டம் 15.6.1956 இல் வந்து தமிழை இரண்டாம் நிலை மொழியாக்கியது. ஈழத் தமிழர்கள் போராடத் தொடங்கினர். அப்போது தனிநாயக அடிகள் தமிழ் மொழியின் உரிமைக்குக் குரல் கொடுத்தார். 1956 ஜூலை இதழில் 'இலங்கையில் மொழி உரிமைகள்' என்ற கட்டுரை எழுதினார். (53,217-230).

இதழியல் வழித் தமிழ்ப்பணி 75
“மொழி உரிமையைப் பறிப்பது நாட்டின் அமைதிக்கும் ஒற்றுமைக்கும் ஊறு விளைவிக்கும் என்பதால் மொழிகளின் உரிமைகளையும் பன்னாட்டுச் சட்டங்களையும் பற்றிக் கவலைப்படாமல் அவசரப்பட்டுச் சட்டம் எதுவும் இலங்கை அரசு கொண்டு வருவது முறையும் நீதியும் ஆகாது. பெரும்பான்மை மக்களின் மொழியே ஆட்சி மொழி என்பது சிங்கள மேலாண்மைக்கும் சிங்கள ஆட்சிக்குமே வழி வகுக்கும். ஒரு தேசம் ஒரு மொழி என்று பலமொழி பல தேசியம் உள்ள நாட்டில் பேசுவது ஒற்றுமையையும் அமைதியையும் குலைப்பது ஆகும். மொழிச்சிக்கல் என்பது வெறும் அரசியல் சிக்கல் அல்ல. அது மெய்ம்மை, சட்டம், அறிவியல், சமூகவியல், மனித வாழ்வியல் தொடர்பானது. அரசியல் ஒருமைப்பாடும் பண்பாட்டுச் சுதந்திரமும் வேண்டும். ஸ்விட்சர்லாந்தில் 72% பெரும்பான்மை இருந்தும் மற்ற இரு மொழிகளுக்கும் மதிப்பு கொடுத்துள்ளனர். மொழி உரிமையைப் பறித்தால் மீண்டும் பெரும் வலிமையோடு எழும்; ஸ்விட்சர்லாந்தில் ஜெர்மன், பிரஞ்சு, இத்தாலியன், உரோமன்சு ஆகியனவும் சம மதிப்புள்ள ஆட்சிமொழிகள், இலங்கையில் தமிழுக்குத் தேசிய உரிமை இல்லை என்றால் எந்த மொழிக்கும் உலகின் எந்த நாட்டிலும் தேசிய உரிமை இல்லை. தங்கள் உரிமைகளையும் தனித் தன்மைகளையும் பண்பாட்டுத் தன்னாட்சியையும் இழக்காமல் தமிழர்கள் சிங்களர்களுடன் சேர்ந்து இலங்கைத் தேசியத்தை அமைத்துள்ளார்கள். அவரவர் மொழியில் புத்த மதக் கருத்துகளைப் பரப்பலாம் என்று புத்தர் ஒப்புதல் கொடுத்தார். மதத்தில் உள்ள மொழி உரிமைதான் அரசியலுக்கும். மிகப் பலமொழிகள் இருந்தால் ஏதேனும் ஒரு மொழியை இணைப்புமொழியாக ஏற்றுக் கொள்ளலாம். இந்தியாவில் இந்தி அல்லது ஆங்கிலம், இரஷ்யாவில் இரஷ்யன், இந்தோனேசியாவில் இந்தோனேசியன், இரண்டே மொழிகள் உள்ள இலங்கையில் சிங்களமும் தமிழும் சம மதிப்புடன் தேசிய மொழிகளாகவும் ஆட்சி மொழிகளாகவும் அறிவிக்கப்பட வேண்டும்’- என்று எழுதியுள்ளார்.
9. ஆய்வு
‘தமிழ் இலக்கியவியலில் உள்ளறிதல்’ என்ற கட்டுரையில் (122 & 3, 181-192) ஜான் பிரட்ரிக் ஹெர்பரிட் என்பவர் அறிமுகப்படுத்திய கல்வி மனவியல் தொடர்பான சொல் உள்ளறிதல் (Apperception). படிப்பவரின் மனம், சூழல் முதலியவற்றுக்கேற்ப பொருளை உள்ளுணர்தல் அமையும். 'புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு’ என்னும் பாரதியின் வாக்கு படிப்பவரின் மனநிலைக்கேற்ப உள்ளறிதலைத்தரும். இலக்கியம் இலக்கியத்திற்கே, அதன் அழகியலே வெளிப்பாடு என்று இந்த நூற்றாண்டில் திறனாய்வு கூறும். தனிமனித மன உணர்வே இலக்கிய உணர்தல். கவிதையில் உள்ளுறையும் பொருண்மையையும் தன்மையையும் அறிதல், பின்னணியையும் தொடர்பையும் அறிதல் என்று இரண்டு வகைகளில் ஆய்தல் நல்லது. பழைய உரையாசிரியர்கள் யாப்பு

Page 45
76 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
அணி இலக்கணமும் பொருள் உரையும் அருஞ்சொற்பொருளும் கூறினர். அடியார்க்கு நல்லார் பன்னூல் அறிவால் கலைகள், நிலவியல், சமயக்கருத்துக்கள் தந்துள்ளார். இலக்கிய நடையை மொழியியல், கருத்தியல், கற்பனை, மனவியல் முதலிய நோக்குகளில் ஆய்வு செய்யலாம். இயற்கையோடமைந்த சங்கப் பாடல்களுக்கும் கற்பனை உருவகம் மிகுந்த காப்பியங்களுக்கும் கால வேறுபாடு உள்ளது. அழகியல், நடையியல் நோக்கு மட்டுமின்றி இந்த இலக்கியத்தின் தோற்றம் பற்றிச் சமூக அரசியல் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்பதே பயன் தரும். சமயமும் மெய்ம்மையியலும் முற்காலத்திய இலக்கிய ஆசிரியர் அல்லது உரையாசிரியர்களின் எழுது பொருளாக இருந்தன என்பதால் அவற்றையும் காணலாம். சமூகவியல் நோக்கில் பார்ப்பது அக்காலச் சூழலையும் ஆசிரியனின் சூழலையும் உணர்த்தும், சமூகவியல் நோக்கில் சிலம்பு, பரணி, குறிஞ்சி, பள்ளு ஆகியவற்றைக் காணவேண்டும். மனவியல் நோக்கிலும் காணலாம். வணிகர் மகனாதனில் வணிகச் சூழலைப் பாரதிதாசனும், உத்தம சோழன் காலத்தில் வாழ்ந்ததால் 'உத்தமன்’ என்ற சொல்லைக் கம்பரும் பாடினர் என்பர். கவின்கலை நோக்கில் ஆய்வு செய்யும்போது ஒலி ஒழுங்கு அணி (எதுகை மோனை போல்) அமைய இசைக் கருவிகள் காரணம் என உணரலாம். அகராதி, கலைக்களஞ்சிய அறிவும் இலக்கியப் புரிதலுக்கு உதவும்" - என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். இக்கட்டுரை முதல் உலகத் தமிழ் மாநாட்டுக் கருத்தரங்கில் படிக்கப்பட்டது ஆகும்.
10. பொது
101. மொழியும், ஆட்சியும்
ஆட்சிமொழி பற்றி எழுத வேண்டிய தேவையை இந்தியாவும், இலங்கையும் ஏற்படுத்தின. இந்தியாவில் இந்தி ஆட்சிமொழி என்பதும் இலங்கையில் சிங்களம் ஆட்சிமொழி என்பதும் தமிழ்த் தேசிய இனத்துக்கு மாபெரும் சிக்கலாக அந்தக் காலக் கட்டத்தில் வந்தன. இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் வட்டாரத் தேசியம்’ என்ற கட்டுரையைத் தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். (10,11-23).
இந்தியாவிலும் இலங்கையிலும் வெவ்வேறுபட்ட மொழிகள், பண்பாடுகள், மதங்கள், தேசியங்கள் கொண்ட வெவ்வேறு மக்கள் பொது எல்லையாலும், "சேர்ந்து வாழும் மனத் தன்மையாலும் 'ஒரு நாடு’ என வாழ்கின்றனர். “தேசிய இனப் பண்பாடுகளால் வேறுபட்ட மக்கள் ஒன்றாக வாழ்ந்தால் ஒரு தலைமைக்குக் கட்டுப்படவேண்டிய தேவையில்லை’ என்று டிஎஸ். எலியட் கூறுவார். வட்டாரத் தேசியமும், நாட்டுத் தேசியமும் இந்தியாவிலும் இலங்கையிலும் முரணுகின்றன. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தாயைப் பாடினார். மறைமலையடிகளும் ஜே.எம்.நல்லுசாமிப்பிள்ளையும் தமிழர்கள்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 77
இந்தியாவிற்கும் உலகத்திற்கும் செய்துள்ள நாகரிகக் கொடையைப் பற்றி எழுதியுள்ளனர். பாரதியார் தேசிய ஒருமைப்பாட்டைப் பாடினாலும் தமிழின் பெருமையையும் பாடியுள்ளார். நாமக்கல் கவிஞர் வள்ளுவரை “காந்தியடிகளாகப் பிறந்தார்’ என்று பாடினார். திரு.வி.க., இரா.பி.சேதுபிள்ளை ஆகியோர் உரை நடையில் இந்தியத் தேசியத்தைக் கூறியுள்ளனர். அதே நேரத்தில் தமிழைப் போற்றினர். நாமக்கல் கவிஞர், தேசியத்தைப் பாடியவர்; தமிழைக் காக்கவும் பாடினார். பாரதிதாசன், கண்ணதாசன், முடியரசன் ஆகியோர் தமிழைப் பாடியதோடு திராவிட ஒருமைப்பாட்டையும் பாடினர். இந்திய விடுதலைப் போராட்டம் இந்திய தேசியத்தைப் பரப்பியது. இந்தி எதிர்ப்பு தமிழைப் பாடச் செய்தது. தமிழிசையைச் சில பிராமணர்கள் எதிர்த்ததால் தமிழிசை எழுச்சி மேலும் வளர்ந்தது' என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார்.
இலங்கையில் சிங்களத் திணிப்பை எதிர்த்துத் தொடர்ந்து எழுதியதோடு மக்கள் போராட்டங்களில் கலந்து கொள்ளவும் பேசவும் செய்தார். அதேபோல் இந்தியாவில் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழர்கள் போராடுவதை எடுத்து எழுதினார். செய்திப் பகுதியில் இந்தித் திணிப்புக்கு எதிரான செய்திகள் தொகுத்துத் தரப்பட்டன. இந்தித் திணிப்பை எதிர்த்து 1957 இல் தமிழக அறிஞர்களும் தலைவர்களும் கையெழுத்திட்டுத் தலைமை அமைச்சருக்குக் கொடுத்த விண்ணப்பம் முழு விவரத்துடன் தரப்பட்டுள்ளது. (6,4,349-354). இந்தித் திணிப்பை எதிர்த்துத் திரு சி. இராஜகோபாலாச்சாரியாரும் பிற அறிஞர்களும் கல்கத்தாவில் பேசிய பேச்சில் முழுவிவரம் தரப்பட்டுள்ளது (7.2.208226).
102. அயலகத் தமிழர்
“ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்” (ஜே 1,275-123) இதழில் ‘தமிழர்களின் மார்டீனிக்குக் குடியேற்றம்’ என்ற கட்டுரை எழுதியுள்ளார்.
குவாடலூப் மார்டீனிக்கு, கயானே பகுதிகளில் பிரஞ்சுக் குடியேற்றங்களில் இந்தியக் குடியேறிகள் பற்றி இந்திய அரசினர்க்கு அறவே தெரியாது. 1874 இல் 10,063 இந்தியர் மார்டீனிக்கில் இருந்தனர். 18 ஆம் நூற்றாண்டிலிருந்தே தமிழர்கள் பிரஞ்சுக் குடியேற்றங்களுக்கும் இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்கும் சென்றனர். 1900 இல் மார்டீனிக்கில் குடியேறியவர்கள் 25,509 பேர். நாடு திரும்பியோர் 1951 பேர், இருந்தோர் 3,764 பேர். அந்தோனியம்மா, சின்னம்மா, லெட்சுமி, ஆரோக்கியம், நல்லமுத்து, மூக்கன் முதலிய பெயர்கள் உள்ளன. பெயர்கள் திரிபடைந்து உள்ளன. படையாட்சி, பறையர், நாயுடு என்று சிலர் பழைய சாதிப் பெயர்களைச் சொன்னாலும் அங்கு சாதியோ ஏற்றத்தாழ்வோ இல்லை. பழக்க வழக்கங்கள் வேறுபடுகின்றன. இறந்த

