கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனித காந்தம்

Page 1


Page 2


Page 3

காயத்ரி சித்தர் டாக்டர்
ஆர்.கே. முருகேசு சுவாமிகள்

Page 4

மனித காந்தம்
unafs allesdo மறைந்துள்ள மஹாசக்தியின்
மர்மம்
காயத்ரி சித்தர்
டாக்டர் ஆர். கே. முருகேசு சுவாமிகள்
காயத்ரி பீட வெளியீடு

Page 5
நூல் விபர அட்டவணை
தலைப்பு மனித காந்தம்
முதற் பதிப்பு 31 - 12 - 1992
ஆசிரியர் : ஆர். கே. முருகேசு சுவாமிகள்
உரிமை ஆசிரியருக்கே
பதிப்பாசிரியர் : கார் . முரளிதரன்
21117, பீட்டர்ஸ் காலணி இராயப்பேட்டை,
சென்னை-600 014. தொலைபேசி : 472794
வெளியீடு காயத்ரி பீட வெளியீடு
"பூரீநகர்' 82, லேடி மக்கலம்ஸ் டிரைவ் நுவரெலியா, இலங்கை தொலைபேசி : 052/2609
அச்சிட்டோர் : வெற்றி அச்சகம்
91, டாக்டர் பெசன்ட் சாலை, இராயப்பேட்டை சென்னை-14

முன்னுரை
பிரபஞ்ச மர்மங்களை அறிந்து கொள்வதில் அடங்கா ஆர்வம் கொண்ட மனிதன், தன்னில், தனக்குள்ளே என்ன இருக்கிறது என்ன நடை பெறுகிறது என்பதை அறிந்து கொள்ள ஆர்வம் கொள்ளாததைக் கண்ட அறிஞர்கள், மாயப் பித்துப் பிடித்து மனிதன் தன்னை மறந்து, தேவை யற்ற எதையெதையோ அறிவதிலும், பயனற்ற வைகளைச் செய்வதிலும் அரிய பிறவியை வீணாக்கு வதாக நினைத்தனர். ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனை அறிந்துகொள்ளத் தூண்டும் பல அரிய சம்பவங்கள் தினமும் நடந்துகொண்டே யிருக்கின்றன. ஆனால் மனிதன் அதைப் பற்றிச் சிறிதும் சிந்திப்பதில்லை.
மனிதன் தன்னையும், தன் அமைப்பையும். செயல முறைகளையும் தெரிந்து கொண்டால், பிர பஞ்சம் முழுவதையும் அறிந்து, தன் வசப்படுத்தி அடையும் நன்மையை, இன்பத்தைவிட அதிக நன்மை-இன்பத்தை அடைவான்.
அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு என ஆன்றோர் கூறுவர். தனக்கப்பால் எங்கோ மிக் தூரத்தில் இருப்பதாகக் கருதும்

Page 6
கடவுளும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறார். தனக் குள்ளிருக்கும் கடவுளைக்கண்டு, அருள் பெறுவதை விடுத்து, காணாத கடவுளைத் தேடி அலைகிறான் மனிதன். இதுதான் அவன் அறியாமை.
மனித வாழ்க்கையில் ஓர் அரிய தத்துவம் "மனித காந்தம்.” இதைப்பற்றி மனிதன் தெரிந்து கொண்டால் வேறெதனாலும் பெற முடியாத பெரிய நன்மைகளைப் பெறுவான்.
ஆனாலும் தம்மிடம் இப்படியொரு காந்த சக்தியிருக்கிற தென்பதையே பலர் அறியமாட்டார் கள். இதையே அறியாதபோது அதைக்கொண்டு நன்மை பெறும் வழிகளை எங்கே அறிந்திருக்கப் போகிறார்கள்!
மனிதன் தன்னை உணரச்செய்ய வேண்டும் என்ற கருத்துடன், அதற்கான சில அனுபவ நூல் களை நாம் வெளியிட உள்ளோம். அவ்வரிசையில் மனித காந்தமும் ஒன்றாகும்.
கூடுமானவரை மனித காந்தம் பற்றிய முழு விளக்கங்களை, சாதாரண மக்களும் படித்து உணர்ந்து கொள்ளும்படி விஞ்ஞான விளக்கத் துடன், பயன்படுத்திக் கொள்ள விரும்புபவர்களுக் கான எளிய சாதனை முறைகளுடன் இதனை வெளியிடுகிறோம்.
பலருக்கும் இது பயன் தரும் என்ற உறுதி எமக்கு உண்டு.
சுவாமி ஆர். கே. முருகேசு

1. மனித காந்தப் பிரபாவம்
நாம் புது மனிதர்களைச் சந்திக்கும்போது சிலருடைய சந்திப்பால் களிப்பும், சிலருடைய சந்திப்பால் வெறுப்பும் கொள்கிறோம். சிலரு டன் நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தாலும் அலுப் புத் தட்டுவதில்லை. சிலருடன் விரைவில் பேச்சை முடித்துக்கொள்ள விரும்புகிறோம். சிலர் ஏதாவது காரியம் சொன்னால் அதைக் களிப்புடன் செய்ய முயல்கிறோம். சிலர் சொல்லும் காரியத்தை புறக் கணிக்கிறோம்.
சிலருடன் நெருங்கிப் பழகுவதில் நமக்கு இன்பம் கிடைக்கிறது. சிலருடன் பழகுவதில் வெறுப்புத் தட்டுகிறது.
இவ்வேறுபாடுகளுக்கு முக்கியமாக அவர்களின் உடலோ, உடையோ, சொல்லோ, அவர்களைப் பற்றி நாமறிந்து வைத்திருக்கும் செய்திகளோ காரணமாயிருக்க முடியாது.
ஏனென்றால், இவ்வனுபவங்கள் புது மனிதர் களின் சந்திப்பிலே மாறுபட்டு உண்டாகின்றன.

Page 7
6
அப்படியானால் இவ்வேற்றுமைகளுக்கு என்ன காரணம்?
சில இடங்களில் நாம் சென்றமர்ந்தால் உற் சாகமாக இருக்கிறது. நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காய் அங்கேயே இருந்து விடுகிறோம். சில இடங்களில் அமர்ந்தால் வெறுப்புண்டாகிறது. உடனே எழுந்துபோய்விட வேண்டுமென்ற உணர்வு தோன்றுகிறது.
இடத்தின் அமைப்பு இதற்குக் காரணமென்று சொல்ல முடியாது. இயற்கைக் காட்சிகள் நிறைந்த இடங்கள் மனதுக்கு நிம்மதியைத் தருவதில்லை. சாதாரண இடங்கள் பல மனதுக்கு நிம்மதியளிக் கின்றன. பல பெரிய வீடுகள் வெறுப்பளிக்கின்றன. சிறிய குடிசைகள் மனதுக்குத் தெம்பூட்டுகின்றன.
இப்படி இடத்துக்கிடம் வேற்றுமை உண்டா கக் காரணமென்ன?
சில வீடுகளில் நாம் குடி புகுந்தால், அங்கு குடி யிருப்பதில் நமக்கொரு தெம்பு பிறக்கிறது. சில வீடு களில் குடி புகுந்தால் நிம்மதியிழந்த உணர்ச்சி யிருந்து கொண்டேயிருக்கும்.
சில வீடுகளுக்குக் குடிபோனால் நாளுக்கு நாள் நல்லவைகள் நடக்கின்றன. சில வீடுகளில் குடிபுகுந்த நாள் முதல் அடுக்கடுக்காய் சோதனை கள்தான்!

7
இவ்வேற்றுமைகளுக்குக் காரணம் வீட்டைக் கட்ட பயன்பட்ட பொருள்களாகவோ, வீட்டின் அமைப்பாகவோ இருக்க முடியாது. ஏனென்றால் ஒரே மாதிரியாய், ஒரேவித பொருள்களைக் கொண்டு கட்டிய வீடுகளிலேயே இந்த வேற்றுமை களைக் காண்கிறோம்.
அப்படியானால் வீடுகளின் இந்த வேற்றுமை நிலைகளுக்கு என்ன காரணம்?
பெரியவர்கள், சாதுக்கள், முதலானோரை வணங்கி, ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளும் வழக்கம் உலகெங்கும் தொன்று தொட்டு நிலவி வருகிறது. பெரியவர்கள் தம் கைகளை உயர்த்தி, நம் தலைக்கு மேல் வைத்து ஆசீர்வதிக்கிறார்கள். இதனால் பெரிய நன்மைகளைப் பெற்றவர்கள் கொடிய நோய்களிலிருந்து நீங்கியவர்கள் பலர்.
கையை உயர்த்தியதால் எப்படி நன்மைகள் ஏற்பட்டன?
“சாது வந்தார்; பழம் மந்திரித்துக் கொடுத் தார்; அதைச் சாப்பிட்டதும் மகப்பேறு உண்டா யிற்று என்றெல்லாம் சொல்லக் கேட்டதில்லையா?
என்ன மந்திரித்தாலும் பழம் பழம்தானே? அதில் ஏதும் மாறுதல் தென்படவில்லையே!
அப்படியிருக்க அந்தப் பழத்தைச் சாப்பிட்ட தும் எப்படி மகப்பேறு உண்டாயிற்று?

Page 8
8
'தீராத நோயால் பல ஆண்டுகள் வருந்தி னேன். ஒரு சாது வீட்டுக்கு வந்தார்; வீட்டிலிருந்த விபூதியைக் கையிலெடுத்து எதையோ சொல்லிக் கொடுத்தார்; அதை வாயில் போட்டு, நெற்றியில் பூசியதும் என் நீண்டநாள் நோய் குணமாகி விட்டது" என்று சிலர் சொல்வதைக் கேட்ட தில்லையா?
ஒரு சிட்டிகை விபூதி சாம்பல், மந்திரித்த பின்னும் சாம்பலாகத்தான் இருந்தது. ஆனால் அதனால் கொடிய நோய்கள் விலகுவது, மனக் கலக்கம் மாறுவது, மற்றும் பல அரிய காரியங்கள் நடைபெறுவது எப்படி?
"மனக்குறையொன்று எனக்கு நெடுநாளாக இருந்து வந்தது. ஒரு சாது வந்து குளிசம் எழுதிக் கட்டினார். என் மனக்குறை நீங்கிவிட்டது" என்று சொல்லக் கேட்டதில்லையா? உலோகத் தகட்டில் எதையோ வரைந்து, என்னவோ செய்து கட்டுவ தால் எப்படி பெரிய மனக்குறைகள் நீங்கும்?
இது போன்ற இன்னும் பல அற்புதங்கள் உலகில் நடைபெறுகின்றன. இவைகளின் மறைவில் செயல்படும் தத்துவம் யாது?
எமது ஆஸ்ரமத்தில் பல சாதனைகளை, பல காலமாக, மக்கள் நலனுக்காகச் செய்து வருகி றோம். எம் ஆஸ்ரமத்தில் சாதகம் பயின்ற மாண வர்கள் பலர் அரிய செயல்கள் பல செய்திருக் கிறார்கள்.

9
இவையும், இவை போன்ற மற்றும் பல அரிய செயல்களும் நிகழ மனித காந்தம்தான் காரணம். மூடன், அறிவாளி, உயர்ந்தவன், தாழ்ந்தவன் எல்லோரிலும் ஓரளவு காந்த சக்தியிருக்கிறது. மனிதர்கள் நெருங்கி நிற்கும்போது அவர்களின் காந்தம் கலந்து பல மாறுதல்கள் உண்டாகின்றன.
2. ஆக்க அழிவுச் சக்திகள்
இன்றைய நாகரிக வாழ்வில் இன்றியமையா உபயோகமாகி வரும் மின்சக்தியைப் பற்றி சிறிது ஆராய்வோம். பலர் மின்சக்தி தமக்குத் தெரியும் என்று நினைக்கிறார்கள். இப்படிச் சொல்பவர் களில் பலர் மின்சக்தியின் செயல்களைத்தான் அறிவார்களன்றி, மின்சக்தியை நேராக அறிய மாட்டார்கள். ஏனென்றால் மின்சக்தி கண் களுக்குத் தெரிவதில்லை.
இன்னின்ன செய்தால், இப்படியிப்படி மின் சக்தி திரளுமென்பதைக் கொண்டு, அப்படிச் செய்து மின்சக்தியைத் திரட்டி, அதைக் கம்பிகள் வழியாகச் செலுத்தி, நூற்றுக்கணக்கான காரிய சாதனைகளுக்கு உபயோகிக்கிறோம்.
கம்பிகளின் வழி ஒடும் மின்சக்தியையும் யாரும் காணமுடியாது. கையால் தொட்டால் ஏற்படும் அதிர்ச்சியால், விளக்கொளி, மின் விசிறி

Page 9
10
யின் சுழற்சி முதலியவைகளால் கம்பிகளின் வழி மின்சக்தி பாய்கிறதென்றறியலாமே தவிர, அது பாய்வதைக் காண முடியாது.
பிரபஞ்சப் பொருள்களெல்லாம் அணுக்களால் ஆனவை. அணுக்கள் பகாப் பொருள்களல்ல. நுண்ணிய பருக்கைகளாக அணுவை சிதைத்து விடலாம். அணுக்களின் சிதைவில் மிஞ்சும் நுண் ணிய பருக்கைகள் மின்னிகள் (Electrons) எனப் படும். இம்மின்னிகளின் பல்வேறு இறுக்க அமைப்பு நிலைகளே பலவேறு அணுக்கள். இம் மின்னிகளின் ஒட்டத்தைத்தான் மின்சார சக்தி என்கிறோம்.
மனிதன் யந்திரங்களின் உதவியால் அணுக் களை மின்னிகளாகப் பிரிப்பதைக் கொண்டே மின்சக்தி உண்டாகிறது. இரும்புக் குழாயில் நீர் ஒடுவதுபோல மின் கம்பிகளின் வழியாக மின்னி கள் ஒடுகின்றன. இதையே மின்சக்தியென்கிறோம். ஒடும் மின்னிகள் விளக்கொளியாய், வெப்பமாய், இயக்கச் சக்தியாய் திரிந்து சிதைவதை செலவான மின்சாரம் என்று கணக்கெடுக்கிறோம்.
இத்தனை வாட்ஸ் மின்சக்தி செலவாயிற்று என்று சொல்லும்போது இத்தனை மின்னிகள் சிதைந்தன என்பதைத்தான் சொல்லுகிறோம்.
மின்னிகளின் ஒட்டம் மின்சாரம், மின்னி களின் சிதைவு மின்சக்திகளின் செலவு. மின்னிகள் சிதையும்போது சூடாகவும், ஒளியாகவும், அழிக்

