கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்

Page 1


Page 2

மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்
`கலாபூஷணம்" குமாரசாமி சோமசுந்தரம்
ரஜி வெளியீடு இலங்கை 2000

Page 3
நூலின் பெயர்:
நூலாசிரியர் :
a flotD:
வெளியீடு:
பதிப்பு:
பதிப்பு ஆண்டு:
அச்சகம்:
விலை:
Name of the Book:
Author :
CopyRight:
Publication :
Edition :
Year of Publication:
Press:
நூற்குறிப்பு
மனித மேம்பாட்டுச் சிந்தனைகள்
குமாரசாமி சோமசுந்தரம்
திருமதி. தையல்நாயகி சோமசுந்தரம்
ரஜி வெளியீடு, 29, முதலாம் ஒழுங்கை, தெகிவளை, இலங்கை,
iபதி
2000 - டிசெம்பர்.
எலெக்ரோடெக் அச்சகம் 2305, கிரிவட்டுதுவ, ஹோமகம.
ரூபா 150
MANTHA MEMPAADDU CHNTHANALGA.
KUMARASAMY SOMASUNDARAM
MRS. THYALNAYAKI SOMASUNDARAM
RAJI PUBLICATIONS
FIRSTEDITION
2000 - December
Electro-tech Graphics
230/5, Kiriwattuduwa, Homagama. RS, 150/-

1.
உள்ளடக்கம்
முகவுரை
மானுட தரிசனம் நல்லெண்ணம் சம்பாதிப்பது எப்படி? விட்டுக்கொடுத்தல் என்னும் மனிதப்பண்பு விழுமியங்கள் என்றால் எண்ன? சமூகத்தோடு பொருந்தி வாழ்தல் பெரியோரைக் கனம்பண்ணு அறவழியில் சமூகசேவை கட்டுப்பாடும் அதன் தட்டுப்பாடும் கற்றம் பேணி வாழும் வாழ்வு சுகம் தரும் சந்ததி இடைவெளி
வணிக விழுமியம்
ஜீவகாருண்யம்
ஆரோக்கிய வாழ்வு தூய்மை ஒரு சிறந்த விழுமிய்ம் உழைப்பு உயர்வு தரும் வதந்தி என்னும் பொய்மை சேரிடமறிந்து சேர்
கல்வியே கருந்தனம்
தலைமைத்துவம்
நாகரிகமும் பண்பாடும் சொற்கேளப் பிள்ளைகளால் மனிதகுலத்திற்கீனம்
கரிசனை என்னும் மனிதப்பண்பு கருமமும் தருமமும் வாழ்வு நலம்பெற உதவும் உடன்பாட்டுச் சிந்தனை மனிதரும் சூழலும் மனிதரும் சமயங்களும் மனம் வெளுக்க மார்க்கம் உண்டா? கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் மனிதரும் அச்சமும் உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று இருளில் ஒளி
நகைச்சுவை
பேச்கக்கலை
எழுத்துக்கலை
நாடகக்கலை
பக்கம்
10
15
20
25
28
33 37 42
45
50
54
59
68
73
78
83
88
93
96
00
105
110
14
117
122
128
133
136
42
46
151
155

Page 4

முகவுரை
தற்காலத்தில், மனிதர்கள் தமக்கு இயல்பானவற்றை, உரிமையான வற்றை விலக்கி, அவற்றுடனான உறவினை முறித்துக் கொள்வதில் ஆர்வங்காட்டி வருகிறார்கள்.
மானுடம், மனிதாபிமானம், மனிதர்மம், மனித விழுமியங்கள், மனச்சாட்சி, இவை மனிதர்களுக்கு இயல்பானவையும், உரித்துடையானவையும் என்பதை எவரும் ஏற்றுக்கொள்வர். ஆயினும், இவையனைத்தும் மனிதர்களின் புறக்கணிப்புக்குள்ளாகி வருகின்றன.
உலகில் அமைதியும் நிம்மதியும், சாந்தியும் சமாதானமும் பறிபோய்க் கொண்டிருப்பதற்கு இப்புறக்கணிப்பே காரணம் என்பதை இன்று எத்தனைபேர் உணர்கின்றனர்? இதனை உணரமறுப்பவர்கள் வாழமறுக்கிறார்கள் என்றே கொள்ள
வேண்டியுள்ளது.
மானுடம் வென்ற தம்மா” - இது கம்பனின் கூற்று. கம்பன் கல்வியிற் பெரியன்.
“மானுடத்தைத் தரிசிக்க வேண்டும், தரிசித்தால் மட்டும் போதாது; அதனை உணரவேண்டும். உணர்தல் என்பது ஆத்மிகந் தழுவிய செயற்பாடு. அதனை உணர்ந்தால் மாத்திரம் போதாது; வாழ்க்கையிற் கடைப்பிடித்து ஒழுகவும் வேண்டும்.
இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகளில் மானுடம் தழுவிய கருத்துக்கள் சில முன்வைக்கப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் தரிசித்த பின்னர், அவைபற்றிச் சிந்தித்து, உணர்ந்து, தெளிந்து, வாழ்க்கையிலும் கடைப்பிடிப்பார்களேயானால், மனிதரின் புன்னெறியதனிற் செல்லும் போக்கில் மாற்றம் ஏற்பட்டு; நன்னெறியதனிற்
செல்லும் போக்கு மலர்ச்சி பெறவாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.
இந்நூலை வெளியிடுவதற்கு என்னை ஊக்குவித்த அன்பர்களுக்கும், அழகாக அச்சிட்ட அச்சகத்தினருக்கும் எல்லாவற்றிற்கும் மேலாக, என்னை வழிநடத்தும் எல்லாம் வல்ல இறைவனுக்கும் எமது நன்றிகள் உரித்தாகுக.
குமாரசாமி சோமசுந்தரம் 29, முதலாம் ஒழுங்கை தெகிவளை, கொழும்பு.
2000. 12.01

Page 5
1. மானுட தரிசனம்
யார் மனிதன்? எது மனித வாழ்வு? நான் மனிதன் தானா? நான் வாழ்வது மனித வாழ்வாகுமா? இத்தகைய வினாக்களை நாம் எம்முள் எழுப்ப வேண்டும். பொதுவாக நாம் எம்மிடம் கேள்விகளைக் கேட்பதில்லை. பிறரிடமே கேள்விகளைக் கேட்பது வழக்கம். வழக்கத்திற்கு மாறாக. நாம் எம்மிடம் சில கேள்விகளைக் (35.(SuTub.
யார் மனிதன்? என்ற வினாவை எடுத்துக் கொள்வோம். இப்பூமியில் காணப்படுகின்ற உயிரினங்களுள். அதி உன்னதம், அதி அற்புதம், அதி உயர்நிலை வாய்ந்த உயிரினம் சார்ந்தவன் மனிதன் என்கிறோம். “அரிது. அரிது மானிடராகப் பிறத்தல் அரிது’ என்னுங்கூற்றும் மனிதனை மிக உயர்வான நிலையில் வைத்துப் பேசுகிறது. மனம் உள்ளவன் மனிதன். மானம் உள்ளவன் மனிதன். பகுத்தறிவு உடையவன் மனிதன், மனிதன் ஒரு சமூகப் பிராணி. சமூகமாகக் கூடிவாழும் உயிரினம் மனித இனம் என்றெல்லாம் மனிதன் என்ற பதத்திற்கு விளக்கம் தருவோம். உடல், ஆன்மா. அறிவு உணர்வு என்பவற்றை ஒருங்கே கொண்டுவாழ்பவன் மனிதன். அவன் ஏனைய உயிரினங்களிலுமிருந்து பல்வேறு வகையில் வேறுபட்டவனாக உள்ளான்.
உண்மையைச் சொல்லப்போனால், மேலே சொல்லப்பட்ட விவரணங்கள் யாவும் மனிதனைப் பற்றிக் கூறப்பட்டுள்ளனவே தவிர. மனிதன் யார்? என்றோ. மனிதனின் வரைவிலக்கணம் என்ன, என்றோ குறிப்பிடத் தலைப்படவில்லை. மனிதன் யார்? என்பது மனிதனாலேயே இன்னும் முழுமையாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.
மனிதன் இந்தப் பிரபஞ்சம் முழுவதையும் ஆளும் வல்லமையைப் பெற்றிருக்கிறான். விண்ணில் உள்ளவற்றின் மேலும். மண்ணில் உள்ளவற்றின் மீதும் தன் அபார செல்வாக்கினை மனிதன் செலுத்திவருகிறான். இறை சக்திக்கு அடுத்த நிலையில் ஆற்றல் படைத்தவனாக மனிதன் விளங்குகின்றான். மனிதன் தனக்கு இத்துணை அபாரசக்தி உண்டு என்பதையும் அறியாதவனாக இருக்கிறான்.
மனிதன் தன்னுள் மறைந்திருக்கின்ற பல்வேறு ஆற்றல்களை அறிந்து, செவ்வையாக மதிப்பீடு செய்து. முறையாக வளர்த்து. அவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் தெய்வம் ஆகலாம். மனிதன் பிறப்பால் விலங்கு. வளர்ப்பினால் மனிதன். ஆன்மிக அடைவினால் தெய்வம். ஆகவே, மனிதன் விலங்காகவும் வாழலாம். அது மிகவும் தாழ்ந்தநிலை வாழ்வு. மனிதன் மனிதனாக வாழ்தல் மனிதனுக்குரிய வாழ்வு மனிதன் வாழவேண்டிய வாழ்வும் அதுவே, மனிதன் மனிதனாக மனிதவாழ்வு வாழும் போது படிப்படியாக உயர்ந்து, ஆன்மிக முதிர்வு பெற்றுத் தெய்வீக நிலைக்கு உயருகின்றான்.
மனிதன் ஆன்மிக வளம் படைத்தவன். அதனாலேயே, அவன் மனிதன் எனப்படுகின்றான். வளம் மட்டும் இருந்து விட்டால் போதாது. அது

பயன்படுத்தப்படவும் வேண்டும். பயன்படுத்தப்படாது தேங்கிக் கிடக்கும் எந்தவளமும். இருந்தும் இல்லாததே. அதுவும் ஒருவகையில் விரயம்தான். மனிதனின் ஆன்மிக வளமும் பயன்படுத்தப்படாமல் பாழ்போகும் நிலையிலேயே தற்போது உள்ளது. ஏனைய உயிரினங்களிடத்திலே இல்லாத ஒன்றான இந்த ஆன்மிக வளம். மனிதனிடத்திலே. மாத்திரம் உள்ளது. இந்த உண்மையைப் பலர் அறிந்திருப்பதில்லை. சிலர் அறிந்திருந்தும் அவ்வளத்தைப் பயன்படுத்து வதில்லை.
மனிதன் என்பவன் யார்? என்ற வினாவுக்குப் பல்வேறு விதத்தில் பல்வேறு விடைகளைக் கொடுக்கின்றனர். எனினும் மனிதனில் உள்ள விசேடம் என்னவென்றால் அவனிடமுள்ள ஆன்மிகவளமே என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். “மனிதன் ஆன்மிக வளம் உள்ள உயிரி” என்று மனிதனை வரைவிலக்கணப்படுத்துவது கூடிய பொருத்தமாகவும் பொருள் நிறைந்ததாகவும் இருக்கும் என்பது எனது எண்ணம்.
மனிதனுக்கான இந்த வரைவிலக்கணத்தை ஏற்றுக் கொள்ளும் போது. மனிதன் தன்னை உணர்ந்தவனாகின்றான். தன்னுடைய உண்மை நிலையைத் தெரிந்து கொள்கின்றான். தான்யார்? எத்துணை சிறப்பு வாய்ந்தவன்? எவ்வளவோ சாதனைகளைப் புரியவல்லவன். அற்புதங்களை நிகழ்த்தவல்லவன் என்பவற்றையெல்லாம் அறிந்து கொள்கிறான்.
யானையின் பலம் அதன் தும்பிக்கையிலே உள்ளது என்பர். மனிதனின் பலம் அவனிடம் ஆழ்ந்து. மறைந்து கிடக்கின்ற ஆன்மிகத்தில் தான் உள்ளது என்றால் அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய கூற்றே.
மனிதன் தன் உடற் பலத்தையும். அறிவுப் பலத்தையும் தான் நேசித்து வந்துள்ளான். ஆன்மிக பலம் என்பதை மிகப் பெரும்பாலானோர். இதுவரை அறிந்து கொள்ளாமலேயே இருக்கின்றனர். உடற் பலம் இளமையில் இருக்கின்ற அளவிற்கு முதுமையிலோ, மூப்பிலோ இருப்பதில்லை. உடற் பலம் நிலையானதும் அன்று. அது வரும். போகும். எனவே. உடற்பலத்தை நம்பியிருப்பவர்கள் பின்னொரு காலத்தில், அதனை இழக்கும் போது துன்பமும் வேதனையும் அடைவார்கள். காலம் என்ற ஒன்று மனித உடற்பலத்தின் ஏற்ற இறக்கத்தை
நிர்ணயிக்கிறது.
அறிவுப் பலமும். துர்ப்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுவருவதை நாம் காண்கின்றோம். கற்றவர்களிலும். கல்லாதவர்கள் நல்லவர்கள். நல்லவர்கள் என்று கூறப்படும் அளவிற்கு. அறிவுப் பலம். அதனது நிலையிலிருந்து தாழ்ந்து வருகிறது. இன்றைய உலகில் காணப்படுகின்ற அல்லல்கள். தொல்லைகள். இழப்புகள். மனிதவிரோதச் செயல்கள். அழிவுகள். அனர்த்தங்கள் யாவற்றிற்கும் எது காரணம் என்று பார்க்கப்போனால், மனித அறிவுப்பலம் தான் காரணம் என்பது தெளிவாகும். இன்று காணப்படும் அறிவுப் பலம் மனித ஆக்கத்திற்குப் பதில் மனித அழிவை ஏற்படுத்துகின்றது. அறிவு. பயனற்றதாகி விடுவது
2

Page 6
மாத்திரமல்ல. பயங்கர கொடுரங்களுக்கும் ஏதுவாகி விட்டது. இந்த வகையில் அறிவுப்பலம் பெரிதும் வீணடிக்கப்பெற்று வருகிறது. "விபரீத புத்தி நாசகாலம்" என்பார்கள். தற்கால அறிவு விபரீத புத்திக்கு இட்டுச் செல்கிறது. மனிதனுடைய அறிவுப் பலமும், வர வரப் பலவீனமாகிக் கொண்டுவருகிறது.
உடல் நன்கு ஒம்பப்படும் போதே. அதன் பலம் அதிகரிக்கின்றது. இளவயதாக இருப்பினும், உடல் ஒம்பப்படாமல் புறக்கணிக்கப் பட்டுவந்தால், உடற்பலம் குன்றிவிடும். அவ்வாறே அறிவும் நன்கு பேணப்பட வேண்டும். அறிவையும் அலட்சியம் செய்தால், அல்லது துர்ப்பிரயோகம் செய்தால், அறிவுப் பலமும்
குன்றிவிடும்.
உடற் பலம், அறிவுப்பலம் என்பவற்றுடன் ஆன்மிக பலம் மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. உண்மையில், மனிதனிடம் ஆன்மிக பலம் சேரும் போதே, உடற்பலம், அறிவுப் பலம் ஆகிய இரண்டும் உறுதி பெறுகின்றன. அத்துடன் அவ்விரண்டு வகைப் பலங்களும், ஆக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன. உடற்பலமும், அறிவு ஆற்றலும் சரியான திசையில் செலுத்தப்படுவதற்கு ஆன்மிக பலமே உதவுகின்றது. ஆன்மிகம் இல்லாத உடல் வலுவும் அறிவுவலுவும் மாலுமியில்லாத மரக்கலம் போலாகிவிடும்.
ஆன்மிகம் என்னும் போது பலர் அதை ஒரு பெரிய வார்த்தையாகக் கொள்கின்றனர். ஆன்மிகத்தைச் சமயத்தோடு இணைத்துப் பார்க்கும் வழக்கம் நம்மிடத்தில் நன்கு வேரூன்றிவிட்டது. ஆன்மிகம் என்றவுடன் மறு உலகம். மோட்சம், மறுமை வாழ்வு. சமயநெறி. உடலை ஒறுத்தல் என்ற எண்ணங்கள் நம் மனங்களில் தோன்றிவிடுகின்றன. வாலிப வயதில் எதற்கு ஆன்மிகம் பற்றிச் சிந்திக்க வேண்டும் அதுபற்றி அறுபது வயதிற்குப் பிறகு யோசிக்கலாம். என்றெல்லாம் வெளிப்படையாகக் கூறிவருகின்றனர். ஆன்மிகம் பற்றிய தெளிவான கருத்தைச் சரியாக அறிந்து கொள்ளாமையே இந்தக் குழப்பத்திற்கு முக்கிய காரணம்:
ஆன்மிகம் என்பது அடிப்படையில் இம்மைக்குரியது; இளமைக்கும் உரியது. ஐந்தில் வளையாதது. ஐம்பதில் வளையுமா? வளையாது என்பதே சரியான பதில், அது போலவே, இம்மை வாழ்வில் ஏற்படாத ஆன்மிகம் மறுமைவாழ்வில் ஏற்படப்போவதில்லை. இளமையில் விருத்தி செய்யப்படாத ஆன்மிகம் அறுபதுக்குப் பின்னர், முதுமை வரும் போது விருத்தியாகப் போவதில்லை.
நல்ல மனிதப் பண்புகளை, மனித விழுமியங்களை வாழ்க்கையில் அனுசரித்தல் மூலம் ஆன்மிகம் வளர்க்கப்படுகிறது. இம் மானுடப் பண்புகள் எல்லாம் மனிதருள் அடங்கிக் கிடக்கின்றன. அவை வெளிப்படுத்தப்பட வேண்டியன. அப்போதுதான் அவற்றால் மனித சமுதாயம் நல்ல பயன்களை அடையும் இம்மானுடப் பண்புகளே ஆன்மிகப் பண்புகளாக மலர்ச்சி பெறுகின்றன. ஆன்மிக வளம் என்று கொள்ளப்படுவது மானுடப்பண்பு வளம் ஆகும். "இளமையிற் கல்" என்றார் ஒளவையார். கல்விகற்க வேண்டிய பருவம் இளமைப் பருவம், அவ்வாறே இளமையிலேயே ஆன்மிகப் பண்புகளையும் விருத்தி செய்ய வேண்டும். உண்மை,
3.

அன்பு நிதி. பிறருக்கு நன்மை செய்தல், தீமை தவிர்த்தல் அஹிம்சை நன்னடத்தை என்பவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தல் ஆன்மிக வாழ்க்கையாகும், அப்படியானால் ஆன்மிக வாழ்க்கை பின்போடப்படக்கூடியதா? என்பதைச் சிந்திக்க வேண்டும் இத்தகைய ஒழுங்கு கட்டுப்பாடு. நன்னடத்தை, நற்பண்புகள் நிறைந்த வாழ்க்கை. இளம் பராயத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.
உடல், அறிவு ஆகிய இரண்டையும் ஆன்மிகம் ஆட்சி செய்ய வேண்டும். அப்பொழுது உடற் பலம், அறிவுப் பலம் ஆகியன செம்மையும் சீரும் பெறுகின்றன. அதேவேளை, அவற்றின் பாதகமான செயற்பாடுகளும் தணிக்கப்பட்டுவிடும். இன்று மனித உடற்பலம், அறிவுப்பலம் என்பவற்றோடு ஆன்மிக பலம் இணையாதபடியினாலேயே, பல்வேறு பிரச்சினைகளும் உருவாகியுள்ளன.
பலங்களிலெல்லாம், நிகரில்லாத, ஒப்பற்ற பலம் ஆன்மிக பலம் ஆகும். அந்தப் பலம் மட்டும் இருந்து விட்டால் போதும் எல்லாப் பலங்களும் கிடைத்துவிடும். ஆன்மிக பலம் ஆனது. உண்மை, நேர்மை, தூய்மை, மனித நேயம், நீதி முதலிய உன்னத பண்புகளை வாழ்வில் மேற்கொண்டு வாழும் போது எம்மில் விருத்தியாகின்றது. மேன்மையான அப்பண்புகளின் பொருட்டு வாழும் போது இடையூறுகள் குறுக்கிடு செய்யலாம். ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல், நெறிபிறழாது. வாழவேண்டும். அதனால் ஆன்மிகம் மலர்ச்சி பெறுகின்றது, எழுச்சி எய்துகின்றது, பலம் தருகின்றது. எனவே, நெறிபிறழாத, மனிதப்பண்புகளோடு இயைந்த வாழ்க்கையே ஆன்மிக வாழ்க்கை, மனிதனால் மட்டுமே ஆன்மிக வாழக்கையை வாழமுடிகின்றது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.
இனி, ஆரம்பத்தில் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு வருவோம். யார் மனிதன்? என்றால் ஆன்மிகம் நிறைந்தவன் மனிதன் என்போம். மனிதனிலிருந்து ஆன்மிகத்தை எடுத்துவிட்டால், அவன் விலங்கு நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகிறான். எது மனித வாழ்வு? என்னும் வினாவிற்கு விடை என்னவென்றால், ஆன்மிகம் கலந்த வாழ்வு, அதாவது நன்னெறி பிறழாத வாழ்வு என்போம். ஒருவனுடைய வாழ்வில் நற்பண்புகள் செறிந்திருந்தாலே, மனித வாழ்வு ஆகின்றது.
இந்த அடிப்படையில், நான் மனிதன் தானா? என்று நாமே எம்மைக் கேட்க வேண்டியதும் அவசியமாகும் மனித வடிவத்தோடும், அங்க அடையாளங்களோடும் நாம் தோற்றமளிக்கலாம். மனிதனாகி விடுவதற்கு அவைமட்டும் போதாது. "நான் மனிதன் தானா?" என்ற வினாவை எழுப்பும் போது, நாம் நம்மை அறிய, ஆராயத் தலைப்படுகிறோம். இந்த ஆராய்வு, மனச் சான்றின் அடிப்படையில் நடைபெறவேண்டும். மனச்சாட்சிக்கு விரோதமில்லாமல் எம்மை நாமே ஆராய்ந்து பார்த்தால், எம்மிடமுள்ள குறைகளையும், நிறைகளையும், காய்தல் உவத்தல் இன்றிக் கண்டுபிடித்து விடலாம். மனச்சான்று, நடுவுநிலைப் பண்பை வளர்க்கிறது. அந்த நடுவுநிலைமையில் நின்று. எம்முடைய குறைகளைப் போக்கிக் கொள்ள
4.

Page 7
முயலவேண்டும் எம்மில் உள்ள நிறைகளை மேலும் விருத்தி செய்ய வேண்டும். அந்த நிலையில், "நான் மனிதன் தான்' என்பதை முடிவுசெய்து கொள்ளலாம். "நான் மனிதனாக இல்லை" என்ற முடிவினை, எம்மைப் பற்றிய ஆய்வு புலப்படுத்துமேயானால், நாம் மனிதனாக முயலவேண்டும். முயன்று எமது வாழ்வினை மனிதவாழ்வு ஆக்கவேண்டும். இவ்வாறு எம்மை, நாம் வினாக்கள் கேட்டு, சுயமதிப்பீடு செய்து வரும்போது வாழ்வு சிறக்கும், சீர் பெறும் என்பதில் ஐயமில்லை.
நாம் எம்மைப் பற்றிச் சிந்திக்காமல், எம்மை ஆராயாமல் எம்மைச் சரியாக அறிந்து கொள்ளாமல் எமது ஆற்றலை முறையாக மதிப்பீடு செய்யாமல் இருப்பதுதான் எம்மிடமுள்ள பெருங்குறையாகும். அதனாலேதான் மனிதர்கள், மனிதர்க்குரிய வாழ்வினை வாழாது, காலத்தை அவமாக்கி அல்லற் படுகின்றனர். நமது சிந்தனை, சொல், செயல் ஆகியவற்றில் மாசுக்கள், மறுக்கள், நிறைந்து வழிகின்றன; கசடுகள், அழுக்குகள் பொங்கி வழிகின்றன. எமக்குள்ளேயிருந்து கொண்டு மெல்லிய தொனியில், மனச்சாட்சியானது, "மனிதனா நீ, மனித வாழ்வா உன் வாழ்வு; நீ செய்வது மனிதன் செய்யக் கூடிய செயலா?" என்று எம்மைக் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. நாமும் கேட்டும் கேளாதவர் போன்று தொடர்ந்து அசட்டை செய்து கொண்டே இருக்கிறோம் மனச் சான்றை அலட்சியம் செய்கின்ற மனிதர்கள் பெருகிவரும் போது, உலகில் சாந்தி, சமாதானம், நிம்மதி எங்ங்னம் நிலவும்? எனவே, மனிதநிலையினின்றும் கீழிறங்காது, மனிதப் பண்புகளைப் பேணி வாழ்க்கையை நடத்தினாலேயே, மனித இனம் எதிர்காலத்தில் காப்பாற்றப்பட முடியும் என்பதை உணர்வோமாக ஆன்மிக வாழ்க்கை, மனிதர்க்குரிய வாழ்க்கை அதுவே மனிப் பண்புகள் நிறைந்த மானுடவாழ்க்கையாகும்.
2. நல்லெண்ணம் சம்பாதிப்பது எப்படி?
சிந்தனை, எண்ணம் எனப் பொதுவாகவும் பேசுகிறோம்; நற்சிந்தனை, நல்லெண்ணம் என்று சிறப்பாகவும் பேசுகிறோம். சிந்தனை என்பது நல்லதாயும் இருக்கலாம், கெட்டதாயும் இருக்க முடியும். அவ்வாறே எண்னமும் நல்லெண்னமாகவும், கெட்டென்னமாகவும் இருக்கலாம்.
தனியாள் ஒருவர், தன் உள்ளத்திலே நல்லெண்ணங்களைத் தோற்றுவிப்பதால், நற்செயல்கள், நல்ல கருமங்களாக அவை வெளிப்பாடாகின்றன. இது ஒருவகை. மற்றொருவகை என்னவென்றால், எம்மைப்பற்றிய, எமது செயல்பாடுகள் பற்றிய நல்லெண்ணத்தைப் பிறரில் உண்டாக்குதல் ஆகும் இன்னொருவிதமாகச் சொல்லப் போனால், நாம் பிறரது நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டும்.
நல்லெண்ணம் சம்பாதிப்பது என்பது பொருள், பண்டங்களைச் சம்பாதிப்பது
போன்று நிகழ்வதல்ல. பொருள் பண்டங்களை உழைத்தும் பெறலாம், உழையாமலும் இருந்து கொண்டு சூறையாடியும் பெற்றுக்கொள்ளலாம்.

நல்லெண்ணத்தைச் சம்பாதித்துப் பெறுவதற்குக் கடின உழைப்புத்தேவை. வேறெவரிடமும் இருந்து அபகரித்துக் கொள்ளமுடியாதது, நல்லெண்ணம் அது விலைகொடுத்து வாங்கக் கூடிய பண்டமும் அன்று. தூய்மையாக உழைத்தே, நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க முடியும் குறுக்கு வழிகிடையாது. நேர்மையான, நீதியான ஒரே ஒரு வழிமாத்திரமே, நல்லெண்ணத்தைச் சம்பாதித்துக் கொள்வதற்கு உள்ளது. வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் உயர்வு அடைவதற்கும், இந்த நல்லெண்ணமே மூலதனம் ஆக விளங்குகின்றது. சமுதாயத்தின் நல்லெண்ணத்தைப் பெறத்தவறியவர்கள் வெற்றி பெற்றதாகச் சரித்திரம் இல்லை. ஒரு சிறிய அளவில் ஆரம்ப வெற்றியினைப் பெற்றிருப்பினும் கூட, விரைவிலேயே அவர்கள் தோல்வியைத் தழுவவேண்டியவர்களாக வந்து விடுவர். நல்லெண்ணம், வாழ்க்கைக்குத் தேவையான மாபெரும் மூலதனம் என்பதால், அதைப் பேண் வேண்டியது மிக அவசியம்,
ஒரு குடும்பம், பிறரால் மதிக்கப்படுகின்றதென்றால் அது ஏனையோரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்துள்ளது என்பது பொருள் ஒரு நிறுவனம் பெரிதும் விரும்பப்படுகின்ற நிலையில் மக்களின் நல்லெண்ணத்தையும் அபிமானத்தையும் பெற்றுவிட்டால், அது உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வதில் சிரமங்கள் இருக்கா, தரமான பொருட்களை உற்பத்தி செய்வதினாலேயே அந்த நிறுவனம் அத்தகைய நல்லெண்ணத்தைச் சம்பாதிக்க முடிந்தது. தனிமனிதனாயினும் சரி, குடும்பம் ஆயினும் சரி, தரமான வாழ்க்கையை, நெறிதவறாமல் வாழ்வதினாலே தான் பிறரின் நல்லெண்ணத்தைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது.
ஒரு விடயத்தைப் பற்றிப் பேசுவதற்கு முன்னரும் எழுத்தில் வடிப்பதற்கு முன்பும், ஒரு காரியத்தைச் செய்வதற்குமுன்பும் நாம் சிந்திக்க வேண்டிய ஒன்று உண்டு. அதுதான் எமது பேச்சோ, எழுத்தோ செயலோ நல்லெண்ணத்தைப் பிறரில் உருவாக்குமா? அல்லது தப்பென்னத்தைத் தோற்றுவிக்குமா என்பதாகும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே கேட்க வேண்டிய வினா இதுவாகும் பெரும்பாலும் தவறுகள் ஏற்படுவதற்குக் காரணம், இந்த வினாவுக்கு விடைகாண்ாமல், கருமங்களில் ஈடுபடுவதுதான். கண்மூடித்தனமாக நடந்து கொண்டால், தப்பென்னத்தைத் தான் சம்பாதிக்க முடியும், ஆகையினால், நல்லெண்ணத்தை உருவாக்க விரும்புபவர்கள், ஆற அமரயோசித்து உறுதியான முடிவை எடுத்துச் செயற்படுத்தவேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் எதிலும், அவதி, வேகம் என்பன தான் மனிதர்களை ஆட்டிப்படைக்கின்றன. அந்த நிலையில் சரியாகத்திட்டமிட்டு உறுதியான தீர்மானம் ஒன்றை எடுக்க அவகாசம் இன்றி அல்லற்படுகின்றார்கள். "சுடுதது மடியைப்பீடி' என்றநிலைதான் பொதுவாக எல்லோரிடமும் காணப்படுகின்றது. இப்படியான நிலைமையில் நல்லெண்ணத்தைக் கட்ாயெழுப்புவது அத்துணை இலேசான காரியம் அன்று. எனினும் வாழ்வில் உயர்வுபெறவிழையவர்கள், வெற்றியை விரும்புபவர்கள், பிறரின் நன்மதிப்பையும், நல்லெண்ணத்தையும் பெற்றே ஆகவேண்டும் என்பதில் இரண்டு கருத்து இல்லை.
6

Page 8
முன்னர்க் காலங்களில் வாழ்ந்தவர்கள், தங்கள் உற்றார், உறவினர், சுற்றத்தவர், ஊரவர், மூத்தோர், பெரியோர், பெற்றோர் ஆகிய சகலரினதும் நல்லெண்ணத்தையும், நன்மதிப்பையும் சம்பாதித்துக் கொள்வதற்காகப் பெரிதும் விரும்பினர். அதனால் தங்களுடைய நடத்தைகள், பேச்சுகள், செயல்கள் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தினர், நல்லொழுக்கம் தான், பிறரின் நல்லெண்ணத்தைப் பெறுவதற்கு உரைகல் ஆக இருந்தது. நல்லொழுக்கத்தைத் தமது உயிரினும் மேலாக ஒம்பினர். பழிபாவங்களுக்கு அஞ்சினர்; குற்றச் செயல்களைத் தவிர்த்தனர்; சமூகச் சட்டதிட்டங்களை மதித்து நடந்தனர். அடக்கம், பணிவு, அமைதி, அன்பு, இரக்கம், கரிசனை, பிறருக்குத் திங்கு செய்யாமை, மதிப்பு, மரியாதை என்பவற்றை வாழ்க்கையில் பேணி வாழ்ந்தனர். இவையனைத்தையும் சமூகத்தவர் மிக நுட்பமாக அவதானித்து உறுதிசெய்த பின்னரே, சம்பந்தப்பட்டவர் மீது நல்லெண்ணம் கொள்வார்கள். நல்லெண்ணத்தையும் நன்மதிப்பை ம் ஓரளவு சம்பாதித்த பிறகு, மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டிருக்கும். சம்பாதித்த நல்லெண்ணத்தைக் கட்டிக்காக்க வேண்டுமே. மிகச் சிறிய தவறு ஏற்பட்டாலும் கூட, அதுவரை காலமும் கட்டியெழுப்பிவந்த நல்லெண்ணம், கண நேரத்தில் சிதைந்து விடும். எனவே, சமூகத்தவர்களுக்குப் பயந்து வாழ்ந்தார்கள். அதனால் ஒழுக்கத்திற்கு ஊறுசெய்யக்கூடிய எதையும் செய்யாது, நல்வாழ்வு வாழ்ந்தனர்.
மானத்தோடு வாழ்தல் என்பது ஒழுக்கத்தில் சிறிதும் குறைவு ஏற்படாமல் வாழ்தல் ஆகும். ஒழுக்கம், நடத்தை என்பன குன்றினால், அவரின் பெறுமானமும் இறங்கிவிடும். பெறுமானம் போய்விட்டால், அவர்மீது நல்லெண்ணம் கொள்ளமாட்டார்கள்; மாறாகத் தப்பெண்ணம் ஏற்பட்டு விடும். அதன்பின் அவர் ஒரு நடைப்பிணம் தான். அவர் "செத்தாருள் வைக்கப்படுவர்.” அதன் பின் வாழ்வதிலும் பார்க்க உயிரை விட்டுவிடுவது மேலான செயல் என்று மேலோர் கொள்வர்.
“மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார் உயிர் நீப்பர் மானம் வரின்.” என்கிறார் வள்ளுவப்பெருந்தகை.
மனம் உள்ளவன் மனிதன். மானம் உடையவன் பெறுமானம் உள்ள மாமனிதன். மனிதப் பெறுமானம் ஆனது. நன்னடத்தை, நல்லொழுக்கத்தினால் ஒருவனுக்குக் கிடைக்கப் பெறுவது, மனிதப் பெறுமானம்தான் எல்லோருடைய நல்லெண்ணத்தையும், நன்மதிப்பையும் ஒருவனுக்குச் சம்பாதித்துத்தருகிறது. மனிதன் தன்னுடைய மதிப்பில், பெறுமானத்தில் எள்ளளவும் குறைவுபடாது. வாழ்ந்து வரவேண்டும். இந்த உண்மையை நம்முன்னோர் அறிந்திருந்தனர். ஆனால் தற்காலத்தில் மனிதர்கள் எப்படியும் வாழலாம் என்ற நிலைப்பாட்டினை ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் சமூகத்திற்குப் பயப்படுவதாகத் தெரியவில்லை. மனம்போன போக்கில் வாழ்கின்றார்கள். மானம், மரியாதை, கண்ணியம், கெளரவம் என்பவை அவர்களுக்கு பிரச்சினையாக இல்லை. நல்லெண்ணம், நன்மதிப்பு என்பன பற்றியும் பெரும்பாலோர் அக்கறைகொள்வதாகத்
7

தோன்றவில்லை. தம்முடைய தவறுகளையும், பிறழ்வான நடத்தைகளையும் கண்டு பிறர் பழித்துரைப்பார்கள், பரிகசிப்பார்கள் என்ற நினைப்பே பலரிடம் காணக்கூடியதாக இல்லை. இது ஒருவகையில் மானம் விட்ட சீவியம். மானத்தை அலட்சியம் செய்பவர்களிடம், தமது பெறுமானத்தை இலட்சியம் செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பெறுமானம் பேணப்பட்டால்தானே, நல்லெண்ணம், நன்மதிப்பு பற்றி அக்கறை கொள்வர். இதுவே இன்றைய பிரச்சினைகள் யாவற்றிற்கும் அடிப்படைக் காரணம். பிரச்சினைகளை மனிதாபிமான முறையில் அணுகுவதற்கு முதலில் மனிதாபிமானத்திற்கு மதிப்பளிக்கவேண்டும். மனிதாபிமானத்தை இன்று யார் மதிக்கிறார்கள்! மானம், மனிதப் பெறுமானம், மனிதாபிமானம் என்ற இவையெல்லாம் மனிதர்களினால் மறக்கப்பட்டு வரும் பண்டங்களாகிவிட்டன. நல்லெண்ணம், நன்மதிப்பு என்பவற்றிற்கும் அதேகதி நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
நல்லெண்ணம் குடும்பத்தில் உருவாவதற்குக் குடும்ப உறுப்பினர்களிடையே நல்லுறவு இருக்கவேண்டும். நல்லுறவு வளர்வதற்கு பரஸ்பரம் . அன்பு நிலவவேண்டும் இருவர் உறவுக்கு பகை, ஐயுறவு ஒருவரை ஒருவர் சந்தேகிக்கத் தொடங்கினால், நல்லுறவு அங்கு நிலைக்காது. கணவனும் மனைவியும் கருத்தொருமித்து, ஒருவருக்கொருவர் ஆதரவாகக் குடும்பத்தை நடத்தும் போதுதான், குடும்பத்தில் இன்பம் கொழிக்கும்; நல்லெண்ணம் மிளிரும். வீட்டில் பிள்ளைகள், பெற்றோரை மதிப்பதும்; அவர்கள் சொற்கேட்டு நடப்பதும்; சகோதரர்களுடன் இணங்கி வாழ்வதும், மூத்தோர்களைப் பேணுதலும் எல்லாம் குடும்பத்தில் கட்டியெழுப்பப்படுகின்ற பரஸ்பர நல்லெண்ணம், நன்மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்தே அமைகின்றன. நல்லெணி ணம் எல்லாப்பிரச்சினைகளையும் தீர்க்கும் மருந்து. குடும்பத்தில் நல்லெண்ணம் இருக்கும் பட்சத்தில் சீரிய நிலை ஏற்பட்டுவிடும்.
“விடுதிருந்தினால் நாடுதிருந்தும்'; என்பர். வீடுகளில் நல்லெண்ணம் நிலவுமானால், நாட்டிலும் சமூகங்களுக்கிடையேயும் பிரதேச மக்களுக்கிடையேயும் நல்லெண்ணம் புரிந்துoயம்)வ, ஒற்றுமை என்பன நிலவும். தப்பெணணங்கள் தான் சந்தேகங்களையும், வேற்றுமைகளையும் வளர்ப்பன; அமைதியையும், நிம்மதியையும் சீர்குலைப்பன.
நாடுகளுக்கிடையே நல்லெண்ணம் வளர்க்கப்பட வேண்டியதும் அவசியம். எந்த ஒரு நாடும் தற்போதைய நிலையில் தனித்தியங்க முடியாது. ஏதோ ஒரு வகையில் ஒன்றில் மற்றொன்று தங்கியும்; ஒன்றை மற்றையது தாங்கியும் இருக்கவேண்டிய நிலையில் உள்ளன. இந்தச் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு நாடும், மற்றைய நாடுகளின் நல்லெண்ணத்தைப் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது.
தப்பெண்ணங்கள் தோன்றாமல் தவிர்த்துக்கொள்ள வேண்டும். நல்லெண்ண

Page 9
விஜயங்கள், நல்லெண்ணத்தூது, கலாசாரப் பரிவர்த்தனைகள் என்பவற்றின் மூலம் நல்லெண்ணம் பாஸ்பரம் நாடுகளுக்கிடையே வளர்க்கப்பட்டுவருகின்றது.
'மடியில் நெருப்பைக் கட்டிக்கெண்டு எவ்வளவு நாட்கள் வாழ்வது" என்று பலர் சலித்துக் கொள்வதை நாம் கண்டிருக்கிறோம். அயலவர்கள், அயல் சமூகங்கள், வல்லவர்கள் ஆகியோருடன் தப்பெண்ணங்களை வளர்த்துக் கொண்டு, அதேவேளை நிம்மதியையும் வைத்துக்கொள்ள முடியாது. தப்பெண்ணங்கள் பகைமையை வளர்க்கின்றன; நிம்மதியைக் கெடுக்கின்றன. நல்லெண்ணங்கள் நட்பினை வளர்க்கின்றன; சமாதானத்தை உறுதிப்படுத்துகின்றன. சமூகங்களுக்கிடையே நல்லெண்ணத்தை விருத்திசெய்வதினால், நாட்டின் அமைதி உறுதிசெய்யப்படுகிறது. நாடுகளுக்கிடையே நல்லெண்ணம் வளர்க்கப்பட்டால் உலகில் அமைதி நிலவும். நல்லெண்ணம் மூலம் கிடைப்பதே தகுந்த பாதுகாப்பு. அதுவே நிலையான பாதுகாப்பு ஆகும். நல்லெண்ணம் கொண்டோர் ஒரு சிலராவது இருந்து விட்டாலும் இந்த வையம் வாழும். “பண்புடையார் பட்டுண்டு உலகம்”, எனும் வள்ளுவர் வாக்கும் இங்கு நோக்கற்பாலது.
வாழ்க்கை என்பது பரிணாமம் என்று கூறுவர். வாழ்க்கை தொடர்ந்து முன்னேறிக் கொண்டு செல்லவேண்டும். இடையில் தொய்வு ஏற்படவோ, தடங்கல் உண்டாகவோ, விடக்கூடாது. சாண் ஏற முழம் சறுக்குகின்றநிலை வாழ்க்கையில் இருக்கக்கூடாது. அதற்கு நல்லெண்ணம் எனும் சம்பாத்தியம் தேவை. நல்லெண்ணத்தை அச்சாகக் கொண்டுதான் எமது வாழ்க்கைச் சக்கரமே சுழல்கிறது. தப்பெண்ணம் ஏற்பட்டு விட்டால் வாழ்க்கையின் அச்சாணி உடைந்து விட்டதற்குச்சரி. பொருளையும் உழைத்தே சம்பாதிக்க வேண்டும். நல்லெண்ணத்தையும் கடின உழைப்பினாலேயே சம்பாதிக்க முடியும். நல்லெண்ணத்தைச் சம்பாதிக்காது, வெறும் பொருளைமட்டும் சம்பாதிப்பவர்கள், வாழ்க்கையில் சரிய நேரிடும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளுதல் SD6Qufu utb.
நல்லெண்ணம் ஆனது உடல், பொருள், ஆவியால் கட்டிவளர்க்கப்படுவது. எந்த இன்னல் வந்தாலும், எத்துணைக்காலம் பிடித்தாலும், நல்லெண்ணம் சம்பாதிக்கப்பட்டுவிட்டால், வாழ்க்கையில் வெற்றி நிச்சயமாகிவிடும்.
பிறரில் கரிசனை கொள்ளுதல், பிறருக்கு உதவுதல், என்பவற்றின் மூலம் நல்லெண்ணத்தை உருவாக்கலாம். நல்லெண்ணத்தைச் சிதைப்பது சுயநலம். விருந்தோம்பல், சமூக உறவுகள் கொள்ளல்; பெரியோர், ஆசிரியர், நண்பர்கள், உறவினர் ஆகியோர்களைத் தரிசித்தல், அளவளாவுதல், குசலம் விசாரித்தல், பொது வைபவங்கள், திருமணங்கள், அமங்கலவைபவங்கள்; மற்றும் பல்வேறு சமய சமூக வைபவங்களில் கலந்துகொள்ளல், பங்கேற்றல் என்பன பிறரின் நல்லெண்ணத்தைச் சம்பாதிப்பதற்கு வழிவகுக்கும் சந்தர்பப்ங்களாக விளங்குகின்றன. இவற்றைத் தக்கவகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

முன்னர்க்காலங்களில், பண்டிகைகள். விழாக்கள், சமயச் சடங்குகள். கொண்டாட்டங்கள், சமூகவைபவங்கள் என்பன மேற்கொள்ளப்பட்டு வந்தமைக்குக் குரிய நோக்கங்களை ஆராயின், அவற்றுள் பிரதானமான ஒன்று நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்பி சமூக உறவைப் பலமாக்குதல் என்பது தெரியவரும்.
பிறருக்குக் கைம்மாறு கருதாது செய்யப்படும் பயனள்ள காரியங்களின் நிமித்தம் பெற்றுக் கொள்ளப்படுவது அவர்களின் நல்லெண்ணம். இந்த இடத்தில், பிறரின் நல்லெண்ணத்தை எதிர்பார்த்துத்தான் காரியங்கள் செய்யப்படுகின்றன என்று நினைக்கத் தேவையில்லை. பிறருக்கு உதவுவது எமது கடமை, ஆனால் உதவி பெற்றவர்கள் நம்மீது நல்லெண்ணம் கொள்வது அவர்களைப் பொறுத்தது.
எல்லாச் சம்பாத்தியங்களிலும் பிறரின் நல்லெண்ணத்தைச் சம்பாதித்தல், மிகச் சிறந்த சம்பாத்தியம் ஆகும். வாழ்க்கையின் வெற்றிக்கு இந்தச் சம்பாத்தியமே மூலதனம் என்பதை உணர்ந்து கொள்வோமாக. நல்லெண்ணம் நமக்குத்தரும் பாதுகாப்பு, உறுதியும் உத்தரவாதமும் கொண்டது.
3. விட்டுக்கொடுத்தல் எனும் மனிதப்பண்பு
விட்டுக்கொடுத்து வாழ்தல் மூலம் குடும்பத்திலும், சரி, பொது வாழ்விலும் சரி, முரண்பாடுகள் இல்லாமல் அமைதியாக வாழமுடியும் என்பதுபற்றிப் பலர் சிந்திக்கிறார்கள் இல்லை. அதனால் வாழ்வில் நிம்மதியில்லாமல் அவலப்படுகிறார்கள். சிலரைப் "பிடிச்சிராவிகள்" என்கின்றனர். அவர்கள் சரியோ, பிழையோ ஒன்றைப் பிடித்துக் கொண்டால் விடமாட்டார்கள். அவர்களை ஒரு வழிக்குக் கொண்டுவருவதென்றால் மிகச்சிரமம், “தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்” என்பார்கள். இத்தகைய பிடிவாதக்குணமுள்ளவர்கள் ஏனையோருடன் நல்லுறவைக் கொண்டிருக்க முடியாதவர்களாக உள்ளனர்.
விட்டுக் கொடுப்பதென்றால், தோல்வியடைதல் என்றொரு தவறான கருத்துப் பலரிடம் நிலவுகிறதை அவதானிக்க முடிகிறது. எடுத்த காரியம் எதுவாக இருந்தாலும் வெற்றி பெறவேண்டும் தோல்வியடையக் கூடாது. வாழ்க்கையில் எப்போதும் இன்பத்தையே சுவைக்க வேண்டும்; துன்பம் ஒருபோதும், ஒரு கணநேரம் தன்னிலும் வரவேசுவடாது. வெற்றியை விரும்புகிறவர்கள்; தோல்வியை விரும்புகிறார்கள் இல்லை. தோல்வியைத் தாங்குவதற்குத் தைரியம் இல்லாதவர்களாகி விடுகின்றனர். துன்பத்தைக் கண்டு துவண்டு விடுகின்றனர். வாழ்க்கையென்றால் இரண்டும் தான் இருக்கும். வெற்றி, தோல்வி; இன்பம் துன்பம்; பிறப்பு, இறப்பு, சுகம், துக்கம், நிலவு, இருட்டு - இவ்வாறாக எதிரும் புதிருமாக இருமை நிலைகளைக் கொண்டதுதான் வாழ்க்கை என்ற உண்மையை உணராதவர்களே, விட்டுக் கொடுக்க மறுப்பவர்களாக, பிடிச்சிராவிகள் ஆக இருக்கின்றனர்.
O

Page 10
அகந்தை, கர்வம், செருக்கு மேலிட்டவர்களும் விட்டுக் கொடுத்து வாழுகின்ற மனப்பான்மை அற்றவர்களாக உள்ளனர். விட்டுக்கொடுத்துவிட்டால் எங்கே தங்களுடைய சுயகெளரவம் பாதிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சுகிறார்கள். தான் சொல்வது தான் சரியென்று அடம்பிடிக்கிறார்கள். விடாக்கண்டன், கொடாக்கண்டன் ஆகிவிடுகிறார்கள். அதனால் நிம்மதியைத் தாமும் இழந்து மற்றவர்களையும் இழக்கச் செய்கிறார்கள்.
குடும்பத்தில் கணவன் அல்லது மனைவி ஒருவர்க்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால், குடும்பம் சீரழியாமல் பாதுகாத்துக் கொள்ளலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். அத்தகைய குடும்பத்தில் வாழ்கின்ற பிள்ளைகள் உடல், உள ஆரோக்கியம் உள்ளவர்களாகத் திகழ்வர் நன்றாகக் கல்வி கற்று உயர்வர். நல்ல பழக்க வழக்கங்கள், நன்னடத்தை, சிறந்த மனிதப் பண்புகள் நிரம்பப் பெற்று எல்லோரினதும் நன்மதிப்பைப் பெற்றுக் கொள்வர். நூல்கள் பல கற்றவராயினும், பெரும் பதவிகளை வகிப்பவராயினும், செல்வங்கள் ஏராளம் உடையவர்களாயினும், புரிந்துணர்வோடு கணவன், மனைவி பரஸ்பரம், விட்டுக் கொடுத்து வாழாத குடும்பம் நிம்மதியை இழந்து விடுவது மாத்திரமல்ல, பிள்ளைகளின் எதிர்கால சுபீட்சத்தையும் அழித்து விடுகிறது.
உண்மையான சுபீட்சத்தை விரும்பும் குடும்பம், காகம் போல் கூடிக் கரைந்து உண்பதாக மட்டும் இராமல், மேகம் போல் கூடித் தியாக மழை பொழிவதாக இருத்தல் வேண்டும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிருத்தல் என்பது உண்மையில் ஒரு தியாகம் ஆகும். கணவன், மனைவிக்கு விட்டுக் கொடுத்தால், அதில் ஒரு இழிவுமில்லை. கணவனுக்கு ஒன்றும் குறைந்து விடாது. ஈருடலும் ஒருயிரும் ஆக வாழ்வோம்; இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்று சத்தியப் பிரமாணம் எடுத்துத்தானே இல்லறவாழ்க்கையை மேற்கொண்டார்கள். ஒருவருக்கு இழிவு வந்தால் அது மற்றவருக்கும் உரியது தானே. அவ்வாறே மனைவி, கனவனுக்கு விட்டுக்கொடுத்தால், அவளின் பெண்மைக்கு எதுவித ஊறும் நேர்ந்து விடப் போவதில்லை, கணவன் வேறு, மனைவி வேறு என்று அந்நியப்படுத்தப்படும் நிலை, உரிமை வேட்கையால், குடும்பத்தில் ஏற்படும் போது, குடும்பம் சிதைவுக்கு உள்ளாக்கப்பட்டு விடுகிறது. தியாகம் மறைந்து விடுகிறது. சுயநலம் மேலோங்கிவிடுகிறது. முரண்பாடுகள் முளைத்து விடுகின்றன. இத்தகைய குடும்பத்தில் சிக்கிக் கொண்ட பிள்ளைகளின் கதி அதோகதியாகி விடுகின்றது. அவர்கள் அன்பு, அரவணைப்பு அற்ற வன் சூழ்நிலையில் வளர்ந்து, சமூக விரோத சக்திகளாகி விடுகின்றனர். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிராதவர்களினால் சமூகம் பெருந்தீங்குகளை எதிர்நோக்க நேரிடுகின்றது.
பெரும்பாலான மணமுறிவுகள்; சகோதரர்களிடையே ஏற்படும் பகைமைகள்: நண்பர்களிடையே உண்டாகும் கசப்புணர்வுகள் பெற்றோர் பிள்ளைகளிடையே தோன்றும் முரண்பாடுகள் என்பன யாவும் சம்பந்தப்பட்டவர்களில் ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையைக் கொண்டிருந்திருப்பாரேயானால், இத்துர்ப்பாக்கியம் சம்பவிக்காமல் தவிர்த்திருக்க முடியும் ஏட்டிக்குப் போட்டியாக
11

வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் பழிக்குப்பழி, இரத்தத்திற்கு இரத்தம் என்னும் கொடுமையான மிருக உணர்வு மனிதர்களை ஆட்டிப்படைப்பதும்; மனிதத்தன்மையை மறந்துவிடுவதும்தான், மனித உறவுகளைப் பாதிக்கின்றன, "யதாரத்தவாதி வெகுஜன விரோதி என்றொரு பழமொழி உண்டு விட்டுக்கொடுத்து நடக்காமல், பிடிவாதமாக, தான் சொல்வதுதான் சரியென்று விடாப்பிடியாக நிற்பவர்கள், பலரைப் பகைத்துக் கொள்ள நேரிடுகிறது எல்லோருடைய வெறுப்புக்கும் ஆளாகின்றனர்.
குடும்ப உறுப்பினர்கள், ஒருவர் தேவையை மற்றையவர் நிறைவு செய்பவராகவும், அன்பினால் பிணைப்புற்றவர்கள் ஆகவும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து உறுதுணையாகவும், ஆறுதல் அளிப்பவராகவும் இருக்கும் போது, குடும்பம் மகிழ்ச்சியும் மலர்ச்சியும் நிறைந்து காணப்படும். அக்குடும்பத்தில வளருகின்ற குழந்தைகளும் உடல், உள ஆரோக்கியமுள்ளவர்களாகத் திகழ்வர் வளர்ந்த பின் சமூகத்திலும் பிரச்சினைக்குரியவர்களாக இருக்க மாட்டார்கள்.
குடும்பத்தில் நிம்மதி இருக்கவேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களிடம் கோபம், அகங்காரம், பிடிவாதம், குடிப்பழக்கம், சோம்பல் என்பன அறவே இருக்கக் கூடாது விட்டுக் கொடுத்து வாழும் பண்பினை வளர்த்துக் கொள்ள இத்தீயசக்திகள் இடமளிக்க மாட்டா சுயநலம் தான் விட்டுக்கொடுக்காமைக்கு அடித்தளமாக உள்ளது. சுயநலமற்றவர்களே குடும்பவாழ்வக் கேற்றவர். சுயநலமற்றதன்மையை எடுத்துக் காட்டுவது விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கு வளர்ச்சியே.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் உறுதுனையாக வாழவேண்டும் ஒருவரின் குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தாமல் மற்றவர் பொருத்துக் கொண்டு பரிவு காட்டுவதால் அவர்களிடையேயுள்ள பிணைப்பு மேலும் மேலும் உறுதி பெறுகிறது: உறவு சீர் பெறுகிறது. இத்தகைய பொறுமையும், விட்டுக்கொடுக்குந்தன்மையும் இருதரப்பினரிடமும் இருத்தல் அவசியம், எக்காலமும் ஒருவரே பொறுத்துக் கொள்ள வேண்டும், விட்டுக் கொடுக்க வேண்டும் என்ற நிலை இருத்தல் ஆகாது. அப்படியென்றால் ஆண்டான், அடிமை என்ற நிலைப்பாடு ஆகிவிடும்.
விட்டுக் கொடுத்தல், இன்னொருவருக்குப் பயந்தோ அல்லது ஆற்றாமையினாலோ என்று இருக்கக்கூடாது. உண்மையில், விட்டுக்கொடுத்து வாழ்வதற்கு வீரம் வேண்டும்; அளப்பரிய ஆற்றல் வேண்டும் என்பதனை நாம் மறத்தலாகாது. அதனாலேயே எல்லோராலும் விட்டுக்கொடுத்து வாழ முடியாமலுள்ளது. பொறுமையை இழப்பது சுலபம்; கோபங்கொள்வது இலகு நாலு வார்த்தைகளை நாகரிகமின்றிப் பேசுவது அத்துணை கஷ்டமான காரியமல்ல. ஆனால் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கினைக் கட்டியெழுப்புவது அத்துணை சுலபமன்று. அதற்குத் தைரியமும் ஆற்றலும் வேண்டும்.
கொழும்பு தமிழ்ச்சங்கம்
விட்டுக்கொடுத்து வாழுகின்றவர்களைப் "பச்சைத் தண்ணீர்" என்றும் கோழை ான்றும் வர்ணிக்கிறார்கள். இது அறியாமையின் சிகரமாகும். கணவன் மஷனவிக்கு
விட்டுக் கொடுப்பவனாகவும் தாராளமானங் கெர் D
BH E#
12

Page 11
மனைவி அதனைப் புரிந்துகொள்ளும் திறன் கொண்டவளாக இருக்கவேண்டும். மாறாக, அவனின் நல்ல குணத்தைப் புரிந்து கொள்ளாமல், அவனைப் பலவீனனாகக் கருதி, ஏறுமாறாக மனைவி நடந்துகொண்டால், அது விவேகமானதாக இருக்காது. அவ்வாறே, மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு முதலிய நாற்குணங்களுடன், கணவனுக்கு விட்டுக்கொடுத்து, குடும்ப கெளரவம் பேணி வாழுகின்ற நல்ல மனைவியின் நற்குன நற்செய்கைகளைப் புரிந்து கொள்ளாமல், தான்தோன்றித்தனமாக நடக்கும் கணவன மார்களும் உண்டு. விட்டுக் கொடுக்கும் மனைவியை அடிமைநிலையில் வைத்துக் கொள்பவர்கள் இவர்கள். விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என எதிர் பார்க்கும் கணவனோ, மனைவியோ, தாமும் அவ்வாறு புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து வாழப்பழகிக் கொள்ள வேண்டியது அவசியம் விட்டுக்கொடுத்தல் என்பது ஒருவருக்கு மற்றவர் அடிமையாதல் அன்று; அது, ஒருவரை ஒருவர் கெளரவிப்பது, கண்ணியப்படுத்துவது, நேசிப்பது என்று விளங்கிக் கொண்டால், பிரச்சினை எதுவும் ஏற்படாது.
நாம் எல்லோரும் நல்லவற்றை அறிந்து கொள்ளவேண்டும் எவ்வளவு நல்லதைச் செய்கிறோமோ அவ்வளவு நல்லகாரியங்கள் நடைபெறும் அதனல் நாம் நல்லது என்று தெரிந்ததைப் பிறருக்கும் எடுத்துச் சொல்லவேண்டும். அவர்களையும் நல்லவற்றைச் செய்யும் படி தூண்ட வேண்டும் மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்கிறோம். இதன் உட்கருத்து என்ன? மனிதன் நல்லவற்றையே செய்து வாழவேண்டும் என்பதாகும். மனித மனங்களிலே நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள் உருவாக வேண்டும் அவை நல்லசெயல்களாக மாற்றப்படவேண்டும் மனிதவாழ்விலே இவைதான் முக்கியமானவை. இந்த நல்லவற்றுள் மிக முக்கியமானதுதான் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு.
விட்டுக்கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன? எத்தனையோ பிரச்சினைகளும், முரண்பாடுகளும், பகைமைகளும் விட்டுக்கொடுத்து வாழ்தல் மூலம் எழாமலே தடுக்கப்பட்டு விடுகின்றன. முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிடுகின்றன. எல்லோரையும் விட விட்டுக் கொடுப்பவன் பெரிய தியாகி ஆகிவிடுகிறான்.
கொடுத்தல் என்றால் ஈதல் என்று பொருள். ஈதல் என்பது அறம் ஆகும். விட்டுக் கொடுத்தல் என்பதும் ஒரு பெரிய அறம் எனலாம். நல்லது செய்வதற்கு தர்மம் அல்லது அறம் என்று பெயர் விட்டுக் கொடுத்தல், என்பது பொருள், பண்டம், காசு என்பவற்றை இழக்காமல், செய்யப்படும் தர்மம். இது எல்லோருக்கும் இயன்றது; எல்லோராலும் செய்யக்கூடியது. எனவேதான் விட்டுக்கொடுத்து நடப்பவன் எல்லோரையும் விடப் பெரிய தர்மவான் ஆகிவிடுகின்றான்.
விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கை வளர்த்துக் கொள்பவர்கள், பணிவு, அடக்கம் பொறுமை, கருனை, பிறர் நலம் பேணல் முதலிய விழுமியப் பண்புகளையும் உடையவர்களாகத் திகழ்கிறார்கள். அவர்களின் பேச்சிலும் இனிமை கலந்திருக்கும் செயல்களில் நன்மை பொதிந்திருக்கும் தானும் கஷ்டப்படாமல், மற்றையோரையும் துன்பத்திற்கு உள்ளாக்காமல் பார்த்துக் கொள்பவன்தான் உயர்ந்த மனிதன்.
3.

விட்டுக்கொடுத்தல் மூலம் இந்த உயர்வான நிலையை மனிதன் அடையமுடியும்
உலகம் ஒரு குடும்பம் என்ற உணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். இது ஒன்றும் நமக்குப் புதிதல்ல. "யாதும் ஊரே, யாவரும்கேளிர்” என்னும் மகத்தான மானுடக் கொள்கையை இம்மண்ணுலகிற்கு ஈய்ந்தவர்கள் நம் மூதாதையர்கள் நாrனைவரும் சகோதர உறவு பூண் வர்கள் ஒருவர்க்கொருவர் அந்நியர் அல்லர் என்பதை நம்மனத்தில் நன்குபதிவு செய்து கொண்டோமானால், விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு இருக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் இன்றைய உலகில் மனிதன் செல்வத்தையும், புகழேயும், பதவி அந்தஸ்துக்களையும் சேர்ப்பதில் தீவிரமாகப் போட்டிபோட்டுக்கொண்டு ஈடுபடுவதால் விட்டுக்கொடுத்து வாழும் மனப்பாங்கினை வளர்த்துக்கொள்ள அவனுக்கு முடிவதில்லை. எதிலும் போட்டிமனப்பான்மை மேலாட்சிநடத்தும் போது விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை எவ்வாறு தழைக்கும். அதனால் போட்டா போட்டிச் சூட்டில், திறந்த சந்தைப் பொருளாதார முறையிலிருந்து வெளியே கக்கப்படுகின்ற வெட்கையில், இந்த விட்டுக் கொடுத்து வாழ்தல் என்பது கருகிவருகிறது. இதனைக் கண்டு விசனப்படாமல் இருக்க முடியாது. தற்காலத்தில் மனித விழுமியப் பண்புகள் குறைந்து வருகின்றன. மற்றவனின் நல்வாழ்வைப்பற்றிச் சிந்திக்க எந்தமனிதனுக்கும் நேரம் இல்லை, மனித வாழ்க்கையே இயந்திர மயமாகியும் வேக மயமாகியும் வருகிறது. மனிதர்களிடையே நன்கு நிலைகொண்டு விட்ட போட்டா போட்டியே இந்நிலைமைக்குக் காரணம் ஆகும். போட்டா போட்டி என்பது ஒரு பெரும் மாயை. அதனுள் சிக்கி மனிதர்கள் தத்தளிக்கிறார்கள்.
உலகில் நட்புறவையும் அமைதியையும் ஓங்கச் செய்ய, இந்தப் போட்டா போட்டி சரியான மார்க்கமல்ல. இந்த மார்க்கம் மனித அழிவின் விளிம்பிற்கே இட்டுச் செல்லும், ஒவ்வொருவரும் தான் தான் மற்றவரைவிட முந்த வேண்டும் என்ற எண்ணத்தினால் தூண்டப்படும் போது, மனிதாபிமானம், மானுடம் என்பன மறைந்துவிடும், மானுடமும் மனிததர்மமும் மறைந்தநிலையில் உலகில் அமைதியும் சாந்தியும் எவ்வாறு நிலைபெறும்? இதனை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியம் விட்டுக்கொடுத்து வாழும் மனட்டாங்கினை வளர்த்துக் கொள்வோம் அதன் மூலம் மானுடத்தை நிலைபெறச் செய்வோம். அந்தநிலையில் சாந்தியும் சமாதானமும் உலகில் பிறக்க வழிபிறக்கும் என்பதை உணர்வோமாக,

Page 12
4. விழுமியங்கள் என்றால் என்ன?
“Values’ என்னும் ஆங்கிலப் பதத்திற்கு, பெறுமதி, பெறுமானம், மதிப்பு எனப்பொருள் கொள்ளப்படுகிறது. பணம், பண்டங்கள், பொருள்கள், நிலம்புலங்கள் என்பன உலகியல் வாழ்க்கையில் மதிப்பு, பெறுமதி வாய்ந்தனவாக விளங்குகின்றன, இவற்றைச் “செல்வங்கள்” என்றும் அழைக்கின்றனர். இவற்றின் பெறுமதிகள் பொருளுக்குப் பொருள், காலத்துக்குக் காலம், இடத்துக்கிடம் வேறுபட்டும் காணப்படுகின்றன. உதாரணத்திற்குச் சொல்வதானால், தங்கப் பவுண், வெள்ளியிலும் பார்க்கப் பெறுமதி கூடியது; அமெரிக்க டொலர் நாணயத்தின் பெறுமதி நாளுக்குநாள் அதிகரித்துச் செல்கின்றது. ஆசிய நாடுகள் பலவற்றினதும் நாணயங்களின் மதிப்பு இறக்கப்பட்டு வருகின்றது. கிராமப் புறக் காணிகளின் பெறுமதி நகர்ப்புறக் காணிகளின் பெறுமதியைக் காட்டிலும் மிகவும். குறைவாகவே
உள்ளன, என்பவற்றைக் கூறலாம்.
மேலே குறிப்பிடப்பட்ட பணம், பொருள்கள், நிலங்கள் என்பவற்றைப் பொறுத்த மட்டில், அவை ஒவ்வொன்றினதும் பெறுமதி, பெறுமானம், அல்லது மதிப்பு பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. சில உளவியற்காரணிகளாக உள்ளன; வேறு சில பண்புசார் காரணிகளாக இருக்கின்றன; மற்றும் சில அமைவிடம், சூழல் தொடர்பான பெளதிகக் காரணிகளாக விளங்குகின்றன; இன்னும் சில, பொருள்களின் கிராக்கி, அருமை, பெருமை சம்பந்தப்பட்ட காரணிகளாக உள்ளன.
“Values’ என்னும் ஆங்கிலப் பதம், விழுமியங்கள் என்ற தமிழ்ச் சொல்லினாலும் உணர்த்தப்படுகிறது. உயர்வானவை; மேன்மையானவை; உன்னதமானவை இவை உயிரினும் மேலானபெறுமதியுடையவை. இவையே விழுமியங்கள்.
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்” என்பது திருக்குறள். ஒழுக்கம் மேன்மையானது; அதுவும் எம்மால் பெரிதும் மதித்துப் பெறுமானம் மிக்கதெனய் போற்றப்படுகின்ற எம் ஆருயிரை விட அதிமேன்மையானது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. எனவே ஒழுக்கம் ஒரு விழுமியம் ஆகும். நமக்கு நம்முடைய உயிரினும் மேலாக விழுப்பம் தருபவை எவையோ அவையெல்லாம் விழுமியங்கள் ஆகும் விழுமியங்களின் மதிப்பு, நம் உயிரைவிட, உறவை விட, இவ்வுலகில் எவ்வெப் பொருள்களை யெல்லாம் பெறுமதியும் பெறுமானமும் மிகுந்தன என்று கொண்டாடி மகிழ்கின்றோமோ அவற்றின் மதிப்பை விட, அதி உயர்ந்தது. நாம் எவற்றை இழக்கினும் விழுமியங்களை இழந்து விடலாகாது. என்ன கொடுத்தும், விழுமியங்களை அனைத்திற்கும் மேலாக பாதுகாத்து வரவேண்டும்; ஒம்ப வேண்டும்; பேண வேண்டும். விழுமியங்கள் தான் மனித அடையாளங்கள், மிருகங்களிலிருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுகின்ற அடையாளங்கள். மனிதர்கள், தமது அடையாளங்களை இழக்கலாமா? இழந்து விட்டால் நாம் மனிதர்கள் தான் என்பதை எவ்வாறு நிரூபிப்பது? ஆதலால், நாம் மனிதர்களே என்று எம்மை அடையாளங்காட்டும் மனித விழுமியங்களை
15

நாம் எஞ்ஞான்றும் போற்றிய், பேணிப் பாதுகாத்து வருதல் இன்றியமையாததாகும்
விழுமியங்கள் என நாம் போற்றுவன பெரும் மதிப்பும் பெறுமதியும் வாய்ந்தவை. உலகத்து உயர்ந்தோர்களால் மதிக்கப்பெற்று வருபவை. அவை என்றும் ஓரெ பெறுமானத்தையுடையவை. காலம், இடம் என்பவற்றிற்கேற்ப பெறுமானத்தில் கூடிக்குறைவதில்லை.
மனித விழுமியங்களாகக் கொள்ளப்படுபவை இரண்டு பிரிவுகளுக்குள் அடக்கலாம் g6)6(T6).f60,
1. என்று முள்ள மூல விழுமியங்கள் இவற்றுள் ஆன்மிக, ஒழுக்க விழுமியங்கள் அடங்கும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதற்கும், மனிதப் பண்புகளுடன் நற்குடிமக்களாக வாழ்வதற்கும் இவ்விழுமியங்கள் எம்மை வழிநடத்துகின்றன.
2. உலகியல் சார்ந்த விழுமியங்கள் இவை சமூகம், கலாசாரம், பொருளாதாரம் சார்ந்தவை. சமூகங்களில் ஒழுங்கு, கட்டுப்பாடு நிலவுவதற்கு விழுமியங்களைப் பேணிவருதல் அவசிய மாகின்றது.
“மனித நாகரிகம் ஆனது வெறுமனே செங்கற்களாலும், சாந்தினாலும், இரும்பினாலும், இயந்திரங்களினாலும் கட்டியெழுப்பப்படுவதல்ல. மனிதர்களாலும் அவர்களின் நற்குணப் பண்புகளினாலும், நன்னடத்தைகளினாலும் உருவாக்கப்படுவதே நயத்தக்க நாகரிகம் ஆகும்,” என்கிறார், தத்துவஞானி சர்வபள்ளி இராதாகிருஷ்ணன். ஆனால், மனித சமூகங்களில் தற்காலத்தில் நற்குணப்பண்புகளும் நன்னடத்தைகளும் அருகிவருகின்றன. இதனால் மனித சமூகங்கள் பல்வேறு அனர்த்தங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.
நவீனத்துவம், புதுமை, முற்போக்கு என்று கூறிக்கொண்டு, கண்மூடித்தனமான, அடிதலைமாறிய மாற்றங்களைத் தற்காலத்தவர் புகுத்தி வருகிறார்கள். ஏதாவது வித்தியாசமாகச் செய்ய வேண்டுமென்பதற்காக, நல்லவை, நன்மை பயப்பவை என்பதையும் கருத்திற் கொள்ளாது அவற்றையும் மாற்றிவிடத்துடிக்கின்றனர். இது அறியாமையாகும். மாற்றம், வளர்ச்சிக்குத் தேவையே என்பதை ஏற்றுக் கொள்ளும் அதேவேளை கண்மூடித்தனமான மாற்றங்கள் கேடு விளைவிக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். எக்காலத்திற்கும் ஏற்ற விழுமியப் பண்புகளையும் மாற்ற வேண்டுமா? சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.
"முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம் பொருளாய், பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றிய”னாய் விளங்குவன விழுமியங்கள். அவை பழமைக்குப் பழமையாய்; புதுமைக்குப் புதுமையாய், திகழ்பவை, அத்தகைய என்றும் இளமையாய் சிரஞ்சீவியாய் வாழ்கின்ற, வாழப்போகின்ற விழுமியங்களை, மாற்ற முற்படும் போது அழிவு நிச்சயமாகிவிடுகிறது.
இன்று மக்கட் சமுதாயத்தில் அதுவும் குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே
16

Page 13
சமூக, ஒழுக்க, ஆன்மிக விழுமியப் பண்புகள் நழுவ விடப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. இது, நன்மைக்கு அல்ல என்பதை மட்டும். கூறிவைக்க முடியும். இதனால் பல சமூகப் பிரச்சினைகள் தோன்றும்; சமூகக் கட்டுக்கோப்பு, உறுதிப்பாடு என்பன குலையும். மக்கள் சுதந்திரத்தையும், உரிமைகளையும் இழக்க நேரிடும். விளைவு, மனித சமுதாயம் பலநூற்றாண்டுகளாகக் கட்டியெழுப்பிப் பாதுகாத்து வந்த நயத்தக்க நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்பன அழியும் நிலை ஏற்படுதல் ஆகும். ஒன்றைக் கட்டியெழுப்புவது என்றால் ஆயிரம் நாள் வேலை; அதனை அடித்து நொருக்குவது அரை நிமிடவேலை என்பார்கள், இதைத்தான் நாம் இன்று செய்து கொண்டிருக்கின்றோம். இதற்குப் பெயர் புத்திசாலித்தனமா? பைத்தியகாரத்தனமா? என்பதைக்காலந்தான் நிர்ணயிக்கும்.
சத்தியம், தர்மம், சாந்தி, அன்பு. அகிம்சை என்பன அடிப்படை மனித விழுமியங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவை என்றுமே மாற்றமடையாத நிரந்தர விழுமியங்கள். இவையே உலகை வாழ்விப்பன. இவற்றை மனிதர்கள் எந்தநிலையிலும் உதாசீனஞ் செய்தல் ஆகாது. இவை ஒவ்வொருவராலும் விரும்பப்படவேண்டியவை; போற்றப்பட வேண்டியவை; வாழ்வில்-கடைப்பிடித்து ஒழுகப்பட வேண்டியவை. அவ்வாறு செய்தால் வாழ்வு உண்டு; செய்யாவிட்டால் தாழ்வு உறுதியாகிவிடும் பின்னர் எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது போய்விடும்.
சத்தியம் என்றும் உள்ளது; எல்லாம் வல்லது; எங்கும் நிறைந்தது. அது பரம் பொருள் ஆக உள்ளது. எல்லாம் அறிவது, அதனால் சத்தியத்திற்கு எதையும் மறைக்கமுடியாது. சத்தியத்திற்குத் தெரியாமல், அதனைப் புறக்கணித்து எந்தக் காரியத்தையும் எம்மால் செய்ய இயலாது. இன்று நடப்பவை என்ன? சத்தியத்திற்கு மாறான செயல்கள்; உண்மைக்கு உடன்பாடற்ற கருமங்கள். எங்கும், எதிலும் பொய்யும் புரட்டும்; சூதும் வாதும்; இவை வேதனை செய்யாமல், வேறென் செய்யும். சுற்று மாற்று வேலைகளும்; ஏமாற்று வித்தைகளும்; சதிகளும் சூழ்ச்சிகளும் மனித வாழ்க்கையில் மலிந்து விட்டன. இந்த நிலையில் உலகில், சாந்தியும் சமாதானமும் அமைதியும் நிம்மதியும் வா, வா என்று கூவியழைத்தால், வந்து விடுமா? எப்படி வரும்? மனிதருக்கு அஞ்சி, அமைதியும் நிம்மதியும் ஒட்டம் பிடிக்கும் காலம், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம்.
அரிச்சந்திரன் நாடகம் பார்ப்போம். உண்மைக்காக இறுதிவரை எல்லா இன்னல்களையும் ஏற்றுக் கொண்ட அந்த உத்தமனை வாயினால் போற்றுவோம். உண்மை உயர்வுதரும் என்பதையும் கொள்கையளவில் ஏற்போம். செயற்கரிய செய்த பெரியர். மகாத்மா என்று காந்தியடிகளை வாயார வாழ்த்துவோம். சத்தியம், அஹிம்சை என்று காந்தியடிகள் வாழ்ந்துகாட்டிய உத்தம நெறிகளை உயர்த்திப் பேசுவோம், ஆனால் எங்கள் வாழ்க்கை நடைமுறைகளில் அரிச்சந்திரனையும், காந்தியடிகளையும் எமது தோழர்களாக, நண்பர்களாக ஏற்று அவர்களுடன் கூடிக்குலாவி, பேசிப்பழகி, அவர்கள் போன்று வாழத்தயாராயுள்ளோமா? அவர்களைத் தெய்வங்களாக்கி விடுகிறோமே தவிர அவர்களின் தெய்வீக நிலைக்கு உயர நாம் மறுக் கிறோம்.
17

நடைமுறைவாழ்க்கையில் அரிச்சந்திரனையும் காந்தியடிகளையும் உதாசீனஞ் செய்வதிலேயே கண்ணுங்கருத்துமாக உள்ளோம். சத்தியம் இலட்சியத்தில் வாழ்கிறதே தவிர, நடைமுறை வாழ்க்கையில் வாழ்வதில்லை. இன்றைய துர்ப்பாக்கிய நிலைக்கு இதுவே காரணம்.
வாழ்க்கையில் தர்மம் கடைப்பிடிக்கப்படவேண்டும். “தர்மம் தலைகாக்கும்’ என்பது சத்தியவாக்கு. சத்தியமும் தர்மமும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பார்கள். சத்தியத்திலும் உயர்ந்த தர்மம் வேறெதுவும் கிடையாது. நல்லவர்கள் என்போர் நல்ல வழியில் நடந்து கொள்பவர்கள். அவர்களுக்கு, எல்லாக் காரியங்களிலும் வெற்றி நிச்சயம். தர்மம் வெல்லும், அதர்மம் தோற்கும் என்பது சத்தியவாக்கு. மகாபாரதயுத்தம், தர்மயுத்தமாகும். தர்மத்தின் பக்கத்தில் தருமர் முதலிய ஐவரே நின்றனர். அதர்மத்தின் பக்கத்தில் துரியோதனன் முதலிய நூற்றுவர் நின்றனர். ஆனால் ஈற்றில் தர்மமே வென்றது.
தர்மங்களைக் கடைப்பிடிக்காத பட்சத்தில், அழிந்தொழிந்து போகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டுமே, அவர்களின் தர்மங்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளத் தலைப்படுகின்றனர். மனித சமுதாயம் படும் பாடுகளுக்கும் துன்பங்களுக்கும் மனிதர்கள் தர்மத்திலிருந்து விலகியிருப்பதே காரணம். பயம் இல்லாமலும், பயத்தை ஏற்படுத்தாமலும் வாழும்முறை ஒன்று இவ்வுலகில் இருக்குமாகில், அதற்குப் பெயர்தான் தர்மமுறை. இன்று எல்லோருமே அஞ்சி அஞ்சித்தான் வாழ்கிறார்கள்; மற்றையோரையும் அஞ்ச வைக்கிறாரகள். அது எதனைக் காட்டுகிறது என்றால், உலகில் தர்மம் குன்றி விட்டது, அதர்மம் மேலோங்கி நிற்கின்றது என்பதையே காட்டுகின்றது ஆகும்.
தர்மம் என்பது ஒரு தினத்தில் குறித்த நேரங்களில் போட்டுக் கழற்றும் சீருடையைய் போன்றதல்ல. தர்மம் எப்போதுமே எம்முடன் ஒட்டி, உறவாடிக்; கூடிக் கலந்து கணமேனும் எம்மை விட்டுப் பிரியாது எம்முடன் உடன் உறைவேண்டியது. எமது சிந்தனையில், பேச்சில், செயலில், தர்மம் எப்போதும் தரித்திருக்க வேண்டும். எல்லாம் சரியாக நடக்கும் போது, தர்மம் எங்களுடன் உள்ளது என்பது பொருள், பிழை ஏற்படுமானால், தர்மம் எம்மை விட்டு விலகிவிட்டது என்பது அர்த்தம். “சத்தியம் வத; தர்மம் சர” என்பது வேதவாக்கு. “உண்மையே பேசு, தர்மத்தின் வழியில் செல்” என்பது இதன் பொருள் வாழ்க்கையில் உயர்வதற்கு இவையிரண்டுமே உறுதுணையாகும்.
எமது சாந்தியைக் குலைப்பதற்குக் காங்கணம் கட்டிக் கொண்டு எம்முள்ளே ஆறு உட்பகைவர்கள் இருக்கிறார்கள். காமம், குரோதம், லோபம் மோகம், மதம், மாற்சரியம் என்பவையே அந்தப் பகைவர்கள். இவற்றிற்கு நாம் இடமளிக்கும் வரை அமைதியையோ, சாந்தியையோ நாம் அடையமுடியாது. இப்பகைவர்களுடன் உறவை வைத்துக்கொண்டு சாந்தியைத் தேடி அலைவதில் பயன் ஏதும் கிட்டப்போவதில்லை எமது உள்ளங்களிலிருந்து காமம், பொறாமை, ஆசை, கோபம், வெறுப்பு, பகைமை போன்ற அழுக்குகளை அகற்றும் போது,
18

