கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்: ஒரு பன்முகப் பார்வை (1980-1998)

Page 1


Page 2

ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
- ஒரு பன்முகப் பார்வை (шптаыib - 2 ) (1980 - 1998)
கே. எஸ். சிவகுமாரன்
மணிமேகலைப் பிரசுரம் தபால் பெட்டி எண் : 1447
7 பே.எண்4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை - 600 017. தொலைபேசி : 24342926, 24346082
ußlesiir 9eĝ5scă) : manimekalai1@dataone.in Website:www.tamivanan.com

Page 3
(Irabid-2) 瓯
ஆசிரியர்களும்
ஆசிரியர் லி கே.எஸ். சிவகுமாரன்
மொழி இ தமிழ் பதிப்பு ஆண்டு 3 2008
பதிப்பு விவரம்’ என முதற் பதிப்பு
உரிமை இ ஆசிரியருக்கு தாளின் தன்மை ($ 1.6 கி.கி.
நூலின் அளவு 3 கிரெளன் சைஸ்
(12% x 18%. Ghs.f5)
அச்சு எழுத்து அளவு 3 1 புள்ளி
மொத்த பக்கங்கள் 3 240 அட்டைப்பட ஓவியம் 3 ராம்கி
லேசர் வடிவமைப்பு இ கிறிஸ்ட் கம்ப்யூட்டர்ஸ்
(C) 23725639 அச்சிட்டோர் 3 ஸ்கிரிப்ட் ஆஃப்ஸெட்
சென்னை - 94.
நூல் கட்டுமானம் தையல்
வெளியிட்டோர் 3 மணிமேகலைப் பிரசுரம்,
சென்னை - 17
O இந்திய விலை : ரூ. 7000
இலங்கை விலை : ரூ. 220.00
 
 

12.
13.
14.
15.
16.
17.
18.
19.
பொருளடக்கம்
நூலாசிரியரின் நோக்கம். கலாநிதி செ. யோகராசாவின் கணிப்பு. குப்பிளான் சண்முகத்தின் அழகியல் பாங்கு . க. சட்டநாதனின் முதிர்ச்சி அனுபவம் . காவலூர் ஜெகநாதனின் வாய்ப்பாட்டுக் கதைகள். தெளிவத்தை ஜோசப்பின் மலையக மக்கள் மீதான அக்கறை . மூன்று மலையக எழுத்தாளர்களின் நேர்த்தியான கதைகள்
மு. கனகராசனின் கவினுறு நடை. செ. யோகநாதனின் பெண் விடுதலைக் கதைகள் . கல்லூரி மாணவர்களின் கவித்துவம் . முல்லை மணி காட்டும் வார்த்தையின் மகத்துவம் . எஸ். பொன்னுத்துரையின் பல்துறை ஈடுபாடு . நாகூர் எம். கனியின் கொழும்பு
முஸ்லிம்களின் படப்பிடிப்பு. முத்து ராசரத்தினத்தின் வறிய கதாபாத்திரங்கள். க. தணிகாசலத்தின் வாழ்க்கைச் சொற்சித்திரங்கள். கோகிலா மகேந்திரனின் உளவியற்கதைகள். எஸ்.வி. தம்பையாவின் அன்றைய பார்வை. கே. டானியலின் எழுத்து முயற்சி. சாந்தனின் நேர்மைத் திறன் .SLLLLLLLCLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLCLCSCLLLLCLCLLLLLLLLLLCLLLLLLL என். சோமகாந்தனின் நேரடி அனுபவ வீச்சு .
5
6
15
17
22
26
31
37
41
45
48
54
59
66
67
3ל
77
81
88
96
உமா வரதராஜனின் கலாரசனை ஆழமாக்கம். 107

Page 4
20.
21.
22.
23.
24.
25.
26.
27.
28.
29.
30.
3.
32.
33.
34. 35.
36.
37.
38.
39.
எம்.ஐ.எஸ். முஸம்மில்லின் கிராமியப்பார்வை . 12 சுதாராஜின் மனசை உலுப்பும் கதைகள். 116 எஸ்.எச். நிஹ்மத்தின் நுட்பப்பார்வை. 121 உடுவை தில்லை நடராஜாவின் முன்னைய நடப்புகளின் சித்திரிப்பு 128 அருண் விஜயராணியின் பெண்மைப் பார்வை . 134 முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் பார்வை. 139 மாத்தறை ஹஸினா வஹாப்பின் சிக்கனச் சித்திரிப்புகள் 146 சோ. ராமேஸ்வரனின் பத்திரிகைக் கதைகள் . 152 ராஜபூரீகாந்தனின் மனிதாபிமானப் பார்வை . 156 அ. முத்துலிங்கத்தின் உலகளாவிய பார்வை. 164
மு. பொன்னம்பலத்தின் ஆன்மீக மனிதநேயம் . 170 மாத்தளை சோமுவின் அவர்களின் தேசம் . 174
புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் மேற்கொள்ளும் புதிய பயணம். 177
கோகிலா மகேந்திரன் நுண்ணியதாகக்
காட்டும் பெண்ணியம் 184 யோ. பெனடிக்ட் பாலன் காட்டும் மனித விழுமியங்கள் 197 யூ.எல். ஆதம்பாவாவின் தென்கிழக்குச் சித்திரங்கள். 210 நீர்வை பொன்னையன் காட்டும் பாதை . 216
திருக்கோவில் கவியுவனின்
மட்டக்களப்பு மீனவர் சித்திரிப்பு. 228 ரஞ்சகுமாரின் கலைப்பயணம் . 234.--مه நூலாசிரியரின் பிற நூல்கள். 239

நூாைசிரியரின் நோக்கம்
Fழத்துத் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்கள் எவ்விதமான கதைப் பொருள்களைத் தமது சிறுகதைகளுக்கு இதுவரை எடுத்து வந்துள்ளார்கள் என்பதைத் தமிழ்நாட்டு வாசகர்களுக்கும் பிற நாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்களுக்கும், இலங்கைத் தமிழ் வாசகர்களுக்கும் எடுத்துக் கூறுமுகமாக, இத் திறனாய் வா ளர் எழு தி ய மதிப்புரைகள், பாகம் ஒன்றிலும், இந்த இரண்டாம் பாகத்திலும் சேர்க்கப் பட்டுள்ளன. ஒரு பதிவாக அமையக் கூடிய இந்நூல், ஆய்வாளர்களுக்கு நிறையத் தகவல்களைத் தருபவையாக அமையும் 6 நம்புகிறேன். மணிமேகலைப் பிரசுர நிர்வாகி நண்பர் ரவி தமிழ்வாணனுக்கு நன்றிகள்.
- கே.எஸ். சிவகுமாரன்
21, Murugan Place, Colombo - 06, Srilanka 077 960 6283
R
窝
*్మ

Page 5
கே.எஸ். சிவகுமாரன் ஈழத்து கலை, இலக்கிய உலகில் முக்கியப்படுத்தப்பட வேண்டியவர்
- செ. யோகராசா
அண்மையில் எழுபதாண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள கே.எஸ். சிவகுமாரன் நீண்ட காலமாக தொடர்ந்து எழுதி வருபவர்; எழுத்துலகின் பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளவர்; பன்முக ஆளுமை பெற்றவர். எனினும் கே.எஸ். சிவகுமாரன் என்றவுடன் எவருக்கும் ‘பத்தி எழுத்தாளர்’ என்பது மட்டுமே நினைவிற்கு வரும். அதற்குமப்பால் அவரது கலை, இலக்கிய முயற்சிகள் பற்றி ஆழமாகவோ, கூர்ந்தோ சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஈழத்தில் நவீன இலக்கிய உலகிற்கூட நிலவி வருகின்ற முன்னோர் மொழியைப் பொன்னைப் போற் போற்றும் மரபிலிருந்து விலகி, கே.எஸ். சிவகுமாரனது கலை, இலக்கிய முயற்சிகள் பற்றிச் சிந்தித்துப் பார்த்ததன் விளைவே இக்கட்டுரையாகும்.
1
மேற்கூறியவாறு சிந்திக்கும் போது முதலிற் கூறப்பட வேண்டிய விடயம் நூல் மதிப்புரைகள் சார்ந்த அவரது கட்டுரைகள் பற்றியதாகும். இவ்விதத்தில் இவற்றுள் (நூலுருப் பெற்றவற்றுள்) 26 சிறுகதைத்

தொகுப்புகளும், 66 நாவல்களும் அடங்குகின்றன. இவை பத்திரிகைகளுக்காகவோ, சஞ்சிகைகளுக்காகவோ எழுதப்பட்ட நூல் நயமாகவோ அறிமுகமாகவோ மட்டுமன்றி, விமர்சனப் பாங்குடையனவாகி கே.எஸ். சிவகுமாரனை ஈழத்து விமர்சகர்களின் கவனத்திற்குரிய ஒருவராக்குகின்றன. (30 களில் எழுதத் தொடங்கிய இலங்கையர்கோனைத் தவிர்த்து) 40 களில் எழுதத் தொடங்கிய வரதர் தொடக்கம் 90களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய திருக்கோவில் கவியுவன் வரையானோரது சிறுகதைப் படைப்புகளும், 50களில் எழுதத் தொடங்கிய இளங்கீரன் தொடக்கம் 90களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய சுமதி அற்புதராஜா வரையான நாவலாசிரியர்களது படைப்புகளும் இவரது பார்வைக்குட்பட்டுள்ளமை முக்கியமான விடயமாகும். இவரது விமர்சன அணுகுமுறை எத்தகையது என்பது (பின்னர் அதுபற்றிக் கவனிப்போம்) ஒருபுறமிருக்க, இவ்வழி, ஈழத்துப் புனைகதை சார்ந்த விமர்சனம் வளர்ச்சி கண்டுள்ளது என்பதே முதலிற் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியுள்ளது. இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டின் ஈழத்து விமர்சன வளர்ச்சிப் போக்குப் பற்றி இவ்வேளை தவிர்க்கவியலாதவாறு நினைவுகூர வேண்டியதவசியம்.
நிதானமாக நோக்கும்போது (1) 80 வரையான ஈழத்து விமர்சன வளர்ச்சிப் போக்கில் செயன்முறை விமர்சனத்தை விட, கோட்பாட்டு விமர்சனமே முதன்மையிடம் பெற்றுள்ளது. (ii) ஈழத்துப் புனைகதை

Page 6
8
வளர்ச்சி பற்றி கவனஞ் செலுத்தப்பட்டமை குறைவாகவுள்ளது. (iii) தனியொருவர் பற்றிய முழுமையான விமர்சனமோ, தனியொரு படைப்புப் பற்றிய ஆழமான விமர்சனமோ அரிதாகவே இடம் பெற்றுள்ளது. (iv) பக்கச் சார்பு அதிகமாகவுள்ளது. (V) பாராட்டே விமர்சனமாகக் கருதப்பட்டு வந்துள்ளது.
மேற்குறிப்பிட்டவாறுள்ள ஆரோக்கியமற்ற விதத்திலான ஈழத்து விமர்சன வளர்ச்சிப் போக்கு நிலையில் கே.எஸ். சிவகுமாரனின் முற்குறிப்பிட்ட, விமர்சன போக்குடைய மதிப்புரைகள் ஈழத்து விமர்சன வளர்ச்சியில் முக்கிய இடம் பெறுகின்றமை தவிர்க்கவியலாதாகின்றது.
இவ்விடத்தில், முற்குறிப்பிட்ட ஈழத்து விமர்சன வளர்ச்சிப் போக்கின் இயல்புகளுடன் தொடர்புபடுத்தி கே.எஸ். சிவகுமாரனின் விமர்சனங்களினூடே வெளிப்படுகின்ற வித்தியாசமான இரு இயல்புகள் பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகிறது.
ஈழத்து முன்னோடி விமர்சகர்களுள் கணிசமானோர் முற்போக்குச் சார்புடையவர்களாய் இருந்துள்ளமையும் அவ்விதத்தில் முற்போக்கு எழுத்தாளரது படைப்புகளுள் குறைகள் காணாதிருந்தமையும் நாமறிந்ததே. ஆயின், கே.எஸ். சிவகுமாரனின் விமர்சனங்களில் அத்தகைய குறைபாட்டிற்கிடமிருக்கவில்லை. உதாரணமாக, டொமினிக் ஜீவாவின் ‘பாது கை’ பற்றிக் குறிப்பிடும்போது இவ்வாறு குறிப்பிடுகின்றார்.

'. இக்கதையின் மூலம் தொழிலாள மக்களும் தவறு செய்யக்கூடும் என்ற உண்மையைத் தயங்காமல் கதாசிரியரான திரு. டொமினிக் ஜீவா எடுத்துக் கூறுவது பாராட்டத்தக்கது. ஆயினும் கதையிலுள்ள முக்கிய நிகழ்ச்சியைப் பிரதானப்படுத்திக் கூறுமளவிற்கு இக்கதையில் ஏதேனும் ஒப்பற்ற உணர்வு வாசகர்களைத் தொற்றிக் கொள்ளும் விதத்தில் இழையோடுவதாகத் தெரியவில்லை. மற்றப்படி கதையின் இதர அமைப்புக் கூறுகள் பாதுகையில் நன்றாக அமைந்திருக்கின்றன.
டானியலின் பஞ்சமர்’ பற்றி ஒரிடத்தில் பின்வருமாறு எழுதுகின்றார் :
இந்நாவல் கூற வருவது என்னவென்றால் முதல் தடவையாக, பஞ்சமர் எனப்படுபவரே, தமக்கிடையேயுள்ள வேறுபாடுகளைக் களைந்து முதலில் ஒன்று பட்டு, அணிசேர்ந்து தமது எதிரிகளுடன் போராட முனைகிறார்கள் என்பதுதான். அவர்களுடைய இந்த முயற்சி பாராட்டப்படும் அதேவேளையில், நிறைவேற்றப்படும் அதே வேளையில், அவை நாவலில் விவரிக்கப்படும் பாங்கு ஒரு வீரக் கதைக்குரியதாக (ரொமான்டிக்) அமைகிறதைக் காணலாம்.'
வித்தியாசமான மற்றொரு இயல்பு, இலகுவில் விமர்சகரொருவரது சிந்தனைக்குட்படாத விடயங்கள் சில சந்தர்ப்பங்களிலே கே.எஸ். சிவகுமாரனது பார்வைக்குள் அகப்படுவது. உதாரணமாக, உமா

Page 7
1O
வரதராஜனின் ‘உள்மன யாத்திரை’ தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது,
'உமா வரதராஜனுக்கு ‘சினிமா பிரக்ஞை அதிகம் என்றுதான் கூற வேண்டும். இவருடைய கதைகளை உருவ ரீதியாகப் பகுத்துப் பார்ப்போமாயின் இவற்றிலே ப்ரேம், ஷொட், சீன், சீக்குவென்ஸ், எப்பிஸோட் என்றவாறு திரைப்பட உறுதிப் பொருள்களை இனங்காண முடியும், எனவே, உமா வரதராஜனின் கதைகளைக் குறும் படங்களாக அல்லது குறுந் தொலைக்காட்சி நாடகங்களாக நாம் காணமுடியும்.’
அடுத்த விடயத்திற்குச் செல்வதற்கிடையில், கே.எஸ். சிவகுமாரனது விமர்சன அணுகுமுறைகள் பற்றியும் சுருக்கமாகக் குறிப்பிடுவதவசியமாகிறது. பொதுவாக, ஒரு படைப்பினை உள்ளடக்கம், உருவம் என்ற அடிப்படையில் பகுத்து நிறை, குறைகளை விரிவாகவோ, நுணுக்கமாகவோ, (இடம், காலம் என்பனவற்றிற்கேற்ப) செறிவாகவோ கவனிப்பதும், படைப்பின் இலக்கியத்தரம், சமூகப் பெறுமானம் என்பவற்றிற்கு முதன்மையளிப்பதும் அன்னாரது அணுகுமுறையின் முக்கிய இயல்புகளாகின்றன. சில சந்தர்ப்பங்களில் இவற்றை முழுமையாக அனுசரிக்காத நிலையும், படைப்புப் பற்றி முழுமையான பார்வையை வழங்காத நிலையும் காணப்படுகிறது. வேறு சில வேளைகளில் பாராட்டுரை திகட்டுமளவிற்குச் செல்வதும் முன்னோர் மொழியை LDpl பரிசீலனையின்றிச் சிக்கெனப் பற்றிக் கொள்வதுமுண்டு.

11
2
புனைகதைகள் பற்றிய கே.எஸ். சிவகுமாரனின் நூல்கள் இன்னொரு கோணத்திலும் முதன்மை பெறுகின்றன. அதாவது, ஈழத்து நாவல் வரலாறு பற்றி ஒரு ஆய்வு நூலும் (ஈழத்து நாவல் இலக்கியம் - நா. சுப்பிரமணியம்), ஈழத்துச் சிறுகதை வரலாறு பற்றி ஒரு ஆய்வு நூலுமே (ஈழத்துச் சிறுகதை வரலாறு - க. குணராசா) இன்று வரை வெளியாகியுள்ளன. விசனத்திற்குரிய இந்நிலையில் இவரது நூல்கள் தனித்தோ, விரித்தோ, மேலதிகமாகவோ பயன்படக்கூடிய உசாத்துணை நூல்களாகவுள்ளமை வெளிப்படை எடுத்துக்காட்டாக, நாவல் வரலாறு பற்றிய முற்குறிப்பிட்ட நூல் (எழுபதுகளில் எழுதப்பட்டதாதலின்) எழுபதுடன் நின்றுவிட அதற்குப் பிற்பட்ட வரலாறு பற்றி அறிய முடியாத நிலையில் அதற்குப் பிற்பட்ட நாவல் வளர்ச்சிப் போக்குப் பற்றி ஓரளவாவது அறியவும், சிறுகதை வரலாறு பற்றிக் குறிப்பிடுகின்ற நூலில் விடுபட்டுப் போன முக்கியமான எழுத்தாளர் ஒரு சிலர் பற்றி (உ-ம் : மட்டக்களப்புப் பிரதேச எழுத்தாளரான சத்தியன்) அறியவும் கே.எஸ். சிவகுமாரனின் நூல்கள் பயன்படக் கூடியனவாகவுள்ளமை பற்றி இவ்வேளை குறிப்பிடத் தோன்றுகிறது.

Page 8
12
3
கே.எஸ். சிவகுமாரன் தொடர்பாக அடுத்துக் குறிப்பிடத்தக்க விடயம், அன்னார் ஈழத்து நவீன இலக்கிய முயற்சிகள் பற்றி அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி வருவது. ஈழத்து நவீன தமிழ் இலக்கியம் பற்றிய அறிவு தமிழ்மொழி தெரியாதோருக்கு அதிகமிருக்குமென்று நிச்சயமாகக் கூறமுடியாது. பிற மொழி பேசும் பிற நாட்டினர் ஒருபுறமிருக்க, சிங்கள மொழி பேசுகின்றோர் இதுபற்றி அறிந்திருப்பது பயன்மிக்க ஒன்றென்பதில் சந்தேகமில்லை. எனவே, அத்தகையோருக்கு கே.எஸ். சிவகுமாரன் ஏலவே Gaugfu, DIgisten, 65T (Thamil Writing in Sri Lanka1974; LeRoy Robinson in Conversation with K.S. Sivakumaran on Aspects of Culture in Sri Lanka - 1992) தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி வருகின்ற கட்டுரைகளும், பத்தி எழுத்துக்களும் அதிக பயன் விளைக்குமென்பது பற்றி வற்புறுத்திக் காட்டப்பட வேண்டியது தேவையானதன்று. (அமெரிக்காவிலிருந்து (ஆங்கிலத்தில்) வெளியான ‘உலக இலக்கியம்’ பற்றிய இரு கலைக் களஞ்சியங்களிற் கூட இவர், ஈழத்துத் தமிழ் இலக்கியம் பற்றிய அறிமுகக் கட்டுரைகள் எழுதியிருப்பது பலருமறியாத விடயமே.)
கே.எஸ். சிவகுமாரன் தொடர்பான கவனத்திற்குரிய ஏனைய விடயம், மேற்கூறியவாறு நவீன இலக்கியத் துறையுடனன்றிக் கலைத்துறையுடன் - சினிமாவுடன் தொடர்புபட்டிருக்கின்றது. ஒப்பீட்டு

13
ரீதியில் தமிழ்நாட்டினை விட ஈழத்தில் தமிழ்ச் சினிமா தொடர்பான கட்டுரைகள் (சிங்களச் சினிமா பற்றியே தம்பி ஐயா தேவதாஸ் எழுதி வருகின்றார்) அரிதாகவே வெளிவருகின்றன. ஈழத்தில் சசி. கிருஷ்ணமூர்த்தி, அ. யேசுராசா, உமா வரதராஜன், குப்பிளான் சண்முகம், (அண்மைக் காலமாக) மாரி, மகேந்திரன், இராகவன் முதலான விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இத்துறையில் ஈடுபட்டு வந்துள்ளனர். இப்பட்டியலில் கால அடிப்படையில் மட்டுமன்றி தனி இரு நூல்களை முதன்முதலாகத் தந்தவரென்ற விதத்திலும் முதன்மையிடம் பெறுபவர் கே.எஸ். சிவகுமாரனே. இருநூல்களுள் ஒன்றான 'அசையும் படிமங்கள்’(2001) திரைப்படக் கலை பற்றியும், திரைப்படத் திறனாய்வு பற்றியும் அறிய விரும்புவோர்க்கான அடிப்படை நூலாக அமையக் கூடியது. அவ்வப்போது எழுதப்பட்ட கட்டுரைகளாயினும் ஒரு நூல்போன்று திட்டமிட்டு எழுதப்பட்டுள்ளதாகக் காணப்படுவது வியப்பிற்குரிய விடயமாகின்றது. மற்றொரு நூலான “சினமா, சினமா ஒர் உலக வலம்’ (2006) இந்தியச் சினிமாக்கள், இயக்குநர்கள் பற்றியும், சர்வதேசத் திரைப்பட விழாக்கள் பற்றியுமான ரசனைக் கட்டுரைகளையும், தகவற் கட்டுரைகளையும் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4
அறுபதுகளில் சிறுகதை முயற்சியிலிடுபட்டிருந்த கே.எஸ். சிவகுமாரனின் சிறுகதைகள் இன்றைய

Page 9
14
நிலையில் முக்கியமற்றனவாகத் தென்பட்டாலும், அன்றைய சூழலில் புதிய உத்திகள், உளவியற் பார்வை, கொழும்பில் மேற்தட்டு வர்க்கத்தினர் வாழ்க்கை பற்றிய சித்தரிப்பு போன்றவற்றால் வித்தியாசமான அனுபவங்களைத் தந்திருந்தமை குறிப்பிடத்தக்கதே.
5
இதுவரை கூறியவற்றிலிருந்து கே.எஸ். சிவகுமாரனைப் பத்தி எழுத்தாளராக மட்டும் கருதிவிடக் கூடாது; கருதிவிட முடியாது என்பது ஓரளவு புலப்படுமென்றே கருதுகின்றேன். முன்னர் அவ்வப்போது மொழி பெயர்த்த கவிதைகள், சொந்தக் கவிதைகள், உலக எழுத்தாளர் பற்றிய கட்டுரைகள் முதலியனவும் நூலுருப்பெறுவது அவசியமானது. அவற்றை விட முற்கூறிய புனைகதை சார்ந்த நூல் மதிப்பீட்டுக் கட்டுரைகள் போன்றே கவிதைத் தொகுப்புகள், நாடக முயற்சிகள் பற்றி அன்னாரெழுதி வந்துள்ள ஆக்கங்களுள் நுலுருப் பெறுவது மிக அவசியமானது. அப்போதுதான் கே.எஸ். சிவகுமாரன் t, I fib fóil இருந்து வரும் பிம்பம் மேலும் உடைபடுவதற்குரிய வாய்ப்பு ஏற்படுமெனலாம்!
(இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி செ. யோகராசா, ஈழத்துச் சஞ்சிகை "மல்லிகை” மார்ச் 2007 இதழில் எழுதிய மதிப்பீடு.)
来

15
குப்பிளான் சண்முகத்தின் அழகியல் பாங்கு
ଡ୍ର ଓଁ அழகியல்வாதியின் அகவய ரீதியான பார்வையுடன் கூடிய கதைகளை எழுதியிருக்கும் ஆசிரியர் பெரும்பாலானவற்றில் வளரிளம் பருவத்தினரின் (கோடுகளும் கோலங்களும்) உடல் வேட்கையையே சித்திரிக்கின்றார். மனோரதியப் பாங்கில் கதைகள் அமைந்தாலும், நிதர்சனத்தில் அடியூன்றிய அழகியல்வாதியின் பார்வையைக் கதைகளுடே காண முடிகிறது. வாழ்க்கை என்பது கற்பனையே, எதிர்பார்ப்புகளிலேயே வாழ்க்கையில் விறுவிறுப்பு காணப்படுகிறது. வாழ்க்கை என்பது அழகிய கோடுகளும், மாதிரிகளும் கொண்டது போன்றவற்றில் நம்பிக்கை கொண்ட சண்முகம், தமது பாத்திரங்கள் இத்தகைய வாழ்க்கை நோக்குடையவையாக அமையத் தீட்டியுள்ளார்.
இவருடைய கதைகள் கவிதை மொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. வாழ்க்கையின் நிதர்சன நெருக்கடிகளின் மத்தியில், நின்று நிதானித்து அவகாசமாக வாழ்க்கையையும் இயற்கையையும் சுவைக்கத் தவறிவிடுகிறோம். எத்தனை கோடியாக

Page 10
16 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அமையும் இன்பங்களின் படிமங்களை அழகுற சண்முகம் கவிதை லயமாகக் கொண்டு வருகிறார்.
கிராமிய, வெகுளித்தனமான இளைஞர்கள் யதார்த்த பூர்வமாகச் சிந்திப்பதையும், அந்தந்த நிமிடங்களில் வாழ்வதே இன்பம் என ஆசிரியர் நம்புவதையும் காட்டுவதாக இருளில் இருந்து ஒளி பிறக்கிறது’ என்ற கதை அமைந்துள்ளது. அழகியல்வாதிக்கும் சமூகக் கடப்பாட்டுடன் எழுதுபவனுக்கும் இடையில் உள்ள பேதங்களைத் "தடங்கல்’ என்ற கதை விளக்குகிறது. ‘ஒரு பாதையின் கதை' தற்பாஷித உத்தியில் (Monologue) தர்க்கரீதியாகச் சிந்திக்கும் ஒரு பழமைவாதியைப் பற்றியது.
வெறுமனே மனோரதியப் பாங்குடன் (Romantic) நின்றுவிடாது, ஆழமாக, சமூகப் பார்வையுடன் குப்பிளான் சண்முகம் எழுதுவாராயின் சிறப்பாக இருக்கும்.
来

கே.எஸ். சிவகுமாரன் 17
க. சட்டநாதனின் முதிர்ச்சி அனுபவம்
Tெழுபதுகளில் அறிமுகமாகிய தனித்தன்மை வாய்ந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் க. சட்டநாதன். இவருடைய கதைகளில் ஒரு முதிர்ச்சியனுபவத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. "ஆழம்’ என்ற வார்த்தைக்கு இப்பொழுது அர்த்தமில்லாமற் போய்விட்டது. இடம் பொருள் தெரியாமல் இவ் வார்த்தையைப் பிரயோகித்து, பலர் மலினப் படுத்திவிட்டதால் சட்டநாதன் கதைகளை 'ஆழமுடையவை என்று கூறாமல் முதிர்ச்சியனுபவத்தைப் பரிவர்த்தனை செய்பவை’ என்போம்.
“மாற்றம்’ என்ற இவருடைய சிறுகதைத் தொகுதியில் ஆறு கதைகள் அடங்கியுள்ளன. சட்டநாதன் சிறு பத்திரிகைகளுக்குத்தான் அதிகம் எழுதியிருப்பதனாலோ என்னவோ, அவருடைய பெயர் ஜனரஞ்சக வாசகர்களுக்கிடையில் பிரபலம் பெறாமல் இருக்கலாம். ஆனால் ஓர் அற்புத தமிழ்ச் சிறுகதையாசிரியனை யாவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதனால் சற்று விஸ்தாரமாகவே அவரைப் பற்றி இங்கு எழுதினேன்.

Page 11
18 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சுந்தர ராமசாமி என்ற தமிழ் நாட்டு எழுத்தாளரின் கதைகளைப் படிக்கும் பொழுது எழும் லேசான சுக அனுபவம் சட்டநாதன் கதைகளைப் படிக்கும் போது ஏற்படுகின்றது. சமூகப் பார்வையும், உளவியல் நுணுக்கமும், மனித உறவுகளைப் புரிந்துகொண்ட தன்மையும் லலிதச் சித்திரிப்பும் ஒருங்கு சேர்வதனால் இவரது கதைகளில் கலைநயம் பளிச்சிடுகின்றது.
சட்டநாத்ன் பேசுகிறார் - “இறுக்கமான குடும்ப உறவுகளில் ஆணின் அதிகார முனை மழுங்க, பெண் தன்னைச் சுற்றிப் பிணைந்து கிடக்கும் தளைகளைத் தகர்த்து விட்டு விடுதலையாவது எனது கதைகளில் இயல்பாகவே சாத்தியமாகிறது. ஆண் பெண் உறவு - உணர்வு விவகாரங்களைக் கடந்து சமூகத்துடனான மனித உறவுகளின் சித்திரம்தான். அனுபவங்களை யெல்லாம் சிதறப் பிடிக்கும் எத்தனங்கள் தான் எனது கதைகள்’.
இத்தொகுதியில் இடம் பெற்றிருக்கும் கதைகளில் தாம்பத்திய உறவைப் புரிந்துகொண்ட முதிர்ச்சித் தன்மை முதலில் கவனத்தை ஈர்க்கின்றது. அடுத்ததாக மத்திய, கீழ் மத்திய தர வர்க்க மக்களின் விழுமியங்கள் பற்றிய அறிவை அனுபவ பூர்வமாக இக்கதைகள் தருவதை அவதானிக்கலாம். மூன்றாவதாக, வர்க்கம் என்றும் சாதி என்றும் சூள்கொட்டிக் கோஷம் கிளப்பாமலே இலேசாகவே

கே.எஸ். சிவகுமாரன் 19
அநீதிகளையும் முரண்பாடுகளையும் வாசகர் தாமே அறிந்துணர இக்கதைகள் வகை செய்கின்றன.
‘உறவுகள்’ - என்ற கதையை எடுத்துக் கொள்வோம்.
“கோவியப் பெட்டை தானே தட்டிப் பார்த்தால் எடுபட்டிடுவாள்” என்ற எண்ணத்துடன் ஒருத்தியை வலிந்து காதலித்துப் பின்பு மணமுடித்துப் பின்னர், தாழ்வுச் சிக்கல் காரணமாக (அவள் அவனிலும் கூடிய சம்பளம் பெறும் உத்தியோகம் பார்ப்பவள்) எழுத்துலகில் நாட்டம் கொண்டவள், நிதானமானவள்) அவளை விட்டுச் செல்கிறான் - சாதியும் சீதனமும் பார்க்கும் குடும்பத்தில் பிறந்த ஒருவன். இக்கதை முழுவதையும் வாசகர்கள் தாமே படித்தால்தான், அனுபவம் புலப்படும். கதையின் இறுதியில் ஆசிரியர் இவ்வாறு முடிக்கிறார்.
“அவளுக்கு அப்பொழுது ஏனோ லூஸினின் கதையொன்றில் வரும் ஹிகன் என்ற பெண்ணும், இப்சனின் நோராவும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களைப்போல் இவளால் தாம்பத்திய உறவை வெட்டிக் கொள்ள முடியவில்லைதான். ஆனால் அவர்களைப் போலவும் நடந்து கொள்ளாமல் இவள் இருப்பதற்கு அவளே வழி செய்திருப்பது இவளுக்கு ஒருவகையில் நிம்மதியாக இருந்தது. அந்த நிம்மதியே அவளுக்கு இப்போதைக்குப் போதுமானது. அவள் நிம்மதியாகப் பெருமூச்செறிந்தாள்.”

Page 12
20 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
“இப்படியும் காதல் வரும்’ மற்றொரு புத்தனுபவம் தரும் கதை. இரண்டு ஆய்வறிவாளர் (ஆணும் பெண்ணும்) ஜெயகாந்தன் கதைகளில் வரும் சில பாத்திரங்கள் போன்று தமக்குள்ள உறவை நியாயப்படுத்தச் சந்தர்ப்பம் துணை செய்வதையும், அச்சந்தர்ப்ப்ம், கதாநாயகியான விமலாவின் அந்தஸ்துக்கு ஒருபடி கீழ் நிலையிலுள்ள வர்க்க மட்டத்தின் சிக்கலான உறவுகள் தான் என்பதும் புலப்படுவன. தவிரவும், இழிவால் (சீதனம் இல்லாததனால் மணம் முடிக்காமல் இருக்கும் எட்டுச் சகோதரிகளுக்கு ஒரு தம்பி பிறக்கப் போகிறானாம்), சாதித்தளைகளை மீறிய பெண் விடுதலைச் சித்திரிப்பு போன்றவற்றையும் இக் கதையில் காண முடிகின்றது.
“மாற்றம் - ஒரு பரம்பரையை, ஒரு சமூகத்தை, ஒரு மரபை விமர்சிக்கும் வகையில் அற்புதமாக எழுதப்பட்ட கதை. பாத்திரங்களின் சாதி உணர்வையும் மீறி பணம்’ என்னும் உறவுட் பொருள் ஆட்சி செலுத்துவதையும், உறவுகள் (வேறுபல காரணங்களுக்காக) மாற்றமடையும் என்பதையும் காட்டுகின்றது. சாதி, அந்தஸ்து, பரம்பரைப் பெருமை போன்றவை வெளிப்பூச்சுக்கள், உள்ளே பழிவாங்கும் திட்டமும், செக்ஸ"ம், சொந்தம் என்ற உணர்வும் ஆளுமை செலுத்துகின்றன. கதையைப் படித்தால் வாசகர் இவற்றை அறிவார்கள்.
‘பிச்சைப் பெட்டிகள்’ - மனித குணத்தின் விசித்திரப் போக்குகளை ஒரே காட்சியில் காட்டும்

கே.எஸ். சிவகுமாரன் 21
அற்புதக் கலையழகு. ஒரு பஸ் வண்டிப் பயணத்தில் ஆறு பேர் நடந்து கொள்ளும் விதமும், அவர்களுடைய போக்குகளில் ஏற்படும் மாற்றமுஞ் சித்திரிக்கப் படுகின்றன.
‘தாம்பத்தியம்’, ‘அந்தக் கிராமத்துச் சிறுமி’ ஆகியன எஞ்சிய கதைகள்.
“இக்கதைகளில் வருபவர்கள் தமது சிநேகத்திற்கும் நேசத்திற்கும் உரியவர்கள்; மனித நேசம் சாஸ்வதமானது” என்னும் சட்டநாதன் இன்னும் நிறையக் கதைகளை எழுத வேண்டும்.
க. சட்டநாதன், சாந்தன், அ. யேசுராசா, குப்பிளான் சண்முகம், காவலூர் ஜெகநாதன் போன்ற எழுத்தாளர்கள் லேபல் ஒட்டிய சமூகவியல் சார்ந்த புனைகதைகளை எழுதாவிட்டாலும் அவர்கள் கலைத் திறனுரடாகத் தெரிய வருவது அவர்களுடைய பொதுவான சமூகப் பிரக்ஞைதான். இவர்களில் சட்டநாதன் வெகு விசேஷம் என்பது எனது அபிப்பிராயம்.
(தினகரன் “வாரமஞ்சரி’ 20-07-1980)
来源

Page 13
22 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
காவலூர் எஸ். ஜெகநாதனின் வாய்ப்பாட்டுக் கதைகள்
LDறைந்த காவலூர் ஜெகநாதன் எழுதிய பத்தொன்பது கதைகளின் தொகுப்பு யுகப்பிரசவம்'. தமிழ் நாட்டுப் பத்திரிகைகளிலும், ஈழத்துப் பத்திரிகைகளிலும் இவை ஏற்கெனவே வெளிவந்தவை. பல பரிசுகளைப் பெற்றிருக்கும் ஜெகநாதனின் கதைகளைப் படித்துப் பார்க்கும் பொழுது, அவற்றில் ஒருவிதமான வாய்ப்பாட்டம்சத்தை இனங்கான முடிகிறது. அதாவது இன்ன பொருளை வைத்து இன்ன மாதிரி எழுதினாற்றான் விமர்சகரிடையே அங்கீகாரம் பெறலாம் என்று கருதி எழுதினாற் போலப் பல கதைகள் அமைந்திருக்கின்றன. இன்னும் ஒருபடி மேலே சென்று கூறுவதானால், அவர் ஒரு தொழிற்சாலை போன்று செயற்பட்டு உணர்ச்சியும், கலையழகும் சேராத சில வாய்ப்பாட்டம்சங்களைத் தமது கதைகளில் திணித்திருக்கிறார் என்று கூறலாம்.
அதே சமயத்தில், காவலூர் ஜெகநாதன், வட பிராந்தியத்திலுள்ள பலதரப்பட்ட மாந்தர்களைத் தமது கதைகளில் யதார்த்தபூர்வமாக அறிமுகப் படுத்தியிருக்கிறார் எனலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 23
“தாம் ஒரு காலத்தில் அடக்கியாண்டவர்களின் எழுச்சியையும் ஏற்றத்தையும் புரிந்து கொள்ள இயலாமல் கறுவிக் கொள்ளும் உயர் சாதிக்கார சுப்பிரமணியம்; பிறருக்கு நல்லதைச் செய்து வாழ்ந்தும் தனக்கு உதவ வேண்டிய நேரத்தில் ஒருவரும் இல்லையே என்று ஏங்கும் கிருஷ்ணபிள்ளை; வேறொரு சாதிப்பெண்ணை விரும்பி மணமுடித்ததற்காகத் தன் சாதிக்காரரால் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் கல்லுடைத்து மனைவியுடன் பிரச்சினைகளைத் தன்னம்பிக்கையுடன் எதிர்நோக்கும் உயர் சாதி இளைஞன், அவன் மனைவி றோசலின், சாதிக் குரோதங்களைத் தனது வியாபார முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்தும் கடைக்காரச் செல்லையா; அவரின் மிருகத்தனமான தாக்குதலைப் பொறுக்க மாட்டாமல் ‘ஒருக்காத்தான் சாகிறது’ என்று கூறியபடி விறுக்கிட்டு எழும் தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் ஒருவன்; கூட்டுறவுச் சங்கக் கடையில் கூசாமல் கொள்ளையடித்துக் கொண்டே ஊரிலே நல்லவராகவும் நாணயக்காரராகவும் பெயர் வாங்கியுள்ள பொன்னம்பலம்; கடைச் சிப்பந்தி திடீரெனச் செத்ததால் சீசன் வியாபாரம் பட்டுப் போகுமே என்று கவலைப்படும் கடை முதலாளி வீரவாகு தான் தவழ்ந்த மண்ணிலேயே அதற்காக உயிரைக் கொடுத்த வாலிபன் மாடசாமி, இனவெறியைச் சுயநலத்திற்காகத் தூண்டிவிடும் அரக்கத்தனத்தை எதிர்த்து “வலையைவிட மனிசந்தான் பெரிசு” என்று மனிதாயத்தை

Page 14
i24 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வலியுறுத்தும் மீனவர் மாணிக்கம்; உழைப்பாளிகளின் ஒற்றுமையை உணர்ந்து கொள்ளும் கிழவன் மாரி, வாழ வேண்டும் என்ற நினைப்பையே இழந்துவிட்டுச் சாவுக்காகக் காத்திருக்கும் செல்லம்மாக் கிழவி; தலைமுறைகளிடையே தோன்றும் இடைவெளிகளைப் புரிந்துகொள்ள மாட்டாமல் தவிதவிக்கும் மாரிமுத்துக் கிழவர்; கண்போல் காத்து வந்த தனது காணித் துண்டைக் கவர வருபவர்களைக் கொல்லவும் துணிந்துவிடும் கிழவன் இராமையா; ஊரின் காவல் தெய்வம் மாதிரி இருக்கும் கனகம்மா கணபதியுடன் ஒடிப் போனவள் என்று எல்லோரும் விலக்கி வைத்தும் வைராக்கியத்துடன் வாழ்க்கையில் வெற்றி காணும் வேதவல்லி, விவசாயத்தைக் கைவிட்டு ஓமானுக்கு உழைக்கப் போகும் மகனைத் திட்டித் தீர்த்துவிட்டு வயோதிகத்திலும் மண் வெட்டியைத் தூக்கும் கமக்காரர் பரமலிங்கம்; இனிமைக் கனவுகளில் இலயித்து ஏமாற்றப்பட்டு விடும் இளம் கன்னியர்; கணபதிப்பிள்ளையரின் பசப்பு வார்த்தைகளில் மயங்கி நித்திய ஏமாளியாகவே இருக்கும் நாகன்; (இத்தொகுப்புக்கான முன்னுரையில், க. கைலாசபதி) -ஆகிய பாத்திரங்கள் ஜெகநாதனின் கதைகளில்
வருகிறார்கள்.
சாதி, வர்க்கம் என்ற வாய்ப்பாடுகளுக்குள் நின்று கொண்டு சமூகம், காலம், மாற்றம் ஆகியன குறித்து, மீனவர், விவசாயிகள், கூலிகள் பற்றி ஜெகநாதன் கதைகள் படைத்துள்ளார் - எழுத்தாளனின்

கே.எஸ். சிவகுமாரன் 25
சமூகப் பணியை நிறைவேற்றும் விதத்திலே, தன்னம்பிக்கையும் தளரா உறுதியும் கொண்ட பாத்திரங்களை ஜெகநாதன் அறிமுகப்படுத்தியுள்ள போதிலும் அவை உயிர்ப்பும், முழுமையும் பெற்றவையாக எனக்குத் தென்படவில்லை. தவிரவும் சொற்சிக்கனமும், பொருத்தமுடைமையும் இலாவகமும் ஒன்று சேரக் காணோம். சில இடங்களில் சொன்னதையே திருப்பிச் சொல்லிக் கதையை நீட்டி முழக்குகிறார்.
இருந்தபோதிலும் புதிய எழுத்தாளர்களில் காவலூர் ஜெகநாதனும் முக்கியமான ஒருவர் என்பதை மறுப்பதற்கில்லை.
(தினகரன் : 1980)

Page 15
26 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
தெளிவத்தை ஜோசப்பின் மலையக மக்கள் மீதான அக்கறை
• இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளியினர் தாமிருக்கும் நாட்டைப் புறக்கணித்துப் பாரத நாட்டிலேயே அதிக விஸ்வாசம் கொண்டிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மீது முன்னர் சுமத்தப்பட்டிருந்தது.
ஆனால் இப்பொழுது “நாமிருக்கும் நாடு நமதென்பதறிந்தோம்” என்ற உணர்வு வலுப்பெற்று வருவதை மலைநாட்டு ஆய்வறிவாளர்களும், எழுத்தாளர்களும், நாடகாசிரியர்களும், திரைப்படத் தயாரிப்பாளர்களும் வலியுறுத்தி வருவதிலிருந்து நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.
இதே அடிநாதத்தை மீண்டும் ஒலியெழுப்புவது போன்று, ‘நாமிருக்கும் நாடே என்ற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுதியை யாழ்ப்பாணத்தில் உதயமாகிய ‘வைகறை வெளியிட்டுள்ளது. தொகுதித் தலைப்பைக் கொண்ட கதையும் இதில் இடம் பெற்றிருக்கின்றது. அக்கதை GD வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கின்றது. அக்காலத்தில் இங்குள்ள மலைநாட்டு மக்களிடையே தேசிய உணர்வு நன்கு

கே.எஸ். சிவகுமாரன் 27
நெறிப்படுத்தப்படவில்லை என்பதை இக்கதை மூலம் ஒரளவு அறிந்து கொள்வதுடன் கதாசிரியர் தெளிவத்தை ஜோசப், அக்காலத்திலேயே சமூகப் பிரக்ஞை கொண்டிருந்தார் என்பதையும் அவதானிக்கிறோம்.
தெளிவத்தை ஜோசப் ஒரு பிரபல ஈழத்து எழுத்தாளர் என்பது நாமறிந்த விஷயம். மலைநாட்டு (பதுளைப்பகுதி) எழுத்தாளர் என்ற முறையிலும், கலைப் பண்பு மிளிர எழுதும் முன்னணி எழுத்தாளர் என்ற விதத்திலும், 1960க்கள் உருவாக்கிய முக்கிய படைப்பாளியான ஜோசப்பின் கதைகள் அடங்கிய முதலாவது தொகுதியான இந்நூலை நாம் ஒரு நல்ல சிறுகதைத் தொகுதி என்றே வரவேற்கிறோம். அவருடைய நாவல்கள் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன.
1963 - 1977 காலப்பகுதியில் வெளியான பதினொரு கதைகளின் தொகுப்பே இந்நூல். இக்கதைகளை இப்பொழுது படிக்கும்பொழுது, கதைகள் எழுதப்பட்ட காலப் பகுதியில் ஆசிரியரின் எழுத்தாற்றல் எந்நிலையில் இருந்தது, கதைகள் சொல்லும் காலமும் கருத்தும் எத்தகையன என்பதையும் நாம் அறிய முடிகின்றது.
மலைநாட்டு வாழ்க்கை அனுபவமே இல்லாத என் போன்ற நகர்ப்புற வாசிகளுக்கும் தனது எழுத்தாற்றல் காரணமாக அந்த 'அனுபவத்தை ஜோசப் பரிவர்த்தனை செய்து வெற்றி காண்கிறார்

Page 16
28 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
என்றால், அவருடைய எழுத்து பயனுடையதாகின்றது என்பதுதான் அர்த்தம்.
இத்தொகுதியில் இடம் பெறும் 'அது' என்ற கதையைத் தவிர ஏனையவை, வாழ்க்கையை - பதுளைப் பிராந்தியத் தோட்டத் தமிழ் மக்களின் - படம் பிடித்துக் காட்டுவதுடன், அவ்வாழ்க்கை முறையின் அர்த்தங்களையும், அனர்த்தங்களையும் சொல்லாமல் சொல்லிவிடுகின்றது. சமூகக் கண்ணாடியாக இலக்கியம் விளங்க வேண்டுமாயின், எழுத்தாளனும் ஓரளவு ஆய்வறிவு ரீதியாக இயங்கவேண்டும். அதற்குக் காலமும், அனுபவமும் அறிவும், முதிர்ச்சியும் தேவை. தெளிவத்தை ஜோசப் இனி எழுதவிருக்கும் கதைகள் எப்படிக் கலையையும் உண்மையையும் பின்னிப் பிணைத்ததாக இருக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியங் கூறும் விதத்தில், கலையழகு ஒருபடி கூடவும், யதார்த்தப் பண்பு ஒரு படி குறைந்தும் எழுதப்பட்ட அவருடைய முக்கிய கதைகள் அமைந்துள்ளன. இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளில் உருவ அமைதி சிறப்பாக அமைந்த அளவிற்கு கதைகளின் யதார்த்தப் ւյ6ծr ւյ, ஆய்வறிவு ரீதியாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதையே இங்கு சொல்ல வருகிறேன்.
தெளிவத்தை ஜோசப்பின் இக்கதைகள் பற்றிச் சுருக்கமாக, ஆனால் சமூகவியல் அடிப்படையில், மற்றொரு மலைநாட்டு இளம் ஆய்வறிவாளர்

கே.எஸ். சிவகுமாரன் 29
மு. நித்தியானந்தன், இத்தொகுதியிலேயே எழுதியிருப்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
‘லய'த்தில் வாழும் மக்களிடையே கூட சாதியுணர்வு இருக்கிறது என்பதையறிய அதிசயமாக இருக்கிறது. ‘தீட்டு ரொட்டி’ இதனை உணர்த்துவதுடன், சின்னஞ் சிறு சுகளின் கல்மிஷமில்லா வெள்ளை இதயத்தையும் அற்புதமாகச் சித்திரிக்கின்றது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், மலைநாட்டுத் தோட்டம் ஒன்றில் எவ்வளவு சுயநலமாக நடந்து கொள்கிறார் என்பதைச் ‘சோதனை வெளிப்படுத்துவதுடன், அப்பகுதிச் சிறாரின் கல்விநிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
தார்மீக நெறியும் புத்திசாலித்தனமும் சமூகச் சீரழிவின் போது எவ்வாறு திசைகெட்டுப் போகின்றன என்பதை ‘மண்ணைத் தின்று.’ என்ற கதை உணர்த்துகின்றது. ‘ஒரு தோட்டத்துப் பையன்கள் படம் பார்க்கப் போகிறார்கள்’, ‘நாமிருக்கும் நாடே ஆகிய கதைகள் மூலம் தமது பிராந்திய மக்களின் வாழ்க்கை முறையை ஆசிரியர் கிண்டல் செய்கிறார். வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்பதையே ஜோசப் இக்கதைகளைக் கொண்டு வலியுறுத்துகிறார். ‘பாவ சங்கீர்த்தனம்', 'அது' ஆகிய இரண்டு கதைகளும் "கலைமகள்’ பத்திரிகையில்

Page 17
30 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வெளியானவை. அப்பத்திரிகைக்கு எழுதப் பட்டதனாலோ என்னவோ, இக்கதைகளின் சுருதி வேறுவிதமாக அமைந்திருப்பதை நாம் சட்டென்று உணரக்கூடியதாக இருக்கின்றது.
‘கூனல்’, ‘மீன்கள்’ ஆகியன ஒருவித திகைப்புணர்ச்சியை ஏற்படுத்திச் சமூகத்தில் உதிரிப் பாத்திரங்களின் நிலையை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
‘பாட்டி சொன்ன கதை’ ஒரு நல்ல ‘வழிகாட்டல் கதையாக அமைய, ‘சிலுவை’ ஒரு சோகக் கதையாகவும் அமைகிறது.
கூட்டு மொத்தமாகப் பார்த்தால், இத்தொகுதி பயனுள்ள ஒரு தொகுதி என்றே கூறவேண்டும். தெளிவத்தை ஜோசப் ஆற்றல் நிறைந்த, கதை சொல்லும் கலை கைவரப் பெற்று, கருணையுள்ளம் படைத்த, சமூக அவதானி என்று கூறும் அதே வேளையில், ஆய்வறிவு ரீதியாகவும் பகைப்புலனைப் புரிந்து கொள்ளுவாராயின் பெரும் பயன்கிட்டும் என்றும் சேர்த்துக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
தெளிவத்தை ஜோசப்பின் புதிய ஆக்கங்கள், விமர்சனப்பத்திகள், முகவுரைகள் யாவுமே வேறொரு தளத்தில் நின்று மீள ஆராயப்பட வேண்டியவை.
(தினகரன் வாரமஞ்சரி : 20-01-1980)
来

கே.எஸ். சிவகுமாரன் 31
மூன்று மலையக எழுத்தாளர்களின் நேர்த்தியான கதைகள்
பDTத்தளை Gay Top தொகுத்துள்ள ‘தோட்டக்காட்டினிலே’ என்ற புத்தகத்தில் ஒன்பது நல்ல சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. தொகுதிகள் வெளிவந்தால் தான் நல்ல சிறுகதை எழுத்தாளர்களை இனங்கண்டு கொள்ளலாம். பத்திரிகையில் வரும் சிறுகதைகளைப் படிக்கும் வாய்ப்பு விமர்சகர்களுக்கு இல்லாமற் போகலாம். எனவே, எழுத்தாளர்களை இனங்காணத் தொகுப்பு நூல்கள் உதவுகின்றன.
மாத்தளை சோமு, மலரன்பன், மாத்தளை வடிவேலன் ஆகியோர் திறமையுள்ள சிறுகதை ஆசிரியர்களாக இருக்கிறார்கள் என்பதை இந்நூல் வெளியான பின்பே நான் உணரலானேன். யாழ்ப்பாணத்தான், மட்டக்களப்பான், வன்னியான், தீவான், தோட்டக்காட்டான், சோனகன் என்று தமிழர்கள் தம்மையே இனம் பிரித்துப் பேசுவதனாலோ என்னவோ, நமது நாட்டில், நமது மொழி பேசுபவர்களிடையே உண்மையான இனப் பற்று இல்லை எனலாம்.
மலைநாட்டு எழுத்தாளர்களை நாம் உரிய முறையில் இதுவரை சரியாகக் கவனிக்கவில்லை.