11
கும் அல்லது ஆக்கும் இயக்கச் சக்தியாகவும்
திரிகிறது.
அணுகுண்டு *என்பது அணுக்களின் மின்னி
களைச் சிதைப்பதால் செயல்படுவது.
இதனால்தான் அணுகுண்டு சிதையும்போது பயங்கரச் சூடும், ஒளியும் உண்டாவதோடு பேரழிவும் ஏற்படுகிறது.
புற்றுநோய் போன்றவைகளைக் குணப்படுத்த உபயோகப்படுத்தப்படும் ரேடியம் (Radium) பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ரேடியமாகத் திரண்டிருக்கும் அணுக்களிலுள்ள மின்னிகள் தானாக சிதைந்து கொண்டே இருக்கின்றன.
ரேடியத்தை ஊசியில் பதித்து, புற்று போன்ற நோயுள்ள பகுதியில் செலுத்தி வைக்க, அதிலிருந்து சிதைந்து கொண்டேயிருக்கும் மின்சக்தியின் கதிர் கள் அப்புற்று நோயைத் தாக்கி, அதன் வளர்ச்சி யைத் தடுத்து, வளர்ந்ததைக் கரைத்துவிடுகிறது
இந்த ரேடியம் போலவே யுரேனியம் முதலான சில உயர்ந்த வரிசை அணுக்களும் தாமாக எப் போதும் தம் மின்னிகளைச் சிதையச் செய்து கொண்டேயிருக்கின்றன. இதன் பயனாகத்தான் அணுகுண்டு செய்வதற்கு இத்தகைய உயர்ந்த வரிசை அணுக்களை உபயோகிக்கிறார்கள். ஏனென்றால் இவைகளிலிருக்கும் மின்னிகளை மிகக் குறைவான சக்தியைக் கொண்டே சிதைத்து விடலாம்.

Page 10
12
ரேடியம், யுரேனியம் முதலிய பொருள்களின் மின்னிகளின் சிதைவை ரேடியோ ஆக்டிவ் (Radio Active) என்பர். இப்பொருள்கள் இந்தச் சிதைவுத் தன்மையைக் கொண்டவை யென்பதைக் கண்ட விஞ்ஞான உலகம் இதன் காரணத்தையும், மற்ற பொருள்களின் அணு அமைப்பில் உள்ள இறுக்கத் தையும் நன்கு ஆராய்ந்து, பல்லாயிரம் ஆண்டு களுக்கு முன் ஆன்மீகர்கள் கண்டுபிடித்த ஒரு பேருண்மையை புரிந்து கொண்டது.
அதாவது பிரபஞ்சத்திலுள்ள அனைத்துப் பொருள்களும் மின்கதிர் வீச்சுடையவையே (Radio active substances) 6T657 Lug Lifi55g. ரேடியம் போன்ற பொருள்களின் மின்னிகள் வேகமாகச் சிதைகின்றன. வேறு பொருள்களின் மின்னிகள் மெதுவாகச் சிதைகின்றன.
ஒரு கிராம் எடையுள்ள ரேடியம் சுமார் 2 மாதங்களில் தன் மின்னிகளனைத்தையும் கதிர் வீச்சு மூலம் இழக்குமானால், அதேயளவுள்ள வேறொரு பொருள் 2 வருடங்களில் முற்றும் சிதை யும். மற்றொரு பொருள் 20 வருடங்களில் முற்றும் சிதையும்.
இப்படிப் பொருளுக்குப் பொருள் மின்னிகள் சிதையும வேகத்தில் மாறுபடுகின்றனவே தவிர சிதையும் தன்மையில் எல்லாமே ஒன்றாகத்தான் இருக்கின்றன.
வைரம் போன்ற இறுக்குப் பொருள்களும் மந்த வேகத்தில் தம் மின்னிகளை இழந்துகொண்டு

13
தானிருக்கின்றன. வைரம் போன்றவைகளில் அணுக்களின் இறுக்கம் அதிகமாயிருப்பதால், பல் லாண்டுகள் சிதைந்தும் அளவில் குறையாதது போல் தெரிகிறது.
ஆக, சூரிய, சந்திர கோளங்கள் முதல் அணுP போன்ற நுண்பொருள் மற்றும் பிரபஞ்சப் பொருள் கள் வரை பேரண்டப் பொருள்களெல்லாமே அணுச் சிதைவுக்குள்ளாகிக் கொண்டு தானிருக் கின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துக் கொள்ள வேண்டும். அணுச்சிதைவை கதிர்வீச்சு என்போம். ஏனென்றால சிதையும் அணு, சக்திக் கதிர்களாகப் பரவிதான் மறைகின்றது. சூரியனின் சிதைவால் ஒளிக்கதிர்கள் பரவுவதுபோல, அணுச் சிதைவின் கதிர்களும் பரவுவதால் இதைக் கதிர் வீச்சு என்கிறோம் பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள பொருள்களனைத்தும் கதிர்வீச்சுத் தன்மை கொண்டவையே.
பிரபஞ்சப் பொருள்களெல்லாம் கதிர்வீசிக் கொண்டிருப்பவையானால், பிரபஞ்சம் 6TÜ போதோ அழிந்திருக்க வேண்டுமே என்று ஐயம் «7 (ԼքւD.
ஒவ்வொரு பொருளும் கதிர்வீசும் தன்மை யைக் கொண்டது போலவே, கதிரிழுப்புச் சக்தி 60)uujib (Gravitation, attraction) GossTaoo, Lobj, கிறது. அதாவது ஒரு பக்கம் பொருள்களின் மின்னிகள் சிதைந்து கொண்டேயிருந்தாலும், மற்

Page 11
14
றொரு பக்கம் புதிய மின்னிகளை ஆகாயப் பரப்பி
லிருந்து இழுத்துத் தம் அணுவில் இணைத்துக் கொண்டேயிருக்கின்றன.
ஒரு செடியில் பழைய இலைகள் பட்டுப்போய் புது இலைகள் தோன்றிக்கொண்டேயிருப்பது, போல், எல்லாப் பொருள்களும் தம் பழைய மின்னிகளை இழந்து கொண்டும், புதிய மின்னி களை ஆகாயப் பரப்பிலிருந்து கவர்ந்தவண்ணமும் இருக்கின்றன.
மின்னிகள் சிதைவை அழிவுச் சக்தியென்றும், மின்னிகள் சேர்வதை ஆக்கச் சக்தியென்றும் சொல் வதனால், எல்லாப் பொருள்களிலும் இவ்விரு சக்திகள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டே யிருக்கின்றன எனலாம்.
ஆயினும், எல்லாப் பொருள்களிலும் இச் சக்திகள் ஒரேயளவில் செயல்படுவதில்லை. சில பொருள்களில் ஆக்கச் சக்தி குறைவாகவும், அழிவுச் சக்தி அதிகமாகவும் செயல்படுகிறது. இத்தகைய பொருள்கள் விரைவில் மறைந்து அழிந்து போகின்றன.
ரேடியம் போன்றவைகளில் ஆக்கச்சக்தி ஒரு சதமானால் அழிவுச் சக்தி 99% சதமாகச் செயல் படுவதனால்தான் அவைகளின் அழிவை கண் முன்பாகவே காண முடிகிறது. வைரம் போன்ற பொருள்களின் ஆக்கச் சக்தியும், அழிவுச் சக்தியும்,

15
ஒரு சத வேற்றுமையில் முற்றும் செயல்படுவதால் அவை பலகாலம் தம் பொருண்மையை இழக்காம லிருக்கின்றன.
வளரும் மரம் போன்றவைகளில் ஆக்கச்சக்தி 80 சதவிகிதமும், அழிவுச் சக்தி 20 சதவிகிதமும் இருப்பதால், மரம் பழைய இலைகளை இழந்து, புதிய இலை, தண்டுகளுடன் வளர்கிறது.
கல் போன்ற சில பொருள்களிலும் ஆக்கச் சக்தி அழிவுச் சக்தியைவிட சற்று அதிகமாய் செயல்படுவதால் கற்கள் பெரியதாக வளர் கின்றன. இந்த ஆக்க, அழிவுச் சக்திகள் எப் போதும் பொருள்களில் ஒரேயளவில் செயல்படுவ தில்லை. சில சமயங்களில் ஒரு பொருளில் ஆக்கச் சக்தி அதிகமாய் செயல்பட, அழிவுச் சக்தி குறை வாய் செயல்படுகிறது, இந்நிலையில் அப்பொருள் வளர்கிறது என்று சொல்கிறோம். sso
ஓர் அளவுக்குப் பின் அதே பொருளில் இவ் விரு சக்திகளும் சமமாய்ச் செயல்படுகின்றன. அப் போது அப்பொருள் தேய்வும், வளர்ச்சியுமில்லா மல் அப்படியே இருப்பதாகத் தெரிகிறது.
பின்னொரு சமயம் அழிவுச்சக்தி அதிகமாக வும், ஆக்கச் சக்தி குறைவாகவும் செயல்படுகிறது. அப்போது அப்பொருள் அழிந்து கொண்டிருக் கிறது, தேய்ந்து கொண்டிருக்கிறது என்று சொல் கிறோம். பிரபஞ்சப் பொருள்களில் எல்லாம் இவ்

Page 12
16
விரு சக்திகள் இப்படி மாறி மாறி செயல்பட்டுக் கொண்டேயிருப்பதால், பிரபஞ்சமே அழிந்து கொண்டும் இருக்கிறது; தேய்ந்து கொண்டும் இருக்கிறது என்கிறோம். புதுக்கிரக, நட்சத்திரங் கள் தோன்றியும், பழையவை மறைந்தும், தோன் றியவை வளர்ந்தும், வளர்ந்தவை தேய்ந்தும் இப்படி பிரபஞ்சம் ஓயாமல் இயங்கிக் கொண்டிருக் கிறது. سر
3. மனித காந்தப் பரீட்சை
முன்சொன்ன கதிர்வீச்சு, ஆக்க, அழிவு, நியமங்கள் உயிரற்ற பொருள்களுக்கு மட்டும் பொருந்துவனவல்ல. உயிர்கள் இருந்து செயல் படும் உடல்களுக்கும், அவ்வுடல்களில் இருந்து செயல்படும் மனம் போன்ற சூக்குமக் கருவி களுக்கும் பொருந்தும்.
அணுவடிவான கரு, அன்னையின் கர்ப்பத்தில் ஆக்கச் சக்தி அதிகரித்ததைக் கொண்டு உருவாகி, பிறந்து, உலகில் பெரிதாக வளர்கிறது. வாலி பத்தில் ஆக்க, அழிவுச் சக்திகள் பெரும்பாலும் சமஅளவில் செயல்படுகின்றன. பிறகு அழிவுச் சக்தி அதிகமாகவும், ஆக்கச் சக்தி குறைவாகவும் செயல்படுகிறது என்பதை எளிதில் உணர்ந்து கொள்ளலாம்.
இப்போதுதான் மிக முக்கியமான பொரு ளுக்கு நாம் வருகிறோம்.