Page 14
உள்ளங்கள் தூய்மை பெறுகின்றன. தூய உள்ளத்திலேயே சாந்தி பிறக்கும், அமைதி தவழும், நிம்மதி நிலவும், மனத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் அறம் ஆகும்.
"மனத்துக் கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்,
ஆகுல நீர பிற"
என்கிறது வள்ளுவம், மனத்தில் குற்றமில்லாதிருத்தல் அறம் ஆகும். அறம் அவ்வளவே என்பது வள்ளுவரின் நிலைப்பாடு தருமத்தை வாழக்கையில் ஒருவன் கடைப்பிடிப்பதால் அச்சம் நீங்குகிறது; அழுக்காறு, காமம், பகைமை போன்றவை அகல்கின்றன. அப்பொழுது அங்கு சாந்தி நிலவுவது இயல்பே. தூய மனம், தெளிவான நோக்கு, ஆகியனவற்றினாலேயே சாந்தியை ஏற்படுத்த முடியும், மனிதர் ஒவ்வொருவரினதும் அகத்தில் சாந்தி குடியிருக்கும் போது, புறச்சூழலிலும்
சாந்தியும் சமாதானமும் நிலவும் என்பது உரு .
அன்பு என்பது உலக மகாசக்தி அன்பினை உபாசித்து வருபவர்கள், வாழ்வில் நடைமுறைப்படுத்துபவர்கள் எப்பொழுதுமே நிறைவாழ்நிபு வாழ்வர். அமைதியைப் பெறுவதற்குச் சுலபமான வழி எல்லா உயிர்கள் மீதும் நேயங்கொள்ளல், அன்பு சொரிதல், கரிசனையுடையராய் இருத்தல் ஆகும். இதற்கு ஒரு சதமேனும் செலவு செய்யத் தேவையில்லை. உலகில் உள்ள அனைவருக்கும் இயலக் கூடியது பிறருக்கு அன்புசெய்தல் ஆகும். பெரும் பெரும் கடினமான காரியங்களையெல்லாம் செய்யத் துடிக்கும் மனிதர்கள் மிகச் சுலபமான அன்பு செய்தலை ஏனோ மறுத்து வருகின்றார்கள் என்பதுதான் புரிந்து கொள்ள முடியாத பெரும் புதிராக மக்களிடையே இருந்து வருகிறது.
அன்பு செய்தல், ஒவ்வொரு மனிதனினதும் அடிப்படை உரிமையாகும். அன்பு செய்ய மறுத்தல், உரிமை மீறல் ஆகும். அன்பு செய்தல் மனித இயல்பு அன்பு செய்யாதிருத்தல் மனித இயல்புக்கு மாறானது என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். அன்பும் அறனும் தான் வாழக்கையின் பண்பும் பயனும் என்பர் வள்ளுவர். அகிம்சை என்பது பிறர்க்கு இன்னாசெய்யாமையாகும். அது அன்பின் செயல் வடிவம். அன்புடையார் எல்லாம் உடையர், அதேவேளை "என்பும் உடையர் பிறர்க்கு' உலகின் எல்லாச்சமயங்களும் அன்பைத்தான் வாழும் வழியாக ஏற்றுக் கொண்டுள்ளன, என்பதை நினைவிற்கொள்வோம்.
எனவே, சத்தியம், தர்மம். சாந்தி, அன்பு, அகிம்சை என்னும் ஐந்து அடிப்படை விழுமியங்களையும் வாழ்வில் மேற்கொண்டு நல்வாழ்வ வாழ்வோமாக,
1ց

5. சமூகத்தோடு பொருந்தி வாழ்தல்
நாம் வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமாகில், வாழுகின்ற சூழ்நிலையோடு பொருந்தி வாழத் தெரிந்துகொள்ள வேண்டும். சமுகமயமாதல் என்று கல்வியியலாளர் கூறுவர் வழங்கப்படுகின்ற கல்வியின் பிரதான ஒரு நோக்கமும் கற்போனை வாழும் சமுதாயத்தோடு பொருந்தியும் இணங்கியும் வாழச் செய்தல் ஆகும் சமூக விழுமியங்கள், சமூகப் பண்புகள், மரபுகள் என்பன் கற்றல் அனுபவங்களாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. பாடசாலைகளில் இவ் அனுபவங்களைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்கள். பின்னர் சமூகத்துடன் சேர்ந்துகொள்ளும் போது, பிரச்சினைகள் இல்லாமல் சமூகத்தவருடன் பொருத்தப்பாட்டோடு வாழ்வர் வாழக் கற்றல் என்பது இதனையே குறிக்கின்றது.
இன்றைய பாடசாலைக் கல்வியை முடித்துக் கொண்டு டெரியேறுவோரில் பெரும்பாலோர், வாழுகின்ற சமூகத்துடன் பொருந்திவாழப் பெரிதும் சிரமப்படுகின்றனர். பிறந்த நாட்தொடக்கம் வாழ்ந்துவருகின்ற தமது குடும்பத்தில் கூட, பெற்ற தாய், தந்தையருடன் இனங்கி வாழ முடியாமல் பலர் சங்கடப்படுகின்றனர். அவர்களைப் பெற்ற, பிரியத்தோடு வளர்த்து, பல தியாகங்களைப் புரிந்த பெற்றோர்கள், பிள்ளைகளின் பொருந்தா நிலையைக் கண்டு, மனம் வெதும்பி, வேதனை அடைகின்றனர்." பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு" என்னும் பழமொழி இன்றைய சமுதாயத்தில் உயிர்ப்புள்ளதாக விளங்குகிறது.
பெரியோர்கள், தலைவர்கள் இன்று இதுபற்றி வினா எழுப்புவதைக் காண்கிறோம் இவ்வளவு பெருந்தொகை பணம் கல்விக்காகச் செலவழித்தும், நாம் கண்ட பயன்தான் என்ன? கல்வி, நல்ல பிரஜைகளை உருவாக்குவதில் தவறி வருகின்றதா? கல்விக் கூடங்களின் வெளியீடுகளான கற்றுத்தேறிய மாணவர்கள், அதற்கு அத்தாட்சியாக சான்றிதழ்களும் பெற்றவர்கள், சமூகத்துடன் பொருந்தி வாழமுடியாமல் இருக்கிறார்களே என்று நாட்டின் தலைவர் தொடக்கம், சாதாரண குடிமக்கள் வரை பிரஸ்தாபிக்கிறார்கள்.
மிருகங்களும் சரி, பறவைகளும் சரி, தாவரங்களும் சரி, அவற்றின் சூழ்நிலைகளுக்கு ஏற்பத் தங்களைச் சரி செய்து கொள்கின்றன. அவ்வாறு சூழ்நிலைக்குச் சரி செய்து கொள்ளமுடியாமல் போகும் பட்சத்தில் அவை அழிந்து போகின்றன, சூழ்நிலைக்கு ஏற்றவாறு தம்மைப் பொருத்திக் கெள்ளுதல் என்பது ஓர் உயிரி தொடர்ந்து உயிர் வாழ்தலுக்கு ஒரு தேவையாக உள்ளது.
மிருகங்கள் பலவகையாக உள்ளன. பலம் மிகுந்த மிருகங்களும் உண்டு: பலம் குறைந்த மிருகங்களும் உள்ளன. இவ்வாறாக, ஒரு காட்டில் பல மிருக இனங்கள் வாழ்கின்றன. இவை ஒன்றதுகொன்று பலியாகாமல் போவதற்குத் தகுதிகள் பெற்றும் காணப்படுகின்றன. விரைவாக ஒடும் திறன் பெற்றவையும், பாபுந்திறன் பெற்றவையும் பலம் மிகுந்த மிருகங்களின் தாக்குதலில் இருந்து
EO

Page 15
தப்புவதற்குத் தம்மைச் சரிசெய்து கொள்கின்றன. வேறுசில மிருகங்கள் பதுங்கித் தப்பித்துக் கொள்கின்றன. இன்னும் சில அவற்றோடு இணைந்து அமைதியாக வாழக்கற்றுக் கொள்கின்றன. அதனால் வாழுந்தகுதியைப் பெறுகின்றன. வாழும் சூழலோடு இனங்கியும், சூழ்நிலைக்குச் சரிசெய்தும் வாழவேண்டியதன் அவசியத்தை விலங்கினங்களும், தாவரங்களும், ஏனைய பிராணிகளும் புரிந்து கொண்டிருக்கும் போது அறிவிலும் அனுபவத்திலும் மேம்பட்டு நிற்பதாகச் சொல்லிக் கொள்கின்ற மனித இனம், தாம் வாழுகின்ற சூழ்நிலை, சூழல், சமூகம் என்பவற்றோடு பொருந்தி வாழமுடியாமலும், பொருந்தி வாழ வேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளாமலும் இருப்பது கவலைக் குரியது.
பண்டு தொட்டுக் கல்வியே இத்தகைய பொருத்தப்பாட்டுடன் வாழும் தகுதியை மக்களுக்கு அளித்து வந்தது. சமூக நீதி, சமூக விழுமியங்கள், சமுக மரபுகள் என்பவற்றைக் கல்வியே மக்களுக்க உணர்த்தி வந்தது. ஆனால் இன்று, அத்தகைய பணியில் இருந்து கல்வி, துங்கிக் கொண்டதோ, அல்லது கல்வியை வழங்குபவர் ஒதுங்கிக் கொண்டனரோ என்பது ஆய்விற்குரியது. குற்றங்களைக் கூறுவதிலும், குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் எத்தரப்பினர் என்று அறிவதிலும் நேரத்தைக் கடத்துவதைப் பார்க்க, கல்வி மீண்டும் சமூக மரபுகளை, விழுமியங்களை கற்போர்க்கு வழங்கும் பணியைச் செய்வதற்கு வழிவகை செய்தலே உடனடித் தேவையாகும், என்பதைச் சம்பந்தப்பட்டவர்கள் உனர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
வாழும் சூழலுடனும், சமுகத்துடனும் பொருந்தி வாழ்தல் என்பது யாது? என்பது பற்றிப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம், பழமை பேணுவதா ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள சமூக நிலைமைகளை அப்படியே ஏற்றுக் கொள்வதா? மாற்றங்கள் தேவையில்லையா? வளர்ச்சி முன்னேற்றம் வேண்டாமா? முரண்படுதல் ஆகாதா, இவ்வாறு பல வினாக்களைத் தொடுக்கலாம் சமூகத்தில் உறுதிப்பாடு, அமைதி, சமாதானம் நிலவவேண்டுமானால், குடிமக்கள் நல்ல பண்புள்ளவர்களாக விளங்கவேண்டும்; விதன்ைடா வாதங்கள் ஆகாது. சமூகமயமாக்கல் என்று இதனைக் கூறுவர். கல்வியே இந்தப்பணியின் பெரும் பங்கினைச் செய்து வருகிறது. கல்வி பிழைத்தால் சமூகத்திலும், முழுநாட்டிலும் அது பிரதிபலிக்கும்.
சமூகமயமாக்கல் என்பதற்குப் பல்வுேறு வரைவிலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன.
"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்"
என்பது வள்ளுவப் பெருந்தகை தரும் விளக்கம் எவ்வளவற்றைக் கற்றிருந்தாலும் உலகத்து உயர்ந்தவரோடு பொருந்தி வாழத் தெரியாவிட்டால், அக்கல்வியால் ஒரு பயனும் இல்லை என்பதைத் திட்டவட்டமாக வள்ளுவர் கூறியுள்ளார்.
இன்று கல்வி என்றுமில்லாத அளவிற்குப் பெருகியுள்ளது. கல்வியன் பரப்பு, உள்ளடக்கம் என்பன ஆழ்ந்தும் அகன்றும் உள்ளன. அறிவின் பெருக்கம்
2

அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு எல்லையைத் தாண்டிவிட்டது, விண்ணையும் மண்ணையும், அறிவினால், வெற்றி கொண்டமனிதன், கேவலம், தன்னையறியுந் திறனற்றவனாகக் காணப்படுகிறான். அதனால் இந்த உலகோடு ஒட்டிவாழ முடியாதவனாகி விட்டான். "உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று' என்பது ஆன்றோர் உரை.
தான் வேறு, சமூகம் வேறு என்று நினைப்பவன், கற்றவன் அல்லன், சமூகத்தில் தான் ஒர் உறுப்பினன் என்று கொண்டு, சமூகத்துடன் தன்னை இசைவாக்கிக் கொள்பவனே கற்றமனிதன்.
"சமுகத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறுப்பினர் ஒருவர் ஆவதற்கு, தான் செய்யவேண்டியவற்றையும் செய்யக் கூடாதவற்றையும் அவரை அறிந்து கொள்ளச் செய்வது சமூகமயமாக்கல் ஆகும். என Hawinghப81 என்பவரும் Nபேg:மே என்பவரும் வரையறுத்துள்ளனர்.
"தனியாள் ஒருவன் தனது சுற்றாடலின் சமூகச் சூழலுக்கேற்பத் தன்னை இசைவாக்கிக் கொள்ளலே சமூகமயமாக்கல்' என எமில் டேர்காம் Eml
பrkheim கூறியுள்ளார்.
ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, "சமூகமயமாக்கல்' என்பது, ஒரு சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக இலக்குகளையும், சமூக விழுமியங்களையும் வாழ்க்கை முறைகளையும், ஒழுக்கங்களையும் அச்சமூகத்தின் உறுப்பினர் ஒருவருக்கு உரித்தாக்குவதாகும் மாணவப் பருவத்தில் கற்கவேண்டியவற்றைக் கற்கவேண்டும் கற்றபின், வாழ்க்கையில் அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும் கல்வி பற்றிய தமிழ் மரபுச்சிந்தனை இதுவேயாகும் ஏன், கீழைத்தேயக் கல்விமரபும் இதே சிந்தனையையே முன்வைக்கிறது.
சமூக ஒழுங்கு என்பது அங்கு வாழுகின்ற மனிதர்களின் ஒழுங்கு ஆகும். ஒவ்வொரு மனிதனும் ஒழுங்காக வாழ்ந்தால் சமூகம், நாடு, உலகம் யாவும் ஒழுங்காய் விடும். இன்று உலகம் ஒழுங்கு கெட்டு விட்டது; குடும்பம் ஒழுங்கு கெட்டுவிட்டது, இதற்குத் தனிநபர் ஒழுங்கு கெட்டு விட்டது என்பதுதான் பொருள். எனவே ஒவ்வொரு தனிநபரும் இது விடியத்தில் கவனத்திற்கு உரியவர். சமூகமயமாக்கலில் ஈடுபட்டிருக்கின்ற குடும்பம், சமய சமூகநிறுவனங்கள், முக்கியமாகப் பாடசாலைகள் இதில் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
துடும்பம், சூழ்ந்த சமூகம், தொழில், வேலைத்தலம் ஆகிய ஒவ்வொன்றிலும் ஒவ்வொருவரும் பொருத்தமானவராகவும், இனக்கமுள்ளவராகவும், தம்மை பிசைவித்துக் கொள்பவராகவும், ஒத்துழைப்பு நல்குபவராகவும், சட்ட
திட்டங்களுக்கு மதிப்பளிப்பவராகவும், தம்மைச்சரிசெய்து வைத்துக் கொள்வது, ன்றியமையாததாகும். இதனையே உலகத்தோடு ஒட்ட ஒழுகல், சமூகத்தோடுபொருந்தி வாழ்தல், சமூகமயமாக்கல் என்று பல படப் பேசுகிறார்கள். வெகுசன விரோதியாகத் தம்மையாக்கிக் கொள்பவர் சுவரோ அவர் கற்ற
22

Page 16
கல்வியால் பயன்பெறாதவர் ஆகின்றார்.
உயிர் வாழ்தலுக்கு, சூழ்நிலையோடு பொருந்தியும் இசைந்தும் வாழவேண்டும். உயிர் வாழ்தல் என்று கூறும்போது உயிருடன் இருத்தல் மாத்திரம் அன்று: கன்னியம், கெளரவம், இனக்கம், நன்னடத்தை, நல்ல ஒழுக்கம், இனியசுபாவம், நல்ல பண்புகள் ஆகியவற்றுடன் மனிதனாகவும் வாழ்தலைக்
குடும்பத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோருக்கிடையே பரஸ்பரம் புரிந்துணர்வு, ஐக்கியம், ஒத்துப்போதல், நல்லிசைக்கம் என்பன இருக்க வேண்டும். அப்போது தான் குடும்பத்தில் இன்பம், மகிழ்ச்சி அமைதி என்பன காணப்படும். அக்குடும்பம் இனக்கமான சூழ்நிலையைக் கொண்டுள்ளது எனலாம். இங்கு ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறே, அயலவர்களும் நம்மை ஏற்றுக்கொள்ளக் கூடிய விதத்தில் நடந்து கொள்ள வேண்டும் அயலவர்களுக்கு இடைஞ்சல் கொடுப்பவர்களாக, நாமோ நமக்கு இடைஞ்சல் தருபவர்களாக அயலவர்களோ இருப்பின், அங்கு பொருத்தப்பாடு இல்லை என்பதே அர்த்தம் ஒருவரை மற்றவர் ஏற்றுக் கொள்ளவில்லை, என்றால் எதிர்ப்பு, பகைமை, வெறுப்பு என்பன துலாம்பரமாகத் தெரியும்.
சூழ்நிலைக்கேற்றபடி பரஸ்பரம் அநுசரித்து நடக்கும் போதுதான், ஒவ்வொருவரும் விரும்பத்தக்க மனிதராக, வரவேற்பிற்குரியவராக சமுதாயத்தில் இடம் பெறுகின்றனர். உயிர் வாழ்தல் என்பது உயிருடன் கூடி வாழ்தல் மாத்திரமல்ல விரும்பத்தக்க மனிதராக ஊருடன் கூடிவாழ்தலும் ஆகும் என்பதை நினைவிற் கொள்ளுதல் வேண்டும்,
"ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்னும் ஒளவையின் வாசகத்தையும் மனத்திற் கொள்ளத் தவறக்கூடாது.
புதிதாகத் திருமணம் செய்தவர்கள் புதிய சூழ்நிலைக்குத் தம்மைச் சரிசெய்து கொள்ளல் வேண்டும். அதுவும் மிகத்துரிதமாகச் செய்தல் அவசியம். இவ்வாறு தம்மைச் சீர்செய்து, பொருத்தப்பாட்டினை அடையத்தவறிய எத்தனையோ புதுமணத் தம்பதிகள், விரைவில் மனமுறிவுக்கு உள்ளானது மாத்திரமல்ல மண்முறிவிற்கும் உள்ளானார்கள்.
புதிதாக வேலை ஒன்றில் அமர்ந்தவர்கள் தாம் வேலை செய்கின்ற சூழலோடு பொருந்திவாழக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது வேலைத்தலத்தில் மகிழ்ச்சியாக வாழமுடியாமல் போய்விடும் வேலையிலும் வெறுப்பு ஏற்பட்டுவிடும், வேலைக்குப் போவது என்பதே சிரமமான செயல் ஆகிவிடும் வேலை செய்யும் இடம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தால் தான், வேலையில் திருப்தி உண்டாவதோடு, உற்பத்தியும் பெருகும்.
23

குடும்பத்திலும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு இணங்கிவாழப் பழகிக் கொள்ள வேண்டும் விட்டுக்கொடுத்து நடக்கும் பண்பு கொண்ட மனிதர்கள் வாழ்க்கையில் தோல்வி காண்பதில்லை.
எந்தச்சமூகத்திலும், அங்கு நிலவும் சூழ்நிலைக்கு ஏற்றபடி அனுசரித்து நடக்கும் போது, வரவேற்கத்தக்க மனிதராகச் சமூகத்தில் மதிக்கப்படுவர். அச்சமூகம் குடும்பமாக இருக்கலாம், அண்டை, அயல் ஆக விளங்கலாம் உத்தியோகம் பார்க்குமிடமாக இருக்கலாம்; வர்த்தகச் சமூகமாக இருக்கலாம். பொருந்தி வாழாமல், வேறுவிதமாக நடந்து கொண்டால், எதிர்ப்பையும் பகைமையையும் தான் சம்பாதித்துக் கொள்ள நேரிடும் மற்றவர்கள் நம்மை ஏற்றுக் கொள்ளாத நிலையில், எமது வாழ்வில் மகிழ்ச்சியோ, நிம்மதியோ இருக்காது.
சமூகச் சூழ்நிலைக்கு நம்மைச் சரிசெய்துகொள்ளல், சமுகத்தோடு பொருந்தியும் இணங்கியும் வாழ்தல் விட்டுக்கொடுத்தல், பணிதல், அடக்கம் என்னும் போது, நாம் எமது தனித்துவத்தைப் பலியிடுதல், அல்லது "ஆமாம்சாமி” போடுதல் ஆகிவிடக்கூடாது விட்டுக்கொடுத்தல் என்றால் அதர்மத்தையும், அநீதியையும் கண்டு வாழாவிருத்தல் அல்ல.
ஒரு ஊழல் நிறைந்த சமூகத்தில் எவ்வாறு நம்மைச் சரிசெய்து கொள்ளமுடியும் எவ்வாறு அச்சமூகத்துடன் ஒத்துழைக்க முடியும்; அங்குள்ள நடைமுறைகளை ஏற்றுக் கொள்ள இயலும் என்னும் வினாக்கள் எழுவது இயற்கையே. ஒத்துழைத்தால், எம்மைப் பொருத்திக் கொண்டால் அதன் அர்த்தம் என்ன? நாமும் ஊழலுக்குத் துணைபோகிறோம், ஊழலில் பங்கேற்கிறோம் என்பதுதானே அர்த்தம் உண்மைதான், இன்று எத்தனையோ நல்லவர்கள், ஊழல் என்பதையே வெறுத்து வந்தவர்கள், சந்தர்ப்பம் சூழ்நிலைக்குப் பொருந்தி வாழவேண்டிய நிலையில், ஊழலில் பங்குகொள்ளா விட்டாலும், மற்றையோரின் ஊழலுக்குத் துணைபோக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. சூழ்நிலைக்குத் தக்கபடி தம்மைச் சரிசெய்யாது விட்டால் குறித்த அச்சூழலில் அவர் விரும்பப்படாதவராகவும் அங்குள்ளவர்களினால் ஏற்றுக்கொள்ளப்படாதவராகவும் வந்துவிடுகிறார்.
ாழல்கள் இடம்பெறும் சூழலில், சூழ்நிலைக்குத் தம்மைச் சரிசெய்து கொள்ளல் என்பது ஊழலுக்குத் துணைபோவதாலும், ஊழலில் பங்குகொள்வதாலும், ஊழலுக்கு இடமளிப்பதாலும் நிறைவேற்றுவதாக இருத்தல் கூடாது. அது தர்மத்துக்கு விரோதமானது, நீதிக்கோ, தரமத்துக்கோ விரோதமான முறையில், சூழ்நிலைக்குச் சரிசெய்தல், அல்லது பொருந்திவாழுதல் நடைபெறக் கூடாது என்பதை நாம் கருத்தில் கொள்ளுதல் அவசியமானது.
இவ்வுலகில் தொல்லைகள் ஆயினும் சரி இன்பங்கள் ஆயினும் சரி தொடர்ந்து டிப்பதில்லை. தொல்லைகள், துன்பங்கள், சோகங்கள் விரைவில் தொலைந்துவிடும் என்று நம்புவோம். அவ்வாறு நம்பிக்கை கொள்வதே ஒரு சிறந்த மனப் பலம், தைரியம் ஆகும். இவ்வாறான ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதே ஒரு வகையில் சூழ்நிலைக்கு ஏற்ப நம்மைச் சரிசெய்தல் எனலாம்.
2

Page 17
சூழ்நிலைக்கு எம்மைச் சரிசெய்து கொண்ட பிறகு, எம்மிடம் இருக்கின்ற திறமைகளை மேலும் சிறப்பாக்கிக் கொள்ள வேண்டும். இந்தவகையில், சமூகங்களுடன் தர்மமான முறையில் பொருந்தி வாழப்பழகிக் கொண்டால் வாழ்வுசிறக்கும் தி நிலவும், வெற்றிகிட்டும்; இன்பம் கொழிக்கும். இவற்றைே நாம் ஒவ்வொருவரும் விரும்பி நிற்கிறோம்.
6. பெரியோரைக் கனம்பண்ணு
சமூகத்திலும் சரி, குடும்பத்திலும் சரி, பெரியவர்களுக்கு உரிய இடம் அளிக்கப்படுவது மனிதப்பண்பு ஆகும். பெரியவர்கள் என்போர் வயதில் முதிர்ந்தவர்கள், வாழ்க்கை அனுபவங்கள் நிறையப் பெற்றவர்கள்; எத்தனையோ பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தவர்கள்; அவற்றிற்குத் தீர்வும் கண்டவர்கள். அதனால் புதிய தலைமுறையினருக்கு, அறிவுரைகள் கூறவும், வழிகாட்டவும், ஆசிகள் கூறவும், அவர்களை நெறிப்படுத்தவும் அருகதை உள்ளவர்கள். தற்காலத்தில், நல்லநாட் பெருநாட்களிலும், திருமண வைபவங்கள் உள்ளிட்ட மங்கல விழாக்களின் போதும், ஆசிகள் பெறுவதற்குப் பெரியோர்கள், மூத்தோர்கள் ஆகியோரை அணுகி அரவணைக்கும் அளவிற்கு, அப்பெரியார்களின் அறிவுரைகளையும், அனுபவங்களையும் கேட்டு நடப்பதற்கு இளையோர் தயாராகவில்லை.
பெற்றோர்கள், பெரியவர்களுக்குப் பல குடும்பங்களில், உரிய மதிப்பும், மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. அவர்களின் ஆலோசனைகள், அறிவுரைகள், வழிகாட்டல்கள் ஆகியன இளைய தலைமுறையினரால் உதாசீனஞ் செய்யப்படுகின்றன. செல்லாக் காசுகள், ஆக்கப்பட்ட நிலையில் முதியவர்கள், தங்கள் இயலாமையை எண்ணி வேதனைப்பட்டுக் கொண்டு காலத்தைக் கடத்துகின்றனர். தம்மைவிட அனுபவங்களிலும், அறிவிலும், வாழ்வியல் திறன்களிலும் பன்மடங்கு சிறந்தவர்களைப் போற்றி வாழுதல் தான் மனிதத்தன்மை. அத்தகைய மனிதத்தன்மை தற்பொழுது அருகிவருவதைக் காணும் போது விசனப்படாமல் இருக்கமுடியாது.
பெரியவர்களைப் பேணுவதாலும், பலவழிகளில் அவர்களை மகிழ்ச்சிப்படுத்துவதாலும் நன்மைகள் பல கிடைக்கும் என்பது உறுதி. மாறாக, அவர்களை அலட்சியப் படுத்துவதாலும், அவர்களின் மனங்களைப் புண்படுத்துவதாலும் பெருந்தீமைகள் தான் விளையும் என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் வேதனைப் படப்பட, அவர்களுக்குப் பிழை செய்தவர்கள் வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றத்தையோ வெற்றியையோ 960LuiLDIT LITS6,
குடும்பத்தில் வாழுகின்ற வயது முதிர்ந்த பெற்றோர், பெரியவர்கள பெருந்
தொல்லை தருபவர்களாகக் கருதுபவர்களும் உண்டு. இரவில் நேரம் பிந்தி வீட்டுக்கு வருபவர்களைக் கேள்வி கேட்பார்கள். காலந்தாழ்த்தி உணவு உண்ணும்
25

போது, அவ்வாறு செய்தால், உடல் நலம் கெட்டுவிடும்; வேளாவேளைக்கு
உரிய நேரத்தில் உணவு உண்ணவேண்டும் என்று புத்திமதி சொல்வாரகள்,
காலையில், நேரத்தோடு நித்திரை விட்டு எழுந்திராவிடடால், எழுப்புவார்கள். உடைகள், அணிகலன்கள், அலங்காரங்களைப் பார்த்துவிட்டு, அவற்றில் அடக்கமும், பண்பும் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பகல் நேரங்களில் நித்திரை செய்ய விடமாட்டார்கள். நகத்தைப் பற்களால் கடித்தால். கொட்டாவி விட்டால், நெட்டி முறித்தால் பேசுவார்கள். நண்பர்களுடன் உரத்துச் சத்தம் போட்டுப் பேசினால் அவர்களுக்குப் பிடிக்காது. உடனே, அந்தக்காலத்து உளுத்துப்போன கதைகளைச் சொல்லி, அங்கிருப்போரின் சுவாரஸ்சியத்தைக் கெடுத்துவிடுவார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க விடமாட்டார்கள்.
வெளியே போவதானால், எங்கெங்கே போவது, யார் யாருடன் போவது, என்ன நேரத்துக்கு விடு திரும்புவது, போன்ற விபரமான விளக்கங்கள் கொடுக்கப்பட வேண்டும். கணவன் மனைவிக்கிடையே எழுகின்ற சிறு சிறு பூசல்கள், புடுங்குப்பாடுகளை எப்படியோ அறிந்து கொண்டு அவற்றைப்பற்றி விசாரணை செய்ய வந்துவிடுவார்கள். ஏதாவது, ஒய்வு என்று சொற்ப நேரம் வீட்டில் நிம்மதியாக இருக்கலாம் என்றால், அந்த நேரத்தில்தான் தங்களுடைய சுகவீனங்கள் பற்றியும் வயது போட்டுதுதானே என்று தங்களைக் கவனிப்பதில்லை என்றும் "புறணி அளப்பார்கள். ஒரு சினிமாவுக்கோ, தெரிந்த நண்பர், உறவினர் விடடுக்கோ இளசுகள் போவதற்கு உடுத்துப் படுத்து வெளிக்கிட்டால், ஆயிரம் கேள்வி கேட்பார்கள். இப்படியாக வீட்டில் உள்ள இளைய தலைமுறையினர், அங்குள்ள மூத்தோர்கள், முதியவர்கள் பற்றி விமர்சனம் செய்வதைக் கேட்டிருக்கிறோம்.
எது எப்படியிருந்தாலும், “உப்புச் சமைஞ்சால் உப்பின் அருமை தெரியும், அப்பன் சமைஞ்சால் தான் அப்பன் அருமை தெரியும்?” வீட்டிலே வயது போனவர்கள் இருக்கிறதுக்கு நிகரில்லை. பெரியவர்கள், பெற்றோர்கள் மற்றவர்களுக்குக் கேடு நினைத்து அப்படிப் பேசுவதில்லை. பிள்ளைகள் நல்லாயிருக்க வேண்டுமென்று, அவர்களைத் திருத்துவதற்குத்தான் அப்படிப் புத்திமதிகள் சொல்லுகிறார்கள். அவர்கள் பெரும் அனுபவசாலிகள். அவர்களின் துணை நிச்சயம் எல்லோருக்கும் வேண்டும். வாழ்க்கையில் இடையூறுகள் இல்லாமல் வாழ்வதற்குப் பெற்றோர்கள், பெரியோர்கள், வயது முதிர்ந்தவர்களின் வழிகாட்டல் மிகமிகத் தேவை” என்று கூறுபவர்களும் இக்காலத்தில் இல்லாமல் இல்லை பிள்ளைகளின் வாழ்வு முன்னேற்றத்தை இருதய சுத்தியோடு விரும்பி நிறபவர்கள்; அவர்கள் நெறியற்ற வாழ்வில் சிக்கி வழுக்கி விழுந்து விடக்கூடாதே என்று உளமாரப் பிரார்த்திப்பவர்கள்; அல்லும் பகலும் தம்பிள்ளைகளின் அதிகபட்ச வாழ்க்கை உயர்வினைப் பற்றியே சிந்திப்பவர்கள்; அதற்காகக் கசப்பாய் இருந்தாலும் நல்ல புத்திமதிகளைக் கூறுபவர்கள், நமது பெற்றோர்கள், வீட்டு முதியவர்கள் ஆகியோரைத் தவிர வேறு எந்தத்தரப்பினராகவும் இருக்க முடியாது. ஆகவே, அவர்களின் முதிர்ந்த அனுபவங்களிலிருந்து பிறந்த ஆலோசனைகளைப் பெற்றுப் பயனடைய நாம் தவறக் கூடாது. அவர்களின் அன்பையும், ஆசிகளையும் பெற்றுக்கொள்ள வேண்டியது மிக இன்றியமையாதது என்பதை இளைய
26

Page 18
தலைமுறையினர் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
இல்வாழ்க்கையில் இன்பங்களும் துன்பங்களும் மாறிமாறி வருவது இயல்பு. இன்பத்தைக் கண்டு இறுமாப்பு எய்துதல் துன்பத்தைக் கண்டுதுவழுதல் என்பன நிகழ்கின்றன. அவற்றைச் சமப்படுத்தி வாழ்க்கையை நடத்திச் செல்லுதல் வாழ்க்கையில் புகுந்து கொண்ட ஆரம்ப காலங்களில் சற்றுச் சிரமம் ஆக இருக்கும். அதற்குப் பட்டறிவு தேவை. பட்டறிவை ஒரு நாள் இருநாளில் பெற்றுக்கொள்ள முடியாது. பல்கலைக்கழகப்பட்டங்களோ, மற்றும் கல்விச் சான்றிதழ்களோ, இந்தப் பட்டறிவைத் தரமாட்டா. நூல்சார்ந்த அறிவிற்கும், பட்டறிவிற்கும் எவ்வளவோ வேறுபாடு உண்டு. வாழ்க்கையை வாழ்ந்து, பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து, களத்தில் வெற்றி தோல்வி கண்டு பெரும் விலையில் பெற்றுக் கொள்ளப்பட்ட அறிவு, ஆற்றல்கள், திறன்கள், மனப்பாங்குள், விழுமியங்கள் என்பனவற்றை உள்ளடக்கியதுதான் பட்டறிவு. இது கால ஓட்டத்தாலும், முதிர்ச்சியினாலும் அடையப்படுவது. அத்தகைய பெரும்மதிப்பு வாய்ந்த பட்டறிவு நமது முத்தோர்கள், பெரியவர்கள் பெற்றோர்கள் ஆகியோரிடம் தான் நிறைந்துள்ளது. அந்தப் பட்டறிவில் இளைய சந்ததியினர் உரிமை கோராமல் விட்டுவிடலாமா? அவர்களின ஆஸ்திகள், பனம், பண்டங்களில் பங்கு கேட்கும் அளவிற்கு அவற்றை அடைவதற்கு எடுக்கும் முயற்சிகளின் பிரயத்தனத்திற்கு, ஈடாக இல்லாவிட்டாலும், சொற்பமாவது பெற்றோர், பெரியவர்களின் அனுபவம் மிகுந்த பட்டறிவிலும் பங்குகொண்டால் எமது வாழ்வு எத்துணை நலம் பெறும் என்பதை என்னிப் பார்க்க வேண்டும். "பெரியோரைக் கனம்பண்ணு' என்ற முதுமொழி பொருள் பொதிந்தது. பெற்றோரின் அனுபவங்களும், ஆலோசனைகளும், பட்டறிவும் பிள்ளைகளுக்குக் கிடைக்கவேண்டிய சொத்துக்கள் தான். அவற்றைப் பெற்றுப் பயன்படுத்துவது தர்மம் ஆகும்; விட்டு விடுவது அறியாமையும் அதர்மமுமாகும்.
பெற்றோர். பின்னடிக்காலங்களில் இடைஞ்சலாக இருப்பவர்கள் எனும் எண்னம் அடியோடு போக்கப்பட வேண்டியது. அவர்களைப் பேணி, மகிழ்வித்து, அவர்கள் சொற்கேட்டு நடப்பவர்களுக்கு வாழ்வில் எல்லாவித முன்னேற்றங்களும் நிச்சயம் கிட்டும். பெற்றோர்களும் பெரியோர்களும் விரும்புகின்ற நல்லொழுக்கம், நற்பண்புகள் ஒழுங்கு, நீதி, நேர்மை, கண்ணியம், கட்டுப்பாடு என்பன தம் பிள்ளைகளாலும் பிற்சந்ததியினராலும் பேணிக்காக்கப்படவேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு அவ்வாறு பிள்ளைகள் ஒழுகும் பட்சத்தில், பெற்றோர், பெரியவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
"தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல் வன்மையுள் எல்லாம் தலை' என்கிறது
வள்ளுவம் முத்தோர் சொல் வார்த்தை அமிர்தம், என்பதைத் தலைக்கொண்டு, அவர்களின் நட்பைத் துனைக் கொண்டு நல்வாழ்வு வாழ்வோமாக,
27

7. அறவழியில் சமூகசேவை
சமூக சேவை பற்றிப் பலரும் பலவாறாகப் பேசுகிறாரகள், மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை, எனக்கூறி, மக்களுக்குச் சேவை செய்து வந்தால் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்த பலன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள் இப்படிப்பலனை எதிர்பார்த்துச் செய்வது சேவையாகாது. அது இலாபம் தேடும் முயற்சியாகி விடும் சேவையில், அர்ப்பனம், தியாகம் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இதன் அர்த்தம் என்ன? சேவை செய்யும் போது எவ்வெவற்றையெல்லாம் அரப்பனம் செய்கின்றோம்; காலம், பொருள், பனம், சக்தி என்பவற்றைத் தியாகம் செய்கின்றோம் என்று நினைப்பதாலும், சொல்வதாலும், இந்தச் சேவையினால் எத்துணை நஷ்டத்தையும் இழப்பையும் எதிர்நோக்கினோம் என்பதைக் கணக்குப்பார்த்துப் பட்டியல்படுத்துவதாக அமைகின்றது. இலாபத்தைக் கருதிச் செய்வதோ, இ, பினைத் தியாகம் என்ற போர்வையால் போர்த்தி, உள்ளுர வெதும்புவதோ உண்மையான சேவையாகாது. இலாப நட்டம் பாரப்பது தொழிலில், சேவையில் அல்ல.
நாம் சமுதாயத்திற்குச் சேவை செய்ய விரும்புகிறோம். எவ்வாறு ஆற்றலாம் என்று பலர் கேட்கின்றார்கள்
சமுதாயத்திற்குச் சேவைசெய்ய எவ்வளவோ வழிகள் உள்ளன. முதலில், சமுதாயத்திற்குச் சேவைசெய்ய வேண்டுமென்று மனதார விரும்ப வேண்டும்; அதன்பின் அவ்வாறு செய்வதாக மனதில் செய்து திடசங்கல்பம் கொள்ள வேண்டும். மனமுண்டானால் இடமுண்டு என்பார்கள், ஆக்குவதும் அழிப்பதும் மனம் தான். மனம் விரும்பிவிட்டால் மார்க்கமும் வந்துவிடும். இடம், பொருள், ஏவல், காலம் வாய்ப்பு பாவும் கிடைத்துவிடும் "அறம் செய விரும்பு" என்றுதான் ஒளவையார் சொன்னார். அர்த்தமுள்ள வாசகம் அது. "அறம் செய்" என்று அவர் கட்டளை பிறப்பிக்கவில்லை. எனவே சேவை செய்ய விருப்பங்கொள்ள வேண்டும், முதலில், அது ஒரு மனச் செயற்பாடு ஆகும் அதன்பின், சேவையைத் திரிகரான சுத்தியோடு செய்ய வேண்டும், மனம், மொழி, மெய் என்பன தூய்மை நிலை எய்தவேண்டும், அப்போது பலன் எதிர்பார்க்கப்படமாட்டாது. இழப்பு, நஷ்டம் பற்றியும் கருத்தில் கொள்ளப்படமாட்டாது. சேவையானது அன்புத் தொண்டாக மலரவேண்டும்; அருள் பிரவாகமாக ஓங்க வேண்டும்.
உலகியலில் உழலும் மனிதர், பொதுவில் மனத்தூய்மை குன்றியவர்களாகவே இருப்பர். அறக்கடமைகளைச் செய்யச் செய்யத்தான் படிப்படியாக, மனமானது பொறாமை, அவா, அங்கலாய்ப்பு, பலனை எதிர்பார்த்தல், என்னும் அழுக்குகளினின்று நீங்கப் பெற்று, தூய்மை பெறும். அதுவரை, செய்யும் செயல்கள், பணிகள் தொண்டுகள் யாவும் உண்மையான சேவையாக மாட்டா, பத்தூய்மை பெறாமல், சேவையை மேற்கொள்வதால் மட்டும் ஒருவன் வெற்றிபெற்று விடமுடியாது. உள்ளத்தூய்மையற்ற சேவையால் சமூகத்திற்கு நன்மையை விடத்தீமையே அதிகம் ஏற்படும். சேவையென்ற பெயரால்

Page 19
எத்தனையோ சமூகவிரோதச் செயல்கள், பாலியல் வன்முறைகள், சிறுவர் துர்ப்பிரயோகம் என்பன நடைபெறுவதாகச் செய்தித்தாள்கள் வாயிலாக அறிகிறோம் இவையாவும் இதயத் தூய்மையற்ற சேவையால் எற்படும் தீமைகள். புலன் நுகர்ச்சிப் பொருட்களில் மனத்தைச் செலுத்திக் கொண்டு செய்யும் சேவை, போவிச்சேவை.
புலன் பொறிகளை, மனத்தால் கட்டுப்படுத்த வேண்டுமாகில், மனம் தூய்மை பெறவேண்டும். அவ்வாறு அவற்றை மனதினால் கட்டுப்படுத்தி பற்றின்றி, பலனை எதிர்பாராது, செய்யும் பணிகளே மேலான சேவையாகும். மனந்தூய்மை, முழுமையாகப் பெறும் வரை சேவையில் ஈடுபடாது விலகியிருக்க வேண்டும் என்று கருதிவிடக்கூடாது. தார்மிகக் கடமைகளையும், அறச் செயல்களையும் செய்யச் செய்யத்தான் மனந்தூய்மை பெறும். என்பதை மறந்து விடக்கூடாது. " வினம், மற்றும் பொறி புலன்கள், படிப்படியாகத்தான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு டரவேண்டும் மனத்தைச் சுத்தப்படுத்துவது, தமக்குத் தாமே செய்கின் சேவை. agical (p568 G4LLucousillyu Ga Galil. "Charity begins at Home" Gioio ஆங்கிலத்தில் ஒரு வாசகம் உண்டு. இவ்வாறு ஒவ்வொருவரும் தன்னைத் தானே சுத்தி செய்வதால் படிப்படியாக, முழுச் சமுதாயமுமே சுத்திசெய்யப்பட்டு விடுகிறது. சமுதாயம் என்பது, பல தனிமனிதர்கள் சேர்ந்த குழுமம் தானே.
நாம், குடும்பத்தில், ஒவ்வொருவரும் இதயகத்தியுடன் எம் கடமைகளையும், பணிகளையும் செய்து வந்தால், அதுவே குடும்ப நலனுக்குச் செய்யும் சேவையாகும், குடும்பம் ஒரு சமூகம் என்பதை நாம் அறிவோம். இவ்வாறு குடும்பங்கள் நலன் பெற, சமுதாயம் நலன் பெறும்.
இளமையை விண் விரயம் செய்யாது கல்விகற்றுத்தேறும் மாணவர்கள், நல்ல சேவையையே செய்கிறார்கள. கற்ற கல்வியின பேறாக அறிவுடைய மனிதர்கள் ஆவதால், அவர்கள் சிறந்த பண்புகளைக் கொண்ட நல்ல குடிமக்களாக வாழ்கின்றார்கள் சமுதாயத்தின் நன்மைக்காக, அவர்கள் கற்ற கல்வி உதவுகின்றது.
"தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க்கு எல்லாம் இனிது” என்று குறள் பேசுகிறது. ஒரு குடும்பத்தில் பிறந்த மக்களின் கல்வி, அறிவு, ஆற்றல், உலக சமுதாயத்தில் உள்ள எல்ல மனிதர்களுக்கும், உயிரினங்களுக்கும், இனிமையை, இன்பத்தை, நன்மையை விளைவிக்கும் எனத் தெய்வப்புலவர் கூறிவைத்தமை உளங்கொள்ளற் பாலது.
விஞ்ஞானிகள், அருளாளர்கள், தலைவர்கள் முதல் சிறந்த தொண்டர்கள் வரை, இளமைப் பருவத்தில தாம் பெற்ற கல்வியினாலேயே, சமுதாயம் நலம் பெறும் சேவை செய்யக் கூடிய அளவிற்கு வளர்ந்தனர், எனவே தான் இளமையில், சிரத்தையோடு கல்விகற்பதும் அறிவையும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்வதும் மகத்தான சேவையெனக் கருத முடிகின்றது. இளமையிற் கற்கும் கல்வி, ஒருவனுக்கு, மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் அன்புத்தொண்டு செய்யும் வாய்ப்பையும்; இனிமையை வழங்கும் பாக்கியத்தையும் அளிக்கின்றது என்பதால்
29

ஒழுங்காகக் கல்வி கற்றல் ஒரு மகத்தான சமூக சேவை ஆகின்றது என்பதை
நாம் உணர்தல் வேண்டும்.
மக்களைப் பெற்றுச் சீராக வளர்த்துக், கல்வியறிவுடையோர் ஆக்குதல் ஓர் அறச் செயலாகவும், மக்கட்சேவையாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால், மாநிலத்து மன்னுயிர்க்கெல்லாம் நன்மை செய்யும் பிள்ளைகளை உருவாக்கித் தந்தவர்கள் பெற்றோர்கள். அவர்கள் சமுதாயத்திற்குச் செய்தசேவை, மகத்தான சேவை என்பதில் ஐயமில்லை.
சமுதாயத்தில் நாம் பல்வேறு தொழில் துறைகளில் ஈடுபட்டிருக்கிறோம் விவசாயம், கைத்தொழில், மருத்துவம், பொறியியல், ஆசிரியத்துவம், வியாபாரம், போக்குவரத்து, வங்கி எனப் பல்வகைப்பட்ட தொழில் துறைகள் உள்ளன. ஒவ்வொருதுறையிலும் பல்வேறு நிலைகளில் தொழில் ஆற்றுபவர்கள் உள்ளனர். நாம் ஏற்றுக்கொண்ட தொழில்களை ஒழுங்காகவும், சிரத்தையோடும், தூய்மையோடும் ஆற்றும்போது, அவையாவுமே சமூக சேவையாகப் பரிணமித்து விடுகின்றன. சமூக சேவையையே முழுநேரமாகச் செய்பவர்களும் இருக்கின்றனர். எவ்வாறாயினும் நாம் செய்யும் ஒவ்வொரு தொழிலையும் சமூக சேவையாக மாற்ற முடியும். சமூக நலன்களைப் பேணுவதாக, நாம் தொழிலை ஆற்றினால், சமூகசேவை ஆகிவிடுகிறது.
நாம் மனித விழுமியங்களை மதித்து, எமது வாழ்க்கையைச் செம்மையாக நடத்திவந்தால், அதனால் பிறருக்கும் நன்மைகளே கிட்டும். ஏனையோருக்கு இடைஞ்சல்கள், இடையூறுகள், துன்பங்கள் தராமல் வாழ்தல் சமூகசேவை ஆகாதா? நிச்சயமாக அது சமூக சேவைதான். பிறர் நலன்களைக் கருத்தில் கொண்டு. அவற்றைப் பேணி வாழும் போது சமூக சேவை செய்பவர் ஆகின்றோம்
நாம் எங்கள் அன்றாட நடவடிக்கைகள், செயற்பாடுகள், கருமங்ககள் யாவற்றையுமே மகத்தான சமூக சேவையாக ஆக்கிக் கொள்ளவேண்டும். நேர்மையான சிந்தனை, நிதானமான பேச்சு, கடின உழைப்பு, கண்ணியமான நடத்தை, கெளரவமான வாழ்க்கைமுறை - இவையே அதற்குத் தேவை, "தாய் ஊரிலே பிச்சையெடுக்க, மகன் கும்பகோணம் சென்று கோதானம் செய்வது" எந்தவிதத்திலும் அறச் செயல் ஆகிவிடாது. சமூக சேவையைத் தனியே முத்திரை இட்டுச் செய்வதிலும், தாம் தாம் அன்றாடம் செய்யும் கருமங்கள் உடன் ஒன்றிணைத்துச் செய்வதே மேலான சேவையாகும். தத்தம் கருமங்களிலும் கடமைகளிலும் சோரம் போய்க்கொண்டு, புகழுக்காகவும் பேருக்காகவும் விளம்பரம் செய்து சமூகசேவை மற்றும் அறப்பணிகள் என்பனவற்றில் ஈடுபடுதல் "குளிக்கப் போய் சேறு பூசிக்கொண்ட நிலைக்கு இட்டுச் செல்லும்
"கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அழுவானேன்" ான்ார்கள். நாம் செய்யும் ஒவ்வொருதொழிலையும் மனிதசேவையுடன் இணைத்துச்
3.

Page 20
செய்யக்கூடியதாக இருக்கும்போது, சமூகசேவை எவ்வாறு செய்யலாம் என்று தேடி அலையவேண்டியதில்லை. கடமைகளை ஒழுங்காகவும், உணர்வோடும் செய்தலே சமூகசேவை என்பதை அறிந்துகொள்ளல் நன்று.
சமூக சேவையை எங்கள் எல்லாவித வாழ்க்கை முறைகளுடனும் இனைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு செயலிலும், பெரிதோ, சிறிதோ, சேவை மனப்பான்மை ஊடுருவவேண்டும் ஒரு செயலைச் செய்யமுன், இச் செயலைச் செய்வதால் மற்றையவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படுமா? பிறருக்கு இதனால் என்ன நன்மை கிடைக்கும் போன்ற விசாரனைகளை மேற்கொள்ளல் அவசியம் அப்பொழுதுதான் நாம் செய்யும் பணிகள்; சமூக சேவைப் பணிகளாகப் பரிணமிக்கும். வையத்துள் வாழ்வாங்கு வாழ்தலே மிகப் பெரிய சமூக சேவையாகும்.
சமூகத்திற்கு உதவுவதாக, எங்கள் நாளாந்த வேலைகள், கடமைகள் அமையும் போது, எமது சுயநலவேட்கை படிப்படியாகக் குறைகிறது; எமது உள்ளம் விரிவடைகிறது; பிறர்மீது கரிசனை, இரக்கம் அதிகரிக்கின்றன; வேற்றுமை உணர்வுகள் மறைகின்றன. இம்மாறுதல்கள் யாவும் எம்மை அறியாமலே நிகழ்கின்றன. சிலவேளைகளில், நாம் எப்படி இருந்தோம் எப்படி மாறிவிட்டோம் என்று எண்ணி ஆச்சரியப்பட வேண்டியும் இருக்கும். எவரைப் பார்த்தாலும் உறவினர்போல் தெரிகிறார்கள், அந்நியராக இல்லை; நண்பர்களாகக் காட்சியளிக்கிறார்கள், பகைவர்களாக இல்லை; வேண்டிபவர்களாகத் தோன்றுகிறார்கள்; விரோதிகளாக எவருமே தென்படவில்லை. துன்புறுவோரைக் கண்டால் எம் உள்ளம் வேதனைப்படுகிறது; இரக்கம் சுரக்கிறது: கண்ணீர் மல்குகிறது. இவைதான் எம்மில் ஏற்பட்ட மாறுதல்கள் முன்பெல்லாம் அப்படியில்லையே யார் துன்பப்பட்டால் எமக்கென்ன? எம்பாட்டில் நாம் போவோம் என எண்ணிய காலம் அது "உவருக்கு உதான் சரி, நல்ல பாடு பட்டும்" என்று எண்ணிப் பிறர்துன்பத்தில் இன்பங்கண்டகாலமும் ஒன்று இருந்தது. ஆனால் இப்பொழுது அப்படி இரங்காமல் இருக்கமுடியவில்லையே! ஆம், அதுதான் அந்தமாறுதல், மனிதன் மனிதத் தன்மைகளைப் பெற்று மனிதனாகி வருவதையே
என்பது துன்பத்தின் மறு பெயர் மனிதத்தன்மைகளுடன் இயைந்த வாழ்வில் சுகம் பேசுகிறது. அதனால் பிறர் வாழ்விலும் சுகம் கிடைக்கிறது. யாவருக்கும் சுகம் தரும் மனிதத் தன்மைகளுடன்ான மனித வாழ்வை ஏன் மறுக்க வேண்டும் அவ்வாறான மனிதவாழ்வை, எல்லோரையும் வாழ்விக்கும் வகையில் வாழ்ந்து காட்டும் போது, மனித சேவை பரிமளிக்கிறது.
சேவையில் முக்கியமாகக் கைக் கொள்ளப்படவேண்டிய ஒன்று, எல்லோரை கணித்து மதிப்புமரியாதை செய்தல் பெற்றோர், மூத்தோர். பெரியோர், ஆசிரிய
3.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகியோரை மதித்து மரியாதை செய்தல் மிகவும் வேண்டற்பாலது. அவர்களின் மனங்குளிர்ந்தால், நம் வாழ்வு சிறக்கும். இன்றைய சமூகசேவை செய்பவர் பலரிடம் இந்தப் பண்பினைக் காண்பது அரிதாக உள்ளது. பணிவுடைமையும், இன்சோல் வழங்குதலும் சேவையைச் சிறப்பிக்கும் பண்புகள்.
எல்லாவிதமான மனித அல்லல்கள், பலவீனங்கள், மிருக உணர்ச்சிகள் என்பனவற்றிலிருந்து மனிதர் விடுபட்டு உன்னத நிலைக்கு உயர்வதற்கு, தத்தம் கடமைகளை ஆற்றுவதற்கு ஊடாக சேவை செய்யும் முறைமை பெரிதும் உதவுகிறது. இத்தகைய சேவை முறைமை மனித ஒழுக்கங்களைக் கடைபிடிக்கும் சிறந்த வழியாகவும் அமைந்து விடுகின்றது. அன்புத் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கும் ஒருவனுக்கு பிற கெட்ட ஈடுபாடுகளில் புலன்களை இழக்கும் அபாயம் அற்றுவிடுகிறது. தாம் தாம் ஈடுபட்டிருக்கும் தொழில்களுடன் இணைத்துச் சேவை செய்கின்ற முறைமை, சிறந்த வாழ்க்கை நெறியாகவும் வந்து விடுகிறது.
இன்றைய சூழ்நிலையில் ஊழல்கள், அதர்மங்கள், அநீதிகள் ஏன் மலிந்திருக்கின்றன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் கூடாதன் மலிந்துவிட நல்லவைகள் மலினப்படுத்தப்படுகின்றன. விரல்விட்டு எண்ணக்கூடிய தர்மவான்கள், நீதிநெறிப்படி ஒழுகுபவர்கள் அங்கொன்று இங்கொன்றாக இருப்பினும், அவர்கள் தனிமனித முன்னேற்றத்தின் விரோதிகளாகக் கணிக்கப்பட்டு ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள் வாழத்தெரியாதவர்கள் என்றும பிற்போக்கானார் என்றும் வேறு பட்டங்களையும் சுமக்க வேண்டியுள்ளது. சமூக சேவை வேறு, தம் தொழில் வேறு என்கின்றனர். தொழிலில் மனிததர்மம், சமூகசேவை, நிதி என்பன கலந்து விட்டால் தொழிலிற்குப் பழுது ஏற்பட்டு விடுமாம், ஆகக் கூடிய இலாபம் பெறமுடியாதாம். இவ்வாறு பெறும் கொள்ளைலாபத்தில் ஒரு சிறிய பங்கினை சமூக நலன் சேவைகளுக்கு ஒதுக்குவதன் மூலம் பாபவிமோசனம் தேடிக் கொள்ளலாம் என்பது தற்கால நவீன முற்போக்குச் சிந்தனையாக எழுச்சிபெற்றுவருகிறது. சமூகத்தில் நீதிநெறி என்பது படுபிற்போக்குத்தனத்தின் குறியீடாகவும் எச்சமாகவும் கருதப்படும் நிலையில், உலகில் சாந்தி, அமைதி, சத்தியம், அகிம்சை அன்பு, கருணை முதலிய மனிதவிழுமியங்கள் தேவைதானா, என்ற வினா எழுப்பப்பட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. உலகம் போகிற போக்கில், அணுகுண்டு, கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகண்ைகள், உயிரியல் நச்சு ஆயுதங்கள் போன்ற பயங்கர போர்க்கருவிகள் மனித இன் அழிவிற்கு, அத்துணை பாரிய அளவில், காரணமாக இருக்கும் போலத்தோன்ற வில்லை, ஆனால், மனிதர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அதர்மச்சிந்தனிைகள், ானச்செயல்கள், மனிதர்க்கு ஒவ்வாத காட்டுமிராண்டித்தனமான நடத்தைகள், ஒழுக்கச் சீர்கேடுகள், வாழ்க்கைச் சீரழிவுகள், ஏமாற்று வித்தைகள், நல்லனவற்றை ஒதுக்கிவைத்தல், அட்டுழியங்கள் என்பன தொடருமாயின் மனித இன அழிவிற்கு அவையேகாரணமாக அமையப்போகின்றன. அதற்குரிய அறிகுறிகள் தென்படுகின்றன. மனித உறவுகள், வியாபார உறவுகளாக மாறிவருகின்றன. இலாபம் எவ்வளவுதேறும் என்பது முக்கியமேயன்றி, மனிதர்கள் முக்கியமல்ல. அடைவைப் பற்றிச் சிரத்தை எடுக்கப்படுகிறதே தவிர, அடையும் வழிமுறைகள் பற்றிச் சிரந்த கொள்வதாகத் 臀 நிலைமைமுற்றிக்
ாழும்பு தமிழ்ச்ச 3. திேந்

Page 21
கொண்டுவருகிறது; வீங்குகிறது; வெடிக்கப்போகிறது என்பதை மட்டும் முன்னேற்பாடாகச் செர்ல்லிவைக்க முடியும் கல்விப் புனரமைப்பில் மனித விழுமியக் கல்விப் பண்புகளைக் கூடுதலாக உட்செலுத்துவதால், “மனித ஆக்கம்” நடைபெறவழிவகுத்து, மனித இனத்தை அழிவிலிருந்து காப்பாற்றலாம். மனிதரில் மனப்பாங்குமாற்றம் தேவை. "அறநெறி பிழைத்தோர்க்கு அறங்கூற்றாகும்” என்னும் சிலப்பதிகாரக் கூற்று சத்தியவாக்கு ஆகும்.
அதற்கு முன்னர் மனிதவிழுமியப் பண்புகளை மனித வாழ்க்கையில் பேண முயல்வோம். மனித இனத்தைப் பூரண அழிவிலிருந்து காப்பாற்ற நாம் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் கொள்வோமாக. அதுவே மிகப்பெரிய உன்னதமான சமூக சேவையாகும்.
8. கட்டுப்பாடும் அதன் தட்டுப்பாடும்
“சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று ஐந்தின், வகை தெரிவான் கட்டே உலகு"
என்கிறது தமிழ் மறை. இவ் ஐந்து புலன்களையும் அளவாகப் பயன்படுத்தக் கூடிய மனிதர்களே, பொய்ம்மையில்லாத ஒழுக்க நெறியில் நிற்பவர் ஆவர். அதற்கு ஐம்பொறிகளாகிய மெய், வாய், கண், மூக்கு, செவி என்பவற்றை முறையாக ஆட்சிசெய்பவர்களாக மனிதர் விளங்கவேண்டும். ஆனால் மனிதர்களோ ஐம்பொறிகளாலும் அடக்கி ஆளப்படுபவர்களாகவே விளங்குகின்றனர். அதனால் பல்வேறு தொல்லைகள் ஒழுங்கினங்கள், நடத்தைப் பிறழ்வுகள் சமூகங்களில் மலிந்து காணப்படுகின்றன. மனித ஒழுக்கக்
இந்த ஐம்பொறிகளைக் கட்டுப்படுத்திச் சரியாக முகாமை செய்யும் ஆற்றல் அவர்களிடம் இல்லாமையே காரணமாகின்றது.
கட்டுப்பாடு, வாழ்க்கையில் மிக அவசியம். மோட்டார் வாகனத்தை ஒட்டுபவர், அதன் வேகத்தைக் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருப்பாரேயானால், வாகனம் ஏதாவது ஒன்றுடன் முட்டி மோதி, விபத்துக்கு உள்ளாகி விடுவதைத் தடுக்கமுடியாமல் போய்விடும். அத்தகைய விபத்தில் வாகனத்திற்கும், அதில் இருப்பவர்களுக்கும் மாத்திரமல்ல, அக்கம்பக்கத்தில் நின்ற பிறருக்கும் சேதங்கள், இழப்புக்கள் என்பன ஏற்படுகின்றன. வாழ்க்கையிலும், கட்டுப்பாடு இன்றி நடந்துகொள்ளும் மனிதர்களால், அவர்களும் தங்கள் வாழ்க்கையைப் பழுதாக்கிக் கொள்கின்றனர். அத்தோடு நில்லாமல் அவர்கள் வாழும் சமூகத்தையும் பாழ்படுத்தி விடுகின்றனர்.
மனிதன், தன் இந்திரியங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருத்தலையே கட்டுப்பாடு என்கிறோம். இந்திரியங்களைப் பொறிகள் என்றும் அழைப்பர். இந்தப் பொறிகள் மூலமே பல்வேறு செய்திகள், தகவல்கள், அறிவுகள் என்பவற்றை
33

வெளியுலகிலிருந்து மனிதன் பெற்றுக் கொள்கிறான். பின் அவற்றிற்கேற்ப அவன் துலங்குகிறான். இத்துலங்கல்கள் மனிதனிடமுள்ள கர்ம இந்திரியங்கள் மூலம் நிகழ்த்தப்படுகின்றன. வாய், கைகள், கால்கள், பாலியல் உறுப்புக்கள் என்பன கர்மேந்திரியங்கள். இந்திரியங்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியாதவர்கள், இந்த உறுப்புகளுக்கு அடிமையாகி அவலங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
நாக்கும், காம இச்சை இந்திரியமும் தான் மனிதனைக் குழப்பிவிடுகின்ற மோசமான தன்மையைக் கொண்டவை. இவற்றில் அகப்படும் மனிதர்கள் படாதபாடுபடுகிறார்கள். கற்றவர்களைக் கல்லாதவராகவும், அறிவாளியை அறிவிலியாகவும், சாதுவை மூர்க்கனாகவும், சந்நியாசியைக் கபடசந்நியாசியாகவும் ஒருகணத்தில் மாற்றிவிடக்கூடிய அபார சக்தி இந்த இந்திரியங்களுக்கு உண்டு. இந்திரியங்களின் சேஷ்டையால்த்தான் மக்கள், மாக்கள் ஆகின்றனர்; கெளரவம், கண்ணியம், மதிப்பு, மரியாதை யாவும் இழக்கப்பட்டு விடுகின்றன. எனவே, இந்திரியங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட வேண்டியது அவசியமாகின்றது.
நாக்குக்கு இரண்டு தொழில்கள் உண்டு; ஒன்று சுவைத்தல் மற்றையது பேசுதல்.
“யாகாவாராயினும் நாகாக்க” என்கிறார் வள்ளுவர். இந்தப் பேசும் பொறியினால், அதன்துஷ்பிரயோகத்தினால் மனிதரகள் அவலங்களுக்கு உள்ளாகின்றனர். பேச்சு ஆனது பொய்யாகவோ, புழுகாகவோ, வசையாகவோ, திட்டாகவோ, புறங்கூறல் ஆகவோ, அமங்கலமாகவோ, கடுஞ் சொல்லாகவோ, சபதமாகவோ, வஞ்சனையாகவோ, சினமூட்டுவதாகவோ இருந்து விட்டால் அதன் பலாபலன்களையும் தீய விளைவுகளையும் எண்ணிப்பாருங்கள். பொறுப்புள்ள மனிதரின் பொறுப்பற்ற பேச்சுக்களாலும், சபதங்களினாலும் ஏற்பட்ட சண்டை சச்சரவுகள், போர்கள் பற்றி வரலாறு கூறுகின்றது. தற்காலத்திலும் பகைமைகள், முரண்பாடுகள், அபிப்பிராய பேதங்கள், உணர்ச்சிக் கொந்தளிப்புகள், மணமுறிவுகள், மனமுறிவுகள் என்பன ஏற்படுவதற்கு வேண்டாத பேச்சுக்களே அடிப்படைக் காரணமாக அமைகின்றன.
அண்டல் காரர்கள், ஆளை ஆள் சிண்டுமுடிப்பவர்கள் பேச்சைத்தான் ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் மனிதரின் சாந்தியையும் சமாதானத்தையும் குலைக்கும் கருவியாகப் பேச்சுப் பயன்படுத்தப்படுகிறது. சாகசப் பேச்சுக்கள், முகஸ்துதிகள், முகமன் பேச்சுக்கள், சாதுரியப் பேச்சுக்கள் என்பவற்றால் மனிதர்கள் ஏமாற்றப்படுகிறார்கள்.
திருஷ்டி என்றும் கண்ணுறு என்றும் கூறப்படுவது போல், நாவூறு என்றும் கூறப்படுவதை நாம் கேள்விப்பட்டுள்ளோம். நாவூறு என்பது பிறர் மீதோ, பிறரின் செயல்கள் மீதோ அவாஞ்சை கொண்டு சில சொற்களைப் பேசுதல். அதனால் அவர்களுக்கு உடல் நோய்கள் ஏற்படலாம், செய்காரியங்கள் அதன் பின சித்திக்காமல் விடலாம். “அவன் வந்தான்; எல்லாரையும் பார்த்து, நாவுற உமிஞ்சு போட்டுப் போறான். இனி என்ன நடக்குமோ தெரியாது”, என்று
34

Page 22
கேட்டிருக்கிறோம். இவை யொன்றும் மூடநம்பிக்கைகள் அல்ல; நாக்கின் அபாரசக்தியையே இங்கு குறிப்பிடுகிறார்கள்.
வாயினால் வாழ்த்தினாலும் பலிக்கின்றது; திட்டினாலும் பலிக்கின்றது; இச்சை கொண்டு நா ஊறினாலும் தீமை விளைகின்றது. ஆகையினால் நாவின் சக்தியை, ஏன் நன்மை ஏற்படுத்துவதற்குப் பயன்படுத்தக்கூடாது? திங்கு விளைவிப்பதற்கு ஏன் பயன்படுத்த வேண்டும்? இந்த வினாக்களை அடிக்கடி நாம் எம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாவைப் பிறர் நன்மைக்காகவும் எமது நன்மைக்காகவும் பயன்படுத்துவதே நல்லது என்ற விடையைப் பெற்று, அதன்படி நாவினைப் பழக்கி விடவும் வேண்டும். நாவினைத் துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தல் ஆகாது. இதனையே நாவிற்கான கட்டுப்பாடு என்பர்.
அமைதியாக இருத்தல், பேசாதிருத்தல், என்பன மெளன விரதமாகும். மெளன விரதத்தை அனுட்டித்தல் மூலம் நாம் நாவைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடிகின்றது. சத்தம் என்பது நாவிலிருந்து எழுப்பப்படும் ஒலி. இந்த ஒலி கர்னகொடுரமாக எழுப்பப்படும் போது சூழலை மாசடையச் செய்கின்றது. எத்தனையோ வித இரைச்சல்கள் உண்டு. மனிதர் உண்டாக்கும் இரைச்சலால் சூழல் மாசடையாமல் பாதுகாப்பதற்கு, நாம் நாவினை ஓம்புதல் வேண்டும்.
“மெளனம் கலகநாஸ்தி’ என்பர். மெளனம் கலகத்தை அடக்கும் சக்திவாய்ந்தது. மெளனம், மனித சக்தியைச் சேமித்துத் தருகின்றது. சத்தம், சக்தியை விரயமாக்குகின்றது. கோபத்தை அடக்க மெளனம் துணை செய்கின்றது. உணர்ச்சிகள் வீசுரமடையாமல் தணிப்பதற்கு மெளனம் உதவுகின்றது. மெளனப் பயிற்சி செய்து வந்தால், பேசும் பேச்சில் சொற்சிக்கனமும், பணிவும், இனிமையும், பண்பும் இருக்கும்.
ஒருவருடன் பேசமுன், தனது பேச்சு, அவரின் உணர்வுகளைப் பாதிக்குமோ, மனத்தைய புண்படுத்துமோ என்று யோசித்துப் பேச வேண்டும். ஒருவரின் பேச்சு, அவரைப் பற்றிய அபிப்பிராயத்தைக், கேட்போர் மனங்களில் பதித்து விடுகிறது. இவர் ஒரு அலட்டல் பேர்வழி, இவர், ஒரு வாய்ப்பூச்சுக்காரன்; இவர் ஆழமானவர் - இவ்வாறு ஒருவரை, அவரின் பேச்சுக் காட்டிக்கொடுத்துவிடும்.
பல்வேறு வேலைகளிலும் ஈடுபடுபவர்கள் குறைந்தது ஒரு மணி நேரம் ஆதல் தினசரி மெளனமாக இருத்தல் அவசியம் எனப் பெரியவர்கள் கூறுவர். ஓயாது உழைப்பவர்களுக்கு உடலும், உள்ளமும் ஒய்வு பெறவேண்டும். வாரத்தில் ஒரு நாள் - முழுநாளுமோ அல்லது சில மணித்தியாலங்களோ மெளனவிரதம் அனுட்டித்தல் நன்மை பயக்கும். அப்பொழுது பிறர் வந்து வேண்டாதவற்றைப் பேசிக் குழப்பமாட்டார்கள். தேவையற்ற தலையிடிகளையோ, கவலைகளையோ ஏற்படுத்தமாட்டார்கள். மெளனவிரதம் என்று தெரிந்து விட்டால், அந்நேரங்களில் நண்பர்களோ, குடும்பத்தினரோ வந்துநச்சரிக்க மாட்டார்கள; விண் வார்த்தைகள் பேசுதல், வம்பளத்தல் என்பனவற்றைத் தவிர்த்துக்கொள்ளலாம். பிறருக்கும்
35

இடையூறுகள் செய்யாது தம்மைக்காத்துக் கொள்ளலாம். உணர்ச்சிகள் வீசுரம் அடையாது தடுத்துக் கொள்ளலாம்.
மெளனமாக இருக்குங்காலங்களில் தியானத்தில் ஈடுபடலாம்; நல்ல சிந்தனைகளில் மனத்தை உலவவிடலாம். ஆன்மிக நாட்டங்களில் செறிந்திருக்கலாம்.
வாழ்வில் அதிகம் கதைப்பவர்கள், பேச்சைப் பயன்படுத்தித் தொழில் புரிபவர்கள் நிச்சயம் மெளனம் பேணிவர வேண்டும். மெளனம் உள்ளத்திற்கு சாந்தியைத் தருகின்றது; அதனால் உலப்பிலா ஆனந்தம் உண்டாகின்றது. ஒரு முறை சுவைகண்டவர் மெளனத்தைக் கடைப்பிடிக்கத் தவறமாட்டார்கள். மெளனம் தனக்கும் பிறருக்கும் நன்மையைச் செய்வதால் அது விழுமியம் ஆகும்.
நாவுக்குச் சுவைத்தல் என்னும் தொழிலும் உண்டு. உணவு, பானம் என்பவற்றை உட்கொள்ளும் வகையிலும் நாவடக்கம் தேவைப் படுகிறது. சுவையானவற்றையெல்லாம் சுவைத்து உண்டு விடவேண்டும் என்பதில் நா அடம்பிடிக்கும். நாவின் விருப்பங்களுக்கு விட்டுக்கொடுத்து நடக்கும் மனிதர்கள் உடலைக் கெடுத்து நோயாளிகள் ஆக வேண்டி நேரிடும். "நோய்க் கிடங்கொடேல்" என்னும் ஒளவையார் வாக்கினைப் பேணவேண்டுமானால் “வாய்க்கு இடங்கொடேல்" என்ற வாக்கினை முதலில் பேண வேண்டியது அவசியம். நாவுக்கு நாம் நாயகன் ஆகவேண்டுமே தவிர, நா நமக்கு நாயகன் ஆக இடம் கொடுக்கக்கூடாது. இது எம்முடைய வாழ்வின் வளத்திற்கு மிகவும் இன்றியமையாதது.
இந்த வகையில் நாக்கை அடக்குவதற்குச் சில வழிவகைகள் இருக்கின்றன. அவற்றைத் தவறாமல் கடைப்பிடிப்பதால் நாக்கை எம் வழிக்குக் கொண்டு வரமுடியும். விரதம் அனுட்டித்தல்; அளவுடன் நேரத்துக்கு உண்ணுதல்; இடை நேரங்களில் உணவுகளைத்தவிர்த்தல்; காரம், உப்பு சீனி, புளி என்பவற்றைத்தவிர்த்தல் அல்லது குறைத்தல்; மனத்தைக் கட்டுப்படுத்துதல், மனவலிமை பேணல் என்பன அவற்றுட் சில வழிமுறைகள் ஆகும்.
மனிதரின் குணங்கள் உண்ணும் உணவைப் பொறுத்து மாறுபாடு அடைகின்றன. இதனை ஆராய்ச்சியும் அனுபவமும் வெளிப்படுத்தியுள்ளன. இராட்சத உணவுகளாக மாமிசம் விளங்குகின்றது. விலங்குகளின் இறைச்சியை உண்போர் இராச்சத. தாமத குணங்களைப் பெறுகின்றனர். காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என்பவற்றை அளவாக உண்போர் சாத்வீக குணங்களான அன்பு, இரக்கம், கருணை, பணிவு, பொறுமை அஹிம்சை முதலியவற்றை உடையோராகத் திகழ்கின்றனர். மனித விழுமியங்களை ஒம்புபவர்களுக்கு உணவுக்கட்டுப்பாடு, பேச்சுக்கட்டுப்பாடு ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய நாவடக்கம், கட்டுப்பாடு இன்றியமையாதது. இவற்றிற் கெல்லாம் மனவைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளுதல் அவசியமாகின்றது.
”அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பார்கள். அமிர்தம் உயிர்களை வாழவைப்பது. அத்தகைய அமிர்தத்தையும் அளவுமீறி உண்டால், அது
36

Page 23
நஞ்சாகிவிடும். நன்மைக்குப் பதில் தீமையே கிட்டும், அவ்வாறே உணவு, உடை, தூக்கம், நட்பு, உறவு, மற்றும் உழைப்பு என்பவற்றிலும் அளவு என்று ஒன்று உண்டு என்பதை மறந்துவிடலாகாது. அந்த அளவிற் பார்க்கக் கூடினாலும் கஷ்டம், குறைந்தாலும் தீங்கு ஏற்படும். சிலர் உடலையோ, மூளையையோ ஓய்வின்றி வருத்தி உழைக்கிறார்கள். உழைப்பு வேண்டியதுதான். ஆனால் அளவை மீறினால் ஆபத்து விளையும் உழைப்பின்றிச் சோம்பலாக இருந்தாலும் தீங்குதான் ஏற்படும் திருமண வாழ்விலும் இந்த அளவைக் கடைப்பிடிப்பவர்களின் வாழ்வு மகிழ்ச்சிகரமாகவும் வளமாகவும் அமைகின்றது. அளவை மீறிச் சுக போகங்களை அனுபவிக்க விழைபவர்கள் விரைவில் வாழ்க்கையைக் கெடுத்து விடுகிறார்கள். பிள்ளைகளும் உடல், உளக்குறைபாடுகள் உடையோராக
வந்துவிடுகின்றனர்.
இளமையில் உணர்ச்சிகளைப் பிரவாகிக்க விட்டவர்கள், பிஞ்சில் பழுத்துவிடுகிறார்கள். பிஞ்சில் பழுத்தால் அதைப் பழம் என்று கூறுவதில்லை. வெம்பல் என்றே கூறுவார்கள். வெம்பல் ஒன்றுக்கும் உதவாது வீசி எறியப்படவேண்டியது தான். அரும்பு, மலர், காய், கனி என்று பருவநிலைகள் இருக்குமாப்போல், மனிதருக்கும் குழந்தை, பிள்ளை, குமரப்பருவம், முதுமை என்ற நிலைகள் உண்டு பருவந்தப்பி நடக்க முயன்றால், வாழ்க்கை பாழாகிவிடும் அந்தந்தப் பருவங்களில், அவற்றிற்குரிய ஒழுக்கங்களை அளவோடு மேற்கொண்டால் வாழ்வுசிறக்கும் என்பது உறுதி அடிதலை மாறிநடத்தல் ஆகாது. இதனை இளைஞர்கள் மாத்திரமல்ல, முதியவர்களும் உணர்ந்து தத்தம் வயது, பருவம் என்பவற்றிற்கு ஏற்றமுறையில் அளவோடு நடந்து கொண்டால் வாழ்வு வளம் பெறும் மகிழ்ச்சி ததும்பும் இவ்வாறு வாழ்க்கையைப் பேணுதல், விழுமியம் ஆகும் என்பதை உணர்வோமாக.
9. சுற்றம் பேணி வாழும் வாழ்வு சுகம் தரும்
கற்றத்தவர், உறவினர், என்போர் ஒரே வீட்டில் வசிக்கின்ற குடும்பத்தினருக்கு அடுத்தபடியாக, எம்மோடு நல்லுறவு பூண்டு சொந்தம், பந்தம், அன்பு, பாசம் பாராட்டி எமது வாழ்வின் இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்கு பற்றி உரிமை கொண்டாடி வருபவர்கள். அவர்கள் எம்மைச் சுற்றி இருக்கும் போது, நாம் பலம் பெறுகின்றோம், சுற்றத்தவர், உற்றார், உறவினர் ஆகியோர் இருக்கும் போது நமக்கென்ன பயம், என்று தமக்குத் தாமே தென்பு கூறுபவர்களைக் காண்கிறோம். வறுமை, நோய், எதிர்பாராத ஆபத்துக்கள், இறப்பு என்பன நேரும் போது தம் குடும்பத்தைச் சுற்றத்தவர் பார்த்துக் கொள்வார்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டிருக்கும் இயல்பு மனிதர்களிடையே வளர்ந்து வந்துள்ளது. சுற்றத்தவர் மிகச் சிறந்த காப்புறுதி என்ற எண்ணம் நெடுங்காலமாக நிலைத்து நின்றுள்ளது.

