கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மனித விழுமியங்கள்

Page 1
参o * * -象羲* * *****ā L德象 á
இ கி. தா. இரு
மனித வி
*霹海
குமாரசாமி
 

" ή 2 β
ளையாட்டுத்து 霧 リリ
லக அன்பளிப்பு
ழுமியங்கள்
=ീ{:
變魯
சோமசுந்தரம்
ழும்பு
995

Page 2

மனித விழுமியங்கள்
குமாரசாமி சோமசுந்தரம்
கொழும்பு
1995

Page 3
நூலின் பெயர் :
ஆசிரியர் :
உரிமை :
வெளியீடு :
பதிப்பு :
பதிப்பு ஆண்டு :
அச்சகம் :
விலை :
Name of the Book:
Author :
Copy Right :
Publication :
Edition
Year
PreSS
Price
மனித விழுமியங்கள்
குமாரசாமி சோமசுந்தரம்
திருமதி தையல்நாயகி சோமசுந்தரம்
ரஜி வெளியீடு 73, 2/1, விகாரை லேன், கொழும்பு-6
இலங்கை.
முதற் பதிப்பு
1995
*ஸ்ரார் லைன்" அச்சகம், கொழும்பு-14.
ரூபா நூறு.
Manitha Vizhumiyankal
(Human Values)
Kumarasamy Somasundaram
Mrs. Thyalnayaki Somasundaran
RAJI Publications
73, 2/1, Vihare Lane, Colombo-6.
First Edition
1995
Star Line Printers, Colombo.14.
Rs. 100/-
ii

மனிதரும் விழுமியங்களும்
வாழ்த்துரை
சர்வமும் ஓர் ஒழுங்கில் செல்கின்றன. மனதால் ஆன மனிதரும் ஓர் ஒழுங்கில் செல்கின்றனர். பூமியிலே நாட்டுக்கு நாடு கண்டத் திற்குக் கண்டம் இயற்கை ஒழுங்குகள் மாறுபட்டுக் காணப் படுகின்றன. ஒழுங்கு மார்க்கம் ஆகின்றது. மார்க்கம் சமயம்
ஆகின்றது.
பூமியிலே வெவ்வேறு மார்க்கங்களால் வேறுபட்ட சமயங்கள் காணப்படுகின்றன. உலகத்து மனிதர் ஒன்று கூடும்போது சமயங் களின் பின்னணிகள் வெளிப்படுகின்றன. அப்பொழுது சமரசம் ஏற்படுகின்றது.
சமயம் ஒரு பாதை-ஒரு போதை-ஒரு போர்வை. சமரசம் தற்காலிகமான அமைதியை ஏற்படுத்தும் ஒரு ஒப்பந்தம்.
சகல விதமான அறிவுகளும் மனிதரை விட்டு நீங்கும்போது சமயம் சமரசம் அனைத்தும் அற்றுப் போகின்றன. (Renunciation of the entire Knowledges 956ör 1976örGrGBT Lo Soî55 துவம் வெளிப்பட ஆரம்பிக்கும்.
சமயம், சமரசம் கடந்த சமயாதீத உண்மை உணரப்படும். முழுமைத்துவமான மோணம், முழுமைத்துவ அன்பு, முழுமைத் துவ கருணை, முழுமைத்துவ உணர்வு, முழுமைத்துவத் தெளிவு ஆகியனவே "மனிதத்துவத்தை வெளிப்படுத்துவன. இவை அண்டசராசர உண்மையைப் புலப்படுத்தும் (Universal Truth). இதுவே மனித முழுமைத்துவம் ஆகும்.
iii

Page 4
* சைவப் பெரியார் திரு. குமாரசுவாமி சோமசுந்தரம் ஐயா அவர்களின் தூய சிந்தனையில் மானிடம் உருவாகி, ‘மனித விழுமியங்கள் ஆகி, அனைவருக்கும்" பயன்படும் வகையில் தெளி வாகி, நூலாக வெளிவருகின்றது. அவர்களின் தூய நெறியான பணிவும், வாழ்வும், பணியும் குறைவில்லாத நிறைவாக என்றும் மலர்ந்த வண்ணமே இருக்கும்.
ஓம் சிவம்
சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி வழி ஓம் ஷர். மெளனாச்சிரம் 19, ஐ. பீ. சீ. றோட், வெள்ளவத்தை, கொழும்பு-6, 6, 12. 994
iy

மனிதர்களிடம் ஆற்றல்கள் நிறைய உள்ளன. அவை அவர்களிடம் உள்ளார்ந்த நிலையில் அடங்கிக் கிடக்கின்றன. தம்முள்ளே இருக்கும் ஆற்றல்களை முழுமையாக அறிந்து கொள்ளாமலேயே காலத்தைக் கழித்து வருகின்ற மனிதர்கள் பலர் காணப்படுகின்றனர்.
மனிதர்கள் ஒவ்வொருவரும் தன்னை அறிய வேண்டும்; தன் னுள்ளே காணப்படுகின்ற ஆற்றல்களை உணர்தல் வேண்டும். அப் பொழுது தெரிய வரும், ஒவ்வொருவரின் அதியுயர்ந்த பெறுமானம்.
மனிதன் பெறுமதி மிக்கவனாக இருப்பதற்குரிய காரணம், மனிதத் தன்மைகளோடு, மனித விழுமியங்களைப் பேணி, மனிதனாக வாழக் கூடிய அதி அற்புத ஆற்றல் அவனிடம் இயல்பாகவே நிறையக் காணக் கிடக்கின்றமைதான் என்பதை நாம் உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
நல்லவர்களாகவும், எல்லோருக்கும் நன்மை செய்வதில் வல்லவர் களாகவும் விளங்கக்கூடிய ஆற்றல், இவ்வுலகில் மனிதர்களிடம் மாத் திரமே உண்டு. இந்த வகையில் மனித இனம் ஏனைய உயிரினங்களை விட உயர்ந்து நிற்கின்றது. ஆனால் மனித இனம், அதன் இயல்பான ஆற்றலைப் பயன்படுத்தத் தவறி வருவதால், கீழ் நிலைக்குத் தள்ளப் படும் அவல நிலைக்குள்ளாக்கப்பட்டு வருவதையும் உணரக் கூடியதாக உள்ளது.
மனிதன் தன் அதி உயர்ந்த பெறுமானத்தை இழந்துவிடு வானோ என்ற அச்சம் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. காரணம், மனித இனத்திற்குப் பெறுமானத்தைத் தருகின்ற மனித விழுமியங்கள், மனிதர்களால் வாழ்க்கையில் பேணப்படாது புறக் கணிக்கப்பட்டு வருதலேயாகும்.
அன்பு, அஹிம்சை, உண்மை, சாந்தி, மானுடம், நல்லொழுக்கப் பண்புகள் என்பன மனித விழுமியங்கள்; அவையே மனித உரிமைகள். அவற்றை மனிதர்கள் தமது வாழ்க்கையில் பேணாமல் விடுதல் மனித உரிமை மீறல் ஆகும். இதனால் மனிதர்கள் தமது பெறுமதியை இழந்து வருகின்றனர்.
s
மனிதப் பண்புகளை-மனித விழுமியங்களை வாழ்க்கையில் மேற் கொள்ள மறுப்பவர்கள், மறப்பவர்கள் யாவரும் மனிதப் பெறுமதி யோடு வாழ மறுப்பவர்கள் ஆகிவிடுகின்றனர்.
இன்றைய உலகில், மனித விழுமியங்கள் மறக்கப்பட்டு வரு கின்றமையை அறிவோம். எனவே மனித விழுமியங்களை நினைவு
V

Page 5
படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. பல சமூக, ஆன்மீகப் பெரியார்கள் இத்தேவையை வலியுறுத்தி வருகிறார்கள். பகவான் பூரீ சத்திய சாயி பாபா, மனித விழுமியங்களின் தேவையை உணர்த்துவ தோடு, அத்தேவையை நிறைவு செய்யும் வழி வகைகளையும் வழங்கி யுள்ளார்கள்.
மனித விழுமியங்கள் பற்றி நினைவுபடுத்தும் பணியில் ஈடுபாடு கொள்வதற்கும் அடியேனுக்குத் திருவருள் கிட்டியது. இந்நூலில் இடம் பெறும் கட்டுரைகளில் உள்ள மனித விழுமியக் கருத்துக்கள், மனித சமுதாயத்திற்குப் புதியவையல்ல. யாவும் எல்லோருக்கும் த்ெரிந்தவை தான். அவற்றை ஒரு தரம் ஞாபகப்படுத்தும் பணியையே மேற் கொண்டேன் என்பதையும் கூறி வைக்க விரும்புகிறேன்.
மனித விழுமியங்கள் யாவர்க்கும் உரியவை; பொதுவானவை; மனித நல்வாழ்வுக்கு அத்தியாவசியமானவை; ஆதாரமானவை.
'மனித விழுமியங்கள்' எனும் இந்நூலில் சில விழுமியச் சிந்தனைகளை மாத்திரம் நினைவுபடுத்த முயன்றுள்ளேன். நல் லொழுக்கமுள்ள, மானுட நேயங் கொண்ட உலக சமுதாயம் ஒன்றினை எண்ணிப் பார்க்கிறேன். கிட்டும் என்பது உறுதி.
வாழ்த்துக்கள் நல்கி அருளிய இலங்கை மெளனாச்சிரம் தலைவர், வணக்கத்திற்குரிய சுவாமி உமாஷங்கரானந்த சரஸ்வதி ஷி ஓம் ஷர் அவர்களுக்கு வணக்கம் கலந்த நன்றியைத் தெரிவிக்கின்றேன். இலங்கை வானொலியார், இம் மனித விழுமியக் கருத்துக்களை வாரந்தோறும் ஒலிபரப்பி ஆக்கமும் ஊக்கமும் தந்தனர். வீரகேசரி, தினகரன் பத் திரிகைகளும் சிலவற்றைப் பிரசுரித்திருந்தன. எல்லோர்க்கும் எனது நன்றிகள். நேயர்கள், வாசகர்கள், நண்பர்கள் பலர் இவற்றைத் தொகுத்து நூலாக வெளியிடும்படி அன்புக் கட்டளையிட்டனர். அதன் விளைவாக, நாற்பத்தைந்து கட்டுரைகள் தொகுக்கப்பெற்று இந்நூல் வெளிவருகின்றது. இந்நூலினை அழகாக அச்சிட்டு உதவிய கொழும்பு ஸ்ரார்லைன் அச்சகத்தாருக்கு எனது நன்றிகள்.
இந்நூலைக் கற்று, கற்றபடி ஒழுகுகின்ற அனைவர்க்கும் இந்நூல்
FOf Tf6õTO .
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.'
--திருக்குறள்
குமாரசாமி சோமசுந்தரம் V1.

12.
13.
14.
5.
6.
7.
18.
மனித விழுமியங்கள்
பொருளடக்கம்
வாழ்த்துரை ( ) 8
முகவுரை
வாழ்க்கை ஒழுங்கு 8 p.
மனித விழுமியங்கள் உயர் வாழ்க்கைத் தரம்
சத்தியம்
வாழ்க்கை நலம் பேணல்
தரும நெறி
இன்னா செய்யாமை
'மானுடம் வென்றதம்மா'
சுதந்திரம்
சாந்தி
சும்மா இருத்தல்
பழக்க வழக்கம்
உணவுப் பழக்கம்
இல்லறமே நல்லறம்
மனித விருத்தி
முது சொத்துக்கள்
நன்னடத்தை
பிள்ளை வளர்ப்பு
vii
பக்கம்
iii
91
05
09
3
7
2.
25
29
35
38
4罗
46
51
56
6.
G5
7 ፀ
74

Page 6
9.
20.
21.
22.
23.
24,
25,
26.
27.
28.
29.
3 Ꭴ .
31.
32.
33.
34.
35.
36.
37.
38.
39.
40.
4 I.
42,
43.
44.
45.
மனித ஆளும்ை
வாய்மை
திருடாதே
சுய கட்டுப்பாடு கடமைகளும் பொறுப்புக்களும் நயத்தக்க நாகரிகம்
பேராண்மை
செம்மையே அழகு
இளமை
மீட்சி
கூடி வாழ்
சாத்வீகம்
சான்றாண்மை முற்போக்கு நிறை வாழ்வு
மன அடக்கம்
நடுவு நிற்றல்
பணி செய்தல்
ஆன்மிகம்
நற்சிந்தனை
சினம் வேண்டாம்
செயல் மூலம் உணர்த்தல் மனித ஆக்கம் ஒழுக்க வளர்ச்சி விளையாட்டும் விபரீதமும்
அச்சம்
மனித பெறுமானம்
viii
&
ፃ 9
83
87
92
96
I 00
104
108
1 12
16
120 124
28
133
137
141
l45
149
153
157
6
I65
69
73
78
8.
186

1. வாழ்க்கை ஒழுங்கு
சூரிய மண்டலத்தை நோக்குங்கள். சூரிய குடும்பத்தில் பல கோள்கள் உள்ளன. அக்கோள்கள் ஒவ்வொன்றும் தாமும் சுழன்று கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது. அவற்றிற்கென்று குறித்த பாதைகள் இருக்கின்றன. தத்தம் பாதைகளில், அங்கிங்கு விலகாமல் சென்று கொண்டிருப்பதால், அவை ஒன்றோடொன்று முட்டி மோதா மலும், ஒன்றினால் மற்றையவற்றிற்கு அனர்த்தம் விளைவிக்காமலும் இருந்து வருகின்றன. மேலும் அத்தகைய ஒழுங்குமுறை இருப்பதால், இரவு பகல் உண்டாகின்றன; பருவ காலங்கள் ஏற்படுகின்றன. குறித்த நிகழ்வுகள் குறித்த வேளையில் நடைபெறுகின்றன. சூரியனுடைய ஆகர்ண சக்தி அல்லது இழுப்பாற்றல், கோள்களை ஓர் ஒழுங்குமுறை யில் இயங்கச் செய்வதற்கு உறுதுணையாக நின்று, நெறிப்படுத்து கின்றது என்று விஞ்ஞான விளக்கம் தரலாம் அல்லது இக்கோள்கள் மற்றும் அண்டங்கள் அனைத்தையும் படைத்து, ஓர் ஒழுங்குமுறையில் இயங்கி வருகின்றதும்; நமது சிந்தனை, வாக்கு, செயல், ஆய்வு யாவற்றிற்கும் அப்பால் எல்லாவற்றையும் கடந்து நிற்கின்றதுமான பரம்பொருள் ஒன்று உண்டு என்றும், அது பேராற்றல் வாய்ந்தது என்றும், இத்தகைய ஒழுங்குமுறையான இயற்கை நிகழ்வுகள், இயக்கங் களுக்கெல்லாம் அப்பரம்பொருள்தான் காரணம் என்றும் மெய்ஞ்ஞான விளக்கத்தையும் தரலாம். எது எவ்வாறு இருப்பினும், இவ்விளக்கங் களிலும் முக்கியமானது எதுவெனில், சூரிய மண்டலத்தில் உள்ள இக்கோள்கள்; அவற்றின் சுற்றுகை, சுழற்சி ஆகிய இயக்கங்கள்; அவற்றின் விளைவாக ஏற்படுகின்ற இயற்கை நிகழ்வுகள் என்பன ஒர் ஒழுங்கு முறையிலும், விதிகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டும் நடைபெறுகின்றமையை உணர்ந்து கொள்ளுதல் ஆகும். இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது என்னவெனில், எங்கே ஓர் ஒழுங்குமுறை நிலவுகிறதோ, எங்கே விதிகள், சட்டதிட்டங்கள் பேணப்படுகின்ற னவோ; எங்கே நெறிமுறைகள் கைக் கொள்ளப்படுகின்றனவோ அங்கெல்லாம் குழப்பங்கள் இல்லை, அனர்த்தங்கள் இல்லை; எனவே துன்பங்கள் துயர்களும் இருக்க முடியாது. சாந்தி, சமாதானம், இன்பம், நிறைவு என்பவையே அங்கு காணப்படுகின்றன.
இயற்கை கற்றுத் தந்த பாடத்தோடு, இனி மனித வாழ்க்கையை நோக்குவோம். மனித வாழ்க்கை துன்பங்கள் நிறைந்துள்ளது என்பது பரவலாகப் பேசப்படுகின்ற பேச்சு. இன்று நேற்றல்ல, மனித நாக ரிகம் தொடங்கிய காலத்திலிருந்தே இவ்வாறாகப் பேசப்பட்டு வரு
l

Page 7
வதை நாம் அறிவோம். காலத்துக்குக் காலம் பல ஞானிகள் தோன் றினர்; சமயப் பெரியார்கள் உருவாகினர்; மனித குல ஈடேற்றத்திற்கு வழி காட்டினர். மனித வாழ்க்கைத் துன்பங்களுக்குரிய காரணங்களைக் கூறி, அத்துன்பங்களிலிருந்தும், மனிதர்கள் விடுதலை பெறுவதற்கு வழி வகைகள் யாவை என்பதையும் கூறிப் போந்தனர். இந்து சமயம், பெளத்த சமயம், சமண சமயம், கிறீஸ்தவ சமயம், இஸ்லாம் சமயம் ஆகிய பெருஞ் சமயங்கள் தோன்றி, மக்களிடையே பரவின.
உண்மை ஒன்று; வழிகள் பல என்பதற்கியைய உண்மை எது என்று சொன்னதிலும், நன்மை எது என்று மொழிந்ததிலும், செம்மை எது என்று கூறியதிலும்; எல்லா ஞானியர்களும், எல்லாச் சமயத் தலைவர்களும், மேல் நாடு, கீழ் நாடு என்ற வித்தியாசமில்லா மல் ஒருமித்த கருத்தும், ஒருமையுணர்வும் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகின்றது. அவர்கள் வேறுபடுவதெல்லாம் உண்மையையும், நன்மையையும், செம்மையையும் அடைவதற்குக் கூறும் வழிகள், மார்க் கங்கள், பாதைகள் ஆகியவற்றில்தான். ஓர் ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் இருப்பது இயல்புதானே; ஒரேயொரு வழிதான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிப்பதுதான் இயல்புக்கு மாறானது. எனவே, பல்வேறு வழிகள், பல்வேறு காலங்களில், பல்வேறு சமயத் தலைவர் களால் கூறப்பட்டிருப்பினும், அவை யாவுமே மனித ஈடேற்றத்திற்கும், மனிதர்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, மண்ணில் நல்ல வண்ணம் அவர்களை வாழ்விப்பதற்கும் ஏற்ற வழிகளாகவே விளங்குகின்றன. எனவே மனிதர்களின் துன்பங்களுக்குக் காரணம், இப்பெரியார்கள் காட்டிய வழிமுறைகள் ஒன்றையேனும் வாழ்க்கையில் கடைப்பிடிக்கத் தவறியமையே என்பது உணர்தற்பாலது.
வாழ்க்கையின் பல இடர்ப்பாடுகளுக்கெல்லாம் மனிதர்களின் அறியாமையே காரணம் என்று பகவான் புத்தர் கூறினார். அறியாமை யெனும் இருளை அகற்றுவதற்கு, அறிவு எனும் ஒளி ஏற்றப்பட வேண்டும். இதற்குக் கல்வி அவசியம். இன்று இந்த இருபதாம் நூற்றாண்டில் வாழ்கின்ற நாம் கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர்கள். நாடுகளில் கல்வி கற்போர் தொகை, கல்வி கற்றவர். களின் விகிதாசாரம் என்பன அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. அதனால் அறிவுப் பெருக்கம், வகை தொகையின்றி வளர்ந்துகொண்டே போகின்றது. முன்பு, நூறு அல்லது அதற்குக் கூடிய ஆண்டுகளுக் கொருமுறை அறிவு இரட்டித்தது என்று கூறுவர். இந்த நூற்றாண்டில், பத்து வருடங்களுக்கொருமுறை அறிவு இரட்டித்து வளர்ந்து வந்தது. தற்போது, அதிலும் மிகக் குறுகிய காலத்தில் அறிவுத் தொகுதி இரட்டிக்கிறது என்பது கண்கூடு.
2

இந்த இடத்தில் சற்று நின்று, நிதானமாகச் சிந்தித்து ஒரு விடயம் பற்றி அறிய வேண்டியது அவசியம். அந்த விடயம் என்ன வென்றால், நாம் இன்று காண்கின்ற பாரிய அறிவுப் பெருக்கமும், அறிவுப் பிரவாகமும் எத்தன்மையன? என்பதும், அத்தகைய வீறு கொண்ட அறிவுப் பெருக்கினால், மக்களிடையேயுள்ள அறியாமை நீங்கிவிட்டதா? என்பதுமேயாகும். மக்களின் அறியாமை நீக்கப்பட் டிருந்தால், மக்களிடையேயுள்ள துன்பங்கள், துயர்களும் நீக்கம் பெற் றிருக்கும். ஆனால் உண்மை நிலை அவ்வாறில்லை. மாறாக, துன்பங் களும் துயர்களும் இன்று பெருகியே காணப்படுகின்றன. அவ்வா றாயின் இன்றைய உலகில் இடம் பெற்றுள்ள, அறிவுப் பெருக்கம் அது ஆற்ற வேண்டிய பணியை ஆற்றத் தவறிவிட்டது. அதாவது, மனிதர் களிடையே உள்ள அறியாமையை நீக்கத் தவறிவிட்டது. அத்தோடு ஏற்கனவேயுள்ள அறியாமையை, இன்றைய அறிவுப் பெருக்கம், மேலும் வளர்த்துப் பெருக்கியுள்ளது என்று கூறினால், அது தவறான கூற்றாக அமையாது என்பது எனது எண்ணம். எனவே இன்று பெருகி யுள்ள அறிவு, மக்களின் அறியாமையைப் போக்க வல்லதாக இல்லை; அற்றங்காக்கும் கருவியாக அதாவது மனிதகுல அழிவு வராமல் காக்கும் சாதனமாக இல்லை. அப்படியிருக்க நாம் பெற்றுள்ள அறிவினை, எப்படி அறிவு என்று கூறமுடியும்.
இன்றைய உலகில் பெருகிப் பிரவாகிக்கின்ற அறிவு, விஞ்ஞானம், தொழில்நுட்பம் சார்ந்தவை; எனவே அறிவியல் சார்ந்த அறிவாக விளங்குகின்றது. அறிவியல் என்பது அறிவு என்னும் நாணயத்தின் ஒரு பக்கம் மட்டுமே. அதுவே அறிவு என்று கூற முடியாது. அறிவுக்கு இன்னொரு பக்கமும் உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அது அறவியல் சார்ந்தது. அதாவது அறப்பண்புகளின் அடிப்படையில் எழுகின்ற மனித விழுமியங்கள் சார்ந்தது. மனித விழுமியங்கள் சேர்க்கப்படாத அறிவு பயனற்றது. இதுபற்றி தெய்வப் புலவர் திருவள்ளுவர் கூறுவதை நோக்குவோம்.
'அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின் நோய்
தந்நோய் போல் போற்றாக் கடை."
என்பது குறள்.
பிற உயிர்களின் துன்பங்களைத் தன் துன்பம் போல எண்ணி, அவ்வுயிர்களின் துயர் துடைத்து அவற்றைக் காப்பாற்றாவிட்டால், ஒருவன் பெற்றுள்ள அறிவு வளர்ச்சியினால் என்ன பயன் ஏற்படப் போகிறது என்பது இக்குறள் கூறும் கருத்து. அறிவு விழுமியம்
3

Page 8
சார்ந்ததாகவும் அமையும் போதுதான், பெற்ற அறிவு பயன் நிறைந் தது ஆகிறது. தன்னலத்திற்கும் மேலாகப் பொதுநலத்தில் ஈடுபாடு கொள்ளச் செய்வது, தூண்டுவது, விழுமியம் சார்ந்த அறிவு. அறிவியல் சார்ந்த அறிவும்; விழுமியங்கள் சேர்ந்த அறவியல் அறிவும் உரிய அளவில் சங்கமமாகும்போதுதான் அறிவு முழுமை பெறுகிறது; நிறை அறிவாகப் பரிணமிக்கிறது. அப்போதுதான் அறிவு, அறிவொளியாகி, அறியாமையென்னும் கொடிய இருளை அகற்றுகிறது. அஞ்ஞான்று மக்களிடையே காணப்பட்ட துன்பங்கள் துயர்களும் துவண்டோடி
விடும்.
பெரியோர் வாக்குப் பொய்த்ததில்லை; பொய்ப்பதுமில்லை. ஆனால், பெரியோர் வாக்குச் சரியாக உணரப்பட வேண்டும். அறிவு ‘‘அற்றங் காக்கும் கருவி'யாகவும், அறியாமையை அகற்றித் துன்பங் களிலிருந்து மனித இனத்திற்கு விடுதலை தேடித் தரும் சாதன மாகவும் விளங்கி, நல்ல பயனை நல்க வேண்டுமாகில், அறிவு அறிவிய லோடு, விழுமியங்கள் சார்ந்ததாகவும் அமைய வேண்டியது அவசியம். அப்பொழுதுதான் அறிவு அதன் உண்மையான கருத்தைப் பெற்று உனித குலத்தை வாழ்விக்கும் அரிய சஞ்சீவியாகின்றது. சமகால மலகம் வேண்டி நிற்கும் அறிவு ஆனது. அறிவியலும், அறவியலும் அதாவது விழுமியங்களும் சார்ந்தனவாக அமைய வேண்டும் என்பதை மனதிற் கொள்வோமாக. அதனையே அறிவியல் சார்ந்த மனிதவியல் கோட்பாடு என்பர்,

