கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஏகலைவன் 2003

Page 1


Page 2
சமுக-கலை-இலக்கியகல்விஅறிவியல் ஏடு *விளைச்சலை மதித்து விலைகொடு கலைஞனின் சிலைக்கும் குடைகொடு”
A
"அன்பான இதயங்களே!
நான் 'ஏகலைவன்" தொடங்கி
ஆண்டொன்று கடந்துவிட்டது.ஒவ்வொரு இதழை
வெளியிடும்போதும் எத்தனையோ ஏக்கங்கள்.எதிர்பார்ப்புக்கள்.
கற்பனைகள்.அச்சங்கள் எனக்குள் ஏற்படுவதுண்டு அத்தனையும் கடந்து அடுத்த இதழை வெளியிட முனைவேன்.தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் பொருளாதார நட்டத்தின் மத்தியிலும் இதழை இடைநிறுத்தாது இலக்கிய இலாபம் கருதி வெளியிடுமாறு உள்ளிருந்தோர் சக்தி ஊக்குவித்துக்கொண்டிருக்கின்றது.என்னை நடத்தும் சக்தி எதுவென்று புரியவில்லை
ஆண்டு நிறைவு இதழாக ஏகலைவன்
வெளிவருவதையிட்டு அகமகிழ்கின்றேன்.இவ் வெற்றிக்கு காரணமாயிருந்த அனைவருக்கும் என் இதயம் கலந்த நன்றிகளை
தெரிவித்துக்கொள்கின்றேன்.
என் அனைத்து முன்னேற்றங்களுக்கும் முதற்காரணியாக அமைந்த
என் பெரியதந்தை
இ.கந்தசாமி
அவர்களின் திருப்பாதங்களில்
என் வெற்றிகளை சமர்ப்பிக்கின்றேன்
அன்புடன்
இ.சு. முரளிதரன் )
 
 
 
 
 
 
 
 


Page 3


Page 4
****)*
T 压x 门己任g U
!江
Rov
VEM *乐产
町 *正5 °5 *正5产
ע_H= xי של
(50 £.
G
QĘ
Q)

ஏகலைவன் - கணை 6
ாங்கிவிட்ட சந்ததிமுன் பாளமாய் எழும் பேனா துரோணர் தந்ததிந்த ஆறாம் விரலாய் எழும் பேனா
கெளரவ ஆசிரியர் திரு.ப.ஜோதீஸ்வரன்
பிரதம ஆசிரியர் திரு.இ.சு.முரளிதரன்
இணையாசிரியர் திரு.செ.சுதர்சன்
மதியுரைஞர் திரு.கி.நடராசா ருெ.க.தர்மலிங்கம் திரு.ஆ.விமலராஜா
அட்டை வடிவமைப்பு துஷா ஸ்ரூடியோ நெல்லியடி)
ஓவியர் ரு.எஸ்.நேசன்
விளம்பர முகாமையாளர் சல்வன் செ.ஜெயந்தன் சல்வன் ரறொசான்
• • • • • • كWاه قاه- 2
வாழ்த்துச் செய்தி
சிறுகதை
தாட்சாயணி
கவிதைகள்
குப்பிழான் ஐ.சண்முகன் 25 த.ஜெயசீலன் இ ச.முகுந்தன் இ யாத்திரீகன் இ நரகத்த முள் இலி
கட்டுரைகள்
பேரா.க.அருணாசலம் இ பேரா.சபா.ஜெயராசா இலி கலாநிதி தரைமனோகரன்.இ கலாநிதி க.சொக்கலிங்கம்,இலி செங்கை ஆழியான் இ த.இராஜேஸ்வரன் இ சி.ஜெகநாதன் இ
மாணவர் ஆக்கங்கள்

Page 5
ஏகலைவன் - கணை 6
வாழததுரை
மனிதகுல வளர்ச்சிக்குக் கல்வித்துறை ஆற்றிவந்துள்ள பங்களிப்புமிக முக்கியமான ஒன்றாகும். வேடுவ நிலையிலிருந்த மனிதன் இன்று கணினி யுகத் தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். சந்திர மண்டலத்தியல்புகளையும் ஏனைய கோள்களின் இயல்புகளையும் கண்டு தெளிய முயன்று கொண்டிருக்கின்றான். அதே சமயம் மனித குலம் ஆத்மீக ரீதியாகப் பின்னடைவைக் கண்டு கொண்டி ருக்கின்றது.
உலகில் எங்கு பார்த்தாலும் போட்டி பொறாமைகளும் கொலை, கொள் ளை நிகழ்ச்சிகளும், பாலியல் வன்முறைகளும் கோர யுத்தங்களும் , ஆக்கிரமிப்பு களும் , உயிர், உடைமை அழிவுகளும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. உலகம் அமைதி இழந்து தவிக்கின்றது. இயந்திரமயமாகி வரும் வாழ்வில் மனி தன் அமைதியைத் தேடி அலைகின்றான்.
இந்நிலையில் அறிவியல், தகவல், தொழில்நுட்பத்துறைகளின் முன்னேற் றத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நாம் மனித உள்ளங்களைப் பண் படுத்தவும் முயலுதல் இன்றியமையாததாகும்.
மனித உள்ளங்களைப் பண்படுத்துவதில் சமயத்துக்கும் கலை இலக் கியங்களுக்கும் மிக முக்கிய பங்குண்டு என்பதை உணர்ந்து நாம் செயற்பட வேண்டும். இவ்வகையிலே பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் பல தசாப்தங் களாக ஆற்றிவரும் பணிகள் மனங்கொள்ளத்தக்கவை. இளந்தலை முறையின ரிடத்து மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணருவதற்கும் வளர்த்தெடுப்பதற் கும் சஞ்சிகைகள் துணைபுரிகின்றன.
வணிகநோக்கிலான பத்திரிகைகள் பல இலாபம் ஈட்டுவது ஒன்றினையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படுவதால் இளந்தலைமுறையினரின் உள் ளங்களைப் பண்படுத்துவதற்குப் பதிலாக மாசுபடுத்துகின்றன. தமிழகத்திலும் இலங்கையிலும் இலட்சிய நோக்கோடு வெளிவந்த சிற்றேடுகள் பல பொருளாதார நெருக்கடிகளினால் அற்ப ஆயுளில் மடிந்துவிட்டன. மல்லிகை போன்ற ஒரு சில சிற்றேடுகளே தொடர்ந்தும் வெளிவந்து சாதனைகள் படைத்துக் கொண்டி ருக்கின்றன. -
இந்த வரிசையிலே இலட்சிய நோக்கோடு வெளிவந்து கொண்டிருக்கும் “ஏகலைவன்"என்னும் சமூக - கலை - இலக்கிய - கல்வி - அறிவியல் இரு திங் கள் இதழ் சஞ்சிகை பல இடையூறுகளுக்கு மத்தியிலும் வெற்றிகரமாக ஓரா ண்டைத் தாண்டியுள்ளது. தொடர்ந்தும் அது பல தசாப்தங்களுக்கு வெற்றிநடை போடவேண்டும். பல துறைகளிலும் சாதனைகள் படைக்க வேண்டும் என இதய சுத்தியுடன் வாழ்த்துகின்றேன்.
பேராசிரியர் க.அருணாசலம் தமிழ்த்துறை , பேராதனைப் பல்கலைக்கழகம்

ஏகலைவன் - கணை 6 வாழ்த்துச் செய்தி
அண்மைக்காலத்திலிருந்து நானும் ஏகலைவன் இதழின் வாசக னாகிவிட்டேன். ஏகலைவனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் எனது அன்புக்குரிய பேராதனைப் பல்கலைக்கழக மாணவன் செ.சுதர்சன் ஆவார். மகாபாரதத்தில் இடம்பெறும் ஏகலைவன் அனைவருக்கும் அறிமுகமான வன். சுயமுயற்சி, உழைப்பு, தியாகம் முதலியவற்றின் சின்னம், மகாபாரத ஏகலைவன். உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியினால் உருவாகி வெளி வரும் ஏகலைவன் இதழும் சுயமுயற்சி,உழைப்பு, தியாகம் என்பவற்றின் குறி யீடாகவே விளங்குகின்றது. இதனோடு சம்பந்தப்பட்ட அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், கல்லூரியின் அபிமானிகள், படைப்பாளர்கள் அனை வரும் பாராட்டுக்குரியவர்கள்.
பாடசாலை மட்டத்து வெளியீடுகள் சில அடையாளங்களைக் கொண் டிருப்பதுண்டு. அத்தகைய அடையாளங்களுள் முதன்மை பெற்றிருப்பது, பெரும்பாலும் அவை குறைப் பிரசவ முயற்சிகளாக அமைந்திருப்பதாகும். ஆனால் ஏகலைவன் இத்தகைய குறைபாடுகளின் எல்லைகளை மீறி, அழ காகவும், ஆரோக்கியமாகவும் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கும் சிந்தனைத் திறன் மிக்க குழந்தையாக மிளிர்கின்றது. ஓராண்டை நிறைவு செய்து தனது பிறந்தநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் சமூக - கலை - இலக்கிய - கல்வி - அறிவியல் குழந்தைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிப்ப தில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
ஏகலைவன் மென்மேலும் அறிவுப்பொலிவோடும் திடகாத்திரத்தோடும் வளர்வான் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு. ஒரு கல்லூரியின் இதழாக இருந்தபோதிலும் இந்நாட்டின் அறிவுஜீவிகளதும், கலை இலக்கிய வாதிகளதும், விமர்சகர்களதும், பொதுவாசகரதும் கவனத்தைக் கவரும் வகையில் இது வளர்ந்து வருவது பெருமிதத்திற்குரியது. ஏகலைவன் இந் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் நிறையவே உண்டு. அவற்றை அவன் செய்வான் என்ற நம்பிக்கை, எல்லோரையும் போல எனக்கும் உண்டு.
வாழ்த்துக்கள்
கலாநிதி துரைமனோகரன் தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்

Page 6
ஏகலைவன் - கணை 6
இருபெரும் சமய சமரசவாதிகள்
“ ஞானத்திலே பரமோனத்திலே
யாகத்திலே தவ வேகத்திலே ஆக்கத்திலே தெய்வபக்தி கொண்டார்தம் அருளினிலே உயர்நாடு " - மகாகவி பாரதியார் -
பக்தியில் சிறந்த பாரத நாட்டில் இந்திய மதங்களாகிய இந்து, சமணம், பெளத்தம், மேலைத்தேய மதங்களாகிய கிறிஸ்தவம், இஸ்லாம் போன்றனவும் பரவிக் காணப்படுகின்றன.
சிறந்த இலக்கண இலக்கிய வளம் பெற்றுத் திகழும் தமிழ்மொழியில் சமயச் சார்புடைய இலக்கியங்கள் பலவுள்ளன. அந்த வகையில் சைவபக்தி இலக்கியங்கள், வைணவ பக்தி இலக்கியங்கள், சமண இலக்கியங்கள், பெளத்த இலக்கியங்கள், கிறிஸ்தவ இலக்கியங்கள், இஸ்லாமிய இலக்கியங் கள் என அவற்றின் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு வகுத்து நோக்கலாம். தலைசிறந்த தமிழ் இலக்கியப் படைப்பாளிகள் பலர் சமய ஆசாரம் உடையவர்களாகவும்,பக்திநெறியில் ஒழுகுபவர்களாகவும் விளங்கி யுள்ளனர். அவர்களுள்ளும் சிலர் எல்லாச் சமயங்களையும் ஏற்று அவைகளுக் குரிய மரியாதைகளை வழங்கிய சமயச் சமரசச் சிந்தனையுடைவர்களாக வாழ்ந்துள்ளார்கள்.
அந்த வகையில் தஞ்சாவூரைச் சேர்ந்த தமிழ்க் கிறிஸ்தவராகிய வேத நாயகம் சாஸ்திரியாரும் (1774-1864) எட்டயபுரத்தைச் சேர்ந்த சக்திஉபாசக ராகிய மகாகவி சுப்பிரமணிய பாரதியாரும் ( 1882 - 1921) தமிழ் இலக்கிய வரலாற்றிலும் சமய வரலாற்றிலும் இரு மைல் கற்கள் போன்றவர்கள்.
ஐம்பத்தியிரண்டுக்கும் மேற்பட்ட நூல்களுக்கு ஆசிரியராக விளங்கும் சாஸ்திரியார் நூற்றுக்கணக்கான கிறிஸ்தவப் பக்திப் பாடல்களையும் பாடி யுள்ளார். கல்வி அறிவில் குறைந்த பாமரமக்களும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவாறு பல நாட்டுப்புற இலக்கிய வடிவங்களைக் கையாண்டு தமது படைப்புக்களைப் பாடியுள்ளார்.
வேதநாயகம் சாஸ்திரியார் பாரதியாரை விட காலத்தால் முந்தியவர். இவர் வாழ்ந்த காலம் ஐரோப்பாவில் இருந்து பல பாதிரிமார்கள் தமிழகம் வந்து
14 S K «Ha A - ) محصے

ஏகலைவன் - கணை 6
கிறிஸ்தவ மதத்தைப்பரப்பிய காலமாகும். மகாகவிபாரதியார் வாழ்ந்த காலம் இந்திய சுதந்திர உணர்வு கருப்பெற்ற காலமாகும். இருவரும் அந்நியர்கள் ; இந்தியாவை ஆண்ட காலப் பகுதியில் வாழ்ந்தவர்கள்.
தமிழ்க் கிறிஸ்தவர்களில் பெரும்பாலானோர்கள் மதம் மாறிக் கிறிஸ் தவம் தழுவியோர் ஆவார்கள். தாம் புதிதாக ஏற்றுக்கொண்ட சமயத்தில் தமக் கிருந்த ஆர்வத்தினையும் பற்றினையும் தமது படைப்புக்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள். சில கிறிஸ்தவ அறிஞர்களிடம் அவை வரம்பு மீறிச் சென்று ஏனைய மதங்களாகிய இந்து மதம் போன்றவற்றைப் பழிக்கும் முறையிலும் வெளிப்படுகின்றன. ஆனால் தஞ்சை வேதநாயகம் சாஸ்திரியார் இதற்கு விதி விலக்காக விளங்கினார். இதற்கு,
" ஒரு பொருளே தெய்வம் - நீ உகந்து தொழு நெஞ்சே உடைந்து மனம் கெஞ்சே - அந்த ஒரு பரனுக் கஞ்சே ” மேற்கண்ட இவரின் சிந்தனையும் காரணமாக இருந்திருக்கலாம்.
ஓரிறைக் கோட்பாட்டு நெறியை ஏற்கும் சாஸ்திரியார் யேசு, சிவன், அல்லா போன்ற பெயர்கள் யாவும் ஓர் இறைவனையே சுட்டுகின்றன என்று கருதினார்.
" சிவதவ வபநவ தெய்வ அதிசய சொரூபியே.
ஆண்ட சாதா சிவ கருணா ".
" ஓம் அல்லா அல்லா ஒமேகாவே மாவல்லா 1 மகத்துவ தெய்வீகா அல்லா அல்லாவேயே யோவாவே
அரிய அரிய வாழ்வே"
என்ற செய்யுள்கள் சாஸ்திரியாரின் சமய சமரசச் சிந்தனையைச் சுட்டு கின்றன. தமிழ்க் கிறிஸ்தவராகிய சாஸ்திரியார் இந்துக்கள் வணங்கும் சிவ னையும், இஸ்லாமியர்கள் தொழும் அல்லாவையும் போற்றிப் பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவரைப் போல வேறு எந்தத் தமிழ்க் கிறிஸ்தவ அறிஞர்களும் எடுத்துரைக்கத் துணியாததை மேற்கண்ட முறை யில் பாடியமை சாஸ்திரியாரின் சமய சமரச சிந்தனையைப் புலப்படுத்து கின்றது.
தமிழ் இலக்கிய வரலாற்றிலும் இந்துசமய வரலாற்றிலும் பெரும் செல் வாக்குப் பெற்றுத் திகழ்பவர் பாரதியார் . இவரின் பெரும்பாலான படைப்புக்
- N

Page 7
ஏகலைவன் - கணை 6
களில் பக்தியை அடிப்படையாகக் கொண்டவை எடுத்துக் காட்டாக தோத் திரப் பாடல்கள், கண்ணன் பாடல், பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு போன்ற வற்றைக் குறிப்பிடலாம்.
அந்த வகையில் சிறந்த இந்துவாக விளங்கியபாரதியார் இந்தியாவில் பரவியிருந்த கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற மதங்களையும் கடவுளர்களையும் போற்றிப் பாடி சிறந்த சமய சமரசவாதியாக விளங்கியுள்ளார். இதற்கு,
“ எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் - எங்கள் இறைவா ! இறைவா ! இறைவா ” “ ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள் ”.
போன்ற பகுத்தறிவுச் சிந்தனைகளுடன் இவ்வுலக படைப்பினையும் அதில் வாழ்கின்ற உயிர்களையும் போற்றிப் பாடுகின்றார். இறைக் கோட் பாட்டில் வேறுபாடற்ற நிலையைத் தான் உணர்ந்தது போலவே இந்திய நாட்டு மக்களும் உணர வேண்டும் என விரும்பினார் பாரதியார்.
அந்த வகையில் கிறிஸ்தவ மதத்தவர்கள் வழிபடும் யேசுநாதரைப் புகழ்ந்து பின்வருமாறுபாடுகின்றார் பாரதியார்.
“ ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்
எழுந்துயிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமாமரியா மக்தலேனா நேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள் ”
இங்கு யேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட செய்தியும் பின் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்ததையும் மரியா மக்தலேனா மகிழ்ச்சியடைந்தமையும் கூறப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாமல் இஸ்லாமியர்கள் தொழும் அல்லாவைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார் பாரதியார். இஸ்லாமிய மார்க்கத்தின் மகிமை என்ற தலைப்பிலும் பிரசங்கம் செய்தார். பாரதியார் அல்லாவைப் போற்றிப் பின்வரு மாறு பாடுகின்றார்.
“ பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடியண்டங்கள்
எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளிவானிலே
நில்லாது கழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்
சொல்லாலும் மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி”
(அல்லா 1 அல்லா 1 அல்லா ! )

ஏகலைவன - கணை 6
சு இவ்வாறு கிறிஸ்தவ , இஸ்லாமிய மதங்கள் மட்டுமல்லாது உலக மதங்களை எல்லாம் போற்றிப் பின்வருமாறுபாடுகின்றார்.
“ பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி ! புத்தமதம், சமணமதம், பார்ஸி மார்க்கம் சாமியென யேசு மதம் போற்றும் மார்க்கம் சனாதனமாம் ஹிந்து மதம் , இஸ்லாம் யூதம் நாமமுயர் சீனத்துத் "தாவு”மார்க்கம் நல்ல கண்பூசி மதம் முதலாம் பார்மேல் யாமறிந்த மதங்கள் பல உளவாம் அன்றே யாவினுக்கும் உட்புதைந்த கருத்திங்கொன்றே"
இதனை நோக்கும்போது உலக மகாகவிமட்டுமல்லாது உலக சமய சமரச சிந்தனாவாதியாகவும் பாரதியைக் கொண்டாட முடியும்.
இந்த வகையில் 'சிவாயநம என வழிபடும் சைவர்களையோ ஓம் நமோ நாராயணா ’ என வழிபடும் வைணவர்களையோ ‘புத்தம் சரணம் கச்சாமி ’ என வழிபடுவோரையோ கர்த்தரே " எனப் பிரார்த்திப்போரையோ, அல்லாவின் நாமத்தைக் கூறுபவர்களையோ நாம் தவறாக மதிப்பிட முடி யாது. அவரவர்களுக்குத் தங்களின் மதம் புனிதமானது; உண்மையானது என்பதனை ஒவ்வொருவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாம் தாம் வழிபடும் கடவுளர்களே நியாயமானவர்கள். ஏனைய கடவுளர்களையும் சமயங்களையும் சாத்தான்கள், மிலேச்சர்கள், அடிப்படைவாதிகள் எனக் குறைகூறுவதில் எவ் வித நன்மையும் ஏற்படப் போவதில்லை. மாறாக ஒருவனைத் தீய சிந்தனை யின் பாலே வழிநடத்திச் செல்லும். அது அவனுக்கு மட்டுமல்லாது அவனது சமூகத்துக்கும் பெரும் தீங்காக அமைகின்றது.
அந்த வகையிலே சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த வேதநாய கம் சாஸ்திரியாரும் மகாகவிபாரதியாரும் எவ்வாறான சமய சமரசச் சிந்தனை யுடன் வாழ்ந்தார்கள். அவற்றினை மக்களிடத்திலே எவ்வாறு பிரச்சாரப்படுத்தி னார்கள் என்பதனைச் சிந்தித்துப்பார்க்கும்போது இன்றைய நிலை வேதனை யளிக்கின்றது.
சிஜெகநாதன் உதவி விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப் பல்கலைக்கழகம்.

Page 8
ஏகலைவன் - கணை 6
ங்ெகும்.எங்கும்
எதிலும் எதிலும் அரைவேக்காடுகளின் அரங்கேற்றம்
எல்லாம் அறிந்த்தவாய் எல்லாம் வல்லதுவாய் எங்கும் நிறைந்ததவாய் எண்ணி இறுமாந்து
எதிலும் எதிலும் அரை வேக்காடுகளின் அரங்கேற்றம்
நெஞ்சை நிமிர்த்தி கம்பீர நடைநடந்த, எனக்குத் தெரியாதா என்று தலையசைத்த அற்பப் பதராய் அடுத்தவரைப் பார்த்தெள்ளி தம்மை வியந்த தருக்கும் மிகக்கொண்டு
எதிலும் எதிலும் அரைவேக்காடுகளின் அரங்கேற்றம்
குப்பிழான் : ஐ.சண்முகன் இ
 

ஏகலைவன் - கணை 6
喙 Ο பின்னவீனத்துனும் ஒரு மீர்Uற்றுை
உலகின் புதிய சிந்தனை அருவிகளுள் ஒன்றாக அமையும் பின்ன வீனத்துவம் (Postmodernism) தீவிர திறனாய்வுக்கு உட்படுத்தப்படும் புலமைப் புலமாகவும் மாறி வருகின்றது. கலை, இலக்கியம், கல்வி, பண்பாடு, பொரு ளாதாரம், சமூகம் என்ற பல துறைகளில் எடுத்துப் பேசப்படும் இக்கருத்தியல் புலமை நிலையில் விரிவான ஆய்வுகளை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இதனை விளங்கிக் கொள்வதற்கு வரலாற்று நிலையில் நவீனத்துவத்தின் தொடர்ச்சியாயமையும் “வரலாற்று நிலைப் பின்னவீனத்துவ நிலை ” (Postmodernis) கலை, பண்பாடு, கல்வி முதலாம் துறைகளில் முகிழ்த்துள்ள "கலை நிலைப் பின்னவீனத்துவம் ”நவீன சமூகக் கோட்பாட்டு வடிவில் மலர் ச்சியுற்றுள்ள "சமூக நிலைப்பின்னவீனத்துவம்” ஆகிய பாகுபாடுகளை இனங் கண்டு கொள்ளல் முக்கியத்துவம் பெறுகின்றது.
பழைய சிந்தனையாளர்கள் முன்வைக்கும் அடியாதார வாதங்கள் (FoundationleSS) நியாயமற்றவை என்றும், சார்புடையவை என்றும் பொருத்த மற்றவை என்றும் பின்னவீனத்துவ வாதிகள் விளக்குவர். பகுத்தறிவு பூர்வ மான அடியாதாரங்கள், அகிலப் பண்பு கொண்ட மதிப்பீடுகள் முதலியவை குறிப்பிட்ட ஒரு குழுவினரை மேன்மைப்படுத்தவும் ஏனையோரைத் தாழ்த்தி விடவும் பயன்படுத்தப்படுகின்றன என்பது அவர்களின் ஓங்கிய கருத்தாகும். (Ritzier. 1996) - பேராசிரியர் சபா.ஜெயராசா -
பரந்துபட்ட சிந்தனைகளை உள்ளடக்கிய “பெருங் கருத்துத் திரள் கள் ” (Motanaratives) சமூகவியலோடு தொடர்புடைய “விரிந்த கருத்துத் திரள்கள்” (Grandmaratives) முதலியவை பின்னவீனத்துவத்தாற் தள்ளு படி செய்யப்படுகின்றன. (Lyotard, 1984) தொகுத்து ஒன்று திரட்டிக் கூறல் மற்றும் பரந்துபட்ட அணுகுமுறைகள் முதலியவற்றைக் கைவிட்டு தனித்தனி அலகுகள்மீதும் உதிரிகள்மீதும் கவனம் செலுத்துதலைப் பின்னவீனத்துவ வாதிகள் வற்புறுத்துகின்றார்கள். அதாவது "உதிரிகளைத் தரிசியுங்கள்” என்ற கருத்து ஓங்கி ஒலிக்கின்றது. ஒடுக்கப்படுவோர் ஒன்றிணைவதைச் சிதைப் பதற்கு ஒடுக்குமுறைக்கு உட்பட்டவர்களிடத்து முகிழ்த்தெழும் பொது உணர்வுகளைச் சிதறடிப்பதற்கும் பின்னவீனத்துவக் கருத்தியல் பலமாக முன்னெடுக்கப்படுதலை இச்சந்தர்ப்பத்திற் சுட்டிக் காட்டவேண்டியுள்ளது.

