கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எழுத்தார்வம் உள்ளவர்களுக்கு

Page 1
塹
*-
臀
구T
■
 


Page 2
s
With Best Compliments From:
O.G.M. PRODUCTS
தரமான சகலவித அரிசி மா தயாரிப்பாளர்கள்
RED ROSE
இழயப்ப வெள்ளை அரிசிமா
வறுத்த வெள்ளை அரிசிமா தேங்காய் கலக்கப்பட்ட பிட்டு மா
Filli shiff LDIT
தரக்கண் மா
பொரிவுவங்கா மன
ஆட்டா மா
LU) is
கிதுள் மா
போன்றவற்றை சில்லறையாகவும் மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.
大 大 ★ 大、天 大 大、火、火、大 大 大 六 火、火、大、大 火 大 大、火 ★
No. 45/1, Hemmathagama Road,
Mawanella, Sri Lanka.
Tel: 035-46167, 46608 Fax : 0094 - 35 - 46101
 

TTLE:
ELUTHHARVVAMULLAVNARKALUKKU
கட்டுரைத் தொகுப்பு: - எழுத்தார்வமுள்ளவர்கலுநக்கு
ᎠᎱᎢᎧᎲlᏬᏏ: செளத்துல் உம்மா
உயன்வத்தீை றம்ஜான் ஆசிரியர் - ப்ரியநிலா
எழுதியவர்: A.P.V. G&SJID615 B.A. Dip. In Edu.
வெளியீடு:
ப்ரியநிலா 193, உயன்வத்தை, தெவனகலை. Te: O35-46749
முதற் பதிப்பு : ஜூன் 1999 பிரதிகள் 1000
ISBN 955-96060-2-6

Page 3
ப்ரியநிலா,
உயன்வத்தை,
தெவனகல. ப்ரியங்களுடன்,
எழுத்தார்வம் கொண்ட இனிய இதயங்களே!
ப்ரியநிலா மூலம் இலக் கரிய உலக ல காலடி வைத்தவர்களினதும் , அதன் மூலம் அறிமுகமானவர்களினதும் உருவாகியவர்களினதும் தொடர்புகள் இன்றும் ப்ரியநிலாவுடன் இருக்கவேதான் செய்கின்றது ப்ரியநிலாவின் வளர்ச்சிக்கு ஆரம்பம் முதல் சிறப்பான படைப்புக்களைத் தந்து கைகொடுத்துதவியவர்கள் பலர். அவர்களுள் ஒருவரும் இன்று நோய்விாய்ப்பட்டு, ! படுக்கையில் இப்பவருமான, சிறந்த பேச்சாளரும், கவிஞரும், எழுத்தாளரும், கல்விமானுமாகிய அதிபர் A. P.V. கோமஸ் அவர்களால் "எழுத்தார்வமுள்ளவர்களுக்கு சில ஆலோசனைகள்" என்ற கட்டுரைத் தொடர் ஒன்றைப் ப்ரியநிலாவில் எழுதிவந்தவர் ஆவார். அக்கட்டுரைத் தொடரைப் பலரின் வேண்டுகோளுக்கிணங்க சிறு கைந்நூலாக 'ப்ரியநிலா வெளியீடாக வெளிக்கொணர ஆசைப்பட்டேன்.
சிலர் அடிக்கடி சொல்லும் வார்த்தைதான், "இன்று எமக்கு வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள் அதிகமாகத் தேவைப்படுகின்றனர்" என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், அதேபோன்று இன்றைய காலகட்டத்தில், சமூகங்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட சவால்களை எதிர்கொள்ளவும், மக்கள் மத்தியில் நல்லெண்ணங்களை வளர்க்கவும், அரசியல் ரீதியாக, சமூக ரீதியாக, கலாச்சார ரீதியாக எழுந்துவரும் தாக்கங்களை முறியடிக்க, எழுத்தாளர்கள் , பேச் சாளர்கள் , பத்திரிகையாளர்கள் அவசியமாக உள்ளனர் என்பதை எம்முள் எத்தனைபேர் சிந்திக்கின்றனர்?
ஆகவே, எழுத்துத் துறையில் நுழைய ஆசைப்படும் இளம் எழுத்தாளர்கள் நலன் கருதி, இச் சிறு கைந் நூலை தொகுத் தளிப் பதில மகிழ்ச்சியடைகின்றேன். ஆக, இக்கைந்நூலைப் படித்து இளைய சமூகத்தினர் மத்தியில் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரேனும் எழுத்தை ஆளும் ஆற்றலைப் பெற்று சமூகத்துக்கு நல்லதைச் சொல்வார்களேயானால் அதுவே நாம் பெறும் மன நிறைவாகும்.
 

இதில் அடங்கியுள்ள கட்டுரைகளை ஒரு சிறு நூலாக வெளியிட்டு ஆரம்ப எழுத்தாளர்களுக்கு உதவ ஆசைப்படுகின்றேன் என்று, கட்டுரை ஆசிரியர் APV கோமஸ் அவர்களிடம் சொன்னபோது நல்லபணி, என்னில் ஒரு ஆட்சேபனையும் இல்லை என்று கூறி அனுமதியளித்த அவர்கட்கும், அழகிய முறையில் கனணி அச்சுக்கோர்வை செய்து தந்த AKEPS நிறுவனத்துக்கும், ஒப்புதல் பார்த்துக் கொடுத்த AKEPS நிருவாகப் பணிப்பாளர் A.H.M. ரபீக் அவர்கட்கும், கருத்துரை ஒன்றை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவைச் செயலாளர் M.M. பீர் முஹம்மத அவர்கட்கும், விளம்பரங்களைத் தந்துதவிய மாவனல்லை O.G.M. Products ஸதாபானத்தாருக்கும். NEWMANS COLLEGE அதிபர் ஹ8சைன் முஹம்மத் அவர்கட்டும், அழகிய முறையில் அச்சுப் பிரதி பணினித் தந்த M.J.M. Offset Printers தாபனத்தாருக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்.
இனியவர்களே! படியுங்கள், எழுதுங்கள், சமூகம் கண் திறக்கட்டும்!
"எழுத்துப் பணியும் ஒரு சமூகப் பணியே!”
ப்ரியநிலாவின் அடுத்த வெளியீடுகளாக,
本 ப்ரியநிலாவில் மலர்ந்த சிறுகதைகளின்
தொகுப்பும், 来 பிரதேச எழுத்தாளர்களின் சிறுகதைத்
தொகுப்பொன்றும் மிக விரைவில் வெளிவர உள்ளது.
ஆசிரியர். ク ܠܐ

Page 4
என்னின் மேலான எண்ணம். மலையகப் பகுதியிலிருந்து மலரும் நல்லதோர் ஏடாம் உயன்வத்தை ரம்ஜான் அவர்களின் அருமை ஏடாம், 'ப்ரிய நிலாவில் "எழுத்தார்வமுள்ளவர்களுக்கு சில யோசனைகள்" என்று மலர்ந்து விரிந்த பத்துத் தொடர் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடும், எழுத்தாள நண்பர் உயன்வத்தை ரம்ஜான் அவர்களுக்கு நாம் பெரிதும் நன்றியுடையோராவோம்.
மு னி போல ;B 60) puj 61 (Լք Ֆ (P 9 u if g , நோய்வாய்ப்பட்டிருக்கும்.இந்ந வேளையில் இப்புத்தகம் வெளிவருவது கண்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். எல்லா நன்றியும் அந்ந வல்லவனுக்கு உரித்தாகட்டும். எல்லாப் புகழும் அவனுக்கே.
Teach yourself free lance writing 615 D g, stildo) (J196) 3, 1600 ju(Sub எண்ணக்கருத்துகளைத் தொகுத்து வழங்கியபோது ஏற்றதோர் நல்ல வரவேற்பு இருந்தது என்பதை நாமறிவோம். 'ப்ரிய நிலா இதற்கு வழிவகுத்தது. எனக்கே எழுத வேண்டும் என்ற ஊக்கத்தை ஊட்டியதும் இவ்வாறான ஏடுகள்தான் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நமக்கு நாமே கறபித்துக் கொள்ளுதல் என்பது மிக முக்கியமானதொன்று. அதுதான் அனுபவத்தின் அடிப்படை.
நமக்கு நாமே ஆசிரியராகும்பொழுது T-E-A-(-ti-E-R என்ற ஏழு எழுத்துக்கள் வழங்கும் ஏழு குணங்கள் பற்றி, கற்கும் மாணவர் மனங்கொள்ள வேண்டும் என்பது மிக மிக முக்கியம். ஆம், புதிதனை எழுத எண்ணுபவர்களுக்கு இது மிக மிகத் தேவை. h−
இவைதான் அவை: Trust - இவர் கற்றுக் கொடுப்பவை நல்லவை என்ற நம்பிக்கை எழ வேண்டும்; Energetic என்ற தன்னுாக்கம் எழ வேண்டும்; Alectionate என்ற பாசம் எழ வேண்டும்; ஆம் படித்துக் கொடுக்கும் விடயங்களில் ஒரு பாசம் 1 பற்று எழ வேண்டும். Corporative என்ற ஒத்துழைப்பு மிக மிகத் தேவை: Humble எனக்கு இதுவெல்லாம் தெரியாது இனிமேல்தான் படிக்க வேண்டும் என்ற மனத்தாழ்மை நமக்குத் தேவை; எல்லாம் தெரிந்தவர்கள் என்ற எண்ணமிருக்கக்கூடாது. தாழ்ச்சி மிக முக்கியம்: Eficient என்ற என்னால் ஏற்ற முறையில் செய்ய முடியும் என்ற மன எழுச்சி எழ வேண்டும் : ResourcefulneSS நமக்கு
 