சுற்றத்தவர்கள் இரத்த உறவு கொண்டவர்கள். ஒருவருக்குத் துன்பம் நேரும் போது, உறவினரின் இரத்தம் துடிக்கும் என்பர். அவர்களிடையே, இரத்த உறவின் ஊடாக ஏற்பட்டுள்ள பந்தமும் பாசமும் இவ்வாறு அன்புணர்வு கொள்ளச் செய்கிறது. "Box is thickerlan Water" என்றொரு ஆங்கிலப் பழமொழியும் உண்டு. நெருங்கிய உறவினரை இரத்த உரித்து உடையோர் என்கின்றனர்.
"தான் ஆடாவிடினும் தன்தசை ஆடும்" என்னும் பழமொழி இந்த இரத்த உரித்தின் மேன்மையை எடுத்துக் காட்டுவதாக விளங்குகிறது. முன்பின் ஒருவரையொருவர் இன்னார் என்று அறிந்திராதவர்கள் எங்கோ ஒர் இடத்தில் சந்தித்து அளவளாவும் போது, தாம் இரத்த உறவினர்கள் என்பதை அறியவந்தால் அவர்களின் மகிழ்ச்சி எல்லை கடந்ததாக இருக்கும்.
முன்னைய காலங்களில், கிராமங்களில் வாழந்தவர்கள் பெரும்பாலும் இரத்த உரித்துடைய உறவினர்களாகவே இருந்தனர். அவர்களிடையே காணப்பட்ட ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் இந்த உறவுமுறையினால் ஏற்பட்ட பந்தபாசமே முக்கிய காரணம். சுற்றத்தவர், உறவினர்களுக்கிடையே சன்டை சச்சரவுகள், முரண்பாடுகள், கருத்து வேற்றுமைகள் இருப்பதில்லை என்று சொல்வதற்கில்லை. நெருக்கமானவர்களுக்கிடையேதான் சண்டை சச்சரவுகள் வரும் என்று சொல்வார்கள், ஆனால் அந்தச் சண்டை சச்சரவுகள் நிரந்தரமாக நிலைத்து நிற்பதில்லை, ஒரு நல்லது, கெட்டது வரும்போது அவர்கள் சரிப்படுத்தப்பட்டு ஒன்று சேர்க்கப்பட்டு விடுவார்கள். திருமணம், மரணம் போன்ற மங்கல, அமங்கலதிகழ்வுகளின் போது பகைமையை மறந்து, ஒருவரையொருவர் மன்னித்து, ஊரே ஒன்று கூடிவிடும். பெரியோர்கள், மூத்தோர்கள் முன்னின்று உறவை ஒன்று சேர்த்துவிடுவார்கள். இளையோர், மூத்தோர் சொற்கேட்டு நடந்துவந்த காலம் அது.
சுற்றம் சூழ வாழ்வதே சிறப்பு மிக்க வாழ்வு "குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை" என்பது ஆன்றோர் வாக்கு விட்டுக்கொடுத்தல், பொறுமை, மன்னித்தல் போன்ற மனித விழுமியங்களை ஒம்புதல் மூலம் உறவினரிடையே விரிசல் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஒற்றுமை பேனப்பட்டது.
சுற்றத்தாரிடையே உறவுபேணப்படுவதற்குப் பல்வேறு சமய, சமூக விழாக்கள்; கொண்டாட்டங்கள் என்பன கொண்டாடப்பட்டு வருகின்றன. திருமணம், சீமந்தம், பூப்புநீராடல், கர்ணவேதனம், முதலிய மங்கல விழாக்கள் நடாத்தப்படும் போது உறவினர்கள் ஒன்று கூடி நலம் விசாரித்தல், உதவிகள் புரிதல், அளவளாவுதல், வாழ்த்துதல், விருந்துண்டு மகிழ்தல் என்பன இடம் பெறுகின்றன. இவற்றின் மூலம் உறவு மேலும் ஸ்திரப்படுத்தப்படுகிறது.
மரணக்கிரியைகளிலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றும் தன்மையையும் உறவினர், சுற்றத்தவர்களிடையே காண்கின்றோம். திருமணம் போன்ற மங்கல விழாக்களுக்குச் செல்ல முடியாவிட்டாலும் மரணக் கிரியைகளில் நிச்சயம் கலந்து கொள்ள வேண்டும் என்ற உண்ர்வும் உறவினர் மத்தியில் நிலவுவதை
3B

Page 24
நாம் அறிவோம் உறவு சுற்றம் என்பன பேணப்படுவது முக்கியமாக இப்படியான் மங்கல அமங்கல நிகழ்வுகளில் அவர்களை பங்கு பற்றச் செய்வதற்காகவே என்று கூறப்படுவதைக் கேட்டுள்ளோம்.
உறவு வெறும் பேச்சளவில் மாத்திரம் இருந்து விடல் ஆகாது. உறவினர் கூடி உறவாடும் போது தான் அது வாழும் உறவு ஆகின்றது. அன்பு, பந்தம், பாசம் நல்லெனன்னம், மதிப்பு மரியாதை, நல்ல அபிப்பிராயம், நம்பிக்கை, கருத்துப்பரிமாற்றம், புரிந்துணர்வு. ஐக்கியம் என்பன யாவும் விருத்தியும் சிறப்பும் பெறுவது எப்போவெனில் இவ்வாறு உறவினர்கள் ஒன்று கூடி உறவா மகிழும்போது தான் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
உறவினரோடு பழகாதவன் வாழ்க்கையில், உப்புச் சப்பு இருக்காது என்பர்.
உறவினருடன் கூடியிருந்து விருந்துண்ணல், உரையா டல், அளவளாவுதல், குசலம் விசாரித்தல் என்பன கோடி இன்பம் தரக்கூடிய செயல்கள்.
சுற்றத்தவர் உறவினர்களுடன் உறவாடும்போது கனிவு, பணிவு, பரிவு, கரிசனை உரிமை என்பன கலந்து கொண்டால், உறவு நன்கு சுவைக்கும்.
"செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்" என்னும் ஒளவை வாக்கு பொன்வாக்கு செழுங்கிளை என்று குறிப்பிடப்படுவது உற்றார், உறவினர் சுற்றத்தவர்களை ஆகும்.
உறவினர்கள் கல்வியிலோ, செல்வத்திலோ, பதவி அந்தஸ்துகளிலோ நம்மிலும் பார்க்கக் குறைந்தவர்களாக இருப்பினும், அவர்களிடையே ஏற்றத்தாழ்வு பாராட்டலாகாது.
உறவினர்களுக்குத் துன்பம் எதிர்பாராத இழப்புகள், நஷ்டங்கள் ஏற்படும் போது மற்றைய உறவினர்கள கைகொடுத்து உதவவேண்டும். அக்கடமையைச் செய்யாதவர்கள் கொடுமன்த்தவர் ஆவர்.
ஒரு காலத்தில் செல்வமும் அதிகாரங்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்து போது, உறவும் உரித்தும் சொல்லி வந்து, நன்மை பெற்றுச் சென்றவர்கள் பின்னர் அவர்கள் வறுமையிலும், நோயிலும் நொந்து இழப்புக்களையும்
கஷ்டநஷ்டங்களையும் சந்தித்து உழலுகின்ற வேளை எட்டியும் பாராத நிலையையும் காண்கின்றோம். இத்தகைய மனப்போக்கைக் கொண்ட உறவினர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் இக்காலத்தில், "அற்றதளத்து அறுநீர்ப் பறவைகள்' போன்றவர்கள் அவர்கள், குளத்தில நீர் நிலைத்திருக்கும் வரையில் பறவைகள் வந்த வண்ணம் இருக்கும். குளத்தில் நீர் வற்றியவுடன் பறவைகள் அந்தப்பக்கம் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. நாம் பகமையாக இருக்கும் வரை வந்து வந்து பசுமையை உறிஞ்சிய உறவினர் பகமை இழந்து வற்றல் ஆகி நிற்கும் நம்மிடத்தே வரமாட்டார்கள். இந்த அவலநிலையைத்
39
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தற்காலத்தில் நிதர்சனமாகக் காண்கிறோம்.
தற்காலத்தில் நகரவாக்கங்கள் அதிகரிக்க அதிகரிக்க மக்கள் நகரவாசிகள் ஆக மாறிவருகின்றனர். தொழில்களின் நிமித்தம் மக்கள் நகரங்களில் குடியேறுகின்றனர். அதன் விளைவாக உற்றார், உறவினர். சுற்றத்தார் முதலிய இரத்த உறவினர்களை மறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மிக நெருங்கிய இன சன பந்துக்களை அறிந்து கொள்ளவும், அளவளாவவும், அவர்களின் இன்ப, துன்ப நிகழ்வுகளில் கலந்து கொள்ளவும், சுற்றம் தாங்கவும் இன்றைய காலகட்டத்தில் பலருக்கு முடிவதில்லை. மேலும் சொந்த நாட்டையே விட்டு வெளியேறி வேற்று நாடுகளில் குடியேறி வாழ்பவர்களுக்கு இப்படியான சுற்றத்தாரோடு உறவுகொள்ளுதல் என்பது முடியாத காரியமாகி வருகிறது. சுற்றம், உறவினர் சூழ வாழும் போது நாம் நமது கலாசாரம், பண்பாடுகளைப் பேணக்கூடியதாக இருந்தது. ஆனால் ஆங்காங்கே சிதறிவாழும்போது, என்னதான் விருப்பங்கள் இருந்தாலும், அவற்றை முறையாக அனுசரிக்க முடியாமல் உள்ளது என்பதையும் ஏற்கத்தான் வேண்டும்.
உறவினர் சுற்றத்தவர்களோடு பேணிக்கொள்ளப்பட வேண்டிய உறவு தற்காலத்தில் நலிவடைந்து வருகின்ற அதேவேளை, தானும் தன்பாடும் என்று உறவினரிடமிருந்து ஒதுங்கிவாழவிரும்புவோரையும் காண்கின்றோம். இவர்கள் சமூக, பொருளாதார ரீதியில், சுற்றத்தவர்களை விடச் சற்று உயர்ந்து விட்டவர்கள் என்று கருதிக் கொள்பவர்கள். தம்மிலும் சுற்றத்தவர்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணம் எப்படியோ இவர்களின் மனங்களில் பதிந்து விடுகிறது. அதனால் உறவினர்கள் உதாசீனப் படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்குரிய மதிப்புக் கொடுக்கப்படுவதில்லை. பொருள், பண்டம், பதவி, அந்தஸ்து என்பன வரும், போகும். அவற்றை நம்பி, உற்றார் உறவினர்களைக் கைவிடுதல், அவர்களோடு உறவுகொள்ளாது விடுதல் அறியாமை ஆகும். தமது உறவினர் கஷ்டப்படும் போது, இழப்புக்களை எய்தும் போது பக்க பலமாய் உதவிகள் நல்கி, அவர்களை அரவணைத்துப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஏனைய உறவினர்களுக்கு உண்டு. இதனையே மனிதாபிமானம் என்பர். அக்கடமைகளைச் செய்யப் பின்னிற்பவர் மனிதாபிமானமற்றவர்கள் ஆவர். இத்தகைய உறவினர் இருந்தும் இல்லாதவர்களே.
மனிதாபிமானம் என்பது உறவினர் சுற்றத்தவருடன் மட்டுப்படுத்திக்கொள்வது என்று எண்ணி விடக்கூடாது. அந்த எல்லைக்கப்பாலும், உலகளாவிய ரீதியில மனிதாபிமானம் செல்லவேண்டும். ஆனால் சுயநலம், தனிப் போக்கு, தன்னிச்சை மேலோங்கியுள்ள இக்காலத்தில் மனிதாபிமானம் சுற்றத்தார். உற்றார், உறவினர் வரையிலாதல் இருந்து விட்டாலே பெரியகாரியம் ஏன், உடன் பிறந்த அண்ணன், தம்பி அக்கா, தங்கை போன்ற சகோதரங்களிடையே தன்னிலும் இந்த மனிதாபிமானம் தற்காலத்தில் அருகி வருகிறதே. இவற்றிற்கெல்லாம் அடித்தளமாக உள்ளது, இன்று நாம் பெரிதும் கொண்டுள்ள பொறாமை தான். உற்றார், உறவினர், சுற்றம், குடும்பம் என்று இரத்த உறவும், உரித்தும் கொண்டவர்கள் மத்தியில் பொறாமை, எரிச்சல், புகைச்சல் என்பன இன்று கட்டவிழ்த்து

Page 25
விடப்பட்டுள்ளன. பொறாமை என்பது சேர்ந்தாரைக் கொல்லி. அதற்கு உறவு, உரித்து, சொந்தம், பந்தம் என்றால் என்னென்று தெரியாது. ஆழிப்பதைத் தவிர, ஆக்கத்தெரியாது. பொறாமையோடு உறவு கொள்பவர்கள் தம்மையும் அழித்துப் பிறரையும் அழிக்கும் பெற்றியர் ஆவர். அதனாலேயே பிறருடன் நல்லுறவு பேன விரும்புபவர்கள், பொறாமையுடன் உறவு கொள்ளல் ஆகாது என்று அறிவுடையோர் குறிப்பிட்டுள்ளனர். பொறாமை காரணமாக, உறவினர்கள் பிரிந்து நிற்பதைக் காண்கின்றோம். அவ்வாறு பிரிந்து நிற்பதால், அவர்களின் பலம் குன்றி விடுகிறது என்பதை உணர்கின்றார்களில்லை.
தற்காலத்து வாழ்க்கை முறை, உறவினர், சுற்றத்தாருடன் உறவு பேணி வாழ்வதற்குத்தடையாக உள்ளது. வாழ்க்கை வேகம் மிகவும் அதிகரித்து விட்டது. எதற்கும் "நேரமில்லை" என்று சொல்பவர்களையே பெரும்பாலும் சந்திக்கிறோம். எல்லோரும் காற்றாய்க் கடுகதியில் பறக்கிறார்கள். நடக்க நேரமில்லை, உணவு உன்னை நேரமில்லை, நின்று ஒருவரோடு கதைக்க நேரமில்லை. எல்லாமே அவசரம் அவசரமாக நிகழ்கின்றன. எதிலுமே பிடிப்பில்லை. எல்லா வேலைகளுமே செய்தவை பாதி, செய்யாதவை பாதி ஆக உள்ளன. ஒரு திருப்தியற்ற, அவதி வாழ்க்கையை நடத்துகிறார்கள். அது ஒரு இயந்திர வாழ்க்கையாக அமைந்து விட்டது.
இந்த நிலையில் உற்றார் உறவினரிடம் சென்று குசலம் விசாரித்தல், அளவளாவுதல், அன்பு செய்தல் என்பன எப்போவாவது மிக அருமையாகவே நிகழ்கின்றன. அதுவும் ஒரு சம்பிரதாயமாகப் பற்றற்ற நிலையில் நடைபெறுகின்றது. முன்னர்க்காலத்தில் இருந்தது போல சுற்றம் பேனல், உறவு கொண்டாடுதல் இனிமேல் காலங்களில் நிகழ்வது சிரமம் தான். என்றாலும், இயன்ற அளவிற்கு சுற்றத்தவர், உற்றார், உறவினர் ஆகியோரைப் பேணி அன்புறவு கொள்வதை வாழ்க்கைப்பழக்கமாகக் கொள்வது பலவிதத்திலும் நன்மை பயக்கும் என்பதை உணர்ந்து கொள்ளல் நன்று.
-1

10. சந்ததி இடைவெளி
சந்ததி இடைவெளி வர வர அதிகரித்துக் கொண்டு செல்கின்றது என்பது இன்றைய பொதுவான அபிப்பிராயம் ஆக உள்ளது. காலங்கள் தோறும் இளையோரும் இருந்திருக்கின்றனர்; அவர்களுடன் முதியோர், வயோதிபர் ஆகியோரும் வாழ்ந்திருக்கின்றனர். இந்த இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிந்துணர்வு, ஐக்கியம், ஒற்றுமையுடன் இருந்துள்ளனர். முரண்பாடுகள் எழவில்லை என்று சொல்லமுடியாது. ஆனால், பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றப்பட்டு வந்த வாழ்க்கை விழுமியங்கள், பண்பாடுகள், நம்பிக்கைகள் என்பன ஒரளவு முரண்பாடுகளைத் தனித்து, சந்ததி இடைவெளியையும் குறுக்கி வந்துள்ளன. இளையோர், முதியோருக்கிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பினும், விரிசல் அத்துணை பெரிதாக இருக்கவில்லை. காரணம், சமூக உண்ர்வு, சமூக உறுதிப்பாடு, கட்டுக்கோப்பு வழிவழி வந்த மனித விழுமியங்கள் என்பன வலுப்பெற்றிருந்தமையேயாகும். தற்போது, இவையனைத்தும் செல்வாக்கு இழந்த நிலையில் பலவீனப்பட்டுவிட்டன. எனவே தான், சந்ததி இடைவெளி நீண்டு கொண்டே செல்கின்றது.
சந்ததி இடைவெளி என்பதால் கருதப்படுவது இளையோருக்கும் முதியோருக்கும் இடையே அவர்களின் சிந்தனை, பேச்சு, செயல்கள் ஆகியவற்றில் காணப்படுகின்ற வேறுபாடுகளையாகும். இளையோர் ஆற்றலும், புதுமை காணும் ஆர்வமும் மிகுந்தவர்கள், முதியவர்கள் வாழ்க்கை அனுபவங்களும், பண்பாட்டு விழுமியங்களும் நிறைந்தவர்கள். முதியவர்கள் இளையோருக்கு வழிகாட்டிகள் ஆகவும், தமது பட்டறிவை இளையோருடன் பகிர்ந்து கொள்பவர்களாகவும் விளங்கவேண்டும் அதேவேளை இளையோரின் மிதமிஞ்சிய ஆற்றலையும் புதுமை நாட்டத்தையும், தனித்துவ உணர்வையும் முடக்கிவிட முதியவர்கள் முயலக்கூடாது. இளையோர்கள் அவர்தம் முன்னோர்கள் வழங்கிய அரும் பெரும் பண்பாடடு விழுமியப் பொக்கிஷங்களை அலட்சியம் செய்து விடல் ஆகாது. இந்தவகையில் இருதரப்பினருக்குமிடையில் உள்ள சந்ததி இடைவெளியை, இணக்கம் காண்பதன் மூலம் குறைத்துக் கொள்ள முடியும். அப்பொழுதுதான், இளைய சந்ததியினர் நல்வழிப்பட்டு, மனித விழுமியங்களை வாழுகின்ற சமூகத்தில் பேணி, மனிதத்தன்மையோடு சமூகத்தவருடன் உறவாடிய் பொறுப்புள்ள நற்பிரஜைகளாக உருவாக முடியும். இன்றைய இளைஞர்கள் நாளைய பொறுப்புள்ள சமூகத்தலைவர்கள். எனவே, இளையோர்களை ஒதுக்கிவிடுதல் வளர்ந்தவர்களுக்கு அழுகல்ல; வளர்ந்தோர்களின் பட்டறிவைப் பயன்படுத்தாது விடுதல் இளையோருக்கு முறையல்ல என்பதை இருசாராரும் உனர்ந்து கொள்ளுதல் அவசியம். எதிர்காலத்துச் சமுதாய நன்மை கருதி இளையோரும் முதியோரும் பரஸ்பரம் புரிந்துணர்வோடு செயல்படவேண்டும்.
முதியோர்கள், தாமும் ஒரு காலத்தில் இளையோராக இருந்தமையை அடிக்கடி
எண்ணிப்பார்க்க வேண்டும் அப்போதுதான் இளையோர்களின் உணர்வுகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொள்ள முடியும் அதேபோல இளையோர்களும் தாமும்
2

Page 26
ஒரு காலகட்டத்தில் முதுமைப் பருவத்தை அடைவார்கள் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல, தாம் முதுமை அடைந்தகாலத்தில், தம்மை அக்கால இளைஞர்கள் அலட்சியப்படுத்தினால், தாம் எத்துணை வேதனையை அடைவர் என்பதையும் கற்பனை செய்து LITE வேண்டும் அப்போதுதான் முதியோர்நிலையையும், அவர்களின் ஆதங்கத்தையும் இளையோர்கள் உண்ர்ந்து கொள்ளமுடியும்.
இன்றைய இளைய தலைமுறையினர், மனக் நொந்தளிப்புகளும், குழப்பமும் நிறைந்தவர்களாக உள்ளனர்; மனம் போன போக்கில் செல்கின்றனர்; மேலை நாட்டுக் கலாசாரங்களைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றி வாழ்க்கையைச் சீரழிக்கின்றனர்; நமது பண்பட்ட கலாசாரம், பண்பாடுகளைப் பிற்போக்கானவை என்று கூறி ஒதுக்கிவைக்கிறார்கள் வளரந்தவர்கள் தங்கள் சொற்களைக் கேட்கிறார்கள் இல்லையே என்று மனம் புழுங்குகின்றனர் இளைஞர்கள் கட்டுப்பாடற்றமுறையில் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டு, சமூகத்தில் தொல்ல்ை தருபவர்களாக உள்ளனர். என்று இவ்வாறு பலவகையாக இளையோர் பற்றிய விமர்சனங்களைத் தினசரி கேட்கின்றோம். இளைஞர்கள் என்றால் இபடித்தான் இருப்பார்கள் என்று அடித்துக் கூறுபவரகளும் உண்டு. அதேவேளை, இளைஞர்கள் வளர்ந்துவிட்டால் எல்லாம் சரிவந்துவிடும் என்று தமது அனுபவங்களை ஆதாரங்காட்டிச் சமாதானம் கூறும் பெரியவர்களும் உள்ளனர்.
எது எப்படியிருப்பினும், இளையோர், தம்மைப் பற்றி, தமது குறைகள் நிறைகள் பற்றி ஆற அமர சிந்தித்துப் பார்க்க வேண்டியது அவசியம், அவர்கள் என்றுமே விளையாட்டுப்பிள்ளைகள் அல்ல. படிப்பீடியாகப் பொறுப்புணர்வு, சமூக உணர்வு, கடமையுணர்வு ஆகியவற்றைப் பெறவேண்டியவர்கள். ஓரளவு வயது வந்ததும், தம்மைப் பற்றி ஆராயக்கூடிய, மதிப்பீடு செய்யக்கூடிய, குறை நிறைகளைக் கண்டுபிடிக்கக் கூடிய விவேகமும், அறிவும், திறனும் இளையோர்களுக்கு வந்துவிடுகின்றன. எனவே தம்மைப் பற்றிச் சிந்தித்தல் அவசியமாகின்றது. תעדון கட்டிக்காட்டுவதை விரும்பாவிடினும், இளையோர் தாமாகவே தம்மை அறிந்து கொள்ளலாம் தானே. தாமாகவே முயன்று, பிறரின் குறுக்கீடு இன்றி, தம்முடைய விவேகம் அறிவு ஆற்றலைக் கொண்டு தம்மைக் கண்டறிந்து கொண்டால் அது மிக உன்னதமானது. இளையோர்களுக்கு அதுமுடியும் என்பதில் ஐயம் இல்லை.
இளையோர்களின் பெறுமதி மதிப்பிடற்கரியது. எனவே, அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அலட்சியப்படுத்தப்பட முடியாதவர்கள் இங்கு வலியுறுத்தப்படவேண்டிய முக்கிய கருத்து என்னவெனில், இளைஞர்கள் முதலில் தமது பெறுமானத்தைச் சரிவர அறிந்து கொள்ள வேண்டும் சமூகத்தில் அவர்களது முக்கியத்துவத்தையும், வசிபங்கையும் செவ்வையாக உணர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் தம்மைத் தாம் அலட்சியம் பண்னக்கூடாது என்பது தெரியவரும். தம்மை அலட்சியப்படுத்திக் கொள்வதினாலேயே சமூகத்தில் பொறுப்பற்றவர்களாகவும், தொ ஸ்லைதருபவர்களாகவும் இளைஞர்கள் மாறிவருகிறார்கள் தன்னையே அலட்சியம் பண்ணுபவர், தரணியை ஆட்சியம்

செய்வது ஒரு விந்தையல்ல.
"தன்னைத்தான் காதலனாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால்."
என்பது வள்ளுவர் வாக்கு. எவனொருவன் தன்பால் அன்பு கொள்கின்றவனாக விளங்குகின்றானோ, அவன் பிறருக்குத் தொல்லைகள் தரமாட்டான். எவன் தன்னை இலட்சியம் செய்கிறானோ, அவன் பிறரையும் இலட்சியம் செய்வான். மாறாக, தன்னை அலட்சியம் செய்பவன், பிறர் அவனுக்கொருதுரசு அவர்களையும் அலட்சியம் செய்வான். பிறருக்கு இடையூறுகளை விளைவிக்க அத்தகையோர் பின்நில்லார்.
இன்று பெரும்பாலும் இளையோர்களிடையே நடை, உடை, பாவனை, நடத்தை, பண்புபேணல், சமூக ஒழுக்கம் எதிலுமே கவனக்குறைவு, அலட்சியப்பாங்கு, தான்தோன்றித்தனம், சிரத்தையின்மை என்பன கானப்படுவதை அவதானிக்க முடிகிறது. எதையும் பரவாய்ப்படுத்தாத ஒரு மனப்பாங்கு வளர்ந்து வருகிறது. இவற்றை வேண்டுமென்றோ, திட்டமிட்டோ அவர்கள் செய்வதில்லை என்று எண்ன வேண்டியுள்ளது. இத்தகைய நடத்தைக்கோலங்கள் அவர்களின் இயல்பாகவும், சுபாவமாகவும் மாறிவருமாப் போல் தோன்றுகின்றன. இவற்றைப் பிழைகளாகவோ, தாம் விடும் தவறுகளாகவோ இளையோர் கருதுவதாகவும் தெரியவில்லை. அவர்களும் அவ்வாறு ஏற்றுக்கொள்வதில்லை.
இளையோர்கள், தாம் வாழுகின்ற சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். சமுதாயத்திலிருந்து தம்மைப் பிரித்துப் பார்க்க முடியாது. எதிர்காலத்துச் சமுதாயத்தில் தாம் ஆற்றவேண்டிய பங்கு என்ன, என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும், அப்படியானால், தம்முடைய நடத்தைகள் அனைத்தும் சமுதாய நோக்குடையனவாகவும் சமுதாய நன்மையின் பொருட்டும் அமையவேண்டும் என்ற உணர்வு மேலிட, அவர்கள் அவ்வாறு ஒழுக முயற்சிப்பர். எனவே, இளையோர் மீது பலவந்தமாக எதையும் சுமத்தாமல், தாமே உணர்ந்து நல்ல முறையில் செயல்படக்கூடிய சூழ்நிலையை இளையோர்களுக்கு அமைத்துக் கொடுப்பதையே வளர்ந்தோர் தமது கடமையாகக் கொள்ளவேண்டும். இருதரப்பினரும் விலகியிருக்கக்கூடாது; இணைந்து செயற்படவேண்டும் இளைஞர் ஆற்றல்கள் விண்போகவோ, விரயமாக்கப்படவோ விட்டு விடக்கூடாது. இளைஞர் நடத்தைகளை அவர்களாகவே செவ்வையாக்கிக் கொள்ளும் போது தான்,
நிலைபெறுகின்றன.
இளைஞர்கள் தம்மைப்பற்றிய உணர்வையும், சமுதாய உணர்வையும் பெறுவதற்குச் சிறந்த சமூகச் சூழல் இருப்பது அவசியம். வளர்ந்தவர்கள் மேலாண்மை செலுத்தும் சமுதாயமாக உலகம் உள்ளது. சமூக, அரசியல், பொருளாதார, கலாசார நிறுவனங்களைப் பரிபாலனம் செய்தல், அவை பற்றிய திரமானங்கள் எடுத்தல், அமுல்படுத்துதல், என்பன யாவும் வளர்ந்தோர் பொறுப்பில் உள்ளன. இளையோர்களின் பங்களிப்பு மிக மிகக்குறைவு என்றே கூறவேண்டும்.
44

Page 27
வளர்ந்தோர் ஆதிக்கச் சமுதாய அமைப்பில், இளையோர்கள் ஆளப்படுபவர்களாகக் கொள்ளப்படுகிறார்களே தவிர, பங்காளிகளாக அவர்களை ஏற்றுக் கொள்ளும் நிலை இன்னமும் ஏற்படவில்லை. திர்மானங்கள், முடிபுகளை எடுப்பது ஒரு சாரார்; அவற்றின் படி ஒழுகுவது மற்றொரு சாரார் என்ற நிலைப்பாடு ஆரோக்கியமானது அல்ல. தீர்மானங்கள் எடுக்கப்படும் போது பங்குபற்றும் உரிமையைப் பெற்றவர்களே, அவற்றை ஏற்று ஒழுகுவர். நமது இளையோர்களைப் பொறுத்தவரையிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. இளையோர்களைத், தீர்மானங்கள் எடுத்துக் கொள்ளப்படும்போது, கணிப்பிற் கொள்வதில்லை; பின்னர் தீர்மானங்கள் அவர்கள் மீது திணிக்கப்படுகின்றன. இளைஞர்கள் அதிருப்தி கொள்கிறார்கள், தமது, அதிருப்தியை பல்வேறு வழிகளிலும். வடிவங்களிலும் வெளிப்படுத்த முயலுகிறார்கள். அவர்கள், இளம் பராயத்தவராக இருப்பதால், வெளிப்பாடுகள் பெரும்பாலும் வன்மை நிறைந்தே இருக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியது தான்.
வளர்ந்தவர்கள், இளையோரை அறிந்து கொள்ள வேண்டும். ஆதிக்க மனப்பான்மையோடு அவர்களை அணுகாமல், தோழமையுடனும், புரிந்துணர்வுடனும், பரிவுடனும் இளைஞர்களின் பிரச்சினைகளை நோக்க வேண்டும் அப்போதுதான் பரஸ்பரம் நல்லுறவைப் பேணமுடியும். மனித விழுமியங்களான அன்பு, உண்மை, நிதி, நடுவுநிலைமை, சாந்தி, அஹிம்சை, நட்பு ஆகியவற்றின் அடிப்படையில் வளர்ந்தோர், இளையோர் இடையிலான உறவு கட்டியெழுப்பட்படும் போதே, சந்ததி இடைவெளி குறைந்து உலகில் அமைதியும் சுபிட்சமும் நிலவும்.
11. வணிக விழுமியம்
“நம் வாழ்க்கையேவர, வர வியாபாரமாகி வருகின்றது.’ என்று பலர் சொல்லக் கேட்டுள்ளோம். வாழ்க்கையில் சுயநலமும், இலாப நோக்கும் மேலோங்கி நிற்பதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். அப்படியாயின், வியாபாரம் என்றால் தற்காலத்தில் இலாபத்தை மாத்திரம் நோக்காகக் கொண்ட ஒரு கருமம் என்ற கருத்து அதிலிருந்து பிறக்கின்றது. இலாபம் சம்பாதித்தல் என்ற ஓர் எண்ணம் ஏற்பட்டு விட்டால், அங்கு சுயநலம் மேலாண்மை செலுத்தத் தொடங்கிவிடும். சுயநல உணர்வு வளர்ச்சி பெறத் தொடங்கினால், அதன் வேகத்தைத் தடுத்து நிறுத்துவது மிகச் சிரமமான காரியம். அது ஆல் போல் தழைத்து அறுகுபோல், வேரூன்றிவிடும் தன்மையது. வியாபாரத்தில் முற்றும் முழுதாகச் சுயநலப் போக்கு உருவாகி வளர்வது அனுமதிக்கப் பட்டால், வியாபாரத்தின் மகத்துவம் பாதிப்படைந்துவிடும்.
விவசாயத்திற்கு நிகராக முக்கியத்துவம் பெறுந்தொழில் வியாபாரம், விவசாயம்
போன்று வணிகமும் பெருமையும் பழமையும் உடைய தொழில். மனிதசமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்திசெய்யுந் தொழில். அதனால்,
45

மனிதாபிமானத்துடன் அத்தொழில் ஆற்றப்படவேண்டும். ஆனால், தற்காலத்தில், வியாபாரத்திற்கும் மனித தர்மத்திற்கும் சம்பந்த மில்லாதநிலை உருவாகி வளர்ந்து வருவதையிட்டு விசனம் கொள்ளாதிருக்க முடியாது. வியாபாரத்தின் இந்த இழிநிலையைக் கருத்திற் கொண்டுதான், மனித வாழ்க்கை வியாபாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது. மனித வாழ்க்கையும் இழிந்து வருகிறது; வியாபாரமும் இழிந்து வருகிறது. இதுவே இன்றைய உண்மைநிலை.
வணிகம் மிக உயர்வான தொழில்; அதேவேளை மனித வாழ்க்கைக்குத் தேவையான தொழில். வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களையும் பண்டங்களையும், வணிகத்தின் மூலமாக எல்லோரும் பெற்றுக் கொள்கின்றனர். அந்த நிலையில், வணிகம், தர்மத்தின் அடித்தளத்தில் நின்று ஆற்றப்படவேண்டும். நடுவுநிலைமை என்ற பண்பு, பேணப்படவேண்டும். வியாபாரத்தில் சுரண்டலோ, கலப்படம் செய்தலோ; சரியான அளவு, நிறை என்பன பேணப்படாமையோ; பதுக்கல் செய்தலோ இடம் பெறும்போது, வியாபாரத்தின் தரமும் தர்மமும் குன்றிவிடுகின்றன; வியாபாரம் இழிநிலைக்குக் கீழ் இறங்கி விடுகின்றது. இது வியாபாரம் என்னும் தொழிலின் குற்றமன்று, கூர்ந்து பார்க்கின், வியாபாரம் செய்வோரின் குற்றமாகும். எனவே, வியாபாரம் உயர்நிலையில் வைத்துப் போற்றப்பட வேண்டுமாகில் வியாபாரம் செய்வோர் மனிதப் பண்புகள் நிறைந்தவரகளாக விளங்கவேண்டும். அப்படியாயின் வியாபாரத்தை மனிதாபிமானத்துடன் நீதிநெறி நின்று, மனித தர்மம் பேணிச் செய்யவேண்டும். சுயநலம், கொள்ளை இலாபநோக்கு என்பன இல்லாத இடத்து மனித தர்மம் தலையெடுக்கும். வியாபாரத்தோடு மனித தர்மம் இணையவேண்டியது அவசியமாகும்.
பண்டங்களை மாற்றிக் கொள்வதன் மூலம் கொடுக்கல் வாங்கல் செய்த பண்டைக் காலத்தில், பிரச்சினைகள் அதிகம் இருக்கவில்லை. பழங்காலத்தவர் தாங்கள் உற்பத்திசெய்த பொருட்களைப் பிறருக்கு விற்கவும், தம்மிடம் இல்லாத பொருட்களைப் பிறரிடமிருந்து வாங்கவும் பின்பற்றப்பட்ட முறை, பண்டமாற்று முறையாகும். இங்கு வியாபாரிகளின் பங்கு மிகக் குறவுை. இலாபம் அதிகம் பெற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஏக்கமும் அப்போது இருந்திருக்கவில்லை. மனிதப் பன்ைபுகள் பேணப்பட்டன.
நாகரிகம் வளர, வளர, மனிதர்களின் தேவைகளும் பெருகத் தொடங்கின. தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டுமே என்ற அங்கலாய்ப்பும் ஏற்பட்டது. பண்டமாற்று முறையினால் ஈடுகொடுக்க முடியாமல் இருந்தது. அதனால் வியாபார முறை நடைமுறைக்கு வந்தது. வியாபாரம் என்றால் பொருள்களை விலைக்கு விற்பனவு செய்தல்; விலை கொடுத்துப் பொருள்களைக் கொள்வனவு செய்தல் ஆகிய இரண்டு செயற்பாடுகளை உள்ளடக்கிய செயன்முறை ஆகும். பொருள்களை விற்பதன் மூலம் இலாபம் பெறுதல்; விலைக்கு வாங்குதல் மூலம் தேவைகளை நிறைவு செய்தல் என்பன வியாபாரத்தின்பிரதான குறிக்கோள்கள் ஆகும். வியாபாரத்தில் பணம் முக்கிய இடம் பெறுகின்றது. பணம் புழக்கத்தில் இருக்கும் சந்தர்ப்பங்களில், அதனை மிகச் சாவதானமாகக்
46

Page 28
கையாள வேண்டும். வியாபாரத்தில் கிடைக்கப் பெறுகின்ற இலாபம், பனப்பெறுமானத்திலேயே கணக்கிடப்படுகிறது.
வியாபாரம் என்னும் போது இலாபம் எதிர்பார்க்கப்படுவது ஒன்றும் தவறு அன்று. ஆனால் நியாயமற்ற முறையில் இலாபத்தைப் பெருமளவில் திரட்டமுயல்வது தான் தவறான காரியம், வியாபாரம், மூலமோ, வேறு எந்தத் தொழில் மூலமோ சம்பாதிக்கப்படுகின்ற பணம், தர்மத்திற்கு விரோதமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டதாக இருக்கக் கூடாது,
"நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழியவிடல்" என்பது வள்ளுவம், ஒருவனுடைய சம்பாத்தியம், ஆசைகாரணமாகத் தகாத வழியில் தேடியதாக இருப்பின், அது நன்மைதருவது போலத் தோன்றினாலும், அதனை அப்பொழுதே, அக்கணமே விட்டுவிடுதலே தர்மமாகும்.
தற்காலத்தில், வேறெந்தத் தொழிலையும் விட வியாபாரத்தில் மிகக் கூடுதலான வருமானம் பெறுதல் கண்கூடு. விற்பனையின் மூலம் இலாபத்தை அடைதல் வியாபாரத்தின் நோக்கமாக இருப்பினும், எதற்கும் ஓர் எல்லை உண்டு என்பதையும் மறந்து விடலாகாது. "ஆசைக் கோர் அளவில்லை" என்பார்கள். பனம் சேரச்சேரப் பணத்தின் மீதான ஆசையும் பன்மபங்கு பெருகுகிறது. மேலும் மேலும் பணத்தைச் சேர்ப்பதிலேயே கண்ணுங் கருத்தும் செலுத்தப்படுகின்றன. ஆசைப்பெருக்கம் துன்பத்திற்கு வழிவகுக்கிறது. எத்தனை கோடி பணம் சேர்க்கப்படுகின்றதோ, அத்தனைகோடி துன்பங்களும் உடன் சேர்க்கப்பட்டு விடுகின்றன. இந்த உண்மையை மனிதரில் எத்தனை பேர் உணர்ந்துள்ளனர்? பனம் சேர்க்கப் படலாகாது என்பதல்ல இதன்கருத்து. இலாபம் இல்லையென்றால், வணிகர்கள் வியாபாரத்தைக் கைவிட்டு விடுவார்கள். வணிகர்கள் வியாபாரத்தைக் கைவிட்டு விட்டால், மக்களுக்குத் தேவையான பொருட்களை எவ்வாறு அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்? மக்களின் தேவைகளை எங்ங்னம் நிறைவுசெய்வது? நாட்டின் உற்பத்திகளை எவ்வாறு சந்தைப்படுத்துவது? இப்படிப்பல கேள்விகள் எழலாம்.
விவசாயம் நாட்டின் முதுகெலும்பு என்கின்றனர். வாணிகமும் நாட்டின் முதுகெலும்பு தான். ஒரு நாட்டின் பொருளாதார அபிவிருத்தியும், வீழ்ச்சியும் பெரும்பாலும் வணிகர்களின் கரங்களில்தான் தங்கியுள்ளது என்பது உண்மையே. அத்தகைய வணிகப் பெருமக்கள் தமக்குரிய இலாபம் ஒன்றினை மாத்திரமே சிந்தையில் கொள்ளாது நுகர்வோர்களின் நன்மையையும், நாட்டின் நலனையும் கருத்தில் கொண்டு வாணிகம் செய்தல் வேண்டும். அதுவே தர்மமாகும்.
நுகர்ச்சி, பாவனைக்கு ஏற்ற தரமான பொருட்களையே நியாயவிலைக்கு உற்பத்தியாளர்களிடம் வாங்கிப் பாவனையாளருக்கு நியாய விலைக்கு விற்கமுயற்சி செய்யவேண்டும். தட்டுப்பாடுகளைத் தற்காலிகமாக ஏற்படுத்திப் பொருட்களை அதிக விலைக்கு விற்க எத்தனிக்கக் கூடாது. இங்கு கொள்ளை இலாபம் அடித்தலே நோக்கம் ஆகின்றது. இது மனிததர்மத்திற்கு முரண்பாடானது.
47

தரத்தில் குறைந்த பொருட்களை விற்பனை செய்தல், பழுதடைந்த பொருட்களை விற்பனை செய்தல்; கலப்படம் செய்தல்; பொருட்களை வேண்டுமென்றே பதுக்கிவைத்தல்; கள்ளக்கடத்தல் செய்தல் போன்றன வணிகப் பெருமக்கள் செய்யக்கூடாத தகாத செயல்கள். அவை சமூக விரோதச் செயல்கள். அரச தண்டனைக்கு மட்டுமல்ல; தெய்வ தண்டனைக்கும் உரிய குற்றங்கள் ஆகும். அரசந்தி, தெய்வநீதி, சமூக நீதி ஆகியனவற்றைப் புறக்கணித்து நடத்தப்படுகின்ற வாணிபம் ஈற்றில் திரா இடும்பைதரும் என்பது சத்தியவாக்கு, "தீவினை விட்டு ஈட்டல் பொருள்" என்பது ஆன்றோர் கூற்று. தீயவழிகளில் சென்று பொருள் ஈட்டுவதற்கு அஞ்சுதல் அறம்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிப்பணத்தைச் செலுத்தாது கள்ளக்கணக்குக் காட்டும் வர்த்தகர்கள், நாட்டுக்குத்துரோகம் இழைப்பவர்கள் ஆவர். கறுப்புப் னம், கறுப்புச் சந்தை என்றெல்லாம் வர்த்தக உலகில் சர்வசாதார ணமாகப் பசப்படுகின்றன. இவையாவும் முறையற்ற காரியங்கள். இதகைய சம்பாத்தியங்கள், சம்பாதித்தவர்களை அழவைத்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் ஒரு நாளைக்குத் திடீரென்று மறைந்துவிடும் செல்வம் நிலையாதது என்று சொல்லுவார்கள். அதிலும் அதர்ம வழியில் தேடப்படும் செல்வம் நிலைக்கும் என்று எவ்வாறு நம்ப முடியும். அரசு வரிச்சலுகைகளைப் பாவனையாளர் நன்மை கருதி வழங்கும் போது வர்த்தகர்கள், அதனால் வருகின்ற நன்மைகளைப் பாவனையாளர்களுக்கு வழங்காமல், அவற்றைத்தாமே முற்றும் முழுதாக அனுபவிப்பது என்பது அநியாயமான காரியம் ஆகும்.
வியாபாரத்தில் பொருட்களை விற்போர், பொருட்களைக் கொள்வோர் என இரு சாரார்கள் ஈடுபாடு கொள்கின்றனர். கிடைக்கும் இலாபம் இந்த இரு சாரார்களுக்கும் உரியது. நியாய விலையில் விற்பனை செய்வதன் மூலம் நுகர்வோர்களுக்கு இந்த இலாபத்தில் பங்கு கிடைக்கிறது. வியாபாரத்தில் கிடைக்கப்பெறும் முழு இலாபத்தையும் வியாபாரிகள் அடைவது என்பது கொள்ளை இலாபம் எனப்படும். இதனால் நுகர்வோர் சுரண்டலுக்கு உள்ளாகின்றனர். இது அறம் ஆகாது. நுகர்வோர்கள் பொருள்களை அகமலிவாகப் பெற்றுக் கொள்ளும் போது, முழு இலாபமும் நுகர்வோர்களையே சென்றடைகின்றது. அதனால் வியாபாரிகள் நஷ்டமடைகின்றனர். அதுவும் அறம் ஆகாது. வியாபாரத்தில் நீதி, நியாயம் என்பன பொருட்களை விற்போர், வாங்குவோர் ஆகிய இருசாராரிடையேயும், இலாபத்தைப் பகிர்ந்து கொள்கின்ற முறையிலேயே தங்கியுள்ளது. இலாபத்தை ஒரு பகுதியினர் மட்டும் தமதாக்கிக் கொள்வது வியாபாரத்தில் நீதியாகாது. வணிகர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்; பாவனையாளர்களும் பாதுகாக்கப்படவேண்டும் அதுவே தர்மம். இப்பாதுகாப்பு சட்டங்களினால் மாத்திரம் தந்துவிடமுடியாது. தற்காலத்தில் சட்டங்களை மீறுவோர் தொகை அதிகரித்துக் கொண்டே செல்கின்றது இது மனித விழுமியங்களை அவமதிப்பதாகும். சட்டங்களை மதித்தல், அனுசரித்தல் என்பன மனித விழுமியங்கள். எனவே, மனித விழுமியங்கள், மனிதர்களால் பேணப்படும் போதே பாவனையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் உண்மையான பாதுகாப்புக்கிடைக்கும்.

Page 29
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது அவற்றை நுகர்வோருக்கு எத்துணை பாரதூரமான தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றது என்பதை அவ்வாறு செய்பவர்கள் மனப்பூர்வமாக உணர்ந்து கொள்வார்களேயானால், அவர்கள் மனிதவிழுமியங்களை அறிந்து கொண்டவர்கள் ஆகிவிடுகின்றனர். அதன் பின், அந்தத் தவறினைச் செய்ய ஒரு போதும் முயலமாட்டார்கள்.
“பேராசை பெருந்தரித்திரம்” என்பது பழமொழி பேராசையினால் உந்தப்படும் போதுதான், பல்வேறு ஊழல்களும் அநீதிகளும் அநியாயங்களும் வியாபாரத்தினுள் புகுந்து விடுகின்றன. நேர்மை, நியாயம், நீதி பார்த்தால் வியாபாரம் எப்படிச் செய்வது, என்று சிலர் கேட்கின்றனர். வியாபாரம் என்றால் நாலுந்தான் இருக்கும் என்பது அவர்கள் வாதம். அதுதவறு ஆகும். வணிகத்துறையில் ஒழுங்கு கட்டுப்பாடுகள் தேவை; ஒழுக்க நெறிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். வணிகம் ஒரு சமூகசேவை; சமூகத் தொண்டு. என்ற உலர்வு வியாபாரம் செய்வோர்களிடம் முதன்மை பெறவேண்டும். சமூகநலனின் பொ ட்டே வணிகம் நடத்தப்படுகிறது.
மக்களின் தேவைகளைக் கண்டறிபவர்கள், வணிகர்கள். பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பவர்கள் அவர்கள். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் விவசாய, கைத்தொழில் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கு உதவுவோர், வணிகர்கள். உற்பத்திகளைப் பெருக்க உந்துசக்தியாக அவர்கள் விளங்குகிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதிகளில் அவர்களின் பங்கு மகத்தானது. இத்துணை சிறப்புக்களும் பெருமைகளும் கொண்ட வணிகத் தொழிலில் ஈடுபடுவோர் மனித விழுமியங்களைப் பேணி, மனித தர்மங்களின் அடித்தளத்தில் நின்று வியாபாரம் செய்யவேண்டும். அதிக இலாப நோக்கு, சுயநல நாட்டம் என்பவற்றைக் குறைத்துப் பொதுநலம், சேவை, மனிதநேயம், நேர்மை, சமூக நலன் ஆகியவற்றை அனுசரித்து வியாபாரம் செய்யும் போது, வணிகத்துறையும் களங்கமற்ற ஓர் உன்னத தொழிலாக மிளிரும். வியாபாரத்திற்கென ஒழுக்கம் உண்டு. அந்த ஒழுக்கத்தை ஒம்புதலே வியாபாரத்திற்கு அழகு என்பதை உணர்தல் அவசியம் ஆகும்.
“சமன் செய்து சீர்தூக்குங்கோல் போல் அமைந்தொருகால் கோடாமை சான்றோர்க் கணி”
- குறல் வியாபாரத்திற்கும் தராசுக்கும் தொடர்புண்டு. முதலில் தான் சமமாக இருந்து பின்னர் பொருளைச் சீர்துக்கிக் காட்டுவது தராசு. அந்தத் தராசு போன்று, நடுவுநிலைமைபோற்றி சான்றோர்களாக விளங்க வேண்டியவர்கள் வணிகர்கள். வணிகர்கள் சான்றோர்களாகத் திகழ வேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்

12. ஜீவகாருண்யம்
இம்சித்தல் என்பது தனக்கும் பிறருக்கும் இடைஞ்சல்கள், இடையூறுகள் தொல்லைகள், தொந்தரவுகள் என்பவற்றை ஏற்படுத்துதல் ஆகும். அதனால். நிம்மதி, சமாதானம் என்பன சம்பந்தப்பட்டவர்களில் குலைந்து விடுகிறது. வாழ்க்கையில் துன்பமும், மன உளைச்சலும் வேதனையும் நிறைந்து விடுகிறது. சிலர் திட்டமிட்டு, வேண்டுமென்றே பிறரை இம்சிக்கிறார்கள். இம்சித்தல் அவர்களுக்கு ஒரு பொழுது போக்கு ஆக உள்ளது. “பிள்ளைக்கு விளையாட்டு சுண்டெலிக்குச் சீவன் போகுதாம்’ என்றொரு பழமொழி நம்மிடையே நிலவுகிறது. சுண்டெலியைப் பிடித்து வைத்துக் கொண்டு, அதைத் தடியால் சிறிது சிறிதாக அடித்தும், ஊசியால் குத்தியும் சிறுவர்கள் விளையாட்டுப் பார்ப்பார்கள். அது நெளிந்து நெளிந்து வேதனைப்படுவதைக் கண்டு இரசிப்பார்கள். இவ்வாறு தும்பி, வண்ணத்துப் பூச்சி போன்ற ஜீவ செந்துக்களைப் பிடித்து இம்சை செய்து விளையாடுவதையும் காண்கின்றோம். அவற்றின் சிறகை ஒடித்து விட்டு, அவை பறக்கமுடியாமல் வேதனைப் படுகின்ற காட்சியைக் கண்டு ஆனந்தப்படும் சிறுவர்கள் பலரையும் பார்க்கிறோம். எம்மில் எத்தனை பேர் இத்தகைய அடாத செயல்களைக் கண்டு, அவற்றில் ஈடுபட்டிருக்கும் சிறுவர்களுக்குப் புத்திமதி கூறுகிறோம். சொல்லப் போனால், பெரியவர்களும் சிறுவர்களுடன் சேர்ந்து இரசித்து இன்பங்கொள்வதையே காண்கின்றோம். சித்திரவதை செய்வதிலும், சித்திரவதை செய்யப்படுவதை ஊக்குவிப்பதிலும், அதனால் அவ்வுயிர்கள் வேதனைப்படுவதைக் கண்டு இன்புறுவதிலும் எத்துணை ஆர்வம் மனிதர்களிடம் பொங்கிப் பிரவாகிக்கின்றது என்பதைச் சிந்திக்கும் போது, மனிதர்கள் இத்துணை கொடுமையாளர்கள் ஆகி வருகின்றார்களா, என எண்ணிக் கவலை கொள்ள வேண்டியுள்ளது.
தும்பியும், வண்ணத்துப்பூச்சியும், சுண்டெலியும் சிறு பிராணிகள் தானே; அவற்றைப்பிடித்துச் சிறுவர்கள் விளையாடுவது சகஜம்தானே; அதை வேடிக்கையாகக் கொள்ளாமல், அதை ஒரு பாவச் செயலாக ஏன் பெரிது படுத்த வேண்டும்; என்று பலர் நினைக்கலாம். சிறிதோ, பெரிதோ, உயிர் உயிர்தான்; வதை வதை தான்; வேதனை வேதனைதான் என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.
இந்த இடத்தில், “தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்” என்ற பழமொழியை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். சிறிய பராயத்தில் பழகிக் கொண்ட பழக்க வழக்கங்கள், நல்லதோ, கெட்டதோ, வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செல்லும். உயிர்களை வதைப்பதை ஒரு விளையாட்டாகவும் வேடிக்கையாகவும் செய்யும் சிறுவர்கள் வளர்ந்த பின், வன்செயல்களிலும் உயிர்க் கொலைகளிலும் நிச்சயம் ஈடுபடுவார்கள். அக்கொடுஞ் செயல்களின் விளைவாக, மற்றையோர் வேதனையால் துடிப்பதைப் பார்த்தும் இன்பம் அடைவார்கள். அவர்களிடம் ஜீவகாருண்யம் கிஞ்சித்தும் இருக்கமாட்டாது. பிறரை இம்சித்தல் என்பது ஜீவகாருண்யம் அற்றவர்களுக்கு ஒரு விளையாட்டு அல்லது வேடிக்கையாக இருக்கலாம்.
50

Page 30
அதனால் அவர்கள் இன்பம் பெறலாம். ஆனால் அவர்களின் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்ட அப்பாவிகள், ஆதரவு அற்றவர்கள், மெலியார்கள் எத்துணை அவஸ்தைக்கும் வேதனைகளுக்கும், சித்திரவதைக்கும் உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
இம்சித்தல், உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் நடத்தப்படுகிறது. பெரும்பாலும் சிறுவர்கள், பெண்கள், வயோதிபர்கள், ஊனமுற்றோர் போன்ற நலிந்தோர் மீது தான் இம்சித்தல் கூடுதலாகக் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர் சிறுமிகள், அவர்களின் உடல் ஆற்றலுக்கும், வயதுக்கும், விவேக வல்லமைக்கும் அப்பாற்பட்ட வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அதிகாலையிலிருந்து ஓய்வின்றி நள்ளிரவு வரை பல்வேறு வேலைகளைத் தொடர்ந்து செய்! வேண்டியுள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவருமே எசமானர்கள். அவர்கள் பணிக்கும் அத்தனை வேலைகளையும் செய்தே ஆகவேண்டும். அல்லாவிட்டால் திட்டு, வைவு, நச்சரித்தல் மட்டுமல்ல, அடி, உதை சித்திரவதைகளுக்கும் இவ்வேலைக்காரச் சிறுவர் சிறுமிகள் உள்ளாக்கப்படுகின்றனர். உடலாலும் உள்ளத்தாலும் பெரும் பாதிப்பை இச்சிறுவர்கள் அடைகிறார்கள். அவர்கள் யாருக்குச் சொல்லி அழுவார்கள். யார்தான் ஆறுதல் கூறித் தேற்றுவார்கள். இரக்கமற்ற கல்நெஞ்சக்காரர்களிடம் சிக்கிய இச்சிறுவர்கள் பிஞ்சுப்பருவத்தில் எத்துணை அல்லற் படுகிறார்கள். உடல்வேதனை, மனவேதனை, அச்ச உணர்வு என்பவற்றால் வெதும்பிப் போகிறார்கள். தங்கள் பிள்ளைகளைப் போன்றவர்கள்தானே இவ்வேலைக்காரச் சிறுவர்களும் என எண்ணும் இரக்ககுணமும் அருள் உள்ளமும் இந்த எசமானர்களுக்கு ஏனோ ஏற்படுவதில்லை என்பது தான் விளங்கிக்கொள்ள முடியாத புதிராக உள்ளது. சிறுவர்களை வேலைக்கமர்த்துவது சட்டப்படி குற்றம் அவர்களைக் கொடுமைப்படுத்துவது பெரும் அநீதி; மனிதாபிமானமற்ற செயல். தனக்கொரு நியாயம், பிறர்க்கு ஒரு நியாயம் ஆக நடந்து கொள்வது மனிததர்மமல்ல. இத்தனையையும் நன்கு தெரிந்து கொண்டவர்களே சிறுவர் சிறுமிகளை இம்சிக்கிறார்கள்; கொடுமைப்படுத்துகிறார்கள். தர்மம் எங்கே, நீதி எங்கே, ஜீவகாருண்யம் எங்கே என்று கேட்கத் தோன்றுகிறது.
கண்ணியமாக வாழும் உரிமை; பிறரின் நச்சரிப்பு, ஆய்க்கினை; கேலி, கிண்டல்: திட்டுக்கள், வசவுகள்; அடித்தல், உதைத்தல்; பாலியல் துஷ்பிரயோகம்; மற்றும் ஏனைய வன்முறைகள், இம்சைகள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை சிறுவர்களுக்கு உண்டு என்பதை ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் உரிமைகள் பட்டயம் கூறுகிறது. அங்கத்துவநாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. உடல் ரீதியாகவோ, உளரீதியாகவோ சிறுவர்கள் இம்சிக்கப்பட்டு அவர்களை ஊனமாக்குதல், நலிந்தநிலைக்கு இட்டுச் செல்லுதல் என்பன தார்மீகம் அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
வலது குறைந்த பிள்ளைகள், உளக்குறைபாடுகள் உள்ள பிள்ளைகள்.
51

ஊனமுற்ற பிள்ளைகள் என்போர் குடும்பங்களில் ஒரு சுமையாகவே கருதப்படுகிறார்கள். அவர்களை வீட்டில் வைத்திருப்பது குடும்பகெளரவத்திற்கு இழுக்கு என்றும் பலர் எண்ணுகிறார்கள். அதனால் அத்தகைய குறைபாடுகள் உடைய சிறுவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அவ்வாறு புறக்கணிப்பதும், வேண்டா வெறுப்பாக நடந்து கொள்வதும் அவர்களை இம்சித்தலாகவே அமைகின்றன.
உடல், உள ரீதியாக ஊனமுற்ற பிள்ளைகள் ஏற்கனவே நொந்து போயும், நலிந்தும் உள்ளனர். அவர்களின் குறைகளை அடிக்கடி சுட்டிக்காட்டி அவர்களை நச்சரித்துக் கொண்டிருப்பதாலோ வெறுத்து ஒதுக்குவதாலோ, காரியம் ஒன்றும் ஆகப்போவதில்லை. வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதாகவே அமையும். அவர்களைச் சுமையாகவோ; அவர்களைவைத்திருப்பது குடும்பத்திற்குக் கெளரவக்குறைவு என்றோ எண்ணித் தாமும் வேதனைப்படாமல், தம்மைத்தாமே இம்சித்துக் கொள்ளாமல்; சேவை செய்வதற்குக்கிடைத்த வாய்ப்பு இதுவாகும் என்று எண்ணி மனித விழுமியப் பண்போடு பெற்றோர்கள் தம் உணர்வுகளை உடன்பாடான முறையில் சீர் செய்து கொள்ளலாந்தானே! அந்நிலையை எய்திவிட்டால் எத்துணை நலன்கள் கிட்டும் என்பதை எண்ணிப்பாருங்கள். அதைவிட்டு இம்சை செய்வதால் யாருக்கும் நன்மையில்லை. மன அழுத்தமும். உளப்பிணியும் அதிகரிக்குமேயன்றி, குறையப்போவதில்லை. உடல் உளக் குறைபாடுகளுடைய சிறுவர்கள், குழந்தைகளின் பெற்றோர்களும், ஏனையோரும் அவர்களை எந்தவித உளத்தாக்கங்களுக்கும் உள்ளக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவர்களின் தார்மீகப் பொறுப்பாகும்.
இது சம்பந்தமாகச் சமூகத்தவர்களுக்கும் பொறுப்பு உண்டு என்பதை மறத்தலாகாது. உடல் ஊனமுற்றவர்கள், உளக்குறைபாடு உள்ள வர்களைச் சமூகத்தவர் சிலர் புறக்கணிக்கிறார்கள்; மேலுஞ்சிலர் ஊனங்களின் பெயர் கொண்டு அழைக்கிறார்கள். ஏற்கனவே நொந்து போயுள்ள இத்தரப்பினர் இம் மொழிப் பிரயோகத்தினைக் கேட்டு மனம் சஞ்சலப்படுகிறார்கள். குறைபாடுகளை வெளிப்படுத்திப் பகிரங்கமாகக் கேலி, கிண்டல் செய்யும் பொழுது அவர்கள் நரகவேதனையை அடைகிறார்கள் என்பதை இவர்களுக்கு எங்கே தெரிகிறது.
செவிப் புலனற்றவர்கள், வாய்பேச முடியாதவர்கள், திக்கிப் பேசுபவர்கள், கட்புலன் குறைந்தவர்கள், வலது குறைந்தவர்கள்; வளர்ச்சிக்குறைபாடு உடையோர், மந்த புத்தியுடையோர், சித்தசுவாதீனம் உள்ளவர்கள் ஆகியோர் நகைச்சுவைப்பாத்திரங்கள் அல்ல. அவர்களைக்கண்டால் கேலி செய்து அதனால் அற்பசொற்ப இன்பங்கள் பெற்றுக் கொள்வதற்காகப் படைக்கப் பெற்ற பிரகிருதிகள் அல்லர் அவர்கள் என்பதை உறத்தி செய்து கொள்ளவேண்டும். இம்சித்தல் என்பது இந்த வகையிலும் நடைபெறுகின்றது. இதைத் தவிர்த்துக் கொள்வது மேலான அறம் ஆகும். இத்தகைய உடல், உள ஊனமுற்றோர்; குறைபாடுடையோர் உள்ள குடும்பங்களையோ, பெற்றோர்களையோ சமூகப் புறக்கணிப்புக்கு உட்படுத்தாமல்பார்த்துக் கொள்ள வேண்டியதும் சமூகத்தவரின் தார் மிகப் பொறுப்பாகும். அதனால், ஊனமுற்றோர், அவர்களின்

Page 31
குடும்பத்தவர்களால் புறக்கணிப்புக்கு உட்படுத்தப்படாமல் தப்புதற்கு வழிவகுத்தவர் ஆவர்.
உடல் ரீதியாக அல்லது உளரீதியாக ஊனமுற்று, அதனால் குறைபாடுகளும் இயலாமையும் உள்ள சிறுவர் சிறுமிகள், எவ்வித இம்சைகள், தாக்கங்கள், புறக்கணிப்புகள், வன்முறைகள் என்பவற்றிற்கும் உள்ளாகாமல்; கண்ணியமும் கெளரவமும் தன்னம்பிக்கையும் நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கும்; வாழ்க்கையில் திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்வதற்கும், ஏற்ற உதவி, ஒத்தாசைகள், பங்களிப்பு என்பவற்றைச் சமூகத்தவர்கள் புரிதல் மனித விழுமியங்கள் சார்ந்த செயற்பாடுகள் ஆகும். மாறாக, அவர்களைத் துன்புறுத்துதல், இம்சித்தல், புறக்கணித்தல், கைவிடுதல் என்பன இரக்கமற்ற அரக்கச் செயல்கள் ஆகும். அத்தோடு மனித உரிமை மீறலும் ஆகிவிடும். மேலும், அவர்களின் விருத்திக்கும் வாழ்விற்கும் தேவையான கல்வி, தொழிற்பயிற்சி, போஷாக்கு மற்றும் சுகாதாரப் பராமரிப்புகள் புனர்வாழ்வு கலாசார ஆன்மிக விருத்தி, பொழுது போக்கு, வேலையில் அமர்த்தல் முதலிய நடவடிக்கைகளுக்குத் தடையாகவோ, இடராகவோ இருத்தல் இம்சை ஆகும். இத்தகைய சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் பெரும் சேவையாகும். சேவைபென்பது கருனையின் மேலீட்டால் செய்யப்படுவது; எதையும் பிரதியுபகாரமாக எதிர்பாராமல் செய்யப்படுவது. நலிந்தோர், ஊனமுற்றோர் ஆகியோரைL பிறரின் இம்சித்தலில் இருந்து பாதுகாப்பது, ஒம்புவது உண்மையில் பெருஞ் சேவையேயாகும்.
மெலியாரை வலியார் தாக்குவது வீரம் அன்று. அது கோழைத்தனம் மெலியாரை, வலியார் தாக்காமலும், இம்சிக்காமலும் விடுதல் உண்மையில் வீரம் ஆகும். அதையே பேராண்மை என்றும் பெரியோர் கூறுகின்றனர்.
சமூகத்தில் வாழுகின்ற எல்லோரும், குறிப்பாகப் பெற்றோர்கள், பிள்ளைகள் குழந்தைகள் ஆகியோரின் நலனோம்பலில் கண்ணுங்கருத்துமாக இருத்தல் வேண்டும். குறிப்பாக உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம், சூழல் துப்புரவு, விபத்துக்களைத்தடுத்தல், கல்வி வழங்கல் பாதுகாப்பு, அன்பு அரவணைப்பு. நல்லொழுக்கப்பண்பாடு பேனல் என்பவற்றில் கரிசனையோடு இருத்தல் மிக அவசியம், அவற்றில் கரிசனை கொள்ளாதவர்கள், அவர்களை இம்சித்தவர்களாகவே கொள்ளப்படுவர். இம்சித்தல் என்பது உடல் மாத்திரம் அல்ல. ஒருவரின் அடிப்படை உரிமைகளைபயும்; அத்தியாவசியத் தேவைகளையும் மறுப்பதும்; தடையாக இருப்பதும் கூட இம்சித்தல் ஆகும்.
சிறுவர்கள் சிலர், குடும்பத்திலும், பாடசாலைகளிலும் பாரபட்சத்திற்கு இலக்காகிறார்கள். அதனால் பெரும் பாதிப்பு அடைகின்றனர். பாரபட்சம் காட்டல் ான்பதும் இம்சித்தல் தான். நடுவுநிற்றல் என்னும் சீரிய பண்பினைக் ாவலிடுதலின் விளைவே பாரபட்சம் ஆகும்.
53

பாதகமான சூழ்நிலைகளில் பிறந்ததன் காரணமாகவும், வாழ்வதன் பயனாகவும் சிறுவர்கள் சிலர் இம்சைகளுக்கு உள்ளாகின்றனர். அதனால் நலிவுற்றவர்களாகவும், நலமிழந்தவர்களாகவும் வந்து விடுகின்றனர். இந்தத் தரப்பிற்குள், பெற்றோரின் கடுமையான வறுமையினாலோ குடும்ப உறவுச் சீரழிவினாலோ போர், வன்செயல் காரணமாக ஏற்பட்ட இடப் பெயர்வினாலோ: அகதிகள், ஆதரவற்றோர் ஆகிவிட்டமையினாலோ பாலியல் துஷ்பிரயோகம், கரண்டல்களுக்கு உள்ளாகியமையினாலோ மிக மோசமான இம்சைகளுக்கும் கொடும் பாதிப்புகளுக்கும் உள்ளாக்கப்பட்ட சிறுவர்கள், அடங்குவர்.
"பொருளாதாரச் சுரண்டவிலிருந்தும் பிள்ளையின் கல்வியை இடைநிறுத்தக்கூடிய அல்லது அதனில் குறுக்கீடு செய்யக்கூடிய ஏதேனும் வேலைபில் ஈடுபடுத்தப்படுவதில் இருந்தும் பிள்ளையின் ஆரோக்கியத்திற்கு அல்லது உடல், உள, ஆன்மிக, ஒழுக்க, சமூக முன்னேற்றத்திற்குக் கேடு விளைவிக்கக்கூடிய ஏதேனும் செயலிலிருந்தும் பிள்ளையைப் பாதுகாத்தல் வேண்டும்" என்று ஐக்கிய நாடுகள் சிறுவர் உரிமைகள் மீதான பட்டயம் கூறுகிறது. சிறுவர்களைக் கொண்டு உழைப்பிப்பதிலிருந்து பாதுகாப்பு: பாலியல் சுரண்டலில் இருந்தும் தவறான நடத்தையிலிருந்தும் பாதுகாப்பு போதைவஸ்துப் பிரயோகம், கடத்தல் என்பவற்றில் இருந்து பாதுகாப்பு சிறுவரை விற்பனைசெய்தலில் இருந்து பாதுகாப்பு: சித்திரவதை, சுதந்திரமறுப்பு என்பவற்றிலிருந்து பாதுகாப்பு: போராட்டங்களில் ஈடுபடுத்துவதிலிருந்து பாதுகாப்பு போன்றன சிறுவர்களுக்கு உறுதிப்படுத்தப்படுதல் மிக அவசியம். இவ்வாறான சிறுவர்களுக்கு இழைக்கப்படுகின்ற இம்சைகள் மனிதாபிமானத்திற்கு அப்பாற்பட்டவை. மனித விழுமியப் பண்புகளுக்கு முரணானவை. இம்சைகளைச் சிறுவர்களுக்கு இழைக்காமல் பார்த்துக் கொள்வதும் அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதும் தர்மம் ஆகும். வாழும் பிள்ளைகள், வளரும் பிள்ளைகளை செவ்வனே பாதுகாத்து, ஓம்பி, உடல் உள ஒழுக்க ஆரோக்கியம் நிறைந்தவர்களாக வளரச்செய்து அவர்கள் எதிர்காலத்தில் கட்சம், மகிழ்ச்சி, திருப்தி நிறைந்த பூரண வாழ்க்கையை எய்துவதற்கு உதவுவோமாக,
13. ஆரோக்கியவாழ்வு
சத்தியம், தர்மம், நீதி, சாந்தி, அன்பு அஹிம்சை, சேவை முதலிய உயர்வான மனித வாழ்க்கை விழுமியங்களைப் பேணி அறம், பொருள், இன்பம், விடுதல்ை நிறைந்த நல்வாழ்வினை அடைவதற்குக் கருவியாக நமக்கு இருப்பது எமது சரீரம் அல்லது உடம்பு ஆகும் உயிர் ஆனது உடம்போடு சேர்ந்து இருக்கின்ற நிலையிலேயே வாழ்க்கை என்பது நடைபெறுகின்றது. உடம்பு அழிந்து விடின், உடம்பை விட்டு உயிர் நீங்கி விடும். அத்தோடு, கிடைத்தற்கரிய மனிதப் பிறவியும், அதனால் நடைபெற்ற மனித வாழ்க்கையும் முற்றுப் பெற்று விடுகின்றன. எனவே உயிர்வாழ்க்கை நல்லதாக அமைவதற்கு, இறக்கும் வரை, தங்கள் சரீரத்தை வியாதிகள் அணுகாவண்ணமும், வேறு விதங்களில் சரீரத்திற்கு ஊறு நேராமலும் பாதுகாப்பது ஒவ்வொருவருக்கும் இன்றியமையாததாகும். முறையாக

Page 32
உடலோம்புதல், சரிரத்தை ஆரோக்கியம் குன்றாமல் பேணிவருதல் என்பன விழுமியங்கள் ஆகும்.
ஓர் உயிரின் உடலை வதைப்பதோ, இம்சை செய்வதோ, வேறு திங்குகளை அதற்கு இழைப்பதோ அல்லது கொலை செய்வதோ மனித தர்மம் ஆகாது. அவ்வாறே, தனது உடலை வருத்துவதோ, வதைப்பதோ அன்றேல் தன் உயிரை வலிய விடுவதோ கூடத் தர்மம் ஆகாது. தனது உடலாக இருப்பினும் சரி, பிற உயிர்களினது உடல்களாக இருப்பினும் சரி, அவ்வுடல்களைப் பேணிப் பாதுகாத்து
வருதலே தருமமாகும்.
"உடம்பார் அழியில் உயிரார் அழிவர்" என்கிறார் திருமூலர். உடம்பை, ஆரோக்கியம் கெடாமலும், கெட்ட நடத்தைகளால் சீரழிக்காமலும் வேறு விதத்தில் அழிய விடாமலும் பாதுகாக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.
சிலர் உடம்பினை அழுக்கென்றும் இழுக்கென்றும் கூறி, அதனைப் பேணாத வருத்துவர். உணவைச் சுருக்கியும், ஒறுத்தும் வாழ்வர். அதனால் உடல் ஆரோக்கியம் குன்றும் உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் அங்கு நல்ல உயிரும், உள்ளமும் தங்கி அவையும் ஆரோக்கியமாக விளங்க முடியும், SSLLLLaC LLLLL L LLLLLLaLL aLaLLLLSS TTTTCL TT TTTTTTT TTS
"உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே."
என்பது திருமூலர் திரு மந்திரம் உடம்பு ஒம்பப்பட வேண்டிய ஒன்று என்பதை இடித்துரைக்கிறார். தமது உடம்பை ஓம்புதல் அறமாகும். அவ்வாறே பி உடம்புகளுக்குத் தீங்கு செய்யாது, அவற்றைப் பாதுகாத்தலும் அறம் ஆகு
உடம்புக்குத் தீங்கு செய்வோர் யாரென்றால், "உடம்பொடு உயிரி நட்பறியாதார்' என்கிறார் திருமூலர். அத்தகையவர் "மடம் புகு நாய் போல் மயக்கத்தோடு இருப்பவர் மனிதத்தன்மைகளோடு கூடிய மனிதர்கள் யாவரும் உடம்பிற்கும் உயிருக்கு மிடையிலான நட்பினை நன்கு அறிவர். அவர்க உடம்பிற்கும் உயிருக்குமிடையிலான நட்பினைக் கெடுத்தும், உடம்பிலிருந் உயிரினைப் பிரிப்பதானகொலையினைப் புரிந்தும் வாழமாட்டார்கள்.
உடம்பிற்கும் உயிருக்குமிடையிலான நட்பினை நிலைத்திருக்கச் செய்யும் அறப்பணியாகும். எனவே, உடலாரோக்கியம் பேணுதல் மூலம் அறப்
செய்தவர்கள் ஆவோம்.
டடலின் அங்கங்களாக மெய் வாய், கன், மூக்கு செவி எனும் ஐம் பொறிகளு உட்கரணம் ஆகிய மனமும் இருக்கின்றன, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்ற
55
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ஆகியவற்றுடன் தொடர்பான அறிவைப் பெற, உடலின் கன்னே உள்ள ஐம்பொறிகள் உதவுகின்றன. அவற்றையும், மனத்தையும் உரிய முறையில் ஒம்புவதும் அவற்றைத் தான்தோன்றித்தனமாக அலைய விடாது கட்டுப்பாட்டினுள் வைத்திருப்பதும் உடல் ஒம்புதல், உடல் ஆரோக்கியம் என்பவற்றுள் அடங்கும். ஆரோக்கிய வாழ்விற்குப் புலன்களின் ஆரோக்கியம், மனத்தின் ஆரே ாக்கியம் என்பன பெரும்பங்களிப்புச் செய்கின்றன, ஞானேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற தகவல்கள், செய்திகள், அறிவு என்பவற்றை வெளியுலகிலிருந்து நமக்குப் பெற்றுத்தருகின்ற ஐம்புலன்களுடன் வாய், கை, கால், குதம், தய்யம் என்னும் ஐந்து கர்மேந்திரியங்களும் நமது உடலில் உள்ளன. இப்பத்து இந்திரியங்களும் உடம்பு பல்வேறு செயல்களைப் புரிவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. இவையாவும் கண்ணுக்குப் புலப்படுகின்ற உட ELING உறுப்புக்கள்.
எமது சரீரத்தில் கண்ணுக்குப் புலனாகாமலும், அதி உயர் ஆற்றலுடனும் விளங்குகின்ற ஓர் அற்புத இந்திரியம், மனம் என்னும் பெயரால் வழங்கப்படுகிறது. இந்த மனம், எல்லா இந்திரியங்களுக்கும் கட்டளைகள் பிறப்பித்து அவற்றை இயக்குகிறது. மனம் எசமான் இந்திரியங்கள் பணியாளர்கள் (BLITGö தொழிற்படுகின்றன. மனத்தின் பனிப்புகளுக்கேற்ப இந்திரியங்களின் செயற்பாடுகள்
gTLDID.
மனித வாழ்க்கை என்பதே மனிதன் தன் மனத்துடன் இடையறாது நடாத்துகின்ற முடிவில்லாத பனிப்போர் என்றே கூறிவிடலாம். இந்த மனதை எவன் ஒருவன் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வெற்றி பெறுகின்றானோ அவன் சான்றோன் ஆகின்றான். மனத்தை அடக்குவதில் அதனைத் தூய்மைப்படுத்துவதில் நாம் சதா முயற்சிகள் மேற்கொண்டபடி இருக்கவேண்டும். எவ்வளவோ தடங்கல்களும் இடையூறுகளும் இடையில் ஏற்படலாம். அவற்றை உறுதியுடன் எதிர்நோக்கி, அவற்றைநீக்கி, நமது புனித முயற்சிகளைத் தளரவிடாமல் முன்னெடுத்துச் சென்றால் இலக்கினை அடைதல் நிச்சயம். ஒவ்வொருமனிதனும் சான்றோன் ஆதல் வேண்டும் அதற்கு மனதைத் தூய்மைப்படுத்தும் முயற்சிகளை எடுக்கவேண்டும். ஆரோக்கியமான உடலில் தான் ஆரோக்கியமான மனம் இருக்கக் கூடிய சாத்தியம் உண்டு. தூய்மையான மனமே, ஆரோக்கியம் நிறைந்த மனம் என்பதை உணர்ந்து கெள்ளருதல் வேண்டும்.
நல்லொழுக்கம், நன்னடத்தை, மனிதவிழுமியங்களை வாழ்க்கையில் பேனல் என்பன நாம் எந்த அளவிற்கு நம் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துவதில் வெற்றியெய்தி இருக்கிறோம் என்பதைப் பொறுத்ததாக உள்ளன. மனத்தில் மாககள், அழுக்குகள் இருக்கும்வரை நல்லொழுக்க சிலர்கள் போல வெளியில் தோன்றினாலும், அவர்கள் புரிவது பொய்யொழுக்கமும் ஏமாற்று வித்தையுமேயன்றி, நல்லொழுக்கமல்ல. இத்தகையவர்கள் உலகில் பலர் இருப்பதனாலேயே, சமூக ஆரோக்கியம் குன்றி, குழப்பமும் கொந்தளிப்பும் அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆரோக்கியத்திற்கும் அதன் வழி அமைதி, நிம்மதி, சாந்தி என்பன தனிமனிதனிலும், சமூகத்திலும் ஏற்படுவதற்கும்.
ES

Page 33
ஒவ்வொருவரும் தத்தமது மனத்தையும், உடலையும் ஆரோக்கியமாகப் பேணிவருதல் மிக அவசியம் ஆகும்.
இனி, உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நம் முன்னோர் பின்பற்றிய ஆரோக்கிய வழிமுறைகள் சிலவற்றை ரீலறி ஆறுமுகநாவலர் திரட்டித் தந்துள்ளார். அவற்றைப் பார்ப்போம்
தினமும் சூரியன் உதிப்பதற்குமுன் நித்திரை விட்டெழுந்தால் மனம் தெளிவடையும் நரம்புத்துவாரத்து நீர் சுத்திபெறும் பித்தம் நீங்கும். உடல் சுறு சுறுப்பாக இயங்கும்.
காலையில் உடற்பயிற்சி ஒழுங்காகச் செய்து வரவேண்டும் குறைந்தது கால் நடையேனுஞ் செய்து கொண்டுவந்தால் சரீரம் இறுகும்; பசி உண்டாகும்; மலச்சிக்கல் நீங்கும். உடல் ஆரோக்கியம் சிறக்கும். காலைக்கடன்களைத் தினமும் ஒழுங்காக நிறைவேற்றவேண்டும். மலம், சலம் என்பவற்றை அடக்காது மோசனஞ் செய்தல் அவசியம். அப்போதுதான் வியாதிகள் உண்டாகாமல் பார்த்துக் கொள்ளமுடியும்,
தின்ந்தோறும் ஒழுங்காகச் சரிரத்தைத் தேய்த்து நீராடி, வரண்ேடும். உடலின் புறத்தூய்மை இதனால் பேண்ட்படுகின்றது.
காலையில் ஸ்நானம் செய்தலே சிறந்தது. வெந்நீரிலே ஸ்நானஞ் செய்வதை விடக் குளிர்ந்த தண்ணீரிலே நீராடுவது உடம்புக்கு அதிக உறுதியைப் பயக்கும். சூரியனின் கதிர்கள் படாத நீர் காற்றுப்படாத நீர், பாசி படர்ந்துள்ள நீர், சேறுள்ள நீர், இலையுதிர்ந்த நீர், புழுக்கள் உள்ள நீர், துர்நாற்றம் வீசும் நீர் என்பனவற்றில் நீராடல் ஆகாது. இத்தகைய அசுத்த நீரைப் பருகுதலோ, சமையலுக்குப் பயன்படுத்துதலோ கூடாது.
நீராடி முடிந்தவுடன், உடம்பிலே சிறிதேனும் ஈரமில்லாமல் துடைத்து விட்டுத் தோய்த்து உலர்ந்த வஸ்திரத்தையோ, ஆடையையோ தரித்துக் கொள்ளல் வேண்டும். உடம்பிலே ஈரஞ்சுவறும்படி நெடுநேரம் ஸ்நானம் பண்ணிய ஈரத்தோடிருத்தல் ஆகாது.
மன உழைப்பு, சரிர உழைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டு உடம்புகளைத்து இருக்கும்போதும், உணவு உண்ட உடனும் நீராடக்கூடாது.
உடுக்கிற வஸ்திரங்கள், ஆடைகளும்; படுக்கை, தலையனை என்பனவும் அழுக்கில்லாமல் சுத்தமாயிருத்தல் வேண்டும் படுக்கை விரிப்புக்கள், மெத்தைகள், தலையண்ைகள் என்பனவற்றை நாள்தோறும் வெய்யில், காற்று, படும்படி வெளியில் போடவேண்டும்