Page 18
32 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இதற்கு முக்கிய காரணம் போதிய தொகுதிகள் இல்லாமையே. இலங்கையின் மொத்தச் சனத்தொகையில் ஓரளவு கணிசமான தொகை தமிழ் பேசும் இனத்தவர் ‘தோட்டக்காட்டான்களாகவே' இருக்கிறார்கள். இழிவாகப் பயன்படுத்தும் ஒரு தொடரைத் துணிகரமாக ஆக்க பூர்வமான முறையில் ஒர் ஆக்கத்துறைக்குப் பயன்படுத்திப் பெயரிட்டுள்ள மாத்தளை சோமு, மெச்சத்தக்கவர்.
இக்கதைத் தொகுதியைப் படித்த பின்னர் எனக்கு எழுந்த எண்ணங்கள்:
(1) தொகுப்பாசிரியரின் தொகுப்புத் தலைப்பு, மலை நாட்டு எழுத்தாளர்களின் உள்ளக் கிடக்கையைக் காட்டி நிற்கின்றது.  ேத ரா ட் ட க் க ரா ட் ட (ா ன் க ள் என்றழைக்கப்படுபவர்களிடையே எழுத்தாற்றல் மிக்க மனிதாபிமான கலைஞர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஈழத்தின் மற்றெந்தப் பகுதி எழுத்தாளர்களின் ஆற்றல்களுக்கு எந்த விதத்திலும் தரங் குறைந்தவர்களில்லை.
(2) மலரன்பன், மாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் ஆகிய எழுத்தாளர்கள் பற்றிய விவரங்களையும் குறிப்பிட்டிருக்கலாம்.
(3) மலரன்பனின் "உறவுகள்’ மாத்தளை சோமுவின் ‘நாய்கள் மனிதராவதில்லை மாத்தளை வடிவேலனின் ‘வெட்டு மரங்கள்’ ஆகிய மூன்று

கே.எஸ். சிவகுமாரன் 33
(4)
சிறுகதைகளும் காலதேச வரம்புகளைக் கடந்த அடிப்படை மனித உறவுகளைச் சித்திரிக்கும் நேர்த்தியான கதைகள்.
மாத்தளை சோமு “அவன் ஒருவனல்ல" என்ற கதையில் ஒருவித இலட்சியத் தனிமனித கதாபாத்திர வார்ப்பு தெரிகிறது. இலட்சியத்தைக் குறை கூறவில்லை. ஆனால் இந்த ஒரு மாஸ்டர்தானா அவ்விதமான பண்பு கொண்டவராக இருப்பார். வேறும் ஆசிரியர்களும் முற்பட்டால், அப்பிரதேசக் கல்வி வளர்ச்சிக்கு உதவலாம்தானே? எனக்குப் பாத்திர வார்ப்பு யதார்த்தமாக அமைந்திருப்பதாகத் தெரியவில்லை. ‘நாய்கள் மனிதராவதில்லை’ கதையில் காணப்படும் ஒட்டமும், வேகமும், படிமச் சித்திரிப்பும் நல்ல உத்திகள். புதுமையாக இருக்கின்றன. ஆசிரியரின் ஆற்றல் நன்கு வெளிப்படுகின்றது. ‘லயத்துப் பயல்’ சம்பவங்கள் நடக்கக்கூடியவை. ஆனால் அவற்றை வெறுமையாகச் சித்திரித்தால் மாத்திரம் போதுமா? ஏன் அவ்விதமான அந்நியப்போக்கான உறவு இரு பால்யத் தோழர்களுக்கும் பின்னர் ஏற்பட்டது என்பதை நாமறிவோம். உறவைத் துண்டித்துக் கதாநாயகன் தன் ‘லயத்துக்குச் செல்கிறான். சென்று அவன் எடுக்கும் தீர்மானம் என்ன என்பதைச் சுலோகங்கள் இன்றிக் கோடி

Page 19
(S)
ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
காட்டியிருந்தால் நன்றாகக் கதை முடிந்திருக்கும் என்பது எனது அபிப்பிராயம். மலரன்பன் பார்வதி கதையில் கணவன் கடைசியாக எடுக்கும் நடவடிக்கை வெவ்வேறு விதமாக அமையலாம். கதாசிரியர் காட்டும் வழி அவற்றுள் ஒன்று. ஆனால் ஒரே வழியல்ல. பார்வதியின் தர்மசங்கடம் நமக்குப் புரிகிறது. ஆனால் கற்பு என்றும், நிர்ப்பந்தம் என்றும், அவல நிலை என்றும் சித்திரிக்க வேண்டுந்தானா? புதுமைப்பித்தனின் அம்மாளுவுக்குப் பின் இப்படியாக கதைகள் பல வந்து போய்விட்டன. நீடித்த அனுபவந் தருவனவாகத்தான் அவை இல்லை. “தார்மீகம்’ கதையில் இனவேறுபாடுகளையும் கடந்த மனித உறவு பற்றி கூறப்படுகின்றது. அதே வேளையில் கொழும்பு போன்ற இடங்களைப் பார்க்கிலும் மலை நாட்டில்தான் வகுப்பு வெறியர்களின் கோரச் செயல்கள் பயங்கரமாக இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. நகர்ப்புறங்களில் பெயருக்காகுதல் பொலிஸ் என்று ஏதோ ஸ்தாபனம் இருக்கிறது. தோட்டக்காட்டில் பந்தோபஸ்து குறைவு. ‘உறவுகள்’ - குடும்ப அங்கத்தவர்களுக்கிடையில் உள்ள உறவுகளைப் பணம் தீர்மானிக்கிறது என்பதைக் காட்டுகின்றது.

கே.எஸ். சிவகுமாரன் 35
மாத்தளை வடிவேலனின், ‘புத்தாண்டு புதிதல்ல என்ற கதை நிரந்தரமாகத் துன்பத்தை அனுபவிப்பவர்களின் வைராக்கிய உணர்வைக் காட்டுகின்றது. கூடவே முதுமையானவர்களின் இளகிய மனதையும் காட்டுகின்றது. ‘வெட்டு மரங்கள்’ ‘கட்டுரைப் பாங்காக அமைந்தாலும் சம்பவக் கோவையுடன், அனுதாபத்தை விளைவிக்கும் புதிய பார்வையுள்ள கருத்தை உள்ளடக்கியிருக்கின்றது. ‘கறிவேப்பிலைகள்’ கதையும் நன்றாகத்தான் இருக்கின்றது. ஆனால் இது போன்ற கதைகளை ஜெயகாந்தன் மூலம் படித்ததனாலோ என்னவோ, புத்தறிவோ, புத்தனுபவமோ பெற முடிவதில்லை.
புதிய எழுத்தாளர்கள் வாய்ப்பாடுகளுக்குள் கதைகளின் உள்ளடக்கத்தையும் உருவத்தையும் அடக்காமல், சாமான்யத்திலும் வித்தியாசமானதை இனங்கண்டு கவித்துவமாக எழுத முற்படல் பயன்தரும் என நினைக்கிறேன்.
‘நல்ல இலக்கியங்கள்’ என்று கூறப்படும் பண்டைக்காலம் முதல் இற்றைவரையுமுள்ள உலகப் படைப்புகளைப் படிக்கும் பொழுது வாய்ப்பட்டி லக்கியங்களைப் (உள்ளடக்கத்திலும் சரி) படிக்க மனம் வருவதில்லை. இந்தக் குறிக்கோள் இலக்கியங்கள் ஆழமாகவும் வீச்சுள்ளதாகவும் இருந்தால் வரவேற்கலாம். இல்லாவிட்டால் ‘சமூகப் பணி’ என்ற போலிப் போர்வையில் (சமூகப் பணி என்பதை வலியுறுத்தும் அதே வேளையில்) கற்பனையும்

Page 20
36 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கவித்துவமும் குன்றிய படைப்புகளைக் காரசாரமாகவே விமர்சிக்க வேண்டி ஏற்படுகின்றது.
*தோட்டக் காட்டினிலே தொகுப்பு அதிர்ஷ்டவசமாக அவ்விதம் விமர்சிக்க வேண்டிய தொகுதியாக இல்லை. மாறாக, ஒரு நல்ல தொகுதியாக இருக்கிறது. மூன்று புதிய எழுத்தாளர்களை நாம் இனங்கண்டுகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இத்தொகுதிக்கு அருமையான ஒரு திறனாய்வை க. கைலாசபதி எழுதியிருக்கிறார். இந்நூலில் அது முன்னுரையாகச் சேர்க்கப்பட்டுள்ளது. அதில் அழுத்தமாக விழுந்துள்ள பகுதி “மனித உணர்வுகள் எல்லோருக்கும் பொதுவானவை என்று சிலர் “தத்துவம்’ போதித்தாலும், கூர்ந்து நோக்கினால், இவையும் மனிதரது வர்க்க நிலைகளுக்கும் நிலைப்பாடுகளுக்கும் அமையவே செயற்படுகிறது தெளிவாகும்.”
சுருங்கக் கூறினால் “தோட்டக் காட்டினிலே இதைத்தான் சொல்லாமற் சொல்கிறது.
(தினகரன் வாரமஞ்சரி : 16-03-1980)
来

கே.எஸ். சிவகுமாரன் 37
மு. கனகராசனின் கவினுறு நடை
அட்டை, அச்சமைப்பு, அச்சுத்தாள், அலங்காரம் அத்தனை அம்சங்களிலும் மாத்திரந்தானா (பகவானின் பாதங்களில்) மு. கனகராசனின் கதைத்தொகுப்பு அலாதியாயிருக்கிறது? கதைகளில், கதை சொல்லும் நேர்த்தியில், கவிதை மொழியில் - அனைத்திலுமே ஒரு கவிஞனின் உள்ளத்தையும், ‘கலைநயம்’ என்றால் என்ன என்றறிந்த சமூகப் பிரக்ஞையுள்ள ஒர் எழுத்தாளனின் சிந்தையையும் நாம் காண்கிறோம்.
மு. கனகராசனை நமது சிறந்த சிறுகதை ஆசிரியர்களில் ஒருவராக இதுவரை நமது இலக்கிய வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடத் தவறிவிட்டனர். இத்தொகுப்பு வெளிவரும் வரை கனகராசனின் ஆற்றலை முழுமையாக எவரும் அறிந்திருக்கவும் வாய்ப்பிருக்கவில்லை.
கவிஞன், நாடகாசிரியன், மொழிபெயர்ப்பாளன், கட்டுரையாளன், விமர்சகன் என்றறியப்பட்ட கனகராசன் சிறுகதைத் துறையிற்றான் சிறந்து விளங்குகிறார் எனலாம். அவர் எழுதிய பதினொரு கதைகள் இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவை 1962க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை. நிவேதம்’ என்ற கதையைத் தவிர

Page 21
38 ஈழத்துச்o சிறுகதைகளும் ஆசிரியர்களும்
Jf600607uLu கதைகள் எனக்குப் புரிந்தன. உங்களுக்கும் அப்படித்தானிருக்குமென நம்புகிறேன். புரிவது மட்டுமல்ல, அவை யாவும் அழகாக ஆழமான அர்த்தங்களைக் கவினுறப் பரிவர்த்தனை செய்கின்றன சலனங்களை மீட்டுகின்றன. மீண்டும் மீண்டும் படித்து மகிழத் தூண்டுகின்றன.
நீர்வை பொன்னையன், என்.கே. ரகுநாதன், செ. கதிர்காமநாதன், செ. யோகநாதன் போன்ற படைப்பாளிகளிடந்தான் (அதாவது 1970க்கு முற்பட்ட முற்போக்கு வட்டத்துள்) கலைநயம் அல்லது கலை மெருகு ஏதோ உறைந்து கிடக்கிறது என்று கண்டால், கனகராசனை இதுவரை இனங்காணாமற்போனது போனதுதான். இந்தப் புத்தகம் வந்திராவிட்டால் இக்கதாசிரியர் பற்றி நாம் அறியத் தவறியிருப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக, கடந்த இரு தசாப்தங்களிலும் எழுதிய முற்போக்குச் சிறுகதையாசிரியர்களில் கதைக்கனதியும், கலைப்பிரமாணமும் இணைய எழுதிய சிறந்த படைப்பாளி கனகராசனே என்பதை எவருமே ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதைபற்றியும், ஒவ்வொரு எழுத்தாளரிடமிருந்து விமர்சனத்தைப் பெற்றுத் தமது தொகுப்பிலேயே சேர்த்திருக்கிறார் கனகராசன். அத்தனை பேரும் கனகராசனின் அழகுணர்ச்சியைக் கூறாமலே கூறுகின்றனர். இளங்கீரன், எஸ். பொன்னுத்துரை,

கே.எஸ். சிவகுமாரன் 39
சு. வே போன்ற சிரேஷ்ட படைப்பாளிகள், தெளிவத்தை ஜோசப், லெ. முருகபூபதி, சிவா சுப்பிரமணியம், எம்.எச்.எம். ஷம்ஸ் போன்ற முன்னணி புதிய படைப்பாளிகள், சில்லையூர் செல்வராசன், சபா. ஜெயராசா போன்ற கவிஞர் / விமர்சகர்கள், நீள்கரை நம்பி ஆகியோர் அநேகமாகக் கதைகளின் மையத்தைத் தொட்டுத் தமது உணர்ச்சித்தெறிகளை வியப்புணர்வுடன் வெளிப்படுத்தியுள்ளனர்.
கதைகள் பெரும்பாலும் வளரிளம் பருவத்தினரின் அனுபவங்களையே படம்பிடித்துக் காட்டுகின்றன. ஆனால், வெறும் ‘செக்ஸ்’ எழுத்தாளர்களின் கொச்சைத் தன்மைக்கும், கனகராசன் செக்ஸைக் கையாளும்
விதத்திற்குமிடையிற்தான் எவ்வளவு இடைவெளி!
இக்கதைகளின் விமர்சகர்கள் எவ்வாறு வியக்கிறார்கள் என்பதை வாசகர்களும் அறியச் சில மாதிரிகள்.
G
ஒ. கனகராசன்! அவளை - அவளுடைய முழுமையை எப்படிச் சொல்லிவிட்டீர்கள்’ (இளங்கீரன்), “அசோகமித்திரன் என்ன. கனகராசன்” (நீள்கரை நம்பி), “ஆர்ப்பாட்டமோ, அதிகாரத்தனமோ இன்றி இலக்கியம் செய்கின்றாரே - அதே தோரணை’ (தெளிவத்தை ஜோசப்) “வெறுஞ் சுலோகங்கள் கொண்ட சுவரொட்டிகளாக்கப்படாது நிதானமாகவும் கலை பொதிந்த கவின் காட்சிகளாகவும்” (சபாஜெயராசா),
“புதுப்புனைவாக்கம் வரவேற்கத்தக்கதாய் இருப்பதுடன்

Page 22
40 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ஒர் ஆழ்ந்த சோகஞ்சார்ந்த வியப்புணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது’’ (கே.எஸ். சிவகுமாரன்) “உலகை எழுப்பி உண்மையைப் பார்க்க வைக்கும் மேன்மைக் கலைஞர் வெகுசிலர். அவர்களின் படைப்புகள் தனிரகம். இந்த வெகுசிலரில் ஒருவர் மு. கனகராசன்” (சில்லையூர் செல்வராசன்), “ஒரு மாதிரியான விடயங்களை அருவருப்பு தோன்றா வகையில், நளினமாகவும் குறியீட்டு முறையிலும் சொல்லும் பாணிக்கதையை விரசமில்லாத வகையில் முடித்த L Tš (5 என்பன கருத்தாவின் திறமைக்கு முத்திரையிட்டு நிற்கின்றன’ (சு.வே), “இனக் கலவரத்தைப் பின்னணியாக வைத்து எழுதப்பட்ட ‘தீ’ வெறும் ‘கதை’ அல்ல’ (சிவா சுப்பிரமணியம்), “கதாசிரியரின் தலையீடு இன்றி, முழுக்கதையிலும் கல்யாணிகளின் எண்ணச்சலனங்களே விரவி வருவதனால் பாத்திரங்கள் நினைவிலே பதிகின்றன’ (எம்.எச்.எம்.ஸம்ஸ்), “கதையோட்டம் கைதேர்ந்த கவித்துவத்தைப் பறை சாற்றுகிறது’ (லெ. முருகபூபதி), “அறுபதுகளின் தலைமுறையின் நேர்த்தியான சிறுகதை முனைப்புக்கு மூத்த தலைமுறையின்
99
படைப்பாளியின் ரஸனையே ஆசியுமாம்” (எஸ். பொன்னுத்துரை).
97 Lb Lo T சொல்லக்கூடாது, இத்தனை
ரசனைகளும் உண்மையைத்தான் கூறுகின்றன. வெறும் புகழ்ச்சியில்லை! நீங்களும் படித்துத்தான் பாருங்களேன்!
(வீரகேசரி, வார வெளியீடு : 14-04-1981)

கே.எஸ். சிவகுமாரன் 41
செ. யோகநாதனின் பெண் விடுதலைக் கதைகள்
இன்றைய சமூகத்தில் தமிழ்ப் பெண்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் அல்லது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்குவன போல, செ. யோகநாதன் சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.
அவ்வாறான சிறுகதைகளின் தொகுப்பு ‘கண்ணிர் விட்டே வளர்த்தோம். இத்தொகுப்பில் 14 கதைகள் அடங்கியுள்ளன. ஆசிரியர் 1967க்கும் 1978க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதிய கதைகளே இவை. இவருடைய பிற நூல்களாவன; “யோகநாதன் கதைகள்,’ ‘ஒளி நமக்கு வேண்டும்’, ‘காவியத்தின் மறுபக்கம்’ ஆகியனவாம்.
1960களில் உருவாகிய நல்ல எழுத்தாளர்களில் ஒருவரே யோகநாதன். இவருடைய எழுத்துகளில் சமூகப் பார்வையும், கலைப்பிரக்ஞையும் ஒன்று சேர்வதனால் இவரை ஏனைய சுலோக எழுத்தாளர்களின் பட்டியலில் சேர்க்க முடியாதிருக்கிறது. இவர் வசந்தம் என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.

Page 23
42 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
*கண்ணிர் விட்டே வளர்த்தோம் தொகுப்பிலுள்ள கதைகள் 6) விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றனவாயினும், அடிநாதமாகப் பெண் விடுதலை பற்றியே முரசறையப்படுகிறது.
“மூடு திரையில்” திருமணமாகாத நிலையில் உள்ள ஒருத்தி தனது தந்தையின் ஆதரவுடன் குறைந்த சாதிக்காரன் ஒருவனை நாடிச் செல்கிறாள்.
“பண்பாட்டின் பொய் இருளினுள் புதைந்து கிடக்க விரும்பாத ஒளியை நோக்கித் தானே ஓடினாள்,” என்பது ஆசிரியர் கூற்று. சற்றே மிகைப்பட எழுதப்பட்ட “சொர்க்க பூமியில்” வரும் பெண், நேரடி அனுபவத்தின் பின் சொந்த நாட்டுப் பண்பாட்டின் மகத்துவத்தை உணர்கிறாள்.
ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அழகு, பண்பு, கல்வி ஆகியவை இருந்தும், வறுமை காரணமாக துர் நடத்தையில் ஈடுபடும் பெண் ஒருத்தி அருந்ததி. இன்னொரு அழகான பெண் கல்மிஷமின்றிப் பழகிய காரணத்தைக் காதல் என்று மருண்டு தத்தளிக்கும் ஒருவனின் நிலைமைக்குச் சினிமாவும் பத்திரிகைக் கதைகளும் காரணமாகின்ற என்கிறார் ஆசிரியர். இன்னொரு கதையில் சிங்களப் பெண் தனது வயிற்றைக் கழுவுவதற்காக நாகரிகமான முறையில் ஒருவனுடன் சல்லாபித்துச் சாப்பிடுதல் சித்திரிக்கப் படுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 43
இளமைப் பருவமே இன்றைக்குக் கலாசார அழுக்குகளில் விழுந்து போய்க் கிடக்கையில், அதனால் பாதிக்கப்பட்ட ஒர் இளம் பெண் ஒர் இளைஞனுடன் கடிதத் தொடர்பு வைத்தமைக்காக அவள் தாய் பெரிதுபடுத்துவதைத் தாங்காத அந்த இளம் பெண் உயிர் துறக்கிறாள் மற்றொரு கதையில்.
வேறு சில கதைகளில் குடியேற்றவாத எதிர்ப்பை உணர்த்தும் அனுபவம் புலப்படுகிறது: (பெறுமதியற்ற ஒவியங்கள்). தாழ்த்தப்பட்ட வகுப்புப் பெண்ணினத்தின் எழுச்சி (நேற்றைய அடிமைகள்) பாதிக்கப்பட்டவர் இணைந்து செயலாற்றல் (ஏழை சொல் அம்ப்லமேறும்), மற்றும் ‘ஊனம்’, ‘புதிய நட்சத்திரம். இன்றைய இளைஞர் சிலரின் சீர்கேடுகளைச் சித்திரிக்கையில் ‘வெடிக்காரன்’, ‘கண்ணிர் விட்டே வளர்த்தோம்’ ஆகிய சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துவோரின் ஊழல்களுக்கு எதிராகத் துணியும் போக்கைக் காட்டுகின்றன. “பட்டி மாடு’ கதையில் உடற்பசியும், வர்க்க உதாசீனமும் காட்டப்படுகின்றன.
யோகநாதன் கதைகளில் சமுதாயச் சித்திரிப்பு கலைநயமாக அமைவதைப் பெரும்பாலான கதைகள் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. அதேவேளையில் அவருடைய கதைகள் பெரும்பாலும் நீண்டு போய் விடுகின்றன. குறுநாவல் எல்லைக்கும் போய்விடுகின்றன. இதனால் சிறுகதைக்குரிய சலனங்களை எழுப்பத் தவறி விடுகின்றன என்றாலும்

Page 24
44 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கதையை அவர் சுவைபட எழுதுவதனால் இக்குறைபாட்டை அதிகம் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை.
தவிரவும் கவிதை, சிறுகதை, குறுநாவல், நாவல் போன்றவற்றிற்கு இலக்கணம் வகுக்கவே முடியாத மாதிரி இவற்றின் வளர்ச்சி பல்கிப் பெருகி வருகின்றதல்லவா? செ. யோகநாதன் திறனாற்றல் உள்ள எழுத்தாளர்தான். சொல்லும் செயலும் சிந்தனையும் ஒன்றாகின் அவர் மீதான மதிப்பு இன்னும் கூடத்தான் செய்யும்.
(வீரகேசரி, வாரவெளியீடு : 17-05-1981)
来

கே.எஸ். சிவகுமாரன் 45
கல்லூரி மாணவர்களின் கவித்துவம்
தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி படைப்பிலக்கிய மன்றம் வெளியிட்ட ஒரு சிறுகதைத் தொகுப்பு இவர்கள்’. இச்சிறுகதைத் தொகுப்பு, இளம்பராயத்தினர் உலகில் காணும் புதுமையைக் காட்டி நிற்கிறது.
ஆதவன், சேரன், செந்தில் மோகன், விஜயேந்திரன், ரவி, பாலசூரியன் ஆகிய ஆறு புதிய எழுத்தாளர்கள் ஆரம்ப காலத்தில் எழுதிய சிறுகதைகள் சில இவை. 1975-80 காலப்பகுதியில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் இவை முதற் பரிசு பெற்றனவாம்.
க. ஆதவன்-யாழ் பல்கலைக்கழக மெய்யியல் உதவி விரிவுரையாளர் - கவியரசன் என்ற பெயரில் நவமான நவீனத்துவக் கவிதைகளை எழுதிவரும் உ. சேரன் (மஹாகவியின் புதல்வன்), பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர் - இளவாலை விஜயேந்திரன், குண்டசாலை விவசாயக் கல்லூரி மாணவர் - சொ. செந்தில்மோகன், அ. ரவி, பா. பாலசூரியன் ஆகியோர் பல்கலைக்கழகப் பிரவேசத்தை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள்.

Page 25
46 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இன்னுமொரு தகவல்; ரவி, பாலசூரியன், ‘இவர்கள்’ தொகுப்பாசிரியர் சபேசன் ஆகிய மூவருமே ‘புதுசு’ என்ற புதிய சிற்றேட்டை வெளியிடுகிறார்களாம்.
இத்தொகுதிக்கு கவிஞர், விமர்சகர், விரிவுரையாளர் எம்.ஏ. நுஃமான் ஒர் அறிமுகத்தை எழுதியிருக்கிறார். இவருடைய கணிப்பு பெரும்பாலும் எனக்கு உடன்பாடானதுதான்; என்றாலும் “சிறுகதை அமைப்பைப் பெர்துவாக இவர்கள் எல்லோருமே இலாவகமாகக் கையாண்டுள்ளனர்” என்ற கூற்றை ஆதரிக்க முடியாதிருக்கிறது. உண்மையில் இத்தொகுப்பில் பலவீனமே, இக்கதைகளில் உருவம் சிதைந்திருப்பதுதான். ஆதவன், சேரன், ரவி மூவரும் உள்ளடக்கத்துக்கு இணங்கிய உருவ அமைப்பைக் கையாள, செந்தில் மோகன், பாலசூரியன், விஜயேந்திரன் ஆகிய மூவரும் மனம் போன வாக்கில் கதைச்சாரத்தைச் சொற் சித்திரங்களாக வடிக்க முனைந்துள்ளனர்.
“எதிர் திசையில் மெதுவாக நகர்ந்தது உலகம்” என்று தமது கதையைச் சேரன் முடிக்கிறார். இதற்கு விரிவுரை செய்யும் நுஃமான், “உலகை விட்டு அவன் (கதாநாயகன்) விலகிச் செல்வதற்கான குறியீடாக நாம் அதைக் கருதலாம்” என்கிறார். மாறாக, மனோரதியச் சூழலில் இருந்து விடுபட்டு, உலகுடன் ஒன்றுபட்டு யதார்த்தத்தை எதிர்கொள்ள அவன் தயாராகிச் செல்கிறான் என்றும் நாம் விளக்கம் கொள்ளலாம். இரு

கே.எஸ். சிவகுமாரன் 47
இடங்களில் மாறுபட்ட கருத்தைக் கொண்ட நான், கதைகள் பற்றிய நுஃமானின் ஏனைய கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன்.
ரவி எழுதிய கதையின் கடைசிப்பகுதி அர்த்தமுடையதாகவும், இயல்பானதாகவும் அமைகிறது. கதாநாயகன் தன் மனக்கிளர்ச்சியை எதிரொலிக்கும் வகையில், வீட்டில் சிறு அட்டகாசம் செய்கிறான். ‘அபத்தம் பொருத்தமான தலைப்பும்
din l
ரவி, சேரன், ஆதவன் கதைகள் எனக்குப் பிடித்தவை. ஏனைய கதைகள் வாழ்க்கையில் சுகங்கள், சுமைகள், ஏக்கங்கள், நம்பிக்கைகள், அடாத செயல்கள் போன்றவை பற்றி இன்றைய இளைய தமிழ்ச் சமுதாயம் எப்படி நோக்குகின்றது என்பதைக் காட்டுவன.
இக்கதைகளை எழுதியவர்கள் எல்லோருமே கவித்துவப் பார்வை கொண்டவர்களாகவே தெரிகிறது. எனவே சொற்செட்டு, சிக்கனம் ஆகிய அம்சங்களையும் கவனித்து, சமுதாயத்தை மேலும் 'ஆழமாக’ப் பரிசீலித்து எழுதுவார்கள் என்று நம்ப இடமுண்டு. இத்தொகுப்புக்கு சேரன் அட்டை ஓவியம் தீட்டியிருக்கிறார். அதன் அர்த்தமோ, கலையம்சமோ எனக்குப் புரியாதது அவர் குற்றமில்லை. இதுவும் ஒரு குறியீடோ?
(தினகரன் வாரமஞ்சரி : 10-01-1982)
来

Page 26
48 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முல்லை மணி காட்டும் வார்த்தையின் மகத்துவம்
முல்லைமணி என்ற புனைபெயரில் எழுதும் வி. சுப் பிரமணியம் நகைச்சுவை நிரம்பிய பல சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அவருடைய கதைகளின் தொகுப்பான “அரசிகள் அழுவதில்லை’ என்ற நூலை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. அக்கதைகளில் ஒன்றின் பெயர் ‘உறவுகள்.’ அக்கதையிலே கமலா என்றோர் ஆசிரியை வருகிறாள். அவளுக்குச் சேகர் என்றொரு காதலன் இருந்தான். அவன் அவளை இவ்வாறுதான் ஒருமுறை வர்ணித்தான் -
“விலாட்டு மாம்பழக் கன்னம். கருவலைக் கூந்தல். ஒளிக்கீற்று நெற்றி. தயிர் வண்ணப் பல்வரிசை.”
மேற்கண்ட உருவகங்களை ஒருவிதத்தில் புதுப் புனைவானவை எனலாம். ஒர் எழுத்தாளனின் கற்பனைத் திறனை நாம் பெரும்பாலும் புறக்கணித்துவிட்டு அவன் கூறும் செய்தியையே கருத்திற்கொண்டு வந்துள்ளோம். கருத்துடன்

கே.எஸ். சிவகுமாரன் 49
கற்பனையும், கவித்துவமும் சேரின் புத்தாக்கம் பிறக்கிறது.
முல்லை மணியின் கதைகளில் கருத்து இருக்கிறது. கவித்துவமான கற்பனையும் இருக்கிறது. ஆயினும் உணர்வைக் கிளறும் உணர்ச்சிப் பரிவர்த்தனை மழுங்கி நிற்க, அறிவார்ந்த பகுப்பு முறை வியாக்கியானம் மேலெழும்பித் தளம்புகிறது. இது பிழையல்ல. அதேசமயம் ஒர் ஆக்கப் படைப்பு உணர்ச்சியையுந் தழுவிச் சென்றால் தான் நிறைவு ஏற்படுகிறது.
முல்லைமணியிடம் பாராட்டத்தக்கதாகக் காணப்படும் பண்பு, செட்டுச் செட்டாக நிகழ்ச்சிகளைக் கோத்துச் செல்லும் பாங்கு. ‘வழ வழா கொழ கொழா’ வார்த்தைகளைத் துருவித்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவிற்கு அவர் “வார்த்தையின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்.
முல்லைமணியின் கதைகளைப் பத்திரிகை ரகக் கதைகள்’ என்று எவ்வாறு ஒதுக்கி விட முடியாதோ, அவ்வாறே அவற்றை வாழ்க்கையின் ஆழமான சித்திரிப்புகள் என்று ஏற்றுவிடவும் முடியாது. அவருடைய கதைகள் அவதானிப்புகளாக மனித சமூக பிரக்ஞை கொண்ட ஒர் எழுத்தாளரின் அக்கறைகளாக அமைகின்றன என்று நாம் கணித்துவிடலாம்.
*அரசிகள் அழுவதில்லை’ என்ற இக்கதைத் தொகுப்பிலே, இக்கதைகள் பற்றிய இரண்டு

Page 27
50 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
விமர்சனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. விமர்சகர்களாகிய க. கைலாசபதியும், எழுத்தாளர் ‘அன்பு மணி’ என்ற இரா. நாகலிங்கமும் தத்தமது மட்டங்களில் இருந்து விமர்சித்திருக்கிறார்கள். சொல்லாமலேயே கைலாசபதியின் விமர்சனம் ஆழமுடையதாக இருக்கிறது. அன்புமணி இலக்கியத்தை இலக்கியமாக மாத்திரமே பார்க்கிறார். இலக்கியம் வாழ்க்கையைப் பிரதிபலிப்பது, வாழ்க்கையை விமர்சிப்பது வாழ்க்கையைப் பண்படுத்துவது என்பது அவருடைய அளவுகோல். கைலாசபதியின் அளவுகோலில் அடிநாதமாக ஒலிப்பது சமுதாயவியல் நோக்கும், வரலாற்றியல் நோக்கும் உள்ளடங்கிய பல்நெறி சார்ந்த பார்வையாகும்.
கதையை கதையாக மாத்திரம் கூறினாற்போதும் என்று எண்ணும் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் ஒரு ரகத்தினர். முல்லைமணியும் அன்புமணியும் இந்த விதத்தில் ஒற்றுமை கண்டனர். வாசகரும் பல ரகத்தினர். எனவே இரசனை என்பது ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.
எனது இரசனையை எனது பார்வையில் தெரிவிப்பதாக இருந்தால், சில கதைகள் பற்றி இவ்வாறு தான் குறிப்பிடுவேன் - அரசிகள் அழுவதில்லை - மட்டக்களப்புப் பகுதி மீனவரின் பேச்சு மொழியினை அறிமுகப்படுத்துகிறது. மேலைப் பண்பாட்டைத் தழுவும் மத்தியதர வாழ்க்கைப் போக்கைக் கிண்டல் பண்ணுகிறது. வறுமையிலும் செம்மையான

கே.எஸ். சிவகுமாரன் 51
உண்மையான தாம்பத்திய வாழ்வை, கீழ் மட்டத்தினர் அனுபவிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் பந்தங்கள், பா சங்களை விட்டு உள்ளத்தை மரமாக்கிக் கொள்கின்றனர். ஏழைகளால் அது முடிவதில்லை. இவையே ஆசிரியரின் பார்வை.
*பிணைப்பு’ - நிலப் பிரபுத்துவ மரபில் வந்தோர், நிதர்சனத்தை மறந்து, நிலம் தம்மோடு கூடப் பிறந்தது என்ற கற்பனையில் திளைத்துத் தமது மண்ணாசையை வெளிப்படுத்துகின்றனர் என்பதற்கு இக்கதை சான்று. கிராமியப் பண்பாட்டை இக்கதையில் காணலாம்.
‘துணை’ - புத்தகப் பூச்சி நடைமுறை வாழ்க்கையில் கஷ்டப்படுவார் என்பதைக் காட்டும் கதை.
‘வீட்டில் நடந்தது’ எங்கு, காலத்தின் போக்குக்குத் தழுவியுட்படாத மரபு நிலவுகிறதோ அங்கு அதிர்ச்சி காணக் கிடைக்கும் என்பதைக் காட்டும் கதை. ‘தம்பையர் வெறுப்பது காதல் கலியாணம். விரும்புவது முதலாளித்துவ சமுதாயம். எது நடக்கக்கூடாது என்று கருதினாரோ அது நடந்துவிட்டது அவர் வீட்டில்’ என்று ஆசிரியர் கதையை முடிக்கிறார். ኦ!፡፡ “ஐராங்கனி' - தமிழ் தெரிந்த சிங்களப் பெண்ணைத் தமிழன் ஒருவனும், முஸ்லிம் ஒருவனும் காதலிக்கின்றனர். அவளோ அவர்களைச்

Page 28
52 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சகோதரர்களாகக் கருதுகிறாள் - அதுவல்ல பிரதானம். ஆசிரியர் அப்பாத்திரம் மூலம் சொல்லவரும் கருத்து முக்கியமானது ஐராங்கனி கூறுகிறாள் - “எமது ஈழத் திருநாட்டில் ஏற்பட்ட துன்பங்களுக்கெல்லாம் நம் நாட்டிலுள்ள பல்வேறு இனத்தவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாதது தான் காரணம். இனக் கலவரத்தில் எனது தமையனைப் பறிகொடுத்த பின்னர் தான் எனக்கும் இந்தப் புத்தி வந்தது. தமிழ்ப் பண்பாட்டிலே வாழ்ந்தவன் தமிழன் எனத் தவறாக இனங் காணப்பட்டுக் காடையரால் கொல்லப்பட்ட சம்பவம் என் மனதிலே ஆறாத புண்ணை ஆக்கியிருக்கிறது. இப்படியான நிகழ்ச்சிகள் இன்னும் நம் நாட்டில் நடைபெற வேண்டுமா? இதைத் தடுக்கக் கூடியவர்கள் நிச்சயம் அரசியல்வாதிகளல்ல. பல்வேறு சமூகத்தினரையும் புரிந்து கொள்ள நான் எடுத்துக் கொண்ட முயற்சியின் அங்கம் தான் எனது தமிழ்ப்படிப்பும் உங்கள் நட்பும்.” இக்கதையில் போராதனைப் பல்கலைக்கழகச் சூழலை ஆசிரியர் அறிமுகப்படுத்துகிறார்.
‘உறவுகள்’ - "அவள் வேண்டியது தன் அன்பைச் சொரிய ஒரு ஜீவன் - அவள் மீது அன்பைச் செலுத்த ஒரு ஜீவன்” - கதாநாயகி ஒரு “கொம்பானியனை’யே நாடினாள். காதலனையோ கணவனையோ அல்ல என்பது கூறாமல் கூறும் செய்தி. шоп Cupci) கதைகளினின்றும் வேறுபட்டு நிற்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் 53
“கிராமங்கள் கற்பழிக்கப்படுகின்றன” - கதைத் தலைப்பும், ஆசிரியர் கூற்றும் காட்டுவதைப் பார்த்தால் கிராமங்கள் நகர்ப்புறங்களாக மாறுவது வரவேற்கப்படவில்லை. இக்கதையில் வரும் பாத்திரம் பசுமை நினைவுகளுக்கு ஏற்ப யாவுமே முன்னர் இருந்தது போலவே இருக்கும் என்று நம்பி ஏமாறுகின்றான். யாவும் மாற்றத்திற்கு உட்படுவது வளர்ச்சியின் அறிகுறியன்றோ?
‘அவளும் தோற்றுவிட்டாள்’ - யானை பிடிக்கும் அனுபவத்தை அறிமுகப்படுத்துகிறது.
‘என்ன அநியாயம் சேர்’ - நல்ல நகைச்சுவையுடன் கிராமிய பாத்திரத்தை அறிமுகப்படுத்துகிறது. இரண்டு பெண்டாட்டிக் காரரின் திண்டாட்டம் விவரிக்கப்படுகிறது.
‘காத்திருக்க வேண்டும்" - மேனாட்டுக் கதையொன்றைப் படித்த அருட்டுணர்வினால் எழுதப்பட்டது போலும்.
(தினகரன் வாரமஞ்சரி : 28-03-1982)
来源

Page 29
54 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
எஸ் பொன்னுத்துரையின் பல்துறை ஈடுபாடு
தலைசிறந்த ஈழத்து எழுத்தாளர்களுள்
ஒருவரான எஸ். பொன்னுத்துரையின் இத்தொகுப்பில் இடம்பெற்ற கதைகளில் “தேர்’ என்ற கதை சிறப்பானது. உல்லாசப் பேர்வழி யொருவரின் முதுமையையும் அவரின் நினைவுகளையும் சித்திரிக்கிறது. யாழ்ப்பாணத்தான் தனது சூழலில் சராசரி வாழ்க்கையை எவ்வாறு நடத்துகிறான் என்பதைக் குறியீடாக உணர்த்தி நிற்கிறது.
‘அம்பு’ என்ற கதை, சோமாதேவி என்ற வரலாற்றுப் பாத்திரத்தின் காமவிழிப்புணர்வை எடுத்துக் காட்டுகின்றது.
அரைவேக்காட்டு அரசியல்வாதிகளையும், ஆய்வறிவாளர்களையும் ஏளனமாகச் சித்திரிக்கின்றது ‘அணி’ என்ற கதை.
“வேலி'யில் கிராமத்துச் சூழலில் விஸ்வாசமுள்ள மனைவி யொருத்தியின் கற்புநெறி காட்டப்படுகின்றது.

கே.எஸ். சிவகுமாரன் 55
முஸ்லிம் விதவையொருத்தி தன் கணவனின் நல்லடக்கத்தின் பின் சிந்திக்கும் போக்கை முஸ்லிம் பேச்சு வழக்கினைப் பயன்படுத்தி அழகாக ‘ஈரா’ என்ற கதையில் எழுதியுள்ளார். நற்பண்பு வாய்ந்த ஒரு பெண் தனது கணவனிடமிருந்து விவாகரத்துக் கோருவதுபற்றி மட்டக்களப்புப் பேச்சு மொழியில் சிந்திப்பதாக ‘விலை’ என்ற கதை அமைகிறது. இந்து, பெளத்த, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களின் தத்துவங்களை விளக்குவனவாகச் சில கதைகளும் இடம் பெற்றுள்ளன.
(தினகரன் வாரமஞ்சரி : 06-06-1982)
来

Page 30
56 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
டொமினிக் ஜீவாவின் வாசகருடனான உரையாடல்
வாழ்வின் தரிசனங்கள் தொகுப்பில் 12 கதைகள் இடம் பெற்றுள்ளன. எழுத்தாளர் ஜீவாவின் கருத் தோட்டமும் வெளியிடப்பட்டுள்ளது. “அழுத்தமான மனப் பிரிவுகளை (மனப்பதிவுகள்?) ஏற்படுத்தும் சிருஷ்டிகளே காலப்போக்கில் நின்று நிலைத்து வாழ்ந்து வரக்கூடும் என்ற அசைக்க முடியாத மன நம்பிக்கை உள்ளவன் நான். கூர்மையான மனச்சாட்சி உள்ளவர்களின் இதயங்களில் ஒரு மின்னல் சுடரொளியைத் துடிக்க வைக்கும் ஆற்றல் சிறுகதைகளுக்கு இருக்கவேண்டும் எனப் பெரிதாக அடிக்கடி ஆசைப்படுபவன்’ என்று கூறும் ஆசிரியர் டொமினிக் ஜீவா, “கதை என்பதே ஒர் உள்ளடக்கம் தான். இன்றைய சமுதாயத்தின் மனித மனங்களின் உணர்வுகளை, முக்கிய பிரச்சினைகளைப் பற்றி இரசிகர்களுடன் உரையாட இந்த உத்தி முறை பயன்படுத்தப்படுகிறது. யார் இந்த உத்திமுறைகளைக் கலை நுணுக்க வேலைப்பாடுகளுடன் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறாரோ அவரே சிறந்த படைப்பாளி எனக் கணிக்கப்படுகிறார்’ எனவும் கூறியிருப்பதை அவதானிக்க வேண்டும்.

கே.எஸ். சிவகுமாரன் ... । 57
இந்தப் பின்னணியில், அவருடைய கதைகளைப் படிக்கும் பொழுது, வாசகருடன் உரையாடும் உத்திகளை ஜீவா சுவாரஸ்யமாகக் கையாள்கிறார் எனலாம். இந்த சுவாரஸ்யமே அவருடைய ‘கலைநயம்’ என்பேன்.
மார்க்சிய சொற் பிரயோகத்தில் கூறுவதாயிருந்தால், பூர்ஷ"வா வாழ்க்கையை ஒரு புரொலிட்டேரியன் எவ்வாறு பார்க்கிறான் என்பதை இக்கதைகள் காட்டி நிற்கின்றன.
மத்தியதர நாகரிகப் போர்வையணிந்த பிச்சைக்காரன் (இந்நாட்டு மன்னர்கள்) கதை; இனக்கவர்ச்சியால் மனதைப் பறிகொடுத்த மேலிடத்துப் பெண், காதலன் கண்ணிழந்தும் ஏறிட்டுப் பார்க்காள் (நீர் மேல் எழுத்து) என்று கூறவரும் கதை; சுயநலத்துக்கும் மேம்பாட்டுக்குமாகப் பேரினவாதம் பேசும் மேலிடத்தார் கதை (கிடந்தான் அவன்); இயலாமை காரணமாகப் பெருநகர பூர்ஷ"வா ஏமாற்று முறைகளை பிராந்தியப் பிரகிருதிகளும் பின்பற்றுதல் (உவர்த்தரையில் களைச் செடிகள் பூக்கின்றன); பள்ளத்துச் சிறுவனின் இதய சுத்தியுடன் மேட்டுக் குடியினரின் செருக்கை ஒப்பிடும் (வாழ்வின் தரிசனங்கள்) கதை; மத்திய தர வர்க்கத்தினரின் தந்திரம் மேலோங்குகையில் அவர்களிடையே காணப்படும் சாதிப்பேராபிமானம் சிதைந்து விடும் (உண்மையின் கால்கள்) என்ற கதை, மத்தியதர வர்க்கத்தில் பெண்கள் நாகரிகமாகத் திருடுதல் பற்றிய

Page 31
58 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
(சமூகப் பொம்மைகள்) கதை; காசுக்காகக் கீழ் சாதிக்காரனோடும் ஒட்டும் உயர்சாதிக்காரன் (பணச் சடங்கு) கதை; தப்பும் தவறும் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாது, அதைச் சுட்டிக் காட்டியவன் அம்பட்டன் என்பதனால் அவன் மீது அசூசை கொள்ளும் வாத்தியாரின் (தப்புக் கணக்கு) கதை; கிராமத்தவர்கள் வாய் சவால் களாலும் , அடா பிடித்தனங்களாலும் (வெங்காயப் புழு) எடுபட்டுப்போகும் கதை; பரவணிக்குப் பரவணி’ வர்க்க நலன் ஊறிப்போயிருக்கும் (ஷணம்) என்று கூறும் கதை ஆகியவையும் முதற் கதையான ‘சக்கரம் சுழன்றது’ என்ற கதையும் டொமினிக் ஜீவா சிறுகதை ஆசிரியராக, அவர் எவ்வாறு கணிக்கப்படலாம் என்பதைக் காட்டுகின்றன. W
ஜீவாவும் ஏனைய எழுத்தாளர்கள் போல் நாவல் எழுதும் பொழுது, அவரது கலைத்திறன் நன்கு பளிச்சிடும் என எதிர்பார்க்கிறேன். ‘வாழ்வின் தரிசனங்கள்’ என்ற தொகுதியைக் கருத்துக்கு எடுத்துக்கொள்ளும் பட்சத்தில், அவரும் ‘கலைநயமாக எழுதும் ஒரு முக்கிய சிறுகதை எழுத்தாளர் தான் என்பதை மறுப்பதற்கில்லை.
(தினகரன் வாரமஞ்சரி : 23-05-1983)
来源

கே.எஸ். சிவகுமாரன் 59
நாகூர் எம். கனியின் கொழும்பு முஸ்லிம்களின் படப்பிழப்பு
t
துTரத்துப் பூபாளம் தொகுப்பிலே 12 கதைகள் இருக்கின்றன. இக்கதைகளை ஆசிரியர் 1967 ஆம் ஆண்டிற்கும் 1982 ஆம் ஆண்டிற்கும் இடையில் எழுதியிருந்தார். சுமார் 15 வருட காலத்திலே சிறுகதை எழுதும் அனுபவத்தை அவர் படிப்படியாகப் பெற்று வந்துள்ளார். இவருடைய ஆரம்பகாலக் கதைகளில் சிறுகதைக் கட்டமைதி மெருகு பெறவில்லை. ஆனால் அண்மைக் காலங்களில் அவர் எழுதிய கதைகளைப் படிக்கும் பொழுது சிறுகதைக் கலையில் அவர் போதிய பரிச்சயம் பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது.
நாகூர்கனி இத்தொகுப்பு மூலம் ஒரு சமூகப் பணியைச் செய்துள்ளார். அதாவது கொழும்பு வாழ் இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கைக் கோலங்களை ஏனைய சமூகத்தினருக்குத் தமிழ்மொழி மூலம் அறிமுகஞ் செய்திருக்கிறார். கூடவே அரபு மொழிச் சொற்களையும் பொருத்தமாகக் கையாண்டிருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் உண்மையான இஸ்லாமிய நெறிகள் சிலவற்றை விளக்கும் பொருட்டுக்

Page 32
60 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கதைகளைப் புனைந்திருக்கிறார் என்பதைவிட நாளாந்த வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதைகளுடாக இஸ்லாமிய நெறிகளை இனங் கண்டுள்ளார் எனலாம். அந்த விதத்தில் ஒரு சில இஸ்லாமிய இலட்சியங்களைப் பிரபல்யப்படுத்த “சிறுகதை’ என்ற இலக்கிய வகையை கனி தேர்ந்துள்ளார் எனலாம்.
அதே சமயம் இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய சபா. ஜெயராசா கூறியிருப்பதும் அவதானிக்கத்தக்கது.
“இஸ்லாமியப் ι ισόοτ ιμπ (5) தோய்ந்த எழுத்தாக்கங்கள் இந்நாட்டின் ஏனைய பண்பாடுகளுக்குரிய பொதுவான பிரச்சினைகளையும் மூலகங்களையும் அணுகி எழும்பொழுது அவை ஏனைய பண்பாடுகளுக்குமுரிய பொதுச் செல்வங்களாகி விடுகின்றன.’ இவ்வாறு முன்னுரையாசிரியர் கூறியிருப்பது போல நாகூர் எம். கனியின் 'தூரத்துப் பூபாளம்’ என்ற இத்தொகுப்பிலே இன்றைய சமுதாய வாழ்க்கையே படம் பிடித்துக் காட்டப்படுகிறது. இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளிலே சகலரும் முஸ்லிம் பாத்திரங்கள்தான். இஸ்லாமியத் தத்துவங்களை விளக்குவதற்கு உதவும் பாத்திரங்கள்தான். அதே சமயம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் பலவித இன்னல்களும் நாம் வாழும் முழுச் சமுதாயமும் எதிர்நோக்குபவைதான்.
இவருடைய கதைகள் யாவுமே இஸ்லாமிய நெறிக்கு உட்பட்ட முற்போக்குக் கதைகள் தாம்.