Page 46
78 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
பதின்மூன்றாம் நாள் கருமந்திரம் (கலுமந்திரம்) செய்கின்றனர். கலப்புத் திருமணம் மிகுதி. பூசாரி உள்ளார். தைப் பொங்கல் கொண்டாடும் பழக்கம் இரண்டாம் தலைமுறையினரிடம் இல்லை. மதுரை வீரன், மாரியம்மன், சீதாலட்சுமி, காளியை வழிபடுகின்றனர். தமிழ் தெரியாது. 1930 வாக்கில் தமிழ் நாடகங்கள் நடத்தியுள்ளனர். சில நாட்டுப்புறப் பாடல்களை நினைவு கூர்ந்து சிலர் சொல்கின்றனர்" என்று அயலகத் தமிழர் வாழ்வு பற்றி எழுதியுள்ளார்.
இக்கட்டுரை இரண்டாம் உலகத் தமிழ்மாநாட்டில் (1968) தனிநாயக அடிகள் படித்த 'குவாடிலோப் மற்றும் மார்டீனிக்கு தீவுகளில் தமிழர் குடியேற்றம்’ பற்றிய கட்டுரையை அடியொற்றியதே. 1948-1950, 1952-1954 இல் உலகச் சுற்றுப் பயணத்தில் தாம் கண்ட வெளிநாட்டுத் தமிழர்களையும் சிறப்பாகக் கீழை ஆசிய நாடுகளில் கண்ட தமிழ்ப் பண்பாடுகளையும் தம் மனத்தில் கருதியிருந்தார். பண்பாடும் கலையும் காக்கப்பட எப்போதும் நினைத்தார். மூன்றாம் தமிழ் மாநாட்டில் (1970) உலகெங்கும் பரவிக்கிடக்கும் தமிழினம் பற்றிய கருத்தரங்கு அமர்வின் தலைவராக இருந்து "சமகாலத் தமிழினக் குழுக்கள் - ஓர் அளவீடு' என்ற கட்டுரை படித்தார்.
103. இந்தியச் சிந்தனைகள்
103.1 'தொல் தமிழ் இலக்கியங்களின் கல்வியியல் சிந்தனைகள்' பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்த தனிநாயக அடிகள் தம் ஆய்வோடு தொடர்புடைய உலக இந்தியச் சிந்தனையியல்களைப் பற்றியும் தமிழகச் சிந்தனையியல் பற்றியும் ஆய்ந்துள்ளார். அவ்வாய்வுக் கருத்துகளை இந்தியச் சிந்தனையியல் என்று குறித்துக் கட்டுரைகள் எழுதினார். இக்கட்டுரைகள் கல்வி, இலக்கியம் பற்றிய கட்டுரைகளுடன் தொடர்புள்ளவை.
‘இந்தியச் சிந்தனையியலின் தொடக்கக் காலம்’ என்ற தலைப்பில் தனிநாயக அடிகள் எழுதிய கட்டுரை ‘தமிழ் கல்சர்” இன் இரு இதழ்களில் (6.1, 4-18; 63, 235-245) வந்துள்ளது. பிராமணியம், சமணம், பெளத்தம், ஆசீவகம் ஆகியன வடநாட்டில் வளர்ந்து முறைப்பட்ட அமைப்பெய்தித் தமிழ்நாட்டுக்கு வந்தன. இந்தோ-ஆரிய நாகரிகக் கலப்பு கி.மு.6 ஆம் நூற்றாண்டில்தான் நிகழ்ந்துள்ளது. பெர்சியா, அசிரியா, கிரேக்கம் ஆகிய நாடுகளிலும் இதே போல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. சடங்குகளின் பெருக்கம், ஒருபுறம், நாத்திகம் மறுபுறம் உண்மையான ஆத்திகமும் ஏற்படக் காரணமாயிற்று. சூதர் மாகதம் முதலிய பாணர்கள் தொடக்கக் காலப் பரப்புநர்கள்; பிராமணக்குருக்கள் முறைப்பட்ட அமைப்பினர். பிராமணர்கள் பெற்ற அறிவுச் சிந்தனை மிகச்சிறு அளவுக்குமேல் அரச குலத்தார்க்கும் வணிக குலத்தார்க்கும் தரப்படவில்லை. சூத்திரர்களுக்குக் கல்வி அறவே கிடையாது. பிராமணப்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 79
பெண்களுக்கும் கல்வியில்லை. பிராமணர் கல்வி ஒருபுறமும் சமணக் கல்வி மறுபுறமும் வளர்ந்தது. அரச குலத்தார் அல்லது திராவிடர் அல்லது பிராமணர் அல்லாதார் எழுச்சி பெற்றதால் வடகிழக்கு இந்தியாவில் பிறர் கல்வி பெறலாயினர். அறிவுத் தன்மையும் துறவுத் தன்மையும் பிராமணரல்லாதாரும் பெற்றனர். இராவணன் வடமொழி இலக்கியம் பயின்றவன்.
மகாவீரருக்கு முன் 24 தீர்த்தங்கரர்கள் இருந்தனர் என்பதும், கெளதம புத்தர்க்கு முன் 23 புத்தர்கள் இருந்தனர் என்பதும் பிராமணர் அல்லாதாரின் துறவுத் தன்மையின் தொல் மரபைக் காட்டும். துறவிகள் ஊர் ஊராகச் சென்று வாதம் செய்து புகழ் பெற்றனர். துறவு மேற்கொள்வதன் மூலம் பிராமணரல்லாதாரும் அறிவும் மதிப்பும் பெற்றனர். உடலை இழிவாக நினைத்தல், தவறான தவமுறைகள், உடலை வருத்துதல் முதலியன சிலரிடம் ஏற்பட்டன. புத்தமதம் மனவியல் அடிப்படையில் அமைதியை ஊக்குவித்தது. சமணம், கடும்துறவு, இன்னா செய்யாமை (அகிம்சை) வற்புறுத்தியது. ஆட்சியாளர்களும் பொதுமக்களும் பரப்புநர்களின் பேச்சை மதித்துக் கேட்டனர். பரப்புநர்கள் ஒருவர் அடுத்தவரை வாதத்தால் வென்றனர். அக்காலத்தை 'மிகவும் உயரிய சிந்தனை வளர்ச்சிக்காலம்’ என்று எஸ். இராதா கிருஷ்ணன் கூறுவார்.
கிரேக்கம், உரோம் ஆகிய நாடுகளிலும் உலவும் பரப்புநர்கள் இருந்தனர். அங்குக்கல்வி மூலமாக எல்லா மக்களுக்கும் சிந்தனை வளர்ச்சி கிடைத்தது. சடங்குகளை எதிர்த்துப் புதிய சமய மரபுகள் தோன்றின. பித்தகோரியன் பிரிவினர் புலால் மறுத்தனர். இந்திய சார்வாகர்கள் (பொருள் முதல்வாதிகள்) போல் யவன (ஐயோனிய)ப் பள்ளியினர் பகுத்தறிவுச் சிந்தனைகளைக் கொண்டிருந்தனர். கிரேக்கத்தில் சாக்ரடீசும் அரிஸ்டாடிலும் தோன்றினர்; இந்தியாவில் புத்தரும் மகாவீரரும் தோன்றினர். கிரேக்க உரோமானியர் உடல் உள்ளப் பண்பாட்டைப்பேசினர். வட இந்தியர் உடல் உயிர் ஆகியவற்றைப் பெரிதும் ஒதுக்கிவிட்டு வாழ்க்கைக்கு அப்பால், உயிரின் முடிவுக்கும் பின்னால் விடுதலை தேடினர்’ - என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். கிரேக்க உரோமானியர்கள் போல் தமிழர்களும் உடல் உள்ளம் பண்பாட்டை வளர்க்கும் கொள்கையினர் என்பதைத் தனிநாயக அடிகள் கூறாமல் விட்டுள்ளார். இங்கு ஊகிக்க விட்ட கருத்தைப் பிற கட்டுரைகளில் வெளிப்படையாக எழுதியுள்ளார்.
10.3.2 விரிவுரையாளர் அல்லது பேராசிரியராகப் புதிதாகப் பொறுப்பேற்றவர், தாம் வந்த மூன்றாண்டுக்குள் தம்முடைய துறைக்குத் தொடர்பான தலைப்பில் பல்கலைக் கழகத்தில் தொடக்கவுரை ஆற்றவேண்டும் என்பது மரபு. அதன்படி 16.12.1962 இல் மலாயப் பல்கலைக் கழகத்தில் தனிநாயக அடிகள் ‘இந்தியச் சிந்தனையியலும்

Page 47
8O தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
உரோமன் ஸ்டாயிக் வாதமும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அவ்வுரை ‘தமிழ் கல்சர்’ 1963- ஜூலை - செப்டம்பர்’ இதழில் (103136) வந்துள்ளது.
‘மேலைநாட்டுச் சிந்தனையியலில் ஆர்பிக், பித்தகோரியன், பிளேட்டோயியம், எபிக்யூரனியம் புதிய பிளேட்டோயியம், ஸ்டாயின்வாதம் முதலியவற்றை இந்தியவியல் மெய்ம்மைகளோடு ஒப்பிடலாம். இந்திய அரேபிய இலக்கியங்கள் எல்லாமே நல்ல ஐரோப்பிய நூலகத்தின் ஓர் அடுக்கறைக்குக் கூடப் போதுமானவையல்ல" என்று மெக்காலே (1835) ஏளனம் செய்தார். ‘இந்தியக் கலைகள் (ஓவியங்கள் சிற்பங்கள்) இயற்கையாக இல்லாமல் அரக்கத்தனமாக உள்ளன’ என்றார் ஜான் ரஸ்கின். அரவிந்தர் முதலியோர் முயற்சியால் படிப்படியே இந்நிலை மாறி இந்திய ஞானத்தை மேலை நாட்டினர் உணர்ந்து வருகின்றனர். பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் நகர அரசு மனித சமத்துவத்தை உண்டாக்கும். என்றனர். அன்டிபோன், சிலிக்ஸ், சீனோ ஆகியோர் அலெக்சாண்டரின் உலகப் பேரரசுக் கொள்கையை ஒத்து, உலகக் குடியுரிமையையும் அன்புச் சட்டத்தையும் கூறினர். செனிகர் (கி.மு.4 - கி.பி.65) மார்கஸ் அரேலியஸ் (கி.பி.121 -180) முதலியோர் முதலில் உரோமன், அடுத்து உலகக் குடிமகன் என்று கூறினர். பிராமணிய இலக்கியங்கள் வருணப்பாகுபாடுகளை வலியுறுத்தின. சமணம், பெளத்தம், ஆசீவகம் ஆகியன பிராமணியத்துக்கு எதிராக எழுந்தன. பிராமண, பெளத்த இலக்கியங்கள் மதம் பரப்பும் தன்மையைக் கொண்டவை. தமிழ் இலக்கிய்ங்களோ வருணப் பாகுபாடு சாராதவை. ‘யாதும் ஊரே,யாவரும் கேளிர்’ ‘யாதானும் நாடாமால் ஊராமால்' என்று தமிழ்க் கவிஞர்கள் பாடினர். ‘ஸ்டாயிக்வாதிகள் அறிவார்ந்தவர்களைச் சேப்பியல்ஸ்’ என்பர், தமிழிலக்கியம் “சான்றோன்’ எனக்கூறும். தன்னலமின்மையே மனிதப் பண்பு என்று ‘ஸ்டாயிக்” வாதிகளும் தமிழர்களும் கூறுவர். திருக்குறள் மனிதப் பண்புகளைக் கூறுவதில் பெளத்தம், பகவத் கீதை ஆகியவற்றைவிட உயர்ந்து விளங்குகிறது என்று ஆல்பர்ட் ஸ்வைட்சர் கூறுவார். எதிரியையும் மன்னிப்பதும், தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் நன்மை - செய்வதும், மீள் பயன் கருதாமல் உதவுவதும், மனத்தில் மாசில்லாமையும் பெரியாரைத் துணைக்கோடலும் முதலியன தமிழர் அறங்கள், சிந்து சமவெளி காலத்திலிருந்து (கி.மு.3000) தமிழர் மரபு உள்ளது. திருக்குறளும் தொல்காப்யிமும் தமிழ்ப் பண்புகளை வெளிப்படுத்தும் என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். இக்கட்டுரை இறுதியில் ’மலாயப் பல்கலைக் கழக இந்தியத் துறையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மொழி, இலக்கிய, கலை உறவுகள் கல்விப் பகுதியில் கொள்ளப்படும். ஜப்பானியக் கவிதைகள், சென் பெளத்தம் ஆகியவற்றோடும் ஒப்புமை கருதப்படும். இவ்வகையில் தென்கிழக்கு ஆசியாவில் மையமாகச் செயற்படும்’ என்று கூறியுள்ளார். இவ்வாறு செயற்பட வேண்டும் என்று 1955 -இலேயே தென்கிழக்கு ஆசியாவில்