2. மனித விழுமியங்கள்
இன்று விழுமியங்கள் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. நாடுகளின் தலைவர்கள், சமயத் தலைவர்கள், சமூகத்தலைவர்கள், கல்விமான்கள் தொடக்கம் சாதாரண குடிமக்கள் வரை, மனித விழுமியங்கள் பற்றியும், மனித மேம்பாடுகள் பற்றியும் நிறையப் பேசு கிறார்கள், எழுதியும் வருகிறார்கள். தற்காலத்தில் ஏற்பட்டுள்ள பல் வேறு பிரச்சினைகளுக்கும், மனித சமுதாயத்தைப் பற்றியுள்ள சகல பீடைகளுக்கும், தொல்லைகளுக்கும் அடிப்படைக் காரணமாக, மக்கள் மனித விழுமியங்களையும், ஒழுக்கப் பண்புகளையும் வாழ்க்கை யில் கடைப்பிடிக்கத் தவறியமையைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
நாம் வாழுகின்ற யுகம் விஞ்ஞான, தொழில்நுட்ப அபிவிருத்தி, அதி அற்புத வளர்ச்சி கண்டுள்ள காலப்பகுதி. இதன் பயனாக மக்களின் வாழ்க்கை வசதிகள், நாகரிக ஆடம்பரங்கள், செல்வச் செழிப்பு என்பன மிகவும் செழித்து ஒங்குகின்றன. அவை அனைத்தும் மக்களை, மிக்க மகிழ்ச்சியுடன் இன்ப வாழ்வு வாழச் செய்யப் போதுமானவை என்றுதான் எல்லோரும் எண்ணுகின்றனர். ஆனால் இன்றைய உலகில், மக்கள் வாழ்க்கையில் உண்மை நிலை என்ன? எத்தனை பேர் தங்கள் வாழ்க்கையின் திருப்தி கொள்கின்றனர்? மகிழ்ச்சியெய்துகின்றனர்? அமைதியோடு சீவிக்கின்றனர்? குறைகள் இல்லாதோர் யார் உளர்? அநேகமாக, எவரைச் சந்திப்பினும், "நான் சந்தோஷமாக இருக்கிறேன்; வாழ்க்கையில் திருப்தியோடு இருக்கி றேன்.' என்று கூறுபவர்கள் மிகச் சிறு தொகையினரே, தங்கள் துன்பச் சுமைகளையும், நெஞ்சக் கனதிகளையும் எடுத்துச் சொல்லத் துடிப்பவர்களே பலர் ஆக உள்ளனர். மக்கள் மத்தியில் அவா, அவதி, வேகம், அங்கலாய்ப்பு, சுயநல வேட்கை என்பன காணப்படுவதால், எத்தனையோ கோடி வாழ்க்கை வசதிகள், இன்பங்கள் இருந்தும், அவற்றை அனுபவிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
மக்கள் வாழ்வில் அமைதி, அடக்கம், திருப்தி, சாந்தி, சமா தானம், நல்லொழுக்கம் என்பன காணப்படும்போதுதான், வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாகவும், இன்பம் பொங்குவதாகவும் அமையும். ஆனால் இந்நிலைமை மிக அரிதாகவே சமுதாயத்தில் உள்ளது. எத் துணைச் செல்வங்கள் இருப்பினும், மனத் திருப்தியும், மன அமைதி யும் இல்லாதபட்சத்தில், அச் செல்வங்களினால் பயன் ஏதும் இருக் காது.
さ

Page 9
உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்து விட்டால் வாழ்க்கையில் நிறைவு ஏற்பட்டுவிடும் எனத் தற்கால மக்கள் நினைக்கின்றார்கள். அதற்காக இரவு பகலாக, ஒய்வு ஒழிச்சலின்றி, நீதி நியாயம் பாராது, கருமமே கண்ணாக உழைக்கின்றார்கள்; பாடுபடுகின்றார்கள். இலக்கும் அதனை அடைதலும் முக்கியமேயன்றி, அதற்காகப் பின்பற்றவேண்டிய வழிமுறைகள் பற்றி அவர்கள் அக்கறை கொள்வதில்லை. வழிமுறை கள், நேர்மையற்றனவாகவோ, தவறானவையாகவோ இருக்கலாம். அவற்றைப் பற்றிச் சிந்தைக்கெடுப்பவர்கள் மிக அரிதாகவேயுள்ளனர். பிழையைச் செய்த பின்னர், அது சரியென நியாயப்படுத்துவதிலும், பிழையை மறைப்பதிலும் பலர் கெட்டிக்காரராக விளங்குகின்றனர்.
மக்களின் உலகியல் தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு இன்று பெருகிக் கொண்டே செல்கின்றன. ஒரு தேவையைப் பூர்த்தி செய்ய, இன்னொரு தேவை ஏற்படுகிறது. வாழ்நாள் முழுவதும் பாடுபட்டாலும் தாம் விரும்பியவாறு உலகியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாதவாறு அவர்கள் தவிக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்? ஆசையும், அவாவும் தான் காரணம். எந்த நேரமும் ஏதோ ஒன்றை அடைய வேண்டுமென்ற மன அங்கலாய்ப்புடனேயே மனிதர் கள் காணப்படுகின்றனர். அங்கலாய்ப்பு, ஏக்கம், ஆசை என்பன மனித மனங்களில் வீற்றிருக்கின்ற வரை, மனம் அமைதி கொள்ளாது; கலங்கிய படியே இருக்கும். தேவைகள் பூர்த்தி செய்ய முடியாத அளவிற்குப் பெருகும். ஆகவே மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாக வும் வாழ்வதற்குத் தங்கள் ஆசைகளுக்கும், அங்கலாய்ப்புக்களுக்கும் எல்லை வகுக்க வேண்டியது அவசியம் ஆகின்றது.
மனிதர்கள் பெருமகிழ்ச்சியுடன் பெருவாழ்வு வாழ வேண்டியவர் கள். அத்தகைய நிறைவான வாழ்விற்கு முற்றிலும் தகுதியும் தகைமை யும் உடையவர்கள். அவர்களிடம் ஆற்றலும், வல்லபங்களும், விவேக மும் பெருமளவில் உண்டு. இவ்வுலகில் காணப்படுகின்ற அத்துணை இயற்கை வளங்களும் மனிதர்களுக்கே உரித்துடையவை. இயற்கை எழில்களும், வளங்களும் மனிதர்கள் அனுபவிப்பதற்கென்று தோற்று விக்கப்பட்டுள்ளன. அவற்றை அனுபவிக்கும் திறன்களும் மனிதர்களி டம் உண்டு. மனிதர்கள் பல அற்புத சாதனைகள் புரிய வல்லவர்கள். ஏனெனில், மனிதர்களே அதி உயர்ந்த அற்புதப் படைப்பு ஆக மிளிர்கின்றனர். மற்றைய எந்த உயிரினமும் மனிதனுக்கு எந்த வகை யிலும் ஈடு, இணையாகாது. இந்த அரிய உண்மையை மனிதர்கள் அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை அறிந்தவன் தரணி ஆள்வான் என்பது முது மொழி.
6

மனிதன் இன்று தன்னை அறிய முற்படாமையினால்; தன்னிட முள்ள அளவு கடந்த ஆற்றல்களை உள்ளபடி உணர முடியாமை யினால், அரசனாகச் சகல சிறப்புகளுடனும் செழுமையுடனும் வாழ வேண்டியவன், அடிமையாக, சுதந்திரமின்றி, பயந்து வாழவேண்டிய வனாக உள்ளான். உண்மையில் பரிதாபத்திற்குரிய நிலையில் நிகழ் கால உலக மாந்தர் உள்ளனர். தம்மால் படைக்கப்பட்டவற்றிற்கே இன்று மனிதர்கள் அஞ்சி வாழ்கின்ற நிலையென்றால், அவர்களின் வாழ்வில் மகிழ்ச்சி எவ்வாறு தோன்றும். வாழ்க்கையை அடி தலை மாறியும், அறம்புறமாகவும் நடாத்த எடுத்த முனைப்பே, வாழ்வில் தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
தன்னையறிதல் மூலம் மனிதன் தன்னிடமுள்ள நிறைகளையும் குறைகளையும் அறிகின்றான். இச் செயற்பாடு மனிதனுக்கு மட்டும் இயலக் கூடியது. இவ்வாறு அறிந்து கொள்வதினால், தனது குறை களை இனங்கண்டு நீக்கவும், நிறைகளை மேலும் நிறைவுபெறச் செய்யவும் முடிகிறது. தன்னை உணர்தல் மூலம், மனிதனுக்கே உரித் துடையவை எவை, அந்நியமானவை எவை என்பதை உணர்ந்து தெளிந்து கொள்ளும் வாய்ப்பு மனிதனுக்கு ஏற்படுகின்றது.
மனிதனுக்கு உரித்தானவை, இயல்பானவை, உடன்பாடானவை என்பவற்றை அவன் தன்னுடன் அணைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அவை மனித வாழ்வின் சிறப்புக்கும் உயர்வுக்கும் உறுதுணையாக இருப்பவை. மனிதனை மனிதனாக வாழ்விப்பவை. அவையே மனிதர்களின் பெருந்தனமும் கருந்தனமுமாகும். எனவே தான், அத்தகையவை மனித இனத்திற்குப் பெறுமதியும், பெறுமான மும் கொண்டவையாக உள்ளன. மனிதர்களுக்குப் பெருமதிப்பும், பெறுமானமும் கொண்ட பண்புகள், குணவியல்புகள், நடத்தைகள் அனைத்தையும் மனித விழுமியங்கள், மனித மேம்பாடுகள் என்கிறோம் மனித வாழ்க்கையை மேம்பாடடையச் செய்பவை மனித விழுமியங்கள் அவை மனித குலத்திற்கு உரிமையானவை; எனவே ஒவ்வொரு மனித னாலும் அவை பேணப்பட வேண்டியவை. மனித விழுமியங்கள் வளர்க்கப்பட்டுப், பேணப்பட்டு, வாழ்க்கையில் அவற்றை மேற் கொண்டு வாழும்போதுதான் மனித வாழ்க்கை சேமமுறும்; சீரும் திருவும் பொலிய; இன்பமும் மகிழ்ச்சியும் பொங்க மனித வாழ்க்கை செம்மையும் பசுமையும் வாய்ந்ததாக விளங்கும்.
உலகியல் தேவைகளுடன், மனிதனின் ஆத்மிகத் தேவைகளும் நிறைவு செய்யப்படும் பட்சத்திலேயே, மனிதன் நிறைவான வாழ் வினைப் பெறமுடியும். இன்று உலகியல் தேவைகளைப் பூர்த்திசெய்யும்
7

Page 10
முயற்சிகளில் மாத்திரம் மனிதர்கள் ஆர்வமும் கரிசனையும் காட்டுவத னாலேயே, உலகம் தொல்லைகளுக்கும், அவலங்களுக்கும் உட்படுத்தப் பட்டுள்ளது. ஆத்மீகத் தேவைகளும் நிறைவு செய்யப்படும்போதுதான் உலகில் நிரந்தர ஐக்கியம், ஒருமைப்பாடு, சாந்தி, சமாதானம் நிலவ வழி பிறக்கும். தான் வாழ்ந்தால் போதும் என்ற நினைப்பினை மாற்றி, உலகில் உள்ள எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்ற விழுமிய எண்ணம் மனதில் குடிகொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். இது ஒர் ஆத்மிகப் பண்பு. ஆத்மிகம் என்றால் சமயக் கோட்பாடு, மறு உலக வாழ்வு சம்பந்தப்பட்டது; எனவே சாதாரண மக்களால் அநுசரிக்க முடியாத கோட்பாடு என்று பொதுவாக மக்கள் எண்ணுகின்றார்கள். இது தவறான எண்ணம். ஆத்மிகம் பற்றி அவர்கள் அறிந்தது அவ்வளவு தான். உண்மையில் மனிதப் பண்புகள், மனித விழுமியங்கள், மனித மேம்பாடுகள் என்பவற்றை அனுசரிக்கும்போது அங்கு ஆத்மிகம் மிளிர் கின்றது. பிற உயிர்கள் மீது அன்பு காட்டுதல், சேவை செய்தல், உண்மை பேசுதல், நேர்மையாக நடத்தல், பிறர் நலம் பேணுதல், இன்னா செய்யாமை, நல்லொழுக்கம், சட்டங்களை மதித்தல், சூழலை மாசடையாது பேணுதல் யாவும் ஆத்மிகச் செயற்பாடுகள். இவற்றை எம்மால் செய்ய முடியுமா, முடியாதா? முடியும். மனித விழுமியங்கள் யாவும் ஆத்மிகம் சம்பந்தமானவை. மனித வாழ்வினை மேம்படுத்தும் பண்புகள் அனைத்தும் மனித விழுமியங்கள் ஆகும். மனித விழுமியங் கள் விலை மதிக்க முடியாத பெறுமதி வாய்ந்தவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

3. உயர் வாழ்க்கைத் தரம்
நல்ல விழுமியங்களை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகுவதால், மனித வாழ்க்கைத் தரம் சீரும், செம்மையும் பெறுகின்றது. பொரு ளாதார ரீதியிலோ, சமூக ரீதியிலோ மனிதர்களின் வாழ்க்கைத் தரம் கணிக்கப்படுகின்ற நிலைமையைத்தான் இன்று பொதுவாகக் காண்கின்றோம். பல வசதிகளுடனான பங்களா, விலையுயர்ந்த கார், வங்கிகளில் பெருவாரி பண இருப்பு, ஆடம்பரங்கள், காணிகள் என்ப வற்றுடன், புகழ், கீர்த்தி, உயர் பதவி, செல்வாக்கு, எடுபிடி ஆட்கள் என்பவற்றைக் கொண்டு ஒருவரின் வாழ்க்கைத்தரம் கணிக்கப்படுகின்ற காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஒருவரின் வாழ்க்கைத் தரம் உயர்வாக உள்ளது என்று மதிப்பீடு செய்யப்பட வேண்டுமாகில், மேலே கூறப்பட்டன யாவும் அவரிடம் இருத்தல் வேண்டும். அதனால், வாழ்க்கைத் தரம் உயர்த்தப்படுவதற்கு அச் செல்வங்களையெல்லாம் எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்று கங்கணங் கட்டிக் கொண்டு இரவு பகலாக, மெய் வருத்தம் பாராது, கண்துஞ்சாது மனிதர்கள் அலைவதை நாம் காண்கின்றோம்.
உண்மையில், வாழ்க்கைத் தரம் உயர்வு, என்றால் அது பொரு ளாதார சமூக ரீதியில் தான் கணிக்கப்பட வேண்டுமா? அல்லது அவற்றிற்கு அப்பாலும் வேறுஅடிப்படைகள் உண்டா? என்பதையும் நாம் ஆராய்ந்து பார்த்தல் அவசியம்.
'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்கிறார் வள்ளுவப் பெருமான். மனிதர்கள் எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும் என்பது இக்குறள் தரும் பொருள். 'உயர்வு' என்ற சொல்லிற்குப் பலர் பலவாறு கருத்துக்களைக் கூறலாம். மனிதர்கள் எல்லோரும் அறிவுள்ளவர்கள். திருவள்ளுவருக்கும் அது தெரியும். அதனாலேயே "உயர்வு’ என்று கூறிவிட்டு, அதன் பொருளை விரிக்காது விட்டார்.
அறிவு விரிந்துவிட்டது என்று எண்ணப்படுகின்ற தற்காலத்திலே, "உயர்வு’ என்பதற்குப் பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, புகழ் உயர்வு என்றெல்லாம் பொருள் கொள் ளப்படுகிறது. ஆனால் அவையனைத்து உயர்வுகளும் இருந்தும், அவற்றை மனித உயர்வு என்று கூறிவிட முடியாது.இங்கு குறிப்பிடப் பட்ட உயர்வுகள் நிரந்தரமானவையல்ல. இன்றைய பணக்காரன்
9

Page 11
நாளைய பரம ஏழையாகவும் ஆகிவிடலாம். பொருளாதார, சமூக அடிப்படையிலான உயர்வுகள் வரும், போகும். அவற்றைப் பொரு ளாகக் கொள்வதோ அல்லது உயர்வாக மதிப்பிடுவதோ புல்லறி வாண்மையாகும் என்பது பெரியோர் கொள்கையாகும்.
மனித உயர்வு, மனித வாழ்க்கைத் தர உயர்வு என்பது மனித விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும்போதுதான், அந்த உயர்வு, உரமும் உறுதியும் மிக்கதாகின்றது; செழுமையும் அழகும் நிரம்பியதாகின்றது. எனவே, 'உள்ளுவதெல்லாம் உயர் வுள்ளல்’’ என்று வள்ளுவர் கூறும்போது அவர் கருத்திற்கொண்டது உயர்வான எண்ணங்களையே. உயர்வான எண்ணங்கள் எப்போதும் மனித விழுமியங்கள் சார்ந்தனவாயும், அவற்றைத் தழுவியனவாகவுமே அமையும்.
பூரீ இராமபிரான், பூரீ கிருஷ்ணபிரான், புத்தர் பெருமான், இயேசு பிரான், முகம்மது நபிகள் நாயகம், பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகாநந்தர், மகாத்மா காந்தியடிகள் ஆகி யோர் மாந்தருள் மாணிக்கங்களாக, மகாத்மாக்களாக, மக்களுள் மிக உயர்ந்தவர்களாகப் போற்றப்படுகிறார்கள். அவர்கள் அவ்வாறு போற்றப்படும்படியாக, எவ்வாறு அந்த உயர்வினை, எல்லோரினதும் வணக்கத்திற்குரிய உயர் நிலையினை அடைந்தார்கள் என்பதைச் சிறிதளவு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களின் உயர்வு, பணத் தினாலோ, பொருளினாலோ, பதவி அந்தஸ்தினாலோ ஏற்பட்டதன்று. அப்பெருந்தகைகள், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராகவே வாழ்ந் தார்கள்; எல்லோரும் வாழ வேண்டும், இன்புற்றிருக்க வேண்டும்; நல்லோர்கள் ஆக வேண்டும், நலனோம்பி வாழ வேண்டும் என்றே சதா காலமும், சிந்தித்தார்கள், பேசினார்கள், அவற்றையடைவதற் காகச் செயற்பட்டார்கள். அவர்களின் வாழ்வு கலங்கரை விளக்கமாக இருந்தது. வாழ்க்கையின் இருண்ட பக்கங்களில் நின்று கொண்டு வழி தெரியாமல் தட்டுத் தடுமாறியவர்களுக்கு ஒளி கொடுத்து நல்வழி காட்டியவர்கள். அவர்கள் சிந்தையிலே உள்ளியவை எல்லாம் உயர் வுள்ளல்-அதுதான் மனித ஈடேற்றம்; வாயினால் பேசியவையெல்லாம் உயர் போதனைகள், மெய்யினால் ஆற்றியவையெல்லாம் உயர் சாதனைகள். உயர்வான செயல்கள். 'உயர்வு' என்ற சொல்லிற்கு உரியபொருள் தந்தவர்கள் இப் பெரியார்கள். மனித விழுமியங்களே, மனிதர்களை உயர்வுக்கு இட்டுச் செல்பவை என்பதை நமக்கு நிரூபித் துக்காட்டிய பெருந்தகைகள் அவர்கள்.
மனித விழுமியங்கள் தரும் மனித உயர்வுதான், உண்மையான உயர்வு; நிரந்தரமான உயர்ச்சி. அத்தகைய உயர்வுதான், வாழ்க்கைத்
10

தரத்தையும் உயர்த்துகிறது. ஏனையோரின் வாழ்க்கைத் தரத்தையும்
உயர்த்த வழி வகுக்கிறது.
மனித விழுமிய உணர்வு மனிதனின் சிந்தையில் ஏற்படவேண்டும். அதற்கு மனித சிந்தை தூய்மையானதாக விளங்க வேண்டும். தூய சிந்தையிலேயே விழுமிய உணர்வுகள் தோன்ற முடியும். அவ்வாறு தோன்றுகின்ற விழுமிய உணர்வுகள், பின்னர் சிந்தையில் அழுக்குகள் படியாதவாறும் பார்த்துக் கொள்கின்றன. மனித உள்ளம் ஆனது எத்துணை தூய்மையுடையதாக இருக்கின்றதோ, அந்த அளவிற்கு, மனிதனின் உயர்வும் மேலோங்குகின்றது. “மாந்தர்தம் உள்ளத்தனை யது உயர்வு' என்று குறள் கூறுவதும் இதனையேயாகும். எனவே வாழ்க்கையில் உயர்வு பெற எண்ணுபவர்கள், வாழ்க்கைத் தரத்தை உயர்த்த விழைபவர்கள் முதலில் தமது மனங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். மனித விழுமியங்களின் உற்பத்தித்தானம் மனித உள்ளங்களேயாகும்.
மனிதனுடைய வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் மனித விழுமியங்கள் தேவை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மனிதனின் ஒழுக்கம், மனித விழுமியங்களினாலேயே ஆட்சி செய்யப்படுகின்றது. மனித ஒழுக்கம் மனித விழுமியங்களினாலேயே போஷிக்கப்படுகின்றது. ஒழுக் கம், மனிதனுக்கு உயர்வைத் தருகிறது. எனவே ஒழுக்கத்தை ஒருவன் தனது உயிரினும் மேலாக ஒம்பிப் பேணி வர வேண்டும் என்று நூல்கள் கூறுகின்றன. .."
மனித வாழ்க்கைத்தர உயர்வு என்பதில் மூன்று நிலைகளை அல்லது படிகளை நாம் அவதானிக்கலாம்.
முதல் நிலை, எத்துணைச் சிறியதொரு தீமையையும் எவர்க் கும் செய்யாதிருத்தல், எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாதிருத்தல். நேரடியாக, மட்டுமன்றி மறைமுகமாகவும் தீமையை உயிருள்ள வற்றிற்கோ, உயிரற்றவற்றிற்கோ செய்யக் கூடாது. அதனால் தனக்கு நன்மை ஏற்படுகின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும். எனவே, ஒருவன் தான் வாழ்க்கையில் உயர்வு பெற்று இன்பமாக வாழ விரும்புபவன், பிற உயிர்களுக்குத் தீமை செய்த லாகாது. பிறருக்குத் தீமை செய்யாமல் இருப்பது எவருக்கும் இயலக் கூடிய காரியம்.
வாழ்க்கைத் தர உயர்வின் இரண்டாவது நிலை, பிறருக்கு நன்மை நினைப்பது, நல்ல இனிமையான இன் சொல் வழங்குவது,
1.