கற்றுத்தருபவரிடம் வனமுள்ளது என்ற வனமான எண்ணம் தேவை. ஆம்.
இந்த ஏழு குணங்களும் கற்றுக் கொடுக்கும் ஆசானுக்கும் கற்கும் மாணவர்களுக்கும் மிக மிகத் தேவை.
எனவே, எழுத்தார்வமுள்ள, புதிதாக எழுத எண்ணும் மாணவர்கள்
மேற்கூறியவற்றை ம்னத்தில் பதித்துக்கொண்டு பின் வாசிக்கத்
தொடங்குங்கள். இவையெல்லாம் நமக்கு வழிகாட்டிகள் என்ற எண்ணம் மனத்தில் நன்கு பதிய வேண்டும்.
இதேவேளை உங்கள் மனத்தில் தன்னமபிக்கை துளிர்விட் வேண்டும்; என்னால் இது முடியும் என்ற எண்ணம் எழ வேண்டும்; கிடைக்கும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும்
ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்று அருமையாக சொல்லப்பட்டுள்ளது நீங்களும் அவ்வாறு பூத்துக் குலுங்கும் மலராக புன்னகைக்கட்டும் மற்றவர்களுக்கு மகிழ்ச்சி வழங்கும், மலராகுங்கள். வண்ணமலராய் புன்னகை செய்யுங்கள்.
என்ன எழுதலாம் என்று மனத்தில் எழும் பொழுது ‘ஆன்மிகம், 'மனிதத்துவம் இரண்டையும் மலரவையுங்கள். மற்றவர்களுக்கு ஒளியாக இருந்து வழிகாட்டிட எழுதுங்கள்.
ஆக, இதனை வாழ்க்கையில் உங்களுக்கு வழிகாட்டும் ஏடாக ஏற்றுக் கொள்ளுங்கள். மனத்தில் வளத்தால் வாழ்ந்து வளருங்கள். ஆம், துன்பம் பின்நோக்கித்தான் பார்க்கும். சோகம் சுற்றிவர நோக்கும். ஆனால், நம்பிக்கை மேல் நோக்கிப் பார்க்கும். மேல் நோக்கிப் பார்ப்போம். மேலானவற்றை எழுதுவோம்.
A.P.V. Gibsy part)
M.C. olig, மாத்தளை
O66-3 1736

Page 5
மாத்தளை இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பேரவைச் செயலாளர் எம்.எம்.பீர் முஹம்மது அவர்களின் வாழ்த்துச் செய்தி
நீண்ட நெடு நாட்களாக ஆசிரியராகவும் அதிபராகவு திருப்பணியாற்றிய கால கட்டத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தான் சந்தித்த சம்பவங்களை தன் கண்முன் நிகழ்ந்திட்ட நிகழ்வுகளையெல்லாம் சிறுகதைகளாக்கி
"அங்கமெல்லாம் நிறைந்த மச்சான்",
"வாழ்க்கையே ஒரு புதிர்" ஆகிய இரு சிறுகதைத் தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்துக்கு தந்திட்ட மலையகத்தின் முது பெரும் எழுத்தாளரும், சிறந்த பேச்சாளருமான பெரியவர் ஏ.பி.வி கோமஸ் அவர்கள் இப்போது m
"எழுத்தார்வமுள்ளவர்களுக்கு" என்ற தலைப்பில் எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்கும், குறிப்பாக எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களாகிய மாணவ மாணவிகளுக்கும் பயன்பெறத் தக்க வகையில் இந்நூாலை எழுதி தமிழ் இலக்கியத்திற்கு மேலும் சிறப்பு செய்திருப்பது பாராட்டத்தக்கது.
இந்நூலின் நூலாசிரியர் தன் இலக்கிய அறிவை புத்திக்கூர்மையை, அனுபவ செழுமையை எவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி இனிய தமிழிலும், எளிய நடையிலும் எழுதியிருக்கிறார். தான் கதை எழுதிய அனுபவத்தை பிறரிடம் பகிர்ந்து கொள்ளும் தைரியம் இவருடைய எழுத்தில் காணப்படுகிறது. இதில் ஏதும் ரகசியமில்லை இதுவே, தான் கதை எழுதும் முறை என் தன் டயரியைத் திறந்து போடுவது நூலாசிரியரின் தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. கதை, கவிதை, கட்டுரை எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ள அத்தனை பேர்களுக்கும் இந்நூால் ஒரு பாடப்புத்தகம் போல் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.
 
 

சமூகத்தில் மார்கழி மாதத்து குளிரைப் போல மனதுக்கு இதமான நல்ல நிகழ்வுகளும் சித்திரை மாதத்து வெயிலைப் போல உடம்பையும் உள்ளத்தையும் சுள்ளென்று சுட்டெரிக்கின்ற அவலங்களும் மாறி மாறித் தொடர்கின்றன. இந்த அவலங்களையும் நல்ல நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்ற வீரியமுள்ள எழுத்தாளர்கள் சமூகத்தில் மலர வேண்டும். ஏனென்றால் மக்கள் படும் துயரங்களைப் பார்த்து அறிவால் அழுகின்றான் விஞ்ஞானி; வாயால் அழுகின்றான் அரசியல்வாதி, இதயத்தால் அமுசின்ாைன் இலக்கியவாதி; என்று ஒரு அறிஞன சொன்னது போல் சமூகத்தில் நடக்கும் எல்..." சம்பவங்களையும் சுட்டிக்காட்டி எழுதுகின்ற எழுச்சிமிக். மறுமலர்ச்சி எழுத்தாளர்களை உருவாக்க இந்தப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கையிலும், இந்நுால் எதிர்காலத்தில் சத்தியத்துக்கு சாட்சி கூறுகின்ற உண்மைக்கு உரை எழுதுகின்ற நல்ல பல எழுத்தாளர்களை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தனது "ப்ரியநிலா" பத்திரிகையில் தொடர்ந்து வந்த நூலாசிரியரின் கட்டுரைகள் யாவையும் பிரியமுடன் தொகுத்து நூலுருவில் கொண்டு வந்த சகோதரர் உயன்வத்தை றம்ஜான் அவர்களின் முயற்சி, ஆர்வம் போற்றிப் புகழத்தக்கது. இது போன்ற எழுத்துக்களை எழுத நூலாசிரியர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களும் அதைத் தொகுத்து வெளியிட்ட சகோதரர் றம்ஜான் போன்றவர்களுமாக கிராமத்துக்கு இரண்டு பேர் இருந்து விட்டால் நாட்டில் வீட்டுக்கு வீடு எழுத்தாளர்கள் மலர்வது உறுதி. இது வெறும் புகழ்ச்சியல்ல. உண்மை. படித்து பயன் பெற வாழ்த்துக்களுடன்
இலக்கிய சுவையாளர்.
எம்.எம். பீர்முஹம்மது செயலாளர், இஸ்லாமிய தமிழ் இலக்கிய பேரவை மாத்தளை

Page 6

எழுத்தார்வமுள்ளவர்களுக்கு சில யோசனைகள்
ஈ உள்ளத்தில் எழும் எண்ணங்களைக் கள்ளமில்லாது வெளியிடுவதே ஒர் உண்ணதக் கலையாகும். அவ்வாறு செய்வதற்குத் தமக்குக் கலையுணர்வு தேவை. ஆனால், இந்தக் கலையுணர்வு பிறப்பால் மட்டும் வந்துவிடுவதில்லை. முயன்றால் நம்மால் முன்னுக்கு வரும் அளவுக்கு நன்றாக வளர்த்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு உள்ளத்து எழும் உணர்ச்சிகளையும் , எண்ணங்களையும் வெளியிடுவதில் பேச்சுக் கலையும், எழுத்துக் கலையும் பிரதான இடத்தைப் பெறுகின்றன. பேச்சுக் கலை பற்றி பிரிதொரு சந்தர்ப்பத்தில் கலந்தாலோசிக்கலாம் எனற காரணத்தால் இங்கு எழுத்துக் கலை பற்றி சற்று ஆராய்வோம்.
நான் இங்கு எழுதுவது பத்திரிகைகளுக்கு எழுத வேண்டும் என்று ஆர்வங்கொண்டிருக்கும், வளரும் எழுத்தாளர்களுக்காக மட்டுமல்ல. எழுத்து என்பது இயற்கையாக, எளிதாக வருவதில்லை, அது ஒர் உண்மைக் கலை என்று எண்ணுபவ கலக்குமாகவே. ஆமாம். இம்முயற்சியில் வெற்றிபெற வேண்டுமானால் ஒருவருக்கு உள்ளார்ந்த இயல்பான திறமையும் நுண்ணறிவும் விடாமுயற்சியும் தேவை.
எனவே, எழுத்துக் கலையின் நீண்ட பாதையில் அடியெடுத்து வைக்கும் ஆர்வமுள்ள இளம் எழுத்தாளர்களுக்கு அப்பாதையை கரடுமுரடற்றதாக ஆக்கிக் கொள்வதற்கு, அப்பாதையில் காணபபடும் சில தடங்களைத் தாண்டிச் செல்வதற்கு, அங்கு காணப்படும் பள்ளக் குழிகளை இனங்கண்டு கொள்வதற்குத் தேவையான யோசனைகளைக் கொடுக்கல ம் என்றே எண்ணுகிறோம். ஆமாம்.
நாம் பத்திரிகைகளுக்கு எழுதும் பல விடயதானங்கள் பிரசுரிக்கப்படாமல் போவதற்குரிய காரணங்களை அறிந்து அவைகளைத் திருத்திக் கொள்வது நல்லதல்லவா?
()