இதழியல் வழித் தமிழ்ப்பணி 81
தமிழ்ப் பண்பாட்டின் செல்வாக்கு என்ற கட்டுரையில் (43220) தனிநாயக அடிகள் எழுதியிருந்தார். தாமே மலாயப் பல்கலைக்கழக இந்தியத் துறைத் தலைவராகப் பொறுப்பேற்றதும் அதனைச் செயற்படுத்தினார்.
10.4. தமிழ்ப் பல்கலைக்கழகம்
சங்கம் வைத்து மொழி வளர்த்தது தமிழ் மரபு மேலை நாட்டுத் தொடர்பால், 'பல்கலைக் கழகம்’ என்னும் அமைப்பு வகையிலான கல்விக் கழகம் தமிழ்நாட்டுக்குப் புதியது. பல்கலைக்கழகம் எதுவும் தென் ஆசியாவிலேயே தோன்றாத காலத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்தை முதன்முதல் முன்வைத்த ஹென்றிக்கு ஹென்றிகுலஸ் அடிகள் (1520-1600) என்னும் அறிஞரைப் பற்றித் தமிழுலகத்துக்கு முதல் முதல் அறிமுகப்படுத்தியவர் தனி நாயக அடிகள் ஆவார். ஹென்றிக்கு ஹென்றிக்குலஸ் அடிகள் என்னும் கிறித்துவப் பரப்புநர் இலங்கையில் மன்னாரிலோ தமிழகத்தில் புன்னைக்காயலிலோ 1560-க்குள் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்று திட்டமிட்டார் (7.3,289) என்று தனிநாயக அடிகள் எழுதியுள்ளார். மதுரைத் தமிழ்ச்சங்கம் ஒரு தமிழ்ப் பல்கலைக்கழகமாக உருவாக வேண்டும் என்று 29.9.1906 'இந்தியா' இதழில் மகாகவி சி.சுப்பிரமணிய பாரதியார் எழுதினார். (இளசை மணியன் (தொ.ஆ) பாரதி தரிசனம் பாகம் 1, ப.264). 1925, 1926 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கவேண்டும் என்ற இயக்கம் நடைபெற்றது. (செந்தமிழ்ச் செல்வி, சிலம்பு 3, ப.413; தமிழ்ப் பொழில். துணர் 1 பக்.185, 325, 400). இதே போல் இலங்கையில் 9.6.1956 இல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அமைக்கவேண்டும் என்ற இயக்கம் தனிநாயக அடிகள் போன்றோர் முயற்சியால் தோன்றியது (5, 4, 359). தனிநாயக அடிகள் 1961 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்கு அளித்த நேர்காணல் விடையில் ‘தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகம் உலகத் தமிழறிஞர்களை ஒன்றுகூட்ட முடியும்’ என்று கூறினார். வே.அ.ப70) ஆயின் அவரே உலகத் தமிழறிஞர்களை ஒன்றுகூட்டி 1964 இல் உலகத்தமிழாராய்ச்சி மன்றம் கண்டதோடு 1966 முதல் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தவும் 1970 முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தொடங்கவும் வழி செய்தார். இவற்றின் விளைவாக 1981 இல் தமிழ்நாட்டில் தமிழ்ப்பல்கலைக்கழகம் தோன்றியது.
1. கட்டுரைகளின் தன்மை
11. பன்மொழி அறிவும் இலக்கியக் கல்வியும் கொண்டிருந்ததால் தனிநாயக அடிகள் பல மொழிகளில் மேற்கோள்களை அப்படியே எடுத்தாண்டுள்ளார். பகவத் கீதை மேற்கோளைத் தந்துள்ளார் (10, 3, .ெ சங்க இலக்கியங்கள் கூறும் நகரங்களைப் பற்றிக் கூறும்பொழுது,

Page 48
82 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
லூயிஸ் மம்ஃபோர்டு என்பவர் நகர வாழ்க்கைபற்றி எழுதியுள்ள பகுதியை எடுத்துத் தந்துள்ளார். தனிநாயக அடிகளின் கட்டுரைகளில் அடிக்குறிப்புகளை நோக்கினால் அவர் எண்ணற்ற நூல்களைப் பயின்றவர் என்பதை அறியலாம்.
12. உவமைகளையும் உருவகங்களையும் கையாண்டு தம் கருத்துக்களைக் கூறுகிறார். எடுத்துக் காட்டாக மு.வரதராசனாரைப் பற்றிய கட்டுரையின்
இறுதியில்,
'இஸ்ரேலியர்கள் பாபிலோனிய ஆற்றங்கரைகளிலே வில்லோ மரக்கிளைகளில் தங்கள் யாழைத் தொங்கப்போட்டுவிட்டு, சியோனில் தாங்கள் இழந்த பழைய புகழ்வாய்ந்த காலங்களை எண்ணிப் புலம்பி அழுவது போல அறியாமை, சமூக ஏற்றத்தாழ்வு, வறுமை ஆகியவை இந்தப் புதின ஆசிரியரின் மனத்தில் தங்கிக்கிடந்து பெரிதும் அவரை மகிழ்ச்சியடையாமல் செய்கின்றன’*
என்று எழுதியுள்ளார் (102.18).
13 உரோம் நகரில் பயின்ற போதே பன்னாட்டு மாணவர்களுடன் தங்கியிருந்ததால் உலக உணர்வைப் பெற்றார் தனிநாயக அடிகள் (த.ப20). உரோம் நகரத்தில் தனிநாயக அடிகள் பயின்ற மெய்ம்மையியல் படிப்பில் அவர் எடுத்துக் கொண்ட ஆய்வு ‘புனிதர் சிப்ரியன்’ பற்றியதாகும். இதனால் வெறும் கடவுள், வழிபாடு, சடங்கு மந்திரங்கள் என்பவற்றைவிட மக்கள்தொண்டு, சமுதாயம், பண்பாடு ஆகியவற்றைக் கருத முற்பட்டார். இதனை,
‘நமக்குக் கடவுள் அளித்த அறிவையும், இந்திய ஆன்மீகம் பாரம்பரியத்தையும் பயன்படுத்திக் கொள்வது நம் கடமை என்று, கார்த்தேஜ், அலேக்சாண்டிரியா ஆகியவற்றின் பாதிரிமார்களின் எதிர்பார்ப்புகளும் விளக்கவுரைகளும் நினைவூட்டுகின்றன அவர்களுடைய எச்சரிக்கைகளும் அறிவுரைகளும் கிறித்துவ ஆலயங்களை இந்தியாவில் பண்பாட்டுடனும் நாகரிகத்துடனும் பின்னிப்பிணைந்த தாக்குவதற்கு அறிவும் பாதுகாப்பும் கூடிய திட்டங்களை உருவாக்க நமக்கு வழி காட்டுகின்றன. வறுமையுள்ள இடத்தில் நமக்குள் தணிவகுப்பு ஏற்படுத்திக் கொண்டு இருப்பதை விடுத்து, கடைத்தெருக்களுக்கும் குடிசைகளுக்கும் சிறுகுடிசைகளுக்கும் சிறுகுடில்களுக்கும் சேரிகளுக்கும்
* 10.2, 18- "Faced with the great problem of intellactual, Social and material poverty in
Madras, perhaps the novelist is preoccupied, and can hardly be cheerful, very much like the Isralites who hung their harps on the willows along the banks of the rivers and canals of
Babylon, and sat to weep over the loss of their former glory, in Sion."

இதழியல் வழித் தமிழ்ப்பணி 83
கிறித்துவ ஆலயங்களைக் கொணர வேண்டும் என்று அவர்களுடைய சமூக ஈடுபாடும் அறவுணர்வுடன் கூடிய பணிகளும் கற்பிக்கின்றன”*
என்று தம் ஆய்வேட்டின் முன்னுரையில் தனிநாயக அடிகள் எழுதியிருப்பதால் உணரலாம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படித்த பின் அவரது தமிழ் உணர்வு பண்பாட்டுணர்வு. உலகப் பார்வை ஆகியன விரிந்தன.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூற்று அடி தனிநாயக அடிகளின் மனத்தில் ஆழப்பதிந்தது. திரு.வி.க.வைப் பற்றி எழுதும் போதும் (10,419) ஸ்டாயிக் வாதத்தைப் பற்றி எழுதும்போதும் (10320) இக்கருத்தை எடுத்துக்கூறியே விளக்கினார். மேலைநாடுகளுக்குச் சென்ற பொழுதெல்லாம் அந்தந்த மொழிகளில் எழுதிக் காட்டியும் எடுத்துக் கூறியும் பரப்பினார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற அடியை,
‘நமக்கு எல்லா நகரங்களும் ஒன்று, எல்லாரும் உறவு’ (Tous
all towns are one, all men our Kin") (5,1,67) - gy Curti.
‘எல்லா ஊரகமும் என் சொந்த ஊர், எல்லாரும் என் உற்றார் g) pasha Ts' ("Every village is my village and all are my kith and Kin') (122.105) - முனைவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம்.
‘எல்லா நிலங்களும் என் சொந்த நிலம், அவற்றின் எல்லா Loiseth 6T6i, GasTibgsid, 'Lib' ("All earth is my homeland, And all its people my kinsfolk") (12,2,105) - 3rig. 9'gd) ரகுமான்.
என்று பிறர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்க தனிநாயக அடிகள்
‘எல்லா நாடும் என்நாடு, எல்லா மனிதரும் என் உறவு'
("Every country is my country, Every man is my kinsman") (4,4,351,103,20)
* Dr. Xavier S.Tani Nayagam, The Carthaginian clergy, preface:
"The speculations and interoretation of the Fathers of Carthage and Alexandria remind us of our duty to utilize the God-given wisdom and the spritual heritage of India. Their warnings and counsels guide us in chartering a wise and safe course in this process of making the church "incarante" in India in its culture and in its civilization. Their social interest and charitable works teach us that where poverty reigns, we cannot constitute a class by ourselves but bring the church into the marketplace, into the hut and the hovel, the shack and the shum.

