கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலை ஒளி

Page 1


Page 2


Page 3

ஓலி இஆ
பல்துறை மலர்
625/7625///
சட்டத்தரணி எஸ். எம். ஹனிபா
தமிழ் மன்றம்
- கல்ஹின்ன, கண்டி -

Page 4
MALAI OLI
a Souvenir edited by S. M. Haniffa, B. A. (Cey.), Ll.B (S. L.) Attorney - at - Law.
Copyright reserved.
One hundredth publication of:
Thamil Mamram, Galhinna, Kandy.
Address of correspondence :
Thamil Mamram,
10, Fourth Lane,
Koswatta Road, Rajagiriya.
Printed by:
Kumaran Press (Pvt) Ltd., 201, Dam Street, Colombo - 12. Tel. : 421388
ISBN 955 - 9041 - 04 - 5

அலகிலா அருளும் அளவிலா அன்பும் இலகுமோர் இறையின் இனியபேர் போற்றி
வானவர்க்கும் நின்னுடை தூதருக்கும் மறை தெளிந்த மற்றை யோர்க்கும்
ஊனுடைய பல்லுயிர்க்கும் உணர்வரிய
பேரொளியாய் ஓங்கி நின்ற
- ஞானம்எனும் பரம்பொருளே அழியாத
பெரும்பேறே நடுநின் றென்றும்
ஊனமற விளையாடி எவ்விடத்தும்
எந்நாளும் உறையும் கோவே !
- உமறுப் புலவர் சீறாய் புராணம்

Page 5
அல்லா, அல்லா, அல்லா!
பல்லாயிரம் பல்லாயிரம் கோடிகோடி யண்டங்கள் எல்லாத் திசையிலுமோ ரெல்லையில்லா வெளிவானிலே நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன் சொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ்சோதி
(அல்லா, அல்லா, அல்லா)
கல்லாதவராயினும் உண்மை சொல்லாதவ ராயினும் பொல்லாதவ ராயினும்தவ மில்லாதவ ராயினும் நல்லாருரை நீதியின்படி நில்லாதவ ராயினும் எல்லாரும்வந் தேத்துமளவில் யமபயங்கெடச் செய்பவன்
(அல்லா, அல்லா, அல்லா!)
மகாகவி சி. சுப்பிரமணிய பாரதி
ஊருக்கு நல்லது சொல்வேன் - எனக் குண்மை தெரிந்தது சொல்வேன் சீருக்கெல் லாம்முத லாகும் - ஒரு தெய்வம் துணைசெய்ய வேண்டும்.
- பாரதி

வாழததுகள
டாக்டர். தாரா டீ மெல்
செயலாளர், கல்வி அமைச்சு.
பேராசிரியர் கா. சிவத்தம்பி தகைசார் ஓய்வுநிலைப் பேராசிரியர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
திரு. எம்.எல்.ஏ. காதர், தென்கிழக்குப்பல்கலைக்கழகத் துணைவேந்தர்.
திரு. லில் குணசேகர கலாசார அலுவல்கள் அமைச்சு.
திருமதி. சாந்திநாவுக்கரசன் இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சு.
கல்வி இயல் . 17
LD5ž5š6hůD --- 71
சட்டம் . 107
இலக்கியம் . 131

Page 6
உழைக்க வேணடும்
மன்னும் சுதந்திரத்தை - நாட்டில்
மக்கள் அடைந்தவுடன்
பொன்னை மழையாக - வானம்
பொழிந்து கொட்டிடுமோ ?
பாலை சோன்)லயாகிக் - கனிகள்
பழுத்து தீர்ந்திடுமோ ?
சேலை சேலையாகப் - பருத்திச்
செடிகள் காய்த்திடுமோ ?
ஆக்கம் வேண்டுமெனில் - நன்மை
அடைய வேண்டுமெனில்,
ஊக்கம் வேண்டுமப்பா ! - ஓயாது
உழைக்க வேண்டுமப்பா!.
உலக மக்களெல்லாம் - அன்போடு
ஒருதாய் மக்களைப் போல்
கலக மின்றிவாழும் - காலம்
காணவேண்டுமப்பா !
- கவிமணி சி. தேசிக விநாயகம் பிள்ளை

Greeüungs
FROM THE SECRETARY,
MAN STRY OF EDUCATION
The galhinnai lamil Manram and its founder Mr. S. JM. Haniffa, are uell known to uriters and publishers in Sri
Canka.
The has published ninety nine books so far, single handed, this is a great achievement because it has been done
without asking for any assistance or donations from anyone.
The publishing society he founded in 1953 uhile yet an undergraduate in 9Peradeniga, first published 9Prof.
M. M. Uluise's "Muslim Contribution to Lamil siterature"

Page 7
(in english). Lhe next book toas that of Prof. S. Utthiananthan, the very first book auritten by him titled "Slakkiyat Lhenral".
JMr. Tlanija has published eighty seven books in Lamil, nine is Sinhalese and three in english. More than fifty authors have benefited from his services. Lhis souvenir that he is publishing is his one hundredth book and records his
achievements.
the service JMr, Taniffa has rendered in the last fifty years in publishing books, is a praisenuorthy matter and my heartfelt blessings are uith him. My best suishes for the suc
cess of his future activities.
ހށަ&} Dr. Tara de Mel
SECRETARY,
MNSTRY OF EDUCATION,

முயற்சிகள் வெல்க!
༦
Y.
ܬ݁ܪܶ
بیستمهای
hlösslÖ fjlslyf filisi blalas பேராசிரியர் கா. சிவத்தம்பி
': ஒஸ்டில் பின்னல் ཨ)(ཨེ་ 3)ངམ་ཨ་ཨ་། (》vམགི་ཅི་ ولمان المسلاميهما ابدالرالمومنده؟؟ ༠89ཡི་ཀ, ༩ ཚག། ༡༥ཏེ། ) },ཤི་ཧ་ ہیںQNٹW
É•၏ဂ် %ရ၏w☎l hးဇီစံ " န္တိ၊ } mp; ரேM' *y% المقاوميروفيلم 娜 ks )¬ማኞቅ

Page 8

தென்கிழக்குப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம். எல். ஏ. காதர்
திமிழ் மொழியில் இலங்கையில் நூல்கள் வெளிவருவது, ஒரு சாதாரணமான நிகழச்சி அல்ல. வசதி படைத்த நூலாசிரியர்களோ அல்லது திறமையும், ஊக்கமும், சந்தைப்படுத்தும் துறையில் நாட்டமும், பரிச்சயமும் கொண்டுள்ள சில இளம் எழுத்தாளர்களோ துணிந்து செய்யும் பகிரதப் பிரயத்தனம் இது. பொதுவாக, அவ்வாறு சாதனை படைக்கும் எழுத்தாளர்கள் தமது கன்னிப்பிரசுரத்துடன் ஒய்ந்துவிடுவதும் உண்டு. நித்தியமாக எதிர் நிச்சல் புரிய யாருக்குத்தான் இயலும்! ஆனாலும் இவ்வாறு நடைமுறைப்படுத்தும் புத்தக வெளியீடுகள்தான். இலங்கை தமிழ் இலக்கியத்தை சாகாமல், யாதோ குற்றுயிராக இருக்க வழிவைத்திருக்கின்றன.
இந்தச் சூழலில்தான், ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, ஜனாய் எஸ். எம். ஹனிபா, பிரசுர களம் அமைக்க முன்வந்தார். அவருடைய பள்ளிப் பருவத்தில் கூட, அவர் இலக்கியச் செயல்பாடுகளிலும் சிறு சஞ்சிகைகளை அச்சு வாகனத்தில் ஏற்றுவதிலும் மும்முரமாக இருந்தார். அதில் ஒரு பருவ ஏடு, "சமுதாயம்" என்ற நாமம் தாங்கிவந்தது. கல்ஹின்-ை னயில், அதிகமாக ஹனிபா என்று பெயர் உள்ளவர்கள் இருந்தபடியால், "சமுதாயம்" ஹனிபா என்றே பாமரராலும், பண்டிதராலும் அவர் அழைக்கப்பட்டார்.

Page 9
1951ல் இலங்கை பல்கலைக்கழகத்தில் எஸ். எம். ஹனிபா சேர்ந்தபொழுதும் கூட, தமிழ் நூல் பிரசுர வெளியீடுகள் என்ற விடயத்தை அவர் விட்டுக்கொடுக்கவில்லை. அக்காலத்தில் பல்கலைக்கழகத்திலும், அரசினர்தாபனங்களிலும், வீடுகளிலும், ஆங்கிலமே கொடிகட்டிப் பறந்தது. பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், பாளி, சிங்களம், தமிழ், அரபு என்கின்ற கிழக்கு மொழிகள் பீடத்திலும், வினாத்தாள்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலிருந்தன. விடைகளும் ஆங்கில மொழியில்தான் கோரப்பட்டன.
இவை யாவற்றையும் பொருட்படுத்தாமல், ஜனாய் ஹனிபா தமது பிறந்த ஊரான கல்ஹின்னையின் பெயரால் தமிழ் மன்றம் என்ற பிரசுரலாயத்தை நிறுவினார். அதில் விசேடம் என்னவென்றால், அதன் முதல் பிரசுரம், ஆங்கில நூல் ஒன்றாகும். மர்ஹஅம் பேராசிரியர் ம. மு. உவைஸின் "Muslim Contribution to Tamil Literature" என்பதே, அது. துணை வேந்தர் சு. வித்தியானந்தனின் "இலக்கியத் தென்றல்", "தமிழர் சால்பு" போன்ற நூல்களும் உடனுக்குடன் வெளிவந்தன. அப்பொழுது, ஜனாப் ஹனிபா பல்கலைக்கழக மாணவராக இருந்தார்.
பட்டப்படிப்பை முடித்த பின்னர், ஜனாய் ஹனிபா நீதித் துறையில் பிரவேசித்து வழக்கறிஞரானார். பின்னர், ஊடகத் துறையில் சேர்ந்து, உழைத்துவிட்டு, முழுநேர பிரசுரகர்த்தாவாக மாறினார். அவருடைய தமிழ் மன்றம், தொடர்ந்து சிெயலாற்றி வந்தது.
மீண்டும் மீண்டும் நல்ல நூல்களை வெளிக் கொணர்வ. தற்கு வல்ல அல்லாஹ் ஜனாப் ஹனிபாவுக்கு உதவி நல்குவானாக!
وعاع معك ماكر يح .21% -
Vice - Chancellor, South - Eastern University, Oluvil.
15.02.2001

ଗୋନୋମିନ - ୯୫ %}} ~~
str gjitha ko:34
hard ***
ay b MINISTRY OFCL RAAFFAIRS
Kt , ! !! ہوئی بھی بہ:یتیجہ بہ یہ* ابو
| 4 pu *x/t), sprawa
fly kahanaya Biarria
Li fi: A.
'far ko S has kاہم
For Lee Gunassicia
President Sinhala Writers Organization.
Congratulations and best wishes
it is ticed admirable that my good friend M. S.M. Haifa has been able to publish hundre buvuks through Tamil Mahram the Cushi2.tkk ble funded What Fakes mc doubly happy is the fact that he Established this organization while yet in
incrgraduate at the Pradaya University in 1953.

Page 10
Mr S.M.Hanifa, Attorney-at-law is a veteran journalist. He worked at lake House and at the Sri Lanka Broadcasting Corporation in the Editorial Division. After retirement he devoted his time to publishing work.
We of the Sinbala Writers' Organization have bad the privilege of associating ourselves with programmes of the Tamil Manram in promoting national integration activities through creative literature and publications in Sinhala, Tamil and English in SriLanka,
We wish to congratulate Mr. Hanifa on his hundredth publication and wish bin further success in his far reaching cfforts, promoting amity and concord at a time
when we are all interested in peaceful coexistence,
ベー
A f *
()ས་༡༦مسلمانہ
LeGunaseker
President S.W.O.)
Advisor to the Ministry of Cultural Affairs
kor: tegi its are: së १९११ ఉసీట్ల vsí K. Nasser i 39902 ir gyrrwg" | 2083 41 jಘಿಸಿ: {{ "ešto eks. : Ми Difyrsta i Secretary 86.999 765 ששף
த் 227 8,

ozýbušsů Fax 552642 මහග් අoකය
Cooe) Grana Gudh Telephones எனது இல
My No
ඔෆඩි අංකය
உமது இல අධජ්‍යක්ෂක Your No பணிப்பாளர்:552641 ගාලූ පාර Director 2481/1 sSeg
Galle Road
oo) ගින්දු ආගමික හා සංස්කෘතික කටයුතු දෙපාර්තමේන්තුව කොළඹ - 4 பொது 552643 கொழும்பு - 428.5.2001 General இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் Colombo - 4
Department of Hindu Religious and Cultural Affairs
வாழ்த்துச் செய்தி O O. O. O. O. O. O. O. O. O. O. O. O.
கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தையும் அதன் நிறுவனரான என்.எம். ஹனிபா அவர்களையும் இலங்கையின் தமிழ் எழுத்தாளர்களும், பதிப்புத்துறையைச் சார்ந்தவர்களும் நன்கறிவார்கள்.
இதுவரை 99 நூல்களை தனியொரு மனிதராக நின்று இவர் பதிப்பித்துள்ளார். எவ்வித உதவியையும், அன்பளிப்பையும் எவரிடமும்
S

Page 11
கோராது ஆற்றப்பட்ட பெரும்பணி இது. தனிமனித முயற்சியின் ஒரு இலட்சிய சாதனை என்றே இவரது பணியைக் குறிப்பிடவேண்டும்.
1953ல் பேராதனைப் பல்கலைக்கழக மாணவராக இருந்தபோது தமது ஊரின் பெயரில் இவர் ஆரம்பித்த தமிழ் மன்றத்தின் முதல் வெளியீடு கலாநிதி எம். எம். உவைஷ் அவர்களிள் 'முஸ்லிம்களின் தமிழ்த் தொண்டு என்ற நூலாகும். அவ்வாறே பேராசிரியர் சு. வித்தியானந்தனின் முதல் தமிழ் நூலான இலக்கியத் தென்றல்' எனும் நூலே ஹனிபா அவர்கள் வெளியிட்ட அடுத்த நூலாக அமைந்துள்ளது.
தமிழில் 87 நூல்களையும், சிங்களத்தில் 09 நூல்களையும், ஆங்கிலத்தில் 03 நூல்களையும் ஹனிபா அவர்கள் வெளியிட்டுள்ளார். இவற்றுள் ஐம்பது எழுத்தாளர்களின் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. நூறாவது பிரசுரமாக வெளியிடப்படும் இம்மலர் அவரது சாதனைகளை விளக்குவதாக அமைகின்றது.
கடந்த ஐம்பது ஆண்டு காலப்பகுதியில் இலக்கிய ஈடுபாட்டோடும், இலட்சியப் பிடிப்போடும் ஹனிபா அவர்களால் ஆற்றப்பட்ட பதிப்புப்பணி மகத்தானதாகும். அவரை மனமாரப் பாராட்டுகின்றேன்.
அவர்தம் பணிகள் மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றேன்.
Y%ー
சாந்தி நாவுக்கரசன்
பணிப்பாளர் இந்து கலாசார அலுவல்கள் திணைக்களம் 248, 1/1 காலி வீதி,
கொழும்பு -04.
f

ஆசிரியரும் வகைசொல்லலும்
- பேராசிரியர் எஸ். ரூபசிங்க
உலகமயமாக்கமும் கல்வித்துறை மாற்றங்களும்
- பேராசிரியர் எஸ். சந்திரசேகரன்
சமுகத் தேவையின் பின்னணியில் கலைத்திட்ட உருவாக்கம்
- கலாநிதி தி. கமலநாதன்
இனக்குழும விவரண ஆய்வு :
வகுப்பறை ஆய்வுகளுக்கான ஒரு நடைமுறை அனுைகுமுறை
- தையமுத்து தனராஜ், எம். ஏ.
a a a se a a
9
32
48

Page 12
ஆசிரியனின் தகைமை ட
நல்லாசிரியனது வரைவிலக்கணத்தை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பவணந்தி முனிவரின் நன்னூல், பின்வருமாறு கூறுகிறது.
குவனரு டெய்வங் கொள்கை மேன்மை கலைபயிறெளிவு கட்டுரை வன்மை நிமலை நிவைகோன் மலர்நிகர் மாட்சியும் உலகிய வறிவோ முயர்குண மிணையவும் அமைபல நூலுரை யாசிரி யன்னே
உயர்குடிப் பிறப்பும், காருண்யமும், ஆண்டவன் வழிபாடாகிய இவைகளால் எய்திய மேன்மையும், பல நூல்களிலே பழகிய தோற்றமும், நூற்பொருளை மாணாக்கர் எளிதில் உணரும்படி தொடுத்துச் சொல்லும் வன்மையும், நிலத்தையும் மலையையும், துலாக்கோலையும், பூவையுமொத்த குணங்களும் உலக நடையை அறியும் அறிவும், உயர்வாகிய குணங்கள் இவை போல்வன பிறவும் நிறையப்பெற்றவன். நூல் கற்பிக்கும் ஆசிரியனாவான்.
வெறுமனே தனது, உற்றாரின் குழந்தைகளின் வளர்ச்சிக்கும், ஊரவர்களின் குழந்தைகளின் உயர்ச்சிக்கும், தான் பிறந்து வளர்ந்து வாழ்ந்து, மெளத்தாகி அடங்கப்போகும் மண்ணின் மலர்ச்சிக்கும் பாடுபடுபவனாக ஆசிரியன் உயர வேண்டிய கட்டாயம் உண்டு.
- எஸ்.எச்.எம். ஜெமீல் (கல்விச் சிந்தனைகள் - பக் 78, 79)

ஆசிரியரும்
வகை சொல்லலும்
" ஓர் அறிமுகம் -
பேராசிரியர் எஸ். ரூபசிங்க, கல்விப் பீடம், கொழும்புப் பல்கலைக்கழகம்.
தமிழாக்கம் : எம். எம். யாகூத், எம். கருணாநிதி
ിക/மும்புப் பல்கலைக்கழகக் கல்வி பீடத்தில் சமுக விஞ்ஞான கல்வித்துறையின் இருக்கைப் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் ரூபசிங்க அவர்கள். ஒரு தலைசிறந்த கல்வியியல் ஆய்வாளரும் கல்விமானும் ஆவார். இலங்கையின் கல்விமுறை பற்றிய இவருடைய ஏராளம7ன ஆய்வுக் கட்டுரை. கள் சர்வதேச உள்ளுர் ஆய்வுச் சஞ்சிகைகளில் வெளி. வந்துள்ளன. இலங்கையின் கல்விமுறை பற்றிய ஆய்வுநூல்களும் கட்டுரைகளும் இவரது ஆய்வுகளை மேற்கோள் காட்டாது gaap62/06/27 A774/7.
பொறுப்பாயிருத்தல் என்ற சொல் நாம் அனைவரும் அறிந்த ஒரு பொதுச் சொல்லாகும். ஆயினும் அண்மைக் காலங்களில் வகை கூறல் என்ற சொல்லை கற்றவர்களும்
9

Page 13
பயன்படுத்தி வருகின்றனர். accountability என்ற ஆங்கிலச் சொல், இப்பொருளைத் தருகிறது.
பொறுப்பாயிருத்தல், வகை சொல்லல் ஆகிய இரண்டு சொற்களும் ஒத்த கருத்துடையனவல்ல. ஆயினும் இச் சொற்களால் குறிக்கப்படும் அர்த்தங்களுக்கிடையே தொடர்பேதும் இல்லையெனக் கூறிவிடவும் முடியாது. "நான் பொறுப்பேற்கிறேன் . ஆனால் நீங்கள்தான் வகைசொல்ல வேண்டும்" என்ற பிரயோகம் அன்றாட நடவடிக்கைகளில் இடம்பெறுவதைக் காண்கிறோம். பல்வேறு நூல்கள் மற்றும் ஆவணங்களில் பொறுப்பாயிருத்தல் என்னும் பொருள்தரும் வகையிலேயே, வகைசொல்லல் பயன்படுத்தப்படுகிறது.
பல்வேறு தொழில்களில் ஈடுபடுவோரின் பல்வகைப்பட்ட சமூகப் பொறுப்புகளை விபரிப்பதற்காக மேலைத் தேய மொழிகளில் "வகை சொல்லல்" எனும் சொல் பாவனையிலிருந்து வருகிறது. தற்காலத்தில் முகாமைத்துவத்தில், பெருமளவில் பேசப்பட்டு வரும், ஒரு சொல்லாக, முக்கிய தொனிப் பொருளாக இச்சொல் மாறியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தசாப்தத்திலும் இருபத்தோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தத்திலும் கல்வி சம்பந்தமாகப் பேசும் போது, வகை சொல்லல் எனும் விடயத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும். (லேலோ - 1990). "வகை சொல்லல்" அண்மைக் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்த ஒரு சொல்லாக இருந்தபோதிலும், அதன் உட்பொருள் கல்வி வரலாற்றின் எல்லாக் காலங்களிலும் காணப்பட்டு வந்துள்ளது. இங்கிலாந்தில் போர்ச் செலவினங்கள் அளவுகடந்து சென்றமையாலும் எமதுநாட்டில் கோப்பிப் பயிர்ச் செய்கை அழிவுற்று அரசின் வருமானம் குறைவடைந்தமையாலும் ; பாடசாலைகள் தொடர்பாக அரசின் செலவினங்களைக் குறைத்துக் கொள்ளும் நோக்குடன் ஒவ்வொரு பாடசாலைக்கும் பெறுபேறுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீட்டு வேலைத்திட்டமொன்று 1870 களில் அமுல் செய்யப்பட்டி

ருந்தமையை நாம் அறிவோம். ஒருவருடைய பெறுபேற்றுக்கு ஏற்பக் கொடுப்பனவு வழங்குதல் நேரடியாக, வகை சொல்ல வேண்டியமையை உறுதிப்படுத்தும் ஓர் உத்தியாக அமையாத போதும் ; அவ் வேலைத்திட்டத்தில் கூட வகை சொல்ல வேண்டியமை என்பதால் நாம் கருதும் பல அம்சங்கள் பொதிந்துள்ளன என நாம் மறுக்க முடியாது.
வகை சொல்லல் ஒரு புதிய அம்சம் எனக் கூறத்தக்க வகையில், 1970 களிலேயே கல்வித்துறையில் முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. பிரித்தானியாவின் பிரதமராக இருந்த ஜேம்ஸ் கலகன், இதனை முன் வைத்தார். நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒருவர் இக்கருத்தை முன் வைத்தமை முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆச்சரியப்படத்தக்கதுமாகும். 1976ல் ஒக்ஸ்போர்ட் நகரத்திலமைந்த ரஸ்கின் பாடசாலையில் நடந்த நிகழ்ச்சியொன்றிலேயே, கலகன் பின்வருமாறு கூறினார் :
"கல்வியுடன் தொடர்புடைய அறிஞர்கள் மட்டுமன்றிப் பொதுமக்களும் கல்வி சம்பந்தமான தமது அபிப்பிராயங்களை வெளியிட உரிமையுண்டு." இந்த உரையின் பின்னர், கல்வி தொடர்பான பொதுமக்களின் ஆர்வம் உலகெங்கும் பரவியது. கல்விமான்கள், ஆசிரியர்கள், பாடசாலைகள் யாவும் வகை சொல்லல் என்ற விடயம் பற்றி அடிக்கடி பிரஸ்தாபிக்கத் தொடங்கினர்.
கல்வித்துறையிலேயே ஈடுபாடு கொண்டுள்ள அனை. வரதும் நன்மைக்கு வழிகோலும் ஆசிரியர்கள், கற்பித்தலினுடாகத் தமது எதிர்பார்ப்புகளை ஈடுசெய்கின்றனர். இதன் மூலம் பிள்ளைகளும். பெற்றோரும், தொழில் வழங்குவோரும் திருப்தியடையும் நிலையை ஏற்படுத்துதல் வேண்டும். கல்வி தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின்போது, தாம், நியாயமாக நடந்துள்ளனர் என்பதற்கான காரணங்களைச் சமர்ப்பிக்கும் கடமைப்பாட்டையும் ஆசிரியர்கள் கொண்டுள்.
6T60TT.

Page 14
காரணங்கள் பல
ஆசிரியர்களின் வகை சொல்ல வேண்டியமைக்கான
காரணங்கள் பல, கல்வித்துறை வரலாற்றில் இடம்பெற்றி. ருந்துள்ளன. அவையாவன :
事
பாடசாலைகள் மீதான அரச முதலீடு துரிதமாக அதிகரித்தமை. செலவு செய்யப்படும் நிதிக்கு ஏற்பப் பெறுபேறுகள் கிடைக்க வேண்டும் என்ற உணர்வின் வளர்ச்சி. தமது பிள்ளைகளின் கல்விப் பயனுறுதியில், பெற்றோர் காட்டிவந்த ஆர்வ அதிகரிப்பு. பெரும்பாலான பாடசாலைகள் தமது பொறுப்புகளைச் சரிவர ஆற்றுவதில்லை என்ற அபிப்பிராயம் பரவலாக ஏற்பட்டமை. பாடசாலை நடவடிக்கைகளில் பொதுமக்கள் காட்டிய ஆர்வத்தில் உண்டான அதிகரிப்பு. w கூட்டு முகாமைத்துவம் தொடர்பான கருத்துகள் பிரபல்யமடைந்தமை (லேலோ - 1992)
tÎl6ủlü6ri) ởntb6ri) (The world education crisis), 6It' (36)uiĩl”.
GTuindi (School is dead), (557TLD6i goir (World problem in education) போன்றோர் தமது படைப்புகளினுடாக, 1970களில் கல்வியமைப்பில் தலைதுாக்கிய இவ்வாறான குறைபாடுகளைக் கடுமையாகக் கண்டிக்கவில்லை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். பாடசாலைகள் தமது பொறுப்புகளை நிறைவேற்றத் தவறியுள்ளன என அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த ஆய்வாளர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டே கலகனும் தமது கூற்றை வெளியிட்டுள்ளார் என்பதில் ஐயமில்லை.

வகை சொல்லல் என்பது யாது ?
தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் பல்வேறுவித சமூகப் பிணைப்புகளைக் காட்டுவதற்காக வகை சொல்லல் என்ற சொல் மேற்கத்தைய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது என முன்னர் கண்டோம். கல்விமான்கள் சிலர் அப்பிணைப்பு. களை எடுத்துக்காட்டிய விதம் பின்வரும் மேற்கோள்களின் மூலம் தெளிவாகின்றது.
* பாடசாலைகளின் நடவடிக்கைகள் தொடர்பான விபரங்களைச் சமர்ப்பித்தல் தொடர்பாக பாடசாலைகள் கொண்டுள்ள கடப்பாடு வகைசொல்லல் எனலாம். இவற்றைச் சட்டரீதியாக அறிந்து கொள்ள உரிமையுள்ளோருக்குச் சமர்ப்பித்தல் வேண்டும். (ரோனி புஷ் - 311)
* நிறுவனமொன்றில் பதவி வகிப்போரின் நடவடிக்கைகள் பற்றி, அவர்கள் வகைசொல்ல வேண்டியவர் திருப்தியடையாதவிடத்து, தமது நடவடிக்கைகளைத் தாமே ஆய்வுக்கு உட்படுத்தித் திருத்தியமைப்பது தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள கடப்பாடு வகை சொல்லல் எனப்படும். (மொரிஸ்கோகன்)
* தொழில்புரிவோர், தமது தொழில் தருநரதும், மற்றும் தமது செயற்பாடுகளின் பெறுபேறுகளை அனுபவிப்போரதும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டுமெனக் கொண்டுள்ள கடப்பாடு, வகை சொல்லல் எனப்படும்.
(ஏர்வுற் 1994)
கடப்பாடுகள் நான்கு
இந்த வரைவிலக்கணங்கள் மூலமும், கலகனின் மேற்.
கூறிய கூற்றின் மூலமும் எடுத்துக்காட்டப்பட்டதற்கமைய வகை சொல்லல் என்பது, தொழில்புரிவோர் ஒருவரின் குறைந்தபட்சக்

Page 15
கடப்பாடுகள் நான்கினை உள்ளடக்கியுள்ளன. தமது சேவை. களைப் பெறுவோரின், அதாவது தமது நடவடிக்கைகளின் பெறுபேறுகளை அனுபவிப்போரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுதல் தொடர்பான கடப்பாடு (obligation) அவற்றுள் முதலாவதாகும். தமது தொழில் சார்ந்த நடவடிக்கைகளைப் பற்றி அது தொடர்பான உரிமையைக் கொண்டுள்ளோருக்கு விபரங்களைச் சமர்ப்பிக்கவும், அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கு விடையளிக்கவும், கடப்பாடு கொண்டிருத்தல் இரண்டாவதாகும். தாம் கருமமாற்றும் போது மேற்கொள்ளும் தீர்மானங்கள் நியாயமானவையென உரிய தரப்பினர்க்கு நிரூபித்துக் காட்டுதல் பற்றித் தொழில்புரிவோர் கொண்டுள்ள கடப்பாடு மூன்றாவதாகும். அத்தரப்பினரும் தாமும் சேர்ந்து நடத்தும் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தமது தொழில்சார் செயன்முறையை முன்னேற்றுவதற்காகத் தொழில்புரிவோர் கொண்டுள்ள கடப்பாடு நான்காவதாகும்.
ஓர் ஆசிரியரின் வகை சொல்லலில், தமது தொழில் சார்ந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைச் சீராக மாணவர்க்கும், பெற்றோருக்கும் ஏனையோர்க்கும் சமர்ப்பிப்பதற்கும் இவ்விடயங்கள் தொடர்பாக எழுப்பப்படும் வினாக்களுக்கு விடையளிப்பதற்கும், பிள்ளைகளின் கல்வி தொடர்பாக தாம் எடுக்கும் தீர்மானங்கள் நியாய பூர்வமானவையென நிரூபிப்பதற்கும், தமது தொழில்சார்நடவடிக்கையை அவசியமானவிடத்துத் திருத்தியமைத்துக் கொள்ளவும், அதனுடாகத் தமது சேவையைப் பெறுவோரின் எதிர்பார்ப்புகளை ஈடுசெய்வதற்கும் தாம் கொண்டுள்ள கடப்பாடு என்பன அடங்குகின்றன என நாம் முடிவு செய்யலாம். இத்தகைய பரந்த எல்லையுள் ஆசிரியரின் வகைசொல்லல் பற்றிய பரப்பைப் பகுத்தாராயும் போது, அதன் பல்வேறு அம்சங்களை வேறுபடுத்தி இனங்காண வேண்டியுள்ளது.

* விழுமியஞ் சார்ந்த வகை சொல்லல்;
தனக்குக் கொடுப்பனவு செய்வோர்க்கு, அப்பணத் தொகைக்கு ஏற்பப் போதுமான அளவு சேவையை வழங்க ஆசிரியர் கடமைப்பட்டுள்ளனர்.
* சட்டரீதியான வகை சொல்லல்;
சேவைகளை நுகர்வோரைப் பாதுகாப்பதற்கென விதிக்கப்பட்டுள்ள யாப்புகள், சாசனங்கள் ஆகியவற்றை ஆசிரியர் மதிக்க வேண்டும். அதற்கமைய அரசியல் யாப்பில் அடிப்படை மனித உரிமைகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகள் யாவற்றையும், 1989இல்நவம்பர் 20ஆம் திகதி ஐக்கியநாடுகள் தாபனம் நிறைவேற்றிய சிறுவர் உரிமைகள் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளையும் எமது சிறுவர் தொடர்பான நடவடிக்கைகளின் போது, ஆசிரியர் மதித்து நடக்க வேண்டும்.
* தொழில் சார்ந்த வகை சொல்லல்:
தமது தொழில், மற்றும் சக தொழிலாளரின் கெளரவம் காக்கப்படும் வண்ணம் கருமமாற்றல் வேண்டும் என்ற கடப்பாடும் ஆசிரியர்க்கு உண்டு.
* ஒப்பந்தம் சார்பாக வகை சொல்லல்;
தமக்கு வேலை தருநரால் (கல்வி மேலதிகாரிகள், அதிபர் ஆகியோரால்) தொழில் தொடர்பாக விதிக்கப்படும் விடயங்களுக்கு இணக்கம் தெரிவித்து, அவற்றை உரிய
வாறாகப் பேணுதல் ஆசிரியரின் கடமையாகும்.
(ஏரவுற்: 223)
இப்பட்டியலில் அரசியல் சார்ந்த வகை சொல்லல் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும்

Page 16
பாடசாலைகளின் பொறுப்பு, அரசினரால் தீர்மானிக்கப்பட்டுள்ள நோக்கங்களுக்கு அமைய, அரசினால் தயாரிக்கப்படும் பாடவிதானங்களுக்கு ஏற்பப் பிள்ளைகளுக்குக் கல்வியை வழங்குதலாகும். இத்தகைய நோக்கங்கள் பாட ஏற்பாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமையத் தமது கடமைகளை மேற்கொள்ள அவர்கள் கடப்பாடுடையவர்களாவர்.
வகைசொல்ல வேண்டிய பொறுப்புகள்:
ஆசிரியர்களின் தொழில்சார் வகை சொல்ல வேண்டியமையை உறுதிப்படுத்துவதன் மூலம் அடைய வேண்டியவை. யென எதிர்பார்க்கப்படும் நோக்கங்கள் வகைசொல்ல வேண்டிய பொறுப்புகளில் அடங்குகின்றன. வகை சொல்லல் என்னும் எண்ணக் கருவைப் பகுப்பாய்வு செய்வோர், வகை சொல்ல வேண்டியமையினுடாக, எய்த வேண்டியவையென எதிர்பார்க்கும் அம்சங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். வகை சொல்லல் என்பதால் பணியணியினரைநிர்வகித்தல் எனச் சிலர் கருதுகின்றனர். குறிப்பாக ஆசிரியர்களை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பாத்திரங்களை, கருமங்களைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டிய கடப்பாடு அவர்களுக்கு உண்டு. ஆசிரியர்களின் நடவடிக்கைகளை, செயற்பாடுகளை மதிப்பீடு செய்து, அதற்கேற்ப வெகுமதியோ அல்லது தண்டனையோ வழங்கப்பட வேண்டியவர்களைத் தெரிந்து எடுத்தல் துணை நோக்கங்களில் ஒன்றாகும். நிருவாகம் தொடர்பாகக் கணிசமான நம்பிக்கை கொண்டிராதோர், ஆசிரியரின் தொழில்சார் நடத்தையை முன்னேற்றச் செய்யும் ஓர் உத்தியாக வகைசொல்லலைப் பயன்படுத்த வேண்டுமெனக் கருதுகின்றனர். நிருவாகமானது தொழில் புரிவோன் செயற்பாடுகளை அவை நிறைவேற்றப்பட்ட பின்னர் மதிப்பீடு செய்ய முற்படுகிறது. அபிவிருத்தியென்பதன் மூலம், தொழில்புரிவோன் தவறுகள் இழைப்பதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது. வகை

சொல்ல வேண்டியமையை ஒரு முன்னேற்றக் கருவியாகப் பயன்படுத்த வேண்டுமென வாதிடுவோர் கூறும் அபிப்பிராயம் என்னவெனில், வகுப்பறையில் ஆசிரியர்கள் தவறிழைப்பதற்கான வாய்ப்புகளை இழிவளவிலாக்குதல் வகைசொல்லல் மூலம் கருதப்படும் என்கின்றனர். இதன் வாயிலாகப் பாடசாலையின் கல்வித் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம். ஒவ்வொரு மாணவனைக் குறித்தும் பாடசாலை ஆற்ற வேண்டிய சேவையை நியாயமாகவும், சமநிலையிலும் ஆற்றப்படுகின்றமையை வகை சொல்லல் மூலம் உறுதிப்படுத்தலாம் எனக் கூறுவோரும் உளர். பாடசாலை முகாமைத்துவத்தில் சமுதா. யமும் பங்குகொள்ள வேண்டுமெனக் கருதுவோர், வகை சொல்லலை அதற்கான வலிமைமிக்க ஒர் ஆயுதமாகக் கருதலாம் எனக் கூறுகின்றனர். (ரொன் பேகர், லேலோ)
யாருக்கு வகை சொல்ல வேண்டும் ?
தொழில்புரிவோர் வகை சொல்ல வேண்டிய பிரிவினரை பின்வரும் இரண்டு வகையினராகப் பகுத்துக் காட்டலாம்.
(புஷ். 321)
- உள் வாரியானோர்
- வெளிவாரியானோர்
உள்வாரியானோர் எனும் பிரிவில் தாம், தமது தொழில்சார் சகாக்கள், பணிக்குழு மற்றும் அவர்களது நிறுவன முகாமைத்துவம் என்பன அடங்கும். "தாம் முதன்முதலில் தமக்கே வகை சொல்ல வேண்டும்" என்ற கூற்று அனைவரினதும் கவனத்துக்கு இலக்காதல் வேண்டும் : எவரேனும் ஒருவரது மிகச் சிறந்த, மிகத் திருத்தமான தீர்ப்பாக அமைவது அவருடைய மனச்சாட்சியாகும். எனவே ஆசிரியர்களிடத்தில் தமக்கு வகை சொல்ல வேண்டியமை பற்றிய உணர்வை வளர்க்க இயலுமாயின், அது பாடசாலைகளில் கல்விப்பணியை

Page 17
மேம்படுத்தத் துண்டுகோலாக அமையும். புறவாரியானோர் என்ற வகையில், ஆசிரியர்களின் செயற்பாடுகளை அனுபவிக்கும் முதனிலைப் பிரிவிலுள்ள மாணவர்களும், பெற்றோர், தொழில் தருநர், உயர்கல்வி நிறுவன அதிகாரிகள் என்பாருடன் அரசும் அடங்கும்.
ஆசிரியர்களின் பணிகளுடன் தொடர்பு கொள்ளும் தன்மைக்கு அமைய இவர்களைப் பல உபபிரிவுகளாகப் பிரிக்கலாம். பாடசாலை தொடர்பாகப் பாடசாலைக்கு வெளியேயிருந்துதீர்மானமெடுப்போர், பாடசாலைநடவடிக்கைகளின் பெறுபேறுகளை அவதானிப்போர், அவர்களின் பிரதிநிதிகள், பாடசாலைக்கு ஒதுக்கீடுகள் வழங்குவோர் இப்பிரிவில் அடங்குவர். (ரொனி பேக்கர் ; 99)
வெளிவாரிப் பிரிவினருக்கும் வகை சொல்வோன், யாதேனும் பொதுப் பொறிமுறையை உருவாக்க வேண்டிய தேவையை ஒருசிலர் முன் வைக்கின்றனர். (ஃபின்ச் : 341) மேற்படி பிரிவின் பிரதிநிதிகளான பிரசைகள் சபைக்கு ஆசிரியர்கள் வகை சொல்ல வேண்டுமென அவர்கள் முன்மொழிகின்றனர்.
எவை தொடர்பாக வகை சொல்ல வேண்டும்:
வகை சொல்ல வேண்டியமை தொடர்பான கலந்துரையாடலில், பெரும்பாலும் விவாதத்துக்குள்ளாகிய தலைப்பு, "ஆசிரியர் எது தொடர்பாக வகை சொல்ல வேண்டும் " என்பதாகும். வகை சொல்லல் பற்றிய கருத்துகள் பரவிய ஆரம்பகாலங்களில் பிள்ளைகளின் பாட அடைவு மட்டம் தொடர்பாக ஆசிரியர்கள் வகை சொல்ல வேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. அமெரிக்க வர்த்தக சங்கம் போன்ற நிறுவனங்களைக் கொண்டு பாடசாலைகளுக்கான கற்றல் நோக்கங்களையும் அந்நோக்கங்களை எய்த வேண்டிக் கற்கும் பாடவிடயங்கள் உள்ளடக்கிய கல்விப் பொதியைத் தரப்படுத்தி, அவை பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படும்

விதத்தை ஆய்ந்தறிவதன் மூலம், மதிப்பீடு செய்வதன் மூலம், ஆசிரியர்களின் வகை சொல்லலை உறுதிப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. மாணவர் கற்றல் முற்று முழுதாக ஆசிரியர் கற்பித்தலின் பெறுபேறாக இருப்பின், மாணவரின் பெறுபேற்றை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியரின் வகை சொல்லலை தீர்மானிப்பது நியாயமாக அமையலாம். எனினும், மாணவர் அடைவைத் தீர்மானிப்பதில் ஆசிரியர் எனுங் காரணி மட்டுமன்றி, மாணவர் முதிர்ச்சிநிலை, சமூகப் பின்னணி போன்ற காரணிகளும் பங்களிப்புச் செய்கின்றன. எனவே, மாணவர் அடைவு தொடர்பாக ஆசிரியர் வகை சொல்ல வேண்டும் என்ற கருத்து கூடும் விமர்சனத்துக்குள்ளாகியது. அவ்வாறே, ஆசிரியர் வகை சொல்ல வேண்டியமை பரம்பிச் செல்ல வேண்டிய வேளையில் பணிப் பிரிவுகள் தொடர்பாகவும் அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர்.
- சேவை பெறுநரின் தேவைகளை ஈடுசெய்தல் - தனது முறைகள் - வழிவகைகளை காலவோட்டத்திற்கு
ஏற்ப மேம்படுத்திக் கொள்ளல் - தனது நிறுவனம் மற்றும் தொழில் கெளரவத்தைப்
பேணிக் காத்தல் - நாட்டின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட உரையா
டல்களில் பங்கு கொண்டு அவை மூலம் வளம் பெறல்.
(ஏரவுன் - 236)
என்பவை அவ்வாறான அம்சங்கள் என அவர்கள் எடுத்துக் காட்டினர். அத்துடன் வகுப்பறைச் செயன்முறை புதிய கருத்துகளுக்கும் சமுதாய உணர்வுகளுக்கம் பொறுப்புணர்ச்சி காட்டல் (ஃபின்ச் : 346) போன்ற கருத்துகள் தொடர்பாகவும் வகை சொல்ல வேண்டியவை விசாலமடைய வேண்டுமெனக் கருதப்படுகிறது.

Page 18
மாணவர் ஒழுக்கம்
ஆசிரியர்கள் வகை சொல்லல் வேண்டிய அம்சங்கள் மட்டுமன்றி அவர்களால் வகை சொல்ல இயலாத விடயங்கள் தொடர்பாகவும் கவனஞ் செலுத்துதல் பயன்மிக்கது. மாணவர் ஒழுக்கம் அவ்வாறானதொன்றே. வகுப்பறையில் மாணவர் நடத்தை முன்னரிலும் பார்க்கச் சீர்குலைந்துள்ளது எனக் கருதுவோர், அவை தொடர்பாக ஆசிரியர்களை வகைசொல்ல வேண்டும் என வாதிடுகின்றனர். இன்று மாணவர் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாயின், அது முற்று முழுவதாகச் சமூக முறைமையின் சீர்குலைவுகளின் விளைவு வகுப்பறையில் புகமுற்பட்டமையே தவிர, ஆசிரியர்கள் தமது பொறுப்பைநிறைவு செய்யத் தவறியமையால் உண்டான விளைவு அல்ல எனவும் எடுத்துக்காட்ட முடியும். இதிலிருந்து ஒரு விடயம் தெளிவாகிறது. தமது கட்டுப்பாட்டுக்கு உட்படக் கூடிய விடயங்கள் தவிர, கட்டுப்படுத்த வியலாத விடயங்கள் தொடர்பாக ஆசிரியர்களை வலுக்கட்டாயப்படுத்த முடியாது எனக் கூறலாம்.
வகை சொல்லலை எவ்வாறு உறுதிப்படுத்தலாம் ? பண்டைக் காலத்தைப் போலன்றி இன்று ஆசிரியர்கள் தமது தொழில்சார்ந்த பணிகளைத் தனிநபர்கள் என்றவாறில்லாது பாடசாலையெனுங் கூட்டமைப்பினுள்ளே மேற்கொள்ளுகின்றனர். (ஏரவுஸ் :225) எனவே ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் தனிநபர்கள் என்ற வகையில் வகைசொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பது நியாயபூர்வமானதல்ல. தனக்கும் தனது நிறுவ னத் தலைவருக்கும் தொழில்சார்ந்த சகாக்களுக்கும் வகை சொல்ல வேண்டியமைக்கு இது தடங்கலாக அமையக்கூடும் எனக் கருதலாம்.
முடிவுரை
ஆசிரியர்களின் வகை சொல்லல் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஒரு பாணியாகத் தலைதூக்கிய போதிலும், இன்று அது கல்வித் தொகுதியுடன் இணைந்துள்ள

மிக முக்கியமான ஒன்றாகிறது. பாடசாலைக்கு வரும் ஒவ்வொரு பிள்ளை தொடர்பான நியாயத்தை நிறைவேற்றி, அவர்களுடைய கற்றலுக்கான உரிமையைக் காத்து, கற்றலை இயன்றளவு சிறப்பான முறையில் பெற்றுக் கொடுப்பது ஆசிரியர்களின் கடமையாகும். கற்றல், பெளதீக ரீதியாக அளவிட முடியாத தொழிற்பாடாகையால், வெளிநிலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் மதிப்பீடுகள் மூலம் ஆசிரியரின் வகை சொல்லலை உறுதிப்படுத்த முனைவதன் மூலம் அனுகூலங்களை விடக் கூடுதலான பிரதிகூலங்களே ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, பாடசாலைகளும் ஆசிரியர்களும் தமது செயற்பாடுகளை உடனுக்குடனும் காலத்துக்குக் காலமும் முறைப்படி ஆய்வுக்குட்படுத்தி, அதற்கமையத் தமது குறைகளையும், நலிவுகளையும் நீக்கிக் கொள்ளுதல் வகை சொல்லலை உறுதிப்படுத்தும் மிகச் சிறந்த வழிமுறையாகும். அதற்கமைய தமது வகை சொல்லலை உறுதிப்படுத்தத் தவறும் பாடசாலைகளுக்குத் தொடர்ந்தும் நிலைத்து நிற்க உரிமையில்லையாதலால் அவ்வாறான பாடசாலைகள் சேவை பெறுநரால் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
உசாத்துணை :
Beacher, Tony & Maclone Stuart ed (1978) Accountability in Education. NFER
Bush. Tony & West Buruham John, ed. (1994) The Principles of Educational Management Longman
Eraut M (1994) Developing Professional Knowledge al Completemce Falmen Press.
Lello, John, ed. (1979) Accountability in Education Word Lock.
xxxxxxx

Page 19
பேராசிரியர் எஸ். சந்திரசேக்ரன்
ിക/மும்புப் பல்கலைக்கழகக் கல்விப் போதன7பீடத்தில் இருபத்தைந்து ஆண்டுகள7கப் பணியாற்றி வருகிற7ர். ஜப்பான்ஹிரோஷிம7 பல்கலைக்கழகத்தில் இவர் உயர்கல்வித்துறையில் ஆய்வு மேற்கொண்டு முதுமானிப் பட்டம் பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழிலும் பதின்முன்று நூல்கள் எழுதியுள்ள7ர். ஐக்கிய அமெரிக்கா, நோர்வே, புதுடில்லி பிலிப்பைன்ஸ் லிபிய7, சென்னை ஆகிய இடங்களில்நிகழ்ந்த கல்வியியல் கருத்தரங்குகளில் கலந்து கொண்டவர். தேசிய கல்வி ஆணைக்குழு தேசிய நூலக சேவை ஆசிரியர் கல்வி அதிகார சபை (NATE) தேசிய கல்விநிறுவனப் பேரவை என்பவற்றின் உறுப்பினர். அமெரிக்க ஒபே7ன் பல்கலைக்கழகத்தில் அலப7ம7 மாநிலத்தின் வருகை தருபேர7சிரியர7கக் கடமையாற்றியுள்ள7ர்.
இன்று அனைத்து ரீதியில் பேசப்பட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டும் வரும் உலக மயமாக்கக் கோட்பாடு, உலக நாடுகளின் கல்வித் துறையில் ஏற்படுத்தி வரும் தாக்கம், அத்தாக்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் பற்றி நோக்குவது இக்கட்டுரையின் நோக்கமாகும். இதற்கு, இலங்கை உட்பட பல்வேறு உலக நாடுகளில் இடம் பெற்றுவரும் கல்வித்துறை
 

மாற்றங்களும் புதிய செல்நெறிகளும் எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளப்படும். குறிப்பாக உலக மயமாக்கத்தின் முக்கிய அம்சங்களான சந்தைத் தத்துவம், தனியார்மயப்படுத்தல் போன்றன கல்வித்துறையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன என்னும் விடயம் இக்கட்டுரையில் முக்கியமாக ஆராயப்படும்.
இன்றைய உலகமயமாக்க யுகத்தில், உலக நாடுகளுக்கிடையே ஏற்பட்டுவரும் தொடர்புகள் வர்த்தகத்துறை சார்ந்தன மட்டுமல்ல; சர்வதேசத் தொடர்புகள் பொருளாதார உறவுகளுக்கு அப்பால், நிறுவனங்களுக்கிடையேயும் ஏற்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்களில் கல்வித்துறை முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. ஏனெனில், கல்வி முறைகளின் மரபுவழி நோக்கங்களை நோக்குமிடத்து நவீன உலகமயமாக்கத்தின் அம்சங்கள் இன்றைய கல்வி முறையுடன் பொருந்தி வராதன போலத் தோன்றும். காலங்காலமாகக் கல்வி முறைகள் சமூகத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தொடர்ந்து பாதுகாக்கவும் அவற்றை இளையோருக்கு உணர்த்தி, அவர்களை சமூகத்துடன் இசைந்து வாழச் செய்யவும் பயனுடைய நிறுவனங்கள் என்றே வலியுறுத்தப்பட்டு வந்தன. கல்விநிறுவ னங்களின் தோற்றத்துக்கு இவ்வாறான நோக்கங்களே கற்பிக்கப்பட்டு வந்தன. ஜேர்மன் நாட்டுச் சமூகவியலாளரான Durkhism வலியுறுத்திக் கூறிய சமூக மயமாக்கம், இன்றும் கூட பாடசாலைக் கல்வியின் ஒரு முக்கிய குறிக்கோளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. சில அறிஞர்கள் இதனைக் கல்வியின் பழமைத் தொழிற்பாடு என்றும் கூறுவர். சுருங்கக் கூறின், வழிவழிவந்த சமுகப்பண்பாட்டைப்புதிய தலைமுறையினரிடம் கையளிக்கும் தொழிற்பாட்டைக் கொண்ட கல்விமுறை, தற்போது உலகமயமாக்கத்தின் தாக்கத்திற்குட்பட்டுள்ளது. இதனால், தேசிய கல்வி முறைகள் தமது தனித்துவ அம்சங்களை இழந்து, உலகளாவிய கல்வி முறைகளை ஒத்த அம்சங்களைப் பெற்று வருகின்றன. தேசிய பாட ஏற்பாடுகளில்

Page 20
காணப்பட்ட தனிச்சிறப்பான அம்சங்கள் மங்கி வருகின்றன. கல்விக் கொள்கைகள், கல்வித் துறையில் முதன்மையும் முன்னுரிமையும் பெறும் அம்சங்கள், கல்வி நிர்வாக முறைகள் முதலியன உலகளாவிய கல்விமுறைகளில் ஒரு சீர்த்தன்மையைப் பெற்று வருகின்றன.
இதுவரை காலமும் தேசியக் கல்விமுறைகளில் ஏகபோக உரிமையைக் கொண்டிருந்த அரசாங்கங்கள், இன்று கல்வித்துறைகளிலிருந்து பின்வாங்கிவருகின்றன: பாடசாலை நிர்வாகப் பொறுப்பை, தனியார் துறையினரிடமும் பாடசாலைகளிடமும் ஒப்படைத்துவருகின்றன. அரசாங்கப்பாடசாலைகள் வர்த்தக நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறைகளை ஏற்று வருகின்றன. சந்தைக் கேள்விகளுக்கு-பெற்றோரின் கோரிக்கைகளுக்கு - (market demands) ஏற்பத் தம்மை மாற்றியமைத்து வருகின்றன. இத்தகைய செல்நெறிகளை உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் (IMF), பொருளாதார ஒத்துழைப்பு, அபிவிருத்திக்கான ஸ்தாபனம் (OECD) போன்ற சர்வதேச அமைப்புகள் ஊக்குவித்து வருகின்றன. தம்மிடமிருந்து கல்வித்துறையின் வளர்ச்சிக்கெனக் கடன்களையும் உதவிகளையும் வளர்முகநாடுகள் பெற முற்படும் போது, தனியார்மயம், சந்தைத் தத்துவம் என்பவற்றை இவ்வமைப்புகள் நிபந்தனைகளாக விதிக்கின்றன. இதனால், இத் தத்துவங்கள் உலகளாவிய ரீதியில் தேசியக் கல்வி முறைகளுக்கிடையே பரவி வருகின்றன. கீழைநாடுகள், மேலைநாடுகள், சமூக உடைமை நாடுகள், முதலாளித்துவ நாடுகள் என்ற வேறுபாடின்றி சகல நாடுகளிலும் இக்கொள்கைகளும் செயற்பாடுகளும் ஒரு அளவில் கல்விமுறைகளைப் பொறுத்து பின்பற்றப்படுகின்றன.

கல்விமுறைகளின் குறைபாடுகளும் புதிய தீர்வுகளும்
ஒரு காலத்தில் கல்வித்துறையில் சில ஏற்பாடுகள் சிறந்தவை எனக் கருதப்பட்டன. கல்வித்துறையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டினுடாக, தேசிய கல்வி முறையொன்றை நிறுவலாம் கல்வியில் பின்தங்கியுள்ள பிரிவினருக்குக் கல்வித்துறையில் சம வாய்ப்புகள் வழங்கலாம் தேசிய ரீதியாகக் கல்வி முறையைத் திட்டமிட்டு கல்வியில் ஒரு சீர்த்தன்மையை(uniformity) ஏற்படுத்தலாம்: செலவுமிக்க கல்வி முறையைப் பேணிப் பராமரிக்கத் தேவையான ஏராளமான நிதிவளங்களை வழங்கும் சக்தி அரசாங்கத்துக்கே உண்டு: கல்வித்துறையில் தனியார் துறையினருக்கு இடமளிக்கும்போது சலுகை பெற்ற வகுப்பினர் மட்டுமே அதிக நன்மைகளைப் பெறுவர் கல்வி வசதிகளில் கிராமங்களுக்கும் நகர்ப் புறங்களுக்குமிடையே காணப்படும் வேறுபாடுகள் இதனால் மேலும் விரிவடைய வாய்ப்புண்டு (மறைந்த) சோவியத் யூனியன் சமூக, பொருளாதாரத்துறையில் பல வெற்றிகளைக் காணவும், உலக வல்லரசாக உருவாகவும் மத்தியமயப்படுத்தப்பட்ட தேசிய கல்வி முறையே காரணமாக இருந்தது பொருளாதாரப் பிரச்சினைகளையும் வறுமையையும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும் கொண்ட வளர்முக நாடுகளுக்கு மத்திய அரசின் கட்டுப்பாடும் நிதிவளங்களும் கல்வி வளர்ச்சிக்கு முக்கியமானவை. இக்கருத்துக்களின் அடிப்படையிலேயே 1960களிலும் 1970களிலும் இலங்கை உட்படப் பல வளர்முக நாடுகளில் கல்வித் துறையில் அரசாங்கக் கட்டுப்பாடும் தலையீடும் ஊக்குவிக்கப்பட்டன. இலங்கையில், 1961ல் பல சிரமங்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் தனியார் பாடசாலைகளை (கிறித்தவ மிஷனரி பாடசாலைகளை) அரசாங்கம் பொறுப்பேற்றபோது, மேற்கண்ட பல நியாயங்கள் முன் வைக்கப்பட்டன.

Page 21
இன்று பாடசாலைகள் மீது விடுக்கப்படும் கண்ட
னங்களைத் தொகுத்து நோக்கும்போது, அவை செல்வந்த, வறிய, சமூக உடைமை மற்றும் முதலாளித்துவநாடுகளுக்குப் பொதுவானவையாகக் காணப்படுகின்றன :
கல்வி முறைகள் வினைத்திறன் குறைந்த அதிகார 6)Jiřá5á5 9j60DDílá56Trab (inefficient bureaucracies);
கல்விநிர்வாகிகள் அக்கறையற்றவர்களாய், மாறிவரும் தேவைகளைக் கருத்திற் கொள்ளாமல் செயல்படுகின்றனர்.
கல்வ்க்கென ஒதுக்கப்படும் அரசாங்க நிதி வளங்கள் (பொதுமக்கள் பணம்) திறமையற்ற முறையிலும் விரயமாகவும் செலவு செய்யப்படுகின்றது ;
முக்கியமாக, பாடசாலைகள் இன்றைய சமூக, பொருளாதார தேவைகளுக்குப் பொருத்தமற்ற, காலத்துக்
கொவ்வாத பாட ஏற்பாடுகளை மாணவருக்குக் கற்பிக்
கின்றன;
மாணவர்கள் பாடசாலைக் கல்வியினுடாகப் பெறுகின்ற திறன்கள் சமூக தேவைகளுடன் தொடர்பற்றவை;
பல உலக நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, பொதுப் பாடசாலை முறைகளை (அரசாங்கப் பாடசாலைகள்) விட, தனியார் பாடசாலைகள் வினைத்திறனுடன் இயங்குகின்றன.
அரசாங்கப் பாடசாலை முறையின் இத்தகைய குறைபாடுகள் காரணமாகச் சில நாடுகளில் - குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் இப்பாடசாலை முறை பற்றிய நம்பிக்கையின்மை பொதுமக்கள் மத்தியில் வளர்ந்து வருகின்றது. இந்நம்பிக்கையின்மையானது அண்மைக் காலங்களில் இந்நாடுகளில் கல்விச் சீர்திருத்த இயக்கங்கள் தோன்றக்

காரணமாக இருந்தமை பற்றி ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அரசாங்கத் தொழில்துறை, கல்வித்துறை பற்றிய குறைபாடுகளும், அவற்றுக்கான தீர்வுகளும் உலகமயமாக்கச் சிந்தனையின் அம்சங்களாக விளங்குகின்றன.
மேற்கூறப்பட்ட கல்விப்பிரச்சினைகளுக்கு உலகளாவிய
ரீதியில் வழங்கப்படும் தீர்வுகளிலும் சில ஒருமைப்பாடுகளைக் காணமுடிகின்றது:
பாடசாலைகளும் கல்விமுறைகளும், வர்த்தக/தொழில் நிறுவனங்களின் தத்துவங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதன் மூலம் வினைத்திறனுடன் இயங்க முடியும்:
சந்தையில் காணப்படும் போட்டி காரணமாக வர்த்தக/ தொழில் நிறுவனங்கள் வினைத்திறனுடனும் மாறிவரும் தேவைகளையொட்டியும் இயங்க வேண்டியுள்ளது: போட்டி நிறைந்த சந்தையில் வினைத்திறனற்று இயங்கும் நிறுவனங்கள், இறுதியில் மூடப்படும் நிலையே ஏற்படும் ;
கல்வித் துறையில் அரசாங்கங்கள் பெற்றிருக்கும் ஏகபோக உரிமை அகற்றப்பட்டு, கல்வி நிறுவனங்கள் போட்டியினடிப்படையில் இயங்க விடப்பட்டால் திறமையற்ற நிறுவனங்கள் இறுதியில் முடப்பட வேண்டி வரும். இந்நிலையில் கல்வித் தராதரங்கள் அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் ;
எஞ்சி நிற்கும் திறமையாக இயங்கும் பாடசாலைகள் சமூக தேவைகளுக்குப் பொருத்தமான கல்வியை வழங்க முற்படும் ; இதனால் மாணவர்கள் நன்மை பெறுவர்;

Page 22
திறமையாக இயங்கும் பாடசாலைகள் பொதுமக்களுக்கு நிதி வளங்கள் பற்றிப் பொறுப்புக் கூறும் (financially accountable). étoil07. Bg5u IT60g, 2 u ifibg b6f 60LDகளை (higher returns) வழங்குவதால் பொதுமக்களும் அரசாங்கங்களும் தமது நிதிவளங்கள் முறையாகச் செலவிடப்பட்டமை குறித்துத் திருப்தி தெரிவிப்பர்;
கல்வித் துறையில் சந்தை நடைமுறைகள் பின்பற்றப்படும்போது வினைத்திறனும் பொறுப்புக் கூறுந் தன்மையும் சிறப்படைவதுடன், பாடசாலைகளை வினைத் திறனின் அடிப்படையில் தெரிவு செய்யும் உரிமை மக்களுக்குக் கிண்டக்கின்றது ; இதனால் கல்வித் துறையில் சனநாயக தத்துவங்கள் சிறப்பிடம் பெற முடியும் என சந்தைத் தத்துவத்தை ஆதரிக்கும் அறிஞர்கள் கூறுவர் ; கல்வித் துறையில் தனியார் துறையினருக்கு இடமளிக்கும்போது, மக்கள் தெரிவுகளைச் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிட்டுகின்றன. சந்தைத் தத்துவங்களால் பெறப்படும் நன்மைகளுடன் சனநாயக தத்துவங்களும் இணைக்கப்படும்போது, சந்தை மயமாக்கம், தனியார் மயமாக்கம் என்பவை பரவலாக ஏன் விரும்பப்படுகின்றன என்பதற்கான விளக்கம் கிடைக்கின்றது.
இக்கொள்கைகளை ஆதரிப்போர் நுகர்வாளர்களின் (பொதுமக்கள்/பெற்றோர்கள்) நிலைப்பாட்டிலிருந்தே தமது கருத்துக்களைக் கூறுகின்றனர். கல்விச் சேவைகளை வழங்குவோரின் (Suppliers) நிலைப்பாட்டை அவர்கள் மேற்கொள்ளவில்லை. நுகர்வாளர்கள் தாம் விரும்பும் பொருளை வாங்க முடிவது போல, பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கல்வி பெறுவதற்குச் செல்ல வேண்டிய பாடசாலைகளைத் தெரிவு செய்யும் உரிமை உடையவர்கள் என்ற முறையில் இந்நிலைப்பாடு விளக்கிக் கூறப்படுகின்றது.

