கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி

Page 1
Děřfu ITSOT E
D
 

ழி
பாழ்வுக்கு வ
BuIITJ.J.T.J. (T

Page 2

மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி

Page 3
saflfflwfialt Lingo Tebai Gir
1. நல்ல குடும்ப வாழ்வுக்கு நல்ல உறவு தேவை 40.00
முதல் பதிப்பு ஐப்பசி, 1990 இரண்டாம் பதிப்பு ஆவணி, 1992 மூன்றாவது பதிப்பு புரட்டாதி, 1993 2. இடமளித்தல் 5.00
முதல் பதிப்பு கார்த்திகை, 1991 3. விடுதலைக்கீதங்கள் 15.00
முதல் பதிப்பு 1992 4. திருமணம் முடிப்பதற்கு முன் அறியவேண்டியவை 40.00
முதல் பதிப்பு பங்குணி, 1993 5. அற்புதம் நிட்சயம் 15.00
முதல் பதிப்பு மாசி, 1994 6. காதல் 15.00
முதல் பதிப்பு புரட்டாதி, 1994 7. இறை தாகம் 5.00
முதல் பதிப்பு கார்த்திகை, 1994 8. அன்றாட வாழ்வில் தத்துவங்கள் 40.00
முதல் பதிப்பு ஆவணி, 1995 9. என்னை அன்பு செய்யப்போகிறேன் 20.00
முதல் பதிப்பு ஆணி, 1996
பெற்றுக்கொள்ளுமிடம் 65/322, Crow Island, . 637322, காக்கைதிவு, Mattakkuliya, மட்டக்குளி, Coornbo-fs கொழும்பு-13.
Sri Lanka. சிறி லங்கா.
ii

LLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLYLLLLLYuLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLLqeqL
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
نسبه مسلم
67670,Gag.Gura:JITër :"## 进 : E. :::A;
Q-வு SSNN `K ー வெளியீடு: எஸ்.ஜே.யோகராசா)
: . »FENNM سسسسس

Page 4
இந்நூல் சிறிலங்கா தேசிய நூலக சபையால் கிடைத்த உதவியுடனும், ஒத்தாசையுடனும் வெளியிடப்பட்டது. இந்நூலிலுள்ள கருத்துக்கள், சிறிலங்கா தேசிய நூலக சபையின் கருத்துக்களை வெளியிடுவதல்ல என்பதைக் கருத்தில் கொள்ளவும்.
முதல் பதிப்பு: கார்த்திகை 1995
உரிமை ஆசிரியருக்கே
ISBN 955-95655-5-9
அட்டைப்படம்: திரு.லக்கிசிங்க லக்சானா
அச்சிட்டோர்: சஜோஸ் பிரிண்டஸ்
iv

பெற்றோர்க்குச் சமர்ப்பணம்

Page 5

அணிந்துரை
மனித வாழ்க்கை என்பத அனேகமாக வாழப்படவில்லை. பதிலாக இயற்கையாக எம்முள் ஏற்படுத்திக்கொண்ட பழக்கவழக்கங்களின் செயற்பாடுகளால் இழுத்தச்செல்லப்படுகின்றது. நாம் வாழ்வதற்கு எம்மைத் தயாராக்க வேண்டும். இவ்வுலகில் நாம் முற்றும் இயலுமானவர்களாகப் பிறப்பதில்லை. ஒன்றுமே இயலாதவர்களாக பெற்றோரிலும், மற்றோரிலும் தங்கி இருப்பவர்களாகவே பிறக்கின்றோம். எமத பெற்றோரும் மற்றோரும் அவர்களின் அனுபவம், மனத்தேவைகள் என்பவற்றிற்கேற்பவே எம்மை கருவில் ஆக்கத் தொடங்கியது முதல் பிறந்த வாழ்வின் இறுதிவரை வழிப்படுத்தி நடத்தகின்றனர். இதனால் மனித சமூகத்தில் தனிமனித மனம் விளங்கிக் கொள்ளப்படுவத குறைவு. அவ்வாறு விளங்கி செயற்படும்போத அதி உன்னத இன்பம், ஒரு தாய், தந்தை, பிள்ளை, சகோதரர் மற்றவர்களுடன் ஏற்பட்டு, உண்மை அன்பும் பெருமையும் வாழ்வும் ஏற்படும், ஏற்படுகின்றத.
ஆகவே, நாம் தயாராக இருக்கவேணிடும்". அததான் "நாம் நம்மை பயிற்றுவித்தல் என்பதாகும்", என்ற அதி உயர்ந்த உண்மையை நண்பர் யோகராசா இந்த நாலில் மிக அழகாக எவ்விதமான தயக்கமுமின்றி அனைவரையும் ஏற்கச் செய்தள்ளார்.
ஒரு இளம் ஆணும், பெண்ணும் தமத வாழ்வில் இணைவதைப் பற்றி அவர்கள் எவ்வாறு தம்மை வாழ்விற்காகத் தயாராக்க வேண்டும், ஏணி அத அவசியம் என்பத முதல் ஒரு குடும்பத்தில் உருவாகும் பிள்ளைகள் தமத மணவாழ்க்கைக்குத் தயாராகுதல் வரை என்ன என்ன விடயங்கள் இடம்பெறுகின்றன. இயற்கை எவ்வாறு மனவளர்ச்சியையும் தேவைகளையும் உருவாக்குகின்றத என்றும், மன எழுச்சி சரீர வளர்ச்சி, தேவைகள் எவ்வாறு இடம்பெறுகின்றன, இவற்றை விளங்கி நிறைவேற்ற ஒரு தாய், தந்தை எவ்வாறு தங்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு எவ்வாறான பயிற்சி தேவை என்பதை மிகவும்
vii

Page 6
சுவையான முறையில் எடுத்தக்காட்டியுள்ளார்.
உண்மையில் இந்நாலை வாசிக்க ஆரம்பித்தத முதல் நான் $ბტ தனி நபராக, ஒரு பிள்ளையாக, பெற்றோனாக எவ்வாறான பாத்திரத்தை வகிக்க வேண்டும் என்பதை மேலும் தெளிவாகப் புரிந்தகொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்தத பெரும் மகிழ்ச்சி தரும் விடயமாகும்.
உளவியல் என்பது இலகுவில் விளங்கிக்கொள்ள முடியாத விசேடமாக கல்வி கற்றவர்களுக்கே அத உரியத என்று நாம் நினைத்த வந்ததண்டு. குறிப்பாக தமிழில் இத தொடர்பாக இருக்கும் நால்களை விளங்கிக்கொள்வதே மிக கடினமாகும். ஆனால், அந்நிலையை மாற்றி ஆசிரியர் அன்றாட வாழ்க்கை அனுபவங்களை இணைத்த மனித உளவியலை மிக அழகாக எடுத்தக் கூறுகின்றார். மாறிவரும் இன்றைய சமூகத்திற்கு ஏற்ப எவ்வாறு குடும்ப வாழ்வு அமையவேண்டும் என்றும் பொருத்தமான வகையில் எவ்வாறு கூட்டுக்குடும்ப வாழ்வு அமைய வேண்டும் என்றும் தனிக்குடும்ப வாழ்வின் முக்கியத்தம் பற்றியும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளமை மிகவும் காலத்திற்குப் பொருத்தமான ஒன்றாகும்.
சர்வதேச குடும்ப ஆணிடாகிய இந்த ஆணிடில் குடும்ப வாழ்வினை முறைப்படுத்தக்கூடிய ஒரு நாலாக இந்நால் வெளிவருவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஆசிரியரின் முயற்சியை வெகுவாகப் பாராட்டு வதோடு, இந்நால் எல்லோராலும் கட்டாயமாக படிக்கக்கூடிய வகையில் கிடைக்க வேண்டும் என்பதே எனத விருப்பமுமாகும்.
ஓ.ஆறுமுகம் சிரேஷர் விரிவுரை/7ளர் இகைகை மணிறக் கல்லூரி கொழும்பு 30-1-1996
viii

முன்னுரை
எமத சமுதாயத்திலி மனிதனி உணிமையான சந்தோசத்தை, நிம்மதியைத் தேடி அலைகிறான். ஆனால் அத கிடைக்காதபோத தற்காலிகமான, மாறக்கூடிய சந்தோஷத்தைத்தரும் மாயைகளில் சிக்கிக் கஷ்டப்படுகிறான். போதைக்கு அடிமையாகிய மனிதனால் குடும்பமும், சமுதாயமும் வேதனைப்படுகின்றத. குடும்பத்தின் சக்தி, வல்லமை என்பத என்ன? என்ற கேள்விக்குச் சரியான அர்த்தம் புரியாது மனிதன் வாழ்கிறான். பணம், சொத்த, அந்தஸ்த போன்றவையே குடும்பத்தின் சக்தி என நினைத்த நல்ல அன்புள்ள உறவே குடும்பத்தின் சக்தி என்ற உண்மையை மறந்தவிடுகிறான்.
குடும்பத்தில் ஒரு குழந்தை ஐந்தவயதக்குள் ஐம்பதவீதமான பழக்க வழக்கங்கள் எண்ணங்களைக் கற்றுக்கொள்கிறது. மிகுதி ஐம்பத வீதத்தை இறக்கும்வரை பழகுகிறத. ஆகவே குடும்பத்தில் நல்ல அன்புறவு, குழந்தையின் மனவளர்ச்சிக்கு, சமுதாய வளர்ச்சிக்கு, ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான தாகும்.
இன்று குடும்பங்களில் கணவன் மனைவி இருவருக்குமிடையில் அன்புறவு குறைந்த வருகிறத. குடும்பத்தில் மற்றவர்களத நன்மையைவிட தனத நன்மையைக் கருத்தில்கொண்டு வாழ்வோரே பெருகி வருகின்றனர். இப்படிப்பட்ட குடும்பத்தில் வளரும் பிள்ளைகள் சமுதாயத்தில் வாழும்போத தமத தனிப்பட்ட நன்மையை மட்டும் கருத்தில் கொண்டவர்களாகவே வாழ முனைவர்.
இன்று கூட்டுக்குடும்ப முறை குறைந்த தனிக்குடும்பமுறை அதிகரித்து வருவதால் குடும்பத்தில் பல பிரச்சினைகள் எழுகின்றன. விவாகரத்தக்கள் அதிகரிக்கின்றன. ஒருவர் மற்றவருடன் நல்லவிதத்தில் அன்புத் தொடர்பை ஏற்படுத்தத் தெரிவதில்லை.

Page 7
ஆகவே நல்லகுடும்பங்கள் உருவாகினால் நல்ல சமுதாயம் உருவாகும் என்ற நோக்கத்தை மனதில்கொண்டு இந்நாலை எழுதினேன். இதில் எனத அனுபவங்களையும் ஏனைய அறிஞர்களின் கருத்தக்களையும் சேர்த்தள்ளேன். இந்நாலை 25 அதிகாரங்களில் அடக்கியுள்ளேன். அதன்ை நான்கு பிரிவுகளாகப் பிரித்தள்ளேன்.
(அ) கணவண் மனைவி இருவருக்குமிடையில் உறவு (ஆ) பெற்றோர் பிள்ளைகளுக்குமிடையில் உறவு (இ) குடும்பத்துக்கும் சமுதாயத்துக்குமிடையில் உறவு (ஈ) குடும்பத்துக்கும் இறைவனுக்குமிடையில் உறவு
இந் நாலுக்கு அணிந்தரை எழுதித்தந்த திரு.ஓ.ஆறுமுகம் அவர்களுக்கும் எனக்கு ஆலோசனைகள் தந்த திரு. கொட்வின் மென்டிஸ் அவர்களுக்கும், இதனை வெளியிட உதவியவர்களுக்கும், அழகாக கணணியில் பொறித்ததவிய திரு. றோயம் தோமஸ் அவர்களுக்கும், அட்டைப்படத்தை வரைந்ததவிய திரு. லக்கிசிங்க லக்சானாவுக்கும் அழகாக வெளியிட்டுதவிய அச்சகத்தாருக்கும் எனத நன்றிகள்.
மொழியியல்துறை, அன்புள்ள களனிப்பல்கலைக்கழகம், antigurayarr கொழும்பு

1.
02.
3.
04.
S.
06.
977
OS.
09.
0.
11.
2.
3.
岚4。
S.
6.
17.
8.
19.
21.
岔2。
23.
24.
25.
பொருளடக்கம்
விவாகமும் குரும்பமும் பற்றிய பொதுக்குறிப்பு 01 குரும்பங்களின் வகைகள் 4 விவாக வாழ்வும் ஆயத்தமும் 6. ஆழமான அன்புத் தொடர்பே விவாகமாகும் s குரும்பத்தில் முக்கியமான உறவு
கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி உறவு dpússister strariassi sTens? 黛2
கணவனர் மனைவிக்கிடையில் தொடர்பை
வளர்த்துக்கொள்வது எப்படி? உணர்வுகள் சரியானவையா? பிழையானவையா? 篮梦 கணவன் மனைவி உறவை ஏற்படுத்த ஆசை இருத்தல் வேண்டும் 2霆 கணவன், மனைவி இருவரும் வேறுபட்ட இருவராகும் 6 மனமுதிர்ச்சி திருமண வாழ்வுக்குத் தேவை 29 உடலுறவு 3. குடும்ப வாழ்வில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகள் 3. கணவன் மனைவி இருவருக்குமிடையில் சண்டையேற்படல் 38 பெற்றோர் பிள்ளை உறவு 4盔 குழந்தை பிறந்து ஒரு வயதுவரை அதன் மனநிலையை நோக்குவோம் 43 இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுவரை 45 நான்கு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட நிலை 49 ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயதுவரை , S3 ஒழுங்கும் தண்டனையும் 60 பெற்றோர் தமது பிள்ளைக்குத் தண்டனை கொருக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்புகள் இளமைப்பருவம் குரும்பத்துக்கும் சமுதாயத்துக்குமிடையிலுள்ள தொடர்பு ንፀ மதுபானம் போதைப்பொருள் குடும்பத்தில் ஆன்மீகம்

Page 8

O1 1. 6Ĩonius(ypth 58thu (ypth Uribu பொதுக்குறிப்பு
அ. இன்று எமது சமுதாயத்தை நோக்கும்பொழுது; விசேடமாக மனிதனை நோக்கும்பொழுது; மனிதக் குழந்தையைப் போலி முடியாத தன்மையுடன் பிறக்கும் பிராணி வேறொன்றும் இல்லை எனலாம். நான் ஏன் அப்படிச் சொல்கிறேன் என வாசகர்கள் சிந்திக்கலாம். எல்லாப் படைப்பிலும் உயர்ந்த படைப்பு மனிதன்தானே எனச் சிந்திக்கலாம். அது உண்மைதான். ஆனால் மனிதன் பிறக்கும் பொழுதே எல்லாத் திறமைகளும் நிரம்பியவாறு பிறப்பதில்லை. மிருகம் பிறந்ததும் சிறிது நேரத்தில் தானாகவே எழுந்து நிற்கிறது. ஒடுகிறது. பால் குடிக்கிறது. மனிதக்குழந்தை அப்படியல்ல. பிறந்த குழந்தை பெற்றோர், பெரியவரின் உதவியுடனேயே படிப்படியாக இவற்றைச் செய்யப்பழகுகிறது. ஆகவே பிள்ளை மனிதரைப்போன்று பேச, ஓட, குடிக்க, உணவுண்ணப்பழகப் பெரியவரின், மற்றவரின் உதவி தேவை என்பது புரிகிறதல்லவா? r
ஆ. மிருகத்தின் குட்டிகள் சாப்விட, குடிக்க இயற்கையாகப் பழகிவிடும். ஆனால் மனிதக் குழந்தையோ அவ்வாறல்ல. எல்லாவற்றையும் பழக வேண்டும். நலல நிலைப்புள்ள பழக்கங்களைப் பெறவேண்டுமானால் அக்குழந்தை பழக வேண்டும். கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை மேலே பார்த்தோம். ஆகவே இதைப்பழக குழந்தைக்கு குடும்பம் என்ற ஸ்தாபனம் தேவைப்படுகின்றது.
இ. குடும்பம் என்று கூறியதும் அதன் சரியான அர்த்தத்தைப் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானதாகும். ஒரு விட்டில் கணவன், மனைவி, பிள்ளைகள் ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதற்காக அதைக் குடும்பம் என்று கூறமுடியாது. அப்போ குடும்பம் என்பதன் அர்த்தம் என்ன?
கணவன் மனைவி பிள்ளைகளுக்கிடையில் நல்ல அன்புத் தொடர்பு இருக்கவேண்டும்.
இதைத்தான் குடும்பம் எனலாம்.முதலில் கணவனுக்கும், மனைவிக்கு மிடையில் நல்ல ஸ்திரமான அன்புத்தொடர்பு இருக்க வேண்டும். அதேபோன்று பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் நல்ல அன்புத் தொடர்பு இருக்க வேண்டும். பிள்ளைகள் ஒருவர் ஒருவருக்கிடையில் நல்ல அன்புத்தொடர்பு இருக்கவேண்டும். இத்தொடர்பு வெளியில் நன்றாக மற்றவர்க்குத் தெரிதல் வேண்டும். இவ்வாறு நல்ல அன்புத்தொடர்பு இருக்கும் குடும்பத்தையே குடும்பம் எனறு கூறலாம. . . .
எமது சரீரத்துக்கு நல்ல சத்துள்ள உணவு, இளைப்பாறுதல், நித்திரை கிடைத்தால் சரீரம் தானாக வளர்ந்துவிடும். ஆனால் மன, ஆன்மீக வளர்ச்சிக்கு நல்ல அன்புத்தொடர்பு தேவை.
எமது அன்புறவுக்குக் கலாச்சாரமும் ஓரளவு பங்கு கொள்கிறது எனலாம். அது எப்படி? எம் ஒவ்வொருவருக்கும் கலாச்சாரப் பண்புகள் மனதில் பதிந்துள்ளன. நாம் இலங்கையில் வாழும் தமிழர்கள் என நினைத்துக்கொண்டால், எமக்குப் பொதுவான கலாச்சாரமும் உண்டு.

Page 9
O2
ஒவ்வொரு பிரதேசத்துக்கும் வேறுபட்ட பண்புகளும் உண்டு. அதேபோல் ஒரு குடும்பத்தில் உள்ள பண்பு மற்றக் குடும்பத்தில் வேறுபட்டதாகவும் இருக்கும். இதனை உய கலாச்சாரம் அல்லது கிளைக்கலாச்சாரம் எனலாம். சில குடும்பங்களில் அப்பா தலைமைப் பொறுப்பையும், சில குடும்பங்களில் அம்மா தலைமைப்பொறுப்பையும் எடுப்பார். இதுவும் உப கலாச்சாரமே. குடும்பத் துக்குக் குடும்பம் வேறுபடலாம். வீட்டிலே விருந்ை ஆயத்தப்படுத்தும் முறையும் வேறுபடலாம்.
சிலர் மிருகத்துடன் குடும்பத்தை ஒப்பிட்டு குடும்பம் என்பது, சந்ததியைப் பெருக்க இன விருத்தி செய்ய மட்டும் இருப்பது என்று எண்ணுவர். இது பிழையான கருத்தாகும். இதைவிடப்பரந்த நோக்கம் குடும்பத்துக்குள்ளது.
விவாகத்தில் சாரம் மட்டுமல்ல உடலுறவு மட்டுமல்ல மனம் கலாச்சாரம் போன்ற பல பண்புகள் கலந்துள்ளன. இவை நல்ல தொடர்புக்கு உதவுகின்ற விதத்தில் அமைதல் வேண்டும்.
ஈ. குடும்பத்தில் பெற்றோர் பிள்ளைகள் உறவில் இருவிதமுண்டு. ஒன்று பெற்றோருக்கு இயற்கையாகப் பிறக்கும் பிள்ளைகள். மற்றையது வேறொரு பெற்றோரிடம் எடுத்து வளர்க்கும் பிள்ளைகள். நம்மவரிடையே ஒரு தப்பபிப் பிராயமுண்டு. எமக்கு இயற்கையாகக் கிடைத்த பிள்ளையே உண்மையான பிள்ளை. மற்றது வளர்ப்புப்பிள்ளை. அது பிள்ளையில்லை என்ற கருத்துண்டு. பெற்றோர்கள் இவ்விரு பிள்ளைகளையும் ஒரே மாதிரியே நடத்த வேண்டும். வளர்த்த பிள்ளை எமது பிள்ளையல்ல என்ற எண்ணம் பெற்றோரிலும், உறவின ரிலும் இருந்தால் இது பிள்ளையின் மனதுக்குக் கூடாது. அதன் எதிர்காலத்துக்கும் கூடாது. வளர்ந்தபின் தாம் வளர்ப்புப் பிள்ளைகள் என்று அறிந்ததும் இன்று பல பிள்ளைகள் மணமுறிவுக்கு ஆளாகியுள்ளனர். வேதனையான வாழ்க்கை வாழ்கின்றனர். இந்த நிலை உருவாகாத விதத்தில் பெற்றோரும், மற்றவரும் இருவகையான பிள்ளைகளும் எந்தவிதமான வேறுபாடுமில்லாத பிள்ளைகளே என்ற மனநிலையை உருவாக்க வேண்டும். அதன்படி செயற்படவும் வேண்டும்.
உ. ஆதிகாலத்தில் கணவன் மனைவிக்கிடையில் தமது தொழிலி உறவு ஏற்படச் சந்தர்ப்பம் இருந்தது.
விவசாயம் செய்யும்போது, மீன் பிடிக்கும்போது ஆணுக்குப் பெண் உதவி செய்வாள். ஆனால் இன்று வெளிநாட்டில் தொழிலுக்காகச் செல்வதாலும், பெண் வேறு தொழிலுக்குச் செல்வதாலும் இருவரும் சேர்ந்து நடமாடச் சந்தர்ப்பம் குறைந்துள்ளது. அதனால் இருவருக்குமிடையில் நல்ல அன்புறவு வளரச் சந்தர்ப் பம் குறைந்துகொண்டே போகின்றது. இதனால் பல விளைவுகள் குடும்பத்தில் ஏற்படுகின்றன. மனைவி, கணவன் வேறு அன்புத்தொடர்பை ஏற்படுத்த வழிவகுக்கி றது. அதனால் பிள்ளைகளின் வாழ்வு சிதைந்து போகிறது.
ஊ. அதேபோன்று குடும்பத்தில் கணவன் மனைவி இருவரும் கதைப்பது:முக்கியம். கருத்தைப் பரிமாறுவது முக்கியம். இது இல்லாமல் பிள்ளைகள் நல்ல மனிதராக முடியாது. நல்ல தொடர்பைப் பெற்றோரிலே பிள்ளைகள் பார்த்துப் பழகுவர். பிறப்பால் ஒரு பிள்ளை நல்ல மனிதனாக

விவாகமும் தடும்பமும் பற்றிய பொதுக்குறிப்பு O3
முடியாது. குடும்பத்தில் மனித சூழலில் அப்பிள்ளை அதைப்பழக வேண்டுமென முன்பும் பார்த்தோம். நல்ல நடமாட்டம், நல்ல பழக்கவழக்கமுள்ள குடும்பத்தில் வளரும் பிள்ளை நல்ல பழக்க வழக்கம், நல்ல நடமாட்டமுள்ள பிள்ளையாக வளரும.
ஒரு பிள்ளை சிறு வயதிலேயே காட்டில் மிருகங்கள் மத்தியில் மட்டும் வளர்ந்து வந்தால் அப்பிள்ளை மிருகங்களைப் போலவே உணவுண்ணும். மிருகங்களைப்போலவே நடமாடும். சத்தம் போடும்.
ஆகவே நல்ல மனிதனாகப் பிள்ளை வளரவேண்டுமானால் நல்ல அன்புத் தொடர்புள்ள குடும்பத்தில் வளர வேண்டும்.
எ. பிள்ளையின் ஆளுமை உருவாகும் ஆரம்பப் பாடசாலை குடும்ப மாகும.
பிள்ளை பெறுமதிகளை, எண்ணங்களைக் குடும்பத்திலிருந்து உறிஞ்சி எடுக்கிறது. அது உறிஞ்சி எடுக்கும் போது இது சரி, இது பிழை எனப்பிரித்து உறிஞ்சி எடுப்பதில்லை. புகைப்படப்பெட்டி போன்று உள்ளதை அப்படியே உறிஞ்சி எடுக்கிறது. Α
வீட்டில் சமுதாயத்தில் பேசப்படும் வார்த்தைகள் எமது நம்பிக்கைகள், மூடக்கொள்கைகள், நல்ல கொள்கைகள், பழக்கவழக்கங்கள் மொழியைப்பற்றி, இனத்தைப்பற்றி, மற்றவர்களைப்பற்றியுள்ள எண்ணங்களை அட்படியே உறிஞ்சி எடுக்கிறது. அதன்படி தானும் வாழப்பழகுகிறது. ஆகவே பெற்றோர், பெரியோர் இதனை மனதில்கொண்டு நாம் எம்மை மாற்றி வாழப்பழக வேண்டும்.
எண்ணம் என்று மேலே கூறியது என்னவென்றால் நாம் ஒரு விடயத்தை நிகழ்ச்சியைக் கண்டு ஆதனை விளங்கிக்கொள்ளப் பழக்கப்பட்டுள்ளோம். ஒவ் வொரு குடும்பமும் ஒரேம்ாதிரி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதில்லை. சில வேறுபடலாம். சில ஒன்றாகலாம். உதாரணமாக பணம், உணவு, உடை, கொண்டாட்டம் விருந்துபசாரம் போன்றவற்றில் வேறுபட்ட எண்ணங்களுடன் செயற்படலாம். நல்லது கெட்டது என்பதில் வேறுபட்ட எண்ணங்களைக் கொண்டிருக்கலாம். தமிழர்கள் என்ற ரீதியில் குடும்பத்துக்குக் குடும்பம் இது வேறுபடலாம்.
மேலும் தமிழர்கள் மத்தியில் மத அடிப்படையில் கிறிஸ்தவ குடும்பங்களை நோக்கினால் குலம், இனம். மொழி பற்றி நோக்கும்போது பொதுவாக ஒவ்வொரு மனிதனும் சமத்துவமுடையவர்கள் என்பர். ஆனால் இது குடும்பத்துக்குக் குடும்பம் நடைமுறையில் அப்படியல்லாது செயலில் வேறுபட்டுச் செயற்படக்கூடும். சிலர் மீது கூடுதலாக விருப்பம் கொள்வர். எல்லோரையும் சமமாக எண்ணுவதில்லை.
இப்படிப்பட்ட எண்ணங்கள், பழக்கவழக்கங்களைப் பிள்ளைகள் குடும்பத்திலி ருந்து உறிஞ்சி எடுக்கின்றனர். இதில் எது சரி எது பிழை என்று வேறுபடுத்தி சரியானதை மட்டும் எடுப்பதில்லை. சிறுவயதில் பிள்ளைகளுக்கு அவ்வளவு திறமை இருப்பதில்லை.
ஆகவே ஒரு பிள்ளை குடும்பத்திலேயே நல்லதையும் கெட்டதையும் முதலில் பழகுகிறது. குடும்பத்திலே அப்பா அம்மா பெரியவர்கள் பிள்ளைகளுக்கு மிகவும் முன்மாதிரியாக வாழ வேண்டும். பிள்ளை நல்ல உறவை வளர்த்துக்கொள்ள நல்ல குடும்பம் தேவை. குடும்பங்களில் பலவகையுண்டு.

Page 10
O4. மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
如 放 ·责 2. குடும்பங்களின் வகைகள் இன்று எமது சமுதாயத்தில் முக்கியமாக இரண்டு விதமான குடும்பங்களைக் காண முடிகின்றது.
1. விசாலமான பரந்த குடும்பம் அல்லது பெரிய கூட்டுக்குடும்பம் 2. தனிக் குடும்பம்
1. பெரிய கூட்ருக்குரும்பம் இதிலே இரண்டு வகையுண்டு. ஒன்று கணவன் மனைவி இருவரது பெற்றோர், சகோதரர், பிள்ளைகள் எல்லோரும் ஒன்றாக வாழ்வது. ஏறக்குறைய இருபது முப்பது அங்கத்தினரைக்கொண்டது.
அடுத்தது சிறு அளவிலான கூட்டுக்குடும்பம். கணவன் மனைவி பெற்றோர் பிள்ளைகள் ஒன்றாக வாழ்வது.
3. தனிக்குரும்பம் கணவன் மனைவி திருமணம் முடிக்காத பிள்ளைகளைக்கொண்டது தனிக் குடும்பமாகும். வெளிநாடுகளில் திருமணம் முடிக்காத வளர்ந்த பிள்ளைகளை இதில் சேர்ப்பதில்லை. இலங்கையிலே திருமணம் முடிக்கும் வரை பிள்ளைகள் பெற்றோருடன் வாழ்வர்.
இலங்கையிலே தனிக்குடும்ப முறை அதிகமாகப் பரவி வருகிறது. இன்று திருமணத் தம்பதியினர் தனிக்குடும்ப முறையையே அதிகம் விரும்புகின்றனர்.
கூட்டுக்குடும்பத்திலும், தனிக்குடும்பத்திலும் நன்மை தீமை இரண்டும் உள்ளது. பெரிய கூட்டுக்குடும்பத்தில் வயதுக்கு மூத்தவரே குடும்பத்தில் நிர்வாகத்தைச் செய்வார். ஏனையோர் அவரைக்கேட்டே இறுதி முடிவெடுப்பர். ஆனால் தனிக் குடும்பத்தில் ஆண் அல்லது பெண் அல்லது இருவரும் தீர்மானம் எடுப்பர்.
கூட்டுக்குடும்பத்தில் தனிநபரது நன்மையைவிட குடும்பத்தின் நன்மையையே முக்கியமாகக் கருதுவர். காணியை விற்கும்பொழுது, ஒருவரைத் திருமணம் முடிக்கும் பொழுதும் குடும்ப நன்மையையே கருத்தில்கொள்வர். இவரைத் திருமணம் முடிப்பதால் குடும்பத்துக்கு நன்மையுண்டா? இந்தக் காணியை விற்பதால் விலை குறைந்தாலும் குடும்பத்துக்கே நன்மை வரவேண்டுமென எதிர்பார்ப்பர். தனிக்குடும்பத்தில் தனிநபருக்குச் சுதந்திரம் அதிகமுண்டு. திருமணத்துக்காகப் பிள்ளை ஒருவரைத் தெரிவுசெய்தபின் பெற்றோருக்குத் தெரிவிப்பர். பெற்றோர் விரும்பினாலும் விரும்பாமலிருந்தாலும் திருமணம் முடிப்பர். அதாவது பெரிய கூட்டுக்குடும்பத்தில் வயது முதிர்ந்தவரே தீர்மானம் எடுப்பார். தனிக்குடும்பத்தில் திருமணம் முடிப்பவர், இல்லையேல் பெற்றோர் முடிவெடுப்பர்.
கூட்டுக்குடும்பத்தில் உடைவாங்கும். போதும் ஒரே விதமான உடையையே எல்லாப் பிள்ளைகளுக்கும் ஆண் பெண் வேறுபாட்டிற்கேற்ப வாங்குவர்.
கூட்டுக்குடும்பங்களில் பிள்ளைகளுக்குத் தனிமை, வேதனை குறைவாக இருக்கும். பெற்றோரின் தண்டனைக்குப் பிள்ளை ஆளாகும்போது குடும்பத்தில் மற்றவர்களின் அரவணைப்பு அன்பு, ஆறுதல் கிடைக்கும். தாங்க முடியாத

குடும்பங்களினி வகைகள் Os
தனிமை, வேதனை உணர்வு இருக்காது. பாதுகாப்புணர்வு கூடுதலாக இருக்கும். பிள்ளைகளுக்கு மட்டுமல்ல வயதாகியவர்களுக்கும் பாதுகாப் புணர்வுண்டு. வயதுபோனாலும் தம்மிடம் கேட்டே செயற்படுவதால் நாம் இன்னும் வாழ்கிறோம். புறக்கணிக்கப்படவில்லை என்ற உணர்வு இருக்கும்.
ஆனால் தனிக்குடும்பங்களில் பிள்ளைகள் தனிமை, வேதனை உணர்வை அதிகம் அனுபவிப்பர். அப்பா அடிக்கும்போது "அப்பா எனக்கு அடிக்க வேண்டாம்" என்று தந்தையிடமே அழுதுகொண்டு செல்லும். அதேபோன்று வயது வந்தவர்களுக்கும் அதிக பாதுகாப்பில்லை. ஒவ்வொரு சகோதரரும் பெற்றோரை மாறி மாறிப் பார்க்க வேண்டிய நிலை இருக்கும். *நான் மட்டும் தானா பிள்ளை அக்காவும் பிள்ளைதானே. அங்கேயும் போய்க் கொஞ்சக்காலம் இருக்கலாம் தானே” என்று பெற்றோருக்குக் கூறும் நிலை வரும.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதாயின் பிள்ளைகளைப் பார்க்க யாரும் இருப்பதில்லை. வேலைக்காரரே தேவைப்படுவர். பெற்றோர் வீட்டில் இருந்தால் தமது பிள்ளைகளைப் பார்க்கவே பெற்றோரை வீட்டில் வைத்திருப்பர். இல்லையேல் பெற்றோரால் எவ்வித உதவியும் எமக்கில்லை எனக் குறைபட்டுக்கொள்வர்.
கூட்டுக்குடும்பத்தில் தீர்மானம் எடுக்கும்போது பெரியவரிடம் அனுமதி ஆசீர்வாதம் கேட்கும் நிலை இருந்தது. இதனால் பெரியவர்கள் மதிக்கப்படுவர்.
தனிக்குடித்தனத்தில் கணவன் மனைவி தீர்மானம் எடுப்பதால் , பெற்றோரைப் புறக்கணிப்பதாக பெற்றோர் வேதனைப்படுவர். அதேபோன்று எமது குடும்பத்தில் விவாகரத்துக் கூடுதலாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினையேற் பட்டதும் கூட்டுக்குடும்பத்தில் பெரியவர்கள் தலையிட்டுத் தீர்த்து வைத்துவிடுவர். தனிக்குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதும் தீர்த்துவைக்க யாரும் இருப்பதில்லை.
இவ்விருவகையான குடும்பங்களில் ஒன்றிலேயே நாம் வாழ்கிறோம். அல்லது வாழப்போகிறோம். முன்னைய காலங்களைவிட இன்று குடும்பப் பொறுப்புகள் வேறுபட்டவையாக இருக்கின்றன. முன்பு பொறுப்புகள், செயற்பாடுகள் கொண்ட வாழ்வு இருந்தது. கணவன் இந்த பொறுப்பையும் மனைவி இந்தப் பொறுப்பையும் செய்ய வேண்டும் என்ற நிலை இருந்தது. அதாவது கணவன் பொருளாதாரத்தைத் தேடுவது, மனைவி பிள்ளைகளைப் பாதுகாப்பது. மனைவி பிள்ளைகளை வளர்ப்பது, உணவு சமைப்பது வீட்டைப்பார்த்துக்கொள்வது போன்ற கடமைகள் சமுதாயத்தால் கொடுக்கப்பட்டிருந்தன.
ஆனால் இன்று இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது. சமுதாயத்தில் கொடுக்கப்படும் பொறுப்புக்களைப் பாராது தமது தனிப்பட்ட நன்மையைக் கருதிச் செயற்படுவர். மனைவி வேலைக்குச் செல்கிறாள். அதனால் இருவரும் சேர்ந்து சமைக்கின்றனர். இருவரும் சேர்ந்து பிள்ளைகளைப் பார்க்கின்றனர். வேகமாக மாறிவரும் உலகிலே நாம் இன்று வாழ்கிறோம். முன்பு திருமணத்துக்கு ஆயத்தங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று விவாக வாழ்வுக் குப் பல ஆயத் தங்கள் தேவைப் படுகின்றன. இந்த ஆயத்தங்களில்லாததால் விவாகவாழ்வு சிக்கலாகிக்கொண்டு செல்வதைக் காணமுடிகிறது.

Page 11
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
3. விவாக வாழ்வும் ஆயத்தமும்
நாம் ஒரு வியாபாரத்தைத் தொடங்குவதற்கு முன் ஆயத்தம் செய்கிறோம். பரீட்சை எழுதுவதற்கு மூன் ஆயத்தம் செய்கிறோம். அதேபோன்று திருமணத்திற்கு முன்பும் ஆயத்தம் செய்கிறோம்.
நாம் எப்படிப்பட்ட ஆயத்தத்தைச் செய்கிறோம்? உடை தயாரிக்கிறோம். உணவு தயாரிக்கிறோம். எங்கு? எப்படிச் செய்வது? என்று ஆயத்தம் செய்கிறோம். ஆனால் இருவரும் சேர்ந்து வாழ்வதற்குத் தேவையான மன ஆயத்தத்தில் அதிக கவனம் செலுத்துவதில்லை. இதனால் திருமணம் முடித்துச் சில காலத் திற்குள் திருமண வாழ்வு கசக்கத் தொடங்குகிறது. அந்த நேரத்தில் உறவு முறிகிறது. சிலர் விவாகரத்துக்கு ஆசைப்படுகின்றனர். திருமணத்திற்கு முன் இவர் இப்படி இல்லையே என்று கலங்குகின்றனர்.
விவாக வாழ்வு எண்பது அர்ப்பணித்த தொடர்புள்ள வாழ்வாகும். அதாவது விவாக வாழ்வுக்கு மாறாத, உறுதியான தொடர்பு தேவை. கணவன் மனைவி இருவரும் ஒருவர் மற்றவருக்காகத் தன்னை அர்ப்பணிப்பது முக்கியமாகும். உணர்வை முன்கொண்ட தொடர்பு இல்லாது நல்ல உயர்வான பிரதிச்செயலை மற்றவர் காட்டும் போதும் விருப்பமில்லாத கோப வெறுப்பு உணர்வை மற்றவர் காட்டும்போதும் மாறாத அர்ப்பணித்த அன்புத் தொடர்பு டன் வாழவேண்டும். அதாவது மற்றவரின் நன்மையைத் தனது நண்மையாகக் கருதி இருவரும் செயற்பட வேண்டும்.
சட்டப்படி தொடர்பு ஏற்பட்டுவிட்டதே என்பதற்காக இருவரும் வாழும் வாழ்க்கை விவாக வாழ்க்கையல்ல. இருவருக்குமிடையிலும் ஆழமான அன்புத்தொடர்பு முக்கியமானதாகும். எவ்வளவுதான் பிரச்சினை வந்தாலும் இருவரும் கலங்கி அதைரியப்படாது, அவர் எங்கு சென்றாலும் நானும் அவருடன் சென்று வாழப் போகிறேன் என்ற மனநிலை இருவருக்கும் தேவை.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் தொடர்பு நன்றாக இருந்தால், பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான தொடர்பும் நன்றாக இருக்கும். இல்லையேல் ஒருவர் ஒருவருக்கிடையில் உறவு உடைந்துவிடும். கணவனும், மனைவியும் காலையும், மாலையும் எந்நேரமும் கீரியும் பாம்பும்போல் சண்டை பிடித்தவண்ணம் இருந்தால் இதைப்பிள்ளைகள் பார்த்து அவர்களும் அவ்வாறு பழகிவிடுவர்.
இன்று எமது சமுதாயத்தில் தனிக் குடும்பமே பெருகி வருகிறது. திருமணத் திற்கு முன் ஒருவர் ஒருவரைத் தெரிவு செய்த பின் பெற்றோருக்கு அறிவிப்பர். பெற்றோரைக் கேட்டுத் தீர்மானம் எடுப்பது குறைந்து வருகிறது. முன்பு சமுதாயத்தால் ஆணுக்கும், பெண்ணுக்கும் பொறுப்புக்கள் கொடுக் கப்பட்டிருந்தன. பொருளாதாரத்தைத் தேடுவது ஆண். சமைட்பது, பிள்ளைகளை வளர்ப்பது பெண் என்ற நிலை இருந்தது. திருமணத்திற்கு முன் ஒரு பெண் நன்றாகச் சமைக்கப் பழகியிருப்பதுதான் முன் ஆயத்தம் என்று எண்ணினர். ஆண் பொருளாதாரத்தைத் தேட ஒரு தொழில் தேடுவதே முன் ஆயத்தம் என எண்ணினர்.
இன்று அப்படியல்ல, இருவரும் வேலைக்குப் போகின்றனர். இருவரும்

விவாக வாழ்வும் ஆயத்தமும் O7
பிள்ளைகளைப் பார்க்கின்றனர். இருவரும் சமைக்கின்றனர்.
முன்னைய காலங்களை விட இக்காலத்தில் திருமணத்துக்கு முன் விசேடமான ஆயத்தங்கள் தேவைப்படுகின்றன. முன்பு கூட்டுக் குடும்பங்கள் இருந்ததால் இருவருக்குமிடையில் பிரச்சினைகள் ஏற்படும்போது அதைத் தீர்த்து வைக்கப் பெரியவர்கள் குடும்பத்தில் இருந்தனர். இன்று தனிக்குடும்பங்கள் பெருகி வருவதால் தமது பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது திண்டாடுகின்றனர். திருமணத்திற்கு முன் மணப்பெண்ணும் அவளது பெற்றோர் "உனது கணவனைத்திருத்த நீ தெரிந்து வைத்திருக்க வேண்டும்" என்பர். அவ்வாறே மணமகனுக்கு அவனது பெற்றோர் "உனது மனைவியைத் திருத்த நீ தெரிந்து வைத்திருக்க வேண்டும்” என்பர். கணவனும் மனைவியும் திருமணத்திற்குப் பின் ஒருவர் ஒருவரைத் திருத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பர். இதனால் சண்டை அதிகரிக்குமே தவிர குறையாது. எமது திருமண வாழ்வு வெற்றிகரமான தாக அமைய வேண்டுமானால் கீழ்வரும் விடயங்களை மனதில் கொள்வது நன்று.
அ) மணமகனுக்கும் மனமகளுக்கும் மன உறுதி தேவைப்படுகிறது. அதாவது எமது விவாக வாழ்வு, குடும்பவாழ்வு நல்லதாகவே அமையும் என்ற விசுவாசம், நம்பிக்கை தேவை.
திருமண வாழ்வைத் தொடங்கும்போதே சந்தேகம், பயம் இருந்தால் எப்படி வெற்றிகரமான திருமணவாழ்வு அமையும்?
ஆ) திருமணவாழ்வு சிறப்புற இருவருக்கும் மன முதிர்ச்சி தேனிவ. மற்றவருடன் பழகும்போது நல்ல உறவை ஏற்படுத்தக்கூடிய நடமாட்டத்தைக் கொண்டிருத்தல் வேண்டும். அதாவது மற்றவருடன் நல்ல தொடர்பை ஏற்படுத் துவதில், பழகுவதில் வளர்ச்சியடைந்தவரை மனமுதிர்ச்சி பெற்றவர் எனலாம். இ) திருமணத்திற்கு முன் மிகவும் சிறந்த ஆயத்தம் என்னவென்றால் நல்ல குடும்பத்தில் வாழ்ந்திருப்பதே. நான் வாழ்ந்த குடும்பத்தில் எப்படி வாழ்ந்தேனோ; அப்படியே வாழப் போகும் குடும்பத்திலும் வாழ்வேன் என்பதை மறந்துவிடாதீர்கள். என்னைத் திருத்தி வாழ முனைந்தால் குடும்ப வாழ்வு afotus)Lub.
ஈ) திருமணத்திற்குமுன் ஆயத்தம் என்பதில் இரண்டு உள்ளது. ஒன்று நீண்டகால ஆயத்தம் அதாவது சிறுவயதிலிருந்து மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவது, ஒழுங்கைப் பழகுவது, பாதுகாப்பைப் பெறுவது, சுதந்திரத்தை அனுபவிப்பது, அன்பைப் பெறுவது போன்றவையாகும். மற்றது திருமணம் நெருங்கியதும் நாம் இன்று செய்யும் ஆயத்தங்களாகும். பணழ், உடை, இருக்க இடம், தொழில் போன்றவைகள்.
எமது ஆயத்தங்கள் இருவருடைய உறவையும், தொடர்பையும் ஆழமாக்க உகந்தனவாக இருத்தல் வேண்டும். வெறும் ஆடம்பரம், அந்தஸ்து போன்றவற் றுக்கு அடிமையாகியவைகளாக இருக்காது, வருவாய்க்குத்தக்க செலவுடன் அவசியமானதை மட்டும் பாவித்து மகிழ்ச்சிகரமாக வாழ உதவவேண்டும். போட்டி மனப்பான்மையிலிருந்து விடுபட்டு இயற்கையாக வாழப்பழக வேண்டும். ஆகவே எமது வாழ்வு மலர வேண்டுமானால் நல்ல தொடர்புள்ள வாழ்வு அவசியம்.