Page 49
84 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
என்று மொழிபெயர்த்து உலகம் முழுவதும் பரப்பினார். இதனால் உலகம் முழுதும் தமிழ்ப் பண்பாட்டின் உயிர் நாடியான கருத்து பரப்பப்பட்டது. உலகத் தமிழாராய்ச்சி மன்றம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத்தமிழ் மாநாடுகள் ஆசியவற்றின் முத்திரைச் சொற்களாக இவை ஆயின.
114 திருக்குறளில் ஈடுபாடு கொண்ட தனிநாயக அடிகள், தம் கட்டுரைகளில் திருக்குறள் கருத்துகளையும், ஜி.யூ.போப், ஆல்பர்ட் ஸ்வைட்சர் முதலியோர் திருக்குறளைப் பாராட்டிய சொற்களையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
“பண்புடையார் பட்டுண்டு உலக்ம் அஃதின்றேல்
மண்புக்கு மாய்வது மண்” (குறள்-996) என்ற திருக்குறளை அப்படியே தமிழில் தம் ஆங்கிலக் கட்டுரையில் இறுதியில் (4,4364) தந்துள்ளார். மலாயப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய சொற்பொழிவுக் கட்டுரையில்
“நகல் வல்லார் அல்லார்க்குமாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள்” (குறள்-999)
என்ற குறளை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் செய்துள்ள* மொழி பெயர்ப்பைவிடக் சுருக்கமாகவும், தெளிவாகவும் மொழி பெயர்த்துத் தந்துள்ளார்.**
12. முடிவுரை
தனிநாயக அடிகள் ‘தமிழ் கல்சர்’, ‘ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழ்கள் நடத்தியதன் மூலம் - தம் இதழியல் பணியின் மூலம் - தமிழ்ப்பணி செய்துள்ளார்.
1. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் தெரியாத தமிழரல்லாத பிற இன, மொழி, நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், வெளிநாடுகளில் பல ஆண்டுகளாய் வாழ்வதால் தமிழை மறந்து போன
* G.U. Pope's English Translation. Tirukkural, couplet 999.
"To him who knows not
how to smile in kindly mirth Darkness in day time broods O'er all the vastand mightyearth" - G.U. Pope. ** 7,1,10,103.31:
"To those who are unable to laugh it is pitch dark . . . . .
even admist the blaze of noon" -Xaviers.Tani Nayagam

இதழியல் வழித் தமிழ்ப்பணி 85
தமிழர்களுக்கும் தமிழின் பெருமையை ஆங்கில மொழியில் இதழ் நடத்தியதால் அறிமுகப்படுத்தினார்.
2. ஒரளவே தமிழ் தெரிந்த வெளிமாநில, வெளிநாட்டுத் தமிழர்களுக்கும் தமிழ் பயின்ற மொழியாளர்களுக்கும் தமிழியலை அறிமுகப்படுத்தினார்.
3. தமிழியல் குறித்து வெளிநாட்டாரின் தமிழியல் கருத்துகள் ஆய்வு முடிவுகள் பற்றித் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் அறியவும், அறிஞர்களின் தமிழ்ப்பணிகள் தமிழாராய்ச்சிகள் பற்றி வெளிநாட்டார் அறியவும் இவ்விதழ்களின் வழி உதவினார்.
4. தமிழ் இலக்கியக் கழகம் வளர்ச்சி பெறவும், தமிழ்ப்பண்பாட்டுக் கழகம் (1952) செய்யும் பணிகள் பரவவும், தமிழ்க்கலை மன்றம் (1955) தோன்றித் தமிழக இலங்கை அறிஞர்கள் முதல் கட்டத்திலும் தமிழ்நாடு இலங்கை மலேசிய அறிஞர்கள் இரண்டாம் கட்டத்திலும் ஒன்றுகூடித் தொடர்பு கொள்ளவும், பின்னர் உலகத்தமிழ் மாநாடுகள் (1968 முதல்) நடத்தி உலகத்தமிழனமே ஒன்று கூடவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அமையவும் (1970) தனிநாயக அடிகளின் இதழியல் பணி உதவியது. தென்கிழக்கு ஆசியவியல் நிறுவனம், இந்தியவியல் நிறுவனம், பிரஞ்சு இந்தியவியல் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் முதலியன தோன்றவும், வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இந்தியவியல் திராவிடவியல், தமிழியல் கல்வி தோன்றவும் தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி ஒரு தூண்டுதலாக இருந்தது.
5. தமிழில் முதலில் அச்சான நூல்கள் அவை இருக்குமிடங்கள் பற்றிய செய்திகளையும், "இந்திய மொழிகளிலேயே முதன் முதலில் அச்சேறிய மொழி தமிழ், உலக மொழிகள் பலவற்றில் முதலில் அச்சேறிய தமிழ், என்னும் பெருமைகளையும் முதல் முதல் அறிந்து தம் இதழியல் பணியால் உலகுக்கு அறிவித்தார்.
6. தாய்லாந்தில் திருப்பாவை திருவெம்பாவைப் பாடல்கள் வழங்குகின்றன என்று முதன் முதல் கண்டு தம் இதழில் அறிவித்ததோடு தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழ்ப்பண்பாடு விளங்குகின்றது என்றும் கூறி ஆசியவியல் உணர்வையும் ஆய்வையும் தம் இதழியல் பணியால் தூண்டினார்.
7. தனிநாயக அடிகள் தம் உலகப் பயணங்களில் செய்த சொற்பொழிவுப் பணியாலும் நூல்கள் மூலமும் எழுத்துப் பணியாலும் செய்த உயரிய தமிழ்ப்பணிக்கும் தமிழ்த்தூதுக்கும் உள்ள அவற்றின்
கால எல்லை, பரப்பு எல்லை, பொருள் ஆகியவற்றைக் கருதும் 않
;fg:چی مگر کمرہ:جمہ آج ہر ہو ............ء ت ، ح “ . . ر ہتھی۔

Page 50
86 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
காலம், பரப்பு, மொழி, இனம், நாடு ஆகியவற்றைத் தாண்டித் தாம்" மட்டுமல்லாது பலரையும் இணைத்துக் கொண்டு தனிநாயக அடிகள் தமிழ்ப்பணி செய்வதற்கு இதழியல் உதவியுள்ளது.
8. காலத்தை வென்று தமிழறிஞர்களுடைய கட்டுரைகளையும் தமது கட்டுரைகளையும் ஆய்வு முடிவுகளையும் கண்டுபிடிப்புகளையும் தருவதாகத் தனிநாயக அடிகளின் இதழியல் பணி விளங்குகின்றது.
寅*麦**卖卖六害卖演*索演共冀卖
" . யாஅம் இரப்பவை
பொருளும் பொன்னும் போகமும் அல்ல: நின்பால்
அருளும் அன்பும் அறனும் மூன்றும்”
- பரிபாடல் (579-82).

87
ợls se a fish seųæșapoioșųo Isgoe&#ņus zz 1961 ooőșņuo 8 tg?||1910 1psfilgio Is6 #0.965$ņuo 1
|s6 lysosoï 9.
ĶIEĢșđợış işg yeris? 6
Iso sofissão z
Is6 -ssä, 92
'qi@ışorog) lışılmoos smæssiugio) đỉigioșųoo qoyoto@Iműve a qysigis qismīļoe) Isomosoɛɛg sfiume) @& spuriņos psfugle)(işi Isg sgrìostwo Zi
htşmışısı(isg lsp.$$mtoț¢ső osło 1ɛ ‘a ‘0’.
|S6, tollostoto 'SO
|sougiốện qui ilçeúụelsen 6+6. únosýsig iz #S6i-8ț6#
osoɛɛg pop-iteto qúrosoþ9-8ỳ6! Sỹ61-0#64
1.pophụ lưenqụcello
stæs@ui
+1@șiĝğıs?
quis@1șeș-Tfts ‘ųısıçrıņ(sooĝņmā 191łońsse) mis?
Ųreof) |1911-T-IgnŲiore0/ųmųjįssão
noođị&& mựiquorņn nosobile somugių so
postoloĵurn $foo)m&so fologs) ??opus)?? pols@suso)
įsasgissīkg
19șđỡ đợi? "?
용國3

Page 51
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
容 释
ɔbɔdsoņos V sousqsums popųog0£6M 'Z'$Z -
əJIT sooqɔS uo sųonoụ Kens6.Z6I’Iso II
'oojoques inops aqI.6.Z6|{'0'[‘I 'sysop uo ou Argo joj bola y6Z6|['8'6 TųßisuooW Áq ənuðAy 9891\oɔ ɔųL6Z6 I’LLZ ‘uosses!!!AIO Jo inosaes aqI.6Z6 I’9”OI unaeq III, ļosums uog omgeN8Z6I’ZI’6 uoɔsodeN ‘Kross H un orðH øų moaeg. ÁW8Z6!?!!"6
ponoxo, tọųnţiņuńssã3 $spee,
Hirių sosyn sŵolgotņuúisigo sogæfðumúgs0861°01′S. týmů ựơo splýsingle) đgiả ưą įosì sự
qułmųori solo qŵusijos fills đợio esplimgresyonɛ961°9′6
q??I$$) plyn gorpo cosą sue@sig QIỆmẽ sựđì& ș19eg qi@@@ș@g 19ạ ựsso se lopp spisalgoɖo ŋusɛ)$|$(fi) 096] sfioquoi-sh?
Loppuie,so quesīģ&6S-8$61 IpoợIỆổilgio mộígopo qyệf)8964 1posits(pre) șđi gio9S6! qimasusun qi@asonZSối
usòoợis figlo poợIỆ
sợấfi) -TIạooșoșiĝo qoysos), ove&#ffig ysgtouon &
qissunssum
‘ųIIIĜtạo Qumsgụsốện, mis?
(euger “28əlsoɔ sɔsɔŋŋwà nS) (ụmrie) s(olloșulteusố spysyisiko omissiųoo) apılasappelpošap ựmpos)
oversasố otoŋwɛʊ
Urugtsson
qofio șụorpo șmigos) șoossass).
ɔuqqsums pəț¢yoq spođẹ@ (ogs? ?
groołyńgo 6)Isiðfia spęś9đợiș
წყოიტg Josyfi ŋɔɔtoo
Ļo@wn ofƆs (u-golffe) sốoņısố
!mson Ựorbunĝ tgọo (č-gðußტ) auუტ digiê

89
opoa s, losaxos10 ɔɖI. ɔuos os qeq 0\}.
ɔuos os quae ɔɖL
ởuos os qed ɔųI.
osoɔtɔgɔ ussuostuolį L
wapi powosog W
uygų yo sɔswoŋS V
·srosess-um, əųI.
ouos jo gəų, Jood
“¡¡¡¡¡ ÁIpups peəT -aug-I poolpņqo osus dood V sıfajroses go ɔlsw orenbS V ossosS 09S
uɔmɛɔH Jo punoH QWI. ruoacas! Jo punoH əųI. suotą w Isiqaasi osvoi o ǹ go osms oo!:S ɔų, jo uosswobo oq; uopɔŋɔwɔud uomios “Kjofo ɔŋ puɛ ləMod 0\L ossena otų jo suņJeð oss I. tuoosq sɔsmoT 0ųL
·syoong summae op us shoog osouostų svoulos luosoɔ u sɔɔsia ouņsələsus tuoosN Áųəla O
ÁųɛKo's
gugut us tusseajasuoɔ wque I quoN usussa jo suos opos spļ80H olĻI.
tỷ6I Ásms ç£6I ÁɛWN çɛ6I'IdV #961’000 yɛ61’dəS șç5 IonW #961 Ásmr yɛ6I ÁøWN yɛ6I'IdV yɛ6I'mwyN ș961'18"W yɛ6 Ioues ƐƐ6IoCI £ €6s'AON £ €61°300
9y6I ɔumf çỳ6I ɔumf 0£6M "ZI’S 0£6V6'08.
086 I'6'0€
0£6's '878 0£6I'9'y?
0£6I’9’6 096 I’S’9% 086 I'{'LI 0£6s^{'0's
oquiosoɔ
uosÁɔɔ soy yn ôH parogs op jo loĝuossəW QL

