கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கை மலையகத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் - தொகுதி I

Page 1
@លធ្វើបាប மலையகத் UTUrgh
шаит.
கார்ந்து
 

ហិញfr ញ៉៣លuffi
தொகுதி
ாட்டுப் பின்புலம்
திப்பாசிரியர் நிகேசு சிவத்தம்பி
இர
ធ្វើប្រា៣ 1993

Page 2

தொகுதி I
பண்பாட்டுப் பின்புலம்
பதிப்பாசிரியர்
கார்த்திகேசு சிவத்தம்பி தமிழ்ப்பேராசிரியர் தலைவர், நுண்கலைத்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்
உதவி மு. சின்னத்தம்பி முதுநிலை விரிவுரையாளர் பொருளியல்துறை பேராதனைப் பல்கலைக்கழகம் பேராதனை
4,3635 வெளியீடு உதயம் நிறுவனம் 113 1/1 இனர் பிளவர் வீதி
கொள்ளுப்பிட்டி, கொழும்பு 3 இலங்கை

Page 3
SSSSSL
LANKA MALALAKATHAMILARIN
PANPATUM KARUTTHU NILAYUM
The Culture and Ideology of the Plantation Tamils of Sri Lanka.
Vol- I The Cultural Background
Edited by Karthigesu Sivathamby
Professor of Tamil Head/ Dept. of Fine Arts University of Jaffna
With the assistance of M. Sinnathamby Senior Lecturer in ECOnomicS University of Peradeniya - Peradeniya
Published by Udayam Foundation 113 l/l, Inner Flower Road Colombo 3
With the assistance from the NORAD Cultural Fund
1993
2

SSSSSSSSSSSS
பொருளடக்கம்
1. தோற்றுவாய் 7
2. ஆய்வு முன்னுரை - மலையகத் தமிழர்களின்
பண்பாட்டுத் தளம் 11
3. வாழ்க்கைச் சடங்குகளும் கரணப்பயில் வுகளும்
செல்வி பி. சோதிமலர் 40
4. இந்திய வம்சாவழிமக்களின் குடும்ப, குல தோட்டத் தொழில், நிலை வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாட்டுமுறைகள்
எஸ்.விஜய்ச்சந்திரன் 62 5. குடும்பமட்ட வழிபாட்டு முறைகளிற் பெண்கள் w செல்வி து. சோபனாதேவி 78
6. ந்திய வம்சாவழி மக்களின் தோட்ட நகர்சார் சமூக
லை வழிபாட்டுத் தலங்கள்
ஏ. இராமகிருஷ்ணன் 89
7. மலையகப் பகுதிகளில் கத்தோலிக்கம்
ஏ.வி.பி 醬 ததே 113
8. பெருந்தோட்ட இந்திய வம்சாவழிமக்களின்
ஆடைஅணிகள்
க.ப.சிவம் 132
9. பெருந்தோட்ட இந்திய வம்சாவழி மக்களின் பணி பாட்டுப் பின்ன்னியோடிணைந்த கலை, கைவினைப் பொருட்கள்
க.ப.சிவம் 138
10. மலையகத் தமிழ் மக்களின் ஆற்றுகைக் கலைகள்
மாத்தளை வடிவேலன் 144 11. மலையகக் கோயில்களிற் காணப்படும் கட்புலக்
கவின்கலைகள் ந.வேல்முருகு 180 12. பின்னிணைப்பு
1 மலையகப் பணி பாட்டு நடவடிக்கைகளின்
வருடாந்தச் சுழல் 184 I மலையகம் பற்றிய ஒரு தேர்ந்த நூற்பட்டியல் 190
SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS
3

Page 4
முன்னுரை
இலங்கைப் பெருந்தோட்ட மக்களின் பொருளியல் நிலை பற்றிய எழுத்து வளன் நிறைய உண்டு. பெருந்தோட்டங்களிலே தொழிலாளர்களாகவுள்ள, இந்தியாவிலிருந்து அண்மையில் வந்து குடியேறியுள்ள, இத்தமிழ் மக்களது வாழ்க்கை நிலைமைகள் பற்றிக்குறிப்பிடும் இவ் எழுத்துக்கள் அவர்களது வீட்டு வசதி, நீர்விநியோகம், சுகாதாரம் முதலான பெளதீக அம்சங்கள் பற்றியே பெரும்பாலும் பேசும். பேருந்தோட்டக் குழுமத்தின் சமூக வாழ்க்கை போதிய அளவு ஆராயப்படவில்லை.
அந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கென்றே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, அந்தக் குழுமம் எவ்வாறு வாழ்கின்றது என்பது பற்றியும் அவர்களை வன்மைநிலைப்படுத்தும் நோக்கிற் பார்க்கும் பொழுது அவர்கள் வாழ்க்கையில் முக்கியப்படும் காரணிகள் யாவையென்பது பற்றியும் உள்ளார்ந்த தரிசனங்களைப் பெறும் நோக்கத்துடன் அமைக்கப்பெற்ற ஒரு முழுமையான ஆய்வாகும்.
அந்த ஆய்வின் முதலாம் பகுதி - இத்தொகுதியின் உள்ளடக்கம் -விவரணநிலைப்பட்டது, பின்னர் மேற்கொள்ளப்படவிருக்கும் மிக ஆழ்-நிலை ஆய்வுக்கான பின்புலமாய் அமைவது.
நொறாட் (கூட்டுறவு ஒத்துழைப்புக்கான நோர்வீஜிய நிறுவனம்) நிறுவனத்தினர் வழங்கிய ஒரு நிதிக்கொடை இவ்வாய்வினை மேற்கொள்ள உதவிற்று. யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போராசிரியர் கா. சிவத்தம்பி இதனை திட்டவமைப்புச் செய்து, ஒருங்கிணைத்து நடத்தினார். இந்த ஆய்வுக்குழுவின் அங்கத்தவர் எல்லோரும் இந்தக் குழுமத்தினைச் சேர்ந்தவர்களே.
Lu. DnTassifisasib தலைவர், உதயம் நிறுவனம்

PREFACE
There is a wealth of literature on the economy of the tea plantations of Sri Lanka. While reference is made in this literature to the life and living conditions of the Tamils of recent Indian origin, who constitute the bulk of the plantations workers, it is largely confined to physical aspects such as housing, water supply, health etc. The social life of the plantation community has not been adequately covered.
This research project is undertaken to fill this gap. It is a holistic study aimed at providing insights into how this community lives and what factors are significant in their lives from the point of view of their empowerment. Part One of this study, the subject matter this book, is descriptive and provides the background for a more in-depth study to be undertaken later.
This study has been made possible by a grant from NORAD (Norwegian Agency for Development Co-orperation). It is designed and co-ordinated by Professor K. Sivathamby of the Jaffna University. All the other members of the research team are drawn from this community itself.
P. Manikam Chairman Udayam Foundation
September 1993

Page 5
கட்டுரையாசிரியர்கள்
பி. சோதிமலர் B.A. (Hons), விரிவுரையாளர், தமிழ்த்துறை, பேராதனைப்பல்கலைக்கழகமீ.
எஸ்.விஜயச்சந்திரன் B.A. (Hons), விரிவுரையாளர், பொருளியல்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்.
து. சோபனாதேவி B.A. (Hons), விரிவுரையாளர், பொருளியல்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்.
@T・ இராமகி ருஷ்ணன் B.A.(Hons) விரிவுரையாளர், புவியியல்துறை,பேராதனைப்பல்கலைக்கழகம்.
ஏ.வி.பி கோமஸ் B.A. (Cey), இளைப்பாறிய அதிபர்.
க.ப. சிவம் எழுத்தாளரும் இலக்கியச்செயற்பாட்டாளரும், όοδοτις-.
மாத்தளை வடிவேலன் B.A.(Cey), கலாச்சார உத்தியோகத்தர், இந்து சமய அலுவல்கள் அமைச்சு, கொழும்பு.
ந. வேல்முருகு B.A. (Hons), Ph.D சிரேஷ்ட விரிவுரையாளர் புவியியல்துறை, பேராதனைப்பல்கலைக்கழகம்.
பின்னிணைப்பு 1 - தொகுப்புக்கு உதவியோர் திரு.செ. சுப்பிரமணியம், திருமதி சரஸ்வதி ஜெயராஜ், திரு.வ. தேவராஜ்
பின்னிணைப்பு 1 தொகுப்பாளர்- எம். ஏ. ஃபிர்தெளஸியா இப்றாகிம்.
கார்த்திகேசு சிவத்தம்பி M.A, Ph.D, தமிழ்ப்பேராசிரியர்
தலைவர், நுண்கலைத்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
 

தோற்றுவாய் வரலாறு
பிரித்தானியர்களது ஆட்சியின்போது பல்வேறு தொழில்களைப் புரிவதற்காகத் தென்னிந்தியாவிலிருந்து இலட்சக் கணக்கான மக்கள் இலங்கைக்கு வந்தனர். இவ்வாறு குடிவரவுக்குட்பட்ட தென்னிந்திய மக்களை இரு பிரிவினர்களாகப் பிரிக்கலாம். முதற் பிரிவினர், தாமாகவே தொழில் நாடி இங்கு வந்தோர். இரண்டாவது பிரிவினர், தோட்டத்தொழில் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அத்தோட்டங்களில் தொழில் புரிவதற்காக இங்கு கொண்டு வரப்பட்டோர். இம்மக்கள் இன்று இலங்கையின் மலையகத்திலும் ஏனைய சில பகுதிகளிலும் நிரந்தரமாக வாழ்ந்து வருகின்றனர். பிரித்தானியரது ஆட்சியின்போது பல்வேறு முறைகள் மூலம் இம்மக்களது குடிவரவு ஊக்குவிக்கப்பட்டது. தென்னிந்தியாவில் வேலூரை அடுத்த செங்கல்பட்டு, மதுராந்தகம், வட ஆற்காடு, தென்னாற்காடு, திண்டிவனம், சிதம்பரம் ஆகிய பகுதிகளிலிருந்தும் சேலம், நாமக்கல், கொயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், அறந்தாங்கி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி, ஆகிய பகுதிகளிலிருந்தும் மக்கள் புலம்பெயர்ந்து இலங்கைக்கு வந்தனர். பல்வேறு சாதியினரும் இக்குடிவரவுக்கு உட்பட்டதான சான்றுகள் அரசாங்க அறிக்கையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
இவ்வாறு தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்தோரில் அண்ணளவாக 5ே சதவீதமானோர் திருச்சிப் பகுதியிலிருந்தும், 16 சதவீதமானோர் சேலம் பகுதியிலிருந்தும், 16 சதவீதமானோர் மதுரைப் பகுதியிலிருந்தும், 10 சதவீதமானோர் வேலூர் பகுதியிலிருந்தும், 4 சதவீதமானோர் ஏனைய பகுதிகளிலிருந்தும் வந்ததாகத் தெரிய வருகின்றது.
இவ்வாறு குடிவரவுக்குட்பட்ட மக்கள் ஏனைய சமூகங்களைப் போன்று தமக்கென ஒரு பண்பாட்டுப் பாரம்பரியத்தினை உடையவர்களாக இருந்தனர். இங்கு வந்து குடியேறிய இவர்கள் இப்பண்பாட்டுப் பாரம்பரியங்களை இலங்கையிலும், தொடர்ந்து பேணி வளர்க்கலாயினர். இப்பாரம்பரியங்களைத் தொடர்ந்து பேணுவதற்குச் சாதகமான சூழ்நிலை இலங்கையின் தொட்டப் புறங்களிலும் காணப் பட்டமை குறிப் பரிடத் தக்கது. வரலாற்றுக்காரணிகளுடனர், குடியிருப்புக்களின் அமைவு, அமைப்பு, என்பனவும் மக்களின் சமூக பொருளாதார நிலைகளும், மக்கள் அடிக்கடி இந்தியா சென்று வரச் சாதகமாகவிருந்த இவ்விரு நாடுகளின் புவியமைவும் மலையகத் தமிழ் மக்களின் பண்பாடு தென்னிந்தியத் தமிழ் மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டதாக இருப்பதற்குக் காரணிகளாக
Yelasser.
7

Page 6
குடிவரவுக்குட்பட்ட மக்கள் பெரும்பாலும் இந்துக்களாக இருந்த காரணத்தால் இந்துப் பாரம்பரியங்கள் இலங்கையிலும் பின்பற்றப்பட்டன. இந்துக்கள் வந்திறங்கிய துறைமுகங்களிலும், பிரயாணம் செய்யும்போது ஒய்வெடுத்த இடங்களிலும், நிரந்தரமாகத் தங்கி குடியிருப்புக்கள் ஏற்படுத்திய இடங்களிலும் இந்து வழிபாட்டிடங்கள் நிறுவப்பட்டதுடன், பல்வேறு சமூக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. மலையகத்தில் இவர்களுக்கு வழங்கப்பட்ட சமூக வசதிகளில் மத நடவடிக்கைகளுக்கான வசதிகள் முதன்மையான இடத்தை வகித்தன. மத சுதந்திரத்தால் உற்பத்திகள் பாதிக்கப்பட மாட்டா என்பதையும் இவ்வசதிகளால் வெளியுலகத் தொடர்புகளைக் குறைத்து, மக்கள் இங்கு நிரந்தரமாக வாழ விரும்புவர் என்பதையும் நிர்வாகத்தினர் நன்கு அறிந்திருந்தனர். இதனால் மலையகம் எங்கும் வழிபாட்டிடங்கள் தோன்றலாயின. அத்தோடு மக்கள், தங்கள் நம்பிக்கைகள், சடங்குகள், விழாக்கள், விரதநாட்கள், பண்டிகைகள், கூத்துக்கள், கலைகள், இலக்கியம், பொழுதுபோக்கு நடவடிக்கைகள், விளையாட்டுக்கள், கிரியைகள், போன்றவற்றைத் தொடர்ந்தும் பேணுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டன. இதனால் மலையகத் தமிழ் மக்களுடைய தனித்துவமான பண்பாட்டுப் பாரம்பரியமொன்றினை இன்றும் இங்கு இணங்காணக் கூடியதாயுள்ளது.
ஆய்வின் குறிக்கோள்
மலையகத் தமிழ் மக்களுடைய பண்பாட்டுப் பாரம்பரியத்தினை இனங்காண்பதும், அம்மக்களுடைய மதங்களுடன் தொடர்புடைய பண்பாட்டு அம்சங்களையும் மக்களின் கலைகள், கைவினைப்பொருட்கள், வாய்மொழி இலக்கியம், போன்றவற்றையும் இம்மக்களது சமூக நிறுவனங்களான குடும்பம், திருமணம், பொழுதுபோக்கு, விளையாட்டுக்கள், முதலானவற்றையும் அறிந்து விளக்குவதும் இவ்வாய்வின் முக்கிய நோக்கங்களாகும்.
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட முறைகள்
இவ்வாய்வு இரண்டு கட்டங்களாக மேற்கொள்வதற்குத் திட்டமிடப்பட்டது. முதற்கட்டமாக மலையகத் தமிழர்களுடைய பல்வேறுபட்ட பண்பாட்டுப் பாரம்பரியங்களையும் அவர்களின் மதங்களுடன் தொடர்புடைய பண்பாட்டு அம்சங்கள், கலைகள், கைவினைப் பொருட்கள், வாய்மொழி இலக்கியம் ஆகியனவற்றையும் அறிவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாம் கட்டத்தில் இம்மக்களுடைய சமூக நிறுவனங்களான குடும்பம், திருமணம், பொழுதுபோக்கு என்பன ஆராயப்படவுள்ளன. இரண்டாம் கட்டத்தில் மலையகச்சமூகத்தின் கருத்துநிலைத்தளம் பற்றிய ஆய்வு

மேற்கொள்ளப்படும். எனவே இக் கட்டத்தில் இவ்வாய்வு முழுமையடையாமல் இருப்பதனைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். கூடிய விரைவில் இவ்வாய்வின் சகல குறிக்கோள்களும் ஈடேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாய்வுக்குப் பொறுப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் கா. சிவத்தம்பி நியமிக்கப்பட்டார். இவருடைய ஆலோசனையின்படியும் மேற்பார்வையிலும் முழு ஆய்வும் மேற்கொள்ளப்பட்டது. பேராசிரியர் கா. சிவத்தம்பிக்கு உதவியாக இணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். ஆய்வு தொடங்கிய காலத்திலிருந்து செல்வி. கெளரி பழனியப்பனும், பேராதனைப் பல்கலைக்கழக பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் திரு. மு. சின்னத்தம்பியும் நியமிக்கப்பட்டனர். ஆய்வு தொடங்கி ஆறு மாதங்களின் பின்னர் செல்வி. கெளரி பழனியப்பன் இந்தியாவுக்குச் சென்றுவிட்ட காரணத்தால் பேராதனைப் பல்கலைக்கழக புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ந. வேல்முருகு செல்வி பழனியப்பன் மேற்கொண்டிருந்த பணிகளை ஆற்றுவதற்காக நியமிக்கப்பட்டார். அத்துடன் துணை ஆய்வாளர்களாக எழுவர் நியமிக்கப்பட்டனர்.
இவ்வாய்விற்கு உதவிய துணை ஆய்வாளர்கள் மலையத்தைச் சார்ந்தவர்களாகவும், மலையகத்திலேயே நெடுங்காலம் வாழ்ந்தவர்களாகவும், மலையகத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களாகவும் இருந்தமையால் இவர்கள் மூலம் பல்வேறு தகவல்கள் பெறப்பட்டன. இவர்கள் கட்டுரைகள் எழுதவும் பணிக்கப்பட்டனர்.
இவ்வாய்வு 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. துணை ஆய்வாளர்கள் வெளிக்களத்திற்குச் சென்று மலையக மக்களை நேரடியாகச் சந்தித்து உரையாடியதன் மூலமும் தமது அவதானிப்புக்களின் மூலமும் பல்வேறு தகவல்களைத் திரட்டினார்கள். இவ்வாறு திரட்டப்பட்ட தகவல்களும் நிழற்படங்களும் இவ்வாய்வின் முதல்நிலை ஆதாரங்களாகக் கொள்ளப்பட்டன. இம்முதனிலை ஆதாரங்கள் இலங்கையின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரட்டப்பட்டன. உயர்நிலைப் பிரதேசத்தில் நுவரேலியா, பதுளை ஆகிய மாவட்டங்களிலும் இடைநிலைப் பிரதேசத்தில் கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலும் தகவல்கள் திரட்டப்பட்டன. தாழ்நிலைப் பிரதேசத்தைச் சேர்ந்த காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களும் ஆரம்பத்தில் தெரிவு செய்யப்பட்ட போதும், பல்வேறு காரணங்களால் அம்மாவட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. ஏற்கனவே பிரசுரிக்கப்பட்ட பிரசுரங்களிலிருந்தும் துணையாதாரங்கள் திரட்டப்பட்டன.
துணை ஆய்வாளர்கள் எழுதிய கட்டுரைகள் 1992ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் திகதி நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் வாசிக்கப்பட்டன. இக்கருத்தரங்கிற்கு மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த எழுத்தாளர்கள்,
9

Page 7
கலைஞர்கள், ஆய்வாளர்கள், அறிஞர்கள் இக்கட்டுரைகளை விமர்சித்தனர். இவ்விமர்சகர்களது கருத்துக்களும் இயன்றளவுக்கு ஆய்வுக் கட்டுரைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளன. கருத்தரங்கில் நிழற்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தொகுதியிற் பின்வரும் கட்டுரைகள் இடம்பெறுகின்றன.
செல்வி. பி. சோதிமலர் எழுதிய வாழ்க்கைச் சடங்குகளும் கரணப்பயில்வுகளும் திரு. எஸ் விஜயச்சந்திரன் எழுதிய இந்திய வம்சாவழி மக்களின் குடும்ப, குல தோட்டத்தொழில் நிலை வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாட்டு முறைகள் செல்வி. து. சோபனாதேவி எழுதிய குடும்ப மட்ட வழிபாட்டு முறைகளிற் பெண்கள்
4. திரு. இராமகிருஷ்ணன் எழுதிய இந்திய வம்சாவழி மக்களின் தோட்ட,
நகர்சார் சமுகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்கள். 5. திரு. ஏ. வி. பி. கோமஸ் எழுதிய மலையகப் பகுதிகளில்
கத்தோலிக்கம் 6. திரு. க. ப. சிவம் எழுதியுள்ள பெருந்தோட்ட இந்திய வம்சாவழி
மக்களின் ஆடைஅணிகள் 7. திரு. க.ப. சிவம் எழுதிய பெருந்தோட்ட இந்திய வம்சாவழி மக்களின் பண்பாட்டுப் பின்னணியோடிணைந்த assau, கைவினைப்பொருட்கள் 8. திரு. மாத்தளை வடிவேலன் எழுதிய மலையகத்தமிழ் மக்களின்
ஆற்றுகைக்கலைகள் 9. கலாநிதி ந. வேல்முருகு எழுதிய மலையகக் கோயில்களிற் காணப்படும்
கட்புலக் கவின்கலைகள்
பின்னிணைப்பாக
மலையகப்பண்பாட்டு நடவடிக்கைகளின் வருடாந்தச் சுழல் பற்றிய ஒரு தொகுப்பும்
மலையகம் பற்றிய ஒரு தேர்ந்த நூற்பட்டியலுமுள்ளது.
10

ஆய்வு முன்னுரை
மலையகத் தமிழர்களின் பண்பாட்டுத் தளம்
இலங்கைப் பெருந் தோட்டத் தமிழ் மக்களின் பண்பாடும் கருத்து நிலையும் பற்றிய ஆய்வின் முதற்கட்ட முடிவில் வெளியிடப்படும் கட்டுரைத் தொகுதிக்கான அறிமுகம்.
கார்த்திகேசு சிவத்தம்பி
இலங்கைத் தமிழ் வழக்கில் இன்று மலையகம்" எனும் தொடர் இலங்கையின் ம்லைப் பிரதேசங்களிலுள்ள பெருந்தோட்டங்களிலும் அவற்றைச் சார்ந்த நகரங்களிலும் வாழும் இந்திய வம்சாவழித் தமிழரைக் குறிப்பதாகும். மலையகப் பகுதிகளைச் சாராத பகுதிகளிலுள்ள பெருந்தோட்டங்களில், அதாவது மேல், தென் மகாணங்களைச் சார்ந்த றப்பர் பெருந்தோட்டங்களில் காழ்ப்வர்களையும் மலைசார் பகுதிகளிலிருந்து சென்று வடகிழக்கு பகுதியின் வெசாயப் பிரதேசங்களிலும் (கிளிநொச்சி, வவுனியா, மாவட்டங்களில்) கோழும்பிலும் வாழ்பவர்களையும் கூட "மலையகத் தமிழர்” என்ற தொடர் கொண்டே சுட்டும் மரபு இன்று வழக்கிலுள்ளது.
மலையகம்” என்பது இலங்கையின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் சிண்ணக்கருவாக அமைந்துள்ளது. "மலையகத் தமிழர் என்ற இத்தொடர்," பொதுப்படையாக, பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் யாவரையும் குறிப்பிடுகின்றதெனினும், சற்றுக் கூர்ந்து நோக்கும் பொழுது, அது உண்மையிற் பெருந்தோட்ட உற்பத்தி முறையோடிணைந்துள்ள மூன்று முக்கிய "குழுவினரை" ஒருங்கு இணைத்துள்ள ஒரு பதமென்பது தெரிய வரும்.
(1) பெருந்தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளிகளான இந்திய
வம்சாவழித் தமிழர்கள் (கங்காணிளும் தொழிலாளர்களும்),
(2) பெருந்தோட்டங்களில் நிர்வாக அலுவலகங்களில் உத்தியோகத்தர்களாகக் கடமையாற்றும் இந்திய வம்சாவழித் தமிழர்கள் (இவர்களுள் ஆசிரியர்களையும் சேர்த்துக் கொள்வர்),
(3) பெருந்தோட்டங்களைச் சார்ந்த நகரங்களிலும் வணிக முயற்சிகளிலிடுபட்டுள்ள இந்திய வம்சாவழித் தமிழர்கள்,
re- 11

Page 8
ஆகியோரே அந்த மூன்று குழுவினருமாவர். இவர்களிடையே வர்க்க, சமூக, வேறுபாடுகளிருப்பினும், பல்வேறு சமூக, பொருளாதார அசைவியக்கங்கள் காரணமாகவும் அரசியல் வரலாற்று நிர்ப்பந்தங்கள் காரணமாகவும் இவர்கள் ஒன்றாகவே நோக்கப்பட்ட வரலாற்றினூடாகவும், இவர்களிடையே வளர்ந்த தவிர்க்க முடியாத ஒன்றிணைப்பினுாடாகவுமே மலையகத் தமிழர் என்ற அரசியல் சமூக, எண்ணக்கரு வளர்ந்துள்ளது என்பது வரலாற்றுண்மையாகும். மலையகம் என்பது மேற்கூறிய மூன்று கூறுகளின் இணைப்பினைப் பிரதிபலிக்கும் எண்ணக்கருவெனினும், அதன் தளமாகவும், பலமாகவும் அமைவது பெருந்தோட்டத் தொழிலாளரேயாகும். பெருந்தோட்டத் தமிழர் வாழ்க்கையின் மையப்புள்ளி தொழிலாளக் குடும்பம் தான். மலையகம் பற்றிய எந்தப் புலமை உசாவலும் , அந்த தீ தொழிலாளக் குடும் பங் களைப் பிரதானப்படுத்துவதாகவேயிருத்தல் வேண்டும். ஆனால் அத்தொழிலாளர்களின் வாழ்க்கைமுறைமை அதாவது அவர்களின் பண்பாட்டு நடைமுறைகள், கருத்துநிலை பற்றிய ஆய்வுகள் இல்லையென்னும் அளவுக்கு மிகக் குறைவாவேயுள்ளது.
இலங்கை அரசினைப் பொறுத்தவரையில், இந்தப் பெருந்தோட்ட இந்தியத் தமிழ் வம்சாவழியினரின் பிரச்சினை மிக முக்கியமான ஒன்றாகும். மலையகத் தமிழர்களின் பிரச்சினை இலங்கையின் தேசிய மட்டத்தில் நான்கு பரிமாணங்களைக் கொண்டதாகும்.
l. "சுத்த” சிங்களப் பண்பாட்டின் மையம் என்று கருதப்படும் ஒரு பிரதேசத்தில் (கண்டியைச் சின்னமாகக் கொண்ட மலைநாட்டுச் சிங்களவர் வாழும் பிரதேசத்தில்) தமிழர்களின் ஆதிக்கச் சாத்தியம் பற்றிய பயம்.
2. இலங்கையின் பாரம்பரிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, றப்பர், உற்பத்தியை இலங்கையில் ஏற்பட்டு வரும் அண்மைக்காலப் பொருளாதார வளர்ச்சிச் செல்நெறிகளுக்குகேற்ப அமைவு செய்து கொள்ளல் பற்றிய பிரச்சினைகள்.
3. இப்பெருந்தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளர்களுக்கு, சர்வதேச மட்டத்திற் குறைந்தபட்சத் தேவைகளாக ஏற்றுக் கொள்ளப்படும்வசிப்பிட சுகாதார, கல்வி சேவைகளை வழங்குதல். இவ்விடயம் பற்றி ஐ. நா. ஸ்தாபன நிறுவனங்களும், சர்வதேசிய, அரச சார்பற்ற நிறுவனங்களும் உன்னிப்பான கவனஞ் செலுத்துகின்றன.
12

எல்லாவற்றுள்ளும் மிகச்சிக்கலானதான பிரச்சினை, இந்த இந்திய வம்சாவழித் தமிழரை எவ்வாறு "இலங்கையராக” இணைத்தெடுத்துக் கொள்வதென்பதாகும். பிரஜாவுரிமை பற்றிய சட்டங்கள் வழியாக இலங்கையர்கள் ஆகியுள்ளவர்களைத் தொடர்ந்தும் ஒரு தனிக்குழுவாக நடத்துவது சிரமமான ஒன்றே. பாரம்பரியமான இலங்கைத் தமிழர்களின் அரசியல், ஆட்சியமைப்பு அந்தஸ்து இன்னும் தனியாகத் தீர்க்கப்படா திருக்கும் நிலையில், அது காரணமாகவே ஆயுதந்தாங்கிய தீவிரவாதப் போராட்டமொன்று நடந்து கொண்டிருக்கும் பொழுது, மொழிப் பண்பாட்டொருமை காரணமாக இந்திய வம்சாவழியினர் இலங்கையின் வடக்கு கிழக்குத் தமிழர்களுடன் எத்துணை இறுக்கமாக இணைந்து கொள்வார்கள், அந்த இணைவு எத்தகைய தேசியத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சிந்திப்பது இயல்பான ஒன்றேயாகும்.
இந்த நான்கு அம்சங்களும் தம்மியல்பாகத் தொழிற்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தினுள்ளே சமூக, பண்பாட்டு விடயங்களில் முக்கியமான மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் தமது "லயன் வாழ்க்கை” மரபிலிருந்து விடுபட்டு மேனிலை நோக்கிய ஒரு சமூக அசைவியக்கத்துக்காகத் தொழிற் படத் தொடங்கியுள்ளனர். இதன் நாரணமாக, தங்களது இன, மொழி உணர்வு பற்றியும் பண்பாட்டுத் தனித்துவம் பற்றியும் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். தோட்டத்தின் சமூக, பொருளாதார வரையறைகளுக்கு அப்பாலுள்ள சமூக, பொருளாதார வட்டங்களுக்குச் செல்ல விழைகின்றனர். இந்த அசைவியக்கம் "மலையகம்" என்ற கோட்பாட்டுக்கு வலுவளிக்கின்றது. அந்தக் கோட்பாட்டினால் வலுப்பெறுகின்றது. இந்தப் பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தின் அசைவியக்கங்களை, அந்த அசைவியக்கங்களின் முக்கியத்துவத்தை, அவற்றின் தன்மைகளை எண்ணிக்கொள்ள முனையும் பொழுது, அதன் வரலாற்று அடிப்படையையும் அதன் (சமூக) உருவாக்க அம்சங்களையும் மறந்து விடுதல் கூடாது. இந்தச் சமூகம் வரலாற்றில் மிக மோசமான காலனித்துவ சுரண்டலுக்கும், தேசிய ஒடுக்குமுறைக்கும் ஆட்பட்ட ஒரு குழுமமாகும். இவை காரணமாக இதன் பிரச்சினைகளும் இந்தச் சமூகத்தின் துயர்துடைப்புமுயற்சிகளும் ஐ. நா. நிறுவனங்களினதும், (சர்வதேச தொழில் ஸ்தாபனம், ஐ. நா. சிறார் அவசரநிதியம்) சர்வதேச மனித நல நிறுவனங்களினதும் சிரத்தையாயிற்று.
தாழ்வுற்று ஒதுங்கித் தங்களுக்குரிய சுதந்திரங்கள், உரிமைகள் யாவை என்பதையே அறியாது வாழ்க்கை நடத்திய இவர்கள் பற்றிச் சர்வதேச சிரத்தை ஏற்பட்ட பொழுது, இவர்களைப் பற்றிய பல எழுத்துக்கள் தோன்றின. சர்வதேச முக்கியத்துவம் கொண்ட அந்த எழுத்துக்கள் பெரும்பாலும் இவர்களிடத்து நிலவிய, நிலவும் "இல்லாமைகள்" பற்றியனவாகவேயமைந்தன. வாக்குரிமை இல்லாமை, வசிப்பிடமில்லாமை, கல்வி இல்லாமை, சுகாதார
13

Page 9
வசதியில்லாமை, என இவர்களைச் சூழச்சுற்றியுள்ள இல்லாமைகள் பற்றிய ஆய்வுகளே பல்கிப் பெருகின. இத்தகைய ஆய்வுகள் பிரதானமாக ஆங்கிலத்திலேயே வெளியிடப்பட்டன. இம்மக்கள் எதிர்நோக்கும் அரசியல், மனித நலப்பிரச்சினைகள் பற்றி ஆராயும் இவ்ஆய்வுகள், இனப்பிரச்சினையானது எவ்வாறு, ஒரு காலனித்துவ உற்பத்திமுறைமை காரணமாகத் தோன்றிற்று என்பதையும் அந்த உற்பத்திமுறைமை எவ்வாறு மனிதாபிமானமற்ற முறையில் மனிதர்களைச் சமூக, பண்பாட்டு எல்லைகளுக்கு அப்பால் உழைப்புக்கான பண்டப்பொருட்களாக ஏற்றி இறக்கித் தங்கள் விலையைப் பற்றித் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க முடியாத அளவுக்கு அறியாமையிலும், இல்லாமையிலும் அவர்களை வைத்திருக்க முயன்றது என்பதையும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்தன.
இத்தகைய ஆய்வுகளுள், மிகச்சிலவற்றைத்தவிர (உ-ம் ஜெயராமன் என்பவர் 6Topgu Caste continuities in Ceylon - A study of the social structures of those plantations, Bombay l974) Glugstol unraveTaopal பெருந்தோட்டத் தமிழரிடையே சமூக ஒழுங்கமைப்புப் பற்றியோ அன்றேல் அதன் வழியாகக் கட்டமைக்கப்பெற்ற பண்பாடு பற்றியோ கவனஞ் செலுத்தவே இல்லை. இத்தகைய சூழலில் இந்தக் குழுமத்தின் சமூகத் தனித்துவத்தைப் பேணுவதில் அவர்களது பண்பாடு வகிக்கும் இடம் பற்றியும், குழுமத்தினூடாகவே தோன்றி வளர்ந்த தலைமைத்துவத்தின் பண்பாடு (அதாவது அதன் தொழிற்சங்கத் தலைமையின் தன்மை) பற்றியும் அத்தலைமைத்துவப்பண்பாடு (அதாவது இந்தக்குழுமத்தின் அரசியற் பண்பாடு) இந்தச் சமூகத்தின் சமூக, பண்பாட்டுப் பெருவட்டத்தினால் தீர்மானிக்கப்பட்ட தன்மை பற்றியும் ஆய்வுகள் செய்யப்படாதுள்ளமை ஆச்சரியத்தைத் தரும் நிகழ்வன்று.
இக்கட்டத்தில், "மலையகம்” என்ற பொதுப்படையான பதத்தினாற் சுட்டப்பெறும் சமூகமானது தன்னைத்தானே எவ்வாறு நோக்கிக் கொள்கின்றது என்பது பற்றியும் அது எந்தெந்தக் காரணிகள் தன்னை அடக்கி யொடுக்கி வைத்திருக்கின்றன எனக் கருதுகின்றது என்பது பற்றியும் அறிந்து கொள்வது அவசியமாகின்றது. இந்த வினாக்களுக்கான விடையைத் தேடும் பொழுது, இம்மக்களிடையே ஏற்பட்டுள்ள கல்வி வளர்ச்சியும், இனக்குழுமப் பிரக்ஞையும் (உணர்வும்) மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியவையாகின்றன. அப்பொழுது தான் ஒரு முக்கியமான வினா மேற் கிளம்புகின்றது. இவர்கள் தங்களைத் தாங்களே விடயி நோக்காக பார்க்கும் தன்மையைப் பெற்று விட்டனரா என்பதே அந்த வினாவாகும். இதற்கான விடையைத் தேடும் பொழுது, தமிழில் அதாவது இவர்களது தாய்மொழியில் இந்தப் பிரச்சினைகள் பற்றியும் இவர்களது அரசியல் சமூகப் பிரக்ஞை பற்றியும் எத்தகைய எழுத்துக்கள்
14

தோன்றியுள்ளன என்பது பற்றி அறிந்து கொள்வது இதனை விளங்கிக் கொள்வதற்கான முக்கியமான தடயமாக மேற்கிளம்பும்.
மலையக இலக்கியத்தைக், குறிப்பாக மலையக எழுத்தாளர்களால் எழுதப்பெற்ற ஆக்க இலக்கியங்களை இந்தக் கண்ணோட்டத்திற் பார்ப்பது மிக அவசியமாகும். அதாவது தங்களது வாழ்க்கையின் உணர்ச்சிமையங்கள் பற்றிப் பேசப்புறப்படும், சித்திரிக்க எத்தனிக்கும் எழுத்தாளர்களுள் எத்தனை பேர் தமது சமூகத்தின் அசைவியக்கம் பற்றிய யதார்த்த பூர்வமான அறிவினையுடையவர்களாகக் காணப்படுகின்றனர் என்பது ஒரு முக்கியமான வினாவாகும். அத்தகைய ஒரு பார்வையை அந்தச் சமூகத்தின் கல்விநிலை, பண்பாட்டுப் பெறுமானங்கள் ஊக்குவிக்கின்றனவா என்பதும், அத்தகைய எழுத்துக்களை வாசிப்பதற்கும் வாசித்துக் கிரகித்துக் கொள்வதற்குமான ஒரு வாசகர் கூட்டம் அந்தச் சமூகத்தினுள் வளர்ந்து விட்டதா என்பதும் மிக மிக முக்கியமான விடயங்களாகும்.
இலக்கிய விமர்சன ஆய்விலும், இலக்கிய வரலாற்று ஆய்விலும் இது ஒரு முக்கியமான வினாவாகும். அதாவது ஒரு குழுமத்தின் பிரச்சினைகளை (அது பற்றிய சுய பார்வைகளை மாத்திரமல்லாது உண்மையான பிரச்சினை மையங்களை) அறிந்து கொள்வதற்கு, அந்த மொழியிலுள்ள எழுத்துக்கள் (ஆக்க இலக்கியங்கள் மாத்திரமல்ல, கட்டுரைகள், விமர்சனங்கள் ஆகிய எழுத்துக்களும்) எந்த அளவுக்கு பயன்படுகின்றன என்பது மிகச் சுவாரசியமான ஒரு தேடலாகும். ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை அது நிலவும் சமூகம் பார்க்கும் முறைமையினை அச்சமூகத்தின் "முதல் மொழி எழுத்துக்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். அந்த முதல் மொழி எழுத்துக்கள் அம்மொழிக் குழுமத்தினரின் சமூக உளவியலை எடுத்துக் காட்டுவனவாகவே இருக்கும். இலங்கை, இந்தியத் தமிழ் எழுத்துக்களிலிருந்து இரண்டு உதாரணங்களை இங்கு எடுத்துக் காட்டலாம்.
(1) சாதிகளைப் பற்றிப் பட்டவர்த்தனமாக எழுதுவதிற் காணப்படும் தயக்கம், இலங்கைத் தமிழரிடையேயும் இத்தயக்கம் மிகத்துல்லியமாகத் தெரிகிறது.
(2) திராவிட இயக்கம் பற்றிய காய்தல் உவத்தலற்ற, வரலாற்றாய்வு முறைகளுக்கியைய எழுதப் பெற்ற ஒரு தமிழ் நூல் இதுவரை (snairpitatDD.
இலக்கியம், எழுத்துப்பற்றிய ஒரு முக்கியமான சமூகவியலுண்மை இதன் வழியாகத் தெரியவருகின்றது. அதாவது, ஒரு சமூகம் தன்னைத்தானே விடயி நோக்காகப் பார்க்கத் தொடங்கும் பொழுது தான், அதற்கான மனநிலையையும், நோக்கையும் பெறும் பொழுது தான் அந்தச் சமூகம் பற்றிய உண்மையான விமர்சன பூர்வமான எழுத்துக்கள் மேற்கிளம்பும். இதனாலேதான் தமிழில்
15

Page 10
இன்னும் தமிழ் மக்களிடையே நிலவும் சமூக அமைப்பு, சாதியமைப்பு குறிப்பாகச் சாதிவரன் முறை பற்றிய ஆய்வுகள் வரத்தொடங்கவில்லை எனலாம். இலங்கைத் தமிழரிடையே 1960ஆம் ஆண்டுகள் வரை, ஆக்க இலக்கியத்திலேயே சாதிப்பிரச்சினையை உள்ளது உள்ளபடி எடுத்துப் பேசும் தன்மை இருக்கவில்லை. சமதர்மக் கருத்து வளர்ச்சி, பொதுவுடைமை நோக்குப் பரவல், சமூக சமத்துவத்துக்கான போராட்டங்களின் முனைப்பு ஆகியன வளர்ந்து சென்ற ஒரு கட்டத்திலேயே, அதுவும் “அந்த” “வளர்ச்சி” யோடு சம்பந்தப் பட்டவர்களினதும் (டானியல், ஜீவா, ரகுநாதன் பெனடிக்ற் பாலன் முதலியோர்) அந்தக் கருத்துநிலையை ஏற்றுக் கொண்டவர்களினதும் (கணேசலிங்கம்) எழுத்துக்களிலேயே அந்த நோக்குத் தென்பட்டது. தமிழகத்துப் புனைகதை வளர்ச்சியில் 1960களில் ஏற்பட்ட பொருள் விரிவுக்கான காரணத்தையும் இத்தகைய ஒரு பின்னணியிலேயே விளங்கிக் கொள்ளலாம். ஜெயகாந்தன், செல்வராஜ், சின்னப்பாரதி முதலியோரும், இவர்களுக்குச் சற்றுப் பின் வந்த சமுத்திரம் முதலியோரும் தமிழகத்தின் சுதந்திரத்திற்குப் பின்னர் ஏற்பட்ட சமூக ஜனநாயக விஸ்தரிப்புக்கான இலக்கிய உதாரணங்களாவர்.
வர்க்க உணர்வுடன் தான் வரலாறு (எழுதப்படத்) தொடங்குகின்றது என்பது மார்க்சின் முக்கிய கருத்துக்களில் ஒன்று. மலையகம் பற்றித் தமிழில் வரும் எழுத்துக்களுக்கும் இது பொருந்தும், மலையகத்தின் கல்வி வளர்ச்சி ஏற்படத் தொடங்கி அந்த அமைப்பினுாடாக ஆக்கியற் திறமைசாலிகள் வரத்தொடங்கவே மலையக இலக்கியம், மலையகச் சமூகத்தை விடயி நோக்காகப் பார்க்கத் தொடங்கியது. இந்த வளர்ச்சிப் போக்கினை என். எஸ். எம். ராமையா, தெளிவத்தை ஜோசப் ஆகியோரிடத்துக் காணலாம். மலையகத்தின் பண்பாடு பற்றிய விடயி நோக்கான பார்வை, அச்சமூகத்தைப் புறநோக்காகப் பார்த்தமை ஆங்கிலத்திலேயே மிக மிகக் குறைவாக இருக்கும் பொழுது, தமிழில் அத்தகைய எழுத்துக்கள் எப்படித் தோன்ற முடியும்? நமது சமூகங்களிலுள்ள எழுத்தறிவுடையோர் மட்டத்தில், அதாவது எழுத வாசிக்கத் தெரிந்தோர் மட்டத்தில் நமது சமூகம் பற்றிய விடயி நோக்கைப் பரப்புவதற்கு நமது மொழியிலேயே அது பற்றி எழுதுவது அவசியமாகிறது. இந்த ஒரு முக்கியமான உந்துதல் காரணமாகவே இந்த ஆய்வு தமிழிலேயே மேற்கொள்ளப்படுகின்றது.
நமது சமூகம் பற்றிய தெளிவான பார்வை நம்மிடத்தேயில்லையெனில், நமது சமூகத்தில் எவ்வித முன்னேற்றங்களையும் நாம் உண்டாக்கி விட முடியாது
இக்கட்டத்தில் மொழியும் சமூகமும் பற்றிய ஓர் உண்மையினை மீள நினைவுறுத்திக் கொள்ளல் பொருத்தமானதாகும். "உனது மொழியின் ஆற்றலுக்கு அப்பால் உன்னாலே சிந்திக்க முடியாது; உனது சிந்தனையின் பரப்புக்கும் வளர்ச்சிக்கும் ஏற்பவே உனது (சிந்தனை) மொழியும் வளரும்”
16

IV
புலையகத்தின் அச்சாணியாகவுள்ள பெருந்தோட்டத் தமிழரின் இல்லாமைகளைப் புரிந்து கொள்வதற்கும், அந்த இல்லாமைகளிடையே அவர்கள் எப்படி ஆாழ்ந்து வந்துள்ளனர், வாழ்ந்து வருகின்றனர் என்பதைப் புரிந்து கொள்வதற்கும் அவர்கள் சமூக ஒழுங்கமைப்பு, பண்பாட்டமைவு பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும். அதுவும் அவர்கள் மொழியிலேயே அந்த "எழுத்து” இருப்பின் அவர்களிடத்து அப்பிரச்சினைகள் பற்றிய பிரஞ்ஞை ஏற்படுவதற்கான சூழல் ஏற்படும். இந்நிலையில் பண்பாடு பற்றிய ஒரு வரைவிலக்கணத்தை ஏற்றுக் ஒகாள்ளல் அவசியமாகின்றது. பண்பாடு என்பது குறிப்பிட்ட ஒரு மக்கட் கூட்டம் தனது சமுக, வரலாற்று வளர்ச்சியினூடாகத் தோற்றுவித்துக் கொண்ட பெளதிகப் பொருட்கள், ஆத்மார்த்த கருத்துக்கள், மத நடைமுறைகள், சமுகப் பெறுமானங்கள், ஆகியவற்றினதும் தொகுதியாகும். பண்பாடு என்பது ஒரு கூட்டத்தினரின் தொழில்நுட்ப வளர்ச்சி நிலை, உற்பத்தி முறைமை, உற்பத்தி உறவுகள், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், க்லைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் தொகுதியாகும்.
பண்பாடு என்பது வெளிப்பார்வைக்கு ஒரு நடத்தை முறையாகவே தோன்றினாலும், உண்மையில் அது ஓர் அறிகை முறைமையே. பண்பாடு என்பது அந்த மக்கட் கூட்டத்தினரிடையேயுள்ள சகலரும் பகிர்ந்து கொள்ளும் கருத்துக்கள், நடைமுறை உத்திகள், வழிநடத்து முறைமைகள் ஆகியனவாகும். அதாவது உண்மையில் பண்பாடு என்பது ஒரு குறிப்பிட்ட குழுமத்திடையே அதன் அங்கத்தவர்கள் கொள்ளும் அர்த்தங்களுக்கான சூழமைவுகளைக் கொண்டதாகும். பண்பாடு மனிதர்களைப் பக்குவப்படுத்துவது, ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறைக்கு அந்தக் குழுமத்தின் மக்களை இணைய வைப்பது. எனவே ப்ண்பாட்டை அறிவதன் மூலம் நாம்:
(s) அவர்கள் வாழ்க்கை எவ்வாறு ஒழுங்கமைக்கப் பட்டுள்ளது என்பதையும். (ஆ) அந்தப் பெளதீக எண்ணக்கரு நிலைப்பட்ட ஒழுங்கமைப்பு அவர்களிடையே சமூக மாற்றம் பற்றியும் அந்த மாற்றத்தை (மாற்றங்களை) ஏற்றுக் கொள்வது பற்றியும் ஏற்படும் நிலைப்பாடுகளுக்கு எவ்வாறு காரணமாக அமைகின்றது என்பதையும், (a) அவர்கள் தங்களை எவ்வாறு பார்க்கிறார்கள், மற்றவர்களை எவ்வாறு
St. பார்க்கிறார்கள் என்பதையும் (ஈ) நடைபெறும் மாற்றங்கள் யாவை (அந்த மாற்றங்களின் அளவும் அவை ஏற்படுத்தும் மனநிலை மாற்றங்கள் யாவை) என்பதையும் அறிந்து கொள்ளலாம். இத்தகைய ஓர் அறிகை மூலமே அந்த மக்களின் வாழ்க்கையில் மதம், மொழி, பண்பாடு ஆகியன பெறும் இடத்தை, அவை வகிக்கும் பங்கை, அறிந்து கொள்ளலாம்.
17

Page 11
மலையகத்தின் பெருந்தோட்டத் தமிழரைப் பொறுத்தவரையில் அவர்களுடைய மனப்பதிவுகள், மதப் பெறுமானங்கள், வாழ்க்கை நோக்கு, மொழியுணர்ச்சி போன்றவற்றை அறிந்து கொள்ளாமல், அவர்களது இல்லாமைகளைப் போக்குவதற்கு எடுக்கப்பெறும் நடவடிக்கைகளின் வன்மையை அறிந்துக் கொள்ள முடியாது. மலையகப் பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்க்கை முறைமை, வாழ்க்கை நோக்குப் பற்றியறிந்து கொள்வதற்கு, அவர்களது பண்பாட்டில் இடம்பெறும் கீழ்க்காணும் விடயங்கள் பற்றிய விவரமான அறிவு அத்தியாவசியமாகும்.
(l) அந்தச் சமூகத்தின் தனித்துவமான பண்புகளை எடுத்துக் காட்டும்
அதன் கலைவெளிப்பாடுகள் பற்றிய அறிவு
(அ) வாய்மொழி நிலைப்பட்டவை -ஐதீகங்கள், கதைகள், பாடல்கள்,
(ஆ) இசை மரபுவழியானது, நவீனமானது. இவையிரண்டும் ஒன்றுடன்
ஒன்று ஊடாடும் முறைமை.
(இ) நடனம் -மரபுவழியானது, நவீனமானது இவையிரண்டும் ஒன்று
ஊடாடும் முறைமை
(ஈ) நாடகம் மரபுவழியானது, நவீனமானது இவையிரண்டும்
ஒன்றுடன்ஒன்று ஊடாடும் முறைமை.
(உ) இலக்கியம்
(ஊ) ஓவியம் முதலான கட்புலக் கலைகள்
(2) மதம்
(அ) வழிபாடு - வீட்டு மட்டம், சாதி மட்டம், பொது மட்டம்
(ஆ) வழிபடப்பெறும் தெய்வங்கள், வழிபடு முறைகளி. தெய்வங்கள் வகுத்து நோக்கப்படும் முறைமை (நல்லதெய்வம், துர்த்தேவதை ஆகிய கோட்பாடுகள்)
(இ) விதிமுறையான கோயில்கள் - கோயில் ஒழுங்கமைப்பு, பூசை
விவரங்கள், திருவிழாக்கள்
(ஈ) கிறிஸ்தவ தேவாலயங்கள் - கிறிஸ்தவப் பிரிவுகள், விழாக்கள்
பூசை விபரங்கள், திருச்சபையின் ஒழுங்கமைப்பு
(உ) மதத்தொடர்புகளும் அவற்றுக்கான தேவைகளும் ஹிந்து
கிறிஸ்தவ, ஹிந்து - பெளத்த, ஹிந்து -இஸ்லாம்
(ஊ) வாழ்க்கைச் சடங்குகள் பிறப்பு, பக்குவப்படல், விவாகம், மரணம் பற்றிய சடங்குகள் (பால்வகுப்பும் (Gender)சடங்குகளும்)
(3) சாதியும் அதிகாரஅடுக்கு வரன்முறையமைப்பும்
(அ) சாதி பற்றிய பாரம்பரிய நியமங்கள் (ஆ) சாதி பற்றிய சமகால நிலை (இ) சாதிகளின் அதிகாரஅடுக்கு வரன்முறையமைப்பு
18

(4)
(Pኝ)
伦)
(7)
(8)
@)
(IO)
குடும்பம்
(அ) குடும்பம் பற்றிய எண்ணக்கரு மையக்குடும்பம், விஸ்தரிக்கப்பட்ட
குடும்பம்
(ஆ) குடும்பமும் திருமணமும்
(இ) திருமண முறைகள்
(ஈ) விவாக விலக்கும் வைதவியமும்
(உ) குழந்தைகள்
(ஊ) பால்வகுப்பும் குடும்பமும்
உணவு (அ) நாளாந்த உணவு
(ஆ) விசேட உணவு
(இ) வைபவ உணவு (ஈ) சமையல் முறையும் சமையற் பாண்டங்களும்
சுகாதாரமும் மருந்துவமும் (அ) நோய் பற்றிய எண்ணக்கரு (ஆ) பாரம்பரிய மருந்துகள் (இ) மதமும் மருந்தும் (ஈ) நவீன மருத்துவம்
வதிவிடம் (அ) வதிவிட வகைகள் (ஆ) வதிவிடமொன்றினுள் " ஒழுங்கு" பற்றிய எண்ணக்கரு
அணிகலன்கள் (அ) பால்வகுப்பும் நகைகளும்
(அ) பால்வகுப்பும் ஆடைகளும் (ஆ) அன்றாட விசேட, வைபவ ஆடைகள் (இ) ஆடை வகைகள்
(ஈ) ஆடையும் சமூக ஒழுங்கமைப்பும்
விளையாட்டுக்களும் பொழுது போக்குகளும் (அ) மரபுவழி வருபவை
(ஆ) நவீனமானவை (இ) பால் வகுப்பும் விளையாட்டும் பொழுது போக்கும்
ஆண்களுக்குரியவை, பெண்களுக்குரியவை.
19

Page 12
(11) இலட்சிய நியமங்கள்
(அ) பால் வகுப்புப் பற்றியவை (ஆ) அழகு பற்றியவை
(2) அறிவு பண்பாட்டுக் கையளிப்பு (அ) மரபுவழிக் கல்வி முறைமை (ஆ) இன்றைய பாடசாலை முறைமை (இ) பாடசாலையும் சமூகமும் (ஈ) கல்வியும் சமூக அசைவியக்கமும் (உ) பாரம்பரியத் தொழிற்பயிற்சிகள்
(3) வெகுசனத் தொடர்புச் சாதனங்களின் பங்கு
(அ) பத்திரிகை (ஆ) வானொலி
(இ) திரைப்படம் (ff) தொலைக்காட்சி
(14) இன்றைய அரசியல், சமுகவைபவங்களும் அவை கொண்டாடப்படும்
முறைகளும் அவற்றில் பாரம்பரியக் கலைகள் பெறும் இடம்
(15) பண்பாடும் மாற்றமும்
மாற்றங்களை இனங்கண்டு கொள்ளலும், அவைபற்றிய மனப்பதிவுகளும்
V
மலையக மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்தைத் தர ரீதியாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதற்காக மலையக இளஞ்சந்ததியினரின் கல்வி, சமூகநல முயற்சிகளில் பன்முகப்பாட்டையும், ஆழ, அகலவிரிவையும் ஏற்படுத்துவதைத் தனது குறிக்கோளாகக் கொண்டியங்கும் * உதயம் " நிறுவனம், மேற்கொள்ளவிரும்பிய முயற்சிகள் நாம் மேலே எடுத்துக்கூறிய பண்பாட்டுப் பகுப்பாய்வினை மேற்கொள்வது பற்றி ஊன்றிச் சித்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தின. மக்களின் முன்னேற்றம் என்பது அடிப்படையில் ஒரு கருத்துநிலைப் பிரச்சினையாகும். முன்னேற்றம் என்பது யாது? மலையகச் சூழலில் முன்னேற்றம் என்பது எவ்வெவற்றைச் சுட்டி நிற்கும். எந்த நிலையிலிருந்து எந்த நிலைக்கான முன்னேற்றம் என்பன கருத்து நிலைப்பட்ட(ideological) பிரச்சினைகளேயாகும். முன்னேற்றம் என்ற கருதுகோளின் அடிப்படையிலே தெளிவில்லாதிருப்பின், அந்த இலக்கு எய்தப்பட முடியாததாகி விடும் அத்துடன் முன்னேற்றம் என்பது அளவு ரீதியான பெளதீக மாற்றங்களால் உண்டாகும் தரரீதியான (மனோநிலை, வாழ்க்கை நோக்கு) மாற்றங்களைக்
20

குறித்து நிற்பதுடன் பொதுவாக மனிதனின் மானுடத் தன்மையின் வாய்ப்பான விகசிப்புக்கும் வெளிப்பாட்டுக்குமான வளர்ச்சியையும் குறிப்பதாகும். இந்த மாற்றங்களும், இந்த மாற்றங்கள் வழி வரும் மானுட விகச்சிப்புக்களும், பண்பாடு என்னும் தளத்தில் நிலைகொண்டவையாகும். இவையாவும் ஒரு பண்பாட்டினுடாக வந்து, அந்தப் பண்பாட்டின் உயர்வுக்கு உதவுவனவாக இருக்கும்.
அரசியல், பொருளாதார உரிமை மறுதலிப்புக்களால் நீண்ட காலம் வளர்ச்சியையே அறியாதிருந்த பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகத்தின் தனித்துவப் பேணுகைக்கும், முன்னேற்றச் சாத்தியப் பாடுகளுக்கும் இந்தச் சமூகத்தின் பண்பாடு எந்த அளவுக்கு உதவியுள்ளது, உதவும் என்பதை அறிவது இந்தச் சமூகத்தினை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முக்கிய தடயமாகும். இவ்வாறு நோக்கும் போது தான் பண்பாடு (culture)என்பது, கருத்துநிலையுடன் (ideology)மிக நெருங்கிய தொடர்புடையது என்பது தெரியவரும். கருத்துநிலை என்பது யாது என்பதை ஜேம்ஸ் கிளக்மன் என்பவர் விளக்கியுள்ளார்.
"சமூக ஊடாட்டம் (அதாவது சமூகத்தினுள் ஏற்படும் உறவுப்பரிமாறல்கள்) வளரத் தொடங்க, அந்தச் சமுகத்தில் வாழும் மனிதர்கள் உலகம் பற்றியும், தங்களது சொந்தச் சமுக வாழ்க்கை பற்றியும், தெய்வம், சொத்து, அறம், நீதி ஆகியன பற்றியும் எண்ணக் கருத்துக்களையும் நோக்குக்களையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இவற்றினடியாகச் சமுகம் பற்றியும் அரசியல், சட்ட, மத, கலை, தத்துவநோக்குப் பற்றியும் கருத்துருவமான ஒரு பொதுவான எண்ண அமைப்பு வளரத் தொடங்குகின்றது. அந்த எண்ண அமைப்புத் தான் "கருத்துநிலை” என்று குறிப்பிடப்படுவதாகும். மனிதர்கள் தம்முன்னேயும் புறத்தேயுமிருக்கும் இயற்கைச் சூழலோடுரற்படுத்திக் கொள்ளும் செயல்வன்மையுடைய உறவுகளா லேயே மேற்குறிப்பிட்ட நோக்குகளும் எண்ண அமைப்புக்களும் ஏற்படுகின்றன."
கருத்துநிலை என்பது சமூகங்களின் வரலாற்று நிலைப்பட்ட சீவியத்துக்கு முக்கியமானது என்று அல்துசர் என்னும் சிந்தனையாளர் வற்புறுத்தியுள்ளார். பணர்பாடு பற்றி ஏற்கனவே தரப்பட்டுள்ள வரைவிலக்கணத்தை தோக்கினால், பண்பாடு என்பது கருத்துநிலை தோன்றுவதற்கான தளமாகவிருக்கும் உண்மை தெரியவரும். இன்னும் சற்று ஊன்றி நோக்குவோமேயானால், எந்த ஒரு பண்பாட்டுக்கும் அதற்குரிய அசஅமைப்பையும் முழுமையையும் தந்து, அதனை உயிர்ப்புள்ள ஒன்றாக்குவது கருத்துநிலையே என்பது தெளிவாகும். நாம் இது வரை பார்த்தவற்றிலிருந்து பண்பாடு என்பது வாழ்க்கை முறையினடியாக வ்ருவதென்பதும், கருத்துநிலை என்பது பண்பாட்டைத் தளமாகக் கொண்டது
21

Page 13
என்பதும் கருத்துநிலையே மனிதர்களின் மனோபாவங்களையும், வாழ்க்கை நோக்குக்களையும் தீர்மானிக்கின்றது என்பதும் தெரியவரும். இந்த அறிவுப்பின்புலத்தில், மலையகத் தமிழரை நோக்குவோமேயானால் அவர்களது தன்மைகளையும், நிலைப்பாடுகளையும் விளங்கிக் கொள்வதற்கு, அவர்களது பண்பாடு பற்றியும் அவர்களிடையே நிலவும் கருத்துநிலை பற்றியும் தெளிவான அறிவு இருத்தல் வேண்டுமென்பது தெளிவாகும்.
பண்பாட்டு நடைமுறைகள் பற்றியும் அந்த நடைமுறைகளுடன் காரண காரியத் தொடர்புடைய கருத்து நிலை பற்றியும் தெளிவான ஒரு கருத்தினை ஏற்படுத்திக் கொள்வதற்கு வேண்டிய முதல் தேவை, அந்த பண்பாட்டு நடைமுறைகள் பற்றிய ஒழுங்கமைப்புள்ள ஒரு விவரணமாகும். இந்த அடிப்படையில் முதலில் மலையகப் பண்பாட்டைப் பண்பாட்டாய்வியல் நியமங்களுக்கேற்ற முறையில், விவரித்தல் முதற் கடமையாகின்றது. விவரணத் தெளிவு இல்லையேல் விமர்சனம் தோன்ற முடியாது. இந்த எண்ணத்தின் அடிப்படையிலேயே நாம் இப்பொழுது மேற்கொண்டுள்ள பெருந்தோட்டத் தமிழரின் பண்பாடும் கருத்துநிலையும் என்ற ஆய்வு உருவானது.
இந்த ஆய்வின் ஒழுங்கமைப்பு மூன்று கட்டங்களில் உருவாக்கப் பெற்றது. முதலாவது கட்டம் உதயம் நிறுவனத்தினர், பல்வேறு கருத்துப் பரிமாறல்களின் பின்னர், இந்த ஆய்வுத் திட்டத்தினை ஏற்றுக் கொண்டமையாகும். இந்த முதலாவது கட்டத்தில் பெருந் தோட்ட தமிழ் மக்களின் தோட்ட மட்ட வாழ்க்கையில் முக்கிய இடம் பெறும் மனிதர்கள், நிறுவனங்களுடன் உரையாடல் மேற்கொள்ளப்பட்டது. அந்த உரையாடல்களின் மூலமாகவே ஆய்வு ஒரு திட்டமாக்கப் பெற்றது.
இரண்டாவது கட்டம் ஆய்வுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவற்கான ஆள்வலுவைப் பெற்றுக்கொள்வதற்கான தேடலாக அமைந்தது. இக்கட்டத்தில் பெருந்தோட்டத் தமிழர்களின் வாழ்க்கை பற்றிய நிபுணத்துவ அறிவு கொண்ட பலருடன் உரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வுத் திட்ட்ம் எதிர்நோக்கும் சவால்கள் பற்றி அறிந்து கொள்வதற்கும் இக்கருத்துப் பரிமாறல்கள் உதவின. இ ந்த உரையாடல்களிற் பங்கு கொண்டோரில் முக்கியமானவர்கள் பேராதனைப் பல்கலைக்கழகப் பொருளியல் துறை முதுநிலை விரிவுரையாளர் திரு. மு. சின்னத்தம்பி, திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சின் திட்டமிடற் பிரதிப் பணிப்பாளர் திரு. எம். வாமதேவன், புனைகதை எழுத்தாளர் திரு. தெளிவத்தை ஜோசப், வீரகேசரி பிரதி ஆசிரியர் திரு. வி. தேவராஜ், பாம் நிறுவனத்தைச் சேர்ந்த செல்வி ராணி, உதயம் நிறுவனத்தைச் சேர்ந்த திரு. எம். இராதாகிருஷ்ணன் ஆகியோராவர்.
இந்த உரையாடல்களின் பொழுது மலையகப் பண்பாடு என்று நாம் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளும் பண்பாட்டுக் கோலத்தினுள்ளேயுள்ள
22

பன்முகப்பாடு தெரிய வந்தது. எந்த பண்பாட்டு ஆய்விலும் கவனிக்கப்பட வேண்டிய ஆக்கக்கூறுகள், மக்கள் மட்டங்கள் ஆதியன மலையகப் பண்பாட்டிலும் மிக உன்னிப்பாகவே நோக்கப்பட வேண்டுமென்பதும், மேலும் மதவேறுபாடுகளும் இந்து, கிறிஸ்தவ அநுட்டான வேறுபாடுகள், பெளத்தத்தின் தாக்கம் ஆகியன) நன்கு கவனிக்கப்பட வேண்டுமென்பதும் புலனாயிற்று. இந்த உரையாடல்களின் பொழுது வெளிவந்த ஒரு பேருண்மை மலையகத்தின் தொடக்க கால தமிழ் நூல்கள் இப்பொழுது இல்லாதுள்ளமையாகும். நடேசய்யர் காலத்திலும் அதற்கு முன்னரும் வெளிவந்த பிரசுரங்கள் பற்றிய தரவுகள் பேணப்பட வேண்டியன.
இவ்வாய்வில் ஈடுபட்டுள்ளவன் என்ற வகையில் ஒரு முக்கிய வேண்டுகோளை இக்கட்டத்தில் முன்வைக்க விரும்புகிறேன். மலையகத்தினரின் எழுத்துக்களையும் மலையகம் பற்றிய எழுத்துக்களையும் கொண்ட ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு நூல் நிலையம் ஒன்று தொடக்கப்பெறுதல் மிக அவசியமாகும். அந்தப் பணியில் முதல் முயற்சியாக தனியார் சேகரிப்புக்களாகவுள்ள நூல்களைப் பெற்று அந்நூல் நிலையத்தைத் தொடங்கி வைக்கலாம். காலஞ்சென்ற சி.வி. வேலுப்பிள்ளை அவர்களின் நூல் நிலையம் பேணப்பட வேண்டிய ஒன்றாகும்.
ஆய்வுக்கான தரவுப் பரப்பு பற்றி அறிந்த இரண்டாம் கட்டத்தின் பின்னர், மூன்றாவது கட்டமாக ஆராய்ச்சியை மேற்கொள்வதற்கான புலமை ஒழுங்கமைப்பைச் செய்து கொண்டோம். எந்த ஒரு ஆய்வின் சிறப்பும் அது மேற்கொள்ளப்படும் முறைமையின் செம்மை கொண்டே தீர்மானிக்கப்படுவதாகும். -aնe! பற்றிய ஆர்வமும் ஆய்வொழுக்குகளுக்குக் கட்டுப்படும் பயிற்சியுமின்றி ஆய்வு சிறத்தல் முடியாது. ஆயினும் பெருந்தோட்டத் தமிழர் வாழ்க்கை போன்ற ஒரு விடயம் சம்பந்தமான அதுவும் அவர்களின் பண்பாட்டாய்வு சம்பந்தமான முக்கிய பேராய்வுகள் எதுவுமில்லாதபடியினாலும் அப்பண்பாட்டின் சகல அம்சங்களையும் இயன்ற அளவுக்கு ஒருங்கு சேர்க்க வேண்டுமென்பதாலும் இந்த ஆய்வினை இரு நிலைகளில் மேற்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது. ஆய்வின் மையக்குழுவாக இத்துறை ஆராய்ச்சிகளில் ஏற்கனவே ஈடுபட்டுள்ள கெளரி பழனியப்பனையும், மு. சின்னத்தம்பியையும், திரு. சின்னத்தம்பி மூலமாக இவ்விடயத்தில் ஈடுபட்டுள்ள இளம் விரிவுரையாளர்களையும் ஏற்கனவே ஆய்வுப் பரிச்சயமுள்ள பட்டதாரிகளையும் சேர்த்துக் கொள்வதென்றும் அதேவேளையில் மலையக வாழ்க்கை மரபு பற்றிய ஆய்வினைப் பெற்றுள்ளவர்களது சேவைகளை நன்கு பயன்படுத்த வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஏற்கனவே பெருந்தோட்டத் தொழிலாளரிடையே நிலவும் குடும்ப அமைப்புபற்றி ஆய்வு மேற்கொண்டிருந்த செல்வி கெளரி பழனியப்பன், ஆய்வு இணைப்பாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பேராதனைப் பல்கலைக்
23

Page 14
கழகத்தில் விரிவுரையாளர்களாகக் கடமையாற்றும் மலையகத்தைச் சேர்ந்த இளம் ஆராய்ச்சியாளரைப் பயன்படுத்துவதென்றும் திரு. மு. சின்னத்தம்பியின் வழிகாட்டலில் அவ் இளம் விரிவுரையாளர்கள் செயற்படுவர் என்றும், ஆய்விணைப்பாளர் திரு. சின்னத்தம்பியின் ஆலோசனையுடன் ஆய்வொழுங்குகளை நடத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டு 1991 ஒகஸ்டில் கள ஆய்வு தொடங்கப்பெற்றது. 1991 ஒக்டோபரில் நடத்தப்பெற்ற ஆய்வு மதிப்பீட்டுக் கூட்டத்தில் அதுவரை ஏற்பட்ட அநுபவத்தின் அடிப்படையில் ஆராய்ச்சி இணைப்பாளர் எடுத்துக்கூறிய ஆலோசனைக்கியைய இந்த ஆய்வினை இரு கட்டங்களிற் செய்வதே பொருத்தமானது என்று தீர்மானிக்கப்பட்டது. அந்தத் தீர்மானத்தின்படிக்கு, முதலாவது கட்டத்தில் மதப்பயில்வுகள், கலைப் பயில்வுகளை உள்ளடக்கிய பண்பாட்டுப் பின்புலம் பற்றிய ஆய்வினைச் செய்வதென்றும் அதன் பின்னர் இரண்டாம் கட்டமாகச் சமூக நிறுவன அமைப்புக்கள் பற்றிய ஆய்வை குடும்பம், திருமணம், சமூக உறவுகள் முதலியன பற்றிய ஆய்வை மேற்கொள்வதென்றும் தீர்மாணிக்கப்பட்டது.
அந்நிலையில் முதலாம் கட்டத்தில் பின்வரும் விடயங்கள் பற்றிய தரவுகளைக் கள ஆய்வு வழியாகத் திரட்டிக் கொள்வதென்று தீர்மானிக்கப்பட்டது.
(1) வாய்மொழிப் பாரம்பரியம்
(1) ஐதீகங்கள், கதைகள் (i) நாட்டார் பாடல்கள் (2) இசைக் கருவிகள் (3) மரபுவழி நாடகம் (கூத்து) (4) அச்சிடப்பெற்ற இலக்கியங்கள்
(1) மரபு வழியானவை (i) நவீன வழியானவை (5) ஒவியம் (6) சிற்பம் (7) கைப்பணிப்பொருட்கள் தளபாடங்கள் பற்றிய தரவுகள் (8) கரணங்கள்
இந்துக்கள் (1) வீட்டு மட்டம்
(2) தோட்ட மட்டம்
கோயில் சார்ந்தன கோயில் சாராதன கிறிஸ்தவர்கள் (1) தோட்ட மட்டத்தில் நிலவும் சமூக
ஒழுங்கு முறைகள் (2) சடங்குகள் அதே தீர்மானத்துக்கியைய நடந்த துரிதமான ஆய்வுச் செயற்பாடு மிக்க பயனைத் தருவதாக அமைந்தது. அக்கூட்டத்தில் கிடைக்கப் பெற்ற, பெறப்பட்ட
24

தரவுகளையும் கள ஆய்வு அவதானிப்புக்களையும் . பின்வரும் ஆய்வுத் தலைப்புக்களில் அமைத்து அவை ஒவ்வொன்றும் பற்றிக் கட்டுரை தயாரிப்பது என்றும், தயாரிக்கப்படும் கட்டுரைகள், கருத்தரங்கொன்றிலே சமர்ப்பிக்கப்பெற்று விவாதிக்கப்படல் வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டது.
முதலாவது - குடும்ப, குல தோட்ட மட்டங்களில் நிலவும் வழிபாடுகளும் கரணங்களும் (தோட்டமட்டவழிபாடுகள் என்பவை பெருந்தோட்டச் செய்கையோடும் தோட்டத்தின் நடைமுறை வாழ்க்கையோடும் சம்பந்தப் ப்ட்டனவாகும்)
இரண்டாவது- தோட்ட வாழ்க்கைமட்டத்துக்கு அப்பாலான வழிபாடுகளும் கரணங்களும் இதில் தோட்டங்களிலும் தோட்டங்களை அண்டிய நகரங்களிலும் காணப்படும் "விதிமுறை” ஒழுங்கமைதி கொண்ட வழிபாடுகளும் கரணங்களும் இடம்பெறும். இந்த வழிபாட்டுமையங்கள் தோட்டத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு அப்பாலானவையாக இருக்கும்.
மூன்றாவது - பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பண்பாட்டு நாள்காட்டி Calender) ஒன்றைத் தயாரிப்பதற்கான தரவுகளைத் தேடுதல். ஒரு வருட காலத்தில் எந்தெந்த வைபவங்கள் முக்கியமானவை. அவை நிகழும் இடங்கள் என்பன பற்றிய தரவுகள்.
நான்காவது - கரணங்களிலும் வழிபாடுகளிலும் பெண்கள் பெறும் இடம்.
ஐந்தாவது - பெருந்தோட்ட தமிழ்த் தொழிலாளரிடையே வாழ்க்கைச் சடங்குகள் (பிறப்பு, மூப்பெய்தல், திருமணம், இறப்பு பற்றிய சடங்குகள்)
ஆறாவது - இவர்களிடத்துக் காணப்படும் கலை, கைப்பணிப் பொருட்கள்
வாய்மொழி மரபுகள் பற்றிச் சேகரிக்கப்பட்ட தகவல்கள், மலையகத்தின் பொதுவான இலக்கியப் பாரம்பரியத்துடன் இணைத்து நோக்கப்பட வேண்டியவையாகும். மலையகத்தின் முழுமையான இலக்கியப் பாரம்பரியத்தைச் செம்மையுற எழுதவதற்கான போதிய தரவுகளை நாம் திரட்டிக்கொள்ளவில்லை என்பதால் இலக்கிய வளத்தைப்பற்றிய விவரணத்தைப் பின் போடுவது நல்லது என்று தீர்மானிக்கப்பட்டது.
VI
முதற்கட்ட ஆய்வின் மிக முக்கிய அம்சமாக அமைந்தது 1992 பெப்ரவரி 8, 9 ஆம் திகதிகளில் கண்டி, லேவல்லையில் ஒழுங்கு செய்யப்பட்ட இரண்டு நாள்
25

Page 15
கருத்தரங்காகும். இக்கருத்தரங்கின் நோக்கம் அதுவரை செய்யப்பட்ட ஆய்வினை மலையக மக்களின் கலை, பண்பாடு, வாழ்க்கை பற்றிய துறைகளிற் சிறப்பு ஈடுபாடு கொண்டோர் முன் எடுத்துக்கூறி ஆய்வின் தரம், நம்பகத்தன்மை, ஆகியனவற்றை மதிப்பிடுவதும் தொடர்ந்து எவ்வெவ் அம்சங்களிற் கவனம் செலுத்துவது என்பது பற்றி அறிந்து கொள்வதுமாக இருந்தது. ஆய்வில் ஈடுபட்டிருந்த சகலரும் பங்கு கொண்ட இக்கருத்தரங்கிற்குத் திருவாளர்கள் சாரல்நாடன், அந்தனிஜீவா, மேமன்கவி, பூபாலன், குறிஞ்சித் தென்னவன், மாத்தளை வடிவேலன் ஏ. வி. பி. கோமஸ், எம். வாமதேவன், திருமதி நடராசா உட்பட பல முக்கியஸ்தர்கள் வந்திருந்தனர். கட்டுரைகள் ஒவ்வொன்றும் வாசிக்கப்பெற்றதன் பின்னர் பார்வையாளர்கள் தங்கள் கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
குறிப்புரை வழங்கியோர் கட்டுரைகளிற் கூறப்பட்ட தரவுகளை மறுக்காது. மேலதிக தரவுகளை எடுத்துக்கூறினர். கட்டுரைகள் பற்றிய கலந்துரையாடல்களின் பொழுது எடுத்துக் கூறப்பட்ட விமர்சனங்களை உள்வாங்கிக் கட்டுரைகள் ஒவ்வொன்றும் மீள எழுதப்பட்டன. மீள எழுதப்படுவனவற்றைத் திரு. மு. சின்னத்தம்பி வழிநடத்தினர். கருத்தரங்கிற் கூறப்பட்ட கருத்துக்கள் தற்போது நிலவும் நிலைமையை மிகத் துல்லியமாக எடுத்து விளக்கின. அவற்றுள் முக்கியமான சிலவற்றை இங்கு குறிப்பிடல் பொருத்தமானதாகவிருக்கும்.
அ. பெளத்தத்துடன் ஏற்படும் ஊடாட்டம், புத்தரைப் "பெருமாள்சாமி”
என்று வழிபடல்
ஆ. ஒரு மட்டத்திலுள்ள தெய்வம் (குடும்ப, குல, தோட்ட மட்டங்கள்) இன்னொரு மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படல், குல தெய்வங்கள்
தோட்ட மட்டத்தில் வழிபடப்படல்
இ. பெருந்தோட்ட இந்து வழிபாட்டு முறைமைகளில் ஏற்பட்டு வரும்
சமஸ்கிருத நெறிப்பாடு
F. கிறிஸ்தவ வணக்க முறைகள் இந்து முறைமைகளின் தன்மையில் அமைக்கப்பெற்றுப் பண்பாட்டு மயப்படுத்தப்பட்டனவாகப்பரவல்,
உ. வளர்ந்து வரும் காளி வழிபாடு (காளி, மாரியம்மன், வழிபாடு
அண்மைக்காலத்தில் தமிழகத்திலும் வளர்ந்துள்ளது)
ஊ. பூசாரி முறைமையின் பண்புகள்
எ. மத பண்பாட்டு நடவடிக்கைகளுக்கும் தொழிற் சங்க
நடவடிக்கைகளுக்கும் உள்ள ஊடாட்டம்
26

இவற்றைவிடக் கருத்தரங்கின் பொழுது நடந்த வாத விவாதங்கள் மூலமாகச் சில முக்கிய பண்பாட்டு வரலாற்றுண்மைகள் துல்லியமாக மேற் கிளம்பின. உதாரணமாக,
(l) பிரித்தானியர் தேயிலைக் கம்பனிகளை நடத்தியபோது தோட்டத் தொழிலாளர்களின் குல மட்ட வழிபாடுகளை போட்டியுணர்வு முறையில் ஊக்கப்படுத்தி வந்தனர் என்பதும்
(2) தோட்டங்கள் ஆங்கிலேயர் கைகளிலிருந்து பிள்ளைமார் செட்டியார்கள் கைக்கு மாறிய பொழுது, தோட்டப் பொது வழிபாட்டிடமாகப் பிள்ளையார் கோயில்கள் ஏற்பட்டன என்பதும்
(3) இலங்கைப் பெருந்தோட்டத்தமிழர் மதமரபில் வைஷ்ணவம் ஒரு முக்கியமான இடத்தைப் பெறுகின்றது என்பதும் மிகமுக்கியமான சமூக பண்பாட்டுத் தரவுகளாகும்.
கருத்தரங்கின் பொழுது பின்வரும் கட்டுரைகளே விவாதிக்கப்பட்டன.
1. வாழ்க்கைச் சடங்குகளும், கரணப்பயில்வுகளும்
குடும்ப, குல தோட்ட மட்ட வழிபாடுகள்
குடும்ப மட்ட வழிபாட்டிற் பெண்கள்
தோட்ட நகர் மட்டக் கோயில்கள்
ஆடை அணிகள்
கலை, கைவினைப் பொருட்கள்.
இந்தக் கட்டுரைகள் பற்றிய கருத்தாடல் நடந்த முறையினூடாகவே, கிறிஸ்தவம் புற்றிய கட்டுரை எழுதப்பட வேண்டுமென்று தீர்மானிக்கப்பெற்றது. கிறிஸ்தவம் என்பது றோமன் கத்தோலிக்க மரபையும், புரட்டஸ்தாந்த மரபையும் உள்ளடக்கியது. அந்த இருமரபுகள் பற்றியும் கட்டுரைகள் எழுதப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதெனினும், பிரசுரத்திற்கு வந்து சேர்ந்தது திரு. ஏ. வி. பி கோமஸ் எழுதிய கத்தோலிக்கம் பற்றிய குறிப்பேயாகும். ஆற்றுகைக்கலைகள் புற்றிய கட்டுரை கருத்தரங்கில் வாசிக்கப் பெறவில்லை. ஆனால் ஆய்வின் முதற்கட்ட நிறைவுக்குப் பெருந்தோட்ட மக்களின் ஆற்றுகைக்கலைகள் பற்றிய ஆட்டுரை அவசியமெனக் கருதப்பட்டமையினால் திரு மாத்தளை வடிவேலன் அவர்கள் எழுதியுதவிய கட்டுரை இங்கு சேர்த்துக் கொள்ளப்பட்டது. வ்விடயம் பற்றி அவர் ஏற்கனவே சிறு நூலொன்றையும் வெளியிட்டுள்ளமையால் இக்கட்டுரை, இத்தொகுதியில் வரும் மற்றைய கட்டுரைகள் போன்று ஆடுத்துக்கொண்ட பொருள்பற்றிய முனைப்பான நோக்கினைத் தரும் வகையில்
மைக்கப்பட்டுள்ளது.
27

Page 16
ஆற்றுகைக்கலைகளை வீடியோ பதிவு செய்வதற்கான நிதிவசதியிருந்தும், முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் அப்பணி கைகூடாமலேயே போய் விட்டது. இந்த ஆய்வின் மொத்தமான நோக்குக்கு இணையத் தயாரிக்கப்படாது போகுமேயானால் அந்த வீடியோ பதிவினாற் பிரயோசனம் இல்லாது போய்விடும் என்பதனால் முதற்கட்டத்தில் அந்தப் பொறுப்பினை நாம் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. பெருந்தோட்டத் தமிழ்மக்களின் பண்பாட்டு ஆய்வுப் பின்புலத்திற் சொல்லப்பெறும் அவர்களது ஆற்றுகைக் கலைகள் பற்றிய வீடியோச்சித்திரம் அந்தக்கலைகள் எவ்வாறு இம் மக்களின் பண்பாட்டு வேர்களில் இருந்து மேற் கிளம்புகின்றதென்பதைத் துல்லியமாகக் காட்டல் வேண்டும். அந்த வீடியோப்பதிவு அதற்கேற்ற முறையில் திட்டமிடப் பெறல் வேண்டும். காமன் கூத்து ஆட்டம் ஒன்றினையோ அல்லது பொன்னர் சங்கர் ஆட்டமொன்றினையோ படம் பிடிப்பது அல்ல எமது நோக்கம். எமது நோக்கம் இவ்வாற்றுகைக்கலைகள் எவ்வாறு பெருந்தோட்டத்தமிழர்களின் பண்பாட்டுக் கண்ணாடிகளாக அமைகின்றன என்பதைச் சித்திரிப்பதேயாகும்.
ஆய்வின் முதற்கட்ட நிலையில் அதுபற்றிய கருத்துத் தெளிவுடனும், கலையாற்றலுடனும் பணிபுரியத்தக் கவர்களை ஒருங்கிணைத்துத் தொழிற்படுத்துவது நமக்குச் சிரமமாகவிருந்ததால் அப்பணியை நாம் மேற்கொள்ளவில்லை. மலையகக் கோயில்களில் கட்டடக்கலை பற்றிய கட்டுரையும் கருத்தரங்கிற் படிக்கப்பெறாதது. முதலில் கருத்தரங்கிற் கலந்து கொண்டும் பின்னர் ஆய்விணைப்புப் பணியை மேற்கொண்டும் உதவி புரிந்த கலாநிதி வேல்முருகு இதனை எழுதியுள்ளார். நூல் விவரப்பட்டியலும் கருத்தரங்கிற் சமர்ப்பிக்கப்படாதது. ஆனால் இத்தகைய ஒரு தொகுப்பு இடம் பெறுவது அவசியம் என்று உணரப்பட்டது. இங்கு இடம்பெறும் இப்பட்டியலை ஒரு “தேர்ந்த” பட்டியலாகவே கொள்ளல் வேண்டும். இதில் நிச்சயமாக நம்மிற் பலருக்குத் தெரிந்த பெருந்தோட்ட வாழ்க்கை பற்றிய எல்லா எழுத்துக்களும் இடம்பெறவில்லை. ஆயினும் இந்தத் தெரிவு நூற் பட்டியல் அமைக்கப்பட்டுள்ள முறைமை நூலாசிரியரின் தொழில் முறை நெறியினைப் பின்பற்றியிருப்பதால் சேகரிப்பு முறைமைக்கு வழிகாட்டியாக அமைகின்றது.
கருத்தரங்கில் நன்கு விவாதிக்கப்பெற்ற ஒரு கட்டுரை இத்தொகுப்பிலே இடம் பெறவில்லை. அது பெருந்தோட்டத் தமிழ் மக்களின் பண்பாட்டு நடைமுறைகளின் வருடாந்தச் சுழல் பற்றியதாகும். ஒவ்வொரு வருடத்திலும் வரும் ஒவ்வொரு மாதங்களிலும் எவ்வெப் பண்பாட்டு நடைமுறைகள் இடம்பெறுகின்றன என்பது பற்றி " பண்பாட்டு நாள்காட்டி" (Cultural Calender) எனும் தலைப்பில் வ. தேவராஜ் ஒரு கட்டுரை வாசித்தார். பண்பாட்டு நடவடிக்கைகளின் வருடாந்தச்சுழல்வு எனும் கருதுகோளின் முக்கியத்துவம் உணரப்பட்டபொழுது கருத்தரங்கு உறுப்பினர் அதுபற்றி சிரத்தை மிகுந்த கலந்துரையாடலில் ஈடுபட்டனர். பண்பாட்டு நடைமுறைகளில் தோட்டத்துக்குத் தோட்டம்,
28