17
ஆக்கச் சக்தி மிக அதிகமாய் செயல்படும் காலத்திலும் மனித உடலில் அழிவுச்சகதி குறைந்த அளவிலாவது செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கும். உயிர்களின் உடல், அணுவைப் போன்ற நுண்ணிய செல்களெனும் பொருள்களாலானது. பொருள்கள் மின்னிகளாலானதைப் போல் இவ் வுடலனுக்களாகிய செல்களும் அதே போன்ற மின்னிகளால் ஆனவைதான். இம்மின்னிக்ள் சிதைவதன் மூலம் உடலில் அழிவுச் சக்தியும், மின்னிகள் வளருவதன்மூலம் ஆக்கச் சக்தியும் செயல்படுகிறது
மனித உடலில் அன்னையின் கர்ப்பத்தில் கரு வாகி, உருவாகத் தொடங்கியது முதல் இவ்விரு சக்திகளும் செயல்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. ஆக, மனித உடலையும் ஒரு கதிர் வீசும் பொரு ளெனக் கொள்ளலாமல்லவா?
கதிர் வீசும் பொருள்களின் பண்புகளெல்லாம் உயிருடைய மனித உடலுக்கும் உணடு.
மற்றொரு விஞ்ஞானத் தத்துவத்தை இப் போது அறிந்து கொள்வோம்.
ஒரு கம்பியில் மின்சக்தி பாயும்போது அக் கம்பியைச் சுற்றி காந்த மண்டலம் உண்டாகும். காந்தத்தின் குணங்கள் யாவும இதில் இருககும். ஒரு பரீட்சை மூலம் நீங்கள் இதைச் செய்து பார்க்கலாம்.
LD-2

Page 13
18
ஒரு டார்ச் செல்லை எடுத்து அதன் இரு துரு வங்களையும் எதிலாவது இணைத்து, மின்சாரத் தைக் கம்பியில் ஒடச் செய்யுங்கள். இப்போது மிக நுண்ணிய இரும்புத் துகள்களை அக்கம்பியின் அருகில் தூவுங்கள். அத்துகள்கள் உடனே ஓடி கம்பியில் ஒட்டிக் கொள்வதைக் காண்பீர்கள், கம்பியைச் சுற்றி இப்போது மின் காந்தம் இருக் கிறது. கம்பியில் ஒடும் மின்சக்தியை நிறுத்துங்கள் ஒட்டிய துகள்கள் பிரிந்து விடும் மின்சாரம் பாயும். கம்பியைச் சுற்றி காந்தம் பரவும் தத்துவத்தை அடிப்படையாய்க் கொண்டுதான் ரேடியோவில் பல அமைப்புகள் செயல் படுகின்றன. மின்விசிறி முதலான பல மின் பொறிகளின் இயக்கமும் இந்த மின்காந்தத் தத்துவத்தில்தான் செயல்படுகின்றன.
மின்சாரம் என்பது மின்னிகள் ஒட்டம், மின்னி கள் சிதைவதால் ஏற்படும் கதிர்வீச்சு என முன்பு கண்டோம். மனித உடல் முழுவதும் இத்தகைய மின் சிதைவும், கதிர் வீச்சும் எப்போதும் நடந்து கொண்டேயிருப்பதால் மனித உடலை ஓர் மின் சார யந்திரம் என்று சொல்லலாம் அல்லவா?
மனித உடலில் அபாரமான மின்சாரம் உண்டாகிக் கொண்டேயிருக்கிறது. மனித உடலில் உண்டாகும் மின்சக்தியைச் சேதாரமில்லாமல் திரட்டி, ஒரு வழியில் செலுத்தினால் ஒரு பெரிய மின்சார ரயிலை ஒட்டலாமென ஆராய்ச்சியாளர் கள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

19
அவ்வளவு சக்தியும் மனித உடலை விட்டுச் செலவாகிக் கொண்டேயிருக்கிறது.
உயிர் அல்லது உடல் சக்தி இம்மனித மின்சார சக்தி தான். உணவின் அணுக்கள் உடலணுக் களாய் திரிந்து சிதைந்து மின்சக்தியாக மாறி, உடலுக்குச் சக்தி கொடுத்துச் செலவழிந்து போகின்றன.
நம் உடலால் செய்யும் எந்த காரியத்திலும் உடலின் கோடிக்கணக்கான மின்னிகளைச் சிதைத்து, மின்சாரமாக்குகிறோம். இச் சக்தியால் தான் உடலியக்கம் நடைபெறுகிறது.
மனித உடற்சக்தி, மின்சக்தி போன்றதுதான் என்பதை ஒரு சிறு பரீட்சை மூலம் பரீட்சித்தறிய லாம். நம் கையை இயக்கும் ஒரு நரம்பு, சக்தி குறைந்து விட்டதன் பயனாகக் கையை சரியாக இயக்க முடியாத போது, அக்கையில் தாளக்கூடிய அளவு மின்சக்தியைப் பாய்ச்சினால் கை சரியாக இயக்க வரும்.
மனித உடல் ஒரு மின் யந்திரம் தான் என்று அறிந்ததன் பயனாக இன்று அதற்குச் சக்தியைக் கொடுக்கவும், அதில் ஏற்பட்ட பல கோளாறுகளை நீக்கவும் மின் சக்தியைப் பயன்படுத்துகிறோம். மருந்துகள் செய்ய முடியாத பல அரிய சாதனை களை மனித உடலில் மின்சக்தி செய்து விடுகிறது.

Page 14
20
மனித உடல் எப்போதுமே மின் சக்தியை உண்டாக்கி, வெளிவிடும் அமைப்பு எனக்கண்ட பின் அதைச்சுற்றி எப்போதும் ஒரு காந்த மண்ட லம் இருக்க வேண்டுமென்பதைப் புரிந்து கொள்ளலாம்.
மனித உடல் மின்சக்தியை வெளிப்படுத்துவ துடனல்லாமல் வெளியிலுள்ள மின்சக்தியை சுவாசத்தின் வழி ஏற்றுக் கொண்டேயிருப்பதால் இதன் காந்தம், ஈர்க்கும் காந்தம், தன காந்தம், பிறரைத் தன் பால் கவரும் காந்தம், (Positive எதிர்ப்புக் காந்தம, ரிண காந்தம், தன்னிலிருப் பதை வெளித்தள்ளும் (Negative) காந்தம் கொண்டதாயிருக்க வேண்டுமென்பதை அறிய லாம்.
மனித உடலைச் சுற்றிக் காந்தமிருக்கிற தென் பதை ஓர் எளிய சோதனை மூலம் அறியலாம்.
அசல் பட்டு நூல்களைக் கத்தியால் சிறுசிறு துண்டுகளாகக் கத்திரித்து மேஜை மேல் பரப்பி வையுங்கள். இரு உள்ளங்கைகளையும் நன்றாகச் சூடு பரக்கத் தேய்த்து, வலது கை உள்ளங்கையைப் பட்டுத்துகள்களுக்கு அருகில் கொண்டு செல்லுங் கள். உடனே அத்துகள்கள் உங்கள் கையை நோகதி வந்து அதில் ஒட்டும்.
ஆனால் இதற்கு உடலில் நல்ல காந்த சக்தி இருக்க வேண்டும். அக்காந்த சத்தியின் அளவுக்குத் தக பல பொருள்கள் கையால் ஈர்க்கப்படும்.

2.
காந்த சக்தியின் குறைவால் இச்சோதனையில் வெற்றி பெறாதவர்கள் பின்னால் நாம் விளக்கப் போகும் முறைகளில் தம் காந்த சக்தியை வளர்த்துக் கொண்டு பிறகு இச்சோதனையைச் செய்தால் வெற்றி கிடைக்கும்.
4. மனித காந்த துருவங்கள்
அணுவைச் சிதைக்க, அதைச் சிதைக்கவல்ல அணுமின் வேற்றுமை கொண்ட ஓரகத் தனிமப் பொருள்களை (Isotopes) உபயோகிக்கிறோம். உடலணுக்கள் சக்தியாக எப்படி சிதைகின்றன? இச்சிதைவைச் செய்யவல்ல சக்தி வேண்டுமே? அந்தச் சக்தியைப் பற்றி அறியும் போது மனித உடல் இயக்கத்தின் ஒரு மாபெரும் தத்துவத்தை நாம் புரிந்து கொள்வோம்.
மனித உடலின் அணுச்சிதைவுகள் இரண்டு அமைப்புகளால் நடைபெறுகின்றன. ஒன்று மனம். மற்றது நரம்புகள்
சாதாரணமாக, மனித மனம் எப்போதும் இயங்கிக் கொண்டே, நினைத்துக் கொண்டே இருக்கிறதென்பதை அனைவரும் அறிவார்கள்.
இப்போது, மன இயக்கத்தால் உடலில் நடை பெறும் மாறுதலைக் காண்போம். சூசுஷ்மமான மனம், ஸ்தூல மூளையைக் கருவியாகக் கொண்தி

Page 15
22,
தான் செயல்படுகிறது. மனம் நினைக்கும் போது மூளையில் என்ன நடைபெறுகிறது என்பதை பல நுண்ணிய கருவிகளைக் கொண்டு நேருக்கு நேராக சிலர் கண்டிருக்கிறார்கள்.
மனதின் ஒவ்வொரு நினைப்பும் மூளையின் லட்சக்கணக்கான அணுக்களைச் சிதைப்பதன் மூலம்தான் உண்டாகிறது. நல்ல எண்ணம்,கெட்ட எண்ணம் எதுவும் மூளையணுக்களைச் சிதைப் பதன் மூலமே உண்டாகின்றது. LJG) DITGCT எண்ணம் அதிக அளவான மூளையணுக்களைச் சிதைக்கும்.
சில எண்ணங்கள் மூளையின் ஒரு பகுதியி லுள்ள அணுக்களைச் சிதைக்கும். சில எண்ணங் கள் மற்றொரு பகுதியிலுள்ள அணுக்களைச் சிதைக்கும். அணுச் சிதைவால் மின் சக்தி பாய்கிற தென்றும், மின் சக்தி பாயும் போது தன்னைச் சுற்றி காந்த மண்டலத்தைக் கொண்டு பாய்கிற தென்றும் முன்பு கண்டோமல்லவா?
அதனை இப்போது இப்படிச் சொல்லலாம். மனிதனின் மனம் எப்போதும் இயங்கிக் கொண் டிருக்கிறது; இவ்வியக்கம் மூளை அணுக்களைச் சிதைப்பதன் மூலம்நடைபெறுகிறது; மூளையணுக் களின் சிதைவால் மனிதனின் தலைக்குள் மின்சக்தி உண்டாகிப் பாய்கிறது. இம்மின்சக்தியைச் சுற்றி எப்போதும் காந்தமண்டலம் இருக்கிறது.

23
மன இயக்கத்தாலுண்டாகும் மின்சக்தியை மன மின்சாரம் என்றும், அதனாலுண்டாகும் காந்தத்தை மனக்காந்தமென்றும் சொல்வோம்.
நெடுநேரம் எதையாவது யோசித்துக் கொண் டிருந்தால் மானசீகச் சோர்வு (Mental exhaustion) உண்டாவது ஏனென்று தெரிகிறதல்லவா? அதிக அளவில் மூளையணுக்கள் சிதைந்து அந்த அளவு அணுக்கள் உடனுக்குடன் உண்டாகாமையால் தான் இந்தச் சோர்வை உணர்கிறோம். பல நாட்கள் இப்படி மூளைத் தளர்ச்சி (Brainfag) ஏற் பட்டுவிடும். இதைக் குணப்படுத்த மூளையணுக் களை உண்டாக்கும் உயிர் சத்துகள் நிறைந்த உணவுடன், மனதுக்கு அதிக வேலைதராமல், அமைதியாயிருக்கவும் வேண்டும்.
உண்ணும் உணவில் சில தனிப்பட்ட உயிர் சத்துக்கள் ரத்தத்தின்வழி மூளையை அடையும் போது அங்கு அவை மூளை அணுக்களாகத் திரிகின் றன. அதனால்தான் மூளை வேலை செய்பவர்கள் சில தனிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டு மென்று சொல்கிறார்கள். வெண்டைக்காய், கோவைக்காய், வல்லாரைக்கீரை முதலியவை இதில் அடங்கும்.
மனித காந்தம் இரு துருவங்களைக் கொண் டது. ஒன்று மனத்துருவம், இதைப்பற்றி மேலே விளக்கினோம். மற்றது பெளதீகத் துருவம்.

Page 16
24
இப்போது பெளதிக துருவத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
மூளையின் அணுக்கள் எண்ணங்களால் சிதை வது போல் உடலின் அணுக்கள் உடல் இயக்கத் தால் சிதைகின்றன. இச்சிதைவிலிருந்து மின்சாரம் வெளிப்பட, அதைச்சுற்றி காந்த மண்டலம் உரு வாகும்.
மன இயக்கத்தால், செயலால், நினைப்பால் மூளை அணுக்கள் சிதைந்து மன மின்சாரம் உண் டாகிறது. உடலணுக்களைச் சிதைப்பது எது?
மூளையின் மாறுபாட்டுக்கு மனம் காரணம் போல் உடல் இயக்கத்துக்கு அதே மூளைப் பொரு ளான நரம்புகள் காரணமாகும்,
முதுகெலும்பின் நடுவில் மூளையின் தொடர் பாகப் பல நரம்பு ஜோடிகள் புறப்பட்டு, முதுகந் தண்டின் இருபுறங்களிலும் கிளைத்துப் படர்ந்து உடல் முழுவதையும் பற்றும்படி நுண்ணிய கிளை களை விட்டுப் பரவியிருக்கின்றன.
முதுகந்தண்டின் இருபுறக் கிளைகளின் நடுவில் ஒரு சிறு துளை நீண்டிருக்கிறது, முதுகந்தண்டின் வலப்புற நரம்புத் தொடரை பிங்கலை என்றும், இடப்புறத்தில் உள்ளதை இடகலை என்றும், நடுவி லுள்ள துளையை சுழிமுனையென்றும் யோக நூல் கள் கூறும்.

25
இந்த நரம்புகள் இல்லாவிட்டால் உடலுக்கும் உணர்வுக்கும் தொடர்பேயிருக்காது. ஞானேந்திரி யங்களின் அறிவிப்புகள், கர்மேந்திரியங்களின் இயக்கங்கள் அனைத்தும் இந்த நரம்புகளின் அடிப் படையில்தான் நடைபெறுகின்றன.
உடலின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் செய்தி களை மூளைக்குத் துடிப்பு வழி அறிவிக்கும் நரம் கள், மன எண்ணங்களின்படி மூளை செயல்பட அதைத் தாங்கி உடலில் காரியங்களைச் செய்விக் கும் நரம்புகள், ஐம்புலன் துடிப்புகளை மூளைக்கு எடுத்துச்செல்லும் நரம்புகள், இப்படிப் பலதரப் பட்ட நரம்புக் கூட்டங்கள் முதுகந்தண்டின் வ வந்து, உடல் முழுதும் பரவியிருக்கின்றன.
ஒளி, ஒலி, சுவை, ஊறு, நாற்றம் என்ற ஐம் புலன் துடிப்புகளை மூளைக்கு எடுத்துச் செல் லும் நரம்புகளை அறிவிப்பு நரமபுகளென்றும் (Sensual Nerves) a) LaSai உண்டாகும் கோளாறு களை மூளைக்கு அறிவித்து அவ்விடத்திய ஆணை யின்படி உடலுறுப்புகளை, கர்ம இந்திரியங்களைச் செயல்படுத்தும் நரம்புகளை இயக்க நரம்புகள் (Motor Nerves) என்றும் கூறுகிறோம். இவையன்றி இருதயம், நுரையீரல், இரைப்பை, கல்லீரல் போன்று மனிதரின் வசத்துக்குட்படாமல் தன்னிச் சையாய் இயங்கும் உறுப்புகளை இயக்கும் நரம்பு கள் தனியாக மூளையிலிருந்து தொடங்கி, இவ் வுறுப்புகளில் பரவி, அவைகளை இயக்குகின்றன.