Page 9
ஏகலைவன் - கணை 6
வரலாற்றுப் போக்குகளை நிராகரித்தல், வரலாற்றியல் அனுபவங் களை நிராகரித்தல், பண்பாட்டு வேர்களில் ஆழ்ந்து ஊடுருவிச் செல்லாமை முதலிய பண்புகளுடன் தொடர்புபட்டுப் பின்னவீனத்துவம் வளர்ந்து செல்ல லாயிற்று. தனிமனித உணர்வுகளின் தணிக்கைகளும் சிதைவுகளும் தொடர்பு வீழ்ச்சிகளும் அவர்களது பார்வையில் அதிக முக்கியத்துவத்தைப் பெறுகின்றன. (Jameson 1984) உலகமும் தனிமனிதரும் பற்றி திரட்டிய கருத்துகள் (Totalising) ஆபத்தானவை என்பதும் அவர்களுடைய கண் ணோட்டம்.
பின்னவீனத்துச் சிந்தனைகள் பல தளங்களையும் பல தரங்களையும் உள்ளடக்கியவை. மென் போக்குடையவர்களும், கடும் போக்குடையவர் களும், பின்னவீனத்துவசிந்தனாகூடத்தில் இருக்கின்றார்கள். உதாரணமாக ஜேம்ஸ்சன் என்பவர் மென் போக்குடையவராகவும் ஜீன்பெளடிலார்ட் கடும் போக்குடையவராகவும் காணப்படுகின்றனர். மார்க்சியக் கருத்துக்களைத் தீவிரமாக எதிர்ப்பதுடன் பெளடிலார்டின் அறிகை முயற்சிகள் எழுந்தன. ஒரு வகையில் நவ முதலாளியை முறைமையின் நயப்பு அவரிடத்து அடிநிலை அறிகையாக அமைந்திருந்தது.
மார்க்சியக் கொள்கைகளை மறுதலித்து “குறியீட்டு நிலைப் பரி மாற்றம்” (Symbolic Exchange) என்ற எண்ணக்கருவை அவர் முன்மொழிந் தார். (Baudrillard, 1975) வாங்குதலும், வழங்குதலும், பெறுதலும் கொடுத்த லும் ஆகியவை முறிவுபடாத ஒரு வட்டப்பாதையில் நிகழ்ந்து கொண்டிருப்ப தாக முன்மொழிந்த அவர் மார்க்சியத்தின் வர்க்க நிலைகளையும் உழைப்பின் பெறுமதியையும் சாடினார். சமூகம் மார்க்ஸ் கூறியது போன்று உற்பத்திநிலைப் பட்ட ஆளுகையினால் உருவாக்கப்படவில்லை என்றும் தொடர்புச் சாதனங் கள் தகவல் நிரற்படுத்தல்,கணினிகள் மற்றும் அறிவுக் கைத்தொழில் முதலிய வற்றால் உருவாக்கப்படுகின்றதென்பதும் அவரது வாதம். மார்க்ஸ் குறிப்பிட்ட சுரண்டல் முறைமையின் குவிப்பை வேறு திசையில் மாற்றுவதற்கு முயலும், அவர் வெகுஜன சாதனங்களும் கணினிகளும் உருவாக்கும் குறியீடுகளின் ஆட்சியே மேலோங்கியுள்ளதாக விபரித்துள்ளார். தருக்க நிலையில் வேறு பிரி தறிதலின் குலைப்பை (Dedifferentiation) அவர் முன்னெடுத்துள்ளார்.
கலை, இலக்கியம் மற்றும் கல்வித்துறைகளில் முற்பாவனை (Simu. lation)யின் முக்கியத்துவத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது முற்பாவனை யின் யுகம் என்றும் இதன் வழியாக பொருள்களையும் சம்பவங்கைளயும் செப்ப

ஏகலைவன் - கணை 6
மாக்உருவாக்கலாம் என்பதும் அவரது துணிவு. தொலைக்காட்சி வாழ்க்கை யிற் கலப்பதும் வாழ்க்கை தொலைக்காட்சியிற் கலப்பதுமாக முற்பாவனையும் - ஆக்கமும் , ஆக்கமும் - முற்பாவனையுமாக தொடக்கமும் முடிவுமற்ற வட் டப்பாய்ச்சல் நிகழ்வதாகவும் அவர் விளக்கினார். இவரது சிந்தனையிலிருந்து வெளிப்படுத்தப்படும் பிறிதொரு கருத்து அதீதயதார்த்தம்(Hyperreality) பற் றியதாகும். ஒரு வகையில் மார்க்சிய யதார்த்த வாதத்தை மறுதலிப்பதற்கும் இவ்வகையான கருத்து அவரால் முன்மொழியப்பட்டது. வெகுசனத் தொடர்பு சாதனங்கள் யதார்த்தங்களின் பிரதிபலிப்புக்களைத் தரலாம் அல்லது யதார்த் தத்துக்கும் மேலான புனைவுகளைத் தரலாம். யதார்த்தத்துக்கும் மேலான புனைவு அதீத யதார்த்தமாகின்றது. இந்நிலையில் பொதுசனங்கள் புரட்சி யாளர்களாக மாற்றப்படாது ஒத்துணர்வுள்ளவர்களாக மாற்றப்படுகின்றார்கள். கலை இலக்கியங்களையும், அவற்றின் கருத்துக்களையும் உள்வாங்கும் நிலையில் பொதுமக்கள் நுகர்ச்சியாளர்களாக இருக்கும் நிலையில் அவற்றைக் கையாளும் திறன் நடைமுறையில் இல்லாமற் போய்விடுகின்றது. அதாவது பொதுமக்கள் கலைகளை நுகர்வோராக இருக்கின்றார்களேயன்றி உலகை மாற்றியமைக்கும் நடவடிக்கையார்களாக இல்லை என்று அவரது வாதம் பின்னவீனத்துவச் சிந்தனைகளின் ஆக்கத்துக்குரிய பெரும் விசையாகவும் பின்புலமாகவும் அமைந்த பிற்கட்டுமானம் மைகல் பூக்கோவினுடைய கருத் துக்களாகும். பூக்கோவை ஒரு பின் அமைப்பியல் வாதியாகவும் விளக்குவர். அறிவுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை விரிவாக விளக்குவதில் பூக்கோ கவனம் செலுத்தினார். “அறிவின் தொல்பொருளியல்” என்ற அவரது எண்ணக்கரு (Foucault, 1966) ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் காணப்படும் விதிகளின் கட்டமைப்பு குறிப்பிட்ட உரையாடல்களைத் தீர்மானிப்பதில் வகிக்கும் பங்கு என்பவை அவரால் விளக்கப்பட்டன.
அறிவுக்கும் அதிகாரத்துக்குமுள்ள தொடர்புகளை விளக்கும் பூக்கோ அறிவின் நிரலமைப்புக்கும் அதிகாரத்துக்கும் உள்ள இணைப்புக்களையும் வலுப்படுத்திக் காட்டியுள்ளார். மிகவும் உயர்ந்த அறிவு கூடிய அதிகாரப் பிர யோகத்துக்கு வழிவகுக்கும். அறிவால் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் அதி காரத்தை மேலும் வலுப்படுத்த உதவுகின்றது. இவ்வாறாக பூக்கோ குறிப் பிட்ட வித்தியாசமான சிந்தனைகள் புதிய புலக்காட்சிகளைக் கருத்தியல் நிலையில் உருவாக்கின. பின்னவீனத்துவவாதிகளின் வித்தியாசமான புலக் காட்சிகளுக்கு இவரது சிந்தனைகள் ஒரு வகையில் உரமிட்டன.
பின்னவீனத்துவச் சிந்தனைகளின் விசைமேலெழுவதற்கு டெறிடா வின் கட்டுமானக்குலைப்பு அல்லது கட்டுடைப்புச்(Deconstruction) சிந்த
C- 11 - ) Na1

Page 10
ஏகலைவன் - கணை 6
னைகளும் விசையூட்டின. மொழியையும் சமூக நிறுவனங்களையும் கட்டு டைப்புச் செய்யும் கருத்துக்களை அவர் முன் வைத்தார். மொழித்தொகுதி ஒழுங்கு குலைந்த நிலையில் உள்ளதென்றும் உறுதி குலைந்த நிலையில் உள்ளதென்றும் அவர் கருதினார். மொழியை நம்பாதிருத்தல் என்ற எதிர்மறை நிலையானது பின்னவீனத்துவச் சிந்தனைகளுக்கு வாய்ப்பான விளை நில மாக அமைந்தது.
மேலைப்புலச் சிந்தனைகளில் முகிழ்த்த அகிலம் தழுவிய சிந்தனைச் செயலமைப்புக்களும் எவை நல்லவை எவை தீயவை என்ற சமூக நிலைப் பட்ட விழுமிய ஆக்கங்களும் கட்டுடைப்புச் செய்யப்படுவதோடு, மெய்யான பொருளில் இருந்து எழுத்துப் புனைவின் மாயையை விடுவிக்க வேண்டும் என்ற டெறிடாவின் கருத்து பின்னவீனத்துவத்தின் அறிகை நிலை ஊசல் களுக்கு வாய்ப்பளித்தது.
பாரம்பரியமான அரங்குகளின் கட்டுமானத்தைக் குலைத்தும் உடைத்தும் பிரதிநிதித்துவ வகையான தருக்க முறையையும், அரங்க ஆக்கு னர்களின் மேலாண்மையையும் ஒழிக்க வேண்டுமென அவர் எண்ணினார். அவர் முன்வைத்த எழுத்தாக்க விசைகளும் பின்னவீனத்துவ ஆக்கங்களுக் குரிய தளங்களை அமைத்தன.
கடந்த கால கால் நூற்றாண்டாக உலகில் நிகழ்ந்த அரசியல், பொரு ளாதாரம், சமூகம் மற்றும் கல்வியியல் சார்ந்த நிகழ்ச்சிகளின் பின்புலத்தில் பின்னவீனத்துவத்தை நோக்கும் நிலையிலே தான் தெளிந்த புலக்காட்சி களைப் பெறமுடியும். அரசியல் அரங்கில் சோவியத் ஒன்றியத்தின் சிதைவு, பொருளதார அரங்கில் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பல்தேசியக் கம்பனி களின் வியாபகம், சமூக நிலையில் ஒடுக்கப்பட்டவர்களிடத்து ஏற்பட்ட கல்வி மறுமலர்ச்சி, உயர்கல்வியில் ஏற்பட்டுவரும் விரிவாக்கம் முதலியவற்றை நேர் நிலையிலும் எதிர் நிலையிலும் அணுகும் தளம்பல் நிலையானதும் சிதறல் நிலையானதும் பன்முகப்பாங்கானதுமான அறிகை நிலை பின்னவீனத்துவ மாகியது. மார்க்சிய அறிகையை எதிர்ப்பதில் பல தளப்பாங்கான பரிமாணங் கள் பின்னவீனத்துவத்தின் உள்ளடக்கமாகி நிற்கின்றன.
கோட்பாட்டு வடிவில் அது நவீன சமூகக் கோட்பாடாகவும், கலை வடிவில் அது நவீன கலைக்கோட்பாடாகவும், கல்வியியல் அடிப்படையில் அது நவீன கல்விக் கோட்பாடாகவும், வளர்ச்சிஉற்றதில் வியப்பில்லை. ஏனெனில்

ஏகலைவன் - கணை 6
கல்விச் செயல்முறை எத்தகைய கருத்துக்களையும் அகல்விரி பண்புடன் தக்கவைத்துக் கொள்ளும் இயல்பைத் தன்னகத்தே கொண்டிருக்கும். இதற் குக் காரணம் பல்வேறுபட்ட முரண்பாடுகளைச் சமூகம் உள்ளடக்கிநிற்கும் இயல்பும் சமூக இயல்பைக் கல்வி புலப்படுத்தி நிற்கும் நிலையுமாகும்.
பின்னவீனத்துவத்திற் காணப்படும் சிறப்பு, உலகச் சிந்தனையாளர் களால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கருத்துக்களைப் புதிய மொழியில் நளினமாகக் கூறியுள்ளமை ஆகும். அவர்களிடத்துக் காணப்படும் பிறிதொரு சிறப்பு அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய சொல்லாக்கங்கள் (மேலைத்தேய மரபில் புதிய புதிய சொற்களும் சொற்றொடர்கள் ஆக்கப்படும்பொழுது அவை வரவேற்கப்படுகின்றன. ஆனால் எமது சூழலில் புதிய சொற்களஞ்சியங்களை உருவாக்குவோர் எதிர்ப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.)
வளர்ந்து வரும் உலகமயமாக்கலின் எதிர்மறைப் பாங்குகளை நியா யப்படுத்துவதற்கும், தகவல் அமைப்பின் தாக்கங்கள் மனிதர்களிடத்து "எதிர் மானிடப்படுத்தலை”உருவாக்கும் நிலையை இயல்பான செயற்பாடாக ஏற்றுக் கொள்ளச் செய்வதற்கும் பின்னவீனத்துவம் உதவும் கரங்களைக் கொடுக் கின்றது.
༽நாவல் முடியவில்லை சாதிக்கும் மதத்திற்கும் ཛོད' به سه گ
விளக்கை அனைத்தேன் | தனித் தனியாக விட்டில்கள். சமரசம் உலாவும் இடம்.
விலைக்கு வாங்கி எறிந்தான் “சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை” ஒற்றைச் செருப்பை கட்டுரைக்கு தடை விதித்தது ஊனமுற்றவன். தணிக்கைக் குழு.
للمرے ܓܠ

Page 11
நேற்றுவரை “மெய்யை” வீறிட்ட
என்னிதயம்
காற்றிறங்கிச் சூம்பிக்
கிடக்கிறது; கொடுமை கண்டு
அக்கினியைத் துப்பும் என்
ஆறாம் விரலதுவோ
பக்கவாதப் பட்டதுபோல் பார்வைக்குத் தெரிகிறது
水 率 s t se
ஊருக்குப் பிடித்த பகல்களிலே சந்தர்ப்பச் செட்டைகளை வெளவாலாய் ! சமுதாயப் புற்றுக்குள் யாருக்கோ பிடித்த சந்தனத்தில் சென்றுரித்துச் சென்றுறித்துச் சீவிக்கும் மண்புழுவாய் சாரைகள் முன் வீனுக்குப் புரண்டு நெளிகிறது தோல் கழற்ற விரும்பாத சீவன்நான் என் சுயங்கள் ஒத்தாடத் தெரியாத செம்மறி நான்
s h
துச்சாதனர்க் கென்றே துகிலுடுக்கத் தெரியாத அச்சுதா சரணமென்று அலறுதற்கும் விரும்பாத கற்றுாண் நான் ; கண்ட கண்ட
காற்றெல்லாம் தடவ
கால் அகட்டி வளைகின்ற
ஆற்றங் கரையோர நாணற் களையன்று, "நான் ” “எனது” என்பதெல்லாம் ஆணவத்தின் வடிவமென்று ஆரும் மொழிந்திடலாம்.
99 GG
ஏன் ? எதற்கு? என்ற வினா எழுப்புபவர் எல்லோரும் ஆணவத்தின் வடிவமென்று ஆண்டவர்கள் சொன்னார்கள் ! ஆள்பவர்கள் சொல்கின்றார் ! ஆளுபவர் சொல்லிடுவர் 1
மட்டங்கள் மாறாமல் மெளனங்கள் குலையாமல்
இட்டதனை நிறைவேற்ற என்றைக்கும் F க்கன் " மேலுள்ளோன்”
Փ(ՖbՖ சட்டத்தில் உள்ளதொரு சாகாத வார்த்தையிது
イエト C - 14-)
 
 

நணஏகலைவன் - கணை 6
4ಿಸ್ಟ್ವೇpb 6tArgsjaas
இருநாட்டு நாணயங்களுக்கு இடையிலான பரிமாற்று வீதம் நாணய மாற்று வீதம் எனப்படும். எனவே நாணயமாற்றுவீதத்தில் ஏற்படும் எந்த ஒரு மாற்றமும் பரிமாற்றப்படும் பொருட்கள், சேவைகளின் விலை மட்டங்களில் மாற் றத்தினை ஏற்படுத்துவதன் மூலம் ஒரு நாட்டின் பொதுவிலை மட்டத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்தும். ஒரு நாட்டின் பொதுவிலை மட்டத்தினை நிர்ண யிக்கும் காரணிகளைப் பொதுவாக இருவகைப்படுத்தலாம். ஒன்று உள்நாட் டுக் காரணிகள்(பணநிரம்பல், நுகர்வு, முதலீடு, அரசாங்கச்செலவீடு,உற்பத் திக் காரணிகளின் விலைகள், பின்தங்கிய தொழில்நுட்பம்) மற்றையது வெளி நாட்டுக் காரணிகள் (எண்ணெய் விலை, உலகச் சந்தைவிலை , நாணய மாற்று வீதம்) . ஒரு நாடு இறக்குமதியில் தங்கியிருக்கும் அளவு அதிகமாக இருப்பின் ஏனைய காரணிகளுடன் ஒப்பிடும்போது நாணயமாற்று வீதத்தி லான மாற்றங்கள் அந்த நாட்டின் பொதுவிலை மட்டத்தில் ஏற்படும் பாதிப்பும் அதிகமாக இருக்கும்.
இன்று உலக நாடுகள் இடையேதாராளப் பொருளாதாரக் கொள்கை வலுவடைந்து வருகின்றது. இதன் ஒரு அங்கமாக நாடுகள் வர்த்தக, செலா வணிக் கட்டுப்பாடுகளைத் தாராளமயமாக்கிவருகின்றன. வர்த்தகக் கட்டுப் பாடுகள் தாராளமயமாக்கப்படும்போதுநாடுகள் இறக்குமதியில் தங்கியிருக்கும் அளவு அதிகரித்துவருகின்றது. செலாவணிக் கட்டுப்பாடுகள் தாராளமயமாக் கப்படும்போதுநாணயமாற்றுவீதத்தளம்பல்கள் அதிகரித்துவருகின்றன. இவ் விரு நிகழ்வுகளுடன்1971இல் பிரிட்டன்வூட்ஸ் அமைப்புமுறிவடைந்து மிதக் கும் நாணய மாற்றுவீத முறை முக்கியம் பெற்றதனை அடுத்து உலகப் பண விக்கச் செய்முறைக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணியாக நாணய மாற்றுவீத மாற்றங்கள் காணப்படுகின்றன.
நாணயமாற்று வீத மாற்றம் என்பது வெளிநாட்டு நாணயத்தின் பெறு மதியில் ஏற்படும் மாற்றத்தினைக் குறிக்கும். இது நிலையான நாணய மாற்று வீத முறையின் கீழ் நாணயப் பெறுமதி ஏற்றமாக அல்லது நாணயப் பெறுமதி இறக்கமாகக் கணிப்பிடப்படுகின்றது. மிதக்கும் நாணயமாற்றுவீத முறையின் கீழ் நாணயப் பெறுமதி உயர்வாக அல்லது நாணயப் பெறுமதித் தேய்வாகக் கணிப்பிடப்படுகின்றது. இக்கட்டுரை நாணயமாற்றுவீதமாற்றங்கள் குறிப்பாக
115 n Yue1

Page 12
ஏகலைவண் - கணை 6
நாணய பெறுமதி இறக்கம் அல்லது நாணயப் பெறுமதித் தேய்வு ஒரு நாட்டின் பொது விலை மட்டத்தினை எவ்வழிகளில் பாதிக்கின்றது என்பதனை ஆய்வு செய்கின்றது.
நாணயப் பெறுமதி இறக்கமும் நாணயப் பெறுமதித் தேய்வும் இரு வேறுபட்ட எண்ணக்கருக்களாக இருக்கின்றபோதிலும் அனேக பொருளிய லாளர்கள் பெறுமதி இறக்கம் என்ற பதத்தினை பெறுமதி தேய்வு என்ற பதத் திற்கு மாற்றீடாகப் பயன்படுத்திவருகின்றனர். பெறுமதிஇறக்கத்தின் உடனடி விளைவாகச் சார்பு விலையின் மாற்றம் காணப்படுகின்றது. ஒரு நாடு 10 சத வீதம் நாணயப் பெறுமதி இறக்கம் செய்யின் உள்நாட்டு விலையுடன் ஒப்பிடும் போது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையும் 10 சதவீதத்தால் அதிகரிக்கும். இது ஒரு எளிமையான கருத்தாக இருக்கின்ற போதிலும் இம் மாற்றம் எப்பொழுதும் இதே அளவாக இருக்கும் எனக்கூற முடியாது.
நாணயப் பெறுமதி இறக்கமானது பொதுவிலை மட்டத்தில் மட்டுமல் லாது வெளியீடு, சென்மதி நிலுவை, வேலைவாய்ப்பு, வெளிநாட்டுச் சொத் துக்கள், வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலாத்துறை, வருமானப் பங்கீடு என் பவற்றின் மீதும் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. எனினும் பெறுமதி இறக் கத்தின் உடனடி விளைவாகப் பொதுவிலை மட்ட அதிகரிப்பு காணப்படு கின்றது. பெறுமதி இறக்கத்தின் மிக மோசமான விளைவாகவும் கருதப்படு கின்றது. பெறுமதி இறக்கமானது பொருளாதார வளர்ச்சி, சென்மதி நிலுவை, வர்த்தக மாற்றுவீதம் போன்ற மெய் மாறிகளுடன் ஒப்பிடும்போது பொதுவிலை மட்டத்தின்மீது பெரியதும், விரைவானதுமான விளைவுகளை ஏற்படுத்து discrpg (Robson et al. 1979)
நாணயப்பெறுமதி இறக்கத்திற்கும் பொதுவிலை மட்ட அதிகரிப் பிற்கும் இடையிலான தொடர்பினை இரு வகைப்படுத்தலாம். ஒன்று நேரடித் தொடர்பு, மற்றையது மறைமுகத் தொடர்பு நேரடித் தொடர்பு என்பது நாணயப் பெறுமதி இறக்கம் பொதுவிலை மட்டத்தில் ஏற்படுத்தும் உடனடி அதிகரிப் பினைக் குறிக்கும். இது பின்வரும் வழிமூலம் ஏற்படுகின்றது. இன்று நாடுகள் பல்வேறு தேவைகளுக்காகப் பல்வகைப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்து வருகின்றன. இவற்றை நுகர்வுப் பொருட்கள் (உணவு, குடிபானம்,
மழையின் வருகையால் கவிதையாகின புழுதி படிந்த பூக்கள்
 
 
 
 

ஏகலைவன் - கணை 6
உடுதுணி), இடைநிலைப் பொருட்கள் (விவசாய உள்ளீடுகள், கைத்தொழில் உள்ளீடுகள்), முதலீட்டுப் பொருட்கள் (இயந்திரங்கள், பொறிகள், கருவிகள், போக்குவரத்துச் சாதனங்கள், கட்டிடப்பொருட்கள் என வகைப்படுத்தலாம். பெறுமதி இறக்கம் இறக்குமதி செய்யப்படும் இப்பொருட்களின் விலையினை அதிகரிப்பதன் மூலம் குறிப்பிட்டநாட்டின் பொதுவிலை மட்டத்தில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்திவருகின்றது. இவ்விளைவின் அளவினை இறக்கு மதிநாட்டின் வருமானம், வர்த்தகக் கொள்கை, இறக்குமதிப் பொருட்களுக் கான கேள்வி நெகிழ்ச்சி போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன.
மறைமுகத் தொடர்புபலவழிகள் மூலம் ஏற்பட முடியும். முதலாவதாக நாணயப்பெறுமதி இறக்கம் இறக்குமதி செய்யப்படும் உள்ளிட்டுப் பொருட் களின் விலையினை அதிகரிப்பதன் மூலம் பொது விலைமட்டத்தினை அதி கரிக்கின்றது.ஏனைய காரணிகள் மாறாதநிலையில் நாணயப் பெறுமதிஇறக்க மானது முதலில் இறக்குமதி செய்யப்படும் விவசாய உள்ளிடுகள் (களை நாசினி, கிருமிநாசினி, உரம், விதைகள்) கைத்தொழில் உள்ளிடுகள் (மூலப் பொருட்கள், சக்திவளங்கள்) என்பவற்றின் விலையை அதிகரிக்கின்றது.இது உற்பத்திச் செலவினை அதிகரித்து விவசாய, கைத்தொழில் முடிவுப்பொருட் களின் விலையும் அதிகரித்து இறுதியாக பொது விலை மட்ட அதிகரிப்புக்கு வழிகோலுகின்றது. இவ்விளைவின் அளவினை மொத்த இறக்குமதியில் உள்ளிட்டின் பங்கு, உள்ளிட்டுப் பொருட்களின் விலைசார் கேள்வி நெகிழ்ச்சி, அந்நாட்டின் வர்த்தகக் கொள்கை போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன.
இரண்டாவதாகப் பெறுமதி இறக்கம் கூலியினை அதிகரிப்பதன் மூலம் பொது விலைமட்டத்தினை அதிகரிக்கின்றது. பெறுமதிஇறக்கம் இறக் குமதி செய்யப்படும் பொருட்களின் விலையை அதிகரிக்கும். இறக்குமதிப் பொருட்களின் விலை அதிகரிப்பு பொதுவிலை மட்டத்தினை அதிகரிக்கும். பொதுவிலை மட்ட அதிகரிப்பானது கொள்வனவு சக்தியைக் குறைக்கும். கொள்வனவு சக்திகுறைவடைவதால் தொழிலாளர் வாழ்க்கைத்தரம் பாதிக் கப்படும். தொழிலாளர் வாழ்க்கைத்தரம் பாதிக்கப்படுவதால் அவர்கள் கூலி உயர்வு கோரிப் போராடுவார்கள். இது கூலியை அதிகரிக்குமாயின் அதற்குத் ” தராதரமாக உற்பத்திச் செலவு அதிகரிக்கும். உற்பத்திச் செலவு அதிகரித்தால் இது மீண்டும் கூலி உயர்வினைத் தூண்டும். இதன் திரண்ட செய்முறை தொடர்ச்சியாக பொதுவிலை மட்டத்தில் அதிகரிப்பினை ஏற்படுத்துகின்றது. இவ்விளைவின் அளவினை தொழிலாளர் வருமானம், தொழிற் சங்கப்பலம், இறக்குமதியில் தங்கியிருக்கும் அளவு போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன.

Page 13
ஏகலைவன் - கணை 6
மூன்றாவதாகப் பெறுமதி இறக்கம் ஏற்றுமதிப் பொருட்களின் விலை யை அதிகரிப்பதன் மூலம் பொதுவிலை மட்டத்தினை அதிகரிக்கின்றது. பெறு மதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை அதிகரிக்கின்றது. இப் பொருட்கள் ஏற்றுமதிக் கைத்தொழிலுக்கு உள்ளிடாகப் பயன்படுத்தப்படும் போது அவற்றின் உற்பத்திச்செலவினை அதிகரிக்கின்றது. இது ஏற்றுமதிப் பொருட்களின் விலையை அதிகரிக்கின்றது. இதனால் ஏற்றுமதியின் போட்டி யிடும் திறன் பாதிக்கப்படுகின்றது. எனவே ஏற்றுமதியின் போட்டியிடும் திறனைப் பாதுகாப்பதற்கு மீண்டும் நாணயப்பெறுமதி இறக்கம் செய்ய நேரிடும். இது மீண்டும் ஏற்றுமதிக் கைத்தொழிலின் உள்ளிட்டுச் செலவினை அதிகரித்து ஏற்றுமதியின் போட்டியிடும் திறனைப் பாதிக்கும். இதன் திரண்ட விளைவே. பணவீக்க - பெறுமதிஇறக்க நச்சுவட்டம் எனப்படும். நச்சுவட்டத்தின் ஆரம் பம், அதன் தொடர்ச்சியான இயக்கம் என்பவற்றிற்கு பெறுமதி இறக்கம் குறைந்தளவு பங்கினையே வகிக்கின்றது. இருந்தபோதிலும் சிறிய திறந்த பொருளாதாரங்களில் பணவீக்க-பெறுமதி இறக்க நச்சுவிட்ட செய்முறையில் பெறுமதி இறக்கத்தின் பங்கு உயர்வாக இருக்கின்றது (Bond 1980) .இவ் விளைவின் அளவினை இறக்குமதி உள்ளீடுகளுக்கான கேள்வி நெகிழ்ச்சி, ஏற்றுமதிப் பொருட்களுக்கான கேள்வி நெகிழ்ச்சி வர்த்தகத் தொடர்பினைக் கொண்டிருக்கும் நாடுகளின் நாணயப் பெறுமதி இறக்க அளவு போன்ற காரணி கள் நிர்ணயிக்கின்றன.
நான்காவதாகப் பெறுமதி இறக்கம் தேசிய வருமானத்தினை அதி கரிப்பதன் மூலம் பொதுவிலை மட்டத்தினை அதிகரிக்கின்றது. நாணயப் பெறுமதி இறக்கம் வெளிநாட்டு நாணய வடிவில் உள்நாட்டுப் பொருட்களின் விலையை மலிவாகக் காட்டுவதால் பெறுமதி இறக்கம் செய்த நாட்டின் ஏற்று மதிப் பொருட்களுக்கான கேள்வியை அதிகரிக்கும். இதனால் ஏற்றுமதிஅளவு அதிகரித்து ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். இது நாட்டின் தேசிய வருமா னத்தினை அதிகரிப்பதன்மூலம் உள்நாட்டுப் பொருட்களுக்கான கேள்வியை அதிகரித்து பொதுவிலை மட்டத்தில் அதிகரிப்பினை ஏற்படுத்துகின்றது. இவ்விளைவின் அளவினை ஏற்றுமதிக் கைத்தொழிலின் தன்மை, ஏற்றுமதிப் பொருட்களின் விலைசார் கேள்வி நெகிழ்ச்சி, பெறுமதி இறக்க அளவு போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன.
ஐந்தாவதாகப் பெறுமதி இறக்கத்தின் நிச்சயமற்ற தன்மையால் காப் புறுதிச் செலவு அதிகரிப்பதன் மூலம் பொது விலை மட்டம் அதிகரிக்கின்றது. நாணயமாற்றுவீத மாற்றங்களை எதிர்வு கூற முடியாது. இதனால் ஏற்றுமதி
(118) سمسےح

ஏகலைவன் - கணை 6
யாளர்களும், இறக்குமதியாளர்களும் நிச்சயமற்ற தன்மையினை எதிர்நோக்கு கின்றனர். ஆகையால் ஆபத்தினைத் தவிர்ப்பதற்காக நிச்சயமற்ற தன்மை க்கு எதிராகக் காப்புறுதி செய்து கொள்ள முயல்வர். இக்காப்புறுதிச் செல வானது உற்பத்திச் செலவில் எளிதாக உள்ளடக்கப்படுவதால் வர்த்தகப் பொருட்களின் விலைகளில் அதிகரிப்பினை ஏற்படுத்த முடியும். நெகிழும் நான யமாற்றுவீத முறையில் நிச்சயமற்ற தன்மை அதிகம் இருப்பதால் இந்நாணய மாற்றுவீத முறையின் கீழ் வர்த்தகப் பொருட்களின் விலை அதிகரிப்பதற்கும் ggotb 60 BTU600TLDITó5 Sqbdisdairpg). (Crockett and Goldsten 1976). இவ்விளைவின் அளவினை நாணயமாற்றுவீத அசைவின் அளவு, ஆபத்தின் தன்மை, காப்புறுதிக் கட்டுப்பணத்தின் அளவு ஏற்றுமதிக் கைத்தொழிலின் முதலீட்டின் அளவு போன்ற காரணிகள் நிர்ணயிக்கின்றன.
நாணயப் பெறுமதி இறக்கம் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் வர்த்தகப் பொருட்களின் விலையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதன் மூலமே பொது விலை மட்டத்திலும் மாற்றத்தினை ஏற்படுத்துகின்றது. நாணயப்பெறுமதி இறக்கம் வர்த்தகப் பொருட்களின் விலைகளின் மீது எந்தளவுமாற்றத்தினை ஏற்படுத்துகின்றது என்பதினைச் சரியாக அறிவதற்கு பிரித்தெடுப்பு விளை வினைக் (pass-through effect) கணிப்பிட வேண்டும். பிரித்தெடுப்பு விளைவு என்பது குறிப்பிட்ட நாட்டில், குறிப்பிட்ட காலப்பகுதியில் வர்த்தகப் பொருட் களின் விலைகளில் உண்மையாக ஏற்பட்ட அதிகரிப்புக்கும் அதாவது பணக் கொள்கை, இறைக்கொள்கை, வர்த்தகக்கொள்கை, கேள்வி, நிரம்பல் நெகிழ்ச்சி, நாணயமாற்றுவீத தாக்கம் இல்லாதபோது ஏற்பட்ட கருதுகோள் அதிகரிப்பிற்கும் இடையிலான வித்தியாசத்தினைக் குறிக்கும். பிரித்தெடுப்பு விளைவு பெறுமதி இறக்கம் இறக்குமதிப் பொருட்களின் விலையை உடனடி யாக அதிகரிப்பது இல்லை எனவும் முழுமையான பிரித்தெடுப்பு விளைவு இரு வருடங்களின் பின்புதான் ஏற்படும் எனவும் (Spitaler 1980) கூறுகின்றது. எனினும் பிரிட்டன்வூட்ஸ் அமைப்பின் முறிவு, உலகமயமாக்கல், உலக வர்த்தக நிறுவனத்தின் தோற்றம் என்பன பொதுவிலை மட்டத்திற்கும் நாணய மாற்று வீத மாற்றத்திற்கும் இடையே பலமான தொடர்பு இருப்பதினை உறுதி செய்கின்றன.
சிய்பாய்களின்
சிலைகளைக் கொன்றது
gIIIIIIIrerfuil air cLIGoTIT t

Page 14
=്യങ്ങബഖങ്ങി - ബങ്ങ് 6
உசாத்துணை நூல்கள்
Bond, M.E. 1980. Exchanage Rate, Inflation and Vicious Circles, IMF Staff Papers. Vol.27. pp.679-711.
Chaudhuri.K. 2002. Convergence of Inflation Rates During Flexible Exchange Rate Period. Indian Economic Review. Vol.XXXVIL No.1 pp 59-68
Crockett, A.D., and Goldstein.M. 1976. Inflation Under Fixed and Flexible Exchange Rates. IMF Staff Papers. Vol.23. pp 509-543.
Obstfeld, M. 2002. Inflation- Targeting Exchange Rate Pass- Through and Volatility. American Economic Review. Vol 92. No.2 pp. 102-107.
Robson, W., Webb, T.R., Townsend, M.A 1979. The Influence of Exchange Rate Changes and Prices: A Study of 18 Industrial Countries. Economica. Vol.46. pp27-50
Sodersten, Bo and Reed, G 1994 International Economics. Houndmills: Macmillan Publishers Ltd.
Spitaller, E. 1980. Short-Run Effects of Exchange Rate Changes on Terms of Trade and Trade Balance. IMF Staff Papers. Vol.27. pp.320-348
Wijesinghe, D.S. 1990 Exchange Rate Changes and Their Impact on Inflation. Staff Studies. Vol.20.No.1&2. pp.47-73.
த.இராஜேஸ்வரன் முதுநிலை விரிவுரையாளர் , பொருளியல் துறை , பேராதனைப் பல்கலைக்கழகம்.
 