Page 12
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
4. ஆழமான அன்புத் தொடர்பே
விவாகமாகும்
குடும்பம் என்று கூறும்பொழுது ஸ்திரமான, ஆழமான தொடர்புகளின் கூட்டே என முதலாம் அதிகாரத்தில் நோக்கினோம். எம்மிடையே நான்கு விதமான தொடர்புகள் இருப்பதைக் காணலாம்.
அ. சிலருடன் நாம் தொடர்பு கொள்ளும்பொழுது "எப்படி?" "நல்லம்" என்ற அளவில் நிறுத்தி விடுகிறோம். சாதாரணமாக பஸ்சில் அடிக்கடி பயணம் செய்யும்பொழுது அறிமுகமான ஒருவரைக் கண்டால் ஏற்படுத்தும் தொடர்பு இப்படிப்பட்டது.
ஆ. அடுத்த நிலை இதைவிட ஆழமான தொடர்பாகும். அதாவது "எப்படிச் சுகம்? நல்ல சுகம்" என்பதோடு மட்டும் நிறுத்திவிடாது சிலருடன் நெருக்கமான தொடர்பை வைத்துக்கொள்கிறோம். இவர்களை நண்பர்கள் என்கின்றோம். -
இ. இன்னும் சிலருடன் எமது வேதனை, சந்தோசம், பயம் என்பவற்றையும் பகிர்ந்து கொள்கிறோம். அடிக்கடி தொடர்பு கொள்கிறோம். அவர்களை மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்கின்றோம். இந்த நிலைக்குச் சென்றதும் அப்படித்தொடர் புள்ளவர்களின் தொகைகளும் படிப்படியாக குறைந்து செல்வதைக் காண்கிறோம்.
ஈ. இதைவிட ஆழமான உறவு கணவன் மனைவி உறவாகும். கேந்திரமான உறவாகும். சரீரம், மனம், ஆன்மீக வேதனைகளைப் பகிர்ந்து கொண்டு ஏற்படுத் தும் ஆழமான உறவாகும். இந்த உறவை ஓர் படத்தில் வரைந்தால் இவ்வாறு காட்ட முடியும்.
எப்படி சுகமா? நலில சுகம். எனிற உறவு եւ կյa!
N سنگسر N உற்ற நட்புறவு / (O) | கணவனி மனைவி தொடர்பு (GO)
இன்று குடும்பங்களை எடுத்துக்கொண்டால் இப்படிப்பட்ட ஆழமான, கேந்திரமான உறவு இல்லாதிருக்கலாம். ஆனால் உற்சாகமெடுத்தால் இப்படிப்பட்ட ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளலாம். எம்மிடையே ஆழமான

ஆழமான அணிபுத்தொடர்பே விவாகமாகும் , O9.
அன்புறவை வளர்த்துக்கொள்ள இரண்டு முக்கியமான காரணங்களை மனதில் கொள்ளுதல் வேண்டும்.
நல்ல உறவை ஏற்படுத்துவதற்கான அறிவு முதலில் தேவை. அறிந் தாலும் அக்குறிக்கோளை நிறைவேற்ற நான் ஒத்துழைக்கவில்லையேல். ஆழமான உறவை என்னால் ஏற்படுத்த முடியாது போய்விடும். ஆகவே கணவன் மனைவி இருவருக்கும் பரித்தியாகமும், உற்சாகமும் தேவை. உதாரணமாக ஒரு மேசையை அறைக்குள்ளிருந்து வெளியே கொண்டுவர இந்த விதத்தில் சரித்து, தூக்கி எடுத்தால் வெளியே கொண்டு வரலாம் என்ற அறிவு இருவருக்கும் இருந்தால் மட்டும் போதாது. இருவரும் சேர்ந்து அந்த மேசையைச் சரித்துத்துக்க வேண்டும். அப்பொழுதே மேசையை வெளியே எடுக்க முடியும். அதாவது அறிவு மட்டுமிருந்தால் போதாது. பயிற்சியும், உற்சா கமும் தேவை.
மனித உறவு ஒவ்வொரு மனிதனுக்கும் உறவு (தொடர்பு) தேவையான ஒன்றாகும். குடும்ப வாழ்விலும் கணவன் மனைவிக்கிடையில் நல்ல உறவு தேவைப்படுகிறது. திருமணம் முடித்ததும் தமது குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் வாழவே எல்லோரும் விரும்புவர். இருப்பினும் தமது குடும்ப வாழ்வை நன்றாக ஆக்கிக்கொள்வதற்கு எது தேவை என்பதை அறிந்து கொண்டவர்கள் மிகச்சிலரே. பெரும்பான்மையான தம்பதிகள் தமது குடும்பத்தில் முக்கியமானதாகக் கருதுவது எது என்பதை அறிந்துகொள்ள ஒரு வழி உண்டு. அதாவது அவர்கள் எதற்காக அதிகம் கஷ்டப்படுகிறார்கள் என்பதைத் தேடிப்பார்த்தால் அது புலனாகும்.
பெரும்பான்மையான தம்பதிகள் தமது குடும்பத்துக்காகப் பணம் சம்பாதிப் பதிலேயே அதிகம் கஷ்டப்படுகிறார்கள். சுகபோகமான வீட்டைக்கட்டவும், பொருட்க ளைச் சேகரிக்கவுமே அதிகம் கஷ்டப்படுகிறார்கள். இவைகள் குடும்ப வாழ்வுக்கு அவசியமற்றவை என்று கூறவில்லை. விவாக வாழ்விலும், குடும்ப வாழ்விலும் ஆழமான அன்புத் தொடர்பை வளர்ப்பது ஏனையவற்றைவிட முக்கியமானது என்பதையே இங்கு கூற விளைகிறேன்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உறவு, தொடர்பு அவசியமானது என்று கூறினே னல்லவா? இதை ஓர் அனுபவத்தில் நோக்குவோம். குடும்பத்தில் கணவன் ஒரு வருட மேற்படிப்புக்காக வெளிநாடு செல்கிறார். விமான நிலையத்தில் வழியனுப்ப மனைவி பிள்ளைகள் செல்கின்றனர். ஒரு வருடம் முடிந்ததும் கணவன் திரும்பி வருவார் என்று தெரிந்தாலும், விமானம் பறக்கும்போது மனைவி பிள்ளைகள் அழுகின்றார்கள். இங்கே உறவு தற்காலிகமாக விலகும்போது அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை.
ஒருநாள் இரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையான ஒருவர் என்னிடம் ஆலோசனை பெற வந்தார். "நான் இரண்டு முறை தற்கொலை செய்ய முயன்றும் முடியவில்லை. இன்று உங்களைச் சந்தித்து உங்களிடமிருந்து

Page 13
O மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
எனக்கு விடை கிடைக்கவில்லையேல் இறப்பதே மேல் என்ற எண்ணத்துடன் வந்தேன்” என்றார். அவரோடு அன்பாகப் பேசி அவரது பிரச்சினைகளுக்குச் செவிமடுத்தேன். அவரிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. வசதியான வீடு, வாகனம், பணம், எல்லாம் இருந்தன. ஆனால் “சில காலமாக எனது மனைவியும் பிள்ளைகளும் என்னுடன் கதைப்பதில்லை" என்றார். பார்த்தீர்களா? சொத்து, பணம் இருந்தும் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டமை உறவு உடைந்த நிலையிலேயேயாகும். S.
வாழ்வில் அர்த்தத்தைத் தருவதும், மகிழ்ச்சியைத் தருவதும் ஆழமான அன்புறவிலேயாகும் என்று கூறினால் சாலப்பொருந்தும். காற்று இல்லாமல் ஒரு மனிதனால் வாழ முடியாது. காற்று மிகவும் முக்கியமானது. அதுபோலவே சந்தோசமான வாழ்வுக்கு நல்ல தொடர்பு, உறவு தேவையாகும். எம்மை அன்பு செய்ய, உரிமை பாராட்ட, வரவேற்புணர்வைத்தர மற்றவர்கள் இருக்கும்போது எமக்குள் மகிழ்ச்சி பொங்குகிறது.
சாதாரணமான வாழ்வில் உறவு தூரமாகும்போது முறியும்போது கவலையும்; புதிதாக உறவு வளரும்போது, உறவு ஆழமாகும்போது மனதில் மகிழ்ச்சியும் ஏற்படுவது இயற்கை. ஆகவே விவாக வாழ்வில், குடும்ப வாழ்வில் ஆழமான அன்புத் தொடர்பை ஏற்படுத்த உள்ள திறமைகள் மிகவும் முக்கியமாகின்றன. ஆகவே குடும்ப வாழ்வில் உள்ளாகி இருப்போரும், உள்ளாக இருப்போரும் நல்ல உறவை ஏற்படுத்த அவசியமான திறமைகளைக் கொண்டிருக்க வேண்டும். நல்ல உறவை ஏற்படுத்தத் தெரிந்திருப்பது மட்டுமல்ல அதற்காக அர்ப்பணித்த வருமாக இருத்தல் வேண்டும்.

11
* 负 如 寅 5. குடும்பத்தில் முக்கியமான உறவு
குடும்பத்தில் கணவன், மனைவி இருவருக்கிடையிலும் உள்ள தொடர்பு முதலில் முக்கியமானதாகும். இதேபோன்று பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலுள்ள தொடர்பு முக்கியமானதாகும். அதுமட்டுமன்று பிள்ளைகள் ஒருவர் ஒருவருக்கிடையிலுள்ள தொடர்பு முக்கியமானதாகும்.
கணவனுக்கும் மனைவிக்கும் ஏதாவது பிரச்சினையினால் இருவருக்கு மிடையில் தொடர்பு முறிந்திருந்தால் பிள்ளைகளுக்கிடையிலும் நல்ல தொடர்பு இருக்க மாட்டாது. ஒரு குடும்பத்தில் தனது கணவன் அயல் வீட்டுக்குப் போவதை மனைவி விரும்பவில்லை என்பதைக் கணவன் அறிந்தும் அதைப்பொருட்படுத்த வில்லை. தனது கணவன் அடுத்த வீட்டுக்குப் போவதைத் தடைசெய்ய மனைவி ஓர் உபாயத்தைத் தேடினாள். தனது கணவன் அடுத்த விட்டுக்குச் சென்ற எல்லாச் சந்தர்ப்பத்திலும் தனது இளைய மகளுடன் சண்டைபிடித்து இளைய மகளை வேதனைப்படுத்தினாள். இளைய மகள் சத்தம் போட்டதைக் கேட்டதும் கணவன் உடனே வீட்டுக்கு வந்துவிடுவார் என்பதை மனைவி அறிந்திருந்தாள். இவ்வாறு அடிக்கடி தண்டனை பெறும்போது தாயைப்பற்றி எப்படிப்பட்ட உணர்வு இளைய மகளுக்குள் ஏற்பட்டிருக்கும்? என்பதை உங்களால் சிந்திக்க முடியும். தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு பெலவீனமடைய கணவன் மனைவிக் கிடையில் இருந்த உறவு பெலவீனமடைந்ததே இங்கு காரணமாகும்.
உறவு, தொடர்பு என்பது இன்றைய நாளைவிட நாளைய நாளில் வளர்த் துக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
ஒருநாள் தனது திருமணவாழ்வில் மனைவியோடு உறவை முறித்துக் கொண்ட கணவன் "நான் தற்போதுள்ள மனைவியை விலக்கி விட்டு, மற்றொரு பெண்ணை மணந்துகொண்டால் புதிதாக நல்ல உறவை ஏற்படுத்தப்பழகிக் கொள்ளலாம்" என்று நினைத்தானாம். இது பிழையான அபிப்பிராயமாகும். தற்போது இருக்கும் மனைவியுடன் நல்ல உறவை ஏற்படுத்தப் பழகவேண்டும்.
பெரும்பாலும் எமது குடும்பங்களில் கணவன் மனைவிக்கிடையில் உள்ள உறவு, முறிந்தே காணப்படுகிறது.
உறவு, தொடர்பு என்பது இனிறைய நாளைவிட
நாளைய நாளில் வளர்த்துக்கொள்ளக்கூடிய ஒன்றாகும். கற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றாகும்.

Page 14
2 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி 6. கணவன் மனைவிக்கிடையில்
அடிக்கடி உறவு முறிவதற்கான காரணங்கள் எவை?
அ. சில காலம் கணவன் மனைவிக்கிடையில் உறவு முறிந்திருந்தால் அவர்களிடம் அதற்கான காரணம் என்னவென்று கேட்டால் என்னைக் கணவன் புரிந்துகொள்ளவில்லை என்பர். என்னைப் பிழையாக விளங்காதிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்பர். இங்கு ஒருவர் மற்றவரைப் புரிந்து கொள்ளாத நிலை பிரச்சினைக்குக் காரணம் என்பதைப் புரிய முடிகிறது.
ஆ. கணவன் மனைவி உறவு பாதிப்படைய மற்றொரு காரணமும் உண்டு. இருவரும் ஒன்றாக வாழும்பொழுது ஒவ்வொருவரும் தத்தமது வேலைகளைப் பூர்த்தி செய்வதை மட்டும் சிந்திப்பதுண்டு. அதாவது தண்னைப்பற்றி மட்டும் சிந்திப்பதுணிரு. உதாரணமாக வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் கணவன் தனது மனைவியுடன் தனது உணவு, தனது உடை, தனது இளைப்பாறுதலைப் பற்றி மட்டும் கதைக்கிறான் என்று வைத்துக்கொண்டால், அவர் மனமுதிர்ச்சி அடையவில்லை எனலாம். மனமுதிர்ச்சியடைந்தவர் தன்னை மட்டுமல்ல மற்றவரது உணவு, உடை இளைப்பாறுதலைப்பற்றியும் சிந்திப்பார். சாதாரணமாக குடும்பத்தில் தன்னை மட்டும் சிந்திக்கின்ற நபரை மற்றவர்களுக்கும் பிடிக்காத நிலை ஏற்படும்.
தனது தேவையை மட்டும் பூர்த்தி செய்ய நினைப்பது சிறு வயதுக்குப் பொருத்தமான நடத்தையாகும். வளர்ந்தவர்களுக்காக இருக்கும் வாழ்வே திருமண வாழ்வாகும். சிறுபிள்ளைகள் எப்பொழுதும் தமது தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்ய முயலுவர். தனது தந்தை வேறொரு பிள்ளையைத் தூக்கி வைத்திருப்பதைக் குழந்தை விரும்பாது. ஆனால் வளர்ந்ததும் இந்நிலை மாறவேண்டும்.
மனமுதிர்ச்சி பெற்ற ஒருவரில் சுயநலம் குறைந்து பொதுநலம் கூடும். அறிவற்ற நிலையிலிருந்து அறிவுள்ள நிலைக்கு மாற வேண்டும். தங்கும் நிலையிலிருந்து சுயாதீனமாகும் நிலைக்கு மாறவேண்டும்.
ஒருவர் தன்னைவிட மேலாக மற்றவரை அன்பு செய்ய முடியாது. தன்னை அன்பு செய்வது போல் மற்றவரை அன்பு செய்தாலே போதுமானது. நான் விரும்புவதையே மற்றவரும் விரும்பவேண்டுமென்று பலாத்காரப்படுத்துவது மன முதிர்ச்சி அடைந்த நிலையல்ல. அப்படி நான் எதிர்பார்த்தால் மற்றவரிலும் என்னையே காண்கின்றேன் என்பது அர்த்தம். மற்றவரை அன்பு செய்யவில்லை மற்றவரிலும் என்னையே அன்பு செய்கிறேன் என்பது பொருள். மற்றவரை அவராக இருக்க விடவேண்டும்.
ஒருவருக்குத் தன்னைப்பற்றிய அறிவு தேவை. தன்னை அறிந்தவரே மற்றவரையும் அறிவார். தன்னைப் புரிந்து தன்னை அன்பு செய்பவரால் மட்டுமே மற்றவரைப் புரிந்து மற்றவரை அன்பு செய்ய முடியும். தன்னைவிட வேறுபட்ட கருத்துள்ளவரையும் அன்பு செய்ய மனமுதிர்ச்சி அடைந்தவரால்

கணவனி மனைவிக்கிடையில் அடிக்கடி உறவு முறிவதற்கான காரணங்கள் எவை? ዝ3
முடியும்.
இ. கணவன் மனைவி உறவு முறிவதற்கு மற்றொரு காரணம் ஏதாவதொரு சந்தர்ப்பத்தைப்பற்றி அல்லது நிகழ்ச்சியைப்பற்றி தான் கண்டு விளங்கிக்கொண்ட காட்சிதான் சரி என்று எண்ணுவதாகும். அந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் தான் காணும் விதத்திலேயே மற்றவரும் காணவேண்டும் என்று எண்ணுவதாகும். நான் காண்பதைத்தவிர வேறு விதத்தில் காண முடியாது என்று எண்ணுவதாகும். தன்னுடன் ஒத்துவராத எல்லோரும் உண்மையைக் காணாத, உண்மையை ஏற்றுக்கொள்ளாத மூடர்கள் என்று எண்ணுவதாகும்.
தனது கணவன் அல்லது மனைவி தான் கண்டு விளங்கிக்கொண்டதை, அதே விதத்தில் கண்டு விளங்கிக் கொள்ளாததால் அவர்கள் பிழை என்று நினைப்பது சரியாகுமா? அப்படி நினைப்பது அறிவற்ற எண்ணமாகும். இப்படி எண்ணும்போது கட்டாயம் கணவன் மனைவி உறவுக்குத் தடையாகிறது.
(உ-ம்) காரியாலயத்தில் வேலை செய்கின்ற இருவர் வேலை என்பதை நோக்கும் விதம் வேறுபட்டதாக இருக்கலாம். கடிமை உணர்ச்சியுடன் வேலை செய்பவர். வேலையை மகிழ்வுடனும் விருப்பத்துடனும் செய்வார். வேலையில் அக்கறையில்லாதவர் எந்நேரமும் வேலை கஷ்டமானது என்று கவலைப்பட்டுக் கொண்டே இருப்பார். இங்கு வேலை என்பதை இருவரும் ஒரே விதத்தில் நோக்கவில்லை என்பது புரிகின்றது.
நாம் ஒரு நிகழ்ச்சியை நோக்கும்பொழுது எமக்குப் பழக்கப்பட்ட விதத் திலேயே நோக்குகிறோம். ஈர்க்கப்பட்ட விதத்தில் நாம் அதைக் கண்டு விளங்கிக் கொள்கிறோம். எமது சமயம், கலாச்சாரம், சமுதாயப் பழக்கவழக்கம், வாழ்க்கை முறை, எமது கல்வி நிலையின் மட்டம், எமது சமுதாய பொருளாதார மட்டம், எமது குடும்பத்திலிருந்து நாம் பெற்ற நம்பிக்கை, விசுவாசம் பயம், எண்ணம் பெறுமதிகள், எமது கண்ணோட்டம் போன்ற காரணங்களை மனதின் பின்னணியில் வைத்துக்கொண்டே அந்த நிகழ்ச்சியை நோக்குகிறோம். அப்போது இப்பின்னணிக ளின் தாக்கத்துடனேயே நிகழ்ச்சியைப் புரிந்து கொள்கிறோம்.
இங்கே எமக்குத் தெரிகின்ற படத்தில் நீங்கள் எதைக் காண்கிறீர்கள்?

Page 15
14 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
இந்தப் படத்தை ஒரு குழுவிடம் காட்டிக் கேட்டபோது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் காண்பதாகக் கூறினர். ஒருவர் இதில் இரு முகங்கள் உண்டு என்றார். மற்றொருவர் இதில் பூச்சாடி தெரிகிறது என்றார். மூன்றாமவர் இது பாத்திரம் என்றார். மற்றொருவர் வெற்றிலைத் தட்டம் என்றார். இவ்வாறு இருபத்தி மூன்று உருவத்தைக் கூறினர். இதில் எந்தப் பதில் சரியானது? இதேபோன்றுதான் எம்மால் மற்றவரைத் தீர்ப்பிட முடியாதுள்ளது.
ஒரு மேசையைப் பார்த்து ஒருவர் அதை வாசிக்க அதில் எழுதப்பயன்படுத் தும்போது மேசை என்கிறார். ஆனால் மழைநேரத்திலே வெளியில் விளையாட முடியாத பிள்ளை வீட்டுக்குள் ஓடிவந்து, மேசையைச் சுற்றி சேலைகட்டி அதை வீடாக நினைத்து விளையாடும். அதை வீடு என்று சிறுபிள்ளை கூறும். பெரிய வர்கள் மேசை என்பதை சிறுபிள்ளை வீடு என்கிறது. இங்கு பாவிப்பதைக் கொண்டுதான் மேசையா? வீடா? என எண்ணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தத்தமது கலாச்சாரப்பின்னணி, தனிப்பட்ட பின்னணியின் படி நிகழ்ச்சியில் பல அர்த்தத்தைக் காண்பர். அதேபோன்று தான் மேலுள்ள படத்தையும் பலவிதமாக நோக்குவர்.
இவ்வாறுதான் கணவன் மனைவி என்ற ஆழமான உறவில் உள்ளாகிய இருவரும் ஒன்றை ஒரே விதத்தில் காண்பதில்லை. கணவன் தனது மனைவியுடன் ஒத்துப்போக முடியாத சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இந்த ஒத்துக்கொள்ள முடியாத நிலையால் இருவருக்கிடையிலும் ஏற்படும் உறவை உடைக்க இடமளித்தல் முறையாகுமா?
ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் ஒருநாள் வீட்டின் சாலையில் கதைத்துக்கொண்டிருந்தனர். அந்த நேரம் சடுதியாக அவ்விடத்துக்கு ஒரு எலி ஓடிவந்தது. ஓடிவந்த எலி சடுதியாக ஓடி மறைந்துவிட்டது. "அந்தக் கதவாலேயே அந்த எலி ஓடியது" என்று கணவன் பேச்சோடு பேச்சாக மனைவிக்குக் கூறினார். அதை மனைவி ஏற்கவில்லை. "இந்தக்கதவால் அந்த எலி ஒடவில்லை அந்தக் கதவாலேயே ஓடியது" என்றாள் மனைவி. தான் கூறியதைப் புறக்கணித்ததால் கடுங்கோபம் கொண்ட கணவன் "நான் மனதிலே வந்ததைச் சொல்லவில்லை. கண்ணாலே கண்டதைத்தான் சொன்னேன்" என்றார். "நானும் எனது கண்ணாலே கண்டதைத்தான் சொன்னேன்" என்றாள் மனைவி. இருவரும் தம்மை அறியாமலே கோபத்துடன் சத்தம் போட்டனர். அது முற்றிச் சண்டையாக வெடித்தது. இருவரும் பிரிந்து விட்டனர். நண்பர் ஒருவரின் முயற்சியால் இருவரும் திரும்பவும் வீட்டுக்கு வந்தனர். வந்து மெளனமாக இருந்தனர். சிறிது நேரம் இருவருமே ஒருவருடன் ஒருவர் கதைக்கவில்லை. பின்பு கணவன் மனைவியுடன் கதைக்க ஆரம்பித்தார். மனைவி திரும்பவும் "நான் எப்படி அதை ஏற்றுக்கொள்வது இந்தப் பக்கத்தாலே எலி ஓடியதை நான் பார்த்தேன்” என்றாள். இருவருக்குமிடையில் திரும்பவும் சண்டை ஏற்பட்டுவிட்டது. இங்கே இருவரும் தான் கண்டதுதான் சரி என்று நினைத்து வாதாடியதால் பிரச்சினை ஏற்பட்டது எனலாம்.
ஈ. கணவன் மனைவி இருவரும் முகமுடி போடாது வாழவேண்டும். சிறு பிள்ளைகள் பொய்யான வாழ்வைப் பெற்றோர், பெரியவரிலிருந்து கற்றுக்கொள்வர். மூன்று வயதுவரை உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தப்

கணவனி மனைவிக்கிடையில் அடிக்கடி உழவு முறிவதற்கான காரணங்கள் எவை? 15
பார்ப்பர். ஆனால் அதன்பின் பெற்றோர் பெரியவரிடம் இருந்து பொய் சொல்ல, மறைக்கக் கற்றுக்கொள்வர்.
ஒருநாள் கணவனும் மனைவியும் சுகவீனமாக இருந்த உறவினர் ஒருவரைப் பார்க்கத் தமது பிள்ளையையும் கூட்டிக்கொண்டு சென்றனர். அங்கே சிறுபிள்ளை நோயாளியான மாமாவைப் பார்த்து "மாமா எனது அப்பா எங்களுடைய வீட்டிலே இருந்த செவ்விளநீர் மரத்திலே பிடுங்கிய செவ்விளணியிலே பெரியவைகள் எல்லாவற்றையும் வீட்டிலே வைத்து விட்டுச் சிறிய செவ்விளநீர்தான் மாமாவுக்குக் கொண்டு வந்தார்" என்றாள். அந்த நேரம் ஒன்றுமே பேசாமல் இருந்த தந்தை வீட்டுக்கு வந்ததும் பிள்ளைக்கு அடித்தார். அன்றிலிருந்து பிள்ளை பொய் சொல்லப் பழகியது. அடுத்த நாள் வீட்டுக்கு இருவர் காசு சேர்ப்பதற்கு வருவதைத் தாய் கண்டுவிட்டு மகனிடம் சென்று “மகன் வெளியில் நிற்கின்ற மாமாமாருக்குச் சொல்லுங்கள் வீட்டிலே அம்மா இல்லையென்று” என்று கூறினாள். பிள்ளை வெளியில் சென்று வந்தவர்களிடம் "அம்மா தான் வீட்டிலை இல்லையென்று சொல்லச் சொன்னா” என்றாள். வந்தவர்கள் சென்றதும் தாய பிள்ளைக்கு அடித்ததால் அன்றும் பொய் சொல்லக் கற்றுக்கொண்டது. இப்படிப் படிப்படியாகப் பொய் வாழ்வு வாழப் பழகியது பெற்றோர் பெரியோர் மூலமாகவேயாகும்.
உ. விவாக வாழ்வில் கனவர்ை கணவனாகவும் மனைவி மனைவியாகவும் இருக்க இடமளிக்க வேண்டும். இருவருக்குமிடையில் இடைவெளி தேவை. மற்றவர் இருக்கும் நிலையிலிருந்து அவரை மாற்றி அன்பு செய்வதைவிட, அவர் இருக்கும் நிலையில் அவரை ஏற்று அன்பு செய்யவேண்டும். இங்கே ஒருவர் கூறும் பிழையை மற்றவர் சரியென்று ஏற்க வேண்டும் என்பது அர்த்தமல்ல.
ဎွိ88%
பெண்
இவ்விரு படங்களிலும் ஒன்று இருவருக்கும் இடையில் இடைவெளியைக் காட்டுகின்றது. இருவரும் ஒரே சர்மாக இருக்கவேண்டுமென ஒருவர் மற்றவரை மாற்ற வெளிக்கிடுவது பிழை. இருவருக்கிடையிலி மாற முடியாதவைகள் பல உள்ளன. ஆகவே நீ நியாக இரு. உன்னை நாள் அன்பு செய்கிறேன்." என்ற விதத்தில் மற்றவரை மாற்ற முயலாது, இருக்கும் நிலையில் ஏற்று அன்பு செய்தல் வேண்டும். தவறுகளை அன்போடு சுட்டிக்காட்ட வேண்டும்.

Page 16
16 tnaissaமான வாழ்வுக்கு வழி
7. கணவன் மனைவிக்கிடையில் தொடர்பை வளர்த்துக்கொள்வது
6Ttit utg?
ஒருவர் ஒருவருடன் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முக்கிய வழி கருத்துப் பரிமாற்றம், உணர்வுப் பரிமாற்றமேயாகும். வீட்டில் கணவன் மனைவியுடன் கதைக்கும்பொழுது தமது கருத்தை உணர்வைப்பகிரும்பொழுது, பரிமாறும்பொழுது தான் வாழ்வதாக மற்றவர் உணர்கிறார். இருவரும் அன்புடன் உறவாடவில்லை யென்றாலும், சண்டை பிடித்தாலும் கூட நான் வாழ்கிறேன் என்ற உணர்வு மற்றவருக்கு ஏற்படுகிறது. கதைக்காமல் இருந்தால் அதைத் தாங்க முடிவதில்லை.
தனது மனைவி, பிள்ளைகள் தன்னுடன் கதைக்காமல் இருந்ததால் ஒருவர் இருமுறை தற்கொலை செய்ய முனைந்தார். அவரிடம் பணம், சொத்து இருந்தது. ஆகவே கதைக்காமலிருப்பதைத் தாங்க முடிவதில்லை. இதை மனதில்கொண்டு கணவன், மனைவி இருவரும் நல்லவிதத்தில் ஒருவர் மற்றவருடன் கதைக்கப் பழகிக் கொள்ள வேண்டும். தமது கருத்தை, உணர்வைப்பரிமாறப் பழகிக்கொள்ள வேண்டும்.
தொடர்பு சாதனம்
தொடர்பைப்பற்றிக் கவனிக்கும்பொழுது அதில் மூன்று முக்கிய விடயங்க ளைக் கவனிக்க வேண்டும்.
அ. செய்தி கொடுப்பவர்
ஆ. செய்தி பெறுபவர்
இ. செய்தி
எமது குடும்பங்களில் செய்தியைக் கொடுப்பவர் யார்? என்று கேட்டால் ஆண் செய்தி கொடுப்பவர், பெண் செய்தி பெறுபவர் என்று பலர் விடை கூறலாம். இது பிழையாகும். நல்ல உறவு ஏற்பட வேண்டுமானால் கணவன் மனைவி இருவருமே செய்தி கொடுப்பவராகவும் செய்தி பெறுபவராகவும் இருக்க வேண்டும்.
விவாக வாழ்வில் இருவருக்கும் ஒவ்வொருநாளிலும் அன்றையநாள் புதியதாகவே இருக்கும். பழையனவற்றையும் புதிதாகப் பார்க்க வேண்டும். இருவருக்கும் புதியபுதிய அனுபவங்கள் வரும். புதியனவற்றைக் கதைக்கப் பல விடயங்கள் இருக்கும். ஒருசிலர் கணவன், மனைவி இருவரும் சண்டை பிடிப்பதையே கதைப்பது என எண்ணுவர். அதற்குக் காரணம் எமது பழக்கவழக்கங்களில் வேறுபட்ட நிலை இருப்பதேயாகும்.
எமது வார்த்தை முறைகளில் முன்று வகையுண்டு

கணவன் மனைவிக்கிடையில் த்ொடர்பை வளர்த்துக்கொள்வது எப்படி 17
அ. "இப்ப நேரம் என்ன” என்று ஒருவர் மற்றவரிடம் கேட்டால் "பத்து மணி" என்று விடை கொடுக்கிறார். இங்கு தொடர்பு முறியவில்லை. இதனை ஒன்றிய தொடர்பு என்பர்.
ஆ. "நேரம் என்ன” என்று கேட்டால் “ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள்? உங்களுடைய மணிக்கூட்டுக்கு என்ன நடந்தது?" என்று கூறுவது ஒன்றாத் தொடர்பாகும்.
இ. சிலவேளைகளில் கேட்கும் கேள்விகளுக்குப் பொய்யான பதிலும் கூறக்கூடும். நீங்கள் கடை ஒன்றில் உடுப்பு எடுக்கச் செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அங்கு உங்கள் மனதுக்குப் பிடித்தமான துணியை வாங்க முயலும்போது "இந்தத் துணி கடைசியாய் மிஞ்சியுள்ளது" என்று வியாபாரி கூறுகின்றார். இதனால் ஏமாந்து விலை கூடக் கொடுத்துவிட்டீர்கள் என்று அறிந்தால் அந்த வியாபாரியை உங்களுக்குப் பிடிக்காது போகலாம். ஒன்றாத் தொடர்பு வார்த்தையாலும், பொய்யான வார்த்தையாலும் உங்கள் உறவு முறிந்து போகலாம். வீட்டில் அடிக்கடி ஒன்றிய தொடர்பு வார்த்தைகளைப் பாவிப்பதாலேயே தொடர்பு வளர்கிறது.
கணவன், மனைவி இருவருக்குமிடையில் நல்ல அன்புத்தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டுமானால் தனது வாழ்வின் சுக்கானை மற்றவரிடம் கொடுப்பது பிழையாகும். மற்றவர் ஏதாவது கூறியதால் நான் மனம் நொந்துகொண் டால் அதன் அர்த்தம் எனது சுக்கானை மற்றவரிடம் கொடுத்துவிட்டேன் என்பதாகும். மனம் நோகும்படி மற்றவர் ஏதாவது கூறினால் அவர் கூறியதில் நான் ஏதாவது திருந்த உண்டா எனப் பார்த்து நல்லதை எடுத்துவிட்டு வேதனை ஏற்படுத்துவதை விட்டுவிடுவதே நலமாகும். அதனால் மற்றவர் புண்படமாட்டார். இல்லையேல் மற்றவர் என்னை வழிநடத்தத் தொடங்கினால் அவரது கையில் எனது சுக்கானைக் கொடுத்திருந்தால் நான் துக்கப்படுவேன் அல்லது கோபப்படுவேன். மனப்புண் ஏற்படத் தொடங்கியதும் இருவருக்கிடையிலும் இடைவெளி ஏற்படத் தொடங்கி விடும்.
இருவருக்கும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தமது அனுபவம், உணர்வுகளை ஒருவர் மற்றவருடன் பகிர வேண்டும். நேரம் அதிகமாக இருந்தால் மட்டுமே மற்றவர்களைப் பற்றிக்கதைக்க வேண்டும். இல்லையேல் கணவன் மனைவி இருவருக்கும் பிரயோசனப்படக்கூடிய விடயங்களைப்பற்றியே பகிர வேண்டும். கணவன் மனைவி இருவருக்கிடையிலும் நல்ல தொடர்பை ஏற்படுத்த ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள வேணி டும் . புரிந்துகொள்ளவில்லையேல் இருவருக்கிடையிலும் உறவு முறியலாம். ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ளக் கற்றுக்கொண்டு அதன்படி செயற்பட்டால் உறவு முறிவது குறையும் என்பதில் சந்தேகமில்லை. ܗܝ
மற்றவரைப் புரிந்துகொள்வது எப்படி? ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள அவரது கருத்து, எண்ணம், வாழ்க்கைப் பின்னணி அவரது விருப்பு, வெறுப்பு, கல்வியறிவு மட்டம் போன்றவற்றை அறிந்தால் போதுமானது என ஒருவர்

Page 17
8 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி 1.
கூறலாம். உண்மையில் மேற்கூறப்பட்டவற்றின் மூலம் ஒருவரை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். ஆனால் இவற்றைவிட இன்னும் முக்கியமானவற்றை அறிந்துகொள்ள வேண்டும்.
காலையில் எம்மை நன்றாகப் புரிந்துகொண்ட ஒருவர் அன்று பகல் அல்லது மாலையில் புரிந்துகொள்ளாத சந்தர்ப்பங்களுமுண்டு. இதற்கு மற்றொரு காரணமுமுண்டு. மனிதனது விருப்பு, வெறுப்பு, கருத்துக்களை விட மிக வேகமாக மாறக்கூடிய ஒன்றும் உண்டு. அதாவது ஒருவரது உணர்வு அடிக்கடி மாறக்கூடியதாகும்.
நீங்கள் இந்நூலை மகிழ்ச்சியான உணர்வோடு வாசிக்கத் தொடங்கினாலும், இந்நூலிலுள்ள குறிப்புகள் உங்களுக்கு விருப்பம் இல்லாதிருப்பின் சிறிது நேரத்தில், உங்களது மகிழ்ச்சி கலக்கமான அல்லது கோபமான உணர்வாக மாறக்கூடும்.
உணர்வுகள் மாறக்கூடியவை. பெரும்பாலும் உணர்வுகள் தற்காலிகமான வையாகும். இருப்பினும் உங்களது உணர்வைப் பிழையில்லாமல் அப்படியே ஒருவர் விளங்கிக்கொள்கிறார் என்றால் அவர் உங்களைப் புரிந்துகொள்கிறார் என நீங்கள் எண்ணுவீர்கள். கணவன், மனைவி இருவரும் கலந்துரையாடும் பொழுது உறவு ஏற்படுத்தும் பொழுது ஒருவர் மற்றவரது உணர்வுகளைப் புரிந்துகொள்வதற்கே அதிகம் உற்சாகம் எடுக்க வேண்டும். எனது மனைவி, இப்போது மகிழ்வோடு கதைக்கிறாரா? அல்லது பயத்திலா? துக்கத்திலா? வெறுப்பிலா? கோபத்திலா? அல்லது வேறு உணர்வில் கதைக்கிறாரா என்று அறிவதில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள அவரது நிகழ்கால உணர்வைப் புரிவது முக்கியமாகும். இது ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள இருக்கும் முதற்படி மட்டுமே. ஒருவர் மற்றவரைப் புரிந்துகொள்ள இரண்டாவது படிநிலையும் எடுக்க வேண்டும். அதாவது மற்றவரது உணர்வைப் புரிந்துகொண்டு அதை அவருக்கு வெளிப்படுத்தவும் வேண்டும் "அடுத்த வீட்டுக்காரர் உங்கள் மீது குற்றம் சுமத்தியதால் உங்களுக்குச் சரியான வேதனையாக உள்ளது அப்படித் தானே!" இவ்வாறுதான் மற்றவரில் புரிந்துகொண்ட உணர்வை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு வெளிப்படுத்தும் போது மற்றவர் என்னைப் புரிந்துகொண் டுள்ளார் என அவருக்கு விளங்கும். தன்னை மற்றவர் புரிந்துள்ளார் என்று ஒருவர் உணர்ந்தால் தன்னைப்புரிந்து கொண்டவருடன் மிகநெருக்கமான உறவை ஏற்படுத்த விரும்புவார். இதனால் கணவன், மனைவி இருவருக்குமிடையிலுமுள்ள விவாக உறவு மேலும் ஆழமாகும். தன்னைப் புரிந்துகொண்டார் என்று உணர்ந்த மனைவி கணவனுடன் மனந்திறந்து பழகுவார். தன்னைப் புரிந்துகொண்ட கணவனுடன் மனந்திறந்து பேச மனைவி பயப்படமாட்டாள். தன்னைப் புரிந்து கொள்ளவில்லையேல் மணந்திறந்து பேச முன்வரமாட்டாள்.