Page 17
96
இந்த நரம்புகளை சித்தநரம்புகள் (Autonomic Nerves) GuarantLib.
இந்த நரம்புகளுக்கும், முன் சொன்ன அறிவிப்பு இயக்க நரம்புகளுக்கும் நேர் தொடர்பு இல்லாவிட்டாலும், பின்னதன் தடித்த கிளைகள் முன்னதுடன் பல இடங்களில் இணைந்துள்ளன
இந்த நரம்புகள் உடலின் பல இடங்களில் தடித்தும், வேறு கிளை நரம்புகளுடன் சேர்ந்தும் முந்தைய நரம்புகளின் கிளைகளுடன் கூடியும் பின்னல்கள் போல் பரவியுள்ளன.
இவைகளை ஆதாரங்கள்(plexus)என்கிறோம். இவைகளில் முக்கியமானவை மூலாதார, ஸ்வாதிஷ் டான, மணிபூரக, அநாகத, விசுத்தி, ஆக்ஞா, சகஸ்ரார ஆதாரங்களாகும்
இவைகளிலும் முக்கியமானது நாபியை அடுத்து உள்ளிருக்கும் மணிபூரகமாகும். (Solar plexus) இந்த ஆதாரங்களைப் பற்றியும், அவை களில் அட்சரங்கள், கமலங்கள், தெய்வங்கள் இருப் பதால் பட விளக்கம் கூறும் யோக இரகசிய விளக் கங்கள் பற்றியும் இப்போதைக்கு நாம் ஆராய வேண்டியதில்லை.
இந்த நரம்புகள் எதனால் இயங்கி, உடலை நடத்துகின்றன? இதன் வழி செயல்படும் சக்தி எது? என்பதைப் பற்றிதான் இப்போது நாம் தெரிந்து கொள்ள வேண்டும். −

27
உலோகக் கம்பியில் எந்நேரமும் மின்சக்தி ஓடுவதைப் போல் நரம்புகளான அணுக்கம்பி களில் பிராணன் எனும் மின்சக்தி பாய்கிறது. கம்பியில் பாயும் மின்சக்தியால் மின் விளக்கு, எரிகிறது. மின்விசிறி சுழல்கிறது. மற்றும் பல காரியங்கள் நடைபெறுவதைப் போல் நரம்புகளில் பாயும் பிரான சக்தியால், இருதயம், ஈரல், சுவாச உறுப்புகள் போன்றவை இயங்குகின்றன. ஐம் பொறிகள் புலன் துடிப்புகளைத் தாக்கி உட் செலுத்துகின்றன. கைகால் முதலிய கர்ம இந்திரியங்கள் இயங்குகின்றன. உடலின் எந்தப் பகுதியில் ஏற்படும் கோளாறும் மூளைக்குத் தெரிவிக்கப்பட, மனதின் ஆணைப்படி கர்ம இந்திரியங்கள் செயல்படுகின்றன.
இந்தப் பிராண சக்திதான் உடல் செல்களை ஆக்கவும் அழிக்கவும் செய்கிறது.
பிராணனைத்தான் உயிர் என்கிறோம். உடலில் இயங்கும் பிராணன் முற்றும் நின்று போவதைத்தான் சாக்காடென் கிறோம்.
உயிரற்ற உடல் பிணம் அதில் எந்த இயக்கமும் நடைபெறாது.
மூளையணுக்கள் செயல்படவும் இந்தப் பிராணன் தேவை. மூளைக்குப் போதுமான உயிர் சக்தி கிடைக்கவில்லையானால் மனம் நல்ல முறை யில் வேலை செய்யாது. உடல் சக்தியாக விளங்கு

Page 18
28
வது இந்தப் பிராணனே. உடலின் எந்தப் பகுதி யிலாவது போதுமான பிராணன் செயல்படாவிட் டால் அப்பகுதி அழுகத் தொடங்கும் இரத்தத்தை ஒட்டச் செய்யும் இரத்தச்சூடு இப்பிராணன்தான். இரத்தத்தில் பிராணன் குறைந்தால் இரத்தத்தின் நீர்ப்புத் தன்மை குறைந்து, உறைந்து சரியாக உடல் முழுவதும் பரவாமல் போக பல நோய்கள் உண்டாகும்
இப்படி உடலின் சக்தியால், ஆன்மா உடலில் இருந்து செயல்படுவதற்கு ஆதாரமாயிருக்கும் பிராணன் உடலில் உற்பத்தியாவதில்லை. அது வெளியிலிருந்து சுவாசத்தின் வழி ஏற்கப்படுகிறது.
நாம் சுவாசத்தை உள்ளிழுக்கும் போது காற்றை மட்டும் இழுக்கிறோமில்லை. காற்றில் பரவியிருக்கும் ஆகாயத்தையும் (Ether) இழுக் கிறோம். காற்றிலுள்ள பிராணவாயுவை ரத்தம் கிரகித்துக் கொள்ள, ஆகாயத்திலிருக்கும் பிரா ணனை நரம்புகள் ஏற்றுக் கொள்கின்றன.
நுரையீரலை இயக்கும் நரம்பு முதலில் பிரா -ணனை ஏற்று, முதுகுத் தண்டு வழியாய் எல்லா நரம்புகளுக்கும் அனுப்புகிறது. இப்படி உடலில் புகும் பிராணன் முன்பு சொன்ன நரம்புப்பின்னல் களாகிய ஆதாரங்களில் சேமித்து வைக்கப்படு கிறது. மணிபூரக சக்ரத்தில்தான் மிக அதிக அள வான பிராணன் சேமிக்கப்படுகிறது. இந்தப்

29
பிராண சக்தியால்தான் இருதயம் போன்றவை இயங்குகின்றன.
இந்தப் பிராணன் ஒருவகையில் பெளதிக மின் சாரத்தைப் போன்றது. இதை முன்பு ஒரு சோதனைமூலம் பகுத்தறிந்தோம், இப்பிராணன் உடல் முழுதும் பரவி செல்களை ஆக்கியும் அழித் தும், உடலை உயிர்ப்பித்தும் கொண்டுமிருப்ப தால் உடல் முழுதும் மின்சக்தி சுழன்று கொண் டிருக்கிறதென்பதையும், இதன் பயனாக மனித உடலைச் சுற்றி காந்த மண்டலம் இருந்தாக வேண்டுமென்பதையும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.
மூளையில் உண்டாகும் மின்சக்தியை மன மின்சாரமென்றும், அதனாலாகும் காந்தத்தை மனக்காந்தமென்றும், நரம்புகளின்மூலம் வட்ட மிடும் பிராணனாம் மின்சாரத்தை உடல் மின் சாரம் என்றும், அதனாலாகும் காந்தத்தை உடல் காந்தம் அல்லது பெளதிகக் காந்தம் என்றும் சொல்வோம்.
மனித காந்தம் மனம், உடல் என்ற இரு துருவங்களைக் கொண்டது என்பதையும், இவ்விரண்டில் ஒன்று பெளதிகத் தன்மையும் மற்றது அறிவுத்தன்மையும் கொண்டதென்பதை, யும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளவும்.

Page 19
5. மனித காந்தப் பண்புகள்
மின்சாரத்தால் உண்டாக்கப்படும் காந்த அலைகள் எல்லாம் ஒரே தன்மையைக் கொண்டி ருப்பதில்லை. ஒரு வானொலி நிலையத்தில் மின் சக்தியை, பாடுபவர்பலவகைகளில் தன் சப்த அலை களால் மோத, அதன் பயனாக மின்சாரத்திலும், காந்தத்திலும் பல வடிவங்களும், தன்மைகளும் உண்டாகி வானத்தில் பரவுகிறது.
இதனால்தான் அது வானொலிப் பெட்டி களில் சப்தமாக மாறும்போது மறுபடி அதே வடிவமாகக் காற்றை மோதச்செய்து சப்த அலை களை உண்டாக்குகிறது.
Lfair 5 T is 5-960) a Jafai (Radio Carier Waves) சப்தத்தின் தன்மைகள் (Quality) உண்டு எனச் சொல்லலாம். இதே தத்துவத்தை டேப் ரிகார்டர் களில் காணலாம். மின்காந்தத்தில், அதை உண் டாக்கும் சாதனங்களின் தன்மை பொருந்தியிருக் கும்
இதேபோல் மனித காந்தத்தின் இரு துருவங் களிலும் அதை உண்டாக்கும் சாதனங்களின் தன்மை பொருந்தியிருக்கும். ஒருவன் நல்லவை களை எண்ணும்போதுண்டாகும் மனித மின்காந்த சக்தியில் அந்த நல்ல எண்ணத்தின் தன்மை இருக்கும். கெட்டவைகளை எண்ணும்போது உண்டாகும் மின்காந்த சக்தியில் கெட்ட எண் ணத்தின் தன்மையிருக்கும். பலமான எண்ணம்

31
அதன் தன்மையைக் கொண்ட பலத்த காந்த அலைகளை உண்டாக்கும். பலம் குறைந்த எண்ணம் மிகப்பலம் குறைந்த காந்த அலைகளை உண்டாக்கும். இதேபோல் மனித காந்தத்தின் பெளதிகத் துருவத்திலும் இந்தத் தன்மைகள் உண்டு.
நல்ல ஆரோக்கியமானவனின் உடலில் உண் டாகும் மனித மின் காந்தம் ஆரோக்கியத்தன்மை கொண்டதாகவும், நோயாளியின் உடல் காந்தம் நோய் தன்மையைக் கொண்டதாகவும் இருக்கும். நரம்புச்சக்தி பல வடிவில் செயல்படும். பலமுள்ள உடலின் காந்த அலைகள் பலமுள்ளவைகளாகவும், பலம் குறைந்த பிராணனால் உண்டாகும் காந்த அலைகள் பலமில்லாதவைகளாகவும் இருக்கும்.
ஒரு வானொலி நிலையத்தில் உண்டாக்கப் படும் மின்காந்த அலைகள் கண்ணுக்குத் தெரியா மல், வேறெதற்கும் புலனாகாமல் வான்பரப்பு முழுவதும் பரவுகின்றன என்பதை நாமறிவோம். இந்த அலைகளுக்கு வீடுகள், மலைகள் போன்ற எதுவுமே தடையாயிருப்பதில்லை. அனைத்திலும் எளிதாக ஊடுருவி இவை வேகமாக வானத்தில் பரவுகின்றன.
ஒவ்வொரு மனித உடலையும் ஊடுருவி எப் போதும் ஆயிரக்கணக்கான வானொலி நிலையங் களிலிருந்து அனுப்பப்படும் மின்காந்த அலைகள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன. ஆனால் மனிதன் அதை உணருவதில்லை. உணர முடியாத படி சூக்குமமாக அவை பாய்ந்து செல்லுகின்றன.

Page 20
32.
இதைப போலவே, மனிதனில் உண்டாகி, உந்தப்பட்டு வெளி வரும் மனித காந்த அலை, களும் தங்குதடையில்லாமல் வான்பரப்பில் பரவத் தான் செய்யுமென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இதுவும், மின்காந்த அலைகளும் வடிவத்திலும், குனத்திலும் வேறுபட்டவையே தவிர செயல்முறையில் வேறுபட்டவையல்ல.
பலத்த மன எண்ணங்கள் பலமான மனக் காந்த அலைகளை உண்டாக்க, அவை வானப் பரப்பில் நெடுந்து ரம் பரவும் பலத்த நரம்பு மின் காந்த அலைகள் தங்கு தடையின்றி வான்பரப்பில் நெடுந் தூரம் பாயும்.
மனக்காந்தத்தைப் பலமாய் உந்துவது, பலத்த உணர்வால் உந்தப்படும் எண்ணங்கள். நரம்பு காந்தத்தைப் பலமாய் உந்துவது உணர்வால் உந்தப்பட்ட பிராண சக்தி.
மனித காந்தத்தை ஒருவர் வான் பரப்பில் தொலை தூரம் பரவச் செய்ய முடியும். சண்டை யின்போது இந்தியாவிலிருந்து பரப்பப்பட்ட மின் காந்த அலைகளைப் பரவவிடாதபடி வேற்று நாட்டு அலைகள் தடுத்தன என்பதைப் பத்திரிகை களில் படித்திருப்பீர்கள். ஒரு குறித்த வேகத்தில் பரவும் மின்காந்த அலைகளை அதைவிடப் பல மான வேகத்தில் வேறொரு இடத்தில் பரவச் செய்

33
தால் முன்னதை பரவாமல் தடுத்து, Gosfugiull-st மல் நிறுத்தி விடலாம்.
சில சமயங்களில் ரேடியோவில் பொருள் தெரியாத கரபுராச் சப்தங்கள் உண்டாவது இத் தகைய குறுக்கீட்டினால்தான் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
நம் வீட்டிலிருக்கும் ரேடியோ அமைப்பில் சில மாறுதல்களைச் செய்வதன்மூலம் நம்மைச் சுற்றி யிருக்கும் ரேடியோக்கள் எதிலும் சுத்தமாகப் பாட்டுக் கேட்காதபடி, கரபுரா சப்தத்தை உண் டாக்க முடியும். ரேடியோ விஞ்ஞானம் பயின்ற, வர்களுக்கு இவ்வுண்மை தெரியும்.
இதேபோல், மனித காந்தத்திலும் பலமான அலைகள், பலம் குறைந்த அலைகளைச் செயல் படாமல் தடுக்கும். நல்ல எண்ணத்தின் காந்த அலை பலமுடைய தானால் அது பரவும் இடங் களெல்லாம் பலமற்ற, கெட்ட எண்ண அலை களைச் செயல்படாமல் தடுத்துக் கொண்டு பரவும். ஆனால் மனித காந்த அலைகளில், மின் காந்த அலைகளுக்கில்லாத ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அதாவது, ஒரே வேகமுடைய நல்ல, கெட்ட எண்ண அலைகளில் நல்ல எண்ண அலை கள் இயற்கையில் பலமுள்ளவைகளாகவும், கெட்ட எண்ண அலைகள் இயற்கையில் பலம் குறைந் தவையாகவும் இருக்கும்.
LD-3