 
 
 
 
 
 
 

உணஏகலைவன் - கணை 6
வீடு திரும்பி விரைந்து வந்து உங்களது பாடென்ன என்று
பார்த்தேன் வழமை போல் ! @么 €ച്ച விழியிரண்டும் விட்டத்தை வெறிக்க, 22 கரம் மெதுவாய்க் ീച്ച குளிர்ந்து வர. நீங்கள் குறண்டிக் கிடந்தீர்கள் சர்வநாடியும் எனக்குள் அடங்கிவிட ஓலமிட்டேன் உங்கள் உதிர்வை உலகுக் குரைத்தார்கள்.
பாட்டா. எனில் என்றும் பாசத்தின் முழுஅளவைக் காட்டி எனை வளர்த்த கற்பகமே. .
நான்கைந்து வயதினிலே உங்கள் வலக்கை விரல்பிடித்து அயலெல்லாஞ் சுற்றி "அது என்ன இது ரேன்ன" எனக்கேட்டுக் கேட்டு எத்தனையோ கற்றதனை. அரிவரிக்குப் போன அந்நாளில் . உற்சாக உருவாய் எனைத்துக்கிச்
சென்றென்னோடிருந்ததனை. நகரத்துப் பள்ளியிலே நான் படிக்கப் போகையிலே சைக்கிளேடத் தெரியாமல் எனைக் கூட்டி நடந்ததனை. துடுப்பாட்டம் பழக நான் துடித்தநாளில் பந்து வீசப் பொடியனாக மாறி விழுந்து எழும்பியதை ... , காலை ரியூசனென்று கண்ணயர்ந்தால் புலரியின் முன் கோப்பிக்குத் தண்ணிர் கொதிக்க வைத்து ;
la N. C-21 - )

Page 15
ஏகலைவன் - கணை 6
எனையெழுப்பிக் கூதல் கலையவைத்துக் கோப்பியூற்றித் தந்ததனை. பென்சன் எடுத்து வந்தால்
பிண்னேரம் போளி, வடை என்று எதையேனும் எனக்கு வேண்டித்தாறதனை. , கொஞ்சம் வளர்ந்துநான்
சைக்கிளேடப் பழகியபின் தன்னோட வராததற்காய்த் தவித்துப் பலதடவை குழந்தைபோல் கோபித்துக் கோவிலுக்குப் போனதனை. காலை புறப்பட்டு வீடு மாலைசேருகிற வாலைப்பருவத்தில்
எனை ஏக்கப் பார்வையுடன் "ராசா "என அழைத்து எனைக்கரைய வைத்ததனை. , வீட்டில் எவருடனும்
எரிந்து விழுந்தாலும் என்னோடு என்றும் இனிப்பாக நின்றதனை. நாலு மணிக்கெழுந்து நீரள்ளி,
அடுப்பு முட்டி அடிவளவு முற்றம் அனைத்தினையுங் கூட்டிக்
குளித்து,
அனுட்டானம்’பார்த்துக்குறிவைத்து முதல்நாள் பறித்துவைத்த மொட்டில் மலர்தெரிந்து கோயில் பல சென்று
பின் சந்தை கடையென்று
நிதமும் ஒரு ஒழுங்கில் ' பொடி நடையாய்த் திரிந்ததனை. y சண்டை வலுத்திருந்த தருணத்தில்
காலொன்றிற்
குண்டுபட்டு. வேலைசெய்ய இயலாதிருந்ததனை. y இடம்பெயர்விற் சென்று இடர்படையில்
புதுச்சூழல்; தடம்மாறிப் போன தனிவாழ்வு : என்பவற்றால்
(22 N

தணஏகலைவன் - கணை 6
வழமைக் கடமை தவிர்த்து ஒடுங்கியதை . மீண்டும் ஊர் மீண்டு
கோவில் மணிகேட்டால் “முருகா ” எனக் கண்ணிர்மல்கிக் கசிந்ததனை. கட்டிலே வாழ்வாகக்
காலம் கழிகையிலே
இடைக்கிடையில் கோவிலுக்குச் சைக்கிளிலே நான். ஏற்றிக் கொண்டு செலும்போது குளிர்ந்து மகிழ்ந்ததனை. . முதுமையிலே குழந்தையாகி
அடம்பிடித்துப் பல இரவு எதுவென்று தொடர்பற்ற பழங்கதை புசத்தியதை . Sy சிலவேளை நான் கூடச் சினந்ததனை. ,
L16, 25t-6026/
எமையெல்லாம் வெருட்டி விட்டு ' மீண்டுங் கண் திறந்ததனை. கடைசியிலோர் காய்ச்சலிலே கட்டிலிலே சரிந்தபடி நீண்ட தினங்களப்
நினைவற்றுக் கிடந்ததனை.
அத்த நட்சத்திரஞ்சொல்லி அருச்சனை நான் செய்து. உங்கள் பேச்சை மீண்டுங் கேட்கப் பெரிதும் விரும்பியதை . jV எண்ணியெண்ணிப் பார்க்கின்றேன்! இன்றைக்குள் நீங்கள் போய். ஓராண்டு ஆயிற்றா ? “ஓம் "என்று திவச'நாள் கூறக்கணி துடைக்கின்றேன். உங்கள் நினைவினை - இப் பிறவியிலே மறப்பேனா ?
பிரதிபலன் பாராமல் -
அன்புவைக்க ஆளற்று. நாகரிகம் என்று கொண்டு , செல்லுகிற வாழ்வில் எல்லாஞ் செயற்கையாச்சே. ! உங்களைப்போல்
ஒரு உறவை நான் . எனது பேரனுக்கு வழங்குவன7 ?
ー

Page 16
ஏகலைவன் - கணை 6
லூசிப்புத் திறனை ஊழ்த்தல்
"வாசிப்பு மனிதனைப் பூரணமானவனாய் ஆக்குகின்றது ” என்பது ஓர் ஆங்கிலப் பொன்மொழி. இன்று வாசிப்புப் பழக்கம் எம்மிடையே அருகி வருகின்றது. சிறப்பாகக் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றிலே ஈடுபடும் மாணவர் களிடையேயும் ஆசிரியர்களிடையேயும் இக்குறைபாடு பெருமளவு காணப் படுவது கவலைக்குரியதாகும். மோட்டார்வண்டியிலே ஊதுகுழல் (Hom) தவிர்ந்த மற்ற உறுப்புக்கள் யாவும் இரையுமானால் அதன் கதியாதாகும் ? கல்வியுடன் நேரடித் தொடர்புடையோர் கல்விக்கு இன்றிமையாச் சாதனமான வாசிப்பிலே கவனம் செலுத்தாவிடில் அவர்களின் கதிஇந்த மோட்டார் வண்டி யின் கதி போன்றதுதான்.
இன்று பல்வேறு கவனம் கலைப்பான்களால் (Distracters) வாசிப்புப் பழக்கம் கல்வியாளரிடையே அருகிவருகின்றது. இந்நிலை கட்டாயமாக மாற வேண்டும். இதற்கு வாசிப்புத் திறனை வளர்க்கும் முயற்சிகள் முனைப்படை தல் இன்யியமையாததாகும். இங்கு இவ்விடயம் சார்ந்த சில கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன.
வாசிப்பின்போது நிகழ்வன :
வாசிக்கும்பொழுது எமது கண்கள் இடப்பக்கத்தில் இருந்து வலது பக்கமாக அச்சடித்த அல்லது எழுதிய வரிகளிலே பயணம் செய்கின்றன. இந் தப் பயணத்தின்போது கண்கள் அமைதியாக அசைவின்றிச் செல்லவும் கூடும். இமைத் துடிப்பினால் அசைவாட்டம் அடைந்து செல்லவும் கூடும். இந்த இரு தன்மைகளையும் ஒருவர் வாசிக்கும்பொழுது நாம் நன்கு அவ தானிக்கலாம்.
இவ்வாறு கண்கள் பயணம் செய்கையில் மூளையானது வரிகளி லுள்ள சொற்களை இனங்கண்டு கொண்டு பதித்துக் கருத்துக்களை உரு வாக்குகின்றது. கண்கள் தரிக்கும் ஒவ்வொரு இடத்திலும் மூளையில் கருத் துப் பதிவு நிகழ்கின்றது என்பதுதான் இதன் பொருள். தரித்தலின் கால இடை வெளி பெரும்பாலும் 3/4 செக்கனாக இருக்கும்.
ܓܔ ܡ ܐܚ C- 24-)

Eணஏகலைவன் - கணை 6
ஒரு முறையில் எத்தனை எழுத்துக்களைப் பதிக்கலாம். நான்கு எழுத்துக்கள் என்பது இத்துறையில் ஆராய்ந்தோர் வந்துள்ள முடிபாகும். கண்களின் கூர்மைக்கும் மூளையின் கிரகிக்கும் ஆற்றலுக்கும் ஏற்ப எழுத் துக்களின் அளவுகூடுதலும் உண்டு. குறைதலும் உண்டு. சராசரியாகப்பார்க் கும்பொழுது நான்கு எழுத்துக்கள் என்பதே பொதுவிதி. ஒரு சமயத்தில் எத் தனை எழுத்துக்களைப் பதிக்க முடியுமோ அதுதான் ஒருவரின் அடையாளங் eöff60ö g96IIQ (Reiognition Span) GI60Té 6löffcstas.
இவ்வாறுபதிக்கும்பொழுதுபதிக்கப்படும் சொல்லின் இடப்புறத்திலும் வலப்புறத்திலும் உள்ள சொற்களை அவதானிக்கவோ கிரகிக்கவோ முடியாத பொழுது அடையாளம் காண்அளவு குறைவானது என்று கொள்ளப்படும். பக்கச் சொற் கிரகிப்பின் தொகை கூடக் கூட அடையாளங்காண் அளவும் கூடுதலாய் உள்ளது என்பது பெறப்படும். ஒரு வரியில் ஒரே சமயத்தில் இடம்பெறும் அடையாளங்காண் அளவின் கூடுதலுக்கேற்ப விரைந்த வாசிப்பு நிகழ்கின்றது. குறைதலுக்கேற்பத் தாமத வாசிப்பு நிகழ்கின்றது. தாமதமாக வாசிப்போர்தங்கள் அடையாளங்காண் அளவைக் கூட்டுதற்குப்பயிற்சிகளை இடைவிடாது மேற்கொள்வது அவசியமாகும்.
தாமதமான அடையாளங்காண் அளவு காரணமாகப் பொருட் கிர கிப்பிலும் தடை ஏற்படுகின்றது. இதனால் முயற்சி கூடுதலாக இருந்தாலும் பயன் குறைவாகவே அமைகின்றது. எனவே அடையாளங்காண் அளவைக் கூட்டியே ஆகவேண்டும்.
வாசிக்கும்பொழுது முதலில் இனங்கண்ட சொற்களைக் கருத்துத் தெளிவில்லாத தாமத வாசகர் (Slow Reader) மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்க்க வேண்டியவராகின்றார். இதனால் பொருட் கிரகிப்பும் சிந்தனையை ஒருமுகப்படுத்தலும் முடியாது போய் விடுகின்றன.
குண்டுடன் தவறி பள்ளியில் விழுந்தது 'பைலட் வாங்கி வைத்த பொம்மை
புலம்பெயர் தேசத்தில் புதிர் மரணங்கள் துயற்படும் துயிலுமில்லங்கள்
ܓܔ ̄ ܡܡ -ܐܬܐ C- 25 - )

Page 17
ஏகலைவன் - கணை 6
வாசித்தலின்போது ஏற்படும் வேறு சில குறைபாடுகள் :
சிலர் எவ்வளவுதான், அறிவுமுதிர்ச்சிஅடைந்தவர்களாய் இருப்பினும் வாசிக்கும்பொழுது உரக்க வாசிப்பவர்களாகவே இருக்கின்றனர். றவுண்றி என்ற கல்வியியலாளர் இவர்களை வாசிக்கும்பொழுது புத்தகத்தினூடாகப் பேசிக் கொள்பவர் என்ற சொற்றொடராலே குறிக்கின்றார். (Those who talk themselves through a book) ggöl çobanı606â Göfl'GOL G16öı6p 6öTGü60 வேண்டும்.
தொண்டை , நர் ஆகிய உறுப்புக்களுக்கு அநாவசியமான வேலை கொடுப்பதால் வாசிப்புத்திறன்குறைவதோடு, விரைவில் வாசிப்பில்களைப்பும் ஏற்படுகின்றது. எனவே இந்தச் சேட்டையைத் தவிர்த்தல் வேண்டும். சிலர் குறைந்தது குசுகுசு என்று முணுமுணுத்து வாசிப்பதும் உண்டு. இவர்கள் புத்தகத்தோடு இரகசியம் பேசுபவர்கள் என்று கொள்ளலாம். இவர்களும் இத னைத் தவிர்த்தல் வேண்டும்.
சொற்றொடர்களிலே அடிக்கடிதரித்தலையும் குறைத்து, பொருளைச் சொல்லாக அன்றிச் சொற்றொடர்களாக வாசித்துக் கிரகிக்கும் தன்மையைப் பெற முயற்சி செய்தல் நல்லது. வாசிப்பைத் திருத்திக் கொள்ள விரும்புவோர் பின்வரும் கேள்விகளை அடிக்கடி கேட்டுக் கொள்க.
1. உரத்து வாசிப்பதிலேயா நான் இப்பொழுதும் ஈடுபடுகின்றேன் ? 2. வாசிக்கும்பொழுது என் கண்கள் முன்போல அடிக்கடி சொற்களிலே
தரித்து நிற்கின்றனவா ? எனது வாசிப்பின் கிரகிப்பளவு முன் உள்ளது போலவே இருக்கின்றதா ? 4. முன்போலச் சொல், சொல்லாகத்தான் இப்போதும் வாசிக்கின்றேனா?
3
够
இந்தக் கேள்விகளுக்கு இல்லை, அல்லது ஆம் என்ற விடைகள் கிடைப்பதைப் பொறுத்து ஒருவரின் வாசிப்பில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, ஏற்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
(ஆதாரம்: நந்தி நூல்கள் வரிசையில் நான் எழுதிய "படிப்பது எப்படி ?” (1973) என்ற நூலின் ஓர் இயலின் சாரம்)
கலாநிதி க.சொக்கலிங்கம் (சொக்கன்) கி
イエト C- 26-)

ஏகலைவன் - கணை 6
புகலிடக் கவிதைகள் : சில குறிப்புக்கள்
பேராசிரியர் க.அருணாசலம்
தமிழ்த்துறை
பேராதனைப் பல்கலைக்கழகம்
தமிழ்மொழி , தமிழ் இனம், தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு ஆகியனவற்றின் தாயகம் தமிழகமே. நீண்டகாலமாகத் தமிழகமே இவற்றின் உறைவிடமாகத் திகழ்ந்து வந்துள்ளது. தமிழகத்தின் அயலிலே அமைந் துள்ள ஈழமும் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் வளர்ச்சிக்குப் பணியாற்றி வந் துள்ளது. நீண்ட காலமாகத் தமிழகத்தைப் பின்பற்றி வந்துள்ள ஈழம் இரு பதாம் நூற்றாண்டிலே தனக்கெனத் தனித்துவமான பண்புகளைக் கொண்ட இலக்கியங்களைப் படைக்கலாயிற்று. பல்வேறு காரணங்களால் பத்தொன்ப தாம் நூற்றாண்டில் தமிழ்மக்கள் சென்றுகுடியேறிய மலாயா, சிங்கப்பூர் முதலிய நாடுகளிலும் தமிழ் இலக்கியம் தனித்துவப்பண்புகளுடன் வளர்ந்துகொண்டி ருக்கின்றது. இதன் காரணமாகவே இன்று தமிழ் இலக்கியம் என்னும்போது தமிழக இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கியம், மலேசியத் தமிழ் இலக்கியம் என்றெல்லாம் பேசப்படுகின்றது.
கடந்த சில தசாப்தங்களாகத் தமிழ் இலக்கியம் கடல்கடந்து உலக ளாவியதாக வளரத் தொடங்கியுள்ளதை அவதானிக்கலாம். இருபதாம் நூற் றாண்டுத் தமிழ் இலக்கிய வளர்ச்சியின் புதிய பரிமாணங்களுள் ஒன்றாக இது காணப்படுகின்றது. கடந்த சில தசாப்தங்களாகக் கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், சுவிற்சிலாந்து, நோர்வே, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா முதலிய நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலரால் இலக்கிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவை புகலிட இலக்கியங்கள் என அழைக்கப்படுதல் இன்று வழக்காகிவிட்டது.
இலங்கை சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து இன முரண்பாடு தீவிர மாக வளரத் தொடங்கியது. 1958ஆம் ஆண்டிலும் 1977ஆம் ஆண்டிலும் இலங் கையின் பல பாகங்களிலும் இடம்பெற்ற இனக் கலவரங்கள் தமிழ்மக்களை
வெகுவாகப்பாதிக்கலாயின. சிறுபான்மையினமத்கள்தமது:ஈழத்திழ்ச்சிகன்
《།།《 C-27 -) 丽

Page 18
ஏகலைவன் - கணை 6
களுக்காகவும் விடுதலைக்காகவும் பல தசாப்தங்களாக நடாத்திவந்த சாத் வீகப் போராட்டம் 1970 களின் பிற்பகுதியில் இருந்து இளைஞர்களின் ஆயுதப் போராட்டமாகப் பரிணமிக்கலாயிற்று. 1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் குரூரம் மிக்க இனப்படுகொலைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டம் உக்கிரம் பெறலாயிற்று. இலங்கையின் வடக்கு, கிழக்குப்பகுதிகள் உக்கிரம் மிக்க போர்க்களங்களாக மாறின. உயிர், உடைமை இழப்புகள் அதிகரிக்க லாயின. குரூரம் மிக்க போராட்டச் சூழ்நிலைகளாலும் பொருளாதார நெருக்கடி களினாலும் பிறகாரணங்களாலும் ஆரம்பநிலைக் கல்விகற்றோர்முதல் உயர் கல்விபெற்றோர் வரை இலக்கிய கர்த்தாக்கள் முதல் இலக்கிய ஆர்வலர்கள் வரை என இளந்தலைமுறையைச் சேர்ந்த பல திறத்தினரும் இலட்சக் கணக்கில் மேலைநாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இந்தியாவுக் கும் இடம்பெயரலாயினர்.
தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடு களுக்குப் புகலிடம் தேடிச் சென்ற ஈழத்தவர்களால் படைக்கப்படும் இலக்கி யங்களே இங்கு புகலிட இலக்கியம்’ எனக் கொள்ளப்படுகின்றது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்தியாவில் பிரித்தா னியரது ஆட்சி நிலை நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து கூலிகள் என்னும் பெயரில் இலட்சோப லட்சம் தமிழ்மக்கள் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளிலும் தீவுகளிலும் குடியேற்றப்பட்டனர். ஆயின் அவர்கள் புகலிடத்தவர்களாகக் கரு தப்படவில்லை. கல்விஅறிவற்ற அம்மக்கள் மத்தியில் இருந்து இலக்கியங்கள் வெளிவரப் பல தசாப்தங்கள் சென்றன. ஆயின் ஏறத்தாழ அதேகாலப் பகுதி யில் உயர்கல்வி, தொழில்வாய்ப்பு என்ற ரீதியில் ஆங்கிலம் கற்ற சிலர் பிரித் தானியா, அமெரிக்கா முதலிய நாடுகளிற் குடியேறினர். அவர்கள் அகதிகள் அல்லர். அவர்களது படைப்புகளும் புகலிட இலக்கியங்கள் அல்ல.
இந்நிலைமைக்கு மாறாகக் கடந்த சில தசாப்தங்களில் ஈழத்தி லிருந்து புகலிடம்தேடி மேலைநாடுகளுக்குச் சென்றவர்களுள் கணிசமான வர்கள் கற்றறிந்தவர்களாகவும் இலக்கிய கர்த்தாக்களாகவும் இலக்கிய ஆர் வலர்களாகவும் விளங்கியமையால் இலக்கிய முயற்சிகளும் உடன் நிகழ்வாக இடம்பெறலாயின.
தகர்க்கப்பட்ட வீடுகளில் தழைத்திருந்தது வாசலில் வைத்த கள்ளிச்செடி
la-N C- 28 -)

தணஏகலைவன் - கணை 6
புலம்பெயர்ந்துசென்றவர்கள்பற்றிவெவ்வேறான அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் ஈழத்து இலக்கிய கர்த்தாக்கள் பலர் வெளியிட்டுள்ளனர். புகலிடம் தேடிச் சென்றவர்கள் எல்லோரும் போர்க்காலச் சூழ்நிலையின் உக் கிரம் காரணமாக வெளியேறியவர்கள் அல்லர். அதிகரித்து வரும் தேவை களுக்கும் வேகம் பெற்றுவரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் ஈடு கொடு க்கு முகமாக - திரைகடலோடியும் திரவியம் தேடுவதற்காகச் சென்றவர்கள். எப்பொழுது வெளிநாட்டு முகவர் நிலையங்களில் இருந்து சாதகமான பதில் வரும் எனக் காத்திருந்து, பதில் வந்ததும் பெற்றாரையும் மனைவியையும் மக் களையும் சுற்றத்தாரையும் செய்து கொண்டிருந்த தொழிலையும் என யாவற் றையும் விட்டு விட்டு ஓடியவர்கள். அத்தகையவர்கள் பலர் "திடீர்ப் பணக் காரர்” களகமாறினர். அவர்களது பெற்றோர்களும் "என்ரை பிள்ளை வெளி நாட்டிலை உத்தியோகம் பார்க்குது; வெள்ளைக் காரியைக் கலியாணம் செய் துள்ளது. எங்களையும் அங்குவரட்டாம்” என விம்பு பேசலாயினர்.
புலம்பெயர்ந்து சென்று புகலிட நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப் போரெல்லாரும் தமதுநிலைப்பாட்டைப்பற்றியோ தாயகம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ சிந்திக்கத் தெரிந்தவர்கள் அல்லர். தேடிச் சோறு நிதந்தின்னும் வேடிக்கை மாந்தர்களாகவும் சேற்றெருமைகளாகவும் எங்கிருந்தாலும் எத் தகைய அவஸ்தைகளைப் பட்டாலும் மூக்குமுட்டக் குடித்து வயிறாரஉண் டால் போதும் என வாழ்பவராகவும் பலர் உள்ளனர். பாரம்பரிய விழுமியங்களை மறந்து முகவரிகளை இழந்து கலாசாரச் சீரழிவுகளுக்குள்ளாகி ஆள் உயர மான "கேக் வெட்டி, பெயர்களிற் சில மாற்றங்கள் செய்து தாமும் தமது முன் னோர்களும் பிறந்து வளர்ந்த மண்ணை மறந்து தாம் பிறந்து வளர்ந்த மண் னின் கலாசாரத்தைப் "பனங் கொட்டைக் கலாசாரம்” என எள்ளிநகையாடிப் புதுவகையான வாழ்க்கை நடத்துபவர்கள் பலர்.
இத்தகையவர்களுக்கு மத்தியில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே தமது இன்றைய பரிதாப நிலையையும் நடந்து கொண்டிருக்கும் அவலங் களையும் தாமும் தமது முன்னோர்களும் பிறந்து வளர்ந்து வாழ்ந்த தாய கத்தின் நிலையையும் எதிர்காலத்தையும் பற்றிச் சிந்திக்கின்றனர் ; தவிக் கின்றனர்; ஏங்குகின்றனர். அவர்களுட் சிலராவது தமது அனுபவங்களையும்
அழத்தபின் அகதி வருந்தினான் நுளம்பின் தடும்பத்திற்காக
ܓܒܪܐ ܐܚܝ C-29 - )

Page 19
ஏகலைவண் - கணை 6
சிந்தனைகளையும் இலக்கியப் படைப்புகளாக்க முனைகின்றனர். அவையே இன்று நமக்குப் புகலிட இலக்கியங்களாகக் கிடைக்கின்றன.
புகலிட இலக்கியங்களின் இன்றைய வளர்ச்சி நிலை நம்பிக்கை யூட்டுவதாகவே காணப்படுகின்றது. இவ் வளர்ச்சிவேகம் தொடர்ந்தால் அடுத்துவரும் ஐம்பது ஆண்டுகளுள் அல்லது சற்றுப் பின்னர் புகலிட இலக் கியம் என்னும் தொடர் மறைந்து அதற்குப் பதிலாக ஜேர்மனித் தமிழ் இலக் கியம்,பிரான்சுத் தமிழ் இலக்கியம், கனடாத் தமிழிலக்கியம், சுவிற்சிலாந்துத் தமிழ் இலக்கியம், அவுஸ்திரேலியாத் தமிழ் இலக்கியம் என்னும் தொடர்கள் வழக்கிற்கு வரலாம். தாயகத்திலே பிறந்து வளர்ந்து புகலிடம் தேடிச் சென்றவர் களின் செயற்பாடுகளைத் தவிர்த்துப் புகலிட நாடுகளிற் பிறந்து வளர்ந்து கொண்டிருப்பவர்களின் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் கூர்ந்து நோக்குமிடத்துப் புகலிட இலக்கியத்தின் எதிர்கால வளர்ச்சி கேள்விக்குரிய தாகலாம் என்னும் அச்சம் தோன்றுகின்றது.
புகலிடம் தேடிக் குடியேறிய நாடுகளில் வாழ்வோர் தமது வதிவிடப் பண்பாட்டுப்பிரச்சினைகளையும் தாயகம் பற்றிய ஏக்கங்களையும் எதிர்காலம் பற்றிய எண்ணங்களையும் அகதிவாழ்வின் அவலங்களையும் இலங்கையின் அரசியல் நிலைமை பற்றிய அலசல்களையும் புகலிட நாடுகளிற் புதிதாகப் பெற்றுக் கொண்டிருக்கும் அனுபவங்களையும் பெண்ணிலை வாதச் சிந் தனைகளையும் தமது பிள்ளைகளின் போக்குகள் பற்றிய தவிப்புக்களையும் பிறவற்றையும் கவிதைகளாகவும் கட்டுரைகளாகவும் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் நாடகங்களாகவும் படைத்து வருகின்றனர். இப்படைப்பு களுள் அதிகமானவை அவ்வவ்நாடுகளில் இருந்து வெளிவரும் சஞ்சிகை களிலும் தினசரிகளிலும் வெளியிடப்படுகின்றன. இவற்றுட் கணிசமானவை தனிநூல்களகவோ தொகுப்பு நூல்களாகவோ வெளிவந்துள்ளன.
புகலிடச் சஞ்சிகைகள் என்ற வகையில் அக்கினிக் குஞ்சு, மரபு (அவுஸ்திரேல்யா), லண்டன் முரசு, பனிமலர், புலம் (பிரித்தானியா), தேடல், நான்காவது பரிமாணம், பார்வை, காலம் (கனடா) , தேனி, தூண்டில், சமர், புதுமை, இளைஞன், சிந்தனை(ஜேர்மனி) , அம்மா, பள்ளம், ஓசை, எக்சில் (Exil), சமர் , பாரிஸ் தமிழன், பாரிஸ் முரசு, புன்னகை (பிரான்ஸ்), மனிதம் (சுவிற்சிலாந்து), சுவடுகள், சக்தி(நோர்வே), கற்பகம் (டென்மார்க்) அ,ஆஇ
(ஒல்லாந்து) முதலியன குறிப்பிடத்தக்கன.
(130)
} w ܡܘ | ܐ
Nil1