19
8. உணர்வுகள் சரியானவையா?
līnipu Thu
உணர்வுகளைப்பற்றிக் கூறும்பொழுது கேள்வி எழலாம். கோபம், பொறாமை, குரோதம், பயம் போன்ற உணர்வுகள் ஏற்படுவது சரியா? இப்படிப்பட்ட உணர்வுகளை எமது மனதில் பதியவைப்பது பிழையானதல்லவா? என்ற கேள்விகளுக்கு விடை தருவதற்கு முன்பு உணர்வுகள் உருவாகுவது எவ்வாறு என்று நோக்குவோம்.
மனிதனுக்குப் பல தேவைகள் உண்டு. உணவு, பானம், இளைப்பாறுதல் போன்ற சரீர தேவைகளைக் கூறலாம். இத்தேவைகள் சரியான விதத்தில் கிடைக்கும்போது திருப்தி, சந்தோஷம் போன்ற உணர்வுகள் ஏற்படுவதோடு, இத்தேவைகள் பூர்த்திசெய்யப்படாமல் இருக்கும்போது இதைவிட வேறுபட்ட உணர்வுகள் உருவாகும். உதாரணமாக உணவ கிடைக்காதபோது பசி உணர்வு ஏற்படும். இளைப்பாறுதல் கிடைக்காதபோது களைப்புணர்வு ஏற்படும். சரீரத் தேவைகளைவிட எமக்குப் பாதுகாப்புத் தேவையும் உண்டல்லவா? பணம் இல்லாமல் போகும்பொழுது, வாழ்வதற்குப் பிரச்சினைகள் வரும்போது பாதுகாப்புத் தேவை நிறைவேற்றப்படாதபோது பயஉணர்வு ஏற்படும். கெளரவத்தேவை நிறைவேறாது போகும்போது தாழ்வான உணர்வு, மற்றவர்கள் குறைவாக என்னை மதித்தார்கள் என்ற உணர்வு ஏற்படும். சமுதாயத்தேவை நிறைவேற்றப்படாதபோது முழுமையில்லாத தனிமை, புறக்கணிப்புணர்வு ஏற்படும். சுதந்திரமாகச் செயற்பட முடியாதபோது குறைவு, கலக்கம் ஏற்படும். இவ்வாறு நோக்கும்பொழுது எமது உணர்வுகள் எமது தேவைகளோடு தொடர்புபட்டதாக உள்ளன. வெளியில் அல்லது உள்ளே ஏற்படும் உத்வேகத்தால் இயற்கையாகத் தோன்றும் பிரதிச்செயலே உணர்வாகும். பசி உணர்வு உள்ளாள உத்வேகத்தின் பிரதிச்செயலாகும், பயம் என்பது பெரும்பாலும் வெளியே தோன்றும் உத்வேகத்தின் பிரதிச்செயலாகும். கோபமும் அவ்வாறே. கோபம், பயம், அல்லது வேறு எந்த உணர்வானாலும் எமது அனுமதியைப்பெற்று எம்மில் தோன்றுவன வல்ல, இவைகள் இயற்கையாகவே தோன்றுகின்றன.
ஆகவே உணர்வுகள் ஏற்படுவதற்கு நாம் பொறுப்பெடுப்பது கடினமான தாகும். ஆதலால் உணர்வைச் “சரி” அல்லது "பிழை" என்று தீர்ப்பிட முடியாது. எமது விருப்பத்தோடு ஏற்பட்ட செயல்களையே தீர்ப்பிட முடியும். ஆனால் உணர் வுகளைத் தீர்ப்பிட முடியாது. உணர்வுகள் சரி என்றோ பிழை என்றோ கூறமுடியாது. அதற்கு ஆன்மீகத்தின் குணமில்லை.
உங்களுக்கு உங்கள் கணவரில் கோபம் ஏற்பட்டதனால் நீங்கள் கூடாத பெண் என்று கூறமுடியாது. அதேபோன்று உங்கள் மனைவி மீது கோபம்

Page 18
2O மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
வந்ததற்காக நீங்கள் கூடாத கணவன் என்று கூறவும் முடியாது.
இருப்பினும் உங்களுக்குள் ஏற்பட்ட உணர்வுக்கேற்ப செயற்பட்டால், அச்செயலுக்குப் பொறுப்பாளிகள் நீங்களேயாகும். கோபம் என்பது உணர்வுதான். ஆனால் கோபத்தில் மற்றவரை அடித்தால் அது உணர்வல்ல. அவ்வாறு அடித்தது உள்விருப்பத்தோடு ஏற்பட்ட செயலாக இருப்பதால் அதை பிழை என்று பலர் தீர்ப்பிட இடமுண்டு. ஆகவே செயலைத் தீர்ப்பிட முடியும். ஆனால் உணர்வைத் தீர்ப்பிட முடியாது. − உணர்வை வெளிப்பருத்துதல்
உண்மையில் கணவன் மனைவிக்கிடையிலுள்ள உறவை நல்ல விதத்தில் வளர்த்துக்கொள்வதனால் ஒருவர் ஒருவருக்குள் ஏற்படும் உணர்வை வெளிப்படுத்த வேண்டும். திருமணமாகிய இருவரும் ஒருவர் மற்றவரில் ஏற்படும் உணர்வை வெளிப்படுத்தாமல் அடக்கி வைப்பதைக் கண்டிருப்பீர்கள்.
சில உணர்வுகள் பிழையானவை என்று நினைத்தே அவ்வாறு அடக்கி வைக்க முயலுகிறோம். உணர்வுகளைச் சரியென்றோ, பிழையென்றோ ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை ஏற்றுக்கொண்டால் அவற்றைச் சரியான விதத்தில் வெளிப்படுத்துவது பிழையற்றது என்பதை ஏற்க வேண்டும்.
உணர்வை வெளிப்படுத்துவது பிழையற்றது என்பதை மட்டுமல்ல கணவன் மனைவி உறவை நல்லவிதத்தில் ஏற்படுத்திக்கொள்வதும் முக்கியமானதாகும்.

9. கணவன் மனைவி உறவை ஏற்படுத்த ஆசை இருத்தல் வேண்டும்
ஒருவர் மற்றவரைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கு இருவருக்கிடையிலும் நிரந்தரமாகத் தொடர்பை ஏற்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.
கருத்துக்களையும், உணர்வுகளையும் பரிமாறிக்கொள்ள வேண்டும்.
கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ள இருவரும் கதைத்தல்" வேண்டும். கதைக்காமல் தொடர்பை வளர்த்துக் கொள்வது கடினமானதாகும். ※,
ஆதலால் விவாகம் முடித்துவாழும் எல்லாத் தம்பதிகளுக்கும் தொடர்பை வெளிப்படுத்த விருப்பமும், ஆயத்தமும், திறமையும் இருக்க வேண்டும். சில தம்பதியினருக்குக் கதைக்க கலந்துரையாட நேரம் இல்லலாதிருக்கின்றது. இது மிகவும் கவலைக்குரிய நிலையாகும்.
தொடர்பை வெளிப்படுத்த நேரத்தைத் தேடிக்கொள்ள வேண்டும். நேரத் தைத் தேடிக்கொள்ளாதோர் விவாகம் முடிக்க வேண்டுமா? அப்படிப்பட்ட இருவர் தமது தொடர்பை எப்படி வளர்த்துக்கொள்ளுவது? ஆகக் குறைந்தது ஒரு நாளைக்கு முப்பது நிமிடமாவது அல்லது இருபது நிமிடமாவது ஒருவர் மற்றவரு டன் தமது கருத்தை, உணர்வை அனுபவத்தைக் கலந்துரையாட வேண்டும்.
விவாகம் முடித்து ஆறு மாதமாகும்பொழுது தம்மிடையே உறவு குறைகின்றதை ஒரு தம்பதியினர் உணர்ந்தனர். அதைத் தேடிப்பார்த்த போது ஒரு உண்மை புலப்பட்டது.
ஆறு மாதங்களுக்கு முன் இந்த இளைஞன் (கணவன்) ஒரே நேரத்தில் இரு புதிய வேலைகளை ஆரம்பித்தார். அதில் ஒன்று திருமணம் முடித்தது. மற்றது பஸ் வண்டியை விலைக்கு வாங்கியது.
மனைவியைச் சந்தோசப்படுத்துவதற்காக அதிகாலையில் எழுந் பஸ்ஸை ஒட்டி பணம் சம்பாதித்தார். ஆகக் கூடுதலாகப் பணம் சம்பாதித்து இரவாகியே வீடு திரும்புவார். இதனால் காலையிலும், பகலிலும், இரவிலும் இருவருக்கும் கதைக்க நேரம் கிடைக்கவில்லை. உணர்வுகள், கருத்துக்களை வெளிப்படுத்த நேரம் கிடைக்காததால் இருவரது உறவும் பலவீனமாகத் தொடங்கியது. கணவன் தன்னையறியாமலே மனைவியைத் திருமணம் முடிக்காது பஸ் வண்டியையே திருமணம் முடித்துள்ளார். ஒருநாளுக்கு பதினாறு மணித்தியாலம் பஸ் வண்டியுடனும், தனது மனைவியுடன் சில நிமிடங்களுமே காலத்தைக் கழித்தார்.
விவாக வாழ்வை வெற்றிகரமாக அமைக்க; கணவன் மனைவி இருவரும் உணர்வுகள், கருத்துக்களைத் தெரிவிக்க நேரத்தை ஒதுக்குவது முக்கியமான

Page 19
22 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
g5T(5D.
சிலர் இக்கருத்தையிட்டு வேறுவிதமாக நோக்குவர். அதாவது அதிக நேரத்தை மனைவியுடன் கதைக்க ஒதுக்கினால் சண்டையிலேயே முடிகிறது. ஆகவே குறைவாகக் கதைத்தால் போதாதா? என்று கூறுவர். கலந்துரையாடல் எண்பது சண்டைபிடிப்பதல்ல.
இருவரும் எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பாவிக்கின்றனர்? முன்பு கூறியதைப் போன்று ஒன்றிய தொடர்பா? ஒன்றாத் தொடர்பா? நேரம் என்ன என்று கேட்கும்போது மற்றவர் பத்து மணி என்கிறாரா? அல்லது நீங்கள் பாருங்கள். எனக்கு நேரமில்லை என்கிறாரா? N நாம் நேரம் ஒதுக்கிக் கலந்துரையாடும்போது ஒன்றிய தொடர்பு வார்த்தை
களையே பாவிக்க வேண்டும்.
உணர்மையாக வாழ்தல் கணவன் மனைவி இருவரும் நல்ல உறவை வளர்த்துக்கொள்ள உண்மையுடன் வாழப்பழக வேண்டுமென முன்பும் நோக்கினோம். ஒருவர் மற்றவரைச் சந்தேகத்தோடு பார்க்கத் தொடங்கினால் உறவு மேலும் முறியலாம். குடும்ப வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே சந்தேகிக்கத் தொடங்கினால் பாதுகாப்புப் பலவீனத்தால் நரம்புத் தளர்ச்சி நோய்க்கு ஆளாகலாம்.
பாராட்ருதல் கணவன் மனைவிக்கிடையில் உறவை வளர்த்துக்கொள்ள ஒருவர் மற்றவரைப் பாராட்ட வேண்டும். பாராட்டைப் பெறுபவர் பாராட்டுபவரை விரும்புவார். பாராட்டுதலைப் பெறும் மனைவி தனது கணவனை மனதால் நெருங்குகிறாள். அதேபோன்றுதான் கணவனும் பாராட்டுதலைப் பெற்றால் தனது மனைவியை விரும்புவான். பாராட்டைப் பெறும்பொழுது தான் செய்யும் நல்ல செயல்களில் தைரியம் பிறக்கிறது. பாராட்டுவதால் தொடர்பு வளர்கிறது. ஓர் கருத்தரங்கின் மூலம் பாராட்டுதலின் முக்கியத்துவத்தைப்பற்றி அறிந்த நபர் ஒருவர் மாலையில் வீட்டுக்குச் சென்றார். வீட்டில் அவரது மனைவி "இரு சறமும் அழுக்காக இருந்ததால் துவைத்து வைத்துள்ளேன்" என்றாள். உடனே மனைவியைப் பாராட்ட வேண்டுமென்ற அறிவுரை அவரது ஞாபகத்துக்கு வரவே “உங்களுக்கு நன்றி” என்று மனைவிக்குக் கூறினார். மனைவி ஆச்சரியப்பட்டவாறு “ஏன் எனக்கு நன்றி என்று கூறினிர்கள்?" என்று கணவனிடம் கேட்டாள். “உங்களது நல்ல செயலைக் கண்டதால் நன்றி என்று கூறினேன்" என்று கணவன் கூறினான். "நாங்கள் திருமணம் முடித்துப் பதினான்கு வருடங்கள் ஆகின்றன. இதற்கு முன் ஒருநாள் கூட நன்றி என எனக்குக் கூறவில்லை. இன்றுதான் முதன் முதலாக நன்றியென்று எனக்குக் கூறியுள்ளிர்கள்" என்றாள். நீண்ட காலமாக வாழ்ந்துவரும் குடும்பங்களில் பாராட்டுதல் மிகவும் அதிகமாக இருக்குமென எம்மால் நினைக்க முடியுமா? செயற்பாட்டினர் பின்னணியை அறிவது ஒருவரது உணர்வை அறிந்தால் மட்டும் போதாது. அவரது செயற்பாட்டின் பின்னணியையும் அறிதல் வேண்டும். செயற்பாட்டைப் பிரித்துப் பார்க்காது அச்செயற்பாட்டுக்குப் பொருத்தமான சூழலின் பின்னணி என்ன என்பதை நோக்குதல் வேண்டும். பின்னணியை அறிந்தால் அச்செயற்பாட்டின் காரணத்தைப் புரிந்து விடலாம். ஒரு காரணமுமில்லாத மனித செயற்பாடு இல்லை எனலாம்.

கணவனி மனைவி உறவை ஏற்படுத்த ஆசை இருத்தல வேணடும். 23
ஒரு தம்பதியினர் தமது திருமணத்தின் பின் தனி வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தனர். ஒருநாள் காலையில் கணவன் தனது உடுப்புகளை எடுத்துப் போட்டுக் கொண்டு வேலைக்குப்போக வெளிக்கிடும்பொழுது மனைவியிடம் கொடுத்த பணம் எல்லாம் தனது உடுப்புகளின் இடையே வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார். மனைவியைக் கூப்பிட்டு இனிமேல் எனது உடுப்புக்குள் பணத்தைச் செருகி வைக்க வேண்டாம் என்று கூறினார். மறுநாள் பார்த்தபோது அப்பணம் திரும்பவும் கணவனின் உடுப்புக்கடியில் வைக்கப்பட்டிருந்தது. கணவனுக்குக் கோபம் வந்துவிட்டது. மனைவியை ஏசிவிட்டார். இனிமேல் இப்படிச் செய்ய வேண்டாம் என்று கூறினார். மறுநாள் வேலைக்குப் போகும்பொழுது திரும்பவும் பணம் வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு கணவன் மனைவியுடன் கோபிக்காது மனைவியுடன் கலந்துரையாடினார். அப்பொழுது அவருக்குப் பல உண்மைகள் புரியவந்தன. மனைவி சிறு பெண்ணாக இருக்கும்போது தகப்பன் இறந்துவிட்டார். பாதுகாப்பைப் பற்றிய பயம் அவளுக்குள் இருந்தது. கணவன் வீட்டில் இல்லாத நேரம் கணவனது உடைக்குள் பணத்தை வைப்பது பாதுகாப்பானது என மனைவி உணர்ந்தாள் என்பது புரிய வந்தது.
நாம் எமது எல்லா நடமாட்டங்களிலும் மற்றவருக்குச் செய்தி கொடுக்கி றோம். நாம் உட்கார்ந்திருக்கும் விதத்தில் எல்லாம் அர்த்தமுண்டு. ஆகவே நிகழ்ச்சியை அதன் பின்னணியிலிருந்து வேறுபடுத்திப் பார்ப்பது பிழை.
தமது கருத்தை மற்றவருக்கு நேரடியாகக் கூறத் தெரிவதில்லை. கீழ்மனதின் உந்துதலால் நடமாடுகிறோம். அதன்மூலம் நாம் மற்றவரைப் புரியப் பழக வேண்டும். எமது வார்த்தையால் மட்டுமல்ல எமது நடை, உடை, பாவனை, குரல், பார்வை போன்றவற்றில் வரும் செய்தியை அறிய வேண்டும்.
ஒருநாள் வீட்டில் மனைவியின் தாயார் மருமகனுக்குக் கூறினார். “உங்களது மாமா அதாவது எனது கணவன் முன்பு குசினியில் இரண்டு மூன்று முறை என்னைச் சுற்றித் திரிந்தால் அவருக்குப் பசி வந்துவிட்டது என நான் அறிந்துவிடுவேன்” என்றார். இங்கே மாமாவை மாமி புரிந்துள்ளார்.
வார்த்தையில் கூறும் செய்தியையும், வார்த்தையில் நேராகக் கூறாவிடினும் நடமாட்டத்தில் தரும் செய்தியையும் நன்றாகப் புரிந்து கொள்பவரை மற்றவர்கள் நெருங்குவார்கள். தன்னைப் புரிந்தவர்களிலேயே அதிகம் அன்பு வைப்பார்கள்.
நாம் மற்றவருக்குச் செவி சாய்ப்பது கடினமான ஒன்றாகும். ஆனால் கதைப்பது இலகுவானது. இறைவன் எமக்கு இரு செவிகளையும் ஒரு வாயையும் தந்ததில் அர்த்தமுண்டு. குறையப் பேசி, அதிகமாகச் செவிசாய்க்க வேண்டும் என்பதற்கேயாகும். சிலர் செவிசாய்ப்பது போல் நடிப்பர். இதுவும் பிழை. மற்றவர் சொல்லிலும், நடமாட்டத்திலும் எமக்கு உணர்த்தும் செய்தியில் உளந்திறக்க வேண்டும். செவிசாய்க்கும்போது மற்றவர் அந்த நிகழ்ச்சியை அனுபவித்த அனுபவத்துக்குக் கற்பனையில் சென்று மற்றவரைப் புரிந்துகொள்ள முயல வேண்டும். அப்பொழுதுதான் செயற்பாட்டுடன் காது கொடுத்தேன் என்று பொருள்.
பெரும்பாலும் செவிசாய்க்கும்போது மேலேயுள்ள செய்திக்கு மட்டுமல்ல

Page 20
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி 24.
உள்ளேயுள்ள செய்திக்கும் செவிசாய்க்க வேண்டும். வெளியே கொடுக்கும் செய்தி ஒன்று. உள்ளேயுள்ள செய்தி வேறொன்றாக இருக்கும். உதாரணமாக ஒருநாள் கணவனும் மனைவியும் மூத்த மகனும் காரில் சென்று கொண்டிருந்தனர். மூத்த மகனே காரை ஒட்டிச் சென்றார். அவர் கார் ஒட்டுவதில் புதுப்பழக்கமானவர். அம்மா திடீரென "மகன், அதிலே தூரத்தில் வருவது பஸ்ஸா, லொறியா" என்றார். அருகிலிருந்த கணவன் மனைவி கூறிய வார்த்தையின் மேலோட்டமான அர்த்தத்தை மட்டுமல்ல உள்ளேயுள்ள அர்த்தத்தையும் புரிந்துவிட்டவராக "உங்களுக்குச் சரியான பயமாக இருக்குத்தானே" என்றார். "உங்களுக்கு அது எப்படித் தெரிந்தது" என்று மனைவி ஒத்துக்கொண்டார். இங்கே லொறியா பஸ்ஸா என்பதல்ல "பார்த்துக் கவனமாக ஒட்டு” என்பதைப் பயத்தோடு "பஸ்ஸா, லொறியா" எனத் தாய் கூறினார்.
அதேபோன்று வேலை முடிந்து வீட்டுக்கு வந்த கணவன் உடைகளை மாற்றித் தேநீர் குடித்துவிட்டுப் பத்திரிகை பார்த்துக்கொண்டிருந்தார். அருகே வந்த மனைவி, "வீரகேசரி பேப்பரா பார்க்கிறீங்கள்?" என்றாள். அவள் கூறிய கூற்றின் உள்ளே இருந்த அர்த்தத்துக்குச் செவிசாய்த்த கணவன் உடனே பேப்பரை மூடிவைத்துவிட்டு "அருகிலே உட்காருங்கள் கதைப்போம்” என்றார். இங்கே மனைவிக்கு வீரகேசரிப்பத்திரிகை என்பது தெரியும். என்னோடு கொஞ்சம் கதைப்பீங்களா? என்பதைச் சொல்லாமல் வீரகேசரியா பார்க்கிறீர்கள்? என்று கூறினாள்.
ஆகவே மற்றவரது உணர்வு மட்டுமல்ல, மற்றவரின் நடமாட்டத்தின் பின்னணியைப் புரிவது மட்டுமல்ல, செவிசாய்ப்பதும் முக்கியம். மேலேயுள்ள செய்திக்கும் உள்ளேயுள்ள செய்திக்கும் செவிசாய்க்க வேண்டும்.
எமது எண்ணம் மற்றவரோடு நல்ல உறவை ஏற்படுத்த எமது எண்ணமும் முக்கியமான தாகும். எண்ணம் என்பது ஒருவரைப்பற்றி நாம் பார்க்கும் ஆழமான மனநோக்க மாகும். ஒரு இடத்தில் ஒரு அனுபவத்தைப் பெற்றால் அதை வைத்துக்கொண்டே எல்லா நிகழ்ச்சியையும் பார்ப்பர். நெட்டையர் எல்லாம் மோடர், கட்டையர் எல்லாம் குள்ளர் என்பது பலரின் எண்ணம். இது பிழையாகும். சில குலத்தவர், சில இடத்தவருக்கு இந்தப் புத்தி என்று எண்ணுவோம். குணங்கள் வருவது எமது சூழலாலேயே. சிலநேரம் முன்பு நடந்த நிகழ்ச்சியில் கணவன் செயற்பட்ட விதத்தால் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சியிலும் இப்படித்தான் செயற்பட்டார் என எமது எண்ணத்தைக் கொண்டே தீர்மானம் எடுக்கிறோம். இப்படிப்பட்ட எண்ணங்களும் நல்ல உறவுக்குத் தடையாகின்றன. சிலர் தமது கணவன் மனைவி தவறு விடும்பொழுது அன்றே உணர்த்து வதில்லை. அதுவும் தவறானதாகும். அதாவது நல்ல சூழல் இல்லாததால் சொல்லாமல், நாட்கள் கடந்து செல்ல இடம் கொடுக்கின்றனர். உதாரணமாக, கணவன் வேறொரு பெண்ணோடு தொடர்பு கொண்டவர்போல் இருப்பதாகச் செய்தி கிடைக்கிறது மனைவிக்கு. வேறு பெண்ணுடன் வித்தியாசமான தொடர்பை வைப்பது எனக்குப் பிடிக்கவில்லை என்பதை வெளிப்படுத்தாமல் இருக்கின்றாள் மனைவி. கணவன் பல நாட்களின் பின் உண்மையாகவே

கணவனி மனைவி உறவை ஏற்படுத்த ஆசை இருத்தல் வேணடும். 25
அந்தத் தவறில் விழுந்து விடுகிறான். செய்தி அறிந்த அன்றே அன்போடு அவனுக்கு எதிர்ப்பைக் காட்டியிருந்தால் அன்றுடன் அப்பெண்ணுடன் இருந்த தொடர்பை முறித்திருக்கலாம். காலங்கடந்த பின் கவலைப்பட்டுப் பிரயோசனமில்லை.
ஒரு கூட்டத்தில் பேச்சாளரின் உரை நன்றாக இருக்கும்போது, கைகளைத் தட்டுவதன் மூலம் பேச்சாளருக்கு உணர்த்துகின்றனர். இது வளர்ந்து செல்லும் தங்கள் அபிப்பிராயமாகும். நித்திரை தூங்கி கொட்டாவி விட்டு கையிலுள்ள கடிகாரத்தைப் பார்ப்பதன் மூலம் குறைந்து செல்லும் அபிப்பராயத்தை பேச்சாளருக்குக் கொடுப்பர். பேச்சாளரும் இதை உணர்ந்து தனது பேச்சை முடித்துக்கொள்வார். பிரதி அபிப்பிராயத்தை உணர்த்தாமல் மூடிமறைத்தால் மற்றவர் புரிந்துகொள்ள மாட்டார்.
கணவனுடைய நடமாட்டத்தில் மனைவியின் பங்குண்டு. 100:100 வீதம் கணவனுடைய நடமாட்டத்துக்கு அவரே பொறுப்பல்ல. மனைவியின் நடமாட்டத்தின் ஒரு பகுதியின் பிரதிபலிப்பே கணவனின் நடமாட்டமாகும். மற்றவரது நடமாட்டத்தில் எனது நடமாட்டமுண்டு. ஆகவே மற்றவரை மாற்ற நினைக்காமல் என்னை மாற்ற உற்சாகம் எடுக்க முடியாதா? என்பதைச் சிந்திக்க வேண்டும்.
உதாரணமாக திருமணம் முடித்து பத்து வருடங்கள் கழிந்த கணவன் குடும்ப ஆலோசகரிடம் ஆலோசனை பெறச் சென்றார். மனைவியையும் அழைத் துக்கொண்டு வருமாறு ஆலோசகர் கூறினார். ஆனால் மனைவி வரமறுக்கிறாள் என்று கூறிவிட்டார். இருந்தாலும் மூன்று மாதங்களாக மனைவியில்லாமல் குடும்ப ஆலோசகரிடம் அவரே ஆலோசனை பெற வந்தார். ஒருநாள் குடும்ப ஆலோசக ரிடம் ஓடிவந்த கணவன் ஆலோசகரை நோக்கி இனிமேல் மனைவி வரவேண்டிய அவசியம் இல்லை. என்னுடன் உறவாகிவிட்டாள்" என்று சந்தோஷத்தோடு கூறினார். இங்கே என்ன நடந்துள்ளது? 7 வருடமாக எந்தவித உட்லுறவும் கொள்ளாமலிருந்த மனைவி அன்று வேலைவிட்டுச் சென்ற கணவனை வீட்டில் வழக்கத்துக்கு மாறாக அன்போடு வரவேற்று உபசரித்தார். கணவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி மாற்றிவிட்டாயே என்று மனைவியிடம் கேட்டபோது மனைவி தனது மனநிலையைக் கூறினாளாம். “எமது குடும்ப வாழ்வில் நீங்கள் குடித்துவிட்டு வந்து என்னுடன் உடலுறவுக்கு வருமாறு அழைக்கும்போது எனது அடிமன ஞாபகம் வரும். எனக்கு உங்களில் வெறுப்புணர்வுதான் வரும். அதனாலே தான் 7 வருடமாக நான் உடலுறவுக்குச் சம்மதிக்கவில்லை. விவாகரத்துச் செய்தால் நன்றாயிருக்குமென நினைத்து நாள்தோறும் வேதனைப்படுவேன். இப்போது மூன்று மாதங்களாக உங்களது நடத்தையைக் கவனித்தேன். உங்களில் ஒரு மாற்றத்தைக் கண்டேன். ஆரம்பத்தில் அதை நான் நம்பவில்லை. என்னை ஏமாற்ற நடிக்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் காலப்போக்கில் உண்மையிலேயே உங்களில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். என்மீது உண்மையான அன்பு உங்களுக்கு இருப்பதைக் கண்டேன். அதனாலேயே இன்று உங்களை அன்புடன் உபசரித்தேன்" என்று கூறினாளாம்.
பார்த்தீர்களா ஒருவருடைய நடமாட்டம், நடத்தை மற்றவரை மாற்றியமைக் கிறதல்லவா? அதேபோன்று கணவனின் நடமாட்டம் கெடுவதற்கு மனைவியும் பொறுப்பல்லவா?

Page 21
26 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
10. கணவன், மனைவி இருவரும் வேறுபட்ட இருவராகும்
கணவனும், மனைவியும் வேறுபட்ட இருவராகும். ஒருவரைப்போல் எல்லாவற்றிலும் 100:100 வீதம் முழுமையாகச் சமமானவர் இவ்வுலகில் இல்லை. சில குணங்களில் இருவரும் சமமானவர்கள். மதம், பெறுமதி போன்றவை ஒன்றாக இருப்பினும் நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். வேறுபட்ட இருவர் ஒன்றாகச் சேர்ந்து வாழும்போது எப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.
ஒருவர் உதவிகேட்டு பிச்சைகேட்டு வீட்டுக்கு வரும்போது ஒருவர் உடனடியாக உதவவேண்டும் என எண்ணலாம். மற்றவர் வந்தவரைத் தேடிப் பார்த்து அவருக்கு என்ன குறை என்பதை விபரமாக அறிந்தபின் உதவலாம் என எண்ணலாம். - -
கோயிலுக்குச் செல்லும்போது மனிதரில் இறைவனைக்கான வேண்டுமென்று ஒருவர் கூறலாம். மற்றவர் கோயிலுக்குச் சென்று கடமைகளை முடிப்பதில் இறைவனைக் காண வேண்டும் எனக்கூறலாம். இங்கு மதம் பற்றி இருவரிடமும் உள்ள எண்ணமும் வித்தியாசமாக உள்ளது. இருவரும் ஒரே மதத்தவராக இருந்தாலும் எண்ணங்களில் மாற்றம் இருக்கலாம்.
ஒருவர் மற்றவரைப் புரியத்தன்னை அறிய வேண்டும். எனது எண்ணம் எப்படிப்பட்டது. எனது மனதைக் கஷ்டப்படுத்தும் வேதனை, பயம், ஆசை, சந்தோஷம், எதிர்பார்ப்பு, பிரச்சினை என்ன என்பதைத் தான் அறிய வேண்டும். சுயஅறிவு ஒவ்வொருவருக்கும் தேவை. திட்டம் போடச் சிலருக்குப் பயம். ஒருவர் மற்றவரது எண்ணத்திலிருந்து வேறுபட்டவராக இருப்பார் என்பது புரிகிறதல்லவா? அதேபோன்று இருவரும் வேறுபட்டவராக இருப்பதால் ஒருவர் மற்றவரை அறிய வேண்டும். அதேபோன்று தன்னைப்பற்றியும் அறிய வேண்டும். கணவன் மனைவி இருவரும் இருவேறுபட்ட இருவர் என்பதைப் புரிய வேண்டும். ஆண், பெண் என்ற விதத்தில் இருவரும் வேறுபட்டவர்கள். இதனால் இருவரும் வேறுபட்ட விதத்தில் நடமாடுவர். நிகழ்ச்சிகளில் செயற்படுவர்.
பெண்களைவிட ஆண்களின் நடமாட்டம் பொதுவாக வேறுபட்டதாக இருக்கும். ஆண்கள் பெரும்பாலும் வீட்டுக்கு வெளியிலுள்ள செயற்பாட்டில் இறங்கவே விரும்புவர். வெளியே செல்ல ஆசைப்படுவர். எதற்கும் பயமில்லாதவாறு உள்ளாகுவர். ஆபத்திலும் சிக்குவர்.
பெண்கள் பெரும்பாலும் பெறுவதற்கு விரும்புவர். அன்பைப்பெற அதிகம் ஆசைப்படுவர். தமது வாழ்வில் உள்ளதைப் பாதுகாத்துக்கொள்ள விரும்புவர். இயற்கையாக இருப்பதைப் பாதுகாக்கப் பழக்கப்பட்டவர்கள். உயிரைத் தனது வயிற்றில் பாதுகாத்து பெற்றெடுப்பர். மதத்தையும் அதிகமாகக் கடைப்பிடிக்க

கணவனி மனைவி இருவரும் வேறுபட்ட இருவராகும். 27
விரும்புவர். வெளிப்படையாகப் பயிற்சி செய்து ம்தத்தை அனுசரிக்க ஆசைப்படுவர். அதனால் ஆண்களைவிட பெண்களே கோயில்களில் நிறைந்திருப்பதைக் காணலாம். மேலும் சுயாதீனமாக இருக்கவிரும்புவர். பயம், துக்கம் போன்ற உணர்வுகளை அதிகம் ஆண்களைவிட வெளிப்படுத்துவர். மேலும் தங்கிவாழ ஆசைப்படுவர். பாதுகாப்புணர்வைப்பெற அன்பைப்பெற அதிகம் ஆசைப்படுவர்.
ஆண் எதிலும் தர்க்கரீதியாகவே புரிந்துகொள்வார். காரணம் தேடிச் சிந்திப்பார். இதயத்தைவிட அதிகம் புத்தியைப் பாவிப்பார். பெண் பெரும்ப்ாலும் உணர்வுக்குட்பட்டவளாகச் செயற்படக் கூடியவள். உணர்ச்சிவசப்பட்டு விடுவாள். இறந்த வீட்டில் அழுதுவிடுவாள். மேலும் எதிலும் பெரிய விளக்கமில்லாது உணர்வுக்குட்பட்டே செயற்படுவாள். பெண்ணுக்கு மெஞ்ஞானம் ஆணைவிட அதிகமாக இருக்கும். காரணம் காட்ட முடியாதிருந்தாலும் உள்ளுணர்வில் புரிந்துவிடுவாள்.
ஆண்கள் பெரிய விடயங்களை அதிகம் பற்றிக்கொண்டு செயற்படுவர். உலக சமாதானம், நாட்டுப்பிரச்சினை போன்ற பெரிய தலைப்புகளைப்பற்றியே சிந்திப்பர். பெண்கள் நபர்களையே பற்றிக்கொண்டு செயற்பட விரும்புவர். மனிதரது துக்கம், வேதனை பற்றி அதிகம் சிந்திப்பர். மற்றவர் துக்கப்படுத்தினாரா என்று சிந்திப்பதை விடுத்து எனது மனம் புண்பட்டுவிட்டதே என்று சிந்திப்பாள் பெண். ஏதாவது ஒரு உற்சவத்துக்கு சென்றால் அங்குள்ள சிறு சிறு விடயங்களிலும் கவனம் செலுத்துவாள் பெண். உடையைப்பற்றியும் அதிலுள்ள நிறத்தைப்பற்றியும் கவனம் செலுத்துவாள். இதனாலேயே காரியதரிசியாகக் காரியாலயங்களில் பெண்களை நியமிக்கின்றனர். பெண் பெரும்பாலும் நிபந்தனை போடாது அன்புசெய்வாள். ஆண் ஏதாவது கட்டுப்பாடு விதித்தே அன்பு செய்வான்.
ஆண்கள் வேகமாக செயற்படுவர். பின்பு உற்சாகம் குறையலாம். பெண்கள் அன்பை வெளியில் வெளிப்படுத்த ஆசைப்படுவர். நீண்ட காலம் தொடர்ந்து அன்பு செலுத்த ஆசைப்படுவர். ஆண்களைப்போல் சரீர தேவைக்கு மட்டும் அன்பைக் கட்டுப்படுத்தமாட்டாள். ஆண் அன்பையும், பாலுறவையும் வேறுபடுத்திப் பார்ப்பான். மனம் வேதனையான நாட்களில் பாலுறவைப் பெண் விரும்பமாட்டாள். ஆண் அப்படிப்பட்ட நாட்களிலும் பாலுறவை விரும்புவான். பெண் நபர்களில் கரிசனை கொள்வதால் தாதி போன்ற தொழிலுக்குப் பெரும்பாலும் பெண்கள் பொருத்தமானவர்கள். சிறிய பிள்ளைகளுக்குப் படிப்பிப் பதற்கு பெண்கள் பெரும்பாலும் பொருத்தமானவர்கள்.
தனக்குக் கிடைக்கும் அன்பில் ஆண்கள் விசுவாசம் கொள்வர். ஆனால் என்னை அன்பு செய்கிறாரா என்பதை பெண் அடிக்கடி சோதித்துப் பார்ப்பாள். பாதுகாப்புணர்வு குறைவாக பெண்ணுக்கிருப்பதாலேயே அவ்வாறு செய்கிறாள். இவ்வாறு வேறுபட்ட சுபாவங்களைக்கொண்ட இருவர் ஒன்றாகச் செயற் படும்போது ஒருவர் மற்றவரை முழுமைப்படுத்துகின்றார். எல்லா ஆண்களிலும்

Page 22
28 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
பெண்களின் சுபாவமும், பெண்களில் ஆண்களின் சுபாவமும் உண்டு. ஆண்கள் சில குணங்களிலும் பெண்கள் சில குணங்களிலும் மேலோங்கி நிற்பர்.
இங்கே சிறிய பகுதி குணமாகும். இந்த சுபாவம் இரண்டும் சேரும்போது முழுமை பெறுகஃறோம் . பெண் குனம் ஆணில் இருப்பதால் ஆணைப்புரிந்துகொள்ள முடிகிறது. ஆண்குணம் பெண்ணில் இருப்பதால் பெண்ணைப்புரிந்துகொள்ள முடிகிறது. தம்மை முழுமையாக்க ஒவ்வொருவருக்குள்ளும் ஆசையுண்டு. ஆகவே ஒருவர் மற்றவரை முழுமையாக்குகிறார்.
வேறுபட்ட இருவர் ஒன்றாக வாழும்போது விட்டுக்கொடுத்து, புரிந்துகொண்டு வாழப்பழகுதல் வேண்டும். வேறுபாடுள்ள மற்றவரையும் ஈய்ந்து கொடுத்து ஏற்றுக்கொள்ளக்கூடிய சுபாவம் தேவை. "நான் சொன்னால் சொன்னதுதான்” என்று விடாப்பிடியாக நிற்போர் விவாக வாழ்வுக்குப் பொருத்தமில்லாதவர்கள். மனமுதிர்ச்சி அடைந்த ஒருவர் மற்றவரோடு ஈய்ந்துகொடுத்து விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழ முற்படுவார்.
ମୁଁ ଖୁଁ ଖୁଁ

11. மனமுதிர்ச்சி திருமண வாழ்வுக்குத் தேவை
சரீரத்தில் வளர்ந்து முதிர்ந்தாலும் மனமுதிர்ச்சி பெறவில்லையேல் குடும்ப வாழ்வில் பல பிரச்சினை உருவாக இடமுண்டு. மனமுதிர்ச்சி பெற்றவரில் பின்வரும் குணங்களைக் காண முடியும்.
1. யதார்த்தத்தை ஏற்கக்கூடிய மனநிலை இருக்கும். தன்னைப்பற்றி மற்றவரைப்பற்றி, சூழலைப்பற்றி, பெற்றோரைப்பற்றிய உண்மை நிலையை ஏற்கக்கூடியவராக இருப்பர். தான் கறுப்பா, சிவப்பா?, உயரமா, கட்டையா? எந்த நிலையோ அதை அப்படியே ஏற்கக்கூடிய மனப்பக்குவம் இருக்கும். தனது உயரம் 5 அடியானால் 7 அடி என்று கூறத்தேவையில்லை. சூரியனில் இருந்து தூரமாகத் தூரமாக எமது நிழல் நீளமாகிக்கொண்டிருக்கும். ஆகவே மனமுதிர்ச்சி பெற்றவர் யதார்த்தத்தை அப்படியே ஏற்பார். யதார்த்தத்தில் இருந்து தூரமாகிப் போக மாட்டார். எமது நிழல் எமது உருவம் அல்லவே. இறைவனை நெருங்கும் அளவுக்கு யதார்த்தத்திற்கு முகம் கொடுப்போம். நான் யதார்த்தத்தை அறிந்து செயற்படும்போது மற்றவர் மாறத் தொடங்குவர். சிறுவர்கள் யதார்த்தத்தை ஏற்பதில்லை. அதனால் தமது சூழலை மாற்ற முயலுவர். ஒருநாள் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பதற்காகத் தபாலகம் சென்றார் ஒரு மாணவி. அங்கு தபாலதிபர் விண்ணப்பப்படிவத்தில் நிறம் கறுப்பு என எழுதிவிட்டார். இதனைப் பொறுக்காத மாணவி இனிமேல் நான் தபால் கந் தோருக்குப் போக மாட்டேண் என்றாளர் . இங்கு மனமுதிர்ச்சியடையவில்லை என்பது புரிகிறது. தனது நிறம் கறுப்பானால் யதார்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய மனவளர்ச்சி தேவை.
2. மற்றவரில் மாற்ற முடியாத பழக்கங்கள் இருக்கலாம். மனமுதிர்ச்சி யடைந்தவராலே அவருக்கு உதவ முடியும். மனமுதிர்ச்சிபெற்றவர் தன்னை மாற்றினால் மற்றவர் மாறுவார் என்று கூறுவார். மற்றவரால் வரும் கலக்கத்தைத் தாங்கிக்கொள்வார். மற்றவர் மாறாதவராக இருந்தாலும் அவருடன் சேர்ந்து வேலை செய்யக்கூடியவராக இருந்தால் மனமுதிர்ச்சி பெற்றவர் எனலாம். ஒருவர் இருக்கும் நிலையில் அவரை ஏற்றுக்கொண்டாலேயே அவரை மாற்ற உதவ முடியும். மனமுதிர்ச்சி பெற்றவர் மற்றவரை இருக்கும் நிலையிலே ஏற்றுக் கொள்வார். சில குணங்களை மாற்றலாம். சில குணங்களை மாற்ற முடியாது. ஆகவே மற்றவரை அவர் இருக்கும் நிலையில் ஏற்பது நன்று. நீ மாறினால் மட்டுமே சேர்ந்து வாழ்வேன் என்பது மனமுதிர்ச்சிக்குறைவை எடுத்துக் காட்டுவ தாகும். மற்றவர் மாறிக்கொண்டு வரும்பொழுது அதைப்பாராட்டி, அவரால் ஏற்படும் வேதனையைச் சகித்துக்கொண்டு மனமுதிர்ச்சி பெற்றவர் செயற்படுவார்.