Page 52
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
sjoseonpɔ-lɔ0ā īsume.I suɔsɔuy
'sqốnoq Lubipus jo postod suururos y tuosÁəo uỊ sự8ų ɔĝenougq 'Áļasoos IssueI. Ápiso jo suoseonpə əųI. uongonpə ubipus quo!oue Jo Ásasoos əŋ puu ɔmɛ lɔiŋ ŋuel quɔsɔuy uosÁəɔ o, ɔɔuələgəi susoods ipsa aming sų pus suɔsɔid sų sised sų ampno sueI 'essy 1883 qinos u, əəuuəngus summɔ ŋueI. Áuropeoy əųI. Jo suumor sȚIII.
osmiqľI usədomą u, sydụosmuuw pume1 'Isule I. Jo 8usųɔgɔL ɔųI. dųsiesoļos pue uousəļums suɔAA0U tņựA IIe si přes sŋumɛI, oùI. Hume.I ore seq, sousųL əŋ ŋureI, oyun lopuɔŋ ‘ĀŋƏod Hume.I. Jupious us amsen jo uoŋgɩaidrosus poļiņā ɔųI.
omȚnɔ ŋumɛI. Jo įvaļams ɔųI.
AɔįA3YI Ásiasmeno siųI.
LÇ6I “03G-100
odəS-Áịnt 1961 (IByN-uer 996 I 'das-ÁIns 996 I ɔump-Idy
996 I 'mw-user
* ŞÇ6I oɔCH-10O
$$6I dəS-Áịns
. $$6's 'JBW-ubf
#Ç6I ‘39CI-400 yŞ6I rew-uer £$6I-dəS 996 Iount-ydy £96 IoneyN-ust
ZȘ6I 'ooq-dəS Z96|| osny-ount Z96 I’qɔ ɑ
se pɛw ‘ampno sume.I. Jo Áuropeoy ; ‘ubốeẤeN subųL'S Iosabx
'usjooụnĮ.
‘Áuosoɔ wɔN ‘Zç “Kjo soos
əmelonsT sueI.
mæ88ÁæN subųI's rosabx
ammɔ ŋmɛL

91
-(‘O troopa ya uotswou» og ubogÁæN sueq Los essex) 619 i Kreuoŋɔsɑ ɔsɔnổnuod-sueI, os os obojold 'uomonponus uv '6L91 skruoposa osnomuodolsumsi svoupold og otsuv
rumepums uuekļux us semen ɔŋ puu ɔmɛN russoloss uvuosi puesųầnoq, uelpus serpew jo Kuo ɔŋ Jo įsipaoN əųL sopns plures. Jo Áụde soosq 8 9ųI.
**‘omne 19ųT Isuel Ámsuɔɔ pəņuəAL us tusseuoseNĮduosốos sɔipnis siue] o, opino seos||desốo||q|8. V seỊddmųjas āTH 1010oCI
〜、 'ÁnumoO puter op us suspeol issuppna put user iso!!!
·siopeəu\sių
pue siausią įsueljo suɔsuoɔ pueKreynqeɔɔA ɔųL |sounoɔ ŋɔmɔsɔŋ puesuɔudosoA3CI Isusa I. otis. Įues, ug pɔsusid sxooq is-13 ou L
omsæJonțT urcâuvs ut suaudojoaap jo offens osądosols||d o'IL
• ነ961 ɔunr-Idy #961 əump-oudy £961
oooOI - 100
‘Ç96|| ’døS-ÁInf 996|| əump-oudy £96ł ‘lew-ues £961 :jew-ues [96]
'ooq - 100
{96||
dos - ÁInf
696|| oooOI-100, 696.! ’døS-Áļuf 6961 oleW-ueT 896l dəS-ÁỊnr 8$6I :Jew-ues

Page 53
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
92
CTV Amuɔɔ ŋuɔsɔsɔŋ on smiju!
prȚII Ismael us ambioIII seossa jo posiaa əųI 'Áəams y 'Sdnolo IsueI. ÁIerodutosuoo jo spms oĻI. ‘888I-998I
ənbruņiew puɛ ədnosɔpɛnɔ o, suomesosw sume1 'sə!pms Kleios I Isume.I. us uoņdɔɔlɔddy 'uerbesex Jo uoŋɛɔŋŋuɔpus oụI ossibulos Álomonponus suguneqo osəmųno uessy 1st, qnos pub qinos o, uouuoo sɔnțea puu spopp
ɔunļejonsT Isume.I suəlouy uỊ ÁŝosodẢI. Joseonpq
ədomą urðssəM uỊ uoŋbɔnpo Kiepuoɔɔs jo spodsy
uoņeonpq loqɔɛɔI. Jo ɔɔŋɔeid pue Aqdosossa oụI
oslopeəu \sig pue slouisid IssueI. Jo suəyuoo pub ÁmsnquooA ɔŋI.
uoŋɛomp3 sinpy go ɔdoɔs ɔųI. 'suoŋɛomp3 ubipus suɔsɔuy jo KoosodẢI ĐỊI. respuI q.nos us suy snosốssos ossoņeo 'prooəYI Įsəŋ ŋgɔ ɔųI, :um Kiddessos. onbruņiew əų, o, uoņeńsuig [sua]; 'sə!pms ļļue L. Jo sɔpɛɔɔp om I.
'sə!pms Áreiosi Isuel uỊ uoņdɔɔrɔddy
L96|| 0L6I
IL6lI 896 I 896|| 8961
Ş961
096|| 1961 'dəSiew 096 I’AON 6$6I dəSÁIns
696 I ’09CTÁIns 996 I 'oump Idy £$6I (JEWouer ZL61’dəS 696 I "10O 696 Ioudy 996 I
odəSoudy
uennow ənseHøųL (Áuôųoipuoā sỊmeå)
(serpeyN)
(mdunĮein»)
MoosoW
quəųO Jo ÁųsuɔAsun
urboeseN sugųI:s siosaux
'sɔīpniS ueədomą -opus pue ueyue II fuelpus-unuopsoema 0L61’dəS sə!pms |sueI. Jo Ieusuɔs ɔɔuɔlɔjuoɔ 896 Iouer sə!pnus IsueI. Jo meuques opuɔjɔjuoɔ 996 I Isudy sə!pms |sume I. Jo Iguļūros ɔɔuələJuoɔ Ieuoņeuuosus əų. Jo sou poɔɔolą 'sįsseļuɔțIO Jo Áļoloos uessÁețew əų jo sou pɔɔpola iņAXX s|ss]esuɔȚIO. Jo ssərouoo seuoŋeulogus
uosÁɔɔ Jo Áļ0100S uoŋɛɔnpo lưuoț¢N əų. Jo įpumos səpnļS IæsooS pue peoploss H Jo įkumos uosÁəɔ ɔųL eo!Jo!sıH eos8o8epəea sụy TeosomųT
sə!pms sure L. Jo seu mor

93
ÁŋƏod Isume.I quələuy
"sood sold puɛ loodsonəYI ‘səpms suivi u,qạibɔsɔH
'Isule L un Āŋɔɔɑ ɔaoT seossseio
sốnoĻI. [bonso xɔɔio put semippuļūI, 21||
·'Áļosoos pue uoffisɔYI }JI3S 3u/puedxq Əŋ Jo stopI əųI. ussugumH sueI. Jo sỊoodsy omjelossT sueI, os uosinqļņuoɔ ɔŋoņgɔ ɔųI
- į
III.308ā snțuəoog uoq
ossex. Jo Knooɑ ɔųL
‘996 I ony
996 Lámr
086|| Ş96I AON
1961 SL6I
I9-096|| £96||
676I
€y-Zț6I
suox{ŝuoH
suger xox{3ưeg sɛrpɛW
‘ç - serpew seipew. Jo ÁųsuɔAlun
euger ‘ɔɓəIsoo sxoshwa IS 'euger ossex ‘ɔ3ɔIsoɔ sÁuoluyons
uozīJOH ulogsvg địos) sıgı
概说
086I omɔɔT sesuotuow ulussesseurasoŋɔ
sə!pms uessy 1seg ņnos Jo əumĮoA uoŋɛɲɔŋɔɔ ɓəsoos urbis 'QumĮoA uoŋɛJouleuluoɔ əəIsqnr 10AȚIS ses||ddnųos q', 'iq sənssi se soos pue snopossos seipew. Jo Áįįsipayuno əŋ Jo įpreəsəYI [esuosio jo sựuuy Ibnuuỷ sauņsĻIųɔ ɔŋoqueo
semuuỷ sysou,và ns ueluoņuỷ ĐỊI.
199đẹ@ @naees?

Page 54
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
94
†ıışsri spisomootoo qoursų, og ýmssoos@j orgo
opeųL Iyute],
eqmɑ ɛspus useiusqələą įsına
----员更员身患鲁鲁复见
omųnɔ put uosoņos Tuom!rodzə uwypus op oqsequas wqseqenas op us amerosi jo Koembopeus
1861
896||
#961 'ooq-8ny
Z96 I’9'91
?96 ("ZO'8 s
£96 IoII’9
files@on
Isopspoe,
mdumpesnys
serpeyN
Ļeon uđẹp 07.lisíum đầy sẽ șwas s quae Ļoøn uffys 0-aisiun đợio șosea quoises}
Ļeon Ó Tuaeson
s||muod đặtổ sương) spiken *perion *ë or-rismo ques səus I uskuļuw uoțÁoo jo sɔmɑ ɔŋ.
đoyeusi

95
பின்னிணைப்பு
‘தமிழ் கல்சர்', 'ஜேர்னல் ஆஃப் தமிழ் ஸ்டடீஸ்' இதழ்களில் எழுதிய ஆசிரியர் அகர வரிசையும், அவர்களது கட்டுரைகளும்
ALEXANDER. P.C.
ANDRONOV. M.
ANJANEYULU.AUDILAKSHMI
ARASARATNAM. S.
: Asoka and the Spread of
Buddhism in Cheranadu. 1,2,125-131.
: On the Future Tense Base in
Tamil. 8,3, 186-192.
On the uses of Participles and Participial Nouns in Tamil. 8,4,249-258.
Hints Regarding the origin
of the present Tense suffix "kinrin Tamil.9,2,145-150.
Materials for a bibliography of Dravidian Linguistics. 11,1,3-50
Notes on Brahui. J. 1,2, 1-6.
: Tamil words in Indonesian
and Malayan Languages. 9,1,43-55.
: Some aspects relating to the
establishment and growth of European Settlement along the Tamil coast in the seventeenth century. 7,4, 355-369.