பயிருக்குப்பயிர் ( தேயிலைத் தோட்டங்களில் ஒரு முறையும்), இறப்பர் தோட்டங்களில் இன்னொரு முறையும்) பிரதேசத்துக்குப் பிரதேசம் காணப்படும் வேறுபாடுகள் பற்றி இந்த அமர்வின்போது வற்புறுத்தப்பட்டது. பெருந்தோட்டத்துத் தமிழ் மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகளின் பொதுமையும், வேறுபாடுகளும் மேலே குறிப்பிட்ட விடயங்களில் மாத்திரமல்லாமல் அவர்கள் தமிழகத்தின் எவ்வெப்பிரதேசங்களிலிருந்து வந்தார்களோ அந்தப் பிரதேசத்தாக்கமும் பண்பாட்டு ஆய்விற் கணக்கெடுக்கப்படல் வேண்டும் என்ற உண்மை அந்தக் கட்டுரையைப் பற்றிய கலந்துரையாடலில் தெளிவாகிற்று. ஆனால் துரதிஷ்டவசமாக அந்தக்கட்டுரை, பிரசுரத்துக்குக்கென மீள எழுதப்படாததால் இங்கு இடம்பெறவில்லை.ஆயினும் இத்தொகுதியின் பின்னிணைப்பாக, மிகப் பருவரைவான ஒரு தொகுப்பினைத் தந்துள்ளோம்.
VI
கருத்தரங்கு நடந்தேறியதன் பின்னர் அதுவரை ஆய்வு இணைப்பாளராகவிருந்து வந்த செல்வி கெளரி பழனியப்பன், தமிழகம் செல்ல வேண்டி வந்தமையால் தமது பொறுப்பினைக் கையளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்பொழுது கலாநிதி வேல்முருகு அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டார். கருத்தரங்கின் பின்னர் கட்டுரைகள் மீள எழுதப்பட்ட பொழுது அவற்றை மேற்பார்வை செய்யும் பொறுப்பினைத் திரு. சின்னத்தம்பியும் கலாநிதி வேல்முருகுவும் ஏற்றுக் கொண்டனர். அவர்கள் இருவரும் மேற்கொண்ட அயரா முயற்சியின் விளைவாகவே இந்தக் கட்டுரைகள் ஒழுங்கமைப்பான ஒருங்கிணைப்பைப் பெற்றுள்ளன.
அடுத்து இத்தொகுதியில் இடம்பெறும் கட்டுரைகளின் அமைப்பு, தன்மை பற்றிக் குறிப்பிடுவது அவசியமாகின்றது. இத்தொகுதியில் இடம்பெறும் கட்டுரைகள் ஒவ்வொன்றும், மீளமைப்புச் செய்யப் பெற்றனவே. கையெழுத்துப் பிரதிகள் முதலில் ஆய்விணைப்பாளர்களாலும் பின்னர் ஆய்வு மேற்பார்வையாளராலும் வாசிக்கப்பெற்று கட்டுரையாளர்களுடன் கலந்தா லோசிக்கப்பட்டன. அந்த ஆலோசனைகளின் அடிப்படையில் கட்டுரைகள் மீள அமைக்கப் பெற்றன. திரு. கோமஸ், திரு. சிவம் ஆகியோரைத் தவிர்ந்தவர்கள் பல்கலைக்கழகத்தைச் சார்ந்தவர்களாகவே இருந்தமையினால் இந்தக் கலந்துரையாடல் சுலபமாயிற்று. ஆய்வின் முழுமைக்குத் தேவையான ஒருமுகப்பாடு வற்புறுத்தப்பட்ட அதேவேளையில் கட்டுரைகளை எழுதுவதற்கான ஓர் ஆய்வு வாய்ப்பாடு கட்டுரையாளர்கள் மீது திணிக்கப் பெறவில்லை. கட்டுரையாளர்களின் ஆய்வுத்தனித்துவங்கள் - பொருள் அமைப்பு, அவதானிப்புச் சக்தி, கொண்டு கூட்டும் வியாக்கியானத்திறன், மொழி நடை ஆகியன பேணப்படுவது பற்றி மிகுந்த சிரத்தை எடுத்துள்ளோம். குறிப்பாக ஒவ்வொருவரது மொழி நடையிலும் அதிக தலையீடு இருக்கவேயில்லை.
*
29

Page 17
இயன்றளவு செம்மைப்படுத்தல் நடந்துள்ளதே தவிர எவ்வித திணிப்புகளும் இடம்பெறவில்லை. ஒவ்வொருவருடைய ஆராய்ச்சி ஆளுமைகளையும் வளர்த்தெடுப்பதே ஆய்விணைப்பாளர்களினதும் எனதும் நோக்கமாக விருந்தது.
பதுளைப் பிரதேசத்தின் வாழ்க்கைமுறை பண்பாட்டு நடைமுறைகள் பற்றிப்பிரதேச அடிப்படையிலான ஒரு குறிப்பினைத் திரு.வ. தேவராஜ் அவர்கள் தந்திருந்தார். இத்தொகுதியிற் பிரதேசவாரியான முறையில் கட்டுரைகள் அமைக்கப்படவில்லையாதலால், கட்டுரைகள் மீளனழுதப்பட்ட இறுதிக்கட்டத்தில் அக்கட்டுரையில் காணப்பெற்ற சில தகவல்கள் மற்றக்கட்டுரைகளுள் உள்வாங்கப்பட்டன. கட்டுரைகளின் "சுயாதீனத்தன்மையை" வற்புறுத்திக்கூறும் அதே வேளையில் இக் கட்டுரைகளின் ஆய்வு நிலைத்தன்மைகளை இவற்றின் எடு கோள்களைப்பற்றி விவரிப்பது அவசியமாகிறது. அண்மைக்காலத்தில் பண்பாட்டு மானிடவியற்றுறை எழுத்துக்களின் மூலம் பற்றிய ஒரு கருத்துப் பெருத்த விவாதத்துக்கு உட்பட்டுள்ளது. பண்பாட்டு மானிடவியற்றுறை சமூகவியற்றுறை ஆய்வுகளை எழுதுபவரின் பின்புலம் கொண்டு இரண்டுவகையாகப் பிரிக்கலாம்.
1. அந்தப் பண்பாட்டுக்கு வெளியே உள்ளவர்கள் அந்தப் பண்பாடு பற்றி எழுதுவது.(உ + ம்) மேனாட்டார் தமது பண்பாடு பற்றி எழுதுவது
2. அந்தப் பண்பாட்டினுள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
அந்தப் பண்பாடு பற்றி எழுதுவது
இந்த இரண்டு எழுத்துக்களிலும் கணிசமான வேறுபாடுகள் உள்ளன. புற ஆய்வாளருக்கும் "அக” ஆய்வாளருக்கும் இடையே நோக்கு வேறுபாடுகள் பல ஏற்படும். ஒரு பண்பாட்டினுள்ளிருந்து எழுதும் ஆய்வாளர்கள் (Writing from within) தாம் எழுதுவன பற்றிப் "புற” ஆய்வாளர்கள் போன்று விடயி நோக்கான விவரணங்களில் ஈடுபாடு குறைவாகவே இருக்கும். இந்த "அக” ஆய்வாளர்கள் சில எடுகோள்களை ஏற்கனவே ஏற்றுக் கொண்டவர்களாக, அதனால் அந்த எடுகோள்களைத் தமது தளமாகக் கொண்டவர்களாக (Taking for granted) இருப்பார்கள். அந்த அளவுக்கு அந்த ஆய்வில் சில நியமங்கள் "பேசாப் பொருளாக" ஆனால் நிர்ணயச் செல்வாக்குள்ளனவாகத் தொழிற்படும். உதாரணத்திற்கு நம்மிடையேயுள்ள (இலங்கைத் தமிழரிடையேயுள்ள) சமூக ஆய்வுகளைப் பார்க்கலாம். நமது எழுத்துக்களில் சாதிகள் பற்றித் "திறந்து” பேசும் வழக்கில்லை. மேலும் நமது சமூதப்பண்பாட்டு நியமங்களுள் அசெளகரியமானவை என்று கருதப்படும் சில விடயங்கள் பற்றிப் பேசப்படுவதில்லை. பேசினாலும் அழுத்திக் கூறுவதில்லை. உதாரணமாக விதவை வரிவாகம் , வைப் பாட்டி முறைமை பெண் களின் இரண்டாந்தாரப்பிள்ளைகள் பற்றி நாம் திட்டவட்டமாகப் பேசுவது குறைவென்றே கூறலாம்.
30

இங்கு தொகுக்கப்பெற்றுள்ள கட்டுரைகளும் இந்தப் பண்பாட்டினுள்ளிருந்து எழுதப்படுபவையே. அந்த அளவுக்கு சில விடயங்களை நாம் எடுத்துக் கூறவும், அழுத்திக் கூறவும் முடியாத ஒரு தயக்கம் உள்ளது. உதாரணத்துக்குக் "குலதெய்வ” எண்ணக்கருவினை எடுத்துக் கொள்வோம். நாம் இங்கு "குலதெய்வங்கள்” என்று கூறுகின்றோமே தவிர அவற்றின் பெயர்கள் யாவை, எந்தெந்தக்குலம், எந்தெந்தத் தெய்வங்களைத் தமது குலத்தெய்வங்களாகக் கொள்கின்றன என்பன பற்றிப்பட்டவர்தனமாகக் கூறுவதில் ஒரு தயக்கம் நிலவுவதை இங்கு அவதானிக்கலாம். இது தவிர்க்கப்பட முடியாதது. மேனாட்டர் தமது சமூகங்கள் பற்றித் தாங்கள் எழுதும் போது இத்தகைய கருத்துநிலைப் பிரச்சினைக்கு ஆட்பட்டிருப்பதற்கான பல்வேறு உதாரணங்கள் உள்ளன. ஆனால் "சமூகவிஞ்ஞானம்" என்பது இயன்ற அளவுக்குச் சமூகத்தை விடயி நோக்காகப் பார்க்கும் நோக்கினை வார்த்தெடுக்கும் பயில் துறையாகும். ஒரு சமூகத்தைச் சரியாக விளங்கிக் கொள்ளாமல் அதன் பிரச்சினைகளை இனங்காண்பதோ, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதோ முடியாத காரியமாகும். எனவே அந்த வேண்டிய அளவுக்கேனும் நாம் நமது சமூகம் பற்றிய "விஞ்ஞான பூர்வமான" நோக்கை வார்த்தெடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில் நோக்கும் போது இந்தத்தொகுதியினில் வரும் ஆய்வுக்கட்டுரைகளில் இந்தப் பண்பாட்டினுள் வாழ்பவர்கள் தமது பண்பாடு பற்றிய நேர்மையான ஒரு விவரணத்தைத்தர முயன்றுள்ளனர். அந்த முயற்சியை ஒழுங்கமைப்பதும், வழிநடத்துவதுமே ஆய்வு மேற்பார்வையாளரின் கடமையாகவிருந்தது. தரப்படும் இந்தப்பண்பாட்டு விவரணம், பெருந்தோட்டத் தமிழர் பற்றிய, குறிப்பாகத் தேயிலைத் தோட்டங்களில் வாழும் தமிழர் பற்றிய முழுமையான ஒரு பார்வையைப் பெற்றுக் கொள்வதற்கு உதவும் என்றே கருதுகின்றோம். இந்தப் "பார்வை” பெருந்தோட்ட முறைமைக்குள் வாழும் தமிழர்களுக்குத் தங்களைப் பற்றி விளங்கிக் கொள்ளவும், அந்த முறைமைக்குள் வராத மற்றத் தமிழர்கள், தமிழ் பேசும் மக்கள் இந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவுமென்று கருதுகின்றோம்.
பெருந்தோட்டத் தமிழரின் பண்பாட்டுக்கோலம் முழுவதையும் இத்தொகுதி தரவில்லை என்பதை இக்கட்டத்தில் ஒத்துக் கொள்கின்றோம். ஆனால் நேரத்துக்குப் பெற்றுக்கொள்ள முடியாத சில கட்டுரைகள் காரணமாக நிறைவு செய்யப்பெற்ற பல கட்டுரைகளை வெளியிடாது தாமதிப்பதும் ஒரு புலமைக்குற்றமாகும். சமூகக் குற்றமாகும். அந்த ஒரு நோக்குக் காரணியாகவே உள்ளனவற்றை ஒருங்கு சேர்த்து வெளியிடுகின்றோம். மலையகத் தமிழர்களது பண்பாடு பற்றித் தமிழில் வெளிவரும் முதலாவது வரன் முறையான முயற்சியென்ற வகையில் இத்தேடல்வழியே பெறப்பட்டனவற்றைக் கால தாமதம் செய்யாது வெளியிடுவது அவசியமாகும். இந்த ஆய்வில் நாம் எதிர்நோக்கிய சிக்கல்களை, இந்த ஆய்வுத் தொகுதியினைப் பூர்த்தி செய்வதில்
31

Page 18
நாம் எதிர்நோக்கிய இடர்ப் பாடுகளை, இப்புலமை முயற்சிகள் சம்பந்தமாக நம்மிடையே நிலவும் குறைபாடுகளாக ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு நாம் ஒவ்வொருவரும் உதாரணங்களாவோம். முற்றிலும் வெளியிடப்படாது போவதிலும் பார்க்க உள்ளவற்றைப் பிந்தியாவது வெளியிடுவது நல்லதென்று கருதியே இத்தொகுப்பினைப் பதிப்பித்தோம்.
VI
பெருந்தோட்டத் தொழிலாளத் தமிழர்களின் பண்பாட்டை அவர்களது சமூக, பொருளாதார யதார்த்த இருக்கையுடன் இணைத்து நோக்குவது பற்றிச் சில குறிப்புரைகளை கூறுவதற்கு முன்னர், இந்தத் தொகுதியில் வரும் கட்டுரைகள் மூலமாகவும், கருத்தரங்கு மூலமாகவும் மேற்கிளம்பிய இப்பண்பாடு பற்றிய இரண்டு முக்கிய சமூக அம்சங்களை இக்கட்டத்திலே வற்புறுத்த விரும்புகின்றேன். முதலாவது, பெருந்தோட்டத் தொழிலாளர் ஒழுங்கமைப்பிலும், அன்றாட சீவியத்திலும் "கங்காணி முறைமை” வகிக்கும் முக்கியமான இடமாகும்.
ஏகாதிபத்திய காலனித்துவ விவசாய முறைமையொன்று அதன் அடிநிலையிற் கிடந்த தொழிலாளரைச் சுரண்டுவதற்கு அவர்களிடத்தேயிருந்த அவர்களின் பண்பாட்டு முறைமைக்குள்ளேயிருந்த ஒருவரைப் பயன் படுத்தியுள்ளது. அந்த ஒருவர் "கங்காணி” ஆவார். தொழிலாளர்களின் நாளாந்தத் தொழிலை (வேலையை) கண்காணித்த அவரே அத்தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டு வருவதிலும் இங்கு அவர்கள் தங்கள் சீவியத்தை ஒழுங்கமைத்துக் கொள்வதிலும் அவர்களுடைய பொருளாதார சீவியத்தைக் கட்டுப்படுத்துவதிலும் (கடன் கொடுத்தல் போன்றவை மூலம்) முக்கிய நிர்ணய பலமுள்ள இடத்தைப் பெற்றிருந்தார். கங்காணி என்ற மையப் புள்ளியே தோட்ட நிர்வாகத்தையும் தொழிலாளரையும் இணைத்து நின்றது. தொழிலாளர்களைப் பொறுத்த வரையில் கங்காணியே அவர்களை " ஆட்படுத்தி வைத்திருக்கும் ஒரு முறைமை முழுவதினது சின்னமாக அமைந்திருந்தார். “தொழிற் சங்கங்கள் மலையகத்துள் ஊடுருவும் வரை தோட்டத்தில் கங்காணிமாரின் நிலை ஒரு "ஜமிந்தாரின்” நிலையை ஒத்ததாகவிருந்தது என்று சி. வி. வேலுப்பிள்ளை (1988) ஓரிடத்திற் குறிப்பிட்டிருந்தாலும், உண்மையில் தொழிலாளர் - கங்காணி உறவானது இத்தொழிலாள மக்களுக்கு ஏற்கனவே தமிழகத்திற் பழக்கப்பட்டிருந்த "பண்ணையார்” முறைமையை ஒத்ததாகும். அந்த நிலவாட்சி முறைமையில் நிலச்சொந்தக்காரன் தொழிலாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதில்லை. நிலச்சொந்தம் பிரமதேயத்துக்கோ, அல்லது காணியாட்சிகாரருக்கோவிரு க்கலாம். ஆனால், நிலத்தில் தொழில் புரியும் குடியானவர்களைப் பொறுத்தவரையில் பண்ணையாரே முக்கிய இடம் பெறுவர். "பண்ணை"யின் மக்களோடு (பண்ணையாட்களோடு) தொடர்புடையவர் பண்ணையாரே. இவரே
32

தொழிலாளர்களுடனான தமது தொடர்புகளிற் கெடு பிடியுடையவராக இருப்பார். இதனால் இவரே மக்களின் இரகசியமான கண்டனத்துக்கும், கேலிக்குமுரியவராவர். இந்த நிலைமையை நாம் பள்ளு இலக்கியங்களிலே குறிப்பாக முக்கூடற்பள்ளு போன்ற பள்ளு இலக்கியங்களிலே காணலாம்.
கங்காணி பற்றிய இந்தத் தொழிலாளர் நோக்கினை மலையகத்துத் தமிழரிடையே நிலவும் வாய் மொழிப்பாடல்கள் எடுத்துக்காட்டுகின்றன.
" பாகை படந்ததைப் பாருங்கடி - அது பத்திப் படந்ததைப் பாருங்கடி பாகை விதைபோலே நம்மையா கங்காணி பல்லு வரிசையைப் பாருங்கடி"
"தோட்டம் பிரளியிலே தொரே மேலே குத்தமில்லை a/i/d5/7600f Lo/7f7f7Gau கனபுரளி யாகுதையா?
(சி. வி. வேலுப்பிள்ளை பக் 24 - 27)
பெருந்தோட்டத் தமிழ்ச் சமூகப் பண்பாட்டிற் கங்காணி வசிக்கும் இடம் முக்கியமானதாகும். லயத்தோடு லயமாகவுள்ள வீட்டிலே வாழ்ந்து கொண்டு அந்த மக்களின் தொழில் வாழ்க்கையை மாத்திரமல்லாது சமூக, பண்பாட்டு வாழ்க்கையையும் அவர் கண்காணித்து வந்தார். கங்காணிக் குடும்பத்தினர் பலர் காலவோட்டத்திலே தோட்டச் சொந்தக்காரர் ஆனார்கள் என்ற உண்மை இந்தக்குறிப்பில் வற்புறுத்தப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்திற் கங்காணி மரபில் பிற்காலத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது என்பதைக் குறிப்பிடல் வேண்டும். அதாவது பெருந்தோட்டமுறைமை நன்கு நிலைஉஊன்றிய பின்னர், ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் தொகுதியினுள் அதுகால வரை நல்ல தொழிலாளியாகவும் சமூக முதன்மையுடையவராகவும் இருந்த ஒருவர் பின்னர் ஏதோ ஒரு தடைப்பாடு காரணமாகத் தனது வழமையான, தொழிலைச் செய்யமுடியாதபொழுது அவரைத் தொழிலாளரின் மேற்பார்வையாளர் என்ற வகையிற் கங்காணியாக நியமித்ததுண்டு. நாம் இதுவரை பேசிய கங்காணி முறைமை வேறு. “கங்காணி மாரை அந்த முறைமைக்குள்ளே கொண்டுவருதல் முடியாது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பண்பாடு பற்றிப் பேசும்பொழுது, தொழிலாளர் குடும்பங்கள் தமிழ், தெலுங்கு இரு மொழிகளையும்
33

Page 19
பேசக்கூடியவனவாக விருந்தன என்பதை மனதிருத்திக் கொள்ளல் வேண்டும். விஜய நகராட்சியைத் தொடர்ந்து தமிழ் நாட்டின் தென்புறத்தில் புதுக் கோட்டையை அண்டிய பலவிடங்களில் ஏற்கனவே சனத்தொகை அதிகமில்லாத விடங்களில் தெலுங்குக் குடிகள் குடியேற்றப்பட்டனவென்பது வரலாற்று ஆசிரியர்களால் ஏற்றுக் கொள்ளப்படும் உண்மையாகும். இந்தக் குடியேற்றங்களே தமிழ்நாட்டில் நாயக்கர்கள் எனப்படும் குழுவினர் வாழ்ந்தமைக்கான வரலாற்றுப்பின் புலமாகும். 19ம் நூற்றாண்டின் நடு, பிற் கூறுகளில் தென் தமிழ்நாட்டிலிருந்து தொழிலாளர்கள் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டபொழுது அத்தொழிலாளர்களிடையே நாயக்க, நாயுடு குலத்தைச் சேர்ந்தவர்கள் இடம் பெற்றனர் போலும். இந்தக்குலத்தின் பரம்பரையினரே இன்றும் தெலுங்கு மொழியில் ராமர் பஜனையை நடத்தி வருகின்றனர். இந்த உண்மையை மிகுந்த தயக்கத்துடனேயே சிலர் கருத்தரங்கின் போது எடுத்துக் கூறினர்.
இரண்டாவதாக மலையக மக்கள் என இன்று நாம் சொல்லும் மக்கள் கூட்டத்தினரிடையே ஏற்கனவே சமூக பண்பாட்டு வேறுபாடுகள் பல இருந்தன எனும் சமூக பண்பாட்டு உண்மையை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். தொழிற்சங்கம் வளர்ந்து மலையகமென்னும் எண்ணக்கரு ஒரு பொதுமையான குழுமக் கோட்பாடாக வளர்ந்துள்ள இன்றைய நிலையில் இந்த வேறுபாடுகளை வற்புறுத்தவது பொருத்தமற்ற ஒன்றேயாகும். ஆனால் தோட்ட மட்டத்தில் குழுக்கள் தங்கள் சாதிக் குழுமத்தையே தமது தனித்துவத்தைப் பேணுவதற்கான கூறாகக் கொண்டனர். இந்த நிலைமை இன்றும்" எழுதாக் கிளவியாகப் போற்றப்படுவதை நாம் காணலாம். தொழிற்சங்க முதன்மைத் தலைமைகளிற் d9ñ. இந்தச் சமூகத்தனித்துவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பன நிதர்சனமான சமூக உண்மையாகும். தொழிற்சங்க ஒருமைப்பாடு "இந்திய வம்சாவழியினர்” என்ற பெரும்படியான குறியீட்டை வற்புறுத்த தோட்ட மட்டத்தின் அடி நிலைச் சமூக வாழ்க்கைகளோ இந்த அடி நிலைச் சமூக ஒழுங்கமைப்புக் குழுமங்களுக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது. இதனால் ஒரு மட்டத்திலே (சமூக ஒருங்கியைபு நிலையில்) தனித்துவத்தைப் பேணுவதற்குப் பயன்படும் ஒரு சமூகக் குறியீடு இன்னொரு மட்டத்தில் (தொழிற்சங்க அரசியல் மட்டங்களில்)வற்புறுத்தப்படக் கூடாததாகவிருக்கின்றது. இதனால் மலையக மக்களிடையே நிலவும் பண்பாட்டுப் பன்முகப்பாடு தரக்கூடிய வளமும், எடுத்துப் பேசப்படாமலே போய் விடுகின்றது.
இக்கட்டத்தில் பெருந்தோட்டத் தமிழரிடையே சாதி முறைமை வகிக்கும் இடம் பற்றிச்சிந்தித்தல் அவசியமாகும். பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளர்களிடையே சாதி முறைமை இருக்கின்றதென்பதும், அது அவர்களின் அகச் சமூக அமைப்பினை ஒழுங்கமைப்புச் செய்கின்ற ஒரு முக்கிய காரணி என்பதும் எல்லோருக்கும் தெரிந்ததே. இத்தொழிலாளிகள் தமிழகக் கிராமங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பொழுது அங்கு நிலவிய கிராமச் சமூக அமைப்பையும்
34

குறிப்பாகக் குடிமை முறையையும் (சலவைத் தொழிலாளர் முதல் முடியிறக்குநர் வரை) இங்கும் கொண்டு வந்தனர் என்பது உண்மையே. ஆனால் தோட்டத்தின் பொருளாதார வாழ்க்கை முறைமையைப் பொறுத்த அளவில் சாதி முறைமை அத்தியாவசியமானதன்று தோட்டத்துப் பொருளாதார வாழ்க்கைக்கு, சாதியமைப்பு வழங்கும் பாரம்பரிய Sygesi Tura uprøðr (p6op (Traditional hierarchies) தேவைப்படாது. ஆனால் அந்தப் பாரம்பரியச் சமூக அதிகார வரன் முறையை இந்தப் புதிய புவியியல் சமூகச் சூழலிற் பயன்படுத்தி தொழிலாளர்களை ஒரு குறிப்பிட்ட மட்டத்தில் "அமுக்கி வைத்திருந்தனர் என்று கொள்ளலாம். கங்காணி முறைமை இந்தப் பாரம்பரியச் சமூக அதிகார வரன் முறையைப் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் சமூக சீவியத்தைப் பொறுத்தமட்டில், அதன் பிரதான அலகாகக் குடும்ப நிலை வாழ்க்கையைப் பொறுத்த மட்டில், சாதி முறைமை வழங்கிய "குழும ஒருங்கு நிலை” மிகமுக்கியமானதாகவிருந்தது. பெருந்தோட்டத் தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் சாதி முறைமையானது சமூக சீவியத்திற்கான ஓர் அவசிய அடையாளமாயிற்று.
சாதிக்குழுமங்கள் தந்த ஒருங்கியைபு நிலை காரணமாகப் பெருந்தோட்டங்களிலும் தொழிலாளர் குடும்பங்களுக்கான வதிவிடவரிசைகள் (லயங்கள்) கொடுக்கப்பட்ட பொழுது சாதிக்குழுமங்களை ஒவ்வொரு தொகுதியாக வசிக்கவிடும் முறைமை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பெருந்தோட்டங்களிற் சாதி முறைமையானது, கிராமங்களிலே கிராம வாழ்க்கையின் சமூக பொருளாதார நடைமுறைகளை ஒழுங்கு படுத்துவது போன்ற ஒரு பயன்பாட்டைப் பெறாது பிற தொடர்புகளின்றித் தனித்துவிடப்பட்ட ஒரு மக்கட் கூட்டத்தினர் தமது சமூக ஒருங்கிணைப்பைப் பேணுவதற்கான ஒரு மரபு வழி முறைமையாகிற்று. இதனால் சாதி முறைமையானது பெருந்தோட்டத் தொழிலாள மக்களிடையே முக்கியமான ஒரு பயன்பாட்டை உடையதாக இயங்கிக் கொண்டிருந்தது எனலாம். இந்தச் சமூக ஒருங்கியைபில் சாதி (குல) வழிபாடுகள் முக்கியமானவையாகும். பிரிட்டிஷ் முதலாளிகள் போட்டித் தெய்வங்களுக்கான வழிபாட்டிடம் அமைத்துக் கொடுப்பதில் ஆர்வம் காட்டினர் என்ற குறிப்பு இந்தப்பின் புலத்திலே பார்க்கப்படும்பொழுது அர்த்தம் நிறைந்த ஒன்றாக அமைந்துள்ளது.
இக்கட்டத்தில், கடந்த ஐந்து வருடங்களாகச் சாதி அடிப்படையிலான சங்கங்கள் தோன்றுவதை எடுத்துக்கூறுவது அவசியமாகிறது. முக்குலத்தோர் சங்கம், ஒடுக்கப்பட்டோர் சங்கம், நாயுடுமார் சங்கம் எனப்பல சங்கங்கள் கிளம்பியுள்ளன. முற்றிலும் பெருந்தோட்டத் தொழிலை மாத்திரமே நம்பியிராத ஒரு நிலைமையும் அதற்கும் மேலாக வாக்குரிமைப் பேற்றின் பின்னர் ஏற்பட்டுள்ள தேர்தற்பிரதிநிதித்துவ வாய்ப்புக்களும் இந்த நிலைமையை வளர்க்கின்றன.
35

Page 20
மேலே எடுத்துக்கூறப்பட்ட அம்சங்களும், அவற்றினடியாக மேற்கிளம்பும் சமூக உண்மைகளும், ஒரு முக்கியமான சவாலை எம்முன்னர் வைக்கின்றது. இந்தத் தொகுதியில் வரும் கட்டுரைகளில் எடுத்துப் பேசப் பெறும் பண்பாட்டு அம்சங்களை நாம் எந்தப்பின்புலத்தில் வைத்து விளங்கிக் கொள்ள வேண்டும் என்பதே அப்பிரச்சினையாகும். ஏனெனில் இவற்றை விளங்கிக் கொள்வதற்கான பின் புலத்தை நாம் தெளிவுற அறிந்து கொள்ளாவிடில், இந்த விவரணங்கள் உதிரித்தரவுகளாகவோ அன்றேல் இலட்சிய மயப்படுத்தப்படக்கூடிய நடை முறைகளாகவோ மாத்திரமே எடுக்கப்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சற்று முன்னர் எடுத்துப் பேசப்பட்ட விடயம் மிக முக்கியமானதாகும். அதாவது மலையகம் இன்று ஒரு பண்பாட்டுக் கூறாகவே கருதப்பட்டாலும் அது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வந்த மக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகையால் இதனை ஒரு "தொகுதியாகவே கொள்ளல் வேண்டும். பல்வேறு பண்பாட்டுக் குழுமங்களைக் கொண்ட இத்தொகுதி குறிப்பிட்ட ஒரு பொருளாதார முறைமைக்கும் வாழ்க்கை முறைக்கும். நிர்ப்பந்தமாகப் பழக்கப்படுத்தப்பட்டதால் இன்று நாம் கொள்ளும் மலையகம் என்னும் "ஒருமைப்பாடு” உருவாக்கப் பெற்றதெனலாம்.
இந்தத் தொழிலாளர்கள் தமிழகத்தில் எந்தப்பிரதேசத்திலிருந்து எந்த எந்தச் சாதி குழுமங்களிலிருந்து கொண்டு வரப்பட்டார்களோ, அந்தந்தச் சாதிக் குழுமப்பண்பாடுகள் இங்கும் பேணப்படலாயிற்று பெருந்தோட்டத் தொழிலாளரின் இலங்கைக் குடியேற்றம் பற்றி ஆராய்ந்துள்ளோர். இத்தொழிலாளர்கள் பெரும்பாலும் திருச்சிராப்பள்ளி, சேலம், தஞ்சாவூர், மதுரை, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தென் ஆற்காடு, செங்கல்பட்டு, திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களிலிருந்தும், மிகச்சிலர் சித்துார் முதலாம் தெலுங்கு மாவட்டங்களிலிருந்தும் மேலும் சிலர், திருவாங்கூர், கொச்சி, மலபார் பிரதேசங்களிலிருந்தும் கொண்டு வரப்பட்டனர் என்பது ஆதார பூர்வமாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. (சந்திரசேகரம், 1989). தோட்டத் தொழிலுக்கெனக் கொண்டு வரப்பட்டோர் பெரும்பாலும் மிக உயர்ந்தனவாகக் கருதப்படும் குழுமங்களைச் சார்ந்தவர்களல்லர். அவர்களுட் பெரும்பாலானோர் தத்தமது சொந்தப் பிரதேசங்களிலேயே ஒடுக்கு முறைக்கு ஆட்படுத்தப்பட்டவர்களே. எனவே, அந்தப் பண்பாடுகள் இங்கும் ஒடுக்கு முறைகளுக்கு இணங்கிப்போகும் ஒரு சாத்தியப்பாடு இருந்து கொண்டேயிருந்தது.
தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட சாதிக்குழுமங்களை நோக்கும் பொழுது இவர்களுட் பெரும் பாலானோர் இன்றும் கூட பின்தங்கிய பிரிவினராகவே கருதப்படுவது தெரியவரும். பெருந்தோட்டத் தமிழரிடையே இன்று காணப்படும் சாதிக்குழுமங்கள் அகர வரிசை அடிப்படையில் கீழே தரப்படுகின்றன.
36

1. அகம்படியர் 21. பறையர் - வள்ளுவப்பறையர்
2. அம்பட்டர் 22. பண்டாரம்
3. அம்பலக்காரர் 23. பொதுகை வண்ணார்
4. ஆசாரி 24. மறவர்
5. இடையர் 25. முத்துராசா
6. ஒட்டர் 26. முதலி
7. SLDfTaff 27. செட்டியார்
8. கவுண்டர் 28. a Gajajaratants
9. Seitant 29. 616767ntir
10. குயவர் 30. 6 1606)ulf
11. குறும்பர் 1. வள்ளுவர்
12. கோனார் 32. Cavennett
13. சக்கிலியர். - அக்கா வீட்டில் பெண்
14. Fifestiff எடுக்கும் வேளாளர்
15. செட்டி - ஆறுநாட்டு வேளாளர்
கோமுட்டிச்செட்டி - கொங்கு வேளாளர்
வளையற் செட்டி - கொடிக்கா வேளாளர்
16. தேவர் - சோழிய வேளாளர்
17. நாடார்
18. நாயர்
19. நாயுடு
20. பள்ளர் - தேவேந்திரபள்ளர்
இப்பட்டியலைத் தந்துதவியவர்கள் திரு. க. ப.சிவமும், திரு.தேவராஜும்ஆவர்.
இந்தப் பட்டியலைப் பார்க்கும்பொழுது இவர்களிற் பெரும்பான்மையோர். தமிழகத்தில் பின் தங்கிய வகுப்பினராகவும் பழங்குடி வகுப்பினராகவும் (Backward castes and scheduled Tribes) substiuGLuaufrasennauty. 9555 தொழிலாளி குழுமங்கள், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டதும், இங்கு பிற தொடர்பு எதுவுமின்றி, வந்த நிலையிலேயே "உறை நிலை" (Frozen) யில் வைக்கப்பட்டனர். இதனால் இவர்களின் பண்பாடும் உறை நிலையிலேயே இருந்தது. இந்த "உறை நிலை"க்கான ஒரு முக்கிய காரணத்தை எடுத்துக் கூறுவது அவசியமாகின்றது. இம்மக்கள் இலங்கையிற் குடியேற்றப்பட்டபொழுது அவர்கள் உள்ளூர்த் தொடர்புகளில் இருந்து எந்த அளவுக்கு ஒதுக்கப்பட முடியுமோ அந்த அளவுக்கு புறம்பாகவே வைக்கப்பட்டார்கள். "அந்தப் புறம்போக்கு” நிலைமைக்கான சகல வசதிகளும் வழங்கப்பட்டன. வீடு, முழு நேரத்தொழில் ஆகியன அவர்களை வந்த ஊரோடு ஒட்ட விடாது வைத்திருந்தன. அத்தகைய ஒரு சூழலில் இவர்கள் தனிமையான கூட்டமாகவே வாழ்ந்து வந்தனர்.
37

Page 21
பொருளாதார ரீதியாகப்பார்க்கும் பொழுது இந்தப் பெருந்தோட்ட விவசாயம் தொழில் மாற்றத்துக்கோ, இடமாற்றத்துக்கோ வாய்ப்பளிக்கவில்லை. அத்துடன் தோட்ட அமைப்புக்குள் முகாமையானது ஏதேச்சாதிகாரத்தன்மையுடைய ஒரு முகாமையாகவே இருந்தது. இப்பொழுதும் அப்படியே உள்ளது. மேலும் இந்த அமைப்பானது முழு நேரத் தொழிலை அடிப்படையாகக் கொண்டது. காலை முதல் மாலைவரை வேலை, அதுவும் உடலுழைப்பே, பிரதானப்படுத்தப்பட்டது. யாவற்றுக்கும் மேலாக பெருந்தோட்டத்தொழில், குடும்பத்தை அலகாகக் கொண்டது. அதாவது, கணவன், மனைவி, வயது வந்த பிள்ளைகள் யாவருமே அத்தொழிலில் ஈடுபட்டனர். இப்படியான ஒரு சூழலிலே இந்தச் சமூகத்தைப் பேண அவர்களுக்கிருந்த குறைந்த பட்ச ஊடாட்டங்களை வழங்க அவர்களது "பண்பாடு” உதவிற்று. அதனிலும் மேலாக் இத்தகைய ஒரு கருத்து நிலையையும் இந்தப்பண்பாடு - அதன் சடங்குகள் வைபவங்கள், நியமங்கள், கருதுகோள்கள்- ஏற்படுத்திற்று. அந்தக்கருத்து நிலையின் சமூகத்தளம் பற்றிய ஆய்வு அடுத்த கட்டமாக -9յeoւՕպմo.
இங்கு தரப்படும் பண்பாட்டு விவரணத் தொகுப்பு, பண்பாடு தொழிற்படும் சமூகத்தைப்பற்றியும், அதன் அமைப்புப் பற்றியும் இந்தச் சமூக அமைப்புக்கும், பண்பாட்டுக்கும் உள்ள உறவு பற்றியும் அறிவதற்கான உந்துதலைத் தருகின்றது. அத்துடன் சமூக பொருளாதார உறைநிலையிலிருந்து இவர்கள் விடுவிக்கப்பட்ட, படுகின்ற நிலையில் பண்பாடு அந்த மாற்றங்களால் எவ்வெவ்வகையிற் பாதிக்கப்படுகின்றது என்பதை அறிவதும் அந்த மாற்றங்களுக்குப் பண்பாடு எந்த அளவுக்கு உதவுகின்றது என்பதையும் அறிவதற்கான தேடலையும் இவ்வாய்வு தொடங்கி வைக்கின்றது.
இவ்வாய்வின் பொழுது எனக்கு உண்டான நன்றிக் கடப்பாடுகள் பல. இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்குக் காரணகர்த்தராகவிருந்தவர் உதயம் நிறுவனத்தின் தலைவர் திரு. பஞ்சநதம்பிள்ளை மாணிக்கம் அவர்களாவர். ஒரு பொறியியலாளருக்குள்ள நோக்குத் தெளிவுடனும் ஒழுங்கமைப்பு ஆற்றலுடனும், தொழிற்படும் அவர் இந்த ஆய்வினைத் திட்டமிட்டு மேற்பார்வை செய்யும் பொறுப்பினை எனக்கு வழங்கினார். எனக்குள்ள இடர்ப்பாடுகளை விளங்கிக்கொண்டு, வேண்டிய ஊக்கத்தினைத் தந்தார். அவருக்கு எம்மனங் கனிந்த நன்றி. உதயம் நிறுவன நிர்வாகப்பணிப்பாளர் திரு.எஸ். தம்பிராசா அவர்கள் தமது நிர்வாகத் திறன் மூலம், இந்த ஆய்வினைச் செம்மையுற நடத்த உதவினார். அவருடன் ஏற்பட்ட உறவு, அவரிடத்துள்ள அற்புதமான மனிதாயதப் பண்புகளை எனக்கு அறிமுகம் செய்து வைத்தன. அவருக்கு என் நன்றியுரித்து. பேராதனைப் பல்கலைக்கழகப் பொருளியல் முதுநிலை விரிவுரையாளர் திரு.எம்.சின்னத்தம்பி இவ்வாய்வின் களநிலை மேற்பார்வைக்கும், வழிநடத்தலுக்கும் பொறுப்பாகவிருந்தவர். அவருடைய உதவியும்,
38

ஆலோசனைகளும் இன்றி இவ்வாய்வு இக்கட்டத்தைத் தானும் எட்டியிருக்க முடியாது. அவருக்கு என் நன்றிகள்.
இவ்வாய்வின் தொடக்க கால ஆய்விணைப்பாளராக இருந்தவர் செல்வி விஜயகெளரி பழனியப்பன். இத்துறை ஆய்வில் ஏற்கனவே நல்லனுபவம் பெற்ற கெளரி இவ்வாய்வுக்கு வேண்டிய தளத்தை நன்கு இட்டுத்தந்தார். அவர் உதவி மறக்க முடியாதது. அவரைத் தொடர்ந்து அப்பதவியை ஏற்ற கலாநிதி வேல்முருகு தன்னை என்றும் ஒரு மாணாக்கனாகவே கருதுபவர். அதனால் அவரது புலமைத் தேடலில் விநயம் உண்டு. அப்பண்பு இந்த ஆய்வுக்கட்டுரைகளை முழுமைப்படுத்தப் பெரிதும் உதவிற்று. அவருக்கு என் நன்றிகள். ஆய்விற் பங்கு கொண்ட இளம் ஆய்வாளர்கள் தங்கள் பணிகளை மிகுந்த ஊக்கத்துடன் மேற்கொண்டார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது நன்றி உரித்து, இந்த ஆய்வின் பொழுது எனக்கு வேண்டிய ஊக்கத்தை அளித்த பல நண்பர்களுள் திரு. க. ப. சிவத்தையும், திரு. எம். வாமதேவனையும் எனது முன்னாள் மாணவர் வி. தேவராஜையும் குறிப்பிடல் வேண்டும். இவ்வாய்வு சம்பந்தமாகத் தெளிவத்தை ஜோசப் அவர்களை நான் இரண்டு மூன்று தடவைகளே சந்தித்தேன். அந்த நினைவுகள் மிக்க பசுமையுடன் உள்ளன.
இத்தொகுப்பின் அச்சுப்பதிப்பின்பொழுது பெருந்துணையாகவிருந்தவர், கொழும்புப் பல்கலைக்கழகப் புவியியல் விரிவுரையாளர் திரு. எஸ். அன்ரனி நோபேட் ஆவர். அவரது செயற்செம்மைத் திறனும், சலியாத உழைப்பும்தான் இந்தத் தொகுதியினை இந்த வடிவில் தருகின்றது. அவருக்கு என் நன்றி,
இந்த ஆய்வு முன்னுரை எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்த நூல்கள், கட்டுரைகள்
1. V.K. Jeyawardena The Rise of the Labour Movement in Ceylon. North Carolina
2. சோ. சந்திரசேகரம் -இலங்கை இந்திய வரலாறு, மதுரை. 1989
3. சி.வி. வேலுப்பிள்ளை - மலை நாட்டு மக்கள் பாடல்கள், சென்னை.1963
4. G.H Peiris - Changing Prospect of the Plantation Workers of Sri Lanka, ICES,
Colombo 1988
5. Jeyaraman - Caste Continuities in Ceylon, Bombay, 1974.
6. Gowri Palaniappan - Changing Conditions of the Family in a Sri Lanka Plantation,
M.Phil dessertation, University of Colombo 1991
7. கா. சிவத்தம்பி - தமிழிலக்கியத்தில் மதமும் மானுடமும், சென்னை 1983
39

Page 22
வாழ்க்கைச் சடங்குகளும் கரணப்பயில்வுகளும்
செல்வி . பி. சோதிமலர்
இந்தியாவிலிருந்து வந்து குடியேறிய மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் சடங்கு முறைகள் பெரும்பாலும் பிராமணர்களல்லாத தென்னிந்திய மக்களின் சடங்கு முறைகளை ஒத்ததாகவே காணப்படுகின்றன. மலையக மக்களிடையே காணப்படுகின்ற சடங்குமுறைகளின் பிறப்பு, பூப்புனித நீராட்டு, திருமணம், இறப்பு என்பன தொடர்பான சடங்குகள் முக்கியமானவையாகும். இச்சடங்கு முறைகளில் சில மரபு நெறி மாறாதனவாகவும், மற்றும் சில நவீன முறைக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டனவாகவும் காணப்படுகின்றன. அட்டன், புசல்லாவ, மாத்தளை, கம்பளை, கண்டி ஆகிய பகுதிகளில் நேரடியாகச் சென்று பெற்ற தகவல்களின் தொகுப்பாகவே இக்கட்டுரை அமைகின்றது.
பிறப்பு
வாழ்க்கை வட்டத்தின் முதற்படியாக பிறப்பு இடம்பெறுகின்றது. பிறப்புத் தொடர்பான கரணங்கள் தாய் கர்ப்பம் தரித்ததிலிருந்து ஆரம்பிக்கின்றன. தோட்டங்களில் ஆடிமாதத்தில் திருமணமான கணவன் மனைவியரிடையே ஒரு சில சடங்குகள் நடைபெற்று வருகின்றன. ஆடிமாதத்தில் பெரும்பாலும் பெண்ணைத் தாய்வீட்டுக்கு அழைத்து வருவது வழக்கம். ஏனெனில் ஆடிமாதத்தில் கருத்தரித்தால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க நேரிடலாம். சித்திரை மாதத்தில் பெண்பிள்ளை பிறந்தால் சீரழிந்து போகும் என்ற நம்பிக்கை இம்மக்களிடையே காணப்படுகின்றது. அத்துடன் அது தாய்மாமனுக்குக் கூடாததெனவும் நம்பப்படுகிறது.
1.1 ஆடிப்பதினெட்டு
ஆடிமாதத்தின் பதினெட்டாம் நாள் அநேகமான தோட்டங்களில் விசேடமாகக் கொண்டாடப்படுகிறது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட தம்பதியினரே இதனை விசேடமாகக் கொண்டாடுகின்றார்கள். இந்நிகழ்ச்சியானது முதல் வருடத்தில் பெண்ணின் தாய் வீட்டிலும், அடுத்துவரும் ஆண்டுகளில் கணவனின் தாய் வீட்டிலும் நடாத்தப்படும். இந்த ஆடிப்பதினெட்டைக் கொண்டாடுவதற்குப் பல நோக்கங்கள உள்ளன.
40

1. தாலி கட்டிய மஞ்கள் கயிறு அறுந்து போவதற்கு முன்பு கணவன் அதனை
மாற்ற வேண்டியிருப்பது ஒரு காரணமாகும். 2. தாலியைப் புனிதப்படுத்துவதற்காக அதனை மஞ்சள் நீரினாற் கழுவி
குங்குமத்தைத் தொட்டுப் பொட்டிட்டு மீண்டும் அணிவித்தல். 3. மண் அல்லது பொட்டு என்ற அணியை அத்துடன் இணைத்தல்.
1.2 கட்டுச் சோறு கட்டுதல்
இக்கட்டுச்சோறு கட்டும் நிகழ்ச்சியானது பெண் கருத்தரித்து ஐந்தாம், ஏழாம், ஒன்பதாம் மாதங்களிலேயே நடைபெறுகின்றது. இக்கட்டுச்சோறு பலவிதமாகக் கட்டப்படுகிறது. முதலில் பெண்ணின் உறவினர்களால் கட்டுச்சோறு கட்டுவதும், அதனைத் தொடர்ந்து பெண்ணின் தாய் கட்டுச்சோறு கட்டிப்போடுவதும், பெண்னை மாப்பிள்ளை வீட்டிலிருந்து தாய் வீட்டுக்கு அழைத்து வருவதும் வழக்கமானது. தலைப்பிள்ளைக்கு மட்டுமே இவ்வாறு தாய்வீட்டுக்கு அழைத்து வருவது உண்டு. அடுத்தடுத்த பிரசவங்களின் போது பெண் கணவனின் வீட்டிலேயே இருப்பாள். கட்டுச்சோறானது மூன்று வகையாகக் கட்டப்படுகிறது.
1. புளி கரைத்துத் தாளித்து தயிர்ச்சோறு கட்டல் 2. தேசிக்காய் (எலுமிச்சம் பழம்) அல்லது தக்காளிச்சோறு கலந்து கட்டுதல். 3. வெள்ளைச்சோறு கட்டுதல்.
புளி கரைத்துச் (புளிச்சோறு) சோறு கட்டுதலாவது, சோற்றை ஆக்கிப் பின்பு வெங்காயம், கடுகு, கறிவேப்பிலை உட்பட வாசனைத்திரவியங்கள் கலந்து எண்ணை இட்டுத் தாளித்த பின்னர் இதனுடன் புளியைக் கலந்து சமைத்தலாகும். சமைத்த பின்பு தயிருடன் கலந்து அது பரிமாறப்படும். புளிச்சோற்றை சமைப்பது போன்று தேசிக்காய் அல்லது தக்காளிச் சோறு சமைக்கப்படும். புளிக்குப் பதிலாகத் தேசிக்காய் அல்லது தக்காளி பயன்படுத்தப்படும்.
1.3 வளை காப்புப் போடுதல்
வளை காப்புப்போடும் வழக்கம் தற்போது அருகிக்கொண்டு வருகிறது. முன்னர் பொன்னாலான காப்பைச் செய்து பெண் வீட்டார் மாப்பிள்ளையின் வீட்டுக்கு எடுத்துச் சென்று அணிவித்தனர் என்று சொல்வர். இப்பொழுது கறுத்த பிளாஸ்டிக் காப்புகளே அணிவிக்கப்படுகின்றன. இச் சடங்கானது பெரும்பாலும் பெண் கருத்தரித்து ஏழு மாதங்களின் பின்னரே மேற்கொள்ளப்படுகிறது.
4.

Page 23
1.4 மகப் பேறு பார்த்தல்
ஆரம்பகாலங்களில் தோட்டபுறங்களில் மருத்துவச்சி அல்லது வயதில் மூத்த அநுபவமுள்ள பெண்ணாற் பிரசவ ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டன. பெரும்பாலும் வீட்டில் உள்ள கத்தியையும், படங்குச் சாக்கையும் இதற்காகப் பயன்படுத்தியுள்ளார்கள். இப்பொழுது இந்த நிலைமை முற்றாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று அநேகமான மகப்பேறுகள் தோட்ட வைத்திய நிலையங்களிலேயே நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
1.5 மகப்பேற்றுத்தாயை நீராட்டல்
தாயின் நிலைமையைப் பொறுத்து ஐந்தாம் அல்லது ஏழாம் தினங்களில் குளிப்பாட்டுவது வழக்கமாகவுள்ளது. இதற்காக கொய்யா, ஆமணக்கு, ஆடாதோடை, அஞ்சல், நொச்சி, தேசிக்காய் (எலுமிச்சை) போன்றவற்றின் இலையை அவித்து எடுத்து ஒத்தடம் கொடுத்து, தலையை நனைக்காது, உடல்மட்டக் குளிப்பை மேற்கொள்வார்கள்.
1.6 சேனைப் பாலூட்டல்
பிள்ளைகளுக்குத் தலைப்பால் ஊட்டலே "சேனைப்பால்" ஊட்டல் என அழைக்கப்படுகிறது. நாவிர மஞ்சிக்கீரையைக் கசக்கி விளக்கெண்ணையை ஊற்றி, மாவும் சீனியும் கலந்து குழந்தை வாயில் தடவுவது வழக்கம். சிலர் தாய்மாமனின் மோதிரத்தை உரைத்து பாலிட்டு அதனை மாமனைக்களி ஊட்டுவிப்பதையும் சேனைப்பால் ஊட்டல் என்பர். சேனைப்பால் ஊாட்டலினால் குழந்தைக்கு மலச்சிக்கல், சளி, தொண்டைக்காச்சல் ஆகியன ஏற்படாது என்று கருதப்படுகிறது. சில இடங்களில் வசம்பு, குப்பைமேனி என்பனவும் அரைத்துக் கொடுக்கப்படுகின்றன. மேலும் வேப்பெண்ணையும், சர்க்கரையும் கலந்து நாவில் தடவும் வழக்கமும் சில இடங்களில் காணப்படுகின்றது. வாழ்க்கையானது இனிப்பு, கசப்பு என்னும் இரு தன்மைகளையும் கொண்டது என்னும் தத்துவத்தை விளக்குவதாகவே இது அமைகின்றது என்கிறார்கள்.
1.7 தோசப்பரிகாரம்
பேய், பிசாசு போன்றவை பிள்ளையைத் துன்புறுத்தாதவண்ணம் எருக்கம் பட்டையைத் திரித்து இடுப்பில் அல்லது கழுத்தில் கட்டுவதும் உண்டு.
1.8 கறுப்புப்பொட்டு வைத்தல்
கறுப்புப்பொட்டை வைப்பதன் மூலம் கண்திருஷ்டி படாமல் காத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இம்மக்களிடையே காணப்படுகிறது.
42

19 தொட்டில் கட்டுதல்
தாய் மாமன் ஏணைச்சீலையைக் கொண்டு பிள்ளைக்கான தொட்டிலைக் கட்டுவார். நீண்ட காலத்துக்குப் பிள்ளைப் பேறின்றி பின்னர் பிள்ளை பிறந்தால் கரும்பால் தொட்டில் கட்டப்படுகிறது. தொட்டிலில், கடவுளுக்கு நேர்த்தி வைத்த காணிக்கைப்பணமும் கட்டப்படுவதுண்டு.
1.10 பிறந்த பிள்ளைகள் இறப்பதைத் தவிர்த்தல்
பிறந்த பிள்ளைகள் தொடர்ந்து இறந்தால் அடுத்த குழந்தையை இறப்பிலிருந்து காப்பாற்றும் பொருட்டு சடங்கொன்று மேற்கொள்ளப்படுகிறது. பிறந்த குழந்தையைக் கொண்டு போய் குப்பையிலிட்டுவந்து, சற்றுநேரம் சென்றதும் மீண்டும் அப்பிள்ளையை சுமந்து வருகின்றனர். இவ்வாறு செய்தால் பிள்ளைகள் தம்மிடமிருந்து சென்று விடாது என்ற நம்பிக்கை இம்மக்களிடையே நிலவுகிறது.
1.11 பெயர் சூட்டுதல்
தோட்டப்புறங்களைப் பொறுத்தளவில் தகப்பன் அல்லது அவரின் வழி வந்தவர்களே பிறந்தகுழந்தைக்குப் பெயர் சூட்டுவது வழக்கம். பிறந்த நேரத்தைப் பார்த்து பெயரைச் சூட்டுவர். அத்துடன் குல தெய்வங்களின் பெயரை இணைத்துக்கொள்வதும் உண்டு. தற்போது குல தெய்வங்களின் பெயர்களைச் சூட்டுவது குறைந்துள்ளது. சில இடங்களில் வீட்டுக்கு ஒரு பெயர். பாடசாலைக்கு ஒரு பெயரென இரு பெயர்கள் சூட்டப்படுகின்றன. ஆரம்ப காலங்களில் நிற அடிப்படையிலும் பெயர்களைச் சூட்டியுள்ளனர். சிவப்பாயி, கருப்பன், வெள்ளைச்சாமி போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இரண்டு பிள்ளைகள் ஏற்கனவே பிறந்த பின்பு, மூன்றாவது பிள்ளை ஆண்பிள்ளையாகப் பிறந்தால் அவருக்கு மூக்கையா எனப் பெயர் சூட்டுவதும் வழக்கமாய் இருந்துள்ளது. இறந்தவர் குடும்பத்தினர்தான் (பாட்டன், பாட்டி) மீண்டும் பிறந்துள்ளார்கள் எனக் கருதுபவர்கள் அவர்களின் பெயர்களையும் சூட்டுகிறார்கள். ஆனால் இப்பொழுது நவீனமான பெயர்களைச் சூட்டுவதே பொது முறைமையாகியுள்ளது.
112 முடி இறக்குதல்
சில குடும்பத்தினர் பிறந்து முப்பதாவது நாளன்று முடி இறக்குவர். சிலர் ஒரு
வருடத்துக்குள் வெட்டுவதாகவும் குறிப்பிடுகின்றனர். அதற்கென ஒரு காலம் கிடையாது. பிறந்த நேரத்தைப் பொறுத்தும் அது நிர்ணயிக்கப்படுகிறது.
43

Page 24
பிள்ளையின் கிரகப்பலன் கூடாததாக இருப்பின் காலம் தாழ்த்தி முடி இறக்ககுவர். முன்பு முடியிறக்குவதற்குப் பெரும்பாலும் கதிர்காமத்துக்கு நேர்த்தி வைப்பது வழக்கமாக இருந்து வந்துள்ளது. இச்சடங்கானது பெரும்பாலும் தைப்பூசத்தன்று நடைபெறுகின்றது. தோட்டத்தில் உள்ள அம்பட்டன் (பாபர்) இதில் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்கின்றார். இவருக்குத் தட்சணையும் வழங்கப்படும்.
1.13 காதுகுத்தல்
இது மாமனின் உதவியுடன் சுபமுகூர்த்தத்தில் நடைபெறுகின்றது. பெரும்பாலும் தைபூசத்தினத்திலேயே இச்சடங்கு செய்யப்படுகின்றது. அன்றய தினத்தில் விருந்தினருக்கு மரக்கறி உணவு பரிமாறப்படுகிறது. ஆரம்ப காலங்களில் மாமனால் கொடுக்கப்பட்ட தங்க ஊசியால் தான் குழந்தையின் காது குத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முன்பு ஆண், பெண் ஆகிய இரு பாலருக்கும் காது குத்தப்பட்டது. இப்பொழுது பெண் குழுந்தைகளுக்கு மட்டும் காது குத்தப்படுகிறது.
114 பல்லுக் கொழுக்கட்டை அவித்தல் (கொழுக்கட்டை)
பிள்ளைக்கு பல்லு முளைக்கும் காலத்தில் நிறையக் கொழுக்கட்டை அவித்து பிள்ளையை நிற்க வைத்துப் பிள்ளையின் மேல் கொட்டுவதும் வழக்கமாயுள்ளது. பின்னர் அவற்றை நசித்து உணவூட்டி மகிழ்வார்.
1.15 வித்தியாரம்பம் (ஏடு தொடங்குதல்)
தோட்டப் புறங்களில் ஏடுதொடங்கலைப் பெரும்பாலும் வீட்டிலேயே மேற்கொள்வது வழக்கம். வீட்டுத் தலைவனே இக்காரியத்தை செய்து முடிப்பார். தோட்ட ஆசிரியரை வீட்டுக்கு வரவழைத்து ஏடு தொடக்குவதும் உண்டு. இச்சடங்கு பெரும்பாலும் நவராத்திரியின் இறுதிநாளான விஜயதசமியன்று நடைபெறும். ஏடு தொடக்கும் இடத்தில் விநாயகரின் படமும், சரஸ்வதியின் படமும் வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் கடலை, அவல், பொங்கல், என்பன படைக்கப்பட்டு வழிபாடு செய்வதும் வழக்கமாயுள்ளது.

பூப்படைதலுடன் தொடர்புடையவை
2. பூப்பெய்தல் (பூப்புனித நீராட்டு)
தோட்டப்புறங்களில் இந்நிகழ்ச்சியானது "வயதுக்கு வருதல்" "ஆளாகுதல்” பருவமெய்தல்" "பெரியபிள்ளையாகுதல்” எனப் பல்வேறு தொடர்களால் குறிப்பிடப்படுகிறது. வயதுக்கு வந்த பெண் வீட்டில் ஒரு பக்கமாக அல்லது மூலையில் ஒதுக்கமாக விடப்படுகிறாள். அச்சந்தர்ப்பத்தில் அவள் ஆண்களைப்பார்ப்பதும், ஆண்களுடன் கதைப்பதும் தடைசெய்யப்பட்டிருக்கும். பருவமெய்திய செய்தி மாமனுக்கும் வண்ணானுக்கும் அறிவிக்கப்படும். மாமனுக்கு வண்ணாத்தி மூலமே செய்தி அனுப்பப்படும். தாயொருத்தி வண்ணாத்தி ஒருத்தியை அழைத்துப் பாடுவதாக பின்வரும் நாட்டார் பாடல்
அமைந்துள்ளமை நோக்கத்தக்கது.
வேம்புரங்க வேம்புரங்க சிறுமெல்லியக்கே வேம்புரங்க காட்டில் நிற்கும் அந்த கன்னி மலைவேம்பு வீட்டுக்கு வேணுமெனு விரும்பினார் உன் தகப்பன் சானி பெருக்கி முத்தம் தெளிக்கையிலே கட்டும் புடைவையிலே பொட்டு தெறிச்சதென்ன கண்ண பினைஞ்சழுதார் வண்ணாத்தி வண்ணாத்தி வண்ணானெங்க போனாங்க ஆழச் செவுரேரி அழுக் கெடுக்க போனாங்க குட்டிச் செவுரேரி கூப்பிடடி வண்ணாத்தி மாமன் அரண்மனைக்கு LDIt prrruth Gyfrtei)63 a) Int சித்த பெருமனைக்கு சேவுச்சி சொல்லிவா
மேற்குறிப்பிட்ட பாடல்களைப் போன்ற பாடல்களைப் பாடி வண்ணானை அழைக்கும் மரபு இன்று அருகிவிட்டது. வண்ணான் வருவதற்கு முன்
45

Page 25
பருவமெய்திய பெண்ணிடம் பேய், பிசாசுகள் நெருங்காத வண்ணம் காவலுக்குப் பெண்ணொருத்தி நிறுத்தப்படுகிறாள். பின் ருதுவானவருக்கு பாக்கு வெட்டியொன்று கொடுக்கப்படுகிறது. சில இடங்களில் “சத்தகம்” என்றழைக்கப்படும் ஒலைவாரும் கூரான கத்தியும் கொடுக்கப்படுகிறது. கத்தியின் கூர்மையைப்போலவே கூர்மையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இக்கத்தி கொடுக்கப்படுகிறது என்றுசொன்னார்கள்.
2.2 நீர் வார்த்தல்
நீராட்டும்பொழுது மாமியார் அல்லது சுமங்கலிப் பெண்கள் முதன்முதல்
நீராட்டுவார். பின் முட்டை நல்லெண்ணைய் பால் என்பனவற்றை உணவாகக் கொடுப்பார்கள். பெரும்பாலான இடங்களில் நீராட்டிய பின்பு உணவாகச் சோறும், பருப்புக்கறியும் கொடுக்கப்படுகிறது. பின்பு தாய்மாமன், அத்தான்மார் ஆகியோரின் விருந்துபசாரங்கள் நடைபெறும்.
2.3 களி கிண்டுதல்
பருவமெய்திய பெண்ணுக்கு விசேட உணவாகக் களி கொடுக்கப்படுகின்றது. இக்களியானது அரிசிமா, உழுந்து, கருப்பட்டி என்பனவற்றைக் கொண்டு சமைக்கப்படுகின்றது. இக்களி கிண்டும் நிகழ்ச்சியானது பல பெண்களும் கூடிச் செய்யும் ஒன்றாகும். களி கிண்டுவதற்காக, பெண்களை அழைத்துப் பாடுவதாகப் பின்வரும் பாடல் அமைவதைக் காணலாம்.
"உச்சியிலே நின்று ஒடியாத நல்வேம்பே நாக்கில் நின்று நலியாதே நல்வேம்பே மார்பில் நின்னு மயங்காதே நல்வேம்பே நாத்திமார் கிண்டுங்கடி நார்த்தாம் பூப்போல மாமியார் கிண்டுங்கடி வானத்து (மீன்) போல தாயாரு கிண்டுங்கடி சட்டி கரிப்போல சக்களத்தி கிண்டுங்கடி சட்டி கரிப்போல ஒப்புடியா கிண்டுங்கடி ஓடையில் கொட்டுங்கடி”
2.4 வண்ணான் சடங்கு
பருவமெய்திய பெண்ணுக்கு வண்ணான் செய்ய வேண்டிய கடமைகள் வண்ணானின் சடங்குடன் முடிந்து விடும். அநேகமாக இவ்வண்ணான் சடங்கானது, பூப்பெய்திய தினத்திலிருந்து பதினாறாம் நாளில் நடைபெறும். அன்றைய தினத்தில் காலையில் சுமங்கலிப் பெண்கள் ஐவர் அல்லது ஏழுபேர் ஒன்றாகக் கூடுவர். பின்பு "நீத்து" அல்லது “ஓணான் கொடி" என்றழைக்கப்படும்
46

கொடியை வட்டவடிவமாகக் கட்டியெடுத்து சுற்றி நின்று பிடித்துக் கொள்வர். பூப்பெய்தியுள்ள பெண்ணை அவ்வட்டத்துள் புகுந்து இருமுறை தாண்டச் செய்வர். பின்னர் அக்கொடியை காலால் மிதிக்காது தூக்கி எறிவர்.
பின்பு நீராட்டுவதுடன் வண்ணான் கொடுத்த ஆடைகளை நீக்கிவிட்டு அன்று தொடக்கம் வீட்டு ஆடைகளை அணியச் செய்வர். பின்பு குத்துவிளக்கேற்றி அதில் இப்பெண்ணை விழிக்கச் செய்வர். விளக்கின் அருகிலே கண்ணாடி ஒன்றை வைத்திருப்பர். கண்ணாடியைப் பார்த்து குங்குமத்தை வைத்துக் கொள்வதற்காகக் கொடுப்பர். அதன் பின்பு பெண்ணானவள் அதுவரை இருந்த மூலையை விட்டு உலாவலாம் எனக் கருதப்படுகின்றது. வண்ணான் சடங்கு நடைபெறும் தினத்தன்று வண்ணானுக்குக் கொடுக்க வேண்டிய தட்சனைப் பொருட்களாக குடம், மரக்கறி, அரிசி என்பனவும், ஒரு நேரச் சமையலுக்கான சமையல் பொருட்களும் கொடுக்கப்படுவதுடன் சேலை, பணம் என்பனவற்றையும் பூப்பெய்திய பெண்ணின் தாயானவள் வண்ணாத்தியிடம் கொடுப்பாள்.
2.5 புண்ணியதானம்
தோட்டப்புறங்களில் புண்ணியதானச் சடங்கானது பூப்பெய்திய முப்பத்தொராவது தினங்களிலேயே நடைபெறுகின்றது. குடும்ப வசதியை பொறுத்துச் சில இடங்களில் பதினாறாம் தினத்தன்று நடாத்தப்படும். ஐயரின் உதவியுடன் வீட்டைச் சுத்திகரிப்பதுடன் நவக்கிரக பூசையும் மேற்கொள்ளப்படும். அத்துடன் உற்றார் உறவினரிடமிருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்ளும் நிகழ்ச்சியும் இடம்பெறும். மாமன்மார் சீர் வரிசை வழங்குவதும் அவற்றை அணிவித்து மகிழ்வதும் வழக்கமாகவுள்ளது. புண்ணியதானம் நடந்து முடிந்த மறுநாள் தாய்மாமன் மருமகளுக்குக் "கடா" விருந்து வைப்பதுண்டு. இது ஒரு சில இடங்களிலே மட்டும் நடைபெற்று வருகின்றது. பெண் வயதுக்கு வந்து முப்பது தினங்களுக்குப் பின்பு அதாவது புண்ணியதானம் முடிந்த பின்பு முதன் முதல் கோயிலுக்கு அழைத்துச் சென்று அவரின் பெயரில் விசேட பூஜை செய்யப்படுகிறது.
திருமணம்
தோட்டத்து மக்களைப் பொறுத்தளவில் திருமணங்கள் இரண்டு வகையாக
நடைபெறுகின்றன. அவையாவன: (1) பெரியார்களால் நிச்சயிக்கப்படும் திருமணம், (2) காதல் திருமணம்.
47

Page 26
3.1 பெரியோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணம்
இத்திருமண முறையைப் பொறுத்தளவில் முதலில் தரகர் மூலமாக பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றது. பின்பு ஜாதகம் பார்க்கப்படும். இதனைக் குறிப்பிப் பார்த்தல் எனவும் கூறுவதுண்டு. ஜாதகம் பொருத்தமாக இருந்தால் சம்பிரதாய பூர்வமாகப் பெண்ணைப் பார்க்க மாப்பிள்ளை வீட்டுக்கு பெண் வீட்டார் செல்வது வழமையாகவுள்ளது. பேச்சு வார்த்தைகள் சமாதானமாக அமையுமாயின் நிச்சயதார்த்தம் அல்லது தாம்பூலம் மாற்றல் இடம்பெறும்.
3.2 தாம்பூலம் மாற்றல்
இந்தப் பெண்ணுக்கு இந்த மாப்பிள்ளை அல்லது இந்த ஆணுக்கு இந்தப் பெண்தான் என நிச்சயப்படுத்துவதே தாம்பூலம் மாற்றிக்கொள்வதாகும். இச்சந்தர்பத்தில் பெண்ணின் தகப்பனும், மாப்பிள்ளையின் தகப்பனும் தாம்பூலம்மாற்றிக் கொள்வர். தாம்பூலம் மாற்றிக் கொண்டதற்கு அடையாளமாக மோதிரத்தையோ, மாலையொன்றையோ பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் அணிவிப்பது வழக்கமாகவுள்ளது.
3.3 பத்திரிகை வைத்தல் (பத்திரிகை வைத்தலாவது திருமணத்துக்கு
அழைப்பிதழை வழங்குதலேயாகும்)
பத்திரிகை வைத்தலானது திருமணத்துக்கு முன்பு இரண்டுவாரங்களுக்கு நடைபெறும். விதவைகளோ, இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்தவர்களோ பத்திரிகை வைப்பதற்குச் செல்வதில்லை. முதலிற் கோயிலிற் பத்திரிகையை வைத்துப் பூசை செய்வர். பின்பு சூரிய சந்திரருக்கும் பூசைகள் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வயதில் முதிர்ந்தவர்கள் இருப்பின் அல்லது மாமனுக்கு பத்திரிகை கொடுக்கப்படுகிறது. பத்திரிகையுடன் வெற்றிலை, பாக்கு, மஞ்சள் என்பனவும் சேர்த்தே கொடுக்கப்படும். மற்றும் நெருங்கிய உறவினருக்கு நேரடியாகப் பத்திரிகை கொடுப்பதும், ஏனையோருக்கு தபாலில் அனுப்புவதும் வழக்கமாகியுள்ளது. இப்பத்திரிகை வைப்ப்துடன் தொடர்புபட்ட பாடலொன்று பின்வருமாறு அமைவதைக் காணலாம்.
தெக்கத்தி மாமனுக்கு தென்னோலையில் பாக்கு வைத்தோம் வடக்கத்தி மாமனுக்கு வாழையிலையில் பாக்கு வைத்தோம் சுத்தி மடிகோடி குரியருக்கும் பாக்கு வைத்தோம் பக்கம் மடிகோடி பகவானுக்கும்
48

பாக்கு வைத்தோம் வாறாக வாறாக மானிட்ட
பந்தருக்கு பந்த நெஞ்சி படநெஞ்சி வாறாக இட்டார்கள் பந்தல் இருதூக்கி காதவடி"
3.4 பொன்னுருக்கல்
இச்சடங்கானது தாலியைச் செய்வதற்கு முன்பு ஆசாரி அதற்கான பொன்னை உருக்குவதாகும். பொன்னை உருக்குவதற்கு முன்பு விநாயகருக்கு விசேடமான பூசையொன்று செய்யப்படும். தாலி செய்து முடித்த பின்னர் சுமங்கலிப் பெண்கள் ஐவர் சென்று ஆசாரியருக்கான தட்சணையைக் கொடுத்துவிட்டுத் தாலியைப் பெற்று வருவது வழக்கமாயுள்ளது. தாலியைச் செய்வதற்கு பொன்னைத் தட்டும்போது அது விலகித் தெறித்து விழுந்தால் திருமணம் ஆகப்போகும் மணமக்களின் எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று நம்பப்படுகிறது.
3.5 மணமகளின் வருகை
ஐயரின் உதவியுடன் நடைபெறும் திருமண வைபவத்தில் முதலில் மணமகளின் வருகை இடம்பெறுகிறது. மணமகள் மணவறை அல்லது மேடைக்கு வந்த பின்பு ஐயர் தீர்த்தத்தை வழங்குவார். அத்துடன் தருப்பைப் புல்லையும் பெண்ணிடம் கொடுப்பார். மணமகளைச் சுமங்கலிப் பெண்கள் அடைகற்றி நீர், செம்பு, லட்சுமி விளக்கு என்பவற்றைக் கொண்டு சுற்றி ஆசிர்வதிப்பார். பின்பு மணமகள் தாலி கட்டப்படும் போது அணியவேண்டிய உடைகளை ஐயர் பெண்ணின் தோழியிடம் ஒப்படைப்பார். தொடர்ந்து தோழி மணமகளை அலங்கரிக்கும் வேலையில் ஈடுபடுவாள்.
3.6 மணமகனின் வருகை
மணமகளுக்குச் செய்த கரணங்களைப் போலவே மணமகனுக்கும் செய்யப்படும். பின்பு மணமகனின் தோழன் மணமகனுக்கு ஆடை அணிகளை அணிவிப்பார்.
3.7 முர்த்தக்கால் ஊன்றுதல்
தோட்டப்புறப் பகுதிகளில் மூர்த்தக்கால் பெண் வீட்டாரும், மாப்பிள்ளை தோழருமாகச் சேர்ந்து ஊன்றுவது வழக்கமாயுள்ளது. மா, பூவரசம், முள்முருக்கு என்பன மூர்த்தக்காலாக ஊன்றப்படுகிறது.
49

Page 27
3.8 ஓமம் வளர்த்தல்
திருமணச் சடங்குகளில் ஒன்றாகவே ஒமம் வளர்க்கப்படுகிறது. ஐவகையான குச்சிகள் இட்டு நெய்யையூட்டி ஐயர் ஒமத்தை வளர்ப்பார். "அக்கினி" சாட்சியாக இந்தத் திருமணத்தில் நான் இப்பெண்ணை மணமகளாக ஏற்றுக்கொள்கிறேன். " என்ற மணமகனின் உறுதிமொழியைக் குறிப்பதாகவே இச்சடங்கு இடம்பெறுகின்றது.
3.9 கன்னிகாதானம்
மணமக்களை மணவறையில் இருத்தி அவர்கள் முன்னிலையில் அவர்களின் பெற்றோர்கள் (சம்பந்திமார்) மாறி மாறிப் பொட்டிட்டு மாலை மாற்றிக்கொள்வர். பின்பு மூன்று பரம்பரைப் பெயரைச் சொல்லி பாணிக்கிரகணம் செய்து கன்னிகாதானம் செய்து கொடுப்பர்.
3.10 மாங்கல்ய தாரணம்
மாப்பிள்ளை பெண்ணின் கழுத்தில் தாலியைக் கட்டுவார். மூன்று முடிச்சுகள் போடப்படும். முதலில் கணவரும் பின்பு மைத்துணியும் சபையிலிருந்து ஒருவரும் இவற்றைக் கட்டுவர்.
3.11 அம்மி மிதித்தல்
ஐயரின் வேண்டுகோளுக்கு இணங்கவே மணமகள் அம்மியை மிதிக்கிறாள். ஏனெனில் அம்மியைப் போன்று உறுதியாகக் கணவனின் மனதைப் பற்றிக்கொள்ளல் என்பதைக் குறிப்பதாகவே இது அமைகின்றது என்கின்றனர். சில இடங்களில் இச்சடங்கினை அகலிகையுடன் தொடர்புபடுத்திக் கூறுவதுண்டு.
3.12 மிஞ்சி போடுதல்
மனைவி கணவனை விடமிஞ்சிப் போய்விடக்கூடாது என்பதற்காக கணவனின் சகோதரன் பெண்ணுக்கு மிஞ்சியை அணிவிக்கிறான் என்கின்றனர். இதே போலப் பெண்ணின் சகோதரி மணமகனுக்கு மிஞ்சியை அணிவிக்கிறாள். மிஞ்சி போடுதல் தொடர்பாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. திருமணமான ஆண் காலில் மிஞ்சி போடுவதற்கான காரணம் என்னவெனின், பெண்கள் எப்போதும், குனிந்து கொண்டு நடப்பதுண்டு. ஆணின் காலில் மிஞ்சியைக் கண்டதும் அவரை நிமிர்ந்து பார்க்க மாட்டார்கள் என்பதாகும். காலில் மிஞ்சியிருப்பது திருமணமானவர் என்பதைக் காட்டுவதற்கு உதவும் என்பதாலும் மிஞ்சி அணியப்படுகிறது என்ற கருத்தும் நிலவுகிறது.
50

3.13 அருந்ததி நட்சத்திரத்தினைப் பார்த்தல்
மணமகள் கற்புக்கரசி அருந்ததியைப்போல கற்புள்ளவளாக வாழவேண்டும் என்பதற்காகவே இந்நிகழ்ச்சி இடம்பெறுகிறது என்பர். அருந்ததியை மணமக்களுக்குக் காட்ட வேண்டும் என்பதற்காகவே முன்பு திருமணங்கள் இரவில் நடைபெற்றதாகவும் கூறுவர்.
3.14 குழந்தைய்ைப் பரிமாற்றல்
திருமணமான தம்பதிகள் உறவினர் ஒருவருடைய குழந்தையைத்தாம் அழைத்து வருவர். ஐயரின் வேண்டுதலுக்கு ஏற்பப் பெண் மணமகனின் கைக்கு அக்குழந்தையை பரிமாற்றுவாள். பின்பு மணமகன் மணமகளுக்கு மாற்றுவான். இவ்வாறே குழந்தைப் பரிமாற்றம் மும்முறை நடைபெறும். குழந்தைச் செல்வத்தை பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்கே இச்சடங்கு நடைபெறுகின்றது. இதனைத் தொடர்ந்து மணமக்கள் சபையோரிடம் இருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொள்வார்கள். இறுதியாக விருந்துபசாரம் இடம்பெறும். இதன் பின்பு சுப முகூர்த்தத்தில் மணமகளுக்கான சாந்தி முகூர்த்தம் இடம்பெறும்.
3.15 ஐயர் இல்லாமல் செய்யப்படும் திருமணம்
இத்திருமணமுறையானது முதலில் பெண் கேட்கும் படலத்துடன் ஆரம்பமாகும். இதனை ஆரம்பிப்பவர்கள் மாப்பிள்ளை வீட்டாராகும். பெண் கேட்டுச் செல்லும் போது பெண்வீட்டார் பெண் கொடுக்கச் சம்மதித்தால் மட்டுமே பெண்ணைப் பார்க்கச் செல்வர். பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த பின்பு திருமணத்துக்கான திகதி நிச்சயிக்கப்படும். இதனைத் "தேதி வைத்தல்" என்று கூறுவர். திருமணத்தன்று முதலில் பாக்கு மாற்றுவர். அதாவது சம்பந்திமார் பாக்கு மாற்றிக்கொள்வர். முதலில் கோயிற் பாக்கும் பின்பு தாய்மாமன் பாக்கும் மாற்றிக்கொள்ளப்படுகிறது. பின்பு பெண்ணுக்குப் பரிசாக நகை போடப்படுகிறது. பரிசு நகையாக மாலை அல்லது காப்பு அணிவிக்கப்படும். அவ்வாறு அணிவிக்க வசதியில்லாத போது பரிசுக்காக இருபத்தொரு ரூபா மாத்திரம் மாப்பிள்ளை வீட்டாரால் பெண் வீட்டாருக்குக் கொடுக்கப்படும்.
விவாகத்தினத்தன்று தாலி, கூறைச்சேலை என்பவற்றுடன் மணமகள் மணவறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். பின் இருவரையும் பாயில் இருத்தி விளக்கினை நோக்கி வணங்குமாறு கூறித் தாலி கட்டப்படும். சிறு தோட்டங்களில் (உதாரணம் நாரங்களைத் தோட்டம், பதுளை) 1951ம் ஆண்டு வரையில் தாலி மஞ்சள் கயிற்றினால் கட்டப்படவேண்டும் என்ற வழக்கு இருந்தது. இத்தோட்டப்பகுதியில் 1940ம் ஆண்டுக்கு முன் தாலி கட்ட மாப்பிள்ளை
51

Page 28
செல்வதில்லை. மணமகளின் தங்கையே தாலியைக்கட்டிப் பெண்ணை மணமகளின் வீட்டுக்கு அழைத்து வருவது வழமையாக இருந்தது. ஐயர் இல்லாது செய்யப்படும் திருமணங்களில் குடும்பத்திலுள்ள மூத்த ஆண்கள் முன் நின்று கரணங்களைச் செய்விப்பர்.
3.16 "கலப்புத் திருமணங்கள்”
காதல் திருமணமானது பெரும்பாலும் பதிவுத் திருமணமாகவே அமைகின்றது. தோட்டப்புறங்களில் வசிக்கின்றவர்கள் போதிய பொருளாதாரத்தைப் பெற்றிராமையே இதற்கு காரணம். இவ்வாறு காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றவர்கள் பெரும்பாலும் ஒரே தோட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள். ஒரு சிலரே வெளியிடங்களிலிருந்து திருமணம் செய்து கொள்கின்றனர். இரண்டாவது வகையினர் பெரும்பாலும் தோட்டங்களிலே தொழில் செய்யாதவர்களாகவே இருக்கின்றனர். இவர்கள் தோட்டத்துக்கு வெளியே காய்கறித் தோட்டம் வைத்திருப்போராகவோ, வியாபாரிகளாகவோ இருக்கின்றனர். காதலித்துத் திருமணம் செய்து கொள்கின்றவர்கள் பெரும்பாலும் சரதியைக் கவனிப்பதில்லை. அத்துடன் வ்ரித்தியாசமான சாதியினரைத் திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணமானவுடன் வேறு தோட்டங்களுக்குக் குடிபெயர்ந்து செல்வது வழக்கம்.
இது தவிர, தாய்மாமனைத் திருமணம் செய்து கொள்ளும் வழக்கமும் சிலரிடையே உண்டு. அதாவது பரம்பரைச் சொத்துக்கள் வெளியில் போகாமல் இருப்பதற்காக அவ்வாறு செய்யப்படுகிறது. உறவினர்களைத் திருமணம் செய்து கொள்கின்றவர்களில் ஒரு சிலர் முறை மாறிய, அதாவது திருமணம் செய்து கொள்ளக்கூடிய முறையல்லாத, அண்ணன் முறையில் உள்ளவர்களையும், (பெரியம்மாவின் மகன்) கூட திருமணம் செய்து கொண்டுள்ளமை பற்றியும் அறிய முடிகின்றது.
கலியாணச் சடங்கில் முக்கிய அம்சங்களிலொன்று தாலி கட்டுதல் ஆகும். ஆனால் பல இடங்களில் தாலி கட்டுதல் கலியாணத்தின் பின்னரே நடைபெறுகின்றது. காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் பிள்ளைகள் பெற்ற பின்னால் கூட தாலியைக் கட்டிக்கொள்வதுண்டு. தமது வசதியைப்பொறுத்து அண்மையில் உள்ள கோயிலுக்குச் சென்று ஐயரின் உதவியுடன் தாலியைக் கட்டிக் கொள்வர். இவ்வாறான தாலியை அணிவிக்கும் தினத்தில் ஒரு சில உறவினர்களுக்கு மட்டும் சொல்லிச் செய்வதுண்டு. கலப்புத் திருமணம் என்னும் தொடர் பொதுவாகச் சாதிவரையறைகளுக்கு அப்பாற்பட்ட திருமணங்களையே குறிக்கும். தமது குலவட்டத்தினுள் முறைப்பெண்ணோ ஆணோ ஒருவரையொருவர் விரும்பித் திருமணஞ் செய்யுமிடத்து முன்னர் கூறப்பட்ட மரபுவழிப்பட்ட முறைமைகள் கடைப்பிடிக்கப்படும்.
52

V
மரணம்
மலையகமக்களிடையே மரணத்தோடு தொடர்புற்ற பல்வேறு சடங்குமுறைகள் காணப்படுகின்றன. ஒருவர் இறக்கப்போகிறார் எனத் தெரிந்துகொண்டால் வாயில் பால் வார்ப்பது வழக்கமாயுள்ளது. உயிர் பிரியும் வேளையில் சங்கு ஊதி பேணடி அடிக்கப்படுவதும் வழக்கமாயுள்ளது. இறந்தவுடன் பெருவிரல்கள் கட்டப்படும். ஒருவர் இறந்து அரை மணித்தியாலத்துக்குள் தேங்காயை உடைத்து வைத்து தலைமாட்டில் விளக்கேற்றி வைப்பர். ஊதுபத்தி பற்ற வைப்பதுவும் வழக்கமாயுள்ளது. அத்துடன் மஞ்சளைக் கரைத்து நீரில் அறுபதாம் பச்சை எனப்படும் (ஒரு விதஇலை) பச்சிலையைப்போட்டு வைப்பர். நிறைநாளியும் வைக்கப்படும்.
4.1 சேட்டுமை கட்டி இழுத்தல்
உயிர் போகாது இழுத்துக்கொண்டிருப்பதையே இவ்வாறு குறிப்பிடுவர். இச்சந்தர்ப்பத்தில் முதலில் பாலை ஊற்றுவர். பின்பு காசை உரைத்து ஊட்டுவர். அதன் பின்பும் உயிர் போகாது விடின் வெள்ளி, அல்லது தங்கத்தைக் கரைத்து வாயில் ஊற்றுவர். பின்பு உயிர் பிரிந்ததும் வைகுண்டமாலை எனப்படும் பாடல் பாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து ஒப்பாரி வைக்கப்படுகிறது. ஒப்பாரி வைப்பதுடன் தோட்டப்புற வழியே சாவுத்தப்பை அடித்து இறந்த செய்தியை ஊருக்கு அறியச் செய்வதும் வழமையாகவுள்ளது. வீட்டில் ஒப்பாரி பாடுவது வழக்கம். இறந்தவுடன் பாடப்படும் ஒப்பாரியுள் ஒன்றாக இப்பாடல் அமைந்துள்ளது.
"வெள்ளி வெலக்கி வெல பாலு வாங்கி வைச்சேன் வெலப்பாலு வேணாமுனு வெள்ளி ரதம் சம்மதிச்ச”
ஒப்பாரியானது கணவனுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, மாமிமார்களுக்கு மாமனுக்கு எனத் தனித்தனியே வகைப்படுத்திப் பாடுவது வழக்கமாயுள்ளது. பொதுவாக ஒgபாரியில், இறந்தவர் வாழ்ந்தபோது செய்த நன்மைகளையும், தீமைகளையும் எடுத்துக் கூறப்படும். மாமியார் இறந்தவிடத்து மருமகள்பாடும் ஒப்பாரியில் பெரும்பாலும் மருமகள் செய்த கொடுமைகள் எடுத்துரைக்கப்படும். கணவரை இழந்த மனைவியொருத்தி பாடும் ஒப்பாரியானது பின்வருமாறு அமைகிறது.
53