Page 23
30 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
3. மனமுதிர்ச்சி பெற்றவரிடம் பாதுகாப்புணர்வுண்டு. எந்த நேரமும் பாதுகாப்புணர்வில்லாது பயந்து கொண்டிருந்தால் அவர் மனமுதிர்ச்சி பெற்றவரல்ல. தொழில் செய்யுமிடத்தில், வீட்டில் மற்றவர்கள்மீது விசுவாசம் வைத்து நடக்கக்கூடியவராக மனமுதிர்ச்சி பெற்றவர் இருப்பார். எவரையும் நம்ப முடியவில்லையென்றால் அதற்கான காரணம் என்னிடம் இருக்கவேண்டும். 4. சில மூடக்கொள்கைகளை எமது மனதில் பதித்துள்ளோம். குலத்தை முன்கொண்டு, இனத்தை முன்கொண்டு, மொழியை முன்கொண்டு, அந்தஸ்தை முன்கொண்டு சில எண்ணங்கள் எனது மனதில் பதிந்திருக்கும். ஒரு குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களை அருகில் இருந்த வீட்டுப் பிள்ளைகளுடன் சேரவிடவில்லை. இவர்கள் தாழந்தவர்கள் என்று கூறிப் பெற்றோர் தடுத்தனர். இப்படி வளர்ந்த பிள்ளைகள் திருமணம் முடித்து மூன்று பேருடைய திருமண வாழ்விலும் மணமுறிவு ஏற்பட்டுவிட்டது. காரணம் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணத்தோடு திருமண வாழ்வு வாழும்போது கணவனை, மனைவியைத் தாழ்த்தியே எண்ணுவர். மற்றவரை மதிப்பதில்லை. இது மனமுதிர்ச்சி நிலையல்ல.
5. அன்பு செய்யவும், அன்பு செய்யப்படவும் கூடியவராக மனமுதிர்ச்சி யடைந்தவர் இருப்பார். சிலர் மற்றவரை அடிமைப்படுத்திச் சுதந்திரம் இல்லாது செயற்படுவர். மற்றவருக்குச் சுதந்திரம் கொடுப்பது எனது சுயாதீன நிலைக்குக் களங்கம் என நினைப்பர். இது மனமுதிர்ச்சியடையாத நிலையைக் காட்டுகின்றது. மனமுதிர்ச்சியடைந்தவர் மற்றவருக்கு உதவி செய்தாலும் அவரை நிர்வகிக்க எண்ணமாட்டார். சிலர் சிறு உதவியைச் செய்து மற்றவரை நிர்வகிக்கப் பார்ப்பர். இது மனமுதிர்ச்சி நிலையல்ல. மனமுதிர்ச்சி பெற்றவர் உதவி செய்யவும். உதவியைப் பெறவும் முன்வருவர். மனமுதிர்ச்சி பெறாதவர் உதவியைப் பெற விரும்பமாட்டார்.
6. மனமுதிர்ச்சி பெற்றவர் உடலுறவில் திருப்தியைக் கொடுக்கவும், பெறவும் ஆயத்தமாக இருப்பார். தனது திருப்தியை மட்டும் மனதில் கொண்டு செயற்பட மாட்டார்.
7. தனது உணர்வுகளை அடக்கி வைக்காது உரியவிதத்தில் வெளிப்படுத்தக் கூடியவராக மனவளர்ச்சி பெற்றவர் இருப்பார். உணர்வு என்பது நல்லது கெட்டது என்று சொல்வதற்கில்லை. அதை உரிய விதத்தில் வெளிப்படுத்த வேண்டும். சிறிய நிகழ்ச்சிகளிலும், பெரிய நிகழ்ச்சிகளிலும் ஒரே விதத்தில் உணர்வை வெளிப்படுத்தாது நிகழ்ச்சிக்கேற்ப வெளிப்படுத்தக் கூடியவராக இருந்தால் அவர் மனமுதிர்ச்சி பெற்றவராகும். சிறிய நிகழ்ச்சிக்கும் அழுது, பெரிய நிகழ்ச்சிக்கு அதேபோல் அழுதால், சிறிய நிகழ்ச்சிக்கும் பெரிதாகக் கோபித்து, பெரிய நிகழ்ச்சியிலும் அதேவிதத்தில் கோபித்தால் அவர் மனமுதிர்ச்சி பெறவில்லை எனலாம்.
8. எனது உறுதிப்பாடு இதுதான். மற்றவரது உறவு உடைந்துவிடுமே

மனமுதிர்ச்சி திருமண வாழ்வுக்குத் தேவை 31
என்று பயப்படாது தனது கருத்தை வெளிப்படுத்தக்கூடியவராக மனமுதிர்ச்சி யடைந்தவர் இருப்பார்.
9. தன்னம்பிக்கை மனமுதிர்ச்சி பெற்றவரில் இருக்கும். என்னிடம் வல்லமை, திறமையுண்டு. என்னால் எனது பிரச்சினைக்கு முகம்கொடுக்க முடியும் என எண்ணுவர். முடியாத நிலையை அளவுக்கு அதிகமாக எண்ணுவதில்லை. பிரச்சினையின் முன்னிலையில் அதைச் சவாலாக எடுக்காது, முகம்கொடுக்க முடியாதிருந்தால் மனமுதிர்வு இல்லை எனலாம்.
10. மனமுதிர்ச்சி அடைந்த ஒருவர் வெளிநிலையில் நின்று தீர்மானம் எடுக்கமாட்டார். இது நன்மை என்று நன்றாகத் தெரிந்தால் தீர்மானம் எடுப்பார். 11. அதேபோன்று மனமுதிர்ச்சி பெற்றவர் தனது வாழ்வின் சுக்கானை மற்றவரிடம் கொடுப்பதில்லை. வீட்டில், காரியாலயத்தில் இருவர் ஏதாவது கூறினால் கலவரப்பட்டு செயற்படும்போது எனது சுக்கானை மற்றவரிடம் கொடுத்து விட்டேன் என்பது அர்த்தம். கடைக்குச் சென்றதும் எனக்கு விருப்பமான விதத்தில் உடுப்பெடுக்காது கடைக்காரன் அழகானது என்று கூறியதால் எடுத்து வந்தால் எனது சுக்கானை அவரிடம் கொடுத்துவிட்டேன் என்பது அர்த்தம்.
12. மற்றவரோடு உறவை ஏற்படுத்தத் தெரிந்தவராக மனமுதிர்ச்சி பெற்றவர் இருப்பார். மற்றவரை ஒரு பொருளாகப் பாவித்துத் தனது குறிக்கோள்ை நிறைவேற்ற மற்றவர் ஓர் உதவி என்று நினைக்க மாட்டார். சந்தர்ப்பத்துக்கேற்ப விட்டுக்கொடுத்து ஈய்ந்து கொடுக்கக்கூடியவராக இருப்பார். சந்தர்ப்பத்துக்கேற்ப தன்னை மாற்றி மற்றவரை ஏமாற்றாது தனது நிலைப்பாட்டைத் தெரியப்படுத்தக் கூடியவராக இருப்பார்,
13. மற்றவர்கள் அவரை நம்பும் விதத்தில் மனமுதிர்ச்சி பெற்றவர் நடமாடு வார். யதார்த்தத்துக்கேற்ப விசுவாசத்துடன் இந்த நேரத்துக்கேற்ப செயற்படக் கூடியவராக இருப்பார்.
14. சிலர் எந்நேரமும் கலக்கத்திலே இருப்பர். குடும்பத்தில், காரியாலயத்தில் மற்றவர்கள் எதிர்பார்ப்பதை என்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்று கலங்கியவாறு இருப்பர். முடியாது என்று கூற முடியாதவர்களாக இருப்பர். முடிந்தால் ஆம் என்றும், முடியாவிட்டால் முடியாது என்றும் கூறக்கூடியவராக மனமுதிர்ச்சியடைந்தவர் இருப்பார்.
15. அன்றாடம் எமது வாழ்வின் செயல்களில் சமநிலை இருக்க வேண்டும். உண்பது, குடிப்பது, தூங்குவது போன்றவற்றில் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும். ஆனால் அளவுக்கதிகமாக உண்பது, தூங்குவது மனமுதிர்ச்சியைக் காட்டாது. எதையாவது செய்ததும் எந்நேரமும் குற்ற உணர்வு இருந்தால் அவர் மனமுதிர்ச்சி பெறவில்லை எனலாம்.
16. தன்னைப்பற்றிய சுய அறிவு மனமுதிர்ச்சி பெற்றவரிடம் உண்டு. தனது திறமை, தனது முடியாத தன்மை பற்றியும் தனது உடல்நிலை பற்றியும் அறிவு இருக்கும்.
17. பொறுப்பைப்பாரமெடுக்கும் திறமை மனமுதிர்ச்சி பெற்றவரிடம்

Page 24
32 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
உண்டு. ‘என்ன செய்ய எப்படியாவது இழுத்துச் சுமக்கத்தானே வேண்டும்" என்ற மனநிலை மனமுதிர்ச்சியைக் காட்டவில்லை.
18. தனது ஆளுமையின் ஒருபகுதியாக தனது மனச்சாட்சி மனமுதிர்ச்சி பெற்றவரில் இருக்கும். சிலரது மனச்சாட்சி எப்போதும் வெளியில் இருக்கும். அதாவது மற்றவர் கூறியதும் கலங்குவர்.
19. மனமுதிாச்சியடைந்தவர் தனக்காக மட்டுமன்றித் தனது குடும்பத்துக்காக மட்டுமன்றி மற்றவர்களுக்காகவும் வாழ முயலுவர்.
20. எமது வாழ்வு பெறுமதி வாய்ந்தது. வாழும் அளவுக்கு அதன் பெறுமதி கூடுகிறது. இதனை நாமே உருவாக்க வேண்டும். நாம் நன்றாக வாழ விரும்ப வேண்டும். வாழ்வு பெறுமதி வாய்ந்தது என்று வாழ்கிறோமா? அல்லது ஏனோ தானோ ஸ்ன்று வாழ்கிறோமா? மனமுதிர்ச்சி பெற்றவர் வாழ்வை வாழ விரும்புவார்.
ஆகவே மனமுதிர்ச்சி என்பது வயதில் கூடியவர்கள் என்ற அர்த்தமில்லை என்பது புரிகிறதல்லவா? எனது முதிர்ச்சிநிலை பல நிலையிலும் இருக்க வேண்டும். சரீர, மன, புத்தி, ஆன்மீகம் போன்ற துறைகளில் முதிர்ச்சியடைதல் வேண்டும்.
 

33
12. உடலுறவு
இன்று உடலுறவு என்ற சொல்லைப் பாவிக்கும்போது சமுதாயத்தில் மிகவும் கேவலமான ஒன்றாகவே எண்ணுகிறோம். பலர் அதைப்பற்றிக் கதைப்ப தற்கும், எழுதுவதற்கும் வெட்கப்படுவர். இதைப் பசாசு என்று எண்ணுவதும், இதை கடவுள் என்று எண்ணுவதும் தவறாகும்.
உடலுறவு இயற்கையின் சனப்பெருக்கத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. அடுத்தது கணவன், மனைவி தமது அன்பைச் சரீரம், மனத்தின் மூலம் வெளிப்படுத்தும் வழியாகும். இந்த இரண்டு குறிக்கோளும் உடலுறவில் நிறைவேறுகிறது எனலாம்.
சிலர் இவ்விரு குறிக்கோளில் ஒன்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து மற்ற தைக் குறைவாக நினைப்பர். பிள்ளை என்பது இருவரது அன்பின் வெளிப்பாடே. திருமணத்துக்கு முன் இருந்த உறவைவிட இன்று உறவை வளர்க்கச் சரீரத்தைப் பயன்படுத்துகின்றனர்.
வார்த்தை இல்லாது ஸ்பரிசத்தின் மூலம் அன்பை வெளிப்படுத்த முடியும். இருவரது தொடர்பையும் வளர்க்க உடலுறவு பயன்படுகிறது. உடலுறவில் ஒரு சரீரம் மட்டுமல்ல இரு சரீரமும் அன்பைப் பரிமாறுகின்றது. இல்லையேல் சடலத்துடன் உறவுகொள்ளலாமே. அது நடப்பதில்லை ஏன்? ஒருவர் மற்றவருக்கு மனதால், ஸ்பரிசத்தால் அன்பை வெளிப்படுத்துகின்றார். உடலுறவு என்பது தனது சரீரத்துக்கு அப்பால் சென்று மற்றவரது வாழ்வில் உள்ளாதலாகும். மற்றவருடன் வாழ்வைப் பகிர ஆயத்தப்படுத்துவதாகும்.
உடலுறவில் இரு பக்கங்களுண்டு. எல்லா அழகிலும், வல்லமையிலும் இருபக்கம் உண்டல்லவா? உடலுறவின் மூலம் உயர்வு, விடுதலை ஏற்படுகின்றது. உயர்ந்த அன்பை வல்லமையைப் பெறுவதற்கு மாறாக மறுபக்கத்தில் எனது சுயதிருப்தியை மட்டும் கருத்தில்கொண்டு செயற்படலாம். இப்படிப்பட்ட சந்தர்ப் பத்தில் கணவன், மனைவியை ஒரு பொருளாகப் பாவிக்கிறான். ஆகவே உடலுறவு சுயநலத்துடன் செயற்படுவதா? அல்லது என்னையும் மற்றவரையும் விடுதலை யாக்கப் பயன்படுவதா? என்பது முக்கியமானது.
அன்பு இருவருக்கிடையிலும் இருந்தாலே உடலுறவின் மூலம் அன்பு செய்பவர் தன்னைக்கொடுப்பதாக மாறும். மற்றவர் பொருளாக அல்லாது அன்பை வெளிப்படுத்தும் ஊடகமாக ஒரே திருப்தியை அனுபவிக்க வேண்டும். பொருளாக பாவிக்காதிருந்தால் மற்றவரது விருப்பு, வெறுப்பு, சுதந்திரம், செளக்கியம் ஆகியவற்றிற்கு மதிப்பளிப்பர். இல்லையேல் மற்றவர் இதில் ஈடுபடமாட்டார். உடலுறவில் பரித்தியாகம் இடம்பெறலாம். பலாத்காரம் இடம்பெறக்கூடாது. பலாத்காரம் இடம்பெற்றால் மற்றவர் பொருளாகிவிடுவார். இருவருக்கிடையிலும் கருத்துப்பரிமாற்றம் இடம்பெறவில்லையேல் சுயநலம் ஏற்படத்தொடங்கும். இங்கே இருவருக்குமிடையில் உறவு உடையத்

Page 25
34. மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
தொடங்கும். உடலுறவு சட்டப்படியான தொடர்பு அல்ல. அன்புத் தொடர்பே இதற்கு அவசியமாகிறது.
உடலுறவில் உள்ளாகும்போது ஆண், பெண் இருவருக்குமிடையில் வேறுபாடுகள் ஏற்படுகின்றன. உடலுறவில் ஆண் அதை ஆசை உணர்வாக எண்ணுகின்றான். அதனால் விரைவாக முடிக்க ஆசைப்படுகிறான். ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல. கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.
ஆண் பார்வையால், சிந்தனையால் உடனடியாக உடலுறவுக்கு ஆயத்தமாகி விடுகிறான். சிறு தூண்டுகோலில் அவன் ஆயத்தமாகிவிடுவான். ஆனால் பெண்ணுக்கு நீண்டநேரம் தேவையாகிறது. நேரடியான ஸ்பரிசத்தின் மூலம் உச்சநிலையை அடைகிறாள்.
ஆணினால் அன்பு, விசுவாசம், சமாதானம், பாதுகாப்பை உடலுறவிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடிகிறது. ஆனால் இதைப் பெண்ணால் உடலுறவிலிருந்து வேறுபடுத்த முடிவதில்லை. எல்லாம் ஒன்றித்த நிலை இருக்கும்.
இந்த வேறுபாடுகள் எனது விவாக வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லவா? ஆணுக்கு அதிகநேரம் தேவையில்லை. ஆனால் பெண்ணுக்கு அதிக நேரம் தேவைப்படுகிறது. ஆதலால் பென்னை ஆண் ஆயத்தமாக்க வேண்டும். அன்புணர்வை ஏற்படுத்தி ஸ்பரிசத்தின் மூலம் அவளை ஆயத்தப்படுத்த வேண்டும். அவளது உணர்வை உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல் அவளுக்கு ஆயத்தம் இல்லாது போய்விடும்.
ஆகவே பெண்ணுக்கு நீண்ட ஆயத்தம் உதவி தேவைப்படுகிறது. மனை வியை ஆயத்தமாக்கவில்லையேல் அவள் கீழ்நிலையில் இருப்பாள். இதனால் போகப்போக அவளுக்கு உடலுறவில் விருப்பம் குறையத் தொடங்கும். இருவரும் ஒரே நேரத்தில் திருப்தியை அனுபவிக்கும் நிலைக்கு வர, இதைப்பற்றிய அறிவு தேவைப்படுகிறது.
பகல் முழுவதும் சண்டை, மனக்கசப்பான நிலையில் இருந்துவிட்டு இரவில் உடலுறவுக்கு ஆண் ஆயத்தமாகிவிடலாம். ஆனால் பெண்ணால் அப்படி முடிவ தில்லை. சில பெண்கள் உடலுறவில் கணவனைப்பழிவாங்குவர். இது இருவரது உறவுக்கும் தடையாகலாம்.

35
13. குடும்ப வாழ்வில் ஏற்படும் நடைமுறைப்பிரச்சினைகள்
1. கணவன் மனைவி இருவரும் தமது வாழ்க்கை திருமணத்திலிருந்து ஆரம்பிக்கும்போது முதலிரவிலிருந்து ஓர் பிரச்சினை எழக்கூடும். அதாவது எமது கலாச்சாரத்தில் பெண்ணின் கன்னிமையைச் சோதித்துப்பார்ப்பதற்காக எம்மிடமுள்ள நடைமுறைகள் இருவருக்கிடையிலும் சில வேளைகளில் பிரச்சினை களை தோற்றுவிக்கக்கூடும். முதலிரவில் உடலுறவின் கன்னிமையுள்ள பெண்ணின் சில அடையாளங்களை எதிர்பார்ப்பர். இந்த அடையாளத்தைக் காணாதபோது கணவன் மனைவியைச் சந்தேகிக்கத் தொடங்குவான். பெண்களின் கன்னிமை போன்ற சவ்வு பலவகைப்பட்டது.
() (O) ()
இப்படிப்பலவகை உள்ளன. சிலருக்கு ஈய்ந்து கொடுக்கும் தன்மை வாய்ந்தது. சிலர் தமது சுயதிருப்தியில் ஈடுபட்டதால் திருமணத்தின் முன்பு இது உடைந்திருக்கலாம். எது எப்படியிருப்பினும் பெண்ணின் சரீரத்தில் கன்னிமையைத் தேடியதால் மணம் முறியாது மனதிலேயே கன்னிமை இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். சில பெண்கள் தமது சரீர ரீதியிலான கன்னிமையைப் பாதுகாத்தாலும் அவள் மனதில் வேறு ஆணுக்கு இடம்கொடுத்திருக்கலாமல்லவா? ஆகவே இதை இருவருக்கும் இடையில் ஏற்படும் உறவுக்குத் தடையாக்கிக் கொள்ளலாகாது.
2. பணமும் பல குடும்பங்களில் பிரச்சினையை ஏற்படுத்தும் ஒன்றாகி விடுகிறது. இது எனது பணம். இது எனது பெற்றோர் தந்த பணம் என்ற மன நிலையை விட்டு இது எமது பணம் என்ற மனநிலைக்கு இருவரும் வரவேண்டும். வரவையும் செலவையும் எழுதுவது நன்று. முழுமையான விதத்தில் எழுத முடியாதிருந்தாலும் ஓரளவுக்காவது பொதுவான விதத்தில் எழுதுவது சாலச் சிறந்தது. இதனால் நன்மைகள் உண்டு. எழுதும்போது வருமானத்துக்கு ஏற்ப செலவு செய்யப் பழகலாம். அதேபோன்று எமது வருமானத்தில் சேமிப்புப் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சேமிப்பு இரு வகையாகலாம். ஒன்று மாதாமாதம் வரும் வருமானத்தில் சிறு தொகையைச் சேமிப்பது. மற்றது வீடு கட்ட, அல்லது ஏதாவது முக்கியமான பொருட்களை வாங்க கடன்படலாம். அதனை மாதாமாதம் செலுத்தும்போது அதுவும் சேமிப்பைப் போன்றதே.
3. தனது பெற்றோர் அல்லது மாமா, மாமியால் வரும் பிரச்சினைகளும் உண்டு. திருமணம் முடித்ததும் புதிய தம்பதிகள் தனிமையாகக் குடித்தனம்

Page 26
36 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
நடத்துவதே சாலச்சிறந்தது. ஏனென்றால் புதிதாகத் திருமணம் முடித்ததும் இருவரும் ஒருவருக்கேற்ப மற்றவர் தன்னைப் பக்குவப்படுத்திக்கொள்ளப் பழக வேண்டியுள்ளது. குடும்ப வாழ்வு என்றால் இப்படித்தான் என்று இருவரும் தத்தமது உள்ளத்தில் பல சிந்தனைகளை வைத்துக்கொண்டே திருமணம் முடிப்பர். பெற்றோரைவிட்டு மற்றவரைத் திருமணம் முடித்துக் குடும்ப வாழ்வு வாழ வருவது ஒருவரின் உதவியுடன் மற்றவர் வளரவே. அதன் பொருள் முற்றாகப் பெற்றோரைக் கைகழுவி விடுவது என்பதல்ல. திருமணத்தின் பின் பெற்றோரில் தங்காது, பெற்றோரின் உதவியின்றி கணவன் மன்னவி ஒருவர் மற்றவரின் உதவியுடன் வாழப்பழக வேண்டும்.
பெற்றோர்கள் பிள்ளைகளைத் திருமணம் முடித்து வைத்தாலும் பிள்ளைக ளைக் கைவிட முடியாது கஷ்டப்படுவர். தாய் பிள்ளையின் தொடர்பிலிருந்து பிள்ளையின் பிறப்புடன் தூரமாகிறாள். அதுவரை தனது வயிற்றில் ஆழமான உறவுடன் பிரியாது வாழ்கிறாள். அதன்பின்பு தாய்ப்பாலை நிறுத்தியதும் பிள்ளையிலிருந்து இரண்டாவது பிரிவு ஏற்படுகின்றது. அதன் பின்பு பிள்ளை பாடசாலைக்குப் போகத் தொடங்கியதும் மூன்றாவது பிரிவு ஏற்படத் தொடங்கு கின்றது. நான்காவதாகத் திருமணத்துடன் பிரிவு ஏற்படுகின்றது. திருமணப் பிரிவுடன் பிள்ளை பெற்றோரிலிருந்து முழுமையாக விடுபட்டு சுயாதீனமாக வாழப் பழகுகி றது. இது பெற்றோருக்குக் கடினமானதொன்றாகும்.
பெற்றோருடன் வாழாது வேறாக வாழ்ந்தாலும் பெற்றோர் வேறு வீட்டில் வாழ்ந்த வண்ணம் புதிதாக திருமணம் முடித்த தம்பதியினரை நிர்வகித்துக்கொண்டிருப்பர். தொலைபேசி மூலம், அல்லது அடிக்கடி வீட்டுக்கு வந்து தமது கருத்தைத் திணித்து அவர்கள் சுயாதீனமாகத் தீர்மானமெடுத்து வாழவிடாது நிர்வகிப்பர். இதனால் கணவன் மனைவிக்கிடையில் பிரச்சினைகள் 6Typ6)T(b.
சில பெற்றோர் விசேடமாகக் கணவனை இழந்த விதவைத் தாய் தனது பாதுகாப்புக்காகப் பிள்ளைகளை அளவுக்கதிகமாகத் தன்னில் தங்கப் பண்ணி எல்லா உதவிகளையும் பிள்ளைக்குச் செய்வாள். சரீர உதவி, பண உதவி போன்றவற்றைக் காட்டி பிள்ளையைத் தன்னில் தங்கப் பண்ணுவாள். தாய் இல்லாது வாழ முடியாத அளவுக்கு உதவிகளைச் செய்து தங்கப்பண்ணுவாள்.
மறுபக்கத்தில் பெற்றோரில் தங்கி வாழப்பழகாது சுயாதீனமாக வாழப் பிள்ளைகளும் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் அர்த்தம் பெற்றோரைக் கவனிக்க வேண்டாம் என்பதல்ல, பெற்றோரைக் கவனிப்பது பிள்ளைகளின் பொறுப்பாகும். பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்யும் பெரிய உதவி தம்மில் தங்கிவாழாது சுயாதீனமாகத் தீர்மானம் எடுத்து வாழப்பழக்குவதாகும்.
4. பெற்றோருக்குப் பண உதவி செய்யும்போது அவர்களுக்குச் செலவ ழிக்கும்போது இருவரும் கலந்துரையாடிச் செய்வது நன்று. இதில் ஒருவர் மற்றவரது நிலையைப் புரிந்து கொள்வதும், பொறுமையும் தேவை. மற்றவரது

துடும்ப வாழ்வில் ஏற்படும் நடைமுறைப் பிரச்சினைகள் 37
மனம் நோகாமல் உதவி செய்வது நன்று. ஒழித்துச் செய்வது நல்லதல்ல.
5. பெற்றோரின் ஆசீர்வாதம் இல்லாது திருமணம் முடித்தோர் தமது குடும்பத்தை நல்ல முறையில் கொண்டு செலுத்த மற்றவர்களைவிட அதிகமாகச் சிந்தித்துச் செயலாற்ற வேண்டும்.
6. இருவருக்கிடையிலும் பிரச்சினை ஏற்பட மற்றொரு காரணமும் உண்டு. சிலவேளைகளில் ஒருவருக்கு மற்றவரில் கோபம் ஏற்படலாம். புகழ்ச்சி, வரவேற்பு, அதிகமாக ஒருவருக்கு மற்றவரிடமிருந்து கிடைக்காமல் இருக்கலாம். ஒருவர் மீது மற்றவர் குற்றம் சுமத்துவதே கூடுதலாக இருக்கும். இது எல்லாக் குடும்பங் களிலும் பெரும்பாலும் பொதுவானதே. ஆகவே எந்த நேரமும் ஏச்சும் பேச்சுமே கிடைக்கிறது என்று கலவரப்படவேண்டிய அவசியமில்லை. நெருக்கமில்லாத ஒருவர் மற்றவரை விமர்சனம் பண்ணும்போது தாங்கக்கூடிய வேதனையே ஏற்படும். ஆனால் அன்பு செய்யும், நெருக்கமாகப் பழகும் ஒருவர் பிழையாக விமர்சனம் பண்ணும்போது அதனைத் தாங்க முடிவதில்லை. ஒருவர் மற்றவரைப் புண்படுத்து வது எனது குறிக்கோளல்ல என்று மனதில் நினைத்துக்கொள்ள வேண்டும். மற்றவர் ஏசும்போது அதற்குச் செவிசாய்த்து இதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியுமா இல்லையா என்று சிந்திக்க வேண்டும். என்னைப்பற்றி மற்றவர் ஏன் அப்படிச் சிந்திக்கிறார். ஏன் இப்படி இவருக்கு என்னைத் தெரிகிறது எனச் சிந்திக்க வேண்டும். காலையில் இருந்து மாலை வரை எனது வாழ்வில் மனம் நோகக் கூடியதாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளைச் சேர்த்துக்கொண்டு இருக்கிறேனா? அல்லது காலையில் இருந்து மாலைவரை நடக்கும் புகழ்ச்சி, வரவேற்பு போன்றவற்றை சேர்க்கின்றேனா? இவை இரண்டும் உணர்வுகள். அதாவது கோபம், வேதனை, சந்தோசம் இவை யாவும் உணர்வுகள். உணர்வை வெளிப்படுத்த வேண்டும். நாம் மற்றவரைத் திருத்தும்போது, பிழையைச் சுட்டிக்காட்டும்போது குரல், முகபாவம் போன்றவற்றிலும் உணர்வை வெளிப் படுத்துகின்றோம். நான் கூறுவது கோபத்திலா, ஆத்திரத்திலா, சந்தோசத்திலா என்பது எனது குரல். முகபாவத்தைக் கொண்டு மற்றவருக்குத் தெரிந்துவிடும். உணர்வுகளை அடக்குவதும் பிழை. நடந்த நிகழ்ச்சிக்கேற்ப வெளிப்படுத்த வேண்டும். சிறிய நிகழ்ச்சியிலும் கத்திக் கூறுவது. பெரிய நிகழ்ச்சியிலும் கத்திக்கூறுவதல்ல. கணவன் மனைவி இருவரும் ஒருவர் ஒருவரைக் கீழ்ப்படுத்தி வைப்பதல்ல. இருவரும் சேர்ந்து தலைமைத்துவம் செய்வது தீர்மானம் எடுப்பது நன்று.

Page 27
38 . மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
m ·寅 。 14. கணவன் மனைவி
黄 இருவருக்குமிடையில்
责 责 食 சண்டையேற்படல் கணவன் மனைவிக்கிடையில் சண்டையேற்படும்போது பிரயோசனமான விதத்தில் சண்டை பிடிப்பது எப்படி? விளையாட்டில் சட்டதிட்டங்களுண்டு. சண்டைக்கும் சட்டதிட்டங்களுண்டு. ஒருவர் மற்றவருடன் சண்டை பிடிக்கும்போது கூறும் செய்தி என்னவென்றால் நீ கூறுவதை என்னால் ஏற்க முடியாது என்பதே. ஒருவர் மற்றவரோடு கதைக்காமல் இருந்தால் அதன் அர்த்தம் நீ வாழ்வோர் மத்தியில் இல்லை. இறந்துவிட்டாய் என்பதே. ஆகவே வார்த்தை மூலம் சண்டைபிடிப்பது பிழையில்லை. சண்டை பிடிக்கும்போது இருவரும் மனதில் கொள்ளவேண்டிய சில சட்டதிட்டங்களுண்டு.
1. சண்டை பிடிப்பதாயின் அதற்கு ஒரு தலைப்புத் தேவை. உதாரணமாக மேசையில் இருந்த பாத்திரம் தட்டுப்பட்டு மேசை முழுவதும் நனைந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். ஒழுங்காக அழகாக வைத்திருக்க ஆசையுள்ள மனைவியால் இதைப் பொறுக்க முடியாது. கணவனை ஏசலாம். பாத்திரம் உடைந்த தலைப்புடனேயே சண்டை தொடங்கியது. அத்தலைப்புடன் சண்டை முடிய வேண்டும். அதைவிடுத்து வேறு தலைப்புக்களையும் இச்சந்தர்ப்பத்தில் இழுத்துப் பேசுவது தவறு. அதாவது அன்றும் அப்படித்தான். சென்ற மாதமும் அப்படித்தான் என்று வெவ்வேறு தலைப்புகளிலும் சண்டையை இழுக்காது ஒரு விடயத்தில் முடித்துக்கொள்ள வேண்டும். . - Y
2. சிலர் பழைய கதைகளையே கிண்டிக் கிண்டிச் சண்டை பிடிப்பர். வாகனத்தில் முன்னுக்குப் பார்த்தவாறு வாகனத்தை ஒட்டும் சாரதியுடன் பயணம் செய்ய மற்றவர் விரும்புவர். ஆனால் பின்னோக்கிப் பார்த்தவாறு வாகனத்தைச் சாரதி ஒட்டினால் அந்த வாகனத்தில் பயணம் செய்ய யாரும் விரும்ப மாட்டார்கள். காரணம் வாகனம் மோதிவிடும் என்பதாலேயே. அதேபோன்று திருமணம் முடித்த நாளில் இருந்து நடந்தவைகளை மீண்டும் மீண்டும் அசைபோடுபவர்கள் எதிர் காலத்தில் வாழ்வதில்லை. கடந்த காலத்திலேயே வாழ்கிறார்கள். நிகழ்காலத் திலேயே சண்டை பிடிக்க வேண்டும்.
3. பெற்றோரை மாமா, மாமி சகோதரரை இழுத்துப் பேச வேண்டாம். நீயும் அப்பிடித்தான். உனது அம்மாவும் அப்பிடித்தான். உங்கள் பரம்பரையே ஆப்பிடித்தான் என்று ஏசுவது பிழை. அதைவிடுத்து “உங்களுக்கு இன்று எமது அம்மாவில் அதிக கோபம் வந்துவிட்டது தானே” என்று கேட்கலாம்.

கணவனி மனைவி இருவருக்கிடையில் சனிடையேற்படல் 39
4. சண்டையை அந்த நாளில், அந்தச் சந்தர்ப்பத்துடன் முடித்து விடுவது நன்று. சண்டையை முன்னோக்கி இழுத்துச் சென்று நாளுக்குநாள் மனம் உடைவது பிழை.
5. சிலவேளைகளில் சண்டை பிடிக்கும்போது ஒருவர் மற்றவரை அவமானப்படுத்தும் விதத்தில் சண்டைபிடிப்பர். ஒருவர் மற்றவரில் கண்ட குறைபாட்டை, அல்லது சரீரத்தில் கண்ட குறைபாட்டை அல்லது செய்த செயலைக்கூறி வெட்கப்படுத்துவர். மற்றவரில் நீங்கள் மட்டும் கண்டதை வைத்து வெட்கப்படுத்துவது தவறு.
6. சண்டைபிடிக்கும் அறையுடன் சண்டை முடிய வேண்டும். அறையிலே சண்டை தொடங்கி, முன்சாலையில் நீண்டு, சிலவேளைகளில் வீதியிலும் வந்து சத்தமாக ஏசுவர். இது பிழை. உலகத்தவருக்கு எமது சண்டையைக் காட்டுவது பிழை.
7. தொழிலுக்குச் செல்லும் மனைவியர் தமது வேதனைகளைக் காரியா லயத்தில் மற்றவருக்குக் கூறுவர். இது பிழை. விசேட பயிற்சிபெற்ற ஆலோசகரிடம் கூறுவது சிறந்தது. ஒரு பெண் கணவனுடன் சண்டைபிடித்து வேதனையுடன் காரியாலயம் சென்றாள். அன்று தனது வேதனையைச் சக ஊழியருக்குக் கூறினாள். அவர் உணவு இடைவேளையில் ரொபி ஒன்றைக்கொண்டு வந்து கொடுத்தார். அவளது வேதனைக்கு ரொபி போதுமானதாக இருக்கவில்லை. அதன்பின் தனது மேலதிகாரியிடம் சொன்னாள். அவளது வேதனையைக் கேட்டுவிட்டு மேலதிகாரி அவளிடம் "இண்டைக்கு அரைநாள் லீவு போட்டுவிட்டு படம் பார்க்கப் போவோம் வாருங்கள்” என்றார். பார்த்தீர்களா பயிற்றப்பட்ட ஆலோசகரிடம் பிரச்சினையைக் கூறாததால் ஏற்படும் விளைவை.
8. பொறாமையும், சந்தேகமும், விசுவாசக் குறைவும் இளம் குடும்பங்க ளிலும், வயது வந்த குடும்பங்களிலும் ஏற்படலாம். அன்பு செய்யும்போது பொறாமை வரலாம். தான் அன்பு செய்பவரைத் தனக்குள் மட்டும் கட்டுப்படுத்தி வைக்கப் பார்ப்பர். இது இளங்குடும்ப பெண்களில் இயற்கையாக உள்ளது. ஒருவர் மற்றவரில் சந்தேகப்படுவது சந்தேகப்படும் விதத்தில் நடமாடுவதால் அல்ல. எனக்குக் கஷ்டம் வருமா? என்ற பயம் ஏற்படும்போதே. சந்தேகம் வந்தால் அன்றே வசதியான நேரத்தை ஒதுக்கி இருவரும் கலந்துரையாட வேண்டும். பெரும்பாலும் ஆணைவிட பெண்ணுக்குப் பாதுகாப்புணர்வு குறைவு. பாதுகாப் புணர்வு குறைந்ததும் அவர் கூடாதவர் அல்லர். மற்றவருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படும் விதத்தில் நடமாட வேண்டும்.
அதேபோன்று இருவருக்கும் மனந்திறந்த நிலை இருக்க வேண்டும். ஒருவர் மனந்திறந்த நிலை குறைந்ததும் அவரில் மற்றவருக்குச் சந்தேகம் ஏற்படும். சந்தேகப்பட்டவை உண்மையில்லாதிருக்கலாம்.
9. மாதவிடாய் நின்றதும், அல்லது கற்பப்பையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றியதும் பெண்ணுக்குப் பாதுகாப்புணர்வு குறையலாம். நான்

Page 28
4O மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
இனிமேல் பிரயோசனமில்லாத ஒருவர் என்று நினைக்கலாம். இதனால் சரீர, மனத்தாக்கம் ஏற்படலாம். நான் முன்புபோல் கவர்ச்சியான ஒருத்தியல்ல. உடலுறவிலும் முன்புபோல் இப்போ கவர்ச்சியில்லை. முன்புபோல் கணவன் எனக்கு அன்பில்லை என்று கணவனைச் சந்தேகிக்கலாம்.
ஆகவே விவாக வாழ்வைச் சமநிலைக்குக் கொண்டுவர வேண்டும். கணவன் செய்யும் காரியாலயங்களில் மனைவி உற்சாகம் எடுப்பதில்லை. அதே போன்று மனைவி செய்யும் காரியங்களில் கணவன் உற்சாகம் எடுப்பதில்லை. கணவன் வியாபாரியானால், வியாபார விடயங்கள் எதுவுமே மனைவிக்குக் கூறுவதில்லை. இதனால் மனைவிக்கு ஒன்றுமே தெரியாதிருக்கலாம். இருவரும் கலந்துரையாடுவதில்லை. இருவரும் சேர்ந்து செய்யும் வேலை வீட்டில் அல்லது வெளியில் இருக்க வேண்டும். உதாரணமாக, இருவரும் சேர்ந்து கோயிலுக்குப் போவது, இறைவனை வீட்டில் தொழுவது, உணவு உண்பது போன்றவற்றிலாவது இருவரும் சேர்ந்து செய்வது நன்று. இன்று எமது இல்லங்களில் இருவரும் உணவைக் கோப்பையில் போட்டு தொலைக்காட்சியின் முன்சென்று அதைப் பார்த்துக்கொண்டே உணவுண்ணுவர். இருவரும் கலந்துரையாட நேரத்தை ஒதக்குவதில்லை.
ஆகவே இவற்றை மனதில்கொண்டு சண்டை ஏற்பட்டாலும் அதைப் பேசித் தீர்க்கப்பழக வேண்டும்.

41 -
× 责 演 演 15. பெற்றோர் பிள்ளை உறவு பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலுள்ள உறவைப் பற்றிச் சிந்திக்கும்போது இந்த உறவு தொடங்குவது பெற்றோரின் பக்கத்திலிருந்தே என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த உறவு நன்றாக இருக்க வேண்டுமானால் பிள்ளைகளின் மனவளர்ச்சி பற்றிப் பெற்றோருக்கு அறிவு தேவை. சாதாரணமாகப் பிள்ளைகளின் சரீர வளர்ச்சி பற்றி டாக்டரிடம் கேட்டு அறிவைப் பெருக்கிக்கொள்வர் பெற்றோர்கள். ஆனால் மனவளர்ச்சிபற்றிய அறிவையும் தாம் வளர்த்துக்கொள்வது முக்கியம் என்பதைப் பெற்றோர்கள் உணர்வது குறைவாகும்.
பிள்ளையின் மனவளர்ச்சிபற்றி அறிவதற்கு முன்பு நான் என்னைப்பற்றிய கய அறிவை வளர்த்துக்கொள்வது முக்கியம். எனக்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? நான் ஏன் இப்படிச் செயற்படுகின்றேன்? எனது சுபாவம் என்ன? எனது திறய்ைகள் எது? போன்றவற்றில் சுயஅறிவு தேவை. சுயஅறிவை வளர்த்துக்கொண்டவர்கள் மற்றவர்களோடு நல்லதொடர்பை ஏற்படுத்தககூடியவர் d,Gi: di 305iurits6r.
பிள்ளைகளது மனநிலையைப்புரிவது எப்படி? குழந்தை பிறப்பதற்கு 280 நாட்களுக்கு முன் கற்பப்பையுடன் இருக்கும் பொலோப்பியன் நாளத்தில் ஆணின் உயிரணுவும் பெண்ணின் கருவும் சேர்ந்த நேரத்திலிருந்து உயிர் ருவாகத் தொடங்கிவிடுகிறது. பிள்ளைக்கு இந்தக் கணத்திலிருந்து அன்பு தேவைப்படுகிறது. அன்பு என்பது தீர்மானம், அர்ப்பணமாகும். பெற்றோர் பிள்ளைக்காக வாழத் தீர்மானம் எடுக்க வேண்டும்.
பெற்றோருக்குத் தேவைப்படும், பெற்றோரால் ஏற்றுக்கொள்ளப்படும் பிள்ளையாக வயிற்றிலிருந்தே உருவாக வேண்டும். இல்லையேல் பிள்ளையின் மனவளர்ச்சி குறையத் தொடங்கும். எதிர்பாராத நேரத்தில் பிள்ளை உருவாகிவிட்டதே என்று வெறுப்புணர்ச்சிகொண்டால் அது பிள்ளையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே எமது எண்ணத்தை மாற்றி அன்போஇ ஏற்றுக்கொள்ளப்பழக வேண்டும், அதேபோன்று தாயின் மினநிலை பிள்ளையின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். தாய் கவலையாய், வேதனையாய், பயமாய் மனதில் பெரும் கஷ்டப்பட்டால் அது வயிற்றிலிருக்கும் பிள்ளையின் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சிலர் தமது பிள்ளை வெள்ளையாகப் பிறக்கவேண்டும். அல்லது கறுப்பாகப் பிறக்க வேண்டும். அல்லது பெண்ணாக அல்லது ஆண்ாகப் பிறக்கவேண்டும் என எதிர்பார்ப்பர். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாகப் பிறந்தால் பிள்ளையைப் புறக்கணிப்பர். இது தவறு. அதைவிடுத்து பிள்ளை எப்படிப் பிறந்ததோ அந்த நிலையில் பிள்ளையை ஏற்றுக்கொள்ளப்பழக வேண்டும். இன்று அதிகமானோர் தமது வயிற்றிலுள்ள பிள்ளையை கருச்சிதைவு செய்கின்றனர். உயிர் இறைவனுக்குச் சொந்தம். அதை அழிக்கும் உரிமை இறைவனுக்கே சொந்தம். மூன்று கிழமைகளில் குழந்தையின் இதயம் அடிக்கத் தொடங்கும். இதனால்

Page 29
42 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
வயிற்றிலுள்ள குழந்தையின் இதயத் துடிப்பைச் சில கருவிகள் மூலம் பெற்றோர் கேட்கச் செய்கின்றார்கள் சில டாக்டர்கள். அதன்பின் கருவைக்கொலை செய்யும் எண்ணத்தைப் பல பெற்றோர்கள் கைவிட்டும் உள்ளார்கள்.
தாயின் சரீர, மனநிலை பிள்ளைக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் வயிற்றில் குழந்தை உருவாகியதும் தாய் தனது உடல் நிலையையும், மனநிலையையும் கவனத்தில்கொள்ள வேண்டும். சத்துள்ள ஆகாரம், இளைப்பாறுதல் போன்றவற்றைக் கவனிப்பதோடு மனதில் சந்தோசத்தை ஏற்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும். கற்பந்தரிப்பது நோயல்ல. கற்பந்தரித்தபின் வைத்தியரிடம் வைத்திய ஆலோசனைக்காகச் செல்வது நோய் வந்துவிட்டது என்பதாலல்ல. தாயின் சரீர சூழலைக்குழந்தைக்கு ஏற்படுத்திக் கொள்ளவேயாகும். முன்பு வீட்டில் குழந்தை பெறுவர். வீட்டில் நல்ல வசதியிருப்பின் தாதியின் உதவியுடன் வீட்டில் பெறலாம். வைத்தியசாலைக்குச் செல்வது வசதிகள் இருப்பதாலேயே என்ற மனநிலையை ஏற்படுத்துவது முக்கியமானதாகும். பிறந்ததும் இரண்டு நாளில் வீட்டுக்கு வரலாம். நோய் இருந்தால் மட்டும் வைத்தியசாலையில் தங்கவேண்டும். பிரசவத்தைப்பற்றித் தாயிடமுள்ள மனநிலை நல்லதாக இருக்க வேண்டும். இது பெரிய கஷ்டமான ஒன்று. என்னை மரணத்துக்கு உள்ளாக்கும் பிள்ளை என்று தாய் நினைப்பது தவறு. இது இயற்கையானது. இது நோயல்ல என்ற மனநிலையை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும் மனைவியைக் கணவன் தைரியப்படுத்தி ஆயத்தப்படுத்த வேண்டும். வயிற்றில் குழந்தை உருவாகிவிட்டது என்றவுடன் ஆரம்பத்தில் மனைவி சந்தோஷப்பட்டாலும் காலப்போக்கில் இக்குழந்தையை எப்படி நான் பத்து மாதங்களுக்குச் சுமக்கப்போகிறேன்? என்ற பயம் ஏற்படலாம். பிரசவவேதனையை எப்படிச் சகித்துக்கொண்டு குழந்தையைப் பெறப்போகிறேன் என்று கலங்கித் தடுமாறும்போது கணவன் அவளை அன்புகாட்டித் தேற்றி மனதில் தைரியத்தை ஊட்டுவது முக்கியமானதாகும். எல்லாவற்றிலும் மனைவிக்குக் கணவன் உதவி ஒத்தாசை வழங்க வேண்டும்.
சில நாடுகளில் கணவனையும் பிரசவவேளையில் பிரசவ அறையில் இருக்க அனுமதிப்பர். இங்கும் சில பிரத்தியேக வைத்தியசாலைகளில் சில டாக்டர்கள் அனுமதிப்பர். குழந்தை பெற்றெடுப்பது அப்பா அம்மா இருவரது செயலுமாகும் என்பதை மனதில்கொண்டு கணவனும் அதில் பங்கெடுப்பது சாலச்சிறந்தது. சிலர் கணவன் மனைவி உறவைவிட பிள்ளையே முக்கியம் என நினைத்துத் தாய் வீட்டுக்குச் செல்வர். பிறப்புக்காகத் தாய்வீடு செல்லவேண்டிய அவசியமில்லை. கணவன் மனைவி இருவருக்கும் இடையில் தொடர்பை வளர்ப்பது முக்கியமானதாகும். இல்லையேல் கணவனின் மனதில் இக்காலத்தில் என்னைவிட பிள்ளை முக்கியமாகிவிட்டதே என்ற வெறுப்பான மனநிலை ஏற்பட இடமுண்டு. பிள்ளையை வளர்ப்பதில் தமது நேரத்திற்கேற்ப கணவன் மனைவி இருவரும் பங்கெடுக்க வேண்டும். இது மனைவியின் வேலை என்று கணவன் ஒதுங்கி இருப்பது பிழை.