- இந்நிலைப்பாட்டை ஆதரிக்கும் அறிஞர், பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தெரிவுச் சுதந்திரம், கல்வித் துறையில் நீதியை (equity) நிலைநாட்ட உதவுகின்றது என்றும் வாதிடுவர் ; சில நாடுகளில் அரசாங்கங்கள் அயலில் உள்ள பாடசாலைகளுக்கு மட்டுமே பெற்றோர். கள் பிள்ளைகளை அனுமதிக்க முடியும் என வரையறை செய்துள்ளன. இலங்கையில், 1961ம் ஆண்டு தொடக்கம் வீட்டிலிருந்து இரண்டு மைல் தூரத்திலுள்ள பாடசாலையை மட்டுமே தெரிவு செய்ய முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு புதிதாக வழங்கப்படும் இவ்வுரிமை பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், சிறுபான்மை இனக்குழுக்கள் ஆகியோ. ரால் பெரிதும் விரும்பப்படுகின்றது. தமதுவசதிகுறைந்த சுற்றாடலில் உள்ள பாடசாலைகளை அவர்கள் தவிர்த்து விட்டு, அப்டால் உள்ள சிறந்த பாடசாலைகளை நாட முடிகின்றது.
கல்வித் துறையில் அரசாங்கத்தின் பங்கு
மேற்கூறப்பட்ட வாதங்கள், நியாயங்களின் அடிப்படை யில் பார்க்கும் போது, அரசாங்கம் முற்றாக தனியார்துறையினரிடம் கல்விப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது போலத் தோன்றும். ஆனால், கல்வித் துறையில் சந்தைத் தத்துவத்தை ஆதரிப்பவர்கள் அரசாங்கம் முற்றாகக் கல்வித் துறையிலிருந்து ஒதுங்கிவிட வேண்டும் என்று வாதிடவில்லை. இதற்குக் காரணம், அரசாங்கமும் பல்வேறு அரசியல் சக்திகளும் கட்சிகளும், கல்வி பொதுமக்களின் நன்மைகளைக் கருத்திற் கொண்டது என நம்புவதாகும். இன்று செல்வந்த நாடுகளும் வறிய நாடுகளும் பொருளாதார மேம்பாட்டுக்குக் கல்வித் தேர்ச்சியுடைய மக்கள் தேவை எனக் கருதுகின்றன. உலக பொருளாதார முறையில் போட்டியிட்டுச் செயற்படக் கல்விப் பயிற்சியுடைய உழைப்பினர் தொகுதியொன்று (labour
39

Page 23
force) தேவை என இந்நாடுகள் உணர்கின்றன. திட்டமிட்ட
பொருளாதார முறைகளில் அரசாங்கங்கள் கல்வித் திட்டங்களைத் தயாரிக்கின்றன. முதலாளித்துவ நாடுகளில் அதிகம் தலையீட்டைச் செய்யாத அரசாங்கங்கள் கூட, பாடசாலைக் கல்விக்கான சட்ட மூலங்களையும் நிதி ஒதுக்கீடுகளையும் தயாரிக்கின்றன.
கல்வி ஒரு அரசியல் முதலீடாகவும் கருதப்படுகின்றது. கல்வித் தேர்ச்சிபெற்ற பிரசைகள் தகவல்களின் அடிப்படையில் சரியான முடிவுகளைச் செய்யும் ஆற்றல் உள்ளவர்கள். இதனால், சமூகத்தின் உறுதிப்பாட்டையும் ஸ்திரத் தன்மையையும் பேண முடிகின்றது. இந்நிலையில் சகல ஆட்சியாளர்களும் தமது மக்களுக்குப் பொருத்தமான கல்வியை வழங்க விரும்புகின்றனர். கல்வியின் மீதான முதலீடு சமூகத்துக்குக் கூட்டுமொத்த நன்மையை வழங்கக் கூடியது. பொதுமக்கள் இவ்வாறான காரணங்களின் பொருட்டு, விரும்புவதால் அதனை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு என வலியுறுத்துவர்.
இவ்வாறு ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், பொதுமக்கள் எனப் பலதரப்பட்டவர்களும் கல்விக்கு முக்கியத்துவமளிப்பதால், எவ்வளவுதான் சந்தை சக்திகள், பெற்றோர்களின் தெரிவு செய்யும் உரிமை பற்றிப் பேசினாலும் அரசுகள் தமது கல்வி வழங்கும் கடமையிலிருந்து முற்றாக விலகிவிட முடியாது. கல்விக்கான நிதியை ஒதுக்குதல், கல்விக் கொள்கைகளைத் தீர்மானித்தல், கல்விச் சட்டங்களை நிறைவேற்றுதல் போன்ற பணிகளில் அரசாங்கங்கள் தொடர்ந்து ஈடுபட வேண்டியுள்ளது. பாடசாலைக் கல்வியை சந்தைத் தத்துவப்படி நோக்குவோரும் நடைமுறையிலுள்ள பொதுப் பாடசாலை முறையின் கீழ் பெற்றோர்களின் பாடசாலைத் தெரிவு சுதந்திரம் மேலும் விரிவுபடுத்தப்படல் வேண்டும் என்றே கோருகின்றனர். பெற்றோர்கள் எந்த அரசாங்கப் பாடசாலையையும் தெரிவு செய்ய உரிமை பெற்றிருக்க வேண்டும் என்பது
()

அவர்கள் கருத்து. தனியார் பாடசாலை முறையை ஆதரிப்பவர்களும் அரசாங்கங்கள் கல்விக்கான நிதியை வழங்கும் தமது பொறுப்பைக் கைவிட முடியாது என்றே வாதிடுகின்றனர். அரசாங்கங்கள் தனியார் பாடசாலைகளுக்கு உதவ மானியங்கள் வழங்க வேண்டும் ; இலங்கை, இந்தியா, செக் குடியரசு ஆகிய நாடுகளில் இதற்கான ஏற்பாடுகள் உண்டு. ஐக்கிய அமெரிக்காவின் சில மாநிலங்களில் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் பணம் பெறும் பத்திரம் (vouchers) இவ்வாறான உதவிகளையே குறிக்கின்றன.
இத் தொடர்பில் காணப்படும் இரு முக்கிய செல்நெறி. களையும் பின்வருமாறு தொகுத்துக் கூறலாம் :
- பாடசாலைகளைத் திறமையாக இயங்கச் செய்யவும் பெற்றோர்களுக்கான (அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக்கான) வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் கல்வித் துறையில் சந்தைத் தத்துவம் பின்பற்றப்படல் வேண்டும்.
- கல்வி, சமூகப் பயனுடையது ; சிறந்த பொறுப்புள்:
பிரஜைகளைக் கல்வி முறையே உருவாக்குகின்றது. இவர்கள் சமூகத்தின் மேம்பாட்டுக்கு உதவுபவர்கள். எனவே, கல்வித்துறையை முற்றாக சந்தை சக்திகளிடம் ஒப்படைத்து விட முடியாது. கல்வித் துறையில் அரசாங்கம் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செய்து வரல் வேண்டும்.
அரசாங்கத்தின் கல்வித் துறையிலும் பொதுக் கொள்கையிலும் ஏற்பட்டு வரும் அமைப்பு மாற்றங்கள்
இவ்விரு செல்நெறிகளை விட மற்றொரு செல்நெறியை இவ்விடத்துத் தெளிவுபடுத்த வேண்டும். தனியார் மயம் என்பது
பாடசாலைகளின் நிர்வாகத்தைத் தனியார் துறையினரிடம் ஒப்படைப்பதாகும். சந்தைத் தத்துவம் என்பது கல்வி முறை

Page 24
யிலும் பாடசாலைச் செயற்பாட்டிலும் சந்தைத் தத்துவங்களையும் பயன்படுத்துவதாகும். சந்தைத் தத்துவங்களைப் பாடசாலைகளைத் தனியார் மயப்படுத்தாமலே, அரசாங்கப் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டும். இவ்வகையில், சந்தைத் தத்துவங்கள் அரசுப் பாடசாலைகள், தனியார்துறைப் பாடசாலைகளுக்கும் பொதுவானவை. எடுத்துக்காட்டாக அரசாங்கப் பாடசாலைகள் தனியார் மயப்படுத்தப்படாத நிலையிலும், செலவுகளைக் குறைத்து வினைத்திறனுடனும் விளம்பரங்களைச் செய்து கொண்டும் இயங்கி வரலாம்.
உற்பத்திச் செலவுகளைக் குறைத்தல், கேள்வி (demand) இல்லாத பொருட்களை அகற்றி விடுதல், பிரபல்யமான பொருட்களை மட்டும் தயாரித்தல், இலாபத்தைக் கூட்ட விளம்பரம் செய்தல் போன்ற வர்த்தக நிறுவனங்களின் வழிமுறைகளை இலாபத்தை நாடும் தனியார் பாடசாலைகளால் பின்பற்றக் கூடியன. இவை அரசாங்கப் பாடசாலைகளைப் பொறுத்த வரையில், ஒரு பெரிய திருப்புமுனையாகவே அமையும். ஆனால், தற்போது இயங்குவதால் ஏற்படக்கூடிய செலவுகளை ஈடுசெய்யும் முயற்சிகளில் அவை ஈடுபடலாம். கடந்த இரு தசாய்த காலத்தில், அரசாங்கங்கள் கல்வி உட்பட பொதுச் செலவுகளைக் குறைத்து வந்துள்ளன. குறைநிரப்புவதற்குப் பாடசாலைகள் சுயமாக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கிலாந்தில் கையாளப்பட்ட கொள்கையாகும். இந்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடுகளில் வெட்டு விழுந்ததைத் தொடர்ந்தும் பாடசாலைகளுக்கு அதிகாரமும் பொறுப்பும் பகிர்ந்தளிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், பாடசாலைகள் தாமாகவே நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டன. வர்த்தக நிறுவனங்கள் பின்பற்றும் நடைமுறைகளையே பாடசாலைகளும் பின்பற்றி, நிதி தேட முற்பட்டன.
இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், நன்கு வளர்ச்சி பெற்ற பாடசாலைகள் இவ்வாறு நிதி திரட்டும் முயற்சியில் கையாண்ட வழிமுறைகளாவன:

அதிக கட்டணத்தில் வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்தன ;
வர்த்தகவியல், கம்ப்யூட்டர் கல்வி முதலிய துறைகளில் புதிய பயிற்சி நெறிகளை ஆரம்பித்தன ;
வர்த்தகக் கம்பெனிகள் போன்று, தமது பயிற்சி நெறிகளை விளம்பரம் செய்தன ; ,
ஆசிரியர்களின் வேலைப்பளுவையும் வகுப்பறையில் மாணவர் தொகையையும் அதிகரித்தன ;
பல்வேறு சேவைகளில் முதலீட்டைக் குறைத்து, தனியார் கம்பெனிகளின் சேவைகளை நாடின :
அரசாங்கங்கள் புதிய பாடசாலைக் கட்டடங்களில் முதலீடு செய்யாது. தனியாரிடமிருந்து வகுப்பறைக் கட்டடங்களை வாடகைக்குப் பெற்றன.
வர்த்தகக் கம்பெனிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தி. யமையால், பல கம்ப்யூட்டர் கம்பெனிகள் கம்ப்யூட்டர்களைப் பாடசாலைகளுக்கு வழங்கின ; சில கம்பெனிகள் செவிப்புல, கட்புல சாதனங்களையும், தயாரிக்கப்பட்ட பாட அலகுகளையும்(modules) வழங்கின. இதனால், கம்பெனிகளின் பொருட்களுக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது ;
பாடசாலைகள் சில கம்பெனிகளுக்கு மட்டும் தமது வளாகங்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கின. இதற்கான கட்டணங்களைப் பாடசாலைகள் பெற்றன.
நிதி திரட்டும் முயற்சியில் சில சீனப்பாடசாலைகள் உணவு விடுதிகள், நடன விடுதிகள், வாடகைக் கார் கம்பெனிகள், டயர் தொழில், ஆடைத்தொழில் முதலிய முயற்சிகளிலும் ஈடுபட்டன.

Page 25
இவை யாவும் உலக மயமாக்கத்தின் விளைவாகக் கல்வி நிறுவனங்கள் எவ்வாறு வர்த்தக நிறுவனங்களின் நடைமுறையைப் பின்பற்றுகின்றன என்பதனையும் எவ்வாறு அரசாங்கங்களின் நிதி உதவிக் குறைப்புகள் அதற்குக் காரணமாக இருந்தன என்பதையும் விளக்குகின்றன.
அரசாங்கங்களின் கொள்கை மாற்றத்துக்கான பின்புலத்தையும் இவ்விடத்து சற்று நோக்குதல் வேண்டும். ஏற்கனவே கூறப்பட்டது போல, பொது மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் அரசாங்கங்கள் எந்த அளவு ஆற்றல் படைத்தவை என்ற கேள்வி அண்மைக் காலங்களில் எழுப்பய்பட்டு வருகின்றது. உற்பத்தித் திறன், வினைத்திறன் என்பவை முக்கியத்துவம் பெற்று வரும் இந்நாளில், அரசாங்கங்கள் வழங்கும் சேவைகள் எவ்வாறு நிருவகிக்கப்படுகின்றன என்ற விடயம் பரிசீலிக்கப்பட்டது. அரசாங்கக் கொள்கை ஆக்கம், பொதுச் சேவைகளை வழங்கும் பணி என்பவற்றில் அரசாங்கத்தின் பங்கு பற்றிய விடயம் உலகமயமாக்கக் கோட்பாட்டினால் பல பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளது. இதனால், நிர்ப்பந்தங்களுக்குள்ளாகியுள்ள அரசாங்கங்கள் பல மறுசீரமைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. இம்மறுசீரமைப்பின் போது பொருளாதாரப் பகுத்தறிவுவாதம், அதிகாரப் பகிர்வு, சந்தைகளின் முக்கியத்துவம், தாபனமுறைuJIT60T (lpabsT60)LDgBg5/6)lib (corporate managerialism) (SuT6irp அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றன.
அரசின் பிரதான பொறுப்புகளில் ஒன்றான கல்வித்துறை இம்முகாமைத்துவ சிந்தனைகளின் செல்வாக்குக்கு உட்பட்டது. இத்தாபன முறையான முகாமைத்துவத்தின் மையக் கருத்து பகுத்தறிவின் அடிப்படையிலான, வெளியீட்டை நோக்காகக் கொண்ட (output-oriented), திட்டமிடப்பட்ட, முகாமைத்துவ ரீதியான நிறுவனச் சீர்திருத்தம் என்பதாகும். இத்தகைய முகாமைத்துவ நடைமுறையின்படி, அரசாங்கத்துறையில் பெறுபேறுகளிலும் உற்பத்தி விளைவுகளிலும்,

குறைந்த ஊழியர்களைக் கொண்டு அதிக உற்பத்தியிலும், நல்ல முறையில் மாற்றங்களை நிருவகிப்பதிலும் அக்கறை செலுத்தப்பட்டது. இவ்வாறு அரசாங்கத்துறையின் நிருவாகத்தில் அடிப்படையான தத்துவ மாற்றம் (paradigm shift) ஏற்பட்ட பின்னர், கல்வித்துறையிலும் பின்வரும் விடயங்களில் கூடிய அக்கறை செலுத்தப்பட்டது:
- பெறுபேறுகள், விளைவுகள், வினைத்திறன் (results and effectiveness) ; பன்முகப்பட்ட முகாமைத்துவ சுற்றாடல் (decentralized management)
- உற்பத்தி இலக்குகளை நிர்ணயித்தல் ;
- பல்வேறு மாற்று ஏற்பாடுகளைக் கருத்திற் கொண்டு
பொதுச் சேவைகளை வழங்கல் :
பொதுத்துறை நிறுவனங்களுக்கிடையே போட்டிச் சூழலை ஏற்படுத்தல் : - ஸ்தாபனத்தின் மைய அமைப்பின் ஆற்றலை வலுப்
படுத்துதல்.
உலக வங்கி, தனது கல்விச் சீர்திருத்த முயற்சிகளில் இத்தகைய முகாமைத்துவ அணுகுமுறைக்கு முக்கியத்துவமளித்து வருகின்றது. பொருளியல் சார்ந்த நியாயங்களே முதலிடம் பெறுகின்றன. கல்விக்கான நிதி ஒதுக்கீடு, பொருளாதார பெறுபேறுகள், மனித வள விருத்தி, வினைத்திறன், செலவுகள், தனியார் நிதி போன்றவை இதில் முக்கியமானவை. கல்வி முறைகளை வினைத்திறனுடன் (efficiency) இயங்கச் செய்யும் சிந்தனையும் மேற்கூறப்பட்டுள்ள பொருளாதார அணுகுமுறையும் பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் வளர்முக நாடுகளிலும் பின்பற்றப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கிழக்காசியநாடுகளின் கல்வி முறைகளை ஆராய்ந்தவர்கள், கல்வி நிதியைப் பொறுத்த வரையில் அரசாங்கங்களை விட பெற்றோர்களும்
S

Page 26
உள்ளுர் சமூகமும் முக்கிய பங்களிப்பைச் செய்துள்ளதாகக் கூறுகின்றனர். இந்நாடுகளில் கல்வி வாய்ப்புகளை வழங்குவதிலிருந்து அரசாங்கங்கள் பின்வாங்கி வருகின்றன. இதே போன்ற நிலைமைகளை வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் அவதானிக்க முடிகின்றது. சுருங்கக் கூறின் அரசாங்கத் துறையின் மேலாதிக்கத்துக்குட்பட்டிருந்த கல்வித்துறை அண்மைக் காலங்களில் உலக மயமாக்கலின் விளைவாக சந்தைத் தத்துவம், பொருளியல் நியாயங்கள் என்பவற்றின் செல்வாக்கிற்குட்பட்டு வருகின்றது.
உலகமயமாக்கலும் இலங்கையும்
இப்பின்புலத்தில், உலகமயமாக்கலினால் இலங்கையில் கல்வித்துறை பெற்று வரும் தாக்கங்களைப் பின்வருமாறு சுருக்கிக் கூறலாம் :
பொருளாதார உலகமயமாக்கத்தின் விளைவாக இலங்கையில் இடம்பெற்று வரும் பன்னாட்டுக் கம்பெனிகள், வெளிநாட்டு மூலதனப் பாய்ச்சல் முதலியவற்றை ஸ்திரப்படுத்திக் கொள்ளும் முறையில், இப்புதிய நிலைமைகளுக்கேற்ப பாடசாலைக் கல்வியிலும் உயர்கல்வியிலும் ஆங்கில மொழிக்கும் ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பயிற்சி நெறிகளுக்கும், முக்கியத்துவமளிக்கப்பட்டு வருகின்றது. அவ்வாறே கம்ப்யூட்டர் கல்விக்கு உயர்கல்வி நிலையில் முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக நிலையில், ஏராளமான கட்டணம் அறவிடும் சந்தை நெறிகள் கடந்த இரு தசாப்த காலமாகவே நடாத்தப்பட்டு வருகின்றன. 1945ம் ஆண்டு தொடக்கம் பல்கலைக் கழக நிலை வரை, இலவசக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த போதிலும்,

1980களில் இக்கட்டணம் அறவிடும் பயிற்சி நெறிகள் அறிமுகம் செய்யப்பட்டன.
தனியார் துறையினர் உயர்கல்வி நிறுவனங்களை அமைக்க வழி செய்யும் வகையில் உயர்கல்விச் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளது. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கட்டணஞ் செலுத்திப் படிக்க முன்பு இருந்த வெளிநாட்டுச் செலாவணிக் கட்டுப்பாடுகள், அகற்றப்பட்டுள்ளன. ஒரு மதிப்பீட்டின்படி மூன்றாம் நிலைக் கல்வி பயிலும் இலங்கை மாணவரில் 10 சதவீதமானவர்கள் இன்று வெளிநாடுகளில் பயிலுகின்றனர்.
பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களுக்கு வேலை நியமங்கள் வகுக்கப்பட்டு அவர்களுடைய செயலாற்றங்களின் அடிப்படையில் பதவி உயர்வுகள் வழங்கப்படும் முறையில் புதிய ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்களின் தொகையை அதிகரிக்காது, பணியில் உள்ள ஆசிரியர்களின் வினைத்திறனை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உலகளாவிய நடைமுறைகளின் அடிப்படையில் பாட சாலைகளை நிர்வகித்து நடாத்தும் பொறுப்பு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளுர் சமூக உறுப்பினர்கள் ஆகியோரிடம் விடப்பட்டு, "பாடசாலை - மைய முகாமைத்துவக்" கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
米米米米米米

Page 27
சமூகத் தேவையின் பின்னணியில் கலைத்திட்ட உருவாக்கம்
கலாநிதி. திருநாவுக்கரசு கமலநாதன் பீடாதிபதி, தேசிய கல்வியியற் கல்லூரி, யாழ்ப்பாணம்.
கிலைத்திட்டம் என்பது கற்றலுக்காக வேண்டப்படும் சந்தர்ப்பங்களை ஒழுங்கமைக்க ஆக்கப்பட்ட திட்டம் என்று சிறப்பிக்கப்படுகின்றது. எனவே, அங்கு நோக்கம் என்பது முக்கியம் பெறுகின்றது. நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டே அது உருவாக்கப்படுகின்றது. நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதால், அந்நோக்கங்கள் நிறைவேற்றப்பட செயற்பாடு அவசியமாகின்றது. அத்துடன் அந்நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பதனை அறிந்து கொள்வதற்கு மதிப்பீடு தேவைப்படுகின்றது. இந்நோக்கம், செயற்பாடு, மதிப்பீடு ஆகியன உள்ளடக்கப்படுவதால் கலைத்திட்டம் ஒரு அமைப்பொழுங்கினைப் பெற்றுச் சிறப்புப் பெற்றுக் கொள்கின்றது. அந்த அமைப்பொழுங்கு இருந்தால்தான், கற்றலுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற "சந்தர்ப்பங்கள் வழங்கல்" என்பதனைப் பூரணமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும். எனவே, கலைத்திட்டத்தில் சிறப்பு அதன் அமைப்பொழுங்கில் தங்கியுள்ள அதே நேரத்தில், அந்த அமைப்பொழுங்கு கற்றலுக்கான சந்தர்ப்பங்களைப் பொருத்தமாக வழங்க முடிவதால், கலைத்திட்டம் ஆக்கல், கற்பித்தல் செயற்பாட்டில் சிறப்புப் பெற்றுக் கொள்கின்றது.
 

கலைத்திட்டத்தின் சிறப்பு, அதைப் பயிலும் சமூகத்தினரை அறிந்து உருவாக்குவதில் தங்கியுள்ளது. கலைத்திட்டம் சமூக மேம்பாட்டுக்குதவுவதால் சமூகத்தை நன்குணர்ந்து, அவர்களின் தேவையுணர்ந்து உருவாக்குதல் மூலம் கலைத்திட்டத்திற்கு சிறப்பினைப் பெற்றுக் கொள்ள முடியும். கலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தும் போது அதற்குத் தேவையான பெளதிக, மானுட வளங்களைப் பெற்றுக் கொள்ளல் அவசியம். அவற்றைச் சமுதாயத்தில் இருந்தே பெற்றுக் கொள்ள வேண்டும். எனவே, சமுதாயத்தை உணர்ந்து கலைத்திட்டத்தை உருவாக்குவதே சிறப்புடையதாகும்.
கலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்ட பின்னர், அவற்றைச் செயற்படுத்தும் மையங்களாகப் பாடசாலைகளிருப்பதைக் கவனத்திற் கொள்ளல் வேண்டும். அந்தப் பாடசாலைகளின் வளம், அதனைச் சூழவுள்ள மக்கள் வளம் ஆகியனவறிந்து அவற்றிலிருந்து உச்சப் பயன்பாடு பெறும் வகையில் கலைத்திட்டங்கள் உருவாக்கப்படின் அக்கலைத்திட்டம் சிறப்புப் பெறும் என்பது தெளிவு.
இந்த வகையில் பாடசாலையை முதன்மையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் முறையான கல்விச் செயற்பாடுகள் யாவும், கலைத்திட்டம் என்ற விடயத்துள் அடக்கப்பட்டு சிறப்புப் பெற்றுக் கொள்கின்றன.
இங்கு குறிப்பிடப்படும் கலைத்திட்டம் சிறப்புப் பெறுவது, அது பற்றிய விளக்கத்தினைத் தெளிவாக ஆசிரியர்களும் மாணவர்களும் பெற்றுக் கொள்வதிலேயே தங்கியுள்ளது. எனவே, கலைத்திட்டத்தின் நோக்கம் செயற்பாடு போன்றவற்றின் தெளிவான விளக்கத்தினை அதனோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்க வேண்டியது முக்கிய கடமையாகும். அவ்வாறு விளக்கமளித்த பின்னர் ஆசிரியர், மாணவர் அங்கு பொருத்தப்பாடு கண்டுள்ளனரா என்ற விடயத்தினை அறிந்து கொள்வதற்கும், நடைமுறைக்கு வந்துள்ள கலைத்
9

Page 28
திட்டம் சமூகப் பயன்பாடு கொண்டதா என்பதனை அறிவதற்கும், மதிப்பீடு செய்து கொள்ளலும் அவசியம்.
மதிப்பீட்டைத் தொடர்ந்து தேவையேற்படின், கலைத்திட்டங்களில் திருத்தம் செய்து கொள்வதும் அவசியமாகும். கலைத்திட்டங்களில் திருத்தம் செய்யும் போது பெருமளவிலான அவதானம் தேவை. உண்மையில் மாற்றம் தேவைதானா என்பதை முதலில் சிறந்த முறையில் மதிப்பீடு செய்து கொள்ளல் வேண்டும். அதைவிடுத்து, கலைத்திட்ட மாற்றங்களை செய்தல் பயனுள்ள செயற்பாடாகக் கருத முடியாது.
இலங்கையில், சுதந்திரத்தின் பின்னர் முதன் முதலாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தைந்தில் பாடசாலைக் கலைத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியிரண்டிலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தெட்டிலும், ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்தைந்திலும் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணுற்றிரண்டிலும் தற்போது ஆயிரத்துத் தொள்ளா. யிரத்து தொண்ணுற்று ஒன்பதிலும் கலைத்திட்ட மாற்றங்கள் நடந்துள்ளன.
உலகநாடுகளிலேயே, இலங்கையில் அடிக்கடி கலைத்திட்ட மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. ஏறத்தாழ ஆறு அல்லது ஏழு வருடங்களுக்கொரு முறை மாற்றங்கள் நடைபெற்றுள்ளன. இத்தகைய மாற்றங்களுக்கு பின்வரும் மூன்று அம்சங்கள் காரணங்களாக அமைந்தமையும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது:
1. கலைத்திட்டமானது பொதுக் கொள்கையாக்கத்துடன்
ஒத்ததாக உருவாக்கப்படாமை.
2. கலைத்திட்டத்தினுடைய பலம், பலவீனம் மதிப்பிடப்
UT60)).
3. நிதி பெற்றவுடன், கலைத்திட்ட மாற்றம் மேற்கொள்ளப்
படுகின்றமை.

இவை பொதுவான காரணிகளாக கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பேராசிரியர் ஜே. வணசிங்க அவர். களால் சுட்டிக்காட்டப்பட்ட போதும், இவற்றிற்கெல்லாம் மேலாக வேறோர் காரணியும் முன்னாள் கல்வி மந்திரி திரு. றிச்சர்ட் பத்திரான அவர்களால் கலைத்திட்ட மாற்றத்துக்குரிய காரணம் பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையையும் இங்கு கவனத்திற் கொள்ளல் வேண்டும். அவர் கூறிய காரணம்,
"இந்நாட்டின் கல்வி முறைமை, அரசாங்க மாற்றம் ஏற்படும் போதெல்லாம் பல மாற்றங்களுக்குள்ளாகின்றது. கல்வி முறைமை விமர்சிக்கப்படுகின்றது. கல்வி முறைமையில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் பாடசாலைப் பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு தீங்கு விளைவிப்பனவாகும்" என்பதாகும்.
பேராசிரியர் ஜே. வணசிங்க அவர்களால் கூறப்பட்ட காரணங்கள் மூன்றும், பொதுவாக யாவராலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியவை. மாண்புமிகு கல்வி மந்திரி அவர்களின் கருத்து இலங்கை போன்ற வளர்முக நாடுகளின் யதார்த்த நிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதை உணர முடிகிறது.
அரசியலுக்கும், கலைத்திட்ட உருவாக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருத்தல் தவிர்க்க முடியாதது. ஆனால் வளர்முக நாடுகளின் அரசியல் ஸ்திரமின்மை கல்வியிலும் தாக்கத்தினை ஏற்படுத்தி அடிக்கடி கலைத்திட்ட மாற்றங்களையும் நமது அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய திட்டங்களையும் கல்வியுடன் இணைத்தல் தவிர்க்கப்படல் வேண்டும்.
பேராசிரியர் வணசிங்க அவர்கள் கூறிய விடயத்தினையும் மாண்புமிகு அமைச்சர் கூறிய விடயத்தினையும் கவனத்திற் கொண்டு, தேசிய கல்வி முறைமை ஒன்றை உருவாக்கிக் கொள்வதில் கவனம் செலுத்தல் வேண்டும்.
இந்தத் தேசிய கல்விமுறைமை என்பது "சகல அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அல்லது சகல அரசியல்

Page 29
கட்சிகளுக்கும் பொதுவான கட்சி சார்பற்று எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட, அரசியலுக்கும் மேலான ஏதேனுமொன்று" என்பதாகும்.
இந்த அடிப்படையில் கலைத்திட்டம் உருவாக்கப்படின் அது நாட்டுக்குகந்த, சமுதாய வளர்ச்சிக்கேற்ற, மாணவ மேம்பாட்டிற்கேற்ற கலைத்திட்டமாக அமைந்து சிறப்புப் பெறும் என்பதில் ஐயமில்லை.
இந்த வகையில் கலைத்திட்டம் அமைக்கப்படும் போது, பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்ட குறைபாடுகள் நீக்கப்படுவதுடன், அக்கலைத் திட்டத்தினை மதிப்பீடு செய்து கொள்ளும் போது அதன் பலம் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை. 受
கலைத்திட்டமானது, தனித்து பாடநூல்களோடு மட்டும் தங்கியுள்ளது அல்ல என்றும் அதற்கும் மேலானதொன்று என்றும் முன்னர் கண்டோம். மேலும் அதன் சிறப்பு, கலைத்திட்டம் உள்வாங்கி வைத்துள்ள பல்வேறுபட்ட விடய அம்சங்களிலும் தங்கியுள்ளது. கலைத்திட்டம் பாடசாலை ஒழுங்கமைப்பில் மாணவர்கள் பெறக்கூடிய எல்லாவிதமான அனுபவங்களிலும் தங்கியுள்ளமை இங்கு அவதானிக்கப்பட வேண்டும். பாடசாலைகளிலே நடைபெறுகின்ற மாலைக் கூட்டம், மாலை விளையாட்டு நிகழ்ச்சிகள், பல்வேறுவிதமான மாணவர் மன்றச் செயற்பாடுகள் போன்ற பாடசாலை ஒழுங்கமைப்பின் எல்லாவிதமான நடைமுறைகளும் கலைத்திட்டத்தின் பாற்பட்டவை, கலைத்திட்டச் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பவை.
எனவே, கலைத்திட்டம் பரந்த வியாபகத் தன்மை கொண்டது. அது உள்வாங்கி வைத்துள்ள இயல்புகள் பரந்தவை. அவை எல்லாவற்றையும் பாடசாலை ஒழுங்கமைப்பில் வரையறுக்கப்பட்ட கால எல்லைக்குள் மாணவர்களுக்கு கற்பித்து விடமுடியாது. எனவே, கலைத்திட்டம் தன்னுள் கொண்டுள்ள விடயங்களில் எதனைக் கற்பிப்பது, எவ்வாறு கற்பிப்பது என்ற அம்சங்களை தெளிவாக்குவதன் மூலந்தான்
S
2

அதன் சிறப்புத்தங்கியுள்ளதுஎன்பதனையும் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும்.
எதனைக் கற்பிப்பது என்பதில் கற்பிக்கப்படும் விடயங்களில் அறிவு, திறன் மனப்பாங்கு ஆகியன முக்கியம் பெற வேண்டும். எந்த ஒரு விடயத்தைக் கற்பிக்கும் போதும், மாணவர்களிடம் மேற்சொன்னவை சிறப்புப் பெறக்கூடியதாகத் திட்டமிடப்பட வேண்டும். அந்த வகையில் திட்டமிடப்பட்டு அமைக்கப்படும் கலைத்திட்டங்களே சிறப்புப் பெறுவனவாக அமைவதுண்டு. அதைவிடுத்து, பேராசிரியர் வணசிங்க அவர். கள் குறிப்பிட்டது போல் வேறு நாடுகளிடமிருந்தோ அல்லது நிறுவனங்களிடமிருந்தோ நிதி கிடைத்துவிட்டது என்பதற்காக, வலிந்து கலைத்திட்டத்தை மாற்றுவதாலோ அல்லது புதிய கலைத்திட்டத்தை உருவாக்குவதாலோ, குறிப்பிட்ட அக்கலைத்திட்டம் சிறப்புப் பெற்று விடாது. அறிவு, திறன், மனப்பாங்கு மாணவர்களிடத்து வளர்க்கக் கூடிய வகையில் பொதுக் கொள்கையாக்கத்துடன் இயைபு பெற்றதாகக் கலைத்திட்டம் அமைவதே கலைத்திட்டச் சிறப்புக்குக் காரணமாக அமையும்.
கலைத்திட்டம் வரையறுத்த விடயங்களை எவ்வாறு கற்பிப்பது என்பதிலும், கலைத்திட்டம் கொள்ளுகின்ற அக்கறையிலுந்தான் மேலும் அதன் சிறப்பும் வெற்றியும் தங்கியுள்ளது.
எந்த விடயத்தையும் எவரும் கற்பிக்கலாம் என்று கூறும்போது, அங்கு கற்பிக்கும் முறைதான் முக்கியமானது என்பது தெளிந்து கொள்ள வேண்டிய விடயமாகின்றது. எனவே, கலைத்திட்டம் கூறுகின்ற விடயங்களை எவ்வாறு மாணவர்களுக்குக் கற்பிப்பது என்பதில் இறுக்கமான அவதானிப்புத் தேவை. கூறவேண்டியவற்றைக் கூறுகின்ற முறையில் கூறினால் தான், அது விளக்கம் பெறும். முறை என்பதுதான் இங்கு முக்கியமானது. முறை என்பதை இங்கு அவதானிக்கும் போது, கற்பித்தல் சாதனங்களின் பயன்பாடு அவசியமாகின்றது.
S

Page 30
சாதனப் பயன்பாட்டுடன் கற்பித்தல் முறையில் பொருத்தப்பாடு காணும் போது, கலைத்திட்டம் கூறுகின்ற விடயங்கள் சிறப்புப் பெற்றுக் கொள்ள வாய்ப்புக் கிட்டுகின்றது. இவற்றுடன் மதிப்பீடு, பின்னுரட்டல் போன்ற விடயங்களையும் கலைத்திட்டம் கொண்டிருத்தல் பெரும் சிறப்பானதாக அமையும் என்பது (தெளிவு.
கல்வியின் நோக்கை அடையச் செய்வதில், கலைத்திட்டத்தின் சிறப்புப்பாரிய பங்களிப்பைச் செய்யும் என்பது சகல கல்வியியலாளர்களாலும் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பொதுவான கருத்தாகும். கல்வியால் மனிதன் பூரணமடைய வேண்டுமெனின் அதற்கு உறுதுணையாக நின்றுழைப்பது கலைத்திட்ட வடிவங்கள்தான். ஒரு நாடு தனது பண்பாட்டிலே கலாசார விழுமியங்களிலே சிறப்புப் பெறுகின்றதென்றால், அதற்கு நடைமுறையில் உள்ள கலைத்திட்ட ஒழுங்கமைப்பும் காரணமாக அமைகின்றது என்று கூற முடியும். குழந்தைகளை நற்பிரசைகளாக்க, அதன்வழி அவர்களது எதிர்காலம் சிறக்கக் கூடிய வகையில் அவர்களை ஆயத்தம் செய்ய, அவர்கள் பெறுகின்ற சிறப்பினால் நாடு முன்னேற்றம் காண உதவும் சிறப்பு வாய்ந்த ஊடகமாக விளங்குவது கலைத்திட்டமே. எனவே, கலைத்திட்டங்கள் உருவாக்கப்படும்போது, மேற் சொன்ன விடயங்களைக் கவனத்திற் கொள்ளுதல் அவசியமானதாகும்.
கலைத்திட்டம் நாட்டின் தேவையுணர்ந்து உருவாக்கப்படும் போது, அது சமூகத்திலே வழிவழியாகத் தொடர்ந்து வரும் பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாத்து அவற்றை இளைய தலைமுறையினர்க்கு வழங்குகின்றது. அதன் வழி 'கலைத்திட்டமானது, மதிப்புமிக்க சமூகப் பணியொன்றினை
ஆற்றி சிறப்புப் பெற்றுக் கொள்கின்றது.
கலைத் திட்டம் பற்றி சிறப்பாகக் கூறுவோமேயானால், கலைத் திட்டமானது முழுக்க முழுக்க மாணவனையே மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுவது. ஏற்கெனவே குறிப்பிட்டது

போல், மாணவனது எதிர்காலம் சிறக்கக் கூடிய வகையில் அவர்களை ஆயத்தம் செய்யும் பணியை ஆற்றுவதுடன் மாணவர்களது ஆக்கத்திறனை வளர்க்கக் கூடிய வகையிலும் திட்டமிடப்பட வேண்டும் என்ற நவீன சிந்தனையும் இங்கு சிந்திக்கற்பாலது.
இன்னும், கலைத்திட்டம் சிறப்புப் பெறுவதற்கு அதனை ஆக்கும் போது, சிறப்பாக கலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது அதன் சாத்தியமான தன்மை (teasibility), பயன்படுதன்மை (effectiveness), கல்விப் பெறுமதி கொண்ட தன்மை (educational Value) ஆகிய மூன்றிலும் முக்கியமாகக் கவனம் கொள்ள வேண்டியது அவசியமாகும். அவ்வாறு கவனங்கொள்வது கலைத்திட்டத்தின் வெற்றிக்குக் காரணமாக அமையும் என்பதனையும் ஞாபகத்தில் கொள்ளல் வேண்டும்.
0 0 ( 0 (0.
Uசுங்கிளியே Uசுங்கிளியே பசுங்கிளியே, உனக்கு நான் பசும்பாலில் பழம் பிசைந்து பரிந்தளிக்கப் போகின்றேன் நிசமாகச் சொல்லுகிறேன் நீயே ஒரு பாட்டைத்தான் நிகழ்த்திடுவாய் என்தமிழில் நெஞ்சில் இன்பம் பூக்கவே!
சாரணபாஸ்கரன்

Page 31
இனக்குழும விவரண ஆய்வு: வகுப்பறை ஆய்வுகளுக்கான
ஒரு நடைமுறை அணுகுமுறை حتعمير "
W Ethnography :
ah. A practical approach
to classroom research
தை. தனராஜ் பணிப்பாளர், தமிழ்த்துறை தேசிய கல்வி நிறுவனம்.
Aിമ கல்விநிறுவனத்தில் பணிப்பாளர7கப் பணி புரிபவர். கல்வியியல் துறையில் முதுகல்வி மாணிப் பட்டம் பெற்றவர். அவுஸ்திரேலியா, மலேசிய7 ஆகிய நாடுகளில் நடைபெற்ற கல்வியியல் கருத்தரங்குகளில் பங்கு கொண்டவர். கல்விந7ர்வாகத் துறையில் ஏர7ள7ம7ன செயலமர்வுகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் என்பவற்றில் வள அறிஞர7கப் பணியாற்றியவர் பல கல்வியியல் நூல்களின் பதிப்பாசிரியர்
அறிமுகம்
பாடசாலை உலகினை இறுதியில் மாற்றக் கூடியவர்கள் ஆசிரியர்கள்தான் அதனைப் பூரணமாக விளங்கிக் கொள்வதன் மூலம், அவர்கள் அம்மாற்றத்தை ஏற்படுத்துவர்.'
எமது காலத்தின் புகழ்பூத்த ஆசிரிய ஆய்வாளர்களில் ஒருவரான லோறன்ஸ் ஸ்ரென்ஹவுஸ் (Lawrence Stenhouse) என்பவருக்குரியதுதான் இம் மேற்கோள். அவர் கல்வி ஆய்வு களுக்கு ஆற்றிய பங்களிப்குைகளரவிக்குமுகமாக, இந்த
 

மேற்கோள் ஈஸ்ட் அங்கிலியா பல்கலைக்கழக வளவில் அவரது நண்பர்களால் பொறிக்கப்பட்டுள்ளது. (Ruddock - 1985). இக்கூற்றின் மூலம் ஆசிரியர்களை ஸ்ரென்ஹவுஸ் புகழ்ந்துரைத்த போதும், மிகவும் முக்கியமானதொரு விடயத்தையும் அவர் அழுத்தியுரைக்கின்றார். அதாவது, ஆசிரியர்கள் "பாடசாலை உலகை" விளங்கிக் கொள்ள வேண்டுமெனில் அவர்கள் தம்மளவில் ஆய்வாளர்களாக மாற வேண்டியது அவசியம். ஆய்வுகளில் ஈடுபடாது அவர்களால் பாடசாலைகளை விளங்கிக் கொள்ளவோ மாற்றியமைக்கவோ முடியாது.
ஆசிரியர்களின் இப்புதிய நடிபங்கு, மேற்கு நாடுகளிலும் அவுஸ்திரேலியாவிலும் 1970 களிலேயே ஏற்கப்பட்டுவிட்டது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் அக்காலகட்டத்தில் சிறு சிறு ஆய்வுகளை மேற்கொள்ளத் தொடங்கினர். இவ்வாய்வுகள் பொதுவாக வகுப்பறைகளில் கலைத்திட்ட அபிவிருத்தி தொடர்பானவைகளாக அமைந்திருந்தன. இதன் காரணமாகவே ஸ்ரென்ஹவுஸ் 1975ல் பின்வருமாறு குறிப்பிட்டார் : "ஆய்வுகள் இன்று நாளாந்த செயற்பாடுகளாகிவிட்டன : ஒரு கைத் தொழிலாகவும், ஒரு கருவியாகவும், ஒரு பொழுதுபோக்காகவும் ஆய்வுகள் இன்று ஏற்கப்படுகின்றன." 1970களில் ஆரம்பித்த இச் செல்நெறியானது, இன்று பல நாடுகளில், குறிப்பாக மேற்கு நாடுகளில் வேகமும் முனைப்பும் கொண்டு வளர்ந்துள்ளது. "ஆசிரியர்கள் இன்று வெளிவாரி ஆய்வாளர்களுக்கு வகுப்பறைகளைத் திறந்துவிட்டுவிட்டு வேடிக்கை பார்க்கும் பார்வையாளர்களல்லர். அவர்கள் ஆய்வுகளின் படைப்பாளர்களாக தன்முனைப்பான பாத்திரத்தை ஏற்றுள்ளனர்."(Denscombe - 1995) எனினும், இலங்கையைப் பொறுத்தவரையில் "பாடசாலை உலகை" விளங்கிக் கொண்டு அதனை மாற்றியமைக்கவும், தமது வகுப்பறைச் செயன்முறைகளை விருத்தி செய்யவும் ஆசிரியர்கள் தமது புதிய "ஆய்வாளர்" நடிபங்கினை ஏற்றுக் கொண்டுள்ளனர் என நாம் உறுதியாகக்

Page 32
கூறுவதற்கில்லை. இந்நாட்டைப்பொறுத்தவரையில், பட்டமேற்படிப்பின் தேவைகளுக்காகவன்றி ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் வேறில்லை (Kularatne - 1993). இந்நிலைமைக்கான காரணிகள் பல உண்டு. இவற்றில் மிக முக்கியமானது ஆய்வுகளை மேற்கொள்ளுதல் பற்றிய ஆசிரியர்களின் மனப்பாங்குகளாகும். ஆய்வுகள் என்பவை தமது திறமைக்கும் தகுதிக்கும் அப்பாற்பட்டவை என்றும் சாஸ்திரியப் புலமை கொண்ட விற்பன்னர்களால் மட்டுமே ஆய்வுகள் மேற்கொள்ளப்படக் கூடும் எனவும் அவர்கள் நம்புகின்றனர். அத்துடன், ஆய்வு முறைகளைப் பற்றிய முதலாவது அறிமுகத்தை ஆசிரியர்கள் முதுமாணிப் பட்டத்துக்கு முன்பு, தமது தொழில்சார் வாழ்க்கையில் எப்போதுமே பெறுவதில்லை. இம்முதுமாணி பட்டத்துக்குத் தெரிவு செய்யப்படும் ஆசிரியர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையினராவர். இதுமட்டுமல்லாது எமது அதிபர்கள், கல்வி அதிகாரிகள் பலரின் ஆய்வு நோக்கற்ற மனப்பாங்குகள், மாற்றங்களுக்கு இடம்தராத ஒரே மாதிரியான கலைத்திட்டச் செயற்பாடுகள், பரீட்சைப் பெறுபேற்றையே நோக்காகக் கொண்ட கொஞ்சமும் ஆரோக்கியமில்லாத போட்டித்தன்மைகள் போன்றவையும் கூட, நமது நாட்டில் ஆசிரியர்கள் கல்வி ஆய்வுகளில் ஈடுபடாமைக்கு காரணங்கள் எனக் கூறலாம்.
வகுப்பறை ஆய்வுகள், கற்றல்-கற்பித்தல் செயன்முறை விருத்திக்குப் பல்வேறு வழிகளில் உதவுகின்றன. வகுப்பறை மட்டத்தில் கலைத்திட்ட அமுலாக்கத்தின் வினைத்திறனை அல்லது வினைதிறனின்மையை ஆய்வுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. கல்விக் கொள்கைக்கும், விரும்பிய இலக்குகளில் அடைவுக்கும் ஏதுவான கலைத்திட்ட மாற்றங்கள் ஆய்வுகளின் மூலமாக வெளிக்கொணரப்படுகின்றன. உலகளாவிய ரீதியில், கல்வித்துறையில் ஏற்படும் அபிவிருத்தி. களையும் புத்தாக்கங்களையும் கலைத்திட்டத்திற்குள் நுழைத்து, அதனை செழுமைப்படுத்துவதற்கு ஆய்வுகள் உதவுகின்றன. இவை மட்டுமல்லாமல், காலத்துக்குக் காலம்

கலைத்திட்டத்தின் உள்ளடக்கத்தையும் கற்பித்தல் முறைகளையும் மதிப்பீடு செய்வதற்கும் ஆய்வுகளே கருவியாகின்றன. அபிவிருத்தியடைந்த நாடுகளில் கலைத்திட்ட மாற்றங்களுக்கும், சீர்திருத்தங்களுக்கும் முன்னோடியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், நமதுநாட்டைப் பொறுத்த வரையில், அரசியல் அதிகார மாற்றத்துக்குக் கலைத்திட்ட சீர்திருத்தங்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதைக் காணலாம்.
எனினும், இலங்கையில் கல்வி ஆய்வுகளின் எதிர்காலம் பிரகாசமாகக் காணப்படுகிறது. இலங்கை ஆசிரியர் சேவை (SLTS) ஸ்தாபிக்கப்பட்டிருப்பதால், ஆசிரியர்களின் உயர்தொழில் தன்மை(professionalism) அதிகரித்துள்ளது. பட்டப்பின் படிப்புத் தகைமை கொண்ட ஆசிரியர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் கூடிச் செல்கிறது. எனவே, எதிர்காலத்தில் ஆசிரியர்கள் தமது புதிய ஆய்வாளர் நடிபங்கினை ஆர்வத்துடன் ஏற்று செயற்படுவார்கள் என நம்பலாம். தேசிய கல்வி நிறுவகம்(NIE), தேசிய கல்வி ஆணைக்குழு(NEC), பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) போன்ற அரசாங்க அமைப்புகளும் பல அரசு சார்பற்ற நிறுவனங்களும் கல்வி ஆய்வுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஆய்வுகளுக்கான நிதிவசதிகளையும் வழங்குகின்றன (Kularatne, 1993).
இவ்வாறான ஒரு புதிய சூழ்நிலையில், வகுப்பறை மட்டத்தில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான ஒரு பயனுறுதி. யுள்ள ஆய்வுமுறையாக, இனக்குழும விவரண ஆய்வு (ethnography) என்னும் எண்ணக்கருவை இக்கட்டுரை விளக்க முனை. கிறது. கடந்த சில தசாப்தங்களாக வகுப்பறை மட்ட ஆய்வு களில் சிறந்த அணுகுமுறையாக இனக்குழும விவரண ஆய்வு முறை பல நாடுகளில் பிரசித்தி பெற்று வருகிறது (Denscombe1985). எனவே, எதிர்காலத்தில் கல்வி ஆய்வுத் துறையில் ஈடுபட விரும்பும் ஆசிரியர்கள் இனக்குழும விவரண ஆய்வுமுறையில் பரிச்சயம் கொள்ளச் செய்தல் பயனுள்ள ஒரு முயற்சியாக இருக்கும்.

Page 33
இனக்குழும விவரணம் : அதன் வரைவிலக்கணம் Ethnography : A definition
"உலகத்தின் மனித இனங்களின் தோற்றத்தையும் அவற்றின் வளர்ச்சியையும் விளங்கிக் கொள்ளும் ஒரு விஞ்ஞானம்" என இனக்குழும விவரணம் வரைவிலக்கணப்படுத்தப்LGBáling. (International Dictionary of Education - 1984). P(b ஆய்வுமுறை என்ற அளவில் இவ்வணுகுமுறை பெரும்பாலும் LD60f265u6i LDiplib depab6fusio (anthropological and sociological) ஆய்வுகளிலே பயன்படுத்தப்பட்டு வந்தது. எனினும், இவ்வணுகு முறை இன்று கல்வி ஆய்வுகளிலும் பயன்படுத்தப்படுவதுடன் பிரசித்தி பெற்றும் வருகிறது. (Fetterman - 1984). இனக்குழும விவரணம் பல்வேறு விதங்களில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. "ஒரு குழுமத்தின் வாழ்க்கை முறையைப் பற்றி எழுதுவதுதான் இனக்குழும விவரணம்" என மக்னில் (McNeil - 1985) குறிப்பிடுகிறார். இங்கு குழுமம் எனப்படுவது ஒரு பாரிய் இனக்குழுவாக இருக்கலாம் :அல்லது சிறு வகுப்பறையாகவும் இருக்கலாம்.
டஃப்ட் (Traft 1985) என்பார் இனக்குழும விவரணம் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார். "இனக்குழும விவரணம் என்பது கட்டுப்பாடுகள் இல்லாத ஒர் இயற்கையான ஆய்வாகும் இது பண்பு ரீதியானதே தவிர, அளவுரீதியானதல்ல".
இனக்குழும விவரணம் என்பது, ஒரு கலாசாரம் அல்லது துணைக் கலாசாரமானது ஒரு தனி நபரை அல்லது குழுவை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றிய ஒரு விவரண பகுப்பாய்வாகும். அடிப்படையில் பண்பு ரீதியான இவ்வாய்வு பங்கேற்புத் (participatory) தன்மையும் கொண்டது. ஏனெனில் ஆய்வாளர் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தான் ஆய்வுக்கு உட்படுத்தும் குழுவின் வாழ்க்கை முறையில் பங்கேற்கிறார். அவ்வாறான பங்கேற்பின் மூலம் பெறும் அனுபவத்தையே அவர் தனது ஆய்வின் வெளிப்படுத்தல்களுக்கு அடித்தளமாகக் கொள்கிறார்.

இனக்குழும விவரண ஆய்வுமுறையின் வளர்ச்சி The Development of Ethnographic Research
நவீன இனக்குழும விவரண ஆய்வின் தோற்றத்தை, 19ம் நூற்றாண்டின் பின்னரைப் பகுதிகளில் காணலாம். (McNeil - 1984). இக்கால கட்டத்தில் மனிதவியலாளரும், சமூகவியலாளரும் இவ்வாய்வு அணுகுமுறையைத் தமது கள ஆய்வுகளில் பின்பற்றினர். மெக்னில் கூறுவதைப்போல இக்காலத்தில் பிரித்தானிய சாம்ராச்சியத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிமக்களை ஆய்வுசெய்தBoas, Rivers போன்ற ஆய்வாளர்களே இனக்குழும விவரண ஆய்வுக்கான அடித்தளத்தை இட்டனர். இவர்கள் தாம் ஆய்வு செய்த இனக் குழுக்களின் மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெறும் அளவுக்கு தமது ஆய்வுகளில் ஆழமாக ஈடுபடவில்லை. எனினும் களஆய்வு முறைகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்ட பிற்கால ஆய்வாளர். at6TT607 D. T. Evans, B. Malinowski, A. R. Redcliffe, M. Mead போன்றோருக்கு உறுதியான ஆய்வு வழிகாட்டல்களை ஏற்படுத்தித் தந்தோர் இவர்களேயாவர். மேற்குறிப்பிட்ட ஆய்வாளர்கள் மேற்கு பசுபிக், மெலனீசியா, ஆப்பிரிக்கா முதலிய பகுதிகளில் வாழ்ந்த பழங்குடிமக்களை ஆய்வு செய்தனர். இவர்களில் மெனினோவ்ஸ்கி மிகவும் சிறந்த இனக்குழும விவரண ஆய்வாளர் என மெக்னில் முடிவு செய்கிறார். மெலினோவ்ஸ்கிமேற்கு பசுபிக்கில் வாழ்ந்தTrobianders எனப்படும் பழங்குடி மக்களில் ஒருவராக வாழ்ந்து, அவர்களது மொழியையும் கற்றுத் தேர்ந்து மிகச் சிறந்த ஆய்வுகளை வெளியிட்டார்.
இனக்குழும விவரண ஆய்வுமுறையில் Chicago School எனப்படும் சிக்காகோ சிந்தனை மரபும் மிகவும் முக்கியமானதாகும். இம்மரபினை 1930 களில் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் எற்படுத்தியோர் Robert E. Park என்பாரும் அவரது ஆய்வுக் குவுவினருமாவர். இவர்களில் Becker, Geoffman

Page 34
ஆகியோர் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்வி மாணவர்களை ஆய்வு செய்தனர். இதுவே கல்வித்துறை ஆய்வுகளில் இனக் குழுத விவரண ஆய்வு முறையினை அறிமுகப்படுத்திய முதலாவது சந்தர்ப்பமாகும். (Taft - 1985).
1968ல் Smith, Geoffrey ஆகியோர் வகுப்பறைச் செயன்முறைகளை விளங்கிக் கொள்ள நுண் - இனக்குழும விவரண giló (Micro - Ethnography) (p60p60)u Uusir JGBg5g56OTii. இவ்வாய்வுக்கு, அவர்கள் ஒரு தவணை முழுவதும் வகுப்பறைச் செயற்பாடுகளில் கிரமமாகப் பங்கெடுத்தனர்.
இன்று கல்வி ஆய்வுகளில் இனக்குழும விவரண ஆய்வுமுறை பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. "மனிதவியலிலும் கல்வியியலிலும் இனக்குழும விவரணம் ஒர் உப பிரிவாக வளர்ச்சியடைந்தமைக்கு காரணம், ஆய்வுக்கு உட்படுத்தப்படும் தோற்றப்பாடுகளை விளக்குவதற்கு நடைமுறையிலுள்ள மரபுவழி ஆய்வுமுறைகளின் வரையறைகளேயாகும். இக்குறைபாட்டினை இனக்குழும விவரண ஆய்வுமுறைநிவர்த்தி GéFilémogô. (Le Compte and Goetz - 1984).
இனக்குழும விவரண ஆய்வில் தரவு சேகரிக்கும் முறைகள் Data collection in Ethnographic research
இவ் ஆய்வுமுறையில் ஈடுபடும் ஆய்வாளர்கள் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களை மதிப்பிடவேண்டி உள்ளனர். அவர். களுக்குத் தேவைப்படும் நெகிழ்ச்சித்தன்மைக்காக பன்முகப்பட்ட தரவு சேகரிப்பு முறைகள் இவ்வாய்வு முறையில் பயன். படுத்தப்படுகின்றன.
Le Compte & Goetz (1984) @60Iöé5(pup 6îl6)J600T souil6)- முறை நுட்பங்களின் நான்கு பண்புகளைப் பின்வருமாறு விவரிக்கிறார் : (அ) அனுபவபூர்வமானவை (empirical), (ஆ) Guib60)abu JT607606) (naturalistic), (g)) (p(p60)LDLUIT607606) (holistic), (FF) Li6öTClpébüu'L606) (multi – modal).
62

இத்தகைய பண்புகளைக் கொண்ட இனக்குழும விவரண ஆய்வுத் தரவுகள் மூன்று பரந்த பகுதிகளுக்குள் அடக்கப்படுகின்றன : (அ) அடிப்படைத் தரவுகள் (baseline data), (ஆ) செயன்முறைத் தரவுகள்(process data), (இ) விழுமியத் தரவுகள் (value data).
ஆய்வுக்கு உட்படுத்தப்படும் குழுவினரது தகவல்கள் அடிப்படைத் தரவுகள் செய்யப்படுகின்றன. செயன்முறைத் தரவுகள் என்பவை நிகழ்வுகள் பற்றிய தரவுகளாகும். உதாரணமாக ஒரு புத்தாக்கத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படுபனவற்றைக் கூறலாம். விழுமியத் தரவுகள் என்பவை ஆய்வில் பங்குபற்றுவோர், நிகழ்வுகளுக்கு நிதியீட்டம் செய்தோர்,நிர்வாகிகள் என்பவர்களின் விழுமியங்கள் பற்றியதாகும்.
இனக்குழும விவரண ஆய்வாளருக்கு, தகவல் சேகரிக்க உதவும் முதன்மைக் கருவிகள் அவர்களது கண்ணும் காதும் ஏனைய புலனுணர்வுகளுமாகும். (Colier 1973). இவற்றுக்குத் துணையாக கட்புல செவிப்புல சாதனங்களும், புகைப்படக் கருவிகளும் அமைய வேண்டும். இனக்குழும விவரண ஆய்வுகளுக்கு பயன்படக்கூடிய கருவிகளை Pelto & Pecto (1978) பின்வருமாறு வகைப்படுத்துகின்றனர்:
(அ) ஆய்வாளருக்கும், பங்கு பற்றுபவர்களுக்கும் இடைவினை ஏற்படுத்தக்கூடிய தரவு சேகரிக்கும் முறைகள் (Interactive Methods)
(ஆ) ஆய்வாளருக்கும் பங்குபற்றுபவர்களுக்கும் இடைவினை ஏற்படுத்தாத தரவு சேகரிக்கும் முறைகள்(Non - Interactive Methods)
பங்குபற்றுனர் அவதானித்தல், முக்கிய தகவல் தரக்கூடியோருடன் நேர்காணல், அளவீடு (Survey) போன்றவை இடைவினை கொண்ட முறைகளாகும். இம்முறைகள் மூலம் சேகரிக்கப்படும்

Page 35
தரவுகளின் தரம் ஆய்வாளருக்கும், பங்குபற்றுனருக்கும், பல்வேறு வழிகளில் ஏற்படக்கூடிய இடைவினைகள் மூலம் பாதிக்கப்படக்கூடும். இடைவினையற்ற முறைகள் மூலம் சேகரிக்கப்படும் தரவுகள், கூடிய தரம் கொண்டவைகளாகும். இம்முறையில் ஆய்வாளர் பங்குபற்றுனரில் துலங்கல்களில் செல்வாக்கு செலுத்தும் வாய்ப்புகள் இல்லை (Webb 1966). எனினும் ஆய்வாளர் தனக்கு தேவைப்படும் சகல தகவல்களையும் அறிய முடியும் என நிச்சயமாகக் கூறுவதற்கில்லை.
பங்குபற்றி அவதானித்தல் (Participant observation)
பங்குபற்றி அவதானித்தலே, இனக்குழும விவரண ஆய்வாளர்கள் கையாளும் மிகப் பிரதான ஆய்வு நுட்பமாகும். புகழ்பெற்ற இனக்குழும விவரண ஆய்வாளரான மார்கிறெட் மீட் தாம் ஆய்வு செய்த குழுக்களின் நாளாந்த வாழ்க்கையில் தானும் பங்குபற்றியே அவர்களை அவதானித்தார். இவ்வாறு அவதானிப்பவரிடம் நம்பிக்கை, ஆர்வம், இயல்பு நிலை ஆகியவை கட்டாயமாக இருக்க வேண்டிய பண்புகளாகும் (Cohen & Manion - 1989). ஆய்வாளரும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுபவரும் பரஸ்பர நம்பிக்கையும் நட்பும் ஒரு பொதுவான குறிக்கோளை நாடிச் செல்லும் வேட்கையும் கொண்டவர்களாக இருத்தல் வேண்டும். ஆய்வாளர் தனது முயற்சிக்கு எதிரான தடைகள் எவ்வளவு வந்தபோதிலும் அவற்றை எல்லாம் மீறி தனது இலக்கை நோக்கித் தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்பவராக விளங்க வேண்டும். Gold (1958), பங்குபற்றி அவதானிப்பவர்களைப் பின்வருமாறு வகைப்படுத்துகிறார்:
(9) (5 (p(p60)LDLLIT607 Uffigil libgp160) if (A complete participant) இவர் தனது அடையாளத்தை முற்றாக மறைத்துக்கொண்டு, ஆய்வுக்கு உட்படும் குழுவில் ஒருவராகவே இருப்பார்.

(ஆ) அவதானிக்கும் பங்குபற்றுனர் (A participant - as - ob
(9)
Server) இவர் குழுவினருடன் தீவிரமாக ஈடாடுவார். ஆனால், குழுவினர் அவர் தம்மில் ஒருவரல்லர் என்பதை அறிந்திருப்பர்.
Liebuiptb 96.15IT60fill 16 if (An observer - as participant) இவர் அவசியமானபோது குழுவினரிடம் விஜயம் செய்வார். இது வழமையான முறையாகக் கையாளப்படுவதில்லை.
பங்குபற்றி அவதானித்தல் இனக்குழும விவரண ஆய்வு முறையில் மிகவும் முக்கியமான தரவு திரட்டும் முறையாகும். ஆனால், அதிலுள்ள மிகப்பெரிய ஆபத்துதான் ஆய்வுசெய்யும் குழுவினருடன் ஆய்வாளர் தானும் ஒன்று கலத்தலாகும்(going native). ஆய்வாளர் குழுவோடு குழுவாகக் கலப்பதன் மூலம் ஆய்வுக்கு அவசியமான பண்பான புறவயத்தன்மை பாதிக்கப்படும். Taft (1985) பங்குபற்றி அவதானித்தலிலுள்ள பிரதிகூலங்களைப் பின்வருமாறுபட்டியல் படுத்துகிறார்:
(1)
(2)
(3)
நெருங்கிய பழக்கத்தின் காரணமாக மிக முக்கியமான ஒரு தரவினை கவனிக்காமல் விட்டுவிடுதல்.
பங்குபற்றி அவதானிப்பவர் குழு உறுப்பினர்களின் நடத்தையின் இயல்பு நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தல்.
பரஸ்பர நம்பிக்கையின் விளைவாக குழுவினரிடமிருந்து பெற்ற தகவல்களை வெளிப்படுத்துவதன் மூலம், நம்பிக்கைக்குத் துரோகமிழைத்தல்
6s S

Page 36
இனக்குழும விவரண ஆய்வு முறையும் வகுப்பறை ஆசிரியரும் Ethnography and Classroom Teacher
ஆசிரிய ஆய்வாளர், செயற்பாட்டு ஆய்வு (action research) 6.560600libg) guil62 (collaborative research) (p565u கருத்துக்கள் முதன்மை பெறுகின்ற இக்காலத்தில் இனக்குழும விவரண ஆய்வுமுறை ஆசிரியர்களுக்குப் பல நன்மைகளை வழங்கமுடியும் என வூட்ஸ் (Woods 1986) குறிப்பிடுகிறார்.
ஆசிரியர்கள் அறிவைப் பெற்றுக் கொள்வதற்காக ஆய்வு முடிவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் "வெற்றுப்பானைகள்" அல்லர். அவர்களிடம் ஏற்கெனவே மனப்பாங்குகளும், அபிப்பிராயங்களும், நோக்குகளும், விருப்புகளும் உள்ளன. எனவே, ஆய்வு முடிவுகளை அவர்கள் தமது மனப்பாங்குகள், நம்பிக்கைகளின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது நிராகரிக்கவோ செய்வார்கள் (Zeichner 1995).
தற்காலத்தில் ஆசிரியர்கள், குறிப்பாக. மேற்கு நாட்டு ஆசிரியர்கள் புலமை நிறைந்த கல்வியாளர்களால் மேற்கொள். ளப்படும் ஆய்வுகள் பொதுவாக பாடசாலைகளின் நடைமுறைகளுக்குப் பொருந்துவனவாக இல்லை என்னும் அபிப்பிராயத்தைக் கொண்டுள்ளனர். மறுதலையாகப் பார்க்கும்போது ஆசிரியர்கள் மேற்கொள்ளும் கல்வி ஆய்வுகள் புலமைசார்ந்த ஆய்வாளர்களினால் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. ஆசிரியர்களின் ஆய்வுமுயற்சிகள் என்பவை ஆசிரிய அபிவிருத்தியே அன்றி அறிவு உருவாக்கமாக மாட்டா என அவர்கள் கூறுகின்றனர் Zeichner 1995. எனினும் இன்று மேற்குலகிலும் அவுஸ்திரேலியா முதலிய வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஆசிரிய ஆய்வாளர்களினால் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இவை உயர் பட்டங்களைப் பெறுவதற்கான தேவைகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்காகவோ அல்லது தமது "பாடசாலை உலகத்தை"நன்கு விளங்கிக் கொள்வதற்காகவோ இருக்கலாம். ஆய்வு நோக்கம் எதுவாக
66

இருந்தபோதிலும், இவ்வாசிரிய ஆய்வாளர்களுக்கு இனக்குழும விவரண ஆய்வுமுறை மிகவும் அனுகூலமாக உள்ளது. வூட்ஸ் (Woods 1986) குறிப்பிடுவதைப் போல இனக்குழும விவரண ஆய்வுமுறை ஆசிரியர்கள் இலகுவாகப் பயன்படுத்தக்கூடிய அணுகுமுறையாகும். இதனைக் கைக்கொள்ள அனுபவமோ அல்லது சிக்கலான கருவிகளோ அவசியமில்லை. கட்டுப்படுத்தப்பட்ட பரிசோதனைகளோ புள்ளி விபரங்களோ முக்கியமில்லை. தத்துவார்த்த, முறையியல் சார்ந்த அறிவும் அவசியமில்லை.
எனவே, இனக்குழும விவரண ஆய்வு அணுகுமுறையானது ஆய்வுகள் மூலம் தமது வகுப்பறை நடைமுறைகளின் உள்ளார்ந்த அம்சங்களை அறிய விரும்பும் ஆசிரியர்களுக்கு மிகவும் எளிமையானதும் பிரயோசனமானதுமான முறையாகும். வகுப்பறைகளில் நிகழ்த்தப்படும் ஆய்வுகளில் இம்முறையை பயன்படுத்துவதிலுள்ள அனுகூலங்களை டென்ஸ்கோம்ப் (Denscombe - 1995) பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
(அ) கோட்பாட்டைவிட விவரணத்திற்கு அழுத்தம் தருதல்.
(ஆ) புள்ளி விபரங்கள் போன்ற சிக்கலான தன்மைகள் அற்ற, ஆசிரியர்களுக்கு மிகவும் பரிச்சயமான தரவுகள் போதுமானவை.
(இ) தரவுகள் சேகரித்தலில் ஆசிரியரின் அறிவு, அனுப
வத்துக்கு இடமளித்தல்.
(ஈ) ஆய்வு செய்வதற்கான பொருத்தமான, வசதியான
ஆய்வுக்களம்.
(உ) தரவுகள் சேகரித்தலில் நெகிழ்ச்சியான தன்மை,
(ஊ) மிகவும் குறைந்த செலவுகள்.