Page 12
நன்மை செய்வது ஆகும். "ஈதல் அறம்'. அறம் செய விரும்ப வேண்டும்; பின் அறம் செய்ய வேண்டும். குடும்பத்தினர் அனைவரும் மனம், வாக்கு, காயம் ஒத்து விரும்பிச் செய்வதுதான் அறம். பேர், புகழ், விலாசத்திற்காகக் கொடுக்கும் கொடை அறம் ஆகாது. ஈதல் என்பது நிதியும் பொருளும் கொடுத்தல் மட்டும் தான் என்று எண்ணக் கூடாது. பண்பாக நல்ல இனிய வார்த்தைகள் வழங்கல், சரீர உதவி, சிரமதானப் பணிகள், இரக்கம் கொள்ளுதல் எல்லாமே ஈதல்தான். அத்தகைய ஈதலும் அறம்தான். எல்லாவித அறங்களும் பிறருக்கு நன்மைபயப்பனவே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அறங்கள் செய்பவனுக்கும் நன்மையே கிடைக்கும். எனவே வாழ்க்கைத்தர உயர் வின் இரண்டாவது நிலை, பிறருக்கு நன்மை செய்துவாழ்தல்.
மனித வாழ்க்கைத் தர உயர்வின் மூன்றாவதும் இறுதிநிலையும், பிறர் நல்வாழ்வு வாழ்ந்து மகிழ்ச்சியெய்தும்போது, நாமும் அம் மகிழ்ச்சியில் பங்கு கொண்டு மகிழ்வெய்தும் உயர் நிலை என்பதாகும். இதனை, அடைவது மிகவும் சிரமம். தன் நன்மைக்காகப் பிறருக்குத் தீமை செய்யாது விடலாம்; பிறருக்குப் பல வழிகளில் நன்மையும் செய்யலாம். ஆனால் பிறரின் நல்வாழ்வைக் கண்டு, பொறாமை கொள்ளாது, சகித்துக் கொள்வதும், மகிழ்ச்சி கொள்வதும் மிக அரிதான காரியம். யான் பெற்ற இன்பம், ஏன், அதிலும் கூடுதலான இன்பம், எல்லோருக்கும் கிட்ட வேண்டும், என எண்ணுவதும், அவ் வாறான இன்பங்களை மற்றையோர் பெற்று அனுபவிக்கும்போது, அக் காட்சியைக் கண்டு பூரிப்பு அடைவதும் ஆகிய உயர்ந்த நிலையினை நாம் அடைவோமானால், அதைவிட வாழ்க்கைத் தர உயர்வு வேறெது வுமே இருக்க முடியாது. நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் இந்த உயர் நிலையை அடைய முயற்சிப்போமாக.
2

4. சத்தியம்
சத்தியம், எல்லா விழுமியங்களுக்கும் அடிப்படையானது; ஆதார மானது. எனவே, அது மிக உயர்ந்த விழுமியமாகப் பேசப்படுகிறது. சத்தியம் நித்தியமானது; மாறுந் தன்மையற்றது; கால, தேச, வர்த்த மானங்களையெல்லாம் கடந்து நிற்பது, எவனொருவன் சத்தியத்தை உபாசித்து, வாழ்க்கையிலும் கடைப்பிடிக்கிறானோ, அவன் மனிதருள் மாணிக்கமாகி விடுகின்றான். பண்டைய காலத்து அரிச்சந்திரன் முதல் அண்மைக் காலத்து மகாத்மா காந்தி அடிகள் வரை, சத்திய விரதி களையும், சத்தியத்தை ஓம்பியவர்களையும் நாம் அறிந்துள்ளோம். அவர்களின் வாழ்க்கையும், வரலாறும் எமக்குக் கலங்கரை விளக்கமாக அமைந்துள்ளன. ஆயினும், அத்தகைய ஒளி விளக்குகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றி, எமது வாழ்க்கைப் படகுகளையும் இருட் டில் நின்று தத்தளிக்காது, கரையேற்ற முயல்பவர்கள் எத்தனை பேர் இன்று உளர், என்பது வினாவாகவே உள்ளது.
சத்தியம் என்பதை அறியவும், உணரவும், சத்தியத்தை வாழ்க்கை யில் பின்பற்றவும், இவ்வுலகில் மனிதனுக்கு மட்டுமே முடியும். ஏனைய உயிருள்ள, உயிரற்ற படைப்புக்களுக்கு இவ் ஆற்றல் இல்லை. அந்த வகையில், மனிதன் உயர்ந்து நிற்கின்றான். மனிதனுக்கு இயல்பாகவே உள்ள உயர்வினைச், சத்தியத்தை ஒம்புதல் மூலம் அவன் பேணிக் கொள்ள வேண்டியது அவசியம் ஆகின்றது. சத்தியத்தை உணர்வதற்கு, மனிதன் தனது விவேகத்தையும், உள்ளுணர்வினையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மனச்சாட்சி என்று ஒன்று மனிதனிடம் உள்ளது. சரி எது? பிழை எது?; உண்மை எது? பொய் எது?, அசல் எது? நகல் எது?, நல்லது எது? கெட்டது எது? என்று சிந்தனைகள், பேச்சுக்கள், செயல்கள் ஆகியவற்றை இனங்கண்டு தரம் பிரித்து, ஒவ்வொரு கணமும் மனிதனுக்குக் கூறிக் கொண்டே மனச்சாட்சி இருக்கிறது. விவேகமும் உள்ளுணர்வும் மனச்சாட்சிக்குத் துணை புரிகின்றன. இத்துணை வாய்ப்பினைப் பெற்றிருந்தும், மனிதர்களுள் எத்தனை பேர், தத்தம் மனச்சாட்சிக்கு மதிப்பளித்து, மனச்சாட்சி கூறுவதைக் கேட்டு ஒழுகுகிறார்கள். அவ்வாறு செய்யாமையினால்தான், மனிதர் கள் சொல்வழி கேளாதவர்கள் ஆகிவிட்டனர். சொல்வழி கேளாத மனிதர்கள் வாழும் உலகில், ஒழுங்கினை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். எல்லாம் அறிந்தவர்கள் என்று கூறிக்கொள்கின்ற மனிதர்கள் ஏனோ அறிய வேண்டியவற்றை அறியாது இருக்கிறார்கள்? என்பது புதிராகவே இருக்கின்றது.
3

Page 13
மனச்சாட்சி ஒருபுறம், ஐந்து புலன்களும் மறுபுறம். இவற்றிற்கு இடையில் மனிதன். பெரும்பாலும் மனிதர்கள் பஞ்சப் புலன்களின் சொல்வழியே ஒழுகுகின்றனர். புற உலக ஆசா பாசங்களில் மனிதனை ஈர்த்துச் செல்வன, மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் அவனின் புலன்கள். இங்கு பொய்ம்மைக்குத்தான் முக்கியத்துவம். பொய்யை நினைக்க வேண்டியுள்ளது; பொய்யையே பேசவேண்டியுள்ளது; பொய் வேலைகளையே செய்ய வேண்டியுள்ளது. புலன்களுக்கு அடிமைப் பட்டால், மனிதன் பொய்யினை ஒரு வாழ்க்கைப் பழக்கமாகவே வாழ்க்கையில் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றான். அதிலிருந்து அவனை மீட்டெடுப்பது சிரமம். எனவே அத்தகையவன் பரிதாபத்திற்குரியவனாகின்றான். பொய்யை முதலாகக் கொண்டு, வாழ்பவர்கள், என்றுமே நிம்மதியுடன் வாழ்ந்ததில்லை; இறுதியில் அழிவையும் நிச்சயமானதாக்கிக் கொள்கின்றனர்.
புலன்களின் கோரப் பிடியிலிருந்து தப்பிக் கொள்ளக் கூடியவர் களே, மனச்சாட்சியின் சொல்லுக்குக் கட்டுப்படுபவர்கள். அவர்களே மனச்சாட்சியின்படி ஒழுகுபவர்கள். அவர்களே விவேகிகள்; சத்திய வான்கள். இன்னும் ஒருபடி அழுத்திக் கூறுவதானால், அவர்களே உண்மையான மனிதர்கள். மனிதர்கள் மனிதத் தன்மைகளைக் கொண் டிருத்தல் அவர்களின் இயல்பு; இயல்பு மாத்திரமல்ல, அது அவர்களின் உரிமையுங் கூட.
உண்மையைச் சிந்தித்தல், வாய்மையைப் பேசுதல், மெய்ம்மை யானவற்றைச் செய்தல் என்பன மனித இயல்புகள், மனித உரிமைகள் ஆகும். அவற்றைப் புறக்கணித்தல் என்பது மனித இயல்புக்கு மாறா னது மட்டுமல்ல, மனித உரிமை மீறல் எனும் குற்றமும் ஆகின்றது. மனிதன் தனது கடமைகள் யாவை? உரிமைகள் எவை? என்பதை அறிந்து கொண்டு, அவற்றிற்கேற்றபடி ஒழுகும்போது, அவனுக்கு மனச்சாட்சி உறுதுணையாக நிற்கின்றது. மனச்சாட்சியின்படி நடப்ப வர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பாதை தவறியவர்கள் ஆக மாட் டார்கள். ஏனெனில், மனச்சாட்சி, சத்தியத்தைக் கலங்கரை விளக்க மாகக் கொண்டது.
மக்களிற் பலர், தம்மினத்திற்கே உரித்தான சத்தியத்தை, மனித குல உரிமையை உணரவோ, உணர்த்தவோ வகையறியாது குழம்பு கின்றனர். தமது ஐம்புலன்களின் வாயிலாக, அப்புலன்களினால் உந்தப் பட்ட நிலயில், அவற்றிற்குக் கட்டுண்ட முறையில், சத்தியத்தைக் காணவும், காட்டவும் தலைப்படுகின்றனர். அதனாலேயே குழப்பம் ஏற்படுகிறது. உலகில் இன்றுநிலவுகின்ற குழப்பங்கள், ஒழுங்கீனங்கள்,
14

துன்பங்களுக்கெல்லாம் காரணம், மனிதர்கள் சத்தியத்தை விட்டு வெகு தூரம் விலகிச் சென்று கொண்டிருப்பதுதான். சத்திய ஒளி சற்றேனும் தெரியாத புள்ளியை அல்லது எல்லைக் கோட்டினைத் தாண்டிவிட்டால், மனிதத்துவம், மனித தர்மம், மனித நீதி என்பவை யும் மறைந்துவிடும் அபாயம் உண்டு. எனவே மனித இனம் இப் பேராபத்தினின்றும் காப்பாற்றப்பட வேண்டும்.
மனிதனைக் கீழ்மைப்படுத்தும் எதனையும் மறந்துவிட வேண்டும். மனிதன் செல்கின்ற நேரிய, சீரிய பாதையைத் திசைதிருப்பும் எவற்றை யும் துறந்துவிட வேண்டும். தன்னுட் சென்று, விவேகத்தையும் உள்ளுணர்வையும் பயன்படுத்தி, மனத்தை ஒரு வழிப்படுத்தி, மனச் சாட்சியின் துணையுடன் சத்தியத்தை உணர்ந்துகொள்ள முடியும். தன்னையறிதல், தன்னையுணர்தல் என்று பெரியவர்கள் இதனைக் கூறுவர். இச் சொற்பிரயோகங்களைக் கண்டு பயம் கொள்ளத் தேவை யில்லை.
மனிதன், சத்தியத்தை அறிவதால் மாத்திரம், போதாது. இன்று சத்தியம் பற்றியும் அதன் மகத்துவம் பற்றியும் பேச வல்லார் பலர் உள்ளனர். எனவே, சத்தியம் பற்றிய அறிவு, நிரம்ப அவர்களுக்கு உண்டு என்பதைச் சந்தேகிப்பதற்கில்லை. எனினும் அவர்கள் யாவரும் சத்திய வழியில் ஒழுகுகின்றார்களா என்பதுதான் கேள்வி. ஒன்றைக் கற்று அறிந்து கொள்வது இலகு. ஆனால் கற்றாங்கு ஒழுகுவதுதான் சிரமம். சத்தியத்தின்படி நடந்து கொள்ளாமைக்குக் காரணம், சத் தியம் பற்றிய அறிவு இல்லாமையல்ல, சத்திய வழியைப் பின்பற்ற மறுப்பதேயாகும். அறிதல், ஒழுகுதல் ஆகிய இரண்டும் இணையும் போதுதான் சத்தியம் முழுமையாகச் செறிகிறது. மனிதன் இந்த நிலையை எய்துதல் வேண்டும். சத்தியத்தை அறிவதன் மூலம், மனிதன் தன்னிடமுள்ள குறைகளையும், நிறைகளையும் மதிப்பிட்டு, குறைகளை நீக்கி, நிறைவுகளை மேலும் நிறைவுபடச் செய்ய வேண்டும். ஒவ் வொரு மனிதனும் இச் செயன்முறைக் கூடாகத் தன்னைச் செலுத்தும் போது, சமுதாயத்தில் சாந்தியும் அமைதியும் நிலவும் என்பது உறுதி யாகிவிடும்.
மனிதன் ஒவ்வொருவனும் சத்திய வளம் கொண்டவன். எனவே சத்தியத்தை அறியவும், உணரவும், சத்திய வழி நிற்கவும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயலும் என்பது இதிலிருந்து பெறப்படுகிறது. இங்கு
15

Page 14
தான், மனிதப் பிறவியின் உயர்வும் சிறப்பும் வெளிப்பாடாகிறது. கிடைக்கப் பெற்ற இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திச் சத்தியத்தின் மூலம் மனித வாழ்வினைச் செம்மையும், சீரும்; செழுமையும், இனிமை யும் நிறைந்ததாக ஆக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையு மாகும். இந்நிலை ஏற்படும்போது, மனிதப் பிறவியை வெறுத்து ஒதுக்க வேண்டிய நிலை தோன்றாது. ‘மனித்தப் பிறவியும் வேண்டு வதே, இந்த மாநிலத்தே' என்ற உன்னத நிலை எங்கும் பிரவாகிக்கும்.
மனித விழுமியங்களுள் மிக உயர்வானது சத்தியம். முதன்மை யானதும் சத்தியம். எல்லா விழுமியங்களும் தோன்றுவதற்கு மூலாதார மும் சத்தியம்,
'சத்தியம் வத'-எப்பொழுதும் உண்மையே பேசு. ‘சத்திய மேவ ஜயதே'-வாய்மையே வெற்றி பெறும். 'ந அன்றாதம்'-“பொய்ம்மை'யால் ஒருபோதும் வெல்லமுடி
шFT&5].
'பொய்யாமை பொய்யாமை ஆற்றில் அறம்பிற
செய்யாமை, செய்யாமை நன்று’’ --குறள்.
எனும் சத்திய வாசகங்களை உணர்ந்து, சத்தியத்தை வாழ்வில் கடைப் பிடித்து நல்வாழ்வு வாழ்வோமாக.
16,

5. வாழ்க்கை நலம் பேணல்
உண்மை, வாய்மை, மெய்ம்மை எனும் மூன்று சொற்களும் பொய்யாமை எனும் பொருளையே சுட்டி நிற்கின்றன. உள்ளத்தால் பொய்யாமை உண்மை; வாக்கு எனும் பேச்சினால் பொய்யாமை வாய்மை; உடலினால் பொய்யாமை மெய்ம்மை. சத்தியம் அவை அனைத்திலும் விரவி நிற்கின்றது சத்தியம் ஒன்றுதான். அது எல்லோ ராலும் பேணப்பட வேண்டியது; மதிக்கப்பட வேண்டியது; வணக்கத் திற்குரியது. அவ்வாறு செய்பவர்கள் வாழ்க்கை வளம் பெறுவர்; வாழ்வு நலம் அடைவர். சத்தியவான்கள் என்றென்றும் போற்றப் படுவர்; துதிக்கப்படுவர். அவர்களுக்கு இன்பமே சூழும்; எந்நாளும் துன்பமில்லை. oኃ
உண்மைக்கு அழிவில்லை; மாற்றமுமில்லை. வாதப் பிரதிவாதங் களாலோ சொற்போர், சொல்வன்மையாலோ, உண்மையை மாற்றி விடலாம் அல்லது திரித்துவிடலாம் அல்லது துரத்திவிடலாம் என்று எண்ணுவது தவறு. உண்மையை மறைப்பவர்களும், மறுப்பவர்களும் உண்மை என்றோ ஒருநாள் வெளிப்பாடாகும், வெளிச்சத்திற்கு வரும்; அந்த வெளிச்சத்தில் தங்கள் புரளிகளும் புரட்டுக்களும், பொய் வேடங்களும் அம்பலத்திற்கு வரும்; அப்பொழுது மனிதர்களுக்கு முகம் கொடுக்க முடியாது வெட்கித் தலைகுனிய வேண்டி வரும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். உண்மை வெல்லும் என்பது உறுதி யான கூற்று. அதில் சந்தேகத்திற்கு இடம் இல்லை. உண்மையின் பக்கம் நிற்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றியடைவர் என்பது வரலாறு தரும் பாடம்.
ஒன்றை நினைந்து இன்னொன்று பேசி, பிறிதொன்றைச் செய் வது என்ற நிலைப்பாடு மனிதர்களிடையே இன்று பரவலாகக் காணப் படுகிறது. இன்று உலகில் காணப்படுகின்ற துன்பங்கள், துயர்களுக் கெல்லாம், இத்தகைய பாசாங்குகள், கபடத் தன்மைகள், ஏமாற்றுக் கள் என்பன வாழ்க்கையில் பல தரப்பினரிடமும் இடம் பெற்றிருத்தலே காரணமாகும். மனித தர்மத்திற்கும் மனித விழுமியங்களுக்கும் உடன் பாடற்ற இவைகள் அறவே தவிர்க்கப்பட வேண்டியவை. எண்ணம், சொல், செயல் ஆகியவற்றிற்கிடையே ஒருமைப்பாடு இருக்கும் பட்சத் தில் திரிகரண சுத்தி எனும் மூவகைத் தூய்மை ஏற்படுகின்றது. மூவகைத் தூய்மையாளர்களே மனித விழுமியங்களைப் பேணுபவர்: சத்தியத்தைக் கடைப்பிடிப்பவர்.
17

Page 15
உள்ளத்தாற் பொய்யாது, உண்மைவழி நின்று ஒழுங்குபவர்கள், எல்லா மக்களின் மனங்களிலும் உறைகின்ற பெற்றியைப் பெற்றவ ராவர். மகாத்மா காந்தியடிகள் உண்மையைப் போற்றியவர், உண்மை யொழுக்கம் மேற்கொண்டவர். அதனால் எல்லோர் மனங்களிலும் நீங்காத இடத்தைப் பெற்று விட்டார். உண்மை வாழ்வு பலம் பொருந் தியதாகவும் ஆகிவிடுகின்றது. அசைக்க முடியாத மாபெரும் சாம்ராஜ் யத்தையே அசைத்து, பாரதத்திற்குச் சுதந்திரம் பெற்றுக் கொடுத்த காந்தியடிகளின் மாபெரும் வலிமை, சத்திய வாழ்வு பெற்றுத்தந்ததே யாகும். காந்தியடிகளின் வாழ்வும், போராட்டமும் சத்திய சோதனை கள் நிரம்பியவை; அவர் செய்த வேள்வி, சத்திய வேள்வி; எனினும் அவர் சத்திய நெறியை உறுதியாகப் பற்றி, ஒழுகியும் வந்தார் அவரின் வெற்றி சத்தியத்தின் வெற்றியாகும்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்."
என்பது வள்ளுவர் கூறும் வாய்மையின் வரைவிலக்கணம். பிறருக்குத் தீமை விளைவிக்காத வகையில் பேசுவதுதான் வாய்மை, பண்பான சொற்களை, இனிமையான சொற்களை, பணிவான சொற்களை, பயனுள்ள சொற்களை அதேவேளை கரவு, வஞ்சகம், பொறாமை விரவாத சொற்களைத் தேர்ந்து பிறருடன் பேசும்போது, அச் சொற் கள் பிறருக்குத் தீங்கு விளைவிக்காதென்பது உறுதி. இச் செயல் எல்லோருக்கும் இயலக் கூடியது. தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் தோன்றும்போது, பிறருக்குத் தீங்கு நினைத்தலும் உடன் தோன்றிவிடுகிறது. தொடர்ந்து தீங்கு விளைவிக்கும் பேச்சும், செயலும் நிகழ்கின்றன. இன்று பொதுவாக மக்களிடையே இந்நிலை யினையே காண்கின்றோம். அதன் அறுவடையே உலகில் காணப்படு கின்ற துன்பங்களும் துயர்களும். தினை விதைத்தவன் தினை அறுப் பான் என்பது பொய்யாமொழி. இது எக்காலத்திற்கும் உண்மை. அவ்வாறிருக்க பிறர் வாழ்வைக் கெடுக்க நினைப்பவர், பிறருக்குத் தீமைபயக்கும் பேச்சைப் பேசுபவர்கள், பிறருக்குத் தீங்கினைச் செய் பவர்கள் தாம் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, திருப்தியாக வாழவேண்டும் என எதிர்பார்ப்பது மடமையிலும் மடமை. அத்தகைய சுபீட்ச வாழ்வு தீங்கினருக்கு ஒருபோதும் கிட்டாது. இரும்பைத் தின்று போட்டு இஞ்சித் தண்ணிரைக் குடித்தவன் கதைபோல் ஆகிவிடும். இஞ்சித் தண்ணிரால் இரும்பைச் சமிபாடடையச் செய்ய முடியாது. எனவே, நல்வாழ்விற்கு உண்மை வழியை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. உண்மையைப் பேசினால் நன்மையைப் பெறலாம்.
18

உண்மை, தமக்கும் பிறருக்கும் நன்மையைத் தரவல்லது. உலகில் உண்மையை உணர்ந்து கொள்ளும் ஒருவன்தான், எவ்வுயிரையும் வெறுக்காதவனாக விளங்குவான். பிற உயிர்கள் மீது அன்பும் இரக்க மும் செலுத்துவது தன்மீது அன்பும் இரக்கமும் கொள்ளுதல் போன் றது. பிறரைக் கொடுமைப்படுத்துவது அல்லது பிறருக்கு இன்னா செய்தல் என்பது தன்னைக் கொடுமைப்படுத்துவது அல்லது தனக்கு இன்னா செய்தலுக்கு இணையாகும். பிறருக்குச் சேவை செய்தலும், தனக்குச் சேவை செய்தல் போன்றதே. பிறரின் நல்வாழ்வைக் கண்டு மகிழ்தலும், தன்னுடைய நல்வாழ்வில் மகிழ்ச்சி கொள்வதற்கு ஒப் பாகும். இத்தகைய அரிய உண்மைகளை மனிதர்கள் உணர்ந்துகொண் டால், உலகில் துன்பம் ஏது, துயர் ஏது? எல்லோரும் இன்புற்று இருத்தலன்றி, வேறொன்றும் அறியாதவர்களாகி விடுவர், உலக மாந் தர்கள்.
உண்மை தெளிந்தவர்கள், உண்மை எது, பொய் எது? என இனங்காணும் ஆற்றலைப் பெற்று விடுவர். உண்மையில் மாத்திரம் தம் கருத்தைச் செலுத்துவர். உண்மைக்கே மதிப்பளிப்பர். பொய்ம்மையை மறந்து விடுவர். மனச்சாட்சியினை உரைகல் ஆகக் கொள்வர். மனச்சாட்சிக்கு விரோதமானவற்றை ஒதுக்கி விடுவர். நடுவு நிலைமை அவர்களது தாரக மந்திரம். சிறிது காலம் நன்மையே தருவது என்றாலும், நடுவு நிலைமை தவறுதலால் வருகின்ற வளத் தையோ, செல்வத்தையோ, அப்பொழுதே, அக்கணமே வேண்டாம் என்று தள்ளி வைத்து விடுவார்கள். தவறான வழியில் வருகின்ற பொருள், பண்டம், பணம் முதலியன தன்னை மட்டுமல்ல, தனது சந்ததியையும் அழித்து விடும் எனும் உண்மையை உணர்ந்தவர்கள் நடுவு நிலைமையாளர்.
**செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து.' என்பது குறள். உண்மையான, செம்மையான வழியில் கடின உழைப்பின் மூலம் பெற்றுக்கொள்ளுகின்ற செல்வம், இடையில் அழிந்து போகாமல் அவனின் சந்ததியினர்க்கும் உறுதியாக நன்மை தரும். விவேகம் உள்ளவர்கள், உண்மை தெளிந்தவர்கள், தன் சந்ததியினரின் நல்வாழ்விலும், சுபீட்சத்திலும் சிரத்தை உள்ளவர்கள் ஒருபோதும் தன் கைகளை நீட்டி இலஞ்சம், பெற்றுக்கொள்ள மாட்டார்கள். பிறர் பொருளைச் சூழ்ச்சியினால் அபகரிக்கமாட்டார்கள்; பிறர் மனம் வருந்தும்படி எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டார்கள். சீர்தனம், வரதட்சணை , சன்மானம் என்பவை கூட, பிறரின் மனங் களை வருத்திப் பெற்றுக் கொள்ளப்படுபவைதான் என்பதை உளங் கொள்ளுதல் நன்று.
19

Page 16
உண்மையை அறிந்து கொண்டதும், அந்த உண்மை எந்த இக் கட்டான நிலையிலும், எம்மைப் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்க வேண்டும். உண்மையில் உறுதியான நம்பிக்கை கொள்ளாதவர்களே, உண்மை பேசப் பயப்படுகிறார்கள். இது நாளாந்தம் நாம் காணக்கூடிய காட்சிகளாகவே உள்ளது. இரவு வெகு நேரம் கழித்து வீட்டுக்கு வரும் மகனை நோக்கி, அவனது அப்பா, "ஏன் இவ்வளவு நேரம் பிந்தி வருகிறாய்' என்று கேட்டால், உண் மைக் காரணத்தைப் பெரும்பாலும் மறைத்துவிட்டு வேறு பொய்க் காரணங்களே வெளிவரும். இவ்வாறுதான் குடும்பத்திலும் சரி,தொழில் பார்க்கும் இடங்களிலும் சரி பொய்க்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது. ஏன், என்று ஆராய்ந்து பார்த்தால், உண்மை சொன்னால் தண்டனை கிடைக்கும் என்று பயப்படுகிறார்கள். தண்டனைக்கு அஞ்சியே சிறுவர்கள் தொடக்கம் வளர்ந்தோர் வரை பொய் சொல் கிறார்கள் என்பது தெரிய வருகின்றது. ஒரு பொய்யை நிலைநாட்டு வதற்குப் பல பொய்கள் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது. தவறு செய்பவர்கள், தவறுகளை உணர்ந்து, உண்மையை ஒத்துக் கொள்ளும் பட்சத்தில், மன்னிப்புக் கிடைக்கும் நிலைமை ஏற்படு மானால், பொய் சொல்ல வேண்டிய நிலைப்பாட்டினைத் தவிர்த்துக் கொள்ளலாம். உண்மையை உணர்ந்தவர்கள் திரும்பவும் தவறுகளைச் செய்யமாட்டார்கள். பெற்றோர்கள், பெரியவர்கள், ஆசிரியர்கள் முத லியோர், நல்ல புத்திமதிகளைக் கூறி வளர்ந்து வரும் சந்ததியினரை உண்மை வழியில் இட்டுச் செல்வதற்கு முயல வேண்டும். மனித விழுமியங்களை உணர்த்திவிட்டால் எல்லோரும் மனிதர்கள் ஆகி விடுவர். உலகம் வாழ்வதற்குச் சிறந்த இடமாகிவிடும்.
20