43
16. குழந்தை பிறந்து ஒருவயதுவரை அதன் மனநிலையை நோக்குவோம்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு ஓர் அதிர்ச்சி ஏற்படுகிறது. கற்பப்பையில் குழந்தை இருந்தபோது முழுமையான பாதுகாப்பு இருந்தது. அவசியமான நேரத்தில் அவசியமானவற்றை உறிஞ்சி எடுக்கும் சூழல் குழந்தைக்கு இருந்தது. கற்பப்பையில் இருக்கும்போது இருந்த பாதுகாப்புணர்வு இந்த உலகில் எங்குமே கிடையாது. அதனாலேதான் வளர்ந்தாலும் நாம் கவலை, பாதுகாப்புணர்வு கிடைக்காதபோது நித்திரையில் குறண்டிக்கொண்டுபடுத்திருப்போம். அதாவது கற்பப்பையின் நிலைக்குச் செல்ல உற்சாகம் எடுக்கிறோம்.
குழந்தை பிறக்கும் போது அதற்குப் புதிய அனுபவம் ஏற்படத்தொடங்கு கிறது. தாங்கமுடியாத குளிர், வெளிச்சம் போன்றவற்றால் அது திடுக்கிடும், அழத்தொடங்கும். பிறந்ததும் குழந்தையைச் சிறிது நேரம் தாய் அனைத்து வைத்திருப்பது நன்று. அணைத்ததும் திரும்பவும் பாதுகாப்புணர்வு கிடைக்கிறது. நாள்தோறும் மாறாத அரவணைப்புத்தேவை. சில நாட்களில் நல்ல விதத்தில் அரவணைப்பதும், சில நாட்களில் வெறுப்போடு அரவணைப்பதும் பிழை. முதல் வருடத்தில் தாயின் அரவணைப்பும் தாய்ப்பாலும் குழந்தைக்குத் தேவைப்படுகிறது. தாய்ப்பாலை எப்படிக்கொடுக்கிறேன் என்பதைத் தாய் சிந்திக்க வேண்டும். பாலைக்கொடுக்கும்போது அன்புடன் ஸ்பரிசித்தவாறு, பிள்ளையின் தலையைக் கையால் வாரிக்கொண்டு வரவேற்புடன் கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். இயந்திரம்போல் பால் கொடுப்பது பிள்ளையின் வயிற்றை நிரப்புவது மட்டுமே. அதன் மனவளர்ச்சிக்கு அது எந்தவிதத்திலும் பிரயோசனமில்லாது போகலாம். தாய் இல்லையேல் தாயைப்போல் நெருக்கமாக அன்புசெய்யும் ஒருவர் தேவை. பிள்ளை தனது உணர்வுகளில் வாழும். நாளுக்கு நாள் ஆளை மாற்றுவதும் பிழை. அன்பை வரவேற்பை பிள்ளை தனது உணர்வினால் அறிந்துகொள்கிறது. பிள்லை நித்திரையாய் இருக்கும்போது தாயோ மற்றவரோ சத்தம்போட்டு மற்றவர்களை ஏசும்போது பிள்ளை திடுக்கிட்டு அழும். இதுவும் பிள்ளையின் மனதுக்கு நல்லதல்ல.
சிலர் புத்தகங்களை வாசித்து அதன்படி பிள்ளை வளர்க்க முயல்வர். சில புத்தகங்கள் சரியான முடிவைக்கூறலாம். கருத்து வேற்றுமை ஏற்படலாம். ஆகவே புத்தகத்தில் உள்ளவற்றைப்பார்த்து அப்படியே எல்லாவற்றையும் செய்யவேண்டியதில்லை. நல்லவற்றை மட்டும் சிந்திப்பது நன்று. சிலர் தமது பிள்ளையை வண்டியில் வைத்து, பட்டியால் கட்டி இழுத்துக்கொண்டு செல்வர். இந்த வயதில் பிள்ளைக்கு ஸ்பரிசம் முக்கியம் என்பதைப்பலர் புரிவதில்லை. தாயின் அரவணைப்பு அதிகமாகத் தேவைப்படுகிறது.
பிள்ளையை ஒரு மூலையில் தனிமையில் விளையாட விட்டுவிட்டு

Page 30
44 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
அது அங்கும் இங்கும் நகராது ஏதாவது தடைபோட்டு வைத்துவிட்டு தாய் தனது வேலைகளைச் செய்வாள். இது பிழை. “அளவுக்கு அதிகமானது" என்ற வார்த்தை முதல் வருடத்தில் ஸ்பரிசத்தைப் பொறுத்தவரை குழந்தைக்குப் பொருந்துவ தில்லை. அன்பான ஸ்பரிசம் அளவுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது. ஏசிஏசிப் பிள்ளையின் வேலைகளைச் செய்கின்றேனா? அல்லது அன்பு உணர்வில் பிள்ளைக்கு விளங்கும் விதத்தில் செய்கிறேனா என்பதைச் சிந்தித்துத் தாய் கவனமாக இருப்பது நன்று.
பிள்ளை பிறந்தபின் தான் பிறந்த உலகு விசுவசிக்கக்கூடிய உலகமா? ஏங்கும் உலகமா? அன்பு செய்யும் உலகமா? எனச்சிந்திக்கும். அதாவது விசுவசிக் கக்கூடிய உலகு என்ற உணர்வை சூழல் ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். இல்லையேல் மற்றவரைச் சந்தேகிக்கத் தொடங்கும். மற்றவரை விசுவசிக்காது. சிக்மன் புறொயிட் என்ற உளவியல் அறிஞர் ஆரம்பநிலையில் குழந்தை தனது திருப்தியை வாயில் அனுபவிக்கிறது என்று கூறுகிறார். திருப்தி அனுபவத்தை வாய்மூலம் பெற முயலுகிறது. அடிக்கடி அன்புசெய்ய வாயையே பாவிக்கும். வளர்ந்ததும் சிலர் விரல்குப்புவர். இதற்குக்காரணம் வாய் அனுபவத்தில் அக்காலத்தில் பாதுகாப்புணர்வைப் பெறாததே. தாய் பிள்ளைக்குப் பால்கொடுத்துக் கொண்டிருக்கும்போது வீட்டுக்கு யாராவது வந்தால் சிலர் பிள்ளைக்குப்பால் கொடுப்பதை நிறுத்திவிட்டு வந்தவருடன் கதைத்துக்கொண்டிருப்பர். அது பிழை. வந்தவரை இருக்கும்படி கூறிவிட்டு பிள்ளைக்குப்பால் கொடுத்து முடிக்கவேண்டும். இல்லையேல்பிள்ளையின் மனதில் தாக்கம் வரலாம்.
வேலைக்குச்செல்லும் பெண்கள் தமது பிள்ளைகளை மற்றவர்களிடம் கொடுத்துவிட்டுச்செல்வர். சிலர் வெளிநாடு செல்வர். தாயைப் போன்று அன்பு அரவணைப்பைக் கொடுக்கக்கூடிய ஒரு பெண்ணையே ஒரு வயதுவரை பார்த்துக் கொள்ள நியமிக்கவேண்டும். ஒருபிள்ளையின் நிறம், உயரம் போன்றவை பரம்பரையாய் வரலாம். ஆனால் பிள்ளையின் குணம் விரைவாகக் கோபம் வரும் ஒருவரா? இல்லையா போன்ற குணங்கள் வளரும் சூழலாலேயே ஏற்படுகின்றது. அப்பா கோபக்காரனானால் பிள்ளையும் கோபக்காரனாக இருந்தால் அது பரம்பரையால் வந்ததல்ல. வாழும் சூழலாலேயே ஏற்படுகின்றது. நாம் சண்டைபிடித்தே பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற சூழல் வீட்டில் எந்நேரமும் இருந்தால் இதைப்பார்க்கும் பிள்ளையும் பிரச்சினைகளை அப்படியே சண்டை பிடித்தே தீர்க்கப்பழகும்.
ஆகவே சமுதாயத்துக்கும் எமக்கும் பிரயோசனமான பிள்ளையாக எமது பிள்ளை இருக்கவேண்டுமானால் அதற்கு அன்பு பாராட்டுதல், மதிப்புணர்வு, வரவேற்பு போன்ற சூழலைக் கொடுத்து நல்ல மனவளர்ச்சியை ஏற்படுத்தவேண்டும். ஸ்பரிசத்தில் குழந்தை இந்த வயதில் அன்பை, பாதுகாப்பை உணர்வதால் உடுப்பு உடுத்தும்போது, கழுவும்போது அமைதியாக, கடுமையாக இல்லாது செய்தல் வேண்டும்.

17. இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுவரை
சிறிது சிறிதாகப் பிள்ளை நடக்கத் தொடங்கும். அதிகமாகக் கதைக்கத் தொடங்கும். உலகை ஆராய்ச்சி செய்யத்தொடங்கும். இந்த ஆய்வைத் தனது கை, கால்களைப்பாவித்தே செய்யத் தொடங்கும். இதனால் மற்றவர்களுக்குப் பயமும், ஏக்கமும் ஏற்படத்தொடங்கும். அதனால் வீட்டில் பெரியவர்கள் அப்பிள்ளையை அங்கும் இங்கும் ஓடாது தடுத்துவைத்து ஒரே இடத்திலே உட்கார வைப்பர். இதைவிடுத்து பிள்ளை ஏற இறங்க, ஒட அனுபவிக்க இடங்கொடுக்க வேண்டும். பிள்ளைக்கு இயற்கையாக வரும் குணத்தைத் தடுக்காது நாம் ஓரளவு பின்னாலே நின்று கைகொடுத்து உதவவேண்டும். பிள்ளைகள் படித்து அறிவில் முதிர்வது ஒன்று. அதேபோன்று மனதில், சரீரத்தில் முதிர்வது மற்றொன்று. குழந்தை தானாகச் செயற்பட ஆரம்பிக்கும்போது கைகொடுத்து உதவுதல்வேண்டும். எந்த நேரமும் செய்யவேண்டாம். ஏற வேண்டாம். தொட வேண்டாம். ஓட வேண்டாம் என்றே கூறிக்கொண்டிருந்தால் அதற்குத் தன்னம்பிக்கை குறைந்து போய்விடும். என்னால் முடியாது என்றே எப்போதும் சிந்திக்கும். ஆகவே என்னால் முடியும் என்று சிந்திக்கப்பழக்குதல் வேண்டும். வாழ்வின் பிற்காலத்தில் ஆபத்துக்களுக்கு முகம்கொடுக்க நேரிடலாம். சிறுவயதில் தன்னம்பிக்கை வளராவிடில் பிற்காலத்தில் வாழ்வில் முகங்கொடுக்க முடியாமல் தோல்வியடைவர். அளவுக்கதிகமாகப் பிள்ளைக்கு வேண்டாம் வேண்டாம் என்று கூறினால் அளவுக்கதிகமாகப் பிள்ளையைப் பாதுகாக்கிறோம். அளவோடு வேண்டாம் என்று கூறினால் அளவோடு பாதுகாக்கிறோம். ஒரு பிள்ளையிடம் உங்கள் பெயர் என்ன என்று கேட்டபோது "ஜோன் வேண்டாம்" என்று பதில் கூறியது. வீட்டில் எந்நேரமும் ஜோன் செய்யாதே என்ற பொருளில் கூறியதால் தனது பெயரே அப்படி என்று பிள்ளை எண்ணிவிட்டது.
இந்த வயதில் பிள்ளை அதிகமாக விளையாட விரும்பும். ஆரம்பத்தில் இரு பிள்ளைகளை அருகருகே விட்டால் இரண்டும் விளையாடும். ஆனால் தனித்தனியாகவே விளையாடும். பின்பு மற்றவருடன் சேர்ந்து விளையாடத் தொடங்கும். சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு மிகவும் முக்கியமானது என்பதைப் பெற்றோர்கள் உணரவேண்டும். பிள்ளை விளையாட்டின் மூலம் பல விடயங்களை அறியத் தொடங்குகிறது. சூழலை, மூலப்பொருட்களை எடுத்துத் தனக்கு ஏற்றவிதத் தில் அமைக்கப்பழகும். களிமண், கிளே போன்றவற்றைப் பயன்படுத்தி உரல், உலக்கை, வீடு, அம்மி, குழவி, மிருகங்கள் போன்ற பலவற்றை அமைக்கப்பழகும். பிள்ளை மணலில் வீடு கட்டும். இவற்றைக் கண்டதும் பெற்றோர் மண் விளையாடாதே, தண்ணி விளையாடாதே என்று தடுத்துவிடுவர். அளவுக்கு அதிகமாக விளையாடவிடாது அளவோடு

Page 31
46 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
விளையாட விடுவது நன்று. உருவங்களை மாற்றி விளையாடக்கூடிய பில்டிங் பொக்ஸ், கிளே, களிமண் போன்றவற்றை விளையாடக் கொடுக்க வேண்டும். கடையில் இருக்கும் விளையாட்டுப்பொருட்கள் மட்டுமல்ல எமது நாட்டில் செய்த சிறு மரவண்டில், கழற்றிப் பூட்டக்கூடிய விளையாட்டுப் பொருட்களே நன்று. இலக்றோனிக் பொருட்களை வாங்கிக் கொடுக்கிறோம். அது அங்கும் இங்கும் ஓடும் அவ்வளவுதான். பிள்ளை அனுபவத்தைப்பெற வேறு ஒன்றும் இருப்பதில்லை.
பிள்ளை உணவு உண்ணும்போதும், நித்திரைக்குப் போகும்போதும் தாய்க்கும் பிள்ளைக்கும் பிரச்சினை ஏற்படலாம். பசி வரும்வரை நாம் பொறுத்தால் அது சாப்பிடும். எமது நேரப்படி குழந்தைக்குப் பசி வருவதில்லையே. நாம் பயணம் செல்ல இருப்பதால் எமது நேரத்துக்கு உணவு கொடுக்க முயலுகிறோம். டாக்டர் கால அட்டவணை தருவது நோயாக இருக்கும்போதே, நோய் மாறியதும் உணவுவேளை இயற்கையாக இருக்கவேண்டும். அதேபோன்றுதான் தூக்கமும், ஓடி விளையாடிக்களைத்தால் துரங்கும். சிலநேரம் முளித்திருக்கும். நித்திரை கொள்ள விரும்பாது. நித்திரை என்பதை வாழ்வு முடிகிறது எனப்பிள்ளை நினைக்கிறது. இரவும் பகலும் என்பது பிள்ளைக்குத் தெரியாது. அதனால் பலாத்காரப்படுத்தி பயப்படுத்தி உணவுண்ண வைப்பதும், துரங்க வைப்பதும் பிழையானது. பிள்ளையின் நேரம் வரும்வரை நாம் காத்திருக்கவேண்டும்.
இந்த வயதில் முடியாது, மாட்டேன், இல்லை என்று எதற்கும் கூறப்பழகும் நான் வேறுபட்ட ஒருவர். நான் சுயாதீனமாக ஆசைப்படுகிறேன் என்று நினைக்கிறது. அதன் அடையாளமாகவே இவ்வாறு கூறுகிறது. அதனை உணராத பெற்றோர் "நீ இப்போதே இப்படியென்றால் வளர்ந்தால் எப்படி இருப்பாய்” என்று அடிக்கி றார்கள். இதனால் உறவு உடைகிறது.
ஒவ்வொரு பிள்ளையும் விசேடமானது. ஒரு பிள்ளை விரைவாகக் கதைக் கும். மற்றப் பிள்ளை தாமதித்துக்கதைக்கும். இதனால் அடுத்த வீட்டுப்பிள்ளை இந்தவயதில் கதைக்கிறதே. நடக்கிறதே எனது பிள்ளை நடக்கவில்லையே என்று ஒப்பிட்டுப் பார்ப்பது பிழை. காது கேட்டால் பிள்ளை கதைக்கும். காது கேட்காத பிள்ளையானால் கதைக்காது. சில நேரங்களில் நாம் மற்றப் பிள்ளைகளோடு ஒப்பிட்டு எமது பிள்ளையைப் பார்ப்பதால் பிள்னை பெற்றோரைச் சந்தோசப்படுத்தக் கஷ்டப்பட்டுச் செய்யப்பழகும். கதைக்கும். அதனால் கொன்னை தட்டத் தொடங்கலாம்.
வாயில் திருப்தியான நிலை மாறி மலசலம் கழிக்கும் இடங்களில் திருப்தி ஏற்படும் காலமாக மாறும். இக்காலத்தில் மலங்கழிப்பதைப் பார்த்துப்பிள்ளை வெட்கப்படும் விதத்தில் கூறுவது பிழையாகும். மலம், சலம் வெளிவிட்டதும் தனது ஆக்கம் என அதைப் பார்த்து பெருமை கொள்கிறது பிள்ளை. இதனை மறந்து பிள்ளையை வெட்கப்படுத்தி அவமானப்படுத்தித் தீமையான அனுபவத் தைப்பெற வைப்பது பிழையாகும்.

இரணிடு வயதிலிருந்து முனிறு வயது வரை 47
யாராவது வீட்டில் வந்ததும் கக்கா இருப்பது பிழை என்று பிள்ளைக்குச் சொல்லும்போது அது அடக்கி வைக்கிறது. இப்படி அடக்கிப் பழகிய பிள்ளை வளர்ந்ததும் போலியாக, பொய்யாக வாழப்பழகும். மற்றவர்களுடன் மனந்திறக்காது பழகும்.
பிள்ளை இரண்டு மூன்று வயதாகும்போது தாய் மற்றொரு பிள்ளையைக் கற்பந்தரிக்கலாம். அப்போது முதல் பிள்ளையைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். புதிதாகப் பிறக்கும் பிள்ளையை முதல் பிள்ளையால் ஏற்க முடியாது இருக்கலாம். புதிதாகப் பிறந்தால் அப்பிள்ளையைத் தூக்கி எறிந்துவிடுவேன் என்று கூறும். ஆகவே முதல் பிள்ளையை ஆயத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் மனநிலை பாதிக்கப்படும். நிரோசி மனநோய் நிலைக்குப் பிள்ளை தள்ளப்படலாம். பிறந்த பிள்ளையை யாராவது பார்க்க வந்தால் பிறந்த பிள்ளைக்கு ஏதாவது பரிசுப்பொருட்கள் கொண்டு வந்தால் முதல் பிள்ளையைப் பாதிக்காத விதத்தில் முதல் பிள்ளையின் கையிலேயே பரிசுப் பொருட்களைக் கொடுத்து "தம்பிக்குத் தங்கச்சிக்கு குடுங்கோ" என்று கூற வேண்டும்.
ஒரு பெண் 25 வயதில் இருக்கும்போது அதற்குத் தாங்க முடியாத தலைவலி ஏற்பட்டது. டாக்டரிடம் சென்றபோது அதற்கான காரணம் எதுவும் தெரியவில்லை. உளவியல் டாக்டரிடம் அழைத்துச் சென்றபோது அதற்கான காரணம் புரிந்தது. குடும்பத்தில் இவள் முதற்பிள்ளை. இவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது மற்றப்பிள்ளை பிறந்தது. பெற்றோர் முழு அவதானத்தையும் பிறந்த இரண்டாவது பிள்ளைக்கே செலுத்தினர். முதல் பிள்ளை எத்தனையோ சந்தர்ப்பங்களில் பெற்றோரின் அவதானத்தை எடுக்க முயன்று பார்த்தும் பயன் அளிக்கவில்லை. ஒருநாள் அப்பா எழுதிக்கொண்டிருந்தபோது இவள் ஒரு படத்தைக்கிறிக் கொண்டுவந்து அப்பாவிடம் காட்ட வந்தாள். அப்பா பிள்ளையை ஏசி அம்மாவிடம் அனுப்பிவிட்டார். இப்படி பல முயற்சியும் பலனளிக்கவில்லை. இறுதியாக வீட்டில் பீங்கான்களைக் கழுவி, வீட்டை ஒழுங்குபடுத்துகிறாள். அதனால் நல்ல பிள்ளை என்று பெற்றோரின் பாராட்டைப்பெறுகிறாள். அன்றிலிருந்து பெற்றோரின் அன்பைப் பெறுவதற்காக முடியாது என்ற வார்த்தையைக் கூறாது எல்லாம் செய்கிறாள். வளர்ந்து காரியாலயத்திலும் மேலதிகாரி அதிகமாக வேலை கொடுத்ததும் முடியாது என்று கூற முடியாமல் வேலையைப் பாரமெடுக் கிறாள். இதனால் ஏற்பட்ட மனவேதனையே தலைவலிக்குக் காரணமாகியது. இங்கே சகோதர போட்டி ஏற்பட்டுள்ளது. பெற்றோரின் அன்பு, அவதானம் தன்னில் இல்லாது தங்கையில் அதிகமாக உள்ளது. தன்னில் அதிகமான அன்பு முன்புபோல் இல்லை என்று சிந்திக்கத் தொடங்கும். இது மிகவும் கஷ்டமான ஒன்று. இதைத்தாங்க அப்பிள்ளையால் முடியாது. ஆகவே மற்றொரு பிள்ளை பிறந்ததும் முதல் பிள்ளை தனது தம்பியை அல்லது தங்கையை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் அப்பிள்ளையை ஆயத்தப்படுத்த வேண்டும்.
இரண்டாவது பிள்ளைபெறும்பொழுது செய்யும் ஆயத்தங்களில் முதல்

Page 32
43 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
பிள்னையை ஆயத்தப்படுத்த வேண்டும். இவ்வாறு செயற்பட்டால் முதல் பிள்ளைக்கு ஏற்படும் மனத்தாக்கத்தைக் குறைக்கலாம். முதல் பிள்ளைக்கு முன்பு கொடுத்த அன்பு அவதானம் குறையாத விதத்தில் பெற்றோர் நடமாட வேண்டும், சகோதர போட்டி குழந்தையில் ஏற்பட அதிகம் இடங்கோடுத்தால் அது பிற்காலத்தில் பழிவாங்கும் துனத்தை உருவாக்கலாம். ஆகவே பிறந்த குழந்தையைக் கவனிப்பதுடன் நிறுைவிடாமல் பேரிய பிக்: யையும் கவனிக்கத் நபிறக்கூடாது.
இந்த வயதில் உள்ள பிள்ளைகள் அதிகமாகக் கற்பனை உலகில் சஞ்சரிக்கும். கற்பனைக் கதைகள் உருவாக்கும். இந்த வயதில் கதைகள் கூறுவதைக் கேட்க கேரி விரும்புனர். ஆக:ே பெற்றோர் கன்தகள் சொல்லவும் வேண்டும். அதேபோல் பிங்: எபின் மனநிலைக்கு ஆயத்தமும் செய்தால் வேண்டும். இந்த பதில் உள்ள பிளன்:T ஐ ஒன்மையான ற்றை புF சிந்து கநய். அதனTப்:11 ניתן rii. 5-YE" (G._Eiffi கருவில்ல்ை, கற்பனையையும், உன்ேமை நிகழ்வி:ம் கலந்து கூறுகிறது. K uTTu kHS u uu TTK Tuu ummS S LLLL umum S TuuTTS uu uuS KS LSYSTTT S SLLLL போன்த புள்பது பக்துப் பொய்பாகத் தோன்: பிள்ளை கற்பன்ைபில் உள்வதே!ே கூறியது. புரத்தில், !ரில் செய்த மிருகங்களிப்புப் பிள்ளைக்கு விளையாடம் வெடுத்தாள் அதற்கு உாவு நீத்துவர், குளிப்பாட்டுவர். இது விளையாட்டுட்பேருள். உண்பு உணர்ாேது என்பதை எம்'ஸ் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இந்த வயதில் உள்வி பிள்ளையால் விளங்கிக்கொள்: முடிவதில்:. இதை நாம் புரிந்து கொள்ளப் பழக வேண்டும்.
இல்:ைபதில் ஈட்டில் பல ாேழிகளைப் பேசினால் அந்த பொழிகளை மிகப்பும் இலகுவாகப் பேசப்பழகிவிடும. இதேபோன்று மொழி ந.ை பாவிக்கும் சொற்கள் பீட்டிலும் வேளிர்பிலு கேட்பதே அப்படியே கோல்டிப்பழகும். :Iட்டிங் 1ேற்:ே ஒரு:T ஒருவிரோடு போர்போது சப்பரப்பட்ட சொற்கேைப பாவிக்கிறோமோ அதை அப்படியே பிள்ளையும் சோல்லப் பழகும். இரண்டு பூன்று வயதில் கதைக் பே பழகும். அங்கும் இங்கம் ஓடLபழுதும் 2.ப்ேகைப்பற்றிய அறிவு விரிவடையத் தோடங்கும். ஆகவே காண்பதத் தொட்.ே பிடித்துப் பார்த்து ஆயத் தொடங்கும் தன்ேைப்பறி இருக்கும் TTTa SaaaaS u YS TuLLTTS TTT S S Tu LLTTTT SKzS0YSS TT S T aKSJTTT சிறிது சீரிதாக இந்த பதில் அறிடத் தொடங்கும்.
கழ்வு:ம் கற்பனை பண்
卤
ப்
또
கி
નો
嵩
I
C
i
 
 
 
 
 
 
 
 
 

莺 青 青 18. நான்கு வயதுக்கும் ஐந்து
曹 曹 青 青 ജ வயதுக்கும் இடைப்பட்ட நிலை இதற்கு முன்பு விட்டில் உள்ளவர்களோடு மட்டும் பழகிய பிள்ளை இப்போது சமுதாயத்தில் வேறு நபர்களுடன் பழகத் தொடங்கும். அதாவது பாலர் பாடசா லையில் மற்றவர்களோடு பழகத் தொடங்கும்.
இந்த வயதில் சமவயதுள்ள பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடப் பழகுகிறது. இதற்கு முன்பு தனிமையில் தான் மட்டும் விளையாடியது. அதாவது இரு பிள்ளைகளை விளையாட விட்டால் இரண்டு பிள்ளைகளும் தனித்தனியே விளையாடத் தொடங்கும்.
இதேபோன்று தாயுடன் அதிகமாக இருந்துவிட்டு பாடசாலைக்குச் செல்லத் தொடங்கியதால் இது பிள்ளையின் மனதுக்குக் கடினமான ஒன்றாகும். சில பிள்ளைகளுக்கு மிகவும் கஷ்டமாகவும் சில பிள்ளைகளுக்கு அவ்வளவு கஷ்டமில் லாமலும் இருக்கும். இதற்குக் காரணம் இதற்கு முன்பு ஏற்படும் பிரிவு நல்லவிதத்தில் நடந்திருந்தால் இது இலகுவாக இருக்கும். நல்லவிதத்தில் பிரிவு ஏற்படாதிருந்தால் கஷ்டமாக இருக்கும்.
முதல் பிரிவு என்பது குழந்தை தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததும் ஏற்படுவது. இரண்டாவது பிரிவு தாய்ப்பால் குடிப்பதை நிறுத்திய நேரத்தில் ஏற்பட்டது. இரண்டு பிரிவிலும் ஏற்பட்ட அனுபவங்கள் தாய்க்கும் பிள்ளைக்கும் நன்றாக இருந்திருந்தால் இந்த மூன்றாவது பிரிவாகிய பாடசாலைக்குப் போகும் பிரிவும் நன்றாக இருக்கும். இம்முன்று பிரிவும் நன்றாக இருந்தால் நான்காவது பிரிவான திருமணத்துடன் ஏற்படும் பிரிவும் எதிர்காலத்தில் நன்றாக அமையும். முதல் இரண்டு பிரிவும் நன்றாக அமையாத பிள்ளை பாலர் பாடசாலையில் படிக்கும்போது சில வேளைகளில் அவதானத்தைச் செலுத்தாது அழுதவண்ணை மிருக்கக்கூடும். ஆகவே இப்படிப்பட்ட வேறுபாட்டைப் புரிந்துகொண்டு பெற்றோரும் பிள்ளைகளும் செயற்பட வேண்டும். அதாவது தாய்ப்பாலை நிறுத்த முலையைச் சுற்றி வேப்பெண்ணெய் பூசுவர். பிள்ளைக்கு அடிப்பர். இது தவறு. படிப்ப்டியாகத் தாய்ப்பாலைப் பிள்ளை நிறுத்தும். இதில் கலவரப்படத் தேவையில்லை. தனது திருப்தி, பாதுகாப்புணர்வை முலையைச் சூப்பும்போது பிள்ளை பெறுகின்றது. இதனைப் படிப்படியாக நிறுத்த வேண்டும்.
பாலர் பாடசாலையில் மற்றொன்றையும் பிள்ளை பயில வேண்டியுள்ளது. அதாவது விட்டில் தன்னை அம்மா அன்பு செய்தார். ஆனால் பாடசாலையில் தாய்க்குச் சமமான ஆசிரியை எல்லாப் பிள்ளைகளையும் ஒரேவிதத்தில் அன்பு செய்யும்பொழுது, இது பிள்ளைக்குப் புதிதான ஒன்றாக இருக்கும். கஷ்டமாக இருக்கும். இந்த நிலையில் முகங்கொடுக்கப் பிள்ளை படிப்படியாகப் பழகவேண்டும்.

Page 33
во மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
மற்றப் பிள்ளைகளுடன் பழகும்பொழுது பிள்ளையின் உணர்வு அடிக்கடி மாறுகின்றது. சிலவேளைகளில் மற்ற நண்பர்களுடன் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும். அதேபோன்று சிலவேளைகளில் அதே நண்பர்களுடன் சண்டை பிடிக்கும். இதையும் பெற்றோரும் ஆசிரியரும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த வயதில் பிள்ளை அடிக்கடி கோபப்படுவது இயற்கையான ஒன்றாகும். ஆனால் வளர்ந்தவர்களாகிய எமக்கும் அப்படி அடிக்கடி கோபம் வருவது இயற்கைக்கு மாறானது.
சிறுபிள்ளை இந்த வயதில் எல்லாவற்றையும் அறிவதில் அதற்குக் குதுகலம் ஏற்படும். இவைகள் எல்லாம் எதற்காக உள்ளன என்று சிந்திக்கும். அதனால் பெற்றோரிடம் அடிக்கடி கேள்வி கேட்கும். அறிகின்ற குதூகலத்துடன் அறிவதற்காகக் கேள்வி கேட்கும்போது பிள்ளையின் வயதுக்கேற்ப பெற்றோர் பிள்ளைக்குப் பதில் சொல்லப்பழகுதல் வேண்டும். சிறுபிள்ளைகளில் எதையும் அறியும் ஆசை அதிகமாக இருக்கும். இது இயற்கையே. கேள்வி கேட்பது நல்லது. இது எமக்குக் கஷ்டமாக இருப்பதால் கேள்வி கேட்கின்ற பிள்ளைக்கு ஏசிவிடுவோம். இது பிழை. சில கேள்விகள் கடினமான கேள்விகளாக இருக்கும். உதாரணமாக நிலவு (சந்திரன்) ஏன் நாங்கள் போகும்போது அதுவும் வருகிறது எனக்கேட்கும். இதற்கு விரிவான பதிலைக்கொடுக்க எம்மால் முடியாது. பதில் கொடுத்தாலும் அது பிள்ளைக்கு விளங்காது. ஏன் நிலவு கீழே விழாமல் மேலே இருக்கிறது என்று கேட்கலாம். இப்படிப்பட்ட கேள்விகளுக்கு ஓரளவு பதில் கொடுத்தாலே போதுமானது. சில பெற்றோர் பிள்ளைக்கு இந்த வயதில் ஏற்படும் இந்த மனநிலையைப் புரிவதில்லை. அது பிழையாகும்.
மேலும் இந்த வயதில் பால் சம்பந்தமாக மனதில் வளர்ச்சி ஏற்படும். தனது பாலுறுப்பில் அதிக அவதானத்தைச் செலுத்தத் தொடங்கும். விசேடமாகப் பெண்பிள்ளையின் உறுப்பைவிட ஆண்பிள்ளையின் பாலுறுப்பு பெரும்பாலும் வெளியில் அதிகமாகத் தெரிய இருப்பதால், ஆண்பிள்ளை தனது பாலுறுப்பில் அதிக அவதானத்தைச் செலுத்தும். தனது பாலுறுப்பை ஸ்பரிசித்துப் பார்க்கும். இதைக் கண்ட பெற்றோர் பிள்ளைக்கு அடிப்பர். இது தவறு. பிள்ளை கெட்டுவிட்டது என நினைப்பர். பாலறுப்பைப் பற்றி பெற்றோரின் எண்ணம் நல்லதல்ல. அதைப் பற்றிக் கதைப்பதையே விரும்பமாட்டார்கள். சிறுபிள்ளை பாலுறுப்பைத் தொட்டுப் பழகும்போது பெற்றோர் தமது கூடாத எண்ணத்தைக்கொண்டே பிள்ளையைத் தண்டிக்கின்றனர். குழந்தை பெரியவர்கள் நினைக்கும் எண்ணத்தில் பாலுறுப்பைத் தொடுவதில்லை.
குழந்தை எதையும் ஆராயும் வயதில் இருப்பதால் பாலுறுப்பைப் பற்றியும் அறிய முயலுகிறது. ஒருநாள் எனது மகன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். "அப்பா தங்கச்சிக்கு இப்படி இருக்கிறது. எனக்கு ஏன் அப்படியல்ல" என்றார். உடனே நான் "ஆண்பிள்ளைக்கு அப்படித்தான். பெண்பிள்ளைக்கு இப்படித்தான்” என்று கூறி வேறு கதையைத் தொடங்கிவிட்டேன். இந்த வயதில் தமது பாலுறுப்பில் கைபோட்டால் அவர்களுக்கு அடிக்காது பாலுறுப்புள்ள இடத்தை

நாணிகு வயதுக்கும் ஐந்து வயதுக்கும் இடைப்பட்ட நிலை 51
நன்றாக கழுவி வியர்வையில்லாதிருந்தால் கடிக்காது. கைபோடவும் மாட்டார்கள். மேலும் உடையை இறுக்கமாகப் போட்டால் பாலுறுப்பு நசிபடுவதால் இறுக்கமான உடையை அணியாதிருப்பது நன்று.
சிக்மன் புறொயிட் என்ற உளவியல் அறிஞர் கூறுவது இந்த வயதில் ஆண்பிள்ளை தாயில் விசேடமான கவர்ச்சியை ஏற்படுத்திக்கொள்ளும். இதனால் தாயை ஆட்கொள்ள எத்தனிக்கும். தனது அப்பா, அம்மா மீது அன்பாக இருப்பதால் தாயைத் தன்னால் ஆட்கொள்ள முடியவில்லையே என்று எண்ணும். இதைச்செய்ய எத்தனித்தால் தனக்குத் தருந்தண்டனையாக "எனது பாலுறுப்பை அப்பா வெட்டிவிடுவார்" என்று பயப்படும். இவ்வாறு மனதில் ஏற்படும்போது இரு வழிகளில் செயற்படத் தொடங்கும்.
அ. தனக்கு ஏற்படும் இப்பயத்தைக் கீழ் மனதில் அடக்கி வைக்கும். ஆ. இல்லையேல் தந்தையைப்போல் செயற்பட்டு, நடமாடித் தாயை வெற்றிகொண்டு ஆட்கொள்ள முயற்சி செய்யும்.
இதேபோன்றுதான் பெண்பிள்ளையும் செயற்படும். தந்தையில் அதிகம் கவர்ச்சி ஏற்படும். தந்தையை ஆட்கொள்ள முனையும். ஆண் பிள்ளையைப்போன்று மனப்பயத்தைக் கீழ்மனதில் தள்ளிவிடும். அல்லது அதிகம் அதிகமாக அம்மாவைப்போன்று செயற்படத்தொடங்கும்.
இந்த வயதில் ஆண்பிள்ளை, தனது தாயைத் தனது மனைவி என எண்ணும். சிலவேளைகளில் தாயின் பாலுறுப்பை ஸ்பர்சிக்க முயலும், சேலையைத் தூக்கிப் பார்க்கும். பெண்பிள்ளையும் தந்தை மீது அவ்வாறு எண்ணும்.
நாம் எமது வாழ்வில் பெரும்பாலும் மேல் மனதின் படியே நடமாடுகிறோம். செயற்படுகிறோம். வாழ்வின் அனுபவங்கள், உணர்வுகளில் சிலவற்றைக் கீழ்மன தில் தள்ளுகிறோம். பின்பு அதன்படி செயற்படுகிறோம். நாம் சிலவேளைகளில் போதிக்கிறோம். பிரசங்கம் உரை வைக்கிறோம். கீழ்மனதிலிருந்தே இதைச்செய் கிறோம். சிலவற்றை அடிகீழ் மனதில் தள்ளிவிடுகிறோம். தாங்க முடியாத மனவேதனைகள்ை இவ்வாறு தள்ளிவிடுகிறோம். கனவு காண்பது கீழ்மனதிலி ருந்தே. இரவில் கனவு காண்கிறோம். இவற்றில் சில கனவுகள் காலையில் ஞாபகம் இருப்பதில்லை.

Page 34
52 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
இந்த வயதில் ஆண்பிள்ளை தனது ஆண்மை. ஆளுமையைத் தந்தை யிடமிருந்தும், பெண்பிள்ளை தாயிடமிருந்து பெண்மை, ஆளுமையையும் உறிஞ்சி எடுத்து அதன்படி செயற்படப்பழகுகிறது. ஆண்மை என்றவுடன் பலர் நினைப்பது மனைவிக்கு அடிப்பதையும், அடக்கி ஆழ்வதையுமே. இது ஆண்மையல்ல. எமது கலாச்சாரத்திலும் இடங்கொடுக்கிறோம்.
வீட்டில் ஆண்பிள்ளை அக்காவுக்கு அடிக்கிறது. அதனால் அக்கா சீறி எழுகிறாள் என வைத்துக்கொள்ளுங்கள். இதனைக்கண்ட அம்மா தனது மகளைப் பார்த்து, "அவன் ஆண்பிள்ளை தானே. நீ கொஞ்சம் பொறுத்துப்போ" என்பாள். அல்லது மூத்தமகனுக்கு விசேடமான சலுகை காட்டுவாள். உணவு உடை எல்லாவற்றிலும் ஆண்பிள்ளைக்குச் சலுகை காட்டுவாள். இந்த அனுபவங்களைப் பெற்ற ஆண்பிள்ளை வளர்ந்ததும் குடும்ப வாழ்வில் மனைவியை நடத்தும்போது பழைய அனுபவங்களே அவனில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆணின் ஆண்மை பெண்ணின் பெண்மை என்பது உயர்ந்த குணங்களாகும். மற்றவரை அடித்தல், கீழ்ப்படுத்துதல் அல்ல.
ஆகவே பெற்றோர்கள் இதனை மனதில்கொண்டு செயற்பட வேண்டும். பெண்பிள்ளை தாயையும், ஆண்பிள்ளை அப்பாவையும் பின்பற்றும் விதத்தில் பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழவேண்டும்.
பெற்றோரிடமிருந்து நல்ல குணங்களைப் பிள்ளைகள் பின்பற்றும் விதத்தில் பெற்றோர்கள் நடமாட வேண்டும்.
கணவன் மனைவி இருவருக்குமிடையில் நல்ல அன்புத்தொடர்பு இருப்பதைப் பிள்ளைகள் காண வேண்டும்.
கூட்டுக்குடும்பத்தில் பலர் இருப்பதால் ஒருவரிடமில்லாத நல்ல குணத்தைப் பிள்ளைகள் மற்றவரிடமிருந்து பெற வாய்ப்புண்டு.
பிள்ளை அடிக்கடி அதே கேள்வியை ஆழமாகக் கேட்கும். "நான் பிறக்க முதல் எங்கே இருந்தேன்” என்று ஆரம்பத்தில் கேள்வி கேட்கும். "அம்மாவின் வயிற்றிலே" என்று விடை கூறினால் அது போதுமானது. சில நாட்கள் சென்றதும் அதே கேள்வியை மீண்டும் கேட்கும். "நான் அம்மாவின் வயிற்றில் இருந்து எப்படி வந்தேன்" என்று அதே கேள்வியை விரிவாகக் கேட்கின்றது. அப்படிக் கேட்கும்போது "அம்மாவின் பெண்ணுறுப்பால் வெளியே எடுப்பார்கள்" அல்லது "டாக்டர் வயிற்றை வெட்டி வெளியே எடுப்பார்” என்று கூறலாம். இன்னும் சில காலம் சென்றதும் "எங்களுடைய அக்கா எங்களோடு இருந்த நேரம் பிள்ளை பெற இல்லை. கல்யாணம் முடித்த பிறகுதான் பிறந்தது" என்று கேள்வி வளரலாம். பெற்றோர் கலவரப்படாது பொய் சொல்லாது நிதானமாக பிள்ளையின் அறிவுக்கேற்ப பதில் கூறப்பழக வேண்டும்.