Page 37
முடிவுரை
இனக்குழும விவரண ஆய்வுமுறையானது மிகவும் பயனுள்ள ஓர் ஆய்வுக் கருவியாகும். இன்று சமூகவியல், மனிதவியல் சார்ந்த கல்விப் பிரச்சினைகளை ஆய்வு செய்யப் பயன்படுத்தப்பட்ட இம்முறை கல்வித்துறையிலும் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அடிப்படையில் இவ்வணுகுமுறையானது ஒரு குழுவின் வாழ்க்கை முறையில் ஏற்படும் நிகழ்வுகளை விவரிக்கிறது. இவ்வாறு விவரணம் செய்யும்போது குழுவின் சமூக அமைப்புகளிலும், தனிமனித-குழு இடைவினைகளிலும் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.
ஆய்வாளர் ஆய்வில் தானும் பங்குபற்றுகின்ற காரணத்தால், குழுவின் கலாசாரத்தையும் குழு உறுப்பினர்களிடையே ஏற்படும் இடீைவினைகளையும் ஆழமாகக் கற்க முடிகிறது. இவ்வாறானதொரு அணுகுமுறை ஆவணங்களை பகுப்பாய்வு செய்தல், வினாக்கொத்துகளுக்கு துலங்கல்களைப் பெறுதல் முதலிய அணுகுமுறைகளைவிட மிகவும் வித்தியாசமானது.
இனக்குழும விவரண ஆய்வானது ஆய்வாளரின் நேரத்தை மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் எடுக்கக் கூடியது. அத்துடன் ஆய்வாளருக்கு மிகவும் கஷ்டமான சோதனைகளை ஏற்படுத்தக்கூடியது. ஆனால், ஒர் ஆசிரியர் இனக் குழும விவரண ஆய்வில் ஈடுபடும்போது மேற்கூறப்பட்ட சிரமங்கள் ஏற்படுவதில்லை. ஏனெனில், ஆய்வு அவரது தொழிலின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது.
இனக்குழும விவரண ஆய்வுமுறையின் நம்பகத்தன்மை பற்றி பொதுவாக கேள்வி எழுப்பப்படுகிறது. இவ்வாய்வை அதே சூழ்நிலையில் மீளவும் செய்து அதே முடிவுகளைப் பெறக்கூடிய சாத்தியமில்லை என்பதும் உண்மையாகும். ஆய்வாளர் குழுவின் வாழ்க்கை முறையில் ஆழமாக ஈடுபட்டு தன்னையும் தனது நோக்கத்தையும் இழந்துவிடக் கூடிய வாய்ப்பும் இவ்வாய்வு முறையில் உள்ளது.
68

ஆனால், இவ்வணுகு முறையில் உள்ள மிகப் பெரிய வலிமை என்னவெனில், நடத்தையானது அதனது இயல்பான பின்னணியில் அவதானிக்கப்படுகிறது என்பதாகும். ஆய்வாளர் ஏனைய ஆய்வுமுறைகளைப் போல ஏற்கெனவே எவ்விதமான ஊக்கத்தையும், எடுகோள்களையும் கொண்டிருப்பதில்லை. ஆனால், தனது அவதானிப்புகளிலிருந்து எடுகோள்களோ அல்லது கோட்பாடுகளோ உருவாவதற்கு ஆய்வாளர் இடமளிக்கிறார். பிழைகளைத் தவிர்க்க எடுக்கும் கூடிய கவனமும், தரவுகளையும் அவதானிப்புகளையும் மீண்டும் மீண்டும் சரி. பார்த்தலும் இவ்வாய்வு முறைக்கு விஞ்ஞானத் தன்மையை வழங்குகின்றன.
References:
1. Cohen, L and Manion, L (1989) Research Methods in
Education, London : Routledge.
2. Collier, J. Jnr., (1973) Alaskan Eskimo : A Film Analysis of Cultural Confrontation in Schools, New York: Holt Reinhart and Winston.
3. Denscombe, M (1995) Teachers As An Audience For Research: The Acceptability of Ethnographic Approaches to Classroom Research in Teachers and Teaching: Theory and Practice Vol, 1 No, 2 ed. Christopher Dey, University of Nottingham, U. K.
4. Gold, R. L. (1958) Roles in Sociological Field Observa
tion, Social Forces.
5. Kularatna, N, G. (1993) Educational Research Environment in Sri Lanka, Paper presented for the South Asian Sub Regional Meeting of SERI / BAFED at Dhaka.
69

Page 38
10.
11.
12.
Le Compte, M. D. and Goetz, J.P. (1984) Ethnographic Data Collection in Evaluation Research.
McNeill, P. (1985) Research Methods, London : Routledge.
Pelto, P.J. and Pelto, G. H. (1978) Anthropological Research . The Structure of Inquiry, London : Cambridge University Press.
Ruddock, J and Hopkins D (1985) Readings from the works of Lawrence Stenhouse ed. London: Heinemann.
Taft, R (1985) Ethnographic Research Methods in Husen, Tand Postlethwaite, T.N. ed. The International Encyclopedia of Education, Oxford: Pergamon.
Woods, P. (1986) Inside Schools : Ethnography in Edu
- cational Research, London : Routledge and Kegan Paul.
Zeichner, M (1995) Beyond The Divide of Teacher Research and Academic Research in Teachers and Teaching: Theory and Practice Vol. 1. No. 2 ed. Christopher Dey, University of Nottingham, U. K.
()3-03-03-03-0

O
ஆஸ்த்மா - கலங்க வேண்டிய நோயல்ல
- டொக்டர் எம். கே. முருகானந்தன்
இலங்கையில் புற்று நோய்
- வைத்தியக் கலாநிதி வாணி
உக்கிரப் பெருவழுதி பிள்ளை
இலங்கையில் அராபிய (யூனானி) மருத்துவம்
- டாக்டர் எம். எச். எம். நஸிம்
பல் பாதுகாக்கும் முறைகள்
- LITais if 676i. 6669, B.C.S.
తి a s a s్న 9
73
87
93
99

Page 39
-முதியவர் நலன்
முதியோர்களின் நலத்திற்கு நாம் முன்னுரிமை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தவறிவிட்டோம். தனிநபர் மட்டத்தில் மட்டுமன்றி, தேச மட்டத்தில் கூடத் தவறிவிட்டோம்.
"பல முதியவர்களின் ஆதங்கம், தமது ஆரோக்கியம் பற்றியதுதான். நீண்டகாலம் நலமாக வாழவேண்டும் என்ற விருப்பு எல்லோருக்கும் இருக்கும்தானே. ஆனால், அவர்களது சிந்தனை அதற்கு அப்பாலும் நீள்கிறது. நாம் நோய்வாய்ப்பட்டால் அல்லது ஏதாவது விபத்தில் மாட்டுப்பட்டுப் படுக்கையில் கிடந்தால், அது குடும்பத்தினருக்குக் கஷ்டம். மேலதிக வேலைப்பளுவையும் பொருளாதாரச் சுமையையும் அவர்களுக்குக் கொடுத்து விடும் என்று அஞ்சுகின்றனர்.
உண்மைதான். மற்றவர்களில் தங்கியிருக்காது, சுதந்திரமாக நீண்ட காலம் ஒரு முதியவரால் வாழ முடியுமாயின், அதையே ஆரோக்கியமான, சுறுசுறுப்பான முதுமை எனப் போற்றலாம். அவர்கள் சுதந்திரமாக, மனநிறைவோடு இயங்க உதவியும் ஒத்தாசையும் வழங்குங்கள்.
நீங்கள் நலமாக (பக்கம் 137) டாக்டர். எம்.கே. முருகானந்தன் எழுதிய நூலிலிருந்து

ஆஸ்த்மா - கலங்கவேண்டிய நோயல்ல
டாக்டர் எம். கே. முருகானந்தன் எம். பி. பி. எஸ். (இலங்கை)
(சிகாதார அம்சங்கள் சம்பந்தமாகப் பல நூல்களைத் தமிழில் எழுதியுள்ள7 வைத்திய கலாநிதி எம் தே, முருகானந்தன், இலக்கியம், விமர்சனம், சிறுகதை என்று பல துறைகளில் கைவைத்துள்ளவர். இவற்றைவிட, வானெ7லிவாயில7க நலமாக வாழ்வோம்"எனும்நிகழ்ச்சியையும் வழங்கிவருகிற7ர் தொலைக்காட்சியிலும், சுகவாழ்வு பற்றிய நிகழ்ச்சிகளில் பங்குகொண்டு அரும்பணிபுரிந்து வருகிற7.தனது அறிவியல்துறை எழுத்துக்கépodš425/7225 d7/7dz52ž-z5fl// LO6ØžZ_6vy7 L/7777, é262váč4z52//zý ///ř27 gaz5flu/- வற்றைப் பெற்றுள்ள77.
மருத்துவபீட மாணவனாக அவரிருந்த காலத்தில் மருத்துவட்ட இந்து மன்றத் தலைவராகவும், இதழாசிரியராகவும் விளங்கிய அவர், கவியரங்கு, மேடை நாடகம் என்பன முலம் L6M27%øý LVII7777Z@%256idz56ØD677uyužb (6)z Vijay6776777777.
அரச7ங்க வைத்தியர7கநாலு வருடங்கள் கடமை புரிந்த டாக்டர் எம். கே. முருகானந்தன் அவர்கள், கடந்த இருபத்தொரு வருடங்கள7க குடும்ப வைத்தியராக தொடர்ந்தும் சேவையாற்றி வருகிறார். அவர் எழுதி மிகச் சமிபத்தில் வெளியான நீங்கள் நலம7க." எனும் நூல் சமுகப் பணியில் ஒரு மைல்கல் எனக் கற்றோர7ல் கணிக்கப்பட்டுள்ளது

Page 40
"கரும வியாதி, எனக்கு வந்து கழுத்தறுக்கிறது" என பக்கத்துவிட்டு செல்லம்மா பாட்டி அங்கலாய்க்கிறாள்.
"குளித்ததால் வந்ததா முழுகியதால் வந்ததா" எனக் காரணங்களைத் தேடி களைத்துப் போனார் எதிர்வீட்டு சலிம்
நானா.
வாழைப்பழம், மோர், தயிர், வெண்டிக்காய் என ஒவ்வொன்றாகத் தவிர்த்து கடைசியாக இப்பொழுது சுட்டு ஆறிய நீரைத் தவிர, வேறெதுவும் சாப்பிட முடியாத பத்தியத்தில் திணறுகிறாள் மேரி.
சாதி, மத, இன வேறுபாடுகளைக் கடந்து, இவர்கள் எல்லோன்ரயும் தொல்லைப்படுத்துவது இந்த ஆஸ்த்மா நோய்தான்.
இன்று பரவலாக மனித இனத்தை தொல்லைக்கு உள்ளாக்கும் நோய்தான் இது.
கைத்தொழில் நாடுகளில் 2 முதல் 6 வீதமான பெரியவர்களையும், 15 முதல் 20 வீதமான குழந்தைகளையும் இது அல்லற்படுத்துகிறதாம். வாகனங்களின் புகையும், தொழிற்சாலைகளின் அழுக்குக் காற்றும் துரசியும் தங்கு தடையின்றி காற்று மண்டலத்தில் கலக்கும் எம்மைப் போன்ற வளர்முக நாடுகளில் இந்நோயின் தாக்கம் மிகமிக அதிகம்.
நோயால் வரும் துன்பம் ஒருபுறமிருக்க, அந் நோயைப் பற்றிய தவறான கருத்துகளால் கலங்குபவர்கள் இன்னும் அதிகம்தான்.
எத்தகைய நோய்: "உண்மையில் ஆஸ்த்மா என்றால் என்ன? அது வருவதற்கான காரணங்கள் என்ன ? காரணம் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, அது வராமல் தடுக்கும் வழி என்ன," இவை தானே உங்கள் கேள்விகள் ?
ஆஸ்த்மா என்பது, மூச்செடுப்பதில் ஏற்படும் சிரமமாகும். இது இழுப்பாக அல்லது தொடர்ந்த இருமலாக வெளிப்படலாம். இதற்குக் காரணம், சுவாசக் குழாயில் ஏற்படும் ஒருவித

அழற்சியாகும். இவ் அழற்சியால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பட்டு சுருங்கி இறுக்கமடைகின்றன. இதனால் சளியும், சுவாசக் குழாயிலிருந்து சுரக்கும் திரவமும், வெளியேற முடியாது தடைப்படுகின்றன.
சளி சுலபமாக வெளியேற முடியாவிட்டால், என்ன நடக்கும் ?அதை வெளியேற்ற எமது சுவாசத் தொகுதி முயலும், அந்த முயற்சி தொடர்ச்சியான இருமலாக வெளிப்படும். இந்த தொடர்ச்சியான இருமல் குழந்தைகளில், ஆஸ்த்மாவிற்கான முக்கிய அறிகுறியாகும். பல குழந்தைகளில் இரவு இருமல் பெரும் தொல்லை கொடுப்பதாக இருக்கிறது. தனியான இரவு இருமல் மாத்திரமே, பல குழந்தைகளின் ஆஸ்த்மாவிற்கான முதல் அறிகுறியாக இருப்பதுண்டு.
இருமலைத் தவிர நெஞ்சு இறுக்கமும், மூச்சு விடுவதில் சிரமமும் தொடரலாம். சுவாசிக்கும்போது நெஞ்சில் ஒரு சத்தமும் இசைக்க ஆரம்பிக்கக் கூடும். இதைத்தான் "ஆஸ்த்மாவின் இராகம்" என ஒரு கவிஞர் பாடினார்.
துண்டும் காரணிகள்: ஆஸ்த்மா என்பது சுவாசக்குழாயில் ஏற்படும் ஒருவித அழற்சி என்றோம். இந்த அழற்சி எதனால் ஏற்படுகிறது ?
நோயைத் தூண்டும் காரணிகளை மருத்துவத்தில் trigger factors என்பார்கள். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பல பொருட்கள் இவ்வாறு தூண்டிகளாகவும் செயற்படும். பெனிசிலின் மருந்து பலருக்கு ஒத்துக் கொள்வதில்லை என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அதனால்தான் டெஸ்ட் ஊசி போட்டுப்பார்த்தபின்னரே, முழுமையான ஊசியைப் போடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். இந்த பெனிசிலின் மருந்து ஊசியாக ஏற்றப்பட்டால் மாத்திரமின்றி, மாத்திரைகளாக உட்கொள்ளப்பட்டாலும் பலரில் ஆஸ்த்மாவை தூண்டிவிடும்.
குழந்தைகளிலும் சில பெரியோர்களிலும் தடிமன் போன்ற வைரஸ் தொற்று நோய்கள், சிலவுேளை இங்கம்த் தூண்டிவிடும்.
7
S

Page 41
வேறுசிலரில், சில்லென வீசும் குளிர் காற்று ஆஸ்த்மாவைக் கிளப்பிவிடும். குளிரூட்டப்பட்ட அறைக்கு உள்ளும் வெளியேயும் ஒடித் திரியும் சிலருக்கு சூழலின் வெப்பமாற். றங்கள் ஆஸ்த்மா தூண்டப்படுவதற்குக் காரணமாகின்றன.
"பக்தி மணத்தைத் "தூண்டும் ஊது பத்தியின் வாச. னையும், மிளகாய்ப் பொரியலும், உணவு தாளிக்கும் மணமும் கூட சிலருக்கு ஆஸ்த்மாவை கிளப்பிவிடும். காதலியின் உடல் வாசனை இயற்கையானதா, செயற்கையானதா என முகர்ந்து ஆராயப் புகுந்த சினிமாத்தனமான காதலன், அவளின் சென்ட் வாசனையால் ஆஸ்த்மா வெடித்துக் கிளம்ப, ஆளைவிட்டால் போதும் என ஒடித் தப்பியது கட்டுக் கதையல்ல.
ஆம். கடுமையான எந்த மணமும் ஆஸ்த்மா தொடங்குவதற்குக் காரணமாகலாம்.
கனடாவிலிருந்து வந்த ஒருவர் தம்பி வீட்டிலுள்ள பொமேரியனை (நாயை) மடியில் வைத்துக் கொஞ்சிய கையோடு மூச்செடுக்க முடியாமல் திணறிக்கொண்டு ஓடி வந்து நெபுலைசர் (Nebuliser) பிடித்தது அண்மையில் நடந்த இன்னுமொரு உதாரணமாகும். வீட்டு செல்லப் பிராணிகளான நாய், பூனை போன்றவற்றின் தோலிலுள்ள முடிகள் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணமாக இனங் காணப்பட்டுள்ளன. மிருகங்களின் இயற்கை முடிகள் மாத்திரமன்றி குழந்தைகள் படுக்கையில் கட்டியணைத்துக் கொண்டு உறங்கும் கரடி,நாய் பொம்மைகளில் படிந்திருக்கும் தூசிகள் பல, குழந்தைகளின் ஆஸ்த்மாவிற்கான தூண்டிகளாக இருக்கின்றன.
புகை பிடிக்கும் பலரின் இருமலுக்குக் காரணமாக இருப்பது புகையிலையின் புகைதான் என்பதை பலரும் சுலபமாக மறந்து விடுகிறார்கள். புகைப்பவருக்கு மாத்திரமின்றி, புகைப்பவரின் குழந்தைக்கும் மனைவிக்கும் கூட அவர் பரப்பும் புகை இருமலையும் ஆஸ்த்மாவையும், கொண்டு வரலாம். புகைத்தலைநிறுத்தியவுடன், இருமலும் ஆஸ்த்மாவும் பலருக்கு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

பஞ்சு மெத்தையின் சூட்டு இருமல்: பஞ்சு மெத்தையின் சூட்டினால் இருமுகிறது எனப் பலரும் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். தலையணையிலும் மெத்தையிலும் உள்ள பஞ்சில் "L6b, 60LD" (dust mite) 6T6ip (B60ii 600db (5 6lo ULT5 நுண்கிருமி ஒளிந்திருக்கும். இது எமது உடலிலிருந்து தினமும் உதிரும் சிறு தோல் துணிக்கைகளை உண்டு உயிர் வாழும் கிருமியாகும். இதுவும் ஆஸ்த்மாவைத் தூண்டும் முக்கிய காரணியாக இனங் காணப்பட்டுள்ளது.
கரப்பொத்தான் பூச்சியின் எச்சமும், இன்னுமொரு துரண்டியாகும்.
தூசிக்கும் ஆஸ்த்மாவிற்குமுள்ள தொடர்பு நன்கு அறியப்பட்டதே. தூசி தட்டினால் அல்லது அடைத்துக் கிடந்த புத்தகங்களுக்கும் ஆடைகளுக்கும் கிட்டப் போனாலே சிலருக்கு தும்மலும் முக்கால்நீர் வடிதலும் இருமலும் தொடங்கி ஆஸ்த்மாவாக மாறித் தொல்லை கொடுக்கும்.
மோட்டார் சைக்கிளிலும் ஸ்கூட்டரிலும் செல்லும் பலர் முகமுடித் திருடர்கள் போல மூக்கை கைக்குட்டையால் கட்டிக் கொண்டு விரைவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள். திருடன் எனப் பொலிசிக்குத் தகவல் கொடுக்க ஓடுகிறீர்களா? சற்றுப் பொறுங்கள். பாவம்! முகத் துணியைக் கழற்றினால் வாகனங்கள் கிளப்பும் தூசியால் நடுவழியில் ஆஸ்த்மாவால் அவர்கள் சிரமப்பட நேரிடும்.
மனச்சோர்வு, மனப்பதற்றம் போன்ற மனக் குழப்பங்களும் சிலருக்கு ஆஸ்த்மாவைத் தூண்டுவதுண்டு.
இவற்றைத் தவிர கடுமையான உடற்பயிற்சிகளும் காரணமாகலாம். ஒடி, ஆடி விளையாடினால் சில பிள்ளைகளுக்கு ஆஸ்த்மா தொடங்கிவிடுவதுண்டு. வேர்க்கக் களைக்க விளையாடினால் உங்கள் குழந்தைக்கு ஆஸ்த்மா வருகிறது என்பதற்காக அதன் விளையாட்டை நிறுத்திவிடாதீர்கள். விளையாட்டு அவர்களின் உடல், மனோ வளர்ச்சிகளுக்கு

Page 42
மிகவும் அவசியமானது. ஆஸ்த்மாவைத் தடுப்பதற்கான மருந்தை வைத்திய ஆலோசனையுடன் கொடுத்துவிட்டு அவர்களை வழமை போல விளையாட விடுங்கள்.
வேறு மாத்திரைகள்: வெவ்வேறு நோய்களுக்காக உபயோகிக்கும் சில மருந்துகளும் சிலருக்கு ஆஸ்த்மாவைத் தூண்டிவிடுவதுண்டு. உதாரணமாக அஸ்பிரின், புரூபன் (buprofen) இன்டோமெதசின் (indomethacine) போன்ற பல வலிநிவாரணி மாத்திரைகள், ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன.
இதேபோல உயர் இரத்த அழுத்தத்திற்கும் கண் அழுத்தத்திற்கும் உபயோகிக்கும் beta blockers எனும் வகை மருந்துகளும் (உதா - புரபனலோல், டிமலோல்) துண்டிகளாகும்.
சிலரது ஆஸ்த்மாவை பருவகால ஆஸ்த்மா (Seasonal asthma) எனக் குறிப்பிடுவோம். மரங் கொள்ளாமல் பூத்துக் குலுங்கும் காலங்களில் பூக்களில் உள்ள மகரந்தம் காற்றில் பரவிச் சிலருக்கு ஆஸ்த்மாவுக்குக் காரணமாகிவிடும். பருவகால வேறுபாடுகள் துல்லியமாக உள்ள மேலை நாடுகளில்தான் இதனைக் காணலாம். வருடம் முழுவதும் பூத்துக் குலுங்கும் எமது போன்ற வெப்பவலய நாடுகளில், ஆஸ்த்மாவிற்கு எந்த நாளும் ஆட்சிதான்.
ஆஸ்த்மாவைத் தடுங்கள்: ஒருவருக்கு ஆஸ்த்மா நோய் என வைத்துக் கொள்வோம். "இந்த வருத்தம் வராமல் தடுக்க முடியாதா ?" என்பதுதான் அவர் வைத்தியரை கேட்கும் முதல் கேள்வியாக இருக்கும். முதல் கேட்கும் கேள்வி மட்டுமல்ல, அடிக்கடி கேட்கும் கேள்வியும் கூட.
வைத்தியரால் கட்டுப்படுத்தத்தான் முடியும். உங்களால்தான் தடுக்க முடியும்.
எப்படி என்கிறீர்களா?
ஆஸ்த்மா நோய்க்கு பல காரணங்கள் உள்ளன. தூண்டும் காரணிகள் பற்றி ஏற்கனவே பார்த்தோம். உங்களுக்கு

நோயைத் தூண்டும் காரணிகளை உங்களால்தானே இனங்காண முடியும்.
சாம்பிராணிப் புகை உங்களுக்கு வரட்டு இருமலையும் இழுப்பையும் ஏற்படுத்துமாயின் அத்தகைய சூழலைத் தவிர்ப்பதன் மூலம், ஆஸ்த்மா தூண்டப்படுவதை நீங்கள் தடுக்கலாம் அல்லவா ?
நீங்கள் தவிர்க்கக் கூடிய ஏனைய விடயங்கள் என்ன ? தவிர்க்க வேண்டிய "துண்டும் காரணிகள்" எவை? உங்களது மெத்தை தலையணை போன்றவற்றை "டஸ்ட் மைட்" தங்கியிருக்க முடியாத பொலித்தீன் அல்லது பிளாஸ்டிக் துணியால் மூடுங்கள். உங்களது படுக்கையறையில் உள்ள மென்மையான துணிகளாலான திரைச்சீலை, தரைவிரிப்பு, கம்பளம் போன்றவற்றை அகற்றுங்கள்.
டஸ்ட் மைட் மறைந்திருக்கக் கூடிய உங்கள் படுக்கை விரிப்பு, தலையணை, மெத்தை, அவற்றின் உறை ஆகியவற்றை அடிக்கடி நல்ல வெயிலில் காயப் போடுங்கள். அக் கிருமிகள் அழிந்து விடும். படுக்கை விரிப்பு, தலையணையுறை, மெத்தையுறை ஆகியவற்றை வாரம் ஒருமுறையாவது55°C சூடுள்ளநீரில் துவைக்க வேண்டும்.
உங்களது படுக்கை விரிப்பின் மேல் ஒரு பன்பாயை போடுங்கள்.
பஞ்சு, துணி போன்றவற்றால் ஆன மென்மையான பொம்மைகள் உங்கள் குழந்தையின் படுக்கையறையிலிருந்து அகற்றுங்கள்.
வீடும் படுக்கையறையும்,நல்ல காற்றோட்டம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
நாய், பூனை. முயல் போன்ற திட்டமான ஒரு வெப்பநிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ, படுக்கவோ அனுமதிக்கா
தீர்கள்.
79

Page 43
உங்களது படுக்கைத் துணிகளிலும், தரைவிரிப்பு போன்ற ஏனைய மென்துணிகளிலும் வசிக்கும் தூசிப் பூச்சி. களை அழிக்க அக்கிரிற்று கொல்லிகளை உபயோகியுங்கள். அத்துடன், கரப்பொத்தான்பூச்சியின் கழிவுகள் ஆஸ்த்மாவை தூண்டும் ஒரு முக்கிய காரணியாகும். எனவே, கரப்பொத்தான் பூச்சியை ஒழிக்க வீட்டை சுத்தமாக வைத்திருப்பதுடன், அவற்றை அழிக்க பூச்சி கொல்லிகளை உபயோகியுங்கள்.
திட்டமான ஒரு வெப்பநிலைக்குரிய பாலூட்டிச் செல்லப் பிராணிகளை உங்கள் படுக்கையறையில் நுழையவோ, படுக்கவோ அனுமதிக்காததுமாத்திரமின்றி, வீட்டில் வளர்ப்பதையும் தவிருங்கள். அது முடியாவிட்டால் அச் செல்லப் பிராணிகளை வாரம் ஒருமுறையாவது, நன்கு குளிப்பாட்டினால் ஆஸ்த்மாவை தவிர்க்கலாம்.
புகை ஆஸ்த்மாவைத் தூண்டும் ஒரு வலிமையான காரணியாகும். எனவே ஆஸ்த்மா நோயாளி புகைத்தலை நிறுத்த வேண்டும். அது மாத்திரமின்றி அவ்வீட்டில் ஏனையவர்கள் புகைத்தலையும் முற்றாகத் தடுக்க வேண்டும்.
சமையலறைப் புகையும், விறகுப் புகை, ஏனைய மரப்பொருட்கள் எரியும் புகை ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆஸ்த்மாவைத் தூண்டுகின்ற மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக அஸ்பிரின், புரபனலலோல், டிமலோல், இன்டமெதசின் போன்றவை.
உணவு பதனிடலில் பயன்படுத்தப்படும் சல்பைற்று (Sulfite) ஆகியவை ஆஸ்த்மாவை மோசமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. உலர்த்திய பழங்கள், பதனிடப்பட்ட உருளைக்கிழங்கு உணவுவகைகள், கோர்டியல், பியர், வைன் ஆகியவற்றில் இது கலந்திருப்பதால் அத்தகைய உணவுகளைத் தவிருங்கள்.

கடுமையான பல மணங்களும் விசிறித் தெளிப்புகளும் (sprays) சுவாசக் குழாய்களை உறுத்தி ஆஸ்த்மாவைத் தூண்டுகின்றன. உதாரணமாக அழகுசாதனப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றைக் கூறலாம். வீட்டில் பயன்படுத்தும் தெளிகருவிகளில் உள்ள வாயுக்களும் காரணமாகலாம். நன்கு உலராத பெயின்ட் வகைகளின் மணமும் ஆஸ்த்மாவை தூண்டக் கூடும்.
அதிகாலையில் வீசும் குளிர் காற்று சிலருக்கு ஆஸ்த்மாவை தூண்டக் கூடும். அதே வேளை அதிகாலையின் நடுங்கும் மார்கழிக் குளிரில், குளிர் நீரினால் தலையில் குளித்தும் சுகமாக இருக்கும் நோயாளிகளும் இருக்கவே செய்கிறார்கள்.
இதுவரை சொல்லியவற்றிலிருந்து உங்களுக்கு ஆஸ்த்மாவை துரண்டும் காரணியை இனங்காண முடிந்ததா? அப்படியானால் நோயை இன்றோடு விரட்டிவிடலாம் அல்லவா? ஆஸ்த்மாவை தூண்டும் காரணியை இனங்காண முடியாவிட்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை. நோயைத் தடுக்கக் கூடிய, நோயைத் தணிக்கக் கூடிய நல்ல சிகிச்சை முறைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
ஆஸ்த்மாவிற்குச் சிகிச்சை: ஆஸ்த்மாவிற்கான சிகிச். சையின் அவசியமும் பலனும் அந்நோயை அனுபவித்தவர். களுக்குத்தான் புரியும்.
மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டு கைகளை மேசையில் ஊன்றியபடி, பேசவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் திடீரெனச் சுகம் கிடைத்தவருக்குத்தான் சிகிச்சையின் அருமை புரியும்.
ஆஸ்த்மாவிற்கு பல சிகிச்சை முறைகள் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஆங்கில வைத்தியம், சித்த ஆயுர்வேத வைத்தியங்கள், யூனானி, ஹோமியோபதி என எல்லா வைத்தியங்களிலும் சிகிச்சை முறைகள் இருக்கவே செய்கிறது. ஏன்
S

Page 44
பாட்டி வைத்தியத்திலும், உங்கள் வீட்டு வைத்தியத்திலும் கூட இருக்கிறதுதானே ?
சிறந்த சிகிச்சையின் அம்சங்களாக எவற்றை நீங்கள் கருதுவீர்கள் 9
* விரைவில் சுகம் கிடைக்க வேண்டும். * சுகம் உடனடியாகக் கிடைப்பது மாத்திரமின்றி, நீடிக்க
வும் வேண்டும். * உங்கள் நாளாந்த வேலைகளைப் பாதிக்கக் கூடாது. * மருந்துகள் பக்க விளைவுகளைக் கொடுக்கக் கூடாது. கைநடுக்கம், ப்தற்றம் போன்ற உடனடிப் பக்கவிளைவுகளை மாத்திரமின்றி பிரஸர், நீரிழிவு, எலும்புச் சிதைவு போன்ற எதிர்காலப் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக்
din ITg5. * மருத்துவச் செலவு உங்கள் கைக்கு அடக்கமாக
இருக்க வேண்டும். அவ்வளவுதானே ?
சிகிச்சை முறைகள்: ஆங்கில வைத்தியத்தைப்பொறுத்த வரையில், சிகிச்சை முறைகளை மூன்றாக வகுக்கலாம்.
* வாய்வழி உட்கொள்ளும் மாத்திரைகள், சிரய்மருந்துகள். * ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும்
மருந்துகள். * முச்சுக்குழாய் வழியே செலுத்தப்படும் மருந்துகள்
வாய்வழி உட்கொள்ளப்படும் மாத்திரை, சிரப் மருந்துகளே இங்கு பெரும்பாலானவர்களால் உபயோகிக்கப்படுகிறது. அது விலை குறைவாக இருப்பதும், வேறு நல்ல சிகிச்சை முறைகள் இருப்பது பற்றிய அறிவின்மையுமே இதனையே தொடர்ந்து பாவிப்பதற்கான காரணமாகும்.

ஊசி ஊடாக நாளத்தில் நேரடியாகச் செலுத்தப்படும் மருந்துகள் சில மிகக் கடுமையான வேளைகளில் மட்டுமே இப்பொழுது உபயோகிக்கப்படுகிறது.
மூச்சுக் குழாய் ஊடாக உள்ளிழுக்கும் கருவிகளையே (inhalers - இன் ஹேலர்) இப்பொழுது வைத்தியர்கள் பெரும்பாலும் ஆஸ்த்மா நோயாளிகளுக்கு சிபார்சு செய்கிறார்கள். இதற்குக் காரணம், அதன் துரித செயற்பாடும் பக்கவிளைவுகள் அற்ற தன்மையுமே ஆகும்.
எனினும் எம்மைப் போன்ற வறிய நாடுகளில் பெரும்பாலான நோயாளிகள் இன்னமும் மாத்திரைகளையே உபயோகிப்பதற்கு காரணம் மாத்திரைகளோடு ஒப்பிடும் போது இன்ஹேலர்களின் கூடியவிலைதான். போருக்குப் பணத்தை அள்ளிக்கொட்டும் பிச்சைக்கார அரசுகள், நோயாளிகளுக்கான இலவச மருத்துவச் செலவில்தானே கஞ்சத்தனம் காட்டமுடியும்!
இன்னுமொரு காரணத்தையும் சொல்லலாம். பெரும்பாலான நோயாளிகளுக்கு "இன்ஹேலர்" என்றாலே ஒருவித பயம் இன்னும் நிலவுகிறது.
"இது கடுமையான நோயாளர்களுக்கு மாத்திரம் தேவை யான வைத்தியம், எனக்கு அவசியமில்லை"
"இன்ஹேலரைப் பழகினால் பிறகு கைவிடமுடியாது" "இது ஆபத்தான முறை, உயிராபத்தையும் கொண்டு வரும்" என்பது போன்ற பலவிதமான தவறான கருத்துக்கள் நோயாளர்களிடையே நிலவுகிறது. இதனால் "இன்ஹேலர்" பாவிக்க அவர்கள்தயங்குகிறார்கள்.
ஆனால், இன்ஹேலர்கள் உண்மையில் ஆபத்தற்ற மிகவும் பாதுகாப்பான சிறந்த சிகிச்சை முறையாகும் என்பதே உண்மையாகும்.
ஆரம்பநிலை ஆஸ்த்மா நோயாளிகளுக்கு கூட மிகவும் உகந்தது.

Page 45
இன்ஹேலர்கள் ஏன் சிறந்தவை: மருந்துகளை மாத்தி.
ரைகளை உட்கொள்ளும் போது அவை உணவுக்குழாயினால் உறிஞ்சப்பட்டு, குருதிச் சுற்றோட்டத்தில் கலந்து, மிக நீண்ட நேரத்தின் பின்னர், அதுவும் உட்கொள்ளப்பட்டதின் மிகச் சிறிய அளவே சுவாசப்பையை அடைகிறது. எனவே, போதிய நிவாரணம் கிடைக்க வேண்டுமாயின் அதிகளவு மருந்தை எடுக்க வேண்டும். இது பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
1.
2.
ஆனால் இன்ஹேலர்கள் நேரடியாக சுவாசப்பையினுள் மருந்தைச் செலுத்துவதால், மிகக் குறைந்த அளவு மருந்தே போதுமானது. மாத்திரைகள் மில்லி கிராம் அளவில் கொடுக்கப்படுகின்றன. ஆனால் இன்ஹேலர் மருந்துகள் அதில் நூறு மடங்கு குறைவான, மைக்கிரோ கிராம் அளவிலேயே கொடுக்கப்படுகின்றன. இதனால், உடலுக்கு ஏற்படும் பக்கவிளைவுகள், இல்லையெனும் அளவிற்கு குறைந்துவிடுகிறது. இன்ஹேலர் மருந்துகள் சுவாசப்பையினுள் நேரடியாகச் செலுத்தப்படுவதால் மிக விரைவாகவும் குணமாக்குகிறது. அதேபோல குறைந்த அளவு மருந்தே பாவிக்கப்படுவதால், இது ஆபத்தற்ற பாதுகாப்பான சிகிச்சை முறையுமாகும்.
மருந்து வகைகள்: நீங்கள் எத்தகைய வழியில் மருந்து
களை உள்ளெடுத்தாலும், அவை அடிப்படையில் இரண்டு
66Dasso)6
1.
சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் (bronchodilators) எனப்படுபவை. இவற்றை உடனடி நிவாரணம் அளிக்கும் மருந்துகள் எனவும் கூறலாம்.

இவை ஆஸ்த்மாவின் போது சுருக்கமடையும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்து சுவாசத்தைச் சுலபமாக்கும். நீங்கள் பெரும்பாலும் உபயோகிக்கும் வென்டோலின் - சல்பியுடமோல் , பிரிக்கானில் - ரெபியு. டலன், அமைனோபிலின் போன்றவை இந்த வகையைச் சேர்ந்தவை.
2. 9typidd5(5 6725y (T607606) (anti inflammatory agents) எனப்படுபவை. இவை உடனடி நிவாரணம் அளிப்பதில்லை. ஆனால், சுவாசக் குழாய்களின் அழற்சியை நீண்ட கால அளவில் இவை தணிப்பதால் நோய் அடிக்கடி வருவதையும், நோய் மோசமடைவதையும் தடுக்கின்றன.
எனவே ஆஸ்த்மாவிற்கான சிகிச்சையில் இவை இரண்
டுமே முக்கியமானவைதான். ஆயினும், அழற்சிக்கு எதிரான மருந்துகளின் முக்கியத்துவம் பற்றி கூறவேண்டும். கோர்டிகோ ஸ்டீரொயிட் வகை மருந்துகள் இதில் அடங்குகின்றன.
பிரட்னிசொலோன், பீட்டாமெதசோன் போன்ற மாத்திரைகள் சில உதாரணங்களாகும். இவை கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. ஆனால், இன்ஹேலர் மூலம் கொடுக்கப்படும் இதே வகையைச் சேர்ந்த புதிய மருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே கொடுக்கப்படுவதால் ஆபத்தற்றது.
இது புதுவகை மருந்து - எங்களில்தான் பரீட்சித்துப் பார்க்கிறீகளோ என நீங்கள் பயப்பட வேண்டியதில்லை கடந்த இருபத்தியேழு வருடங்களுக்கு மேலாக பாவனையில் இருக்கின்றன. விலை அதிகம் என்பதால் முன்பு இலங்கையில் பெருமளவு பாவனையில் இருக்கவில்லை. இப்பொழுது கைக்கு அடக்கமான விலையில் கிடைக்கிறது. எனவே பரவலான பாவனைக்கு வந்துள்ளது.

Page 46
உங்களுக்கான மருந்து எது? உங்களுக்கு உகந்த மருந்து எது ?
உங்களுக்கான மருந்து உங்கள் நோயின் நிலையில் தங்கியுள்ளது. நோயில் பல நிலைகள் உள்ளன. அதற்கேற்ப சிகிச்சையில் மாற்றங்கள் தேவைப்படும். சுருக்கம் கருதி இங்கு gy6oo. Tati ‘fkätf8GIJI
இடையிடையே தலைகாட்டும் குறைந்த ஆஸ்த்மா : உங்களுக்கு ஆஸ்த்மாவின் தாக்கம் இடையிடையேதான் வருகிறது. அதாவது வாரத்திற்கு இரண்டு முறைக்கு குறைவாகவே வந்து அதற்கு இடைப்பட்ட காலத்தில் நோய்க்கான எந்த அறிகுறியும் இருப்பதில்லை எனில், நீங்கள் நோயின் அறிகுறி தோன்றும் நேரங்களில் மட்டும் சுவாசக் குழாய்களை விரிவடையச் செய்யும் (bronchodilators) எனப்படும் முதலாவது வகை மருந்துகளில் ஒன்றை மட்டும் பாவித்தால் போதுமானதாகும். அதாவது வென்டோலின், பிரிக்கானில் போன்ற ஒரு மருந்தை இன்ஹேலராக உபயோகித்தால் போதுமானது.
ஏனையவர்களுக்கு: ஏனையவர்களுக்கு இரண்டு வகை மருந்துகளையும் அதாவது நோயின் வாதையை உடனடியாகத் தணிக்கும் மருந்துகளையும் நோய் வராமல் தடுக்கும் மருந்துகளையும் பாவிக்க வேண்டியிருக்கும்.
அதாவது வென்டோலின் பிரிக்கானில் போன்றவற்றில் ஒன்றையும், சைக்கிளசோன், பெகடைட், பல்மிகோர்ட் போன்றவற்றில் ஒன்றையும் நாளாந்தம் பாவிக்க வேண்டியிருக்கும்.
எந்தெந்த மருந்துகளை எந்தெந்த அளவுகளில், எத்தனை தடவைகள் உபயோகிக்க வேண்டும் என்பதை உங்கள் வைத்தியர்தான் தீர்மானிக்க வேண்டும்.
(9 0 0} {0} {3}

இலங்கையில் புற்றுநோய்
வைத்திய கலாநிதி வாணி உக்கிரப்பெருவழுதி பிள்ளை மஹரகம புற்றுநோய் வைத்திய நிலையம், மஹரகம.
மெதுநாட்டில், புற்றுநோயால் இன்று பலர் தாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை நாமறிவோம். இந்த அதிகரித்த தாக்கத்துக்கு காரணங்கள் பல இருக்கலாம். அவற்றுள் சில
6) ICBLDIT:
1. வைத்திய வசதிகள் அதிகரித்திருப்பதனால் நோய்க்
கண்டுபிடிப்பு அநேகமான நோய்களில் எளிதாகின்றது.
2. மக்களின் அறிவும் இந்நோயைப் பற்றிய ரீதியில்
விசாலமடைந்துள்ளமை,
3. நோய்க்கான சிகிச்சைமுறைகள் பல பரீட்சார்த்தமாகக்
கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை,
4. மக்களின் வாழ்க்கைத் தரம், உணவு முறை என்பன (உதாரணமாக - புதிய காய்கறிகள் உண்ணுவதைக் குறைத்து குளிரூட்டப்பட்ட மாமிச வர்க்கங்களைப் பாவிப்பது, நார்த்தன்மை கூடிய உணவுவகைகளைப்

Page 47
புறக்கணிப்பது என்பவையாகும். இப்போது பெரும்பாலோரின் நாட்டம் திடீர் உணவு வகைகளில் செல்வதும்
மிக எளிதில் புலப்படும்.
5. சூழல் மாசுபடிவதும் புற்றுநோய்க்கான ஒரு காரண
штGђtD.
எமது நாட்டில் மட்டுமல்ல, உலகம் பூராவும் இந்த நோய் பலரைப் பற்றியுள்ளது. இதற்கான சிகிச்சை முறைகளைக் காண பல நாடுகள் - ஒவ்வொன்றும் தனித்தனியாகவோ, மற்றைய நாடுகளுடன் சேர்ந்தோ - ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளன. பணமுதலீட்டு அமைப்புகள் பல, இதற்கான உதவி ஒத்தாசைகள் புரிகின்றன.
எமதுநாட்டிலும், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசம் போன்ற வளர்முக நாடுகளிலும் வாய்ப்புற்று நோய் மிக அதிக அளவில் ஏற்படுகின்றது. இதற்கான காரணம், இந்த நாடுகளிலுள்ளோர் வெற்றிலை, பாக்கு, புகையிலை, சுண்ணாம்புடன் சேர்த்து மெல்லுவதுதான்.
இங்கே புகையிலையும், சுண்ணாம்பும் வாயிலிருக்கும் மென்சவ்வுக்கு ஊறுவிளைவித்து நாளாவட்டத்தில், கலங்களுக்கு ஒர் அசாதாரண இனப்பெருக்க வாய்ப்புக்கு வழிவகுத்து விடுகின்றது.
அடுத்து, களப்புற்றுநோயைக் கூறலாம். இது புகைத்தல் காரணமாக உடம்பில் ஏற்படும் சோகை - உணவுப் பற்றாக்குறை முதலிய காரணங்களினால் ஏற்படலாம்.
பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோயில் ஏறத்தாழ 20 சதவீதம் மார்புப் புற்றுநோயும் 20 சத வீதம் கர்பப்பை புற்றுநோயுமாகும்.
விதிவிலக்கல்ல: குழந்தைகளும் இந்நோய்க்கு விதிவிலக்
கல்ல. மஹரகம புற்றுநோய் நிலையத்தில், ஏறத்தாழ 80 முதல் 100 வரை சிறார்கள் தினமும் அங்கே தங்கிச் சிகிச்சை

பெறுகின்றார்கள். இவர்களைப் பொறுத்தவரையில், இரத்தப் புற்றுநோய் பாதியும் கட்டிப் புற்றுநோய் பாதியுமாக ஏற்படுகின்றது. இந்தக் கட்டிப் புற்றில், 40 சதவீதம் மூளையிலும் 20 சதவீதம் சிறுநீரகம் மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் 10 சதவீதமும், மிகுதி கண்கள் எலும்பு, ஈரல் முதலிய இடங்களிலும் ஏற்படலாம்.
சிறுவர்கள் தாயின் நெருங்கிய பராமரிப்பில் இருப்பதனால், நோய்க்கான ஆரம்ப அடையாளம் கண்டவுடன் அநேகமானோர் வைத்தியரிடம் எடுத்துச் செல்லப்படுகின்றனர். பன்னெடுங்காலமாக மஹரகமவிலுள்ள புற்றுநோய்ச் சிகிச்சை நிலையம் பலவகையான புற்றுநோய்களுக்குச் சிகிச்சையளிக்கும் நிலையமாக விளங்கி வந்துள்ளது. கதிர்வீச்சு சிகிச்சை முறையும், இங்கே மேற்கொள்ளப்படுவதனால், மக்கள் நெருக்கம் குறைந்த இடத்திலேயே இது ஆரம்பிக்கப்பட்டது. அக்காலத்தில் இந்தக் கதிர்வீச்சைப் பற்றிய பயம் மக்களிடையே நிறைய இருந்தது. அளவிடப்பட்ட வைத்தியசிகிச்சைக்காக மேற்கொள்ளக் கூடிய கதிர்வீச்ச. ானது, சாதாரண மக்களிடையே, இனப்பெருக்க உறுப்புகளிலே படுமாயின், வேண்டாத விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்ற பயம் மக்களிடையே இருந்து வந்தது.
மருத்துவச் சிகிச்சைக்குப்பயன்படுத்தப்படும் கதிர்வீச்ச. ானது, மிகவும் அவதானமாகக் கையாளப்படுகின்றது. இதனால் இத்தகைய பயங்கள் அனாவசியமானவையே.
ஆனால், இன்றோ கட்டிடக்கலையின் அபிவிருத்தியால், இவ்வித சிகிச்சை நிலையங்கள் - அரசினர் ஆஸ்பத்திரிக் கட்டிடங்களையொட்டி அமைக்கக் கூடியதாக உள்ளது. அவ்வாறு அமைந்ததே கண்டி, காலி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் உள்ள புற்றுநோய்ச் சிகிச்சைநிலையங்களாகும். கண்டிச் சிகிச்சை நிலையம் பல வருடங்கட்கு முன் ஆரம்பிக்கப்பட்டு, இன்று மூன்று விசேட வைத்தியருடன் செயல்பட்டு வருகின்றது. காலியில் உள்ள நிலையம் சமீப

Page 48
காலமாக இரண்டு வைத்திய நிபுணருடனும், இப்போது மிகச் சமீப காலமாக அநுராதபுர அரசினர் வைத்திய நிலையத்தில் புற்றுநோய் வைத்தியர் ஒருவரின் துணையுடனும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. வடக்கே இருக்கும் ஒரேயொரு நிலையமான தெல்லிப்பளை புற்றுநோய் வைத்திய நிலையம், பல காரணங்களை முன்னிட்டு பல வருடங்களாக இயங்க முடியாமலிருக்கின்றது. வைத்தியர் பற்றாக்குறை, சீரற்ற நாட்டு நிலை காரணமாக இந்த நிலையம் எப்போது இயங்க முடியும் என்று சொல்லத் தெரியவில்லை. பல வருடங்களுக்கு முன் தெல்லிப்பழைநிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கோபால்ட் (cobolt60) சிகிச்சைப்பகுதி, இயந்திரத்திலிருந்து அகற்றப்பட்டு மறுபடியும் அது ஆங்கே பொருத்தப்படாமையால் தமிழ் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உண்மைநிலைமையென்னவென்றால் இந்த கேபால்ட் 60 என்பது ஒரு கதிர்வீச்சைக் கொடுக்கக் கூடிய Isotope ஆகும். இதிலிருந்து எந்நேரமும் கதிர்வீச்சு வெளியாகிக் கொண்டே இருக்கும். இதனால், இந்தப் பொருளை மிகுந்த கவனத்துடன் பாதுகாக்க வேண்டும். இப்பொருள் ஐந்து வருடங்களுக்கு, தொடர்ந்து கதிர்வீசும் தன்மையுடையது. மேற்கொண்டு ஐந்து வருடங்களின் பின், தனது வீரியத்தில் பாதியுடன் செயல்படவல்லது. இந்த இயல்புகளினால், இப்பொருள் ஒவ்வொரு ஐந்து வருடகாலத்துள்ளும், மாற்றப்பட வேண்டும்.
தெல்லிப்பழையில் இந்த cobolt 60 பொருத்திய சமயம் இந்த சிகிச்சையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய தகுந்த நிபுணர் எவரும் அங்கே கடமையாற்ற இல்லாத காரணத்தால், அந்தcobolt60கதிர்வீச்சுப் பொருள் அங்கிருந்து அகற்றப்பட்டு, வேறு சிகிச்சை நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
இப்போது பல வைத்தியர்கள், புற்றுநோய் வைத்திய நிபுணத்துவத்துக்கான பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் யாரேனும் வடமாகாண நிலையத்துக்கு பொறுப்பாக வந்து சிகிச்சையை ஆரம்பிக்கக் கூடும். அதுவரை, யாழ்ப்பாணத்திலிருந்து புற்றுநோயாளர் மிகவும் சிரமத்துக்கு

மத்தியில் மஹரகம சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பப்படுகிறார்கள்.
இதற்கிடையில், யாழ்ப்பாணத்தில் நிலவும் போர்ச்சூழலினால் - வைத்திய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் - புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிப்பதற்கும் நோயாளரை தாமதமின்றி அனுப்புவதற்கும் தடங்கல் ஏற்படுகின்றது.
நோயாளர் பிரச்சினை:
தமிழ் பேசும் நோயாளர் பலர் தமது நோயின் விபரமறிய ஆற்றலற்றவர்களாயிருக்கிறார்கள். 90 வீதம் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த வைத்தியர்களே நிபுணர்களாக இருக்கிறார்கள். நிபுணத்துவம் பெற்ற பலர் எம்மத்தியில் இருந்தபோதும், பல காரணங்களை முன்னிட்டு, இவர்கள் வெளிநாடுகளில் வேலைபெற்றுச் சென்றுவிட்டனர். இதனால் வசதிபடைத்தோர் பெரும் கிலேசம் கொண்டு, வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக செல்ல முற்படுகின்றனர்.
இன்று, இலங்கையில் புற்றுநோய்ச் சிகிச்சை ஓரளவு முன்னேற்றம் பெற்றுள்ளது. நிபுணத்துவ வைத்தியர், பல நாடுகளுக்குச் சென்று அந்தந்த நாடுகளின் சிகிச்சை முறையில் தேர்ச்சி பெற்று வந்துள்ளனர். இன்று எம் நாட்டிலும் மேற்கத்திய சிகிச்சை முறைகள், சிற்சில மாறுதல்களுடன் செய்யப்படுகின்றன.
ஊசி மருந்துகள் - மற்றும் தேவையான மருந்துகள் தருவிக்கப்படுகின்றன.
இந்த நோய்க்கான வைத்தியமுறை பலதரப்படும். கதிர் சிகிச்சை, சத்திரசிகிச்சை, மருந்துகளால் கொடுக்கப்படும் சிகிச்சை என சிகிச்சைகள் பலவகைப்படும்.
abgóri áfdélőF6ODớF teletherapy. brachytherapy 67 607 g)(b- வகைப்படும். முன்னையது கருவியின் மூலம், கதிர்கள் ஒரளவு தூரத்திலிருந்து நோயுற்ற பகுதிக்கு செல்வது ஆகும். பின்னையது மிகவும் கிட்டிய தூரத்திலிருந்து அல்லது நோயுள்ள

Page 49
பகுதிக்குள் செலுத்தப்படுவதாகும். இம்முறையில் நோயுள்ள பகுதியினுள் ஊசி வடிவ அல்லது இழைவடிவ கதிர்வீச்சுப் பொருள்களை செலுத்துவதாகும்.
gifọuub (iridium) đffuub (caesium) gösbábub (3UIT6ösm பொருட்கள் இதற்குப் பாவிக்கப்படும். சில வேளை கோபால்ட் 60 கதிர்வீச்சைப் பயன்படுத்தி, கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற குழாய் அல்லது வெளியிடம் உள்ள இடங்களுக்கு கதிர்வீச்சு செலுத்தப்படும்.
முன்னர் ரேடியம் (radium) கண்டுபிடித்த காலத்தில் இச்சிகிச்சை ரேடியம் பாவித்தே செயல்படுத்தப்பட்டது. ஆனால், வேண்டாத விளைவுகள் இதில் இருந்ததனால், இப்போது இதன் பாவனை அருகி வந்துள்ளது. ஆனால் அதே பயனைத் தரக்கூடிய பக்கவிளைவுகள் அதிகமற்ற, புதிய கண்டுபிடிப்புகள் பெரிதும் புழக்கத்திற்கு வந்துள்ளன.
சத்திரசிகிச்சையினால், புற்றுநோயால் தாக்குண்ட அவயவழும், அதைத் தொடர இருந்த இழையங்களும் வெட்டி அகற்றப்படும். முற்றாக புற்றுநோய் அகற்றப்படாவிட்டால், சில சமயங்களில், கதிர்வீச்சையும் சேர்த்து கொடுக்க வேண்டி
6) IC5LD.
※女米女※女※女※
உனக்கு உண்டாகும் துன் ug: insiger
ந்த வகையிலாவது ஒன்றில் ஒழுங்கீனமாக நடந்து ாண்டதும்*உன்னுடைய அகங்காரமுமே தான்
 

டாக்டர். எம். எச். எம். நளிம் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வைத்திய வளாக விரிவுரையாளர்
ിക/மும்புப் பல்கலைக் கழகத்தின் சுதேச வைத்திய வள7ாக விரிவுரையாளரான டாக்டர் எம். எச். எம். நளீம், கல்ஹரின்னையைச் சேர்ந்தவர். கல்ஹின்னை அல் மன7ர் தேசிய கல்லூரியில் கல்விப் பொதுத்தராதரசாதாரணதரம் வரைபடித்து பின்னர் அக்குறனை மத்திய கல்லூரியில் படித்து கல்விப் பொதுத் தராதர உயர்தரத்தில் சித்தியெய்தினார். அதன் பின், மருத்துவக் assié250D// 62ai02/60i/ //f.
கிரேக்க நாட்டில் ஆரம்பித்த யூனாணி மருத்துவம் அராபியர்களினால் மேலும் அபிவிருத்தி செய்யப்பட்டு முழு உலகிற்கும் பரப்பப்பட்டது. 16ம் நூற்றாண்டுவரை உலக மக்களின் சுகாதாரத்தைப் பேணுவதிலும், நோய் நிவாரணி அளிப்பதிலும் முதன்மை ஸ்தானத்தில் இருந்தது யூனானி வைத்திய முறையே. அராபியர்கள் வியாபார நோக்கத்திற்காக உலகின் எப்பாகங்களுக்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் இந்த வைத்திய முறையையும் அறிமுகப்படுத்தினார்கள். இந்த வகையில், அராபியர்கள் முதலாம் நூற்றாண்டிலிருந்து இலங்கைக்கு வியாபார நோக்கத்திற்காக காலடி வைத்த காலந்தொட்டே யூனானி வைத்திய முறையும் இலங்கைக்கு

Page 50
அறிமுகப்படுத்தப்பட்டு, இன்றுவரையும் இம்மண்ணில் நிலைத்திருக்கின்றது.
யூனானி மருத்துவம் முஸ்லிம்களின் ஒரு பரம்பரைச் சொத்தென்றே கூறலாம். அத்துடன், இது ஒரு பெறுமதியானதும் பாதுகாக்கப்பட வேண்டியதுமான மருத்துவமுறை. இந்த 21ம் நூற்றாண்டிலும் இந்த மருத்துவமுறை நிலைகொண்டிருக்கின்றதென்றால், நோய் தீர்க்கும் இந்த வைத்திய முறையின் அபார சக்தியே காரணம். கிரேக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இவ்வைத்திய முறை அராபிய நாடுகளுடாக ஈரான், ஸ்பெயின், பங்களாதேசம், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரப்பப்பட்டு, இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வைத்தியத் துற்ைபயின் முன்னோடி, Boharath (நவீன மருத்துவர்களினால் Hippocrates என அழைக்கப்படுகின்றவர்) ஆகும். இவரையே நவீன மருத்துவத்துறை இன்றும்கூட "மருத்துவத்தின் தந்தை" எனக் கூறுகிறது. இன்றைய நவீன மருத்துவத்துறையின் வளர்ச்சிக்குக் கூட இவரது மருத்துவக் கோட்பாடுகளும், தத்துவங்களும் பெரும் உதவியாக இருக்கின்றன.
6)Q5ᘃĚu î6ör Arastu (Aristotle), Jalinoose (Galen), Abu Cassim Zaharavi (considered as father of Surgery by the West), Abu Ali Ibn Sinna (Avicenna) Sgȳu uTi -60Tmr6of D(5gög56ngöதுறையின் கோட்பாடுகளை உருவாக்குவதிலும் அதன் வளர்ச். சிக்கும் எழுச்சிக்கும் பெரும் பங்காற்றினார்கள். மேலும், இவர்கள் நோயினால் அநுபவித்துக் கொண்டிருந்த மக்களுக்கு சிகிச்சையளித்து யூனாணி மருத்துவத்தின் மகிமையை உலகறியச் செய்தார்கள்.
யூனானி மருத்துவத்துறையின் புதுவடிவமே, இன்றைய நவீன மருத்துவம். இன்றைய நவீன மருத்துவத்துறையில் உடற் கூறியல் (Anatomy) இல் கூறப்பட்டுள்ள அதே விடயங்கள் இற்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே Galen இனால் விபரிக்கப்பட்டுள்ளதற்குச் சான்றுகள் உள்ளன. அத்துடன், இன்றைய அனேக மருத்துவச் சொற்கள் கூட கிரேக்க, அராபிய மொழிகளில் இருந்தே திரிபு பெற்றுள்ளன.

அராபியர்கள் முதலாம் நூற்றாண்டிலிருந்தே இலங்கைக்கு வர ஆரம்பித்து விட்டார்கள். இவர்களில் சிலர் வைத்தியத் துறையிலும் தேர்ச்சி பெற்றிருந்தார்கள். இதன் காரணமாக முற்காலத்தில் இலங்கையை ஆட்சி புரிந்த அரசர்களின் குடும்ப வைத்தியர்களாக அராபியர்கள் இருந்ததை வரலாறு எங்களுக்குக் கூறிக் கொண்டிருக்கிறது. அது மட்டுமன்றி இலங்கை முஸ்லிம்களுக்கும் இவர்கள் இவ்வைத்திய முறையைக் கற்றுக் கொடுத்தார்கள். இன்றுகூட நம் நாட்டின் பல பாகங்களிலும், விசேடமாக முஸ்லிம்கள் செறிந்து வாழும்பகுதிகளில்பரம்பரையூனானி வைத்தியர்கள் உள்ளனர்.
ஆரம்பம் :
இவ்வைத்தியத் துறையின் பெறுமதியை உணர்ந்த இலங்கை அரசு, இவ்வைத்தியத்துறையை மேலும் நவீன விஞ்ஞான தொழிநுட்பங்களையும் நவீன மருத்துவக் கோட்பாடுகளையும் உபயோகித்து அபிவிருத்தி செய்வதற்காக ஆயுர்வேத, சித்த மருத்துவத் துறையுடன் சேர்த்து யூனானியையும் அறிமுகப்படுத்தி, சுதேச வைத்தியக் கல்லூரியை 1929ம் ஆண்டு ஆரம்பித்தது. இதற்காக அக்காலப் பகுதி சட்டசபை அங்கத்தவர் திரு. கே. பாலசிங்கம் அவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் நினைவுகூரப்பட வேண்டிய ஒன்றாகும். இக்கல்லூரிக்கென ஒரு பரிபாலன சபையை உருவாக்கி யூனானி, நவீன மருத்துவப் பாடங்களடங்கிய ஒரு பாடத்திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு இக்கற்கை நெறியைபூர்த்தி செய்த மாணவர்களுக்குடிப்ளோமா சான்றிதழ் வழங்கப்பட்டது. 1977ம் ஆண்டு ஏப்ரல் 8ம் திகதிவரை, இக்கல்லூரி சுதேச வைத்திய அமைச்சினால் பரிபாலிக்கப்பட்டுவந்தது. அதன்பின், இக்கல்லூரி 31ம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் மூலம் கொழும்புப் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. இக்கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றமைக்கு
9S

Page 51
அக்காலப்பகுதியில் கல்வி அமைச்சராக இருந்த அல்ஹாஜ் பதியுத்தீன் மஹ்மூதை முஸ்லிம்கள் மாத்திரமன்றி, சகல சுதேச வைத்தியர்களுமே என்றும் நினைவு கூரவேண்டும். இதற்காக அன்றைய யூனானி மருத்துவபீடத் தலைவர் டாக்டர் எம். ஏ. எம். ஜலால்தீனின் பங்கும் மிக முக்கியமானது. இவர்களினது பங்களிப்பு இன்றேல், இன்றுகூட இக்கல்லூரி பல்கலைக்கழக அந்தஸ்தைப் பெற்றிருக்காது. 1929ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பாடத்திட்டம் 1934, 1941, 1961, 1974 ஆகிய காலப்பகுதிகளில் திருத்தியமைக்கப்பட்டது.
இக்கல்லூரியை பல்கலைக்கழக மட்டத்திற்கு தரமுயர்த்தப்பட்ட பின்பு, பாடத்திட்டத்தையும் பல்கலைக்கழக மட்டத்திற்கு தரமுயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதால் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனக் கிளையின் தலைவர் பேராசிரிய P.N.V. Kurup இன் தலைமையில் ஒரு குழு ஏற்படுத்தப்பட்டு ஆயுர்வேத, சித்த, யூனானி பட்டமாணிக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, 1983ம் ஆண்டு, முதற்தொகுதி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இப்பாடத்திட்டம் நாட்டின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய நோக்கங்களை இலக்காகக் கொண்டு, அமைக்கப்பட்டது. இதன் பிரகாரம் தற்போது இத்துறையைக் கற்று வெளியேறக்கூடிய பட்டதாரிகளிற்குBAMS (ஆயுர்வேத) BUMS (யூனானி) BSMS (சித்த) சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிறுவனத்தை பல்கலைக்கழக மட்டத்திற்கு தர. முயர்த்தப்பட்டு மேற்குறிப்பிட்ட வைத்தியத் துறைகளில் பட்டமாணி பாடத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான நோக்கங்கள் :
நாட்டு மக்களின் நோய்த்தடுப்புத் துறையிலும், நோய் நிவாரணத் துறையிலும் பங்கு கொள்ளக்கூடிய திறமையான வைத்தியர்களை உருவாக்கி, அவர்களை சுகாதார சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம், சிறந்த

வைத்திய சேவையை சுதேச வைத்தியம் மூலம் மக்களுக்கு வழங்குதல்.
- மருத்துவத் துறைக்கு, தீவிர ஆராய்ச்சி மூலம் மேலதிக பங்கை உண்ணாட்டு மருத்துவம் மூலம் அளிப்பதற்காக வேண்டிய சிறந்த ஆராய்ச்சியாளர்களை உருவாக்கல்.
- எதிர்காலத்தில் சிறந்த வைத்தியர்களை உருவாக்குவதற்காக யூனானி, நவீன வைத்தியத் துறைகளில் சிறந்த அறிவும், ஆற்றலும் உடைய விரிவுரையாளர்களை உருவாக்குதல்.
யூனானிப்பட்டதாரித்துறைக்கு கல்விப் பொதுத் தராதர உயர்தர உயிரியல் துறையில் நான்கு பாடங்களில் சித்தி. யடைந்து, 180 க்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் வருடந்தோறும் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். இத்துறை முஸ்லிம்களின் பரம்பரைச் சொத்து என்ற படியாலும், முஸ்லிம்களின் கலாச்சாரத்துடன் நெருக்கமாக உள்ளதாலும் கணிச. மான அளவு முஸ்லிம் மாணவர்களே, இத்துறையில் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இத்துறை, ஐந்து ஆண்டுகால பாடத்திட்டத்தையும் ஒரு வருட பயிற்சியையும் கொண்டது. யூனானி மருத்துவப் பட்டமாணித்துறையில் சகல நவீன மருத்துவப் பாடங்களும் கற்பிக்கப்படுகின்றன. எனவே, நவீன மருத்துவ பீடத்திற்கு செல்வதற்காக முயற்சி செய்து படித்த மாணவர்கள் ஒரு சில புள்ளி வித்தியாசத்தினால் அனுமதி கிடைக்காதவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றக்கூடிய ஒரு நிறுவனமாக இந்நிறுவனம் உள்ளது.
நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளின் காரணமாக இன்று ஐரோப்பிய நாடுகளில்கூட, இம் மருத்துவத்துறை மூலம் சிகிச்சை பெறுவதற்கான கேள்வி கூடிக் கொண்டு செல்கிறது.

Page 52
இவ்வைத்தியத் துறையைப் பாதுகாத்து, தொடர்ந்தும் இந்நாட்டில் உயிர் வாழவைப்பது குறிப்பாக முஸ்லிம்களின் பொறுப்பு. எனவே, முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் இவ்வைத்தியத்துறை சம்பந்தமாக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி, இம்மாணவர்களை யூனானி வைத்தியத் துறையில் கற்க ஊக்கமளிக்கப்படல் வேண்டும்.
உலகில் கல்விமான்களான அறிஞர்கள் தோன்றாதிருப்பின் மனிதர்கள் மிருக நிலைக்கே ஆகியிருப்Litiasai.
கற்றோர்தாம் கற்றதன்படி செயலாற்றாதிருப்பது, விசனிக்கத் தக்கதாகும். அத்தகையோரில் ஒருவராக நீங்கள் ஆகிவிடவேண்டாம்.
பொறுமை அறிவின் அமைச்சன் அன்பு அதன் தந்தை, தாழ்மை அதன் ஆபரணம்.
இமாம் ஷாபி (ரஹற்)

பல் பாதுகாக்கும்
முறைகள்
Dr. S. Suresh, B.D. S.
4/7ழ்ப்பாணம், சுன்னாகத்திலுள்ள ஸ்கந்தவரோதயக் கல்லூரியில் படித்த பின்னர், டாக்டர் சுரேஷ் சென்னையில் கிறிஸ்டியன் கல்லூரியில் பயின்ற7ர். அதண்டபின், பல் மருத்துவக் கல்வியை, மைசூர் பல்கலைக்கழகத்திலும், இலங்கையில் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் பெற்ற7ர். தற்பொழுது தனியார் பல் மருத்துவத் துறையில் சேவை செய்கிற7ர்
மருத்துவ சம்பந்தம7ன நலம7க வாழ்வோம்', 'சுகவாழ்வு" வானொலி தொலைக்காட்சிநிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபற்றிவருவதனால், இவர் பொதுமக்களுக்கு நன்கு அறிமுகம7னவர்.தற்பொழுது ஞாயிறுதினங்களில் ஒளிபரப்பாகும் "உதய தரிசனம் "நதிகழ்ச்சியிலும் பங்கு புற்றுவதுண்டு வானொலியின், “Zo63263/ư/7677 /277ớ7°/6%z3ệớz%/%}ỵớ 456yế25/6)z5/767z%27/7,
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது தமிழ்ப் பழமொழி பெற்றோர்கள் தம் மக்களுக்கு எந்தச் செல்வத்தைத் தேடி வைக்காவிடினும் குறைவற்ற செல்வமாகிய நோயற்ற வாழ்வைத் தேடித் தருதல் வேண்டும். மக்கள் நோயற்ற நல்லுடல் பெற்றிருந்தால், பிற செல்வங்களை எளிதில் தேடிவிடலாம். பிற செல்வங்கள் இருந்தும் நல்ல சுகம் இல்லையேல், வாழ்நாள் முழுவதும் துன்பமே தொடரும்.