உண்ணும் உணவில் ஒர் ஒழுங்கு வேண்டும். கண்ட கண்ட நேரங்களில், அகப்பட்ட உணவுகள் எல்லாவற்றையும் போசனஞ் செய்யக் கூடாது. சத்துணவுகளை உண்ண வேண்டும் முன் சாப்பிட்ட உணவு முழுதும் சீரணமாகி, மிகுந்த பசி தோன்றிய பின்புதான் அடுத்த போசனஞ் செய்தல் வேண்டும் கெடுதிவிளைவிக்கக் கூடிய ஒவ்வாத, ஒத்துவராத உனவுப்பண்டங்களை உட்கொள்ளல் ஆகாது. உண்ணும் போது உணவை அளவுக்கு அதிகமாகவேனும் அற்பமாகவேனும் உண்னல் ஆகாது. போசனம் மிகுந்தாலும், குறைந்தாலும் நேர ஒழுங்கின்றி உண்டாலும் நோய் செய்யும்.
அதிக சூடுள்ள அன்னமும், உணவுப் பதார்த்தங்களும் பழையதும் ஊசிய அன்னமும், பழங்கறியும், புசித்தலாகாது. இரவிலே, தயிரும் மோரும், கீரைகளும் கிழங்குகளும், கனிகளும் உன்னலாகாது. போசனஞ் செய்த உடனே நூறடி தூரம் ஆதல் குறுநடை செய்தல் வேண்டும். போசனத்திற்குப் பின், உண்டகையோடை, கடுமையான மனமுயற்சியோ, உடல் உழைப்போ GHli||Elitetsllg|-
பணியிலும், மழையிலும், பெருங்காற்றிலும், கடும் வெய்யிலிலும் திரிதலால் நோய்வாய்ப்பட வேண்டி வரும், நல்ல தூய காற்றையே சுவாசிக்கவேண்டும். காற்றோட்டமுள்ள இடத்திலேயே படுத்துத்துங்குதல் வேண்டும். தோலிலே ஒளிபடுவது ஆரோக்கியத்தை விளைவிக்கும். தோலை ஊடுருவிச் செல்லும் ஒளி இரத்தத்திற்கும் நன்மை பயக்கும். அதனால், வாழுமிடங்கள் ஒளி, காற்று புகக்கூடியனவாய் அமைதல் வேண்டும். அவை குறைவாக உள்ள இடங்கள் மற்றும் இருட்டறைகளில் இருப்பவர்கள் உடல் வெளுத்துப் பலம் குன்றியவர்களாக இருப்பர்.
உட்கார்ந்து இருக்கும் போதும், நிற்கும் போதும், நடக்கும் போதும், வேலை செய்யும் போதும், உடம்பு குனிந்த நிலையில் இல்லாமல் நிமிர்ந்த நிலையில் உள்ளதாய் அமைதல் வேண்டும். குனிந்த நிலையில், மார்பு ஒடுங்கி, வயிறு தாழ்ந்து, தோள்கள் கவிந்து அழகு கெடுவதோடு, சரீரம் நோயடையும் பிள்ளைகள் தலையும், தோள்களும், முதுகும் கூனிப்போகும்படி ஒரு போதும் விடலாகாது.
மனமும் சரீரமும் தாம் செய்த முயற்சியளவுக்கேற்ப இளைப்பாறல் வேண்டும். அவை இரண்டையும் இளைப்பாற்றுவது நித்திரை. இராக்காலமே நித்திரைக்கு ஏற்ற காலம், பகல்நித்திரை வாதரோகங்களை விளைவிப்பதற்கு வித்தாகும். இராத்திரியின் பிற்பாகத்தில் நித்திரை செய்வதிலும் முற்பகத்தில் நித்திரை செய்தலே ஆரோக்கியத்திற்கு உகந்தது. இரவில் நெடுநேரம் கண்விழித்திருப்பதும் உடல் நலத்தைப் பாதிக்கும். இரவில் நித்திரை செய்யாதவரிடத்தே சித்தமயக்கம், மந்தம் போன்றன வந்து சேருவதுடன்; எரிச்சல், கோபம், அயர்ச்சி, சோம்பல் என்பனவும் வந்துசேரும். மிகுந்த நித்திரையும், விடிந்த பின்னரும் நெடுநேரம் உறங்குதலும் உடலுக்குக் கெடுதியை விளைவிக்கும். உண்ட உண்வு சமிபாடு அடையுமுன்னர் சயனிக்கலாகாது. வடக்குத்திக்கை நோக்கியபடி தலைவைத்துப்படுத்து உறங்கக் கூடாது.
58

Page 34
இரவிலே நெடுநேரஞ் செல்லுமுன், போசனஞ் செய்து கொண்டு அது சிரனமான உடனே சீக்கிரம் படுத்து நித்திரை செய்து, சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே விழித்தெழுந்துவிடப் பழகிக் கொள்ளல் வேண்டும் இதனால் ஆரோக்கியம்
உண்டாகும்.
உடல் ஆரோக்கியம், உள்ள ஆரோக்கியம்: அகப் புறத் தூய்மை என்பனவெல்லாம் சேர்ந்த நிலையிலேயே, மனிதன் நல்லொழுக்கத்தையும், நன்னடத்தையையும், நல்ல மனிதப் பண்புகளையும் பேணி, இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ முடியும். உடல் நோயுற்று, ஆரோக்கியம் கெட்டு வாட்ட முறும்போது உள்ளமும் தத்தளிக்கும், மனித விழுமியங்களும் மறக்கப்பட்டுவிடும் எனவே உடல் ஆரோக்கியம் பேணி, நல்வாழ்வு வாழ்வோமாக.
14. தூய்மை ஒருசிறந்த விழுமியம்
சுத்தமாக, நம்மையும், நாம் வாழுகின்ற சுற்றாடலையும் வைத்திருக்க வேண்டியது நமது பொறுப்பு. தூய்மை ஒரு சிறந்த விழுமியம் ஆகும். நாம் தூய்மையாக இருப்பது நமது ஆரோக்கியத்திற்காக மட்டும் அல்ல, மற்றையோருக்காகவும், அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும் தூய்மையைப் பேனவேண்டியுள்ளது. நாம் அசுத்த உடை அணிந்திருந்தால், எமது உடலிலிருந்து வியர்வை மனம் மேலெழுந்தால், எமக்குக் கிட்டவரப் பிறர் தயங்குவர். ஆகவே, பிறருக்கு நாம் இடைஞ்சலாக இருக்க நேரிடுகிறது. எனவே, உடலையும், அணியும் உடைகளையும், தினமும் நீரினால் சுத்தம் செய்யவேண்டும். ஒவ்வொருநாளும் காலையில் நீராடல், மற்றும் வேளையில் அவ்வப்போது கை, கால், முகம் கழுவுதல்; காலையிலும், இரவில் படுக்கைக்குப் போகுமுன்னரும் தினமும் பல்துலக்கல்; தினமும் உள்ளாடைகளையும் காலுறைகளையும் மாற்றுதல்; அவற்றை நீரில் அலம்பிச் சுத்தம் செய்தல்; செருப்பு, சப்பாத்துக்களை சுத்தமாக வைத்திருத்தல், சீப்புகளை அழுக்கேறாமல் துப்புரவு செய்து வைத்திருத்தல், உரியகாலங்களில் தலை முடியை வெட்டுவித்தல்; படுக்கை விரிப்புக்கள், தலைபனைகள், துவாய், கைக்குட்டை ஆகியவற்றைச் சுத்தமாகத் துவைத்து வெயிலில் உலர்த்திச் சுத்தமாக வைத்திருத்தல், நகங்களை வெட்டுதல் வாழுமிடத்தைக் கூட்டிப் பெருக்குதல் பயன்படுத்தும் பொருட்களில் அழுக்குப் படியாமல் பாதுகாத்தல் முதலிய தினசரி செய்யவேண்டிய கருமங்கள் ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தித் தூய்மையாக இருக்கும் வழக்கத்தை ஒவ்வொருவரும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இது இளம் பராயத்திலிருந்து நடைபெற்று வரவேண்டும்.
பெற்றோர், ஆசிரியர்கள் முதலியோர், பிள்ளைகளைச் சிறுபராயத் திலிருந்தே
59
 
 
 
 
 
 
 
 

தூய்மைபேணப்பயிற்றுவிக்கவேண்டும்; தொடர்ந்தும் நடைமுறையில் கடைப்பிடிக்கிறார்களா என்பதைக் கண்காணித்தும் வரவேண்டும் கண்ட கன்ட இடங்களில் எச்சில் துப்புதல், மலசலங்கழித்தல், கழிவுக் கடதாசிகளை வீசுதல், குப்பை கூழங்களைப் போடுதல், கழிவுப் பொருள்களைப் போடுதல் மூலம், நாம் வாழுகின்ற சுற்றாடலை மாசுபடுத்துகிறோம் என்பதைச் சிறுவர்கள் மட்டுமல்ல, வளர்ந்தவர்களும் கூடத் தற்காலத்தில் உணர்ந்து கொள்வதாகத் தெரியவில்லை, இவையாவும் மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கின்றன; மனிதர்களை நோயாளிகள் ஆக்குகின்றன; மரணத்திற்கும் ஏதுவாகின்றன என்பதை, ஏன் இன்றைய நாகரிக சமூகத்தில் நாம் உணர்ந்து கொள்ளத் தயங்குகிறோம் என்பதுதான் இன்றைய பெறுமதி மிக்க கேள்வி. "சுத்தம் சோறிடும் எச்சில் இரக்க வைக்கும்" என்றொரு பழமொழியுள்ளது. முன்னர்க் காலங்களில் ஒதுக்குப் புறங்களுக்குச் சென்று எச்சில் துப்புவார்கள். ஆனால் தற்பொழுது விட்டு முற்றங்கள், நடைபாதைகள், பஸ்தரிப்பு நிலையங்கள் மற்றும் மனிதர் உலாவும் இடங்களிலெல்லாம் துப்பல்களைக் காணலாம். இவற்றால் ஆரோக்கிபக் கேடுகள் ஏற்படுகின்றன என்பதைச் சிந்திப்பாரில்லை.
படுக்கையைச் சுத்தமாகவும் ஒழுங்காகவும் ஒவ்வொருவரும் வைத்திருக்கப்பழகிக் கொள்ளவேண்டும். காலையில் எழுந்ததும், தலையனைகள், படுக்கை விரிப்புக்களைச் சீர செய்து ஒழுங்காக்கிவிட வேண்டும் போர்வைகள், துண்டுகளை ஒழுங்காக மடித்து வைத்து விட வேண்டும். படுக்கைகள், விரிப்புக்கள், போர்வைகள், உறைகள் என்பவற்றை அவ்வப்பொழுது நன்றாக உதறிவெய்யிலில் காய விடுதல் அவசியம், மூட்டை போன்ற ஜெந்துக்கள், மற்றும் பூச்சிகள் என்பன படுக்கையில் அழுக்குள் இருந்தால்த் தான் அங்கு குடியேறும் ஒருவர் பயன்படுத்தும் படுக்கை, தலையனை, விரிப்பு போர்வை, உடைகள் என்பவற்றை மற்றையோர் பயன்படுத்துதல் ஆகாது, அதனால் நோய்கள் தொற்றும் அபாயம் உண்டு நீரில் தோய்த்துச் சுத்தம் பண்ணி வெய்யிலில் உலர்த்திய ஆடைகளை அணிதல் வேண்டும். உடைகளை அழுக்கேறிய நிலையில் அணிவதாலும்; பின்னர் கழற்றிக் காற்று, வெய்யில் படாத இடங்களில் ஒழுங்கின்றிக் குவியலாகப் போடுவதாலும், உடைகளிலிருந்து துர்நாற்றம் விசுகின்றது. பக்கத்திலிருப்பவரகளுக்கு அது இடைஞ்சலை ஏற்படுத்துகின்றது. தத்தம் உடலிலிருந்தோ, உடையிலிருந்தோ எழுகின்ற துர்நாற்றத்திற்கு அவர்கள் பழக்கப்பட்டு விடுகிறார்கள்; அதனால் அவர்கள் அதை உணர்ந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மற்றையவர். அந்தத் துர்நாற்றத்தைச் சகிக்க முடியாமல் மூக்கைப் பொத்திக் கொள்ள நேரிடுகிறதே என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும் சமூகத்தில் வாழும் நாம் பிறருக்கு எந்த விதத்திலும் தொல்லை தருபவர்களாக இருக்கக் கூடாது. குறிப்பாக, பாடசாலை மாணவர்கள் உடல் சுத்தம், உடைச் சுத்தம் பேணுவதில் விழிப்பாக இருக்க வேண்டும். சிலர் வெளி ஆடைகளை மினுக்கமாக வைத்திருப்பார்கள்; ஆனால் உள்ளாடைகள், பெனியன்கள் என்பவற்றை நாட்கணக்கில், வாரக் கனக்கில், தோய்த்துச் சுத்தம் செய்யாமல் அணிவார்கள். உள்ளாடை ஊத்தையாக இருந்தால் பிறருக்குத் தெரியவா போகிறது என்பது அவர்கள் வாதம். இது தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்வதாதும் தமது ஆரோக்கியத்தைக் கெடுப்பதோடு, மற்றையோருக்கும்

Page 35
இடையூறை ஏற்படுத்தும் செயலாக உள்ளது. ஒருவர் அணிந்த உடையை, இன்னொருவர் அணிவதாலும் சுகாதாரக் கேடுகள் விளையும், முக்கியமாகத் தோல் வியாதிகளுக்கு இது காரணமாகின்றது. நட்பு, சகோதரத்துவ உணர்வுகள், மேலீட்டால் ஒருவர் உடையை மற்றையவர் மாறி அணிகின்றனர். ஆனால் அந்தப் பழக்கத்தைத் தவிர்த்துக் கொள்ளுதல் நன்று.
எப்போதும் எளிமையான, தூய்மையான, பகட்டில்லாத ஆடைகள், உடைகளை அணிவதே சிறப்பாகும். நமது பண்டாட்டிற்கேற்ற உடைகளை உடுத்த வேண்டும். உடைகள் நமது மானத்தைக் காப்பதாக அமையவேண்டும்; அதேவேளை சுவாத்தியத்திற்கேற்ற தாகவும் இருத்தல் வேண்டும். நமது ஆடைகள், உடைகள் என்பன நமது பண்பாட்டினையும் கலாசாரத்தையும் வெளிப்படுத்துவனவாக அமைவதால், அவற்றில் கூடிய கவனமுடையவர்களாக நாம் இருத்தல் அவசியம். வெளிநாட்டினரின் ஒவ்வாத உடைகளை அணிந்து கொள்வதையும் அதனால் பிறருக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துவதையும் தவிர்த்து கொள்ளுதல் நன்று.
“கந்தையானாலும் கசக்கிக் கட்டு; கூழ் ஆனாலும் குளித்துக் குடி,” என நம் முன்னோர்கள் கூறி, அதன்படி ஒழுகி வந்தமையையும் நாம் மனதிற்கொள்ளவேண்டும் உடைகளை நீரினால் கழுவிச் சுத்தப்படுத்தி, வெய்யிலில் உலர்த்தி உடுக்கவேண்டும் என்பதையும்; தினமும் நீராடி உடலையும், உறுப்புக்களையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டுமென்பதையும் நம் முன்னோர்கள் உணர்ந்து செயற்பட்டமையை இப்பழமொழிகள் எடுத்துக் காட்டுகின்றன. ஆனால் தற்காலத்தில், சுத்தம் பேணல் என்பது கை விடப்பட்டு வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
காலைக் கடன்களைக் காலையிலேயே செய்ய வேண்டும். மலசலங்கழித்தல் மிக முக்கியமான காலைக்கடன் ஆகும். காலையில் நிகழ்த்தப்பட வேண்டிய கடமை என்பதாலேயே காலைக்கடன் என்ற பெயரைப் பெறலாயிற்று. இதையறியாத பலர், குறிப்பாக மாணவர்கள், பாடசாலைக்குச் செல்லும் அவதியில், காலைக் கடன்களை ஒழுங்காக நிறைவேற்றாமல் விட்டுவிடுகின்றனர். அதனால் ஆரோக்கியம் கெடுகிறது. மலச்சிக்கல், ஒழுங்காக மலங்கழிக்காமையினால் ஏற்படுகின்றது. சகல நோய்களுக்கும் மூலகாரணம் மலச்சிக்கல் என்பதை யாவரும் அறிவர். பாடசாலையில் சுகாதாரக் கல்வியைப் பயின்றும், பாடசாலையில் அதிக புள்ளிகளைப் பெற்றிருந்தும் கூட, கற்றவற்றை அன்றாடம் வாழ்க்கையில் கடைப்பிடிக்காது விட்டுவிடுவதனால், கற்றவர்க்குக் கற்றதனால் எவ்வித பயனும் இல்லாமல் போய்விடுகிறது."
“கற்க கசடறச் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத்தக”
என்பது வள்ளுவர் வாக்கு ஒன்றைக் கற்றால், கற்று அறிந்தபடி ஒழுகவேண்டும். “கற்றாங்கு ஒழுகு” என்பது தலை சிறந்த மகுடவாசகம். சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம், போஷாக்கு, உடைப்பழக்கம் இப்படிப் பலவற்றைச் சுகாதாரக்
61

கல்வி போதிக்கிறது. ஆனால் என்ன பிரயோசனம். முன்னரைக்காட்டிலும், அறிவுடையோர் வாழுகின்ற இக்காலத்தில் தான், சுகாதாரச் சீர்கேடுகள், அழுக்குகள், அசுத்தங்கள் பல்கிப் பெருகியுள்ளன.
காலையில் எழுந்ததும் பல்துலக்குதல் மற்றொரு காலைக் கடன் ஆகும். இந்தக் கடமையையும், பலர் உதாசீனஞ் செய்து வருகிறார்கள். பல்துலக்கி, நாக்கு வழித்து, வாய் அலம்பி, முகங்கழுவிய பின்னரே, எதையும் அது பானமாக, இருக்கலாம், உட்கொள்ள வேண்டும் என்பதைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் ஆரோக்கிய வாழ்விற்கு நன்று. “ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பர். பிரஷ்ஷைப் (Brush) பயன்படுத்துபவர்கள், அதனைச் சுத்தமாக நன்கு கழுவி தூய்மையாக வைத்துப் பேண வேண்டும். காலையில் போலவே, படுக்கைக்குப் போவதற்கு முன்னர், இரவிலும் பற்களைத் துலக்க வேண்டும். பற்களைச் சுத்தமாக வைத்திருத்தல், முழு உடல் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு அவசியமாகும். சிறு பராயத்தில், தம் பற்களைச் சரிவரப் பாதுகாக்காதவர்கள், பின்னர் பலவித நோய்களுக்கு ஆளாக நேரிடும். “பல்லுப் போனால் சொல்லுப் போகும் ” என்பார்கள். சொல்லுமட்டுமல்ல, உடல் ஆரோக்கியமே போய்விடும் என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும். குளியல் அறை, மலசலசுவடம் என்பவற்றை நன்கு கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். மற்றவர்கள் அருவருப்பின்றி அவற்றைப் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
நீராடுதலுக்குக் குளிர்ந்த தண்ணிர் ஏற்றுது. இரத்த ஓட்டம் சீரடைகின்றது, தேகமும் சூடு நீங்கிப் பொலிவு பெறுகின்றது. குளிக்கும் போது உடம்பில்
நீரை அள்ளி மேலில் ஊற்றிவிட்டு விரைவாக வெளியேறுகிறார்கள். “காகக் (S 缸 ’ என்று சொல்வார் r. ல் எதி - d. உபயோகித்த சோய்பையோ, துவாய், மற்றும் துணிகளையே பயன்படுத்தக்கூடாது. குளித்து முடிந்ததும், துவாயினால் உடம்பைத்துவட்டி ஈரத்தை எடுத்துவிட வேண்டும். துவாய், தினமும் நன்றாகத் துவைத்து, அலம்பி வெய்யிலில் உலர்த்தப்படவேண்டும் தங்கள் த் தாங்களே உடனுக்குடன் துவைத்துச் கொள்வது நல்ல பழக்கம். சிலர் ஊத்தைத் துணிகளையும், உடுப்புக்களையும். றயிலோ, வேறு ரிலோ நாட் க்கில் கேக்கி த்திருப்பார்கள். அவ்வாறு செய்தல் நல்ல பழக்கம். அன்று. தண்ணிரையும், சோப்பையும் சிக்கனமாகப் பயன்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும்.
உடைகளில் ஏதாவது ஓரிடத்தில் கிழிசல் ஏற்பட்டுவிட்டால், அதை உடனே தைத்து விட வேண்டும். “உரிய காலத்தில் இடப்படும் ஒரு சிறிய தையல், மிகப்பெரிய நஷ்டத்தைத் ಬ್ಲೌಹಿ உதவுகிறது” என்றொரு பழமொழி உண்டு. "A Stitch in time saves nine என்று அதனை ஆங்கிலத்தில் கூறுவார்கள். எதையும் விணாக்கவோ, விரயமாக்கவோ கூடாது. பாவிக்கக் கூடிய அளவிற்கு ஆடைகளைப் பாவிக்க வேண்டும். எவ்வாறாயினும் சுத்தம் தான் முக்கியம்.
சிலர் கைக்குட்டைகளை எடுத்து விரித்தால், அதன் துர்நாற்றத்தை,
62

Page 36
பக்கத்திலுள்ளவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாதபடி இருக்கும் கைக்குட்டைகள் அடிக்கடி கழுவிச் சுத்தம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். தும்மும் போதோ, இருமும் போதோ கைக்குட்டைகளைப் பயன்படுத்த வேண்டும். பிறருக்கு இடையூறுதரக் கூடிய விதத்தில், தும்மல் இருமல், அபான வாயுவை வெளியேற்றல், கொட்டாவி விடுதல், நெட்டிமுறித்தல், தலைசொறிதல், மூக்கிற்குள் கைவிட்டுத் தோண்டுதல், காதைக்குடைதல், உடம்பைச் சொறிதல், கைக்குட்டையால் விசுக்குதல், துணியை உதறுதல், மயிர் கோதுதல், நகங்கடித்தல் எச்சில் உமிழ்தல் தூங்கிவழிதல், பெருமூச்செறிதல், தலைசீவுதல், பகைத்தல் என்பன நடைபெறக்கூடாது. இத்தகைய செயல்களைப் பொதுவாகப் பிறர் முன்னிலையில் செய்தல் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், பிறர் அவற்றினால் அருவருப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
எமது உடல், மனம் ஆகியவற்றுடன், நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள், துணி மணிகள், உடைகள், மற்றும் நாம் வாழும் இடம், சுற்றாடல், கருவி உபகரணங்கள் ஆகிய அனைத்தையும் தூய்மையாகவும், புனிதமாகவும், சுத்தமாகவும் வைத்திருத்தல் அவசியமாகும்.
புறந்துய்மை போன்றே அகந்தூய்மையும் நன்கு பேணப்பட வேண்டியது முக்கியமாகும். கல்வி கற்கும் சிறார்களுக்கு மன ஒருமைப்பாடு அவசியம். மனத்தைப் புலன்களின் வழியில் செல்லவிட்டால் படிப்பு நடவாது, ஆகவே, மனத்தூய்மை அவசியம். மனத்தில் தீய எண்ணங்கள், கொடிய சிந்தனைகள் என்பன எழுவதற்கு இடம் தரல் ஆகாது. காட்சி மூலமும், கேட்டல் மூலமும், முகர்தல் மூலமும், சுவைத்தல் வாயிலாகவும், பரிசித்தல் மூலமும் கெட்டவை, கூடாதவை, ஒவ்வாதவை மனத்தில் சென்று படிவதற்கு அனுமதிக்கக் கூடாது. இவ்வாறு நடந்து கொண்டால் மனந்தூய்மை மாசுபட்டு விடும் மாணவப்பருவத்தில், பாலுணர்வைத்துரண்டும் நூல்களைப் படிப்பதும், திரைப்படங்களைப் பார்ப்பதும் தவிர்க்கப்பட வேண்டும். அவ்வாறே கெட்டவர்களின் தோழமையும் மனத்தை மாசுபடுத்திவிடும்.
மாசு மறுவற்ற துயவாழ்க்கையும்; தூய்மையான சிந்தனைகளும், பேச்சுக்களும். செயல்களும் உடையவர்கள் ஆன்மிகரீதியிலும், உலகியல் ரீதியிலும் வியத்தகு வலிமையையும் பலத்தையும் பெறுகிறார்கள். அவர்களைக் கீழோர் வெல்லமுடியாது. எனவே இளமையிலிருந்தே, அகந்தூய்மை புறந்துய்மையுடன் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முயலுதல் விவேகமுடைமையாகும்.

15. உழைப்பு உயர்வுதரும்
சீரும் சிறப்புமாக நாம் வாழவேண்டும் என்பது நம் ஒவ்வொரு வரினதும் குறிக்கோளாக உள்ளது. அக்குறிக்கோளை அடைவதற்கு நாம் ஏதாவது தொழில் செய்ய வேண்டும். தொழிலையும் நேர்மையான வழியில் செய்ய வேண்டும். நேர்மைவழி யென்பது கடின உழைப்போடு சம்பந்தப்படுகிறது. உழைப்பினால் மட்டுமே உயரமுடியும். உழைப்பினால் பெற்ற உயர்வுதான் நிலைத்திருக்கும்; நீடித்திருக்கும் உழைத்துப் பெற்ற பொருள், அதிலும் அறவழியில், நேர்மையாகப் பாடுபட்டு உழைத்துப் பெற்ற பணம், பொருள், சொத்து என்பவற்றிற்கு, அந்த நல்ல வழியிலான உழைப்பே, தகுந்த காப்புறதியாகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வேறு காப்புறுதி தேவையில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ளலாம்.
கடின உழைப்பினால், நேர்மையான வழியில் உழைத்துச் சம்பாதித்த பணம், ஒரு சமயம் திருட்டுப்போனாலும் கூடத், திரும்பிவரும் என்பதில் சந்தேகமில்லை. “ஏலேலசிங்கன் தேடிய பொருள் தானே போய்த், தானே வரும்.” என்றொரு பழமொழி உண்டு. ஏலேலசிங்கன் என்பவர் திருவள்ளுவரின் மாணவர். வள்ளுவர் வழியை வழுவாது கடைப்பிடித்து வாழ்ந்தவர். அறவழியில் பொருள் ஈட்டியவர். அவர் ஒரு பெரும் கப்பல் வணிகர். ஒருமுறை கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்ட பொருள்கள் காணாமல் போய்விட்டதாக ஏலேலசிங்கனுக்குச் செய்திகிடைத்தது. வள்ளுவர் கூறிய அறவழியில் நின்று வாணிபம் செய்த தமக்கு ஏன் இப்படி ஓர் அவலம் வரவேண்டும் என்று மனம் நொந்தவராய், தமது குறையை எடுத்து வள்ளுவரிடம் கூறினார். “அறம் பொய்க்காது; நேர்மை வழியில் தேடிய பொருள் என்றால், நிச்சயம் அப்பொருள் திரும்பி வந்தேதீரும்” என்று வள்ளுவர் உறுதியாகக் கூறி, ஏலேலசிங்கனை நம்பிக்கையோடு இருக்கும்படி சொன்னார்.
அத்துனை வலிமை உண்டு என்பதை இக்கதை உணர்த்துகிறது.
அறத்தில் வைக்கின்ற ஆழமான நம்பிக்கை விண் போவதில்லை. அந்த நம்பிக்கை காலப் போக்கில் உறுதியான தன்னம்பிக் கையாக உருப்பெற்று வாழ்க்கையைத்துணிவோடு எதிர் கொள்ளக்கூடிய மனவலிமையையும், மனத்திடத்தையும் மனிதனுக்குக் கொடுக்கிறது.
உழைக்கத் தெரிந்தால் மட்டும் போதாது. கள்ளக் கடத்தல் காரர்களும், கலப்படம் செய்வோரும்:, திருடர்களும், ஏமாற்றுக் காரர்களும் ஒருவகையில் உழைப்பாளிகள் தான். மூளை, உடல் இரண்டினாலும் உழைக்கின்றார்கள். பெருந்தொகை பணத்தையும் சேர்க்கின்றார்கள். மனித முயற்சியோ, உழைப்போ அறத்தை அலட்சியப்படுத்துவதாக அமையக் கூடாது. மனித உழைப்பிற்கு அறம் உறுதுணையாக வேண்டியது அவசியம்.

Page 37
அறத்தின் வலிமையை மனிதர்கள் உணரும் போது, அவர்கள் ஈடுபாடுகொள்கின்ற முயற்சிகள், தொழில்கள் யாவும் புதிய பலம் பெறுகின்றன. அறமும் பொருளும் இணைய வேண்டும் அப்பொழுது தான் ஈட்டிய பொருள், பாழ்பட்டுப் பழுதுபடாமல், பரம்பரை பரம்பரையாகத், தொடர்ந்து பயன்தரும்.
“தீவினை விட்டு ஈட்டல் பொருள்” எனப்படுகிறது. கெட்ட வழிகளில் பொருள் சம்பாதிக்கப்படக்கூடாது; என்பதே இதன் பொருள்.
அறம், பொருள்தேடுவோருக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. அதனால் அறத்தை முன்வைத்துப் பொருள்தேட முயலவேண்டும். அறம் என்னும் ஒளி சரியான திசையைக் காண்பிக்கும். அத்தோடு சரியான பொருளையும் தேடிக்கொள்ள உதவும்.
அறத்துடன் அன்பு பூண்டவர்கள்தான், தாம் தேடிய பொருளைப் பிறருக்கு உதவி செய்து அவர்களை வாழ்விக்கக் கூடிய பண்பு கொண்டவர்களாக இருப்பர். எல்லாத் தொழில்களும் மகத்துவமானவை என்று எண்ணவேண்டும். தொழில்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லை. இது உயர்வான தொழில்; இது கேவலமான தொழில் என்று எதுவும் இல்லை. மனிதர்கள்தான் இவ்வாறு கற்பனை செய்து கொள்கிறார்கள். அது தவறு. தொழில் செய்கின்ற விதத்தில், நேர்மையாகச் செய்கின்ற தொழில், நேர்மையினமாகச் செய்கின்ற தொழில் என்று பாகுபடுத்தினால், நேர்மையாகச் செய்கின்ற தொழில் உயர்ந்தது என்பதில் சந்தேகமில்லை. அதே தொழில் நேர்மையினமாகச் செய்யப்படுமேயானால், அது கீழ்மையான தொழில் என்பதிலும் ஐயமில்லை.
வாழ்க்கைக்கு நிச்சயம் ஒரு தொழில் தேவை. தொழிலைத் தேர்ந்தெடுத்த பின்னர், அதனை ஊக்கத்துடனும் சிறப்பாகவும் செய்துவரவேண்டும். தொழிலை ஏற்றுக்கொண்ட பின்னர், அது பற்றி குறைத்து மதிப்பிடுவதும்; சிறியதும் சிறப்பில்லாததும் என்று சதா மனத்தை உறுத்திக்கொண்டு இருப்பதும்
தொழிலை ஏற்றுக் கொண்டதும், அதைத்தெய்வமாகப் போற்றிவரவேண்டும். “செய்யுந் தொழிலே தெய்வம்” என்று ஏற்றுக் கொள்வது எமது மரபு. அடுத்து அத்தொழிலில் முழுமையாக ஈடுபாடுகொள்ள வேண்டும். தொழிலில் வெற்றி பெறுவதற்கு இத்தகைய ஈடுபாடு மிக அவசியம். தொழிலை நேசிக்க வேண்டும். கள்ளமில்லாமல் உழைக்க வேண்டும். உழைப்பு என்றால் பாடுதான். ஆனால் பாடு பட்டால் தான் பட்டத்திற்கு இருக்கமுடியும் என்பதையும் மறுத்தலாகாது. எடுத்த கருமத்தைச் செம்மையாகச் செய்து வெற்றிகாண வேண்டும். “செய்வன திருந்தச் செய்’ என்று ஆன்றோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
உழைப்பு ஒரு புறம்; மறுபுறம் செவ்வையாகக் கருமத்தை ஆற்றுதல் முக்கியம்.
தொழிலில் வெற்றிபெறுவதற்கு உழைப்பும்; செம்மையும் மிக அவசியம் என்பதை உ.ணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு தொழிலைச் செய்யும் போது,
65

மனங்கோணக்கூடாது. அதன் வெற்றியில் சந்தேகம் கொள்ளக் கூடாது; பாதியில் கைவிட்டுவிடக்கூடாது; சலித்துச் சோர்ந்து விடுதல் ஆகாது. “விடாமுயற்சி வெற்றிதரும்” என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும். “நல்ல தொடக்கம் பாதி வெற்றி” என்பார்கள். ஒரு தொழிலைத் தொடங்கும் பொழுதே அலுத்துக் கொண்டால் அது எப்படி நல்ல தொடக்கமாக அமையும்,
செய்வன எல்லாம் செவ்வனே செய்வதோடு, எடுத்த கருமத்தை உறுதியான ஊக்கத்தோடும், சிரத்தையோடும், மகிழ்ச்சியோடும், தன்னம்பிக்கையுடனும், துணிவுடனும் செய்ய ஒவ்வொருவரும் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். சிலர் கருமத்தை ஒத்திவைக்கும் பழக்கமுடையவர்களாக உள்ளனர். “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” என்றொரு பழமொழியுள்ளது. “பின்னையென்பதும் பிறகு என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்’ என்பர். ஆதலினால் எந்தக் காரியத்தையும் அநாவசியமாகப் பின்போடக் கூடாது. எத்தனையோ கருமங்கள் முற்றுப்பெறாமைக்குக் காரணம், அவை பின்போடப்பட்டமையே என்பதை அனுபவபூர்வமாகத் தெரிந்து கொள்ளலாம். “நன்றே செய்க; அதனை இன்றே செய்க” என்பதில் எத்துணை பொருள் பொதிந்துள்ளது என்பதை எண்ணிப்பாருங்கள்.
“நீ ஒரு காரியத்தைச் செய்தால், அதனை எத்துணை திறமையாகச் செய்ய முடியுமோ, அத்துணை திறமையாகச் செய்” என்கிறார் ஓர் அருளாளர். வாழ்க்கையில் நல்ல முறையில் உயர்வதற்கு இது அருமையான வழிகாட்டல் குறிப்பு. இதனை உள்ளத்தில் நிறுத்திக் கொள்பவன் முன்னேறாமல் இருக்க (plgus.
பலர் வறியவர்களாக இருப்பதற்குக் காரணம், அவர்கள் உழைப்பில் ஊக்கமில்லாமையே யாகும். அதேவேளை உண்மையான உழைப்பாளிகளைச் சுரண்டி உல்லாச வாழ்வு வாழ்பவர்களையும் காண்கின்றோம். இது அறம் அன்று. தொழிலில் மிகவும் வளர்ச்சியடைந்த நாடுகளைப் பாருங்கள். அங்குள்ள மக்கள் உழைப்பினைத் தெய்வமாக உபாசிப்பவர்கள். உண்ணுவதிலும், உறங்குவதிலும், வீண்வம்பு பேசுவதிலுமே அருமையான காலத்தைக் கடத்தும் மனிதர்கள் உழைப்பினால் முன்னேறுவதற்கு வாய்ப்பில்லை. உழைத்து முன்னேறுபவர்களைப் பார்த்து அழுக்காறு கொள்வதிலும், அங்கலாய்ப்பதிலும் பயன் ஒன்றும் ஏற்படப் போவதில்லை.
கடின உழைப்பு ஒரு காலமும் ஒருவனைக் கொல்ல மாட்டாது. அது அவனை வாழவைக்கும். மாறாக, உழைக்காமல், சோம்பித்திரிபவர்களே, காலகதியில் நோய்க்கு ஆளாகி மடிந்து போகின்றார்கள். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்,” நோயற்ற வாழ்வு வாழ விரும்புபவர்கள் உழைப்பில் ஈடுபடவேண்டும்; அறத்தில் நம்பிக்கை கொள்ளவேண்டும். அறவழியில், உழைப்பவர்கள் அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. எனவே ஆரோக்கியமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு இரவில் தூக்கம் குழம்புவதில்லை. நித்திரைக்கு மருந்தும் தேவையில்லை. மனம் நிம்மதி பெறுகிறது. எனவே, உடல் நலத்துடன் வாழ்கிறார்கள்.
6S

Page 38
கற்றுப்புப் பணம் என்றால் என்ன? கள்ளச்சந்தை என்றால் என்ன? இவற்றைப் பற்றிப் பலருக்குத் தெரியாது. தெரிந்து கொள்ளாமல் இருக்கும்வரை, அவர்களுக்கு நல்லதுதான்.
நேர்மையற்ற, நீதியற்ற, தர்மமற்ற சட்டவிரோத வழிகளில் சம்பாதிக்கின்ற பணத்தைத் தான் கறுப்புப் பணம் என்கிறார்கள். கறுப்புப் பணம் சம்பாதித்தல், சம்பாதிப்பதற்குத் துணை போதல்; வைத்திருத்தல் என்பன சட்டப்படி குற்றமாகும்; அரச தண்டனைக்கு உரியவர்கள். ஆனால், சந்தர்ப்பம், சூழ்நிலை, செல்வாக்கு என்பவற்றால் பலர் தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். கறுப்புப் பணத்தைத் தரும காரியங்களுக்கு வழங்கித் தங்கள் பாவத்தைக் கழுவிக்கொள்ளலாம் என்று எண்ணி வாரி வழங்குகிறார்கள். இது வெறும் தப்புக் கணக்குத் தான். அவர்களை, அவர்கள் செய்யும் இழிவான செயல்களை, பதுக்கிவைத்திருக்கும் கறுப்புப் பணத்தை, அறம் சதா அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பதை அவர்கள் அறிவார்களா? அவர்கள் மீது அறம் சீற்றம் கொண்டுள்ளது. "அறநெறி பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்” என்பது நம் முன்னோர் கண்டறிந்த பேருண்மை. கறுப்புப் பணம் சம்பாதித்தவர்கள்; கள்ளச் சந்தைப் பங்குதாரர்கள் யாவரும் அறநெறி பிழைத்தோர்கள். அவர்களுக்கு அறம் கூற்றாக வரும் என்பது நிச்சயம். அறம் வழங்கும் தண்டனையிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. அறத்தின் முன் எல்லோரும் சமம் என்பது உறுதி. அறத்திற்குக் கைலஞ்சம் கொடுக்கமுடியாது. அறநெறியில் தேடாத பணத்தைக் கெர்ணடு அறப்பணிகள் செய்வது என்பது அறத்திற்குக் கைலஞ்சம் கொடுப்பதாகும் ஆனால் அறம் அதை ஏற்றுக் கொள்ள மாட்டாது. அவர்கள் செய்வது அறமும் ஆகாது. அத்தோடு அறத்திடம் பிரதிபலன் எதிர்பார்த்துச் செய்யப்படுகிற செயல்களும் அறம் ஆகா. எனவே தான், அறப்யணிகள் செய்ய விழைபவர்கள் நேர்மையான முறையில், அறவழியில், நிதியின் அடிப்படையில் தேடிய செல்வத்தையே பயன்படுத்த வேண்டும் என்று தர்மநூல்கள் கூறுகின்றன.
உழைப்பு என்பது வெறுமனே பொருள்தேடும் நோக்குடன் செயற்படுதல் மாத்திரமன்று. நோக்குடன் வழியும் முக்கியம். எந்த வழியில் உழைப்பு செயற்படப்போகிறது என்பதையும் முன்கூட்டியே நிச்சயப்படுத்திக கொள்ளுதல் வேண்டும். அறிவழியே அதற்குரிய வழியாகும்.
“அறத்தால் வருவதே இன்பம்” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அறநெறியிலே வாழ்வதன் பயனாக வருவதே உண்மையான இன்பம் மற்றைய தீய வழிகளை மேற்கொள்வதன் பயனாக வருவது இன்பம் போன்று காட்சியளிப்பினும், அது துன்பமே. அறத்தோடு பொருந்தாமல் வருவனவெல்லாம் துன்பங்கள், துயர்கள். இன்னல்கள், இடர்கள் என்பனவே.
அறத்தை விட நன்மையானதும் இவ்வுலகில் இல்லை. அறத்தை மறப்பதை விடக் கெடுதியானதும் இல்லை. எனவேதான், “அன்றறிவாம் என்னாது அறஞ் செய்க" என்று வள்ளுவர் எம்மையெல்லாம் விளித்துக் கூறுகிறார். அறத்திற்குத் தவணை கூறக்கூடாது. இப்போது இளைஞராக உள்ளவர், வயது வந்த
67

பிற்காலத்தில் அறத்தைப் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம், என்று எண்ணாமல், இளமைக் காலத்திலிருந்தே எண்ணங்களோடும், பேசும் பேச்சுக்களோடும், செய்கின்ற ஒவ்வொரு கருமத்தோடும் அறத்தை இணைத்துக் கொள்ள வேண்டும் அதுவே வாழ்வில் இன்பத்தைத் தரும்.
உழைப்பு என்பது மனிதவாழ்வில் இடையுறாத செயல்முறையாகும். தன்தொழில் விட்டவன் மனித சாதியில் இழிந்தவன். அறம் என்பதும் வாழ்வில் உழைப் போடு இணைந்து இடையறாது நடைபெற வேண்டிய செயல்முறையாகும், அறவழியில் உழைக்கின்றவர்கள் உற்சாகமாக இருக்கின்றார்கள், அச்சம் இன்றி வாழ்கின்றார்கள்; மனக் கலக்கமின்றி மகிழ்ச்சியோடு விளங்குகின்றார்கள். அவர்களை உடல் நோயோ, மனப்பிணியோ, வேறு தொல்லைகளோ அணுகுவதில்லை.
உழைக்கின்ற விருப்பமும், அறப்பண்புகளும் இள வயதிலிருந்தே வளர்க்கப்படவேண்டும். “இளமையிற் கல்’ என்ற ஒளவை வாக்கும் இதனை எடுத்து உணர்த்துகின்றது. இதற்குக் குடும்பங்களும், பள்ளிக்கூடங்களும் உறுதுணையாக இருக்க வேண்டும். உலகத்தில் வெற்றி வாகை சூடியவர்கள் அனைவரும் உழைப்பினால் உயர்ந்தவர்களே; அதிர்ஷ்டத்தினால் அல்ல. “தம்பி, நீ வானத்திலே மாளிகை கட்டு. நான் ஆதரிக்கிறேன். ஆனால் தரையில் அஸ்திவாரம் போடு என்று நான் கூறுவதை நீ ஆதரிக்க வேண்டும்” என்றார் ஒரு பெரியவர். இங்கு, தரையில் அஸ்திவாரம் போடு என்பதன் பொருள் அறத்தை அடித்தளமாகக் கொள்என்பதே. உலகில் உயர்வதற்கு, உழைப்பு ஒன்றே உன்னதமானது, அதுவும் அறவழியில் என்பதை உணர்ந்து கொள்வோமாக.
16. வதந்தி என்னும் பொய்ம்மை
சின்ன விஷயத்தைே இல்லாத ஒன்றையோ பெருப்பித்துக் காட்டுவதில், சிலர் பெரும் விருப்பமுடையவர்களாக இருக்கின்றனர். இது, ஒருவகையில், பழக்கதோஷம் என்றே கூறவேண்டும். இந்தப் பழக்கத்தினால் எத்துணை தீய விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவர்களுக்கு, விளையாட்டாக இருக்கலாம், ஆனால் மற்றையோர்க்குத் தீமைகளைப் பயப்பதாக உள்ளனவே.
வதந்தி. பரப்புதல் என்னுங் கலை இந்தப் பழக்கத்தினால் வளர்ந்து வருகிறது. வதந்திகளைப் பரப்புவதில் பல அணுகு முறைகளைக் காண்கிறோம். பரப்புபவர்கள், கற்பனை வளம் நிறைந்தவர்களாகவும் உள்ளனர். அண்டப் புளுகு, ஆகாசப்புளுகு என்கிறார்களே; அப்புளுகுகளும் கற்பனை வளத்தின் பிரதிபலிப்புக்கள் தான். வதந்திகள் ஒன்றைப் பத்தாய், நூறாய் பெருக்கிப் பரப்பப்படுபவை. புளுகுகளும் அப்படித்தான். “அவிச்ச இறால் துடிக்குது’ என்று கூறி, அதனை நம்பவும் செய்து விடுகிறார்கள், இந்தப் புளுகர்கள், “கெட்டிக்காரன் புளுகு எட்டு
68

Page 39
நாட்களுக்குத்தான்” என்பார்கள். அதன் பின் குட்டு வெளிவந்துவிடும், இதிலிருந்து என்ன தெளிவாகிறது என்றால், பொய்யும், புரட்டும், புளுகும், புனைந்துரையும் நிலைக்கக்கூடியனவல்ல. அவை விரைவில் அழிந்து விடக்கூடியன என்பதேயாகும் இத் தொழிலில் பொழுது போக்காக ஈடுபடுபவர்களும் சமூகத்தின் நம்பிக்கையை இழந்து விடுகிறார்கள், பிறரின் நம்பிக்கையை இழப்பவர்கள் சமூகத்தில் பெறுமதியற்ற மனிதர்களாகி விடுகின்றனர்.
நம்பகத்தன்மை, மதிப்பு, தகுதிப்பாடு என்பன மனிதர்களினால் பேணப்பட வேண்டிய இன்றியமையாத வாழ்க்கை விழுமியங்கள். மனிதப் பெறுமதி உயர்வதற்கு இவ்விழுமியங்கள் அவர்களிடம் காணப்படுவதே காரணம், மனிதப் பெறுமதி இறக்கத்திற்கு இவை மனிதர்களிடமிருந்து விலகிப் போய் விடுவதே காரணம் ஆதும்.
வதந்திகளைப் பரப்புவோர், பொய்யுரை பகர்வோர், பொய்ச்சாட்சி கூறுவோர் அண்டப் புளுகில் ஈடுபடுவோர் எல்லோருமே ஒரே தரத்தைச் சேர்ந்தவர்கள்தான் சமூகத்தில் சுயமதிப்பையும், சுய கெளரவத்தையும் இழந்த நிலையில், மனித குல மதிப்பிறக்கத்திற்குத் துணைபோவோராக விளங்குகின்றனர். உண்மைக்குப் புறம்பானவர்கள் இவர்கள், உண்மையினின்றும் வேறுபட்டவர்கள் எத்தகைய ஈனச் செயல்களையும் புரியப் பின்னிற்க மாட்டார்கள். மனிதப் பெறுமதியற்றவர்கள் இத்தகையோர். அவர்கள் விலங்கிற்கு ஒப்பானவர்கள். இத்தகையோர் மனித சமுதாயத்திற்குப் பெருந்தீங்குகளை இழைக்கின்றனர்.
வதந்தி எவ்வாறு பரப்பப்படுகின்றது என்பதை விளக்க ஒரு கதை கூற விரும்புகிநேன். இது தான் கதை. சில காலங்களுக்கு முன்பு, சிகாமணி என்ற பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் ஊர்த்தலைமைக் காரராகப் பணிபுரிந்தவர். அந்தப் பதவியிலிருப்பவர்கள் சில வேளைகளில் கடுமையாகவும் இருக்க வேண்டிவரும் அதனால் அவ்வூரவர்களிற் பலர் அவர்மீது கோபம், கொண்டிருந்தனர். அவரைப்பற்றிய செய்திகளைத் திரித்தும் விரித்தும் கூறிப்பரப்புவதில் அம்மக்கள் ஆர்வங் கொண்டிருந்தனர். அதற்குரிய சந்தர்ப்பத்தையும் எதிர்பார்த்திருந்தனர்.
"சும்மாவே பல்லைச் சப்பிறவனுக்கு ஒரு பிடி கடலை கிடைத்தால் எப்படி இருக்கும்," என்பார்கள், அந்தமாதிரி அவ்வூர் மக்களுக்கும் சிகாமணி பற்றிய செய்தியைப் பெருக்கி வதந்தியாகப் பரப்புவதற்கும் எதிர்பார்த்திருந்த சந்தர்ப்பம் வந்து விட்டது.
ஒருநாள் சிகாமணி, ஆற்றங்கரை ஓரமாக நடந்து வந்தார். அப்போது ஜில் என்று வீசிய காற்று அவரின் உடலைத் தழுவியபோது இதமாக இருந்த போதிலும், சற்று நேரத்தில் நெஞ்சில் சளிபிடிக்கவும் ஏதுவாயிற்று. நெஞ்சுச் சளிகாரணமாகப் பலத்த சத்தத்துடன் இருமினார். நன்றாகக் களைத்தும் விட்டார். நெஞ்சுக்குள்ளிருந்து தொண்டையூடாக வாய்க்குள் வந்த சளியை ஒருவாறு வெளியில் துப்பிவிட்டார். துப்பிவிட்டுத்தான் பார்த்தார், நிலத்தில் வீழ்ந்த சளித்திரளுக்குள் உருண்டை வடிவான ஒரு பொருள் மின்னிக்கொண்டிருந்தது.
69
 

அதைக் கண்ணுற்ற சிகாமணி அசந்துவிட்டார்.
அது என்னவாக இருக்கும் என்று மனத்தை அலைத்தபடி சிகாமணி விடுவந்து சேர்ந்தார். அங்கு, என்றுமில்லாதபடி சிகாமணி, மன உளைச்சலுடன் சோர்ந்து போய் இருப்பதைக் கண்ட அவருடைய மனைவி, "என்ன நீங்கள் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள், உங்கள் உடம்புக்கு என்ன?" என்று கேட்டாள்.
"என் உடம்புக்கு ஒன்றுமில்லை. எல்லாம் உள்ளத்தில் ஏற்பட்ட கோளாறுதான்' என்ற சிகாமணி, மனைவியைப் பார்த்து, "நீ வேறு யாருக்கும் நான் சொல்லப் போகிற விஷயத்தைச் சொல்லமாட்டேன் என்று வாக்குறுதி தந்தால், நான் அதை உன்னிடம் சொல்வேன்' என்றார்.
இதைக் கேட்டதும் சிகாமணியின் மனைவியின் அங்கலாய்ப்பு அதி உயர் வேகத்தில் செயற்பட்டது. "வாக்குறுதிதானே. அதைக் கொடுப்போம். எல்லோருந்தானே வாக்குறுதியை அள்ளி வீசுகிறார்கள். பின் மறந்தே போய்விடுகிறார்கள். நான் என்ன விதிவிலக்கா," என எண்ணிக் கொண்டாள்.
"சரி, நான் பாரிடமும் நீங்கள் சொல்வதைச் சொல்லமாட்டேன், ஒரு குருவிக்குந் தெரியவராது. இந்த வாக்குறுதியைத் தருகிறேன். சொல்ல வந்ததை ஒழியாமல் சொல்லுங்கள்' என்று ஆர்வத்துடன் சொன்னாள், மீண்டும் மீண்டும் அவள் வற்புறுத்தவே, தான் துப்பிய சளித்திரளுக்குள்ளே கண்ட உருண்டைவடிவான பொருள் மினுமினுக்கக் கண்ட விஷயத்தை விளக்கமாகக் கூறினார்.
சிகாமணியின் மனைவி இது பற்றித் தனக்குள்ளே அலசிப்பார்த்தாள். அந்த மின்னும் பொருள் தங்கப்பவுனாகத்தான் இருக்க வேண்டும் என்ற முடிவை எடுத்தாள், அந்த மகிழ்ச்சியை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை இனிமேல் தனது கணவன் தங்கப்பவுணை அடிக்கடி வெளியெடுப்பார் என நினைக்க, நினைக்க அந்த நல்ல செய்தியை யாருக்காவது உடனே சொல்லியாக வேண்டும் போவிருந்தது. அப்படியானால் கணவனுக்குக் கொடுத்த வாக்குறுதி என்ன ஆவது? இதுவும் மனதில் உறுத்தத்தான் செய்தது. கடைசியில் வழக்கம் போல் வாக்குறுதி தோற்றுவிட்டது.
சிகாமணியின் மனைவிக்குக் கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. வீட்டின் பின்புறத்து வேலியில் ஒரு கடவை இருந்தது. அதற்கூடாகக் கனவனுக்குந் தெரியாமல் மெல்ல நழுவி, பக்கத்து வீட்டுக்குச் சென்றாள்.
அங்கே, பானுமதி அவசர அவசரமாக எங்கேயோ போவதற்கு வெனிக்கிட்டுக் கொண்டிருந்தாள். சிகானியின் மனைவியைக்கண்டது எரிச்சல் ஒரிச்சலாய் வந்தது பானுமதிக்கு தன்னுடைய பயனம் தடையாகப் போகிறதே என்ற ஆதங்கம் ஒரு புறம் சிகாமணியின் மனைவி கொண்டுவந்து புதினத்தை ஆதியும் ஆவல் மறுபுறம் ஒரு மாதிரித் தன்னைச்சமளித்துக் கொண்டு "என் ஆவராக வருகிறாய், என்ன விஷயாம்," என்று பாஜ:து கேட்டார்.
7

Page 40
அதற்குச் சிகாமணியின் மனைவி, “நான் ஒரு முக்கியமான செய்தி கொண்டுவந்திருக்கிறேன். அதை உனக்குச் சொல்லாமல் வேறு யாரிடம் சொல்லுவேன். நீமட்டும் நான் சொல்லப்போகும் செய்தியை வேறு எவரிடமும் சொல்லமாட்டேன் என்ற வாக்குறுதியை எனக்குத்தர வேண்டும்,” என்றாள்.
பானுமதிக்கோ இருப்புக் கொள்ள முடியவில்லை, “அப்படி என்ன இரகசியமான செய்தி. நான்வாக்குறுதி தருகிறேன், சொல்” என்று அவளைத் துரிதப்படுத்தினாள்.
“அது ஒரு இரகசியம். என்கணவன் பற்றிய செய்தி” என்று சிகாமணியின் மனைவி சொன்னதும், பானுமதியின் ஆவல் ஆகாயத்தை முட்டியது. “சொல், நான் ஒருவரிடமும் சொல்லமாட்டேன்.” என்று மீண்டும் மீண்டும் பானுமதி அங்கலாய்த்தாள்.
“நிச்சயமாகவா’ என்றாள் சிகாமணியின் மனைவி. அதற்குப் பானுமதி, “என்மீது உனக்கு நம்பிக்கையில்லையென்றால், நீ ஒன்றுஞ் சொல்ல வேண்டாம். இது வரை உன்னை எப்போதாவது ஏமாற்றி இருக்கிறேனா? என்று கோபத்துடன் (335i Lisi.
“கோபிக்காதே, நீ மிகவும் நல்லவள் நேர்மையானவள். அதனாலேதான், சொல்வதற்கு உன்னைத்தேடி வந்தேன். என் கணவன், இன்று இருமிவிட்டு துப்பினாராம், தங்கப்பவுண் கட்டி ஒன்று வந்து விழுந்துதாம். அதைக் கண்டு அவர் அசந்தே போனாராம்” என்றாள் சிகாமணியின் மனைவி.
“உண்மையா? இனி உன்பாடு தேவலையே. தினமும் ஒரு தங்கப்பவுண். ஒரு மாதத்தில் முப்பது. அப்படியானால் ஒரு வருஷத்தில் எத்தனைதங்கப் பவுண்கள்” என்றவள், அப்படியே அதிர்ச்சியால் அமர்ந்து விட்டாள் பானுமதி. சிகாமணியின் மனைவியும் தன் மனத்தின் முட்டைத் தீர்த்த மகிழ்ச்சியுடன் விடுதிரும்பிவிட்டாள்.
பானுமதி அடுத்த நாட் காலை, நேரத்துடனேயே வேலைபார்க்கும் அலுவலகத்திற்குச் சென்று விட்டாள், அங்கு வேலை பார்க்கும் கிளைத்தலைவர் சக்திவேல், பானுமதியின் அகால வரவைக் கண்டு ஆச்சரியப்பட்டு, “என்ன, இன்று வழக்கத்துக்கு மாறாக நேரத்துடன் அலுவலகப் பக்கம் வந்து விட்டீர்கள். என்ன விசேஷம்,” என்று கேட்டார்.
“நான் நேற்றுப் பின்னேரம் ஒரு சேதி அறிந்தேன், இரவு முழுக்கத் துரக்கமே
வரவில்லை. அதையாருக்காவது சொல்ல வேண்டும் போலிருந்தது. அது தான் விடிஞ்சதும் விடியாததுமாய் ஓடி வந்தேன்,” என்றாள் பானுமதி.
71

சக்திவேலுக்கு அமைதியாய் இருக்கமுடியவில்லை, “என்ன செய்தி அதை என்னிடம் சொல்லக் கூடாதா?’ என்றான்.
“சொல்லுகிறேன். ஆனால் ஒருநிபந்தனை” என்றாள் பானுமதி.
“என்ன நிபந்தனை” என்று கேட்டான் சக்திவேல், “நான் சொல்லும் இந்தச் செய்தியை வேறு எவருக்குஞ் சொல்வதில்லை என்ற வாக்குறுதி தரவேண்டும் என்பது தான் அந்த நிபந்தனை,’ என்றாள் பானுமதி.
அது பெரிய காரியமா? வாக்குறுதி தந்து விட்டேன். சொல்லுங்கள்.” என்று சக்திவேல் அவசரப்படுத்தினான்.
“மிகவும் இரகசியம், சிகாமணியின் மனைவியே என்னிடம் சொன்னாள். சிகாமணி, காலையில் ஒரு தங்கப்பவுண், மத்தியானம் ஒரு தங்கப்பவுண், மாலையில் ஒரு ங்கப் * ஆக மூன்று தங்கம் வாயிலிருர் டுத்தாராம்” என்றாள் பானுமதி.
“என்ன ஒரே நாளில் மூன்று தங்கப் பவுண்களைச் சிகாமணி வாயிலிருந்து
டுத்தாரா? நம் பில்லையே. ஆனால் நம்பித்தான் வேண்டும்,” என்றார் சக்திவேல்.
“நிச்சயமாக நான் இந்தப்புதினத்தை ஒருவரிடமும் சொல்லமாட்டேன்,” என்று மீண்டும் வலியுறுத்திய சக்திவேல், “தினம் தினம் மூன்று தங்கப்பவுண்களை எடுத்தால், சிகாமணி உலகத்திலேயே முதற் பெரும் பணக்காரப் புள்ளியாக அல்லவா விளங்கப் போகிறான்,” சக்தி வேலுக்கு இதைத்தாங்கிக் கொள்ள முடியவில்லை. தன் மனைவியிடம் இப்புதினத்தைச் சொன்னால்த்தான் நெஞ்சு முட்டைத் தணிக்கலாம் போலிருந்தது. கந்தோருக்கு லிவு போட்டுவிட்டு வீடு நோக்கிப் புறப்பட்டான், சக்திவேல்.
தன் மனைவியிடம் சக்திவேல் “சாரதா, உனக்கு ஒரு விசலம் தெரியுமோ. சிகாமணியின் வாயிலிருந்து நேற்றுமட்டும் ஐந்து தங்கப்பவுண்களும் மூன்று முத்துக்களும் வெளிவந்ததாம்,” என்றான்.
சக்திவேலின் மனைவியிடம் சொன்ன இரகசியம், நன்றாக விற்பனையாகின்ற தினசரிப் பத்திரிகையில் போட்டதற்குச் சமம். சிகாமணி, மூன்று பவுனும், ஐந்து முத்துக்களும் வாயிலிருந்து எடுத்த செய்தி பத்தாய், நூறாய், ஆயிரமாய்ப் பெருகி, ஊர் முழுவதும் மட்டுமல்ல அண்டை அயல் ஊர்களுக்கும் பரவியது. ஆல்போல் தழைத்து, அறுகு போல் வேரூன்றி எங்கும் வியாபகமாகியது.
“உங்களுக்குச் சேதி தெரியுமா, சிகாமணியின் வாய்க்குள்ளிருந்து தங்கம், முத்து, பவளம், புஷபராகம், நீலோற்பலம், வைரம், வைடூரியம், மாணிக்கம், மரகதம் எல்லாம் வந்து குவிந்து, விடும் வளவும் நிரம்பிவிட்டு தாமே.’ இவ்வாறு
72

Page 41
ஒருவரை ஒருவர் விசாரிக்கத் தொடங்கினர். ஈற்றில் வருமானவரித் தினைக்களத்திற்கும் செய்தி எட்டிவிட்டது.
இந்தச் செய்தியை அறிந்து கொண்ட சிகாமணிக்குத் தலைகிறுகிறுத்தது. பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. இல்லாத ஒன்று எப்படியெல்லாம் விஸ்வரூபம் எடுத்து விட்டது. இவ்வாறு வதந்தி பரவிக் கொண்டே சென்றது. வதந்தியிலிருந்து தப்புவதற்குச் சிகாமணிக்கு ஒரேயொரு வழிதான் தென்பட்டது. அதுதான், வீட்டிலிருந்து இரவோடு இரவாக வெளியேறி வேறு ஊருக்குப் போவது சிகாமணியும் அப்படியே தலைமறைவாகிவிட்டார்.
வதந்தி பரப்பப்படுவதால், எவ்வளவு பிரச்சினைகள், சிக்கல்கள் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன என்பதைப் பலர் உணர்வதில்லை." பிள்ளைக்கு விளையாட்டாம் கண்டெலிக்குச் சீவன் போதுதாம்” என்று ஒரு பழமொழி இருக்கிறது. பிறருக்கு இம்சை செய்யாமல் வாழவேண்டும் என்றால், வதந்திகளை உருவாக்குதலில் இருந்தும், பரப்புவதிலிருந்தும், அவ்வாறு செய்து வேடிக்கை பார்ப்பதிலிருந்தும் விலகியிருத்தல் அவசியம் என்பதை உணர்வோமாக.
17. சேரிடமறிந்து சேர்
சூழல் மனிதர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு கொள்கின்றது. நல்ல
சூழல் வாய்க்கப் பெற்றால், நல்ல மனிதர்கள் உருவாகின்றனர். சூழல் பிழைத்தால்,
மனித உருவாக்கமும் பிழைத்து விடும். சமூகச் சூழல் என்பதில் நண்பர்களும் அடங்குகின்றனர். "உன் நண்பர் யார் என்பதைச் சொல், நீ எப்படிப்பட்ட ஆள் என்பதைக் கூறிவிடுகிறேன்" என்னும் கூற்றுப் பொருள் பொதிந்த கூற்று, நண்பர்கள் உயிர் வழங்கும் உத்தமர்களாகவும் உள்ளனர். உயிர் பறிக்கும் விஷச் செந்துக்களாகவும் இருக்கின்றனர். "சேரிடம் அறிந்து சேர்' என்று ஆன்றோர்கள் சரியாகத்தான் சொல்லிவைத்துள்ளார்கள். ஒருவருடன் சேர்ந்து, பழகி, உறவாடுவதற்கு முன், அவர் பற்றித் திர விசாரித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்,
"ஆழந்தெரியாமல் காலை விடாதே" என்றொரு பழமொழி உண்டு மனிதரை
அளந்து அறிவதும், அவர்களின் மன ஆழத்தினை அறிவதும் இலேசான காரியமல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகக் கவனமாக இருத்தல் அவசியம் கண்ட கண்ட எல்லோருடனும் சிநேகிதம் வைத்துக் கொண்டால் ஆபத்தில்
மாட்டிக் கொள்ள நேரிடும்.
நல்லவர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும். கெட்டவர்களுடனும்,
தந்திரக்காரர்களுடனும் நட்புக் கொள்வதால் ஏற்படுவது நாசம்தான் என்பதைப்
பின்வரும் கதை விளக்குகின்றது.
ஒரு காட்டிலே ஒரு நரி வாழ்ந்து வந்தது. அங்கே ஒரு காகமும் வசித்து வந்தது.
7.

ஒன்று மிருகம்; மற்றையது பறவை. இரண்டிற்குமிடையே நட்பு எற்பட்டது. நட்புக் காரணமாக, நரியும் காகமும் அடிக்கடி சந்தித்துக் கொண்டன. குசலம் விசாரிப்பதிலிருந்து பலதும் பத்தும் பேசுவதுவரை, அவர்களின் சந்திப்பில் இடம் பெறும், நட்பும் வளர்ந்தது; கூடவே அவைகளின் சந்திப்புக்களும் அதிகரித்தது. நல்லது கெட்டது; வம்பு, தும்பு பிறர்பற்றிய புதினங்கள் எல்லாம் சந்திப்புகளின் போது பரிமாறப்படும்.
நரியும் காகமும் பேச உட்கார்ந்து கொண்டால் நேரம் போகிறதே அவைகளுக்குத் தெரியாது. காகம் விரைவாகப் பறந்து செல்லக் கூடிய பறவை என்றபடியால், நரியின் இருப்பிடத்திலேயே இருவரின் சந்திப்புக்களும் சம்பாஷனைகளும் நடந்து வந்தன. காலம் செல்லச்செல்லத் தினசரி, குறிப்பிட்ட நேரத்திற்குக் காகம் பறந்து சென்று நரியைச் சந்தித்து வந்தது.
காகத்தின் வரவை, ஆவலோடு, வழிமேல் விழிவைத்து, நரி எதிர்பார்த்திருக்கும் சற்று நேரம் காகம் பிந்தினால் கூட, நரி தாங்க முடியாமல், அங்குமிங்கும் நடந்து அலையும், காகத்தைக் கண்டதும் ஒரே குவிதான். தான் தேடிய தின்பண்டங்களையும் நரி காகத்திற்குக் கொடுத்து மகிழும், ஒரு நாளைக்குக் காகம் போகத் தவறினாலும், நரி பொறுக்க முடியாமல் தவிக்கும்.
நரி ஒரு குள்ளத்தனமான மிருகம், பிறரை ஏமாற்றுவதில் சமர்த்தன். அதனால் நரியோடு சினேகம் பன்னவேண்டாம் என்று காகத்திற்கு, ஆதன் உறவினர்களும் நண்பர்களும் எச்சரித்து வந்தனர். தாய்க் காகம் எவ்வளவோ புத்திமதிகளைக் கூறியது. எல்லா அறிவுரைகளையும் புறக்கணித்து விட்டுக் காகம் நரியிடம் சென்று வந்தது.
ஒரு நாள் நரியைச் சந்திக்காமல் விட்டாலும் காகத்திற்குப் பத்தியப்படாது. அந்த நாள் விடியாத நாளாகவே காகத்திற்குத் தென்படும் நரியின் இருப்பிடத்திற்கு அருகே மான் ஒன்று வாழ்ந்து வந்தது. மானும், தாய்க்காகமும் நெடுங்காலமாகச் சிநேகிதர்கள். நரியின் இருப்பிடத்தில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி அவ்வப்போது, மான், தாய்க் காகத்திற்குச் செய்தி அனுப்பிவந்தது. இது எப்படியோ காகத்திற்குத் தெரிய வர, தாய்க்காகத்திற்கும் காகத்திற்குமிடையில் முறுகல் நிலையும் ஏற்பட்டது. நாகம், மான் உடனும் சண்டைக்குப் போனது. மான் ஒரு நல்ல பிறவி அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டது.
நரி, காக்கை இருவரினதும் நட்பை எவராலும் தடுத்து நிறுத்த முடியாத அளவிற்கு, நட்பு வளர்ந்துவிட்டது. இந்த நிலையில், ஒரு நாள், நரியானது காக்கையிடம், "நாம் இருவரும் சேர்ந்து ஏதாவது தொழில் செய்வோமா" என்று கதை விட்டது. காக்கையும் அது ஒரு நல்ல யோசனைதான் என்று ஆமோதித்தது. அடுத்து. என்ன தொழிலைக் கூட்டாகச் செய்யலாம் என்று இருவரும் ஆலோசித்தனர். அது சரியில்லை, இது சரிப்பட்டு வராது என்று ஒவ்வொன்றாகத் தட்டிக்கழித்தனர். வேறு எவரினதும் யோசனைக்குக் கட்டுப்படுவதில்லை என்றும் சுதந்திரமாகச் சிந்தித்தே முடிவு எடுப்பது என்றும் முதலில் கங்கண்ம் கட்டிக் கொண்டனர்.
74

Page 42
அதனால் நரியும் காகமும் தான் மண்டையைப் போட்டு உடைத்தனர். ஈற்றில், நரி ஒரு யோசனையை முன்வைத்தது.
“நாம் இருவரும் சேர்ந்து விவசாயம் செய்வோம். நல்ல பலன் கிடைக்கும்” என்பதுதான் நரியின் அபூர்வமான யோசனை “கோடி பொன் பெறும் அந்த யோசனை’ என்று காகமும் ஏற்றுக் கொண்டது.
விவசாயத்தில் ஏற்கனவே நரியாருக்குக் கொஞ்சம் அனுபவம் இருந்தது உண்மைதான். வேறொரு இடத்தில் ஒருவர் விதைத்துப் போட்டு, அவசரமாக வெளிநாடு செல்ல, அதைப் பொறுப்பேற்று, அறுவடை செய்து நல்ல கொழுத்த லாபம் பெற்றவர் நரியார். நரியாரின் எதிர்பாராத அதிர்ஷ்டம் அது. மற்றும்படி, உழுது, பண்படுத்தி, விதைத்துப் பயிர் வளர்த்த அனுபவம் நரியாருக்கு இல்லை. இப்பொழுது தனித்து நின்று, சுயமுயற்சியாக விவசாயத்தில் ஈடுபட, விருப்பம் இருந்தும், நரிக்கு உள்ளுர ஒருபயம். வந்த வெள்ளம் நின்ற வெள்ளத்தையும் அள்ளிக்கொண்டு போட்டாலும் என்ற பயம் நரியாருக்கு இருந்தது. இந்த நேரம்தான், காகத்தையும் இழுத்துப் பங்காளியாக்கிக் கொள்ள நரி முயற்சி செய்தது. ஒருவர் அகப்பட்டுக் கொண்டார்; அவரை எப்படியும் ஆட்டிய்படைக்கலாம் என்று நரி தந்திரம் பண்ணியது.
காகத்திற்கோ, விவசாயத்தில் முன்பின் அனுபவம் இல்லை. தாயின் அரவணைப்பில், காகம் சுகமாக உண்டு. உறங்கி, சுதந்திரமாகப் பறந்து திரிந்து வந்ததே தவிர, அதற்கு ஒரு வேலையும் செய்யத் தெரியாது. தாய்க்காகத்தோடு முரண்டுபிடிக்கமாத்திரம் காகத்திற்கு நன்றாகத் தெரிந்திருந்தது. விவசாயம், நரியோடு கூட்டுச்சேர்ந்து செய்யப்போவதாகத் தாய்க்காகத்திடம், ஒரு நாள் காகம் பிரஸ்தாபித்த போது, தாய்க்காகத்திற்குச் சிரிப்புத்தான் வந்தது. விளையாடித்திரிந்த தன்பிள்ளை விவசாயம் செய்யப்போகுதாம் என்று பரிகசித்தது. “வேண்டாம் இந்த விவசாயம்; நீ உலகந் தெரியாமல் வளர்ந்து விட்டாய்; நரியின் குள்ளத்தனத்தைப் பற்றி முழு உலகத்திற்குமே நன்கு தெரியும் நரியின் தந்திர மந்திரங்கள் பற்றி உன் அய்யா கதை கதையாய்ச் சொல்லுவார். யாரோடு சினேகிதம் செய்தாலும் நரியோடு சினேகிதம் பண்ணக்கூடாது. நீ ஏமாற்றப்பட்டுவிடுவாய். நரியின் குணமே மற்றைவரை ஏமாற்றுவது தான். நீ அந்தக் குள்ள நரியோடு சேரவும் வேண்டாம். விவசாயம் செய்யவும் வேண்டாம். சிறுபிள்ளை வேளாண்மை விடு வந்து சேராது என்பர் நரியோடு உன் சகவாசத்தை இன்றோடு விட்டுவிடு” என்று தாய்க்காகம், தன் பெற்றபிள்ளைக் காகத்திற்கு எவ்வளவோ புத்திமதிகளைச் சிொல்லியது.
“தாய் சொல்லைத் தட்டக்கூடாது' என்பர். ஆனால் காகமோதாயாரின் சொல்லைக் கேட்கவில்லை. நரியும் காகமும் விவசாய நடவடிக்கைகளில் இறங்கின. நரி, காகத்திடமிருந்து நல்லாய் வேலை வாங்கியது. வெளுத்த தெல்லாம் பால் என்று எண்ணுகின்ற இந்த இளம் காகம் பறந்து பறந்து அலுவல் பார்த்தது. ஓயாது உறங்காது. நரியார் இட்ட பணிகளை யெல்லாம் காக்கையார் செய்து வந்தார். நரி கட்டளை இடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. ஏனென்றால் அது வேறு இடத்திலும் விவசாயம் செய்தது. .
75

விதைப்புக்கு வேண்டிய எல்லா ஆரம்பநடவடிக்கைகளும், நடந்தேறின. காகத்தின் முயற்சியே முழுவதுமாக இருந்தது. இந்த நேரம் நரியும் காகமும் ஓர் ஒப்பந்தம் செய்தன,
“நிலத்திற்கு மேலே விளைவதெல்லாம் நரிக்கு உரியது. நிலத்திற்குக் கீழே விளைவதெல்லாம் காகத்திற்கு உரியது.” என்பதுதான் நிபந்தனையோடு கூடிய ஒப்பந்தம். நரி என்ன சொன்னாலும் அதற்கு "ஆமா’ப் போடுவது தான் காகத்தின் இயல்பாகி விட்டது. ஆனால் மற்றவர்கள் ஏதும் சொன்னால் காகத்திற்கு “சுரீர் என்று கோபம் வந்து விடும். அண்டம் எடுபடக் கத்திக் கரையும்.
நிபந்தனையை விதித்தது நரி, காகம் அதைஏற்றுக் கொண்டது. நரி ஏற்கனவே
திட்டமிட்டு இருந்தபடி நெல் பயிரிடப்பட்டது அதற்குப்பின் நரி வயல் பக்கமே போவதில்லை. காகம் தான் பறந்து பறந்து பயிரைப்பாதுகாத்து வளர்த்தது. ஒவ்வொரு நாளும் நரியிடம் காகம் சென்று நெற்பயிர்களின் வளர்ச்சி பற்றிச் சொல்லி வந்தது.
நெற்பயிர்களும் நன்றாகச் செழித்து வளர்ந்தன. நெற்கதிர்களும் நன்கு விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருந்தன. இந்த விபரங்களையெல்லாம் காகம் போய்ச் சொல்லக் கேட்ட நரி, வயலுக்கு வந்தது. விளைச்சலைப் பார்த்ததும் நரிக்கு மகாசந்தோஷம்.
இப்போது தாம் இருவரும் செய்து கொண்ட ஒப்பந்தத்தை நரி ஞாபகப்படுத்தியது. நிலத்திற்கு மேலே விளைவது எல்லாம் நரிக்கு உரியது என்பது நிபந்தனை. அதன்படி நெற்கதிர்களை யெல்லாம் அறுவடை செய்து நரி எடுத்துக் கொண்டது. நிலத்திற்குக் கீழே விளைபவற்றைத் தானே காகம் எடுத்துக் கொள்ளலாம். காகம் நிலத்தைக் கிண்டிக் கிளறிப் பார்த்தது. நெல்லின் வேர்கள் தான் கற்றைகற்றையாகக் கிடந்தன. அவ்வேர்கள் ஒன்றுக்கும் உதவாதவை. காகத்திற்கு இந்த நெல் விவசாயத்தினால் ஒருவித பயனும் கிடைக்க வில்லை. பாடுபட்டது காகம்; பயன் பெற்றது நரி என்ற நிலையாய்ப் போய்விட்டது. காகத்திற்குத் துக்கம் தான். ஆனால் வெளியில்; தாய்க்காகத்திற்கோ, மற்றிைய உறவினர்களுக்கோ சொல்வதற்கு வெட்கம். நரியின் கள்ளத்தனத்தை நேரில் கண்ட மான் இந்த விஷயத்தை, காகம் ஏமாற்றப்பட்டதை, எப்படியோ தன் சினேகிதியான தாய்க்காகத்திற்குத் தெரியப்படுத்தியது. தாய்க்காகத்திற்கோ கோபமும் துக்கமும் தாங்கமுடியவில்லை.
அன்று வழக்கத்திற்கு மாறாக, காகம் நேரத்தோடு கூட்டுக்கு வந்து விட்டது. தாய்க்காகம், பிள்ளைக்காகத்தை நோக்கி, “என்ன, இன்றைக்கு எண்டைக்கும் இல்லாதபடி வெள்ளென வந்தாச்சு. விவசாயம் எப்படி? விளைஞ்ச நெல்லையெல்லாம், உன்ர கண்ணிலை மண்ணைத் தூவிப் போட்டு, நரி கொண்டு போட்டுதாமே. பாடுபட்டவன் ஒருத்தன்; பலனை அனுபவிக்கிறவன் இன்னொருத்தன். நரியின்ரை பிறவிக்குணத்தைத் தெரிந்து தான், அதோடை ஒருத்தரும் சேருவதில்லை. நான் சொன்னன், நீ கேட்டியா. தாய் சொல்லைத் தட்டாதே என்று சும்மாவா சொல்லி வைச்சார்கள். இனியாவது நரியுடனான
76

Page 43
சகவாசத்தை நிறுத்திவிடு” என்று தாய்பேசிக் கொண்டே இருந்தது. காகம் மெளனம் சாதித்தது.
எப்படியிருந்தாலும், காகம் நரியுடனான நட்பினை முறித்துக் கொள்ளவில்லை. காகம் தொடர்ந்தும் நரியிடம் போய்வந்தது. அந்த அளவிற்கு நரியனார் காக்கையாரை வசியப்படுத்தி வைத்திருந்தது. காகத்தின் குடும்பத்தினருக்கு இது பெருங்கவலையை அளித்தது. ஆனால், காகத்திற்கோ, நரிதான் பெரிதாகப்பட்டது.
சில நாட்கள் சென்றன. மறுபடியும் விவசாய வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று நரி, காகத்திடம் கூறியது. ஏற்கனவே ஏமாற்றமடைந்த காகம், இம்முறை, வேறொரு நிபந்தனையை வித்தித்தது.
“பூமிக்குக் கீழே விளைவது நரிக்கு உரியது; மேலே விளைவது அனைத்தும் காகத்திற்கு உரியது.” காகம் விதித்த இந்த நிபந்தனையை, நரி மறுவார்த்தை பேசாமல் ஏற்றுக் கொண்டது. காகமும், தான் இம்முறை புத்திசாலித்தனமாக நடந்து கொண்டதாக எண்ணியது.
விவசாய நடவடிக்கைகள் ஆரம்பமாகின வழக்கம் போலக் காகம்தான் முழுமூச்சாக வேலைகளைச் செய்தது. முழுப் பலனும் தனக்குத்தான் இம்முறை கிடைக்கப் போகி *ற நினைப்பு, காகத்திற் - ம் உற்சாகத் அளித்தது.
நரி மிக ஆழமாகச் சிந்தித்தது. என்ன பயிர் செய்வது என்பதைத் தீர்மானிப்பது நரியின் பொறுப்பு. இறுதியில் தனக்குமட்டும் நன்மை தரக்கூடிய தீர்மானத்தை நரி எடுத்தது. “இந்தமுறை கச்சான் கடலையும், உருளைக்கிழங்கும் பயிரிடுவோம். சந்தையிலும் அவற்றிற்குத் தான் நல்ல மானம்” என்றது நரி, காகம், நரி சொல்லைத் தட்டாது அல்லவா, காகம் சம்மதித்தது.
கச்சான் கடலையும், உருளைக்கிழங்கும் பயிரிடப்பட்டன. சில மாதங்கள் கடந்தன. அறுவடைக்காலம் வந்தது. நரி, ஒப்பந்தத்தின்படி நிலத்திற்குக் கீழே விளைந்த நிலக்கடலையையும், உருளைக் கிழங்கையும், நிலத்தைத் தோண்டி எடுத்துக் கொண்டது. நிலத்துக்கு மேல் காணப்பட்ட தேவையற்ற இலை கொடிகளைக் காண்பித்து அவையே காகத்திற்கு உரியவை என்றது நரி,
காகம் இரண்டாம் முறையும் நரியினால் ஏமாற்றப்பட்டு விட்டது. காகத்திற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை காகம் நல்ல பாடம் படித்து விட்டது. தாய் முதலிய பெரியோர்கள் சொன்ன புத்திமதிகளைக் கேட்டு நடவாததற்குக் கிடைத்த தண்டனை என்று காகம் எண்ணியது. நரியுடனான சினேகிதத்தை விலக்கிக் கொண்டது. பறந்து சென்று தாயிடம் மன்னிப்புக்கேட்டது. அன்று முதல் காகம் புதிய நல்ல வாழ்க்கையைத் தொடங்கியது.
நட்பு, நல்லவர்களுடன் கொள்ள வேண்டும். கெட்டவர்களுடனும், தந்திரக்காரர்களுடனும் சினேகம் பூண்டால் நாசமும், கெடுதியும், துன்பங்களும் தான் வந்தெய்தும் என்பதை உணர்ந்து கொள்வோமாக.
77

18. கல்வியே கருந்தனம்
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்.” குறள்
கல்வி கற்றவர்கள் தான் கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர்.
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனையவர்.”-குறள்
முதற் குறள் கல்வியின் சிறப்பையும் மற்றைய குறள் கல்லாமையின் இழிவையும் எடுத்துக் கூறுகிறது. கல்வி கல்லாதவன் இரு கால் விலங்கு. மனிதனை மனிதனாக்குவதும், மனிதனில் முழுவிருத்தியை ஏற்படுத்துவதும் கல்வி.
SL SL SLSSLLSSLSLL SLLLLSLSS0LLLSLSSLSSLLSLSLSLLLLLSLLLSLLLLLLLL LLLL LSLLLSL0LLSLLS SLS00SLLLLSLLSLLSLLLLLSLLLSLSLLLSLLSLLS ”நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு.”
என்கின்றது நாலடியார். அதனால்,
“கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே"
என்று வெற்றிவேற்கையும் “ஒதுவது ஒழியேல்" என்று ஆத்திசூடியும் “கைப்பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி' என்று கொன்றைவேந்தனும் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் கூறுகின்றன.
அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு வாழ்க்கைப் பயன்களையும் கல்வி வழங்குவதால், கல்வி சிறந்த மனித விழுமியம் ஆக உள்ளது. கல்வியின் பெறுமானம் இவ்வளவு என்று வரையறுத்துக் கூறமுடியாது.
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம். சாந்துணையுங் கல்வி என்று அறிஞர் கூறுவர். மனிதர்களிடம் அறிவு உள்ளார்ந்த நிலையில் இருப்பினும், அவர்களுக்கு அறிவு கற்றனைத்து ஊறும்; கல்லாத விடத்து மறைந்துவிடும். கல்வி என்பது மனிதப்பண்பு; அதுவே மனிதனை விலங்சி மிருந்து வேறுபடுத்த உதவுவது.