Page 55
96 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
ARULNANDHY.K.S.
ARUMUGHA MUDALIAR, S.
ARLENE.R.K. ZIDE
AROKIASWAMY M.
The Dutch East India Company and the kingdom of Madura, 1650-1700. 10, 1, 48-74.
A note on Periathamby Mariappar. 11, 1, 51-57.
: Somasunthara Pulavar of
Navaliyur, Jafna. 3,1, 4760.
: The Antiquity of Tamil and
Tolkappiam. 2,3,&4, 340361.
The Period of Religious Revival in Tamil Literature. 6,4,294-308.
Concepts of Religion in Sangam Literature and in devotional literature. 11,3,252-271.
: A brief survey of work to
data on the Indus Valley Script. J.2.1.1-12.
: The Dolmens of Pudukottai
State, 1,1, 73-83.
Jain Vestiges in Coimbatore District. 1,3&4, 204-212.
The Cult of Mariamman or the Goddess of Rain. 2,2, 153-157.
The Problem of Dravidian Origins. 2,3&34-339.
Castes in South India, 3,3&4, 326-320.
The Probable Origin of Chola Architecture. 4, 2,
76 - 184.

ASKO PARPOLA
ATHILAKSHMI
BALAKRISHNANAIR. T.
BALENDERA. W.
BAZOU, L. EOPOLD.
BISS OONDOYAL B.
BURROW. T.
CALDWELL ROBERT.
CHATTERJI. SUNITIKUMAR
9.
: The Indus Script Decipher
ment the situation at the end of 1969, J.2, 1,89-110.
: Tamil Nayanars in Telugu
Literature. 6, 1, 71-77.
: Where did the Dravidians
come from? 10,4, 121-133.
: Trincomalai Bronzes, 2,2,
76-198.
: Kulatur, An Experience in
Village. 3.2, 121-129.
A Sculptor's paradise in South India Mamalapuram 4, 1,12-39.
Religious Landmarks in Pudukkottai 6,1,19-30.
Religious Landmarks in Pudukottai, 7,4, 370-385.
: A note on Maridas Pillai. 12,
4,315-318.
: Dravidian & the Decipher
ment of the Indus Script. J. 2, 1, 149-156.
: Dravidology-one Hundred
Years ago (Extracts from Dr. Robert Caldwell's A Comparative Grammar of the Dravidian Languages). 5,4,340-344.
: Old Tamil, Ancient Tamil
and Primitive Dravidian. 5,2, 148-174.
Dravidian Philology. 6,3, 195-225.

Page 56
98 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
CHIDAMBARANATHACHETTIAR.A :
CHIDAMBARANATHA
MUDALLAR TK.
CORNELIUS. J.T.
CHAIM RABIN
CENWENH.THOMAS.
Extract of Letter. 6,4,347
The Indian Synthesis, and Racial and Cultural InterMixture in India. 8,4, 267324.
The Tamilian Ideal of Manly Effort. 1, 1,43-46.
Ancient Tamil Kings-Their High Ideals. 3,2, 103-109.
The Short Story and its
Development in Tamil. 4,3, 227-238.
Cilappadikaram, The Earliest Tamil Epic. 5,2, 196-206.
Introduction to Tamil Poetry. 7, 1,56-75
Thiruvalluvar's Message to the world. 92, 101-107.
: The Song World in TamilA Glimpse. 2,2, 119-126.
: The Dravidian Question.
3,2,92-102.
The Dravidian - Question Answered (4,3,263-275).
The Graffiti on the megalithic pottery of South India & Dravidian origin. 12, 4, 287-302.
: The Revival of the Hebrew
language.J.l., 1,41-60.
: The Struggle for linguistic
survival facing minorities or Subject nationalities, J.l., 2,

DAVID.H.S.
99
: The Original Home of the
Dravidians. Their Wandering in Prehistoric Times. B.C. 4,500 to 1,500.3,2,778.
The Earliest Tamil Poems Extant. 4, 1,90-98.
Some Contacts and Affinities between the EgyptoMinoan and the Indo(Dravido). Sumerian Culture. 4,2, 169-175.
The Tamil Book of Prov-, erbs. 9,2, 151-180.
Some Further Contacts and Affinities between the Egypto-Minoan and the Indo-(Dravido) Sumerian. Culture. 5,1,56-71.
The Exact Connexion between the Harappan and Sumerian Cultures and their Probable Date. Could either of them have been Aryan? 5,4,298-324.
The Kurunthokai Anthology. 74, 32-349.
The Earliest Stage of Tamil Religion.9,4,395-349.
The Tamil Book of Proverbs. 10,4.
Suggestions to research schools and lexicographers. 12, 1, 1-12.

Page 57
100 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
7-18. Suggestions to research schools and lexicographers in Tamil and Dravidology. 12, 2&3, 231246, 124, 269-287.
DRAVID HOWARD DAY : Links between Ur and Indus
J.2.2, 1-18.
DEVAPOOPATHYNADARAJAH : The Gloriossa Superba in Classical Poetry 11, 3, 280290.
Courtship & Marriage in the Classical Period.J. 1, 2, 1942.
DIEHL. C.G. : The Goddess of Forests in Tamil Literature. 11,4, 308326.
EHRENRELS. U.R. : North-Up, South-Down.
8,2,163-171.
A Trend in the Development of National Units. 9, 1, 1-12.
EMENEAU. MURRAY.B. : Linguistic Prehistory of
India. 5, 1,30-55.
A Kota Vowel-Shift. J. 1, 1, 21-34.
FILLIOZAT. J. : Tamil and Sanskrit in South India. 4,4,285-300. Research in S.E. Asia & Far East. 12,243,109-116.
GANESHSUNDARAM PC. : Grammatica TamilJskogo Jazyka by M.S.Andronov. J. 1,1,169-182.
GNANAPRAKASAR, SUVAMI : Ceylon Originally a land of
Dravidians. 1, 1, 27-35,
The Tamils turn Sinhalese. 1,2, 132-142.

GUNASEGARAM, S.J. .
GUROV. N.V.
HAMEED. K.P.S.
HAROLD SCHIFMANN
HERAS. H.
HEWAWASAM. P.B.J.
101
Beginnings of Tamil Rule in Ceylon. 1,3&4, 213-225.
Linguistic Evidence for the Common origin of the Dravidians and Indo-Europeans. 2, 1,88-112.
Source for the Studey of the History of Jaffna. 2,3&4, 303-316.
: Early Tamil Cultural Influ
ences in South East Asia. 6,4,319-341.
The Historicity of Agathiar. 7, 1,48-55.
The Poet of Revolt. 8,2, 7180.
Description of the Kandy Perehara. 9,3,305-316.
Manimekalai. 10.2.42-52.
: Towards the Linguistic In
terpretation of the Proto-IndianTexts. J.2, 1, 53-87.
: Bow Song. A folk Art from
South Travancore. 5,3,274284.
: Distinctive features of Tamil
Pronomial System. J.2, 2, 19-24.
: The Hypocritical Cat.
1,3&4,286,319.
The Problem of Ganapati. 3.2, 151-210.
Kokila Gitaya (Gharathi iņ Sinhalese). 82,81-83. *t
莓委任

Page 58
102 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
INDRAPALA. K.
ISRAEL.M.
JESUDASON. C.
JESUDOSS. D.I.
JOHN CHADWICK (& GERARD GLAUSON) JOSEPH. P.
Tamil Sources of some Sinhalese Literary works with special reference to Lokppakaraya. 9,2, 241262.
: Some Medieval Mercantile
Communitites of South India and Ceylon.J.2,2,2540.
: Additional Materials for a
Bibliography of Dravidian Linguistics. 12, 1,69-74.
: A Study of Kabilar, the
Sangam Poet. 3, 1, 18-35.
Paranar. 3,3&4. 269-284.
V.V.S. Aiyar's Approach to Kambar. 4,4, 301-311.
: The Literature dbf Saiva
Siddhanta and Allied Schools. 1,3&4, 226-233.
The Political Philosophy of Tiruvalluvar 2,2, 142-152.
The Concept of Anava in Saiva Siddhanta. 3,3 & 4, 250-268.
: The Indus Script
Deciphered.J.2, 1, 135-148.
: Algummim or Almuggim.
oftheBible. 6,2, 133-138.
Lost Lemuria-Fresh Evidence?72,121-130.
A Dravidian from Spain. 8, 1,4-8.
Romance of two Tamil Words. 8,3, 201-207.

JOTHIMUTTU. P
KAILASAPTHYK.
KANAGARATHNAM. DONALD.
KANAPATHIPILLAI. K.
KANDASWAMY MUDALIAR. v.
103
Indian Ivory for Solomon's Throne, 8,3,271-280.
Ophir of the Bible Indentification. 10,3, 48-70.
The Harappa Script - A Tragedy in Timing. 11,4, 295-307.
In foote's footsteps. 12, l, 59-68.
The relative chronology of Harappa 12,4, 319-352.
Harappa Script Decipherment - Rev. Heras and his Successors. J.2. l. lll-134.
: A General Evaluation of the
Tamil Poet, Krishna Pillai (1827-1900), 9,3301-304.
: Tamil Heroic Poetry.J. 1, 1,
184.
: Translations from
Tayumanavar. 3,1,46.
: Popular Religions among
the Ceylon Tamils. 8, 1,26,31.
: Tamil Architecture - Its De
velopment. 2,3&4,317-323.
A Study in Mullaippa: t:t:u. 4,3,258-263.
A Short lay of Minstrels. 5,1,78-91.
The Song of Madurai. 5,3, 285-288.5,4,345-356, 6,1, 56-70.

Page 59
O4 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
KARL. H. MENGES
KATRE. S.M.
KNOROZOV. YU.V.
KNOWLETON. E.C.JR.
KODANDAPAN PILLAI. K.
KULANDRAN SABAPATHY
LAKSHMANAN CHETTIAR. S.M.L.
LAMB. ALASTAIR
LEGRAND. F.
: The Dravido Altaic relation
ship. J. 1, 1,35-40.
: On a Special Lectution in
Southern Kannada. 6,3, 246-247.
: The Formal Analysis of
Proto Indian texts. J.2, l, 1328.
: Anto De Proenca”S
Vocabulario Tamilico Lusitano. Ill, 2, 135-164.
: Ancient Tamil Music 7,1,
33-47. 8.3, 193-200. Vada Venkatam. 9,1, 63-92.
: The Tentative Version *
Bible (or“The Navalar Wersion”). 7.3, 239-250.
: Trends in Modern Tahil
Prose. 22, 158-163.
A Brief Survey of the Tarihil Press. 4,2, 158-168.
Dr.R.P. Sethu Pillai - An Appreciation. 3,3,248-249.
: Indianised Inscriptions i
North-Western Malaya. 10, 1,75-86.
: The Todas of the Blue
Mountain, l, l, 62-72.
Tamil Loan Words in Greck. 3, 1,36-45.
Tribes of the Nilgiris-The Kotars. 4,4, 3 12-322.

LEHMAN, ARNO
LOGANAYAKY NANNITHIAMBY.
LOURDUSWAMY.P.
MAHADEVAN.I.
MAHADEVA SASTRI. K.
MAHARAJAN. S.
MAKARENKO. V.K.
MANCKAMI. VSP.
MANICKAVASAGOM. M.E. .
MARR. J.R.
105
: Karl Graul the 19th Century
Dravidologist. 11,3,209225.
A South Indian Contribution to Christian Art Histroy. J. 1, 1, 167-168.
: The German Contribution
to Tamil Studies. 9.2, 109116.
: The fine arts & Recreation
during the Cola Period.J. 1, 2,59-74.
Women in Modern Tamil Literature. J1. 1. 185-186.
: A Naturalist’s Similes in
Cankam Literature. 2, 1, 7987.
: Dravidian Parallels in Proto
Indian Script. J.2. 1, 157276.
: Dialectal Variation in Eleventh Century Telugu. 6,4,
342-346.
: The Greatest Tamil Mystic.
13,&4,181-185
: Some Data on South Indian
Cultural Influences in S.E. Asia. 11, 1.58-91.
: Reflections on Pallava His
tory.9,4,411-415.
: Patterns of Early Tamil Mar
riages. 11,4,329-338.
: The Translation of Cankan
Literature. 12,2 &3, 223230.