ஏகலைவண் - கணை 6
"புகலிடக் கவிதைகள் பல்வேறு வகையிலும் ஈழத்துத் தமிழ்க்கவிதை வளர்ச்சியிற் பல புதிய பரிமாணங்களைச் சேர்ப்பனவாக விளங்குகின்றன. புகலிடக் கவிஞர்களை இரு முக்கிய பிரிவுகளுள் அடக்கலாம். முதலாவது பிரிவினர் ; இலங்கையில் இருந்து புகலிடம் தேடிப் புறப்படுவதற்கு முன்பே இலங்கையின் தரமான இளந்தலை முறைக் கவிஞர்களாகவோ முதிய தலை முறைக் கவிஞர்களகவோ விளங்கியவர்கள்; புகலிடம் தேடிச் சென்றபின்பும் தமது அனுபவங்களைக் கவிதைகளாக வடித்துக் கொண்டிருப்பவர்களுள் இலங்கையின் அரசியல் செல்நெறிகளையும் போர்ச்சூழலையும் பிறவற்றையும் இலங்கையில் இருக்கும்போதே கவிதைகள் மூலம் வெளிப்படுத்தியவர்கள். அத்தகையவர்கள் எத்தகைய இன்னல்களுக்காளனாலும் நேரம் தெரிந்து கூவும் சேவல் போன்றவர்கள். அவர்களால் கூவாமல் - கவிதை வடிக்காமல் இருக்க முடியாது. சேரன், வ.ஐ.ச.ஜெயபாலன், சிவசேகரம், க.ஆதவன், ஹம் சத்வனி, இளவாலை விஜயேந்திரன், மைத்திரேயி முதலியோர் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடத்தக்கவர்கள்.
இரண்டாவது பிரிவினர்; பெரும்பாலும் புகலிட நாடுகளுக்குச் சென்ற பின்பே கவிதை முயற்சிகளில் ஈடுபடத் தொடங்கியவர்கள். அல்லது தீவிர ஈடு பாடு காட்டத் தொடங்கியவர்கள். இத்தகையவர்களுட் சிலர் தமக்கு முந்திய பரம்பரையினரான ஜெயபாலன், சேரன் போன்றோரது கவிதை முயற்சிகளுக் கீடான அல்லது விஞ்சிய கவிதைகள் பலவற்றைப் படைத்துக் கொண்டி ருத்தல் விதந்து கூறத்தக்கதொன்றாகும். இவ்வகையில் கி.பி.அரவிந்தன், அ.கந்தசாமி, சுகன், செழியன், சிவம், தமிழ்மாறன், ராகவன், தமயந்தி, தீரன், நாடோடி, அருந்ததி, ஆனந்தபிரசாத்சம்பு, தம்பா,கல்யாணி, சுசீந்திரன், சித்தி, ரமணன், ஆனந்த சுரேஸ், சூரியன், கெளரி, திலீபன், பா.அ.ஜயகரன், ரவி அமிர்தன், வீணைமைந்தன், தமிழன்பன், காங்கயி, நளாயினிமூர்த்தி,தர்மினி, சக்கரவர்த்தி, திருமாவளவன் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
இவர்களது கவிதைகளுட் கணிசமானவை ஓர் அகதியின் பாடல், அகதி , இனி ஒரு வைகறை ’, ‘கட்டிடக் காட்டுக்குள் ', 'இருள் வெளி’, முகங்கொள்','காலத்தின் பதிவுகள்’, ‘கவிதைச் சோலை', 'துருவச் சுவடு கள், இரண்டாவது பிறப்பு, தேவி எழுந்தாள்', 'ஏகலைவழமி’, மறையாத
r நாப் குரைக்கும் இரவு
திடுக்கிடும் தென்னங்குருத்துக்கள் விடியலில் Ĉg5mge2ortomo .... ?

Page 20
ஏகலைவன் - கணை 6
மறுபாதி, கோசல்யா கவிதைகள், அதிகாலையைத் தேடி, எலும்புக் கூடுகளின் ஊர்வலம் முதலிய தொகுதிகளக வெளிவந்துள்ளன.
புகலிடக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்க தொகையின “அரசியற் கவிதைகள்” எனக் கூறக்கூடிய அளவிற்கு அவை இலங்கையின் அரசியல் விவகாரங்கள், அரசியலில் பேரினவாதம் செலுத்தும் செல்வாக்கு, அதனால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அனர்த்தங்கள், அரசியல் ரீதியாகச் சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதிகள், கொடுமைகள் முதலியன வற்றை அம்பலப்படுத்துவனவாகவும் கண்டிப்பனவாகவும் அலசுவனவாகவும் அமைந்துள்ளன. இலங்கையின் அரசியல் விவகாரங்களையும் அனைத்துலக அரசியல் விவகாரங்களையும் ஒப்புநோக்க முயன்றுள்ளன. இலங்கையிலும் பார்க்கப் புகலிட நாடுகளிற் கருத்து வெளியீட்டுச் சுதந்திரம் அதிகமாகை யினாற் போலும் இந்நிலைமை காணப்படுகின்றது. சமகால ஈழத்துத் தமிழ்க் கவிதைகளில் இத்தகைய இயல்பினைக் காண்பதரிது. புகலிடச் சஞ்சிகை களில் இடம்பெறும் இலங்கையின் அரசியல் நிகழ்வுகள், ஏமாற்றுத்தனங்கள், சந்தர்ப்பவாதப் போக்குகள், நடிப்பாற்றல், அரசியல் ஊழல்கள், காடைத் தனங்கள் முதலியன பற்றிய கட்டுரைகளையோ கேலிச் சித்திரங்களையோ (கார்ட்டூன்களையோ) இலங்கையின் தமிழ்ச் சஞ்சிகைகள் வெளியிடமுடியுமா? தணிக்கைச் சபை அவற்றை அனுமதிக்குமா ?
அரசியற் கவிதைகள் என்ற வகையில் கி.பி. அரவிந்தனது கவிதை களும் சிவசேகரத்தின் கவிதைகளும் சேரனின் கவிதைகளும் எமது மிகுதி யான கவனத்திற்குரியவை. எடுத்துக் காட்டாகச் சில கவிதைகளை இங்கு நோக்கலாம். அரவிந்தனது கவிதைகளுட் சில வருமாறு :
"கடல்வாய் கொள்ளுண்ட சிறுபோகம், பெரும்போகம்
நிலம் போலாகுமோ எல்லாமும் பொய்த்ததுவோ... ?
துப்பாக்கி வயப்பட்ட அகதிமுகம் பெறவா
என்சிறு தேசம் உயிர்க் களையை நான் இழந்தேன்?
தேசமெங்கும் தீவிதைத்தேன் ?
வீரிய விதைகள்
இரத்தத்துள் அமிழும் துறவறம் கொண்டதும்
பதர்கள் மிதக்கும் கடுந்தவம் புரிந்ததும்
at N

வரம்பல் பெற்றதும் வீரமும் களத்தே விட்டு வெறுங்கையோடு இலங்கை புகும் இராவனேஸ்வரனாகவா ? சிறகுகளைக் கூட காவிச் செல்ல மாட்டாமல் . சரணாலயம் நீங்கும் ஏதிலிப் பறவை (முகம் கொள் 1992, பக் 25-26) பருத்திவெடித்தால் தறியினில் நெய்யலாம் கரும்பு விளைந்தால் ஆலையில் பிழியலாம் கம்பு பயிரானால் கூழ் காய்ச்சிக் குடிக்கலாம் கூட்டு நினைவினில் பயிராகி வளர்ந்தவை ஆறாத் துயரென்றால். சந்தேகம் கொள்ளற்க கற்களின் உரசலில் தீப்பொறி தெறிக்கும் பாறை இடுக்கிலும் நீர்மை கசியும் சொர்க்க பூமியும் கனவுத் தேசமும் எங்குமே இல்லை இரத்தமும் சதையுமாய்த்தான் பாதைகள் விரியும் என் தேசம் போல வெந்து தனியாக் காடாக (முகங்கொள் பக் 26-29) இன்று போய் நாளை வரும் உயிர்ப்பேன் உங்களிடை இருப்பேன் கைகள் கொள்ள
ஏகலைவன் - கணை 6
கலைச் செல்வங்கள் காவியும் நெஞ்சு முட்ட அன்புதனை நிறைத்தும் நேசக் கடல் நாடி வருவேன் . முகம்பெற்றவனாக ” (முகங்கொள் பக் 29) எனவும் துருவம் தப்பி வந்த என்னை அலாரம் அடித்தெழுப்பும் கடிகாரமுள்
ണ്ണഗ്രങ്ങ് ഉ
தாவலில் ஏறி துள்ளலில் இறங்க மேல் மூச்சு வாங்கும் முழங்கால் சில்லுத் தேயும் ஊரினில் தீண்டாத
இழிசனப் பணிகளை ஆலாய்ப் பறந்து தலைகளிற் சுமக்கக் கூலிகள் பெருகும் பெருமையும் சேரும் சாதியத் தடிப்பிலும் ஒரு சுற்றுப் பருக்கும்
நாரிமுறியக்
(133)
கழுவித் துடைத்து கழிவுகளைக் கொட்டிச் சேவகம் செய்ய வெண்தோல் மினுங்கும் மூட்டுக்குள் வலிக்கும் sé8,0l · · · · · இளைப்பாறென உடல் சோரும் படுத் தெழும்ப இடம்தேடிக் கண்ணயரக் குறண்டிக் கிடக்கும்
Nala1

Page 21
ஏகலைவன் - கணை 6
ஊரும் உறவும் இனசன பந்தமும் கால்களில் இடறும் நாளை நாள் விழுங்கும் தவளைப் பாய்ச்சலில் வாரம் இங்கு நாளாகும் கடிதம் ஏன் வரவில்லை ? மனிதம் சிறுமையுற சூத்திரங்கள் அச்சுறுத்த இயந்திரங்கள் காவு கொள்ளும் துருவங்கள் எதிரெதிராய் துயரங்கள் சமாந்தரமாய் இனி என்ன . 99 (முகங்கொள் பக் 58-59) எனவும் குறுக்குக் கட்டும் நார்க் கடகமும் சுமந்தோரெல்லாம் இழிந்தவரானால் என்னவர் அகங்கள் தரமிங்கும் அளக்கும் கறுப்பினை இகழும் காலணிகளில் முகங்கள் நசுங்கும் சிதையும் அதனால் என்ன ? ஐரோப்பியக் காலன்றோ !
மோதிரக் கையன்றோ ! தோத்திரங்கள் சொல்வோம் Thanks, Merci, Danke ........ கனவுகள் காயமான
மனிதரைப் போல இலைகளை உதிர்த்து உள்ளுக்குள் உயிர்த்து மரங்கள் வெறிக்கும் இருப்பிடம் தொலைத்த எனக்காய் இரங்கும் மலர்கள் தூவிய பீடங்கள் ஒவ்வொன்றிலும் கூர்வாள் உயர்த்திய வீரரைத் தாங்கும் பாயும் புரவிகள் தேசங்கள் வென்றவர் சிலையிலும் முறைப்புடன் தீப்பற்றும்குரல்களால் செவிகளில் அறைவர் “வெளியேறு. சிலைகள் உயிர்க்கும் வாள்முனை மினுங்கும் தாயகம் துறந்தவனே
உனக்கு ஏது இருப்பிடம் ".
(முகங்கொள் பக் 61 - 62)
எனவும் வரும் பாடற்பகுதிகள் மிகமிக உன்னிப்பாக நோக்கத்தக் கவை. “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது ஆன்றோர் வாக் காகும். மேற்படி பாடற்பகுதிகள் யாவும் கி.பி அரவிந்தனின் “முகம்கொள்” என்னும் கவிதைத் தொகுதியில் இருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவை.
இப்பாடற் பகுதிகள் உணர்த்தும் உண்மைகள் யாவை என்பதுபற்றி நாம் ஆழமாகச் சிந்தித்தல் இன்றியமையாத ஒன்றாகும்.
கவிஞன் அரவிந்தன் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தங்களினால் தான்
(34)
Null-1

ஏகலைவன் - கணை 6=ண-
பிறந்து, வளர்ந்து, மண்ணோடுமண்ணாக உருண்டு புரண்டு விளையாட்டில் பனங்கொட்டை சூப்பிச்சுவைத்து உடல் முறுக்கேறி இளமை இன்பங்களை யும் முழுமதியின் குளிர்ச்சியையும் கட்டிளம் காரிகைகளைத் தொட்டுரஞ்சும் சுகத்தையும் இடையிலே இழந்து, பிறந்து வளர்ந்த மண்ணில் இருந்து விரட் டப்பட்டு முதலில் தமிழகத்திற்கும் பின்னர் ஐரோப்பிய நாடுகளுக்கும் முகவரி இழந்தவர்களாகவும் அகதிகளாகவும் நாடற்றவர்களாகவும் சென்று தாம் அங்கு பெற்றுக் கொண்டிருக்கும் சோகமும் ஏக்கமும் குரூரமும் மிகுந்த அனு பவங்களையும் வாழ்க்கை வரண்டு கொண்டிருக்கும் போதிலும் எதிர்காலம் பற்றிய தீரம் மிகுந்த அசுரத்தனமான நம்பிக்கையையும் ஒருங்கே வெளியிடு வதாக இவை அமைந்துள்ளன.
பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களினால் இலங்கையில் குறிப் பாக வடபுலத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற “பனங்கொட்டைத் தமி ழர்கள் "கனடா, அவுஸ்திரேலியா, சுவிற்சிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், டென் மார்க், நோர்வே, சுவீடன், பெரிய பிரித்தானியா, மத்திய கிழக்கு நாடுகள் முத லியவற்றில் வெவ்வேறு வகையான அனுபவங்களைப் பெற்றுக் கொண்டி ருக்கிறார்கள் என்பதே நிதர்சன உண்மையாகும்.
மேற்கண்ட பாடற்பகுதிகளை இயற்றிய கவிஞன் கி.பி. அரவிந்தன் தான் பிறந்து, விளையாடி, வளர்ந்து. உரிமைப் போராட்டங்களில் பங்குபற்றி, வேறு வழியற்ற நிலையில் இரவோடிரவாக யாழ்ப்பாணத்தை விட்டு நீங்கி, பாக்கு நீரிணையினூடாகத் தமிழகத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் வதிந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களும் தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண்ணிலேயே தனது பெற்றோர்களையும் உயி ருக்குயிரான வாழ்க்கைத்துணைவியையும் அன்பினில் விளைந்த அருமைக் குழந்தைகளையும் தாயகத்தையும் விட்டுப் பிரிந்த வேதனையும் உள்ளக் குமுறல்களும் பிரிவுத் துயரமும் தவிப்புகளும் ஏக்கங்களும் இப்பாடற் பகுதி களில் ஒருங்கே வெளிப்படுவதை அவதானிக்கலாம்.
புலம்பெயர்ந்து சென்ற நம்மவர் சிலரின் சாதி அகம்பாவமும் ஆண்ட பரம்பரை என்னும் திமிரும் அற்பத்தனங்களும் புகலிட நாடுகளிலும் தொடர் ந்து கொண்டிருப்பதைக் கண்டு கவிஞன் வேதனையுறுகின்றான்.
சரணாலயம் விட்டு நீங்கிய ஏதிலிப் பறவையாகப் புகலிட நாடுகளில் முதுகு வலிக்கக் கோப்பைகள் கழுவும் ஊரில் தீண்டாத இழிசனப்பணிகளை
گسیح |

Page 22
ஏகலைவன் - கணை 6
மேற்கொள்கிறான். வெள்ளையரல்லாதார் என்னும் நிறவெறிக் கொள்கை யினால் புகலிட நாடுகளின் வெறுப்புக்கும் ஏளனத்துக்கும் குரோதத்திற்கும் தாக்குதல்களுக்கும் உள்ளாகின்றான்; மனிதம் சிறுமையுறசூத்திரங்கள் அச் சுறுத்த இயந்திரங்கள் காவுகொள்ளும் கொடூரங்களுக்காளாகிவாழ்க்கையில் இருந்து அந்நியமாகிறான் ; இயல்பூக்கங்கள் கிளர்ந்தெழும் போதெல்லாம் பிறந்த நாட்டினையும் பெற்றோரையும் அருமைத்துணைவியையும் அன்புக் குழந்தைகளையும் விட்டு நீங்கிய பிரிவுத் துயரினால் வெந்து வெந்து ‘கும்பி கூழுக்கழ கொண்டை பூவுக் கழுததாம். இது எதற்கமுகின்றது இடம் வலம் தெரியாத இடத்தில் ' என அலுத்துக் கொள்கிறான்.
புகலிட நாடுகளில் அகதித் தமிழர்கள் படும் வேதனைகளைக் கவி ஞன் வெளிப்படுத்தும் பாங்கு பாரதியாரின்"ஆப்பிரிக்கத்துக் காப்பிரிநாட்டிலும் தென்முனை அடுத்த தீவுகள் பலவினும். ”, “கரும்புத் தோட்டத்திலே - அவர்கால்களும்..” எனத் தொடங்கும் பாடல் அடிகளை மனக்கண் முன் கொண்டு வருகின்றன. கவிஞனின் வேதனைக் குரல் பாடல்கள் முழுவதி லும் இழையோடுகின்றது.
இத்தகைய அவலங்களுக்கு மத்தியிலும் கவிஞனது உள்ளம் சாம்பி விடவில்லை. மாறாகச் “சாதிய வெக்கையிலும் வேகாத உயிர் நிற வெக்கை பிலா வேகும்” எனச் சவால் விடுகின்றான் ; எதிர்காலத்தைத் தீரத்தோடும் நம்பிக்கையோடும் நோக்குகின்றான் ; “உழு மறுத்துழு மீளவும் மீளவும் பண்படும் நிலம்’ எனவும்,‘எரியவும் வேண்டும் ஒளிரவும் வேண்டும் புயலினுள் ஏறவும் வேண்டும்' எனவும் வேண்டுதல் செய்கின்றான்.
புகலிட நாடுகளிற் சென்று குவியும் அகதிகளின் பரிதாபநிலையை , வந்து வந்து சேர்கின்றன பார். அறுத்தெடுத்த ஈரல் குலைகள் துடிதுடிக்கும் இதயங்கள் உருவி எடுக்கப்பட்ட நாடி நரம்புகள் பதனமான முகங்கள் என வருணிக்கின்றான். கவிஞன் தனது கவிதைகளின் பல இடங்களிலும் ஆழ மான கேள்விகளை எழுப்பிப் படிப்போரை நிதானமாகச் சிந்திக்க வைக் கின்றான்; கருத்துகள் பலவற்றைத் துணிகராண்மையுடன் முன் வைக்கின் றான் ; ‘சயனைட் குப்பியைச் சயனைட் தின்னும் தொப்புள் கொடியில் சயனைட் பூக்கும்’ என எச்சரிக்கிறான். தெளிவும் எளிமையும் வேகமும் மிக்க நடை கவிஞனின் கருத்து வெளிப்பாட்டுக்குக் கைகொடுத்து உதவுகின்றது.
கி.பி.அரவிந்தனது 'முகம்கொள்’ கவிதைத் தொகுதியின் பின் அட்
イエト ay ay " v at G. 36 O

ஏகலைவன் - கணை 6
டையில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் ஆழமான சிந்தனைக்குரியவை; புகலிட நாடுகளில் வாழ்க்கைப் போராட்டம் நடாத்திக் கொண்டிருக்கும் பலரது வாழ் க்கை வரலாறாகவும் பெற்றுக் கொண்டிருக்கும் அனுபவங்களாகவும் விளங்கு கின்றன. அவ்வாசகங்கள் வருமாறு :
" இருப்பு முகம் அகதி
பதிவு முகம் கிறிஸ்தோப்பர் பிரான்சிஸ் உறவு வட்ட முகம் மனோகரன் பலர் அறிமுகம் சுந்தர் பிடித்த முகம் கி.பி.அரவிந்தன் பிறந்தது யாழ்ப்பாணம் 17-09-1953 பெற்றோர் மூதாதையர் நெடுந்தீவு மூத்தது முசுடு என்போர் மூத்தோர். அவனும் மூத்தவன் . இளையவர் அறுவர். படிப்புபட்டத்தில் தொங்காதது வீடு துறந்தது பதினேழு வயதில் வீடு திரும்பியது முப்பத்தாறு வயதில் மறு வருடத்தில் இல்லறம் . சுமத்திரி துணை. ஒரு வருடத்துள் விழித்துறங்கும் தொலைவுகளில் வாழ்க்கை. பிரான்சில் அவன் . தாயகத்தில் அவன் குழந்தை பிரிவு, அலைவு, தனிமை தோல்வி, இழப்பு, அவமதிப்பு ஏக்கம், ஏமாற்றம், துயரம் அவனுக்கு இயல்பானது - தொடர்வது. இவற்றை எழுத்துக்குள் எட்டச் செய்யாதது அவனது குறைபாடு , இயலாமை , முயற்சித்தாலும் எட்டாது ஏனெனில் ஆள் கட்டை இவ்வளவு தான் ”
இதேபோன்று நூலின் ஆரம்பத்தில் "வணக்கம் என்னும் பகுதியில் இவை என்முகத்தின் சில பக்கங்கள், பதிவுகள், நினைவுப்பரணியில் இருந்து இறக்கப்பட்டவைகள். பட்ட நன்றிக் கடனுக்கு நன்றி சொல்லும் முனைவு.
C-37 -)
a
Nils-1

Page 23
ஏகலைவன் - கணை 6
இத்துடன் நட்பு, தேசம், தோழமை, காதல், கனிவு, மனிதம் என்பவற்றையும் அவலமுற்றுத் தொய்ந்த மனத்தின் ஆறாப் புண்களையும் எனக்குப் பரிச் சயமான சொற்களுக்குள் புகுத்திவிடலாம் என்னும் துணிவு. இச்சொற்களுக் குள் அவை வசப்படவில்லையாயின் அது என் மொழியறிவின்பற்றாக்குறையே. வெட்கம் கொள்கிறேன். நூலாக்கியதற்கு ஒரு குட்டு, முடிந்தால் அதிகமாகவும் தலைதாழ்த்தி, நட்புடன் கி.பி.அரவிந்தன்” எனக் கூறியுள்ளார்.
கி.பி அரவிந்தன் என்னுங் கவிஞனின் இக்கூற்றுகள் எத்தகைய தொரு அடக்கமும் பணிவும் மிகுந்தவை என்பது ஊன்றிக் கவனிக்கத் தக்கது. "கோழி ஒரு முட்டையை இட்ட மாத்திரத்தே "கொக்கரக்கோ என உலகமெலாம் பறைசாற்ற முயலும் ஆமை எத்தனை முட்டைகளை இட்டா லும் அமைதியாக இருக்கும் ” என்பர். தரம் குறைந்த சராசரிக் கவிஞர்கள் பொதுவாகத் தம்மைத் தாமே குறைத்துக் கூறியதில்லை. ஆயின் மாபெருங் கவிஞனான கம்பன்
" ஓசை பெற்றுயர் பாற்கடலுற்றொரு
பூசை முற்றவும் நக்குபு புக்கென ஆசை பற்றி அறையலுற்றேன் மற்றிக் காசில் கொற்றத் திராமன் கதையரோ ”
என்னும் அற்புதமான பாடலையே அரவிந்தனின் கூற்று நினைவூட்டு கின்றது.
இக்கவிஞனது "ஞாயிறும் நானும்” என்னும் தலைப்பிலான கவிதை 1992ஆம் ஆண்டில் பாரிஸ் மாநகரில் வெளிவந்துள்ளது. காய்கதிர்ச் செல்வனே! கள்வனோ என் கணவன் எனச் சிலப்பதிகாரக் கண்ணகி கேட்டது போல் இக்கவிஞரும் சூரியனிடம் முறையிடுதல், சூரியனுடன் உரையாடல், சூரிய னைத் துணைக்கழைத்தல், கொடுமைகள் மிகுந்த இவ்வுலகினை அழித்து விடும்படி சூரியனிடம் வேண்டுதல் முதலியன உள்ளத்தை உலுக்குவனவாக அமைந்துள்ளன.
இப்பாடலின் சில பகுதிகள் இங்கு அவதானிக்கத்தக்கவை.
“தூக்கக் கிறக்கமும்
சொறிந்த சுகமுமாய் சப்புக் கொட்ட

நமைச்சல் போய்
எரிந்தது
சொறிந்த புண்
என்ன வீச்சம் கறிக்கு வதக்கிய வெங்காயம் சொக்ஸ், கோமனம்
(556 . . . . . .
குழைத்து வரும் காற்றும் தாங்காது காசு தின்னும்
ஏகலைவன் - கணை 6
களையில்
அழுக்கு நன்னும்
இயந்திரத்திடம் கொடுத்தாக வேண்டும்
உடுதுணி
போர்வை
இந்த அறை
GIGö 6laruiluuGaoTub
Libó0)L மனசை.” (முகங்கொள்பக் 80)
என அகதிவாழ்வின் அவலங்களை வெளிப்படுத்துகின்றார்.
உலகின் இன்றைய நிலை கண்டு,
“... புத்துலகக் கோட்பாடு கோளாகி
வேறெதற்கு. p உறிஞ்சும்
மத்திய கோட்டிற்குத் வண்
தெற்கேயென்ன ஒட்டுண்ணிகளோ
கடகக் கோட்டிற்குத் புவிப்பரப்பும்
தெற்கே யென்ன போதாமல்
கொல்லைப் புறந்தானே அண்டவெளிதாவி.
மண் செத்து மனுக்குல அறிவியலாம்,
மலை செத்து unrufléféfghostb
மரங்கொடி செடி செத்து அழிவியல்
Ф Јай60ӧї06 மானுட அறங்களின்
மோதுண்டு 6חסNu6ט
உயிர் மூச்சும் பொசுக்கு நீ w
நஞ்சுண்டு புவிக் கோளையே
வடக்கென நொறுக்கு நீ
தெற்கென உன் சீற்றம்
மனிதமும் நான் அறிந்தேன்
பிளவாகி சரிதானே
தனித்தனிக் சூர்யா ... !”
(முகம்கொள், பக் 83-84)
எனக் கொதித்துச் சாபமிடுகின்றார்.
(139 N

Page 24
ஏகலைவன் - கணை 6
எத்தனையோ ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிருக்கும் கவிஞன் தான்பிறந்து வளர்ந்த மண்ணையும் அங்குள்ள தனது உறவுகளையும் எண்ணிச் சூரியனிடம் பின்வருமாறு முறையிடுகின்றான் :
“மத்திய கோட்டருகே உன் சினம் தனி தரித்து நிற்கையில் பார் வெங்கதிர்களை நீரிடை நெருப்பென சுருக்கிக் கொள் தீப்பந்தமென, கடல்நீர் உறிஞ்சி செம்மணிச் சுடலையென கார்மேகம் வேகும் என் தேசம் படைத்து என்கனவு மழைக் கரங்களால் என் வனப்பு நீராட்டு என் இளமை செழிப்பூட்டு என் பாசம் பூக்களும் தென்றலும் நேசம் முத்தமிட இரத்த உரித்து எல்லாமும் இப்போ நீ அவியலாகி. கைகொடு தரிசித்தாயா? நான் எழ (முகங்கொள், பக் 86-87)
பொதுவாக இவரது கவிதைகள் அனுபவங்களின் பிழிவாகவும் யதார்த்தப் பண்பு மிக்கதாகவும் காணப்படுகின்றன. தேர்ந்தெடுத்த சொல் லாட்சிகளும் வீறார்ந்த வேகம்மிக்க நடையும் கருத்துத் தெளிவும் அடிக்கடி எழுப்பப்படும் வினாக்களும் அநாவசியமான குறியீடுகளோ படிமங்களோ இன்றிக் கூறவிரும்பிய கருத்தை உள்ளத்திற் படியும் வண்ணம் கூறிச் செல் லும் பாங்கும் இக்கவிதைகளுக்குத் தனிச்சோபை அளிக்கின்றன.
அகதிகளின் இருப்புநிலை, தாயகம் பற்றிய ஏக்கம், புகலிட நாடுகளில் நிறவெறிக்கும் இனவெறிக்கும் உள்ளதல், தனிமை, வதிவிடப் பிரச்சினை, புகலிட நாடுகளின் அடிநிலை மக்களின் வெறுப்புக்கும் குரோதத்திற்கும் உள் ளாதல், மனிதம் சிறுமையுற சூத்திரங்கள் அச்சுறுத்த இயந்திரங்கள் காவு கொள்ளும் இயந்திர வாழ்க்கை, அந்நியமாதல், புகலிட நாடுகளிலும் அகதி களது நிச்சயமற்ற வாழ்க்கை நிலை, என்றோ ஒரு நாள் தாயகம் திரும்பலாம் என்ற நம்பிக்கை அடிமனதில் குடிகொண்டிருந்தாலும் தாயகத்தில் தொடரும் குரூரம் மிக்க போர்ச் சூழ்நிலை அந்நம்பிக்கையையும் இழக்கச் செய்தல் முதலிய பல்வேறு விடயங்களையும் தமது கவிதைகளுள் அடக்கியுள்ளார்.
(140N
{ =
~-—