கே.எஸ். சிவகுமாரன் 61
கதைகள் பாராட்டும்படியான கருத்துக்களை உள்ளடக்கியுள்ளன. மைமுனா ஒரு. என்ற கதையை எடுத்துக்கொள்வோம். இக்கதையிலே அனாதரவான ஒர் ஏழை முஸ்லிம் தாயின் முற்போக்கான சிந்தனைகள் வெளிப் படுத்தப் படுகின்றன. அவளுடைய சிந்தனைகளை இஸ்லாமிய வரலாற்றிலிருந்தே ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அந்தத் தாயார் ஒரு கட்டத்திலே கணக்காளர்களுக்கு இலவசமான பயன்தரக்கூடிய ஆலோசனையையும் தெரிவிக்கிறார். பணக்காரர் தம்மிடம் குவிந்திருக்கும் பணத்தை முதலீடு செய்து முஸ்லிம் விதவைகளுக்கென ஒரு கைத்தொழில் பேட்டையை உருவாக்க வேண்டும் என்பதும், முஸ்லிம் பெண்களே அதனை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் கூறிய ஆலோசனை செயற்படவில்லை. வாழ வழியில்லையே என்ற ஆறாத்துயரினால் இரத்த அமுக்கம் ஏற்பட்டு இறந்து விடுகிறாள். இதுதான் கதை. அபரிமித செல்வம் இருப்பவர்கள் இல்லாதவருக்குக் கொடுத்துதவுவது ஒரு சமுதாயக் கடமை என்பதை ஆசிரியர் மறைமுகமாகத் தெரிவிக்கிறார். உடன் நிகழ்காலச் சமுதாயத்தை சித்திரிக்கும் மற்றுமொரு சிறந்த கதை “நான் ஒரு தத்துவமானேன். மத்திய கிழக்கிலே வேலைவாய்ப்புத் தருவதாகக் கூறி ஏய்த்துப் பிழைக்கும் ஏஜண்டுகளின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துகிறது இக்கதை. அதேசமயம் ஏமாந்த சோனகிரி ஒருவரையும் நல்ல முறையிலே அறிமுகப்படுத்துகிறது. கதையினூடே ஒரு பச்சாதாப உணர்வு பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

Page 33
62 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இக்கதை எழுதப்பட்ட முறையும் வரவேற்கத்தக்கதாய் அமைந்துள்ளது.
மத்திய கிழக்குக்குச் சென்று உழைத்து வந்தாலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சமுதாயம், பெண்களை வாழ விடுவதில்லை என்பதை ‘அரங்கேற்றமா? நாடகமா?’ கதையிலே ஆசிரியர் எடுத்துக் கூறுகிறார். பர்ஷானா என்ற ஒரு பெண் கடல் கடந்து சென்று உழைத்து வந்தாலும், லாபம் பெறாத மேகமாக, பிறருக்காக மழைபொழியும் கருவியாக மாறுகிறாள். இக்கதையிலும் உடனிகழ்கால வாழ்க்கைக் கோலங்கள் சித்திரிக்கப்படுகின்றன.
‘கடன் இல்லாத ஹஜ்’ என்ற கதையும் இஸ்லாமியத் தத்துவத்தை விளக்கும் கதையாகும். கடனாளியாக ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதை விட அந்த யாத்திரையைச் செய்யாமல் இருப்பதே மேல் என்ற கருத்து வெளிப்படுத்துகிறது.
இஸ்லாமிய நெறிகளை வலியுறுத்தி விளக்கம் கொடுக்கும் மற்றொரு குறிப்பிடத்தக்க கதை “கீழ் வானில் ஒரு சூறைக்காற்று. அபரிமித உழைப்பு ஏழைகளுக்குச் செல்கையிலுங்கூட பயனுடையதாக, வறியவர்களில் ஒருவருக்கு முழுமையாகச் செல்லல் நல்லது என்ற கருத்துப்பட இக்கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ‘தூரத்துப் பூபாளம்’ என்ற கதையிலே நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்கள் சீர்குலைந்து நவமான சிந்தனைகள் இளைஞர்கள் மத் தி யி ல் எ மு வ ைத கதா நா ய கி யி ன் அனுபவத்திலிருந்து ஆசிரியர் காட்டுகிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 63
இத்தொகுப்பிலே மிகவும் சிறப்பாக அமைந்த கதை 'ஜிலேகா கலைகா. மிக மிக நன்றாக எழுதப் பட்டுள்ளது . இதன் உள்ள டக் கர். வரவேற்கத்தக்க - பாராட்டத்தக்க ஒன்று. “பாய்’ (Bhai) சமூகம் பற்றிய பல செய்திகளை இக்கதை மூலம் நாம் அறிகிறோம்.
“ஓர் இஸ்லாமிய எண்ணத்தின் நடைமுறை இதோ நடந்து போய்க் கொண்டிருக்கிறது” என் , கதாநாயகி சுலோகாவை விபரித்துக் கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
சகோதரத்துவம், சமத்துவம் போன்றவற்தை, வலியுறுத்தும் இஸ்லாத்தைத் தழுவினாலும் , அம்மதத்தில் இருப்பதைச் சுட்டிக் காட்டி முற்போக்கான ஒரு வழியை இக்கதை மூலம் ஆசிரியர் காண்பிக்கிறார்.
இக்கதை பற்றிய விளக்கமும் சேர்க்கப் பட்டிருப்பது பயனுடையதாக இருக்கிறது. மேமன் இனப் பெண் முற்போக்கான சிந்தனை கொண்டவள். ஒரு சோனகனை மணம் முடிக்க முன்வருவதை இக்கதை கூறுகிறது. சிறுகதைக்குரிய உருவம் இக்கதையில் நேர்த்தியாய் வந்து அமைகிறது.
‘ஓர் இதயம் அழுகிறது’ என்ற கதையிலே, ஏழ்மை காரணமாக தான் காதலித்த பெண்ணை மணம் முடிக்க இயலாது போன ஒர் அச்சுக்கோப்பாளனின் 'கதை கூறப்படுகிறது. குடும்பச் சுமை காரணமாக

Page 34
64 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ஓயாது உழைத்துத் தங்களையே வருத்திக் கொள்ளும் எத்தனையோ ஏழைக் குடும்பங்களின் சோகக் கதைகளில் இதுவும் ஒன்று.
“வெள்ளை போலும் நிறத்தான்’ என்ற கதையிலும், இஸ்லாம் மூலம், வெள்ளை நிற உடைகளை முஸ்லிம் பெண்கள் அணியும் உண்மை புலப்படுத்தப்படுகிறது.
வழக்கமாக 69 (5 பெண்ணைத்தான் ஒவியத்துடன் ஒப்பிடுவார்கள். ஆனால் 'அவன் ஓர் ஓவியம்’ கதையில் ஆசிரியர் ஒர் ஆணை ஒவியமாக்குகிறார். “இஸ்லாமிய சமுதாயத்தில் ஓர் உண்மை முஸ்லிம் தோன்றிவிட்டான். இருண்டவானில் தம்பிக்கை நட்சத்திரம் உதித்துவிட்டது. எத்தனையோ ஏழைக் குடும்பங்களின் மணவாழ்வுக்கு ud fkas nrs விளக்கொன்று தூண்டப்பட்டுவிட்டது. அந்த விளக்கொளியில் அவனது எண்ணங்கள் சுவரில் சிறிய சித்திரமாக ஏன் அவனே ஓர் ஓவியமாகத் திகழ்கின்றான். ஒவியத்திற்கு உயிர் வருமா? பூரண வாழ்க்கைத் திட்டத்தைக் கொண்டுள்ள ஒ. முஸ்லிம் சமூகமே, ஒவியத்திற்கு உயிர் தருவாயா? தராவிட்டால் அவன் என்றும் உயிரற்ற ஒவியந்தான். என்று கதையை முடிக்கிறார் ஆசிரியர்.
கதை ஒரு முற்போக்கான எண்ணங்கொண்ட முஸ்லிமின் முன்மாதிரியான செயல்பற்றியது. அந்த விதத்தில் இக்கதையின் உள்ளடக்கத்தை நாம் வரவேற்கிறோம். கதை யதார்த்தமாகச் சூழலைச்

கே.எஸ். சிவகுமாரன் 65
சித்திரிக்கிறது. சம்பாஷனைகள் இயல்பாக அமைகிறது. அதேசமயம் கதையின் கட்டமைதி இறுக்கமாக இல்லை, தர்க்கரீதியான முடிவுக்கு வாசகர் வரும் விதத்தில் கற்பனைச் செறிவைக் காட்டாமல் வியாக்கியானம் தந்து எழுதுவது தவிர்க்கப் பட்டிருக்கலாம். எனவே உருவக் குறைபாடுடைய கதை என்று இதனைக் குறிப்பிடலாம். உள்ளடக்கச் சிறப்புக்கேற்ப உருவமும் இணைந்திருக்குமாயின் இக்கதை மேலும் பாராட்டைப் பெற்றிருக்கும்.
‘மூம்டாஸ்’ என்ற கதையும் இறுக்கமாகச் செப்பனிடப் பட்டிருக்குமாயின் கனதி கூடியிருக்கும். ‘சிறுகதை’க்குத் தேவையற்ற பகுதிகளை வெட்டிச் சரி செய்துவிட்டால், ஒரு நல்ல கதையிது. இந்தக் கதையில் ஒரு முஸ்லிம் பெண்ணின் நற்பண்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கொடிய நோய்க்கு அவள் பலியாகாமல் இருந்திருப்பாளாயின், அவள் மைத்துனனுக்கு அருமையான மனைவியாக இருந்திருப்பாள். இக்கதையிலே நாயகன் கூட ஒருவித இலட்சியத்துக்காகத் தனது சுயநலனைத் தியாகம் செய்து தான் அண்டி வாழ்ந்த மாமன் மாமிக்கு உதவுகிறான். அப்படியிருந்தவன் தன் மைத்துணி இறந்தபின் நடைப்பினமாகிறான். இதுதான் கதை. கூட்டு மொத்தமாகப் பார்த்தால் 'தூரத்துப் பூபாளம்’ அண்மையிலே வெளிவந்துள்ள நல்ல சிறுகதைத் தொகுப்புகளில் ஒன்று எனலாம்.
(வீரகேசரி வாரவெளியீடு : 28-08-1983)
米

Page 35
66 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முத்து ராசரத்தினத்தின் வறிய கதாபாத்திரங்கள்
சிலந்தி வயல் தொகுப்பில் இடம்பெற்ற பல கதைகளில் அன்றாட வாழ்விற்கே அல்லற்படும் வறிய மக்களின் துன்ப நாடகங்கள் சித்திரிக்கப்படுகின்றன. ஐஸ் கிரிம் விற்பவன், கடலைக்காரன், அச்சுக்கோப்பவன், அரிசியாலைத் தொழிலாளி, வேலையற்ற ஆனால் கலையில் பிடிப்புக் கொண்ட குடிகாரன், மத்திய தரத்தினரின் வீடுகளில் பணிபுரியும் ஹரிசனப் பெண்கள் போன்றவர்கள் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள். காமம், நொருங்கிய இதயங்கள், சமூக சமநிலை தளம்பல் போன்றவை கதைகளில் அடி நாதம்.
இக்கதைகளை எழுதிய முத்து ராசரத்தினம் ஒரு தொழிலாளியாக இருந்தவர். அச்சுக்கோத்தவர். வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் தனது சொந்த அனுபவங்களை எழுத்தில் வடித்திருக்கிறார் எனலாம். கதைகளில் உள்ளடக்கம், முக்கியத்துவம் அவதானிக்கப்படும் அதே வேளையில், உருவ அமைதியில்லை என்பதையும் குறிப்பிட வேண்டும். அனேகமாக எல்லாக் கதைகளும் தன்மை ஒருமை நிலையில் நின்று எழுதப்பட்டுள்ளன. இவரைப் பற்றிய அண்மைக்கால விபரங்கள் எதுவும் தெரியவில்லை.
(தினகரன் வாரமஞ்சரி : 15-05-1983)

கே.எஸ். சிவகுமாரன் 67
க. தணிகாசலத்தின் வாழ்க்கைச் சொற்சித்திரங்கள்
1974க்கும் 1988க்கும் இடையில் எழுதப்பட்டு, யாழ்ப்பாண இலக்கியச் சிற்றேடாகிய தாயகம் பத்திரிகையில் பிரசுரமான கதைகளின் தொகுப்பு பிரம்படி, இக்கதைகளை எழுதியிருப்பவர் நன்கு பிரபல்யம் பெறாத ஒர் அற்புதமான சிறுகதை எழுத்தாளர். ‘அற்புதம்’ என்று கூறுவது ஏனெனில், ஆசிரியர் தாம் கூற வருவதைத் தெளிவாகவும் கலை யுணர்வுடனும் நேரடியர்கவும் யதார்த்தமாகவும் கூறி விடுவதுடன், நமது சிந்தனைக்கும் உணர்வுக்கும் வேலை வைக்கிறார் என்பதனாலாகும். நம்மிடையே கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஏராளமான எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ஆயினும் அவர்களுள்ளே க. தணிகாசலம் தனித்துவ ஆளுமை கொண்டவர் என்றே கூற வேண்டியுள்ளது. அவருடைய ஆளுமை எத்தகையது என்பதை விளக்க அவர் எழுதியுள்ள கதைகளை நாம் பரிசீலிக்க வேண்டும்.
女★女
தணிகாசலத்தின் கதைகள் என்ன கூறுகின்றன என்பதைப் பார்க்குமுன், முற்சார்பாக அவர் பற்றிக் கூறப் பட்டிருப்பவைகளையும் நாம் அவதானித்தல் வேண்டும்.

Page 36
68 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
‘எழுத்து என்பது இன்றைய சுரண்டலும் அடக்குமுறையும் கொண்ட தனி உடைமை சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்குரிய சாதனங்களில் ஒன்று என்பதை மிக அடக்கமாகவே ஏற்றுக்கொண்டு அதற்காகவே தன் எழுத்தாற்றலைப் பயன்படுத்தி வருபவர் நண்பர் தணிகாசலம். இதை அவரது சிறுகதைகளுக்குள் புகுந்து தேடலை நடத்துவோர் இலகுவாக இனங்கண்டு கொள்ளலாம். வர்க்க சமுதாயத்தின் கேவலங்களையும் கோரத் தனங்களையும் புட்டுக் காட்டி அதன் ஊடாக லட்சோப லட்சம் மக்களின் துயர் நிறைந்த வாழ்வை முன்னிறுத்திக் காட்டும் போக்கு மட்டுமன்றி அத்தகைய சமூக அமைப்பை மாற்றி அமைப்பதற்கும் கட்டியம் கூறி நிற்பதே அவரது சிறுகதைகளின் சிறப்பம்சமாகும்.’ (தேசிய கலை இலக்கியப் பேரவை)
女女女
கவிஞர், விமர்சகர், நாடகாசிரியர் இ. முருகையன் இத்தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் என்ன அளவு கோல்களை வைக்கிறார் என்பதை அடுத்துப்
umTsju’u G3LunTL b.
பல கதைகள் வாழ்வின் மேற்பரப்புத் தோற்றங்களை மிகவும் பரும்படியாகப் பார்ப்பதுடன் நின்று விடுகின்றன. இவைகளெல்லாம் நடப்பியல் மெய்ம்மைகளைச் சித்திரிப்பன போலத் தெரிந்தாலும் அம்மெய்ம்மைக் கூறுகளின் அகத் தொடர்புகள்

கே.எஸ். சிவகுமாரன் 69
பற்றியும், புறத் தொடர்புகள் பற்றியும், உள்ளோட்டங்கள் பற்றியும், வெளிவீச்சுக்கள் பற்றியும் நிதானமாய் நோக்கும் ஆற்றல் இல்லாதவை.
ஆனால் தணிகாசலம் தந்துள்ள கதைகள் அப்படிப்பட்டவை அல்ல. நிகழ்ச்சிகளையும் மாந்தர்களையும் தெரிவு செய்யும் முறையிலே தான் இந்தக் கதைகளின் உள்ளொளி உற்பத்தியாகின்றது. வகை மாதிரியான நிகழ்வுகள், வகை மாதிரியாக பாத்திரங்கள் - இவையே இவருடைய கலையாக்க நெறியின் உயிர்நிலைகள்.’
“இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் அண்மைக்கால வரலாற்றுச் சூழலிலே தோய்ந்து நின்று எழுதப்பட்ட இக்கதைகளின் பொருளுருவும் மொழியுருவும் அன்பர் தணிகாசலத்தினை நல்லதொரு சிறுகதை எழுத்தாளராக நமக்கு அறிமுகம் செய்து வைக்கின்றன. நிகழ்கால இலங்கைக் கலைஞன் ஒருவனின் வேள்வியிலே பிறப்பெடுத்தவை.
女女★
ஒரு சிறு கிராமத்தின் மக்கள் அனைவரும் ஒரு கதையின் பாத்திரங்களாக வரும் ‘அற்புதத்தை தணிகாசலம் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். ஒரு பாதை திறக்கப்படுகிறது என்ற கதையை ஒரு துண்டு தொலை நாடகமாகப் படம் பிடிக்கலாம். அவ்வளவு தத்ரூபம். அது மாத்திரமல்ல - மண் வாசனை, கிராமியப் பேச்சுமொழி, கூட்டு மனப்பான்மை, புதிய அணுகல்

Page 37
70 ஈழத்துதுச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முறையான சமுதாய விழிப்புணர்வு அத்தனையையும் இக்கதையிலே கொண்டு வந்து விடுகிறார் ஆசிரியர்.
இனரீதியான பகைமை உணர்ச்சிகளும், மனிதத்துவம் என்ற சக்திமிகு தாக்கத்தினால் கரைந்துவிடுவதையும், இனத்தவர் என்று சொல்லத்தக்கவர்கூடத் தமது வர்க்க உணர்வைக் காட்டுவதையும் ஆசிரியர் நலுங்காமல், குலுங்காமல் உறவுகள் தெரிகின்றன என்ற கதையில் காட்டுவது பாராட்டத்தக்கது.
எதிர்காலத்துக்கான நம்பிக்கையோடு ஒழுங்குபடுத்தி எழுப்பப்பட்ட சயந்தனின் வாழ்க்கை, கஷ்டங்கள் நிறைந்ததானாலும் ஒரு புதிய நாகரிகத்திற்கே கருவாக வளர்வதை மூர்த்தி உணர்கிறான்’ என்ற நல்நோக்குடன் ‘மண்ணின் மைந்தர்கள்’ என்ற கதையை எழுதும் தணிகாசலத்தை ஒர் அச்சுக் கோப்பாளராகக் கருத முடியாதிருக்கின்றது. அவர் விமான நிலையச் சூழலை கொண்டு வருவது ஆச்சரியமாய் இருக்கின்றது.
‘கூலிக்குழப்பம் கதை மூலம் ஒரு பாத்திரம் அனுபவ ரீதியாக முதிர்ச்சியடைவதை அப்பாத்திரத்தின் வாயிலாகவே ஆசிரியர் கூறுகிறார் -
'இனிச் சும்மா இருக்கேலாது. சரியாய் சிந்தித்துச் செயற்பட்டால்தான் பிரச்சினையள் எல்லாம் தீரும் என்று நிதானமாகக் கூறுகிறேன்.

கே.எஸ். சிவகுமாரன் 71
மற்றுமொரு “பொஸிட்டிவ் கதை மழை. இங்கும் கூட்டு முயற்சி பயனளிப்பதையும், “அந்த இழப்புகளின் மத்தியிலும் அவர்களிடையே ஒரு புத்துணர்வு பிறக்கின்றது’ என்பதும் உணர்த்தப் படுகின்றது.
என்னைப் பொறுத்தமட்டிலே gj60) 607 (L கதைகளைப் போலன்றி, சிவந்த பாதையில் என்ற கதை சிறப்பாக அமையவில்லை. சிறிது அலுப்புத் தட்டுகிறது. கதை முற்பகுதி உடனிகழ் காலச் சித்திரிப்பாக அமைந்தாலும் பின்னோக்காக அமைந்த பகுதி, முற்று முழுதாகக் கதை ஆரம்பத்துடன் தொடர்புடையதாய் அமையவில்லை.
கல் என்ற கதையின் ஊடாக ஆசிரியர் தமது முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த போக்கையும் காட்டுகிறார். “மெல்ல மெல்லப் பாயும் தண்ணி கல்லையும் ஊடுருவிப் பாயும்’ என்பர். அதுபோல, அனுபவரீதியாக உணர்வு பெற்று இயங்க வகை செய்கிறார் ஆசிரியர். “அவன் கற்றறிந்த உண்மைகள் அவனது வாழ்க்கையின் அனுபவங்களூடாகப் பரீட்சிக்கப்பட்டு அவனது வாயிலிருந்து சமுதாய அமைப்பினை மாற்றும் போர்க்குரலாக வெளிவருகிறது’ என்கிறார் ஆசிரியர்.
தெற்கு நோக்கி என்னும் கதை தமிழ்ப்
பிரதேசத்து D di di 6 அனுபவித்து வரும் சொல்லொணாத் துயரங்களிற் சிலவற்றை எடுத்துக்

Page 38
72 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கூறுவதுடன், யதார்த்த நிலைமைகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.
விடுதலை இயக்கங்கள் என்ற பெயரிலே, சரியான பார்வையிழந்த சில இளைஞர்கள் சிந்திக்காது தன்னிஷ்டப் போக்கில் நடந்து எல்லாவற்றையுமே குழப்பியடிப்பதைத் துணிகரமாக வேலிகள் என்ற கதையில் ஆசிரியர் சுட்டிக் காட்டியிருப்பது வரவேற்கத்தக்கது. ‘எதிரிக்கு எதிராக மக்களை அணிதிரட்டுவது மட்டுமல்ல, போராட்டத் திசைகளை நேர்படுத்தி சீராக்கவும் அது போன்ற ஊர்வலங்கள் தொடர்கின்றன. o dj 35 Gir மென்மேலும் விழிப்படைகின்றனர்’ எனக் கதை முடிவதும் அவதானிக்கத்தக்கது.
அகதி, நாய்களோ, பிரம்படி, நல்ல நாள் ஆகியன நிகழ்காலத்தின் தரிசனங்கள். இவை கதைகள் அல்ல, வாழ்க்கையின் சொற் சித்திரிப்புகள்.
(தினகரன் வாரமஞ்சரி : 05-11-1984)
来

கே.எஸ். சிவகுமாரன் 73
கோகிலா மகேந்திரனின் உளவியற் கதைகள்
நிமது நாட்டிலே பல பெண்கள் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வருகின்றனர். ‘நொறுங்குண்ட இதயம்’ என்ற நாவலின் ஆசிரியையே ஈழத்து முதல் பெண் நாவலாசிரியர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மங்கள நாயகி போன்ற அத்தகைய பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்களை நாம் இன்னும் படிக்கச் சந்தர்ப்பம் கிடையாததனால் பாலேஸ்வரி போன்றவர்கள் எழுதியவையே நமது ஆரம்ப வாசிப்பாக அமைகிறது.
பாலேஸ்வரி, குறமகள், பத்மா சோமகாந்தன், பவானி, சாந்தினி (மகேஸ்வரி வயிரமுத்து), சசிதேவி தியாகராஜா, அன்னலட்சுமி ராஜதுரை, கமலா தம்பிராஜா போன்றவர்கள் சமூக தனி மனிதப் பிரச்சினைகளைப் பொது நோக்கிலும் தனிமனித நோக்கிலும் தீட்டியுள்ளனர்.
பின்னர், பூங்கோதை, மண்டூர் அசோகா, குந்தவை, சிதம்பரபத்தினி, யோகா பாலச்சந்திரன், ராஜம் புஷ்பவனம், கவிதா, தேவி, பூரணி, தாமரைச்செல்வி, அருண் விஜயராணி, தமிழ்ப்பிரியா,

Page 39
74 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியன், நயீமா பஷிர், சித்திபரீடா, பிரொஸா ஹ"சைன், பரந்தன் கலைபுஷ்பா, கே.வி. பரம், சிவமலர் செல்லத்துரை, தேவமனோகரி, ஹம்சத்வனி, ஜனகமகள் சிவஞானம் போன்றோர் நமது கவனத்தை ஈர்த்து வந்துள்ளனர்.
புன்ை கதைத் துறை தவிர ஏனைய எழுத்து வகைகளில் திருமதி நவரத்தினம் (முன்னாள் கல்வித் திணைக்கள அதிபர்), திருமதி கங்கேஸ்வரி கந்தையா, திருமதி மீனாட்சி பொன்னுத்துரை, திருமதி பாலாம்பிகை நடராஜா, பண்டிதை தங்கம்மா அப்பாக்குட்டி, சற்சொரூபதி நாதன், திருமதி சிவச்சந்திரன் போன்ற பலர் நமது கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.
இரண்டு சிறுகதைத் தொகுப்புகளைத் தந்துள்ள கோகிலா மகேந்திரன், தவிர்க்க முடியாத அளவிற்கு தமது முத்திரையைப் பதித்து எழுதும் ஒரு பெண் எழுத்தாளர். ‘மனித சொரூபங்கள்’ என்ற தொகுதியை நாம் படிக்க வாய்ப்புக் கிட்டவில்லை. “முரண்பாடுகளின் அறுவடை' என்ற தொகுப்பைப் படித்துப் பரவசப்பட்டோம். 14 கதைகளும் ஏதோவொரு விதத்தில் முரண்பாடுகளைத்தான் தீட்டுகின்றன. எந்தவொரு கதையுமே சோடை போகவில்லை. கதையில் ஜீவனும் வார்ப்பும் இணைவதனால், கதை உள்ளடக்கம் வேறு, உருவம் வேறு என்று பிரித்துப் பார்க்க முடியாதவாறு கதைகள் எழுதப்பட்டுள்ளன.

கே.எஸ். சிவகுமாரன் 75
கோகிலாவின் எழுத்துக்களில் உண்மைகள் பளிச் சி டு கி ன் றன . மனித உறவு க  ைள உளவியற்பாங்குடன், சமூகப் பின்னணியில் அவர் தொட்டுக் காட்டுகிறார்.
இவர் படித்த பெண்ணாகவும், யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு வெளியேயுள்ள அனுபவ வாய்ப்புகளைப் பெற்றுமிருப்பதனாலும் இவருடைய பார்வைகள் அகலமும் ஆழமும் பெறுகின்றன.
ஆண் ஆதி க்க ச் சமுதாயத் தி ல் பெண்ணடிமைத்தனம் செயற்படும் விதத்தையும், அதே சமயம் இச் சம்பிரதாயங்களையும் மீறி, மனித இதயங்கள் சுருதியுடன் பேசுவதையும் அலட்டிக் கொள்ளாமலே கோகிலா வெளிப்படுத்துகிறார். ஆண் - பெண் உறவுகளை உளவியல் அடிப்படையில், ஒரு முதிர்ச்சித் தன்மையுடன் விளக்கிக் காட்டுகிறார் ஆசிரியை. இதற்கு, உதாரணமாக ‘அன்பிற்கு முன்னால்’, ‘தலைமுறைகள் முரண்படும்போது’, ‘அர்த்தமுள்ள ஒரு வாழ்வு’, ‘ஓர் உள்ளம் பேசுகிறது', ‘வதை’, ‘அர்ச்சிக்கப்படாத விக்கிரகங்கள்’, ‘உள்ளத்தால் அடிமைகள்’ ஆகிய கதைகளைக் குறிப்பிடலாம்.
இக்கதைகளில் வரும் பெண்களுடன் சம்பந்தப்பட்ட ஆண்கள் ஏன் அப்படி இதமாக நடந்து கொள்கிறார்கள் எ ன் பதற்கு உளவியற் காரணங்களையும் காட்டாமற் காட்டுகிறார் ஆசிரியை.

Page 40
76 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
என வே வெறுமனே ஒரு பெண் ணி ன் ஒரு தலைப்பட்சமான பார்வை என்றோ, கருத்தென்றோ தட்டிக்கழிக்க முடியாதவாறு, ஆணின் சார்பிலும் நின்று கதாசிரியை எழுதுவது இவருடைய கதைகளுக்கு நம்புந்தன்மையை ஏற்படுத்துகிறது.
சாதி வேறுபாடுகள், மூட நம்பிக்கைகள், தலைமுறை இடைவெளி, வறுமையின் எல்லை, சீதனத் தொல்லை, மனிதாபிமானம், வாழ்க்கை நெறி, ஆசிரிய உலகம், சிறுவர் உளப்பாங்கு, மாற்றத்திற்கு அனுசரணையாய்ப் போதல், கலைக்கு விலைபேசல், புதியனவற்றை இனங்கண்டு சுதாகரிக்க மறுத்தல் போன்ற விஷயங்களைக் கதைகளாகப் புனைந்திருக்கும் ஆசிரியை பாராட்டுக்குரியவர்.
பெண்ணின் மனதைப் பெண்ணே அறிவாள் என்பதனாலோ என்னவோ கோகிலா மகேந்திரனின் பெண் பாத்திரங்கள் தத்ரூபமாக வார்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக ‘அன்பிற்கு முன்னால்’, ‘நிமிரும் ஊனங்கள்', ‘அர்ச்சிக்கப்படாத விக்கிரகங்கள்’, ‘உள்ளத்தால் அடிமைகள்’ ஆகிய கதைகள் கலைநயமாய் அமைந்துள்ளன.
(வீரகேசரி வெளியீடு : 06-05-1984)
来

கே.எஸ். சிவகுமாரன் 77
எஸ்.வி. தம்பையாவின் அன்றைய பார்வை
1956-1966 காலப்பகுதியிலே எஸ்.வி. தம்பையா எழுதிய 11 சிறுகதைகளின் தொகுப்பு இது. நல்ல தமிழிலே அருமையான கருத்துக்களைச் சுமந்து கற்பனையாக எழுதப்பட்ட இக்கதைகள் 80களில் வாசகனைத் திருப்திப்படுத்துமா என்பது ஒரு புறமிருக்கட்டும், அதே சமயம் அவை எழுதப்பட்ட காலத்தின் பின்னணியிலே, அன்றைய இளவட்ட எழுத்தாள ன் எவ்வாறு வாழ்க் கை  ைய நோக்கியிருக்கிறான் என்பதையறியவும், சிறுகதை வளர்ச்சிப் பாதை எத்தகைய கட்டங்களாக அமைந்திருந்தது என்பதையறியவும் பழைய சிறுகதைகளின் இத்தகைய தொகுப்புக்கள் இன்றைய வாசகனுக்கு உதவுமல்லவா? அந்த விதத்திலே இத்தொகுப்பை வெளியிட்டமைக்காக ஆசிரியர் எஸ்.வி. தம்பையாவைப் பாராட்டவே வேண்டும்.
“கடலில் கலந்தது கண்ணிர்’ தொகுப்புக்கு, இன்றைய முன்னணிப் படைப்பாளிகளுள் ஒருவரான ‘தெணியான்’ முதிர்ச்சி மிளிரும் ஓர் அருமையான மதிப்பீட்டைத் தந்துள்ளார். “தெணியான்’ தமது

Page 41
78 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முன்னுரையிலே கூறியிருப்பது இங்கு மீண்டும் குறிப்பிடத்தக்கது
“காதல், இளமை நினைவுகளை வென்று நிற்கும் தாய்மையின் சிறப்பு, குடியினால் வரும் கேடு, வர்க்க அவலம், போலி வாழ்வினால் விளையும் ஏக்கம், உடைமைகள் பொதுமையாவதாலே தீரும் சமுதாயப் பிரச்சினை, யாழ்ப்பாணத்து நிலவுடைமைச் சத்தியின் கெடுபிடி, சாதிக்கொடுமை, மூடக்கொள்கையால் நேரும் கேடு எனப் பல்வேறு கருப்பொருள்களை உள்ளடக்கியனவான படைப்புகள் இத்தொகுப்பில் சிருஷ்டிகளாக உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய உள்ளடக்கங்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ள படைப்புகள் இக்காலத்துக்கு மாத்திரமல்ல, எதிர்காலத்துக்கும் ஏற்றவையாகவும், நிலைத்து வாழத் தகுந்தவையாகவும் விளங்குகின்றன.”
மலேசியப் பத்திரிகைகளான ‘தமிழ் முரசு", ‘தமிழ் மணி’, ‘பதிப்பு’ மற்றும் தினகரன் வாரமஞ்சரி’, “பொன்னி’ ஆகிய இதழ்களில் இக்கதைகள் பிரசுரமாயிருந்தன. ஆசிரியர் எஸ்.வி. தம்பையா (தம்பையா என்ற பெயரிலே மேலும் இரு எழுத்தாளர்கள் எழுதுவதனால், இவருடைய முதல் எழுத்துகளையும் சேர்த்துக் குறிப்பிடுகின்றேன்) தமது தொகுதி பற்றி என்ன எழுதியிருக்கிறார்.
“நான் வாழ்ந்த சூழலில் என்னை பாதித்த, மனதை உறுத்திய சம்பவங்களை அந்த அந்தக் கால சூழலுக்கேற்ப ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில்

கே.எஸ். சிவகுமாரன் 79
பரீட்சார்த்தமாகவே எழுதியுள்ளேன். அன்று எழுதிய எல்லாமே இன்று எனக்கு உடன்பாடு என்று சொல்ல முடியாவிடினும், அந்த அந்தக் காலகட்டத்தில் எழுதியது அப்படியே இருக்கட்டும் என்பதால் எவ்வித மாற்றமும் செய்யாது விட்டுள்ளேன். இது என் சிறுபிள்ளை வேளாண்மை.”
இந்தப் பெருந்தன்மையான கூற்றைக் கவனியாது அபிப்பிராயம் கூற வருவதே தப்பு. தாம் அன்று எழுதியதை அப்படியே மாற்றஞ் செய்யாது தந்திருக்கையில், இன்றைய அளவுகோல்களைக் கொண்டு அளவிடுதல் நியாயபூர்வமானதல்ல.
50களிலும் 60களிலும் தி.மு.க. எழுத்தாளர்கள், மு.வ. அகிலன், நா.பா., சிரஞ்சீவி, கல்கி போன்றவர்களுடைய எழுத்துக்களின் செல்வாக்குத் தொடர்ந்து இருந்து வந்தமையினால், தமிழில் எழுதும் எழுத்தாளர்கள் இந்தச் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தனர் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
எஸ்.வி. தம்பையா அவர்களும் இந்த எழுத்து தடைக்கு இந்தப் பாத்திர அமைப்பு முறைக்கு, இந்தக் கதைப் பின்னல் சாயலுக்கு உட்பட்டிருந்தார் என்பதை, இத்தொகுதியில் இடம் பெற்றுள்ள சில கதைகள் காட்டுகின்றன. உதாரணமாக மு.வ.வின் தடைச் சாயலை பட்டமரம்’, ‘அணையா விளக்கு’ போன்ற கதைகளின் நடைப்பாங்கில் காணலாம். இது ஒன்றும் பாரதூரமான குற்றமல்ல.

Page 42
8O ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மூன்று, நான்கு தசாப்தங்களுக்கு முன்னர் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாய் இருக்கவில்லை. எனவே ஆசிரியர் “சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் பண்பிலே திருப்தியுறாது, விஸ் தாரமாகவும், விளக்கமாகவும் கதைகளை எழுதியிருக்கிறார். அதே சமயம், ‘தெணியான்’ அவர்கள் குறிப்பிட்டிருப்பதுபோல, உவமான உவமேயங்களை அழகுறப் பயன்படுத்தியுள்ளார்.
பாட்டாளி வர்க்கத் தொழிலாளியாக இருந்து கொண்டே தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் நன்கு கற்றுத் தெளிவான, தூய்மையான, மதிக்கத்தக்க எண்ணங்களையும் ஆசிரியர் வளர்த்து வந்திருக்கிறார் என்பதற்கு இத்தொகுதியே சான்று. இளைஞனாக இருந்தபொழுது எழுதினாலுங்கூட மனித உறவுகளை முதிர்ச்சி கொண்ட பார்வையாளனாக அவர் அவதானித்துத் தமது கதையில் சித்திரிப்பது பாராட்டுக்குரியது.
எஸ்.வி. தம்பையா அவர்கள் சில கதைகளில் சம்பவ எடுத்துரைப்புகளைக் குறைத்துக் கொள்ளவில்லை. உண்மைதான், ஆனாலும் நிச்சயமாக அவர் தமிழ் நடை நனைந்த கொப்பின் பூவிதழ்கள் அல்ல. வைர மணிச் சிதறல்கள்.
(தினகரன் வாரமஞ்சரி : 14-10-1984)
来

கே.எஸ். சிவகுமாரன் 81
கே. பானியலின் எழுத்து முதிர்ச்சி
கே. டானியல் வெகு எழுதிய சிறுகதை ‘மண்’. இது "ஈழமுரசு’ இரண்டாவது ஆண்டு மலரிலே (5.2.1986) பிரசுரமாகியிருக்கிறது. முற்றிலும் உரையாடல்களைக் கொண்டு எழுதப்பட்ட இச்சிறுகதை, டானியல் எழுத்துத் துறையில் கண்ட பிரமாதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. உள்ளடக்கம், உத்தி, உருவம், உரையாடல், மண் வாசனை, எதார்த்தம், வட்டார / தொழிற் குலப் பேச்சோசை மொழிப் பாங்கு அத்தனையும் ஒருங்கு சேர நேர்த்தியாய் வந்தமர்ந்த கதை இது.
சாதாரன சம்பவந்தான். ஆனால் அதற்கு முற்போக்கான, மரபுமீறிய எண்ணக்கருவை ஏற்றிப் புதுப் புனைவாக்கமாக ஆசிரியர் கதையை அமைத்துள்ளார். இயற்பண்பும் (நச்சுரலிஸ்டிக்) யதார்த்தமும் (ரியலிஸ்டிக்), துரித சம்பவக் கோவையும் (ரப்பிட் சீக்குவென்ஷல் ப்ரோஸஸ்) கலாரூபமாக அமைந்ததனால், கதை வாசகன் ஆர்வத்தை ஒரே சீராக வைத்திருக்க முயல்கிறது. இந்த விதங்களில், இச்சிறுகதையின் உத்திமுறை (டெக்னிக்) வெற்றியளித்துள்ளது என்றே கூறலாம்.

Page 43
82 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பிள்ளைப் பேறுடன் கதை ஆரம்பமாகிறது. “பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பது போல, “பெற்ற மனமும் கல்லாக மாறவும், மண்ணின் மேலுள்ள பற்றையும், கலாசார வேர்களில் ஊறிய திளைப்பையும், பழைய பரம்பரையினரின் வைராக்கியத்தையும் வெளிப்படுத்தவும் கருவியாய் அமைவது போன்று கதை முடிகிறது.
யாழ்ப்பாணக் கமக்காரத் தம்பதிக்கு ஆறு தடவை பிள்ளை உண்டாகியும் ஒன்றும் உயிர் தரிக்கவில்லை. ஏழாவது தடவையாக சந்நதியான் பிறந்தான். அருமை பெருமையாக வளர்ந்தான். தாய் மாமன் தனது மகள் வள்ளியம்மையை அவனுக்குக் கொடுக்குமுகமாக அவனின் மேற்கல்விக்கு நிதியுதவி வழங்கினார். அவனோ லண்டனில் மேற்படிப்புப் படிக்கப் போகுமுன்னரே தனது பெற்றோரின் எளிமை கண்டு வெட்கமுற்று தனது பெயர் முதல் சகலவற்றையும் மாற்றிக் கொள்கிறான். சுய பாரம்பரியத்தில் அவன் வேர்கொள்ளவில்லை. லண்டனில் மாற்று மத, மாற்று இனப்பெண்ணை மணமுடித்து, நாடு திரும்பி கொழும்பு வந்து, யாழ்ப்பாணத்திலுள்ள தனது பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான். காசும் அனுப்புகிறான். கல்வியறிவு இல்லாத அப்பெற்றோர் கடிதம் கண்டு துயரடைகின்றனர். கமக்காரர் முதுமையுற்றாலும், தமது சொந்தக் காலில் நின்று, தனது சொந்த மண்ணில், கத்தரிச்செடி நட்டுத் தானும், சுயமரியாதையுடன் சீவனோபாயம் நடத்த முன்வருகிறார். பையன்

கே.எஸ். சிவகுமாரன் 83
அனுப்பிய பிச்சைக்காரக் காசான ரூ. 200/-ஐயும், கடிதத்தையும் நெருப்பில் போட்டுக் கொளுத்துகிறார். பழைய மரபின் ரோசத்தை அவர் வெளிப்படுத்துகிறார். கதையின் முற்பகுதியிலே, வயிறு நோகும் கர்ப்பவதி, களைப்படைந்து அயர்ந்து தூங்கும் தனது கமக்காரக் கணவனை எழுப்புகிறாள். தூரத்தில் உள்ள தனது ஆத்தையையும் மருத்துவிச்சியையும் அழைத்து வருமாறு அவனை பால் நிலவு பொழியும் இரவில் அனுப்புகிறாள்.
அடுத்த பகுதியிலே, ஆத்தையும் அவளும் உரையாட, மருத்துவிச்சியும் வந்து விடுகிறாள். தனது குலத்துக்குரிய மொழியிலே, “பிள்ளை நாச்சியார் என்னெனை செய்யுதாக்கும்? நான் வந்திட்டன் நாச்சியார். ஏன் பயப்படுதாக்கும். நயினார் வெளியிலை போகவாக்கும். ராசநோக்காடு கண்டிட்டு தாக்கும்’ எனக் கூறுகிறாள்.
பின், ஆத்தையை விளிக்கிறாள் -
“பெரிய நயினாத்தி சுடு தண்ணியைக் கெதியாய் வைக்கவாக்கும். ச்.ச்.ச். நாச்சியார் எப்பன் பல்லைக் கடிச்சுக் கொண்டு.ம்’ என்கிறாள்.
இதற்கிடையில் கமக்காரக் கணவர் செல்லி என்ற இந்த மருத்துவிச்சியிடம்,
6
‘என்னெடி செல்லி, சத்தம் ஒண்டையுங் காணேல்லை. ஏதும் வில்லங்கமேயெடி?” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறான்.

Page 44
84 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அதற்கு அவள் கூறுகிறாள். “நயினார் எப்பன் பேசாமல் இருக்கவாக்கும். எல்லாம் செல்லி சரியாச் செய்வன்.”
இந்த ரீதியிலே சம்பாஷணை செல்கிறது. குழந்தையும் பிறக்கிறது.
அதற்குப் பின் துரித கதியில் காட்சி மாறுகிறது. பையனுக்கு இரண்டு வயது முடியப்போகிறது. அவன் மாமன் மகளுடன் சர்ணைக்கூறைபோட ஆயத்தங்கள் செய்யப்படுகின்றன. பின் சம்பிரதாயங்கள் சம்பாஷணை மூலமே எடுத்துக் கூறப்படுகிறது. பரியாரி (சிகையலங்காரம் செய்பவர்), கட்டாடி (சலவை செய்பவர்) ஆகியோர் சம்பந்தப்படுகின்றனர். மாப்பிள்ளையின் பெயர் சந்நதியான் (முருகன்) ஆகையால் பெண்ணுக்குப் பொருத்தமாக வள்ளியம்மை என்று பெயர் வைக்கப்படுகிறது.
தொடர்ந்து பையனின் படிப்பு ஐந்தாம் வகுப்பு, இங்கிலிஷ் படிப்பு, எட்டாம் வகுப்புச் சித்தி ஆகியன பெற்றோர் உரையாடல் மூலம் தெரிய வருகிறது.
சந்நதியான் ‘நாகரிகமடையத் தாயின் பாரம்பரிய O- 60 - தரிக்கும் முறை விகற்பமாகப்படுவதைத் தாயிடம் கூறியிருக்கிறான். தனது பெயரும் ‘ன்’ல் முடிவதால் இதனை மாற்றப் போவதாகவும் கூறியிருக்கிறான். ஆறுமத்தான் என்ற அந்தத் தந்தைக்கு ஆத்திரம் வருகிறது. முத்தாச்சி என்ற அவனின் பெயரையும் பாலகுமாரி என்று மாற்றிவிடலாமே என்று குத்தலாகக் கூறுகிறார் தந்தை.

கே.எஸ். சிவகுமாரன் 85
 ைபயன் கொழும்புக்குப் போய்ப் படிக்கவிருக்கிறான், தாய் மாமன்தான் செலவை ஏற்றுக் கொள்கிறான். அதன் பின் அவன் டொக்கருக்குப் படிப்பதற்காக லண்டனுக்குச் செல்லவிருப்பதாகக் கொழும்பிலிருந்து தனது பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான். லண்டனுக்குப் போகுமுன் யாழ்ப்பாணம் வந்த போது மச்சாள் வள்ளியம்மையைக் கலியானம் செய்து கொண்டு அவளையும் கூட்டிச் செல்லுமாறு பெற்றோர் கேட்கின்றனர். அவன் மாட்டேன் என்கிறான். தான் ஆம்பிள்ளை என்றும், வயது முதிரும் வள்ளியம்மையைத் தான் முடிக்கப்போவதில்லை என்றும் அவன் மறுக்கிறான்.
கிழவருக்குக் கோபமும், ஆத்திரமும் வருகிறது.
“ஓம் நீர் ஆம்பிளை, கிழண்டினாப் போலை கலியாணம் முடிக்கலாம். பொம்கிளை கிழண்டினா முடிக்கப்படாதாக்கும் கேளடி ஆத்தை உவனை’ என்கிறார்.
தாயும் “டெ தம்பி நன்றி மக்கப்படாதடா மோனை. உன்ரை படிப்புக்கு கொம்மான் தான்ரா காசு சிலவளிச்சவன்!”
'gaughafajig-rr?'
“அதை மறக்கப்படாதடா!”
r “நான் லண்டனிலை இருந்து உழைச்சு அவற்றை கடனைக் குடுக்கிறன்” என்கிறான் மைந்தன்.

Page 45
86 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மகன் லண்டனுக்குப் போய் இரண்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு கொழும்பு திரும்பி பெற்றோருக்குக் கடிதம் எழுதுகிறான்.
“என்மேல் பிரியமான அம்மா அறிவது! நான் இலண்டனிலிருந்து ஐந்து வருடப் படிப்பை இரண்டு வருடத்தில் முடித்துவிட்டு வந்துவிட்டேன். அங்கு என்னோடு படித்த ரோசி என்ற பெண்ணைக் கலியானம் செய்து கொண்டு வந்துவிட்டேன். அவளின் தாய் ஒரு வெள்ளைக்காரிச்சி, தேப்பன் ஒரு இலங்கையர். அடுத்த வாரம் உங்களைப் பார்க்க வருகிறேன். அவவைக் கூட்டி வரவில்லை. ஏனென்றால், வீட்டோடு சேர்த்தால் போல உங்கே கக்கூசு குளியல் அறை இல்லை. கட்டில் மெத்தை இல்லை. புழுக்கக் காலமாக இருப்பதால் அவளுக்குத் தேவையான வசதி இல்லை.”
ஐயா சுகமில்லாமல் இருக்கிறார் என உங்கிருந்து வந்த ஒருவர் சொன்னார். இத்துடன் ரூபா இருநூறு LD 60of? ஒடர் மூலம் அனுப்புகிறேன். பெற்றுக்கொள்ளவும். நான் கடைசிவரை உங்களைக் காப்பாற்றுவேன். நான் காப்பாற்றாமல் வேறு யார் உங்களைக் காப்பாற்றுவது. இப்படிக்கு மகன்.
மகனின் உதாசீனமும், ஆணவச் செருக்கும் பிரதிபலிக்கும் கடிதத்தைக் கண்டு உரோசமுள்ள தந்தைக்கு ஆத்திரம் வருகிறது.
‘உவன் எங்களைக் காப்பாற்றப்போகிறானாம்’
என்று கூறிய அவர், கடிதத்தையும் காசுத்துண்டையும் விளக்கில் கொளுத்தி எரிக்கிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 87
“இஞ்சபார் இந்த விசர் மனிசனை! இந்த வருத்தத்தோட, மண்வெட்டியோடை நடக்கேலாமை சந்நிதியானே! மம்பெட்டி துரக்கிக் கொத்தேலாமை வில்லங்கப்படுகுது’ என்றாள் மனைவி.
அவர் மனைவியிடமும் கடிதத்தை வாசிக்க உதவியவளையும் இவ்வாறு கூப்பிட்டு காரியத்தில் இறங்குகிறார்.
“எடி இஞ்சை வாடி மாட்டெடியிலை கிடக்கிற எருவிலை அள்ளியந்து கொட்டெடி, எடி கறுத்தாற்றை இளையவள் கொப்பரெட்டைச் சொல்லு நாளைக்கு நடுகிறத்துக்கு நாலு பிடிகத்தரி நாத்துக் கடனாகத் தரச் சொல்லி”
கதையும் முடிகிறது.
இக்கதையைப் படிப்பவர்கள் இக்கதையின் கதாநாயகனான தந்தையின் பாத்திரம் மிகவும் காத்திரமாய் அமைவதை அவதானிப் பார்கள். பையனின் நோக்கிலிருந்து கதை எழுதப்படவில்லை என்பது வெளிப்படை.
கதை நிகழும் காலப் பகுதி 40 அல்லது 50களாக இருக்கலாம். பண்பாடு மாற்றம், பயன் மதிப்புகள் மாற்றம், காலப் போக்கில் மாற்றம் போன்றவற்றினுாடே நிகழும் ஒரு சம்பவக் கோவையை ஆசிரியர் டானியல் அழகுறச் சித்திரித்திருக்கிறார்.
(தினகரன் வாரமஞ்சரி : 30-08-1986)
来源

Page 46
88 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சாந்தனின் நேர்மைத்திறன்
ஒட்டுமா என்ற நாவலையும், பார்வை, கடுகு, ஒரேயொரு ஊரிலே, கிருஷ்ணன்தூது, முளைகள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கும் இளைஞர் ஐ. சாந்தன் தமிழில் இன்று எழுதும் படைப்பாளிகளில் விசேட கவனத்தைப் பெறத்தக்கவர் என்பது பல விமர்சகர்களின் அபிப்பிராயம்.
இந்தியாவிலும் (தமிழ்நாடு, பிற மாநிலங்கள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களையும் உட்படுத்தி) ஈழத்தில் இன்று தமிழில் எழுதுபவர்களில் உலகளாவிய, இலக்கியப் பண்பு கொண்ட கதைகளைப் படைத்து வருபவர்களில் சாந்தனும் ஒருவர் என்பது எனது நீண்ட நாட்கணிப்பு.
பொறுக்கி எடுத்து ஒர் இருபது சிறுகதை யாசிரியர்களைத் தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தின் பிரதிநிதிகளாகக் காட்டும்படி பிறமொழியினர் கேட்டால் சாந்தனும் அப்பட்டியலில் இடம்பெறுவார் என்பதில் சந்தேகமேயில்லை.

கே.எஸ். சிவகுமாரன் . ' 89
அவருடைய கதைகளைப் படித்ததும், அவர் தொடர்பாக எழும் எண்ணங்களைத் தொகுத்துத் தருதலே இந்தக் கட்டுரையின் நோக்கம். எனது பார்வை கனதியாக இல்லை என்று சில கண்டனக்காரர் கருதக்கூடும். திறனாய்வு என்றால் கண்டனமே என்று மருளும் பாமரத்தன்மையினரைப் பொறுத்தருள்வோம் என்று கூறுவதைவிட வேறு என்ன சொல்லமுடியும்.
அனுபவ உணர்வு
சாந்தன் தன் அனுபவத்தில் உணர்வதை அப்படியே சிறைபிடித்துப் பொருத்தமான சொற்களிலே தந்துவிடுகிறார். இது என்ன பிரமாதம்? எல்லா எழுத்தாளர்களுமே இதைத்தானே செய்கிறார்கள் என்று கூறிவிடலாந்தான். ஆனால் உண்மையிலேயே எல்லா எழுத்தாளர்களாலும் அப்படிச் செய்ய முடியுதில்லையே! திறனாற்றலுடைய எழுத்தாளன் தான் அத்தகைய இலாவகத்தைத் தனது எழுத்தில் கலாரூபமாகக் கொண்டு வர முடிகிறது. ஆற்றல் இல்லாமல் கடமைக்காக, கடப்பாட்டுக்காக எழுதுபவர்கள் வலிந்து தான் அவ்வாறு அனுபவங்களைச் சிறைப்பிடிக்க முயலுகிறார்கள். அம்முயற்சியைத் தேர்ச்சி பெற்ற வாசகன் அல்லது திறனாய்வாளன் எளிதில் இனங்கண்டு கொள்கிறான்.
திறனாற்றல் உண்மையான எழுத்தாளனுக்கு எவ்வாறு வந்து வாய்க்கிறது என்று கேட்டால், அது அவனது சத்திய வேட்கையிலிருந்து தான்

Page 47
90 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கிடைக்கிறது என்று சொல்லவேண்டும். அதாவது அவனது உள்ளத்தில் ஒளியிருப்பதனால், அவன் வாக்கிலும், எழுத்திலும் ஒளி துலங்குகிறது. எழுத்தில் நேர்மை
உள்ளத்தில் எப்படி ஒளியுண்டாகிறது?
எழுத்தாளன் தன்னளவிலாகுதல் நேர்மையாக இருப்பதனாற்றான்; இங்கு நாம் கவனிக்க வேண்டிய சொல், ‘நேர்மை’ ஆம். சாந்தனின் எழுத்தில் நேர்மையிருக்கிறது. அவர் தனது அனுபவத்துக்கும் அறிவுக்குமெட்டிய வகையில் தாம் சொல்ல வருவதை, உணருவதை அறிவுக்கு மெட்டிய வகையில் தாம் சொல்ல வருவதை, உணருவதை (அவருடைய கருத்து அல்லது பொருள் கொண்டு விளக்குமுறை சரியாக இருக்கலாம் அல்லது அது தப்பாக இருக்கலாம். அது வேறு விவகாரம்) நேர்மையாகவே கூறிவிடுகிறார்.
இதனாற்றான் சாந்தனின் எழுத்தில் கவர்ச்சியிருக்கிறது. அந்தக் கவர்ச்சி சில வேளைகளில் புளகாங்கிதத்தைத் தருகிறது. சில சில வேளைகளில் தார்மிகமான கோபத்தை உண்டு பண்ணுகிறது. இந்தக் கோபம் ஆசிரியர் மீது எழுவதல்ல. அவர் நடமாடவிட்டிருக்கும் சில பாத்திரங்கள் மீதுதான் இந்த ஆத்திரம் எழுகிறது.
ஆசிரியர் சாந்தன் தான் சிருஷ்டிக்கும் பாத்திரங்கள் தொடர்பாக எடுக்கும் நிலைப்பாடு

கே.எஸ். சிவகுமாரன் 91
பெரும்பாலும் சரியானதாகவே இருக்கிறது. இவ்வாறிருப்பதனால் அவர் வாசகனைத் தம்மோடு அழைத்துச் செல்கிறார். அந்த விதத்தில் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் இடையே ஒரு தொடர்பு ஏற்பட்டு விடுகிறது.
இந்தத் தொடர்பு டக்கென்று ஏற்பட்டு விடுவதனால், கதாசிரியரின் கருத்தும், பார்வையும், அனுபவமும் வாசகனுக்குப் பரிவர்த்தனை செய்யப்படுவதில் தடை ஏற்படுவதில்லை. இங்கு ஆசிரியரின் நோக்கம் நிறைவேறுகிறது.
சாந்தனின் கதைகளில் அவதானிக்கக்கூடிய மற்றொரு முக்கியமான பண்பு - அவருடைய எழுத்து நடையாகும். வாசகனும் எழுத்தாளனும் சம்பாஷிப்பது போன்ற தோரணையில் (புதுமைப்பித்தனின் உத்தியும் இதுதான்!) பெரும்பாலும் அமைந்திருப்பதுதான். அதாவது “போர்மல்’ ஆக, சம்பிரதாயமாக, இலக்கண சுத்தியுடன் எழுதப்படாமல், மனசு நினைத்துக் கதைப்பது போல, சாந்தன் எழுதுவார். இதுவும் அவருடைய கதைகள் வெற்றியடைய உதவும் ஒர் உத்தி எனலாம்.
பவ்விய நகைச்சுவை
இன்னொன்று - அவருடைய கதைகளில் காணப்படும் ஒரு பவ்வியமான நகைச்சுவை. அதனை விரசமாக்காமல் சொல்லும் தோரணை, குறிப்பாக கிருஷ்ணன் தூது கொத்தில் வரும் முதல் கதையான

Page 48
92 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
நீக்கல்கள்’ கதையைக் குறிப்பிடலாம். நமது ஈழத்து எழுத்தாளர்கள் பலருக்கும் இது கைவந்த கலை என்று சொல்ல முடியாதிருக்கிறது.
சாந்தனுடைய கதைகள் மூலம் அவருடைய ஆளுமை புலப்படுகிறதா என்று பார்த்தால், முழுக்க முழுக்க சாந்தனின் ஆண்மையும் ஆளுமையும் அவருடைய கதைகளில் கலந்திருப்பதைக் காணலாம். படைப்பாளியும் எழுத்தும் பிணைந்திருப்பதைக் காணலாம். இது ஒன்றும் வியப்பானதல்ல! ஏனெனில் நான் முன்னரே கூறியது போல, சாந்தன் நேர்மையாகவே தமது எழுத்தைப் படைக்கிறார். அங்கு “பேர்ஸனாலிட்டி’ தெரிகிறது.
சாந்தன் எழுதும் கதைகளைப் படிக்கும் பொழுது பெறப்படும் அவருடைய ஆளுமைத் தோற்றம் என்ன என்பது அடுத்து எழும் கேள்வி. இங்குதான் சாந்தனின் கதைகளில் உள்ள உள்ளடக்கத்துக்கு நாம் வருகிறோம்.
அவருடைய கிருஷ்ணன் தூது என்ற கதைக் கொத்தை எடுத்துக் கொள்வோமானால், இத்தொகுப்பில் இடம்பெற்ற பெரும்பாலான கதைகள் சிங்கள - தமிழ் இனங்களின் உறவு பற்றியதாய் இருக்கக் காண்கிறோம்.
இக் கதைகளைப் படிக்கும் பொழுது, சாந்தன் ஒரு தமிழன் என்ற வகையில் தமிழன் பெருமையில் இறுமாப்புக் கொள்பவர் எனக் கொள்ளலாம். சாந்தன்

கே.எஸ். சிவகுமாரன் 93
தனிப்பட்ட முறையில் தற்பெருமை பிடித்தவர் என்று நான் கூறவில்லை. தமிழினத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில், தான் ஒரு தமிழன் என்றே உணர்ந்து கொண்டு தமது அனுபவங்களை ஒவ்வொரு கணமும் எதிர்நோக்குகிறார்.
பெருமையின் பளு
இளந்தமிழன் சாந்தனுக்குத் தனது இனத்துக்கேயுரிய பாரம்பரியப் பெருமையின் கமை, அவரை அழுத்துகிறது. அந்தப் பளுவின் ஆக்கிரமிப்பிலேயே அவர் பிரச்சினைகளை அணுகுகிறார்.
அதே சமயத்தில் சாந்தன் தன்னையுங் கடந்த மனிதனாகிறார். இறுதியாய்வில் சாந்தன் ஒரு மனிதனாகவே, விரும்பத்தக்க ஓர் உலக மனிதராகவே தமது கதைகளில் காட்சி தருகிறார்.
உலக இலக்கியங்களில் இந்தப் பச்சாதாபத்தை, இந்தப் பண்பைத்தான் நாம் காண்கிறோம். ஆக, சாந்தன் என்பவர் மனிதநேயத்தை நாடும் ஒரு கைதேர்ந்த எழுத்தாளன் என்று கூறுவதில் நியாயமிருக்கிறது.
சாந்தனைப்போல சிறுகதைகள் எழுதும் எழுத்தாளர் நம்மிடையே வேறு எவருமிலர். அதாவது
தனித்துவமான ஓர் எழுத்தாளர் அவர். இதனை விரிவாகச் சொன்னால், சாந்தன் மாதிரிச் சாந்தனே

Page 49
94 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
தான் எழுதலாம். மற்றைய எழுத்தாளர்களும் தத்தமக்குரிய இயல்பிலேயே எழுதலாம்.
அதே சமயம் நமது எழுத்தாளர்கள் பலரையும், வசதியை முன்னிட்டு, ஒரு சில வகைகளுக்குள் அடக்கிவிடலாம். ஆனால் சாந்தனை அவ்வாறு அடக்க முடியாதிருக்கிறது. நமது சிறுகதை ஆசிரியர்கள் வெளியிட்ட தொகுப்புகளை மனதிற் கொண்டு பார்ப்பின் இலங்கையர்கோன், வரதர், வ.அ. இராசரத்தினம், செ. கணேசலிங்கன், டொமினிக் ஜீவா, கே. டானியல், எஸ். பொன்னுத்துரை, என்.கே. ரகுநாதன், நீர்வை பொன்னையன், அ. முத்துலிங்கம், காவலூர் ராசதுரை, மு. தளையசிங்கம், பவானி, எம்.எஸ்.எம். இராமையா, தெளிவத்தை ஜோசப், செ. யோகநாதன், செ. கதிர்காமநாதன், சட்டநாதன், மு. கனகராசன், சாந்தன், காவலூர் ஜெகநாதன், மண்டூர் அசோகா, சுதாராஜ், லெ. முருகபூபதி, மு. திருநாவுக்கரசு, பூங்கோதை, புலோலியூர் க. சதாசிவம், குப்பிளான் சண்முகம், அ. யேசுராசா, தோட்டக் காட்டினிலே என்ற சிறுகதைத் தொகுதியில் இடம் பெற்ற மாத்தளை எழுத்தாளர் ஆகியோர் நல்ல தரமான கதைகளை எழுதியிருக்கின்றனர். இவர்கள் தனித்துவமானவர்கள்.
சிக்கன நெறிமுறை
இருந்தபோதிலும் கதையும், கலையும் இணைய எழுதும் அண்மைக்கால எழுத்தாளர்களில் சாந்தன்,
சட்டநாதன், மு. கனகராசன் ஆகிய மூவரும்

கே.எஸ். சிவகுமாரன் 95
அருமையாக எழுதுகிறார்கள். இவர்களில் சாந்தனின் பெயரை முதலிற் குறிப்பிட வேண்டியுள்ளது. காரணம் அவருடைய கதைகளில் சிக்கன நெறி மேலெழுந்து நிற்பதுதான். ஒவ்வொரு சொல்லும் தேர்ந்தெடுக்கப் பட்ட அவசியமான சொல்லாக இருக்கிறது. வழவழாத்தன்மை இல்லை.
நான் கூறுவது மிகையல்ல என்பதற்கு அத்தாட்சியாக க. கைலாசபதியும் தமிழ்நாட்டு எழுத்தாளர் ஹோரியும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
சாந்தனின் கதைகளை ஒவ்வொன்றாக எடுத்து விமர்சிக்க வேண்டிய தேவை இல்லை. கதைகளில் சாந்தனைக் காணலாம். பயிற்றப்பட்ட வாசகனுக்கு அவர் கதை பரிச்சயமாகும். அரைவேக்காடாக இருந்து கொண்டு பெரிய ஆழமுடையவர் என்று தம்மைப் பாவனை பண்ணிக்கொண்டு பாமரத்தனமாக எதையும் எடைபோடும் பிரதிநிதிகளுக்குச் சாந்தனின் கதைகளும் அவர் பற்றிய மதிப்பீடும் ஆழமற்றனவாய் இருக்கும். பாவம் விட்டு விடுங்கள். இவர்கள் காலவோட்டத்தில் அடிபட்டுப் போய்விடுவார்கள்.
(தினகரன் வாரமஞ்சரி : 12-09-1987)
来

Page 50
96 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
என். சோமகாந்தனின் நேரடி அனுபவவிச்சு
‘ஈழத்துச் சோமு’ என்ற என். சோமகாந்தன் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வெளியிட்ட பல சிறுகதைகளில் சில கதைகள் மாத்திரமே ஆகுதி’ என்ற இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. இக்கதைகள் 1959க்கும் 1986க்கும் இடையிலே எழுதப்பட்டவையாகும்.
சோமகாந்தனின், சமகால இலக்கிய பங்களிப்புகளுடன் ஈழத்து இலக்கிய வளர்ச்சியும் சம்பந்தப்பட்டிருப்பதை வரலாற்றாசிரியர்கள் அறிவர்.
ஒர் எழுத்தாளனின், படைப்பை அவன் எழுதிய காலகட்டப் பின்னணியிலே வைத்துப் பார்ப்பது வழமை, அவசியமும்கூட ஆயினும் அக்கதைக் கருத்து, சமகாலக் கருத்தோட்டத்திற்கமையாதிருப்பின், அதனைச் சுட்டிக் காட்டுவது திறனாய்வாளரின் கடமையாகும்.
முதலிலே பலராலும் பாராட்டப்பட்ட 'ஆகுதி" என்ற கதையை எடுத்துக்கொள்வோம். 'ஆகுதி’ என்ற சொல்லே பிரத்தியேக அர்த்தங்கொண்டது.