Page 60
106 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
MEENAKSHISUNDARAM. TP.
MORAIS, FRANCIS
MUDALIYAR. V.S.
MURUGARATHNAM. T.
MURUGESAMUDALIAR. M.
: The Theory of Cankam Po
etry, 1,1,36-42.
The Theory of Poetry in Tolkappiyam. 1,2, 104-113.
The Tamil Script Reform. 2, 1,28-35.
Tataka in other Literatures. 4,3,221-226.
Tolkappiar's Literary Theory. 12,2&3, 117-126.
All India Oriental Conference. 1955 -Tamil Section. 5,2, 130-147.
Nakkirar, The Earliest. Tamil Mystic. 6,4,209-318.
Thiru T.V.K. - The Living. 7, 1, 16-21.
The Teaching of Tamil Grammar. 7,3,263-287.
: Barathi at the Corssroads.
2, 1,69-78.
Dr. Swaminatha Aiyar, Editor and Writer, 4, 1, 40-52,
Vedanayakam Pillai. 10, 2, 31-41.
: Gleanings from the
Silappathikaram. 7,2, 170182.
: Bibliography ofdissetations
on Tamilology. J. 1, 2, 125166
: Tolkappiars Literary
Theory. 12,2&3, 117-126.

MYLERU. C.R.
NADAR, PAUL. A.C.
NAGALINGAM. C.
NAGASWAMY. R.
NADDU. ETHIRAJULU. G.
NAIDU, SHANKARIRAJU. S.
NATARAJAN.B.
NATARAJAH. F.X.C.
107
: Some Dravidian Loan
Words in English. 1,2, 143153.
Some Similes From Kambar. 7,3, 251-262.
: Tamil Culture in
Thirurvalluvar. 1,2, 114-120.
APioneer Research Worker in Tamil Music. 3,2,110-120.
Kamban’s Modernism. 5, 1, 74-77.
The Problem of the Life and Age of Kamban.6.1.31 - 49, 6,2,92-12.
The Problem of the Life and Age of Kamban. 7,2, 150
69.
: The Pallavas, Their origin
and Their Title “Vidolvidugu”. 4,3, 239257.
: Architecture in Tamilnadu.
J. 1, 1, 139-154.
கம்பரும் சமய வளர்ச்சியும்.
8,4, 325-326
: A comparative study of
Tamil and Nagari Alphabets. 9, l, 33-42.
: Thiruvalluvar's Choice
Formand theme. 2,3,4, 255260.
: The Scholarship of Simon
Casie Chetty. 1, 3&4, 269274.

Page 61
108 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
NATESAN. S.
NESIAH. K.
NEVILLE HUGH
NIRMALA RAMACHANDRAN
PAKRISANKAR. PR.
PALANI. U.
PIERIS, EDMUND. RT REV. DR,
PLLAI. K.K.
PLLA. S.A.
: The Realms of Love: Poems
from Narrinai (Translated), 8.4,350-356.
: The Status of Tamil in
Ceylon. 7,12, 183-196.
: The Story of Kovalan
Ceylon Tamil Version.
: Classical Dance of the An
cient Tamils. 12,2 & 3, 171180.
: Ancient Political Thought
in the Kural. 1, 3&4, 197. 203.
காவிரியின் கரையில்
இலக்கியம். 102, 53-71.
: Tamil Catholic Literature o
Ceylon. 2,3 & 4, 229-244.
: The Brahmi Inscriptions o:
South India and the Sangam Age. 5.2, 175-185.
Historical Ideas in Early Tamil Literature. 6,2, 113132.
The Western Influence on TamilProse. 6.3, 159-175.
: Medieval Indian History.
9,1, 13-25.
: Aryan Influence in
Tamilakam during the Sangam Epoch. 12, 2 & 3.
Tamil Literature as a source material of History. J.l,l, 115-138.
: Auxiliary Verbs in Tamil.
12,3,272-279.

PARAMASIVAN. K.
POPLEY. H.A.
RAGHAVAN. C.S.
RAGHAVAN. M.D.
RAGHAVAN. V.
RAJAGOPALACHARIAR. C.
RAJAGOPALAN. K.R.
RAJAMANICKKAM. M.
RAJESWARI. E.T.
RAJESWARI AMBALAVANAR
109
: A Short note on
Parankunru. 10,2, 95-97.
: Social Ethics in the
Tirukkural. 23 &4,261-275.
Social Challenges in India Today. 8, 1,9-25.
: Bharathi-Poet of the Tamil
Renaissance. 1, 1,47-51.
: Koravai. 22, 136.
The Sociology of Jaffna - The Nalavar & the Koviar. 3.2, 139-150.
: The Northern Boundry of
Tamil Nadu, 1,3 & 4, 275285.
: The Place of English in In
dian Education. 5,1, 16-29.
: Agastya - His Non-Aryan
Origin. 6,4,236-293.
: Saivism in the Pre-Pallava
Period. 54,323-339.
※
Stone Inscriptions in
Devkapuram. 12,1,51-58.
: Growth of Temples under
the Colas (A.D.880-1280). 8,4,259-256.
: The first Tragedy in
Kamban. 1,3 & 4, 234-253; 2, 1,50-68.
: The first Tragedy of Ahalya.
3, 1,61-67,3,3 & 4, 285-291.
: Tamil Education in Malaya
1920-1941.J. 1, 1,89-114.

Page 62
10 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
RAMAMURTHY.K.
RAMAN. V.P.
RAMANATHAN. S.
RAMANUJAN. A.K.
RATNAM. K.P.
ROBERTL. HARDGRAVE.
RUKMINIDEVE.
RUTHNASWAMY. M.
SACHITHANANDAN. V.
SAMY. PL.
SANKALIA. H.D.
Tamil Journalism and the Indian Community (192041).J.2, 2,41-58.
: The Linguistic Area of
Tamil Nadu, 1,2, 163-170.
: The Music of Ancient
Tamils, 12,2 & 3, 193-222.
: Ancient Musical modes in
Cilappatikaram. 12, 2 & 3, 193-202.
: The Interior landscape.J. 1,
1, 183.
: Education in the Ancient
Tamil Countries. 14, 254268,2.3&4,324-333.
: The New mythology of a
caste in change. J.l., 1, 6188.
: Bharata Natyam, The South
Indian Classical Dance. 2,2, 137-14.
: Western Knowledge of
Tamil. 1, 1,9-13.
An Encyclopeadia of Tamil Culture. 11, 3, 207-208.
: Bharati and Walt Whitman.
94,343-370.
Bharati and Shelly. 10,1,2447.
: Kurinjci.42, 132-139.
: The Beginning of Civili
sation in South India. J.l., 2, 43-58.

SANKARAN. C.R.
SARMA. MARGABANDHU
SATHASIVAM. A.
SELVANAYAGAM. S.
SENTHAMILAN.
SESHADR. K.
SETHUPILLAI. R.P.
111
: On Aytam.9, 1,27-32.
Tolkappiyar & the Science of Phonemics. 9,2, 117-130.
: The Epic of the Anklet. 1,2,
154-162.
: The Suffix 'cin' (gait) in
Cankam Tamil. 7,2, 140-149.
: The Regional concept in
Tamil Literature. J. 1, 1, 155166.
: Dr. Schweitzer, The
"World's Greatest man' and the Kural. 3,2, 69-76.
Transliteration of Tamil in Roman & Vice Versa. 4, 1, 58-72.
The Problem of a "National or "Official Language' in India. 4,2, 117-131.
Worship inspiritand Truth. 7,1,76.
Official Language of Indian Union. 7, 1,77-11. 7,2,208226.
: Saiva Siddhantha as Reli
gion and Philosophy. 8,3,
72-177.
: Place-names In Tamil
Akam. 3,2, 82-91.
PlaceNames ofAgricultural Region or Marutham. 4,4, 323-336.
All India Oriental Conference, 1955, Presidential

Page 63
112 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
SHANMUGAMUDALIAR. V.
SINGARAVELU.S.
SIVAPRAKASAM. V.K.
SOMASUNDARAM, J.M.
SPERS. JOHN.
SRINVASAN. THOMAS.
SUBBIAH. A.
Address. Dravidian Section. 5.2, 120-129.
: Kamba Ramayanam -
Hiranya-Vadai-Padalam (or The Slaying of Hiranya). 6.2, 139-152.
: Progress in Tamilology 11,
1,96-113.
The Origin and Development of Barter Trade. 11,4, 37-328.
The Ramayana and its influence in the literature, drama & art of South East Asia. 12,4,303-314.
சிலப்பதிகாரம் குடிமக்கள்
காப்பியமா? 9,2,131-144.
வனப்பிலக்கியம். 10,3, 7196.
: The Rajarajeswara Temple
of Sri Brihadiswara. 8,3, 23-240.
Alagar Koil. 9,4, 403-410.
The Island Shrine of Shree Ranganatha. 11, 4,317-328.
: From Wisdom's Antique
Home. 6,3,176-194.
Critical Tribute Toa Pioneer. 6,4,267-272.
: Beschi, The Tamil Scholar
and Poet. 3,3 & 4, 297-313.
: Voiced and Voiceless Stops
in Tamil. 5.2, 186-195.

SUBRAMANIAN. N.
SUBRAMANIAMI. V.
SUBRAMONIAM. VII.
SUNDARAM. P.S.
THAMBIAH. H.W.
THANGAH. ARUL.
13
Is Phonetic Change universal & inexitable? 12,2 & 3, 139-158.
கடவுள் வாழ்த்துப் பாடிய
பெருந்தேவனார். 10,1,8797.
The Avifauna of the Tamil country. 2,4, 259-268.
: Tamil Political Journalism
the Pro-Gandhian Period. 10, 4.
: The Evolution of the Tamil
Script. 2, 1,36-41.
The Importance of Tamil Linguistics. 3.2, 130-138.
Muslim Literature in Tamil. 4, 1,73-89.
The Need for Linguistics. 7,2, 131-139.
Nagatives. 8,1, 32-43.
Dravidian Words in Sanskrit. 9,3,291-300.
: Kannan Pattu-Translation
from Bharati. 74,350–408.
The Contents of Thesa walamai. 8,2, 108-143.
: The Law of Thesawalamai.
7,4,386–408.
The Contents of Thesa walamai. 8,2, 108-143.
: Dr. G.U. Pope, Tamil's Am
bassador. 1,l, 52-61.

Page 64
114 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
THANANJAYA RAJSINGHAM. S.
THANINAYAGAM, XAVIER. S.
: A Phonological and Mor
phological study of Tamil Plakkaat. 11,2, 173-200.
: This Quarterly Review, 1,1,
1-8.
The Survival of Tamil Culture. 1, 2,97-103.
The Ethical Interpretation of Nature in Ancient TamilPotry. 1,3 & 4, 186-196.
Render unto Tamil the hings that are Tamil. 2, 1,7- 13.
The Tamil Said. It All with flowers. 22, 164-175.
Statesmen and Scholarship 2.3&4,221-227
The Teaching of Tamil. 3,1, 9-17.
Tamil Manuscripts In European Libraries. 3,3 & 4,219230.
This Journal of the Academy. 4, l, l-ll.
Tamil Cultural Influences In South East Asia. 4,3, 203220.
Tamil Culture-Its Past, its Present and its Future with Special Reference to Ceylon. 4,4,341-364.
Ancient Tamil Literature and the Study of Ancient Indian Education. 5, 1, 1-15.