Page 29
"எரிக்கும் நிலவே எந்திரிக்கும் சூரியரே கைக்கொடுக்கும் கருனரே விரல் கொடுக்கும் வீமரே - நான் அருச்சுனை சேர்ந்த அரும்பாவி வாறேனே .
4.2 இறந்த செய்தியை அறிவித்தல்
இறந்த செய்தியை பறையர் என்று கூறப்படுபவர்கள் மூலமாக தோட்டம் முழுவதும் அறிவிக்கப்படும். இது "கேதம் சொல்லுதல்" என்று கூறப்படும். கேதம் சொல்லச் செல்பவர்கள் ஒவ்வொரு வீட்டுக்கு முன்னாலும் நின்று இறந்தவர் பற்றிய செய்தியை அறிவிப்பார். இந்த அறிவிப்பிற்கென ஒவ்வொரு வீட்டிலும் காற்பணம், அல்லது ஒரு பிடி அரிசி கொடுப்பர். தற்போது இது வழக்கில் இல்லை. ஏனெனில் குறிப்பிட்ட சாதியினர் இதனைச் செய்வதற்கு மறுப்பதே காரணம், கேதம் சொல்பவரின் சொந்த வீட்டிலும் தப்பு அடிக்கப்படும்.
4.3 கோடி போடுதல்
செத்த வீட்டுக்கு வருபவர்கள் இறந்தவர் ஆணாக இருந்தால் "வேட்டி" லேஞ்சு கொண்டு வருவார். பெண்ணாக இருந்தால் சேலை கொண்டு வருவார்கள். இது கோடி கொண்டு வருதல் எனப்படும். இந்தக் கோடியானது ஒரு பாத்திரத்தில் தேங்காய், அரிசி, என்பனவற்றுடன் வைத்துக் கொண்டுவரப்படும்.
4.4 கட்டைமெய் எடுத்தல்
தோட்டங்களில் இறந்தவரின் வீட்டுத்திண்ணையிலோ அல்லது வாசலிலோ ஒரு மேசை போடப்பட்டு, தாம்பிாளத்தில் வெற்றிலை, பாக்கு, புகையிலை என்பன வைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பக்கத்தில் ஒரு கொப்பியும் பேனையும் வைக்கப்பட்டிருக்கும். இறந்தவரின் உறவினர்கள். நண்பர்கள், அக்கொப்பியில் தமது பெயரை எழுதிவிட்டு அவ்விடத்தில் தமக்கு விருப்பமான பணத்தைக் கையளித்துச் செல்வர். இவ்வாறு கொடுக்கப்படும் காசு கட்டைமெய் எனப்படுகின்றது. இத்தொகை இறந்தவரின் வீட்டுக்கு உபகாரமாக அமைகிறது.
4.5 மாமன் சீரு
றந்தவருக்கு மாமன் முறையானவர் கொண்டுவருவது மாமன் சீரு எனப்படும். மாமன் வீட்டுக்காரர் வசதிபடைத்தவராக இருந்தால் தனியாகத்துப்பு அடிப்பவரைக் கூட்டிவருவார். பொதுவாகச் செத்த விட்டில் தப்படிப்பவரையே கூட்டி
54

வருவது வழக்கம், மாமன் செத்த வீட்டை வந்து சேரும் வரை காத்திருந்து
அதன் பின்பே செத்தவரை வெளியில் அதாவது வாசலுக்குத் தூக்கி வருவர்.
1ा जान्छ, *: L"
("gifڑھنوئعڑ%fHfF
6 நீர்மாலை எடுத்தல் تقلیتیلے
இறந்தவர் வீட்டு வாசலில் வைத்து நீர்மாலை எடுக்கப்படும். அதாவது இறந்தவரின் பிள்ளைகளை மாமன் வீட்டார் ஆற்றுக்கு அழைத்துச் சென்று குளிக்கச்செய்து பூமாலையிட்டு, வேட்டி, பூனூல் அணிவித்து (இடமிருந்து வலமாகப் பூணுரல் அணியப்படும்) ஈரவேட்டியுடன் ஒரு குடத்தில் நீர் நிரப்பி வீட்டுக்குக் கொண்டு வருவர். இந் நீரின் உதவியுடன் அம்பட்டன் சடங்குகளைச் செய்யத் தொடங்குவார்.
47 அரப்பு வைத்தல்
அம்பட்டன் கூட்டத்தைப் பார்த்து மாமன்மார் வந்து எண்ணெய் அரப்பு வையுங்கள் என்று கூறுவார். அம்பட்டனின் ஒரு கையில் சட்டியில் நீரும், மறுகையில் துணியும் வைத்திருப்பார். எண்ணெய் அரப்பு தொட்டு வைத்தவுடன் சட்டியில் கையைக்கழுவிவிட வேண்டும். கழுவிய கையை உதறக் கூடாது என்பதும் ஐதீகமாகும். இது முடிந்ததும் மாலை மாற்றப்படும். இறந்தவர் ஆணாக இருப்பின் மாலை மாற்றுவதுடன், ஆற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட குடத்து நீரை மனைவியின் தலையில் ஊற்றி, நெற்றி குங்கமத்தை அழித்து விடுவதுடன், தாலியையும் கழற்றி விடுவர். சில இடங்களில் கருமாதியன்றே தாவி கழற்றப்படுவதுண்டு.
4.8 நெய்ப்பந்தம் பிடித்தல்
இறந்தவருக்காக நெய்ப்பந்தம் பிடிக்கும் சடங்கில் பேரப்பிள்ளைகளே பங்கெடுத்துக் கொள்கின்றார்கள். பேரப்பிள்ளையில்லாதவர்களுக்கு நெய்ப்பந்தம் பிடிப்பதில்லை. இதனைத் தொடர்ந்து எண்ணெய் தொட்டு வைத்தல் என்னும் சடங்கு இடம்பெறுகின்றது.
9 சீதேவி வாங்குதல்
இறந்தவரின் செல்வத்தை இருப்பவர்கள் வாங்கிக் கொள்வதாகக் கருதியே ச்ெசீதேவி வாங்கும் சடங்கு நடைபெறுகின்றது. நவதானியங்கள் கலந்த ாணியை உருண்டையாக இறந்தவரின் வலது கையில் வைத்து அடையாளம் படும்படி செய்து கொள்வர். அதனை இறந்தவரின் மனைவியோ வேறொருவரோ பாங்குவதே "சீதேவி வாங்குதல்" எனப்படும். இதனை வாங்குபவர் அதனை றெந்தவர் உயிர் பிரிந்த இடத்திலுள்ள சுவரில் அடித்து வைப்பார். எட்டு
55

Page 30
எனும் சடங்கு நடைபெறும் வரையில் அத்தானியம் கலந்த சாணமாகிய சீதேவிக்கு நீர் ஊற்றப்படும். எட்டு நடைபெறும் தினத்தில் அது ஆற்றில் விடப்படும்.
4.10 வாய்க்கரிசி போடுதல்
இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படும். இறந்தவரை வீட்டு வாசலில் வைத்திருக்கும் போது ஒரு முறையும் புதை குழிமேட்டில் வைத்து ஒரு முறையும் இரண்டு முறைபோடப்படுகின்றது. பிரேதம் முச்சந்தியை அடைந்தவுடன் அம்பட்டன் "நாடுறு உறுமஞ் செய்ங்க” என்று கூறி வாய்க்கரிசி போட அழைப்பார். வாய்க்கரிசி போடுபவர்கள் சில்லரைக் காசுடன் அரிசியையும் அள்ளி மூன்று முறை போடுவார்கள்.
4.11 இறந்தவருக்கு ஆசி கூறுதல்
இறந்தவர் மேலான வாழ்க்கையைப் பெற வேண்டுமெனப் பிரார்த்தித்து உறவினர்கள் கூறும் ஆசியாக அமைகின்றது.
"சொர்க்கஞ்சேர்" கைலாசஞ்சேர்” வைகுண்டஞ்சேர்” என்பதே இவ்வாசியாகும்.
4.12 கொள்ளிக்குடம் உடைத்தல்
இறந்தவரின் வீட்டுக்கு முன்புறமாகவுள்ள முச்சந்தியில் வைத்து இது உடைக்கப்படும். தாய்க்குத் தலைமகனும், தகப்பனுக்குக் கடைசி மகனும் கொள்ளிக்குடம் உடைப்பது வழக்கமாகவுள்ளது. கொள்ளிக்குடம் ஏந்துபவர் மூன்று முறை பிரேதத்தை சுற்றி வருவார். அவரின் பின்னால் ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது பேர் சுற்றி வருவர். ஒவ்வொரு முறையும் சுற்றிவரும்போது அம்பட்டன் கொள்ளிக்குடத்தில் ஒவ்வொரு ஒட்டை போடுவான். பின்னால் வருபவர்கள் ஓட்டை வழியாக வரும் நீரை இரண்டு பக்கமும் தட்டிவிட்டுக்கொண்டு வருவர். மூன்று முறை சுற்றியபின் கொள்ளிக்குடத்தை தோளிலிருந்து பின் பக்கமாக எடுத்து அம்பட்டன் தரையில் போட்டு உடைப்பார். இதன் பின்னரே பிரேதம் தூக்கப்படும். கொள்ளிக்குடம் உடைத்தவரின் தலையில் முக்காடு இட்டு பின்பக்கம் திரும்பிப்பாராது வீட்டுக்கு அழைத்துச் செல்வர். முச்சந்தியிலிருந்து பிரேதம் தூக்கப்பட்ட பின்னர் அந்த இடத்தில் பெண்கள் சுற்றி நின்று மாரடித்து இறுதியில் சுற்றி இருந்து மூன்று முல்ற அழுது விட்டு வீடு செல்வர். அதேவேளையில் பிரேதம்
56

தூக்கியவுடன் முச்சந்தியில் ஒரு சுண்டு தண்ணிரும் புகையிலையும் வைத்துவிடுவர். ஆண்களாயின் பீடி அல்லது சுருட்டு வைத்து விடுவர். பிரேதம் தூக்கிச் செல்லப்படும் போது முறுக்கப்பட்ட வேட்டியைப் பிரேதப் பெட்டிக்கு மேலாக ஒரு புறத்திலிருந்து மறுபக்கமாக மாறி மாறி வீசி எறிந்து செல்வர். அத்துடன் சோளப்பொரியுடன் சில்லறைக்காசைக் கலந்து பிரேதப் பெட்டிக்கு மேலாக இறைத்துக் கொண்டும் செல்வர்.
4.13 குழிமேட்டில் வாய்க்கரிசி போடுதல்
பிரேதம் இடுகாட்டுக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்பு மூன்று முறை
குழியைச் சுற்றி வந்து பிரேதப்பெட்டியை இறக்கி வைப்பர். அம்பட்டன் மீண்டும் "நாடுறு உறுமஞ் செய்ங்க” என்று சொல்லி வாய்க்கரிசி போடுங்க என்று சொல்லுவார். இதனைதொடர்ந்து உரித்துடையாரை (அதாவது தாய்க்குத் தலைமகனையும், தகப்பனுக்கு கடைக்குட்டியையும்) அழைத்துச் சென்று அவரின் இடக்கையில் மணிக்கட்டுக்கும் கீழுள்ள முடியை சவரம் செய்து கையைக் கழுவி விடுவர்.
4.4 குழிமேட்டுச் சடங்குகள்
பிணப்பெட்டியைக் குழிக்குள் இறக்கும் முன்பு அக்குழிக்குள் சில்லரைக்காசு போடப்படும். அதனைப்பறையர் எனக் கூறப்படுவோர் இறங்கி எடுத்துக் கொள்வர். அதனைத் தொடர்ந்து பெறுமதியான அணிகள் இருப்பின் அவை கழற்றப்படும். அதன் பின்பு உறவினர்களின் கைப்படப்பிணம் இறக்கப்பட்டு அடக்கம் செய்யப்படும். இச்சடங்கில் அம்பட்டன் பெரும்பங்கினை வகிப்பார். பிணம் தகனம் செய்யப்படும் வழக்கமும் உண்டு.
4.15 பங்காளிகளின் கலந்துரையாடல்
குழிமேட்டில் இறந்தவரை அடக்கம் செய்த பின்னர் அம்பட்டன் எல்லோரையும் நோக்கிக் கதைப்பார். பங்காளிகள் மாத்து விரிங்க என்று கூற அம்பட்டன் வெள்ளை வேட்டியை விரித்து மாமன் மச்சினன் வந்திருங்கோ என்று கூறுவர். மாமன் மைத்துனர்கள் சம்மணம் போட்டுக் கொண்டு இருந்தவுடன் "எட்டு” எப்பொழுது வைப்பது என்பதைத் தீர்மானிப்பர். பின் கட்டை மெய் கணக்கிடப்பட்டு அம்பட்டன் பறையர் என்போருக்கும் சம்பளம் வழங்கப்படும். பின்னர் கோடியாக வந்த துணிகளில் ஒன்றை எடுத்து ஒரு அளவுக்குக் கிழித்து அம்பட்டனுக்கு ஒரு முழம் என்று ஒரு துண்டையும் கேதம் சொன்னவருக்கு ஒரு முழம் என்றும் வண்ணானுக்கு ஒரு முழமுமாகத் துண்டுகளை அவர்களை நோக்கி வீசுவர். இதன் பின்பு கோடிகள் அனைத்தும் கணக்கிடப்பட்டு வண்ணானிடம் ஒப்படைக்கப்படும் (வண்ணான் அவற்றைச்
57

Page 31
சலவை செய்து எட்டாம் நாள் "எட்டு” சடங்குக்கு கொண்டு வருவான்) இதனைத் தொடர்ந்து அனைவரும் ஆற்றில் குளித்துவிட்டு ஈரவேட்டியுடன் வீட்டுக்கு வருவர். இவ்வாறு வருபவர்கள் ஒவ்வொருவராக வாசலில் வைக்கப்பட்டிருக்கும் உரலைத் தாண்டிக் கொண்டு வீட்டினுள் விளக்கைப் பார்த்துக் கும்பிடுவர்.
இறந்தவரை எரித்திருந்தால் கொள்ளி வைத்தவர் இறுதியாகச் செல்வார். அவர் உரலைத்தாண்டி பின் காலால் தள்ளிவிடுவார். வீட்டின் முன்னாள் வைக்கப்பட்டுள்ள உரலில் சாணிநீர் அல்லது மஞ்சள் நீர் கரைத்து வைக்கப்பட்டிருக்கும்.
4.16 சலிப்புச் சோறு பரிமாறல்
பிணத்தை அடக்கம் செய்து விட்டு வந்த அனைவருக்கும் "சலிப்புச்சோறு பரிமாறப்படும். இப்பரிமாறல் சில வேளைகளில் பிட்டாகவும் இருக்கும். சோறாக இருப்பின் சோற்றுடன் மிளகு ரசம் பரிமாறப்படும், இது அநேக உறவினர் அயலவர் வீட்டிலிருந்து கொண்டு வரப்பட்டதாக இருக்கும். இறந்தவரின் வீட்டில் எட்டு முடியும் வரை அடுப்பு மூட்டுவதில்லை. முன்னர் சமைத்த உணவு மாமன் வீட்டிலிருந்து எட்டு வரையில் கொண்டுவரும் வழக்கமாயிருந்தது. இந்த வழக்கம் இப்பொழுது அருகியுள்ளது.
4.17 எட்டுத் தினங்களுக்கு தீ வளர்த்தல்
ஒருவர் இறந்த தினத்திலிருந்து தொடர்ந்து எட்டு நாட்களுக்கு வீட்டுக்கு முன்னாள் நெருப்பு மூட்டப்படுவதும் சில பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
4.18 முன்றாம் குழிமுடல்
மூன்றாம் குழிமூடல் என்பது இறந்து மூன்றாம் தினத்தில் செய்யப்படுவது. அன்றைய தினத்தில் தென்னை ஓலை கொண்டுவரப்பட்டு அது பின்னப்படும். இது "பாடை" எனக் கூறப்படும். பின்னப்பட்ட பாடை, குரும்பை போன்றவற்றைக் கொண்டு சுடுகாட்டுக்குச் செல்வர். பிரேதம் எரிக்கப்பட்டிருப்பின் "உச்சந்தலை” ஒட்டைத் தேடி எடுப்பர். அதனை ஒரு தகரத்தில் போட்டு மூடி வைத்துவிட்டு ஏனைய சாம்பல் அனைத்தையும் சாக்கில் அள்ளிக் கொள்வர். பின் அந்த இடத்தில் சுற்றி கற்களை அடுக்கி சிறு மேடாக்கி அந்த மேட்டில் அம்பட்டன் ஒரு உருவத்தை கையால் வரைந்து கொள்வார். இந்த உருவத்தின் தலைமாட்டில் ஒரு கல்லை வைத்து அதற்கு சாம்பிராணி, கற்பூரம், காட்டிய பின் அந்த கல்லுக்கருகில் வெற்றிலை, இளநீர், ஒரு புதுப்பானையில் தண்ணிர் ஆகியவற்றை வைத்து நான்கு தடியை ஊன்றி மேலே பாடை கட்டுவர்.
58

தலைமாட்டில் தென்னை, மா, பலா அல்லது கரும்பு இவற்றுள் ஏதாவது ஒன்றை நட்டுவிட்டுத் திரும்புவார்கள்.
4.19 எட்டுக் காரியம் செய்தல்
இச்சடங்கானது இறந்த தினத்திலிருந்து எட்டுத் தினங்களுக்குப் பிறகு நடைபெறுகிறது. இறந்த தினத்தில் இறந்தவரின் கையில் பதித்து எடுக்கப்பட்ட "சீதேவி" என்ற பாலிகையை மையமாக வைத்தே இந்த எட்டுக் காரியம் செய்யப்படுகின்றது. இறந்த தினம் தொடக்கம் இப்பாலிகை நன்றாக நீருற்றி வளர்த்து வரப்பட்டிருக்கும். எட்டாம் நாளன்று கொள்ளிக்குடம் உடைத்தவர் அதிகாலையிலேயே எழும்பிக் குளித்துவிட்டு பாலிகைக்கு நீர் தெளித்து எடுத்துவருவார். பின் அந்தப் பாலிகைச் சட்டிக்குப் பூமாலை போடப்படும். இதனைக் தொடர்ந்து அரிசிச் சுண்டில் அரிசி எடுத்து ஈர்க்கில் குச்சியில் ஒரு வெற்றிலையை நேராகச் செருகி அதில் குற்றிவைப்பர். இது நிறைநாளி என்று அழைக்கப்படும். பக்கத்தில் ஒரு செம்பில் நீரை எடுத்து அதில் தேங்காய் வைத்து அந்த தேங்காய்க்கு பூமாலை போட்டு நூல் சுற்றி மீதி நூலை சுவற்றில் ஆணி அடித்துக் கட்டி விடுவர். இறந்தவர் அந்த நூலில் ஏறிப் போவதாக நம்பிக்கையுண்டு.
செம்புக்கருகில், இறந்தவர் பாவித்த பொருட்கள் வைக்கப்பட்டு, எட்டாம் நாள் வருபவர்கள் இது வைக்கப்பட்டிருக்கும் இடத்துக்குச் சென்று கேதம் காணுவர். பெண்கள் அவ்விடத்தில் அமர்ந்திருந்து அழுவர். இதனைத் தொடர்ந்து பாலிகைக்கு அருகில் மூன்று இலைகள் போடப்படும். இந்த இலை பலா இலையை கொண்டு தைக்கப்பட்டதாக இருக்கும். இதில் பலகாரங்கள் பழவகைகள் வைக்கப்பட்டிருக்கும். இரண்டு இளநீர், பால் என்பன வைக்கப்பட்டு அவ்விடத்தில் விளக்கு ஏற்றப்படும். இந்த விளக்கை லச்சுமி விளக்கு என்பர்.
இந்த வேலைகள் முடிவுற்ற பின்பு வெளியில் வந்து வண்ணானை மாற்று விரிக்குமாறு கூறுவர். அந்த மாற்றில் மாமன் உறவு முறைக்காரர்களை வந்து அமருமாறு அழைப்பர். பின்பு அவர்களை நோக்கி உத்தரவு தருகின்றீர்களா? என்று கேட்பர். அதாவது எட்டுக் காரியத்தை நடாத்துவதற்கு உத்தரவு கோரப்படும். அதனைத் தொடர்ந்து எல்லோரும், வந்து விட்டார்களா என்று மீண்டும் கேட்பர். இதற்கு மாமன் உறவினர்கள் வந்தும் வராமலும் இருக்கும். என்று கூறுவர். இதனை அடுத்து வீட்டார் தண்ணீர் வாளியைக் காட்டி மாமன் மச்சினன் "எடுத்த வழி கொடுத்த வழி, கையைக் கழுவிவிட்டு வந்து தண்ணிர் சிலாவுங்க” என்று கூறுவர். மாமன் உறவு முறையானவர்கள் கையைக் கழுவி விட்டு வந்து தண்ணிர் சிலாவ அவர்களைத் தொடர்ந்து அனைவரும் செய்வர். கொள்ளிடக்குடம் உடைத்தவர் இறுதியாக தண்ணி சிலாவுவார். "பிறகு படையல் பள்ளபத்தை” மூன்றாகப் பிரிப்பர். மூன்று இலையில் இளநீருடன்
59

Page 32
ஒன்று வண்ணானுக்கும், மற்றது அம்பட்டனுக்கும், நடுவில் உள்ள இலை வீட்டுக்கும் என்று பிரிப்பர்.
அதன் பின்பு பலா இலை கொண்ட மூன்று தொன்னையைக் கொண்டு வருவர். அதில் அவித்த உணவு இருக்கும். ஒரு தொன்னையை அம்பட்டனுக்கும், இரண்டாவது தொன்னையை வண்ணானுக்கும் கொடுப்பர். மிகுதியாக இருக்கும் ஒரு தொன்னையை வாசலில்வைத்துவிட்டு "மாமன் மச்சினன் உருமா கட்டிக்கொள்ளுங்க" என்று கூறிவிட்டு அந்தத் தொன்னையில் தண்ணீர் ஊற்றித் தள்ளிவிடுவர். இதனைத் தொடர்ந்து கொள்ளி வைத்தவர் பாலிகையை தூக்கிக்கொள்வார். அவருக்கு மேல் வேஷ்டியை விரித்து பிடித்துக்கொண்டு ஆற்றுக்குப் போய் பாலிகையை ஆற்றோரத்தில் வைத்துவிட்டுக் குளித்து விட்டு வீட்டுக்கு வருவர். வீட்டுக்கு வந்த பின் ஒவ்வொருவராகச் ஒரன்று விளக்கைப் பார்த்து கும்பிடுவர். "பாலிகை" எட்டு நாட்களுக்கு எவ்வாறு முளைத்துள்ளதோ அதனைக் கொண்டே நன்மை தீமை பார்க்கப்படும், பாலிகை நன்றாக முளைத்து இருந்தால் நல்லதென்றும் இல்லையென்றால் தடாது என்றும் நம்புகின்றனர்.
4.20 கரு மாதி
இச்சடங்கானது பெரும்பாலும் முப்பத்தோராவது தினத்தன்று நடைபெறுகின்றது. சில இடங்களில் பதினாறாம் நாள் நடைபெறுவது உண்டு கருமாதி நடைபெறும் முதல் நாள் இரவு இறந்தவருக்கு விருப்பமான உணவுகள் மூன்று நேரம் படைக்கப்படும். பின்பு மாரடித்து அழுதல் எனும் சடங்கு நடைபெறும், அதாவது பெண்கள் மார்பில் தட்டிக்கொண்டு அழுதலாகும். ஏனைய தடங்குகள் ஆற்றோரத்தில் அம்பட்டன், வண்னான் ஆகியோரின் உதவியுடன் நடைபெறும் இறந்தவரின் நினைவாக ஒருகல் ஆற்றோரம் ஊன்றப்படும். அக்கல்லைச் சுற்றி மேற்புரமாகப் பந்தல் போட்டு வாழை மரத்தையும், கட்டியிருப்பர். பின் சங்கை ஊதியவண்ணம் ஆற்றோரம் ஊன்றப்பட்ட அக்கல்லை வீட்டுக்குக்கொண்டு வருவர். இறுதியாக மொட்டை அடிக்கும் சடங்கு இடம்பெறும், தந்தை இறந்திருப்பின் தலைமகனுக்கும் தாய் இறந்திருப்பின் கடைசி மகனுக்கும் மொட்டை அடிக்கப்படும்.
4.21 தாலிகழற்றல்
திருமணமான ஆணொருவர் இறந்திருப்பின் அவரது மனைவியின் தாலி கருமாதி தினத்தன்று கழற்றப்படும். அச்சடங்கானது விதவையரின் உதவியுடனேயே செய்யப்படுகிறது. ஏற்கனவே விதவையான பெண்ணொருத்தியை இறந்தவரின் மனைவியின் தாலியை கழற்றச்சொல்லுவர். கழற்றப்பட்ட தாலியை பாலுக்குள் போடுவர்.
ՃI)

#22 திவசம்
இறந்தவருக்கு ஒரு வருடம் சென்ற பின்பு திதி பார்த்து இச்சடங்கு செய்யப்படுகிறது. இத்திவசமானது முதல் வருடத்தில் சிறப்பாக செய்யப்படும். அதன் பின்னர் இறந்ததினத்தன்று வருடாவருடம் திவசம் செய்யப்படும்.
4.23 அமாவாசை விரதம்
தகப்பனை இழந்தவர்கள் ஆடி அமாவாசை விரதம் இருப்பதுண்டு. இவ்வாறு விரதம் இருப்பதால் இறந்தவர்கள் நன்மையைச் செய்வார்கள் என்ற நம்பிக்கை இவர்களிடையே உண்டு.
முடிவுரை
மலையக மக்களின் மேற்படி சடங்கு முறைகள் அவர்களது வாழ்க்கைச் சூழலில் முக்கிய இடம் வகிக்கின்றது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் கூட கடன் வாங்கியாவது இக்கடமைகளைச் செவ்வனே நிறைவேற்ற வேண்டும் என்ற மனப்பான்மை இவர்களிடையே வேரூன்றிக் காணப்படுகிறது.
தோட்டத் தொழிலாளர்களால் கடைப்பிடிக்கப்படும் மேற்குறிப்பிட்ட சடங்கு முறைகள் பல ஆண்டு தொடக்கம் கைக்கொள்ளப்பட்டு வந்தாலும் பொருளாதார நெருக்கடி காரணமாக அவற்றுட் சில படிப்படியாக அருகிவருவதைக் குறிப்பிடலாம். சில தோட்டங்களில் சடங்கு மரபுகளை நவீனவுலகுக்கு ஏற்றவாறு நேரத்தைக் குறைத்து மிக எளிதாகச் செய்யக்கூடிய விதத்தில் மாற்றி அமைத்துள்ளனர். ஓய்வு நேரம் குறைவாக உள்ளமையே இதற்கான அடிப்படைக் காரணமாகும்.
எது எவ்வாறு இருப்பினும் இந்திய வம்சாவளி மக்கள் தோட்டப்புறங்களில் தொடக்கி வைத்த சடங்கு முறைகள் இன்றும் நடைமுறையில் இருந்து வருகின்றன என்பதில் ஐயமில்லை.

Page 33
4)
இந்திய வம்சாவளி தமிழ் மக்களின் குடும்ப, குல தோட்டத் தொழில்நிலை வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாட்டு முறைகள்
எஸ். விஜயச்சந்திரன்
1.0 fesör GT asof
இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் (தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின்) வழிபாடுகள் பற்றிய இவ் ஆய்வானது அம்மக்கள், பெருமளவில் வாழும் பிரதேசங்களான நுவரேலியா, மாத்தளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலே திரட்டப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெறுகின்றது.
இந்தியவம்சாவளித் தமிழ் மக்கள் தெய்வ வழிபாட்டை மேற்கொள்ளும் நோக்கம் வழிபாட்டு முறைமை, வழிபடும் இடம், என்பவற்றிற்கேற்ப பின்வருமாறு அவர்களது வழிபாடுகைளைப் பல பிரிவுகளாக வகுத்து நோக்கக்கூடியதாய் உள்ளது.
குடும்பமட்ட வழிபாடு
குலமட்ட வழிபாடு தோட்ட வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாடு தோட்டச் சமூகநிலை வழிபாடு (முழுத்தோட்டமும், இணைந்து செயற்படும் வழிபாடு) 5. தோட்ட வரையறைக்கு அப்பால் உள்ள வழிபாடு
:
இந்திய வம்சாவளி மக்களினது தெய்வ வழிபாடு பற்றிய இவ்வாய்வானது, குடும்ப, குல, தோட்ட வாழ்க்கை என்பவற்றோடு இணைந்த வழிபாட்டு அம்சங்களை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வழிபாட்டு அம்சங்கள் இம்மக்களது சமூக வாழ்க்கையில் முக்கியம் வகிப்பனவாக விளங்குகின்றன. இவர்கள், மேற்கூறப்பட்ட மூன்று வழிபாட்டு மரபுகளையும் தம் முன்னோரிடமிருந்து அறிந்து, அவ்வழிபாட்டு அம்சங்களை தொடர்ந்தும் பின்பற்றுகின்றனர். இவர்களது முன்னோர் தொழில் நிமித்தம் தென்னிந்தியக் கிராமங்களிலிருந்து வந்தபோது அக்கிராம மக்கள் வழிபட்டு வந்த அதே வழிபாட்டு மரபுகளையே அடித்தளமாக இங்கும் கொண்டுள்ளனர் எனலாம்.
62

2.0 ஆய்வுமுறையும் தகவல் சேகரிப்பும்
இவ்வாய்வில் பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் அடிநிலை வழிபாட்டு அம்சங்களை குடும்பமட்ட வழிபாடு, குலமட்ட வழிபாடு, தோட்ட மட்ட வழிபாடு, என்ற மூன்று பிரிவுகளாக வகுத்து நோக்கப்படும். அத்துடன் ஒவ்வொரு வழிபாட்டு மட்டத்திலும் வழிபடப் பெறும் தெய்வங்கள், அவற்றின் உருவ அமைப்பு, வழிபாட்டு முறைகள், பயன்படுத்தப்படும் பொருட்கள், வழிபாட்டுக்கான காரணம், இவ்வழிபாடுகளின் இன்றைய நிலை எனவும் பிரித்து நோக்கி பிரதேச ரீதியான வேறுபாடுகளையும் வெளிக்கொணரும் வகையில் இப்பொருள் ஆராயப்படும்.
இவ்வாய்வில் இடம்பெறும் தகவல்கள் 1991ம் ஆண்டு காலப்பகுதியில் நுவரேலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய இடங்களில் வாழும் பல்வேறுபட்ட மக்களைச் சந்தித்து மேற்கொண்ட சேவ்விகள் மூலமும், நேரடி அவதானிப்புக்களின் மூலமும், தெய்வ வழிபாட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள். வழிபாட்டு அம்சங்கள் பற்றி அறிந்தவர்கள் போன்றோரிடமிருந்தும் பெறப்பட்டன.
3.0 வழிபாட்டு முறைகள்
3.1 குடும்ப மட்ட வழிபாடு 3.1.1 golygópáistío
இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் தங்களது குடும்ப மட்டத்தில் வீடுகளில் வழிபடும் முறைகள் குடும்ப மட்ட வழிபாடு எனக் கொள்ளப்படுகின்றது. குடும்ப அங்கத்தினர் அனைவரும் இவ்வழிபாடுகளில் கலந்து கொள்வர்.
3.1.2 தெய்வங்களும் பிரிவுகளும்
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களிடையே காணப்படும் குடும்ப வழிபாடுகளில் இரு தன்மைகளைக் காணக்கூடியதாகவுள்ளது இவர்கள் இந்துக்கள் வழிபடும் மரபுரீதியான தெய்வங்களான விநாயகர், முருகன், சரஸ்வதி, இலட்சுமி, காயத்திரி, சிவபெருமான், உமாதேவி, இராமர், சீதை, அனுமான், கிருஷ்ணன், நாராயணன், சபரிமலை ஐயப்பன், காமாட்சி, மாரியம்மன் ஆகிய தெய்வங்களையும் சத்தியசாயிபாபா, இராகவேந்திரா போன்ற சமயப் பெரியார்களையும் வழிபடுகின்றனர். தமது குடும்ப அங்கத்தவர்களில் இறந்தவர்களை வழிபடும் மரபும் இருந்து வருகின்றது. நாம் தகவல்களை திரட்டிய எல்லாப் பிரதேசங்களிலும் இது பொதுவான அம்சமாகக் காணப்படுகின்றது. இதில் பிரதேச ரீதியான வேறுபாடுகள் காணப்படவில்லை.
63

Page 34
3.1.3 உருவ அமைப்பு
குடும்பநிலை வழிபாட்டு அம்சங்களில் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட படங்களில் உள்ள உருவ அமைப்புக்களையும் சிறு சிறு சிலைகளையும் கொண்டு மக்கள் தெய்வங்களை அடையாளப்படுத்தி, வழிபடுகின்றனர். சாதி, குல, வேறுபாடுகள் இதில் முக்கியம் பெறுவதில்லை.
3.1.4 அமைவிடம்
குடும்ப மட்ட வழிபாட்டு நிலைகளில் தெய்வங்களின் அமைவிடமாக வீடுகளில் தனியறைகள் அல்லது அறையின் ஒரு சிறுபகுதி (மூலைப்பகுதி) அமையும். இவ்வசதி இல்லாதவர்கள் பலகையிலான பெட்டி வடிவான அமைப்புக்களை சுவர்களில் தொங்கவிட்டு அவற்றுக்குள் தெய்வங்களின் உருவங்களைப் பிரதிட்டை செய்துள்ளனர். இறந்தவர்களுக்கான வழிபாட்டுத்தளமாக பெருமளவான வீடுகளில் வீட்டு அறைகளின் ஒரு மூலைப்பகுதி அமைந்துள்ளதை அறிய முடிந்தது.
3.1.5 வழிபடும் முறையும் வழிபாட்டு உபகரணங்களும் காலமும்
குடும்பநிலை வழிபாடுகளில் தினசரி காலையும், மாலையும் விளக்கிடுவது உட்பட வெள்ளிக்கிழமைகளில் சாம்பிராணிப்புகை, ஊதுபத்தி, கற்பூரதீபம் என்பன கொண்டு வழிபடுவதும் அடங்கும். பண்டிகை நாட்கள், திருவிழாக்காலங்கள் என்பவற்றின்போது பால், பழம், பொங்கல், வெற்றிலை, பாக்கு என்பன கொண்டு விசேட ஆராதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குடும்ப மட்ட வழிபாடுகளின்போது விபூதித்தட்டு, குத்துவிளக்கு, தூண்டாமணி விளக்கு, ஒற்றைத்தீபம் என்பன பிரதானமாக பயன்படுத்தப்படுகின்றன.
3.1.6 நோக்கம்
குடும்ப மட்ட வழிபாடுகளின் பிரதான நோக்கம் குடும்ப சுபீட்சம் எனக் கருதப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களை நோயிலிருந்து பாதுகாத்தல், பொருளாதார நிலை மேம்பாடு, என்பனவற்றிற்காகவே தினமும் வீடுகளில் தெய்வ வழிபாடு செய்வதாக இவர்கள் கருதுகின்றனர்.
3.1.7 அண்மைக்கால மாற்றங்கள்
குடும்பநிலை வழிபாட்டு முறைகளில் சில மாற்றங்களை இரத்தினபுரி,
கேகாலை ஆகிய மாவட்டங்களிலேயே குறிப்பாகக் காணக்கூடியதாகவுள்ளது. இப்பகுதிகளில் சிங்கள மக்களது ஊடுருவல் காரணமாக புத்தரையும்
64

குடும்பமட்டத்தில் வழிபடும் போக்கு அதிகரித்து வந்துள்ளது. சில வீடுகளில் பெளத்த வழிபாட்டு முறைகளையும் கொண்டுள்ளனர். கண்டி, நுவரேலியா மாவட்டங்களில் ஏற்பட்டு வரும் கிறிஸ்தவ மதமாற்றத்தினைத் தொடர்ந்து மேலே கூறப்பட்ட மரபுவழி குடும்ப வழிபாட்டு முறைகள், கைவிடப்பட்டு அதற்குப் பதிலாக கிறிஸ்தவ தெய்வங்களைக் குடும்பநிலை வழிபாடுகளிலும் மேற்கொள்வதனை அறியக் கூடியதாக இருந்தது. கண்டி, நுவரேலியா மாவட்டங்களில் சில குடும்பங்களில் குடும்பநிலை வழிபாடுகளில் இந்து மத வழிபாட்டு முறை மாற்றமுற்று கிறிஸ்தவ வழிபாட்டு முறைகள் இணைந்துள்ளதையும், மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி பகுதிகளில் பெளத்த வழிபாட்டு அம்சங்கள் இந்துமத வழிபாட்டுடன் இரண்டறக் கலந்துள்ளதையும் காண முடிகின்றது.
பெளத்த வழிபாடுகளை பின்பற்றத் தொடங்கும் மக்கள் பெளர்ணமி தினத்தன்று மலர்க்கட்டுடன் பெளத்த விகாரைக்குச் சென்று புத்தரை வழிபடுவதிலும், வெசாக் தினத்தில் கூடுகளை அலங்களிப்பதிலும் அதிக நாட்டம் செலுத்துகின்றனர். அத்தோடு மரண வீடுகளுக்கு பெளத்த பிக்குகளை அழைத்துவந்து சடங்குகளை மேற்கொள்ளல் பிக்குகளுக்கு தானம் வழங்குதல் போன்றனவற்றையும் குறிப்பிடலாம்.
கிறிஸ்தவ வழிபாட்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்குபவர்கள் ஞாயிறு தோறும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் சென்று ஆராதனைகளில் பங்குகொள்கின்றனர். அத்தோடு இரவு வேளையில் வீடுகளில் கிறிஸ்தவ பாடல்களை இசைத்தல், செபஞ்செய்தல், போன்றனவும் பிரதான வழிபாட்டு அம்சங்களாக இடம்பெறுகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் சிலுவை இணைக்கப்பட்ட மாலைகளை அணிவதில் ஆர்வம் உடையவர்களாகவும் காணப்படுகின்றனர். அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் மதமாற்றங்களைத் தொடர்ந்து பெளத்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்றும் மக்கள், தாம் முன்பு பின்பற்றிய இந்துமதம் சார்ந்த தெய்வங்களுக்கான வழிபாடுகளையும் பின்பற்றுவதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதங்களைப் புதிதாகப் பின்பற்றுபவர்கள், இந்துமத வழிபாடுகளைக் கைவிட்டுள்ளனர். இருந்தபோதிலும், புதிய மதங்களைப் பின்பற்றத் தொடங்கியவர்களுங்கூட தமது குடும்பத்தில் இறந்த இரத்தத்தொடர்புடைய முன்னோர்களைத் தெய்வமாகக் கருதி வழிபடும் முறை தொடர்ந்தும் பேணப்பட்டு வருவதாக ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களின் மூலம் அறியக்கூடியதாய் இருந்தது.
65

Page 35
3.2 குலமட்ட வழிபாடு
3.2.1 அறிமுகம்
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வழிபாட்டு அம்சங்களில் குடும்ப மட்ட வழிபாட்டினை விட சற்றுப் பரந்த வழிபாட்டு அம்சமாக குலமட்ட வழிபாடுகள் காணப்படுகின்றன. "பங்காளிமார்” எனப்படும் உறவு முறைகளைக்கொண்டவர்கள் ஒரு குலத்தைச் சேர்ந்தவர்களாகவும் அவர்களுக்கென ஒரு தனியான தெய்வமும் அதற்கான வழிபாட்டு அம்சங்களும் காணப்படுகின்றமையைக் குலமட்ட வழிபாடு குறிக்கின்றது. சாதி, கோத்திரம் என்பவற்றிற் கேற்ப குலமட்டத் தெய்வங்களும் அவற்றிற்கான வழிபாடுகளும் வேறுபடுகின்றன. இவ்வழிபாட்டு முறை பரம்பரையாகப் பேணப்பட்டு வருவதாகவும், இவ்வழிபாட்டு முறையின் பயனாகத் தமது குலமும், அக்குலத்தைச் சார்ந்த ம்பங்களும் நன்மை பெறுவர் எனவும், அவ்வாறு வழிபடத்தவறும் பட்சத்தில் தங்கள் குடும்பத்திற்குக் கேடுகள் விளையும் எனவும் இவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
குலதெய்வ வழிபாடு குடும்ப அங்கத்தவர்களாலும் குலத்தைச் சார்ந்தவர்களாலும் ரகசியமாகப் பேணிப்பாதுகாக்கப்படுவதால் பெரும்பாலான மக்களிடமிருந்து இதுபற்றிய விளக்கங்களைப் பெற முடியாதிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க ஒரு பிரச்சினையாகும். தமது குல தெய்வங்கள் பற்றிய விடயங்களை மற்றவர்கள் தெரிந்துகொண்டால், தெய்வத்தின் அருள் குறைந்துவிடும் எனவும், விரோதிகள் தமது குலதெய்வத்தின் கண்களைக்கட்டித் தமக்கு சூனியம் செய்து விடுவார்கள் எனவும் இவர்கள் நம்புவதால் குல தெய்வ வழிபாட்டு மரபுகளை மறைக்கின்றனர்.
3.2.2 infaisair
குலதெய்வ வழிபாடுகள் பற்றி எமக்கு கிடைத்த தகவல்களைக் கொண்டு நோக்குமிடத்து குலதெய்வங்களில் மூன்று முக்கிய பிரிவுகளின் உண்மையை அறிய முடிந்தது. அவையாவன -
1. தமது பரம்பரையில் இறந்தவர்கள் 2. இந்துப்பாரம்பரியத்திலுள்ள பிரதான தெய்வங்கள், அவற்றைச் சார்ந்தவை 3. ஏனையவை (பிரதானமாக பலி மூலமான வழிபாட்டுக்குரியவை)
3.2.3 தெய்வங்கள்
ரெட்டி யாட்டி வரதம்மா, அங்காயம்மா, பேச்சியம்மா, பெரியண்ணன் போன்றன முதலாவது பிரிவினையும் அம்மன், கன்னிமாரியம்மா, மாரியம்மன், இராமர்,
66

பழனியாண்டி, உமாதேவி, மகாலச்சுமி, வீரபுத்திரர் என்பன இரண்டாம் பிரிவினையும் மதுரைவீரன், மாடசாமி, முனியாண்டி, சங்கிலிக்கறுப்பன், காளி, கறுப்புத் தெய்வம், வல்லடியான், காட்டுமுனி, வால்ராசா, மாயாண்டி, கருப்பண்ணன்சாமி, வீரமாகாளி, பத்திரகாளி, சுடலை மாடன், உத்திரகாளி என்பன மூன்றாவது பிரிவையும் சார்ந்த சில தெய்வங்களாகும். இக்குலமட்ட வழிபாட்டுத் தெய்வங்களில் மதுரைவீரன், மாடசாமி, காளி, முனியாண்டி என்பனவற்றை ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நுவரேலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய எல்லாப்பகுதிகளிலும் வழிபடுகின்றனர். ஏனைய தெய்வங்கள் பிரதேசத்திற்கு ஏற்ப வேறுபடுகின்றன. குலமட்ட தெய்வங்களில் கறுப்புத் தெய்வம் கண்டிப் பிரதேசத்தில் குல தெய்வமாக, கள்ளர், மறவர், அகம்படியார், என்போராலும், மதுரைவீரன், иотидттиб) என்பன எல்லா இடங்களிலும் பள்ளர், பறையர், குலத்தினரால் வழிபடப்படுவது பொதுவான அம்சமாகும். ஏனைய தெய்வங்கள் பொதுவாக எல்லோரும் வழிபடும் தன்மையினதாகவே உள்ளன. ஆயினும் இன்று நடைமுறையில் இத்தெய்வங்கள் குலம் மாறி வழிபடப்படுவதையும் ஓரளவிற்குக் காணக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மதுரைவிரன் வழிபாட்டைக் குறிப்பிடலாம். இது குறிப்பிட்ட ஒரு சாதிக்கேயுரியது. இப்பொழுது அடிநிலை மக்கள் பலர் இத்தெய்வத்தினை வணங்குகின்றனர்.
குலமட்ட வழிபாடுகளில் தெய்வ உருவங்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பொருட்களாக கல், வேல், குலம், என்பன காணப்படுகின்றன. இதில் ஒரே பொருள் பல தெய்வங்களைக் காட்டும் அடையாளமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மதுரைவிரன், பெரியண்ணன் போன்ற குல தெய்வங்கள் சிலையாக வடிவமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
3.2.4 அமைவிடம்
குலமட்ட வழிபாடுகள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதால் உருவ அமைப்பைக் கொண்ட வகையில் பொது அமைவிடங்களில் அவை காணப்படுவதில்லை. குறிப்பாக குலதெய்வ வழிபாட்டு நிலைகள் வீட்டுத் தோட்டங்களில் அமைந்துள்ளன. அல்லது குடும்ப அங்கத்தினர் மாத்திரம் அறியக்கூடிய ஒதுக்குப்புறமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, வீட்டுமுற்றம், சேனை, என்பனவற்றைக் குறிப்பிடலாம்.
3.2.5 வழிபாட்டு முறைகளும் படையல்களும்
குலமட்ட வழிபாடுகள் உயிர்ப்பலி முறையிலும் உயிர்ப்பலியற்ற முறையிலும்
மேற் கொள்ளப்படுகின்றன. மேலே குறிப்பிட்ட குலதெய்வங்களில் அம்மன், மாரியம்மன், கன்னிமாரியம்மன், இராமர், பழனியாண்டவர் ஆகிய தெய்வங்களுக்கு
67

Page 36
உயிர்ப்பலியற்ற வகையில் பழம், பொங்கல், பால் வெற்றிலை, பாக்கு இளநீ போன்ற படையல் பண்டங்கள் கொண்டு வழிபாடு செய்யப்படும்.
இறந்தவர்களைக் குலதெய்வமாக வழிபடும் முறைகளிலும், மாடசாமி மாயாண்டி, கறுப்புத்தெய்வம், முனியாண்டி, காளி. சங்கிலிக்கறுப்பன் காட்டுமுனி, சுடலைமாடன், உத்திரக்காளி, போன்ற குலதெய்வ வழிபாட்டு முறைகளிலும் உயிர்ப்பவி முக்கிய இடம் வகிக்கின்றது. வழிபாட்டின்போது ஆடு அல்லது கோழி பலியிடப்படுவது வழக்கமாகும். இது தவிர படையல் பண்டங்களில் சாராயம், கள்ளு என்பனவும் இடம் பெறுகின்றன.குலமட்ட வழிபாடுகளின் போது சாராயம், கள்ளு போன்ற மதுபான வகைகள் காளி வழிபாட்டின் போது மட்டுமே சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் அறியமுடிகின்றது.
குலமட்ட வழிபாடுகளின் போது படையல்களில் படைக்கப்படும் பண்டங்கள் பூசையின் பின்பு அக்குலத்தை சேர்ந்தவர்களால் குறிப்பாக குடும்ட அங்கத்தினர்களால் அல்லது நெருங்கிய சகோதரர் உறவு உடையவர்களால் மட்டுமே உண்ணப்படும். அத்தோடு மதுரைவிரன், மாடசாமி. முனியாண்டி கறுப்புத்தெய்வம். சங்கிலிக்கறுப்பன், மாயாண்டி. சுடலைமாடன் காட்டுமுை ஆகியவற்றிற்குப் படைக்கும் பண்டங்களைப் பெண்கள் உண்பதற்கு அனுமதிக்கட் படுவதில்லை. அதிலும் குறிப்பாக, பூப்பெய்திய பெண்கள் இவற்றை உண்பது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.
J.2.6 asTearn
குலமட்ட வழிபாடுகள் தங்களது தேவைகள் கருதி தேவையான போது வழிபடப்படுகின்ற போதும் வருடத்திற்கு ஒருமுறை குறிப்பிட்ட காலத்தில் விசேட பூசை இடம்பெறும். இக்காலம் குலத்திற்குக் குலம் வேறுபடும் தெய்வங்களுக்கான படையல்களும் தெய்வங்களுக்குத் தெய்வம் வேறுபடும் அத்தோடு பிரதேச அடிப்படையிலும் இவை வேறுபடும். பொதுவாக தோட்ட மட்டத்திலான குலதெய்வ வழிபாடு, ஊர்த்திருவிழா முடிவுற்றவுடன் நடைபெறுவது பெரும்பாலான இடங்களில் வழக்கமாக இருந்து வருகின்றது குலதெய்வ வழிபாடுகள் பெருமளவில் இரவு நேரங்களில் நடைபெறும் அத்தோடு இதில் குடும்ப அங்கத்தினர் மட்டும். குறிப்பாக ஆண்கள் மட்டு கலந்து கொள்கின்றனர். குடும்ப அங்கத்தினர் அல்லது குலத்தைச் சார்ந்தவ பூசகராக நின்று வழிபாடுகளைக் கொண்டு நடத்துவார்.
3.2.7 நோக்கம்
குலமட்ட வழிபாடுகள் எல்லாப் பிரதேசங்களிலும் ஒரே நோக்கினைே கொண்டனவாக உள்ளன. குடும்பநலன், குலநலன் என்பன முக்கி

மதுரை வீரன் சிலை (மதுரை வீரனுக்கெனத் தனியே கோயில்களும் உண்டு. மதுரை வீரன் குலதெய்வமாக வழிபடப்படுவதும் உண்டு)

Page 37

நோக்கங்களாகும். மற்றவர்கள் தங்களுக்குத் தீங்கு செய்ய அல்லது சூனியம் செய்ய முயலும் போது குலதெய்வங்கள் தம்மைப் பாதுகாக்குமென இவர்கள் நம்புகின்றனர். இது தவிர குடும்பங்களில் சுபகாரியங்கள் நிகழும் சந்தர்ப்பங்களிலும் ஆடு, மாடு, கன்று ஈனும் சந்தர்ப்பங்களிலும் குலதெய்வ வழிபாடு இடம் பெறுவது வழக்கமாக உள்ளது. தோட்டக்கோயிலில் திருவிழா நடைபெறும்போதும் குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுவது வழக்கமாயுள்ளது.
தோட்ட வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாடு
3.3.1 அறிமுகம்
இலங்கைப் பெருந்தோட்டங்களில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் குடும்ப, குல மட்ட வழிபாட்டுக்கு மேலாகத் தோட்ட மட்டத்திலான குழு நிலை வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட தோட்ட எல்லைக்குள் வாழும் மக்கள் குழுக்களாக ஒன்றிணைந்து தொழில் ரீதியிலும் தோட்டப் பாதுகாப்பு கருதியும், மரபு ரீதியான பெருந்தெய்வ வழிபாட்டிலும், மாறுபட்ட சில வழிபாட்டுப் பாரம்பரியங்களை மேற்கொள்கின்றனர். இத்தகைய வழிபாட்டு அம்சங்களையே இங்கு தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாடு என்பது குறித்து நிற்கின்றது.
3.3. 2 il filmfaylı
தோட்ட மக்களது வாழ்க்கையோடு ஒன்றிணைந்ததாகத் தோட்ட மட்டத்திலான குழுநிலை வழிபாடுகள் விளங்குகின்றன. இவற்றைத் தொழில் சார்ந்த வழிபாடு, தொழில் சாராத வழிபாடு என இரண்டாகப் பிரிக்கலாம்.
3.3.3 தெய்வங்கள்
தோட்ட வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாடுகளில் முதலாவது பிரிவாகிய தொழில் சார்ந்த வழிபாடுகளில் ஆண்கள், தமது தொழிலமைப்போடு இணைந்த வகையில் ரோதமுனி, தவறனைமுனி, கம்பிமுனி, கவ்வாத்துமுனி, தன்னைமுணி, எனும் பெயர்களைக் கொண்ட தெய்வங்களையும் பெண்கள் தங்களது தொழிலமைப்போடு இணைந்தவகையில் கொழுந்துசாமி, மட்டத்துசாமி, எனும் பெயர்களைக் கொண்ட தெய்வங்களையும் வழிபடுகின்றனர்.
ரோதமுனி வழிபாடானது தேயிலைத் தொழிற்சாலையில் தொழில் புரியும் ஆண் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து மேற்கொள்ளும் வழிபாடாகும். இதற்கான அமைவிடம் தேயிலைத் தொழிற்சாலைக்கருகில் அமைந்திருக்கும். பொதுவாக
69

Page 38
ஒரு வேல் அல்லது சூலம் இதனைக் குறிக்கும் வகையில் நாட்டப்பட்டிருக்கும். இவ்வழிபாடு வருடத்திற்கு ஒருமுறை விடுமுறை நாட்களில் விமர்சையாகக் கொண்டாடப்படும். தேயிலைத் தொழிற்சாலைகளில் இயந்திரங்களுடன் தொழில்புரியும் போது ஆபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வேண்டி வழிபடுதல் ரோதமுனிவழிபாட்டில் பிரதான அம்சமாகும். வருடத்திற்கொருமுறை ஆடு பலியிட்டு, (சில வேளைகளில் கோழியும் பலியிடப்படும்.) இவ்வழிபாடு இடம்பெறுகின்றது. உயிர்ப்பலியுடன் பூசை நடத்தாவிடில் தொழிலாளர்கள் இயந்திரங்கள் மூலம் விபத்துக்குள்ளாகி இரத்தம் சிந்த வேண்டி ஏற்படுவதோடு, உயிரிழப்பும் ஏற்படலாமென தொழிலாளர்கள் நம்புகின்றனர். இங்கு பலியிடப்படும் ஆடு அவ்விடத்திலேயே சமைத்து தொழிலாளர்களுக்கு பரிமாறப்படும். இவ்வுணவுகள் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது. ரோதமுனி வழிபாடு இறப்பர் தொழிற்சாலைகளிலும் மேற்கொள்ளப்படுகின்றது. இங்கும் முன்னர் கூறப்பட்ட அதே வழிபாட்டு முறைகளே கையாளப்படுகின்றன. "ரோதை" என்பது சில்லினைக் குறிப்பதாகும்.
தவறனைமுனி வழிபாடானது தேயிலைக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தில் வழிபடப்படும் தெய்வமாகும். இவ்விடம் தோட்ட மக்களது வழக்கில் "தவறனை” என அழைக்கப்படுவதால் அவ்விடத்தில் வழிபடப்படும் தெய்வம் "தவறணைமுனி" என பெயர் பெற்றுள்ளது. இவ்வழிபாடும் உயிர்ப்பலிப் பூசைகள் மூலமே இடம்பெறுவதோடு ஆண்களே பூசைகளிலும் கலந்துகொள்கின்றனர். தேயிலைக்கன்று உற்பத்திகளில் ஈடுபட்டுள்ள அனைவரும் இதில் ஈடுபடுவது ஒரு மரபாகப் பேணப்படுகின்றது. தொழில் நடவ்டி க்கைகளின் போது எவ்வித ஆபத்தும் ஏற்படாது பாதுகாப்பு வேண்டுவதும், தேயிலைக்கன்றுகள் செழித்து வளர வேண்டும் என்பதும் இந்த வழிபாட்டுக்கான பிரதான காரணங்களாகும்.
"கவ்வாத்து முனி (கவ்வாத்துச்சாமி) வழிபாடானது தேயிலைச் செடிகள் புதிய தளிர் விடுவதற்காக " கவ்வாத்து " வெட்டும் சந்தர்ப்பங்களில் ஆயுதம் மூலமான ஆபத்துக்கள் ஏற்படாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் வழிபாட்டைக் குறித்து நிற்பதாகும். இவ்வழிபாட்டிற்கான தெய்வம் " கவ்வாத்துமுணி” அல்லது " கவ்வாத்துச்சாமி” என அழைக்கப்படுகின்றது. இவ்வழிபாடானது நிலையான அமைவிடங்களில் கல் அல்லது வேல் வடிவமான உருவங்களைக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட போதிலும், பெருமளவான தோட்டங்களில் " கவ்வாத்துவெட்டு" தொடங்கும் மலைகளில் ஒரு கல்லை வைத்து வழிபாடு செய்வதும் மரபாக இருந்து வருகின்றது. இது நிலையான வழிபாட்டு இடத்தைக் கொண்டிருப்பதால் கவ்வாத்து வெட்டும் வேலை ஆரம்பமாகும் தினத்தன்று சிறிய பூசையுடன் எவ்வித ஆபத்தும் தொழில் முடிவதற்குள் எவருக்கும் ஏற்படாதிருக்க வேண்டும் என்ற நேர்த்திக்கடனுடன் வழிபாடு ஆரம்பமாகும்.
70

தொழில் நடைபெறும் நாட்களில் தொழில் ஆரம்பமாகும் முன்னர் ஒவ்வொரு தொழிலாளரும் கவ்வாத்துமுனியை வணங்கிய பின்னரே தொழிலை ஆரம்பிப்பர். பின்பு, கவ்வாத்து வெட்டும் வேலை முடிவடையும் தினத்தன்று ஆடு அல்லது கோழி பலியிடப்பட்டு வழிபாடுகள் இடம்பெறும். பலியிடப்பட்ட ஆடு அல்லது கோழி அவ்விடத்திலேயே சமைக்கப்பட்டுத் தெய்வத்திற்குப் படைக்கப்படும் இப்படையலில் சோறு, இறைச்சிக்கறி, என்பனவற்றுடன் கள்ளு, சாராயம், சுருட்டு என்பனவும் சேர்த்துக் கொள்ளப்படும். பூசை முடிந்தவுடன் உணவு அனைவருக்கும் வழங்கப்படும். வழிபாடுகளில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். அத்தோடு, இங்கு சமைக்கப்பட்ட உணவை வீட்டிற்குக் கொண்டு செல்லவோ பெண்கள் உண்ணவோ கூடாது என்பது கட்டுப்பாடாகும். மீறி உண்டால் தெய்வம் தண்டிக்கும் என இவர்கள் நம்புகின்றனர்.
தோட்டங்களில் போக்குவரத்து வசதிகள் விருத்தியுறாதிருந்த காலத்தில் கம்பிகள் மூலமே கொழுந்து மூடைகள் ஓரிடத்திலிருந்து தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டன. அத் தொழில் களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு தீங்கு ஏற்படாது பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வந்த வழிபாட்டுத் தெய்வங்களிலே "கம்பிமுனி "தன்னைமுனி" என்பன குறித்தன.
அதே பெயர்களைக் கொண்ட வகையில் இன்றும் தேயிலைத்தொழிலில் தளத்தில்) ஈடுபட்டுள்ளோர்களால் இவ்வழிபாடு பேணப்பட்டு வருகின்றது. இங்கு உயிர்ப்பலி (ஆடு அல்லது கோழி பலியிடல்) மூலமே வழிபாடு மேற்கொள்ளப்படும். பலியிடப்பட்டதன் இறைச்சி அவ்விடத்திலேயே சமைத்துப் பூசையின் பின்னர் பரிமாறப்படும். இப்பூசையில் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்வர். இருபாலருமே உணவுகளை உண்பர்.
"கொழுந்துசாமி” ”மட்டத்துச்சாமி” எனும் தெய்வங்களுக்கான வழிபாடு தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து பறிக்கும் பெண்களால் மேற்கொள்ளப்படும் வழிபாடாகும். கொழுந்து சாமரி வழிபாடானது வருடாவருடம் மேற்கொள்ளப்படுகின்றது. தேயிலைச் செடிகளை கவ்வாத்து வெட்டியபின் புதிதாக துளிர்விடும் தேயிலைத்துளிர்கள் ஒரு சீராக வளர்வதற்காக பெண்களைக்கொண்டு வெட்டுவிக்கப்படும். இதனை தொழிலாளர்களின் வழக்கில் மட்டம் வெட்டுதல் என அழைக்கப்படுகின்றது. இம்மட்டம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் ஆயுதங்கள் மூலம் தமக்கு எவ்வித ஆபத்தும் நேரிடாதவாறு தமக்கு பாதுகாப்பு வேண்டி வழிபடும் தெய்வம் மட்டத்துச்சாமி எனக் குறிப்பிடப்படுகின்றது. கொழுந்துசாமி வருட ஆரம்பத்திலும், வரட்சி காலங்களிலும் தேயிலைச்செடிகள் செழித்து வளர வேண்டுமென வேண்டி வழிபடப்படுகின்றது. இவ்வழிபாடுகள் பெண்களுக்கே உரித்தானவையாக இருப்பினும் ஆண்களும் இவற்றில் கலந்து கொள்வர். அவர்களில் கங்காணிமார், கணக்குப்பிள்ளை, தோட்ட அதிகாரி (தோட்டத்துரை)
71

Page 39
ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். இவ்வழிபாடுகளில் உயிர்ப்பலி மூலமான பூசைகள் இடம்பெற மாட்டாது. பொங்கல், பச்சையரிசி, கடலை, பழவகை, வெற்றிலை, பாக்கு, தேங்காய் என்பன படையல் பொருள்களில் உள்ளடங்கியிருக்கும்.
படையலில் உள்ள உணவுப்பொருட்களை ஆண்களும், பெண்களும் உண்பர். வீட்டிற்கு எடுத்துச் சென்று உறவினர். பிள்ளைகள், யாவருக்கும் பங்கிடுவர். இவ்வழிபாடுகளின் போது தெய்வத்தைப் பிரதிபலிக்கும் உருவம் காணப்படமாட்டாது. எனவே தேயிலைச்செடி யொன்றிற்கு மாலையிட்டு அலங்களித்து அதற்கே பூசைகள் நடாத்தப்படுவது பொதுவான வழக்கு.
எமது ஆய்வுக்கான பெரும்பாலான தகவல்கள் தேயிலைத் தோட்டங்களிலிருந்தே பெறப்பட்டதனால் தேயிலைத்தொழிலுடன் தொடர்புள்ள தெய்வ வழிபாடுகளே இங்கு தரப்பட்டுள்ளன. தோட்டத் தொழிலோடு நேரடியாகச் சாராத தோட்ட மட்டத்திலான வழிபாட்டு முறைகளில் நுவரேலியா, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய எல்லா மாவட்டங்களிலுமே குலதெய்வங்களாக வழிபடப்படும் மாடசாமி, மதுரை வீரன், காளி ஆகிய தெய்வங்களுடன் இராமர், சந்திமுனி, முச்சந்திமுனி, முனியாண்டி எனும் தெய்வங்கள் பொதுவான தோட்ட வழிபாட்டுத் தெய்வங்களாகவும் விளங்குகின்றன. நுவரேலியா மாவட்டத்தைப் பொறுத்த மட்டில் மகாமுனி, முனிஸ்வரன், வண்ணடியார், வண்ணாத்திகொட்டை, மாரி, போர்மலை, காட்டுமுனி, உத்திரக்காளி, வீரமாகாளி, வனத்துச் சின்னப்பர், (கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தெய்வம்) ஆண்டிசாமி, பூர்ச்சியம்மா, சங்கிலிக் கறுப்பன் எனும் தெய்வங்களும், கண்டி, மாத்தளைப் பிரதேசங்களில் நொண்டியப்புச்சி, ராயக்கன், இடும்பன், சங்கிலிக்கறுப்பன், கருப்பண்ணன்சாமி, வாள்முனி, ஆண்டியப்பன், வடபத்திரகாளி, பத்திரகாளி, இருளாயி, காமாச்சி, துர்க்காதேவி, மஞ்சள்சாமி எனும் பெயர் கொண்ட தெய்வங்களும், இரத்தினபுரி, கேகாலை பிரதேசங்களில் செண்டாகட்டி, நொண்டியப்புச்சி, வைரவர், முனியாண்டி, பிள்ளையார் மலைத்தெய்வம், காட்டுச் சின்னப்பர், பெரியப்பர், பத்திரகாளி, எல்லைமுனி, இரட்டைக்கல்முனி, எனும் பெயர் கொண்ட தெய்வங்களும் தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்து வழிபாடுகளில் காணப்படுகின்றன.
3.3.4 உருவ அமைப்பு
மேலே குறிப்பிடப்பட்ட தெய்வங்களில் மதுரைவிரன், வனத்துச்சின்னப்பர். (கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தெய்வம்) என்பன உருவ அமைப்பைக் கொண்டனவாகவும் ஏனையவை கல், மரம், வேல், சூலாயுதம் என்பனவற்றை உருவமாகக் கொண்டனவாகவும் அமைந்துள்ளன. கொழுந்துச்சாமி மட்டத்துச்சாமி என்பனவற்றின் வழிபாடு தேயிலைச்செடிக்கே செலுத்தப்படுகின்றது. இதே போன்று கம்பித்துண்டைக் கொண்டு அடையாளப்படுத்தப் படுகின்றது.
72

3.3.5 தெய்வங்களின் பண்புகள்
தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாட்டு முறைகளில் வழிபடப்படும் தெய்வங்களாக ஆண் தெய்வங்களும் பெண் தெய்வங்களும் காணப்படுகின்றன. ஆண் தெய்வங்களாக இராமர், வனத்துச்சின்னப்பர், வால்ராசா, கந்தசாமி, பிள்ளையார், காட்டு மலைத்தெய்வம், பெரியப்பர், மாடசாமி, மதுரைவிரன், முனீஸ்வரன், கண்டிசாமி, சங்கிலிக் கறுப்பன், வைரவர், சந்திமுனி, முச்சந்திமுனி, முனியாண்டி, மகாமுனி, வால்முனி, மயானமுனி, செண்டாகட்டி, எல்லைமுனி, இரட்டைமுனி, கம்பிமுனி, தவறனைமுனி, தன்னைமுணி, என்பனவும் பெண் தெய்வங்களாக வீரம்மாகாளி, வடபத்திரகாளி, மஞ்சள்காளி, வண்ணாத்திக்கொட்டை, வனதேவதை, ஈடுளாயி, துர்க்காதேவி, பூச்சியம்மா, மாரியம்மன், கொழுந்துச்சாமி, மட்டத்துச்சாமி என்பனவும் வழிபடப்படுகின்றன. இத்தெய்வங்களும் சில சாந்தத்தன்மை வாய்ந்தனவாகவும் வேறுசில கொடூரமான வையாகவும் பழிவாங்கும் தன்மைகொண்டனவாகவும் கருதப்படுகின்றன. ஆண் தெய்வங்களில் வண்ணடியார், வனத்துச்சின்னப்பர், வால்ராசா, கந்தசாமி, பிள்ளையார், காட்டு மலைத்தெய்வம், பெரியண்ணன் என்பனவும் பெண்தெய்வங்களில் பூச்சியம்மா, மாரியம்மன், வனதேவதை, காமாட்சி, கொழுந்துசாமி, மட்டத்துசாமி என்பன சாந்தத்தன்மை கொண்டனவென்றும் நம்புகின்றனர்.
ஆண்தெய்வங்களில் மாடசாமி, மதுரைவீரன், முனிஸ்வரன், ஆண்டிசாமி, சங்கிலிக்கறுப்பன், ராயக்கன், இடும்பன் என்பனவும் பெண்தெய்வங்களில் வண்ணாத்திக்கொட்டை, உத்திரகாளி, வீரம்மாகாளி, இருளாயி, துர்க்காதேவி, என்பனவும் கொடுரமான தன்மையினை அல்லது பயங்கரத் தன்மையினைக் கொண்டனவாகவும் ஊர்ப்பாதுகாப்புத் தெய்வங்களாகவும் காணப்படுகின்றன. இவ்விரு தன்மையினையும் கொண்டிராத தெய்வங்களுட் சில அவமதிப்பவர்களை பழிவாங்கும் தெய்வங்களாகவும், ஒழுங்கு முறைப்படி தம்மை வழிபடாதவருக்கு கண்டங்களை கொடுத்துச் சோதிக்கும் தெய்வங்களாகவும் இரவு நேரங்களில் தரிசிக்கமுடியாத தெய்வங்களாகவும், கொடுரப் பண்பு வாய்ந்த தெய்வங்களாகவும் உள்ளவையென மக்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப்பிரிவிற்குள் உள்ளடங்கும் தெய்வங்களாக ஆண் தெய்வங்களில் சந்திமுனி, முச்சந்திமுனி, முனியாண்டி, மகாமுனி, வால்முனி, மயானமுனி, செண்டாகட்டி, எல்லைமுனி, கம்பிமுனி, தவறணைமுனி என்பனவற்றையும் பெண்தெய்வங்களில் காளி, பத்திரகாளி, வீரபத்திரகாளி, உதிரக்காளி, வடபத்திரக்காளி, மஞ்சள்காளி, என்பன
வற்றையும் குறிப்பிடலாம்.
3.3.6 அமைவிடம்
தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாட்டுத் தெய்வங்களின் அமைவிடங்கள் தோட்ட நுழைவாயிலில், தோட்ட எல்லைகள், சந்திகள்,
73

Page 40
நீருற்றுகள், மரத்தடி, மலையுச்சி, ஆற்றங்கரை, போன்ற இடங்களில் அமைந்துள்ளன. தோட்டத் தொழிலோடு இசைந்த வழிபாடுகளில் தொழில்புரியும் இடம் வழிபாட்டுத்தலமாக காணப்படுகின்றது. ஆலமரத்தடி, அரசமரத்தடி என்பன குல தெய்வங்களின் அமைவிடங்களில் முக்கியமானவையாகும்.
3.3.7 வழிபாட்டு முறைகள்
தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாட்டு முறைகளில் உயிர்ப்பலியிடப்பட்டு வழிபடும் முறையும் காணப்படுகின்றது. இது பொதுவாக வழிபடப்படும் தெய்வங்களுக்கேற்ப வேறுபடுகின்றது. கொழுந்துசாமி, மட்டத்துச்சாமி, மாரியம்மன், காமாட்சி, துர்க்கா, வனத்துச்சின்னப்பர் தவிர்ந்த ஏனைய தெய்வங்களுக்கு ஆடு அல்லது கோழி பலியிடப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்வழிபாடுகளை வருடத்திற்கு ஒருமுறை தோட்ட மக்கள் ஒன்றினைந்து மேற்கொள்கின்றனர். விரும்பியோர் தனித்தனியாகவும் வழிபாடுகளை மேற்கொள்வர். இந்த வழிபாட்டின் போது உயிர்ப்பலிக்குப் பன்றி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வழிபாடு 12 வருடத்திற்கு ஒரு முறையே மேற்கொள்ளப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இத்தெய்வ வழிபாட்டின் போது உயிர்பலி கொடுத்து பூசை நடத்துபவர் பூசாரி என அழைக்கப்படுகின்றனர். இவர் தோட்டத் தொழிலாளியாகவோ தோட்டத்தொழிலில் இருந்த ஓய்வு பெற்றவராகவோ இருப்பார். அத்தோடு சாதி அமைப்பும் இங்கு பங்களிப்புச் செய்கின்றது. பொதுவாக பள்ளர், மதுரைவீரன், மாடசாமி போன்ற கோவில்களில் இவர்கள் பூசாரிகளாக இருப்பர். தொழில் சார்ந்த தோட்ட மட்ட வழிபாடுகளின் போது தொழில் ரீதியாகத் தலைமை வகிக்கும் கங்காணி, கணக்கப்பிள்ளை, போன்றோர் வழிபாடுகளை நடத்துகின்றனர். இது பொதுவாக உயரிப்பலியற்ற முறையாகவே காணப்படுகின்றது.
3.3.8 படையலும் பண்டங்களும்
உயிர்பலி மூலமாக நடைபெறும் வழிபாடுகளில் சாராயம், கள்ளு, சுருட்டு, பீடி என்பனவற்றோடு வெற்றிலை, பாக்கு என்பனவும் படையல் பண்டங்களோடு வைக்கப்படுகின்றன. உயிர்ப்பலியற்ற வழிபாடுகளில் பால், பொங்கல், பச்சையரிசி, பழம், வெற்றிலை, பாக்கு என்பன வழிபாடுகளின் போது படைக்கப்படுகின்றன. இரத்தினபுரி மாவட்டத்தைப் பொறுத்தவரை உயிர்ப்பலி மூலமான வழிபாடுகளில் கஞ்சா கூட படையல்களில் இடம்பெறுகின்றது. உதாரணமாக மதுரைவீரன், சந்திமுனி, மாயாண்டி போன்ற தெய்வ வழிபாடுகளை இங்கு குறிப்பிடலாம்.
74

3.3.9 மாற்றம்
இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் தோட்ட வாழ்க்கையோடு இணைந்த குழுநிலை வழிபாட்டு அம்சங்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை அவதானிக்கலாம். குறிப்பாக, இளம் தலைமுறையினர் உயிர்ப்பலி மூலமான வழிபாட்டு முறையில் நாட்டம் செலுத்துவதில்லை என்பது முதியோர்கள் கூறும் குறைபாடாகும். மற்றும் கற்றவர்கள் பொதுவாகக் குல, தோட்டநிலை வழிபாட்டு அம்சங்களிலிருந்து ஒதுங்கிக்கொள்வதும் அவர்கள் உயிர்ப்பலி கொடுத்து வழிபாடுகளை நடாத்தும் முறையிலிருந்து ஒதுங்கிக் கொள்வதும் குல, தோட்டமட்ட வழிபாடுகளின் செல்வாக்கினைக் குறைந்துள்ளன. பூசாரிமார் இறந்ததன் பின்பு புதிதாக அத்தொழிலைச் செய்வதற்கு அவர்களின் குடும்பத்தை சார்ந்தோரோ ஏனையோரோ முன்வருவதில்லை. இவ்வழிபாட்டு முறைகள் சில கைவிடப்பட்டு வருவதை அறியக்கூடியதாய் உள்ளது. குடும்பநிலை வழிபாட்டில் குறிப்பிடக்கூடிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது பொதுவான அபிப்பிராயமாகும்.
4.0 முடிவுரை
ஒரு சமூகத்தின் தனித்துவத்தையும் மேம்பாட்டையும் பிரதிபலிப்பனவற்றில்
ச்சமூகத்தினது பாரம்பரியங்களினதும் பண்பாட்டுப் பின்னணிகளினதும் பங்கு அளப்பெரியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வழிபாட்டு முறைகளையும் இது உள்ளடக்கும். இவ்வகையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் தெய்வ வழிபாடுகள் பெருநிலை, சிறுநிலை வழிபாட்டு அம்சங்களைக் குறிப்பிடத்தக்கது. இவர்கள் இந்து சமயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டவகையிலான மரபுரீதியான வழிபாடுகளையும், தென்னிந்தியக் கிராமங்களில் தமது முன்னோர் மேற்கொண்ட பாரம்பரிய வழிபாடுகளின் வழிவந்த வழிபாடுகளையும், இலங்கைப் பெருந்தோட்டங்களில் குடியேறிய போது அங்குள்ள தொழிலமைப்புகளை அடிப்படையாகக் கொண்ட புதிய பல வழிபாடுகளையும் மேற்கொண்டுள்ளமையை இவ்வாய்வு வெளிப்படுத்துகிறது.
தோட்டத்துறையில் வாழும் மக்களில் பெரும்பான்மையானோர் இந்துக்களாகையால் குடும்பமட்டத்தில் இந்துமத முறையிலான வழிபாடுகளைப் பேணுகின்றனர். இவர்களது முன்னோர் தென்னிந்திய கிராமங்களிலிருந்து புலம் பெயர்ந்து வந்துள்ளமையால் அக்கிராமங்களின் சமூக அமைப்புகளைப் பிரதிபலிக்கும் குலமட்ட வழிபாடுகளோடு தோட்ட வாழ்க்கையோடு இணைந்த, ஒரு சில குழுநிலையான வழிபாடுகளையும் மேற்கொண்டனர். இவற்றிற்குப் புறம்பாக, தோட்டங்களில் ஆண், பெண் இருபாலரின் தொழிற் பாகுபாட்டிற்கு ஏற்ப குழுநிலையான தோட்ட, தொழில்நிலை வழிபாடுகள் காணப்படுகின்றன.
75

Page 41
குடும்பநிலை வழிபாடுகளில் இந்துக்களின் பிரதான தெய்வங்கள் உள்ளடக்கப்படுவதுடன், குலமட்ட வழிபாடுகளிலும், தோட்ட சிறுநிலை வழிபாடுகளிலும் மதுரைவிரன், மாடசாமி, மாரியம்மன் எனும்தெய்வங்களும் முனி எனப் பெயர்பெறும் வகையிலான பல்வேறு தெய்வங்களும், இவை தவிர்ந்த வேறுசில தெய்வங்களும் வழிபடப்படுகின்றன. அத்தோடு குடும்ப மட்டத்திலான வழிபாடுகளில் சமயப் பெரியார்களும் இறந்தவர்களும் (குடும்ப உறவுமுறையில்) இடம்பெறுவது போல குலமட்ட வழிபாடுகளிலும் இறந்தவர்கள் வழிபடப்படுகின்றனர். குலமட்ட வழிபாடுகளில் பலிமூலமான வழிபாட்டு அம்சங்களும் தோட்ட மட்ட வாழ்க்கையோடு இணைந்த வழிபாடுகளில் தொழில்சார்ந்த தொழில்சாராத வழிபாட்டு பிரிவுகள் இடம்பெறுவதோடு, பலிமுலமானதும் பலியற்றதுமான வழிபாடுகளும் இடம்பெறுகின்றன. வழிபாட்டு முறைகளில் அத்தெய்வ வழிபாடுகளில் (மரபுரீதியான வழிபாடு தவிர்ந்த) பலிகள் பிரதான இடம் வகிக்கின்றன. குலமட்ட தோட்ட சிறுநிலை வழிபாடுகளில் இது கண்கூடு. பெண் தெய்வவழிபாடுகளில் காளி, உதிரக்காளி, பத்திரகாளி, போன்றவை தவிர்ந்த ஏனைய தெய்வங்களை வழிபடும் போது பலி இடம் பெறுவதில்லை. குடும்ப, குல, தோட்ட மட்ட வழிபாடுகளிகளின் அமைவிடம் பெரிய கோயில் அமைப்புகளைக் கொண்டிருப்பதில்லை. அத்தோடு படம், வேல், கல், சூலம் என்பனவே தெய்வ உருவங்களைப் பிரதிபலிப்பன வாயுள்ளன.
குடும்ப, வழிபாடுகள் தினமும் காலையும், மாவையும், குலமட்ட வழிபாடுகள் வருடார்ந்த அடிப்படையிலும் குலத்தின் தேவைகருதி இடம்பெறுவதும், தோட்ட வாழ்க்கையோடு இணைந்த சிறுநிலை வழிபாடுகள் வருடாந்த அடிப்படையில் ஊர். தொழில் தேவை கருதியும், நேர்த்திக்கடனுக்காகவும் இடம்பெறுவதும் பொதுவான அம்சமாகும். பொதுவாக இம்மக்களது அனைத்து வழிபாட்டு மட்டங்களிலும் குடும்பநலம், சமூகநலம், தொழில்நலன், ஊர்ப்பாதுகாப்பு நோய், நிவாரணம் என்பன முக்கிய நோக்கங்களாக உள்ளன.
இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின் வழிபாட்டு முறைகளில் பல்வேறுபட்ட மாற்றங்கள் அண்மைக்காலமாக இடம்பெறுவதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் பெளத்தர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இவர்கள் பெளத்த வழிபாட்டு முறைகளை மேற்கொள்வதும், தோட்டப்புறத்தில் பரவலாக இடம்பெறும் கிறிஸ்தவ மதமாற்றம், நகரை அண்மிய பகுதிகளில் இடம்பெறும் இஸ்லாமிய மதமாற்றம் என்பவற்றின் ஊடுருவலால் இதுவரை காலமும் மேற்கொண்ட அனைத்து வழிபாடுகளையும் கைவிட்டு புதிய மதவழிபாடுகளை மேற்கொள்வதும், இளைஞர்களும், கற்றோரும், நகர்ப்புறத்தைச் சார்ந்து தொழில் புரிவோரும், குல, தோட்டநிலை வழிபாடுகளிலிருந்து ஒதுங்கிக்கொள்வதும், பவிமூலமான
76

வழிபாடுகளைத் தவிர்த்துக் கொள்வதும், இன்று ஏற்பட்டு வரும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்கவையாகும்.
அத்தோடு குறிப்பிட்ட குலதெய்வத்தை வழிபடுவோர் அனைவரும் தாயகம் திரும்பியமை காரணமாகவும் அல்லது வடகிழக்கு பகுதிகளில் குடியேறியமை காரணமாகவும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களின் அமைவிடங்கள் கைவிடப்பட்டுள்ளன. பெளத்தர்கள் (சிங்கள மக்கள்) நேர்த்திக்கடன், குடும்பப்பிரச்சினைக்கான தீர்வு போன்ற காரணங்களுக்காக காளி பிள்ளையார் போன்ற தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. தோட்டத் தொழிலாளர்களாகத் தொழில் புரியும் பெளத்த மக்கள், கிறிஸ்தவ மக்கள் தொழில்நிலை சார்ந்த வழிபாடுகளில் (குறிப்பாக, ரோகமுனி, கல் வாத்துமுனி, கொழுந்துசாமி, மட்டத்துசாமி) பெருமளவில் பங்குகொள்கின்றனர்.
இலங்கைவாழ் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் வழிபாட்டு அம்சங்கள் இலங்கை வாழ் ஏனைய தமிழ் மக்களின் குறிப்பாக இந்துக்களின் வழிபாட்டு அம்சங்களிலிருந்து பெரிதும் வேறுபட்டனவாகவுள்ளது. இது இம்மக்கள் தமக்கென வழிபாட்டுப் பாரம்பரியங்களையும் அதனோடு இணைந்த பண்பாட்டு வழிமுறைகளையும் கொண்டுள்ளனர் என்பதனை எடுத்துக்காட்டுவதாக உள்ளது. இப்பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் பெருமளவில் தென்னிந்தியக் கிராமங்களில் கானப்படும் பாரம்ப்ரியங்கள், கலாச்சாரங்கள் என்பனவற்றோடு ஒத்தனவாகும். அத்தோடு இவை, தோட்டப்புறங்களில் திரிபுற்றுமுள்ளன. இம்மக்களால் 150 வருடங்களுக்கு மேலாகப் பேணிப் பாதுகாக்கப்பட்டு வந்த பாரம்பரியங்களும் கலாச்சார அம்சங்களும் பெரும் மாற்றங்களை பெற்று வருவதுடன் வழக்கிலிருந்து ஒழியும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது. தொடர்ந்து இடம்பெறும் இனக்கலவரங்கள். சமூகத்தில் கற்றோரின் எழுச்சி, இளைஞர்களின் நகர்புறத் தொடர்பு, இடமாற்றம், கலப்புத் திருமணம், மதமாற்றம், போன்ற காரணிகள் இவ்வழிபாட்டுடன் இணைந்த பாரம்பரியங்களையும் பண்பாட்டு அம்சங்களையும் தொடர்ந்து பேணிக்காப்பதிற் பெரும் சவாலாக அமைந்துள்ளன.
77

Page 42
s
குடும்பமட்ட வழிபாட்டு முறைகளில் பெண்களின் பங்கு
து. சோபனாதேவி
1.0 அறிமுகம்
விருத்தியடைந்த நாடுகளில் பெண் ஆணுக்கு நிகராகச் சமூக அந்தஸ்தைப் பெறக்கூடிய நிலைக்கு உயர்ந்து விட்டாள். ஆனால் மூன்றாம் உலக நாடுகளில், சிறப்பாக ஆசிய நாடுகளிற் பெண்களின் நிலை கவலைக்கிடமானதாகவே காணப்படுகின்றது. சமூகக் கட்டுக்கோப்புகள், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் காரணமாக பெண்கள் சில கட்டுப் பாடுகளை மீற முடியாத நிலையிற் காணப்படுகின்றனர். இலங்கையைப் பொறுத்த வரையிற் பெண்கள் பல துறைகளிலும் முன்னேறி இருந்தாலும், பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பெண்களின் நிலை தாழ்ந்த மட்டத்திலேயே காணப்படுவதை நாம் மறுக்க முடியாது.
பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த பெண்கள் முக்கிய பொறுப்புக்கள் வகிக்கின்றனர். தோட்டத் தொழிலாளிகளாகக் கடமை புரியும் இப்பெண்கள் குடும்பப் பெண்களாகவும் இருப்பதால், இவர்களின் வேலைப்பளு ஏனைய பெண்களின் வேலைப்பளுவிலும் அதிகமானது. எட்டு மணி நேர உழைப்பின் பின் வீடு திரும்பும் பெண்களுக்கு இளைப்பாறுவதற்கு நேரம் கிடைப்பதில்லை. கணவனுக்கு வேண்டிய பணிவிடைகளைப் புரிந்து, குழந்தைகளைப் பராமரித்து வீட்டுப் பொறுப்பையும் சுமப்பது இலகுவான காரியமல்ல. மத்திய தரக் குடும்பப் பெண்களைப் போன்று இவர்களுக்கு கணவனின் ஒத்துழைப்பு சிறிதும் கிடைப்பதில்லை. எனவே ஒப்பீட்டு ரீதியில் நோக்கும் போது ஆண்களைவிடப் பெண்களே அதிக வேலைப்பளுவினைச் சுமக்கின்றார்கள். சில குடும்பத்தில் உள்ள மூத்த பெண்பிள்ளைகள் பெற்றோர்களின் சுமையைத் தாங்குவதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். இக்காரணங்களாற் தோட்டப்புறங்களிற் பெண்களின் கல்வி நிலை மிகவும் தாழ்ந்த மட்டத்திற் காணப்படுகின்றது.
இத்தனை பிரச்சினைகளையும் எதிர்நோக்கும் இப்பெண்கள் மதநம்பிக்கை மிக்கவர்களாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கதோர் அம்சமாகும். இவர்கள் தமது பாரம்பரிய மத அநுஷ்டானங்களைப் பயபக்தியுடன் பின்பற்றுகிறார்கள். இவர்களது எதிர்கால நம்பிக்கை மத அநுஷ்டானங்களால் கட்டி எழுப்பப்பட்ட ஒன்றாகவே காணப்படுகின்றது.
78