கே.எஸ். சிவகுமாரன் 97
நாளாந்தப் பாவனையில் இல்லாதது. ‘ஆகுதி சமயக்கிரியைகளுடன் தொடர்புள்ளது. ஒமகுண்டல நெருப்பு அல்லது தீ எனப்படும் ஐம்பூதங்களில் ஒன்றைக் குறிப்பது. இக்கதையிலும் 'ஆகுதி ஒரு குறியீடாக இடம் பெறுகிறது எனலாம். ஆக்கமும் அழிவும் ஆகுதியினால் ஏற்படுகிறது. நிர்மலப்படுத்தும் கருவி நிர்மூலத்தை ஏற்படுத்தவும் தயாராய் நிற்கிறது.
இக்கதை பற்றி மேலும் விபரிக்கு முன், கதாசிரியர் சோமகாந்தன் சம்பந்தமான உஒரு விபரத்தையும் நாம் நினைவிலிருத்த வேண்டும். சோமகாந்தன் பிறப்பால் ஒரு பிராமணர். எனவே வைதீக அனுஷ்டானங்கள் தொடர்பான நேரடியான அனுபவம் பெற்றவர். குருக்கள் வர்க்கக் கலாசாரத்தின் பண்புகளையும், அக்கலாசாரப் பின்னணியின் சிறப்பான இலட்சியங்களுக்கு வடிவங்கொடுக்கும் ஜெகன்னாத குருக்களின் பாத்திரத்தையும், சோமகாந்தன் போன்ற எழுத்தாளர்களே எம் மனத்திரை முன் கொண்டு வர முடியும். அதாவது நேரடி அனுபவ வீச்சு உயிர்ப்புள்ள எழுத்துக்கு இடமளிக்கிறது.
சில தசாப்தங்களுக்கு முன் முற்போக்கான எழுத்து என்றால், வாழ்க்கையின் அடிமட்டத்தில் உள்ள மக்களின் இடர்ப்பாட்டை மட்டும் சித்திரிப்பவை என்று கருதப்பட்டது. ஆனால் தமிழ் நாட்டிலே ஜெயகாந்தனின் பிரபல்யத்திற்குப் பின்னர் தமிழ் உடனிகழ்கால எழுத்து முயற்சிகள் கதையாக

Page 51
98 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பரிமாணங்களைப் பெறத் தொடங்கின. இதுபற்றி மேலும் விளக்காமல், எடுத்துக்கொள்ளப்பட்ட கதைக்கு வருவோம்.
முற்போக்குச் சிந்தனைகளை வரவேற்கும் சோமகாந்தன், தன் அனுபவத்திற்குட்பட்ட விதத்திலே, பிராமணர் ஒருவரைக் கதாபாத்திரமாகக் கொண்டு எழுத வந்தமை உண்மையிலே ஒரு முற்போக்கான முன்னேற்றம் தான்.
ஜெகன்னாத குருக்களின் சங்கடமான நிலையை மேனிலைப்படுத்துவதுடன் கதை முடிகிறது. இக்கதையிலே கூறாமற் கூறிவிடும் உத்தியை ஆசிரியர் வெற்றிகரமாகப் பயன்படுத்தி உள்ளார் எனலாம்.
சைவ நெறியை உள்ளத்தாலும், உணர்வாலும், கிரிகைகளாலும் கடைப்பிடிக்கும் குருக்கள், பெளதிக வாழ்வின் ஆஷாட பூதித்தனங்களுக்கு எதிராகச் செயலற்றுப் போகும் யதார்த்தத்தைத் தான் ஆசிரியர் சோமகாந்தன் இக்கதையிலே படம் பிடிக்கிறார்.
சமயமே இன்று நிறுவன ரீதியாக்கப்பட்ட பின்னர், வெறும் சமயக்கிரியைகள், சமயத்தின் தத்துவத்தையோ, உட்கருத்தையோ புரியாதவர்களினால் சின்னாபின்னப்படுத்திச் சீரழிக்க வைப்பதை, G3s nuco தர்மகர்த்தா, ஏகாம்பரபிள்ளையின் செயல் மூலம் காட்டுகிறார்
ஆசிரியர்.

கே.எஸ். சிவகுமாரன் 99
“எரியும் குண்டலத்தில் ஏகாம்பரத்தார் போத்தலுடன் சரித்து ஆகுதியாக்கிவிட்ட நெய், சீற்றங் கொண்ட அக்கினியைச் சுவாலித்தெழும் பெருந்தனலாக மாற்றிவிட்டது” என்று கதாசிரியர் சோமகாந்தன் கவித்துவமாகவே எழுதி இருக்கிறார்.
ஒரு கிரேக்க துன்பீற்று நாடகத்திலே வரும் காவிய நாயகனின் வீழ்ச்சி போன்று “ஜெகன்னாத குருக்கள் திக்கித்துப் போய்விட்டார்’ என்று ஆசிரியர் விவரிக்கிறார். “அம்பாளின் கர்ப்பக்கிரக விளக்கு மாதிரி ஊதுபத்தி கருகிக் கொண்டிருந்தது’ என்ற வாக்கியத்துடன் கலாசாரப் பண்புகளின் கருகிய நிலையையே ஆசிரியர் காட்டி விடுகிறார்.
‘ஆகுதி" கதையை அடுத்து 1986இல் எழுதப்பட்ட மற்றைய கதையான ‘விடியலுக்கு வருவோம். இந்தக் கதையிலும் ஒரு குருக்கள் வருகிறார் - வைதீஸ்வர ஐயர் - இவரும் வைதீகப் பிராமணர். ஆயினும் மனச்சாட்சியின் முன் சமத்துவத்தைப் பேணுபவர். வைராக்கியமுடையவர்.
அந்தக் கோயிலின் படியை அவர் விட்டிறங்கி பத்து ஆண்டுகளாகப் போகின்றன. ஆனாலும் அவரின் வைராக்கியம் இன்னும் மாறாமல் அப்படியே இருக்கிறது என்று கதாசிரியர் ஒரிடத்திலே குறிப்பிடுகிறார்.
கதாசிரியர் சோமகாந்தனின் முற்போக்குச் சிந்தனை வைதீஸ்வரனின் பாத்திரம் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.

Page 52
100 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அவருக்குத் தெரிந்தளவில் வேதாகம, சாஸ்திர, புராணங்களெதுவும் ஆசார சீலராக ஆலயத்துள் வந்து கும்பிடுவதை எதிர்க்கவில்லை. வழமையாக இருந்து வந்த பழமை கால தேச வர்த்தமானங்களை ஒட்டி மீறப்படுவது குற்றமுமல்ல என்று மனச்சாட்சி அவருக்கு எடுத்துச் சொன்னது.
இந்தக் கதையிலே, ஆலயப் பிரவேசம் சம்பந்தமாக கோயில் தர்மகர்த்தா ஒருவர் நடந்து கொள்ளும் விதம் பற்றி குறிப்பிடப்படுகிறது. அரசியல் லாபம் தீட்டக் குறைந்த சாதியர் எனக் கூறப்படுபவர்களுக்காகவும் கோயிலைத் திறந்து விடும்படி பணித்த தர்மகர்த்தா, தேர்தலில் தோல்வி கண்டதும், அடக்கப்பட்டவர்களுக்குக் கோயில் திறக்கப்படக் கூடாதென்று பின்னர் பணிக்கிறார். அர்ச்சகரோ இந்தத் திகிடுதத்தங்களுக்கெல்லாம் வளையாதவர். வைராக்கியமும் மனிதாபிமானமும் படைத்தவர். அவர் புரட்சிகரமாக நடந்து கொள்கிறார். தனது ஆலயக் குருக்கள் தொழிலை விட்டு விவசாயம் செய்யப்புறப்படுகிறார்.
முற்போக்கா நடந்துகொள்ளும் பிராமணர்களை வைத்துப் பலர் கதைகளை ஏற்கனவே தமிழ்நாட்டில் எழுதி உள்ளனர். ஜெயகாந்தன் அவர்களில் ஒருவர். பிராமணரான லாச. ராமாமிருதமும் அற்புதமானதொரு குறுநாவலை எழுதி இருக்கிறார். நண்பர் சோமகாந்தன் போன்றோர் நமது நாட்டிலே முற்போக்குப் பிராமணர்களை அறிமுகப்படுத்தி யிருக்கின்றனர்.

கே.எஸ். சிவகுமாரன் 101
சோமகாந்தன் ‘விடியல்’ என்ற இக்கதையிலே தமது முற்போக்குப் பிரதிமையை ஏற்றி வைதீஸ்வர ஐயரைப் படைத்திருக்கிறார் எனலாம். இப்படிக் கூறுவதற்குக் காரணம், அந்தப் பாத்திரம் இறுதியில் நடந்து கொள்ளும் விதம் சிறிது மிகையாக இருக்கிறது. அதாவது இயல்பாகவும் நம்பும் படியும் கதை வாசகருக்குப் பரிவர்த்தனை செய்யப்படவில்லை. சில இலட்சியப் பாத்திரங்கள் நாவலில் இடம்பெறுமளவிற்குச் சிறுகதையில் இடம்பெறுவதில்லை எனலாம். இதற்குக் காரணம், இரு வடிவங்களின் வேறுபாடுதான். நாவலில் விஸ்தாரமான சித்திரிப்புக்கு இடமிருக்க, சிறுகதையிலே கவிதை போன்று உணர்ச்சி அல்லது சலனம் சட்டெனத் தோற்றுவிக்கப்படல் வேண்டும்.
நாக விகாரை’ என்ற கதை மூலம் ஒருதலைப் பட்சமான இனவேறுபாட்டுச் சரிக்கட்டல்களை ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். இக்கதை 1959 ஆம் ஆண்டு எழுதப்பட்டதை நினைவிலிருத்தினால் இக்கதையில் காணப்படும் ஒரிரு குறைகளைப் பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம். சிங்கள மக்களிடையே பேரினவாத உணர்ச்சி மேலோங்கி இருந்த காலகட்டத்தை கதை சொல்கிறது. இந்த விதத்தில் வரலாற்று நிகழ்ச்சியை அது பதிவு செய்கிறது. ஆனால் அந்தப் பேரினவாத உணர்வு 1983 ஜூலை மாதத்திற்குப் பின்பு அதே வேகத்தில் இருப்பதாகக் கூறமுடியாது. உலகத்தின் கவனத்திற்குத் தமிழ்ப்பேசும் மக்களின் பிரச்சினைகள் வந்த பின்னரும் அட்டூழியங்களின் விளைவுகள் மனதையுறுத்தியதன்

Page 53
102 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
தொடர்ச்சியாகவும் பேரின மக்களின் போக்கில் இயல்பாகவே நெகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க இயலாது. தவிரவும், தமிழ் மக்கள் அன்று போல் அகிம் சைவாதிகளாய் இப்பொழுது இல்லை. வன்செயல் எங்குமே தலைவிரித்தாடும் பொழுது நிதானம் தப்பி விடுகிறது. ஆனால் எழுத்தாளர்கள் என்றும் நிதானத்தைக் கைவிடப்படாது என்பது என் கட்சி.
ஆகவே, இக்கதையில் வரும் சம்பவங்களை இலட்சியச் சாயல் கொண்ட நிதர்சனக் கோவை என்று கூறி அமைதி காணும் அதேவேளையில், கதைக் கட்டுக்கோப்பு, சிக்கனம், உணர்ச்சிப் பரிமாற்றம் ஆகிய அம்சங்களில் கதை, ஓர் ஆரம்ப கால எழுத்தாளரின் ஆக்கமுயற்சியைப் பறைசாற்றுகிறது எனலாம்.
1963 இல் பிரசுரமான பவளக்கொடி’யை 1987இல் படிக்கும் பொழுது, இது மாதிரிக் கதைகள் பலவற்றைப் படித்திருப்பது காரணமாக, புதிய அனுபவம் பெற வாய்ப்பில்லாது போய் விடுகிறது. ஒரு நடிகை பாத்திரமாகி விட்ட இலயிப்பைக் கூறும் இக்கதை அவளின் ஆசை நிராசையாகப் போன அதிர்ச்சியைப் பின்னணியாகக் கொண்டது. இதே கருப்பொருளை சோமகாந்தன் இப்பொழுது கதையாகக் கொள்வாராயின், நிச்சயமாக அதனை வேறு வடிவத்தில்தான் எழுதுவார் என நினைக்கிறேன்.
“குளத்தங்கரை அரச மரம்’ என்ற தலைப்பிலே, தமிழ்ச் சிறுகதையின் முன்னோடியான வ.வே.சு. ஐயர்

கே.எஸ். சிவகுமாரன் 103
ஒரு கதை எழுதி இருந்தார். அந்த உத்தியிலே அதே தலைப்பிலே, சோமகாந்தன் 1961 ஆம் ஆண்டு கதை ஒன்றை எழுதினார். புதிதாக மணம் முடித்த இருவர் இரண்டாண்டுகளுக்கு இன்பமாக இருந்து விட்டுப் பின் அழகான ஆண் பிள்ளை ஒன்றைப் பெற்றெடுக்கத் தீர்மானிப்பதைக் கதை கூறுகிறது. முதலுக்கும் முடிவுக்கும் காரணத் தொடர்பில்லாமை இருப்பது கதையின் குறைபாடு எனலாம். ஆயினும் ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறை இன்று வளர்ந்திருக்கும் நிலையில் அன்று வளர்ந்திருக்கவில்லை. அக்கால கட்டத்திலே, பல கதைகள், ஈழத்துச் சோமு எழுதியுள்ள இந்தக் கதைபோலவே அமைந்திருந்தன. எனவே காலச் சூழலில் இருந்து பிரித்துப் பார்க்காமல் கதையை நோக்கினால், அவசரப்பட்டு பிள்ளைகளைப் பெற வேண்டாம் என்று வரவேற்கத்தக்க கருத்து கதையில் இருப்பதை நாம் காண முடிகிறது.
இத்தொகுப்பிலே பத்திரிகைக் கதை என்று விவரிக்கப்படும் கதைகள் சிலவும் இடம் பெற்றுள்ளன. இங்கு பத்திரிகைக் கதை என்று நான் குறிப்பிடுவது கதைக்காகக் கதை என்ற முறையில் கதையைக் கட்டு வது ம் , வெறுமனே லட்சியத் தை ச் செருகுவதுந்தான். உதாரணமாக “தெளிவு’ என்ற கதையை எடுத்துக்கொண்டால், அங்கே மணமான பெண் கணவன் இல்லாமல் தனியே நாட்டியம் பார்க்கச் சென்று அசம்பாவிதமான அனுபவத்துக்கு உட்பட்டு, பின் ‘அத்தான்! உங்களை விட்டுவிட்டு நான்

Page 54
104. ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ஒருநாளும் போகமாட்டேன்’ என்று உணர்ச்சிவசப் படுகிறாள். கணவன் தினமும் தாமதமாய் வீடு திரும்புவது ஓவர்டைம்’ கொடுப்பனவுக்காகத்தான் என்ற ஒரு திகைப்புச் செய்தியும் கதையில் வருகிறது. பெண் விடுதலை பேசப்படும் இந்நாட்களில் இக்கதையில் வரும் பெண் நடந்துகொண்ட விதம் இருபது வருடங்களுக்கு முன்தான் பொருத்தம் உடையதாக இருக்கும். இந்த நாட்களில் உழைக்கும் பெண்கள் அலுவல்கத்திலும் வீட்டிலுமாக 16 மணித்தியாலங்கள் உழைக்கிறார்கள். அவர்கள் கூடித்தான் வெளியே செல்லவேண்டும் என்றில்லை. அந்த நாட்களில் கணவன்மார்தான், அலுவலகத்தில் மாரடித்துவிட்டுப் பின்னர் தமது குடும்பத்தினருடன் வெளியே போய் வரவேண்டிய நிலையும் இருந்தது.
சுருக்கமாகச் சொன்னால் “தெளிவு’ என்ற கதை 1960களில் நமது எழுத்தாளர்கள் கொண்டிருந்த பார்வையைக் காட்டுகிறது.
அதே அறுபதுகளில் மனப்பாம்பு’ போன்ற அருமையான கதைகளையும் நமது எழுத்தாளர்கள் படைத்தனர். சோமகாந்தனுக்குச் சொற்கள் கீழ்ப்படிகின்றன. விறுவிறுப்பான, அதே சமயம் இறுக்கமான நடையிலே நல்லதொரு படப்பிடிப்பை ஆசிரியர் இந்தக் கதையிலே நிகழ்த்தி இருக்கிறார்.
இந்த வருணனையைப் பாருங்கள்:

கே.எஸ். சிவகுமாரன் 105
“தேங்காய்த் துருவல் போலச் சொரசொரக்கும் ஒட்டிய கன்னங்களுக்குப் பவுடர் பூசி, உதட்டுக்குச் சாயம் தடவி எடுப்பிழந்த அங்கங்களை ஏறத் தூக்கி, எழில் கூட்டி அப்போது தான் மலர்ந்த குமரிகளென ஒயில் காட்டி நகர வீதிகளில் வரும் கன்னிகைகள் போல அந்த விளக்குகள் தெருவுக்குப் பகட்டுச் செய்தன.”
இக்கதையிலே மணம் முடித்து மனைவியுடன் வாழ முடியாத நிலையிலிருக்கும் ஒர் இளம் அரசாங்க உத்தியோகத்தனது தர்ம சங்கடமான அனுபவம் ஒன்றைக் கதை கூறுகிறது. அதேவேளையில் பயன் மதிப்புகள், சலனங்கள், வாழும் சூழல், பகட்டு போன்றவற்றின் மோதல்களுக்கிடையில் அவன் நிதானம் அடைவதும் கதையில் கூறப்படுகிறது.
"அது வேறு உலகம்’ என்ற கதையில் உளவியல் ரீதியாக ஒரு பிரச்சினை அணுகப்படுவதைக் காண்கிறோம்.
“வெறுமனே தூய்மைவாதம் பேசி, மற்றவர்கள் வாழ்க்கையில் நுழைந்து அவர்களைப் பற்றிய ரிஷிமூலம், நதிமூலம் ஆராய்ந்து கொண்டிருக்கிறது அவரது சமூகம். கணேஷ் திருந்திக்கொள்ள முடியாதபடி உண்மையில் கெட்டுப் போனவன்தானா என்ற சந்தேகம் அவர் மனதில் நுழைந்து, குழப்பத்தை உண்டாக்கிவிட்டது” என்று ஆசிரியர் எழுதுகிறார்.

Page 55
106 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
1959ஆம் ஆண்டிலே, சோமகாந்தன் எழுதிய "வாத்தியம் பேசவில்லை’ என்ற கதை அற்புதமான மனிதாபிமான கதை. ஆசிரியரின் முற்போக்கான பார்வையை அன்றே காணமுடிகிறது. அந்த வாத்தியார் பாத்திரம் அலாதியாக உருவம் பெற்றிருக்கிறது.
*காசுக்காக அல்ல’ என்ற கதையிலே, கயமைத் தன்மையுடைய ஒருவர், தாம் எதிர்கொள்ளும் அனுபவங்கள் மூலம், எவ்வாறு நெகிழ்ந்து விடுகிறார் என்பதை கச்சிதமாகக் காட்டி விடுகிறார் ஆசிரியர்.
கடைசியாக, நிலவோ நெருப்போ’ என்ற முதற்கதையும் குறிப்பிடத்தக்க படைப்பு எனலாம்.
“பசி வந்துவிடுமே என்ற பயத்தில் கட்டுண்டு அவர்கள் சேர்ந்து நிற்கிறார்கள். அவர்கள் பயத்துக்குப் பயந்து நாட்டாண்மைத் தரகர் நாடியொடிந்து நிற்கிறார்” என்று இக்கதை முடித்திருக்கும் தோரணை முதிர்ச்சி அனுபவமிக்க ஒர் எழுத்தாளனுக்கே வரக்கூடியது. இத்தனைக்கும் இக்கதை 1962இல் எழுதப்பட்டது.
சோமகாந்தனின் ஆகுதி’ சிறுகதைத் தொகுதி வந்திருக்காவிட்டால், அவருடைய படைப்பிலக்கிய ஆற்றலை இன்னும் வாசகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லாது போயிருக்கும்.
(வீரகேசரி வாரவெளியீடு : 10-02-1987)
米

கே.எஸ். சிவகுமாரன் 107
உமா வரதராஜனின் கலாரசனை ஆழமாக்கம்
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அற்புதமான எழுத்தாளர்களில் குறிப்பிடத்தகுந்த ஒர் இளைஞர் உடையப்பா மாணிக்கம் வரதராஜன். உமா வரதராஜன் என்ற இவர் சிறுகதை, விமர்சனம், திரைப்படம் ஆகிய துறைகளில் ஈடுபாடுடையவர். ‘வியூகம்’ என்ற புதுவிதமான தோற்றங்கொண்ட சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றார்.
உமா வரதராஜன் என்ற பெயரிலே இவர் எழுதிய சிறுகதைகள் பல சிற்றேடுகளில் வெளிவந்துள்ளன. 1976 முதல் 1988 வரை இவர் எழுதியுள்ள 13 கதைகளின் தொகுப்பு "உள் மன யாத்திரை.
பிரபல தமிழ்நாட்டு ஒவியர் கே.எம். ஆதிமூலம் அவர்களின் முன்பக்கப் பின்பக்க ஓவியங்கள் நூலின் கவர்ச்சிக்கு அழகூட்டுகின்றன. அட்டையிலே முகந் தெரியாத பெண்ணொருத்தியின் உருவக் கோடுகளும், நெஞ்சுறுதி, அடக்கம் போன்றவற்றைப் புலப்படுத்துவனபோல அவள் நிற்கும் தோற்றமும் அவள் ஆளுமையை வெளிப்படுத்து வனவாக இருக்கின்றன. பின் அட்டையிலே ஆசிரியரின்

Page 56
108 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
தோற்றம் போலும் நிழலும் ஒளியும் பிணையும் சித்திரம்.
உமா வரதராஜனின் கலாசாரப் பின்னணி கலப்புச் சார்ந்தது. தமிழ்நாடும், கிழக்கிலங்கையும் அவர் பண்பாட்டின் பின்னணிக் கோலங்கள். ஆயினும் இலங்கையராகவே அதுவும் போலித்தன்மை சற்றேனும் இல்லாத, நிஜத்தைத் தரிசிக்க முற்படும் ஒர் தூய கலைஞராகவே உமா வரதராஜன் தன்னை இனங்காட்டிக் கொள்கிறார். அந்தவிதத்திலே இவர் எழுத்தில் உண்மை தெறிக்கிறது. அது காரணமாக சமூகப் பணி, உள்ளடக்கக் கதைப் பின்னல், கனதிக் குறைவு போன்ற குறைபாடுகளும் பாரதூரமானவை என்று சொல்லுமளவிற்கில்லை.
இவருடைய கதைகளைப் படிக்கும் பொழுது ஒரு தனியான சுகம் ஏற்படுகிறது. இந்தத் தனியான சுவை இவருடைய எழுத்தாற்றலினால் உருவாகிறது. சொற்களின் மகத்துவத்தை ஒரு கவிஞனுக்குரிய செட்டான ஆக்கத் திறனை உணர்ந்தவராக உமா வரதராஜன் இருப்பதனால், இவர் கதைகளில் ஒளி உண்டாகிறது. ‘உள்ளத்தில் ஒளியுண்டாயின் வார்த்தையிலும் ஒளி உண்டாம்’ என்பதுபோல இவர் கதைகள் கலாரசனையை ஆழமாக்குகின்றன.
உமா வரதராஜன் தமது கதைகளை “உள் மன
யாத்திரை’ என்றே குறிப்பிடுகிறார். அதாவது இவருடைய கதைகள் பெரும்பாலும் புறச்சூழல்

கே.எஸ். சிவகுமாரன் 109
விவகாரங்களைவிட, மனது சம்பந்தப்பட்டவையாக இருப்பதைக் காண்கிறோம்.
நாட்டின் பெரும்பாலான எழுத்தாளர்கள் சமூக யதார்த்தத்தைத் தழுவ, ஒரிருவர் உளவியல் யதார்த்தத்தையும் தழுவிச் சென்றுள்ளனர். அந்த விதத்திலே, சட்டநாதன், கோகிலா மகேந்திரன், கவிதா, உமா வரதராஜன் இன்னும் ஓரிருவர் போன்றவர்கள் வித்தியாசமாக எழுதுபவர்கள். இவர்களுள்ளும் உமா வரதராஜன் கதைகளைப் படிக்கும் பொழுது, தமிழ்நாட்டு சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், பிரபஞ்சன் போன்றவர்களின் கதைகளைப் படிக்கும் பொழுது ஏற்படும் பரவச உணர்ச்சி எனக்கு ஏற்படுவதுண்டு.
உமா வரதராஜனின் கதைகள் உண்மைபோல் சுடுவதற்குக் காரணம், அவை உண்மை வடிவமாக அமைவதுதான். அக்கதைகள் பெரும்பாலும் இவருடைய சொந்தக் கதைகளாக இருப்பதனால், எழுத்தில் உண்மை ததும்பி நிற்கிறது. தனது சொந்த அனுபவங்களைத்தான் இவர் உணர்ச்சி கொந்தளிக்கும் சொல் ஒவியங்களாகத் தீட்டியிருக்கிறார். இவருடைய கதைகள் ஒவ்வொன்றுமே ஒரு தன்னுணர்ச்சிப் பாடல் எனலாம். ஒரு நல்ல சிறுகதையை ஒரு நல்ல ‘லிரிக்குடன் ஒப்பிடுவர். அவ்விதம் பார்க்கும் பொழுது உமா வரதராஜனின் கதைகளை ‘லிரிக்ஸ்’ எனலாம். ‘லிரிக்ஸ்' என்றால் தன்னுணர்ச்சிப்
un Güvé956řT.

Page 57
110 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
உமா வரதராஜனுக்கு "சினிமா பிரக்ஞை அதிகம் என்றுதான் கூறவேண்டும். இவருடைய கதைகளை உருவ ரீதியாகப் பகுத்துப் பார்ப்போமாயின் இவற்றிலே ப்ரேம், ஷெராட், சீன், சீக்கு வென்ஸ், எப்பிஸோட் என்றவாறு திரைப்பட உறுதிப் பொருள்களை இனங்காண முடியும். எனவே உமா வரதராஜனின் கதைகளைக் குறும்படங்களாக அல்லது குறுந்தொலைக்காட்சி நாடகங்களாக நாம்
காணமுடியும்.
“உள்மன யாத்திரை’ என்ற இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதியிருக்கிறார் கவிஞரும், விமர்சகரும், மொழியியல்துறை அறிஞருமான எம்.ஏ. நுஃமான், மார்க்சிய விமர்சனத்திலே அதிக நாட்டங்கொண்ட துஃமான், மார்க்சியமே இல்லாத வரதராஜனின் கதைகள் பற்றி கூறியிருக்கும் சில வரிகள் இங்கும் குறிப்பிடத்தக்கவை;
“ஒரு நுண் உணர்வு மிக்க வாசகனைப் பொறுத்தவரை படைப்பாளியின் மனோபாவத்தைவிட படைப்பு வெளிப்படுத்தும் வாழ்க்கை உண்மைகள் அல்லது சமூக யதார்த்தம், அது ஏற்படுத்தும் கலைப்பயிற்சி என்பவையே முக்கியமானவையாகும். உமா வரதராஜனின் படைப்புகள் வெளிப்படுத்தும் சமூக யதார்த்தமும், அவை ஏற்படுத்தும் கலைப்பாதிப்பும் ஆழமானது. சமூகத்தில் ஊடுருவியுள்ள பொய்மையை போலித்தனங்களை, முரண்களை அவை
அம்பலப்படுத்துகின்றன. அவற்றோடு ஒத்து மறுக்கும்,

கே.எஸ். சிவகுமாரன் 111
அவற்றுக்கிடையே அகப்பட்டு நசுங்கும் மனித உள்ளத்தின் அவஸ்தையை வாசகன் மனதிலும் தொற்ற வைக்கின்றன. இதுவே இவரது கலையின்
s
வெற்றியாகும்.’’ நுஃமான் கூறுவதை நாம்
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
உமா வரதராஜனின் கதைகள் எந்தப் பத்திரிகைகளில் வெளிவந்தவை என்பதிலிருந்தே, இவரது ஆளுமை எத்தகையதாய் இருக்கும் என்பதை வாசகர்கள் ஒருவாறு ஊகிக்க முடியும். கணையாழி, கால், கீற்று, களம் ஆகிய சிற்றேடுகளிலும், வீரகேசரியிலும் இவர் கதைகள் பிரசுரமாகி இருக்கின்றன. இவருடைய கதைத் தலைப்புகள் கூட கவித்துவமானவைதான்.
இக்கதைகள் எல்லாமே படிப்பதற்கு வித்தியாசமான அனுபவத்தைத் தருவன. ஆயினும் படிப்பவரின் சொந்த அனுபவ வீச்சுக்கு ஏற்ப கதைகளிலிருந்து பெறப்படும் அனுபவப் பரிவர்த்தனையின் ஆழம் அமையும். என்னைப் பொறுத்தவரை உமா வரதராஜனின் கதைகள் அத்தனை ஆழமானவை என்று கூற முடியாவிட்டாலும், அதாவது புத்தம் புதுவிதமான அனுபவமாக இல்லாவிட்டாலும் - இவர் கையாளும் சொற்கள் நிச்சயமாக புதுப்புனைவானவை எனக்
கூறுவேன்.
(முரசொலி ; 10-08-1988)
来源

Page 58
112 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
எம்.ஐ.எஸ். முஸம்மில்லின் கிராமியப் பார்வை
கிவிதை வேறு, செய்யுள் வேறு, கதை வேறு, சிறுகதை வேறு. சிறுகதை என்றால் சிறிய கதை அல்ல. ‘சிறுகதை’ தன்னுணர்ச்சிப் பாடல் போன்ற ஓர் இலக்கிய வடிவம் என்பர். இந்த நூற்றாண்டிலே தமிழுக்கு அறிமுகமாகி நன்கு வளர்ச்சி பெற்று வரும் ஒர் இலக்கிய வகை சிறுகதை.
சிறுகதை என்றால் என்ன, தமிழ்ச் சிறுகதைகள் எத்தகையவை போன்ற ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் ஏராளமாகவே தமிழில் வெளிவந்துள்ளன. இலக்கிய மாணவரும், எழுத்தாளரும் இவற்றைத் தேடிப் படித்தறிந்து வைத்திருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாம் 21ஆம் நூற்றாண்டை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். நவீன வெகுசனத் தொடர்புச் சாதனங்கள் மூலம் தகவல் / தரகுப் பரிவர்த்தனை வியத்தகு வகையில் செயற்படுகிறது. இந்த நிலையிலே பின்னணி அறிவை விசாலப்படுத்த வேண்டியது எழுத்தாளனின் தேவையாகிறது. வரலாற்று நிதர்சனப் பரிச்சயம், எதிர்காலப் போக்கை நிர்ணயஞ் செய்தல் ஆகியன எழுத்தாளனிடமும் இருக்க வேண்டிய பண்புகளாகும். காலத்தின் தேன்வைக்கேற்ப நமது

கே.எஸ். சிவகுமாரன் 113
அணுகுமுறைகளை விசாலப்படுத்த வேண்டும். உள்ளத்தாலும், அறிவ்ாலும் நவீன முறைகளில் எழுத்தாளனும் பரிச்சயங் கொண்டிருத்தல் இன்றியமையாதது.
எழுத்தாளன், வாசகன் இருவருமே இவ்வாறு இற்றைவரையும் ஏற்பட்டுள்ள மாறுதல்களில் பரிச்சயங் கொண்டிருப்பதனால், எழுத்தாளரிடமிருந்து சிறப்பான படைப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
புத்தனுபவம், புத்தறிவு, கூருணர்ச்சித் தன்மை, மெருகுற வாய்ப்பு போன்றவற்றை ஒவ்வொரு புதிய படைப்பிலுமிருந்து வாசகன் எதிர்பார்க்கிறான். பயிற்சியும், தேர்ச்சியும் பெற்ற வாசகனே இவ்வாறு எதிர்பார்க்கின்றான்.
நன்கு பயிற்சி பெற்ற எழுத்தாளன், நன்கு பயிற்சி பெற்ற வாசகனுக்காக எழுதுகிறான். சாதாரண வாசகனுக்காக ஆரம்ப எழுத்தாளன் எழுதுகிறான் எனச் சமாதானப்படுத்திக் கொண்டாலும் ஒர் இலக்கிய வகையை படைப்பதிலும் எடை போடுவதிலும் முதிர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பீடிகையுடன், நண்பர் எம்.ஐ.எஸ். முஸம்மில் எழுதிய பிரார்த்தனையிலுள்ள 11 கதைகளையும் படித்துப் பார்த்தேன். 1977க்கும் 1981க்குமிடையே இக்கதைகளை இவர் எழுதியிருக்கிறார். இவை பத்திரிகைகளிலும், வானொலியிலும் வெளியானவை. இந்தச் சாதனங்களின் தேவைக்கேற்ப

Page 59
114 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
'பத்திரிகை ரக’க் கதைகளாகவே இவர் எழுதியிருக்கிறார். எனவே இக்கதைகள் எழுதப்பட்ட காலம், களம் ஆகியவற்றை மனத்திலிருத்தியே இக்கதைகளை நாம் ஆராய வேண்டும்.
நண்பர் முஸம்மிலின் கதைகளில் அருமையான கருத்துக்கள் பொதிந்துள்ளன. 1981ஆம் ஆண்டிலே இவர் எழுதிய ‘அவள் ஏன் போகிறாள்?’ என்ற கதை பெருமளவுக்குச் சமகால அனுபவத்தைப் பரிவர்த்தனை செய்கிறது எனலாம்:
எ முத் தாள னு க்கு அனு பவ ம் ஒர் அத்தியாவசியமான தேவை. கிராமங்களிலே வாழும் ஒர் எழுத்தாளன், தனது சுற்றாடல் வாழ்க்கையைச் சித்திரிப்பது என்றால், ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளேயே தனது அனுபவத்தைப் பெற வேண்டும். தவிரவும் கிராமியப்புற வாழ்க்கை, நகர்ப்புற வாழ்க்கை போன்று அவ்வளவு சிக்கலானதல்ல. நண்பர் முஸம்மில் தமது கதைகளின் சூழலையும், பாத்திரங்களின் தேர்வையும் பெரும்பாலும் கிராமத்தையொட்டியே வைத்துள்ளார்.
முஸம்மிலின் கதைகள் சமுதாயச் சீர்கேடுகள் சிலவற்றைச் சுட்டிக் காட்டுகின்றன. சீதனம் வாங்கும் பழக்கம், கன்னி கழியாமை, பொய்க்காதல், போலி அந்தஸ்து, சாதியில் எளியவராயினும் மனிதத்துவம் கொண்ட மாந்த ரை இழிவு படுத்து த ல் , வரட்டுக்கெளரவம், நன்றி மறத்தல், ஆற்றாமை, பொறாமை போன்றவற்றை ஆசிரியர் வெறுக்கிறார்.

கே.எஸ். சிவகுமாரன் 115
இந்த வெறுப்பை வெளிப்படுத்தும் விதத்திலேயே இவருடைய கதைகள் கட்டப்பட்டுள்ளன. கட்டமைப்பு இன்னுஞ் செம்மையாகவும், நுணுக்கமாகவும், அழகியற்றன்மை கொண்டதாகவும் அமைந்திருந்தால் பகுத்தாயும் வாசகர்களை மேலும் பரவசப்படுத்தி இருக்கும்.
வாசகர்கள் பலதரப்பட்டவர்கள் என்பதையும் நாம் இங்கு மறக்கக் கூடாது. சாதாரண வாசகர்கள் - அதாவது விசேஷ கலை, இலக்கியப் பயிற்சி குன்றியவர்கள் - கதையில் வரும் கருத்து நன்றாக அமைந்திருந்தால் நிச்சயம் அதனை வரவேற்பர். அதே சமயம், எளிமையான முறையிலே, நேரிடையாகக் கதை சொல்லப்படுவதையே விரும்புவர். பத்திரிகைக் கதைகள் பெரும்பாலும் ԱՄ 6007 வடிவம் பெறாதவையாகவும், இலக்கிய நயங் குன்றியதாகவும் அமைகின்றபோதிலும், வாசகனுக்குச் சிரமந்தராது துலாம்பரமாக, விளக்கமாக, அறநெறிகளை அறிமுகப்படுத்துபவை. அந்த விதத்திலே இக்கதைகள் மாணவருக்குத்தான் பெரிதும் பயனளிக்கிறது எனலாம்.
ஆக, எழுத்தாளன் எத்தகைய வாசகர்களுக்காக எழுதுகிறான் என்பதையும் நாம் கவனித்தல் வேண்டும். நண்பர் முஸம்மில் தானுணர்ந்த, அவதானித்த சில வாழ்க்கைப் போக்குகளைச் சாதாரண வாசகனுக்குச் சொல்ல விரும்பி, பத்திரிகை, வானொலி போன்ற ஊடகங்களின் தேவைக்கேற்பத் தமது கதைகளை எழுதியிருக்கிறார்.

Page 60
116 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சுதாராஜின் மனசை உலுப்பும் கதைகள்
ஆசிரியர் சுதாராஜ் (எஸ். ராஜசிங்கம்) ஏற்கனவே பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), இளமைக் கோலங்கள் (நாவல்) ஆகிய நூல்கள் மூலம் பிரபல்யம் பெற்றவர். ஆயினும் கொடுத்தல் தொகுப்பு மூலம் இன்றைய முன்னணி ஈழத்துச் சிறுகதையாசிரியர்களில் குறிப்பிடத்தகுந்த ஒருவராகக் கெளரவம் பெறுகிறார் எனலாம். எப்படி? ஆக்கத்தை அல்லது படைப்பை இலக்கியமாக்குந் தன்மையை அவர் அறிந்திருப்பதுதான். இந்த அருந்திறனை ஒவ்வொரு கதையிலும் அவர் வெளிக்கொணர்வதை வியக்காமல் இருக்க முடியவில்லை. அவர கதைகள் மனிதனின் இக்கட்டான கட்டங்களைச் சமூகப் பின்னணியிலே நம் கண்முன் கொண்டுவந்து சலனத்தை எழுப்புகின்றன. இச்சலனத்தை எழுப்புவது தான் இலக்கியத்தின் பணி. இந்த நாட்டில் நன்மதிப்புப் பெற்ற ஒரு கலைஞனான சிரித்திரன் ஆசிரியர் சுந்தர் எவருமே பின்பற்ற முடியாத பளிங்குக் கற்போன்ற தனது தெளிவான நடையிலே, இக்கதையின் ஆன்மாவை (அவரே கூறுவது போன்று பண்பான உள்ளங்களின் நெகிழ்ச்சியில் கிளர்ந்தெழுந்த

கே.எஸ். சிவகுமாரன் 117
வடிவங்களே கலையாகும்) எடுத்துக் காட்டியிருக்கிறார். கதைகள் ஒவ்வொன்றும் அருமையானது. செக்கோவ், புதுமைப்பித்தன் கதைகளைப் படிப்பதுபோல அமைகிறது.
இக்கதைகள் பன்னிரண்டையும் ஒவ்வொன்றாக எடுத்து அலசுவது இங்கு பயன் தராது. மனித நேயம் என்பதே இவருடைய கதையின் அடிநாதம். இவர் ஒரு மின் பொறியியலாளரான படியால் அறிவியல் நோக்கிலே பிரச்சினைகளை அணுகுகிறார். தனிமனிதனானபடியால், சமூகத்தில் வேர் விட்டுள்ள ஊழல்களை அகற்றியெறிய இயலாதிருப்பதும் கதைகளில் உணர்த்தப்படுகிறது.
மேட்டுக் குடியினர், மத்திய தரத்தினர், ஒடுக்கப்பட்டவர் போன்ற வர்க்கத்தினர் பற்றி நிறையக் கதைகள் நம்மிடையே உள்ளன. ஆனால் கீழ் மத்திய தரத்தினரின் இக்கட்டான கணங்களை எழுதுபவர் குறைவு. சுதாராஜ் மாத்திரம் இவர்களைப் பற்றிய பல கதைகளைக் கலாபூர்வமாக அறிமுகப்படுத்தி யிருக்கிறார். உதாரணமாக, சாரதியாக இருந்து ஒய்வுபெற்ற அந்தஸ்து குறைந்த ஆறுமுகம், மாஸ்டராக இருந்து முதியோர் இல்லத்துக்குப் போயுள்ள கிழவன், நாயிலுங்கடையனாக மாறிய கிழவன் சைவக்கடை வயித்தி ஆகியோர், உச்சத்திலிருந்து வீழ்ச்சியடைபவர்களின் பரிதாப நிலையைப் பச்சாதாபத்துடன் சித்திரித்து வெற்றி காண்கிறார் சுதாராஜ்.

Page 61
118 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இப்படியான பாத்திரங்களின் மீட்சிக்கு எவ்வாறு நாம் உதவலாம் என்று எம்மை எண்ணத் தூண்டுகின்றன. இக்கதைகளில் இத்தூண்டுதலே இலக்கியம் உந்து செயலுக்கு உதவும் பணியைச் செய்வதை நாம் காண்கிறோம். எந்தவிதமான வெளிக்கோஷங்களும் இல்லாமலே உள்ளார்ந்த பண்பாக பிரசாரம் அமைகிறது. வெற்றியும் பெறுகிறது. நல்ல இலக்கியங்கள் எல்லாம் கலை நயம் என்ற இந்த அம்சத்தைக் கொண்டிருப்பதனால்தான் நூற்றாண்டு நூற்றாண்டாக நயந்தருகின்றன.
“ஏகபத்தினி விரதம்’, ‘ஒரு தேவதையின்
குரல்’, ‘உதிரிகள் அல்ல”, “நன்றியுள்ள மிருகங்கள்’, “கணிகின்ற பருவத்தில்’, ‘பொழுது பட்டால் கிட்டாது’, ‘திருப்பங்கள்’ ஆகியன மானிட இக்கட்டுக்களை (உலகில் எங்கும் இவை நடக்கக்
கூடியவை) நேர்கொண்டு பார்க்க வைக்கின்றன.
சிங்களவர் சிலர் வகுப்புவாதத்தையும் மீறி மனித சமூக நீதிக்காக குரல் எழுப்புவதையும் வர்க்கத்தால் ஒன்றுபட்டவர்கள் தமிழ் / சிங்களம் என்று பார்க்காமல் மனிதநேயத்தில் துடிப்பதையும், சிங்களத் தொழிலாளி குற்றுயிராகக் கிடக்கத் தனது தந்தையின் மரண வீட்டுக்குச் செல்லும் மைந்தன் பயணத்தைத் தொடராமல் தொழிலாளிக்காக குரல் எழுப்புவதும் - மனித நேயத்தினால் எழும் தூய உணர்ச்சித் துரண்டுதல்கள். சுதாராஜின் பொறுப்புள்ள,

கே.எஸ். சிவகுமாரன் 119
மென்மையான, தூய இதயத்தையே இக்கதைகள் காட்டுகின்றன.
இவருடைய ஒவ்வொரு கதையும் மனசை உலுப்பிவிட்டாலும், ‘பாதைகள் மாறினோம்’, ‘நன்றியுள்ள மிருகங்கள்’, ‘படுக்கை’ ஆகிய கதைகளைப் படித்ததும் கண்ணிர் மல் கினேன். எவ்வளவு உருக்கமாக சுதாராஜ் எழுதுகிறார். போலியுணர்ச்சி (ஸென்டிமென்டலிஸம்) என்று கூறவே முடியாது. கணிகின்ற பருவத்தில் என்ற வளரிளம் பருவத்தினர் அடோலஸன்ட் கதையை எவ்வளவு முதிர்ச்சித் தன்மை வாய்ந்த ஒர் உணர்வுக் கதையாகத் தீட்டுகிறார்.
நாடறிந்த நமது மூத்த சிறுகதை எழுத்தாளர்கள் பற்றிய மதிப்பீடுகளும், மறுமதிப்பீடுகளும், காலத்தை ஒட்டிப் புதிய பார்வையுடன் இன்னும் அணுகப்படவில்லை. அதுவரை 1960 வரை எழுத்துலகில் புகுந்தவர்கள் கொடிகட்டிப் பறக்கவே செய்வர்.
எழுபதுகளில் சாந்தன், சட்டநாதன், கனகராசன், திருநாவுக்கரசு, புலோலியூர் க. சதாசிவம், காவலூர் ஜெகநாதன், பூங்கோதை, சுதாராஜ், முருகபூபதி (தொகுப்பு வெளியிட்டவர்களைப் பொறுத்தமட்டில்) போன்றவர்கள் எனக்குப் பரவசத்தையே தந்துள்ளனர். எழுபதுகளில் தொகுப்பு வெளியிடாமலே நல்ல அருமையான கதைகளை எழுதிய பலர் இருக்கின்றனர்.

Page 62
120 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
“கொடுத்தல் அழகிய ஒரு தொகுப்புங்கூட. ரமணியின் மூவர்ண அட்டை ஏகனின் (குணசிங்கம்) இன்றைய படிம வரைபடங்கள், சுத்தமான பதிப்பு 150 பக்கங்கள். சுந்தரின் அருமையான அறிமுகம் இத்தனையும் புத்தகத்தின் பெறுமதியை மேலும் அதிகரிக்கின்றன. சுதாராஜ் இதுவரை புறக்கணிக்கப்பட்டுள்ள ஓர் உண்மைக் கலைஞன். அவர் புதிய முயற்சிகளை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.
தினகரன் வாரமஞ்சரி : 26-02-1989)
来

கே.எஸ். சிவகுமாரன் 121
எஸ்.எச். நிஹமத்தின் நுட்பப் பார்வை
எஸ்.எச். நிஹ்மத் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுப்பு “எரிகொள்ளி’. 1981 முதல் 1988 வரை பத்திரிகைகளில் இவை வெளிவந்தன. தினகரன், வீரகேசரி, சிந்தாமணி, மல்லிகை, சிரித்திரன், களம், சஞ்சீவி, ஆனந்த விகடன் ஆகிய பத்திரிகைகளில் இவை பிரசுரிக்கப்பட்டன.
இப்பத்திரிகைகளின் தேவைகள் ஒன்றுக்கொன்று வித்தியாசமானவை. அத்தேவைகள் எவ்வாறு வித்தியாசப்படுகின்றன என்பதை நிஹ்மத் நுட்பமாகப்ட புரிந்து கொண்டு உரிய பத்திரிகைக்கு உரிய கதையை எழுதியிருக்கிறார் எனலாம். வெற்றியும் பெற்றிருக்கிறார். இது பாராட்டத்தக்க அம்சம்.
ஒர் எழுத்தாளன் தனது படைப்புகள் பரவலாகப் படிக்கப்பட வேண்டும் என்று விரும்புவது இயல்பே. எனவே, தனது சிந்தனையை, கற்பனையை, நோக்கை, எழுத்து வன்மையை வெவ்வேறு மட்டத்திலுள்ள வாசகர்களும் படிக்க வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை. தனது நோக்கத்தை நிறைவேற்ற ஆசிரியர் எந்தவிதமான உத்தியையும் பயன்படுத்தலாம்.