Page 44
மனிதர்களின் இயலறிவையும், திறன்களையும், ஆற்றல்களையும், விவேகபுத்தியையும், மனப்பாங்கையும் வெளிக்கொணர்வது கல்வியாகும். மனிதர்கள் நயத்தக்க நாகரிகத்தையும் பண்பாட்டையும் எய்துவதற்குக் கல்வியே உறுதுணையாயிற்று. வாழ்க்கையில் உயருதல் என்னும் வாழ்க்கைக் குறிக்கோள் கல்வி மூலமே எய்தப் பெறகிறது. பண்புகளையும், திறன்களையும் உயர்த்தி வளர்ப்பதன் மூலம், மனிதனின் பூரணமான ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி வழிசெய்கிறது. தன்னையறிதல், தன்னிறைவு பெறுதலுக்குக் கல்வி உதவுகிறது. மனிதத்தன்மையை மனிதர் பெற உறுதுணையாய் விளங்குவது கல்வி என்பது அறிஞர் முடிபு. அதேவேளை சமுதாய, கலாசார, கலை, ஆன்மிக, பொருளாதார வளர்ச்சிக்கும் கல்வி உயிர்நாடியாக உள்ளது. அந்த வகையில், கல்வி மனித அடிப்படை உரிமைகளுள் ஒன்றாக, ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான கலாசார நிறுவனம் வெளிப்படுத்திய சாசனத்தில் வலியாத்தியுள்ளது. கல்வி எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். அதைத் தடு து மனித உரிமை மீறல் ஆகும். மனித விழுமிய மீறலும் ஆகும். க. ரவி வழங்கப்படவேண்டும் என்பதை உலகில் எல்லாச் சமயங்களும் வலியுறுத்துகின்றன.
கல்வியைக் கருவறையிலிருந்து கல்லறைவரை கற்கவேண்டும் என்று கொள்வது இஸ்லாமிய மரபு. கல்வியை இளமை தொட்டு மரணபரியந்தம் விடாமல் கற்கவேண்டும் என்கிறார் நாவலர் பெருமான். அவரின் கருத்துப்படி கல்விக்குப் பயன் அறிவு: அறிவுக்குப் பயன் ஒழுக்கம் ஆகும். பகவான் ரீ இராமகிருஷ்ணர், “கற்க மறுப்பவன் வாழமறுப்பவன் ஆகின்றான்” எனக் கூறிய அமுதவாக்கு, கல்வி வாழ்க்கைக்கு இன்றியமையாதது என்பதை உணர்த்துகிறது.
கல்வி மனித ஈடேற்றத்திற்கும் கருவியாக உள்ளது. ஒழுக்கத்தைக் கற்பிக்காத கல்வி, கல்வியாகாது என்பதைக் கல்வியாளர்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். கல்வியென்பது சூழ்நிலைக்கேற்ப, சூழ்நிலையோடு ஒட்டியும், இசைந்தும் வாழக்கற்றுத் தருவது மட்டுமல்ல; சிறந்த, சீரிய விழுமியங்களைப் பேணி உயர்ந்த முறையில் மனிதர்களை ஒழுகச் செய்யவும் வேண்டும். கல்வியின் பண்பும், பயனும் அதுவே. கல்வியிலே பழமையும் புதுமையும் ஒன்றிக்க வேண்டும் என்பது போல, கல்வியிலே பண்பும் பண்பாடும் ஒன்று
“பண்பெனப் படுவது பாடறிந்தொழுகல்" என்று கலித்தொகை கூறுகின்றது. பிறர் இயல்பை அறிந்து நடக்கும் நற்குணம், கல்வியால் தரப்படுகிறது. பண்புடைமை என்பது சான்றாண்மை. நீதிநெறி முறைமையிலிருந்து வழுவா நடத்தை உடையவர்கள் சான்றோர்கள். சான்றோர்கள், அழுக்காறு, அவா, வெகுளி இன்னாச்சொல் என்பவற்றை விலக்கி, அன்பு, அறம், நீதி, உண்மை, நன்னடத்தை என்னும் அடிப்படையில் வளர்ந்து வந்தவர்கள். தங்கள் பண்பையும், மற்றையவர்களின் பண்பையும் வளர்ப்பவர்கள். கல்வியின் முக்கிய அம்சம் மனிதனை மனிதன் என மதித்து, அவனது உரிய நிலையைப் பேணுதல். இன்னொரு வகையில் சொன்னால் உலகில் மானுடத்தைப் பேணுவதற்கும் வளர்ப்பதற்கும் கல்வி உறுதுணையாக வேண்டும்.
79

மனிதனின் அடிமைத்தளை கல்வியால் அகற்றப்படவேண்டும் அறியாமை, வறுமை, பிணி, அடக் பவற்றின் பிடியிலிருந் 编 பிடுவிக்கக் கல்வியால் தான் முடியும். ஒரு நாடு அதன் கண்ணுள்ள மனித சக்தியையும், இயற்கை வளங்களையும் இணைத்துப் பொருளாதார வளர்ச்சி காணக் கல்வி உதவுகிறது. கல்வி மனிதர்களின் அறியாமையை அகற்றும் அதே வேளை பொருளாதார வளத்தையும் வழ்க்கைத்தரத்தையும் உயர்த்த வல்லது.
விஞ்ஞானக் கல்வி, தொழில்நுட்பக்கல்வி, கவின் க் கல்வி, விழுமியக்கல்வி, பண்பாட்டுக் கல்வி, சமூகக் கல்வி, உடற்கல்வி, ஆன்மிகக் கல்வி என்ற பல்வேறு கூறுகளும் இணைந்த கல்வியாக, கல்வி வழங்கப்படும் போதே, ஒரு தேசத்தின் நலன் விருத்தி, உறுதி நிலை, சுபீட்சம் என்பன வலுப்பெறும்.
எத்தகைய பொருளாதார விருத்தி ஏற்பட்டாலும், மனித விழுமியங்களும் பேணப்பட்டாலே, பொருளாதார விருத்தி அர்த்த முள்ளதாகவும், மனிதர்கள் அதனை முறையாக, முழுமையாக அனுபவிக்கக் கூடியதாகவும் விளங்கும். சமூகத்தில் அமைதி, சாந்தி, ஒழுங்கு கட்டுப்பாடு என்பன நிலவ, மனிதவிழுமியங்களே உதவும். எனவே வெறுமனே விஞ்ஞான, தொழினுட்ப அபிவிருத்தியில்மட்டுமே கல்வி கருத்தைச் செலுத்தாமல், மனிதப் பண்பாடு, மனித விழுமியங்களையும் கல்வி வளர்க்க வேண்டிய தேவை தற்பொழுது ஏற்பட்டுள்ளது.
இன்றைய சூழ்நிலையில், உலகின் எப்பாகத்திலும் வாழுகின்ற மக்கள், அமைதியின்றி, நிம்மதியின்றித் தவிக்கின்றனர். முன்னைய காலங்களை விடத் தற்போது கல்வி பெரிதும் அபிவிருத்தி கண்டுள்ளது. விஞ்ஞான முன்னேற்றமும், தொழில் நுட்ப அபிவிருத்தியும் இந்த நூற்றாண்டில் வியத்தகு விந்தைகளைப் புரிந்துள்ளன. மனிதன் மண்ணையும், விண்ணையும் ஆளும் ஆற்றலை அபரிமிதமாகப் பெற்றுள்ளன். இத்தனையும் மனிதனின் வல்லபங்களை எடுத்துக் காட்டுகின்றன. ஆனால், தன்னை அறியமுடியாமலும், தன்னை ஆள இயலாமலும் தவிக்கிறான். மனதில் அமைதியில்லை. சமுதாயத்தில்எங்கும் குழப்பங்கள். இவற்றிற் கெல்லாம் முக்கிய காரணம், மனித வாழ்விற்கு மிக அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற மனிதத் தன்மையையும், மனித
என்பது அறிஞர்கள் கருத்து. அது முற்றிலும் உண்மையே என்பது இன்று உணரப்பட்டு வருகிறது.
“உலகை ஒன்றாகக் காண்பதே கல்வி” என்று தமிழ் மூதாட்டி ஒளவையார் கல்விக்கு வரைவிலக்கணம் தந்தார். அது தமிழ்க் கல்வி மரபு ஆகியது. ஏற்றத்தாழ்வுகள் அற்ற; வேற்றுமைகள் பேதங்கள் இல்லாத சமத்துவம், சகோதரத்துவம், நீதி, சத்தியம், நேர்மை என்னும் விழுமியங்கள் நிறைந்த ஒரே உலகை நிர்மாணிக்கக் கல்வி கருவியாக, உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை இவ்வரைவிலக்கணம் அறிவிக்கிறது. கல்வியினால் எழுகின்ற அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை முதலியன மனித
80

Page 45
வாழ்க்கைக்கு அடித்தளமர்க அமைய வேண்டும் என்பது வள்ளுவம் அமைத்த கல்விமரபு.
ஆத்மிகநெறிப்படி மனிதர்கள் வாழவேண்டும். அதனை வகுத்துத் தருவது கல்வி என்று சமயங்கள் இயம்புகின்றன. கல்வி என்றால் சமயக் கல்விதான் என்று குறிப்பிடப்பட்ட காலமும் இருந்தது. அக்காலங்களில் மனிதர்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்.
வாழக்கையின் துன்பங்களுக்கும் இடர்ப்பாடுகளுக்கு மெல்லாம் அடிப்படைக் காரணம் அறியாமையே என்பது புத்தர் பிரானின் கருத்து ஆகும் அறியாமையை நீக்க எல்லாமக்களுக்கும் கல்வி புகட்டப்படவேண்டும், என்றார். பெளத்தக் கல்வி, மக்களிடையே அறநெறியை வளர்த்தது.
கிறிஸ்தவக் கல்வியும், இஸ்லாமியக் கல்வியும் சமயத்திற்கே முக்கியத்துவம் வழங்கியது, தூய்மை, சமய விழுமியங்கள் என்பன கல்வியின் கருப்பொருள்கள்.
சமயங்கள் யாவும் மனித ஒழுக்கக் கல்விக்கே முக்கியத்துவம் வழங்கிவருகின்றன. மனித வாழ்வு சீரும் சிறப்பும்; அமைதியும், சாந்தியும் பெற வேண்டும் என்பதே சமயங்களின் குறிக்கோள் ஆகும்.
மனிதர்களின் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றின் இயற்கைப் பெற்றிகளை வெளிக் கொணர்ந்து விளக்கம் பெறச் செய்வதே கல்வி என்று காந்தியடிகள் கல்விக்கு வரைவிலக்கணம் கண்டார். மனித விழுமியங்கள் ஆன்மிக வளர்ச்சியின் பாற்பட்டது.
“மனிதனுள் ஆழ்ந்து கிடக்கும் பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி” என்று சுவாமி விவேகாநந்தர் கூறியுள்ளார். ஆன்மாவை மறைத்திருக்கின்ற அறியாமை என்னும் இருளை நீக்குவது கல்வி. அறியாமை நீங்கினால் மனித துன்பங்கள் நீங்கி விடும். அறியாமை அகனற்ால் அறிவு வெளிச்சம் வந்து விடும், உள்ளார்ந்த ஆற்றல் ஆன்மா சம்பந்தப்பட்டது; அதனால் ஆன்மிகம் சார்ந்தது. ஆன்மிக ஆற்றல் மனிதர்களை வாழ்விக்கும் தன்மையது.
மனித வாழ்வில், மனிதன் ஆன்மிக ஆற்றலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது வாழ்விற்கு இன்றியமையாதது. இந்த ஆன்மிக ஆற்றலுக்கு முன்னால், ஏனைய தீய சக்திகள் அனைத்தும் பலம் கெட்டுவிடும்.
விஞ்ஞானமும், தொழில் நுட்பமும் இன்று மனிதர்கள் ஆன்மிக ஆற்றலை வளர்க்க விடாமல் தடுத்து வருகின்றன. மனித விழுமியங்கள், மனிதத்தன்மைகள் ஆகியவற்றின் மதிப்பிடமுடியாத பெறுமதிகளை மதிப்பிறக்கம் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகின்றன. பல்வேறு முரண்பட்ட கருத்துக்களையும் முன்வைத்து மனிதர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. விஞ்ஞான அறிவிற்கு எட்டாதவற்றை பொய் என்று சொல்லிவிடுகின்றன. அதனால் இளைய
8

பரம்பரையினர் இரண்டுங்கெட்டான் நிலைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆன்மிக ஆற்றல், அதனால் கிடைக்கக் கூடிய மனித விழுமியங்கள், மனிததர்மம், நீதி என்பவற்றில் இளைஞர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். அமைதியின்மை, குழப்பங்கள், கொந்தளிப்புகள், நம்பிக்கையினங்கள், உளப்பிணிகள் என்பன மனிதர்களிடையே தவிர்க்க முடியாதனவாகி வருகின்றன. தேவையானவற்றில் மாத்திரமன்று, எல்லாவற்றிலும் மாற்றம் தேவை என்கின்றனர். நீதி, சத்தியம், தர்மம், அன்பு, அஹிம்சை நல்லொழுக்கம் என்பன என்றுமே மாறாத விழுமியங்கள். இவையும் மாறவேண்டும் என்று, அடம்பிடித்தால் மனித இனத்திற்கு விமோசனம் ஏது?
உலகில், சுய முன்னேற்றம், பிறரில் கரிசனை கொள்ளாமை, போட்டாபோட்டி என்பவற்றால் மனிதர்கள் தடுமாற்றம் அடைவதுடன், வாழ்க்கைப் பாதையும் திசைமாறிச்செல்கிறது. திறந்த பொருளாதார முறைமை, சுயநலவிருத்தியையே அதி உச்சநிலையில் வைத்துக் கொண்டாடுகிறது. இன்றைய கல்வி முறையும் இதற்குத் தான் உறுதுணையாகிறது. அறத்திற்குத் துணைபோக வேண்டிய கல்வி, இன்று மறத்திற்குத் துணை போவதையிட்டுக் கவலை கொள்ளாமல் இருக்க முடியாது. வாழ்க்கையின் இலட்சியமே எதிர்மறையாகிவிட்டது. வாழ்க்கை என்பதற்குப் பொருளே மாற்றப்பட்டுவிட்டது. இப்படித்தான் வாழ்வது என்று வரையறை செய்வது மனித சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதாக உள்ளதாம். அதனால், சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக எப்படியும் வாழலாம் என்ற மாற்றம் கொன்டுவரப்பட்டதாம். எப்படி இருக்கிறது வேடிக்கை இது வெறும் மாற்றம் அன்று; உச்சமான தடுமாற்றம் என்றே கூறவேண்டும் சத்தியத்தையும் நீதியையும் தர்மத்தையும் கைநழுவ விட்டுவிடடு, உலக ஒற்றுமை, அமைதி, சமாதானம், பாதுகாப்பு என்று, பேசுதல் வீண் விரயம், அர்த்தமற்ற செயல், பிள்ளைப் பருவ விளையாட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இளையோர்கள் வாழ்க்கையை வளம்பட வாழ்வதற்குத் தேவையான வாய்ப்பினைய் பெற்றுக்கொள்ளக்கூடிய விஞ்ஞான தொழினுட்பக் கல்வி உள்ளிட்ட சீவனோபாயக் கல்வி வழங்குவதோடு, அவர்களுள்ளே மறைந்துகிடக்கும் ஆன்மிக ஆற்றல்களையும் வெளிக்கொணரக்கூடியதான கல்வியாகவும் அது அமையவேண்டும். ஆன்மிக ஆற்றல் வெளிப்படும் போதே, விழுமியப்பண்புகளும்
ஆற்றலே பெறுமதியானதும் இன்று தேவைப்படுவதும் ஆகும்.
செல்வம், அதிகாரம், புகழ், அந்தஸ்து என்னும் இவைகளையே தேடிக்கொள்ள மக்கள் பெரிதும் விழைகின்றனர். அவற்றைப் பெற்றபின் தக்கவைக்கவோ, பாதுகாக்கவோ முடியாமல் தவிக்கின்றனர். அவை பறிபோனதும் துன்பத்தில் துவள்கின்றனர். சற்று அமைதியாக இருந்து சிந்தித்தால் உண்மை விளங்கும்; காரணம் தெரியவரும்; தவறு என்ன என்பதும் புரியும், ஆனால் அவ்வாறு சிந்திக்க மறுக்கிறார்களே என்பதுதான் விந்தையாக உள்ளது.

Page 46
மனிதன் மனிதத் தன்மையைப் பெற மறுப்பதே இன்னல்களுக்கு மூலம் ஆகிறது. நமது முன்னோர்கள் கல்வி மூலம் மனிதப் பண்புகளை விருத்திசெய்தார்கள். அவற்றை வாழ்வில் மேற்கொண்டு வாழ்ந்தார்கள். சமூகத்தில் ஒழுக்கத்திற்கு முதல் இடம் தந்தார்கள். ஒழுக்கத்தை உயிரினும் மேலாக ஓம்பினார்கள். நீதி, தர்மம், சத்தியம் தவறாது வாழ்ந்தார்கள். உன்னத இலட்சியங்களைக் கொண்டிருந்தனர். பழி பாவங்களுக்கு அஞ்சினர். வாழ்வாங்கு வாழ்ந்தனர். அதனால் அவர்களின் வாழ்வு வளமாகவும், ஒழுங்காகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவுள்ளதாகவும் அமைந்திருந்தது.
பாவத்திற்கு அஞ்சுவதையும், எல்லா உயிர்களின் மீது அன்பையும்; சமூகத்தில் நன்னடத்தையையும்; எல்லோர்மீதும் கரிசனையையும் பேணி, நிதி தவறாநெறி முறையில் வாழ்ந்து கொண்டு; விஞ்ஞானத்தையும் அணைக்கும் போது, வாழ்வு வளம் பெறும், சுபீட்சம் அடையும், நீங்காத சுகம் தரும் என்பதில் ஐயமில்லை. இந்தநிலையிலேயே, “வாழ்க்கைக்கு உறுதுணையாக வருவது தூய நற்கல்வியே” என்ற திருமூலர் வாக்கு, பொருள் நிறைந்ததாக அமையும்.
19. தலைமைத்துவம்
ஜனநாயக நாட்டில், “எல்லோரும் நாட்டு மன்னர்கள்” ஆகக் கணிப்புப் பெறுகிறார்கள். மன்னர்கள் என்றால் தலைவர்கள் என்னும் பொருளைத் தருவதாகக் கொள்ள வேண்டும். அப்படியானால், ஒவ்வொரு குடிமகனும் ஏதோ ஒரு வகையில் தலைவனாகவே செயற்பட வேண்டியவனாகின்றான். வேறொரு விதத்தில் சொல்வதானால், ஜனநாயக நாட்டில், பிறக்கும் போதேயாவரும் தலைவர்களாகப் பிறக்கிறார்கள் எனலாம். ஆனால், விநோதம் என்னவென்றால், பலர் போகப் போகத் தலைமையை இழந்து வருகிறார்கள் என்பதுதான்.
தலைவர்கள் பிறப்பதில்லை; எவரும் தலைவர்களாக உருவாகலாம் என்பது புதிய கருத்து. அதையும் மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து அறிந்து கண்டமுடிவு. மேற்சொன்ன எனது கருத்து. பிறிதொரு கோணப்பார்வையிலிருந்து பெறப்பட்டது. ஜனநாயக நாட்டில், ஒவ்வொருவரும் பிறக்கும் போது, தலைவனாகக்கூடிய உரிமையும் உடன் தோன்றிவிடுகிறது என்பதே அதன் தொனியாகும். ஒரு சிலரே தலைமைத்துவத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். அதனால் அதனைப் பேணிவருகிறார்கள். ஆனால் பலர் தலைமைத்துவத்தைத் தட்டிக்கொட்டிவிட்டு அவலப்படுகிறார்கள். தலைவனாக விளங்கக் கூடிய உரிமையுடன் பிறந்தும், தலைமைத்துவப் பண்புகளையும், தகைமைகளையும், தகுதிப்பாடுகளையும் கட்டியெழுப்பத் தவறியவர்களே, அவ்வாறு தலைமையை இழப்பவர்கள். ஆகவே தலைவனாகப் பிறந்துவிட்டால் மட்டும், போதாது, தான் வளர்த்துக் கொள்ளும் பண்புகளினால் தான் தலைமைத்துவத்தைத் தக்கவைக்க முடிகிறது என்பதை உணர்ந்த கொள்ளுதல் அவசியம்.

தலைவர்கள் என்னும் போது அரசியல் ரீதியாகவே பொதுவாக நோக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. ஆனால் சமூகத்தலைவர்கள், ஊர்த்தலைவர்கள், தொழில்த்தலைவர்கள், வேலைத்தலத்தலைவர்கள், உத்தியோகத்தலைவர்கள், குடும்பத்தலைவர்கள், குழுத்தலைவர்கள் எனத் தலைவர்கள் பலரகம் என்பதையும் மறந்துவிடலாகாது. மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் ஊழியராகவோ, கீழ்ப்பணியாளராகவோ இருப்பவர்கள் வேறொரு சந்தர்ப்பத்தில் தலைவர்களாகவும் உள்ளனர். ஒவ்வொருவரும் தனக்குத் தானே தலைவராகவும் இருக்க வேண்டி உள்ளது. தன்னை ஆளமுடியாதவன், வாழுந்தகுதியை இழந்து விடுகின்றான்.
ஐந்து புலன்கள் உள்ளன. போதாததற்கு மனம் என்னும் உட் கரணமும் உள்ளது. இவற்றைக்கட்டி ஆளாவிட்டால், அவை தத்தம் விருப்பப்படி அலைந்து திரியத் தொடங்கிவிடும். அவ்வாறு கட்டுப்பாடு இல்லாமல் போனால், அதாவது அவற்றை நாம் ஆட்சிசெலுத்தா விட்டால்; இன்னொரு வகையில் கூறினால், ஐம்புலன்களுக்கும் மனத்திற்கும் நாம் நல்ல தலைமையை வழங்கத்தவறினால், அவை நமக்கு வஞ்சனையைத் தான் செய்யும். நமக்கு தீரா இடும்பை தரும். நன்னெறியிற் செல்ல எம்மை அவை அனுமதிக்கா, நாம் தலைவராக விளங்கிப் புலன் பொறிகளையும் மனத்தையும் முறையாக முகாமை செய்ய வேண்டும். அல்லா விட்டால் நாம் தலைமையை இழந்து அவற்றிற்கு அடிமையாகி அல்லற்படவேண்டி வரும் . இன்று பல்லோரினுடைய நிலைமை துன்பமயமாகிவிட்டமைக்கு முக்கிய காரணம் அவர்கள் தலைமைத்துவத்தைப் பறிகொடுத்து விட்டமையேதான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
நாம் பிறக்கும் போது தலைவர்களாகத்தான் பிறக்கின்றோம்; சுதந்திரத்துடன் தான் தோன்றுகின்றோம். ஆனால், எமது புலன்களுக்கும், மனத்திற்கும் இடங்கொடுக்கும் போது, எம் தனித்துவம், தலைமைத்துவம், சுதந்திரம், யாவும் அவற்றினால் அபகரிக்கப்பட்டுவிடுகின்றன. அதன்பின் துன்பங்கள் நம்மைச் சூழ்ந்து கொள்கின்றன. இதையிட்டு நாம் சிந்திக்க வேண்டியது அவசியம்.
ஒவ்வொருவரும் தன்னை அறிய வேண்டும்; அதற்கு முயற்சிக்க வேண்டும். எம்மிடம் உள்ள பலம் எத்துனை பெரியது என்பதை உணர்தல் அவசியம். நாம் தலைவர்கள் தான் என்பதை உணர்வோம்; எம்மிடம் உள்ளே ஆழ்ந்து புதைந்து கிடக்கும் அளவற்ற தலைமைத்துவ ஆற்றலை அறிந்து கொள்வோம். எமது அறியாமை தான் இதுவரை எமக்குத் திரைபோட்டு, எம்முடைய அளப்பரிய ஆற்றல்களையும், திறன்களையும், வல்லபங்களையும் எமக்குத் தெரியாதபடி மறைத்து வைத்திருந்தது என்பது தெரியவரும். தன்னை அறிந்து, தன் தலைமைத்துவத்தையும் அதன் தேவையையும் உணர்ந்து கொண்டால், எமக்குத் தீமை செய்யும் புலன் பொறிகளையும், மனத்தையும் திருத்தி விடமுடியும். அவற்றைத் திருத்தி, எம் வழிக்குக் கொண்டுவந்தால், அவை நமக்குத் துணையாகி விடும்; தொல்லையாக இருக்க மாட்டா.

Page 47
புலன்களோ, மனதோ கூடாதவையல்ல. அவற்றின உதவி நமக்குத் தேவையே. மெய், வாய், கண், மூக்கு, செவி என்பன மூலமே நாம் தகவல்கள், செய்திகளைப் புறத்தேயிருந்து பெற்றுக் கொள்கிறோம் அறிவை விருத்தியாக்கிக் கொள்கிறோம்; விவேகத்தை வளர்க்க முடிகிறது. மனம் சிந்திக்க உதவுகிறது; பகுத்தும் தொகுத்தும் பார்க்கத் துணையாகின்றது. அவை நமக்குத் துணையாக உள்ள கருவி கரணங்களே தவிர, அவை நாம் அல்ல என்பதை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாம் எம்முடைய தலைமையை ஒருபோதும் நமக்குத் துணையாயுள்ள இந்தக் கருவி கரணங்களிடம் கையளித்து விடக் கூடாது. எமது தலைமையை நாமே வைத்துக் கொள்ள வேண்டும். அது எமது பிறப்புரிமை. கருவி கரணங்கள் எமது சொற்படி செயற்படவேண்டுமே தவிர நாம் அவற்றின் கட்டளைகளுக்குப் பணிதல் ஆகாது.
ஆனால் இன்று மனிதர்கள் அவர்கள் வசம் இல்லையே! மனம், மற்றும் ஜம்புலன்கள் வசமாகிவிட்டார்களே! அவற்றிடம் பூரண சரணாகதி அடைந்த நிலையில் உள்ளனர். “தலையிருக்க வால் ஆடுகிறது” என்பார்களே. மனிதர்கள் அந்தநிலைமைக்கு வந்துவிட்டது போலத்தோன்றுகிறது. மனிதர்கள் தமது தலைமையை இழந்து தவிக்கிறார்கள். இந்த உண்மையைக் காலங் கடந்தபின்னர் ஆவது உணர்ந்து கொண்டால், மீண்டும் நாம் தலைமையைப் பெற்று விடலாம், மனம் முதலிய கருவிகரணங்களை எம் தலைமையின் கீழ்க் கொண்டுவந்து விட்டால் அவற்றால் ஆபத்து இல்லை; அவை நமக்குத் துணையாகி விடும்.
கருவிகளை நாம் விரும்பும் போது பயன் படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, கருவிகளின் விருப்பத்திற்கு நாம் பயன்படுத்தப்படுவதாக இருத்தல் ஆகாது. அது தலைமைக்கு அழகல்ல.
“ஆடுகள் நினைத்த இடத்தில் இடையன் பட்டி போடுவதில்லை. இடையன் நினைத்த இடத்தில் தான் ஆடுகளுக்கு பட்டிபோடுவான், ” என்பது ஒரு பழம்கூற்று. இந்த மாதிரித்தான் மனிதரும் நடந்து கொள்ள வேண்டும். மனம் போன போக்கிலே போவதற்கு, மனிதன் அனுமதிக்கக் கூடாது. மனிதன் தான் தலைவன்; மனம் வெறும் கருவி. மனிதனுக்கு மனம் அடங்கி நிற்கவேண்டும்.
மனம் போன போக்கில் அதைப் போகவிட்டால், அழுக்காறு, அவா, சினம், பொறாமை, எரிச்சல், செருக்கு, காமம் என்பவற்றைப் பிரசவித்து, மனிதன் கையில் கொடுத்து, அவற்றைப் பேணி வளர்க்கும்படி கட்டளையிடும். அதனால் மனத்தை முந்த விடாமல், மனிதன் தலைமையினால் முந்த வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவர். மனிதன், மனத்தை முகாமைத்துவம் செய்யும் போது மனத்தில் அமைதி, அன்பு, கருணை, கரிசனை, சாந்தம் என்பன தோன்றும். அவையே அம் மனிதனையும், ஏனையோரையும் வாழ்விப்பன. எனவேதான், மனத்திற்கும், மற்றும் புலன் பொறிகளுக்கும் மனிதன் தலைவனாக வேண்டும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொருமனி தனாலும் தலைமை தாங்க இயலும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
85

எவனொருவன் தனக்குத் தலைவனாக விளங்குகிறானோ, அவனேதான் மற்றையோருக்குத் தலைமை தாங்கும் தகுதிப்பாட்டைப் பெறுகிறான். தனக்குத் தலைமைதாங்கி, மனம், புலன்கள், பொறிகள் முதலிய கருவிகளை முகாமைப்படுத்தி, வெற்றிகாண்பவரே, மற்றையோருக்கும் தலைமைதாங்கி அவர்களை சுயிட்சத்திற்கு இட்டுச் செல்வர்.
தலைமை என்பது பண்பாட்டின் அடிப்படையில் கட்டிவளர்க்கப்பட வேண்டும். வெறும் பதவி அந்தஸ்தினாலும்; செல்வம், புகழ், அலங்காரங்களினாலும்; புறநடிப்பினாலும் சில காலங்களுக்குத் தலைவராக இருக்கலாம்; ஆனால் நெடுங்காலம் நீடித்திருக்க முடியாது. இன்று பல தலைவர்கள் திடீர் திடீரெனத் தோன்றுவதையும்; பின்னர் விரைவில் வீழ்ச்சி அடைவதையும் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு என்ன காரணம்? இவர்கள் தமக்குத் தலைவர்களாக இருக்க முடியாமற்போனமையே, அவர்களின் வீழ்ச்சிக்குக் காரணமாய் அமைகின்றது. இதை நம்மில் எத்தனை பேர் ஏற்றுக் கொள்வர்? தங்கள் வீழ்ச்சிக்கு காரணத்தைப் பிறர்மீது சுமத்திவிடுவது இன்றைய நடைமுறையாகி விட்டது. தன் பிழையையோ, இயலாமையையோ தானே ஏற்றுக் கொள்ளுதல் என்பது இன்று இல்லாமல் போய்விட்டது. ஒருவன் தனது வீழ்ச்சிக்குத் தானே காரணன் என்பதை எப்போது அறிகிறானோ, அந்தக் கணமே அவன் எழுச்சியின் முதற்படியில் காலெடுத்துவைத்து விட்டான் என்பது அர்த்தம். அதை விடுத்துத் தோல்விக்குப் பிறர்காரணம் என்று எண்ணுபவர்கள், பலரின் பகைமையையும் வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்வார்களே தவிர, மீண்டும் வெற்றியை எட்டியும் பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். தலைமைத்துவத்தையும் இழந்து விடுகின்றனர்.
“தீதும் நன்றும் பிறர் தர வாரா”; அவை நாமே முயன்று தேடிக்கொண்டவை என்று நம் முன்னோர் சொல்லிவைத்தது, அற்புதமான மகுடவாசகம். அதை அடிக்கடி நினைத்துக் கொண்டாலே நம் தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.
ஒருவர் தலைமைதாங்க விரும்பினால், மக்களைத் தம்பால் கவர்ந்து ஈர்க்க வல்ல மனிதப்பண்பாடு, நல்ல ஒழுக்கம், பிறர்மீது கரிசனை, மனிதாபிமான உணர்வு, மனித விழுமியங்கள் என்பவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும். இப்பண்புகளை வளர்த்துக் கொள்ளும் எவரிடமும் தலைமை தேடிவரும். தலைமையைத் தேடிச் செல்ல வேண்டியதில்லை. வெற்றிபெற்ற தலைவர்களின் வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால், அவர்கள் தலைமையைத் தேடிச் சென்றவர்களாக இல்லை. தலைமை அவர்களைத் துரத்திப் பிடித்த வரலாறாகவே உள்ளது. காரணம், அவர்கள் முதலில் தமக்குத தலைமைதாங்கித் தமது தலைமைத்துவத்தை உலகறியச் செய்தவர்கள். மகாத்மா காந்தியடிகள் அஹிம்சை, சத்தியம் ஆகிய இரண்டு உயர் நெறிகளையும் கடைப்பிடித்துத் தமக்குத் தலைவரானார். அவருடைய மனம், மற்றும் புலன்கள் பொறிகள் என்பன பலவேளைகளில் அவரை ஆட்சிசெய்யப்பார்த்தன. சத்திய சோதனை என்னும் தமது சுயசரிதை நூலில்,

Page 48
இவைபற்றியெல்லாம் உள்ளபடி எழுதியிருக்கிறார். ஆனால், அவர் அவற்றிற்கு எல்லாம் இடங்கொடுக்கவில்லை. வைராக்கியமாக இருந்தார். மனத்துக்கோ, பொறிபுலன்களுக்கோ ஆதரவாக இருக்காமல், அவற்றை வென்றார். அவற்றின் மீது தான் தனது ஆட்சியைச் செலுத்தினார். தனக்குத் தலைவரானார். அதனால் தலைமை அவரைத் தேடி வந்தது. அவருடைய தூய்மையான ஒழுக்க வாழ்க்கையே, அவருக்குத் தலைமைத்துவம் தந்தது. எல்லா மக்களும் அவரின் தலைமையை ஏற்றனர்.
உலகியல் தலைமை, ஆன்மிக அடிப்படையில் இருந்து கட்டியெழுப்பப்பட வேண்டும், ஆன்மிகப்பண்புகள் அற்ற உலகியல் தலைமை விரைவில் பழுதடைந்துவிடும் வரலாறு இதனைக் காட்டுகின்றது. தான் மனிதனாக, மனிதத் தன்மைகளுடன், பண்புகளுடன் செம்மையாக வாழ்ந்து காட்டாமல், தாம் தலைமை தாங்கும் மக்களுக்கு நல்ல வழிகாட்டுவதென்பது முடியாத காரியம், செம்மை வாழ்வுதான், ஆன்மிக வாழ்வு எனப்படுகிறது. ஆன்மிக வாழ்வு என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது என்றோ, எட்டாக் கணியென்றோ எண்ணிவிடுதல் தவறானது. ஆன்மிக வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் இயலக் கூடியது தான். மீண்டும் சொன்னால், மனிதத் தன்மைகளோடு மனிதனாக வாழும் வாழ்வுதான் ஆன்மிக வாழ்வு. மனித விழுமியங்களை மதித்து வாழும் வாழ்வுதான் செம்மை வாழ்வு; அதுவே ஆன்மிக வாழ்வுமாகும்,
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்பது வள்ளுவர் மறை.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று மனிதவிழுமியங்கள் பேணி வாழ்கின்றவன் எவனோ அவனே தலைவன் ஆவான் தலைமைத்துவப் பண்புகள் அவனிடம் தான் மிளிரும், அத்தகைய ஒரு தலைவனின் ஏவலை, உலக மாந்தர் விரைந்து கேட்டு நடப்பர். இத்தகைய பன்பாடு நிறைந்த தலைவர்களையே, நாடும், சமூகமும், தொழில் தலங்களும் அலுவலகங்களும் குடும்பங்களும் இன்று வேண்டி நிற்கின்றன.
87
 
 
 
 
 
 

20. நாகரிகமும் பண்பாடும்
இம் மண்ணிற் பிறந்த மக்கள், நாகரிகம் அடைந்தவர்களாகவும், பண்பாடு உடையவர்களாகவும் வாழவேண்டியது அவசியம். ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போன்று, மனித வாழ்க்கைக்கும் நாகரிகம், பண்பாடு என இரண்டு பக்கங்கள் உண்டு. இவ்விரண்டினதும் ஒருங்கினைந்த வளர்ச்சியிலேயே மனிதவாழ்க்கையின் பெறுமானமும், மதிப்பும் தங்கியுள்ளன. மனிதன் வசதி வாய்ப்புக்களுடனும்; புகழ், அந்தஸ்துடனும்; பணம் பண்டங்களுடனும், பட்டம் பதவிகளுடனும் மட்டும் வாழ்ந்துவிட்டால் நிறைவாழ்வு வாழ்ந்ததாகக் கொள்ளமுடியாது. மனிதன் அவற்றுடன், மனிதப் பண்பாட்டுடனும், மனிதத் தன்மைகளுடனும் உறவாடிக்கொண்டு மனிதனாக வாழும்போதே நிறைவாழ்வு வாழ்ந்ததாகக் கருதமுடியும்.
நாகரிகம், பண்பாடு என்பன இரு வேறு விடயங்கள். இரண்டிற்குமிடையே பாரிய வேறுபாடு உண்டு. வாழ்க்கையின் உலகியல் சார்ந்த முன்னேற்றங்களைக் குறிப்பதாக நாகரிகம் அமைகின்றது. நாகரிகம் புறவாழ்க்கை சார்ந்தது; விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சி, நாகரிகத்தை முன்னேற்றுகின்றது. மின்சாரம், மோட்டார் வாகனங்கள் ஆகாயவிமானங்கள், தொலைக்காட்சி, வானொலி, இயந்திர சாதனங்கள், அணுசக்தி, கணனி, எலெக்ரோனிக்மெயில் முதலியன மனிதனின் அபூர்வ சாதனைகள். இவற்றால் மனிதர்களின் வாழ்க்கை வசதிகள் பெருக்கப்பட்டும், சிரமங்கள் குறைக்கப்பட்டும் உள்ளன. இதனையே நாகரிக வளர்ச்சி என்கிறோம். நாகரிகம் மட்டும் அதிதீவிர வளர்ச்சி பெற்று விட்டால் மாத்திரம் போதாது. பண்பாடும் அதே கதியில் வளர்ச்சி பெற்றாலே, நாகரிக வளர்ச்சி அர்த்தமுள்ளதாக அமையும்.
இன்றைய உலகின் நெருக்கடிகளுக்கும் பரிதாப நிலைக்கும் பிரதான காரணம், நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டினதும் வளர்ச்சியில் காணப்படுகின்ற பாரிய ஏற்றத்தாழ்வேயாகும். நாகரிகம் பாரிய வளர்ச்சி கண்டுள்ளது. அந்த அளவிற்குமனிதரில் பண்பாடு வளர்வில்லை. மனிதனின் அரும்பெரும் சாதனைகள் அனைத்தும் மனிதர்களை அழிப்பதற்கே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆக்க முயற்சிகளுக்குப் பயன்படுத்த மனிதர்கள் தயங்குகிறார்கள். ஆகவே, இந்த நூற்றாண்டில் பெருவளர்ச்சி கண்ட நாகரிகம், பூபாரந் தீர்க்கப் புறப்பட்டு விட்டதோ என எண்ணத்தோன்றுகிறது. இந்த இலட்சணத்தில், இருபத்தோராம் நூற்றாண்டைப் பற்றி என்னென்னவோ எல்லாம் சிந்திக்கிறார்கள், எத்தனையோ திட்டங்களையெல்லாம் திட்டுகிறார்கள். முன்னாயத்தங்கள் தடல்புடலாக நடைபெறுகின்றன. இவற்றை நினைக்கும் போது, எந்த ஒரு அறிவுள்ள மனிதனுக்கும் சிரிப்பு ஏற்படாமல் விடாது. "தாய் ஊரிலே பிச்சையெடுக்க வைத்துவிட்டு, மகன் கும்பகோணத்திலே கோதானம் செய்தானாம் என்றொரு பழமொழி உள்ளது. மனிதப் பண்புகளைப் புறக்கணித்து விட்டு நடத்தும் எந்தச் செயலும், எந்த முன்னேற்றமும் மனித குலத்திற்கு நன்மையைத் தராது. ஆகவே இருபத் தோராம் நூற்றாண்டுக் கான சமூக,

Page 49
பொருளாதாரத்திட்டங்களைத் திட்டும் போது, முதன்மைகளைத் தீர்மானிக்கும் போது, மனித விழுமியப் பண்புகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவேண்டிய அவசியதேவையை உணர்ந்து கொள்ளவேண்டும். இன்னொருவகையில் கூறுவதாயின், உலகம் இன்று வேண்டி நிற்பது பண்பாட்டு வளர்ச்சியையே ஆகும்.
பண்பாடு, மனிதனின் அக வளர்ச்சியாகும். உள்ளத்தைப் பண்படுத்துதல் மூலம் பெறப்படும் வளர்ச்சி. உள்ளம் தூய்மையடைதல், அதன் வழி எண்ணங்கள், உணர்வுகள், பேச்சுக்கள், செயல்கள் தூய்மையடைதல் பண்பாட்டு வளர்ச்சியாகும். நிலத்தைக் கொத்திக், கிண்டி, உழுது, பசளையிட்டு, புல்பூண்டுகளைக்களைந்து பண்படுத்திய பின்னர், அந்நிலத்தில் விதைக்கும் தானியங்கள். நன்கு முளைத்து, செழித்துவளர்ந்து, சிறந்த பயனைத்தருகின்றன. வெறும் கட்டாந்தரையிலோ, புல்பூண்டுகளால் மூடப்பட்டுள்ள நிலத்திலோ விதைக்கப்படும் விதைகள் முளை கொள்ளுமுன்பே கருகிவிடும். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவெனில், நிலத்தைப் பண்படுத்தப்பண்படுத்தவே, நல்ல விளைச்சல் ஏற்படுகிறது; நிலத்தை அலட்சியம் செய்து, பண்படுத்தாமல் அந்நிலத்தில் பயிர்ச்செய்கை செய்வதினால் எவ்வித பிரயோசனமும் கிடைப்பதில்லை என்னும் தெளிவான உண்மையையே ஆகும். நிலத்தைப் பண்படுத்துவதற்கு உழைப்பு, அதிலும் கடின உழைப்பு அவசியம். பாடு பட்டு மனிதன் நிலத்தைப் பண்படுத்துகிறான். மனித உள்ளங்களும், நிலத்தைப் போன்று பண்படுத்தப்பட வேண்டியவை. உள்ளங்களையும் பாடுபட்டுத்தான் பண்படுத்த வேண்டும்.அதனாலோ என்னவோ, அத்தகைய நன்கு பண்பட்ட உள்ளங்களிலிருந்து பெறப்படும் விளைவுகளையே பண்பாடு என்கிறோம். "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” என்பது ஆன்றோர்வாக்கு. பண்பாட்டின் அழகு, எழில், நயம், பொலிவு, பூரணம் யாவும், மனிதரின் வாழும் முறையில் பிரதிபலிக்கும். மனிதரின சிந்தனைகளிலும், உணர்வு வெளிப்பாடுகளிலும், சொல்லிலும், செய்காரியங்களிலும் பண்பாட்டின் முத்திரை பதிந்திருக்கக் காணலாம். பண்பாடுதான் மனிதரை, மனித நிலைக்குக் கொண்டு வருவது; தெய்வீக நிலைக்கு உயர்த்துவது. காந்தியை, மகாத்மா ஆக்கியது எது? எத்தனையோ வழிகள் இருந்தும் காந்தியடிகள் அஹிம்சை வழியை, உண்மை வழியை வாழும் நெறியாகக் கொண்டது எதனால்? மாபெரும் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் பிடியிலிருந்து இந்தியாவிற்குக் “கத்தியின்றி இரத்தமின்றி” சுதந்திரம் பெற்றுக் கொடுத்தாரே! இந்த மாபெரும் சக்தியை மகாத்மா காந்தி எங்கிருந்து பெற்றார்? எல்லாவற்றிற்கும் விடை ஒன்றுதான். பண்பாடு என்பதுதான் அந்த ஒரே விடை. இது சிந்திக்கற்பாலது. காந்தியடிகள் பெற்ற மாபெரும் வெற்றிகளின் இரகசியம், அவர்கடைப்பிடித்து வந்த மனிதப்பண்பாடுதான் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
காந்தியடிகளை, “அரை நிர்வாணப் பக்கிரி", நாகரிகமற்றவர் என வெள்ளைக்காரத்துரைத்தனத்தார் வருணித்தனர். அவர் வாழ்க்கை வசதிகளை அதிகம் அனுபவிக்கவில்லை. ஏழைபங்காளன் அல்லவா அவர். ஏழைகளைப் போல உடுத்தார், உண்டார், உலாவினார். ஆடம்பரவாழ்க்கையை அறவே
89

வெறுத்தார். அதனால் நாகரிகத்தில் ஏழ்மைபோல்த் தோன்றினார். ஆயினு: மனிதப் பண்பாட்டில் மாபெரும் செல்வனாக விளங்கியவர் காந்தியடிகள் காந்தியை, மகாத்மா நிலைக்கு உயர்த்தியவை அவர் வாழ்வில் இம்மியளவு: தவறாமல் கடைப்பிடித்துவந்த சத்தியமும், அஹிம்சையுமேயாகும். இவை மனி விழுமியங்கள்; பண்பாட்டின் சிகரங்கள் எனலாம்.
உலகில் இன்று நாகரிகம் பெருவளர்ச்சி கண்டுள்ளது. அதை மறுப்பதற்கில்லை. இந்தநூற்றாண்டில் ஏற்பட்ட அறிவு வளர்ச்சி, முன்னர் எப்பொழுதும் கண்டிராத அளவிற்கு, தொகையிலும் வேகத்திலும் மிக அதிகம் ஆகும். அதனால் அதனை “அறிவு வெடிப்பு” என்கின்றனர். இந்த அறிவு வெடிப்பினால், அதன் பெருவளர்ச்சியினால், மனித குலத்திற்கு ஏற்பட்ட பலாபலன்களை இந்த நூற்றாண்டு முடிவுறும் தறுவாயில் மீட்டுப்பார்த்து மதிப்பீடு ச்ெயவது அவசியமாகும். இதனை ஒரு கணக்கெடுப்பாகக் கொள்ளலாம். கணக்குப் பார்க்காமல் செலவு செய்பவர்கடைசியில் அவலப்பட வேண்டிநேரிடுகிறது. அவ்வாறே, இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவுத்தொகுதிகளும் எதற்குப் பயன்படுத்தப்பட்டன, எவ்வாறு செலவு செய்யப்பட்டன என்பதைக் காய்தல உவத்தல் இன்றி, நடுவு நிலையில் நின்று ஆராய்ந்து தீர்ப்பு வழங்குவதற்குச் சர்வதேச ஆணைக்குழு ஒன்று தேவையாகும். தீர்ப்பு என்னவாக இருக்கும் என்பதையும் முன்கூட்டியே கூறிவிடலாம். இந்த நூற்றாண்டில் அபரிமிதமாக ஏற்பட்ட விஞ்ஞான தொழினுட்ப அறிவும் ஆற்றலும் மனிதகுல நாசத்திற்கே பெரிதும் பயன்படுதுத்தப்பட்டன; ஆக்கத்திலும் அழிவிற்கே முதன்மை தரப்பட்டன, சமாதானத்திற்காக அன்றி யுத்தத்திற்காகவும், மனிதர்களின் அமைதியைக குலைப்பதற்காகவும் செலவு செய்யப்பட்டன. உலகில் யுத்தங்களினால் அகதியாக்கப்பட்டவர்களின் தொகையையும், ஆதரவற்றவர்களின் எண்ணிக்கையையும், உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் ஊனமுற்றோர்களின் தொகையையும் இவற்றுடன் போரில் மரணித்தவர்களின் எண்ணிக்கையையும் கூட்டிப் பார்த்தால், அவை சான்றாதாரங்களாக விளங்கும். அறிவின் பெருவளர்ச்சியும் ஆற்றலின் மிகை விருத்தியும் இந்தநூற்றாண்டில் மனிதகுல அழிவிற்கும் அவலங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன என்ற தீர்ப்பு வழங்கப்படும் நிலையில் அதனை நீதி என்று ஏற்றுக் கொள்வததைத் தவிர, மறுப்பதற்கு நியாயம் இல்லை.
திருக்குறளைச் சட்டப்புத்தகமாகக் கொண்டு பார்க்கும் போதும், மேற்கூறிய திர்ப்புச் சரியாகவே இருக்கும். “அறிவினால் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தந்நோய் போல் போற்றாக்கடை” என்பதுதிருக்குறள். மனிதர், பெற்ற அறிவின் உதவியால் மற்றையோர் துன்பங்களைத், துயர்களை நீக்க முடியாவிடின், அந்த அறிவு பயனற்றது என்பது வள்ளுவத்தின் தீர்ப்பு. இந்த நூற்றாண்டில் மக்கள் பெற்ற அறிவும் ஆற்றலும் பிறர்துன்பங்களைப் போக்குவதற்குப் பயன்படவில்லை என்பதுடன், பிறருக்குத் துன்பங்களை வருவித்துமுள்ளன என்பதை உணர்ந்து கொள்ளும் போது மனிதரின் இழிநிலை தெற்றெனத் துலங்குகின்றது.
90

Page 50
“அறிவு அற்றம் காக்கும் கருவி” என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. மனிதரை இறுதிவரை காப்பாற்றும் கருவி அறிவு ஆகும் என்பது வள்ளுவர் நிலைப்பாடு. இன்றைய அறிவு, மனிதரைக் காக்கும் கருவியாக இல்லையே என்பது நமது ஆதங்கம். அறிவு மனிதரில் பண்பாடுகளை வளர்க்க வேண்டியது; ஆனால் இன்றைய நிலையில் அறிவு மனிதர்களுக்குப் பாடுகளை அதாவது துன்பங்களை இழைப்பதற்குத் துணைபோகின்றதே.
இச்சந்தர்ப்பத்தில் விஞ்ஞான அறிவு, தொழில்நுட்ப ஆற்றல் என்பன நமக்குக் கூடாதன, ஆகாதன என்ற முடிவிற்கு வந்துவிடுதல் தவறு என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். தவறு, அத்தகைய அறிவுகளையும் ஆற்றல்களையும் பிழையாகப் பயன்படுத்துவோரிலேயே உள்ளது. மூடன் கையில் தீப்பந்தம் தரப்படின், தீயைக் கொண்டு வீட்டையும் கொளுத்துவான்; ஊரையும் அழிப்பான். அது தீயின் பிழையன்று, தீப்பந்தத்தைக்கையில் ஏந்தியவனின் விருப்பம். தியை வேண்டாமென்று தள்ளிவிட முடியாது. தீயைத் தேவைக்கேற்ற விதத்தில் அளவாகப் பயன்படுத்தும் போது, நன்மை கிடைக்கிறது. விஞ்ஞான, தொழில்நுட்ப அறிவையும் ஆக்க வழிக்குத் திசைதிருப்பினால், அந்த அறிவு அற்றங்காக்கும் கருவியாக மனிதர்களை இறுதிவரை காப்பாற்றும் என்பது உறுதி. இதில் எள்ளளவேனும் சந்தேகத்திற்கு இடமில்லை.
இங்குதான் பண்பாடு, விழுமியங்களின் தேவை உணரப்பட வ்ேணடியுள்ளது. மனிதரைப் பண்பாடு உடையவர்களாக, விழுமியங்கள் பேணுபவர்களாக வளர்த்து விட்டால், அறிவையும் ஆற்றலையும்; திறனையும் வல்லபங்களையும் சரியான முறையில், ஆக்கப்பாதையில் நெறிப்படுத்தும் பெற்றியராக மனிதர் வந்து விடுவர். மனிதரில் மனிதப்பண்புகள், விழுமியங்கள் விருத்தியாகும் போது, மனித மனங்கள் பண்படுத்துப்பட்டுவிடுகின்றன. உள்ளங்களில் தூய்மை ஏற்பட்டுவிடுகிறது. உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகில், மனிதரின் அறியாமை, அழுக்குகள் உள்ளிட்ட இருள் அகன்று விடும். உள்ளங்களில் ஊற்றெடுப்பனவெல்லாம் நல்ல விளைவுகளையே நல்கும். இப்பொழுது ஏற்படும் அறிவின் பெருவளர்ச்சியும், ஆற்றலின் மிகுவளர்ச்சியும் அளவு அறிந்தும், ஆக்கத்திற்காகவும், உலக நன்மையின் பொருட்டும் பயன்படுத்தப்படும். இருபத்தோராம் நூற்றாண்டின் சவால்கள் மனிதப் பண்பாடு, மனித விழுமியங்கள் என்பன பேணப்படாமையால் ஏற்படுவதாகவே அமையப்போகிறது. எனவே, மனிதப் பண்புகள், மனித விழுமியங்கள் என்பவற்றை மதிப்பவர்களாகவும் பேணுபவர்களாகவும் மனிதர்கள் நெறிப்படுத்தப்பட்டும் வழிப்படுத்தப்பட்டும் வந்தால், சவால்களே தோன்றுவதற்கு இடமில்லாமல் போய்விடும். இந்தக் கைங்கரியத்தை இப்பொழுதிருந்தே தொடங்க வேண்டும். வீட்டிலும், பாடசாலைகளிலும், சமூகத்திலும் அதற்குரிய நல்ல சூழலைப் பெற்றோர், ஆசிரியர், சமூகத்தவர் என்போர் இளஞ்சிறார்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் தாங்கள் முன்மாதிரியாக நடந்து காட்டுதலும் அவசியம்.
“வளர்ந்த பின் திருத்துவதிலும், இளமைப்பராயத்தில் நற்பண்புகளைக் கட்டியெழுப்புதல் மேலானது” என்று கல்வியாளர் கூறுகின்றனர். இளம்
9

பராயத்திலிருந்து மனிதப் பண்புகளை வளர்த்தல் இலகுவானதும் கூட என்பதை உணர்தல் வேண்டும். “இளமையிற் கல்வி சிலையில் எழுத்து” என்பர். சிறுவயதில் கற்றுக்கொண்ட பழக்கமும் பண்பும் அதுநல்லதோ கெட்டதோ இறுதிவரை நீடிக்கும். அதனாலேயே இளமையில் கெட்டபழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது என்று பெரியவர்கள் வலியுறுத்துகின்றனர்.
சூரியோதயத்திற்கு முன்னர் அதிகாலையில் தயிரைக்கடையும் போதுதான் வெண்ணெய் விரைவில் நன்கு திரண்டுவரும். சூரியன் உதித்து, வெயில் வந்து விட்டால், தயிரை எவ்வளவுதான் கடைந்தாலும், வெண்ணெய் திரளுவதில் சிரமம் ஏற்படும்; வெப்பத்தினால் வெண்ணெய் உருகுமே தவிர, திரண்டு வராது. இது தயிர் கடைபவரின் அனுபவம். நல்ல பழக்க வழக்கங்கள், பண்புகள், விழுமியங்கள் என்பனவற்றையும் குழந்தைப் பருவத்திலிருந்தே விருத்தி செய்யப்பட்டு வருவதால், அவை நன்கு நிலைகொண்டுவிடும். மனிதவாழ்க்கையின் குழந்தைப்பருவம், ஒரு நாளின் அதிகாலை போன்றதாகும், குழந்தை வளர்ந்து குமரப்பருவத்தை அடைந்து விட்டால், சமூகத்தில் நிலவும் குறைபாடுகள், ஊழல்கள் என்பன அவர்களில் தொற்றிவிடுகின்றன. சமூகத்தின் தாக்கத்தினால், பண்புவளர்ச்சியை இடையில் ஏற்படுத்துவது சிரமமாகிவிடுகின்றது. “இளமையிற் கல்” என்ற முதுமொழியும், கற்கவேண்டியவற்றை இளம் வயதில்
கற்றுவிட வேண்டும் என்று வற்புறுத்துகிறது.
இருபதாம் நூற்றாண்டின் அறிவு விருத்தி, மனிதர்கள் பணம், பண்டம், தேடுவதற்கும்; பதவி, அந்தஸ்து, அதிகாரம் என்பவற்றை அடைவதற்கும்; வன்முறைகள், வன்செயல்கள் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கும்; அநீதிகள், அதர்மங்களை நீதி எனவும் தர்மம் எனவும் நியாயிப்பதற்கும் பெரிதும் உதவியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அதே வேளை, பண்பாட்டினைப் பின்னடையச் செய்தும் உள்ளது. ஒழுக்கம், கட்டுப்பாடு, நேர்மை, நிதி, மனிதநேயம், மனிதர்மம், பிறர்நலம் பேணல், கரிசனை என்பன மனித சமுதாயத்தில் பெரும் அருந்தல் ஆகி விட்டன. மனித சமுதாயத்தில் இருந்து மனிதப்பண்புகள் வெளியேற்றப்பட்டமையே இந்த நூற்றாண்டில் ஏற்படுத்தப்பட்ட அதியற்புத மனித சாதனையாகும். எங்கும் மனித ஒலங்கள், அழுகைக் குரல்கள், துன்பகிதங்கள், துயர ஒலிகள், மரண ஊர்வலங்கள். இவற்றின் மத்தியிலேயே, இருபதாம் நூற்றாண்டு பிரியாவிடை பெறுகிறது. இந்த நூற்றாண்டு சுயநல அபிவிருத்தி நூற்றாண்டு என உலக வரலாற்றில் “பொன் எழுத்துக்களால்” பொறிக்கப்படும். மனிதம் மறைந்த நூற்றாண்டு என நினைவு கூரப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இவையாவும் நமக்கு நல்ல படிப்பினைகளாக அமையட்டும். கொடுத்துத் தான் படிக்கவேண்டும் என்பார்கள். படிப்பினைகள் உணரப்படுமாயின் அதுவே நஷ்ட ஈடாகவும் ஆகிவிடும். “Destruction for construction” என்பதுஒரு மகுட வாசகம். “அழிப்பது ஆக்குவதற்கே’ என்பது அதன் பொருள்.
இந்த வகையில் இருபது ஒரு சகாப்தத்தின் முடிவு ஆகக் கொண்டும், இருபத்தொன்று மற்றொரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகக் கொண்டும்,
92

Page 51
Bj நம் இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து மனிதப் பண்பாடு மலர்ச்சி பெறவும், தழைத்து ஓங்கவும், மனிதம், மனிதர்மம், மானுடம் என்பன மீண்டும் உலகில் நிலை பெறவும் செய்வதற்கான, நல்ல கைங்கரியங்களில் உடனடியாகக் கருத்துச் செலுத்துவதும், ஈடுபாடு கொள்வதும் மனிதக் கடமைகளாகக் கொள்வோமாக. பண்பாடு பேணுவதால் மாத்திரமே, உலகில் அமைதியை ஏற்படுத்த முடியும் என்பதை உணர்வோமாக.
21. சொற்கேளாப் பிள்ளைகளால் மனிதகுலத்திற்கீனம்
“சொற்கேளாப் பிள்ளைகளால் குலத்திற்கீனம்” என்பது பழமொழி பெற்றோர், பெரியவர்கள், ஆசிரியர்கள் என்போர் வாழ்க்கை அனுபவங்கள் நிரம்பியவர்கள். எனவே, இளைய தலைமுறையினரை வழிப்படுத்தத் தகுதி பெற்றவர்கள். இவ்வாறு வழிப்படுத்துதல் எப்போது சாத்தியமாகும் என்றால், வாழ்க்கை அனுபவங்கள் குறைந்த இளைய பரம்பரையினர், மூத்தவர்களுடன் ஒத்துழைக்கும் நிலைப்பாடு ஏற்படும் போதுதான் என்பது தெளிவு. பெரியோர்களின் சொல்லுக்குச் செவிசாய்க்காத பிள்ளைகள் பொதுவாகப் பிரச்சினைக்கு உரியவர்களாகவே விளங்குகின்றனர்.
பிள்ளைகளிடம் கீழ்ப்படிதல், பணிவு என்னும் பண்புகள் காணப்படும் போதே, அவர்கள் பெரியவர்களின் சொல்லைக் கேட்பார்கள். கேட்டபடி ஒழுகுவார்கள். பிரச்சினையற்ற பிள்ளையாக வளருவர். பிரச்சினை திர்ந்துவிட்டால், வளர்ந்த பின் பிள்ளை செயல்திறன் மிக்கதாக விளங்கும். பெரியவர்களின் சொல் கேட்டு நடக்காத பிள்ளைகள், நிச்சயம் தீயவழிகளில் செல்வர். அதன் விளைவாக அவர்கள் தமக்கும் பிறருக்கும் தொல்லைகள் தருகிறார்கள். அதனால் தாம் பிறந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல, தாம் சார்ந்த மனித குலத்திற்கே அவமானத்தையும், இழிவையும் உண்டாக்குகின்றனர்.
குழந்தைப் பருவத்தில் பெற்றோருக்கு அடங்கி வாழுகின்றவர்கள், கொஞ்சம் வயதுவந்து விட்டால் பெற்றோர், பெரியோருக்கு அடங்குதல் என்பது சற்றுக் கடினமாகிவிடுகிறது. குழந்தைகளை அடக்குவதிலும், அடங்க வழிகாட்டுதல் மேலானது. காரணம் எதையும் அடக்கப்படும் போது அது திமிறத்தான் செய்யும் தாமாக அடங்கினால், அதனால் கிடைக்கின்ற அடக்கம், பணிவு, கீழ்ப்படியுந் தன்மை என்பன நிலைத்திருக்கும் தன்மையைப் பெற்றுவிடுகின்றன.
தன்னடக்கம், பணிவு, கீழ்ப்படிதல், பொறுமை ஆகியன மனித நற்பண்புகள். இவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள் எல்லோரினதும் பிரியத்தையும் அன்பையும் இலகுவில் பெற்றுக்கொண்டு விடுகின்றனர். அதன் பயன், வாழ்வில் மகிழ்ச்சியை நிரம்பப்பெறுதல் ஆகும். இக்காலத்தில் வாழ்வில் மகிழ்ச்சி மிக அருந்தலாகவே கிடைக்கிறது என்றால், அதற்குக் காரணம், நாம் நல்லவர்களாக நடந்து கொள்ளாமையும் பிறரின் பிரியத்தையும் அன்பையும் பெறத்தவறியமையும் தான் என்றே கூறவேண்டும்.
93

பணிவும் அடக்கமும் குடும்பத்திலும் சரி, பொதுவாழ்விலும் சரி, ஒருவர் ஏனையோருடன் பொருந்தியும் இணங்கியும் வாழ்வதற்கு மிகத் தேவையான பண்புகள். அகந்தை, கர்வம், செருக்கு, பொறாமை போன்ற தீய பண்புகள் மனிதனைப் பற்றிக் கொண்டால், சமூகத்தில் ஏனையோருடன் சேர்ந்தும் பொருந்தியும் வாழ்வதற்கு அவை அனுமதி வழங்கமாட்டா. பொருத்தப்பாட்டுடன் சமநிலை பேணிச் சமூகத்தில் வாழ்தல் என்பது அரும் பெரும் வாழ்க்க்ைக்கலை. வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் இந்தக் கலையை மனிதன் கையாளும் முறையிலேயே பெரிதும் தங்கியுள்ளது. இதனாலேயே, குழந்தைகளை நன்கு வளர்ப்பதற்கும், சிறந்த முறையிலே அவர்களுக்கு வாழ்க்கைப் பயிற்சியளிப்பதற்கும் பெற்றோர்கள் நேரடிப்பொறுப்பேற்க வேண்டும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். “பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா, அவனைப் பேணிவளர்க்கவேண்டும் தெரியுமா? என்கிறான் ஒரு கவிஞன். ஆம் அவன் வாழ்க்கைக் கலை உணர்ந்த புலவன்.
பெரும்பாலும் பெற்றோர்கள் தம்பிள்ளைகளைப் பேணி வளர்ப்பதாகத் தற்காலத்தில் தெரியவில்லை. வேலைப் பழு; தாய் தந்தையர் இருவரும் பொருளாதார பலத்தை நாடித் தொழில் பார்த்தல்; பெற்றோர், பிள்ளைகளின் பராமரிப்பை வேறு ஆட்களிடம் கையளித்தல்; பெற்றோர் பிள்ளைகளைப் பிரிந்திருத்தல்; பேரன் பேத்திமாருடனோ உறவினருடனோ பிள்ளைகள் வாழ்தல் என்பன காரணமாகப் பெற்றோர் தம் அருமருந்தன்ன பொறுப்பைத் தட்டிக்கழித்து விடுவதைப் பெரும்பாலும் இன்றைய காலகட்டத்தில் காணமுடிகிறது. இதனால் பிள்ளைகள் நற்பண்புகளில் பயிற்சிபெறும் வாய்ப்பினை இழந்து விடுகின்றனர். பிள்ளைப் பராமரிப்பிலும், பிள்ளைகளுக்கு நற்பண்புப் பயிற்சியளிப்பதிலும் பெற்றோர்களுக்கு இணை பெற்றோர் தான். பெற்றோருக்கு மாற்றிடோ பதிலிடோ இல்லையென்றே கூற வேண்டும். பிள்ளை வளர்ச்சிக்குத் தாய்ப்பாலுக்கு நிகர் தாய்ப்பால் தான் என்று தற்போது கண்டுபிடித்துக் கூறப்படுகின்றதே, அத்தகைய கூற்றுத்தான் மேலே குறிப்பிட்ட கூற்றும் ஆகும்.
பிள்ளைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும் பண்புவளர்ச்சிக்கும் பெற்றோரின் அறக்கருணையும் மறக்கருணையும் நிச்சயம் தேவை. அறக்கருணை மட்டும் அதிகப்படியாக இருந்தாலும் பிள்ளையின் வளர்ச்சிக்கு அது பாதகமாகிவிடும். அன்பும், பரிவும், பாசமும் நேசமும் தேவை; ஆனால் அளவுக்கு அதிகமாக இருத்தல் ஆகாது. பேரன், பேத்திமாருடன் வளருகின்ற பிள்ளைகளுக்கு அறக்கருணை அளவுக்குமிஞ்சிக் கிடைக்கின்றது. மறக் கருணை கிடைப்பது மிக அரிது. இந்த நிலை பிள்ளைவளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மறுபக்கத்தில், மறக்கருணையும் சில பெற்றோர்களைப் பொறுத்தமட்டில் தம்பிள்ளைகளுக்கு அளவுக்கு அதிகமாக வழங்கப்படுகிற நிலையினையும் காண்கிறோம். தண்டனையும் அளவோடு இருக்கவேண்டியது அவசியம். அப்போதுதான் அது மறக்கருணையாகித் திருத்தம் செய்ய உதவும் அதைவிட்டு, எடுத்த எடுப்பில் தண்டனையும் வழங்கி, எல்லாவற்றிற்கும் நச்சரித்துக் கொண்டும் இருந்தால் அது நல்ல பலனைத்தரமாட்டாது. எனவே அது மறமே அன்றி மறக்கருணை அன்று.
94.

Page 52
பிள்ளைகளின் உத்தமமானதும் சமநிலை பொருந்தியதுமான வளர்ச்சியும் விருத்தியும், பெற்றோரின் அறக்கருணையும் மறக்கருணையும் ஒரு சீராக இணைந்துநின்று உதவுவதிலேயே தங்கியுள்ளது. பெற்றோருக்குத் தான் இவற்றின் குறிப்பிட்ட அளவு தெரியும். அதனாலேயே பிள்ளைவளர்ப்பில் பெற்றோரின் பங்கு பெரிதும் உணரப்படுகிறது. சமூகப் பொருத்தப்பாடு. சமூக நல்லுறவு, சமூக இணக்கம், சமூக ஆரோக்கியம் என்பன வெல்லாம் ஒரு சீராக விருத்தி பெறுவதற்குப் பெற்றோரின் முறையான நேரடிப் பங்குபற்றல் இன்றியமையாதது.
சிலகுடும்பங்களில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே நல்லுறவு, நல்லிணக்கம், நல்லெண்ணம் என்பன இல்லாமல் உள்ளது. பெற்றோருக்கு அடங்காத பிள்ளைகள் உள்ள குடும்பங்களிலே இந்நிலை காணப்படுகிறது. சிறுவயதில் மிதமிஞ்சிய அளவில் குழந்தைகளுக்குச் செல்லம் கொடுத்து, அவர்களின் மனம் போன போக்கிலும் அக்குழந்தைகளை விட்டுவிடுவதால், அவர்கள் பெரியவர்கள் ஆன பிறகு எல்லோரும் தமக்குக் கட்டுப்படுவார்கள்; மூத்தோர் இளையோர் என்ற வித்தியாசம் இன்றி எல்லோருக்கும் கட்டளைகள் இடலாம்; தாம் சொல்வது எப்போதும் சரி; மற்றையோரின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கத் தேவையில்லை என எண்ணி அவ்வாறு நடந்து கொள்கின்றனர். பெற்றோரின் வளர்ப்புமுறைகளில் ஏற்படும் தவறுகளால் இப்பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அடங்காத்தனம் வேறு, சுதந்திரம் வேறு என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். கட்டுப்பாடு என்றால் அடிமைத்தனம் என்றோ, சுதந்திரத்தை இழத்தல் என்றோ கருதிவிடக்கூடாது. அளவோடு யாவும் இருத்தல் வேண்டும். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்னும் மகுடவாசகத்தைப் பெற்றோர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ளுதல் அவசியம்.
பிள்ளைகள், இளம்பராயத்தில் தாமாகவே விரும்பி, நல்லொழுக்கப் பண்புகளை மேற்கொள்வதற்கேற்ற ஆரோக்கியமான சூழ்நிலைகளைக் குடும்பத்தில் பெற்றோர்கள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். வெறும் கட்டளைகளாலும்; அறிவுறுத்தல்கள், பணிப்புரைகளை வழங்குவதாலும் மாத்திரம் பிள்ளைகளை நல்லொழுக்கமுள்ளவர்களாக மாற்றிவிடலாம் என்று கருதிவிடக்கூடாது. பெற்றோரும் முன்மாதிரியாக நடந்து காட்டவேண்டும். விஞ்ஞானம் கற்பதற்குச் செய்முறை எத்துணை அவசியமோ, அவ்வாறே நல்லொழுக்கம் கற்பதற்கு முன்மாதிரி இருத்தல் அவசியம். நல்லொழுக்கப் பண்புகள் நிறைந்த உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம் ஆனந்தமும் களியும் மிகுந்த குடும்பமாகத் திகழும் வாழ்க்கையின் குறிக்கோளும் மகிழ்ச்சியாகவும் இன்பமாகவும் வாழ்தல் தானே. அவற்றை அடைவதற்கு நம்பிக்கையும் உறுதியும் வாய்ந்த வழிமுறை ஒன்று உண்டு என்றால் அது வாழ்வில் மனித விழுமியப் பண்புகளையும், நல்லொழுக்கத்தையும் பேணிவருவதுதான் என்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

22. கரிசனை எனும் மனிதப்பண்பு
சமுதாயம் என்றால் ஒரு தொகுதி மக்களைக் கொண்டது. சமுதாயம் சிறக்க வேண்டும்; மேம்பாடு அடைய வேண்டும் என்று கூறும் போது அச்சமுதாயத்தின் உறுப்பினராக உள்ள அத்தனை பேரும் தனித்தனி சிறப்புப் பெற்றவராதல் வேண்டும் என்னும் கருத்திலேயே அப்படிக் கூறுகிறோம். அப்படியாயின் குறித்த அந்தச் சமுதாயத்திலுள்ள தனிமனிதர்கள் ஒவ்வொருவரும் மனிதப் பண்பினால், உயர் குணங்களினால், நற்பழக்க வழக்கங்களினால், நிதி நெறிமுறைகளினால் உயர்ந்தவராக உருவாக்கப்பட வேண்டும். தனிமனித உயர்வும் அதன் வழி சமுதாய உயர்வும் ஏற்பட வேண்டும்.
ஒரு சில மனிதர்கள், தாம் தாம் உயர்ந்து விட்டால் போதும் என நினைப்பார்கள். சமுதாயம் டயரவேண்டுமென்ற எண்ணமே இருக்காது. அவர்களின் கவலை யாவும் தமமைப்பற்றியதாகவே இருக்கும். பிறர் பற்றிய கவலையோ, கரிசனையோ கொஞ்சமும் அவர்களிடம் இருக்காது. அத்தகைய ஒருவரைப் பார்த்து, “நீ ஒரு சுயநலவாதி; பிறர்மேல் கரிசனையற்றவன்’ என்றெல்லாம் சொன்னால், உடனே அந்த ஆளுக்குக் கோபம் வந்தவிடும். சண்டைக்கும் வந்துவிடுவார். அதேவேளை அதே ஆளைப் பார்த்து, “இந்தச் சனங்கள் எல்லோருமே சுயநலவாதிகள் தான். தான் வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் அயோக்கியர்கள்” என்று சொன்னால், அந்த ஆளுக்குக் கோபமும் வராது, சண்டைக்கும் வரமாட்டார். “நீ சொல்வது முற்றிலும் சரி” என்று சேர்ந்து பாடத்தொடங்கினால் கூட ஆச்சரியப் படுவதற்கில்லை. “சனங்கள் எல்லாரும் சுயநலவாதிகள்” என்று சொல்லும் போது, கேட்கின்ற அந்த ஆளும் அத்தொகுதிக்குள் அடங்குவதை அவர் அறிவதில்லை. அதனால், யார், யாரையோ திட்டுகிறான்; தன்னையல்ல என்று நினைத்து கோபப்படாமல் சந்தோஷமாக இருக்கிறான். இதைத்தான் நம்மிடம் தொகுதி மனப்பான்மை அல்லது கூட்டுமனப்பான்மை கிடையாது என்று, டாக்டர் மு. வரதராசனார் அன்று சொல்லிவைத்தார்.
சமுதாயத்தில் நான்வேறு மற்றையோர் வேறு என்று எண்ணுகின்ற மனோபாவம் நம்மிடம் வளர்ந்து வருவதனால் தான், பல சமூக ஊழல்களையும், சமூக அனர்த்தங்களையும் காணக்கூடியதாக உள்ளன. சமூகச் சீர்கேடுகளும், சுற்றாடல் சீரழிவுகளும் நம்மிடம் சமுதாய உணர்வு இன்மையைத் தான் காட்டுகின்றன.
வீதியால் வாகனங்களை ஒட்டிச் செல்பவர்களைச் சற்று அவதானித்துப் பாருங்கள். மற்றவர்களை முந்தித் தம் வாகனங்களை ஒட்டிச் செல்லவேண்டும் என்று எண்ணிச் செயல்படுபவர்களே அதிகம். விதி ஒழுங்கு முறையைக் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாகத் தெரியவில்லை. வீதிக்குக் குறுக்கே மஞ்சள் வர்ணம் பூசப்பட்ட நடைபாதையில் உரிமையோடு நடந்து செல்பவர்களை அலட்சியம் செய்கிற வாகன ஒட்டிகளால் எத்தனை விபத்துக்கள்,
96

Page 53
உயிர்ப்பலிகள் ஏற்படுகின்றன. சமுதாய உணர்வு இருந்தால் இப்படிச் செய்வார்களா? மழைக்காலத்தில், வீதியோரங்களில் நடைபாதையை அண்டித் தேங்கி நிற்கின்ற சேற்று நீரை, நடைபாதையில் ஒதுங்கிச் செல்கின்ற பாதசாரிகள் மீது அள்ளி இறைத்துவிட்டு, “விர்” என்று ஓடு கின்ற வாகனங்கள் எத்தனை. நடந்து செல்பவர்கள் சேற்று நீர் தோய்ந்து, உடையும் உள்ளமும் பழுதுபட்டநிலையில், போகவேண்டிய இடங்களுக்குச் செல்லவும் முடியாமல், தம்நிலையைப் பிறருக்குச் சொல்லவும் இயலாமல், பரிதவிக்கும் நிலை எத்துணை பரிதாபகரமானது என்பது வாகன ஓட்டிகளுக்குத் தெரிவதில்லை. சமூக உணர்வு இருக்குமேயானால் வாகனத்தினால் பாதசாரிகளைக் குளிப்பாட் டுவார்களா?
பஸ்தரிப்பு நிலையத்தில் நின்று கொண்டு சமுதாய உணர்வு; பொது நன்மை; ஊனமுற்றோர் நலிந்தோர், வயோதிபர், குழந்தைகள் பாதுகாப்பு என்பன பற்றிச் சரளமாகப் பேசுபவர்கள், பஸ்வண்டி வந்து நி ைறதும் நில்லாததுமான வேளையில் மற்றையோரைத் தள்ளி விழுத்தி இடறிக் கொண்டு முண்டியடித்து முன்னேறிப் பாய்ந்து போய் உட்காருகிறார்களே! இவர்களின் பேச்சுக்கும் செயலுக்கும் என்னதான் சம்பந்தம் இருக்கிறது என்று ஆச்சரியப்பட வேண்டியுள்ளது. சமூக உணர்வு, பொதுநன்மை யெல்லாம் பேச்சளவில்தான்; காரியத்திலோ, நடைமுறையிலோ நம்மிடையே தென்படுவதைக் காணக்கூடியதாக இல்லை.
உணவிலே கலப்படம், பண்டங்களிலே கலப்படம் குடிபானங்களிலே கலப்படம்; நோய் தீர்க்கும் மருந்துகளிலே கலப்படம்; இப்படி எங்கும் எவற்றிலும் கூசாமல் கலப்படம் செய்யப்படுகிறது. இவை போதாதென்று பேச்சிலே, எழுத்திலே, கொள்கையிலே, வாழும் முறையிலே, மனித நடத்தையிலே, குணத்திலே, குடும்பத்திலே, வேலைத்தலத்திலே எங்கும் கலப்படம் தான் மேலாட்சி செய்கின்றது. இன்று சுவாசிப்பதற்குத் தூய காற்று இல்லை; குடிப்பதற்குத் தூய நீர் இல்லை. உண்பதற்குத் தூய உணவில்லை; உணவைப் பரிமாறுவதற்குத் தூயமனத்தினர் இல்லை; பார்ப்பதற்குத் தூய காட்சிகள் இல்லை; கேட்பதற்குத் தூய இனிமையான இசையோ பேச்சோ இல்லை. தூய்மை, உண்மை ஆகிய இரண்டும் இயற்கையை விட்டு அகன்று விட்டனவோ என எண்ணத் தோன்றுகிறது. இவற்றின் ஆட்சி நலிந்தால், கலப்படம் தான் மேலாட்சி செலுத்தும் மனிதரிடம் சமுதாய உணர்வு பேச்சில் மட்டும் வாழ்கின்றது; நடைமுறையிலோ, செயற்பாட்டிலோ அது இறந்து விட்டது. அதனால் தான் இன்று அமைதியின்மை, குழப்பங்கள். கொந்தளிப்புகள் என்பனயாவும் வியாபகமாக எங்கும் உள்ளன.
போட்டிகள் நிறைந்த உலகத்தில், வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமானால், ஒருவன் தன்னைப் பற்றி மாத்திரமே எண்ண வேண்டியுள்ளது. போட்டி என்று ஒன்று வந்துவிட்டால், சிந்தனை, பேச்சு, செயல், எல்லாமே தன்னைப் பற்றியதாகவே வந்துவிடும். ஓர் ஒட்டப் போட்டியில் முதலாம் இடம் பெறும் வாய்ப்புள்ளவன். பின்னால் ஓடி வருபவர்களை நோக்கி “விரையுங்கள்; நான்
97

சற்று வேகத்தைக் குறைக்கிறேன்; எல்லோருமாகச் சேர்ந்து முதலிடத்தைப் பெறுவோம்” என்று சமுதாய உணர்வுடன் செயற்பட முடியுமா? அவ்வாறே உத்தியோகங்களுக்காகப் போட்டியிடுபவர்கள்; பட்டம் பதவிகளுக்காகப் போட்டியிடுபவர்கள்; தலைமைப் பதவிகளுக்காகப் போட்டியிடுபவர்கள்; மற்றும் அரசியல், பொருளாதாரம், வியாபாரம், கல்வி, கலைகள் என்பவற்றில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிடுபவர்கள். அனைவருமே தன்தன் உயர்வுக்கும் வெற்றிக்கும் ஆகத்தான் போட்டியிடுகிறார்கள் என்பது பச்சையான உண்மை. போட்டியாளர்கள் சமுதாய உணர்வு பேசுவது, தன்தன் வெற்றிக்கு அது உதவியாக இருக்கும் என்பதற்காகவேயன்றி, சமுதாய நன்மைக்காக அல்ல என்பது தெரிந்த விஷயமே. போட்டிகள் மூலம் வெற்றிகள் தீர்மானிக்கப்படும் சமுதாயத்தில், சமுதாய உணர்வு என்பது ஒரு பேச்சுக்குத் தான் என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். தன்னைப்பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு பழக்கத்தையே போட்டிகள் உருவாக்கி வருகின்றன. ஏன் கடவுளை வணங்கி, அவன் தாள்களை அடைவதற்கு முயற்சிக்கின்ற சமயவாதிகள் கூட, தன்தன் முத்திப்பேற்றைப் பற்றிச் சிந்தித்து அதற்குத் தனிவழிகண்டு தான் மட்டும் மோட்சத்தை அடைய எத்தனங்கள் மேற்கொள்ளப்படுவதையே காண்கிறோம். “எல்லோரும் இன்புற்றிருப்பது வேயன்றி வேறொன்றறியேன்” என்றும் “எல்லோரும் வாழ்க, இன்பமே சூழ்க’ என்றும் உரக்கக் கூறினால் மட்டும் அது சமுதாய உணர்வாகி விடாது. சாதனையிலும் சமுதாய உணர்வு பரிணமிக்க வேண்டும்.
சமுதாய உணர்வு வளரவேண்டுமானால் முதலில் சுயநல உணர்வு தணியப் வேண்டும். பிறர் நலனில் அக்கறையும் கரிசனையும் ஏற்படவேண்டும். இன்றையபோட்டிகள் நிறைந்த உலகில், வழி அல்லமுக்கியம். அடைவுதான் முக்கியம். என்னும் போது பிறர் நலனில் கரிசனை கொள்ளல் எப்படிச் சாத்தியமாகும் எனக் கேட்கத் தோன்றுகிறது. ஒவ்வொருவரும் அவதியில், அவசரமாக ஓடிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் குட்டி முந்தப்பார்க்கிறார்கள். இடையில், எத்தனை பேர்கள் வேதனைப்படுகிறார்கள், இன்னல் அடைகிறார்கள் இவர்களின் ஒட்ட வேகத்தினுள் சிக்கி, என்பது ஓடுபவர்களுக்கும், பறப்பவர்களுக்கும் எங்கே தெரிகிறது. மனித மனத்தின் ஆழ அகலத்தைச் சரியாக இன்னமும் கண்டு பிடிக்க முடியாமலுள்ளது. அந்த நிலையில் சமூக உணர்வுபற்றிப் பேசப்படுவதெல்லாம் வெறும் அலங்காரம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இன்று உலக வல்லரசு நாடுகளிடம் இருக்கும் ஏவுகணைகளையும் அணுகுண்டுகளையும் கொண்டு ஒருசில நிமிடங்களில் உலகை அழித்துவிடலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றார்கள். அத்துணை அபாயம் எம்மை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில் ஆதல், மனித உறவுகள், சமூக உணர்வுகள், சமாதான சக வாழ்வு என்பனபற்றி வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல், அர்த்தமுள்ள செயல்களில் இதயகத்தியுடன் ஈடுபாடுகொள்ள வேண்டாமா? மனிதரை மனிதர் நேசியாமல்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்து கொண்டுவாழும் வாழ்க்கையினைத் தொடர்ந்து கொண்டு இருந்தால், விரைவில் எல்லோருமே ஏமாறும் நிலைக்கு வந்துவிட நேரும் என்பது உறுதி.