Page 21
34
இவ்வுலகில் உள்ள உயிருள்ளவை, உயி ரில்லாதவை அனைத்தும் காந்தத்தை எப்போதும் வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. இப்போ தைக்கு நாம் மற்றவைகளின் காந்தத்தைப் பற்றி விட்டுவிட்டு, மனித காந்தத்தைப் பற்றி மட்டும் ஆராய்வோம்.
ஒவ்வொரு மனிதனும், அவனது தனிப்பண்பு கொண்ட காந்தத்தை வானில் பரப்பிக்கொண்டே யிருக்கிறான். இப்படிப் பலராலும் பரப்பப்படும் காந்தம் ஒன்றையொன்று மோதிக் கொண்டும், சிலதை சிலது அழித்துக் கொண்டும் அண்டவெளி முழுவதும் பரவிக் கொண்டேயிருக்கின்றன. இவைகளில் பல வேகமானவை. பல வேகம் குறைந்தவை. விண்ணில் மின்காந்த அலைகளைப் போலவே மனித காந்த அலைகளும், அவைகளின் தொடர்பும் பரவிக் கொண்டேயிருக்கின்றன.
6. மனித காந்த உறவும் உதைப்பும்
அணுக்கள் ஒன்றோடொன்று இணைவதன் மூலம்தான் பிரபஞ்சப் பொருள்களனைத்தும் உரு வாகின்றன. ஒவ்வொரு பொருளிலும் என் னென்ன அணுக்கள் எந்தெந்த அளவில், என் னென்ன வடிவில் இணைந்திருக்கின்றன என்பதை சோதனைமூலம் கண்டுவிடலாம்.

35
பொருள்களின் அணுத்தன்மைகளையும், அணுக்கள் இணைந்து பொருளாகும் தன்மைகளை யும் நெடுங்காலம் ஆராய்ந்த அணு விஞ்ஞானிகள் அரியதோர் உண்மையைக் கண்டார்கள்.அக்கண்டு பிடிப்பு மனிதனின் பெளதிக அணு ஆராய்ச்சி தொடங்கிய சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பாகவே ஆன்ம ஞானிகள் கண்ட உண்மையை வலியுறுத்துவதாயமைந்தது.
விஞ்ஞானிகள் அணுக்களின் இணைப்பில் கண்ட உண்மை இதுதான்- மனிதர்களில் சிலர், சிலருடன் மட்டும் நெருங்கிப் பழகுவது, சிலரை வெறுத்துத் தள்ளுவது போலவே அணுக்களிலும் சில அணுக்களை சில அணுக்கள் நெருங்கி வரும் போது எதிர்த்துத் தள்ளிவிடுகின்றன. அதனால் எல்லா அணுக்களும் மற்றெல்லா அணுக்களுட னும் சேர்ந்து பொருள்களாகின்றன என்று சொல்ல முடியாது. சில அணுக்கள் சில அணுக் களுடன்தான் எப்போதும் சேரும். சில அணுக் களுடன் ஒரு போதும் சேரா.
அணுக்கள் இப்படிச் சேர்வதை ஆன்மீகவாதி கள் சொல்வது டோல் பஞ்சபூதத் தத்துவங்களாகப் பிரிக்கலாம். அணுக்களில் சில அனல் தத்துவம் கொண்டவை. சில நீர்தத்துவம் கொண்டவை. சில வாயு, ஆகாயத் தத்துவம் கொண்டவை. அனல் தத்துவ அணுக்கள் எப்போதும் மற்ற அனல் தத்துவ அணுக்களுடனும், சில வாயு அணுக்களுட னும் கலக்கும். ஆனால் ஒரு போதும் நீரணுக்

Page 22
36
களுடன் கலக்கா. அனலணுக்களும், நீரனுக்களும் அப்படியே கலந்த பொருள் பிரபஞ்சத்திலில்லை.
அணுத்தன்மையைப் போலவே, மனிதரிலும் பலவகைப்பட்ட நல்லவர்கள், கெட்டவர்கள் இருக் கிறார்கள். ஒருவன் கல்வியில் நல்லவன். ஒருவன் ஒழுக்கத்தில் சிறந்தவன், ஒருவன் கலையில் வல்லவன், ஒருவன் கொடையில் பெயர் பெற்ற வன், ஒருவன் அரசியலில் தலைவன், ஒருவன் பேசுவதில் வல்லவன். இவர்களெல்லோரும் பொது வாக நல்லவர்களென்றே பிறரால் கருதப்படுபவர் கள். ஒருவனிடம் குடிப்பழக்கம் மட்டும் இருக்கும். ஒருவனிடம் புகைப்பழக்கம் மட்டும் இருக்கும். ஒருவனிடம் பொறாமைக் குணம் மட்டுமிருக்கும். ஒருவன் திருடுவதில் இன்பம் காண்பவனாயிருப் பான். ஒருவன் பிறரைக் கொல்வதில் நிம்மதி பெறு பவனாயிருப்பான்.
இவர்களெல்லோரும் பொதுவாய்க் கெட் டவர் கள் என்று கருதப்படுவார்கள். சில நல்லவர்கள் சில நல்லவர்களுடன் எப்போதும் நட்புகொள்ள விரும்புவார்கள். சில கெட்டவர்கள், கெட்டவர் களுடன் எப்போதும் நட்பு கொள்ள விரும்புவார் கள். சில நல்லவர்கள் சில காரணங்களால் சில கெட்டவர்களை விரும்பலாம். சில கெட்டவர்கள் சில காரணங்களுக்காக சில நல்லவர்களுடன் நல்லவிதமாக இருந்து வர விரும்பலாம்.

37
மனிதர்களின் இந்த மாறுபாடுகள் அவர்களின் காந்தத்திலும் இருக்குமென எளிதில் புரிந்துகொள் ளலாமல்லவா? சிலரின் காந்தம் சிலரின் காந்தத் தைக் கவர்ந்து தன் மயமாக்கிக் கொள்ளும். சிலரின் காந்தம் சிலரின் காந்தத்தை நெருங்க விடாமல் எதிர்க்கும். இதன் அடிப்படை, காந்தத் தின் பண்புதான் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.
சில பலத்த கெட்ட காந்தம், பலமற்ற நல்ல காந்தத்தை ஊடுருவி அதைத் தன்மயமாக்கும். சில பலத்த நல்ல காந்தம் பலமற்ற கெட்ட காந்தத்தை ஊடுருவித் தன்மயமாக்கும்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே தீயாரைக் காண்பதுவும் தீதே என்ற தமிழ் நல்லுரைகளில், சத்சங்கத்தால் சன்மார்க்கம் பிறக்கும் என்பவை போன்ற ஆப்தர்களின்-ஆன்மஞானம் பெற்றவர் களின்-உபதேசங்களில் இந்த அடிப்படை உண்மை அடங்கியிருக்கிறது.
இரண்டு மனிதர்கள் தம் காந்தங்கள் கலக்கும் படி நெருங்கி நிற்கும் போது அவர்களுக்குத் தெரியாமலே அவர்களின் காந்தத்தில் பரிவர்த் தனை நடைபெறுகிறது. இப்பரிவர்த்தனை சில சமயம் இருவருக்கும் நல்லதாய், ஒரு சமயம் இருவருக்கும் கெடுதலாய், ஒரு சமயம் ஒருவருக்கு தல்லதாய், மற்றவருக்குக் கெட்டதாயிருக்கக்கூடும்.

Page 23
38
அதனால் தான் தன்மையறிந்து, தகுந்தவர் களுடன் மட்டும் நேசம் கொள்ளவோ, நெருங்கிப் பழகவோ செய்ய வேண்டுமென ஆன்றோர் உப் தேசித்துள்ளார்கள்.
7. மனித காந்தப் பிரதிபலிப்பு
மின்காந்த அலைகளுக்கு இல்லாத ஒரு மாபெரும் தத்துவம் மனித காந்தத்துக்கு இருப்ப தைத் தெரிந்து கொண்டால் மனித வாழ்க்கையின் மாபெரும் இரகசியங்கள் பல தெள்ளிதின் விளங்கும்.
டேப்ரிகார்டர் என்ற கருவியின் உதவியால் டேப்களில் நமக்கு வேண்டிய பாடல்களை, வசனங் களைப் பதிப்பித்து வைக்கலாம். இப்பதிவுகள் காந்தத் தன்மையுடன் டேப்களில் பதிவதால், அவைகளைக் கண்ணால் காணமுடியாது. அதில் பதிந்த காந்த அலைகளை சப்த அலைகளாக மாற்றும் கருவியின் மூலமாகத்தான் அந்த டேப்பில் பதிந்துள்ள ஒலிகளைக் கேட்டறிய முடியும்.
ஒரு டேப்பில் ஒரு முறை பதிவான ஒலிகளை எத்தனை முறை வேண்டுமானாலும் ரிகார்டரில் போட்டுக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். முற்றும் வேண்டாமென்று கருதும் போது டேப்பி லுள்ள பதிவை நீக்கிவிட்டு, வேறு தேவையான

39
பதிவை பதிப்பித்துக் கொண்டு வேண்டுமான போதெல்லாம் ரிகார்டர் கருவியால் கேட்டுக் கொண்டேயிருக்கலாம்.
மனித உடலிலிருந்து வெளிப்படும் மன நரம்பு துருவங்களைக் கொண்ட மனித காந்தம், தான் படும் எல்லாப் பொருள்களிலும் தன் தன்மையை பதிப்பித்து விடுகிறது. உயிருடைய பொருள்களில் மட்டுமல்லாமல், உயிரற்ற கல், மண் போன்ற பொருள்களிலும் அது தன் பண்பைப் பதித்து விடுகிறது. ஒரு முறைக்குப் பல முறை அதே பண்பு வாய்ந்த காந்தம் ஒரே பொருளில் பதிந்து கொண்டே வந்தால் அப்பொருளில் அக்காந்தம் நல்ல தடிப்பாகப் பதிந்து விடுகிறது. இப்படிப் படியும் காந்தப் படிவுகள் முன்பே விளக்கிய கதிர் வீச்சுத் தன்மையில் செயல்படும் தன்மை கொண்ட தாகையால் மிகவும் மந்தமாகத் தன் பண்புகளைத் தன்னைச் சுற்றிலும் வீசிக் கொண்டிருக்கிறது.
வாசகர்களே! நாம் பீடிகையில் குறிப்பிட்ட சில செயல்களின் காரணம் இப்போது விளங்கும். நாம் ஓர் இடத்தில் சென்றமர்ந்ததால் இன்பமும் அமைதியும் பெறக் காரணம், அந்த இடத்தில் இதற்கு முன் வசித்தவர்கள் இன்பமும், அன்பும் கொண்டவர்களாய் வாழ, அவர்களின் காந்தம் அந்த இடத்தின் எல்லாப் பொருள்களிலும் பரவி யிருந்து மெதுவாகக் கதிர்வீசிக் கொண்டிருப்பது நம் காந்தத்தின் வழியாகப் புகுந்து நம் காந்தத் துடன் கலப்பதேயாகும்.

Page 24
40
ஓர் இடம் நமக்கு வெறுப்பை உண்டாக்கக் காரணம் அங்கு முன் வசித்தவர்கள் எப்போதும் வெறுப்புத்தன்மையுடன் வாழ அவர்களின் காந்தம் அந்த இடத்துப் பொருள்களனைத்திலும் பதிந் திருந்து, மெதுவாகக் கதிர்வீச, அது நம் காந்தத்தில் கலப்பதாலேயேயாகும். ஒரு வீட்டில் நாம் குடி புகுந்தால் நமக்கு நன்மையே நடைபெறக்காரணம் இதற்கு முன் அவ்வீட்டில் வசித்தவர்கள் நல்லவித மாய் வாழ்ந்து, தம் காந்தத்தை வீடு முழுவதும், சுவர், தரை, கூரைகளிலெல்லாம் பதித்துவிட்டுச் செல்ல, அது மெதுவாய் கதிர் வீசி நம் காந்தத் துடன் கலப்பதால்தான. இதே போல் கெட்ட வர்கள் வாழ்ந்த வீட்டில் நாம் குடி புகுந்தால் மேலும் மேலும் நமக்குக் கெடுதல்களே வந்து சேகும்.
எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே வாழ்ந்த ஒரு குடும்பம் இருந்த- வீட்டில் ஒரு. நாளும் சண்டையே போட்டறியாத குடும்பத் தினர் குடி புகுந்தார்கள். நாள்தோறும் சண்டை போட்டுக் கொண்டார்கள். நல்லாயிருந்த குடும்பத் தில் ஏணிப்படி சண்டைகள் நடைபெறுகின்றன என்பதை யாருமே அறிந்து கொள்ளவில்லை. வேறு வீட்டுக்குக் குடி போனதும் பழையபடி அமைதியான வாழ்க்கையை நடத்தினார்கள்.
கொலைகாரர்கள் வாழ்ந்த வீடுகளில் குடி புகும் நல்ல குடும்பங்களில் கொலையும் நடந்து விடுவதுண்டு.