இந்த ஆய்வு பெருந்தோட்டத்துறையில் வாழும் மக்களின் குடும்ப குல மட்டங்களின் வழிபாட்டு முறைகளில் பெண்களின் இடம் அல்லது பங்கு பற்றிச் சில தோட்டங்களில் மேற் கொண்ட ஆய்வுகளின் பெறுபேறாகும். இவ்வாய்வுக்குட்பட்ட இடங்கள் வருமாறு () நுவரேலியா (2) அட்டன், தலவாக்கெல்லை (3) கண்டி, மாத்தளை (4) பதுளை
2.0 ஆய்வு மேற்கொண்ட முறை
நுவரேலியா, ஹட்டன், தலவாக்கெல்லை, கண்டி, மாத்தளை, பதுளை, ஆகிய மாவட்டங்களிலுள்ள பதினைந்து தோட்டங்களை மாதிரிகளாகத் தெரிவு செய்து அங்கிருந்து பெறப்பட்ட தகவல்களினடிப்படையில் இவ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இம்மாதிரிகளைத் தெரிவு செய்வதற்கு முன்னர் ஏற்கனவே மலையகக் கதுை. பண்பாட்டில் ஆர்வம் கொண்டுள்ள பலரைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் எழுமாறாக இத் தோட்டங்கள் தெரிவு செய்யப்பட்டன. பின்பே குறிப்பிட்ட தோட்டங்களுக்கு சென்று வெளிக்கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு தோட்டத்திலும் நான்கு அல்லது ஐந்து பேரைச் சந்தித்து நேர்முக விசாரணை மூலம் தகவல்கள் திரட்டப்பட்டன. பொதுவாக தோட்டக் கமிட்டி தலைவர், மற்றும் மலையக கலை பண்பாட்டு விடயங்களில் ஆர்வம் கொண்டுள்ளோர், எழுத்தாளர்கள், ஓவியர்கள், நாடகங்கள், ஆட்டங்கள், கூத்துக்கள் போன்றவற்றை தோட்டங்களில் அவ்வவ்போது பயிற்றுவிக்கும் "மாஸ்டர்" அல்லது "வாத்தியார்” என அழைக்கப்படுவோர், முதியோர்கள் போன்றவர்ளைச் சந்தித்தே இவ்வாய்விற்கான தகவல்கள் சேகரிக்கப்பட்டன. ஒரு குடும்ப மட்டத்தில் நாளாந்தம் நடைபெறும் வேலைகள் தொடக்கம், குடும்பங்களில் நடைபெறும் சகல வைபவங்கள் பற்றியும் அத்துடன், தோட்ட மட்டங்களில் நடைபெறும் Fesseav s6oav, Lu GavumvC) தொடர்பான அனைத்து விடயங்கள் பற்றிய தகவல்களும் இந்த நேர் விசாரணைகளின் போது சேகரிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக, வழிபாட்டு முறைகளிற் பெண்களின் பங்கு என்ன என்பது தொடர்பான தகவல்கள் sfGềgri_tpfroử Cềớrfr&é%I'Lil Il-6ỡT.
அத்துடன் தோட்டங்களில் அவ்வவ்போது நடைபெற்ற சில வைபவங்களின் போது நேரடியாகத் தோட்டங்களுக்குச் சென்று அவற்றை அவதானித்ததுடன் சம்பந்தப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியதன் மூலமும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. விசேடமாக மட்டகலைத் தோட்டத்தில் மார்கழி மாதத்தில் நடைபெற்ற திருவெம்பாவை, இக்காலங்களில் பெண்கள் கோலம் போடும் நிகழ்ச்சிகள், ஹெல்பொட தோட்டத்தில் இடம்பெற்ற தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், தெருக்கூத்து, என்பனவும் இவ்வாய்வுக்காலங்களில்
79

Page 43
நேரடியாகச் சென்று அவதானிக்கப்பட்டன. அத்துடன் இந்நிகழ்ச்சிகள் சில புகைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளன. இவ் வம்சங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வாய்வு அறிக்கையானது எழுதப்பட்டுள்ளது.
3.0 குடும்ப மட்ட வழிபாட்டு முறைகளிற் பெண்களின் பங்கு
3. நாளாந்த வழிபாட்டு முறைகள்
பொதுவாகப் பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த பெண்கள் அதிகாலையில் எழுத்து தமது காலைக்கடன்களை முடித்தபின் அடுப்பை மெழுகுவது வழக்கம். அன்றைய பொழுது நன்றாக அமைய வேண்டும் என்று காளி, மாரி ஆகிய தெய்வங்களை வணங்கி அடுப்பை மூட்டுவர். உலையை அடுப்பில் வைக்கும் போதும் உலையில் அரிசியைப் போடும் போதும் இறைவனை நினைத்து ஓரிரு வார்த்தைகள் கூறுவதை அநேகமான வீடுகளில் நாம் இன்றும் காணலாம். சோற்றை வடித்த பின்னரும் சோற்றுப் பானையை நீரினால் சுத்தம் செய்து விட்டும், அடுப்பு சாம்பலினால் பானையைச் சுற்றி திருநீற்றைப்போல் பூசும் வழக்கம் காணப்படுகின்றது.
குடும்ப நலனில் அக்கறை கொண்டு இயந்திரமாக இயங்குகின்ற இப்பெண்கள் காலையிலும், மாலையிலும் விளக்கேற்றி இறைவனை வழிபடத் தவறுவதில்லை. எலமுல்ல தோட்டத்தில் வசிக்கும் அறுபது வயதான மீனாட்சி என்னும் பெண் தினமும் உலையில் அரிசி போடும் போது
"பத்துப் பேருக்கும் கொண்டு பழையதுக்கும் மிஞ்சினுமடா பரமசிவனே பார்வதித்தாயே"
என்ற வார்த்தைகளைக் கூறிவிட்டு போடுவதாகக் கூறினார். ஒரு சில வீடுகளில் மாலையில் மட்டும் விளக்கேற்றுவது உண்டு. மாலையில் வேலை முடித்து வீடு திரும்பும் பெண்கள் வீட்டைச்சுத்திகரித்து மஞ்சள் நீள் தெளித்துப் பின்னர் விளக்கேற்றி இறைவனை வழிபடுவதை இன்றும் பரவலாகக் காணக்கூடியதாகவுள்ளது. இந்த இறைவணக்கத்தின்போது ஓரளவு படித்த பெண்கள் தேவாரம் பாடுவதும் உண்டு.
.ே வாராத்த வழிபாட்டு முறைகள்
அனேகமான தோட்டங்களில் எல்லா வீடுகளிலும் வெள்ளிக்கிழமை ஒரு
முக்கிய நாளாகக் கருதப்படுகின்றது. அத்தினத்தில் பெண்கள் நீராடி வீடு மெழுகிப் பாத்திரங்களைத் துவக்கி, வீட்டைச் சுத்திகரிப்பர். பின்னர் இறைவனுக்கு
8O

சூடம், சாம்பிராணி, காட்டிப் பூசை செய்வர். அத்துடன் அநேகமான பெண்கள் வெள்ளிக்கிழமை விரதம் அநுஷ்டிப்பதுண்டு. வெள்ளிக்கிழமை காலை உணவைத் தவிர்த்து பகல் உணவை உட்கொள்வர். பகல் உணவு உட்கொள்ள முன்னர் காகத்திற்குச் சோறு வைப்பர். வெள்ளிக்கிழமைகளில் முடி வெட்டல், நகம் வெட்டல், கடன் கொடுத்தல், இறந்தோரை அடக்கம் செய்தல் போன்ற காரியங்களைத் தவிர்த்துக் கொள்வர். மேலும், வெள்ளிக் கிழமை மாலையில் திருஷ்டி கழிக்கும் வழக்கமும் உண்டு. ஒரு மண்சட்டியில் நெருப்பில்) கடுகு, மிளகாய், உப்பு போன்றவற்றை இட்டு பிள்ளைகளின் தலைக்கு மேல் மூன்று தடவைச் சுற்றி விட்டு முச்சந்தியில் அதைப் போடுவார்கள். இதனையும் பெண்கள் தான் செய்வார்கள். எலமுள்ள தோட்டத்தைச் சேர்ந்த எழுபது வயதான மாரியாயி என்னும் மூதாட்டி திருஷ்டி கழிக்கும் போது,
தாய் முழி தகப்பன் முழி
எட்டப் பார்த்தவங்க முழி ஏறிட்டுப் பார்த்தவங்க முழி எல்லாம் இது கேடுகு, உப்பு வெடிகளை வெடித்துப் போகணுமடா"
என்ற வார்த்தைகளைக் கூறி திருஷ்டி சுத்துவதாகக் கூறினார். சில பெண்கள் சனிக்கிழமையை விரதநாளாக அநுஷ்டிக்கிறார்கள். தொடர்ந்து தலைவலியால் துன்புறும் பெண்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் சிவப்பு பூ எடுத்து சூரிய நமஸ்காரம் செய்வதுண்டு, முதன்முதலாக வரும் விருத்தினரை செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய தினங்களில் உணவு கொடுத்து உபசரிப்பதில்லை. அவ்வாறு செய்தால் உறவு முறிந்துவிடும் என்ற ஐதிகம் அவர்கள் மத்தியில் நிலவுவதே இதற்குக் காரணமாகும். விருந்தினர் மிகத் தொலைவில் இருந்து வந்து விட்டால் அவர்கள் பசியைப் போக்க வேண்டும். அத்தகைய சந்தர்ப்பங்களில் முதலில் உப்பு நீரைக் கொஞ்சம் குடிக்கக் கொடுப்பது வழக்கம் என்பது எவமுள்ள. மகாகுடுகல தோட்ட மக்கள் கூறிய தகவல்களில் இருந்து தெரிய வருகிறது. நல்ல காரியங்களைச் செய்வதற்கு புதன் கிழமையே சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
8.3 மாதாந்த வழிபாட்டு முறைகள்
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழ் மக்களின் நம்பிக்கை. எனவே, தை மாதம் பிறக்க முன் அதற்கான ஆயத்தங்களைச் செய்வதில் மக்கள் மும்முரமாக ஈடுபடுவர். வீட்டின் சுவர்களுக்கு சுண்ணம் தீட்டுதல் பொதுவான வழக்கம். எனினும் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்களிற் சிலர் சுண்ணாம்பிற்குப் பதிலாக, ஒரு வகை வெண்மண்ணைக் கொண்டு சுவரைத்
8

Page 44
தீட்டுவர். இவ்வெண்மண்ணைப் பெண்கள் வெளியிலிருந்து சுமந்து வருவர். வீட்டைத் துப்பரவு செய்து சுண்ணந்தீட்டுவோர். பெரிதும் ஆண்களாகக் காணப்பட்டாலும், சமையலறைச் சுவர்களுக்கு சுண்ணந்தீட்டுவோர் பெரும்பாலும் பெண்களாகவே காணப்படுகின்றனர்.
பொங்கலுக்குப் பயன்படுத்தும் புதிய பொங்கற் பானையைச் சில தோட்டங்களிற் பெண்களே சுமந்து வருகின்றார்கள். பொங்கல் தினத்தன்று அதிகாலையில் வீட்டு வாசலில் பொங்கல் பொங்குவார்கள். இப்பொங்கலுக்கான அடுப்பினை ஆண்களே தயார் செய்து கொடுப்பர். பொங்கற் பானைக்கு கோலமிட்டு கர்ப்பூரம் கொழுத்தி இறைவனை நினைத்து அடுப்பில் வைத்து தயார் செய்வது பெரும்பாலும் பெண்களால் நிறைவேற்றப்படும். எனினும், கர்ப்பூரம் காட்டி பூசை செய்யும் பொறுப்பு ஆண்களுக்கே உரியதாகவுள்ளது. நுவரேலியாப் பகுதிகளிற் சீரற்ற சீதோஷ்ண நிலைமை காரணமாகச் சூரிய பொங்கலை வீட்டினுள்ளே வைத்துக்கொள்வர். இத்தினத்தில் வீட்டில் பூசை செய்த பின் ஆண்களும், பெண்களும் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது.
மாட்டுப் பொங்கலில் ஆண்கள் கூடுதலாகப் பங்கெடுக்கிறார்கள். மாட்டுப்பட்டியைச் சுத்தம் செய்து, மாட்டையும் குளிப்பாட்டி மாட்டை அலங்கரிப்பதுடள் அதன் பட்டியையும் தோரணங்களால் அலங்களிப்பதையும் ஆண்கள் செய்கிறார்கள். பெண்கள் நீல நிறக் கரைசலைக் கொண்டு மாட்டுப்பட்டிச் சுவர்களில் கோலம் போடுவதுடன், மாட்டுப்பட்டிக் அருகாமையில் சிறு கோலம் போட்டு கற்கள் கொண்டு அடுப்பினைத் தயார் செய்து அதில் பொங்கல் பொங்கி பூசைக்கு ஏற்ற வகையில் ஓர் தட்டில் பொங்கல் மற்றும் பூசைப் பொருட்களைத் தயார் செய்து வைப்பர். ஆண்கள் கர்ப்பூரம் காட்டி பூசை செய்வர். இதனைத் தவிர தைப்பூச நாட்களில் தோட்டங்களில் ஒரு சில பெண்கள் விரதம் அநுஷ்டித்துச் சுத்தமாக சமையல் செய்து இறைவனுக்குப் படைத்துப் பூசை செய்வர். ஆண்கள் விரதம் இருந்தால் ஆணே பூசை செய்வது வழக்கம். பெண் மட்டும் விரதம் இருந்தால் பெண் இப்பூசையைச் செய்யலாம்.
இதேபோன்று சிவராத்திரி தினத்தன்றும் அநேக பெண்கள் விரதம் அநுஷ்டிக்கின்றார்கள். பெரும்பாலான தோட்டங்களிலும் சிவராத்திரிவிழா விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது. இத்தினத்தில் பெண்கள் விரதம் இருப்பதுடன் இரவு முழுவதும் நித்திரை விழிப்பர். இந்நேரங்களிற் கோயில் பூசையுடன் சம்பந்தப்பட்ட வேலைகளில் ஆண்கள் மாத்திரம் பங்கெடுக்கிறார்கள்.
பூசையின் இடையிடையே கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இக்கலை நிகழ்ச்சிகளில் பெண்களும் பங்கெடுக்கின்றனர். சிவராத்திரி தினத்தில் தேவார திருமுறைகள் பாடுவதில் இளம் பெண்களின் பங்களிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
82

மேலும், நுவரேலியா, அட்டன், தலவாக்கெல்லைப் பகுதிகளிற் பொதுவாகப் பங்குனி மாதத்தில் மாரியம்மன் திருவிழா ஐந்து நாட்களுக்கு மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவின் போது நாள் வைபவமாகக் கரகம் பாலித்தல், காப்புக் கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகின்றன. அன்றைய தினத்தில் பெண்கள் அதிகம் பங்கு பற்றுவதில்லை. இதனைத் தொடர்ந்து நடைபெறுகின்ற கோயிற் பூசை சம்பந்தப்பட்ட விடயங்களில் ஆண்களே முழு வேலைகளிலும் ஈடுபடுகின்றனர். பூசை நேரங்களில் மட்டும் பெண்கள் கோயில் சென்று வழிபடுவர். எனினும், தேர்த்திருவிழாத் தினத்தன்று பெண்கள் தமது வீடு, வாசலைக் கழுவித் துப்பரவு செய்து, வீட்டு வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டி அலங்களிப்பர். வீட்டின் வாசலுக்குத் தேர் வரும்போது பூசை செய்வதற்காக வீட்டு வாசலில் ( ஒரு சிறிய மேசையில்) கும்பம் வைத்து, அத்துடன் பூசைத் தட்டையும் பூசைக்கு ஏற்றவகையில் தயார் செய்து வைப்பார்கள். வீட்டு வாசலுக்குத் தேர்வருவதற்கு சற்று முன்பு வாசலை மஞ்சள் நீரினாற் கழுவித் தேர் வந்தவுடன் தேரை இழுத்து வரும் வாகனத்திற்கு நான்கு மூலைகளையும் மஞ்சள் நீர் கொண்டு கழுவி, கடவுளுக்கு (மாரியம்மன்) ஆராத்தி எடுப்பது வரையும் பெண்களே செய்கிறார்கள். பூசைத் தட்டை பூசகரிடம் கொடுத்து பூசை செய்து வாங்குவதை மட்டும் ஆண்கள் செய்கின்றார்கள். அத்தோடு அத்தேரையும் ஆண்களே இழுத்து வருவர்.
இதற்கு மாறாக, பொகவந்தலாவையில் உள்ள சீனாகொல என்னும் தோட்டத்தில் முறையே விநாயகர், முருகன் தேர்களை ஆண்கள் இழுத்துவர அம்மன் தேரை மட்டும் பெண்கள் இழுத்து வரும் வழக்கமுண்டு. இதே போன்று பூரீ மாத்தளை முத்துமாரியம்மன் கோயிலிலும் அம்மன் தேரைப் பெண்கள் இழுத்து வருவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் தேர் போகும்போது தேருக்கு முன்னால் தோட்டங்களில் அநேகமாகப் பெண்களே அம்மன் பாடல்களைப் பாடிக் கொண்டு போவது வழமையாகவுள்ளது. கோயிலில் நடைபெறும் மாவிளக்கு பூசையில் பூசைக்குரிய மாவிளக்கை தயார் செய்து அதனை ஒரு தட்டில் வைத்து வெள்ளைத்துணியில் திரிபோட்டு, விளக்கேற்றி பூசகரிடம் பூசைக்கு கொடுப்பதும் பெண்களே. இவற்றையடுத்து கரகம், காவடி, வேல் குத்தல், தீமிதித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவதுண்டு. இந்நிகழ்ச்சிகள் ஆண்களுக்கு சரிநிகராகப் பெண்களும் பங்கெடுப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். பல தோட்டங்களிலும் பொதுவாக பறவைக்காவடியை பொதுவாக ஆண்கள் தான் எடுக்கின்றார்கள். ஆனால் சில தோட்டங்களிற் பெண்களும் இப்பறவைக்காவடியை எடுக்கின்றார்கள் எனத் தெரியவருகிறது.
சித்திரை மாதத்து சித்திரா பெளர்ணமி தினத்தன்று ஆரம்ப காலங்களிற் தோட்டங்களிற் பல விதமான உணவுப் பண்டங்களைச் செய்து படைத்து, அவ்விடத்திற் சித்திரபுத்திரர் கதை கூறி அத்தினத்தைக் கொண்டாடுவதாக
83

Page 45
ராகலை பகுதிகளில் ஆய்வு செய்த போது குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று இது அருகிவிட்டது. சித்திரைமாத வருடப்பிறப்புத் தினத்தில் பெண்கள் தமது வீடுகளிற் கும்பம் வைத்து குத்துவிளக்கேற்றல் இன்றும் வழமையாகவுள்ளது. அத்துடன் இத்தினத்திற் கோயில் சென்று வழிபடுவதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே குறிப்பிட்டபடி பங்குனி மாதத்தில் மாரியம்மன் திருவிழா நடைபெறாத கோயில்களில் ஆடி மாதத்தில் திருவிழா நடைபெறும். பங்குனி மாதத் திருவிழா போன்றே இத்திருவிழாவும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆடிஅமாவாசைத் தினத்தன்று தகப்பனை இழந்தவர்கள் விரதம் இருப்பார்கள். பொதுவாக, ஒவ்வொரு மாதத்திலும் அமாவாசை விரதத்தை அநுஷ்டிக்கும் வழக்கமும் உண்டு. இவ்விரதத்தை ஆடி அமாவாசை தினத்தில் ஆரம்பிப்பது வழக்கம்.
புரட்டாசிச் சனி விரதம் இன்று தோட்டங்களில் அநேகரால் அநுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்விரதத்தை ஆண், பெண் இரு பாலரும் அநுஷ்டிக்கிறார்கள். இத்தினத்திற் கோயில் சென்று நவக்கிரகத்திற்குப் பூசை செய்து எள்ளுச்சட்டி எரிப்பது தோட்டங்களிற் காணக்கூடிய ஒரு அம்சமாகும். பதுளைப் பகுதிகளில் இச்சணி விரதம் கூடுதலாக அநுஷ்டிக்கப்படுகிறது. நகரத்திற்கு அண்மையில் உள்ள தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் இவ்விரத தினத்தன்று பல மைல்கள் நடந்து வந்து நகர் சார்ந்த கோயிலான பதுளை ரொக்கில் காளியம்மன் கோயிலில் எள்ளு எரித்து நவக்கிரக பூசை செய்வதும் குறிப்பிடத்தக்கதே. புரட்டாதி மாதத்தில் வரும் நவராத்திரி விழாவை அநேகமான தோட்டங்களில் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றார்கள். வீடுகளில் கும்பம் வைத்தல், நவதானியம் முளைக்கப் போடுதல், போன்றவற்றைப் பெண்களே செய்து வருகின்றார்கள். அத்துடன், சில இடங்களிற் பெண்கள் ஒன்பது நாட்களும் விரதம் அநுஷ்டிப்பதும் வழமையாகவுள்ளது. மேலும் மாலை வேளைகளில் அநேக இளம் பெண்கள் இந்த நவராத்திரி தினங்களாகிய ஒன்பது தினங்களிலும் நவராத்திரிப் பாடல்களைப் பாடி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி பூசை தோட்டங்களில் மிக விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது. இந்நாளில் பெண்கள் வீட்டைத் துப்பரவு செய்து கடலை அவித்து, அவல், பொங்கல் என்பனவற்றை தயார்செய்து அவற்றுடன் பூசைக்குத் தேவையான வெற்றிலை, பாக்குப் பழங்கள் என்பனவற்றையும் ஒழுங்கு செய்து வைப்பர். எனினும் இறுதியில் கர்ப்பூரம் காட்டிப் பூசை செய்வது ஆண்களே. இதற்கு மாறாக, தோட்டங்களிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையம், இரவு நேரப்பாடசாலை சன சமூக நிலையம் போன்ற இடங்களில் மேற்கூறப்பட்ட சரஸ்வதி பூசையை பெண்களே ஒழுங்கு செய்து கர்ப்பூரம் காட்டி பூசை செய்கின்றனர். பத்தாம் நாளான விஜயதசமி தினத்தில் தோட்டங்களிற் சிறுவர்களுக்கு ஏடு தொடக்கும் வைபவம் இடம் பெறுகின்றது. சிலர் கோயிலுக்குச் சென்று ஏடு தொடக்குவர்.
84

இதனைக் கோயிலில் பூசகராகத் தொழில் புரியும் ஆணே செய்வார். சிலர் தோட்டப் பாடசாலைகளில் ஏடு தொடக்குவதும் இன்று வழமையிலுள்ளது. இங்கு பாடசாலை அதிபரே ஏடு தொடக்குகின்றார். பெண் அதிபராக உள்ள பாடசாலையில் அந்த பெண் ஏடு தொடக்கும் தொழிலைச் செய்யும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.
ஐப்பசி மாதத்தில் வருகின்ற தீபாவளித் திருநாளைத் தோட்டங்களில் மிக விசேடமாக கொண்டாடுவது வழக்கம். இத்தினத்திற் பலகாரம் செய்து, கடவுளுக்குப் படைத்து வழிபடுகின்றனர். ஒரு சிலர் தீபாவளித் திருநாளுக்கு முதல் நாளன்று பலகாரம் செய்து, அத்துடன் கோழி இறைச்சி, சாராயம், கள்ளு, புகையிலை போன்றவற்றைப் படைத்து பூசை செய்வார்கள். இதனைவிட ஐப்பசியில் வருகின்ற கந்தசட்டி விரதத்தை ஒரு சிலர் அநுஷ்டிக்கின்றனர். பொதுவாக தோட்டங்களின் மேல் மட்ட உத்தியோகஸ்தர்களின் வீட்டில் உள்ள பெண்களே இவ்விரதத்தைப் பெரிதும் அநுஷ்டிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ( குறிப்பாக உடரதாளை, ராதளை, ஸ்பிரிங்வெளி, கோணகல்ல, பசறை போன்ற இடங்களில் இவ்விரதத்தை அநுஷ்டிக்கிறார்கள்.)
இவற்றைவிடக் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகைத் தீபத் திருநாளில் அநேகமான தோட்டங்களில் இரவு வேளையில் வீட்டு வாசலில் தீபம் ஏற்றுவதைப் பெண்கள் செய்து வருகின்றார்கள். சிட்டி, பப்பாசி, வாழைத்தண்டு, போன்றவற்றில் இத்தீபத்தை ஏற்றுவது வழக்கமாகும். மார்கழி மாத நடுப்பகுதி தொடக்கம் தை மாதம் பிறக்கும் வரையும் தினமும் காலையில் பெண்கள் வீட்டு வாசலிற் கோலம் போடுவது வழக்கமாயுள்ளது. தினமும் விடியற் காலையில் பெண்கள் வீட்டு வாசலைக் கூட்டி, சாணத்தால் மெழுகி அதில் புள்ளிக்கோலம் போடுவது வழமையாகவுள்ளது. இக்கோலத்தை முற்காலங்களில் அரிசி மாவினாலும் தற்போது ஒருவித வெள்ளை நிறக் கற்களைத்தூள் செய்தும் போடுகின்றனர். சிலர் மட்டுமே இன்றும் அரிசி மாவினாற் கோலம் போடுகின்றனர்.
நுவரேலியாவில் மட்டும் அங்குள்ள சீரற்ற காலநிலை காரணமாக அநேகமான தோட்டங்களிற் பகல் 12 மணி தொடக்கம் 1 1/2 மணிவரை கிடைக்கின்ற மதியபோசன இடைவேளையின் போது அங்குள்ள பெண்கள் கோலம் போடுகின்றார்கள்.
இதனை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற போது லேங்டேல் தோட்டம் மீட்டு தோட்டங்களில் அவதானிக்கக் கூடியதாய் இருந்தது. அத்துடன், கோலத்துக்கு அருகில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து அறுகம் புல், பறங்கிப்பூ என்பனவற்றைக் குத்தி வைப்பதுண்டு. இதனைப் பெண்கள் தான் செய்து வருகின்றார்கள். இவ்வாறு ஒவ்வொரு நாளும் செய்து, இறுதியாக தைப்பொங்கல்
85

Page 46
தினத்தன்று இவற்றை ஆற்று நீரில் கொண்டு போய் விடுவது வழக்கம். இதனை நீரிற் போடும் போது
"amit ászág avagy ásútg. வளர்த்தேனே தெப்பை வாய்க்கால் தண்ணிரிலே போறயே தெப்பை"
எனக் கூறித்தான் போடுவார்களாம். மேலும் திருவெம்பாவை தினங்களில் அதிகாலையில் இராமர் பஜனை பாடுவது தோட்டங்களில் வழமையாகவுள்ளது. ஆண்கள் தான் இதிற் கூடுதலாகக் கலந்து கொள்கின்றார்கள். இப்பஜனையின் போது கம்பம் தூக்கி வருவது வழமை. வீட்டு வாசலுக்கு வந்தவுடன் இக்கம்பத்திற்கு எண்ணெய் ஊற்றுவதில் மட்டுமே பெண்கள் பங்கெடுக்கிறார்கள்.
4.0 குல தெய்வ வழிபாடுகளிற் பெண்களின் பங்கு
குலதெய்வ வழிபாட்டு முறைகளிற் பெண்களிலும் பார்க்க ஆண்களே கூடுதலாக பங்கெடுக்கிறார்கள். ஆனால், அதிலும் கூட உரிய நேரத்திற் பூசை செய்யும்படி வலியுறுத்துபவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். திருமணம் முடித்த பின்பு கணவன் எக்குல தெய்வத்தை வழிபடுகின்றானோ அத்தெய்வத்தையே மனைவியும் வழிபட வேண்டும் என்ற நியதியுண்டு.
5.0 தோட்ட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகள்
தோட்ட வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட வழிபாட்டு முறைகளில் பெண்களின் பங்கு சொற்பமானதே, குறிப்பாக ரோதைமுனி, முனிசாமி போன்ற தெய்வங்களுக்குப் பலியிடும் இடத்திற்குப் பெண்கள் செல்லக்கூடாது என்ற விதியுண்டு.
கொழுந்து சாமி வழிபடும் போது மட்டும் பெண்கள் மலைக்குச் சென்று ஒரு தேயிலைச் செடியைச் சுத்தம் செய்து அதற்குப் பூமாலையிட்டு அத்துடன், பொங்கல் செய்து, மற்றும் பூசைக்குத் தேவையானவற்றையும், ஒழுங்கு செய்வர். அதிலும் கூட, கர்ப்பூரம் காட்டிப் பூசை செய்வதற்குக் (ஆண்) கங்காணி தான் அழைக்கப்படுகின்றனர்.
மேலும் தோட்டங்களில் சில பெண்கள் விபூதி மந்திரித்துக் கொடுத்து நோய்களைக் குணப்படுத்துவதிலும், குடும்பங்களில் நடக்கவிருக்கும் சில காரியங்களை முன் கூட்டியே எதிர்வு கூறுவதிலும் கைதேர்ந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இதற்கு மேலும் உதாரணமாகச் சில வருடங்களுக்கு
86

முன்பு கண்டியிலுள்ள எலமுல்ல எனும் தோட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒரு பெண் இந்தியா சென்று உயர் கல்வி கற்று இலங்கை வந்திருந்தார். இப்பெண் மேற்குறிப்பிட்டவாறு நோய்களைக் குணப்படுத்துவதிலும் குடும்பங்களில் நடக்கவிருக்கும் சம்பவங்களை முன் கூட்டியே தெரிவிப்பதிலும் சிறந்து விளங்கியதாக அத்தோட்டத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்டார்கள். இப்பெண்ணை " மணி கட்டி சுவாமி " என்றே அழைத்தார்கள்.
58 வயதான லச்சுமி என்னும் பெண் செவ்வகந்த என்னும் தோட்டப் பகுதியில் மேற்குறிப்பிட்ட விடயத்திற் பெயர் போனவராகக் காணப்படுகின்றார்.
அத்துடன் ஆங்காங்கே சில நோய்களையும் குணப்படுத்தி வந்துள்ளார். இறையருள் காரணமாகத்தான் இவ்வாறு அவருக்குச் செய்யக்கூடியதாக இருந்ததாக அவரே கூறுகின்றார். தோட்டப் பகுதியில் மட்டும் அல்ல நகர்சார்ந்த புஸ்ஸல்லாவ, கலகா போன்ற பல இடங்களுக்கும் மக்கள் அழைத்துச் சென்று பூமாலை போட்டு வரவேற்று, ஒவ்வொருவரும் தமது குடும்ப நிலை பற்றியும் எதிர்கால நிலை பற்றியும் கேட்டறிந்தார்கள்.
மேலும், தோட்டங்களில் அம்மை நோய் வந்தால் இது மாரியம்மன் நோய் என்ற கூறி நோய்வந்தவரைத் தனிமையில் மிகத் துப்பரவாக வைத்துவிடுவர். தினமும் மாலை நேரங்களிற் பெண்கள் மாரியம்மன் தாலாட்டைப் படிப்பர். அத்துடன் இந்நோய் குணமாகியவுடன் மாரியம்மனுக்கு பிச்சை எடுத்து துள்ளுமா, மாவிளக்கு போன்றவற்றை எடுத்து வைப்பதாக நேர்த்தி வைப்பதுண்டு. நோய் குணமாகியவுடன் அக்குறிப்பிட்ட வீட்டில் உள்ள ஒரு பெண் வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வீட்டில் வாசல் படியிலும் முந்தாணியை விரித்து "அம்மா மாரியம்மனுக்குப் பிச்சை போடுங்க” என்று கேட்டு அரிசி சேகரித்து வந்து துள்ளுமா, மாவிளக்குச் செய்து நேர்த்தியை நிவிர்த்தி செய்வர்.
தொடர்ந்து மழை இல்லாது வரட்சி நிலவும்போது குடம் குடமாக நீரெடுத்து மழையை வேண்டி மாரியம்மனுக்கு ஊற்றுவதாகவும், இதனைத் தொடர்ந்து மழை பெய்யும் என்றும் நம்புகின்றனர். ஒரு சில வேளைகளில் மழை வேண்டித் தோட்டத்திற் பெண்கள் சேர்ந்து மாரியம்மன் கோவிலில் அரிசிக் கஞ்சி வைத்து ஊற்றும் வழக்கமும் உண்டு. இவ்வாறு மத ரீதியாகப் பெண்களின் பங்கு காணப்பட்டாலும் கூட சில முக்கிய இடங்களிற் பெண்களின் பங்கு கிடையாது. உதாரணமாகக் கோயில் நிர்வாகம் போன்றவற்றில் பெண்களின் பங்களிப்பு இல்லையென்பதும் அறியக் கூடியதாய் உள்ளது. கோயில் நிர்வாகத்தில் பெண்கள் பங்குபற்றுவதில்லை.
87

Page 47
இக்கட்டுரையை எழுத உதவியோர் பற்றிய விபரங்கள்
தோட்டத்தின் பெயரும், இடமும், தகவல்களைத் தந்துதவியோரும்
1. பீட்ரு தோட்டம் - ஏ. ஜோசப் மோசஸ், எஸ். சந்திரா, மோசஸ். 2. லபுகலை மேற்பிரிவு, கீழ்ப்பிரிவு - குறிஞ்சித் தென்னவன்,
வேலு, எஸ். பூங்கான், 3. எலமுல்ல தோட்டம் - சி. மீனாச்சி. எஸ். இராமையா, மாரியாய்,
வி. நாயகம், எஸ். லோகம்மா, இராசையா 4. எல்பொட தோட்டம் - சாரங்கபாணி, எம். சீரெங்கன், வி.மாரியாய்,
என். கணேசன் 5. மாகஸ்தோட்டம் - எஸ். கோபிநாத், ஆர். ஐயாதுரை, கே.மரியதாஸ்,
சீ.ஜெபமாலைமேரி 6. கந்தபொல டிவிசன் - வீ. மோகனதாஸ், எஸ். காளியம்மா 7. சென்ட். லியானாட்ஸ் தோட்டம் - எம். பன்னிர்செல்வம், கே. சாந்தகுமார்,
எஸ். சுந்தரம், ஆர். மாரிமுத்து 8. மவுசாஎல்ல, விந்துலை - எஸ் ஞானம்மாள், நடேசன், சீ. சிவநாதன்,
எஸ். முத்துகுமார் 9. பொகவந்தலாவை - எஸ். சுபலக்சுமி, பி.செல்லையா, 10. மகாருடுகல - டீ.ராமசாமி, மீனாட்சி, எம்.லோகநாதன், வி.ராசு,
ஆர். ஆறுமுகம் 11. லேஸ்டேல் - சீத்தாலக்சுமி, பெரியண்ணன், இராஜசுலோசனா, பழனியப்பன் 12.மட்டகல தோட்டம் - எம். புண்ணியசெல்வி, ஏ.ஆறுமுகம், தேவதாஸ்,
எம்.ஆரியலக்சுமி 13. தேஸ்பி தோட்டம் - பி. பெரியசாமி, எம். மகேந்திரன், ஜெ. விமலா,
(ԹջաUուb 14. முன்பிலேன் - எஸ். சிவராஜ், ஜீ. கந்தையா, எல். சீத்தாதேவி 15. மெல்போர்ட் - ஆர். ராமு, டேவிட், சுந்தர், வி.மாரியாய்
88

6
இந்திய வம்சாவழி மக்களின் தோட்ட நகர்சார் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள்
ஏ, இராமகிருஷ்ணன்
1.0 அறிமுகம் 1.1 ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிரதேசம் பற்றிய பொதுநோக்கு
ஏறக்குறைய 125 வருட காலங்களுக்கு முன்பு தென்னிந்தியாவின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து தொழில் வாய்ப்பினை நாடி இலங்கையில் குடியமர்த்தப்பட்ட தோட்டப்புறமக்களே இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் எனப்படுவர். இவர்களின் கலை பண்பாட்டு அம்சங்கள் தொடர்பாக இவ்வாய்வுக் கட்டுரை வரையப்பட்டுள்ளது. தென்னிந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வந்த இம்மக்களுள் அதிகமானோர் பெருந்தோட்டப் பிரதேசங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். பிரதானமாக மத்திய மலைநாட்டில் பெருந்தோட்டப்புறங்களில் இவர்கள் செறிந்து வாழ்ந்து வருகின்றனர். கண்டி, நுவரேலியா, அட்டன், தலவாக்கலை, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களில் ஒரு சில தோட்டப்புறங்களிலிருந்து இவ்வாய்வுக் கட்டுரைக்கான தகவல்களும் விளக்கப்படங்களும் திரட்டப்பட்டன. ஒரு சில நடைமுறைச் சிரமங்களினால் களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பெருந்தோட்ட இந்தியவம்சாவளி மக்களிடமிருந்து தரவுகள் சேகரிக்கப்படவில்லை.
தோட்டப்பகுதிகளிற் காணப்படும் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களும், நகர்ப்புறங்களிற் காணப்படும் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களும் எம்து ஆய்வுக்கு உட்பட்டன. சமூகப் பொதுநிலை வழிபாடு என்பது சமுகத்தின் எல்லா மக்களும் பொதுவாகச்சென்று வழிபடும் தலங்களைக் குறிக்கும். இத்தலங்கள் நகர்ப்புறங்களின் மத்தியிலும், தோட்டப்புற மக்களின் வேலைத்தலங்களுடனும், குடியிருப்புகள், தெருச்சந்திகள், போன்ற இடங்களிலும் காணப்படுகின்றன. நகர்ப்புறத்தலங்கள் பொதுவாக நகர்ப்புற மக்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டனவாக உள்ளன. தோட்டப்புற மக்கள் நகரக் கோயில்களுக்கு வந்து போவது வழக்கம். இதற்கு மாறாக, தோட்டப்புறச் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத்தலங்களில் இவர்களது செல்வர்ஃகே பெரிதும் காணப்படுகின்றது. ஒரு சில தோட்டப்புறச் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத்தலங்கள் பிரதான பாதைக்கு பல மைல் தொலைவிலும்
89

Page 48
காணப்படுகின்றன. உதாரணமாக, மகாஒயா தோட்ட மாரியம்மன் கோவில் (அவிசாவளை) திவுரும்பிட்டிய தோட்டம், (இரத்தினபுரி) எல்ஸ்டன் தோட்டம் (கொழும்பு மாவட்டம்) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மாரியம்மன் கோவில்களும் கூட நகர்ப்புறத்திலிருந்து பல மைல் தொலைவில் காணப்படுவதாக உள்ளன.
1.2 ஆய்வு மேற்கொள்ளப்பட்ட முறை
இவ்வாய்விற்கான தகவல்கள் அந்தந்த மாவட்டங்களில் உள்ள நகர்ப்புற சமூகப்பொதுநிலைவழிபாட்டுத் தலங்களிலுள்ள பிரதான பூசகரிடம் வினாக்கொத்து மூலமும் நேர்முகமாக பார்த்துணர்ந்தும் பெறப்பட்டன. தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் பற்றிய தகவல்களைத் தோட்டத் தொழிலாளர்கள். தொழிற்சங்க உறுப்பினர்கள், கோவில் தலைவர்கள் பூசாரிமார்கள், பண்டாரம், முதியோர், இளைஞர்கள். அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், தோட்டக் கங்காணிமார்கள். போன்றோர்களுடன் கலந்துரையாடிப் பெறப்பட்டன. இத்துடன் நேரடியாக வெளிக்கள ஆய்விலிருந்து பெறப்பட்ட தரவுகள், மக்களிடமிருந்து கேட்டறிந்தவை தலங்களின் வரலாற்று ரீதியான தரவுகள் என்பனவற்றைப் பிரதானமாகக் கொண்டுள்ளன. இடஅமைவு ரீதியாகவும், மக்களின் நாளாந்த நடவடிக்கைகளாலும், கலை பண்பாட்டு மாற்றங்களாலும், வேறுபட்டுக் காணப்படும் மேற்படி இரு சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களைக் கீழ்வருமாறு வகைப்படுத்தி ஆராயலாம்.
(1) நகர்ப்புறச் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் (2) தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள்
மேற்கூறப்பட்ட இருவேறு வகைகளாக இத்தலங்களைப் பிரிப்பதற்கு இவற்றில் காணப்படும் முக்கிய சில வேறுபாடுகளே அடிப்படையாகவுள்ளன. நகர்ப்புறத் தலங்களில் (ஐயர்) எனப்படுபவரும் தோட்டப்புறத் தலங்களில் (பண்டாரம்) எனப்படுபவரும் பூசைகளை நடத்துகின்றனர். மேலும் இத்தலங்களின் தோற்றப்பாடு, கட்டிடக் கலை அம்சங்கள். பூசைவேலைகள், பூசைமுறைகள் என்பனவற்றிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.
1.3 நகர்ப்புறச் சமுகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள்
நகர்புறத்துச் சமூகநிலை வழிபாட்டுத் தலங்கள் பொதுவாக நகர்களின் மத்தியில் அமைந்துள்ளன. உதாரணமாக, கண்டி செல்வவிநாயகர் கோவில் கேகாலை பூஜி கதிர்வேலாயுத கோவில், மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் கோவில், இரத்தினபுரி சிவன் கோவில் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இக்கோயில்களுக்கு ஏனைய மதங்களைச் சேர்ந்தோரும் வந்து வழிபடுவதைக் காணலாம். உதாரணமாக கேகாலை கதிர்வேலாயுத சுவாமி கோவில், கண்டி
90

செல்வ விநாயகர் கோவில், மாத்தளை முத்துமாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் பெருமளவான பெளத்தர்களின் வருகையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இவற்றில் சில தலங்களில் கோயிலுக்கென்று பாவனைப்பொருட்கள் "உபயம்" என்ற பெயரில் பெளத்தர்களால் வழங்கப்பட்டுள்ளன. இத்தலங்களில் நடைபெறும் தேர்த்திருவிழாக்களில் காவடி, கரகாட்டம், தீமிதிப்பு போன்ற நிகழ்ச்சிகளில் கூட இவர்கள் பங்கெடுத்துக்கொள்வது வழக்கமாக இருந்து வருகின்றது.
நகர்ப்புறச் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் முருகன், விநாயகர், சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்களைப் பிரதான தெய்வங்களாகக் கொண்டுள்ளன. ஏனைய தெய்வங்களான மாரியம்மன், இராமர் போன்ற தெய்வங்களுக்கு சிறு ஆலயங்களும் இப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கேகாலை கதிர்வேலாயுத சுவாமி கோவில், இரத்தினபுரி சிவன் கோவில், கதிரேசன் கோவில், பொகவந்தலாவை கதிரேசன் கோவில், தலவாக்கலை கதிரேசன் கோவில், வத்துகாமம் விநாயகள் கோவில், போன்றனவும் மாத்தளை, வத்துகாமம் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் மாரியம்மன் கோவில்களும் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களாகும்.
14 தோட்டப்புறச் சமுகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள்
ஏற்கனவே குறிப்பிட்டது போன்று. நகர்ப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களும், தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களும் ஒரே விதமான அம்சங்களைக் கொண்டிருக்கவில்லை. புவியியல் ரீதியாகவும், நிர்வாக கட்டிட அமைப்பு ரீதியாகவும், இவ்விருவகைத் தலங்களும் வேறுபட்டுக் காணப்படுகின்றன. தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழி பாட்டுத் தலங்களில் பெரும்பாலனவை "முடிய" அமைப்புடையவாக உள்ளன. தோட்டப்புறத் தமிழ் மக்களின் சமய கலாச்சார வளர்ச்சிக்காக ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக்காலத்தில் இவை அமைக்கப்பட்டன. இவை பெரும்பாலும் தோட்ட மக்கள் ஒன்று கூடும் சமூகநிலை மத்தியஸ்தானமாக இருந்து வருகின்றன. இவ்வாறான இடங்களைத் தெரிந்தே இவ்வாலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களின் அமைப்பு நிர்வாகம், பூசைகள் மேற்கொள்ளப்படும் முறைகள் என்பனவற்றை நோக்குமிடத்து நகர ஸ்தாபனங் களிலிருந்து இவை வேறுபட்ட தன்மையினைக் கொண்டனவாகவுள்ளன. பிற மதங்களிள் ஊடுருவல் தன்மையானது தோட்டப்புற தலங்களில் பெரிதும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு தசாப்த காலத்துக்குள் பெளத்த மக்களின் ஊடுருவல் இத்தலங்களுள் ஏற்பட்டுள்ளமையை விசேடமாகக் குறிப்பிடல் வேண்டும்.
91

Page 49
அண்மைக்காலங்களில் ஏற்படுத்தப்பட்ட திட்டமிட்ட குடியேற்றத்திட்டங்களால் சிங்கள மக்களின் குடியிருப்புக்கள் இப்பகுதிகளில் மாற்றுப் பயிர்ச்செய்கையுடன் இணைந்து காணப்படுகிறது. கோயிற் கட்டிட அமைப்பில் இதனது தாக்கத்தினை நாம் அவதானிக்கலாம். சில தோட்டங்களில் இந்துக்கோயில்களுக்கு முன்னாலேயே அமைக்கப்பட்டுள்ள பெளத்த விகாரையுடன் இணைந்த புத்தர் சிலையையும் காணக்கூடியதாகவுள்ளது. இவ்வாறான கோயில்களைக் குறிப்பாக இரத்தினபுரி மாவட்டத்தில் எல்ஸ்டன், கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த பென்ரித் போன்ற தோட்டங்களில் கண்டுகொள்ள முடிந்தது. படம் & சீ
தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களில் பெரும்பாலானவை முத்துமாரியம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. ஏனைய தெய்வங்களான முருகன், விநாயகர், விஷ்ணு போன்ற தெய்வங்களுக்கான மூலஸ்தானத்துக்குப் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலே இச்சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. நகர்ப்புறத் தலங்களில் மூலஸ்தான தெய்வங்களாகக் கருதப்படும் சிவன், முருகன், விநாயகர் போன்ற தெய்வங்கள் இங்கு இரண்டாம் நிலைத் தெய்வங்களாக வழிபடப்படுவது நோக்கற்பாலது
2.0 பிரதேச ரீதியான ஆய்வு
2. நகர்ப்புறப் பிரதான கோவில்கள்
ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் பெரும்பாலானவற்றில் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் நகர்ப்புறப்பகுதிகளின் மத்தியளிப்தானங்களில் அமைந்துள்ளன. இத்தலங்களிற் பெரும்பாலானவை முருகன், விநாயகர், சிவன் போன்ற தெய்வங்களைப் பிரதான தெய்வங்களாகக் கொண்டுள்ளன. இரத்தினபுரி மாவட்டத்தில் நகர்ப்புறத்துச் சமூகப் பொதுநிலை வழிபாட்டுத்தலங்கள் அனைத்திலும் முருகன் வழிபாடும், சிவன் வழிபாடும் பெரிதும் காணப்படுகின்றன. உதாரணமாக இரத்தினபுரி நகரில் சிவன் கோவிலும், பலாங்கொட நகரில் கதிர்வேலாயுத சுவாமி கோவிலும் அமைந்துள்ளன. கேகாலை மாவட்டத்தில் கேகாலை நகரில் கதிர்வேலாயுத சுவாமி கோவிலும், ரம்புக்கனை நகரில் முருகன் கோவிலும் உள்ளன. மாத்தளை நகரில் அம்மன் கோவில் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலமாக காணப்படுகின்றது. இவை தவிர வத்துகாமம் நகரில் கதிரேசன் கோவிலும், கம்பளை நகரில் கதிரேசன் கோவில் உட்பட அம்மன் கோவிலும் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களாக உள்ளன. அட்டன், தலவாக்கலைப் பகுதிகளில் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் அனேகமானவை முருகனை அல்லது பிள்ளையாரைப் பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. மேற்படி நகர்ப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் சிலவற்றில் மாரியம்மனுக்கென சிறிதாக அமைக்கப்பட்ட விக்கிரக அமைப்புடன் கூடிய சிறு கட்டிடங்களையும் அவதானிக்கலாம். மாறாக,
92

படம் 2: இரத்தினபுரி மாவட்ட எல்ஸ்டன் தோட்ட முத்துமாரியம்மன் கோயில்

Page 50

முருகப் பெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் விக்கிரக அமைப்புடன் கூடிய சிறுகட்டிடங்கள் மாரியம்மன் கோவிலுக்கு இடது, வலது புறமாக அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (படம் 3 & 4 J
நகர்ப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களிற் பெரும்பாலானவை நாட்டுக்கோட்டைச் செட்டிமாரால் கட்டப்பட்டன எனத் தெரியவருகின்றது. கண்டி செல்வவிநாயகர் கோவில், நாவலப்பிட்டி கதிரேசன் கோவில், கேகாலை கதிர்வேலாயுதசுவாமி கோவில் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இத்தலங்களின் பூசகரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களிலிருந்தே இவை நாட்டுக்கோட்டைச் செட்டிமாரால் கட்டப்பட்டன என நம்பப்படுகின்றது. இவற்றில் ஒரு சில தலங்கள் கண்டி, மன்னர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறுகின்றன. உதாரணமாக, கண்டி செல்வவிநாயகர் ஆலயம், கண்டி தலதாமாளிகையைக் கட்டிய கீர்த்தி பூரீ இராஜசிங்கன் என்ற அரசன் தமிழ் மக்களுக்கும் தலம் ஒன்று அமைக்கும்படி கட்டளையிட அந்த ஆணையின் பேரில் கட்டப்பட்ட சிவன் கோவில் பின்னர் விநாயகர் ஆலயமாக மாறியது என்பர். விநாயகப் பெருமானின் உருவச்சிலையானது துணி துவைக்கும் கல்லுக்கு மேலே இருப்பதாக கனவு கண்ட வீரப்பன் செட்டியார், அவ்வுருவச்சிலையை எடுத்து வந்து நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் உதவியுடன் கட்டிய கோவிலே இன்றைய செல்வவிநாயகர் ஆலயமெனக் கூறப்படுகின்றது. இக்கோவில் சிவன் கோவில் எனக் கூறப்படுவதற்கு மூலஸ்தானத்தில் லிங்கம் இருப்பதும் மூலஸ்தானத்துக்கு முன்பாக நந்தியின் உருவச்சிலை இருப்பதும் தக்க ஆதாரங்களாகும்.
இப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களின் அமைப்பு முறைகளிற் சில முக்கிய அம்சங்களைக் காணமுடிகின்றது. முதலாவதாக, நகர்ப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் யாவும் திராவிடக்கட்டடக் சிற்பக்கலையம்சங்களைக் கொண்டனவாகவும் தமிழகத்துச் சிற்பிகளால் கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட பெரிய கோபுரங்களைக் கொண்டனவாகவும் இருப்பதைக் காணலாம். இரண்டாவதாக, இத்தலங்கள் யாவும் தெரிவு செய்யப்பட்ட பரிபாலனக் குழுவினரால் நிர்வகிக்கப்படுகின்றன. தனிப்பட்டோரான தர்மகர்த்தாக்களின் ஆளுகையில் இருந்துவரும் கோவில்களும் உண்டு. இத்தலங்களிற் பெரும்பாலானவை இந்து கலாச்சார அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அமைச்சின் உதவியுடனும், பக்தர்கள் இடும் காணிக்கை மூலமும் கோவில் அபிவிருத்தி, தேர்த்திருவிழா போன்ற முக்கிய திருவிழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் அவ்வப்பகுதியிலுள்ள நகரக் கடை உரிமையாளர்களிடம் பணம் வசூலிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், உபயங்கள் மூலம்
93

Page 51
கிடைக்கப்பெறும் பண உதவியும் இதில் அடங்கும். நகர்ப்புறத் தலங்களின் தேர்த்திருவிழா உற்சவமானது பெரும்பாலும் தை, மாசி மாதங்களில் கொண்டாடப்படும். பெளர்ணமியை ஒட்டியே தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களின் தேர்த்திருவிழாவைப் போலன்றி நகர்ப்புறத்தலங்களின் தேர்த்திருவிழாக்களில் காவடி, கரகாட்டம், பக்திப்பாடல் போன்றவை இடம்பெறும். இத் தேர்த்திருவிழாவின் தேர்ப்பவனி நகரப் பிரதேசத்தில் ஊர்வலம் வர இந்து மக்கள் உட்பட ஏனைய மத மக்களும் இதிற் கலந்துகொள்வர்.
மாத்தளை பூரீ முத்துமாரியம்மன் தேரானது மிகவும் சிறந்த சிற்பக் கலையமைப்பைக் கொண்டதாகும். இத்தேர்த்திருவிழாவின் போது நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் வந்து கலந்துகொள்வர். இதற்காக விசேட போக்குவரத்து வசதிகளும் கூட ஏற்பாடு செய்யப் பட்டிருக்கும். இந்த நகர்ப்புறத்துப் பொதுத்தலங்களில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் செல்வாக்கு பெரிதும் காணப்பட்டது. சாதாரண மக்கள் சுவாமியின் பக்த கோடிகளாக மட்டுமே இருந்து வருகின்றனர். இத் தலங்கள் யாவும் ஒன்றில் பெரும் வர்த்தகர்களின் ஆதிக்கத்தில் அல்லது தனிப்பட்டோரின் செட்டிமார்களின்) ஆதிக்கத்திலேயே இருந்து வந்துள்ளன. இத்தலங்களில் அண்மைக்காலங்களில் தீமிதிப்பு, மஞ்சள் நீராட்டம், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் மிகக்குறைவாகவே இடம் பெறுகின்றன. தேர்த்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் செட்டிமார்களாலும் வர்த்தகர்களினாலும் மேற்கொள்ளப்படுகின்றன. சகல நிதி விடயங்களும் நிர்வாகக் குழுவின் பொறுப்பில் இருக்கும்.
நகர்ப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களின் பூசை முறைகளும் அவற்றை நடத்தும் பூசகரும் தோட்டப்புற அமைப்பிலும் பார்க்க வேறுபட்டதாக அமைகின்றது. பெரும்பாலான நகர்ப்புறத் தலங்களில் பிராமணக் குருக்கள் ஒருவரே பூசகராக இருந்து வருகிறார். இங்கு பெரும்பாலும் நித்திய, நைமித்திய பூசைகள் நடைபெறுவது வழக்கம், வெள்ளி, செவ்வாய்க்கிழமைகள், விசேட நாட்களாகவும் விசேட பூசை தினங்களாகவும் அனுஷ்டிக்கப்படும். மூவேளைப் பூசைகளும் இங்கு நடத்தப்படுகின்றன. மேலும் தீபாவளி, தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு போன்ற நாட்களும் இத்தலங்களில் விசேட பூசைத் தினங்களாக கொண்டாடப்படுகின்றன.
2.2 தோட்டப்புறச் சமுகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள்
தோட்டப்புறத்து சமூக வழிபாட்டுத் தலங்களின் சிறப்பம்சம் யாதெனில்
இம்மக்களின் தொன்றுதொட்டு வரும் வழிபாட்டு முறைகளில் அமைந்த தெய்வ வணக்கங்களாக அவை இருப்பதாகும். குறிப்பாக, தோட்டப்புறச் சமூக
4

படம் 3: அவிசாவளை மகா ஓயாத் தோட்ட முருகப்பெருமானுக்கென அமைக்கப்பட்ட சிறு கோயில்
படம் 4: அவிசாவளை மகா ஓயாத் தோட்ட விஷ்ணு கோயில்

Page 52

நிலை வழிபாட்டுத்தலங்கள் யாவும் இந்தியக் குடியமர்வின் அடிப்படையிலேயே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சுமார் 125 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு தேயிலை, கோப்பிப் பயிர்ச்செய்கைக்கென இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர்கள் கொண்டு வந்த வழிபாட்டு முறைகளையே இன்றும் நாம் தோட்டப்புறங்களிற் காண்கின்றோம். இத்தொழிலாளர்கள் தென்னிந்தியாவிலிருந்து வருமுன் அவர்கள் எத்தெய்வ வழிபாட்டினை மேற்கொண்டார்களோ அதே தெய்வ வழிபாட்டினையே இலங்கையிற் குடியமர்ந்த இடங்களிலும் அவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், இவர்களை இங்கு கொண்டுவந்த கங்காணிமார்கள் அல்லது மேற்பார்வையாளர்கள் தாம் வணங்கிய தெய்வத்துக்குரிய சிறிய கோவில் ஒன்றையும் அவர்கள் வசித்த இடங்களில் அமைத்தனர். அத்தெய்வமே இம்மக்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வமாக மாறிற்று. கங்காணிமார்கள் எந்தத் தெய்வத்தினை வழிபடக் கோவில் கட்டினார்களோ அந்த வழிபாட்டையே இம்மக்களும் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இலங்கையிற் குடியமர்ந்த காலத்தில் கல்வடிவில் அமைக்கப்பட்ட இத்தோட்டப்புறத் தலங்கள் பின்பு சிறிது சிறிதாக பெரிதாக்கப்பட்டு இன்று தோட்டத்தின் பொது இடங்களில் அதாவது மக்கள் அனைவரும் ஒன்று கூடும் இடங்களில் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களாக மாற்றமடைந்துள்ளன. இத்தலங்கள் அமைக்கப்பட்டிருக்கும் இடங்கள் தோட்ட மக்கள் ஒன்று கூடும் இடங்களாகவும் அண்மைக்காலங்களில் வீடியோ படங்கள் காட்டும் பொது இடங்களாகவும், அரசியல் மேடைகளாகவும் கூட அமைந்துள்ளமையை அவதானிக்கலாம்.
பெரும்பாலான சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களுள் மாரியம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்ட கோவில்களே அதிகம். மாரியம்மன் வழிபாடு தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்டதாகும். இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகமான தலங்கள் மாரியம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்ட தல்ங்களாகும். கண்டி மாவட்டத்திலும் அதிகமான சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் மாரியம்மனையே பிரதான வழிபாடாகக் கொண்டுள்ளன. நுவரெலியாப் பகுதியிற் காணப்படும் பெரும்பாலான சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களும் மாரியம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்டுள்ளன. ஏனைய கடவுள்களின் வழிபாடுகள் இங்கு இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. அட்டன், தலவாக்கலை பகுதிகளிலும் தோட்டப்புற வழிபாடுகள் யாவும் மாரியம்மனையே பிரதான தெய்வ வழிபாடாகக் கொண்டிருக்கின்றன. பொதுவாக தோட்டப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் ஒரு சில தலங்களுக்கு மட்டுமே "அற்பு/தங்கள்" தோன்றியுள்ளமைக்கான சான்றுகள் உள்ளன. தொழில் வாய்ப்புடனும் இந்தியக் குடிப்பெயர்வுடன் தொடர்பான தெய்வவழிபாட்டு முறையே இன்று தோட்டப்புறங்களிற் காணப்படுகின்றது.
95

Page 53
நகர்ப்புறச் சமூகநிவை வழிபாட்டுத் தலங்களிற் காணப்படுகின்ற கோவிற் கலை வெளிப்பாடுகள், சிற்ப வெளிப்பாடுகள் என்பன தோட்ட நிலைக்கோவில்களிற் காணப்படுவதில்லை. இங்கு காணப்படுகின்ற கலை அம்சங்கள் யாவும் இம்மக்களின் கற்பனையுடன் கூடியனவாகவும், அவர்களது வறுமைநிலையை எடுத்துக்காட்டும் ஒரு வகையான சித்திரிப்பினைக் கொண்டனவாகவும் உள்ளன.
உதாரணமாக நுவரேலியாத் தோட்டத்தைச் சேர்ந்த முன்பிலேனே தோட்ட அம்மன் கோவில் ஒரு அற்புதத்தின் பின்தோன்றியதாக அறியப்படுகிறது. கடும் வறட்சியின் பின்னர் தோட்டத் தொழிலாளரின் கனவில் அம்மன் சிலையானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் புதைத்திருப்பதாகவும் அந்த இடத்தில் நீர் உள்ளது என்றும், கூறிச்சென்றதால் அதை எடுத்து வணங்கி வந்ததோடு, இன்றுவரை அவ்விடத்தில் நீர் வற்றாது இருப்பதை அத்தோட்ட மக்கள் வியந்து கூறியதோடு அன்று கண்டெடுக்கப்பட்ட உருவச்சிலை தான் இந்த மாரியம்மன் சிலை எனவும் விளக்கினார்கள். இது அவிசாவளை மாஓயாத் தோட்டத் தொழிலாளர்களாற் கட்டப்பட்ட ஆலயமாகும். (படம் 5)
2.3 தோட்டப்புறத்து முச்சந்தி வழிபாட்டுத் தெய்வங்கள்
அம்மனைப் பிரதான தெய்வமாகக் கொண்ட தோட்டப்புறத்துப் பொதுநிலை வழிபாட்டு முறைகளில் நகர்ப்புறக் கோவில்களின் பிரதான வழிபாட்டுத் தெய்வமான முருகன், விநாயகர், சிவன் போன்ற தெய்வங்களின் உருவச்சிலைகள் இரண்டாம் நிலைத் தெய்வங்களாகக் காணப்படுகின்றன. இவற்றில் ஒரு வகையான வழிபாட்டு முறையே முச்சந்தியில் தெய்வங்களின் உருவங்களை வைத்து வணங்கி வரும் முறையாகும். இங்கு நகர்ப்புறப் பிரதான தெய்வமான முருகன் சிலையினை முச்சந்தியில் காவல் தெய்வமாக இம்மக்கள் வழிபட்டு வருகின்றனர். ஆனால், மாரியம்மன் சிலைகளை இவ்வாறான சந்தி வழிபாடுகளிற் காணமுடியாது. அம்மனை இவர்கள் தமது குல தெய்வமாகவும், கோவிலிற் பிரதான தெய்வமாகவும் கொண்டுள்ளார்கள். (படம் - 5) மக்கள் தமது வேலைத்தலங்களுக்குச் செல்லும்போதும், வேலைவிட்டு வீடுதிரும்பும் போதும் தமது பாதுகாவலைக் கருதி முருகனை வணங்கிச் செல்வதற்காக இவ்வித சிறு கோவில்களைக் கட்டியுள்ளார்கள். இதற்காகத் திருவிழாவோ, பூசை தினங்களோ கொண்டாடப்படுவதில்லை.
2.4 நிர்வாக அமைப்பு
தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக அமைப்பானது நகர்ப்புறத் தலங்களின் அமைப்பிலும் முற்றிலும் வேறுபட்ட தன்மையைக் கொண்டதாகும். முதலாவதாக, இவற்றின் நிதி சேகரிப்பானது
t)Ճ

படம் 6: கொழும்பு மாவட்ட பென்ரித் தோட்ட முச்சந்தி வழிபாட்டுத் தெய்வம்

Page 54

தோட்ட மக்களின் சம்பளத்தில் (செக்ரோல்) இருந்து வெட்டி எடுக்கப்படும் சந்தாப் பணத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. எனவே இக்கோவில்களுக்கு பொதுமக்களின் பங்களிப்பு கணிசமான அளவு உள்ளமையை இது குறிக்கிறது. ஆனால் பெரும்பாலான சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களின் வறுமை நிலைக்கு அம்மக்களின் அக்கறையின்மையும் வறுமைத்தன்மையுமே காரணமாகும். ஆலய நிர்வாகமானது ஆலயக்குழு முறையில் நடாத்தப்படுகின்றது. இக்குழுவே சகல நிதி ஏற்பாடு, திருவிழா என்ற ஏற்பாடு, விசேட தினங்களின் ஒழுங்கு முறை என்பனவற்றிற்கு பொறுப்பாக இருக்கும். இவற்றில் ஒரு சில குறைபாடுகளும் இருக்கவே செய்யும், அண்மைக்காலங்களாக கோவில் நிர்வாகக் குழுக்களில் ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தினது ஆதிக்கம் வலுப்பெற்று வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. தொழிற்சங்கத் தொடர்பின்றி இயங்கும் நிர்வாக குழுக்கள் எதுவித நிதிஉதவிகளையும் பெற முடியாத நிலையில் இருந்து வருகின்றன. மறுபுறத்தில் நிர்வாகக்குழுவானது ஏதாவது ஒரு தொழிற்சங்கத்தினைச் சார்ந்து இயங்கி வருமாயின் ஏனைய தொழிற்சங்கங்கள் இத்தலத்தின் சகல விடயங்களையும் பகிஷ்கரிக்கும் நிலையும் காணப்படுகிறது. இவை இத்தலங்களின் முன்னேற்றத்திற்குப் பாரிய தடைகளாகவும் இருந்து வருகின்றன.
நகர்ப்புறத் தலங்களில் காணப்படாத ஒரு சிக்கலான தலையீடுதான் இங்கு காணப்படும் அரசியல் தலையீடாகும், அதாவது, கோவில் நிர்வாகக் குழுவில் உள்ளவர்களும் அரசியல் செல்வாக்குப் பெற்றவர்களாகவே உள்ளனர். இவர்கள் கூட தோட்ட நிர்வாகத்தைத் தட்டிக்கேட்டு வேண்டிய தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றவர்களாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தோட்டப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் வறுமை நிலையில் காணப்பட்டாலும் வருடாந்தத் திருவிழாவினைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். திருவிழாவின் போது தேர் இழுக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. பொதுவாக, அம்மன் கோவிலாக இருப்பின் அம்மனுக்குத் தேர் ரதமும், முருகன், விநாயகர் பெருமானுக்கும் ஒரு சில தலங்களில் முனியாண்டிக்கும் தேர் இழுக்கப்படுவதும் வழக்கமாகவுள்ளது.தேரை விட சப்பறத்திலும் தெய்வங்களை உலாக்கொண்டு செல்லும் மரபும் உண்டு.
திருவிழாவின் போது தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களில் எடுத்துச் செல்லப்படும் சப்பறங்களின் அமைப்புக்களைப் படம் 7.சீ.9 இல் காணமுடிகிறது.பெரும்பாலான தோட்டங்களில் எட்டு நாட்களுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கமாகவுள்ளது. அதிகமான தோட்டப்புறத் தலங்களில் மாசி, பங்குனி மாதங்களிலேயே இத்தேர்த்திருவிழா நடைபெறுகின்றது. முதல் நாளான காப்புக்கட்டுதலுடன் தொடங்கி பாவித்தல் நிகழ்ச்சியில் பூசகர் ஏதாவது ஒரு பொருளை (பழம், பூ, தேங்காய்) நினைத்துக்கொள்வார். இவ்வேளையில் அருள் வரவழைத்து அவ்வாறு அருள் வந்தவர் பூசகர்

Page 55
நினைத்த பொருளை சரியாக எடுப்பாரேயானால் அவ்வருடத் திருவிழாவுக்கு அம்மன் அருள் கிடைத்துவிட்டது என நினைத்து ஏனைய ஆயத்தங்கள் ஏற்பாடுகள் என்பன மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிகழ்ச்சியின் பின் ஆற்றங்கரையில் அல்லது குளங்களுக்கு அருகில் நடைபெறும் கரகம், பாவித்தல் நிகழ்ச்சியும் நடைபெறும். அதன் பின்னர் பிரதான தெய்வத்தினை அலங்கரித்து கோயிலுக்கு கொண்டுவருவார்கள். இதனை அடுத்துவரும் மூன்று தினங்களும் பிரதான தெய்வமாகிய அம்மனின் தேர்ப்பவனி அம்மன் ஆலயத்தை சுற்றி வரும் நிகழ்ச்சியைக் காணலாம். இவ்வேளை மக்கள் அனைவரும் தலத்திற்கு வந்து அம்மனின் அருளைப் பெற்றுச் செல்வர். நேர்த்திக்கடன் போன்ற நிகழ்ச்சிகள் இந்நாட்களில் நடைபெறுவதுண்டு. தேர் கிராமந் தோறும் பவனி வர ஊர்மக்கள் தோரணம் கட்டி, கோலமிட்டு வீட்டு முற்றத்தில் பூசைப் பொருட்களுடன் இறைவனை எதிர்பார்த்த வண்ணம் இருப்பார்கள். பக்தர்கள் தேர்ப்பவனிக்குப் பின்னால் பக்திப்பாடல்களுடன் கிாவிட , கரகாட்டம், வாத்தியக்கச்சேரி என்பன அடங்கிய ஊர்வலங்களாக வீதி வழியே வருவர். மறுநாள். தீமிதிப்பு வைபவம், அன்னதானம் என்பன நடக்கும். இறுதிநாளான எட்டாம் நாள் மஞ்சள் நீராட்டம் நடந்த பின்னர் கீரகத்தை ஆற்றிலே விட்டுவிடுவார்கள். இதன் பின் மூடப்படும் கோயில் எட்டு நாட்களுக்குப்பின்பு இடும்பன் பூசையுடன் திறக்கப்படும். இவ்வாறான தேர்த்திருவிழா வைபவமானது ஆய்வு மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில் நடைபெறுவது வழக்கமாகும்.
உதாரணமாக, உந்துகொட மாரியம்மன் கோவில், யட்டதாரி மாரியம்மன் கோவில், பம்பேகம மாரியம்மன் கோவில் என்பன கேகாலை மாவட்டத்தைச் சேர்ந்தவை. அவிசாவளைப் பிரதேசத்தில் மாஒயா தோட்டம் மாரியம்மன் கோவில், பலாங்கொடைப் பிரதேச இராசகலத் தோட்டம், திவுரும்பிட்டியத் தோட்ட அம்மன் கோவில்களும், தெல்தேர்ட்டை, வத்துகாமம். நூல்கந்தராத் தோட்டம், கரலியத்தைத் தோட்டம், மகியாவை, நித்தவளை போன்ற கண்டி மாவட்டத்திலுள்ள இடங்களிலும், முன்பிலேன் தோட்டம், மார்க்கஸ் தோட்டம், கந்தபொலை தோட்டம் போன்ற நுவரேலியா மாவட்டத்திலுள்ள தோட்டங்களிலும் இ திதேர்த்திருவிழாவானது மிகச் சிறப்பாக நடைபெறுவதை அவதானிக்கலாம். கண்டி மகியாவை தேர்த்திருவிழா பங்குனி மாதம் நடைபெறும். இத்தேர்த்திருவிழாவானது கண்டி மாநகரில் சகல இன மக்களும் வியப்புறும் அளவிற்கு ஒன்றிணைந்து கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருவிழாவாகும். நகர மத்தியில் அமைந்திருக்கும் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களிற் கூட கடந்த சில வருடங்களாகத் தேர்த்திருவிழா கோயிலைச்சுற்றி மட்டுமே வருகிற வேளையில், சிறிய கிராமப்புறமான கண்டி மகியாவை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழாவானது நகரத்தைச் சுற்றி வந்து பலரையும் வியப்பிலாழ்த்துவது குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

படம் 8. இராம இலக்குமண சீதையுடன் உருவாக்கப்பட்ட தேர்

Page 56

இவற்றினைவிட இரு வகை வழிபாட்டுத் தலங்களிலும் வேறு விசேட திருவிழாக்கள். கொண்டாட்டங்கள் என்பன நடைபெறுவதையும் காணலாம், தோட்டப்புறத்துச் சமூகப்பொது நிலை வழிபாட்டு தலங்களில் இராமர் பஜனை சிறப்பாகக் கொண்டாடப்படும். மார்கழி 15ம் திகதி ஆரம்பமாகும் இப்பஜனையானது தைப்பொங்கல் தினத்தன்று முடிவுறும். இளைஞர்கள் அதிகாலையில் குளித்துக்கம்பம் எடுத்த வண்ணம் பஜனை பாடி வருவார்கள்,பஜனையின் போது ஊர்மக்கள் கம்பத்துக்கு எண்ணெய் ஊற்றி இராமர் வழிபாடு மேற் கொள்வார்கள். இதுபோன்ற தைப்பொங்கல், தீபாவளி, நவராத்திரி சிவராத்திரி உட்பட விசேட நாட்களில் பூசைகளும் நடைபெறுவதுண்டு. தோட்டப்புறச் சமூகப்பொதுநிலைத்தலங்கள் சிலவற்றில் காலை, மாலை பூசைகள் நடைபெறுவது வழக்கம், பெரும்பாலான பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் ஒருவேளை பூசை மட்டுமே நடைபெறுகின்றது. இன்னும் சில தலங்களில் விளக்கேற்றுவதோடு மட்டும் நின்றுவிடுவதுண்டு. ஆனால் குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பூசைகள் நடத்தி வருகின்றார்கள்.(உதாரணமாக தெல்தோட்டை, வத்துகாமம், அம்பன்பிட்டிய, பட்டதாரி கேகாலை மாவட்டம்) அம்மன் கோவில் போன்ற தலங்களில் வெள்ளிக்கிழமை பூஜை சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறான பூசைகளுக்குப் பூசாரி என்பவரே பொறுப்பாக இருந்து வருகிறார். இவர்கள் தமது தந்தையார், முன்னோர்கள் மேற்கொண்ட முறைகளைக் கண்டும், கேட்டும் அல்லது தாம் நினைத்ததைச் சரியென்றும் கொண்டே இத்தலங்களில் பூசைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் கல்வி அறிவு குறைந்தவர்களாக இருந்தபோதும், சிறந்த பக்தியுடன் பூசைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஒரு சில தலங்களிற் பண்டாரம் என்பவரும் பூஜைகளை நடத்தி வருகிறார். உதாரணம் வத்துகாமம் விநாயகர் கோவில், கம்பளை கதிரேசன் கோவில் என்பனவாகும். இதே போன்று மேலும் பல கோயில்களிற் பண்டாரம் என்பவரால் பூசைகள் நடத்தப்படுகின்றன. சில கோவில்களிற் பிராமண குருக்கள்மார்களும் பூசகராக இருந்து வருகின்றார்கள். (குருதெனிய அம்மன் கோவில், குறிஞ்சிக்குமரன் கோயில் பேராதனை) அட்டபாகே அம்மன் கோவில் போன்றவற்றை இங்கு குறிப்பிடலாம்.)
தோட்டப்புறச் சமூகப் பொதுநிலை வழிபாட்டு தலங்களில் அம்மனை ஏன் பிரதான தெய்வமாக வழிபடுகின்றனர் என்ற வினாவும் எழுகின்றது. இதற்குப்பல காரணங்களை நாம் கூறலாம். இம்மக்கள் தம் மூதாதையர்களின் வழிபாட்டு முறைகளைப் பின்பற்றியிருக்கக்கூடும். கடும் வரட்சி காரணமாக மழையை வேண்டி மாரியம்மனை வணங்கும் வழக்கம் தென்னிந்தியப் பகுதியிலிருந்து வந்தது. இம்முறையைக் குடிப்பெயர்வு காரணமாக இலங்கையிலும் இவர்கள் புகுத்தியிருக்கலாம். தோட்டப்புறத்தொழில் வாய்ப்பு மழையை நம்பி
99.