53
19. ஆறு வயதிலிருந்து பன்னிரண்டு வயது வரை
இந்த வயதில் பால்வேறுபாட்டைப் பற்றிய அறிவைப் பெற்றோர் படிப்படியாகப் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டும். அப்படியானால் பாலறிவு பெற்றோருக்குத் தேவையானது. பால்வேறுபாடு பற்றிப் பெற்றோருக்குள்ள எண்ணம் மிகவும் கீழ்த்தரமானது. அதைபபற்றிக் கதைக்கவே விருப்பமில்லை. பாலுறுப்புப்பற்றியும், பால்வேறுபாடுபற்றியும் பெற்றோருக்கு அறிவு இருப்பது மட்டுமல்ல. நல்ல எண்ணமும் இருப்பது முக்கியம். ஆகவே பெற்றோர் பிள்ளைகளுக்கு இந்த அறிவை மட்டுமல்ல, இதைப்பற்றிய நல்ல எண்ணத்தையும் கொடுக்க வேண் டும். இந்த எண்ணத்தை நேரடியாகவும் மறைமுகமாகவும் கொடுக்கிறோம். 习
இந்த வயதில் பிள்ளைகள் ஆரம்பப் பாடசாலைக்குச் செல்வார்கள். முன்பைவிடச் சமுதாயத்தில் பலரைச் சந்திக்கின்றார்கள். முன்பைவிட வீட்டைவிட்டு வெளியே அதிக நேரம் துாரமாகி இருக்கப் பிள்ளையால் முடிகிறது. புற உலகில் காலடி எடுத்து வைக்கிறது. இதனால் சமவயதில் உள்ள குழுவில் சேரத் தொடங்கும். வீட்டுக்கு அயலிலும் சமவயதினருடன் சேரத்தொடங்கும். அவர்களு டன் முன்பைவிட அதிக நேரத்தைக் கழிக்க விரும்பும். விளையாட ஆசைப்படும். ஆண்பிள்ளை வீட்டுக்கு வெளியே விளையாட்டுத் திடலில் விளையாட ஆசைப் படும்.
இக்காலத்தில் பெற்றோர் தமது பிள்ளைகள் “சரியான குழப்படி” என்றும், “எந்நேரமும் விளையாட்டுத்தான்" என்றும் குறைகூறுவர். இது பிள்ளையின் இயற்கையான சுபாவமே. சமவயதான குழுவில் விளையாட, சேர ஆசைப்படுவது இயற்கையே. பெரியவராகியதும் உலகுடன் தொடர்புகொள்ளப் பழகுவது இக் குழுவிலேயேயாகும். இதைத் தடுத்தால் வளர்ந்த பிள்ளையானாலும் எதிர்காலத்தில் மற்றவர்களுடன் சேரப் பழகாது. தனிமையில் வாழவே விரும்பும்.
தமது பிள்ளைகளை மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட விட்டால் கூடாத வார்த்தைகளைப் பேசப்பழகிவிடுவர் என்று இவர்களை விளையாட விடாது தடுத்துவிடுவர். விளையாடச்சென்று சண்டை பிடிப்பர். அதனால் இரு குடும்பங்க ளுக்கிடையிலும் பிரச்சினை ஏற்பட்டுவிடும் என்ற பயத்தில் பிள்ளைகளை மற்றப் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட பெற்றோர் விடுவதில்லை.
இந்த வயதில் பிள்ளைகள் சுறுசுறுப்பாகவும், செயற்பாடுள்ள பிள்ளைகளாகவும் இருப்பர். இதனைப் பார்த்த பெற்றோர்கள் சரியான குழப்படி, சண்டியன் என்று கூறுவர். வேண்டாம் என்று சொன்னாலும் அதைக் கேட்காது பிள்ளை செய்வதாலேயே குழப்படி என்பர். இந்தச் சுபாவம் இந்த வயதில்

Page 35
54 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
இயற்கையானது என்பதைப் பெற்றோர் புரிவதில்லை.
ஆண்பிள்ளை விசேடமாக வீட்டுக்கு வெளியே விளையாட்டுத் திடலில் விளையாட ஆசைப்படும். பெண்பிள்ளைகளும் இவ்வாறு விரும்பக்கூடும். பெரியோரை மதிக்காது பேசுவது போன்று இந்த வயதுப் பிள்ளைகள் கதைக்கக் கூடும். சிலவேளைகளில் ஒழுக்கக் குறைவாகவும் நடக்கக்கூடும்.
துப்பரவாக இருக்க விரும்புவதில்லை. வியர்வையோடே இருப்பர். எந்நேர மும் விளையாடவே ஆசைப்படுவர். இவை பிழையல்ல. இயற்கையானது மேலும் பொறுப்புடன் செயற்பட மாட்டார்கள். ஏதாவது சொன்னால் அந்நேரத்தில்தான் கடைப்பிடிப்பர். அதன்பின்பு மாறிவிடுவர். இதுவும் இயற்கையான சுபாவமே.
தமது குழுவில் சிலநேரம் நல்ல ஒற்றுமையாக இருப்பர். சிலநேரம் சண்டைபிடிப்பர். இதுவும் இயற்கையே. பிள்ளைகள் சண்டை பிடிப்பதைக் கண்டதும் பெற்றோர், பெரியவர்கள் இதில் தலையிடுவர். இதனாலேயே குடும்பங்களுக்கிடை யில் பிரச்சினை வருவதால் பிள்ளைகளை விளையாட மற்றவர்களுடன் சேரவிடுவதில்லை. இதுவும் பிழையே. இரு பெற்றோருக்கும் இந்த அறிவு இருப்பின் பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் சண்டையிடத் தேவையில்லை.
இந்த வயதிலுள்ள பிள்ளைகளுக்குப் புத்திமதி சொன்னால் அதைக் கருத்தில் கொள்வது குறைவாக இருக்கும். ஆனால் இதை அனுபவத்தில் பழகிக் கொள்ளும். அது மட்டுமல்ல இந்த வயதில் பிள்ளைகள் செய்யும் செயல்களில் ஆழமான தன்மை இருக்காது. ஆடிக்கடி மாறும் தன்மை இருக்கும், ஏதாவது வாங்கித் தருமாறு கேட்பர். பணம் கொடுத்து அதை வாங்கிக் கொடுத்ததும் அதிக நாட்கள் அதைப் பயன்படுத்துவதில்லை. பூமரத்தை நாட்டுவர். மறுநாள் பிடுங்கி வேறு இடத்தில் நாட்டுவர். ஒன்றிலும் ஆழமான விதத்தில் செயற்பட மாட்டார்கள். -
அதேபோன்று தமது அவதானத்தை ஏதாவதொன்றில் செலுத்தும் போது கொஞ்ச நேரமே செலுத்துவர். பெற்றோர் பிள்ளைகளிடம் ஒரு மணித்தியாலயத் துக்கு மேல் படிக்கும்படி கூறுவர். அவர்களால் பத்து நிமிடத்துக்கு மேல் அவதானத்தைச் செலுத்த முடிவதில்லை. அடிக்கடி மாறுபவற்றிலே அவதானத்தைச் செலுத்துவர். சிலவற்றில் நல்ல உற்சாகமெடுப்பர். அதுவும் கொஞ்ச நேரமே இருக்கும். இன்று தொடங்கும் விளையாட்டை நாளை கைவிட்டு விடுவர்.
மேலும் பல பொருட்களைச் சேர்க்கத் தொடங்குவர். முத்திரை, வெண்கட்டி, சோடாமூடி, ஸ்ரிக்கேஸ், பேப்பர் போன்ற பல பொருட்களைச் சேர்ப்பர். கிராமப் புறங்களிலுள்ள பிள்ளைகள் குருவிகளைப் பிடித்துத் தமது களிசான் பையில் வைத்திருப்பர். பெண் பிள்ளைகள் பெரும்பாலும் வீட்டில் விளையாடுவர். பாடசாலையில் நிகழும் வேதனையான சம்பவங்களில் மணஞ்சோர்ந்து அதற்கான பாதுகாப்புணர்வை வீட்டிலே தேடுவர். பிள்ளை பாடசாலை முடிந்து வீட்டுக்கு வரும்போது ஆகக்குறைந்தது தாயாவது

ஆறு வயதிலிருந்து பனினிரணிடு வயதுவரை 每5
வீட்டிலிருப்பது நன்று. வந்ததும் தனது வேதனைகளைச் சொல்ல நினைப்பர். அதற்கான சூழலைப் பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
ஒருநாள் இந்த வயதிலுள்ள பெண்பிள்ளை இரண்டு வாரம் பாடசாலைக்குப் போகவில்லை. காரணம் நோய் வந்துவிட்டது. நோய் மாறியதும் பாடசாலைக்குச் சென்றது. அங்கே காலை இடைவேளை நேரத்தில் அம்மாவை நினைத்து அழத்தொடங்கியது. வீட்டுக்கு வந்ததும் ஏன் மகள் உங்களுக்கு என்ன நடந்தது?" என்று கேட்டபோது எனக்கு அம்மாவை ஞாபகம் வந்தது. அதனாலே அழுதேன்" என்று பிள்ளை கூறியது.
இங்கே இரண்டு விடயங்கள் பிள்ளைக்கு நடந்துள்ளன. ஒன்று சரீரநோயி னால் கஷ்டப்பட்ட பிள்ளை பாடசாலை சென்றதும் சரீரச் சோர்வால் மனவேதனை ஏற்பட்டுள்ளது. அடுத்த விடயம் என்னவென்றால் இரு வாரங்கள் பாடசாலை செல்லாது இருந்ததால் சிநேகிதிகள் குழுவில் இப்பிள்ளையைப் புறக்கணித்து விட்டனர். இரண்டு வாரம் வகுப்புக்கு வராததால் உனக்குப் படிப்பித்தது தெரியாது என்று கலந்துரையாடலில் இப்பிள்ளையைக் குழுவினர் சேர்த்துக்கொள்ளவில்லை. இதுவும் பிள்ளையின் மனதில் வேதனையைக் கொடுத்தது. இதனாலேயே இடைவேளை நேரத்தில் அழுதது.
தந்தை ஒரு குடும்ப ஆலோசகராக இருந்ததால் பிள்ளையின் மனதைப் புரிந்து கொண்டார், அதிபருடன் தொடர்புகொண்டு நடந்ததைக் கூறினார். அதிபரோ பிள்ளை விளையாடும் குழுவினரை அழைத்து இத்தந்தையோடு கதைக்கவிட்டார். தந்தை குழுவினரிடம் “ளங்கடை மகள் ரெண்டு கிழமை பள்ளிக்கூடத்துக்கு வரேல்ல. அதனாலை படிப்பிச்சது ஒண்டும் தெரியல்லையெண்டு கவலைப்படுறா. என்னாலை உங்கடை வகுப்பிலை வந்து இருக்க முடியாது. மகளுக்கு எப்பிடி உதவி செய்யலாம்?" என்று கூறினார். உடன் குழுவினர், "அங்கிள் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்" என்று கூறி அப்பிள்ளையை அழைத்துச் சென்றனர். அன்றிலிருந்து பிள்ளை அவ்வாறு இடைவேளை நேரத்தில் அழுவதில்லை.
இங்கே சரீர நோய் மனதில் வேதனையை ஏற்படுத்தியது மட்டுமல்ல குழுவால் புறக்கணிக்கப்பட்டதும் மனதில் வேதனையை ஏற்படுத்தியது எனலாம். இந்த வயதில் பிள்ளைகள் தமது குழுவினருடன் சேர்ந்து விளையாட ஆசைப்படும்போது அதற்கு இடமளிக்க வேண்டும். வீட்டில் சேர்ந்து வேலை செய்யவும் சில நேரங்களில் விரும்புவர். அண்ணன் தங்கையுடன் சேர்ந்து வேலை செய்ய, விளையாட விரும்புவர். இதனை உற்சாகப்படுத்த வேண்டும். ஆண்பிள்ளையானால் அப்பாவுடன் சேர்ந்து சிறுசிறு வேலை செய்யச் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். இந்த வயதுவரை பிள்ளைகளுக்குத் தேவையா னவற்றைப் பெற்றோர் செய்தனர். ஆனால் இந்த வயதில் பிள்ளைகளுடன் சேர்ந்து வேலை செய்தல் வேண்டும். அப்பாவின் வேலைகளில் உதவும்போது ஆண்பிள்ளை தன்னம்பிக்கையைப் பெறுகிறது. என்னால் வேலை செய்ய முடியும் என்ற நம்பிக்கை வளரத் தொடங்குகிறது. அதேபோன்று பெண்பிள்ளையைத் தாய் தனது வேலைகளில் சேர்த்துச் செய்தல் வேண்டும்.

Page 36
56 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
பெரும்பாலான பெற்றோர்கள் தமது வேலைகளில் இந்த வயதிலுள்ள பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வதில்லை. இவர்களால் இதைச் செய்ய முடியாது என்று பெற்றோர் கூறுவர். மரக்கறி வெட்டத் தருமாறு கேட்டால் உனக்கு வெட்டத் தெரியாது என்பர். நீ வெட்டினால் சாப்பிடவும் முடியாது போய்விடும் எனத் தாய் கூறுவாள். அழகான விதத்தில் தெரியாது வெட்டத் தெரியாது இருக்கலாம். இருந்தாலும் வேலை செய்யப்பழகவிடுவது நன்று. கத்தியால் கையை வெட்டிவிடுவர் எனப் பெற்றோர் பயப்படுவர். சரியான விதத்தில் வெட்டச் சொல்லிக் கொடுத்தால் பிள்ளை கையை வெட்டாது பழகும். செய்யும் எல்லா வேலையையும் செய்ய விடாது தடுத்தால் அப்பிள்ளையின் தன்னம்பிக்கை இல்லாது போய்விடும்.
இந்த வயதிலுள்ள பிள்ளைகளின் முன்னால் பெற்றோர் இறைவன்போன்று தோன்றி நிற்றல் பிழையானதாகும். சிறுவயதில் தனது பெற்றோர் எல்லாம் தெரிந்தவர்கள், பிழை விடாதவர்கள் என்று நினைத்தனர். ஆனால் நடுத்தர வயதில் தமது பெற்றோர் பிழை விடக்கூடியவர்கள். பெற்றோருக்குத் தெரிந்த விடயங்களும் உண்டு. தெரியாத விடயங்களும் உண்டு. பொய் சொல்லிப் பிள்ளைகளுக்கு மாயை போன்று காட்டுவது பிழை. பெற்றோருக்குத் தெரியாதிருந்தால் எனக்குத் தெரியாது. நீான் தெரிந்தவரிடம் கேட்டுச் சொல்கிறேன் என்று கூறும்போது பெற்றோர்கள் கடவுள் போன்று பிழை விடாதவர்கள் அல்லர். பெற்றோரும் பிழைவிடக் கூடியவர்கள் என்பதைப் பிள்ளைகளும் உணருவர்.
"அப்பா என்னைச் செய்ய வேண்டாமென்று எனக்குச் சொல்லி விட்டு நீங்கள் செய்யிறீங்கள்” என்று பிள்ளைகள் பெற்றோரைப் பார்த்துக் கேட்பர். அப்போது அவர்களை அதட்டாது "மகன் என்னை மன்னிச்சுக்கொள்ளுங்கோ அப்பா பிழைவிட்டுப்போட்டன்" என்று கூறினால் இதுவே உயர்ந்த நிலையாகும். அதைவிடுத்து "நான் பெரிய ஆள். செய்யலாம். பிழைவிடலாம். நீ சின்னப்பிள்ளை. பிழைவிடக்கூடாது" என்று கூறினால் நான் பெரியதாகியதும் பிழைவிடலாம் என்று பிள்ளை நினைக்கும். சில பெற்றோர் பிள்ளைகள் அப்படிக் கேட்கும்போது "வாய்மூடு. அப்பாவைத் திருத்தப் பார்க்கிறாயா?" என்று கூறுவர். இதுவும் பிழையே.
இவ்வாறு பெற்றோர் “இவ்வயதிலுள்ள பிள்ளைகள் ஒழுங்கில்லை" என்று குறைபட்டுக்கொள்ளுவர். அதனால் தண்டனை கொடுக்க வேண்டும். தண்டனை கொடுத்தால் ஒழுங்குள்ள பிள்ளையாக வளரும் என்பர். ஒழுங்கையும் தண்டனையையும் அடுத்த அதிகாரத்தில் நோக்குங்கள்.
ஒருவரது விவாக வாழ்வு நன்றாக அமைய வேண்டுமானால் சிறுபிள்ளைப் பருவத்தில் தனது அப்பா அம்மாவுக்கிடையில் நல்ல அன்புத் தொடர்பு இருப்பதைப் பிள்ளை அனுபவித்தால் வளர்ந்ததும் விவாக வாழ்வு சிறப்புறும். மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அன்பு செய்யப்பட்டு, பாதுகாப்புணர்வைச் சிறுவயதில் அனுபவித்தால் வளர்ந்ததும் விவாக வாழ்வு சிறப்புறும். சிறுவயதில் தண்டனை அதிகமாகப் பெற்றவர்கள் வளர்ந்தால் மற்றவர்களுக்கும் அவ்வாறு

ஆறு வயதிலிருந்து பணினிரணிடு வயதுவரை 57
தண்டனை கொடுக்க முனைவர்.
மேலும் இந்த வயதிலுள்ள பிள்ளைகளுக்கு எதிர்ப்பாலாரில் அதிக நெருக்கம் இருப்பதில்லை. ஐந்து வயதிலிருந்து ஆண்பிள்ளை அதிகமாக ஆண் பிள்ளையுடன் சேர விரும்பும் . அதனால் ஆணையே முன்மாதிரியாகக்கொள்ள விரும்பும். பெண் பிள்ளை பெண்ணையே முன்மாதியாகக்கொள்ள விரும்பும். பால்வேறுபாட்டின் அடையாளத்தை உறுதிப்படுத்த விரும்புவதால் எதிர்பாலாரில் அதிகம் விருப்பம் வருவதில்லை. அவர்களைப் பெரும்பாலும் பிடிக்காது இருக்கும்.
ஒருநாள் நான் இந்த வயதிலேயுள்ள பிள்ளைகளுக்குப் பிரசங்கம் செய்யப் பாடசாலை ஒன்றுக்குச் சென்றிருந்தேன். முன்வரிசையில் ஆண்பிள்ளைகளும் பின் வரிசையில் பெண்பிள்ளைகளும் இருந்தனர். முன்வரிசையிலிருந்த ஆண்பிள்ளிை/ஒன்று திடீரென9ாழும்பி, "சேர், இந்தப் பொம்பிளையளை அடிச்சு விரட்ட வேணும்" என்று கூறினார். ஏன் என்று கேட்டேன். பின்னால் எனக்கு கிள்ளுதுகள் என்று கூறினார். "நாங்கள் கிள்ளவில்லை” என்று பெண்பிள்ளைகள் கூறினர். சிலநேரம் கிள்ளாமல் இருந்திருக்கலாம். கதிரை அங்கும் இங்கும் நெருக்கி இருக்கலாம். இந்த வயதில் ஆண்பிள்ளைகளுக்குப் பெண்பிள்ளைகளைக் கண்டால் எரிச்சல் வரலாம். இப்படிப்பட்ட குணம் எந்த நாளும் இருக்காது. கொண்டாட்டம் பெருநாள் வரும்போது ஆண்பிள்ளைகள் பெண்பிள்ளைகளோடு சேர்ந்து செயற்படுவர்.
நடுத்தரவயது வருவதால் பாலுறுப்புப்பற்றி அறிய ஆசை ஏற்படும். ஆனால் உடலுறவு கொள்ள ஆசையிருப்பதில்லை. பாலுறுப்புகளைப்பற்றிய புத்தகங்களைக் கன்டால் அதை அறிய, வாசிக்க ஆசைப்படுவர். பிள்ளைகளில் இப்படிப்பட்ட குணத்தைக் கண்டதும் நாம் கலவரப்பட வேண்டியதில்லை. அடிக்க வேண்டிய தில்லை. காரணம் பிள்ளை இதைச்செய்வது பாலுறுப்புப்பற்றி அறிய ஆசை இருப்பதாலேயே.
பாலுறுப்புகளைப்பற்றி நாம் பாவிக்க விரும்பாத வார்த்தைகளைப் பாவிக்க விரும்புவர். நண்பர்கள் ஒன்று கூடியதும் இதைப் பற்றிக் கதைப்பர். இது இயற்கையே. பாடசாலை செல்லும்போது ஒரு பிள்ளை வழியில் சிறுநீர் கழித்தால் ஒருவர் பின் ஒருவராக மற்றவர்களும் சிறுநீர் கழிப்பர். மற்றப் பிள்ளைகளுக்குச் சிறுநீர் கழிக்க வேண்டிய தேவை இல்லாதிருந்தாலும் அதைச்செய்வர். அதுமட்டு மல்ல சிறுநீர் கழித்தவாறு ஆணுறுப்பைப் பார்ப்பர். அளவு எப்படி என்று நோக்குவர். ஒப்பிட்டுப் பார்ப்பர். இதுவும் பாலுறுப்புப்பற்றிய உந்துதலின் வெளிப்பாடே.
ஒருநாள் ஒரு தாய் அழுதவண்ணம் என்னிடம் ஓடி வந்தாள். அவளது பிரச்சினை என்னவென்றால், நடுத்தர வயதில் இருக்கும் தனது மகன் அடுத்த வீட்டுப்பிள்ளைக்குப் பாடசாலையில் வைத்து ஒரு கடதாசி கொடுத்தானாம். அக்கடதாசியில் உனது பெண்ணுறுப்பைக் கிறித் தருமாறு அடுத்த வீட்டுப் பிள்ளையிடம் கொடுத்தானாம். அப்பிள்ளை கடதாசியைக் கொண்டு சென்று

Page 37
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி 58
தனது தாயிடம் கூறியதாம். அத்தாய் இந்த ஆண்பிள்ளையின் தாயிடம் கூறிவிட்டாள். தாய் அப்பிள்ளைக்கு நன்றாக அடித்தாள். பின்பு தந்தை வீட்டுக்கு வந்ததும் தந்தையிடமும் கூறினாள். தந்தையும் பிள்ளைக்கு நன்றாக அடித்துவிட் டார். இன்னும் திருப்திப்படாத தாயார் மறுநாள் என்னிடம் வந்து இதைக்கூறினாள். "எனது மகன் கெட்டுவிட்டான். எங்கள் பரம்பரையிலேயே இப்படி ஒரு பிள்ளை இல்லை. எனது மனதிலிருந்து மகனை அப்புறப்படுத்தவும் தீர்மானம் எடுத்துவிட் டேன்" என்றாள். அவளை ஒருவாறு தேற்றிவிட்டு இந்த வயதிலுள்ள பிள்ளைகளின் மனநிலையை அவளுக்கு நான் விளக்கினேன். அதன்பின்பே தனது பிள்ளை கெட்ட பிள்ளையில்லை. இயற்கையாக இந்த வயதில் வரும் மனநிலைப்படி செயற்பட்டுள்ளது என்பதை அத்தாய் உணர்ந்து கொண்டாள்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் பிள்ளையை அடிக்காது பிள்ளையை அணைத்துச்சொல்லிக் கொடுத்தல் வேண்டும். மகன் இது இயற்கைதான். இதைப் பற்றி ஒவ்வொருவரிடமும் கேட்கப் போனால் பிரச்சினை வரும். இதைப்பற்றி அறிய வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள். நான் இதைப்பற்றிய விளக்கப் படங்களுடன் உள்ள புத்தகத்தில் விளக்குகிறேன் என்று கூறி இருக்கலாம். அப்படிக் கூறியிருந்தால் பாலுறுப்பு இயற்கையானது. நல்லது என்று பிள்ளை எண்ணும். அப்படிச் செயற்படாது அப்பிள்ளைக்கு அடித்தால் அன்றிலிருந்து பாலுறுப்பு என்பது பசாசு போன்றது என அப்பிள்ளை எண்ணத் தொடங்கும்.
இந்த வயதில் பிள்ளைகள் வீர வணக்கத்தைப் பின்பற்றுவர். தாம் உயர்ந்தவர்கள் என்று நினைப்பவர்களைப் பின்பற்றி வாழ ஆசைப்படுவர். ஆண்பிள்ளை விளையாட்டில் ஆசையுள்ள பிள்ளையானால் விளையாட்டு வீரரைத் தனது கதாநாயகனாக் குவார்கள் . பெரும்பாலும் வயதுபோனவர்களையல்ல. இளம் வயதினரைப் பார்த்தே பின்பற்றுவர். அவர்களைப் போல் வீரச் செயலைத் தாமும் பின்பற்றவே பார்ப்பர். ஆனால் இன்று எமது பிள்ளைகள் யாரைத் தமது கதாநாயகனாக எண்ணுகின்றனர்? சினிமாப் படங்களில், தொலைக் காட்சியில் சண்டை பிடிக்கும் கொலைஞர்களையே தமது கதாநாயகனாக்குவர். பெரும்பாலும் எமது பிள்ளைகள் தமது கதாநாயகனாக அப்பா அம்மாவைப் பின்பற்றும் விதத்தில் நாம் வாழப் பழக வேண்டும். ஆசிரியர்களும் அவ்வாறே.
இந்த வயதிலுள்ள பிள்ளைகள் ஓர் பிரசங்கத்தை, உரையைக் கேட்டு அதில் குறிப்பெடுத்துப் படிக்கும் திறமை இருக்காது. ஏதாவது தமது கைகளால் செய்து, செயல் முறையின் அனுபவத்தினூடாகவே கல்வியைப் பெற்றுத் தமது அறிவை வளர்க்க முனைவர். அவதானத்தோடு ஒரு பிரசங்கத்தைக் கொஞ்ச நேரமே கேட்பர். மணித்தியாலக்கணக்கில் பொறுமையோடு இருந்து அவதா னத்தைச் செலுத்த அவர்களால் முடிவதில்லை.
எண்ணத்தில் உள்ளவற்றைப் புரிந்துகொள்வதில் மிகவும் கஷ்டப்படுவர். அதாவது உருவம், மணம், நிறம் இல்லாதவற்றைக் கற்பனையில் அறிவது

ஆறு வயதிலிருந்து பணினிரணிடு வயதுவரை 59
கடினம். உதாரணமாகப் "பக்தி” என்பதைப் புரிந்து கொள்வது கடினம். இப்படிப்பட்டவற்றிற்கு தமக்கு விளங்குவதுபோல் தலையசைத்துப் பதில் சொன்னாலும் உண்மையில் அவர்களுக்கு விளங்குவதில்லை. இப்படிப்பட்ட எண்ணத்தை விளங்கிக்கொள்ளப் பதினொரு வயதாவது செல்ல வேண்டும். இந்த வயதிலுள்ள பிள்ளையை மற்றப் பிள்ளைகளுடன் பெற்றோர் ஒப்பிடுவர். அது தவறானதாகும். "அண்ணா இப்படி இல்லை, அக்கா உன்னைப் போல இல்லை” என்று ஒப்பிடுவதை விரும்பமாட்டார்கள். அண்ணன் வேறுபட்ட ஒருவர். அக்கா வேறுபட்ட ஒருவர் என்பதை மனதில் கொள்வது நன்று. அது மட்டுமல்ல ஒரு பிள்ளையை ஒரு மாதிரியும் மற்றப் பிள்ளையை வேறொரு மாதிரியும் கவனிப்பதையும் பிள்ளைகள் விரும்புவதில்லை.
இந்த வயதிலுள்ள பிள்ளைகள் ஆன்மீகம், மதத்தைப் பற்றிச் சிந்திப்பது அதன் அளவைப் பார்த்தேயாகும். நோக்கத்தைப் பார்ப்பதல்ல. உதாரணமாக ஒரு பிள்ளை கோபம் வந்ததால் வீட்டில் ஒரு பீங்கானைக் கீழே எறிந்து உடைத்துவிட்டது. மற்றொரு பிள்ளை தாய்க்கு உதவி செய்யப் போய்த் தவறுதலாக ஆறு பிங்கானை உடைத்துவிட்டது. இங்கே இந்த இருவரிலும் யார் அதிகம் பிழைவிட்டார்கள் என்று இந்த வயதிலுள்ள பிள்ளைகளிடம் கேட்டால் ஆறு பீங்கானை உடைத்தவரே என்பர். நோக்கத்தைப் பார்க்காது அளவையே பார்ப்பர். M நீதி, நேர்மை பற்றியும் இந்த வயதிலுள்ள பிள்ளைகளிடம் வேறுபட்ட அபிப்பிராயம் இருக்கும். சனிக்கிழமை காலையில் விளையாட எல்லோரும் சேர்ந்து ஆயத்தமாகி இருந்தனர் என வைத்துக்கொண்டால், அன்று காலை மழை பெய்கிறது. இதைக் கண்டதும் இது பெரிய அநியாயம் என எண்ணுவர். யாரோ வேண்டுமென்று செய்தது போன்று உணருவர்.
வளர்ந்தவர்கள் சட்டதிட்டங்களைக் கடைப்பிடித்தாலும் விசேடமான சந்தர்ப் பங்களில் அச்சட்டதிட்டங்களை மாற்றுவர். ஆனால் இந்த வயதிலுள்ளவர்களுக்குச் சட்டதிட்டங்கள் கடவுளால் தரப்பட்டது. யாராலும் அதை மாற்ற முடியாது என எண்ணுவர்.
சட்ட திட்டங்கள் மாறக்கூடியது. மனிதருக்காகவே சட்டதிட்டங்களுள்ளன. சட்டதிட்டங்களுக்காக மனிதர் இல்லை." இந்த விதத்தில் நடுநிலை வகிக்கக் கூடியவர்களாகப் பெரியவர்கள் நடமாட வேண்டும். பெரியவர்கள் சொன்னால் சொன்னது தான். அதை மாற்ற முடியாது என்று நடமாடினால் பிள்ளைகளும் அதைப் பார்த்துப் பழகுவர். -
இந்த வயதிலுள்ள பிள்ளைகளுக்கு மதத்தைப் படிப்பிப்பவர்கள் மதத்தை வாழ்பவர்களாக இருக்க வேண்டும். அதாவது அதன்படி வாழ உற்சாகம் எடுப்பவர்களாக இருக்க வேண்டும். படிப்பிப்போர் அதன்படி வாழாதவர் என்பதைப் பிள்ளை கண்டால் அதில் அதிக பிரயோசனத்தை எடுக்காது. வீட்டில் பெற்றோர் சமயப்படி வாழ முயற்சி எடுப்போராக இருக்க வேண்டும். மதப் படிப்பினைகள், கருத்துக்கள், எண்ணங்கள், பெறுமதிகளைப் பிள்ளைகள் தமது பெற்றோர், ஆசிரியரிடமிருந்து உறிஞ்சி எடுக்கக்கூடிய விதத்தில் வாழப்பழக வேண்டும். இந்த வயதில் நாம் எங்கு வாழ்ந்தாலும், எக்கலாச்சாரத்தில் வாழ்ந்தாலும் அதில் ஆழமாக வேரூன்றும் விதத்தில் வாழ வேண்டும்.

Page 38
SO மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
责 贪 责 表 20. ஒழுங்கும் தண்டனையும் ஒழுங்கு என்பது என்ன? எமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தச் சில சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கிறோம். சில சட்டதிட்டங்களின்படி அதைச் செய்கிறோம். நாமே ஏற்படுத்திக்கொண்ட தடைகளே ஒழுங்கு எனலாம். நான் எனக்குச் சட்டதிட்டம் போட்டு அதன்படி கடைப்பிடிக்கின்றேன். மனமுதிர்ச்சி அடைந்த ஒருவருக்கு நாட்டில் சட்டதிட்டங்கள் தேவையில்லை. காரணம் அவர் தனது வாழ்வில் அவற்றைச் சரியாகக் கடைப்பிடிப்பதாலேயேயாகும். ஆகவே மற்றவரது சுதந்திரத்தைப் பாதுகாக்கும் விதத்தில் எமது சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதே ஒழுங்கு என்கிறோம்.
ஒழுங்கு என்பது சிறுவர்களுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் தேவை யான ஒன்றாகும். எமது சமுதாயத்தில் இன்று ஒழுங்கு குறைந்துள்ளது. மற்றவரது சுதந்திரத்திற்கு என்ன நடக்கிறது என்பதை நாம் எண்ணுவதில்லை. ஒழுங்கு என்பது புகையிரதத்தின் முன்னோக்கிய பயணத்துக்காக இருக்கும் ரயில் தண்டவாளம் போன்றது என்று கூறினால் மிகையாகாது. ஒரு புகையிரதம் ஓடுவதற்குத் தண்டவாளம் தேவைப்படுகிறது. தண்டவாளம் இருப்பதால் புகையிரதம் பக்கவாட்டில் செல்வது தடைப்படுகிறது. முன்னோக்கிச் செல்ல உதவுகின்றது. இங்கே பக்கவாட்டில் செல்லாது புகையிரதத்தின் பயணம் ஒரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காரணம் குறிக்கோளை நோக்கிப் பயணம் செய்ய அவசியமாக இருப்பதால் தண்டவாளம் தேவைப்படுகிறது.
ஒழுங்கு என்பது இதைப்போன்ற ஒன்றுதான். நானே எனக்குச் சட்டதிட் டத்தைப் போடுவதாயிருந்தால் மிகவும் நல்லது. அப்போது மற்றையோர் என்னைக் குறைசொல்ல மாட்டார்கள். ஒழுங்கு என்பது அளவுக்கு அதிகமாகச் சட்டதிட்டத்தை இலகுவாக்குவதோ, அளவுக்கு அதிகமாக சட்டதிட்டத்திற்கு அடிமையாக்குவதோ அல்ல. நல்லவாழ்வு வாழ்வதற்காகத் தேவைக்கேற்ப ஓரளவு சட்டதிட்டம் தேவையானது. அவை மட்டுப்படுத்தப்பட்டதாகக் குடும்பத்தில் இருக்க வேண்டும். பிள்ளையின் வளர்ச்சிக்கு உதவும் விதத்திலேயே பெற்றோர் சட்டதிட்டங்களைப் போட வேண்டும். அவை பிள்ளையின் மனவளர்ச்சிக்குத் தடையாக உள்ளனவா என்று பார்த்துக்கொள்ள வேண்டும், பிள்ளை தனது பிரச்சினைகளை வீட்டில் வந்து பெற்றோருக்குச் சொல்லும்போது பெற்றோர் பெரும்பாலும் சட்டதிட்டங்களைக் கூட்டுவார்கள். அப்படிப் பெற்றோர் செயற்பட்டதும் பிள்ளை ஒன்றுமே பெற்றோ ருக்குச் சொல்ல விரும்பாது போகலாம். காரணம் நான் இதைச் சொன்னால் சட்டதிட்டம் கூடலாம் என்ற பயம் மனதில் எழக்கூடும்.
சட்டதிட்டங்கள் தேவையானவையே. அவை பிள்ளையின் மன வளர்ச்சிக்கு உதவும் விதத்திலேயே இருக்கவேண்டும். அதேபோன்று பிள்ளையின் மனமுதிர்ச் சிக்கேற்பவே சட்டதிட்டம் விதிக்கப்பட வேண்டும்.

ஒழுங்கும் தணிடனையும் 61 ۔۔۔۔۔
குடும்பத்தில் ஒரு பிள்ளையைக் கடைக்குத் தனியே அனுப்பக்கூடியதாக இருக்கும். மற்றொருபிள்ளையை வீட்டில் வெளிக்கதவு வரையில்கூடத்தனியாக அனுப்ப முடியாத நிலை இருக்கலாம். இங்கே ஒருபிள்ளை பொறுப்புடன் நீண்டதூரம் தனியாகப் போகக்கூடிய மனவளர்ச் சியைப் பெற்றுள்ளது. மற்றப்பிள்ளை அவ்வாறு பெறவில்லை. ஆகவே பிள்ளையின் மனமுதிர்ச்சியைக் கவனித்தே இவற்றைச் செய்ய வேண்டும்.
பெற்றோர் தமது பிள்ளைக்குத் தண்டனை கொடுக்க எத்தனிப்பது பிள்ளையின் நன்மைக்காகவே. திரும்பவும் அதே கஷ்டத்தில் விழாதிருக்கவே. பிள்ளை பிழைவிட்ட்தும் அப்பிள்ளைக்குத் தண்டனை கொடுப்பதைவிடுத்து பிள்ளை செய்யும் நல்ல செயல்களைப் பாராட்டுவதன் மூலம் பிழையைத்தான் திருத்திக்கொள்ள உதவலாம். இதை அடிக்கடி செய்வதால் பிள்ளைகள் பிழை விடுவது குறையலாம். நாம் பெரும்பாலும் பிழையான நடமாட்டத்திற்குத் தண்டனை கொடுக்கப்பழகியுள்ளோம். நல்ல நடமாட்டத்தைப் புகழ்வதில்லை. சிலவேளை களில் நல்ல விதத்தில் பிள்ளை நடமாடினால் அப்பிள்ளையைப் பாராட்டாது, அதைப் பகிடிபண்ணும் விதத்தில் "இண்டைக்கு மழைபெய்யப்போகுது" "அதுதான் இன்டைக்கு மழை பெய்யுது" போன்ற வார்த்தைகளைப் பாவித்து பகிடி பண்ணுகிறோம்.
பெற்றோர் பிள்ளைக்குக் கொடுக்கும் தண்டனை சரிர, மன வேதனையை ஏற்படுத்தக்கூடியதாகவே இருக்கிறது. ஒருநாள் ஒரு தந்தை என்னிடம் கூறினார். "என்ரை பிள்ளையை இண்டைக்கு கண் சிவக்கும் வரை தலைகீழாய் கட்டிப்போட்டு விட்டு வருகிறேன்" என்றார். மற்றொரு தந்தை என்னிடம் வந்த "எனது மகள் அடுத்தவீட்டு இளைஞனுடன் காதல் தொடர்பை ஏற்படுத்திவிட்டாள். அவளின் கை, கால்களைக் கட்டிப்போட்டு வீட்டில் பூட்டி வைத்துள்ளேன். தூர இடத்தில் பிள்ளையை விடுவதற்கு ஒரு மடம் தேடித்தர முடியுமா?" என்றார். இப்படிப்பட்ட தண்டனைகள் பிள்ளைக்குப் பொருத்தமற்றவையாகும். இத்தண்டனைகளால் பிள்ளைகள் தமது செயற்பாடுகளை மனதில் அடக்கி வைக்கின்றனர். ஆனால் தமது பழக்கங்களை மாற்ற முற்பட மாட்டார்கள். ஆசிரியர் இருக்கும்போது மாணவர் ஆசிரியருக்குப் பயத்தில் சத்தம் போடாமல் இருப்பர். ஆசிரியர் வகுப்பை விட்டு வெளியேசென்றதும் உடனே சத்தம்போடத் தொடங்குவர். இதுபோன்றே தமது நடமாட்டத்தை அடக்கிவைத்து இருக்கும். எதிர்ப்பின் முன்னிலையில் கீழ்மனதில் அடக்கிவைத்து எதிர்ப்பு இல்லாதபோது திரும்பவும் பழைய விதத்தில் நடமாடத் தொடங்குவர்.

Page 39
மகிழ்ச்சியான வாழ்வுக்கு nig 62
21. பெற்றோர் தமது பிள்ளைக்குத் தண்டனை கொடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டிய குறிப்புகள்
பிள்ளைக்குத் தண்டனை கொடுக்கும்போது அதன் வயதிற்கேற்ப தண்டனை கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும். பிள்ளையின் உணர்வு வேகத்திற்கேற்றதாக இருக்கவேண்டும். பிள்ளையின் உடல் ஆரோக்கிய நிலைக்கும் மனவளர்ச்சிக்கும் ஏற்ற தண்டனையாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பிள்ளைக்கும் கொடுக்க வேண்டிய தண்டனை மாறுபட்டதாக இருக்க வேண்டும். சிலபிள்ளைகள் அதிகம் பயந்த பிள்ளைகளாக இருக்கலாம். தடியைக் கையில் எடுக்கும்போதே தலைசுற்றி விழும் பிள்ளைகளும் உண்டு. அல்லது பயத்தில் சிறுநீர் கழித்துவிடும் பிள்ளைகளும் உண்டு. சிலபிள்ளைகள் தண்டனையைப்பெற ஆயத்தமாக இருப்பர்.
நாம் பிள்ளைக்குத் தண்டனை கொடுக்க ஆசைப்படுவது நாம் சிறிய வயதில் தண்டனையைப் பெற்றதால் அதைத் தீர்க்க வேண்டுமென்று எமது கீழ்மனதிலிருந்த அவாவினாலேயாகும். உதாரணமாக ஒரு ஆசிரியர் தனது வகுப்பில் பிழைவிட்ட மாணவனைத் தண்டித்து விட்டு கதிரையில் ஏற்றிவிட்டார். ஏற்றிவிட்டுஅம்மாணவனைப்பார்த்து "நாம் படிக்கும்போது எங்களது ஆசிரியர் நான் பிழைவிட்டதும் கதிரையில் ஏற்றித் தண்டனை தந்தார். அப்படி அவர் என்னைத் தண்டித்தபடியால்தான் நான் இன்று ஆசிரியராக இருக்கிறேன். நல்லவனாக இருக்கின்றேன் என்று கூறினாராம். இங்கே உண்மையில் நடந்தது என்ன? அன்று சின்னப் பிள்ளையாக இருக்கும்போது ஆசிரியர் தண்டனை கொடுக்கும் போது ஆசிரியருக்குத் திருப்பி அடிக்க முடியவில்லை. ஏசமுடியவில்லை. ஆசிரியரைக் கதிரையில் ஏற்ற முடியவில்லை. இப்போது கீழ்மனத்திலுள்ள உந்துதலினால் நல்ல நோக்கத்தோடு பிள்ளைகளில் அதைச் சாதிக்கிறார் ஆசிரியர். அதாவது கீழ்மனதில் தள்ளி வைத்ததை இப்போது மாணவர்களில் வெளிப்படுததினார் ஆசிரியர். இதுவே உண்மை.
ஒருநாள் தனது மகளைத் தந்தை பட்டியால் அடித்தார். எனது அப்பாவும் இப்படித்தான் என்னைத் திருத்தினார். உங்களையும் அப்படித்தான் வளர்க்க வேணும்" என்று தந்தை கூறினார். அதுமட்டுமல்ல தனது ஒரு மகனைத் தண்டித்துவிட்டுத் தனது அடுத்த மகனையும், மகளையும் கூட்டிக்கொண்டு போய் மகனைக் காட்டினார். "பாருங்கோ இவன் செய்த வேலையை மூண்டு

பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தணிடனை கொடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேணிடிய குறிப்புகளி 63.
களிசான் உள்ளே போட்டிருக்கிறான்” என்றார். பிள்ளைகள் எம்மைப்பற்றி நன்கு அறிந்துவைத்திருப் பார்கள். அப்பா எப்படி அடிப்பார்? எப்போது அடிப்பார் என்றெல்லாம் அறிந்து வைத்திருப்பர்.
ஆகவே தண்டனை கொடுக்கும்போது பிள்ளைக்கேற்ப கொடுக்க வேண்டும். பிள்ளைகள் பெற்றோரை நன்கு கவனித்து வைத்திருப்பதற்கு மற்றொரு உதா ரணம். பிள்ளைகள் தாம் விளையாடும்போது சிறுவயதில் "நான் அம்மா நீ அப்பா” என்று கூறி அப்பா, அம்மா சொல்வதுபோல் செயற்படுவதுபோல் செய்துகாட்டுவர். அம்மா அப்பா ஏசுவதைப்போன்று ஏசுவர். ஆகவே பிள்ளைகள் எம்மை நன்றாகக் கவனித்து வைத்திருப்பர் என்பதை மனதில்கொண்டு பிள்ளைக் கேற்ற விதத்தில் தண்டனை கொடுக்க வேண்டும். சிலர் பயப்படுவார்கள். சிலர் நடுங்குவர். சிலர் தண்டனைக்கு ஆயத்தமாக இருப்பர். அவர்களுக்கேற்ற தண்டனை கொடுக்கப் பெற்றோர் பழகி இருக்க வேண்டும்.
நாம் கொடுக்கும் தண்டனையால் பிள்ள்ை தனது வாழ்வில் பாடம் கற்கக்கூடிய தண்டனையாக இருக்கவேண்டும். தனது வாழ்வைத் திருத்திக் கொள்ள, சரிசெய்துகொள்ளக்கூடிய தண்டனையாக இருக்க வேண்டும். உங்கள் வீட்டில் உங்களது பிள்ளை பந்து அடித்து விளையாடுகிறது. வீட்டுக்குள் விளையாட வேண்டாம் என்று நீங்கள் பிள்ளைக்குக் கூறுகிறீர்கள். கண்ணாடி உடைந்துவிடும் என்று கூறினிர்களென வைத்துக்கொள்ளுங்கள். இருப்பினும் கண்ணாடி உடைந்துவிட்டது என வைத்துக்கொள்ளுங்கள். பிள்ளைக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். எப்படித் தண்டிப்பது? பிள்ளையைக் கூப்பிட்டுப் புதிதாகக் கண்ணாடி போடவேண்டும். அதனால் பாடசாலைக்குப் போகும்போது உங்கள் செலவுக்குத் தரும் பணத்தில் சிறுதொகையை ஒதுக்கினால் அப்பாவும் காசு போட்டுக் கண்ணாடி வாங்கலாம்” என்று பிள்ளைக்குக் கூறினால் பிள்ளை தனது வாழ்விலே பாடத்தைக் கற்றுக்கொள்கிறது.
பிள்ளைக்குத்தண்டனை கொடுப்பதற்கு முன்பு அம்மாவும் அப்பாவும் பிள்ளைக்குக் கொடுக்க இருக்கும் தண்டனைபற்றி ஒருமனப்பட்டு இப்படித்தான் இத்தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று இருவரும் சம்மதிக்க வேண்டும். தண்டனையைக் கொடுக்கும்போது இருவரும் தண்டனையைபற்றி இருவிதமான கருதி தைக் கொணர் டிருப்பது பிழையாகும் . ஒருவர் தணி டனை கொடுக்கவேண்டுமென் கிறார். மற்றவர் தண்டனை கொடுக்கக்கூடாதென்கிறார். இதைப்பிள்ளைகண்டால் பிள்ளை இத்தண்டனையில் பிரயோசனத்தை எடுக்கமாட்டாது. பிள்ளைக்குத் தண்டனை கொடுப்பதற்கு முன்பு அப்பா அம்மா இருவரும் கலந்துரையாடி ஒருமனப்பட்டு அவசியமாயின் பிள்ளைக்குத் தண்டனை கொடுப்பதே சிறந்த வழியாகும்.
ஓர் அனுபவத்தைக் கவனியுங்கள். பாடசாலையில் தவணை முடிந்ததும் ஆசிரியர் பிள்ளையிடம் ரிப்போர்ட்டைக்கொடுத்து பெற்றோரின் கையொப்பம் வாங்கிவருமாறு கூறினார். வீட்டில் தந்தைக்கு ரிப்போர்ட்டைக் காட்டியதும்

Page 40
64. மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
உளவியல் தெரிந்த தந்தையாதலால் கூடுதலான புள்ளிகளைப்பெற்ற பாடங்களைச் சுட்டிக்காட்டிப் பிள்ளையைப் பாராட்டினார். இன்னும் முயற்சியெடுத்தால் குறைந்த புள்ளிகளையும் கூட்ட முடியுமென்றார். அப்போது பிள்ளைக்கு இது பிரச்சினையாகிவிட்டது. பிள்ளை தனது தந்தையைப் பார்த்து "ரீச்சர் குறைந்த புள்ளியைப் பார்த்துவிட்டு எல்லாப் பிள்ளைகளுக்கும் முன்பாக என்னைத் தண்டித்தார். அப்பா, நீங்கள் அதிகமான புள்ளியை சுட்டிக்காட்டி என்னைப் பாராட்டுகிறீங்கள்” என்று கூறினாள். இங்கே ஒரே ரிப்போர்ட்டைப் பார்த்து ஆசிரியர் ஒன்றைக்கூறினார். அப்பா வேறொன்றைக்கூறினார். தந்தைக்கு உளவியல் அறிவு இருந்ததால் ஆசிரியரைக் காட்டிக்கொடுக்காது ஆசிரியரைத் தாழ்த்திக்கூறாது பிள்ளையைப் பார்த்து "நீங்கள் கணக்கில் இரண்டு பிழைவிட்டது கவனக்குறை வாலே என்று ஆசிரியர் நினைத்திருக்கலாம்" என்று கூறினார்.
பிள்ளையின் முன்னிலையில் ஆசிரியரைக் குறைத்துக் கூறியிருந்தால், ஏசியிருந்தால் பிள்ளை பின்பு ஆசிரியருக்கு மதிப்புக் கொடுக்காமல் இருக்கலாம். ஆகவே பெற்றோரும் ஆசிரியரும் வெவ்வேறு விதத்தில் செயற்படுவது தவறான தாகும். பிள்ளைகள் பிழைவிட்டதும் அப்பிள்ளைக்குப் பெற்றோர் தண்டனை கொடுத்துவிட்டு பெற்றோர் அதே தவறைச் செய்யாமல் இருப்பது நல்லது.
தண்டனை கொடுக்கும்போது "நான் உங்களில் இனிமேல் அன்பில்லை. இனிமேல் உங்களை அன்புசெய்யமாட்டேன்" என்று பிள்ளைக்குக்கூற வேண்டாம். அது தண்டனையல்ல. எமது பிள்ளைகள் பிழைவிடும்போது அவர்களை அதிகம் அன்பு செய்வது மிகவும் முக்கியமானதாகும். அன்பிலிருந்து பிரிப்பது பிழையாகும். "இதுக்குப் பிறகு உனக்கு அப்பா இல்லையெண்டு நினைத்துக்கொள்" என்று கூறுவது பிழை. "நீ இனிமேல் எங்களுடைய குடும்பத்திலே இல்லையென்று நினைத்துக்கொள்” இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பாவிப்பது மிகவும் பாரதூரமானதாகும். பிள்ளை அடிக்கடி பிழைவிடுவதைக் கண்டால் முன்பைவிட பிள்ளையை அதிகம் நெருங்கவேண்டும்.
 