41
ஒருவரைப் பார்த்தவுடன் நமக்கு விரும்பும் மற்றொருவரைப் பார்த்த வுட ன் நமக்கு வெறுப்பும் வரக் காரணம் அவர்களின் காந்தம் நம் காந்தத்துடன் கலப்பதால் தான் என்பதை இப்போது உணர்ந்து கொள்வீர்கள்.
பாரத நாட்டில் சில பழங்காலப் பெரியவர் கள் ஆசாரமென்ற பெயரால் பிறரின் துணிகளை உபயோகப் படுத்தாமல், பிறர் சமைத்த உணவை உண்ணாமல், பிறர் தொட்ட நீரைப் பருகாமல் இருப்பதைக் கண்டு இக்காலத்தவர்கள் நகைத்து “கர்நாடகம்" என்று கேலி செய்வதுண்டல்லவா? இது கேலிக்குரிய விஷயமல்ல. இதில் அரிய மானிடத் தத்துவம் இருக்கிறதென்பதை இப் போது புரிந்து கொளளலாம்.
ஒரு மனிதன் உபயோகிக்கும் துணி, நகை, பண்ட பாத்திரம் முதலிய அனைத்திலும் அவனு டைய காந்த சக்தி பதிந்திருக்கும். இதை மற் றொருவர் உபயோகப்படுத்தும் போது அதற்குரிய வரின் தன்மையெல்லாம் மெது மெதுவாக உபயோகிப்பவர்களில் செயல்படத் தொடங்கும்.
நெடுங்காலமாய் நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒருவன் உபயோகிக்க துணிகளை ஆரோக்கிய வான் உபயோகித்தத் தொடங்கினால் நாளடை வில் அவன் ஆரோக்கியம் கெட்டு, அந்த நோய் வரப் பெறவும் செய்யலாம். ஒருவர் உணவு

Page 25
42
சமைக்கும் போது அதில் தன் காந்தத்தையும் கலக்கச் செய்கிறார். சமைத்தவர் கெட் ட எண்ணம், கவலை துன்பப் படுபவராயிருந்தால் அவரால் சமைக்கப்படும் உணவை உண்ணும் ஒரு நல்லவனில் அத்தீயக் குணங்கள் தோன்ற முடியும். ஒருவர் சாப்பிட்ட பாத்திரத்தில் மற்றவர் சாப்பிடும் போது இத்தகைய மாறுபாடுகள் உண்டாகுமென அறியலாமல்லவா?
இப்போது சொல்லுங்கள்! நல்ல வாழ்க் கைக்குக் கர்நாடகப் பழக்கம் நல்லதா? கண்மூடித் தனமான நாகரிகப் பழக்கம் நல்லதா?
தட்டுகளில் பட்சணங்களைப் பரிமாறும் சிற்றுண்டி சாலைகள், பலரின் காந்தங்களைப் பலரில் பரப்பும் பரந்த பணியைச் செய்கிறது. நீங்கள் இனிமேல் சிற்றுண்டிச் சாலைக்குச் சென் றால் இலையில் பட்சணங்களை பரிமாறும் படிக் கேளுங்கள்.
பிறரின் படுக்கையில் படுத்தால், பிறரின் நகைகளை அணிந்தால் அவர்களின் தன்மை, நமக்கும் உண்டாக வழியுண்டென்பதை மறவா தீர்கள்.
மனித உடலின் ஒவ்வொரு உறுப்பும், பகுதி யும் அவன் குண காந்தத்தால் நிறைந்திருக்கிறது. இதன் அடிப்படையில் சில அரிய சாதனைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. m

இங்கிலாந்து நாட்டில் ஆன்மீக வித்தை பயின்ற ஒரு மாணவூர்ஒத%ழுதி மக்கு ஒரு வேண்டுகோள் கடி டுதியிருந்தார். அதில், "நான் மனித காந்தத்தைப் படித்தறியும் சாதனை பழகியிருக்கிறேன்; பிறர் உபயோகித்தப் பொருள் களைக் கொண் டு அவர்களின் வாழ்க்கை களைக்கண்டறிந்திருக்கிறேன்; ஆனால் உங்களைப் போன்ற சித்தியடைந்த பெரியவர்களின் வாழ்க் கையை அவர்கள் உபயோகித்த பொருள்களைக் கொண்டு கண்டறிய வேண்டுமென்பது என் அவா! இதில் நான் வெற்றியடைந்தால் என் சாதனை நல்லமுறையில் முடிந்திருக்கிறதென நிம்மதியடை வேன்; அதனால் எனக்குத் துணை செய்ய உங் களின் ஏதாவது ஒரு பொருளை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும்' என்று கண்டிருந்தது.
நாம் நமது காதுக்கு மேற்புறத்திலுள்ள ரோமத்தைக் கத்தரித்து கவரில் வைத்து அனுப்பி னோம். சில நாட்களின் பின் அவரிடமிருந்து புல்ஸ்கேப் பேப்பர் அளவில் 6 பக்கங்கள் கொண்ட டைப் அடிக்கப்பட்ட கடிதம் வந்தது. பிரித்துப் பார்க்க அதில் நம் வாழ்க்கை முழுதும் சரியாக விவரிக்கப்பட்டிருந்தது. ஒரு சிறு கற்றை ரோமத்தி லிருந்து ஒருவரின் வாழ்க்கை முழுவதையும் அறிந்து கொள்ளச் செய்தது மனித காந்தமே.
ரிகார்ட் செய்யப்பட்ட டேப்பிலுள்ள சப்தங் களை மறுபடி சப்தங்களாக மாற்ற ஒரு கருவியிருக்

Page 26
44
கிறது பதிந்த மனித காந்தத்தின் முழுத்தன்மை யையும் அறிய சில சாதனைகள் இருக்கின்றன.
சாதனைகளை விளக்குமுன் இச்சாதனையைப் பயின்றவர்கள் செய்யக்கூடிய சில அரிய செயல் களைப் பார்ப்போம். இச்சாதனையை நல்லமுறை யில் பயின்ற ஒருவரை ஓர் இடத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு கீழே கிடந்த கல்லை எடுத்துக் கையில் கொடுத்தால், அவர் அக்கல்லை கையில் பிடித்துக் கொண்டு, அக்கல் இருந்த இடத்தில் இதற்கு முன் என்னென்ன இருந்தது, ஏதாவது மக்கள் இனம் இருந்து மறைந்து போனதா? இருந் திருந்தால் அவர்கள் எப்படி வாழ்ந்திருந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி விடுவார்.
பிறகு, சரித்திர ஆராய்ச்சியைக் கண்டறிந்தால் அவர் சொன்னது சரியாயிருக்கும். நீங்கள் பலகால மாக உபயோகித்து வரும் ஒரு சிறிய கைக் குட்டையை அவர் கையில் கொடுத்தால் அதை, கொண்டு உங்கள் வாழ்க்கைமுறை, மனப்பண்பு, ஒழுக்கம் முதலிய அனைத்தையும் கூறிவிடுவார் கள். இந்த சாதனைக்கு 'காந்த ஞானம்" (Psychomancy) GT Gör go Golu uuri.
உயிர்ப்பொருள்கள் மட்டுமல்லாமல், உயிரற்ற பொருள்களும் ஒருவகையில் தம் காந்தத்தை வெளி யில் பரப்பிக் கொண்டேயிருக்கின்றன என்பதை முன்பு கண்டோம். இதனால் இவைகளின் காந்த

45
மும் இவைகளைச் சுற்றியுள்ள பொருள்களில் பதிந் திருக்குமாகையால் அப்பொருள்களின் காந்தத் தைக் கொண்டு அவைகளின் தன்மைகளைப் பகுத் தறிந்து கொள்ளலாம்.
கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும் என்று சொல்வதிலும் ஏதோ பொருளிருக்க வேண்டுமென்று தெரிகிறதல்லவா?
8. மனித காந்த சாதனைகள்
மனித காந்தம் மனித உடலைச்சுற்றி, முட்டை வடிவில் காணப்படும் இதையே மனித கிரணம் (Human Aura) என்று சொல்வார்கள். இக்கிரணக் கற்றை சிலருக்கு உடலைச்சுற்றி சில அங்குல தூரம் வரையில் பரவியிருக்கும். சிலருக்குப் பல அடிகள் பரவியிருக்கும். தம்மையறிந்து தகைமை பெற்ற மகரிஷிகளில் இது சில கிலோ மீட்டர்கள் தூரம் பரவியிருக்கும்.
சில சாதனைகள் மூலம் இதை வானப்பரப்பில் பல்லாயிர கிலோ மீட்டர்கள் வரையும் பாயச் செய்யலாம்.
இந்தக் காந்தக் கற்றை எந்த உடலிலிருந்து வெளியாகிறதோ அந்த உடலின் தன்மையையும், அவ்வுடலிலிருந்துசெயல்படும் மனதின் தன்மையை யும் கொண்டிருக்குமென முன்பே விளக்கினோம்

Page 27
46
மனதின் தன்மைக்குத்தக இக்கிரணக்கற்றை நிறத்தையும், வடிவத்தையும், பண்பையும் கொண் டிருக்கும். இது பரவும் வழியில் உள்ள பொருள் களிலும் பிற மனங்களிலும் தன் பண்பை உண் டாக்கிச் செல்லும்,
ஒருவருடைய காந்தத்தில் குறித்த ஒரு தன்மை வாய்ந்த பலமான காந்தத்தைப் புகுத்தினால் அக்காந்தத்தின் தன்மைகள் மெல்லமெல்ல அவரிட மும் செயல்படுவதைக் காணலாம்.
இப்படி பிறரில், பிற பொருள்களில் காந்தப் பதிவை உண்டாக்க இரண்டு சாதனைகள் தேவை ஒன்று காந்தத்தை அதிக அளவில் சேமித்தல். இரண்டாவது அதை அருகிலும், தொலைவிலு முள்ள பொருள்களில், பிறர் காந்தங்களில் பதியச் செய்தல். இவ்விரு சாதனைகளைப் பற்றியும் பின் னால் விளக்குவோம்.
இப்போது காந்தத்தை அதிக அளவில் சேமித்து, பொருள்களிலும், பிறரிலும் பதிப்பிப்ப தன் மூலம் செய்யப்படக்கூடிய சில அரிய சாதனை களைக் காண்போம்.
பீடிகையில் குறிப்பிட்ட சில காரியங்கள் எப் படி நடைபெறுகின்றன என்பதை இப்போது பார்ப்போம். விபூதி, பழம் போன்ற பொருள் களைக் கையில் வைத்துக் கொண்டு அதில் குறித்த

47
வொரு எண்ண காந்தத்தை மனதின் வழியாகவும், அதற்கான சக்தியை நரம்பின் வழியாகவும் ஏற்றிக் கொடுக்க, அதை உபயோகிப்பவர்களின் காந்தத் தில் இதிலுள்ள காந்தம் கலந்து, அவர்கள் மனதி லும், உடலிலும் குறித்த பண்பை உண்டாக்கி விடுகிறது. w
கடின நோயால் வாடுபவர்களுக்கு நோய் நீங்க வேண்டும், சுகமாயிருக்க வேண்டும் என்ற பண்பு கொண்ட காந்தத்தை நேராகப்பாய்ச்சியோ நீர் முதலியவைகளில் பதித்தோ கொடுக்க, அது அவர்களின் காந்தவழி சென்று நோயைக் குணப் படுத்துகிறது.
பெரியவர்கள் ஆசீர்வாதம் செய்யும்போது வெறும் கையை உயர்த்துவதில்லை. அதே சமயம் தம் காந்தத்தைக் குறித்த தவத்தின் தன்மையை தாக்கி, கைவழி நம் தலைக்காந்தத்தில் புகுத்து கிறார்கள். இதனால்தான் அவர்கள் ஆசீர்வதித்த படி நமக்கு நன்மைகள் நடந்தேறுகின்றன. தொலைவில் இருப்பவர்களுக்கும் வானப்பரப்பில் குறித்த தன்மை வாய்ந்த காந்த சக்தியைப் பரப்பி நோய்களைப் போக்கவும், மற்றும் பல காரிய சாதனைகளில் வெற்றியடையவும் செய்யலாம்.
வாசகர்களே! தெய்வ சாதனை, மந்திர சாதனை, யோக சாதனை, ஆன்ம சாதனை முதலியவைகளைச் செய்து, பயனடைய விரும்புப

Page 28
48
வர்கள் தொடக்கத்தில் தகுந்த ஒரு குருவின் மூலம் தீகூைடி பெற வேண்டுமென்ற விதியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
தீசுை; பெறாமல் செய்யப்படும் எந்தசாதனை யும் பயன் தராதென்பது அனுபவம். இன்று தீகூைடி என்ற சொல் தவறான பொருளில் உபயோகிக்கப் பட்டு வருகிறது.
சீடருக்கு குருநாதர் மந்திர உபதேசம் செய்வது, சாதனா முறையை உபதேசம் செய்வது தீகூை; யென்று கருதப்பட்டு வருகிறது. சமயகுறவர்கள் பலர் தம் சமய வழியைப்பின்பற்றி சாதனை புரிய விரும்புபவர்களுக்கு இத்தகைய உபதேசத்தையே தீகூைr என்ற பெயரில் செய்கிறார்கள். ஆனால் இது தீகூைrயாகாது.
மந்திரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டு மானால் மந்திர நூல்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதற்கு இரகசிய உபதேசம் தேவை யில்லை. தீகூைஷியின் உண்மைப் பொருள் குருநாதர் தன் மாணவனின் சாதனைத் தன்மைக்குரிய காந்த சக்தியைப் பதிப்பித்தலாகும்.
ஏனெனில், விதையில்லாத நிலத்தை எவ்வளவு உழுது, எருவிட்டு, நீர் பாய்ச்சினாலும் பயிர் வளராதது போல் தன்னில் தெய்வ மந்திர வடிவப் பண்பு இல்லாதவர்கள் எத்தனை ஆண்டுகள் நியம