Page 57
இருப்பதால் தொடர்ந்தும் இவர்கள் மழையை நம்பி மாரியம்மனை வணங்கி வருகின்றனர். வெப்ப நோய்களான அம்மை, சூலை போன்றவற்றைத் தீர்ப்பதற்கு அம்மன் வழிபாடானது சிறப்புப்பெற்ற ஒரு தெய்வ வழிபாட்டு முறையாகக் கருதப்படுகின்றது. குடிபெயர்ந்து வந்த இம்மக்கள் இந்நோய்களாற் பாதிக்கப்பட்டபோது மாரியம்மனை வழிபடத் தொடங்கியிருக்கலாம். இறுதியாக,கங்காணிமார்களின் குடும்பத் தெய்வமாக அம்மன் இருந்த ւյւգ-աnat) அவர்கள் கொண்டுவந்த மாரியம்மன் வழிபாட்டு முறையானது அவர்களது பரம்பரையினர் இடம் விட்டு இடம் நகர்ந்து வேறு தோட்டங்களுக்குச் சென்ற போது தம்முடன் கொண்டு செல்லப்பட்டது எனக் கருதவும் இடமுண்டு.
3.0 தோட்டப்புற இளைய தலைமுறையினரும்
இந்துக் கோவில்களும்.
பொதுவாக தோட்டப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் சைவசமயத்திற்கு ஆற்றும் தொண்டுகள் அண்மைக்காலத்திற் குறைந்து வருகின்றது. தோட்ட மக்களிடையே காணப்படும் சச்சரவுகள், பிளவுகள் ஒற்றுமையின்மை, இளைஞர்களிடையே காணப்படும் மதப்பற்றின்மை போன்றவற்றால் இன்று தோட்டச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்கள் சமுதாய ரீதியான சேவைகளைச் செய்யமுடியாதுள்ளது. இதே போன்று அரச தலையீடுகள், தொழிற்சங்கங்களின் தலையீடுகள் என்பனவும் தோட்டப்புறங்களிற் தலையெடுத்துள்ளது. இவை காரணமாக சமயக் சடங்குகளிற் தோட்டப்புறத்து மக்களது நாட்டம் குறைந்து வருகிறது. இவ்வித நெருக்கடியிலிருந்து விலக விரும்பும் இளைஞர்கள் இதிலிருந்து விடுபட்டு தொழில் வாய்ப்புத்தேடி நகர்ப்புறங்களை நாடிச் சென்று அங்கேயே தங்கிவிடுவதனாலும், நவீன போக்குகள் காரணமாகவும், மத விடயங்களில் ஈடுபாடு கொள்ளாது விடுவதனாலும் பொதுவான மத வளர்ச்சியும் பின்னடைவு கண்டுள்ளது. பெரும் பாலான தோட்டப்புற இளைஞர்கள் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களின் சமய பண்பாட்டு விடயங்களில் பங்கெடுத்துக் கொள்வது குறைவாகவேயுள்ளது.
3.1 தோட்டப்புற இந்துக் கோவில்களும் பிறமதங்களின் வளர்ச்சியும்
பெரும்பாலான இளைஞர்கள் தோட்டப்புறங்களில் வேலை வாய்ப்பு இல்லாத நிலையில் அண்மைக்காலங்கள்ல் தொழில் வாய்ப்பினைத் தேடி நகர்ப்புறங்களை நோக்கிப் படையெடுப்பது பெரிதும் காணக்கூடியதாவுள்ளது. இதன் காரணமாகவும் மக்களிடையே காணப்படும் சாதிப்பிரச்சினை. ஏழ்மை, பொருளாதாரப் பிரச்சினை போன்ற காரணங்களாலும் இன்று பல தோட்டங்களில் கிறிஸ்தவத் தேவாலயங்கள் தோன்றியுள்ளன. உதாரணமாக சென் செபஸ்தியன்
100

தேவாலயம், புனித அந்தோனியார் தேவாலயம், சென் ஜூட் தேவாலயம் போன்றன பென்ரித், எல்ஸ்டன் போன்ற தோட்டங்களிற் (கொழும்பு மாவட்டம்) காணக்கூடியதாயுள்ளது. (படம் 10IU
மேற்கூறிய காரணங்களைக் கொண்டு இத்தேவாலயங்கள் மதமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது தெளிவாகின்றது. ஆயினும், சில கிறிஸ்தவ தேவாலயங்கள் பெருந்தோட்டத் தொழிலின் ஆரம்ப காலந்தொட்டே இருந்து வந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் உண்டு. உதாரணமாக வனத்துச்சின்னப்பர் தேவாலயம் தோட்டப்புற மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றை தீர்க்கும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டது. கிறிஸ்தவ மதம் சார்ந்த பல சமூகநிறுவனங்கள் தோட்டப்புறங்களில் பணியாற்றுகின்றன. இவற்றுடன் சில மதமாற்ற நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. முக்கியமாக இரத்தினபுரி மாவட்டத்திலும், கேகாலை மாவட்டத்திலும், கொழும்பு மாவட்டத்திலும் இவ்வாறான மதப்பிரச்சார நடவடிக்கைகளை அவதானிக்க முடிகின்றது. வரவு செலவு யாவும் நிர்வாகக் குழுக்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, அமைச் சின் சரிபார் சுடன் நிதி திரட்டும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
3.2 கோவில் நிர்வாகப் பிரச்சினைகளும், தீர்வுகளும்
தோட்டப்புறத்துப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களை நோக்கும் போது பெரும்பாலான தலங்கள் கலாச்சார அமைச்சில் பதிவு செய்யப்பட்டன என அறியக்கிடைத்தது.இருந்தும் மிகவும் குறைவான தலங்களுக்கே அமைச்சினது அபிவிருத்தி உதவி கிடைத்துள்ளது. பெரும்பாலான தலங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதோடு அமைச்சின் உத்தியோகத்தர்களது கவனத்திற்கு அவற்றினது பிரச்சினைகள் கொண்டு வரப்பட்டிருந்தும் இன்றைய தோட்டப்புறத்து சமூகப்பொதுநிலை வழிபாட்டுத்தலங்களின் அவல நிலையைத் தீர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காது இருப்பது இம்மக்களின் துர்அதிர்ஷ்டம் என்றே கூறவேண்டும். இதுதொடர்பாக அமைச்சினைக் குறை கூறும் தன்மையினையும் அவதானிக்க முடிந்தது. பொது மக்களின் நன்கொடை, சம்பளத்தில் இருந்து அறவிடப்பட்ட சந்தாப்பணம் என்பனவே திருத்த வேலைகளுக்கும், அபிவிருத்தி வேலைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மாறாக நகர்ப்புறத்துத் தலங்கள் யாவும் அமைச்சின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு இவற்றின் வரவு செலவு யாவும் நிர்வாகக் குழுக்கள் மூலம் தீர்மானிக்கப்பட்டு, அமைச்சின் சிபார்சுடன் நிதி திரட்டும் நடவடி க்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இறுதியாகத் தோட்டப்புறத்துச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களுக்கு அதிக அக்கறை காட்டர்து நகர்ப்புறத்துச் சமூகப்பொது நிலை வழிபாட்டுத் தலங்களுக்கே கலாச்சார அமைச்சு உட்பட நிர்வாக உத்தியோகத்தர்களும் அதிக அக்கறை காட்டி வருவது நன்கு புலப்படுகின்றது.
101

Page 58
தொட்டக்கோவில் தோட்ட மக்களின் சொந்தக் கட்டிட அழகுணர்ச்சி அநுவபத்துடனும், முயற்சியுடனும் ஆக்கப்பட்ட கோவிலாக இருந்து வருகிறது. மேலும், இதனை பெருப்பிக்கவோ, இதில் அபிவிருத்தி வேலைகளை மேற்கொள்ளவோ தோட்ட நிர்வாகமானது எந்த உதவியும் வழங்குவதாக இல்லை. குறைந்த செலவிற் கட்டப்பட்ட இது போன்ற தலங்களே இத்தோட்ட மக்களின் ஒன்றுகூடும் மத்தியஸ்தானமாக இருந்து வருகின்றன. ஒரு சில தோட்டச் சமூகநிலை வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே சிறப்பான கலை துணுக்கத்தை அவதானிக்க முடிந்தது. உதாரணமாக, கண்டி, மாவட்டத்தில் கிரிமிட்டிய அம்மன் கோவிலானது சிறந்த சுவரோவியங்களைக் கொண்டதாகவுள்ளது. நாயன்மார்களின் சுவரோவியங்களும், அப்பர், சம்பந்தர், மாணிக்கவாசகள் போன்றோரின் அற்புதங்களும் சுவர்களில் வரையப்பட்டுள்ளன. வள்ளிதிருமணம், பார்வதி திருமணம், ரேணுகாதேவி, தபசு ஆகிய காட்சிகள் உள்ளுர் மக்களின் உதவியுடன் ஆக்கப்பட்டிருப்பது சிறப்பு அம்சமாகும்.
இத்தோட்டப்புறத்துச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களைக் கட்டியெழுப்பவும் அவற்றை அபிவிருத்தி செய்யவும் தடையாக இருப்பது அம்மக்களின் வறுமைநிலையாகும். சிறந்த கலை நுணுக்கமுள்ள சிற்பிகள் இத்தோட்டப்பகுதிகளில் இருக்கிறார்கள். குறிப்பாக, லபுக்கலை தோட்டப்பகுதியில் திரு. இராமச்சந்திரன் என்பவர் சிறந்த கலை நுணுக்கமுள்ள சித்திரங்களை அப்பிரதேச வழிபாட்டுத்தலங்களில் அமைத்துள்ளார். இவ்வாறான ஒவியங்களை ஆதரித்து முன்னுக்கு கொண்டுவரவேண்டிய சக்தி தோட்ட ஆலயங்களுக்கும் அப்பிரதேச மக்களுக்கும் இல்லாதிருப்பது கவலைக்குரிய விடயமாகும். இவ்வாறிருந்தும் கூட இரத்தினபுரி, கேகாலை, கண்டி போன்ற மாவட்டங்களில் உள்ள ஒரு சில தோட்டப்புறத்துக்கோவில்களிற் சிறப்பான சுவரோவியங்களையும் தெய்வ உருவச்சிலைகளையும் மக்களே தமது சொந்த முயற்சியில் அமைத்துள்ளார்கள். இவ்விதம் சிறந்த உருவச் சிலைகளையும், சுவரோவியங்களையும் (படம் 2 இல் காணலாம். படத்தில் காட்டப்பட்டிருக்கும் மாரியம்மன் கோவிலானது கொழும்பு மாவட்டத்தில் உள்ள பென்ரித் தோட்டப் பகுதியில் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களின் பிரதான தலமாக இருந்து வருகின்றது. இங்கு காணப்படும் சுவரோவியங்களை திரு. பத்மநாதன் என்ற கோவில் கமிட்டி உறுப்பினர் ஒருவரே வரைந்துள்ளார். தோட்டப்புறச் சமூகப்பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று தேவஸ்தான தெய்வமாக மாரியம்மன் இருப்பதையும் ஏனைய நகர்ப்புறத் தெய்வங்களான முருகன், விநாயகர், விஷ்ணு போன்ற தெய்வங்களின் உருவங்கள் இரு மருங்கிலும் இருப்பதையும் இப்படம் காட்டுகிறது.
பெரும்பாலான தோட்டப்புறப் பொதுநிலை வழிபாட்டுத் தலங்களில் காணிக்கைத் தெய்வம் என்று ஒன்று தேவஸ்தானத்துக்கு வலது புறத்தில் அமைக்கப்பட்டிருக்கும். இதற்கென்று சிலை ஒன்றினைச் செய்து வழிபடும்
102

படம் 10: இரத்தினபுரி திருவுரும்பிட்டிய தோட்ட கிறிஸ்தவக் கோபில்

Page 59

முறையினையும் சில இடங்களிற் காணமுடிந்தது. (படம்) கட்டிடக்கலையானது நகர்ப்புறத் தலங்களிலும் பார்க்க முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது. தோட்டப்புறத் தலங்களின் மூலஸ்தானத்திற்கு முன்பாக "மின்னடையான்" என்ற காவல் தெய்வத்தின் உருவச்சிலையினைக் காணமுடிந்தது. நகர்ப்புறச் சமூக வழிபாட்டுத் தலங்களில் நந்தி, மயில் போன்றன மூலஸ்தானத்துக்கு முன்பாக இருப்பதைப்போன்று இங்கும் மின்னடையான் என்ற காவல் தெய்வத்தின் உருவச்சிலை அம்மன் தலங்களிற் காணப்படுகிறது. அம்மனின் காவல் தெய்வம் என நினைத்து இம்மக்கள் இதனை வணங்கி வருகின்றனர். விசேட நாட்களிலும் தேர்த்திருவிழா நாட்களிலும் இதற்குப் பூசைகள் செய்த பின்பே மூலஸ்தான தெய்வமான அம்மனுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. இம் மின்னடையான் என்ற காவல் தெய்வம் சில சமூகப்பொதுநிலை வழிபாட்டு தீ தலங்களில் ஓவியங்களாகவும் கறி சிலையாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பிரதான பொது வழிபாட்டுத் தலத்தின் எதிர்ப்புற வாசலின் இருமருங்கிலும் நந்தியும், சிங்கமும் உருவச்சிலைகளாக அமைக்கப்பட்டுள்ளன. சில தோட்டங்களில் உள்ள தலங்களில் அதிதோட்டங்களிலேயே உருவாக்கப்பட்ட உருவச்சிலைகளையும் அவதானிக்கலாம். (படம் 3) மேலும் இவ்வாறான உருவச்சிலைகளை "பென்ரித்" தோட்டம் அட்டாளைத் தோட்டம் கேகாலை மாவட்டம்) போன்ற இடங்களிற் காணலாம். இதேவேளையில் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சில தோட்ட வழிபாட்டுத் தலங்களில் வெளியிடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பிரதான தெய்வ உருவச்சிலைகளை வைத்து அதனைப் பூசித்து வருகின்றனர். இதில் முக்கியமாக தெல்தோட்டை பகுதியில் காணப்படும் சிறப்பலங்காரம் செய்யப்பட்ட அம்மன் சிலையை படத்தில் காண்கின்றோம். படம் து
வேறும் சில இடங்களிற் கற்சிலையாக மட்டும் அம்மனை வணங்கிவரும் முறையையும் காணலாம். உதாரணமாக, இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த திவுரும்பிட்டிய தோட்டத்திலுள்ள கோவிலில் அம்மன் சிலையானது சிறிய கற்சிலையாக மட்டுமே உள்ளது. இத்தலத்தின் கட்டிடம் மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. மண்சுவர்களினால் கட்டிட அமைப்பினைக் கொண்ட இத்தலம் எப்போது இடிந்து விழுமோ என்ற சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. இந்நிலைமை இத்தோட்ட மக்களின் ஏழ்மை நிலையை எடுத்துக் காட்டுகிறது. அதே நிலையில் இதனைப் பக்தி நிறைந்த ஒரு சமூக வழிபாட்டுத் தலமாகக் கருதி மக்கள் வழிபடுகின்றனர். இத்தலத்திலும் கூட சிறு ஆலய அமைப்பில் முருகனையும், விநாயகரையும் இடது. வலது புறங்களில் அமைத்துள்ளனர். இத்தோட்டப்புறக் கோவில்கள் சிலவற்றில் நவக்கிரக மண்டபங்களும் அமைக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கிரிமிட்டிய மாரியம்மன் கண்டிகோவிலில் சிறப்பான மண்டபத்தினையும் விக்கிரகங்களையும் காணலாம். இவற்றின்
O

Page 60
செலவினங்களைக் கவனிக்கப் போதிய வசதியின்மை காரணமாக இவை இன்று கைவிடப்பட்ட நிலையிலுள்ளது. -
பின்னிணைப்பு
தோட்ட, நகர்சார் கோவில்கள்
பதுளை
.
முருகன் சுவாமி கோயில் - வேவெள்ள டிவிஸன், வேவெள்ள தோட்டம்,
பதுளை,
கிருஷ்ணன் சுவாமி கோயில் - வேவெஸ்ள டிவிளபன், வேவெஸ்ஸ தோட்டம்,
பதுளை,
மதுரைவிரன் சுவாமி கோயில் - இல. 16. பதுஞபிட்டிய வீதி, பதுளை
சி. சுப்பிரமணியம் சுவாமி கோயில் - கிரம்ஸ்லண்ட டிவிஸன், கிலன் எல்பின்
凸。
9.
II.
2.
I.
l,
5.
.
I7.
I.
9.
தோட்டம் பதுளை,
முருகன் சுவாமி கோயில் - இங்குருகம டிவிஸன், கிலன் எல்பின் தோட்டம்,
பதுளை.
கதிரேசன் சுவாமி கோயில் - தேபெத்த டிவிளபன், வேவெஸ்ள தோட்டம்,
Luganes.
பூரு கதிரேசன் சுவாமி கோயில் - வெஸ்மேரிலன்ட் டிவிஸன், தெல்பெத்த
தோட்டம், பதுளை, விநாயகர் சுவாமி கோயில் - மேல் பிரிவு, வேவெள்ள தோட்டம், பதுளை, சுப்பிரமணியம் சுவாமி கோயில் மாணிக்கவல்லி டிவிஸன் தோட்டம், பதுளை
கதிரேசன் பெருமாள் சுவாமி கோயில்- வேவெஸ்ள டிவிஸன், வேவெஸ்ள தோட்டம் பதுளை, பூரீ சித்திவிநாயகர் கோயில் - சரஸ்வதி மகா வித்தயாலயம், பதுளை, கதிர் வேலாயுத சுவாமி கோயில் - கலன் தோட்டம், பதுளை. பூரீ கதிரேசன் கோவில் - மலன்கமுவ டிவிளபன், தெலபெத்த தோட்டம்,
பதுளை மாரியம்மன் கோயில் - மேல் பிரிவு, தெல்பதத் தோட்டம், பதுளை, பூரீ மாணிக்கவிநாயகர் கோயில் - இல, 22 லோவர் வீதி, பதுளை. பூரீ கதிரேசன் கோயில் - மலன்கமுவ டிவிளபன், தெல்பெத்த தோட்டம், பதுளை. முருகன் கோயில் - மத்திய பிரிவு, வேவெஸ்ள தோட்டம், பதுளை. சுப்பிரமணியம் கோயில் - கெந்தகொல்ல டிவிஸன், தெல்பெத்த தோம்ம,
பதுளை. கதிரேசன்/விநாயகர் கோயில் - கிலன் எல்பின் டிவிளபன் கிலன் எல்பினி,
பதுளை,
பூரீ கதிர் வேலாயுத சுவாமி கோயில் - நாரங்கல டிவினன். கந்தேகெதர
()4

படம் 11: கொழும்பு மாவட்ட பென்ரித் தோட்ட புனித அந்தோனியார் கோயில்
படம் 12: கொழும்பு மாவட்ட பென்ரித் தோட்ட கோயில் உருவச்சிலைகளும் சுவரோவியங்களும்

Page 61

படம் 14: தெல்தோட்டப் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை.

Page 62

1. பூரீ சுப்பிரமணியம் கோயில் கொள்ளம்மண்டி டிவிஸன்,சாரணியா, பதுளை. முருகன் கோயில் - டியனகல டிவிஸன், கிலன் எல்பின், பதுளை. . பூரீ விநாயகர் கோயில் - டொப் டிவிஸன், வேவெஸ்ஸ், பதுளை.
விநாயகர் முருகன் மாரியம்மன் கோயில் - மேமலை டிவிஸன், ஸ்பிரிங்வெலி, பதுளை. 25. பூரீ கதிர்வேலாயுத மாரியம்மன் கோயில் - மாப்பாகல டிவிஸன், யூரி
தோட்டம், பதுளை. முருகன் கோயில் - அப்பர் டிவிஸன், வேவெஸ்ஸ், பதுளை. காளியம்மன் தேவஸ்தானம் - ரொக்கில் இம்புல்கொட, பதுளை. பூரீ கதிர்வேலாயுத அம்மன் கோயில்- 3ம் கட்டை பசரை ரோட், பதுளை. பூரீ சுப்பிரமணியசுவாமி கோயில் - ரொக்கில், இம்புல்கொட, பதுளை. பத்தினி சுவாமி கோயில் - அராவ தோட்டம், பதுளை. 31. பூரீ சுப்பிரமணியசுவாமி கோயில் - சாரணியா குரூப், பதுளை. 32. பூரீ சுப்பிரமணியசுவாமி கோயில் - சாரணியா குரூப், தங்கமலை டிவிஸன்,
பதுளை. 33. சுப்பிரமணிய சுவாமி கோயில்- சாரணியா குரூப் மாதென்ன பிரிவு, பதுளை. 34. கனதெவி சுவாமி கோயில் - எலதலுவ தோட்டம், பதுளை.
பண்டாரவளை
1. பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் - பரிபாலன சபை, பன்சல ரோட்,
பண்டாரவளை.
2. பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - டயபரா தோட்டம், மேல் பிரிவு,
பண்டாரவளை.
3. பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் - யூ. டீ. டயபரா தோட்டம்,
LuøTL MTDT6606MT.
4. பூரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் - அரிஸ்லேபி அரசினர் தோட்டம்
பண்டாரவளை.
5. பூரீ சிவசுப்பிரமணியம் கோயில் - புதுமலை டிவிஸன், ஊவா ஜலன்ஸ்,
பண்டாரவளை.
8. சித்திவிநாயகர் கோயில்- மேற்பிரிவு, செல்சி தோட்டம், பண்டாரவளை
7. விநாயகர் கோயில் - இந்து பரிபாலன சபை, டயபரா தோட்டம்,
Y பண்டாரவளை.
9. பூரீ சிவசுப்பிரமணியம் கோயில் - பூனாகலை 2ம் பிரிவு, பூனாகலை
Louis LTTa) 16067.
பூனி சிவசுப்பிரமணியம் கோயில் - எல்லவெலைத் தோட்டம், பண்டாரவளை.
10. பூரீ முத்துமாரியம்மன் கோயில் - நாயபெத்தை, கல்கந்தை டிவிலன்,
பண்டாரவளை.
1. பூரீ சிவசுப்பிரமணியம் கோயில் - நேலுவதோட்டம்
2. மாரியம்மன் சுவாமி கோயில் - கேஸன் அயிஸ்வெப் (தனியார்),பண்டாரவளை.
105

Page 63
13. முருகன் சுவாமி கோயில் - வியங்காவெல தோட்டம் பண்டாரவளை,
14. முத்துமாரியம்மன் கோயில் கிரேக் தோட்டம், மேற்பிரிவு லியங்காவெல,
பண்டாரவளை.
15. பூரீ சிவசுப்பிரமணியம் கோயில் - கிரேக் தோட்டம், மேற்பிரிவு
வியங்காவெல, பண்டாரவளை.
16. பூரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோயில் - ஐஸ்லேப் அரச தோட்டம்
பண்டாரவள்ை.
17 மாரியம்மன் சுவாமி கோயில் - நாயபெத்த தோட்டம், பண்டாரவளை.
18. பத்தினி சுவாமி கோயில் - பலகல எல்ல தோட்டம், பலகல வியங்காவெல
பண்டாரவளை,
அப்புத்தளை 1. பூரீ ஆதிவிநாயகர் சுவாமி கோயில் - பூg இராமகிருஷ்ண தோட்டம்,
அப்புத்தளை, 2. பூg கதிர்வேலாயுத சுவாமி கோயில் - அப்புத்தளை. 3. பூரீ சிவசுப்பிரமணியசுவாமி கோயில் - தம்பத்தன்னை தோட்டம்,
அப்புத்திளை, 4. பூரீ கதிர்வேலாயுதசுவாமி கோயில் - தொடங்கொல்ல தோட்டம், அப்புத்தளை. 5. பூரீ கதிர்வேலாயுதசுவாமி கோயில் - பிட்ரத்மலை கீழ் பிரிவு. அப்புத்தளை. 6. பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - விகாரகலை அரசினர் தோட்டம்,
அப்புத்தளை. 7. முருகன்/ மாரியம்மன் சுவாமி கோயில் - 8 ம் கட்டை, படல்கும்பர
அப்புத்தளை. 8. முருகன் சுவாமி கோயில் - வைக்கும்பர தோட்டம், படல்கும்புர,
அப்புத்தளை கமேவெல, 9. முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - வைக்கும்பர தோட்டம், படல்கும்புர,
அப்புத்தளை கமேவெவ. 10. பூரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் - மேல்பிரிவு, கோணமுட்டாவ
தோட்டம், அப்புத்தளை. 11. இந்து சுவாமி கோயில் - வியாரகல தோட்டம், கீழ்ப்பிரிவு, அப்புத்தளை. 12. முத்துமாரியம்மன் கோயில் - கீழ்ப்பிரிவு வியாரகல தோட்டம், அப்புத்தளை,
அலுதுமுல்ல 1. முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - அம்பிட்டி கந்த தோட்டம், பூனாகலை, 2. பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - கல்பானி தோட்டம், பெரகலை, 3. பூரீ தேவி கருமாரியம்மன் கோயில் - அலுதுமுல்ல. 4. பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் - பூனாகலை வீதி, கொஸ்லாந்தை,
IX

ஊவா பரனகம 1. பூரீ சிவபால முருகன் சுவாமி கோயில் - அலக்கொல்ல தோட்டம் மேற்பிரிவு
உடப்புள் சல்லுTவ. 2. பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - மேற்பிரிவு, கர்க்கீல்ஸ் தோட்டம்,
உடப்புள் சல்வாவ. 3. பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - லக்கிலேன்ட் தோட்டம்,
உடப்புள் சல்லாவ. 4. கதிரேசன் சுவாமி கோயில் - லக்கிலேன்ட் தோட்டம், உடப்புஸ்சல்லாவ. 5. முருகன் சுவாமி கோயில் - கர்க்கீல் கீழ்ப் பிரிவு, லக்கிலேன்ட் தோட்டம்
உடப்புஸ்சல்லாவ,
மொனராகல 1. பூரீ வேலாயுத சுவாமி கோயில் - இங்கினியாகல, மொனராகல. 2. விநாயகர்/ மாரியம்மன்/கந்தசுவாமி கோயில் - குமாரதொல டிவிளபன்.
பேnாரராக3), 3. சித்திவிநாயகர்/பூரீ முத்துமாரியம்மன் கோயில் - மூப்பனவெளி டிவிளன்.
மொனராகவ.
பசரை 1. கதிரேசன் சுவாமி கோயில - 141. பிரதான வீதி, லுணுகல. 2. இந்து சுவாமி கோயில் - பழைய டிவிஸன், தொழிற்சாலை, ஒப்டன் குரூப்
ஒலுகி.ெ மாரியம்மன் சுவாமி கோயில் - அம்பலான்கொட டிவிளடன் ஒப்டன் குரூப்
லுணுகிவி, பூரீ முருகன் சுவாமி கோயில் - மேமலை டிவிஸன், ஒப்டன் குரூப், லுணுகல. பூரீ முருகன் சுவாமி கோயில் கீழ்ப்பிரிவு, வைக்குப்புற தோட்டம்,
கமேர்வெல், பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - அக்கரபத்தனை பிரிவு, யூரி தோட்டம், பசரை. பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் - அமினிவத்த, பசிறை. பத்தினியம்மா சுவாமி கோயில் - பழைய ஸ்டார் பீ. ஒப்டன் குரூப் ஒப்டன். விஸ்ணு சுவாமி கோயில் - பொல்கொல்ல. ஒப்டன். 10, மாரியம்மன் சுவாமி கோயில் பொல்கொல்ல, ஒப்டன், ப. முருகன் சுவாமி கோயில் - பழைய ஸ்டோர் பீ ஒப்டன் குரூப், ஒப்டன். 12. கீனாகொட சுவாமி கோயில் - யப்பாம பிரிவு மாதோவ குரூப், மடல்சீம. 13. முருகன் சுவாமி கோயில் - டோனே தோட்டம், மடல்சீம. 14. முருகன் சுவாமி கோயில் புடுகொடுவ வெடபெத்த மெடிக்காதென்ன.
மடல்சீம. 15. முருகன் சுவாமி கோயில் - பட்டாவத்த தோட்டம், மடல்சீம.
OY

Page 64
5.
17.
S
9.
EՈ
El
22,
墨。
盟5,
25.
7.
8.
29.
O.
SI.
8.
3.
9.
S.
7,
39,
முருகன் சுவாமி கோயில் - தலவதி பேலெஸ்னிய வெடபெத்த, மெடிக்காதென்ன மடல்சீம.
முருகன் சுவாமி கோயில் - கல்லுள்ள தோட்டம், மடல்சீம. முருகன் சுவாமி கோயில் - ஏக்கர் 70,கோகாகல மெடிக்காதென்ன, மடல்சீம. சுப்பிரமணியம் சுவாமி கோயில் - கீழ்ப்பிரிவு எல்டேப் தோட்டம், பசறை,
முருகன் சுவாமி கோயில் - பாக் தோட்டம் லுனுகல, நமுனுகல. இந்து சுவாமி கோயில் - வேவெகல தோட்டம் மடுல்சீம. கதிரேசன் சுவாமி கோயில்- மாதோவ தோட்டம், குடுதோவ டிவிளன்,
பசறை. பத்தினி சுவாமி கோயில் - கிதுல்கேலே பகுதி, எல்டேப் தோட்டம், பசறை.
பூg கதிரேசன் சுவாமி கோயில் - சோலன்ஸ் தோட்டம், லுணுகல. செல்லக்கதிர்காம கோயில் - சோலன்ஸ் தோட்டம், லுணுகல. பழைய பத்தினி கோயில் - மாபா எல்ல தோட்டம், லுணுகல. பூரீ முருகன் கோயில் - சுவிட்ன் டிவிளபன், ஒப்டன் குரூப், ஒப்டன். பூரீ முருகன் கோயில் - டெல்மேரியா தோட்டம், மீரியபெத்த டிவிளபன்,
LI FGATD. பூரீ முத்துமாரியம்மன் கோயில் - 2ம் டிவிஸன், டெமேரியா தோட்டம், மீரியபெத்த, பசறை பூரீ முத்துமாரியம்மன் கோயில் - 1ம் டிவிஸன் டெமேரியா தோட்டம், மீரியபெத்த, பசறை முருகன் கோயில் - டயறபா தோட்டம், பசறை பூரீ முருகன் கோயில் - மாதென்னை டிவிளபன், டமேரியா தோட்டம், பசறை
மருதுவீரன் கோயில் - 1ம் டிவிஸன் டெமேரியா தோட்டம், பசறை இந்து கோயில் - சின்ன கனவரல்ல, கனவரல்ல தோட்டம், நமுனுகல மாரியம்மன் கோயில் - கோனகல தோட்டம், கீழ்ப்பிரிவு, பசறை பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - அனிபா டிவிஸன் பசறை குரூப், பசறை ஆதி மாரியம்மன் கோயில் - ரோபேரி தோட்டம், பிட்டமாறுவ விநாயகர்/ பூஜீ விஸ்ணு கோயில் - ரோபேரி தோட்டம், பிட்டமாறுவ கதிரேசன் / பத்தினியம்மா கோயில் - ரோபேரி தோட்டம், பிட்டமாறுவ
கந்தகெட்டிய 1. பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் - நாராங்கல, கந்தேகெகர
எல்ல. 1. பூஜீ சுப்பிரமணியம் சுவாமி கோயில் - சவுதம் தோட்டம், றபர் டிவிலியன்,
தெமோதர.
2. சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் - எல்லவத்தை தோட்டம், நமுனுகல. 3. பூரீ சுப்பிரமணியம் சுவாமி கோயில் - நாவில கீழ்ப் பிரிவு, அரச தோட்டம்,
பல்லாகெட்டுவ, கும்பால்வெல.
08

பிபிலை
பால்கதிரேசன் சுவாமி கோயில் - பிபிலை தோட்டம், பிபிலை. பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - பிபிலை டிவிஸன், பிபிலை குரூப், பிபிலை
மடுல்சீமை
இந்து கோயில் - மடுல்சீமை தோட்டம், மடுல்சீமை
பல்லாகட்டுவ
1. சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் -ஈ-ஜீ-கே டிவினன். கனவரல்ல குரூப்,
நமுணுகல.
2. முருகன் சுவாமி கோயில் - நீப்பர் தோட்டம், எல்ல.
சித்திவிநாயகர் சுவாமி கோயில் - டவுன் கமிட்டி, நமுணுமுல. . சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் பெரிய கனவரல்ல, கனவரல்ல
தோட்டம், நமுணுமுல. 5. மாரியம்மன் சுவாரி கோயில் - பெரிய கனவரல்ல, கனவரல்ல தோட்டம்,
திமுணுமு.ே வழிப்பிள்ளையார் சுவாமி கோயில் - பெரிய கனவரல்ல, கனவரல்ல தோட்டம், நமுணுமுல. 7. பூg சுப்பிரமணிய சுவாமி கோயில்-கோவுஸ் தோட்டம்,நியூபக் டிவினன்.எல்ல
ஆலிஎல
சுப்பிரமணியம் சுவாமி கோயில் - கோட்டகொட 7 வது டிவிளபன்.ஸ்பிரிங்கெலி. 8. சுப்பிரமணியம் சுவாமி கோயில் - கோட்டகொட 8 வது டிவிளபன்ஸ்பிரிங்கெலி. பூg சுப்பிரமணியம் சுவாமி கோயில் = படக்வெல்ல ம்ே பிரிவு ஆவின்.ெ 4. பூஜீ சித்திவிநாயகர் சுவாமி கோயில் - பண்டாரவளை ரோட், ஆவிஎல. முருகன் சுவாமி கோயில் - கீழ்ப்பிரிவு டிக்வெல்ல தோட்டம், ஆவிஎல. சித்தி விநாயகர் சுவாமி கோயில் - செரண்டிப் டிவிஸன், குயின்ஸ்டவுன் தோட்டம், ஆவிஎல. 7. பூஜி கதிர்வேல் சுவாமி கோயில் - சென் ஜேம்ஸ் தோட்டம் ஆலிஎல. 8. சுப்பிரமணியம் சுவாமி கோயில் - எவ்வட்ள் தோட்டம், ஆவிஎல,
பூஜி கதிர்வேலாயுத சுவாமி கோயில் - 2ம் பிரிவு, ரொசட் தோட்டம், ஆலிஎல. 10. பூரீ சுப்பிரமணியம் சுவாமி கோயில் - 1ம் பிரிவு ரொசட் தோட்டம், ஆவிஎல ப, பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் ம்ே பிரிவு ரொசட் தோட்டம்,ஆலிஎல. 18. பூஜீ சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் - எட்டம்பிட்டிய தோட்டம், 2ம்
பிரிவு, ஆவிஎல. 3. பூரீ சித்திவிநாயகர் சுவாமி கோயில் - 196, ஜெயந்தி போகமடித்த, ஆலிஎல. 4. பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - உடுவர தோட்டம், தெம்மோதர 5. சுப்பிரமணியம் சுவாமி கோயில் - செரண்டிப் டிவிளபன், குயின்ஸ் டவுன்
தோட்டம்.
109

Page 65
16. சிவசுப்பிரமணியம் சுவாமி கோயில் - மேற்பிரிவு. மொரகல்வி தோட்டம்
ஆலிஎல.
17. சுப்பிரமணியம் சுவாமி கோயில் நல்லமலை,5 வது டிவிஸன், ஸ்பிரிங்வெலி
18. கதிரேசன் சுவாமி கோயில் - 7 வது தோட்டம், ஸ்பிரிங்வெலி தோட்டம்
ஸ்பிரிங்வெலி, 19. கனதெவி சுவாமி கோயில் - கீழ்ப்பிரிவு ஸ்பிரிங்வெலி தோட்டம்,
ஸ்பிரிங்வெலபி. 20. கதிரேசனி சுவாமி கோயில் - ஒதம்ப டிவிஸன், தெமோதர தோட்டம்,
தெமோதர.
21. பூரீ சித்திவிநாயகர் சுவாமி கோயில் - பண்டாரவளை ரோட், ஆலிஎல
வெலிமடை
1. பூரீ கதிரேசன் சுவாமி கோயில் - புதிய பிரிவு. டவுன்சைட் தோட்டம்.
வெலிமடை
2. பூரீ பத்தினி சுவாமி கோயில் - அபரகல தோட்டம், போரகள், வெலிமடை
பூரீ முத்துமாரியம்மன் கோயில் - அக்கல தோட்டம், போரகஸ், வெலிமடை பூரீ சித்திவிநாயகர் கோயில் - அம்பகஸ்தோவ டிவிஸன், வெலிமடை குரூப் வெலிமடை, பூரி கதிர்வேலாயுத சுவாமி கோயில் - வெலிமடை டிவிஸன், வெலிமடை குருப், வெலிமடை 6. பூரீ மாரியம்மன் சுவாமி கோயில் - கட்டகாலை டிவிஸன், டயறபா தோட்டம்
பண்டாரவனை. பூரீ பத்தினி சுவாமி கோயில் - போரகள் தோட்டம், போரகள், 8. பூரீ முத்துமாரியம்மன் சுவாமி கோயில் - வெலிமடை டிவிஸன், வெலிமடை
குரூப், வெலிமடை, 9. பூரீ முருகன் சுவாமி கோயில் - வெலிமடை டிவிஸன், வெலிமடை குரூப்
வெலிமடை, 10.பூரீ விநாயகர் சுவாமி கோயில் - புதிய டிவிஸன் டவுன்சைட் தோட்டம்
வெலிமடை, 1.இந்து கோயில் - தம்பவின்ன டிவிஸன், தம்பவின்னதோட்டம், தம்பதெனியா 12. பூரீ முருகன் சுவாமி கோயில் - பென்எட் தோட்டம், வெலிமடை,
#
.
நுவரெலியா 1. முத்துமாரியம்மன் கோயில் - கந்தபொல. 2. காயத்ரி அம்மன் கோயில் - நுவரெலியா, 3. முத்துமாரியம்மன் கோயில் - மூன்யிலேன் தோட்டம், தி, அம்மன் கோயில் - பெட்ரூ தோட்டம். 5. அம்மன் கோயில் - லொவர்ஸ்பிவிப் தோட்டம். சி, மாரியம்மன் கோயில் - எல்பொட தோட்டம்.

7. அம்மன் கோயில் - கந்தபொல தோட்டம். 8. அம்மன் கோயில் - மார்க்கஸ் தோட்டம்,
9.
ID -
7.
2.
.
14.
முத்துமாரியம்மன் - மட்டகல தோட்டம்.
அம்மன் கோயில் - மீவுசாகல தோட்டம், அம்மன் கோயில் - மகுருகலை தோட்டம், மாரியம்மன் கோயில் - எலமுல்ல தோட்டம். முத்துமாரியம்மன் கோயில் - எஸ்கதெல் தோட்டம். அம்மன் கோயில் - கல்வே தோட்டம்.
அட்டன் - தலவாக்கலை
மானிக்கப் பிள்ளையார் கோயில் - அட்டன்
2. கதிரேசன் கோயில் - அட்டன் 3. முருகன் கோயில் - பொகவந்தலாவ 4. பிள்ளையார் கோயில் - டிக்கோயா 5. கதிரேசன் கோயில் - தலவாக்கலை 5. முருகன் கோயில் - மஸ்கெலியா நகர் 7. முருகன் கோயில் - குயில்வத்தை
இரத்தினபுரி
.
d
的。
பூரீ முத்துமாரியம்மன் கோயில் - ராசகல தோட்டம்
இராமர் கோயில் - ராசகல (ஏமிட்டிய பிரிவு) முத்துமாரியம்மன் கோயில் - ராசகல (1ம் Lിrിഖു மாரியம்மன் கோயில் - அகஸ்லேன்ட் தோட்டம் மாரியம்மன் கோயில் - அலுப்பொல தோட்டம்
அம்மன் கோயில் - அலுப்பொல வேவெலவத்த பிரிவு)
மாரியம்மன் கோயில் உனுவல தோட்டம் மாரியம்மன் கோயில் - திவுரும்பிட்டிய தோட்டம் பூரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில் - பலாங்கொட II):
.
பூரீ முத்துமாரியம்மன் கோயில் - பலாங்கொட சிவன் கோயில் - இரத்தினபுரி
கண்டி - மாத்தளை
d
的。
7.
விநாயகர் கோயில் - உலுகங்க தோட்டம் அம்மன் கோயில் - தெல்தோட்ட தோட்டம்
அம்மன் கோயில் - கிரிமெட்டிய தோட்டம்
அம்மன் கோயில் - கலகா தோட்டம் அனுமான் கோயில் - நூல் கந்தர தோட்டம்
அனுமான் /முருகன் கோயில் - படியகம தோட்டம் முருகன் கோயில் - நாராயண தோட்டம்
11

Page 66
E.
岛。
III.
II.
II,
3.
I
5.
.
7.
E.
9.
.
교,
முருகன்/ அனுமான் கோயில் - மாணிக்க தோட்டம் முருகன் கோயில் - தாபவெல் தோட்டம்
அம்மன் கோயில் - அம்பிட்டிய தோட்டம் அம்மன் கோயில் - குருதெணிய தோட்டம் அம்மன் கோயில் - பலகொல்ல தோட்டம் முருகன் கோயில் - கரலியத்த தோட்டம் அம்மன் கோயில் - பல்லேகல்வி தோட்டம் அம்மன் கோயில் - அட்டபாகே தோட்டம் பிள்ளையார் கோயில் - பூபுரெஸ்ள தோட்டம் வைரவர் கோயில் - டெல்டா, சங்கவர். ஸ்டென்பேக் தோட்டம் கனகராவர் கோயில் - உடபேராதெனிய தோட்டம் அம்மன் கோயில் - பெனிதெனிய தோட்டம் அம்மன் கோயில் = ஒரவான்ட்ட அம்மன் கோயில் - அந்தனை தோட்டம் அம்மன் / காட்டு மாரியம்மன் கோயில் - மாகியாவ மாரியம்மன் கோயில் - நாதாவெலெய் கிராமம்
கண்டி
பூரீ முத்துமாரியம்மன் கோயில் - மாத்தளை அம்மன் கோயில் - வத்தேகம கதிரேசன் / விநாயகர் கோயில் - வத்தேகம அம்மன் கோயில் ( மருவியகல கோயில்) - வத்தேகம முத்துமாரியம்மன் / கதிரேசன் கோயில் கம்பளை பூரீ செல்வ விநாயகர் கோயில் - கண்டி மாரியம்மன் கோயில் - தெவ்தெனியா பூஜி முத்துமாரியம்மன் கோயில் - கலகா குறிஞ்சிக் குமரன் கோயில் - பேராதெனியா
கொழும்பு மாரியம்மன் கோயில் - பென்ரித் தோட்டம் மாரியம்மன் கோயில் - எல்ஸ்டன் தோட்டம்
112

மலையகப் பகுதிகளில் கத்தோலிக்கம்
ஏ. வி. பி. கோமஸ்
பங்குகள் பற்றிய அறிமுகம்
மலையகத்தில் கத்தோலிக்க சமயப்பங்குகள் ஏனைய பகுதிகளைப் போலவே செயற்படுகின்றன. பல தேவாலயங்களை உள்ளடக்கிய ஒரு பங்கை எடுத்துக்கொண்டால் அப்பங்குக்கென்று ஒரு குருவானவர் பொறுப்பாக இருக்கின்றார். சந்தர்ப்பத்திற்கேற்ப அவருக்கு உதவியாக ஓரிரு குருக்கள் நியமிக்கப்படுவர். தேவையையும் வசதியையும் அடிப்படையாகக் கொண்டே குருவானவர்கள் நியமிக்கப்படுவர். அதி வணக்கத்துக்குரிய ஆயரே மேற்றிராணியார்) இந்நியமனங்களைச் செய்கிறார்.
ஒரு மறை மாவட்டத்தின் கீழ் பல பங்குகள் அமையலாம். உதாரணமாக, கண்டி மறை மாவட்டத்தின் தலைவரான ஆயரின் கீழ் மாத்தளை, கண்டி, நுவரேலியா ஆகிய மாவட்டங்களிலுள்ள பங்குகள் செயற்படுகின்றன.ஒவ்வொரு பங்குக்குருவும் தனக்குக் கீழுள்ள கத்தோலிக்கருக்குப் பொறுப்பு வாய்ந்தவராவார். கத்தோலிக்கர் அந்தப் பங்குப்பகுதியில் எங்கு வாழ்ந்தாலும் அவர்களின் ஆன்மீக நலனுக்கு பங்குக்குருவானவரே பொறுப்பு. எனவே ஒரு பங்கின் கீழ் வரும் எல்லாத் தோட்டப்பகுதிகளும் அக்குறிப்பிட்ட பங்குக்குருவின் பொறுப்பிலேயே உள்ளன. பங்குக்குருவுக்கு எல்லாப் பகுதிகளையும் மேற்பார்வை செய்ய முடியாது என்பதால் பொதுவாக அவர் தமது உதவிக்குருக்களில் ஒருவரைத் தோட்டப்பகுதிகளுக்குப் பொறுப்பாக நியமித்துவிடுவார். இவ்வாறு பொறுப்பேற்ற குருவானவர் சந்தர்ப்பச் சூழ்நிலைக்கேற்ப அப்பங்கிலுள்ள அருட் சகோதரர்கள், அருட் கன்னியர் ஆகியோரது உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
தோட்டங்களிலோ, பங்குகளிலோ எந்தவொரு நிகழ்ச்சியும் நடைபெறும் பொழுது மொழி வேறுபாடுகள் கவனிக்கப்படுவதில்லை. உதாரணமாக, ஒவ்வொரு பங்கிலும் குருவானவருக்கு பொதுவேலைகளில் உதவி செய்வதற்கு பங்குச் சபையொன்று அமைக்கப்படும். இதில் சிங்கள, தமிழ் விசுவாசிகள் இணைந்தே செயற்படுவர். கலந்துரையாடல்கள் மூன்று மொழிகளிலும் நடைபெறும், இதேபோன்றே, சில தோட்டங்களில் கத்தோலிக்கர் தொடர்பான விடயங்களைக் கவனித்துக் கொள்வதற்கு விடயம் தெரிந்த ஒருவரோ, ருெவரோ நியமிக்கப்படுவர். இவர்கள் அநேகமாகக் கல்வி அறிவுள்ளவர்களாக
13.

Page 67
இருப்பர். சில இடங்களிற் தோட்டப்பகுதிகளிலுள்ள கற்றோர் அல்லது கத்தோலிக்க நிர்வாகிகள் (டீமேக்கள், கிளார்க் போன்றவர்கள்) இப்பணியை மேற்கொள்ள முன்வருவர். இங்கும் சாதி, மொழி வேறுபாடுகள் காட்டப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்டப்பகுதிகளிற் குருவால் நியமிக்கப்பட்டவர் நேரடியாகவோ அல்லது தோட்டத்திலுள்ள ஏனையோரின் உதவியுடனோ விடயங்களைக் கவனிப்பார். உதாரணமாகக் குறிப்பிட்ட ஞாயிற்றுக்கிழமை ஞானோபதேசப்பாடமும் திருப்பலிப் பூசையும் இருக்கிறது எனக் குருவானவர் அறிவித்திருந்தால் மேற்கூறிய நியமிக்கப்பட்ட பொறுப்பானவர்கள் எல்லாக் கத்தோலிக்கர் வீடுகளுக்கும் அல்லது காம்ராக்களுக்கும் சென்று சொல்லி விடுவார்கள். நியமனம் பெற்றவர் கோயிற்பிள்ளை என அழைக்கப்படுவதுண்டு.
தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழி பேசுவோரும் பங்கு பற்றும் பட்சத்தில் ஞானோபதேசப் பாடங்கள் வெவ்வேறாக நடத்தப்படும். அருட் சகோதரர்கள் அருட்கன்னியர்கள் அல்லது ஆசிரியத் தொண்டர்கள் இவ்வகுப்புகளை நடத்துவர். ஆனால் எக்காரணம் கொண்டும் திருப்பலிப்பூசை வேறாக நடாத்தப்படுவதில்லை. இரு மொழிகளிலும் ஜெபங்கள். பிரார்த்தனைகள், பாடல்கள் என்பன இடம்பெறும். தமிழ்மொழி பேசுவோரே பெரும்பான்மையாக வருவதால் தோட்டங்களிற் பூசைகள் அனேகமாகத் தமிழ் மொழியிலேயே ஒப்புக்கொடுக்கப்படும். பொதுவாக, வன. பிதாக்கள் மூன்று மொழிகளையும், ஓரளவாவது தெரிந்திருப்பர். சிங்களமொழி பேசும் குருக்களாக இருந்தாலும் ஒரளவாவது தமிழ் தெரிந்தவர்களே தோட்டப்பகுதிகளுக்கு நியமிக்கப்படுவர். மொழி தெரியாவிட்டாலும் எப்படியாவது அதனைக் கற்றுக்கொள்கின்றனர். தமிழ்மொழிச் சொற்களை சிங்களத்தில் எழுதி வாசிக்கும் குருக்கள்மாரும் இருக்கிறார்கள். திருவழிபாட்டுக்குரிய பிரார்த்தனை,ஜெபங்களை எழுதி மனப்பாடம் செய்து கொள்கின்றனர்.
பெரிய பங்கில்
பெரிய பங்குத் தேவாலயங்களில் சந்தர்ப்பத்திற்கேற்ப மூன்று மொழிகளிலும் வெவ்வேறாகப் பூசைகள் நடைபெறும். சனிக்கிழமை மாலை வேளைகளில் ஆங்கிலத்திலும், ஞாயிற்றுக்கிழமை காலை எழு மணிக்குத் தமிழிலும் அதன்பின் ஒன்பது மணிக்கு சிங்களத்திலும் நடைபெறுவதுண்டு. வசதிக்கேற்ப நேரமும் மொழி மூலமும் வேறுபடும். ஆனால் தேவாலயத் திருவிழாச் சந்தர்ப்பங்ளில் வசதிக்கேற்ப பூசைகள் தமிழில் ஒன்றும், சிங்களத்தில் ஒன்றுமாக நடைபெறும், திருநாட்பூசையானது வழமையாகவே இரு மொழிகளிலும் நடத்தப்படும். சில பகுதிகளிற் சிங்களத்திலும், வேறுசில தமிழிலும் இடம் பெறும்.
14

கோயிலுக்கு அனைவரும் எந்தவிதமான வேறுபாடுகளுமின்றித் தாம் விரும்பிய இடத்தில் அமரலாம். பெரிய முதலாளிக்குப் பக்கத்தில் சிறு தொழிலாளி அமர்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும். இதுபோன்றே ஆண், பெண் பெரியவர்கள், சிறுவர்கள் என்ற வேற்றுமையும் கவனிக்கப்படுவதில்லை. பாடற்குழுவிலோ அல்லது விவிலிய வாசிப்பிலோ எவ்வித வேறுபாடுமின்றி எவரும் பங்குபற்றலாம், அது அவரவரது திறமையையும் விருப்பதிதையும் பொறுத்தது.
வழிபாட்டு நாட்கள்
ஒரு பங்குக்குருவானவருக்குக்கீழ் பத்துப்பதினைந்து தோட்டப்பகுதிகள் அமையலாம். சில பகுதிகளுக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிப் பூசை ஒப்புக்கொடுக்க முடியாதநிலை ஏற்படுகின்றது. சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஒருமுறை குருவானவர் போய்த் திருப்பலிப்பூசை ஒப்புக்கொடுப்பார். ஏனைய ஞாயிற்றுக்கிழமைகளில் அருட்சகோதரர் அல்லது யாராவது விடயம் தெரிந்த ஆசிரியர் சென்று ஞானோபதேசப்பாடங்கள் நடத்திய பின்னர் பிரார்த்தனைக்கூட்டங்களையும் நடத்துவர். இவ்வித சந்தர்ப்பங்களிலும் பூசை ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை. எனினும் தோட்ட மக்கள் வந்து கலந்து கொள்வது சற்றுக்குறைவாகவே உள்ளது. சிறு பிள்ளைகளுக்கு மீட்டாய், படங்கள் சிறு சிறு பரிசில்கள் கொடுக்கப்படுவதால் அவர்கள் வந்துவிடுவர். எளிமையும் தெய்வபயமும் இம்மக்களிடம் இன்னும் குடிகொண்டுள்ளன. தோட்டத்தில் வேலை நாட்களிற் திருப்பலிப்பூசை வைக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் மட்டுமே இவர்களைக் கவருவது சிரமமாக இருக்கும். மறுபக்கத்தில், பங்குக்குரு. கத்தோலிக்கப் பொது நலச் சேவை சங்கங்கள் போன்றவற்றிடமிருந்து தமக்குக் கிடைக்கும் சிற்சில சலுகைகள் கிடைக்காமற் போய்விடுமோ என்ற பயமும் அவர்களது வருகைக்குத் தூண்டுகோலாக அமைகின்றது. உதாரணமாகப் பெரும்பங்கைச் சேர்ந்தவர்கள் இடம்பெறும் மரியன்னையின் சேவை. வின்சன்ட் டிபோல் சபை போன்றவை காலத்துக்குக் காலம் அதிலும் குறிப்பாக திருவிழாக்காலங்களிலும் நத்தார் - பாஸ்கா (இயேசுவினது மரிப்புக்காலம்) காலங்களில் உடைகள், விளையாட்டுப் பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றனவற்றை வழங்குவது வழக்கம். இவற்றை இழந்துவிடுவோமோ என்ற எண்ணமும் அவர்கள் கோயிலுக்கு வருவதற்கு உந்து சக்தியாய் அமைந்தது. வயதான ஆண், பெண் இருபாலாரும் சொல்லாமலேயே பிரசன்னமாய் இருப்பர். அவர்கள் பெரும்பாலும் ஜெபங்கள் படிப்பதிலும் பாடல்களை இசைப்பதிலும் அதிகம்ாக பங்குபற்றுவதையும் அவதரீனிக்கலாம்.
பொதுவான பங்குத்தேவாலயம் இருப்பது போலத் தோட்டங்களிலும் சிறு கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் பல
115

Page 68
இடங்களிற் கோயில்கள் இல்லாத காரணத்தால் தோட்டத்துரை கத்தோலிக்கராகவிருந்தால் அவரது பங்களாவில் அல்லது டீமேக்கள், கிளார்க் போன்ற தோட்ட உத்தியோகத்தர்கள் கத்தோலிக்கராய் இருக்கும் பட்சத்தில் அவர்களது வீடுகளிற் திருப்பலிப்பூசைகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. இவ்வேளைகளில் பங்களாவின் முன் அறையில் தொழிலாளர் முழங்காலில் இருப்பதற்காகவும் உட்காருவதற்காகவும் பாய்கள் விரிக்கப்பட்டிருக்ககும். துரையும் ஏனைய உத்தியோகத்தர்களும் நாற்காலிகளில் அமர்ந்திருப்பர்.
ஒரு கத்தோலிக்கரின் வாழ்வில்
எந்தவொரு கத்தோலிக்கனது வாழ்விலும் ஏழு திருவருட்சாதனங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. அவையாவன, திருமுழுக்கு ஞானஸ்நானம்) பச்சாத்தாபம், திவ்வியநற்கருணை, உறுதி பூசுதல், மெய்விவாகம்/ குருத்துவம், நோயில் பூசுதல், (அவஸ்தை பூசுதல்) என்பனவாகும். பெரிய பங்கைச் சார்ந்தவராயினும் தோட்டப்பகுதியில் உள்ளவராயினுஞ்சளி மேற்குறிப்பிட்ட திருவருட்சாதனங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகும்.
திரு முழுக்கு
கத்தோலிக்கத் தம்பதிகளுக்கு ஒரு பிள்ளை பிறக்கும் பட்சத்தில் ஓரிரு வாரங்களில் அல்லது வசதிகிடைத்தவுடன் பிள்ளைக்குத் திருமுழுக்கு கொடுக்கவேண்டியது பெற்றோரின் தலையாய கடமை. திருச்சபையின் சட்டத்துக்கமைய திருமுழுக்குப் பெற்ற ஒருவர்தான் கத்தோலிக்கராவர். அநேகமாக, பிரதான பங்குக்கோவிலிலேயே திருமுழுக்குக் கொடுக்கப்படும். பொதுவாக, மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை இது நடைபெறும்.
ஞானத்தாய், ஞானத்தந்தை என்று அழைக்கப்படும் குழந்தையின் பெற்றோரால் நியமிக்கப்படும் இருவர் குழந்தையைக் கோவிலின் பீடம் வரை கொண்டு செல்வர். திருப்பலிப்பூசை நடைபெறும் வேளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இது நடைபெறும். பெற்றோரும் ஏனையோரும் கோவிலுக்கு வருவர். ஞானத்தாயும் ஞானத்தந்தையும் விசுவாசம் சம்பந்தமான கேள்விகளுக்குப் பதிலளிப்பார்கள். கத்தோலிக்கத் திருச்சபையின் அங்கத்தவனாகின்றாயா என்பதே இதன் தொனிப்பொருளாய் இருக்கும். இங்கு குழந்தைகளுக்குப் பதிலாக அந்த ஞானப்பெற்றோர் பதில் சொல்லுவர். பிற்காலத்தில் குழந்தையின் ஞான வளர்ச்சிக்கு இவர்களே பொறுப்பு என்று கூறப்படுகின்றது. இதை ஒர் அந்தஸ்துச் சின்னமாகக் கொள்கின்றனர். அன்றைய தினம் சிலர் குருவானவருக்கு ஏதாவது பரிசில்கள் வழங்குவார்கள் அநேகமாகப் பழவகைகள், தேயிலை போன்றன கொடுக்கப்படும். உணவு சமைத்து அனுப்புபவர்களுமுண்டு.
116

பிள்ளை வளர்ந்ததும் ஏதாவது ஒரு பள்ளிக்கூடத்திற் சேர்ப்பார்கள். தோட்டப் பள்ளிக்கூடங்களில் அநேகமாகக் கத்தோலிக்க மதம் படிப்பிக்கப்படுவதில்லை எனவே, தோட்டங்களில் முன்னர் குறிப்பிட்டது போன்று அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், ஆசிரியத் தொண்டர்கள் அல்லது குருவானவரால் நியமிக்கப்பட்ட கோயிற்பிள்ளை அல்லது சிறிது கற்றவர்கள் ஞாயிறு பாடசாலைகள் நடத்துவர். இந்த மறைக்கல்வி நடத்துவதற்கென விசேடமாகப் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. சாதாரணமாகத் தோட்டங்கள் தோறும் இவ்வாறு பயிற்றப்பட்ட தொண்டர் ஆசிரியர்கள் காணப்படுகின்றனர்.
இந்த ஞானோபதேசப்பாடங்கள் பொதுவாக ஞாயிற்றுக்கிழமை திருப்பலிப்பூசை நடைபெறு முன்னரே நடைபெறும். பூசையில்லாத நாட்களில் தொண்டர் ஆசிரியர்கள் திருமறைப்பாடல்களுடன் பாடல்களையும் இசைக்கச்செய்து, சாதாரண ஜெபங்கள் படித்து வழிபாடுகளை நடத்துவர். பிள்ளைகளை இவ்வகுப்பிற்கு வரத்தூண்டும் நோக்கமாக ஏதாவது சிறு விளையாட்டுக்களையும் இடைக்கிடை சமயப்போட்டிகள் நடத்தி சிறு பரிசுகளையும் வழங்குவர். இது கற்பிக்கும் தொண்டர்களின் ஆர்வத்தைப் பொறுத்தது.
உறுதிபூசுதல் - உறுதிபூசுதல் தினத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள் (அதாவது எட்டு, ஒன்பது வயதுடையோர்) வெள்ளை உடையே உடுத்தவேண்டும். இந்தச் சடங்கிற்கும் எல்லோரும் பங்குக்கோயிலுக்கே வரவேண்டும். மிகவும் எளியவர்களுக்கு குருவானவர் வசதி படைத்தோரின் உதவியுடன் உடைகள் வாங்கிக் கொடுப்பார். எவ்வித வேறுபாடுகளுமின்றி பிள்ளைகள் ஒரே ஆசனத்தில் வரிசையாக உட்காந்திருப்பர்.
திவ்விய நற்கருணை
திவ்விய நற்கருணை அல்லது "புதுநன்மை வாங்குதல்” என்பது ஒரு பிரதான திருவருட் சாதனமாகக் கொள்ளப்படுகின்றது. நன்மை தீமை அறிந்து செயற்படக்கூடியவர்கள் பாவமன்னிப்புப் பெற்று இயேசுவின் உடலின் சின்னமாய் இருக்கும் திருஅப்பத்தை முதன் முதலாகப் பெறுகின்ற நாளே திவ்விய நற்கருணைத் தினமாகும். இச்சடங்குக்குத் தயார்செய்யும் முகமாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன. புது நன்மை பெற விரும்புகின்ற எல்லாப்பிள்ளைகளும் இவ்விசேட வகுப்புகளில் விசேட ஜெபங்கள் படித்துப் பயிற்சி பெற வேண்டும். தோட்டப்பகுதிப் பிள்ளைகள் ஞாயிற்றுக்கிழமை பூசைக்கு முன் நடத்தப்படும் இவ்வகுப்புக்களுக்குப் பங்குக்கோவில் அமைந்துள்ள இடத்திற்கு வரவேண்டியிருக்கும்.
எல்லாப் பயிற்சிகளும் பெற்ற பின் ஒரு குறிப்பிட்ட நாளில் பாவ சங்கீர்த்தனம் அல்லது பாவமன்னிப்பு நடைபெறும். அநேகமாக, இது புதுநன்மை வாங்கும்
117

Page 69
நாளுக்கு இரண்டொரு நாளுக்கு முந்தியதாக அமையும். எல்லாப் பிள்ளைகளும் பங்குக் கோவிலுக்கு வந்து பாவமன்னிப்புச் சடங்கிற் பங்குபற்றுவர். திவ்விய நற்கருணை அல்லது புதுநன்மை வெகு கோலாகலமாக நடத்தப்படும். ஆயர் அல்லது விசேட குருவே அன்றைய திருவழிபாடுகளையும் திருப்பலிப்பூசையையும் நடத்துவார். முன்னர் கூறியது போன்று புதுநன்மை பெறும் தினத்தன்று தூய்மையான வெள்ளை உடையையே பிள்ளைகள் அணிந்திருப்பர். கோயிலுக்குள் வரிசையாக அழைத்து வரப்பட்டு வழிபாட்டுச் சடங்குகள் நடைபெறும்,
திருப்பலிப்பூசையும் ஏனைய வழிபாடுகளும் முடிந்த பின்னர் எல்லாப் பிள்ளைகளுக்கும் சிற்றுண்டிகள் வழங்கப்பட்டுப் படங்கள், ஜெபமாலைகள் போன்றன ஞாபகச்சின்னமாக வழங்கப்படும். இங்கும் எவ்வித வேறுபாடுகளும் காட்டப்படமாட்டாது. தோட்டப்பகுதிகளிலிருந்து வரும் பெற்றோரும் மற்றையோரும் இதனை ஒர் அந்தஸ்துச் சின்னமாகக் கொள்ளுவர். திருவழிபாடெல்லாம் முடிந்த பின் அவர்கள் ஏனையோருடன் கலகலப்பாகப் பேசி மகிழ்வதையும் காணக்கூடியதாகவிருக்கும்.
மெய் விவாகம்
அடுத்தது மெய்விவாகம் அல்லது குருத்துவம், மெய்விவாகம் என்ற சொல்லே திருமணத்திற்கு பிரயோகிக்கப்படுகின்றது. கத்தோலிக்க சமயத்தில் திருமணம் செய்து கொள்வோர் குருக்களாக முடியாது. குருக்களானோர் திருமணம் செய்து கொள்ளமுடியாது. இவை இரண்டிலும் ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டும்.
குருத்துவம்
மலையகப் பகுதியிலிருந்து மிகக்குறைந்த தொகையினரே "குருத்துவம்" பெற்றுள்ளார். ஆனால் இப்பொழுது இத்தொகை கூடிக்கொண்டு வருவதை அவதானிக்கக் கூடிய தாக வுள்ளது. இதற்குக் கல்வி ஓர் அடிப்படைக் காரணம் எனக் கூறலாம். க. பொ. த சாதாரன பரீட்சையில் மிகத் திறமையாகத் தேர்ச்சி பெறுவதுடன் ஆங்கில மொழியிலும் பேசுவதற்குத் திறமை இருக்க வேண்டும். மேலும், ஐந்தாண்டுகள் படிப்பும் பயிற்சியும் பெறத்தயாராய் இருக்க வேண்டும். எனவே இவ்வளவு காலமாக மலையகப் பகுதிகளில் கல்வித்தரம் குறைந்திருந்ததால் குருவானர்கள் உருவாகுவதிலும் தேக்கம் காணப்பட்டது.
திருமணம்
பெண்பார்க்கச் செல்லுதல், மோதிரம் மாற்றுதல், நிச்சயதாம்பூலம்) போன்ற சந்தர்ப்பங்களிற் தமிழர் பண்பாட்டு முறைப்படி வெற்றிலை, பாக்கு
| 8

தேசிக்காய் குங்குமம், சந்தனம், பழவகைகள், மங்கலப்பொருட்கள் என்பனவற்றை எடுத்துச் செல்வதுண்டு, பெண்பார்க்க அல்லது மோதிரம் மாற்றுவதற்குச் செல்லும்போது குத்துவிளக்கேற்றிவைத்து ஊதுபத்தி கொழுத்தி, ஆலாத்தி எடுத்து சந்தன குங்குமப் பொட்டிட்டு மாப்பிள்ளையை வரவேற்பர். மோதிரம் மாற்றல் பெண் வீட்டில் செய்யப்படும். வசதியுள்ளவர்கள் ஒரு குருவானவரை அழைத்து மோதிரங்களை ஆசீர்வதித்து அவற்றை யாராவது பெரியவர்கள் எடுத்துக்கொடுக்க ஆணும் பெண்ணும் மாற்றிக் கொள்வர். இவ்வாறு செய்யும் பொழுது, மோதிரங்கள், மாலைகள், சேலை ஏனைய பொருட்கள் அனைத்தையும் குருவானவர் ஆசீர்வதிக்கும் பொழுது ஜெபிக்கவேண்டிய ஜெபங்கள், வாசிக்க வேண்டிய விவிலியப் பகுதிகள் போன்றவை அச்சிடப்பட்டுள்ளன. குருவானவர் தம்பதிகளாகப் போகிறவர்களுக்கு அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்கள் பற்றி ஒரு சிறிய பிரசங்கமும் செய்வார். மேற்படி சடங்குகள் முடிந்த பிறகு மோதிரம் மாற்றிக்கொண்ட இருவரையும் முழங்கால்களில் இருக்கச்சொல்லி பெரியவர்கள் நெற்றியில் சிலுவை வரைவார்கள். வயதில் குறைந்தோர் கைகுலுக்கி அல்லது முத்தமிட்டு வாழ்த்துவர். அதன்பின் ஏதாவது வருந்துபசாரம் நடைபெறும் . மதுபான மருந்தி மகிழ்ச்சியடைபவர்களுண்டு.
நிச்சயதார்த்தமில்லாமல் திருமணத்தை நடத்துபவர்களுமுண்டு, மோதிரம் மாற்றல் நடந்தபிறகு தமது வசதிக்கேற்பத் திருமணநாளை நிச்சயித்துக் கொள்வார்கள். சீர்வரிசை, சீதனம் போன்றவை இருந்தபோதும், இன்று இந்தப்பழக்கம் அருகி வருவதைக் காணுகின்றோம். இதற்குக் காரணம் பல ஆண்களும் பெண்களும் திருமணத்திற்கு முன் ஒருவரை ஒருவர் சந்தித்துப் பேசிப்பழகுவதாக இருக்கலாம். திருமணங்கள் பெரும்பாலும் பங்குக் கோயில்களிலேயே நடத்தப்படுகின்றன. ஒரு சில திருமணங்கள் அவ்வதிதோட்டங்களில் நடத்தப்படுவதுண்டு. தேவாலயத்திற் திருமணத் திருவழிபாடும் சடங்குகளும் எல்லோருக்கும் ஒரே வகையாகவே இடம்பெறும். ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடு கிடையாது. செலவழிக்க வசதியிருந்தால் தாமே செலவழித்து பாடற்குழுக்களை அமைத்துக்கொள்வர். அது அவரவர் வசதியைப் பொறுத்தது.
திருமணம் செய்து கொண்டதின் சின்னமாக தருவானவர் மோதிரங்களை ஆசீர்வதித்து மணமகன் மணமகளுக்கும் மணமகள் மணமகனுக்கும் அணிவிக்கச் செய்வார். அத்துடன் தங்கத்தாற் செய்யப்பட்ட தாலியை ஆசீர்வதித்து மணமகன் கையால் கட்டச்செய்வார். மேலும், திருமணச்சடங்குகள், பவிபூசை எல்லாம் முடிந்த பின்னர் தம்பதிகளைத் தேவாலயத்தின் முன் தலைவாசலில் நிறுத்தி ஆரத்தி எடுக்கும் வழக்கமும் சிலரிடையே உண்டு. இவ்வேளையிலே ஏனையவர்கள் புதுத்தம்பதிகளை வாழ்த்தி அன்பளிப்புக்களையும் வழங்குவர். தோட்டங்களிற் சிற்றாலயங்களிற் திருமணங்கள் நடைபெறும்பொழுது, தமிழர்களது
19

Page 70
பழங்காலப் பழக்க வழக்கங்களையும் இந்துக்களின் பாரம்பரியப் பழக்க வழக்கங்களையும் பின்பற்றுவர்.
நோயில் பூசுதல்
ஒருவர் சுகமீனமாகவிருந்து மரணித்து விடுவார் என்று எண்ணும் பட்சத்தில் குருவானவரை அழைத்து வந்து நோயாளியை ஆசிர்வதித்துப் பாவமன்னிப்பு வழங்கி ஆன்மாவைத்தூய்மைப்படுத்துவர். நன்மரணமடைதற்கு இது ஒரு சாதனமாகக் கொள்ளப்படுகின்றது. தோட்டப்பகுதிகளிற் குருவானவரைத் தேவையான பொழுது அழைக்க முடியாதிருப்பதால் நோயில் பூசுதல் பெறாமலேயே சிலர் இறந்துவிடுகின்றனர். சுவாமியார் வரவியலாது என்று கண்டவுடன் அத்தோட்டத்திலுள்ள எல்லாக் கத்தோலிக்கர்களும் மரணத் தருவாயில் இருப்பவரின் வீட்டிற்கு வந்து ஜெபம் படிப்பார்கள். நன்மரணத்துக்கான ஜெபம் என்பது வேறாக இருக்கின்றது. இன்று இந்தப்பழக்கமும் அருகி வருகின்றது. இளைஞர்கள் இவ்விடயத்தில் அவ்வளவு அக்கறை காட்டுவதில்லை.
தோட்டங்களிற் கத்தோலிக்கள் எவரெனும் இறந்துவிட்டாற் பெரும்பாலும் கோயில் களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மையவாடிகளில் புதைக்கப்படுகின்றனர். வசதி கிடைத்தால் மட்டுமே மரணச்சடங்குகளுக்குக் குருவானவர் செல்வார். குருவானவர் வழிபாடுகளை நடத்திய பின்னர் சடலம் ஆலயத்திற்குப் பக்கத்தில் புதைக்கப்படுவதையே மக்கள் விரும்புகின்றனர். சிலவிடங்களிற் சடலம் இருக்கும் வீட்டிற்கு முன்னால் தீமூட்டி எரியவைத்தல், தப்படித்தல் போன்ற இந்துக்களின் வழக்கமும் பின்பற்றப்படுகின்றன. வருடம் ஒருமுறை நவம்பர் மாதம் இரண்டாம் திகதி ஆத்துமாக்கள் தினம் எனக் கொள்ளப்படுகின்றது. அன்றைய தினத்திற்கு முன்னர் மையவாடி சுத்தம் செய்யப்பட்டு கல்லறைகளும் சீர்செய்யப்படும். ஆத்துமாக்கள் தினத்தன்று குருவானவர் மையவாடிக்குச்சென்று கல்லறைகளை மந்திரித்து ஜெபம் படிப்பர். சுற்றத்தார் மற்றும் கத்தோலிக்கள் அனைவரும் திருவழிபாட்டில் பங்குபற்றி இறந்த ஆன்மாக்களுக்காக ஜெபிப்பார்கள். உறவினர்கள் அந்தந்த கல்லறைகளுக்கு முன் முழங்காலிட்டு ஜெபிப்பார்கள். பின்னர் ஏழை, எளியவர்களுக்குத் தானம் கொடுப்பார்கள். சில இடங்களில் மையவாடியில் திருப்பலிப்பூசையும் இடம்பெறும்.
திருவிழா
திருவிழாக்காலங்களிற் சில விசேட நிகழ்ச்சிகள் நடைபெறுவதை நாம் அவதானிக்கலாம். தோட்டங்களிற் திருவிழா நடத்தப்படும்பொழுது அத்தோட்ட மக்களே கத்தோலிக்கரும் சிலவேளைகளில் கத்தோலிக்கரல்லாதோரும் சேர்ந்து
120

கோயிலையும் ஊர்வலம் வரவிருக்கும் வீதி வழிகளையும் தங்கள் விருப்பப்படி அலங்காரம் செய்வர். பெரும்பாலும் குருத்தோலை களையும் கிரேப்பேப்பரையும் அலங்காரத்திற்கு உபயோகிப்பர். வீதி வழியே தோரணம் கட்டுவர். சிலவிடங்களில் மட்டும் வாழைமரம் நாட்டப்பட்டு மாவிலைத்தோரணம் கட்டப்படுகின்றது. சொரூபத்தை சப்பரத்தில் வைத்து மலர்களாலும் காகிதப் பேப்பராலும் சோடனை செய்து தோளில் தூக்கிச் செல்வர். விழா முடிந்த பின்னர் அன்னதானம் கொடுப்பர். இந்து சமயப்பழக்க வழக்கங்கள் சில கடைப்பிடிக்கப்படுவதையும் காணலாம்.
கிறிஸ்மஸ், ஈஸ்டர், பெரிய வெள்ளிக்கிழமை போன்ற காலங்களிற் தோட்டப்பகுதி மக்களும் நகர்ப்புறக் கோயில்களுக்கே வருவர். அந்தந்தப்பகுதி நகர்ப்புறக் கோவிற்.திருவிழா நடந்தால் எல்லோருமாக வருவர். உதாரணமாக மாத்தளையில் புனித தோமையார் திருவிழா நடைபெறும் பொழுது சுற்றியுள்ள தோட்ட மக்கள் வந்து அதில் பங்குபற்றுவர். அநேகமாக இரண்டாம் பூசை (9.00 ) தமிழிலேயே நடத்தப்படும். திருநாட்பூசை வேறாக நடைபெறும். பூசை முடிந்து ஆயர், குருக்கள், கன்னியர்கள், அருட்சகோதரர்கள், ஏனைய பெரியவர்கள், சிறியவர்கள் அனைவரும் ஏழை பணக்காரன், தோட்டப்பகுதியினர் நகர்ப்பகுதியினர் போன்ற பேதங்களின்றி ஓர் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உறவாடுவார். இந்த கலந்துரையாடலில் எல்லோரும் சிறுசிறு "ஒன்றுகூடல்" விளையாட்டுக்களிலும் பங்குபற்றுவர்.
கிறிஸ்மஸ்
கிறிஸ்மஸ் காலத்தில் கரோல் பாடற் குழுவினர் தோட்டங்களுக்குச் சென்று பாடல்கள் பாடுவர். தோட்டப்பகுதிகளிலுள்ள பிள்ளைகளும் பெரியோர்களும் இதில் சேர்த்துக் கொள்ளப்படுவர். பாடல்கள் பாடி முடிந்த பின் தேநீர் விருந்து நடைபெறுவதுண்டு. இப்பொழுது சில தோட்டப்பகுதிகளில் நாடகங்கள் பயிற்றப்பட்டு மேடையேற்றப்படுகின்றன. இதிற் தோட்டப்புறப் படித்த இளைஞர்கள் பங்குபற்றுவர்.
வழிபாடுகள்
தோட்டக் காம்ராக்களில் மட்டுமன்றி நகர்ப்புற வீடுகளிலும் படங்கள், சொரூபங்கள் என்பனவற்றை வைத்துத் தினசரி விளக்கேற்றி ஜெபம் படிப்பர். சிலர் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் விளக்கேற்றுவர். ஜெபம் படித்தாலும், படிக்காவிட்டாலும் சொரூபத்தைத் தொட்டு முத்தமிடுவார்கள். சொரூபம் வைத்திருக்கும் இடத்தை "சொரூபக்கூடு" என அழைப்பர். சில வேளைகளிற் பல குடும்பங்கள் ஒன்றுசேர்ந்து ஒரே இடத்திற் கூடி, கூட்டுப்பிராத்தனை நடத்துவதுண்டு.
121

Page 71
பயிற்சிகள்
சிலவிடங்களிற் தோட்டப்பகுதி மக்களுக்காக சில விசேட பயிற்சிவகுப்புகளும் நடத்தப்படுகின்றன. உதாரணமாக, வடக்கு மாத்தளைப் பகுதியில் மாட்டுப் பண்னை பொன்று தொடங்கப்பட்டுள்ளது. படித்த இளைஞர்கள் முன்வந்து பங்குக்குருவின் உதவியுடன் தேவையான அமைப்புக்களை உருவாக்கிக் கொள்ளுகின்றனர். பல இடங்களிற் தையல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. வேறுசில இடங்களிற் கைத்தொழில்களும் பயிற்றுவிக்கப்படுகின்றன. வின்சன்ட் டி போல் சபை, ஜோசப்வாஸ் இளைஞர் மன்றம் போன்ற சில சமூகசேவை அமைப்புக்கள் திருவிழாக்காலங்களிலும், விசேடமாகக் கிறிஸ்மஸ் பாஸ்க்காக் காலங்களிலும் உலர் உணவு, பணம், உடை போன்றவற்றைச் சேகரித்துத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவர்.
சமுகசேவை
இதேபோன்று. இவ்வியக்கங்கள் சில தோட்டங்களிற் சுகாதாரம், குடும்பநலன் தொடர்பான கருத்தரங்குகளை நடத்துகின்றன. பங்கைச்சேர்ந்த ஆசிரியர்கள். வைத்தியர்கள் போன்றோர் தொண்டர்களாகப் பங்குபற்றுவர். இப்பொழுது சில தோட்டங்களிற் (உதாரணமாக, ஆகலை, மடுல்கலை தோட்டங்களில் ) தியான வகுப்புக்கள் அல்லது பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. விவிலியத்திலிருந்து சில பகுதிகள் வாசிக்கப்பட்டு அப்பகுதிகளைப்பற்றிய சிந்தனைகளைத் தூண்டிக் கருத்துக்கள் வழங்கப்படுகின்றன. ( கட்டுரை ஆசிரியரும் இதில் பங்குபற்றியுள்ளார்)
முடிவுரை
தோட்டப்பகுதிகளில் மட்டுமன்றி நகர்ப்புறத்திலும் இந்துக்களுக்கும் கத்தோலிக்கருக்கும் இடையே ஓர் அன்னியோன்ய உறவு இருந்து வருவதை அவதானிக்கலாம். தோட்டப்பகுதிகளில் கத்தோலிக்க திருவிழாக்களில் இந்து இளைஞர்களும் பெரியோர்களும் பெரிதும் ஈடுபாடு காட்டுகின்றனர். நகர்ப்புற இந்து ஆலயங்களிற் திருவிழாக்கள் நடைபெறும்பொழுது, விசேடமாக சரஸ்வதி பூசை நடைபெறும் போது, கத்தோலிக்கரும் பங்குபற்றுவதைக் காணலாம். பொதுவாகச் சமூக நிகழ்ச்சிகளில் (திருமணம், மரணவீடு) இந்துக்களும் கத்தோலிக்கரும் பரஸ்பர உறவு கொண்டாடுகின்றனர் என்பதில் ஐயமில்லை.
இவ்வாறு மலையகப் பகுதிகளில் கத்தோலிக்கர் மத அடிப்படையில் சில விசேட தன்மைகளைக் கொண்டிருந்தாலும் மனிதத்துவ அடிப்படையில் மற்றவர்களோடு உறவுகொண்டு நேயபூர்வமாகவே வாழுகின்றனர். சில தோட்டப்பகுதிகளிற் காணப்படும் கோயில்கள், சிற்றாலயங்கள் என்பனவற்றின்
1.

பெயர்களும் அமைந்துள்ள இடங்களின் பெயர்களும் கீழே பட்டியலாகத்
தரப்பட்டுள்ளன.
கத்தோலிக்க சமய வழிபாட்டுத் தலங்கள்
1. கண்டி பங்கு
பிரதான கோயில்
புனித அந்தோனியார் - கண்டி ஜூன் 13. திருவிழா நடைபெறும் - தோட்டப் பகுதி மக்களும் பங்குபற்றுவர்.
ஏனைய கோயில்கள்
புனித மரியான் - கெடம்பே புனித சூசையப்பர் - பூரணவத்தை பரிசுத்த சேபமாலை - மாகியாவை பாத்திமா ஞானஒடுக்க ஆலயம் (வழிபாட்டுத்தவம்) - வேவல்வை இரட்சக பிதாக்களின் வழிபாட்டுத்தலம் - சாந்தா மரியா தொன் பொஸ்கோ - பகிரவகந்த விதி நல்வாயர் கன்னியர்மடம் = கட்டுகெங்வை புனித செபஸ்தியார் வழிபாட்டுத்தலம் - ஊடுவவை - ஹன்டானை புனித அந்தோனியார் வழிபாட்டுத்தலம் - மெளண்ட் பிளசன்ற் பரிசுத்த இரத்த வழிபாட்டுத்தலம் - லேவல்லை லங்கா மாதுர கன்னியர்மடம் - கடுகள்தோட்டை
2. கடுகள்தோட்டை பங்கு
திரு இருதய கோயில் - சியம்பலக்ஸ்தன்னை புனித ரஃபேல் - கலகெதர மொத்த கத்தோலிக்கர் - 180
3. அம்பிட்டிய பங்கு
புனித மரியாள் கோயில் - அம்பிட்டிய லுTrது மாதா கோயில் - மைபிெட்டய புனித அன்னாள் - ஹேவாஹெட்ட புனித செபஸ்தியார் - மூலோய மொத்த கத்தோவிக்கர் = 1888
4. படிவத்தை பங்கு
பாத்திமா னங்கள் தாயின் கோயில் - படிவத்தை புனித அன்னாள் - பல்வேகவை
123

Page 72
岳。
岳。
".
வீனத்து சின்னப்பர் - திகனை புனித அந்தோனியார் = மகாபெரிதன்னை புனித அந்தோனியார் - தொடங்கொல்லை மொத்த கத்தோவிக்க - 1500
பேராதனைப் பங்கு
புனிய தெரேசான் - பேராதனை ஞானத்தின் எங்கள் தாயின் கோயில் - பல்கலைக்கழகம் - பேராதனை மொத்த கத்தோவிக்க - 1000
கடுகண்ணாவை பங்கு
புனித பிரான்சிஸ் சவேரியர் கோயில் - கடுகண்ணாவை மொத்த கத்தோவிக்க - 818
கம்பளை பங்கு
புனித சூசையப்பர் கோயில் - கம்பளை புனித தன்னாள் - அட்டபாகை புனித வனத்து சின்னப்பர் - புப்புரஸ்பை மொத்த கத்தோவிக்கர் - 808
நாவலப்பிட்டி
புனித மரியாள் கோயில் - நாவலப்பிட்டி புனித செபஸ்தியா - சோவந்கத்தை புனித அந்தோனியார் - டொன்சைட் மொத்த கத்தோவிக்கர் - கீ1ே0
த்தளை - பெரும்பங்கு
மாத்தளை - வஹாகோட்டை - பன்விவை என்று மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
1. மாத்தளை
புனித தோமையார் கோயில் - மாத்தளை திரு இருதய கோயில் - இரத்தோட்டை கிறிஸ்து இரட்சகர் கோயில் - கந்தேதுவர கிறிஸ்து தெய்வீக சொஸ்தப்படுத்துவர் கோயில் அஸ்கிரிய (வடக்கு மாத்தளை) அப்போஸ்தலர் சின்னப்பர் கோயில் - பிட்ட கந்த கிறிஸ்தவர்களின் தாய் மரியாள் - மிட்லண்ட்ஸ் மொத்த கத்தோலிக்கர் - தி000
124

வகாகோட்டை
புனித அந்தோனியார் - வகாகோட்டை புனித மரியான் - மகாவலை புனித மரியாள் - நிக்கவெயர புனித அந்தோனியார் - ரொட்டவேவா புனித அன்னாள் - பட்டவத்தை புனித ஆசிர்வாதப்பர் - தேவாளவா புனித யூதாதேயு - கலேவலை உயிர்த்த கிறிஸ்துவின் கோயில் = சமந்தலயாய புனித சூசையப்பர் - மூக்குலான கிறிஸ்துராஜா - சியம்பலாகாவலை புனித மிக்கேல் - பட்டலயாய மொத்த கத்தோலிக்கர் - 5025
பன்விலை
புனித மரியாள் - பன்விலை புனித அந்தோனியார் - வத்தேகம எங்கள் தாய் வேளாங்கன்னி - உன்னஸ்கிரிய புனித செபமாலை - மடுல்கல்லை கிறிஸ்து ராஜா - ஹாகலை, மடுல்கலை புனித அன்னாள் - நக்கிள்ஸ் மொத்த கத்தோவிக்க - 1500
நுவெ ரலியா பெரும்பகுதி
புனித சவேரியா - நுவரெலியா புனித அந்தோனியார் - பிளக்பூல் புனித சூசையப்பர் - கந்தபளை புனித வனத்துச் சின்னப்பர் - பேதுரு தோட்டம் புனித செபஸ்தியார் - மகாகஸ்தோட்டை சது சகாயமாதா - சார்ந்திபுர
தலவாக GIGL)
புனித பட்ரிக் கோயில் - தலவாகலை கிறிஸ்துராஜா - வடக்கு மெடகும்புர புனித செபஸ்தியார் - கோலிருட் கீழ் டிவிசன் புனித சூசையப்பர் - கோவிரூட் மேல் டிவிசன் புனித ஆசிர்வாதப்பர் - கிரேட் வெஸ்டேன் தோட்டம் திருக் குடும்பம் - பனியஸ்கல்ப தோட்டம்
125

Page 73
மரியாளின் பரிசுத்த இருதயம் - பாஸ்மெஸ்டன் புனித சவேரியார் - ரிட்னாகிரி புனித ஜோன் ந பிரிட்டோ - லிந்துல ரகன் வத்தை புனித அந்தோனியார் - லிந்துல ஒடிங்டன் புனித அன்னாள் - ஈல்டன்கோல் பரிசுத்த இருதயம் - டில்லிகோல்ட்ரி புனித சூசையப்பர் - பியர்வெல் புனித மைக்கல் - லோகி வேளாங்கன்னித்தாயின் தேவாலயம் - கம்வுட் புனித இராயப்பர் - சின்னப்பர் - ட்ரோப் தோட்டம் பாத்திமா தாயின் கோயில் - டிரேடன் - கொட்டகலை புனித அந்தோனியார் - ரொசிட்டா புனித யுதேயா - கெல்லிவத்தை புனித செபஸ்தியார் - சென்ற் கிளயார் தோட்டம் மொத்த கத்தோலிக்கர் - 7200
அக்கிரபத்தனை
புனித பிரான்சிஸ் அசிசி தேவாலயம் - கெளலகேன - லிந்துலை புனித அந்தோனியார் - டையகம வேளாங்கன்னித் தாய் - கோம்வுட் தோட்டம் பாத்திமா தாய் - அக்ர ஊவா தோட்டம் லூர்த்து மாதா கோயில் - கினென்லியன் புனித யூதேயா - ஹாட்லோ புனித அன்னம்மாள் - சென் ரெகுலஸ் தோட்டம் புனித செபஸ்தியார் - கிம்ரு தோட்டம் நல்லாயர் கோயில் - கிளென்னிகிள்ஸ் டிவிசன் தொன் பொஸ்கோ - நட்போன் தோட்டம் சதா சகாயமாதா - எல்ஜின் தோட்டம் உயிர்த்த தேவன் - பெல்மோதல் தோட்டம் கிறிஸ்து இரட்சகர் - கிரான்ஸி தோட்டம் மொத்த கத்தோலிக்கர் - 4035
பொகவந்தலாவை
புனித செபமாலை கோயில் - பொகசைக்தலாவை மொத்த கத்தோலிக்கர் - 4500
மஸ்கெலியா தோட்டம்
புனித சூசையப்பர் - மஸ்கெலியா வனத்துச் சின்னப்பர் - கெளரவில்லை
126

வனத்துச் சின்னப்பர் - மோச்கா வனத்துச் சின்னப்பர் - லக்சபானா வனத்துச் சின்னப்பர் - மோரே புனித செபஸ்தியர் - பியர்லோன் புனித செபஸ்தியர் - கார்ட்மோர் புனித அந்தோனியார் - நியூவெலி புனித யாகப்பர் - நோர்வூட் எங்கள் தாயின் கோயில் - டீசைட் புனித சவேரியார் - போட்ரீ மொத்த கத்தோலிக்கள் - 2300
தவலதென்ன/ பூண்டுலோயா/ புஸ்ஸல்லாவ
புனித மரியாள் - தவலத்தன்ன புனித அந்தோனியார் - ஹெல்பொடை பரிசுத்த இருதய கோயில் - பிரொட்டோப் புனித சவேரியார் - ரம்பொடை புனித செபஸ்தியார் - பூண்டுலோயா புனித ஆசீர்வாதப்பர் - புஸ்ஸல்லாவ மொத்த கத்தோலிக்கர் - 2131
ஹட்டன்
திருச் சிலுவைக் கோயில் - ஹட்டன் அப்போஸ்தலராகிய புனித யாகப்பர் -ஆன்பீல்ட் திருக்குடும்பம் - பாத்போட் வனத்துச் சின்னப்பர் - பட்டகலை யேசுவின் திரு இருதயம் - பின்னோயா புனித அந்தோனியார் - போர்டைஸ் சதா சகாய மாதா - ஹோன்சி புனித அந்தோனியார் - மேபீல்ட் புனித செபஸ்தியார் - ஒட்டரி அப்போஸ்தலராகிய புனித யூதா - வுன்னொன் புனித அந்தோனியார் - ஸ்ரட்டன் வனத்துச் சின்னப்பர் - செல்லைஓயா நற்செளக்கியத்தின் எங்கள் மாதா - ஹட்லி வேளாங்கன்னி மாதா - கிறிஸ்லர்ஸ் பார்ம் புனித மிக்கேல் - அப்பொட்ஸ்லி யேசுவின் சிறிய மலராகிய புனித திரேசாள் - இங்கஸ்டிரே தோட்டம் லூர்த்து மாதா - மெனிப்பா வத்தை மொத்த கத்தோலிக்கர் - 3110
127

Page 74
இராகலை
புனித செபமாலை கோயில் - இராகலை புனித அந்தோனியார் - மகா ஊவா
திரு இருதய கோயில் - வட்டுமுல்லை மொத்த கத்தோவிக்கர் - 2050
மட்டக்கெல்லை
புனித அந்தோனியார் - தலவாக்கெல்லை புனித ரீட்டான் - நானுஒயா திரு இருதயம் - டெஸ்போர்ட் புனித செபளப்தியா - டெஸ்போர்ட் புனித மரியாள் - கால்சே புனித அந்தோனியார் - சொமன்பசெட் புனித பிரான்சின் சவேரியார் - ரதிெல்லுை வேளாங்கன்னி மாதா - ரதெல்லு தோட்டம் மொத்த கத்தோலிக்கர் - 1500
சப்பிரகமுவ பெரும்பங்கு
தெனியாய
புனித சூசையப்பர் - தெணியாய திரு இருதயம் - அனின்கந்தே தோட்டம் புனித செபஸ்தியார் = செல்வகந்த மொத்த கத்தோவிக்கர் - 1980
இரத்தினபுரிப் பகுதி
புனித இராயப்பர் சின்னப்பர் - இரத்தினபுரி புனித அந்தோனியா - விவல்வத்தை புனித அன்னாள் - பரடைஸ் தோட்டம் புனித செபஸ்தியார் = மில்வவிட்டிய தோட்டம் புனித சவேரியார் - கல்பொட தோட்டம் திரு இருதயம் - முட்வாகலை தோட்டம் மாசற்ற இருதயம் - நிரியல்ல தோட்டம் மொத்த கத்தோவிக்கர் - 1500

ரக்குவானை
புனித அந்தோனியார் கோயில் - இறக்குவானை புனித செடான்பதியார் - பாவன்வத்தை மாசில்லாமல் உற்பவித்தவள் - கடமுதுனம
பலாங்கொட
புனித சூசையப்பர் - பலாங்கொடை புனித அன்னம்மாள் - அலுத்துரை மாசில்லாமல் உற்பவித்தவள் - கலாகண்ம புனித பிரான்சிஸ் சவேரியார் - தெய்கிஸ்துலாவை மொத்து கத்தோவிக்கர் = 810
தொலஸ்வலை
உயிர்த்த இரட்சகரின் கோயில் - நிவித்திகவை புனித செபஸ்தியார் - மில்வ விட்டியா தோட்டம் மரியாளின் புனித இருதயம் - நிரில்ல தோட்டம் புனித அந்தோனியார் - அப்புருகல தோட்டம் மொத்த கத்தோவிக்கர் - 1500
ஹோவத்தை
புனித அன்னாள் - கதறாவத்துை. மொத்த கத்தோலிக்கர் = 8000
கேகாவை
புனித மரியாள் - கேகாலை
எட்டியாத்தோட்டை
புனித மரியான்- எட்டியாந்தோட்டை புனித ராயப்பர் சின்னப்பர்- கித்துல்கலை புனித செபஸ்தியார் - வெற்றிலையூர் Graf gigro - 1600
தெய்யோவிற்ற
புனித அந்தோனியார் - தெய்யோவிற்ற புனித அன்னாள் - மாலிபொட புனித சூசையப்பர் - ஈஇல்ல தோட்டம்
12)