6. தரும நெறி
வாழ்க்கையில் வெற்றியடைவதற்கும், அந்த வெற்றிகள் நிலைப் பதற்கும் ஒரே வழி, மக்கள் தர்மம் தவறாது, நீதி நெறியில் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வதுதான் என்பது அறிஞர்களின் கருத்து. தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சரி, தாம் ஏற்றுக் கொண்ட பொது வாழ்விலும் சரி, தர்மம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். அப்படியாயின் தர்மம் எது? தர்மம் அல்லாதது எது? என்பதை இனம் பிரித்து அறிந்து கொள்வது எவ்வாறு என்ற வினா எழலாம். ஒருவருக்குத் தர்மமாகத் தோன்றுவது, ஏனையோருக்கு அதர்மமாகத் தோன்றுகிறது. ஒரு காலப் பகுதியில் தர்மம் என்று கொள்ளப்பட்டவை, பின்னொரு காலப் பகுதியில் அவ்வாறு கொள்ளப் படாத நிலையும் இருந்து வருகிறது. தர்மம், அதர்மம் என்று வேறு படுத்திக் காட்டக் கூடிய உரைகல் அல்லது அளவு கோல் உண்டா? இவ்வாறு சாதாரண மக்களிடையே மாத்திரமல்ல, கற்றறிந்த அறிஞர் களிடையேயும் கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் காணப்படுகின்றன.
தர்மங்கள் எல்லாக் காலங்களுக்கும், எல்லோருக்கும் உரியவை என்றும்; அவ்வாறின்றிக் குறிப்பிட்ட குழுவினருக்கும், குறிப்பிட்ட காலப் பகுதிக்கும் உரியவை என்றும், வகுத்துக் காட்டப்பட்டுள்ளன. உண்மை, அன்பு, அஹிம்சை, கருணை, சாந்தி போன்றவை எல் லோருக்கும் உரிய, எக்காலத்திற்கும் ஏற்ற தர்மங்கள், விழுமியங்கள், அறங்கள், நீதிகள் என்று கொள்ளப்படுகின்றன. இடைக்காலங்களில் கால வேறுபாட்டினாலும், சமூக மாற்றங்களினாலும், “பழையன கழிதலும், புதியன புகுதலும், வழுவல’ போன்ற கருத்துக்கள் வலுப் பெற்றன. பழையன, பயனற்றவையாயின் தாமாகவே கழிந்து விடும்; புதியன பயனுள்ளவையாயின் தாமாகவே புகுந்து விடும். இந்த நிலைப் பாட்டினைத் தடுக்கும் சக்தி யாருக்கும் கிடையாது. இதனைச் சரிவர உணர்ந்து கொள்ளாதவர்கள், பழையனவெல்லாம் பயனற்றவையெனக் கருதி, பழையனவற்றைக் கழிக்க எத்தனித்தார்கள்; புதியன எல்லாமே சிறந்தவையென்று கொண்டு அவற்றைப் புகுத்த முயற்சித்தார்கள் அப்பொழுதுதான், சமூகத்தில் சமநிலை சரிந்தது; நடுவுநிலைமை நலியத் தொடங்கியது; அடிதலை மாறியது; இந் நிலைமை தற்காலத் தில் மேலும் வலுப்பெறுகிறது. பழையன எல்லாம் நல்லனவுமல்ல; புதியன வெல்லாம் கூடாதனவுமல்ல என்பதையும் மறுப்பதற்கில்லை. எனினும், பழையன யாவும் கூடாதனவுமல்ல; புதியன யாவும் நல்லனவு மல்ல. என்பதையும் மறைக்க முடியாது.
21

Page 17
மாற்றங்கள், வளர்ச்சியைக் குறிப்பன. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது தான், சமூக வளர்ச்சியும் நிகழ்கின்றது. மாற்றங்கள் ஏற்படுவது நியதி. மாற்றங்கள் நிகழ்வதைத் தடுக்க முடியாது; உண்மை; இக் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியனவே. ஆனால் சமூகத்திற்கு ஒவ்வாத, அதேவேளை சமூக உறுதிப்பாட்டினைக் குலைக்கக் கூடிய, கண்மூடித்தனமான மாற்றங்கள் புகுத்தப்படுவதால் சமூகக் கேடுகள், சீர்குலைவுகள் என்பனவே நிகழும் என்பதையும் மன திற் கொள்ளவேண்டியது அவசியம் நல்ல, முற்போக்கான மாற்றங்கள் சமூகத்தினரிடையே புகுந்து கொள்கின்றன. அதனால் தீமை இல்லை. ஆனால், தீய, எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும் மாற்றங்கள் சமூகங்களில் வலிந்து புகுத்தப்படுகின்றன. அவற்றாலேயே, சமூக அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.
பழைமையைக் கழித்தலுக்கும், பழைமை கழிதலுக்கும் உள்ள வேறுபாட்டையும்; புதியன அல்லது மாற்றங்களைப் புகுத்தலுக்கும், அவை புகுதலுக்கும் இடையேயுள்ள வேறுபாட்டையும் நன்கு விளங் கிக் கொள்ளுதல் அவசியம். கழித்தலும், புகுத்தலும் வெளித்தலை யீட்டினால் வலிந்து நிகழ்த்தப்படுபவை. கழிதலும், புகுதலும் தாமாக வும் இயல்பாகவும் நிகழ்பவை. தாமாகவும், இயல்பாகவும் நிகழ் வனவே மனித சமுதாயத்திற்கு ஏற்றவை; இனியவை; வளர்ச்சியை நோக்கியவை. அதனால் அவை மனித சமுதாயத்தை வாழ்விப்பவை; வளர்ப்பவை எனலாம்.
பண்டு தொட்டு இன்றுவரை, மக்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தர்மங்கள் உள்ளன. அத் தர்மங்கள், மக்களுக்குப் பயனுள்ள னவாயும் மக்களை வாழ்விப்பனவாயும் வாழ்வில் வெற்றியைத் தரவல்லனவாயும் இருந்து வருகின்றமையினாலேயே, அவை மக்க ளிடையே இன்னமும் சிரஞ்சீவியாக வாழும் தர்மங்களாக உள்ளன. இவ்வாறு வாழுகின்ற தர்மங்கள், அவை பழையன என்பதற்காகக் கழிக்கப்படுதல், தேவையற்ற செயலாகும். இந்தப் பூமி பழையது; வானம் பழையது; காற்று, நீர், மண் யாவும் பழையன. அதனால் அவற்றையெல்லாம் கழித்து விட முடியுமா? மனித இனம் தோன்றிய காலந் தொடக்கம், மனிதர்கள் தங்கள் கால்களையே பயன்படுத்தி நடக்கிறார்கள். காலால் நடப்பது பழைமை என்பதற்காக, அதைத் தள்ளி விட்டுத் தலையால் நடக்கலாகுமா? அது புதுமையாகுமா?
தலைமுறை, தலைமுறையாக, மக்களை வாழ்வித்து வருகின்ற தர்மங்கள், எம்மால் பேணப்பட வேண்டும்; வாழ்க்கையில் கடைப்
பிடிக்கப்பட வேண்டும். அத்தோடு அடுத்த சந்ததியினருக்குக் கையளித்
22

தலும் வேண்டும். மனித குலம் தழைத்துச் செழித்து வளர்வதற்கும், காலந்தோறும் மனிதர்கள், மனிதத் தன்மையுடன் மனிதர்களாக வாழ்வதற்கும்; உலகம் ஒன்று மனித குலம் ஒன்று, என்ற விழுமிய உணர்வினை மக்களிடம் ஏற்படுத்துவதற்கும்; சாந்தி, அமைதி, சமா தானம் உலக மாந்தரிடையே ஓங்கி நிலவுவதற்கும்; அதன் விளைவாகச் சமூக, பொருளாதார, கலாசார, ஆத்மீக, அறிவியல் துறைகள் ஆகிய சகல துறைகளிலும் மனிதர்கள் பெரு வளர்ச்சி எய்துவதற்கும்; இந்த உலகில் மானுடம் வெல்வதற்கும்; தர்மங்கள், மனித விழுமியங்கள், மனுக்குல நீதி, அறங்கள் என்பன பாதுகாத்துப் பேணப்படுதல் மிக மிக அவசியம் ஆகின்றது. உலகத்திலுள்ள எல்லாவற்றிலும் தர்மமே பெரியது. இந்த உலகின் சாரமே தர்மம்தான் என்கின்றன நூல்கள்.
இனி, தர்மம் என்றால் என்ன? அதன் இலட்சணங்கள் யாவை?
என்பவற்றைத் தெளிவு படுத்துவோம்.
எவ்வெவற்றில், அஹிம்சை இடம்பெறுகின்றதோ, அவையெல் லாம் தர்மம் ஆகின்றன என்பது பெரியோர்களின் முடிவு; ஒரு சிந்தனை, பேச்சு அல்லது செயல் அஹிம்சையோடு இணைந்தும், அஹிம்சையின் பாற்பட்டதாகவும் அமையும் போது, அது தர்மம் என் பர். அஹிம்சைதான், இது தர்மமோ அதர்மமோ என்பதை இனங் கண்டு காட்டக் கூடிய உரைகல், அளந்தோ எடைபோட்டோ சுட்டக் கூடிய அளவு கோல் ஆகின்றது என்பது தெளிவாகின்றது. அடுத்து, எதில் இன்பம் விளைவாக இடம் பெறுகின்றதோ, அது தர்மம். இந்த உலகில் முன்னேற்றம், மேம்பாடு, வளர்ச்சி ஆகியவற்றை எது ஏற் படுத்துகின்றதோ, அதுவே தர்மம்.
'தர்மம் தலை காக்கும்’ என்பர். நல்ல முறையில் தர்மத்தின் அடிப்டையில் வாழ்பவர்களுக்கு ஒரு பொல்லாப்புமில்லை; எக் கேடும் அவர்களைச் சூழாது என்பது உறுதி. கண்ணை இமை காப்பது போல, மனிதர்களைத் தர்மமே காப்பாற்றுகிறது. அவர்களைத் தீய வழியில் சென்று தீமைகளைச் சந்திக்கத், தர்மம் ஒரு போதும் விடாது. இத்தகைய தர்மத்தின் வழியில் செல்பவர்களுக்குக், கேடு செய்ய நினைப்பவன் கெடுவான்; ஆனால் தர்மத்தின் வழி நிற்பவர்கள் எக்காலத்திலும் கெடுதலுக்கு உள்ளாக்கப்பட மாட்டார்கள். இறுதியில் தர்மம் வெல்லும்; அதர்மம் தோற்கும் என்பது முடிந்த முடிவு.
மனிதர்கள் தர்ம வழியில் செல்லுமாறு தூண்டுவது அஹிம்சை எனும் விழுமியமேயாகும். அந்த வகையில் அஹிம்சையே தலையாய
23

Page 18
தர்மமாகவும் விளங்குகின்றது. அஹிம்சை என்பது எவரையும் இம் சிக்காமை; எவருக்கும் இன்னா செய்யாமை ஆகும்.
மனத்தினாலோ, சொல்லினாலோ, செயலினாலோ எவர்க்கும் தீங்கு செய்யாமலும், தீய விளைவுகளை ஏற்படுத்தாமலும் இருத்தலே இன்னா செய்யாமை. அதுவே அஹிம்சை. இந்த வகையில், இப்பிர பஞ்சத்தின் கண் உள்ள உயிருள்ளவை, உயிரற்றவை, அசையும் பொருட்கள், அசையாப் பொருட்கள், நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் போன்ற எவற்றிற்குமே தீங்கு செய்தலோ, குற்றம் இழைத்தலோ, அவற்றின் சம நிலையைக் கெடுத்தலோ, அவற்றை அழிவுக்குள்ளாக்கு வதோ, எல்லாமே அஹிம்சைக்கு எதிரானவையாகவே கொள்ளப் படுகின்றன.
ஒரு செயல், அஹிம்சை சார்ந்ததோ, இல்லையோ என்பது அதனால் ஏற்படுகின்ற விளைவின் தன்மையைப் பொறுத்ததாகும். நல்ல விளைவுகள், நற் பயன்கள் கிடைக்குமாயின், அச்செயல் அஹிம் சையின் பாற்பட்டது என்று கூறிவிடலாம். அதனால், அச்செயல் தர்ம வழியில் செய்யப்பட்டதாகவும் விளங்குகின்றது. ஒருவனுக்கு அஹிம்சை கைவரப் பெற்றுவிட்டதென்றால், அவனுக்கு இவ் உலகில் பகைமையே இருக்காது. பகைவனும் நண்பனாகி விடுவான்.
தனிமனிதனும், சமுதாயமும் ஒழுங்காய், உறுதியாய், சமநிலையில் இருப்பதற்கும், முன்னேற்றம் எய்துவதற்கும் விதிமுறைகள் தேவை. இவ் விதிமுறைகள் தர்மத்தின் அடிப்படையில், நீதியின் பாற்பட்டதாக இருத்தல் வேண்டும். எதில் அஹிம்சை இடம்பெறுகிறதோ, அதுவே தர்மம், அதுவே நீதியென்றும் கண்டோம். தர்மம், நீதியின் அடிப் படையிலான சமூக ஒழுங்குவிதி முறைகளை அனுசரிப்பது, அஹிம் சையே. அவ்வாறு மேற்கொள்ளாது தர்மத்தைப் புறக்கணிப்பது அஹிம்சை அல்ல. அஹிம்சையும், தர்மமும் ஒன்றிற்கொன்று ஆதார மானவை. எனவே அஹிம்சையைப் பேணித் தர்ம வழி நின்று மக்கள் வாழும்போதுதான், மனித வாழ்க்கை சீரும் சிறப்பும் பெறும்.
24

7. இன்னா செய்யாமை
இவ்வுலகில் சிறந்த மனித விழுமியங்களைப் பேணி, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து வாழ்கின்றவர்கள் யாவரும் அஹிம்சை யைப் போற்றி, வாழ்விலும் மேற்கொள்பவர்களாகவே விளங்குவர். சகல உயிரினங்களிலும் ஒரே ஆன்மாதான் நீக்கமற நிறைந்துள்ளது. எனும் பேருண்மையை உணர்ந்தவர்கள் பிறருக்குத் தீங்கு நினைப் பதோ, செய்வதோ எங்ங்ணம்? பிறருக்கு இம்சை விளைவித்தால், நாம் எமக்குத்தான் இம்சை செய்கின்றோம் என்பதே உண்மை நிலை. ஆன்மிகமாக நாம் எல்லோரும் ஒன்றே, என்ற உணர்வு ஏற்பட்டு விட்டால், இவ்வுலகில் அஹிம்சை தலையெடுத்துவிடும். இவ்வாறே, நன்னடத்தை, அன்பு, கருணை, சாந்தி, தர்மம், சத்தியம் ஆகிய வற்றை மதித்து நடப்பவர்கள், அஹிம்சை எனும் விழுமியத்தையும் ஆராதிப்பவர்களாகவே விளங்குவர்.
வன்செயல்கள், இம்சை, ஒழுங்கீனம் ஆகியவை மனிதர்களிடையே காணப்படுவதற்கு, அடிப்படையில் அவர்களிடம் உள்ள பயம், பாது காப்பின்மை எனும் உணர்வு தான் காரணம் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பயத்தின் மேலீட்டினாலேயே, பிறரைத் தாக்க முயல் கின்றனர். மிருகங்களிடையேதான் இத்தகைய நிலையைக் காணலாம். அறிவு வளர்ச்சி பெற்றுள்ள மனிதர்கள், ஏன் தான் ஒருவருக்கொருவர் தீங்கு செய்ய எத்தனிக்கிறார்களோ என்பது தான் புரியவில்லை. சில வேளை, மனிதர்கள் பூரணமான பரிணாம வளர்ச்சியைப் பெற்றுக் கொள்ளாத நிலையில் இருக்கிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது. மிருக நிலையிலிருந்து மனித நிலைக்குப் பரிணாமம் நடைபெறுகின்ற போது, இன்னும் மனிதனிடம் மிருக உணர்வுகள் அற்ப சொற்பம் தேங்கிக் கிடக்கின்றன. எஞ்சிய மிருக உணர்வுகள் தான், மனிதனைத் தன்வயம் இழக்கச் செய்து. மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபாடு கொள்ளத் தூண்டுகின்றன. இந்த மிருக உணர்ச்சிகளிலிருந்து, மனிதன் விடுதலையடையும் போதுதான், மனிதன் மனிதனாகின்றான். மனித னாகிவிட்ட மனிதனாலேயே அஹிம்சையைப் பேணவும் மேற்கொள்ள வும் முடிகின்றது.
அஹிம்சை என்பது எவர்க்கும் இன்னா செய்யாமை. இன்னா செய்யாமை மாத்திரம் போதாது; பிறர் மனம் புண்படக் கூடியவாறு இன்னாத பேச்சுக்களைப் பேசவும் கூடாது. திட்டுதல், ஏசுதல், வீண் சொற்களைப் பிரயோகித்தல், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்திப்
25

Page 19
பிறரை ஆத்திரமூட்டுதல், போகவிட்டுப் புறங்கூறுதல், பொய்யுரைத் தல், சூளுரைத்தல், தூற்றுதல், கோள் சொல்லுதல், இகழ்தல், நிந்தித் தல், யாவுமே பேச்சினால் இழைக்கின்ற இம்சைகள். தீயினால் ஏற்பட்ட புண்கள் காலப்போக்கில் ஆறிவிடலாம். ஆனால் வாயினால் சுட்ட வடுக்கள் என்றுமே ஆறாது. அதனால் நாவைக் காத்துக்கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பெரும்பாலான பிரச் சினைகள், சண்டை, சச்சரவுகளை, நாவை அடக்குவதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியும். இனிய, அன்பும் ஆதரவும் நிறைந்த வார்த்தைகளையே, பணிவுடனும், பண்புடனும் பேசுவது என்ற உறு தியை நாம் கொண்டிருப்போமேயானால், வேறு அறங்கள் தேவை யில்லை. எவரின் பகைமையும் எம்மை நெருங்க மாட்டாது.
மனத்தாலும் எவர்க்கும் இம்சை நினைத்தல் ஆகாது. எண்ணங் கள் தான் செயலாக வெளிப்படுத்தப்படுகின்றன. கெடுவான், கேடு நினைப்பான், என்பது பழமொழி. பிறருக்குத் தீங்கு நினைப்பவன் தானே அழிந்து போவான்.
இம்சையை நினைக்கவோ, செய்யவோ தூண்டுவது ஒருவனிடம் ஏற்படுகின்ற கோபம், பொறாமை, எரிச்சல், அச்சம், அவா போன்ற உணர்வுகள். இத்தகைய அவல உணர்வுகள், அகத்தில் எழாதவாறு பார்த்துக் கொள்பவர்களே மகாத்மாக்கள். கோபம் வந்து விட்டால் அது பாவமாகவே முடியும் என்பர். கோபம் ஏற்படும் போது, என்ன பேசலாம், எவற்றைப் பேசக் கூடாது என்பதே தெரிவதில்லை. கோபம் போதையைத் தரும். அப்பொழுது மானம், மரியாதை, குலம், கல்வி, தானம், தவம், கெளரவம், கண்ணியம் அனைத்தும் நீங்கிவிடும். மனிதன் மிருகமாகி விடுகின்றான். பொறாமை, எரிச்சல் ஏற்படும் போது, பழிவாங்கல் மேலிடுகிறது. மனிதனின் அறிவுக்கண்கள் மறைக் கப்பட்டு விடுகின்றன. இருட்டில் நிகழ்வன இன்னாதனவாகவே இருக் கும். 'மனிதனுக்குத் தன் உயிர் மிகவும் பிரியமாக இருப்பதுபோலவே, எல்லா உயிர்களுக்கும் தம் உயிர் என்றால் மிகவும் பிரியம்தான். ஆகையால் அறிவாளிகளும் புண்ணியாத்மாக்களும் மன்னுயிரைத் தம் முயிர்போல் மதித்தல் அவசியமாகும்.”*
'மனிதன் தன்னிடம் எல்லோரும் தயை செய்ய வேண்டும் என்று விரும்புவதைப் போலவே, அவனும் பிறரிடம் தயை காட்ட வேண்டும்'
"பேராசையிலிருந்து கோபம் உண்டாகிறது. அது பிறரிடம் குறை காண்பதினால் வளருகிறது. சகிப்புத் தன்மையினாலேயே அற் றும் விடுகிறது.’ இவ்வாறு அறநூல்கள் கூறுகின்றன.
26

இம்சை செய்ய வேண்டுமென்று துணிவது ஒருவனுக்கு ஏற்படு கின்ற பசி போன்றது. பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பர். இம்சித்தல், இன்னா செய்தல் என்பன நிகழும் போது மனிதன் தன்னை இழந்துவிடுகிறான். தர்மம், அதர்மம் என்பதே அவனுக்குத் தெரியா மல் போய்விடும். ஆகையால், அஹிம்சையைப் பேணுபவன் இம்சையை
வென்று விடுகிறான்; மனிதனாகி விடுகிறான்; மகாத்மாவும் ஆகிறான்.
அஹிம்சையின் இரகசியத்தை அறிந்து கொண்ட பெரியவர்கள், எல்லாவற்றிலும் அஹிம்சையே தலை சிறந்த தர்மம், மிக உயர்ந்த விழுமியம் என்கின்றனர். அஹிம்சையைக் கடைப்பிடிப்பதனால் நல்லன வெல்லாம் கிடைக்கும்; அல்லனவெல்லாம் தேயும்; அறம் பெருகும்; சாந்தி சமாதானம் ஓங்கும். உலகில் எல்லோரும் பயமின்றி வாழும் நிலை தோன்றும். பகைமை என்பது அற்றுவிடும். நட்பு மேலோங்கும், இந்த உலகம் மனிதர்கள் வாழத்தகுந்த இடமாக வந்துவிடும். எல் லோரும் இன்புற்றிருப்பதையே அல்லாது வேறொன்றையும் அறியாத மக்களே உலகில் காணப்படுவர்.
இப் பூமியில் மக்கள் மாத்திரமல்ல, வேறு உயிரினங்களும்; தாவ ரங்களும்; இயற்கை வளங்களும் உள்ளன. அவற்றையும் குலைக்கவோ, குழப்பவோ கூடாது. மனிதன் இயற்கையோடு முரண்படுவதால், இயற்கைக்கு ஊறுவிளைவிக்கின்றான். இயற்கை விதிகளையும், முறை மைகளையும் மீற எத்தனிக்கின்றான். அப்பொழுது அஹிம்சைக்கு முரணாக நடந்து கொள்கிறான், தமது இயற்கைச் சூழலுடன் இசைந்து வாழுவது தான், இயற்கை விதிகளை மீறாதிருத்தல் ஆகும். மரங் கொடி செடிகள், விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட இயற்கையை மதித்துப், பேணுதல் மூலமும்; அவற்றிற்கு இடையூறுகள் விளைவிக் காது, அவற்றைப் பாதுகாத்தல் மூலமும், இயற்கைச் சமநிலை பிறழா மல் பேணப்படுகிறது. இதுவும் அஹிம்சையின் பாற்பட்டதே என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். மனித வாழ்வு இயற்கையோடு ஒத் திசைவு கொண்டதாக அமைய வேண்டும். அப்பொழுதுதான், வாழ்வு சிறக்கும், செழிக்கும். இயற்கையோடு இசைவுடன் வாழ்வது என்பது, விழுமியங்களைப் பேணி, அவற்றினை வாழ்வில் அனுசரித்து, நீதி முறையில் ஒழுகி வாழ்தல் ஆகும். பெரியவர்கள், வளர்ந்தவர்கள் இவ்வாறு வாழும் முறை தெரிந்து வாழ்ந்து காட்டுவதைப் பார்த்தே அடுத்து வரும் இளைய தலைமுறையினரும் அவ்வாறு ஒழுங்காக வாழத் தலைப்படுவர். சமூக வாழ்க்கை முறை, தலைமுறைகள்தோறும் மாறி வருகின்றன என்பது உண்மை. இந்த மாற்றங்கள் நன்முறையாக அமையும் போது நிச்சயம் அவை வரவேற்கப்படும். ஆனால் கண்டதே காட்சி, கொண்டதே கோலமாக மனித முன்னேற்றத்திற்குக் குந்தகம்
27