22. 961T60tnü U(36)ith
இளமைப்பருவம் தொடங்குவது சரியாக இந்த வயதிலேதான் என்று யாராலும் கூறமுடியாது. பிள்ளைப்பருவம் முடிந்ததும் இளமைப் பருவம் ஆரம்பமாகும். இந்த வயதில் பிள்ளைகளின் சரீர வளர்ச்சி மிகவும் வேகமாக வளரும் என்று கூறலாம். சிறுவயதில் சரீர வளர்ச்சி வேகமாக வளர்ந்தது. பின்பு அதன் வேகம் சிறிது குறைந்திருந்தது. இந்தவயதில் திரும்பவும் சரீர வளர்ச்சி வேகமாக இருக்கும்.
சரீர வளர்ச்சி என்று கூறும்போது பாலுறுப்பு வளர்ச்சி வேகம் அதிகமாக இருக்கும். இக்காலத்தில் ஆணும்பெண்ணும் பூப்படையும் காலத்தை நெருங்குவர். இதனால் சரீரத்தில் பல மாற்றங்கள் ஏற்படும். இச்சரீர மாற்றம் ஏற்படமுன்பு ஆண், பெண் இருபாலாரிலும் வெளி அடையாளங்கள் பல தெரியத் தொடங்கும். உதாரணமாக ஆண் பிள்ளையானால் பூப்படைவதற்கு முன் உரோமம் வளர்தல், குரல் மாறுதல் போன்றவை நிகழும். பெண்பிள்ளையானால் தோலின் கீழ்ப்பகுதி மூடி சரீரத்தில் கொழுத்ததாகத் தெரியத் தொடங்கும். அக்காலத்தில் பெண்பிள்ளை பூப்படைய ஆயத்தமாகின்றது என ஆயத்தப்படுத்துதல் வேண்டும். எமது கலாச் சாரத்தில் இக்காலத்தில் ஆண், பெண் இருபிள்ளைகளையும் ஆயத்தப்படுத்துவது பெற்றோரால் நிகழ்வதில்லை. பெற்றோர் ஆயத்தப்படுத்துவதானால் மிகவும் நன்று.
எமது கலாச்சாரத்தில் பெண்பிள்ளைகள் பூப்படைவதைப் பற்றிப் பெரியவர்களுக்குத் தெரியும். ஆனால் ஆண்பிள்ளை பூப்படைவதைப் பற்றிப் பெரும்பாலா னோருக்குத் தெரியாது. எமது வீடுகளில் கதைப்பதுமில்லை. இதை அறிவது முக்கியமானதாகும்.
பாலுறுப்பு ரீதியில் பூப்படைதல் என்பது என்ன? பெண்பிள்ளை பூப்படைதல் என்பதை முதலில் நோக்குவோம். முதன்முறையாக கருப்பையிரண்டில் ஒருபக்கத்திலுள்ள கருப்பையிலிருந்து ஒரு சினை முற்றி பலோப்பியன் நாளத்துக்குள் சென்று கற்பப்பைக்குள் பயணம் செய்யும். பயணம் 24 மணிநேரம் வரை நீடிக்கும். சினை கற்பப்பைக்குள் பயணம் செய்யும்போது ஆணின் விந்துடன் சேராதிருந்தால் அது 24 மணித்தியாலத்தில் கரைந்துவிடும். அதேபோன்று மற்றொரு ஆயத்தமும் நடைபெறும்.
அதாவது கற்பப்பையில் இரத்தம் சேர்க்கப்படும். காரணம் ஆணின் உயிரணுவுடன் சினை கலந்ததும் அதிலிருந்து உருவாகும் குழந்தையைப் பாதுகாப்பதற்காகக் கற்பப்பையில் ஆயத்தம் இடம்பெறும். இந்தப்பெண்பிள்ளை சிறுமியாக இருப்பதால், ஆணின் விந்து சேராத நிலையில் கற்பப்பைக்குள் சேர்க்கப்பட்ட இரத்தம் அவசியமில்லாது போய்விடும். தற்கால ஆய்வின்படி கற்பப்பை மாதத்திற்கொருமுறை கழுவப்படுகின்றது என்கின்றனர். இக்காரணத்தால் சேர்க்கப்பட்ட இரத்தம் வெளியேற்றப்படுகின்றது. இதை முதன்முதலில் கண்டதும் பெற்றோருக்குத் தெரியவருகிறது. இதைக்கண்டதும் பிள்ளை பூப்படைந்துவிட்டாள் என்கிறோம். அதன்பின்பு மாதவிடாய் சக்கரம் ஆரம்பிக்கத்தொடங்கும். ஆரம்பத்தில் மாற்றமுள்ளதாக இருக்கலாம். காலப்போக்கில் சக்கரம் முறையானதாக அமைந்த பின் சாதாரணமாக 28

Page 41
66 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
நாட்களுக்கொருமுறை ஒருமாதம் இடதுபக்க சினைப் பையிலும், மறுமாதம் வலதுபக்க சினைப்பையிலும் சினைமுற்றி வெளிவரும். சிலருக்கு 24, 25 நாட்களுள்ள குறுகிய சக்கரமாகவும் சிலருக்கு 30, 34 நாட்க ளுள்ள நீண்ட சக்கரமாகவும் இருக்கலாம். பொதுவாக 28 நாட்கள் இருக்கும். இது முறைப்படி நடக்க பூப்படைந்தபின் ஆறுமாதமாவது ஆகலாம்.
அது அப்பிள்ளை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது என்பதன் அடையாள மாகும். இது நல்ல நிகழ்ச்சி. மகிழ்ச்சியான நிகழ்ச்சியாகும். ஆனால் எமது பெற்றோர் தமது பிள்ளைகளை இதற்கு ஆயத்தப்படுத்துவதில்லை. செய்யும் ஆயத்தமும் நன்மையான ஆயத்தமில்லை. சில பெற்றோர் பூப்படைவதை நோயாகக் காண்கின்றனர். மாதவிடாயை நோயாக நினைக்கின்றனர். சுகமில்லாமல் வந்துவிட்டது என்ற வார்த்தையைப் பாவிப்பர். இது சரீர நோய் என எண்ணுகின்றனர். இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பாவிக்கும்போது அதில் விளைவுகளும் உண்டு.
ஒருநாள் ஒருபெண் என்னிடம் தனது பிரச்சினையைக் கூறினாள். "எனக்குச் சுகமில்லாமல் வரும்போது மயக்கம் வருகிறது" என்றாள். இங்கே சுகயினம் என்பது என்ன என்பதைத் தேடிப் பார்த்தபோது மாதவிடாயே அந்த குறிப்பிட்ட “சுகயினம்" என்றதைப் புரிந்து கொண்டேன். இப்பிள்ளைக்கு பெண்கள் விடுதியிலேயே இந்நிகழ்ச்சி (மயக்கம்) ஏற்பட்டுள்ளது. இப்பிள்ளை வீட்டில் இருக்கும் காலத்தில் மாதவிடாயை ஒருநோய் எனப் பெரியவர்கள் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்துள்ளார்கள். மாதவிடாய் வந்த காலத்தில் பாடசாலை செல்லவோ, வேலை செய்யவோ அனுமதிக்கவில்லை, இதனால் இப்பிள்ளையின் மனதில் மாதவிடாய் என்பது நோய் என்று புரிந்துவிட்டது. அந்தநேரத்தில் ஒருவேலையும் செய்யக்கூடாது என்பதும் மனதில் பதிந்துவிட்டது. பயிற்சிக்காகப் பெண்கள் விடுதியில் தங்கியிருக்க வந்ததும் அங்கிருப்பவர்களுக்குப் பிள்ளையின் நிலை தெரியாது. பாடங்களில் பங்குபற்ற மாதவிடாய் காலத்தில் முடியாத நிலை ஏற்பட்டது. மனதில் கஷ்டமாகியது. மற்றவர்களும் அவளுக்கு உதவ வில்லை. சுகமில்லாத நேரத்திலும் என்னை வேலைசெய்யச்சொல்கிறார்களே என்று எண்ணினாள். இங்கு மனதிலே வந்த மோதல், குழப்பம், சரீரத்தாக்கமாக மாறியது. மயக்கம் போட்டு விழும் நிலைக்கு வந்தது. சிலவேளைகளில் இதைக் கிஸ்ரேறியா என நாம் அழைக்கிறோம். இது சரீர நோயல்ல. சரீர நோயில் இருக்கும் அடையாளங்கள் வெளிப்படும் மனச்சிக்கலே. ஆகவே இந்தப்பெண் ணுக்கு மனப்பிரச்சினையே ஏற்பட்டது. சுகயினமான நாட்களில் வேலை செய்வது கூடாது" என மனதில் பதிந்திருந்தது. இதை மற்றவருக்குக் கூறவும் முடியாத நிலையிலிருந்தாள். பெற்றோர் தாம் அறியாமல் செய்யும் பிழையால் சாதாரணமான உடலில் நடக்கும் நல்ல நிகழ்ச்சி நோயாக அறிமுகப்படுத்தப்படுகிறது.
எமது தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் பிள்ளை பூப்படைந்தவுடன் சில பழக்கவழக்கங்கள் உள்ளன. சில பழக்கவழக்கங்களால் பிள்ளை பயப்படுகிறது. நோய் என்று அறிமுகப்படுத்தாதிருந்தாலும் செய்யும் செயல்களால் இது இயற்கை யான ஒன்றல்ல. ஏதோ ஒன்று என்று மனப்பயம் ஏற்படுகின்றது.
பிள்ளை பூப்படைந்ததும் சில குடும்பங்களில் அப்பிள்ளையைப் புறம்பாக்குவர். ஒரு அறையில் சில நாட்கள் இருக்கும்படி கூறுவர். ஆண்களைக்

இளமைப் பருவம் 67
காட்டுவதும் இல்லை. தந்தையைக்கூடக் காட்ட மாட்டார்கள். இப்படிச் செயற்படும்போது பிள்ளை மனதில் எனக்கு ஏதோ புதுமையான ஒன்று நடந்துவிட்டது என எண்ணு கிறது. இது ஒருபோதும் நடக்காத ஒன்று என்று எண்ணுகிறது. இந்த எண்ணம் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வரும்போது கீழ் மனதில் இருக்கும். இது நடக்கவேண்டிய ஒன்றல்ல. ஒரு பெண்ணுக்கு வேறு நோய் ஒன்றும் இல்லாதி ருந்தால் பூப்படைந்துவிட்டாள் என்பதற்காக அறையில் புறம்பாக இருக்கவிட வேண்டிய அவசியமில்லை. ஒருதாய் கூறினாள். தனது மகளுக்கு "இப்படிப்பட்ட சடங்கொன்றும் செய்யவில்லை. இதைச் செய்யாதுவிட்டதனால் மகளில் ஒரு குறைபாடும் இருக்கவில்லை" என்று.
ஆகவே இதைப்பற்றி எந்தவிதமான பயமும் ஏற்படத் தேவையில்லை. அணியவேண்டிய உடையற்றிச் சொல்லிக்கொடுக்க வேண்டுமே தவிர பயப்படுத்தி அறையில் புறம்பாக்கி வைப்பது நல்லதல்ல. அதேபோன்று சில உணவுகளை அப்பிள்னைக்குக் கொடுக்காது ஒதுக்குகிறோம். சிங்கள் மக்களில் சிலர் மாதவிடாய் காலத்தில் எண்ணெய் சாப்பாடுகளைக் கொடுப்பதில்லை. ஆனால் தமிழ் மக்கள் நல்லெண்ணெய் குடிக்கக்கொடுப்பர். அல்லது உணவோடு கலந்து கொடுப்பர். ஆகவே எண்ணெய்சேர்ந்த உண்வைக் கொடுப்பது கூடாது என்று சிங்கள மக்களுக்கு இருக்கும் பயம் அர்த்தமற்றது. செமிக்கக்கூடிய உணவுகளைக் கொடுப்பது நல்லது.
ஆகவே பயப்படுத்தக்கூடிய எந்தப்பழக்கவழக்கத்தையும் கைவிடுவது நன்று. அதுமட்டுமல்ல பெற்றோருக்கும் சில பயங்கள் இக்காலத்தில் வரலாம். பிள் ளைக்குக் குளிப்பாட்டுவது யார்? எந்தப் பக்கம் பார்த்துக் குளிப்பாட்டுவது? என்ற பிரச்சினை எழலாம். இதனால் சாஸ்திரகாரனிடம் சென்று ஆலோசனை கேட்பர். பெற்றோர் இதைச் செய்வது பயத்தினாலேயே. யார் பிள்ளையைக் குளிப்பாட்டுவது என்ற பயமும் வரும், இந்த வயதுப்பிள்ளை தனியாகக் குளித்து முழுகத் தெரிந்திருக்கும். முழுக்காட்டுவது யார் என்று பெற்றோர் பயப்படத் தேவையில்லை. மேலும் மாதவிடாய் வந்ததும் குளிக்கக்கூடாது என எண்ணுவர். இது இயற்கையான நிகழ்ச்சி. நோயல்ல. ஆகவே குளிக்காமல் இருக்கத் தேவையில்லை. உடல்நோயேதும் இல்லையேல் குளிக்கலாம்.
ஆதிகாலத்தில் இப்பழக்கவழக்கங்கள் ஏற்பட்டது பிள்ளையின் பாதுகாப்பைக் கருதியே. ஆதியில் விஞ்ஞானக்குறிப்புகள் தெரியாது. ஆனால் இன்று விஞ்ஞானம் வளர்ந்துவரும் யுகத்திலேயே வாழ்கிறோம். சில பழக்கவழக்கங்கள் அர்த்தமுள் ளவை. பிள்ளையைப் பெற்றோர் பயப்படுத்தாத ஒற்றுமையை ஏற்படுத்தக்கூடிய பழக்கவழக்கங்கள் நன்று. தமிழ், சிங்கள கலாச்சாரத்தில் புதிதாக வயலில் அருவிவெட்டும் காலத்தில் புதிர்காய்ச்சி, பொங்கல் பொங்கும் பழக்கம் சிலரிட முண்டு. இது செழிப்பைக் காட்டுகிறது. மகிழ்ச்சியைக் காட்டுகிறது. இப்படிப்பட்ட நல்ல பழக்கவழக்கங்களைச் செய்வது நன்று.
கலாச்சாரம் என்பது காலத்திற்கேற்ப வளரக்கூடியதாக இருக்கவேண்டும். நாம் கலாச்சாரம் என எண்ணுவது இவ்வளவு காலமும் உள்ள பழக்கவழக் கங்களைப் பாதுகாப்பது என்றே எண்ணுகிறோம். எமது கலாச்சாரத்தில் அர்த்த முள்ள புதியவைகளைச் சேர்க்க முடியும். பூப்படைந்த நேரத்தில் நல்ல பழக்க வழக்கங்களைச் சேர்த்துக்கொள்வது பிழையல்ல. ஆண்பிள்ளையைப்

Page 42
68 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
பொறுத்த வரையில் பூப்படைதலைப்பற்றிப் பெற்றோருக்கு அறிவில்லாததால் இப்படிப்பட்ட பழக்கவழக்கங்களைச் செய்வதில்லை. பெண்பிள்ளைகளுக்கு சினைப்பை இரண்டு இருப்பதைப்போன்று அண்டகோசம் (விதை) இரண்டு ஆணுறுப்பின் கீழ் உள்ளது. இதிலேதான் விந்து அல்லது ஆண் உயிரணு உருவாகின்றது. பூப்படையும் காலம் நெருங்கியதும் முதன்முறையாக விந்து வெளியேறும். பெரும்பாலும் இரவில் கனவுகாணும்போது விந்துவெளிவரலாம். இது நடந்தால் அப் பிள்ளை பூப்படைந்து விட்டது, அல்லது பெரியபிள்ளையாகிவிட்டது எனலாம். இதற்குமுன் உரோமம் முளைப்பது, குரல் மாறுவது போன்ற அடையாளங்கள் தென்படலாம். இந்த அடையாளங்களைக் கண்டதும் பெற்றோர் விழிப்பாயிருக்கவேண்டும். பிள்ளைக்குச் சொல்லிக்கொடுத்து ஆயத்தமாக்க வேண்டும். ஆயத்தப்படுத்த வில்லையேல் இந்த நிலையைக் கண்டதும் பிள்ளை பயப்படக்கூடும். ள்வ்வளவுதான் இதைப்பற்றிய அறிவிருந்தபோதும் பலர் இதைப்பற்றி அனுபவம் கிடைத்தவுடன் பயப்படக்கூடும்.
சில பெண்பிள்ளைகள் பயத்தில் இதைப்பெற்றோருக்குக் கூறாது மறைத்து விட்ட சந்தர்ப்பங்களுண்டு. ஒரு பெண்பிள்ளை தனது பிரச்சினையை முன்கொண்டு என்னிடம் ஆலோசனைபெற வந்தது. அப்பிள்ளையுடன் கலந்துரையாடிய போது தனது அனுபவத்தைக் கூறியது. "நான் பூப்படைந்து நான்காவது மாதவிடாய் வந்பின்பே பெற்றோரிடம் கூறினேன். பெற்றோர் நான்காவது மாதவிடாய் வந்த நிகழ்ச்சியை முதலாவது என எண்ணிக் கொண்டாடினார்கள்" என்று கூறினாள். அவள் பெற்றோருக்குக்கூறவில்லை. காரணம் இப்படிப்பட்ட விடயங்களில் பெற்றோ ருடன் நல்லவிதத்தில் கலந்துரையாடக்கூடிய சூழல் இல்லாதிருப்பதேயாகும். பாலுறுப்புப்பற்றி பெற்றோர் இந்தவயதில் பிள்ளைகளுடன் கலந்துரையாடுவ தில்லை. சில பெற்றோர் பாலறுப்புப் பற்றி மட்டுமல்ல எந்தவிடயத்திலும் கலந்துரையாடுவதில்லை. ஆகவே இப்படிப்பட்ட அனுபவத்தில் பிள்ளைகள் அறிவைப் பெற்றிருந்தாலும் பயப்படக்கூடும்.
இப்படிப்பட்ட அனுபவத்திற்குள்ளாகும்போது எமது கலாச்சாரத்தில் பிள்ளை கள் பெற்றோருடன் இந்த அனுபவத்தைப் பகிர்வது குறைவு. கேட்க யாருமில்லை. அதனால் பெரும்பாலும் சமவயதுள்ள நண்பர்களுடன் இதைப்பற்றிக் கேட்கக்கூடும். சமவயதிலுள்ள நண்பர்களுக்கும் இதுபற்றிய அறிவு இருப்பதில்லை. தனக்குச் சரியான அறிவு இதைப்பற்றி இல்லை என்று கூறவும் விருப்பமில்லை. அதனால் மூடக்கருத்துக்களை வெளிப்படுத்துவர். ஆனால் பூப்படைந்த ஆண்பிள்ளை பயப்படக்கூடும். சில நண்பர் பயப்படுத்துவர். இப்படி அடிக்கடி நிகழ்ந்தால் மெலிந்துவிடுவாய். முகம் சுருங்கிப்போகும். கசரோகம் வரும் என்று பலவிதமாகக் கூறி பயப்படுத்துவர். இதில் விஞ்ஞான உண்மை இருக்காது. இருந்தாலும் பூப்படைந்த பிள்ளை உண்மையானாலும் பொய்யானாலும் பயப்படக்கூடும்.
ஆகவே பெற்றோர் சரியான அறிவைப் பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும். இது இயற்கையானது. கலவரப்படவேண்டிய அவசியமில்லை என்று கூற வேண்டும். பாலுறுப்புப்பற்றிய அறிவைப்பெற்றோர் சந்தர்ப்பத்திற்கேற்பவே கூறவேண்டும். ஏதாவது நிகழ்ச்சி ஏற்படும்போது கூறலாம். உதாரணமாக

இளமைப் பருவம் − 69
மகனின் குரல் மாறுகிறது என வைத்துக்கொள்வோம். இதை வைத்து சிரிக்காது இதை முன்கொண்டு மகனுக்குச் சொல்லிக்கொடுக்கலாம். மகன் குரல் மட்டுமல்ல சரீரத்திலே இன்னும் பல மாற்றங்கள் ஏற்படலாம். இன்னும் சில காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏற்படலாம் என்று சந்தர்ப்பத்திற்கேற்பவே கூறவேண்டும்.
சரீர மாற்றங்களால் பிள்ளையின் மனதிலும் தாக்கம் ஏற்படும். நான் மற்றவரைவிட உயர்ந்தவர் என்று சில வேளைகளில் நினைப்பர். எல்லாம் என்னால் முடியும் என நினைப்பர். ஆனால் அதேபிள்ளை மறுநாள் அதை விடக் கீழ்ப்பட்ட தாழ்ந்த உணர்வுக்கு உள்ளாகலாம். தனது நடவடிக்கையைப்பற்றித் தாழ்வான எண்ணம் ஏற்படலாம். அதாவது ஒருநேரம் உயர்ந்தவர் என்ற உணர்வும், மறுகணம் தாழ்ந்தவர் என்ற உணர்வும் ஏற்படும். இது இந்த வயதில் உள்ள பிள்ளைகளுக்கு வருவது இயற்கையே.
சில நேரங்களில் பெற்றோரை நெருங்குவர். அவர்களுடன் சேர்ந்திருப்பர். பெற்றோர் சொல்வதைக் கேட்க விரும்புவர். சில நேரங்களில் பெற்றோரைப் புறக்கணிக்க அவர்களுக்கு எதிராகச் செயற்பட எண்ணுவர். இப்படி மனதில் மாறும் என்று பிள்ளைகள் அறிவதில்லை. அதனால் பெற்றோராகிய நாம் பிள்ளைகள் இந்த வயதில் எமது மனதில் புண்படும் வார்த்தைகளைக் கூறிவிட்டதே என்று கவலைப்படாது பிள்ளைகளின் மனதைப் புரிந்துகொள்வது முக்கியம். அடிக்கடி மாறுபட்ட நிலையில் செயற்படும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
இந்த வயதிலுள்ள பிள்ளைகளைத்தீர்ப்பிட்டுத் தண்டிப்பதைவிட அவர்களைப் புரிந்துகொள்வது முக்கியமானதாகும். சிறுவயதில் பிள்ளைகளில் கீழ்ப்படிதலை எதிர்பார்த்தனர். பிள்ளையும் கீழ்ப்படிந்தது. இதற்குப் பழக்கப்பட்ட பெற்றோர் கீழ்ப் படியாதவாறு செயற்படும்போது பிள்ளையிலே வெறுப்பேற்படுகின்றது. தமது ஆதிபத்தியம், வல்லமைக்கு எதிராகச் செயற்படுவது போன்று தெரிகின்றது. இதேபோன்று இந்த வயதில் பிள்ளைகளின் மனதில் சுயாதீனம் ஏற்படப்பெரியதொரு ஆசைதோன்றுகிறது. சுதந்திரத்துடன் செயற்பட ஆசை ஏற்படும்.
ஒருநாள் தனது மகளைப்பற்றி ஒரு தந்தை என்னிடம் அனுபவம் ஒன்றைக் கூறினார். "வீட்டில் நான் இருக்கும்பொழுது எனது மகளும் அருகில் அமர்ந்திருந் தாள். அப்போது ஒரு பூனைக்குட்டி துள்ளிக்குதித்து அங்கும் இங்கும் விளையாடிக் கொண்டிருந்தது. இதைக்காட்டியவாறு பூனைக்குட்டிக்கு இருக்கின்ற சுதந்திரம்கூட எனக்கு இல்லையே” என்றாள். அதை நான் சிந்தித்தேன். முன்பு இப்படிக்கூற வில்லையே. இவ்வாறு கூறுவது முன்பைவிட இப்போ எனக்குச் சுதந்திரம் கூடுதலாகத் தேவை என்பதை உணர்ந்தேன்” என்று என்னிடம் கூறினார். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் பெற்றோர் தமது பிள்ளைகளுடன் சண்டைபோடுவர். சுதந்திரம் தந்தால் கெட்டுப்போய் விடுவீர்கள் என்று அதிகமதிகமாகக் கட்டுப்படுத்துவர். இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் பிள்ளை பெரியபிள்ளை என்று எண்ணினாலும் பெரிய பிள்ளைகளுக்குக் கொடுக்கக்கூடிய பொறுப்புகளைச் சிறிது சிறிதாகக் கொடுப்பதில்லை. வார்த்தையிலும் சரியா, சரியா என்று கதையின் இடையில் அடிக்கடி கேட்பார்கள். இந்த வயதில் உள்ள பிள்ளைகளுக்குச் சுதந்திரம், பொறுப்பைக் கொடுக்கவேண்டும்.

Page 43
7O மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
சுதந்திரத்தைக் கேட்டாலும் சுதந்திரத்தைப் பாவிக்கப் பயமுண்டு. கஷடப்பட்டு விடுவேனோ என்ற பயம் பிள்ளையின் மனதிலிருக்கும். சுதந்திரத்திற்கு ஆசையும் அதைப் பாவிக்கப் பயமும் ஒரேநேரத்தில் இருக்கக்கூடும். நான் செய்வது சரியா என்று உறுதியாக இருப்பதில்லை. இதனால் தமக்கு ஏற்படும் சந்தேகத்தைப் பயத்தைப்போக்கப் பெற்றோருடன் சமவயதிலுள்ள நண்பர்களுடன் சேர ஆசைப்படுவர். பெற்றோருடன் மிகவும் நெருக்கமான நட்புறவு பிள்ளைகளுக்கு இருந்தால் பெற்றோருடன் தமது உறவை வளர்ப்பர். இல்லையேல் சமவயதுடன் தமக்கு உதவிபெற அதிகம் சேருவர்.
6. US வந்தவருடன் நெருங் கரிப் பழகுவதைவிடச் சமவயதிலுள்ளவர்களுடன் நெருங்கிப்பழக உளரீதியில் விரும்புவது இயற்கையே. தமக்கு அதிகம் அர்த்தத் தைப் பிரயோசனத்தைத் தரும் என்று எண்ணுவர். இப்படிச் செய்யப் போகும் போது தமது குழுவில் சேரவேண்டியேற்படும். சமவயதுக்குழுவில் அங்கத்தவராகவேண்டி ஏற்படும். சேர்ந்ததும் பலவிடயங்களில் கட்டுப்பட்டு விடுவர். குழுவினரின் சட்டதிட்டங்களுக்கு எதிராகச் செயற்படும்போது குழுவிலிருந்து வெளியேற்றப் பார்ப்பர். அதாவது தனது சுயாதீனத்தை ஓரளவு பரித்தியாகம் செய்தே தமது குழுவில் செயற்பட நேரிடும். தமக்கிடையே நடமாடும் விதம் இப்படித்தான் எனக் குழுவில் இருக்கும். அவர்களைப்போல் நடமாடச் சம்மதிக்க வேண்டிவரும். ஆகவே பெற்றோராகிய நாம் இதைப்புரிந்துகொள்ளவேண்டும். பிள்ளை இப்படி நடமாடுவது குழுவினரின் நடமாட்டம் இப்படி இருப்பதானாலேயே. உதாரணம்: நாகரீகம். சமவயதுக் குழுவில் தலைமயிர் ஒரேவிதத்தில் வெட்டினால் எமது பிள்ளையும் அப்படியே வெட்ட நினைக்கும். எமது மகன் அதற்குப் புறம்பாக இருப்பது கடினமானது.
ஒரு தந்தை என்னிடம் தனது அனுபவத்தைக்கூறினார். "எனக்கு இரு ஆண்பிள்ளைகள் இருக்கின்றனர். நான் தலைமயிரைக் கட்டையாகவே வெட்டு வேன். பிள்ளைகள் தலைமயிரை வளர்த்துப் பயித்தியமாக நடக்கிறார்கள் என்றார். கண்களும் தெரியாத விதத்தில் தலைமயிர் வளர்த்துள்ளனர். ஒருநாள் பிள்ளையைக்கூப்பிட்டு மனதில் கற்பனைக்கதை ஒன்றை உருவாக்கிக்கூறினார். உன்னைப்போல் ஒரு மகன் அப்பாவுக்கிருந்தார். கண்களை மூடியவாறு தலைமயிர் இருந்ததால் இரு கண்களைச்சுற்றியும் கத்தரிக்கோலால் வட்டமாக மயிரை வெட்டிவிட்டார். கண்தெரிவதற்காக அப்படி வெட்டினார் என்று கூறினார். கண்களை மூடியிருந்த மயிரை வட்டமாகக் கண்கள் தெரியும் விதத்தில் வெட்டினால் மயிர் கீழே விழுந்துவிடுமே. பிசினால் ஒட்டினார்களா, வட்டமாக மயிர் முகத்தை மூடியிருக்க” என்று கேட்டார். அதிலும் மனம்புண்பட்டுவிட்டது அப்பாவுக்கு.
இங்கே நீளமாகத் தலைமுடியை வளர்த்தது ஏன், சமவயதுக்குழுவில் சேர்ந்திருக்கவே. இல்லையேல் குழுவினர் பிள்ளையை ஒதுக்கிவிடுவர். சிலநேரத் தில் பிழையான செயல்கூட குழுவில் மற்றவர்கள் செய்யும்போது விருப்பமில்லாமல் இருந்தாலும் செய்யாமல் குழுவில் இருக்க முடியாத நிலைக்கு உள்ளாகுவர். குழுவில் இருக்க வேண்டுமானால் அதைச் செய்யமுனைவர். இப்படிப்பட்ட செயல்களால் பிள்ளைகள் பெற்றோருடன் மோதலை

இளமைப் பருவம் 71
ஏற்படுத் துவர். இளமைப்பருவத்திலுள்ள பிள்ளைகள் வீட்டிலிருந்தால் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையில் ஒருநாளும் மோதல் இல்லை என்றால் இதுவும் இயற்கைக்குப் புறம்பானதே. மனரீதியில் பிள்ளைகள் அல்லது பெற்றோர் நோயாளிகள் என்பது அர்த்தம். இயற்கையாக சிறு சிறு ம்ோதல் 65D.
பிள்ளைகள் சுதந்திரத்தை எதிர்பார்ப்பர். ஆறு மணிக்கு வீட்டுக்கு வரவேண்டுமெனப் பெற்றோர் எதிர்பார்ப்பர். ஏன் ஏழு மணிக்கு வந்தால் என்ன? என்று பிள்ளை கூறும். பெற்றோருக்குக் கோபம் வந்துவிடும். இதுவரையும் கீழ்ப்படியப்பழகிய பிள்ளை இந்த வயதில் கீழ்ப்படியாது செயற்படும்போது இது பெற்றோருக்குப் பிரச்சினையாக இருக்கும். கீழ்ப்படியும் பிள்ளைக்கு அதிகம் அன்புகாட்ட முனைவரி பெற்றோர். இது பிழை. பிள்ளைகள் பிள்ளைகளாக இருப்பதால் அவர்களுக்கு அன்புகாட்டவேண்டுமே தவிர கீழ்படிவதால் அல்ல. அல்லது நன்றாகப் படிப்பர் என்பதாலுமல்ல.
இந்த வயதில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையில் மோதல் வருவதற்குக் காரணங்கள் உண்டு. சில காரணங்கள் பிள்ளைகளால் ஏற்படும். சில மோதலுக்குப் பெற்றோரே காரணம். 长
இந்த வயதிலுள்ள பிள்ளைகள் சுயாதீனமாகச் செயற்பட விரும்புவர். தானே தீர்மானம் எடுக்க விரும்புவர். ஒரு தந்தையிடம் தனது மகள் ஒருநாள் "அப்பா நான் எனக்கு விருப்பமான முறையில் தீர்மானம் எடுக்க, எனக்கு விருப்பமான நேரம் வீட்டுக்குவர போவதற்கு, சுதந்திரம் இல்லையே” என்று அப்பாவிடம் கூறியது. அப்பா பிள்ளையைப் பார்த்து, இந்த வயதில் உங்களுக்கு தேவையான உணவு, உடுப்பு, போக்கு வரத்துச்செலவு எல்லாவற்றையும் நீங்களே தேடிக்கொண்டால் சுதந்திரமாக நடக்கலாம் என்றார், படித்துக்கொண்டிருக்கும் பிள்ளையாதலால் கயாதீனமான நிலைக்குப் படிப்படியாகவே வரவேண்டும். நீங்கள் விரும்பிய நேரத்துக்கு வருவதற்கும். போவதற்கும், நாங்கள் ஆயத்தமாயிருக்கவேண்டுமென நீங்கள் எதிர்பார்த் தால் எங்களுக்குக் கஷ்டம், நாங்களும் சுயாதீனமானவர்கள். உங்களது தேவை கள் எல்லாவற்றையும் நீங்களே கவனித்தால் அதைச்செய்ய முடியும்" என்றார். அதற்குப் பிள்ளை விரும்பவில்லை. இவ்வாறு பிள்ளையுடன் கலந்துரையாடிப் படிப்படியாகவே சுயாதீன நிலைக்குப் பிள்ளைவர உதவவேண்டும்.
பிள்ளைகள் சுயாதீனத்தை எதிர்பார்க்கும்போது பெற்றோருக்குத் தெரிவது பிள்ளை கீழ்ப்படிவில்லை என்றே. வல்லமைக்கு எதிராகச் செயற்படுவர் அல்லது எதிர்த்து செயற்படுவர். ஸ்திரமாக இது சரியா, பிழையா என்று தெரியாததால் பெற்றோருடன் மோத எண்ணுவர். எதிலும் ஸ்திரமில்லாத நிலை இருக்கும். தன்மேல் சந்தேகப்படுவர். என்னால் அதைச் செய்ய முடியுமா? சரிவருமா? என்று தன்னை சந்தேகிப்பர். அதேபோன்று அடிக்கடி மாறும் தன்மை உண்டு. ஒருநேரம் ஒன்றைக் கூறுவர். மற்ற நேரம் வேறொன்றைக் கூறுவர். ஆகவே மாறுபடும் இந்த மனப்போக்கால் பெரியவர், பெற்றோருடன் மோதல் வருகிறது. இவைகள் பிள்ளைகளின் மனப்போக்கால் மோதல் ஏற்படுபவை.
அதேபோன்று பெற்றோரின் மனநிலையாலும் மோதல் ஏற்படலாம். வல்லமையில் பழக்கப்பட்டவர்கள் பெற்றோர்கள். நில் என்றால் முன்பு நின்றது.