Page 7
நீங்கள் ஏன் எழுத்தாளர் ஆக வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்? வெளியிடப்படவேண்டிய பல எண்ணக்கருத்துகள் உங்கள் உள்ளக் கோட்டையில் நிறைந்து வழிவதனாலா? அல்லது வார்த்தை சாலங்கள் உங்களை வசப்படுத்துவதனாலா? அல்லது சமூகத்துக்கு நீங்கள் ஏதோ ? ஒரு செய்தியை வெளியிட எண்ணுவதனாலா? ஓர் உண்மையை உலகுக்கு பிரகடணப்படுத்த உங்கள் உள்ளம் உந்தித்தள்ளுவதனாலா? இல்லை, பிரபல எழுத்தாளர்களுக்கு சமூகத்தில் கிடைத்திருக்கும் கெளரவத்தால் உங்கள் மனம் கவரப்பட்டதாலா? எனவே, உங்கள் பெயரும் அச்சில் வரவேண்டும் என்ற கனியாத ஆர்வத்தாலா அல்லது உங்கள் தனிமையைப் போக்கிக கொள்ள ஒரு வழிதேடிக் கொஞ்சம் மேலதிக வருமானம் பெறலாமே என்ற ஆசையினாலா?
மேற்கூறிய எந்த எண்ணத்தை நீங்கள் கொண்டிருந்தாலும் தவறில்லை. ஆனால், ஒன்று எத்தனை முறை தோல்வி கண்டாலும் பரவாயில்லை. நான் பிரபலமடையும்வரை எழுதியே தீருவேன் என்ற மனப்பான்மை கொண்டவர்களாக மாறவேண்டு . தோல்விகளைக் கண்டு துவண்டு விடுபவர்கள் எழுத்துலகில் வெற்றிபெற முடியாது என்பதே உண்மை,
இளம் எழுத்தாளர்களுக்கு நாம் அடிப்படையாக வழங்கும் அறிவுரை மனதைத் திடப்படுத்திக் கொண்டு விடாமுயற்சியை வளர்த்துக் கொள்ளுங்கள் என்பதே. ஆக, மேற்கூறியவற்றை நாம் முன்னுரையாக எடுத்துக்கொண்டு நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் ஆற்ற வேண்டிய பணிகளையும் பற்றி ஆராய்வோம்.
தன்னம்பிக்கை
என்ன காரணம் உங்களை எழுதத் தூண்டியிருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் அடிப்படையாகச் செய்ய வேண்டிய பிரதான வேலை வாசகர்களின் நம்பிக்கையைப் பெறுவதன் மூலம் பத்திரிகை ஆசிரியர்களின் மனங்களில் இடம் பிடிப்பது, இது மிக முக்கியமான ஒன்று. உண்மையில் ஆராய்ந்து பார்த்தால் இதுவே ஒர்

எழுத்தாளனின் வெற்றிக்கு ஆதார சுருதியாய் அமைகின்றது என்பது தெரியவரும். அதாவது, புகழ் பெற்ற அல்லது பிரசித்திபெற்ற எழுத்தாளர்களின் கதைகளை, விடயதானங்களை, நாவல்களை பத்திரிகை ஆசிரியர்கள் உடனடியாக ஏற்றுப் பிரசுரிக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்? புதிதாக எழுதத் தொடங்கும் ஒர் எழுத்தாளனைவிட இந்தப் பழைய எழுத்தாளர் வாசகர்களின் மனதைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கைக்கு ஆளாகியுள்ளார் என்பதே காரணம்.
ஓர் இளம் எழுத்தாளர் இந்நன்னிலையை அடைய வேண்டுமானால், தன்னம்பிக்கையுய முயற்சியுமாகிய நற்குணங்கள் கட்டாயம் தேவை. இவ்விரு குணங்களையும் அடித்தளமாக அமைக்காத இளம் எழுத்தாளர்கள் 'முன்னுக்கு வரவே முடியாது. ஆமாம்,
எவ்வளவு திறமை வாய்ந்தவராக இருந்தாலும் என்ன, தமிழ் மொழியில் எத்தனை பாண்டித்தியம் பெற்றவராக இருந்தாலும் என்ன, என்னாலும் முன்னுக்கு பர முடியும், பெயரும் புகழும் பெற முடியும் என்ற தன்னம்பிக்கையுட் அந்நிலையை அடைவதற்கு முயற்சியும் இல்லாவிட்டால் வெற்றிபெற முடியாது. அதுவும் இன்றைய எழுத்துலகில் இக் குண நலன்கள் மிக மிகத் தேவைப்படுகின்றன. ஏனெனில், எண்ணற்றவர்கள் எழுதத் தொடங்கயிருக்கின்ற ராலம் இது.
ஏதோ ஓரிரு கட்டுரைகளை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிவிட்டு, அவைகளில் ஒன்று இரண்டு கூட பிரசுரமாகாவிட்டால் அதைரியப்பட வேண்டாம்; நம்பிக்கையை இழக்கவேண்டாம். தோல்வியே வெற்றியின் முதல்படி என்ற தத்துவம் இங்கு செல்லுபடியாக வேண்டும். இது செல்லுபடியாக வேண்டுமானால் தன்னம்பிக்கையும், முயற்சியுமே தகைசான்ற தூண்டுகோள்கலாக அமைய வேண்டும்.
இளம் எழுத்தாளர்கள், வளரும் எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டும். இந்த எழுத்துப் பழக்கமும், பயிற்சியுந்தான்
(3)

Page 8
நம்மை ஒரளவு முன்ற்ேறமடையச் செய்து புகழைக் கொண்டுவர முடியும். சிபாரிசுகளினாலோ அல்லது முதுகு சொரிதலினாலோ விளைகின்ற புகழ் நிலைத்து நிற்காது; வெற்றியைத் தராது; அது கல்லின் மேல் எழுதிய எழுத்தாக அமையாமல் நீர் குமிழிப் புகழாகவே அமையும். மேலும்,
நிறைய எழுத வேண்டும் என்பதற்குக் காரணம் இப்பயிற்சியே நம் எழுத்தைத் திருத்துகின்றது. "சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்" என்ற உண்மை, எழுத்துத் துறைக்கு மிகப் பொருத்தமானது. ஏனெனில்,
புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பிறப்பதில்லை. அவர்கள் ஆக்கப்படுகிறார்கள். ஆமாம், எத்தனைதான் வரகவி கருவிலே நிருவுடையவர் என்றெல்லாம் போற்றிப் கழப்பட்டாலும், ஒருவரிடம் தன்னம்பிக்கையும் முயற்சியும் இல்லாவிட்டால் அந்த வரத்தாலோ திருவாளோ பலன் பெறப்போவதில்லை. எனவே,
வளரும் எழுத்தாளர்களே உங்கள் எழுத்துத் துறையின் முத60 படியாக தன்னம்பிக் கையையும் முயற்சியையும் கைக்கொள்ளுங்கள். சொந்தக் க ல்களில் நிற்க இவ்விரு நல்லியல்புகளையும் கால்களாகக் கொண்டு எழுத்துத் துறையில் புகுவதற்குக் கால்கோள் இடுங்கள். வெற்றி பெறுவீர்கள்.
வாசிப்பு அவசியம் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்ட எழுத்தார்வம் உள்ளவர்கள் தங்களின் மொழி வளத்தை மேன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். இது மிக மிக அத்தியவசlயமானது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆமாம், ஒன்றில் தமிழை நன்றாகக் கற்றிருக்க வேண்டும். அல்லது சுயமாகக் கற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் பிர சத்தி பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவைகளை உன்னிப்பாக வாசிக்க வேண்டும். கவிதையாக இருந்தால், நாம் வாசிப்பது நமது காதில் விழும்படியாக சற்று உரத்தே வாசிக்க வேண்டும். அல்லாமலும் மரபுக்
(4)