115
The Educators of Early Tamil Society. 5.2, 105-119.
Language Rights in Ceylon. 5,3,217-230.
The Sixth year of Publication. 6, l, 1-3.
A Seminal Period of Indian Thought. 6, 1,4-18.
Commemoration Numbers. 6,2,85-86.
A Seminal Period of Indian Thought. 6,3,235-245.
Ancient Tamil Poet-Educators. 6,4, 273-285.
The Philosophic Stage of Development in Sangam Literature. 7, l, l-15.
The First Books Printed in Tamil. 7,3,288-308.
The Tamil Development and Research Council. 8, 1, 1-5.
The Vocabulary and Content of Tamil Primers and First Readers. 8,3,208-230.
Earliest Jain and Buddhist Teaching in the Tamil Country, 8,4,337-349.
Dr. R.P. Sethupilai. 9,3, 218-230.
A Bibliographical Guide to Tamil Studies. 9,4,33-334.

Page 65
116 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
THOMAS. P.J.
THOMPSON. M.S.H.
UWISE, MOHAMED. M.
VAIYAPURI PILLAI. S.
Regional Nationalism in Twentieth Century Tamil Literature. 10, 1, 1-23.
A Bibliography of Tamil Studies. 10, 1,98-108.
The Novelist of the City of Madras. 10,2, 1-18.
Indian Thought and Roman Stoicism. 10,3, 1-36.
Nature and the Natural in Kalyanasundarar. 10,4.
International Association of Tamil Research. ll, l, 1-2.
Anto De PrОencias Tamil Pourtuguese Dictionary. 1679.11.2, 117-127.
Apperception in Tamil Literary Studies. 12, 2, & 3, 18-192.
Two Decades of Tamil Studies. J. l, l, 1-20.
Tamil Emigration to the martinique. J. 1, 2, 75-123.
: When the Dravidian South
Led India. 2, 3 & 4, 245-254.
: Muttollayiram. 9, 4, 335
342.
: Islamic Poetry in Tamil. 3,
3 & 4, 292-296.
: Recent Progress in Reseach
Studies. 1, 1, 16-26.
History of Tamil Language and Literature, 3, 3 & 4,331358.

VANMIKANATHAN, G.
VARADARAJAN. M.
VARAGUNAPANDIAN. A.A.
VENKATASAMY. MYLAI. SEENI
VIPULANANDA SWAMI
VISWANATHAN.E.S.A.
VITHIANATHAN. S.
VOLCOCKB.Y.A.
VON. FURER-HAIMENDORF,
CHRISTOPH
WENDY DONIGER OFLAHERTY
17
: Verities of Tiruvacagam. 2,
3 & 4, 283-302.
Manikkavacakopanisad. 2, 3&4,231-249.
The Passionless Passion (An Interpretatic of Certain Decads of the Tiruva cagam). 5, 3, 231-250.
குறிப்பு வினை. 8, 2, 84-92.
புறக்கணிப்பு 9, 3, 263-270.
Literary Theories in Early Tamil. Ettutokai. 12, 2 & 3,
127-38.
: The Genius of Tamil Music.
2, 1,42-49.
சிறுபாணன் சென்ற
பெருவழி. 9, 1, 57-64. எழினி-யவனிகா. 9, 4, 387394.
: The Development of
Tamilian Religious Thought. 5,3,251-266.
: Thiru. Vi. Ka. Concept of
caste. 11, 3,226-251.
: Tamil Folk Drama in
Ceylon. 11, 2, 165-172.
: Towards an Interpretation
of the Proto-Indian Pictures. J.2. 1, 29-52.
: New aspects of the
Dravidian Problem. 2, 2, 127-135.
: In defence of Sir John
Marshall.J.2, 1,277-291.

Page 66
18 தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
WHEELER. MORTIMERSR
WILSON, JEYARATHNAM. A.
ZVELEBILIKLAML. DR,
: Rescue of a submerged city.
J.2, 1,287-291.
Mohenjo-Daro. 2, 1, 17-27.
: Cultural and Language
Rights in the Multi National Society. 7, 1,22-32.
: Bharathi’s Poems. 3, 3 & 4,
314-325.
The Present State of Dravidian Philology. 4, 1, 53-57.
Bharathi's Youth. 4, 2, 140157.
ACzech Missionary of the 18th Century as Author of a Tamil Grammar.4,4,337340.
A Note on Tamil Synday - Nhattina. 5, 1, 72-73.
Translating old Tamil Poetry - Some Suggestions. 5, 3, 267-273.
A Short note on "The Tamil contribution to world’s civilisation'an Appeal.5,4, 295-297.
The Prose works of Bharathi. 5, 4,315-327.
Tentative periodization of the development of Tamil. 6, 1,50-55.
Verbal Noun in Early old Tamil. 6, 2,87-91.

119
Emphasis in Early Old Tamil 6,3,226-234.
The Existence of Adverbs in Tamil 8, 1,44-50.
Dative in Early Old Tamil. 8, 2,83-107.
Participal and Verbal nouns as predicates in early Old Tamil 8, 3, 178-185.
One hundred years of Dravidian comparative philology.9, 2, 181-201.
- More about adverbs and adjectives in Tamil. 9, 3, 28-290.
Tamil Poetry 2000 years ago. 10, 23, 19-30.
A few notes on colloquial Tamil 10, 3,37-47.
Colloquilal Tamil as System. 11, 1,92-95.
Tamil in Synchrony and Diachrony. 11, 4,339–352.
The Brahmi Hybrid Tamil Inscriptions. 12, 1, 13-50.

Page 67
தனிநாயக அடிகளின் இதழியல் வழித் தமிழ்ப்பணி
2O.
*661 (pfff) so ‘1990-91994? ameg醇醚蠶麟
'1661 foņLon 'ffugos@on oqsmagoo ĝř###H (goiulogi
メ"Z661'11"| 1990-9199f@ 'quorīrīgặrı geçeơistog
(4861 a9c99@ão 1990-9199f@ ‘qisorīrūgšrı geçegistog
z661’u’ı
• 1990-91,9 oC) 'quorīņgrā īsfigīgs
'9/61Usoffrì51-1990-9199 solo) '05m glofosoj119 £ quo L-ı-ā un
:1990-91ço solo) qimaboog ossin gae@ęto, o mỹ
|$661 a9c99@õ3 · 1990-91ņ9€. ‘quoteisīgi Nogomuñufig,鱷 Z66|| g1919TIŋLÉtos@gữ “đì)?)?ņason
'#861 og sto 199ã3 ooooof¡des ‘qorısığırı ‘quotąją
qisao, đồış9để
qī£đī),slo oprnigorpsẽ
119ođĩ, đìgis ĝ01çou@q'IỆ q sẽ gử
(gfyllore qiq qilisso ugođẻ, đỉgnął IŪLaoso oprngfiqoỹ đìgią
qĥormulooq, qıfòrngpao@j
i qoun - 1994, L'Égúun
juliootissão qışmı,Giggs, 1,09an stologog suusotilo qışmı,Giggsae
quingosori qiftođầuro igogio gobiłę gmisqigog;
119oqpisĩ lysg)ę
1,9o-bilo omugių są to:
·ą919 guɔ ‘ış9190901@gao '(Igorāņ@se mụırılo, oni d©ý (p1,91çeđiệī£ 6
·LIGI’s° (įgulo og
·LIGT são 'gıllo z “follon ‘ış9@qĪrique 9 o ‘grī£1,9oC99 s 1șormụccoon eseusố + 1194?-bilo 199@fī)łę og
sựmų,9%? Hırıs@uolo) "鱷
Top 1,9 osođĩiĝo 1çouấ3 gegog so il

121
'serpew ‘qɔlɛɔSƏH Isure Ljouoņepossy seuoŋeuiosus
'serp -ew ‘empɔ ŋunɛL Jo KurɔpɛɔV 'uțiòoņu)LoÁīɔsɔös ainīgiøųTIŢue L
uụooņn L ‘KıɔsoosKierairi韶
‘Io6s 0161
'896 I uer çı61 prew serpew'sə!pms
Ipuei. Jo ɔınıņsui Ieuoŋeuiorul sosi-mwesupuloissionsunsual
“çsel greiss 'ısıssısofo) qımœurnụuo 19oonaooooo 1961 șiņuon '1990-9199f0 indows içerı soos oặh Up uri zşgı bi@șī£ș11@ quo fi o șrneğșãosố T đựnos
ɔɔuələJuoɔ seuonbuuəlui pijųLoiịu Još
II ‘I (IoA səpms ņureL.joseuunor
IIX IoA og I TOA “QumInɔ ŋumɛL
Áầioso ueņusselpreɔɔųL səpnySuureLỊo seusuɔS
ɔɔuələJuoɔ fɛuoneurojui įįjįå øü, Jošjupodbouă
*鮭 uspɔɔɔOJA
sɔpnųS Que LyoneuțuioS
ɔɔuələJuoɔ seuoneurosus puoɔɔS əų. Jo souspoɔɔold
spauinotųầnojųLųɔjɛɔsɔɛ, ŋunɛL ĮeinspỊnn L
1961 oyobon @-usgluon đỉgiosoas a quoqsão
ısporņigo-bio 1ņotos@qip qøırasıyoreño
Hapıspısıylo
நிநிதிரிரதி
·s (19ỊAɛxuq oueo
IO! 顎龍a
JəųO)
Ioui ‘S (19ỊAɛX'JCI自窮pubųL IZ
os royaux JCI“ureges eN sueųLoz
‘61 '81 LI
·yov ueneagueyN 9I uonessueI Ls,ɔdod 'n' O 'Si - 守t (ņu9ırırsıựrn100m!
·ıừNoto輯og1
••• •ış9œqsısımoğsuo “zı
ngo-tałoqışmugių soos 'il

Page 68


Page 69


Page 70
உலகத் தமிழாரா சென்னை அண்மை ெ
சங்கத் தமிழர் வாழ்வியல் தமிழக மேடைநாடகப் பெண் க:ை -குறிப்பேடு A Grammar of Contemporary Lit Cilappatikaгап காதம்பரி மூலமும் வசனமும் Tani Pacura Togai
Dedication
Temple Chimes
Nālā Verbā
Tamil Heroic Poems Six Long Poems from Sangam T. Kurinci-P-Pattu-Muttolayiram Kur Luntokai Landscape and Poetry Tamil Culture and Civilization Tolkappiyam and Astadhyayi தமிழக மகளிர் தொடக்க காலமுதல் ஆறாம் நூற்றாண்டு வரை தமிழில் நவீன நாடகம் இலக்கியத்தில் சோதிடம் சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்கு தொல்காப்பியம்-பொருள்-புறத்தி தொல்காப்பியம்-பொருள்-புறத்தி: சோதிடவியல்
மூலிகைக் கற்பங்கள் அமிர்த மதன கூத்து நாடகம் சித்த மருத்துவ மணிகள் கேரளப் பல்கலைக்கழகக் கீழ்த்தி.ை சுவடிகள் விளக்க அட்டவனை (முத Tamil Scripts - Work Book Work Book Written Tari விடுதலைக்கு முன் தமிழ்நாவல்களி திருக்கோயில்களில் தொழில் சமுதா தமிழ்க் காட்சி நெறியியல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியக் ஒப்பிலக்கியம்:கொள்கைகளும் செய கருணையம்மன் அந்தாதி

ாய்ச்சி நிறுவனம் - 6OO 113 வளியீடுகள்
I. AdL
- 75.00
பஞர்கள்
,, 25. OC) erагy Tamil ... 80.00 ... 1). OO
, , 125, OO
30.00
ይጋ5.ûù
2), OO
45, OO
، H000
armi ... O.OO 4O, OO
, , 11), OO
5OOO
... 6.O.O.)
. 110, OO
5 O.OO FOOO ... 55, OO களும் , , BC.O.) னையியல் பகுதி - 1 . 50.00 ணையியல் பகுதி - 2 . 65.00 7O.OO 80.00 9 OC) 75.00
சர் ல் தொகுதி) ... 85.00 50.DD ,, 50. OČ) ல் பெண்கள் ... 30.OO ய உறவுகள் . 25,0() ., 46.00 கோட்பாடுகள் . 30.00 பல்முறைகளும் ... 15.00 22. OC)