Page 54
எதிர் கொள்ள வேண்டிய ஆபத்துக்களைப் பற்றிச் சிந்தித்தாலோ
ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுதி வாசித்தாலோ, மேடைகளில் எடுத்துக் கூறினாலோ, விழிப்புணர்வை ஏற்படுத்திவிடலாம் என்று எண்ணலாம். இப்பவும் கூட, சமூக உணர்வு, பொது நலம் என்பனபற்றி அறிவு பூர்வமாக எவருக்கும் தெரியாதென்று சொல்வதற்கில்லை. ஆனால் நடைமுறையில், சாதனையில் சமூக உணர்வு, பொதுநலம் இல்லாமல் இருப்பதுதான் விசனத்திற்குரியதாக
_||!l.
"சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வஈன்னம் செயல்"
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. நல்ல விஷயங்களைப் பற்றிச் சொல்வதற்கு நம் மத்தியில் அநேகர் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் நல்லவற்றைச் செய்வதற்குத் தான் துணிகின்றார்களில்லை. வள்ளுவப் பெருந்தகை தான் வாழ்ந்த காலத்து மக்களைப்பற்றி மாத்திரமல்ல; பின்னர் வாழப்போகின்ற மக்களைப் பற்றியும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றார்.
கண்ட கண்ட இடங்களில் அசுத்தம் செய்கின்றனர்; குப்பை கூளங்களைக் கொட்டிப் பரப்புகின்றனர் ஒலிபெருக்கி மூலம் உச்சஸ்தாயியில் சத்தம் எழுப்பி அமைதியைக் குலைக்கின்றனர்; மோட்டார் வாகனங்களில் உரத்த தொனியில் "ஹோன்" சத்தம் எழுப்புகின்றனர்; புகை படலமாகக் கக்கக் கக்க வாகனம் ஓட்டுகின்றனர்; ஆற்றுநீருள் சாய்க்கடை நீரைப் பாய்ச்சுகின்றனர் நடைபாதையிலும், நடுவீதியிலும் கூடிநின்று போவோர் வருவோரைத் தடை செய்கின்றனர் பொதுச் சொத்துக்களைத் திருடுகின்றனர் அல்லது பாழ்படுத்துகின்றனர்; "கியூ” வரிசையை முறித்து முன்னேறுகின்றனர்; தொழிற் சாலைகளிலிருந்து நச்சுவாயுக்களையும் தூசிகளையும் குடியிருப்புக்களுக்குள் வெளியேற்றுகின்றனர்; கட்டாக்காலியாக நாய்களையும், ஆடு, மாடுகளையும் வீதிகள் பொது இடங்களில் உலாவ விடுகின்றனர்; பொது விதிகளில் கிரிக்கெட் உதைபந்தாட்டம் போன்றவற்றை விளையாடிப் போவோர் வருவோர்களுக்கு இடைஞ்சல் செய்கின்றனர்; பொது இடங்களில் மக்கள் மத்தியில் புகைக்கின்றனர் இவ்வாறு எவ்வளவோ இடையூறுகளை மனச்சாட்சியில்லாமல் சுயநலத்திற்காகவும் வேடிக்கைக்காகவும் பலர் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். இவையாவும் தவறான செயல்கள் என்று தெரிந்து கொண்டுதான் செய்கிறார்கள். இத்தவறுகளைப் பார்ப்பவர்கள், மெளனம் சாதிக்கிறார்கள். சட்டங்களும் கண்டுங் காணாமல் இருக்கின்றன பாதிக்கப்பட்டோர் நிவாரணமின்றி உள்ளுர வெந்து வெதும்புவதைத் தவிர வேறொன்றுமறியாது திகைத்து நிற்கின்றனர். அனைவரும் மனிதர்கள் தான் என்பதை மட்டும் சொல்லிவைக்க விரும்புகிறேன். இந்த நிலையில் சமுதாய உணர்வு எங்கே போய்விட்டது? பொது நலனில் நாட்டம் எங்கே ஒழிந்து கொண்டது? என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
 
 
 
 
 
 
 
 
 
 
 

இன்று மக்கட்சமுதாயம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று ஆற அமர இருந்து தூரதிருஷ்டியுடன் சிந்திக்கும், அவ்வாறு சிந்தித்துப் பரிகாரம் தேடும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மனிதர்கள் எவரையும் கானோம். எல்லோருமே இன்றைக்கு இலாபம் எவ்வளவு தேறும், எவ்வளவற்றை அதிகபட்சமாகச் சுரண்டிச் சுதாகரித்துக் கொள்ளலாம், அதுவும் உடனடியாக, என்று முழுமையாகச் சிந்தித்து முற்றிலாக அதில் தம்மை அர்ப்பணித்துக்கொண்டிருப்பதே இந்த அவல நிலைக்குக் காரணம். இன்றைக்குக் கிடைத்த வாய்ப்பினை நழுவ விட்டுவிடக்கூடாதே என்று அவதிப்பட்டு அதில் அமிழ்ந்து கிடப்போருக்கு, நாளையைப் பற்றியோ பிறர் நலம் பற்றியோ நினைக்க நேரமில்லையாம். இந்த நிலை நீடிக்குமானால், சமூக உணர்வு, பொது நலம், பிறரில் கரிசனை என்பன வருங்காலத்தில் எவ்வாறு தப்பிப் பிழைக்கப்போகின்றதோ என்பதை நினைக்கும் போது அச்சமாக உள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டைப் பற்றிச் சிந்திக்கும் நாம் சமூக உணர்வு மற்றும் பெதுநல மேம்பாடு பற்றியும் கருத்திற்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும். நிலைமை மாறவேண்டுமானால், ஒவ்வொரு மனிதனும் மாறவேண்டும்; ஒழுக்கத்தில், பண்பாட்டில் ஆன்மிகத் தூய்மையில், மனித விழுமியங்களில் ஒவ்வொருவரும் நம்மபிககை கொண்டு நடத்தைகளை அவற்றிற்கேற்றால் போல் இப்போதிருந்தே மாற்றிக் கொள்ளத் தொடங்கவேண்டும். இதனைச் சிந்திப்போம் செயற்படுவோம்.
23. கருமமும் தருமமும்
"செல்வம் என்பது சிந்தையின் நிறைவே" என்று சரியாகத்தான் நம் ஆன்றோர்கள் சொல்லிவைத்தார்கள். நமது மனம், திருப்தி கொள்ளாவிட்டால், எத்தனைகோடி பணம் இருந்தாலும், ஏராளமான பொருள், பண்டம், காணி, நிலம் இருப்பினும் அவை செல்வம் ஆகாது. பொருட் செல்வம் பெருகப் பெருக, மேலும் மேலும் சேர்க்க வேண்டும் என்ற மன உந்துதலும் அதிகரிக்கின்றது. கல்விச் செல்வமும், அவ்வாறே சாந்துணையும் தேடித்தேடிச் சேர்க்கப்பட வேண்டியதாகவே உள்ளது.
பொருட்செல்வமும், கல்விச் செல்வமும் தேடித் தேடிச் சேர்த்துக் கொள்ளப்படும் போது, இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும், இது போதாது, என்று மனம் நிறைவு கொள்ளாமல் இருப்பினும் அவற்றைப் பிறருக்குக் கொடுக்கும் போதும், பிறருடன் விருப்புடன் பகிர்ந்து கொள்ளும் போதும் ஏற்படுகின்ற மனநிறைவு இருக்கின்றதே, அதனால் பொருளும், கல்வியும் செல்வங்கள் என்னும் அந்தஸ்தைப் பெற்றுவிடுகின்றன.
"ஈதல், அறம்' என்று சொல்லப்பட்டுள்ளது. ஈதல் என்றால் கொடுத்தல்,
பிறருக்கு நன்மை பயப்பனவற்றைக் கொடுத்தல் தான் அறம் ஆகின்றது. பொருட் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளுதல் அறம்.
C

Page 55
"பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்பது வள்ளுவம். தமக்குக் கிடைத்த உணவு, மற்றும் பொருள்களைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு, அனுபவித்து மற்றையோரும் அவற்றை உண்டு, அனுபவித்து, மகிழும் போது, அது அறங்கள் எல்லாவற்றிலும் தலையாய, மேலான அறம் ஆவது மாத்திரமல்ல, கொடுத்தவனின் சிந்தையும் நிறைவு பெறுகின்றது. பொருள் பிறருக்குக் கொடுக்கப்படுவதால் தான் செல்வம் ஆகின்றது: அறமும் ஆகின்றது. தேடிய பொருளைத் தேக்கித் தமக்குமட்டும் என வைத்திருந்தால் அது செல்வமுமன்று அறமும் ஆகாது.
பொருட்செல்வம் எவ்வாறு, எவ்வழியில் ஈட்டப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அது செல்வமா, செல்வமில்லையா, என்பதைத் தீர்மானிக்க வேண்டும் அறத்தின் வழிநின்று ஈட்டப்படுகின்ற பொருள்தான் செல்வம். அதை விட்டு, வேறு தீயவழிகளில் சம்பாதிக்கும். பொருள், திருட்டுப் பொருள் ஆகும். "பொருள், பூரியார் கண்ணும் உள' என்கிறார் வள்ளுவர். பொருள் மிகுதியாக இழிந்தவரிடத்திலும் உள்ளது. தகாத வழியில் பொருள் சேகரித்து வைத்திருப்பவர்கண்ளயே இங்கு இழிந்தவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது.
ஏதோ ஒரு வகையில் களவு செய்து சேர்த்துக் கொண்ட பொருள், அதைச் சேர்த்து வைத்திருப்பவர்களுக்கு மன நிறைவையோ, நிம்மதியையோ தராது. மாறாக, அவர்களின் மனங்களை, அவர்களிடமுள்ள குற்ற உணர்வு சதா உறுத்திக் கொண்டும், நெருடிக் கொண்டும் இருக்கும். மனப் பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்துகொண்டு இருக்கும் போது, சிந்தையில் நிறைவு எப்படி ஏற்பட முடியும். எனவே, அவ்வாறு குறுக்கு வழியில் சம்பாதித்த பொருள், பனம் முதலியன செல்வம் ஆக விளங்கமாட்டாது. சிந்தைக்கு நிறைவையும் தரமாட்டாது.
கடின உழைப்பினால் தேடிய பொருளே, நம்முடைய பொருள் ஆகும். அதுவே பொருட் செல்வம் உழைக்காமல் நம்மிடம் வந்து சேர்ந்த பொருள், பிறருக்கோ அரசுக்கோ, வேறு ஸ்தாபனத்துக்கோ உரித்தான பொருள். அப்பொருள் திருடப்பெற்ற பொருள். திருடுவது அறம் அன்று. இன்று, பிறரிடமிருந்து வஞ்சித்துங் பனம், பொருள்களை அபகரிப்பதும் பொதுச் சொத்துக்களையும், அரசாங்க உடமைகளையும், தர்மஸ்தாபனங்களின் நிதியையும் கையாடுவதும் மோசடி செய்வதும் சர்வசாதாரணமாகி வருகின்றது. இத்தகைய திருட்டுக்களில் ஈடுபடுபவர்கள், சமூகத்தின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் அல்ல; மேல் மட்டத்தில் பொறுப்பு வாய்ந்தவர்களாகவும் நிருவாகிகளாகவும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்களாகவே பெரும்பாலும் உள்ளனர் என்பதை அறியவரும் போது கவலை கொள்ளாமல் இருக்கமுடியாது. வேலியே பயிரை மேய்ந்தால் எப்படி? நம்பிக்கைத் துரோகம் கொடியபாவம், பழி, குற்றம் என்பதை ஏன் இவர்கள் டனர்கின்றார்கள் இல்லை. எப்பவோ ஒரு நாள் நீதியின் முன் இவர்கள் பரப்படுவார்கள் என்பதையும் எண்ணுகின்றார்கள் இல்லை. அரச நீதியுடன், தெய்வதிக்கும் நிச்சயம் பதில் சொல்லியாகவேண்டும் தண்டனையையும்
TOT

அனுபவித் தே ஆகவேண்டும் என்பதைச் சற்று மனதில் சிந்தித்திருப்பார்களேயானால் இவ்வாறு திருடிப் பொருளைச் சம்பாதிப்பார்களா? விநோதம் என்னவெனில் இவர்கள் யாவரும் கற்றறிந்தவர்கள்; திருடுவது குற்றம் என்பதைத் தெரிந்து கொண்டுதான் திருட்டு வேலையில் இறங்குகிறார்கள் என்பதாகும். தெரிந்து செய்யும் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது.
"உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக் கள்ளத்தால் கள்வேம் எனல் ” என்பது திருக்குறள்.
குற்றமானதை மனத்தினால் நினைப்பதும் குற்றமாகும். அதனால் பிறரின் பொருள்களை அவர்கள் அறியாதபடி "வஞ்சித்துக் கொள்வோம்” என்று என்னாது இருக்க வேண்டும்.
களவு செய்து, பிறரை வஞ்சித்து, இலஞ்சம் பெற்று, தீய வழிகளில் சம்பாதித்த ஆக்கம், பெருகுவது போல ஒரு தோற்றத்தைத் தந்தாலும், அது இறுதியில் அழிந்து விடுவது மாத்திரமன்று, அப் பொருளைச் சம்பாதித்தவர்களையும், அது சுவறியவர்களையும் அழித்துவிடும், தீய வழியில் சம்பாதித்த பொருள் சந்ததியையே அழித்து விடும் என்று பெரியோர்கள் கூறியுள்ளனர். இது அனுபவ
உண்மையாகவும் உள்ளது.
"அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் பிற்பயக்கும் நற்பாலவை."
என்பது தமிழ் மறை. பிறரை வருத்தி, அவர்களை அழச்செய்து, அவர்களிடமிருந்து பறித்தெடுத்த பணம், பொருள் முதலியன, அவ்வாறு பெற்றவனையும் அழவைத்து, துன்பத்தில் ஆழ்த்திவிட்டுப் போய்விடும். எனவேதான் வள்ளுவப் பெருந்தகையும் மற்றொரு குறளில்,
"ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை"
என்று உறுதியாகக் கூறுகிறார். வள்ளுவர் சொற்கேளாதோர் தொகை இன்று பெருகி வருகின்றது. தாயின் பசியைப் போக்குவதற்காக அல்ல, இவர்கள் திருடுவது, தங்கள் ஆசையை நிறைவு செய்வதற்காகவே அவ்வாறு இழிவான செயல்களைச் செய்கிறார்கள்.
கல்வியைத் தேடுவதும், பொருள் சேகரிப்பதற்கே என்னும் நிலைமை தற்காலத்தில் தோன்றியுள்ளமையை நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. கல்வியும் எப்பொழுது செல்வமாகின்றது என்று நோக்கில், கல்வியைப் பிறருக்குக் கொடுக்கும் போதுதான் என்பது தெரியவரும் கொடுக்கக் கொடுக்கக் குறையாது, பெருகுவது கல்வி, கல்வியைக் கற்க விரும்புவோர்க்கு இலவசமாக வழங்கும் போது, அது பெருகுவது மாத்திரமல்ல, கல்விச் செல்வம் ஆகப் பரிணமிக்கிறது.

Page 56
கல்வியை விலைக்கு விற்பவர்கள் கல்வி வணிகர்கள். அவர்கள் குரு ஸ்தானத்தில் வைத்து எண்ணப்படுவதற்குரிய அருகதையை இழந்தவர்கள் ஆவர். மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியோர் எமது வணக்கத்திற்குரியவர்கள். ஏன்? அவர்கள் கைம்மாறு எதிர்பாராது எமக்கு பொருளையும், கல்வியையும், அன்பையும் , அருளையும், கருனையையும் மற்றும் எமக்கு வேண்டியவற்றையெல்லாம் வாரிவழங்குபவர்களாக உள்ளனர். வழங்குவதிலேயே இவர்களின் பெருமையும், சிறப்பும் உயர்வுபெறுகிறது.
பொருட்செல்வமும் சரி, கல்விச் செல்வமும் சரி, அவற்றை மற்றையோர் பயன்கொள்ளாமல் பதுக்கி வைத்திருத்தல் ஆகாது. அவ்வாறு செய்தல் அறம் அன்று.
பொருட்செல்வம் அருட்செல்வமாக மாற்றம் பெறவேண்டும். அவ்வாறே கல்விச் செல்வமும் அருட்செல்வமாக வேண்டும். அருள் உள்ளவர்களிடம் பொருளும் கல்வியும் சேரும் போது அவ்விரண்டும் பிறர்க்கு வழங்கப்படுகின்றன. அவை ஈதல் செய்யப்படும் போது அறம் ஆகின்றன. அருட் செல்வம், பொருட் செல்வம், கல்விச்செல்வம் ஆகிய மூன்றும் ஒருவனிடத்தில் சங்கமிக்கும் போது, ஆன்மிகச் செல்வம் கிடைக்கப் பெறுகிறான். உலகில் மிக உயர்ந்த செல்வம் ஆன்மிகச் செல்வமாகும். வாழ்க்கையின் அதி உயர் குறிக்கோளாக ஆன்மிகச் செல்வத்தைச் சேகரித்தல் அமைகின்றது. மனிதப் பிறவியின் நோக்கமும் ஆதுவே.
ஆன்மிகச் செல்வத்தில் திளைப்பவன் தனக்கென எதுவுமே வைத்துக் கொள்ளாதவன். "தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' ஆக உள்ளான். மனிதருள் மாணிக்கம் ஆக, மாந்தருள் தெய்வமாகப் போற்றப்படுகிறான். அவனிடம் இருப்பவையாவும் ஆன்மிக உடமைகள். அவை நன்னெறி வாழ்க்கையில் உருவானவை. மனித விழுமியங்கள், மனிதர்மம், மானுடம், அறம், கருனை, மனிதநேயம் முதலிய ஆன்மிகப் பண்புகள் இத்தகைய ஆன்மிகச் செல்வர்களின் வாழ்வில் விளக்கம் பெறுகின்றன மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் முயன்று ஆன்மிகச் செல்வர்கள் ஆகவேண்டும்.
ஆன்மிக வாழ்வு என்பது இந்த உலகில் வாழப்படுவதுதான். இவ்வுலக வாழ்வு, ஆன்மிகம் சார்ந்ததாகவும் உள்ளது; ஆன்மிகம் சாராததாகவும் இருக்கின்றது. ஆன்மிகம் வாழ்வில் செறிந்திருந்தால், வாழ்வு மேன்மை பெறுகிறது; மேம்பாடு அடைகிறது. மாறாக, ஆன்மீகம் வாழ்வோடு சேராது விட்டால், வாழ்க்கையைக் கீழ்மைப்படுத்தும், இழிவுபடுத்தும், கொச்சைப்படுத்தும் அத்தனை அசுர சக்திகளும், வாழ்க்கையுடன் இணைந்து வாழ்க்கையைச் சூழ்ந்தும் இருக்கும். மனித வாழ்க்கையில் ஏற்படுகின்ற குழப்பங்கள் கொந்தளிப்புகள் தொல்லைகள், அழிவுகள், துன்பங்கள் யாவற்றிற்கும் காரணங்களை ஆராய்ந்து பார்த்தால், வாழ்வில் ஆன்மிகம் செறிந்து இராமையே முதற்காரனமாக இருப்பதைக் FILMIAH GATTLE.
O3

ஆன்மிகம் என்னும் போது இரண்டு விடயங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும் ஒன்று கருமம், மற்றையது தருமம், கருமம் என்பது பணி என்று பொருள் கொள்ளலாம். "பணிபுரி, பலனை எதிர்பாராதே" என்கின்றது பகவத்கீதை "என்கடன், பணி செய்து கிடப்பதே" என்கிறார் அப்பர் அடிகள், உலகியல் ரீதியில் நோக்கினால், ஊதியம் பெறாது உழைக்க வேண்டும் என்னும் கருத்து தொனிக்கின்றது போலத் தோன்றுகிறது. விதைத்தால், விளைச்சலை எதிர்பார்ப்பது தவறாகுமா என எண்ண வேண்டி உள்ளது. ஆனால் இந்தக் கருத்தில் அக்கூற்றுகள் சொல்லப்படவில்லை.
மாதச் சம்பளத்திற்கு வேலை செய்பவர், தாம் செய்த வேலைக்கு மாதமுடிவில் சம்பளம் பெறுவது சரியானது. ஆனால், மேலதிகமாக ஒருவரிடம் எதையாவது எதிர்பார்த்து அவருக்கு ஓர் அலுவலைச் செய்து கொடுத்து, கைலஞ்சம் பெறுவது தவறான செயல். அந்த அலுவலைச் செய்து கொடுக்க வேண்டியது அந்த அலுவலருடைய கடமை, அக்கடமையைச் செய்வதற்குக் கைம்மாறாகச் சம்பந்தப்பட்டவரிடம் எதையும் எதிர்பார்க்கக்கூடாது. ஆகவே, எங்கே பலனை எதிர்பார்க்கலாம்; எங்கே பலனை எதிர்பார்க்காமல் கருமத்தை ஆற்ற வேண்டும் என்பதை தருமத்தின் அடிப்படையில் நின்று தீர்மானிக்க வேண்டும்.
கஷ்டப்பட்டுப் படித்த மாணவர், பரிட்சையில் நல்ல பெறுபேறுகளை எதிர்பார்ப்பது தர்மம் ஆகும். கைலஞ்சம் பெற்று ஒரு காரியத்தை முடித்துக் கொடுப்பது அதர்மம் ஆகும்.
கருமம் என்பது பலன் கருதாத கடமை. "நன்றி என்று கூறவேண்டும் என்பதைக் கூட எதிர்பாராமல் செய்வதே ஆன்மிகம் சார்ந்த செயல் ஆகும். நாம் lf கடமையைச் செய்து விட்டோம் என்ற திருப்தியோடு அமைவதே ஆன்மிகம். அதையே கருமயோகம் எனப் பகவத்கீதை கூறுகிறது.
தருமம் என்பது கைம்மாறு கருதாத உதவி எனலாம். வாழ்க்கையில் பிறர் நலங்கருதிச் செய்யவேண்டியவை எவை செய்யத்தகாதவை எவை என்று தருமம் கூறும், ஒரு செயலைப் புரிவதற்கு முன்னர், இது தருமந்தானா, இல்லையா, என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மிகத்தை நாடுபவர், கருமம் என்பது என்ன? தருமம் என்பது என்ன, என அறிந்து கொள்வர். தாம் தேடிய எல்லாவகைச் செல்வங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்வதில் இன்பம் காண்பவரே ஆன்மிகச் செல்வர்கள். ஆன்மிகச் செல்வமே எல்லாச் செல்வங்களிலும் தலை சிறந்தது. உலகில் அமைதியையும், சாந்தியையும், சமாதானத்தையும் நிலை பெறச் செய்வதற்கு, மனிதர்கள் ஆன்மிகச் செல்வர்களாகப் பரிணாமம் பெறவேண்டும்.
எல்லாவற்றையும் சமமாக நோக்குவது, பாவிப்பது, நடைமுறையில் அனுசரிப்பது ஆன்மிகம் ஆன்மாவிற்கு உடம்பையும் அதன் புலன்கள், கரணங்களையும்
கட்டுப்படுத்துவது ஆன்மிகம் உலகில் வாழ்க்கையை முறைப்படுத்துவதும்
11:

Page 57
நெறிப்படுத்துவதும் ஆன்மிகம். ஆன்மிகம் கலவாத உலகியல் வாழ்க்கை ஒழுங்கற்றதாகிவிடுகிறது. ஆன்மா தான், தான் என்பதை உணர்ந்து விட்டவர்களுக்கு, இவ்வுலகில் துன்பமும் துயரும் இல்லை. தன்னை உணர்ந்தவன் முறைப்படி தன்னையும் ஆள்வான், தரணியையும் ஆள்வான் தார்மீகமும் தர்மமும் உலகில் ஓங்கும். நாம் இவ்வுலகில் வாழவேண்டியவர்கள் அதுவும் இன்பமாக வாழ வேண்டியவர்கள் அமைதியாக வாழவேண்டியவர்கள் ஆனால் துன்பத்தில் துவற்கின்றோம்; அமைதியின்றி, நிம்மதியின்றித் தவிக்கின்றோம். காரணம், எமது உலகியல் வாழ்க்கையை ஆன்மிகப் பாதையில் செலுத்தத் தவறியமையேயாகும். உலகியல் வேறு, ஆன்மிகம் வேறு என்று கருதாமல்; உலகியல் வாழ்வை ஆன்மிக வாழ்வுடன் இனைத்து, இசைவு பெறச் செய்தல் வேண்டும். இதுவே இன்றைய தேவையும் ஆகும். உலகில் சாந்தி, சமாதானம், இன்பம் மலர இதுவே வழி என்பதை உணர்ந்து கொள்வோமாக,
24. வாழ்வு நலம் பெற உதவும் உடன் பாட்டுச் சிந்தனை
சிலர் எந்நேரமும் சிரித்து மகிழ்ந்து நல்ல விஷயங்களைப் பற்றியே பேசுவர் அவர்கள் வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்நோக்குவர். வாழ்க்கை நிகழ்வுகளின் பிரகாசமான பக்கத்தையே காணும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பர். வேறு சிலர் இதற்கு எதிர்மாறாக, வாழ்க்கைச் சம்பவங்களின் இருண்ட பகுதிகளையே பார்க்கும் வழக்கமுடையவராயிருப்பர். இவர்கள் எந்நேரமும் கவலை, விரக்தி, அங்கலாய்ப்பு நிறைந்தவர்களாக இருப்பர். ஒவ்வொரு விஷயத்தையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பர். அதனால், சிரிக்கவோ மகிழவோ முடியாதவர்கள் ஆகிவிடுகின்றனர்.
ஒரே நிகழ்ச்சியை உடன்பாடாகவும், எதிர்மறையாகவும் நோக்க இயலும் என்பதையும்; உடன்பாடாக நோக்குபவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வர் எதிர்மறையாக நோக்குபவர்கள் அமைதியின்றித் தவிப்பர் என்பதையும் அனுபவபூர்வமாக அறியக் கூடியதாக உள்ளது. எவரும் மகிழ்ச்சியாகவே இருக்க விரும்புவது இயல்பு. அதனால், வாழ்க்கை நிகழ்ச்சிகளை உடன்பாடாகவும், அவற்றின் பிரகாசமான பக்கத்தையே நோக்குவதாகவும் ஆன பழக்கத்தை நாம் உருவாக்கிக் கொள்ளுதல் அவசியமாகும் எதிர்மறையான நோக்கும் கண்ணோட்டமும் பெரும்பாலும் வாழ்க்கையில் அவநம்பிக்கையையும், பிடிப்பின்மையையும் மனிதரில் ஏற்படுத்துகின்றன. பலர் வாழ்வில் முன்னேற்றமடையாமைக்கும், விரக்திநிலையை அடைவதற்கும் அவர்கள் வாழ்க்கையின் இருண்டபக்கத்தைப்பார்க்கும் பழக்கத்தையும் எதிர்மறைக் கண்ணோட்டத்தையும் கொண்டிருப்பதே பிரதான காரணம்
TԱ5

எல்லாவற்றினதும் நன்மையான அம்சங்களைப் பார்க்க நாம் பயின்று கொள்ள வேண்டும்.
வாழ்க்கையின் ஒளிப்பக்கத்தைப் பார்த்தல்; வாழ்க்கையை நன்னோக்குடன் பார்த்தல் என்பது நல்ல எதிர்பார்ப்புக்களுடனும், எதிர்கால நம்பிக்கையுடனும், ஆக்கபூர்வமாகவும் பார்த்தல் ஆகும் ஒன்றின் நன்மையான பக்கத்தை அல்லது பிரகாசமான பக்கத்தை நோக்குதல், உடன்பாட்டு நோக்காகும் நாம் பரீட்சைக்குப் படிக்கும் போது, நிச்சயமாகப் பரீட்சையில் வெற்றி பெறுவோம் என்ற உறுதியோடு படிக்க வேண்டும். ஒரு வேலையைத் தொடங்கும் போது, அதை என்னால் செய்து முடிக்க முடியும் எனும் நம்பிக்கையுடனும் சிரத்தையுடனும், தொடங்க வேண்டும். நல்ல தொடக்கம் பாதி வெற்றி என்பது இதனைத் தான். ஒருவர் செய்த நன்மையை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் தீமையை உடனுக்குடன் மறந்து விட வேண்டும். ஒருவரிடமுள்ள நல்ல குணங்களைக் கண்டு கொள்ளத் தவறக் கூடாது. அதற்காக அவரை எத்தனை முறையும் பாராட்டலாம்.
மழை பெய்கிறது. அப்போது அந்த நிகழ்வினை முன்னிட்டுப் பின்வருமாறு நாம் எண்ணினால் அதன் நன்மையான அல்லது பிரகாசமான பக்கத்தை நோக்கினதாக அமையும்.
நீண்ட வரட்சிக்குப் பின்னர் இன்று மழைபெய்கிறது. அது வரவேற்கப்பட வேண்டியதே. நிலம் குளிர்ந்து மரஞ் செடி கொடிகள், செழிப்பாக வளரும். மழை நமக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. கிணறு, குளம், வாவிகளில் நீர் நிரம்பிவிடும். மழை பெய்வதால் வளிமண்டலத்தில் உள்ள தூசிகள் அகன்று சுத்தம் அடையும். சுற்றாடலில் தாய்மை ஏற்படுகிறது. இவ்வாறு மழையை உடன் பாட்டு நோக்கில் நோக்குவதால் எம்முடைய மனத்தை மகிழ்ச்சி நிலையில் வைத்திருக்கிறோம்.
மாறாக, இந்த மழையாலே வெளியில் செல்ல முடியாமல் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க வேண்டியுள்ளது. ஒரேகுளிர், நடுங்குகிறது. வீடு ஒழுகுகிறது. இந்த நேரம் பார்த்து இந்த மழைவந்து எல்லாத்தையும் கெடுத்துவிட்டதே. வீதிகளில் நீர் நிறைந்து போக்குவரத்துச் செய்யமுடியாமலுள்ளதே. மண்சரிவு, வெள்ளப் பெருக்கு ஏற்படும் போல நிலைமை உள்ளது. காலையில் தோய்த்துக் காயப்போட்ட ஆடைகள் எல்லாம் நனைந்துவிட்டன. இந்த அநியாய மழை வந்து தொல்லை தருகிறதே" இவ்வாறு மழை பெய்வதைக் கண்டதும் எரிந்து புகைபவர்களையும், மழையைத் திட்டித் தீர்ப்பவர்களையும் நாம் கான்கிறோம். இவர்கள் மழையை எதிர் மறை நோக்குடன் பார்க்கிறார்கள். அவர்களின் மனங்களில் அமைதி இல்லை; ஒரே பதற்றத்தினால் அல்லற்படுகிறார்கள். அப்படியானால், சாந்தம், மகிழ்ச்சி, நிம்மதி என்பவற்றை அவர்கள் இழந்து விடுகிறார்கள். அதனால் தவிக்கிறார்கள். ஒரு நிகழ்ச்சியை எதிர்மறையாகவும், அதன் இருண்ட பக்கத்தை நோக்கியதனாலுமே அவர்கள் இத்துணை சஞ்சலத்திற்குள்ளாகின்றனர்.
106

Page 58
சிலர் கம்மா உட்கார்ந்து இருந்து கொண்டு, தேவையற்ற விஷயங்களுக் கெல்லாம் தலையைப் போட்டு உடைக்கிறார்கள். வீணாக அலட்டிக் கொள்ளுகிறார்கள். நடக்காதவற்றை எல்லாம் நடந்ததாகக் கற்பனை பண்ணிக் கொள்கிறார்கள். அதனால் நரக வேதனைப்படுகிறார்கள். கடைசியில் அவர்கள் கற்பனையில் நினைத்தது போல அப்படியொன்றும் நடந்து விடுவதில்லை.
ஒரு தந்தை, காலையில் புறப்பட்டுச் சென்ற தன் மகன், மாலை வந்தும், வீடு திரும்பாததையிட்டுப் பின்வருமாறு எண்ணி எண்ணி வேதனைப் படுகிறார்.
“என் மகன் காலையில் போகும் பொழுது முன்னுக்கு வந்த சகுனம் சரியில்லை. நான் அப்பவே நினைத்தேன் இப்படியொன்று நடக்கு மென்று. அது சரியாய்ப் போய்விட்டது போலத்தான் தோன்றுகிறது. வழக்கமாய் நான்கு மணிக்கே வந்திடுவான். ஐந்து மணியாகியும் காணவில்லை. ஒருவேளை பஸ்ஸில் ஏறும் பெழுது கால் தடக்கி. ச்சா, அப்படியிருக்காது. அல்லது வீதியைக் கடக்கும் போது ஏதாவது நடந்ததோ,.’ இவ்வாறு எண்ணி எண்ணிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போது மகன் வந்து விட்டதைக் கண்ட தந்தை “என்ன உன்னை எங்கெங்கேயெல்லாம் தேடுகிறது. ஆஸ்பத்திரி, வீதி, கிணறு, குளம் எல்லா இடத்திலும் தேடுவோமென்று வெளிக்கிட்டுக் கொண்டிருக்கிறேன். நல்ல காலம், நீ வந்து விட்டாய். நீ சிரிக்கிறாய். நான் பட்ட பாட்டை, எங்கே உனக்குத் தெரிகிறது. ” என்றார் தந்தை. மகன் வழக்கம் போலச் சிரித்துக்கொண்டு உள்ளே போய்விட்டான்.
இங்கு தந்தையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ஆம். இவர் எதையும் எதிர்மறையாகவே சிந்தித்துப் பழக்கப்பட்டவர். எதுவும் நிகழாமலே, ஏதோ தீங்கு நடந்து விட்டதாகக் கற்பனை பண்ணும் இயல்பினர். அதனால் பயம், பதற்றம், அங்கலாய்ப்பு என்பனவற்றால் பிடிக்கப்படுகிறார். இதே வேளை, சற்று நன்னோக்கான கண்ணோட்டத்தோடு தந்தை, தன் மகன் ஏதோ, அலுவல் காரணமாக வரத் தாமதம் ஆகிறது போலும்; கோயிலுக்கும் போயிருக்கலாம்; எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்தில் விடு திரும்பிவிடுவான் என்று உடன்பாடான முறையில் சிந்தித்து இருப்பாரேயானால் அவரிடம'அமைதி ஏற்பட்டிருக்கும். கவலை கொள்ளாமல் உற்சாகமாக இருந்திருப்பார்.
இவ்வாறு எதற்கும், எந்த நிகழ்வையும் எதிர்மறையான கண்ணோட்டத்தில் நோக்கி, தம்வாழ்வினை நரகமாக்கிக் கொள்பவர் பலரை நாம் சந்திக்கிறோம். இவ்வாறு சதா அஞ்சி அஞ்சிச் செத்துப் பிழைக்கின்ற பேர்வழிகளுக்கு அமைதி, சாந்தம், நிம்மதி ஏது?
கண்களுக்கு மஞ்சட் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் எல்லாமே மஞ்சள் ஆகத்தான் தெரியும். பச்சைக் கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால் பார்ப்பவை பச்சையாகவே காட்சியளிக்கும். அது கண்ணின் பிழையன்று; பார்க்கப்படும் பொருட்களின் பிழையுமன்று.
107

அவ்வாறே நாம் என்ன கண்ணோட்டத்துடன் ஒன்றைப் பார்க்கிறோமோ, அக்கண்ணோட்டத்தின்படியே அது நமக்குத் தெரியும். 'நல்ல என ஒன்றைநோக்கினால் அது எமக்கு நல்லதாகவே தெரியும். நாம் மகிழ்ச்சியாக இருக்கும் காலத்தில் பரிமாறப்பட்ட உணவுப் பதார்த்தம், உப்புச்சப்பில்லாமல் இருப்பினும் உண்ணும் போது சுவைமிக்கதாக இருக்கிறது. ஆனால் மன வெறுப்பு ஏற்பட்டுவிட்ட நேரம், அறுசுவையுடனான அருமையான உணவுப் பதார்த்தமும் கசந்தும் சுவையற்றதாகியும் விடுகிறது. எல்லாவற்றிற்கும் அவ்வப்போது இருக்கும் மனநிலையே காரணமாகின்றது.
நாம் ஒருவர் மீது அன்புகாட்டும் போது, அவரும் பதிலுக்கு எம்மீது அன்பு காட்டத்தூண்டப்படுகிறார். நாம் பகைமை பாராட்டும் போது, எம்மீது பகைமை பாராட்ட அவர் தூண்டப்படுகிறார்.
வெகுமதிகளை மனமுவந்து பிறர் ஒருவருக்கு நாம் வழங்கினால், பதிலாக அவரும் வெகுமதிகளை நமக்கு அளிக்க முன்வருகிறார்.
நாம் நண்பர் வீட்டிற்கு வெறுங்கையோடு போய் வந்தால், அவரும் நம் வீட்டிற்கு வரும் போது வெறுங்கையோடுதான்வந்து போவார். ஒன்றும் கொண்டு போகவில்லையே என்று வெட்கப்படவும் மாட்டார்.
மரியாதையைக் கொடுத்துத்தான் மரியாதையைப் பெறவேண்டும். பார்க்கப் போனால், எல்லாமே கொடுக்கல் வாங்கல் தான் என்பதை உணரமுடியும்.
இனிச் சிந்தித்துப்பாருங்கள். எதையும் நல்ல கண்ணோட்டத்துடன் நோக்க வேண்டுமென்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். நமது நன்மைக்காக வாழ்வில் இதைக்கடைப்பிடிக்க வேண்டியது அவசிய மாகின்றது.
"வாயே வாழ்த்து கண்டாய்” என்கிறார் ஓர் அருளாளர். வாயின் அருமை பெருமை வாழத்துவதிலே தங்கியுள்ளது. நாம் ஒருவரைச் சந்திக்கும் போது இருகைகூப்பி வணக்கம் சொல்கின்றோம். உடனே அவரும் தனது இரு கரங்களையும் கூப்பிப் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிடுகிறார். நாம் ஒருநாளைக்கு ஏதோ அவசரத்தில் வணக்கம் சொல்லாமல் போகிறோம். அந்தநாள் எம்மைக்கடந்து செல்லும் அந்த நண்பரும் எதுவும் கூறாமல் போகிறார். இவையாவும் மனித இயல்புகள் ஆகும்.
ஒருவரைப் பார்த்துப் புன்னகை செய்தால், அவரும் எம்மை நோக்கிப் புன்னகையை உதிர்த்துவிட்டுச் செல்கிறார். முறாய்த்துப் பார்த்தால் அவரும் அதே பாணியில் பார்க்கிறார். என்னே விந்தை. நாம் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ ஒரேவழி, நாம் நல்லபடி நடந்து, மற்றையோரையும் நல்லபடி நடக்கத் தூண்டுவதேயாகும். நாம் முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று எம்மைப் பார்த்தால், நாம் செய்யும் அங்க சேஷ்டைகள் அனைத்தும் அப்படியே அங்கு பிரதிபலிப்பதைக் காணலாம். நாம் சிரித்தால் கண்ணாடிக்குள்
108

Page 59
தெரியும் விம்பமும் சிரிக்கும்; அழுதால் அதுவும் அழும், வாழ்விலும் நாம் எந்நேரமும் மற்றவர்களில் பிழை பிடித்துக் கொண்டும், இல்லாததையும் பொல்லாததையும் கண்டு கொண்டும் இருந்தால், எதிர்மறையான கண்ணோட்டம் உடையவர் என்பது பொருள். மாறாக, வாழ்வில் எந்நேரமும் நன்மையான பக்கத்தைப் பார்த்துக் கொண்டும், நம்பிக்கையை வளர்த்துக் கொண்டும், வாழ்ந்தால், உடன்பாடானதும் (Positive) நன்னோக்கு உடையதுமான கனன்னோட்டத்தைக் கொண்டவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
எடுத்த எடுப்பிலேயே சிலர், “உது சரிப்பட்டு வராது. எல்லாரும் ஏறின் குதிரையிலை சக்கடத்தாரும் ஏறிச்சறுக்கி விழுந்தாராம்' இவ்வாறு அமங்கலமாகக் கூறுவர். சிலர் இப்படியான வார்த்தைகளைக் கேட்டு எடுத்த கருமத்தில் உற்சாகமிழந்து அதனை நிறுத்திக் கெள்வதுமுண்டு. உண்மையில் "முயற்சி திருவினையாக்கும்', "ஊழையும் உட்பக்கம் காண்பர்", "மெய்வருந்தக் கூலிதரும் " முதலிய உற்சாகம் தரும் மகுட வாசகங்களை அறிந்து கொள்ளாதவர்களே இவ்வாறு சலித்துக் கொள்கிறார்கள். சலிப்பு என்பது வாழ்க்கைக்குத் தேவைப்படாத ஒன்று. வேண்டாததை வீசி விடுவதே நல்லது அதை நம்முடன் வைத்துக் கொண்டிருந்தால் அழகு கெட்டுவிடும். என்னால் முடியும் என்றால் அது முடியும் தான். இடையில் அவநம்பிக்கை வந்துவிட அனுமதிக்கக் கூடாது. அவநம்பிக்கை கோழைகளின் இலட்சணம். வீரர்களுக்கு அவநம்பிக்கை வரவேமாட்டாது. எனவே வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ளவேண்டியது அவசியமாகும்.
எதிர்மறைக் கன்னோட்டத்துடன் வாழ்வின் நிகழ்ச்சிகளை நோக்கி வருபவர்கள் உற்சாகமிழக்கின்றனர்; அவர்கள் எடுத்த காரியங்கள் கைகூடுவதில்லை தோல்வியையே தழுவிக்கொள்கிறார்கள். மனவெறுப்பு, விரக்தி, கோபம், நம்பிக்கையினம், சந்தேகம், பொறாமை, சித்தியின்மை என்பவற்றையே அரவணைத்துக் கொள்கிறார்கள். பிறரின் புறக்கணிப்புக்கு உள்ளாகிறார்கள் நாளடைவில் இவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு விடுகிறார்கள்.
நன்மையான பக்கத்தையே பார்த்து, பிரகாசமான பகுதிகளையே கண்டு வருபவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். எடுத்த கருமங்களில் வெற்றியடைகின்றனர். பிறரால் விரும்பப்படுபவர்களாகவும், நல்ல பண்புகளைக் கொண்டிருப்பவர்களாகவும் விளங்குவதால், சமூகத்தில் தலைவர்கள் ஆகின்றனர். இவர்களின் சொற்களுக்கு மிகுந்த பெறுமதி உண்டு. எல்லோருமே அவர்களின் தலைமையை ஏற்றுக் கொள்கின்றனர். அவருடன் ஒத்துழைக்கின்றனர். காந்தமும் கவர்ச்சியும், சாந்தமும், தன்னொளியும், அடக்கமும் அபிமானமும் கொண்ட தலைவராகத் திகழ்கின்றனர். சிந்தனையாலும், பேச்சினாலும், செயலினாலும் பிறரை வாழ்விக்கின்றனர்.
எனவே நமக்கும் பிறர்க்கும் நன்மை பயக்கும் வகையில் வாழ்க்கைச் ாம்பவங்களை நன்னோக்கோடும், ஒளியான பகுதிகளையே காணும் பண்போடும் அாபுரவமாகவும் பார்க்கும் பழக்கத்தினை நம்மில் வளர்த்து, வாழ்வில் பர்ரியுடன் வாழ்வோமாக,

25. மனிதரும் சூழலும்
சூழ்நிலைகளும், சுற்றுப்புறச் சார்புகளும் ஒரு மனிதனின் வாழ்வில் வியத்தகு மாறுதல்களை ஏற்படுத்திவிடுகின்றன. வாழுகின்ற சமூகச் சூழல், அங்கு தினசரி காணும் காட்சிகள் கேட்கும் பேச்சுக்கள், உரையாடல்கள் நடைபெறும் அன்றாட நிகழ்வுகள் என்பன நல்லனவாக இருப்பின், அங்கு வாழ்பவர்கள் நலல மனிதர்களாகி விடுவார்கள், மாறாக, அவை தியனவாகக் காணப்படின் தியவர்கள் ஆகிவிடுகின்றனர். "இளமையிற் கல்வி சிலையில் எழுத்து' என்பார்கள் கல்வி எனும் போது, பாடசாலைக் கல்வியை மாத்திரம் கருதிவிடுவதன்று. நியமமற்ற முறையில் சமூகங்களிலிருந்தும் நண்பர்கள், சகபாடிகளிடமிருந்தும் வானொலி, தொலைக்காட்சி, திரைப்படம், செய்தித்தாள்கள், சஞ்சிகைகள், கதைப்புத்தகங்கள், நாவல்கள், ஏனைய நூல்கள் ஆகியவற்றிலிருந்தும் கல்வியைப் பெறுகின்றனர். இவ்வாறு பெறப்படுகின்ற கல்வி மகத்தான எண்ண மாறுதல்களை மனிதர்களில் ஏற்படுத்துகின்றன.
"தாரமும் குருவும் தலைவிதிப்பயன்' என்னும் முதுமொழி எம்மிடையே புழக்கத்திலிருந்து வருகிறது. தலைவிதி என்பதை விட்டிட்டுப் பார்த்தாலும், தாரமும் குருவும் ஒருவருடைய வாழ்வில் மாறுதல்களைக் கொண்டுவருவதை மறுக்க முடியாது. மாறுதல் நன்மையாகவும் இருக்கலாம், தீமையாகவும் அமையலாம். குரு விடமிருந்துதான் கல்வி பெறப்படுகிறது. அந்தக் குரு ஆசிரியனாகவும் இருக்கலாம் பெற்றார், சுற்றத்தினர், நண்பர்கள், சகபாடிகள், பெரியார்கள் ஆகவும் அமையலாம் திரைப்படம், தொலைக்காட்சி செய்தித்தாள் போன்ற தொடர்புச்சாதனங்களாகவும் இருக்கலாம் அல்லது கதைகள், நாவல்கள் போன்ற நூல்களாகவும் விளங்கலாம். அவையாவும் மனிதர்களுக்கு அனுபவங்களையும், தகவல்களையும், அறிவுகளையும் வழங்கி, அவர்களில் அறிவு, திறன், மனப்பாங்கு சார்ந்த நடத்தை மாற்றங்களையும் ஏற்படுத்திவிடுகின்றன. கல்வி என்பது அனுபவம் என்பர். கல்வியின் பயன் நடத்தை மாற்றங்கள் ஏற்படுத்தல் ஆகும். அதுவும் இளமைப் பருவத்தில் ஏற்படுகின்ற நடத்தை மாற்றங்கள், கல்லில் எழுதப் பெற்ற எழுத்துக்கள் போன்று நீண்ட நெடுங்காலம் நின்று நிலைக்கும். நல்ல மாற்றங்கள் என்றால் மகிழ்ச்சிதான். ஆனால் திய மாற்றங்கள் ஆகிவிட்டால், முழுவாழ்வையுமே பாழ்படுத்திவிடும். எனவேதான் வாழுகின்ற சூழ்நிலையும், சுற்றுச் சார்புகளும் நல்லதாக அமையவேண்டும் என்று விரும்பப்படுகிறது.
சிறு குற்றங்களைச் செய்த இளைஞர்கள் மறியல் சாலைகளில் தடுத்து வைத்திருக்கும் போது அங்குள்ள கொலைகாரர்கள், திருடர்கள், போதைப் பொருள் கடத்தல் காரர்கள் போன்ற குற்றவாளிகளுடன் தொடர்புகொள்ள நேரிடுகிறது. குற்றவாளிகளுடன் சேர்ந்து கொண்ட அந்தச் சிறுகுற்றம் இழைத்த இளைஞர்களும் அயோக்கியர்களாக மாறிவிடுகின்றனர். மறியல் சாலைகளில் காணப்படுகின்ற இத்தகைய பாதகமான சூழ்நிலையினால் அந்த இளைஞர்களும்
பாரிய குற்ற வாளிகளின் நிலைக்குத்ளெழுநிTதின் 臀 சங்கம்
110
IETF-్న శి - ..

Page 60
சிறு சிறு குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு நல்லதொரு சூழ்நிலையில் வைத்து அவர்கள் பழகுவதற்கு நல்லமனிதர்களையும் கொடுத்து, வாசிப்பதற்கு நல்ல நூல்களையும் வழங்கி, நல்ல இனிமையான, படிப்பினை மிகுந்த பொழுது போக்குக்களுக்கும் இடமளித்தால், அவர்களும் நல்ல இனிய மனிதர்களாக மாறிவிடுவார்கள். எவருமே குற்றவாளிகளாகப் பிறப்பதில்லை வாழும் சமூகமே ஒருவனைக் குற்றவாளியாக்குகின்றது என்பது சமூகவியலாளர் கருத்து ஆகும்.
ஒருவன் தனது மனதுள் பல விடயங்களை வைத்து அழுத்திக் கொள்கிறான். அல்லும் பகலும் அவை உறுத்திக்கொண்டே இருக்கும். திய விடயங்கள் மிக இலகுவாக மனங்களுட்புகுந்து விடுகின்றன. ஆனால் அவற்றை வெளியேற்றுதல் மிகச் சிரமம், முதலில் மனதைப் பற்றிக் கொள்ளும் தீயவை பின்னர் உடம்பு முழுவதையும் பற்றிக் கொள்கின்றன. இரத்தத்தோடு சேர்ந்து விடுகின்றன. அதன் பின் அவன் காண விரும்புபவை, கேட்க விரும்புபவை, பேச விழைபவை, ஏன், செய்யும் செயல்கள் அனைத்துமே தியனவாகவே அமைந்து விடுகின்றன. அவனுக்குத் தீமையைத் தவிரவேறு எவை பற்றியும் நினைக்கவோ, பேசவே, சிரத்தை கொள்ளவோ செயலாற்றவோ முடியாதவனாகிவிடுகிறான். தீமையை ஆராதிப்பதே அவனின் பழக்கமும் வழக்கமும் ஆகிவிடுகின்றது. ஒருவன் திருடனாகவோ, கொடுமை யாளனாகவோ, கொலைகாரனாகவோ, போதைதரும் வஸ்துக்களைப் பாவிப்பவனாகவோ வந்து விடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பதாகவே கற்பனையில் இவற்றைப் பற்றிச் சிந்திக்கவும், திட்டங்கள் திட்டவும், பாவனை செய்யவும் தொடங்கிவிடுகிறான் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர் கற்பனையில், பாவனையில் குற்றங்களைப் புரிவதில் ஒருவகை திருப்தியையும், இன்பத்தையும் அடைகிறார்கள்.
"வாழும் பிள்ளை வளரும் பிள்ளைகளை மண் விளையாட்டில் தெரியும்" என்று ஒரு பழமொழி உள்ளது. இதிலிருந்து பலவற்றை நாம் அறிந்து கொள்ள முடிகிறது. சிறு வயதில் குழந்தைகள் திருடர்களாகவும், கொலைகாரர்களாகவும் LDF அருந்தியவர்களாகவும் பாத்திரமேற்று ୍n agai, Gifil୍ விளையாட்டுத்துப்பாக்கிகளையும், கத்தி பொல்லுகளையும் வைத்துக் கொண்டு பிறரை மிரட்டி விளையாடுவதைப் பார்த்திருக்கிறோம். குழந்தைகள் அந்தப் பாத்திரங்களில் தமது திறமைகளை யெல்லாம் காட்டி நடிக்கும் போது பெற்றோர்களும் மற்றோர்களும் கண்டு மகிழ்கின்றனர்; தட்டியும் கொடுக்கின்றனர். குழந்தைகளின் அபாரமான கற்பனைகளையும் பாவனைகளையும் காணுகின்ற பெற்றோர்கள், "அசல் திருடன் மாதிரியே இருக்கிறானே' "துப்பாக்கியை என்ன லாவகமாகப் பிடிக்கிறான், பார்த்திரகளா", "நம்ம பக்கத்து விட்டு ஆடிய பாதம் குடித்து விட்டு என்ன மாதிரிப் பேசுவாரோ தள்ளாடுவாரோ, அந்த மாதிரி அச்சொட்டாய் நடிக்கிறானே, என் பிள்ளை, சபாஷ்' என்றெல்லாம் தம் குழந்தைகளுக்குப் புகழாரம் சூடுவதையும், இரசிப்பதையும் நாம் பார்க்கின்றோம் அது மாத்திரமல்ல, வருவோர் போவோர்களுக்கெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பாரக்ள. இவற்றையெல்லாம் உற்று நோக்கும் குழந்தைகள், அவற்றை அப்படியே மனங்களில் பதித்துக் கொள்கிறார்கள். இவையெல்லாம் குழந்தைப் பருவ விளையாட்டுத்தானே என வளர்ந்தவர்கள் நினைத்துத் தட்டிக்
St ASA 111

கொடுக்கிறார்கள். ஆனால் பின்னர்க் காலத்தில் இவ்விளையாட்டுக்கள் வினையாகி விடுகின்றனவே என்பதை யார் எண்ணிப்பார்க்கிறார்கள். குழந்தைகளின் கற்பனைகளை நல்ல வகையில் வளர்க்கப் பெற்றோர்கள் உதவவேண்டும். திருட்டு, கொலை, வன்முறைகள், தொடர்பான கற்பனைகள் சிறுபராயங்களில் குழந்தைகளில் வளர விட்டால் பின்னர் ஆபத்துக்களை எதிர் நோக்க வேண்டியிருக்கும்.
விளையாட்டுப் பொருட்களை வாங்கிக் குழந்தைகளிடம் கொடுக்கும் பெற்றோர்களோ உறவினர் நண்பர்களோ அவற்றைத் தெரிவு செய்வதில் மிகக் கவனமாக இருக்க வேண்டும், கெட்ட சிந்தனைகளையோ திய கற்பனைகளையோ குழந்தைகளில் ஏற்படுத்தக் கூடிய விளையாட்டுப் பொருட்களை அவர்களிடம் வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளல் நன்று. புத்தகங்கள். சஞ்சிகைகள் விஷயத்திலும், அவற்றைத் தேர்ந்தெடுத்துச் சிறுவர்களுக்கு வாசிப்பதற்குக் கொடுக்க வேண்டும். ஒருவன் வாசிக்கின்ற நூல்கள், பார்க்கின்ற திரைப்படக்காட்சிகள் என்பன அவனில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அவனின் நடத்தைகளையே மாற்றி விடுகின்றன. பெண்களுக்குத் தொல்லைதரும் காட்சிகளையோ, பெரியோர்களை அவமதிக்கும் காட்சிகளையோ காதல் லீலைகளையோ, திரைப்படங்களில் அப்பட்டமாகப் பார்த்தவர்கள், தாமும் அவ்வாறு நடந்து கொள்ள எத்தனிக்கிறார்கள். குற்றச் செயல்கள் புரிவதற்கு இவை தூண்டுதலாகின்றன. உணர்ச்சிகளுக்கு அறிவை மயக்கும் ஆற்றல் உண்டல்லவா? காதல் நவீனங்களைப் படித்து விட்டோ திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்த்து விட்டோ உணர்ச்சி வசப்பட்டுத் தாமும் அத்தகைய லீலா விநோதங்களில் ஈடுபாடு கொண்டு, அலைந்து தம் வாழ் நாட்களைக் கெடுத்து, நிர்க்கதிக் குள்ளாகும் பல இளைஞர்கள், யுவதிகளைக் கண்டிருக்கிறோம். இவற்றை எல்லோரும் அறிந்தும் கூட, இத்தகைய கெட்ட நடத்தைகளையும், வன்முறைகளையும், திருட்டு நடவடிக்கைகளையும் தூண்டும் திரைப்படங்களும் நாவல்களும், சஞ்சிகைகளும் ஏராளமாக இன்னும் வந்து கொண்டிருக்கின்றனவே என்பதைக் காணும் போது விசனமும் வருத்தமும் அடையாமலிருக்க முடியாதுள்ளது. இவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாமை, மனித சமுதாயத்தின் அழிவுக்கு வழிவகுக்கத் துணைபோவதாக உள்ளது. அணுகுண்டுகளினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை விட, மனிதர்களின் துர்நடத்தைகளால் உண்டாகக்கூடிய அழிவுகள் மிகப் பாரிய அளவில் அமைகின்றன என்பதை சிந்திக்கச் தெரிந்தவர்கள் கூடச் சிந்திக்கின்றார் களில்லை.
நல்ல நூல், நல்ல சுற்றம், நல்ல நண்பர்கள், நல்ல சூழல் என்பன மனிதர்களுடைய நடத்தைகளை நன்முறையில் அமைத்துக் கொள்ளத் துணைபுரிகின்றன. நல்ல நூல்களை வாசிப்பதால், மனிதவாழ்வு செம்மை பெறுகின்றது. கெட்டுச் சீரழிந்து போகின்ற நிலையில் கைவிடப்பட்ட பலர், நல்ல நண்பர்களின் சேரக்கையால், வாழ்க்கையில் புது ஒளி பெற்று, முன்னேறியுள்ளனர். ஆனால் இன்றைய பிரச்சினையென்ன வெனில் நல்ல நண்பனை இனங்கண்டு கொள்வது தான். அது ஒரு துர்ப்பாக்கியமாகவே
112

Page 61
எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. நல்ல நண்பனைக் காண்பது அரியதொன்றாகி விட்டது. முயன்றால் முடியாதது ஒன்றில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.
பெளதிகச் சூழல்கள், கைத்தொழிற் பெருக்கத்தினாலும் மனிதர்களின் அசிரத்தையினாலும் மாசடைகின்றன. சமூகச் சூழல்கள், இன்றைய மனிதர்களால் வேண்டுமென்றே மாசுபடுத்தப்படுகிறது. கெட்ட திரைப்படங்களைத் தயாரிப்பவர்களும், கெட்ட நூல்களை எழுதி வெளியிடுவோரும், கெட்ட உணர்ச்சிகளைத் துண்டுவோர்களும் தாம் செய்வது தவறு என்று தெரியாமலா செய்கின்றார்கள். இலாபம் சம்பாதிப்பது அவர்களுது நோக்கம்; மனிதகுல ஈடேற்றம் அல்ல. எனவே பிழை, சரி, அறம், அநீதி என்றெல்லாம் பார்க்க அவர்களக்கு நேரம் இல்லை. இந்தநிலையில் ஒரேயொரு வழிதான் தோன்றுகிறது. அதுதான், நோய்க்கிருமிகள் காற்று மூலமோ, நீர் மற்றும் உணவு மூலமோ மனிதரின் உடம்பில் உட்புகாமல் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவதாலும், தடுப்பு முறைகளைப் பின்பற்றுவதாலும் காத்துக் கொள்ளுமாப்போல் கெட்ட நூல்களிலும், கெட்ட கலைகளிலும், கெட்ட நண்பர்களிலும், கெட்ட சூழலிலும் உள்ள, நம்முடைய மன உணர்ச்சிகளைக்கிளறி உத்வேகப்படுத்தும் ஒவ்வாத நோய்க்கருத்துக்கள் காட்சிகள் என்பவற்றை எமது மனங்களுள் புகவிடாமல் முன்னெச்சரிக்கையுடன் எம்மை நாமே காத்துக்கொள்ள வேண்டும். இத் தியன நம்மை நெருங்கவிடாமல் பார்த்துக் கொள்வது எமது தலையாய கடமையாகும் குழந்தைகளையும், சிறுவர்களையும் பாதுகாப்பது பெற்றோர், பெரியோர்களின் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால் தற்காலத்தில் தகுதி வாய்ந்த சான்றோர்களுடன் பழகிப் பண்படும் விருப்பும் மக்களிடையே குறைந்து வருகிறது. கெட்டவர்களின் செல்வாக்கு ஓங்குகிறது. நம்மை விட்டால் போதும் என்ற அளவிற்கு நல்லவர்கள் ஒதுங்கிக் கொள்கிறார்கள். வாழும் சூழலில் அமைதியும் கிடைப்பதில்லை. எவை எப்படியிருப்பினும் தீயவற்றைத் தடுக்கவும் நல்லவற்றைப் பேணவும் வேண்டிய மன வலிமையை பெறவேண்டிய தேவை ஒன்று உளது, அதனை இனிமேலும் அலட்சியம் செய்ய முடியாது என்பதை உணர்வோமாக.
13

26. மனிதரும் சமயங்களும்
சமயங்கள் பல இவ்வுலகில் உள்ளன. ஒவ்வொரு சமயமும் பல பிரிவுகளைக் கொண்டுள்ளன. இவ்வுலகில் எத்தனை மாந்தர்கள் உள்ளனரோ, அத்தனை சமயப் பிரிவுகள் இருக்கலாம். அவ்வாறு இருப்பதை அனுமதிக்கலாம். அதனால் ஒரு கேடுமில்லை. இவ்வாறு சொன்னவர் சுவாமி விவேகாநந்தர். ஒரு சமயம் உண்மையானது எனில் எல்லாச் சமயங்களும் உண்மையானவை தான். ஒரு சமயம் கூறுகின்ற மனித நல்வாழ்வுக் கருத்துக்களுக்கு எத்துணை பெறுமதி வழங்கப்படுகிறதோ, அத்துணை பெறுமதியும், மதிப்பும் கொண்டவைதான் எல்லாச் சமயங்களும் கூறுகின்ற மனித மேம்பாட்டுக் கருத்துக்கள். எல்லாச் சமயங்களும் மனிதர்கள், உண்மையை அறியவும், அடையவும் வழிகாட்டுதலையே குறிக்கோளாகக் கொண்டவை. மனித ஈடேற்றத்திற்கான மனித விழுமியங்களையும், வாழ்க்கைப் பெறுமானங்களையும் எடுத்தியம்புவதில் எல்லாச் சமயங்களும் ஒத்த கருத்துள்ளனவாகவே விளங்குகின்றன. சமயங்கள் அனைத்தும் மனிதர்களை ஒற்றுமைப்படுத்தவே எழுந்தன. ஆனால் நடந்தவை வுேறு. கடந்தகாலங்களில் சமயத்தின் பேரால் போர்கள், பூசல்கள், மதமாற்றங்கள் என்பனவே நடந்தன. மனித குலம் பிரிவுக்கு உள்ளானது. அதனால் சமயத்தின் போக்கே மாறியது. சமயத்தில் நம்பிக்கையும் இழக்க நேரிட்டது. அதற்குச்சமயங்கள் பொறுப்பல்ல, சமயவாதிகளே பொறுப்பு. சமயங்களின் நோக்கம் மனிதர்களுக்கிடையே போரை உண்டாக்குவது அல்ல; ஒற்றுமையை ஏற்படுத்தி, சாந்தியையும், சமாதானத்தையும் ஏற்படுத்துவது ஆகும். மனிதர்களுக்கிடையே பேதங்களையும், பிணக்குகளையும் உருவாக்குவதல்ல; ஐக்கியத்தையும், ஒருவரை ஒருவர் மதித்து, அன்பு பேணும் பண்பையும் தோற்றுவிப்பது சமயங்களின் பணி என்பதை மனிதர்கள் உணர்ந்து கொள்ளுதல் மிக அவசியம். சமயங்களும், சமயங்களைத் தோற்றுவித்த புனிதர்களும், மக்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும், வாழ்க்கையில் பெறுமதி வாய்ந்த மனித விழுமியங்களை உணர்த்துவதற்காகவும், அவற்றின் வழி வாழ்வாங்கு மனிதர்களைச் செம்மை வாழ்வு வாழ்விப்பதற்காகவும், அதனால் மனிதர்களைத் தெய்வீகநிலைக்கு உயர்த்துவதற்காகவும் நெறிகளை உருவாக்கித்தந்து சிறப்புப்
சமயம், ஆன்மிகம், தெய்வீகம், கடவுள் எனும் சொற்களைக் கேட்டதும் பலர். அஞ்சுகிறார்கள்; இன்னும் சிலர் நமக்கெல்லாம் இவை ஒத்து வராது என்று ஒடி ஒழிக்கின்றனர். மேலும் சிலர், அவையெல்லாம் வயது வந்தவர்களுக்கு மட்டும், முதுமை வரும் போது பார்த்துக் கொள்ளலாம், இப்ப என்ன அவசரம் என்று கூறி நழுவப்பார்க்கின்றனர். இவ்வாறான அபிப்பிராயங்கள் தோன்றுவதற்குரிய காரணம் என்ன? என்பதை ஆராய்ந்தால், சமயம், ஆன்மிகம் முதலிய சொற்கள் அவர்களிடையே ஏற்படுத்தியுள்ள தவறான விளக்கத்தை உணரமுடிகின்றது.
114

Page 62
ஆன்மிகம், தெய்வீகம் என்றவுடன் அதிகமானோர் எண்ணுவது, மோட்சம், நரகம், அடுத்த உலகம் பற்றிய விடயங்களைத்தான். இதனால் சமயம் என்பது மோட்சத்தை அடையவும், அடுத்த உலக வாழ்க்கைக்கு ஆயத்தம் செய்வதற்கும்; நரக உலக வாழ்க்கைத்துன்பங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கும் தகுந்த உபாயங்களைச் சொல்லித்தரும் சாதனம். என்றே மக்களில் பெரும்பாலோர் நினைக்கின்றனர். சமயம் கூறுகின்ற அறங்கள், நீதிகள், நெறிகள், விழுமியங்கள், சேவைகள், நற்செயல்கள் யாவும் இனிமேல் வரப்போகின்ற மறுமைவாழ்க்கைக்கு உதவக்கூடிய புண்ணிய கைங்கரியங்கள் என்றே பொதுவில் மக்களால் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. அந்த அறங்கள், நீதிகள், நெறிமுறைகள் யாவும் வாழ்க்கைப் பெறுமதி மிக்க மனித விழுமியங்கள்; இம்மையில், இந்த உலகில், நாம் தற்பொழுது வாழுகின்ற சமுதாயத்தில், அமைதியுடனும், சாந்தி சமாதானத்துடனும், ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கு அத்தியாவசியம் தேவையானவை என்பதை மக்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டும். இதனை உணர்ந்து கொள்ளும்பட்சத்தில் ஆன்மிகம், தெய்வீகம் என்பனபற்றி வயது முதிர்ந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணுவது எவ்வளவு தவறு என்பதைத் தெளிந்து கொள்வர்.
“மனிதரிடம் உள்ளார்ந்து காணப்படுகின்ற தெய்வீகத்தை வெளிப்படுத்துவது சமயம்’ இவ்வாறு சமயத்திற்கு வரைவிலக்கணம் கூறியுள்ளார் சுவாமி விவேகாநந்தர். மனிதரிடம் உள்ள பல்வேறு வளங்களில் ஆன்மிக வளமும் ஒன்று அதனால், ஒவ்வொரு மனிதனும் இயல்பாகவே ஆன்மிக வளம் கொண்டவன் என்று கொள்ளப்படுகிறது. மனிதனுக்கு மனிதன், பொருள்வளம் போன்று, வேறுபட்ட அளவில் ஆன்மிக வளம் இருக்கலாம். ஆன்மிக வறுமை உள்ளவர்களும் இருக்க முடியும். அவர்கள் விலங்குகளுக்குச் சமமாவர். பொருளில் மனிதர்களிடையே சமத்துவம் இல்லாமை போன்று, ஆன்மிகத்திலும் சமத்துவம் அற்றநிலை காணப்படுகிறது. ஆயினும் இரண்டையும் சம்பாதித்துக் கொள்ளக்கூடிய சக்தி மனிதரிடம் உண்டு. இதுவும் மனிதரை, விலங்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றது.
ஆன்மிக வளம் என்றால் என்ன என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொண்டால், அவ்வளத்தை விருத்தி செய்தல் இலகுவாகிவிடும். ஆன்மிகம் மனிதனுக்கு இயல்பானது; எனவே உரித்தானது. ஆன்மிக வளம், மனிதனிடம் இயல்பாகவும், மனிதனுக்கே உரித்தாகவும், உள்ளார்ந்த நிலையிலும் காணப்படுகின்ற உயர் மனிதப்பண்புகள் வளம் ஆகும். தெய்வீகம் என்று உயர்வு கருதிக் குறிப்பிடப்படுதல் இங்கு நோக்கற்பாலது. தெய்வீகப் பண்புகள், உயர்மனிதப் பண்புகள் எனும் கருத்தில் கொள்ளப்படுதலை விளங்கிக் கொள்வோம். ஆன்மிகப் பண்புகள், தெய்வீகப் பண்புகள், உயர்மனிதப் பண்புகள் எனக் கூறப்படுபவை யாவும் ஒத்தகருத்துள்ளன என்பதைப் புரிந்து கொள்ளுதல் அவசியமாகின்றது.
இவ் உயர்மனிதப் பண்புகள், உயர்வான பெறுமதியையும், பெறுமானத்தையும்,
15

தெய்வீகம் என்றும் ஆன்மிகம் என்றும் சமயச்சார்புடையவர்கள் அழைத்தனர். சமயச் சார்பற்றவர்கள் ஆன்மிகம், தெய்வீகம் என்பவற்றை விரும்பாவிடில், உயர் மனிதப் பண்புகள் எனக் குறிப்பிடலாம். சமயம் என்பது குறிப்பிட்ட ஒரு வழி அல்லது பாதை. குறித்த அந்த வழியிலோ சமயத்திலோ சார்ந்து நில்லாதவர்களும் நிச்சயம் உயர்மனிதப் பண்புகளின் வாழ்க்கைப் பெறுமதியைப் போற்றுவர். மனிதர்கள் யாவரும் மண்ணில் நல்ல வண்ணம் வாழவும், வாழும் முறையில் வாழவும், உயர்மனிதப் பண்புகள் மிக அவசியம்,
மனிதப் பண்புகள் என்றாலே என்றும் உயர்வானவை, தெய்வீகமானவை என்ற நிலைப்பாட்டினை உடையவைதான். அதனால் உயர்வு, தாழ்வு என்பவற்றைக் குறிக்கிற அடைமொழிகள் தேவையற்றன.
அன்பு, உண்மை, நேர்மை, நீதி, நடுநிலைமை, பொறுமை, சுயநலமின்மை, கருணை, அஹிம்சை முதலியன மனிதப் பண்புகளே. இத்தகைய மனிதப்பண்புகள், மனிதனுள் புதைந்து கிடக்கும் வரை அவை, மனிதருக்கு எவ்வித பயனும் அளிக்கப் போவதில்லை. அவை வெளிப்படுத்தப்படவேண்டும். வெளிப்படுத்துதல் என்றால் என்ன? எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்னும் வினாக்கள் அடுத்து எழுகின்றன.
மனிதப் பண்புகளை வெளிப்படுத்துதல் என்பது அவற்றை மனித நடத்தைகளில் காண்பித்தல் ஆகும் நடத்தைகளில் மனிதப் பண்புகளைக் காண்பித்தல் என்றால், மனிதப் பண்புகளை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழகுதல் என்பதாகும். எனவே சமயம் மனிதனில் ஆழ்ந்துகிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவது. என்று சுவாமி விவேகாநந்தர் கூறியதன் தாற்பரியம், மனிதனிடம் உள்ளார்ந்து காணப்படுகின்ற மனிதப்பண்புகளை அறிந்து அவற்றை அன்றாடம் தமது வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகுதலுக்கு சமயம் உறுதுணையாக உள்ளது என்பதேயாகும். எனவே, சமயம் என்பது முத்திக்கு வழிகாட்டுவது மட்டும் அல்ல, இந்த உலகில் செம்மையாக வாழ்வதற்கும் வழிகாட்டுகின்றது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
மனித வாழ்வு செம்மையாகவும், அமைதி நிறைந்ததாகவும் அமைய வேண்டுமென்று கருதிய நம் முன்னோர்கள், அதற்குரிய நிதி நெறிகளையும்; சமூகச் சட்டங்கள், விதிகளையும் உருவாக்கினர். அவற்றை இலகுவில் நடைமுறைப்படுத்துவதற்காகவே சமயம் எனும் ஊடகத்தைத் தெரிவு செய்தனர். சமயம் எனும் ஊடகம் சக்தி மிக்கதாக இருந்ததற்குக் காரணம் சமயத்தின் மீது மக்கள் த்திருர் tä ம், பக்தியமே. சமயம் ஒன் bலகென் சொன்னால் மக்கள் அதனை ஏற்றனர். எனவேதான், மனிதப்பண்புகளை விருத்திசெய்வதும், வாழ்க்கையில் கடைப்பிடிப்பதும், ஆகியவை சமய ஆசாரங்களாகவும், சமய அனுட்டானங்களாகவும் கொள்ளப்பட்டு வந்தன. அந்தவகையில் தான், சமயத்தின் இறுதிநோக்கமான முத்தியையோ, இறைவனையோ, பரிநிர்வாணத்தையோ அடைவதற்கு உண்மை, அன்பு, அறம், கருணை என்பன உதவுகின்றன எனச் சமயங்கள் வலியுறுத்துகின்றன. அதனால்
116