Page 20
விளைவிக்கக் கூடியனவாக அமையும் போது, அத்தகைய மாற்றங்களை இனங்கண்டு, அவற்றை இடம் பெறாமற் செய்ய உதவுபவை மனித விழுமியங்கள், மாற்றங்களையோ, முன்னேற்ற வளர்ச்சிகளையோ தடைப்படுத்துவன அல்ல; மாறாக அவை நன்முறை மாற்றங்களுக்கும் மனிதகுல மாண்பிற்கும், வளர்ச்சிக்கும் உரமும், உறுதியும் தருவனவாக விளங்குவன. மாற்றங்களைப் போஷிப்பன, புனிதப்படுத்துவன: மனித விழுமியங்கள் பிற்போக்கானவை என்று கருதுவது தவறு. அவை பின்னோக்கும், முன்னோக்கும் கொண்டவை. அந்தவகையில், அஹிம்சை எனும் மனித விழுமியம், ஏனைய மனித விழுமியங்களுக்கு அடிப்படையானவை. பழைமைக்குப் பழைமையாய்; புதுமைக்குப் புதுமையாய் விளங்குகின்றது. இன்றைய விஞ்ஞான, தொழில் நுட்ப உலகில், அஹிம்சையினாலேயே, விஞ்ஞானத்தின் முழுமையான நற் பலன்களை மனித குலம் அனுபவிக்கும்படி செய்ய முடியும். அது மட்டுமல்ல, அழிவிலிருந்தும் மனிதகுலம் காப்பாற்றப்பட முடியும். விஞ்ஞானமும், மனித விழுமியங்களும் இணைய வேண்டும். அவை முரண்படக் கூடாது. விஞ்ஞானமும் மனித விழுமியங்களும் இணைந்து ஒன்றிற் கொன்று ஆதாரமாகச் செயற்படுவதிலேயே, மனித குலத்தின் மீட்சியும், வாழ்வும், வளமும், சுபீட்சமும் தங்கியுள்ளன என்பதை உணர்ந்து கொள்வோமா க.
28

8. "மானுடம் வென்றதம்மா"
செம்மையான மனித வாழ்க்கை, விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது. உலகத்தில் வாழும் நெறிப்படி வாழ்க்கை அமைந்துவிட்டால், அதுவே செம்மையான வாழ்க்கையாகும். வாழும் நெறி, விழுமியங்கள் சார்ந்தது. விழுமியங்கள், வாழ்க்கைப் பெறு மானங்கள் ஆகும்.
**வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்' தெய்வத்துக்குச் சமான மாவான் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. மனித வாழ்வு சீரும், திருவும் பொலியச் செம்மையாக விளங்குமேயானால் அதனைத் தெய் வீக வாழ்வு என்பர். தெய்வீக வாழ்வினை, இப் பூவுலகிலேயே வாழ முடியும் என்பது அறிஞர்கள் கருத்து.
‘வாழ்வாங்கு வாழ்தல்' என்பது, மனிதவின நாகரிக வரலாற் றில், உயர்ந்தோர் என்று கொள்ளப்பட்டவர்கள், தமது வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக் கொண்டனரோ, எத்தகைய நன்னெறிகளைக் கைக்கொண்டனரோ, எவ்வெவற்றை நற்பண்புகள் எனப்போற்றி, தம் வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகினரோ, எங்ங்னம் தாமும் நீதி தவறாது வாழ்ந்து, பிறரையும் நன்முறையில் வாழ்வித்தனரோ, அதே வழியில் உயர்ந்தோரைப் பின்பற்றி நின்றும், வாழுங்காலத்து நல் உணர்வோடு தம்மைப் பொருத்திக் கொண்டும் சிறப்பாக வாழ்தல் ஆகும். மனித விழுமியங்கள், மிக உயர்வான மனிதப் பண்புகள், 'மானுடம்' என்பதில் இவையனைத்தும் அடங்கியுள்ளன. மனிதன் இவ்வுலகில் காணப்படும் அதியுயர்ந்த, அற்புதமான படைப்பு, மானு டம் அதன் உள்ளடக்கம். உயர்ந்தன என்று கொள்ளப்படுகின்ற யாவற்றிற்கும் ஒரு மரபு உண்டு. ஆகையால் மனித விழுமியங்களுக்கும் ஒரு மரபு உண்டு; வரலாறு உண்டு. மனித விழுமியங்களின் வரலாறு என்பது அந்த விழுமியங்களை இனங்கண்டவர்கள், அவற்றைக் கடைப் பிடித்து உய்வு பெற்றவர்களின் உயர்ந்த வரலாறு ஆக உள்ளது. இவை யாவும் தற்காலத்து மக்களுக்கு நல்வாழ்க்கைக்கு வழி காட்டும் கலங்கரை விளக்கங்கள் ஆகும். அவற்றை நாங்களும் வாழ்க்கையில் மேற்கொள்ளும் போது எமது வாழ்க்கையும் சீரும், சிறப்பும், செம்மை யும் பெறுகின்றது.
பூமியில் காணப்படுகின்ற அனைத்து உயிர்த் தோற்றங்களுள்ளும் அதி உயர்ந்தவன் மனிதன். “அரிது, அரிது மானுடராகப் பிறத்த
29

Page 21
லரிது' என்பது ஒளவை வாக்கு. உயிரியல் ரீதியாகவும், சமூகவியல் ரீதியாகவும் இக் கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. உள்ளது சிறத்தல் எனும் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கும் போதும், மனிதன் பரிணாம வளர்ச்சியில் மிக உயர்ந்த படியிலேயே உள்ளான். மனிதன் ஏனைய உயிரினங்களிடம் காணப்பெறாத உடல், உள, விவேக ஆற்றல்களையும் கொண்டவன். மனம் உள்ளவன் மனிதன் என்பர். மனிதனிலே நாகரிகமும், பண்பாடும், கலாசாரமும் இணைவதையும் காண்கின்றோம். புதியனவற்றைப் படைக்கவும், பலவற்றையும் ஆய்வு செய்யவும், நல்லவற்றை இனங்கண்டு கொள்ளவும், தீயனவற்றை உணர்ந்து தவிர்த்துக் கொள்ளவும் மனிதனுக்குத் தெரியும். இதற்கெல் லாம் காரணம், மனிதனிடம் சிந்திக்கும் சக்தி உண்டு என்பதேயாகும். மனிதன் சிந்திப்பதனாலேயே பகுத்தறிவு, பிரித்துணர்தல், தொகுத் தறிதல் என்பன அவனிடம் காணப்படுகின்றன.
மனிதனின் சிறப்புக்கு மற்றொரு காரணம் மொழியாகும். மணி தன் விலங்குகளைப் பார்க்கிலும் வளர்ச்சியில் மிக உயர்வான நிலை யினை அடைந்திருப்பதற்கு எடுத்துக்காட்டாக மொழிப் பயன்பாட் டைக் கூறலாம். மனிதர்களிடையே கருத்துப் பரிமாற்றம், உணர்ச்சிப் பரிமாற்றம், தொடர்பாடல் என்பன நடைபெறுவதற்கு மொழி சாதன மாக அமைந்துள்ளது. மனிதனின் சிந்தனை விருத்திக்கும்; நாகரிக, பண்பாட்டு வளர்ச்சிக்கும் மொழி பெரிதும் உதவியது. சமூக மரபு, பண்பாட்டு மரபு, கலாசார மரபு எனும் நம் முன்னோர் திரட்டிய அருஞ் செல்வங்களும், முதுசொத்துக்களும் இன்று வரை பேணப் பட்டு, ஒவ்வொரு தலைமுறையினருக்கும் ஊடாகக் கையளிக்கப்பட்டு, எம்மால் பெற்றுக் கொள்ளவும் முடிந்தமைக்கு மொழி முக்கிய ஊடகம் ஆகின்றது. மொழிப் பயன்பாடு இல்லையென்றால், இவ்வரிய சொத் துக்கள் களஞ்சியப்படுத்தப்படவோ, கையளிக்கப்படவோ இயலாத நிலை ஏற்பட்டிருக்கும்.
மனிதன் ஒரு சமூகப் பிராணி என்பர். மனிதன் உயிரியல் ரீதி யாகப் பிறக்கும்போதே சில பண்புகளைக் கொண்டுள்ளான் என்பர். ஆயினும், இன்றைய ஆய்வுகளின்படி, உயிரியல் மரபிலிருந்து மனிதன் பெற்றுக் கொண்ட பண்புகள் மாத்திரம், மனிதனின் முழுமையான வளர்ச்சிக்கு, நிறை மனிதனாக மலரும் ஆளுமை விருத்திக்குப் போது மானவையல்ல. அதாவது மனிதன் உலகின் அதியுயர்ந்த படைப்பாகத் தம்மை மேம்படுத்திக் கொள்வதற்கு மனித அங்க அடையாளங்களுடன் மனித இனத்தில் ஒர் உறுப்பினனாகப் பிறந்து விட்டால் மட்டும் போதாது. மனிதனாகப் பிறப்பது, மனிதத் தன்மைகளைப் பெற்று மனிதனாக வாழ்வதற்கு முதற்படி என்பது உண்மையே. மனிதத்
30

தன்மைகள், மனித விழுமியங்கள், மனித மேம்பாடுகள், மனிதப் பண்புகள் என்பனவும் மனிதனோடு இணையும் போதுதான், மனிதன் நிறை மனிதனாகின்றான்; முழுமையான ஆளுமை வளர்ச்சியையும் பெறுகின்றான். மனிதன் மனிதனாகின்றான். மனிதன், விலங்கு நிலை யினின்றும் நீங்கி, மிருக உணர்ச்சிகளை நீக்கி, மனித விழுமியங் களை அனுசரித்து, மனித தத்துவத்தைப் பேணி அவற்றின் அடிப்படை யில் வாழும் போது தான், மனிதனாகின்றான். தாமும் இன்பமாக வாழ்ந்து மற்றையோரையும், மகிழ்ச்சியுடனும், நிறைவுடனும் வாழ்விக் கிறான். இந்த விழுமிய நிலையை எய்தும் போதுதான், மனிதன் , இந்தப் பூவுலகில் உள்ள அனைத்து உயிர்த் தோற்றங்களுள்ளும், அதியுயர்வான, அற்புதமான படைப்பு எனும் கூற்று மெய்ப்பிக்கப் படுகின்றது.
மானுடத்தை மனிதன் பேணி வருவதிலேயே, மனிதப் பிறவியின் மாட்சியும், உயர்வும், பெறுமானமும், நிலைபேறும் தங்கியுள்ளன மானுடம் அற்ற மனிதன், உண்மையில் மனிதன் அல்ல; அவன் இரு கால் விலங்கே எனலாம். அவன் வாழுமிடம், பூவுலகமல்ல; அட விகாடே எனலாம்.
மானுடப் பண்பு வளர்ச்சியில், பரம்பரை பரம்பரையாகச் சேர்த் துக் கொண்ட அறிவுக் களஞ்சியம், மற்றும் மனப்பண்பு, அறிவியல் விருத்தி, இலக்கிய வளர்ச்சி, அழகுணர்வு, ஒழுக்க வளர்ச்சி, ஆத்மிக உணர்வு என்பன யாவும் இடம் பெறுகின்றன. மானுடம் நிறைந்த பண்பாட்டு வளர்ச்சியில், அன்பும் அறனும் தழைக்க வேண்டும்; ஆற்றல் உருவம் பெற வேண்டும்.
மனிதர்கள் தனித்து வாழும் இயல்பினர்கள் அல்ல, சமூகத்தில் கூடி வாழ்பவர்கள். ஏனையோரிடம் சேர்ந்து வாழ்வதற்குப் பண்புகள் தேவை. மனிதப் பண்புகளின் வளர்ச்சி, சமூக அநுபவங்கள் மூலம் பெரிதும் நிகழ்கின்றன. சமூக அநுபவங்கள் யாவும் சமூக மரபினைத் தழுவி எழுவனவாக உள்ளன. சமூக மரபு என்பது மனித நாகரிக ஏணி, மனித இனம் முன்னேறிச் செல்லும் படிகள். ஒவ்வொரு தலை முறையிலும், மனிதனால் உருவாக்கப்படும் சமூக மரபின் அளவும், தன்மையும் கூடிக் கொண்டே செல்கின்றது. இது தொடர்பாக, விஞ்ஞான மேதை ஐசாக் நியூற்றணின் பொருள் பொதிந்த கூற்றினை நோக்குதல் வேண்டும். 'எனது முன்னோரைக் காட்டிலும் என்னால் அதிக தொலைவு காண முடிந்தமைக்குக் காரணம், அவர்களின் தோள் களின் மீது நின்று தான் பார்த்ததே.*-இங்கு முன்னோர்களின் தோள் என்று நியுற்றன் குறிப்பிடுவது சமூக மரபினையே. சமூக மரபு காலங்
31

Page 22
காலமாகக் கட்டியெழுப்பப்படுவது. அதில் ஒவ்வாதன கழிதலும், புதியன ஏற்கக் கூடியனவாயின் ஏற்றலும் வழுவல எனக் கொள்ளப் படுகின்றன. இவ்வாறு வளர்ந்து வருகின்ற சமூக மரபுகள் பெறுமதி வாய்ந்தவை. வாழ்க்கையை வளம்படுத்துவதாக அமைவன. உலகில் வாழ்வாங்கு வாழவும், மண்ணில் நல்ல வண்ணம் வாழவும்; நீதிகளைப் புகட்டி, அறவழியில் மனிதர்களை வாழச் செய்யவும், வழிகாட்டும் வாழ்க்கை நெறிகளாகச் சமூக மரபுகள் விளங்குகின்றன. தனிமனித ஆளுமை உயர்வுக்கும்; சமுதாயக் கட்டுக்கோப்பும் உறுதிப்பாடும், மேம்பாடு அடைவதற்கும் சமூக மரபுகள் அத்துணை வாழ்க்கைப் பெறுமதியுடையனவாக விருப்பதால் அவற்றை விழுமியங்கள் என் கிறோம். கல்வியின் பிரதான நோக்கம் நம்முன்னோர்களால் உருவாக் கப்பட்டு தலைமுறை தலைமுறையாக அளிக்கப்பட்ட சமூக மரபுகளை, அவற்றுள் புதைந்துள்ள மனித விழுமியங்களையும், வாழ்க்கை மேம் பாடுகளையும் இன்றைய தலைமுறைக் குழந்தைகளுக்கு அளிப்பதாகும். நிகழ்காலக் கல்வியில் இத்தகைய மனித விழுமியங்களும் பண்பாட்டுக் கூறுகளும் நெகிழவிடப்பட்டு வருவதாகத் தற்பொழுது உணரப் படுகிறது. மனித வாழ்க்கை செழுமையும், செம்மையும் அடைவதற்கு நிகழ்காலக் கல்விநெறி மனித விழுமியங்களை வளர்ப்பதாகவும் அமைய வேண்டும்.
32

9. சுதந்திரம்
சுதந்திரம் என்பது எல்லோராலும் விரும்பப்படுகின்ற ஒரு பண்பு. சகலராலும் விரும்பப்படுவதால், சுதந்திரத்தின் பெறுமதி அளவிடற் கரியது. எனவே சுதந்திரம் ஒரு மனித விழுமியம். விழுமியம் என்று கூறப்படுகின்ற ஒன்று, தனக்கும் பிறருக்கும் நன்மை பயப்பதாய் அமைதல் வேண்டும். அன்பு ஒரு விழுமியம் என்று சொல்லப்படுவதற் குரிய காரணம் என்னவெனில், அன்பு ஒருவரிடமிருந்தால் அவருக்கும் நன்மை, பிறருக்கும் நன்மை உண்டாகும் என்பதாகும். சுதந்திரமும், ஒருவரிடம் காணப்படும் பட்சத்தில் அவருக்கும் மற்றையோருக்கும் அதனால் நன்மை ஏற்பட வேண்டும். ஒருவரின் சுதந்திரம் ஏனை யோருக்குத் தீமை விளைவிக்கும் சந்தர்ப்பங்களும் உண்டு. அத்தகைய சுதந்திரம் விழுமியம் ஆகாது.
ஒருவர் தனக்குரிய சுதந்திரத்தை அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால் பிறருக்கு அந்தச் சுதந்திரத்தால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை உறுதிசெய்து கொள்ளுதல் வேண்டும். ஜனநாயக நாட்டில், சுதந்திரம் ஒவ்வொருவரின் பிறப்புரிமை. அது மற்றையோரின் உரி மையை மதிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, மறுப்பதாக இருத்தல் கூடாது.
சுதந்திரம், கட்டாக் காலிச் சுதந்திரமாகவோ, காட்டுக் கழுதை யின் கட்டுக்கடங்காச் சுதந்திரமாகவோ, மனிதர்களில் காணும் சந்தர்ப் பங்களில், அச்சுதந்திரம் சுயநலத்தை வளர்ப்பதாகவும், பிறர் நலத்தை நசுக்குவதாகவும் அமைந்து விடுகிறது. அப்பொழுது சுதந்திரம், மனித விழுமியம் ஆகும் தகுதியை இழந்து விடுகிறது. பிறருக்குத் தொல்லை தருவது எதுவும், இடைஞ்சல் கொடுப்பது எதுவும் எப்படி விழுமியம் ஆகும்,
ஆசைக்கோர் அளவில்லை என்பார்கள். அவ்வாறே சுதந்திரத்திற் கும் எல்லையில்லை போலத் தோன்றுகிறது. ஆசையே துன்பத்திற்குக் காரணம். அளவற்ற ஆசையும், எல்லையற்ற சுதந்திரமும் ஒருவரிடம் சேர்ந்துவிட்டால், பிறர் துன்பங்களுக்கும், தொல்லைகளுக்கும், ஏதுக் கள் ஆகிவிடுகின்றன. எனவே ஒருவரின் ஆசைக்கும் எல்லை வேண்டும். சுதந்திரத்துக்கும் வரம்பு தேவை. ஒருவரின் அமிர்தம் இன்னொரு வருக்கு நஞ்சு ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மனிதத்
33

Page 23
தன்மை. அமிர்தம் எப்படி நஞ்சாகும் என்று கேட்கலாம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு" என்ற முதுமொழியில் அதற்கு விடை யும் உள்ளது.
சுதந்திரத்துக்குக் கட்டுப்பாடு தேவை என்பதை உணரும் பட்சத் தில், அது சுய கட்டுப்பாடாக இருக்க வேண்டுமே தவிர, பிறரினால் ஒருவரின் சுதந்திரம் கட்டுப்படுத்தப் பட்டதாக இருத்தல் கூடாது. அடங்குதல் என்பது தாமாக அடங்குதல். அது சுற்றறிந்த சான்றோர் களின் செயல். வள்ளுவரும் அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றும் ‘‘அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்' என்றும் கூறுகின்றார்.
அடக்கம், சுதந்திரம் என்பதன் எதிர்ப்பொருட் சொல் அன்று.
அடங்காமை, சுதந்திரத்திற்குரிய இலட்சணமும் அன்று. 'எனக்கு எல்லாச் சுதந்திரங்களும் உண்டு. நான் எவர்க்கும் அடங்கமாட்டேன். நான் நினைத்தபடிதான் நடப்பேன்,' என்கிறார்களே! இவர்கள்
பரிதாபத்திற்குரியவர்கள், சுதந்திரம் என்றால் என்ன, என்று அறியாத வர்கள் சுதந்திரத்தை அனுபவிக்கத் தெரியாதவர்கள், வரிசையில் அடங்கி விடுபவர்கள். இவ்வாறு, தான்தோன்றித் தனமாக நடந்து கொள்பவர்கள், விரைவில் சுதந்திரத்தை இழப்பவர் ஆகவும் ஆகி விடுகின்றனர். மாறாக, அடக்கம் ஒரு சிறந்த மனிதப் பண்பு. அது மனித வாழ்வின் தரத்தை உயர்த்த வல்லது. இன்னும் சொல்லப் போனால், அடக்கம், பொறை, விட்டுக் கொடுத்தல், பணிவு என்னும் நற்பண்புகள் மனித சுதந்திரத்தை வளர்க்கின்றனவே தவிர மழுங்கச் செய்யவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
சுதந்திரம், எம்மில் அகந்தையை உண்டாக்குவதற்கு இடமளிக்கக் கூடாது. அவ்வாறே, வாழ்க்கையில் ஒழுங்கீனத்தை ஏற்படுத்துவதற் கும் சுதந்திரம் முயலக்கூடாது. குரங்கின் கையில் பூமாலையைக் கொடுத்தால், பூமாலை என்ன பாடுபடுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியும். மாலையில் அழகாகத் தொடுக்கப் பெற்ற பூக்களைப் பிய்த்து எறியும்; கடித்துத் துப்பும்; ஒரு கணத்தினுள் அழகிய பூமாலை அலங் கோலமாகிவிடும். பூமாலையின் அழகினையும், பெறுமதியையும் உண ரும் தன்மை குரங்கிற்கு இல்லை. “கழுதை அறியுமோ கற்பூர வாசனையை' என்ற பழமொழி இந்த இடத்தில் எண்ணிப் பார்க்க வேண்டியது. சுதந்திரத்தின் பெறுமதியையும், மனிதப் பெறுமானத்தை யும் செவ்வையாக அறிந்து கொள்ளாத மனிதர்களிடம் சிக்கிவிட்ட சுதந்திரத்திற்கும் அதே கதி தான் ஏற்படுகிறது.
மனிதர்கள் யாவருமே ஏதோ ஒரு வகையில் பிறரில் தங்கி வாழு கின்றவர்கள்தான். அவ்வாறாயின் ஒவ்வொருவரும் பிறரின் தயவினிை
34:

எதிர்பார்ப்பவர் ஆக உள்ளனர். இந்த நிலையில் மனித சுதந்திரம் என்பது வெறுமனே பேச்சுக்கும் ஏட்டுக்கும் தானே தவிர, மனித வாழ்க்கைக்கு அல்ல என்பதும் தெரிகிறது. மனிதன் பிறர் தயவின்றி, தனது சொந்தக் காலில் நின்று, சுயமாக வாழும் நிலையிலேயே, அவன் சுதந்திர புருஷன் ஆகின்றான். இந்த நிலை மாந்தர்கள் எல்லோருக்கும் கைவரப் போவதில்லை. ஆற்றாமை என்பது உயிர்களின் இயல்பு; இறைவன் ஒருவனே சர்வ வல்லமையுடையவன்; பிறரின் தயவு தேவைப் படாதவன்; வேண்டுதல் வேண்டாமை இலாதவன்; அவன் ஒருவனே பூரண சுதந்திரன் என்கின்றனர், ஆன்மிகவாதிகள்.
மனிதர்கள் பூரண சுதந்திரத்தை அடைய முடியாதவர்களாக இருக்கலாம். ஆயினும் சுதந்திரத்தோடு வாழ விரும்புபவர்கள். சுதந்திர வேட்கை, சுதந்திர தாகம் இருப்பது மனித இயல்பு. சுதந்திரம் மணி தரின் அடிப்படைத் தேவை. இயன்ற அளவு அந்தத் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்குச் சமூகம் உதவ வேண்டியது அவசியம். மனிதரின் சுதந்திரத் தேவை பூர்த்தி செய்யப்படாத பட்சத்தில், மனிதர்கள் பிறழ்வான நடத்தை, ஒழுங்கற்ற போக்கு, சமூக விரோதச் செயல்களில் ஈடுபாடு ஆகியவற்றில் இறங்குதல் தவிர்க்க முடியாததாகி விடும். சுதந்திரத்தைத் துர்ப்பிரயோகம் செய்வதினால் எத்துணை சமூக அனர்த்தங்கள், அவஸ்தைகள் ஏற்படுகின்றனவோ அவ்வாறே, சுதந்திரம் மறுக்கப்படும் மனிதர்களிடமிருந்தும்; அடக்கப்பட்ட, ஒடுக் கப்பட்டவர்களிடமிருந்தும் பிரச்சினைகள் தோன்றத்தான் செய்யும்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவியை அடக்கி ஆள முயலும் போதோ, மனைவி கணவனை அடக்கி ஆள எத்தனிக்கும் போதோ, ஒருவருக்கொருவர் பல கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். இந்தக் கட்டுப்பாடுகள் மூலமாக ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தைப் பறிப்ப தாக எண்ணிக் கொள்கின்றனர். பிரச்சினைகள் உருவாகின்றன. உரி மைப் போராட்டம் கணவன் மனைவிக்கிடையே தொடங்குகின்றது. ஆண் ஆதிக்கம், பெண் ஆதிக்கம் என்றெல்லாம் பேசப்படுகின்றது. முதலில் மனமுறிவும், தொடர்ந்து மணமுறிவும் ஏற்படுகின்றன. இதனால் யாருக்கு என்ன பிரயோசனம்?
கணவன் மனைவிக்கு இடையிலான உறவு அன்பின் அடிப்படை யிலான உறவு. காதல் இருவர் கருத்தொருமித்து, ஒருவர்க் கொருவர் ஆதாரமாகவும்; அன்பினால் விட்டுக் கொடுத்தும்; அன்பினைக் கொடுத்து வாங்கியும்; தியாக உணர்வோடும் நடைபெறுவதுதான் இல் வாழ்க்கை. இதில் ஒருவருக்குச் சுதந்திரம் அதிகம், மற்றையவருக்குச் சுதந்திரம் இல்லை; என்றோ, ஒருவருக்கு உரிமை உண்டு, இன்னொரு
35