Page 75
சதா சகாயமாதா - செஸ்டபோர்ட் தோட்டம் புனித இராயப்பர் சின்னப்பர் - சபுமல்கந்த தோட்டம் புனித அன்னாள் - சபுமல்கந்த தோட்டம்
திரு இருதயம் - நூரி தோட்டம்
பாத்திமா மாதா - பம்பகமுக தோட்டம்
மொத்தக் கத்தோலிக்கர் 425
தேவஊழிய மையங்கள் (Mission Centers)
மேலும் சில தோட்டங்களிற் சிறு சிறு ஆலயம் போன்றவை உள்ளன அவைகளிலும் ஞாயிற்றுக்கிழமை பூசைகள்/வழிபாடுகள் நடைபெறுகின்றன மாதம் ஒருமுறை/இருமுறைகள்/மும்முறைகள் என வேறுபடும். அவைகளி
சில
அம்பகோட்டை தங்கல்ல பெலகொட்டை வைத்தலாவ தோட்டம் Lu GuofTL uģ56 u Gav ஒப்பல்களை விலானகமை * நிக்கலோயா
வேவல்மட அங்கும்புற
Luftfloit லபுக்கல தோட்டம் அப்பேவலை
LDTGossTL வெதமுல்ல
9/6) DIT கிளன்டெவன் உடப்புஸ்ஸல்லாவ
டெல்மா
கொன்கோடியா பாத்திமா மிஷன் சென்றர் கொஸ்கல தோட்டம் டேலா தோட்டம் கலதுற தோட்டம் புங்கந்த தோட்டம்
来
来
来
球
k
k
率
掌
米
米
s
米
来
率
率
* லான்ஸ்டோன் தோட்டம்
பெடரெஸ்ஸோ தோட்டம்
கேர்கொஸ் தோட்டம் கியூ லோரன்ஸ் மேற்பகுதி வென்சூர் டில்லிரி போய்ஸ்டன் பொகவந்தலாவை தோட்டம் லின்போர்ட் கொட்டியாகலை சென்ற் ஜோன் டெல்ரீ எல்பொட
Le 6ôTaïvuc96öT
லொய்னோன் ஹா பொரஸ்ட்
மதுரட்ட புரூக்சைட் பையன்வில்லா படியபெலல்ல நில்தந்தயின அபுகளப் கந்த தோட்டம் நிவிதிகலை தோட்டம் பனம் கார்டன் தோட்டம் வீலோபிட்டிய தோட்டம் மாதாபே டிவிஷன்- 2 மாதாபே டிவிஷன் - 3
130

* ஹொரமுல்ல தோட்டம் * தீபீனா தோட்டம் * பில்லகொல்ல டிவிஷன் * ரசகலை தோட்டம் * வெல கும்புற தோட்டம் * உவெல்ல தோட்டம் * பெட்டிகல தோட்டம் * விக்கிலிய தோட்டம் * மொலகொட தோட்டம் * நியுலண்ட்ஸ் தோட்டம் * துல்கிரிய தோட்டம் * அட்டால தோட்டம் * பனாவத்தை தோட்டம் * எதுருபொல தோட்டம் * கெலனி தோட்டம் * தேதுகல தோட்டம் * வேவஸ்ஸ தோட்டம் * தெல்பெட தோட்டம் * மாபாகொல்ல தோட்டம் * 10 வது கட்டை தோட்டம் * பலகெட்டுவ தோட்டம் * மகாவலவத்தை தோட்டம் * ரொசெட்டா தோட்டம்
ருக்கதென்ன தோட்டம் டீன்ஸ்லன்ட் தோட்டம் சார்னியா தோட்டம் L6fg5(35Teco Dumit அலகொல்ல * அட்டம்பெட்டியல்
ஊவா பென்ஹெட் கிரேய்க் பொரஸ்ட் கம்பகா லக்கிலண்ட் பொரலந்த கும்புக்கன் படல்கும்புற
an
(3а тајt evdardleiiv இந்திகியூல்
நக்கல கும்புக்கன தோட்டம் நன்ன புராவ பிபில தோட்டம் பிட்டகும்புற பிஷப் லியோ மேமோரியல்
ஹால் - வெலிமடை
冰
:
ஸ்பிரிங்வுட் குரூப் * டெப்டேன் தோட்டம் * ரங்தொல தோட்டம் * ரை தோட்டம் * நியூபிட்டிகலை தோட்டம் * வெலவாய தோட்டம் * கல்தொட்ட தோட்டம் * கணேதன்ன தோட்டம் * எட்னா தோட்டம்
கலபிட்ட மட தோட்டம் நோர்த்லண்ட் தோட்டம் நிர்மலா தோட்டம் எல்கல தோட்டம் கிரிபோருவ தோட்டம்
கிளன் அல்பின் தோட்டம் வெஸ்மோலன்ட் தோட்டம் உளரி குரூப் தோட்டம்
கானவரெல்ல தோட்டம் மேமலை தோட்டம் * உனுகல்ல தோட்டம் * சென்ற் ஜேம்ஸ் தோட்டம் * டிகவெல்ல தோட்டம் * மொரகொல்லை தோட்டம் * லெட்கரவத்த தோட்டம் * ஆப்பன் எயர் பிரிசன் * பிரிசன் - பதுல்ல * Gstrike Sau * 6asDL-gmrLumr
வெலிமடை குரூப் டெளன்சைட் வால்டமார் யூகோலாண்ட் அம்பகஸ்தோவ
தம்பவின்ன * சியம்பலாந்துவ * சூரியதலாவ * மொனராகெல்ல * தொடன்வத்த * நஸ்கால தோட்டம் * பரவில்ல * தவலகம * மெதகம * வேகம * பிரிசன் - பதுல்ல
sk
事
131

Page 76
பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்களின் ஆடைஅணிகள்
க.ப.சிவம்
சாதாரண தொழில் நிலை ஆடைகள்
தோட்டங்களுக்கு வந்து குடியேறிய காலத்திலிருந்து பொதுவாகப் பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வேலைத்தலத்திற்கு செல்லும்போது அணியும் ஆடைகளைப் பொறுத்தவரை அன்று தொடக்கம் இன்று வரை ஒரே நிலையில் இருப்பதை அறியக்கூடியதாய் உள்ளது. ஆண்களைப் பார்க்குமிடத்து அவர்கள் இடுப்பில் நான்கு முழ பருத்தி நூலிலான கைத்தறி வேட்டிகள், மேலாடையாக அரைக்கை "கமிஸ்" என்று அழைக்கப்பட்ட சட்டைகள் அத்துடன் வட்டக் கழுத்துடைய பாடி என்று அழைக்கப்பட்ட சிறிய புயங்களோடு ஒட்டிய கைகளைக் கொண்ட மேலாடைகள் என்பனவற்றை அணிந்து வந்தனர். பெரிய கங்காணிமார்கள் பெரிய நீளக்கை பொத்தான் இடப்பட்ட மேற் சட்டைகளையும் எட்டு முழுப்பருத்தி வேட்டிகளையும் அணிந்தனர்.
தொழிலாளர்களின் தலையில் முண்டு அல்லது துண்டு என்று அழைக்கப்பட்ட நீளமான சிறிய பருத்தித்துணியால் தலையில் தலைப்பாகை கட்டுகிறார்கள். கங்காணிமார்களும் இவ்வாறே தலையில் தலைப்பாகை அணிந்துள்ளனர். குளிர் காலத்தில் ஆண்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கம்பளித் துண்டுகளால் தலைப்பாகை அணிவர். இதே போல வெளிநாட்டிலிருந்து விசேடமாக வரவழைக்கப்பட்டு தோட்ட நிர்வாகங்களால் இவர்களுக்கு வழங்கப்பட்ட முழுக்கை, அரைக்கைகளைக் கொண்ட மேலாடைகளையும் அணிந்து வந்துள்ளனர். அதிகமாகக் கங்காணிமார்களும், கணக்குப்பிள்ளைகளும், சில தோட்டத் தொழிலாளர்களும் கூட கம்பளித் துணியாலும் மற்றும் குளிர் பாதுகாப்பு துணியாலும் தைக்கப்பட்ட நீள கைகளைக் கொண்ட கருப்பு நிறக் கோட்டையும் அணிந்து வருகின்றனர்.
வேலைத்தளத்தில் பெண்களின் ஆடைகள்
பெண்கள் அன்று தொட்டு இன்று வரை பொதுவாக, ஒரேவித ஆடைகளை
அணிந்து வேலைத்தளத்திற்கு வருகின்றனர் எனலாம். ஆரம்ப காலம் முதல் எட்டு முழ பருத்தி சேலைகளும், கண்டாங்கி சேலைகளையும் அணிகின்றனர்.
132

இந்தச் சேலைகளைக் கட்டும்போது கணைக்காலுக்கு மேல் தான் கட்டுவார்கள். தேயிலைச் செடிகளில் புகுந்து வேலை செய்வதற்கு இலகுவாக இடுப்பில் பட்ங்குத் துணியை ஒரு துண்டு கயிறு கொண்டு கட்டுகிறார்கள். சிலர் இப்படங்கிற்குப் பதிலாகப் பொலிதீனைக் கட்டுவதும் உண்டு. ஆரம்ப காலத்தில் பெண்கள் மேல் சட்டை அணியும் முறை இருக்கவில்லை. தனியே சேலை மட்டும் தான் கட்டி வந்துள்ளனர். இன்று பொதுவாக எல்லாப் பெண்களும் ரவிக்கை அல்லது லவுக்கைகளையும் அணிந்து வருகின்றனர். தலையில் கொழுந்துக் கூடையைச் சுமப்பதற்கு இலகுவாகப் பழைய துணியினால் தலையை கட்டிக்கொள்கின்றனர்.
வீடுகளில் அணியும் ஆடைகள்
பொதுவாக குழந்தைப் பருவத்தில் ஆண், பெண் பாகுபாடில்லாது சிறிய பருத்தித் துணியால் தைக்கப்பட்ட ஆடைகளையே (சட்டைகள்) அணிந்து வந்துள்ளனர். அதனை நாம் இன்றும் காணக்கூடியதாய் இருக்கின்றது. இதனை விட நடைப்பருவத்திலுள்ள சிறுவர்கள் ஒரு சிறிய அரைக்கால் சட்டையும் அரைக்கை மேற்சட்டையும், சிறுமிகள் நீண்ட பாவடையும், மேற்சட்டையும், பருவமடைந்த பெண் பிள்ளைகள் பெரிதும் தாவணி என்ற அரைச்சேலைகளையும் அணிந்தனர். இன்றும் சில வீடுகளில் இப்பருவமடைந்த பெண்கள் இந்த தாவணி அணிவதையும் ஒரு சில பெண்கள் சேலைகளை அணிவதையும் வேறு சில பெண்கள் (முழங்கால் வரை) நீண்ட சட்டைகளை மட்டும் அணிவதையும் காணக்கூடியதாய் உள்ளது. திருமணம் முடித்த பெண்கள் பெரிதும் வீடுகளில் சேலைகளையே அணிந்து வந்துள்ளமை அறியக்கூடியதாய் உள்ளது.
இன்றும் பெரிதும் திருமணம் முடிந்த பெண்கள் சேலைகளை அணிவது தோட்டங்களில் பெரிதும் வழமையிலுள்ளது. இருப்பினும் ஒரு சில திருமணம் முடித்த பெண்கள் இன்று வீடுகளில் நீளமான பாவாடை சட்டை அணிவதும் காணக்க்கூடியதாய் உள்ளது. ஆண்கள் பொதுவாக எல்லோரும் வீடுகளில் சாரம், சேட் என்பதையே அணிகின்றனர். தோட்டப்புற இளைஞர்கள், யுவதிகள் பலரும் நாட்டின் ஏனைய சமூகத்தினரைப் போன்று கட்டைக்கவுன், கட்டைப்பாவாடை, ஜீன்ஸ், போன்றனவற்றை அணிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிறப்புத்தினங்கள்
பண்டிகைக் காலங்களில் அதாவது தீபாவளி, தைப்பொங்கல், புத்தாண்டு,
கிறிஸ்மஸ், போன்ற வைபவ காலங்களில் ஆண்களும், பெண்களும் அவரவர் வசதிக்கேற்ற பலவகை புத்தாடைகளை வாங்கி அணிந்து வந்துள்ளனர். சுமார்
133

Page 77
ஐம்பது ஆண் டுகளுக்கு முன் பெவிப் பொம் இந்தியாவிலிருந்து இப்பண்டிகைகளுக்காகத் தோட்ட நிர்வாகங்களே இவர்களுக்கு பருத்திச் சேலைகளையும், நான்கு முழ வேட்டிகளையும் இறக்குமதி செய்து வழங்கி வந்துள்ளன.
ஆண்களுக்கு வேட்டியும், தோளில் போடும் துண்டும். பெண்களுக்கு சேவையும், ரவிக்கைத் துணியும் தோட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டன. ஆனால் இன்று இவ்வாறு வழங்கப்படுவதில்லை. பெரிய கங்கானிமார்களும், கடை முதலாளிமார்களும், அவர் குடும்பத்தினர் அனைவரும் பண்டிகைக்கால ஆடைகளாகப் பட்டாடையும், சற்று உயர்ந்த ரக பட்டு வேட்டிகளையும், அணிந்து வந்துள்ளனர். இன்று இப்பண்டிகைக் காலங்களில் தோட்டங்களில் வழங்கப்படும் பண்டிகை முற்பணங்களைக் கொண்டு கடைகளில் புத்தாடைகளை வாங்கி அணிகின்றனர். இவ்வாடைகள் வழமையாக அணியும் ஆடைகளை ஒத்ததாகவே இருக்கின்றன. துணிகளின் ரகங்களும், தரங்களும் அவரவர் வசதி வாய்ப்பிற்கேற்ப தெரிவு செய்யப்படுகின்றன. திருவிழாக் காலங்களில் பொதுவாக வீடுகளிலும், ஆலயத்திற்கு செல்லும் போதும் பெண்கள் அதிகமாக மஞ்சள், சிவப்பு நிற சேலைகளையே அணிகின்றனர். இவையே மாரியம்மனுக்கு உகந்த நிறமென இவர்கள் கருதுவதே இதற்கு காரணமாகும்.
சடங்குகளும் ஆடைகளும்
வைபவவேளை அணியப்பெறும் ஆடைகள்
தோட்டங்களில் சமீப காலத்தில் தான் குழந்தையின் முப்பதாம் நாள் பிறந்த நாள் என விசேடமாகக் கொண்டாடப்படுகின்றது. இவ்வைபவங்களின் போது தோட்டத் தொழிலாளர் அவரவர் வசதிக்கேற்ற ஆடைகளை வாங்கி அணிகின்றனர். பணம் படைத்தவர்கள் நவீன ஆடைகளையும் இன்று அணிகின்றனர்.
ருதுசாந்தி வைபவம்
பெண்கள் ருதுவானவுடன் குறித்த பெண்ணை ஆண்கள் கண் படக்கூடாது என்றும், துடக்கு என்றும் கூறித் தனியாக மறைவான இடத்தில் அமர்த்துவார்கள். பின் தண்ணீர் ஊற்ற நல்லநேரம் பார்த்துவிட்டு வண்ணான் தாய்மாமி. அத்துடன் நெருங்கிய உறவினர்களை அழைத்து. அப்பெண்ணை மஞ்சள் நீர் கொண்டு நீராடச் செய்து, அக்குறித்த நேரத்தில் (ருது அடைந்த நேரத்தல்) அவள் அணிந்திருந்த ஆடையைத் துடக்கு ஆடை என்று கூறி வண்ணாத்திக்குக் கொடுத்து விடுவார்கள். பின் நீராடி முடிந்ததும் வண்ணான் கொண்டு வந்த சேலையை அணிவிப்பார்கள். இவ்வாறு பதினாறு நாள் வரை வண்ணானால் கொண்டுவரப்படும் சேலைதான் அணியப்படுகிறது. பதினாறாம் நாள்
134

காடிப்போட்டு கழிக்கும் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இந்நாளில் ஓரளவு டக்குக் கழிந்து விட்டது என்று கூறிப் புதிய ஆடையொன்று (சாதாரண சேலை) வாங்கி அணிவிப்பார்கள்.
தனைச் சிலர் தற்காலங்களில் ஒன்பதாம் நாளிலேயே செய்து விடுகின்றனர். இதன் பின் சிறந்த நாளைப் பார்த்து ருதுசாந்தி வைபவம் நடைபெறுகின்றது. இவ்வைபவத்திற்கு முதன் முதல் தாய்மாமனுக்கே பழம் பாக்கு வைத்து தனது மகளின் ருது சாந்தி வைபவத்திற்கு வரும்படி குறித்த பெண்ணின் பெற்றோர் அழைப்பர். அத்துடன் உற்றார். உறவினர் பலருக்கும் இவ்வழைப்பு விடப்படுகின்றது. இத்தினத்தில் தாய் மாமன் சீர் கொண்டு வர வேண்டுமாம், இம்மாமன் சீரில் அவ் ருதுசாந்தி வைபவத்திற்கு பெண்களுக்கு அணியவேண்டிய பட்டுச்சேலை, ரவிக்கை, பாவாடை என்பனவும் அடங்கியிருக்கும். தாய்மாமன் கொண்டுவரும் சேலையே அப்பெண்ணுக்கு அணிவித்து அவ்வைபவத்தில் :o சகல சடங்குகளும் இடம்பெறும். இதனைவிடவும் அப்பெண்ணுக்கு மாமன் முறையானவர்களும் இச்சீர் கொண்டுவரும் வழமை காணப்படுகின்றது. பின்னேர வேளையில் ஏனைய மாமன்மார்களின் சேலையும் அணிவிக்கப்படும்.
திருமண வைபவம்
திருமண வைபவங்களில் மனமகளுக்கு நிச்சயதார்த்த சேலை, பரிசச் சேலை, மாமன்மார் சேவை, திருவாதிரைச்சேவை, தாவி கட்டுகையில் அணிந்திருக்கும் றைச்சேலை, மறுவீடு போகும் சேவை என்பன வழங்குதல் அன்றும் இன்றும் இடம் பெற்று வருகின்றது. இச்சேலைகளின் தரம், ரகம் என்பன அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப அமையும், பெரும்பாலான தொழிலாளர் குடும்ப பெண்களுக்கு விலை குறைந்த மட்ட ரகமான தங்க நிற சரிகைகளைக் காண்ட சேவைகள், அவற்றுக்கேற்ற ரவிக்கைகள் தெரிவு செய்து வாங்கி அவற்றை மணமகளுக்கு அணிவிப்பார்கள். மாறாக இவர்களில் வசதி படைத்த சிலர் மிக விலை உயர்ந்த தங்கநிறச் சரிகைகளைக் கொண்ட சேவைகளையும் மற்றும் வண்ண முகப்புகளைக் கொண்ட காஞ்சிபுர சேலைகளையும் அவற்றுக்கேற்ற ரவிக்கைகளையும் வாங்கி அணிவிக்கின்றனர். இச்சேவைகளில் கறுப்பு, ஊதா நிறங்கள் தெரிவு செய்ய மாட்டார்களாம். இந்நிறங்கள் அணிவது திருமணத்திற்கு உகந்தது அல்ல என்று பரம்பரை பரம்பரையாக நம்பி வருகின்றனர். அத்துடன் தமது குல தெய்வங்களுக்குரிய நிறங்களையும் இத்திருமண சேலையாகத் தெரிவு செய்ய மாட்டார்களாம்.
திருமணத்தை உறுதிசெய்யும் நாளில் மணமகனின் வீட்டாரால் வழங்கப்படுவதே நிச்சயதார்த்த சேலையாகும். பெண்ணைத் திருமணத்திற்கு அழைத்து வரும்போது :: சேலை பரிசச்சேலை ஆகும். இதுவும் மணமகளின் வீட்டாரால் வழங்கப்படும். மணமகனின் தாய் மாமனாரால் வழங்கப்படுவது மாமன்
135

Page 78
சேலையாகும். தாலி கட்டும்போது மணமகள் அனிந்திருக்கும் சேவையே கூறைச் சேவை என்பர். கத்தோலிக்க பெண்கள் கூறைச்சேவையாக வெள்ளை நிறப்பட்டுச்சேவையை அணிகின்றனர்.
மணமகனைப் பொறுத்தவரை வசதி படைத்தவரானால் பட்டுவேட்டி, பட்டுச்சாவ்வை, பட்டுச்சட்டை என்பவற்றையும் வசதி குறைந்தவராயின் குறைந்த ரக பட்டுவேட்டி, மில்வேட்டி, மேற்சட்டைகள் என்பனவற்றை அணிவதும் இன்றும் வழக்கத்தில் உள்ளது. இப்போதைய திருமணங்களில் மணமகன் ஆங்கில உடைகளான நீண்ட காற்சட்டையும், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேற்சட்டைகளையும் அணிகின்றான். திருமணம் முடித்த பின்பு, குறிப்பாகத் தலைத் தீபாவளி, ஆடிப்பதினெட்டு, தைப்பொங்கல் போன்ற தினங்களில் மணமகளின் பெற்றோர் ஆடைகளை அன்பளிப்பாக வழங்கிக் கெளரவிப்பர்.
மரணச்சடங்கு
ஆண்கள் இறந்துவிட்டாலும் பெண்கள் இறந்துவிட்டாலும் முதலாவதாக சிறிய வெள்ளைநாடாத் துணியில் மஞ்சள் பூசப்பட்டு வாயைப் பொத்திக் கட்டப்படுகின்றது. இது "வாய்க்கட்டு" எனப்படும். இதன் பின் சடலம் குளிப்பாட்டப்பட்ட பின் ஆண்கள் எனில் அவர்கள் வழக்கமாக அணியும் புதிய வேட்டி, மேற்சட்டை, சால் வை. கோட்டு, நீண்ட காற்சட்டை அணிவிக்கப்படுகின்றன. சடலம் அடக்கம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியே கொண்டு செல்லப்படும்போது பிறந்த வீட்டு கோடி என்று கூறப்படும் இறந்தவரின் இரத்த உறவு கொண்டவர்கள் புதிய வேட்டிகளை பிரேதப்பெட்டியின் மீது வைப்பார்கள். இறந்தவரின் மைத்துனர்களும் இவ்வாறே கோடி இடுவார்கள்.
இதன் பின் பிரேதம் அடக்கம் அல்லது தகனம் செய்யப்படும் இடத்தில் முழத்துண்டு என்று அழைக்கப்படும் புதிய வெள்ளைத் துணித்துண்டொன்று பிரேதப் பெட்டி மீது வைக்கப்படுகின்றது. இதன்பின் கருமகாரியங்கள் நடைபெறும் போது அன்றைய தினம் பகல் உணவிற்கு பின் இறந்தவரின் பிறந்த வீட்டு, புகுந்த வீட்டு உறவினர்கள் இறந்தவரின் குடும்பத்தினருக்கு வேட்டி, சட்டை, சேலை என்பனவற்றை புதிதாக வழங்குவர். இப்போது நீண்ட காற்சட்டைகளும் இவ்வாறு வழங்கப்படுகின்றது. கணவன் இறந்துவிட்டால் கருமகாரியத்தன்று அதிகாலையில் நடைபெறும் சமயச் சடங்கின் போது கணவனை இழந்த மனைவிக்கு திருமணச்சேலையும் ரவிக்கையும் அணிவித்து, சமயச் சடங்கிற்குப்பின் புகுந்த வீட்டாரால் வழங்கப்படும் வெள்ளைச் சேலையை அணிவிப்பர். கணவனை இழந்த விதவைகள் பெரும்பாலும் வெள்ளைச் சேலைகளை அணிவதே மரபுவழிப் பழக்கமாக இருந்தபோதும் இப்பொழுது விதவைகள் பலரும் பல நிறச் சேவைகளையும் அணிந்து வருகின்றனர்.
3.

இதேபோல் பெண்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கும் சடலத்தைக் குளிப்பாட்டிய
பின் அவர்கள் வழக்கமாக அணியும் சேலை, ரவிக்கைகளையே புதிதாக அணிவிக்கின்றனர். சடலங்களை அடக்கம் செய்வதற்கு எடுத்துச் செல்ல முன் அவர்களது கணவன்மாருக்கு புகுந்த வீட்டு. இறந்த வீட்டு சகோதரர்களும், மைத்துனர்களும் புதிய வேட்டிகளையும், சிறிய சால்வைகளையும் இறந்தவரின் தலைமீது போர்த்துவார்கள். அடக்கம் செய்யும் இடத்தில் முழத்துண்டு போடப்படும். கருமகாரியம் நடைபெற்று முடிந்தபின் குறிப்பிட்ட சில சாதியினைச் சார்ந்தோரிடையே, மனைவியை இழந்த கணவனுக்கு மச்சான் தலைப்பாகை கட்டுதல் என்ற சடங்கு இடம்பெறும், ஒரு மரபு வழிச் சடங்காக மைத்துனர்களினால் வெள்ளை வேட்டியால் தலைப்பாகை கட்டப்படும். இங்கும் மனைவியை இழந்த கணவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மைத்துனர்களும் மாமன்மார்களும் புதியவேட்டி, சேலை மற்றும் இன்றைய நவீன உடைகளை வழங்குவர்.
சமூக அந்தஸ்தும் ஆடைகளும்
தோட்டங்களில் பூசாரிமார்கள் வெள்ளைநிற அல்லது காவி நிற வேட்டிகளையும், இடுப்பில் சிவப்பு, பச்சை நிறத்துண்டுகளையும் அணிவது வழமையாகவுள்ளது. காரணம் காளி, மாரி, போன்ற தெய்வங்களுக்கு இந்நிறம் உகந்தது என்ற நம்பிக்கையாகும்.
ஆடைகளும் சமுக ஊடாட்டங்களும் தோட்டங்களில் அநேக இடங்களில் சில பெண்கள், ஆண்களின் ஆடைகளான சாரம், சேட் என்பனவற்றை வீட்டில் பெண்கள் ஆடைகளாக பாவிக்கும் வழமை காணப்படுகின்றது:
தகவலைச் சேகரிக்க உதவியோர் பற்றிய விபரம்
திரு. ஆர். சுப்பிரமணியம் - ஆசிரியர், மாபெரித்தன்னை, பல்லேகல கவிஞர் வேலுசாமிதாசன் - (வயது ஐம்பத்தாறு) பட்டியாகம தோட்டம், தெல்தொட திருமதி வேலுசாமிதாசன் - (வயது ஐம்பது) பட்டியாகம தோட்டம், தெல்தொட திரு. ஆர். கருக்கள் - (எண்பது வயது) நூல்கந்துரத் தோட்டம், கலகா திரு. ஆர். ராஜகோபால் - ஆசிரியர் - பூண்டுலோயா திரு. கே. கருப்பையா - உடுவலைத் தோட்டம், கண்டி
திரு. எஸ். முத்துசாமி - அந்தான தோட்டம், கண்டி
திரு. கே. ராமசாமி - மாயாவ, கண்டி
திரு. எம். கதிர்வேல் - டக்வாரி தோட்டம், றங்கலை
திரு. எஸ். அழகையா - மடுன்கலை தோட்டம், மடுன்கலை
திரு. எம். மாளிக்கம்பிள்ளை - குளிராட்டி, உண்ணாஸ்கிரிய திரு. கே. சுப்பிரமணியம் - கூம்பியாங்கொட, மாத்தளை செல்வி. எம். தெய்வயானை - நூல்கத்துர, தெல்தோட்ட திரு. குறிஞ்சித் தென்னவன் - லபுக்கெல்லை, நுவரேலியா

Page 79
이
பெருந்தோட்ட இந்திய வம்சாவளி மக்களின் பண்பாட்டுப் பின்னணியோடிணைந்த கலை கைவினைப் பொருட்கள்
க.ப.சிவம்
மக்கள் வாழும் தோட்ட லயன் அறைகளின் சுவர்களிற் கண்ணாடிசி சட்டமிட்டும் சட்டமிடப்படாமலும் தொங்கவிடப்பட்டுள்ள விநாயகள், சுப்பிரமணிய, மாரியம்மன், காளி, அனுமன், பூரீராமர், சீதாப்பிராட்டி, சிவபெருமான், பார்வதி, பூரீகிருஷ்னர், பூரீலட்சுமி, சரஸ்வதி. இயேசுநாதர், அன்னைமரியாள் போன்ற தெய்வப் படங்களை இன்றும் காணலாம். இப்படங்களின் அடியில் ஆணியறையப்பட்டுப் பலகைத் தாங்கிகள் மீது ஊதுபத்தி, குடம், சாம்பிராணி, விபூதி வைக்கும் சிறிய பித்தளைத் தாம்பாளம், தகரத்திலான தூபக்கால், மயிலிறகுகள், சந்தனக் கும்பாக்கள். பித்தளையிலான சிறிய குத்துவிளக்குகள், சிறிய தண்ணிர்ச் செம்பு என்பனவும் வைக்கப்பட்டிருக்கும். சில படங்களின் மீது பூமாலைகளும் இடப்பட்டிருக்கும்.
கங்காணி, கணக்கப்பிள்ளை ஆகியோரது வீடுகளிற் கண்ணாடிச் சட்டமிடப்பட்ட கூண்டுகளிற் தெய்வப்படங்களும் தெய்வ உருவச்சிலைகளும் பெரிய குத்துவிளக்குகள், பித்தளை, எவர்சில்வர். கர்ப்பூரத் தீபாராத்தி என்பனவும் கானப்படும். நகர்ப்புற இல்லங்ளிற் தெய்வப்படங்கள். பூசைப்பொருட்கள். பூமாலைகள் என்பன வைப்பதற்காக எவர்சில்வர்.பித்தளைத் தாம்பாளங்கள் என்பனவும் சில வீடுகளில் இந்துத் தெய்வங்களின் படங்களோடு கிறிஸ்தவ தெய்வங்களினது படங்களும் இருக்கக் காணலாம்.
தோட்டப்புற வீட்டுத்தளபாடங்கள்
லயன்களிற் தொன்றுதொட்டு ஒலைப்பெட்டிகள், அஞ்சறைப்பெட்டி அல்லது தைலாம்பெட்டி அல்லது தாயிலாப்பெட்டி என்பன உடுதுணி, ஆபரணங்கள், உணவுப்பொருட்கள் மற்றும் முக்கிய பொருட்களான சீப்பு. கண்ணாடி முதலியவற்றை வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டு வந்துள்ளன. முடியிடப்பட்ட மரப்பெட்டிகள், (பல அறைகள் கொண்டவை) உடுதுணிகள், நகைகள், சீப்பு. சோப்பு. கண்ணாடி, குங்குமம், முகப்பவுடர், பலசரக்குச் சாமான்கள், உணவுப்பொருட்கள் என்பனவற்றைப் பாதுகாக்க உபயோகிக்கப்பட்டன. இவை தவிர வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ட்ரங் பெட்டிகளிலும், மேல் மூடியையும் 3 பூட்டுகளையும் கொண்ட 4x2 அளவிலான
138

தகரப்பெட்டிகளிலும் உடுபுடவை நகைகள், அலங்காரப்பொருட்கள், (சீப்பு, சோப்பு. கண்ணாடி) என்பனவற்றைப் பத்திரப்படுத்தி வைத்தனர்.
சமையற்பாண்டங்களும், வேறு பாத்திரங்களும்
உணவு சமைப்பதற்கு மட்பாண்டங்களே உபயோகிக்கப்பட்டன. இன்று அலுமீனியத்திலான சட்டி பானைகள், தாச்சிகள், குவளைகள், தண்ணிக்குடங்கள். கோப்பைகள், பீங்கான்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. 1960ம் ஆண்டுவரை பெரும்பாலான தொழிலாளர்களின் வீடுகளில் வெண்கலக்கும்பாக்கள், சட்டிகள் என அழைக்கப்படும் கனமான ஈயத்தாலான தட்டு என்பன உணவு பரிமாறி உண்பதற்கும், வெண்கலப் பித்தளை லோட்டாக்கள், தம்ளர்கள் அல்லது குவளைகள் தண்ணி அருந்துவதற்கும் பயன்படுத்தப்பட்டன. செம்பு, வெண்கல ஈயக்குடங்கள், செம்புகள், சருவச்சட்டிகள், அண்டா, குண்டாக்கள் என்பன தண்ணிர் வைத்துக் கொள்வதற்கும் திருகு மூடிகளைக் கொண்ட வெண்கல துக்குச் செம்புகள் வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டன. உணவைச் சூடாறாமற் பாதுகாக்கத் தூக்குப்பேனிகளைப் பயன்படுத்தினர். நீரைக் கொதிக்க வைப்பதற்கும், வைபவங்களில் உணவு சமைப்பதற்கும் பித்தளை, வெண்கலப் பாத்திரங்கள், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சருவச்சட்டிகள், சிறிய சருவச்சட்டிகள், அண்டாக்கள், குண்டாக்கள் என்பனவற்றைப் பயன்படுத்தினர். வெண்கலம், பித்தளை அல்லது ஈயத்திவான பல்வேறு வடிவங்களைக் கொண்ட பேணிகள், கரண்டிகள் என்பன கறிசமைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன. இன்று பொதுவாக எல்லா வீடுகளிலும் எவர்சில்வர் பாத்திரங்களே உபயோகத்தில் உள்ளன. சில வீடுகளில் மாத்திரமே சம்பிரதாயத்துக்காகச் சில மட்பாண்டங்களும் குறிப்பாகச் சோறு சமைப்பதற்கும் ரசம் வைத்துக்கொள்வதற்கும் இரண்டொரு பானைகளும் உள்ளன.
பூசைப் பொருட்களை எடுத்துச் செல்ல வெண்கல. பித்தளை, தாம்பாளத்தட்டுகள் உபயோகத்தில் இருந்துள்ளன. 1972-1976 ஆண்டுகளுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட உணவுப்பஞ்சத்தின் விளைவாகத் தோட்டப்புறங்களிற் பாவனையிலிருந்த பித்தளை வெண்கலப்பாத்திரங்களும் ஏனைய பொருட்களும் விற்கப்பட்டன. முன்பு நாற்சதுர வடிவிலான சிறிய பித்தளை வெண்கலப் பெட்டிகள் வெற்றிலைப் பெட்டிகளாகக் கையாளப்பட்டன. பித்தளையிலான சிறிய வட்ட டப்பாக்களை சுண்ணாம்பு வைப்பதற்கு உபயோகித்தனர். தோட்டப் பெண்களின் இடுப்பில் வெற்றிலை, சுண்ணாம்பு, பாக்குவெட்டி, அடங்கிய ஒரு சிறு சுருக்குப்பையைக் காணலாம், ஆண்கள் கூட இவற்றை உபயோகித்துள்ளனர். இன்று இவை புழக்கத்தில் இல்லை. பதிலாக, சிறிய எவர்சில்வர் வெற்றிலைத் தட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. வெற்றிலை, பாக்குவெட்டி போன்றவற்றை வைப்பதற்கு அட்டைப்பெட்டிகள், பிஸ்கட் பெட்டிகள் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர்.
39

Page 80
வீட்டுத் தளபாடங்கள்.
லயன் அறைகளில் ஆரம்பத்திலிருந்தே உட்கார்ந்து கொள்வதற்கும் படுத்துக்கொள்வதற்கும் நீண்டதொரு பலகை வாங்கு காணப்பட்டது. இப்போது ஏறக்குறைய எல்லா வீடுகளிலும் மரப்பலகையிலான கட்டில்களைக் காணலாம். அதே போன்று உடுபுடவைகள் வைப்பதற்கும் அலங்காரப்பொருட்களை வைப்பதற்கும் சூட்கேஸ் பெட்டிகள், கென்வஸ் பெட்டிகள், துணிப்பைகள் என்பனவற்றை உபயோகிக்கின்றனர். மண்ணாலான திட்டின் மீது வைக்கப்பட்டுள்ள அம்மியும் குழவியும், திரிகைக்கில், உரல், உலக்கை, ஆட்டுக்கல் என்பனவும் சமயலறை உபகரணங்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆட்டுக்கல், திரிகைக்கல் என்பன பொதுவாகக் கங்காணி, கணக்கப்பிள்ளை, மற்றும் வசதிபடைத்தோர் வீடுகளிலேயே காணப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட பனையோலைப்பாய்கள், கோரைப் புற்களாலான பாய்கள், படுக்கை விரிப்புகள் கம்பளிகள், சேவைகள், வேஷ்டிகள் என்பனவே தரையில் அமர்வதற்கு உபயோகிக்கப்பட்டன. பெண்கள் சமையல் வேலைகளைச் செய்யும்போது பலகைக் கட்டைகள் என்ற சிறிய பலகை ஆசனத்தில் அமர்ந்தே வேலை செய்துள்ளனர். இன்று அநேகமான தொழிலாளர் வீடுகளில் இரண்டொரு நாற்காலிகள், முக்காவிகள் உள்ளன.
அலங்காரப் பொருட்களும் அணிகலன்களும்
பெண்களின் அலங்காரப் பொருட்கள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்டன. எருமைக் கொம்புகளிலான சிறிய பெரிய சீப்புகள், பெண்களின் அலங்காரப் பொருட்களில் அடங்கும். பல் இடுக்குகளுக்குள் சிக்கிக்கொள்ளும் உணவுத்துகள்களை அகற்றும் பித்தளை, வெண்கல பற் குத்திகளையும் காதுகளில் அழுக்குகளை அகற்ற வெண்கலக் காதுகுத்திகளையும் முன்னர் பாவித்துள்ளனர். இன்றும் சில இடங்களில் இவை காணப்படுகின்றன. முன்னர் தலைக்கிளிப்புகள், பொட்டு வகைகள், றப்பர் வளையல்கள், கண்ணாடி வளையல்கள் போன்றவற்றை அணிந்த இவர்கள் இப்போது கண்ணாடி இறப்பர் வளையல்கள், பிளாஸ்டிக் பிரளப்கள் (துரிகைகள்), பிளாஸ்டிக் சீப்புகள், ஜிப்னிகள், டிஸ்கோ காதணிகள், தங்க நகைகள் குண்டஸ் ஜிமிக்கி, பட்டா ஜிமிக்கி போன்றவற்றையும் பயன்படுத்துகின்றனர்.
பாரம்பரியமாக மலையகப் பெண்கள் தங்கம் அல்லது பொன் மயிர்மாட்டி, கொப்பு, விசிறி, முறுகு, ஒன்னப்பு. குருட்டுத்தட்டு. ஓலைமாட்டல், ராசிக்கொப்பு. தண்டட்டி, நாகவடம், பூச்சிக்கூடு. தோடு, லோலாக்கு, மூக்குகளின் இருபுறமும் தனிப்பொன் மூக்குத்திகள், ஒருபுற மூக்குத்திகள், முக்காந்தண்டில் பிலாக்கு
14()

பொன்ற ஆபரணங்களை அணித்தனர். தங்கம், பொன். பித்தளை வளையல்கள், கண்ணாடி வளையல்கள் என்பனவற்றைக் கைகளில் அணிந்தனர். மஞ்சள்கயிறு, கறுப்புக்கயிறு. கருமனி மாலை, குன்றி மணிமாலை, மஞ்சாடிக்கொட்டை மாலை. தங்கச்சங்கிலி, தாடிலச்சரகு, தங்கப்பதக்கம், தாலிமணி, தாலிக்கொடி, தாலிப்பொட்டு, அரைக்கம்பி, தாவிக்கம்பி போன்ற தங்கத்திலான கழுத்தணிகளையும் அணிந்து வந்தனர். விரல்களிற் தங்கம், பித்தளை, பொன், வெள்ளி என்பனவற்றிலான மோதிரங்களை அணிந்து வந்தனர். கெண்டைக் கால்களில் வெள்ளி மணிகள், கம்பிகள், சங்கிலிக் கொலுசுகள் என்பனவற்றையும், புயத்தில் வெள்ளியிலான பீலி என்பனவற்றையும் அணிந்தனர்.
திருமணம், ருதுசடங்கு போன்ற வைபவங்களிற் பொன், தங்க நெற்றிப்பட்ட ராக்கொடி. ஜிமிக்கி, மாட்டல், முக்குத்தி, ஒட்டியானம், காசுமாலை, அட்டியல், பொற்சரடு, கைவிரல்களில் மோதிரங்கள், கெண்டை க்காவிற் பாத சலங்கைகளையும் கால்விரல்களில் மிஞ்சி, வெள்ளி என்பனவற்றையும் அணிந்தனர். இப்பொழுது பெரும்பாலானவர்கள் வைபவங்களுக்கு வாடகைக்கு விடப்படும் இடங்களில் இருந்து வாங்கி இவற்றை உபயோகிக்கின்றனர். இத்தகைய நகைகள் அனைத்தும் போலிநகைகளாக வாடகைக்கு விடப்படுகின்றன. பாரம்பரிய நகைகளை இன்று விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சில தோட்டங்களில் மட்டும், அதுவும், வயது முதிர்ந்த பெண்களின் காதுகளில் மட்டுமே காணக்கூடியதாக உள்ளது. 1972 - 1975 காலப்பகுதியில் இடம்பெற்ற பஞ்சத்தின் போது இந்நகைகள் அனைத்தையும் தொழிலாளர்கள் விற்றுவிட்டதாகத் தெரிவித்தனர்.
ஆயுதங்களும் கருவிகளும்
தோட்டத் தொழிலாளர்களின் இருப்பிடங்களிற் கொழுந்துக் கூடைகள், படங்குகள், சாக்குகள் மட்டக்கம்புகள், கத்திகள், தேங்காய்த்துருவிகள், தகரவாளிகள், பிளாஸ்த்திக் கொள்கலன்கள், மண்வெட்டி, சுரண்டி, கவ்வாத்துக் கத்தி என்பனவற்றையும் காணலாம். 1958 ம் ஆண்டுக்கு முன்பு இங்கு வளையல் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இந்திய வளையற் செட்டிகள் தோட்டங்கள் தோறும் சென்று பெண்களுக்கான கண்ணாடி, வளையல்கள், சீப்பு, சோப்பு, வெள்ளி மிஞ்சுகள். குங்குமம், நெற்றிப்பொட்டு என்பனவற்றை நேரடியாக விற்பனை செய்து வந்தனர்.
இன்றைய பெண்களின் அணிகலன்கள்
இன்று நகர் சார்ந்த மக்களைப்போலவே தோட்டப்புறப் பெண்கள் மத்தியிலும் நவநாகரீக டிசைன்களிலான ஜிப்சி, டிஸ்கோக் காதணிகளும் ஜிமிக்கிகளும் பயது முதிர்ந்த பெண்களின் காதுகளிற் கல்பதிக்காத தோடுகள், கைகளில் மோதிரங்கள். ஒரு சிலரின் கைகளில் தங்க வளையல்கள் உட்பட பிளாஸ்திக்
|4||

Page 81
வளையல்கள், தங்க முவாம் பூசப்பட்ட பித்தளை வளையல்கள் என்பனவும் உபயோகத்தில் உள்ளன. சிலர் போலி பாசி மணிமாலைகளையும் தங்கம் சங்கிவிகளையும் கழுத்தில் அணிந்துள்ளனர். இளம்பெண்கள் பொதுவாகக் காதுகளிற் பட்டாஜிமிக்கி, குண்டல ஜிமிக்கி என்பனவற்றை அணிகின்றனர்.
ஆண்கள் பாரம்பரியமாக இடுப்பில் அரணாக்கொடி (அரை ஞாண் கொடி) என்ற வெள்ளியிலான ஒரு சங்கிலியையும் சிறுமிகள் அரை முடி என்ற வெள்ளியிலான கம்பியில் மாட்டப்பட்ட அணியையும் அணிந்திருந்தனர். ஆண்கள் காதுகளிற் கல் பதித்த பொன், தங்க கடுக்கன்களையும், கால் விரல்களில் வெள்ளி மிஞ்சுகளையும் கைவிரல்களில் மோதிரங்களையும் அணிந்திருந்தனர். இன்று அரணாக்கொடி, அரைமுடி எல்லாம் அருகிவிட்டன. நவநாகரிக அணிகலன்களே பலராலும் அணியப்படுகின்றன. அலங்காரங்கள். தோரணவகைகள் மரணச்சடங்குகளில் ( திருமணமாகாதவராயின்) குலை ஈனாத வாழைக்கன்று. எருக்கிப் பூ என்பன பயன்படுத்தப்படும், திருவிழாக்கள் திருமணங்கள் மற்றும் சுபகாரியங்களுக்குக் கும்பம் வைப்பதற்கு தேங்காய் உபயோகிக்கப்படும் , திருவிழா அல்லது திருமணப் பந்தலுக்கு தென்னங்குருத்தோலைகள், மாவிலை பூலாப்பூ அல்லது பொங்கல்பூ, மஞ்சளுடன் சுடிய பச்சை மஞ்சள் செடி, கரும்பு, செங்கரும்பு, துளசி, கமுகு, கித்துள். மீனாப்புல், அறுகம்புல், மூங்கில், பூவரசு, அரசு. முள்முருங்கை என்பன பொதுவாகப் பாவிக்கப்படுகின்றன. வீடு மெழுகுவதற்கும் முற்றத்தில் தெளிப்பதற்கும் பசுச்சானம் கையாளப்படும்.
கோலமிடுவதற்கு அரிசிமா, கோதுமை மா. வண்ணக்கலவைகள் சுண்ணாம்புத்தூள், தேங்காய்ப்பூ என்பனவும் சுவர்களுக்கு வெள்ளையடித்தலுக்கு சுண்ணாம்பும் பயன்படுத்தப்படுகின்றன. சில வியன் காம்ராகிகளில் சுவர்களுக்கு ஒருவித மஞ்சள் சமராவும் பூசப்படுகின்றது. பொங்கற் காலங்களில் வளர்ப்பு மிருகங்களை அலங்கரிக்க சாயம், நீலம் என்பன பயன்படுத்தப்படுகின்றன. கமுகம்பூ, தென்னம்பூ, மல்லிகைப்பூ, செவ்வரத்தம்பூ அரளிப்பூ செவ்வந்திப்பூ கனகாம்பரம் என்பனவும் மணவறை அலங்காரம் தொடக்கம் கோயில் அலங்காரம், சுபமங்கள அலங்காரம், என்பவற்றிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கிரகப் பிரவேசம் அல்லது புது வியாபாரம் தொடங்கும் போது கயிற்றில் கட்டப்பட்ட பூசனிக்காய் முகப்பில் தொங்கவிடப்படுகின்றது. பசுச்சாணம், மஞ்சள்தூள் என்பன மதச்சடங்குகளிற் பிள்ளையார் பிடிப்பதற்கும் மஞ்சள் தெளிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. பாக்கு மரத்தடியினால் சிரட்டையை கொண்டு உணவு பரிமாறுவதற்கு அகப்பைகளையும் இவர்கள் தயாரிப்பர் இக்காலப்பகுதியில் பிளாத்திக்கிலான பொருட்களைச் சகல தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்.
மாத்தன்ன, ரத்தோட்டை பகுதிகளிற் தருப்பைப் புல்லைக்கொண்டு பாய் TTT T TT THLSSSY CLCLCCL0LaS YLC L SYLC இடங்களிற்
142

를 를
든 三
ES 를
படம் 1: வீட்டில் உணவுப் பொருட்கள், உடுதுணிகள், நகை நட்டுக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொண்ட தயிலாப் பெட்டி (மரப்பலகை) - மகியாவை வீரன் வீட்டில்
三
படம் 2: உடுதுணிகளையும் நகைநட்டுக்களையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப்பயன்படும் டிரங் பெட்டி தகாத்தாலானது

Page 82

படம் 3: வெண்கல, பித்தளைப் பாத்திரங்கள், குடம், பானைகள், கும்பா, மேவளி. தாம்பாளம், வட்டா, வெற்றிாலத்தட்டு, பூச்சாடி, செப்புப் பா:ன. காசுப் பானை என்பன. (மகிபாவ ஜி. வீரன் இல்லம்)
를
畫
ܒ
- -
劃
படம் 4 உசாவு உண்பதற்குப் பயன்படுத்திய வெண்கல கும்பாவட்டில் (ாகியாவ ஜி. வீரன் வீட்டில்)

Page 83

படம் 5: குடம், சருவம், தாம்பூலத்தட்டு, குண்டான், காஸ்பானை, வெற்றிலைத் தட்டு, எச்சில் பணிக்கம்

Page 84

களிமண்ணைக்கொண்டு தமக்குத் தேவையான சட்டி பானைகளைத தயாரிக்கின்றனர். கொழுந்தெடுக்கும் கூடைகள் மண்னன்ஞம் கூடைகள், கோழிக் கூடைகள், போன்றவற்றைச் செய்வதற்கு மூங்கில், பிரம்பு போன்றவற்றைத் தலவாக்கொல்லைப் பகுதி மக்கள் பயன்படுத்துகின்றனர். சுமார் முப்பது குடும்பத்தினர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஹேவாஎட்ட முல்லோயா, ஒப், ரொக்வூட் ஆகிய இடங்களிற் கூடை பின்னும் தொழிலிற் பலர் ஈடுபட்டுள்ளனர்.
உரல் உலக்கைகள் போன்றவற்றைத் தோட்டங்களிற் தொழிலாளர்களே தயாரித்து மற்றையோருக்கும் விற்பனை செய்கின்றனர். இது எல்லாத் தோட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் தொழிலாகும். கருங்காவி, பலா கித்துள் போன்ற மரங்களை உரல், உலக்கை என்பன தயாரிக்கப் பயன்படுத்துவர். கண்டி நாவலப்பிட்டி, தலவாக்கலை, அட்டன், மாத்தளை போன்ற இடங்களிற் கோயில் அலங்காரங்களுக்கு விசேடமாக இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விசேட கலை வேலைப்பாடு கொண்ட மகர தோரணம், மாலைகள் என்பன கையாளப்படுகின்றன. வண்ணக்காகிதங்கள், வன்னாக்காகிது மாலைகள் என்பனவும் அலங்காரங்களுக்கும் தோரணங்களுக்கும் பயன்படத்தப்படுகின்றன. சிறிய மண்சிட்டிகளும் இரண்டாகப் பிளக்கப்பட்ட பப்பாசிக் காய்களும் குரும்பையின் அரைப்பாதியும், கார்த்திகைத் தீபக் காலங்களிற் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெள்ளைத்திரிகள் ஏற்றப்பட்ட விளக்குகளாகப் பாவிக்கப்படுகின்றன. தோட்டத்தொழிலாளர்கள் சிலரின் வீடுகளிற் சுவரில் மரக்கட்டையில் மான்தலை வடிவமைத்து மான் கொம்புகளை அதிற் பொருத்தி அழகுக்காக மாட்டியுள்ளார்கள். கண்டி பல்வேகம அம்பக்கோட்டையில் தென்னந்தும்பு மூலம் தும்புத்தடி, கயிறு, மரவேலைகள் மரச்சிற்ப வேலைகள் இராமச்சந்திரன் என்பவராலும் வேறு சிவராலும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு பூச்சாடி என்பனவும் செய்யப்படுகின்றன.
தொட்டத்தொழிலாளர்களின் சமையலறைப் பொருட்கள்
ப்ேபை வைக்க சிரட்டையை உபயோகிப்பர். ஒரு மாதத்தின் பின்னர் உப்புச்சிரட்டையை சுற்றிவர உப்பு பூத்திருக்கும். மோர் கடைவதற்கு மத்து வேதிதிருப்பர் வடிதட்டுகள் மூங்கிவைக் கொண்டு தயாரிக்கப்படும். தென்னைமரத்தில் உள்ள பன்னாடையைப் பல தேவைகளுக்குப் பயன்படுத்துவர். பிட்டு அவிப்பதற்கு மூங்கிற் குழாயைப் பாவிப்பர். அதனை அபுப்பாகத்தில் பானையில் ஆவி வெளியேறாதபடி கயிறு துணிகளாற் சுற்றிக்கட்டுவர். இடியப்பம் பிழிவதற்கு இருபக்கமும் கைப்பிடிகள் கொண்ட மரத்தாற் செய்த சிறு உரலை உபயோகிப்பர். சோறு வடிப்பதற்கும் பித்தளைத் தகட்டிவான
பு-தட்டை உபயோகிப்பர்,

Page 85
կ0]
மலையக ஆற்றுகைக் கலைகள்
மாத்தளை வடிவேலன்
மலையகத்தில் கோப்பி, தேயிலை, தோட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னரே தமிழ் மக்கள் வாழ்ந் திருந்ததாகக் கூறப்படுவதுண் டெனினும் அக்காலத்தையொட்டிய தனித்துவமான ஒரு கிவைப் பாரம்பரியத்தைக் காணமுடியாதுள்ளது. ஆனால் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்குப் பின்னர் குடியேறிய மக்களின் வாழ்க்கையில் செழுமையான சுவைப் பாரம்பரியப் பண்பாட்டுக் கோலங்களை நாம் கானக்கூடியதாகவுள்ளது.
மலையகத்தில் வந்து குடியேறியோ தம் பாரம்பரிய தெய்வ வழிபாடு, கலை இசை நடன மரபுகள் என்பனவற்றைத் தம்முடனே கொண்டு வந்தனர். மலையக் கலை பண்பாட்டு அம்சங்கள் தென்னிந்திய கலை பண்பாட்டு அம்சங்களின் தொடர்ச்சியாகவே காணப்படுகின்றது. மலையத்தில் குடியேறியோர் விவசாயத் தொழிலாளர் உட்பட ஏனைய தாழ்த்தப்பட்ட சாதிகள் என்று குறிப்பிடப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்தோரே அதிகமானோர் ஆவர்.
தம் கடும் உழைப்பால் காடுகளை அழித்து பசுமையான தோட்டங்களையும், கற்பாறைகளைக் குடைந்தும் ரயில் பாதைகளையும் அமைத்த இவர்கள், ஓய்வின்றி இரவு பகலாக உழைத்த போதும் தம் கஷ்டங்களைக்கூட தண்ணிக் இதுத்துகு ச்சி தவிவை சித்தம் கேட்டிகு ச்சி என்றும் கூடைத் தலைமேலே கோவிவச்ச அம்மாடு மண்டை மடியூகட்டும் மாறாதச் சம்மாடு என்றும், குர் ரியோ கும் ரி கோப்பிக் காட்டு என்றும் கலாநயத்தோடு வெளிப்படுத்தியவர்கள்.
"கண்டி ஒரு காதம் கதிர் கொழும்பு முக்காதம் முக்காதம் போனவரு எக்காலம் திரும்பு வாரோ .
ஆத்தோரம் கொந்தரப்பு அது நெடுகவல்லாரை வல்லாரை வெட்டியல்லோ என் வல்லமை குறைஞ்சிருச்சி
|

றப்பரு மரமானேன் நாலு பக்க வாதானேன் இங்கிலீசுக்காரனுக்கு ஏறிப்போகக் காரானேன் சுத்தி சவுக்கு மரம் சூழ்ந்ததொரு மாசிமுட்டம் இருட்டடைஞ்ச மன்னனுக்கு எந்த மலை கொந்தரப்பு? அந்தா தெரியுதடி உங்க
அண்ணன் கொன்ன மலை
என்ற தம் அவலங்களை நாட்டார் பாடலாக நயம்படப் பாடியவர்கள். இவ்வாறு இவர்களுடைய இன்பங்கள் இன்னல்கள் எல்லாம் இசையாகவும் ஆட்டங்களாகவும், கூத்துகளாகவும் மலர்ந்துள்ளன. தெய்வபக்தி, கடின உழைப்பின்மீது கொண்டுள்ள பற்று, எவ்விதமான சவாலையும் நம்பிக்கையோடும் நாணயத்தோடும் எதிர்கொள்ளும் வன்மை, சோகம், வீரம், சிருங்காரம், பயம், பாசம், விசுவாசம் ஆகிய பண்புகளையெல்லாம் இவர்களின் இக்கலாபூர்வமான வெளிப்பாடுகளில் நாம் தரிசிக்க கூடியதாயுள்ளது.
I
இசை, இசைக் கருவிகள்
கலைகளில் முதன்மையான இசை மலையக மக்களின் வாழ்க்கையில் பெற்றிருக்கும் முதன்மையும், முக்கியத்துவமும், குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெருந்தோட்டத்துறையைச் சேர்ந்த தமிழர் மரபில் சில தனித்துவமான இசைக்கருவிகள் வழக்கிலிருப்பது பெருமைக்குரிய விடமாகும். யாழ், வீணை, தம்பூர், சுரகெத்து, சுரபத்து, துங்கினா. வயலின், புல்லாங்குழல், நாகசுரம், ஒத்துமகுடி, சங்கு, திருச்சின்னம், பூரி, எக்காளம், கொம்பு, கைவினை எனப்படும் சிறிய நாற்சுரம், மத்தளம், தவில், சுங்கிரா பங்சமகவாத்தியம், கிடிதிட்டி, உடல்ரகரா, டமாரா டவண்டை, சூரியப்பிறை, சந்திரப்பிறை, உடுக்கை பம்பை, தமுக்கு, தம்பட்டம், முரசு, கஞ்சக்கருவிகள், சேமக்களம், ஜாலரா, குளித்தாளம், ஜவதரங்கம், கடம், கொக்கரை, மொத்தைசின்னரம், கத்திரிகை, குடமுழவம், கொடு கொட்டி, துடி, படகம், பேரிகை, உடுக்கை, சல்விகை, கரடிகை, திமிலை, சுக்கை, கிளப்பறை, தமிருகம், தண்ணுமை, தடாரி, அந்தரி, முழவு, சந்திரவவயம், கணவீடு, நூம்பு, நிகானம், துடுன்ம. அடக்கம், தகுனிச்சம், விரவேறு, பாகம், உபாங்கம், நாழி, கைப்பறை, சல்லி, ஆவங்கி, குடுக்கை என்னும் இடக்கை, கரடிகை எனப்படும் நூற்றுக்கணக்கான
|1

Page 86
இசைக்கருவிகள் பண்டைய தமிழகத்தில் வழக்கியிருந்ததாகப் பழந்தமிழ்
(f !ի |ր (i. ழந்தமாழி ால்களினின்றும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
무
இன்று மலையகத்தில் வழக்கிலுள்ள பாரம்பரிய இசைக்கருவிகளில் அநேகமானவை மேற்குறிப்பிட்ட இசைக்கருவிகளையொத்தனவாகவுள்ளமையுடன் தென்னிந்திய கிராமிய இசைச்சூழலை அடியொற்றியவையாகவும் காணப்படுகின்றன. மலையக மக்களின் வாழ்க்கையில் காணப்படும் இக்கருவிகள் இறைவழிபாட்டிற்கும் இசைவாயிலாகக் கிடைக்கும் இன்பத்தினை துய்ப்பதற்காக மலையக மக்களின் நாளாந்த வாழ்க்கையோடு, அவர்தம் உழைப்போடு உணர்வோடு ஒன்றியிருக்கின்றன.
பண்டைத்தமிழ் இலக்கியங்களில் முரசு என்னும் தோல் வாத்தியக்கருவிக்கு தனியான இடமுண்டு, போரில் முரசு முழங்கியது. அரங்கத்தின் செய்திகளிளித் தெரிவிக்க தமுக்கு, தம்பட்டம், முதலியவை பயன்படும். மலையக் பாட்டாளி மக்கள் தம் வாழ்வில் அமைந்த இதற்கு ஒப்பான ஒரு இசைக்கருவியே தப்பு எனப்படும் வாத்தியமாகும். இது வட்டவடிவமானது. இதனை தோளில் கொழுவிக்கொண்டு இடது புஜத்தால் அணைத்த படியே இடது மணிக்கட்டில் தாங்கிக்கொண்டு இரு கரத்திலும் தடிகளை கொண்டு அடிப்பர் வலது கரத்தினுள் அடிக்கப்படும் தடி பருமனாகவும் இடது கரத்தால் அடிக்கப்படும் தடி ஈர்க்கினைப்போன்று மெல்லியதாகவும் இருக்கும்.
தப்பு - தோட்டங்களில் தப்பு என்ற இவ்வாத்தியக்கருவியைப் பல்வேறு வகையாக அடிப்பர். அதிகாலையில் தோட்டத்தில் தொழிலாளர் துயில் எழுப்புவதற்காக காலைத்தப்பு முழங்கப்படும். பின்னர் வேலைகளுக்கு அணிதிரன, பிரட்டுகளத்திற்குச் செல்ல பிரட்டு தப்பு அடிப்பார்கள். இவ்வாறே பகல் உணவு. இடைவேளை, மாலையில் வேலைமுடிந்து வீடு திரும்புதல், என்பவற்றிற்கெல்லாம் தப்பினைத் தாளம் மாற்றி மாற்றி அடிப்பார்கள், இந்த மாற்று ஒசையினைக்கொண்டே என்ன நிகழ்ச்சி என அறிந்துகொள்ள முடியும். ருதுசாந்தி, திருமணம், முதலான மங்கள கிருமங்களுக்கு அடிக்கப்படும் முறையைவிட சாவுவிட்டில் அடிக்கப்படும் முறை வித்தியாசமானதாக இருக்கும் இழவு வீட்டில் தப்பு அடிக்கும்போது ஒரு சாவு வீடு என்பது சகலருக்கும் புலப்பட்டுவிடும். காவடி ஆட்டம், கரகாட்டம், காமன் ஆட்டம், தூதுவன் ஆட்டம், உற்சவங்கள். திருவிழாக்களின்போது சீர்கொண்டு செல்லுதல் என்பனவற்றிற்கு வெவ்வேறு வகைகளில் தாள சுருதி பேதங்களை மாற்றி மாற்றி அடிப்பர். இவ்வாறே உற்சவங்களில் குடி அழைத்தல், காப்புக் கட்டுதல், என்பனவற்றிற்கும் தனித்துவமாக இசைக்கப்படும்
மலையகத்தில் ஆடப்படும் காமன்கூத்து, பொன்னர் சங்கர் கூத்து அருசிசினன் தபசு முதலான கூத்துகளுக்கும் தப்பு முக்கிய பக்கவாத்தியமாக அமைகின்றது.
If

琵
t

Page 87

தோட்டத்து மக்கள் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இத்தப்பு ஒருவன்
தவறு இழைக்கும் பட்சத்தில் அவனை அவமதித்து பழிக்கும் கருவியாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றம் இழைத்த ஒருவனை ஒத்தத்தப்பு, அடித்து அவமானப்படுத்தும் வழக்கமும் முன்பு தோட்டங்களில் காணப்பட்டுள்ளது.
உடுக்கு - மலையத்தில் வழக்கிலுள்ள கருவி உடுக்காகும், மலையகத்தில் தோடங்கி பார்த்தல் என்பது தெய்வீகக் கலையாகும். இதனைச் சாமிபார்த்தல் என்றும் சுறுவர். உடுக்கை அடித்து இஷ்டகுலதெய்வத்தை வருத்தி அழைத்து சாமியாடி அல்லது பூசாரி குறி சொல்வான். டுன் . டுண்டு . டுண்டு டுண்டு என்று வின்டுரைக்கும் உடுக்கு பல மண்டுகளாக அடிக்கப்படும். நாட்டுப்பாடல் இசையிலும் உடுக்கு பயன்படுத்தப்படும். கீTபுெ ஆட்டம், கரகாட்டம் பேயரட்டம் முதலான நிகழ்ச்சிகளுக்கும் உடுக்கு பாவிக்கப்படுவதுண்டு. பேயோட்ட நிகழ்ச்சிக்கு உடுக்கே நடுநாயகமான இசைக்கருவியாகும். உடுக்கடித்துப் பேயோட்டும் நிகழ்ச்சி சுவாராஸ்யமிக்கது.
உறுமி - என்னும் வாத்தியம் இப்போது பெரிதும் வழக்கொழிந்துவிட்டது. தோலிலான ஒரு சோடி இக்கருவி இணைக்கப்பட்ட நிலையில் இசைப்பவரின் கழுத்திலிருந்து இடுப்புவரை தொங்க அரைவட்டமாக பிறைவடிவில் வளைந்த தடியினால் அழுத்தித் தேய்த்து வாசிக்கப்படும். அழுத்தித் தேய்த்து தேய்த்து இடைவிடாது வாசிக்கப்படுவதால் இதிலிருந்து W]/L1 ۔ ۔ ۔ + + + + + + += ']T]/In = ++۔۔۔+, றும். ஆ . உடும் . ஆ. என்று இசை இதமாக எழும். இக்கருவி எழுப்பும் இவ் இசையினைக் கொண்டே "உறுமி" எனப் பெயர் பெற்றது GTESTSLT frd.
தமுர் - தப்பினைப் போலவே ஆலய உற்சவங்கள் திருமணம், இழவு வீடுகள் என்பனவற்றிற்கெல்லாம் இசைக்கப்படுகின்றது. ஒரு தமுர் செட் என்பது ஒரு பெரிய தமூரினையும் நான்கு அல்லது மூன்று குச்சி தமுர்களையும் கொண்டது. தமுர் அடிப்பவர் காலில் சலங்கை கட்டி ஆடவும் செய்வார். அவர் ஆட்ட பு-கீழிருக்கு ஏற்ப அபிநயம் பிடிப்பதுடன் பல வகையான சைகைகளைக் காட்டி தமுர் அடிக்கும் கழிகளைச் சுழற்றி மேலே வீசிப் பிடித்து ஆடவும் செய்வார். தமுரை அடித்தபடியே ஒப்பாரி போன்ற பாடல்களைப்பாடி குச்சி முர் அடிக்கும் தன் சகாக்களை நெறிப்படுத்துவதும் பிரதான தமுரான பெரிய தமுரை அடிப்பவரின் பொறுப்பு வாய்ந்த கடமையாக அமைகின்றது.
செஞ்சன் கட்டை - கஞ்சிராவை ஒத்த செஞ்சன கட்டை என்னும் டும்புத்தோவிலான சிறு வட்டவடிவமான இசைக்கருவி பக்க பாத்தியக்கருவியாகக் காமன் கூத்து போன்ற ஆட்டங்களின் போது பயன்படுத்தப்படுகின்றது.
|47

Page 88
சங்கு - சில தோட்டங்களில் பிரட்டு தப்புக்குப் பதிலாக சங்கினை ஊதுவர். இக்குழல் நீண்டு வளைந்திருக்கும் கொம்பூதுவது போன்று இக்குழாயும் அமையும். காலையும் மாலையும் உயரமான ஓரிடத்தில் ஏறி நின்று இதனை ஊதுவர். கோயில் பூசையின் போதும் இராமர் பஜனை, காமன் ஆட்டம், போன்ற பக்திகலந்த வைபவங்களின்போதும் ஜல் எனப்படும் வெண்கலத் தகரம் கலந்த கருவி இசைக்கப்படும். இதனைச் சல்லிகை என்றும் அழைப்பர். சல் என்ற ஒசையினை எழுப்புவதால் இப்பெயர் எற்பட்டது.
தண்டை- அம்மன் ஆலயங்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் மங்கள உற்சவங்களில் கும்மி கொட்டும் பெண்கள் காற்சிலம்பிற்கு ஒப்பான தண்டை என்னும் ஆபரணத்தைக் காலில் அணிந்து ஆடுவர். இதன் உள்ளே அமைந்துள்ள உள்ளீடுகள் இனிய இசையினை எழுப்பும். பண்டாரங்கள் சேமக்களம் என்னும் கருவியினைப் பயன்படுத்துகின்றனர். இதனைக்குச்சியினால் அடித்து ஒலியுண்டாக்கிக்கொண்டு பாடுவர். துஞ்சினா சுரையினால் ஆன குடத்துடன் மூங்கில் கழியிணைந்த ஒரே தந்தியுடைய கருவி, தெருப்பாடகரும், யாசகரும் இதனைப் பயன்படுத்துகின்றனர். மகுடி பாம்புப் பிடிப்போர் வாசிக்கும் கருவி. இரு குழாய்களைக் கொண்டது. மலையக இசை நிகழ்ச்சிகளில் புல்லாங்குழல் வாசிக்கப்படுகின்றது. ஜாலரா, குழித்தாளம் என்பனவும் தேவாரப்பாடல் முதலான பக்தி வைபவங்களுக்கும் இசை நடன நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. இவைகளைத்தவிர இன்று ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், கடம், தவில், மோர்சிங், செண்டை, முதலிய இசைக்கருவிகளும் வழக்கிலுள்ளன.
இசை நிகழ்ச்சிகளும், ஆலய முதலான வழிபாட்டுத்தலங்களிலும் சமயம் சமயஞ் சாராத வைபவங்களிலும் உற்சவங்களிலும், விழாக்களிலும் ஆடப்படும் நடனங்களும், கூத்துக்களின் அந்தஸ்தைப் பெறாத கோயிற் கலையோடிணைந்த சிற்றாட்ட வகைகளும்
மலையகத்தின் பாரம்பரிய கலைகளை நோக்குமிடத்து மதத்திற்கும், மக்கள் வாழ்க்கைக்கும் கலைகளுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பினை அறியலாம். கூத்துக்கள் புராண இதிகாசக் கதைகள் போன்றனவற்றைக் கருவாகக்கொண்டு ஆலயச் சூழலில் நடைபெறுவதைப் போல மலையகத்தில் கூத்துக்களைப்போன்று தொடர் அம்சங்கள் இல்லாத கரகம், சிலம்பம், காவடி, கும்மி, கோலாட்டம், பின்னல், கோயிலாட்டம், ஒயிலாட்டம், புலிவேடன் ஆட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், அனுமன் ஆட்டம், பிடிவரிசை, பஜகோவிந்தம், அல்லது பஜனை என்றும் தம்பம் தாங்கிய ஊர்வலம், வாள் வீச்சு, பயூன் எனப்படும் கோமாளி, சாமி அல்லது உரு ஆடல், பொய்க்கால் ஆட்டம், சக்கை ஆட்டம்,
148

தேவராட்டம், பகல் வேடம், தெருக்கூத்து, முதலிய ஆட்டங்கள், பெருமளவில் செல்வாக்குப் பெற்றிருந்தன. மேற்குறிப்பிட்ட சிற்றாட்டங்கள் பலவற்றிற்கு தெய்வ நம்பிக்கையே அடிப்படையாகும். தெய்வவழிபாடுகளுடன், சடங்குகளும், ஆசாரங்களும், நம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்து இக்கலைகளுக்கு மெருகேற்றியுள்ளன.
காவடி
காவடி ஆலயத்திலிருந்து நமக்கு கிடைத்த பாரம்பரிய கலைவடிவமாகும். காவடி குறிஞ்சிநிலக் கடவுளாகிய குமரனை மையமாகக்கொண்டு அவன் ஆலயத்தைக் களமாகக் கொண்டு வளர்ந்த கலை எனலாம். காவுதடி என்ற சொல்லிருந்தே காவடி என்ற சொல் தோன்றியுள்ளது என்பர். கரகாட்டத்தைப் போன்றே காவடி ஆட்டமும் பக்தி உணர்விற்காகவும் அதே வேளையில் களியாட்டமாகவும் இன்று ஆடப்படுவதை காணலாம். தோட்டப்பகுதிகளில் காவடி ஆட்டம் என்னும்போது இது இருபாலரும் ஆலயத்தோடு சம்பந்தப்பட்ட பக்தி சிரத்தை மிக்க ஓர் அம்சமாகவே தென்படுகிறது. தோட்டப்பகுதிகளில் கதிர்காமத்தீர்த்தத்துடன் தான் முருகன் ஆலயங்களில் திருவிழாக்கள் தொடங்குகின்றன. திருவிழாக்களில் காவடி ஆட்டம், காவடி ஊர்வலம், என்பன சிறப்பாக அமைகின்றன.
கரகம்பாலிப்பதைப் போன்று காவடி எடுத்தலும் நீர் நிலைகளிலிருந்து குடி அழைச்சிக் கொண்டு வருவதோடுதான் ஆரம்பமாகின்றது. இங்கு குளித்து முழுகி” அருள் வந்த பின்னர் வேல் குத்தி காவடி எடுக்கின்றனர். அருள்வராதவர்களுக்கு "வேல்” அல்லது செடில் பூட்டுவது கிடையாது. அருள் வந்தோர் நெற்றிப்பட்டம், நாக்குவேல், பாம்படம், புஜவேல்கள், இன்னும் முதுகில் செதில்கள் என்பனவற்றைப் பூட்டுவர். முதுகில் செதில் பூட்டி பறவைக்காவடி எடுப்பதற்கு வாக்கு கிடைக்கவேண்டும். பறவைக்காவடி எடுப்பவர்கள் அருள் வந்து வாக்கு கிடைத்து வாய்திறந்து குறி சொல்வதும் உண்டு. அவர் வழங்கும் விபூதி நோய் நொடிகளை தீர்க்கும் சக்தி கொண்டது என்ற நம்பிக்கை உண்டு. பறவைக்காவடி எடுப்போர் அருளுடன் தீமிதிப்பு செய்வதும் உண்டு.
தோட்டப்புற மக்கள் தோட்டத்திலும் சூழலிலும் அமைந்துள்ள ஆலயங்களில் காவடி எடுப்பதுடன் கதிர்காமம் முதலான திருத்தலங்களுக்கும் சென்று காவடி எடுப்பர். தம் நேர்த்திக் கடனை நிறைவேற்ற விரதமிருந்து வேல் பூட்டி தீச்சட்டி ஏந்தி அங்கம் புரள்வர். காவடிகளில் பல வகை உண்டு. அவை அன்னக்காவடி, பாற்காவடி, பன்னீர்க்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, வேல்காவடி, பறவைக்காவடி என்பனவாகும். தோட்டப்புற மக்கள் பிள்ளை வரத்தை நிறைவேற்ற கதிர்காமத்தில் எடுக்கும் கருப்புத்தொட்டிலும் காவடிக்கு
- 149

Page 89
ஒப்பானதே ஆகும். அன்னக்காவடி பொங்கலையும், பாற்காவடி, பாலையும் பன்னீர்ச் செம்பை பன்னிக்காவடியும், மலர்களை புஷ்பக்காவடியும் கொண்டு ஆடுவதாகும். முதுகில் பூட்டிய கொக்கிகளினால் தேரில் தொங்கிக்கொண்டு ஆடும் பறவைக்காவடியே காவடி ஆட்டத்தின் தலை சிறந்த அம்சமாகும்.
காவடியை பத்தி வைபவங்களில் மட்டுமன்றி ஊர்வலம், கலைநிகழ்ச்சிகள், இன்னும் வைபவங்கள் உற்சவங்கள் திருவிழாக்கள் என்பனவற்றிலும் ஆடி மகிழ்கின்றனர். இவைகள் பக்தர்கள் தம் குறிப்பிட்ட நேர்த்திக்கடனுக்காக ஆடுபவைகளிலிருந்து வேறுபட்டவை. காவடியை மயில் இறகு, பட்டுத்துகில், வர்ணத்தாள்கள், மணிகள், முதலான அலங்காரப் பொருட்களால் அலங்கரிக்கின்றனர், காவடி ஆட்டத்தின்போது முருகனைப் பற்றிய துதிப்பாடல்கள், கதிர்காமக்கந்தன் மாலை முதலிய பாடல்கள் பாட பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்புவர். தோட்டப்பகுதிகளில் முன்பு தப்பே பிரதான வாத்தியக்கருவியாகும். இன்று காவடி நடனங்கள் ஊர்வலங்களுக்கு நாதஸ்வரம் தவில், பம்பை, முதலியவற்றுடன் விசேடமாகத் தோட்டப்புறங்களில் அதிகமாக பாவனையில் உள்ள பாண்ட் செட்டே பாவிக்கப்படுகின்றது. இப்போது ஆட்டக்காவடிகளில் இருபக்கங்களிலும் அமைந்த முருகன் திருவுருவம், மயிற்கற்றைகள் அல்லது வர்ணச்சிறகுகள் என்பன தகரம் அல்லது மென்பலகைகளினால் அமைந்த வில்வடிவமும் மட்டுமே காணப்படுகின்றது.
ஒரு ஆலயத்தில் பல காவடிகள் இருந்தபோதும் "கோயிற்காவடி" என்ற ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்காவடியை எல்லோரும் எடுத்து ஆடமுடியாது. இதனை ஆடுபவர் பூசாரி, அல்லது பூசாரியின் பரம்பரையைச் சேர்ந்தோர் அல்லது மதிப்பெடுத்து அல்லது குறிசொல்லப்பட்டு அங்கீகாரம் பெற்றவராக இருக்கவேண்டும். கோயிற் காவடி எடுப்பவர் அருள் வந்த வேளையிலே கோயிலிலுள்ள வெட்டு அருவாள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்குவதுடன், குறிப்பால் அல்லது திருவாய் மலர்ந்து ஆரூடம் கூறுவதும் உண்டு. இவ்வாறு கூர்மையான கத்தி மீது நின்று குறிசொல்பவர் அதிலிருந்து சிறிது காவடி எடுத்த பின்னர் சாமி மலை ஏறிவிடும். காவடி ஆட்டத்தில் ஆண்களும், பெண்களும் பங்கேற்கின்றனர். காவடிச் சிந்து என்ற பாட்டுக்கு உரித்தான தாள நடைக்கு இக்கவையின் நுணுக்கங்களை வளர்த்துக்கொண்டு ஆடும்போது நடனக் கலை வளர்ச்சியடைந்து வருகின்றது. தப்பு, தமுக்கு, உறுமி பம்பை என்பன மறைய நாதஸ்வரம், நையாண்டி மேளம், என்பன அவ்விடத்தைப் பிடித்துக் கொள்கின்றன.
கோலாட்டம்
கோலாட்டம் பற்றிய வரலாறு கண்ணன் ராதையோடும் கோபியரோடும் கொண்ட லீலைகளோடு தொடர்புடையதாக அமைகின்றது என்பர். கோபியர்
15()

யமுனை மணவில் பசுவையும் கன்றையும் செய்து மகிழ்ந்து கண்ணனுக்கு கோலாட்டம் ஆடினார் என்பர். பெண்கள் பசுக்களுக்காக நோன்பு நோற்று நடைபெற்ற விழா கோலாட்ட ஜவற்கரை என்பதாகும். இவ்விழாக்காலம் முழுவதுமே கோலாட்டம் இடம்பெறும், பெண்கள், நோன்பு நோற்று பசுவையும், கன்றையும் களிமண்னால் பிடித்து பின்னரே அதனை பல இடங்களுக்கும் இழுத்துச்சென்று கோலாட்டம் அடிப்பர். பின்னர் அதனை குளத்திலோ ஆற்றிலோ இடுவர்.
முன்னர் தனிஆட்டமாக விளங்கிய கோவாட்டம் இன்று தமிழ்ப் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் போதெல்லாம் நடத்தப்படுகின்றது. கோலாட்டப் பாடல்களுடன் கோலாட்டமும் மலையக பாரம்பரிய கலைகளில் இன்னுமொரு முக்கிய அம்சமாகும். சிங்கள மக்கள் மத்தியில் இது "வீகெலி" என்ற பெயரில் வழக்கிலுள்ளது. தமிழகத்திலே வசந்தன் கோலாட்டம் என்றும் அழைக்கப்படுகின்றது. தென்னிலங்கையில் உள்ள இஸ்லாமியர் மத்தியில் கழிக்கம்பாட்டம் என்று வழக்கிலுள்ளது. தோட்டப்பகுதிகளில் கருங்காவி முதலிய உறுதிவாய்ந்ததும் இனிய ஓசை எழுப்பக் கூடியதுமான தடிகளைக் கோலாட்டத்திற்குப் பயன்படுத்துவர். இத்தடிகளைக் களி மண்ணுக்கிடையே அழுத்தி வைத்திருந்து பின்னர் அட்டவில் வைத்துப் புகையூட்டுவதும் உண்டு. இப்படிச் செய்வதால் கோலாட்டத்தடி உறுதியடைவதுடன் இனிய ஓசையினையும் எழுப்பும் பின்னர் இத்தடிக்கு நிறமூட்டுவதும் உண்டு.
தோட்டப்புறங்களில் பாரம்பரிய கிராமிய பாடல்களுடன் இந்திய சுதந்திரத்தோடும் நேதாஜியின் வீரவரலாறோடும் சம்பந்தப்பட்ட பாடல்களையும் பாடி கோலாட்டம் அடிப்பதைக் காணலாம். சோடி சோடியாகவும் ஒரு குழுவாகவும் வட்டமாகக் கோவாட்டம் அடித்து ஆடும்போது தாளத்திற்கு ஏற்ப கால்களையும் அடி பெயர்த்து ஆடி வருவர். நிறமூட்டப்பட்ட கோல்களும் தலையிலும் இடுப்பிலும் கட்டிய துண்டும் தார்க்ப்பாச்சு வேட்டி காற்கலங்களும் ஆட்டத்தைக் களைகட்டவைக்கும். கோலாட்டங்களுள் பின்னற் கோலாட்டம் தனி சிறப்பு வாய்ந்தது. திருவிழாக்களின் போது சின்னஞ்சிறு பல்லக்குகளை ஊர்வலமாகக் கொண்டு செல்வர். இப்பல்லக்குகளிலும் இருமுனைகளிலும் அழகிய வர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்ட கயிறுகள் கட்டப்பட்டிருக்கும். கோல்களுடன் வட்டமாக நின்றுகொண்டிருக்கும் பெண்கள் அக்கயிறுகளின் மறுமுனைகளை கையில் பிடித்திருப்பார்கள், சிக்கலான அமைப்பிலுள்ள அழகிய பின்னல் ாடாவை நெய்வது போல அப்பெண்கள் பாட்டுக்குத் தக்கப்படி குறுக்கும் நெடுக்குமாகச் சென்று கோலாட்டம் போடுவார்கள் இதனால் கயிறு ஒரு சீராக நெய்யப்படும். அதாவது பின்னல்படும். பின்னர் அதே முறையில் ஆடி ஆடி இணைக்கப்பட்ட கயிற்றைப் பிரிப்பர். பிறகோலாட்டங்களைப் போன்று தெனையும் ஆண்களும் பெண்களும் ஆடுவர். பின்னல் கோவாட்டம் கவர்ச்சிகரமானது,

Page 90
கும்மி
கும்மியடித்தலில் பெண்களே அதிகமாக ஈடுபடுவர். எனினும் ஆண்கள் கலந்துகொள்ளும் கும்மிகளும் உண்டு. பெண்கள் வட்டமாகத் தம் வளைக்கரங்கள் ஒலிக்க கூட்டமாகக் கொட்டுவது கும்மியாகும். மலையகத்தைப் பொறுத்தவரை பெண்கள் திருவிழாக்கள் நடக்கும் போதும், பண்டிகைகளின்போதும், வேறு பொது வைபவங்களின் போதும் துரை முதலான தோட்டத்து பெரியோர் மத்தியிலும் கும்மியடித்து மகிழ்வர். மாரியம்மனுக்கு நடைபெறும் திருவிழாக்கள் போது பெண்கள் கும்மியடித்தல் சிறப்பான அம்சமாகும். அம்மனைச் சிறப்பித்துப் பாடுவதுபோல தோட்டத்துப் பெரியோர்களையும் தம்கும்மிப்பாடலில் சேர்த்துப் பாடி மகிழ்விப்பர். ஒயிலாட்டத்தின் போது கும்மி கொட்டப்படும். இது ஆட்டத்தோடு நாடக பாணியில் அமையும்.
ஒரு வீட்டு முற்றத்தில் பெண்கள் கும்மிகொட்டும்போது நடுவில் சாணியில் பிடித்த பிள்ளையார், அல்லது மாக்கோலம் அல்லது குத்துவிளக்கு என்பனவற்றை வைத்து வட்ட வடிவமாகச் சுற்றி வருவர். அனுபவமும் முதிர்ச்சியும் கொண்ட பெண்ணொருத்தி முதலடியை எடுத்துப்பாடக் குழுவில் கும்மி கொட்டும். பெண்கள் பின்பற்றிக் கூட்டாக பாடல் இசைப்பர். கொட்டுங்கடி கும்மி கொட்டுங்கடி கோதையர் சூழ்ந்துமே கொட்டுங்கடி என்ற கூட்டோசையுடன் பெண்கள் கொட்டுவர். தன்னைனாதனம் தன்னானே தன்னைனாதனம் தன்னானே” என்று தாள நயத்துடன் தொடரும் கும்மிப் பாடலொன்று பின்வருமாறு அமைகின்றது.
தன்னைனா தனம் தன்னானே - தன்னைனா தனம் தன்னானே தன்னா என்று தான் சொல்லுங்களேன் உங்க நாவுக்கு சர்க்கரை நான் தாரேன் இன்னும் ஒரு முறை சொல்லுங்களேன் - நல்ல இனிக்கும் சர்க்கரை நான் தாரேன் தன்னைனாதனம் தன்னானே தேங்காய் உடைக்கவே சிதறவே தெப்பக்குளம் எல்லாம் தத்தளிக்க மருதமினாட்சி மாயவன் தங்கச்சி எப்ப வருவாளாம் தெப்பம் பார்க்க மருத வந்தாலும் தேரோடதாம் - அந்த மருத மீனாட்சி மாயவன் தங்கச்சி தன்னைனனா தனம் தன்னானே சின்னக் குளத்தில் நீராடி - அந்த சிங்காரத் தோப்பிலே வேட்டையாடி
152