Page 63
உண்மை, அன்பு, அறம், கருணை, அஹிம்சை என்பன இறைவனை அடைவதற்குத்தான் தேவை அல்லது இறைவனை அடைய விரும்பும் நேரத்திலிருந்துதான் தேவையென்று கெள்ளுதல் தகாது.
இந்த உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கும் இத்தகைய மனிதப் பண்புகள் வேண்டும். குடும்பத்தில் உறுப்பினர்களிடையே பரஸ்பரம் அன்பு, உண்மை, நேர்மை, விட்டுக்கொடுத்தல் இருந்தால் தான் குடும்பத்தில் இன்பமும் அமைதியும் நிலவும். சமுதாயத்தில் குழப்பங்கள், கொடுமைகள் இல்லாமல் சாந்தியும், சமாதானமும் இருந்தால் தான் சமுதாயம் முன்னேற்றம் காணும். ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது பரஸ்பரம் அன்பு, நேர்மை, உழைப்பு, உண்மை, ஊக்கம், விசுவாசம் முதலிய நற்பண்புகளைக் கொண்ட மக்களில் தங்கியுள்ளது. மனிதப்பண்புகள் மலராத மக்களைக் கொண்ட நாடு பொருளாதார விருத்தியையோவேறெந்தத்துறை விருத்தியையோ காண இயலாது.
எல்லாச் சமயங்களும் நல்லனவற்றைத்தான் போதிக்கின்றன. நல்ல அறங்களையும் பண்புகளையும், விழுமியங்களையும் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுமாறு வற்புறுத்துகின்றன. அறத்தாலும், அன்பாலும், நீதியினாலும் வருவதே இன்பம் என்கின்றன. வேத இருடிகள், சைவநாயன்மார்கள், புத்தர், யேசு, முகம்மது நபிகள், திருவள்ளுவர், மகாவீரர், திருமூலர், இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தியடிகள் முதலான சான்றோர்களும் அருளாளர்களும் தாம் தெளிந்த உண்மைகளை, வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திய நெறிகளைப் பிற்சந்ததியினரின் வாழ்க்கை நலன்கருதி, அவர்களும் அவற்றைப் பின்பற்றி வாழவேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். அவர்கள் சென்ற பாதைகள் நன்கு செப்பனிடப்பட்ட சீரான பாதைகள். அப்பாதைகளில் செல்பவர்களுக்குக் காப்புறுதி வழங்கியுள்ளார்கள். அப்பாதைகளில் பயமின்றி, தயக்கம் இன்றி நடப்பதால் நன்மைகள் பல உண்டு என்பதை உணர்வோமாக.
27. மனம் வெளுக்க மார்க்கம் உண்டா?
இந்தப் பூமியில் காணப்படுகின்ற எல்லா உயிரினங்களுக்குள்ளும் அதி அற்புதச் சிருஷ்டியாக விளங்குவது மனித இனம். மனிதனுக்குள் மனம் இருக்கிறது. மனம் உள்ளவன் மனிதன், எனப்படுகிறான். மனிதன் நல்லவனாதலும், தீயவனாதலும் அவனவன் மன்த்தைப் பொறுத்தது. அவன் வல்லவன் ஆக விளங்குவதும், கோழையாக ஒதுங்குவதும் கூட, ஒவ்வொருவரினதும் மனத்தைப் பொறுத்த விஷயம். மனம் உறுதியானதாகவும், உரமானதாகவும் , ஒழுங்கானதாவும் விளங்கவேண்டும் மனம் பழுதுபட்டாலோ, பலம் குன்றினாலோ, ஒழுங்கு கெட்டாலோ, மனிதனுக்குப் பாதகமாகவே செயற்படும். எனவேதான், ஆக்கமும் கேடும் ஒருவனுக்கு மனத்தினால் ஏற்படுத்தப்படுவதால், மனம் மிக்க கவனத்துடன் காத்து ஒம்பப்படவேண்டும் என ஆன்றோர்கள் கூறிவைத்துள்ளனர். ஆன்றோர் வாக்குகள், வாழ்க்கை அனுபவத்திலிருந்து
17

தோன்றுபவை என்பதால் அவை எம்மால் கொள்ளத்தக்கவை; தள்ளத்தக்கவையல்ல.
மனிதர்களைப் பெரும் இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் உட்படுத்தும் யுத்தங்கள் மற்றும் பல்வேறு முரண்பாடுகள் என்பனவற்றின் ஊற்று மனிதமனங்களேயாகும். இதனை ஆழ்ந்து சிந்தித்தால், மனிதமனங்கள் எத்துணை கெடுதிகளுக்குத் துணைபோகின்றன என்பது தெரியவரும். ஆசை, கோபம், பகைமை, அகந்தை, வெறுப்பு முதலிய கெட்ட உணர்ச்சிகளை மனங்களே பிரசவிக்கின்றன. இதனால் சான்றோர்கள் மனமடங்கும் மார்க்கத்தைத் தேடினர். இன்னும் சில அருளாளர்கள் மனம் இறக்க வேண்டுதல் செய்தனர். மனம் என்று ஒன்று இருக்கும் வரை மனிதனுக்கு விமோசனம் இல்லை என்பது அவர்களின் நிலைப்பாடு, மனம் இல்லையானால், கெட்ட உணர்ச்சிகள் தோன்ற வாய்ப்பே இல்லாமல் போய்விடும் என எண்ணினர் போலும். மனம் கறுப்பாக விருந்தால், உலகமும் கறுப்பாகவே அத்தகைய கறுப்பு மனத்தினர்க்குத் தோன்றும் மனம் வெளுப்பாக இருந்தால், அவர்களுக்கு எல்லாமே வெளுப்பாகத் தோன்றும். எனவேதான், மகாகவி பாரதியாரும் மனம் வெளுக்க மார்க்கம் தேடி அலைந்து, ஈற்றில் மனம்வெளுக்க மார்க்கமில்லை என்று கூறினார் போலும். அதற்கு முன், தாயுமானவரும் மனத்தை அலைய விடாது சும்மாவைத்திருக்கின்ற திறனைப் பெறுதல் மிக அரிது என்று கூறினார். மனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது, மனிதனின் மனம் என்று கண்டோம். அதே மனம் தான், மனிதனை, விலங்குகளிலும் பார்க்க இழிநிலைக்குத் தள்ளி விடுகிறது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மனத்தை வைத்துக் கொள்வதிலும் அதை இறக்கச் செய்வதே மேல் என ஞானிகள் எண்ணினர்.
இன்னொருவகையில் நோக்கினால், இதே மனத்தில்த்தான் சமாதானம், சாந்தம், கருணை என்பனவும் தோற்றம் பெறுகின்றன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். யுத்தமும் மனத்திலேயே மூழ்கிறது; சமாதானமும் அதே மனத்திலிருந்தே முகிழ்க்கிறது. அழிவு, ஆக்கம் இரண்டையும் ஏற்படுத்தும் சக்தி மனித மனத்திற்கு உண்டு. மனம் ஆக்கத்தை மாத்திரம் ஏற்படுத்தி அழிவு முயற்சிகளைத் தடுக்குமேயானால், மனத்திற்கு நிகராக வேறு ஒன்றுண்டோ?.
மனித நடத்தைகளுக்கும், மனித மனத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. உண்மையில் மனம் தான் மனித நடத்தைகளை வழிநடத்துகின்றது. கெட்ட நடத்தைக்கு மனிதனைத் தூண்டுவது மனந்தான். நன்னடத்தைக்கு வழிசமைப்பதும் மனந்தான். போதும் என்றும் போதாது, போதாது என்று எம்மைச் சொல்ல வைப்பதும் மனமேதான். மனம் செம்மையாகி விட்டால் மனிதன் செம்மையாகி விடுகிறான். மனம் கொடுமையாகி விட்டால், மனிதனும் கொடுமையாளனாகி விடுகிறான். மிண்டு மனத்தவர், கொடுமனத்தவர், விலங்குமணத்தவர் மக்களில் மாக்கள் ஆவர். இவர்கள் மனிதனுக்குக் கட்டுப்படாத மனத்தைக் கொண்டவர்கள். மனத்தை மீறவிட்டவர், மதிகெட்டவர். மதி கெட்டுவிட்டால், மனித நடத்தைகளும் கெட்டுவிடும்.
18

Page 64
மனத்தை ஆட்சி செய்பவன், மாமனிதன். அவன் அறிஞன், மேதை, அவர்கள் தம் வாழ்வுக்குமட்டுமல்ல, பிறர் வாழ்விற்கும் கலங்கரை விளக்கம் ஆவர். மனம் போன போக்கில் அதன் பின்னால் செல்பவர்கள், பேதைகளாகிப் பிறர் பழிபிற்கும் இடமாகி விடுகிறார்கள். வாழ்க்கையையும் வசையுடன் முடித்துக்கொள்கிறார்கள்.
ஒருவன் கஷ்டப்பட்டு உழைத்துச் சிறிய தொகை பணத்தைச் சம்பாதித்தான். கையில் வைத்திருந்தால் அந்தப் பணம் கரைந்து போய்விடும். சேமிப்புக் கணக்கில் வைத்தால் பணமும் பெருகும்; பாதுகாப்பாகவும் இருக்கும் என எண்ணுகிறான். உடனே அவனின் மனம் என்ன சொல்கிறது தெரியுமா? “ஏ, மனிதா, பணத்தை நீ இவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தது, பூட்டிவைத்து அழகு பார்க்கவா, அதனால் உனக்கென்ன பிரயோசனம். பணம் தேடுவது அனுபவிக்கத்தானே. நன்றாக அனுபவி”, என்கிறது மனம். மனத்தின் இந்த வார்த்தைகளை மீற அவனால் முடியவில்லை. மனம் போன போக்கிலே போகிறான், மனம் ஆணையிட்டபடி செய்கிறான். மதுக்கடைக்குச் செல்கிறான். மதுப்போத்தல்களை வாங்கி வாங்கிக் குடிக்கிறான். நண்பர்களுடனும் மதுவைப் பகிர்ந்து கொள்கிறான். விலையுயர்ந்த உணவுப் பதார்த்தங்களை வாங்கி உண்கிறான். இவ்வாறு சில நாட்கள் கழிகின்றன. மதுப்பழக்கத்தை நிறுத்த முடியவில்லை. கையில் இருந்த பணமும் செலவாகி விட்டது. கடன் வாங்கிக் குடிக்கிறான். கடனாளியாகிறான். அந்த நிலையிலும் மனம், அவனை விட்டபாடில்லை. மேலும் மேலும், அவனை, இரந்து பணம் பெற்றேனும் குடி என்று மனம்தூண்டுகிறது. அதுமட்டுமா, திருடியாதல் குடி என்கிறது மனம். கடனாளி என்றும், பிச்சைக்காரன் என்றும், திருடன் என்றும் குடிகாரன் என்றும் சமூகம் அவனைத்தூற்றுகிறது. தெருவோரத்தில் விழுந்துகிடக்கும் போதும், குடி, நன்றாகக் குடி என்றுதான் அவனின் மனம் சொல்கிறது. இன்னமும், மனம் போன போக்கிலேதான் சென்று கொண்டிருக்கிறான். மனம் இவ்வளவு தீங்கு செய்கிறதே என்றுகூட அவனால் உணரமுடியவில்லை. அவன் அவனாக இல்லை. அவனிடம் அத்துணை வலிமையும் இல்லை. மனத்தின் கைப்பொம்மையாகிவிட்டான். மனத்தின் இரும்புப் பிடியிலிருந்து விலகமுடியாமல் உள்ளான். மானம், மரியாதை, வெட்கம், ரோசம் எல்லாமே அவனிடமிருந்து விடைபெறுகின்றன. இப்பொழுது அவன் மனிதனல்ல, வெறும் ஜடம் நடைப்பிணம் மனம் போன போக்கிலே போனமையால் கிடைத்த பலன் இது. தன்னை மறந்தான்; தன் நாமம் கெட்டான்; மனத்திற்கு அடிமையானதால், வாழ்க்கையை அனுபவிப்பதற்குப் பல நல்ல வழிகள் இருந்தும், அந்த நல்ல வழிகளில் அவன் செல்வதற்கு அவனின் மனம் அனுமதிக்க வில்லை. குடித்துக் கும்மாளமடித்து வாழ்க்கையை அனுபவி என்று மனம் வழிகாட்டியது. மனம் வழிச் சென்றான். எல்லாவற்றையும் இழந்தான். வாழ்க்கையையும் தெருவோரத்தில் நாலு பேர் தூற்ற முடித்துக் கொண்டான். இசைபட வாழவேண்டியவன், வசைபட வாழ்வை முடித்துச் சிறுமை சேர்த்துக் கொண்டான். அவனுடன் அந்தச் சிறுமை நின்று விடவில்லை. அவனின் பரம்பரை பரம்பரையாக. அச்சிறுமை தொடர்கிறது. அவனின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் அந்த “வெறிக் குட்டியற்றை” என்னும் அடைமொழிவைத்தே
119

அழைக்கப்பட்டு வருகின்றனர். தாம் செய்யாத குற்றத்திற்கு இப்படியும் ஒரு தண்டனை அவர்களுக்கு. குடி, குடியைக் கெடுக்கும் என்று சும்மாவா சொல்லி வைத்தார்கள். குடிக்கக் காரணம் மனந்தான். மனம் மனிதனுக்குக் கட்டுப்பட வேண்டுமே தவிர. மனம் மனிதனை ஆட்டிப்படைக்க இடம் அளிக்கப்படல் ஆகாது. “மனம் போன போக்கிலே போக வேண்டாம்” என எச்சரிக்கிறார் ஓர் அருளாளர். மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம். அதைக் கேட்டு நடந்தால் ஒரு பொல்லாப்புமில்லை.
இன்று போதைப் பொருள்களை உபயோகிக்கும் கூட்டம் பெருகிக் கொண்டே போகிறது. இளைஞர்கள், சிறுவர்கள் கூடப் போதைப் பொருள்களைப் பாவிக்கத் தொடங்கியுள்ளனர். பாடசாலை மாணவர்கள் சிலரும் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி வருவதைப் புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவர்கள் எல்லோரும் இன்னும் பல காலம் வாழவேண்டியவர்கள். உலகினை நடத்தவேண்டிய நாளைய தம் ,லவர்கள். இப்படியாக, ஏன் பிஞ்சில் வெம்பிப் பழுத்து இடையில் உதிரவேண்டும். இவர்களிடம் நாடு எவ்வளவற்றையோ எதிர்பார்க்கின்றது. அந்த எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யுமுன்னர், இளஞ்சந்ததியினர் ஏனோ தம்மை அழித்துக்கொள்கின்றனர். இது விதியன்று. மனம் செய்கின்ற சதி. போதைப் பொருள்களை உட்கொள்ளும்படி யார் துண்டுவது. சந்தேகமேயில்லை மனம் தான் துண்டுகிறது. தோழர்கள் போதைப் பொருள்களை வாரி வழங்கும் போது, வஞ்சகமில்லாத நல்ல மனம் என்றால், வேண்டாமென்று தடுத்து நிறுத்தியிருக்கலாம் தானே! அது ஏன் அவ்வாறு செய்யவில்லை. அது நல்ல மனம் இல்லை, கொடுமணம், வஞ்சகமும் சூதும் நிறைந்த நஞ்சு மனம், அதனால்தான் அது தடுக்கவில்லை. மாறாக, போதைப்பொருளை உட்கொள்ளுமாறு துண்டுகிறது. மீண்டும் மீண்டும் போதைப் பொருளை நுகர்வதற்கான தணியாத தாகத்தை மனம் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. மனிதனைக் கெடுப்பதால் மனத்திற்கு என்ன இலாபம். உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்று சும்மாவா சொல்லிவைத்தார்கள், நம் முன்னோர். மனிதனும் மனமும் உடன்பிறந்தவையல்லவா? மனம், மனிதனைக் கொல்ல விழைகின்றது. போதைப் பொருள்கள் கருவிகளாகின்றன. மனிதர்கள் மனம் போன போக்கிலே போனால் அழிவு உறுதியாகிவிடும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியமாகும். மனம் கெடுக்க எத்தனங்கள் செய்கின்றது. மனிதன் அதனைத் தடுக்க வேண்டும். மனிதனிடம் அந்த ஆற்றல் உண்டு என்பதை அறியாதவனாய் உள்ளான். மனிதன் தனது பலத்தை அறிந்து கொண்டால் பலவீனத்தை அகற்றிவிடலாம்.
மனிதனிடம் பலமும் உண்டு; பலவீனங்களும் உண்டு. இரண்டிற்கும் மனந்தான் காரணம். மனப்பலம் எப்போது ஏற்படுகிறது. மனிதன் மனத்தை ஆளும்போது, அவனுக்கு மனப்பலம் உண்டாகிறது. உடற்பலத்திலும் மனப்பலம் முக்கியமானது. மனப்பலத்தினால்த்தான் அரிய பல சாதனைகளை மனிதன் நிலை நாட்டியுள்ளான். மனத்தைக் கட்டுப்படுத்தி மனிதன் வைத்திருக்கும் போது மனப்பலம் உண்டாகிறது. மனத்தை அது பாட்டிற்கு அலையவிடும் போது, மனம் தளர்ந்து விடநேரிடுகின்றது. மனப்பலம் குன்றிவிடும். மனப்பலம்
120

Page 65
குன்றிவிட்டால், உடல் பலமும் குன்றி வாழ்க்கையும் சூனியமாகி விடுகின்றது. வைராக்கியம், உறுதி, தைரியம், வீரியம், சீரிய வாழ்க்கை, செம்மை, ஒழுங்கு என்பன யாவும் மன ஆரோக்கியத்தினால் ஏற்படுபவை. மன ஆரோக்கியமே மகா சக்தியாகும் என நம் முன்னோர் கண்டதை நோக்குதல் அவசியமாகும்.
ஒவ்வொரு மனிதனின் மனமும் செம்மையாகும் போது, சமூகம் செம்மையாகிவிடும், மனிதன், விலங்குகளைப் போலன்றி, பகுத்தறிவுடன், அழகுணர்திறனும், ஒழுக்கவியல் திறனும் கொண்டுள்ளான். அவனிடம் ஆன்மிக வளமும் உள்ளது. ஆகையினாலேயே, படைப்புக்களுக்குள் மனித இனம் முதன்மை பெற்றுத்திகழ்கிறது. ஆனால், மனிதனோ தம்முடைய உள்ளார்ந்த திறன்களையோ, அற்புத ஆற்றல்களையோ, வளங்களையோ உளளபடி அறியாதவராயும், அவற்றைச் சரிவரப் பயன்படுத்த இயலாதவராயும் காணப்படுகின்றனர். தம்மை அறிய முயற்சிப்பதில்லை. அதுவே மனிதன் பெரு குறையாகும். தன்னையறிந்தவன் தரணியாள்வான். அப்படியாய ன், தன்னையறியாதவன் தரணியை ஆளமாட்டான் என்பது இதிலிருந்து பிறக்கின்றதல்லவா?
தன்னையும் தன்னுடைய வல்லமைகளையும் உள்ளபடி அறிந்தவன், தன் மனத்தைக் கட்டுப்படுத்தவும், மனத்தை ஒருவழிப்படுத்தவும், அந்த ஒருவழி, நல்வழியாக அமையவும் கூடியவனாக இருப்பான். மனம் செம்மையாகிவிட்டால், அவன் ஆன்மிகம், அழகு, ஒழுக்கம் நிறைந்தவனாகின்றான். மனிதன் மனிதத் தன்மைகளுடனான மனிதானாகி விடுகிறான். ஆகவே மனிதனாவதும், விலங்காவதும் அவனவன் மனத்தைப் பொறுத்ததாகும். அதனாலேயே மனம் நன்கு பேணப்பட வேண்டியதன் அவசியம் வற்புறுத்தப்படுகிறது.
மனத்திலுள்ள அழுக்குகள், அசுத்தங்கள் என்பன நீக்கப்பட்டு விட்டால், மனம், தூய்மை பெறுகின்றது. தூய்மையான மனம் சக்தி நிறைந்தது. அத்தகைய மனோசக்தியே, ஆத்ம சக்தியாக மலருகின்றது. பெரும் ரிஷிகள், முனிவர்கள் என்போர் தமது ஆத்ம பலத்தினாலேயே அரிய பல சாதனைகள் புரிந்துள்ளனர். நயத்தக்க நாகரிகம், பண்பாடு, ஆன்மிகம் என்பவற்றை வளர்த்தனர். நாம் இன்று இவ்வளவு தூரம் முன்னேற்றம் கண்டிருப்பது அவர்களின் ஆத்ம சாதனைகளின் விளைவேயாகும். இன்றைய மனிதர்கள் ஆத்ம சக்தியைப் புறக்கணித்து, வேறு புறச் சக்திகளின் துணையுடன் சாதனைகள் படைக்கின்றனர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்றும் தொழினுட்ப விருத்தி என்றும் பேசுகின்றனர். ஆனால் அவையாவும், மனிதத்தன்மைகளற்ற மனிதரிடம் சென்றடைந்ததன் பயனாக, மனித குலத்திற்குப் பெரும்பாலும் அழிவையும், அவலங்களையும் தான் ஏற்படுத்தி வருகின்றன. மனிதனிடம் ஆத்மசக்தி இருக்குமேயானால், மனித குலத்திற்கு இந்த நிர்க்கதி ஏற்பட்டிருக்காது. மனிதன், தன் ஆத்மபலத்தை விருத்தி செய்வதன் மூலம் மனிதத் தன்மைகளைப் பெற்றால்த்தான், இன்றைய உலகம் எதிர்நோக்கியுள்ள சகல பிரச்சினைகளும் திரும். மற்றும்படி, எந்தச் " தியாலும், விஞ்ஞானமோ, தொழில்நுட்பமோ, மந்திரம், தந்திரம், மாயையோ;
பதிநுட்பமோ, விவேகமோ அரசியல் சாணக்கியமோ எதுவாலும், தற்கால
12

உலக சமுதாயம் கொண்டுள்ள அரசியல் சமூக, பொருளாதாரம் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்சினையையும் தீர்க்க முடியாது. தீர்க்கப்படாத பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டுமானால், மனிதர்கள் மாறவேண்டுமானால், மனிதர்கள் மாறவேண்டுமென்பதால் கருதப்படுவது, அவர்களின் மனமாற்றம். மனங்களில மாற்றம் ஏற்படுவதற்கு, மனந்துய்மை பெறவேண்டும். மனந்துாய்மை, வாய்மையால் காணப்படும் என்பது வள்ளுவர் கண்டுபிடிப்பு அழுக்காறு, அவா, கோபம், பகைமை, அகந்தை, போர்த்தன்மை போன்ற அழுக்குகள் அகற்றப்படுதலிலேயே மனம் தூய்மைப் படுத்தப்படுதல் தங்கியுள்ளது. மனிதனுக்கு இவ்வழுக்குகளை நீக்கும் வல்லமை நிறைய உண்டு. அதுவே மனிதச் சிறப்பு, முயன்றால் மனிதர்க்கு முடியாததொன்றில்லை. மனிதனின் முயலாமைதான், அவனிடம் ஆற்றல் இல்லாமல் இருப்பதாகத் தோன்றுவதற்குக் காரணம். ஒவ்வொருவரும் தன்னையறிந்து, தம் உள்ளார்ந்த ஆற்றல்களை உணர்ந்து, அவற்றை வெளிப்படுத்தி, மனம் முதலிய திரிகரணங்களையும் கத்தி செய்து, மனமாற்றம் பெற்று, அதனூடாக மனிதமாற்றம் எய்தி, வையத்தில வாழ்வாங்குவாழும் போது உள்ள பிரச்சினைகள் மறைந்து தீர்ந்துவிடும். வேறு புதிய பிரச்சினைகள் தோன்ற இடமில்லாமல் போய்விடும். விடிவு, நம் ஒவ்வொருவர் கையிலுந்தான் உள்ளது என்பதை உணர்வோமாக.
28. கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம்.
சந்தோஷமான, திருப்தி நிறைந்த வாழ்வு எனும் போது ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு, ஒத்த கருத்தினராய், வேண்டியவேளைகளில் ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து, நல்லிணக்கம் நல்லுறவு பேணி, மனஞ் சஞ்சலமின்றி வாழுகின்ற அமைதி வாழ்வையே கருதுகின்றோம்.
குடும்பத்தில் அமைதி நிறைந்த வாழ்க்கைதான் உண்மையான சந்தோஷ வாழ்க்கை. குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை நிலவும் போதுதான் சந்தோஷம் நிலைத்தும் நீடித்தும் நிற்கமுடியும்.
அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற முதலாவது காரணம் சந்தேகம் ஆகும். அடுத்த காரணம் பேச்சு. இதை நாவடக்கமின்மை என்றும் கூறலாம். ஆகவே கணவன் மனைவிக்கிடையே எந்த விதத்திலும் சந்தேகம் தோன்றாதவாறு, அவர்கள் இணைந்த ஆரம்பக்காலத் திலிருந்தே, பார்த்துக் கொள்ளுதல் மிக அவசியமாகும்.
சந்தேகம் சேர்ந்தாரைக் கொல்லி. அதனை வாலாயம் செய்யும் எவரையும் அது வாழவைத்ததில்லை. சந்தேகத்திடம் தப்பித்தவறியும் அகப்பட்டுக்
22

Page 66
கொள்ளக்கூடாது. அகப்பட்டுக் கொண்டால் அதன் கோரப்பிடியிலிருந்து மீள்வது அத்துணை இலேசான காரியமன்று.
ஒளிப்பும் மறைப்பும்; உருட்டும் புரட்டும்; பொய்யும் களவும் குடும்ப உறுப்பினர் எவரிடம் இருப்பினும் அங்கு சந்தேகம் தோன்றித் தன்கைவரிசையைக் காட்ட முற்பட்டுவிடும். எனவே, கணவன் மனைவி நல்லுறவு பேணுவதில் மிக முக்கியம், என்னவெனில் சந்தேகம் அவர்களிடம் எந்த நிலையிலும் புகுந்து விடாமல் கண்ணுங்கருத்துமாக இருத்தலேயாகும். அதற்கு ஒளிப்பு மறைப்பில்லாமல், பொய்புரளி இல்லாமல், திறந்த மனதோடு நேர்மையான கருத்துப்பரிவர்த்தனை செய்து வாழவேண்டும்.
“ஒரு விஷயம் சொல்கிறேன்; உன்கணவன் காதிலை மட்டும் போட்டு விடாதை” என்ற பீடிகையுடன் சிலர் பேசத் தொடங்குவார்கள். அவர்கள் ஆபத்தை உருவாக்க முனைகிறார்கள் என்பதுதான் அர்த்தம். அவ்வாறு பேசத் தொடங்குபவர்களிடம் “அப்படியானால் அந்த விஷயத்தை எனக்குச் சொல்லவேண்டாம். என்னால் இரகசியம் பேணுவது இயலாத காரியம். என் கணவனிடம் நான் எதையும் மறைப்பதில்லை. அப்படி மறைத்துச் சந்தேகத்தை வளர்த்துக் கொள்ள நான் விரும்பவில்லை.” என்று உடனே பதில் சொல்லிவிடுவதே முறையாகும்.
அவ்வாறே சில ஆண்களிலும் “கிசு கிசு” பேசுபவர்கள் இருக்கிறார்கள். சில ஆதாரமற்ற விடயத்தையோ, வீண் வதந்தியையோ அரைகுறையாக அறிந்து கொண்டு வந்து, ஒருவரிடம், “ஒரு விஷயம் அறிந்தேன். முதன்முதல் உங்களிடம் தான் அதனைச் சொல்லப் போகிறேன். ஒருத்தரிடமும் சொல்லக்கூடாது. முக்கியமாய் உங்கள் மனைவியின் காதுக்கு இது எட்டக்கூடாது. ஏன் சொல்லுகிறேன் என்றால் பெண்களிடம் ஒரு இரகசியம் சொன்னால் அது பத்திரிகையில் போட்டதற்குச் சரி” இப்படியான அவையடக்கத்தோடு இரகசியம் சொல்ல வருபவர்கள் ஆபத்துப் பேர்வழிகள். அவர்கள் குறைந்தது பத்துப்பேர்களுக்காவது இந்த இரகசியத்தை ஏற்கனவே சொல்லியிருப்பார்கள். ஏதாவது சாட்டுப்போக்குச் சொல்லி மெதுவாக அவர்களைக் கழற்றிவிடுவதே அதிவிவேகமான செயலாகும். தீங்கினர்தம் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் நீங்குவதே நல்ல நெறி என்று ஒளவை மூதாட்டி கம்மாவா சொல்லிவைத்தார்.
கணவனும் மனைவியும் புரிந்துணர்வோடு, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து,
கருத்தொருமித்து மகிழ்ச்சியுடன் வாழ்வதைக் காணச் சிலருக்கு மனம் பொறுப்பதில்லை. ஏதோவிதத்தில் சந்தேகத்தை உண்டாக்கி, குடும்பத்தில்
箕23

யலைக்கிளப்பிவிடுவதில் புளகாங்கிதம் அடைபவர்களைச் சமூகத்தில் காண்கிறோம். இவர்கள் மனித விழுமியங்கள் பற்றிக் கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. இருகால் விலங்குகள் இவர்கள், பிறர் வாழச்சகிக்கமாட்டாதவர்களை எப்படி மனிதர் வரிசையில் சேர்த்துக் கொள்வது.
பிறர் இன்புறுவது கண்டு தாமும் இன்புறுபவர்கள் மேலோர். பிறர் இன்புறுவது கண்டு அதனைப் பொறுக்க முடியாமல் துன்புறுவோர் கீழோர். அவர்களால் மனித குலத்திற்கு இழிவு ஏற்படுகிறது. எத்தனையோ பேர்களின் வாழ்க்கையை அவர்கள் பாழ்படுத்தி விடுகிறார்கள். இந்தக் காட்சியைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்:
சரசுவும் சந்திானும் இளம் தம்பதிகள். திருமணமாகி ஓரிரு ஆண்டுகளே கழிந்துள்ளன. ஒரே அலுவலகத்திலேதான் அவர்களிருவரும் வேலைபார்த்து வருகின்றனர். இதுவரை அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை. வாடகை வீடு ஒன்றில் சந்தோஷமாக வாழ்கின்றனர். சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக வாழும் குடும்பம் அவர்கள் குதூகலமாக வெளியே போய்வருவது, மகிழ்ச்சியாகக் குடும்பம் நடத்துவது, அமைதிபேணுவது என்பன அயலில் வாழ்ந்தவர்களுக்குக் கண்ணுக்குள் குத்தியிருக்க வேண்டும். இந்த இளம் தம்பதியினரால் எப்படிப் பிச்சுப் பிடுங்கல் இன்றி இவ்வளவு அந்நியோன்யமாய் இருக்க முடிகிறது என்ற ஆச்சரியம் அக்கம்யக்கத்திலுள்ளவர் வந்தது. இவர்கள் ஒருநாளைக்கு ஒரு பொழுதாவது மெல்லிய சண்டைதன்னிலும் பிடிக்கமாட்டார்களா என்ற ஏக்கம் ஒருபுறம் வாட்ட, அந்த நன்னாளை எதிர்பார்த்த வண்ணம் அயலவர்கள் காலத்தைச்சிரமப்பட்டுக் கழித்துவந்தனர். அவர்கள் எதிர்பார்த்த நாள்வரவே இல்லை. அந்தப்பகுதியில் சண்டை சச்சரவுகள், கச்சுப் பிச்சுகளுக்குக் குறைவேயில்லை. அவற்றைப் பார்த்துப் பார்த்து அப்பகுதிச் சனங்களுக்கு அலுத்துவிட்டதோ என்னவோ சரசுவும் சந்திரனும் சண்டைபிடிக்கிறதைப் பார்க்க அப்பகுதி மக்களுக்கு அப்படியொரு அலாதி பிரியம். ஆனால் சுரகவோ, சந்திரனோ அத்தகைய சந்தர்ப்பத்தை வழங்காமலே வந்தார்கள்.
ஒருநாள் மாலை ஐந்து மணி இருக்கும், பக்கத்து விட்டுப் பவளமலர், சாசுவின் வீட்டுக்கு வந்திருந்தாள். முன் கதவைத் தட்டினாள். சரசு ஓடிவந்து கதவைத்திறந்து பவளமலரைக் கூட்டிச்சென்று கூடத்திலுள்ள ஆசனத்தில் அமரச் செய்தாள்.
能24

Page 67
பவளமலர் வீடு முழுவதையும் தன்கண்களால் அளந்து விட்டுச் “சரசு, நீ வீட்டை வடிவாய்த்தான் வைச்சிருக்கிறாய். ம். குழந்தை குட்டியிருந்தால் இப்படி வீட்டை ஒழுங்காய் வைச்சிருக்க விடுங்களே. ஒரே அல்லோல கல்லோலமாய்த்தான் இருக்கும். என்ரை வீட்டை வந்துபார். வைச்ச சாமான் வைச்ச இடத்திலே கிடந்துட்டுது எண்டால் அது ஒரு உலக அதிசயம் தான்.” என்றாள்.
“ஏன் மாமி, உங்களுடைய பிள்ளையஸ் எல்லாம் வளந்த பிள்ளையஸ் தானே.” என்றாள் சரசு
“வளர்ந்தது தான் மிச்சம். குனிஞ்சு ஒரு துரும்பும் எடாதுகள். இன்னும் என்னைக்கொண்டுதான் சேவகம் பாப்பிக்க நிக்கினம். இவ்வளவு நேரமும் சண்டை பிடிச்சுப் போட்டுத்தான் ஆறுதலுக்கு உன்னட்டை வாறன்’ இவ்வாறு பவளம் பொரிந்து தள்ளினாள்.
சரசு மெளனமாகக் கேட்டுக் கொண்டிருந்தாள். பவளம் தொடர்ந்தாள். “சரசு, நான் வந்த அலுவலை மற்ந்து வேறை கதை பேசிக் கொண்டிருக்கிறன். இப்பதேத்தண்ணி ஒண்டும் போட வேண்டாம். சரசு வோடை கொஞ்சம் கதைக்கத்தான் வந்தனான்.”
பவளம் இப்படிச் சொன்னால் தேநீர் தேவைப்படுகிறது என்பதுதான் பொருள். சரசுவுக்கு இது விளங்காமலில்லை. சரசு எழுந்து, “கொஞ்சம் இருங்கோ மாமி . வந்திடுறேன்” என்று சொல்லி விட்டுக் குசினிப்பக்கம் விரைந்தாள் ஓ, சரசு என்ன சொன்னாலும் கேளாது. ஒரு அரைக் கப் போதும்.” என்று சொல்லிக் கொண்டு, பவளமலர் சரசுவைப் பின் தொடர்ந்து போனாள்.
சரசுவின் குசினியை ஒருதரம் பார்த்து விடவேண்டும் என்பது பவளத்தின் எத்தனையோ நாள் ஆசை. இன்று கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டுவிடுவாளா, என்ன.
குசினியை வடிவாக ஒருமுறை உற்றுப்பார்த்த பவளம், அங்கு சாமான்கள் ஒழுங்குபடுத்திவைத்திருக்கும் அழகையும், தூய்மையையும், பாத்திரங்கள் பளிச்சிடும் ஒளியையும் கண்டு அசந்தே விட்டாள். “என்ரை பிள்ளையளை ஒரு நாளைக்குக் கூட்டி வந்து சரசு வின்ரை குசினியைக் காட்டவேணும். பார்த்தாப் பிறகு எண்டாலும் அதுகளுக்கு அறிவு வருகுதோ எண்டு பாய்யம்", என்று பவளம் சொல்லியும் விட்டாள். சரசுக்கு இதுமாதிரியான விடுப்புகள்
25

பிடிக்காது. அவசர அவசரமாகத் தேநீரை ஊற்றி எடுத்துக் கொண்டு, “வாருங்கோ மாமி அங்கே போய் ஹோலில் இருந்து ஆறுதலாய்க் குடிக்கலாம்” என்று சொல்லிப் பவளத்தைக் கூட்டிக்கொண்டு ஹோலுக்கு வருவதற்குள் போட்ட தேநீரும் பச்சைத் தண்ணிராய் ஆறிப்போய்விட்ட தென்றால், எவ்வளவு நேரம் எடுத்தது என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். அதற்குள் நூறு கேள்விகளைப் பவளம், சரசுவிடும் கேட்டுவிட்டாள். அத்தனையும் விடுப்புக் கேள்விகள்தான். ஒரு கேள்வி மிகச் சுவரசியமானது.
“மெய்யே சரசு, இவ்வளவு நிற்றாய், கிளினாய் வீடு குசினி, ஹோல், வாசல் எல்லாத்தையும் வைச்சிருக்கிறாய். தம்பி சந்திரனும் உனக்கு கூடமாட உதவி ஒத்தாசை செய்வராக்கும். எங்கடை ஆம்பிளையஸ் எண்டாலோ ..” என்று பவளம் முடிப்பதற்குமுன், சரசு கதையை முறித்து, வேறு திசைக்குக் கதையைத்திருப்பிப் பவளத்தைக் கூட்டிக் கொண்டுபோய் கூடத்தில் அமர்த்திவிட்டாள்.
பவளத்திற்கு ஒரு மாதிரியாய்ப் போய்விட்டது. வீடு முழுவதையும் துளாவிப்பார்த்து, என்னென்ன சாமான்கள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை நோட்டம்விட்டு, ஆயிரம் கேள்விகளைக் கேட்டு, விசாரணை செய்வதில் பவளத்திற்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஆனால் சரசுவிற்கு, இப்படியாகப் பிறர், தன் விட்டுக்கு வந்து பூராயம் பார்ப்பது, விடுப்புக்கேட்பது, விண் கதைபேசி நேரத்தைப் பாழடிப்பது என்பன எதுவும் பிடிக்காது. விட்டிற்கு விருந்தினர் வந்தால், ஹோலில் அமர்ந்து, நல்ல விஷயங்கள் பற்றிக் கலந்துரையாடி விட்டுப் போய்விடவேண்டும் என்பது தான் சரசுவின் விருப்பம். அரட்டையடித்தல், பிறரின் குற்றங்குறைகளை விமர்சித்தல், கோள்மூட்டுதல், ஒவ்வொருவரின் மாதச்சம்பளம் மற்றும் வருமானம் பற்றிக் கேள்விக்குமேல் கேள்வி கேட்டல்; மாமன், மாமி; சகோதரங்கள்; அக்கம் பக்கம் போன்றவர்களுடன் எப்படிச் சமாளிக்கிறாய், போன்ற, இன்னோரன்ன விடயங்களில் நடைபெறும் கலந்துரையாடல்களில் பங்கு பற்றுதல், கருத்துத் தெரிவித்தல் என்பவற்றில் சரசுவுக்கு நாட்டம் இல்லை. அதனால் சரசுவிடம் வருவோர் போவோர் மிகக் குறைவு. அதுமட்டுமல்ல அது ஒரு மாதிரி என்ற பெயரையும் ஏற்படுத்திவிட்டார்கள்.
பவளமலர் கொஞ்ச நேரம் மெளனமாக இருந்தாள். அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. பேசத்தொடங்கினாள் “சரசு, நான் கேட்கிறனெண்டு குறை நினைக்கவேண்டாம். . நீங்கள் கலியாணம் முடிச்சு மூண்டு நாலு வரியமாய் போச்சே, இன்னும் குழந்தை, குட்டியள் .” என்று இழுத்தாள். “குழந்தை குட்டியளுக்கு இப்ப என்ன அவசரம்.” என்ற சரக, முகத்தை மறுபக்கம் திருபபிக் கொண்டாள்.
126

Page 68
“இதுவும் ஒரு கதை தான். குடும்பத்திலே சந்தேகம் விபரீதம் இல்லாமல் இருக்கிறதுக்கு, பிள்ளைகுட்டியள் வேணும்.” என்றாள் பவளமலர்.
“ஏன், நாங்கள் நல்ல சந்தோஷமாகத்தான் இருக்கிறோம். கணவன் மனைவிக்கிடையே புரிந்துணர்வு இருக்குமேயானால், ஏன் சந்தேகம், விபரீதம் வரப்போகுது.” என்றாள் சரசு.
“என்னமோ சரசு, நீங்கள் சின்னஞ்சிறிசுகள். சொல்ல வேண்டியது எங்களின்ரைகடமை. அக்கம் பக்கத்தில்ை இருக்கிறம். ஏதோ நாங்கள், நாங்கள் வாழ்ந்தால் போதும் எண்டு நினைக்கிறது தப்பு. எல்லாம் உங்களின்ரை நன்மைக்குத்தான் சொன்னேன்,” என்று தத்துவம் பேசினாள் பவளமலர்.
“இந்தப் பவளமலர் எப்போதுதான் எழுந்து போகப் போகிறாளோ” என்று எண்ணியபடி, சரசு “ஏன் மாமி, அவலை நினைச்சு உரலை இடிக்கிறியள் திரும்பவும் சொல்லிறன், எனக்கும் என் கணவருக்கு மிடையே எந்தச் சண்டை சச்சரவுகளோ, சந்தேகங்களோ கிடையாது. போதுமா? தயவுசெய்து . நாங்களும் சண்டை பிடிக்கிறதைப் பார்த்து, நீங்களெல்லாரும் சந்தோஷப்பட ஆசைப்படாதையுங்கோ, அது நிறைவேறாது.” என்றாள்.
"அப்ப, நேற்று இராத்திரி இங்கை பெரிய சண்டை பிடிச்சமாதிரிச் சத்தங்கேட்டுதே. இந்த அக்கம் பக்கத்துச் சனங்கள் எல்லாம் திரண்டு வந்து நிண்டுதுகளே.” என்று பவளமலர் சொன்ன போது தான், சரசுவக்கு விஷயம்புரிந்தது. “பவளம் மாமியினரை அங்கலாய்ப்பு இப்பத் தான் தெரியுது. கண்ணாலே கண்டதும் பொய், காதாலே கேட்டதும் பொய், ஆரத்திர ஆராய்ந்தறிந்ததே மெய், நீங்கள் நேற்று இராத்திரி காதாலே கேட்டது பொய்,” என்றாள் சரசு.
"அப்ப எது மெய் எண்டாவது சொல்” என்று பவளம் கேட்டாள்.
அதற்குச் சரசு “நேற்று எங்களுடைய திருமண நாள். ஒய்வாக இருந்தோம். இரவு வீடியோ நாடகம் ஒன்றைப் போட்டுப்பார்த்தோம். அதிலே கணவன் மனைவி சண்டை பிடிக்கிறமாதிரி ஒருகாட்சி. அது மிக தத்ரூபமாக இருந்தது. நாங்கள் சண்டை பிடிச்சது கிடையாது. படத்திலேயாவது பாப்பம் எண்டு, கொஞ்சம் சத்தத்தைக் கூட்டியிருந்தோம். அது வினையாய்ப் போச்சு. சும்மா மெல்லிற வாய்க்கு, ஒருபிடி அவல் கிடைச்சமாதிரி ஆச்சு உங்களுக்கு.” என்று உண்மையான நிலைமையைக் கூறினாள்.
127

தன்னுடைய வித்தை ஒன்றும் சரசுவிடம் எடுபடாது என்று ஏமாற்றமடைந்த நிலையில் பவளமலர் அவ்விடத்தை விட்டு மெல்லப்புறப்பட்டாள். R
மற்றவர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்வதைக் கண்டு பொறுக்காத மனத்தினர், ஏதோ வழியில் அமைதியைக் குலைத்துசந்தோஷத்தைக் கெடுக்கத் துணிவர். பிறருடைய அமைதியைக் கெடுக்கப்போய்த், தங்களுடைய அதிையைத் தான் கெடுத்துக் கொள்கிறார்கள். என்பதை அறிவார்களா?
பிறருக்கு நன்மை செய்யாவிட்டாலும், பிறரின் வாழ்க்கையில் புகுந்து திருவிளையாடல்கள்புரியாமல் இருந்துவிட்டாலே போதும். அதுவே பெரிய அறமாகும் என்பதை உணர்வோமாக.
29. மனிதரும் அச்சமும்
அச்சம் நமக்குத் தேவையா? தேவையில்லையா?; அச்சம், மனித முன்னேற்றத்திற்குத் தடைவிதிக்கிறதா?, அல்லது சார்பாக இருக்கிறதா? அச்சம் மனிதருக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதா? அல்லது ஆபத்தின் நின்றும் மனிதரைக்
காப்பாற்றுகிறதா? இவ்வாறு வினாக்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
அச்சம் தேவைதான். மனித குலத்திடம் அவசியம் காணப்பட வேண்டிய பண்புக்குணம் ஆக அச்சம் உள்ளது. இயல்பாகவே அச்சம் உள்ளவர்கள், வாழ்க்கையில் மிகவும் கவனமாக இருப்பார்கள். வாழ்க்கையில் கவனமாக இருப்பவர்கள், சரிந்து வீழ்ந்து விடமாட்டார்கள். அவர்கள் படிப்படியாக முன்னேறுவார்கள். வருங்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம்தான், எதிர்காலப் பாதுகாப்பிற்காகக் கல்வி கற்கவும், பொருள் சம்பாதிக்கவும், சேமிக்கவும், தொடர்ந்தும் உழைப்பில் நம்பிக்கை கொள்ளவும் மனிதர்களுக்குத்
தூண்டுதலாக உள்ளது.
வாழ்க்கையில் மானம், மரியாதை, கண்ணியம், கெளரவம், குடிப்பிறப்பு, மதிப்பு என்பவை தம்மை விட்டு அகன்றுவிடுமோ என்ற பயத்தின் விளைவாகவே தான், நாம் நல்லவர்களாகவும் நாணயமானவர்களாகவும் சமூகத்தில் வாழ்வதற்கு முயற்சிக்கிறோம்.
கேட்டவற்றைச் சிந்திக்கவும், கூடாத வார்த்தைகளைப் பேசவும், தீய
கருமங்களைப் புரியவும் நாம் பின்னிற்கிறோம். காரணம் என்ன? அச்சம் தான். அதனாலேயே வள்ளுவப் பெருந்தகையும்,
28

Page 69
'அஞ்சுவது அஞ்சாமை பேதமை, அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில்' என்று கூறியுள்ளார்.
அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும். அது பேதமை, அறிவுடையார் செயல் அன்று தீவினைகள் செய்வதற்கு அஞ்சுவது மனிதத் தன்மை ஆகும் தீவினைகள், திங்கானவை. எனவே அஞ்சத்தக்கவை. அவ்வாறு அஞ்சத்தக்கவற்றைக் கண்டு அவற்றிற்கு அஞ்சுதல் அறிவுடையாரின் தொழிலாகும் என்கிறார, வள்ளுவர்.
"தீங்கினர்தம் கண்ணுக்குத் தெரியாததுரத்தில் நீங்குவதே நல்ல நெறி என்று பழம்பாடல் கூறுகின்றது. திங்கினருக்குப் பயப்படுதல் நல்ல நெறியென்று கூறப்பட்டுள்ளது.
எனவே, அச்சம் இல்லாவிடில், சில சந்தர்ப்பங்களில் துன்பங்கள் வாழ்வில் குறுக்கிடும். அச்சம் காரணமாகவே துன்பங்கள் தவிர்க்கப்படுகின்றன.
"பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி கொடிய விலங்குகளைக் கண்டு பயப்படுகிறோம். கள்வர் பயம், அக்கினிபபம், இடிமின்னல் பயம் சத்துருபயம், புத்தபயம், ரோகபயம், என மனிதர்கள் பலவற்றிற்குப் பயப்படுகிறார்கள் பெரிய சத்தம் கேட்டுத் திடுக்குற்றுப் போகிறார்கள் மனிதர்கள் மட்டுமல்ல, பிராணிகள், பறவைகள், விலங்குகள் போன்றவையும் அச்சத்தின் பிடியில் தான் வாழுகின்றன. அவற்றை உற்றுநோக்கினால் எந்நேரமும், ஆபத்து நிகழாம் என்று எண்ணிக் கொண்டே வாழ்கின்றன என்பது புலப்படும்.
ஓர் அனிைலையோ, காகத்தையோ பாருங்கள். எவ்வளவு கவனமாக அங்குமிங்கும் பார்த்துக்கொண்டே, தத்தம் கருமங்களைச் செய்கின்றன. மனிதர்கள் யாராவது அருகில் உள்ளனரா என்பதை உறுதிசெய்து கொள்கின்றன. சிறு சத்தம் அல்லது அரவம் கேட்டால் போதும், மறு கணம் அவற்றைக் காணமுடியாது.
மனிதர்களும், ஏனைய உயிரினங்களும் தம்மை எதிரிகளிடமிருந்து காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்களிடம் இயல்பாகவே உள்ள அச்சம் தான் காரணம் இவர்களின் பாதுகாப்புத் தேவையை நிறைவு செய்வதற்கு அச்சம் பெருந்துணையாகின்றது.
மெலியார், வலியாருக்கு அஞ்சுகிறார்கள். வலியாருக்கு வலிமை எவ்வாறு வந்தது எனக்கேட்கலாம். உடற்பலம், பொருட்பலம், பதவிப் பலம், சமூக
12

அந்தஸ்துப்பலம்: புகழ், கீர்த்தி தரும் பலம் என்பவை காரணமாகச் சிலர் வலிமை பெற்றுத்திகழ்கின்றனர். இன்னும் சிலர் கொலை, களவுகள், காமம், பொய் பேசுதல் போன்ற பாதகச் செயல்களை அஞ்சாமல் செய்து வருவதால், சமுதாயத்தில் அவர்களைக் கண்டு பயந்து ஒதுங்கி வாழவேண்டியுள்ளது. இவர்களும் வன்கனாளர் என்ற வகையில் வலியார்களாக உள்ளனர். சமூகத்தில் இன்னொரு சாரார், தமது கல்வியறிவு, ஒழுக்கம், பண்பாடு, நன்னடத்தை ஆகியவற்றில் வலிமை பெற்று விளங்குகின்றனர். இவர்கள் சமுதாயத்தில் மிகமிகச் சிறு தொகையினரே. இத்தகைய வலியார்களுக்கு அஞ்சுதல் என்பது சற்று வித்தியாசமானது. இங்கு அவர்களுக்கு அஞ்சுவதால், அஞ்சுபவர்களின் கல்வி, ஒழுக்கம், பண்பாடு, நடத்தை மேலும் மேம்பாடு அடைகின்றது. நடைமுறை வாழ்க்கையில், உண்மைக்கும், நேர்மைக்கும், நீதிக்கும், அறநெறிக்கும் அஞ்சுவார் தொகை மிகவும் குறைந்து வருகின்றது என்பது கண்கூடு குறிப்பாகப் படித்தவர்கள், உயர் பதவிவகிப்பவர்கள், சமூகத் தலைவர்கள் மட்டத்தில் இந்த அச்சம் குன்றிப்போய் விட்டமையைப் பார்க்கும் போது, கவலை கொள்ளாமல் இருக்க முடியவில்லை. தற்கால நிலைமையைக் கூர்ந்து அவதானித்தால், அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சாமையும், அஞ்ச வேண்டாத வற்றிற்கு, அஞ்சுதலுமே வழமையாகி விட்டமையைக் காணமுடிகின்றது.
சிறிய மீன்களைப் பெரியமின்கள் விழுங்குகின்றன. இந்நிகழ்வு கடலில் மாத்திரமல்ல; தரையிலும் மனிதர்களிடையே சதா நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. வலியார் மெலியாரைத் துன்புறுத்து கின்றனர். இந்த நிலையில், வலியார் தாம் செய்கின்ற ஈனச் செயல்கள் பிழையானவை என்பது உணரப்பெற்று, அதன் பின் அச்செயல்களுக்கும், அவற்றால் ஏற்படுகின்ற பழி, பாவங்களுக்கும் அஞ்சும் நிலை ஏற்பட்டாலொழுய, மெலியாரின் அச்சம் நீங்குவதற்கு வழியில்லை, வலியாராய் பார்த்துத் திருந்தாவிட்டால் மெலியாரின் அச்சத்தைப் போக்க முடியாது. இத்தகைய நிலைமை ஏற்படாமல், மெலியார் அச்சத்தை விட்டுவிட்டால், மெலியாரின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை. எனவே மனிதர்களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் தத்தம் பாதுகாப்பிற்கு, அச்சம் அவசியமே.
இன்னொருவகையில், அச்சம் தீமைகளையும் விளைவிக்கின்றன. பொய் சொல்லுதல், பத்தின் காரணமாகவே நிகழ்கின்றது. உண்மையைச் சொன்னால் தண்டனை கிடைக்கும். தண்டனைக்குப் பயந்து பொய் சொல்லித் தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள். "நாய் ஏன் கடிக்கிறது?" என்ற கேள்விக்கு, "மனிதன் கடித்துவிடுவான், அதற்குமுன் தான் அம்மனிதனைக்கடித்து விடவேண்டும்,
130

Page 70
என்று நினைத்தே நாய் கடிக்கிறது.” என்று ஒருவர் பதில் சொன்னார். இதில் சரி, பிழையல்ல முக்கியம். அதில் இருந்து ஒன்று புலனாகின்றது. அதுவே முக்கியம். பொதுவாக, ஒருவர், மற்றொருவரைத் தாக்குவது, மற்றவர் தன்னைத் தாக்கிவிடுவார் என்ற பயத்தினால் என்பது புலனாகின்றது.
எதிலும், கைமுந்துவது பயத்தினால் தான், சிலவற்றிற்குக் கை முந்துவது நல்லது வேறு சிலவற்றிற்குப் பிந்துவது நன்று.
"பந்திக்கு முந்து, படைக்குப் பிந்து” என்று ஒரு பழமொழி இருக்கிறது. பந்திக்கு முந்துவதும், படைக்குப் பிந்துவதும், ஏன் என்று ஆராய்ந்தால் இரண்டிற்கும் அச்சம் தான் காரணம் என்பது தெளிவாகும். பந்திக்கு முந்துவது, பிந்தினால் சாப்பாடு இல்லாமல் போய்விடுமே என்ற பயத்தினால்; படைக்குப் பிந்துவது, முந்தினால் உயிரிழந்து போகக் கூடும் என்ற அச்சத்தினால்,
எல்லோருக்கும் அச்சம் தேவைதான், தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வாழ்வில் கவனமாக நடந்து கொள்வதற்கும் என்றாலும், பெண்களுக்கு அச்சம் முக்கியமாகத் தேவையென்பதை உணர்ந்தோ என்னவோ நம் முன்னோர்கள், பெண்களில் இருக்க வேண்டிய நால் வகைப்பண்புகளுள் ஒன்றாக 'அச்சம்' என்ற குணப் பண்பையும் உள்ளடக்கியுள்ளனர். மடம், அச்சம், நாணம், பயிர்ப்பு என்பவைகளே அந்த நான்கு குணப்பண்புகள் ஆகும். தற்காலத்தில், நாணமும் அச்சமும் நாய்க்குத்தான், நமக்கேன், என்று பேசப்படுகின்ற போதிலும் அவசரப்படாமல், ஆற அமர யோசித்தால், அவற்றின் பயன்பாட்டுப் பெறுமானத்தைத் தெரிந்து கொள்ளலாம்.
அச்சம் என்பது பலமா, பலவீனமா என்பதையும் ஆராயவேண்டும். சந்தர்ப்பங்களைப் பொறுத்து, அச்சம் ஒருவரின் பலமாகவும் உள்ளது பலவீனமாகவும் உள்ளது. அவசியமாகவும் உள்ளது, அவசியமற்றும்
அன்பும், மதிப்பும், மரியாதையும் தரக்கூடிய அச்சத்தையே மனிதரில் வளர்ப்பது நல்லது. குறிப்பாக மாணவர்களிடமும், பிள்ளைகளிடமும் இப்பண்பு விருத்தி செய்யப்படவேண்டும். பெரியோர்கள், மூத்தோர், பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோரை அன்புடனும் மரியாதையுடனும், பண்புடனும், மாணவர்கள் நடத்தும் வகையைச் சேர்ந்த பய உணர்ச்சியாக, அச்சம் விளங்க வேண்டும். மேலும் பெற்றோர்களும் ஆசிரியர்களும், பிள்ளைகளின் பய உணர்ச்சியை மிதமான அதாவது அளவான நிலையிலேயே வைத்துக் கொள்வதற்குப் பயிற்சியளிக்க
13

வேண்டும். அப்போது தான் அச்சம் ஒரு பலம் வாய்ந்த பண்பாக விளங்கும். அதை விட்டு, அச்சமின்மையாலும் அளவுகடந்த துணிச்சலினாலும் பிள்ளைகள் முன்யோசனையற்றதும் ஆபத்தானதுமான செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவை தீங்காகிவிடும். அசட்டுத் துணிச்சல் விவேகத்துடன் பொருந்திவராது.
பய உணர்ச்சி அளவிற்கு அதிகமாக ஆதிக்கம் செய்யும் குழந்தைகளையும் காண்கின்றோம். இதற்குப் பெரும்பங்கு பொறுப்பினைப் பெற்றோரே ஏற்கவேண்டும். தாம் பிள்ளைகளுக்குக் கூடுதலான பாதுகாப்பினைக் கொடுப்பதாக எண்ணிக் கொண்டு பிள்ளைகளைப் “பயந்தாங் கொள்ளிகள்” ஆக்கிவிடுகின்ற பெற்றோர்கள் இருக்கின்றனர். இத்தகைய நிலையில் தான் பிள்ளைகள் தன்னம்பிக்கையும் தைரியமும் இழந்து நிற்கின்றனர். எதையும் முன்னெடுத்துச் செல்ல முடியாமலும், பின்வாங்கும் நிலையிலும் உள்ளனர். வளர்ந்தும் வளராதவர்களாக, மலர்ந்தும் மலராதவர்களாக வந்து விடுகின்றனர். கோழைத்தனம் குடிகொண்ட நிலையில், அவதியுறுகின்றனர். இங்கு அச்சம் ஒரு பலவீனத்தைத் தரும் பண்பாக வந்துவிடுகிறது.
இத்தகையோரைப் பார்த்தே, மகாகவி பாரதியார், “அச்சந்தவிர்”, “ஆண்மை (3 ல்'; 66 ர்க் iC3 tᏛ; & ர்க் ல்” “கொடு எதிர்த்து நில்” என்று புதிய ஆத்திசூடி புனைந்தார். மேலும்,
“அஞ்சியஞ்சிச் சாவார் . இவர் அஞ்சாத பொருளில்லை அவனியிலே வஞ்சனைப் பேய்கள் என்பார் - இந்த மரத்திலென்பார்; அந்தக் குளத்தில் என்பார் துஞ்சுது முகட்டில் என்பார் * மிகத் துயர்ப்படுவார் எண்ணிப்பயட்படுவார்.”
என்றும் பாடினார்.
சிறுவயதிலே, சொல்லப்படும் பேய், பூதம், வேதாளம் வரும் கதைகள் மூலம் அவர்களின் பய உணர்ச்சி தூண்டப்படுகிறது. குழந்தைகள் ஒன்றுக்கொன்று பயம் காட்டும்படியும் விடக்கூடாது. பெற்றோர், ஆசிரியர், வளர்ந்தோர் பிள்ளைகளை அவதானமாகப் பேண வேண்டும். பொதுவில் பிள்ளைகளின் அச்ச உணர்ச்சியைக் கட்டுப்பாட்டுக்குள் அவர்கள் வைத்திருக்கப்பழக்க வேண்டும். அதனை முற்றிலாக அழித்து விடவும் கூடாது. எனவே ஒவ்வொருவரும் தத்தம் பய உணர்ச்சியை மிதமான நிலையில் வைத்திருப்பதே
32

Page 71
30. உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று
“கீழான எதையும் பார்க்கக் குனியாத கண்கள்; கீழான எதையும் தேடத்துணியாத கைகள்; கீழான எவற்றையும் நினைக்க விரும்பாத நெஞ்சம் ; கிழான எதையும் கேட்கத் தயாரில்லாத செவிகள்; கீழான எவற்றையும் பேசத் தெரியாத வாய் - இவற்றையுடையோர் மேலோர் ஆவர்” சான்றோர் என அவர்களை உலகம் அழைக்கின்றது. மனிதர்களாகப் பிறந்தோரின் முக்கிய வாழ்க்கைக் குறிக்கோள், சான்றோர் ஆதல், சான்றோர் என்பவர் மானுடப் பண்புகள் நிறையப் பெற்றவர்கள். மனித விழுமியங்களைப் போற்றி வாழ்பவர். மனிதராகப் பிறத்தலிலும், மிக அரிதான நிகழ்வு எதுவெனில், மானுடர் ஆதல் ஆகும். இதிலிருந்து பிறக்கின்ற ஒரு கருத்து. மனிதராகப் பிறவி எடுத்த எல்லோரும் மானுடர் ஆதல் இல்லை என்பதாகும். அவ்வாறு மானுடர் ஆகாதவர்கள் மனிதப்பிறவியின் நோக்கத்தை எய்தத் தவறியவர்கள் ஆவார்கள். அவர்களைப பொறுத்த வரையில் அருமையாகப் பெற்ற மனிதப் பிறவி, வீணாகி, விரயமாகி, அவமாகிப் போய்விடுகின்றது. மனிதரால் முடியாததொன்றில்லை என்பர். எனவே, ஒவ்வொரு மனிதனும் மன உறுதியோடு முயன்றால் மானுடன் ஆகிவிடலாம். முயற்சி திருவினையாக்கும் என்பது வள்ளுவம்.
பழந்தமிழர் கொள்கைப்படி, “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று” உயர்ந்தோர், சான்றோர். அவர்கள் தான் மானுடர். இத்தகைய உயர்ந்தோர்களைக் கொண்ட உலகம், தீயன என்றும், தகாதன என்றும், அல்லவை என்றும் பலவற்றை நீக்கிவைத்துள்ளது. அவ்வாறே, நன்மை பயப்பன என்றும், நயமானவை என்றும், தகுந்தன என்றும் சரியானவை என்றும் பலவற்றை ஏற்றுக் கொண்டுள்ளது. இந்தவகையில் உயர்ந்தோர் உலகம் பழித்தவற்றை ஒழித்தும், போற்றுகின்றவற்றை ஏற்று வாழ்வில் அனுசரித்தும் வருகின்றவர்கள் உயர்ந்தோர், சான்றோர், மானுடர் ஆகிவிடுகின்றனர். இதனாலேயே வள்ளுவப்
“மழித்தலும் நீட்டலும் வேண்டா, உலகம் பழித்தது ஒழித்து விடின்” என்று
மனிதன் மனிதனாவதற்கு உரிய மிக இலகுவான வழியைக் கூறுகிறார்.
வள்ளுவரை ஒரு பொருட்டாகக் கொள்பவர்கள் இன்று யார் இருக்கிறார்கள்?
வள்ளுவருக்குச் சிலையெடுப்பதிலும் விழா எடுப்பதிலும் நமக்கு உள்ள
ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கு ஆர்வம், வள்ளுவத்தைக் கற்று அதன்படி, நிற்றலில் நமக்கு இருக்குமேயானால், நாமெல்லோரும் இன்று எத்துணை
மகிழ்ச்சியுடனும், சாந்தி சமாதானத்துடனும் வாழ்ந்து கொண்டிருப்போம்.
133

“கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.”
என, ஒவ்வொரு மனிதனும் கல்வியைக் கசடறக் கற்க வேண்டும், அதன் பின் கற்றபடி நிற்க வேண்டும். அதாவது வாழ்க்கையில் கற்றபடி ஒழுக வேண்டும் என்று எவ்வளவு சிரத்தையோடும் அழுத்தமாகவும் வள்ளுவர் கூறுகின்றார். வள்ளுவரைக் கேட்டு அவர் சொற்படி நடந்தால் நமக்கு ஒரு கேடும் நேர்ந்து விடாது. உலகம் பழித்தவற்றை ஒழித்து வாழ்ந்தால் என்றும் நன்மையே கிட்டும் என்பது வள்ளுவர் காட்டும் வாழ்க்கை நெறி.
மனிதகுலம் அதன் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும், அமைதிக்கும், சமூக உறுதிப்பாட்டிற்கும் மனித விழுமியங்களை வாழ்வில் பேணவேண்டியது அவசியம் ஒழுக்க விதிகள், சட்டங்கள், கோட்பாடுகள் என்பன வாழ்க்கையிலிருந்து பிழிந்து எடுக்கட்பட்ட சாரங்கள். அவை அனுபவரீதியாக மெய்பிக்கப் பெற்றவை. அவற்றின் மெய்ம்மையில் மீண்டும் மீண்டும் ஐயம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவற்றைப் பற்றி வினாக்களை எழுப்பிக் குழப்பமடையத் தேவையில்லை. உண்மையைப் பேசு, நன்மையை அடைவாய்"; “நேர்மையைக் கடைப்பிடி”, “பகைமையைப் பகைைைமயால் நிறுத்த முடியாது; பகைமையை அன்பினால் அடக்கமுடியும்,”, “அறம் செய விரும்பு’; “தந்தை தாய் பேண்”; இவை எத்துணை பெறுமதி வாய்ந்த கூற்றுக்கள். இவற்றின் விழுமியத்தில் ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும். இவைபோன்று இன்னும் எத்தனையோ ஒழுக்கச் சட்டங்களையும், ஒழுக்கக் கோட்பாடுகளையும், நன்கு பரிசோதித்து அவற்றின் பெறுமானங்களை ஏற்று நம்முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ளார்கள். அவற்றை நாமும் ஏற்று வாழ்வில் கடைப்பிடித்து நன்மையடைவதே முறைமையும் விவேகமும் ஆகும்.
மனிதர்கள் சமூகமாக வாழத் தொடங்கிய காலத்திலிருந்தும், அரசு அமைத்து வாழ்ந்த காலத்திலிருந்தும் பல்வேறு சமூக, அரசியல் சட்டங்களை யாத்து அவற்றை அனுசரித்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் சமூகத்தில் ஓர் ஒழுங்கு, அமைதி, உறுதிப்பாடு, பாதுகாப்பு, சமாதானம் என்பன பேணப்படுகின்றன. மக்கள் வாழ்க்கை செம்மை பெறுகின்றது. ஆனால், சட்டங்களை முறிக்கும் போது குழப்பங்கள் ஏற்பட, சமூகத்தில சீர்குலைவு ஏற்பட்டு விடுகின்றது. இது புறவாழ்க்கையைப் பொறுத்தது. மனிதர்கள் அகவாழ்வு தொடர்பான ஒழுக்கச் சட்டங்களையும், விதிகளையும் ஏற்படுத்தியுள்ளார்கள். அவற்றை அனுசரிப்பதால் மனிதரின் அகங்கள் தூய்மைபெறுகின்றன. தூய்மை பெற்ற மனிதர்கள் புறவாழ்வில் உள்ள சமூக, அரசியல் சட்டங்களையும்
134

Page 72
நிச்சயமாகப் பேணுவார்கள், சட்டங்களை முறிக்கவோ, அவற்றுடன் முரண்படவோ முன்வரமாட்டார்கள். இதிலிருந்து நாம் உணர்ந்து கொள்ளவேண்டிய உண்மை என்னவெனில், சமூகத்தில் சட்டங்களையும், நீதியையும் பாதுகாப்பதற்கு மனிதர்கள் ஒவ்வொருவரும் முதலில ஒழுக்க விதிகளையும், ஒழுக்க நெறிமுறைகளையும் பேணுபவர்களாக உருவாக்கப்பட வேண்டும்.
ஒழுக்கம் பேணுபவர்களே, சமூகத்தில் சட்டத்தையும் மதிப்பவர்களாக விளங்குகின்றனர். மறுதலையாக நோக்கின், சட்டம் முறிப்பவர்கள், உதாசீனம் செய்பவர்கள், குழப்பம் விளைவிப்பவர்கள் ஆகியோர் யார் என்று பார்த்தால், அவர்கள் மனித ஒழுக்கத்திற்கும், வாழ்க்கை விழுமியங்களுக்கும் எவ்வித மதிப்பும் கொடுக்காதவர்களாகவே காணப்படுகின்றனர். நல்ல கல்வியினாலேயே ஒழுக்கம் பேணும் சமூகத்தைக் கட்டிபெழுப்பமுடியும் ஒழுக்கம் பேணும் சமூகமே சட்டத்தையும் நீதியையும் மதித்து அதன் பயனாக அமைதியைச் சமுகத்தில் நிலவச் செய்யும். நல்லொழுக்கத்தைத் தராத கல்வியால் யாதொருபயனுமில்லை. இன்று சமூகங்களில் சட்டமுறிப்பும், ஊழல்களும், வன்செயல்களும், சமூகவிரோதச் செயல்பாடுகளுமே மலிந்து காணப்படுகின்றன.
மனிதர்களிடம் நல்லொழுக்கம் குன்றிவருவதையே இவை காட்டுகின்றன அப்படியாயின் இன்றைய கல்விமுறை, மனிதர்களுக்கு நல்லொழுக்கத்தில் பயிற்சி கொடுக்கத்தவறி விட்டது என்றே கூறவேண்டும். அத்துடன் குடும்பமும், சமூகப் பெரியவர்களும் கூட இளைய தலைமுறையினருக்கு ஒழுக்க அறிவையும், பயிற்சியையும், முன்மாதிரிகளையும் அளிக்கத் தவறிவருகின்றனர் இந்த நிலை நீடிக்குமேயானால், இருபத்தோராம் நூற்றாண்டில் சமூகங்கள் அறம்புறமாகவும், அடிதலைமாறியும், குழப்பங்கள் நிறைந்தும் காணப்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகப்பட வேண்டியதில்லை. அராஜகம் வென்று விடும்; அமைதி மறைந்துவிடும். எனவே, நாம் விரைந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்,
நல்லொழுக்கத்தை மக்களிடையே நடைமுறைப்படுத்துவதற்கு வேண்டிய அனைத்து முயற்சிகளும் துரிதப்படுத்த வேண்டும். கல்விமுறைமையின் ஒவ்வொரு அம்சத்திலும் ஒழுக்கக் கல்வி சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் கற்றவர்கள் அனைவரும் பொது வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் தூய்மையுடையோராகி, நல்லொழுக்கங்களை மேற்கொண்டு வாழ்ந்து காட்டவேண்டும் சமூக, பொருளாதாரக், கலாசாரக் கொள்கைகள், திட்டங்கள் என்பன உருவாக்குபவர்கள் நல்லொழுக்கத்தையும் அவற்றுடன் இணைத்து விடுவதால், அவை உரமும் வலுவும் பெறுகின்றன. அனேகமான சமூக, கலாசார
35

பொருளாதாரத்திட்டங்கள் வெற்றிபெறாமைக்குக் காரணம், அவற்றுடன் விழுமியப் பண்புகள் சேர்க்கப்படாமையே என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். இனிமேலாவது, மனித விழுமியங்களின் அடிப்படையில் திட்டங்கள் ஆக்குவதையும், அவற்றை அமுல்படுத்துவதையும் பற்றிச் சிந்திப்போமாக,
கல்வி, கலைகள், சமயம் ஆகியவற்றைக் கூட மனிதாபிமானமற்ற ஒழுக்கச் சீர்கேடுகள் விட்டுவைக்கவில்லை, தூய்மைப்படுத்துவனவே, தூய்மையற்றுத் திகழும்போது, மனித சமுதாயம் எப்படித்தான் தப்பிப்பிழைக்கப் போகிறதோ தெரியவில்லை. பொதுப்பணிகள், சமூகசேவைகள் கலை இலக்கியப் பணிகள் ஆற்றுவதற்கென மன்றங்கள், சங்கங்கள், கழகங்கள் உள்ளன. இவை தன்னலங்கள், தலைமைத்துவப் போட்டாபோட்டிகள் ஆகியவற்றிலிருந்து காப்பாற்றப்பட்டாலே, அவற்றின் நல்ல நோக்கங்கள் அடையப்பெறலாம். பொதுநலத்தைத் தன்னலமாக மாற்றும் மாயாசால் விதி தை பஞ்சமாபாதகங்களை விடக்கொடியது. குற்றங்களை மறைவாகச் செய்து கொண்டு, வெளியார் மெச்சும்படி வாழுகின்ற வாழ்வு, ஒரு நாள் அம்பலத்திற்கு வரும். நிதி அதைச் செப்தே திரும். நிதி தன் கடமையைச் செய்யத்தவறுவதேயில்லை. பல்வேறு உரிமைகளை வென்றெடுக்கக் குரல் எழுப்பும் மனித இனம் ஏனோ, இழக்கப்பட்டு வருகின்ற மனிதப் பண்புகளையும், மனித விழுமியங்களையும், மனிததர்மத்தையும் மீண்டும் மளித இனம் பெற்றுக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல் மெளனமாக இருக்கின்றதோ என்பது தான் புரியாத புதிர் ஆக உள்ளது. மணித வாழ்க்கையில் பிழையில்லாத ஒழுங்கும், மாசில்லாத நடத்தையும் பழுதில்லாத அறமும் சுயநலமற்ற அன்பும் அமையுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
31. இருளில் ஒளி
சிலவேளைகளில், நமது உள்ளங்களை, ஏதோ ஒரு கடந்தகால நிகழ்வோ, சம்பவமோ திடீரெனத் தோன்றி உறுத்திக்கொண்டே இருக்கும் அந்த நிகழ்வு சோகம் அல்லது ஏமாற்றம் சம்பந்தமாக இருந்தால் நம்மைப் போட்டு வாட்டி வதைத்து விடும். அவ்வேளை, யாராவது குறுக்கிட்டு, "என்ன ஒருமாதிரி இருக்கிறியள், ஏதாவது உடம்புக்குச் சுகமில்லையோ' என்று குசலம் விசாரித்தால் போதும், அவர்மீது எரிச்சல் பொங்கப்பாய்ந்து விழுகின்றோம். நெஞ்சில் ஒரு நெருஞ்சி முள் குத்திக்கொண்டிருந்தால் எப்படி வேதனைப்படுவோமோ, அதைவிடப் பன்மடங்கு வேதனை மனத்தை அழுத்தும். இத்தகைய மனவேதனைகள், துன்பங்கள், துயர்களை வாழ்க்கையில் அனுபவிக்காதவர்கள் எவரும் இலர் என்றே கூறவேண்டும். துன்பங்கள்,
136

Page 73
மனிதவாழ்க்கைக்குப் புதியன அல்ல. அவற்றை எதிர்நோக்கி, தன்னை இழக்காது, துன்பங்களை நீக்க முயல்வதில்தான், மனிதவாழ்வின் வெற்றி தங்கியுள்ளது.
சுகமும், துக்கமும், இன்பமும் துன்பமும் மனித வாழ்க்கையில் மாறிமாறி வந்து கொண்டிருப்பது சாதாரணமான விஷயங்கள். அவை யொன்றும் அசாதாரணமானவையோ, நடக்கமுடியாதனவோ அல்ல. மனிதவாழ்க்கையில் அனுபவிக்கின்ற ககமும் நீடிப்பதில்லை; அதே போன்று துக்கமும் நீடிப்பதில்லை என்ற வாழ்க்கை உண்மையைக் கண்ணாரக் கண்டும் நாம் ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறோம். இதுவும் ஒருவகையில் துன்பங்கள் பெருகுவதற்குக் காரணம்.
“இன்பம் இன்பம் இன்பம் இன்பத்திற்கோர் எல்லைகாணில் துன்பம் துன்பம் துன்பம்’ என்கிறார் பாரதியார்.
இன்பம் என்று ஒன்று இருந்தால், அதன் முடிவில் துன்பம் வரத்தான் செய்யும். அவ்வாறே, துன்பம் வாழ்க்கையில் குறுக்கிட்டால், அதன் முடிவில் இன்பம் வந்தே தீரும். இது இயற்கை நியதி மாத்திரமன்று; வாழ்க்கை அனுபவமும் கூட என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதனால்தான், இன்பத்தைக் கண்டு இறுமாப்புக் கொள்ளவும் தேவையில்லை; துன்பத்தைக் கணிடு துவண்டுவிடவும் கூடாது என்று நமது ஆன்றோர்கள் சொல்லிவைத்தார்கள். தோன்றிய ஒவ்வொன்றிற்கும் முடிவும் உண்டு. எனவே இன்பத்திற்கும் துன்பத்திற்கும் முடிவு உண்டு என்பது உறுதி.
வாழ்க்கை உண்மைகளை ஏற்றுக்கொள்ளாத சிலர், தாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இன்பங்கள், வாழ்க்கை வசதிகள், இளமை யாக்கை சொத்துக்கள், சுதந்திரங்கள் என்பன தம்மோடு என்றென்றும் நிரந்தரமாக இருக்கப் போகின்றவை என நம்பி வாழ்கின்றார்கள். முற்றிலும் எதிர்பாராத விதத்தில் அவை திடீரென நீங்கி விட்டமையை உணரும் போது, துன்பம், துயரம், சோகம், பயம், ஏமாற்றம் என்பன அவர்களைப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றன. அவற்றைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வாழ்வின் இருண்ட காலப்பகுதியாக அதனை நோக்குகின்றனர்.
ஏதோ விதத்தில், மனிதர்களாகப் பிறந்த எல்லோருடைய வாழ்க்கையிலும் இருண்ட நாட்கள் வரத்தான், செய்யும். அத்தகைய துன்பநாட்களை தைரியத்துடனும் மனப்பலத்துடனும் எதிர்நோக்கத் தயாராக வேண்டும்.
இருள், என்பது கூடாததுமல்ல. இருட்காலத்தில் தான் சந்திரனின் பொலிவையும், நடசத்திரக் கூட்டங்களின் அழகையும் கண்டு கொள்ளை இன்பம் கொள்கிறோம்.
37

எப்போதுமே பகலாக இருந்தால், பகலின் அருமையையும் உணரமாட்டோம்; இரவுத்துக்கத்தினால் நாம் அடையக்கூடிய உடல் உள ஆரோக்கியத்தையும், ஓய்வையும் கூட நாம் பெற்றுக் கொள்ள முடியாதவர்களாகிவிடுவோம். வாழ்வின் இன்பசுகங்களை மனிதர் பெரிதும் அனுபவிப்பதும் இரவுகாலங்களில் தான் என்பதும் மறைக்க முடியாத உண்மை. எனவே இருள் சூழ்ந்த இரவுகாலங்களைத் தமக்குப் பயனுள்ளதாகவும், சாதகமானதாகவும் ஆக்கிக் கொள்வது மனிதரின் விவேகம், புத்தி என்பவற்றின் ஆற்றலைப் பொறுத்தது. இருள் படர்ந்ததும், இயக்கமின்றி ஒரு மூலையில் முடங்கிக் கொண்டால், அப்பொழுதாகிவிடும். நாகரிக மனிதன் முதலில் இருளைப் போக்க அக்கினி வளர்த்தான்; தொடர்ந்து நெய் விளக்கேற்றினான்; பின்னர் மின்சாரத்தைக் கண்டு பிடித்து ஒளியைப் பாய்ச்சினான். இருளைப் போக்க அவன் முயற்சி.ெய்தபடியே இருந்தான்.
இரவுக்குப் பின்னர் மீண்டும் பகல் நிச்சயம் புலரும் என்ற நம்பிக்கையும் மனிதரிடம் இருந்தது.
இந்தமாதிரி நோக்கும்போது, வாழ்க்கையில் நாம் எதிர்கொள்கின்ற இருண்ட நாட்கள்; அப்போது அனுபவிக்கின்ற துன்பங்கள், துயரங்கள்; கஷ்டநஷ்டங்கள் சோதனைகள் என்பன வெறுக்கப்படக்கூடியன அல்ல. அவற்றிலிருந்து பல வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ள முடிகின்றது. அதனால் தானோ, என்னவோ, வள்ளுவப்பெருந்தகையும், "இடுக்கண் வருங்கால் நகுக,” என்று அறிவுரை கூறுகின்றார். வாழ்வில் துன்பங்கள், இழப்புகள் வரும்போது, குய்யோ முறையோ என்று அழக்கூடாது; மாறாகச் சிரிக்க வேண்டும்; சிந்திக்க வேண்டும். இது எல்லோருக்கும் இயலக்கூடியதா? என்ற வினா, கூடவே எழுகின்றது. முயன்றால் முடியும் என்பதே இதற்குரிய விடை.
துன்பம் வரும்போது, மனந்தளராமல், தைரிய மாகச் சிந்திக்க வேண்டும். தன்னுடைய குறைகளையும் நிறைகளையும் ஆராய இது நல்ல சந்தர்ப்பம். நன்றாக வாழ்ந்த காலத்தில் விட்ட பிழைகள், தவறுகள் என்பவற்றை அசைபோட்டு அறியக்கூடியதாக இருக்கும். யார் உற்ற நண்பர்கள், யார் நண்பர்களாக நடித்தவர்கள் என்பதெல்லாம் பட்டவர்த்தனமாகத் தெரியவரும். குடும்பத்தவர், உறவினர், சுற்றத்தவர்களில் போலிகளையும், விகவாசிகளையும் அறிய வரும். வாழ்ந்தகாலத்தில், சுற்றிச் சுற்றி மொய்த்தவர்களில் அநேகர் தாழ்வுற்றகாலத்தில், "செத்த மாட்டிலிருந்து உண்ணி ஸ் கழன்றது' போல், அகன்று விடுவார்கள். முகமன் பேசியவர்கள், போற்றிய புகழ்ந்தவர்கள், பாராட்டுக் கூறியவர்கள், விருந்துவைத்தவர்கள், மாலை மரியாதை செய்தவர்கள்
138