Page 53
எனவே, ஆரோக்கியமாக வாழ்வதற்கு நோய் வந்தபின் நீக்க முயல்வதைவிட, நோய்த் தடுப்புப் பணியே சாலச் diplibgp25ft gib. 3gs List(Sul "prevention is better than cure" என்னும் ஆங்கிலப் பழமொழியும் வழங்கலாயிற்று.
சிறுவயதில் பற்கள் பாதுகாக்கப்படாவிட்டால் வாயும் பற்களும் கெடுவதுமட்டுமன்றிப்பல நோய்களுக்குப்பல் நோயே வாயிலாக அமைந்துவிடக்கூடும். பெற்றோர்கள் தம் பிள்ளை. களின் நோயற்ற வாழ்வில் கண்ணும் கருத்துமாக இருத்தல் வேண்டும் என்பது இதனால் புலப்படுகின்றது.
பிள்ளைகளுக்கு நல்வாழ்வளிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு பெற்றோரும் நன்கு அறிந்திருத்தல் மிகவும் அவசியமாகும். மருத்துவத்துறை சம்பந்தமான கட்டுரைகள், புத்தகங்கள், ஆகியவற்றை வாசிப்பதன் மூலமாகவும், வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வரும் மருத்துவத்துறை சார்ந்த கேள்வி - பதில் மற்றும் டாக்டரை நேர்காணல் போன்ற நிகழ்ச்சிகளை நன்கு அவதானித்து வருவதாலும் நாம் நமது மருத்துவ அறிவை சிறிது வளர்த்துக்கொள்வதோடு பல சந்தேகங்களுக்கு விடைகாணவும் வழிபிறக்கின்றது.
மேலைநாடுகளில், மக்கள் குடும்ப வைத்தியரிடம் தங்களை கிரமமாகக், காண்பித்து தேவையான ஆலோசனை. களைப் பெற்றுக்கொள்கிறார்கள். நாமும், நம் நாட்டிலும் இப்படியான ஒரு பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல் மிகவும் அவசியமாகும். குடும்ப வைத்தியர் என்பவர் எங்களை ஆரம்பத்தில் இருந்தே தெரிந்து வைத்திருப்பதனால் எங்களுக்கு உள்ள நோயை மிகவும் இலகுவாக, அத்துடன் நோயின் ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து விடுவதனால் அதற்கான சிகிச்சையை விரைவில் பெற்றுக்கொண்டு குணமாகலாம்.
சில வேளைகளில் குடும்ப வைத்தியரின் அறிவுறுத்தலின் பேரில் நாம் சில மருத்துவத்துறைசார் நிபுணர்களை அணுகவேண்டி ஏற்படலாம். அதாவது "Specialists"என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இம் மருத்துவ நிபுணர்கள்

இத்துறையின் ஒவ்வொரு பகுதியிலும் தனியாகப் பாண்டித்தியம் பெற்று அத்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருபவர்கள்.
பல்மருத்துவத்துறையும் இவற்றில் ஒன்றாகும். பல்மருத்துவத்துறையில், பற்களை மாத்திரமல்லாமல், வாயில் உள்ள மற்றைய பகுதிகளையும் உள்ளடக்கிய சிகிச்சை முறையே நடைமுறையில் இருந்து வருகின்றது. உதாரணமாக, வாயில் உள்ள மற்றைய பகுதிகளான உமிழ்நீர் சுரப்பிகள், தாடை எலும்பு, நாக்கு போன்றவற்றில் தோன்றும் நோய்களுக்கும் நாம் பல் மருத்துவரையே நாடவேண்டும்.
பற்களின் பாகங்கள்: நம் உடல்நலத்தைக் கெடுக்கும் நோய்களைப் பற்றி அறியுமுன், பல்லின் பாகங்களைப்பற்றிநாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.
பல், மூன்று பெரும் பாகங்களை உடையது. அவை "பல்தலை", "பல் கழுத்து", "பல்வேர்" என்பனவாகும். இவற்றுள் ஈற்றுக்கு வெளியே தெரியும் பாகமே பற்தலை எனப்படும். பல் எலும்புக் குழியில் பொருந்தியுள்ள பாகம் பல்வேர் என்று கூறப்படும். அவை இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியே பற்கழுத்து ஆகும்.
பற்தலையின் வெளிப்புறம் உள்ளது "பற்சிப்பி" அல்லது "மிளிரி" எனப்படும் enamal ஆகும். இது எலும்பைவிட உறுதியானது. இதற்கு உள்ளே "பற்காழ்" என்ற (dentin) பாகம் உள்ளது. இது பல்லின் தலைப்புறம் மட்டுமன்றி பல்லின் வேர்ப்புறமும் அமைந்துள்ளது. இதுவும் எலும்பைப் போன்ற உறுதியினையுடைய பாகமாகும். ஆனால், பற்சிப்பியைப் போல் எளிதில் உடையாது. இந்த பற்காழ் பகுதியில் பல நுண்ணிய நரம்புகள் காணப்படும். அதனாலேயே பற்சொத்தை ஏற்படும் போதும் பற்கள் தேயும் போதும் பற்களில் கூச்சம் ஏற்படுகின்றது. பல்லின் நிறம் பெரும்பாலும் பற்காழின் நிறத்தைப் பொறுத்தே அமையும்.
பற்காழின் உள்ளே பல்லின் நடுப்பகுதியில் "பற்கூழ்"

Page 54
என்று அழைக்கப்படும் மென்மையான பாகம் உள்ளது. ஆங்கிலத்தில் இதை "pulp" எனப்படும். பல்லின் இந்தப் பகுதியில் பல நுண்ணிய இரத்தக் குழாய்களும், பல நுண்ணிய நரம்புகளும் ஒன்றோடு ஒன்று பின்னிப் படர்ந்திருக்கும். பல் நோய்கள் காரணமாக இந்தத் திசு அழிந்துவிடும். அப்பொழுது அந்தப் பல் "இறந்த பல்" என்று அழைக்கப்படும்.
பல்வேர்ப் பகுதியில் "பற்காரை" என்ற பாகம் பற்சிப்பிக்குப் பதிலாக அமைந்துள்ளது. வேர்ப்புறத்தில் மட்டும் காணப்படும் இப்பாகம், பல்லின் கழுத்துப் பகுதியில் தொடங்கி, வேர் நுனிவரையில் காணப்படும். இதுவும் மிகக் கடினமான பாகமேயாகும்.
பற்களின் பயன்கள்: பற்கள் பழங்காலந்தொட்டே நன்கு போற்றப்பட்டு வந்திருக்கின்றன. அவை மக்களுக்கு பலவகையான நன்மைகளை அளிக்கின்றன. பற்கள் உணவை உண்பதற்கு மட்டுமே பயன்படுகின்றன என்று நாம் கருதுகிறோம். ஆனால் அவை பொதுவாக மனிதரின் முகத்தோற்றம் எடுப்பாகவும், அழகாகவும் விளங்கவும் உதவுகின்றன. "பல்போனால் சொல் போயிற்று" என்ற பழமொழியை நாம் கேட்டிருக்கின்றோம். பல்லற்ற மனிதரால் திருத்தமாகப் பேசமுடியாது. தெளிவான பேச்சுக்கும் முக அழகிற்கும் காரணமாயிருப்பன பற்களே ஆகும்.
குழந்தைப் பருவத்தில் முளைக்கும் பற்களை "பால் பற்கள்" (Milk teeth) எனவும், பின்னர் முளைக்கும் பற்களை "bib25Jiul liab6in (Permanent teeth)6T6076Ddings)Tiab6ft.
பால் பற்கள்: பால் பற்களின் மொத்த எண்ணிக்கை 20. மேல்தாடையில் 10 பற்களும், கீழ் தாடையில் 10 பற்களுமாக இவை அமைந்துள்ளன. ஒவ்வொரு தாடையிலும் நாலு வெட்டும் பற்களும், இரண்டு வேட்டைப் பற்களும், 4 கடைவாய்ப் பற்களுமாக இவை அமைந்துள்ளன. குழந்தையின் ஆறாவது Digb3dB5 க்கத்ெ ங்கும்இயல்பற்கள்இரண்டரைவயதிற்குள்

முழுவதுமாக முளைத்துவிடுகின்றன. ஆனால், இவை ஐந்தாவது வயதில் இருந்து பத்தாவது வயதிற்குள் தாமாகவே ஒவ்வொன்றாக விழுந்துவிடுகின்றன.
நிரந்தரப் பற்கள்:பின்னர், அதேஇடத்தில் மீண்டும் பற்கள் முளைக்கின்றன. அவற்றிற்குநிலைப்பற்கள் அல்லது நிரந்தரப் பற்கள் என்று பெயர். இவை மொத்தம் 32 ஆகும். ஆறாவது வயதில் முளைக்கத் தொடங்கும் இப்பற்கள் ஞானப் பற்கள் (wisdom teeth) 4 g565g, 126 lug5ig56i (p6061Tg5g56Gd56ip607. இந்த ஞானப் பற்கள் எனப்படும் wisdom teeth ஒவ்வொரு தாடையிலும் உள்ளே கடைசியாக முளைக்கும் கடைவாய்ப் பற்களாகும். இவை 18 வயதில் இருந்து 24 வயதிற்குள், முளைக்கின்றன. சில சமயங்களில் சிலருக்கு இப்பற்கள் முளைக்காமல் இருந்துவிடுகின்றன.
நிரந்தரப் பற்கள் ஒவ்வொரு தாடையிலும் இரண்டு பக்கங்களிலுமாக 4 வெட்டுப் பற்கள், 2 வேட்டைப் பற்கள், 4 முன்கடைவாய்ப் பற்கள், 6 கடைவாய்ப் பற்களுமாக அமைகின்றன. இவ்வாறு மாறுபட்ட அமைப்புக் கொண்ட பற்கள் உணவினை அரைத்து, எளிதில் உட்கொள்வதற்கு உதவுகின்றன. இவ்வாறு இன்றியமையாத பணிகளைச் செய்ய உதவும் நம் பற்களை, நாம் நன்கு சுத்தமான நிலையில் வைத்திருந்தால் அவை நம் உடலை நோயற்ற நிலையில் வைத்திருக்க உதவும்.
பால் பற்களை பாதுகாக்க வேண்டியதன் இன்றியமையாமை: குழந்தைகளின் உடல் நலக்குறைவுகள் பலவற்றிற்குப் பல் நோய்களே காரணமாகின்றன. குழந்தைப் பருவத்திலேயே மருத்துவம் செய்விப்பதனால் அக் குழந்தைகள் எதிர்காலத்தில் பல் பாதுகாப்பில் கவனம் செலுத்தவும், தகுந்த காலத்தில் பல் மருத்துவம் செய்து கொண்டு பல் நோய்களைப் போக்கிக் கொள்ளவும் முடியும். குழந்தைகளின் நிரந்தரப்
()3

Page 55
உண்பதற்கும், சீராகப் பேசுவதற்கும், முகத் தோற்றம் அழகாய் இருப்பதற்கும் உதவுகின்றன.
பால் பற்கள் சீரற்று காணப்பட்டால், பின்னர் முளைக்கவிருக்கும் நிலைப் பற்களும் சீரற்று ஒழுங்கீனமாக முளைக்கலாம்.
பால் பற்களைப் பாதுகாப்பதைப் பற்றிக் குழந்தைகள் அப்பருவத்தில் அதிகமாக உணரமுடியாது. எனவே, குழந்தைகளின்பற்களைப் பாதுகாப்பதில் பெற்றோர் மிக்கக் கருத்துடன் இருத்தல் வேண்டும்.
பற்கள் சொத்தையாதல் அல்லது பற்சிதைவு எனப்படும் பல்நோய் குழந்தைகளுக்கு இயல்பாக ஏற்படும் ஒருவகைப் பல்நோய் ஆகும். குழந்தைகள் இனிப்புப் பண்டங்களை அதிகமாக உட்கொள்வதனால் இந்நோய் உண்டாகிறது. இவற்றைத் தின்றதும் வாய் கொப்பளிக்கும் பழக்கத்தை குழந்தைகளிடத்தில் ஏற்படுத்தல் வேண்டும். இல்லையேல் இவ் உணவுப் பதார்த்தங்கள் பற்களுக்கு இடையில் தங்கிவிடுகின்றன. இவற்றில் நுண்ணுயிர்கள் எனப்படும் பற்றிரியாக்கள் வேகமாக வளர்ந்து, அங்கே உருவாகும் ஒருவகை அமிலத்தினால் பற்கள் சிதைவடைகின்றன. இப்பற்சிதைவு, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போய் ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டியதும் வலியுடன் முகம் வீங்கத் தொடங்கும். ஆகவே பற்சொத்தையை ஆரம்பத்திலேயே பல் வைத்தியரிடம் காட்டி ஆவன செய்தல் வேண்டும்.
சிறு குழந்தைகளுக்குச் சரியாகப் பல் துலக் கத் தெரியாது. அவர்களுக்கு ஓரளவு விவரம் தெரியும்வரை, நாள்தோறும் இரண்டு வேளைகளிலும் இரவு தூங்குவதற்குப் போக முன்னரும், பெற்றோர்களே குழந்தைகளுக்குப் பற்பசையும் பல்துலக்கியும் கொண்டு பற்களை சுத்தம் செய்துவிடுதல் வேண்டும். இவ்வாறு செய்வதால் பற்சொத்தை ஏற்படுவதை தடுப்பது எளிது. உணவு உண்பதற்கு முன்பும், உண்ட பின்பும் நன்றாக வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.
().

ஒழுங்கான உணவு வேளைகளுக்கிடையே இனிப்புப் பதார்த்தங்கள் தின்பதைத் தவிர்க்க வேண்டும். அதாவது, மூன்று நேரமும் உணவிற்குப் பின்னர் ஏதாவது இனிப்புப் பொருட்கள் உண்பதில் தவறில்லை.
பாற்பற்கள் அவை விழக்கூடிய காலத்திற்கு முன்பே, பற்சொத்தை காரணமாக பிடுங்கி விடுவதனால் பின்னர், பல கேடுகள் விளைகின்றன. சுருங்கச் சொன்னால் அக்குழந்தையின் எதிர்காலம், அழகு, உடல்நலம் எல்லாமே பாதிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஒரு பல்லைப் பிடுங்கி எடுப்பதாக வைத்துக்கொள்வோம். எடுத்தபின் இடைவெளி ஏற்படுவதால், பக்கத்தில் இருக்கும் பற்கள் இரண்டும் எடுபட்ட பல்லின் இடைவெளியில் சரிகின்றன. எனவே, எடுத்த பல்லின் அடியில் முளைத்துவரும் நிலைத்த பல்லானது தான் முளைத்து வருவதற்குப் போதிய இடம் இல்லாததால், தன்னுடைய விருப்பம் போல் கன்னத்துப் பக்கமாகவோ அல்லது நாக்கின் பக்கமாகவோ சரிந்து முளைக்கின்றன. இதன் காரணமாகப் பல் வரிசை சீராக அமையாமல், பாதிக்கப்படுகின்றது.
பல் வரிசை அமைப்பு பாதிக்கப்படுவதால் கோணல் மாணலாக இருக்கும் பற்களின் இடையில் உணவு தங்கிப் பற்சிதைவும், வாய் நாற்றமும், ஏற்படுகின்றது. இதன் காரணமாக, ஈறுகள் பாதிக்கப்படுகின்றன. அது மட்டுமன்றி, அதைத் தொடர்ந்து வேறு பல நோய்களும் வருகின்றன. அத்துடன் வயது முதிர முன்பே எல்லாப் பற்களையும் இழக்க நேரிடும்.
எனவே, பால் பற்கள் தானே என்று கவனக் குறைவாக இராமல், அவற்றை எவ்வளவு கருத்தாகப் பேணிக் காக்கின்றோமோ அதைப் பொறுத்துத்தான் குழந்தையின் பல்லழகு, சொல்லழகு, முகஅழகு, உடல் அழகு ஆகியன அமைகின்றன. சுருங்கச் சொன்னால், குழந்தையின் எதிர்காலம் பல்லின் நலத்தைப் பொறுத்தே அமைகின்றது எனலாம். இதனைப் பெற்றோர்கள் நன்கு உணர வேண்டும்.
3ද 3: 3ද 3: 3ද 3:

Page 56
/- நல்லுறவின் உச்சம் ->
இந்தியாவில் முஸ்லிம்களின் நல்லுறவு எப்படி இருந்தது என்பதைக் காட்டும் சம்பவமொன்றை டாக்டர் ஈஸ்வரி பிரசாத், தனது "இந்திய வரலாறு" எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார். அது வருமாறு:
முஹம்மது பின்காசிம் என்ற இளவயது ஆட்சியாளர் சிந்து மாநிலத்தை வெற்றிகொண்ட பின், பிராமணர் வாழும் பகுதிகளில் சில இந்துக்கள், அவரைப் பேட்டி கண்டனர். மத சுதந்திரம் பற்றி அவர்கள் விளக்கம் கேட்டதற்கு, முஸ்லிம் ஆட்சியாளரான ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபிடம், அவர் எழுதி விளக்கம் கேட்டார். ஹஜ்ஜாஜ் கூறிய விளக்க
DMT6) ligibl:
"இந்துக்கள் நமது ஆட்சிக்கு விசுவாசமாக நடப்பதாய் ஏற்றுக்கொண்டுள்ளனர். கலிபாவுக்குக் கப்பம் கட்டுவதற்கும் தயாராகிவிட்டனர். இனி, நாம் அவர்களிடம் வேறு எதையும் எதிர்பார்ப்பது சரியில்லை. இனி அவர்கள் நமது பாதுகாப்பில் வந்துவிட்டனர். அவர்களுடைய கோயில்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றைப் புதுப்பிப்பதற்கும் நாமே பொறுப்பாளர்கள். அவர்களுடைய விக்கிகரகங்கள் மீது கைவைப்பதற்கு நமக்கு உரிமை இல்லை. எந்தப் பிரஜையையும் அவருடைய மதக் கடமைகளிலிருந்து தடுப்பது முறையாகாது. அவர்கள் விருப்பப்படி, அவர்களுடைய இல்லங்களிலும் வெளியிலும் நடந்து கொள்வதற்கு உரிமை வழங்கப்பட வேண்டும். ン

கைத்தொழில் பிணக்குகளுக்கு சுமுகத்தீர்வு கானனும் வழிவகைகள்
- சட்டத்தரணி அ. சர்வேஸ்வரன் O9
இலங்கையில் இன்று அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டம்
- சட்டத்தரணி ஏ.எச்.ஜி. அமீன் 16
முஸ்லிம் திருமண, விவாகரத்துப் பற்றிய ஒரு நோக்கு
- சட்டத்தரணி என்.எம். சய்றி 25
ভৈ হৈ ৰৈ ৰৈ ৰৈ ৯ৈ

Page 57
ஏன் வேண்டும் சட்டம்
நல்லவர்களிடமிருந்து பயன் பெற வேண்டுமானால், அவர்களிடம் ஒரு சொல்லுச் சொன்னால் போதும், சொன்னபடி செய்வார்கள். பிரச்சினையே அவர்களால் இல்லை. ஆனால், இன்னொரு வகையினர் இருக்கிறார்கள். அவர்களிடம் வெறுமனே சொல்லிப் பயனில்லை. எருமை மாட்டின்மீது மழைபெய்தது போலத்தான். அப்படியானவர்களிடமிருந்து ஏதேனும் பயன் பெற வேண்டுமானால், வேறு வழிகளைக் கையாண்டால்தான் முடியும். இதனை, வள்ளுவர் தன் திருக்குறள் நூலில் சொல்லும் விதமே தனி :
சொல்லப் பயன்படுவர் மேலே77 கரும்புபே7ல் கொல்லப் பயன்படும் கிழ்
(கீழ் மக்களுக்குச் சாதாரணமாகச் சொல்லிப் பயனில்லை. கரும்பை ஆலையில் போட்டுப் பிழிவதுபோல, விழித்தால்தான் அவர்களிடம் பயன்பெற முடியும்.)
இது என்ன நிலையைப் பிரதிபலிக்கிறது? ஒரு சமூகத்தில் கெட்டவர்கள் பெருகி, அச் சமூகம் சீர்கேடடைந்துவிடக் கூடாது என்பதனால் சட்டம் தேவைப்படுகிறது. சமூகத்திலுள்ள எல்லோரும் நல்லவர்களாய் இருந்துவிட்டால், சட்டமே தேவையில்லை. ஆனால், சமூகமொன்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம் இந்த விதம் விதமான ஆட்களுக்காகத்தான், சட்டம் தேவைப்படுகிறது. அதாவது கெட்டவர்களைக் கட்டுப்படுத்தவே சட்டம் தேவை.

வழிவகைகள்
அ. சர்வேஸ்வரன்
அருளானந்தம் சர்வேஸ்வரன் அவர்கள், யாழ் இந்துக் dz56g27/falzýsió 49 alŵrfaussió Lý%7%2ýsiv dz56i62ý7 ázsi2m7/f, gø56øý Lýøíø7/f, கொழும்புப் பல்கலைக் கழகச் சட்டபிடத்தில் கல்வி பயின்று, சட்டம7ணியாகச் சிறப்புச் சித்தியடைந்தார். தற்போது, தொழிற்சட்டத்தில் பட்ட மேற்படிப்பை மேற்கொண்டிருக்கும் இவர், கொழும்புப் பல்கலைக்கழக சட்டபிடத்தில் தொழிற்சட்ட விரிவுரை ய7ளர7கவும் இலங்கைதிறந்த பல்கலைக்கழகத்தில் வருகைதரு தொழிற்சட்ட விரிவுரைய7ளர7கவும் பணியாற்றுகிற7ர்
கைத்தொழிற்பிணக்குகளுக்குத் தீர்வுகாண்பதற்கென, முதன் முதலாக கைத்தொழிற் பிணக்குகள் (இணக்கத் தீர்வு) கட்டளைச் சட்டம் 1931ல் ஆக்கப்பட்டது. இச்சட்டம், இணக்கத் தீர்வு மூலம் கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் முறையை அறிமுகப்படுத்தியது. ஆயினும், கைத்தொழில் வளர்ச்சி காரணமாகக் கைத்தொழிற்பிணக்குகள் அதிகரித்ததாலும், அக் கைத்தொழிற் பிணக்குகள் சிக்கல் தன்மை வாய்ந்தவைகளாகக் காணப்பட்டதாலும்,நடைமுறையிலிருந்த சட்டம் போதுமானதாகக் காணப்படவில்லை. எனவே, 1950ல் 43ம் இலக்கக் கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் ஆக்கப்பட்டு, அதன் பின்னர் பல தடவைகள் திருத்தப்பட்டு இன்றுவரை, நடைமுறையிலிருந்து வருகிறது. இச் சட்டம் ஆக்கப்பட்டதன்

Page 58
நோக்கம் கைத்தொழிற்பிணக்குகளைத் தடுப்பதும் புலனாய்வு செய்வதும் மற்றும் தீர்வு காண்பதுமென. இச்சட்டத்தின் தலைப்புக் கூறுகிறது. எனவே, இச்சட்டம் ஆக்கப்பட்டதன் நோக்கம் கைத்தொழிற் பிணக்குகளுக்குச் சுமுகத் தீர்வு காண்பதாகும்.
கைத்தொழிற் பிணக்கும்
கைத்தொழில் அமைதியும். கைத்தொழிற்பிணக்கென்பது, எவரேனும் ஆளை ஊழியத்திலமர்த்தல் அல்லது ஊழியத்திலமர்த்தாமை அல்லது ஊழியநியதிகள், நிபந்தனைகள் அல்லது சேவை முடிவுறுத்தல். அல்லது சேவையில் மீளவமர்த்தல் தொடர்பாகத் தொழில்தருநருக்கும் வேலையாளுக்குமிடையே ஏற்படும் பிணக்காகும். கைத்தொழிற் பிணக்குகளுக்குச் சுமுகத் தீர்வு காணத் தவறினால் நாட்டின் பொருளாதாரமும், அத்தியாவசிய சேவைகள் உட்பட மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளும் பாதிப்படைவதுடன் வெளிநாட்டு முதலீடும் பாதிக்கப்படும். எனவே, கைத்தொழிற் பிணக்குகளுக்குச் சுமுகத் தீர்வு காண்பது இன்றியமையாததாகும்.
வழிவகைகள்: கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பது, நாட்டு நலனுக்கு இன்றியமையாததென்பதால், கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பை அதன் திறத்தவர்களான தொழில் தருநரிடமும் வேலையாளிடமும் ஒப்படைத்துவிட்டு அரசு வாளாவிருக்கமுடியாது. எனவே, அரசும் தலையிட்டுக் கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு கண்டு கைத்தொழில் அமைதியை ஏற்படுத்தும் வகையிலமைந்த தீர்வுமுறையைக் கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் கொண்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் ஆணையாளருக்கும், அமைச்சருக்கும் கைத்தொழில் அமைதியை ஏற்படுத்துவதற்கான பரந்த தத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கூட்டு o l6óUgá560).5 (colective agreement), 96001á5555i6) (conciliation) sbGgbi5i62 (arbitration) 6opa5gb(og5/Tpsiò si5i5D6öDb

(Industrial Court) மூலம் தீர்வுகாணுதல், தொழில்நியாயசபை (Labour Tribunal) மூலம் தீர்வு காணுதல் ஆகியவை கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிவகைகளாகக் கைத்தொழிற் பிணக்குகள் சட்டத்திலுள்ளன.
ஆணையாளருக்கும்
அமைச்சருக்குமுள்ள தத்துவங்கள்: கைத்தொழிலொன்றில் கைத்தொழிற் பிணக்கொன்று உள்ளபோது அல்லது ஏற்படவுள்ளபோது, அப்பிணக்கிற்குத் தீர்வு காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடப்பாட்டை ஆணையாளர் கொண். டுள்ளார். பிணக்குகளுக்குத் தீர்வு காணும் வழிவகைகளை உள்ளடக்கிய கூட்டு உடன்படிக் கையொன்று, தொழில் தருநருக்கும் வேலையாட்களுக்குமிடையே செய்யப்பட்டிருந்தால் அவ் உடன்படிக்கையின் வாசகங்களுக்கமைய ஆணையாளர் அப்பிணக்கிற்குத் தீர்வு காணலாம், அல்லது தானாக அல்லது அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மூலம் இணக்கத் தீர்வு காணலாம், அல்லது பிணக்கின் திறத்தவர்கள் சம்மதமளித்தால், பிணக்கைத் தீர்வு காண்பதற்காக நடுத்தீர்ப்பாளரிடம் ஆற்றுப்படுத்துவதன் மூலம் தீர்வு காணலாம். அமைச்சர், சிறிய பிணக்காயின் பிணக்கின் திறத்தவர்கள் சம்மதமளித்தாலென்ன, சம்மதமளிக்காவிட்டாலென்ன அப்பிணக்கை நடுத்தீர்ப்பாளருக்கு அல்லது தொழில் நியாய சபைக்கு, நடுத்தீர்ப்பின் மூலம் தீர்வு காண்பதற்காக ஆற்றுப்படுத்தலாம், அல்லது பிணக்கொன்றைத் தீர்வுகாண்பதற்காகக் கைத்தொழில்நீதிமன்றத்திற்கு ஆற்றுப்படுத்தலாம். இவ்வகையில், கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கான பரந்த தத்துவம் ஆணையாளருக்கும் அமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Page 59
கூட்டு உடன்படிக்கை: கூட்டுப் பேரப் பேச்சு வெற்றி. யளிக்கும்போது, கூட்டு உடன்படிக்கையொன்று உருவாகிறது. கூட்டு உடன்படிக்கை என்பது, தொழில் தருநருக்கும் மற்றும் வேலையாட்களுக்கும் அல்லது வேலையாட்களுடைய தொழிற்சங்கத்துக்கும் இடையேயான வேலையாட்களின் ஊழியம் தொடர்பான நியதி, நிபந்தனைகள் பற்றிய அல்லது தொழிற்சங்கத்தின் சிறப்புரிமைகள், உரிமைகள், கடமைகள் பற்றிய அல்லது கைத்தொழிற் பிணக்கைத் தீர்த்து வைக்கும் முறை பற்றிய ஒர் உடன்படிக்கையாகும். வலுவிலுள்ள ஓர் கூட்டு உடன்படிக்கை அதன் திறத்தவர்களைப் பிணிக்குமென்பதுடன் அவர்களுக்கிடையேயான ஊழியம் பற்றிய ஒப்பந்தத்தின் உட்கிடையான நியதியாகவும் அமையும். கூட்டு உடன்படிக்கையென்றால் திறத்தவரொருவர் தொடர்ந்து பிணிக்கப்பட விரும்பாதுவிடின், அவ் உடன்படிக்கையை முடிவுறுத்தலாம். வலுவிலுள்ள கூட்டு உடன்படிக்கையொன்றுக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுதல், சட்ட முரணானதாகும்.
இணக்கத் தீர்வு: இணக்கத் தீர்வு மூலம் பிணக்கைத் தீர்க்கும் தத்துவம் ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. இணக்கத் தீர்வு என்பது, மூன்றாம் திறத்தவரின் உதவியுடன் பிணக்கின் திறத்தவர்கள் இணக்க முறையான தீர்வினையடைவதாகும். இணக்கத்தீர்வை ஏற்படுத்தும் ஆணையாளர் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட அலுவலர், பிணக்கிற்கான திறத்தவர்களை நியாயமானதும் இணக்கமானதுமான தீர்வுக்கு வரத் தூண்டுதல் வேண்டும். கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வுகாணும் முறைகளில் மிகச் சிறந்த முறை இணக்கத் தீர்வு மூலம் தீர்வு காண்பதாகும். இது செலவு குறைந்ததும் விரைவானதுமான தீர்வு காணும் முறையாகும்.

நடுததாபபு: நடுத்தீர்ப்பு மூலம் கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பது, தன்னிச்சையான நடுத்தீர்ப்பு, கட்டாய நடுத்தீர்ப்பு என இரு வகைப்படும். பிணக்கின் திறத்தவர்கள் நடுத்தீர்ப்புக்காகப் பிணக்கினை ஆற்றுப்படுத்தச் சம்மதமளித்தால், அப்பிணக்கினை ஆணையாளர், திறத்தவர்களால் நியமிக்கப்பட்ட அல்லது ஆணையாளரால் நியமிக்கப்பட்ட நடுத்தீர்ப்பாளரிடம் அல்லது தொழில் நியாய சபையிடம் நடுத்தீர்ப்பு மூலம் தீர்வு காண்பதற்காகச் சமர்ப்பிக்கலாம். இது தன்னிச்சையான நடுத்திர்ப்பு எனப்படுகிறது. கைத்தொழிற் பிணக்கொன்று சிறிய பிணக்கென அமைச்சர் அபிப்பிராயப்படின், பிணக்கின் திறத்தவர்கள் சம்மதமளிக்காதுவிடினும் கூட, நடுத்தீர்ப்புக்காக அதனை நடுத்தீர்ப்பாளரிடம் அல்லது தொழில் நியாயசபையிடம் ஆற்றுப்படுத்தும் தத்துவத்தை அமைச்சர் கொண்டுள்ளார். இது கட்டாய நடுத்தீர்ப்பு எனப்படுகிறது. கைத்தொழிற் பிணக்கொன்றுக்குத் தீர்வு காண்பது அவசியமென்பதால், இத் தத்துவம் அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நடுத்தீர்ப்பு மூலம் தீர்வுகாண்பதற்காகப் பிணக்கொன்று நடுத்தீர்ப்பாளருக்கு ஆற்றுப்படுத்தப்படும்போது, அந் நடுத்தீர்ப்பாளர் அவர் அவசியமானதெனக் கருதும் விசாரணைகளைச் செய்து திறத்தவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளைக் கேட்டு அதன் பின்னர் அவருக்கு நியாயமும் ஒப்புரவானதுமாகத் தோன்றும் தீர்த்தளிப்பை வழங்குதல் வேண்டும். இத் தீர்த்தளிப்பு, திறத்தவர்களைப் பிணிக்குமென்பதுடன் திறத்தவர்களுக்கிடையேயான ஊழியம் பற்றிய ஒப்பந்தத்தின் உட்கிடையான நியதியுமாகும். நடுத்தீர்ப்பாளரின் தீர்த்தளிப்பால் தொடர்ந்து பிணிக்கப்பட விரும்பாத திறத்தவர், அத் தீர்த்தளிப்பை முடிவுறுத்தலாம். நடுத்தீர்ப்பாளரின் தீர்த்தளிப்பொன்று நடைமுறையிலுள்ள போது, அதற்கெதிராக வேலை நிறுத்தஞ் செய்வது சட்ட முரணானதாகும்.

Page 60
கைத்தொழில் நீதிமன்றம்: கைத்தொழில்நீதிமன்றமென்பது ஜனாதிபதியால் நியமிக்கப்படும் ஐந்துக்குக் குறையாத ஆட்களைக் கொண்டதாகத் தாபிக்கப்படுவதாகும். அமைச்சர் எழுத்திலான கட்டளை மூலம் ஏதேனும் பிணக்கைத் தீர்வு காண்பதற்காகக் கைத்தொழில் நீதிமன்றத்துக்கு ஆற்றுப்படுத்தலாம். கைத்தொழில் நீதிமன்றம் தேவையான விசாரணைகளைச் செய்து, தேவையான சான்றுகளைக் கேட்டு, அதன் பின் நியாயமும் ஒப்புரவுமான தீர்த்தளிப்பை வழங்குதல் வேண்டும். இத் தீர்த்தளிப்பு திறத்தவர்களைப் பிணிக்குமென்பதுடன் திறத்தவர்களுக்கிடையிலான தொழில் ஒப்பந்தத்தின் உட்கிடையான நியதியாகவும் அமையும். இத்தீர்த்தளிப்பில் திருப்தியன்டயாத திறத்தவர், அதற்கெதிராக அமைச்சருக்கு விண்ணப்பிக்கலாமென்பதுடன், அமைச்சர் அவ் விண்ணப்பத்தைக் கைத் தொழில் நீதிமன்றமொன்றுக்கு ஆற்றுப்படுத்துவார். கைத்தொழில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்த்தளிப்புக்கெதிராக வேலைநிறுத்தஞ் செய்வது சட்ட முரணானதாகும்.
தொழில் நியாயசபை: தொழில்நியாயசபையென்பது கைத் தொழிற் பிணக்குகள் சட்டத்திற்கு 1957 ல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது. வேலையாளொருவர் அல்லது அவர் அங்கத்தவராகவுள்ள தொழிற்சங்கமொன்று, வேலையாளின் சேவை முடிவுறுத்தப்படும்போது, நிவாரணம் கோரி அல்லது அவ் வேலையாளர் பணிக்கொடைச் சட்டத்தின் கீழ் வராத போது பணிக்கொடை கோரித் தொழில் நியாயசபைக்கு விண்ணப்பஞ் செய்யலாம். ஏனைய பிணக்குத் தீர்வு முறைகளால் பிணக்குத் தீர்க்கப்படும்போது, ஆணையாளர் அல்லது அமைச்சருடைய தலையீடு அவசியமாகிறது. ஆனால், இம்முறையின் கீழ் தீர்வு காணப்படும்போது ஆணையாளர் அல்லது அமைச்சருடைய தலையீடின்றி, வேலையாள் நேரடியாகத் தொழில் நியாயசபைக்கு விண்ணப்பஞ் செய்யக்கூடியதாகவுள்ளது.

தொழில் நியாயசபையொன்று, நிவாரணம் வழங்குகையில், வேலையாளின் வேலை முடிவுறுத்தல், ஒப்பந்தப்படியானதா என ஆராயாது அவ்வேலை முடிவுறுத்தல் நியாயப்படுத்தப்படக் கூடியதா அல்லவா எனவே ஆராயும். எனவே, வேலையாளொருவர், அவருடைய சேவைகள் நியாயமற்ற வகையில் தொழில்தருநரால் முடிவுறுத்தப்படும்போது, அதற்கெதிராக நிவாரணம் பெறக்கூடியவராகவுள்ளார். தொழில் நியாயசபைக்குச் செய்யப்படும் விண்ணப்பமானது வேலை முடிவுறுத்தப்பட்ட தினத்திலிருந்து ஆறு மாதங்களினுள், செய்யப்படுதல் வேண்டும். தொழில் நியாயசபையொன்று நிவாரணம் வழங்குகையில், நியாயமற்ற வாசகங்களைக் கொண்ட தொழில் ஒப்பந்தமொன்றால் பிணிக்கப்படாது, நியாயமும் ஒப்புரவுமான கட்டளையை ஆக்கும் பரந்த தத்துவத்தைக் கொண்டுள்ளது. நியாயமற்ற வேலைமுடிவுறுத்தலுக்கெதிரான நிவாரணமாகச் சேவையில் மீளவமர்த்தல் அல்லது இழப்பீடு வழங்கப்படும். தொழில் நியாயசபையின் கட்டளையில் திருப்தியடையாத திறத்தவர், அக் கட்டளைக்கெதிராக மாகாண மேல் நீதிமன்றத்துக்கு மேன்முறையீடு செய்யலாம். தொழில் நியாயசபையால் வழங்கப்பட்ட கட்டளைக்கெதிராக வேலைநிறுத்தஞ் செய்வது சட்ட முரணானதாகும்.
முடிவுரை: ஆகவே, கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் கைத்தொழிற் பிணக்குகளுக்குச் சுமுகத் தீர்வு காணும் பல்வேறு வழிவகைகளைக் கொண்டுள்ளது. கைத்தொழிற் பிணக்குகளுக்குத் தீர்வு காண்பது ஏனைய பிணக்குகளுக்குத் தீர்வுகாண்பதிலிருந்து வேறுபடுகிறது. கைத்தொழிற்பிணக்குகளுக்குத் தீர்வு காண்பதென்பது திறத்தவர்களுக்கிடையேயான பிணக்கிற்கு நியாயமும் ஒப்புரவுமான தீர்வைக் காண்பதோடு, தொடர்ந்து சுமுகமான கைத்தொழில் உறவைப் பேணுவதுமாகும். இந்நோக்கத்தையடையும் வகையில் கைத்தொழிற் பிணக்குகள் சட்டம் காணப்படுகிறது.

Page 61
Y. இலங்கையில்
|இன்று அமுலிலுள்ள Χ முஸ்லிம் தனியார்
சட்டம்
6. 6ët. e 9Ë6j Ll.B., Ll, M.J.P.U.M
அப்துல்ஹமித் கவுஸுல்அமின் ஒரு சட்டத்தரணியாவார். L.ll. B. Avvz-z5/77fiku/72we62/7A/va AI/67aizzazz/7ewL. l. M AVA u l-goalib 62 fiżறுள்ளார். அவர்BCIS டிப்ளே7மாதராதரத்தைப் பெற்றுள்ளதோடு BCIS 4/6zgov//ZO76zw62/fáz56ň 472545ž25ký 2-4/256op6v62(254o762/77:
കെffഗ്ഗമ/ ഖLക്സ്ക്ര കffബിffb Øബ്ദ് ഖഗ്രLകffബb Gങ്ങഖ புரிந்துள்ள இவர் முஸ்லிம்களின் இரண்டு மேன்முறையிட்டுத் தாபனமான வக்பு சபையிலும், காளியிசபையிலும் அங்கத்தவர7க இருந்திருக்கிறார். அவர் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப் 4பின்படிப்பிற்கான பிரிவில் விரிவுரை/7ளராக இருப்பதோடு அங்கு முகாமைத்துவப் பிரிவில் சிரேஷ்ட ஆலோசகராகவும் கடமைAfzz777.
சஞ்சிகைகளுக்கு சட்டத்துறை, அரசியல், கலாசார சம்பந்தப்பட்ட கட்டுரைகளை தற்பொழுது இவர் எழுதிவருகிறார். தமிழ் பத்திரிகையான "விக்வா' ஆங்கிலப் பத்திரிகையான "மிஷ்காத்" ஆகியவற்றின் ஆசிரியராகக் கடமை புரிந்துள்ள7தோடு கடுபெத்த வளாகத்தில் முதல் வெளியீடான 'மிம்பர்"என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ள7ர்.
இவர் ஸாஹிராக் கல்லூரியின் ஆளுனர் சபையில் உறுப்? னராக இருப்பதோடு சோனக இஸ்லாமிய கலாசாரநிலையத்தின் நம்பிக்கையாளர் சபையிலும் உறுப்பினராவார்.
 

உலக முஸ்லிம்கள் ஷரிஆ சட்ட வரம்புக்குள் வாழ வேண்டும். ஷரீஆ சட்டம் என்பது என்ன? திருக்குர்ஆன், நபி பெருமானார் முகம்மது நபி (சல்) அவர்களது அறிவுரைகள், நடைமுறைகள், அன்னாரது தோழர்களின் ஒருமித்த கருத்துக்கள். நீதி வல்லுனர்களின், அலசி ஆராய்ந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவைகள் கொண்டது தான் ஷரீஆ சட்டமாகும். இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படை கருவூலம் தான் 22 வருடங்கள், 2 மாதங்கள் 22, நாட்கள் காலமாக திரு நபி (சல்) அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட இப்புவியின் ஒப்பற்ற திருக்குர்ஆனாகும். தித்திக்கும் திருக்குர்ஆன் 114 அதிகாரங்களையும் 86,430 சொற்களையும் 3.23,760 எழுத்துக்களையும் கொண்ட ஒரு அற்புதமான கிரந்தமாகும். அது 30 ஜூஸ்களும் 6666 ஆயத்துகளையும் உள்ளடக்கிய இப்புவியில் வாழும் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல மனித குலத்துக்கே ஒரு வழிகாட்டியாகும்.
ஆனால், பல்லின மக்கள் வாழும் பூரீலங்காவில் ஷரீஆ சட்டம் முழுமையாக செயற்படுவதில்லை. பெளத்தர்கள் பெரும்பான்மை இனமாக வாழும் இந்நாட்டில் குறிப்பிட்ட சில ஷரீஆ சட்டங்கள்தான் அமுலில் உள்ளன. ஷரீஆவின் ஒரு பகுதியே முஸ்லிம்களின் தனியார் சட்டமாக தற்காலை விளங்குகிறது. ஏனையவை, பொதுச் சட்ட வரம்புக்குள் முஸ்லிம்கள் உள்ளாக்கப்படுகிறார்கள். உதாரணமாக, குற்றவியல் தண்டனைச் சட்டம் முழுவதும் பொதுச் சட்டங்களாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய சட்டந்தான் அமுலிலுள்ளது. Y
இந்நாட்டில் சில சந்தர்ப்பங்களில் ஷரிஆச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுவதுண்டு. உதாரணமாக ஒரு முஸ்லிம் இறுதி விருப்பப்பத்திரம் ஒன்றை எழுதிவைக்காது மரணித்தால் அவருடைய சொத்துக்கள் தொடர்பாக இஸ்லாமியச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று சட்டமே வலியுறுத்துகிறது.

Page 62
முஸ்லிம்கள் இந்நாட்டில் வாழ ஆரம்பித்த காலமுதல், தமக்கே உரித்தான முஸ்லிம் சட்டத்தை அநுபவித்து வந்துள்ளார்கள். தேசிய மட்டத்தில், அரசு சபையின் செயல்பாடுகளின் ஒரு பகுதியாக முஸ்லிம்களுக்கு அவர்களின் சட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் ஏற்ப எல்லா நிலைகளிலும் நீதி அதிகாரப் பிரிவொன்று இருந்தது என பன்னிரண்டாம் நூற். றாண்டில் சிங்கள நீதித் துறை சம்பந்தமாகக் குறிப்பிட்ட இத்ரீஸி குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்டுடன் அராபியர்களுக்கு முதலாம் நூற்றாண்டில் இருந்து சம்பந்தம் இருந்ததாக புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் பிலினி குறிப்பிட்டுள்ளார்.
அக்காலை மலாயா கடல் தீரத்திலும், இலங்கையிலும் அதிகமான அராபியர்கள் வாழ்ந்ததோடு கடல் பிரதேசத்தில் முக்கிய ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று இனம் காண. முடிகிறது. மேலும், கி. பி. ஏழாம் நூற்றாண்டின் முற்பகுதியில் குறிப்பிடக்கூடிய அளவு முஸ்லிம்கள் வாழ்ந்துள்ளார்கள் என்பதை வரலாறு குறிப்பிடுகிறது.
பூரீலங்காவுக்கும் அரபுநாடுகளுக்கும் இடையில் இருந்த கலாசாரத் தொடர்புகளை வரலாற்றாசிரியர் இப்னு ஷஸ்ரியா குறிப்பிடும்பொழுது, கிறிஸ்துவருடம் 632ல், இலங்கையிலிருந்து பல பாகங்களிலும் வசித்து வந்த முஸ்லிம்களைக் கொண்ட தூதுக்குழு ஒன்று எம்பெருமானார் (சல்) அவர்களை தரிசிப்பதற்காக அரபுநாட்டுக்குச் சென்றது என "அஜய்ப்-அல்-ஹிந்து அல்லது இந்தியாவின் அற்புதம்" என்ற தனது நூலில் குறிப்பிடுகிறார். அதுமட்டுமல்ல, இலங்கையில் காலத்திற்கு காலம் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் கீழ் ஆட்பட்டிருந்த வேளையிலும், போர்த்துக்கேயர்கள் (கி.பி. 1505-1658) ஒல்லாந்தர்கள் (கி. பி. 1658 - 1796) ஆங்கிலேயர்கள் (கி. பி. 1796 - 1948) போன்றவர்கள் ஆட்சியில் இந்நாட்டு முஸ்லிம்களின் தனியார் சட்டத்துக்கு இடமளிக்கப்பட்டது. குறிப்பாக ஆங்கிலேயர்களும் இஸ்லாமிய சட்டங்களின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.

பிதா எஸ். ஜி. பெரேரா தமது "பாடசாலைகளுக்கான இலங்கை வரலாறு"எனும் நூலில் (1947 - பாகம் 1) பக்கம் 12ல் "பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் வந்த வேளையில், நாட்டின் பிரதம கப்பல்துறையும் இத்தீவின் வணிகமும் சிறந்து விளங்கிய கொழும்பு மாநகரில், கணிசமான தொகை முஸ்லிம்கள் வாழ்ந்தார்கள். அவர்களின் பிரச்சினைகள் முஸ்லிம் சட்டப்படி, தீர்த்துவைக்கப்பட்டன அதற்காக ஒரு நீதிமன்றமும் இருந்தது" எனக் கூறியுள்ளார்.
எனவே, முஸ்லிம் சட்டம் இந் நாட்டில் ஆரம்ப காலம் தொட்டு நடைமுறையில் இருந்துள்ளது. என்பது உறுதி. அதை எந்தவித சக்தியாலும் இன்று முறியடிக்க முடியாது என்பது உறுதியே.
எமது நாட்டில் முஸ்லிம்களுக்கு மூன்று வகையான தனியார் சட்டக் கோவைகள் இருக்கின்றன.
1. 1951ன் இலக்கம் 13 என்ற முஸ்லிம் விவாக, விவாக
ரத்துச் சட்டம். 2. 1956ன் இல. 51 என்ற முஸ்லிம் பள்ளிவாசல் தர்ம
நம்பிக்கை நிதியம் அல்லது வக்ஃப் சட்டம். 3. முஸ்லிம் வாரிசுச் சொத்துச் சட்டம். இறுதி விருப்பப் பத்திரம் இன்றி மரணிக்கும் ஒரு முஸ்லிமின் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படுதல் முறைகள் சம்பந்தமான
FLib. 193 16ör g6l). 10. முதலாவது, காஸி நீதிபதிகள், முஸ்லிம் விவாகப் பதிவாளர்கள் நியமிக்கும் முறை. மேலும் விவாக, விவாகரத்து தாபரிப்பு வேறு கோரிக்கைகளையும் விடுக்கும் கருமங்களை
1. A History of Ceylon by Father S. G. Perera, S.J., Chapter II page 12 section 17 : The trade, chiefly in cinammon, coconuts and elephants was in the hands of Muslim traders, descendants of the seafaring Arabs ................ The population of the town was largely Muslim and there was a mosque together with a Muslim cemetery and a court of justice to settle disputes according to Muslim Law.

Page 63
உள்ளடக்கியதாகும். காஸி நீதிமன்றம் காஸியின் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடும் செய்யும் காஸி மேன்முறையிட்டு (Board of Quazis)சபை என்பனவும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இரண்டாவது, பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர்கள் மற்றும் நம்பிக்கை நிதியம் ஆகியவைகள் சம்பந்தப்பட்டதாகும். இது சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு வக்ப் சபையும், அதன் தீர்மானங்களுக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு வக்ப் தீர்ப்பு மன்றம் (Wakf Tribunal) இந்தச் சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது, இறுதி விருப்பப்பத்திரம் இன்றி மரணிக்கும் ஒரு முஸ்லிமின் சொத்துக்கள் பங்கிடும் முறை, வடிரீஆ சட்டத்தின்படி அமுல்படுத்தப்படும் என்று இந்த சட்டம் கூறுகிறது. எனவே முஸ்லீம்களின் இந்த விடயத்தை பொறுத்த வரையில் ஷரீஆ சட்டம் இங்கு முழுமையாக அமுல்படுத்தப்படுகிறது.
இவைகளைத் தவிர, வேறு எந்த சட்டக் கோவையும் இங்கு நடைமுறையில் இல்லை. இதைத் தவிர மற்ற விடயங்கள் பொது சட்டக் கோவைகளின் அடிப்படையில்தான் முஸ்லிம்களின் விவகாரங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.
ஆனால், நீதிமன்றங்களின் தீர்ப்புகளின் அடிப்படையில் தோன்றியுள்ள சட்டங்கள் (case law) இன்று முஸ்லிம்களின் தனியார் சட்டங்களாக மாறி அமுலில் உள்ளன.
உதாரணமாக, பிள்ளைகள் தத்தெடுக்கும் முறை பொதுச் சட்டத்தில் உள்ள்து. ஆனால், ஷரீஆ சட்டத்தில் தத்தெடுப்பதற்கு இடமில்லை. எனவே, முஸ்லிம்களுக்கு இந்த பொதுச்சட்ட அடிப்படையில் பிள்ளைகளை தத்தெடுக்க வாய்ப்புள்ளது. கெளஸ் எதிர் கெளஸ் என்ற வழக்கின் தீர்ப்புக்கேற்ப இன்று முஸ்லிம் ஒருவர் ஒரு பிள்ளையை தத்தெடுக்க முடியாது. அப்படித் தத்தெடுத்தாலும் தத்தெடுப்பவர்கள் சொத்துக்கு அப்பிள்ளை உரிமை கொண்டாட
2. 1988 SLLR QITsiyb 1.

முடியாது என்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இது, ஷரீஆ சட்ட முறைப்படியான தீர்ப்பாகும். எனவே, இந்தத் தீர்ப்பு வடிரீஆ சட்டத்தை அங்கீகரித்துள்ளது.
சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம் தனியார் சட்டம் ஷரீஆ சட்டத்துக்கு முரணானதாக அமைந்துள்ளது. எனவே, முஸ்லிம் தனியார் சட்டத்துக்கு திருத்தம் அவசியமாகியுள்ளது. மேலும் முஸ்லிம்கள் நலன் கருதி, ஷரீஆ சட்டத்தில் உள்ள நல்ல பல சட்டங்கள் ஏனைய சமூகங்களுக்கும் பயன் தரக் கூடியவைகளை முஸ்லிம் தனியார் சட்டத்திலும் மட்டுமின்றி, பொதுச் சட்டத்திலும் கூட உள்ளடக்குவது சாலச் சிறந்ததாகும். இப்படியான ஷரீஆ சட்டத்தை, முஸ்லிம்களல்லாதவர்களும் வரவேற்றுள்ளார்கள்.
உதாரணமாக, இறுதி விருப்பு ஆவணத்தை (Last Will) ஷரீஆ சட்டப்படி ஒரு முஸ்லிம் மரணிக்கும் முன் எழுதி வைக்கும் பொழுது அவருக்கு, தமது மனைவியையும் தம் பிள்ளைகளையும் தவிர்த்து வேறு யார் பெயரிலாவது தமது சொத்துக்களை எழுதி வைக்கலாம். ஆனால், மூன்றில் ஒரு பங்கை மட்டும் தான் அப்படி எழுதி வைக்க முடியும். இந்தக் கட்டுப்பாடு இஸ்லாமிய சட்டத்தில் உண்டு. இதன் தாத்பரியம் என்னவென்றால் தம் மனைவியும், பிள்ளைகளும் தம் மரணத்துக்குப்பிறகு தவிக்கக் கூடாது என்பதாகும். ஆனால், பொதுச் சட்டத்தில் இந்தக் கட்டுப்பாடு கிடையாது. பொது சட்டப்படி ஒருவர் அவரது வைப்பாட்டிக்கோ அல்லது யார் பெயரிலாவது (தனது மனைவியையும் பிள்ளைகளையும் தவிர்த்து) தன் சொத்துக்கள் முழுவதையும் எழுதி வைக்கலாம். முஸ்லிம்களும் இந்த பொது சட்டப்படி இறுதி விருப்பு ஆவணம் எழுதலாம்.'ஷரீஆ சட்டத்தை முஸ்லிம்கள் அல்லாதவர்களும் வரவேற்பதோடு, இறுதி விருப்பு ஆவணப் பொதுச் சட்டத்துக்கு
3. இல, 21, 1844 இறுதி விருப்பு ஆவணச் சட்டம் - Last Wil. 4. ரஹ்மத் உம்மா எதிர் சரீபா உம்மா 14 NLR பக்கம் 464.
2

Page 64
திருத்தம் கொண்டு வரவேண்டு என்று வலியுறுத்தி வருகிறார். கள். இது ஷரீஆ சட்டத்தின் அழகியதொரு முன்மாதிரியை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நாட்டின் முஸ்லிம்களுக்கு சொத்துரிமை, விவா. கம், விவாக ரத்து ஆகிய விடயங்கள் சம்பந்தமான முஸ்லிம் தனியார் சட்டம் அமுலாக்கல் ஒல்லாந்த ஆளுனர் பல்க் (1765 - 1785) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமிய மார்க்க வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டு பட்டேவியா (Batavia) அரசாங்கத்தின் மூலம் இங்கு அனுப்பப்பட்டு அக்கால இலங்கையில் குடியிருந்த முஸ்லிம் தலைவர்களின் அனுமதியோடு முஸ்லிம்களால் ஏற்றுக்கொண்ட பின்னர் சட்டமாக்கப்பட்டதொன்றாகும்.
ஆங்கிலேயர் வருகைக்குப் பின், ஒல்லாந்தர் ஆட்சியில் நடைமுறையிலிருந்த நீதிமன்றங்கள் எந்தவித மாற்றமுமின்றி. இயங்குவதோடு அன்று ஒல்லாந்தர் ஆட்சியில் அமுலிலிருந்த சட்டம் செல்லுபடியாகும் என்று 23.04.1799ல் வெளியான பிரக்டனம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது."
இலங்கையில் முஸ்லிம்களின் வயதை நிர்ணயிப்பது. தத்தெடுப்பது, குஹ்லா விவாகரத்து முறை போன்றன சட்டக் கோவையில் இல்லாத போதிலும், நீதிமன்றத் தீர்ப்புகளுக்கேற்ப இந்நாட்டில் முஸ்லிம் தனியார் சட்டம் பின்பற்றப்படுகிறது.
மனைவி எந்தவித காரணமும் வழங்காது பெறும் குஹற்லா விவாகரத்து அன்சார் எதிர் பாத்திமா மிர்ஸா' என்ற வழக்குத் தீர்ப்பின் படி சட்டரீதியாகியது.
5. Governor L.W.Falck sought to improve matters by securing from the Governor General of Batavia (now Jakarta) in September 1770 a short code of Islamic Marriage and Succession - H.M.Z. Farouque in An - Ethnological Survey of the Muslims of Sri Lanka. Page i98. 6. சுலைமான் எதிர் மொகிதீன் 195759 NLR பக்கம் 227 7. 75 NLR i55p 295.

முஸ்லிம் சட்டங்களில் மிகுந்த அறிவுற்றவரும், முஸ்லிம் சட்டம் சம்பந்தமாக நூல்கள் பல எழுதியவருமான நீதியரசர் வீரமன்திரி அவர்கள் இந்த வழக்கில் "முஸ்லிம் சட்டத்தின் தோற்றங்களை விமர்சனம் பண்ணும்பொழுதும் இஸ்லாமிய எழுத்தாளர்களின் கருத்துக்கள் படியும், தற்கால கருத்துரையாளர்களின் கருத்துப்படியும், குஹ்லா விவாகரத்து வழக்கில் கணவன் கலந்து கொள்வது அவசியமாகும்" எனக் கூறியுள்ளார்.
ஷரீஆ சட்டத்தில் உள்ள பல முக்கிய அம்சங்கள் எல்லோருக்கும் பயன் தரக்கூடியவைகளாயிருந்த போதிலும் இந்நாட்டில் அமுலிலிருக்கும் பொது சட்டக்கோவையிலோ அல்லது முஸ்லிம் தனியார் சட்டத்திலோ இல்லாதது பெருங் குறையாகும். அது மட்டுமல்ல ஷரீஆ வுக்கு முரணான சில சட்டங்கள் உள.
உதாரணமாக இறுதி விருப்பு ஆவணத்தை (Last Will) பொதுச் சட்ட அடிப்படையில் எழுதி வைக்கலாம். ஆனால் இது ஷரீஆ சட்டத்துக்கு முரணானதாகும்.
பிரிவி கவுன்ஸில், ஒரு வழக்கில், இறுதி ஆவணச் சட்டம் 1844 இல, 21 முஸ்லிம்களுக்கும் பொருந்தும் என்று தீர்ப்புக் கூறியதோடு இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம் ஒருவர் தம் விருப்பப்படி, ஷரீஆ சட்டப்படி இறுதி விருப்பு ஆவணம் வரையறைப்படுத்துவதை கவனத்தில் கொள்ளாது, தமது முழுச் சொத்தையும் எவருக்காவது எழுதி வைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
பலர் அறிந்த ஆலிம் இறுதி விருப்பு ஆவண வழக்கில்" இந்நாட்டில் பிரதம நீதியரசராக கடமை புரிந்த பேட்ரம் "குர்ஆன் சந்தேகமின்றி இறுதி ஆவணம் பற்றி எடுத்துரைக்கிறது. இது எல்லா அராபிய கருத்துரையாளர்களும் ஏற்றுக்கொண்ட விடயம் என்பதில் கேள்வி எழுவதில்லை. இது மரபு
8. சரீபா உம்மாவுக்கு எதிராக அகமத் 33 NLR பக்கம் 8 9. 20 NLRudisabib 481

Page 65
வழக்கம் மீறாத ஆலிம் அவர்களின் கருத்துமாகும். ஆனால், நடைமுறையில் இது சம்பந்தமாக குர்ஆன் விளக்க அடிப்படையில் முஸ்லிம்கள் செயல்படுவதில்லை. நீதிமன்ற தீர்ப்புக்களை கவனத்துக்கு எடுக்கும் பொழுது, முஸ்லிம் சட்டம் அனுமதிக்காத ஒன்று முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களினால் உறுதியாகி, சட்டமாக விளங்குகிறது. தமது சொத்தில் பங்கில்லாமல் தம் மனைவியும் பிள்ளைகளும் தவிக்கக்கூடாது என்ற உன்னத நோக்குடன் இறுதி விருப்பு ஆவணம் கட்டுப்படுத்தல் வேண்டும் என்று கூறும் ஷரீஆ சட்டத்தை முஸ்லிம் அல்லாதவர்களும் வரவேற்கிறார்கள். ஆனால், நடைமுறையில் இருக்கும் சட்டம் வேறு. எனவே முஸ்லிம்களும் ஏனையவர்களின் நலன் கருதி, ஒருவர் மரணிக்கும் முன் எழுதும் இறுதி விருப்பு ஆவணத்தின் மூலம் தமது சொத்தில் முன்றில் ஒரு பங்கை தான் வழங்க முடியும் என்பதை இறுதி விருப்பு ஆவணச் சட்டத்துக்கு (இல. 21, 1844) திருத்தம் கொண்டு வர வேண்டும்" என்று கூறியுள்ளார்.
ஆனால் இன்று சுமார் 70 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் இந்தப் பொதுச் சட்டத்துக்கு ஷரீஆ சட்ட அடிப்படையில் திருத்தம் கொண்டு வராதது வருந்தக் கூடிய விடயமாகும்.
முஸ்லிம் விவாகரத்து சட்டம் 1951ம் ஆண்டு நிறைவேற். றப்பட்டு முஸ்லிம் தனியார் சட்டமாக அமுலில் இருந்து வந்துள்ளது. அதற்கு 1954 (இல. 31), 1955 (இல.22), 1965 (இல. 1), 1965 (இல. 5) ஆண்டுகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், 1965ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 35 வருட காலம் எந்தவிதமான திருத்தமும் கொண்டுவரப்படவில்லை.
★玄女女贪

முஸ்லிம் திருமண, விவாகரத்துப்
பற்றிய ஒரு நோக்கு
என். எம். சப்றி, எல். எல். பி. சட்டத்தரணி, கொழும்பு வடக்கு, காதி நீதிபதி
முஸ்லிம்களுடைய திருமண விவாகரத்து தொடர்பாக எழுகின்ற பிணக்குகள் 1951ம் ஆண்டிற்கு முன்பு மாவட்ட நீதிமன்றங்களில் சேர்க்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தன. 1951ம் ஆண்டின் 13ம் இலக்க முஸ்லிம் திருமண விவாகரத்து சட்டம் கொண்டு வரப்பட்டதன் பின், முஸ்லிம் திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள் காதி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு அவ்வப்பிரதேசங்களில் எழுகின்ற திருமண விவாகரத்து தொடர்பான பிரச்சினைகளை காதி நீதிமன்றங்கள் விசாரித்து வருகின்றன.
காதி நீதிமன்றம்: இங்கு வழக்கு விசாரணைகள் காதி முன்னிலையில் சட்டத்தரணிகளின் பிரதிநித்துவம் இன்றி, திறத்தவர்களையும் அவர்களது உறவினர்களையும் வைத்து வழக்குகள் விசாரணை செய்யப்படுகின்றன. முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தின் 74ம் பிரிவு, சட்டத்தரணிகள் பிரதி. நிதித்துவம் செய்ய முடியாது என்பதனை வலியுறுத்துகின்றது.
2S

Page 66
காதி நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுக்கும்போதோ, விசாரணை செய்யும் சந்தர்ப்பங்களிலோ, கட்டணமாக ஏதும் அறவிடப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
காதி நீதிபதிகள்: இவர்கள் முஸ்லிம் திருமண விவாக
ரத்துத் திருத்த கட்டளைச் சட்டத்தின்படி, நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படுகின்றனர். இவர்கள் யாவரும்நீதிபதிகளாகக் (Judicial Officers) கருதப்படுகின்றனர்.
காதி நீதிபதிகளின் அதிகாரங்கள் :
1.
மகர் (mahar) பணம் கணவனினால் செலுத்தப்படாத சந்தர்ப்பத்தில், மனைவி முறையிட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம். இலங்கையில் இவ்வாறான வழக்குகள் மிகக்குறைவு ஆகும். காரணம், பொதுவாக ஆயிரம் ரூபாவுக்கு மேல் மகர்ப்பணம் கொடுப்பதில்லை. பிள்ளைகள் அல்லது மனைவியின் பராமரிப்புப் பணம் செலுத்தப்படாது விட்டால் மனைவி முறையிட்டால் அதனை விசாரிக்கும் அதிகாரம். விவாகரத்து வழங்கிய பின்னர், இத்தாப்(ldda)பணம் பெறுவது தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம். பராமரிப்புப்பணம் உத்தரவிட்ட பிற்பாடு, இதனை கூட்டிக் குறைக்கும் அதிகாரம், கைக்கூலி மனைவியால் கணவனுக்கு வழங்கப்பட்டு அதனை திருப்பிப் பெறாவிட்டால் அதனை திரும்பப் பெற்றுக் கொடுக்கும் அதிகாரம்.
பிள்ளைப் பேறுகளுக்கு ஏற்பட்ட செலவுகளை அறவிட்டுக் கொடுக்கும் அதிகாரம். கணவன் மனைவிக்கிடையே ஏற்படும் பிணக்குகளை தீர்த்து வைக்கும் அதிகாரம்,
26

8. திருமணம் ஒன்றை வெற்று வெறிதாக்கும் அதிகாரம்.
9. 12 வயதை அடையாத ஒரு சிறுமியின் திருமணத்தை
பதிவு செய்வதற்கான அதிகாரம்
10. விவாகரத்து வழங்குவதற்கான அதிகாரம்.
11. திருமணத்தின்போது "வலி ஒருவர் இல்லாத சமயம் அத்திருமணத்தின் வலியின் தேவையை இல்லாது செய்யும் உரிமை,
12. தகப்பன் (வலி) ஒருவர் வேண்டுமென்றே ஒரு பெண்ணின் திருமணத்துக்கு தடை விதிக்கின்ற போது, அத்தகப்பனுடைய தேவையை இல்லாதாக்கும் உரிமை.
திருமணம்: திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படுகின்ற ஒரு கூட்டுறவு ஆகும். இக்கூட்டுறவு இறைவனால் ஏற்படுத்தப்படுவதாகும். திருமணத்தின் உரிமைகள் கடமைகள் குர்ஆனில் கூறப்பட்டாலும், இது சட்டத்தின் முன்னிலையில் ஒரு குடியியல் ஒப்பந்தமாகக் கருதப்படும்.
திருமணத்தின் போது மணமகளின் விருப்பம்: சாfபி சட்டத்தின்படி திருமணத்தின் போது பெண்ணின் விருப்பம் பெறப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். பிரிவு 25 (1) தகப்பன் அல்லது வலியாக செயற்படுபவர் பெண்ணின் விருப்பத்தை அறிந்து, அதனை வெளிப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது. மணமகளின் விருப்பத்தைப் பெறாது ஒரு திருமணம் நடைபெற்றது என நிரூபிக்கப்பட்டால் அத்திருமணத்தை திறத்தவரின் விண்ணப்பத்தின் பேரில், வலிதற்றதாக்கும் அதிகாரம் காதி நீதிமன்றத்துக்கு உண்டு. தகுந்த காரணம் இன்றி ஒரு பெண்ணின் திருமணத்தை வலி அல்லது தகப்பன் நிறுத்த முடியாது. அவ்வாறு நிறுத்தும் சந்தர்ப்பத்தில், காதி நீதிமன்றத்துக்கு தகப்பன் அல்லது வலியின் அத்திருமணத்திற்கான தேவையை இல்லாதாக்கும் உரிமை காதி நீதிமன்றத்துக்கு 2—60ӧї06.

Page 67
திருமணப் பதிவு : திறத்தவர்கள் முஸ்லிம்களாக இருந்து திருமணம் ஒன்று நடைபெறுகின்ற வேளையில், அத்திருமணத்தை பொதுச்சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக பதிவது தவறாகும். அத்திருமணம் முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தின் கீழ் பதியப்பட வேண்டும். எனவே, முஸ்லிம்களாக இரு திறத்தினரும் இருந்தால் மட்டும், முஸ்லிம் திருமண விவாகரத்துச் சட்டத்தின் கீழ் திருமணத்தை பதிவுசெய்யலாம். பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருப்பின், அது செல்லுபடியற்றதாக கருதப்படும். திருமணப் பதிவு ஒன்றை செய்து கொள்வது, அவசியமானதொன்றாகும். ஆனாலும், திருமணப் பதிவு செய்யாவிட்டாலும் அது செல்லுபடியான திருமணமாக கருதப்படும். பெண்களைப் பொருத்தமட்டில், திருமணத்தை பதிவு செய்வதை வலியுருத்துவது நல்லது. காரணம் விவாகரத்து நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு இது உறுதுணையாக அமையும்.
மறுமணம் மறுமணம் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டாலும் இலங்கையில் நியதிச் சட்டத்தின் படி, மறுமணம் செய்யும் ஆண் ஒருவர் 30 நாட்களுக்கு முன் அவர் வசிக்கும் பிரதேசத்தின் காதி நீதிபதிக்கும், அவர் திருமணம் செய்யவிருக்கும் பெண் வசிக்கும் பிரதேசத்தின் காதி நீதிபதிக்கும் அறிவித்தல் கொடுக்க வேண்டியது கட்டாயம் ஆகும். மறுமணம் செய்கின்ற ஒருவர்தான் முன்பு திருமணம் செய்ததை மறைத்து, மறுமணம் செய்தால் அவர் குற்றவியல் நடவடிக்கைக் கோவையின் பிரகாரம் வழக்கும் தொடரப்பட்டு தண்டிக்கப்படுவார்.
விவாகரத்து: முஸ்லிம் சட்டத்தில் விவாகரத்து மூன்று வகைப்படும் :
1. தலாக், இது கணவனினால் மனவிையின் மீது கொண்டு
வரப்படும் வழக்கு. தலாக் இரண்டு வகைப்படும்.