கவிதைகளாக இருந்தால், அந்தந்த யாப்புக்கேற்ற ஒசையுடன் வாசிக்க வேண்டும். அல்லது ஒதுதல் வேண்டும். ஆமாம், நாம் வாசிப்பது நமது காதில் விழும் பொழுதுதான் சொற்களின் உண்மையான கருத்துக்களையும், பிரயோகத்தையும் உணர்ந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சொல்லும் எந்தெந்த இடத்தில் தோற்றுகின்றதோ அதற்கேற்றாற்போல் ஓசை லயத்துடன் அமைந்து வலுபெற்றும், வலு குறைந்தும் காணப்படும். எனவே, கட்டாயமாக வாசிப்பை ஒரு பழக்கமாக ஆக்கிக்கொள்ள வேண்டும்.
தமது வாசகர்களைவிட தாம் கல்வி கேள்விகளில் மேம்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்ற உண்மையை எழுதத் துடிப்பவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பட்டங்கள் பெற்றிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பதிலாக நிறைந்த வாசிப்பால் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். எனவே, "கண்டதைக் கற்கப் பண்டிதனாவான்" என்பதற்கிணங்க கிடைக்கின்ற ஏடுகளையெல்லாம் வாசிக்கத் தொடங்க வேண்டும்.
வாசித்தால் மட்டும் போதாது. வாசித்ததனால் பெற்ற கருத்துக்களைக் கொண்டு தமது சொந்த மொழி நடையில் எழுதவும் பழக வேண்டும். சுருங்கக் கூறுவதாயி0, எதையாவது வாசித்து, வாசித்ததைத் தமதாக்கி தமது சொநத மொழிநடையையும், மொழி வளத்தையும் பிரயோகித்துத் தமது"சொந்த விடங்களை எழுதிப்பழக வேண்டும்.
ஆர்வமுள்ள எழுதத் துடிக்கும் புதியவர்கள் கதை, கட்டுரை, கவிதயிைல் மரபுக் கவிதை, புதுக் கவிதை என்றெல்லாம் வேறுபாடின்றி எழுதத் தொடங்குவர். எனவே, மேற்கூறிய ஒவ்வொரு பகுப்புக்குமுள்ள அடிப்படை இலக்கணங்களை அறிந்து கொள்வது மிக மிகத் தேவையாகன்றது. இதறகுக் கதை எழுதுவது எப்படி? கட்டுரை எழுதுவது எப்படி? போன்ற புத்தகங்களைத் தேடிப்பிடித்து வாசிப்பதுடன் மரபுக் கவிதை எழுதத் துடிப்பவர்கள் யாப்பிலக்கணத்தையும் கற்க வேண்டும். இதற்கு யாப்பதிகாரம் என்ற தலைப்பில் புலவர் குமந்தை எழுதியுள் புத்தகம் மிக மிக துணை செய்யும் என்பது எம் தாழ்மையான எண்ணம். ஆனால் புதுக்கவிதை பற்றி ஒன்றும் கூற முடியாதுள்ளது. ஏனெனில், இதுதான் புதுக்கவிதையின் இலக்கணம் என்று கூறக்கூடியதாக இன்னும்
அமையவில்லை.

Page 9
எனவே, மொத்தமாகப் பார்க்கும்போது நாம் எழுதத் தொடங்கும் முன்னால் அதற்காக நம்மைத் தயாரித்துக் கொள்வது நமது தலையாய கடமை என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, எழுதத் துடிக்கும் எவரும் மேற்கூறிய பயிற்சிகளைப் பெற ஆவண செய்துகொள்ளும்படியாக கேட்டுக்கொள்கிறேன். பயிற்சியே நமக்கு எந்தத் தொழிலிலும் வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லையே.
r கற்பவனாகவே இரு
நாம் எவ்வளவுதான் கல்வி கற்றுப் பட்டம் பெற்றவர்களாக இருந்தாலும் எல்லாவற்றிலும் பூரண அறிவு பெற்றவர்களாக இருக்க முடியாது. மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவனுமே இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் சந்தேகமேயில்லை. எனவே,
புதிதாக எழுதத் துடிப்பவர்கள், "எனக்கு எல்லாம் தெரியும்" என்ற எண்ணத்துடன் என்றுமே இருக்கக் கூடாது. இன்னொரு விதத்தில் கூறுவதானால், கற்றல் அல்லது படித்தல் என்ற விடயத்தில் என்றுமே மனநிறைவு பெற்றுவிடக்கூடாது.
நமக்குக் கட்டுரை, கவிதை, கதைகள் எழுதும் ஆற்றல் இருந்தாலும்கூட அனுபவ தியாக அறிய வேண்டியவை நிறைய உள. ஆம், புதிதாக எழுதத்துடிக்கும் இளம் எழுத்தாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விடயம் ஒன்று உள்ளது. அதுதான், எழுத்துலகச் சக்கரம் எவ்வாறு உருண்டு கொண்டிருக்கிறது என்று நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் ஒரு விடயதானம் அச்சில் வெளிவரும் முன்னால் என்னென்ன நடைபெறுகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒரு புத்தகம், ஒரு சஞ்சிகை அல்லது ஒரு பத்திரிகை எவ்வாறு வெளியிடப்படுகின்றது என்பவற்றையும் அறிந்திருத்தல் வேண்டும்.
இவ்வறிவை இவ்விடயம்பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம், அல்லது நேரடி அநுபவங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்விடயம் சம்பந்தமாகத் தமிழ் மொழியில் புத்தகங்கள் அனேகமாக இல்லாவிட்டாலும் ஆங்கில மொழியில் ஏராளமான புத்தகங்கள் உள்ளன. அச்சகங்களுக்குப்
(e)

போய்ப்பார்வையிடல் மூலமும், பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுவது மூலமும் உண்மைகளை அறிந்து கொள்ளலாம். தொந்தரவாக இல்லாவிட்டால், நிச்சயமாக எந்தவொரு பத்திரிகை ஆசிரியரும் இதற்குத் தயாராய் இருப்பார். பத்திரிகை ஆசிரியர்கள் எப்பொழுதும், எழுத்தாளர்களுடன் சுமுகமாகப் பழக வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இது அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் எழும் குணம்.
"வீரனது கைவாளைவிட எழுத்தாளனின் கைப் பேனாவுக்கு வலிமை அதிகம்" என்பதை ஒவ்வொரு எழுத்தாளனும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். பெருமைப்படுவதற்கு அல்ல; ஒவ்வொருவரும் தம் கடமையை நன்கு உணர்ந்து ஏற்ற வகையில் கடமை புரிவதற்காக, ஆமாம்,
எந்ந அளவு இந்தப் பேனா முனைக்கு வலிமை உண்டு என்று நாம் உணர்ந்தால், நிச்சயமாக நாம், தவறு செய்ய எண்ண மாட்டோம். அதாவது, மனித குலத்தை உண்மையில் வழி நடத்துவதற்கு ஏற்றவைகளையே எழுதுவோடி. எனவே, பொதுவான ஒரு பத்திரிகை.கோ வேறு எந்தவொரு பொதுசனத் தொடர்புச் சாதனத்துக்கோ எழுதும் எந்தவொரு எழுத்தாளனுக்கும் பாரியதொரு பொறுப்பு உண்டு என்பது விளங்குகின்றதல்லவா? தன்னுடைய வாசகர்களைப்பற்றி மட்டுமல்ல, ஏனைய எழுத்தாளர்கள் ஏன் பொதுவாக சமூகம் பற்றி அவன் சிந்திக்க வேண்டும்? நான்கு தலைப்புக்களின் கீழ் இந்த விடயங்கள் பற்றி நாம் ஆராயலாம்.
(1) உண்மையும் பொருத்தமும்:
அதாவது ஒருவர் எழுதுவது உணமையானதாகவும், நேர்மையானதாகவும் அமையும் அதேவேளையில், சந்தர்ப்பத்துக்குப் பொருத்தமானதாகவும் அமைய வேண்டும். அறிந்தோ, அறியாமலோ வாசகர்களைத் தவறான வழியில் இட்டுச் சென்றால் நம் வாசகர்கள் நம்மட்டில் வைத்திருக்கும் ந பிக்கையைச் சீரழித்தவர்களாவோம். இது சில வேளையில் குறைந்தது ஒரு பதி திரிகை ஆசிரியருடையவோ அல்லது வெளியீட்டாளருடையவோ
(7)