Page 74
எல்லோருமே, வாழ்வில் தாழ்வு வந்ததும், சொல்லமல் கொள்ளாமல் போய்விடுவார்கள். அத்துடன் நின்றுவிட்டால் கூடப் பரவாயில்லை. அவர்கள் இல்லாதவற்றையும் பொல்லாதவற்றையும் கூறித் தாழ்வுற்றவரை ஏறிமிதித்து வேடிக்கை பார்ப்பர். இவையெல்லாம் உலக இயற்கையே; இதில் விநோதம் எதுவும் இல்லை. தன்னையும், தன்னோடு சேர்ந்த பிறரையும் சரியாக மதிப்பீடு செய்வதற்குக்கிடைத்த அரிய வாய்ப்பு, இத்தகைய துன்பங்கள், இழப்புகள், ஏமாற்றங்கள் வந்துற்ற காலம் என்று எவன் கொள்கின்றானோ, அவனே விவேகியும், வீரனும் ஆவான்.
துன்பத்தைக் கண்டு சலிப்படையவன் வருந்துபவன், விரக்தி கொள்பவன் விவேகியும் அல்லன்; வீரனும் ஆகமாட்டான். எதையும் தாங்கம் இதயம் வேண்டும்; தன்னம்பிக்கை வேண்டும் முயற்சிவேண்டும், வீரமும் 6 வேகமும் மனோபலமும் தான் இவற்றைத் தரவல்லன. இடுக்கண் வரும்போது சிரிக்கவும், சிந்திக்கவும் அவை உதவுகின்றன. அப்போது, துன்பங்களும் துயரங்களும் வந்த வேகத்திலும் பார்க்கக் கூடிய வேகத்தில் போய்த் தொலைந்துவிடும் நல்ல படிப்பினைகளையும் நாம் கற்றுக் கொள்வோம். நம்மையும் சரிவர அறிந்து கொள்வோம்; நம்மைச் சூழ்ந்தவர்களையும் முறையாக உணர்ந்து கொள்வோம்.
"எங்கள் குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்லக் கொல்லவல்ல, பொல்லா வினையறுக்க’, என்கிறார் அருளாளர் ஒருவர்.
தம்முடைய இருண்டகால வாழ்வினைத் தவவாழ்வாக ஏற்கும் மனப்பக்குவத்தைப் பெறுபவன் பாக்கியவான். தவ வாழ்வு என்றால், “உற்ற நோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை” ஆகிய இரண்டையும் வாழ்வில் மேற்கொள்வது ஆகும். தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளலும்; தமது துன்பத்துக்குக் காரணமாக இருந்தவர்கள் என்று கருதப்படுபவர்களுக்கு எவ்வித தீங்கும் செய்யாமையும்; பழிக்குப்பழி வாங்கும் எண்ணம் கொள்ளாமையும் தவ வாழ்வின் இலட்சணங்கள், இத்தகைய தவவாழ்வு வாழ்ந்து வருகையில், துன்ப நாட்கள் விரைவாகக் கழிந்து போக, துயரங்கள், கவலைகள், சோகங்கள் என்பன படிப்படியாக மறதிக்குள் மறைந்து விடும். மறதியும் கூட வேண்டுவதே இந்த மாநிலத்தார்க்கு என்றநிலையிலும் கருத்து உண்டு. துன்பங்கள் மறதியுள் மாண்டுவிட இன்பங்கள் உதயமாகின்றன.
39

சுடச்சுடப் பொன், தங்கமாக ஒளி வீசுகின்றது; சங்கு, வெண்மையாகப் பிரகாசிக்கின்றது. அவ்வாறே, துன்பங்கள், சுடச்சுட, மனிதன் மனிதனாகப் பக்குவப்படுத்தப்படுகின்றான். அறிவும், அனுபவமும், ஞானமும் நிறைந்த மகாத்மா ஆகின்றான். துன்பங்கள் நமக்கு உதவுபவையாக எடுத்துக் கொள்வோம்; உபத்திரங்களாக எண்ணக்கூடாது.
துன்பம் வந்து போன காலம், இறந்த காலம் ஆகும். சிலர் இறந்த காலத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்டிப் புதுப்பிததுக் கெண்டேயிருப்பர். அதனால் துன்பத்திலிருந்து விடுபடமுடியாதவர்களாகி விடுகின்றனர். வருவோர் போவோர்களை வருந்தியழைத்து, உட்கார வைத்து, தமது துன்பங்கள் துயரங்களை யெல்லாம் வரிசைப்படுத்திச் சொல்லிக் கொண்டிருப்பவர்களும் உள்ளனர். அவர்களால் துன்பங்களை எவ்வாறு மறதிக்குள் புதை முடியும். அடிக்கடி துன்பங்களை நினைவிற்குக் கொண்டுவருவதால் அவை, பெருகுமேயன்றித் தணியாது. துன்பங்களை வாலாயப்படுத்தினால், அவற்றுடன் பரிச்சயம் கொண்டால், அவை நம்முடனேயே தங்கிவிடும். துன்பங்களைப் புதுப்பிக்காவிட்டால் அவை விரைவில் நம்மிடமிருந்து விடைபெற்று விடும். நாம் எதைப்பற்றிச் சதா காலமும் நினைத்துக் கொண்டிருக்கிறோமோ, அது வாகவே நாம் மாறிவிடுகிறோம் என்பது ஓர் உளவியல் உண்மை. நல்லவற்றை நினைத்தால் நல்லவனாகவும்; கூடாதவற்றை நினைத்தால் கூடாதவனாகவும் மனிதன் மாறிவிடுகின்றான். அப்படியாயின் துன்பங்களையே எஞ்ஞான்றும் எண்ணிக் கொண்டும், அவற்றை மீட்டுக்கொண்டும் இருந்தால் அவன் துன்புறுகிறவனாகவே மாறிவிடுகிறான் என்பதும் உண்மையே.
துன்பங்கள் நீர்க்குமிழி போன்று நிலையற்றவை; அவை விரைவில் விலகிவிடும் என்னும் எண்ணம் மனதில் படியவைக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் விடிவு உண்டு; சுபீட்சம் விரைவில் வரும், என்ற நம்பிக்கை உணர்வை வளர்த்துக் கொள்ளுதல் அவசியம். ஒன்றின் அழிவில் மற்றொன்றின் ஆக்கம் தோன்றுகிறது. இருள் நீங்கும் போது ஒளிபிறக்கிறது. ஒரு கதவு மூடும்போது மற்றொரு கதவு திறக்கிறது. இவையாவும் வாழ்க்கை நியதிகள். துன்பங்கள், இன்பத்திற்கு வழிவகுக்கின்றன. எல்லாம் நன்மைக்கே; இறுதியில் வெற்றி நமதே என்று உடன்பாடாகச் சிந்திக்கப்பழகிக் கொள்ளவேண்டும். வாழ்க்கையில் ஏற்படுகின்ற இழப்புகள், தோல்விகளைச் சவால்களாக ஏற்று அவற்றை முறியடிக்க வேண்டும்.
“தட்டுங்கள் திறக்கப்படும்”, “கேளுங்கள் கொடுக்கப்படும்” என்பவை மனித வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டும் அருமைய. வாசகங்கள். அதை விடுத்து, “தட்டினால் போலை என்ன கதவு திறக்கவா போகுது? கேட்டால் என்ன கொடுக்கவா போகிறார்கள்?’ என்று மனத்தில் சந்தேகம் கொண்டால்,
40

Page 75
ஐயங்களை வளர்த்தால், எதிர்மறையாகச் சிந்தித்தால், வாழ்வில் மீட்சி ஏற்படாமலே ாேய்விடும். துன்பங்களோடு இணைந்து வாழ வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கே தள்ளப்படுவர்.
உடல் வருத்தங்களுக்கு மனவருத்தங்களே பிரதான பங்களிப்புச் செய்கின்றன என்று கூறப்படுகிறது. துன்பத்திற்கும், மனப்பலக் குறைவுதான் உரமூட்டுகின்றது எனவே, மனதை வீணே அலைக் கழிக்காமல், தைரியத்தோடு இருக்கப் பழகிக் கொண்டால், மலைபோல் வருகின்ற துன்பங்களும் உடனே ஓடி மறைந்து விடும்.
துன்பங்களை ஏன் நினைவில் வைத்திருக்கவேண்டும்? துன்பங்கள் நெஞ்சை விட்டு அகலாமல் இருப்பதற்குக் காரணம் அவற்றை நாம் நேசிப்பது தான். துன்பங்களைப் போய், யாராவது நேசிப்பார்களா, என்று நீங்கள் கேட்கக்கூடும். அப்படியாயின், தொல்லை தரும் துன்ப உணர்வுகளை உடனே மறந்து விடுங்கள். இன்னும் சில நாட்கள் கழித்து துன்பங்களை மறக்கத்தான் போகிறீர்கள். அது இயல்பாக நிகழும். அது வரையும் ஏன் பொறுத்திருக்க வேண்டும். அவ்வாறு பொறுத்திருந்து, வாழ்க்கையை ஏன் நரகமாக்க வேண்டும். இப்போதே துன்பங்களை மறந்துவிடுங்கள். மறுகணமே துன்பத்தின் தொல்லையிலிருந்து விடுதலை பெற்று விடலாம். எளிதாகச் சொல்லிவிடலாம்; ஆனால் செய்வது கடினம் தான். எனினும் மனத்தை ஒருமுகப்படுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதனைச் சாதிக்க முடியும்.
நமக்கு இதுவரை கிடைத்தவற்றையிட்டு மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்ளத்தயாராக இல்லை. கிடைக்காதவற்றைப் பற்றிச் சதாசிந்திப்பதிலும், அடைவதற்காக ஏங்குவதிலும், ஏம்பலிப்பதிலும் வாழ்நாளை வீணாள் ஆக்குகின்றோம். இந்த நிலையில் துன்பங்களைத் தவிர வேறென்ன கிட்டும்.
“போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து.” இதுவரை நாம் அடைந்த வெற்றிகளை நினைந்து மகிழ்ச்சிகொள்ளவேண்டும். வாழ்க்கையில் திருப்தி வேண்டும். அதை விட மன ஆரோக்கியத்தையும், உடல் செளக்கியத்தையும் தரவல்லது வேறு எதுவும் இல்லை. துன்பங்கள், துயர்கள் வராமல் பார்க்கவும், கிடைத்தவற்றை எண்ணி மகிழுகின்ற மனப்பாங்கு பெரிதும் உதவுகின்றது.
வாழ்வில் நிம்மதி வேண்டுமென்றால், ஏக்கங்கள், அங்கலாய்ப்புக்கள், உறுத்தல்கள் என்பவற்றிற்கு மனதில் இடங்கொடுக்காமல், கிடைத்தவற்றை எண்ணித்திருப்தியும் மகிழ்ச்சியும் கொள்ளுதல் மூலமே சாத்தியமாகும் என்பதை உணர்ந்து கொள்வோமாக.
14

32. நகைச்சுவை
சிரிபு, மனிதகுலத்திற்கு மாத்திரம் உரிய செயற்பாடு. சிரிக்கத் தெரிந்தவன் மனிதன். சிந்திக்க வல்லவன் மனிதன். இவ்விரண்டுமே, உலகிலுள்ள உயிரினங்களுள், மனித இனம் மிக உயர்ந்த நிலையில் வைத்து எண்ணப்படுவதற்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன எனலாம். சிந்தனை, மனிதன் பகுத்தறிவைப் பெற்றுக்கொள்வதற்கும்; பிரித்துணர் திறனை அடைவதற்கும்; நன்மனப்பாங்குகள், விழுமியங்கள், நல்லுணர்வுகள் என்பவற்றைக் கட்டியெழுப்புவதற்கும் அவனுக்கு உறுதுணையாகின்றது.
சிரிப்பு, சிந்திக்க வைக்கிறதா? அல்லது சிந்திப்பதால் சிரிப்பு ஏற்படுகிறதா? அவற்றுள் எது முந்தியது? சிரிப்பா? சிந்தனையா? இந்த விவகாரம், கோழியா? முட்டையா? முந்தியது என்ற ஆராய்ச்சியை ஒத்ததாக உள்ளது போலத்தோன்றுகிறதல்லவா? எது எவ்வாறாயினும், சிந்திக்கத் தெரிந்தபடியினாலேயே, மனிதன் சிரிக்கிறான். சிரிப்பு, மனிதனைச் சிந்திக்கவும் துண்டுகிறது என்பதை மறுப்பதற்குமில்லை.
சில சந்தர்ப்பங்களில், மனிதர்கள் சிலர் அறிந்தோ, அறியாமலோ, மனித சமூகத்திற்கு ஏற்புடையதாக இல்லாத, விரோதச் செயல்களில் ஈடுபாடு கொள்கின்றனர். அவர்கள் சமுதாயத்தில் வகிக்கும் அந்தஸ்து காரணமாகவோ, கொண்டுள்ள வலிமை பற்றியோ, எல்லோராலும் வெளிப்படையாகவும், நேரடியாகவும் அவர்களின் தப்பு, தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாமல் உள்ளனர். வேதனைகளை அமைதியாகத் தாங்கிக் கொள்வதைத் தவிர, வேறெதுவும் செய்ய இயலாதவர்களாகவும் காணப்படுகின்றனர். அவ்வேளை எவரோ ஒரு சிலர், மாற்று உத்திகளைக் கையாண்டு, நாசூக்காகவும், நயமாகவும், மறைமுகமாகவும், அவர்களின் தவறுகளையும், சமூக விரோதங்களையும் உணர்த்த முயல்கின்றனர். அதேசமயம், அவர்களின் பகைமைக்கும், ஆத்திரத்திற்கும் ஆளாகாமலும் தப்பித்துக் கொள்ளவேண்டிய நிலையிலும் உள்ளனர். ஆகையால், இக்கைங்கரியத்தைத்தைரியத்துடனும், பயன்தருவகையிலும் ஆற்றுவதற்கு நகைச்சுவை, பண்டைக்காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்டுவருகிறது. நகைச்சுவையோடு குறைகளையும் தவறுகளையும் சுட்டிக்காட்டும் போது, சம்பந்தப்பட்டவர்கள், ஆற அமர அவைபற்றிச் சிந்திக்கிறார்கள்; ஒரளவு திருந்தியும் கொள்கிறார்கள். ஆழமான, அகலமான விடயங்களை, மற்றையோர் நகுை புரிந்து கொள்ளும்படி, எளிமையாக, இலேசாக வாழைப்பழத்தில் ஊசியேற்றுமாப்போல சொல்வதற்கு, மிகச்சிறந்த உத்தி, நகைச்சுவை ததும்ப எடுத்துக் கூறுவதேயாகும்.
42

Page 76
மனித வேதனைகளைச் சுட்டிக்காட்டவும், புட்டுக்காட்டவும்; அவற்றை இழைப்பவர்களுக்கு அவைபற்றி உணர்த்தவும்; அதுவும் நாகரிமாகவும், நயமாகவும் அவற்றை விளக்கவும் நகைச்சுவை உத்தி பயன்படுகிற அளவிற்கு வேறெதுவும் பயன்படுவதில்லை எனலாம்.
சிந்திக்கத் தெரிந்த மனிதன், சிந்தியாமல் செய்கின்ற தவறுகளைச் சுட்டிக்காட்டிச் சிந்திக்கவைக்க நகைச்சுவை வேதனையின் விளிம்பில் தோன்றினாலும், சிரிக்கவும், சிந்திக்கவும் செய்கின்றது. வேறெந்த வல்லபத்தினாலும், பலத்தினாலும் வெற்றிகொள்ள முடியாத பலவற்றை, நகைச்சுவை வெற்றி கொண்டிருக்கிறது. இந்த வகையில், நகைச்சுவை ஆற்றலும், வலிமையும் வாய்ந்த சாதனமாகத் திகழ்கிறது. மேலும் அரிய பெரிய உண்மைகள், வாழக்கைத்தத்துவங்கள், மணி விழுமியங்கள் என்பனவற்றைப் பாமரரும் விளங்கிக் கொள்ளுமாறு உண்ர்த்துவதற்கு நகைச்சுவை பெரிதும் பயன்பட்டுவருகிறது. நகைச்சுவை எவரையும் ஈர்க்கும் ஆற்றலையும், அவர்களின் கவனத்தைக் கவரும் திறனையும் கொண்டிருத்தலே அதற்குக் காரணம்.
நகைச்சுவை அனுபவங்களை மனிதர்கள் முகங்கொள்ளும் போது, பல செயற்பாடுகள் அவர்களின் உள்ளங்களிலும், உடல்களிலும் நிகழ்கின்றன. நகைச்சுவைட்டேச்சாக, துணுக்குகளாக, எழுத்துக்களாகப் பாடல்களாக படங்களாக அல்லது சம்பவங்களாக அத்தகைய அனுபவங்கள் அமையலாம் நாடகங்கள், திரைப்படங்களைப் பார்க்கும் போதும் நகைச்சுவை அனுபவங்கள் ஏற்படுகின்றன. நூல்களிலும், உரைகளிலும், நகைச்சுவை விரவிவரும் பகுதிகள் அத்தகைய அனுபவங்களை வழங்குகின்றன.
நகைச்சுவை அனுபவங்கள், முகங்கொள்ளப்படும் போது அவை தூண்டிகளாகி, மனிதர்களில் துலங்கல்களை ஏற்படுத்துகின்றன. உள்ளங்களில் உவகை உள்ளக்கிளர்ச்சிகள் போன்று பல உணர்ச்சிகள் உற்பத்தியாகின்றன. உணர்ச்சிகளின் எழுச்சிக்கு ஏற்ப, மனிதர்களில் நடத்தைகள் தென்படுகின்றன. பல்வேறு அங்க அசைவுகளுடன் சிரிப்பு, ஆடல், ஆவேசம், பரவசம் ஆகியவற்றையும் இந்நடத்தைகளில் அவதானிக்க முடியும்.
நகைச்சுவையால் உந்தப்பட்ட நடத்தை, சிரிப்பாகவும், உவகையாகவும் தான் இருக்க வேண்டும் என்று கொள்ள முடியாது; இரு பகுதியினருக்கு ஆத்திரத்தையும், துன்பத்தையும் கூடத்தரவல்லது.
விரிசடைக் கடவுளும் திரிபுரங்களைத் தமது சிரிப்பினாலேயே எரித்தார் என்று
13

புராணங்கள் கூறுகின்றன. பண்டைய கிரேக்கத்துத் தத்துவஞானிகளான பிளேற்றோவும் அரிஸ்டோட்டிலும், நகைப்பு இன்னொருசாராருக்குத் துன்பத்தைத் தருவதாகவும், தண்டனையாக இருக்கும் என்றும் கண்டு கூறியுள்ளனர்.
நையாண்டி, கேலி, பகிடி, கிண்டல், வேடிக்கை, முளப்பாத்தி, நக்கல், என்பன. அவற்றைச் செய்பவர்களுக்கு நகைச் சுவையையும், உவகையையும் அளிக்கின்றன. ஆனால் எவரை இலக்காகக் கொண்டு அவை ஏவப்படுகின்றனவோ, அவர்கள் துன்பத்துக்கும், இடையூறுகளுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர். கேவிச்சித்திரங்கள் என்று பத்திரிகைகளில் வெளிவருபவைகளில் அநேகமானவை இவ்வகையினவாகவே உள்ளன. அவ்வாறே, பல்கலைக்கழகங்களிலும், மற்றும் உயர்கல்வி நிலையங்களிலும் தற்போது நடைபெற்று வருகின்ற, "நாக்கிங்' எனப்படும் "பகிடிவதையும் பகிடியாகத் .ெ சடங்கி, வதையாக மாறறம் பெறுகின்றதை அவதானிக்க முடிகின்றது. ஏவப்படுகின்ற சொல்லம்புகளும், ஏனைய செயல்களும், இலக்குகளை அடைந்ததும், வதைக்கின்றன. ஏவியவர்கள் நகைச் சுவையில் திளைக்கின்றார்கள்; அதேவேளை ஏவப்பட்டவர்கள் தொல்லைகளுக் குள்ளாகித் தவிக்கிறார்கள். "பிள்ளைக்கு முஸ்பாத்தியாம், சுண்டெலிக்குச் சீவன் போதுதாம்" என்ற நிலையே இங்குமுள்ளது.
பாலியல் தொடர்பான பகிடிகள் அநாகரிகமானவையாகவும், எதிர்ப்பாலாரின் மனங்களைப் புண்படுத்துவதாகவும் அமைந்து விடுகின்றன. இளைஞர்கள் மத்தியில் பாலியல் தொடர்பான நகைச்சுவைகள் பெரிதும் பிரபல்யம் வாய்ந்தனவாக
உள்ளன.
தம்மிலும், தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் மீதும், வலிமை குறைந்தவர்கள் மீதும் ஏவப்படுகின்ற பகிடிகள், கேலிகள் என்பன அவர்களை இழிவுபடுத்துவதாகவே அமைகின்றன. தமது வலிமைகுன்றிய நிலையில் அவற்றை அவர்கள் பொறுத்துக் கொள்ளுகிறார்கள். ஓர் உயர்குழவினர் என்று கருதிக் கொள்பவர்கள், தம்மைச் சாராத பிற குழவினர்களை - சமயம், மொழி, இனம், நிறம், சாதி அடிப்படையில் பகிடி பண்ணுவதிலும் கேலி, கிண்டல் செய்வதிலும் இன்பம் காண்கின்றனர். இன்னொரு சாராரின் துன்பத்தில், தாம் உவகைகொள்வது தான் நகைச் சுவை என்று அவர்கள் எண்ணுகின்றனர் போலும் அத்தகைய நகைச்சுவை ஆரோக்கியம் தரவல்லன அல்ல; அவை நாகரிகமானவையுமல்ல.
நகைச்சுவை கவலைகளைத் தீர்ப்பதாகவும் மனச்சுமைகளையும், மன உளைச்சல்களையும் நீகுவனவாகவும் உள்ளது என்று கூறுகின்றனர். சிரித்து வாழ்பவர்கள் உள, உடல் ஆரோக்கியமாக வாழ்கின்றனர். நகைச்சுவையோடு கல்வி கற்பிக்கும் போதோ, சொற்பொழிவுகளை நிகழ்ந்தும் போதோ, உரையாடும்
:

Page 77
போது, பெரும்பாலாரின் கவனங்களை ஈர்க்கக் கூடியதாக உள்ளது. எனவே பலர் நன்மை பெறுகின்றனர். கவர்ச்சியாக இச்செயல்களை ஆற்றுவதற்கு நகைச்சுவை சிறந்த உத்தியாக உள்ளது. களைப்பு சலிப்பு சோர்வு என்பவற்றை மனிதர்களிடமிருந்து அகற்றிவிடுகிறது நகைச்சுவை சிறுவர்கள் முதல் முதியோர் வரை நகைச்சுவையை விரும்பி அனுபவிக்க முன்னிற்பர். முதுமையில் ஏற்படும் துன்பங்களையெல்லாம் விரட்டிவிடுகின்ற ஆற்றல் நகைச்சுவைக்கு உண்டு. எல்லோருக்கும் கவலைகளையும், துயர்களையும் மறக்கச் செய்து அவர்களை நீண்ட ஆரோக்கிய வாழ்விற்கு இட்டுச் செல்லும் அரிய சஞ்சீவியாக நகைச்சுவை விளங்குகின்றது. எனவேதான், ஒன்பது சுவைகளுள்ளும் நகைச்சுவையே பெரிதும் யாவராலும் விரும்பப் படுவதாகவும், சுவைகளுள் அரசனாகவும் மிளிர்கின்றது. நகை என்பது அணிகலன், சுவைகளுக்கெல்லாம் அணிகலன் நகைச்சுவை
ஆக்கமும் கேடும் நகைச்சுவையினால் ஏற்படுவதால், அதனைக் காத்தோம்பல் முக்கியமானதாக உள்ளது. இதை உணர்ந்து, நகைசசுவையை ஆக்கத்திற்கே பயன்படுத்த வேண்டும் ஒரு சிலருக்குக் கொண்டாட்டம் பலருக்குத் திண்டாட்டம் என்ற வகையில் நகைச்சுவை இருக்கக் கூடாது. எல்லோரையும் மகிழ்விப்பதாகவே நகைச்சுவை அமைய வேண்டும் என்பதை நாம் கருத்திற் கொள்ளுதல் அவசியம்.
நகைச்சுவை, அதன் பயன்பாடு, என்பன பற்றிப் பல ஆய்வுகளை நடாத்தியுள்ளனர். நகைச்சுவை சிறப்பாக அமைவதற்கு மொழி முக்கிய இடம் பெறுகின்றது. நல்ல மொழித்திறன், மொழியாட்சி உள்ளவர்களே சிறந்த நகைச்சுவையை வாய்மொழியிலோ, எழுத்திலே எடுத்தாளக் கூடியவர்களாக உள்ளனர். நகைச்சுவையை விளங்கி இரசிப்பதற்கும் மொழித்திறன் தேவையாகின்றது. பயன்படுத்துகின்ற மொழியில் இரட்டைக்கருத்து இருக்கும். சிலேடை என்று தமிழில் கூறுவர் சொல்விளையாடல் மூலமும் நகைச்சுவை தோற்றுவிக்கப்படுகின்றது. வட்டார வழக்குகள், குழு உக்குறிகள், புதிய சொற்கள் என்பவற்றைப் புரிந்து கொள்பவர்களே, நகைச்சுவையை நன்கு ரசிக்கின்றனர். நகைச்சுவையை, பகிடியை விளங்கிக் கொள்வது முக்கியம் அது ஒர் அறிவு சார்ந்த செயல், நகைச்சுவையை அனுபவிப்பது அல்லது இரசிப்பது என்பது உணர்வு சார்ந்த செயல்.
நகைச்சுவையைய் புரிந்து கொள்வது என்பது ஆளுக்காள் வேறுபடுகிறது. சிலரால் இரசிக்கக்கூடியவை, இன்னுஞ்சிலரால் இரசிக்கமுடியாதவைகளாகவு முள்ளன. இளைஞர் விரும்பி இரசிக்கும் நகைச்சுவை, முதியவர்களைக் கவர்வதில்லை. அவ்வாறே, பெண்கள், ஆர்ைகளுக்கிடையிலும் நகைச்சுவையை இரசிப்பதில்
145

வேறுபாடுகள் உண்டு. மேலும் நகைச்சுவையைத் தனிமையில் இரசிப்பதிலும், குழுவாகச் சேர்ந்து இரசிப்பதில் கூடிய இன்பம் அடைகின்றனர். ஒரே தன்மையராக, ஒத்துப் போகக் கூடியவர்களாகச் சேர்ந்து கொள்ளும் குழுவினரிடையே நகைச்சுவை இரசனை அதிகம் உள்ளது. நகைச்சுவையை விளங்கி அனுபவிப்பதற்கு விவேகம் தேவைப்படும் நாட்டுநடப்பு, பொது அறிவு என்பனவும் தேவை நல்ல நகைச்சுவையாளர்கள் சமூகத்தில் தலைமைத்துவம் நிறைந்தவர்களாகவும் பலராலும் விரும்பப்படுபவர்களாகவும் விளங்குகின்றனர். படைப்பாற்றல், விவேகம், மொழியாட்சி, தன்னம்பிக்கை என்பன அவர்கள்பால் கானப்படும்.
"சிரித்து வாழவேண்டும், பிறர்சிரிக்க வாழ்ந்திடாதே" என்பது பொருள் பொதிந்த கூற்று. நகைச்சுவை மனிதர்களை ம புழ்ச்சியாக வாழச்செய்கிறது. அதேவேளை சமூக ஊழல்களைச் சுட்டிக்காட்டி, அவற்றைக் களையும் ஆற்றலையும் பெற்றுள்ளது. அத்தகைய வேளைகளில் நகைச்சுவையை மிகச்சாவதானமாகக் கையாளவேண்டியது அவசியம் நகைச்சுவை பிறர் மனங்களைப் புண்படுத்தலாகாது. அது நகைச்சுவையின் பணியல்ல. நகைச்சுவை சக்தி வாய்ந்தது என்னும் போது, அது அணுசக்தி போன்றது. எனவே, மனித ஆக்கத்திற்கு மட்டுமே, நகைச்சுவை பயன்படுத்தப்படவேண்டியது அவசியமாகும் அப்போதுதான் நகைச்சுவை மூலம் தனிமனித ஆரோக்கியமும், சமூக ஆரோக்கியமும் வளர்ச்சிபெற ஏதுவாகும்.
33. பேச்சுக் கலை
சொற்பொழிவு என்னும் பெயரால் நடைபெறுகின்ற மேடை நிகழ்ச்சி பெரும்பாலும் இன்றைய நிலையில், பொது மக்களைக் கவர்ந்து ஈரப்பதாக இல்லை காரணம், கேட்போருக்கு அச் சொற்பொழிவுகள் சுமையாகவும், பாரமாகவும் தோன்றுகின்றன, என்பதே ஆகும் சுவையாகவும், சுவாரசியமாகவும் இருக்காத எதுவும் சுமையாகத்தான் இருக்கும். சுமையை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை. மனிதர்கள் வெறும் சுமைதாங்கிகள் அல்லர் மனிதர்கள் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் கொண்டவர்கள் விருப்பும் வெறுப்பும் உள்ளவர்கள். அவற்றிற்கேற்பத் துலங்கும் தன்மையையும் உடையவர்கள்.
மேடையில்ே சொற்பொழிவு நிகழ்ந்து கிொண்டிருக்கையில் மண்டபத்தில் சிலர் தங்களிடையே பேசிக்கொண்டிருப்பார்கள் இன்னும் சிலர் எழுந்து ே IIThilքելք

Page 78
வருவதுமாகக் காணப்படுவர்; மேலும் சிலர் ஆழ்ந்த உறக்கத்திலும் இருப்பர். இவற்றைவிட இன்னும் விசேடமாகக் கவனிக்கக் கூடியதாய் இருப்பது என்னவென்றால், மேடையில் வீற்றிருக்கின்ற ஏனையபேச்சாளர்கள் தங்களுக்கிடையே குசலம் விசாரித்துக் கொண்டும், சிரித்துக் கதைத்துக் கொண்டும் இருக்கின்ற அலட்சியபாவக் காட்சியேயாகும்.
சபையோர் அவ்வாறு துலங்குவதற்கும், அவர்களின் அலட்சிய பாவத்திற்கும் காரணம், சொற்பொழிவாளர் சபையோரின் கவனத்தைத் தம்பால் ஈர்க்கத் தவறியமையும், சபையோரைத் தம்வயப்படுத்தித் தம் ஆளுமை ஆட்சியின் கீழ் கொண்டுவரக் கூடிய திறமையைப் பெற்றுக் கொள்ளாமையும் ஆகும். உண்மை இவ்வாறிருக்க, சபையில் காணப்படும் அமைதியின்மைக்குச் சபையோரி தரத்தைக் குறைவாக மதிப்பிட்டு, அவர்கள் மேல் குற்றம் சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமானது அல்ல. சபையோர், சித்திரப்பாவைகள் போல் அத்தகவடங்கி, அமைதி பேணி, அவ்வப்போது மகிழ்ச்சிக்குறிப்புகளை வெளிப்படுத்திச் சொர்பொழிவுகளை இரசனையுடன் அனுபவித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பங்களையும் நாம் கண்டிருக்கிறோம்.
" கேட்டார்ப் பிணிைக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாஞ் சொல்"
என்னும் வள்ளுவர் வாய்மொழி, சொற்பொழிவின் இலட்சனத்தையும், அது எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. எந்த ஒரு சொற்பொழிவும் கேட்போரைக் கவனத்திற்கொண்டும், அவர்களை மையமாக வைத்தும் நிகழ்த்தப்படும் போது, அது சிறப்புப் பெறுகிறது. அதனால் தான் வள்ளுவரும், சொற்பொழிவினை ஆற்றும் போது, கேட்போரைத் தன்வயப்படுத்தும் பண்புகளுடன், கேட்தி விருப்பமில்லாதவரும் கேட்கவிரும்புமாறு கூறப்படுவது சொல்வன்மையாகும் என்று கூறியுள்ளார்.
சொற்பொழிவு ஒன்றின் வெற்றிக்கு கேட்போரின் பங்கும், ஒத்துழைப்பும் மிக முக்கியமானவை என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம். அதனால், சொற்பொழிவாளர் அவையை அறிந்து கொள்ளுதல் வேண்டும். அவையோரின் தன்மைக்கும், தரத்திற்கும் ஏற்பய் பேச்சினை நன்கு ஆயத்தம் செய்தல் அவசியம்
பேச்சு ஒன்றினை ஆயத்தம் செய்யும் போது கவனத்திற்க எடுத்துக்கொள்ள வேண்டிய அம்சங்களைக் கூறிவைக்க விரும்புகிறேன்.
博了

முதலில், எடுத்துக் கொண்ட கருத்தை முகஞ்செய்தல் இடம் பெறுகின்றது. பேச்சின் தொடக்கம் அதுவேயாகும். நல்ல தொடக்கம் பாதிவெற்றி என்பார்கள். மேடைப் பேச்சினைப் பொறுத்தளவில் இக்கூற்றுப் பெரிதும் உண்மையாகும். நூறு மீற்றர் ஓட்டம்போட்டியில், ஆரம்பத்தில் பிந்தியவரால், இறுதியில் வெற்றி பெறமுடியாது. அந்த அளவிற்கு ஆரம்பம் நன்றாக அமைய வேண்டும், அவ்வாறே, சொற்பொழிவிலும் ஆரம்பம் கவர்ச்சிகரமாகவும், சபையோரின் கவனத்தைத் தம்பால் ஈர்ப்பதாகவும், சபையோருடன் ஒரு நல்ல உறவினை ஏற்படுத்தக் கூடியதாகவும் விளங்கவேண்டும். ஆரம்பத்தில் இத்தகைய நல்ல சூழ்நிலையை ஏற்படுத்தத் தவறின், பின்னர் எக் கட்டத்திலாதல் ஏற்படுத்துவது என்பது சிரமமான காரியம்,
இந்த ஆரம்பக்கட்டத்தி , தான் பேச எடுத்துக் கொண்ட பொருளினைச் சபையோருக்கு அறிமுகஞ் செய்தல் இடம் பெறுகின்றது. இந்த நிலையில், மிகச் சுருக்கமாக, தனக்குக் கொடுக்கபப்ட்ட நேரத்திற்குள், தான் எடுத்துக் கொண்ட விடயம் தொடர்பாக எவ்வெவற்றைப் பேச உள்ளார் என்பதைச் சபையோருக்கு எடுத்துரைக்க வேண்டும். அதற்கு முன்னர், கவனம் கலைக்கப்பட்ட நிலையில காணப்படுகின்ற சபையோரைத் தம்வயப்படுத்தும் நோக்குடன், ஏதாவது ஓர் விகடத்துணுக்கையோ அல்லது சிறிய கதையையோ, சம்பவத்தையோ கூறுவதாக அமையலாம். கேட்போருக்கு ஒர் ஆர்வத்தை ஏற்படுத்துவதாகவும், ஒரிரு நிமிடங்களுக்குக் கூடுதலாக நேரத்தைச் செலவு செய்யாமலும், பேச எடுத்துக் கொண்ட விடயத்திற்கு இட்டுச் சொல்வதாகவும்: நாகரிகமும் பொருத்தமும் நிறைந்ததாகவும். பேச்சின் ஆரம்பம் அமையும் போதுதான், அது சொற்பொழிவின் நல்ல தொடக்கமாகக் கருதப்படும்.
சொற்பொழிவின் அடுத்த கட்டம், பேச எடுத்துக் கொண்ட விடயத்தை ஓர் ஒழுங்கின் அடிப்படையில், தொடுத்து வளர்த்தல் ஆகும். இந்த நிலையில், ஒரு கருத்தை நியாயங்காட்டி வலியுறுத்தல், அக்கருத்தை முடித்தல், பின் பிறிதொரு கருத்துக்குத் தருக்க ஒழுங்கிலே மாறுதல்; ஒதாவது ஓர் அமிசத்தை அழுத்திக் கூறவேண்டியிருந்தால் அவ்வாறு செய்தல்; வேண்டிய போது புள்ளிவிபரங்கள், தரவுகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு நிறுவுதல்; இடையிடையே சுவையூட்டுவதற்கு அளவாகவும், பொருத்தமாகவும், பண்பாகவும், எவரையும் புண்படுத்தாத முறையில் விகடக் துணுக்குகள், பகிடிக் கதைகள், சம்பவங்கள் என்பவற்றைக் கூறுதல்; மறுப்பையோ, மாறுபட்ட கருத்தையோ எதிர்பார்த்து உ'ப விளக்கங்களைக் கொடுத்தல்; கேட்போர் மனங்களில் பதி ம்படி செய்யவேண்டிய முக்கியமான கருத்தைத் தெளிவூபடுத்தி மீளவவியுறுத்தல்: அழுத்தம் தந்து கூறவேண்டிய கருதிெேrg ஆரிதங்கிங்த்தர்ஸ்
1ւ#3

Page 79
வலியுறுத்துதல் என்பன இடம் பெறுகின்றன.
பேச்சினைத் தொடுத்து வளர்த்துச் செல்லும் சொற்பொழிவாளன் தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தைக் கவனத்திற் கெடுத்து, நேரத்தை முகாமை செய்யுந்திறனைப் பெற்றிருத்தல் அவசியம். பேச்சின் தலைமைக்கருத்துக்கு முக்கியத்துவம் அளித்து, அதனைத் தெளிவுபடுத்தி, தக்க சான்றுகள் காட்டி நிறுவி முடிக்கும் போதே, பேச்சைக் கேட்போருக்குத் திருப்தியும் நிறைவும் ஏற்படும். இதற்குப் பங்கம் விளைவிக்காத வகையில் நேரத்தைப் பங்கீடு செய்து கொள்ளுதல் முக்கியமானதாகும், பொதுவாக, விடயத்திற்கு வருவது, சிலரைப்பொறுத்தவரையில் காலங்கடந்துதான் நிகழ்கின்றது. அதுவரை, "அலட்டல்” தான் நடைபெறுகின்றது. கூறியது கூறல், மிகைபடக்கூறல், ப பங்கவைத்தல், வெறும் சொற்களைத் தொடுத்தல், வம்பு தும்பு பசுதல், பிறர் புண்படப் பேசுதல் ஆகியவற்றில் நேரம் வீண்விரயம் செய்யப்படுவதைப் பல பேச்சாளப் பெருமக்கள் உணர்ந்து கொள்வதில்லை. அவையாவும் கேட்போரின் பொறுமையைச் சோதிப்பன; அதன் விளைவாகச் சபையில் எதிர்மறையான துலங்கல் தோன்றுகின்றன என்பதையும்; சபையோரின் வெறுப்பையும் பகைமையையும் சம்பாதிக்க நேரிடுகிறது என்பதையும் தெரிந்து கொள்ளும் சொற்பொழிவாளர்களே, சொற்பொழிவுத்துறையில மேம்பாடு அடைகின்றனர்.
பேச்சில், நேரத்தை அநாவசியமாக நீட்டுவதால், சபையோரை வசியப்படுத்த முடியாது. மாறாக அவர்களுக்கு எரிச்சல் ஊட்டுவதாக அமையும். சில சமபங்களில் வெறுங்கதிரைகளுக்கே பேச வேண்டிய நிலைமை ஏற்படும். தலைவர் பேச்சைச் சுருக்கும்படியோ, நிறுத்தும்படியோ துண்டில் எழுதி அனுப்பும் வரை, பேச்சை முடிக்கக் காத்திருத்தல் ஆகாது. இதற்கு என்ன செய்யவேண்டும்? பேச்சு முன்கூட்டியே திட்டமிடப்பட வேண்டும். ஆயத்தம் செய்யும் போது, பேச்சினை எடுத்தல், தொடுத்தல், முடித்தல் எனும் அடிப்படையில் ஒவ்வொன்றையும் பல கூறுகளாக்கி. ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்கப்பட வேண்டும். பின்னர் பேச்சினை நிகழ்த்துகையில், ஒதுக்கப்பட்ட நேரத்திற்கு மேலாகக் குறித்த அம்சங்களை விளக்குவதற்கு நேரம் எடுக்கப்படக் கூடாது. இந்த வகையில் நேரத்தை முகாமை செய்வதில் பயிற்சிபெற்ற பேச்சாளன், கேட்போர் நிறைவுகொள்ளும்படி தமது பேச்சினை நிகழ்த்துவான்.
ஒருமுறை, சொற்பொழிவாளர் ஒருவர் அரை மணிநேரம் பேசிக்கொண்டிருந்தார்.
கூட்டத்தில் இருந்தவர்கள் ஒவ்வொருவராக எழுந்து சென்றுவிட்டார்கள். கடைசியில் ஒருவர் மாத்திரம் எஞ்சியிருந்தார். தமது முழுப்பேச்சையும் முழு மூச்சுடன்
49

பேசித்திர்த்துவிட்டு, அங்கு எஞ்சியிருந்த ஒருவரிடம் சென்று தனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார். அப்பொழுது, பேச்சாளர், “பட்டியில் ஒரேயொரு பசு இருந்தாலும் கூட, அப்பகவுக்கு உணவுகொடுத்துத்தானே ஆகவேண்டும்”, என்றார் புன்னகையுடன்.
அதற்கு அங்கிருந்த ஒரேயொரு அன்பர், பேச்சாளப் பெருமகனை நோக்கி, “ஐயா, பசுவுக்குத் தீனி போடவேண்டியது அவசியம் தான். அதற்காக மூடை நிறையவுள்ள முழுத்தினியையும் ஒரேயடியாகப் பகவின் வாய்க்குள் திணித்து விடுவது சரியா?” என்று ஒரு கனதியான கேள்வியைக் கேட்டார். அப்பொழுது பேச்சாளனின் தலையும், பாறாங்கல் ஒன்றைச் சுமப்பது போன்று கனத்தது. தவறை உணர்ந்து கொண்டார். இப்படியான இக்கட்டான நிலையைச் சொற்பொழிவா ர் தவிர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நேரத்தையும் கவனித்துச் சபையோரின் குறிப்பையும் உணர்ந்து கொள்ளுதல் என்பது சிறந்த சொற்பொழிவாளனின் இலட்சணம் எனலாம். சபையோரின் கைதட்டல், கரகோஷம் என்பன குறிப்பால் தமது விருப்பினையோ, வெறுப்பினையோ வெளிப்படுத்தும் ஒருவகை உத்தியாகும். கைதட்டல் பாராட்டுக்கு மட்டும் தான் என எண்ணிவிடும் சொற்பொழிவாளர் சங்கடத்தினுள் மாட்டிக் கொள்ளவும் நேரிடும்.
“கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபைநடுவே நீட்டோலைவாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நன்மரம்”.
சபையோரின் குறிப்பை உணர்ந்துகொள்ள முடியாதவன் நன்மரத்திற்குச் சமானமானவன் என்பது ஒளவை மூதாட்டியின் முடிவு.
ஒரு பேச்சுக்கு, ஆரம்பம் எத்துணை முக்கியத்துவம் வாய்ந்ததோ, அத்துணை முக்கியத்துவம் வாய்ந்தது அதன் முடிவுரை. பேச்சின் சாராம்சம் இரத்தினச் சுருக்கமாக இடம் பெறவேண்டும். ஆரம்பத்தில், பேச்சில் இனிமேல் வரப்போகின்றவற்றைத் தொட்டுக் காட்டுவது போன்று, முடிவில், இதுவரை கூறியவற்றின் தொகுப்பும், சிந்தனைக்கு அழுத்தவேண்டிய ஓரிரு அம்சங்களும், நன்றிநவிலலும் இடம் பெற்றால் போதுமானது. பேச்சினை மொட்டையாக முடித்தல் எந்த அளவிற்கு நல்லதல்லவோ, அந்த அளவிற்கு, முடிவுரையில், “எனக்குத் தரப்பட்ட நேரம் முடிவடைகிறது,” “மேலும் உங்கள் பொறுமையைச் சோதிக்க விரும்பவில்லை”, போன்ற தேவையற்ற அரற்றல்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது ஒரு பேச்சாளன் பற்றிய அபிப்பிராயம், மதிப்பீடு என்பவற்றைச்
50

Page 80
சபையோர் எடுப்பதில் பேச்சின் ஆரம்பமும் முடிவுரையும் பெரிதும்துணை செய்கின்றன என்பதை மறந்துவிடக்கூடாது.
சொற்பொழிவாளன் தமது பேச்சினை நன்றாக ஆரம்பித்து, வளர்த்து, கேட்போரைப் பிணிக்கும் தகையவாய், கூறவேண்டியவற்றைக் கூறி, முடித்துச் சபையோரின் திருப்தியையும் பாராட்டுதலையும் பெற்று அடைகின்றதிருப்தி இருக்கிறதே, அது மகாதிருப்தி; ஈடு இணையற்றது.
34. எழுத்துக் கலை
கேட்டல், பேசுதல், வாசித்தல், எழுதுதல் என்னும் நான்கும் அடிப்படை மொழித்திறன்கள் என்பர். எந்த ஒரு செயற்பாட்டிற்கும், - அது விளையாட்டாக இருக்கலாம், மொழியைப் பயன்படுத்துவதாக இருக்கலாம், நாடகம் நடிப்பதாக விளங்கலாம், சமைத்தலாக இருக்கலாம் - அந்தச் செயல் தொடர்பான அடிப்படைத் திறன்களில் தேர்ச்சி பெற்ற பின்னரே, அச் செயற்பாட்டில் இறங்க வேண்டும். மொழிப் பயன்பாட்டைப் பொறுத்தவரையில், கேட்டல், வாசித்தல் ஆகிய திறன்களில் தேர்ச்சி பெற்றவர்கள், பிறரின் கருத்துக்கள், பல்வேறு விடயங்கள், தகவல்கள் ஆகியவற்றை உள்வாங்கிக் கொள்ளவும்; அவற்றைக் கிரகித்துக் கொள்ளவும், கிரகித்தவற்றை விளங்கித் தெளிந்து கொள்ளவும்; மனத்தில் பதிவு செய்து கொள்ளவும் ஆற்றல் படைத்தவர்களாக விளங்குகின்றனர். பேசுதல், எழுதுதல் மூலம் தமது கருத்துக்கள், எண்ணங்கள், உணர்வுகள் ஆகியவற்றைப், பிறர் அறிந்து கொள்வதற்காக வெளிப்படுத்த முடிகிறது. எனவே கருத்துக்களை இவ்வாறு உள்வாங்குதல், வெளியிடுதல் என்பன நிகழும்போது, அங்குஏற்படுவது கருத்துப் பரிமாற்றம் அல்லது பரிவர்த்தனை. இது ஓர் இருவழித் தொடர்பாடல். இதற்கு மொழி ஊடகமாகும் போது, மொழி ஒரு கருத்து, உணர்வுப் பரிமாற்றச் சாதனம் அல்லது கருவி ஆகின்றது.
கருத்துப் பரிவர்த்தனை, உணர்வுப் பரிவர்த்தனை, அறிவுப் பரிவர்த்தனை, எண்ணப் பரிவர்த்தனை என்பவை செவ்வையாகவும், பிறழ்வு இன்றியும், உறுதியாகவும் நடைபெறுவதற்கு மொழித்திறன்களில் ஆட்சியும், சிறந்த தேர்ச்சியும் இருத்தல் ஒரு முன் நிபந்தனையாகும். இன்னொ வகையில் கூறப்போனால், பிரச்சினைகள் தோன்றுவதற்குப் பிரதான காரணம் பரஸ்பரம் நல்லுறவு, புரிந்துணர்வு இல்லாமை. இத்தகைய வறுமைக்குக் காரணம் நல்ல ஆரோக்கியமான தொடர்பாடல்
151

தேர்ச்சி ஆகும்.
கருத்துப் பரிமாற்றம் என்பதால் ஒருவர் ஒரு பொருள் பற்றித் தாம் தெளிவாக உணர்தல் என்பதும் ஒரு பொருளைத் தெளிவாகப் பிறருக்கு உணர்த்தல் என்பதும் புலனாகின்றது. இவ்விரண்டும் ஐயம், திரிபு, சந்தேகம் இன்றி நடைபெறும் போது தான் எதிர்பார்த்தபயன்கிட்டும்.
“நா காக்க” என்பது பேச்சுக்கு எப்படியோ, “பேனா (நா) காக்க” என்பது எழுத்திற்குப் பொருந்தும். நாவினால் கட்ட வடு ஆறாது என்பார்கள். இது பேச்சைப் பொறுத்தமட்டில். அவ்வாறே, பேனா வினால் சுட்டவடு என்றென்றும் மாற ததாகிவிடும். ஒப்பீட்டளவில், நாவினால் பேசிய வார்த்தைகள் காற்( ,ாடு கலந்து மறைந்து விட்டாலும், பேனாவினால் எழுதப்பட்ட வார்த்தைகள் மறைக்கவோ, மறக்கவோமுடியாதவாறு பதிவுசெய்யப்பட்டு விடுகின்றன. எனவேதான் பேனா, பேய் “நா’ வாக மாறக்கூடாது. பேயின் நாவிலிருந்து வெளிவருவது வெம்மை. வெம்மை சுடும் தானே. எழுத்தில் வடிக்கும் போது நன்கு சிந்தித்துத் தெளிந்த பின்னரே அதனை ஆற்றவேண்டும். சிந்திக்காமல் உருவாக்கப்படும் எழுத்தாக்கங்கள் இலக்கியங்கள் ஆகமாட்டா.
“எண்ணும் எழுத்தும் கண்ணெணத்தகும்”, என்பது ஆன்றோர் வாக்கு. எண் என்பதைக் கணிதம் என்றும், எழுத்து என்பதை மொழி என்றும் பொருள் கொண்டு கணிதமும் மொழியும் வாழ்க்கைக்கு இன்றியமையாதன என்று விளக்கம் தருகின்றனர். இன்னொரு புதிய விளக்கமும் கூறலாம். “எண்ணு” என்ற சொல்லிற்கு ஒன்றைச் சிந்தித்தல், நினைத்துப் பார்த்தல், ஆலோசித்தல், திட்டமிடுதல் என்னும் கருத்துக்களும் உண்டு என்று அகராதி கூறுகிறது. எழுத்து என்பதற்கு படைப்பு அல்லது ஆக்கம் என்று அகராதி பொருள் தருகின்றது.
இந்த வகையில் பார்க்கும் போது “எண்ணும் எழுத்து” அதாவது நன்கு சிந்தித்துத் தெளிந்து, திட்டமிட்டு எழுதப்படுகின்ற ஆக்கங்கள், என்றும் வாழும் இலக்கியங்கள் ஆகின்றன.
“கம்பனைப் போல், வள்ளுவன் போல்”, இளங்கோவைப் போல் சிரஞ்சீவித்துவ இலக்கியம் படைக்கும் புலமைபடைத்தோர் இன்று இல்லையே என்று பாரதியார் ஏங்குகிறார். உண்மை தான். இதற்குக் காரணம் எனன? எண்ணும் எழுத்தாளர் அதாவது சிந்தித்து, தெளிந்து எழுதுபவர்கள் இன்மையே ஆகும். “எண்ணித்
152

Page 81
துணிக கருமம்' என்றபடி ஒரு செயலை ஆற்றமுன் பலதடவைகள் சிநதிக்க வேண்டும். முக்கியமாகச் சிந்திக்க வேண்டியது. இந்தச் செயலைச் செய்வதால் எனக்கு என்ன லாபம் என்பதை விடய், பிறருக்கு என்ன லாபம் என்பதையேயாகும்.
வள்ளுவன், இளங்கோ, கம்பன் ஆகியோர் இன்றும் நம்மிடையே வாழ்கின்றார்கள் என்றால் அவர்களின் படைப்புக்கள் பிறர் நலனையும், மனித குல மேம்பாட்டையும் நோக்கியனவாய் அமைந்தமையே காரணம். தற்காலத்தில், எழுத்தாக்கங்கள் வர்த்தகச் சிந்தனையோடு கலந்துவிட்டன. சுயலாபம் கருதியே வர்த்தகம் நடைபெறுகிறது என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. எனவே, இன்றைய எழுத்துக்கள்; யாக்கை, இளமை, செல்வம் போன்று நிலையாமை எனும் வட்டத்திற்குள் வந்துவிட்டமை, ஆச்சரியத்திற்குரியது அனறு.
எழுத்தாக்கம், மனிதனின் அறிவு, அனுபவம், உணர்வு சார்ந்த முயற்சி. எனவே, எழுத்து ஒரு கலை, எனப்படுகிறது. உடலால் ஈடுபடுகின்ற முயற்சியைத் தொழில் என்கின்றனர். கலையும், தொழிலும் இணைவதில் தவறில்லை. ஆனால் கலையின் நோக்கத்தையும் பயனையும், மறந்து, வெறுந் தொழிலாகமாத்திரம் கலையை எண்ணி, செயற்படும் போதுதான், அங்கு வர்த்தக அம்சங்களின் செல்வாக்கு மேலோங்கிவிடுகின்றது. தற்கால எழுத்தாக்கம், வெறுமனே “தொழில்’ எனக் கொள்ளப்படுகிறது. அதனால் கலையின் உயர் இலட்சியம், மெல்ல நழுவவிடப்படுகிறது. இலக்கியம் ஒரு கலையாக மிளிரும் போது, அங்கு வாசகர்கள் நயம் காண்டார்கள். இலக்கிய நயம் தான் இலக்கிய இரசனை. ஆனால், எழுத்தாக்கம், தொழிலாக மட்டும் வந்துவிடும் போது, நட்டம் எவ்வளவு என்று பார்க்கிறார்கள். அப்பொழுது வாசகர்களின் நயம் பற்றி யார் சிந்திக்கிறார்கள். இக்காலப் பொருளியல் சிந்தனைகளும், நடைமுறைகளும் உற்பத்தியாளனின் நலன் பற்றியன; நுகர்வோரின் நலனில் அக்கறையில்லை. அவ்வாறே, இக்கால, மிகப் பெரும்பாலான தமிழ் எழுத்தாக்கங்கள், படைப்பாளிகள், பிரசுரகர்த்தாக்கள் ஆகியோருக்குக் கிடைக்கும் நயம் நோக்கியன; வாசகர்களுக்குக் கிடைக்கவேண்டிய இலக்கிய நயம் நோக்கியனவாக இல்லை. இலக்கியம் கலையாக நோக்கிப் படைக்கப்படும் போதுதான், வாசகர்கள் நயம் காண்பர். ஆனால் இன்றைய நிலை அவ்வாறு காணப்பட முடியாமல் இருப்பது இலக்கிய இரசிகர்களக்கு துர்அதிட்டமும் நட்டமும் எனலாம்.
"வாசிப்பதால் ஒருவர் திட்யத் தயும் உரையாடுவதால் ஒட்பத்தையும், எழுதுவதால் நுட்பத்தையும் எய்துவார்’ என்பது ஒர் ஆங்கில அறிஞனின் கூற்று. “வாசிப்பதால் ஒருவன் மனிதன் ஆகின்றான்; எழுதுவதால் அவன் நிறை மனிதன் ஆகின்றான்”
53

என்பது இன்னொரு பொருள்நிறைந்த கூற்று நூலறிவு, அனுபவ அறிவு, பகுத்தறிவு உடன் அவற்றைப் பிரயோகிக்கும் ஆற்றல் என்பன எழுத்தாக்கக் கலைஞனிடம் இருக்க வேண்டும். கருத்துக்களையும், உணர்வுகளையும் சுவைபட எழுத்தில் வடிக்கும் போது, ஏற்கனவே எவ்வித ஒழுங்குமின்றி மூளையில் பதிந்திருந்தவை ஒழுங்கு, தெளிவு, செம்மை, நன்மை, அழகு, உண்மை பெற்று இலக்கியக் கலை ஆகப் பரிணமிக்கின்றன. எழுத்துக்கலையை வளர்ப்பவன் உலகை உற்று நோக்க வேண்டும், நூல்களை வாசிக்க வேண்டும், பிறருடன் உரையாடவேண்டும் நோக்குதல், கேட்டல், உரையாடல், வாசித்தல் சிந்தித்தல், தெளிதல், முதலிய திறன்களின் உச்ச விருத்தியிலேதான் எழுத்துக்கலையின் உயர்வு, சிறப்பு என்பன தங்கியுள்ளன. திட்பம், ஒட்பம், நுட்பம் ஆகியவற்றை எய்தியவரே சிறந்த ஆக்க இலக்கிய கர்த்தாவாக முடியும்.
படைப்பிலே படைப்பவன் காணப்படுகிறான் என்பர். அது முற்றிலும் உண்மை. தம் படைப்பின் மூலம் ஏதோ சில செய்திகளைப் பிறருடன் பரிவர்த்தனை செய்து கொள்ள விரும்புகிறான். அதற்குத் தான் தகுதியுடையவன் தானா. என்பதைப் படைப்பாளி நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். தகுதி என்பது சொல்வது ஒன்று, செய்வது வேறொன்று என்ற நிலைமை இல்லாத நிலை. குறையும், கறையுமற்ற நடத்தையும், ஒழுக்கமும் கொண்ட ஒருவனின் சொல்லுத்தான் செல்லும். காந்தியடிகள் எழுதினார்; எழுதியபடி வாழ்ந்தார்; வாழ்ந்தபடி எழுதினார். ஒவ்வொரு எழுத்தாளனும் மனித வாழ்க்கை விழுமியங்களை மதித்துப், பேணி, தம்மைத் தகுதியுடையவனாக்கி, படைப்புக்களைச் செய்தால், அபரப் பிரமன் ஆகிவிடுவர். அவர்களின் எழுத்துக்கள் இலக்கியமாக மதிக்கப்படும் அந்த இலக்கியங்கள் சிரஞ்சீவித்துவம் பெற்றுவிடும்.
மொழித்திறன்களின் முழு வளர்ச்சியின் பயனே எழுத்துக் கலையின் விருத்தி எனலாம். இலக்கியம் எழுதாக் கிளவியாகவும் - அதாவது வாய்மொழி இலக்கியமாகவும், எழுத்து இலக்கியமாகவும் பார்க்கப்படுகிறது. எழுத்தாக்கமாக இலக்கியம் விளங்கும் இக்காலத்தில், அது பாட்டாகவும், உரைநடையாகவும் வடிவம் பெற்றுள்ளமையைக் காண்கின்றோம். இலக்கிய வகைகளுள் மிகப் பழைமை வாய்ந்தது பாட்டே. அக்காலத்தில் வரலாறு, சமயம், மருத்துவம், நீதி, சோதிடம் என்பன போன்ற அறிவுத்துறைகளும் பாட்டுவடிவத்திலே இருந்தன. பிற்காலத்தில், உரைநடை வளர்ச்சி பெற்றதும் அறிவுத்துறைகளுடன், கதை, நாவல், நாடகம், கட்டுரை முதலிய வம் உரைநடைவடிவம் பெற்றன. இக்காலத்தில் பா நடையும் உரைநடையும் தனித்தனி வடிவங்களாக, எழுத்தாக்கக் கலையில் இடம் பெற்றுள்ளன. எழுத்தின் வளர்ச்சி, மொழியின் வளர்ச்சியாகும்.
154

Page 82
35. நாடகக் கலை
சமூக நாடகங்கள் என்று தற்காலத்தில் வழங்கப்படுகின்ற நாடகங்கள், அவ்வாறு ஏன் அழைக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளுதல் வேண்டும். இவற்றைவிட, வேறு நாடகங்களும் உள்ளன என்பது இதிலிருந்து பிறக்கும் இன்னொரு கருத்து. வரலாற்று நாடகம், புராண, இதிகாச நாடகம், இலக்கிய நாடகம் என்பவையே அவை. இசை நாடகம், நாட்டிய நாடகம் என்றும்; பா நாடகம், கவிதை நாடகம் என்றும் வேறும் பல நாடக வகைகள் குறிப்பிடப்படுகின்றன, மேலும் நாட்டுக் கூத்து முதலிய கூத்துக்கள் பற்றியும் பேசப்படுகின்றன. இவற்றைவிடப் புத்தாக்கம், நவீன மோடிகள் என்றெல்லாம் அரங்கிற்கு வந்து கெர்ணடிருக்கின்றன. இந்த நிலையில், நாடகத்தின் வரைவிலக்கணம் பற்றியோ, நாடக வகைகள் பற்றியோ, ஒவ்வொருவகையினதும் பண்புகள், பாங்குகள், எல்லைக்கற்கள், நன்மைகள், தீமைகள் பற்றியோ எடுத்துரைப்பது சற்றுச்சிரமமும் சிக்கல் நிறைந்ததுமான செயலாகும்.
“உண்மை ஒன்று; அதைப் பல பெயர்கள் கொண்டு அழைக்கின்றனர், ” என்று ஒரு பழைய வாக்கு உள்ளது. உண்மையை அடைவதற்குப் பல வழிகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப மனிதர்கள் தெரிந்தெடுக்கிறார்கள். இதற்கு அவர்களிடமுள்ள சுதந்திரம் தான் காரணம். இனி நாடகத்திற்கு வருவோம். நாடகம் என்பது ஒன்றுதான்; அதை அவரவர் எண்ணப்படி பல பெயர்களால் அழைக் கிண்றனர் . நாடகத்தை நடத்துவதற்கு விருப்பத்திற்கேற்றவாறு, மனிதர்கள் வெவ்வேறு வழிகளை, முறைகளை, உத்திகளை, நுட்பங்களை, ஊடகங்களை தெரிந்தெடுத்துப் பயன்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வதற்கு மனிதர்களுக்குச் சுதந்திரம் உள்ளது. இத்தகைய சுதந்திரம் பிரச்சினைகளுக்கும் ஏதுவாகின்றது. அதேவேளை உணர்வுச் சுதந்திரம் இல்லையென்றால் கலை வளர்ச்சியும் ஏற்படாது என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். மனிதர்களிடம் உள்ள உணர்வுச் சுதந்திரம், கலை உலகில் பிரச்சினைகளையும் பிரசவிக்கின்றன; கலைகளையும் போஷிக்கின்றன. இது முரண்பாடாகத் தோன்றலாம். ஆனால் ஆராய்ந்து பார்த்தால், முரண்பாடு அங்கு இல்லை. ஒன்றிற்கொன்று ஆதாரமாக இருப்பதையே காண்கின்றோம், நாடகம் ஒரு கலை, நுண்கலை என்னும் அழகுக்கலை. உயிர்ப்பான விரிகலை. எனவே நாடகத்திற்கும் ஏனைய கலைகளுக்குரிய இப்பண்பு உடன்பாடானதாகவே உளளது.
நாடகம் என்பது “மேடை, வானொலி போன்றவற்றில் ஒரு கதையை, ஒரு நிகழ்வை நடிப்பின் மூலம் காட்டும் கலை வடிவம்’ என்றும், “மேற்குறிப்பிட்ட
155

வகையில் நிகழ்த்துவதற்கு ஏற்றதாகப் படைக்கப்படும் இலக்கிய வடிவம்” என்றும் அகராதி ஒன்று கருத்துத் தெரிவிக்கின்றது. “உண்மையாக இல்லாமல் போலியாக நிகழ்த்தப்படுவது ; பாவனை, நடிப்பு” என்றும் நாடகம் என்று சொல்லிற்கு வேறு கருத்துக்களும் அந்தஅகராதியில் தரப்பட்டுள்ளன.
மேற்கூறிய அடிப்படையில் நோக்கும் போது, சமூக அல்லது சமுதாய நாடகம் என்பது ஒரு சமுதாயக் கதையை, அல்லது சமுதாய நிகழ்வை, மேடையில் அல்லது வானொலி, தொலைக்காட்சி போன்ற சாதனங்களில் நடிப்பின் மூலம் காட்டும் கலைவடிவம் எனலாம். இந்தவகையில் நடிப்பதற்கு ஏற்றதாகவும், படித்து நயப்பதற்கு உரியதாகவும் நூலில் படைக்கப்படும் போது சமூக நாடகம் இலக்கிய வடிவம் பெறுகிறது.
நடிப்பதற்கு மாத்திரம் உரியது; படிப்பதற்கு மாத்திரம் உரியது; நடிப்பதற்கும் படிப்பதற்கும் உரியது என்று சமூக நாடகத்தை மூன்று வகையாக்கிக் காணலாம். மேடையில் நடிப்பதற்கு என சமூக நாடகம் ஒன்றைத் தெரிவு செய்யும் போதோ, எழுதும் போதோ இந்த அம்சங்கள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும். அநேகமான சமூக நாடகங்கள் மேடையில் சோடை போவதற்கோ, தோல்வியுறுவதற்கோ காரணம், அவை மேடையில் நடிப்பதற்குப் பொருத்தமானவையாக இல்லாமையே யாகும் பிரபல்யமான இலக்கிய கர்த்தாவினால் எழுதப்பட்ட நாடகம் ஆக இருக்கலாம். படித்துச் சுவைப்பதற்கு நன்றாக அமையலாம். ஆனால் நடிப்பதற்கோ, மேடையில் காட்சிகளை அமைப்பதற்கோ ஏற்றதாக இருக்காவிடில், நிச்சயம் அந்த நாடகம் சோபிக்காது. எனவே பொருத்தமான நாடகத்தைத் தெரிவுசெய்தல் அதன் வெற்றியை உறுதிப்படுத்துவதில் முதற்படியாக விளங்குகிறது.
நாடகம், ஒருகதையை அல்லது ஒரு நிகழ்வை வேண்டி நிற்கின்றது என்று முன்னர் கண்டோம். இவற்றிற்கு கரு ஒன்று தேவை. கரு என்பது நாடகத்தின் ஊடாகச் சித்திரிக்க விரும்பும் கருத்து. அக்கருத்து மையப் பொருள் ஆக இருக்கும். நாடகக் கதைக்கு கருவே பிரதானம். கருவை உட்பொருளாகக் கொண்டே நாடகம் உருப்பெற்று நகர்த்தப்படுகிறது. இந்தக் கரு ஆரம்பநிலையிலிருந்து வளர்ந்து செல்லும் போது சிதைவுக்கு உட்படுமேயானால், நாடகம் மழுங்கிவிடும் கருவளர்ப்புக்கு நாடகத்தில் பலர் காரணர்களாக இருப்பது போன்று கருச்சிதைவுக்கும் பலர் அல்லது சிலர் உண்டு. சமூக நாடகங்களில், கரு சமூகம் சார்ந்ததாக இருக்கம். குறிக்கோள், சமூக நலன், சமூக மேம்பாடு, சமூகச் சீர்திருத்தம், ஏன் தேவையேற்படின் சமூகத்தை மாற்றியமைப்பது போன்றவற்றை நோக்கியதாகவே இருக்கும். நாடகத்தின் மூலம் கருத்துக்கள்,
156

Page 83
எண்ணங்கள், உணர்வுகள் ஆகியன வெளிப்பாடாகும் போது கலையம்சம் பொருந்தியனவாகவும், பார்ப்போரைக் கவர்ந்து ஈர்க்கும் வகையிலும் அமையும். அதனால் மனிதரில் இரசனையை வளர்ப்பதற்கும், மனிதர்களைப் பண்பாடு உடையவர்களாக விளங்கவைப்பதற்கும் நாடகம் சிறந்த ஊடகம் ஆகப் பண்டு தொட்டு விளங்கிவருகிறது.
நாடகம், கட்புல, செவிப்புல சாதனம் ஆகும் கண்ணுக்கும், செவிக்கும் விருந்தாக வல்ல நாடகம், அவை இரண்டினாலும் அடையப்படும் சுவையைக் குன்ற விடாது, அமைக்கப்படவேண்டும் பாத்திரங்களுக்கேற்ற வகையில், மெய்பாடுகளை உணர்த்தி நடிக்கும் நடிப்புத்திறன் கண்ணுக்கு விருந்தளிக்கின்றது. உணர்ச்சியோடும் பண்போடும் விரவிய உரையாடல், தேவைக்கேற்ற பாடல் செவிக்கு விருந்தாகும், கறி குத் தாளிதம் போன்று மெல்லிய நகைச்சுவை, சமூகநாடகங்களுக்கு மகுடம் சூட்டும். ஆனால், தற்காலத்துப் பெரும்பான்மையான சமூக நாடகங்களில், நகைச்சுவைக் கட்டங்கள் நயத்தக்க நாகரிகமாக இடம் பெறாமை காரணமாக, அவற்றின் தரம் குன்றிவிடுகின்றது. நகைச்சுவை பிறரை மகிழ்விக்க வேண்டுமே தவிர, மனவேதனைக்கோ, அருவருப்புக்கோ காரணமாதல் ஆகாது.
சமூக நாடகங்களில் பாத்திரப் படைப்பு மிக முக்கியமான இடத்தைப் பெறுகின்றது. இப்பாத்திரங்கள் நாம் வாழுகின்ற சமுதாயத்தில் மக்களோடு மக்களாய் உலாவிவருகின்றவர்கள் தான். நாம் அடிக்கடி சந்திப்பவர்கள். புராண, இதிகாச, இலக்கிய நாடகங்களில் வருகின்ற கற்பனைப் பாத்திரங்கள் போன்றவர்கள் அல்லர். வரலாற்று நாயகர்களும் அல்லர். எனவே, சமூக நாடகக் கதைமாந்தர்கள் அதீத மனிதர்களாக இருப்பின் நாடகத்தின்நம்பகத்தன்மை கெட்டுவிடும். சமூகப் பிரச்சினைகள், வாழ்க்கை நிகழ்வுகள் என்பனவற்றை நாடகம் மூலம் இரசிகர்களின் முன் கொண்டு செல்லும் போது அதன் நம்பகம் பாதுகாக்கப்பட வேண்டும். காட்சிகள், பாத்திரங்கள், உரையாடல்கள் என்பன கூடியளவு இயல்பாக இருப்பது நன்று. அதேவேளை, சம்பவங்களை, செய்தித்தாளில் தரப்படுவது போன்றோ, அறிக்கைப்படுத்தியோ அப்பட்டமாக எடுத்துக் கூறுதல் நாடகம் ஆகாது. சுருங்கக் கூறின், வாழ்க்கையின் உண்மைச் சம்பவத்தின் நிழற்படப் பிரதியாக நாடகம் அமைக்கப்படுதல், நாடகத்தின் கலைப்பண்பினைப் பறித்து எடுத்ததாக முடியும். கற்பனைவேறு; பொய் வேறு. கற்பனைக்குப் பின்னால் ஓர் உண்மையிருக்கும். கற்பனை ஓர் உண்மையைக் கண்டு பிடிப்பதில் முடியலாம். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், ஆரம்பத்ல் கற்பனையாகவே இருந்தவைதான். அவ்வாறே கலைகளும் கற்பனையோடு தொடர்புடையனவே தவிரப்பொய்யோடு அன்று என்பதைத் தெளிந்து கொள்ளுதல்
157

அவசியம் தற்காலச் சமூக நாடகங்கள் பலவற்றில், கற்பனைக்குப் பதில் பொய்யை இடம் பெறச் செய்கின்றனர். அதனால் நாடகத்தின் நம்பகத்தன்மைக்குக் குந்தகம் ஏற்பட்டு விடுகிறது. மற்றொருபுறத்தில், நிகழ்வுகளை தத்ரூபமாகக் காண்பிக்கப்போய், கலை வரட்சியை ஏற்படுத்தி விடுகின்றனர். குளிக்கப் போய் சேறுபூசிய நிலையில் இன்றைய சமூக நாடகங்கள் பல உள்ளன.
வாழ்க்கையின் கூறு (aSlice ofLife), நாடகத்தின் மூலப் பொருள் மாத்திரமே அதுவே நாடகமாகாது” என்கிறார் Eric Bentley என்பவர். வாழ்க்கைச் சம்பவங்கள் நாடகத்திற்கேற்றவாறு உருக்கொடுக்கப்படவேண்டும். இதில் நாடக ஆசிரியன் பெரும்பங்கு கொள்கின்றான். உத்திகள் மரபு தழுவியோ, புதுமையாகவோ இருக்கலாம். புதிய பரிமாணங்கள் கலையுணர்வோடும், விஞ்ஞான சிந்தனைப் பண்போடும் அமைt வேண்டும். கலையும் விஞ்ஞானமும் இரு முரண்பாடான விடயங்கள் அல்ல. அவை இணையக் கூடியன; இணைய வேண்டியன. குறிப்டாகச் சமூக நாடகங்களின் வெற்றிக்கு விஞ்ஞான ரீதியிலான அறிவுச் சிந்தனையும், கலைரிதியான உணர்வுச்சங்கதிகளும் தூய்மையின் அடிப்படையில் ஒன்றிக்க வேண்டும். வெறுமனே அறிவு பூர்வமாகவோ, அல்லது முற்றிலும் உணர்வு பூர்வமாகவோ ஆக்கப்படும் நாடகங்கள் வெற்றியடைய முடியாது. ஒரு சமநிலை, ஒரு நடுவுநிலைமை, பிரித்துணர்ந்து மதிப்பீடு செய்யும் மாண்பு என்பவற்றில் நின்று, தளம்பாமல், சோராமல், நெறிப்படுத்தக் கூடிய, முகாமை செய்யும் ஆளுமை கொண்ட நெறியாளன் அல்லது இயக்குநர் தான் நாடகத்திற்குக் கலைவடிவம் தந்து; உயிர்ப்பும் ஊட்டமும் கொடுத்து; உருவும் திருவும் பொலிய நாடகத்தை வளர்த்தெடுக்கின்றார். எனவே இயக்குநர் இயக்கப்படக்கூடாது; அவர் இயங்கவேண்டும். அதற்கு அவருக்குத் தேவை சுதந்திரம்.
நாடகத்தில், நாடக ஆசிரியன், நாடக இயக்குநர் ஆகியோருடன் நாடக நடிகர்களின் பங்களிப்பும், ஒத்திசைவும், திறமையும் முக்கியம். சமூக நிகழ்வு, நாடகக் கலை ஆவதற்கு நடிகர்களின் அசைவும், மெய்ப்பாடும், உரையாடலும், நடிப்பும், சமயோசிதமும், சாதுர்யமும் எத்துணை முக்கியம் என்பது கூறாமலே விளங்கும், அவை அனைத்துமே அளவோடும், பண்போடும் நிகழ்த்தப்பட வேண்டும்.
சமூக நாடகங்கள் மெருகு பெறுவதற்கு, ஒத்திகைகள் நிறையச் செய்யவேண்டும். சமூக நாடகம் தானே; மேடையில் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம் சில நடிகர்களிடம் F ன்டு. இது தவறு, இவ்வாறே, பொருத்தமான ஒப்பனை, மேடையில் காட்சியமைப்பு; ஒலி, ஒளி அமைப்பு என்பனவும் சமூக நாடகங்களில் ஏனோ தானோ என்ற நிலையில் தான் உள்ளது. மேலும், சமூகதாடகங்களில்
158

Page 84
பெரிதும் இடம் பெறுகின்ற பிரசார நெடி, விளம்பர வாடை, சினிமா வடிவில் ஆரோக்கிய மற்ற பகிடிகள், சிலேடைகள், அநாவசியமான கிண்டல் கேலிகள், மறைமுகத் தாக்குதல்கள் என்பன நாடகத்தின் TBMPO வை அதாவது போக்குவேகத்தைத் தணித்து: இரசிகர்கள், பார்வையாளர்களின் பொறுமையைச் சோதித்து, பகைமையைப் பெற்றுக் கொடுத்து விடுகின்றன. எப்போதும் இரசிகர்களைத் தம்பக்கம் வைத்துக் கொள்ளவேண்டியது நாடகத்தின் வெற்றிக்கு இன்றியமையாதது. சமூக நாடகங்கள், தனித்து உலகமரபு தழுவியதாகவோ, நாடகமரபு தழுவியதாகவோ அன்றி, இரண்டிற்குமிடையே இணக்கம் கண்டு, அளவறிந்து, நடுவுநிலைமையுடன் தயாரிக்கப்பட்டால், நிச்சயம் சிறப்புப் பெறும் என்பது எனது எண்ணம்.
1.59


Page 85
தற்போது கல வி நிபுணத் துவ கலைப்பட்டதாரியான இவர், கல்வி
ஆகிய பட்டப் பின் கல்விப்பட்டங்கை
இவர் 'கலாபூஷணம்' விருது: அக Of பட்டம் என் பவற் றையும்
மனிதவிழுமியங்கள், சைவநெறி, கல்: கொண்டு, அவைபற்றி எழுதுவதிலும், சிரத்தை காட்டி வருகின்றார். வானொ கலந்து கொள்கின்றார். இலங் ை
உறுப்பினரும் ஆவர்.
நல்லை நகர் நாவலன் (1994) 'மனித விழுமியங்கள்' (19
G.
(1978
சிந்தனைகள்' (1996) சைவ விழுமிய சிந்தனைகள் (1999) என்பன இவர்
ஆகும். இவரது இரண்டு நூல்கள் வ மண்டலப் பரிசு பெற்றவை. இவர் எழு இந்து சமய கலாசார அலுவல்கள் தி ரீதியில் வழங்கப் பெற்ற சிறந்த ை மூன்று தடவைகள் இவருக்குப் பெற்
"மனித மேம்பாட்டுச் சிந்தனைகள
வரவேற்பைப் பெறும் என்பது எமது
 
 
 

ாரசாமி சோமசுந்தரம் ஆசிரியராகத்
கல்விப் பணியை ஆரம்பித்தவர் ங்கைக் கலவி நிர்வாகசேவையில் வியதிகாரி, பிரதம கல்வியதிகாரி, விப் பணிப்பாளர் ஆகிய பதவிகளை கித்தவர் மகரகம, தேசிய கல்வி வகத்தின் ( ) தமிழ்த் துறைப் ரிப்பாளராகவும், உதவிப்பணிப்பாளர்
யகம் ஆகவும் கடமையாற்றியவர். .
ஆலோசகராகப் பணிபுரிகின்றார்
டிப்புளோமா, எம்.ஏ. (கல்வியியல்)
ளையும் பெற்றவர்.
கில இலங்கை, சமாதான நீதிவான் பெற்றுள் ளார் . தமிழ் ப் பணி பாடு, வியியல் போன்ற துறைகளில் ஈடுபாடு சொற்பொழிவுகள் நிகழ்த்துவதிலும் லி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும்
கக் கலைக் கழக, இலக்கியக் குழு
| "சைவமரபும் தமிழர் வாழ்வும்
5); "நல் வாழ்விற்குரிய நடைமுறைச் பங்கள் (1998); "சைவ வாழ்வியற்’ எழுதி வெளியிட்ட ஏனைய நூல்கள் டக்கு கிழக்கு மாகாணச் சாகித்திய
ழதிய சைவ சமய நூல்கள் மூன்றும்,
ணைக் களத்தினால் அகில இலங்கை
சவ சமய எழுத்தாளர் பரிசுகளை, றுக் க்ொடுத்தன.
y
ர்' என்னும் இந் நூல் வாசகரின்
நம்பிக்கை
(616fiu LT6T