(i) தலாக் அஃசன் - இது ஒரு ஆண் தனது மனைவியின் மீது ஒரு தடவை தலாக் சொல்லும் முறை. இது மனைவியின் இத்தா காலம் முடிவடைய முன் (மூன்று டுகர் காலம்), மீளப் பெறப்பட்டு மனைவியை கணவன் ஏற்றுக் கொள்ளலாம்.
(i) தலாக் ஹசன் - இதன்படி ஒரே முறையில் மூன்று தடவைகள் தலாக் உரைத்து, மனைவியை விவாகரத்து செய்யலாம். இம்முறை தற்போது நடைமுறையில் இல்லை.
திருமண விவாகரத்துச் சட்டத்தின் அட்டவணை ஒன்றின்படி, ஒரு தடவை தலாக் சொன்ன பிறகு, இரு தடவைகள் காதி நீதிபதி திறத்தவர்களிடையே சமாதான ஏற்பாடு செய்ய வேண்டும் என உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் மனைவி சமூகமளிக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது. ஆனால், முஸ்லிம் சரியத் சட்டத்தின்படி ஒரு தலாக் கூறிய பிற்பாடு, மனைவி இத்தாவில் இருக்க வேண்டும். இத்தா காலம் முடிவடையமுன் கணவன் விரும்பினால் மனைவியை திரும்ப ஏற்றுக் கொள்ளலாம்.
. ப(f)ஸாஹற் - இம்முறை விவாகரத்து என்பது, கணவனின் தவறுகளை (மனைவியை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்குப் பராமரிக்காமை, தொடர்ந்து மனைவியை துன்புறுத்தல், அடித்தல், மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது விடல் ஆகியன தவறுகளில் சிலவாகும்) அடிப்படையாகக் கொண்டு அவரின் சம்மதம் கோரப்படாமலேயே, மனைவி பெறக்கூடிய விவாகரத்து ஆகும். இது மூன்று வகைப்படும்.
(i) குல்லா முறை - கடுமையான பிழைகள் தன் கணவனிடத்தில் காணாத போதும், அவரது
29

Page 68
மனைவி தனது திருமண வாழ்க்கையில் திருப்தி யாக இல்லை என்றால், கணவனுக்கு நஷ்டஈடு கொடுத்துதானே விவாகரத்துப் பெற்றுக்கொள். வது குல்லா முறை விவாகரத்து எனப்படும்.
(i) லியன் முறை - இதன்படி கணவன் மனைவியை அபாண்டமாக விபச்சாரம் புரிந்தவள் என குற்றம் சுமத்தினால், மனைவி அக்காரணத்தைக் காட்டி இம்முறைப்படி விவாகரத்துப் பெறலாம்.
(i) தலாக் ஏ தெளவித் - கணவன் தனது தலாக் w சொல்கின்ற உரிமையை மனைவிக்கு பாரப்படுத்தும் முறை, இம்முறையாகும். அதாவது திருமண ஒப்பந்தத்தின் போது வாய் மூலமோ அல்லது எழுத்து மூலமோ இதனை வழங்கலாம். அநேகமாக கணவன் இரண்டாவது திருமணம் செய்கின்ற வேளையில், இவ்வுரிமையை மனைவிக்கு பாரப்படுத்துவது வழக்கம்.
3. முபாரத் - இது கணவன் மனைவி இரு திறத்தின. ருக்கிடையில் விவாக வாழ்க்கை திருப்தி இல்லாது அமையும் போது, இரு பிரிவினரும் விரும்பிக் கோரும் விவாகரத்தாகும்.
முத்தா: இது கணவனால் மனைவிக்கு விவாகரத்தின் பிற்பாடு கொடுக்கப்படும் ஒரு தொகைப்பணம் ஆகும். இது தலாக் கணவனால் கூறப்பட்டாலும், பெண் ஒருவர் விரும்பி கணவனை பஸாtஹற் செய்தாலும், சரியத் சட்ட முறைப்படி கணவனால் மனைவிக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையாகும். முஸ்லிம் விவாகரத்து கட்டளைச் சட்டத்தில், இந்த விடயம் கூறப்படாது இருப்பதனால் இலங்கையில் இம்முறை தற்பொழுதுநடைமுறையில் இல்லை. இதனை எமது சட்டத்தில் உட்புகுத்துவது அவசியம்.

பயிற்சி அனுபவங்கள்
- உடுவை எஸ். தில்லைநடராசா பிரபுவும் புலவரும்
- "கசின்"
அறிவொளி பரப்பிய புலவர்மணி ஈழத்துச் சிறுகதை முலவர் சி. வைத்தியலிங்கம் - எஸ் வன்னியகுலம் கல்ஹின்னை இலக்கிய மரபு
- குறிஞ்சிக் குயில் இலங்கை முஸ்லிம்களின் கலைப் பாரம்பரியம்
- எஸ். எச். எம். ஜெமீல் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் - சில குறிப்புகள்
-றமீஸ் அப்துல்லாஹ்
தமிழுக்குத் தன்னையே அர்ப்பணித்த ஆனாஸானா
நூறு நூல் பதித்த தமிழ்மன்றம் - ஜின்னாஹ் சுயம் - சிறுகதை
- திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார் மீண்டும் ஒரு துயர் - குறுநாவல்
- செங்கை ஆழியான் ஆரம்பகால நினைவுகள்
- எஸ். எம். ஹனிபா தமிழ் மன்ற வெளியீடுகள் அனைவருக்கும் நன்றி
133
142
147
15
64
166
8O
9.
198
199
209
228
232
240

Page 69
அரிய முயற்சிகள்
இனிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இலங்கை முஸ்லிம்கள், தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு அளப்பரிய பங்காற்றியுள்ளனர். குறிப்பாக, மலையகத்தின் தமிழகமான கல்ஹின்னைப் பிரதேச இலக்கியவாதிகள், இப்பணியில் முக்கிய இடம் வகிக்கின்றனர். இவர்களின் இவ்வரிய முயற்சிகள் பற்றி, இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்படாமை என் மனதைக் கிளறியது. அதனால், இப்பிரதேச இலக்கியப் படைப்புகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வேண்டுமென்று பேராவல் ஊற்றெடுத்த வேளை, பேராதனைப் பல்கலைக் கழகத் தமிழ் சிறப்புக்கலை நெறியில் இறுதியாண்டு ஒரு நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது. இவ்வேளை கல்ஹின்னைப் பிரதேச இஸ்லாமியத் தமிழ் இலக்கிய முயற்சிகள் எனும் தலைப்பில் ஆய்வினை மேற்கொண்டு எண் அவாவை நிறைவேற்றிக் கொள்ள களம் அமைந்தது.
- “கல்ஹின்னையின் இலக்கியப் பணி” எழுதிய
திருமதி பளிரா ஹாசிம்
"பெரிய கல் அதிசயம்
Cல்ஹின்னையின் தென்மேற்குப்பகுதியில் ஊரின் ஒரு ஓரமாக மிகப் பெரிய கல் ஒன்று இருக்கிறது. ஆண்ட7ண்டு காலமாக, இதைப் "பெரியகல்" என்றுதான் ஊர்மக்கள் அழைத்து வருகின்றனர்.
அந்தக் கல்லில் பே7ய் அமர்ந்து குறிப்பாக மாலை நேரத்தில் அரட்டை அடிக்காதவர்கள் அவ்வூரில் எவருமில்லை என்றே கூறிவிடல7ம் வெளியூர்களிலிருந்து கல்ஹின்னைக்கு வரும் நண்பர்களைக் கூட்டிக் கொண்டுபோய் காட்டும் அள7. வுக்கு. இந்தப் "பெரியகல்"கல்ஹின்னையின் ஒர் அதிசம7கக் கருதப்படுகிறது. குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த நெல். வயல்கள், சிறுமலைகளின் காட்சியை இதிலிருந்து பார்க்கல7ம்

உருவை எஸ். தில்லை நடராசா
அரசசேவையில் பல்ல7ண்டுகளாக இருக்கின்ற உடுவை எஸ். தில்லை.நடராச7, சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்து சமய கல7சாரத்திணைக்களப் பணிப்பாளராக இருந்தார். தற்பொழுது, கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளராக இருக்கின்ற இவர் ஒரு பிரபல எழுத்த767ர்.
கண்களில் கண்ணி அரும்புகிற விதத்தில், வாசிக்கும் பொழுது சிரிக்கும்படி எழுதிய முதல்வர்கள் "கல்வி "தேவன்" எனக் குறிப்பிடல7ம் இதுபோல இலங்கையில் சிரிப்பை உண்டாக்கும் விதத்தில் எழுதியவர் 'இலங்கையர்கோன்" அவரின் வழியைத் தொடர்ந்து, இலங்கை வானொலியில் பலகாலம் பணிபுரிந்த "சானா" திட்டிய நடைச்சித்திரங்கள், குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைத்தன. "சிரித்திரன்"நகைச்சுவைச் சஞ்சி. கையில் "சுந்தர்" செய்துகாட்டிய சிரிப்பூட்டும் வித்தை சரித்திரப் பிரசித்தமானது இதே பரம்பரையில் இன்று இலங்கை எழுத்தாளர் மத்தியில் உடுவை எஸ். தில்லை நடராசர அரிய அனுபவம் வாய்ந்த ஒருவராகப் பிரகாசிக்கிற7ர்.
காலந்தாழ்த்தி அவரின் நகைச்சுவைக் கட்டுரைகள் "கல்யாணம் முடித்துப் பார்" எனும் பெயரில் நூலுருப்பெற்றது. முன்பு, பத்திரிகைகளில் அதே கட்டுரைகள் வெளியானபோது படித்து ரசித்தவர்கள் இன்று நூலுருவில் அவற்றை மீணடும், மிண்டும் வாசித்துச் சுவைக்கின்றனர்.
33

Page 70
சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சில நாட்களுக்குள் ஆரம்பமாகிவிட்டது தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த உற்சவம். யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் திரள்வதால் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சாரணர்களும் உதவிக்கு அழைக்கப்படுவது வழக்கம். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி சாரணர் இயக்க மாணவர்களோடு இணைந்துகொண்டுநானும் சென்றேன். நாங்கள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இடத்துக்குச் சிறிது தூரம் தள்ளி வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிச் சாரணர்கள் கூடாரம் அமைத்திருந்தார்கள். ஒருநாள் மதிய உணவுக்குப்பின் சாரண ஆசிரியர்நீலகண்டன் எங்களை அழைத்து, "இன்று மாலை சித்மபராக் கல்லூரி மாணவர்கள் உங்களுடன் கலந்து பழக வருகிறார்கள். சிநேக பூர்வமான விளையாட்டுகளும் இடம்பெறும்" என்றார்.
சிதம்பராக் கல்லூரி மாணவர்களும், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவர்களும் சம்பிரதாயபூர்வமான அறிகமுகம் - விளையாட்டுகள் என்று ஈடுபட்டிருந்த வேளை, எங்கள் கல்லூரி சாந்தன், நீளமான கயிற்றைக் கொண்டுவந்தான் - " கயிறு இழுப்புப் போட்டி."
முதல் தடவை எங்கள் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை கயிறிழுத்தல் ஆரம்பமான சில விநாடிகளில். "ஐயோ அம்மா!" எனறு சாந்தன் விழுந்து விட்டான். சுற்றி ஒரு கூட்டம்,
உடனே சுறுசுறுப்பாகச் செயற்பட்டேன். "சேர்! ஒரு கார் பிடிச்சு வரட்டோ?"
நீலகண்டன் ஆசிரியர் கோபித்தார்: "சத்தம் போடாமல் உன்ர வேலையைப் பார்".
நிலத்தில் விழுந்து கிடந்த சாந்தன் வலது கையால் வயிற்றை அமத்திப்பிடித்தபடி அலறினான்: "அம்மா.அம்மா"

மைதானத்தில் மாலை நேர வெய்யில் சுட்டெரித்ததால் எல்லோருமாகச் சேர்ந்து சாந்தனை வேலியோர மரநிழலின் கீழே துரக்கிச் சென்றனர்.
எங்கள் கல்லூரி பெரிய மாணவர்கள் அமைதியாக இருந்து அவதானித்தபடி இருந்தனர். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் சாந்தனைக் கேள்வி கேட்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தனர். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, சாந்தன் ஒருவாறு சமாளித்துக்கொண்டு எழுந்தான் : "இப்ப கொஞ்சம் சுகம்".
"ஆஸ்பத்திரிக்குப் போவமா?" - ஆசிரியர் நீலகண்டன் கேட்டார்.
"இவரும் ஒரு ஆசிரியரா?" பத்து நிமிடத்துக்குப் பிறகு கேட்கிறார்?" -ஆசிரியர்நீலகண்டன் மீது ஒருவிதமான வெறுப்பு.
மரத்தில் மேல் ஏறி .
அப்போது உயரமான மரத்தின் கிளையொன்றில் ஏறியிருந்து கீழே நடந்தவற்றைப் பார்த்துக்கொண்டிருந்த இராஜேந்திரனை ஆசிரியர் நீலகண்டனின் கண்கள் நோக்குகின்றன.
அவரது கோபம் - "உங்கை என்னடா செய்யிறாய் ? இறங்கடா கீழை"
இராஜேந்திரன் விரைவாகக் கீழே இறங்க முயற்சிக்கும்போது அவனது ஒரு கால் மரக்கிளைகளுக்கிடையே சிக்குப்பட்டுவிடுகிறது. அவனது அலறல் பயங்கரமாயிருந்தது. "அம்மா. அம்மா". அதைவிடப் பயங்கரமாயிருந்தது ஆசிரியரது சத்தம் "இறங்கடா. இறங்கடா".
இராஜேந்திரன் அழுதான் - "ஐயோ சேர் கால் மடங்கியிடுத்து. இழுக்க முடியாமல் கிடக்கு."
நாங்கள் எல்லோரும் நன்றாகப் பயந்தோம்.

Page 71
உடனடியாகச் சிதம்பராக் கல்லூரி மாணவர் இருவர் மரத்தில் ஏறினார்கள். ஒருவன் மரத்திலிருந்த வண்ணம் கயிற்றை மேலே எறியச் சொன்னான். இருவரும் கயிற்றில் ஓர் ஊஞ்சல் போலச் செய்து, அதில் இராஜேந்திரனை உட்கார வைத்து பத்திரமாகக் கீழே இறக்கினார்கள்.
"ஓரிடத்திலை கூட்டமாக நில்லாதையுங்கோ, சுத்திவர நில்லுங்கோ. காற்று வரட்டும்" என்று சொல்லிய வண்ணம் வேலியருகே சென்ற ஆனந்தன், "அம்மா. அம்மா!" என்று பிடரியைக் கைவிரல்களால் தடவிய வண்ணம் அழுதான் - "கம்பி வேலி சேர். ஆணி குத்திப்போட்டுது". ஆனந்தன் அழுது கொண்டிருந்தான்.
சிதம்பராக் கல்லூரி மாணவன் ஒருவன் ஆனந்தனின் தலையில் ஆணி குத்திய இடத்திலுள்ள மயிர்களை விரல்களால் விலத்தி அடையாளம் வைத்து, "கத்தரிக்கோலைக் கொண்டு வாங்கோ" என்றான்.
என் மனம் கவலைப்பட்டது - "சாந்தன் வயிற்று வலியால்
அவதிப்படுகின்றான் ; இராஜேந்திரன் கால் மடங்கிக் கஷ்டப்படுகின்றான்; ஆனந்தன் தலையில் ஆணி குத்தி அவதிப்படுகின்றான்; என்ன கஷ்ட காலம் ?"
நான் கவலைப்படும்போது மாணவர்கள் பலர் சிரித்தார்கள். ஆசிரியர் நீலகண்டனும் சிரித்தார். சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் சிரித்தனர். விடயம் இதுதான் -
சாரணர்கள் முதலுதவிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் முதலுதவி அளிக்கத்தக்க அறிவையும் தகைமையும் பெற்றுவிட்டனரா என்பதைச் சோதனை செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் பிரமாதமாக நடித்தனர். இவர்களின் நடிப்பை நிஜமென நினைத்துக் கார் பிடிக்கப் புறப்பட்டதை இப்போது நினைத்தாலும் .

இப்படித்தான்.
எழுபதுகளில் தந்தி ஒன்று அனுப்புவதற்காக யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குச் சென்றேன். தபால் கந்தோரில் ஒரேயொரு உத்தியோகத்தரைத் தவிர மற்றைய எல்லோரும் கந்தோரின் பின்பக்கம் சென்றனர். நானும் சென்றேன். வரிசை யாகநின்ற பலர் ஒவ்வொருவராகத் தந்திக் கம்பத்தின் மேலே ஏறி இறங்கியதை அவதானித்தேன். நீளக் காற்சட்டை அணிந்திருந்த சிலரும் காற்சட்டையைச் சுருட்டி மடித்துச் செருகிக் கொண்டு, தந்திக் கம்பத்தில் ஏறி இறங்கினார்கள்.
அங்கிருந்த ஒருவரிடம், "என்ன விளையாட்டு இது என்றேன்".
"விளையாட்டல்ல. இன்ரவியூ (Interview) நடக்கிறது. இவை லைன்ஸ்மென் வேலைக்கு அப்ளிக்கேஷன் போட்டவை. கம்பத்திலை ஏறத் தெரியாட்டி வேலை செய்ய முடியாது ; அதுதான்," என்றார் ஒருவர்.
கவர்னர் சந்திப்பு: 1990 நடுப் பகுதியில் பிரச்சினைகள் நிறைந்த அவசர காலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு, திருகோணமலையில் எனது வதிவிட இல்லத்துக்கு வந்த பிரதம செயலாளர் திரு. கணேசநாதன் - "அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு கவர்னர் தன்னைச் சந்திக்கட்டாம்" என்றார்.
அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் கணேசநாதன் காட்டிய கதிரையில் அமர்ந்து கொண்டேன்.
ஆளுநரிடமிருந்து வரும் கடிதங்கள், கோவைகளைப் பார்வையிட்டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அடுத்த உத்தியோகத்தர்களுக்கு அனுப்ப வேண்டும். உத்தியோகத்தர்களிடமிருந்து ஆளுநருக்கு அனுப்புவனவற்றைச் சரிபார்க்க வேண்டும்.
சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஆளுநரின் அழைப்பு.
"நானும் செயலாளர் கணேசநாதனும் கொழும்புக்குப் போகின்றோம். அலுவலகத்தைப்பார்த்துக் கொள்ளும்" என்றார்.
37

Page 72
அவசர காலத்தில் அலுவலகக் கடமைகளைச் சரியாக நிறைவேற்றும் தகைமையைச் செயல் ரீதியாகப் பரீட்சித்துப் பார்த்த ஆளுநரும் செயலாளரும் திருப்திப்பட்டு, அலுவலகத்தை என்னிடம் ஒப்படைக்க முடிவுசெய்தனர் எனப்பின்னரே அறிய முடிந்தது.
1994ல் பாங்கொக் நகரில் ஆசிய (Asia) பயிற்சிக் கல்லூரியில் (AT1) நான்கு வார கால "இடர்கால முகாமைத்துவம்" பயிற்சிக்குச் சென்றிருந்தேன்.
பல நாடுகளைச் சேர்ந்த புதிய முகங்கள் - புதிய அனுபவங்கள் - பத்து நாள் பயிற்சி முடிந்துவிட்டது.
காலையில் எழுந்து ஒரு தேநீர் குடித்தால்தான், சற்றுச் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.
பதினோராவது நாள் வழமையைவிட சிறிது முன்னதாக விழித்துக்கொண்ட நான், "எப்போது ரீ குடிக்கலாம் என்ற எண்ணத்துடன் கதவருகே சென்றேன். கதவுக்குக் கீழிருந்த சிறு இடைவெளியூடாக இரண்டு கடிதங்கள் அறையினுள்ளே தள்ளப்பட்டிருந்தன. ஒன்று எனக்கு - அடுத்த கடிதம் எனது அறை நண்பனுக்கு.
கடிதத்தில் காணப்பட்ட தகவல் இதுதான் - "அவசர அறிவித்தல்" பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இரண்டு எரிமலைகள் நள்ளிரவுக்குப் பின், சிற ஆரம்பித்துவிட்டன. எந்த நேரம் என்ன நடக்குமென்று சொல்லத் தெரியாது. எனவே வெளிநாட்டவரைப் பாதுகாப்பாக வெளியேற்ற, தாய்லாந்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற் கட்டமாக இந்த விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டாவது மாடியிலுள்ள மகாநாட்டு மண்டபத்துக்குக் காலை 7.00 மணிக்குச் சமூகமளிக்கவும்.
அந்த அறிவித்தல் என்னை மட்டுமா அதிர்ச்சிக்குள்ளாக்கியது?

"பாங்கொக் நகரை முழுமையாகப் பார்க்க முடியவில்லையே?"
"ஊருக்குக் கொண்டு போவதற்கான பொருட்கள் வாங்கவில்லையே?"
"பயிற்சி அரைகுறையாக இருக்கிறதே?" ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் வித்தியாசமான ஏக்கங்கள்.
மகாநாட்டு மண்டபத்தில் பயிற்சி இணைப்பாளர் எங்களைச் சந்தித்தார்.
"வணக்கம்! திடீரென்று ஏற்பட்ட நிலைமைக்கு வருந்துகின்றோம். வெளிநாடுகளிலிருந்து வந்த உங்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றோம். இப்போது எரிமலைகளின் சீற்றம் அதிகரித்து நிலை உக்கிரமடைந்து வருவதால் பாங்கொக் நகரிலுள்ளோரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் உங்களை மாத்திரம் அனுப்புவது சாத்தியமல்ல. இங்கு பல அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்."
இணைப்பாளர் ஒவ்வொருவரையும் அறிமுகஞ் செய்து வைத்தார் -
"இவர் எரிமலை தொடர்பான தகவல்களைத் தருவார்" "இவர் பொலிஸ் பகுதிப் பொறுப்பதிகாரி" "இவர் காலநிலை அவதானநிலையத்தைச் சேர்ந்தவர்" "இவர் தொடர்பாடல் வேலைகளைக் கவனிப்பார்" தொடர்ந்து இணைப்பாளர் சொன்னார்: "உங்களை நான்கு ஆட்கள் கொண்ட குழுவாகப் பிரித்து. ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்புவோம். இந்த அதிகாரிகள் தேவையான தகவல்களைத் தருவார்கள். கட்டுப்பாட்டறையில் உங்களுக்குத் தேவையான காகிதாதிகள், தொலைபேசி, கணனி ஆகியன உண்டு. விரைவாகத் திட்டங்களைத் தயாரித்தால் எல்லோரையும் எரிமலைச் சீற்றத்திலிருந்து பாதுகாத்து வெளியேற்ற முடியும்"

Page 73
தலைவிதியை நொந்து. நானும் வேறு மூன்று பயிற்சி. யாளரும் தலைவிதியை நொந்து, இறைவனை வேண்டி எங்களுக்கெனத் தரப்பட்டுள்ள கட்டுப்பாட்டறைக்குச் சென்று சுமார் மூன்று மணித்தியாலங்கள் செலவிட்டுப் பல்வேறு அதிகாரி. களிடமிருந்து தகவல்களைப் பெற்று, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றக் கூடிய திட்டத்தைத் தயாரித்தோம்.
பத்து மணியாகிவிட்டது. மற்ற நண்பர்கள் மூவரையும் அழைத்துக்கொண்டு திட்டம் பூர்த்தியான மகிழ்வுடன் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கட்டுப்பாட்டறையினுள் நுழைந்தோம்.
மூன்று மணிநேரமாகப் பாடுபட்டுத் தயாரித்த திட்டம், கடதாசிகள், கிழிந்தும் நீரில் நனைந்தும் நிலத்தில் கிடந்தன. அறையெல்லாம் அலங்கோலம். அழகான கையெழுத்துடன் கூடிய அறிவிப்பு ஒன்றுதான் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.
"இப்படியான நெருக்கடி நேரத்தில், எல்லோரும் கட்டுப்பாட்டறையை விட்டுப் போயிருக்கக் கூடாது. மழையும் காற்றும் நீங்கள் தயாரித்த திட்டக் கடதாசிகளைச் சேதப்படுத்திவிட்டது. மீண்டும் தயாரித்து, பயிற்சி இணைப்பாளரிடம் கொடுக்கவும்" - என்ற அறிவித்தல் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.
யாரை நோவது - செய்த வேலைகளை மீண்டும் செய்து தயாரித்தோம். முதலில் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. பின்னர் முப்பது நிமிடத்தில் செய்து முடித்து விட்டோம்.
திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் செய்யும்போது சரியாகவும், விரைவாகவும் செய்ய முடியும் என்பதோடு, கட்டுப்பாட்டறையில் ஒருவராவது உணவு, உறக்கம் மறந்து கடமையாற்ற வேண்டும் என்பதையும் சொல்லித் தந்த பயிற்சி இணைப்பாளர் "எரிமலைக் குமுறலும்"பயிற்சிக்காகத் தயாரிக். கப்பட்ட நாடகம் என்றார்.
பயிற்சியின்போது, 28 பயிற்சியாளர்களை அழைத்துக் கண்களைக் கட்டி 80 அடி நீளமான கயிற்றைத் தந்து, அக்கயிற்றில் ஒரு சற்சதுரம் போடச் சொன்னார்கள். சுமார்

அரை மணி நேரம் ஒவ்வொருவரும் நன்றாகச் சத்தமிட்டுக் கத்தினோம். உருப்படியாக ஒன்றும் செய்ய முடியவில்லை. பின்னர், எங்களுக்குள் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்தோம். தலைவருக்கு, சிலர் தங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைத் தெரிவித்தனர். தலைவர் ஆலோசனைகளை உள். வாங்கிய பின்னர், கட்டளைகளைப் பிறப்பித்தார்.
"80அடி நீளமான கயிற்றை இரண்டாக மடித்தால் 40 அடி நீளமாகக் குறையும்." ஒவ்வொரு 40 அடிநீளமான கயிற்றையும் பதினான்கு பேர் பிடிக்கவும்.
அடுத்த கட்டளை: 40 அடி நீளமாகக் குறைந்த கயிற்றை மீண்டும் இரண்டாக மடித்து 20 அடியாகக் குறைத்து 20 அடி நீளமான கயிற்றை ஏழுபேர் பிடிக்கவும்.
அடுத்த கட்டளை: "ஒன்று, ஏழு, பதினான்கு, இருபத்தியொன்று எண்ணுக்குரியவர்கள் 90 பாகை கோணத்தில் கயிற்றைப் பற்றிக்கொண்டு, ஒன்று எண்ணுக்குரியவருக்குப் பக்கத்தில் இருபத்தியெட்டு எண்ணுக்குரியவரை நிற்கச் சொன்னார்"
ஒரு சற்சதுரம் உருவாகிவிட்டது. தீயணைப்பு வேலைகளை மேற்கொள்ளும் போது கண்களை முடிக்கொண்டு இடம், வலம் - மேலே, கீழே என்று மாறிமாறிச் செல்லும்போது இத்தகைய பயிற்சிகள் உதவியாயிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
பயிற்சி அனுபவங்கள் பயன் நிறைந்தவையாக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.
eSpa elaSpa eva elaya era

Page 74
பிரபுவும் புலவரும்
7ழகேசரி " உருவாக்கிய எழுத்தாளர்களில் ஒருவர் "கசின்" என்ற புனைப்பெயரில் முன்னைய இலக்கியத் தலைமுறைய7ணர் நன்கு அறிந்தவரான திரு. க. சிவகுருநாதன் அவர்கள். /946ம் ஆண்டிலிருந்து முன்று தசாப்தங்கள் வரை, இலங்கையின் அனைத்துத்தமிழ்ப்பத்திரிகைகளிலும்நிறையவே எழுதியவர் சிறுகதை,நாவல், கட்டுரை என்ற முத்துறைகளிலும், அகலம7கவும் ஆழமாகவும் கால்களை ஊன்றியுள்ளவர், "கசின்" அச்சுவேலி சரஸ்வதி, உசன், இராமநாதன் பாடசாலைகளில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற அவர் திருநெல்வேலி சைவாசிரியர் கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்ற7ர். இலங்கையின் பல பகுதிகளிலும்தமிழாசிரியராகக் கடமையாற்றி இறுதியில் உடுத்துறைமகாவித்தியாலயத்தில் அதிபராகப் பதவி வகித்து ஓய்வு பெற்றார். நகைச்சுவை இழையோடும் நடையையுடைய 'கசின்"அவர்களின் 'கும77இரஞ்சிதம்"என்றநாவல் கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் தொண்ணுற்றைந்தாவது பிரசுரம7க வெளிவந்தது.
/920ம் ஆண்டில் பிறந்த "கசின் "ஐயா, 2000ம் ஆண்டு டிஸம்பர் மாதம் 13ம் திகதி தனது எண்டதாவது வயதுபூர்த்தியைக் கொண்டாடினார். இன்னமும் பத்திரிகைகளில் நகைச்சுவை ததும்பும் கட்டுரைகள் எழுதிவருகிற7ர்.
 

பண்டைக் காலத்தில் சேர, சோழ, பாண்டியரெனத் தமிழ்நாட்டை மூவரசர்களும் திறம்பட ஆண்டார்கள். அக்காலத்தில் அரச சபைகளில் தமிழ்ப்புலவர்களும் விளங்கினார்கள். அக்காலம் தமிழ்ப் புலவர்களின் பொற்காலம் என்று கூறலாம். அவர்கள் கூற்றை. அரசர்களும் கேட்டு நடந்தார்கள்.
அதற்குப் பின் பெரிய இந்திய தேசத்தை ஆங்கிலேயர் ஆண்டனர். இப்பொழுது இருப்பது போல், பெரிய இந்திய தேசத்தை ஒரு கொடியின் கீழ் ஆங்கிலேயர் ஆண்டனர். இதை இந்தியா பெற்ற ஒரு நன்மை என்றும் கூறலாம்.
ஆங்கிலேயர் இந்தியாவைக் கைப்பற்ற முன், இந்தியாவை முஸ்லிம்கள் ஆண்டனர். முஸ்லிம்களும் இந்தியாவை ஒரு கொடியின் கீழ் ஆளவில்லை. சில இடங்களில் சுதேச அரசர்களும், சில இடங்களில் முஸ்லிம்களும் அரசாண்டு வந்தனர்.
எவ்வாறெனினும் முஸ்லிம்கள் முழு இந்திய தேசத்தையும், ஒரு கொடியின் கீழ் ஆங்கிலேயரைப் போன்று ஆளவில்லை. பற்பல சிற்றரசுகளும் பெரிய அரசுக்குத் திறை கொடுக்கின்ற சிற்றரசுகளும், என்று பல வர்ணமாக அரசியல் இருந்தது.
சிற்றரசுகள் ஆளுகின்ற காலத்தில், தமிழ்ப் புலவர்கள் இருந்த போதிலும், அவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. சில புலவர்களைச் சில புலவர்கள் ஆதரித்துவந்தனர். அப்படி ஆதரித்து வந்த போதிலும் சில புலவர்கள், தம்மை ஆதரித்த அரசன் மீது குறை கூறி, அரசனை வெறுத்து, வேறு தேசத்திற்குச் சென்ற வரலாறும் உண்டு.
ஆகப்பிற்பட்ட காலத்தில், பிரபுக்கள் மீது சிலபுலவர்கள் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்ற சம்பவங்களும் உண்டு. அதற்குப் பின் புலவர்கள் "கோவை" என்று ஒருவகைப் பிரபந்தத்தை பிரபுக்கள் மீது பாடி அவர்களின் அவைகளில் பரிசு பெற்றுச் செல்வார்கள். கோவைப் பிரபந்தத்தில், மூன்று அடி அகப்பொருளாகவும், ஒரு அடி, தான் எடுத்துக்கொண்ட பிரபுவையும்
43

Page 75
குறிக்கும். இதன் மூல நூல், இறையனார் அகப்பொருள். இறைவன் மீது பாடப்பட்டது. இதற்குப் பின், தஞ்சை வாணன் கோவை, கரவை வேலன் கோவை எனப் பல கோவைப் பிரபந்தங்கள் தோன்றின.
கரவை வேலன் கோவை என்பது ஈழத்தில் தோன்றியது. கரவெட்டி வேற்பிள்ளை உடையார் மீது பாடப்பெற்றது. கோவைப் பிரபந்தங்களின் காலத்தின் பிறகு, புலவர்களை ஆதரிப்பது வெகுவாகக் குறைந்து விட்டது.
புலவர்கள் குறித்த ஒரு பிரபுவைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற்று வரும் வழக்கம் ஏற்பட்டது.
இப்பொழுது, கற்பிய்பவர்கள், அரசாங்க வேதனம் பெற்று, மிக வசதியாக வாழ்கிறார்கள். சென்ற நூற்றாண்டுக்கு முன்னர், அந்த வழக்கம் இருந்ததில்லை. திண்ணைப்பள்ளிக்கூடங்கள் என்று சில இருந்தன. திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஒரு கிராமத்தில் வசதியான சில மாணவர்களைச் சேர்த்து, ஒரு ஆசிரியர் கற்பிப்பார். அவர்களிடம் கற்கும் மாணவர்கள், நெல், தேங்காய் முதலிய பொருட்களை வெகுமதியாகக் கொடுப்பார்கள். அப்படியெனினும், கல்வி கற்கும் ஒழுங்குமுறை எக்காலத்திலும் நின்றதில்லை.
சென்ற நூற்றாண்டில், சில புலவர்கள் சிற்றரசர் மீது புகழ்பாடிக் கொண்டுபோய் அவர்களுடைய சபையில் வாசித்துக் காட்டிப் பரிசு பெற்று வருவார்கள். அத்தகைய பாடல்களைத் தொகுத்துத் "தனிப் பாடற் திரட்டு" என்று நூலாகச் செய்திருக்கிறார்கள். அந்த நூலிலிருந்து ஒரு பாடலை இப்பொழுது பார்ப்போம். ஒரு பாடலைப் பார்த்தாலே, புலவர்களும் பிரபுக்களும் எப்படி அக்காலத்தில் இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஒரு புலவர், ஒரு பிரபுவின் மீது, அவரைப் புகழ்ந்து பாடிக்கொண்டு சென்று, பரிசு கேட்கிறார். பிரபு பரிசு கொடாது, அவர் பாடிய பாட்டில் பிழைகளைக் கண்டு பிடித்து, அவரைத்

துரத்திவிடுகிறார் ; புலவர் கடவுளை நினைத்து, இப்படிப்பட்டவரிடம் என்னை அனுப்பாதே என்று கடவுளை வணங்கிக் கூறுகின்றார் என்பதுதான் அந்தப் பாடல்.
முற்காலத்தில், தேவ உலகத்தில் ஒரு இரத்தினக் கல் இருந்தது. அந்த இரத்தினக்கல் விலை மதிக்க முடியாதாது, அந்தக் கல்லை ஒரு வங்கியில் கொடுத்து எத்தனை இலட்சம் வேண்டுமானாலும் பெறலாம். அத்தனை மதிப்பு வாய்ந்தது. அதன் பெயர் சிந்தாமணி.
தேவ உலகத்தில் ஒரு வகைப் பசு வளர்த்தார்கள். அந்தப் பசுவில் நெய்யோ, தயிரோ, பாலோ விரும்பியதைக் கறந்து பெற்றுக் கொள்ளலாம். அந்தப் பசுவிற்குப் பெயர் காமதேனு.
மேலும் தேவ உலகத்தில், யாழ்ப்பாணத்தில் பனை போன்று ஒரு மரம் நின்றது. பனையிலிருந்து, பனம் பழம் மாத்திரமின்றி, பன நீர், பனங்கள், பனாட்டு என்று பல பொருட்களைப் பெறலாம். அதனால் பனைக்கு "கற்பக தரு" என்ற பெயர் வழங்குகின்றது. தேவ உலகில் இந்த கற்பகத் தருவிலிருந்து வேண்டிய பழத்தைப் பெறலாம். பலாப்பழம் வேண்டுமானால், பலாப்பழம் பெறலாம். மாம்பழம் வேண்டுமானால் மாம்பழம் பிடுங்கலாம். அப்படியான மரம் அது.
இந்த மூன்று பொருட்களையும், பிரபுவுக்கு உவமையாக வைத்து புலவர் ஒரு பாவைப் பாடிக் கொண்டு பிரபுவின் வீட்டிற்குச் செல்கிறார். அத்தோடு நில்லாமல், அவர் மேலும் பிரபுவைப் புகழ்ந்து, "அரிச்சந்திரனே" யென்றும் பாடினார். அரிச்சந்திரன் உண்மை பேசுவதற்கு உதாரணமாக இன்றும் விளங்குகிறார். அரிச்சந்திரனை உதாரணத்திற்குக் காட்டினால், பிரபு பொருளை வைத்துக்கொண்டு இல்லை என்று சொல்லமாட்டார். ஆகையால், பிரபுவை அரிச்சந்திரனே என்று விளித்துப் பாடுவது ஒரு நல்ல புத்தி என்று புலவருக்குத் தோன்றியது.
-S

Page 76
இவ்வாறு புலவர், அப் பிரபுவின்மீது பின்வரும் பாட்டை இயற்றிக்கொண்டு போய்ப் பாடிக் காண்பித்தார். பா வருமாறு:
சிருல7வி/ காமதேனுவேத7ருவே
செப்பு/வசனத்தரிச் சந்திரனே என்றலும் //7ரைநசீம7டுகல் மரமென்று அட/த செ7ன்னதுமல7ல்
அரிச்சந்திரனென்றே அடாது சொன்னாய் //7ர்க்கடிமை ஆகினேன், ய7ர்கையில் பெண்டு விற்றேன் கூறுநீ"என்ன குதர்க்க மொழிபேசுவோரிடம் என்னை
அனுப்பாதிரு பெரியம்மையே" புலவரைப் பார்த்துப் பிரபு கூறுகிறார்: "யாரை நீ மாடு, கல், மரமென்று அடாது சொன்னது மல்லாமல், அரிச்சந்திரன் என்று கூறினாய்? நான் யாருக்கு அடிமையானேன், யாருக்கு மனைவியையும், பிள்ளையையும் விற்றேன்? கூறடா" என்று புலவரைப்பார்த்து அதட்டிக் கூறினார். புலவர் வந்தேன், சென்றேன் என்றில்லாமல் ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். V−
இப்படிப்பட்ட பிரபுக்களிடம் என்னைக் கொண்டு செல்லாதே, என்று, தான் வழிபடும் தெய்வத்தை நோக்கிப் புலம்புகிறார், புலவர்.
米 米 米 米 米
விசுவாசிகள் ஒருவருக்கொருவர், ஒரு கட்டிடத்தின் கற்களைப் போன்றவர்கள்.
அதில் ஒவ்வொரு கல்லும் பிறிதொன்றினால் உதவி செய்யப்பட்டு, பலப்படுத்தப்படுகின்றது.
- புஹாரி

அறிவொளி
பரப்பிய
IബഖtIDഞ്ഞ്
புலவர்மணி வித்துவான் க. செபரத்தினம், B.A.Dip. -in-Ed. ஓய்வு பெற்ற அதிபர்
புலவர்மணி அவர்கள், வாழ்வாங்கு வாழ்ந்தவர். அவரின் வாழ்க்கை பல்லாற்றானும் வளம் பெற்று விளங்கியது.
விபுலாநந்தர் மீட்சிப்பத்திலே, அடிகளாரை, "கருவிற் திருவுள கலைஞன்" எனப் பாராட்டியுள்ள புலவர்மணி அவர்களும் "கருவிற்திருவுள கலைஞன்" ஆகவே விளங்கினார்.
"கவிதை புனையும் ஆற்றல் இயற்கையில் அவர் பால் அமைந்திருந்தது", எனும் பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களதும் "என் பாட்டு கலைமகள் கடாட்சம்" எனும் புலவர்மணி அவர்களதும் கூற்றுகள் நோக்குதற்குரியவை.
தாய் வயிற்றிலிருக்கும்போதே, கல்லாமற் பாதியறிவு கைவரப்பெற்ற புலவர்மணியின் வாழ்வானது, அறிஞர் பெருமக்களின் பேருதவியால் மேலும் வளம் பெற்றுமலர்ச்சியடைந்து உயர்ச்சி பெற்றதைப் பார்க்கிறோம்.
நடமாடும் பல்கலைக்கழகமெனப் போற்றப்பட்ட சுன்னை குமாரசுவாமிப் புலவர், நடமாடும் பல்கலைக்கழக நூல் நிலையமெனப் பாராட்டப்பட்ட அறிஞர் கைலாசபிள்ளை, மகாவித்துவான் என்னும் பட்டத்துக்குச் சிறப்புச் செய்த கணேசையர், பேரறிஞர் விபுலானந்தர் - ஆகியோர் புலவர்மணி
雌47

Page 77
அவர்களின் நல்லாசிரியர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள். இப்பெருமக்கள், புலவர்மணி அவர்களின் வாழ்வை வளப்படுத்தியதில் குறிப்பிடத்தக்க பணி ஆற்றியுள்ளார்கள்.
தமது ஞானாசிரியரான விபுலாநந்தரின் ஞாபகசக்தியைப் பற்றி, "நான் பத்துவரி பாடமாக்கும் முன்பு மயில்வாகனனார் ஐம்பது வரிகள் பாடமாக்கி விடுவார். மயில்வாகனனாரின் ஞாபகசக்தியின் முன்பு. நமது ஞாபகசக்தி வெறும் சூனியமே. பண்டிதருக்கு இணையான ஞாபகசக்தி உள்ள ஒருவரை நான் கண்டதே இல்லை. அவரது ஞாபக சக்தி அபாரமானது , ஒப்புயர்வற்றது. ஒரு விபுலாநந்தரைப் பெற ஈழநாடு நூறாண்டு தவமிருக்க வேண்டும்" என்று புலவர்மணி குறிப்பிட்டுள்ள போதிலும், புலவர்மணி அவர்களது ஞாபகசக்தியை எவரும் குறைத்து மதிப்பிடமுடியாது. அவருடன் படித்தவர்கள், அவருடன் தொடர்பு கொண்டவர்கள் அனைவரும் அவரது அபார ஞாபகசக்தியைப் போற்றவே செய்வர். அவரது வாழ்வு வளம்பெற்று விளங்கியமைக்கு இந்த அபார ஞாபகசக்தியும் ஒரு காரணமாம்.
புலவர்மணி ஆரம்ப காலத்தில்ே ஆங்கில மொழி மூலம் கல்வி கற்று ஏழாம் வகுப்பு சித்தி அடைந்தவர். வகுப்பிலே தமிழில் பேசினால் தண்டம் செலுத்த வேண்டிய அக்காலத்தில் ஏழாம் வகுப்புசித்தியடைந்தமை குறிப்பிடக்கூடிய செயலாகும். விபுலாநந்த அடிகளாரது ஆசிரியரான குஞ்சுத்தம்பி, அறிஞர் ஆர்.என். சேதுகாவலர், பெரியார் பொன்னையா ஆகியோரிடம் பாடங்கேட்டுப் பெற்றுக்கொண்ட ஆங்கில அறிவானது புலவர்மணி அவர்களின் வாழ்வை வளப்படுத்திட பெரிதும் உதவிற்று.
அறிஞர் தம்ம ஜோதிதேரர், முன்னாள் மகாதேசாதிபதி வில்லியம் கோபல்லாவ, பேராசிரியர் எதிரிவீர - சரச்சந்திர, இசை நடனமேதை தேவசூரியசேன முதலிய பெளத்த சமயப் பெரியார்களின் நட்பினைப் பெற்று, அவரது வாழ்வை வளப்படுத்துவதில் அவரது ஆங்கிலமொழி அறிவு உதவியதைக் காண்கிறோம்.

புலவர்மணி அவர்களிடம் சாதி, சமய, மொழி, இட பேதங்கள் எள்ளளவும் இருக்கவில்லை. அவர் வேதாந்தி, "ஒன்றே குலம், ஒருவனே தேவன்" என்பது அவர்தம் வாழ்க்கை நெறி. "யாதும் ஊரே, யாவரும் கேளிர்" என்பது அவர்களைப் பிடித்த கொள்கை. மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கொழும்பு முதலிய இடங்களிலும், தமிழ்நாட்டிலும் அவர் வாழ்ந்தவர். வளர்ந்தவர். எல்லா இடங்களும் அவர் சொந்த இடங்களாகவே இருந்தன. சைவர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர், பெளத்தர்கள் அனைவருமே அவரின் உறவி. னர்கள். இவ்வுயரிய உயிர்ப்பண்பு புலவர்மணி அவர்களின் வாழ்வை வளப்படுத்தித் தூய்மை செய்துள்ளது.
புலவர்மணி அவர்களின் வளம் பெற்ற வாழ்வே அவரை ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் கண்டு அறிவொளி பரப்பச் செய்தது. அரசகருமமொழித் திணைக்கள சொல்லாக்கக்குழு உறுப்பினராகவும், வானொலி கல்வி ஒலிபரப்பு ஆலோசனைக்குழு உறுப்பினராகவும், இந்துசமய விவகார ஆலோசனைச் சபை உறுப்பினராகவும், கலைக்கழக உறுப்பினராகவும், சாகித்திய மண்டல உறுப்பினராகவும், ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்க பரீட்சகராகவும் புலவர்மணி அவர்கள் பணியாற்றிட அவர்களது வளம் நிறைந்த வாழ்வே காரணமாய் அமைந்தது.
புலவர்மணி அவர்களின் வளம் நிறைந்த வாழ்வின் எச்சங்களாக, மண்டுர்ப்பதிகம், சீவக சிந்தாமணி பாலசரிதை நாடகம், கிறிஸ்தவ மத துயிலுணர்ச்சி, குருபரதரிசனதிருவேட்கை, கொக்கட்டிச்சோலை தான் தோன்றீசுவரர் பதிகம், சிற்றாண்டிப் பதிகம், மாமாங்கப் பதிகம், சர்வசமய சமரசப் பதிகம், விபுலாநந்தர் மீட்சிப்பத்து, பாலைக்கலி, உள்ளதும் நல்லதும், பகவத்கீதை வெண்பா முதலியவற்றையும், நூற்றுக்கணக்கான தனிச் செய்யுள்களையும் குறித்துக் காட்டுவதோடு, அவர் தம் மாணாக்கர் பரம்பரையினையும் உளப்படுத்திக் காட்டலாம். எச்சங்களின் மூலம் புலவர்மணி என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
49

Page 78
புலவர்மணி அவர்களின் வளம்நிறைந்த வாழ்க்கையின் உயிர்த்துடிப்பினை விளக்கிடும் செய்யுள்கள் இரண்டு வருமாறு:
"சிங்களர்தமிழர்முஸ்லிம் ஆகிய செல்வநன்மக்களெ7ன்ற7ய் மங்கள அன்னை மணிக்கொடி தாங்கி வாழ்த்தி வணங்கிடுவோம்"
(புலவர்மணி கவிதைகள் : பக்கம் 9)
"சிங்களமும் செந்தமிழும் சேர்ந்துசம
മ്മ/ിയെടിഞ്ഞുക எங்கும் அரசமொழி என்னவே-துங்கமுடன் ஆட்சிபுரியவழி ஆக்குவதே எல்ல7ரும் மாட்சியுடன் வாழும் வழி"
(புலவர்மணி கவிதைகள் : பக்கம் 35)
举来兼来兼来兼来
TOTITION "வகுப்புக்கள் இருக்கலாம் பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம். பிறவி மாத்திரத்தில் உயர்வு, தாழ்வு என்ற எணர்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம். மத விரோதங்கள் இருக்கலாகாது."
1911ம் ஆண்டு டிசம்பரில் தடைசெய்யப்பட்ட "ஆறில் ஒரு பங்கு" நூலில், மகாகவி பாரதி.
III
s

ஈழத்துச் சிறுகதை
மூலவர் :
சி. வைத்தியலிங்கம்
எஸ் வன்னியகுலம், M.A.
-எஸ். வன்னியகுலம் /967ம் ஆண்டில் சிறுகதை .%اك மயினூடாக இலக்கியப் பிரவேசஞ் செய்தவர். ஈழத்தின் தினசரி. களிலும், சஞ்சிகைகளிலும் 25க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கின்ற7ர், பரிசில்கள் பெற்றிருக்கின்ற7ர்
பல்கலைக்கழகப் படிப்பை மேற்கொண்ட காலத்தில் இவர் படைப்பிலக்கியத் துறையிலிருந்து விலகி விமர்சனத்துறைக்குப் பங்களிப்புச் செய்யத் துவங்கினார். 1973ம் ஆண்டில் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைப் பட்டதாரியானார். 1980ம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் எம்.ஏ. பட்டதாரி. ய7னார். எம்.ஏ. பட்டத்திற்கான இவரது ஆய்வுக் கட்டுரை /982ம் ஆண்டில் "ஈழத்துப் புனைகதைகளில் பேச்சு வழக்கு" என்ற நூல7கப் பிரசுரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மாகாணசபையிலே, பல்வேறு உயர்டதவிகளை7 வகித்து வந்த இவர் 1996ம் ஆண்டிலே இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபன தமிழ்நிகழ்ச்சிப் பிரிவின் LøfŽaz/7677I777ø777řøsö6ż/7gż5/25L62/7ø2zó%øf?GŁYZÁKZ52/25/ z'/z/62Ý%2K25/ZWZ/ பிரிவின் பணிப்ப7ளர7கக் கடமையாற்றுகிற77. இந்த ஆண்டில்திற. னாய்வு தொடர்பாக இவரது நூல்கள் பல வெளிவரவுள்ளன. இவரது பேச்சினும் எழுத்தினும் நக்கிரத்தன்மை உண்டு
இலக்கிய விமர்சனத்துறை தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே பல்வேறு வளர்ச்சிக் கிரமங்களை எட்டியிருக்கின்றது. பண்டைத் தமிழ் இலக்கியங்கள் தொகுக்கப்பட்டமை
s

Page 79
அவற்றுள் முதன்மையானது. அவ்விலக்கியங்களுக்கு உரைகள் வகுக்கப்பட்டமை மேலும் முக்கியமானது. இலக்கிய இரசனையும், சமூகவியல் சார்ந்த விமர்சனங்களும் இவற்றின் வளர்ச்சிப் படிகள். தற்போது இலக்கிய விமர்சனங்களுக்குமப்பால், அவ்விலக்கியத்தின் பின்னணியில், இலக்கிய கர்த்தாவையும் அவரது படைப்பின் தார்ப்பரியத்தையும் விமர்சிக்கும் நெறிமுறை வளர்ச்சி கண்டு வருகின்றது. இலங்கையில் இத்தகையதொரு வளர்ச்சிப் போக்கினை அவதானிக்க முடியவில்லை. பழம்பெரும் இலக்கிய கர்த்தாக்களின் படைப்புக்களே இன்னமும் முழுமையாகத் தேடித் தொகுக்கப்படவில்லை. 20ம் நூற்றாண்டின் நடுக்கூறில் வாழ்ந்தவர்களின் எழுத்துக்களைக்கூட இன்னமும் தேடி அலைய வேண்டிய பரிதாப நிலை தொடர்கின்றது. இலக்கிய கர்த்தாவும், அவன் படைத்த இலக்கியங்களும், மங்கி மறைந்து போகும் நிலையே இன்றுவரை தொடர்கின்றது.
இப்படிப்பட்ட அவல நிலைக்குள்ளான எழுத்தாளர்களிலே, சி. வைத்தியலிங்கமும் அடங்குகிறார். ஈழத்தின் சிறுகதை மூலவர்களில் ஒருவரான சி. வைத்தியலிங்கம் ஏறக்குறைய ஐம்பது சிறுகதைகள் வரை எழுதியிருப்பதாக அறிய முடிகிறது. சிறகதை மூலவர்களில் ஏனைய இருவரான இலங்கையர்கோன், சம்பந்தன் ஆகியோரது படைப்புக்களில் கணிசமானவை ஏற்கனவே தேடித் தொகுக்கப்பட்டுள்ளன. சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதைகள் சில "கங்கா கீதம்" என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இவரது முதற் சிறுகதை பிரசுரமாகி ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளின் பின்னர்தான் இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளமை, இவர் பற்றி இலக்கிய உலகம் கொண்டிருந்த அசமந்தப் போக்கினையும், நோக்கினையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. சி. வைத்தியலிங்கமோ, அவரது படைப்புக்களோ, இதுகால வரை இலக்கிய உலகிலே உரிய கணிப்பிற்குள்ள. ாக்கப்படவில்லை என்ற மனக்கிலேசம் இலக்கியகர்த்தாக்கள்

பலரிடம் உண்டு. ஏனெனில், சிறுகதையை ஆற்றல்மிக்க ஓர் இலக்கிய வடிவமாகப் பயன்படுத்தியவர்களிலே சி. வைத்தியலிங்கம் விதந்து குறிப்பிடப்பட வேண்டியவர்.
சி. வைத்தியலிங்கம் யாழ்ப்பாணத்திலுள்ள இயற்கைவளம் நிறைந்த ஏழாலை என்ற கிராமத்திலே பிறந்தார். இலங்கையர்கோனின் நெருங்கிய உறவினரான இவர் பற்றிய இளமைக்கால விபரங்கள் சேகரிக்கப்படவில்லை. அரச உத்தியோகத்தரான இவர் 1930களிலே கொழும்பை வதிவிட மாகக் கொண்டிருந்தார். கொழும்பு விவேகானந்தா சபை நூல்நிலையம் இவரது இலக்கியப் பசிக்குத் தீனிபோட்டது. திரிவேணி, கலைமகள், கலாநிலையம், செந்தமிழ்ச் செல்வி, ஆனந்த விகடன், மணிக்கொடி போன்ற பத்திரிகைகள் இவரை நவீன இலக்கியப் படைப்புத் துறையில் ஈடுபாடு கொள்ள வைத்தன. இக்காலப் பகுதியில், கொழும்பிலே ஓர் இலக்கிய வட்டம் எழுத்தாளர்களின் இணைப்புப் பாலமாக விளங்கியது. இந்த அமைப்பிலே வ. கந்தையா, சோ.நடராசன், சோ. சிவபாதசுந்தரம், குல. சபாநாதன், ஆ. குருசாமி, இலங்கையர்கோன் ஆகியோர் பிரதான பங்கேற்றிருந்தனர். இந்த இலக்கிய வட்டத்துடனான தொடர்புசி. வைத்தியலிங்கத்தின் இலக்கியத் தாகத்தை மேலும் வளப்படுத்தியது.
நகரத்தில் வாழ்ந்த போதும் சி. வையின் அடிமனத்தின் ஆழத்திலே கிராமமே ஆதிக்கஞ் செலுத்திக் கொண்டிருந்தது. அதனால்தான் அவரது படைப்புக்களிலே கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்க்கை சித்திரமாக்கப்பட்டிருப்பதைக் &b/T6006 ITD. V−
"நகர வாழ்க்கையுடன் நான் என்றுமே ஒன்றியதில்லை. கிராமத்தின் அழைப்புக் குரல் எப்போதும் என் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது" என அவர் குறிப்பிடுவது, கிராம. வாழ்க்கை மீது அவர் கொண்ட ஆராத காதலைப் புலப்படுத்துகின்றது. மஹாகவியின் இதயத்தை எவ்வாறு ஏழாலைக் கிராமத்தின் இயற்கை வனப்பும், கிராமியச் சின்னங்களும்,
s3

Page 80
ஸாஸ்திரீய இசையும் கவர்ந்திழுத்தனவோ, அதுபோல ஏழாலையின் கிராமிய வாழ்வு, இறுதிவரை சி. வையின் மனதைவிட்டு அகலாமல் அவரை முழுமையாக ஆட்கொண்டிருந்தது. 1930ம் ஆண்டு நவீன தமிழ் இலக்கிய வரலாற்றிலே விதந்து குறிப்பிடப்படுவதுண்டு. இந்தக் காலப் பகுதியிலே தமிழ்நாட்டில் மணிக்கொடி, கலைமகள், கலாமோகினி, கிராம ஊழியன், ஆனந்த விகடன் போன்ற இலக்கியத் தரம் வாய்ந்த பத்திரிகைகள் தோன்றின. நவீன சிறுகதை இலக்கியத்தின் பிதாமகர்களான புதுமைப்பித்தன், கு.ப. ரா.நா. பிச்சமூர்த்தி, க. நா. அ. சிதம்பர சுப்பிரமண்யன் ஆகியோர் சிறுகதை இலக்கியக் களத்திலே ஆற்றல் மிகுந்த பரிசோதனைகளை மேற்கொண்டதும் இதே காலப் பகுதியில்தான். இந்தப் பத்திரிகைகளிலே தமது எழுத்துக்கள் இடம்பெறச் செய்வதில் இலங்கை எழுத்தாளர்கள் பெரிதும் ஆர்வம் கொண்டிருந்தனர். தென்னிந்திய பத்திரிகைகளும், இவர்களின் எழுத்துக்களை ஏற்றுப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டின. எனவே இந்தியப் பத்திரிகைகளைத் திருப்திப்படுத்தும் வகையிலே எழுதவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்று அக்காலப் பகுதியில் தோன்றி. யிருந்தது. குடும்பம், ஆண்பெண் உறவு நிலை போன்ற பொதுவான பிரச்சினைகளும் வரலாற்று நிகழ்வுகளுமே சிறுகதையின் பிரதான பொருளாகின. இத்தகையதொரு நிலையிலே, இவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகள் இந்த மண்ணிலிருந்தும் அந்நியப்பட்டு நின்றன.
1930ம் ஆண்டு ஜூன் மாதம் 22ம் திகதி ஈழகேசரிப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கினும், எழுத்தினும் அதுபெரும் செல்வாக்குச் செலுத்தியது. தமிழ்நாட்டின் பத்திரிகைகளில் எழுதுவதற்குத் தவங்கிடந்தவர்கள் ஈழகேசரியைப் பயன்படுத்தத் துவங்கினர். ஈழகேசரியின் முதலாவது சிறுகதையான "பறைச்சேரியில் தீ விபத்து அல்லது வேதாந்த ஐயங்கார்" என்ற சிறுகதை 1933,

ஜூலை மாதம் அந்தப் பத்திரிகையிலே பிரசுரமானது. அள. வெட்டி த. சிவலிங்கம் என்பவர் இந்தக் கதையை எழுதியிருந்தார். இந்தியப் பத்திரிகைகளிலே போட்டி போட்டுக் கொண்டு சிறுகதைகளை எழுதிவந்த நமது நாட்டு எழுத்தா. ளர்கள், ஈழகேசரியிலே சிறுகதைகளை எழுதுவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருந்தமைக்கான காரணங்கள் தனியாக ஆராயப்பட வேண்டியவை. எவ்வாறாயினும் ஈழகேசரி, மிக ஆற்றல் வாய்ந்த எழுத்தாளர்களை உருவாக்குவதிலே பிரதான பங்கினை வகித்தது. இத்தகையதொரு பின்புலத்திலே உருவான எழுத்தாளர்களிலே இலங்கையர்கோன், சம்பந்தன், சி. வைத்தியலிங்கம் ஆகிய மூவரும் ஈழத்தின் சிறுகதை மூலவர்களெனப் போற்றப்படுகின்றனர். சு. நல்லையா, வ. அ. இராசரத்தினம், கே. டானியல், அ. செ. முருகானந்தம், புதுமைலோலன், க. சிவகுருநாதன், சொக்கன், வரதர், டொமினிக் ஜீவா, பவன், சு. வே. இ. நாகராஜன், ஆனந்தன், எஸ். பொ. இராஜ அரியரெத்தினம், சோ. சிவபாதசுந்தரம், கனக. செந்திநாதன் போன்றோரும் ஈழகேசரிப்பண்ணையில் வளர்ந்தவர்களே.
சி. வைத்தியலிங்கம் 1939ம் ஆண்டிலிருந்து எழுதத் துவங்கினார். இவரெழுதிய கதைகளிலே நந்தகுமாரன், பூதத்தம்பிகோட்டை, தியாகம் ஆகியன வரலாற்றச் சிறுகதைகள், பாற்கஞ்சி, மூன்றாம் பிறை, களனிகங்கைக் கரையில், பார்வதி, ஏன் சிரித்தார், அழியாய் பொருள், பைத்தியக்காரி, புல்லுமலையில், நெடுவழி, விதவையின் இதயம், இப்படிப் பலநாள், மின்னிமறைந்த வாழ்வு, கங்கா கீதம், பொன்னி, டிங்கிரி மெனிக்கே, பிச்சைக்காரர் உள்ளப்பெருக்கு, என் காதலி போன்றவை சமூகச் சிறுகதைகள். இவரது சிறுகதைகள் கு.ப.ரா.வின் சிறுகதைகளை நிகர்த்தவை. கு.ப.ரா. வின் பாதிப்பினை இவரது எழுத்துக்களிலே துல்லியமாக இனங்காணலாம்.
S
S

Page 81
பாற்கஞ்சி ஒரு பதச்சோறாக.
பாற்கஞ்சி சி. வைத்தியலிங்கம் எழுதிய சிறுகதைகள் யாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல அமைந்துள்ளது. ஓர் ஏழை விவசாயியின் உயிர் மையமான நெல்வயல் எதிர்பாராமல் மழைவெள்ளத்தில் மூழ்கிப் போகும் அவலத்தைப் பாற்கஞ்சி சித்திரிக்கின்றது. ராமு என்ற சிறுவன் ஏழை விவசாயியான முருகேசனின் மகன். அரிசிக்கு வழியில்லாததால், தினமும் கூழ் குடித்து சலித்துப் போனவன். பாற்கஞ்சிக்காக எந்த நாளும் தாயைத் தொல்லைப்படுத்துபவன். இந்தத் தடவை அந்தத் தாய் அதீத நம்பிக்கை கொண்டிருந்தாள். கணவனது ஒருவருட அயரா உழைப்பில் வய்ல் நன்கு விளைந்திருக்கின்றது. விடிந்தால் அறுவடை. நாளைக்குக் கட்டாயம் பாற்கஞ்சி ஆக்கித் தருவதாக அவள் வாக்குறுதியளித்திருந்தாள். அந்த வாக்குறுதியை அவளால் காப்பாற்ற முடியவில்லை. தனது ஒரு வருட உழைப்பை முருகேசனால் அறுவடை செய்ய முடியவில்லை. திடீரெனக் கொட்டிய பெருமழை அவர்களின் வாழ்க்கையில் மண்ணை வாரி இறைத்துவிட்டது. குடித்து வந்த கூழுக்கும் இப்போது நாதியற்றுப்போய் நிற்கிறது அந்த விவசாயக் குடும்பம். அவர்களது நம்பிக்கைக்கும் யதார்த்தத்திற்குமிடையிலான வெளியை அழகான கற்பனை கொண்டு கதையைப் பின்னி முடித்திருக்கிறார் சி. வை.
"சும்மாப் போம்மா, நாளைக்கு நாளைக்கென்று எத்தனை நாளா ஏச்சுப்பிட்டாய். என்னதான் சொல்லேன். கூழ்குடிக்க மாட்டேம்மா." "நிச்சயமாயச் சொல்றயாம்மா, நாளைக்குப் பாற்கஞ்சி 5(56)Tut..."
- இது நிதமும் கூழ்குடித்து சலித்துப்போன குழந்தையின்
ஏக்கம்.

"ஒரு பெருநாளை எதிர்பார்ப்பது போல் காமாட்சியும் முருகேசனும் அறுவடை நாளை எதிர்நோக்கி இருந்தார்கள். காமாட்சி தன் வீட்டினுள்ள களஞ்சிய அறையைக் கோலமிட்டு மெழுகி வைத்திருந்தாள். லக்டிமி உறையப் போகும் அந்த அறைக்கு ஒவ்வொரு நாளும் தீபம் ஏற்றி வந்தாள். மணையாகக் கிடந்த அரிவாள். களைக் கொல்லன் பட்டறையில் கொண்டுபோய்த் தேய்த்து வந்தான் முருகேசன். கதிர்ப் பாய்களை வெய்யிலிலே உலர்த்தி, பொத்தல்களைப் பனைஒலை போட்டு இழைத்து வைத்தாள். ஐந்தாறு நாட்களுக்கு முன்னரே அயல் வீட்டுக் கந்தையனிடமும் கோவிந்தனிடமும் "அறுவடை, வந்திடவேணும் அண்ணாமாரே" என்று பலமுறை சொல்லிவந்தான். - இது அறுவடைக்கான அவர்களின் ஆயத்த ஆரவாரம். "கருப்பன்செட்டி கடனைத் தீர்த்துப்புடலாம். நமக்கு ஒருவருடத்துக்குச் சோத்துக்குக் குறைவு வராது. எங்க ராமனுக்கு ஒருசோடிக் காப்பு வாங்கணும்." "எனக்கு ஒட்டியாணம்" "ஏன் ஒரு கூறைச்சேலையும் நன்னாயிருக்குமே." "ஆமாங்க, எனக்குத்தான் கூறைச்சேலை. அப்படின்னா ஒங்களுக்கு ஒரு சரிகை போட்ட தலப்பா வேணுமே." "அச்சா, திரும்பவும் புதுமாப்பிள்ளை பொம்புளையாட்டம் ரெண்டுபேரும்" - இவை அவர்களின் கற்பனை. "பாட்டுடன் அறுவடை சென்று கொண்டிருக்கிறது. வயலிலே நின்று நெல்முட்டைகளை வண்டியிலே அடுக்குகிறாள். வண்டி வீட்டு வாசலிலே வந்து நிற்கிறது. அவனுடைய களஞ்சியம் நிறைந்து பரிபூரணமாகிவிட்டது. ராமன் வயிறு நிறையப் பாற்கஞ்சி குடித்துக்கொண்டிருக்கிறான். காமு ஒட்டியாணத்துடன் வந்து அவனை."