ஏகலைவன் - கணை 6Eas
* புகலிடநாடுகளில் வாழும் அகதிகளது வாழ்க்கைநிலைபற்றிப்பாலஸ் தீனிய அறிஞர் ஒருவர் கூறியுள்ள வாசகங்கள் சில வருமாறு :
“... நாடு விட்டு நாடு சென்று வாழ்பவரது வாழ்க்கை, பெயர்கள் சூட்டப்படாத புகைப்படங்களாக உறைந்து போனவை இந்தப் புகைப்படங் களில் காட்சியளிக்கும் பிம்பங்களுக்குப் பெயரில்லை. அவற்றால் பேச முடி யாது. ஆனால் காண்போர் மனத்தை அவை சலனப்படுத்தும். சுண்டியிழுக் கும் தொலைந்து போன தாயகங்களை நினைவுபடுத்தும் ”
IV
ஈழத்துத் தமிழ்க்கவிதை வரலாற்றில் 1950களிலும் 1960களிலும் மஹா கவிமிகுந்த முக்கியத்துவம் பெற்றது போலவே அவரது மகனான சேரன் 1980 களில் இருந்து மிகுந்த முக்கியத்துவம் பெற்றுக் கொண்டிருக்கிறார். இலங் கையின் அரசியல் விவகாரங்கள் , வடபுல நிகழ்வுகள் முதலிவற்றைக் “கார சாரமாக விமர்சிக்கும் அரசியற் கவிதைகள் பலவற்றை அவர்படைத்துள்ளார். “எலும்புக் கூடுகளின் ஊர்வலம்” என்னும் கவிதைத் தொகுதியில் அமைந் துள்ள கவிதைகள் பல இவ்வகையில் நோக்கத்தக்கவை.
கி.பி அரவிந்தனது கவிதைகளைப் போன்றே ஏனைய பலரதும் புக லிடக் கவிதைகள் விரிவாக நோக்கத்தக்கவை. எனினும் இச்சிறுகட்டுரையில் அவை பற்றி நோக்க முடியாதுள்ளது.
διττό διpύυώ
அந்த முட்டாள் சிறுவனுக்கு “எனக்கு இரண்டே சகோதரர்கள்
இருக்கும்போது என் சகோதரிக்கு மட்டும் எப்படி மூன்று சகோதரர்கள்
இருக்கின்றனர்.” என்ற குழப்பம் இன்னும் தீரவில்லை.
மதுவாரகா goljub 9C
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
"து =ܠ
- N C-41 - )

Page 25
ஏகலைவன் - கணை 6
ஒரு வருஷத்துக்கம்
சிவசம்புத் தாத்தாமுன் விறாந்தையில் போடப்பட்டிருந்த வாங்கி லில் கிடத்தப்பட்டிருந்தார். வெள்ளை வேட்டி, சட்டை பளிச் சென்றிருந் தது. இவள் வந்தபோதுபரிமளம் நெஞ்சிலடித்துக்கொண்டு அழுதாள். இவள் சிவசம்புத் தாத்தாவையே மெளனமாகப் பார்த்தபடி நின்றாள். அவர் முகம் உறங்குவதுபோல் இருந்ததை மட்டுமே உணரமுடிந்தது. தாத்தாவின் கண்கள் திறக்காதோ? இரண்டு வாரங்களுக்கு முன் இப் படித்தானே கண்களைத் திறந்து இவளைப் பார்த்துமலர்த்திமலர்த்தி விழித்தார். வாய் ஏதோ சொல்ல உன்னி அப். لاك . . . . . . . G6 அவாவியது.
- தாட்சாயணி -
“தன்ரைஅப்பாவைநினைக்கிறார்போலை.”பரிமளம் தான் அதை மொழிபெயர்த்தாள். இவளதை ஆமோதிக்கவில்லை. மறுக்கவு மில்லை. அடுத்தநாள் அரிசி ஊறப்போட்டு இடித்துபாலப்பம் சுட்டாள். இரண்டு சோடி அப்பங்களை வாழையிலையில் சுருட்டி எடுத்தபோது அம்மாகூட கேள்வியாய் ஏறிட்டாள்.
“சிவசம்புத் தாத்தாக்கு...” என ஒற்றைச் சொல்லில் சொல்லி விட்டுத்தான் வந்திருந்தாள். இதேவீட்டில் தான் அதை அவள் அவ ருக்கு ஊட்டிவிட்டாள்.
அதே அப்பங்களைப் பிய்த்து அவருக்கு ஊட்டிக் கொண்டிருக் கையில் பரிமளம் முணுமுணுத்தாள்.
“ஏன் பிள்ளை, நான் சுட்டுக் குடுக்கிறனான் தானை.”
“அதுக்கில்லை பரிமளக்கா. சம்புத்தாத்தாவுக்கு அப்பமெண்டா நல்ல விருப்பம்.
இதுவரை விளையாடிக்கொண்டிருந்த அந்தவிட்டு வாண்டுகள் இரண்டும் அப்பவாசனையை மோப்பமிட்டு அங்குமிங்குமாய் உலவின.
イエト
42 to

ஏகலைவன் - கணை 6=ண
பிய்த்து ஊட்டிய இரண்டு துண்டு அப்பங்களையும் உண்கை யில் தாத்தர்வின் முகமெங்கும் இனிப்பு வழிந்தாற் போலிருந்தது. பாதி அப்பம் தீர்வதற்கிடையில் தாத்தாவின் வயிறுநிறைந்துவிட்டது. அதற்கு மேல் அவர் உடல்நிலை ஒத்துக் கொள்ளவில்லை. சுழித்துப் போன உதடுகளின் அசைவில் தலைமாட்டிலிருந்த “ரீப்போவில் ”அந்த “பார்சலைக் ”கட்டி வைத்தாள். பரிமளத்தைப் பார்த்து,
“பேந்து குடுங்கோ பரிமளாக்கா.” என்றபடியே எழுந்தாள். வாசலை எட்டும்போதே சிறிசுகள் பார்சலைப்பிரிக்கும் சத்தம் கேட்க வெறுப்புச் சிரிப்போடு நடந்தாள்.
சிவசம்புத் தாத்தா பொல்லூன்றிக்கொண்டு அந்த ஒற்றையடிப் பாதையில் நடந்தாரென்றால் போதும். அப்பால் விளையாடிக் கொண்டி ருக்கின்ற சிறிசுகளெல்லாம் ஓடிவந்துவிடும்.
KK 99
கதைசொல்லுங்கோ தாத்தா. கதை சொல்லுங்கோ. தாத்தா இவர்களது ஆக்கினை தாளதுபோல
“உங்களோடை பெரிய கரைச்சலடாப்பா.”என்றவாறே அரு கிலுள்ள ஆலமரத்தின்கீழ் குந்திவிடுவார். அவரைச் சூழவும் சிறிசுகள் வட்டமாய் அமர்ந்து கொள்ளும். அதைப் பார்க்கையில் சின்னவகுப்பில் வட்டமாய் அமர்த்தி வைத்து ஆசிரியர் வகுப்பெடுத்தது இவளுக்கு ஞாபகம் வரும்.
குழந்தைகளோடு, குழந்தையாய்கதைகேட்பதில் அவளுக்கும் கொள்ளை ஆசை. அதிலும் வள்ளிஆலோலம் பாடிக் கொண்டு தினைப் புலம் காத்த கதையை தினமும் கேட்கலாம் போலவே அவளுக்குத் தோன்றும்.
ஆனாலும், தாத்தா படுகாரியம். ஒவ்வொரு நாளும் கதை சொல்ல முன்னம் இவளைப் பார்ப்பார்.
“அப்ப,இண்டைக்கெனக்கு கூழ் காய்ச்சித் தருவியே பிள்ளை,
வள்ளிக் கதையை நல்ல உசாராயெல்லே தொடங்கோணும்..” என ஆசையூட்டுவார். இவள்“ஓமென்றுதலையாட்டுவாள். பனங்கட்டிகளைப்
17N,
G-43 -) R
گسس ح

Page 26
ஏகலைவன் - கணை 6
பக்குவமாய் இடித்து, வாசப்பயறு போட்டு, பதமாய் தேங்காய்ச் சொட்டு களையுமிட்டுக் கூழ் காய்ச்சித் தருகையில் பலாவிலையால் கோலி யெடுத்து ஊதிஊதிக்குடிப்பார்.
- “இப்பிடியொரு கூழ் எங்கட ‘வள்ளி’ கூட வைக்கமாட்டாள் ” என்று வள்ளியை தங்கள் உறவுக்காரிகளில் ஒருத்தி ஆக்கி விடுவார். தாத்தாவின் “ஜஸில் உச்சிகுளிர்ந்தாலும், “பொய் சொல்லக் கூடாது தாத்தா...” என்று பாடுவாள் இவள்.
எப்போதும் மாலைச் சிற்றுண்டியை அவர் இங்கேயே வைத்துக் கொள்வது வழக்கமாயிற்று. ஆரம்பத்தில் இது குறித்து அவளுக்கும் அம்மாவுக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுதான்.
“ஏன் பரிமளம் இருக்கிறாள்தானை, அவள் செய்து குடுக்கட்டு மன் எல்லாத்தையும்.
1. பென்ஷன் காசு கிடைப்பதனால் அந்தச் சாட்டிலாவது பரிமளம் தாத்தாவைத் தன்னோடு வைத்திருக்கிறாள் அதுவும் இல்லாவிட்டால் எங்கேனும் வயோதிபர் இல்லத்தில் தந்தையைச் சேர்த்துவிட்டுக் கவனியாமலே விட்டிருக்கக் கூடும் ”
“எனக்குத் தானையம்மா தாத்தா இல்லை. அவரை என்ரை தாத்தாவா நினைச்சு செய்து குடுக்கிறன். இதாலை உங்களுக்கென் னம்மா கரைச்சல். s
“பரிமளம் அறிஞ்சாளெண்டால் ஏதோ நாங்கள் சாப்பாட்டைக் குடுத்து வளைக்கிறதாயெல்லே நினைப்பாள்.”
“நாங்களேன் அவரை வளைக்கோணும்.அதோடை தாத்தா தானை ஆசையாக் கேக்கிறார்.”
“என்னவோ.சொல்லு.”என்று அம்மா முற்றுப் புள்ளிவைப் பாள்.அம்மா சொன்னமாதிரியே ஒருநாள் நடந்தது.
தாத்தா மரவள்ளிக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு
 

ஏகலைவன் - கணை 6
மால்ைப் பொழுதில் பரிமளம் வந்து அவரை இழுத்துக்கொண்டு போ னாள்.
“மூண்டு நேரமும் வீட்டிலை கொட்டுறது காணாதாம், கிழடு அமர் பிடிச்சலையுது. 99
தாத்தாவின் முகம் போன போக்கைப் பார்க்கப் பாவமாய்க் கிடந்தது. பரிமளம் இழுத்த வேகத்தில் தாத்தா கையிலிருந்த கிண் ணம் சரிந்து அதிலிருந்த மரவள்ளித்துண்டுகள் நிலத்தில் உருண்டன.
“வயதுபோன நேரத்திலை மூலையுக்கை கிடக்காமல் அவர் வாய்க்கு ருசியா சாப்பாடு தேடுறாராம். 9.
பரிமளத்தின் வாயிலிருந்து சொட்டிய தணற்கட்டிகள் இவ ளையே சுடுவது போலிருக்க, குனிந்து கீழே சிதறிய மரவள்ளித்துண்டு களை ஒன்று சேர்த்தாள்.
“அருமந்த கிழங்கு, பாவம் தாத்தா என்ன ஆசையாச் சாப் பிட்டுக் கொண்டிருந்தவர்.”
“உதுக்குத்தான் நான்முதலே சொன்னனான். உவள்பரிமளம் சரியான எரிச்சல் புடிச்சவள், தானும் செய்யாள். மற்றாக்களையும் செய்ய விடாள்.”
அம்மா எரிச்சலோடு கூறினாள்.
பரிமளத்திற்கு இடையிடையே சந்தேகம் வந்து விடுகிறதோ? தாத்தாவின் பென்ஷன் காசு குறைந்து கொண்டு போகிறதென்று. அத னால்தான் தாத்தாமிகவும் விரும்பிப்பழகுகின்றஇவர்களோடு உறவை வெட்ட முனைகிறாளே.
அதற்குப் பிறகு தாத்தா அவள் வீட்டுக்கு வருவது குறைந்து விட்டது. குழந்தைகள் விளையாடி முடித்தவுடன் கதை கேட்பதற் கென்று ஒன்றிரண்டு நாள் தாத்தா வீட்டுக்குப் போன ஞாபகம். அவர் களையும் சில நாட்களில் பரிமளம் விரட்டி விட்டாள்.
“கண்டதுகள் எல்லாம் வந்து, பூக்கண்டுகளை நுள்ளிக் கொ ண்டு போகுதுகள். சுவரிலை கீறுதுகள். ”என்று நொட்டைக்
la-N - 45- )

Page 27
ஏகலைவன் - கணை 6
காரணங்களைச் சொல்லிக் கொண்டாள்.
இவள்தான் இடையிடையே வரும் விசேட தினங்களின்போது பலகாரங்களும், கோவில் பிரசாதங்களுமெனத் தாத்தாவுக்கு எடுத்துப் போவாள். ஆனால், அவை எதுவுமே தாத்தா உண்ணக் கிடைப்ப தில்லை என்றறிந்தபோது அவள் அதிர்ந்துதான் போனாள்.
ஒருநாள் பரிமளம் கிணற்றடியில் துணி துவைத்துக் கொண் டிருந்தபோது இவள் கேட்டாள்.
“எப்பிடித் தாத்தா நேற்று நான் குடுத்துவிட்ட வள்ளிக் கிழங்கு.?”
“வள்ளிக்கிழங்கோ, குடுத்துவிட்டனியோ...இல்.ஓம்.ஓம்.நீ வைச்சதெண்டா சொல்லவே வேணும்.அந்தமாதிரிக் கிடந்துது.”
சமாளிக்க முனைந்ததாத்தாவின் கண்கள் கலங்கியதை இவ ளால் உணரமுடிந்தது.
“உண்மையைச் சொல்லுங்கோ.தாத்தா.ஏன்முதல் இல்ை யெண்டனீங்கள்."
“எல்லாம் மறந்து போகுதுபிள்ளை இப்ப.வயது போன வேளை யிலை எதையெண்டுதான் ஞாபகம் வைச்சிருக்கிறது.’தாத்தாவின் முகம் தாழ்ந்தபோது அவர் கன்னங்களில் கண்ணிர்’கரகர'வென்று ஓடி யது. இவளுக்கு எல்லாமே புரிந்து போயிற்று.
பென்ஷன் காசு கிடைப்பதனால் அந்தச் சாட்டிலாவது பரிமளம் தாத்தாவைத்தன்னோடு வைத்திருக்கிறாள். அதுவும் இல்லாவிட்டால் எங்கேனும் வயோதிபர் இல்லத்தில் தந்தையைச் சேர்த்துவிட்டுக் கவ னியாமலே விட்டிருக்கக்கூடும். இவர்களெல்லாம் ஏன் தமக்கும் ஒரு நாள் வயது போகும் என்பதை உணர மறுக்கிறார்கள். சுயநலவாதிகளா ய்ப் போய்விட்ட இவர்களின் நடத்தைகளைத் தானே நாளை இவர் களின் பிள்ளைகளும் பிரதிபலிக்கப் போகின்றார்கள்.
சிவசம்புத்தாத்தா படுக்கையில் விழுந்துவிட்டார். இவள் அடிக் கடி போய்ப் பார்த்துக் கொண்டுவந்தாள். அவருக்குப் பிடித்த உணவு
イート C-46 -).

ஏகலைவண் - கணை 6
கள்ைத் தானே கொண்டுபோய் முடிந்தவரை ஊட்டிவிட்டாள். படுக்கை யில் அவர்படும் துன்பங்களைப் பார்க்க வேதனையே மிஞ்சியது.
பரிமளாவோ, சகோதரர்களெல்லாம் தன்னிடம் பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட்டு, சுலபமாய் வெளிநாட்டுக்குப் போய்த்தப்பிவிட்டார் கள் என்று அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். தான் இங்கே இவ்வளவு கஷ்டப்படும்போது அவர்கள் அங்கே’ஹாயாக’ இருப்பது பற்றி இவளிடம் மிகப் பரிதாபமாய் கதை அளப்பாள். இவளுக்கு அதைக் கேட்கக் கேட்க எரிச்சல் மூளும். பென்ஷன் காசு, தந்தையைப் பார்க்க என்று சகோதரங்கள் அனுப்புகின்ற வெளிநாட்டுக் காசு, எல்லாவற்றை யும் எடுத்துக்கொண்டு எதிலும் திருப்தியில்லாத மனத்தோடு, சீரான பராமரிப்பின்றி, தந்தைக்குப்பிடித்த உணவுகளெதுவும் செய்து கொடுக் காமல், வருகின்றபோகின்ற ஆட்களிடம் குறைபட்டுக் கொண்டேயிருப் பவளை யாரால்தான் சகித்துக் கொள்ள இயலும் ?
வாசலில் பறைபலமாக முழங்குகிறது. ஆட்கள் வருகின்றார்கள் GUITGAD..... பரிமளம் மீண்டும் எழுந்து கொள்கிறாள். வருகின்றவர்களுக் காக மீண்டும் அழுகிறாள்.
‘என்ரை ஐயா, என்ன குறை வைச்சனெண்டு என்னைவிட்டுப் போனியள்.” பரிமளத்தின் அழுகை தேய்கிறது. வந்தவர்கள் சுற்றி அமர்கின்றனர்.
தலைமாட்டில் குத்துவிளக்கு மங்கி மங்கி ஒளிர்ந்து அணை கிறது. வீடியோ கருவிகளின் ஒளி "ஹோலை” நிறைக்கிறது. பரிமளம் ‘சென்டை எடுத்து தாத்தாவைச் சுற்றி வந்து விசுக், விசுக் கென்று அடிக்கிறாள்.
அணைந்துபோன குத்துவிளக்குச் சுடரை யாரும் கவனிப்பதா யில்லை.
எழுந்து குத்துவிளக்கை ஏற்ற உன்னிய கால்களுக்கு மறுப் பளித்துவிட்டு இவள் அப்படியே மடங்கி உட்கார்ந்தாள். அந்த வீடியோ பார்வையில் படும்படி விளக்கேற்ற துளியும் விருப்பமில்லை.
イエト C-47 -)

Page 28
ஏகலைவன் - கணை 6
99.
“பரிமளக்கா, விளக்கு நூந்து போச்சு.
இவளின் குரலுக்குப்பதறியடித்த பரிமளம் தீப்பெட்டி எடுத்துபக் குவமாய் வீடியோவில் தெரியும்படி விளக்கேற்றினாள்.
事 ۔ e 本 தாத்தா கண்மூடி நாலு மாதங்களமிற்று. இவளுக்கு மாலைப் பொழுதுகளில், அந்த ஆலமரத்தடி கடக்கின்றபோதும், சிற்றுண்டிகள் சாப்பிடும்போதும் அவர் ஞாபகம் வந்து விடுகிறது.
"UTalib 95.Tg5951. ........ ’ என்று மனம் அவருக்காகப் பச்சா தாபப்படும்.
இப்போதெல்லாம் இவள் பரிமளம் வீட்டுக்குப் போவது வெகு வாகக் குறைந்திருந்தது.
தாத்தா தான் இல்லையே..பிறகெதற்கு அங்கு.?
அன்று வெகு அருமையாய் அவள் அங்கு சொல்லவேண்டி யிருந்தது. சொந்தக்காரர் வீட்டுத் திருமணத்திற்கு செல்வது பற்றிக் கேட்க அவள் வந்திருந்தாள்.
“வெள்ளிக்கிழமை தேவகீன்ரைகலியாணத்துக்கு நானும் உங் களேடைவாறன் பரிமளக்கா, அம்மாவுக்கு ஏலாமல் கிடக்காம்.” பரிமள கொஞ்சம் பரிதாபத்தனமாய் குனிந்து கொண்டாள்.
“என்ன தங்கச்சிகதை.ஐயா செத்து இன்னும் ஒரு வருசம் ஆகேல்லை. நான் என்னெண்டு வெளிக்கிடுற. விழாக்கள், கொண் டாட்டங்களுக்கு நான் என்னெண்டு வாற. 99.
போலியாய் கண்ணிர் உகுத்தவளைப் பார்க்கச் சகிக்காமல் இவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
உழுது மகிழ்ந்தது இராணுவம் துயிலுமில்ல வாசகம்
‘இவர்கள் விதைக்கப்பட்டவர்கள்’
ح5 حصے D_48 ܒ>=
-

ஏகலைவன் - கணை 6
ஒவ்வொரு முறையும் e
என் பாதையின் நியமங்களை யாரோ குழப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்னை அந்நியப்படுத்துவதற்கு வேண்டாத குரல்கள் சில கத்திக் கொண்ருக்கின்றன என் திசையை மாற்றுவதற்காய் கவனம் சிதைய
மறுக்கிறது துரியோதன மனிதர்களின் குரல் என்வழி நெடுகிலும் தொடர்கிறது
இனிய இசையை
இசைத்தபடி எனது திசைகாட்டி வடக்கு நோக்கிச் சுட்டிக் கொண்டிருக்கிறது
- யாத்திர்கன் - யாழ்பல்கலைக்கழகம்.
செழித்த தேசம் என்றார் ஆசிரியர் கல்விச் சுற்றுலா சொன்னது மலையகம் என்பது மக்கள்
イエト C-49 d.

Page 29
ஏகலைவன் - கணை 6 ஈழததுப் பள்ளு நூல்கள்
- கலாநிதி துரை. மனோகரன் - தமிழில் தோன்றிய பொதுமக்கள் சார்பு இலக்கியங்களுள் ஒன்றாகப் பள்ளு இலக்கியம் விளங்குகின்றது. மரபுவழி இலக்கிய அம்சங்களோடு, நாட் பார் இலக்கியப்பண்புகளையும், இசை,நாடகக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டு இவ்விலக்கியம் திகழ்வதைக் காணலாம். பிற சிற்றிலக்கியங்களோடு ஒப்பிடுகையில் பள்ளு இலக்கியம் தனித்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது.
ஈழத்திலே தோன்றிய முதற்பள்ளு நூலாகக் கதிரைமலைப் பள்ளு விளங்குகின்றது.கதிரையப்பர் பள்ளு என்ற பெயரும் இந்நூலுக்கு உண்டு. ஈழத்துப் பள்ளுநூல்களிற் செயற்கைத்தன்மை குறைந்ததாக இந்நூல் அமைந் துள்ளது. இந்நூலின் காலம் பற்றித் தெளிவின்மையே காணப்படுகின்றது. 1935 ஆம் ஆண்டில் கதிரைமலைப்பள்ளைப் பதிப்பித்த வ.குமாரசுவாமி, இந்நூல் 16ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சார்ந்தது என்ற கருத்தைத் தெரிவித்துள் ளர். போராசிரியர் ஆ.சதாசிவம் ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் (1966) என்ற நூலில் கதிரைமலைப்பள்ளு பற்றிக் கருத்துத் தெரிவிக்கும்போது, பின் வருமாறு குறிப்பிடுகிறார்.
* இந்நூலாசிரியரின் பெயர் புலப்படவில்லை.1473-1519 இல் நல்லூரில் இருந்து அரசாண்ட பரராசசேகர மகாராசாவின் காலத்தது இந்நூல் என்பதற்குப் பல ஆதாரங்களுள. பரராசசேகரரின் ஆணையின்படி பன்னிரு புலவரால் இயற்றப்பட்ட பரராசசேகரம் என்னும் வைத்திய நூலிலே “தெண்கதிரைவேலவர்” பலவிடங்களிற் புகழப்படுகிறார். இப்பன்னிரு புலவர்களுள் ஒருவரே "கதிரைமலைப் பள்ளைப் பாடி யிருக்கக்கூடுமென்பது எமது கருத்து. பரராசசேகரம் பாடிய புலவர் களின் பெயர்கள் குறிப்பிடப்படாதது போற் கதிரைமலைப் பள்ளின் ஆசிரியர் பெயருங் குறிப்பிடப்படவில்லை.”
பேராசிரியர் சதாசிவத்தின் ஊகம் எவ்வாறாயினும், இந்நூலின் ஆசிரி யரை இனங்கண்டு கொள்வது சற்றுக் கடினமான விடயமே.
கதிர்காம முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இப் பள்ளு அமைந்துள்ளது. கதிரைமலைப்பள்ளுவன்னிப்பிரதேசத்தைச் சார்ந்த குமிழமுனை, முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் கூத்தாக நடிக்கப்பட்டு வந்ததாகக் கூறப்படுகின்றது. முல்லைத்தீவில் இது கரையர்
IRN

ஏகலைவன் - கணை 6
பள்ளுஇஎன்னும் பெயரில் ஆடப்பட்டு வந்துள்ளதாகத் தெரிகிறது.
பள்ளு இலக்கியமரபினைப் பின்பற்றிப்பள்ளன், மூத்தபள்ளி, இளைய பள்ளி, பண்ணைக்காரன் ஆகிய நான்கு முக்கிய பாத்திரங்கள் அடிப்படை யாகக் கொண்டதாகக் கதிரமலைப்பள்ளு விளங்குகிறது. இந்நூலில் இடம் பெறும் மூத்தபள்ளி மகாவலி கங்கை வயற்பள்ளி என்ற பெயரிலும், இளைய பள்ளிபகிரதாகங்கை வயற் பள்ளிஎன்னும் பெயரிலும் படைக்கப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக நிலவிவரும் இந்திய-இலங்கை உறவை இனங்காட்டும் முறையில் பள்ளியரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என்று கருதலாம்.
கதிரைமலைப்பள்ளு நூற்றுஇருபத்தொன்பது பாடல்களைக் கொண் டுள்ளது. நூலில் இடையில் இருபாடல்கள் (62,90) சிதைந்துவிட்டமை குறிப் பிடத்தக்கது. சிந்து, விருத்தம்,தரு ஆகிய பாவகைகள் நூலிற் பயன்படுத்தப் பட்டுள்ளன. பள்ளு இலக்கியம் இயல்பாகவே நாடகப்பாங்கினைக் கொண் டது. அதற்கேற்பக் கதிரைமலைப்பள்ளும் அமைந்துள்ளது. பேச்சுவழக்குச் சொற்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
எளிமையும், இலக்கியச்சுவையும் இணைந்து, கதிரைமலைப் பள் ளின் தரத்தை உயர்த்தியுள்ளன. இந்நூலினின்றும் எடுத்துக் காட்டாகச் சில பாடல்கள் தரப்படுகின்றன.
* அணியிளங்கதிராயிர முள்ள
வருக்கன் போய்க்குட பாலிடை மேவ மணி கொணர்ந்து மனிவிளக்கேற்றிடு
மகாவலி கங்கை நாடெங்கள் நாடே.
காய்ச்சுத் தோயலுடன் சோறுமிட்டுக்
கடனுக்காகவே கைமரக் காலால் பாய்ச்சியே செந்நெல் முத்தளக் கின்ற
பகீரதாகங்கை நாடெங்கள் நாடே
ஆறு போந்தங்கே தண்ணிருமள்ளி
அழுத பிள்ளைக்குப் பாலும் புகட்டி சேறு போந்த சிறுநெல்லுங் குத்தித்
தீட்டி யாக்கவும் சென்றதோ பள்ளி
காலமே சென்று பாலுங் கறந்து
கமுகம் பூப்போ லரிசியுந் தீட்டிக்
கடுகவே வைத்துக் காய்ச்சியே பாற்கஞ்சி
காலாலே தட்டியூற்றினா னாண்டே
(151) Na1