Page 10
நல்லெண்ணத்தை இழக்கச் செய்யலாம். எனவே, நாம் எழுதுபவை உணர்மையானவைகளாகவும், நேர்மையானவைகளாகவும் , பொருத்தமானவைகளாகவும் அமையும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
(2) சொந்தப் படைப்பாய் அமைய வேண்டும்:
எழுதுவது எதுவானாலும் எழுதுபவை எழுத்தாளனின் சொந்தப் படைப்புகளாய் அமைய வேண்டும். அதாவது, இலக்கியத் திருட்டு வேண்டவே வேண்டாம். அடுத்தவ எழுதியவைகளிலிருந்து கருத்துக்களையோ, வார்த்தைகளையோ அப்படியே அப்பட்டமாகக் 'காப்பி அடிப்பது பழித்து இகழ வேண்டிய ஒரு பாரிய குற்றம். சட்டத்துக்கு விரோதமான செயல் என்பது மட்டுமல்ல, அது ஒரு பண்பற்ற செயலுங்கூட.
(3) காலத்துக்கேற்றதாய் அமைய வேண்டும்:
நாம் எழுதுவது அந்தந்தக் காலத்துக்கு ஏற்றவையாக அமைய வேண்டும். ஆமாம், உண்மையில் இலக்கியத்தை காலக்கண்ணாடி' என்றுகூட அழைப்பார்கள். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளவதென்ன? நாம் எழுதுவது அந்தக் குறிப்பிட்ட கால நிகழ்வுகளை வெளியிடுபவையாக அமைய வேண்டும் என்பதே. ஆனால், பழமையை நாம் எடுத்துக்காட்டுகளாக எடுத்தாள்வதில் எந்தவிதத் தவறும் இல்லை.
(4) சத்தியவேட்கை தேவை:
எந்தவொரு எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய மிகப் பிரதானமான ஒரு குணம், மனமொத்துத்தான் சார்ந்திருக்கின்ற குணநல அமைப்புக்களை வெளியிடுடி இலக்கிய வெளிப்பாட்டில் இணைந்து செயற்பட வேண்டும். ஆம், எழுதுபவர் முற்போக்கு, பிற்போக்கு, நற்போக்கு என்று எப்போக்கைச் சார்ந்தவராக இருந் தாலும் பரவாயல் லை . அப் போ கி குக் கு அவர் உண்மையுள்ளவராய் இருத்தல் வேண்டும். உண்மை, நேர்மை, கொள்கைப் பற்று, நடுநிலைமை, பரந்த மனப்போக்கு போன்ற குணங்கள் இருப்பது சாலவும் சிறந்தது. ஆம், மாய்மாலமும், இலக்கிய விபச்சாரமும் குறிப்பிட்ட காலத்துக்கு வெற்றியைத் தரலாம்.

ஆனால், அந்தப் புகழ் நிலைத்து நிற்பதில்லை. என்றாலும், ஒன்று காலத்துகீகுக் காலம் ஒருவரின் கொள்கை கோட்பாடுகள் அறிவு, அனுபவ முதிர்வுடன் மாற்றமடையலாம். அந்நேரத்தில் அதனை எழுத்தாளர் வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும்.
இவ்வாறான எழுத்தாளர்களாக விரும்புபவர்கள, அறிந்து, புரிந்து கொள்ள வேண்டிய கடமைகள் உள்ளன.
r ஆசிரியரின் எதிர்பார்ப்பு
சுயமாக எழுத முன்வருபவர்கள் அறிந்திருக்க வேண்டிய சில விடயங்கள் பற்றி, இப்பொழுது ஆராய்வது பொருத்தும் என்று எண்ணுகிறேன். ஆமாம்,
நல்லதோர் எழுத்தாளனாக நாம் மாறுவதற்கு, நமக்கு வழிகாட்டும் பாதை, நீங்கள் நினைப்பதுபோல் எளிதானதல்ல. பல வில் லங்களையும் ஏம, ற்றங்களையும் எதிர்ப்புக்களையும் ஏற்கவேண்டிவரும் என்பதை நாம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும். எனவே, -
முதலில் கீழ்க்காணும் குணநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகமிக முக்கியம். விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தோல்விகளை மனநிறைவோடு ஏற்றுக்கொள்ளுந் தன்மை, சிறு சிறு வெற்றிளைக் கண்டு மனநிறைவு பெறாத மனப்பாங்கு, எல்லாவற்றிற்கும் மேலாக அனுபவத்திலிருந்து அறிவைப் பெற்று ஏற்றுக்கொள்ளுந் தன்மை. ஆன. ல் ஒன்று, இக்குணநலன்கள் எல்லாம் இருந்தாலுங்கூ வெற்றி நிச்சயம் என்று எண்ணிவிட வேண்டாம். ஆம்,
மனித இதயத்தைப் புரிந்து கொள்ளும் வலிமையும், சராசரி ஆணும் பெண்ணும் எதனை வாசிக்க விரும்புகிறார்கள் என்ற அறிவும், தன் மனத்தில் எழும் எண்ணக் கருக்களைத் தங்குதடையின்றி வெளியிடக்கூடிய வன்மை போன்றவையும் பெரிதும்
வேண்டப்படுகின்றன.

Page 11
எழுத்தை ஆள்வதற்கும், ஏனையவைகளின் வெற்றிக்குத் தேவையாக அமைகின்ற முயற்சியும் பயிற்சியும் கட்டாயம் தேவை என்பதை எழுதத் துடிப்பவர்கள் உணர்தல் வேண்டும். ஆக, மொத்தமாகக் கூறினால், ஒர் எழுத்தாளனுக்குரிய மனோபாங்கையும், மனோபக்குவத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உதிரத்தையும், வியர்வையையும், கணிணிரையும் எழுத்துக்காக அர்பணிக்க முன்வரும் அன்பர்கள் அடுத்ததாகச் செய்ய வேண்டிய ஒரு முக்கிய விடயம் உண்டு.
அதாவது, எழுதத் தொடங்குவது. ஆமாம், எதை எழுதுவது என்ற ஒர் எண்ணம் முதலில் வாட்டும் பரவாயில்லை, சும்மா பேர்ப்பர் பேனா எடுத்து, மனதில் படுவதைத் தாராளமாக எழுதுங்கள். ஆமாம், எந்த ருவத்தில் எழுதுவது என்ற எண்ணமும் எழலாம். கரு இருந்தால், உரு பற்றி சிந்திக்கவே வேண்டாம்.
கவிதை, கட்டுரை, சிறுகதை, செய்தித் துணுக்கு, கவிதை, சிறுவர் பாட்டு, நாடகம், நாவல் என்று நம்முன்னால்தான் உருவங்கள் விரிந்து கிடைக்கின்றனவே.
நாம் தொடங்கு முன்னால், எந்த அளவு, என்ன விடயங்களை அதிகமதிகமாக வாசித்தோமோ, அதன் தாக்கம் உங்களின் ஆக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்வீர்கள். எனவேதான், இக்கட்டுரைத் தொடரின் தொடக்கத்திலேயே நிறைய வாசிக்க வேண்டியது நல்லதொரு எழுதி தாள னினி கடமை எண் று வலியுறுத்தப் பட்டது. விளக்குகின்றதுதானே?
இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கும் பொழுதும் நல்ல எழுத்தாளர்களின் அல்லது நீங்கள் பின்பற்ற நினைக்கின்ற எழுத்தாளர் அல்லது எழுத்தாளர்களின் புத்தகங்களை நுணுக்கமாக ஆராய்வு மனத்தோடு தொடர்ந்து வாசிக்க வேண்டும்.

அடுத்துத் தேவைப்படுவது, வாசிப்பதற்கும், எழுதுவதற்கும் வசதியான நேரங்களை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். இந்த நேரந்தான் எற்றது என்பது கிடையாது. என்றாலும், விடியற்காலைப் பொழுது ஒருவரும் தொந்தரவு தராத பொழுது நல்லது என்பார்கள். ஆனால் நன்பகல் என்றாலும் பரவாயில்லை. நம் மனம் நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்குப என்றால், ஆமா. நம் மனம் நமக்குக் கட்டுப்பட்டு நம்மை எழுதத் தூண்டும் உந்து நேரத்தையே CUPL என்கின்றோம். பயிற்சி செய்தால் எந்த நேரத்தையும் மூட் நேரமாக மாற்றிக் கொள்ளாமல் என்பதைே புதிய மனோதத்துவம். சுற்றியிருக்கும் சூழ்நிலையில் குண்டு வெடித்தாலும், அதனைக் கணி டு கொள்ளலாம் இலக்கியம் படைக் கலாம் . எது எப்படியிருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் முறையாக எழுதிப் பழகுவது அதிக இலாபத்தைத் தரும்.
எழுதத் தொடங்கி முதற் கால்மணி நேரத்தில் நீங்கள் மிகக் குறைவாகவே எழுதியிரு கலாம். அதற்காக மனந்தளர வேண்டாம். நம்பிக்கையோடு பணியைத் தொடர்க: நிறைய எழுதுவீர்கள்; வெற்றி பெறுவீர்கள்; இதில் சந்தேகம் வேண்டாம்.
pur பாத்திரம் அறிய வேண்டும்
எழுதும் ஒவ்வொரு வினாடியும் புனிதமானது, விலைமதிப்புள்ளது எbற எண்ணத்தோடு எழுது எழுத்தார்வம் கொண்ட ஒருவர் நாம் இதுவரை ஆராய்ந்தவைகளைப் பற்றி நல்லக்கறை கொண்டு தேவையான அடிப்படைத் தகுதிகளைப்
பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம்.
அதாவது தமிழ் மொழியை ஒரளவு பிழையற எழுதுவார்; கற்பனை வளத்தை வளர்த்துள்ளார், மனித வாழ்வைக் கற்றுப் புரிந்து கொண்டுள்ளார், அன்றாட விடயவகள் பற்றி அறிந்து அறிவை வளர்த்துக் கொண்டுள்ளார். ஏதோ ஒரளவு தன் தனி வாழ்வு பற்றி அனுபவம் பெற்றுள்ளார் என்று வைத்துக் கொள்வோம். இவை மட்டும் போதுமா இல்லவேயில்லை. இன்னமுள்ளன பல விடயங்கள்.
()