Page 63
22 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
‘எரி கொள்ளி’ என்ற உருவகமும் படிமமும் கதைத் தலைப்பாக அமைந்தமையையும் பாராட்டவேண்டும். வழமையாக எரி நட்சத்திரம் போன்ற பிரயோகங்கள் தலைப்பாக அமைவதுண்டு. ‘கொள்ளி’ என்ற வார்த்தை இலங்கையில் மாத்திரமே பயன்படுத்தப்படுகிறது. இதனைப் பாவித்து நமது பண்பாட்டுக் கோலங்களில் ஒன்றை உருவகமாக ஆசிரியர் சித்திரித்திருக்கிறார்.
இத்தொகுதிக்கு ஆ. சிவனேசச் செல்வன் முன்னுரை எழுதியிருக்கிறார். “மனித மனங்களினூடே இழையோடும் நுணுக்கமான சங்கதிகளைப் பாத்திரங்களினூடாகப் படம் பிடித்துக் காட்டும் ஆற்றல் கைவந்த ஒருவனே எழுத்தாளனாகிறான்” என்ற முன்னுரை ஆசிரியரின் கூற்றை மெய்ப்பிப்பவை நிஹ்மத்தின் கதைகள்.
அடுத்து, இரண்டு விஷயங்கள் பாராட்டப்பட வேண்டியவை. முதலாவதாக ஆசிரியர் விஞ்ஞான ஆசிரியராக இருப்பதனால் சிந்தாமல் தவறாமல் வார்த்தைகளின் முக்கியத்துவம் கருதிச் சிக்கனமாக எழுதியிருக்கிறார். இது கவிஞனுக்கும், சிறுகதை எழுத்தாளனுக்கும் முக்கியமான தேவைகள். இரண்டாவதாக ஆசிரியரின் சுய நம்பிக்கையும் சுய உற்சாகமூட்டலும் வரவேற்கத்தக்கன.
இதயம் திறந்து’ என்ற பகுதியில் ஆசிரியர் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்தும் உடன்பாடானது.

கே.எஸ். சிவகுமாரன் 123
“பிரச்சினைகளை மட்டுமே சொல்வதும் பிரச்சினைகளுக்குரிய தீர்வை வெளிப்படையாகச் சொல்லி விடுவதும் நல்ல சிறுகதைகளுக்குரிய பண்புகள் அல்ல என்று நான் கருதுவதனால் எனது சிறுகதைகள் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றுக்குரிய தீர்வினை மறைமுகமாகவே சொல்கின்றன. இந்தச் சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் சாக் கடைப் பிரச்சினைகளுக்குரிய பூக்கடைத் தீர்வுகளை எனது கதையில் வருகின்ற ஏதாவது பாத்திரத்தினூடாகச் சொல்லிவிடுவதில் நான் மிகவும் ’ என்று நிஹ்மத் கூறுகிறார். இவருடைய கதைகளில் இவர் சொன்னதைச் செய்தும் விடுகிறார்.
கவனமாய் இருக்கிறேன்’
இனி இவருடைய கதைகள் பற்றிச் சுருக்கமான சில குறிப்புகள். முதலில் 'ஆனந்தவிகடனில் வெளிவந்த இரண்டு கதைகளையும் பார்ப்போம்.
‘ஒரு கணவன், ஒரு மனைவி, ஒரு டைரி.
இது ஒரு சுவாரஸ்யமான கதை மாத்திரமல்ல; நல்ல நோக்கத்தை நாசூக்காகத் தெரிவிக்கும் விதமும் ரசிக்கத்தக்கது. சின்னச் சின்ன வாக்கியங்கள் கவித்துவமாகத் தெரிவிக்கும் பாங்கு உதாரணம் - “ஒரு வெறியனின் பசிக்கு என் புனிதம் இரையானது’ ஆகியவை குறிப்பிடத்தக்க அம்சங்கள். தாம்பத்திய உறவை நம்பிக்கை வலுவூட்டும் விதத்தில் எழுதியிருப்பதும் பாராட்டத்தக்கது.

Page 64
124 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
*ஆனந்த விகடனில் வெளியாகிய மற்றொரு கதையான ‘சரசுவுக்கு ஒரு சவுதிக் கடிதம்’ ஓர் உருக்கமான கதை. நாமே சவூதிக்குப் போய்க் காட்சியை நேரில் காண்பது போன்ற பிரமையைக் கதையில் கொண்டு வருகிறார். அத்துணை லாவகம் அவருடைய எழுத்து நடையில். சின்னச் சின்ன வாக்கியங்கள். சித்திரத்தைச் சிக்கனமாகச் சொற்களில் வடிக்கும் பாங்கு ஆகியவை உற்சாகப் படுத்தப்படல் வேண்டும். நவீன எழுத்துக்கு நல்ல உதாரணம்.
திசைமாறும் ஒடங்கள்’ என்ற கதையில் வரும் வர்ணனைகள் ரசிக்கும்படியாய் இருக்கின்றன. உதாரணம்,
“வெண்கலத் தட்டில் வெள்ளிக் கரண்டியால் தட்டப்பட்டது போன்ற அந்தக் குரலின் திடகாத்திரமான இனிமையில் மயங்கிய சபையோர் சடுதியில் மெளனமாயினர்.’ ‘திடகாத்திரமான’ என்ற சொல் எவ்வளவு புதுமையாய் இந்த இடத்தில் வந்து அமர்கிறது. கெட்டித்தனந்தான்.
இந்தக் கதை சிறிது நீண்டுவிட்டது. இறுக்கம் தளர்ந்து விட்டது. கதையில் பொதிந்துள்ள நையாண்டி புரிகிறது. ஆயினும் கருத்தளவில் வரவேற்கத்தக்க கதையாக எனக்குப் படவில்லை. வாழ்க்கையின் யதார்த்த நிலை இலட்சியத்தை மழுங்கடிக்கப் பார்க்கிறது என்ற தொனியில் கதையை ஆசிரியர் எழுதியிருந்தாலும் பெண்ணிலைவாதிகளின்

கே.எஸ். சிவகுமாரன் 125
எதிர்ப்புக்கு இக்கதை உட்படும் என்றுதான் நினைக்கிறேன்.
'விதி விரட்டியபோது’ என்ற கதையையும் ஆசிரியர் இறுக்கமாக எழுதியிருக்கலாம். கதைக் கருவும் புதுமையானது என்று சொல்வதற்கில்லை. கதை முடிவும் வரவேற்கத்தக்கதாய் இல்லை என்பது எனது அபிப்பிராயம். எனது அபிப்பிராயம் என்பதற்காக ஆசிரியர் கொண்டுள்ள பார்வை பிழை என்றோ எழுதிய முறை பிழையென்றோ அர்த்தமாகாது. இந்தக் கதையிலும் சூழல் தனி மனித முடிவு எடுக்கத் தடங்கலாய் அமைகிறது என்ற உண்மை புலப்படுகிறது.
நதிகளின் நடுவில் ஒரு முயல்” என்ற தலைப்பு மூலமே கதையின் கதாநாயகனின் இயலாமையை, சூழலினால் அவன் பாதிக்கப்படுவதை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர். இந்தப் பொறாமை ஊழல் அரசியல் செல்வாக்கு போன்ற தீய சக்திகளுக்கு எதிராகப் போராடுவது நல்ல நோக்கமுள்ள இலட்சியவாதிகளுக்குக் கஷ்டந்தான். ஆயினும் தோல்வியையும், வெற்றியாக மாற்றும் வண்ணம் ரவிசங்கர் தனது இடமாற்றத்தை ஏற்றுக்கொள்வது வரவேற்கத்தக்கது.
‘எரிகொள்ளி’ என்ற கதையிலே எரியும் விறகுத்
தடியுடன் கதாநாயகி குசினிக்குள் இருந்து வெளியேறுவதாகக் கதையை ஆசிரியர்

Page 65
126 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முடித்திருக்கிறார். அது ஒரு சின்னமாகவும் படிவமாகவும் அமைவது பொருத்தமாயிருக்கிறது. ஒரு கோழை தனது வீரத்தை வீட்டில் காண்பிப்பான் என்பார்கள். அது போல இக்கதாநாயகன் தனது வீட்டில் செய்யும் அட்டகாசங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாற் போன்று கதை உணர்த்தாமல் உணர்த்துவது ரசிக்கத்தக்கது.
‘பரிதா வெளிநாடு போகிறாள்’ என்ற கதையில் சூழலின் கண்மூடித்தனமான எதிர்ப்பையும் மீறிக் கதாநாயகி துணிவுடன் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கது. சில தேவைகள் என்ன காரணங்களினால் ஏற்படுகின்றன என்பதை எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆசிரியர்.
“அவள் ஒரு பீ.ஏ.’ என்ற கதையிலும் சமுதாயச் சூழலின் தீட்சண்யமான ஒரு போக்கை எடுத்துக் காட்டிக் கதாநாயகி மீது பச்சாதாபம் கொள்ள வைத்திருக்கிறார் ஆசிரியர். இதுவும் ஒரு நல்ல கதை என்பது எனது அபிப்பிராயம்.
‘ஏனோ அழுதான்’ என்ற நிஹ்மத்தின் சமீபத்திய கதை மிகமிக நன்றாய் இருப்பதற்கான காரணம் உடன் நிகழ்கால 'சிஸ்டம்' எப்படி இருக்கிறது, ஊழல் எப்படி மலிந்து கிடக்கிறது என்பதை விபரமாக எழுதியிருப்பதனால்தான். கல்வித்துறையில் இருந்து வரும் நிர்வாக ஊழல்களை நாம் அறிந்துகொள்ள இக்கதை மூலம் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் . 127
‘சபலங்கள்’ என்ற கதையை சுவாரஸ்யமாகவும் உள்ளார்ந்த நகைச்சுவையுடனும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆசைகள், சபலங்கள் படித்த பொறுப்புள்ளவர்களையும் பாதிப்புக்குள்ளாக்குகின்றன என்பதைக் கிண்டலாகக் காட்டியிருக்கிறார்.
‘குருதிச் சடங்கு’ என்ற காதற் கதையும் துன்பீற்றுக் கதைதான். சுவாரஸ்யமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். படிப்பதற்குச் சுவையாக இருக்கிறது.
இத்தொகுதியிலும் முதலாவது கதை, 'விதிக்கு ஒரு சவால் ஆக்கபூர்வமான செயலை கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது.
சாதகமற்ற சூழலையும் சாதகமாக ஆக்கிக் கொள்ளும் ஆற்றலிலேதான் வீரம் விளைகிறது என்பதை இக்கதையில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
இக்கதைத் தொகுப்பு மூலம் நிஹ்மத்தின் ஆற்றல் வெளியாயிருக்கிறது. சமுதாயத்தில் காணப்படும் அசாதாரணமான சம்பவங்களை, முரண்பாடுகளை உளவியல் ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மேலும் நுட்பமாக ஆசிரியர் தொடர்ந்து எழுதி வரவேண்டும். மகோன்னத படைப்புகளை அவரிடமிருந்து நாம் எதிர்பார்க்கின்றோம்.
(தினகரன் வாரமஞ்சரி : 17-12-1998)

Page 66
28 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
உடுவை தில்லை நடராஜாவின் முன்னைய நடப்புகளின் சித்திரிப்பு
உடுவை தில்லை நடராஜா தமது இந்தச் சிறுகதைத் தொகுதி மூலம் எம்மைப் பழைய அனுபவங்களை இரைமீட்ட உதவுகிறார். அதாவது கொழும்பிலும், யாழ்ப்பாணத்திலும் தமிழர் வாழ்க்கை முறைகள், பயன்மதிப்புகள், எழுத்து உத்திமுறைகள் போன்றவை எவ்வாறு இருந்தன என்றறிய இந்த எழுத்தாளரின் ஆக்கங்கள் உதவுகின்றன.
‘நிர்வாணம்’ என்ற இத்தொகுப்பில் பன்னிரண்டு கதைகள் இடம் பெற்றுள்ளன. 1967ஆம் ஆண்டிற்கும் 1976ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் பத்திரிகைகளில் எழுதிப் பிரகரித்த கதைகளே இத்தொகுப்பில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்தத் தொகுப்பிற்கு நவீன பாணியில் சித்திரம் வரைந்திருப்பவர், பல்கலைத் திறனாற்றல் மிக்க பூரீதர் பிச்சையப்பா.
உடுவை தில்லை நடராஜா தமது
விடாமுயற்சியாலும் திறன்களை ஒன்று திரட்டிச் செயற்படுத்தியது காரணமாகவும் படிப்படியாக

கே.எஸ். சிவகுமாரன் 129
உயர்ந்து இன்று இலங்கை நிர்வாக சேவையில் உயர் பதவி வகிக்கின்றார்.
தாகம்’ என்ற ஏட்டின் ஆசிரியரான மைக்கல் கொலின் கூறியிருப்பது போல, ‘எந்த இஸம்களுக்குள்ளும் மாட்டிக் கொள்ளாதவர். மானுட நுண்ணிய உணர்வை மிக அழகாகப் படம் பிடிப்பவர்.’
அறுபதுகளின் பிற்பகுதிக்கும் எழுபதுகளின் முற்பகுதிக்குமிடையில் நிலவி வந்த இந்நாட்டுச் சமூக, பொருளாதார, தார்மீகச் சூழல்களுக்கு உடுவை தில்லை நடராஜாவும் உட்பட்டார் என்பதற்கு ஆதாரமாக அவர் கதைகளும், எழுத்துமுறையும் காட்டி நிற்கின்றன.
இவர் நேரடியாகவே கதையைக் கூறுகிறார். நல்ல தார்மீகக் கருத்துக்களைக் கூறுவதே இவருடைய நோக்கம். யாழ்ப்பாணம் தேவன், சொக்கன் போன்ற சிரேஷ்ட எழுத்தாளர்களின் ஆளுமைக்குட்பட்டவர். எனவே அவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள் சில இவர் கதைகளிலும் படிந்து நிற்கின்றன.
உடுவை தில்லை நடராஜாவின் கதைகளில் இழைந்தோடும் நகைச்சுவையும் மெலியார் மீதான பச்சாதாபமும், மெல்லிடையார் போக்குகளைப் படம் பிடிக்கும் தன்மையும் குறிப்பிடத்தக்கன.
'வாசக் கட்டி’ என்ற கதை மிகவும் எளிமையான விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. இக்காலக் கதைகளைப்

Page 67
130 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
போன்று வண்ணமும் வடிவமும் பெறவில்லை என்று ஒரளவு குறையிட்டுக் கொண்டாலும், ஒரு சிறுவனின் ஆதங்கத்தின் வாயிலாகப் பெரியவர்களாகிய நமக்கும் சில படிப்பினைகளை ஆசிரியர் புகட்டுகிறார் எனலாம். பாவனைப் பொருள் நுகர்ச்சி அதிகரித்திருக்கும் சூழலிலே விளம்பர உத்திகள் மேலிடம் பெறுவது தவிர்க்க முடியாததுதான். விளம்பரத்தினால் ஏமாற்றப்பட்ட தாழ்வுணர்ச்சி கொண்ட ஒரு பையனின் குணச்சித்திரத்தை ஆசிரியர் காட்டுகிறார்.
*காலம் காத்திருக்குமா’ கதையில் சுயநலமிக்க ஓர் இளைஞனின் போக்கையும் அவன் மீது பாசங்கொண்ட தாயினதும் தங்கையினதும் மனோநிலையையும் ஆசிரியர் விளக்குகிறார்.
ஆசிரியர் உடுவை தில்லை நடராஜா விருந்து’ என்ற தமது கதையில் பணக்காரர்களின் மனோபாவத்தையும் இல்லாதவர்கள் மனோபாவத்தையும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்.
*சந்நிதி கோயில் சாப்பாடு” கதையில் வேஷதாரித்தனத்தைக் கிழித்துக் காட்டுகிறார். வலியாரும், மெலியாரும் மோதும் கட்டங்களில் நல்லதை உணர்த்துபவர்கள் மெலியர்கள்தான் என்ற ரீதியில் ஆசிரியர் தமது கதைகளைச் சமைக்கிறார். இக்கதை இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
“பிரபலம்’ என்ற கதையில் அக்கால இளைஞர் சிலரின் மேம்போக்கான பயன் மதிப்புகளைச் சுட்டிக்

கே.எஸ். சிவகுமாரன் 131
காட்டுவதுடன், நகைச்சுவைகளையும் எழுதியிருக்கிறார். கதையின் இறுதியில் வரும் வாக்கியம் உண்மைதான்.
“பெரியவர்களின் சிறிய திருவிளையாடல்களையும், பெரிதாக வெளியிடும் பத்திரிகைகளும் வானொலியும் சிறியவர்களின் பெரிய விடயங்களைக் கூடப் பிரபல்யப்படுத்த மாட்டா என்பது கந்தசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.”
‘நிர்வாணம் கதையும் இளைஞரின் விகற்பமான மனப்போக்கைக் காட்டுகின்றது. ‘ஒருவரிடம் வெறுக்கும் காட்சியை இன்னொருவரிடம் காணத் துடிப்பதுதானே மனித மனம்’ என்றும் ஆசிரியர் கதைக்கு வெளியே நின்று விளங்கப்படுத்துகிறார்.
இதுவும் ஒரு காதல் கதை'யை சுவாரஸ்யமாக எழுதியிருப்பதுடன் நிதர்சனங்கள் சிலவற்றையும் ஆசிரியர் தொட்டுக் காட்டுகிறார்.
*கன்னத்தில் கதையும் ரயில் பயணக் கதைதான். இக்கதையும் படிப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கின்றது. முரண்பாட்டு நிலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் முடிவிலே பெண்ணின் தன்மையை ஆசிரியர் இவ்வாறு விளக்குகின்றார்.
“பெண்மை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தன்மையுடையதாக இருந்தாலும், அவையெல்லாம் மேன்மையான தன்மைகளே. பெண்மையின் தன்மைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துத்தான் அறிய வேண்டும்.

Page 68
132 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
‘பாமா படித்துக் கொண்டிருக்கிறாள்’ என்ற கதையும் நன்றாக இருக்கின்றது. போட்டோபோட்டி உலகத்திலே, பல்கலை வேந்தர்களாக எல்லோருமே வர முடியாது. ஓரிருவரே அவ்விதம் ஒளிர்விட முடியும். எனவே இரண்டு மூன்று தோணிகளில் கால் வைக்காது, குறிப்பிட்ட ஒரு துறையில் நன்கு பரிச்சயம் பெற்றுவிட்டுப் பின்னர் வேறு துறைகளில் ஈடுபடலாம் என்பதை ஆசிரியர் உணர்த்துகிறார்.
‘ஷணப்பித்தம்’ - ‘கவர்ச்சி ஒரு கணநேர மயக்கம், உயர் நடத்தைதான் மிகச் சிறந்த ஆண்மை’ என்பதை ஒரு கன்னி உணர்ந்து கொள்வதாக ஆசிரியர் இந்தக் கதையைப் படைத்திருக்கிறார்.
வேஷதாரித்தனத்தினை அம்பலப்படுத்தி, பாத்திரங்களே தமது தவறுகளை உணர்வதாகவும் தில்லை நடராஜா கதை எழுதுகிறார். ‘ஒரு சோக நாடகம் தொடர்கிறது’ இந்த ரீதியில் எழுதப் பட்டிருக்கிறது.
இறுதிக் கதையான ‘அப்பக் கடை நடக்கிறது’ கதையில் யாழ்ப்பாணத்துப் பேச்சு மொழியையும், பந்த பாசங்களையும் அழகாக ஆசிரியர் நமக்குத் தருகிறார். இவருடைய கதைகள் வாசகர்களுக்குச் சிரமம் தராதவை. இலகுவில் புரிந்து கொள்ளத்தக்கவை. சிக்கலான கதைப்பொருள் முரண்கள் இல்லாதவை. நேர்த்தியாக எழுதப்பட்டவை.

கே.எஸ். சிவகுமாரன் . . . . 133
ஓய்வின்மை காரணமாகவோ என்னவோ நண்பர் தில்லை நடராஜா இப்பொழுதெல்லாம் கதைகள் எழுதுவதில்லை. அவருடைய சமூக அவதானிப்புகளும், மனித உறவுகளைப் புரிந்து கொள்ளும் முறையும், பாத்திர வார்ப்புகளும் மொழி வளமும் புதிய அனுபவங்களை, கதைகளில் வடிக்க உதவுமாகையால் 90களில் சமூக சித்திரங்களைக் கதைகளாக அவர் படைக்க வேண்டும்.
(தினகரன் வாரமஞ்சரி : 15-12-1991)
来

Page 69
134 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அருண் விஜயராணியின் பெண்மைப் பார்வை
விஜயராணி செல்லத்துரை என்ற பெயரில் எழுதத் தொடங்கி, அருண் விஜயராணி என்ற பெயரில் பிரபலமாகி, ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் மத்தியில் வித்தியாசமாக எழுதுபவர்களிடையே இனங்காணப்பட்டு, தற்சமயம் அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் எழுத்தாளரினால், முன்னர் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான கன்னிகாதானங்கள் குறிப்பிடத்தக்கது.
1977-90 காலப் பகுதியில் விஜயராணி எழுதிய 12 கதைகளும், காலப்பின்னணியைக் கருத்திற்கொண்டு பார்க்கப்பட வேண்டும்.
தொகுப்புத் தலைப்புக்கதை ‘லிவிங் டுகெதர்’ என்ற மேனாட்டுச் சம்பிரதாயத் தாம்பத்திய வாழ்க்கை (p SO so அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களிடையேயும் தவிர்க்க முடியா மற் பின்பற்றப்படுவதைக் கூறாமற் கூறுகிறது. புலம் பெயர்ந்தோர் வாழ்க்கைப்போக்குகள் பாரம்பரிய பயன்மதிப்புகளுக்கு முரணாகச் செல்வதையும், அதன்

கே.எஸ். சிவகுமாரன் 135
நியாயப்படுத்தும் அம்சத்தையும் கதை கூறுகிறது. நடை யாழ்ப்பாணப் பேச்சு வழக்கைக் கொண்டு அமைந்தாலும், சிறிது சிக்கனமாக, தேர்ந்தெடுத்த வார்த்தைக் கோலத்தைப் பூசி மெருகேற்றியிருப்பின் d'Aroödon அதிகரித்திருக்கும்.
தமிழ்த் திரைப்படங்கள் கூட புதுமையான நோக்குகளில் “பெண்ணைப் பொருள் கொண்டு விளக்கும் இந்தத் தசாப்தத்தில், விஜயராணி பல வருடங்களுக்கு முன் எழுதிய ‘ஒரு நிரந்தர நிழலைத் தேடி’ என்ற கதை இன்று எடுபடாமல் போகலாம். ஆயினும் அது எழுதப்பட்ட காலத்தில் நிச்சயமாக நவீனத்துவம் வாய்ந்த கதைதான்.
1978ல் பிரசுரமாகிய ‘சிலரது வாத்தியத்தில் இரண்டு பக்கங்கள்’ என்ற கதைகூட அருண் விஜயராணியின் துணிச்சலான பார்வையைத் துலாம்பரமாகக் காட்டுகிறது. சிந்தனையும், கற்பனையும் வரவேற்கத்தக்கதாக இருக்கும் அதேவேளையில் வடிவம் செப்பனிடப்பட்டிருந்தால் மேலும் சிறப்பாய் அமைந்திருக்கும்.
‘ஆசையின் ராகங்கள் அபஸ்வர கீதங்கள்’ என்ற கதை 1979ல் பிரசுரமானது. இதே கதையை ஆசிரியை இப்பொழுது எழுத நேர்ந்தால் நிச்சயமாகச் சிறிது மாற்றங்களுடனும் முதிர்ச்சிப் பார்வையுடனும் எழுதியிருப்பார். இந்தக் கதையில் தந்தையைப் பழி வாங்கும் LD59; Gf. 6ör வீம்புதான் முதலிடம்

Page 70
136 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பெறுகிறதேயன்றி, கதாநாயகியின் தாம்பத்திய முதிர்வு நோக்கு இடம் பெறுவதாக இல்லை.
சில நியாயங்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக இருந்தாலும் உலகத்தாரின் கண்களுக்குப் புரியாமல் போய்விடுகிறதோ?’ என்று கதாசிரியை
கொண்ட சந்தேகம் சரியானதுதான். கதை எழுதப்பட்ட காலத்திலிருந்து பல ஆண்டுகள் சென்றுவிட்டாலும், யதார்த்த நிலையில்
மாற்றமெதுவும் இல்லை. கதையின் தலைப்பு பொதுவான நியாயங்கள். ஏணி என்ற கதையும் பல வருடங்களுக்கு முன் வெளிவந்த கதை. யதார்த்த நிலையைப் படம் பிடிக்கிறது. “கமல் வேண்டாம். ஒரு கமக்காரன் வாறானோ பார்ப்பம்’ என்ற ஏக்கப் பெருமூச்சை உதிர்த்துவிட்டுக் கதையை நன்றாகச் சமைத்திருக்கிறார் ஆசிரியர்.
மற்றொரு “எக்ஸ் போஸே’ கதை மனிதாபிமானங்கள் மானம் போகின்றன. பெரிய இடங்களில் இடம்பெறும் வேஷதாரித்தனங்களையும், பொய்மையான உறவுகளையும் விஜயராணி அம்பலப்படுத்துகிறார். மனிதாபிமான இயக்கங்கள் எல்லாமே இக்கதையில் வருவது போன்று மோசடிகளில் இயங்காவிட்டாலும், ஓரிரண்டு அப்படித்தான் செயற்படுகின்றன.
பல வருடங்களுக்கு முன் வெளியாகிய கற்புநிலையென்று சொல்ல வந்தால் கதையும்

கே.எஸ். சிவகுமாரன் 137
மற்றுமொரு புதுப்பார்வை கொண்ட கதை. பெண் நிலையில் நின்று வியாக்கியானம் அளிக்கும் பாங்கு நியாயபூர்வமானதாக அமைகிறது.
தோழி தொகுப்பில் இடம்பெற்ற வாழாவெட்டி கதையும் பெண்ணின் மனநிலையை மிக நேர்த்தியாய் வெளிக் கொணர்கிறது. கதை முடிவும் ஏற்றுக் கொள்ளத்தக்கது.
*திறமைகள் ஏலத்துக்கு விடப்படுகின்றன’ 1984இல் வெளியாகிய கதை. இங்கும் உயர் தொழில் புரிபவர்கள் சிலரின் பயன்மதிப்புக்கள் எவ்வாறு அடிப்படை மனிதாபிமான நீரோட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்பதைக் கதை சித்திரிக்கின்றது. ஒரு நெகிழ்ச்சியை, ஒர் உறுத்தலை படிப்பவர் மனதில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார்.
அருண் விஜயராணியின் இக்கதைத் தொகுதியில் எனக்கு மிகவும் பிடித்த கதை 'அவசரம் எனக்கொரு மனைவி வேணும். உடனிகழ் கால வாழ்க்கைப் போக்கு புலம் பெயர்ந்தவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் சலனங்களையும், வெள்ளைக்காரியாக இருந்தாலும், மனிதாபிமானம் கொண்ட ஒர் அற்புதமான மனிதப் பிறவியாக அதே வெள்ளைக் காரி இருக்கலாம் என்பதையும் விஜயராணி தமது முதிர்ச்சி பெற்ற பக்குவமான பார்வை மூலம் காட்டுவது பாராட்டத்தக்கது.

Page 71
138 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சில வருடங்களுக்கு முன் அவுஸ்திரேலிய வானொலியில் ஒலிபரப்பப்பட்ட கடைசிக் கதையான “எத்தனை காலம்தான்’ தோட்டத் தமிழரின் பேச்சு மொழியில் எழுதப்பட்ட ஒரு யதார்த்தபூர்வமான கதை. நிர்ப்பந்தங்கள் வலிமை பெறுவது காரணமாக, இலட்சியமும் தார்மீகக் கோபங்களும் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்பதைத் தமது கதை மூலம் ஆசிரியை விளக்கியிருக்கிறார்.
அருண் விஜயராணியின் சிந்தனையோட்டம் வரவேற்கத்தக்கது. கதையமைப்பும் பரவாயில்லை. ஆயினும் மெருகும் ஆழமும் இன்னுஞ் சிறிது தேவை. காவேரி என்ற பெயரில் எழுதும் லக்ஷமி கண்ணன், அம்பை என்ற பெயரில் எழுதும் சி.எஸ். லக்ஷமி போன்ற தமிழ் நாட்டுப் பெண் எழுத்தாளர்கள் இந்தப் பண்பையும் உள்ளடக்கி எழுதுவதை விஜயராணியும் அவதானித்திருப்பார்.
(தினகரன் வாரமஞ்சரி : 06-06-1993)
来

கே.எஸ். சிவகுமாரன் 139
முஸ்லிம் பெண் எழுத்தாளர்களின் பார்வை
முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் எழுதிய ஐந்து பரிசுக் கதைகளைக் கொண்டது ‘சுமைகள்’ என்ற தொகுப்பு. முஸ்லிம் மாதர் ஆராய்ச்சிச் செயல் முன்னணி நடத்திய போட்டியின் அறுவடைகள், இந்த அமைப்பின் இணைப்பாளர் அன்பேரியா ஹனிபா. இவர் எஸ்.எம். ஹனிபா அவர்களின் துணைவியாவார்.
இலங்கையில் “பெண்ணியம்’ தொடர்பாக தீவிர செயற்பாடுகளில் இறங்கும் தமிழ்ப் பெண்மணிகளில் முக்கியமான ஒருவர் சித்திரலேகா மெளனகுரு. இவர் இத்தொகுதிக்கு நுட்பமான கருத்துக்கோவையாக ஒரு அணிந்துரை எழுதியிருக்கிறார்.
முதற்பரிசு பெற்ற கதை “சுமைகள்’ எழுதியவர் ஹளபீனா வஹாப் (முஸம்மில்). காலத்தின் துரித வேகத்திற்கும், தேவைக்கும் ஏற்ப விழுமியங்கள் மாறுபடுவதை உணராத சம்பிரதாய வாதிகள் குறிப்பாகப் பெண்களை அநியாயமாகத் துன்புறுத்துகிறார்கள் என்பதைக் கதை சொல்கிறது. கருத்தளவில் நல்ல கதை என்றாலும் கலா ரீதியாக இன்னும் செப்பனிட்டிருக்கலாம். கதை நிகழ்ச்சிகள்

Page 72
140 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
துரிதமாக மாற்றமடையும் போது அவை திடீரென்று வருவதனால் கதையோட்டம் தர்க்க ரீதியாகச் செல்லாமலும் உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியாமலும் அமைந்து விடுகிறது. இக்கதாசிரியரின் சிறுகதைத் தொகுப்பில் காணப்பட்ட லாவகம் இக்கதையில் இல்லா மற் போனதையும் அவதானிக்கலாம்.
சம்பிரதாயங்கிளை யதார்த்த ரீதியாக மாற்றும் துணிவு இல்லாமற் போவதனால் முரண்பாடுகள் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதற்காகத்தானா?” என்ற எம்.ஏ. ரஹிமாவின் கதையில் வரும் ஒரு பகுதி:
இஸ்லாமிய வரன்முறையை மிகவும் நேசித்து அதனோடொன்றிய வாழ்வு வாழ விரும்பிய தாத்தாவுக்குத் தானும் சேர்ந்து மாறு செய்வது போல மனசு கஷ்டப்படுகிறது. முரண்பாடான சமூக நடைமுறைகளை வெல்ல முயற்சித்து முப்பத்தைந்து வருடங்களைக் கடத்திய தாத்தா இன்று மாறிவிட்டாளா..? மனம் கேட்கிறது?
இத்தகைய கதையில் கருத்து விளக்கம் இருந்தாலும் கதையமைப்பில் சீர் இல்லை. சிறிது கவனம் செலுத்தினால், சுருதி பிசகாமல் இந்த எழுத்தாளர்களால் எழுத முடியும்.
ஃபாத்திமா ரஜாப் எழுதிய கதையின் தலைப்பு 'தப்புத் தாளங்கள்’. ஒரே விஷயத்தை ஆண்கள்

கே.எஸ். சிவகுமாரன் 个44
பார்க்கும் u nt jo 60) 6nu பெண்கள் பார்க்கும் பார்வையினின்றும் வேறுபடுகிறது என்பதற்கு இக்கதை உணர்த்தும் நிகழ்ச்சி சான்று. இக்கதையில் வரும் இறுதிப் பகுதி வருமாறு,
“ஆமா சார் நாங்கள் மத்தளங்கள் போல் இரண்டு பக்கமும் அடி வாங்குகிறோம். அதனை உங்கள் நிறுவன நன்மைக்காகத் தாளம் என்று ரசிக்கிறீர்கள். ஆனால் ஒன்று மட்டும் நினைவில் வைத்திருங்கள். இவை எல்லாம் தப்புத்தாளங்கள் என்று நீங்கள் உணரும் காலம் விரைவில் வரும். எந்த நாளும் நாங்கள் அடிவாங்க முடியாது. திருப்பி அடிக்காவிட்டாலும் எதிர்த்தாவது நிற்க வேண்டும் என்கிற உண்மை எங்களுக்கும் புரிந்துவிட்டது. வர்றேன் சார்.”
இங்கும் கதையோட்டம் சுவாரஸ்யமாக இருந்தாலும் சிக்கனம் தேவை. அளவுக்கு மீறிய விபரங்களைத் தவிர்த்தல் நன்றாயிருக்கும்.
முஸ்லிம் எழுத்தாளர் இர்பானா ஜப்பார் தமது கதையில் தமிழ் பாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார். சிறுகதை வரையரையைச் சிறிது மீறியதாகவும், குறுநாவல் போன்று இக்கதை இருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
“கணவனுக்கு மனைவி மேல் பிடிப்பு இல்லாவிட்டால் அவன் வேறு ஒரு பெண்ணையும்

Page 73
142 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண் இதே காரியத்தைச் செய்யத் துணிந்தால் இந்தச் சமூகம் அவளை எப்படியெல்லாம் வதைத்துவிடும்? சே! என்ன உலகம் இது? ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியா? பெண் என்றால் எல்லோருக்கும் இளக்காரமாகிப் போய்விட்டதுதான்! கணவனின் நிர்ப்பந்தம் உக்கிரமான நிலையில். பொறுமையின் எல்லையில் நின்று எதிர்த்து வாதிடத் துணிந்தாள்.”
இர்பானா ஜப்பார் மிக நன்றாகவே எழுதுகிறார். ஆனால் வடிவத்தைத்தான் கோட்டை விட்டுவிட்டார். அவருடைய எழுத்தாற்றலுக்கும் தர்க்க நியாயங்களுக்கும் இன்னொரு உதாரணம், っ
“சட்டம் மூலம் கட்டாய நிர்ப்பந்தத்தில் வாழும் வாழ்க்கையில் என்ன சார் பிரயோசனம்? இல்லறமென்பது மனம் இரண்டும் ஒன்றாய் இணைந்து இன்புற்றிருக்க வேண்டுமேயொழிய கட்டாயத்திற்காக வாழ்கிற அர்த்தமில்லாத வாழ்க்கையல்ல சார்.”
“இந்தக் கொடுமையை என்னவென்பது? மனதில் ஊறிப் போன இந்தச் சமுதாய விழத்துாவல்களை ஒரு புதிய வெற்றிப் பிரவாகம் பெருக்கெடுத்து மாற்றியமைத்து புதிய விழிப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் இந்தக் கேடு கெட்ட சமூகம் மாறப் போவதில்லை.”

கே.எஸ். சிவகுமாரன் 143
“தன் வாழ்க்கை முறையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை அந்தப் பெண்ணுக்கு அளிக்கப்படல் வேண்டுமே தவிர சமூகத்துக்கல்ல! மனித நேயம் வளர்ந்த இனங்களில் பெண் ஒரு பிரச்சினையாவதில்லை. பொருளாதாரச் செம்மையுடைய சமூகங்களில் அவள் கெளரவம் கேள்விக் குறியாவதில்லை. அவளுக்கு மனமுதிர்ச்சி வேண்டும். பொருளாதார சுதந்திரம் வேண்டும்.”
CC
. தன் கணவனின் சாவுக்கு ஒரு பெண் போகமாட்டேன் என்று சொல்கிறாள் என்றால், அவள் எத்தனை அடிபட்டிருக்க வேண்டும். அவள் மனசு எத்தனை வேதனையை விழுங்கியிருக்க வேண்டும்?. காலத்தையொட்டி சில சம்பிரதாயங்களை மீறுவதில் தப்பில்லை. அவர் மகளைக் கனிவுடன் நோக்கினார்.”
இத்தொகுதியில் இடம்பெற்ற ஐந்தாவது கதையை எழுதியிருப்பவர் பெளசியா யாசீன். கதையின் தலைப்பு தீர்க்கப்படாத நியாயங்கள்.
“கணவனைப் பிரிந்து வாழாவெட்டியாக வாழ்வதைவிட கணவனின் இம்சைகளைச் சகித்து, அவனுடனேயே காலம் கடத்தும் இவளைப் போன்ற அப்பாவிகள் இன்னும் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள். இதை இவர்களது அறியாமை என்பதா? அல்லது பண்பாடு, கலாசாரம், சமூகம், சம்பிரதாயம் என்று இவர்கள் தமக்குத் தாமே போட்டுக் கொண்ட கட்டுப்பாடுகளா?”

Page 74
44 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இக்கதைகள் யாவும் மிகைப்படுத்தப்படாமல் அன்றாட வாழ்வில் பெண்கள் அனுபவிக்கும் க ஷ் டங்க  ைள எ டு த் து க் கூறு கி ன் ற ன . பெண்களுக்கென்று ஒரு நியாயம் இருப்பதை ஆண்கள் புரிவதில்லை. பெண்கள் கேவலமாக நடத்தப் படுகிறார்கள். இந்த நிலை குறிப்பாகத் தமிழ் பேசும் சமூகங்களில் தொடர்ந்தும் இருந்து வருவதைக் கதைகள் தெரியப்படுத்துகின்றன.
இந்த எழுத்தாளர்களிடம் நிறையத் திறமை இருக்கிறது. இதனைச் செப்பனிட்டுக் கூர்மைப்படுத்தி சில ஆலோசனைகளை சித்திரலேகா மெளனகுரு கூறுகிறார்.
“இத்தொகுதியில் அடங்கியுள்ள கதைகளில் படைப்புத் திறன் குறைந்து காணப்படுகிறது. ஒரு சில கதைகள் மிகவும் செயற்கைத் தன்மை வாய்ந்தனவாகவும் உள்ளன. மொழி கையாளுகையில் தற் புதுமையில்லை. இத்தகைய குறைபாடுகள் திருத்த முடியாதவையல்ல. அல்லது பெண் எழுத்தாளர்களுக்கு மாத்திரம் உரித்தானவையுமல்ல. தன்னுணர்வுடன் முயலும் போது இலகுவில் நீக்கப்படக் கூடியவையாகும்.
“இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் எந்த வடிவத்தை (கவிதை, சிறுகதை, நாவல்) அவர்கள் கையாளுகிறார்களோ அதன் இயல்புகளைச் சரிவரப்

கே.எஸ். சிவகுமாரன் 145
புரிந்து கொள்வதுதான். இதற்கு அந்தந்த வடிவங்கள் பற்றிய கல்வியும் அறிவும் அடிப்படையானவை. அத்துடன் காத்திரமான இலக்கியப் படைப்புகளுடன் ஏற்படுத்தும் பரிச்சயமும் முக்கியமானது. தமிழிலும், வேறு மொழிகளிலும் (மொழி பெயர்ப்புகளுடனாவது) வெளியாகும் முக்கியமான இலக்கியங்களை முடிந்தவரையில் பெற்று வாசித்தல் வேண்டும். இது எழுத்தாளர்களது ஆக்கத் திறமை அபிவிருத்தி அடைவதற்கு உதவும்.”
(தினகரன் வாரமஞ்சரி : 19-09-1993)
来

Page 75
146 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மாத்தறை ஹளினோ வஹாப்பின் சிக்கனச் சித்திரிப்புகள்
லக்கிய மாணவர்கள், இரசனை மேம்பாடு கொண்ட வாசகர்கள், இலக்கியத் திறனாய்வாளர் போன்றோர் தரம் பிரித்துத் தமது புத்தகங்களைத் தேடிப் படித்துச் சுவைத்துப் பயனடைவதுண்டு. புனை கதை நூல்களையும் அவர்கள் படித்துத் திறனறிவர். பிரசுரமாகும் எல்லாப் புனைகதை நூல்களுமே இலக்கியத் தேர்வில் தேறுவது இல்லை. மிகத் தரமானவையே தகுதிகண்டு, காலத்தை வென்று ஆழமான இலக்கிய நயஞ்செறிந்தவையாய் விளங்குகின்றன.
இலக்கியத் தரமான புனைகதைகள் ஒரு புறமிருக்க, புற்றீசல்கள் போல, பத்திரிகைகளின் தேவைக்காக பல விதமான வடிவங்களில் கதைகள் வெளியாகி வருகின்றன. தரமான, இலக்கியப் பண்புகள் கொண்ட கதைகள் சில வேளைகளில் அதே பத்திரிகைகளிலும் வெளியாகலாம். வெளியாகி இருக்கின்றன. ஆயினும் பெரும்பாலும், அத்தகைய உயர்ந்த, ரசனை தரும் கதைகள் “சிற்றேடுகளில் வெளியாகின்றன. தொகுப்புகளாகவும் வருகின்றன.

கே.எஸ். சிவகுமாரன் 147
நல்ல கதைகளைப் பிரசுரித்து வரும் நாளிதழ்களும் வாரமஞ்சரி, வெளியீடுகளும் சில வேளைகளில் பக்கங்களை நிரப்புவதற்காகத் துணுக்குக் கதைகள் போன்ற சில 'இலகு வாசிப்பு’க்கான விஷயங்களைப் பிரசுரிக்கின்றன. சாவகாசமாக இருந்து படித்துப் பயன்பெற முடியாத வாசகர்களின் உடனடித் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இந்த ஜனரஞ்சகப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் தம்மாலியன்ற பங்களிப்பைச் செய்கின்றன. பெரும்பாலான வாசகர்கள் இத்தகைய ரசனைப் போக்குடையவர்களாக இருப்பது தவிர்க்க முடியாததே.
ஆக ‘நல்ல இலக்கியம்’ என்று சொல்லப்படும் ஆக்கங்கள் படைக்கப்பட்டும், வெளியிடப்பட்டும் வரும் அதே சமயத்தில், கூடவே, வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் வடிவத்திற்கும், தேவைக்கும் ஏற்ப புதுப்புது விதமான எழுத்து, பேச்சு வடிவங்கள் உருவாகி வருவது தவிர்க்க முடியாததும், வரவேற்கத்தக்கதுமான ஒரு பண்பு ஆகும்.
இந்த விதத்தில் பார்க்கும் போது, பத்திரிகைகளின் பங்களிப்பு பாராட்டத்தக்கது எனலாம். புதிய இளைய, ஆற்றலுடையவர்களின் திறனை வரவேற்று உற்சாகமளிப்பது இப் பத்திரிகைகளின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும்.
நமது நாட்டுப் பத்திரிகைகளின் இந்தப் பயன்பாட்டுச் செயலினால் பயனடைந்தவர்களில் ஒருவர் மாத்தறை ஹளபீனா வஹாப் (எம்.ஐ.எம்.

Page 76
148 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முஸம்மில் என்ற நன்கறிந்த தரமான எழுத்தாளரின் துணைவியார்). இவர் கடந்த இரு தசாப்தங்களாக, அமைதியான முறையில் தமது ஆற்றல்களை வெளிப்படுத்தி வந்திருக்கிறார். அது மாத்திரமல்ல. சிறிய இடங்களுக்குள் பெரிய விஷயங்களைச் சுருங்கக் கூறி விளங்க வைக்க பலராலும் முடிவதில்லை. இந்த இடத்திற்கான ஹஸினாவின் எழுத்துவன்மை புலப்படுகிறது. . தனித்தனியாக, அவருடைய கதைகளைப் பற்றிய குறிப்புகள் சில தொடர்கின்றன. தொகுப்பின் பெயர்: “வதங்காத மலரொன்று'.
உபாயங்கள்: நம்பிக்கையூட்டிப் பின்னர் தந்திரமாய் ஏமாற்றும் பேர்வழிகளின் சில்லறைத்தனங்களில் ஒன்றை மிக ரஸமாகக் கதாசிரியை எழுதியிருக்கிறார். உரையாடல்களும் இயல்பாய் அமைந்துள்ளன.
தீர்மானம் தீர்க்கமானதல்ல: சுவாரஸ்யமாக
எழுதப்பட்ட மற்றொரு கதை இது. இருந்தபோதிலும், இக்கதையில் வரும் அலீம் மாஸ்டர் செயலின் போக்கோடு ஒட்டியதாக, கதையின் முடிவு இல்லை என்பது குறைபாடுதான். நல்லெண்ணம் கொண்டவராகத் தன்னைக் காட்டிக் கொள்ளும் அலீம் மாஸ்டர், இடமாற்றத்தைக் காரணமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும்? யாருடைய தீர்மானமும் தீர்க்கமானதல்ல? அலீம் மாஸ்டருடையதா? அதிபருடையதா? என் போன்ற வாசகர்களுக்குக் கற்பனை ஓடவில்லை.

கே.எஸ். சிவகுமாரன் 149
உறங்காத 2.-6äkaregoo D: உண்மைகள் உறங்குவதில்லைதான். ஆயினும் உண்மைகள் சில வேளைகளில் உறைப்பாகவும், அதிர்ச்சியைத் தருவதாகவும் அமையும் அதேவேளையில், கடைசித்துரும்பும் கைவிட்டுப் போகும் போது, பெரும் அவலம் பேரதிர்ச்சியாகத்தான் இருக்கும். இக்கதையில் வரும் மனைவி (தன்னையும் காட்டி, மாற்றாள் ஒருத்தியுடன் பஞ்சனையில் துயின்று அவளையும் தனது மனைவியாகக் காட்டும்) ஒர் வேஷதாரியின் உண்மைச் சொரூபத்தையறியும் கட்டத்தைக் கதை கூறுகிறது. நன்றாக எழுதப்பட்ட கதை இது எனலாம்.
நாடகமே உலகம்: கதாசிரியைக்குக் கைவந்த கதை. கடைசித் திருப்பு முனை இக்கதையிலும் பயன்படுத்தப் படுகிறது. ஓ ஹென்றி பாணிக் கதை என்போமே அது மாதிரி. “அவனது பதில் அவளை ஆச்சரியத்துக்கும் ஏமாற்றத்துக்கும் உள்ளாக்கியது” என்று கதாசிரியை கதையை முடிக்கிறார். “அவனுடைய ஆழ்ந்த அன்பைப் புரிந்து கொள்ளவும் அவளால் முடிந்தது’ என்று ஒரு வரியைக் கதாசிரியை சேர்த்திருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும் என்று என் போன்ற வாசகர்களுக்குப்படுகிறது. உங்களுக்கு எப்படியோ?
அறுவடை “வினை விதைத்தவர் வினை அறுப்பார்’ என்ற கூற்றுக்கு ஆதாரம் காட்டும் போக்கில் கதை அமைந்துள்ளது. பொறாமை காரணமாகத் தவறிழைக்கவிருந்த ஒரு பெண், தான்

Page 77
150 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சமைத்த விபரீதப் பூதத்தினால் தாக்குப்படுவதைக் கதை காட்டுகிறது.
சந்தேகம் என்பது; மற்றுமொரு நகைச்சுவை தரும் பத்திரிகை ரகக் கதையிது. மணி பார்க்கத் தெரியாத பெண், மணி என்ன என்று கேட்க வந்தபோது, சந்தேகங்கொண்ட மனைவி, உண்மை தெரிந்ததும் கவலைப்படுவதைக் கதை காட்டுகிறது.
ஆசைகள்: இந்தக் கதையில், கதாசிரியையின் கருத்தோட்டம் எதுவெனத் தெரியவில்லை. நம்பிக்கைத் துரோகம் செய்தவன் மீது சார்பாகப் பேசுபவர்களின் கருத்தை ஆமோதிக்கவில்லை என்பது தெளிவுதான். ஆயினும், “பணம் கையிலிருந்தும் கொடுக்காது டிமிக்கிவிடப் போன அந்த நபர் மாத்திரம் எதுவுமே பேசாது’ ஏன் அமைதியாக இருந்தார் என்பதுதான் புரியவில்லை.
விடிவை நோக்கி: நடைபாதை வாசிகளின் பிரச்சினைகளுள் சிலவான உடுதுணியில்லாமை, இருக்க இடமில்லாமை, சுவாத்தியப் பாதுகாப்பு இல்லாமை, சுகாதார வசதியில்லாமை போன்றவற்றினால் பாதிக்கப்பட்ட கிழவன் ஒருவனினதும், மனையினதும் ஏக்க நிலையை எடுத்துக்கூறும் கதாசிரியை, வீடமைப்புத் திட்டத்தில் தமக்கும் ஒரு வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்குடும்பம் காத்திருப்பதாக கதையை முடிக்கிறார். பச்சாதாபத்தை ஏற்படுத்தும் இதுமாதிரியான பல கதைகளில் இதுவும் ஒன்று.