Page 24
வருக்குத் தலையிட உரிமை இல்லை என்றோ கொள்வதற்கு இடம் இல்லை. இருவருக்கும் சுதந்திரமும் உண்டு, உரிமையும் உண்டு. கணவனும் மனைவியும் தத்தமக்குரிய சுதந்திரம் எவ்வளவு, உரிமை எவ்வளவு என்று விவாதிப்பதற்கோ, பேசித் தீர்ப்பதற்கோ குடும் பத்தை ஒரு களமாகவோ, நீதிமன்றமாகவோ மாற்றிவிடக்கூடாது. அவ்வாறான துர் அதிட்ட நிலை ஒன்று ஏற்படுமானால் குடும்பத்தில் விரிசலும், பிளவும் ஏற்படுதலைத் தடுக்க முடியாமல் போய்விடும். ஒருமுறை தன்னிலும் வெறுப்புணர்வும் விரிசலும், நம்பிக்கையீனமும் கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்டால், அன்பும் காதலும் மீண்டும் முன்னர் போல் தழைப்பது அரிதிலும் அரிதாகிவிடும். ஒருவாறு சீராக் கம் பெற்றாலும் கூட உறுதியும், நிலைபேறும் பெறும் என்பது சந்தேகம். எனவேதான் விபரீதம் எதுவும் நடவாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு கணவன் மனைவி இருவரையும் சார்ந்த
தாகும். அது அவர்களின் குடும்பக் கடமையும் ஆகும்.
சுதந்திரம், உரிமை என்பவற்றைக் குடும்பத்தில் ஒருவரை ஒருவர் கேட்டுப் பெற்றுக் கொள்வதோ அல்லது போராடிப் பெற்றுக் கொள் வதோ அல்ல. அன்பும், காதலும், புரிந்துணர்வும் குடும்பத்தவரிடையே நிலவும்போது, ஒவ்வொருவரினதும் உரிமையும், சுதந்திரமும் நிச்சயம் பாதுகாக்கப்படும் என்பது உறுதி. எனவே, குடும்பத்தில் உரிமை தேடுதல், சுதந்திர உணர்வு கொள்ளல் ஆணுக்கோ, பெண்ணுக்கோ முதலில் தேவையில்லை என்பதே நலம்தரும் நிலை. உரிமையும் சுதந் திரமும் முதலில் தேவையில்லை என்பதே தவிர, அவற்றை இழந்து விட வேண்டும் என்பதல்ல. அன்பும் அறனுமே இல்வாழ்வில் முதலில் நிற்க வேண்டியவை, அவையே வாழ்வின் பண்பும், நல்ல பயனும் ஆகும் என்கின்றது வள்ளுவம். அன்புக்காக விட்டுக் கொடுப்பது, இணங்கி நடப்பது, வாழ்வில் தோல்வியல்ல; அது மாபெரும் வெற்றி வள்ளுவத்தை மதிக்காத இக்காலத்தவர் சிலர், தான்தோன்றித் தனத்தை உரிமை என்றும், மனம் போன போக்கில் சென்று சீரழிதலே சுதந்திரம் என்றும், அன்பினை அடிமைத்தனம் என்றும்; விட்டுக் கொடுத்து இணங்கி நடத்தலைப் பிற்போக்கு என்றும்; எதனையும் உதாசீனஞ் செய்தலே புதிய போக்கு என்றும் தப்புக் கணக்குப் போட்டு தவறான பாதையில் சென்று தாமும் கெட்டுக் குடும்பத்தையும் சீர் சுெடச் செய்து விடுகிறார்கள். வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி
36

செய்யப்பட்ட பொருந்தாக் கோட்பாடுகள் நம்மை எல்லாம் எப்படி ஆட்டிப் படைக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள வேண்டியது மிக அவசியம்.
இக்காலத்துப் பிள்ளைகளும் வளர்ந்து பெற்றோரின் தோள் மட்டத்திற்கு வரும்போது பெற்றோருடன் தோழமை கொண்டாடு கின்றனர். “தோளுக்கு மிஞ்சினால் தோழன்' என்பது நம்மிடையே பண்டுதொட்டு வழங்கி வருகின்ற பழமொழிதான், தவறில்லை. தோழமையும், உரிமை கோரிப் பெறப்படுவதில்லை. பெற்றோர் பிள்ளைகளுக்கிடையே நிலவுகின்ற அன்பும் நல்லிணக்கமும், நல்லுற வும், விட்டுக்கொடுத்து ஒழுகும் பண்பும் தான் தோழமை உரிமையை வலுப்படுத்துவன. சுதந்திர உணர்வும் தேவையே. ஆனால், பிள்ளை கள் தான்தோன்றித்தனமாக, மனம் போன போக்கில் நடந்து கொள் வதற்கும், நடத்தைப் பிறழ்விற்கும் வழிவகுப்பதாக அச் சுதந்திரம் அமையக் கூடாது.
எனவே, வாழ்க்கையில், அன்புக்கும் நல்லிணக்கத்திற்கும் முத லிடம் கொடுத்து நடந்து கொள்ளும் போது, உரிமையும் சுதந்திரமும் தாமாகவே கிடைக்கின்றன. நல்ல குடும்பங்கள் கற்றுத் தருகின்ற பாடம் இதுவேயாகும்.

Page 25
10. சாந்தி
சாந்தி என்பது இன்றைய உலகில் தேடப்பட்டு வருகின்ற ஒன் றாக இருக்கின்றதே தவிர, அடையப்பட்ட ஒன்றாக விளங்குவதாக இல்லை. மனிதர்கள் எல்லோருமே சாந்தி வேண்டிப் பல்வேறு முயற்சி களில் ஈடுபட்டுள்ளனர்; பேசுகின்றனர்; பிரார்த்திக்கின்றனர்; தியா னம் செய்கின்றனர். வழிபாட்டின் இறுதியில் சாந்தி, சாந்தி, சாந்தி என்று உரக்கக் கூவி அழைக்கின்றனர். இவ்வாறு ஒவ்வொருவரும் தத்தம் அறிவு, ஆற்றலுக்கேற்ற வகையில் சாந்தியை இவ்வுலகில் நிலவச் செய்ய அரும்பாடு படுகின்றனர். இன்னும் சிலர், போர் வன்முறைகளால் சமாதானத்தைக் கொண்டுவர முடியும் என நம்பு கிறார்கள். துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் என இதனைக் கூறு கின்றனர். அதாவது தீயவர்களை அழிப்பதன் மூலம் நல்லவர்களைக் காத்தல் ஆகும். புயலுக்குப் பின் அமைதி, போருக்குப் பின் சமா தானம் என்று கூறப்படுவதெல்லாம் வெறும் வார்த்தை ஜாலங்களே ஒழிய, நிஜங்கள் அல்ல. அத்தகைய வன்முறைகளின் அடக்குமுறை யால், ஏற்படுத்தப்பட்ட அமைதியும் சாந்தியும் நீடித்து நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை.
சாந்தியை எங்கே தேடுகிறோம்? சாந்தி இல்லாத இடங்களிலே சல்லடை போட்டுத் தேடி அலைகின்றோம். ஒரு பொருளை அது இல்லாத இடத்தில் தேடி, பெற்றுக் கொள்ளுதல் சாத்தியமற்றது. எனவே, அப்பொருள் உள்ள இடத்தில் அதனைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனம். மனிதர்களிடம் விவேகம் உண்டு. மனித இனத்தின் தனித்தன்மையும் அதுவேயாகும். அந்த விவேகம் மனிதனால் பயன்படுத்தப்பட வேண்டும். சாந்தி புறத்தே இல்லை. எனவே, புறத்தே அதனைத் தேடுதல் விவேகமற்ற செயல். ஒவ்வொரு வரும் தன்னுள்ளே சாந்தியைத் தேட வேண்டும். நிச்சயம் சாந்தியைப் பெறலாம். அகத்தில் ஊற்றெடுக்கும் சாந்தி, புறத்தே பிரவாகித்து மலர்ச்சி பெறும் போது, எங்கும் சாந்தி நிலவும்; சமாதானம் ஓங்கும். மக்கள் அச்சமின்றி, தொல்லைகளற்று, அமைதியுடன் வாழ்வர். எனவே, சாந்தி எனும் மனித விழுமியம், மனித நல்வாழ்வின் அடித் தளம். நல்வாழ்வின் பெறுபேறாகவும் சாந்தியே விளங்குகின்றது. ஒவ்வொரு மனிதனும் மனம் வைத்தால், சாந்தியைப் பெற முடியும். மன உறுதியும், தன்னம்பிக்கையுமே முக்கியமாகத் தேவை. சாந்தி இருந்தால் தானும் வாழலாம்; மற்றையோரும் வாழலாம், யான்பெற்ற சாந்தி, பெறுக இவ்வையகம் என்ற விழுமிய நிலையும் உண்டாகும்.
38

பொதுவாக, ஒருவர் இறந்தபின், அன்னாரின் ஆத்மா சாந்தி யடையப் பிரார்த்தித்தல், நம்மிடையே மரபாக உள்ளது. தற்காலத் தில், அதனை மரபு என்று சொல்வதிலும் சம்பிரதாயம் என்று கூறுவது கூடிய பொருத்தமாக இருக்கும், என எண்ணுகிறேன். ஒருவரின் உடலை விட்டு, உயிர் பிரிந்தபின், அவ்வுயிருக்குச் சாந்தி தேடி, பெரும் பொருள் செலவு செய்து; அன்னாரின் பிள்ளைகள், சுற்றத்த வர், நண்பர்கள் ஆகியோர் பல்வேறு கருமங்களில் ஈடுபடுகின்றனர். வரவேற்கப்பட வேண்டியதே. ஆயினும், அந்த உயிர், உடலோடு ஒட்டி ஒன்றித்திருந்த காலத்தில், அதாவது அந்த மனிதர் வாழுங் காலத்தில், அவர் சாந்தியுடன் சந்தோஷமாக வாழ்வதற்கும்; சாந் தியை அகத்திலும், புறத்திலும் குடும்ப மட்டத்திலாவது காண்பதற் கும்; பிள்ளைகள், குடும்பத்தினர், உறவினர் ஆகியோர் உதவி செய் திருப்பார்களேயானால், அச்செய்கை, காலத்தினால் செய்த செயலாக வும், காலத்தில் மாணப் பெரிதாகவும் கொள்ளப்பட்டு எல்லாவற்றிற் கும் மேலாக மதிக்கப்பட வேண்டியதாக அமைந்து விடும். சாந்தியை இறந்தபின் அடைவது எவ்வளவு முக்கியமோ, அதனை விட முக்கிய மானது, ஒருவர் உயிரோடிருக்கும் போது சாந்தியை, அடைவதும், அனுபவிப்பதும் எனலாம். சாந்தி, அகத்திலிருந்து எழுந்தாலும், அதன் தோற்றத்திற்கும், அது நிலைப்பதற்கும் புறச் சூழலின் தாக்கமும் ஏதுவாகின்றது. ஒரு குடும்பத்தில் உள்ள சாந்தி, அங்குள்ள ஒருவரின் சிறிய தவறினால் கூடக் குலைந்து விடுவதை நாம் அனுபவ வாயிலாகக் கண்டுள்ளோம். சலனமற்ற, அமைதியான நீர்ப்பரப்பினைக் கொண்ட அழகிய தடாகத்தில், சிறிய கல் ஒன்று வீசப்பட்டுவிட்டாலும், சலனம் உண்டாகி விடுகின்றது. சாந்தியை, அமைதியை ஏற்படுத்துவது சிரமம்; ஆனால் குலைத்து விடுவது மிகச் சுலபம். அதனால் தோன்றுகின்ற சங்கடங்கள், கிலேசங்கள், அழிவுகள் மிகப் பல. மனிதர்கள் இதை உணர்ந்து, சாந்தியைக் குலைக்காமலும், குட்டையைக் குழப்பாமலும் ஆதல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
சாந்தி எனும் சொல் அமைதி, அடக்கம், சலனமின்மை போன்ற கருத்துக்களை உணர்த்துவதாக உள்ளது. மன அமைதி, மன அடக்கம், மனச் சலனமின்மை ஆகிய மனநிலைகளைச் சிறப்பாக உணர்த்துவ தாகவும் உள்ளது. மனம், உணர்வுகளுடன் தொடர்புடையது. இந்த உணர்வுகள் கலக்கமடைகின்றன; குழப்பமடைகின்றன-அதனால் சலனப்படுகின்றன. இதே உணர்வுகள் பின் தெளிவடைகின்றன அடங்குகின்றன; அமைதி பெறுகின்றன-அதனால் சலனமின்மை ஏற் படுகின்றது. உணர்வுகள் மனதில் சலனமடைவதற்குக் காரணிகளாக உள்ளவை எமது ஐம்புலன்கள். மனம், ஐம்புலன்களின் மேலாதிக்கத்
தின் கீழ் உள்ளவரை, மன உணர்வுகள், கலக்கமுற்ற நிலையிலேயே
39

Page 26
இருக்கும். அப்பொழுது, சாந்திக்கு அங்கு இடமில்லை. மனத்தைப், புலன்களின் பிடியிலிருந்து விடுபடச் செய்தால் மட்டுமே, மனம் கலக்க மடைவதை நிறுத்த இயலும். மனத்தினை, ஐம்புலன்களிலிருந்து விடு தலை பெறச் செய்வதற்கு விவேகத்தின் உதவியை நாட வேண்டும். விவேகத்தின் ஆட்சியின் கீழ் மனம் வரும்போது, மனம் கட்டுப்படுத்தப் பட்டுவிடும், மன அலைச்சல், மன உளைச்சல் என்பன நின்றுவிடுகின் றன. உணர்வுகள் செம்மைப் படுத்தப்பட்டு விடுகின்றன. விவேக ஆட்சி என்பது அறிவாட்சி. மனம் ஆனது அறிவாட்சியின் கீழ் வரும் போது, உணர்வுகள் செம்மை பெற, அதனால் உணர்வு அலைகள் அடங்கி அமைதி பெற; அந்த ஆழ்ந்த அமைதியில், சாந்தி பிறக்கிறது. சாந்தி தோன்றியதும், வாழ்விலும், எந்நாளும் இன்பமே அன்றி, என்றுமே துன்பமில்லை எனும் மேலான நிலை உண்டாகின்றது.
மனம், உணர்வுகளுடன் இணைந்துள்ளது. சாந்தி, உணர்வு சம்பந்தப்பட்டது. அறிவு, உணர்வுகளின் வேகத்தைத் தணித்து, அடக்கி, உணர்வுகளையும் பக்குவம் செய்து, பதப்படுத்துகின்றது. உணர்வுச் சீராக்கம், உணர்வுச் சமநிலை, சாந்தியை வளர்ப்பவை.
மனம், ஆசைகளுக்கும் அவாக்களுக்கும் இடமளிக்கும் இயல்பினது அதற்கு உறுதுணையாக இருப்பவை பஞ்சப் புலன்கள். ஆசைகளை வளர்ப்பதற்கென்றே உறுதி பூண்டு, நிறைவேற்றுவதில் அயராது உழைப்பவை, வஞ்சகப் புலன்கள். அவற்றின் செல்வாக்கினால், மனித மனம், விலங்கு மனம் ஆகிவிடுகின்றது. ஆசைகளுக்கு இருப்பிடமாகி விட்ட விலங்கு மனத்தில், சாந்தி முளைப்பது என்பது கட்டாந்தரை யில் புல் முளைப்பதற்கு ஒக்கும். எனவே, அது நடவாத செயல். ஆசை வந்ததும் சாந்தி போய்விடும், ஆசைகள் தனித்து வருவதில்லை. நண்பர்கள், தோழர்களையும் அணைத்துக் கொண்டே வருகின்றன. அழுக்காறு, அவா, சினம், புறங்கூறல், பொய் பேசுதல், பொறாமை, எரிச்சல், வஞ்சனை, போட்டிகள், சண்டை, சச்சரவுகள் என்பனவே ஆசையின் தோழர்கள். இவையனைத்தும் சாந்தியின் விரோதிகள். துட்டரைக் கண்டால் தூர விலகு என்பதற் கிணங்க, சாந்தியும், இத் துட்டர் சமூகத்தை விட்டு விலகி விடுகிறது.
'அறுமின், அறுமின் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின்.’’ என்கிறார் திருமூலர்
ஆசை அறுந்த இடம்தான், சாந்தி தரிக்குமிடம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒன்றைப் பெற வேண்டுமானால்,
இன்னொன்றை விட்டுவிட வேண்டும். இது உலக இயல்பு. சாந்தியைப்
40

பெறுவதற்கு ஒரே வழி, ஆசையை விலக்குதல். பல்வேறு தீய செயல் களுக்கும், பிழையான நடத்தைகளுக்கும் காரணம் ஆசைதான். ஆசைக்கு அளவில்லை. பெருக ஆரம்பித்தால் கட்டுப்படுத்த முடியாது. ஆசை வெட்கமறியாது; மானம், கண்ணியம், நீதி பற்றி அதற்கு அக்கறையில்லை. மிக மோசமான போதைப் பொருளிலும் பார்க்கப் படுமோசமானது ஆசை. மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற் குப் போதுமான பொருள்கள் பூமியில் உண்டு. ஆனால் மனிதனின் ஆசைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்குப் பொருள்கள் கிடையாது, என்று கூறினார், காந்தியடிகள். பேராசை பெருந் தரித்திரம் என்பர். பெருஞ் செல்வம் இருந்தும் அதனை அனுபவிக்க முடியாது துன்பப் படுவர். நிம்மதி கெட்டு விடுவதால், தூக்கம் இன்றித் தவிப்பர். மனைவி, மக்கள், சுற்றம், உறவினர், நண்பர் ஆகிய நெருக்கமானவர் களில் கூட நம்பிக்கை வைக்கப் பயப்படுவர். ஏன், தன்னில்கூட நம் பிக்கை கொள்ள முடியாமல் திண்டாடுவர். நிம்மதியைத் தேடிப் போதை வஸ்துக்களிலும், பொருந்தா வாழ்க்கை வழிகளிலும்; மருந்து, மந்திரம், மாயங்களிலும் தஞ்சமடைகின்றனர். இவையனைத்தும் நிம் மதியை மேலும் சீர்குலைப்பனவாக உள்ளனவேயன்றி, நிம்மதியைத் தருவனவாக என்றும் அமைந்ததில்லை. -
சாந்தியை, மனிதர்கள் புறத்தே தேடி அடைய முடியாது. தம்முள் நாட வேண்டும். அதற்கு ஆசையை அகற்ற வேண்டும். உண்மையான இன்பம், சாந்தியைப் பெறுவதனாலன்றி, பணத்தி னாலோ, பொருள் பண்டத்தினாலோ, பேர், புகழ், அந்தஸ்தினாலோ கிடைப்பதில்லை. எனவே, எமது பொறிகள், புலன்களை அடக்கி; மனதைக் கட்டுப்படுத்தி; நேரிய வழியில் வாழ்ந்து; சாந்தி பெற்று; உண்மையான, நிலைத்த இன்பத்தை வாழ்க்கையில் எய்துவோமாக.
41

Page 27
11. சும்மா இருத்தல்
சாந்தி, சமாதானம் என்றெல்லாம் கூறப்பட்டு வருகிறது. சாந்தி நிலவ வேண்டும் என்கின்றனர்; சமாதானம் ஓங்க வேண்டும் என்கின் றனர். இவ்வாறு மனித வரலாறு தோன்றிய காலந் தொட்டுச் சொல்லப்பட்டு வருகின்றதே தவிர, சாந்தியும், சமாதானமும் எந்த அளவிற்கு மனித இனம் சாதனையில் கண்டுள்ளது என்பது எவராலும் கூற முடியாததொன்றாக உள்ளது. போர், பகைமை, கலவரங்கள், அனர்த்தங்கள், அட்டூழியங்கள், சண்டை சச்சரவுகள் நிறைந்தகாலமே. மனித வரலாற்றின் மிகப் பெரிய காலப் பகுதியாக இருந்து வந்துள்ளது சாந்தி, சமாதானம், அமைதி என்பன இடையிடையே தலைகாட்டி, உடனே மறைந்து விடுவதாகவே உள்ளன. போர், அதனைத் தொடர்ந்து, அதன் முடிவில் ஏற்படுவது சமாதானம் என்ற அளவிற்குத் தான் சமாதானம் பற்றிய அறிவு, மனிதர்களிடம் காணப்படுகிறது. சமாதானம் என்பது அதனை அனுபவித்து அறியப்பட வேண்டியதே தவிர ஏட்டில் படித்து அறியக் கூடியது அன்று. ஒரு பொருளை அனுபவித்து உணர்வதற்கு, அப்பொருள் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். சமாதானம், சாந்தி என்பன கிடைக்காத பண்டங்களாக இருக்கும் பட்சத்தில், அவற்றை அனுபவித்து உணருவது எவ்வாறு என்று பலரும் அங்கலாய்க்கின்றனர்.
போர், முடிவில் அமைதி, மறுபடியும் போர்-இதுதான் மனித நாகரிக வரலாறு. உலகில் போர், ஒர் பரந்த பெரிய சமுத்திரம் என்றால், அமைதி ஒரு துளி பால் போன்றதாகும். ஒரு துளி பால், பெரிய சமுத்திரத்தினுள் விடப்படும்போது, பால் அதன் தன்மையை இழந்து விடுகிறது. அவ்வாறே, மனித நாகரிக வரலாற்றில் அமைதி, சாந்தி, சமாதானம் என்பன அத்தி பூத்தாப் போல, எப்போதாவது ஒரு தடவை ஏற்பட்டாலும், அவை தொடர்ந்து நிலைப்பதில்லை; அவற்றின் தன்மை உணரப்படுவதும் இல்லை. போர் நிலைமை, கொண்ட உலகில், அமைதி கரந்துறைகின்றது; வெளிப்பாடடைவ தில்லை. போர் நிலைமை, பல வகைப்பட்டது. நாடுகளுக்கிடையே, ஆயுதங்களின் பாவனையுடன் நடைபெறுவதுதான் போர் என்பதல்ல. தனி மனிதன் தன்னுடன் போர் புரிந்த வண்ணம் இருக்கின்றான். குடும்பத்தில் அதன் உறுப்பினர்களிடையே போர் நடைபெறுகின்றது. சமூகத்தில் பல்வேறு குழப்பங்கள், வன்செயல்கள், அடாவாடித்தனங் கள் நிகழ்கின்றன. இவை யாவுமே போர் மூட்டங்கள்தான். அமைதி
42

யைக் குழப்புவன, சாந்தியைக் கெடுப்பன, சமாதானத்தைக் குலைப் பன, எல்லாமே ஒரு வகையில் போர்கள் எனலாம்.
புற உலகில் நடைபெறுகின்ற போர்களைவிட மனிதரின் உள்ளரங் கில் நடைபெறுகின்ற போர்களே கூடுதலான, கொடுமையான தீமை களையும், அழிவு சிதைவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். புற அரங்கப் போர்கள் கண்களுக்குப் புலப்படக்கூடிய அழிவுகளை ஏற்படுத்துகின்றன. அதனால் அப்போர் கள் மனிதர்களுக்குப் பெரிதாகத் தோன்றக்கூடும். அப்போர்களை நிறுத்துவதற்காகப் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுகின்றனர். மனிதர் ஒவ்வொருவரினதும் உள்ளரங்குகளில் அதாவது அவர்களின் உள்ளங் களில் இடையறாது, சதா நிகழ்ந்து கொண்டிருக்கின்ற போர்கள், சலனங்கள், குழப்பங்கள் என்பன பற்றிச் சிந்திப்பவர்கள் எத்தனை பேர்? அவைகள், கணத்துக்குக் கணம், மனிதர்களில் ஏற்படுகின்ற உட் சிதைவுகள், உள்ளார்ந்த அழிவுகள், உடைவுகள் எத்துணை பாரதூரமானவை என்பது பற்றிக் கணக்கெடுத்துப் பார்ப்பவர்கள் யாரும் உண்டா? அகப் போர்களை நிறுத்துவதற்கு எத்தனை பேர் முயற்சி செய்கின்றனர்? இவ்வாறு கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். விடைகள் எதிர்மறையில் இருக்கும் என்பது கண்கூடு.
இன்றைய அவசியமும் அவசரமுமான தேவை யாதெனில், மனி தரின் உள்ளரங்கப் போர்களை உடனடியாக நிறுத்தும் முயற்சிகளில் இறங்குவதேயாகும். போர்கள் மனித உள்ளங்களில் தோன்றுகின்றன. பின்னர் புற உலகிற்குப் பரவுகின்றன என்கின்றனர் அறிஞர்கள். ஒரு படரும் கொடியைப் படப்பண்ண வேண்டுமானால், அதன் மூல வேரைப் பிடுங்கிவிட வேண்டும். மூல வேர் அக்கொடி முளைத்த இடத்தில் உள்ளது; அது படர்ந்த இடத்தில் அல்ல. அவ்வாறுதான் புற உலகில் நிகழுகின்ற போர், பூசல்களை நிறுத்த வேண்டுமானால், அவற்றின் மூல காரணத்தை அறிந்து கொள்ளுதல் அவசியம். மூல காரணம், அவை தோன்றிய இடம்தான். அதாவது மனித உள்ளங்கள். எனவே மனித உள்ளங்களாகிய உள்ளரங்கத்தில் நிகழும் போராட்டங் கள் கழையப்பட வேண்டும். உள்ளத்தில் அமைதி, சாந்தி, சமாதானம் தோன்ற வேண்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் சாந்தி நிலவுமே யானால், நிச்சயம் உலகில் சாந்தி நிலவும். உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாகில், வாக்கில், செயலில், குடும்பத்தில், சமூகத்தில், நாட்டில், ஈற்றில் உலகம் முழுவதிலும் சாந்தியும் சமாதானமும் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் என்பது நிச்சயம்.
உன்னைத் திருத்திவிடு, உலகம் திருந்திவிடும். உலகத்தைத் திருத்துவதற்கு முன்னர், நீ திருந்திக்கொள் போன்ற மகா வாக்கியங்
43