வீட்டுக்கு வாராராம் வெள்ளிரதமேறி வீசக்களை கொண்டு வீசங்கடி தன்னைனாதனம் தன்னானே.
இவ்வாறு தென்னிந்திய கிராமத்தில் பாடப்படும் கும்மிப்பாடலை பாடும் பெண்கள் சூழலுக்கேற்ப "கண்டாக்கு கங்காணியார் என்போரையும் பாட்டில் சேர்த்து இணைத்துப்பாடும் வல்லமை பெற்றுள்ளனர். முறையாக இசைப்பயிற்சி பெறாத இப்பெண்கள் இனிமையான கும்மி மெட்டுக்களை பாடுவதுடன் தாமே மெட்டுக்களையும் பாடல்களையும் அமைத்துப்பாடும் வல்லமையும் பெற்றவர்கள். ஒயிற்கும்மி ஒயிலாட்டம் என்பனவும் முன்னர் ஆடப்பட்டன. தமிழகத்து கிராமங்களில் வீதிக்கு வீதி ஆடப்படும் ஒயிலாட்டத்தைத் தோட்டப்புற மக்கள் ஆடினர். ஆண்கள் கால்களில் சலங்கையை கட்டிக்கொண்டு சால்வையை வீசி
வீசி, சுற்றிச் சுற்றி ஆடுவர்.
வரவேற்பு வைபவங்களிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் ஆடப்படும் புலி வேடம் ஆட்டம் திகிலூட்டுவதாக அமையும். புலியைப்போல் வேடம் தாங்கிய ஒருவரை வேடனாகப் பாத்திரமேற்றுள்ள ஒருவன் வில் அம்பு கொண்டு அம்பெய்து கொல்ல விழைவது போல இவ்வாட்டம் அமையும். இவர்கள் இருவரும் தாம் ஏற்றுள்ள உருவத்தைக் காட்டும்படியாக வர்ணங்களால் ஒப்பனை செய்திருப்பர். புலியாக ஆடுபவர் கோபத்துடன் பாய்ச்சல் காட்டி வேடன் மீது பாய்ந்து அவனைத் தோற்கடிக்க முயல்வார். வீதியில் ஒரு ஊர்வலத்தில் ஒரு நிகழ்ச்சியாக இது அமையும் போதும் இருவரும் வட்டமாக ஆடி அபிநயம் புரிந்து பார்ப்போரை மெய்மறக்கச் செய்வர். இவ்வட்டத்திற்கு "ஒத்தை தப்பு” அடிக்கப்படும். புலிவேடம் ஆட்டம் வேட்டை நடனங்களின் ஒரு அம்சமெனலாம். உலகின் பல்வேறு பகுதிகளிலும் வேட்டை நடனங்கள் உள்ளன. மலைநாட்டில் மத்திய தேயிலை தோட்டங்களில் மட்டுமன்றி காலி மாவட்டத்தில் உடுகம நாக்கியாதெனிய தோட்டத்திலும் தொழிலாளர் வரவேற்பு வைபவங்களிலும் வேறு நிகழ்ச்சிகளிலும் இவ்வட்டத்தை ஆடுவது முக்கிய அம்சமாகும். குறவஞ்சி நாடகங்களிலும் வேட்டை காட்சிகள் சிறப்பாகச் சித்திரிக்கப்பட்டுள்ளன. பறவை வேட்டையை அடிப்படையாகக் கொண்டது குளுவ நடனம். இதில் குளுவன், சிங்கன் ஆகிய இரு பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளார்கள். மலையகத்தில் காணப்படும் புலி வேடம் ஆட்டம் மாவட்டத்திற்கு மாவட்டம் சிற்சில மாற்றங்களைக் கொண்டுள்ளமை நோக்கத்தக்கது.
பிடிவரிசை
பிடிவரிசை ஆட்டமென்பது மல்யுத்தம் அல்லது குஸ்திக்கு முன்னர் ஆட்டக்காரன்
இருவரும் அரங்கை அல்லது களத்தை வலம் வந்து முஸ்தீபு செய்வதனை ஒத்தது. பிடிவரிசை ஆடுபவர்கள் கைகளால் சைகை செய்தபடி புயங்களையும்,
153

Page 91
மார்பையயும் தொடையையும் தட்டி ஆர்ப்பரித்து வலம் இடமாகச் சுழன்று ஆடி வருவதாகும். பிடி வரிசை ஆட்டத்தை ஆடுபவர்கள் வன்மப்பிடிகளை பிடித்து அவயவங்களை செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர். பிடிவரிசை ஆடுபவர்கள் தம் உடல் வலிமையினாலும் கட்டுக்கோப்பான தோற்றத்தினாலும் இவ்வாட்டத்தைப் பார்ப்போரை பரவசமடையச் செய்வர். இவ்வாட்டம் சீர்கொண்டு செல்லல் ஊர்வலங்கள் என்பவற்றிலேயே பெரும்பாலும் இடம்பெற்றன.
இதுபோல் ஊர்வலங்களில் பொய்க்கால் குதிரை ஆட்டம், பொய்க்காவில் நின்று ஆடுதல், ஆஞ்சநேயரைப்போல் வேடம் தரித்தவர் கதாயுதத்தையும் வைத்துக்கொண்டு அபிநயம் செய்தல் ஆகிய ஆட்டங்களும் உண்டு. முனியாண்டி என்பது வைரக் கடவுளரின் பிரதிபலிப்பாக மலையகத்தில் - பெரும்பாலும் தோட்டப்பகுதிகளில் வணங்கப்படும் தெய்வமாகும். இதனை "சித்தாகட்டி" வாள்முனி எனவும் அழைப்பர் இங்கு பவியிடப்பட்டு பூசாரி உடுக்கடித்து உருவந்து சாமி ஆடுவார். இதனை முனியாண்டி கூத்து என்றும் கூறுவர். உருவந்து ஆடும் பூசாரி எச்சுப்பேய்களை விரட்டி மக்களைக் காப்பதாக கூறுவார். நாடகங்களில் முன்பு கட்டியக்காரன் வகித்த இடத்தை பின்னர் "பழன்" அல்லது கோமாளி பிடித்துக் கொண்டான். கோமாளி ஊர்வலங்களிலும் வேறு திருவிழாக்களிலும் விநோத உடை அணிந்து நகைச்சுவையாகப் பேசிப்பாடி ஆடுவது வழக்கம். மலையக நாட்டார்பாடல்களில் அதிகமாக கோமாளிப் பாடல்களும் உள்ளன.
வாள்நடனம் அல்லது பட்டாக்கத்திவீச்சு
முற்காலத்தில் வாட்போர் மிக முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது போர் வலிமையுள்ளோர் ஏனையோரை அடக்கி ஆண்டனர். இதனால் மக்கள் வாட்போரில் நாட்டம் செலுத்தினர். இக்காலத்தில் இப்போரை வாள் நடனமாக ஆடி போர்பாவனை செய்தனர். வீரத்தோற்றத்திலும் ஒழுங்கான நடன உருதி அமைந்திருப்பதைக் காணலாம். வலது கரத்தில் வாள் ஏந்தியும் இடது கரத்தில் கேடயத்தை மார்போடு அனைத்தும், எதிரியின் வாள் வீச்சை தடுத்தாற்கொண்டும் ஆடும் வாள் நடனம் பார்ப்போரைப் பரவசமும் மயிர்க்சு சீசெறிவதாகவும் அமையும். தோட்டப்புறங்களில் வாள் வீச்சை கற்க வாலிபர்கள் இந்நடனத்தை ஆடியதோடு வாள் வீச்சு போர்களிலும் பங்குபற்றித் தம் தீரத்தை வெளிப்படுத்தினர். வாள் நடனம் அரங்குகளில் மட்டுமன்றி உற்சவங்கள் வைபவங்கள் என்பவற்றிலும் இடம்பெற்றுள்ளன.
பஜகோவிந்தம் அல்லது ராமர் பஜனை
மார்கழி மாதத்தில் திருவெம்பாவை ஓதி ஆலயங்களில் பூசை நடைபெறுவது வழக்கம், தோட்டப்புறங்களில் உண்டு. இக்காலத்தை "பூடை" (பீடை) மாசம்
| 54

என்றழைப்பர். இப்பீடை காலத்தில் பஜனை செய்வதும் அதுவும் இராமர் விஷ்ணு ஆகியோருக்கு பஜனை பாடி விழா எடுப்பது உகந்ததாகக் கருதப்படுகின்றது. மார்கழி மாத பக்தி நிகழ்ச்சியாக பஜகோவிந்தம் அமையும், அதிகாலையில் பக்தர்கள் பலர் "சங்கு" சேகண்டி" முழங்க பஜனை செய்வர். மாலையில் இராமர் அல்லது விஷ்ணுவின் படத்தோடு வீட்டுக்கு வீடு சென்று பஜனை பாடுவர். இவர்கள் விளக்கு எரியும் கம்பத்தையும் எடுத்துச்செல்வர். இக்கம்பத்துக்கு எண்ணெய் வார்ப்பதுடன் காணிக்கையும் அளிப்பர். கம்பத்தை தாங்கிச் செல்பவர் விரதம் இருந்து புனிதமாக இப்பணியைச் செய்வர். மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாது சிறியோப் பெரியோர் 'அரி ராமா ராமா ராமரையே நம்பியுள்ளோம்" என்று பாடி மகிழ்வர். தைப்பொங்கல் பிறக்க பஜகோவிந்தம் நிறைவு பெறும்.
கரகம்
மலைய மக்களின் பாரம்பரிய ஆட்டங்களில் கரகாட்டம் முக்கியமானதாகும். இது கண்ணகி அம்மன் வழிபாட்டுடனும் சில இடங்களில் காளி வழிபாட்டுடனும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. பொதுவாக மலையகத் தோட்டப்புறங்களில் ஆலயங்களில் உற்சவங்களின்போது கரகத்தை "கும்பம்" வைத்து பாலிப்பது வழக்கமாகும். தமிழகத்தில் கிராம தேவதைகளின் கோயில்களிலும் விழாக்களிலும் ஆடப்பட்ட இக்கரகாட்டத்தை மலையக மக்கள் மறந்துவிடாமல் தம் தோட்டத்து ஆலய உற்சவங்களிலும் வேறு திருவிழாக்களிலும் களிப்புடன் ஆடுகின்றனர். கரகம் பக்தி சிரத்தை மிக்க தெய்வமேறிய ஆட்டமாகவும் அதே வேளையில் கலை உணர்வு மிக்க ஆட்டமாகவும் இது விளங்குகின்றது.
தோட்டங்களில் "கரகம்பாவித்தல்" என்பது பக்தி உணர்வு ததும்பும் ஒரு நிகழ்வாகும். செம்பில் அல்லது குடத்தில் நீரை நிரப்பி "வேப்பிலை பூ என்பனவற்றினால் அலங்காரம் செய்து ஆற்றங்கரை, அருவி, ஓடை, பீலிக்கரை ஆகிய நீர்நிலைகளிலிருந்து பூங்கரகம் எனப்படும் சக்திக்கரகத்தைப் பூசாரி அல்லது கரகம் எடுப்பவர் ஊர்வலமாகக் கொண்டுவருவர். இக்கரகம் விரதமிருந்து அருள் வந்து எடுப்பதாகும். சக்திக் கரகத்தை எடுப்பவர் ஆடமாட்டார். அது உற்சவ மூர்த்தி போல் இயங்கும். சக்திக் கரகத்தை எடுப்பவர் பொதுவாக ஆடாதபோதிலும் "அருள்" வேளையில் வாத்திய இசை அல்லது அருளாட்டத்திற்கு ஏற்ப கையிலிருக்கும் வேப்பிவையை, கொத்து அல்லது திரி எனப்படும் பந்தத்திற்கு ஏற்ப வேப்பிலைக்கொத்தை அல்லது வெள்ளி பூண் தரித்த பிரம்பை வீசிக் குலுங்கி குலுங்கி ஆடுவதும் குறிசொல்வதும் - பார்வை பார்ப்பதும் கேள்விக்கு பதில் சொல்வதும் உண்டு.
|55

Page 92
சக்திக் கரகத்தை எடுப்பவர் கோயிலில் அல்லது கரகம் பாவிக்கும் இடத்தில் கட்டிவைத்திருக்கும் மதிப்பு அடையாளம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் கேள்விக்கு பதில் என்பனவற்றை நிறைவேற்றியாக வேண்டும். குளித்து மூழ்கி ஈரவஸ்திரத்துடன் தொழுது நிற்கும் ஆட்டக்காரர்களில் யாப் சரியான மதிப்பு அடையாளத்தை எடுத்து அல்லது வேறு அம்சங்களையும் திருப்திப் படுத்துகின்றாரோ அவரே சக்திக்கரகத்தினை எடுக்கும் பாக்கியத்தினைப் பெறுகின்றனர். ஏனைய வைபவங்களை தொடங்கு முன்னர் காப்பு கட்டுதல் நடைபெறுவது போல இக்கரகம் பாவிக்கும் போதும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும் இறுதியாக மஞ்சல் நீராடுதல், கரகத்தை ஆற்றில் விடல் என்னும் சடங்குகளோடு இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று இறுதிபெறும்.
தலையில் வைத்து ஆடும் கரகம் தெய்வத்தின் அருளால் சரிந்து விழாமல் சாய்ந்து விழாமல் நிற்கின்றது என்பதே அடிப்படை நம்பிக்கையாகும். கரகத்தில் அம்மன் எழுந்தருளி மக்களை ஆட்கொள்வதுடன், அம்மை வெப்பு நோய்களையும் தீர்த்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்வாசி புரிவாள் என்பது நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புமாகும். வருணபகவானுக்குரிய கடல்களும், புனித ஆறுகளும் கரகத்தில் அடங்கி இருப்பதாக ஐதிகம், அம்மன் சினங்கொண்டு அம்மை, வைசூரி போன்ற நோய்களை ஏற்படுத்தும்போது அவற்றை அவள் கருனையாலே தனிக்க கரகம் எடுத்து ஆடுவதுடன் வேப்பிலைத் தேரையும் இழுத்து வருவதை இன்னும் தோட்டப்புறங்களில் காணலாம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே எறக்கிடுவாள் முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா எறக்கிடுவாள் கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் எறக்கிடுவாள் தோளிலே போட்ட முத்தை மாரி துனிவா எறக்கிடுவாள் . என்று நம்பி ஒண்னங்கரகமடி எங்க முத்துமாரி ஒசிந்த கரகமடி எங்க முத்துமாரி ரெண்டாங்கிரகமடி எங்க முத்துமாரி ரெத்தின் கரகமடி எங்க முத்துமாரி
என்று பாடி ஆடி சக்திக்கரகத்தைப் பல்வேறு நம்பிக்கைகளின் குறியீடாகக் கொண்டாடுகின்றனர். கரகக்கலை இவ்வாறு பக்தி உணர்வு மிக்கதாக விளங்குவதுடன் உற்சவங்களுக்குப் புறம்பாக பொதுவான வைபவங்களிலும் ஆடப்படும் கலை நயமிக்க ஆட்டமாகவும் விளங்குகின்றது. இது ஆட்டக்கரகமாகும். இது வருவாய் தருகின்ற தொழில் எனலாம். இதனை
|

எங்கு வேண்டுமென்றாலும் ஆடலாம். இவ்வாட்டத்திற்கு வாத்திய இசை பக்கபலமாக அமைகின்றது. கரகாட்டக் கலைக்கு மேளமும் ஆட்டமும் முக்கிய அம்சங்களாகும். நையாண்டி மேளம், தப்பு, உறுமி, நாதஸ்வரம், முதலான வாத்திய இசைக்கருவிகளின் துணையோடு கரகம் பவர் நாதவேகத்திற்குத் தக்கபடி கரகம் சரிந்து விழுந்து விடாமல் உடல் அவயவங்களால் அபிநயம் செய்து பாவங்களை வெளிப்படுத்தி ஆடுவார்.
கரகத்தினை அலங்கரிக்கும் போது கூம்பு வடிவில் பல தட்டு அம்சங்களை கொண்டதாகவும் முடியில் கிளியையும், அல்லது எலுமிச்சை பழத்தையும், பல்வேறு வண்ண மலர்கள் நிறத்தாள்கள். என்பனவற்றையும் கட்டி அழகுபடுத்துவர். அடிப்பகுதியாக விளங்கும் செம்புக்கு மேலான பகுதியைத் தனியாகக் கழட்டக் கூடிய கரக அமைப்புகளும் உண்டு.
தலையில் கரகத்தை முதலில் வைத்து ஆடுவது சபை வணக்கமாகும். தெய்வத்திற்கும் சபையோருக்கும் வணக்கம் செய்து ஆடுவது முதல் ஆட்டமாகும். கரகத்தின் புஷ்பாஞ்சவி போல் இது அமையும். சபை வணக்கத்திற்கு மரபு வழி ஆட்டங்கள் பல வகைப்படும். ஒன்றாம் காலம், இராஜபாட் பரீ இராமசந்திரன், ஆரவல்லி, நையாண்டிக்கும், ஒயில் கட்டபொம்மை, காவடி, நொண்டிச்சிந்து, சிலம்பாட்டம் முதலிய ஆட்டவகைகளை ஆடுவர். தற்போது மெல்விசைப் பாடல்களை வாத்தியக் கருவிகள் இசைக்க அதற்கேற்ப ஆடுவதையும் காணக்கூடியதாகவுள்ளது.
கரகாட்டத்தில் இன்னுமொரு முக்கியமான அம்சம் சாதனை புரிதலாகும். சாதனை செய்தல் என்பது கரகம் ஆடுபவர், கரகத்தைத் தலையில் லாவகமாகச் சுழற்றுவதுடன், தோன் முதலிய அங்க அவயங்களுக்கும் கைகளினால் தொடாமலே சாதுரியமாக இறக்கி மீண்டும் தலைக்கு எடுப்பதுடன் கத்தி வீசி சண்டை செய்தல், எலுமிச்சைப் பழங்களை மேலே வீசிப் பிடித்தல், தரையில் விரித்திருக்கும் சேலையை படுத்து உருண்டு உடுத்துதல், ஊசி நூல் கொண்டு தைத்தல் முதலியவற்றைச் செய்தலாகும். கரகாட்டத்தில் தங்கசாமி ஆட்டம் என்பது மதுரை அழகரடிப் பகுதியில் உடம்பைச் சரித்து சரித்து ஆடப்படும் ஆட்டத்தைப் பின்பற்றியதாகும். தற்போது இக்கலை மலையகப் பகுதிகளில் மிகவும் குறைந்து வருவதுடன் மரபு வழி ஆட்டம் மிக திசைதிரும்பி சினிமாத்தனமாக நடைபெறுகின்றது.
சிலம்பம்
மலையக மக்கள் கூத்து, கரகம், காவடி போன்ற ஆட்டங்களுடன் உடற் பயிற்சி
சார்ந்த பொழுது போக்குகளையும் தம் நாளாந்த வாழ்வில் பண்பாட்டு அம்சமாகவும் கொண்டுள்ளனர். மலையக மக்களின் பாரம்பரியக் கலைகளாகவும்,
157

Page 93
அதே வேளையில் உடற் பயிற்சியினையும் உவகையோடு உற்சாகம் திருப் பொழுதுபோக்கு அம்சமாகவும், சோம்பேறித்தனத்தைப் போக்கும் விளையாட்டுக்களாகவும் இவற்றை நாம் இனங்கான முடியும். சிலம்பம், கோவாட்டம், பின்னால்கோவாட்டம், கும்மியடித்தல், பொய்க்கால் குதிரை ஆட்டம், ஒயிலாட்டம், புவியும் வேடனும் ஆட்டம், பொய்க்கால் ஆட்டம், தீப்பந்தம் சுழற்றுதல், கொள்ளிவாய்ப்பந்தம், மயிலாட்டம், பாம்பாட்டி நடனம், அனுமான் நடனம், மஞ்சு விரட்டுதல் மஞ்சள் நீராடுதல், "வாள் அடித்தல்" கிட்டிப்புள்ளு, கிளித்தட்டு பாய்தல், பளிஞ் சடுகுடு, தாயம் ஆடுதல், பிள்ளையார் பந்து அடித்தல் ஆகியனவற்றை இவ்வகையில் அடக்கலாம்.
இவ்வகைகளுள் "வஸ்து" எனப்படும் சிலம்பக் கலை தனிச்சிறப்பு வாய்ந்ததாகும் இதனைத் தனியே ஒரு விளையாட்டு என மட்டும் கொள்ள முடியாது தமிழர்களின் தலையாய தற்காப்பு கிவை இதுவாகும். இக்கலைக்கு கம்பு, அல்லது சுழி அச்சானியாக விளங்குகின்றது. கருங்காவி முதலான விவரம் பாய்ந்த கழிகள் விரும்பி உபயோகிக்கப்படுகின்றன. மனித வாழ்வுக்கு பல்வேறு வகைகளிலும் துணை நிற்கும் விருட்சங்கள் இக்கலைக்கும் அடிப்படையாகும், உடற்பயிற்சித் துறைகளிலும் நவீன விளையாட்டுத் துறைகளிலும் கம்பு அல்லது தடி வகிக்கும் முக்கியத்துவத்தினை நாம் அறிவோம். இசைத்துறைகளிலும் இதன் பங்கு மகத்தானதாகும். வெடி மருந்துகள். துப்பாக்கிகள் என்பன யுத்தகளத்திற்கு வரமுன்னர் கம்புகளிலான ஆயுதங்களே செல்வாக்குப் பெற்றிருந்தன. பண்டைய தமிழகத்தில் கம்புகளிலான TTLLTTT TTTT S S S KKYTTTTT y TSLL TLSL SS TTTSSSTTTCTT T S TeeOaO STTTS TT TTTTTTTTTTTeTTTL பயன்படுத்தப்பட்டன. வில்லடித்துப் பாடுவது தொன்றுதொட்டு இன்று வரை நடைமுறையில் உள்ளது. வில் யுத்தம் புரிவதற்காக மட்டுமன்றி பண்டைய திருமணங்களில் சுயம்வரம் முதலான போட்டிகளை நடத்துவதற்கும் துண்ைபுரிந்துள்ளது. தமிழர் வாழ்வில் கம்பினால் ஆடும் சிலம்பாட்டம் பண்டு தொட்டு பெரும் வழக்கில் உள்ளது. மராட்டிய நாட்டில் கம்பு விளையாட்டு வாட்டி என்றும் குஜராத்தில் டால்லக்கடி என்றும் வங்காள நாட்டில் லாடிகளா என்றும் பெங்களூர் மைசூர் பகுதிகளில் தாண்டா வரிசை என்றும் வழங்குகின்றது. தமிழ் இலக்கியங்களில் சிலம்புப் பயிற்சிகளைப் பற்றியும் சிலம்பப்பயிற்சியினால் விளையும் நன்மைகள் பற்றியும் பெ குறிப்புக்கள் கானப்படுகின்றன. சிவப்பம் தற்காப்பு கிவையாகவும் அதேவேளையில் பொழுது போக்குடன் இணைந்த ரசமிக்க தீரமான விளையாட்டுப் போட்டியாகவும் திகழ்கின்றது.
சிலம்பம் என்ற சொல் பல்வேறு விளக்கங்களைக் கொண்டது. சிவம்பு என்ற சொல் மலையை அல்லது சிலம்பு என்ற காலணியையும் குறிக்கும். சிலப்பு என்றால் ஓசை எழுப்பு என்ற வினைச்சொல்லையும் குறிக்கும். கழியை
158

என்றழைப்பர். இப்பீடை காலத்தில் பஜனை செய்வதும் அதுவும் இராமர் விஷ்ணு ஆகியோருக்கு பஜனை பாடி விழா எடுப்பது உகந்ததாகக் கருதப்படுகின்றது. மார்கழி மாத பக்தி நிகழ்ச்சியாக பஜகோவித்தம் அமையும், அதிகாலையில் பக்தர்கள் பலர் "சங்கு" சேகண்டி" முழங்க பஜனை செய்வர். மாலையில் இராமர் அல்லது விஷ்ணுவின் படத்தோடு வீட்டுக்கு வீடு சென்று பஜனை பாடுவர். இவர்கள் விளக்கு எரியும் கம்பத்தையும் எடுத்துச்செல்வர். இக்கம்பத்துக்கு எண்ணெய் வார்ப்பதுடன் காணிக்கையும் அளிப்பர். கம்பத்தை தாங்கிச் செல்பவர் விரதம் இருந்து புனிதமாக இப்பணியைச் செய்வர். மார்கழி மாதக் குளிரையும் பொருட்படுத்தாது சிறியோர் பெரியோர் "அரி ராமா ராமா ராமரையே நம்பியுள்ளோம்" என்று பாடி மகிழ்வர். தைப்பொங்கல் பிறக்க பஜகோவிந்தம் நிறைவு பெறும்,
கரகம்
மலைய மக்களின் பாரம்பரிய ஆட்டங்களில் கரகாட்டம் முக்கியமானதாகும். இது கண்ணகி அம்மன் வழிபாட்டுடனும் சில இடங்களில் காளி வழிபாட்டுடனும் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது. பொதுவாக மலையகத் தோட்டப்புறங்களில் ஆலயங்களில் உற்சவங்களின்போது கரகத்தை "கும்பம்" வைத்து பாவிப்பது வழக்கமாகும். தமிழகத்தில் கிராம தேவதைகளின் கோயில்களிலும் விழாக்களிலும் ஆடப்பட்ட இக்கரகாட்டத்தை மலையக மக்கள் மறந்துவிடாமல் தம் தோட்டத்து ஆலய உற்சவங்களிலும் வேறு திருவிழாக்களிலும் களிப்புடன் ஆடுகின்றனர். கரகம் பக்தி சிரத்தை மிக்க தெய்வமேறிய ஆட்டமாகவும் அதே வேளையில் கலை உணர்வு மிக்க ஆட்டமாகவும் இது விளங்குகின்றது.
தோட்டங்களில் "கரகம்பாலித்தல்" என்பது பக்தி உணர்வு ததும்பும் ஒரு நிகழ்வாகும். செம்பில் அல்லது குடத்தில் நீரை நிரப்பி "வேப்பிலை பூ என்பனவற்றினால் அலங்காரம் செய்து ஆற்றங்கரை, அருவி, ஓடை, பீலிக்கரை ஆகிய நீர்நிலைகளிலிருந்து பூங்கரகம் எனப்படும் சக்திக்கரகத்தைப் பூசாரி அல்லது கரகம் எடுப்பவர் ஊர்வலமாகக் கொண்டுவருவர். இக்கரகம் விரதமிருந்து அருள் வந்து எடுப்பதாகும். சக்திக் கிரகத்தை எடுப்பவர் ஆடமாட்டார். அது உற்சவ மூர்த்தி போல் இயங்கும். சக்திக் கரகத்தை எடுப்பவர் பொதுவாக ஆடாதபோதிலும் "அருள்" வேளையில் வாத்திய இசை அல்லது அருளாட்டத்திற்கு ஏற்ப கையிலிருக்கும் வேப்பிலையை, கொத்து அல்லது திரி எனப்படும் பந்தத்திற்கு ஏற்ப வேப்பிலைக்கொத்தை அல்லது வெள்ளி பூண் தரித்த பிரம்பை வீசிக் குலுங்கி குலுங்கி ஆடுவதும் குறிசொல்வதும் - பார்வை பார்ப்பதும் கேள்விக்கு பதில் சொல்வதும் உண்டு.

Page 94
சக்திக் கரகத்தை எடுப்பவர் கோயிலில் அல்லது கரகம் பாலிக்கும் இடத்தில் கட்டிவைத்திருக்கும் மதிப்பு அடையாளம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பொருள் கேள்விக்கு பதில் என்பனவற்றை நிறைவேற்றியாக வேண்டும். குளித்து மூழ்கி ஈரவஸ்திரத்துடன் தொழுது நிற்கும் ஆட்டக்காரர்களில் யார் சரியான மதிப்பு அடையாளத்தை எடுத்து அல்லதுவேறு அம்சங்களையும் திருப்திப் படுத்துகின்றாரோ, அவரே சக்திக்கரகத்தினை எடுக்கும் பாக்கியத்தினைப் பெறுகின்றனர். ஏனைய வைபவங்களை தொடங்கு முன்னர் காப்பு கட்டுதல் நடைபெறுவது போல இக்கரகம் பாவிக்கும் போதும் காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இறுதியாக மஞ்சல் நீராடுதல், கரகத்தை ஆற்றில் விடல் என்னும் சடங்குகளோடு இந்நிகழ்ச்சிகள் நடைபெற்று இறுதிபெறும்.
தலையில் வைத்து ஆடும் கிரகம் தெய்வத்தின் அருளால் சரிந்து விழாமல் சாய்ந்து விழாமல் நிற்கின்றது என்பதே அடிப்படை நம்பிக்கையாகும். கிரகத்தில் அம்மன் எழுந்தருளி மக்களை ஆட்கொள்வதுடன், அம்மை வெப்பு நோய்களையும் தீர்த்து நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லாசி புரிவாள் என்பது நம்பிக்கையுடன் எதிர்பார்ப்புமாகும். வருணபகவானுக்குரிய கடல்களும், புனித ஆறுகளும் கரகத்தில் அடங்கி இருப்பதாக ஐதிகம். அம்மன் சினங்கொண்டு அம்மை, வைசூரி போன்ற நோய்களை ஏற்படுத்தும்போது அவற்றை அவள் கருணையாலே தனிக்க கரகம் எடுத்து ஆடுவதுடன் வேப்பிலைத் தேரையும் இழுத்து வருவதை இன்னும் தோட்டப்புறங்களில் காணலாம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே எறக்கிடுவாள் முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா எறக்கிடுவாள் கழுத்திலே போட்ட முத்தை மாரி கானாமல் எறக்கிடுவாள் தோளிலே போட்ட முத்தை மாரி துனிவா எறக்கிடுவாள் . என்று நம்பி ஒண்ணங்கரகமடி எங்க முத்துமாரி ஒசந்த கிரகமடி எங்க முத்துமாரி ரெண்டாங்கரகமடி எங்க முத்துமாரி ரெத்தின் கரகமடி எங்க முத்துமாரி
என்று பாடி ஆடி சக்திக்கரகத்தைப் பல்வேறு நம்பிக்கைகளின் குறியீடாகக் கொண்டாடுகின்றனர். கரகக்கலை இவ்வாறு பக்தி உணர்வு மிக்கதாக விளங்குவதுடன் உற்சவங்களுக்குப் புறம்பாக பொதுவான வைபவங்களிலும் ஆடப்படும் கலை நயமிக்க ஆட்டமாகவும் விளங்குகின்றது. இது ஆட்டக்கரகமாகும். இது வருவாய் தருகின்ற தொழில் எனலாம். இதனை
|5ն

வேகமாகச் சுழற்றுவதனாலும் இக்கலைக்கு இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம். அப்போது எழும் ஓசையினால், வார்த்தை ஜாலம் காட்டி பேசி முழங்குபவரை தற்காலத்தில் சொற்சிலம்பம் ஆடுகிறார் என்று குறிப்பிடுவதும் உண்டு தமிழ் அகராதிகளில் சிலம்பம் என்ற சொல்லுக்கு தந்திரோபாயம் என்றும் பயமுறுத்தல் என்றும் கழிவிளையாட்டு என்றும் பல பொருட்கள் கூறப்பட்டுள்ளன.
மலையகத்தில் இக்கலை சிவம்பம் அல்லது சிலம்படி வஸ்தா என்ற பெயரில் வழங்கிவருகிறது. விசையுடன் லாவமாகக் கம்பைச் சுழற்றுவதுடன் தந்திரமாக உருவி வீசுவதும் சிலம்ப விளையாட்டில் முக்கிய அம்சமாகும். கம்பைச் சுழற்றுபவர் ஆக்கிரோசமாக அபிநயம் செய்து பாய்ச்சல் காட்டுவது பார்க்கப் பார்க்க பரவசமாக அமையும், நெத்தி மட்டக் கம்பெடுத்து வஸ்தா விளையாடுவது மலையகத்தவரின் பொழுது போக்காகும், கம்பை எடுத்து வலக்கையினால் பிடித்து முன்னும் பின்னும் இடமும், வலமும் ஆகச் சுழற்றி வீச்சினைச் செய்து சபை வணக்கம் செய்வது சிலாவரிசை எனப்படும். இவ்வாறு எட்டு வீடு கட்டி நாற்புறமும் பாய்ந்து வீரசாகசம் செய்து சிலம்பம் ஆடுவர். இக்கம்பு வீச்சு முறைகள் துளுகோனர் கருநடா என பல வகையானதாக அமையும்.
தோட்டங்களில் இச்சிலம்பம் கலையை பயிற்றுவிக்கக் கைதேர்ந்த ஆசிரியர்கள் இருந்தனர். இந்தியக் கிராமங்களிலும் கோயில்களிலும் புத்தங்களிலும், சண்டைகளிலும் தாம் மேற்கொண்ட இவ்வாட்டத்தைத் தாம் வாழ்ந்த தோட்டங்களிலும் பயிற்றுவித்தனர். ஒரு சுபதினத்தில் ஒரு வாக்கு பெற்று ஆசிரியர் தோட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கற்பிக்க ஆரம்பிப்பர். இதில் குரு - சிஷ்ய முறை பின்பற்றப்படும். சிலம்பக் கலையை கற்க ஆர்வத்துடன் வந்துள்ள இளைஞர்கள் "ஓம் குருவே துணை குரு நன்றாக வாழ்க" எனக் குருவின் பாதங்களில் வனங்கிப் பயிற்சியை ஆரம்பிப்பர். பயிற்சிகள் முடிவடைந்த பின்னர், அரங்கேற்றம் நடைபெறும். அரங்கேற்ற தினத்தில் விசேட பூசைகள் நடைபெறுவதுடன் வேட்டி, சால்வை, பணப்பரிசுகள் என்பனவற்றை வழங்கி ஆசிரியரைக் கெளரவிப்பர். பயிற்சி பெற்றவர்கள் இருவர் இருவராக போட்டியிட்டுச் சிலம்பம் ஆடுவர். முதலில் ஒருவர் மற்ற ஆட்டக்காரரை முதலாம் அடி, இரண்டாம் அடி மூன்றாம் அடி என தொடர்ந்து தாக்கிக்கொண்டே செல்வார். மற்றப் போட்டியாளர் இதனை மறித்துத் தற்காத்துக்கொண்டே வருவார். பின்னர் மற்றப் போட்டியாளர் இவ்வாறு செய்வார். சிநேக பூர்வமாகவே நடைபெறும் இவ்வாட்டத்தில் போட்டியில் பங்குகொள்வோர் சிலவேளைகளில் உணர்ச்சிவசப்பட்டு உக்கிரமாகப் பொருதுவதுமுண்டு. கைகளினால் சிலம்பத் தடியை சுழற்றுவதுடன் விரல் இடுக்குகளிலும் தடியைப் பொருத்தி, சுழற்றி பூச்சொரிவது போல் சுழலச் செய்து பரவசமடையச் செய்வார்.
5.

Page 95
குறிப்பிட்ட ஒரு தோட்டத்தில் பெயர் பெற்ற ஓர் ஆசிரியரிடம் இக்கலையைப் பயின்றவர்களைப் போட்டியிட்டு வெற்றிகொள்ள, இன்னொரு தோட்டத்தில் உள்ள பிரபல்யமான ஆசிரியர் ஒருவரிடம் பயின்றவர்கள் போட்டிக்காக வருவதுண்டு. ஒருவரைத் தாக்கி அடித்து விழுத்துவதை விட அவரைத் தம் திறமையினாலும் சாதுரியத்தினாலும் களைப்படையச்செய்து தம் கையில் உன்ன தடியின் நுனியில் குங்குமத்தைப் பூசி, எதிர்த்துப் போட்டியிடுபவரின் நெற்றியில் குங்குமத்தைத் திலகமாக வைத்து வெற்றியீட்டிக் களிப்படைவர். இப்போட்டிகளைத் தவிர மலையகத்தில் குறிப்பாக தோட்டங்களில் நடைபெறும் திருவிழாக்கள், கூத்துக்கள், பொது வைபவங்கள் என்பனவற்றிலும் சிலம்பம் ஆடப்படுகின்றது. பொதுவாக வரவேற்பு வைபவங்களில் இவ்வாட்டம் சிறப்பாக இன்றும் ஆடப்படுகின்றது. காமன் கூத்துப் போன்ற சீர்த்துக்களின் போதும் பெண்கள் சீர் கொண்டுபோகும் போதும் சிலம்பாட்டத்தை ஆடுகின்றனர். தற்காப்புக் கலையாகவும், கண்காட்சிக் கலையாகவும் போட்டிக்கவையாகவும் விளங்கும் இக்கலையை முறையாகப் பயின்றோர் மிகவும் சொற்பமாகவே
உள்ளார்.
மலையகத்தவரைப் போலவே தமிழகத்திலிருந்து பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காக மலேசியா முதலான நாடுகளில் குடியேறியோர் அங்கும் இக்கலையைப் பரப்பியுள்ளனர் மலேசியாவில் பாடசாலைகளிலும், உயர் கல்விக் கூடங்களிலும் இக்கவை பயிற்சியளிக்கப்படுகின்றது. சிலம்பம் பயிற்சியினால் உடல் வலுவடைந்து வாய்வு, மலச்சிக்கல் போன்ற தொல்லைகள் நீங்குகின்றன.
தோட்டப்பகுதிகளில் ஒருசில முதியவர்களே இன்று இக்கலையைப் பயின்றவர்களாக உள்ளனர். தளர்ந்து போன இவர்களிடம் இக்கலையைக் கேட்டறிந்து கற்பாரும் இல்லை. எனவே காலப்போக்கில் நம் மூதாதையர் வளர்த்த இவ்வருங்கலை மறைந்துவிடக்கூடிய பேரபாயம் உண்டு. பயமிக்க இக்கவைக்கே இளைய தலைமுறையினர் புத்துயிர்ப்பு அளிக்க வேண்டும்.
111
கூத்துக்கள்
அருச்சுனன் தபசு
மலையகத்தில் ஆடப்படும் கூத்துக்களில் அருச்சுனன் சுத்து முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இக்சுத்து பெருமளவில் வழக்கொழிந்து விட்டது. மகாபாரதி
இதிகாசக் கதை மலையக மக்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்று நிலைத்துள்ளது. இன்றும் தோட்டங்களில் பெரிய எழுத்து ராமாயணம், மகாபாரதம், நல்லதங்காள்
| [[]]

கதை போன்றவைகளைப் படிப்பதைக் காரைவாம், SNJ FT LICET AL GASTIN, LINJA, IT LI TILT I, list) போன்ற இதிகாசங்களை மலையக மக்கள் வெறும் கதைகளாக மட்டும் எண்ணிப் படிப்பதில்லை. சமய உணவுடன் பக்தி உணர்வையும் சிரமேற்கொண்டு இவற்றைத் தம் தெய்வங்களின் அவதாரக் கோட்பாடுகளை எடுத்து விளக்கும் திவ்விய நூல்களாகவே ஏற்றுப் படிக்கின்றனர். மகாபாரதத்தில் தர்மனின் பொறுமையும் வீமனினதும், அருச்சுனனினதும் வீரமும் கர்ணனின் கொடையும் என்பவையெல்லாம் அவர் தம் நாளாந்த வாழ்க்கைக்கு விளக்கம் அளிக்கும் தத்துவங்களாகும்.
இவ்வாறு தம் வாழ்க்கையில் இணைந்துவிட்ட மகாபாரதக் கதையில் வரும் அருச்சுனன் பாத்திரம் நீங்கா இடத்தைப் பெற்றிருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. வில்லுக்கு விஜயன் என்று வீரனாகவும், சகோதரர் பாண்டவரையும், குடும்பத்தவர்களையும், காப்பாற்றும் பாசமிக்கி வீடமை வீரனாகவும், அதே வேளையில் கதை முழுவதிலும் பெண்களின் மனத்திைகி கவர்ந்த கதாநாயகனாகவும், பாமர மக்கள் மனதில் அவன் இடம் பெற்றிருக்கின்றான். கிருஷ்ண பரமாத்மாவின் நட்பு. கீதை உபதேசம், குருக்ஷேத்திர காலத்தில் வெற்றி என்பவைகளெல்லாம் அவனுக்குக் காப்பியநாயகன் என்ற அந்தஸ்தை வழங்குகின்றன. கிருஷ்ணன் தருமனுக்கு திவ்விய சாஸ்திரத்தை உபதேசிக்கின்றார். பின்னர் இதனை தருமனிடம் அருச்சுனன் கற்று இந்திரனிடமும் சிவனிடமும் சென்று அஸ்திரங்களையும் வரங்களையும் பெறுகின்றான். இவ்வரங்களைப் பெற அருச்சுனன் கடும் தவம் புரியும்போது அருச்சுனனும், சிவபெருமானும் ஒரே பன்றிக்கு அம்பு எறிய இருவரும் வாதிட்டு சமர் செய்ய நேரிடுகிறது. இதில் அருச்சுனன் தோற்க சிவபெருமான் தனது மெய் வடிவைக் காட்டி அருச்சுனனை ஆட்கொண்டதுடன் பாசுபதசாஸ்திரத்தையும் வழங்குகின்றார்.
சிவனிடம் பாசுபதாஸ்திரம் பெற்று வரும் அருச்சுனனுக்கு ரத்தினக் கிரீடத்தைச் சூட்டி வச்சிராயுதத்தை வழங்குகின்றார். இத்தனை முக்கியத்துவம் பெற்ற அருச்சுனனின் பெருமைகளை விளக்கும் வண்ணமே அருச்சுனன் தபசு என்னும் கூத்து ஆடப்படுகின்றது. இக்கூத்து ஆடப்படும் தோட்டத்தில் உள்ள ஆலயத்தில் பக்தி சிரத்தையுடன் மகாபாரதக் கதை படிக்கப்பட்டு அருச்சுனன் பாசுபதம் எனும் அளப்திரத்தைச் சிவனிடம் பெறுகின்ற பகுதி வாசிக்கப்படத் தொடங்கும் வேளையில் வாசிப்பு நிறுத்தப்பட்டு அருச்சுனனின் தவநிலைக் காட்சி முதலான அம்சங்கள் பூசையோடு கூடிய சுத்தாக அமையும். சில வேளையில் கூத்தினை விடப்பூசையோடு கூடிய சடங்கு முறைகளே முக்கியத்துவம் பெற்று விளங்குகின்றன.
மகாபாரத வாசிப்பு பட்டாபிசேகம் வரை 18 நாட்கள் வாசிக்கப்பட்டாலும் அருச்சுனன் முக்கியத்துவம் பெறும் தீர்த்த யாத்திரைச் சரித்திரம், வனவாசம்

Page 96
புகும் காட்சி 16ம் நாளாகிய அருச்சுனன் தவநிலைக் காட்சி என்பனவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு கூத்து வடிவில் நடப்பதை காணலாம். இக்கூத்து ஆரம்பமாவதற்கு முன்னர் வழமைபோல் ஆலயத்தில் கரகம் பாலித்தல், காப்பு கட்டுதல், கோடியேற்றுதல் ஆகிய அம்சங்கள் இடம்பெறும். ஆலயத்தின் ஒரு பகுதியில் பஞ்சபாண்டவர்களினதும் திரெளபதியினதும் குத்திதேவியினதும் திருவுருவங்களை அல்லது படங்களை வைத்து விசேட பூசைகளை நடத்துவர். இங்குதான் சுரகத்தையும் பாவித்து வைப்பர். இங்கு ஏற்றப்படும் கொடி சூரிய சந்திர உருவங்களைப் பொறித்ததாக இருக்கும். சில இடங்களில் திரெளபதை அம்மனுக்காக கொழுந்தன் கொடி எனும் கொடியையும் ஏற்றி வைப்பர். வெளியே துரியோதனனுக்கான சரபக்கொடியையும் பாண்டவர்களுக்கான அனுமக் கொடியையும் ஏற்றி வைப்பர். சில இடங்களில் தீமிதிப்பும் இடம்பெறுவதுண்டு. சில இடங்களில் தோட்டங்களிலுள்ள முறையில் தற்காலிக பச்சைப் பந்தலை அமைப்பர். இதிலேயே பாரதத்தை வாசிப்பதுடன் பூசை முதலானவைகளும் நடைபெறும், இக்கதையை வாசிப்பதாகக் கொள்ளமுடியாது. பாட்டாகவும், இசை வடிவமாகவும் தெம்மாங்கு மெட்டுகளுடனும் கிராம சந்தங்களுடனும் வாத்தியக் கருவிகளுடனும் இணைந்து பாடுவர். இக்சுத்தில் பாத்திரம் வாசிப்போர் விரதம் இருந்து உண்ணா நோன்பிருந்து காப்பு கட்டி ஆலயத்திலேயே தங்கிவிடுவர்.
வாசிப்புத் தொடங்கிய 4 வது நாளில் ஆலயத்தின் கிழக்கே சுமார் அறுபது அடிகளுக்கு மேலான ஒரு கொடிக்கம்பம் நடப்படும். இக்கொடிக்கம்பத்தில் அனுமானுடைய உருவம் வரையப்பட்ட கொடிச்சிலை பறக்கவிடப்படுவதுடன் கொடியின் உச்சியில் தர்ப்பைப் புல்லும் வைக்கப்பட்டிருக்கும். மாலையில் பூசை முடிந்தவுடன் கூத்து ஆரம்பமாகும். ஆலயமும் அதனைச் சுற்றிய பகுதியுமே சுத்து நடைபெறும் தளமாகும். அருச்சுனன் தபசு பதினைந்தாம் நான் கூத்தாகும், அருச்சுனன் கெளரவர்களை ஒழிக்கச் சிவனை நோக்கிக் கடுந்தவம் இயற்றிப் பாசுபதாஸ்திரம் பெற்றமையே அருச்சுனன் தபசு என்னும் சுத்தில் முக்கிய அம்சமாகும். இத்தபசு மரம் நடப்பட்ட நாளிலிருந்து அதற்கு விசேட பூசை நடைபெறும்.
அருச்சுனனது பாத்திரத்தை ஏற்பவர் மான் தோல் உடுத்தி, வில் அம்புகளுடன் விபூதி உருத்திராட்சம் என்பனவற்றைத் தரித்து சங்கு, சேகண்டி முழங்க தபசு மரத்தை நோக்கிச் செல்வார்கள். அப்போது அருச்சுனனது தவத்தைக் கலைக்க மோகினிப் பெண்ணொருத்தி இடையில் வந்து ஜாலம் செய்வான். அப்போது அருச்சுனன் அவளை நோக்கி "அட மோகினி பெண்ணே நான் ஈசனை நோக்கி இணையா வரம் வாங்கப் போகின்றேன்" என்றுபாடி அவள் வலையில் விழாமல் தப்பிக்கொள்வான். மோகினிப்பெண் வெட்கி, நானிஅவ்விடத்தை விட்டுச் சென்று விடுவாள். சபையோர்கள் கைகொட்டி ஆரவாரம் செய்து மகிழ்வர். அதன் பின் அருச்சுனனது தவநிலையைக்
52

கெடுக்கப் பரசுராமன் பன்றி உருவில் வருகின்ற காட்சிகள் இடம்பெறும்,
பின்னர் அருச்சுனன் நடப்பட்டுள்ள தபசு மரத்தில் ஏறிச்செல்வார். அப்போது
அவர் பாடல்களைப் பாடியபடி ஏறிச்செல்ல 卤" இருப்பவர் அரோ ஹரா
கோவும் எழுப்புவர்.
சாலாகிரியை வில்லாக சரமேன் யேசு நானாக கல சூழும் முப்புரத்தை தகனமிட்ட கர்த்தாவுடன் பாதrதை நாலாம் படியிற் திருக்காவை நன்றாய் பாசுபதம் வேண்ட மேலா எழுந்து நான் வாரேன் விமலா வரந்தருள்வாயே
மேற்கண்டவாறான பாடல்களைப் பாடிப் பாடியே தபசு மரத்தில் உச்சியை நோக்கி ஏறிச்செல்வர். உச்சியை அடைந்தவுடன் தவவலிமையின் காரணமாகச் சிவபெருமான் உடையம்மனுடன் தோன்றிப் பாசுபதாஸ்திரம் அளிப்பதாகக் கொள்ளப்படும். அருச்சுனனாக வேடம் தரித்தவர் உச்சியை அடைந்தவுடன் ஆலயமணி அடிக்கப்பட்டு விசேட பூசைகள் நடைபெறும், அப்போது வானில் கிருடப்பறவை அருச்சுனன் தபசு கூத்துக்களில் வட்டமிட்டுப் பறப்பது பெரும் தரிசனமாகும். பின்னர் அருச்சுனன் தபசு மரத்தில் இருந்து பக்தர்கள் புடைசூழ்ந்து மேள தாள வாத்தியங்களுடன் அழைத்துவரப்படுவர்.
அருச்சுனன் தபசு நடைபெறும் காலங்களில் சில இடங்களில் கர்ணன் சண்டை என்னும் கதையும் படிக்கப்படுவதுண்டு. கர்ம வீரனான கர்ணனின் குடும்ப வாழ்க்கையில் முக்கிய அம்சங்களேயே இவ்வாறு வாய்ப்பாடாகப் படிப்பர் கனனின் மனைவி கர்ணன் தாழ்ந்த குலத்தவன் என்று ஒதுக்கி பிரிந்து இருத்தல், மனைவியால் ஒதுக்கப்பட்ட கர்ணன் மகனையும் மனைவியையும் பிரிந்து வாழுதல், பின்னர் குந்திதேவியைச் சந்திந்த பின்னர் போருக்கு செல்ல முன்னர் மனைவியிடம் உண்மை நிலையைக் கூறி தான் போரில் இறப்பின் பாண்டவர்களுடன் செல்லுமாறு வேண்டிக்கொள்ளுதல், என்பனவே கர்ணன் சண்டை என உருக்கமாகப் பாடப்படுகின்றது.
கர்ணன் சண்டைகதை படிப்பிலேயே காணப்படுகிறது. கூத்துவடிவில் ஆடப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அருச்சுனன் தபசு கலை நுட்பத்துடன் அருங்கூத்தாக ஆடப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலுள்ள உடப்பு திரெளபதை அம்மன் ஆலயத்தில் நடைபெறும் மகோற்சவத்தில் அருச்சுனன் தவ நிலைக்காட்சி ஓர் அங்கமாக இடம்பெறுகின்றது. ஆனால் மலையகத்தில் அருச்சுனன் தபசே முழு வாசிப்பிலும் கூத்தாக ஆடப்படுவது சிறப்பம்சமாகும்.
பொன்னர் சங்கர் கூத்து
மலையகத்தில் பீடத்து வடிவில் ஆடப்படும் பொன்னர் சங்கர் கதைக் கூத்து தனித்துவமும், கவிச்சுவையும், காவியப்போக்கும் கொண்டது. வீரத்தை
13

Page 97
வலியுறுத்தி நிற்கும் இக்கூத்து அவலச்சுவையோடு அங்கதச்சுவையுமிக்கது. மலையகத்தில் பாரம்பரிய கூத்துக்களான காமன் கூத்து, அருச்சுனன் தபசு போன்ற பக்தி உணர்வை ஏற்படுத்தும் தெய்வமேரிய ஆட்டவகையினை இது சார்ந்ததுடன் புராண கதையம்சங்களையும் கொண்டது. இக்கூத்து மலையகத்தில் மாசி மாதத்திற்குப் பிற்பட்ட காலத்திலோ அல்லது கதிர்காம உற்சவக் காலப்பகுதியிலோ பெரும்பாலும் ஆடப்படுவதுண்டு. முற்பிறப்பில் தர்மராக அவதரித்தவரே பின்னர் பொன்னராகவும் அருச்சுனனே சங்கராகவும், திரெளபதியே இவர்களின் தங்கையாகவும் வீமனே குதிரைச் சேவகனாகவும் மறுபிறவி எடுத்தனர் என்பது கதைக்கூடாக உணர்த்தப்படும் ஐதீகமாகும். இவர்கள் வழிபடும் தெய்வமாக பெரியசாமி குறிப்பிடப்படுகின்றது. இக்கதைகளில் வரும் பாத்திரமான மந்திர மாமுனியே கதையோட்டதிற்குப் பொறுப்பான சூத்திரதாரியாக விளங்குகின்றார்.
இக்கூத்து, கோயில் முற்றவெளியில் அல்லது தோட்டத்தில் அமைந்த வாய்ப்பான இடத்தில் ஆடப்படும். இக்கூத்தில் அங்கம் வகிப்போர் அதாவது பாத்திரங்களை ஏற்று ஆடுபவர் விரதமிருந்து கோயிலில் விசேட பூசைகள் நடைபெற்ற பின்னர் பூசாரியானவர் கட்டிவைத்திருக்கும் அடையாள மதிப்பினை எடுத்த பின்னர் தமக்குரிய பாத்திரங்களைப் பொறுப்பேற்பர். அடையாளங்களாக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பலவகைப் பூக்கள், மஞ்சள், விபூதி, முதலிய மதிப்புப் பொருட்களை எடுக்கத்தவறுவோர் அவ்வருடக் கூத்துக்குச் சேர்க்கப்படமாட்டார்கள்.
காமன் கூத்தினைப் போன்றே கிரீடம் முதலான ஆவரங்களுடன் இதில் விசேடமாகப் பட்டாக்கத்தி வாள்களும் பயன்படுத்தப்படும். இக்கூத்தினை நாடகம் போல் நடத்திச் செல்வர். பொன்னர் சங்கள் 16 வயது பராயத்தினை உணர்த்தும் வண்ணம் 16 தினங்களில் இது பதினாறு அங்கமாக ஆடப்படுவதுண்டு. கோயிலில் முகூர்த்தக்கால் நடுதல் என்னும் சம்பிரதாயத்துடன் இக்கூத்து தொடங்கும். பொன்னர் சங்கரின் தாய் தந்தையர் பொன்னுடையார் கவுண்டர், தாமரை பெரியநாச்சி ஆகியோர்கள். இவர்களுக்குப் புத்திர பாக்கியம் இல்லாத படியால் தாமரை பெரியநாச்சி சகோதரனான குன்னுடையார் கவுண்டன் இராட்சியப் பொறுப்பை ஏற்று நடத்துகின்றார். இராட்சியப் பாரத்தினைக் குன்னுடையார் கவுண்டர் ஏற்க பொன்னுடையார் கவுண்டனும் தாமரை பெரிய நாச்சியும் தமக்குப் புத்திர பாக்கியம் வேண்டிச் சிவபெருமானிடத்துக் கடுந்தவம் புரிந்தனர். இவர்களின் கடுந்தவத்தினால் மனமிரங்கிய இறைவன் காட்சி கொடுத்து 16 வயது வாழ்நாளுடைய பிள்ளைகளை அருளுகின்றார். இப்பிள்ளைகளால் தனக்கும் தனது ஆட்சிக்கும் ஆபத்து என்பதை உணர்ந்த மாமனான குன்னுடையார் குழந்தைகளைக் கொல்ல மருத்துவச்சி மூலமாக சதி செய்கின்றான். இச்சதியினின்றும் தப்பிப்பிழைத்த பொன்னர் சங்கர் மறைந்து வாழ்ந்து பல கலைகளையும் கற்று ஈற்றில் போரில் இறங்கினர். கதையில்
164

பொன்னர் மாமன் குன்னுடையார் கவுண்டர் செப்பக்குளம் ஆசாரியுடன் சேர்ந்து செய்யும் சதியால் தங்கமரக்கால் திருட்டுக்குற்றவாளியாக ஆக்கப்பட்டு அவமானப்பட்டு நிற்பது கோவலன் கதையை நினைவுபடுத்துவதாக உள்ளது. கேடயம், வில்லு, வாள், கொட்டுக்குச்சி. என்பன கதையில் போர்க்காட்சிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பொன்னர் சங்கர் மறைந்து வாழும் காலங்களில் பல சாகசங்களைச் செய்கின்றார்கள். ஊர் மக்களுக்குப் பெருந் தொல்லைகொடுத்து வந்த வேங்கையைக் கொல்லுதல், படுகளம் செல்லுதல், மாமன் செய்யும் சூழ்ச்சி வேலையிலிருந்து தெய்வ அருளால் தப்புதல் என்பனவும் மற்றும் விறுவிறுப்பூட்டும் அம்சங்களாக விளங்குகின்றன.
இக்கூத்தை நோக்கும் போது தனியே ஒரு கூத்தாக மட்டும் கொள்ளமுடியாத நிலைப்பாடுகளும் உண்டு. ஒரு காலப்பகுதியை அதாவது இக்கூத்து நடைபெறும் காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையும் இக்கூத்தோடு ஒன்றித்துவிடுகிறது. தனியே கலா உணர்வுகளை மட்டும் பிரித்துப் பார்க்கமுடியாத நிலை காணப்படுகிறது. இராமாயணம், பாரதம் முதலான இதிகாசங்களில் நம் மக்கள்லயித்து ஒன்றியவர்கள். மகாபாரதக் கதையின் பின்னணியைக் கொண்ட இக்கூத்து நடைபெறும்போது அத்தோட்டமே பக்தி பரவசமாகிவிடுகின்றது. நோன்பிருத்தல், பல்வேறு விதமான கோலங்களை வாசலிலிட்டு அலங்கரித்தல் என்பவற்றுடன் தாமரை பெரியநாச்சிக்கு குழந்தைகள் வேண்டி தவம் இயற்றிய காலத்தில் அவள் தலையில் கிளிகள் கூடுகட்டி வாழ்ந்ததாக நம்பப்படுவதால் இக்கூத்து நடைபெறும் காலங்களில் இளம் பெண்கள் தமக்கு மகப்பேறு கிடைக்கவேண்டும் என்பதற்காகத் தலைமுடியை வாரிச்சீவாது அள்ளிச்சொருகி அழகிய கிளி வடிவங்களை சூடிக்கொள்வர். பாட்டும் வசனமும் கலந்த இக்கூத்து மலையக பாரம்பரிய கூத்துக்களில் தனிச்சிறப்புடையது. இக்கூத்தின் கதைப்போக்கும் முக்கிய நிகழ்ச்சி அம்சங்களும் தோட்டத்திற்கு தோட்டம் சிற்சில வேறுபாடுகளைக் கொண்டு ஆடப்பட்டாலும் பொதுவாக ஒத்ததன்மை இருப்பதைக் காணலாம். படுகளத் திருவிழா என கொண்டாடப்படுவதும் இக்கூத்தேயாகும்.
காமன் கூத்து
காமன் கதை நாம் அனைவரும் நன்கறிந்த ஒன்றாகும். கச்சியப்பசிவாச்சாரிய சுவாமிகள் அருளிச் செய்த கந்த புராணத்தின் உற்பத்திக் காண்டத்தில் நான்காவது படலமாக காமகனப் படலம் அமைந்துள்ளது. இதனைத் தவிர பல்வேறு வாய்மொழிக் கதைகளும் உள்ளன. காமதேவனுக்கு என்றே பண்டிகை ஒன்று உள்ளது. இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
கந்தபுராணக் காமதகனப் படலத்திற்கு உரை செய்த பிரம்ப பூரீ ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் மன்மதன் எரியுண்ட வரலாற்றினைப் பின்வருமாறு
165

Page 98
விளக்குகின்றார்.பிரம்மதேவர் மனோவதி சேர்ந்த பின் மன்மதனை வருவித்து நீ திருக்கைலாசகிரியில் சென்று பூங்கணைகளை கொய்து சிவபெருமான் தேவியை நினைக்குமாறு செய்து வருகுதி என்று ஏவினர். மன்மதன் அவரோடெதிர்த்து யானுய்வதெப்படி என்று பற்பல நியாயங்கள் சுறி மறுத்தார். பிரமதேவர் பின்னும் சிவனருளின்றியொன்றும் நிகழ்வதில்லை நீ யோகநிலையை அகற்றுமாறு செல்வதும் அவர் அருளே, எங்களிடரைத் தீர்க்குமாறு இரங்கி உதவி செய் என்று பல நீதிகளைக் கூறி வேண்டினர். பின்னும் மன்மதன் மறுக்க பிரம்மதேவர் சாபமிட முயல்கின்றார்.
மன்மதன் இவரது சாபமேற்று வருந்துவதிலும் சிவனையெதிர்த்துச் சாதலே தக்கதென்று துணிந்து விடைபெற்று தனதுச்சென்று போர்க்கோலம் புனைந்து பிரியத்துடன் வரும் மனைவியுடன் கயிலையைச் சேர்ந்து திருநந்தி தேவரை அணுகிப் பணிந்து தான் வந்த காரணத்தையுணர்த்தி உட்புகுதற்கு அனுமதி செய்யுமாறு வேண்டினார், அருநந்திதேவர். மேற்றிசைக் கோபுர வாயிலால் செல்லுகவென அப்படியே சென்று சிவபிரான் மோனநிலையில் வீற்றிருப்பதைக்கண்டு அங்கு மெய்சோர்ந்து வில்லைக் கீழை தவறவிட்டு விழுந்து பின்னர் இரதி தேவி தெளிவிக்க ஒருவாறு தெளிந்தெழுந்து தனக்கிவ்வாறு விபத்து நேர்ந்ததென்று நடந்த வாறு நடக்க பான் எண்ணி வந்த தர்மத்தைச் செய்வேன் என்று துணிந்து கீழே விழுந்த வில்லை எடுத்து சிவனையணுகி மலர்க்கனைகளைத் தொடுத்து ஏவிச் சிவபெருமானுடைய நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய அக்கினியினால் எரிந்து நீராயினான். உடனின்ற இரதிதேவி ஆற்றாப் பெருந்துயர் கொண்டு பலவாறு புலம்பினான் என்பதாம். காமனை அனங்கன், மன்மதன், வேனிலான், மாரன், மதனன், வசந்தன், வேள், கருப்பு, வில்வி, மலர்க்கனையோன், காமதேவன், எனும் பெயர்களாலும் அழைப்பர், மன்மதன் திருமாவின் புத்திரனென கொள்ளப்படுகின்றான். மன்மதனின் நிறம் பச்சை ("பச்சை மன்மதா அச்சுத கிளிவாகனா" என்பது பாடல்) இவனது தேர் தென்றலாகும். இவனது கொடி மகரமீன், வில், கரும்புவில், அம்பு மலர் பாணமாகும். இந்திரனுடைய விருப்பப்படி கைலாயம் சென்று சிவனுடைய யோக நிலையை மலரம்புகளை ஏவிக் கலைத்த மன்மதன் அவருடைய நெற்றிக்கண் பொறியால் எரித்து சாம்பலாக்கப்பட்டு பின்னர் ரதிதேவி அழுது புலம்ப அவள் கண்களுக்கு மட்டும் தெரியக் கூடியவனாக உயிர்ப்பிக்கப்படுவான்.
இக்கூத்து மலையகத் தோட்டங்களில் கம்பம் ஊன்றுதல் அல்லது காமன் கம்பம் நடுதல் என்னும் சடங்கோடு ஆரம்பமாகிறது. கம்பம் ஊன்றுதல் மாசி மாதத்து அமாவாசைக்குப்பின் மூன்றாம் பிறையில் நடக்கும். கம்பத்தை காமன் பொட்டலில், வழக்கமாக நடும் இடத்திலேயே ஊன்றுவர். காமன் கூத்திற்கு நடுநாயகமாக விளங்குபவர் காமன் மாஸ்டர். அல்லது காமண்டி வாத்தியா ஆவார். அவர் தலைமையில் அன்று ஆற்றங்கரை அல்லது நீர் நிலைகட்கு அல்லது பீலிக்கரைக்கு காமன் கூத்தில் பங்கேற்பவர்களும் தோட்டத்திற்குப்

பெரியவர்களும் காமன் சுத்திற்கு பொறுப்பானவர் உட்பட பலரும் செல்வா இவ்வாறு நீர் நிலையில் கம்பம் பாலிக்கும் இடத்திற்கு பெண்கள் செல்வது கிடையாது. காமன் கூத்தில் பங்கேற்கும் அனைவரும் தம் வீடுகளை மெழுகிச்
த்தம் செய்திருப்பதுடன் தாமும் குளித்து நோன்பிருப்பர். காமன் சுத்தில் பங்கேற்காத தோட்டத்து மக்களில் பலரும் நோன்பிருப்பதும் உண்டு. முக்கியமாகி நேர்த்திக்கடனை வைத்திருப்போரும் அதனை முடிக்க விருப்போரும் நோன்பிருப்பர்.
பேய்க்கரும்பு கொட்டமுத்து, செங்கரும்பு துவரை, மூங்கில்குருத்து ஆகியவற்றின் தண்டுகளையும் இலைகளையும் ஒரு பீட்டாகிக் கிட்ட கம்பத்திற்கு மேலாகச் சுற்றி பூசை செய்து பக்திப்பிரவாகத்துடன் சுமந்து வருவர். சில இடங்களில் ஈசுவரனாக வேடம் தரிப்போரைக் கம்பத்தைத் தூக்கிவர அனுமதிப்பதில்லை. இக்கம்பத்தில் காதோலை கருகமணி என்பனவற்றையும் சேர்ப்பர். நீர் வைகளில் பாவிக்கப்பட்ட கம்பத்தை ஒற்றைத்தப்பு முழங்க கூடி அழைத்துக்கொண்டு வந்து காமன் பொட்டலில் வழமையாக தடும் இடத்தில் நடுவர். கம்பத்தை நடுமுன்னர் பிடி மண், ஆட்சிரத்தகடு, தங்கம், நானயங்கள் என்பனவற்றையும் குழிக்குள் போடுவது வழக்கம். பிடி மண் என்பது காமன் ஊன்றும் மாஸ்டர் பரம்பரையினர் பரம்பரை பரம்பரையாகச் சேகரித்து வந்த சக்திபொருந்திய மண்ணாகும். ஒரு புதிய இடத்தில் காமன் கம்பம் நடுவதென்றால் பழைய இடத்திலிருந்து அல்லது ஒரு காமன் வாத்தியாரிடமிருந்து பிடி மண்ணைப் பெறுவர். பிடி மண் போடாத கம்பம் சக்தியற்றது என்று நம்புவர். கம்பத்தை ஊன்றுவதற்காக தோண்டிய குழியில் சென்ற வருடம் உயிர் எழுப்புவதற்கு முன்னர் குழியில் இட்டு நாணயங்களையும் வெள்ளிக் காசுகளையும் சேகரித்து எடுத்துக்கொள்வர். ஒருவர் கடந்த வருடம் போட்ட காசையோ நாணயத்தை தாமே திரும்பப்பெற்றால் மகிழ்ச்சியடைவதுடன் அதிர்ஷ்டம் கிட்டும் என்றும் நம்புவர். இவை புனிதப் பொருளாகப் பேணிப் பாதுகாக்கப்படுவதுடன் நோய்களைத் தீர்க்கும் சக்தி கொண்டனவாகவும் கருதப்படும். தோண்டிய குழியில் பால் ஊற்றி கம்பம் வாத்தியார் உட்பட பெரியோர்கள் ஐவர் அல்லது ஒன்பது பேர் கம்பத்தை தொட்டுத் தாங்கி நடுவர். கம்பத்தைச் சுற்றி நாற்சதுரமான முன்தளமேடை அமைக்கப்பட்டு சாணியால் மெழுகப்படும். இம்மேடையில் நாற்புறமும் விளக்கு ஏற்றப்படும். கம்பத்தைச் சுற்றி அலரிப்பூ மாலையினால் அலங்களிப்பர். கம்பத்தில் ஒரு எருவாட்டியையும் கண்ணாடியையும் கொழுவி வைப்பர். சிலர் தம் நேர்த்திக்கடனுக்காக கம்பத்தில் காணிக்கைகளையும் கட்டுவர். காமனை வெண்டிச்செய்யும் நேர்த்திகளில் விரும்புபவரைக் கணவனாக அல்லது மனைவியாக அடையவேண்டுமென்றும் அல்லது புத்திர பாக்கியம் அல்லாதோர் புத்திரபாக்கியத்திற்காக வேண்டுவதும், நற்புத்திரரை வேண்டுவதும் உண்டு. விப்பு முதலான நோயால் வருந்தும் குழந்தைகளை காமன் சுத்தில் ஆடவைப்பதாகவும் நேர்த்தி வைப்பர். காமனுக்கு நேர்த்தி வைத்து பிறந்த

Page 99
குழந்தைகளுக்கு காமராசன், கமேந்திரன், ஈஸ்வரி, ரதி ஆகிய பெயர்களை வைப்பதுண்டு. சிலர் தாம் வைத்த நேர்த்திக் கடனுக்காகச் சீர்கள் செய்வதுடன் மாவிளக்கு எடுப்பா. உடலில் தேமல், மருவி என்பன ஏற்பட்டு வருந்துவோர் காமன் எரியும்போது அவல், உப்பு ஆகியவைகளைப் போட்டு தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.
காமன் கம்பம் ஊன்றுவதற்கு முன்னர் பிள்ளையாரை வேண்டிப் பின்வருமாறு பாடுவர்.
"அகன்ற மாசி மாதம் விளங்கும் பெளர்ணமியில் அமாவாசை கழிந்த மூன்றாம் பிறையில் அங்குசனை உருவாக்கி இங்கிதன் பிறை நோக்கி அருள்புரியே வேணுமையா ஆனை முகப் பிள்ளையாரே"
இத்துடன் சில இடங்களில்
"முந்தி முந்தி விநாயகரே அந்த முக்கண்னன் தன் மகனே பிந்தனுக்கு முன் பிறந்த எம் கணபதியே முன் நடவாய் அந்த வேலவருக்கு முன் பிறந்த விக்கினரே முன் நடவாய்"
என்று பாடுவர். பின்னர் சிவனை நோக்கி,
"அருவுருவாய் அகன்ற பரம் அதன் வழியாக வேதம் அனைத்து எட்டாத அருவுருவாய் ஆதி இல்லாத ஞானி கற்பகமே அற்புதமே மேEபும் அமலனே உன்திருவடி போற்றி வரமருள்வாய் சிவனே போற்றி போற்றி
என்று சிவபெருமானைப் புகழ்ந்துப் பாடுவர். காமன் கம்பம் ஊன்றிய பின்னர் சுற்றி அமைக்கப்பட்ட மேடையில் நவதானியம் வளர்ப்பதும் உண்டு. சி இடங்களில் ரதி, மதன் திருமணத்துக்கு பின்னரே நவதானியம் வளர்க்கின்றனர்
| {յի

மலையகத்தில் ஆடப்படும் இக்கூத்து ஒரு கலைக்கூத்து மாத்திரமல்ல ஒரு சமயச் சடங்கு என்பதனை இவ்வம்சங்கள் காட்டுகின்றன. உண்ணா நோன்பிருத்தல் மச்ச மாமிசங்களை தவிர்த்தல், ஆட்டத்தில் ஈடுபடுவோர் வீடுகளுக்குச் செல்லாது தனித்திருத்தல் என்பன அச்சூழலையே பக்திப் பரவசமாக்கி விடுகின்றன. காமன் ஆட்டம் மதன் கம்பம் ஊன்றிய மூன்றாம் நாள் அல்லது ஐந்தாம் நாள் தொடங்கும். முதலில் கம்பத்திற்கு முன்பதாக அதாவது காமன் பொட்டவிலேயே ஆடுவர். பின்னர் லயம், கடைவீதி, வெளியிடங்களிலுள்ள வீடுகளுக்கும் சென்று ஆடுவர்.
ரதியும் மதனும் நன்கு அலங்களிக்கப்படுவர். மதனுக்கு நீண்ட கைகளையுடைய சேட்டும் கீழ்ப்பகுதியில் பாவாடை போன்ற அங்கியும் ஒன்றாக இணைத்தது போன்று பச்சை நிறத்தில் தைத்து அணிவர், முகத்திற்கு பச்சை நிற அரிதாரம் பூசப்படும். தலையில் கூரான கிரீடம் அணிவிக்கப்படும். இத்துடன் புஜக்கிரீடம், மார்பில் பதக்கம், இடுப்பில் அழகிய பட்டி அல்லது ஒட்டியாணம், அழகிய மாலைகள் என்பனவற்றை அனிவித்து அழகு படுத்துவர். தலைக்கிரீடம் பாரமற்ற மரத்தைக் குடைந்து சும்பு வடிவில் அமைத்து கண்ணாடிகள் மணிவேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும், ரதிதேவியின் கிரீடம் மதனின் கிரீடத்தைப் போன்று கூம்பு வடிவில் அல்லது உருண்டை வடிவில் இருக்கும். ரதிக்கு பாவாடை ரவுக்கையே ஆடையாக அணிவிக்கப்படும். மன்மதன் ஆடும்போது மரத்தினால் செய்யப்பட்ட சிறிய கத்தி ஒன்றை வைத்திருப்பர். (கத்தி எடுக்கலாமா வேல் மதனே கத்தி எடுக்கலாமா-காமன் சுத்து லாவணிப்பாடல்) ரதிதேவி இருகைகளிலும் கைக்குட்டை அல்லது அதே அளவு சீலைத்துண்டை கழற்றி ஆடுவாள். இவர்கள் அணியும் கீரிடம் புஜக்கிரீடம் என்பன பாரமற்ற முள் முருங்கை, இலவம் பஞ்சு என்பனவற்றினால் அமையும். இம்மரங்கள் வளர்பிறையின் போது தறிக்கப்பட்டு பூசை செய்து காமன் நகைகளைச் செய்வர்.
பாலுTற்றி வளர்த்த பச்சைக் கம்பம் பச்சை துளிர்ந்து வளர தினமும் பூசை நடைபெறும். தினமும் மாலையில் நடைபெறும் பூசையில் ரதி, மதன், ஈஸ்வரன், நந்திஸ்வரன், தூதுவன், நாரதர், அகோர வீரபத்திரன், சித்திரபுத்திரர், வெட்டி யான் வெட்டிச்சி, குறவன் கோமாளி ஆகிய பாத்திரங்கள் கலந்துகொள்வர்.
காமன் கூத்தில் மாஸ்டர் முக்கிய இடத்தினை பெறுகின்றார். இவரைக் காமன் வாத்தியார் என்றும் அழைப்பர். பிற கூத்துக்களில் அண்ணாவிமார் வசிக்கும் இடத்தினை இவர் வகிக்கின்றார். ஒரு தகுதி பெற்ற காமன் மாஸ்டர் முழு கூத்துக்குமான பாடல்களை பாடக்கூடியவராக இருப்பார். அத்துடன் காமன் கம்பத்தை நட்டு முழுசுத்தினையும் வழி நடத்திச் செல்லக் கூடியவராக இருப்பார். இவருக்கு உதவியாக "பக்கப்பாட்டு" அல்லது பின் பாட்டுப்பாட
59

Page 100
பல உதவி ஆசிரியர்கள் (ஒத்துப்பாடுபவர்கள்) இருப்பார்கள் ஜல், கைத்தாளம், தப்பு என்பன முக்கிய பக்க வாத்தியங்களாகும். தற்போது டொங்கி டொலக் என்டன்வும் பயன்படுத்தப்படுகின்றன.
காமன் மாஸ்டர் பாடல்களைப்பாட ஏனையோர் ஒத்துப்பாடுவர். இப்பாடல்களை "é ['Junifi", "ଳ\}/tନ / ଶrifi" ଶ ଶst இருவகைப்படுத்தலாம். ஒப்பாரி வசனம் போல் அமையும். இப்பாடல் ஒவ்வொருவரியாக பாட ரதியும் மதனும் காலை முன்பும் பின்பும் அடி எடுத்து வைத்து ஆட்டத்திற்கு அடி எடுத்து வைப்பர். ஒப்பாரி முடிய "செஞ்சனக்கு செஞ்சனக்கு" என்று முழங்க ரதியும், மதனும் அரைவட்ட வடிவில் பக்கம் திரும்பாது ஆடுவர் ஒப்பாளி வைத்துப்பாடும் போது "அறம்வைத்து" ஆங்கோரமாகப் பாடுவதால் ரதிமகனுக்கு "அருள்" வந்துவிடும். அருள்வருமுன்னர் ரதி, மதன் கையில் விபூதியைப் பூசுவர். அருள் வந்த வேளையில் சிரமப்பட்டு அவர்கள் கையிலிருக்கும் விபூதியை எடுப்பர். இவ்விபூதி சக்தி மிக்கது என்று நம்புகின்றனர்.
வீதி வலம் வரும்போதும் லயங்கள் வீடுகளுக்குச் செல்லும்போது பெரும்பாலும் லாவணிப்பாடல்களுக்கு ஆடப்படுகின்றது. அடிக்கடி ஒப்பாளி பாடி அருள் வரும்போது ரதி மதன் கனைத்துப் போய்விடுவர்.
ஒப்பாரி பாடல்
அடி பச்சைக் கலாபமயிலே அச்சுதன் மருமகளே தப்பு அடிக்கப்படும்) பங்கமில்லா மாமணியே மங்கள சிரோன் மணியே தப்பு அடிக்கப்படும்)
இவ்வொப்பாரிப் பாடலின் முதல் இரு வரிகள் பாடிய பின்னர் ரதியும், மதனும், வலது காலை முன்னெடுத்து வைப்பர். பின்னர் இரண்டாம் அடிகள் பாடி முடிய முன் வைத்த வலது காலைப் பழைய நிலைக்கு எடுத்து விடுவர்.
லாவணிப்பாடல்
போகவிடை கொடடி கண்னே பொன்னே போகவிடை கொடடி
ஆசிரியர் இரு அடிகளையும்பாட பின்பாட்டுக்காரர் இரு அடிகளையும் கோரஸ் சேர்ந்து பாடுவர். தப்பு, ஜல், தாளம், பொல்கி முதலிய வாத்தியங்களையும் சேர்த்து இசைக்கும் UேTஷ்ணிப் பாடல்,
நில்லடி மானே மல்லு செய்யாதே திரவியம் பன்னி தாரேன்
17C)

நீ கலங்காதே புலம்பி அழாதே நேரமதிக மாச்சி 'மதன் பாடுவது போன்ற லாவணிப்பாடல்)
போவேன் என்பதும் பொய்யே பழி பொல்வாங்கு நேர்வதும் மெய்யே
மதனா நீயும் நானும் கூடி மாப்புடன் மார்புரள இங்கு மங்களமாக பஞ்சனை மீதில் மகிழ்வுடன் குடியிருப்போம் (இது ரதிதேவி பாடுவது போன்ற வெளிப்பாடலாகும்.)
மதனுக்கோ நதிக்கோ அருள்வராது (தெய்வமேறிய ஆட்டம்) விடின் கம்பம் சக்தியற்றது என்ற கதை பரவி விடும். இதனால் காமன் மாஸ்டர் அருள் எடுக்க அரும் பாடுபடுவார்.
செங்கரும்பு வில்லழகா கொங்கரும்பு பல்லழகா திங்கள் கவியுடையாய் மங்கை பெரும்படையாய் சிவன் தவசை தானழிக்க மெளனமதை ஒழிக்க (ஒப்பாரி)
உன்தகப்பன் சுடுகாட்டுப் பேயனடி அந்த பேயனான்டி மாயான்டி இந்த பெருமான் மகனை எதுதான் செய்வான்டி
என்ற ஒப்பாரி பாடல்களெல்லாம் அருளை வரவளைக்க அறம் வைத்துப் பாடும் பாடல்களாகும். அறம் வைத்துப் பாடும் போதும் ரதி மதன் வில்வெடுத்து ஆடும்போதும் வேகமாக ஆடுவர். எனினும் இவை வடமோடி சீர்த்துக்களிற் போன்று குந்துதல், மிதித்தாடல், போன்றவை இடம்பெறுவதில்லை. லாவணிப்பாடல்கள் உச்சஸ்தாயில் ஒலிக்கும் ஓரிரு வேளையில் மட்டுமே ஆடுவதுண்டு. ரதி மதன் செவ்வரளி கொண்டு ஒருவரை ஒருவர் தாக்குவது போல் அமையும், இவ்வேளைகளில் ரதி, மதன் இருவரையும் நெருங்கவிடாது தடுத்துவிடுவர்.
காமன் கூத்தில் திருமண நிகழ்ச்சி ஒரு முக்கிய அம்சமாகும், ரதி மதன் திருமணம் காமன் கம்பத்தின் முன்னர் முசுர்த்தக்கால் நட்டு பச்சைப் பந்தல்
171

Page 101
நட்டு நடைபெறும், உண்மையில் ஒரு திருமணம் நடைபெறுவது போன்று நடைபெறும், திருமணத்தன்று சீர்கொண்டு வருவர். இச்சீரிற் கடலை முதலான தானியங்களும் பழவகைகள் பொங்கல் ஆகியன இடம்பெறும். இச்சிரே விருந்துபகாரமாக அமையும், திருமணம் காமதகனம் நடைபெறுவதற்கு முன்பதாக முதல் மூன்று தினங்களில் அல்லது பத்தாம் நாள் நடைபெறும், மதனும், ரதியும் பள்ளியறையில் இருக்கும்போது பிரமதேவன் எழுதியனுப்பிய ஒலையுடன் தூதுவன் வருவான். இவைகள் காமதகனத்தன்று நடைபெறும். தூதுவன் காமன் பொட்டலுக்கு மிக தூரத்திலுள்ள ஒரு மடக்கு ரோட்டிலிருந்து அழைத்து வரப்படுவார். இவர் தேவ சபைக்கு வந்த பின்னர் அங்கு ஒலையினைப் பெற்றுக்கொண்டு மன்மதனிடம் சமர்ப்பிப்பதாகக் கருதப்படுகின்றது.
தூதுவனை அழைத்து வந்த பின்னர் அகோர வீரபுத்திரன் அழைத்து வரப்படுகின்றான். இவனது தோற்றம் பயங்கரமானதாக அமையும். நாக்கு வெளியே தொங்குகின்றது எனக்காட்ட வாழைப்பூவின் மட்டை வாயில் பொருத்தப்பட்டிருக்கும். முகம் கருமைப் படுத்தப் பட்டு இருக்கும். முதுகில் முத்திரண்டு பந்தங்கள் கொழுந்துவிட்டெரியும், கண்களில் முட்டைக்கோது ஒட்டப்பட்டிருக்கும். அவர் கையில் சுழலும் பத்தங்களை ஒருவர் கையில் பிடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு வருவார். இது சைக்கில் "நிம்மினால்" தற்காலத்தில் அமைக்கப்படுகிறது. கருமைப்படுத்தப்பட்ட முகத்தில் செங்கோடுகள் கீறப்பட்டு காண்ப்படும். தூதுவனின் இடுப்பில் நீண்ட துணியை அல்லது வேஷ்டியைக்கட்டி பலர் பிடித்துக்கொண்டு வருவார். அப்போது ஒற்றைத் தப்பு அடிக்கப்படும், ஆட்டம் அதற்கேற்ப அமையும்.
யாருக்கடா துரதா நீ ஒலை கொண்டு போறாய் இந்திரலோக தூதா நீ யார் காணும் தூதுவனே நில்லு நீ அவசரமாய் போறதெங்கே சொல்லு
ஆரோக்கியமா அப்புறம் தேடி அந்த அங்குச வேனிடம் போறேன் தேவர் படை சூழும் அந்த இந்திரனாருடைய தூதுவன் நான
என்ற பாடலுடன் தூதுவன் ஆட்டம் தொடங்கும். இவ்வாட்டம் திகிலூட்டுவதாக அமையும், தூதுவன் மருள் நிலையிலேயே ஆடி வருவான். இக்காட்சியைக் கர்ப்பிணிகள் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. பெண்கள் துள்ளுமா, மாவிளக்கு என்பன எடுத்து வருவர். இவற்றையும் தம் நேர்த்திக் கடனாக நிறைவேற்றுவர்.
72

விவாறு ரதி மதன் வில்லெடுத்து ஆடிவரும் போது காமன் கம்பத்தில் ன்னர் சிவபெருமானுக்காக ஒரு பந்தம் போடப்பட்டு நன்கு லங்கரிக்கப்பட்டிருக்கும். இது இமயகிரியில் சிவன் நிஷ்டையில் இருப்பதாக கருதப்படும். கீழே நந்திதேவர் அமர்ந்திருப்பார். கீழே ரதியும் மதன் வில்லெடுத்து ஆடி வந்த பின்னர் ஓரளவு மயங்கிய நிலையில் இருக்கும் ரதிதேவியை அவ்வாட்டத்தினின்றும் பிரித்துக்கொண்டு சென்று விடுவர். மதன் வில்லம்புடன் காமன் கம்பத்திற்கு முன்னே நிற்பான். அப்போது காமன் வாத்தியார் நந்தீஸ்வரரை காமன் வழிபடுவது போல பாட உப வாத்தியார் நந்தீஸ்வரருக்குப் பக்கத்தில் நின்று அவர் பாடுவது போல் மேற்கு திசையாகச் சென்று சிவபெருமானைக் காண்பாய் என்று உத்தைவிடுவார். சில இடங்களில் ரதி மதன் வில்வெடுத்து ஆடும் காட்சிக்குப் பின்னர் தேர் வசந்தனை அழைத்தல், விநாயகப் பெருமானுக்குப் பூசை செய்தல் என்பனவும் காட்டப்படுகின்றன. அவைகளில் ஆட்டங்கள் கிடையாது. ஆனால் ரதி மதன் ஆட்டத்தைப் போன்றே இவ்விருவரும் ஆடி முடிய அவர்களுக்கு தோழன், தோழி போல் அமையும் வெட்டியான் வெட்டிச்சி ஆட்டம் இடம்பெறும். இவ்வாட்டம் 'தமாஷாக" நடைபெறும் வெட்டியான், வேட்டி அல்லது காற் சட்டையுடன் ஒரு பெனியன் அணிந்து தலையில் லேஞ்சி கட்டுடனும் கையில் நீண்ட தடியுடனும் காணப்படுவான். வெட்டியான் வெட்டிச்சி ஆட்டம் நகைச்சுவையுணர்வையூட்டி பார்ப்பவர்களை கலகலப்பாக்கும் ஆட்டமாகும். தற்காலத்தில் வெட்டியானிடம் கானப்படும் நெத்திமட்டக்கம்பு அநேகமாக இருப்பதில்லை. வெட்டியான் வெட்டிச்சி ஆட்டப்பாடல்கள் அநேகமாக நாட்டார் பாடல்களாகவே விளங்குகின்றன.
ஒ . தினம் தினம் தினம் தேடும் தங்கமே உன் திரு முகத்தக் காணாமலே வாடுகிறேன் தங்கமே.
என்பன போன்றவை ஆரம்பகாலப் பாடல்களாக விளங்க இடைக்காலத்தில் இப்பாத்திரத்தில் தெய்வீகத்தன்மையோ அல்லது சாமி அந்தஸ்தோ இல்லாதபடியால் வெட்டியான் வெட்டிச்சி பாடல்களில் தொழிலாளர் வர்க்கத்தினர் தம் தொழில் மகத்துவத்தையும் மனக்குறைகளையும் வெளிக்காட்டும் பாடல்களாக அமைந்தன. உதாரணமாக ஒரு வீட்டில் ரதி, மதன் ஆட்டம் முடிய வெட்டியான் வெட்டிச்சி ஆட்டம் நடைபெறும்போது,
கங்காணி மகளேயடி வே லங்கிடி லேவே அடி, காரப்போட்ட சின்னத்தங்கம் லே லங்கிடி வேலோ