கே.எஸ். சிவகுமாரன் 151
பெரிய குறை: சீதனமாகக் கொடுக்கப்படும் பணத்திற்குப் பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டாரிடம் கணக்குக் கேட்கக்கூடும் என்ற ஐயத்தில் வந்த சம்பந்தத்தை மகளின் தாயாரான ஓர் இளைப்பாறிய ஆசிரியைத் தட்டிக் கழிப்பதை கதை கூறுகிறது. எனினும் கதையில் விளக்கம் குறைவு. கதாசிரியையின் நோக்கம் எது என்பதைப் பொறுத்தே நமது விளக்கமும், வியாக்கியானமும் அமைய வேண்டுமல்லவா?
அடுத்ததாக, “வதங்காத மலரொன்று’ என்ற ஹஸினாவின் ஆக்கம் பற்றிய சில அவதானிப்புக்கள்:
இலட்சிய நோக்குக் கொண்ட ஒரு பெண்ணின் பாத்திர வார்ப்பை கச்சிதமாக ஆசிரியை மாத்தறை ஹளபீனா வஹாப் செய்திருப்பது பாராட்டத்தக்கது. அபரிமிதமான உணர்ச்சிகளோ, சென்டிமென்டலிஸம் எனப்படும் அசட்டு அபிமான உணர்ச்சிகளோ இல்லாமல், வாழ்க்கையை நேர்கொண்டு நோக்கும் சுய மரியாதையுடைய சரீனாவின் பாத்திரம் நினைவில் நிற்கத்தக்கது. சாலி நடந்து கொள்ளும் விதம் சுவாரஸ்யமாக இருப்பதுடன், கதையில் எதிர்பாராத திருப்புமுனையைக் கொண்டு வருவதாகவும் அமைகிறது.
(வீரகேசரி வாரவெளியீடு : 06-02-1994)
米

Page 78
152 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சோ. ராமேஸ்வரனின் பத்திரிகைக் கதைகள்
இலங்கையில் புனைகதை எழுதுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீண்ட கால எழுத்து அனுபவங் கொண்ட சோ. ராமேஸ்வரன் புனைகதைகளும் எழுதியிருக்கிறார். வீரகேசரி, மித்திரன் வாரமலர், வீரகேசரி வார வெளியீடு வாசகர்கள் இவரை நன்கு அறிவர். இப்பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் இடம்பெற்றவர். கடந்த 15 வருடங்களாக கமநல ஆராய்ச்சி பயிற்சி நிறுவகத்தில் தகவல் வெளியீட்டு உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார். கமநலம் என்ற சஞ்சிகையின்
ஆசிரியரும் இவரே.
இவருடைய நுல்கள்: யோகராணி கொழும்புக்குப் போகிறாள் (1992), இவர்களும் வாழ்கிறார்கள் (1993), இலட்சியப் பயணம் (1994). இவையாவும் நாவல்கள். சுதந்திரக்காற்று என்பது இவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி. கடந்த கால் நூற்றாண்டாக இவர் எழுதிய சிறுகதைகளில் பதினொரு கதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
வீரகேசரி வார வெளியீட்டில் இடம்பெற்ற பத்துக் கதைகளை அவர் சிறிது மெருகுபடுத்தித்

கே.எஸ். சிவகுமாரன் 153
தொகுத்திருக்கிறார். சிறுகதைத் தொகுதியின் அட்டைப்படத்தை ஒவியரும் சினிமாப்பகுதிப் பொறுப்பாளருமான அகஸ்டின் மொறாயஸ் வரைந்திருக்கிறார். ‘வீரகேசரி வார வெளியீடு ஆசிரியர் பொன். ராஜகோபாலுக்கு நூல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இத்தொகுதி பற்றிய நல்லதோர் கணிப்பை தேவகெளரி ஏற்கனவே எழுதியிருக்கிறார். எனவே, ஒவ்வொரு கதை பற்றியும் தனித்தனியே பார்க்காமல், ஒரு சிலவற்றை மாத்திரம் மாதிரி மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்வோம்.
நாம் பரிசீலிக்கும் கதைகளாவன: மண்ணை நம்பி (1994), சொந்தமண் (1993), தில்ரு க்ஷியும் ஒரு பாலன் அய்யாவும் (1992).
இம்மூன்று கதைகளும் இந்தத் தசாப்தத்தில் எழுதப்பட்டமையால், ஆசிரியரின் தற்போதைய வளர்ச்சி நிலையை ஒரளவு கணிக்கக்கூடியதாக இருக்கும்.
தில் ரு க்ஷி என்ற கதை மேல்தட்டுப் பாத்திரங்கள் நடந்து கொள்வது போல நடந்து கொள்ளும் இரண்டுங்கெட்டான் நிலையிலுள்ள பாத்திரங்கள் இருவருடைய கதை. இந்த மாதிரிக் கதைகளைக் கலைநயத்துடன் எழுதுபவர்களுள் இலங்கையில் க. சட்டநாதன், உமா வரதராஜன், சாந்தன் போன்றோர் பெயர்கள் தான் மனதில் வருகின்றன. தமிழக எழுத்தாளர்கள் என்றால்

Page 79
154 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
எண்ணிக்கை அதிகம்! பிரபஞ்சன், ஆதவன், அசோகமித்திரன், லக்ஷமி கண்ணன், அம்பை போன்ற I u ovј இருக்கிறார்கள். ஆனால் ராமேஸ்வரன் நேரிடையாகவே கதையை விவரணப் பாங்கில் கூறிவிடுகிறார். துணிகரமாக எழுதிய போதிலும் பத்திரிகை ரகக் கதையொன்று நம்பும் தன்மை குறைந்து, செயற்கைக்கோலம் காணப்படுகிறது. ஆயினும், எழுத எழுதக் கலைத்துவம் அவரிடம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
“சொந்த மண்’ என்ற கதையிலே ‘வெறுப்பு மிகைந்திருந்தது’ என்ற பிரயோகம் இடம்பெறுகிறது. இது சரியா என்று தெரியவில்லை. அதேபோல ‘அசங்கதமான தகவல்கள்’ என்பது எனக்குப் புரியவில்லை. இந்தக் கதையிலே மத்தியதர வர்க்கச் சராசரி தமிழ்க் குடும்பங்களின் அபிலாஷைகள் சிலவற்றை ஆசிரியர் எடுத்துக்காட்டுகிறார். பெரும்பாலான மக்களுக்குச் சுதந்திரகாற்று என்பது கானல்நீர் போன்றதுதான் என்பது கதையிற் புலப்படுத்தப்படுகிறது.
இலக்கியப் பண்புகள் கொண்ட ஒரு நல்ல சிறுகதைக்குரிய கட்டமைப்பும், பாத்திர வார்ப்பும், சிக்கனமும் இக்கதையில் இடம்பெற்றிருந்தால், பத்திரிகை ரகக் கதைகள் போலாகியிருக்க மாட்டாது.
சோ. ராமேஸ்வரனின் கதைகளில் நாம் அடுத்து எடுத்துக் கொள்வது, ‘மண்ணை நம்பி’. இது ஒர்

கே.எஸ். சிவகுமாரன் 155
அருமையான ஆவணச் சித்திரம். ஒரு செய்தி நிருபர், முக்கிய செய்திகளைத் திரட்டி ஓர் ஒழுங்கு முறையிற் தருவது போன்று, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர முற்படும் ஒரு பயணி எதிர்நோக்கும் பகீரதப் பிரயத்தனங்களைத் துடிப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஆசிரியர் எழுதியிருக்கிறார். இத்தகைய ஆபத்து நிறைந்த பயணங்களை மேற்கொள்ளாத வாசகர்களுக்கு இது புதுத்தகவல்கள். இறுதியில் அக்கரைக்கு இக்கரை பச்சை என்ற யதார்த்த நிலையை உணருபவனாகவும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது பிறந்த மண்ணின் சொர்க்கத்தை விரும்புபவனாகவும் அரவிந்தன் என்ற பாத்திரத்தை ஆசிரியர் வரைந்திருக்கிறார். இத்தொகுப்பில் இடம்பெறும் கதைகளில் ராமேஸ்வரன் கடைசியாக எழுதிய கதை இதுவாக இருப்பதனாலோ என்னவோ, அவருடைய எழுத்து நடையிலும், பார்வையிலும், முன்னேற்றம் காணப்படுகிறது.
(வீரகேசரி : 06-01-1995)

Page 80
156 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ராஜ முீகாந்தனின்
மனிதாபிமானப் பார்வை
UTஜ பூரீகாந்தன் என்ன மாதிரி எழுதுகிறார். (அதாவது, எவ்வளவு அற்புதமாக எழுதுகிறார்!) சிறுகதை, மொழிபெயர்ப்புத் துறைகளில் ஈடுபட்ட இவர் மாலுமியாகவும் அனுபவம் பெற்றிருக்கிறார். LD6of 5 முரண்பாடுகளிடையே மனிதத்துவத்தையும், கயமையையும், மெல்லிய உணர்வுகளையும் இனங் கண்டுகொள்வது மாத்திரமல்லாமல், தகுந்த சொற்களைக் கொண்டு அனுபவத்தை வெளிப்படுத்தும் ஆற்றலையும் பெற்றிருக்கிறார். இவருடைய அனுபவ வீச்சு பரந்திருப்பது போல, இவருடைய அறிவின் ஆழமும், கூடியவரை கட்டுக்கோப்புடன் கதையை நிர்மாணிக்கும் பரிச்சயமும் இவர் தகமையைப் பறைசாற்றுகின்றன.
க. சட்டநாதன், உமா வரதராஜன், ரஞ்சகுமார் போன்ற ஈழத்துப் புனைகதையாளர் போன்று ராஜ பூgரீகாந்தனும் தனித்துவத் திறமை பெற்றவர். உமா வரதராஜனின் ஆக்கத் திறனும், கலை நுட்பமும் தமிழக பத்திரிகைகளின் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஏனையவர்கள் மகத்துவம், இன்னமும் நமது ‘ஆழமான

கே.எஸ். சிவகுமாரன் 157
பல்கலைக்கழக மட்ட ஆய்வாளர்களின் கவனத்தைப் பெறாதிருக்கிறது.
காலச் சாளரம் என்று பெயரிடப்பட்ட இந்தச் சிறுகதைத் தொகுதியில் 12 கதைகள் இருக்கின்றன. யாவுமே தலைசிறந்தவை என்று ஒரேடியாகப் புளுக முடியாவிட்டாலும், அரைஞாண், தாலி, ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு, தத்து, நினைவுத் தடத்திலொரு கொடிய வடு, ஜேன் ஆச்சி, நண்பனை இனம் புரிந்து கொண்டான், காலத்தின் கதவுகள், உயரச் செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர்களல்ல ஆகியன நிச்சயமாகப் புத்தனுபவம் தருபவை. ஏனையவற்றில், என்னைப் பொறுத்தமட்டில், கலைப்பண்பு இன்றியும், வியாக்கியானங்கள் தேவையை மீறி அமைந்தும், கதையமைப்பில் செயற்கைத் தன்மை புகுந்தும் உள்ளன. நமது பெரும்பாலான ஏனைய எழுத்தாளர்களின் பெரும்பாலான கதைகளுடன் ஒப்பிடும் பொழுது, இவை பெரிய குறையாய் இல்லை.
ஒவ்வொரு கதையைப் பற்றியும் மேலோட்டமாகக் குறிப்புகளைத் தருவதற்கு முன்னர் (ஒரு பத்தி எழுத்தாளர் வேறு என்னதான் செய்ய முடியும்?) கதாசிரியரின் நோக்கம் என்ன என்பதை நாம்அறிய வேண்டாமா?
ராஜ பூரீகாந்தன் ஒரு முதிர்ச்சி பெற்ற எழுத்தாளர் என்பதற்கு அவருடைய பின்வரும் வாசகம் எடுத்துக்காட்டு.

Page 81
158 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
“சமூக வாழ்க்கையினை, சமகால வரலாற்று நிகழ்வுகளை உள்வாங்கி, அவற்றைத் தெளிவான சிந்தனைத் தளத்தில் புடமிட்டு, தேவையான போது கடந்த கால நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்தி, கற்பனைச் சுவை சேர்த்து “வாசிக்கின்ற’ மனிதர்களுக்குப் பயனுள்ள கருத்துகளைக் கலையம்சத்துடன் தருபவனே “படைக்கின்ற” மனிதன். யதார்த்தத்திற்கும் கற்பனைக்கும் இடையிலான தொடர்புகளைச் சரியான விகிதத்தில் அழகியல் அம்சங்களுடன் பேணுவதிலேயே படைக்கின்ற மனிதனின் ஆற்றல் தங்கியுள்ளது.”
ஆசிரியரின் முதலாவது நூலாகிய இதற்குப் பதிப்புரை எழுதிய பிரேம்ஜி ஞானசுந்தரம், தமது விமர்சனத்தில் ஆசிரியரையும், கதைகளையும் விளங்கும் தமிழில் அழகாகப் படம் பிடித்துள்ளார். அவருடைய கூற்று வாசகம் ஒன்று சீக்கிரமாய் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
“இத்தொகுப்பிலுள்ள கதைகள் முழுவதுமே பிறநாட்டு மொழிகளில் வெளிவருவது ஒர் அவசியமான இலக்கியத் தேவை. அப்போதுதான் மானுடம் முழுமையும் இந்த நாட்டை, இந்த நாட்டின் ஒரு பகுதி மக்களை சத்திய நோக்கில் தரிசிக்க வாய்ப்பாக இருக்கும்.’’ ஆம், உடனடியாகச் சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் இவை ஆக்கப்பட வேண்டும்.

கே.எஸ். சிவகுமாரன் 159
இனி, கதைகளுக்கு வருவோம்: ஆசிரியரின் கூற்றுப்படி, “அரைஞாண் தாலி” 1987 வடமராட்சி “ஒப்பரேசன் லிபரேசன்’ நிகழ்வின் போது ஏற்பட்ட மனப்பதிவுகள். தமிழ்நாட்டு எழுத்தாளர் பிரபஞ்சனின் கதையொன்றை படிக்கும் போது ஏற்படும் உணர்வே எனக்கு இக்கதையைப் படிக்கும் போது அனுபவமாகியது. ஒரு சின்னக் கவனக்குறைவு: இக்கதையில் வரும் இளநங்கை அந்த மனித குணம் நிறைந்த “தாழ்த்தப்பட்டவனி’டம், தன்னை ஒரே மூச்சாக அறிமுகப்படுத்துவது கதையோட்டத்தில் நம்புந் தன்மையைக் குறைத்துவிடுகிறது. ஆசிரியர் "ஜம்ப்-கட்’ உத்தியைப் பயன்படுத்தியிருக்கலாம்.
இக்கதைகளின் கதைப் பின்னலை நான் எடுத்துரைக்க மாட்டேன். நீங்கள்தான் படித்துப் பார்க்கப் போகிறீர்களே!
குழந்தை உள்ளங்களின் கரவின்மையையும், ஒரு ஹிப்பியின் ‘கல்லுக்குள் ஈரம் பாங்கையும் “ஓர் உண்மைக் காகம் செத்துப் போச்சு” கதை கூறாமற் கூறுவது பாராட்டத்தக்கது. நமது இன்றைய போர்ச் சூழலில் ‘காகம்’ ஒரு சின்னம்.
“தத்து’ என்ற கதையில் எனக்குப் பிடித்த ஒரு வரி, ‘. இதயக் கொம்பியூட்டரின் திரையில் வலமிருந்து, இடமாக மெதுவே நகர்ந்து மறைந்தன, மற்றையது கடைசி வரி: "அன்றைய கண்டம் அகன்றது.’ நாளாந்த

Page 82
160 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அனுபவம் யாழ் மண்ணில் எவ்வாறு அமைகிறது என்பதை நம்மில் பலர் அறியோம்.
அடுத்த கதையான “நினைவுத் தடத்திலொரு கொடிய வடு’, தெற்கில் தமிழ் மகன் அனுபவிக்கும் பயங்கரச் சூழலுக்கு ஆசிரியர் பெளதிகவியல் விதியொன்றை நியாயப்படுத்துகிறார். அது என்ன? ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிரானதும், சமமானதுமான தாக்கம் உண்டு.
இவ்வாறு முரண்பாடான நிகழ்வுகளுக்கிடையில், ‘இனம்’ எவ்வாறிருந்தாலும், மனிதம்’ எவ்வாறு சாதாரண மக்களிடையே முகிழ்கிறது என்பதை “ஜேன் ஆச்சி” காட்டுகிறது. தமிழர் என்றால் என்ன, சிங்களவர் என்றால் என்ன, எல்லா ஊமைப்பிள்ளைகளும், ஒரே மொழியாகிய சைகை மொழியிலேயே பேசுகின்றன என்பது கதையில் வரும் ஒரு விளக்கம்.
“உயர்குலத்து உத்தமர்கள்’ வழமையான வர்க்க பே தக் கதை தான். மேற்கோள்கள் அதிகரித்துவிட்டன. கறுப்பு, வெள்ளை என்ற அடிப்படையில் எதிர்துருவங்களாக இல்லாரும், இருப்பவரும் (இவர் ஒரு வெளிநாட்டு வேவுதாரிப் பெண்ணாம்) காட்டப்பட்ட போதிலும், கதையின் திருப்பமாகவும், முரண்படுமெய்மையாகவும் (Paradox) குப்பை வண்டி குப்பையைக் கொட்டி விட்டு , அடுத்து குப் பையாகக்
கருதப்படும் “புள்ளைத் தாச்சிக் குட்டி’யை

கே.எஸ். சிவகுமாரன் 161
ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்று திரும்பும் காட்சி மனதைத் தொடுகிறது.
“நண்பனை இனம்புரிந்து கொண்டேன்’ கதையும், மாலுமி வாழ்க்கை போன்ற புதிய அனுபவங்களைத் தருவதுடன், ‘மனிதம்’ என்பது முற்சார்பு வெறுப்பையும் தாண்டி எங்கெல்லாம் ஒளிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இக்கதையைப் படித்தபொழுது, கடல்சார் பொறியியல் (Marine Engineering) FITtjibg5 ( 560g, usair (65.TLud, b வந்தது. அதனை எழுதியவர் வேறு யாருமல்ல, இளக்காரமாகக் கணிக்கப்படும் ւ օֆ ւս fr தங்கத்துரைதான்! எவ்வளவு தகவல்களை அவர் தமது கதையில் தருகிறார். சரி, அந்தக் கதைக்கும் ராஜபூரீகாந்தனின் இந்தக் கதைக்கும் எந்தவித தொடர்புமில்லை. மனத்திரைக் காட்சியொன்றை எடுத்துரைத்தேன். அவ்வளவுதான்.
சி. தில்லைநாதன் எழுதிய மேடையேற்றிய “தகுதி” என்ற நாடகம், ராஜபூரீகாந்தனின் “காலத்தின் கதவுகள்’ கதையைப் படித்த பொழுது எழுந்தது. இங்கும் வெறும் மனப்பதிவுதான். இரண்டு ஆக்கங்களுக்கும் தொடர்பில்லை. ஆனால், “கல்வி’ என்பது சாதி வேறுபாடுகளைக் கடந்து முன்னேறச் செய்யும் கருத்து இரண்டுக்கும் பொதுவானது.
கப்பல் அனுபவம் போன்று விமான அனுபவத்தையும் ஆசிரியர் தமது, “உயரச்

Page 83
162 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
செல்பவர்களெல்லாம் உயர்ந்தவர்களல்ல” என்ற கதையில் கொண்டு வருகிறார். இக்கதையில் வரும் சம்பாஷணையில், பின்வரும் பகுதி, “நல்லவர்கள் போல் பழகிக் கழுத்தறுக்கும் கயவர்களைப்’ படம் பிடிக்கிறது. அந்தப் பகுதி வருமாறு:
“அவரைத் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்து விட்டார்கள்.”
“லீவு நாளன்று அறிவித்தலோ, உத்தரவு பெறாமல் கட்டுப்பாட்டு நிலையத்திற்குள்ளே போய் கருவிகளை இயக்கியதற்காக அவரை நிரந்தரமாகவே வேலை நீக்கஞ் செய்துவிட்டால், அவருடைய பதவி எனக்குக் கிடைக்கலாம்.”
“அல்பிரட் எவ்வளவு நன்றிகெட்ட எதிர்பார்ப்பு’ என்றான் சயந்தன்.
‘இதெல்லாம் பார்த்தால் வாழ்க்கையிலே முன்னேற முடியாது. எப்பெப்ப சத்தர்ப்பம் கிடைக்கிறதோ, அப்பவே அதனைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.” W−
“உன்ரை உயிரைக் காத்த ஒருவரையே, உனக்கு உதவி செய்வதற்காகவே, தன்ரை வேலையை இழக்கவிருக்கும் ஒருவரையே நீ உதாசீனஞ் செய்கிறாயே.”
அர்த்த ராத்திரியிற் குடைபிடிக்கும், பிறரது தகமையையும் பதவிகளையும் குறைத்து

கே.எஸ். சிவகுமாரன் 163
மலினப் படுத்தும் , கையாலா காதவர்களும் இப்படித்தான் “முன்னேறு’கிறார்கள். கீழே பாதாளம் விரிந்து கிடக்கிறது.
யதார்த்தம்’ என்ற கதையில், சமய ரீதியான சடங்கொன்றின் விபரிப்பும், அது பற்றிய இருவர் அச்சடங்குகளின் உளவியல் பங்குபற்றி விவாதிப்பதும், இறுதியில், யதார்த்தச் சூழலுக்கேற்ப, உளவியல் ரீதியான நடவடிக்கைகளோ, ஏனைய நடவடிக்கைகளோ அமையும் என்ற வாய்ப்பாட்டு ரீதியான முடிவுடன் கதை முற்றுப் பெறுகிறது. ஒருவித செயற்கைத்தன்மையிருப்பதனால், கதை என்னை அதிகம் கவரவில்லை. “வல்லுணர்வுகளிடையே மெல்லுணர்வு’, ‘ஹரிக்கேன் லாம்பு வெளிச்சத்தில்’ ஆகிய இதர கதைகளும் என் இரசனை மட்டத்துக்கு அமையவில்லை. ஒரு வேளை சிலர் என்னைப் பற்றி மதிப்பிட்டிருப்பதுபோல், நான் "ஆழமில்லாதவனாகவும் இருக்கலாம். எப்படியோ? இந்தச் சிறுகதைத் தொகுப்பு, அண்மைக்காலத்தில் நான் தமிழில் படித்த, கிளர்ச்சியூட்டும் (Stimulating என்ற அர்த்தத்தில்) புத்தகங்களில் ஒன்று.
(தினகரன் வாரமஞ்சரி : 28-05-1995)
来源

Page 84
164 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அ. முத்துலிங்கத்தின் உலகளாவிய பார்வை
பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி, தினகரன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தார் என்பதை இன்றைய வாசகர்கள் அறிந்திருக்காவிட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. அமரர் கைலாசபதி ‘இனங்கண்ட ஈழத்துச் சிறுகதை ஆசிரியர்களில் ஒருவர் அ. முத்துலிங்கம். அவருடைய முதலாவது சிறுகதைத் தொகுதி 'அக்கா’ 60களில் வெளிவந்தது. இப்பொழுது இரண்டாவது தொகுதியான
திகடசக்கரம் வெளிவந்திருக்கிறது.
இந்தத் தொகுதி, ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்கு மாத்திரமல்ல, முழுத் தமிழ்ச் சிறுகதைத் துறைக்குங்கூட புதுமாதிரியாகவும், எளிமையாகவும் எழுதப்பட்ட கதைகளைக் கொண்டது எனலாம். புதுமைப் பித்தனின் சாயல் கள் நிரம் பவும் காணப்படுகின்றன. * -
ஆசிரியரிடம் நேர்மை இருக்கிறது. நகைச்சுவை இருக்கிறது. எமது முன்னோரளித்த அருஞ்செல்வங்கள்
பற்றிய பிரக்ஞை இருக்கிறது. நேரிற் கதைப்பது போல எழுதும் லாவகம் இருக்கிறது. யாழ்ப்பாணப் பேச்சுத்

கே.எஸ். சிவகுமாரன் 165
தமிழைக் கவித்துவமாக்கும் மாண்பு இருக்கின்றது. தார்மீகக் கோபமும், ஒப்பீட்டுத் தன்மையும் ஆசிரியரிடம் இருக்கின்றன.
அ. முத்துலிங்கத்தின் மறுவருகை நவீன தமிழிலக்கியத்துக்குப் பெருமிதம் அளிக்கிறது.
கனடாவின் நிரந்தரப் பிரஜையாக இருக்கும் இவர், பாக்கிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் தற்சமயம் வேலை பார்த்து வருகிறார். மேற்கு ஆப்பிரிக்கா, வடமேற்கு ஆசியா போன்ற பகுதிகளில் தொழில் காரணமாகத் தாம் பெற்ற அனுபவங்களைக் கதைகளாக ஆசிரியர் வடித்திருக்கிறார். இவருடைய இந்தப் புதிய கதைகளைப் படிக்கும்போது, வாசகர் புதிய அனுபவங்களைப் பெறுவர் என்பது நிச்சயம்.
‘சிறுகதை’ என்ற இலக்கிய வடிவம் பற்றிய பிரக்ஞை பூர்வமான அறிவு இப்படைப்பாளிக்கு இருக்கிறது என்பதை இவருடைய கதைகள் மூலமும், இவருடைய திகடசக்கரம் சிறுகதைத் தொகுப்புக்கு இவரே எழுதிய முன்னுரை மூலமும் நாம் அறிந்து கொள்கிறோம்.
“பார்வதி’ என்ற முதலாவது கதையில், மூன்று வருட மனப்பதிவுகள் மூலம் ஒரு பரம்பரையின் கதையைச் சிக்கனமாகக் கூறிவிடுவதுடன் பல அர்த்தங்கள் விரியும் வண்ணம், கதையை நிறுத்தவேண்டிய இடத்தில் ஆசிரியர் நிறுத்திவிடுவது, அவருடைய பக்குவத்தைக் காட்டுகிறது.

Page 85
188 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
குங்கிலியக் கலய நாயனார்’ என்ற கதை ஆய்வறிவு ரீதியான சம்பாஷணைகளை உள்ளடக்கியது. ஒரு கனேடியர், ஒரு ஜேர்மனியர், ஒர் இலங்கை யாழ்ப்பாணத் தமிழர் ஆகியோர், ஆப்கானிஸ்தானில், போதை வஸ்து, குடிப்பழக்கம், பக்திப் பிடிப்பு போன்ற அடிமைப் பழக்கங்கள் பற்றி உரையாடுகிறார்கள்.
இந்த உரையாடலின் போது, தத்தமது நாட்டு அனுபவங்களையும் கூறுகின்றனர். ஆயினும், சிறுகதையை மிஞ்சிய தருக்கப்பேச்சின் தொகுப்பாக அமைகிறது கதையின் முற்பகுதி. கதையின் கடைசி ஒன்பது பந்திகளும், உரையாடல்களை உள்ளடக்கியவைதான் என்றாலும், அவற்றின் மூலம் ஒரு திடீர் திருப்பத்தை ஆசிரியர் கொண்டு வந்து இதுவும் ஒரு கதைதான் என்பதை நிரூபிக்கிறார். கதையனுபவத்தைச் சிந்திப்பதன் மூலம், எம்மைச் சிந்திக்க வைக்கிறார். இதில், ஆசிரியரிடம், ஒர் அறிவுமிக்க ஆற்றல் இருப்பதைக் காண்கிறோம்.
அடுத்த கதையின் பெயர் “பெருச்சாளி’. முதலில் வியாக்கியானம். பின்பு கதைக்குள் நுழைவு. அதுவும் ஒரு கணந்தான். பெருச்சாளி தொடர்பான தனது அனுபவம் ஒன்றைக் குறிக்கிறார். பின்பு, கதை நகைச்சுவையாகத் துரிதவேகத்தில் சொல்லப்படுகிறது. இடையிடையே நமது மரபுத் தொடர்களையும், பழமொழிகளையும் பெய்து, பிறநாட்டு அனுபவங்களை ஒரு தமிழனின் கண்களுடாக வெளிப்படுத்துகிறார்.

கே.எஸ். சிவகுமாரன் ,' 167
அ. முத்துலிங்கம் தனது வெவ்வேறு அனுபவங்களிடையே நடுநராக இருக்கும் ஒர் அம்சத்தை சொல்லாமற் சொல்லி விளங்க வைத்துவிடுகிறார். இந்தக் கதையில் ஊழலைப் பெருச்சாளியுடன் சம்பந்தப்படுத்துகிறார்.
“மாற்றமா, தடுமாற்றமா’ என்ற கதையில், 15 வருடங்களுக்குப் பின் கதாசிரியர் தன் சொந்த நாட்டுக்கு வந்து பெற்ற அனுபவங்களை ஒப்பீட்டு அடிப்படையில் விபரிக்கும் பொழுது, அங்கு ஏளனம், அங்கதம், நகைச்சுவை, நிதர்சன நிலை போன்ற யாவற்றையுமே சிக்கனமாகக் கெட்டியாகத் தந்து வாசகர்களைப் பரவசப்படுத்துகிறார்.
‘வையென்னா, கானா’ என்பது இன்னொரு கதை. ஏழரைப் பக்கத்துக்கு அக்கதைக்கு ஒரு முன்னுரை, அது முன்னுரை மாத்திரமா? இல்லை, ரசனை என்றால் என்ன என்பதற்கு ஒரு விமர்சனம்.
அ. முத்துலிங்கம் வெறுமனே ஒரு விஞ்ஞானப் பட்டதாரியோ, கணக்காளனோ, கணனிப் பொறியியலாளனோ, சிறுகதை ஆசிரியனோ மாத்திரம் அல்லன். அவர் ஒரு கலைஞன். நுண்ணிய உணர்ச்சி வெளிப்பாட்டை கட்டான முறையில் தரும் ஓர் யாழ்ப்பாணத் தமிழன்.
முன்னுரைக்கு இசைந்ததாகக் கதையை எழுதியிருக்கிறார். கதை ஒன்றும் பெரிதாக

Page 86
168 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இல்லைதான். ஆனால் அது உணர்த்துவிக்கும் உண்மை ரசிக்கத்தக்கது.
உலக நாடுகளில் நாகரிகம், பயன்மதிப்புகள், விழுமியங்கள் எல்லாம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன என்பதைக் கலைத்துவமாகக் காட்டும் கதை, “குதம்பேயின் தந்தம்'. அது மாத்திரமல்ல - மனித ரா பி மா ன மும் , ஜீவ கா ரு ண் யமும் , கதையினுரடாகவே வெளிப்படுத்தப் படுகின்றன. கதையை விபரித்தால், சுவை கெட்டுவிடும்.
“செல்லம்மான்’ என்ற கதையில் ஒரு கிராமத்து நாயகனை கதாசிரியர் சுவை கெடாமல் தமது செட்டான வார்த்தைப் பிரயோகம் மூலம் கொண்டு வருவதுடன், அந்நாயகன் கதாசிரியரின் ஆதார புருஷர்களில் ஒருவராக இருந்ததாகவும் காட்டுகிறார்.
அ. முத்துலிங்கத்தின் எல்லாக் கதைகளிலுமே இவருடைய கிராமிய, இவருடைய மாகாண, இவருடைய தமிழ் வாழ் நிலைகள் எல்லாம் கொணரப்படுகின்றன.
கடைசிக் கதை ‘திகடசக்கரம். இக்கதையை இவ்வாறு ஆசிரியர் முடிக்கிறார்:
‘ஒரு யுக்தியை ஒருமுறை கையாளலாம். இரண்டாவது முறையும் சமயோசிதமாகக் கையாண்டு தப்பிவிடலாம். ஆனால், மூன்றாவது முறை எதிராளி உசாராகிவிடுவான். அடுத்த முறை புதிதாக, ஏதாவது

கே.எஸ். சிவகுமாரன் 169
யுக்தி தயார் பண்ண வேண்டியதுதான், கந்தபுராணம் போனால் என்ன? சிவபுராணம் இருக்கிறதே! ஏதாவது தோன்றாமலா போய்விடும் என்றேன்.
“கந்தபுராண ஆசிரியர் கச்சியப்பசிவாசாரியார் ‘திகடசக்கரம்’ என்ற தொடரைப் பயன்படுத்தி, அறிஞர்கள் மத்தியில், சவாலுக்கு உட்பட்டபோது, தொல்காப்பியத்தின் படி திகழ் + தேச + சக்கரம் என்பதைத் திகட சக்கரம் என்று அவ்வாறு கூறமுடியாதென அறிஞர்கள் விவாதித்தனர். ஆயினும் கச்சியப்பர், முருகனின் ஆசியுடன் தந்திரமாக வீரசோழியம் என்ற இலக்கண நூலை ஆதாரங்காட்டி விவாதத்தில் வென்றாராம். அதேபோல, இக்கதையிலும், தந்திரமாக, ஓர் ஆலோசகர் ஒரு விவாதத்தில் வெல்வதாகக் கதை தீட்டப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் சம்பந்தமாகவும், மாறுபட்ட குணாதிசயங் கொண்டவர்களின் போக்குகள் தொடர்பாகவும், கதை அருமையாகப் புனையப்பட்டு
எழுதப்பட்டுள்ளது.
திகடசக்கரம் சிறுகதைத் தொகுதி மூலம் அ. முத்துலிங்கம் மீண்டும் அறிமுகமாகிறார். இவருடைய எழுத்து நடை இவருடைய ஆளுமையின்
வெளிப்பாடு.
(தினகரன் வாரமஞ்சரி : 05-05-1996)
来

Page 87
170 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மு. பொன்னம்பலத்தின் ஆன்மீக மனிதநேயம்
மு.பொ. 50களின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய, பரிமாணம் பெற்ற ஒர் எழுத்தாளர், சிந்தனையாளர். திசை என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் இருந்தவர்.
மு.பொ. புங்குடுதீவில் பிறந்தவர் என்பதால் அங்கு இனங்காணக்கூடிய தமிழ்நாட்டு வாழ்க்கை முறையின் சில கோலங்களையும் உள் வாங்கியுள்ளார் என்பது இவருடைய கதைகளிற் சிலவற்றுள் காணப்படும் உரையாடல்களிற் பிராமணியத் தமிழ் அசைவுகள் உச்சரிக்கப்படுவதன் மூலம் காணலாம். இவருடைய தமையனார் - மு. தளைய சிங்கத்தின் ஆளுமை இவருடைய எழுத்துக்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
வடமாகாணக் கலாசாரத்தை இளமையிலும் அண்மையிலும் தனதாக்கிக் கொண்ட மு.பொ., தமது வளரிளம் பருவத்தின்போது சப்ரகமுவ மாகாண சூழலினாலும் பாதிக்கப்பட்டவராவார். எனவே மு.பொ. குறுகிய யாழ்ப்பாண வட்டத்திலிருந்து வெளியே வந்து சிந்திக்கத் தொடங்கியவர்.

கே.எஸ். சிவகுமாரன் 171
இவ்வாறு குறிப்பிடப்படும் தகவல்களின் பின்னணியில் இவருடைய சிறுகதைகளைப் படிக்கும்போது, ஏற்படும் அனுபவம் புதுமையானது.
எந்தவொரு கலை இலக்கியவாதிக்கும் ஏதாவதொரு தத்துவத் தளம் இருத்தல் வேண்டும். இக்கதைகளிலே அத்தகைய தரிசன நோக்கில் இவர் வாழ்க்கை நோக்கு விரிவடைகின்றது. அதற்கேற்ப வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கி சித்திரிக்கும் ஆற்றல் பெறுகின்றன இவரது கதைகள்.
மு.பொ.வின் தத்துவத்தளம் ஆன்மீகரீதியானது. மனித நேயம் கொண்டது. இவருடைய ஆரம்ப காலக் கதைகளில் மு. தளையசிங்கத்தின் கதைகள் போன்றே மனித வேஷதாரித்தனங்கள் மீதான ஒரு வெறுப்பு படிந்திருப்பதைக் காணலாம்.
போலந்தில் பிறந்து ஆங்கில மொழியில் வல்லுனராகி ஆழமான படைப்புகளைத் தந்த ஜோசப் கொன்றட் எவ்வாறு கடலைப் பின்னணியில் பயன்படுத்தினாரோ, அதேபோன்று மு.பொ.வும் கடலை மையமாகக் கொண்டு இந்துமத தர்மத்தின்படி, ஆன்மீக விடுதலையைத் தேடிக்காட்டும் கதைகளை நிதர்சனமாக எழுதியிருக்கிறார்.
கடலும் கரையும் என்ற தொகுப்புக் கதைகளில், கடல் ஒரு குறியீடு. திரும்பத் திரும்ப வந்து நிற்கும் ஒரு படிமம், அடிமனது ஆழத்தில் புதையுண்ட ஒரு இலச்சினை. எனவே கடல் எதைக் குறிக்கிறது, அதன்

Page 88
- 172 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
தன்மைகள் என்ன என்பதை அறிந்தால் அவற்றின் பிரயோகத்தில் மு.பொ.வின் கதைகளை நாம் அணுகமுடியும்.
‘கடலோடு கலத்தல்’ என்ற மு.பொ.வின் முன்னுரையும் தொகுப்பின் இறுதியிலுள்ள மு.பொ., மது, கவியுவன் ஆகியோரின் உரையாடல்களும், கதைத் தொகுதியை நன்கு புரிந்து கொள்ள உதவும். 144 பக்கங்களைக் கொண்ட இத்தொகுதியில் 1963 முதல் 1995 வரை மு.பொ. எழுதியுள்ள 11 கதைகள் இடம் பெற்றுள்ளன.
மூடுபனி, அரைநாள் பொழுது, தவம், கடலும் கரையும், மாயை, கணவன், காடுபுகுதல், யுகங்களை விழுங்கிய கணங்கள், வேட்டை, பயம் கக்கும் விஷம், இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது? என்பன கதைகளின் தலைப்புகள். இவை மேலோட்டமாக கதைகளின் போக்கை உணர்த்தி நிற்பன.
மு.பொ.வின் கதைகளைப் புரிந்து கொள்ள இலக்கிய, அரசியல், சங்கேதக் குறிப்புக்களையும் நாம் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டியுள்ளது. நிதர்சனமான வாழ்நிலைமைகளை கதாசிரியர் யதார்த்தமாகவும் கற்பனை விருப்பு கொண்டும் மானுஷ்ய பாத்திரங்களைக் கொண்டும் விபரிக்கின்றார். வெறும் கதைகளை மாத்திரம் சொல்லாது அதற்கும் அப்பாற் சென்று சில அனுபவங்களைத் தொற்றுவிக்க முனைகிறார். இவர் கையாளும் உத்திகளும்

கே.எஸ். சிவகுமாரன் 173
மொழிநடையும் இப்பரிவர்த்தனைக்கும் பெரிதும் உதவுகின்றன.
இவரது முன்னைய கதைகளில் ஒருவித அங்கதத்தொனி காணப்படினும் பின்னைய கதைகளில் சகல பக்கங்களையும் பார்த்து பதிவு செய்யும் முதிர்ச்சியுடன் கூடிய சமநிலையை ஏற்படுத்தும் பாங்கு இடம் பெற்றிருக்கின்றது.
ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றது. உதாரணமாக கடைசிச் சிறுகதையான “இருப்பின் அடையாளம் எது? அடையாளத்தின் இருப்பு எது?’ என்ற கதை. இது இன்றைய பரிதாபகரமான அரசியற் சமுதாய சூழலை ஒருவித தொடர் உருவமாகச் சித்திரிக்கின்றது.
*மனிதனாக நின்றுதான் போராடுவேன், எனது போராட்டம் எந்த அடையாளத்திற்குள்ளும் புதைக்க முடியாதது. அப்போதுதான் எல்லா மனிதருக்கும் அது உரியதாய் இருக்கும்’ என்கிறார் இந்தக் கதையின் ஊடே மு.பொ.
அரசியல் சார்ந்த கதைகளில் எவ்வாறு கருத்துப் பரிவர்த்தனையை நேர்த்தியாகச் செய்கிறாரோ அந்தக் கலைத்தன்மையுடன் தாம்பத்திய உறவுகளையும் வாழ்க்கையின் அடிப்படை பண்புகளையும் உணர்த்தி நிற்கச் செய்கிறார். மு. பொன்னம்பலம் தரமான சிறுகதையாசிரியனாக இதுவரை இனங்காணப் படாதது விந்தையே.
(மூன்றாவது மனிதன் : ஒகஸ்ட் - செப்ரெம் 1996)

Page 89
174 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மாத்தளை சோமுவின் அவர்களின் தேசம்
இலங்கையிலும், பிற நாடுகளிலும் நன்கு அறியப்பட்ட தமிழ் மொழி ஆக்க இலக்கியப் படைப்பாளிகளுள் முக்கியமான ஒருவர் மாத்தளையைப் பிறப்பிடமாகவும் திருச்சியைப் புகலிடமாகவும், அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோமு எனப்படும் சோமசுந்தரம்.
வெளிநாடு சென்றமையால், ‘சோமுவின் கதைகளது களங்கள் விரிவடையலாயின; அகலுலகத் தொடர்பு கொள்ளலாயின; புதிய பரிமானங்களைப் பெறலாயின. அவரது சமூகப்பார்வை மென்மேலும் விசாலமும் ஆழமும் பெறலாயின’ என்று கலாநிதி க. அருணாசலம் கூறுகிறார். இவருடைய கதைகள் இலங்கைப் பத்திரிகைகளில் மாத்திரமன்றி, தீபம், தினமணி, சுபமங்களா, தினமணிக்கதிர், கணையாழி, புதிய பார்வை, குமுதம், கல்கி, குங்குமம், கலைமகள் போன்ற சென்னைப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன.
இவருடைய இதர படைப்புகள்: நமக்கென்றொரு மி, அவன் வனல்ல, லங்கை ாட்டுத் l 9 (5 த

கே.எஸ். சிவகுமாரன் 175
தெனாலிராமன் கதைகள், அந்த உலகத்தில் இந்த மனிதர்கள், எல்லை தாண்டா அகதிகள்.
மாத்தளை சோமுவின் கதைகளை நடிகர் சிவகுமார், ஜெயகாந்தன், அமரர் பேராசிரியர் க. கைலாசபதி, எஸ். பொன்னுத்துரை போன்றவர்கள் வியந்து பாராட்டியிருக்கிறார்கள். இவருடைய முன்னைய கதைகள் என்ன கூறுகின்றன?
“மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கின்றன. அவர்களது வாழ்க்கை அவலங்களை, தொழிற்துறையிலுள்ள பிரச்சினைகளை, அவர்களை அடக்கி ஆளும் அதிகார வர்க்கங்களை, இன ஒடுக்கல்களைப் பின்னணியாகக் கொண்டு இக்கதைகள் புனையப்பட்டுள்ளன. மலையக மக்கள் குறித்து தெரிந்து கொள்ளவும் அவர்களது பிரச்சினைகளை ஒரளவு புரிந்துகொள்ளவும் உதவுகின்றன.”
‘அவர்களின் தேசம் கதைகள் எப்படிப் LIt 606/2
கதாசிரியரே கூறுகிறார்:
“இத்தொகுதியில் உள்ள சிறுகதைகள் பல நாட்டுக் களங்களைக் கொண்டவை. இத்தொகுதி சற்று வித்தியாசமானது. மலையகம், தமிழகம், யாழ்ப்பாணம், ஆஸ்திரேலியா எனப்பல ‘தேசங்கள்’ களங்களாக அகன்று போயிருக்கின்றன. இஃது தமிழில் முதல்

Page 90
176 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
முயற்சி என்பதை ஒரு அடையாளமாகத்தான் சொல்லிவைக்க விரும்புகிறேன்.”
1986ல் அவுஸ்திரேலியாவில் குடிபுகுந்த மாத்தளை சோமு, 1984ல் எழுதிய ஒரு கதையையும், தொண்ணுரறுகளில் எழுதிய 11 கதைகளையும் இத்தொகுப்பில் சேர்த்துள்ளார்.
“இவற்றில் நான்கு மலையகத்தைக் களமாகக் கொண்டவை. இரண்டு, தமிழகத்துக் கிராமப் புறங்களைக் களமாகக் கொண்டவை. ஆறு கதைகள் அவுஸ்திரேலியா - தமிழகம் - இலங்கை ஆகியவற்றைக் களமாகக் கொண்ட அகலுலகத் தொடர்புடையன.”
160 பக்கங்களைக் கொண்ட இத்தொகுப்புக்கு 19 பக்கங்களில் அருமையானதொரு முன்னுரையைப் பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி க. அருணாசலம் எழுதியிருக்கிறார். மாத்தளை சோமுவையும் அவருடைய கதைகளையும் நன்கு புரிந்து கொள்ள இந்த ஆய்வுரை உதவும்.
கதைகளை நீங்களே படித்துப் பாருங்கள். புதியதோர் உலகம் உங்கள் மனத்திரையில் விரியும். காட்சி தரும்.
(நவமணி : 1-12-1996)

கே.எஸ். சிவகுமாரன் 177
புலோலியயூர் ஆ. இரத்தினவேலோன் மேற்கொள்ளும் புதிய பயணம்
LI Suu பயணம், வடமராட்சி எழுத்தாளர், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் ஆரம்பத்தில் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு.
இந்த நாட்டிலே, இலங்கைத் தமிழ் இலக்கியப் போக்குடன் பின்னிப் பிணைந்துள்ள தரமான இலக்கிய ஏடாகிய மல்லிகையில் வெளிவந்த ஆறு கதைகளும், வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்த ஐந்து கதைகளும் இத்தொகுப்பிலே இடம்பெற்றுள்ளன. மொறாயசின் அட்டைப்படம், அழகான பதிப்பு. ஆக்க இலக்கியகாரரும், விமர்சகருமான தெளிவத்தை ஜோசப் தமது முன்னுரையில், இக்கதைகளின் சாரத்தைத் தருகிறார்.
இதன் மூலம், எழுத்தாளரும் அவருடைய கதைகளும் எத்தகையன என்பதை நாம் அறிந்து கொள்கிறோம். ஆசியுரை வழங்கிய, வீரகேசரிப் பத்திரிகையின் முன்னாள் பொது முகாமையாளர் எஸ். பாலச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ள ஒரு கருத்து மிக முக்கியமானதொன்று. அவர் கூறுகிறார், ‘ஒரு

Page 91
178 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வாசகன் படித்து முடிந்ததும் எழுத்தாளன் கூற முனையும் பாடத்தையே, புரிந்து கொள்கிறான். வாசகர் மனதிலும் அதையொத்த தாக்கம் ஏற்படும்போது, எழுத்தாளனின் முயற்சி பூரணத்துவமடைகின்றது. அவசர வேகத்தில் சமுதாய நிகழ்வுகளை அதி நவீன ஊடகங்கள் மூலமாக வெளிக்கொணரும் இவ்வவசர யுகத்தில் அமைதியான போக்குடனும் தெளிவான சிந்தனையுடனும், சிறுகதை இலக்கியமாகத் தன் எண்ணக்கருவூலங்களைச் சமுதாயத்திற்கு அளிக்கும் புலோலியூர் இரத்தின வேலோன்’ என்கிறார்.
புலோ லியூர் ஆ. இரத்தினவேலோன் கூற்றொன்றையும் நாம் மனதிற் கொள்ள வேண்டும். அதாவது: “பிற பாத்திரங்களைச் சிருஷ்டித்து கதை சொல்வதைவிட நான் நானாகவே நின்று கதை கூறுவதையே பெரிதும் விரும்புகிறேன். அப்போதுதான் Do எழுச்சிகளை, மனித முரண்பாடுகளை, மனக்குமுறல்களை இயல்பானதாக வெளிக்கொணர முடியும் என நான் நம்புகிறேன்’ என்கிறார்.
இது காட்டுகிறது எ ன் ன வெனில் இரத்தினவேலோன் வெறுமனே கதைகளைக் கட்டாமல், கட்டுக் கதைகளை எழுதாமல், தான் உணர்ந்ததை ஆக்கமாகத் தருவதில் அக்கறை கொண்டுள்ளார் என்பதாகும்.
அதிகம் அலட்டிக்கொள்ளாத அதிகம் சிரிக்காத, எந்த நேரமும் சீரியசாகத் தோற்றமளிக்கும்

கே.எஸ். சிவகுமாரன் 179
வேலோன், 1977 முதல் எழுதுகிறார். இவருடைய ஆக்கங்கள் இடம்பெற்ற நூல்கள் - காலத்தின் யுத்தம், அறிமுகவிழா, மல்லிகைக் கவிதைகள். சிறுகதையுடன் கவிதையிலும் ஈடுபாடு கொண்ட புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் தரமான கலை, இலக்கியப் பத்தி எழுத்தாளருமாவார்.
இந்தத் தொகுதியில் உள்ள எல்லாக் கதைகளையும் ஒவ்வொன்றாக எடுத்துப் பகுப்பாய்வு, செய்முறைத் திறனாய்வு செய்தால் மாத்திரமே, ஆசிரியருக்கு நீதி வழங்கியதாக இருக்கும். ஆயினும் இந்தக் குறுகிய இடத்தில் அதனை நாம் செய்ய (AD 9 - LI IT ġib . எனவே மேம்போக்காகச் சில குறிப்புக்களைத்தான் தரலாம்.
அப்படிப் பார்க்கும்போது, முதலாவது கதையான ‘எழுச்சியை சிறுகதை என்று நாம் கூற முடியாதிருக்கிறது. சிறுகதைக்குரிய கட்டுக்கோப்பு இறுக்கமாய் அமையவில்லை. உள்ளடக்கத்தில் முற்போக்குத் தன்மை காணப்படுவது வரவேற்கத் தக்கதுதான். ஆனால் வெறும் விவரண எடுத்துரைப்பும், முற்போக்கு எண்ணமும் போதுமானதாய் இல்லை. கதையைச் சுருங்கச் சொல்லி இறுக்கமாகக் கூறும் ஆற்றல் வேண்டும். ‘எழுச்சி கதை இவ்வாறான குறைபாடுகளைக் கொண்டது என்றால் ஏனைய கதைகளும் அப்படியே என்றில்லை.

Page 92
180 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
உதாரணமாக அடுத்த கதையான தானம்’ வடமராட்சி பேச்சு வழக்காலும் பெரும்பாலும் உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்டதனாலும், கதையில் விறுவிறுப்பு இருப்பதை அவதானிக்க முடிகிறது. வேஷதாரித்தனத்தை செயல்கள் மூலம் ஆசிரியர் அம்பலப்படுத்துகிறார்.
தொடர்ந்து வரும் மீறல்கள்’ கதையும் சுவாரஸ்யமான முறையில் இக்கட்டான நிலைமைகளை, வேகமான ஓட்டத்துடன் சித்திரிக்கிறது. இங்கும் ஆசிரியரின் முற்போக்கான எண்ணங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன. தாம்பத்திய உறவுகளின் நேர்மையைச் சித்திரிக்கிறது கதை.
ஒர் 25 வயது இளைஞனின் "புளூபிலிம்’ பார்க்கும் முதலாவது அனுபவமும், அந்த நீலப்படம் காட்டப்படும் இடம் பற்றிய விவரணையும், உள்நாட்டுச் சிறுகதைத் துறையில் முதற்தடவையாக இடம் பெறுகிறது என நினைக்கிறேன். நன்றாகவே எழுதிக் கொண்டுவந்த ஆசிரியர் இடையிலே பிரசங்கம் செய்வது போல, தார்மீகம் பற்றிப் பேசுவது கதையின் sosoldi, Lustl. Gáis (Unity in Structure) geol-u.pl செய்கிறது. இந்தக் கதையின் பெயர் ‘புத்துணர்ச்சி’.
அண்மைக்காலச் சிறுகதை எழுதும் பாணி, பாங்கு மெல்ல இரத்தினவேலோனிடம் வரத் தொடங்குகிறது என்று கூறுமளவிற்கு இவருடைய ‘பாரதி' என்ற கதை அமைகிறது. தமது

கே.எஸ். சிவகுமாரன் 181
எழுத்தாளர்களின் பெய்ர்கள் இடம்பெறுவது ஒரு புறமிருக்க மற்றொரு புறத்தில் மத்தியதர ஆண் - பெண் தாம்பத்திய உறவை மிக லேசாக ஆசிரியர் தொட்டுச் செல்வதும் கவனத்திற்குரியது. நன்றாக எழுதப்பட்டது இக்கதை.
இத்தொகுப்பிலே, தொடர்ந்து வரும் கதைகள் அனைத்துமே நன்றாக வடிவம் பெற்றிருப்பதுடன், அனுபவச் சித்திரிப்புக்களை ஆழமான முறையிலும் தருவன. "புதிய பயணம் தலைப்புக்கதை கதையில் வடமராட்சிய பேச்சு வழக்கு, ஆக்கபூர்வமான முறையில், செயற்பாட்டுத் தன்மையுடன் பிரயோகிக்கப்படுவதைக் காண்கிறோம்.
அயத்துப்போனன், பத்தாது, ஒல்லுப்போல, கருக்கல், மைமல், வெள்ளன போன்ற சொற்கள் மட்டக்களப்புப் பிராந்தியத்திலும் பயன்படுவதை நாம் காண்கிறோம்.
சூழல் மாற, நெருக்குவாரங்கள் அதிகரிக்க, வாழ்நிலைகள் நிச்சயமற்ற தன்மையில் இருக்க, புதிய பரம்பரையினரின் வாழ்வு நோக்கு வேறுபட, நிலவும் இக்கட்டான நிலையில், வடபுலத்து மக்களின் நிகழ்வை, நாளாந்த வாழ்க்கையின் சில கூறுகளை இக்கதை சித்திரிக்கிறது. (மொன் டீசூரிப்) பாலகனிடமிருந்து புதிய படிப்பினைகளைக் கொழும்பில் வசிக்கும் வயதில் இளைய மாமனார் கற்றுக் கொள்கிறார்.