Page 30
ஏகலைவன் - கணை 6
இலங்கையின் பள்ளுநூலாசிரியர்களுள் தனித்துவம் மிக்கவராகக் கதிரைமலைப்பள்ளின் ஆசிரியர் திகழ்கிறார். இந்நூலின் ஆசிரியரது கவித்துவ ஆற்றல் மெச்சத்தக்கதாக விளங்குகிறது. வேளாண்மை தொடர்பான அவரது இயல்பான ஈடுபாடு, நூலின் செம்மையான அமைப்புக்கு உதவியுள்ளது. சமூக ரீதியான புரிந்துணர்வும் அவரிடத்துக் காணப்படுகின்றது.
கதிரைமலைப்பள்ளுக்கு இன்னுமொரு சிறப்பும் உண்டு. ஈழத்தில் தோன்றிய நாடகச் சார்புகொண்ட முதல் இலக்கியம் என்ற பெருமையையும் அது பெற்றுள்ளது.
போர்த்துக்கீசர்யாழ்ப்பாணத்தில் ஆட்சிசெலுத்திய காலகட்டத்தில் (1821-1658) எழுந்த பள்ளு நூலாக ஞானப்பள்ளு விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியரது பெயரும் அறியக்கூடுமாறில்லை. ஈழத்துப்பள்ளு நூல்களில் சிதை வின்றி முழுமையாகக் கிடைப்பது ஞானப்பள்ளு மாத்திரமே என்பது குறிப் பிடத்தக்கது. கத்தோலிக்க மதச்சார்பான நூலாகவும், இயேசுநாதரைப்பாட்டு டைத்தலைவராகவும் கொண்டதாக இது விளங்குகிறது. இந்நூலுக்கு வேதப்பள்ளு என்ற பெயரும் நிலவியது என்பதை, நூலில் இடம்பெறும் சில செய்யுள் அடிகள் புலப்படுத்துகின்றன. “ அறைந்த வேதபள்ளானதி னிக் கதை,” “நிமலன்றிடு வேதப்பள் வின்னிசை நெறிகூற.” “செம் பொன்பத மேவிய வேதபள்ளிசைபாட” “வேதபள்ளாகிய விசைபாட” என்னும் அடிகள் இதனை உணர்த்துகின்றன.
ஞானப்பள்ளின் ஆசிரியர் தாம் அப்பள்ளைப்பாடமுக்கிய காரணகர்த் தராக விளங்கிய செபஸ்தியான் பொஞ்சகோ அடிகளரைப் பற்றி அவையடக் கத்திலும், ஆசிரியர் வணக்கத்திலும் குறிப்பிடுகிறார். யேசுசபையைச் சேர்ந்த இக்கத்தோலிக்க மதகுருவின் தூண்டுதலினாலேயே ஞானப்பள்ளை இவர் பாடியுள்ளார் என்பதை நூல் இனங்காட்டுகின்றது. போர்த்துக்கீசர் காலத்தில் பொதுமக்கள் சார்பான இலக்கிய வடிவங்கள் மூலமாகக் கத்தோலிக்க மத போதனைபுரிவதற்குக் கத்தோலிக்க மதகுருமாரும் கவிஞர்களும் முயற்சிகள் மேற்கொண்டனர் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டாக ஞானப்பள்ளு விளங்கு கின்றது.
கதை அம்சத்தைப் பொறுத்த வரையில், ஞானப்பள்ளு பொதுவான பள்ளு இலக்கிய மரபைப் பின்பற்றினாலும் மற்றைய பள்ளு நூல்களினின்றும் சில அம்சங்களில் வேறுபட்டு விளங்குகின்றது. பள்ளு இலக்கியத்தில் பள்ளன், மூத்தபள்ளி, பண்ணைக்காரன் ஆகிய மூன்று பாத்திரங்களும் பாட்டுடைத் தலைவனின் ஊரைச் சேர்ந்தவர்களாகப் படைக்கப்படுவது வழக்கம்.
ܓܔܛܘܒܘ-ܐܝ - 52-)

ஏகலைவன் - கணை 6
இளிைய பள்ளி வேற்றுரைச் சார்ந்தவளாக விளங்குவாள். ஆயினும், ஞானப் பள்ளில் இம்முறைமை பின்பற்றப்படவில்லை. முதல் மூவரும் செருசலை யைச் (Jerusalam) சேர்ந்தவராகப் படைக்கப்பட்டுள்ளனர். இளையபள்ளி கத்தோலிக்க திருச்சபையினதும், போப்பாண்டவரினதும் தலைமைப்பீடமாக விளங்கும் உரோமாபுரியைச் சார்ந்தவளாகக் காட்டப்படுகிறாள். இது பிறபள்ளு நூல்களினின்றும் ஞானப்பள்ளு வேறுபட்டிருப்பதனை இனங்காட்டுகின்றது.
ஞானப்பள்ளில் இடம்பெறும் இளையபள்ளி என்றபாத்திரம், பிறபள்ளு நூல்களினின்றும் மிகவும் வேறுபட்ட முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. பிற பள்ளு நூல்களில் அவள் ஆடம்பரப் பிரியையாகவும், மூத்த சக்களத்தியுடன் எப்போதும் பிரச்சினைப்படுபவளாகவும், பொய் பேசுபவளாகவும், பல்வேறு குறைகள் கொண்டவளாகவும் படைக்கப்படுவதுண்டு. ஆனால், இப்பள்ளில் இடம்பெறும் இளையபள்ளிபாட்டுடைத் தலைவரான இயேசுவின் மீது பக்தி கொண்டவளாகவும், சமய ஊழியம் செய்பவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். ஞானப்பள்ளில் இளையபள்ளியின் பாத்திரம் இவ்வாறு படைக்கப்பட்டமைக் கான காரணத்தை ஞானப்பள்ளின் பதிப்பாசிரியரான பேராசிரியர் ஆ.சதாசிவம் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
“ ஏனைய பள்ளு நூல்களில் இளையபள்ளிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் காட்டிலும் ஞானப்பள்ளில் அதிகமாகக் கொடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.காரணம் நூலாசிரியர் கத் தோலிக்கரானமையின் அம்மதத்தின் தலைமைப்பீடமான உரோ மாபுரியை இழித்துக் கூறுவது பொருந்தாது. எனவே உரோமாபுரி யின் பெருமை இளையபள்ளியின் பெருமையாகையின் அவள். மூத்தபள்ளிக்குச் சற்றும் இளைத்தவளல்லள் என இக்காவியம் காட்டுகிறது. ”
பேராசிரியர் சதாசிவம் சிற்றிலக்கிய வகைக்குள் அடங்கும் பள்ளுநூலைக் “காவியம்” என்ற பெயரால் தவறாக வழங்கியதனைத் தவிர் த்துவிட்டு நோக்கும்போது அவரது கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதே.
ஞானப்பள்ளில் இடம்பெற்றுள்ள மற்றைய மூன்று பாத்திரங்களும் கூட, பிறபள்ளு நூல்களிலிருந்தும் மாறுபட்டவையாகவே படைக்கப்பட் டுள்ளன. பிற பள்ளு நூல்களில் மூத்தபள்ளி முக்கிய கதைத் தலைவியாக விளங்குவாள். ஆனால், இப்பள்ளில் சமய ஒழுக்கத்திலிருந்து வழுவியபரிதாப நிலை கொண்ட பாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளாள். பிறபள்ளு நூல்களில் பல்வேறு குணாம்சங்கள் கொண்டவனாகவும், தனது தவறுகளுக்காகப் பண்
- N C-53 -)

Page 31
ஏகலைவன் - கணை 6
ணைக்காரனின் தண்டனையைப் பெறுபவனுமாக விளங்கும் பள்ளன்பாத்தி ரம், ஞானப்பள்ளில் உண்மைக் கிறிஸ்தவ ஊழியனாகப் படைக்கப்பட்டுள் ளது. மற்றைய பள்ளுநூல்களில் உழைக்கும் விவசாய மக்களான பள்ளர் சமூ கத்தவரை மேலதிகாரம் செய்பவனாகவும், பரிகாசத்துக்குரியவனாகவும் சித் திரிக்கப்படும்பண்ணைக்காரன், இப்பள்ளில் ஒரு கிறிஸ்தவ மதகுருவுக்குரிய பண்புகள் பொருந்தியவனாக வார்க்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கீசர் காலத்தில் வாழ்ந்து, கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்து, இலக்கியப் படைப்பாளியுமாக விளங்கிய ஞானப்பள்ளின் ஆசிரியர், போர்த்துக்கல் மன்னன் மீதான தமது இராசவிசுவாசத்தை நூலில் பதிவுசெய் துள்ளார். “பேரான பாராளும் பிடுத்துக்கால்மனுவென்றன்பிறதானம் வீசவே கூவாய் குயிலே” என்று போர்த்துக்கீச மன்னனை நூலிற் புகழ்ந்து பாடியுள் ளர். இயேசுவின் பெருமையையும், கத்தோலிக்க மதக் கருத்துக்களையும் நூலிற் பரவலாகக் கூறிச் செல்கின்றார்.மேலைப்புலத்திலிருந்து புதிதாக ஈழத் தில் புகுந்த கத்தோலிக்கமதம் சார்பான விடயங்களைக் கூறுவதற்கு மேலை நாட்டையே களமாக அவர் பயன்படுத்துகின்றார். ஆயினும், மேலைப்புலத் துக்கு ஏற்றமுறையில் இயற்கை வருணனையை இயல்பாகச் சித்திரிக்க இய லாத இடர்ப்பாடு அவருக்கு ஏற்பட்டமையை நூல் உணர்த்துகின்றது. யாழ்ப் பாணப் பிரதேசத்தில் போர்த்துக்கீச ஆட்சியின் விளைவாகக் கத்தோலிக்க மதத்தினைப் புதிதாக ஏற்றுக்கொண்ட மக்களை உற்சாகப்படுத்தும் தொனி யிலும் நூலாசிரியரின் கூற்றுக்கள் அமைந்துள்ளன." தழைவு பெற்ற யாழ்ப் பாண சத்திய கிறிஸ்தவர்கள் சந்ததமும் வாழவே கூவாய் குயிலே’ என்ற அடி கள் இதனை உணர்த்துகின்றன.பழந்தமிழ் இலக்கியப் பயிற்சியும், ஓசை விகற்பங்களுடன்பாடவல்ல புலமைத்திறனும் கொண்டவராக ஞானப்பள்ளின் ஆசிரியர் விளங்குகின்றார். இப்பள்ளில் இடம்பெறும் சில பாடல்களை இங்கு
நோக்கலாம்.
* மூவுலகும் படைத்த பிதாவின்
மூர்க்கமாகியிருந்தமுன்னோர்க்காய்க் காவலனென முள்முடி சூட்டிக்
கரத்திலுமொரு செங்கோல் பிடித்து
நாவலம்பெறு நல்வாக் கருளி
நலஞ்சிறக்கத் தனியேல் முனிக்குத்
தேவலோகந் திறந்துமுன் காட்டுஞ்
செருசலைத்திரு நாடெங்கள் நாடே.
-(-54)
سمسح

ஏகலைவன் - கணை 6
எண்டி சையும் விளங்கும் பகலொளி
மேவி யேகுட பாலிலடைந்தபின் தெண்டி ரைப்புவியோர்கள் தமக்காய்ச்
செருச லையிற் சுமந்த சிலுவையை அண்டர் நாதன் திருத்தோளிலேவைத்து
ஆறிடுவர்க்கு முன்னிமுன் தோன்றி உண்டு நன்மையிங் கேதானென் றோதும்
றோமா னுபுரிநாடெங்கள் நாடே.
ஆதிமானிட னாகவே வந்து
அதத்தை மீண்டிரட் சித்த அந்நாளில் நீதமான றோமாபுரிச்சபை
நீண்ட பண்ணையிற் கூண்ட வயலில் வேதமானது பூதக லப்பையும்
வித்து மாடு வெகுத்த துரகமும் ஏதிலாததோர் மண்வெட்டி வர்க்கமு
மின்ன தென்று இயம்பிடாய் பள்ள”
ஞானப்பள்ளின் ஆசிரியரிடம் காணப்பட்ட கவித்துவச் சிறப்பு, சமய விடயங்களுக்கு முதன்மை கொடுத்தும் அவர் நூலைப்பாடியதன் வாயிலாகச் சற்றுப் பின்னடைந்துவிட்டது என்றே கூறவேண்டும். பாமர மக்களின் வாழ் வியலை இனங்காட்டும் முறையில் தோன்றிய பள்ளு இலக்கியத்தினை, தாம் சார்ந்த சமய விடயங்களை வெளிப்படுத்துவதற்கு முயற்சித்து, வெற்றியும் தோல்வியும் அற்ற சமநிலைத் தன்மையை அவர் பெற்றுள்ளார் எனலாம்.
ஒல்லாந்தர் காலத்தைச் (1658-1796) சேர்ந்த நல்லூர் சின்னத்தம்பிப் புலவர் பறாளை விநாயகர் பள்ளைப் பாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் சுழிபுரத் திலுள்ள பறாளை என்னும் தலத்திற் கோயில் கொண்டுள்ள விநாயகரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டதாக இந்நூல் விளங்குகிறது. சிந்து, விருத்தம், கலிப்பா ஆகிய யாப்புக்களை கொண்டு இப்பள்ளு அமைந் துள்ளது. இந்நூலில் நாற்று நடுகைக்குப் பின்னுள்ள பகுதிகள் சிதைந் துள்ளமை கவலைக்குரியது.
பறாளை விநாயகர் பள்ளில் மூத்தபள்ளிஈழமண்டலப்பள்ளி எனவும், இளையபள்ளி சோழமண்டலப்பள்ளி என்றும் குறிப்பிடப்படுகின்றனர். தமிழ் நாட்டுடனும் தொடர்புகொண்டிருந்த சின்னத்தம்பிப் புலவர், தமிழ்நாடு - ஈழம் தொடர்பான இலக்கிய உறவை வலுப்படுத்தும் நோக்குடன் இளையபள்ளியின்
K-55
Nila

Page 32
ஏகலைவன் - கணை 6
பாத்திரப் பெயரைச் சோழமண்டலப்பள்ளி என வழங்குகிறார் எனலாம். இரு நாடுகளிலும் நாட்டுவளத்தைச் சின்னத்தம்பிப்புலவர் கற்பனைச் சிறப்போடு பாடியுள்ளர். உதாரணத்துக்குப் பின்வரும் பாடல்களைக் காட்டலாம்.
* மஞ்சளவிய மாடங்கடோறும்
மயில்கள் போன்மட வார்கணஞ் சூழ மஞ்ச ரோருகப் பள்ளியில் வான்சிறை
யன்ன வன்னக் குழாம் விளையாடுஞ் துஞ்சு மேதி சுறாக்களைச் சீறச்
சுறாக்க்ளோடிப் பலாக்கனிகீறி யிஞ்சி வேலியின் மஞ்சளிற் போய்விழு
மீழ மண்டல நாடெங்க ணாடே.
தண்டபாணியிறைஞ்சு பதாம்புயத்
தானுநாதன் றிகம்பரத் தூயன் பண்டை நாகனை யானும் விஞ்சனும்
பாதஞ் சென்னியறியாத நம்ப னண்டர் நாயகற் கற்புத மீதென
வரிகளேந்திய வாலய வெற்பைத் துண்ட வான்கழு கென்றும் வலம்வருஞ்
சோழ மண்டல நாடெங்க நாடே.”
பறாளை விநாயகர் பள்ளில் பள்ளன், மூத்தபள்ளி, பண்ணைக்காரன் ஆகியோர் ஈழநாட்டைச் சேர்ந்தவராகக் காட்டப்படுகின்றனர். இளையபள்ளி சோழநாட்டைச் சார்ந்தவளாகச் சித்திரிக்கப்படுகின்றாள்.
இப்பள்ளில் இடம்பெறும் குலமுறை கிளத்தல் என்ற பகுதி, நாட்டு வளம் கூறலைத் தொடர்ந்து இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் விநாயகரின் வரலாறும், அவரது பெருமையும் கூறப்படுகின்றன.
பறாளை விநாயகர்பள்ளில், பிற பள்ளு நூல்களைப் போன்று பண் ணைக்காரனின் தோற்றத்தை நகைச்சுவை ததும்பப் புலவர் வர்ணித் துள்ளார்.
* மாறுகண்ணுஞ் சோகிப் பாகிற் பல்லினழகுஞ் -சுத்த
மாவளந்த நாழிபோலே வாயினழகுஞ் சீறுசளியாற் பெருத்த துள்ளு நாசியுங் -கொட்டை
திரித்த பருத்தியின்பைக் கூறை வயிறுங்
ܓܔ- ܒܗܝܬܐ C-56 -)

ஏகலைவன் - கணை 6
கிறிவேறு தசையொட்டி வைத்திடுகாதுஞ்-சற்றே
கிடுகுகட்டிப் பெற்றமுட்டிக் காலுமாகவே
ஆறுமுக வேலர்துணை யார்வடிவமோர்-பதி
னாறானார்பண் சேரும்பண்ணைக் காரனார் வந்தார்.”
ஈழத்திலே தோன்றிய பள்ளு நூல்களுள், கதிரைமலைப்பள்ளுக்கு அடுத்த இலக்கியத்தரத்தைப் பறாளைவிநாயகர் பள்ளு கொண்டுள்ளது.
ஒல்லாந்தர் காலத்தில் தோன்றிய பிறிதொரு பள்ளு நூலாகத் தண்டி கைக் கனகராயன் பள்ளு விளங்குகிறது. யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பழையில் நிலப்பிரபுவாக விளங்கிய கனகராய முதலியாரைப்பாட்டுடைத்தலைவராகக் கொண்டதாக இந்நூல் அமைந்துள்ளது.1789 இல் இந்நூல் தோன்றியது என்று கருதப்படுகின்றது.
பிறபள்ளு நூல்களினின்றும் கனகராயன்பள்ளுபாட்டுடைத் தலைவர் விடயத்தில் வேறுபடுகின்றது. நூலின் பாட்டுடைத்தலைவராக உண்மையில் இடம்பெறுபவர் கனகநாயக முதலியார். ஆயினும், அவரது பெயரில் நூல் அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பதிலாக, அவரது முன்னோரான தண்டிகைக் கனகராயன் என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. பாட்டுடைத் தலைவர் என்ற முறையில் கனகராய முதலியாரின் பெருமை நூலின் பல இடங் களிலும் குறிப்பிடப்படுகின்றது. அதேவேளை, அவரின் உறவினர்களைப் பற்றியும் நூலாசிரியர் குறிப்பிட்டுச் செல்கின்றார். இதனாலேயே, அவர்கள் எல் லோருக்கும் பொதுவாக, அவர்களின் முன்னோரான தண்டிகைக் கனகராய னின் பெயரை ஆசிரியர் நூலுக்கு இட்டிருக்கலாம் என்று கருத இடமுண்டு. இந்நூலை மாவை சின்னக்குட்டிப்புலவர் இயற்றியுள்ளார்.
தண்டிகைக் கனகராயன்பள்ளிற் கதைநிகழிடம் தமிழகமாக அமைந் துள்ளது. பள்ளன், மூத்தபள்ளி, பண்ணைக்காரன் மூவரும் வடகாரையைச் சேர்ந்தவராகக் கூறப்படுகின்றனர். இளையபள்ளி, தென்காரையைச் சார்ந்த வளாகக் குறிப்பிடப்படுகின்றாள். மூத்தபள்ளி வடகாரைப்பள்ளி என்றும் இளையபள்ளி, தென்காரைப்பள்ளி எனவும் வழங்கப்படுகின்றனர்.
ஈழத்துப்பள்ளு நூல்களில் நிலப்பிரபு ஒருவரைப் பாட்டுடைத் தலை வராகக் கொண்டதாகத் தண்டிகைக் கனகராயன் பள்ளு விளங்குகிறது. ஒல் லாந்தர் காலத்திலிருந்து முக்கியத்துவம் பெறத்தொடங்கிய நிலப்பிரபுத்து வத்தைச் சேவிக்கும் மனப்பாங்கு வளர்ச்சியின் ஓர் உதாரணமாக இந்நூல் விளங்குகிறது.
la-N C-57 -)-

Page 33
பணஏகலைவன் - கணை 6
தண்டிகைக் கனகராயன் பள்ளின் செய்யுட்போக்கை இனங்காட்டும் முறையில் பின்வரும்பாடலை நோக்கலாம். மூத்தபள்ளிதன் கணவன்பற்றிப் பண்ணைக்காரனிடம் முறையிடும் பாடல்களில் ஒன்றாக இது அமைந் துள்ளது.
துங்கவெம்பரியான் அடைந்தவர்
தங்கட் கவம்புரியான் தூயவன் தண்டிகைக்
தங்கெல்லையறியான்- குடலையி
லுங்களைப்பறியான் - எனையென்றுஞ் சந்தியிலிமுப்பன் - பணமெலாஞ்
சிந்தியே நெளிப்பன் குங்குமப் பூச்சும் நடிப்புஞ்
சங்கையும் பேச்சும் போக்கக் கோட்டிகொள் பள்ளனைத் தொழுவிற்
பூட்டிடு மாண்டே."
தண்டிகைக் கனகராயன் பள்ளு ஞானப்பள்ளைவிட இலக்கியச் சுவை கொண்டதாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நாற்று நடு கைக்குப் பின்னுள்ள பகுதி இப்பள்ளு நூலிற் சிதைந்துவிட்டது.
ஈழத்துப் பள்ளு நூலாசிரியர்களுள் கவித்துவ ஆற்றல் மிக்கவர்க ளாகக் கதிரைமலைப்பள்ளின் ஆசிரியரையும், பறாளை விநாயகர் பள்ளின் ஆசிரியரான நல்லூர்சின்னத்தம்பிப் புலவரையும் குறிப்பிடலாம்.ஞானப்பள்ளு ஆசிரியரும், தண்டிகைக்கனகராயன் பள்ளின் ஆசிரியரான மாவைச் சின்னக் குட்டிப் புலவரும் கவித்துவ ஆற்றல் உடையவரேனும், இருவரும்பாட்டுடைத் தலைவர்களின் பெருமைகளை எடுத்துரைப்பதிலேயே அதிக கவனத்தைச் செலுத்திவிட்டனர். ஈழத்துப் பள்ளு நூல்களில், பள்ளு இலக்கிய அடிப்படை யில் இலக்கியத்தரம் கொண்டவையாகக் கதிரைமலைப்பள்ளையும், பறாளை விநாயகர் பள்ளையுமே கூறமுடியும்.
C-58-)
Na1

ஏகலைவன்  ைகணை 6
மறுமலர்ச்சிப் பண்டிதர் ச.பஞ்சாட்சர சர்மா
- செங்கைஆழியான் க.குணராசா -
நவீன தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக்குப் பண்டிதர் பஞ்சாட்சர சர்மா ஆற்றிய பணி உண்மையில் இலக்கிய உலகினை அவருக்குக் கட மைப்பட வைத்திருக்கின்றது. பண்டிதராகவிருந்தும், வேத சாஸ்திர ஈடுபா டுள்ள வைதிகராக இருந்தும் பழமையில் தீவிரப் பற்றுமிக்கவராக இருந்தும் அவர் நவீன இலக்கியத்தின் வளர்ச்சிக்கு எவ்விதத்திலும் தடையாக இருக் காது அதனை ஓர் இயக்கமாக வளர்ப்பதில் அயராது முயன்றிருக்கின்றார். நாற்பதுகளின் நடுப்பகுதியில் மறுமலர்ச்சி இலக்கியவாதிகளை ஒருங்கி ணைத்து புத்திலக்கியம் ஈழத்தில் மலர அவர் காலாக இருந்துள்ளார். பழை மையைச் சரிவரப் புரிந்து கொண்டமையால் புதுமை இலக்கியத்தினைச் சரி யான தடத்தில் படைப்பதிலும் வழிகாட்டுவதிலும் அவருக்குச் சிரமமிருக்க வில்லை. அவருடைய ஆக்க இலக்கிய முயற்சிகள் கட்டுரை, புனைகதை, மொழிபெயர்ப்பு, நாடகம், சிறுவர் இலக்கியம் எனப் பல்துறை சார்ந்திருந் துள்ளது. அவை அந்தத் துறைக்குரிய வகைமாதிரி இலக்கிய வடிவமாக அமைந்திருப்பதைக் காணலாம். ,
1916 இல் கோப்பாயில் பிறந்த பஞ்சாட்சரசர்மா பாடசாலைக் கல்வியிலும் பார்க்கக் குருகுலக் கல்விமூலம் தன் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக் கொண்டவர். தமிழ், சமஸ்கிருதம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி முதலான மொழிகளில் புலமை மிக்கவர். கலை இலக்கிய நாட்டமும் நிறைய வாசிக்கும் ஆர்வமும் கொண்டிருந்த இவரின் எழுத்தாற்றலைத் தூண்டும் சக்தியாக மறுமலர்ச்சிச் சங்கம் அமைந்தது. ஈழத்துத் தமிழ் இலக் கியத்தில் மறுமலர்ச்சிச் சஞ்சிகைக்கு இருக்கின்ற இடம் இன்றும் பலராலும் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றது. வரதர், அ.ந.கந்தசாமி, அ.செ.முருகானந் தன், நாவற்குழியூர் நடராஜன், சாரதா என்போருடன் பஞ்சாட்சரசர்மாவும் இணைந்து மறுமலர்ச்சிஎழுத்தாளர் சங்கத்தினை உருவாக்கினர். மறுமலர்ச் சிச் சஞ்சிகையின் இணையாசிரியர்களில் ஒருவராக அவர் இருந்துள்ளார். அக்கால வேளையில் அவர் தன் எழுத்தாற்றலை வளர்த்துக் கொண்டார்.
பண்டிதர் பஞ்சாட்சரம் அவர்கள் பஞ்சாகூடிரம், ச.ப.ச, அகூரம், ஜயாறன், நச்சினார்க்கினியர், வாத்தியார், பரம், சர்மா, இரட்டையர்கள்,
N C-59-)

Page 34
ஏகலைவன் - கணை 6
பாரத்வாஜன் முதலான பல புனைப்பெயர்களில் மறைந்திருந்துதன் படைப்புக் களை வெளியிட்டுள்ளார். 1936 ஆம் ஆண்டு தனது இருபத்து மூன்றாவது வயதில் இலங்கை விகடன்’ என்ற சஞ்சிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித் தார். அதன் பின்னர் மறுமலர்ச்சியில் தொடர்ந்தும், ஈழகேசரி, கலைச்செல்வி, ஆனந்தன், நவசக்தி, வீரசக்தி,கலாமோகினி, பாரததேவி, காந்தியம், ஈழநாடு முதலான பத்திரிகைகள் / சஞ்சிகைகள் என்பனவற்றில் எழுதியிருக்கிறார். நவசக்தி, வீரசக்தி,கலாமோகினி,பாரததேவி, காந்தியம் என்பன தமிழ்நாட்டுச் சஞ்சிகைகளாகும். அவையும் பஞ்சாட்சரசர்மாவின் படைப்புகளை விரும்பி வெளியிட்டிருக்கின்றன. ஈழத்துப் பேனா மன்னர்கள் என ஈழகேசரியில் இரசிக மகன் கனக செந்திநாதன் எழுதிய அறிமுகவரிசையில் பஞ்சாட்சரசர்மா தக்க வாறு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறார். மல்லிகையில் நவம்பர் 1985 இல் அவரின் அட்டைப்படத்துடன் வரதரின் அவர் குறித்த கட்டுரையையும் வெளி யிட்டுக் கெளரவித்துள்ளது.
கட்டுரை இலக்கியத்திற்குப் பஞ்சாட்சரசர்மா அளித்திருக்கும் பங்கு குறிப்பிடத்தக்கது. பல்துறைக் கட்டுரைகள், கண்டனக் கட்டுரைகள், விமர் சனக் கட்டுரைகள் என அவர் எழுதியிருக்கின்றார். வசனகவிதை, வடமொழி யும் வள்ளத்தோரும், தமிழில் என்ன இருக்கிறது ? தமிழ் மொழியும் ரோமன் லிபியும், மாறும் இலக்கணம், புத்தரின் தந்தம், மூலங்களும் மொழிபெயர்ப்புக் களும், ஈழநாட்டில் தமிழ்க்கவிதையின் வளர்ச்சி, நல்லைக்கு வந்த முருகன் எனப்பல கட்டுரைகளைக் குறிப்பிடலாம். அக்கட்டுரைகள் தெளிவும் ஆற் றொழுக்கான உரைநடையும் கொண்டிருக்கின்றன. நல்லைக்கு வந்து முரு கன் கட்டுரையில், ஆறுமுகநாவலரின் பெருமுயற்சியால் தமிழகத்திலிருந்து வருவிக்கப்பட்ட முருகன், வள்ளி, தெய்வானை சிவவடிவங்கள் நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய கோயில் அதிகாரி மறுத்ததால் அச் சிலைகள் விடத்தற்பளை வயற்கரைக் கந்தசுவாமி கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட வரலாற்றினைத் தெளிவாக்கியுள்ளர். செந்தமிழ்ச் செல்வி சஞ் சிகையில் யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த ஒரு செல்வியாழ்ப்பாணத் தமிழைப் பழித்தெழுதிய கட்டுரைக்குப் பஞ்சாட்சரசர்மா தொடுத்த கண்டனக் கட்டுரை முக்கியமானது. பஞ்சாட்சர சர்மாவிற்குக் கட்டுரை இலக்கியம் நன்கு கைவந் திருந்தது.
புனைகதைத் துறையைப் பொறுத்தளவில் பஞ்சாட்சரசர்மா கனவு லகம், வாக்குறுதி, படித்துறை சொன்ன பழங்கதை, கண்ணிர்த்துளிகள், கீத நாதம் ஆகிய சிறுகதைகளைத் தந்துள்ளார். இவற்றில் கனவுலகமும் வாக்கு
-27-N C- 60-)