Page 82
இது முருகேசனின் கனவு. "தாயே இதற்கிடையில் ஒரு விக்னமும் வந்திடப்படாது. காமாட்சி அவள் மனத்திற்குள் அம்பிகைக்கு நூறுவாளித் தண்ணில் அபிசேகம் செய்வதாகப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தாள்." இது அவளது இடைவிடாத வேண்டுதல். "நெற்கதிர்கள் உதிர்ந்து வெள்ளத்துடன் அள்ளுண்டு போய்க் கொண்டிருக்கின்றன. காமாட்சி களஞ்சிய அறைக்குள் போனாள். அது வெறுமனே கிடந்தது. அதைப் பார்த்ததும் அவளுக்கு அழுகை விம்மிக் கொண்டு வந்தது. அங்கே நிற்கத் தாங்காமல் வெளியே வந்தாள். ராமு" நாளைக்குத் தாரியாம்மா பாற்கஞ்சி" என்று கெஞ்சிக் கேட்டான். அநேக நாள் பழக்கத்தினாலே "நாளைக் ." என்று மட்டுமே அவளால் சொல்ல முடிந்தது. அந்த அரைகுறையான வார்த்தை முருகேசன் வயிற்றிலே நெருப்பை அள்ளிக் கொட்டியது: இது அந்த ஏழை விவசாயக் குடும்பத்தின் யதார்த்தமாகிப் போய்விட்ட அவலம்.
இப்படி நனவு, கனவு, கற்பனை, ஏக்கம், நம்பிக்கை,
ஆரவாரம், அவலமென பலவர்ண உணர்ச்சிக் கலவைகளை ஒன்றுசேர்த்து அற்புதமாக இந்தச் சிறுகதையைத் தீட்டியிருக்கின்றார் சி. வை. இத்தனை சுவைகள் நிறைந்த சிறுகதைகளை எழுதும் அற்புதத்தை நிகழ்த்திக் காட்டவல்ல இன்னொருவர் கு.ப.ரா. மட்டுமே.
விவசாயிகளின் வாழ்க்கையில் ஏற்படும் அவலங்க
ளையும், பிரச்சினைகளையும், கடன் சுமையால் ஏற்படும் உளவியல் தாக்கங்களையும், வறுமை அவர்களது வாழ்க்கையிலே தொடர்கதையாகிப் போவதையும் சுட்டிக்காட்டுவதே இந்தச் சிறுகதையின் நோக்கமா? அத்தகைய குறுகிய ஓர்

எல்லைக்குள் அடைபட்டுள்ள படைப்பாளி ஒருவனை சிறுகதை முலவரெனக் குறிப்பிடுவது அர்த்தமுள்ளதாகுமா?
சி. வையின் சமுதாயப் பார்வை வீச்சு, இந்தக் குறுகிய எல்லைகளைக் கடந்துநிற்பது. தனிமனித அவலங்களுக்குள் கட்டுப்படாதது. சமுதாய உணர்வுமிக்கது. மானுடந் தழுவியது. மனிதாயத்தை நோக்கி அறைகூவல் விடுப்பது. "தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்" எனப் பாடினான் பாரதி. உலகுக்கு உணவளிக்கும் அந்த உழவனுக்கே உணவில்லாத போது, இந்த உலகம் எதை சாதித்து முடித்துவிட்டது எனக் கேள்வி எழுப்புகிறார் சி. வை. முருகேசன் தனக்காகவும், தன் குடும்பத்துக்காவும் மட்டுமா உழவுத் தொழிலைச் செய்தான். இந்த உலகத்து உயிர்கள் பசியாலும் பட்டினியாலும் மடிந்துவிடக் கூடாது என்பதல்லவா அவனது கனவு. இந்த மானுடத்தையே போஷித்துக் காக்க வேண்டுமென்பதல்லவா அவனது உயர்ந்த இலட்சியம் ; குறிக்கோள். அந்த இலட்சியத்தை அடைவதற்காக அவன் தனது வாழ்நாள் முழுவதையுமே அர்ப்பணித்திருந்தானல்லவா, தனது மனைவியின் ஆசைகளை மண்ணோடு மண்ணாகப் புதைத்திருந்தானல்லவா? தனது மகனின் ஏக்கங்களை நிறைவேற்றும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்தானல்லவா? கனவிலும் நனவிலும் பயிரையே தனது உயிராகக் கொண்டல்லவா இவன் வாழ்ந்திருக்கின்றான்!
இந்த மனிதன் எத்துணை உயர்ந்தவன்! விளிம்பு நிலையிலிருப்பதனால் அவன் எத்துணை எளிமையானவனாகிப் போய்விட்டான்! இயற்கை கூட அவன் வாழ்க்கையை ஒரு நொடிப்பொழுதில் பெரும் அவலத்துக்குள்ளாக்கி விட்டதே துவம்சம் செய்துவிட்டதே!உலகத்தைப் புரக்கப்புறப்பட்டவன், இப்போது ஒட்டாண்டியாகத் தன் குடும்பத்துடன் நடுத்தெருவில் நிற்கின்றானே! இந்த சமுதாயம் இவனுக்காக எதைச் செய்தது? இந்த அரச யந்திரம் என்ன பாதுகாப்பை இவனுக்கு வழங்கியது? இது என்ன உலகம், இது என்ன நியாயம்? இப்படி ஆயிரம் கேள்விகளை அடுக்கிச் செல்கிறது இந்தச் சிறுகதை.

Page 83
பாற்கஞ்சியிலே சொல்லப்பட்ட விடயங்கள் சில. சொல்லப்படாமல் தொக்கி நிற்கும் விடயங்களே மிகப்பல. அவை குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளன. உண்மையில் ஆற்றல்மிக்க ஒரு படைப்பு இதனையே செய்கிறது. அறிவிப்பதும், காட்சிப்படுத்துவதும் உயர்ந்த கலையாகிவிடுவதில்லை. கலையின் பணிஉணர்த்துவதே. அதனைப் "பாற்கஞ்சி" மிகச் சிறப்பாகச் செய்துள்ளது. அது கதையின் முடிவிலிருந்து மனிதனைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. சுய சிந்தனைப் பரப்பை விரிவடையச் செய்கின்றது.
இந்தச் சிறுகதை முன்வைக்கும் முடிவுதான் என்ன? சமூகப் பாதுகாப்பும், அரச அரவணைப்பும் இல்லாத எந்தத் தொழிலுக்கும், எந்த மனிதனுக்கும் முடிவு அவலமானதே. எனவே, எந்தத் தொழிலுக்கும் சமூக நிறுவனங்கள் பாதுகாப்புத் தர வேண்டும். அந்தப் பாதுகாப்பு உத்தரவாதத்தினுாடாக தொழில்பற்றிய நம்பிக்கையை தொழிலாளியின் மனத்திலே வளர்த்தல் வேண்டும். இயற்கையாலோ அல்லது வேறேதும் காரணத்தினாலோ அவனது உற்பத்தி பாழாக்கப்படும்போது அதனை ஈடுசெய்வதற்கான உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையே இந்தச் சிறுகதை வலியுறுத்துகின்றது.
இலக்கியத்தில் சமகாலப்பிரச்சினைகள் ஒங்கி ஒலித்தல் வேண்டும் என்ற கோஷம் 1960ம் ஆண்டுகாலப் பகுதியிலிருந்து தீவிரமடைந்தது. அந்தக் கோஷமே ஈழத்தின் இலக்கியக் கோட்பாடாக இன்றுவரை ஆதிக்கஞ் செலுத்தி வருகின்றது. சமகாலப் பிரச்சினையைசித்திரிப்பதனால் மட்டும் ஒரு படைப்பை இலக்கியமாக ஏற்றுக்கொள்ள முடியுமா? அப்படியானால் சமகாலப் பிரச்சினைகளைத் தாங்கிவரும் கட்டுரைகளும் இலக்கியமாகி விட முடியுமல்லவா? எமது பண்டைத் தமிழ் இலக்கியங்கள் இன்றைய எமது பிரச்சினைகளைத் தொடாதவை என்பதற்காக அவற்றை நாம் புறந்தள்ளிவிட முடியுமா?

எந்த அளவுகோலை வைத்து, சமகாலப் பிரச்சினைகளைச் சுட்டினாலும், கட்டுரைகளை இலக்கியமாக நாம் ஏற்க மறுக்கிறோம். சமகாலப் பிரச்சினைகளைச் சுட்டாவிடினும் பண்டைத் தமிழ் இலக்கியங்களை இன்றும் இலக்கியங்களாக ஏற்றுக் கொள்கிறோம்.
உண்மையில் இலக்கியமென்பது அது விண்டெழும் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களைப் பதிவு செய்வதா. யிருத்தல் வேண்டும். சமூகத்தின் பழக்கவழக்கங்கள், மரபுகள், சம்பிரதாயங்கள், சடங்குகள், பலம், பலவீனம் அனைத்தையும் அது தன்னுள் அடக்கியெழுதல் வேண்டும். இவை யாவற்றையும் உள்ளடக்கியதே சமுதாயம். முழுமையான ஒரு சமூக அமைப்பினையும் அதன் தாற்பரியங்களையும் முன்வைப்பதாலேயே பண்டைய இலக்கியங்களை இன்றும் நாம் போற்றுகின்றோம்.
சி. வைத்தியலிங்கமும் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டம்சங்களைத் தமது சிறுகதைகளிலே பதிவு செய்திருக்கின்றார். பாற்கஞ்சியிலே, யாழ்ப்பாணத்தின் உணவுப் பழக்கவழக்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பாற்கஞ்சியும் கூழும் யாழ்ப்பாணத்து அடிப்பட்ட விவசாய தொழிலாள வர்க்கத்தினரின் பிரதான உணவுப் பொருட்களாகும். யாழ்ப்பாணத்தின் தாழ்த்தப்பட்ட தொழிலாள வர்க்கத்தினர் பனைமரத்தைச் சார்ந்து வாழ்பவர்கள். அவர்களது தொழில், உணவு,உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை பனைமரமே நிறைவு செய்துவந்தது. பனங்கிழங்கிலிருந்து பெறப்படும் ஒடியல் மாவை மூலப்பொருளாகக் கொண்டு அமைக்கப்படுவது கூழ், பஞ்சப்பட்ட இந்த மக்களின் நாளாந்த உணவில், கூழ் மிக முக்கியமானது. (இதன் கருத்து ஏனைய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூழ் குடிப்பதில்லை என்பதன்று) ஏழை விவசாயியின் வாழ்க்கையிலே பாற்கஞ்சி முக்கியமானது. சோற்றுக்கு வழியில்லாதபோது, அது பாற்கஞ்சியாக மாறும். அனேக நாட்களில் பாற்கஞ்சியே அவர்களின் பிரதான உணவாகி விடுவதுண்டு.
16

Page 84
சி. வைத்தியலிங்கத்தின் சிறுகதையிலே வரும் முருகேசன், ஏழை விவசாயியாக இருந்தபோதும், பாற்கஞ்சிக்கும் வழியற்ற நிலையிலேயே வாழ்கின்றான். தாழ்த்தப்பட்ட மக்களின் உணவான கூழ் அவனது பிரதான உணவாக மாறிவிட்டது. சமூகநிலையில் அவன் அதிகிழ் மட்டத்திற்குத் தாழ்ந்து போய் விட்டான். இந்த வாழ்க்கை நிர்ப்பந்தத்தை முருகேசனாலும், அவனது மனைவியாலும் ஏற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால், இளைய தலைமுறையான அவனது குழந்தையால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவன் கூழை நிராகரிக்கின்றான். கூழை ஒரு குறியீடாக வைத்து, ஒரு சமூகப் போராட்டத்தை, ஒருதலைமுறைப் போராட்டத்தை நிகழ்த்திக் காட்டியிருக்கின்றார் சி. வைத்தியலிங்கம்.
கனவும், கற்பனையும் ஏழைகளின் சொர்க்கம். பாற்கஞ்சியிலே முருகேசனையும் அவனது மனைவியையும் கனவிலும் கற்பனயிைலும் மிதக்கவிட்டு, அவர்களின் அடிமன ஆழங்களை துழாவிச் சென்றிருக்கின்றார் சி. வை. யாழ்ப்பாண சமூகத்திலே உழைப்பு என்பது ஒரு கூட்டு முயற்சியாகவே நடைபெறுவதுண்டு. தொழிலின் தன்மையைப் பொறுத்து கூட்டு முயற்சியின் இயல்பும் அமைந்திருக்கும். வயலிலே முருகேசனுடன், கோவிந்தனும், கந்தையனும் சேர்ந்து வேலை செய்வதாகவும், மனைவி காமாட்சியுடன் பொன்னியும், சின்னம்மாவும் சேர்ந்துழைப்பதாகவும் முருகேசன் கனவு காண்கின்றான். (முருகேசன், கோவிந்தன், கந்தையன், பொன்னி, சின்னி போன்ற பெயர்கள் யாழ்ப்பாணத்தில் தாழ்த்தப்பட்ட மக்களைச் சுட்டும் பெயர்களாகும்) கூட்டுறவு முயற்சியில் பிறப்பது பாட்டு. சி. வை. பதிவுசெய்துள்ள பள்ளுப்பாட்டு அங்கதச் சுவை நிறைந்தது. அது மட்டுமன்றி. அது யாழ்ப்பாணத்தின் சாதிக்குரிய தொழில்முறையையும் சுட்டி நிற்கிறது.
"பள்ளத்துப் பள்ளன் எங்கேயடி போய்விட்டான்."

"பள்ளன் பள்ளம் பார்த்துப் பயிர்செய்யப் போயிட்டான்." எனத் தொடர்கிறது அந்தப் பள்ளுப்பாட்டு. என்னதான் சாதி சளக்கு என யாழ்ப்பாணத்தின் சமூக அமைப்பு பிளவுண்டு கிடந்தாலும், அங்குள்ள மக்கள் யாவரும் இயற்கை அன்னையின் அரவணைப்பிற்கு உட்பட்டவர்களே. யாழ்ப்பாணத்து மண் வானம் பார்த்துத் தவங்கிடப்பது. வானம் பொய்த்த போது விவசாயி நலிவுற்றுப் போவதும், மாதம் மும்மாரி பெய்யும் போது அவன் மகிழ்வுற்றுப் போவதும், பெருமழையின்போது அவனது பயிர்போல, அவனது நம்பிக்கை மூழ்கடிக்கப்படுவதும் பாற்கஞ்சியிலே அழகுறப்படம் பிடிக்கப்பட்டுள்ளன.
மூன்றே மூன்று கதாபாத்திரங்களைக் கொண்டு, யாழ்ப்பாணத்தின் பண்பாட்டுக் கோலங்களை நிழற்படம் போலப் பதிவு செய்திருக்கின்றார் சி. வை. பாத்திர உரையாடல், யாழ்ப்பாணத்துக்குரியதாகவுமில்லாமல், தமிழ் நாட்டிற்குரிய தாகவுமில்லாமல் திரிசங்கு சொர்க்கமாய் நிற்கின்றது. ஆயினும், கதை ஒட்டத்திற்கு அது ஊறு பயக்கவில்லை. சி. வைத்தியலிங்கம், ஈழத்தின் சிறுகதை மூலவர்தான் என்பதைப் பாற்கஞ்சி உறுதிப்படுத்துகின்றது.
() () () () ()
மனிதனே! உன் அற்ப வாழ்க்கை தவறிடும் முன்பே இறை வழிபாட்டில் உன்னை ஈடுபடுத்திக்கொள். மரணம் சம்பளிக்கும் முன்பே பாவங்களுக்குப் பரிகாரம் தேடிக்கொள். இவ்வுலகை நேசிப்பவன் கடல் நீரை இருந்துபவன் போலாகிறான். இதைக் குடித்தால் தாகம் அதிகமாகுமே தவிர அவன் நாகம் தீரமாட்டான். நாகம் அடங்காதவனாகவே மடிவாள்.
- GU Faur (Slangu)
63

Page 85
கல்ஹின்னை இலக்கிய மரபு
குறிஞ்சிச் குயிலி
இனிய பண்பா டிழையோடும்
இதயம் கனியும் சுவைபாடும் நனிசிறந்த இலக்கியங்கள்
நயமாய்ப் படைக்கும் கல்ஹின்னை புனிதம் மேவும் பண்பாகப்
போற்றும் இலக்கிய மரபதனைத் தனியாய் ஆய்தல் பயன் நல்கும்:
தக்க அறிஞர் கடனிதாம்!
இறையருள் இலக்கியமாம்குர்ஆன்
ஏந்தல் நபிகள் வழி - மொழிகள் நிறையத் தேர்ந்த ஞானியர்கள்
நேர்வழி காத்த உலமாக்கள் கறையற ஆய்ந்து போதித்த
கவினார் ஞான வழிமலரும் அறநெறி மணக்கும் கல்ஹின்னை
இலக்கிய மரபு - மருள் மறைக்கும்!
()
 

பணத்திமிர்க் கடிமையாகாது
பயமுறுத்தற் கடி பணியாது மனத் துணிவை ஆயுதமாக்கி
மறையறி வையுயர்நிதியாக்கிப் பணிக்கெழும் உலமாக்கள் கரத்திற்
பூத்த பண்பாட் டுப்பாதை அணிதர வகித்த கல்ஹின்னை
அறிவலர் இலக்கிய மரபாகும்!
முதியோர் பணியிற் கருவாகி
மொட்டாய் முகிழ்த்து இளைஞர்தம் இதயப் பொழிலில் மலர்ந் தெங்கும் இனிய அறிவு மணம் பரப்பும் மதியுயர் பண்பாடாய்ப் பொழிந்து
மனிதம் செழிக்கும் பணியாற்றும் நிதியாய்த் திகழ்க! கல்ஹின்னை
இலக்கிய மரபு - தொடர்ந்தொளிர்க!
(கவிமணி எம்சிஎம். ஸ்பைர், 16.05.1996ல் காலமானார். அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு எழுதிய கவிதை இது.)
*\/ NM N14. X\, 4 ※ Z? SN 7'? YN YN 7YR YN

Page 86
எஸ்.எச்.எம். ஜெமீல்
அண்மைக் காலம் வரை அரச சேவையிலிருந்துவிட்டு
மணிவிழ7க் கண்டவுடன் ஒய்வு பெற்றுள்ள அல்ஹ7ஜ் எஸ். எச் எம். ஜெமில் நாடறிந்த கல்விமான். சிறந்த எழுத்தாளர் நூல் பதிப்பிட்டதில் அதிக ஆர்வமுள்ளவர்
கிழக்கிலங்கையின் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜனாப் ஜெமில், 1940ம் ஆண்டு L2றந்தவர். காரைதிyே இராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயம், கல்முனை கார்மெல் பாத்திமாக் கல்லூரி கொழும்பு ஸாஹிராக் கல்லூரி ஆகியவற்றில் ஆங்கில மொழி முலம் கல்வி கற்ற அவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் MLTLTTLT LATL TMLMT TTLLLLLLLLA LLLA La T TTLS அதே பல்கலைக்கழகத்தில் கல்வியியல் டிப்ளோமாவில் விசேட சித்தியும் பெற்றார். யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில்முதும7ணி (எம். ஏ.) பட்டம் பெற்று, கலாநிதிப் பட்டத்துக்காக ஆய்வினை மேற்கொண்ட போதிலும் யுத்த குழ்நிலை காரணம7கத் தொடர முடியவில்லை
பாடசாலை ஆசிரியர், கல்லூரி அதிபர் கல்வி உயர் அதிகாரி உதவிப் பரிட்சை ஆணையாளர், ஆசிரியர் பயிற்சிக் கல7சாலை அதிபர் பல்கலைக்கழகப் போதனாசிரியர், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதற் பதிவாளர் போன்ற தரங்களில் 4/6öwsu///ô/iffu/&g?67/747 67gudo, 4562/747/747 47/ou/ Joygw62/6ü4567 அமைச்சின் செயலாளராகவும் இருந்த பின், அதே அமைச்சின் ஆலே7சகர7கச் சிலகாலம் பணியாற்றிவிட்டு ஒய்வு பெற்ற7ர்.
 

இலங்கை முஸ்லிம்களின் கலைப் பாரம்பரியத்தை மூன்று வகைகளாகப் பகுத்து நோக்கலாம் : ஆடல் கலைகள், பாடல் கலைகள், வரைதல் ககைள்.
ஆடல் கலையைச் சார்ந்ததாகப் பின்வருவனவற்றைக் கொள்ளலாம் : பொல்லடி, பக்கீர் விளையாட்டு (குத்துவெட்டு), சீனடி, சிலம்படி, வாள் வீச்சு, மெத்தை வீடு கட்டுதல், நாடகம், ஊஞ்சல், புலி வேஷம், ஆராத்தி.
பின்வருவன பாடல் வகையைச் சேர்ந்தனவாகும் : கவி, பதம், பக்கீர் பைத், புத்தகம் படித்தல், திருமண வாழத்து, குரவை,
வரைதல் கலைகள் : கட்டிடக் கலை, எழுத்தணி, சித்திரம் தீட்டுதல், பாயிழைத்தல்
பொல்லடி: இது கோலாட்டம், கழிகம்பு எனவும் கூறப்படும். கிராமத்தின் முக்கிய வைபவங்களான பெருநாட்கள், கல்யாணம், கத்னா, காது குத்துதல், பிரமுகர் வரவேற்பு எனும் சந்தர்ப்பங்களில் இடம்பெறும்.
பொல்லடிக் குழுவில், பெரும்பாலும் பதினாறு பேர் இருப்பர்: இத்தொகை இருபத்திநாலு வரை அதிகரிக்கும். ஓரிடத்தில் நின்று வட்டமாக வருவர்; அல்லது வீதிநெடுகிலும் ஊர்வலத்தின் முன்னே நடந்து செல்வர் ; அல்லது இரட்டை மாட்டு வண்டியின் இரு புறத்திலும் அமர்ந்து பொல்லடித்துக்கொண்டு செல்வர். ஓரிடத்திலேயே நிற்கும்போது உள்வளையம், புறவளையம் என இரு வட்டங்களாக நிற்பர். புறவளையத்திலுள்ள ஒருவரும் உள்வளையத்திலுள்ள ஒருவரும் சோடியாவர். அதன் பின் வட்டமாகச் சுற்றி வந்தும், நின்றும், வேகமாக ஒடியும், உள்ளும் புறமும் மாறியும், குந்தியும் எழும்பியும் பலவிதமான ஆட்டங்களிலும் ஈடுபடுவர். அவ்வேளையில், பாட்டும் பாடப்படும். அதன் தருவினை அண்ணாவியார் பாடுவார். அதனைத் தொடர்ந்து குழுவினர் அனைவரும் இணைந்து பாடுவர். பொல்லடியின் சத்தமும் பாட்டின் தாளமும்
67

Page 87
இணைந்திருக்கும். அப்பாஸ் நாடகம், அலிபாதுஷா நாடகம், தையார் சுல்தான் நாடகம் என்பனவும் பொல்லடியின்போது இசைப்பாக்களாகப் பாடப்படுவதுண்டு.
பொல்லடியில் பதினெட்டு வகைகள் உள. தண்ணால், கீச்சான்போர், தரித்தடித்தல், பள்ளியீட்டு, நாலு வீட்டுக்குச் செல்லுதல், தேன்கூடு, மான் வளையம், ஒற்றை மல்லிகை, இரட்டை மல்லிகை, திருமல்லிகை, ஐந்துவெட்டு, நாலடி, ஒன்பதடி, தாளம் என்பன அவற்றுட் சிலவாகும்.
ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு ஊரிலும் பொல்லடித் தத்திகள் இருந்தனர். குறிப்பாக கடலில் கரைவலை மீன் பிடிக்கும் ஒவ்வொரு தோணிக்கும், ஒரு குழுவினர் இருப்பர். அவர்கள் தமது ஒய்வு வேளைகளில் பொல்லடிப்பதில் ஈடுபடுவர்.
ஒவ்வொரு குழுவுக்கும் ஓர் அண்ணாவியார் தலைவராயிருப்பார். அத்தத்தியின் சேவையைப் பெற விரும்புவோர், அவருக்கு வட்டா வைத்து அனுமதி பெறல் வேண்டும். வட்டாவில் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, கைப்பு, புகையிலை, ஏலம், கராம்பு, சுக்கிரிப்பல்லி முதலிய பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.
பொல்லடிக்கு உபயோகிக்கப்படும் தடிகள் விப்பனை மரத்தினால் செய்யப்பட்டவைகளாகும். அவை உடையாது, வளையாது நின்று பிடிக்கக்கூடியவை. அத்துடன், மிகச் சத்தமாக ஒலியெழுப்பக் கூடியவையுமாகும். ஒரு பொல்லின் நீளம் ஒரு பிடியாகும். ஒரு பிடி என்பது கையைப் பொத்திப் பிடித்து முழங்கை வரையுள்ள நீளம், இந்நீளத்துக்கு அதிகமானால் தனக்கு முன்னால் நிற்பவரின் முகத்தில் பொல் தாக்கிக் காயம் ஏற்படலாம். நீளம் குறைவாக இருந்தால், பொல்லைப் பிடித்திருக்கும் கையில் அடி விழலாம். எனவே, பொல்லின் நீளம் எப்பொழுதும் ஒரு பிடி சரியாயிருக்க வேண்டும்.

ஒவ்வொரு பொல்லின் அடியிலும் இரு சலங்கைகள் பொருத்தப்பட்டிருக்கும். இது வெண்டயம் என வழங்கப்படுகின்றது. இனிமையான ஓசையை எழுப்புவது, இவ்வெண்டயங்களேயாகும். பொல்லுகளுக்குப் பல வர்ணங்களும் திட்டப்பட்டிருக்கும். பொல்லடிப்போரும் மிகப் பகட்டான உடை அணிந்திருப்பர்.
தென் மாகாணத்தில் பிரபலமாக அடிக்கப்படுவது, கயிற்றுக் கோலாட்டம் எனும் ஒரு வகையாகும். பொல்லுகளின் ஒரு பக்க முனைகள் கயிற்றினால் கட்டப்பட்டு, மேலே மத்தியில் ஒன்றாகக் கட்டப்பட்டிருக்கும். வளையமாகச் சுற்றிப் பொல்ல. டிக்கும் பொழுது எல்லாக் கயிறுகளும் சேர்ந்து இறுக ஒரு கயிறாகும். மறுபக்கம் வளையமாகச் சுற்றும்போது அவை பிரிந்து வெவ்வேறாகும். இது, பின்னல் களிகம்பு எனவும் அழைக்கப்படும்.
பக்கீர் விளையாட்டு: (குத்துவெட்டு) :பக்கீர் பாவாக்கள் எனப்படும் குழுவினரின் கைதேர்ந்த கலை இதுவாகும். அநேகர் எண்ணுவது போன்று பக்கிர் பாவாக்கள் எனப்படுவோர் இரந்துண்ணுடும் ஒரு கூட்டத்தினரல்ல. மாறாக மிகவும் பழைமையான பாரம்பரியமுடைய சூபித்துவத்தின் வாரிசுகளே அவர்கள். ஒருவர் பக்கீராகப் பிரகடனம் செய்யப்பட்டு, அக்குழுவினர் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு, பல கடினமான படிமுறைகளைத் தாண்ட வேண்டும். "நான்" என்ற மமதையை அடக்கி, எதுவுமே சொந்தமில்லை எனும் பக்குவ நிலையை அடைய வேண்டும். அதனாற்றான் அவர்கள் வீடு வீடாகச் சென்று இரந்து வாழும் எளிய வாழ்க்கை முறையைக் கைக்கொள்ளுகின்றனர்.
குத்து - வெட்டு விளையாட்டென்பது மிகவும் நுட்பமான ஒரு கலையாகும். இது, ஞானத்துடன் தொடர்புடையது. சாதாரண மக்களால் இத்தகைய காரியமொன்றில் ஈடுபட முடியாது. முகத்தின் ஒரு கன்னத்தில் இரும்பு ஊசியை ஏற்றி,
69

Page 88
வாய்க்குள்ளால் அதைச் செலுத்தி, மறுபக்கம் கொண்டு வருதல் : மண்டைத் தோலினுள் இரும்பாணியை ஏற்றுதல் ; பாரமான பொருட்களைக் கண் இமைகளிற் கொழுவிக் கொண்டு வலம் வரல், நாக்கை வெளியிலிமுத்து அதனுாடே ஊசி ஏற்றுதல் போன்ற பலவற்றை அவர்கள் செய்வர். அவ்வேளைகளில் உடம்பிலிருந்து ஒரு சிறிதேனும் இரத்தம் வெளிவராது. ஊசியை அல்லது வாளைக் கழற்றியவுடன் அவ்விடத்தில் வெறும் ஊதுபத்தித் துளையே தடவி விடுவர்.
காரைதீவு எனும் ஊரிலுள்ள பக்கீர்சேனைப்பள்ளிவாசல் எனும் இடமே ஒரு காலத்தில் பக்கீர் பாவாக்களின் தலைமையகமாயிருந்தது. வன்செயல் மூலம் அது அழிவுற்றதின் பின், இன்று அக்கரைப்பற்றின் தைக்கா நகர் அவர்களது தலைமையகமாயுள்ளது. இவர்களது நிகழ்ச்சிகள் வருடாந்தம் அங்கும், கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல், போர்வைப் பள்ளிவாசல், தப்தர் ஜெய்லானி எனுமிடங்களிலும் நடைபெற்று வருகின்றன.
சீனடி: இதுவொரு தற்காப்புக் கலையாகும். கைகளை யும், கால்களையும் உபயோகித்து எதிரியின் தாக்குதலிலிருந்து தப்புவதோடு, அவனை அடித்து வீழ்த்துவதற்குமான நுட்பங்களைக் கொண்டது.
இதன் பூர்வீகம் சீனா தேசம் என்பதைப் பெயரே சுட்டி நிற்கின்றது. ஜூடோ, கராட்டே, குங் - பூ என்பனவற்றின் வகையைச் சார்ந்தது.
நாட்டின் பல பாகங்களிலும் இக்கலை பரவலாயிருந்தாலும், திருகோணமலை மாவட்டத்தில், குறிப்பாக கிண்ணியாய் பிரதேசமே இதற்குப் பெயர் பெற்றதாகும்.
ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில், தூரகிழக்கு நாடுகளிலிருந்து இந்நாட்டிற் குடியேறிய மலாயர் இதனை பிரபல்யப்படுத்தியிருக்கக்கூடும். அவ்வாறு வந்த மலாயருள் கணிச. மானோர் கிண்ணியாய் பிரதேசத்திற் குடியமர்ந்த காரணத்தினால், இது அங்கு பிரபல்யம் பெற்றிருக்கவும் கூடும்.

சிலம்படி:கம்பு வீச்சு எனவும் இது அழைக்கப்படும். ஒருவர் தனியாகவும், பலர் கூட்டாகச் சேர்ந்தும் விளையாடுவர். ஒரு கம்பின் நடுப்பகுதியைப் பிடித்துக்கொண்டு மிக இலாவகமாகக் கம்பைப் பல பக்கமும் மிக வேகமாகச் சுழற்றுவர்.
கம்பின் நீளமானது ஒருவர் நிமிர்ந்து நின்று அக்கம்பை நிலத்தில் வைத்தால், அதன் மறுநுனிநிற்பவரது தாடையைத் தொட வேண்டும். இது மிகவும் உறுதியான கம்பினாற் செய்யப்பட்டு, நுனிகளிரண்டும் வளையமாக்கப்பட்டிருக்கும். ஒருவருக்கு மேற்பட்டோர் கம்பு வீசுவதாயின், 40x40 அகலமான சதுரமான இடம் வேண்டும். அவ்வேளையில் மிக அவதானமான கூர்மையான பார்வையும் அவசியமாகும். ஏனெனில் ஒருவர் கம்பைச் சுழற்றும்பொழுது, அது அடுத்தவரது முக்குநுனிவரை வரும். இவ்விளையாட்டைப் பழக்குபவர் "வாத்தியார்" என மிகவும் மரியாதையுடன் அழைக்கப்படுவார்.
சீனடி போல், இதுவும் ஒரு தற்காப்புச் சண்டைக் கலையாகும்.
வாள்வீச்சு:இருவர் தமது கைகளிலே வாள்களை ஏந்திக். கொண்டு யுத்த களத்திலே பொருதுவது போன்று, பாவனை செய்தல் இதுவாகும்.
அரபுநாடுகளிலும் உற்சவங்களின்போது விளையாடப்படும் ஒரு பிரபல்யநிகழ்ச்சி இதுவாகும். அராபியத் தீபகற்பத்திலிருந்து இந்நாட்டிற் குடியேறியோரோடு, இக்கலையும் வந்து சேர்ந்தது.
சுருள் வாள்வீச்சு எனும் ஒரு வகையுமுண்டு.
இன்று கத்னா வைபவங்களோடு அடையாளப்படுத்தப்படும் உஸ்தாதுமார் எனும் குழுவினரே இக்கலையின் முன்னோடிகளாயிருந்துள்ளனர்.
மெத்தை வீடு கட்டுதல்: கிராமப் புறங்களில் மாடி வீடுகள் எதுவுமே இல்லாதிருந்த காலத்தில், மிகவும் பிரபல்யம்
7

Page 89
பெற்றிருந்த கலை இதுவாகும். நோன்பு, ஹஜ்ஜுப் பெருநாட் காலங்களில் பலகைகளையும், மரத்துரண்களையும் கொண்டு ஒரு மாடி அல்லது இரண்டு மாடிகளையுடைய வீடொன்றைக் கட்டுவர். அவ்வவ்வூர்களில் சிறப்புற்று விளங்கிய ஓடாவிமார் இதில் ஈடுபடுவர். பிரமாண்டமான அத்தகைய மெத்தை வீடுகளைக் கட்டிப் புகழ்பெற்ற ஒடாவிமாரது நாமம் வெகுகாலத்துக்குச் சிலாகித்துப் பேசப்படுவதுண்டு. மெத்தை வீட்டைப் பார்ப்பதற்கும். மேலேயேறிச் செல்வதற்கும், பெருந்தொகையான மக்கள் பல நாட்களுக்கு பல ஊர்களிலிருந்தும் வருவர். பல வர்ண மின்வெட்டுத் தாள்கள். சருகு பித்தளைத் தாள்கள், கஞ்சான் தகட்டுத் தாள்கள் என்பவற்றினால் அழகுறச் சோடனைகள் செய்யப்பட்டு, குளோவர் விளக்கும் தொங்க விடப்படும். இதனுட் செல்வதற்குக் கட்டணமும் அறவிடப்படும்.
நாடகம்: இவ்வாறு கட்டப்படும் மெத்தை வீடுகளில் அல்லது விசேடமாக அமைக்கப்படும் மேடைகளில் நாடகங்களும் மேடையேற்றப்படும். இஸ்லாமிய வரலாற்றுநாடகங்களே இடம்பெறும். அலிபாதுஷா நாடகம், அப்பாஸ்நாடகம், பப்பரத்தி நாடகம் என்பன முக்கியமானவையாகும்.
கோடு- கச்சேரி, எனும் நிகழ்ச்சியும் நடைபெறுவதுண்டு. அசல் நீதிமன்றம் போல் நீதிபதி, வழக்கறிஞர்கள், முதலியார். காவலாளர், எதிரி, வழக்காளி, சாட்சிகள் என வேடமேற்றோரைக் கொண்டு வழக்குகள் நடைபெறும்.
இவ்வாறான நிகழ்ச்சிகள் இரவு பத்து மணியளவில் ஆரம்பித்து, சுபஹ” நேரம் வரை நடைபெறும். பார்வையாளர்கள் பாய், தலையணை, வெத்திலை வட்டா, வறுத்த கடலை. கச்சான் கொட்டை, சோளகக் கொட்டை என்பன. வற்றோடு சென்று, ஆற அமர முற்றவெளியில் அமர்ந்திருந்து நிகழ்ச்சிகளை ரசிப்பர். இடையிடையே நித்திரையும் செய்வர். எழும்பியதும் பக்கத்திலுள்ளவரிடம் நடந்து முடிந்த கட்டங்களைக் கேட்டு அறிந்து கொள்வர்.

ஊஞ்சல் தொட்டில் ஊஞ்சல், பெரிய ஊஞ்சல், கிறுக்கு ஊஞ்சல் என இது மூவகைப்படும்.
தொட்டில் ஊஞ்சல் என்பது இன்றுள்ள மெரிகோரவுண்டைப் போலாகும். பாரிய தூண்கள் நடப்பட்டு, இரும்பு அச்சுகளிலே கதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இரும்பு அச்சைக் கைகளால் சுழற்றும் பொழுது, கதிரைகள் மேல் கீழாகச் சுற்றிச் சுழன்று வரும்.
நிலத்திலிருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் ஊஞ்சல் பலகை இருக்கக்கூடியதாகப் போடப்படுவதே பெரிய ஊஞ்சல் எனப்படும். பலகை மிக நீளமானதாகவும், அகலமானதாகவும் இருக்கும். அதிற் சிலர் அமர்ந்திருக்க, இரு முனைகளிலும் இருவர் நின்று உந்தி உந்தி எழுப்ப ஊஞ்சல் மிக வேகமாக ஆடும். இதில் ஏறி ஆடுவதற்கு. மிகவும் மனோதைரியம் வேண்டும்.
கூரான முனையுடைய காலொன்றினை நாட்டி, அதன் உச்சியில் துலாவொன்று பொருத்தப்பட்டிருக்கும். துலாவின் இரு தொங்கல்களிலும் கயிறுகளில் இரு பலககைள் தொங்கவிடப்பட்டிருக்கும். துலாவைச் சுழற்றுவதினால் கிறுக்கு ஊஞ்சல் வளையமாக ஆடும்.
புலிவேஷம் போடுதல்:இந்திய கண்டத்திலும் இது பிரசித்தி பெற்றது. ஒருவர் புலி மாதிரி வேஷம் போட்டுக் கொண்டு ஊரெல்லாம் உலாவித்திரிவார். சிலர் பயந்தோடுவார்கள் பலர் பெருங்கூட்டமாக அதன் பின்னால் போய்க் கொண்டிருப்பர். பெண்களும் வீட்டு வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு புலிவேடிக்கை பார்ப்பார்கள். அவருக்குப் பண அன்பளிப்பும் வழங்கப்படும்.
ஆராத்தி, ஆலாத்தி எனவும் அழைக்கப்படும். அரசிலை வட்டா எனப்படும் அழகான பெரிய வட்டாவில், பல வர்ணச் சோடனைகள் செய்து இது அமைக்கப்படும். கல்யாண மாப்பிள்ளை, பெண், சுன்னத்துமாப்பிள்ளை, பிரமுகர் யாரையாவது
73

Page 90
நடுவிலிருத்தி,நான்கைந்து பெண்கள் சூழவரநின்று ஆராத்தி. யைச் சுற்றி சுற்றியெடுப்பர். அந்நேரம் குரவையும் ஒலிக்கப்படும். வெடில்களும் சுடப்படும். நிலாத்திரியும் கொளுத்தப்படும். ஆராத்தி எடுப்பதை அநேகமாக பெண்களே செய்வர்; பகிரங்க இடங்களில், ஆண்கள் ஆராத்தியைச் சுற்றும் வழக்கமுண்டு.
கவிபாடுதல் : கிழக்கிலங்கையும், மன்னார் மாவட்டமும் இத்துறையிற் பிரபல்யமானவையாகும். மட்டக்களப்பார்க்குத் தோளிலுங்கா; நாவிலுங்கா என்பது முதுமொழி. அதேபோன்று ஆடவர் தோளிலுங்கா, அரிவையர் நாவிலுங்கா என்பது போன்று "கா" எனும் அசைச் சொல்லும் கவியும் இரண்டறக் கலந்தவையாகும்.
கவிபாடும் சந்தர்ப்பங்கள் அநேகமுண்டாயினும், ஒய்வு வேளைகளில் நிழல் மரங்களின் கீழே கூடியிருந்து கோஷ்டியாகவும், தனியாகவும் கவிபாடுதல் ஒரு தனிக் கலையாகவே பேணப்பட்டு வந்துள்ளது. சுன்னத்துக் கல்யாண வீடுகளிலே இரவு நேரத்தில் விழித்திருப்பதற்கு பக்கீர் பாவாக்களின் நூறு மசாலாவும், கவிகளும் மிகவும் பயன்பட்டன. இறக்காமத்திற் பிறந்து, அக்கரைப்பற்றை வதிவிடமாகக் கொண்ட அந்தகக் கவி மீராஉம்மா. இத்துறையில் தனது அழியா முத்திரையைப் பதித்தவராவார்.
பதம்படித்தல்: பதம் படித்தல், வாது, கவி. பஜனை, கஸிதா என்பன இவற்றுள் அடங்கும். நாடளாவிய ரீதியில் பல ஊர்களிலும் இவை நடைமுறையிலிருந்துள்ளன.
கந்துரிக் களரிகள், மெளலிதுகள், திருமண வீடுகள் எனுமிடங்களில் பதம்படித்தல் நடைபெற்றுள்ளது. கம்பீரமான இனிய குரல் வளமுடையோரே இதில் ஈடுபடுவர். ஒருவர் தனியாகவும் பாடுவார் ; சிலர் கூட்டாகவும் பாடுவர். சாஸ்திரிய சங்கீத மெட்டில் இஸ்லாமியப் பாடல்களே பாடப்படும். மணமங்களமாலை. திருப்புகழ், கப்பற்பாட்டு, ஊஞ்சற் பாட்டு, தாலாட்டு என்பன பிரபல்யமான பாடல்களாகும்.

மெளலிது களரிகளில் பதம்படித்தல் பிறிதொரு பயனையும் கொண்டிருந்தது. மெளலிது ஓதி முடிந்தவுடன், இடத்தை ஆயத்தப்படுத்தி, உணவு பரிமாறச் சிறிது நேர. மெடுக்கும். இடைவேளையில் பதம் படிக்கும் பொழுது, பலர் உணவையே மறந்து அதில் லயித்திருப்பர். பதம் மிகச் சிறப்பாயிருந்தால், உணவு பரிமாறுதலைத் தாமதப்படுத்துமாறு, ஏகோபித்த வேண்டுகோள்கள் விடுக்கப்படுவதுமுண்டு.
இரு குழுக்கள் எதிரெதிரே அமர்ந்து வினா - விடையாக மாறிப்பாடுதல் வாதுப்பாடல் எனப்படும். இது சில வேளைகளில் வசைப் பாடலாக மாறி, கூட்டத்தாரிடையே அடிதடியில் முடிவதும் உண்டு.
பஜனை என்பது இன்றைய இன்னிசைக் கச்சேரியாகும். மத்தளம், பிடில், சல்லாரி, ஹார்மோனியம் ஆகிய வாத்தியக் கருவிகளும் உபயோகிக்கப்படும்.
பக்கீர்பைத் : பக்கீர்மார் தமது றபானை அடித்துக் கொண்டு படித்தல் இதுவாகும். "கொட்டிய்படித்தல்" எனவும் இது அழைக்கப்படும். மசாலாப் பாடல்களே பெரும்பாலும் படிக்கப்படும்.றபான் ஒசையும் மிகவும் இனிமையாயிருக்கும். நோன்பு காலங்களில் முஸ்லிம் கிராமங்களிலே அதிகாலையில் வீதிவீதியாகப் பாடிச்சென்று, மக்களைத் துயிலெழுப்பும் பழக்கம் மிகப் பண்டைய காலத்திலிருந்து, இவர்களாலேயே இன்றுவரை செய்யப்பட்டு வருகின்றது.
புத்தகம் படித்தல் : எழுத, வாசிக்கத் தெரிந்தோர் தொகை குறைவாயிருந்த அக்காலத்தில், புத்தகம் படித்தல் எனும் இக்கலை அறிவு வளர்ச்சிக்கு உதவுவதாகவும் அமைந்திருந்தது. கற்றறிந்த ஒருவர் ஒரு நூலினைப் பாடி அல்லது வாசித்து அதற்குரிய விளக்கமும் அளிப்பார். சிலவேளை, அவருக்குதவியாக ஓரிருவரும் வியாக்கியானமளிப்பதில் உதவுவர். முஹதீன் மாலை. இறகசுல் படைப்போர், சைத்துரன் கிஸ்ஸா போன்றன வாசிக்கப்படும்.

Page 91
மன்னார் மாவட்டத்தில் மிகவும் சனரஞ்சகமாயிருந்தது சீறா பாராயணமாகும். வருடத்திலொரு முறை சீறாப் புராணத்தை முழுவதுமாக வாசித்து, அதற்கு விளக்கமளிக்கும் வழக்கம் மிகச் சமீபகாலம் வரை அங்கு இருந்தது.
றம்ளான் காலத்தில் தராவீஹற் தொழுகையின் பின்னர் மஆனி, பத்ஹCத்தையான், கசசுல் அன்பியா, ராஜமணிமாலை என்பனவற்றைப்படிக்கும் பழக்கமும்நாட்டின் பல பாகங்களிலும் இருந்துள்ளது.
திருமணவாழ்த்து: பெண் வீட்டுக்கு மாப்பிள்ளை வந்து சேர்ந்தவுடன், அங்கு முன்வாசலில் அமைக்கப்பட்ட பந்தலின் கீழ் ஒர் ஆசனத்தில் அவர் அமர்ந்த பின்னர், புலவர் ஒருவர் வாழ்த்துப்பாட ஆரம்பிப்பார். பந்தலின் கால்கள் வண்ணப்பட்டுப் புடைவைகளினால் சுற்றப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும். தென்னங்குருத்தோலை, இளநீர்க்குலை, பூவரி என்பனவற்றா. லும் சோடிக்கப்பட்டிருக்கும்.
மாப்பிள்ளை வாழ்த்தில் அவரின் சிறப்பு. பெண்ணின் சிறப்பு, வழங்கப்படும் சீர் வரிசைகள், சபையிலேயிருக்கும் முறைகாரர் சிறப்பு என்பன பற்றியெல்லாம் சிலாகித்துப் பாடுவார், புலவர். இவ்வாறு பாடிக்கொண்டு போகும் பொழுது அவருக்குப் பல பரிசுகள் வழங்கப்படும். பொன்னாடையும் போர்த்தப்படும். அச்சால்வையினால் மாப்பிள்ளையின் முகத்தில் வீசிப் புகழ் படிப்பர்.
தனக்கு அளிக்கப்படும் பரிசு நிறையுடையதாய் இல்லாத பட்சத்தில், புலவர் தனது மனக்குறையைப் பாடலிலேயே வெளிப்படுத்துவார். நான் மனம் நொந்து போவது சரியல்ல எனஆரம்பித்து மாப்பிள்ளையின் தரத்தையும் சிறிது குறைத்துக் குறை கூறத் தொடங்குவார். உடனடியாகவே, மணமக்களின் உறவினர் அவருக்கு மேலும் பரிசுகளை வழங்குவர். அவ்வாறு கிடைத்தவுடன் புலவர் "யாரப்பா"இந்த மாப்பிள்ளை எனக் கேட்டு மிக ஏற்றிப்புகழ்வார். இப்பழக்கமே பிற்காலத்தில் வாழ்த்துப் பத்திரம் வாசித்தளித்தலாக மாறிற்று.

திருமண வாழ்த்துப் பாடுவதில் பாலமுனைப் புலவர் முகம்மது லெவ்வை, ஒரு காலத்தில் புகழ் பெற்றவராயிருந்தார்.
அட்டாளைச்சேனையில், 1997ல் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் மேடையேற்றப்பட்ட திருமண வாழ்த்து நிகழ்ச்சி, நாடளாவிய ரீதியில் மிகவும் புகழப்பட்டது.
அக்கரைப்பற்று ஒய்வு பெற்ற அதிபர் ஏ. எல். அகமது லெப்பையினால் தயாரிக்கப்பட்டு, தேசியக் கல்லூரி மாணவர். களால் அளிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி கொழும்பு, மல்வானை ஆகிய விடங்களில் நடைபெற்றபோதும் பலத்த பாராட்டைப் பெற்றது.
குரவை: கிழக்கு மாகாணத்துக்கே உரித்தானவொரு கலை இதுவாகும். பெண்கள் தங்கள் மேலுதட்டில் விரலை வைத்து, நாக்கசைப்பினால் ஏற்படுத்தும் இனிய ஒலியே குரவையாகும். கலியான வீடுகளிலும், ஏனைய நிகழ்ச்சிகளிலும், இது முக்கிய இடம்பெறும். ஒரு காலத்தில் ஊரிலுள்ள எல்லாப் பெண்களுமே குரவையிடக் கூடியவராயிருந்தனர்.
அராபியப் பூர்வீகத்தையுடையது, இக்குரவையாகும். அராபியத் தீபகற்பம் ஈராக், எகிப்து போன்றநாடுகளில் இன்றும் குரவையிடும் வழக்கமுண்டு. மாக்கிரட் மீட் எனும் மானிடவியலாய்வாளர் தனது நூலொன்றில், நைல் நதிக் கரைக் கிராமங்களிற் குரவையிடும் பழக்கம்பூர்வீக காலத்திலிருந்தே வழக்கிலுள்ளதாகக் குறிப்பிடுகிறார்.
கட்டிடக் கலை: முஸ்லிம்களின் பாரம்பரியக் கட்டிடக் கலை அம்சங்களைப் பள்ளிவாசல்களிற் காணலாம். இந்நாட்டின் கட்டிட அமைப்பு முறையோடு, இஸ்லாமியக் கட்டிடமுறையும் கலக்கப்பட்டே பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. எல்லாப் பள்ளிவாசல்களிலும் மினாறா, மிஹற்றாப், மிம்பர், ஹெளள், என்பன நுணுக்கமாக அமைக்கப்பட்டன.

Page 92
பள்ளிவாசலினுள்ளே அமைந்த தூண்கள் பாரிய முழு மரங்களிற் செதுக்கப்பட்டதோடு, அழகிய வேலைப்பாடுகளையும் கொண்டிருந்தன. ஜன்னல்களும், கதவுகளும், உயரத்தில் வெளிச்சத்துக்காகப் பதிக்கப்படும் ஜன்னல்களும் பல்வேறு நிறக் கண்ணாடிகளைக் கொண்டிருந்தன. பிறிதொரு விசேட அம்சம், எல்லாப் பள்ளிவாசல்களிலும் "மோதின்* கல்" என ஒன்று கட்டப்பட்டிருந்தது. எட்டுப் பத்துப் படிகள் ஏறிச் சென்று. உயரமான ஓரிடத்தில் வசதியாக நின்று மு அத்தின். அஸான் (தொழும் நேர அறிவிப்பு) சொல்வதற்காகவே இது கட்டப்பட்டிருந்தது.
எழுத்தணி: முஸ்லிம்களுக்கேயுரிய சிறப்புக்கலை இதுவாகும். அரபு, பாரசீகம், உருது ஆகிய எழுத்துக்களைக் கொண்டு சித்திரங்கள் வரைவதே இக் கலையாகும். இவற்றிற்கேற்ப அராபிய, ஈரானிய, இந்திய வடிவங்கள் இதற்குண்டு. இவை இலங்கையிலும் கைக்கொள்ளப்பட்டு வந்துள்ளன. கூபிக், துல்க், றிஹானி, தெளக்கி, முஹாக்கிக், றிகா, துக்ரா, நாஷ்க், நஷ்டாலிக், ஷகஸ்தா, லார்ஸ்ா, மன்ஸுர், குலார், ஸ9ல்ப் ஈ. ஆருச் என இவ்வெழுத்தணியிற் பலவகையுண்டு. இந்நாட்டில் இன்று பிரபல்யம் பெற்று வரும் ஒரு கலை, எழுத்தணியாகும்.
சித்திரம் தீட்டுதல்: மாட்டு வண்டில்களிலும், தோணிகளி. லும் மிக அழகான வர்ணங்களில் பல்வேறு வடிவங்களில் வரைதலே இதுவாகும். பல நிறங்களைக் கொண்டு இவை கீறப்படுவதால் பார்ப்பதற்கு மிகவும் கவர்ச்சியாயிருக்கும்.
பாயிழைத்தல்: கிராமப்புறமுஸ்லிம் பெண்கள் பாய், பெட்டி, உமல் என்பன இழைப்பதில் மிகவும் கைதேர்ந்தவர்களாவர்.
* மோதின், முஅத்தின்: பள்ளிவாசல் ஊழியர்
7S

விதம் விதமான வடிவங்களில் அவை இழைக்கப்படும். சாதாரண வீட்டுப் பாவனை, பொருள்களைக் காய வைத்தல், சாப்பாட்டுப் பந்திகள், கல்யாண வீடு, பெண் - மாப்பிள்ளையின் உபயோகம் எனப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் வெவ்வேறு வகையான பாய்கள் உபயோகிக்கப்படும்.
அவ்வாறான பாய்களுட் சில வருமாறு : மயிலிறகு, அத்துராசி, வீணைப்பெட்டி, சீப்புக் கண்டாங்கி, மயிர்க்கொட்டிய் புழு, பொருத்துப்புணி, தப்புப்புணி, தாராக்கால், தாமரைக்கொடி, சித்துப்புணி, மைக்கண், தோட்டுப்பாய், சப்புப்பாய்.
女 女 女 女 ★
/ ༄༽
அதஸிய்யா என்ற நகரின் கிறிஸ்தவ தேவாலயம்
ஒன்று நில நடுக்கத்தினால் சரிந்து அழிந்து விட்டது. ஹிஜ்ரி அறுபதாவது ஆண்டில், இது நிகழ்ந்தது. அப்பொழுது ஆட்சி நடாத்திய கலீபா அமீர் முஆவியா(ரலி) அவர்கள் அந்தத் தேவாலயத்தை புதிதாக நிர்மாணித்தல் இஸ்லாமியப் பேரரசின் கடமை எனக் கருதி, அரசாங்கச் செலவில் தேவாலயத்தைக் கட்டிக் கொடுத்தார்கள்.
பிற மதத்தினரின் தேவாலயங்கள், கோயில்கள், மடாலயங்கள், மற்றும் அவர்களின் மத சம்பந்தமான நிறுவனங்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பதுடன் நில்லாது, அவை பழுதுகண்டால் அரசாங்கச் செலவில் அவற்றை நிர்மாணித்துக் கொடுக்க வேண்டும் என்பது முஸ்லிம்கள் மீதுள்ள கடமை. ノ
ܢܠ

Page 93
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்
- சில குறிப்புகள்
றமீஸ் அப்துல்லாஹற் விரிவுரையாளர், தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
திமிழ் கூறும் நல்லுலகில், முஸ்லிம்கள் தமிழுக்கு அளப்பரிய தொண்டுகளைச் செய்துள்ளனர். அதனால் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" என்ற தனிப் பிரிவே தமிழ் இலக்கியத்தில் பேசப்படுகின்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இது தனிப்பெரும் பிரிவாக பேராசிரிய இருக்கை பெற்று - இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தற்காலத்தில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்று பேசுகிறபோது பல்வேறுபட்ட கருத்துக்களைப் பெற முடிகின்றது. அது பற்றிய தெளிவு, வளர்ந்து வரும் தமிழிலக்கிய ஆய்வுலகில் மிகவும் அவசியப்படுகின்றது.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தின் தோற்றம் பற்றி, அது தொடர்பாக பேராசிரியர் எம். எம். உவைஸ், பி. எம். அஜ்மல்கான் ஆகியோர் எழுதிய வரலாற்று நூலுக்கு சிறப்புரை எழுதிய சு. வித்தியானந்தன், "சீறாப்புராணம் போன்ற சில நூல்களே தமிழ் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தன வேயொழிய,

தமிழ்த் தொண்டிலே ஊறித் திளைத்த பல நூற்றுக் கணக்கான முஸ்லிம் படைப்புக்கள் அறிமுகப்படுத்தப்படவில்லை. தமிழ் இலக்கிய வரலாறு எழுதிய எழுத்தாளர். களும் இஸ்லாமியத் தமிழ்த் தொண்டு பற்றி ஒரிரு நூல்களைக் குறிப்பிட்டிருந்தனரேயொழிய, இஸ்லாமியத் தமிழ் இலக்கியப் பரப்பை ஆராயவில்லை. இஸ்லாமியரே தமது இலக்கிய வளம பற்றி அறியாதிருந்தனர். இந்நிலை 1950ம் ஆண்டு வரை நிலவி வந்தது" என்று கூறுகின்றார். மேலும் அவர் குறிப்பிடும்போது, "அறபு இஸ்லாம் தொடர்புகளாலே தமிழகத்திலும், ஈழத்திலும் இஸ்லாமியப் பண்பாட்டுக்கான அடித்தளம் இடப்பட்டிருந்ததெனவும், இந்த அடித்தளத்திலேயே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் முளைவிட்டது" என்கிறார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றி அக்கறை காட்டியவர்களில் சு. வித்தியானந்தன் குறிப்பிடத்தக்கவர். விபுலானந்த அடிகளார் பேராசிரியர் எம். எம். உவைஸ் அவர்களிடம் நோமுகப் பரீட்சையொன்றில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றி வினவியதைத் தொடர்ந்தே, எம். எம். உவைஸ் அவர்களினால் இது தொடர்பான ஆய்வு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கைப் பல்கலைக்கழகமே, இந்த ஆய்வு முயற்சி. களுக்கு சந்தர்ப்பமளித்தது. இதற்கு தமிழ்ப் பேராசிரியர் கலாநிதி க. கணபதிப்பிள்ளையும், கலாநிதி சு. வித்தியானந்தனும் பெரிதும் துணையாயிருந்தனர்.
கலாநிதி சு. வித்தியானந்தன் தனது "இலக்கியத் தென்றல்" நூலில், இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு என ஒரு இயலிலும், "கலையும் பண்பும்" என்ற நூலிலும் இஸ்லாமியர் தமிழ்த் தொண்டு பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளார். ஆனால், இவரது பங்களிப்பு யாவும் இஸ்லாமியர்கள் தமிழுக்காற்றிய தொண்டு என்ற அடிப்படையிலேயே பார்க்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் எம்.எம். உவைஸ் அவர்கள் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" என்ற மரபுக்கு காரணகர்த்தாவாகி, அதற்கு தனது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு என்ற நூலில்
S

Page 94
பின்வருமாறு வரைவிலக்கணம் தருகிறார்.
"இஸ்லாம், தமிழ், இலக்கியம் என்னும் மூன்று சொற்களையும் கொண்ட சொற்றொடரே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம், இஸ்லாம் எங்கள் வழி;தமிழ் எங்கள் மொழி; இலக்கியம் எங்கள் விழி ; என்பதற்கேற்ப வழி மொழி விழிகளாய் அமைந்துள்ளது, இஸ்லாமியத் தமிழ் இலக்கியம். ஆக, இவ்விஸ்லாமியத் தமிழ் இலக்கியம் எமது முதுசொம். எமது வழி செம்மையானதாய் இருத்தல் அவசியம். எமது மொழி பண்பாடானதாய் இருத்தல் வேண்டும். எமது விழி கூர்மையானதாய் இருத்தல் இன்றியமையாதது. எனவே, எமது வழிமொழி விழியான இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் போற்றிப் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். வழி போற்றப்பட்டு, மொழி பேணப்பட்டு, விழிபாதுகாக்கப்படுதல் போன்று இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் உரிய முறையிற் கண்கா. ணிக்கப்பட்டு வருதல் வேண்டும்."
மேற்கூறிய வரைவிலக்கணம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றிய உணர்வுததும்பிய கருத்தாக இருக்கின்றதே ஒழிய, அதுபற்றி விஞ்ஞானபூர்வமானதாக அல்லது போதுமான விளக்கத்தை தருகின்றதாக அமையவில்லை. பேராசிரியர் எம். எம். உவைஸஸும், பி. எம். அஜ்மல்கானும் தமது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாற்று ஆய்வுகளில் பின்வருவனவற்றை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளனர்:
1. கி. பி. 1700 வரையான இஸ்லாமியத் தமிழ் இலக்கிய
நூலகள 2. இஸ்லாமிய அடிப்படையிலான தமிழ்க் காப்பியங்கள். 3. சிற்றிலக்கியங்கள் 4. சூபி - மெய்ஞ்ஞான இலக்கியங்கள்

5. அறபுத் தமிழ் இலக்கியம் 6. உரைநடையும் தற்காலக் கவிதையும்
சை. பாத்தும்மா பீவி அவர்கள் இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான தனது கட்டுரையொன்றில், இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை மரபு வகை இலக்கியம், புது வகை இலக்கியம் என்று பிரித்திருக்கின்றார். மரபு வகை இலக்கியத்தினுள் காப்பியம், சிற்றிலக்கியம். ஞானப்பாடல்கள், பொதுமக்கள் பாடல்கள் என்பவை அடங்கியுள்ளன. புதுவகை இலக்கியத்துள் படைப்போர், முனாஜாத், கிஸ்ஸா, மஸ்அலா, நாமா என்பன அடங்கியுள்ளன. தற்காலத்தைப் பொறுத்த வரையில் இந்தப் பகுப்பு முறை போதாததாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போதுமான விளக்கம் இல்லை: பொதுவாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் பற்றி போதுமான விளக்கத்தினை நாம் பெறவில்லையென்றே கருதவேண்டியுள்ளது. "இஸ்லாம் மார்க்கத்தினைப் பின்பற்றுகின்ற முஸ்லிம் புலவர்கள் எழுதும் நூல்களை இஸ்லாமிய இலக்கியம் என்கிறோம்." என்ற எஸ்.எம். ஹனிபா போன்றோரின் சாதாரண விளக்கங்களும் நம் மத்தியிலே உள்ளன.
பேராசிரியர் கா.சிவத்தம்பி தனது "மதமும் மானுடமும்" என்ற நூலிலே "எழுத்தின் அடிப்படைப் பண்பு பற்றி முஸ்லிம் ஒருவர் எழுதியது என்பதற்காக ஒர் ஆக்கம் முஸ்லிம் இலக்கியம் ஆகிவிடாது என்பதை நாம் உணரல் வேண்டும். நவீன தமிழ் இலக்கிய வடிவங்களுட் கணிசமான முக்கியத்துவத்தைப் பெறும் நாவல், சிறுகதை, புதுக்கவிதை ஆகியன முற்றிலும் மதச் சார்பற்ற சூழலினடியாகவே தோன்றுகின்றன என்பதை மனங்கொளல் வேண்டும்" என்கின்றார். இந்த இடத்தில் இருந்துதான், இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான முக்கிய கேள்விகளை நாம் கேட்க வேண்டியுள்ளது.

Page 95
இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றால் என்ன ? எவ்வகை இலக்கியங்கள் அதற்குள் அடங்கும். முஸ்லிம்கள் எழுதிய நவீன தமிழ் இலக்கிய வடிவங்களான புனைகதை, கவிதை. நாடகம் என்பனவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துள் அடங்குமா? அவ்வாறு அடங்குமாயின், அதன் பிரிகோடு யாது?
இஸ்லாமிய சமூகத்தைப் பொறுத்தவரையில், இஸ்லாமிய சமூகத்தவரின் பிரச்சினைகளை அவர்களது மதத்தில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது பின்னிப் பிணைந்துள்ளது. ஆகவே, முஸ்லிம்கள் எழுதிய புனைகதை, கவிதை, நாடகம் முதலானவற்றை இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்றா கொள்வது? அல்லது அதில்வரும் பாத்திரங்களை, செய்தி. களைக் கொண்டா பிரித்துப் பார்ப்பது? அவ்வாறு வருகின்ற மொழிபெயர்ப்பு இலக்கியங்களும் உள்ளன. அவற்றை எதற்குள்ளே அடக்குவது? இவ்வினாக்கள் பற்றி விளங்கிக் கொள்வதற்கு மேலும் சில எடுத்துக்காட்டுக்களை நோக்குவோம்.
இந்த வகையில், புனைகதைகளுள் "இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதை முன்னோடிகள்" என்ற ஜே. எம். சாலியின் கட்டுரை மிகுந்த கவனத்திற்குரியது. ஈழத்திலுள்ள முஸ்லிம் எழுத்தாளர்களினதும் ஒரு சில தமிழ் எழுத்தாளர்களின் கதைகளும் முஸ்லிம்களின் பிரச்சினைகளையும், முஸ்லிம் பாத்திரங்களையும் உள்ளடக்கியனவாக அமைந்துள்ளன. இஸ்லாமியக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதிலுள்ள பிரச்சினைகள், சமூக வாழ்வு இனப்பிரச்சினை போன்றவற்றில் முஸ்லிம் சமூகக் கதைகள் வெளிவந்துள்ளன. எடுத்துக்காட்டாக. அ. ஸ. அய்துஸ் ஸ்மது, மருதுர்க்கொத்தன், எஸ். பொன்னுத்துரை, ஏ. இக்பால், ஒட்டமாவடி அறபாத் முதலானவர்களின் கதைகளைக் குறிப்பிடலாம். இதேபோல, சில நாவல்களையும் அந்த நோக்கில் அவதானிக்கலாம். குறிப்பாக, அ. ஸ. அப்துஸ் ஸமது, வை. அஹமத், முகம்மது ஜெலில், அ. ஸ். சித்திறிஜா போன்றோரின் நாவல்களைக் குறிப்பிடலாம்.