Page 28
கள், மனிதனின் உள்ளரங்கச் சீராக்கத்தையே பெரிதும் வலியுறுத்து கின்றன. புண்ணுக்குள் காணப்படுகின்ற அசுத்தப் படலங்களை அப் படியே வைத்துக் கொண்டு, அதன் மேல், எத்தகைய சிறந்த மருந்தைப் பூசினாலும்,புண் ஆறப்போவதில்லை, அவ்வாறே, உள்ளத்தில் அழுக்கு களை நிறைத்துக் கொண்டு, சாந்திக்காகப் பிரார்த்தனை செய்தாலும், சாந்தி கிடைக்கப் போவதில்லை. புண்ணுக்குள் படிந்துள்ள, ஊத்தைச் சவ்வினை அகற்றிவிட்டு, மருந்து போட்டால், புண் விரைவில் குண மாகி விடும். உள்ளரங்கத்திலுள்ள அழுக்குகள், போராட்டங்கள், அகலும்போது, உள்ளம் தூய்மை பெறுகிறது. தூய உள்ளத்தில் தோன்றுவதுதான் சாந்தி. எனவே, சாந்தியைப் புறத்திலே தேடி அடைய முடியாது. நமது உள்ளரங்கச் சீராக்கத்தின் மூலமே, நம் முள்ளே சாந்தியைக் கண்டுகொள்ள முடியும். உலக சமாதானததுக்கு முன்னோடியாக, மனிதர்கள் ஒவ்வொருவரின் மனத்திலும் சமாதானம்
ஏற்பட வேண்டும்.
நாம் ஒய்வு எடுத்துக் கொள்கிறோம் என்று கூறுகிறோம். இது, எத்தகைய ஓய்வு என்பதை நாம் உணர வேண்டும். எவ்வித கருமங் களிலோ, செயல்களிலோ நம்முடைய உடம்பினை ஈடுபடுத்தாது, சும்மா இருத்தலைத்தான் ஒய்வு என்று பொதுவாகக் கொள்கின்றோம். மருத்துவர்கள் நோயாளிகளை ஒய்வு எடுக்கச் சொல்கிறார்கள். உடலை ஆட்டாது, அசைக்காது வைத்துக் கொண்டு படுக்கையில் படுத்திருத் தல் தான் ஒய்வு, என்கின்றனர். உடலுக்கு ஆறுதல் கொடுத்தால் நோய் குணப்பட்டுவிடும் என நம்புகின்றனர். உடல் ஓய்வாக இருக்கும் அதே வேளையில், நமது மனம், மற்றும் கருவி கரணங்கள் நமக்குள்ளே தொழிற்பட்டுக் கொண்டே இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறி விடுகிறோம். நமது மனங்களுக்கு ஒய்வு கொடுப்பதில்லை. சிலவேளைகளில் மருத்துவர்கள் மருந்து கொடுத்துப் புலன்களின் உணர்வுகளை மயக்கி விடுகிறார்கள். அத்நேரத்திலும், அடி மனம் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. உறக்கத்தில் கூட மனத்திற்கு ஒய்வு இல்லை.
சும்மா இருத்தல் என்பது மிகச் சிறந்த சாதனை எத்தனையோ செயற்கரிய செயல்களைச் செய்பவர்களாலும், சும்மா இருக்கின்ற சாதனையைப் புரிய முடிவதில்லை. சிந்தையையடக்கியே சும்மா இருக்
44

கின்ற திறனைப் பெறுவது மிக அரிது. எனவே சும்மா இருத்தல் என்பது உடலுக்கும், உள்ளத்துக்கும், அகப் புறக் கருவி கரணங்களுக் கும் ஒய்வு அளித்தல் என்பதாகும். உடலுக்கு மட்டும் ஆறுதல் கொடுத்துக் கொண்டு, மனத்தை அலைய விட்டுக் கொண்டிருந்தால் அது பயனுள்ள ஆறுதல் ஆக அமையாது. நாம் வாயை மூடிக் கொண் டிருக்கும்போதும், மனம் பேசிக் கொண்டிருப்பதையும், பல விடயங் களை விவாதிப்பதையும் உணருகின்றோம். கண்களை இறுக மூடிக் கொண்டிருக்கும் போது, அகக் காட்சிகள் பல தோன்றி மறைந்து கொண்டிருக்கின்றன. உறக்கத்திலும், நாளும் கண்டவற்றைக் கனவில் கண்டு கலக்கம் அடைந்த வண்ணம் இருக்கின்றோம். இந்த நிலையில், ஒய்வு என்பது வெறும் அர்த்தமற்ற தொன்றாகவே இருக்கின்றது. உடல், ஒய்ந்திருத்தும் அதனால் பயனில்லை. அதாவது, சாந்தி அமைதி, நிம்மதி, சமாதானம் ஆகியவற்றைத் தருவதாக அத்தகைய ஓய்வு அல்லது சும்மா இருத்தல் அமைவதில்லை. சும்மா இருத்தல் என்பது உடற் சுமை மனச் சுமை ஆகிய இரு வகைப் பாரச் சுமை களையும் இறக்கி ஒருபுறம் வைத்து விட்டு மனிதன் அவற்றிலிருந்து தூர விலகி இருத்தல் ஆகும். அத்தகைய உயர்வான விழுமிய நிலை ஏற்படும்போது தான் சாந்தி உதயமாகும். சாந்தி நிலவும் பட்சத்தில் கவலைகள், துன்பங்கள், துயர்கள், போராட்டங்கள் அழிந்து விடுகின் றன. உலகம் மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக அமைந்துவிடும்.
45

Page 29
12. பழக்கவழக்கம்
சகல மக்களும் ஆரோக்கியமாக வாழவே விரும்புகின்றனர். உடல் ஆரோக்கியம், உள ஆரோக்கியம் ஆகிய இரண்டும் சேர்ந்ததே மனித ஆரோக்கியம். உடல் உளம் என்பவை ஒன்றிற்கு ஒன்று ஆதாரம். ஆரோக்கியமான உடலில்தான் ஆரோக்கியமான உள்ளம் குடியிருக்கும் எனவே உடல் ஒம்பப்பட வேண்டியது. உள்ளத்தின் தன்மை உடலைப் பாதிக்கின்றது. உடல் ஒம்புதல் என்பது உள்ளத்தையும் ர்ேத்தே ஒம்புதல் ஆகும்.
மனிதனின் ஆரோக்கியம் சீராக அமைவதற்கு, அவனுடைய உணவு, நன்னடத்தை, விழுமியங்களைப் பேணுதல், உடற்பயிற்சி, சுகாதாரப் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை ஒழுங்கு, புலன்களைப் பயிற்றுதல், மன அடக்கம் முதலியன முக்கிய பங்களிப்பைச் செய் கின்றன.
நன்னடத்தை என்பது மனித இனத்துக்கே உரியது. வெறும் நடத்தையே, மிருகங்கள் முதலிய தாழ்ந்த, அறிவிற் குறைந்த உயி ரினங்களுக்கு உரியது. மனிதராகப் பிறந்தவர்கள் நன்னடத்தையை மேற்கொள்ளாவிடின், நிலையில் தாழ்ந்து விடுகின்றனர். நன்னடத் தையை வாழ்வில் கடைப்பிடிப்பதனால், உடல், உள ஆரோக்கியத்தை யும், மகிழ்ச்சியையும் மனிதர் பெறுகின்றனர். ஆரோக்கியம் குறைந்த வர்களே இழிந்த செயல்களில் ஈடுபடுகின்றனர். பலம் அற்றவர்கள், மிக எளிதில் கோபம் கொள்வதை நாம் காண்கின்றோம். மனிதன் களைப்பை அடைந்த நேரத்தின்தான் பிறர் மீது சீறி விழுகிறான். எனவே உடல், உள ஆரோக்கியத்தைப் பேணும் மனிதன் நன்னடத்தை யில் நாட்டங் கொள்கிறான். அவ்வாறே, நன்னடத்தை மூலம், மணி தனால் உடல், உள ஆரோக்கியத்தையும் பேண முடிகின்றது.
நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னடத்தைகள் சில வற்றை நோக்குவோம்.
தாய், தந்தை, ஆசிரியர், முதியவர், அறிஞர்கள் ஆகியோரை உளந் தூய்மையோடு வணங்குதல் வேண்டும்; அவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்தல் வேண்டும்; அவர்களின் வார்த்தை அமுதம்: அவர்களின் சொற்கேட்டு ஒழுகுதல் அவசியம்.
46

நீராடி, உடல் தூய்மையைப் பெறுதல் வேண்டும். உடலின் கெட்ட நாற்றம், அழுக்கு, வியர்வை, களைப்பு என்பன நீக்கப்பெற, உடலின் வனப்பும் வலிவும் ஒளியும் அதிகரிக்கின்றன. தலையில் எண் ணெய் வைத்துத் தலை முழுகுவதால் மண்டை ஒட்டிற்கு வலிமையும்; மயிர்க் கால்களுக்கு உறுதியும்; கண், காது, மூக்கு, நாக்கு முதலிய புலன்களுக்குத் தெளிவும் உண்டாகின்றது. முகத்தில் ஒளி பிறக்கிறது. 'சனி நீராடு' என்பது ஒளவையார் வாக்கு. இன்று அநேகர், இப் பழக்கங்களைக் கைக்கொள்வதில்லை. அதனால் அல்லல்படுகிறார்கள். தினமும் அதிகாலையில் நீராடுவதால் உடலுக்குக் குளிர்ச்சி ஏற்படு கிறது; உடல் உஷ்ணம் தணிகின்றது.
பல் துலக்குதல் மிக முக்கியம். காலையில் நித்திரைவிட்டு எழுந்த தும் பல் துலக்கி வாய் கொப்பளித்தபின்பே தேநீர், கோப்பி முதலிய பானங்களை அருந்துதல் வேண்டும். உணவை உட்கொள்ளுதலும் அவ்வாறே, பல் துலக்கிய பின்னரே நடைபெற வேண்டும். இப்பழக் கத்தைப் பின்பற்றாவிடின், நாக்கு, பற்கள், வாய் ஆகியவற்றில் உள்ள அழுக்குகள், உணவுடன் வயிற்றினுட் சென்று, பல்வேறு நோய்களுக்கும் ஏதுவாகும். வாய் நாற்றம், நாவின் சுவையின்மை என்பனவும் ஒழுங் காகப் பல் துலக்கி வந்தால் நீங்கிவிடும். 'ஆலும் வேலும் பல்லுக் குறுதி' என்பது ஆன்றோர் வாக்கு. ஆலங் குச்சி, வேலங் குச்சி ஆகியன கொண்டு பல் துலக்குதல் நன்மையைத் தரும் என்பது இதன் பொருள். 'பல்லுப் போனால் சொல்லுப் போகும்', என்பது பழ மொழி. பற்கள் சொற்களைத் தெளிவாகப் பேசுவதற்கு உதவுகின்றன. பல்லுப் போனால் உணவைச் செவ்வையாகச் சுவைத்து உண்ண முடியா மல் போய்விடும். அது மாத்திரமா, வயோதிபமும் வந்துவிடும். எனவே, பற்கள் அவதானமாகப் பேணப்பட வேண்டியன. மனித ஆரோக்கியத் திற்குப் பற்களின் பங்களிப்புப் பெரிது ஆகும்.
பல் துலக்கும்போது, நாக்கு வழிப்பதையும் மறந்துவிடக் கூடாது நாக்கில் படிந்துள்ள அழுக்கு கெட்ட நாற்றத்தை உண்டாக்குகிறது. உணவைச் சுவையற்றதாக்குகின்றது. வயிற்றினுட் சென்று நோய்க்கு ஏதுவாகிறது. மூச்சையும் தடை செய்கிறது என்று வைத்திய நூல் கூறுகின்றது. ஆகையால் நாக்கைத் தினமும் வழிக்க வேண்டும்.
கை, கால்கள்; மலசல வாயில்கள் என்பவற்றையும் நீரினால் கழுவிச் சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும். மலசல கூடங்களுட் செல்லும் வேளைகளிலும்; வீதி தெருக்களில் நடந்து செல்லும்போதும் காலணிகள் அணிதல் அவசியம்.
47

Page 30
தலையிலுள்ள முடி உரிய முறையில் பேணப்பட வேண்டும். எண்ணெய் வைத்து அழகாக வாரி விடப்பட வேண்டும். கூந்தல் அவிழ்த்து விடப்பட்ட நிலையில், வெளியில் மக்களிடையே உலாவுதல் நல்லதன்று. வெயில், மழை, தூசி என்பவற்றிலிருந்து தலையைப் பாதுகாத்துக் கொள்ளக் குடை முதலியனவற்றைப் பயன்படுத்த வேண்டும். கை, கால்களில் உள்ள நகங்கள் வளரவிடாமல் வெட்டப் படுதல் நன்று. கை நகங்கள் வளர்ந்தால் ஊத்தை, அழுக்கு என்பன அடைந்து சுகாதாரத்தை கெடுத்துவிடும். 'நகத்தைப் பற்களால் கடியாதே' என்ற கூற்று பொருள் பொதிந்தது.
உடுக்கும் ஆடைகள் தோய்த்து உலர்ந்தனவாக இருத்தல் வேண் டும். 'கந்தையானாலும் கசக்கிக் கட்டு' என்பது ஆன்றோர் மொழி. உள் ஆடைகள், வெளியில் தெரிவன அல்ல என்று கருதி அவற்றைக் கழுவியோ, தோய்த்தோ பாவிப்பதில் சிலர் அதிகம் சிரத்தை எடுப்ப தில்லை. அது தவறு. உள் ஆடைகள்தான் மிகுந்த சுத்தம் உடையனவாய் இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுதல் நலம். மேல் துறைக்கின்ற துவாய் மற்றும் கைக்குட்டை என்பனவும் சுத்தமாக வைத்திருத்தல் அவசியம். இருமும் போதும், தும்மும் போதும் கைக்குட்டையினால் வாயை மூடிக் கொள்வதால், பிறருக்கு இடையூறு தராமல் இருக்க முடியும்.
பலர் முன்னிலையில் காறி உமிழ்தல், துப்புதல், மலசலம் கழித் தல், கீழ்நோக்கி வாயுவை வெளியேற்றுதல், தும்முதல், இருமுதல், தூங்கி வழிதல், தலை சீவுதல், கூந்தலை அவிழ்த்து விடுதல், காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருத்தல், உரத்துச் சத்த மிடுதல், கொட்டாவி விடுதல், நெட்டி முறித்தல், சோம்பல் முறித்தல், புகைத்தல், மது அருந்திக் கும்மாளம் இடுதல், ஆண்-பெண் தழுவுதல் என்பன தவிர்க்கப்பட வேண்டியன, இவ்வாறு செய்தால் பிறருக்கு அசெளகரியங்கள் ஏற்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளுதல் அவசியம் மற்றையோருக்கு இடைஞ்சல்கள், இடையூறுகள் செய்யாது நடந்து கொள்ளுதல் நன்னடத்தையின்பாற்பட்டது. இத்தகைய நன் னடைத்தைகள் யாவும் மனித விழுமியங்களேயாகும்.
'பகலிலே நித்திரை செய்யாதே' என்று பெரியோர் கூறுவர். இரவிலே நீண்ட நேரம் கண் விழித்து இருத்தல் ஆகாது. நேரத்தோடு படுக்கைக்குச் செல்லுதல், அதிகாலையில் படுக்கையை விட்டு எழுதல் என்பன நல்ல பழக்கங்கள். இத்தகைய பழக்கத்தினால் ஒருவனிடம் ஆரோக்கியம், அறிவு, செல்வம் என்பன சேர்கின்றன. மனிதனுக்கு ஓய்வு அவசியம். சோம்பி இருப்பது ஓய்வு அன்று. சோம்பல் மிகக்
48

கெடுதி என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதேவேளை ஒய்வு ஒழிச்சலின்றி, ஊண் உறக்கமின்றி சதா வேலை, வேலை என்று அலைவதும் ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.
சிலர் புத்தகங்களை விரித்துப் படிக்க ஆரம்பித்ததும் தூங்கி விடுகிறார்கள். இன்னுஞ் சிலர் பஸ்ஸிலோ, ரயிலிலோ ஏறி உட்கார்ந் ததும் துரங்கி வழியத் தொடங்கிப், பிரயாணம் முடியும் வரை தூங்கு வார்கள். பக்கத்திலிருப்பவர்களுக்குத் தொல்லைகளைக் கொடுக்கின் றோமே என்பதை அவர்கள் உணர்வதில்லை. இத்தகையவர்கள் சில வேளைகளில் தமது உடைமைகளையும் இழந்து, இறங்க வேண்டிய இடத்தையும் மறந்து அல்லல் உறுகின்றனர். ஒரு சிலர், மற்றவர் களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே, நித்திரையாகி விடுகின் றனர். இவ்வாறு பிறரை அலட்சியப்படுத்தக் கூடாது. சொற்பொழிவு களின் போதும்; பாடல் நடைபெறும் போதும்; ஏன் இசை, நடன, நாடக நிகழ்ச்சிகளின்போது கூடக், கண் அயர்ந்து விடுபவர்கள் உண்டு. இவ்வாறானவர்கள் பிறரின் பரிகாசங்களுக்கு ஆளாகின்றனர். பொது இடங்கள், கோயில்கள், வெளியிடங்கள், வீதிகள், வேலைத் தலங்கள் ஆகியவற்றில் படுத்துறங்குதல் ஆகாது. உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ, சாய்ந்த நிலையிலோ, நித்திரை செய்யக் கூடாது. நீட்டி நிமிர்ந்து படுத்தே நித்திரை செய்தல் வேண்டும். மனத்தை அலையவிடாது, கெட்ட எண்ணங்களால் நிரப்பாது துயிலுத லால், இடையில் நித்திரை குழம்பாமல் இருக்கும். கனவு காணுதல், நித்திரையில் அரற்றுதல், நித்திரையில் எழுந்து நடத்தல், குறட்டை ஒலியை எழுப்புதல், பயந்து குழறுதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல் என்பன தம்முடைய தூக்கத்தைக் குழப்புவனவாக மாத்திரம் அமைய வில்லை; பிறருக்கும் இடைஞ்சல்களை ஏற்படுத்தி அவர்களின் தூக் கத்தையும் கலைப்பதாகவும் ஆகிவிடுகிறது.
தூக்கமின்மை, உடல் உள நோய்களுக்கு அறிகுறி. நன்றாகத் தூங்குதல், உடல் உள ஆரோக்கியத்திற்கு அறிகுறி. உடற்பயிற்சி, மன அமைதி, ஒழுங்கான வாழ்க்கை முறை இருப்பின் நித்திரைக்குப் பங்கமேற்பட முடியாது. நித்திரைக்குத் தூக்க மருந்துகள், மது வகை கள், போதை வஸ்துக்கள் ஆகியவற்றின் துணையை ஒருபோதும் நாடவே கூடாது. இவை ஆரம்பத்தில் தூக்கத்தைத் தருவதாகத் தோன்றினாலும், விரைவில் தூக்கத்தைப் பறிப்பதாகவே அமைந்து விடுகின்றன. உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன் என்ற
நிலை உண்டாகி விடுகின்றது.
49

Page 31
நிலத்தில் படுத்துத் தூங்குவதானால், பாய் விரித்து அல்லது தடித்த துணி விரித்து அதன் மேல் படுக்க வேண்டும். கட்டில், மெத்தை யைப் பயன்படுத்துவது தவறில்லை. ஆடம்பரமான சயன மஞ்சங்கள் தேவையற்றவை. படுக்கும் இடம் தூய்மையானதாகவும், காற்றோட்ட முள்ளதாகவும் இருத்தல் வேண்டும். படுக்கை விரிப்புகள், போர்வைகள் தலையணைகள், மெத்தைகள் என்பன அழுக்குப் பிடிக்கும் வரையும், துர்நாற்றம் அடிக்கும் வரையும் காத்திராது, அவற்றைக் கழுவிச் சுத்தம் செய்து வெய்யிலில் உலர்த்திப் பயன்படுத்துதல் அவசியம். படுக்கும் அறைச் சுவர்களில் தொங்க விடப்படும் படங்களோ, வேறு அழகுப் பொருட்களோ, மனத்திற்கு அமைதியையும், அழகையும் தர வல்லனவாய் இருத்தல் வேண்டும். விரிப்புக்கள், தலையணை முதலியனவற்றை மாற்றாது ஒரு படுக்கையை, பலர் பயன்படுத்துவதால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும். படுக்கைக்குப் போகுமுன், சண்டை சச்சரவுகளிலோ, விதண்டா வாதங்களிலோ ஈடுபடுவதைத் தவிர்ப்பதால், மனம் அமைதி பெற, தூக்கம் நன்றாக வரும். பதற்றம், மன அங்கலாய்ப்பு, நெருக்கிடை, பொறாமை, பகைமை உணர்வு என்பன மனத்தை நிரப்பி இருந்தால், தூக்கம் கெட்டுவிடும். உடல், உள ஆரோக்கியம் மிக மிகப் பெறுமதி வாய்ந் தவை, நல்ல பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதால் ஆரோக்கியம் பேணப்படுகிறது. ஆரோக்கிய வாழ்வு மனித விழுமியங்களின் விளைவு <毁@LD·
50

13. உணவுப் பழக்கம்
சிறந்த ஆரோக்கிய வாழ்விற்கு, நல்ல உணவுப் பழக்கம் மேற் கொள்ளப்பட வேண்டியது இன்றியமையாதது. உணவுகளில் சிறந் தவை, இயற்கையாகக் கிடைக்கக் கூடிய தானியங்கள், காய்கள், கிழங்குகள், கனிகள், இலை தழைகள், பால், தேன் முதலியன. இவற்றைச் சாத்வீக உணவுகள் என்பர். சாத்வீக உணவுகள் உடல் ஆரோக்கியத்துடன் உள ஆரோக்கியத்தையும் தரவல்லன. சாத்வீக உணவு வகைகள், மனிதரைச் சாத்வீகக் குணவியல்புகள் உள்ளவராக உருவாக்குகின்றன. சாத்வீகக் குணவியல்புகள் மனிதர்களுக்கே உரிமை யானவை. அதனால் மனித விழுமியங்கள், மனிதாபிமானம், மனிதப் பண்புகள் என்பன மனிதர்களிடம் வாழ்வதற்கும், பேணப்படுவதற்கும் சாத்வீக உணவுகள் உறுதுணையாக உள்ளன. மனிதர்கள், அசுர குணங்களிலிருந்தும், மிருக உணர்வுகளிலிருந்தும், அரக்கத் தன்மை களிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்கு சாத்வீக உணவுகள் பெரும் பங்கு கொள்கின்றன. எனவே சாத்வீக உணவுகளை மாத்திரமே தேடி, இயற்கைச் சூழலிலிருந்து பெற்று; பக்குவப்படுத்தி; சுத்தமாகப் பேணி: அளவாகவும், நேர ஒழுங்கு முறையிலும் உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர்கள், நோயற்ற வாழ்வினை வாழ்வர். 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்பது முதுமொழி.
'நோய்க்கு இடங்கொடேல்' என்பர். நோய்க்கு இடம் அளிக் காமல் வாழ்வதற்கு முக்கியமானது, சாத்வீக உணவுகளை உட்கொள்ளு தல் ஆகும். அதேவேளை, மனித உள்ளத்தையும் சமநிலையில் வைத் திருக்க உதவுகின்றன.
‘மீதூண் விரும்பேல்', என்பது பொன்மொழி. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகி விடுகின்றது என்பர். வாழ்விக்கும் அமிர்தத்திற்கே இந்தக் கதியென்றால், உண்ணும் உணவினை மிதமிஞ் சிச் சாப்பிட்டால் அதனால் ஏற்படக் கூடிய தீய விளைவுகள் எத் துணை தீங்கினை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து கொள்ளலாம். உணவினை அளவிற்கு அதிகமாக உண்பதால் மாத்திரமல்ல; உணவை மிகக் குறைவாக உண்ணுவதாலும் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
‘ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளுக்கேல் என்றால் ஏலாய்.'
5.