ஏகலைவன் - கணை 6
உறுதியும் மலையாளச் சிறுகதைகளின் தமிழாக்கங்கள். படித்துறை சொன்ன பழங்கதை ரவீந்திரநாத் தாகூரின் சிறுகதையின் தமிழாக்கமாகும். கன்னிர்த் துளிகளும், கீதநாதமும் அவரின் சுயபடைப்புக்கள் எனக்கொள்ளலாம். தான் வாசித்து ரசித்தவற்றினை வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளும் ஆவல் அவ ரிடம் இருந்துள்ளது. அதனால் பிறமொழிகளில் வெளிவந்த சிறுகதைகளைத் தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருக்கிறார். வாக்குறுதி என்ற சிறுகதை ஒரு யப்பானியக் கதையாகும். யப்பானியக் கதையை மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளனர். அதனைத் தமிழில் மொழிபெயர்த்து பஞ்சாட்சரசர்மா தந் துள்ளார். இச்சிறுகதை கோவையில் இருந்து வெளிவந்த வீரசக்தி என்ற சஞ் சிகையில் வெளிவந்தது. படித்துறை சொன்ன பழங்கதை 1939 ல் இலங்கை விகடன் என்ற சஞ்சிகையில் வெளிவந்துள்ளது. கனவுலகம் என்ற மலை யாளக் கதையின் தமிழ் ஆக்கத்தைக் கனக செந்திநாதன் மிகவும் வியந் துள்ளார். மொழிபெயர்ப்புச் சிறுகதையை வாசிக்கின்ற உணர்வே ஏற்படாத விதமான மொழிபெயர்ப்பு அதுவென்பது அவர் கருத்து. மேலும் மலையாள நாடகம் ஒன்றினை அடிப்படையாகக் கொண்டு வனதேவதை என்றொரு நாட கத்தினையும் பஞ்சாட்சர சர்மா எழுதியுள்ளார். அது 1947ல் மறுமலர்ச்சியில் வெளிவந்திருக்கின்றது.
பஞ்சாட்சர சர்மாவின் புனைகதைப் பணியில் சிறுவர் கதைகள் சில குறிப்பிடத்தக்கன. வாத்தியார் என்ற புனைபெயரில் இவை எழுதப்பட்டிருக் கின்றன. எலிக்குஞ்சுச் செட்டியார், என்ன வேண்டும்? தெரிந்தால் சொல்லுங் கள், பூமிசுழல்கிறதே என்பன சர்மாவின் சிறுவர் கதைகளம். இவற்றில் முதல் மூன்றும் மறுமலர்ச்சியில் வெளிவந்துள்ளன. நான்காவது அம்புஜம் என்ற சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றது. இவை சிறுவர்களின் உளப்பாங்கினை வளர்க்கும் விதத்தில் எழுதப்பட்டிருக்கின்றன.
பண்டிதர் ச.பஞ்சாட்சரசர்மாவின் இலக்கிய எழுத்துக்கள் ஈழத்திலக் கியத்திற்கு எவ்வாறான பங்களிப்புச் செய்துள்ளன என நோக்கில் பெரும் சாத னைகளாகி ஈழத்து இலக்கியத்தின் செல்நெறிக்கு வலுவூட்டினவெனக் கூற முடியாதுவிட்டாலும், மறுமலர்ச்சிஎன்றஈழத்து இலக்கிய இயக்கத்தின் முக்கி யஸ்தர்களில் ஒருவராக விளங்கி நவீன ஈழத்தமிழ் இலக்கியத்தை முன்னெ டுத்துச் செல்வதற்கான மார்க்கத்திற்குரிய பாதையைச் செப்பமிட்டவர் என்ற வகையில் நினைவுகூரத்தக்கவர்.
l-a-N C-61 - )

Page 35
மேகம் கிளித்தட்டை
மெல்ல நிறுத்திவிட காகம் வியக்கும் ടു కొల్యి கருமை நிறம் வானத்தில் SS சில்லென்று வீசும் (5LO S சிலு சிலு காற்றியல்பால் உள்ளடை தாண்டி QF உணர்வைத் தொடும் ஈரம்
மெல்ல விழுந்த துளி மேனி தொடுகையிலே சொல்ல முடியாச் சுகம் தோன்றும்
மண் வாசம்
நாசிப் பரப்பில் நடை பயிலும் தேவதைகள் ஆசிவழங்கும் அறுகரிசிபோல விழுங்கோடி மழைத்துளிகள் கொஞ்சிக் குலவுகையில் நாடித்துடிப்பின் சுவை இனிக்கும் நெற்றி வழி சிந்திஇதழடையும் சின்னத் துளியழுது பந்திவைக்க தேன் தெவிட்டும்
பாதம் நனைக்கும் தெருவெள்ளம் மேடுபள்ளம் தேடும் அழகில் அருவி அபிநயங்கள் ஆயிரமாய் தத்துவங்கள் காகித ஒடம் கவிழ சிறுவயதில் ஏதோ "டைட்டானிக்” என நினைத்து விக்கித்த ஞாபகங்கள் மீளும் அவளுடைய தோளுரசி , ஆதரவாய் ஒற்றைக் குடைபிடித்து சென்ற நாளும் சிந்தையிலே தட்டும் உயிரின் வேர் தித்திக்க சந்தம் சரமாரியாய் அவிழும் ତ। சங்கீதம் கன்னக்கோல் வைத்து ద్రవో ఖడ භූ இதயம் திருடிவிடும் ک٦ چک இன்பம் வெறுத்து இனியமழை கண்டஞ்சி کم இல்லம் ஒதுங்கும் மனிதரோடு ساعتکنی கூட்டாட்சி வைத்தேன் குசினி ஒழுகுமென்று as ÍS
(62)
 

ஏகலைவன் - கணை 6
துரோனர் பதிநள்
* அமெரிக்காவால் தீவிரவாதத்தை அழிக்கமுடியுமா ?
தங்களைத் தாங்களே அழிக்குமளவுக்கு அறிவிலிகள அவர்கள்
சி.கண்ணன் கரவெட்டி * விளங்கமுடியாத கவிதைகளையே விமர்சகர்கள் உயர்த்துவது ஏன்? விளங்க முடியாத திரை(யிசை)ப்பாடல்களையே ரசிகர்கள் ரசிப்பது ஏன் ? 1) உரைக்க வசதி 2) குரைக்க வசதி
தி.சோபிதன் நெல்லியடி
* கடிகாரங்கள் வைத்து வருகின்ற அட்டைப் பெட்டியின் முகப்பிலுள்ள TCCMTT LL LMTT TG TLTTTMM TT LLLLLLLLM MMTTMMLMLLLLL கிறதே ஏன் ? . அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் சுடப்பட்டு இறந்த நேரந்தான் அது. அவர் இறந்த நேரத்தில் நிகழ்ந்த அதிசயம், அவரது கடிகாரமும் நின்றுவிட்டது. இந்த ஒற்றுமையினைத்தான் கடிகார விளம் பரங்கள் காட்டுகின்றன. w
ப.அஜந்தன் கொக்குவில் * இன்றைய பெண்களின் எடுப்பான உடைகளைப் பற்றி அண்றைய புவ
வனாய் மாறித் துக்ேகான கவிதையொன்று தாரும்?
" சென்று தேய்ந்திறுதல் நின்று பயனின்மை சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல் மிகைபடக் கூறல் கட்டுரை பற்றி பவணந்தியாரின் வசன கவிதையிது.
ܓ=----ܠܐ C- 63-)

Page 36
ஏகலைவன் - கணை 6
நரதீஸ் உடுப்பிட்டி
Y S S LLLLLLMLTTTT TTTT MMMMMTM MMMTMMT LMMMLL S LK TT
தியபடி ஒரு முத்திரை கானப்படுகின்றதே. அதன் அர்த்தம் என்ன? விரல்களை விரித்து V என்ற ஆங்கில எழுத்தைக் குறிக்கும் வகையில் காட்டுகின்றார்கள். “Victory" என்றால் வெற்றி என்று பொருள்.
ஆர்வன் கரணவாய்
* உலக அதிசயங்களைபுராதன. இடைக்கால .நவின எனும்
யில் வரிசைப்பகத்தியபோதெல்லாம் 7 என்ற எண்ணிக்கையில் மட்கம் எதற்காகக் குறிப்பிடுகிறார்கள் ? ஆண்டிப் பேட்டர் என்ற கிரேக்க அறிஞர்தான் இதனை வரிசைப்படுத்தி னார். கிரேக்கர்களுக்கு ஏழு என்பது புனித எண். இதனாலேதான் அதி சயங்களை ஏழுக்குள் அடக்கிவிட்டார். சில அதிசயங்கள் விடுபட்டதற் கும் அதிஷ்ட எண்ணே காரணம்.
அஇளமாறன் இமையாணன் * ஒரு மனிதனுடைய தேசப்பற்றிள் உச்சக் கட்டத்தை எப்போதுகான
Gorb
கடைசி ஓவரின் கடைசிப் பந்தில்
விதிரு நல்லூர்
* தொவைக் காட்சித் தொடர்களிள் பெருகி வருகின்ற விளம்பரங்களை
ஒழிக்க வழி என்ன ? கிளைந்து உலையிலிட ஒரகப்பை இலையிலிட
எங்கள் இல்லத்தரசிகளுக்கு நேரம் ஒதுக்கித் தருகின்ற அவற்றை ஒழிக்க வழிகேட்டு எம்மைப்பட்டினி போடாதீர். '
பணத்தாள் எண்ணும் ஒசையில் பனங்கூடல் அழித்த பகை ஒப்பாரிகள் தீப்பொறி கண்டு திகைத்தது ஆமி’யின் சம்பளம். சீவிய நுங்கில் சிவன்.
மனித உடல் கொத்தாது விரதமிருந்தன காகங்கள்
சமாதான காலம்.
 

م1
ஏகலைவன் - கணை 6
தேடல் போட்டி இல . 06
தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் ஐம்பதாவது பிறந்த தினம்
) 26-1-2004 2) 26-11-2005 3) 26-11-2003
2002ம் ஆண்டு கேணல் கிட்டு பீரங்கிப்படையணியின் சிறப்புத் தளபதி, புற்றுநோயால் வெளிநாடொன்றில் வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதியான இவரின் பெயர்
1) கேனல் சங்கர் 2) கேணல் ராஜ
3) லெப்கேணல் கங்கை அமரன்
இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்ட தினம் 1) 1991 a610 2) 1990 தை 24 3)1990 ஆனி10
கியூபா ஜனாதிபதி பிடல் காஸ்ரோவால் பொருளாதார அமைச்சராக நிய மிக்கப்பட்ட பின்னரும் , போராளியாக மாறி ஆயுதமேந்திப் போராடி கண்கள் திறந்தபடியே மரணித்த பொதுவுடமைப் புரட்சிவீரர் 1) சேகுவாரா 2) மா.வோ.சேதுங் 3) லெனின்
தமிழர் பிரதேசங்களை அபகரிப்பதற்காகவும், அரசியல் இலாபம் கருதியும் சிறிமாவோ பண்டார நாயக்காவால் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட மாவட்டம்
1) அம்பாறை 2) முல்லைத்தீவு 3) கிளிநொச்சி
இந்தியா துடுப்பாட்டத்தில் உலகக் கிண்ணத்தை வென்றபோது அவ் வணியின் தலைவராக இருந்தவர் 1) ரவிசாஸ்திரி 2) கவாஸ்கர் 3) கபில்தேவ்
வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையைக் கருப் பொருளாகக் கொண்டு பாரதியாரின் பாடல்களோடு நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படம் 1) வீரபாண்டிய கட்டபொம்மன் 2) சிவந்தமண் 3) கப்பலோட்டிய தமிழன்
சுடுமணலில்
பாதணியின்றி நடக்கப் புழக்கியது
மிதிவெடி, )کی (ب Y )***?(
(165)
Ye1

Page 37
8.
10.
13.
14.
15.
ஏகலைவன் - கணை 6ண
தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த நாவல்கள் திரைப்படங்களகும்போது தோல்விஅடைந்தன. எனினும் கொத்தமங்கலம் சுப்புவின் நாவலொன்று திரைப்படமாகி பெரு வெற்றிகண்டது. அந்நாவல் எது?
1) முள்ளும் மலரும் 2) தில்லானா மோகனாம்பாள் 3) பாவைவிளக்கு
தமிழில் வெளிவந்த முதலாவது வண்ணத் திரைப்படம் 1) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் 2) இராஜராஜசோழன் 3) ராஜா ஹரிச்சந்திரா
அமெரிக்க ஜனாதிபதியாகிய பிரபல நடிகர்
1) ரொனால்ட்ரீகன் 2) கென்னடி 3) நிக்ஸன்
பிரிக்கமுடியாத நுண்பொருள் எனக்கருதப்பட்ட அணுவைப் பிளந்தவர் 1) அயன்ஸ்ரீன் 2) ரதபோர்ட் 3) tSGәпБѣ
இன்றுவரையில் அஃறிணைக் கதாபாத்திரம், ஒன்றுமட்டுமே "ஒஸ்கார் விருதுபெற்றிருக்கின்றது. இது பிரபல ‘காட்டுனிஸ்ட் வால்ட்டிஸ்னியால் வடிவமைக்கப்பட்டது. அது எது?
1) டைட்டானிக் கப்பல் 2) டைனோசர் 3) மிக்கிமெளஸ்
செயற்கைக்கோள்மூலம் விண்வெளிசென்ற முதல் உயிரினத்தின் பெயர் 1) யூரிககாரின் 2) லைக்கா 3) FTub
1984 மார்கழி 3ம் திகதி இரவு இந்தியாவில் இரசாயனத் தொழிற்சாலை ஒன்றிலிருந்து யூனியன் கார்பைட்" எனும் விஷவாயு வெளிவந்தபோது உறங்கிக் கொண்டிருந்த 2000க்கும் அதிகமானோர் இறந்தார்கள். இவ் விபத்து நிகழ்ந்த இடம்
1) கல்கத்தா 2) ராஜஸ்தான் 3) போபால்
இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த விஞ்ஞானி ஒருவர், தான் எம்.பியாக இருந்த காலத்தில் ஒரே ஒரு முறைதான் பேசியிருக் கிறார். “காற்று வரவில்லையன்னலைத் திறக்கச் சொல்லுங்கள்” என்பது தான் அது. வெள்ளொளியின் ஏழு நிறம் , டெலஸ் கோப் போன்றவற்றை நினைத்தால் நினைவுக்கு வரும் இவ்விஞ்ஞானியின் மற்றொரு அதிஅற் புதக் கண்டுபிடிப்பு
1) புவியீர்ப்பு சக்தி 2) கூர்ப்பு 3) மின்குமிழ்
イエト C- 66-)

16.
17.
19.
20.
ஏகலைவன் - கணை 6
தன்து18வது வயதில் கடிகாரத்தின் பென்டியூல (ஊசல்தத்துவத்தினை உலகிற்கு உரைத்தவர் 1) LorrijdscapsT60 2) (పిDu 3) கலிலியோ கலிலி
பெண்வாசனையே அறியாத இங்கிலாந்தின் பிரதமர்நாற்காலியில் முதன் முதலில் அமர்ந்தவரும், தாராள பொருளாதாரக் கொள்கை மூலம் உல கிற்கே உயிரூட்டியவருமான பெண்மணியை உலகம் இரும்புமனுஷி”
எனப் போற்றுகின்றது. இவர் யார்
1) மார்க்கிரெட் தாட்சர் 2) எலிசபெத் மகாராணி 3) LuII6OTIT
நீலாவணனின் குறுங்காவியமான 'வேளாண்மையை வெளியிட்டவர் 1) மு.பொன்னம்பலம் 2) சு.வில்வரத்தினம் 3) வ.அ.இராசரத்தினம்
நான்காவது உலக தமிழாராய்ச்சி மகாநாட்டில் மஹாகவிது.உருத்திர மூர்த்தியைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தவர் 1) சாலை இளந்திரையன் 2) விபுலானந்தர் 3) தனிநாயகம் அடிகள்
'ஏகலைவன் 'முதலாவது இதழிலே சிறுகதையினை எழுதியவர் 1) சி.கார்த்திகா 2) ம.கோகுலவாணி 3)வதிரி இராஜேஸ்கண்ணன்
போட்டி நிபந்தனை விடைகளுடன் அனுமதி அட்டை இணைக்கப்பட வேண்டும் முடிவுத் திகதி : 05.02.2004
BagLib LITTLp SaGD - OS digi ിൽ ഒിയLയേu ബഗ്ഗ് Lി തുടങ്ങ്
1ம் பரிசு : செள்வி மேனகா விக்கிரமராஜசிங்கம்
யா/வடஇந்து மகளிர் கல்லூரி - 13 வர்த்தகம்
2ம் பரிசு : செல்வி ஜெயபாதசேகரம் ஜெயதிளம்வரி
யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி - 2005 கலை
3ம் பரிசு : செல்வி சுஜாதா இராஜகோபால்
யா/வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி - 2005 கலை
イエト上 C- 67 -)-

Page 38
ஏகலைவன் - கணை 6
ஆறுதல் பரிசு பெறுவோர்
GaFibGulf DBUTTOG GITGIOf யா / உடுப்பிட்டி மகளிர் கல்லூரி - 2005 கலை
GFibGLIG STEGIrült BasTLJITEGGING uuIT / D (6ŭusiq. 965. - 9A
செல்வி ஜனனி சிவப்பிரகாசம் யா / மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை - 11A
செள்வி பசோதா பரமசிவம் யா / வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி - 12 வர்த்தகம்
செள்விதர்வூரிகா சிவப்பிரகாசம் யா / வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி
செல்வி அனுவழியா பறிதர் யா / வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி
செல்வன் சிவராமலிங்கம் சிவகுமாரன் யா / விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி - 9C
செல்வன் பாகையேந்திரன் நந்தகோபண் யா/நெல்லியடி ம.ம.வித்தியாலயம் - 8A
செல்வன் பாலச்சந்திரன் காண்மபண் யா / கம்பர்மலை அத.க.பாடசாலை - தரம் 8
செல்வன் நாகேஸ்வரன் ஜிவிதன் யா / தேவரையாளி இந்துக்கல்லூரி - 10B
போட்டியில் பங்கு பற்றிய நூற்றுக்கணக்கான
மாணவர்களுக்கும், பரிசு பெற்றவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள்.
C- 68-)
as
گسس ح
 

ஏகலைவன் - கணை 6
- கமலின் இன்னொரு oュを)ん。 அரை குறை அவதாரம்
aA9 醉 巴俗 இUஇஇஇ தனது திரைப்படங்கள் மூலம் என்ன சொல்ல * வருகிறேன் என்பதை தெளிவாகச் சொல்லத் தெரி யாதவர் கமலஹாசன் என்பது சில விமர்சகர்களின் வாதம். இதனை நிரூபிக் கும் வகையில் 'அன்பே சிவம் அவதரித்திருக்கிறது. பிரளயனின் நாடகக்குழு, தொழிலாளர்களின் சம்பள உயர்வு, செங்கொடி, பன்னாட்டு நிறுவனங்களை தாக்கல் போன்றன இணைந்து படம் உருவாகியுள்ளது.
நல்லசிவம் ஒரு மார்க்சியவாதி. விகாரமான தோற்றமுடையவன். அமெரிக்க மோகத்திலே அள்ளுண்ட அன்பரசுவை விமான நிலையத்திலே சந்திக்கின்றான். நல்லசிவத்தை தீவிரவாதியாக சந்தேகித்து தன் தவறால் அன்பரசு குற்றஉணர்வுக்கு உள்ளகிறான். சென்னை நோக்கிய நான்கு நாள் பயணத்தில் உண்மை இந்தியாவை, அமெரிக்கநாகரிகத்தில் அழுந்திப்போன இளைஞனுக்கு அறிமுகம் செய்கிறான் நல்லசிவம். அப்படியே அன்பரசுவின் உள்ளே மறைந்து கிடக்கும் கடவுளைக் கிண்டி வெளியே எடுக்கிறான். சென் - னை நோக்கிய பயணத்தில், பின்னோக்கிப்பார்த்தல் உத்தியின் மூலம் நல்ல சிவத்தின் காதல் காட்டப்படுகிறது. நாடகக்கலைஞனாகவும், மார்க்சியவாதி யாகவும், ஓவியனாகவும் கணனி வல்லுனனாகவும் நல்லசிவத்தைக் கண்டு முதலாளியின் மகள் காதல் கொள்கிறாள். எதிர்பாராவிபத்தில் இருவரும் பிரிகி றார்கள். சிவம் தன் காதலியை அன்புக்கு மனைவியாக்குகிறான். (கதாநாயகி அன்பே, சிவம் என்று நினைத்து வாழுவாள் போலும் 1)
பிறப்பால் இந்தியனாகவும், சிந்தனையால் அமெரிக்கனாகவும் மாத வன் (அன்பரசு) காட்டப்பட்டுள்ளார். உலக மயமாக்கலை இத்திரைப்படம் எதிர்ப்பதாக கமல் கூறுவது உண்மையா? அன்பரசு போன்றவர்கள் உலக சந்தையைக் கடவுளாகக் கொண்டவர்கள். இவர்கள் தமது திறமைக்கும், புத்திக்கூர்மைக்கும் கிடைக்கும் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள். தோற் பவர்களைப் பற்றிஇவர்களால் கவலைப்படமுடியாது. பட்டினிச் சாவுகளுக்கும் தற்கொலைகளுக்கும் முதலாளித்துவம் பொறுப்பேற்க முன்வராது. ஆனால் இவர்களுக்குள்ளும் அன்பு இருப்பதாகவும், அது அடைப்பட்டு இருப்பதாக வும் அதைத் தோண்டி எடுத்துவிடலாம் எனவும் கமல் நம்பவைக்க முயற்சிக் கிறார். இந்தவிதியின்படி நான்கே நாளில் மாதவனுக்குள் இருந்த கடவுள் தோண்டி எடுக்கப்படுகிறார்.
மனசாட்சி என்பதே மூடநம்பிக்கைதான். அதற்கு கடவுள் என வடிவ
-C 69
N-1

Page 39
ஏகலைவன் - கணை 6
விளக்கம் கொடுப்பதை ஏற்கமுடியுமா..? சமூகவிதிகள் குறித்தும்,தனிப்பட்ட ஒழுக்கம் குறித்தும் ஒவ்வொருவரும் உருவாக்கி வைத்திருக்கும் ஒரு கை யேடுதான்மனச்சாட்சி சுதேசநாட்டுப்பணத்தில் படித்துவிட்டு வெளிநாடு செல் லும் ஒவ்வொரு இளைஞனும் “என் திறமைக்கு இந்தநாட்டில் மரியாதை இல்லை” என்று கூறிவிட்டுச் செல்லும்போது தனது மனசாட்சிப்படி தான் விமானம் ஏறுகிறான்.
உலகமயமாக்கலுக்கு எதிரான படத்தில் தொழிலாளர் வர்க்கம் உறக்கத்திலே இருக்கிறது. நாடகம் பார்ப்பது, சண்டையை வேடிக்கை பார்ப்பது என்பதோடு அவர்கள் வேலைசரி சம்பளம் 910ஐ920 ஆக்க வேண்டும் எனும்போது தலையாட்டுகிறார்கள். தொழிலா ளர் தலைவர்-முதலாளி மகள் காதல்பற்றி கேள்வி கேட்கக் கூடத் தெரிய வில்லை. உலகமயமாக்கலால் பாதிக்கப்பட்டவர்க்கம் ஊமையாக இருக்கும் போது “அன்பேசிவம்” எப்படி உலகமயமாக்கலை எதிர்க்கும் படமாகலாம் ?
நவீன மேல்க்குடி வர்க்கத்திடம் அற உணர்வை மன்றாடி நிற்பது சரியல்ல. இவ்வர்க்கத்திடமிருந்துநீங்கியவர் சிலர் இருக்கலாம். அவர்களிடம் இதயத்தில் கடவுள் இருக்கலாம். ஆனால் மாதவன் அவ்வாறு நீங்கியவர் களின் பிரதிநிதி அல்ல. அந்த வர்க்கத்தின் பிரதிநிதி
முதலாளியின் வரவேற்பறையில் ஓவியம் வரைந்து காசுவாங்கிதொழிற் சங்கத்திற்கு பயன்படுத்துவதை நல்லசிவத்தின் "அறவுணர்வு” தடுக்க வில்லை. “கலை விலைபோகலாம். கலைஞன் தான் விலைபோகக் கூடாது” எனவிளக்கம் வேறு. பேச்சில் கடவுளும், செயலில் கயமையும் கொண்ட பாத் திரங்களை அண்ணாத்துரை காலத்துச் சினிமாக்களே காட்டி விட்டன.
நமத்துப்போன அத்தகைய கதாபாத்திரமாகவே நாசர்’ தென்படு கிறார். மார்க்சியவாதிகளை துல்லியமாகத் திரையிலே கமல் காட்டியிருக்கிறார். எவ்வளவுதவறுகள் இருந்தாலும் சராசரித் தமிழ்த்திரைப்படங்களோடு ஒப்பிடும் போது ‘அன்பே சிவம் கலையம்சத்துடன் காணப்படுவது பாராட்டப்பட வேண் டியதாகும்.
(உசாத்துணை - புதிய கலாச்சாரம் சஞ்சிகை)
ம.கோகிலவாணி 2004 கலை - யா/உடுப்பிட்டி அ.மி.க
arN C- 70-)
 

ஏகலைவன் - கணை 6
alisa Ij I Lolai
இத்தாலிநாட்டில் ப்ளோரன்ஸ் நகரின் வின்சிஎனும் கிராமத்தில் 1452 ஆம் ஆண்டு லியனார்டோ டாவின்சி பிறந்தார். ஸெர்பியரோ என்பவருக்கும் கேத்தரினா என்ற கூலிப்பெண்ணுக்கும் சட்ட விரோதமாகப் பிறந்ததனால், தாய்ப்பாசம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந் தார். இவரது காலத்தில் ப்ளோரன்ஸ் மாபெரும் கலை பண்பாட்டு மையமாகத் திகழ்ந்தது. இங்குள்ள ப்ொட் டிகா எனும் கலைப்பட்டறையில் டாவின்சி மாணவனா கச் சேர்ந்தார். இவர் வரைந்த “மாகியைத் தொடுதல்” ஓவியத்தைப் பார்த்த இவரின் குரு, அதற்கு இணை யான ஒவியத்தைத் தன்னால் வரைய முடியாதென்று கூறித்தூரிகையைத் தூர எறிந்துவிட்டு வேறுபணியைக் கைக்கொண்டார். அனைத்து அழகியற் கலைகளிலும் டாவின்சி தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, தனித்துவத்தினை நிலை நாட்டினார். பொட்டிகா பட்டறையில் ஓவியக்கலை, சிற்பக்கலை, பொறியியற் கலை போன்ற பலவற்றினைக் கற்று அறிந்தார்.
8 :
டாவின்சி வெறுமனே ஒவியர் மட்டுமல்ல. தேர்ந்த சிற்பி, சிறந்த கவி ஞர், இசைமேதை, தத்துவஞானி, விளையாட்டுவீரர்,பொறியியலாளர், வானிய லாளர், நீர்ப்பாசன நிபுணர், இராணுவ ஆலோசகர்.இப்படி பல அவதாரங் களின் பிதாமகன்.
உலங்குவானூர்தி, பீரங்கி போன்றன கண்டுபிடிக்கப்படாத காலத் திலே அவற்றினைக் கற்பனையில் வரைந்தார். விமானம் இல்லாத காலத்தில் “பரசூட்"டையும் கடிகாரம் இல்லாத காலத்தில் "அலாமை"யும் வரைந்திருக் கிறார். ஒரே நேரத்தில் இருகரங்களாலும் ஓவியம் வரையக்கூடியவர். கை களால் குதிரைலாடங்களை உடைக்கும் வல்லமை பெற்றவர்.
தாயின் கருப்பையில் குழந்தை எப்படி இருக்கிறது ? என்றுகூட ஓவியம் வரைந்தார். ஒளியையும் நிழலையும் ஒன்றுசேர ஓவியத்தில் நுழைத்த முதல் ஓவியர் இவரே. இவரது ஆய்வுகளே “கமரா' வுக்கான அடிப்படைத் தத்துவத்தினை எடுத்துரைத்தன.