பேராசிரியர் எம். எம். உவைஸ், பீ. எம். அஜ்மல்கான் ஆகியோரது "இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் விபரக்கோவை" என்ற நூலில், எம். சி. சித்திலெப்பையின் அஸன்பே சரித்திரமும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகவே கொள்ளப்பட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.
இதேபோல, கவிதையை எடுத்துக்கொண்டால், ஈழத்தில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு எம்.ஏ நுஃ மான், வ.ஐ.ச. ஜெயபாலன், ஏ. இக்பால், அறபாத்,றஷ்மி போன்ற நூற்றுக்கணக்கான முஸ்லிம் தமிழ்க் கவிஞர்கள் கவிதை எழுதுகின்றனர். தமிழகத்தில் மு. மேத்தாவின் "நாயகம் ஒரு காவியம்" போன்றன இந்த வகையில் நோக்கத்தக்கன. எனவே, இத்தகைய நவீன கவிதைகளை நாம் எதற்குள் வைத்துப் பார்ப்பது?மொழிபெயர்ப்பு என்ற வகையில், ஈழத்தின் கவிதைப் பாரம்பரியத்திலே, 1970 - 80 களில் பெரும் தாக்கத்தை உண்டுபண்ணிய கவிஞர் எம். ஏ. நுஃமானின் "பலஸ்தீனக் கவிதைகள்", பலஸ்தீன முஸ்லிம் விடுதலைப் போராளிகளின் பிரச்சினைகளைப் பற்றிய கவிதைகளின் மொழிபெயர்ப்பு வடிவங்களே. இதேபோல, இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் முஸ்லிம் நாடகங்கள் ஒலிபரப்பப்படுகின்றன. இவ்வாறு பார்க்கும்போது நவீன தமிழ் இலக்கிய வடிவங்கள் மதச்சார்பற்ற சூழலினடியாகவே தோன்றுகின்றன என்ற பேராசிரியர் கா. சிவத்தம்பியின் கூற்றுநம்மைப்பொறுத்தளவில் பொருந்தாதா? அவ்வாறு பொருந்தாதெனின், சை. பாத்தும்மா பீவி பார்த்தது போன்றன்றி, பின்வரும் மூவகையாக இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினை நோக்க முடியும். இஸ்லாமிய உள்ளடக்கம் கொண்ட தமிழ் இலக்கிய மரபுவகை வடிவங்கள் என்றும் அறபு, பாரசீக மரபில் இருந்து வந்த இலக்கிய வடிவங்கள் என்றும், இஸ்லாமிய உள்ளடக்கம் கொண்ட நவீன தமிழ் இலக்கிய வடிவங்கள் என்றும் பிரித்துப் பார்க்க முடியும். முதற்பிரிவில் காப்பியம், சிற்றிலக்கியம், ஞானப்பாடல்கள், பொதுமக்கள் பாடல்கள் என்பனவும், இரண்டாம் பிரிவில்,

Page 96
முனாஜாத், கிஸ்ஸா, மஸ்அலா,நாமா, படைப்போர் என்பனவும் அடங்கும். மூன்றாம் வகையிலே இஸ்லாமிய உள்ளடக்கம் கொண்ட புனைகதை, கவிதை, நாடகம் முதலானவற்றை அடக்கலாம்.
இங்கிருக்கின்ற பிரச்சினை இந்த மூன்றாவது பிரிவு பற்றியதே. நவீன இலக்கியங்களை எந்தப் பண்புகளின் அடிப்படையில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்தினுள் வைத்துப் பார்ப்பது, அ. ஸ். வின் எனக்கு வயது பதின்மூன்றும், மருதூர் கொத்தன் சிறுகதைகளும், ஏ. இக்பாலின் மாயத்தோற்றமும், எம். ஏ. நுஃமானின் பலஸ்தீனக் கவிதைகளும், முழுக்க முஸ்லிம் சமூகப் பிரச்சினைகளையே அடியாகக் கொண்டவை. ஆதலால் இவை யாவும் இஸ்லாமியத் தமிழ் இலக்கியமாகுமா? முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய தொண்டு எனப் பார்க்கிறபோது இந்த வரைவிலக்கணப் பிரச்சினைகள் எழநியாயமில்லை. ஆகவே, தமிழில் சைவ சமயம் சார்ந்த இலக்கியத்தினை மாத்திரம் "சைவத் தமிழ் இலக்கியம்" என்றழைப்பது போல இஸ்லாமிய சமய்ம் சார்ந்த இலக்கியத்தினை மாத்திரம் "இஸ்லாமியத் தமிழ் இலக்கியம்" என்ற வட்டத்துக்குள் வைப்போமானால் எமது இலக்கியப் பாரம்பரியம் நெடிதுவாழும்; சேண் விளங்கும். இவ்வாறு வருகிறபோதே இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் என்பதன் பண்பினைப் பேண முடியும். நமது ஆய்வுகள் இதற்கு வழி சமைக்க வேண்டும். வருகிற நூற்றாண்டு இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான சரியான - விஞ்ஞானபூர்வமான வரைவிலக்கணத்தினை வழங்கியாக வேண்டும். அல்லது இதனது எல்லையைக் கண்டறிய வேண்டும் ; நவீன இலக்கியங்கள் தொடர்பான நமது கருத்துக்களில் தெளிவு காண வேண்டும் ; நமது வரைவிலக்கணங்கள் தொடர்பான மீள் கண்டுபிடிப்பு அவசியமானதாகும்.
காலப்பகுப்பின் அவசியம்: இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான மற்றுமொரு குறிப்பையும் கூறவேண்டும். 12ஆம்
36

நூற்றாண்டில் இருந்து தொடங்குகின்ற நமது இலக்கியப் பாரம்பரியத்துக்கு தமிழ் இலக்கிய வரலாறு பேசுகின்ற சங்க, சங்கமருவிய, பல்லவர், சோழர், நாயக்கர், ஐரோப்பியர், இருபதாம் நூற்றாண்டுக் காலங்கள் போன்ற காலப் பகுப்பு அவசியமாகும். இதனை "இஸ்லாமிய இலக்கியக் கால நிர்ணயம்" என்ற கட்டுரையில் ஈழத்தைச் சேர்ந்த எஸ். ஏ. ஆர். எம். செய்யது ஹசன் மெளலானா வற்புறுத்துகின்றார்.
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறும் கால நிர்ணயம் செய்யப்படல் வேண்டும். இப்பணியைச் செய்வதற்கு தகுதியுள்ள ஒருவர் கலாநிதி எம்.எம். உவைஸ் அவர்களேயாகும். பல்சந்தமாலைக் காலம் (கி.பி. 12) தொடங்கி தற்காலம் வரை இஸ்லாமிய இலக்கிய காலநிர்ணயம் செய்யப்பட்டால் தற்காலத்திலுள்ளவர்களுக்கும் எதிர்காலத்திலுள்ளவர்களுக்கும் இலக்கிய வரலாற்று ஆராய்ச்சிக்கு பெரிதும் துணை செய்வதாய் அமையும்."
என்ற ஹசன் மெளலானாவின் கூற்று, இங்கு கவனிக்கத்தக்கதாகும். பேராசிரியர் கா. சிவத்தம்பி தனது "மதமும் மானுடமும்" என்ற நூலிலே இஸ்லாமிய இலக்கிய வரலாறு தொடர்பான கால வரன்முறை பற்றியும் கேள்வி எழுப்புகின்றார்.
"16ம் நூற்றாண்டில் மின்னானுறுத்தின் புலவரின் பொன்னரிய மாலை முதல், முஸ்லிம்களின் தமிழ் இலக்கியப் பங்களிப்புத் தொடங்குகின்றது."
என்ற தப்பான அபிப்பிராயங்கள் வழங்குவதை அவர் எடுத்துக்காட்டி இஸ்லாமியத் தமிழ் இலக்கிய கால வரன்முறை பற்றி வற்புறுத்துகின்றார். இதற்கு தக்க பதிலாக 1986ல் பதிப்பிக்கப்பட்ட எம்.எம். உவைஸ், பீஎம். அஜ்மல்கான் ஆகியோர்களது இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு அமைந்துள்ளது. கா. சிவத்தம்பியின் மேற்குறிப்பிட்ட நூல் அதற்கு முன்னமே பதிப்பிக்கப்பட்டது இங்கு குறிப்பிடத்தக்கது.
87

Page 97
ஆக, இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொடர். பான பிரச்சினைகளுக்கு பேராசிரியர் உவைஸினது நூல் பதிலளித்தது போல இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு காலப் பகுப்புச் செய்யப்படும் போது அது இன்னும் நமது வரலாற்றுக்கு மிகச் சிறந்த ஆதாரமாக அமையும். இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு தொடங்கிய காலப்பகுதியினை தொடக்க காலம் என்றும், கி.பி. 1700களுக்குப் பின் தோன்றிய இஸ்லாமியத் தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் காப்பியங்கள் ஆதலால் அதனை காப்பிய காலம் என்றும் அதற்கு அடுத்த காலப் பகுதியில் சிற்றிலக்கியங்கள் பேரிடம் பிடித்ததால், சிற்றிலக்கியக் காலம் என்றும் அதற்கு அடுத்த காலப் பகுதியினை தத்துவ இலக்கியக் காலம் என்றும் அதற்குப் பின்வரும் காலப்பகுதியினை அறபுத் தமிழ் இலக்கியம் என்றும் தற்காலத்தினை நவீன காலம் என்றும் எம்.எம்.உவைஸ் அவர்களது இஸ்லாமிய தமிழ் இலக்கிய வரலாற்றினை அடிப்படையாகக் கொண்டு காலப்பகுப்புச் செய்யலாம். அல்லது குறிப்பிட்ட இலக்கியங்கள் தோன்றிய காலப்பகுதியினை அடிப்படையாகக் கொண்டு நூற்றாண்டுகள் வாயிலாகவும் அல்லது மேலே குறிப்பிட்டவாறு குறிப்பிட்ட காலத்தில் தோன்றிய பெரும்பான்மை இலக்கியவடிவத்தின் பெயரைக் கொண்டும் காலப் பகுப்புச் செய்யலாம். ஏதோ பொருத்தமானதொரு முறையில் காலப்பகுப்புச் செய்யப்பட வேண்டியதே இங்கு வற்புறுத்தப்படுகின்ற செய்தியாகும். அப்போதுதான், நமது வரலாற்றுத் தவறுகளில் இருந்து தமது இலக்கியப் பாரம்பரியத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
புதிய நூற்றாண்டில், நமது இளைய தலைமுறையின. ருக்கு நமது முதுசமான இஸ்லாமியத தமிழ் இலக்கியத்தினைக் கையளிக்கம் போது அதனை சரியான முறையில் செய்தாக வேண்டும். நவீன தமிழ் இலக்கிய உலகில் நாம் காணுகின்ற இஸ்லாமியத் தமிழ் இலக்கியம் தொடர்பான பிரச்சினை. களுக்கு, மீள் வரைவிலக்கணம் கண்டாக வேண்டும். நமது

இலக்கிய வரலாற்றுத் தொன்மையையும் சிறப்பையும் விளக்க காலப்பகுப்புச் செய்தாக வேண்டும். இத்தகைய பிரச்சினைகளுக்கு நமது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாடுகள் தீர்வு கண்டாக வேண்டும்.
பயன்பட்ட நூல்கள் :
1.
அஜ்மல்கான் , பி.எம். உவைஸ், எம். எம். (1986) இஸ்ல7மியத் தமிழ் இலக்கிய வரலாறு, பாகம் / மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
அஜ்மல்கான் , பி.எம். உவைஸ், எம். எம். (1990) இஸ்ல7மியத் தமிழ் இலக்கிய வரலாறு, பாகம் 2 மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
அஜ்மல்கான் , பி.எம். உவைஸ், எம். எம். (1991) இஸ்ல7மியத் தமிழ் இலக்கிய நூல் விபரக் கோவை மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை.
அப்துஸ் ஸமது, அ. ஸ. (1979) பிறைப் பூக்கள், "மர்கஸ்" , பாணந்துறை.
அப்துஸ் ஸமது, அ. ஸ். எனக்கு வயது பதின்முன்று பிறைப்பண்ணை, அக்கரைப்பற்று,
அப்துஸ் ஸமது, அ. ஸ. (1996) இஸ்லாமிய இலக்கிய நோக்கு, இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகம், சாய்ந்தமருது.
இக்பால், ஏ (1998) மாயத் தோற்றம் தர்ஹா நகர்.
இஸ்மாயில், வீ. எம். (1985) மருதுரர்க் கொத்தன் கதைகள்
கனி, ஆர்.பி. எம். (1963) இஸ்லாமிய இலக்கியக் கருவூலம் அருள்நூல்ப் பதிப்பகம், தென்காசி.

Page 98
10.
.
12.
3.
4.
15.
சிவத்தம்பிகா. (1983)மதமும்மானுடமும் நியூசெஞ்சரிபுக் ஹவுஸ், சென்னை.
பிறையன்பன் (1961) கலையும் பண்பும்
நுஃமான், எம். ஏ (1981) பலஸ்தினக் கவிதை, வாசகர் சங்கம், கல்முனை.
ஹஸன் மெளலானா (1968)இஸ்லாமியத்தமிழ் இலக்கியச் சொற்பொழிவுகள், அரசு வெளியீடு, கொழும்பு.
ஹனிபா, எஸ்.எம். (1991)இஸ்லாமிய இலக்கி/மறுமலர்ச்சி தமிழ் மன்றம், கல்ஹின்னை.
ஜெமீல், எஸ். எச். எம். (1994) பேராசிரியர் ம. மு. உவைஸ் மணிவிழா மலர், முஸ்லிம் சமய, பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.
令 令 令 令 令
“ஏகாந்தம் இனியது. ஆதி இறையைத் தொழுதல் அதனினும் இனியது அறிவினரைச் சேர்தல் இனியது, அத்தகைய அறிஞரைக் கனவிலும் நனவிலும் காணுதல் இனியது”
- ஒளவையார்
9

தமிழுக்குத் தன்னையே அர்ப்பணித்த
'ee,6OIII on II6OIII
ஆனா லானா
- அன்புடீன் -
"ஆனா ஸானா" என்று எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் இலக்கிய மாமணி, கலா பூஷணம், அ. ஸ. அப்துஸ் ஸ்மது 2001ம் ஆண்டு ஜூலை முதலாம் திகதி, மாலை 7.00 மணிக்குக் காலமானார்.
ஈழத்து எழுத்தாளர் வரிசையில், தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்து வைத்திருந்தவர் அ. ஸ. அப்துஸ் ஸமது. கலை, இலக்கியவாதியாக மட்டுமல்லாது தமிழறிஞராகவும், கல்வியில் சிறந்த ஆசானாகவும் விளங்கியவர் அவர். இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இஸ்லாமிய இலக்கியவாதியாக அவர் அடையாளப்படுத்தப்பட்டாலும் மத(ம்) இலக்கியவாதியாக அல்லாது, சமுக இலக்கியவாதியாக அவர் திகழ்வதை அவரது ஆக்க இலக்கியங்களோடு பரிச்சயம் உள்ளவர்கள் நன்கு அறிவர்.
1929ம் ஆண்டு புரட்டாதி மாதம் 7ம் நாள் அக்கரைப்பற்றில் பிறந்த அப்துஸ் ஸமதுவின் தந்தை பெயர் அப்துஸ் ஸலாம் ஆலிம். தாயார், ஆசியா உம்மா.
தமது ஆரம்பக் கல்வியை அக்கரைப்பற்று மெதடிஸ்த மிஷனரி பாடசாலையில் கற்ற இவர், 1951ம் ஆண்டு எஸ். எஸ். ஸி. பரீட்சையில் தேறி, 1952ம் ஆண்டு ஆசிரியர் பணியில் இணைந்து கொண்டார். 1954 - 55ம் ஆண்டுகளில் அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்கலாசாலையில்பயிற்சி ஆசிரியராக

Page 99
பயின்ற இவர் 1972-75 வரை, களனி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு தமிழில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். 1979-1989 வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் தமிழ் விரிவுரையாளராக கடமை
புரிந்து, ஓய்வு பெற்றார்.
முதிர்ந்த தமிழறிஞர். தமிழ் இலக்கியத்திலும், இஸ்லாமிய இலக்கியத்திலும் நன்கு பரிச்சயமுள்ளவராகத் திகழ்ந்த அவர் முதிர்ந்த தமிழறிஞராக விளங்கினார். மேடைப் பேச்சிலும் முன்னணியில் திகழ்ந்த இவர் நகைச்சுவையுடன் பேசி, சபையைக் கவரக் கூடியவராக இருந்தார். அமைதியான சுபாவமும், இரக்க சிந்தையும், பொதுவுட மை எண்ணமும் அவருக்கு கூடப்பிறந்த குணங்களாகத் திகழ்ந்தன.
இளம் பராயத்திலேயே இலக்கிய ஆர்வம் மிகுந்தவராகக் காணப்பட்ட "ஆனாஸானா", ஏழாம் வகுப்பில் படிக்கும்போது, தினகரன் "சிறுவர் உலகம்" பகுதிக்கு "எங்கள் ஊரில் திருநபி ஜெயந்தி" என்னும் கட்டுரையை எழுதி, இலக்கியப் பிரவேசம் கண்டார். இவரது முதலாவது சிறுகதை, 1950ல் "நூர்ஜஹான்" என்ற பெயரில் தினகரனில் பிரசுரமானது. தமிழ்நாட்டு சூழல்களையும் பெயர்களையும் தாங்கி எழுதுவதுதான் சிறுகதை என்று பழக்கப்பட்டிருந்த அக்காலத்தில், இலங்கைச் சூழல்களையும், பாத்திரங்களையும் வைத்துகதை எழுதி "ஈழத்து பிரதேச சிறுகதைகள்" என்ற அடையாளத்தை கொண்டுவந்தார். முஸ்லிம் பாத்திரங்கள் பேசுகின்ற அவரது பல சிறுகதைகள், ஈழத்து எல்லா பத்திரிகைகளிலும் வெளிவரத் தொடங்கின. அவரது அந்தக் கிழவன், நெருஞ்சிமுள், மசக்கை, வர்ணபேதம், ஈர்ப்பு முதலான சிறுகதைகள் விமர்ச. கர்களால் சிலாகித்து பேசப்பட்டன. 1977ல் "எனக்கு வயது பதின்மூன்று" என்ற அவரது சிறுகதைத் தொகுதி வெளிவந்து, அந்த ஆண்டுக்குரிய சாஹித்தியமண்டலப்பரிசையும் பெற்றது.

சிறுகதை, உருவகக்கதை ஆகிய துறைகளில் ஈடுபாடு காட்டிய அவர், நாவல்கள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டார். அவரது ஆர்வத்தை ஆற்றுப்படுத்தியது வீரகேசரி. 1983ல் வீரகேசரி நடத்திய பிரதேச நாவல் போட்டியில் மட்டக்களப்பு, பிரதேச மக்களது வாழ்வியலின் ஒரு பகுதியை மையமாக வைத்து, அவர் எழுதிய "பனிமலர்" நாவல் பரிசு பெற்றது.
1983ல் வெளிவந்த "கனவுப் பூக்கள்" நாவல், வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கல்ஹின்னை தமிழ் மன்றம் அந்நாவலை நூலாக வெளியிட்டு, விற்பனையில் பெரு வெற்றி கண்டது. இந்நாவலுக்கு முஸ்லிம் கலாசார விவகார அமைச்சு, பரிசு வழங்கி கெளரவித்தது. 1987ல் தினகரன் பத்திரிகையில் அ. ஸ். எழுதிய "தர்மங்களாகும் தவறுகள்" நாவல் 1997ல் இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியகத்தினால், நூலாக வெளியிடப்பட்டது. அந்த நாவலைப் பற்றி "சென்னை பார்க்கர் கம்பியூட்டர்ஸ்" நிறுவனம் கருத்து தெரிவிக்கையில், இன, மத, பேதமின்றி அரசியல் வக்கிரங்களையும் மீறி, மனித உறவுகள் இன, மத, பேதமின்றி எவ்வாறு வாழ்வில் பரிணமிக்கின்றன என்பதை "தர்மங்களாகும் தவறுகள்" நாவல் அழகுறச் சித்தரிக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தது. இந்நாவலில் இன்னுமொரு சிறப்பம்சம் என்னவெனின், தமிழ், சிங்கள பாத்திரங்களை கதாபாத்திரங்களாக உருவாக்கி தமிழ் பாத்திரங்கள் மூலமாக அவர்களது வாழ்வியற் கூறுகள், ஆசாபாசங்கள், வாழ்வு முறைகள், நம்பிக்கைகள் போன்றவற்றையும், சிங்களப் பாத்திரங்கள் மூலமாக அவர்களது வாழ்வியல், பண்பாடு, மத அனுஷ்டானம், நம்பிக்கை போன்றவற்றையும் எடுத்துக் காட்டியுள்ளமையாகும்.
1957ம் ஆண்டிலிருந்தே "அ. ஸ." வுக்கு இந்திய சஞ்சிகைகளோடு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. மணிவிளக்கு, பிறை போன்ற இந்திய சஞ்சிகைகளில் அவரது பல கட்டுரைகள் வெளிவந்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த "ஈழகேசரி" பத்திரிகையில் அ. ஸ். அப்துஸ் ஸமதுவின்
193

Page 100
கட்டுரைகளை வாசித்த தமிழ்நாடு "மணிவிளக்கு" ஆசிரியர் ஆ, கா. அ. அப்துஸ் ஸமது (முன்னாள் பா. உ.) இலங்கை அப்துஸ் ஸமதுவுக்கு நீண்டதொரு பாராட்டுக் கடிதத்தை எழுதியதோடு "மணிவிளக்கு" சஞ்சிகைக்கு தொடர்ந்து எழுதும்படியும் வேண்டுகோள் விடுத்தார். அவர் அச்சஞ்சி. கையில் எழுதிய கட்டுரைகள் பின்னர் "சீறா இன்பம்" என்ற பெயரிலும், "பிறை'யில் எழுதிய கட்டுரைகள் சுலைமான் பல்கீஸ் என்ற பெயரிலும் அந்தந்த நிறுவனங்களால் நூலாக வெளியி. டப்பட்டன. 1996ல், இவரது இதர இலக்கியக் கட்டுரைகள் கொண்ட தொகுப்பு "இஸ்லாமிய இலக்கிய நோக்கு" என்ற பெயரில் வெளிவந்தது. சீறாப்புராணம், மஸ்தான் சாகிபு பாடல், இராஜநாயகம் நாகையந்தாரி, நஸிஹத்து முஃமினின் மாலை, பீரப்பா பாடல், சொர்க்க நீதி, நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ், காசிம் புலவர் திருப்புகழ் முதலாம் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களை கையாண்டு எழுதப்பட்ட மொத்தம் 15 கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இந்நூலாகும்.
தன்னைப் போலவே பிறரையும் நேசிக்கும் நேசகராக "அ. ஸ." விளங்கினார் என்பதற்கு எடுத்துக்காட்டாக சொல்லக்கூடிய வகையில் அவர்பிற எழுத்தாளர்களது படைப்புகளையும் நூலுருவில் கொண்டு வருவதில் முன்னின்று உழைத்தவராவார். அதற்கு உதாரணமாக, அவரால் நடத்தப்பட்ட "பிறைப் பண்ணை" வெளியீட்டகம் மூலமாக ஈழத்தின் 57 கவிஞர்களது கவிதைகளைத் தொகுத்து, அவர் வெளியிட்ட "முற்றத்து மல்லிகை" கவிதை நூலைக் கொள்ள முடியும். இத்தொகுதி, 1964ல் வெளிவந்தது.
1979ல் இலங்கையில்நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மகாநாட்டில் இலங்கையின் 27 சிறுகதை எழுத்தாளர்களது சிறுகதைகளைத் தொகுத்து "பிறைப் பூக்கள்" என்ற பெயரில் நூலுருவில் கொண்டு வந்தார்.
அ. ஸ. அப்துஸ் ஸ்மது கலை இலக்கியவாதியாக மட்டுமன்றி, நல்ல கல்விமானாகவும் புகழ் பூத்தவர். 1959 - 61ம்

ஆண்டுகளில் அவர் வெளியிட்ட "இலக்கியப் பொய்கை" என்னும் பாடநூல் 6ம், 7ம், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அக்காலத்தில் பாடநூல்களாக அரச அங்கீகாரம் பெற்றிருந்தது. இந்நூல் பற்றி கருத்து வெளியிட்ட பேராசிரியர் ஏ. வி. மயில்வாகனம் "இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல தமிழ் மாணவர்களுக்கும் பொருத்தமானது"என்று குறிப்பிட்டுள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டியது. கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் இலக்கிய நூல்களையும் உள்வாங்கியதாக இந்நூலின் பாடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
1968 க.பொ.த. சாதாரணப் பரீட்சைக்கு வழிகாட்டியாக அமைந்த தமிழ் இலக்கிய விளக்கத் துணை, தமிழ் இலக்கிய வினாவிடை, இஸ்லாம் வழிகாட்டி என்பனவும் இவரால் வெளியி. டப்பட்ட பாட நூல்களாகும்.
வானொலி, தொலைக்காட்சிப் பங்களிப்பு: இவர் தனது இலக்கியப் பணியை பத்திரிகையோடு மாத்திரம் வைத்துக் கொள்ளவில்லை. வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் மூலமும், அவர் வெளிப்படுத்தினார். இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் அவரது பல சிறு கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. அதே நிகழ்ச்சியில் முப்பதுக்குட்பட்ட அவரது நாடகங்களும் ஒலிபரப்பாகி இருக்கின்றன. பெண் சிந்திய கண்ணிர், கைதிக் கூண்டிலே உமறுப் புலவர் போன்ற இவரது நாடகங்கள் பலராலும் வியந்து பாராட்டப்பட்டதோடு, வானொலி இரசிகர்களின் வேண்டுகோளுக்கமைவாக மறு ஒலிபரப்பும் செய்யப்பட்டன. w
1982-83ம் ஆண்டுகளில் இவரால் முஸ்லிம் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட "இலக்கிய மஞ்சரி" நிகழ்ச்சி இவரது இலக்கியப் புலமையை மேலும் விசாலப்படுத்தியது. பண்டைய இலக்கியத்தில் காலூன்றி நவீன இலக்கியத்தின் தேடலை இலக்கிய, மஞ்சரிநிகழ்ச்சி மூலம் நடத்திக் காட்டியவர் "அ. ஸ்."
9S

Page 101
பத்திரிகைகள் அவரது மணிவிழாவை முன்வைத்து, தமது ஞாயிறு பதிப்புகளில் அவரது சிறுகதைகளை கேட்டு வாங்கிப் பிரசுரித்தமையும் இங்கு நினைவுகூரத்தக்கது. அப்படியே இலங்கை வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியும், இவரது நாடகமொன்றை ஒலிபரப்பியது.
அ. ஸ. அப்துஸ் ஸமதுவின் இலக்கியப் பணியை இனம் கண்டு ஈழத்தின் பிரபல இலக்கிய சஞ்சிகையான "மல்லிகை" 1989ல் அவரது புகைப்படத்தை முகப்புப் படமாக பிரசுரித்தது. அக்கரைப்பற்றிலிருந்து வெளிவந்த "இலக்கியா" சஞ்சிகையும் அவரது புகைப்படத்தை அட்டையில் பிரசுரித்தது.
அ. ஸ. வின் இலக்கியப்பங்களிப்புகள், பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. சாஹித்திய மண்டல விருது, ஆளுநர் விருது, கலா பூஷண விருது என்பன அவருக்குக் கிடைத்த அரச மரியாதைகளாகும். இலங்கை முஸ்லிம் கலாசார அமைச்சு, அவருக்கு தாஜுல் அதிப் பட்டமும், அக்கரைப்பற்று, கலைஞர் ஒன்றியம் "இலக்கியமாமணி" பட்டமும், ஒலுவில் புத்திஜீவிகள் வட்டம் "இலக்கியச் செம்மல்" பட்டமும் வழங்கி, அவரை கெளரவப்படுத்தியுள்ளன.
அக்கரைப்பற்று பிறைப்பண்ணை வெளியீட்டக ஸ்தாபகராகவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்க அக்கரைப்பற்று பிரதேச பிரதிநிதியாகவும், அக்கரைப்பற்று தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும், கல்முனை இஸ்லாமிய நூல் வெளியீட்டுப் பணியக ஸ்தாபகச் செயலாளராகவும், தென்கிழக்கு கலாசாரப் பேரவையின் பிரதம ஆலோசகராகவும் அவர் ஆற்றிய கலை இலக்கியப் பணிகள், ஆரோக்கி. ULDT6060D6).
அமரர்கள் க. கைலாசபதி, எஸ்.டி. சிவநாயகம், வீர. கேசரி ராஜகோபால், பேராசிரியர் ம. முகம்மது உவைஸ், சுபைர் இளங்கீரன், சில்லையூர் செல்வராசன், எச்.எம்.பி. முஹிதீன், கே. டானியல், வி.ஏ. கபூர், எம். எச். குத்துஸ், எம்.எச். எம். அஸ்ரஃ ப் இவர்களோடும், ஆர். சிவகுருநாதன், எஸ்.எம். ஹனிபா,
96

எஸ்.எச்.எம். ஜெமீல் ஆகியோருடனும், தமிழ்நாடு ஆ.கா. அப்துஸ்ஸமது, அப்துல் வஹ்ஹாய் (பிறை) ஆகியோருடனும் அவர் நெருங்கிய நட்பும், நல்லுறவும், மரியாதையும் வைத்திருந்தார்.
புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், தோப்பில் மீரான், கே. ஏ. அப்பாஸ், ஜே.எம். ஸாலி, அகிலன், மு. வரதராஜன் ஆகியோரது கதைகள் மீது அவருக்கு ஆர்வம் அதிகம் இருந்தது.
இவரது ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கு அவருக்கு அச்சாணியாக அமைந்தவர் அவரது மனைவி, றசினா உம்மா, என்பது யதார்த்தம். ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருக்கின்றாள் என்பதற்கொப்ப, "அ. ஸ." வுக்குப் பின்னால் அவர் மனைவி நின்று அவருக்கு வழங்கிய ஒத்துழைப்புகள் ஒப்பிட முடியாதவை.
ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலியன்றதைச் செய்து இலக்கிய உலகில்நிலையான சுவடுகளை பதித்துள்ள இலக்கியமாமணி அ. ஸ. அப்துஸ் ஸமதுவின் நாமம் தமிழ் வாழும் காலமெல்லாம் வாழும். ஏனெனின், அவர் தமிழுக்கும், தமிழ் இலக்கியத்துக்கும் தம்மை அர்ப்பணம் செய்தவர்.
நன்றி : தினகரன் 8.7.2001.
<>★く>★く>★く>★
எய்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அய்பொருள் மெய்ய்பொருள் காண்ப தறிவு
- திருவள்ளுவர்

Page 102
நூறு நூல் பதித்த தமிழ் மன்றம்
- ஜின்னாஹற் -
4த்திருக்கும் புத்தாண்டில் இலங்கை மண்ணில் புதியதொரு சாதனைய7ம் தனித்துநின்றே காத்திரம7ய் ஒருநூறு நூல்பதித்த
கல்ஹின்னைத் தமிழ்மன்றம் வழி வாழி முத்ததமிழ் அறிஞர் எஸ். எம். ஹனிப7 எங்கள்
முதுதமிழில் சிங்களத்தில் ஆங்கிலத்தில் கேரத்தெடுத்த சரம்பே7ல ஆக்கித் தந்த7ர்
கலைகல்வி இலக்கியத்தின் புேற7ம் அன்றே7.
தமிழ்மிது கொண்ட பெரும் பற்றினாலே
தன்னோடு பிறர்படைத்த நூலுஞ் சேர்த்து அமிழ்தளித்தார் மொழித்தரகம் மிக்கோருக்கும் ஆழ்ந்தறிந்து கற்பே7ர்க்கும் அறிஞருக்கும் சுமைபெரிதே மாகிடிலும் தோள்சு மறுந்தார்
சிறப்பாய் எம் தமிழ் மொழிக்காம் பிறமொழிக்கும் இமைப்பிழந்து செயற்பட்ட முயற்சியாலே
என்றுமவர் வாழ்ந்திடுவார் செயலின் விர7
படைத்தவர்கள் பதிப்பிக்கும் சக்தி மற்றுப்
போயிருத்தல் கண்டவர்க்கு உதவும் ப7ங்கில் படைத்தவற்றைப் பெற்றுத்தான் பதித்தே அன்னார் படைப்புலகு காணவுமப் பேர்கள்நாட்டில் அடுத்தவரும் அறியவவர் பேர்நிலைக்க அரும்பணிகள் செய்த7ர்அல்-ஹாஜ்ஹனிபா எடுத்ததனைச் செயற்படுத்திமுடித்துக் காட்டும்
இயல்பினர7ம் ஹனிபாநன்றென்றும் வாழி
() () () () ()
1983

திக்கம் சிவயோகமலர் ஜெயக்குமார்
മീഥക്രി திக்கம்"சிவயோகமலர் ஜெயக்கும7ர்துரைவி. தினகரன் இணைந்து நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற ஒரே பெண்மணியாவார்
இவர் எழுதிய "ச7மேளம்" என்னும் சிறுகதை ஐயாயிரம் ருபா பரிசைப் பெற்றுக்கொண்டது. /999ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ஆம் திகதி லேக்ஹவுஸ் கேட்பே7ர் கூடத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் லேக்ஹவுஸ் தலைவர் பரிசுப் பணம், ச7ன்றிதழ் விருது ஆகிய பரிசுகளை வழங்கினார்.
திருமத7 சிவயோகமலர் ஜெயக்கும7ர் /998ம் ஆண்டு தேசிய கத்தோலிக்க எழுத்தாளர் சங்கம், கத்தோலிக்க சாகித்திய தினத்தை முன்னிட்டு ஞான7ர்த்த டபிரதிபயவின் அனுசரணையுடன் நடாத்திய அகில இலங்கைச் சிறுகதைப் போட்டியில் 'பாவத்தின் சுவடுகளும் பாவமன்னிப்பும்" என்னும் சிறுகதைக்கு, முதல7வது பரிசைப் பெற்றுக்கொண்டார். மோல்டே தமிழ் கலை கலாசார மன்றம் பத்த7வது வருட நிறைவையொட்டி உலகள7விய ரீதியில் நடாத்திய நாடக எழுத்துப் போட்டியிலும் இவரது "புலம் பெயரும் ப7சங்கள் "நாடகப் பிரதி முதற்பரிசைப் பெற்றுக்கொண்டது.
/997ம் ஆண்டு L/7ரிஸிலுள்ள தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிபழைய மாணவர்சங்கப்பிரெஞ்சுக்கிளையினர்ஸ்தாபகர்
99

Page 103
பாவலர் தெ. துதுரையப்ப7பிள்ளைநினைவரகநடாத்திய அகில உலகச்சிறுகதைப் போட்டியிலும் இவரது 72றந்த மணன்"சிறுகதை முதல7வது பரிசுக்குரிய படைப்பாகத் தெரிவு செய்யப்பட்டு, ஐயாயிரம் ரூட்/ பரிசுப் பணத்தைப் பெற்றுக்கொண்டது.
வடமராட்சிப் பகுதியில் அல்வாப் மேற்கு, 'திக்கம்" என்னுமிடத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது பம்பலப்பிட்டியில் வசிக்கின்றார். கலைப் பட்டதாரியான இவர் தேர்தல் திணைக்கள7ம் யாழ் தேசிய விடமைப்புத்திணைக்களம் ஆகியவற்றில் கடமையாற்றிச் சுய விருப்பில் ஒய்வு பெற்ற7ர்.
சிறு வயதிலிருந்து கவிதைத் துறையில் ஆர்வம் காட்டி வந்த இவர் திக்கம் மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலை, பருத்தித்துறை மெதடிஸ்த மகளிர் கல்லூரி சுன்னாகம் இர7மநாதன் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் பழைய ம7ணவியாவார். இவரது முதல் சிறுகதை "மகன் தேடிய விடு" /984ம் ஆண்டு மே மாதம் சிந்தாணியில் வெளியானது
தினகரன், விரகேச77 சிந்தாதமணி ஈழநாடு முரசொலி ஈழமுரசு தினமுரசு பத்திரிகைகளிலும் சிரித்திரன், கற்பகம் அருள் ஊற்றுசஞ்சிகைகளிலும் இவரது பல சிறுபதைகளும் கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நகைச்சுவைக் கதைகள் பிரசுரமாகி //ബണുബ
/984லிருந்து, இன்று வரை இவர் பல இலக்கியப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைப் பெற்றுள்ள77ர். யாழ். இலக்கிய வட்டமும், ஈழநாடு பத்திரிகையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது கல்லுக்குள் ஈரம், குறுந7ல் பரிசு பெற்றது. முரசொலி பத்திரிகையும் யாழ், இலக்கிய வட்டமும் சேர்ந்து நடத்திய அமரர் கவிஞர் இ. நாகர7ஜன் நினைவுக் குழந்தைப் பாடல் தொகுப்புப் போட்டியில் இவரது "தேட்டம்" குழந்தைப் பாடல் தொகுப்புப் பரிசு பெற்றுக் கொண்டது.
"சிரித்திரன்"நடாத்திய சித்திரச் சிறுகதைப் போட்டியில் "வானம் பெ7ய்க்கவில்லை" என்னும் இவரது சிறுகதை முதற் பரிசைப் பெற்றுக்கொண்டது. இச்சிறுகதை 'தினகரன்"இலக்கியப் A/62252/70, M77760/ // 6Liz725.
2)

சுவர்க் கடிகாரம் எட்டு முறை அடித்து ஒய்ந்தது. தன் வீட்டுக்குப் போகும் நினைவோடு லொறி ஒன்றை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தபால்காரக் குமாரசாமி, சாய்வு நாற்காலி ஒன்றில் அமர்ந்தவாறு, தபசு நிலையில் இருப்பது போல இருக்கிறான்.
அவனது மனமோ போர் ஒய்ந்தும் ஒயாத நிலையில். மயான பூமியாகக் காட்சியளிக்கும் தன் பிறந்த மண்ணில் நங்கூரமிட்டு நின்றது. "இன்று என் ஊரை, நான் குடியிருந்த காணியை, என் வீட்டைப் பார்க்கப் போகிறேனே" என்ற குதுகலத்தில் குஞ்சுத்தவளைகள் சேற்றிலிருந்து எம்பிஎம்பிக் குதிப்பது போல, அவனது மனமும் எம்பிக் குதித்தது. ஆனால், "தரிசு நிலத்தைத் தான் பார்க்கப் போகிறேனோ" என்ற அச்சம் மனதில் புழுவாய் நெளிந்து ஊர்ந்திட நெஞ்சைத் தட்டிச் சாந்தப்படுத்த வேண்டிய நிலை, அவனுக்கு.
குமாரசாமி கடமையாற்றும் தபாற் கந்தோரும், அவனது வீட்டுக்கு அருகில்தான் இருந்தது. குண்டு வீச்சுகள், ஷெல் தாக்குதல்களால் அந்த ஊரே நிர்மூலமாகிக் கொண்டிருந்த போது ஊரவர்கள் அகதிகளாக வேறிடங்களுக்கு ஒடித் தப்பித்துக் கொண்டனர். அவ்வாறு அகதியானர்வர்களில், அவனது குடும்பமும் ஒன்று.
இப்பொழுது அந்த ஊர்த் தபாற் கந்தோரில் இருந்த பொருட்களை மீட்பதற்காக விசேட அனுமதியுடன் தபாற் கந்தோர் அதிபரும் அங்கு கடமையாற்றிய ஊழியர்களும் லொறியொன்றில் சென்று வர ஏற்பாடாகியிருந்தது.
முன்பெல்லாம் தபால்காரக் குமாரசாமி என்று பேசிக் கொள்ளும் ஊரவர்கள், இப்போது எல்லைக் குமாரசாமி என்று பேசிக் கொள்வது அவனுக் கெங்கே தெரியப்போகிறது. தெரிந்தாலும் அவன் அதைப் பொருட்படுத்தப் போவதில்லை. காணியின் எல்லை வேலிகளை லாவகமாக அரக்கித் தன் காணியைப் பெருப்பித்துக் கொள்வதில் கில்லாடி என்பதால்தான் அவனுக்கு அந்தப் பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

Page 104
அவன் தனது ஊர், வீடு, குடும்பம் இவற்றைவிடக் கூடுதலான முக்கியத்துவம் கொடுத்திருந்தது எல்லை வேலிகளுக்கே,
அந்த நேரத்தில் அவன் இருக்கும் வீட்டின் முன்னால் வந்து நின்ற லொறியின் "ஹோர்ன்" சத்தத்தினால், சிந்தனை கலையச் சாய்வுநாற்காலியிலிருந்து எழுந்து விரைந்து சென்று, வாசலில் விடப்பட்டிருந்த "பாட்டா"ச் செருப்புகளை அணிந்து கொண்டான், குமாரசாமி.
செருப்பை அணியும்போதே "செளந்தரி நான் போயிட்டு வாறன்" என்று தன் மனைவிக்கு சொன்னவன், அவளது பதிலுக்குக் கூடக் காத்திராமல் அவசரமாகச் சென்று லொறி. யில் ஏறிக் கொண்டான்.
தபால்காரனான குமாரசாமி அவன் வேலை செய்த தபால் கந்தோர் ஆவணங்களை எடுக்கப் போகும் அதிகாரி. களோடு லொறியில் சென்று கொண்டிருக்கிறான். தபாற் கந்தோருக்கு அண்மையில், குறிப்பாகச் சொன்னால் பெருந்தெருவொன்றைக் கடந்து சிறிது தூரம் சென்றால் வருவது அவனது வீடும் வளவும். அவனது வீடு அந்த ஊரிலேயே பெரிய வீடு என்று ஊரவர்களால் பேசப்பட்டது.
தன் பெற்றோர் கட்டிய இரண்டறை மட்டும் கொண்ட சிறிய வீட்டை அவ்வப்போது மூன்று பிள்ளைகளிடமிருந்து பறந்து வரும் அமெரிக்க டொலர்களிலிருந்து, அவ்வூரிலேயே பெரிய ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டது மட்டுமல்ல, சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்துஸ்தானத்திலிருந்து நழுவி விழாமல் காப்பாற்றியும் வந்தது.
வீட்டின் முன்பக்கத்தில் பிரதான வீதியும், வடக்கு எல்லையில் குமாரசாமியின் தங்கை பராசக்தியின் வீடும், வளவும், தெற்கு எல்லையில் அவனது தம்பி குமாரவேலினது வீடும் வளவும் அமைந்திருந்தது.
ஒரு பெண்ணும் இரண்டு ஆண்களும் கொண்ட குடும்பத்தின் தலைப்பிள்ளைதான் இந்தக் குமாரசாமி. தம் ஒரே

மகளுக்குப் பக்கபலமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனது ஒன்பது பரப்புக் காணியை மூன்றாகப் பிரித்து ஆளுக்கு மூன்று மூன்றுபரப்பாக்கி அவற்றில் இரண்டறை கொண்ட மூன்று வீடுகளையும் கட்டிக் குடி வைத்தார் குமாரசாமியின் தந்தை பேரம்பலம். ஆனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாக பக்கபலமாக இருக்க வேண்டியவனே, அவர்களுக்குத் தொல்லையாக அமைவான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. குமாரசாமியின் வளவின் பின்பக்க எல்லையில் பிரபல வர்த்தகர் செல்வராஜாவின் வீடும் வளவும் அமைந்திருந்தது. குமாரசாமியோ தனது எல்லை அரக்கும் கைங்கரியத்தைத் திறம்பட நடத்தியதில், மூன்று குடும்பங்களோடும் சண்டை சச்சரவோடும், ஒற்றுமையின்றியும் வாழ்ந்து வந்தான்.
வருடா வருடம் மூன்று பக்க எல்லை வேலிகளையும் பிடுங்கி அடைக்கும் சாட்டில் புதிய கதிகால்களை அவரவர் காணிப் பக்கமாகச் சற்றுத் தள்ளிநட்டுவிட்டு பழைய கதிகால்களை லாவகமாகப் பிடுங்கி அகற்றி விடுவான் அவன். இது அவனது பிறவிக் குணமோ அல்லது இடையில் வந்து புகுந்து கொண்ட குணமோ யாரறிவார் ?
குமாரசாமி தன் தங்கை பராசக்தியின் வளவோடு தொடங்கப்பட்ட வேலியரக்கல், காலப் போக்கில் அவளது அரைப்பரப்புக் காணியை விழுங்கிவிட்டிருந்தது. இது அவளது கணவன் மயில்வாகனத்துக்குச் சினத்தை எற்படுத்தியிருந்தது. "இதோ பார் பராசக்தி, உன் அண்ணனுக்கு இடங்கொடுத்தால் மடம் பிடுங்குவார் போல இருக்கு. இன்னும் மூன்று வருஷத்திலை எங்கடை காணியே காணாமல் போயிடும் என்பது எனக்குத் தெரியும். கோட்டுக்குப் போய்த்தான் எல்லை வேலியைச் சரியாக்க வேணும்" மயில்வாகனத்தின் மனதில் கடுகடுப்பு எண்ணெயில் போட்ட கடுகாகப் படபடக்கிறது.
தன் அண்ணனை எதிர்த்துப் பேசிப் பழக்கமில்லாத பராசக்தி, செய்வதறியாது தடுமாறிப் போவாள். "கிட்ட இருந்தால் முட்டப் பகை. தூர இருந்தால் பகைவனும் உறவு"

Page 105
என்பார்கள். எங்கடை மகள் பூஜாவும், அண்ணற்றை மூத்த மகன் ஆகாஷ்சும் ஒருவரை ஒருவர் விரும்புகினம். அவர்கள் இரண்டுபேரையும் சேர்த்து வைச்சு வீட்டையும், காணியையும் அவர்களுக்குக் குடுத்திட்டு நாங்கள் மற்றக் காணியிலை கொட்டிலாவது போட்டுக் கொண்டு குடியிருப்பம்" அவள் தயக்கத்தோடு சொல்வாள்.
"நிலவுக்கொளிச்சுப் பரதேசம் போவதா ? அது மட்டு. மல்ல தங்கைச்சி, தம்பி எண்டு பாராமல் உங்கள் இரண்டு பேரினதும் எல்லைகளை அரக்கிற உன்ரை அண்ணன் பெற்ற பிள்ளையெண்டு பார்ப்பார் எண்டு என்ன நிச்சயம். சின்னன் சிறிசுகள் எண்டாலும் எங்களைப்போலத் தொல்லைப்படாமல் நிம்மதியாக வாழவேண்டும் என்பது தான் என் ஆசை. ஆனபடியால் அந்த மாமர வளவிலை ஒரு வீடு கட்டி அதுகளை அங்கேதான் இருக்க வைக்கப் போறன்" மயில்வாகனம் தன் மனைவிக்குப் புரியும்படி சொல்வான்.
தெற்கு எல்லையில் குடியிருக்கும் அவனது தம்பி குமாரவேல், அரசாங்க அலுவலகமொன்றில் சிற்றுாழியனாக வேலை பார்ப்பவன். சிறுவயதில் தாயை இழந்து போன தன் இரண்டு பிள்ளைகளை வளர்ப்பதற்காக வயல் வே1லையும் செய்து வந்தான். களைத்துப் போய் வீட்டுக்கு வரும் நேரம் தமையனின் எல்லை அரக்கும் பிரச்சனைக்குமுகங் கொடுக்க வேண்டியிருக்கும். "எல்லாம் என் தலைவிதி" என்று தனக்குள் நொந்துகொண்டாலும் தமையனோடு பிரச்சனைப்படுவது அழகில்லை என்று எண்ணி, எதுவும் பேசாதிருந்தான்.
எல்லை அரக்குவதும், அதனால் உடன்பிறப்புக்களோடு மனஸ்தாபப்பட்டுக் கொள்வதும் குமாரசாமியின் மனைவி பார்வதிக்கு அறவே பிடிப்பதில்லை. "பிள்ளையளைக் கலியாணங் கட்டிக் குடுத்திட்டு சிவனே என்று ஒதுங்கிற வயதிலை இப்பிடியும் ஒரு ஆசையா?" என்று தனக்குள் வருந்திக் கொள்ளும் அவள், "மனிஷருக்கு மூன்று ஆசைகளிருக்காம்,

மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை எண்டு சொல்லுறார்கள். உங்களுக்கு ஒரு புதினமான ஆசை. வேலி அரக்கிற ஆசை" அவள் தாழிப்பாள்.
"வேலி அரக்கிற ஆசையொண்டும் புதினமான ஆசை. யில்லை. யாழ்ப்பாணத்திலை இருக்கும் அனேகம் பேருக்குள்ள ஆசை. அந்த ஆசை மண்ஆசை தான் என்பது உன் மரமண்டைக்கு ஏன்டிபுரியவில்லை"அவன் ஆத்திரத்தோடும், ஏளனத்தோடும் கேட்பான்.
அவள் அமைதியாகி விடுவாள். அவளுக்கு அவன்மேல் அனுதாபமே மேலோங்கி நிற்கும். "மண்ணை ஆண்டவர் மண்ணிலும் கோடி. இன்னும் ஆள்பவர் எத்தனை கோடி" என்ற முதுமொழி அவளின் நினைவுக்கு வரும்.
லொறியில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிற குமாரசாமிக்குத் தனது வலக்காலில் போடப்பட்டிருந்த செருப்பு இறுக்குவது போல் தெரியத் தன் கால்களைக் குனிந்து பார்க்கிறான். லொறியில் ஏறும் அவசரத்தில் ஒரு காலில் தனது கறுப்பு நிறப் பாட்டாச் செருப்பையும், மறுகாலில் தனது மனவிையினது சிவப்பு நிறப் பாட்டாச் செருப்பையும் போட்டுக் கொண்டு வந்திருப்பதைக் கண்டபோது, அவனுக்குக் கூச்சமாக இருந்தது.
குமாரசாமியின் வளவுக்குப்பின்பக்கத்தில் குடியிருக்கும் வர்த்தகர் செல்வராஜாவுக்கு, அவனது எல்லை அரக்கும் கைங்கரியம் பெருத்த தலையிடியைக் கொடுத்தது. ஆனால், கெளரவத்தோடு வாழவிரும்பும் அவர், அந்தப்பிரச்சனையைக் கோடு, கச்சேரி என்று எடுத்துச் செல்ல விரும்பவில்லை. அரக்கிய நிலத்தோடு சிறிது நிலத்தை விட்டுக் கொடுத்துவிட்டுத், தன் காணிப் பக்கமாக மதிலொன்றைக் கட்டித் தன் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கண்டு கொண்டார் அவர்.
இது குமாரசாமிக்கு இன்னும் வாய்ப்பாய்ப் போய்விட்டது. எல்லைவேலியை முற்றாக அகற்றிவிட்டு முன்பு அரக்கிய
2
S

Page 106
அரைப் பரப்பு நிலத்தோடு மதில் கட்டுவதற்காக விட்டுக் கொடுத்த அரைப் பரப்பு நிலத்தையும் தனதாக்கிக் கொண்டான் அவன்.
நான்கு பிள்ளைகளில் ஆகாஷ் போக, மற்றயை மூன்று பிள்ளைகளும் ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் ஆகி. விட்டதன்பின்னர் குமாரசாமிசகதர்மினிசெளந்தரி சமேதராய் கொழும்பில் குடியேறியிருக்கலாம். ஆனால், தனது எல்லை வேலிகளை நினைத்து எங்கேயும் போக மறுத்துவிட்டான் குமாரசாமி.
இப்படிச் சிந்தனை வயப்பட்டு இருந்தவனைப் பார்த்து "என்ன பலமான யோசனை?" என்று தபாலதிபர் சந்திரகுமார், கேட்டார்.
"ஒண்டுமில்லை சேர். என்ரை வீடு, வளவு எப்படியோ என்றுதான் யோசிக்கிறன்" குமாரசாமி குழப்பத்தோடு சொன்னான்.
"கிணற்றுநீரை வெள்ளமா கொண்டு போகப் போகிறது, குமாரசாமி. காணி இருக்கும்தானே" அவருக்கு எரிச்சலாக இருந்தது. அவனது எல்லை அரக்கும் கைங்கரியம் அவருக்கும் தெரியாமலில்லை.
அந்த நேரத்தில் லொறி குறிப்பிட்ட தபாற் கந்தோரின் முன் வந்து நின்றது. தபாற் கந்தோர் உருக்குலைந்து போய்க் கிடந்தது. தபாலதிபரும், தபாற் கந்தோரில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களும், தபாற்காரர்களும் எஞ்சி மிஞ்சிக் கிடந்த ஆவணங்களையும், பொருட்களையும் லொறியில் ஏற்றினர். குமாரசாமியும் அவர்களுடன் சேர்ந்து மும்முரமாக வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும் அவனது எண்ணமெல்லாம். தனது வீட்டுக்குப் போய்ப் பார்க்க வேண்டும் என்பதிலேயே நிலைத்துநின்றது.
குறிப்பிட்ட றோட்டைத் தாண்டி அப்பால் போகக் கூடாது என்பது கண்டிப்பான உத்தரவு குமாரசாமிதபாற்கந்தோர் முன் தெருவால்சிறிதுதுரம்நடந்து, தன்வீட்டுப்பக்கம் நோக்கினான்.

வீட்டின் தெருவோர மதில் முற்றாக இடிந்து கிடந்தது. அழகான பெரிய வீடு இருந்த அடையாளமே தெரியவில்லை. செல்வராஜாவினால் போடப்பட்ட மதிலும் இருக்கவில்லை. காணியின் வடக்குத் தெற்கு வேலிகள் இரண்டையும் பார்க்கிறான். வேலி இருந்ததற்கடையாளமாகப் போடப்பட்டிருந்த கதிகால்கள் கூட இருக்கவில்லை.
"கலியாணம் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார்" என்பார். கள். அவனைப் பொறுத்தவரை வீட்டைக் கட்டுவது சுலபம். ஆனால், எல்லைகளை அரக்கிப் புதிய கதிகால்கள் நடுவதுதான் கஷ்டம். எல்லை வேலி இல்லாத கவலை மனதைப் பிழிந்தெடுக்கத் தன்னையுமறியாமல் "ஐயோ" என்று அலறி. விட்டான் குமாரசாமி.
தபாலதிபரும் அவரோடு கூடச் சென்ற மற்றவர்களும் "என்னவோ ஏதோ" என்று பயந்துவிட்டனர். நிலைமையை ஊகித்தறிந்து கொண்ட அவர்கள், "இந்தப் பெரிய அழகான வீட்டை இழக்க யாருக்குத்தான் கவலை வராது" என்று கலங்கினர். "ஊரிலேயே பெரிய வீடு இப்பிடியாய்ப் போட்டுது" என்று மனதுக்குள் வருந்திய தபாலதிபர் குமாரசாமி "உன்ரை வீடு மட்டுமா காணாமல் போய்விட்டது?சகல வீடுகளும் தானே தரைமட்டமாகிப் போயிருக்கு. இவற்றைப் பார்த்தே நாம் கலங்கிப் போய் நிற்கிறோம்" என்று கவலையோடு சொன்னபோது,
"சாண் ஏற முழமல்லோ சறுக்கிப் போட்டுது சேர்" என்று அழத் தொடங்கினான். அவனை ஒருவாறு ஆறுதல்படுத்தி தபாற் கந்தோருக்குக் கூட்டி வருகின்றனர்.
"உன்ரை மூன்று பிள்ளையஸ் வெளிநாட்டிலை இருக்குதுகள். நாட்டுப் பிரச்சினை தீர்ந்தால் மறுபடியும் இப்படி ஒரு அழகான வீட்டைக் கட்டலாம்தானே. கவலைப்படாதை" என்று அவனது தோளில் ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார் தபாலதிபர். "சேர், நான் வீட்டைப் பற்றிக் கவலைப்படுகிறன் என்றா நினைக்கிறியள். அதுதான் இல்லை" வளர்த்தநாய் முகத்தைப்
2O7

Page 107
பார்க்குமே, அதுபோல் குமாரசாமி அவரை நிமிர்ந்துபார்த்தான். "அப்பிடியெண்டால்நீகவலைப்படுவது." என்று இழுத்தார் தபாலதிபர்.
"வேலியைப் பற்றித்தான் சேர். நான் வருஷாவருஷம் அங்குலம் அங்குலமாக நகர்த்திப் பிடித்துக் கொண்ட இரண்டு பரப்புக்குக் கிட்டின நிலமெல்லோ பறிபோட்டுது. அதை எப்பிடி சரிக்கட்டப் போகிறேன், சேர். பிரச்சினை தீர்ந்தால். நில அளவையாளர் வந்துநிலத்தை அளந்து கொடுக்கலாம். நான் அரக்கின எல்லையையும் அளந்து தருவாரா, சேர்" அவன் கலங்கினான். w குமாரசாமி எல்லை அரக்கிற காரியம் பற்றி, ஊரார் பேசுவது தபாலதிபர் காதுகளில் விழுந்திருந்தாலும், அவன்தன் வாயால் சொல்லுவான் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.
"நம்மவர்கள் உயிரிழந்து வீடு வாசல்களை, உடைமைகளை இழந்து ஊர்ஊராக அலைந்து அகதிமுகாம்களில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கும் போது, குமார. சாமிக்கு இன்னமும் எல்லை வேலிப் பிரச்சினை ஒய்ந்தபாடில்லை. நாட்டுப் பிரச்சினை தீர்ந்தாலும், அவனது எல்லை வேலிப் பிரச்சினை திரப் போவதில்லை. அவரவர் சுயகுணத்தைக் கடவுளாலும் மாற்ற முடியாது என்பது உண்மைபோல இருக்கு" என்று தனக்குள் நினைத்தவர், தான் வந்த அலுவலைப் பார்ப்பதற்காகக் கூரை இல்லாது இடிந்து போன சுவர்களுடன் இருந்த தபாற் கந்தோருக்குள் நுழைந்தார்.
குமாரசாமி மீது ஏற்படுவது அனுதாபமா, வெறுப்பா என்று அவருக்குப் புரியவில்லை. (யாவும் கற்பனை)

குறுநாவல் மீண்டும் 69(6 துயர்
செங்கை ஆழியான்
இலங்கையின் இலக்கிய வானில் மாத்திரமன்றி கனடா, பிரான்ஸ், மலேசிய7 போன்ற தேசங்களிலும் பிரசித்தி பெற்றுள்ள7 "செங்கை ஆழிய7ன் "தொடாத இலக்கியத்தடம் இல்லையென்றே கூறலாம் சிறுகதை,நாவல் விவரணம், புவியியல் வரலாறு என்ற துறைகளுடன், அவர் இப்பொழுது பதிப்ப7சிரியராகவும் விளங்குகிறார். அவரின் முயற்சியால், மறுமலர்ச்சிச் சிறுகதைகள் ஈழகேசரிச் சிறுகதைகள் ஆகியன நூலுருப் பெற்றுள்ளன. சுதந்திரன் சிறுகதைகளையும் தொகுத்து வெளியிடும் முயற்சி மயில் அவர் ஈடுபட்டுள்ள77:
அரச சேவையில் முன்று தசாப்தங்களுக்கு மேல் இருந்துள்ள கலாநிதிக குனர7ச7, செங்கை ஆழியானாக இலக்கியவானில் மிளிர்கிற77. /94/ம் ஆண்டில் யாழ்ப்ப7ணம் கலட்டி என்ற ஊரில் பிறந்த அவர் மணிவிழ7க் கண்டு அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்ற7ர். அவர் யாழ், இந்துக் கல்லூரியில் கல்வி கற்று, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மேற்கொண்டு 4/627/7//sia/6227.1%i 627677 / / / /b 6)/i/262/f.
"செங்கை ஆழியான் ஆக்கங்கள் நடைமுறைச் சமுதாய நடப்பியல்புச் சித்திரங்கள்" என்று மறைந்த துணைவேந்தர், பேராசிரியர் சு வித்தியானந்தன் அவர்கள் அவரின் எழுத்துப் டற்றிக் கருத்துத் தெரிவிக்கிற77. அவர்கதை கூறும் முறைகளில் இருவகைச் சிறப்புகளை அவதானிக்கலாம். ஒன்று, அவரது
209

Page 108
நணுக்க விபரணமுறை இன்னெ7ன்று சமுகத்தைப் படம்பிடித்து முன்னிறுத்தும் அவரது மொழிநடை "என்றும் கலாநிதிவித்திய7னந்தன் கூறியுள்ள7ர்.
இன்றைய இலக்கிய உலகில், செங்கை ஆழியானைத் தவிர்த்துவிட்டு இலக்கிய வரலாறு காணமுடியாது எனும் அள7. வுக்கு அவர் தனது சுவடுகளை7 ஆழமாகப் பதித்துள்ள77ர். இலங்கை இலக்கியப் பேரவை அவருக்கு இருமுறை பரிசு வழங்கி. யுள்ளது. இந்தியாவில் வில்லி தேவநாயகம் பரிசும், சென்னை இலக்கியச் சிந்தனைப் பரிசும் பெற்றிருக்கிறார்
NAMY YYYN
அங்கு உன்னை, ஆமிக்காரர்சும்மாவிட்டிருப்பான்களா?" காயத்திரியின் சர்வ அங்கமும் அவனுடைய இந்த வார்த்தைகளின் தீயில் கருகிப்போயின. குறி தவறாது அவள் இதயத்தினைக் கூரிய ஊசியாக அவன் சொற்கள் ஊடுருவின. நிலம் பிளந்து அப்படியே, அவளை விழுங்கிக் கொள்வது போன்ற பிரமையில் நிலத்தில் பொத்தென அமர்ந்துவிட்டாள்.
யன்னலூடாகப் பார்க்கும்போது, வெளியே கவலையின் கரிய இருள் அப்பிக் கிடக்கின்றது. கொய்யாமரத்தின் இருள் பரவலுள், வெளவால்கள் விழுந்து எழுகின்றன.
வருடம் முழுவதும் காய்த்துக் கொட்டும் கொய்யாமரம். வீட்டில் எவரும் இல்லாத வேளையில் அவள் அம்மரத்தில் ஏறிக் கிளைகளை வளைத்து, முற்றிய கனிகளைப் பறித்துக் கொள்வாள். அம்மா அதனைக் கண்டால் திட்டித் தீர்ப்பாள்.
"ஏய் காயத்திரி, என்னடி இந்தப் பழக்கமெல்லாம், ஆம்பிளைப் பிள்ளையஸ் மாதிரி மரத்திலே ஏறி. விழுந்து கிழுந்து தொலைக்கப் போகிறாய். கை கால் ஒடிந்தால் தெரியும் குமர்ப்பிள்ளை. ஆமாகவிருந்தாலே ஒருத்தனைப் பிடிக்கிறது கஷ்டம். ஊனமானால் சொல்லத் தேவையில்லை." அம்மாவின் ஒப்பாரி அவளை எதுவும் செய்யாது. அவள் கொய்யாக் கனியைக் கடித்துச் சுவைத்தபடி சிரிப்பாள்.

"ஏனம்மா, பயப்படுகிறாய். எனக்கு இனி ஒருத்தன் பிறந்தா வரப்போகிறான். அதுதான், என் அத்தான் ராகவன் எனக்காக இருக்கிறாரே? முடமானால் என்ன, ஊனமானால் என்ன, ஏற்றுக் கொள்வார்." என்று அவள் சொல்ல விரும்பினாள். ஆனால் சொல்ல முடியவில்லை. சிறு வயதிலேயே காயத்திரிக்கும் ராகவனுக்கும் முடிச்சிட்டுப் பேசிவிட்டார்கள். ராகவன் அவள் மாமன் மகன். இருவருக்கும் இடையில் உறவு நாளொரு வண்ணமாக வளர்ந்துவிட்டது.
அவளுக்கு அந்த நாள் நல்ல நினைவிலிருக்கின்றது. அடுக்களையில் அம்மா வேலையாகவிருந்தாள். அப்பா எங்கோ வெளியில் சென்றிருந்தார். அவள் மெதுவாக வந்து கொய்யா. மரத்தில் ஏறிக்கொண்டாள். கனிந்த பழம் ஒன்று காணப்பட்ட கிளையை வளைத்துப் பறிக்க முயன்றபோது, வெளிப்படலை திறக்கும் சத்தம் எழுந்தது. திரும்பிப் பார்த்தாள்.
படலையைத் திறந்துகொண்டு ராகவன் வந்துகொண்டிருந்தான். அவளுக்குத் திக்கென்றது. மரத்திலிருந்து அவசரமாக இறங்கிவிட முயல, கால் தவறிவிட்டது. அப்படியே கிளையைப் பற்றியபடி தொங்கினாள். குதித்துவிட முடியாது. நான்கு அடிகளுக்குமேல் அவள் பாதங்கள் தொங்கின.
"ஐயோ, அம்மா." என்று அவள் பயத்தில் அலறி. விட்டாள்.
ராகவன் ஓடிவந்து சிரித்தபடி அவளை ஒருகணம் List figbgbiT6ör.
"ஐயோ அத்தான். இறக்கிவிடுங்கள்." அவன் அவள் கால்களைக் கரங்களால் கட்டிப்பிடித்தபடி, "சரி, காயத்திரி, கைகளை விடு." என்றான்.
"விட்டுவிட மாட்டியளே?"
"நிச்சயமாகக் கைவிடமாட்டன். காயத்திரி." அவளைத் தழுவி அவன் இறக்கிவிட்டான். உடல் கனன்றது. முகம் வியர்த்துச் சிவந்து விட்டது.