Page 102
வெத்திலை வேனும்னா லேலங்கிடி லேலோ நீங்க வெளிய வந்து பேசிக்குங்க லே லங்கிடி லேலோ
என்று கடுமையான வேலைப்பளுவினை வைக்கும் கங்காணி மகளை வெட்டிச்சி போர்வையில் வம்புக்கிழுப்பதும், ஒரு வீட்டில் சிறிய தொகையையே சன்மானமாக வழங்கினால்,
கூலி குறைஞ்சி போச்சி கொடுத்த காசும் நின்றும் போச்சி
என்று குத்திக் காட்டி பேசி ஆடுவர். வெட்டியான் வெட்டிச்சியோடு சில வேளைகளில் கோமாளியும் சேர்ந்து ஆடுவதும் உண்டு. சில தோட்டங்களில் ரதி தனித்திருக்கும்போது மதனைத்தேடி தூதுவன் ஓலை கொண்டு வருமுன்னர் குறத்தி வந்து ரதிக்கு நடக்கவிருக்கும் அனர்த்தங்களுக்கு முன்னோடியாக உற்பாதங்களை விளக்கிக் குறி சொல்லும் காட்சிகளும் நடைபெறும். பெண்கள் தேன் கலந்து இடிக்கப்பட்ட துள்ளுமாவை எடுத்து வந்து பூசை செய்வதுடன் ஒரு தாம்பாளத்தில் நன்கு பிசைந்த அரிசி மாவினால் விளக்கு செய்து அதில் எண்ணெய்த் திரியேற்றி மாவிளக்கு எடுப்பதுடன் குரவையிட்டு ஊர்வலம் வருவர். சிலவேளைகளில் இவர்கள் ஊர்வலத்துடன் கும்மியடித்து வருவதும் яр_сілC5).
காம தகனத்தின் முக்கிய நிகழ்ச்சியாக மதன் சிவபெருமானுக்கு மலர்க்கணை தொடுக்கும் செயலும் சிவபெருமான் கோபமுற்று நெற்றிக் கண்னை குறிக்கும் சம்பவங்களும் அமையும். கம்பத்தின் உச்சியில் கட்டப்பட்ட கம்பி ஒன்று சிவபெருமான் அமர்ந்திருக்கும் பரணின் காவில் கட்டப்பட்டிருக்கும். இதுபோல் சிவபெருமான் அமர்ந்திருக்கும் மேடையில் நடுப்பகுதியில் கட்டப்பட்ட கம்பி காமன் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும்.
நந்தீஸ்வரனிடம் விடைபெற்ற மதன் சிவபெருமானைத் தொழுது மலர்ப்பாணம் எய்வது போல காட்டப்படும் வேளையில் கம்பத்தில் கட்டப்பட்டிருக்கும் கம்பியில் தயாராக வைக்கப்பட்டிருக்கும் பட்டாசைக் கொளுத்துவர். இது ஒன்று சீறிக்கொண்டு ஒன்று சிவபெருமானின் பரணில் கீழே விழும். பின்னர் சிவன் விழித்து நோக்க பரணில் கட்டப்பட்டு கம்பத்தில் இணைக்கப்பட்டிருக்கும், பட்டாசை கொளுத்துவர். இது சீறிக்கொண்டு சென்று பெற்றோல், மண்ணெண்ணெய் முதலானவையும் விறகுகளும் ஆக்கப்பட்டிருக்கும் காமன் கம்பத்தை எரியச் செய்யும், அப்போது மன்மதன் வேடம் பூண்டவரை வெள்ளைவேட்டியினால் போர்த்தி அழைத்துச் சென்று விடுவர்.
174

பற்றி எரியும் தீயினைச் சுற்றி வெட்டியான் வெட்டிச்சி ரதி ஆகியோர் மாரடித்து அழுது புலம்புவர். காமன் கூத்தில் மன்மதன் எரிந்தான், மன்மதன் எரியவில்லை என்று மகரக் கொடியினை ஏற்றிவைத்து எரித்த கட்சி எரியாத கட்சி பாடுவது சிறப்பம்சமாகும். இது காமன் ஆசிரியர்களின் வித்துவச் செருக்கினைக் காட்டுவதாக அமையும்.
சங்கரன் கண்ணாலே
மன்மதன் எரிந்த கதை
Ош шптийишт баш итийишп.......... P
எனக் கேட்க
மங்கை ரதி பாகனவன்
சங்கரன் கண்ணாலே
எரியவில்லை ஐயா ஐயா
காமன் எரியவில்லை எனப்படும் காட்சி வெற்றி பெறுமேயானால் கம்பத்தை எரியவிடாது தடுத்து நிறுத்த முடியும். எனினும் எந்தக்கட்சி வெற்றி பெற்றாலும் ஈற்றில் சமாதானம் செய்யப்பட்டு காமதகனம் நடைபெறும். எரியாத கட்சி பாடமுனைவது காமன் வாத்தியார்களுக்கிடையே போட்டி மனப்பான்மையினையும் புலமையினையும் காட்டுவதுடன், பார்வையாளருக்கு பெரும் விருந்தாக அமையும்.
ஒருவருடம் நடப்பட்ட கம்பம் எரிக்கப்படாது விட்டால் ஊருக்குத் தீங்கு வரும் என்ற அச்சமும் நிலவுகின்றது. மதன் எரியும் கதையை ரதிதேவியிடம் தோழியர் சொல்வது போலவும் பின்னர் திருமால் வருந்துவது போலவும் கதைகளிலும் காமன் வாத்தியார்மார் எழுதி வைத்துள்ள ஏடுகளிலும் இருப்பினும் அநேகமான கூத்துக்களில் இது நடத்திக் காட்டப்படுவதில்லை. காமதகனம் நடந்து மூன்றாம் நாள் உயிர் எழுப்பல் நடைபெறும். சிவபெருமான் வேடம் அணிந்தவர் வாழையிலையில் அல்லது பச்சைத் தென்னோலையில் படுக்க வைத்திருக்கும் மதனை மஞ்சள் தெளித்து மூன்று தடவை பிரம்பால் தட்டுவர். அப்போது வேட்டியினால் போர்த்தப்பட்டிருக்கும் மதன் துயில் எழுவார்.
எழுந்திரு மன்மதனே எழுந்திரு ஏக சந்தோஷத்துடன் ஏழுவகை அனந்தேல் தன் சுகனே - ஒன்றும் அழிவின்றி இப்பொழுது அஞ்சுதனே நீயும் அன்புடனே வாழ்ந்திடனே மன்மதனே
என்ற பாடலை காமன் மாஸ்டர் பாடுவார். மன்மதன் உயிர் பெற்று எழுந்தவுடன் மங்களம் மங்களம் சுபமங்களம் மன்மதனுக்கு சுப மங்களம் என்ற பாடலைப்பாடி காமன் பொட்டலை வலம் வருவர். இதன் பின்னர் காமன் ஆசிரியருக்கு சிறப்புகள் செய்யப்படும். மலையக மக்களிடையே
175

Page 103
எழுதாத இலக்கியமாக மிளிரும் காமன் கூத்து பக்தி உணர்வை ஊட்டுவது. அத்துடன் கலை ஆர்வத்தினையும் ஏற்படுத்தும் வல்லமை கொண்டது. தொழிலாளருக்கு இது மிகவும் பிரயோசனமான முறையில் பொழுது போக்கினையும் அளிக்கிறது. ஆடல் பாடல்களுடன் வீரம் சிருங்காரம் சோகம் ஆகிய பண்புகளைக் கொண்டு மனதிற்கு இதமளிக்கின்றது. ஆட்டக்காரர்களுக்கு மருள் அல்லது அருள் வருவதனால் ரதி மதன் பாத்திரங்களுக்கு சுமார் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே சேர்த்துக்கொள்ளப்பட்ட போதும் முழுத் தோட்டத்தினருமே ஏதோ ஒரு வகையில் ஒன்று முதல் 14 தினங்கள் வரை அல்லது முப்பது தினங்கள் வரை தோட்டத்திலுள்ள அனைவரும் பங்கு கொள்வதாக அமைகின்றது.
IV.
மலையக ஆற்றுகைக்கலைகள் ஒரு பொது நோக்கு
மேற்படி கலைகளில் தோட்டத்தொழிலாளரே பங்கு கொள்கின்றனர். இவர்களில் முக்கிய தலைமுறையினர் இந்தியாவில் தம் கிராமங்களில் இவற்றை ஆபுடயதுடன் நேரில் பங்கு கொண்டவர்களாகவும் விளங்குவர். பின்னர் இவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் தொடர்ந்து நடத்தினர். அருச்சுனன் தபசு போன்ற அருங்கலைகளை அதாவது தபசு மரத்தில் ஏறுவது போன்ற செயல்களை ஒரு தோட்டத்தில் ஆட முடியாதிருந்தபோது அடுத்த தோட்டத்தில் உள்ளவர்கள் வந்து பங்கு பற்றிச் சிறப்பித்தனர்.
இக்கூத்துக்களில் அல்லது ஆட்டங்களில் பங்கு பற்றும் கலைஞர்கள் சமய நம்பிக்கையுடைய பக்தர்களாக விளங்கியதுடன் ஆசாரங்களுக்குக் கட்டுப்பட்டு, பூசை நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவர். பெரும்பாலும் இவர்கள் தொழிலாளர்களாகவே விளங்கினர். எனினும் கங்கானியார் கணக்குப்பிள்ளை போன்றோரும் காமன் மாஸ்டர்களாகவும் பூசாரியாகவும் விளங்கியுள்ளனர். பெண்கள் கூத்துக்களில் பாரமேற்பதில்லை. எனினும் கும்மி, கோலாட்டம், தீச்சட்டி எடுத்தல், சீர் கொண்டு செல்லல், மாவிளக்கு எடுத்தல், துள்ளுமா எடுத்தல் ஆகிய கூத்துக்களோடு தொடர்புடைய அம்சங்களில் பங்கு கொள்கின்றனர். இவைகளைச் சில வேளைகளில் கூத்துக்களிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.
சாதி அமைப்பு தோட்டங்களில் உண்டு. எனினும் தொழிலாளர் ஒரே வயங்களில் வாழ்ந்து ஒரே தொழரிவினைச் செப்து பல்வேறு தொழிற்பிரச்சினைகளுக்கும் பொதுப் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுப்பதால் சாதித்தடிப்பு அவர்கள் மத்தியில் அதிகமாக இல்லை. எனினும் கங்காணி அமைப்பு முறையில் ஆலயங்கள் அமைந்து அதில் சடங்குகள் உற்சவங்கள்
|7

நடைபெற்றதுடன் அதன் வழியாகவே சுத்துக்களும் தடைபெற்றதுண்டு. தப்பு முதலிய வாத்தியக்கருவிகளைக் குறிப்பிட்ட ஒரு சாதியினரே வாசித்து வந்தமையினால் இக்காலப்பகுதியில் அதனைத் தாழ்வின் சின்னமாகக் கருதி ஒடுக்கப்பட்ட அவர்கள் அந்தக் கலைப்பயில்வினைக் கைவிட்டு வருகின்றனர்.
இக்கூத்துக்கள் தான் தோன்றித்தனமாக நடத்தப்படுவதில்லை. மரபு தழுவி குறிப்பிட்ட காலப்பகுதியில் சீராக ஆடப்படுகின்றன. காமன் சுத்து மாசி மகத்து அமாவாசைக்கும் பின்னர் மூன்றாம் நாளிலிருந்து ஆரம்பமாகின்றது. அருச்சுனன் தபசு மார்கழி மாதத்திலும் சில பகுதிகளில் தை மாதத்திலும் நடைபெறுகின்றது. பஜகோவிந்தம் மார்கழி மாதத்தில் தவறாது நடைபெறும். பொன்னர் சங்கர் சுத்து, மாரியம்மன் திருவிழாவின்போது சிறப்பாக நடத்தப்படுகின்றது. நடனங்களும், இவ்வாட்டங்களும் திருவிழாவின் போதும் வைபவங்களின் போதும் சிறப்பாக நடைபெறும். இவற்றிற்கான களம் பெரும்பாலும் தோட்டமாகவும் பிற்காலத்தில் தோட்டங்கள் சிதைந்து தமிழ் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்புகளாகவுமே அமைந்தன. ஒரு பீடத்து ஒரு மேடையைக் கொண்டு மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் வரை நடப்பது போல் அல்லது முழு தோட்டத்தையுமே பின்புலமாகக் கொண்டு ஒரு ஆலய சூழலையோ அல்லது திறந்த வெளிப் பொட்டவையோ களமாகக் கொண்டு நடப்பது நோக்கற்பாவது,
தோட்டத்து மக்களே பார்வையாளர்கள். இதில் உத்தியோகத்தர்களும் சில வேளைகளில் பக்கத்து கிராமவாசிகளும் சிறு சிறு கடைகளை வைத்திருப்போரும் அடங்குவர். சுத்துக்களை நடத்துவதற்கான செலவுகளை தோட்ட மக்களே வரி செலுத்தி கொடுப்பர் ஆட்டங்களின் போது வெளியிடங்களில் திரட்டப்படும் நிதியும் இதனுள் சேர்க்கப்படும். தோட்ட உத்தியோகத்தர்கள் நிர்வாகம் என்பனவும் கூத்துகளுக்கு பண உதவி செய்வதுண்டு. சிலர் நேர்த்திக் கடனுக்காகவும், சுத்து ஆடப்படும்போது ஏற்படும் செலவில் ஒரு பகுதியை ஏற்ப, சுத்துக்களைப் பயிற்றும் அல்லது நடத்தும் வாத்தியார் அல்லது மாஸ்டர் அத்தோட்டத்தை அல்லது அயல் தோட்டத்தைச் சேர்ந்தவராகவே இருப்பர். கூத்து நடைபெறும் காலங்களில் பங்கு கொள்வோர் வீடுகளுக்குச் செல்வது கிடையாது. ஆலயங்கள் அல்லது ஒதுக்கப்பட்ட தனியான காம்ராக்களில் தங்குவர். கணவர் கூத்துக்களில் பங்கு கொள்ளும்போது மனைவியும் நோன்பிருப்பார். மச்ச மாமிசம் புசிப்பதில்லை.
கூத்துக்களுக்கான ஆடுகளம் கோயில் முற்ற வெளி அல்லது பிரட்டுக்களம் முதலான வெளி என்பனவே. தற்போது மேடையமைப்பும் உண்டு. அலங்காரப் பொருட்களான ஆபரணங்களைத் தாங்களே செய்வதுடன் அப்படிச் செய்யக் கூடியவர்கள் தமமீடையே இல்லாத பட்சத்தில் பக்கத்துத் தோட்டத்தில் செய்யக்கூடியவர்களிடம் செய்வித்துப் பெறுகின்றனர். அல்லது வாடகைக்கு
77

Page 104
வாங்குகின்றனர். ஒப்பனை முதலானவற்றை தாமே செய்கின்றனர். எனினும் அரதாரம் பூசுதல், நகை பூட்டுதல் என்பனவற்றைக் காமன் பொத்தியார் அல்லது மாஸ்டர் முதலில் கண்ணாடியில் தொட்டு வைத்த பின்னர் ஒரு நடிகருக்கு தானே பூசி ஆரம்பித்து வைக்கின்றார். பின்னர் துணையாக உள்ளோர் பூசுகின்றனர். ஆடைகளையும் இதற்காக விசேடமாக தைத்து மணி, ஜரிகை, முதலானவற்றைப் பிடித்து புனிதப்பொருட்களாகப் பாதுகாப்பர்.
பயிற்சி ஒத்திகைகள் என்பன குறைவாகவே காணப்படுகின்றன. எவ்வாறெனில் ஒரு வருடம் காமன் சுத்து ஆடும்போது அதனைத் தோட்டத்திலுள்ள சகல தரப்பினரும் தொடர்ந்து பங்கு கொண்டு பார்ப்பதனால் தாமும் பயிற்சி பெற்று விடுகின்றனர், ஒரு தோட்டத்தில் ஒரு தடவை ரதி மதன் ஆட்டம் நடைபெற்றால் அவ்வருடம் அவ்வயதினையொத்த எந்த ஒரு சிறுவனும் ஆடத்தயாராக இருப்பான் ஆடக் கூடியவனாக இருப்பான். ஆனால் அருச்சுனன் தபசு மரம் ஒரறுவது போன்றவற்றை இப்படி எவரும் ஏற்றுவிட முடியாது. விசேட பயிற்சி அருள்வாக்கு என்பன தேவை. இக்கலைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு தோட்டம் ஒரு மூடிய அமைப்பாகவும் ஒரு தனித்துவமான சமூகத்தன்மையினைக் கொண்டதாகவும் அமைவது முக்கிய அம்சமாகும். விழுமியங்கள் பிறழ்ந்து விடாமல் ஒரே சீராக சங்கிவித் தொடர்போல் அமைந்து வாழ்க்கைச் சகடவோட்டம் சுழல்வதற்கு இக்கலைகளே ஆதாரமெனவாம்.
கதிர்காமக் கந்தனின் கொடியேற்றத்துடன் விரதமிருந்து அவ்வேலவனின்பால் பக்தி கொண்டு திளைத்த மக்கள் நீர் வேட்டியுடன் தோட்டத்திலுள்ள முருகன் ஆலயங்களில் ஆடிப்பூசைகளைத் தொடங்கிவிடுகின்றனர். வெளி உலகில் நடக்கும் நிகழ்ச்சிகளைத் தம் தோட்டத்தையே ஒரு உலகமாகக் கொண்டு அந்த தோட்டத்திலுள்ள தாமே நிறைவேற்றுவர். தற் காலத்தில் நடைபெறும் சமூக நாடகங்களில் கூட இக்கூட்டுமுயற்சியைக் காணலாம். தனியாள் ஆட்டம் தனிஆள் முயற்சி என்பன மிகக்குறைந்ததாகும். தோட்டப் பகுதி மக்களின் கூட்டு முயற்சிக்கும் ஒருங்கினைந்த வாழ்க்கை அமைப்பிற்கும் இக்கலைகள் தக்க உதாரணங்களாகும். பிற்காலத்தில் இக்கலைக்குக் செல்வாக்கு குறைந்தமைக்கு இக்கூட்டு முயற்சிகள் வேறு வகைகளில் திசைதிருப்பப்பட்டமை அல்லது வேறு தாக்கங்களிலும் முனைப்பாக செயற்பட வேண்டியமையும் முக்கிய காரணியாகும். முன்பு தொடர்ச்சியாகவும் பெருமளவிலும் ஆடப்பட்ட இக்கூத்துக்கள் ஆலயங்களை மையமாகவே கொண்டு அமைந்தன. அன்று தொடக்க நிலையில் வாழ்ந்த மக்களின் அபிலாஷைகளுக்கும் இன்று தோட்டங்களில் வாழும் மக்களின் அபிலாஷைகள் எண்ணங்கள் பிரதிபலிப்புகள் சமூகத்தன்மைகள் என்பன காலவோட்டத்தில் மாறுபட்டு வருகின்றன. எனவே ஆலயங்களில் புராண வாசிப்பு, கதைப்படிப்பு:பட்டாபிஷேகம் என்பனவற்றைக் குறைத்து தாம் தோட்டத்திற்கு வெளியே உள்ள ஆலயங்களில் காண்கின்ற
| 78

பூசை முறைகளைப் பின் பற்றி நடக்கும் போது சடங்குகளும், முளைத்த கலைகளும் மாற்றமடைய இக்கூத்துக்கள் முன்பு பெற்றிருந்த முக்கியத்துவத்தினை இழந்துவிட்டன.
முன்பு ஒரு தோட்டத்தில் அருச்சுனன் தபசு ஆடப்படுவது முக்கியமென்றால் இப்போதோ அந்நிலை மாறி அவ்வாலயத்தைப் பாலஸ்தானம் செய்து திருப்பணி செய்வதுடன் மூலஸ்தான கோபுரம் அமைத்தல், கும்பாபிஷேகம் செய்தல் என்பவற்றிற்கிடையே அதிக அக்கறை செலுத்துகின்றனர். திருவிழாவின்போது ஒரு சமூக நாடகத்தை அல்லது இசை நிகழ்ச்சியை நடத்துவதையே விரும்புகின்றனர். தோட்டப்பகுதிகளிலிருந்து வெளியே வந்து அரசாங்க தொழில்கள் அல்லது வியாபாரம் செய்யும் இளைஞர்கள் நகர்ப்புற ஆலயங்களில் நடக்கும் சிவாச்சாரியார்களைக் கொண்டு நடக்கும் கிரியைகள் வேறு களியாட்டங்கள் தம் தோட்டத்து ஆவங்களில் நடக்க வேண்டுமென விரும்பி அவ்வாறே செய்கின்றனர். அத்துடன் பாரம்பரிய கலைகளில் ஈடுபட்டு வந்த மலையகத்தைச் சேர்ந்த கலைஞர்கள் வறுமையினாலும் முப்பினாலும் நவீந்து ஆதரிப்பாரின்றி அருகிவிட்டனர். இன்றைய தலைமுறையினர் இவர்களின் இடத்தை நிரப்ப முன்வரவில்லை. பிற பொழுது போக்குச் சாதனங்கள் இக்கலைகளின் இடத்தைப் பிடித்து வருகின்றன. இவற்றைப் பழைய மரபு பிசகாது சுருக்கி மேடைக்குக் கொண்டுவருவது சாலச்சிறந்தது. அத்துடன் நவீன தொழில்நுட்ப சாதனங்களைக்கொண்டு ஒலி ஒளி உருவ வடிவமைப்புக்களைக் கொடுத்துப் பலரும் ரசிக்கும் நிலையை ஏற்படுத்திப் புத்துயிர் அளிக்கலாம்.
7.

Page 105
மலையகக் கோவில்களிற் காணப்படும் கட்புலக் கவின் கலைகள்
ந. வேல்முருகு
இலங்கையில் நிரந்தரக் குடியிருப்புகளை ஏற்படுத்திய மலையகத் தமிழ் மக்கள் தாம் வாழும் இடங்களிலெல்லாம் தமக்கென வழிபாட்டுத்தலங்களை நிறுவினார்கள். மலையகத் தமிழ் மக்களில் தொண்ணுரற்றெட்டுச் சதவீதத்தினரும் இந்துக்களாகவே உள்ளனர். இதனால் மலையகம் எங்கும் கோவில்கள் காணப்படுகின்றன. இவ்விந்துக் கோவில்கள் கட்புலக் கவின் கலைகளினால் மேலும் அழகுற்றுத்திகழ்கின்றன. மலையகத்துக் கோவில்களிற் காணப்படும் கட்புலக் கவின் கலைகளை இரண்டு வகைகளாகப் பிரித்து நோக்கலாம்.
(அ) நிரந்தரமாக காட்சிப்படுத்தப்படுபவையாக அமையும் ஓவியங்கள்,
சிற்பங்கள், கொடிக்கம்பம் என்பனவும் (ஆ) எடுத்துச் சென்று அல்லது இழுத்துச் சென்று காட்சிப்படுத்தப்படுபவையாக அமையும் படிமங்கள், தெய்வங்களை எழுந்தருளச் செய்யும் வாகனங்கள்,
தேர், சப்பறம், என்பனவும் விளங்குகின்றன.
தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் உள்ள வழிபாட்டிடங்களில் இத்தகைய கட்புலக் கவின் கலைகள் பெருமளவு காணப்படுகின்றன. இந்தியக் கலைஞர்களாலும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிக் கலைஞர்களாலும், மலையகக் கலைஞர்களாலும், இக் கவின் கலைகள் உருவாக்கம் பெற்றதோடு, வளர் கலைகளாகவும் விளங்குகின்றன. மரம், கல், உலோகம், கண்ண்ாடி, சுவர், சீமேந்து, கடதாசி என்பவற்றில் இக்கலைகள் உருவாக்கப்படுகின்றன. இவை சமய தத்துவக் கருத்துக்களை விளக்குவதற்கெனவும், வழிபாட்டிற்கெனவும்,அலங்காரங்களுக்கெனவும் ஆக்கப்பட்டுள்ளன. இவற்றுட் சில கலைகள் யதார்த்தமுடையனவாகவும், சில கற்பனையுடன் கூடியனவாகவும், சில குறியீட்டுத் தன்மையுடையனவாகவும், சில யதார்த்தத்தோடு கற்பனையையும், குறியீட்டையும் இணைத்தனவாகவும் விளங்குகின்னறன.
பெருந்தெய்வங்களின் பல்வேறு வடிவங்கள், அத்தெய்வங்களின் அவதாரங்கள், புராணக் கதைகள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் போன்றோரின் வரலாறுகள், காவல் தெய்வங்களினதும் சிறு தெய்வங்களினதும் பல்வேறு வடிவங்கள், புத்தரது வரலாறு,மதப் பெரியார்களின் உருவங்கள், இந்திய சுதந்திரப்
180

போராட்ட வரலாறு, பல்வேறுபட்ட கொடிகள், மலர்கள், மிருகங்கள், பறவைகள், சங்கு, சக்கரம் கொண்ட அலங்காரங்கள், கோலங்கள் என்பன இக் கவின் கலைகளின் பொருள்களாகத் திகழ்கிள்றன.
ஒவியங்களும் படங்களும்
சுவர்கள், திரைச்சீலைகள், கண்ணாடி, மரம், தகரம், கடதாசி என்பவற்றில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. தமிழ்நாட்டினைச் சேர்ந்த எம்.கே. குருசாமி ஸ்தபதியும் அவரின் குழுவினரும் ஏனைய பல கலைஞர்களும் தீட்டியுள்ள கண்கவர் அழகிய ஓவியங்கள் பல கண்டி கட்டுக்கலை பூரீ செல்வவிநாயகர் ஆலயம், கண்டி கதிரேசன் கோவில், கலகாவிலிருந்து சுமார் ஐந்துமைல் தொலைவிலுள்ள முத்துமாரியம்மன் ஆலயம் என்பவற்றிற் காணப்படுகின்றன. கண்டி கட்டுக்கலை பூரீ செல்வவிநாயகர் ஆலயத்திற் காணப்படும் சுவரோவியங்கள் 1987-1988 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளிலும், கிரிமெட்டிய தோட்டத்திலுள்ள சுவரோவியங்கள் 1954- 1956 ஆம் ஆண்டுக் காலப்பகுதியிலும் தீட்டப்பட்டவை. கண்டி கட்டுக்கலை பூரீ செல்வவிநாயகர் ஆலயத்தின் சுவரோவியங்களிலும் கோபுரத்திலும் கணபதியின் பல்வேறு வடிவங்களான ஊர்த்துவ கணபதி, நிருத்த கணபதி, விஜய கணபதி, மகாகணபதி, லஷ்சுமி கணபதி, ஏரம்ப கணபதி, சஷ்ப்ர கணபதி, விக்ன கணபதி, உச்சிஸ்ட கணபதி, சித்தி கணபதி, துவிஜ கணபதி, சக்திகணபதி வீரகணபதி, பக்திகணபதி, தருணகணபதி, பாலகணபதி ஆகியவை ஒவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளன. அத்தோடு சிவனின் பல்வேறு நடனக் காட்சிகளும், சங்கரநாராயணர், அர்த்தநாரீஸ்வரர், போன்றோரின் உருவங்களும் பால தண்டாயுதபாணி, தேவ சேனாதிபதி, சுப்பிரமணியர், யோக தண்டாயுதபாணி, கெஜ வாகனர், சரவணபவர், கார்த்திகேயர், ஆகியோரின் உருவங்களும் திருமால் ஆதிசேனன் மீது பள்ளிகொண்ட காட்சியும் மீனாட்சி அம்மன், விநாயகர் போன்ற தெய்வங்களின் திருவுருவங்களும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்தி சுவாமிகள், மாணிக்கவாசகர் ஆகியோரின் அழகிய உருவங்களும் வரையப்பட்டுள்ளன.
கிரிமெட்டிய தோட்ட முத்துமாரியம்மன் ஆலயத்தின் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள ஒவியங்களில் சில மங்கியும் அழிந்தும் உள்ளன. ஆயினும் மலையக ஓவியக் கலை வரலாற்றிற் சிறப்பிடம் பெறக்கூடிய ஓவியங்கள் பலவற்றை இவ்வாலயத்தில் இன்றும் காணக்கூடியதாய் உள்ளது. விநாயகர், விஷ்னு, திருமகள், நந்திதேவர் முன்னிலையில் சிவன் பார்வதியைத் திருமணம் புரியும் காட்சி, ரேணுகாதேவியின் தபசு, திருஞானசம்பந்தருக்குப் பார்வதியே ஞானப்பால் ஊட்டுதல், திருஞானசம்பந்தருக்கு பார்வதியும் ரிஷப வாகனத்தில் காட்சி தருதல், சிவன் பிட்டுக்கு மண் சுமத்தல், புத்த பகவானின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சில காட்சிகள், சத்தியவான் சாவித்திரி, அருணகிரிநாதர்,
181

Page 106
ராமகிருஷ்ண பரமகம்சரும் சாரதா தேவியும், மகாத்மா காந்தி, மூவர்ணக் கொடியுடன் பாரதமாதா போன்ற உருவங்களும் வடிவங்களும் திட்டப்பட்டுள்ளன. நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் நிறுவப்பட்ட பல்வேறு ஆலயங்களிலும் சட்டத்தில் இடப்பட்ட தஞ்சாவூர் ஓவியங்கள் உள்ளன. இவ் ஓவிய்களில் சிறு சிறு விடயங்கள் கூட மிக நுணுக்கமாக வரையப்பட்டுள்ளதோடு இவ்வோவியங்களில் போலி நவரத்தினங்களும் பதிக்கப்பட்டுள்ளன. வரைந்த உடைகளிலும் திரைகளிலும் தங்கரே க்கைத் தடவியுள்ளனர். கிருஷ்ணன், இராமன், சிவன், பார்வதி ஆகியோரின் உருவங்களும் அவர்களின் விளையாடல்களைச் சித்திரிக்கும் ஓவியங்களாக உள்ளன. கேரள நாட்டுச் சிறந்த ஒவியராக கருதப்படும் ரவிவர்மா (1948 -1908) வரைந்த புராண காவிய ஓவியங்களும் அச்சிடப்பட்டு, சட்டங்களில் இடப்பட்டு ஆலயங்களில் உள்ளன.
சிற்பங்கள் சிலைகள்
மலையகக் கோவில்களின் வழிபாட்டிற்கெனவும், அலங்காரத்திற்கெனவும் பல்வேறு சிற்பங்களும் சிலைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இவை, கல், உலோகம், சீமெந்து மரம் போன்ற மூலப்பொருட்களால் ஆனவைகளாகத் திகழ்கின்றன. பெரும்பாலும் இவை கோபுரம், தூண்கள், நிலை என்பனவற்றில் அமைக்கப்பட்டுள்ளன. மாத்தளை, தெல்தோட்டை கலகா கம்பளை, புசல்லாவ: நாவலப்பிட்டி, அட்டன், மள்கெலியா, நுவரெலியா, பண்டாரவளை, பதுளை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய நகரங்களிலும் பேராதனைப் பல்கலைக்கழக குறிஞ்சிக் குமரன் ஆலயத்திலும், பண்டாரவளைக்கு அருகிலுள்ள கிரேக், உடப்புசல்வாவைக்கு அருகிலுள்ள கோடன், கலகாவிற்கு அருகிலுள்ள கிரிமெட்டிய, புப்புரள்ளபவிற்கு அண்மையிலுள்ள டெல்ரா முதலான தோட்டங்களில் அமைந்துள்ள கோவில்களிலும் அழகிய சிற்பங்களும் சிலைகளும்
73 GITGITTEIT.
இவ்வாலயங்களிலுள்ள அ ழகிய நடராஜர், பார்வதி, முத்துமாரியம்மன், காளி, விநாயகர், முருகன், பள்ளி கொண்ட விஷ்ணு, சரஸ்வதி, லட்சுமி நாயன்மார் போன்றோரின் பஞ்சலோகத் திருமேனிகளும் சிற்பங்களும், சிலைகளும் சிறப்பாகக் குறிப்பிடக்கூடியவை. சில கோவில்களில் மதுரைவிரன், காத்தவராயன், கறுப்புச்சாமி, இடும்பன், துவாரபாலகர்கள் ஆகியோருக்கும்
# !!!!!!!!!!!!a.git d_gitଶft edit',
மரத்தாலான பொருட்கள்
மலையக ஆலயங்கள் பலவற்றிலும் மரத்தால் செய்யப்பட்ட பல்வேறு
கலைப்பொருட்களும் கைவினைப் பொருட்களும் காணப்படுகின்றன. தெய்வ உருவங்களை அவங்கரித்து எழுந்தருளச் செய்யும்போது தூக்கியும், இழுத்தும்
| ፳l

படம் : மலையகக் கோயில் ஒன்றிற் காணப்பெறும் கவரோவியம்

Page 107

ற் காணப்பெறும்
ஒன்றி
படம் 2: மEEயகக் கோயில்
தினாச்சில, முருகன் கோயிலுக்கானது.

Page 108

படம் 4 மலையகக் கோபில் ஒன்றிற் காளப்பெறும் பஞ்சலோகத் திருமேனிகள்
படம் 3 கோயில் திாச்சிலை, பாரியம்மனுக்காது

Page 109

மரச் செதுக்கு வேலைப்பாடுடைய கதவு.

Page 110

உலாவரச் செய்யக்கூடிய பல்வேறு வாகனங்களாகவும், சப்பறம் தேர் போன்றவையாகவும் திகழ்கின்றன. பல வர்ணங்கள் திட்டப்பட்ட சூரன். நாகம், எருது, அன்னம், எலி, மயில், காராம்பசு, காமதேனு, சிங்கம், குதிரை, யானை, இடும்பன், பூதம் முதலான உருவமுடைய வாகனங்களும் மரத்தாலான யாளிகள், குதிரைகள், மலர்கள், பொம்மைகள் கொண்ட சித்திரத் தேர்களும்
மலையகக் கோவில்கன் பலவற்றிலும் உள்ளன.
சில கோயில்களின் கதவுகள், கதவு நிலைகள் தூண்கள் முதலானவையும் மரத்தால் ஆக்கப்பட்டுள்ளதுடன், அழகிய செதுக்கு வேலைப்பாடுகள் கொண்டவையாகவும் திகழ்கின்றன. மாத்தளை, கம்பளை, புசல்லாவ, நாவலப்பிட்டி, குருநாகல், கொழும்பு ஆகிய நகரங்களில் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களால் நிறுவப்பட்ட பல்வேறு கோவில்களிலும் இத்தகைய அழகிய மரச்செதுக்கு வேலைப்பாடுடைய கதவுகள், கதவு நிலைகள். துரண்கள் முதலானவற்றைக் காணக்கூடியதாகவுள்ளது.
கலைஞர்கள், கைவினைஞர்கள்
இக் கவின் கலைகள் பலவும் பரம்பரை பரம்பரையாக பெரும் மரபுவழிக் கலைஞர்களால் ஆக்கப்பட்டுத் தொடர்ந்தும் போரி வளர்க்கப்படுகின்றன. மரபும் ஆகம விதிகளும் பேணப்பட வேண்டியிருந்த போதும், கலைஞர்களும் கைவினைஞர்களும் தமது கற்பனைக்கேற்றவாறு செயல்படக்கூடியவர்களாகவும் திகழ்கின்றனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளும் சமூக பொருளாதார மாற்றங்களும் கலைஞர்களையும், கைவினைஞர்களையும் வெகுவாகப் பாதித்துள்ளன. ஒரு சில கலைஞர்களே தொடர்ந்தும் பரம்பரைத் தொழில்கிளைப் புரிகின்றனர். இக்கட்டுரையில் இம்பெறும் தகவல்கள் பெரும்பாலும் பெருந்தோட்டங்களைச் சார்ந்த நகர்நிலப்பட்ட கோவில்களிற் காணப்படுவனவே.
183

Page 111
பின்இணைப்பு 1
பெருந்தோட்டத் தமிழ்மக்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் வருடாந்தச்சுழல்
இத்தொகுப்பில் இந்துத் தமிழர்களின் பண்பாட்டு நடவடிக்கைகளே தரப்படுகின்றன. பெருந்தோட்டப் பொருளாதார வாழ்க்கைக்கும் அங்குள்ள தமிழர்களின் சமூக ஒழுங்கமைப்பும் கீழே தரப்பட்டுள்ள பண்பாட்டு நடைமுறைகளுக்குமுள்ள இணைப்பு முக்கியமான ஓர் அமிசமாகும். அவர்களைத் தாங்கி நிற்கும் அவர்களது நம்பிக்கைகள், அந்த நம்பிக்கைகளின் வெளிப்பாடாக அமையும் சடங்குகள், அந்தச் சடங்குகள் ஏற்படுத்தும் சுயதிருப்தியுணர்வு, சமூக ஒருங்குணர்வு ஆகியன மிகமுக்கியமானவையாகும். இங்கு தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைச் சுழல் தரப்படுகின்றது. ஏனெனில் இவர்களது சமூக மதப்பாரம்பரியத்தில் தமிழ்வருட முறையே முக்கியமான இடத்தைப் பெறுவதாகும். தொழில் ரீதியான வாழ்க்கை நடவடிக்கைகளுக்கு மேனாட்டு வருடமுறையிலேயே (ஜனவரி, பிப்ரவரி என வருபவை) முக்கியமெனினும் பண்பாட்டு வாழ்க்கைக்கு, மத ஒழுகலாற்றுக்குத் தமிழ் வருடமுறைமையே முக்கியமாகின்றது.
இங்கு தமிழ் மாதங்களின் அடிப்படையில் அவ்வவ் மாதங்களில் இடம்பெறும் மத-பண்பாட்டு நிகழ்ச்சிகள் தரப்படுகின்றன. இந்தத் தொகுப்பு () குண்டசாலைத் தமிழ் வரித்தியாலய அதிபர் திரு.செல்லையா சுப் பிரமணியம் , 2) தொழிற்சங்கவாதியான திருமதி சரஸ்வதி ஜெயராஜ், (3) வீரகேசரி துணைப்பதிப்பாசிரியர் திரு வடிவேல் தேவராஜ் ஆகியோரிடமிருந்து, இதற்கெனக் கூட்டப்பெற்ற ஒரு கலந்துரையாடலிருந்து பெறப்பட்டதாகும். திரு சுப்பிரமணியம் கண்டி, வத்தேகம பகுதி பற்றியும் திருமதி சரஸ்வதி ஜெயராஜ் ஹற்றன் பகுதி பற்றியும் திரு தேவராஜ் பதுளைப் பிரதேசம் பற்றியும் ஆழமான பரிச்சயமுடையவர்கள்.
1. தைமாதம் (சனவரி 14/15 முதல் பெப்ரவரி 14/15 வரை)
தைப்பொங்கல்
பொங்கலுக்கு முதல் நாள் போகி கொளுத்துதல், பொங்கலன்று குரியப் பொங்கல் பொங்கலுக்கடுத்த நாள் மாட்டுப் பொங்கல், சில விடயங்களில் மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து பட்டிப் பொங்கல் நடைபெறுவதுண்டு.
184

பொங் கலையொட்டி கிளித்தட்டு, பிள்ளையார்பத்து முதலிய விளையாட்டுக்களும் இடம்பெறும்.
மார்கழி மாத ராமர் பஜனை பொங்கலன்று (தைமுதல் நாளன்று) முடிவுறும். பஜனை ஊர்வலத்தில் கோலாட்டம், கரகம், காவடி ஆகியன உண்டு.அன்று மாலை 4 - 4.20 மணியனவில் கோயில் முற்றத்தில் கும்மியடித்தலுண்டு.
இது ஒரு கலியாண மாதம். முந்திய வருடம் விவாகமானவர்களுக்கு பொங்கல்சீர் கொடுக்கும் வழக்கம் உண்டு. பெண்ணின் தாய் வீட்டிலிருந்து பொங்கலுக்கு வேண்டிய பொருட்கள் கொண்டு செல்லப்படும்.
தைப்பூசம்
இத்தினம் விசேட வழிப்பாட்டுத் தினமாகக் கொண்டாடப்படும். முருகன் கோயில்களில் விசேட பூசைகள் நடக்கும். இத்தினத்தன்று குழந்தைகளுக்குக் காதுகுத்துதல் (தாய்மாமனாற் செய்யப்படுவது) முடியிறக்குதல் செய்விப்பர். தைக்கார்த்திகையன்றும் சில இடங்களிலே விசேட பூசை உண்டு.
தைமாத அமாவாசை முடிந்த மூன்றாம் நாள் பொன்னர் சங்கள் நாடகத்துக்கடன் ஆரம்பிக்கும். இது பெரும்பாலும் அடிநிலைச்சாதிக் குழுமத்தினரை சார்ந்த நாடகமாகும்.மாசி மாதத்தில் அரங்கேற்றப்படும். மலையகத்தின் சில பகுதிகளில் வருடாந்தத் திருவிழா தைமாதத்திற் கொண்டாடப்படுவதுண்டு. உ-ம் நாவலப்பிட்டி பெருந்தோட்டங்களிலுள்ள கோயில்களில் திருவிழா என்பது பெரும்பாலும் 3 அல்லது 5 நாட்களைக் கொண்டதாகும். கரகம் பாலித்துத் திருவிழாத் தொடங்கப்பெறும். குறிப்பெடுத்தலுடனேயே கரகம் பாலிக்கப்படும். குறிப்புக்கள் எவரும் எடுக்காவிட்டால் (குறிப்புகள் என்பன ஒளித்துவைக்கப் பட்டிருக்கும் கோயிற்பொருட்களாகவே இருக்கும்)திருவிழா பின்போடப்படலாம்.
அடுத்து அம்மன் தேர் தோட்டம் முழுவதும் (பொங்கலுக்கு) கொண்டு செல்லப்படும். தேர் வரும்பொழுது கரகம் உண்டு நேர்த்திக்கடனுக்காக கஞ்சி வார்ப்பதுண்டு. மாவிளக்கு எரிப்பதுண்டு. இறுதி நிகழ்ச்சியாக மஞ்சள்நீர் விளையாடல் இடம்பெறும். இதனை நீர் வெட்டு என்றும் சொல்வதுண்டு. திருவிழாவின் பொழுது முழுத்தோட்டமும் பங்குபற்றும். திருவிழா நடக்கும் நாட்களில் பி. ப 2 மணிக்கு வேலை நிறுத்தப்படும்.
185

Page 112
2. மாசி (பிப்ரவரி 14/15 மார்ச் 14/15)
மாசி அமாவாசை வந்து முன்றாம் நாள் காமன் சுத்துக்கான ஆரம்பமுயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
மாசிமகம்
மாத்தளை முத்துமாரியம்மன் தேர்பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முன்றவரும், மாமாங்கத்துக்கு நாறங்கவை, ஹற்றன் பகுதிகளிலுள்ள சில சில கோவில்களில் விசேடபூசை நடைபெறுவதுண்டு.
சிவராத்திரி
பாடசாலை மாணவர்கள் பாடசாலைகளில் இரவு விழித்திருக்கும் ஒரு மரபு இப்பொழுது வளர்ந்து வருகின்றது.
தோட்டத்துக் கோயில்கள் தோட்டஞ்சார் நகர்ப்புறக் கோயில்களில் விசேட பூசைகள் நடைபெறுவதுண்டு. சிவராத்திரி நாடகம் நடத்துதல், தேவார பஜனை நடத்துதல் ஆகியன உண்டு.இப்படியான பொது நடவடிக்கைகளுக்குப்பணம் சேர்க்கும் முறைமை ஹற்றன் பகுதியில் வரின்டுத்து தடத்துதல் என்று குறிப்பிடப்பெறும். இம்மாதத்திலேயே காமன் கூத்து பரவலாக நடைபெறும்.
3. பங்குனி (மார்ச் 14/15 முதல் ஏப்ரல் 13/14 வரை)
பங்குனி உத்தரம்
இந்நாளன்று முருகன் கோயில்களில் விசேட பூசை நடைபெறும். பங்குனி உத்தரத்தின் பொழுது சில கோயில்களில் தீக்குளித்தல்நடைபெறுவதுண்டு. பங்குனியில் பல தோட்டங்களில் வருடாந்தத் திருவிழா நடைபெறுவது வழக்கம். நாவலப்பிட்டி, தலவாக்கல்லை, ஹற்றன் பகுதிகளில் பங்குனரி, சித்திரைக் காலப்பகுதியிலேயே திருவிழா நடைபெறுவதுண்டு. திருவிழாக் காலங்களிற் காதுகுத்தல் முடியிறக்கு ஆகியன நடைபெறுவதுண்டு.
4. சித்திரை (ஏப்ரல் 13/14 முதல் மே 14/15 வரை)
வருடப்பிறப்பு
தமிழ் வருடம் சித்திரையிலேயே தொடங்கும். வருடப்பிறப்பன்று காலையிற் பொங்கி சாமி கும்பிட்டபின்னர், மலைக்குச்சென்று அங்குள்ள முனியாண்டி கோயிலில் கொழுந்து சாமி கும்பிடல்,
8.

சிஸ் தோட்டங்களிற் சித்திரை வருடப்பிறப்பு வேலைநாளாகவிருத்தலால் விசேடமான கொண்டாட்டங்கள் இருப்பதில்லை. சனவரி முதலாம் திகதியும் (ஆங்கில வருடப்பிறப்பின் பொழுது கொழுந்து சாமி கும்பிடும் மரபு உண்டு).
சித்திரைப் பெளர்ணமி கீாெைமுதல் மாலைவரை விரதமிருந்து, மாலையில் விரதத்தை நிறைவு செய்து கொள்ளுதல் சித்திரப்புத்திரனார் கதை வாசிக்கப்படல் சித்திரைக்கூழ் வழங்கல் (பதுளைப்பகுதியில்)
5. வைகாசி (மே 13/14 முதல் ஜூன் 14/15 வரை)
வைகாசி விசாகம்
விசாகதினத்தன்று பெரும்பாலான கோயில்களில் விசேடபூசை நடைபெறும்.
6. ஆனி (ஜூன் 14/15 முதல் ஜூலை 14/15 வரை)
ஆனி உத்தரம் கதிர்காமம் கொடியேற்றம்
(கதிர்காம வழிபாடு மலையக மக்களிடையே பெரிதும் காணப்படுவதாகும்)
1. ஆடி ஜூலை 14/15 முதல் ஓகஸ்ட் 14/15 வரை)
ஆடிப்பதினெட்டு
இது ஆடிப்பெருக்கு என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. பதினெட்டாம் பெருக்குத் தமிழகத்து இந்துத் தமிழர் வாழ்க்கையில் முக்கியமான ஒரு நாளாகும்.பதினெட்டாம் பெருக்கன்று காவேரி அனைதிறந்து விடப்படும்.
காவேரி பெருக்கெடுக்கும் நாள் - இந்த ஆடிப்பெருக்குத் தினத்தன்றுதாவிக்கொடி மாற்றுதல் (புதிய மஞ்சள் கயிறு கட்டுதல்), இறந்து போனவர்களுக்குப் படையல் போடுதல்ஆகிய நிகழ்ச்சிகளும் இடம்பெறும். ஆடிப்பதினெட்டு முடியப்பெண்கள் கடடேறியைக் கும்பிடும் வழக்கம் உண்டு. 5-7 சுமங்கலிப்பெண்கள் தட்டுகள் நிறையநைவேத்தியப் பொருட்களுடன் சென்று காட்டேறியைக் குப்பிடுவர்.இது முற்றிலும் பெண்களுக்கேயுரிய ஒரு வைபவமாகும். காட்டேறியை வழிபடச்சுமங்கலிகள் செல்லும்பொழுது, எதிர்ப்பட ஒருவரும் வரக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையுண்டு.
ஆர்க்காட்டுப்பகுதியிலிருந்து வந்தவர்களிடையே இந்த வழிபாடு காணப்படுகிறது. ஹற்றளில் இவ்வைபவம் நடைபெறுவதுண்டு.
I

Page 113
ஆடி அமாவாசை
தகிப்பனை இழந்தோர் விரதமிருக்கும் முக்கிய அமாவாசை நாள் இது
ஆடிப்பூரம்
அம்மனுக்கு விசேட பூசைகள் நடைபெறும்.
ஆடி வேல் விழா
கதிர்காமத்தித்தம் ஆடிப்பெளர்ணமி தினத்தன்று. உவாப்பகுதியிலும் கண்டி பல்லேகலப் பகுதிகளிலுமுள்ள சில கோயில்களில் ஆடி மாதத்திலேயே திருவிழா நடைபெறும், ஆடி மாதத்தில் பெண்கள் அம்மன் முதலிய தெய்வங்களை குளிர்ச்சிபண்ணி வழிபடும் மரபு ap goint(0).
8. ஆவணி (ஓகஸ்ட் 14/15 முதல் செம்டம்பர் 14/15 வரை
இது ஒரு கல்யானமாதம்
9. புரட்டாசி (செம்டம்பர் 14/15 முதல் ஒக்டோபர் 14/15 வரை)
புரட்டாசிச் சனி விரதம்
இவ்விரதத்தின் பொழுது ராமர் பஜனை நடைபெறுவதுண்டு.
நவராத்திரி
பெண்கள் விரதமிருத்தல் இப்போது பாடசாலைகளிற் பெரிதாகக் கொண்டாடப் பெறுகிறது. சரஸ்வதி பூசை மிகச் | || || கொண்டாடப்பெறும்ஆயுத பூசையின் பொழுது கத்தி, அரிவாள்.மட்டக்கத்தி (தேயிலைத் தொழரிவிற் பயன்படுத்தப் படுபவை) வைத் து வனங்கப்படுவதுண்டு.
புரட்டாசி மாதத்தில் இராமப் பஜனை படித்து விரதமிருக்கும் வழக்கமும் உண்டு
10. ஐப்பசி (ஒக்டோபர் 14/15 முதல் நவம்பர் 14/15 வரை)
கந்தசஷ்டி
அத்துணை பெரிதாகக் கொண்டாடப் பெறுவதில்லை.
தீபாவளி
தீபாவளிக்கு முதல் நாள் படையல் வைப்பது உண்டு, தீபாவளிக் கொண்டாட்டத்தின் மிக முக்கியமான சடங்கு எண்ணெய் வைத்தலாகும் முதியோர் வயது குறைந்தவர்களுக்கு எண்ணெய் வைத்துவிடுவர். புதிய உடுப்புகள் அணியும் வழக்கம் உண்டு.
SR

ஐப்பசி வெள்ளி
விரதம் உண்டு. ஆனால் பெருமளவில் செய்யப்படுவதில்லை.
1. கார்த்திகை (நவம்பர் 14/15 முதல் டிசம்பர் 14/15 வரை)
திருக்கார்த்திகை விளக்கீடு
"புழங்கும் இடங்களிற்" சுடர் கொழுத்துதல்,
ஐயனார் கோயில் வழிபாடு - பொங்கல்
12. மார்கழி (டிசம்பர் 14/15 முதல் ஐனவர் 14/15 வரை)
ராமர் பஜனைகோயில்களில் திருவெம்பாவைப் பூசை
தமிழ் வருடமுறையினடிப்படையில் வரும் இவற்றைவிட ஆங்கில வருடக்கணிப்பு முறையினடியாக வரும் மாத முறைமையிலேயே (சனவரி, பெப்ரவரி என்பவை) கிறிஸ்தவ வைபவங்கள் கொண்டாடப்படுகின்றன. அவைபற்றிய விவரங்கள் திரு, ஏ.வி.பி. கோமசின் கட்டுரையில் உள்ளன.
ஆங்கில முறைமையில் வரும் மாத அடிப்படையில் மே முதலாம் திகதிவரும் மேதினக் கொண்டாட்டம் தொழிற்சங்கங்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகும். மே தின ஊர்வலத்தில் இப்பொழுது பண்பாட்டு அம்சங்கள் இடம்பெறுகின்றன. பாரம்பரிய ஆட்டங்கள் இசைவாத்தியங்கள் இந்த ஊர்வலங்களில் இடம்பெறுவதுண்டு. இவற்றுக்கான தயாரிப்பு ஒத்திகை ஆகியனவும் பண்பாட்டுச் சிரத்தையைப் பேணிக் கொள்ள உதவுகின்றன. அதேவேளையில் பண்பாடு அரசியல் மயப்படுவதற்கும் இவை உதவுகின்றன.
மேலே கூறிய தமிழ் மாத நிகழ்ச்சி வரன்முறை பாரம்பரியப் பண்பாட்டின் தொடர்ச்சியை வற்புறுத்துவனவாகவுள்ளன. அதேவேளையில் புதிய கொண்டாட்ட ாபவங்களும், மலையக வாழ்க்கையில் முக்கியமாகின்றன. பிறந்த நாள்விழா தொகைய ஒன்றாகும். பொதுக்கூட்டங்கள் விழாக்கள் ஒழுங்கு படுத்தப்படும்போது பாரம்பரியக்கலைகளின் ஆற்றுகையை உள்ளடக்கிய ஒரு நிகழ்ச்சி நிரலைத் தயாரிப்பது இப்பொழுது சாதாரண நடைமுறையாகியுள்ளது.
189

Page 114
பின்இணைப்பு 11
LD6O Glou I JIf தொடர்பான ஆக்கங்களும் ஆய்வுகளும்
தொகுப்பு - ஃபிர்தெளஸியா இப்றாஹிம்
சிறுகதையும் சிறுகதைத் தொகுதிகளும்
IO.
190
அப்பாஸ், எம். ஏ (1960) : தெய்வங்கள், சென்னை, ஜெமினி பிரசுரம்,
இரத்தினம் (1959) ; பாட்டாளி வாழ்க்கையிலே, எட்டியாந்தோட்டை, பகுத்தறிவுப் புத்தகப் பண்ணை.
இராசரத்தினம் வ.அ.(1956);"வீடு” ஈழகேசரி, பக். 45. தோட்டத்தொழிலாளர் பிரச்சினைகளைக் குறிப்பாக அவர்களது இருப்பிட வசதிக் குறைவைச் சிறப்பாகச் சித்திரிக்கின்றது. முதலாளி தொழிலாளி வர்க்க முரண்பாடு, தோட்ட அதிகாரிகள் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கி கொடுமைப்படுத்துவதனையும் வெளிப்படுத்தியுள்ளார் இவ்வாசிரியர்.
1959) ; கொழுகொம்பு,சுன்னாகம், வட இலங்கைத் தமிழ்ப் பதிப்பகம்.
கணேசலிங்கன். செ. (1966) சடங்கு, சென்னை, பாரி நிலையம்.
LL LLL LLL LLL LLL LLL LLLL LL LLL LLL LLL LLL LLL LLL LL 1967) : செவ்வானம். சென்னை, பாரி நிலையம்.
a a s a w (1969) ; போர்க்கோலம், சென்னை, பாரி நிலையம்.
a 8 a. a a a a w a (1956) நல்லவன், சென்னை, பாரி நிலையம்.
a a a a a 8 a (1956) : "மரக்கட்டை" நல்லவன். சென்னை பாரி நிலையம் தோட்டத் தொழிலாளி தமது உரிமைகோரிக் கிளர்ச்சிகளில் ஈடுபடும் பொழுது முதலாளிகள் அவற்றை அடக்கி ஒடுக்குவதற்கு எடுக்கும் நடவடிக் கைகளையும் முதலாளிகளுக்குச் சார்பாகவும் , தொழிலாளர்களுக்குப் பாதகமான முறையிலும் அரசாங்கம் நடந்து கொள்வதனையும் இதில் காணலாம்.
a a w (1961) ஒரே இனம், சென்னை, பாரி நிலையம்.

11.
2.
l3.
14.
15.
6.
(1961) ; சாயம், ஒரே இனம், சென்னை, பாரி நிலையம். தோட்டத் துரைமார், கங்காணிமார், தலைமைக் குமாஸ்தாக்கள் முதலியோர் தமது சுயநலத்துக்காகத் தொழிலாளர்களது உழைப்பைச் சுரண்டும் முறையையும், அவர்களது ஊழல்களையும், இரத்தத்தை வியர்வையாக்கி நாள் முழுதும் மாடாக உழைத்துத் தேயிலை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்குச் சிறந்த தேயிலையைச் சுவைக்க வாய்ப்பில்லாது போவதனையும், தொழிலாளர்கள் சுகமீனமுற்ற நிலையிலும் அவர்களுக்கு ஓய்வு கொடுக்காது வேலை வாங்கும் கொடுமையையும், சுகமீனம் காரணமாக அவர்கள் வேலைக்குப் போகாது விடினும் அல்லது சிறிது நேரம் தாமதித்துச் சென்றாலும் அவர்களை வேலையில் இருந்து நீக்கிவிடும் தோட்ட அதிகாரிகளின் அரக்கத்தனத்தையும் இவ்வாசிரியர் சித்திரித்துள்ளார்.
கார்மேகம் எஸ். எம் (1971) ; கதைக்கனிகள், கொழும்பு வீரகேசரி வெளியீடு. மலையக மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் காட்டி, அவற்றிற்குப் பரிகாரம் தேடித்தரக்கூடிய சாதனமாகவும், மக்களின் ஜீவாதார உரிமைகளுக்குப் பாதுகாவலனாகவும், அவர்களின் சிந்தனைகளின் அபிலாஷைகளைப் பிரதிபலிப்பதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களின் உரிமைக் குரலாக விளங்க வேண்டியதும் பத்திரிகைகளின் தார்மீகக் கட்டுப்பாடு என்பதனை இது விளக்குகிறது.
கோகிலம் சுப்பையா (1964) ; தூரத்துப் பச்சை, சென்னை தமிழ்ப் புத்தகாலயம். குடியுரிமையற்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களின் நிலையும் நான்கு தலைமுறைகளுக்குள் அடக்கி விபரிக்கின்றது.
கோதண்டராமன் ப. (1958) ; எழுத்தாளர் தர்மம், சென்னை, நியு செஞ்சரி புக் ஹவுஸ்.
சிவஞானசுந்தரம். செ. (1964): மலைக்கொழுந்து, யாழ்ப்பாணம், (நந்தி) ஆசிர்வாதம் அச்சகம், பக். 246. தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் இன்னல்களையும் எடுத்துக் காட்டுகிறது.
a a as a a (1964) ஊர்நம்புமா, யாழ்ப்பாணம், நண்பர்கள் வெளியீடு. பக் 40 தொழிலாளர்களின் சுகாதாரக் குறைவு, போசாக்குள்ள உணவின்மையால் தொழிலாளர்களும் அவர்களது குழந்தைகளும் நோய்வாய்ப்படுவதனையும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி வசதியின்மையும் அறியாமையினாலும் வறுமையினாலும் இளமையிலேயே மூப்படைவதனையும், வேதனைகளைத் தாங்க முடியாத நிலையிலே தற்கொலை செய்து கொள்வதனையும் இதிற் காட்டியுள்ளார்.
191

Page 115
R.
1ց.
r
E.
டானியல் கே (1957) அசுரபரம்பரை, ஈழகேசரி, ப. 10. இந்திய தொழிலாளர்கள் இலங்கைக்கு வரும் போது காணும் இன்பக் கனவுகளையும், கட்டும் மனக் கோட்டைகளையும், மலைநாட்டையடைந்து வாழத் தொடங்கியதும் அவர்கள் அனுபவிக்கும் இன்னல்களையும்
காட்டியுள்ளார்.
தெளிவத்தை ஜோசப் (1979) நாமிருக்கும் நாடே. யாழ்ப்பாணம், வைகறை வெளியீடு,தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சின்ைகளை மையமாகக் கொண்டு அமைந்துள்ளது. சமுதாயத்தில் ஆளுமையறிந்து நசிந்து போன, தனிமைப்படுத்தப்பட்ட சமுதாய இழையில் இருந்து பிய்த்து எறியப்பட்ட உதிரிப் பாத்திரங்களின் துயரங்கள் ஏக்கங்களுக்கூடாகவே இச்சமுதாயத்தின் கேவலங்களை நோக்குகின்றார்.
நாகராஜன், இ. (1955) "சுமை", ஈழகேசரி, பக், 9. தொழிலாளர் குடும்பங்களின் வறுமை, கடன் தொல்லை. அவர்களது உழைப்பைச் சுரண்டி சுகபோக வாழ்வு நடாத்தும் தன்மை, கடனிலே பிறந்து கடனிலே வளர்ந்து, கடனிலே மடிகின்ற நிலை முதலானவை சித்திரிக்கப்படுகின்றன.
புதுமைப் பித்தன், 1940) துன்பக்கேணி, புதுமைப்பித்தன் சிறுகதைகள், சென்னை, நவயுகப் பிரசுராலயம் பக். 29-69, இலங்கையில் தேயிலைத் தோட்டங்களில் தென் இந்தியப் பெண்கள்படும் துன்பங்களையும், தோட்ட அதிகாரிகளின் அட்டூழியங்களையும் அவர்கள் தமது காம வேட்கைக்குத் தொழிலாளப் பெண்களைப் பலியாக்கும் குரூரத்தையும், சீர்கேடுகளையும் சிறப்பாகச் சித்திரிக்கின்றார்.
SS SSSSSSS SSSS SS SS SS SS SSSSSSS SSSSSSS SSS SSSSS (1954) அன்று இரவு, சென்னை, ஸ்டார் பிரசுரம்,
பெனடிக்ற்பாலன், யோ. (1985) "ஒரேலயக்காம்பராவில்" வசந்தம், மலர் , இதழ் 4 பக். 42-47, தொழிலாளர்களின் இருப்பிட வசதிக்குறைவு. அதனால் ஏற்படும் கஷ்டங்கள், சுகாதார வசதியின்மை, ஆடு மாடுகளைப் பட்டியில் அடைத்து வைப்பது போவத் தொழிலாளர்களையும் லயங்களில் அடைத்து வைத்திருக்கும் முதலாளிகளின் மனிதாபிமானமற்ற செயல், தொழிலாளர்களைப் பற்றிய முதலாளிகளின் அலட்சிய மனோபாவம் முதலானவை சித்திரிக்கப்பட்டுள்ளன.
. . . . . . . . . . . . (1988) சொந்தக்காரன், சென்னை, பாரி நிலையம், # Jả, 246, தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும், இன்னல்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
192

翌星,
5.
#?
,
பொன்னையன், நீர்வை (1970) உதயம், யாழ்ப்பானம், நவயுகப் பதிப்பகம்.
மலரன்பன் (1880) கோடிச்சேலை, மாத்தளை, மாத்தளை தமிழ் எழுத்தாளர் ஒன்றியம். இச்சிறுகதைத் தொகுதியுள் சுமார் பன்னிரண்டு கதைகள் இடம் பெறுகின்றன. பொதுவாக மலையக மக்களின் வறுமையின் கொடுமை சித்திரிக்கப்படுகிறது. உடம்பின் வாட்டம் பட்டினிக்குரல் படிக்க வாய்ப்பின்மை, தொழில் செய்யும் வாய்ப்புகளை இழந்த போக்கு வேலையற்றிருப்பவர்களுக்கு உணவு வழங்காமை எனப் பல பிரச்சினைகள் இக்கதைகளினுடாக எடுத்துக் காட்டப்படுகின்றன.
மலரன்பன் பாத்தளை சோமு, மாத்தளை வடிவேலன் (1980
தோட்டக்காட்டினிலே, மாத்தளை தமிழ் எழுத்தாளர்ஒன்றியம், மாத்தளை. இத்தொகுப்பில் மலையக உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் இருந்தே பெரும்பாலான கதைகள் முகிழ்த்திருக்கின்றன. உழைக்கும் மக்களின் சமூகத்தில் பெண்கள், முதியோர், குழந்தைகள் அனுபவிக்கும் மேலதிக சுமைகள் பற்றி விபரிக்கப்படுகின்றது. தோட்டக்காட்டிலே வேலை பி சமர் ப முடி யாதவர் கள் தேடுவார ற் று. தெரு விரிவே நடைப் பனங்களாய்க் கிடந்து மறையும் சோகம் சிறப்பாகக் காட்டப்படுகின்றது. மனிதரிடையே கானப்படும் புனிதமான பாசங்கள் சு ட பணத்தை மையமாகக் கொண்டன என்ற உண்மை
உணர்த்தப்படுகின்றது.
மொழிவரதன் (1988) மேகமலைகளின் ராகங்கள், கண்டி, மலையக வெளியீட்டகம். மலையக மக்களின் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப வருமானம் கிட்டாததால், மாணவர்களைப் படிப்பதைவிட சிறுவயதில் தொழில் செய்யத் தூண்டும் பெற்றோர்களின் நிலைமை காட்டப்படுகின்றது. வறுமையின் கொடுமையால் சமூகத்துடன் ஒத்துப்போக முடியாதநிலை. சடங்கு முறைகளில் இருந்து விடுபட முடியாத நிலை, வறுமையின் கொடுமையால் தன்மானம் இழக்கப்படும் நிலை முதலானவை சிறப்பாக சித்திரிக்கப்படுகின்றன.
ரகுநாதன் (1951) ரகுநாதன்கதைகள், சென்னை சக்தி காரியாலயம்.
ராமையா, என். எஸ். எம் (1980) ஒரு கடடைக்கொழுந்து, யாழ்ப்பாணம் வைகறை வெளியீடு. மலையக மக்களின் துயர்நிறைந்த வாழ்வினை இலக்கியத்தின் வாயிலாக வெளிக் கொண்டு வருகிறார். மலையக மக்களின் வாழ்க்கையில் பிறப்பிலிருந்து சாவு வரையுள்ள சகல
1413

Page 116
அம்சங்களும் நேர்மை, கண்ணியம், சமூக தர்மம் பற்றிய உணர்வுவகை அனைத்தையும் இம்மக்களின் தி ழைப்பு என்னும் உரைகல்லுக்கூடாகவே நிறுவுகின்றார்.
30 விந்தன் (1952) ஒரே உரிமை, 2ம் பதிப்பு, சென்னை ஸ்டார் பிரசுரம்,
3. . . . . . . . . . . . . . . . . (1953) சமுதாய விரோதி, சென்னை, ஸ்டார் பிரசுரம்,
1980) முல்லைக் கொடியாள், சென்னை, ஸ்டார் பிரசுரம்
Wዳ ஜெயகாந்தன்(1982) இனிப்பும் கரிப்பும், 2ம் பதிப்பு, மதுரை, மீனாட்சி
புத்தக நிலையம்.
d. ..(1962) உண்மைசுடும், மதுரை, மீனாட்சி புத்தக நிலையம்
(1983) ஒரு பிடிசோறு, மதுரை, மீனாட்சி புத்தக நிலையம்,
நாவல்கள்
E. கோகிலம் சுப்பையா (1984) தூரத்துப் பச்சை, சென்னை, தமிழ்ப்புத்தகாலயம்,குடியுரிமையற்ற தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையும், அவர்களின் நிலையும் நான்கு தலைமுறைகளுக்குள் அடக்கி விபரிக்கப்படுகின்றது.
37. கோமஸ் ஏ. பி. வி (1988) அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான்
(குறுநாவல்), கில்ஹின்னை, தமிழ்மன்றம்.
38) சதாசிவம்.க. (1983); முட்டத்தினுள்ளே, கொழும்பு, வீரகேசரி வெளியீடு, மலையக மண்ணைக் களமாகக் கொண்டமைந்த இந்நாவலில், இந்திய வம்சாவழியினர் இந்நாட்டிற்குள் அடியெடுத்து வைத்த நாள்தொட்டு இற்றைநாள்வரை பட்டுவரும் துன்பங்களையும், வேதனைகளையும் யதார்த்த பூர்வமாகக் காட்டியுள்ளார். சம்பளப் பிரச்சினை, தொழிற் சங்க, கட்சி வேறுபாடுகள் அப்பாவித் தோட்டத் தொழிலாளரைப் பாதிக்கும் தன்மை, தமது ஆசாபாசங்களுக்கு உட்படாத பெண்களுக்குக் குறைவான சம்பளத்தைக் கொடுக்கும் கொடுமை என்பன சிறப்பாக சித்திரிக்கப்படுகின்றன.
39) விக்னராஜு, தொ. (1959) தாயகம் (குறுநாவல்) நூரளை, குறிஞ்சிப்
பண்ணை, மலையக மக்களின் குடியுரிமை பற்றிய பிரச்சினையை
1)

dO}
粤T)
*2,
*5。
,
கருவாகக் கொண்டது. பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்தின் விளைவாகச் சிலர் இந்தியாவிற்குத் திரும்பிப் போக முடிவு செய்கின்றனர். பலருக்குத் தாயகம் எது என்ற குழப்பம் ஏற்படுகின்றது. பிறந்து, வளர்ந்து உழைத்துப் பாடுபடுகின்ற இலங்கையையே தாயகமாகக் கொள்கின்றனர்.
ரொமி, மு. வெ. பெ (1952) யார் கொலைகாரன், பதுளை
ஞானசேகரன் தி. (1979) குருதிமலை, கொழும்பு, வீரகேசரி வெளியீடு. தோட்டங்கள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர் தொழிலாளர்களின் மத்தியில் ஏற்பட்ட நன்மை, தீமைகள் கதையின் கருக்களாக்கப்பட்டுள்ளன.
டேவிட் கே. ஆர் (1978) வரலாறு அவளைத் தோற்று விட்டது, கொழும்பு, வீரகேசரி வெளியீடு. இளம் பெண்களின் கற்பு மிகக் கேவலமான முறையில் தோட்ட நிர்வாகத்தினரால் சூறையாடப்படும் தன்மை எடுத்துக்காட்டப்படுகின்றது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், உரிமைகள் என்பன நிருவாகத்தினராலும், அரசாங்கத்தினராலும் பறிக்கப்படும் தன்மையை ஆசிரியர் சிறப்பாகக் காட்டுகிறார்.
தெளிவத்தை எஸ். ஜோசப் (1974) காலங்கள் சாவதில்லை, கொழும்பு வீரகேசரி வெளியீடு. தொழிலாளர்களின் நம்பிக்கையுணர்வு சித்திரித்துக் காட்டப்படுகின்றது. வேலை செய்ததற்கும், உண்மையில் சம்பளம் கொடுப்பதற்கும் உள்ள வித்தியாசமே கதையின் முக்கிய அம்சமாகக் கருதப்படுகின்றது. அத்துடன் அதிகார வக்கத்தின் சுரண்டல்முறை. தொழிலாளர்களின் எழுச்சி, அவர்களின் வீரம், திடம் முதலியன செறிவான கட்டுக் கோப்புடன் சித்திரிக்கப்பட்டுள்ளன.
நந்தி (1964) மலைக்கொழுந்து, யாழ்ப்பாணம், ஆசீர்வாதம் அச்சகம், தோட்டத் தொழிலாளர்களின் இன்னல்களையும் வாழ்க்கை நிலையையும் எடுத்துக் காட்டுகின்றது.
பீர்முகம்மது டி. எம். (1954) கங்காணிகள், பதுளை.
பெனடிக்ற்பாலன், யோ (1968) சொந்தக்காரன், சென்னை பாரி நிலையம், தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளையும், இன்னல்களையும் எடுத்துக் காட்டுகின்றது.
மாத்தளை சோமு (1984) அந்த உலகத்தில் இந்த மனிதர்கள். சென்னை,
195

Page 117
48.
வேலுப்பிள்ளை ஸ். வி (1981) ; வீடற்றவன், யாழ்ப்பாணம், வைகறை வெளியீடு. பிரஜாவுரிமைச் சட்டம் பூரீமா - சாஸ்திரி ஒப்பந்தம், கிராமியத் தோட்ட ஒருங்கிணைப்பு, இன அடக்கு முறைகள் என்பவற்றால் மலையகத் தமிழர் வீடற்று, நாடற்று நிர்க்கதியான தன்மையையும் இவர்கள் இந்தியாவை நோக்கிச் செல்லத் தவிப்பதனையும் இந்நாவல் சித்திரிக்கிறது.
கவிதைகளும் கவிதைத் தொகுதிகளும்.
49.
50.
5I
52.
58.
54.
55.
56.
57
58.
59
6O.
அளUண்மத், அல் (1987) மலைக்குயில், கல்ஹின்னை, தமிழ் மன்றம்.
ஈழக்குமார் (1965) ; குறிஞ்சிப்பூ, கண்டி, கவிதா நிலையம்.
குறிஞ்சித்தென்னவன் (1967) ; குறிஞ்சித்தென்னவன் கவிதைகள், கண்டி, மலையக வெளியீட்டகம்.
முரளிதரன், சு (1986) தியாக யந்திரங்கள், கண்டி மலையக வெளியீட்டகம்.
o v a v (1988) கூடைக்குள் தேசம், கண்டி, மலையக வெளியீட்டகம்.
தீவகத்து ஊமைகள் (நூல்வடிவில் பிரசுரிக்கப்படவில்லை.)
முல்லையூரான் (1980) "உயரத்தால் உயர்ந்தவர்கள்” பொதிகை, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், கலைப்பீட மாணவர் வெளியீடு.
ராமச்சந்திரன், எம். (1987) கவிதை - கவிதைகள், கண்டி,
(1987) விடிவை நோக்கி. கண்டி.
வெள்ளைச்சாமி அ. செ. பலவர்ண ஒப்பாரியும் பாரத நாட்டுப் பயணச் சிந்தும், நாவலப்பிட்டி, ராஜா அச்சகம்.
.பாட்டாளியின் பாடலும் ராசுவின் கணவன் பழனியின் மரண தண்டனையும்.
வேலுப்பிள்ளை வி.வி (1969) ; தேயிலைத் தோட்டத்திலே, தமிழாக்கம் சக்தி - அ. பாலையா, கண்டி, செய்தி பதிப்பகம்.
196

6.
a a a s a (1983) ; மலைநாட்டு மக்கள் பாடல்கள், சென்னை கலைஞன்
பதிப்பகம்.
கட்டுரைகள்
62. அருணாசலம் க. (1974) , ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகளிற் சமுதாய நோக்கு, யாழ்ப்பாணம். நான்காவது அனைத்துலகத் தமிழ் ஆராய்ச்சி LDé95Itp5ITuʻLG6) LD6ufr.
63. . . . . . . . . . . . . . (1981); “புதுமைப்பித்தன் காட்டும் துன்பக்கேணி இளங்கதிர்,
பேராதனைப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம்.
64. . . . . . . . . . . . . (1982) : "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைகள்” தமிழியற் கட்டுரைகள்,
யாழ்ப்பாணம், பூரீ சுப்பிரமணியம் புக் டிப்போ.
65 . . . . . . . . . . . . (1982) : “ஈழத்துத் தமிழ்ச் சிறுகதைத் தொகுதிகள் - ஒரு
மதிப்பீடு இளங்கதிர், பேராதனைப் பல்கலைக் கழகம், தமிழ்ச் சங்கம்.
66. . . . . . . . . . . (1984);"ஈழத்துத் தமிழ் இலக்கியங்களில் இந்திய வம்சாவழியினர்
பிரச்சினைகள்.
67. . . . . . . . . . . (1988) ; "மலையகத் தோட்டத் தொழிலாளர். ஓர் அறிமுகம்
கொழுந்து இதழ் 1, வரிசை 1 கண்டி,
68. . . . . . . . . . . (1989) ; "மலையகத் தோட்டத் தொழிலாளர் ஓர் அறிமுகம்.
கொழுந்து இதழ் 2 வரிசை 2 கண்டி,
69. . . . . . . . . . . (1989) "மலையகத் தோட்டத் தொழிலாளர் ஓர் அறிமுகம்.
கொழுந்து, இதழ் 4, வரிசை 3, கண்டி,
70. . . . . . . . . . . (1989) ; "மலையகத் தோட்டத் தொழிலாளர் ஒர் அறிமுகம்.
கொழுந்து, இதழ் 5, வரிசை 4, கண்டி,
71. . . . . . . . . . . (1989) ; "மலையகத் தமிழ் இலக்கிய வளர்ச்சி” கோ. நடேசய்யர்
நினைவுப் பேருரை, கண்டி.
72. . . . . . . . . . . (1990) : “குறிஞ்சித் தென்னவன் கவிதைகள். சில குறிப்புகள்,
குன்றின் குரல், இதழ் 2- 3, மலர் 10 வரிசை 1-2, கண்டி சத்தியோதய.
197

Page 118
73.
74.
75.
76.
77.
78.
79.
80.
81
82
83.
84.
(1991) ; "மலையகச் சிறுகதைகள் சில குறிப்புகள்” தேசியத் தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர், கொழும்பு, இந்துசமய கலாசார அலுவல்கள் அமைச்சு.
சாந்திகுமார். எல் (1985) ; தோட்டத் தொழிலாளரின் அன்றாடப் பிரச்சினைகள் இன்னும் தீரவில்லை" தினகரன், கொழும்பு,
சுப்பிரமணியம். நா. (1974) "ஈழத்துத் தமிழ் நாவல்கள்” யாழ்ப்பாணம், நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மகாநாட்டு நிகழ்ச்சிகள்.
தில்லைநாதன், சி (1971 72) : "ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி” இளந்தென்றல், இலங்கைப் பல்கலைக்கழகம், தமிழ்ச்சங்கம்.
நவசோதி, க ( ) : "நாட்டுப் பாடலில் மலைநாட்டு வரலாறு” சென்னை, இரண்டாவது உலகக் கருத்தரங்கு.
பாலசுப்பிரமணியம், எஸ் (1980) "மலையக இலக்கியம், பொதிகை, யாழ்ப்பாணம்.
மனோகரன், துரை (1980) ; "மலையகச் சிறுகதைகள் ஒரு மதிப்பீடு” ஊற்று, தொகுதி, இலக்கம் 4, கண்டி,
(1989) மலையக வரலாற்றில் ஒரு புதிய பங்களிப்பு" மல்லிகை,யாழ்ப்பாணம்.
- - - - - - - (1991) ; "மலையகத் தமிழ்க் கவிதைகள் ஒரு நோக்கு" விடிவு, கண்டி, மக்கள் கலை இலக்கியப் பேரவை.
- - - - - - - (1992) : "மலையகத் தமிழ்க் கவிதை ஒரு நோக்கு", விடிவு, இதழ் 14. கண்டி, மக்கள் கலை இலக்கியப் பேரவை.
ரோதைமுனி (1989); "மலையக அரசியலும் தடுமாறும் தலைமைகளும்" விடிவு, இதழ் 7, கண்டி மக்கள் கலை இலக்கியப் பேரவை.
விஸ்வநாதன், கலா (1989); "மலையகத் தொழிலாளர் பிரச்சினைகள்” விடிவு, இதழ் 7, கண்டி மக்கள் கலை இலக்கியப் பேரவை.
அருணாசலம், க. மலையகத் தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் (நூலுருவில் பிரசுரிக்கப்படவில்லை.)
198

86
87.
88.
89.
90.
9.
92.
93.
94.
95.
96.
97.
98.
a a ; மலையகத் தோட்டத் தொழிலாளர் பிரச்சினைகளும் தமிழ் இலக்கியமும். (நூலுருவில் பிரசுரிக்கப்படவில்லை.)
இராமநாதன், எஸ், (1992) ; தோட்டத் தொழிலாளர்களும் லங்கா சமசமாஜக் கட்சியும், லண்டன், தோட்டத் தொழிலாளர் ஸ்தாபன வெளியீடு. பக் - 36.
சந்திரசேகரன், சோ, (1989) ; இலங்கை இந்தியர் வரலாறு, Log/G02 LT, வைரவப் பதிப்பகம்.
சாரல் நாடன் (1986) ; சி. வி. சில சிந்தனைகள், கண்டி மலையக வெளியீட்டகம்.
(1988) ; தேசபக்தன் கோ. நடேசய்யர். ஒரு வரலாற்று ஆய்வு, கண்டி, மலையக வெளியீட்டகம்.
(1990) மலையகத் தமிழர், சென்னை, மலையரசி பதிப்பகம்.
சொர்ணவல்லி பத்பநாப ஐயர் (1988) ; இலங்கையில் தோட்டப் பள்ளிக் கூடங்களின் கல்வியமைப்பும் பிரச்சினைகளும், யாழ்ப்பாணம், தமிழியல்
பாலசுந்தரம், g). (1979) ; ஈழத்து நாட்டார் பாடல்கள், சென்னை, கலைஞன் பதிப்பகம்.
விருத்தகிரி, ப, (1976) ; இந்தியத் தொழிலாளி சென்னை, நியு செஞ்சி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிட்டட்
வேலாயுதம், கே (1988) ; இலங்கை தேசியத் தோட்ட தொழிலாளர் சமூகத்தின் வரலாறும், செயற்பாடுகளும், கொழும்பு, இலங்கை தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கம்
வேலுப்பிள்ளை. ஸி. வி (1967) ; நாடற்றவன் கதை, சென்னை, மிதிலா அச்சகம்.
(1987) நாடற்றவன் கதை, சென்னை, மிதிலா அச்சகம்.
ஜெயசிங், க. (1977) ; இலங்கைவாழ் இந்தியர்களின் குடியகல்வு, ஹட்டன், மக்கள் அச்சகம்.
199

Page 119
99. ஜெயராமன், கோ. (1971) கூலிக் கோட்பாடுகளும் தொழிலாளர் பிரச்சினைகளும், சென்னை தமிழ்நாடு. பாடநூல் நிறுவனம்
சட்டங்கள்
100. இலங்கைச் சட்டங்கள் 1988 ஆம் ஆண்டில் 39 ம் இலக்க, நாடற்ற ஆட்களுக்கு பிரஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) சட்டம், கொழும்பு, அரசாங்க வெளியீட்டலுவலகம், 1988 ப. 4 (இலங்கைச் சட்டம்), இல. 39, 1988)
101. இலங்கைப் பாராளுமன்றம் நாடற்ற ஆட்களுக்குப் பிஜாவுரிமை வழங்குதல் (சிறப்பேற்பாடுகள்) இந்திய வம்சாவழியினரான குறித்த சில நாடற்ற ஆட்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை என்ற அந்தஸ்தை வழங்குவதற்கு ஏற்பாடு செய்வதற்கானதொரு சட்டமூலம், கொழும்பு, அரசாங்க வெளியீட்டு அலுவலகம், 1988 ப. 5 (சட்டமூலம் இல. 71, 1988).
102. கருத்தரங்கு அறிக்கை பெருந்தோட்டக் கைத்தொழிலில் பெண் தொழிலாளர்களின் பங்கு, கொழும்பு, இலங்கை மன்றக் கல்லூரி, 1978, Li's 152.
103. கருத்தரங்கு அறிக்கை தொழிற்சங்க நிர்வாகம், கொழும்பு,
இலங்கைமன்றக் கல்லூரி, பக். 86.
பத்திரிகைகளும், சஞ்சிகைகளும், மலர்களும்.
104. காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 105. குன்றின் குரல், கண்டி, சத்யோதய 1970. 106. கொழுந்து, கண்டி, அந்தனி ஜீவா 107. செய்தி, கண்டி நாகலிங்கம், 1971 108. தீர்த்தக்கரை, கண்டி, சாந்திகுமார். 1980. 109. தேசபக்தன், நடேசன் 1921 -1924. 10. தொண்டன், எஸ். எஸ். சிவகாமிநாதன் 1962. 11. தோட்டத் தொழிலாளி, எஸ். எஸ். சிங்காயிநாதன். 1947. 12. தோட்டத் தொழிலாளி, தி. வெங்கடாசலம் 1956. 13. பாரதி, கே. கணேசன் 1946 14. மலைப் பொறி, இராபாலா. 15. மலைமடல், வி. எஸ். பூெரைரா, கொழும்பு - 1976.
200


Page 120
TYPESETTING: UNIgUE TryppsET
PRINTED BY UNIE-ARTS (PI

TERS NO. 33, GALLE ROAD, COLOMBO-6
RIVATE) LTD. Tel: 445915, 330195