49
மாகச் சமய வழிபாடுகளைச் செய்து வந்தாலும் பயன் கிடைக்காது. இதற்காக முதலில் தகுந்த ஒரு குருவிடமிருந்து அப்பண்புள்ள சக்தியைப் பெற்றுவிட்டால் பிறகு தன் முயற்சி வைராக்கிய சாதனையால் அதைப் பெரிதாக வளர்த்து, அதனாலாகும் பெரும் பயனைப் பெறலாம்.
தீகூைடி யென்பது குரு மாணவனுக்குச் சக்தி யைப் பரிமாறல் என்று பொருள். இச்சக்தி மனித காந்த சக்தியேயாகும்.
மனித காந்தம் மனிதர்களின் உடல் முழுவதிலு மிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருந்தாலும் சிறப் பாக மூன்று வழிகளில் அது அதிக அளவில் வெளிப் படுகிறது. அவை உள்ளங்கை, பாதங்கள், கண்கள் என்பவை. தீய காந்தம் படைத்தவர்கள் பொறாமையுடன் ஒரு நல்ல குழந்தையை முறைத் துப் பார்த்தாலே அக்குழந்தை இளைத்து, நோய் வாய்ப்படும். இதை திருஷ்டி, தோஷம் என்கிறோம்.
பார்த்த போது அவர்களின் மனதில் பலமாகச் செயல்பட்ட பொறாமைத் தன்மை கலந்த காந்தம், குழந்தையின் மெல்லிய காந்தத்தில் கண் வழி வெளிப்பட்டுப் பதிந்ததே இக் கோளாறு களுக்குக் காரணம்.
கெட்டவர்களின் பார்வையால் கெடுதலும், நல்லவர்களின் பார்வையால் நன்மையும் விளை
LD-4

Page 29
50
வது பலரின் அனுபவம், அன்பு கலந்த இரு நண்பர் கள் சந்திக்கும் போது கை குளுக்கிக் கொள்வதும், ஆலிங்கனம் செய்துகொள்வதும் இருவரின் காந்தத் தையும் கலக்கச் செய்து கொள்வதற்காகவே.
"நாமிருவரும் நம் பண்புகளைப் பரிமாறிக் கொண்டு, சமத்துவமாய் வாழ்வோம்” என்ற கருத்து இச்சடங்கில் உள்ளது. முத்தமிடல், கட்டியணைத்தல் மூலம் கிடைக்கும் இன்ப உணர்ச்சி இருவரின் காந்தக் கலப்பினால்தான் உண்டாகிறது. பெண்களின் காந்தமும், ஆண் களின் காந்தமும் ஒன்றையொன்று எப்போதும் கவரும் தன்மை கொண்டது. இதில் தான் ஆண், பெண்களின் கவர்ச்சித்தன்மை அடங்கியிருக்கிறது.
பெரியவர்களின், தெய்வ உருவங்களின் பாதத் தைத் தொட்டுக் கும்பிடும் போது பாதத்தின் வழி வெளிப்படும் அவர்களின் தெய்வீக காந்தத்தை நம் காந்த வழி ஏற்றுக் கொள்வதற்காகத்தான்.
தலையைப் பாதங்களின் அருகில் வைத்து வணங்கும்போது அவர்களின் தெய்வீகக் காந்தம் நம் தலைக் காந்த வழி உட்புகுந்து, விரைவில் நமக்கு நற்பயனை அளிக்கிறது. ஆசீர்வாதங்களில் கைவழி காந்தத்தைப் பெறுகிறோம்.
வாசகர்களே! நாய்கள் மோப்பம் பிடிப்பதைப் பற்றி அறிந்திருப்பீர்கள். அவை எதைக் கொண்டு

51
திருடன் போனவழியைக் கண்டு பிடிக்கின்றன என்று நினைக்கிறீர்கள்? அவன் சென்ற போது அவன்பாதங்களின் வழி வெளிப்பட்ட காந்தம் கல்லிலும், மண்ணிலும் பதிகிறது அதைத்தான் நாய்கள் மோப்ப வழியறிந்து சென்று, ஆளைக் காட்டிக் கொடுக்கிறது.
மேற்சொன்னவைகளிலிருந்து, ஒருவன் தன் காந்த சக்தியை நன்றாக வளர்த்து, அதை வெளிப் படுத்தவும் தெரிந்து கொண்டால் பல அற்புதங் களைச் செய்ய முடியும் என்பது புரியும். நோய் களை குணப்படுத்தலாம்; துன்பப்படுபவர்களின் துன்பத்தைப் போக்கலாம்; தீயவர்களை நல்லவர் களாக மாற்றலாம்; அருகில் உள்ளவர்களுக்கு மட்டுமல்லாமல் நெடுந்தூரத்திலுள்ளவர்களுக்கும் இத்தகைய நன்மைகளைச் செய்யலாம்.
இப்பகுதியை முடிக்கு முன் வாசகர்களுக்கு இன்னொரு ரகசியத்தையும் சொல்லவிரும்புகிறேன். பழம், பால், தானியங்கள் போன்றவைகளில் அதிக காந்தம் பதிப்பித்தால் அவை விரைவில் கெடாமல் பல நாட்களுக்குப் புத்தம் புதியவையாயிருக்கும்.
எம் மாணவர்களுக்கு இந்த பயிற்சியைத் தருகிறோம். எலுமிச்சம்பழம் போன்றவைகளை ஒரு மாதம் வரை அப்படியே புதியதாக இருக்கச் செய்திருக்கிறார்கள் எம் மாணவர்கள்.

Page 30
52
ஒருவர் தன் அலமாரியின் ஒரு அறையில் கீரை, காய்கள், பலவகைப் பழங்களை வைத்து, தினம் காந்தத்தைப் பாய்ச்சி வந்தார். சில வருடங்களின் பின்னும் அவை புத்தம் புதியவையாய், நிறம், மணம் குணங்களில் சிறிதும் மாறுதலின்றி இருந்தன.
இதிலிருந்து, நீங்கள் உங்கள் காந்த சக்தியை வளர்த்துக் கொண்டால் எவ்வளவு பெரிய காரியங் களைச் சாதிக்கலாமென்பதை அறிந்து கொள்வீர் களல்லவா?
9. மனித காந்த வளர்ச்சி முறை
இனி காந்தத்தை வளர்க்கு முன் ஒருவரின் காந்தம் நல்லதா கெட்டதா என்பதைப் பரீட்சித் தறிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஒரு வருடையது கெட்ட காந்தமாயிருந்து விட்டால், அவர் அதைத் தெரியாமல் அதிகமாய் வளர்க்க முயற்சி செய்தால் அதனால் அவருக்கே கெடுதல் விளையும். அதனால் முதலில் தன் காந்தம் நல்லதா கெட்டதா என்பதை அறிந்து கெட்டதாயிருந்தால் முதலில் அதை நல்லதாக மாற்றிக் கொண்டு, பிறகு தான் அதனை வளர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
காந்தத்தின் நல்ல, கெட்ட தன்மை ஒருவரின் உடல் ஆரோக்கியத்தையும், எண்ணங்களின்

53
தன்மையையும் பொருத்திருக்கிறதென முன்பு கண்டோம். அடிக்கடி நோய்வாய்ப் படுபவர் களுக்கும், கெட்ட எண்ணங்களை எண்ணுபவர் களுக்கும் காந்தம் கெட்டதாக இருக்கும். திடுமென ஒரு சமயம் மட்டும் ஆரோக்கியமாய், நல்ல எண்ணத்துடன் இருந்தால் போதாது. அப் போதைய நல்ல பண்பு காந்தத்தை மாற்றிவிட முடியாது. அதனால் முதலில் தன் காந்தம் எப்படி யிருக்கிறதென்பதைப் பரீட்சித்தறிந்து கொண்ட பிறகே அதை வளர்க்க முயற்சி செய்யவேண்டும்.
ஏதாவதொரு பழத்தை வாங்கிக் கொண்டு வாருங்கள். அதை அப்படியே வைத்தால் 2 நாள் வரை கெடாமலிருக்கக் கூடுமென்று கருத முடிந் தால் அதை உங்கள் கைகளில் அரைமணி நேரம் பிடித்திருங்கள். தினம் 2 அல்லது 3 வேளை இப்படியே செய்யுங்கள்; உடனே அப்பழம் வாடத் தொடங்கி விட்டால் உம் காந்தம் கெட்டதென புரியும். அப்படியில்லாமல் 3 நாட்களாகியும் வாடாமல் இருக்கிறதென்றால் உங்கள் காந்தம் நல்லதென அறிந்து கொள்ளலாம்
காந்தத்தின் பெளதிகத் துருவத்தை வளர்க்க நல்ல பிராணாயாம சாதனை வேண்டுமென்பதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம்; ஏனெனில் பிராண இயக்கத்தின் வெளிப்பாடுதானே காந்தம். எவ்வளவுக் கெவ்வளவு பிராணனை வளர்த்துக் கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு காந்தசக்தி

Page 31
54
வளரும். தெரியாத்தனமாக தவறாக எதையாவது பிராணாயாமமென்று செய்து துன்பப்பட்டுவிடக் கூடாது.
காந்தத்தை வளர்க்க மிக எளிதான பிராணா யாம முறை எமது பிராண காந்த சிகிச்சை என்ற புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது.
காந்தத்தின் மற்றொரு துருவமான மனக் காந்தத்தை வளர்க்க நல்ல எண்ணமும், ஏகாக்ர மும்தான் தேவை. ஏகாக்ரத்துக்கும் பல வழி களுண்டு. இங்கு எளியதொரு முறையைச் சொல் கிறோம்.
ஏதாவதொரு படத்தை, பொருளை, புத்தக பாடத்தை சற்று நேரம் கண்களால் பார்த்து விட்டு, பிறகு மனதில் அதை அப்படியே நினைவு படுத்தி வைக்கப் பழகி, இப்பழக்கம் போதுமான அளவு தெளிவாக வந்தபின் ஒரு பொருளை மனக் கண்ணில் இருத்தி, அதைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கப் பழகி வாருங்கள்.
மனம் வேறு நினைப்புக்குத் தாவும் போதெல் லாம், அதனை இழுத்து எகாக்ர நினைப்பில் இருத்திவாருங்கள். இப்படிப் பழகி வரவர ஏகாக்ரம் கைகூடும், மனக்காந்தமும் வளர்ந்து வரும்.
தினமும் பிராணாயாமமும், ஏகாக்ரமும் ஒருங்கே செய்துவர காந்துத்தின் இரு துருவங்களும்

55
சம வளர்ச்சியடைந்து நல்ல காந்த சக்தி நிறையும்.
10. மனித காந்தம் பதிவு
மனித காந்தம் கண், கை, கால்களின் வழி வெளிப்படுகிறதெனக் கண்டோம். நாமாக காந்தத்தை எதிலாவது பதித்து, யாரிலாவது புகுத்த வேணடுமானால் கண் அல்லது கைகளைத் தான் பயன்படுத்த வேண்டும்.
கண் வழியாகப் பிறரின் மனதில், காந்தத்தில் நம் காந்தத்தைப் புகுத்தத்தான் பயன்படுத்தலாம். பிறபொருள்களில் பதிக்க, பிறரின் உடலில் பாய்ச்ச கைகளைத்தான் உபயோகிக்க வேண்டும். காந்தத்தைப் பாய்ச்சவும், பதிப்பிக்கவும் தேவை யான நிலை பிராணாயாமமும், ஏகாக்ரமும்தான்.
பிராணாயாமத்தால் நம் காந்தத்துக்குப் பாயும் தன்மையையும், ஏகாக்ரத்தால் அதற்குத் தேவையான குணத்தையும் உண்டாக்குகிறோம். இரண்டும் கூடிய காத்தத்தை வேகப்படுத்த ஏகாக்ர மனதில் நம் உணர்வை ஒன்றச் செய்ய வேண்டும்.
ஒருவரின் மனதில் காந்தத்தைப் புகுத்த வேண்டிய போது, அவரின் புருவ மத்தியில், நம் கண்களை ஊன்றி, பிராணாயாமம் செய்தபடி

Page 32
56
மனதில் அவரைப் பற்றி ஏகாக்ரம் செய்து நிற்க நம் காந்தம் கண்வழி அவர் மனதில் புகும். நாம் கருதும் கருத்துப்படி அவரின் மனநிலை மாறி வரும். தூரத்திவிருப்பவர்களின் போட்டோவை வைத்து, அவர்களை நினைத்தபடி, போட்டோ வைப் பார்த்தும் செய்யலாம்.
பழத்தில், நீரில், விபூதியில் காந்தத்தை ஏற்ற அதை எதிரில் ஒரு மரத்தட்டில், பீங்கான் தட்டில், தோல்மேல், துணிமேல் வைத்துக்கொள்ள வேண் டும். இரும்பு, செம்பு முதலிய உலோகங்களின் மேல் வைத்தால் பாய்ச்சும் காந்தம் அவைகளால் இழுத்துக் கொள்ளப்படும். இப்படி வைத்தபின் வலது கை விரல்களை விரித்து, அப்பொருளுக்கு மேலே 5, 6 அங்குல உயரத்தில் பிடித்துக்கொண்டு? ஆள்காட்டி விரலை அப்பொருளுக்கு நேராக சாய்த்துப்பிடித்து, பிராணாயாமம் செய்தபடி, மனதில் அப்பொருளில் என்ன குணத்தைப் புகுத்த விரும்புகிறீரோ அக்குணத்தைப் பற்றி உறுதியாய், ஏகாக்ரமாய் நினைத்தபடி, கையை சிலமுறை அப் பொருளைச் சுற்றி வரச் செய்யுங்கள். சில நிமிடங் கள் இப்படிச் செய்தால் போதும்.
தினம் 2-3 தடவை இப்படிச் செய்து, அப் பொருளை உபயோகிக்கும்படி தேவையானவர் களுக்குக் கொடுத்தால் அப்பொருளில் புகுத்தப் பட்ட காந்தம், அவர்கள் காந்தத்தின் வழி உட்புகுந்து, அவர்களின் உடல், மனங்களில் தன் பிரபாவத்தை, தன்மைய்ை உண்டாக்கி விடும்.