Page 93
182 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பிறந்தநாள்’ என்ற கதையில், கொழும்பிலே ஓர் வளரிளம் பருவத்தினன் மேற்கொண்ட பஸ் பிரயாண அனுபவம் சித்திரிக்கப்படுகிறது. சாமான்யமாகப் பெரும்பாலான பிரயாணிகளுக்கு ஏற்படும் அனுபவம்தான். ஆயினும், கதை உணர்த்தும் சிந்தனை அதிர்வுகள் இயல்பாய் அமைந்துள்ளன. கதையில் நேர்மையான சித்திரிப்பு உள்ளது.
‘அறிமுக விழா ஒரு புதிய உத்தியில் எழுதப்பட்ட கதை. வேஷதாரித்தனத்தைச் சொல்லாமற் சொல்லி விளங்க வைக்கும் கதை. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று கூறுவது போல, சொல்லும் செயலும் மாறுபடும் ஒர் எழுத்தாளன் இக்கதையில் சித்திரிக்கப்படுகிறான். புலோலியூர் ஆ. இரத்தினவேலோன், விமர்சனத் துறையிலும் ஈடுபட்டவர். ஆகையால், திறனாய்வுப் பாங்கில் அமைந்த சில மதிப்பீடுகளையும் தருகிறார். இத்தொகுதியில் இடம்பெற்ற கதைகளில் குறிப்பிடத்தக்கது ‘அறிமுகவிழா’.
'தப்புக்கணக்கு மற்றுமொரு கொழும்பு வாழ் அலுவலக ஆண் - பெண் தொடர்புகள் பற்றியது. இயல்பான முறையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். பார்வைகள் வேறுபடுவதை ஆசிரியர் காட்ட முனைகிறார்.
‘தேன் சிந்துமோ வானம்’ என்ற கதையில் ஆசிரியர் லேசாக முரண் நிகழ்வுகளைக் கொண்டு

கே.எஸ். சிவகுமாரன் 183
வருகிறார். ஒரு விஷயத்தை அறிவதற்கு முன் இருந்த மனோபாவமும், அறிந்த பின் உள்ள மனோபாவமும், குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.
இறுதியாக ‘ஒரு விடியலுக்கு முன்’ என்ற கதையை எடுத்துக் கொள்வோம். வடபுலத்து இளைஞர்கள் கொழும்பில் நடத்தும் கஷ்டமான வாழ்க்கை நிலையையும், வடக்கில் ஒளிமயமான எதிர்காலம் வந்து, வாழ்க்கைச் சுமைகள் இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் கதையில் தொனிக்கிறது.
கூட்டு மொத்தமாகப் பார்த்தால், புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய கதைகளின் புதிய பயணம் என்ற தொகுப்பு, கதாசிரியருள்ளே பொதி ந் தி ரு க்கு ம் ஆற் ற  ைல ஓர ள வு வெளிப்படுத்துகிறது. அவருடைய தனித்துவமான ஆளுமையின் வளர்ச்சியைக் கதைகள் காட்டி நிற்கின்றன. சமுதாயத்தையும், மனிதர்களையும் அவர் பார்க்கும் பார்வை அவருக்கேயுரியது. இதனால் வித்தியாசமான அனுபவத்தை வாசகர் நுகர முடியும். ஆயினும் அவருடைய முழுத் திறமையும் இத்தொகுதிக் கதைகளில் வெளிப்பட்டுள்ளன என்று கூறமுடியாது. அவர் தொடர்ந்தும் நுட்பமாக எழுதி எமது அனுபவத்தையும், அறிவையும் விரிவுபடுத்துவார்
என்று எதிர்பார்க்கலாம்.
(நவமணி : 26-10-96)
来

Page 94
184 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கோகிலா மகேந்திரன் நுண்ணியதாகக் காட்டும் பெண்ணியம்
கோகிலா மகேந்திரனின் ஆற்றல் ஏற்கனவே பல நூல்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அவருடைய ஆக்க இலக்கியப் படைப்புகளில் காணப்படும் உளவியல் சார்ந்த பண்புகள், ஈழத்து உடன் நிகழ்காலப் புனைகதைத் துறையில் வரவேற்பைப் பெற்றுள்ளன. அலட்டிக் கொள்ளாமலே பெண்ணியக் கருத்துக்களை அவர் சிக்கனமான முறையில் தெரிவித்திருக்கிறார். உள்ளத்தில் ஒளியுண்டாயின் வாக்கினிலும் ஒளியுண்டாதற்போல, அவர் நோக்கம் தெளிவுற அமைவதனால், அவர் ஆக்கங்களும் ஒர் ஒழுங்கு முறையில் தெளிவாகச் சித்திரிக்கப் பட்டவையாகவும் அமைகின்றன. கதைகள் என்ன கூறுகின்றன என்பது சொல்லாமற் சொல்லப்படும் அதே வேளையில், கதைப் புனைவு, கதைப்பின்னல், கதாபாத்திர வார்ப்பு, கதை நிகழுமிடச் சூழற் பின்னணி. கதையோட்டம், விறுவிறுப்பு, படிப்பவர் ஆர்வத்தை உண்டு பண்ணச் செய்யும் உத்தி, மொழி நடை, ஆக்கத்திறன் போன்றவை குறித்தே ஒரு மதிப்புரையில் நாம் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். The Organic Structure எனப்படும் உள்ளார்ந்த உறுப்பு அமைதி இடம் பெறும் கட்டுமானம் பற்றி ஆய்வறிவாளர்களோ, திறனாய்வாளர்களோ,

கே.எஸ். சிவகுமாரன் , 185
மதிப்புரையாளர்களோ, பத்தி எழுத்தாளர்களோ, கலை இலக்கியச் செய்தியாளர்களோ, அறிமுகஞ் செய்பவர்களோ அதிகம் அக்கறை கொள்வதில்லை. இதனாற்றான் போலும், அரைத்த மாவையே அரைத்து யதார்த்த வாழ்வின் ஆவணப் பதிவுகளாக மாத்திரம் கதைகளை விவரணப் பாங்கில், நம்மிற் பல ஈழத்து எழுத்தாளர்கள் செய்து வருகிறோம். இதனை மனதிற்கொண்டு போலும் ஜெயமோகன் போன்ற இந்திய ஆக்க இலக்கியப் படைப்பாளிகள் எமது ஈழத்து இலக்கியப் படைப்புகளின் சிருஷ்டித்தன்மை பற்றிக் கூற நேர்ந்தது. அது ஒருபுறமிருக்கட்டும்.
இனி கோகிலா மகேந்திரனின் வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் என்ற தொகுப்பின் முதலாவது கதையான 'பிறழும் நெறிகள்’ என்பதனை எடுத்துக் கொள்வோம்.
அதாவது இப்படித்தான் இருக்கும் என்ற ஊகம் என்போமாக. அந்த ஊகத்தில், வளரிளம் பருவ மாணவன் ஒருவனின் விரும்பத்தகாத செயல்களை மாத்திரம் கருத்திற்கொண்டு அவனை பலரும் எடை போடுகிறார்கள். அவனிடம் உள்ள நல்ல அம்சங்களைத் தட்டிக்கொடுத்து அவனை உற்சாகப்படுத்தத் தவறியதுடன், அவன் இயல்பான வளர்ச்சியைத் தடைப்படுத்தியும் வருகின்றனர். ஆயினும் அதிர்ஷ்டவசமாக அவன் ஆசிரியை அவனைப் புரிந்துகொண்டு, அவனுக்குப் புது நம்பிக்கையை அளிக்கின்றாள் என்பதுதான் கதைக் கருவூலம்.

Page 95
186 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
இந்தக் கதை 17 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை என்பதை நாம் மனதில் இருத்தினால், இக்கதை, அக்காலத்தில் ஒரு புதுப்பார்வை கொண்ட கதையாக மிளிர்ந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வோம். பாத்திர வார்ப்பு இயல்பாயமைவதையும் குறிப்பிட வேண்டும். அடி வாங்கினாலும், அடித்த பிரம்புடன் ஒரு நாயகனாக அவன் வகுப்பறைக்குத் திரும்பும் பொழுது, எல்லோர் கவனத்தையும் தான் கவர்ந்ததை அவன் உணரும் போதுள்ள பெருமிதமும், பின்னர் அதே மூர்க்கத்தனமானவன், தம்பி, வசந்தன் என்றெல்லாம் அழைக்கப்படும்போது அவனுள் எழும் இளகிய தன்மையும் பாத்திர வார்ப்பில் சடநிலையாகத் தீட்டப்படுகின்றன. ஆயினும், இன்னும் இறுக்கமாகக் கதாசிரியர் எழுதியிருப்பின், சிறுகதைக்குரிய கவிதைத் தன்மை நன்கு துலங்கியிருக்கும் எனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு கதைக்கும், சிறுகதையின் குணப்பண்புகளைப் பொருந்திப் பார்த்துக் கருத்துத் தெரிவிக்க முடியுமாயினும் அவ்வாறு இங்கு செய்யப்படவில்லை. எனவே, அடுத்த கதையான, மரணிப்பிலும் உயிர்க்கும் என்ற கதைக்கு வருவோம். இக்கதையும் எண்பதுகளின் நடுக்கூற்றுக்குச் சிறிது பிந்தி எழுதப்பட்ட ஒன்று ‘நோய் வெளிப்படுமுன்பே, அதை ஒருவரின் நரம்புத் தொகுதி உணர்ந்து, மூளைக்குத் தெரிவிக்கின்றது. மூளைக்கு வரும் இந்தச் செய்தியே எமக்குச் சுவையாகத் தோன்றுகிறது’ என்ற கருத்தை வெளிப்படுத்தும், போர்காலச் சூழற்கதை இது.

கே.எஸ். சிவகுமாரன் 187
ஆசிரியையின் மருத்துவ, உளவியல் ஞானம் கதையை யதார்த்தபூர்வமாக 6" (լք:5 உதவியிருப்பது மட்டுமல்லாமல், சிறுவர் உளப்பாங்கையும், தாய்மையுணர்வையும் விவரணை ரீதியிலும் சித்திரிக்க வகை செய்கிறது. ஒதுக்கப்படும் பொழுது, எதிர்த்து நிற்பதும் ஒரு மனித சுபாவம் என்பது ஆட்டுக்குட்டிகளுக்கு மாத்திரமல்லாமல், இளம் பாலகர்களுக்கும் பொருந்தும் உளவியல் பாங்கை, ஆசிரியர், மரணத்துள் வாழும் வட புல மக்கள் மரணிப்பிலும் உயிர்ப்புப் பெறுவதைக் காட்டுகின்றார். பப்பாசிக் குழாய் ஒன்றில் கயிறு கட்டித் தோளில் தொங்கப் போட்டிருந்த மகனின் பயமறியாத் துணிவை இதற்குச் சான்றாகக் காட்டி நிற்கிறார். புரிந்தவர்களுக்குப் புரியும் இந்தச் சின்னத்தின் செயற்பாட்டுத் தன்மை.
இக்கதையிலும் செட்டான உருவ வார்ப்பு இருப்பதை அவதானிக்கலாம். கூறாமற் கூறும் பண்பு வரவேற்கத்தக்கது.
ஒலி
விஞ்ஞான, மருத்துவ, உளவியற் செய்திகளைப் பொருத்தமான முறையில் உள்ளடக்கிக் கதைகளை எழுதும் பாங்கு, ஏனைய எழுத்தாளர்களைவிட, கோகிலா மகேந்திரன் அவர்களிடம் கூடுதலாக வந்து அமைவதை நாம் காண்கிறோம். Noise Polution காதுகளுக்கு விகாரமாக ஒலியினால் ஏற்படும் மாசுகளைக் கூறப்புகுந்த ஆசிரியர், இளைய

Page 96
188 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பரம்பரையினரின் அறியாமை காரணமான அடாவடித்தனங்களையும் இக்கதையில் தொட்டுச். செல்கிறார். அத்துடன் மானம், மரியாதை பார்க்காத வீராப்புமிக்க அசட்டு வீரங்கொண்ட பையன், ‘சுதந்திரம்’ என்பதைப் பிழையாக விளங்கிக் கொண்ட் ஏதேச்சதிகாரப் போக்கையும் சுட்டிக் காட்டுகிறார். கதைப் போக்கு மொழிநடை ஆகியன யாவுமே 1986ல் எழுதப்பட்ட இந்தக் கதையில் கச்சிதமாய் இடம் பெறுவதும் குறிப்பிடத்தக்கது. சமுதாயம் ஒரு சறுக்குப் பாதை
1987ல் எழுதப்பட்ட சற்று வித்தியாசமான கதை,
சமுதாயம் ஒரு சறுக்குப்பாதை. இதன் விளக்கத்தைக் கதையின் இறுதியில் இவ்வாறு கூறுகிறார்:
“சமுதாயம் என்ற பாதையில் பணம் என்ற பிடிகளைக் கொண்டு வேகமாக ஏறிய செல்லம்” இங்கு செல்லம் என்பவர், இக்கதையின் நாயகியாக வரும் தங்கராணியின் அயல்வீட்டுக்காரி. கிராமியச் சூழலில், பணச் செருக்குக் காரணமாகக் குணம் மாறும் சிலருக்கு ஒர் உதாரணமாக இந்தச் செல்லம் சித்திரிக்கப்படுகிறாள். கதை நிகழ்காலத்திலும், பின்னோக்கு உத்தி மூலம் சென்ற காலத்திலும் நிகழ்கிறது. இங்கு ஒரு ஆடு நஞ்சூட்டப்பட்டுக் கொலை செய்யப்படுகிறது. தங்கராணியின் மகன் மூன்று வருடங்களுக்கு முன் போய் விடுகிறான். அயல் வீட்டுக்காரியின் மகன் பயத்தினால் வெளிநாடு செல்கிறான். இந்த மட்டில் கதை புரிகிறது. ஆயினும்

கே.எஸ். சிவகுமாரன் 189
சிதம்பரப் பிள்ளை மாஸ்டர் என்பவர் பற்றிக் கதையில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அவர் தங்கராணிக்கு உதவினார் என்று செல்லம் கூறுவது, தங்கராணியைப் பாதிக்கிறது. ஆனால் இவர் யார், இவரின் பங்கு என்ன என்ற விபரம் கதையிலிருந்து பெறமுடியாதிருக்கிறது. இத்தகவல்கள் கூறாமலும் கூறப்படவில்லை. தங்கராணியின் கணவர் கனகுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துள்ளார் என்பது மாத்திரமே கூறப்படுகிறது. இவருக்கும் மல்லிகா என்ற ஆட்டின் கொலைக்கும் என்ன தொடர்பு என்பதை, தங்கராணி கேட்பது போலவே நாமும் ஆசிரியையிடம் கேட்க வேண்டியுள்ளது. இந்தக் கதையில் உருவ நேர்த்திக்கு அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை போல் தெரிகிறது. ஆயினும் எரிச்சல், பொறாமை, புதுப் பணக்காரர் LD Gort L. Frie போன்றவை உணர்த்தப்படுகின்றன. கொஞ்சம் இறுக்கமாக எழுதியிருக்கலாம் என நினைக்கிறேன்.
அடுத்து, இத்தொகுப்பின் தலைப்புக் கதையான வாழ்வும் ஒரு வலைப் பந்தாட்டம் என்ற கதைக்கு வருவோம். இந்தக் கதையும் எண்பதுகளின் பிற்பகுதியில் எழுதப்பட்டது. LDfb 60) pu எழுத்தாளர்கள் அதிகம் தொடாத சம்பவங்களை - உதாரணமாக, இந்தக் கதையில், வரும் வலைப்பந்தாட்டம் என்ற விளையாட்டு நிகழ்ச்சியையும் கதையில், சம்பந்தப்படுத்தி எழுதுபவர் கோகிலா மகேந்திரன் அவர்கள். பெண்களின் பாத்திரங்களை ஆண்கள், தமது கண் கொண்டுதான்

Page 97
190 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
எழுதுவார்கள் GT sæt et பெண்ணியவாதிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால் கோகிலா அவர்கள் போன்ற எழுத்தாளர்கள், தமது பார்வைகளில் பெண் பாத்திரங்களைச் சிருஷ்டிப்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய கதைகளில் நம்புந்தன்மை அதிகமாக இருப்பதற்கான காரணம் ஒர் ஆசிரியர் பாடசாலை அதிபர் என்ற முறையில் அவர் பட்டுத் தேர்ந்த அனுபவங்களைக் கொண்டு எழுதுவதுதான். இக்கதையிலும் வழக்கம் போல உளவியல் பார்வையும் ஆய்வறிவும் இணைவதனால், வாழ்க்கையையே ஒர் வலைப் பந்தாட்டத்துக்கு ஒப்பிட்டுப் பார்க்கும் புதுப் புனைவு இவரிடத்திற் காணப்படுகிறது. பெண்களே, பெண்களுக்கு எதிரி என்ற கூற்று ஓரளவு உண்மை என்பதைக் காட்டுவது போலவும், அனுபவம் காரணமாக, வாழ்க்கையில் சாதிகளைத் தாக்கி, எதிர்த்து உயிர்ப்புக் கொள்வது போலவும், எதிர்கால நம்பிக்கையுடன் முக்கிய கதாபாத்திரத்தை இயங்க வைத்திருக்கிறார். “தனக்குக் கோபம் வரக்கூடும் என இவர் எதிர்பார்த்தார். ஆனாலும் வரவில்லையே’ என்று முடித்திருக்கும் பாங்கு அவர் முதிர்ச்சித் தன்மையைக் காட்டுகிறது. சருமம் தடிப்பது என்பதும் மற்றுமோர் உதாரணம்.
கதை எழுதப்பட்ட முறை மூலம், ஆசிரியரின் செப்பனிடும் தன்மை சீரடைந்திருப்பதை, நாம் அவதானிக்கக் கூடியதாய் இருக்கிறது. இது ஒரு நல்ல நீதி சுட்டிய கதை எனலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 191
மனிதம் மதலைகளிடம் மட்டும்
கோகிலா மகேந்திரன் அவர்களின் இத்தொகுப்பில் இடம் பெற்ற கதைகளுள், என்னை அதிகம் உலுக்கி விட்ட கதை இது. அவ்வாறு தத்ரூபமாக வருணிப்பும், விவரணமும் அமைந்திருந்தது. கதையைப் படிக்கும் போது கண்ணிர் மல்கும் போலிருந்தது. கதாநாயகனின் மீதான கழிவிரக்கத்தினைப் பச் சாதாபம் ஏற்பட்டது என்பதைவிட இக்கதையில் வரும் மதலையின் மனிதத்துவத்தை யிட்டுத்தான் உருக்கம் ஏற்பட்டது.
இக்கதையிலும் கூட உலக வாழ்க்கைக் கோலங்களின் வேறுபட்ட தன்மையையும், பெண்கள் சிலரின் மனப்பாங்கையும் ஆசிரியர் நேர்த்தியாகப் படம் பிடித்திருக்கிறார். கட்டமைப்பு, உள்ளடக்கச் சிறப்பு, கவிதை நடை ஆகியன யாவுமே திருப்தியளிக்கின்றன.
ஆழ்ந்த அநுதாபங்கள்
அடுத்து 1989ல் வெளியாகிய ஒரு கதை இதில் நகைச்சுவையும், ஏளனமும் நன்கு வெளிப்படுகின்றன. என் போன்ற பத்தி எழுத்தாளர்களும் இக்கதையில் வரும் பாத்திரம் போல புத்தகங்களை இரவலாகக்
கொடுத்துத் திருப்பிப் பெறாதவர்கள்தான். இது ஒரு இலகு வாசிப்புக் கதை என்றுங் கூறலாம்.

Page 98
192 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் ണിub
‘எரியும்’ என்ற கதையுடன் 1990களுக்குள் கோகிலா மகேந்திரன் அவர்கள் பிரவேசிக்கிறார். மனதைத் தொடும் மற்றொரு கதை. சுருதி கெடாமல் ஒரே சீராய்ச் சென்று எதிர்பாரா முடிவுடன் சோகம் ததும்பி நிற்கும் கதை. கதை நிகழ்வு யுத்த காலப் பின்னணி. இந்தக் கோர யுத்தம் உயிர்களை மட்டும் பறிக்கவில்லை. பிறக்கப் போகும் உயிர்களையும் முளையிலேயே கிள்ளிவிடும் அளவுக்குப்
பதற்றநிலையை உண்டு பண்ணுகிறது. இதுவும் பாராட்டும்படியான கதை.
கோகிலா அவர்களின் எழுத்துத்துறை வளர்ச்சிக் கிரமத்தை இக்கதை மூலமும் நாம் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது.
அடுத்து நாம் 1994க்குச் செல்வோம். ஓர் ஆசிரியரின் கடமை தவறாச் செயற்பாடு, இக்கதையில் சித்திரிக்கப்படுகிறது. தனது சொந்த மகன் இறக்கும் தறுவாயில் இருக்கும் பொழுது கூட, தனது வகுப்பு மாணவர்களின் நலன் கருதி, அவர் பாடசாலைக்குச் சென்று பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்கிறார். இப்படிப்பட்ட ஆசிரியர்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருப்பது ஒன்றும் புதுமையல்ல. அத்தகைய ஒர் ஆசிரியரின் பலனை எதிர்பாராத முயற்சி, இக்கதையில் விவரிக்கப்படுகிறது. ஆயினும், கோகிலா அவர்களின் வேறு சில கதைகளிற்

கே.எஸ். சிவகுமாரன் 193
காணப்படும் உழைப்பு நிலைச் சித்திரிப்பை இக்கதையிற் காணமுடியாது போய்விட்டது. அவர் தமது எடுத்துரைப்பை, உரையாடல்கள் மூலமும், சற்று எட்ட நின்றும் விபரிக்கிறார். பாத்திரத்தின் இக்கட்டான நிலையை அவருடைய மனத்தினூடாகவும் காட்டியிருந்தால் மிக நன்றாயிருந்திருக்கும் என நினைக்கிறேன்.
மனதையே கழுவி
கோகிலா மகேந்திரன் அவர்களின் கவித்துவமான மற்றொரு கதைத் தலைப்பு, மனதையே கழுவி, இது மிக அண்மைக்காலக் கதை. 1995ல் வெளியாகியது. கதைத்தலைப்பு உணர்த்தும் ஒரு திகைப்பனுபவத்தைக் கவிதை சார்ந்த நடையில் ஆசிரியர் எழுதியிருக்கிறார். உளவியல் பகுப்பாய்வுடன் மூன்று பெண்களின் மனோபாவத்தை பெண் எழுத்தாளரான கோகிலா அவர்கள் செட்டாகத் தீட்டியிருக்கிறார். ஆணாதிக்கக் கண்கள் ஊடாகவே பெண்கள் சித்திரிக்கப்படுகிறார்கள் என்று அவசர அவசர முடிவுக்கு வரும் பெண்ணியவாதிகள், பெண்களின் குறைகளையும், நிறைகளையும் பெண்ணியக் கண்கள் ஊடாகவும் சித்திரிக்கலாம் என்பதை அடிக்கடி மறந்து விடுகிறார்கள். ஆண்கள் கூட பெண்களின் நிலை நின்று கதைகளைப் படைக்கலாம் என்பதையும் மறந்து விடுகிறார்கள்.
மூன்றாந்தர சினிமா பரபரப்புச் செய்தியாளர் தமிழ் நாட்டில் ‘கவர்ச்சி’ என்ற வார்த்தைக்கு தனி

Page 99
194 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அர்த்தம் கொடுப்பர். அது மாத்திரமல்ல. “அழகியல்’ என்ற பதத்துக்கும் அவர்கள் அறியாமையால் கொடுக்கும் விளக்கங்களும் அபத்தமானது.
நஷ்டம் என்னவென்றால், ஒருசில இந்தியப் பத்திரிகைக்காரனைப் பின்பற்றி இங்குள்ள பத்திரிகையாளர்களிற் சிலரும் பிரதி பண்ணுவதுதான். அவ்வளவு தூரத்துக்கு தமிழ்நாட்டு மூன்றாந்தரப் பத்திரிகைகளின், செல்வாக்கு இங்கு ஆட்சி செலுத்துகிறது. போகட்டும்.
பெண்ணின் அழகையும், கவர்ச்சியையும் ஆய்வறிவு ரீதியாகவும், உளவியல் சார்ந்ததாகவும் எழுதும் கோகிலா மகேந்திரன் அவர்கள் விபரிக்கும் தோரணையைப் பாருங்கள்.
“அவளின் கழுத்து வளைவில் மட்டும்தான் இளமை நெடி அடித்தது. வட்ட விழிகள். வரம்பாய் இரு புருவம். கண்ணுக்குள் அம்பு மாதிரித் தளைக்கும் பார்வை. இவை அவளுடையவை. அவளிடமே ஒரு குழந்தை மனம் நிறைந்து வழிந்தது. அவளின் கண்ணிமை மயிரில் புல்லின் மேல் பனித்துளிபோல் நீர், மெதுவாகச் சிரித்தாள். விரக்தி கலந்த புன்னகைதான் என்றாலும், அழகாக இருந்தது. மெல்லிய மஞ்சளும், பச்சையும் சேர்ந்த எளிமையான சட்டை என்றாலும், அந்தத் தெரிவில் ஒரு கலைத்துவம் இருந்தது.”
இவ்வாறு எழுதும் ஆசிரியர் கையாளும் உத்திமுறையும் குறிப்பிடத்தக்கது. கதாபாத்திரத்தின்

கே.எஸ். சிவகுமாரன் 195
ஒரு ஆலோசகர் என்ற முறையில், கதாபாத்திரத்தின் உணர்வுகளை நெறிப்படுத்தி விளக்கம் கொடுக்கும் கதை சொல்பவர், பின்னோக்கு உத்தியையும் கையாண்டு, முதல், இடை, கடை என்ற பிரிவுகளற்றுக் கதையை நகர்த்திச் செல்கிறார். இப்படியாக உத்திகளில் நமது ஈழத்து எழுத்தாளர்கள் எழுதுவது மிகவும் குறைவு. இந்தக் கதை எனக்குப் பிடித்ததற்கு மற்றொரு காரணம், கதையின் பின்னணியில் அமையும், வடபுல மக்களின் யுத்தகால வாழ்க்கை நிலையின் யதார்த்த சித்திரிப்பு ஆகும்.
இறுதியாகக் கடைசிக் கதைக்கு வருவோம். தலைப்பு: சர்ப்ப மரணம். இது இரண்டு வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதை. கதாசிரியர் கூறவருவது ஒருவாறு புலப்படுகிறது. ஆயினும் வாசகனுக்கு ஒரு மயக்கம் ஏற்படுகிறது. ஒரு பாம்பின் மரணம் போல, அவ்ரோ விமானத்தின் வெடிப்பைச் சமப்படுத்தும் ஆசிரியை எழுதிய முறைமையில் சில தெளிவின்மை இருப்பது போலத் தெரிகிறது. கதாசிரியையின் விளக்கத்தைக் கொண்டுதான், இக்கதையையும் மேலும் புரிந்து கொள்வோம்.
கோகிலா மகேந்திரன் அவர்களின் வாழ்வு ஒரு வலைப்பந்தாட்டம் என்ற இத்தொகுதியில், ஆசிரியை 80களிலும் எழுதிய 11 கதைகள் இணைக்கப்பட்டிருப்பதைக் கண்டோம். இந்த நாட்டின் முக்கிய எழுத்தாளர்களுள் ஒருவராகிய இவர், பெண்களின் சித்திரிப்பைக் கச்சிதமாகச் செய்யும் ஒரு

Page 100
196 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
பெண்ணியவாதி என்பதையும் கண்டோம். இவருடைய கதைகள், இவருடைய நேரான அனுபவத்தின் சித்திரிப்பாகவும், கல்விச் சூழல்களில் நடைபெறுவதையும், உளப்பகுப்பியல் பாங்கில் பாத்திரச் சித்திரிப்பு அமைவதாயும் கண்டோம். பிறர் அதிகம் எழுதாத விஞ்ஞான மற்றும் உடனிகழ்கால பிற செய்திகளை உள்ளடக்கிக் கதைகளுக்குப் பொருத்தமாய் அவற்றைச் சேர்ப்பதையும் கண்டோம். கவித்துவமான நடையும், நுண்ணியதாக அவதானித்து எழுதுவதும் இவருடைய பாங்குகள். இக்கதைகள் யாவும் பாராட்டும்படியாக எழுதப்பட்டிருந்தாலும் உணர்வலைகளை என்னுள் அதிகம் எழுப்பிவிடாது போயின. வாழ்வும் ஒரு வலைப்பந்தாட்டம், மனிதம் மதலைகளிடம் மட்டும், மனதையே கழுவி ஆகிய கதைகள், ஈழத்துத் தமிழ் ஆக்க இலக்கியம் செழிப்புடையதாக இருக்கிறது என்பதற்குச் சான்றாக அமைகின்றன.
பல கஷ்டங்களுக்கு மத்தியிலும் எழுத்து மூலம், உலகின் வெவ்வேறு தரிசனங்களை எமக்குத் தந்து கொண்டிருக்கும் கோகிலா மகேந்திரன் அவர்கள் பாராட்டுக்குரியவர்.
(தினகரன் வரமஞ்சரி : 10-08-1997)
来

கே.எஸ். சிவகுமாரன் 197
யோ. பெனடிகட் பாலன் காட்டும் மனித விழுமியங்கள்
GBuLu fT. பெனடிக்ட் பாலன் எழுதிய 18 அருமையான சிறுகதைகளின் தொகுப்பு ‘விபசாரம் செய்யாதிருப்பாயாக’, ‘அருமையான’ என்ற அ  ைட மொ ழி  ைய அர்த் தத்து டன் தா ன் குறிப்பிடுகின்றேன். எந்த ஒரு எழுத்தாளனும் எடுத்த எடுப்பிலேயே உன்னதமான படைப்புகளைப் படைப்பது அபூர்வம். பெனடிக்ட் பாலனும் படிப்படியாகத் தமது இலக்கியத் திறனைத் தமது எழுத்துக்களில் (1962 - 1996) காட்டி வந்துள்ளார். ஒருவருடைய படைப்பை நாம் அணுகுமுன்னர், அது எழுந்த காலச்சூழல், எழுத்தாளரின் வயது, அனுபவம் போன்றவற்றையும் கருத்திற் கொண்டே மதிப்பிட வேண்டும். இவருடைய கதைகள் ஈழநாடு முதல் வீரகேசரி வரையிலுமான பத்திரிகைகளில் வெளி வந்துள்ளன. இவற்றில் சில தாமரை, தாயகம், குமரன், வசந்தம் போன்ற இடதுசாரிக் கருத்தோட்டங்களைப் பிரதிபலிக்கும் ஏடுகளிலும் வெளிவந்தன என்பதை நாம் கவனத்திற்கொள்ள வேண்டும்.

Page 101
18 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வெளிப்படையாகவே, மனிதனை அவன் அவலங்களை மையமாக வைத்தே பாலன் கதைகளை எழுதியிருக்கிறார். மனிதனை, மனித விழுமியங்களை சித்திரித்து உன்னதப் பண்புகளைச் சொல்லாமற் சொல்லி, கலைநயத்துடன் கூறும் படைப்புக்களை பெனடிக்ட் பாலன் தந்திருப்பதை நாம் முதலில் அவதானிக்க வேண்டும். இந்த நூற்றாண்டைச் சேர்ந்த பொறுப்புள்ள எந்த ஒரு எழுத்தாளனுமே, மனிதனின், அவன் வாழ்வின், அவன் மேன்மையில் அக்கறை கொண்டவனாகவே இருத்தல் சொல்லாமலே விளங்கும். அந்த விதத்திலே பெனடிக்ட் பாலனின் கதைகள் ஒவ்வொன்றிலும் நிகழும் உன்னதமான, முற்போக்கான, கருத்துக்களை நான் முழுமையாக வரவேற்கிறேன். அவர் கதைகள் உள்ளடக்கும் செய்திகளில் எந்தவிதமான முரண்பாடும் எனக்குக் கிடையாது. எனவே இது பற்றி அதிகம் கூறுவதற்கு இல்லை.
மொழியின் ஆக்கபூர்வப் பயன்பாடு
கதைகளின் ஏனைய உறுதிப் பொருள்களை நாம் கவனத்தில் எடுக்கவேண்டும். பெனடிக்ட் பாலன் 30, 35 வருடங்களுக்கு முன்னதாகவே மொழியை ஆக்கபூர்வமாக, செயற்பாட்டுத் தன்மையாகக் கையாண்டிருப்பதை நாம் கவனித்தல் வேண்டும். இலக்கியம் என்பது சொற்களினால் ஆனது. எனவே, சொற்களின், சொற்றொடர்களின், சொற்படிமங்களின் பண்புகளை நாம் கிரகித்துக் களிப்படையலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 199
ஒவ்வொரு கதையிலும் இந்தச் சிறப்பை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
"அந்தோனியும் விசேந்தியும்’ என்ற கதையிலே, இதனை நாம் விஷேசமாக உணரலாம். இந்தப் பகுதிகளைப் பாருங்கள்: w
‘வாழ்க்கையின் பரப்பை அடக்கி மனப் புழுக்கத்தில் பின்னிய நினைவின் வலைக்குள் அவன் ஒரு சிலந்தி. இரை தேடி அலையும் சிலந்தி அல்ல. அந்த வலையின் இழைகளைப் பிட்டுக் கொண்டு வெளிநாட வழி மோப்பும் சிலந்தி’ இன்னும் சில வரிகள்:
“அவன் கண்கள் பாயில் விளக்குப் பூச்சி பிடித்தன.
"அந்தோனியின் இதய இழைகள் விபரிக்க முடியாத அன்பின் இறுக்கத்தில் முறுவி இறுகின.”
முரண் நிகழ்வுகளைச் சொற்செட்டால் விளக்கி, இனம் இனத்துடன் சேரும் பண்பை ஆசிரியர் கலைநயமாகக் கூறுவது வரவேற்கத்தக்கது.
YA YA YA
அடுத்ததாக 1963ல் எழுதப்பட்ட விபசாரம் செய்யாதிருப்பாயாக என்ற கதைக்கு வருவோம்.
1963க்கும் 1996க்கும் இடையில் Sex எனப்படும் பால் உறவு தொடர்பான பார்வைகள் மாறுபட்டுள்ளன. எனவே, ஒரு பெண் தொழிலுக்காக அல்லது

Page 102
200 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சிற்றின் பத்துக்காக 2- -Sl 20 Gy கொள்ளல் அப்படியொன்றும் புதுமையான விஷயமாக இன்றில்லை. ஆயினும் 60களில், இது ஒரு விழுமியப் பிரச்சினையாக இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளில் இருந்து வந்துள்ளது.
பெனடிக்ட் பாலன், கத்தோலிக்கச் சூழ்நிலைகளில் கதைகளைத் தந்திருப்பது ஒரு குறிப்பிடத்தக்க அம்சம். இந்தப் பின்னணியில், டொமினிக் ஜீவா, கே. டானியல், எஸ். பொன்னுத்துரை, எஸ். அகஸ்தியர் போன்ற கத்தோலிக்க மதச் சூழலில் பிறந்த எழுத்தாளர்களும் சில நல்ல கதைகளைத் தந்துள்ளனர். பெனடிக்ட் பாலன், விபசாரம் G-Fuiuuurg(Abu'uurTuurts, (Thoushall not commit adultery) 6 TGöp கத்தோலிக்கப் பிரகடனத்தை மையமாக வைத்து இயற்பண்புவாத (Naturalistic) வரைபடத்தில், பெரும்பாலும் உரையாடல்களைக் கொண்ட உத்தியிலே, யதார்த்தவாதமான (Realistic) கதை ஒன்றைத் தந்திருக்கிறார். ரீடா என்ற அந்தப் பெண், மனம் விரும்பாவிட்டாலும், வேறுவழியின்றி தன் இரு பெண் குழந்தைகளையும், தன்னையும் உயிர் வாழ வைப்பதற்காக விபசாரத்தில் ஈடுபடல் தவிர்க்க முடியாமற் போய்விடுவதைக் காட்டும் ஆசிரியர், உண்மையில் சமூக விமர்சனமே செய்கிறார்.
பெனடிக்ட் பாலன் 60களில் எழுதிய மற்றொரு கதை சமுதாய விதி எனப் பொருளடக்கத்தில் குறிப்பிடப்பட்ட போதிலும் இக்கதையின் இறுதியில்

கே.எஸ். சிவகுமாரன் 201
இக்கதை 1995ல் வீரகேசரியில் வெளிவந்ததாகத் தரப்பட்டுள்ளது. இதில் எது சரியெனத் தெரியவில்லை. அதுவல்ல முக்கியம். இக்கதையில் நுட்பமாக உணர்த்துவிக்கப்படும் செய்திகளே முக்கியம். சீதனப் பிரச்சினை ஒரு சமுதாயப் பிரச்சினை என்பதை வெளிப்படையாகவே உரையாடல் மூலம் தெரிவிக்கும் ஆசிரியர், கதையின் கடைசிப் பகுதியில், விதியையும் வெல்ல, புனிதமும், வேதநாயகமும் முற்படத் துணிவதைச் சூசகமாக உணர்த்துவிக்கிறார்.
விரக்தியாய் இருந்த வேதநாயகத்திடம் புனிதம் கூறுகிறாள்;
‘அண்ணை நாளைக்கு தாடியை வழியுங்கோ’
ஆசிரியர் முடிக்கிறார்; “மெளனமாக அவனின் கண்கள் நனைந்து கொள்கின்றன. அது அவளுக்கு மட்டுமல்ல. ஒருவித சுய - இரங்கல், கழிவிரக்கம் இருப்பதுபோல் பட்டாலும், சாதகமற்ற சூழலைச் சாதகமாகப் பார்க்கும் தன்மையைச் சகோதரியின் கூற்று மூலம் கதாசிரியர் உணர்த்துவது கலைநுட்பம்.
★女★
60களில் வெளிவந்த மற்றொரு கதை தேயிலைப்பூ
யாழ்ப்பாணக் கிறிஸ்தவ சூழலில் நின்று பெனடிக்ட் பாலன் மலையகத்துக்கு வருகிறார்.

Page 103
2O2 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
யாழ்ப்பாணக் குடாநாட்டை விட்டு வெளியே வந்து, மற்றுமொரு விரிந்த உலகத்தைப் பார்க்க நேர்ந்த எழுத்தாளர்களின் படைப்புக்கள் இயல்பாகவே ஒரு சமநிலைத் தன்மையைப் பெறுவது ஆச்சரியமில்லை. நந்தி, பெனடிக்ட் பாலன், ஞானசேகரன், சொக்கன், புலோலியூர் சதாசிவம், சுதந்திரராஜா போன்ற எழுத்தாளர்கள் மலையக வாழ்க்கையைப் படம் பிடித்து நேர்த்தியாய் எழுதுவதை தெளிவத்தை ஜோசப் போன்ற விமர்சகர்கள் பாராட்டியிருப்பதை நாம் அவதானித்தல் வேண்டும்.
இந்தக் கதையிலே, பெருந்தோட்டத் தொழிலாள மக்களின் பேச்சு மொழியை வெகு இயல்பாகவே கொண்டு வரும் ஆசிரியர், அளவாக ஓரிரண்டு அழகிய வருணனைகளையும் அள்ளித் தெளித்துள்ளார். யோ. பெனடிக்ட் பாலனின் கவிதைகள் சில தமிழ்நாட்டு ஏடான ‘எழுத்து இல் வெளிவந்தமை ஞாபகத்திற்கு வருகிறது. கருப்பாயி என்ற பெண்ணை இவ்வாறு பெனடிக்ட் பாலன் வருணிக்கிறார்;
“அத்தோட்டத்தில் அவள் எல்லார்
கண்களையும் சறுக்கி விழுத்திவிடும் அழகி. குறுகுறுத்து வாளித்திருக்கும் மென்மையின் திமிர் ஒவ்வொரு அங்கத்திலும் மிஞ்சி விழுகின்றது. வெளியில் உருண்டு விழுவது போல் மயக்கமாக
துள்ளும் மீனாட்டம் அமைந்துள்ள அவளது கண்கள், எத்தனை பேருக்கு மன இடறலைக் கொடுத்திருக்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் 2O3
ஆனால் அவை கிட்ட நெருங்க முடியாத திராணி கொண்ட கண்கள்.”
இப்படியான வரிகள் கதைக்கு அழகூட்டினால், கதை சொல்லும் பாங்கும், கதை ஈற்றில் வரும் திருப்பமும் பெனடிக்ட் பாலனின் வடிவமைப்பு நேர்த்திக்கு (Craftsmanship) சான்று. கதையின் இறுதியில் நடக்கப்போவதை முன்கூட்டியே, கருப்பாயியின் நடத்தை மூலம் கோடி காட்டி விடுகிறார் ஆசிரியர். அவள் நடத்தை பயத்தினால் ஏற்பட்டது வெள்ளைக்காரத் துறை “சின்ன ராஜாவைப் போல நடை பழகும்போது விரும்பிய பூக்களை பிடுங்கிக் கசக்கி எறிந்தால் அவை மீண்டும் அவன் காலடியில் தானே விழுந்து கிடக்க வேண்டும்?’ என்று கருப்பாயியின் இயலாமையைக் கூறாமற் கூறுகிறார் ஆசிரியர். “இவ்வளவு காலமும் அவளை வீட்டிற்கு விரட்டியும் அவள் துரையிடம் போகவேயில்லை. இன்றைக்குப் போகிறாள். ஆச்சரியமாக அவளைப் பார்த்து துரையைப் பார்த்தான் கணக்குப்பிள்ளை. அவன் இறைச்சித் துண்டை நினைத்துவிட்ட நாயைப் போன்று கண்வெட்டாது அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.”
இந்த ஒப்புவமையைப் பாருங்கள்;
“அவள் பேசவில்லை. அவனுக்கு முன்னால் அவளுடைய வனப்பான மார்பகங்களையுடைய நெஞ்சம் கீழிருந்து உருகிவிடும் அக்கினிக் குழம்பால்

Page 104
204 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மேலுயர்ந்து தாழும் பூதியை போல் அசைந்து கொண்டிருந்தது.”
ஈற்றில் கதை இவ்வாறு முடிகிறது. “அவளின் உள்ளத்தின் தீர்ப்பு, அவனோடு அதன் நீதி அவளுக்கு மட்டும்தான் தெரியும். கருப்பாயி தானே அவனை நோக்கி நடந்து கொண்டிருந்தாள்’ புதுமைப்பித்தனின் கதாநாயகி ஒரு வார்ப்பு. பெனடிக்ட் பாலனின் கருப்பாயி இன்னொரு வார்ப்பு ஆக்கத்திறன். எழுபதுகளில் பெனடிக்ட் பாலன் எழுதிய கதைகளில் இரண்டு இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன.
“மரியாயி ஒரு மாடுதானே?’ இந்தக் கதை, என்னைப் பொறுத்தமட்டில் ஓர் Reportage. ஒரு பத்திரிகைச் செய்தி போன்று எழுதப்பட்டிருக்கிறது. 70களில் சுலோகங்கள் அதிகம் எழுந்தன. கலைநயம் எங்கேயோ ஒளிந்துவிட, வீறாய்ப்பு வசனங்களை எழுதி அதுதான் மக்கள் இலக்கியம் என்றொரு மயக்கம் ஏற்பட்ட காலம். புதுக்கவிதை என்ற பெயரில் புற்றிசல்கள் போல் சுலோகங்கள் எழுதப்பட்ட காலம்.
யதார்த்தம் எங்கேயோ நழுவி, இயற்பண்பு வாதம் தலை தூக்கிய காலம். அரசியல் தேவைக்கு அது அவசியமாகப்பட்டதனால், எழுத்தாளர்களும் விட்டில் பூச்சி போற் ஆகர்ஷிக்கப்பட்ட காலம். பெனடிக்ட் பாலனும் விதிவிலக்கல்ல. அதே சமயத்தில் அ. பாலமனோகரன், அருள் சுப்பிரமணியம், நித்திய கீர்த்தி போன்ற எழுத்தாளர்களின் படைப்புகள் வெளிவந்த காலம்.

கே.எஸ். சிவகுமாரன் 205
கொழும்பையும், மலையகத்தையும் இணைக்க முற்படும் கதாசிரியர் பெனடிக்ட் பாலன் வேஷதாரித்தனத்தை (Hypocrysy) இக்கதையில் அம்பலப்படுத்துகிறார். ஆயினும் சொல்லாமற் சொல்லும் பண்பு பறிபோயிற்று. ஆசிரியர் எழுதுகிறார்.
“தேயிலைத் தோட்டத்தில் உழைப்பை மட்டும் சுரண்டுவார்கள். இங்கே இவர்கள் அவள் உழைப்பை மட்டுமல்ல, உணர்ச்சிகளையும், ஆசாபாசங்களையும் நசுக்கிச் சாகடித்து வருவார்கள். மரியாயிக்கு இருக்கிற பெண்ணுணர்ச்சிகளும் யோசப்பருக்கும் மனைவிக்கும் புரியாதவையல்ல. தம் மகளுக்கு காலாகாலத்தில் திருமணம் செய்து வைத்தவர்களுக்குப் புரியாதென்பது பொய்.”
இன்னொரு இடத்தில் “மரியாயி சுரண்டப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவள். அவர்களால்
இவளை நேசிக்க முடியாதுதான்’ என்று தெட்டத்தெளிவாக எழுதுகிறார் ஆசிரியர். ஓர் அரசியல் கட்டுரைக்கு இது பொருந்தும். ஆனால் சிறுகதை ஒரு கலை என்றால் இத்தகைய பிரகடனங்கள் சிறுகதைக்குப் பொருந்தா. இதேவிதமான கதைகளின் அடிநாதத்தை ஒரு செக்கோவ்; ஒரு மோப்பசோன் கலைத்துவமாகத்தான் தருவார்கள்.
இதே மாதிரி ஒரு கதை ‘உனக்கு ஒரு போதும். குமரன் பத்திரிகையில் வெளிவந்தது. செ. கணேசலிங்கன்,

Page 105
206 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
மு. வரதராசன் போன்றோர் பாணியில் முற்போக்கான அரசியற் சிந்தனைகளைத் தரும் எழுத்துருவங்கள். உள்ளடக்கம் வரவேற்கத்தக்கதாய் அமைந்தபோதிலும், அதனைச் சொல்லும் முறையில் கலைத்துவம் நழுவிவிட்டது.
பெனடிக்ட் பாலன் 80களில் எழுதிய ஆறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன. குமரன் ஏட்டில் வெளிவந்த கதை கவரிமான்கள். பெனடிக்ட் பாலனின் கலைத்துவம் மீண்டும் ஒளிர்விடத் தொடங்குகிறது. சாதிவெறிபிடித்தவர்கள் கண் மண் தெரியாமல் செய்யும் அட்டூழியங்களையும், அவர்கள் பிதற்றும், வெறுப்பு வார்த்தைகளையும், சீரான நீரோட்டமாகக் கொண்டு வருகிறார் ஆசிரியர். சாதி வெறி கொண்டவர், தனது இயலாமையை மறைக்கத் தூக்குப் போட்டுச் சாவதாகக் கதை முடிகிறது. சமுதாயத்தில் உள்ள ஒரு சிலரின் சாதிவெறியின் முழுவீச்சையும் ஒரு கதையிலே ஆசிரியர் காட்டிவிடுகிறார். கவரிமான்கள் என்று அங்கதச் சுவையுடன் முன்னைய கதைக்கு எவ்வர்று தலைப்புக் கொடுத்தாரோ, அவ்வாறே பட்டத்துக்குரிய இளவரசன் என்ற தலைப்பு மற்றொரு கதைக்கு அங்கதமாகக் கொடுக்கப்படுகிறது. 80களில் யாழ்ப்பாணத்துச் சராசரி இளைஞனின் கொழும்பு வாழ்க்கையையும், அவன் பளுக்களும், சுமைகளும், குடும்பப் பொறுப்புக்களும் எவ்வாறு இருந்தன என விளக்கும் கதை இது. w

கே.எஸ். சிவகுமாரன் 2O7
‘ஒரு பாவத்தின் பலி : அன்றைய யாழ்ப்பாணத்து இளைஞர்களில் ஒரு சிலரின் போக்கை நன்றாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. யதார்த்தம் தொனிக்கிறது. ஆண் - பெண் அன்னியோன்னிய சம்பாஷணையைச் சுவையுடன் ஆசிரியர் தருகிறார்.
80களில் பெனடிக்ட் பாலன் எழுதிய தாம்பத்திய உறவுக் கதைகளில் குறிப்பிடத்தக்க கலைநயமான கதை கீழைக்காற்று. குடும்ப வாழ்வில், ஆணாதிக்கம், தாழ்வுச் சிக்கல், சீதனப்பெருமை, நிலப்பிரபுத்துவ பயன் மதிப்புக்கள், அடங்கிய பெண்மையின் நியாயபூர்வமான சீற்றம், பெண்ணுரிமையும் விடுதலையும் போன்றவற்றைச் சுருக்கமாகவும், கதையோடு ஒட்டியதாகச் சொல்லாமற் சொல்லியும் ஆசிரியர் வெற்றி பெறுகிறார்.
கடந்த தசாப்த கால நடவடிக்கைகளில் 1985 அளவில் பிரவேசிக்கும் பெனடிக்ட் பாலன், யாழ்ப்பாணவாழ் மக்களின் அன்றாட அவல நிலையை, பயத்தை, அமைதியின்மையை, பதற்றத்தை இப்படி எத்தனை காலம் என்ற கதையில் கொண்டு வருகிறார். அது மாத்திரமல்ல வன்செயல், பிரதி விளைவாக வன்செயல்களைத்தான் கொண்டு வரும் என்பதையும், பயத்தின் காரணம் எழும் தற்காப்புச் சூழல் விபரிப்பையும் கொண்டு வருகிறார்.
அரசியலையும், வர்க்க ஐக்கியத்தையும் தெரிவிப்பதற்காக ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள்

Page 106
208 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
என்ற கதையை எழுதியிருக்கிறார். இதுவும் யதார்த்தம் தொனிக்கும் ஒரு கதை. ஒரு சீரான ஓட்டம் கதையில் இழை ஒடுகிறது. வறுமையை அவர் பல சமூகத் தட்டுக்களினின்றும் படம் பிடிக்கும்போது, இனங்கடந்த ஒருமைப்பாட்டைக் காண்கிறார். ஆயினும், கட்டப்பட்ட கதைபோல் இது இருப்பதையும் புறக்கணிக்க முடியாது.
எஞ்சிய ஆறு கதைகளும், 90களில் எழுதப்பட்டவை. தினம் தினம் நமது இளைஞர்கள் படும்பாடுகளில் ஓரிரு அம்சங்களைத் தொட்டுக் காட்டும் நடப்பு விவரணையாகப் பட்டம் விடுவோம்’ அமைந்துள்ளது. சட்டத்தின் பாதுகாவலரே சட்டத்தை மீறி லஞ்சம் பெறுவதும், இன வேறுபாடுகளற்ற சாதாரண மக்களின் அன்பும், படித்த இளைஞர்கள், நெருக்குவாரம் காரணமாக கூலி வேலை செய்வதையும், ஊதாரிகள் கோடீஸ்வரராய் மாறுவதையும் சித்திரிக்கும் கதை. இங்கு இனம் கடந்த ஒருமைப்பாடுகளே படம் பிடிக்கப்படுகின்றன.
தமிழ் இன இளைஞர்கள் இடையே இருக்கும் கயமைத்தனங்களின் ஒரம்சத்தை கரையேறும் மீன்கள்’ சித்திரிக்கின்றது. நடப்பு உலகில் யாவருக்கும் பரிச்சயமான கதைதான்.
லூக்கஸ் மாஸ்டர்’ என்ற கதை உருக்கமான சுயசரிதை. உண்மைச் சம்பவங்களின் எடுத்துரைப்பு. லூக்கஸ் மாஸ்டர் என்ற தலைப்புக்கேற்ப பாத்திர

கே.எஸ். சிவகுமாரன் 209
வார்ப்பு இன்னும் செழுமைப்படுத்தப் பட்டிருக்கலாம். குமரன் பத்திரிகைக் கதைகள் போல இது அமைந்து விட்டதையும் குறிப்பிட வேண்டும்.
சபிக்கப்பட்டவனா? என்ற கதையைப் படிக்கும் பொழுது மக்ஸிம் கோர்க்கியின் பாத்திரங்கள் தான் என் நினைவுக்கு வருகின்றன. பெண்ணுடன் உடலுறவு கொள்ளாத தன்னையே சபித்துக் கொண்ட, அழகில்லாத, வயோதிபத்தை எய்தும் ஒரு தியாகியின் படப்பிடிப்பு நன்றாக வந்து அமைகிறது.
‘ஓர் அக்கினிக் குஞ்சு’ கண்ணில் நீரை வரவழைக்கும் கதை. வயதுக்கு மீறிய அறிவும் அன்பும் கொண்ட ஒரு பாலகனின் தைரியமும், மரணத்தை ஏற்கும் பக்குவமும் சித்திரிக்கப்படுகின்றன.
“பட்டத்துக்குரிய இளவரசன்’ யாழ்ப்பாணத்து இளைஞர்கள் சிலரின் குடும்பப் பொறுப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறது.
“கைசேர்ந்தவர்கள்’ சுரண்டுபவர்களின் ஏமாற்று வித்தைகளைக் காட்டுகிறது. அப்பாவிகளின் இயலாத் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.
மொத்தத்தில், இத்தொகுதி அழகியதோர் ஆக்க ܗܝ இலக்கியம்.
(தவமணி : 1997)

Page 107
210 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
யூ.எல். ஆதம்பாவாவின் தென்கிழக்குச் சித்திரிப்புகள்
பூ.எல். ஆதம்பாவின் கதைகளைப் படிக்கும் பொழுது கிழக்கிலங்கை முஸ்லிம்களின் பேச்சு மொழி, கவித்துவமாகப் பயன்படுத்தப்படுவதை நாம் முதலில் அவதானிக்கலாம். அடுத்ததாக அப்பகுதி மக்களின் வாழ்நிலை யதார்த்தமாகப் படம் பிடிக்கப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்தாளரின் நேர்மைக்குணமும் ஆளுமையும் கதைகளில் படிந்திருப்பதை நுகரலாம். இத்தகைய அம்சங்களினால், கதைகளில் நேர்மை தொனிக்கிறது.
இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் 1966க்கும் 1995க்கும் இடையில் வெளிவந்தவை. பெரும்பாலான கதைகள் 80களில் பிரசுரமானவை. பத்திரிகை ரகக்கதைகளாக எழுதப்பட்டவை. இந்தப் பின்னணியை மனதில் கொண்டே நாம் இவருடைய கதைகளை அணுகவேண்டும்.
கதாசிரியர் யூ.எல். ஆதம்பாவா ஒரு கல்விமான். நல்லாசிரியர். எனவே நல்லவற்றைப் படிப்பினை ஊட்டக் கூடியவற்றையே ஆசிரியர் கதைகளாக எழுதியிருக்கிறார். நல்ல குணவியல்பு கொண்டவர்களின் மனப்பாங்கை சித்திரிக்கும் கதைகளை ஆசிரியர்

கே.எஸ். சிவகுமாரன் 211
இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். இக்கதைகளில் தார்மீக நெறிகள் வலியுறுத்தப்படுகின்றன. பெண்களின் கருத்துக்களுக்கு மதிப்புக் கொடுக்கும் கணவன்மார்கள் இக்கதைகளில் வருகிறார்கள். பெண்ணியவாதிகள் இதனை அவதானிக்க.
நெறிமுறைகள், விழுமியங்கள், உதாசீனப் படுத்தப்படும் இக்கால கட்டத்திலே, குறிப்பாக மாணவர்கள், இக்கதைகளைப் படித்துப் பார்ப்பது பயனளிக்கக் கூடும்.
காணிக்கை சிறுகதைத் தொகுதி ஆசிரியர் பற்றியும் அவர் தம் ஆக்கங்கள் பற்றியும் அறிஞர்கள் எஸ்.எச்.எம். ஜெமீல், வி.எம். இஸ்மாயில் (மருதூர்க் கொத்தன்) மருதூர் ஏ. மஜீத், கதாசிரியர் யூ.எல். ஆதம்பாவா ஆகியோர், உரிய முறையில் தகவல்களையும் மதிப்பீட்டையும் இந்நூலிலே தந்துள்ளனர். அவற்றிற்கு மேலாக நான் வேறு ஏதும் விஸ்தாரமாகக் கூறவேண்டிய அவசியமில்லை. தவிரவும், கூறியது கூறல் என்ற முறை ஏற்பட்டு விடும்.
இந்த மதிப்புரையில், நான் என்ன செய்ய முனைகிறேன் என்றால் - இப் பன்னிரண்டு சிறுகதைகளையும் ஒருங்கே படித்தபொழுது, என்னில் எழுந்த மனப்பதிவுகளை, உங்களோடு பகிர்ந்து கொள்வதுதான். இக்கதைகளை நீங்கள் படிக்கும் பொழுது, உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவங்கள் ஏற்படும். சில கதைகள் நன்றாகவும்,

Page 108
212 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சில கதைகள், சுமாராகவும், சில நேர்த்தித் திறன் செம்மைப்படுத்தாத விதத்திலும் அமைந்திருக்கலாம். அதற்காக, இந்நூலைப் பற்றித் திறனாய்வு சார்ந்த மதிப்புரைகளைப் பதிவு செய்யாமல் இருக்கமுடியுமோ?
இனி, கதைகளை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
‘வீடு’ - ஒரே மாதிரியான வாய்ப்பாடு கதைகளைப் படித்துச் சலித்துப் போன வேளையில் கிழக்கு மாகாண முஸ்லிம் பேச்சு வழக்கும் இடம் பெறும் ஒரு தாய் - மகள் உறவுக் கதை ஒரு பெரிய ஆறுதலாய் இருக்கிறது. இக்கதையில் வரும் பாத்திரச் சித்திரிப்பும், கதை உணர்த்துவிக்கும் முரண்நிகழ்வும் திடீர் திருப்பங்களும், சிக்கனமான கதைக் கட்டும், ஒட்டமும், கதாசிரியரின் திறனை வெளிக் கொணருகின்றன.
‘நளியீருக்கு இன்று நோன்புப் பெருநாள் - ஒத்த மனதுடைய தம்பதிகளின் நிறைந்த வாழ்வை, இலட்சிய ரீதியாகச் சித்திரிக்கிறது. இக்கதை 16 வருடங்களுக்கு முன் வெளியான கதை என்பதையும் நாம் மனதில் வைத்திருக்க வேண்டும்.
‘ஒரு விடிவெள்ளி உதயமாகின்றது’ - பெண் கல்வி அவசியத்தைக் கூறாமற் கூறுகிறது. கதை எழுதப்பட்ட முறைமை சுவாரஸ்யமானது. ஆயினும், வெறுமனே விவரணமாகக் கதை அமைந்துள்ளது. பாத்திரங்களின் உள்ளுணர்வை குறிப்பாக, அந்தப் பள்ளிக்கூட மாணவியின் மனவேர்ட்டத்தை இன்னும் துட்பமாக எழுதியிருக்கலாம்.