Page 12
முதலாவது, கூடுமானவரை தாம் விடயதானங்கள் அனுப்புவதற்குத் தீர்மானித்துள்ள பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்வற்றைப் பெற்று, அவைகளைப் பற்றிய சில விடயங்களை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு பத்திரிகை அல்லது ஒர் ஏடு என்னென்ன விடங்கள் பிரசுரிக்கின்றன, என்ன வடிவமானவை, எந்த அளவானவை, என்ன கருத்துக் கொண்டவை பிரசுரிக்கின்றன என்று ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அதாவது, ஒரு பத்திரிகையிலுள்ள விடயதானங்களை வாசிப்பதை விட கற்றுணர வேண்டும்.
கவிதைகளையே பிரசுரிக்கும் ஒரு ஏட்டுக்கு கட்டுரை அனுப்புவதோ, புதுக்கவிதைகளைப் பிரசுரிக்கும் ஒர் ஏட்டுக்கு மரபுக்கவிதைகளையோ, நாலு மினிக் கவிதைகளைப் பிரசுரிக்கும் ஒரு பத்திரிகைக்கு நாநூறு வரிக் கவிதைகளை அனுப்புவதோ, முற்போக்குக் கருத்துக்களை பிரசுரிக்கும் ஒரு சஞ்சிகைக்கு சமய சடங்குகள், சமாதான கொள்கை கோட்பாடுகள் வழியும் விடயதானங்களை அனுபடவதோ தவறு. அனுப்பினால் என்ன நடக்கும்.? ஏமாற்றம்தான் மிஞ்சும். எனவே, "பாத்திரம் அறிந்து பிச்சை இடு' என்ற நன்மொழியை மனத்திற் பதித்துக் கொள்வது நல்லது.
இது ஏதோ சாதாரண விடயமாக இருந்தாலும், முதன் முதல் எழுதத் தொடங்கும் எழுத்தாளர் அன்பர்கள் ஏமாற்றத்தால் சலிப்படையாமல் இருப்பதற்கு இது ஒரு முக்கிய அறிவுரையாகும். 6T607(36), Study of the Market 3 boog, i5606)60)u Jiggsglei, கொள்வது முக்கியமாகின்றது.
மேலும் சிறு சிறு கடிதங்கள், தொடர்புகள் மூலம் நாம் எழுத எண்ணும் பத்திரிகைகளின் ஆசிரியர்களுடன் பரீட்சையமாவது நல்லது. இது நம்முடைய விடயதானங்கள் பிரசுரத்துக்கு ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு ஓர் உந்து சக்தியாக அமையும்.
அடுத்து தொடக்கதிலேயே பேராசைப்படவேண்டாம். "விரலுக்கேற்ற வீக்கம். ஏழைக்கேற்ற எள்ளுருண்டை" என்பது போல் சாதாரணமாக, எளிமையான, இலகுவான விடயங்களில் கைவைக்க
(2)

வேண்டும். இன்று சிறு சிறு கவிதைகள் அல்லது பாடல்கள் எழுதித்தான் முதல் முதலில் எழுதத் தொடங்குகின்றனர். இனி னொ னிறு நாம் எழுதுவது எளிதாக ( மார் கட்) சந்தைப்படுத்தக்கூடியதாய் இருத்தல் வேண்டும்.
அடுத்து முதலில் எழுதத் தொடங்குபவர் தனியொரு பத்திரிகைக்குத்தான் தன் விடயங்களை அனுப்ப வேண்டும் என்று எண்ணக் கூடாது. நம் நாட்டில் மூன்று தேசிய தமிழ்த் தினசரிகள். ஞாயிறு பதிப்புகள் இருப்பதால் ஏதாவது ஒன்றுக்குத்தான் அனுப்ப வேண்டும் என்றிருக்கக் கூடாது.
இம்மூன்று தேசிய பத்திரிகைகள் மட்டுமல்ல, ஏனைய சஞ்சிகைகள், பத்திரிகைகள், சிற்றேடுகள் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். உங்கள் பெயரை நிலைநாட்டிக்கொள்வதை காலத்திடம் விட்டுவிட்டு, தொடக்கத்தில் மனந்தளராமல் எழுதக்கூடிய அளவு எழுதி, பொருள், அமைப்பு என்று பார்த்துக்கொண்டிராமல் எழுதி நிறைய அனுப்புங்கள். ஆனால், முன்னால் கூறியவைகளை மனத்தில் கொண்டிருத்தல் வேண்டும். "ஆசிரியரின் எதிர்பார்ப்பு" என்ற அடிப்படையை மறந்துவிடாதீர்கள்.
விடாமுயற்சி வெற்றி தரும் என்ற நன்னம்பிக்கையோடு அனுப்பிக்கொண்டிருங்கள். பின் ஒரிரு மாதங்கள் கழிந்தபின் பிரத்தியேகமான ஒரு மதிப்படு செய்து கொள்ள வேண்டும். ஆமாம், வெளிவந்த விடயதானங்களை, வெளிவராத விடயதானங்களுடன் ஒப்பிட்டுப பார்க்க வேண்டும். வெளிவந்ததற்கான காரணங்கள் யாவை? வெளிவாாததற்கான காரணங்கள் யாவை? என்று பதிப்பாய்வு செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும்பொழுது நம்மையறியாமலேயே நம் படைப்புகளை விமர்சனம் செய்யும் பயிற்சியைப் பெறுகின்றோம். இது விமர்சனததுறையில் காலெடுத்து வைப்பதற்கும் துணை புரியலாம்.
எழுத்தின் கருவா, அமைப்பா, உருவமா, உள்ளடக்கமா, அணுகுமுறையா, முதிர்ச்சியா, எழுத்தின் வண்மையா, காலத்திற்கேற்ற விடயதானமா, பரீட்"யமான பொருள் பற்றி எழுதியதனாலா? என்றெல்லாம் ஆராய்வது நல்லது.
(13)

Page 13
எனவே, எதையனுப்பினோம். எப்பொழுது அனுப்பினோம் என்றெல்லாம் ஞாபகம் வைத்துக் கொள்வது எப்படி என்ற வினா எழுப்பப்படலாம், இதற்கு எழுத்தாளர்களினதும், கலைஞர்களினதும் ஆண்டு ஏடு தரும் ஒரு விளக்கப்படிவத்தைத் தரலாம் என்று எண்ணுகின்றேன். இது புதிய முத்தாளர்களுக்கு ஆர்வமூட்டும் ஒரு சாதனமாக அமையும் என்றும் எண்ணுகிறோம்.
ஒரு குறிப்புப் புத்தகம் வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு பக் கதி தில் கழி கணர் ட விதத் தல வரிசையாக எழுதிக்கொள்ளுங்கள் திகதி, விடயத்தின் தலைப்பு, எங்கே அனுப்பப்பட்டது, ஏற்றுக் கொள்ளப்பட்டதா/இல்லையா - திகதி (கொடுப்பனவு என்றும் எழுதப்பட்டுள்ளது. இது குறித்து புதிய எழுத்தாளர்கள் பிரச்சினைப்பட வே.ைடியதொன்றில்லை என்றே எண்ணுகிறோம்)
Nr கருவில் தெளிவு வேண்டும்
நாம் எந்த ஒரு விடயத்தையும் எந்த ஒரு உருவத்தில் எழுதுவதானாலும் நமக்கு அதற்கான கரு அல்லது கருத்துகள் தேவை. எனவே, இக்கருத்துகளை எங்கிருந்து எப்படிப் பெறுவது, எவ்வாறு பாதுகாத்து வைப்பது என்பதுபற்றி ஆராய்வது புதிய எழுத்தா ளர்களுக்குப் பெரிதும் நண் மை பயக கும் என்று எண்ணுகின்றோம்.
புதிய, காலத்துக்கேற்ற, மனதைக் கவரும் கருத்துகள் தம் வாசகர்களின் எண்ணத்தைக் கவர்ந்து ஏற்ற வெற்றியைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. எனவே, புதிய கருத்துக்களைத் தேடிப் பிடிப்பது எழுத்தார்வங்oகாண்டோரின் கடமையாகின்றது. ஏனெனில், பழைய கருத்துகளுடன் புதியவைகளை இணைத்துக் கொடுப்பதிலேயே வெற்றி தங்கியுள்ளது. பழைய கருக்களிலிருந்து புதிய கருக்கள் ஜெனிக்Jன்றன என்படே உண்மை. ஒரு சில முதிர்ந்த அறிவு படைத்தவர்களே புதிய, நவீன கருக்களை உருவாக்க முடியும். எனினும், இ ைஎங்கோ ஒரிடத்தில் பழமை அத்திவாரத்தில் காலூன்றியே இருக்கும்.