Page 40
ஏகலைவன் - கணை 6
டாவின்சி ஓவியங்களில் மோனலிசா, அந் திம உணவு, லெடா, பெண்தேவதை போன் றன புகழ்பெற்றவை. மோனலிசாவின் புன் னகை பற்றிய புதிர்கள் இன்றுவரை பேசப் பட்ட வண்ணமே உள்ளன. மயானங்களை வென்ற மங்கை என மோனலிசா சிறப்பிக்கப் படுகிறாள். 'அந்திம உணவு சுவரோவியத் தில் இயேசு அமைதி தவழும் முகத்துடன் காணப்படுகிறார். வானத்திலிருந்து மிருது வான வெளிச்சம் இயேசுவின் முகத்தில் ஒளி யை அள்ளிவீசுகிறது. அருகிலிருக்கும் சீடர் கள் ஏதோதோ ரகசியம் பேசியும், புருவத்தைத் தூக்கிப்பார்த்தும், கைகளை ஊன்றியும் ஊற்றுநோக்குகின்றனர்.
1911ம் ஆண்டு மோனலிசா ஓவியம் திருடப்பட்டது. அதன்பின் அவ் வோவியம் வைக்கப்பட்டிருந்த இடத்தைப் பார்க்கவே மக்கள் கூட்டம் கூட்ட மாகச் சென்றனர். மீட்கப்பட்ட ஓவியம் இப்போது, பாரிசிலுள்ள லூவர் மியூஸி யத்தில் உள்ளது. ஐந்நூறு கோடி ரூபாய்க்குக் காப்புறுதிசெய்யப்பட்டுள்ளது.
1519ம் ஆண்டு தனது ரசிகனான மன்னன் பிரான்சிஸ் மடியின்மீது டாவின்சி உயிர் துறந்தார். கலை, மருத்துவம், தாவரவியல், பெளதிகம் என எல் லாத்துறைகளிலும் தடம்பதிக்கும் தனித்துவமான மனி தனை, இனி உலகம் பிரசவிக்குமா. p
S. 9 DII5JGof (2005 கலை) யா/உடுப்பிட்டி அ.மி.க
சோப் நுரைக்க அழுக்கானேன்
குளிக்கும் பெண்.
 
 
 

ஏகலைவன் - கணை 6 6. 3ே நீராவி இயந்திரத்தினைக் கண்டுபிடித்த நிறறைԱՍ ஜோர்ஜ் ஸ்டீவன்ஸன் தனது பதினெட்டு 2 6)கிம் வயது வரைக்கும் எழுதப் படிக்கத் தெரி யாதவராகவே இருந்திருக்கிறார். 1830 புரட் டாதி 15ம் திகதி இங்கிலாந்து மான்செஸ்ரரிலிருந்து லிவர்பூல் நகருக்கு முதலாவது “ரெயின்” வெள்ளோட்டம் நிகழ்ந்தது. எட்டு “ரெயின்”கள் வெள்ளோட்டத்தில் கலந்துகொண்டன. தற்செயலாக ஒரு ரெயின் நிற்க “ரெயின்”ஏன் நிற்கிறது எனத் தெரிந்துகொள்ள ஹஸ்கிசன் என்பவர் இறங் கினார். (இவர்தான் ஸ்ரீவன்ஸனுக்காக அரசாங்கத்தோடும், நிலக்கரிச் சுரங்க முதலாளிகளோடும் வாதாடிரெயின் ஒட்டும் அனுமதிபெற்றுக் கொடு த்தவர்) அருகே வந்த “ரெயின்”மோதிஇறந்தார். இதுவே உலகின் முதல் ரெயின் விபத்து. 3ே நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட முதல் அறுபது வருடங்களிலும் சுவீடன், நோர்வே, டென்மார்க், ஜேர்மனி போன்ற நாடுகளுக்கே திரும்பத் திரும்ப வழங்கப்பட்டது. இதனால் நோபல்பரிசின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டது. மகாத்மாகாந்திக்கு அமைதிக்கான நோபல்பரிசு அறிவிக்கப்படவில்லை. மேலும் டால்ஸ்டாய்,மாக்சிம் கார்க்கிபோன்ற இலக்கிய மேதைகளுக்குக் கூட வழங்கப்படவில்லை. 1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு “கீதாஞ்சலி” எனும் நூலுக்காக ரவீந்திரநாத் தாகூருக்கு வழங்கப் பட்டது. இதனை ஐரோப்பியர்கள் பலமாக எதிர்த்தார்கள். கீதாஞ்சலிக்கு அணிந்துரை எழுதிய ஆங்கிலக் கவிஞர் W.P. யீட்ஸ் கூட தாகூருக்கு வாழ்த்துக் கூறவில்லை. தாகூர் நோபல் பரிசுத் தொகையை கல்கத்தா விலுள்ள வங்கி ஒன்றிலே வைப்பிலிட்டார். சில மாதங்களில் அவ்வங்கி காணாமற் போய்விட்டது. பணத்திற்கோ பரிதாப முடிவு.
3ே இன்றைய உலகில் மருத்துவர்களின் புனிதகருவி "ஸ்டெதஸ் கோப்". 19ம் நூற்றாண்டில் ‘ரெனே’ என்ற பிரெஞ் மருத்துவர் ஒருவர் இருந்தார். அன்றைய காலத்தில் மார்பிலே காதை வைத்துக் கேட்டே இதயத்துடிப் பினை அறிந்தார்கள். கூச்ச சுபாவம் கொண்ட இம்மருத்துவரால், பெண் களின்மார்பில் காதை வைத்து இதயத்துடிப்பினை கேட்க முடியவில்லை. தன்னுடைய பயன்பாட்டிற்காக அவர் கண்டுபிடித்த கருவி தான் ஸ்டெ தஸ்கோப்.
(3 1430ஆம் ஆண்டு இன்றைய ருமேனியாவில் (அன்று ட்ரான்சில்வேனியா) வ்ளாட் ராகுலா எனும் இளவரசன் இருந்தான். இவன் சிறுவனாக இருந்த போது இவனின் தந்தையையும், தமையனையும் துருக்கியர்கள் கொடூர மாகச் சித்திரவதை செய்து உயிருடன் எரித்துக் கொன்றனர். இவன்மன்
is 73 O

Page 41
ஏகலைவன் - கணை 6
னனாகியபின், துருக்கியர்களைக் கொடூரமாகச் சித்திரவதை செய்யத் தொடங்கினான். இரத்தத்தின் சுவையும், மனித மாமிசமும் அவனை ஈர்த்தன. காலஞ் செல்லச்செல்ல சொந்த நாட்டு மக்களையே வேட்டை யாடினான். 1476 ஆம் ஆண்டு துருக்கியர்களால் கொல்லப்பட்டான். சில ஆண்டுகள் கழித்து அவனது சவப்பெட்டியைத் திறந்தபோது அது வெறு மையாக இருந்தது. இச்செய்தி மக்கள் மத்தியில் பரவி பெரும் பதற்றம் விளைவித்தது. இனந்தெரியாத கொலைகளுக்கெல்லாம் துருக்கியர் ரகு லாவையே குற்றம்கூற.வதந்திகளும் அறியாமையும் பயத்தைப் பெருக் கின. நாவலாசிரியர்களும், சினிமாக்காரர்களும் வதந்தியை உண்மை யென நம்ப வைக்கமுயன்றனர். இதுதான் “ரகுலா” உருவான கதை.
The Godfather திரைப்படம் திரையுலகத்தினரைப் பொறுத்தவரையில் ஒரு கல்லூரி ஆகும். சர்வதேச அளவிலே கடத்தல் கொள்ளை கொலை என்பனவற்றைச் செய்யும் ஒரு தலைவனின் கதை (நாயகன், பாட்ஷா போன்ற படங்கள் எல்லாம் “கோட்பாதரின்”நகல்கள்தான்) இக்கதைக்கு படக்குழுவினர் கதாநாயகனைத் தேடித் திரிந்தபோது, இயக்குனர் பிரான் சிஸ்போர்ட் கப்போலா அக்கதாபாத்திரத்திற்கு மார்லன் பிராண்டோவை அணுகினால் என்ன? என்று யோசனை கூறினார். ஆனால் தயாரிப்பாளர் களே”இது நம் இலட்சியப்படம் பிராண்டோ ஒரு காலத்திலே “Super Star” ஆக இருந்திருக்கலாம். இன்று அவர் தோல்விப்படங்களை கொடுக் கும் நடிகர்’ என்று கூறிமறுத்துவிட்டார்கள். ஆனாலும் கப்போலா மனந் தளராது பிராண்டோவை அணுகி, அவரோடு உரையாடினார். உரையாடிக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென எழுந்த பிராண்டோ தன்னறைக்குள் நுழைந்துவிட்டார். அரைமணிநேரமாக ஆசனத்தில் இருந்த கப்போலா பொறுமையிழந்து வெளியே செல்லப்புறப்பட்டபோது, அறைக் கதவினைத் திறந்துகொண்டு ‘கோட்பாதர்” வெளிப்பட்டார். பிராண்டோவின் ஒப்பனை யும் தோரணையும் கப்போலாவை உணர்ச்சியின் உச்சத்திற்கே அழைத் துச் சென்றது. கையிலிருந்த சிறிய கமராவினால் பிராண்டோவைப் படம் பிடித்துத் தயாரிப்பாளர்களுக்குப் போட்டுக் காட்டினார். அசந்துபோன தயாரிப்பாளர்கள் தலைகுனிந்தார்கள். ஒஸ்கார் விருதுகள் உட்பட சினிமா வுக்கான அனைத்து விருதுகளையும் பலமுறை வென்று சலித்துப்போன பிராண்டோ1972இல் கோட்பாதருக்கு மீண்டும் ஒருமுறை ஒஸ்கார் விருது பெற்றார்.அன்றைய முன்னணிநடிகர்கள் படப்பிடிப்புத்தளத்திலே சென்று நடிப்பாற்றலை ரசித்த படமாக The God Father அமைந்திருந்தது.
உகம்வழினி
தரம் 7 : யா/ இந்து மகளிர் கல்லூரி
(தகவல் -வாவ் 2000)
ܓܔ- ܒ -ܐܝ G.74 d

சமாதானம்
கதையாய் தொடர்ந்த கணைகள் முடிந்தது கவிதை தொடர்ந்தது களங்கம் முடிந்தது
உரிமைகள் பிறந்தன உடைமைகள் தெரிந்தன கவனம் திரும்பி கனமாய் வாழ்வு தொடர்ந்தது ஆயுதம் ஒழிந்தது அரனகள உடைநதது அரசு பிறந்தது அகிம்சை தொடர்ந்தது
புறவொன்று பிறந்து புதிதாய் நடந்தது கனவாய் நின்ற வாழ்வு நிஜமாய்ப் போனது
சாஹரிகரன்
யா/நெல்லியடி மத்திய மகாவித்தியாலயம்
தரம் 8
ஏகலைவண் - கணை 6
ώσιτσ(τύις
கதிரவனின் செம்பொற் கிரணங்கள் இருளைத் துளைக்க கதிரவன் மேலெழ கதிர்கள் பரவ ரோசாவே நீமலர்ந்தாய்
உன் அழகில் மெய்ம்மறந்து கவரப்பட மங்கையர் கூந்தலில் இருந்தாய் அந்த வானவில்லுக்கே நிகரானாய்
உன்னைப் பாதுகாக்க முட்களாகிய காவலர்கள் காதலர்களின் பரிசு நீயே இவ்வுலக மலர்களின் தெய்வம் நீயே
விபிரசன்னா யா/நெல்லியடி ம.ம.வி தரம் 8
பயத்திற்குக் கண்ணை மூடுங்கள் முதலாளி :- டிரைவர் 1 இவ்வளவு வேகமாகக் காரை ஒட்டாதே.
எனக்கு ரொம்ப பயமா இருக்கு. டிரைவர் - பயப்படாதீங்க முதலாளி வேகமாகப் போகும்போது
என்னைப் போல நீங்களும் கண்ணை மூடிக் கொள்ளுங்கள்.
சிலக்ஷனா göIJLb 9C யா/உடுப்பிட்டி மகளிர் கல்லூரி
イエト K75 d

Page 42
ஏகலைவன் - கணை 6
O O O O O
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தாய் நாட்டின் பண்புக்கு நேர்
தமிழ் என்னும் மூன்றெழுத்து
தாய் என்னும் இரண்டெழுத்துக்கு சமன்
tổ உயிரை எவ்வாறு நேசிக்கின்றாயோ- அதேபோல்
நீ உன் தமிழை நேசி.
தாயிற் சிறந்த கோயில் இல்லை
தமிழில் சிறந்த மொழி இல்லை.
எங்கள் தமிழ் என்று சொல்வோம் எம் நாட்டின் சிரசு என்று சொல்வோம். தமிழர்கள் இங்கு மறைந்தாலும் தமிழே நீ மறையாதே.
தமிழா நீதமிழை அழிக்க விரும்பாதே தமிழே உன் உயிர்நாடி
எதிரிகள் தமிழை அழிக்கவந்தாலும்-நீ எதிர் நீச்சலடித்து உன் தமிழை மீட்டெழு.
தமிழே என் தாய் மொழியே தாய்க்கு மேலாக நானுன்னை நேசிக்கின்றேன். தமிழா நீ முடங்கிக் கிடக்காதே தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
ஆஷா சிவராஜா
யாதேவரையாளி இந்துக்கல்லூரி 12 கலை.
இவ்விதழில் இடம்பெற்றுள்ள “ ஹைக்கூ” கவிதைகளின் אר
சொந்தக்காரர் இ.சு.முரளிதரன்
مـ
N - 76 -

01)
02)
03)
04)
05)
06)
07)
ஏகலைவன் - கணை 6
பொது அறிவு
முதலாவது “சேர்’ பட்டம் பெற்ற இலங்கையர் யார்? கலாநிதி ஆனந்த குமாரசுவாமி
தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோஜ் புஸ். இவர் எந்த அமெரிக்க ஜனாதிபதிக்கு உபஜனாதிபதியாக இருந்தார்? ரொனால்ட் ரீகன்
கூட்டல் இயந்திரத்தை (கல்குலேற்றர்) முதலில் கண்டுபிடித்தவர் யார்? பாஸ்கல் w
இலங்கைப் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களால் ஆற்றப்படும் உரை களைப் பதிவுசெய்யும் ஏடு எது?
ஹன்சார்ட்
உலகின் முதலாவது புகைப்படம் எடுக்க செலவாகிய நேரம் எவ்வளவு?
8 மணித்தியாலம்
நான்கு வயிறு கொண்ட மிருகம் எது?
LS
ஒரு சிலந்தி தனது வலையைப் பின்ன எவ்வளவு நேரம் எடுக்கிறது? 3 மனித்தியாலம்
08) விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடிப்பிற்கு முன்னரே தனது
09)
10)
11)
ஒவியங்களினுள் புகுத்தியவர் யார்? லியானாடோ டாவின்சி.
*வைரஸ்” என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது? லத்தீன்
“PHYSICS” என்ற சொல் எந்த மொழியில் இருந்து வந்தது? கிரேக்கமொழி
66 மொழிகளில் பேசக்கூடிய ஐக்கிய நாடுகளின் அதிகாரியார்? இவர் எந்நாட்டவர்?
ஜோர்ஜ் ஸ்மித். இவர் பிரான்ஸ் நாட்டவர்
Sב 177)
༽《བོ།། --《

Page 43
12)
13)
14)
15)
16)
ஏகலைவண் - கனை 6
ஒரு மின்புகையிரதம் 1 மணித்தியாலம் செல்வதற்கு மின் இணைப்பி லிருந்து எவ்வளவு நேரம் மின்சாரம் பெறவேண்டும்?
10 நிமிடங்கள்.
பறக்கும்போதே தூங்கும் பறவை எது?
ஆல்பட்றாஸ்
வீரமாமுனிவரின் இயற்பெயர் என்ன? அவர் எந்நாட்டவர்? அவர் எழுதிய நூல் 2 தருக?
கொண்ஸ்டன் டைன்பெஸ்கி
இத்தாலி, தேம்பவாணி, ஒப்பிலக்கணம்
கடல்மட்டத்திற்கு கீழ் உள்ள நாடு எது? கொலண்ட்
இலங்கையின் காபந்து பிரதமராக கடமையாற்றியவர்? WW. தஹநாயக்கா,
ஆக்கம் : சிசேயந்தண்
9A - ) .g.L.E.I.
/ ཛོད༽
அண்பான இதயங்களே !
சிறுகதைகள், கவிதைகள், அறிவியற் செய்திகள், நகைச் சுவை விடயங்கள், கல்விக்கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை எழுதி அனுப்புங்கள். உங்கள் ஆக்கங் களை "ஏகலைவண்" ஆவலோடு எதிர்பார்க்கிறான். ஆக்கங்
கள் சுய ஆக்கங்களாக இருத்தல் வேண்டும்.
அனுற்ப வேண்டிய முகவரி: பிரதம ஆசிரியர் , 'ஏகலைவன்’
யா/உடுப்பிட்டி அ.மி.கல்லூரி,
ارے .வல்வெட்டித்துறை ܓ

D.C.- 5یجیےDGہیمل
" கலர்க் கனவுகளின் காவிய சாசனம்'
-జీ== ܒ ܒ திருவீடியோவிஷன் g
மூத்தவிநாயகர் கோவிலடி ,
கரணவாய் தெற்கு, கரவெட்டி.
தி காலத்தின் பதிவுகளைத் துல்லியமாக வர்ணப் புகைப்படத்தில் பதிதல்
வி வாழ்வியல் வசந்தங்களை
நிஜவிற்பங்களாக
'டிஜிற்ரல் கமரா’ மூலம்
வீடியோவில் வரைதல் I அனைத்திற்கும்
THIRUVIDEO VISION
TP No. O777-84 1243
O21-22.63.567
" திரையுலகம் தேடுவது பி. சி.ழுநீராம் வடமராட்சி நாடுவது திரு வீடியோ விஷன்"
- G - - ༦ ྋa )G་ཚེག་

Page 44
g) . . . ♔ C (ܓܠ தனிமை இருப்பே உலகப் படிப்பின் ്'
ஆற்றல் மிகு தடுப்பு அணியும் உடுப்பே இளமைத் துடிப்பின் ஏற்றமிகு எடுப்பு
SUNVIGKI TEXTILE
சர்விக்கிரெக்ஸ்ரைல்
NAS
闰
Jaffna Road, யாழ் விதி, Uduppiddy Junction, உடுப்பிட்டிச் சந்தி, Uduppididy. உடுப்பிட்டி
"துணிவகைகள் சங்கமித்த ஆடைகளின் சாம்ராஜ்யம் "
முந்தை மனித குலம் முற்றும் துறந்த மந்தை கந்தை யானாலும் கட்டும் இன்றைய சிந்தை வந்திருவிர் - 11 toetsle)|exylabeo
நல்ல ரகம்
உடுப்பிட்டியில் விந்தை §4 ܨܰܠܹ
 

、亨 چتی ہے۔= # உள்ளம் விரும்பும் வண்ணம்
* உருக்கு வேலைகளில் உருவான
அலங்கார உருக்கள்
- வழவமைக்கும் வாசந்தலம் -
KamSa
قمجھنا
DESS
Alwai Road, Udluppididy. Prop: S.5 flaganantsian
"பாதுகாக்க உருக்கு இருக்கு
* இல்லம் அழகு பெறும் வகையில்
ஏற்றமிகு இரும்பில் உருவான b
பல்வேறு பொருட்கள்
தருக்குடன் திருவைப் பெருக்கு ”

Page 45
உருக்கு வேலைகளில் 2
உயர் தொழில்நட்ப அலங்காரங்கள்
பெருகும் திடங்கொண்ட
வலிமை மிகு இரும்புகளில் சிருங்காரங்கள்
റ്റ്
উ৯
&\\
வதிரி விதி, உருப்பிட்டி.
“செருக்குடன் பாதுகாக்கும் உருக்கு விருப்புடன் திருவைப் பெருக்கு ”
VIGNAHINDUSTRIOUS Wathiri Road 9ܓܠ Udi idd
East or West, Home is Best"
==බ්‍රෂි
VSA:
 
 
 
 

H =====م
ஆடகம் குடும் அழகு ஒளிர் வனிதை ஏடுகள் பாடும் கால்முளைத்த கவிதை
■ ந்தரம் قuatiق 11699#&تھaur
நவாலி கிழக்கு, மானிப்பாய்.
ஆ) சுவர்ணநிலா தினமும் தங்க பவற்ப உணவும் பொன் இதய இனமும் கனாக் கண்டேன் தோழி 1
" நிஜத்தில் மின்னல் கீற்றென . அழகின் ஊற்றென வண்ண நாற்றென வடிவம் பெற்றேன் உன்னில் தேவதை உருவாக இங்குவா .
சுத்தமான 22 கரட் தங்கத்தில் நவநாகரிக வகைகளில் உறுதியான வேலைக்கு நம்பிக்கையான நிறுவனம்
" சந்தமொழி சிந்தி நிதம் தந்த சுகம் சுடடும்
அந்த இத விந்தையொடு சொந்தம் உனை நாடும் "

Page 46
கடவுளென மருத்துவரைத் தொழுது
ఢత్తె
உடல் வயலில் பழுது எனில் . மீண்டும் உழுது
வைத்தியத்தால் புதுக்கவிதை எழுது உனக்கான விழுது. விடியும் பொழுது
நாதன் வைத்தியசாலை
சேச்வீதி, உடுப்பிட்டி
Dr.SFELIEF LibL
D.A.M (Cey) B.S.H.L.m.m. (India)
மாருதி தூக்கிய சஞ்சீவி
மருந்தினால் அதிகநாள் நீசீவி.
வேறிலே உருவானவில்லைகள்
ஆயுளை உயர்த்திடும் எல்லைகள்.
 
 
 

உங்கள் கவலையை விடுக இன்றே புறப்படுக எங்கள் வாசலைத் தொடுக நட்பை வந்து நடுக
கிருபாஅன் வவி
உடுப்பிட்டிச் சந்தை, உடுப்பிட்டி.
'பலசரக்குப் பொருட்கள் பிளாஸ்ரிக் உருக்கள்
' குளிர்பான நிரைகள் கதிரை வகைகள்
கொலுவிருக்கும் கொற்றம் { =ހ)
بطل الإلك
些 மலிவுவிலை முற்றம்
"வாடகைக் கதிரைகளின் வசந்த ஊஞ்சல் '
கிளை நிறுவனம் :-
கிருபா அணி வவி
மாடந்தை; வல்வெட்டி.
சிரைக்கும் ஆம்ை,
பலசரக்கும் சிபாருட்களின் சங்கமம் .
( ), დეი (mი"°".. '' irr* '';
/ Ti

Page 47
கற்பின் பிடிமானம் கண்ணகியின் வெகுமானம் 岑
சிற்பப் படிமானம் அழகியலின் அபிமானம்
,யாழ் விதி, உருப்பிட்டிச் சந்தி ܟܓ
உருப்பிட்டி.
S அழகுசாதன உருக்கள்
R பாடசாலைப் பொருட்கள்
S அலங்காரச் செதுக்கல் என LILI R எழிலுலகே இங்கு பதுக்கல்
வனப்பு அலை வற்றாது உள்ள
வரைக்கும் மனக்கடலின் அழகுக்கரை
நுரைக்கும்
 
 

சொக்கத் தங்கம் சூட வேண்டும் அங்கம் ཅའ། மஞ்சள் எழில்மேனி கண்டுநிலா மங்கும் ஆடகப் பொற்கிழி தொங்கும் தமிழ்ச் சங்கம் அவதரிக்கும் காலமிது மீண்டும் திசை எங்கும்
குமார் $
"3
“ဒိန္ထက္အதா గ్జినా
சந்நிதி விதி, உடுப்பிட்டி.
உறுதி உணர்மை, உழைப்பு, உத்தரவாதம்
வருக. 111
நம்பிக்கைதாண் எங்களின் வேதம்
சி சுத்தமான22 கரட் தங்கத்தில்
1 நவநாகரிக வடிவமைப்புக்களில்
Will/, ミジやー。炎多
* سینی
சி குறித்த தவணையில் பி உங்கள் நகைத் தேவையினை
நிறைவேற்றும் நிறுவனம்.
சிபாண்ணகை வாங்கும் சிசாந்தங்களே !
புண்ணகையோரு.
நன்றி மீண்டும் வருக .
T. "

Page 48
இ2F ভািজষ্ট্রে 蟒件 மனங் கமழும் மங்கள இசை * 影 பெளர்ணமி யாகும் உங்களின் திசை
ஜ் நாதவிநோதங்கள்
ஜ் ராக சந்தோசங்கள்
உங்கள் விழாக்களில் இதயம் நிறைக்க
ဧ[0];•
இண்நே நாருங்கள்
இளந்தென்றல் இளவரசன்
M.S. 536Dryptists தவில் குழுவினர்
சேச் விதி, உடுப்பிட்டி.
GN குற்றால அருவியாகக் கொட்டும் மத்தளம் ( SNA வற்றாத மகிழ்வோடு வாழும் நம் உளம். ൧
இS இ
 
 

(ஒ
འི་ ཁོ་தென் பொதிகை மன்றத்தில் அவதரித்த 黑 ஆடகப் பொற் சித்திரத்தை தாய் மடியில் தாலாட்டியது தமிழ்ச் சங்கம் இன்றந்தப் பெருஞ் செயலைத் தத்தெடுத்த பெருமன்றம்
கட்டைவேலி நெல்லியடி பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் கலாசாரக் கூட்டுறவுப் பெருமன்றம்
TP : O21 - 226 352635
வாசிப்பை சுவாசிப்பாய் நேசிக்கும் வாசகரை வளர்த்தெடுக்கும் இலக்கிய ஆக்கங்களை ஏற்று. அரங்கேற்றி கலைஞர்களை ஊக்குவிக்கும் இளையோர் கல்வியை கெளரவித்து புலமைய் பரிசில் எனும் பொற்கிழி வழங்கும்
Ko
உன்னத நிறுவனம். 遵 ܡܶܚܝܧ ܚܸܨܬܵܐ
" च्या

Page 49
இயற்கையின் கொடை
இடை தொடை மறைக்கும் உடை படையணி நடையிலே சீருடை
வளர்சடை அணிவதோ சிற்றுடை
தொடை தட்ட நடை கட்டும்
குமரிக்கோ குடை வெட்டுடை அன்று தழையுடை கடந்து தோலுடை பின்பு கட்டுடை அதிலும் எட்டுடை இடையில் பட்டுடை இணைந்த ஒட்டுடை
இன்று வெட்டுடை நாளை "இல்" உடை
என்று மாறினும் தைக்கும் இக்கடை,
RS தை2ஷ் நீஜைத்
வல்வெட்டி மத்தி, உடுப்பிட்டி.
இண்நே பிறப்சிபருக்கும் நாளைய நாகரிகம்
நிகழ்த்திக் காட்ருதிங்கு ஆர்.எஸ்.தையலகம்
을 J
3334
 
 
 
 
 
 

bghül:llйійни:
அறிகுறி முே & ரே இற்கு
MAINSTREET, NELLADY / o
༨
Latest Tamil, Hindi & English Movies On VHS & WCD
DD & Local Calls
Laminating, Photo Copy, Binding stationery items & Fancy items CD Writing Dialog Agent.
Proprietor
G.Shamseevan
lel-Fah-Del-2263.432
వీరిలీ
தொடர்பகம் திரைப்பிரதி,அடர்தகடு மற்றும் பல்பாக முந்நம்
பிரதான வீதி, நெல்லிய2, கரவெட்2.

Page 50
S N.
யாழ்ப்பாணத்தில் 喜 』
ஸ்ரான்லி வீதியில் ஜப்பானிய தொழில்நுட்பத் தயாரிப்புக்களை SIEDL உத்தரவாதப் பத்திரத்து விற்பனையின் பின் சேவை பெற்றுக்கொள்ளலாம்! தரணி புகழ்பெற்ற உன்ன $0NY என்று கேட்டு வ தாமதம்வேண்டாம் இன்ே 6)ILLIDUJITLafusa) நெல்லியடி கொடிகாமம் தொழில்நுட்பத்துடனான தயாரிப்புக்களையும் SH பெட்டிகளையும் நீண்டக உத்தரவாதபத்திரத்துட
பெற்றுக்கொள்ளலாம் தரணி புகழ் பெற்ற உன்ன
SHARPAKIRATELES PANASONICAIWA a
கொடிகாமம் வீ
 
 

l.J.Stanley Road.Jaffna
}qjLGITSI NO-1 SONY ES
டனும் வயினையும் நீங்கள்
ாத தயாரிப்பான பாங்குங்கள்
ற விரையுங்கள்
வீதியில் ஜப்பானிய
NO-1 SONY ARPAKIRA குளிர்சாதன
TALO
菌。睡 டன் நாங்களே
ாததயாரிப்புகளான
SONIC, ELBA
ன்று கேட்டு வாங்குங்கள்