Page 44
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
72
பிள்ளை, சொன்னது செய்யப் பழகி இருந்தது. பெற்றோரும் அதைப் பாரமெடுக்கப் பழகி இருந்தனர். “வா" என்றதும் “ஏன்? நான் அங்கை போயிற்று வாறன்" என்று பிள்ளை கூறியதும் பெற்றோரின் மனதில் குறைவுள்ளதாகத் தோன்றும்.
அதேபோன்று பெற்றோர் தமது பிள்ளைகளைப் பாதுகாக்கப் பழக்கப்பட் டுள்ளனர். எல்லா விபத்திலிருந்தும் பாதுகாக்கப் பழகியுள்ளனர். இப்போது பாதுகாப்புத் தேவையில்லை என்று பிள்ளை கூறியதும் அதைப் பெற்றோரால் தாங்க முடியவில்லை. இப்போது பாதுகாப்பு அவ்வளவு தேவையில்லை. சிறிது வழியை மட்டும் காட்டுவது, ஆலோசனை மட்டும் கூறுவது போதுமானது என்பதைப் பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. பிள்ளைகளைப் பற்றிப் பிடித்திருந்த நிலையிலிருந்து அவர்களைக் கைவிடப் பெற்றோரால் முடிவதில்லை. பெற்றோர் பற்றிப் பிடித்துள்ள வல்லமையைப் படிப்படியாகக் கைவிட்டு பிள்ளைகளைச் சுயாதீனமாக்க வேண்டும்.
காரணம் பெரியோர், பெற்றோராகிய நாம் எமது செயல்கள் எங்களுடைய வையே என்று கூறப் பழக்கப்பட்டுள்ளோம். எமது பிள்ளைகளைப்பற்றிய எமக்குள்ள செயல்களைக் கைவிட்டதும் நாம் அர்த்தமற்றவர்களாகி விடுவோம் என்று எண்ணு கிறோம்.
"நீங்கள் யார்?" என்று ஒரு கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பேச்சாளர் ஒருவர் கேட்டார். அக்கூட்டத்திலிருந்த பெண் எழும்பி "நான் பாடசாலையில் ஆசிரியை, கடையில் சாமான் வாங்கச் செல்லும்போது நுகர்வோர், பஸ்ஸில் பிரயாணி, வீட்டில் மனைவி, பிள்ளைக்குத் தாய்" என்று கூறினாள். அப்போது பிரசங்கம் செய்தவர் அப்பெண்ணைப்பார்த்து “உங்களது கணவன் இறந்தபின், கடைக்குப் போக முடியாது, கால்கள் செயலிழந்த நாளில், பாடசாலைக்குச் செல்லமுடியாத நாளில் நீங்கள் யார்? என்று கேட்டார். இங்கே எமது செயல்களைக் கொண்டே எம்மை வெளிப்படுத்துகின்றோம் என்பது புரிகிறது. செயல்களுடன் நாம் அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளோம்.
எமது வாழ்வில் எமது செயல்கள் மாறலாம். தொழிலில் இருந்து இளைப்பாற நேரிடும். அப்போது நான் யார்? நானே செயல்கள் என்று எண்ணுவது பிழை. நான் என்ற நபர் மிகவும் உயர்ந்தவர். நான் அதிபர், சங்கத் தலைவர் என்பதல்ல. இவையாவும் இல்லாமல் போகும் காலம் வரும். அப்போது நாம் இருக்கின்றோம். நான் நானேதான் என்ற மனப்பாங்கு எமக்கிருக்க வேண்டும்.
பெற்றோர் பிள்ளைகளின் வாழ்வில் எல்லாவற்றையும் சிறுவயதில் நிர்வகித்த னர். இது சிறு வயதில். ஆனால் பிள்ளைகள் வளர்ந்ததும், திருமணமாகியதும் இவை இல்லாது போய்விடும். அப்போது நான் யார்? எனச்சிந்திப்பர். அப்பா, அம்மா நிலை என்பது இவற்றில் தங்கியிருப்பதில்லை. பிள்ளையின் வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் உதவுகிறோமோ அதற்கேற்பவே அப்பாவாகிறோம். அம்மாவாகி றோம். அந்த அறிவு பயிற்சிக்கேற்பவே தந்தை, தாய் ஆகிறோம். அப்பா என்பவர் அப்படிப்பட்டவரே. சட்டதிட்டங்களைக் கூட்டுபவர் அல்லர். சில பெற்றோர் காலையிலிருந்து மாலைவரை சட்டதிட்டங்களே பிள்ளைகளுக்குப் போடுவர். இவ்வாறு சட்டதிட்டம் போட்டவர்கள் தம்மைத் தேவையில்லை என்று பிள்ளைகள் கூறியதும் அதைப்

இளமைப்பருவம் 73.
பெற்றோரால் கேட்கக் கஷ்டமாக இருக்கும்.
சில பெற்றோர்கள் சிலவேளைகளில் பிள்ளைகளில் பொறாமைப்படக்கூடும். ஏன்? சரீரத்தில் நான் நல்ல கிரிக்கெட் வீரனாக இளம் வயதில் இருந்திருந்தால் எனது மகன் என்னைவிட கிரிக்கெட் விளையாட்டில் கெட்டிக்காரனாக இருந்தால் பிள்ளையைப் பற்றிப் பெருமைப்படுவதோடு, சிலநேரம் பொறாமையும் ஏற்படலாம். இது பெற்றோருக்குத் தெரிவதில்லை. காரணம் சுயஅறிவு பலருக்கு இருப்பதில்லை. தாய் தன்னைவிட அழகான தனது மகளில் பொறாமையும் கொள்ளக்கூடும். சரீர ரீதியிலேயே இது ஏற்படும். மன, அறிவு, ரீதியாக ஏற்படுவதில்லை. அம்மாவை விட மகள் அழகாக இருக்கிறாள் என்று யாராவது அம்மாவுக்கு முன் மகளைப் பாராட்டும்போது சிலரால் அதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோரும் அப்படி யல்ல. மனமுதிர்ச்சி அடைந்தவர்கள் சுயஅறிவுடன் எந்நேரமும் செயற்படுபவர்கள் அப்படியல்ல. இதுவும் மோதலுக்குக் காரணமாகலாம்.
மேலும் எமது வாழ்வில் முழுமையாக்க முடியாதவைகள் இருக்கலாம், இதைப்பிள்ளையில் நிரப்ப, நிறைவேற்ற முற்படுவர். துறவியாக ஆசையிருந்தும் துறவியாக முடியாமற்போன தந்தை தனது பிள்ளையைத் துறவியாக்கி அதில் முழுமைபெற முனைவர். படிக்க முடியாத, டாக்டராக முடியாத, விரிவுரையாளராக முடியாத தந்தை, பிள்ளையை அப்படியாக்கி அதில் முழுமை பெற முனைவர். எமது வாழ்வில் செய்யமுடியாதவைகள் பல இருக்கும். இதைப் பிள்ளையில் நிறைவேற்ற முனைவர். அப்போதும் மோதல் வரலாம். நல்ல நோக்கத்திலேயே செய்வர். ஆனால் இது பிழை என்று தெரிவதில்லை. நாம் நல்ல நோக்கத்தில் செய்யும் மடமையான வேலைகள், பிழைகள் பல உண்டு. இதைத்தேடிப் பார்க்க வேண்டும்.
மேலும் மோதலுக்கு மற்றொரு காரணம் பரம்பரை இடைவெளியாகும். முற்காலங்களைவிட இப்போது அகன்று செல்கிறது. முற்காலங்களில் மாற்றங்கள் ஏற்பட்டன. இருப்பினும் மிகச்சிலவே. ஆனால் இன்று அதிகமான வேகத்தில் எமது வாழ்வு மாறுகிறது. இந்த மாற்றத்தால் அப்பாவுக்கும், மகனுக்கும், அம்மாவுக்கும் மகளுக்கும் இடையில் பரம்பரை இடைவெளி மிக வேகமாக நடைபெறுகிறது. உதாரணமாக விவசாய யுகத்தில் அப்பா விவசாயியாக இருந்தால் பிள்ளை அப்பாவிடம் எப்படி விவசாயம் செய்வது? என்பதைக் கேட்டுச் செய்ய முடிந்தது. ஆனால் இன்று அப்படியல்ல. காரணம் விவசாயம் மாற்றமடைந்துள்ளது. இன்று தற்கால விஞ்ஞான அறிவுகளை நாம் பெறவேண்டியுள்ளது. முன்புபோன்று பெற்றோர் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்க முடியாதுள்ளது. கற்பித்தல் முறைகளெல்லாம் மாறியுள்ளன. வேறுபட்டுள்ளன. இதனால் பரம்பரை இடைவெளி வேகமாக வளர்ந்துள்ளது. சில நேரங்களில் எமது பிள்ளைகள் எம்மிடம் ஓர் நடிகரின் படத்தை வாங்கித்தருமாறு கேட்பர். எமக்கு இப்போ உள்ள நடிகரைத் தெரியாது. காரணம் எமது காலத்து நடிகர் இன்றில்லை. எல்லாமே மாறிக்கொண்டு செல்கிறது.
இவ்வாறு மோதலுக்குப் பெற்றோரின் பக்கமும் பிள்ளைகளின் பக்கமும் காரணங்களுண்டு. இதனால் மோதல் ஏற்படலாம். மோதல் ஏற்படுவது பெரிய

Page 45
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
பிரச்சின்ையல்ல. ஆனால் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கவேண்டும். அளவுக்கு மிஞ்சி காலையும், மாலையும் ஏற்பட்டால் அது நல்லதல்ல. சாதாரண மாக ஓரளவு மோதல் இருப்பது நல்லது. காரணம் இதனுாடாக தமது பக்கத்தை மட்டுமல்ல, பெற்றோர் சிந்திக்கும் பக்கத்தையும் பிள்ளைகள் காண்பர். மோதல் ஏற்படுவது நல்லது. மனம் நோகாத விதத்தில் பிள்ளைகளுடன் பெற்றோர் அதைப் பற்றி உரையாடவேண்டும். இது முக்கியமே. மோதல் இல்லையேல் பிள்ளையின் மனவளர்ச்சியில் ஏதோ சிக்கலுள்ளது என்பது அர்த்தம்.
சிறுவயதிலிருந்து பெற்றோருக்கும், பிள்ளைகளுக்குமிடையில் நல்லதொடர்பு இருந்து வந்திருந்தால் இந்த வயதில் ஏற்படும் மோதலை வெற்றிகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. இந்த வயதிலுள்ள பிள்ளைகள் பெரும்பாலும் தமக்கு அவசியமில்லாதவற்றுக்காகவே பெற்றோருடன் மோதுவர் என்பதைப் பெற்றோர் மனதில் கொள்ள வேண்டும். அவசியமானது, தேவையானது என்ற இரு வார்த்தைகளையும் எடுப்பின், அவசியமானது என்பது; இல்லாமல் இருக்கமுடியாத ஒன்று. கட்டாயத் தேவையைக் குறிக்கும். தேவையானது என்பது கணிடதால் , அழகாக இருப்பதாலி வேண்டுமெனக்கூறுவது. கடைக்குச் செல்லும்போது கடையில் சில பிளாஸ்ரிக் சாமான்களைத் தூக்கியிருப்பர். எல்லாமே அழகானவை. இவற்றைக் கண்டதும் வாங்கவேண்டுமென்ற ஆசை ஏற்படும். இவை அவசியமானவைகள் அல்ல. கண்டதும் ஆசை ஏற்பட்டவைகள். பிள்ளைகள் கேட்பதெல்லாம் அவசிய மானவைகளா? அல்லது கண்டதால் கேட்கிறார்களா, என்று கலந்துரையாட வேண்டும். சில பொருட்கள் அவசியமாக இருக்கின்றதே என்பதற்காக வாங்குவதில்லை. மற்றவர்கள் எல்லோரும் பாவிப்பதால் தாமும் வாங்க வேண்டுவதற்காக வாங்குவர். சிலவேளைகளில் பெரியவர்களும் அப்படித்தான். சிலவேளைகளில் சேலை வாங்குவது அவசியமாக இருப்பதாலா? இல்லை பக்கத்து வீட்டுக்காரி வாங்கியதாலேயே.
ஆகவே இந்த வயதில் ஏற்படும் மோதல் அழகாகத் தீர்ந்து மன முதிர்ச்சி அடைந்த நிலைக்கு வருவர். அவர்களைப் புரிந்துகொண்டு அவர்களோடு ஏற்படும் மோதலில் கலந்துரையாடித் தீர்த்து வந்தால் மனமுதிர்ச்சியை நன்றாக அடைவர், இன்னும் சிலகாலம் சென்றதும் மேலும் பல பிரச்சினைகள் எற்படலாம். பழக்கப்படாத கேள்விகளை எம்மிடம் கேட்கக்கூடும். சிலவற்றிற்கு எம்மால் பதில் கொடுக்க முடிவதில்லை. அல்லது பதில் கொடுக்க நாம் விரும்புவதில்லை. இருப்பினும் பதில் கொடுக்காமல் இருந்தால் பிள்ளையின் சாதாரணமான மன வளர்ச்சி ஏற்படாது தடைப்படலாம். தமது மனதில் இருக்கும் சில பிரச்சினைகளை வேறுவிதத்தில் கூறுவர். பெற்றோருக்குச் சவால் விடும் விதத்தில் கூற ஆசைப்படு வர். முன்பு எமக்குக் கீழ்ப்படிந்தனர். ஆனால் இந்த வயதில் அப்படியல்ல. கேள்வி கேட்க ஆசைப்படுவர். கேள்வி கேட்கவேண்டுமென்ற தூண்டுதலே அவர்கள் மனதில் பிரச்சினையாக இருக்கும். கேள்வி கேட்க நினைப்பதே மனதில் இந்த வயதில் ஆரோக்கியமாக இருப்பதன் அடையாளமாகும். கேள்வி கேட்பது சரியா? அப்பாவின் மனம் துக்கப்படுமா? என்றும் யோசிப்பர். கேள்வி கேட்கக்கூடாது. சவால் விடக்கூடாது என்று நினைத்தால் ஏதோ குறைபாடுள்ளது என்பது அர்த்த மாகும். அப்பா அம்மா சொல்வதை அப்படியே ஏற்றுக்கொள்ள

இளமைப்பருவம் 75
முடிவதில்லை. கேள்வி கேட்க ஆசைப்படுவது அந்த வயதில் இயற்கையே. இந்த வயதில் உள்ள பிள்ளைகள் சொல்வதை ஏற்பதில்லை. சவால் விட்டு கேள்விகேட்டு ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளையே ஏற்றுக்கொள்வர். முடியாதவற்றைப் புறக்க ணரிப்பர்,
பெற்றோர் கூறும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்ளப் பிள்ளைகளால் முடிவதில்லை. அதற்குக் காரணத்தைக் காட்டாமலிருந்தால் எமக்குச் சவால்விடுவர். சவால்விடுவது தயவுசெய்து காரணத்தைக் கூறுமாறு கேட்கவே. காரணத்தைத்தேடியே ஏற்றுக்கொள்வர்.
இந்த வயதிலுள்ள ஆண், பெண் இருபாலாருக்கும் பாலுறுப்புப்பற்றிய உணர்வுகள் வேறுபட்டவையாக இருக்கலாம். பெண்ணை நோக்கும்போது பாலுணர்வு உடலுறுப்புகளில் மட்டுமல்ல முழுச் சரீரத்திலும் பரந்திருக்கும் உணர்வாக அனுபவிக்கக்கூடும். ஆணுக்குப்பாலுணர்வு அதிக ஆசையாக இருக்கும். பெண்ணுக்கு பாலுணர்வு ஆசை என்பதைவிட உணர்வு என்று கூறின் சாலப்பொருந்தும். அதேபோன்று பாலுணர்வை அன்புடன் கலக்காது வேறு உத்வேகம் என உணர ஆனால் முடிகிறது. ஏனையவற்றிலிருந்து வேறுபடுத்திப் பார்க்க முடியும், ஆனால் பெண்பிள்ளையால் பாலுணர்வு என்பதை அன்புணர்வு, விவாக பாதுகாப்புணர்வு, குடும்பவாழ்வு போன்றவற்றை வேறுபடுத்திப் பார்க்க முடிவதில்லை. அவற்றுடன் பிணைந்துள்ளதாகவே காண்பர். ஆனால் ஆண்பிள்ளை யில் பாலுணர்வையும் அன்பையும் வேறுபடுத்திக் காணும் நிலை இருக்கும். பெண்பிள்ளை இவையாவையும் தொடர்புபடுத்தியே பார்க்கும். பிரித்து நோக்க அவளால் முடிவதில்லை. ஆதலால் அன்பைப் பெறுவதற்காக ஆண்பிள்ளையின் பாலுறவு ஆசைக்கு இடம்கொடுக்கக்கூடும். ஆண்பிள்ளை பாலுணர்வை அதிக ஆசையாக எண்ணுவதால் அதைப்பெற்றுக்கொள்ள அன்பைக்காட்டுவதாக வெளிப் படுத்தலாம்.
இதனைப் பெற்றோர் அறிதலி வேண்டும் . அதைப்பிள்ளைகளுக்குச்சொல்லிக் கொடுக்க வேண்டும். ஆண்பிள்ளை மனமுதிர்ச்சி பெறாத ஒருவரானால் இந்த வயதில் விவாகத்துக்கு முன் பாலுறவுத் திருப்தியை அனுபவிக்க, பெண்னை ஸ்பரிசிக்க ஆசைப்படக்கூடும். தான் அன்புசெய்யும் பெண் பிள்ளையை விவாகம் முடிக்க வாக்குறுதி கொடுத்திருப்பதால் பாலுணர்வு திருப்தியைப்பெற ஆண்பிள்ளை ஆசைப்படும். பெண்பிள்ளை இந்த வேறுபாட்டை அறியாதிருந்தால் இடம்கொடுக்கக்கூடும். அன்பில்லாத ஒருவருடனும் பாலுணர்வுத் திருப்தியைப்பெற ஆண்பிள்ளையால் முடிகிறது. சிலநேரம் இதைப் பெண்பிள்ளை அறியாதிருந்தால் ஏமாறவும் கூடும். ஆகவே இந்த அறிவைப் பிள்ளைகளுக்குப் பெற்றோர் சொல்லிக் கொடுக்கவேண்டும்.
இந்த வயதிலுள்ள ஆண், பெண் பிள்ளைகளுக்கு இந்த அறிவைக் கொடுத்து அன்புறவுக்கு வயது வந்தபின் பழக இடமளித்தால் மனதில் பிள்ளைக ளின் வளர்ச்சி ஏற்பட இடமுண்டு. ஆண், பெண் கபாவங்களை இருவரும் அறிந்திருந்தால் திருமணமாவதற்கு முன்பிருந்தே தம்மைப் பாதுகாத்து நல்ல உறவை வளர்த்துக்கொள்ள முடியும். விவாகத்துக்கு நல்ல ஆயத்தத்துடன் ஒருவரைத் தெரிவுசெய்ய பிள்ளையால் முடிகிறது. S.

Page 46
மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி 76 g ழவுககு வழ
இதற்கு இடமளிக்காதிருந்தால் இரகசியமாக பிள்ளைகள் அன்புத்தொடர்பை வைத்துக்கொள்ள முயலுவர். இரகசியமான தொடர்பு எப்போதும் தவறான வழியில் செல்ல சந்தர்ப்பத்தை அதிகரிக்கச்செய்யும். ஆகவே உறவினருடன், பாடசாலையில் சங்கத்தில், மற்றவருடன் நல்ல விதத்தில் பழகவிடுவதால் நல்ல நிலை ஏற்படக்கூடும். சாதாரணமாகப் பெண்பிள்ளை தனது தாயாருடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டால், அதேபோல் ஆண்பிள்ளை அப்பாவுடன் நல்ல உறவை வளர்த்துக்கொண்டால் அப்பாவை முன்மாதிரியாகக் கொண்டால் அத்தாயும் தந்தையும் தம்மை முன்மாதிரியாகக்கொள்ளக்கூடிய விதத்தில் வாழ்ந்தால் இந்த வயதிலுள்ள பிள்ளைகள் எதிர்பாலாரோடு பழகும்போது தவறான வழியில் செல்லமாட்டார்கள். பிள்ளைகளின் அன்புத்தொடர்பைக் கேள்விப்பட்டதும் பெற்றோர் பெரும்பாலும் கலவரப்படுகின்றனர். ஏன் கலவரப்படுகின்றனர்? தனது பிள்ளைக்குப் பொருத்தமானவர் இல்லாது இருக்கலாம் என்ற பயமே இதற்கான காரணமாகும். பன்னிரண்டு, பதின்மூன்று வயதில் பிள்ளைகள் அன்பு என்று நினைப்பது கவர்ச்சியை. இவ்வாறு வளர்ந்தவர்கள்கூட நினைக்கலாம். ஆரம்ப காலங்களில் உருவம் அழகாக இருப்பதால் அல்லது அழகாகக் கதைப்பதால், அல்லது நல்ல குணங்களால் திறமைகளை முன்கொண்டு கவர்ச்சியினால் ஒருவரின் மனம் எதிர்பாலான ஒருவரில் செல்லக்கூடும். அதாவது ஆண் பெண்ணிலும், பெண் ஆணிலும் கவரப்படுவர். இதனை அன்பு என்று கூறமுடியாது. கவர்ச்சி மட்டுமே. கவர்ச்சி என்பது உணர்வு. இது உருவாகும் வேகத்திலேயே மாறிவிடவும் கூடியது. w
அடுத்தது ஒருவரை அன்பு செய்யத்தொடங்கியபின்பும், விவாகம் முடித்தபின்பும் கவர்ச்சி என்பது இல்லாமற்போவதில்லை. அழகான உருவத்தை, குரலைக் காணும்போது ஒருவரது மனம் மற்றவரில் செல்லக்கூடும். ஆகவே கவர்ச்சி என்பது அன்பில்லை. கண்டதும் அன்பு ஏற்படுவதில்லை. இது பொய். கண்டதும் கவர்ச்சி ஏற்படும். அடுத்தது இத்தொடர்பு நீண்டுகொண்டு சென்றால் குதூகலம் ஏற்படும். (cwiosity) இதுவும் அன்பல்ல. உணர்வுக்குட்பட்டதே. இக்காலத்தில் பலர் கடிதம் எழுதுவர். ஆண் யார், பெண் யார் என்பதை அறிய எடுக்கும் உற்சாகமே இந்த நிலையில் ஏற்படும்.
இதைத்தாண்டி தொடர்பு வளர்ந்துகொண்டு சென்றால் கலவரப்படும் (Infatuation) நிலைக்குச் செல்வர். விசேடமாக ஆண்பிள்ளைக்கு அதிகமாக இருக்கும். சிலர் முதல் நிலையில் விவாகம் முடிப்பர். சிலர் இரண்டாவது நிலையில் விவாகம் முடிப்பர். சிலர் மூன்றாவது நிலையில் முடிப்பர். தாம் அன்பு செய்வதாக நினைத்தே முடிப்பர். இந்த நிலையில் அன்பில்லை. இத்தொடர்பு நீண்டால் (Romance) என்ற நிலையை அடைவர். இதுவும் அன்பல்ல. உணர்வுக்குட்பட்ட நிலையே. அன்பு என்பது உணர்வல்ல அன்பு ஏற்பட பல நாட்கள் செல்லக்கூடும். அன்பு என்பது தீர்மானம். அர்ப்பணம். அதிஸ்டானம். பரித்தியாகம் செய்ய விருப்பம் போன்ற நிலையே. எனது மனைவியை அன்பு செய்கிறேன் என்பதன் அர்த்தம் எனது நன்மையைப்போல் அதைக் கருத்தில் கொண்டு மனைவியின் நன்மையையும் ஏற்றுக்கொள்ளும் நிலையாகும். எனது நன்மையைவிடக் குறைவாகவோ கூடவோ நினைக்காது சமமாக நினைக்கும் நிலையில் செயற்படப்பழகியிருந்தால் நான் எனது

இளமைப்பருவம் 77
மனைவியை அன்பு செய்கிறேன் எனலாம். அவருக்காக வாழவோ, துன்பப்படவோ ஆயத்தமான நிலையாகும். தனது நன்மையை கருத்தில்கொள்வதுபோல் மற்றவரது நன்மையையும் கருத்தில் கொள்ளும் நிலையாகும். விவாகத்தில் தெரிவு. அர்ப்பணம் ஏற்பட வேண்டும். அர்ப்பணம் என்பது மற்றவருக்காக வாழ்வது.
இளைஞர்கள் இளம்பெண்கள் மத்தியில் உயர்ந்த நோக்கமுள்ள கற்பனை யான சமுதாயத்தை உருவாக்க ஆசை ஏற்படும். பேதமில்லா, வைராக்கியமில்லா, சமாதானமான சமுதாயத்தை உருவாக்க ஆசை ஏற்படும். நல்ல நோக்கத்தோடு இதைச்செய்ய ஆசைப்படுவர். இந்த ஆசை ஏற்படும்போது அப்படிச் செயற்படுவர். போராடுபவரில் பெரிய உந்துதல் ஏற்படும். பெரும்பாலும் இப்படிச் செயற்படும் தலைவர்களிலும் பெலவீனங்களுண்டு. ஆகவே யதார்த்தத்தை உணர்ந்தே நெருங்கவேண்டும். சமுதாயசேவையில் இவர்களைப் பழக்கவேண்டும். விளை யாட்டில் உள்ளாக்கவேண்டும். மற்றவர்களுக்காக வாழப் பழக்கவேண்டும்.
இளைஞர் இளம் பெண்களைப் பெரியோர் புரிந்துகொள்பவர்களாக இருக்க வேண்டும். அவர்களுக்கேற்படும் மோதல், பிரச்சினை போன்றவற்றைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒருவரில் அவர்களது மனம் சென்றால் அவரிடம் ஆலோசனை பெற ஓடிவருவர். இன்று அப்படிப்பட்டவைகள் குறைவு. பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதே சிறந்தது. சில பெற்றோருடன் கதைக்கவும் முடியாத நிலை இருக்கும். இந்த வயதுக்குட்பட்டவர்களுக்குச் செய்யும் பெரிய உதவி என்னவென்றால் அதிகமதிகமாக முதிர்ந்த மனமுதிர்ச்சி நிலைக்குச் செல்ல உதவுவதேயாகும்.
அவர்களுக்குச் சுதந்திரம் கொடுக்கவேண்டும். அதேபோன்று பொறுப்பும் கொடுக்கவேண்டும். சூழலை அழகுபடுத்தப் பொறுப்புக் கொடுக்க வேண்டும். சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்க உதவ வேண்டும்.
இளமைப்பருவம் என்பது சிலருக்கு நீண்டதாகவும் சிலருக்குக் குறுகியதா கவும் இருக்கும். மனமுதிர்ச்சியடைந்தவர்க்கே திருமணம் முடித்துக்கொடுப்பது நன்று. மற்றவருடன் நல்லதொடர்பை ஏற்படுத்த உதவவேண்டும். தொழில், திருமணம் போன்றவற்றைத் தெரிவுசெய்யும்போது யதார்த்தத்திற்கேற்பத் தெரிவு செய்யப் பெற்றோர் பிள்ளைகளுக்கு உதவவேண்டும். பெற்றோர் தமக்குத் தேவையான தொழிலைச் செய்யவும், தனது விருப்பத்தை நிறைவேற்றவுமே உற்சாகப்படுவர்.
விரும்பும் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள அதாவது தனிமையாக வாழவோ, குடும்பமாக வாழவோ, துறவியாகவோ, வாழ்வதற்குத் தீர்மானம் எடுக்க உதவவேண்டும். சிலர் துறவியாக வாழவிரும்புவர். ஆனால் அவர்களின் நோக்கம் பிழையாக இருக்கலாம். இதைத்தேடிப்பார்க்கவேண்டும். உதாரணம் பெற்றோருடன் நல்ல உறவு இல்லாத நிலையில் வீட்டிலிருந்து தூரமாகிப்போய் துறவியாக விரும்புவர். இதைத் தேடிப்பார்த்து தீர்மானம் எடுக்க உதவவேண்டும். சரியான தீர்மானம் எடுக்க உதவ வேண்டும். சிலர் சில நோயினால், அல்லது வேறு சில காரணங்களால் தனியே வாழத் தீர்மானம் எடுப்பர். குடும்பவாழ்வோ, தனிவாழ்வோ, துறவறவாழ்வோ எதுவானாலும் அதை நாம் ஏற்கவேண்டும். ஏற்று சரியான தீர்மானம் எடுக்க உதவவேண்டும்.

Page 47
78 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
责 费 责 禽 责 23. குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும்
黄 * இடையிலுள்ள தொடர்பு சமுதாயத்தில் முக்கியமான அங்கம் குடும்பமாகும். ஆழமான அன்புத் தொடர்புகளின் கூட்டே குடும்பம் என முதலில் நோக்கினோம். இவ்வாறான அன்புத்தொடர்பில் வளரும் குடும்பம். தன்னைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தாக்கத்தை ஏற்படுத்தும். தன்னுடன் நல்ல உறவை ஏற்படுத்தத் தெரிந்தவர்கள் சமுதாயத்தில் ஏனைய குடும்பங்களோடும் நல்ல உறவை ஏற்படுத்துவர்.
தனது குடும்பத்தில் தேவைகள் இருப்பதைப்போன்று ஏனைய குடும் பங்களிலும் பல தேவைகள் உண்டு என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சரீர தேவைகள், பாதுகாப்புத் தேடுமதேவை, மற்றவர்களுடன் பழகும் தேவை, கெளரவத்தைப் பெறும்தேவை, முழுமையை நோக்கிச்செல்லும் தேவை, போன்றவை எல்லாக் குடும்பங்களுக்கும் உண்டு என்பதை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.
மற்றக்குடும்பங்களும் கெளரவத்தைப் பெறும்தேவை அவர்களுக்கு இயற்கையானதே என்பதைக் கண்டோம். இருப்பினும் நாம் மற்றக்குடும்பங்களைக் கெளரவிக்கும்போதுதான் அவர்களது இத்தேவை நிறைவுபெறும் என்பதையும் கருத்தில்கொள்ளவேண்டும். எந்த நபரானாலும், எக்குடும்பமானாலும் கடலிலிருந்து தூரமாகி இருக்கும் தீவைப்போன்று சமுதாயத்திலிருந்து தூரமாகி குடும் பங்களிலிருந்து தூரமாகி, ஒதுக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு அவர்களால் வாழ முடியாது. எல்லாக் குடும்பங்களும் தம்மைச் சுற்றியுள்ள குடும்பங்களில் உள்ள சுதந்திரம், கெளரவம், பாதுகாப்பு, உரிமைகளைப் பாதுகாப்பதைப்போன்று தமது குடும்பத்திலும் பேணிப்பாதுகாக்க விரும்புவர். தம்மைச் சுற்றியுள்ள சமுதாயத்தில் நல்ல உறவை ஏற்படுத்தக் கூடியதாக இருப்பதற்கு முதலில் தனது குடும்பத்தில் உறவை வளர்ப்பது மற்றவர்களுக்கு நல்ல சாட்சியாகும்.
சுயநலமில்லாது மற்றவர்கள் மீது அக்கறைகொண்டு மற்றவர்களை முன்கொண்டு செயற்படுவது நல்ல உயர்ந்த இலட்சணமாகும். எல்லா நன்மைகளையும் எல்லா வசதிகளையும் தனக்காக வைத்திருக்காது. ஏனைய குடும்பங்களுடன் பகிர்ந்துகொள்வது எமது குடும்ப வளர்ச்சியின் s60Lu T6TLDIT(5tb.
மற்றக் குடும்பங்களிலுள்ள கஷ்டதுன்பம், கலக்கம், பயம், குறைபாடு,

குடும்பத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையிலுள்ள தொடர்பு 79
எதிர்பார்ப்பு போன்றவற்றில் அறிவுடனும், இரக்கத்துடனும் செயற்படும் மனப்பான்மை எமக்கு இருத்தல்வேண்டும். அவர்களின் எல்லாத் துன்பங்களையும் தாங்கும் சக்தியும், நேரமும் எமக்கு இல்லாதிருக்கலாம். அவர்களைக் கருணையுடன் புரிந்துகொள்வதே முக்கியமானதாகும்.
மற்றவர்கள் தமது சொந்தக்காலில் நின்று செயற்படும்வரை அவர்களோடு நின்று செயற்படும் குணம் முக்கியமானதாகும். அவர்களைத் தனிமைப்படுத்த விரும்பாதிருப்பது நன்று.
எமது குடும்பத்தின் நன்மையைக் கருத்தில்கொள்வது போன்று ஏனைய மக்களின் நன்மையையும் மற்ற இனங்களின் நன்மையையும் கருத்தில்கொள்வது நன்று. அதற்காக வழிநடத்த விழிப்பாயிருப்பது நன்று. ஏற்றத்தாழ்வில்லாமல் மற்றக்குடும்பங்களைப் பற்றியும், ஏனைய இனங்களைப் பற்றியும் நாம் கொண்டுள்ள தீர்ப்பு பிழையான அபிப்பிராயங்களுக்கு அடிமைப்படாது மனித இனத்தின் எல்லாக் குழுக்களையும் தயவுடன் நேர்க்குவது முக்கியமானதாகும்.

Page 48
8O - மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
大 责 如 24. மதுபானம் போதைப்பொருள்
மதுபானம் போதைப்பொருட்களைப் பாவிப்பவர்களைக் கண்டதும், எமக்கு ஒரு வெறுப்பு வருகிறது. இது இயற்கையே. காரணம் இவர்களது நடமாட்டத்தைக் கொண்டே நாம் இவ்வாறு வெறுக்கிறோம்.
மதுபானத்தின் ஒரு துளியை ஒரு கிளாஸ் நீரில் விட்டால் சிலவேளைகளில் அதற்குள் மது கலந்துள்ளதா என்று தெரியாத அளவுக்கு இருக்கும். இருப்பினும் இக்கிளாசில் அமீபா என்னும் உயிரணுவைவிட்டால் அதற்கு என்ன நடக்கின்றது என சோதித்துப் பார்க்கும் கண்ணாடியால் பார்த்தால் அது துடிதுடித்து இறப்பதைக் காணலாம். ஒரு கலன் உள்ள உயிரணுவுக்கு ஒருதுளி மதுபானத்தால் தாக்கம் ஏற்படுமானால் எமது சரீரத்துக்கு என்ன தடக் கும் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் புரியும். எமது முக்கியமான உறுப்புகளுக்குக் கெடுதி ஏற்படும். முக்கியமாக மூளையில் பெரிய கெடுதி ஏற்படும். எமது நடமாட்டத்தை மூளைகட்டுப் படுத்துவதால் மூளையில் கெடுதி ஏற்பட்டதும் எமது நடமாட்டத்திலும் மாற்றம் ஏற்படுகிறது.
பிள்ளை வளர்ந்து செல்லும்பொழுது படிப்படியாக மூளையும் விருத்திய டைந்து பல திறமைகளைப் பழகிக் கொள்கிறது. இறுதியில் சுயகட்டுப்பாடும், தீர்ப்பிடுவதும் இப்பிள்ளைக்குக் கடைசியாகக் கிடைக்கிறது. மதுபானம் போதைப் பொருள் பாவிக்கும்போது முதலில் மூளையில் ஏற்படும் தாக்கத்தால் சுயகட்டுப் பாடும், தீர்ப்பிடும் திறமையும் குறைகிறது. இதற்கு அடிமைப்பட்டதும் மேலும் மேலும் இத்திறமை குறைந்து இறக்கிறோம்.
சிலர் அதற்கு அடியமையாகுவர். அடிமையாகினால் அதிலிருந்து விடுபடு வது கடினம். இன்னும் சிலர் போதைப்பொருள், மதுவில் தங்கி வாழ்பவராக இருப்பார்கள். சரீரத்தில் தங்குவார்கள். அதாவது குடிக்காதிருந்தால் கைகால் நடுங்கும்.
சிலர் மனதில் தங்குவர். நாளையநாள் விடுமுறையானால் மனதில் கலக்க மாக இருப்பர். அதாவது மது இல்லையேல் அவர்களால் இருக்க முடிவதில்லை. இதன்ால் இவர்களைக் கூடாதவர்கள் என்பர். உண்மையில் போதை பாவிப்போர் எல்லோரும் கூடாதவர்கள் அல்லர். குடியை நிறுத்தப்பழகினால் மிகவும் நல்லவர்க ளாக இருப்பர். பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையாகுவது, அதைப்பற்றி மக்கள் மனதில் இருக்கும் எண்ணத்தின் மூலமே. குடித்தால் குளிர் குறையும், கவலை திரும், சந்தோஷம் வரும், பசிவரும், சக்தி கிடைக்கும், ஆளுமை கிடைக்கும் எனப் பல பிழையான எண்ணங்கள் குடிப்பவர்களாலும், விற்பவர்களா லும், உற்பத்தி செய்பவர்களாலும் மக்கள் மனதில் போடப்படுகின்றன.
திருமண வைபவம் போன்ற கொண்டாட்டங்களிலும் தொலைத்தொடர்பு சாதனங்களில் காட்டப்படும் விளம்பரங்கள் மூலமும், போதை பாவிக்கும்

மதுபானம் போதைப்பொருள் 31
விதம், போன்றவற்றின் மூலமும் இது பெறுமதியான ஒன்று என்று காட்டப்படுகின்றது. பாவிக்கும் சொற்கள் மூலமும் அதாவது கிக், சொட், றாம் போன்ற வார்த்தைகள் மூலமும் பாவிக்காதவர்களைப் பாவிக்கத் தூண்டுவர். a
இப்படிப் பல விதத்தில் ஏற்படும் தாக்கத்தால் நண்பர்களின் வற்புறுத்தலால் பாவிக்கப் பழகுவர்.
இதனால் சரீர, மன, சமுதாய, குடும்ப சீர்குலைவுகள் ஏற்படுகின்றன. பல குடும்பங்கள் இதனால் சீர்குலைந்துள்ளன.
இதனை மனதில்கொண்டு இவற்றிற்கு ஏமாறாது எம்மையும் எமது குடும்பத்தையும், சமுதாயத்தையும் பாதுகாப்பது எமது கடமையாகும்.

Page 49
82 மகிழ்ச்சியான வாழ்வுக்கு வழி
费 賣。 责 食 賣 25. குடும்பத்தில் ஆன்மீகம் "அன்பே இறைவன்" என பைபிள் கூறுகிறது. "அன்பே சிவம்" என்கிறது இந்து மதம். இஸ்லாம் மதமும் இதையே கூறுகிறது. இவ்வாறு ஒவ்வொரு மதத்திலும் அன்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. இந்த அன்பின் அனுபவத்துக்கு வருவது மதமாகும். நாம் எந்த மதத்தில் இருந்தாலும் அந்த மதத்தில் அன்பின் அனுபவமே முக்கியம் என்பதை மனதில்கொள்ளவேண்டும். "அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்” என்கிறார் வள்ளுவர். “கண்ணால் காண்கின்ற மனிதனை அன்பு செய்யாது கண்ணால் காணாத இறைவனை அன்பு செய்வது என்பது பொய்” என்கிறது பைபிள். எது எப்படியிருப்பினும் அன்பு மதத்தின் அத்திவாரம் என்பது புரிகிறது.
மனிதனுக்கு பாதுகாப்புத் தேடும் தேவை, கெளரவத்தைப்பெறும் தேவை, பாராட்டுதலைப்பெறும் தேவை, அன்பைப்பெறும் தேவை போன்ற மனதின் தேவை கள் உண்டு. இவைகள் கிடைக்காதபோது அவன் கலங்குகிறான். இவைகள் கிடைக்காமல் இருந்தாலும் இவைகள் இறைவனிடமிருந்து கிடைக்கின்றன என விசுவசித்து மற்றவர்களை அன்பு செய்ய முற்படுவது ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையாகும்.
எல்லாவற்றையும் தனது மகிமைக்காகச் செய்யாது இறைவனின் மகிமைக் காகச் செய்வது உயர்ந்த நிலையாகும். அவசியமான பொருட்களை மட்டும் பாவித்து எளிமை வாழ்வு வாழ்வது உயர்ந்த நிலையாகும். இதனாலேதான் பைபிளில் “முதலில் இறைவனை அண்புசெய்ய வேண்டும். அடுத்தது, நான் என்னை அன்பு செய்வதுபோல் மற்றவர்களையும் அன்பு செய்யவேண்டும்” என்று கூறப்படுகிறது.
இறைவனில் நம்பிக்கை வைத்து அவரது அன்பை அனுபவித்து அவரில் பாதுகாப்பைத் தேடி, அவரது மகிமைக்காக அவரது விருப்பப்படி வாழ்வதே உயர்ந்த நிலையாகும். இப்படி ஒவ்வொருவரும் வாழ்ந்தால் அக்குடும்பம் உயர்ந்த குடும்பமாகும்.
குடும்பத்தில் ஆன்மீகம் என்னும் பொழுது நாம் மற்றொன்றையும் நோக்க வேண்டும். மனித அன்பு இன்று எமக்குத் தேவைப்படுகின்றது. இது உண்மையே. மனித அன்பில் சுயநலம் கலந்துள்ளது. எம்மை அடிமைப்படுத்துகின்றது. மனித அன்பு எதிர்பார்ப்புள்ளது. மாறக்கூடியது. மனித அன்பு நிபந்தனை போடுகின்றது. ஆகவே மனிதனது அன்பு இன்று மனிதப்பிரச்சினைக்கு முழுமையான விடை யாகாது.
கட்டுப்பாடில் லாத, மாறாத, நிபந்தனைபோடாத, எம்மை அடிமைப்படுத்தாத, எதிர்பார்ப்பில்லாத இறைவனது அன்பே மனிதப் பிரச்சினைக்கு முழுமையான பதிலாகும். இறைவனது அன்பை அனுபவிப்பவர் அப்படிப்பட்ட அன்பால் மற்றவர் களை அன்பு செய்யும்போது முழுமையான மனிதப்பிரச்சினைக்கு விடை கிடைக் கிறது. மனிதனுக்குச் சரீர தேவைகள்

குடும்பத்தில் ஆண்மீகம் 83
உண்டு. இவை கிடைக்காதபோது மனிதன் துக்கப்படுகிறான். மனிதனுக்கு மனமும் உண்டு. அன்பைப்பெறுவது, அன்பைச் செலுத்துவது, பாதுகாப்பு, பாராட்டுதல், மதிப்பைப் பெறுவது மனதின் தேவைக ளாகும். இவை கிடைக்காதபோது மனிதன் கவலைப்படுகிறான்.
மனிதனுக்கு ஆன்மாவும் உண்டு. இறைவனைத் தேடும் தாகமே ஆன்மிக தாகமாகும். அதாவது மனிதனுக்கு எவ்வளவுதான் இருந்தாலும் திருப்திப்பட மாட்டான். ஆகவே அவன் முழுமையைத்தேடுகிறான். நிறைவைத் தேடுகிறான். அதுவே ஆன்மீக தாகமாகும். இறைவனது அன்பை அதிகமாக அனுபவிக்கும் பொழுது, அதாவது ஆன்மீக தாகம் நிறைவேறும்பொழுது சரீர, மன தேவைகள் கிடைக்காதிருந்தாலும் கூட நிம்மதியை ஓரளவு அனுபவிக்கிறான். ஆனால் சரீர, மன தேவைகள் கிடைத்தும் ஆன்மீகதேவைகள் நிறைவேறவில்லையேல் அவன் ஏழையாகிறான். இதனாலேதான் அன்னை திரேசா "இன்று முதலாவது மண்டல நாடுகளிலேயே அதிகமான ஏழைகள் இருக்கிறார்கள்" என்றார். காரணம் பொருளாதாரத்தில் செல்வந்தராக இருந்தாலும் அவர்கள் ஆன்மீக ஏழைகள் என்கிறார்.
இறைவனது அன்பை அனுபவித்தவர்கள் பலர். மகாத்மாகாந்தி, புத்தர், புனிதர்கள், முகமதுநபி போன்ற பலரும் இறைவனது அன்பால் மற்றவர்களை அன்புசெய்ய முயன்றார்கள். இறைவனது அன்பைப் பெற்றாலே அந்த அன்பால் மற்றவர்களை அன்பு செய்யமுடியும்.
மற்றவர்கள் என்னை மதிக்கவேண்டும். என்பதை விடுத்து, நான் மற்ற வர்களை மதிக்கவும், மற்றவர்கள் என்னை வரவேற்கவேண்டும் என்பதை எதிர்பார்க்காமல் நான் மற்றவர்களை வரவேற்கவும் வரம்தாரும் இறைவா என ஒரு புனிதர் இறைவனிடம் கேட்கிறார். இது இந்த அனுபவித்தின் வெளிப்பாடே. இப்படிப்பட்ட இறை அன்பே இன்று எமக்குத் தேவைப்படுகின்றது. இறைவனின் அன்பை அனுபவித்து அந்த அன்பால் அன்பு செய்வதே உண்மையான சந்தோசத்திற்கு வழி.

Page 50


Page 51
ஆசிரியரைப்
1978ல் தனது பட்டப்படி மக்கள் வங்கியில் சேவை இராஜினாமாச் செய்து விட் ஈடுபட்டு வருகிறார் . பல்கலைக்கழகத்தில் மொழி கடமையாற்றி வருகிறார். இை கற்றுப் பட்டம் பெற்றுள்ளார். போதைப்பொருள் நிவாரணப் ஆலோசகராகவும், தனி சேவையாற்றி வருகிறார். 9) ( சமயம், மொழியியல் போன்ற எழுதியுள்ளார். பல வாெ ஆற்றியுள் ளார் மத 1ே சேவையாளராகவும் கடமை நூல்களை எழுதி சமுதாய வேண்டுமென வாழ்த்துகிறோ

ப்பை முடித்துக் கொண்டு செய்தார். பின்பு அதனை டுச் சமுதாய சேவையில் இப் போது களனி ப் பியல் விரிவுரையாளராகவும் றயியலை நான்கு ஆண்டுகள் ஆலோசனைப் பயிற்சியும், பயிற்சியும் முடித்து குடும்ப நபர் ஆலோசகராகவும் ளவியல், தத்துவம், கவிதை, துறைகளில் பல நூல்களை SOT TGSll பேச்சுக்களையும் 1ாதகராகவும் , சமுதாய பாற்றுகிறார். மேலும் பல த்துக்குச் சேவை செய்ய
L D .
ISBN95-956t.
' '
- - - -