முதலாவதாக புத்தகங்கள், பத்திரிகைகள், சஞ்சிகைகள், நாவல்களிலிருந்து கருத்துகளைப் பெறலாம். எதுவும் அச்சு ஏறிய பிறகு அது பொது உடமையாகிறது. அதனை அப்படியே எடுத்தாளாதபட்சத்தில் அந்தக் ருத்துகளை எவரும் எடுத்தாளலாம். ஒரே கருத்தை எத்தனை எழுத்தாளரும் எழுதலாம். ஆனால், எழுப்படுபவை தம் சொந்தப் படைப்புகளாய் அமைய வேண்டும்.
புதிய எழுத்தாளர் நிறைய வாசிக்க வேணடும். பத்திரிகைகளில் காணப்படும் கதை, கட்டுரைக மட்டுமல்ல செய்தித் துணுக்குகளு நகைச்சுவை துணுக்குகளும் விளம்பரங்களும்கூட புதிய கருத்துகளை நம் மனதில் எழச்செய்யும். பழைய சஞ்சிகைகள் போன்றவை புதிய கருக்களை உருவாக்குவதற்கு நல்ல வேட்டைத்தரம் இதன் பொருட்டு நீங்கள் வாசிகசாலைகளையும், பழைய சஞ்சிகைகள் விற்பனைக் கடைகளையும் நாடிச் செல்வது அவசியம். மொழிகள் சில வாசிக்கத் தெரிந்திருந்தால் நமது முயற்சி இலகுவாகிறது. -
இனி டாவதாக, ஏனைய பொதுசனத் தொடர்பு சாதனங்களாகிய தொலைக்காட்சி, வானொலி போன்றவை. இவைகளைப் பார்க்கும் பொழுதும், கேட்கும் பொழுதும் கவனமாகவும், உன்னிப்பாகவும் செயற்படவும், சாதாரண ஒரு சிறு செய்தி முதலாய் ஒரு கருவுக்கு அடித்தளமாய் அமையலாம்.
மூன்றாவதாக, சாதாரணமான மக்களிடமிருந்து மக்களின் அன்றாட வாழ்க்கையை அவதானமாகக் கவனித்து வந்தால் ஏராளமாக 'கரு'கள் நம குக் கிடைக்கும். வெற்றிப்படைப்புகள் பல இந்த அடிப்படையில்தான் எழுந்துள்ளன. நம்மை, தாண்டிச் செல்லும் ஒவ்வொருவரிடமும் ஒரு 'கதை இருக்கலாம். அவர்கள் கலைஞர்கள் அல்லாததால் அவை சொல்லப்படாமலேயே மறைந்து விடுகின்றன.
உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற வேறுபாடு இங்கு ஏற்படுவதில்லை. எனவே, புதிய எழுத்தாளர்கள் மனித ஜீவியத்தை மனங்கொண்டு படிக்க வேண்டும்; கவனிக்க வேண்டும்.
(5)

Page 14
அடுத்ததாக, மனிதர்களைப் பேட்டி காண்பதன் மூலமும், 'கரு' களை உருவாக்கலாம். இதற்கு நாம் கேள்வி கேட்கும் சாமர்த்தியத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். "ஆமாம்', 'இல்லை' என்ற பதிலை மட்டும் பெறுவதாய் இல்லாமல், விளக்கமாகப் பதில் பெறக்கூடியதாக வினாக்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், நமது சொந்த வாழ்க்கை அனுபவங்களிலிருந்து புதிய கருக்களைப் பெறலாமே. ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அனுபவமாகத்தானே உள்ளது. எனவே, சொந்த வாழ்க்கையை நன்கு சுவைத்து, ரசித்து, அனுபவித்து வாழ்ந்து புதிய 'கரு' களைப் பெறுவோம்.
இப்படியாக பல வகையன ஊந்துகளிலிருந்து நாம் பெற்றுக் கொண்ட கருகளை எப்படிச் சேகரித்து வைப்பது, எங்கே சேர்த்து வைப்பது என்பது பற்றி நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
களஞ்சியப்படுத்தல் நமக்குள்ளும் வெளியிலும் கதை, கட்டுரைகளுககான 'கரு' கருத்துகள் எண்ணற்றவையாக இருந்தாலும் தேவையான பொழுது உடனே பெற்றுக் கொள்வதற்குத் தேவையான வகையில் களஞ்சியப்பத்தி வைக்க வேண்டும். இல்லையா?
புதிதாக எழுதத் தொடங்குபவர்கள் தம்மை நாடிவரும் நற்கரு' களை இனங்கண்டு ஏற்றுக்கொண்டு ஏற்ற விதத்தில் சேகரித்து வைப்பது மிக முக்கியமாகும். இதற்காக சில வழிமுறைகளைக் கையாளலாம் . ஒன்று. பத் திரிகை நறுக்குகளுக்கான ஒரு கோவை வைத்துக் கொள்ளலாம். (The Cuttings File).
ஒவ்வொரு பத்திரிகையாலயமும் தன்னால் வெளியிடப்படட பத்திரிகைள் , ஏனையவர் வெளியிட்ட பத்திரிகைகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட்ட நறுக்குகளை, வேறாக, தேவையான பொழுது உசாவுவதற்கு கோவைப்படுத்தி வைக்கின்றன.
ஒவ்வொரு தலைப்புககும் தனித் தனிக் கோவை வைத்துக் கொள்ள முடியுமெனில் மிக் நல்லது. எது எவ்வாறெனினும், நாம் எவ்வெப் பொருள்கள் பற்றி எழுத விரும்புகின்றோமோ அவ்வப்

பொருள்கள் பற்றி வகைப்படுத்தி கருக்களை சேகரித்து வைக்க புதிய எழுத்தார்வம் கொண்டோர் பழகிக்கொள்ள வேண்டும். தலைப்புக்கேற்ப வன்கப்படுத்தல், நம் நேரகாலத்தை மிச்சப்படுத்த மிகவும் உதவும்.
இதனைப் பல வழிகளிலும் செய்யலாம். மிக எளிதான முறை இதுவே. அதாவது, பத்திரிகை நறுக்குகளை, பத்திரிகையின் பெயர், திகதி இடம் போன்றவைற்றை எழுதிவிட்டு வைக்கலாம். இதற்காக நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள், வாங்கலாம், அல்லது நண்பர்களிடமிருந்து பழையவற்றை பெறலாம் அல்லது பழைய சஞ்சிகைகள் விற்போரிடம் வாங்கலாம்.
கடித உறைகள் பெருத்து விட்டால் அவைகளில் எழுதியுள்ள தலைப்பை உப தலைப்புகளாக பிரித்து, இன்னுஞ் சில கடித உறைகளை சேர்த்துக் கொள்ளலாம்.
சிலர், பெரிய கொப்பிகள் வாங்கி, முக்கியமானவற்றை மட்டும், அந்தந்தத் தலைப்பின் கீழ் குறிப்பெடுத்துக் கொள்வதுமுண்டு. இது சிறிது கடினமானது. ஆனால், இதிலும் சில நன்மைகள் உள்ளன. கடன்வாங்கிய பத்திரிகைகள், புத்தகங்களிலிருந்தும் குறிப்பெடுத்துக் கொள்ளலாம். வாசிகசாலை சஞ்சிகைகள், புத்தகங்களைப் பொறுத்தமட்டில் இந்த வழிமுறைகளையே கடைபிடிக்கலாம்.
மேலும், சிறு சிறு அறைகளைக் கொண்ட பெட்டி அல்லது ராக்கையில் இட்டு வைப்பவர்களும் உள்ளனர். இதற்கு இடவசதி அதிகம் தேவை, செலவும் சற்று அதிகமாகும். எது எவ்வாறிருப்பினும், எம்முறையைப் பின்பற்றினாலும் கீழ்க்காணும் விடயங்களை மனத்தில் பதித்துக் கொள்வது நல்லது. முதலாவதாக, இந்தக் கோவைகள் கையாள்வதற்கு எளிதானவையாக, சாதாரணமானவையாக அமைய வேண்டும்.
இரண்டாவதாக, அது அதிக நேரத்தினை எடுப்பதாகவோ
அல்லது தன்னில் நலனே ஒரு தனிப்பட்ட செயலாகவோ அமைந்து விடக்கூடாது. அதாவது அது ஒரு பொழுதுபோக்கு செயற்பாடுபோல்
3260). Du j G36h163) (BLô.

Page 15
மூன்றாவதாக ஒர் ஒழுங்கான கிரமப்படி அமைதல் வேண்டும். ஆமாம், ஏதாவது தேவைப்படும் பொழுது ஆகக் குறைந்த நேரத்தில் பெறக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
நான்காவதாக சேகரிக்கும் விடயதானங்கள் மிகவும் உன்னிப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருத்தல் வேண்டும். அல்லாவிட்டால் தேவையற்றவை நிறைந்து தேவையான முக்கியமானவற்றறை மூழ்கடித்துவிடும்
ஆமாம் எந்த, ஒரு எழுத்தாளரும் தம்முடைய எண்ணக் கருத்துக்களை நன்கு விளக்குவதற்கும் நிரூபிப்பதற்கும் இவை மிகத் தேவையாகவும் பிரயோசனமாகவும் அமையும். அத்துடன் புதியதொரு திருப்பத்தோடு புதியதொரு நோக்கத்தோடு வேறு ஒரு கோணத்தில் எழுதுவதற்கும் இவை பெரிதும் கைகொடுக்கும்.
மேலும் சொந்தக் கருத்துக்கள் விரைந்து மனதில் எழாத போதும் கற்பனை வளம் பெறுகாத போதும் இந்த நறுக்குகளை கொஞ்ச நேரம் வாசித்தால் புத்துணர்ச்சியும புதிய எண்ணக் கருத்துக்களும் ஊற்றெடுக்கும்
குறிப்புப் புத்தகங்களை எழுதுதல்
அடுத்ததாக, குறிப்புப் புத்தகங்களை எழுதுதல். அதாவது கப்டன் கட்டல் என்பவர் கூறுகிறார் "எதையும் கண்டால் உடனே குறிப்பெடுத்துக் கொள்" -
ஆமாம், புதிய எழுத்தாளர்கள் எப்பொழுதும் ஒரு குறிப்புப் புத்தகத்தை தன்னுடன் கொண்டு செல்வது அவசியம். எப்பொழுது எங்கே எந்நேரம் எது நடக்கும் என்றோ எப்பொழுது நமது மனதில் எண்ணக் கருத்துக்கள் எழும் என்றோ சொள்ள முடியாததுதானே அபிப் பிராயங்கள் மனதில் எழும் பொழுதும் உடனடியாக குறித்துக்கொள்ளலாம். எனவே அவ்வபிப்பிராய கொபி ஒன்று வைத்துக்கொள்வது புதியவர் எழுத்தார்வம் கொண்டவர்களுக்குப் பெரிதும் உபயோகமாக இருக்கும் என்பதில் ஐயமில்லையல்லவா?