57.
ஒரு கண்ணாடி டம்ளரில், சுத்தமான நீரை நிரப்பி, அதை எதிரில் வைத்து, முன்போல் கையை அதற்கு நேரே உயர்த்திப் பிடித்து, பிராணாயாமம் செய்தபடி, "இந்நீர் தகுந்த மருந்தாக வேலை செய்யட்டும்" என்ற மன ஏகாக்ரத்தைச் செய்தபடி சில நிமிடங்கள் இருந்து, பின் இந்த நீரை வேளைக்கு தேக்கரண்டியளவு ஒரு நோயாளிக்குக் கொடுக்க, நீரிலுள்ள காந்தம் அவர் உடலில் பரவி, அவரின் நோயைப் போக்கும். கெட்ட புத்தியுள்ள வர்களின் புத்தியை மாற்றவும் இப்படிச் செய்ய
லாம்.
நல்ல முறையில் காந்த வளர்ச்சிக்குச் சாதனை கள் பயின்ற ஒருவர் தினமும் நீரில் "சூக்ஷம திருஷ்டி பரவ வேண்டும்" என்ற ஏகாக்ரத்துடன் காந்தம் பாய்ச்சிக் கொடுத்துவர, ஒரு மாணவனுக்கு அவனு டைய முயற்சியில்லாமலே சூக்ஷம திருஷ்டி பிறந்தது.
வாசகர்களே! இப்படிப் பொருள்களில் காந்தம் பாய்ச்சுவதைத்தான் "மந்திரித்தல்" என்று நம் நாட்டில் பழங்காலம் முதல் வழங்கி வருகிறார்கள்.
இதே முறையில், பட்டுக் கைக்குட்டைகளை செம்பு, தங்கம் போன்ற உலோகத் தகடுகளை மந்திரித்துக் கொடுத்து, அதை உடலில் அணிந்து கொள்ளச் செய்வதன் மூலம், அதிலுள்ள காந்தத்தை அவர்கள் காந்தத்துடன் செலுத்திப்

Page 33
58
பயன்பெறச் செய்யலாம். இந்த உலோகத் தகடு களில் தகுந்த ஒரு யந்திரத்தையும் எழுதி, அதற்கு அபிஷேகம் முதலிய ரசாயனக் கிரியைகளைச் செய்து, பிறகு முன்போல் காந்தத்தை ஏற்ற, அது நிறைய காந்தத்தைச் சேமித்து வைத்துக்கொண்டு, மெதுவாய் கதிர் வீசிக்கொண்டிருக்கும். இதுதான் யந்த்ர சாதனைகளின் உண்மை
இதேபோல், பஞ்சலோகங்களால் செய்யப்பட்ட தெய்வ உருவங்களை, அபிஷேகம் முதலான ரசாயனக் கிரியைகளுக்கு உள்ளாக்கிய பின், பிராண ப்ரதிஷ்டை என்ற பெயரில் நிறைய காந்தத்தை ஏற்றிவைக்க, அதை வழிபட வருபவர் களெல்லோரும் அதன் கதிர் வீச்சால் நலமடை கிறார்கள். கல் விக்கிரங்களில் அதிகமாய் காந்தம் ஏறாதாகையால் அவைகளை நிலைப்படுத்துமுன், அவைகளின் பீடத்துக்கடியில் உலோக யந்திரங் களை பிரதிஷ்டை செய்து வைப்பார்கள். இப்படிச் செய்யப்படாத விக்கிரங்களுக்குச் சக்தி யிருக்காது.
வாசகர்களே! நீங்களும், உங்கள் குடும்பத்தவர் -களும் காந்தத்தால் நாள்தோறும் நன்மை பெறுவ தற்கான சில முறைகளைக் கூறுகிறேன்.
எந்த உணவை உண்ணத் தொடங்கும்போதும் அவ்வுணவின் மேல் கைநீட்டி, பிராணாயாமத்

59
துடன், "ஆரோக்கியம், பலம்" என்ற ஏகாக்ரத் துடன் காந்தம் பாய்ச்சியபின் உண்டு வாருங்கள்.
உயிர்ச்சத்துக் குறைந்த எளிய உணவாயினும் அது உங்கள் உடலில் நல்ல பலத்தையும் ஆரோக் கியத்தையும் உண்டாக்கும். பருகும் நீரில் இப்படி செய்து பருக நலம் கிடைக்கும்.
நீங்களும் உங்கள் குடும்பத்தவர்களும் அணி யும் ஆடையாபரணங்களில் இப்படி அடிக்கடி *சந்தோஷம், சவுக்யம்" போன்ற ஏகாக்ர காந்தத் தைப் பாய்ச்சி வரலாம். உங்கள் வீட்டிலுள்ள மற்றப் பொருள்களிலும் இப்படிப் பாய்ச்சலாம். உங்கள் வீட்டில் தோட்டம் இருந்து, அதில் காய், கணிச் செடிகளைப் பயிரிட்டால் அவைகளுக்கு இப்படி "அதிக காய்கள் கனிகள் காய்க்க” போன்ற ஏகாக்ர காந்தத்தைப் பாய்ச்சி வருவீர்களானால், எதிர்பாராத அளவில் நல்ல காய், கனிகள் கிடைக் கப் பெறுவீர்கள். குளிக்கும் நீரில் காந்தம் பாய்ச்சி அழகையும், சர்ம ரோகங்கள் நீங்கப் பெறுதலை யும் அடையலாம்;
மேற் சொன்னவைகளைச் சிந்தித்து அறிவதன் மூலம் இன்னும் பல நூற்றுக்கணக்கான வழிகளில் நல்ல காந்தத்தை உபயோகப்படுத்தி நலன் பெறலாம்.
உங்கள் குழந்தைக்கிடும் பொட்டுகளை, நீங்களும், வீட்டாரும் உபயோகிக்கும் விபூதி,

Page 34
60
குங்குமதைத் தினமும் காந்தப்படுத்தி வைக்க, அவை மிக நல்ல பலன் தரும். புதிய புத்தகங் களை வாங்கியவுடன் அவைகளுக்கும் காந்தம் பாய்ச்சுங்கள்; புதிய ஆடை, ஆபரணங்களுக்குக் காந்தம் பாய்ச்சுங்கள்; நோயாளிக்குக் கொடுக்கும் மருந்துகளில் காந்தம் பாய்ச்சுங்கள்; விதைகளை பூமியில் நடுமுன் காந்தம் பாய்ச்சுங்கள்; அற்புத மந்திரவாதியாகி விடுவீர்கள்.
ஊரில் தொத்து நோய்கள் பரவியிருக்கும் போது நீரில் அதிக அளவில் காந்தம் பாய்ச்சி வீடெல்லாம் தெளியுங்கள். உங்கள் வீட்டில் தொத்து நோய் வராது. இப்படி இன்னும் பல வழிகளில் நீங்கள் உங்கள் காந்த சக்தியை மந்திர சக்தியாகப் பயன்படுத்தி பெரிய மந்திர சாதனை களைச் செய்யலாம்.

ஆத்ம சிந்தனை
விஞ்ஞானம் வான் முகட்டைத் தாவிப் பிடிக்கிறது. இயற்கை சக்திகளை எல்லாம் மனிதன் தன் வசப்படுத்தி தனக்கு நன்மை தரும் பல துறைகளில் பயன்படுத்து கிறான்.
ஆனாலும் ஆன்ம ஞானிகள் இதைக் கண்டு வியக்க வில்லை.
அதற்குப் பதிலாகச் சினிக்கிறார்கள்.
ஏனென்றால் மனிதன் தனக்கு வெளியேயுள்ள பிரபஞ்சத்தையும், சக்திகளையும் அறிந்து, அடிமைப் படுத்தினானே தவிர, அவனுக்குள்ளேயே என்னயிருக் கிறது; என்னென்ன சக்திகளால் அவன் வாழ்க்கை கடக் கிறது; வெளியிலுள்ள சக்திகளுக்கும் அவனுக்குள்ளே யிருக்கும் சக்திகளுக்கும் என்ன தொடர்பு என்பவை களைப் பற்றி ஆராயவுமில்லை. அறிந்து கொள்ளவு மில்லை.
இதன் முடிவு, விஞ்ஞான முதிர்ச்சியில் வினைதரும் விபத்துகள், எதிர்பாராத ஆபத்துகள், அற்ப ஆயுள்.
இந்த சிறு புத்தகத்தில் மனிதனுக்குள்ளுறையும் அரிய சக்தியைப் பற்றியும், அதன் பயனைப் பற்றியும் படித்தறிந்தீர்கள். இதுபோல் மனிதனின் ஆழ்ந்த

Page 35
ரகசிய சக்திகளைப்
வெளியாகும்.
62
பற்றி இன்னும் பல புத்தகங்கள் படித்துப் பயனடையுங்கள்.
鲨 المل 溢溢溢溢谷溢沿 当温谷溢 8 م 名兴 经溢洛洛溢 機懋德穩瓣瓣穩激懲擦漂戀 as bas வழி காட்டும் நூல் S SK を 杰 S धे6 姿 ဒွိတ္တိံ ஒவ்வொரு மனிதனிலும் அரிய சக்தி உறை ஜி 多愿景 ஓ கிறது. மனிதனின் காந்த சக்தி பற்றி, அது ஜி 2S 影 g 嫁 杰 38 இருப்பதன் உண்மை பற்றி, அதன் துருவத்தை இ? S YWYN .AA 姆 S%ھلSy 戀 அறிவதுபற்றி, அதை வளர்க்கும் முறைபற்றி, ஐ அதைப் பொருள்களில் ஏற்றி, அரிய காரிய 鑿 S2 弱 s ஐ சாதனைகளைச செய்வதுபற்றி, அதைக் கொண்டு ဇွိုင့် 乏リー ● 岑夏天 雞 பிறரின் தயவு பெற்று, பகைமையை வென்று ஜி 藤 சக்திமானரக வாழும் வழிபற்றி வழிகாட்டும் 經 2S 溢名 u uapli 3 அரிய படைப்பு இது rS SK2 SS 雯 零 ဎွိတ္တိံ၊ 擦 痪 赛 痪 斑恋杰恋恋恋 薇 杰杰※※※※恋烈 燕薇
 
 

7.
8.
9.
காயத்ரி சித்தரின் அரும் பொக்கிவு நூல்கள்
சூக்ஷம சக்திகளுடன் தொடர்பு கொள்ள காயத்ரி மூலம் குண்டலினி விழிப்பு
சகல சக்திகள் அளிக்கும் காயத்ரி தியானம்
முழு ராமாயணப் பாராயண பலனைத் தரும்
ssir u uġ5 if y To Tuu60UT b
காயத்ரி மந்திரப் பொருளை சுருங்கச் சொல்லும் காயத்ரி கீதை
காயத்ரி பற்றி படித்திராத கேட்டிராத இரகசியம் பூரு காயத்ரி மந்திர மகிமை
தியானம்
ஞான குரு
மனித உடலில் தெய்வ ஞானம்
மனித காந்தம்
10. எளிய முறை யோகப் பயிற்சி

Page 36
காயத்ரி சித்தரின் சித்த சாதனா பயிற்சி பாடங்கள்
பிரபஞ்சம் இறைமயம் தெய்வ வசியம்
ரச சாதனை விஞ்ஞான மய சாதனை பஞ்ச பூத தத்துவம்-சாதனை கர்மாவை வெல்லும் வழி முக்காலம் அறிதல் சூக்ஷம திருஷ்டி பயிற்சிகள் கால ஞானமும்-சூக்ஷம திருஷ்டியும் நீ யார் கர்மாவும் வாழ்க்கையும் மனம்போல் வாழும் மர்மங்கள் தன்னை அறிந்து தனக்கு ஆதார தலைவனை அறிதல் ரசமணி செய்முறை நவ பாஷாண செய்முறை
தொடர்பு கொள்ளவும்.
பூரீ காயத்ரி பீடம் யோகாஸ்ரம் 82, லேடி மெக்கலம் வீதி, நுவரெலியா, இலங்கை


Page 37


Page 38
மோகூடிலே
எத்தனைதான் சாமிக ஏற்றமிகு சொற்பொழ பலகாலம் புத்தகங்கள் பலகலைகள் பாங்குறே பரிணாமம் உயரும்வை பரந்தாமன் மோக்ஷமது
மனித பரிணாமம் பல சில பிறவிகளுக்குப் பின்ட பிறக்கும். அதன் வழி மோ
சித்தர்களிடம் சரண்புகு பெற இன்னும் பல பிறவிக தாலும் குருமார்கள் ரகசிய பரிணாமத்தைத் துரிதப்படுத்தி பிறவியிலேயே மோக்ஷம் பெற்
அத்தகைய ரகசிய சா இகத்திலும் பரத்திலும் பெற
தொடர்பு கொ
பூரீ காயத்
நீ arš - , ga

ாக உதயம்
ளைக் கும்பிட்டாலும் ழிவு கேட்டிட்டாலும் படித்திட்டாலும் வே கற்றிட்டாலும் ரை ஞானம் தோன்றா து கிட்டிடாதப்பா
பிறவிகளைக் கொண்டது. தான் அவனுக்கு ஞாண்ம் rம் கிடைக்கும்.
ம் மாணவர்கள் மோக்ஷம் ளையெடுக்க வேண்டியிருந் வித்தை மூலம் அவர்களின் நிவிட, மாணவர்கள் இந்தப் று விடுகிறார்கள்.
தனையைக் கற்று, பயன்
விரும்புகிறீர்களா.
1ள்ளவும் :- ரி சித்தர்
16 preĉuKi Pro, gaavs via agnars.