Page 109
அவன் தான் அப்படிக் கேட்டுவிட்டான். "சும்மா விட்டிருப்பான்களா?"
எவ்வளவு கொச்சைத்தனமான கேள்வி? அவளையே சந்தேகிக்கின்ற கேள்வி.
"நிச்சயமாகக் கைவிடமாட்டன், காயத்திரி" என்றவன், இப்படிக் கேட்டுவிட்டான். அவன் விழிகளில் தேங்கிநின்ற ஐயப்பாடு, ஒருவிதமான அருவருப்புப் பார்வை, ஊசிப்போன அப்பத்தில் நெளிகின்ற புழுக்களைப் பார்க்குமாப் போல. அவளுக்கு அவன் பார்வை அப்படித்தான் பட்டது.
அறைக்குள் மின் விளக்குத் திடீரென எரிகிறது. அம்மா தான் போட்டிருக்க வேண்டும்.
"ஏன் காயத்திரி, இருளுக்குள்ள இருக்கிறாய்" லைற் போடக்கூட நினைவில்லையா?"
இவ்வளவு காலமும் அவள் வெளிச்சத்தில் தான் வாழ்ந்தாள். அவனுடைய இந்த வார்த்தைகளுடன் அவளை இருள் தன்னுள் ஆக்கிரமித்துக் கொண்டது. அவள் திரும்பி அம்மாவைப் பார்த்தாள். அம்மா துடித்துப் போகிறாள்" ஏன்ரி அழுதாயா?"
"இல்லையே?." அம்மா கவலையுடன் அவள் அருகில் வந்தாள். அவள் தலைமயிரைப் பரிவோடு வாரிவிட்டாள். "ராகவன் ஏதாவது கூறினானா?" "இல்லை, அம்மா." "நாள் வைத்தாகிவிட்டது. அதைப்பற்றிப்பேசினானா?" "இல்லை. இல்லை. என்னைச் சிறிது நேரம் சும்மா இருக்கவிடு அம்மா. தலை விண்விண் என இடிக்கிறது."
இருவருக்குமிடையில் ஏதோ சிறிது ஊடல் என அம்மா எண்ணிக்கொண்டாள். அவர்களின் காதல் ஒரு நாள், இரண்டு நாட்களுக்குரியதா? பத்து வருடங்களுக்கு மேலானதென்பது ஊரறிந்த விடயம்.
அம்மா அவளை அறையில் விட்டுவிட்டு வெளியேறியதும், காயத்திரி கட்டிலில் சரிந்து கொண்டாள். இதயம்
2
2

குமுறிக் கொந்தளித்தது. எப்படிப் பழகினார்கள். எவ்வளவு ஆசைக் கனவுகளைக் கட்டினார்கள்?
தூரத்தில் வீதியில் ஒருவன் உரத்த குரலில் பாடிக்கொண்டு சயிக்கிளில் செல்வது கேட்கின்றது. அவனுடைய சயிக்கிளுக்கு வெளிச்சமில்லை. இருள் அவனுக்குப்பயத்தைக் கொடுத்திருக்கின்றது. அத்தானும் அப்படித்தான்.
இரவில் வெளியில் செல்வதென்றால் அவருக்குக் கூட எவராவது வரவேண்டும்.
தவிர்க்க முடியாத நிலையில் இரவில் அகப்பட்டுக் கொண்டால், தனக்குத் தெரிந்த தேவாரங்களைப் பாடிக்கொண்டு வேகமாக வீடு வந்து சேர்வான். அவளுக்கு அந்தச் சம்பவம் நன்றாக நினைவிலிருக்கிறது.
ஒருநாள் அவள் வீட்டுப் படலையை அவசரம் அவசர. மாகத் திறந்து கொண்டு "மாமா.மாமா." என்று சத்தமிட்டபடி ஓடிவந்தான். இரவு வேளைதான். எல்லாரும் வெளியில் முற்றத்திற்கு இறங்கி ஓடிவந்தார்கள். வியர்க்க, விறுவிறுக்கராகவன் முற்றத்தில் நின்றிருந்தான். அவன் உடல் மெதுவாக நடுங்கியதைக் காயத்திரி கண்டாள்.
"என்ன அத்தான்?" "ஒண்டுமில்லை. ஒண்டுமில்லை. வந்தன். ஒரு கறுத்த உருவம் முகப்பில நின்று ஆடினமாதிரி." அவனை வெட்கம் சூழ்ந்து கொண்டது.
"நல்ல மருமோன்." என அப்பாசிரித்தார்: "வாடாப்பா. நானும் கூட வீடு வரை வாறன்."
அப்பொழுது அவனுக்குப் பதினைந்து வயதிருக்கும். அப்பாவும் அவனும் சென்றதன் பின்னர், அம்மா சொன்னாள்: "அந்த முடக்கில ஆலடிவயிரவர்நிக்கிறவர் என்கிறவை." "உனக்கு விசர் அம்மா." என்று அவள் சிரித்தது இப்பொழுதும் மனதில் இருக்கிறது. அப்படிப் பயந்த பிள்ளை இன்று இருபத்தெட்டு வயதில் அப்படியொரு கேள்வியை அவளிடம் கேட்டுவிட்டான். அவனுக்குள் இப்படியொரு மனிதன்

Page 110
ஒளிந்திருக்கின்றானா? சந்தேகமே உருவான மனிதன். இருண்டதை, வயிரவராகக் காணும் மனிதன்.
கட்டிலிலிருந்து எழுந்து மீண்டும் யன்னலிற்கு வந்தாள், காயத்திரி.
அவளுடைய குளிர்ந்த பார்வைக்காக அவன் எவ்வளவு காரியங்கள் செய்திருக்கின்றான்?
"நான் சுத்தக் கறுப்பு காயத்திரி." "அதிலென்ன?கம்பீரமாக இருக்கிறியள். நிறத்தில என்ன இருக்குது. குணத்தில வாழ்க்கை."
"எண்டாலும் காயத்திரி நீநல்ல சிவப்பு. காற்றுதிய தணல் மாதிரி அப்படியொரு நிறம்."
"அத்தான், இதென்ன கதை? உங்கட நிறத்தைப் பார்த்துநான் உங்களை விரும்பவில்லை. உங்கட குணத்தை, நீங்க என்மேலவைச்சிருகிற பாசத்தை, பரிவை."
அந்தப் பரிவு அவனுக்கு இருந்திருந்தால் அப்படி ஒருக்காலும் கேட்டிருக்கமாட்டான். அவனுக்கு என் நிறம் பிடித்திருந்திருக்கின்றது. என் அழகுதான் பிடித்திருந்திருக்கிறது. என் உடல்தான் பிடித்திருக்கின்றது என்பது இப்பொழுது தெரிகின்றது. என் களங்கமில்லாத உள்ளம் அவருக்குப் பிடிபடவில்லை. என் இதயம் சதா அவரை நினைத்து, நினைத்து உருகிக் கொண்டிருப்பது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. கனவிலும் நினைவிலும் அவர் உருவம் என் இருதயமெங்கும் வியாபித்திருப்பது அவருக்குத் தெரியவில்லை.
சுவரில் மாட்டியிருந்தராகவனின் படம் அவள் கண்களில் படுகின்றது. வலக்கரத்தில் பட்டச் சான்றிதழைச் சுருட்டிப் பிடித்த, பட்டதாரிக்கான "குளோக்" உடையுடன் ராகவன் படத்தில் சிரிக்கிறான். கோர்ட், சூட், ரையுடன் அவன் கம்பீரமாகத் தெரிகிறான். ஆறடி இளைஞன். முறுக்கேறிய உடல் வாகு. உடலெல்லாம் பயம்.
பட்டமளிப்பு விழாவிற்கு அவள் சென்றிருந்தாள். அவளால் அவன் போலத் தொடர்ந்து படிக்க முடியவில்லை. படிப்பு

அவளைக் கைவிட்டுவிட்டது. "கலியாணமாகி வீட்டில இருக்கப்போகிற பொண்ணு. படிப்பு என்னத்திற்கென" அம்மாவும் அப்பாவும் அக்கறை எடுக்கவில்லை. அத்தானுக்கு நிகராகத் தானும் படித்திருக்கலாம் என்ற எண்ணம் அவனின் பட்டமளிப்பு விழாவில் அவளுக்கு ஏற்பட்டது. கோல உடையுடன், கம்பீரமாக நடந்து மேடையில் ஏறி நிற்க, துணை வேந்தர் கழுத்திலிட்ட காளானுடன் இறங்கிவரும்போது அவன் பூரித்திருந்தான். அவளுந்தான்.
"அத்தான், இன்று சந்தோசமான நாள்." "ஏன் காயத்திரி .." "பட்டம் கிடைத்துவிட்டது. இனிநீங்கள் ஒரு விஞ்ஞானப் பட்டதாரி. அதுவும் கொம்பியூட்டர் பட்டதாரி. இனி உத்தியோகம். பிறகு." அவள் தொடர்ந்து கூறாது தயங்கி நின்றாள். முகம் சிவந்து மாலை வானமாகியது.
"பிறகு." அவன் அவளை எப்படிக் கிண்டினான், "போங்க. விளங்காத ஆள் மாதிரி." அவன் சற்று நேரம் மெளனமாக விருந்தான். மெளனக் கழிவில், "இதோ பார் காயத்திரி. நான் இனி உழைக்க வேண்டும். யோகனஸ்பேர்க்கிற்குச் செல்ல இருக்கிறன். அங்க ஒரு கம்பனியில கொம்பியூட்டர் கிறாட்ஜுவேற்களுக்கு நல்ல டிமாண்ட். அழைப்புக் கிடைச்சிருக்குது. மறுப்பாய் எண்டு முன்னரே சொல்லவில்லை, காயத்திரி. ஒரு நான்கு வருடங்கள் எனக்காகக் காத்திருக்க மாட்டாயா?"
அவள் மகிழ்ச்சி கணப்பொழுதில் ஒடிவிட்டது. முகம் வெளிறிச் சோர்ந்தது.
அவன் பிடிவாதக்காரன். தான் நினைத்ததைச் சாதிப்HT66.
"என்ன காயத்திரி? . எனக்காகக் காத்திருக்கDIT LITUUT?
"இது என்ன கேள்வி, அத்தான்? காத்திருக்கிறது காத்திருக்காதது பற்றி.நீங்கள்தான் என் வாழ்வு என்றாகிவிட்ட

Page 111
நிலையில் இப்படிக் கதைப்பதா? உங்களுக்காக எவ்வளவு காலமும் நான் காத்திருப்பன்." விழிகளில் நீர் மாலை கோர்த்தது.
அவன் பரிவோடு அவள்முகத்தை நாடியில் கரம் பதித்து உயர்த்தினான். விழிகளிலிருந்து கன்னங்களில் வழிந்த நீரைத் துடைத்துவிட்டான். அவள் கன்னங்களில் மெதுவாக முத்தமிட்டான்.
"என் உயிரே நிதான் காயத்திரி." அப்படிச் சொன்னவன்தான் இப்படிக் கேட்டுவிட்டான். "சும்மாவிட்டிருப்பான்களா?"அவனுடைய வார்த்தைகள் அவளுடலில் புழுக்களாக ஊர்ந்தன. தன்னை உதறிக் கொண்LIT6i.
வெளியே இருந்தாற்போலத் தூறல்கள் விழத் தொடங்கின. காலம் தப்பிய மழைத்துறல்கள். எதிர்வீட்டின் வாசலில் ஒட்டோ ஒன்று வந்து நிற்கின்றது. யாரோ இறங்குகிறார்கள். வாசலில் ஆரவாரச் சத்தம் எழுகின்றது. யாரோ கொழும்பிலிருந்து வந்திருக்க வேண்டும். விமானம் பிந்தி வந்திருக்க வேண்டும்.
கொழும்பு. கொழும்பு. அவள் தன்னை ஒரு கணம் உதறிக் கொள்கிறாள். ஒரு மாலைப் பொழுதில், அவன் தனது கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தான். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான தரைப்பாதைகள் யாவும் மூடப்பட்டிருந்தன. வான் பாதைத் தொடர்பும், பொதுமக்களுக்குக் கிடைக்கவில்லை. யாழ்ப்பாணக் கடனிரேரியை வள்ளங்களில் கடந்து, வன்னியூடாகப் பயணப்பட்டு வவுனியா செல்ல வேண்டும்.
அவள் விழிகள் சோகத்தின் வயப்பட்டிருந்தன. எந்த வேளையிலும் அவள் அழுதுவிடலாம். ராகவனை எல்லாரும் சுற்றிநின்றார்கள்.
"கவனம் மோனை . கவனம்" என்று மாமி அடிக்கடி அவனை எச்சரித்தாள்.

மனம் விட்டு அவனோடு பேசுவதற்கு முடியவில்லை. அவனும் சற்றுக் கவலையோடு காணப்பட்டான். அவனும் ஏதோ அவளோடு பேசிவிட வேண்டுமென விரும்பினான்.
"காயத்திரி. வா." என்று தன் அறைக்கு அவளை அழைத்துச் சென்றான்.
அவள் அவனைப் பின் தொடர்ந்தாள். அறைக்குள் நுழைந்ததும் அவளை இறுகத் தழுவிக் கொண்டான். அவன் மார்பில் அவள் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மினாள். சில கணங்கள் அப்படியே கடந்தன.
"காயத்திரி. என் காயத்திரி." "போயிட்டு வாங்க. . கெதியாகத் திரும்பி வாங்க. உங்களுக்காக இங்க ஒருத்தி காத்திருக்கிறன். மறந்திடாதையுங்க."
அவன், அவர்களிடம் விடைபெற்றுச் சென்றான். வெளியே மழைத்தூறல் இன்னமும் நிற்கவில்லை. மரங்களில் நீர்த்துளிகள் விழுவதால் எழும் இரைச்சல், வீதியில் ஆரவாரம் அடங்கிவிட்டது. எதிர்வீட்டில், இன்னமும் மின் விளக்குகள் எரிகின்றன. கொழும்புப் புதினங்கள் பேசுகின்றார்கள் போலும்.
"காயத்திரி." அவன் அழைப்புக் குரலின் இனிமை காதுகளில் இதுவரை நிறைந்திருந்தது. "அங்கு உன்னைச் சும்மா விட்டிருப்பான்களா?" என்ற சந்தேக வினாவுடன் காதுகளில் நிறைந்திருந்த இனிமை ஓடிவிட்டது. கர்ணகடுரமான விலங்குஒன்றின் குரலாக ரீங்காரமிடுகின்றது. அத்தானா அப்படிக் கேட்டான்?யன்னலடியிலிருந்து திரும்பியபோது அவள் விழிகளில் அவளின் உடுப்புப் பீரோ படுகின்றது. அப்படியே, சில கணப்பொழுதுகள் அதனைப் பார்த்தபடி நின்றுவிட்டாள்.
அதற்குள் அவள் பெரும் புதையல் ஒன்றினை மறைத்து வைத்திருக்கிறாள். கட்டுக்கட்டாக, யோகனஸ்பேர்க்கிலிருந்து அவன் அவளுக்குக் காதலில் குழைத்து எழுதிய கடிதங்கள் பேணப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கடிதமும் அவன் ஏக்கத்

Page 112
தைச் சுட்டிநின்றது. பிரிவின் வேதனையை அவன் வார்த்தைகளில் கொட்டியிருந்தான். அவள் நினைவில் அவன் படும் வேதனைகளை விபரித்திருந்தான். ஒவ்வொரு கடிதமும் காதல் கவிதை, பிரிவின் துயரை விபரிக்கும் இனிமையான துயரங்கள். அவள் மீது அவனுக்குள்ள அக்கறை சில கடிதங்களில் தெரியும்.
"...... காயத்திரி, இன்னமும் இரு வருடங்கள் தான். வேலை செய்து கொண்டு பிஎச்டி செய்து கொண்டிருக்கிறேன். நீ உன்னைக் கவனமாகப் பார்த்துக் கொள். சாப்பிடாமல் இருந்து விடாதே. நான் உன்னுடன் எப்பவும் இருக்கிறன். வெளியில் அடிக்கடி செல்ல வேண்டாம். யாழ்ப்பாணத்துச் செய்திகள் கவலையைத் தருகின்றன. சுண்டுக்குழிக் கிருஷாந்தியைக் கற்பழித்துக் கொன்றுவிட்டார்களாமே? ஏன் இந்தப் பிள்ளை மாலை நேரத்தில் சென்றியைக் கடந்தது? உரும்பிராயில் ரஜனியையும் அப்படிச் செய்துவிட்டார்களாம். ஆமிக்காரர் நம்பத்தக்கவர்களல்லர். கவனம்." அவனுடைய பல கடிதங்களில் இந்த எச்சரிக்கை மிகுந்திருக்கும். அவன் அவள்மீதுமிகுந்த அக்கறை செலுத்துவதாக அவள் இதுவரை எண்ணியிருந்தாள். அவளை அவன் மிகுந்த அக்கறையுடன் பேணினான்.
அவளுக்குச் சில சம்பவங்கள் நினைவில் சதிராடுகின்றன.
வீதிச்சந்தியில் ஒருநாள் ஒரு இளைஞன் அவளை மறித்து, ஒருவரின் வீடு விசாரித்தான். அவள் அவனுக்குக் காட்டிவிட்டாள். அதனை ராகவன் காண நேர்ந்தது.
"என்ன கேட்டவன், காயத்திரி?" "மாணிக்கவாசகரின் வீடு எங்கை எனக் கேட்டான். காட்டி விட்டன்."
"அவன் கேட்டால் காட்ட வேணுமே? இவன்களுக்கு வடிவான பெட்டையளைக் கண்டால் ஒரு சேட்டை. உன்னோட பேசுவதற்காகத் தான் கேட்டிருப்பான்."

அவள் அவனை ஏறிட்டுப் பார்த்தாள். "அப்படித் தெரியவில்லை." "காயத்திரி, இஞ்ச பாரும். நீ எனக்கு மட்டும் உரியவளாக இருக்க வேணும். உன்னோட பிறர் கதைப்பதே எனக்குப் பொறுக்க முடியாமல் இருக்குது."
அவள் அவனைப் பார்த்துச் சிரித்தாள். "சரியான சந்தேகம். என்னிலநம்பிக்கை இல்லையா? அதற்கு அவன் பதில் சொல்லவில்லை. புருவங்களை உயர்த்தி சிரிக்க முயன்றான்.
ஒருதடவை ஒரு இளைஞன் சயிக்கிளில் அவளைப் பின்தொடர்வதைக் கண்டு. அவனை இழுத்தெறிந்து அடித்து ரகளை பண்ணிவிட்டான் ராகவன்.
அடியை வாங்கிக் கொண்டு, "அவ உம்மடை மனிசியே?" என்று அந்த இளைஞன் கேட்டான்: "அடிக்க வந்திட்டார்."
"ஒமடா. அவ என்ர மனிசி தான். கலியாணம் செய்யப் போறவள்."
எவ்வளவு உரிமையாக அன்று சந்தியில் எல்லாருக்குந் தெரியத் தக்கதாகச் சத்தமிட்டு உரைத்தான். அவளுக்கு அவன் அப்படிக் கூறியவை மகிழ்ச்சியைத் தந்தன. அவனது ஒவ்வொரு செயலும், அவள் மீது அவன் வைத்திருக்கும் அளவுக்கதிகமான அன்பைத்தான் பிரதிபலித்தன. ஆனால், இப்பொழுது நினைக்கும்போது தெரிகிறது. அவன் மனதின் ஆழத்தில் அவள் மீது முழுநம்பிக்கையையும் அவன் வைக்கவில்லையோ?
"காயத்திரி, உன் அழகு அப்படிப்பட்டது. றோட்டில போற ஒவ்வொருத்தனும் உன்னைத் திரும்பித்திரும்பிப் பார்க்கிறான்கள்."
"விசர் ." "நானும் நீயும் பக்கத்திற்குப் பக்கம் நின்றால், பெளர்ணமியும் அமாவாசையும் போல இருப்பமென சங்கர் சொல்கி. றான், காயத்திரி."

Page 113
"இங்க பாருங்க அத்தான். இப்படியெல்லாம் கதைக்க வேணாம். உங்களுக்கு மனைவியாக வரப்போகிறவளிடம் இப்படிப் பேசலாமா? எனக்கு நீங்கள்தான் இந்த உலகத்தின் ஆணழகன், போதுமா? என் இதயத்தில உங்களைத் தவிர வேறெவரும் எப்பொழுதும் குடியிருக்க முடியாது."
எவ்வளவு இனிய நாட்கள்? அவனா அப்படிக் கேட்டான்? அவள் மீண்டும் படுக்கையில் விழுந்தாள். உள்ளம் குமுறுகிறது. அவன் அழைத்தான் என்பதற்காக அவள் கொழும்பு சென்றிருக்கக்கூடாது. அதுதான் தவறாகிவிட்டது.
-காயத்திரி ஒருதடவை நீயும் மாமாவும் கொழும் ." ܐܙ புக்கு வாருங்கள். நான் லீவில் கொழும்புக்கு வரவிருக்கிறேன். உன்னைப் பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன. யாழ்ப்பாணத்திற்கு நான் வருவது சிரமம். தயக்கமாகவும் இருக்கிறது. பயமாகவும் இநக்கிறது. வீதிகளெல்லாம் இராணுவ சென்றிகளாம். ஒரே செக்கிங்காம். ஒரு தடவை கொழும்பு வரவும். உனக்காக வாங்கிய பொருட்கள் இங்குள்ளன. அவற்றினைத் தரவேண்டும். இன்னமும் இரு வருடங்களில் ஊருக்கு வந்து, உன்னைத் திருமணம் செய்து அழைத்து வந்துவிடுவேன். கவலைப்படாதே. வருவாயா?."
அய்யாவிற்கு விருப்பமில்லை. விமானத்திலேறிக் கொழும்பு சென்று வருவதில் அவருக்குச் சிறிதும் விருப்பமில்லை. காயத்திரியின் வற்புறுத்தலால் இணங்கினார். s கொழும்பு வந்தார்கள். கொழும்பு வருவதற்கு இராணுவத்திடம் விசா எடுத்து, பயணத்திற்கு ஒரு மாதம் காத்திருந்து, ஒருவிதமாக வந்து சேர்ந்தார்கள். வரும் நாளை ராகவனுக்கு அறிவித்துமிருந்தார்கள்.
கொழும்புவந்து பொலிசில் பதிவுசெய்து ஒரு லொட்ஜில் அறை பிடித்துத் தங்கியிருந்து, அவனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டார்கள். மூன்றாம் நாள் அவன் ஒரு வெடி
22)

குண்டைத்துக்கிபபோட்டான்"எனதுஸ்வைக்கடைசிநேரத்தில்கான்சல்
தொடங்கவிருக்கிறது.அதனைஒழுங்குபடுத்தும்படி "பொஸ்"என்னைக் கேட்டுள்ளர்,காயத்திரிமறுக்கமுடியாது.அந்தவேலைமுடியநான்கு மாதங்கள்செல்லும் கவலைப்படாதே.மாமாவிடம்சொல்லு கவனமாக யாழ்ப்பாணம் போய்ச் சேருங்கள்."
விழிகள் நீரைச் சொரிந்தன. எவ்வளவு ஆவலுடன் வந்தாள். அவன் மிகச் சாதாரணமாகச் சொல்லிவிட்டான்.
"காயத்திரி, அடுத்த வருடம் ஊருக்கு வருவேன். திருமணம் செய்து உன்னை இங்கு அழைத்து வருவேன்."
அந்த வார்த்தைகளின் இனிமையில்நம்பிக்கை பதித்து, மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வருவதற்கு ஒழுங்கு செய்துவிட்டுக் காத்திருந்த ஒரு நாள், கொழும்பில் குண்டு ஒன்று வெடித்தது. தமிழ் வீடுகள் சுற்றி வளைக்கப்பட்டன. நள்ளிரவில் அவர்களின் லொட்ஜ் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டது. இரவு உடையுடன் இளம் வயதினர் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களில் அவளும் ஒருத்தி கொழும்பில் அடிக்கடி நிகழும் இந்த அவலத்திற்கு அவளும் பலியாகினாள். -
விசாரித்துவிட்டு, மறுநாள் அவள் விடுவிக்கப்பட்டாள். "காயத்திரி, இந்த விசயத்தை எவரிடமும் சொல்ல வேண்டாம். அம்மாவிற்குக் கூட."
"ஏன் அப்பா..?" "உனக்கு இந்தச் சமூகத்தைப் பற்றித் தெரியாது. நடக்காதது எல்லாம் நடந்து விட்டதாகக் கதை கட்டிவிடும்."
"என்னப்பா. நீங்கள். இரவு எல்லாரையும் கூட்டிப்போய் பொலிஸ் நிலையத்தில் இருக்க வைத்தார்கள். எல்லாருடனும் இருந்தோம். சாப்பாடில்லை. தண்ணியில்லை. அவ்வளவுதான். காலமை விசாரிச்சினம். பின்னேரம் விட்டிட்டினம். அவ்வளவுதான். இதுக்குப் போய் மறைக்கச் சொல்லிறியள்.
"சரி, இனி உன் இஷ்டம்."

Page 114
அப்பா எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் அவளை எச்சரித்திருந்தார் என்பது இப்பொழுது தெரிகிறது. கொழும்பில் நாளாந்தம் கைதாகி விடுவிக்கப்படுபவர்கள் நூற்றுக் கணக்கானோர். அவ்வளவு பேரும் சந்தேகத்திற்குரியவர்களா? அப்பா, நீங்கள் சொன்னபடி நான் நடந்திருக்கலாம்.
இன்னமும் திருமணத்திற்கு பத்து நாட்களேயுள்ளன. நாட் குறித்தாகிவிட்டது. ராகவன் யோகனஸ்பேர்க்கிலிருந்து வந்து விட்டான். அவன் வந்து ஒரு கிழமையாகின்றது. அவளுக்கென விதம் விதமான பொருட்கள் வாங்கிக் காவி வந்திருந்தான். ஒரு சுற்றுப் பருத்துமிருந்தான். உடலில் நிறமும் ஏறியிருந்தது. அவர்கள் பலதும் பத்தும் பேசிக்கொண்டார்கள். நாள் முழுதும் பேசிக் கொண்டார்கள்.
"காயத்திரி. உன்னைக் கொழும்பிற்கு வரச்சொல்லி விட்டு, நான் வராது ஏமாற்றிவிட்டேன். உனக்குச் சரியான கோபமாக இருந்திருக்கும்."
"அப்படியில்லை. ஏமாற்றமாகவிருந்தது. உங்களால் தான்நான் கொழும்பில் ஓரிரவு பொலிஸ் ஸ்ரேசனில் இருக்கவும் நேர்ந்தது. ."
அவன் துடித்துப் போய் அவளைப் பார்த்தான். முகம் ஓடி இருண்டு அடங்காத் துயரத்தை வெளிக்காட்டியது.
"ஏன். என்ன நடந்தது?" "கொழும்பில் எங்கோ குண்டொன்று வெடித்தது. ஒருநாள் நள்ளிரவு நாங்க இருந்த லொட்ஜ்யை ஆமி சுற்றி வளைத்துக்கொண்டது. நாற்பது வயதிற்குட்பட்ட எல்லோரையும் பொலிஸ் ஸ்ரேசனுக்கு கூட்டிச் சென்றது. நைற்றியோட போனம்."
"எல்லாரும் ஆம்பிளையஸ்.?" "பத்துப்பன்னிரண்டு பெண்கள், எட்டு ஒன்பது ஆண்கள்." "நான் அதைக் கேட்கவில்லை. உங்களை அரெஸ்ட் பண்ணின இராணுவத்தில எல்லாரும் ஆண்கள்."
"இல்லை. எங்களைய்பெண்ஆமிதான்அழைத்துச்சென்றது.
2
2
2

எவ்வளவுகஷ்டம்?தமிழனாகப்பிறந்ததாலே-பொலிஸ்ஸ்ரேசனில ராராவாகுந்தியிருந்தம்.நூற்றுக்கணக்கிலஇருக்கும் அடுத்தநாள் விசாரிச்சாங்கள். விட்டிட்டான்கள். உடனை திரும்பிவந்திட்டம்."
அவன் அவளை ஏறிட்டுப்பார்த்தான். "இதையேன் அப்ப நீ எனக்குச் சொல்லவில்லை.?" "சொல்ல வேணும்போல எனக்கிருக்கவில்லை, அத்தான்." "மறைக்க வேணும் போல விருந்ததா, காயத்திரி?" அவள் துடித்துப் போய் அவனைப் பார்த்தாள். "அப்படியெண்டால் இப்ப சொல்லியிருக்க மாட்டன்." அவன் மெளனமாகவிருந்தான். கரங்களால் தலையை அழுத்திக் கொண்டான். தலையில் பெரும் பாரம் அழுத்தியது.
"என்ன ஒரு மாதிரியிருக்கிறியள்.? "காயத்திரி, எனக்கு உண்மையைச் சொல். மறைக்காதை. அங்கு உன்னை ஆமிக்காரர் சும்மா விட்டிருப்LIT6órab6TIT?"
அவன் விழிகள் அவளைச் சுட்டெரிப்பன போல பார்த்தன. அவன் வார்த்தைகள் சாட்டையடிகளாக அவள் மீது இறங்கின. விக்கித்துச் சில பொழுது இருந்தாள். கதிரையை விட்டெழுந்து அவனை ஊடுருவிப் பார்த்தாள்.
"என்னை நீங்க நம்பவில்லை. என்னில உங்களுக்கு நம்பிக்கையில்லை."
"நீ எதையோ என்னிடம் மறைக்கிறாய். எனக்கு உவங்களைத் தெரியும்."
"என்னைத் தெரியவில்லை." அவன் எழுந்திருந்தான். "என் மனைவி மாசுமறுவற்றவளாக இருக்கவேணும் 16ன்று விரும்புகிறவன் நான். நீ எனக்கு மட்டும் உரியவள். ன்னை ஒருவன் பார்ப்பதைக்கூட நான் அனுமதிக்க மாட்டன். அப்படியிருக்க. காயத்திரி, நடந்ததைச் சொல்."
"ஒன்றையும் நான் மறைக்கவில்லை." "இதை நம்பச் சொல்கிறாயா?"
2
2
3

Page 115
அவள் விழிகளில் நீர் சோர அவனைப் பார்த்தாள். "என்னை நம்புங்கள். எதுவுமே, நீங்க கற்பனை செய்வதுபோல நடக்கவில்லை."
"அவங்கள் சும்மா விட்டிருக்க மாட்டான்கள்." அவள் துயரத்துடன் அவனைப் பார்த்தாள். அப்படியே அவன் கால்களைக் கட்டிக் கொண்டு மடியில் முகம் புதைத்து அழுதாள்.
"என்னை நம்புங்க. எதுவும் நடக்கவில்லை." அவன் அவளை விலக்கிவிட்டு எழுந்திருந்தான். வெளியில் அவலமாக கருக்குருவியொன்று ஒலமிட்டபடி வானத்தைக் கிறிச் சென்றது.
"சரிநான்நம்புறன். ஒன்று கேட்டால் ஒப்புக்கொள்வாயா? "கேளுங்க.." விம்மினாள். "நாளைக்கு எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவரிடம் உன்னை அழைத்துச் செல்கின்றேன். வரவேணும்."
அவள் தீயை மிதித்தவள் போல பதறித் துடித்துப்போனாள். w
"வேண்டாம். என்னை இப்படிப் பரிசு கெடுக்காதையுங்கோ."
"நீ ஒத்துக்கொள்ளாவிட்டால் நம் கலியாணம் நடக்காது, காயத்திரி."
அவன் சென்று விட்டான். செல்லும் போது, "நாளைக்கு வாறன். தயாராகவிரு." என்றான், இரக்கமின்றி.
அவள் துவண்டு போனாள். என்ன மனிதன் ? பத்து வருடங்களாகக் காதலித்து ஒருத்தியைச் சந்தேகிக்கும் மனிதன். அவளை நம்பாதவன்.
யாரோ கட்டிலில் வந்து அமர்கின்றார்கள். egÐyüDLDAT. "பிள்ளை, நடந்ததெல்லாம் எங்களுக்குத் தெரியும். எல்லாருக்கும்தெரியும் அவன்சொல்லிவிட்டான்.பிள்ளை, ஏதாவது தய்பாகநடந்ததா?"

அவள்கட்டிலில்விருட்டெனஎழுந்திருந்தாள். "அம்மா உனக்குக் கூடவா நான் மறைத்திருப்பன், நீ கூடவா நம்பவில்லை."
அம்மா அவளைத் தன்னுடன் அணைத்துக் கொண்டாள். முதுகை ஆதரவுடன் தடவிக் கொடுத்தாள்.
"பரவாயில்லை. அவன் விசர்ப்பொடியன். அவன் கேட்டபடி டாக்டரைப் பார்க்கச் செல், காயத்திரி."
"அம்மா, நீயுமா?" "இந்த உலகத்திற்கு, சமூகத்திற்கு உன்னை நிரூபிக்க அது அவசியம்."
"என்னால அது முடியாது." "இதோ பார் காயத்திரி. நம் தெய்வங்களே அக்கினிப் பிரவேசம் செய்து தம் கற்பினை நிரூபித்திருக்கின்றார்கள். அசோகவனத்தில் சிறையிருந்த சீதையை, இராமர் அக்கினிப் பிரவேசத்திற்குப்பின்னர்தான் ஏற்றுக்கொண்டார். இதொன்றும் புதிதல்ல பிள்ளை .நல்லா யோசி."
அம்மா விளக்கை அணைத்துவிட்டுச் சென்றுவிட்டாள். ஆனால் அவள் ஏற்றிவிட்ட வினாக்கள் அவளைச் சிந்திக்க வைத்தன. சந்தேகம் என்பது ஒரு முடிச்சு மாதிரி.
எப்பொழுதும் உறுத்திக்கொண்டு தான் இருக்கும். அக்கினிப்பிரவேசத்திற்குப்பின்னரும் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழ்ந்துவிடவில்லை.
இந்த ஊரே அவளைச் சந்தேகிக்கலாம். ஆனால், அவன் சந்தேகிக்கக் கூடாது. அவள் உலகம் அவன்தான்.
எப்பொழுது உறக்கம் அவளைக் கவ்விக்கொண்டதென அவளுக்குத் தெரியாது. அம்மா வந்து எழுப்பிய பின்னர் தான் விழிப்பு வந்தது.
"ராகவன் வந்திருக்கிறான், காயத்திரி. வெளிக்கிடு." அவன்மெளனமாக எழுந்துமுகங்கழுவிச்சேலை அணிந்து கொண்டாள்.முகம்வீங்கிக்கிடந்தது. அவனோடுநடக்கும்போது,

Page 116
"என்னைக்கோபிக்காதைகாயத்திரி.எதற்கும்.சமூகம்பேசக்கூடாது பார்" என்றான் பரிதாபமாக,
"சரி.." என்றாள் அவள். அதற்குப் பின்னர், அவள் பேசவில்லை. இதயத்தின் வலி குறைந்திருந்தது. மனதில் தெளிவு பிறந்திருந்தது. இந்தப் பெண்களை, இந்த ஆண்கள் என்னதான் நினைத்திருக்கிறார்கள்?இரத்தமும் சதையுமுடன் உணர்ச்சிகளுமுள்ள ஜன்மங்களாகக் கருதவில்லையா?
"சமூகம் பேசக் கூடாது பார்." - அனைத்தும் நடந்தன. ஆயிற்று. "என்னை மன்னித்துக்கொள் காயத்திரி.நான் விசரன். உன்னைச் சந்தேகப்பட்டிருக்கக் கூடாது."
அவளாலும் அவனைச் சந்தேகிக்க முடியும். அவன் யோகனஸ்பேர்க்கிலிருந்து நான்காண்டுகளுக்குப் பின்னர் வந்திருக்கிறான். ஆபிரிக்கநாடு. எயிட்ஸ் விளைந்திருக்கின்ற நாடு. அவள் சந்தேகிக்க மாட்டாள். அவள் இதயத்தில் குடியிருக்கும் அவன், அப்படித் தப்பான வழியில் சுகம் தேடியிருக்க மாட்டான்.
"என்னை மன்னித்துக் கொள், காயத்திரி." அவள் எதுவும் பேசவில்லை. தெளிவு பெற்றிருந்தாள். வீட்டிற்கு வந்தார்கள்.
"அப்படியொண்டுமில்லை, மாமி." என்றான் ராகவன், மகிழ்ச்சியுடன்.
அவள் அவனை அருவருப்புடன் ஏறிட்டாள். உடலில் புழுக்கள் ஊர்ந்தன.
"என்ரை பிள்ளை." என்றாள் அம்மா திருப்தியுடன். அவளுக்கும் சந்தேகம் இருந்திருக்கின்றது. "சரி சரி இனி ஆகிறதைப் பார்ப்பம்."
"ஒண்டும் இனி ஆகிறதுக்கு இல்லை, அம்மா. இந்தக் கலியாணம்இனிநடக்காது. எல்லாம்நேற்றோடுமுடிந்துவிட்டது."
"காயத்திரி.." என்று அவன் வீரிட்டான்.
2
2

"தயவுசெய்துபோய்விடுங்க.இனி எனக்கும் உங்களுக்கும் எதுவுமில்லை. எல்லாம்முடிஞ்சுபோய்விட்டது."
"இப்ப என்னடி நடந்தது?." அம்மா கேட்கிறாள். "என்ன நடக்கவில்லை." காயத்திரி அமைதியாக வெளியே பார்க்கிறாள். வானம் தெளிவாகியிருக்கிறது : "அக்கினிப் பரீட்சைக்குப் பின்னரும் இராமரின் பின்னால் செல்ல நானொன்றும் சீதையல்ல அம்மா. அவரைத் தயவு செய்து போகச் சொல்லுங்க."
அவள் தடாரெனத் தன்னறைக்குள் நுழைந்து தாளிட்டுக் கொண்டாள்.
யன்னலுடாக நிர்மலமானநிலவானம் விரிந்து தெரிகிறது.
t . . . . . .
வறுமை கொடியது அதனினும் இளமையில் வறுமை கொடியது ஆற்றவொண்ணாக் கொடுநோய் கொடியது அன்பில்லா பெண்டிர் கொடியவர் அவர் அளிக்கும் அமுதும் கொடியது'
- ஒளவையார் -

Page 117
ஆரம்பகால நினைவுகள்
- எஸ். எம். ஹனிபா -
அப்பொழுது, முதுமாணிப் பட்டம் பெறுவதற்காக ஆய்வு செய்து, பல்கலைக்கழக நியதியின்படி ஆங்கிலத்தில் நீண்ட கட்டுரை எழுதிய ம. மு. உவைஸ் அவர்கள், தனது ஆய்வுக் கட்டுரையை நூலுருவில் கொண்டுவரப் பெரிதும் முயன்றார். 1951ம் ஆண்டில் அவருக்கு எம். ஏ, (முதுமாணிப்) பட்டம் கிடைத்து விட்டது. 1953ம் ஆண்டு வரை, அவரின் ஆய்வுக் கட்டுரை தட்டச்சில் அமைந்ததாகவே பல்கலைக்கழக நூல்நிலையத்தில் இடம் பெற்றிருந்தது. அவரால் அதை அச்சிட்டு வெளியிட முடியவில்லை. சிலரின் உதவியை நாடினார். உருப்படியாக ஒன்றும் நடைபெறவில்லை. 1953ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் வரை, இந்த விவரங்கள் ஒன்றையுமே நான் அறியவில்லை.
தற்செயலாக, ஒரு நாள் மாலை பல்கலைக்கழக நூல்நிலையத்தில் சிறிது நேரமிருந்து வாசிப்பதற்காகவென்று, சஞ்சிகை ஏதேனும் கிடைக்குமாவென்று தேடிய சமயம், ஒரு தட்டச்சுப் பிரதியைக் கண்டேன். அதனை வாசித்தேன். பதினைந்து பக்கங்கள் வரையில் வாசிக்கும் பொழுது, "இத்தனைச் சிறந்த ஆய்வொன்று தட்டச்சில், நூல்நிலையத்தினுள் முடங்கிக் கிடக்கலாகாது. இது அச்சில் புத்தகமாக வரவேண்டும்" என நினைத்தேன்.
2
2
S

அன்றிரவே, ஜனாப் உவைஸ் அவர்களுக்குக் கடிதம் எழுதினேன். "ஏன் இதை, அச்சில் நூலாக வெளியிடக் கூடாது?" என்பது தான் நான் அவரிடம் கேட்ட கேள்வி. அவர் எழுதிய பதிலில்தான், தன்னால் அதைச் செய்ய முடியாது என்றும், ஓரிருவரிடம் உதவி கேட்டுப் பயன் ஏற்படவில்லை என்றும் எனக்குத் தெரிவித்தார்.
"நான் வெளியிடவா?" என்று அடுத்த கடிதத்தில் கேட்டேன். "தாராளமாகச் செய்யுங்கள்" எனது பூரண ஒத்துழைப்பு உண்டு" என்று பதில் வந்தது. அதன் பிறகுதான், நான் நூல் பிரசுரிப்பதில் ஊக்கம் கொண்டேன். தொழில் ரீதியாக நான் புத்தகப் பிரசுர வேலையை ஆரம்பிக்கவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று.
கண்டியில், முதல்நூலின் அச்சுவேலைநடந்து கொண்டிருந்தது. பதிப்பகத்திற்கு ஒரு பெயர் வேண்டுமே! எனது பெரு மதிப்புக்குரிய ஆசான் மிக, மிக அன்பாக ஒரு சகோதரன் போல் பழகியவர். அப்பொழுது பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரை யாளராக இருந்த கலாநிதி சு.வித்தியானந்தன். அவர்களிடம், "என்ன பெயர் வைக்கலாம்" என்று கேட்டேன். "தமிழ் மன்றம் என்று வையுமேன்" என அவர் ஆலோசனை சொன்னார். அவருக்கும், ஜனாய் உவைஸ் எழுதிய ஆங்கில நூல் அச்சாவது பற்றித் தெரியும். அதுதான் "Muslim Contribution to Tamil Literature" தமிழ் மன்றம் வெளியிட்ட முதல்நூல். 1953ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியானது.
ஆங்கில நூல் அச்சாகிக் கொண்டிருக்கையிலேயே, தமிழ்நூல் வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. "ஸேர், நீங்கள் ஒரு நூல் எழுதித் தர வேண்டும். நான் பிரசுரிப்பேன்" என்று நான் "வித்தி" ஸேருக்குக் கூறினேன். அவரும் மனமுவந்து, எனது வேண்டுதலை ஏற்றுக் கொண்டார். கடும் உழைப்
"வித்தி ff
229

Page 118
பின் பயனாக "இலக்கியத் தென்றல்" உருவானது. அதுவே, அவரின் முதல் நூல். எமது தமிழ் மன்றம் வெளியிட்ட முதலாவது தமிழ் நூல். தனிப்பிரதி விலை மூன்று ரூபா தான். குறுகிய காலத்தில் பெருந் தொகையான பிரதிகள் விற்பனையாகி. விட்டபடியால், எனக்கு மேலும் ஊக்கம் வந்தது.
தனது கலாநிதிப் பட்டத்திற்காக அவர் ஆங்கிலத்தில் எழுதி, லண்டன் பல்கலைக்கழகத்திற்குச் சமர்ப்பித்த Tamil Culture எனும் நூலைத் தமிழாக்கம் செய்து, "தமிழர் சால்பு" எனும் பெயரில், தமிழ் மன்றத்தின் மூன்றாவது நூல் வெளி
LLIT605.
அதன்பின், கவிஞர் எம்.சி.எம். ஸ0 பைர் எழுதிய "மலர்ந்த வாழ்வு" எனும் சிறுகாவியம் நாலாவது பிரசுரமாக வெளிவந்தது. இதுபற்றிய, சம்பவமொன்றுண்டு. அதாவது அளுத்கம அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அவர் பயின்ற போது தன்னுடைய சுய ஆக்கமாக அதனைச் சமர்ப்பித்தார், ஸ0 பைர். அதனை மதிப்பீடு செய்த உப அதிபர் திரு. சம்பந்தர், எம். ஏ. இதனை வாசித்து விட்டு ஸ0 பைரைப் பாராட்டினார். அதனை நூலாக அச்சிட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார். தமிழ் மன்றம் வெளியிட முன்வந்த போது, ஸ0 பைர் தயங்கினார். ஆனால் நான் விடவில்லை. "கவிதையைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளையிடம் காட்டுவோம், அவர் தரமானது என்று ஏற்றுக் கொண்டால், அச்சிடுவோம்" என்று நான் கூறினேன். வேறு வழியின்றி, ஸ0 பைர் அதற்கிசைந்தார். நாடறிந்த தமிழ் வல்லுனர், அவரைத் தெரிந்த அனைவரும் மெச்சிய தமிழ்ப் பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை அவர்கள் "மலர்ந்த வாழ்வு"க்கு ஒர் அழகான அணிந்துரையே எழுதித் தந்து, "நூல் நல்ல தரமானதுதான், நீ வெளியிடு, ஹனிபா", என்று கூறி நல்லாசி வழங்கினார். தனது அணிந்துரையில், தனது அபிப்பிராயம் என்ன என்பதைப் பேராசிரியர் கணபதிப்பிள்ளை மிகத் தெளிவாக உணர்த்தி. யுள்ளார்கள். அதன்பின், 1956ம் ஆண்டின் ஆரம்பத்தில்

"மலர்ந்த வாழ்வு" வெளிவந்தது. ஆறே மாதத்தில் இரண்டாம் பதிப்பும் வெளியிட நேர்ந்தது. அதன் பின்னரும், இலக்கிய ஆர்வலர் பெருந்தொகையானோரின் வேண்டுகோளை ஏற்று, 2000ம் ஆண்டுமே மாதம் வெளியான "கவிஞர் ஸப்பைர்நினைவு மல"ரில் அது மறுபிரசுரம் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றிய மேலும் ஒரு தகவல் இன்னமும் பதிவாகவில்லை. அதையும் இங்கு கூறுவது பொருத்தமாயிருக்கும். மலர்ந்த வாழ்வு எழுத்துப் பிரதியை, அவர் ஒரு மாத காலம் வைத்திருந்து, அணிந்துரை எழுதித் தந்த பேராசிரியர், நூல் எழுதிய கவிஞரைக் கண்டதில்லை. கவிஞர் வெள்ளைநிறமா, கறுப்பானவரா, உயரமா, கட்டையா என்று அறியாமலே, எனது அன்பான வேண்டுகோளை ஏற்று, நூலை மதிப்பிட்டு, அணிந்துரை தந்த அவர்களுக்கு எப்படித்தான் நன்றி கூறினாலும் போதாது. அவர் உண்மையிலேயே : ,: தயாள குணம் படைத்த மேதை. அவர் போன்ற நல்லார்களின் ஆசியால் தான், தமிழ் மன்றப் பணிகள் வெற்றியாயமைந்
25607.
1956ம் ஆண்டில், நான் பாடசாலை ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினேன். 1958ம் ஆண்டில் "லேக்ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் உதவியாசிரி- எஸ்.எம் யராகச் சேர்ந்-தேன். பின்பு, 1971ம் ஆண்டில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பகுதியில் தொழில் புரிந்துவிட்டு, 1976ம் ஆண்டில் எனது முதல் நூலான "உத்தமத் தூதர்" வெளியிடும் நடவடிக்கையிலிறங்கி, இன்று வரை வேறு வேலைகள் பாராமல், நூல் பிரசுரிப்பதிலேயே ஈடுபட்டுள்ளேன். இங்கு குறிப்பிட்ட நால்வரின் முதல் நூல்களல்லாமல், பின்னர் வேறும் பலரின் முதல் நூல்களை கல்ஹின்னைத் தமிழ் மன்றம் பிரசுரித்துள்ளது.
ܓ ܓ ܓ ܓ ܓ

Page 119
10.
11.
தமிழ் மன்ற வெளியீடுகள்
6Tib. 6Tib. p. 6066i, Muslim Conbtribution to Tamil Literature, 1953, லக்ஸ்மன் பிரஸ், கண்டி, சு. வித்தியானந்தன், இலக்கியத் தென்றல், 1953, அருணா அச்சகம், கண்டி. சு. வித்தியானந்தன், தமிழர்சால்பு, 1954, சாரதா விலாசா அச்சகம், கும்பகோணம். எம்.சி.எம். ஸ"பைர், மலர்ந்த வாழ்வு(குறுங்காவியம் - கவிதை), 1956, வீரகேசரி அச்சகம், கொழும்பு. எஸ். எம். ஹனிபா, உலகம் புகழும் உத்தமத் தூதர் (சிறுவர்க்கான வரலாறு),1976, அல்பியன் பிரஸ், கொழும்பு. எஸ்.எம். ஹனிபா, உதும் நபித்துமானோ (சிங்களம்), 1980, இந்திக அச்சகம், கொழும்பு. எஸ்.எம். ஹனிபா, உத்தமர் உவைஸ், 1981, ஐ.பி.சி. பிரஸ், கொழும்பு. எஸ்.எம். ஹனிபா, துஆவின் சிறப்பு (உர்துவிலிருந்து மொழி பெயர்ப்பு), 1981, றுஹஸுனு பிரஸ், கொழும்பு. எம்.சி.எம். ஸ0 பைர், காலத்தின் குரல்கள் (கவிதை), 1981, ஆரிய பிரஸ், கண்டி. அப்துல் காதர் லெப்பை, என் சரிதை, 1983, மில்லத் பிரஸ், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, இஸ்லாமிய இலக்கிய வளர்ச்சி, 1982, பெயர்பிரின்ட், கொழும்பு

2.
13.
15.
6.
17.
8.
19.
20.
2.
22.
23.
24.
25.
எஸ்.எம். ஹனிபா, மகாகவி பாரதி (சிங்களம்), 1982, சாமர அச்சகம், கொழும்பு. ஜே.எம். சாலி, சாயல் (சிறுகதைகள்), 1983, டெவலோ பிரின்ட், கொழும்பு. சாரணா கையூம், சிறுவர் பாட்டு, 1983, டெவலோ பிரின்ட், கொழும்பு.
அ.ஸ். அப்துஸ் ஸமது, கனவுப் பூக்கள் (நாவல்), 1983, டெவலோ பிரின்ட், கொழும்பு. எம்.சி.எம். ஸசபைர், எங்கள் தாய்நாடு (சிறுவர்கவிதை), 1984, டெவலோ பிரின்ட், கொழும்பு. அன்புமுகைதீன், மாதுளம் முத்துக்கள் (கவிதை), 1984, டெவலோ பிரின்ட், கொழும்பு, எஸ்.எம். ஹனிபா, உவைஸ் சிரித (சிங்களம்), 1984, சாமர பிரின்டர்ஸ், கொழும்பு. அ. சண்முகதாஸ், துணைவேந்தர் வித்தி (வாழ்க்கை வரலாறு), 1984, சாமர பிரின்டர்ஸ், கொழும்பு. எம்.எச்.எம். புஹாரிமுத்தாரம் (கவிதை), 1984, அல்பியன் பிரஸ், கொழும்பு.
எம்.எச்.எம். ஹலீம்தின், காலத்தின் கோலங்கள் (கவிதை), 1984, வட்பிரின்ட், கொழும்பு. ஆ.மு. ஷரிபுதீன், கனிந்த காதல் (கிராமியக் கவிதை), 1985, சாமர பிரின்டர்ஸ், கொழும்பு. ஜூனைதா சரீப், சாணைக்கூறை (நாவல்), 1985, கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
அஹ்மத் முனல்வர், யூஸுப் இஸ்லாம் (வாழ்க்கை அனுபவம்), 1985, குமரன் அச்சகம், கொழும்பு.
அந்தனி ஜீவா, அன்னை இந்திரா (வாழ்க்கை வரலாறு), 1985, குமரன் அச்சகம், கொழும்பு.
2
3.
3

Page 120
26.
27.
28.
29.
30,
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
ஏ.பி.வி. கோமஸ், அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான் (மலையகக் கிராமியக் கவிதை) 1988, வட்பிரின்ட், கொழும்பு.
எம்.எச்.எம்.ஹலீம்தின், இதய மலர் (சிறுவர்கவிதை), 1985, டெவலோ பிரின்ட், கொழும்பு.
புன்னியாமீன், நிழலின் அருமை (சிறுகதைகள்), 1986, கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
எஸ்.ஐ. நாகூர் கனி, அவள் நெஞ்சுக்குத் தெரியும் (நாவல்), 1986, கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
ரிஸாயா ஆப்தீன், கரை சேராத அலைகள் (குறுநாவல்), 1987, றரீ சக்தி பிரின்டிங் இன்டஸ்ரீஸ்,
அல் அஸ்மைத், மலைக்குயில் (கவிதை), 1987, ரோயல் பிரின்ட், கொழும்பு.
ஹலீம்தீன், மகாகவி இக்பால் (வாழ்க்கை வரலாறு), 1987, ரோயல் பிரின்ட், கொழும்பு.
சுலைமா, ஏ. சமி, வைகறைப் பூக்கள் (சிறுகதைகள்), 1988,
ரோயல் பிரின்ட், கொழும்பு.
புன்னியாமீன், இலக்கிய விருந்து (திறனாய்வு) 1987, பசுங்கதிர் பதிப்பகம், சென்னை.
அ. ஸ. அப்துஸ் ஸமது, தீன் மாலை (பொழிப்புரையுடன்), 1987, மில்லத் பிரின்டர்ஸ், சென்னை.
நயிமா சித்திக், வாழ்க்கைச் சுவடுகள், (சிறுகதைகள்), 1987, கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
ஜூனைதா சரீப், பெட்டிசம் (நாவல் - மொழிபெயர்ப்பு), 1988, கத்தோலிக்க அச்சகம், மட்டக்களப்பு.
அன்பு முகைதீன், புதுப் புனல் (கவிதை), 1988, மில்லத் பிரஸ், சென்னை.
சுலைமா, ஏ. சமி, மனச்சுமைகள் (சிறுகதைகள்), 1988, எம். கே. பிரின்ட்ஸ், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, மகாகவி பாரதி (சிறுவர்க்கு, இலகு தமிழில் வாழ்க்கை வரலாறு),1988,குமரன் பிரஸ், கொழும்பு.
2

4.
42.
43.
45.
46.
47.
48.
49.
50.
5.
52.
53.
54.
55.
எஸ்.எம்."ஹசன்", சிந்துநதிக்கரையினிலே (வரலாற்றுநாவல்), 1988, மில்லத் பிரஸ், சென்னை.
வை.எம். மீஆத், நபி பெருமானின் நல்லுரைகள் (சிறுவர்க்கான கவிதை), 1988, குமரன் பிரஸ், கொழும்பு.
எம்.எம். றாசிக், துஆவே வெதகத்கமய (சிங்களம் - மொழி. பெயர்ப்பு), 1989, சாமர பிரின்டர்ஸ், கொழும்பு.
மன்சில் (துஆ, ஸலவாத்) 1989, திரியெம் பப்ளிசஸ், சென்னை. எஸ்.எம்.ஏ. ஹசன், அருள்வாக்கி அப்துல் காதிர் (வாழ்க்கை வரலாறு), 1989, மில்லத் பிரஸ், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, மலையகப் பெருமகன் (வாழ்க்கை வரலாறு), 1989, திரியெம் பிரஸ், சென்னை.
6T6rü.6Tib. gip6ílun, The Great Son (biography) 1981, élfGuib பிரின்டர்ஸ், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, உதாரபுத்ரயா (சிங்களம் - மொழிபெயர்ப்பு), 1990, சாமர பிரின்டர்ஸ், கொழும்பு ஏ.டபிள்யூ.எம். ஹன்சிர், குற்றவியல் சட்டம், 1989, திரியெம் பப்ளிசர்ஸ், சென்னை.
ஏ.டபிள்யூ.எம். ஹன்சிர், எங்கள் தலைவர் பதியுதீன் (வாழ்க்கை வரலாறு), 1989, திரியெம் பப்ளிசர்ஸ், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, பொன்மலர், 1989, மில்லத் பிரின்டர்ஸ், சென்னை.
கே.எஸ். சிவகுமாரன், கலை இலக்கியத் திறனாய்வு, 1989, கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ், சென்னை.
எம்.சீ.எம். ஸ0 பைர், இலக்கிய மலர்கள், 1989, மில்லத் பிரிட்டர்ஸ், சென்னை.
கே.எஸ். சிவகுமாரன், நானும் கைலாசபதியும், 1990, சாமர பிரிடர்ஸ், கொழும்பு.
ஆர்.டீ.எம்.றிழ்வான், பூவுக்குள்ளே ஒரு பூகம்பம் (நாவல்), 1990, எம்.கே. பிரின்டர்ஸ், சென்னை.
2
3
S

Page 121
56.,
57.
58.
59.
60.
61.
62.
63.
65.
66.
67.
68.
69.
70.
சுலைமானுல் காதிரி, பத்ர் மாலை, 1991, தாஜ் பிரஸ், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, எங்கள் ஊர் கல்ஹின்னை (வரலாறு), 1991, மில்லத் பிரின்டர்ஸ், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, கல்ஹின்னை நினைவுகள், 1991, எம். கே. பிரின்ட்ஸ், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, இஸ்லாமிய இலக்கிய மறுமலர்ச்சி, 1991, புஸ்ரா ஏஜென்சீஸ், சென்னை.
சு. வித்தியானந்தன், என் நோக்கில் இஸ்லாம் (கட்டுரைத் தொகுப்பு), 1991, புஸ்ரா ஏஜென்சீஸ், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, வைர மலர், 1991, எம்.கே. பிரின்ட்ஸ், சென்னை.
ஹஸ்ரீனா வஹாப், வதங்காத மலரொன்று, 1992, அரோபிரின்டர்ஸ், சென்னை.
இர்ஃபானா ஜப்பார், துணிவின் எல்லை (நாவல்), 1992, எம்.கே. பிரின்ட்ஸ், சென்னை.
இர்ஃபானா ஜப்பார், புதுமைப்பெண் (சிறுகதைகள்), 1992,
புஸ்ரா ஏஜென்சீஸ், சென்னை.
ஏ.பி.வி. கோமஸ், வாழ்க்கையே ஒரு புதிர் (சிறுகதைகள்), 1992, புஸ்ரா ஏஜென்சீஸ், சென்னை.
இளங்கிரன், வெறும் கனவல்ல (சிறுகதைகள்), 1993, யூரீ கோபுரம் அச்சகம், சென்னை.
இளங்கிரன், நிறைவைத் தேடி (நாடகம்), 1993, புஸ்ரா ஏஜென்சீஸ், சென்னை.
நயிம் சரிபுதின், உத்தமத் தூதர், (கவிதை), 1996, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
ஜி.பி. சேனாநாயக்க, வெசாக் கூடு (சிங்கள நாவல்), 1993, எல்.கே.எம். கம்ப்யூட்டர் பிரின்டர்ஸ், சென்னை.
க.அருணாசலம், சுவாமி விபுலானந்தரின் சமயச் சிந்தனைகள், 1994, மில்லத் பிரின்டர்ஸ், சென்னை.

7.
72.
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
8.
82.
83.
84.
85.
க. அருணாசலம், காலக் கண்ணாடி இளங்கதிர், 1994, கண்ணப்பா ஆர்ட் பிரின்டர்ஸ், சென்னை.
க. அருணாசலம், இலங்கையின் மலையகத் தமிழர், 1994, பார்கர் பிரின்டர்ஸ், சென்னை.
க. அருணாசலம், மலையகத் தமிழ் இலக்கியம், 1994, இளவழகன் பதிப்பகம், சென்னை.
ஏ. ஸாஹிபு லெப்பை, எண்ணமும் எழுத்தும், 1995, திரியெம் பிரின்டர்ஸ், சென்னை.
றிழ்வான், சாலை விளக்குகள் (நாவல்), 1994, இளவழகன் பதிப்பகம், சென்னை.
அருள்வாக்கி அப்துல் காதர், அடைக்கலமாலை, 1994, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
எஸ்.எச்.எம். ஜெமீல், கல்விச் சிந்தனைகள், 1996, கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை.
றஹீமா முஹம்மத், இளங்கிரனின் இலக்கியப் பணி, 1996, கண்ணப்பா ஆர்ட் பிரிண்டர்ஸ், சென்னை.
ஜே.எம். சாலி, ஹெடஹரருவ (சிறுகதைகள், சிங்கள மொழி பெயர்ப்பு) 1996, கொழும்பு.
எம்.ஐ.எம். முஸம்மில், பிரதிபலன் (உருவகக் கதைகள்), 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
மரீனாஇல்யாஸ், தென்னிலங்கை முஸ்லிம்களின் சிறுகதைகள், ஓர் ஆய்வு, 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
மரீனா இல்யாஸ், குமுறுகின்ற எரிமலைகள் (சிறுகதைகள்), 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
எம்.சீ.எம். ஸ பைர், மனிதம் பேணும் மாமறை, 1997, பார்கர் பிரின்டர்ஸ், சென்னை.
6767ü.67b. 6006ofUT, Money Power (novel), 1996, Lustifabft கம்பியூட்டர், சென்னை.
பஸிரா ஹாசிம், கல்ஹின்னையின் இலக்கியப் பணி, பார்கர் கம்பியூட்டர், சென்னை.

Page 122
86.
87.
88.
'89.
91.
92.
93.
94.
95.
: 96.
97.
98.
99.
OO.
எஸ்.எம். ஹனிபா, நெஞ்சின் நெருப்பு, (சிறுகதைகள்), 1997, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, பணப்பசி (குறுநாவல்), 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
ஸ்பருள்ளா கான், காருணிக நபித்துமா, 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
ஸபருள்ளா கான், சத்வ கருணாவ (உயிர்களிடத்தில் அன்பு - மொழிபெயர்ப்பு) 1998, பார்கர் கம்பியூட்டர், சென்னை.
எஸ்.எம்.ஹனிபா, முதல் பளே (மொழிபெயர்ப்பு), 1999, பார்கர் பிரிண்டர்ஸ், சென்னை.
எஸ்.எம். ஹனிபா, தி. கமலநாதன், வித்தகர் வித்தி (நினைவு மலர்), 1999, குமரன் பிரஸ், சென்னை.
புர்கான்பீஇஃப்திகார், பிறந்த மண் (சிறுகதைத் தொகுதி), 1999, குமரன் பிரஸ், கொழும்பு.
எஸ்.எம். ஹனிபா, - கவிஞர் ஸ்பைர் நினைவுமலர் (தொகுப்பு)
2000, குமரன் பிரஸ், சென்னை.
ஜூனைதா ஷெரீப் - சிதைவுகள் (நாவல்) 2000, பிரின்ட்கொம், கொழும்பு.
"கசின்" - குமாரி ரஞ்சிதம் (நாவல்), 2000, குமரன் பிரஸ், கொழும்பு - 12.
இளங்கிரன் - தியாகம் (நாடகம்) 2000, மிலக்ஷி கிராபிக்ஸ், கொழும்பு - 9.
ஏ.எம். நஜிமுதீன் - கசாவத்தை ஆலிம் புலவர் (வாழ்க்கை வரலாறு) 2000, மிலக்ஷி கிராபிக்ஸ், கொழும்பு - 9.
அன்பு முகையதின் - உத்தமநபி வாழ்வில். (கவிதை) 2000, குமரன் பிரஸ், கொழும்பு - 12.
எஸ். எம். கமால்தீன் கவிஞர் திலகம் - செய்னம்பு நாச்சியார் மான்மின்யம், 2001. குரமன் பிரஸ், கொழும்பு - 12.
எஸ். எம். ஹனிபா - மலை ஒளி (தொகுப்பு) 2001, குமரன் பிரஸ், கொழும்பு -12.

தமிழ்மொழி தழைக்கத்
தொண்டுகள் புரிமின்
མ།༽
தாய்மொழிப் பெருமை தளர்வதை நம்மாற் சகித்தல் கூடுமோ, தருமம் ஆகுமோ! ஆதலின் அன்பீர் அன்போடு வேண்டினேன் பிறமொழி யாவையும் பிழையற படித்துத் தமிழ்மொழி தழைக்கத் தொண்டுகள் புரிமின் பிறமொழி தம்மில் பெருமைசேர் நால்களைச் செந்தமிழ்க் காக்கிச் சீர்பெறச் செய்மின் அமிழ்தாந் தமிழை அவர்மொழிக் காக்கித் தமிழின் புகழைத் தரணி அறிந்திட ஆவன செய்மின் அவற்றைவிட் டினிநாம் அவர்மொழி அறிந்த காரண மொன்றினால் எம்முடைப் பண்புகள் யாவையும் மறந்த தமிழ் நாம் பேசுதல் தகாதெனக் கருதி நடையுடை பாவனை எல்லா வகையிலும் அவர்தம் முறையே அழகெனக் கருதிப் பின்பற்றிடுதல் பெருமையோ! கூறீர்!
- GDTM GTLÄGT. STUFGDLJÄ
"மலர்ந்த வாழ்வு ,ހ ܢܠ

Page 123
அனைவருக்கும் நன்றி
அதி உயர் மலையொன்றின் மேல் ஏறி, சுற்றுமுற்றும் பார்க்கும் கண்களுக்கு எத்தனை ரம்மியமான காட்சி தென்படுமோ, அது போன்ற ஒரு அனுபவம், கல்ஹின்னைத் தமிழ் மன்றத்தின் நூறாவது பிரசுரம் வெளியாகும் போது, ஏற்படுகிறது. 1983ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து, 2001ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குட்பட்ட காலப் பகுதியில் பல்வேறு அலுவல்களின் மத்தியில், சொல்லொணா இடர்களையெல்லாம் எதிர்நோக்கி, நூறு நூல்களை வெளியிட்டதால் வரும் மனநிறைவு கொஞ்ச நஞ்சமல்ல. அந்த இன்ப உணர்வை வார்த்தைகளால் விளக்கிவிடமுடியாது. பலரின் பொறாமை, ஒருசில கள்ளப் புத்தியாளரின் ஏமாற்றுகள் போன்ற துயரமான அனுபவங்களைக் கடந்து, எம்மால் நூறு நூல்கள் வெளியிட முடிந்ததற்கு அருளாளன், அன்புடையோனாகிய வல்லமையாளனின் வழிநடத்துதலே காரணம். நூற்றுக் கணக்கான நல்லுள்ளங்களும் எமக்குப் பல வழிகளில் உதவி. துணை புரிந்ததுண்டு.
மலை ஒளி வெளிவருவதற்கு ஆலோசனை தந்தவர் அல்ஹாஜ் எஸ்.
எச். எம். ஜெமீல். கட்டுரைகள் பெறுவதில் பெரிதும் உதவியாயிருந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன், டொக்டர் எம். கே. முருகானந்தம், சட்டத்தரணி ஜனாப் எம். ஆர். எம். ஸல்மான் இலக்கிய ஆர்வலர் திரு. பொ. ஆனந்தலிங்கம் ஆகிய நால்வருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டவனாயிருக்கிறேன். இவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
எமது நூல்களை அச்சிட்டுத் தந்தவர்களுக்கும் நன்றி அதில் ஆகக் கூடுதலான தொகை நூல்களை நேர்த்தியாக அச்சிட்டுதவிய திரு. க. குமரன் அவர்களுக்கு, விசேஷமான நன்றிகள் பல. அவரின் தாயார், திருமதி மீனா கணேசலிங்கம். மலர்ந்த முகத்துடன் எம்மை எப்பொழுதும் அச்சகத்தில் வரவேற்று. உபசரித்து. எமது பணியில் ஊக்கந் தந்ததை என்றுமே மறக்க
முடியாது.
இறுதியாக, எமது நூல்களை விற்பனை செய்து உதவியவர்களுக்கும். ஆர்வத்துடன் வாங்கிப் படித்துப் பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள். - எஸ்.எம். ஹனிபா
兼
 


Page 124


Page 125
நீ ண்ட காலமாகத் தமி
தமது வாழ்வோடு பின்னிப்பினைத் ஹவிர, செந்தமிழ்ப் பிரியர். அ எப்பொழுதும் சுறசுறுப்பாக எடுத்த கருமவீரர். அவர் வெறும் மனிதர சாதவனார் .
பிரபலம் வாய்ந்த வெளி சூழ்நிலையில் தயங்தம் வேளையி பதிப்புத்துறையில்) ஈடுபட்டுள்ள ஹ நோக்கமi: தமிழ்ப் பணியே அ வேண்தாததும்.
இலங்கைத் தமிழ் இலக் இலக்கியச் செழுமைக்கும் தன்ன
ஓரணியா,
- ஆ. சிவநே பிரதம : "T. (இலங்கை ஒலிபரப்புக் கூட் நூல் விமர்சன
d
ரூபா 225
Kumaran Press (P.

ழ்ப் பணியையும், சர்கள் புனியையும் ந்துக் கொண்ட அல்ஹாஜ் எஸ். எம். விதிரான சுராவர் கொண்டவர். காரியத்தை வெற்றியுடன் முடிக்கும் iல. ஒரு நிறுவனமாகச் விசயitடும்
பீட்டு நிறுவனங்களே இன்றைய ஸ், அசாத்தியத் துணிவோடு (நூல் ரணியாவின் நோக்கம், வெறும் இலாப வரது முச்சி எண்பது துறிப்பிடப்பட
- கியத்திற்கும், ஸ்ேலாமியத் தமிழ் பக்கத்தோடு பணியாற்றுபவர் திரு
சச் செல்வன்
ஆசிரியர்,
க்குரல்" -டுத்தாபனத் தமிழ்ச்சேவை
நிகழ்ச்சியில்)
Ab
WANA
ISBN 955 - 9041 - 04 - 5
t) Ltd., Colombo -12.