மேற்கூறிய இக்கொபியை தேவையானால் எண்ணக் கருத்துக்களின் தலைப்புகளுக்கேற்ப பிரித்துக் கொள்ளளாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சில ஆண்டுகள் செல்ல அவ்வெழுத்தாளர் தமக் குத் தானே ஒரு உசாத் துணை வாசிகசாலையை அமைத்துக் கொள்ளலாம்.
எது எவ்வாறு இருப்பினும் குறிப்பெடுத்துக் கொள்ளல் எந்தவொரு எழுத்தார்வம் கொண்டவர்க்கும் பெரிதும் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. இன்னும், சிலகாலம் சென்று எழுத எண்ணுபவர்கூட இப்பொழுது இருந்தே இதனைத் தொடங்கலாமே.
தன்னுடைய எழுத்துத் தொழிலுக்கு கருத்துக்கள் அல்லது கருக்கள் சேர்ப்பது எளிதாயிருக்கும் ஒர் எழுத்தார்வம் கொண்டவர் ஏதாவது ஒரு விடயத்தில் விசேடத்துவம் பெற எண்ணினால், தன்னைப் பெரிதும் கவர்ந்த ஏதாவது ஒரு விடயம் அல்லது பொருள் பற்றி மட்டுமே எழுதி அதிலே விசேட எழுத்தாளராக வேண்டுமானால் அதனை ஒரு நாளில் செய்து முடிக்க முடியாது. ஏனெனில் மனித வாழ்வில் ஏதாவது ஒரு சிறு பகுதிளைப் பறறி மட்டும் நன்றாக கற்க வேண்டும் என்றால்கூட வருடக்கணக்கில் தொழிற்பட வேண்டியிருக்கும்.
தனியொரு விடயத்தில் நாம் தனித்தவம் பெற வேண்டமாகில் அவ்விடயம் பற்றி நிறைய வாசிக்க வேண்டும் அவ்விடயம் பற்றி பழைய சஞ்சிகைகள் வாங்கி கருத்துக்களை சேகரிக்க வேணடும். அவை பற்றி சிந்திக்க வேண்டும் நிறைய எழுத வேண்டும். தனியொரு விடயத்தில் நாம் தனித்துவம் பெற்றால் நம்மை எல்லா பத்திரிகையாளர்களும் அவ்விடயம் பற்றி விடயதானங்கள் தேவைப்படும் பொழுது பெரிதும் மதிப்பார்கள்.
ஒரு பொருள் பற்றிப் புலமைத்துவம் அல்லது விசேடத்துவம் பெறுவது புதிய எழுத்தாளர்களுக்கு பெரிதும் நன்மை பயக்கும். ஏனெனில், நன்கு அறிந்த ஒரு பொருள் பற்றி நன்றாக பிழையற

Page 16
விசேடமாக எழுதலாம். வேற்றி பெறலாம். இது மீண்டும் மீண்டும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தைத் துண்ைடும். அப்படிப்பட்டவர் எழுதும்போது பொதுவாக பத்திரிகையாசிரியர்கள் விடயதானங்களை நிராகரிப்பதில்லை. "ஆளுக்கு விடபம் நன்றாகத் தெரியும்” என்ற எண்னம் ஆசிரியர் மனதில் எழும். அவருக்கு எழுத்தாளர் பட்டில் ஒரு நம்பிக்கை பிறந்து விடும். சில வேளை அந்த விசேட விடயம் பற்றி எழுத தேவையெனில் அவ்வெழுத்தாளர் விசேடமாக அழைக்கப்படுவார் இது உண்மை. சிலவேளை ஏதாவது ஒரு விசேட பகுதியை நடத்தும்படியும் அழைக்கப்படலாம்.
எது நாள் fiாயிருப்பினும் ஏதாவது ஒரு துறையில் விசேடத்துவம் பெறும் எழுத்தார்வம் கொண்டவர் எழுதுவதில் கூடிய விருப்பமும் ஆர்வமும் காட்டுவர். எனவே உங்களுக்கு விருப்பமான ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நல்லது நன்மை பயக்கக்கூடியது. எழுத்தர்வமுள்ளவர்களே! மேலே குறிப்பிட்ட சில கருத்துகளை நான்கு வாசித்தறிந்து அவைகளை புரிந்து கொண்; உங்கள் மனதில் எழும் நல்லெனன்னத்துக் கருத்தக்களையும் இனைத்து சிந்தித்துச் செயலாற்றி வெற்றி பெரும் டி கேட்டுக்கொள்கிறோம், மேலும், இச்சிறிய கட்டுரைத் தொடரில் (ஏட்டில்) தரப்பட்டவை எழுத்தார்வம் உள்ளவர்களுக்குத் தரப்பட்ட ஒரு சில ஆர்வமூட்டும், குறிப்பிட்ட நற்கருத்துக்களே. இவைகள் பற்றி சிந்தித்து செயற்பட வேண்டியது உங்கள் கடமை, அது
உங்கள் திறமையில் தங்கியுள்ளது.
முழு மனதுடன் முயற்சித்து உங்கள் திறமைகளை வளர்த்துக்கொனர்டு வெற்றி பெற வாழ்த்துகிறோம். போலி எழுத்தாளர்கள் மலிந்துவிட்ட இக்காலத்தில் உண்மையாகவும், 24 PIL I Hi fil Is ஆழ நீ த ரிங் தன ன புடனும் எழுதும் நல்லெழுத்தாளர்களாக மீளிர்வீர்களாக வெற்றி உமக்கே"
党曾曾曾 锡岛 敬

=அriப வரப்ப்பைத் தவறவிடாதீர்கள்1=
를
((.l. (1), பரீட்iசயின் சித்திப831 பத் தவறிய யானவர்களும் உயர் தரம் (.ே1.1. A.) படித்து
பல்கலைக்கழகம் செல்கி முடிமரம்.
இதற்குக் r) கொடுக்கிறது
NEWMAN'S COLLEGE
வெளிவாரியாக உயர்தர துப்புக்கள் ஆரம்பிக்ப்பட்டுள்ளன.
(), jihki 8. Ily, silIII, NEWMAN'S COLLEGE புள்வைத்த முதல் முயற்சி
சப் வர்த்தகம் இரு பீவுகளிலும் பா11கர் தக்து
விருப்பா: 'frத் தெரிவு ப்ெபலாம்.
lசக் குறைந்த கட்டணத்திப் ரப் ப1ை8:ளயம் சர்ச்சுடடிய சாதிகள் செய்து கொடுக்கப்படும்,
III \! (IST இல் பரீட்: த பூதுவதற்ii புதிய ானவர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ாது.
எம்மி ' உய தரம் 1ம் பு: க்கும் : f :றுக் f
த்தியடைந்தால், பல்கலைக்கழகம் +ெள் முடியும். TTTTT S SLLLLS LLLLLLLLSSLLLS LLL STT TTT 00 தரகளுக்கார வழிகாட்டஸ்தும் வழங்சீப் இப் பித் மிக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். வெளி பானர்களுக்காள விந்தி வீதிகர் செப்து சொடுக்கப்படும்.
Iாக தொடர்புகளுக்ரு:
பிருந்த பத்தில் படி 1, 13 வதுர்கா ஆசிரியர்கள்
| னாக வேamய அர்ளி வழங்கும் கல்வி நினiம்
NEWMAN'S COLLEGE
HASSEN BUILDING, MAWANELLA.
T.P. ().5 - 485.42
lm

Page 17
-7rl Heyr s trirsili IIey Is Fry I:
O.G.M. PR
PRODUCER ALL WARIETIE
STRING HOPPER WI
ROASTED WHITE
COCONUT ADDED
RED PICE
KWRAKKAN
AGGALA F
GRAM. F.
ANTA FIL
青 古 青青 青 青 置 害 害 害“害 青
No. 45/1, Hemmat
Mawanella,
Te: O35-461
Fax OO94 - 3
'S SS -
- - --
 

RANN,
ODUCTS
S OF QUALITYFLO UR
HITE RICE FLOUR
RICE FOUR
PITTU FLOUR
FOUR
' Fl0U'R
L0U'R
0U'R
0U'R
± * * ★ ★ 莺 莺 莺 壹 青
hagama Road,
Sri Lanka. 67, 46608
}5 - 46 101
- الخط
i