கே.எஸ். சிவகுமாரன் 213
“காணிக்கை” - அதீத நாடகப்பண்பு (Melodrama) இக்கதையில் இடம் பெற்றிருப்பது, இக்கதை பத்திரிகைத் தேவைக்காக எழுதப்பட்டதனாற் போலும். ஆயினும் கதை, உணர்த்துவிக்கும் ஒரு பண்பை நாம் அவதானிக்கத் தவறக்கூடாது. ஆசிரிய - மாணவ உறவின் நேர்மையும், கெளரவமும் வரவேற்கத்தக்கவை. மிகச் சிக்கனமாக எழுதவேண்டும் என்பதற்காக, கதாசிரியர் வீண் விபரிப்புகளைத் தவிர்த்துக் கொள்கிறார். நேரிடையாகவே கதையைச் சொல்வது பொருத்தமாய் அமைகிறது.
‘மீண்டும் அவன் சவுதிக்குப் போகிறான்’ - இந்தக் கதையும் மனதை உருக்கும் விதத்தில் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண முஸ்லிம்களின் பேச்சு வழக்கு எனக்குப் புரிவதனாலோ என்னவோ இக்கதையின் உரையாடல்களை, கதையின் பின்னணியில் வைத்துப் படிக்கும் பொழுது சுவையாக இருக்கிறது. நாணயம் தவறாத ஒரு மனிதரின் நிலைப்பாட்டை, இக்கதையிலும் காணலாம்.
திருந்திய உள்ளங்கள்’ - நன்னெறிச் சார்ந்த மெளலவி சமயக் கிரியைகளை வியாபாரப்படுத்துதல், மதத்தின் அறநெறிக்கு முரணானது என்பதை ஏனையோருக்கும் வலியுறுத்துவதைக் கதை சொல்கிறது. இலட்சிய நெறியை வலியுறுத்தும் மற்றொரு கதை இது.
இணையும் ஒரு குடும்பம்' - எதிலுமே நல்லதையே விரும்பும் ஆசிரியரின் மற்றொரு இலட்சிய

Page 109
214 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
வடிவக் கதை இது. தம்பதிகளிடையே ஏற்பட்ட அர்த்தமற்ற பூசல்களை காதி தீர்த்து வைக்கும் பாங்கு அருமையாக இருக்கின்றது. இங்கும் கிழக்கு முஸ்லிம் மக்களின் பேச்சு வழக்கில் உரையாடல்கள் இடம் பெற்றிருத்தல் சுவையளிக்கிறது. நன்றாகவே கதையின் பெரும்பகுதியை ஆசிரியர் எழுதியிருக்கிறார். ஆயினும், கதையைப் பட்டென முடித்துவிடுவது பத்திரிகைத் தேவைக்காகவே போலும். அதனால், இக்கதையின் முழு பிரமாணங்களையும் நுகர முடியாமற் போய் விடுகிறது.
'தண்டனை' - தர்ம சங்கட நிலையை விளக்கும் ஓர் அருமையான கதை. நீதி பிறழப்படுவதை ஆசிரியர் நேர்த்தியாய் உணர்த்துவிக்கும் பாங்கு ரசிக்கத்தக்கது. கதாசிரியர் யூ.எல். ஆதம்பாவா அவர்கள், தனக்கு நன்கு பழக்கப்பட்ட சூழல்களையே பின்னணியாகக் கதைகளுக்கு எடுத்துக் கொள்வதனால், அவருடைய கதைகள் பெரும்பாலும் யதார்த்தமாய் அமைகின்றன.
‘ஆசை” - இக்கதையில் ஒர் ஏழை மனைவியின் ஆசை வீணாகப் போகிறது. அதிகாரத்தினால் ஏழைகள் சூறையாடப்படுகின்றனர். இக்கதையில் ஒரு முரண் நிகழ்வு. போடியாரின் மனைவிக்குப் பிடிக்காத மீனைத்தான் போடியார், மீனவரிடம் பறித்துச் சென்று, ஏழையின் உழைப்பைச் சுரண்டுகின்றார். அன்டன் செக்ஹோப் கதைகளில் தோற்றுவிக்கப்படும் உணர்வு இங்கும் பரிவர்த்தனை செய்யப்படுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 215
"தந்தையை விஞ்சியதனையன் - இக்கதையிலும் வாழ்க்கை சிக்கலில்லாத முறையில் அமைகிறது. சீராக ஒடும் வாழும் பாங்கு, கதாபாத்திரங்கள் எல்லோரும் நல்லவர்கள். உன்னத நோக்குடையவர்கள். கதாசிரியரின் லட்சியங்கள் வெளிப்படுகின்றன.
“நினைவுகளும் நிகழ்வுகளும் - நாம் ஒன்றை நினைக்க தெய்வம் ஒன்றை நினைப்பதாகக் கதை முடிகிறது. இங்கும் முரண் நிகழ்வும் எதிர்பாராத முடிவும் இடம் பெறுகின்றன.
சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தில் இடம்பெறக்கூடிய கதைகளையும், உருவகக் கதைகளையும் யூ.எல். ஆதம்பாவா அவர்கள் எழுதியிருக்கிறார் என்பது உண்மையே. ஆயினும், சில இடங்களில் சில விவரணங்களைத் தவிர்த்து பாத்திர வாய்ப்பைக் குறைந்தது இரு பரிமாணங்கள் கொண்டதாக அமைத்திருக்கலாம். கதாசிரியர், இனி எழுதும் கதைகளில் முழுக்க முழுக்க நல்லவர்களைக் கொண்ட பாத்திரங்களை எழுதும் போதுங்கூட அவர்களுடைய பலவீனங்களையும் இணைத்துச் சித்திரித்தால், கதைகளில் மெய்ம்மை மேலும் புலப்படும்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பு நாடுபூராவும்
தமிழ் போதிக்கப்படும் பாடசாலை நூலகங்களில் வைத்திருக்க வேண்டிய ஒரு நூல்.
(தினகரன் வாரமஞ்சரி : 25-05-1997)
来

Page 110
216 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
நீர்வை பொன்னையன் காட்டும் பாதை
இந்த நாட்டிலுள்ள எழுத்தாளர்கள் அனைவருமே கரண்டப்படுபவர்கள் சார்பாக நின்று குரல் எழுப்பும், சமதர்மவாதிகள் என்பது மிகையான கூற்று அல்ல. ஆயினும் எல்லோருமே ஒரே தளத்தில் நின்று முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்துபவருமல்லர். ஒவ்வொருவரும் தத்தம் பாங்கில் தமது பார்வையை வெளிப்படுத்துபவர்தாம்.
அதேவேளையில் கலைத்துவமாக, சுவையான முறையில், கதைகளை எழுதுபவர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த பொன்னையன் அவர்கள். இவர் முன்னரும் ஒரு சிறுகதைத் தொகுதியை அளித்தவர். அதன் பெயர், மேடும் பள்ளமும். 1960களிலிருந்தே எழுத்துலகில் பவனி வரும் நீர்வை பொன்னையன் 1970களில் எழுதிய தரமான கதைகளடங்கிய பாதை’ என்ற இத்தொகுதி, இளைய பரம்பரையினருக்கு, அக்கால யதார்த்தச் சூழலை ஆவணப்படுத்தும் ஒரு தொகுதியாக மட்டுமின்றி, இந்த எழுத்தாளரின் கலைத்திறனையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

கே.எஸ். சிவகுமாரன் 217
உள்ளடக்கச் சிறப்பு மேலோங்கி நிற்கும் அதேவேளையில், முற்போக்கான அச்சிந்தனைகளை ஏந்தி வரும் வாகனமும் உருவ அமைதி கொண்டு கலை மெருகுடன் அமைந்து வாசகனுக்குச் சுவை அளிக்கிறது. இந்த வெற்றி சாத்தியமாவதற்குக் காரணம், ஆசிரியர் தான் வரித்த கொள்கைகளில் அவர் கொண்டுள்ள நம்பிக்கையும் நேர்மையுமாகும்.
நீர்வை பொன்னையன் கல்கத்தாவில் பட்டப்படிப்பை மேற்கொண்ட கலையுள்ளம் கொண்ட ஒரு ரசிகன், சுவைஞன். அவ்விதமான பின்னணியைக் கொண்ட ஒருவர் வாழ்க்கையை நோக்கும் பாங்கு, வெறுமனே மேலோட்டமான ஆவணச் சித்திரிப்பாக இருக்கமாட்டாது. கூறாமற் கூறும் கலைத்துவப் பூச்சு, வெளிப்படையான பிரசார வாடையை நீக்கி விடுகிறது. எனவே படிப்பவர் தாமே சிந்தித்துத் தாமே உணர்வலைகளின் வீச்சினால் ஆட்பட்டு மாற்றத்துக்கு உட்படுகிறார். இதுவே கலைஞன் சமூக மாற்றத்துக்கு செய்யக்கூடிய பணியாகும்.
நீர்வை பொன்னையன் , (05 தொழிற்சங்கவாதியாகவும், பள்ளிக்கூட ஆசிரியராகவும் தொழிற்பட்டவர். ஒரு விவசாயியின் மைந்தன். ஆயினும் தாழ்த்தப்பட்ட p jis Gir எனக் கூறப்படுகிறவர்களின் நலன்களுக்காகப் போராடி வருபவர். எண்ணத்தாலும், இதயத்தாலும் ஒரு முற்போக்காளன். இப்பொழுது ‘விபவி’ என்ற

Page 111
218 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறார். இவருக்குப் பக்கத்துணையாக, -9 սմ Մfr 35/ உழைத்துவரும் சிங்கள-தமிழ் பரிவர்த்தனையாளர், எஸ். சிவகுருநாதன் மற்றும் 'ஜீவா’ ஆகியோர் இருந்து வருகின்றனர்.
நீர்வை பொன்னையன் போர்க்குணம் கொண்ட ஒர் ஆவேசப் பேச்சாளர். சிறுமை கண்டு பொங்குபவர். அதேவேளையில் தன்னடக்கமும், பெருந்தன்மையும் கொண்ட ஒரு பரோபகாரி. பழகுவதற்கு இனியவர். எளிமையானவர். அழகுணர்ச்சியும், உயர்மட்ட ரசனையும், பகுத்து அறியும் விருப்பும், நேர்மைக்குணமும் கொண்டவர். இத்தகைய குணநலன்கள் கொண்ட ஒருவரே தமது ஆக்க இலக்கியங்களை உரிய முறையில் படிப்பவர்கள் பயனுறச் செய்யும் வண்ணம் உதவுபவர்களாக இருக்கிறார்கள்.
நீர்வை பொன்னையனின் கதைகள் சிலவற்றை ஒரே தடவையில் நாம் இப்பொழுது படிக்கும் பொழுது, அவை எழுதப்பட்ட காலகட்டத்தையும் மனதிலிருத்த வேண்டும். அக்கால கட்டத்தில் நிலவிய சிந்தனைகள், யதார்த்தச் சூழல், ஆக்க இலக்கியத்தில் பயன்படுத்தப்பட்ட உத்திமுறைகள், மொழிநடை போன்றவற்றைக் கருத்திற்கொண்டு, அவற்றிற்கிடையே எழுதப்பட்ட கதைகள் வெற்றியளித்துள்ளனவா என்று நாம் பார்க்கவேண்டும்.

கே.எஸ். சிவகுமாரன் 219
அவருடைய நோக்கம் என்ன?
‘என்னுரை' என்ற தலைப்பில் ஆசிரியர் தெட்டத் தெளிவாகத் தனது சித்தாந்தங்களையும் நோக்கங்களையும் தெரிவித்திருக்கிறார்.
6
முற்போக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் உழைக்கின்ற, சுரண்டப்படுகின்ற மக்களின் பக்கம் தான் நிற்கின்றோம். எனது படைப்புக்களில் தொழிலாளர், விவசாயிகள்தான் கதாநாயகர்கள். வர்க்க உணர்வுடைய, தன்னலமற்ற அர்ப்பணிப்பு, கூட்டுச் செயற்பாடு, தர்மாவேச போர்க்குணம் ஆகிய குணாம்சங்களையும், சுரண்டல், சூறையாடல், அநீதி அக்கிரமங்கள் நிறைந்த மனிதனை மனிதனே விழுங்குகின்ற இந்தச் சீர்கெட்ட சாக் கடைச் சமுதாயத்தை முற்று முழுதாக மாற்றி, இல்லாரும் உள்ளாரும் இல்லாத ஒரு புதிய உன்னத உலகை அமைக்க வேண்டுமென்ற லட்சிய வேட்கையையும் கொண்ட தொழிலாளர், விவசாயிகள்தான் எனது
கதாநாயகர்கள்.”
ஆசிரியர் நீர்வை பொன்னையன், தனது கதைகள் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்பதை இவருடைய உரை மூலம் கண்டோம். இனி, ஒவ்வொரு கதை பற்றியும், விமர்சனச் சாயல் படிந்த சில பத்தி எழுத்துக் குறிப்புகளைப் பார்ப்போம்.

Page 112
220 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் சுருதி பேதம்
தான் கொண்ட கொள்கைப் பிடிப்பு காரணமாகத் தன்னை காதலிக்கும் ஒரு வசதியுள்ள பெண்ணை, ஒரு வறிய விவசாயியின் மகனும், சுருட்டுக் கடைக்காரன் ஒருவனின் தம்பியுமான, பல்கலைக்கழகப் படிப்பை இடை நிறுத்திய தொழிற்சங்கவாதி, உதாசீனம் செய்கிறான். அக்காலக் காதல் பரிமாற்றங்கள்ை அக்காலச் சூழலில் கதாசிரியர் கவினுற விபரிக்கிறார். படிப்பதற்குச் சுவையாக உள்ளது. வேப்பமரம்
பிரிட்டிஷார் காலத்தில், மக்களிடையே இருந்த ஆட்சி எதிர்ப்பு, ஐக்கியம், சுதந்திர வேட்கை போன்ற பண்புகளைப் பிரசார வாடையின்றி, கதையினூடாக, சம்பாஷணை வடிவில், விறுவிறுப்பாகக் கூறி விடுகிறார் ஆசிரியர். கூறாமற் கூறும் பண்பை கலை மெருகின் ஒர் அம்சமாகவும் கருதுவர். அந்த வகையில், இக்கதையும் சுவாரஸ்யமான முறையில் எழுதப் பட்டுள்ளது.
மலை காய்கிறது
சுரண்டல்களும், சாதி வெறியர்களும், படிப்படியாகப் பலம் இழந்துவரும் காட்சியை, சுவையான யாழ்ப்பாணப் பேச்சு வழக்கில், நாடகத்

கே.எஸ். சிவகுமாரன் 221
தன்மை கொண்ட விறுவிறுப்புடனும், பாத்திரங்களின்
முகத்திரைகளைக் கழற்றிக் காட்டும் விதத்திலும், கதையை ஆசிரியர் சுவைபட எழுதியிருக்கிறார்.
யுக புருஷர்கள்
தலைப்புக்கு ஏற்ற விதத்தில், சமூக மாற்றத்தைக் கொண்டு வரும் கதாபாத்திரங்களை ஆசிரியர் அறிமுகப் படுத்துகிறார்.
நீர்வை பொன்னையனின் கதாபாத்திரங்களை லட்சியவாதிகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனெனில் நடைமுறை வாழ்க்கையோடு ஒட்டிய நம்புத்தன்மைகளைக் கொண்ட பாத்திரங்களாக அவை இருக்கின்றன. அது மாத்திரமல்லாமல், கதையை அவர் எழுதிச் செல்லும் லாவகம் அவர் கலைத்திறனைச் சிரமம் ஏற்படுத்தாமல், வெளிக்காட்டச் செய்கின்றன.
ਸi
மாத்தறையில் தொழிலாள வர்க்க மக்கள் போராட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தலையில் வடு ஏந்திய பெண் ஒருத்தியை அவள் கிழவியாகிப் போய் சுயமாக மரக்கறி வியாபாரம் மேற்கொண்டு தனது போராட்டக் குணத்தைத் தொடர்ந்து பிரதிபலிப்பதைக் கதை கூறுகிறது. கதையின் ஆரம்பத்தில், ஒரு இலட்சியப் பாத்திரம் மூலம், முற்போக்குக் கருத்துக்களை ஆசிரியர் முன் வைக்கிறாரோ என்று எண்ணிக் கொண்டிருக்கையில்,

Page 113
222 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கதை நிகழ்வுப்போக்கு, அப்படியில்லை என்பதை யதார்த்த நிகழ்ச்சிகளின் எடுத்துரைப்பு காட்டுகின்றது. ரத்தச் சுவட்டில் ஒரு அடி
இதுவும் மற்றொரு தொழிற்சங்கத் தோழர்கள் கதை. மே தின ஊர்வலம் தடை செய்யப்பட்டமை, போராட்ட உணர்வைத் திசை திருப்பிக் களியாட்ட ரீதியாக அதனைச் சீரழிக்க முற்பட்டமை, தடுத்து வைக்கப்பட்ட சிறை அறைச் சூழல், சம்பாஷணை மூலம், சம்பவச் சித்திரிப்பு என்று பல விஷயங்களை ஒரே வார்ப்பில் கதை தருகிறது. இன்றைய வாசகர்களுக்குச் சுவையான பழைய வரலாற்றுச்
செய்திகள். புதிய தலைமுறை
நீர்வை பொன்னையனின் கதைகளைச் சலிப்பின்றி ஒருவர் படிக்க முடியும். இதற்கு முக்கிய காரணம் அவர் கதைகளைப் பெரும்பாலும், சம்பாஷணை வடிவில், யாழ்ப்பாணக் கிராமிய மணங்கமழும் சொற்களில் எழுதுவதுதான். படித்த ஒரு வாலிபன். குடும்பத்தினர் அவன் பொருளாதார வசதிக்காகவும், அதன் மூலம் தாம் உய்யவும் காத்திருக்கும் அவ்வேளையில், பொதுநலன் கருதி, ஆவணத் திமிர்பிடித்த சுரண்டல்காரனுக்கெதிராக எழும் போராட்டத்தில் அவன் ஈடுபடுகிறான். இத்தகைய புதிய தலைமுறையினர் தலையெடுக்க

கே.எஸ். சிவகுமாரன் 223
வேண்டிய அவசியத்தை ஆசிரியர், யதார்த்த சமநிலைச் சித்திரிப்பு ஊடாகத் தெரிவிப்பது பாராட்டத்தக்கது.
உலைக்களம்
“போராட்ட உலைக்களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒரு அம்சம் நாங்கள் ஆனபடியால் தான் நாங்கள் எது வந்தாலும் அஞ்சப்போவதில்லை’ என்று இக்கதையில் வரும் தொழிற்சங்கத் தலைவர் கூறுகிறார். மெத்தச்சரி. ஆயினும், கதை எழுதப்பட்ட முறையில், ஏனைய கதைகளிற் காணப்பட்ட இயல்புத் தன்மை இதிற் காணப்படாததால் கலை, உருவக் குறைபாடு காணப்படுகிறது. நம்புந்தன்மையும் சிறிது வீழ்ச்சியடைந்துள்ளது. ஆயினும் இலட்சிய ரீதியில் வரவேற்கப்பட வேண்டியதொன்று. மாறிவரும் பொருளாதார நோக்கில், இதன் சாத்தியப்பாடும் நோக்கத்துக்கு உட்பட வேண்டும்.
இதுவும் ஒரு சுரண்டல் கதை “ஒ மற்றவையின்ற உழைப்பைச் சுரண்டினால் சுகசிவியம் நடத்தலாம் தான்? உங்களைப் போல ஏமாந்த சோனகிரிகள் இருக்கு மட்டும் விதானை யாரைப் Gë u rrah) பெருச்சாளியும் இருப்பினை தானே’ இது ஒரு பாத்திரத்தின் அங்கலாய்ப்பு. அரச உத்தியோகத்தர் ஒருவர் மேலும் சுரண்டுகிறார். காணி உச்சவரம்புச்

Page 114
224 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
சட்டம் வந்த காலை, இக்கதை எழுதப்பட்டுள்ளது. போராட்ட உணர்வைக் கைவிடக்கூடாது என்ற ஆசிரியரின் ஆதங்கம் கதையில் தொனிக்கிறது.
நியதி
சாதி வெறி, நிலச்சுரண்டல், வேஷதாரித்தனம், சுயநலம் போன்ற இழிவான குணங்கள் சில, வடபுலத்துக் கனவான்களிடையே இப்பொழுதும் இருக்கிறதோ சரியாகத் தெரியவில்லை. ஆனால் 70கள் வரை, 80களிலும் கூட மிக மோசமாக இருந்தன என்பதை, நீர்வை பொன்னையன் போன்றோர் எழுதிய கதைகள் மூலம் தெரிய வருகிறது. இந்த ஆக்கினைகளும், நமது தமிழ் மக்கள் இன்று எதிர்நோக்க வேண்டிய இனப்படுகொலைகளுக்கு முன்னோடியாக இருந்திருக்குமோ? அக்கொடுமைகளினாற் பாதிக்கப்பட்ட மக்களின் சாபம்தானோ, இன்று சாதிபேதமின்றித் தமிழ் பேசும் மக்களை நிலை குலைந்த அளவிற்குத் தள்ளியுள்ளது.
தொழிலாள வர்க்கம், சாதி பேதமின்றி ஒன்றாக இணைந்தால் புது சக்தி பெற்று வீறுடன் முன்பாயும் என்ற இலட்சியத்துக்குக் கதை வடிவம் கொடுத்திருக்கிறார் ஆசிரியர். கதை சுவாரஸ்யமான முறையில் எழுதப்பட்டிருப்பதனாலும், சமூக விமர்சனம், உரையாடல் மூலம் வெளிப்படுத்தப் படுவதனாலும், கதையோட்டத்தில் சலிப்பு இல்லை, ஆசிரியரின் திறனாற்றலே புலப்படுகிறது.

கே.எஸ். சிவகுமாரன் 225
ஞான ஸ்நானம்
“காரியாலத்திற்குள் சொகுசாக இருந்து கொண்டு உத்தியோகத்தர்களுடன் பழகி வரும் எமக்கு, படிப்பறிவற்ற முரட்டுத்தனம் பிடித்த தொழிலாளர்களுடன் பழகுவது ஆரம்பத்தில் கஷ்டமாகத்தானிருக்கிறது.”
“வெய்யில்-மழையில் அடிபட்ட, சீமேந்துத் தூசி படிந்த வியர்வை நாற்றமடிக்கும் அவர்களுடைய முரட்டு உடல்கள், அழுக்கு படிந்த உடை, எடுத்ததற்கெல்லாம் கூப்பாடு போட்டுக் கத்தும் முரட்டுத்தனம் எல்லாமே எமக்கு அருவருப்பை ஊட்டின. அவர்களை நாம் வெறுத்தோம்’ - இது மத்தியதர வர்க்க ஒர் இந்துப் பெண்மணியின் கூற்று.
அந்தப் பெண்மணி, இக்கதையின் நாயகி. அவள் சோமாவதி என்ற தொழிற்சங்கவாதியுடன் பழகிய பின்னர், தான் வெறுத்து ஒதுக்கியவர்களைப் பற்றி, இவ்வாறு குறிப்பிடுகிறாள் :
“தோற்றத்தில் எமது தொழிலாளர்கள் முரடர்களாகவும், அசிங்கமானவர்களாகவும் காட்சியளிக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களுடன் நெருங்கிப் பழகப் பழக அவர்களுடைய இதயங்களின் அழகும், தியாக உணர்வும் தன்னலமற்ற சேவையும் எமக்குப் புலப்படுகின்றது.”
சோமாவதி மூலம் ஆசிரியர் தனது பற்றுக்கோடான கருத்தை இவ்வாறு வெளியிடுகிறார்.

Page 115
226 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
“இந்த நாசமாய்ப் போன இனவெறி, மதவெறி, சாதி வெறி எல்லாத்தையும், தொழிலாளியைச் சுரண்டிச் சூறையாடுகிற ஒரு கும்பல் தொழிலாள வர்க்கத்தைப் பிளவுபடுத்த ஆயுதமாய்ப் பாவிக்கிறது.”
தொழிலாள வர்க்கத்தினர், எவரும் அனாதைகளாகப் போகவிட மாட்டார்கள் என்ற கருத்துப்பட 1979இல் இந்தக் கதையை ஆசிரியர் எழுதியிருக்கிறார்.
பாதை
“தொழிலாளர், விவசாயிகள் பற்றி” எழுதும்
நீர்வை பொன்னையன், “அவர்களுக்காகவே
எழுதுகின்றோம்” என்று கூறுகிறார்.
அதற்கேற்றாற் போலவே அவர்களுக்கு ஞானமூட்டுமாற் போன்று இக்கதையிலே, பண்டார என்ற பாத்திரத்தின் கூற்று அமைகிறது.
“தனி மனிதனை ஒழிக்கிறதாலை எங்கட பிரச்சினையள் தீரப் போவதில்லை. எங்களைச் சுரண்டுகின்ற வர்க்கத்தை அழித்து நிர்மூலமாக்கிவிட்டு அதிகாரத்தை உழைக்கும் வர்க்கம் கைப்பற்றினால் தான் எங்கடை பிரச்சினையள் தீரும்.”
1973ல் இந்தக் கதையை நீர்வை பொன்னையன் எழுதியிருக்கிறார். இப்பொழுது 1997 ஒகஸ்ட் மாதத்திற்கு வந்துவிட்டோம். இந்தக் கால் நூற்றாண்டுக்குள் எத்தகைய மாற்றங்கள் தமிழ்ச்

கே.எஸ். சிவகுமாரன் 227
சமூகத்தினரிடையே ஏற்பட்டுள்ளன. ஏற்படாமல் இருக்கின்றன என்பவற்றை சமூகவியலாளர்கள்தான் பகுத்தாய்ந்து கூற முடியும்.
நீர்வை பொன்னையன் தமது கதைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தெளிவு பிறக்கச் செய்துள்ளார் எனலாம். அதாவது, அவருடைய கதைகளைப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்து வாசகர்கள் நிச்சயமாகச் சில உண்மைகளைக் கண்டு உணர்ந்திருப்பார்கள். அந்த அளவில், இத்தொகுதி உள்ளடக்க ரீதியில் ஒரு வெற்றியே. உருவ ரீதியாகவும், இத்தொகுப்பில் அடங்கிய பெரும்பாலான கதைகள், வாசகர்களைத் திருப்திப்படுத்தியிருக்கும். நேர்மையின் விளக்கம் ‘பாதை’.
(தினகரன் வாரமஞ்சரி : 27-07-1997)
来

Page 116
228 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
திருக்கோவில் கவியுவனின் மட்டக்களப்பு மீனவர் சித்திரிப்பு
தொண்ணுறுகளில் எழுதத் தொடங்கிய எழுத்தாளர்களுள் . ஒரு புதிய ‘கண்டுபிடிப்பு திருக்கோவில் கவியுவன் ஆவார். இவருடைய இயற்இபயர் இராசையா யுவேந்திரா. நெசவுத் தொழில் பொறியியலாளர். கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளைஞர். இவருடைய பெரும்பாலான கதைகள், பரிசோதனைக் களமாக விளங்கும் சரிநிகர் ஏட்டில் வெளிவந்துள்ளன.
இத்தொகுப்பில் பத்துக் கதைகள் அடங்கியுள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ‘வாழ்தல் என்பது’ என்னும் தலைப்பை உணர்த்தும் ‘பொதுத்தன்மை வரக்கூடியதான கதைகள்’ தொகுப்பில் இடம் பெறுகின்றன.
கதாசிரியர் நோக்கத்தைப் புரிந்து கொள்ளல் திறனாய்வாளருக்கு அவசியம். அல்லாவிட்டால், “ஆய்வு’ என்ற பெயரில் எழுதப்படும் கண்டனம், பிதற்றல், அங்கதம், வயிற்றுக் கீழே அடித்தல் போன்றவை எல்லாம் திறனாய்வு எனத் தவறாக நம்பப்பட்டு விடும்.

கே.எஸ். சிவகுமாரன் .229
கதாசிரியர் என்ன கூறுகிறார்: “பொதுவாக ஒவ்வொரு படைப்புமே வாழ்வின் ஏதோவொரு அனுபவத்தின் தெறிப்புத்தான். எனினும் என்னுடைய இத்தொகுப்பில் வரும் கதைகளில் வாழ்க்கை தொடர்பாய் என் மனதில் மண்டியிட்டுக் கிடந்து உறக்கத்தின் முன் அல்லது உறக்கம் வராத சமயங்களில் திரைகளைக் கிழித்தெழுப்பும் ஆழ்மன உணர்வுகளைப் பதிய வைத்திருக்கின்றேன் என்று நம்புகிறேன்.”
நனைதலும் காய்தலும் என்ற கதையை முதலிற்படித்தேன். என் உணர்வில் ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது. ஒரு கணநேர அனுபவங்களைத் தன்னும் கவிதை சார்ந்த உருவகங்களின் மூலம் அவர் வெளிப்படுத்தும் பாங்கு பயன்பாடுடையதாக இருக்கிறது. கதாசிரியர் ஒரு பெண்ணின் நிலை நின்று அகவயமான உணர்வைத் தொற்றவைக்கும் பண்பு மனதைத் தொடுகிறது. மேலிடான உணர்ச்சிச் சித்திரமாக இல்லாமல், கதையோடு ஒட்டிய விதத்தில் எழுதும் முறை இயல்பாய் இருக்கிறது.
மரணத்தின் தூது என்ற கதை கஃப்கா (Kafka)வின் கதைகளில் காணப்படும் ஒருவித மனப்பிராந்தியைத் தெரிவிக்கிறது. சொற்செட்டு உண்டு. கோபுர யுத்தகாலச் சூழலில், சிந்திக்கவும் உணர்ச்சியை மட்டுப்படுத்தவும் தெரிந்த அசாதாரண (அதாவது சராசரி மனிதனையும் மிஞ்சிய தன்மைகள் கொண்டவர்) மனிதனை ஆசிரியர் படம் பிடிக்கிறார்.

Page 117
230 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
அந்நியப்படுத்தப்பட்ட, உடனிகழ் கால, படித்த இளைஞன் ஒருவனின் ஒரு கணநேர அனுபவங்களை, “தொடுவானங்கள்’ சித்திரிக்கிறது. அதே வேளையில் சில குறியீடுகள், எனது வாசிப்பு எல்லைக் கட்டுகளுக்குள் மத்தியில் தெளிவாகத் தெரியவில்லை.
“உடைத்துப்போட்ட தெருவிளக்கு” கதையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, கிழக்கு மாகாண யுத்த நிலைமை பற்றிய ந்ேரடி அனுபவம் தேவை. எனது எல்லைக் கட்டுக்குள் நின்றுகொண்டு இதனைப் பகுப்பாய்வு செய்ய முடியாதிருக்கிறது.
ஒரு சிங்களப் பெண்ணின் நிலை நின்று ஒரு தமிழ் இளைஞனை மதிப்பீடு செய்யும் மதிப்பீடு என்ற கதை புதுமையானது மட்டுமல்ல, உளவியல் பாணியிலும் அமைந்திருக்கிறது. அசாதாரணமானவர்களை, சாதாரணமானவர்கள் எவ்வாறு தப்புக் கணக்குப் போடுகிறார்கள் என்பதையும், தாங்கள் அத்தகைய அசாதாரணமானவர்களின் தன்மையைப் புரிந்து கொள்ளவில்லையே என்று பின் உணர்வதையும் கதை காட்டுகிறது. இவ்விதமான உளவியல் பாங்கான கதைகளைத் தமிழில் எழுதும் இலங்கையர் மிகக்குறைவு. ‘உறைவிடம் மேலிடம் என்ற தலைப்பிலே நான் எழுதிய இத்தகைய கதை, இருமை’ என்ற எனது சிறுகதைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
தன்மை, ஒருமையில் ஒரு சிறுமியின், மட்டக்களப்பு வட்டாரப் பேச்சுவழக்கில்

கே.எஸ். சிவகுமாரன் 231
எடுத்துரைப்பதாக ‘செவ்வந்தி’ என்ற கதை அமைகிறது.
மட்டக்களப்பு மாவட்ட மீனவர் பேச்சுமொழியில் எழுதப்பட்ட மற்றொரு சுவையான கதை ‘செவ்வந்தி’. இங்கும் வாலைக் குமரியொருத்தி தன் சிறுமியர் பராய நினைவுகளை இரை மீட்டுகிறாள். பின்னணியில் இலேசாக, யுத்தக்களமும் தெரிகிறது. இந்த நினைவுக் குமிழ்கள் ஒலித்த பின்னர், கதாசிரியர் விபரிப்பைத் தனது நிலை நின்று எடுத்துரைக்கிறார். இத்தகைய கதைகளை எழுதுவது அவ்வளவு சிரமமல்ல, ஆயினும் தற்பாஷித மொழிவளம் கைவரப் பெற்றதாய் இருக்கவேண்டும். கிழக்கிலங்கைப் பாஷையில் கதைகள் எழுதுபவர்கள் மிகமிகக் குறைவு. திருக்கோவில் கவியுவன் இந்த விதத்தில் பாராட்டுக்குரியவர்.
அனுபவங்களைச் சிறைப்பிடித்துப் படிப்பவருக்கு அதே ஸ்ருதியில் தொற்றவைக்கும் நேர்த்தி இந்தக் கதாசிரியருக்கு உண்டு. இனியும் ஒரு சாவு லாவகமாய் எழுதப்பட்ட கதை. கதையைப் படித்த பொழுது என் கண்களில் ஈரம் கசிந்தது.
கண்ணிலிருந்து நீர் மல்க வைத்த மற்றொரு கதை, ‘வாழ்தல்’ என்பது. வடகிழக்குச் சமகாலச் சூழலினின்று விடுபட்டிருக்கும் என் போன்ற வாசகர்களுக்கு, அதனை நேரிற் கொண்டுவந்து அவஸ்தைப்பட வைக்கும் சக்தி இது போன்ற

Page 118
232 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
கதைகளுக்கு உண்டு. திருக்கோவில் கவியுவன் கதைகள் மனதை உருக்குவன.
திரைகளுக்கு அப்பால்’ என்னும் கதையில் வரும் உவமைகள் சில:
“அழகிய ஓவியத்தில் அசிங்கத்தைப் பரவியவள் போல்.
இனிய பாடல் ஒன்றை இடையில் நிறுத்தியவள்
போல்.
மென்பூக்களை முள்ளால் கிழித்தவள் போல்.”
இந்தக் கதையை எனக்கு நன்றாக விளங்க முடியாதிருக்கிறது. ஒரே நபர் ஒரு பொருளைப்பற்றி இரு வேறு பார்வைகள் கொண்டிருக்கலாம் என்பதை விளக்குமாற்போல் கதை அமைகிறது எனவும் கூறலாம். அமைப்பியல்வாதம், பின் அமைப்பியல் வாதம் போன்றவற்றில் பரிச்சயமுடையவர்களே நம்மைப் போன்ற வாசகர்களுக்கு ஒளியூட்டலாம்.
இறுதியாக, காற்று கனக்கும் தீவு என்ற கதையை எடுத்துக்கொள்வோம். இது சிறுகதை என்ற வடிவத்திற்குள் அடங்குமா என்பது புலமைமிக்கோர் விவாதிக்க வேண்டிய விஷயம். அது ஒரு புறமிருக்க, நேரடியாகச் சொல்லமுடியாத விஷயங்களை இத்தகைய கதைப் பாணியில் கூற வருவது செளகரியமாக அமைந்து விடுகிறது. கதை என்ன கூறுகிறது என்பது, தமிழராகிய நமக்குப் புரியும்.

கே.எஸ். சிவகுமாரன் 233
Gagitti joaigi (George Orwell) group5u (Animal Farm) ‘விலங்குப்பண்ணை’ என்ற தொடர் உருவகமான மறை பொருள் உரை (Alegory), இக்கதையைப் படித்தபோது என் ஞாபகத்திற்கு வந்தது.
திருக்கோவில் கவியுவனின் ‘வாழ்தல் என்பது. என்ற இத்தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் கூற்றை இங்கு நினைவுபடுத்தலாம்.
“தொண்ணுரறுகளில் மட்டக்களப்பு பகுதி எதிர்நோக்கிய அனுபவங்களை, இந்த அனுபவங்களில் சிசுவெனக் குறிப்பிடத்தக்க ஒருவரின் சித்திரிப்பு மூலம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இத்தொகுதி தருகின்றது. இங்கு தமிழ்-முஸ்லிம் பரிமாணம் பதிவு செய்யப்படவில்லை.”
தமது முன்னுரையிலே, முது தமிழ்ப் பேராசிரியர் அவர்கள், கதாசிரியரின் கதைகளின் திறன்களைச் சுருக்கமாகவும், பொருத்தமாகவும் 'ஆய்வு செய்துள்ளார். இதுவன்றோ திறனாய்வு. கண்டனமும், நையாண்டியும், அங்கதமும் முழு விமர்சனமாகா. அக்கூற்றுக்கள் கால வெள்ளத்தில் அடிபட்டுப் போகும். இது இலக்கிய வரலாறு தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
(ஜூலை, 1998)

Page 119
234 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ரஞ்சகுமாரின் கலைப்பயணம்
Fழத்துச் சிறுகதைத் துறையின் அண்மைக்கால வரலாற்றிலே, பல்கலைக்கழக மட்டத்திலும், பரிசோதனைக் கதைகளைப் படிக்க விரும்பும் வாசகர்கள் மட்டத்திலும், ஏறக்குறைய கடந்த இரு தசாப்தங்களாகப் பேசப்பட்டும், புகழப்பட்டும் வருபவர் ரஞ்சகுமார் என்ற திறனாற்றலுடைய எழுத்தாளர். இவருடைய கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக நான் படித்தேனாயினும், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னரே வெளிவந்த இவருடைய மோகவாசல் என்ற சிறுகதைத் தொகுதியை ஆற அமர இருந்து படித்துச் சுவைக்க முடியாமற் போனது உண்மை. இப்பொழுது, இந்த நூலை (சென்னைப் பதிப்பு, 1995) எடுத்துப் படிக்கிறேன். இத்தொகுதியில் ஏழு கதைகள் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டு என் உணர்விலும், அறிவிலும் படும் எதிரொலிகளைக் கீழே பதிவு செய்கிறேன்:
‘சுருக்கும் ஊஞ்சலும் - சிறு சிறு அனுபவங்களைத் தன்னும் ரசித்து மகிழத் தெரியாத மனிதர்களாய் நம்மில் பலர் இருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கலாம். ஆயினும் கலையுள்ளம்

கே.எஸ். சிவகுமாரன் 235
படைத்தவர்கள் இச்சிற்றின் பங்களை வெகுவாக ரசிப்பர். நமது எழுத்தாளர்கள் பலர் சமூகச் சித்திரிப்புக்களை புறநிலையாக நின்று எழுதுபவர்கள். அதே வேளையில் அகநிலைப்பட்ட கதைகளை எழுதுபவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். வாழ்க்கையின் தரிசனங்களை விரிவுபடுத்த, நீடிக்க இந்த அகவயச் சித்திரிப்புகளும் உதவுகின்றன. ரஞ்சகுமாரின் இந்தக் கதையைப் படித்ததும், அவருடைய பரந்த உலக நோக்கு தெளிவாகத் தெரிந்தது. இயற்பண்புவாதமாக (Naturalistic Mode) எழுதும் ஆபத்தைத் தவிர்த்து, தேர்ந்தெடுத்த முறையிலே கதையை விபரிக்கிறார். விபரிப்புடன் விவரணையும் உண்டு. சிங்களப் பிரதேசத்தின்
பகைப் புலத்தில், கதை சொல்லப்படுவதும் அவதானிக்கத்தக்கது.
கபரக்கொய்யாக்கள்’ - இதுவும் சிங்களப்
பகுதியில் இடம் பெறும் கதை. கபரகொய்யாக்கள், காமுகர்களை வெளிப்படுத்தும் சின்னங்களாக வருகின்றன என்று நினைக்கிறேன். கதை கூறும் செய்தி வெளிப்படையல்ல. கலைத்துவம் மிக்க ஆக்கங்களில் பரிமாணம் ஒரு லயத்துக்குள் அடங்கமாட்டாது. பரவசப்படுத்தும் ஆக்கங்களை, அக்கு வேறு ஆணிவேறாகப் பகுப்பாய்வு செய்தால், மிஞ்சுவது சூன்யம். சூன்யத்தைத் தேடும் முயற்சியில் அழகுச் சேர்க்கையை மறந்து விடுகிறோம். நிகழும் ஒவ்வொரு கனத்தையும் களிப்புடன் ரசிக்கத் தவறி விடுகிறோம்.

Page 120
236 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ரசனையுணர்வின்றி விமர்சனமில்லை. விமர்சனம் முடிந்த முடிவல்ல. கலைப் பயணமே அனுபவம். சில அனுபவங்களை விமர்சன ரீதியாக வருணிக்கமுடியாது. கபரக் கொய்யாக்கள் கதையின் பெரும் பகுதி சுகமான சங்கீதம். ரஞ்சகுமார் பெற்றோர் கலப்பு மணம் முடித்தவர்கள் என்பதனாலோ என்னவோ, சிங்கள, தமிழ் கலாசாரங்களின் பிணைப்புக்களை அவர் கதைகளும் தாங்கி வருகின்றன. தமிழ் அவருக்குக் கை கட்டிச் சேவகம் புரிகிறது.
'காலம் உனக்கொரு பாட்டெழுதும் - வடபுல நிகழ்காலப் போர்ச் சூழலில் நடைபெறும் கதை என்று காட்டிக் கொள்ளாமலே மனிதத்தன்மையைக் கலைத்துவமாகக் காட்டும் ஒரு நெடிய கதை இது. மந்திரம் போல் சொல். விளக்கினால், அனுபவ பரிவர்த்தனை சிதைந்து விடும்.
‘கோசலை' - இதுவும் ஒரு நீண்ட கதை. இன்றைய தமிழ் இளைஞர்களின் அவல வாழ்வுக்கதை. இந்தக் கதையை மாத்திரம் எடுத்துக்கொண்டு, இதன் உள்ளுறை உவமைகளையும், இறைச்சிப் பொருளையும் தீவிரமான முறையில் பகுப்பாய்வு செய்யலாம். வெளிப்படையான காரணங்களுக்காக இதனை நான் இங்கு செய்யமுடியாது. புரிந்தவர்க்குப் புரியும் இக்கதை என்ன கூறுகிறதென்று. இக்கதையின் வடிவ அமைப்பு என்னளவில், பொருத்தமானதாய் இல்லை. இதற்குக் காரணம், இறுக்கம் குறைவு என்பதே - அதாவது நீட்சியைக் குறைத்து, சுருங்கச் சொல்லி

கே.எஸ். சிவகுமாரன் 237
விளங்க வைத்திருக்கலாம். இருந்தாலும், கதை உணர்த்தும் அனுபவம் மெய் சிலிர்க்க வைக்கிறது.
'அரசி' - தாம்பத்திய வாழ்க்கையைச் சித்திரிக்கும் இக்கதையிலே ஒரு பெண்ணின் ஆளுமை சுட்டிக் காட்டப்படுகிறது. வழக்கமாக ரஞ்சகுமார் எழுதும் கதைகளினின்று இது வேறுபட்ட கதை. சுவாரஸ்யமாக எழுதப்பட்டிருக்கிறது.
‘கோளறு பதிகம் - இந்தக் கதையும் மரணத்துள் வாழும் தமிழ் இளைஞர்களின் சீவியத்தின் சில அம்சங்களைப் படம் பிடிக்கிறது. இதுவும் மற்றொரு ஆவணச்சித்திரம்.
“மோக வாசல் - புராணக் கதையைத் தாம் பொருள் கொண்டு விளங்கிய விதத்தில் கதை மூலம் ஆசிரியர் வியாக்கியானம் செய்துள்ளார். ரஞ்சகுமார் தமது கதைகளுக்குப் பின்னணியாக முன்படிவப் புராணக் கதைகளை (Archetypal Myths) பயன்படுத்துவதும் அவதானிக்கத்தக்கது.
ரஞ்சகுமார் இப்பொழுதெல்லாம் சிறுகதைகள் எழுதுவது போல் தெரியவில்லை. ஒருவேளை ஒரு நாவலுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டிருக்கிறாரோ அறியேன்.
இந்தத் தொகுப்புக்கு பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பயனுள்ள ஒரு பின்னுரையை எழுதியிருக்கிறார்.

Page 121
238 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
ரஞ்சகுமாரின் கதைகள் பற்றி அவர் கூறியிருக்கும் விளக்கவுரை புதுப்புனைவானது. இங்கு பதிவு செய்யப்பட வேண்டியது. பேராசிரியரின் வியக்கியானம் வருமாறு: "காலம் உனக்கொரு பாட்டெழுதும், கோசலை, கோளறு பதிகம் என்பன இளைஞர் தீவிரவாதம், யாழ்ப்பாண மண்ணில் வேரூன்றியுள்ள முறைமையினையும், அதன் வழியாகத் தோன்றியுள்ள சாதக, பாதக அமிசங்களையும் அமரத்துவமுடைய இலக்கியப் பொருளாக்கியுள்ளன. இவற்றுள் கோசலை மிகச்சிறந்த காலப்பதிவான படைப்பு ஆகும்.”
விரிவான கணிப்புகளுக்குப் பேராசிரியரின் பின்னுரையை வாசித்துப் பார்க்க
(ஜூலை, 1998)

கே.எஸ். சிவகுமாரன் 239
கே.எஸ். சிவகுமாரன் ஆங்கிலத்தில் எழுதியவை: 01. TAMIL WRITING IN SRI LANKA (1974)
02. LEROYROBINSON IN CONVERSATION WITH K.S.
SIVAKUMARAN (1992)
03. Entry in ENCYCLOPEDIA OF WORLD LITERATURE
(Ungar Publications)
04. Entry in ENCYCLOPEDIA OF 20th Century World
Literature.
தமிழில் எழுதியவை:
01. ஈழத்துச்சி ம் ஆசிரியர்களும் - ஒரு பன்முகப் பார்வை
- Tab O1 (962-1979) – 2Oo8
02. ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும் - (2OO8)
ஒரு பன்முகப் பார்வை - பாகம் O2 (98O - 1998)
03. éfisoTLDmit éâ6OTLDmit - of D sos6i6oub (20O6)
04. இந்திய - இலங்கை இலக்கியம் : ஒரு கண்ணோட்டம் (2OO5)
05. திறனாய்வு என்றால் என்ன? (2005)
06. சொன்னாற்போல - 2 (2OO4)
07. 96.DerLab uaçLDrijesit (2OO)
08. மரபுவழித் திறனாய்வும் ஈழத்துத் தமிழ் இலக்கியமும் (2000
09. ஈழத்துத் தமிழ் நாவல்களிற் சில (1999)
10. மூன்று நூற்றாண்டுகளின் முன்னோடிச் சிந்தனைகள் (999) 11. திறனாய்வு - அண்மைக்கால ஈழத்துச் சிறுகதைத் தொகுப்புகள்
(1999)

Page 122
240 ஈழத்துச் சிறுகதைகளும் ஆசிரியர்களும்
12. இருமை - சிறுகதைத் தொகுப்பு (1998) 13. திறனாய்வு - ஈழத்துச்சிறுகதைத் தொகுப்புகள் (1996) 14. திறனாய்வுப் பார்வைகள் (1996 15. கைலாசபதியும் நானும் (1990) 16. கலை இலக்கியத் திறனாய்வு (989 17. சிவகுமாரன் கதைகள் (1982
நூலாசிரியரைப் பற்றி.
கே.எஸ். சிவகுமாரன் (936) கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிவருபவர். தற்பொழுது Freelance Media Critic S.5 Durélé8 6UC5épmfi. dpsörsonst The Island, வீரகேசரி, நவமணி ஆகிய புதினத்தாள்களின் ஆசிரியப் பீடங்களிலும், இலங்கை வானொலி செய்திப் பிரிவிலும் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிந்தவர். இலங்கை, மாலைதீவு, ஒமான், அமெரிக்கா ஆகிய இடங்களில் உயர்நிலைப் பள்ளி ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகவும் பணியாற்றியவர். இவர் ஒர் ஆங்கில / தமிழ் இலக்கியப் பட்டதாரி. தமிழில் அறிவிப்பாளராவும், செய்தி வாசிப்பவராகவும் பணியாற்றி தற்சமயம் இலங்கை வானொலியின் ஆங்கிலச் சேவையில் பகுதி நேர அறிவிப்பாளராகப் பணியாற்றுகிறார். ஆங்கிலப் பத்திரிகைகளில் கலை, இலக்கியப் பத்திகளை எழுதி வருகிறார். இலங்கை சென்சர்போர்ட் அங்கத்தவராகவும் இருந்துவரும் கே.எஸ். சிவகுமாரன், இந்தியாவின் அனைத்துலகத் திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு திறனாய்வுகளையும் எழுதிவருகிறார்.
来


Page 123
ஆசிரிய
எங்கள் ko 6ööf பிரசுரத்தில் 300-க்கும் இலங்கை எழுத்த நூல்களை வெளியிட்டி இவர்களுள் தலையாய கருதும் ရ္ဟိ ုရှုံ fiါး ရွှံ சிவகுமாரனும் ஒருவர்.
அண்மையில் க திரு. சுஜாதாவின் அநேகம நான் படித்திருக்கிே ஒப்பிடக்கூடிய சிறந்த
காண்கிறேன். தமிழ மனதில் பட்டதை மக்கள் அருமையான எழுத்தாள சினிமா, இலக்கியம் வ எழுத்தாளராகத் தி: வெளியிடுவது மணிமே மகத்தான வாய்ப்பு இ தொடுவார். பெருமைச
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3 Leś Š š Ş []
மேற்பட்ட I am fী চ নীলা ருக்கிறோம். &féérrë
கே எ ஸ்
ாலமான தமிழ் எழுத்தாளர் ாக அனைத்து படைப்புகளையும் றன். அவருடன் இவரை பல்துறை எழுத்தாளராக நான் கட்டும். ஆங்கிலமாகட்டும், மன்றத்தில் வைக்கத் தயங்காத அருமையான நண்பர் இவர் ரலாறு ஆய்வு எனப் பன்முக 5ழும் இவருடைய நூலை கலைப் பிரசுரத்திற்கு கிடைத்த ன்னும் இவர் பல சிகரங்களைத் 5ள் பெறுவார் வாழ்த்துகள்
ரவி தமிழ்வாணன்
பதிப்பாளர்