Page 32
என்ற பாடல் பொருள் பொதிந்தது. ஒருநாள் உணவினை விட்டுவிடு என்றால், வயிறு கேளாது. இரண்டு நாள் உணவை ஒரேயடியாக ஏற்றுக்கொள் என்றாலும் வயிறு மறுத்து விடுகிறது. வயிற்றுக்குத் தெரியும், உணவை எப்பொழுது ஏற்பது, எவ்வளவில் ஏற்பது, என் பதும்; உணவை எப்பொழுது ஏற்காமல் விடுவது என்பதும், வயிறு, பசி மூலம் தன் நிலைப்பாட்டினை எமக்கு உணர்த்துகின்றது. 'பசிக்காமல் புசிக்காதே’ என்பர். ஆகவே, வயிற்றைக் கேட்டு, அதற்கேற்ப உணவை உண்டு வந்தால், தீங்கு ஏதும் நேராது. பசிக்கும் போதே உண்ண வேண்டும்; பசிக்காவிட்டால் உண்ணக் கூடாது. வயிறு கூறும் உபாயம் இதுவேதான்.
ஆனால் மனிதர்களில் எத்தனைபேர், வயிற்றைக் கேட்டு உணவை உண்கின்றனர். பெரும்பாலும் மனதின் ஆசையையே உணவு விடயத் திலும் நிறைவேற்றுகின்றனர். உணவுகளைக் கண்ணால் கண்டதும், மூக்கால் முகர்ந்ததும், உடனே அச் செய்தி மனதிற்கு அனுப்பப் படுகிறது. மனம் அவ்வுணவினை உண்ண வேண்டும் என்று ஆசை கொள்கிறது. அந்த ஆசை நாக்கில் நீரைச் சுரப்பிக்கிறது. உடனே உணவு உட்கொள்ளப்படுகிறது. இது பற்றி வயிற்றுக்கு இதுவரை எதுவுமே தெரியாது. வயிற்றைக் கேட்டுச் செய்யப்படாதது இச் செயல். மனத்தின் உந்தலால் செய்யப்படுகின்ற செயல்; பெரும்பாலும் விவேகத்தையும், புத்தியையும் மீறியதாகவே அமைகின்றன. அதனால் நட்டமே அன்றி நயம் இல்லை.
உண்ணப்பட்ட உணவு வயிற்றினுள் சென்ற பின்னரே, வயிற்றுக் குத் தெரியும். வயிறு, உணவைக் கேட்டுப் பெற்றால், பிரச்சினை இல்லை. கேளாமல் வயிற்றினுள் உணவு திணிக்கப் பெற்றால், அவ் வுணவு சீரணிப்பதில் சங்கடம் ஏற்படுகிறது. சீரணிக்கப்பெற்று, உடம் பில் சுவறினாலும், உடலில் வேண்டாத வளர்ச்சிகள் ஏற்பட்டு, நலத்தையும் அழகையும் கெடுத்து விடுகின்றன. எனவே உணவை உண்ணும் விஷயத்தில், மனத்தின் கட்டளைகளுக்குப் பணியாது; புத்தியையும் விவேகத்தையும் பயன்படுத்தி வயிற்றின் ஆலோசனைப் படி நடந்து கொண்டால் நன்மையாக அமையும். உணவின் மீது ஆசை தோன்றுமிடம் மனம்; உணவு போய்ச் சேருமிடம் வயிறு. ஆசைக் கோர் அளவில்லை. ஆயிரம் பேருக்குரிய உணவுகள் முழுவதையும், ஒரே மூச்சில் விழுங்கிவிட வேண்டும் என்று ஆசை கொள்வது மனத் திற்கு ஒரு பெரிய பிரச்சினையான விஷயமன்று. தேவை, தேவை யில்லை என்பவை மனத்திற்குரியன அல்ல. ஆனால், வயிற்றிற்குத்தான் தெரியும் உணவின் தேவையும், தேவையின்மையும்; அளவும், அளவுக்கு அதிகமும். உணவு மனிதனின் ஆசையை நிறைவு செய்வதற்கு அன்று
52

தேவையைப் பூர்த்தி செய்வதற்கேயாகும். எனவே, உணவு உண்பது என்பது மனத்தைக் கேட்டு அல்ல; வயிற்றைக் கேட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உணவை அளவாக உண்பது எத்துணை முக்கியமோ, அவ்வாறே உணவை உரிய நேரத்தில், ஒழுங்காக உண் பதும் முக்கியமாகும்.
காலை உணவு, மதிய உணவு, இரவு உணவு என்பவற்றைக் குறித்த நேரங்களில் உண்டு வருவது நலன் தரும். காலந் தாழ்த்தியோ, இரண்டுங்கெட்ட நேரத்திலோ நேரகாலம் தெரியாமலோ சாப்பிடு தல், உடல் நலத்தைக் கெடுக்கும். நோய்களை வரவழைப்பதாக அமையும்.
ஒரு நேர்ம் உண்பவன் யோகி; இரண்டு நேரம் உண்பவன் போகி; அளவாக உண்பதன் முக்கியத்துவம் இதிலிருந்து தெரிகிறது.
சிலர் நாள் முழுவதும் ஏதாவது கொறித்துக் கொண்டே இருப் பார்கள் சிற்றுண்டிகளை உள்ளே தள்ளிக் கொண்டே இருப்பார்கள். பிள்ளைகள் சிலர் இனிப்புப் பண்டங்களை அதிகம் சாப்பிடுகிறார்கள். பெற்றோரும் கவனிப்பதில்லை. உடம்பு பருத்து, ஊளைச் சதைகள் வைத்து அழகைக் கெடுத்த பின்னர் கவலைப்பட்டுப் பயனில்லை. நோய்கள் வந்தபின் பத்தியம் இருந்து பரிகாரம் தேடுவதிலும் பார்க்க, ஒழுங்கான உணவுப் பழக்கத்தை மேற்கொண்டு நோய்களை அணுக விடாமல் தடுப்பது மேலான காரியம்.
உணவுப் பதார்த்தங்கள் உண்டு என்பதற்காக அவற்றை நாமே உண்டு விடுதல் முறையன்று. "யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி' என்ற எமது மரபினைப் பேணுதல் அவசியம். 'பகுத் துண்டு பல்லுயிர் ஒம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாந் தலை' என்பது பொய்யா மொழி. எல்லாத் தானங்களிலும் அன்ன தானம் சிறந்தது. மற்றைய எல்லாக் கொடைகளையும் பெறுபவர்கள் மேலும் வேண்டும் என்பார்களே தவிர, 'திருப்தி’, ‘இனிப்போதும்’ என்று சொல்லத் தயங்குவர். உணவை உண்ணக் கொடுத்தால், உண்பவர், ஒரு நிலையில் ‘இனிப் போதும்’ என்று சொல்லக் கேட்க முடியும். விருந்தோம்பல் என்பது நமது மரபு; பண்டைய காலந் தொடக்கம் சிறந்த விழுமியப் பண்பாகப் போற்றப்பட்டு வருகிறது.
‘விருந்து புறத்ததால் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற் பாற்றன்று."
'வருவிருந்து வைகலும் ஒம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.'
53

Page 33
ஆகிய குறட்பாக்கள் கூறும் விழுமியங்களை நாம் உணர்ந்து கொள்ளு தல் வேண்டும். விருந்தினர்களை முகம் மலர வரவேற்று, அவர்களின் பசியைப் போக்குபவர்களின் வாழ்க்கையில் துன்பங்கள் ஏற்படா என் பது அனுபவ உண்மை. தற்காலத்தில் பல்வேறு காரணங்களினால், அகதிகள், ஆதரவற்றோர், நலிந்தோர், உடல் ஊனமுற்றோர் போன் றோர் சமுதாயத்தில் உள்ளனர். உள்ளவர்கள், உடையவர்கள் ஒரு பங்கினை இல்லாதவர்களுக்குக் கொடுத்துதவுதல் மனித தர்மமாகும்.
உணவுப் பண்டங்களை வீண் விரயம் செய்தல் ஆகாது; கொட் டித் தூவுதல், சிந்துதல், அவற்றின் மேல் மிதித்தல், பழுதாக விடுதல், கலப்படம் செய்தல் என்பன மனிதாபிமானமற்ற பாதகச் செயல்கள். வீசியெறிகின்ற உணவினை, ஏழைகளுக்கோ, வேறு உயிரினங்களுக்கோ
உண்ணக் கொடுக்கலாமல்லவா?
வியாபார ரீதியில், உணவுப் பொருட்களில் கலப்படம் செய்யும் மனிதப் பண்பற்ற செயலைச் சிலர் செய்து, கொள்ளை இலாபம் அடிக்கிறார்கள். இதனால் மனித சமுதாயத்திற்கு எத்துணை தீங்கு விளைவிக்கப்படுகிறது என்பதை உணருகின்றாரில்லை. கலப்படம் செய் பவர்கள், தாம் செய்வது இழிந்த, ஈனச் செயல் என்பதைத் தாமாக
உணர்ந்து, திருந்தாவிட்டால், கலப்படத்தை ஒழிக்க முடியாது.
நாம் வாழ்வதற்காக உண்ண வேண்டுமே தவிர, உண்பதற்காக என்றே வாழக் கூடாது. உணவை உண்ணும்போது, வேறு சிந்தனை களை மனதில் தேக்கிக் கொள்ளக் கூடாது; அவசரப்படக் கூடாது; மிக ஆறுதலாகவும் உண்ணக் கூடாது. நின்று கொண்டோ, நடந்து கொண்டோ, அசைந்து கொண்டோ உண்பது ஆகாது. உணவுக்கு மதிப்பளித்து, போற்றி உண்ண வேண்டும். உணவினைப் பழித்துக் கொண்டோ, சரியில்லை, சுவையில்லை என்று நிந்தித்துக்கொண்டோ,
பரிமாறுபவர்களுடன் கோபித்துக் கொண்டோ உட்கொள்ளல் ஆகாது.
சுத்தமில்லாத பாத்திரங்களில், அசுத்தமான இடங்களில், நேரந் தவறிய வேளையில், சன சஞ்சடி நிறைந்த இடத்தில் உணவை உண்ணக் கூடாது. தன்னிடம் அன்பு இல்லாதவர், நல்ல பழக்க வழக்கம் தெரியாதவர், தூய்மை அற்றவர், பகைவர்கள் தரும் உணவு
களை உட்கொள்ளல் ஆகாது. இவற்றினால் தீங்கு விளையும்.
54

சுத்தம் சோறிடும், எச்சில் இரக்க வைக்கும் என்பார்கள். உண வைச் சமைப்பவர்கள், பரிமாறுபவர்கள், உண்பவர்கள், பக்கத்தில் உடன் உண்பவர்கள் ஆகியோர் சுத்தம் பேண வேண்டும். உணவின் மூலம் நோய்கள் பரவுகின்றன. உணவு மேசையில் இருந்து சாப்பிட்டுக் கொண்டே உரத்துப் பேசுதல், சிரித்தல், இருமுதல், தும்முதல், காறுதல், மூக்குச் சிந்துதல் என்பனவற்றைச் செய்தல் மூலம் எச்சில் உணவுகளில் தெளிக்கப்பெற்று நோய்கள் பரவ ஏதுவாகும். சிலர் உணவைப் பரிமாறும்போது இவ்வாறு செய்வதால் சுகாதாரக் கேடுகள் உண்டாகின்றன, என்பதை உணருகின்றார்கள் இல்லை. உணவுகள் மூடி வைக்கப்பட வேண்டும் என்பதையும் பலர் மறந்து விடுகின்றனர்.
மக்கள் எண்ணிச் செயல் புரிந்து வாழக்கூடியவர், உணவிலும் எவை உண்ண வேண்டும், எப்பொழுது உண்ண வேண்டும் எவ்வளவு உண்ண வேண்டும், எவ்வாறு உண்ண வேண்டும், எப்படிப் பேண வேண்டும் என்பவற்றையெல்லாம் நன்கு எண்ணித் துணிந்து உணவுண் பவர்கள் ஆரோக்கியமாக வாழ்வர். இனிது வாழ்வர், நீண்ட ஆயு ளுடன் வாழ்வர். உணவு "மிகினும் குறையினும் நோய் செய்யும்’ என்பர் நூலோர். 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு, அருந் தியது அற்றது போற்றி உணின்' எனும் குறளை மனத்திற் கொள்வோ
Of di .
S5

Page 34
14 இல்லறமே நல்லறம்
வாழ்க்கை என்றால் அறம் செய்து வாழ்தலேயாகும். கணவன் மனைவி பிள்ளைகள் சேர்ந்து ஒரு குடும்பமாக வாழ்தலை இல்லறம் என்பர். குடும்ப வாழ்க்கையை அறம் என்பர் பெரியோர். அறம்செய்து வாழ்தலுக்குக், குடும்ப வாழ்க்கையில் நிறைய வாய்ப்புக்கள் உண்டு. அவ்வாறு அறங்கள் புரிந்து, அறத்தின் அடிப்படையில், மனித விழு மியங்களைச் சார்ந்து வாழுகின்ற குடும்பங்கள், சீரும் சிறப்பும்; திருவும், ஒளியும் பெற்றுத் திகழும் என்பது உறுதி.
'அறத்தால் வருவதே இன்பம்" என்கிறது தமிழ்மறை.
‘அறப் செய்து வாழ்வதே வாழ்க்கை; மற்று எல்லாம்
வெறும் பேழை தாழ்க்கொளி இயற்று' என்று கூறுகிறது.
அறநெறிச் சாரம். w
அறம் சாராத வேறெந்த முயற்சிகளும் முதலில் இன்பந் தருவ தாகத் தோன்றினாலும், அவை நிலையான நீடித்த இன்பத்தைத் தரமாட்டா. இறுதியில் துன்பமாகவே அமைந்துவிடும். மிருகங்களுந் தான் உயிர் வாழ்கின்றன. அவற்றின் வாழ்க்கை நிறைவான வாழ்வு அன்று. மனிதர்கள் உயர்திணையினர். அறம் தெரிந்தவர்கள் அல்லது அறத்தை அறிந்து கொள்ளும் தன்மையினர். அவ்வாறு இருந்தும், அறம் செய்யாமல், அறத்தின் வழி நடக்காமல், தம்முடைய சொந்த நலன்களை மட்டும் பேணி, நிறைவுசெய்து வருகின்ற இல்வாழ்க்கை யானது, உள்ளே எதுவும் இல்லாத வெறும் பெட்டியைப் பூட்டி வைப்பதைப் போன்றதாகும் என அறநெறிச்சாரம் கூறுகின்றது. எனவே அறஞ்செய்து வாழ்வதே இல்வாழ்க்கையின் சிறப்பு. அத்தகைய அறந்தழுவிய குடும்ப வாழ்க்கையே இன்பம் நிறைந்து காணப்படும். இன்பம் எங்கே? என்று தேடி, உலகத்தில் எங்கேயேனும் இன்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியாது. வீண் அலைச்சலும், உலைச்சலும்தான் மிஞ்சும்.
இருக்கும் இடத்தில் இருந்து கொண்டு, கணவனும் மனைவியும் மனமொத்து அறங்கள் புரிந்து இல்லறம் நடத்துவார்களேயானால், இன்பம் அவர்கள் இருக்கும் இடம் தேடி, நாடி வரும். குடும்பம் இன்பப் பூங்காவாக விளங்கும்.
56

குடும்பத் தலைவன், கணவன்; குடும்பத் தலைவி, மனைவி, ஏனைய சமூக நிறுவனங்களில் தலைவன் அல்லது தலைவி என ஒருவர் தான் அந்த நிறுவனத்திற்குத் தலைமை தாங்கி இயங்கிச் செல்வார். ஆனால் குடும்பம் எனும் சமூக நிறுவனத்திற்குக் கணவன், மனைவி எனும் இருவரும் தலைமை தாங்குகின்றனர். ஒரே நேரத்திலும் அவ் வாறு தலைமை தாங்குகின்றனர். இதுவே குடும்பத் தலைமையின் பெருமையும் சிறப்பும். தலைமை ஒருவரின் கையில் இருந்தால் அது சர்வாதிகாரம். ஆனால் குடும்பத்தில் அந்நிலைமை ஏற்படக்கூடாது என்பதனால்தான், கணவனும் மனைவியும் தலைமையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்கிடையே பேதம் இல்லை; ஏற்றத் தாழ்வுகள் இல்லை; ஆனால் சமத்துவம் உண்டு; சுதந்திரம் உண்டு. கணவன், மனைவி சமத்துவம், பண்டுதொட்டு நமது பண்டமாக வளர்ந்து வந்துள்ளது.
எங்கேயாவது கணவன், மனைவிக்கிடையே உயர்வு தாழ்வு காணப்பட்டிருந்தால், அதனை அவர்களில் ஒருவரின் பலவீனம், அல்லது மற்றையவரின் அறிவீனம் என்று கூற வேண்டுமே தவிர, நமது பண்பாட்டின்மீது குற்றம் சுமத்திக் களங்கத்தை ஏற்படுத்துதல் மதியீனம் ஆகும். நமது பண்பாடு, ஆணையும் பெண்ணையும் சரிநிகர் சமானமாக மதித்து வருகிறது. அதேவேளை, ஆண்களினதும், பெண் களினதும் உயிரியல், பெளதிகம் சார்ந்த கடமைகள் பொறுப்புக்களில், வேறுபாடுகள் உள்ளன. இந்த வேறுபாடுகள் அவர்களிடையேயுள்ள உயர்வு தாழ்வுகளாகக் கற்பனை செய்யப்படக் கூடாது அவ்வாறு செய்தமையினாலேயே, பிற்காலத்தில் ஆண்-பெண் சமத்துவம், சம உரிமை ஆகியவற்றில் பிரச்சினைகள் தோன்றின.
குடும்பத்திலுஞ்சரி, சமுதாயத்திலுஞ்சரி, ஆண் பெண் உரிமை களைப் பொறுத்தளவில் சமத்துவம் உண்டு. இதில் மாறுபட்ட கருத் துக்கு இடமில்லை. ஆனால் சிற்சில சந்தர்ப்பங்களில், கடமைகளைப் பொறுத்தளவில், பெண்களுக்கெனத் தனியான கடமைகளும், ஆண் களுக்கெனத் தனியான கடமைகளும் இருப்பதைப் புறக்கணிக்க முடி யாது.
'ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’’ என்கிறாள் தாய். இந்தச் கடமையைத் தந்தையால் செய்ய முடியுமா? இக்கடமையைத் தாய் ஆற்றாமல் தவிர்ப்பது தர்மமாகாது. கடமைகள், பணிகள், பொறுப்புக்கள் யாவும் உயர்ந்த அறங்கள். அறங்களில் உயர்ந்தவை, தாழ்ந்தவை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உணர்ந்து கொண்டால், ஆண், பெண் சமத்துவப் பிரச்சினைக்கே இடமில்லாமல் போய்விடும்.
57

Page 35
இல்வாழ்க்கையென்பது ஆணும் பெண்ணும் கருத்தொருமித்து, ஆதரவு பட்டு வாழ்கின்ற இன்ப வாழ்க்கை. உயர்வு, தாழ்வு என அவர்களுக்கிடையே எதுவுமே கிடையாது. இல்லறம் நல்லறமாவது அப்போதுதான். இல்லறத்தில் கணவன், மனைவி இருவருக்கிடையே உயர்வு, தாழ்வு, கருத்து முரண்பாடு, ஆதரவின்மை ஏற்படுமேயானால் இல்லறம் குழம்பிவிடும்; இன்பம் கலைந்துவிடும்.
'மருவிய காதல் மனையாளும் தானும்
இருவராய்ப் பூண்டு ஈர்ப்பின் அல்லால், ஒருவரால் இல்வாழ்க்கை என்னும் இயல்புடைய வானசகடம் செல்லாது, தெற்றிற்று நின்று. ’’ -அறநெறிச்சாரம்
இல்வாழ்க்கை என்பது வண்டி போன்றது அதனை இழுத்துச் செல்பவர்கள் அன்பும் ஒருமையுணர்வும் கொண்ட கணவனும் மனைவி யும் ஆவர். அவ்வாறு இருவருமாக இணைந்து இழுத்தால் அல்லாமல், கணவன், மனைவி எனும் அவ்விருவருள் ஒருவரால் இழுக்கப்படும். குடும்பம் ஆகிய இணையற்ற, அந்த வண்டி, உருண்டு செல்லாமல் தடைப்பட்டு நின்றுவிடும், என்கிறது அறநெறிச் சாரம். இங்கு கணவன், மனைவி இருவருக்கிடையேயான புரிந்துணர்வு, ஒருமை, யுணர்வு, கருத்து ஒருமைப்பாடு, கூட்டுறவு, பரஸ்பர அன்பு என்பன குடும்ப வாழ்வின் வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் சிறப்புக்கும் ஏதுக்களா கின்றன என்பது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. இத்தகைய மகிழ்ச்சி நிறைந்த குடும்பம் ஒன்றினைத் தரிசித்த நிறைவின் மேலீட்டால் போலும் ஒளவைப் பிராட்டியார் 'இல்லற மல்லது நல்லறமன்று, ' என்று கூறியுள்ளார்.
தற்காலச் சூழ்நிலையில், உரிமைக்கு முதலிடமும்; அன்பு, பரிவு, இன்சொல், விட்டுக் கொடுக்கும் பண்பு முதலிய மனித விழுமியங் களுக்கு இரண்டாம் இடமும்; அலட்சியமும் வழங்கும் கணவன், மனைவியுள்ள குடும்பங்களைப் பார்க்கும்போது ஒளவையாரின் பொன் மொழியை மறு பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. இவ்வாறு சச்சரவு கள் உள்ள கணவன் மனைவியை, தந்தை தாய் ஆகப் பெற்ற பிள்ளை களின் நிலை எத்துணை பரிதாபகரமானது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிள்ளைகள் பெற்றோருடன் வாழும்போது பல வாழ்க்கை அனுபவங்களைப் பெறுகின்றனர். பிள்ளைகளைப் பொறுத்தவரையில் குடும்பம்தான் அறநெறிப் பயிற்சி நிலையம், ஒழுக்கப் பயிற்சி நிலையம், பண்பாட்டுப் போதனா நிலையம், வாழ்வியல் பயிற்சி நிலையம்
58

அனைத்தும் ஆகும். தாய், தந்தை, சகோதரர், மற்றும் மூத்தோர் ஆகியோருடன் வாழ்ந்து பிள்ளைகள் இப் பயிற்சிகளைப் பெறுகின் றனர். மனித உறவுகளைப் பேணும் முறை; வீட்டுக்கு வருவோரை உபசரிக்கும் முறை; சமூகத்தில் பின்பற்ற வேண்டிய நெறி முறைகள்; மனித விழுமியங்களுக்கு மதிப்புக் கொடுத்தல் போன்றவற்றையெல் லாம் பெற்றோர்களைப் பார்த்தும், அவர்களின் வாழ்க்கை முறைகளை அவதானித்துமே பிள்ளைகள் கற்றுக் கொள்கின்றனர். பிள்ளைகளின் உடை , நடை, பாவனைகளில், பெற்றோரின் செல்வாக்கும் வழிகாட்
டலும் பெரிது.
பிள்ளைகளின் நெறிபிறழ்வு, துர்நடத்தை, கீழ்படிதல் இன்மை, ஒழுக்கச் சீர்கேடுகள், மற்றும் சமுதாயத்திற்குப் பயப்படாமை, மன முறிவுகள் கெட்ட பழக்கங்கள், சட்டங்களை மீறுதல் முதலியன, குடும்பத்தில் பெற்றோரின் தவறான வழிநடத்தலாலும்; சில சமயங் களில் பெற்றோரின் ஏனோதானோ என்ற உறுதியற்ற போக்குகளா லும்; வேறு சில சந்தர்ப்பங்களில் பெற்றோரின் கடுமையான போக் காலும்; தாய் தந்தையரின் பிச்சுப் பிடுங்கல்களாலும்; குடும்பத்தில் உரிமைப் போர் காரணமாக அமைதியின்மையாலும்; அன்பு இன்மை யாலும் ஏற்படுகின்றன.
தந்தையின் நடத்தை முறைகளைப் பார்த்து ஆண் பிள்ளைகளும்; தாயின் நடத்தைக் கோலங்களைப் பார்த்துப் பெண் குழந்தைகளும், தங்களுடைய நடத்தைக் கோலங்களைப் பொதுவாக அமைத்துக் கொள்கின்றன. எனவே குடும்பத்தில் பிள்ளைகள் காண்பவைகளும், கேட்பவைகளும் வாழ்க்கைப் பாடமாகப் பிள்ளைகள் கற்று விடுகின் றனர். எனவே, பிள்ளைகள் அன்பு, கருணை, பணிவு, நீதி, நியாயம், உண்மை, மனிதாபிமானம் போன்ற மனிதப் பண்புகள், மனித விழு மியங்களுடன் வளர வேண்டுமானால், பிள்ளைப் பருவத்தில் வாழு கின்ற குடும்பம் அவற்றிற்கேற்ற சூழலைக் கொண்டிருத்தல் அவசியம்.
பெற்றோர், தமது பிள்ளைகளின் வருங்கால நன்னடத்தையை யும், நலனையும் கருத்தில் கொண்டு, நல்லதொரு சூழலைக் குடும்பத் தில் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காகத் தியாகங்களைச் செய்யவும் பெற்றோர் தயாராக இருத்தல் வேண்டும். கணவன், மனைவிக் கிடையே உரிமை காரணமாக எழுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்து, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பையும் அமைதியையும் குடும்பத்தில் நிலவச் செய்வார்களேயானால், பிள்ளைகள் வாழத் தகுந்த சூழ்நிலை உருவாகிவிடும். தமது பிள்ளைகளுக்குப் பெற்றோர் சிறந்த முன் மாதிரிகளாக ஒழுகிக் காட்டும் பட்சத்தில், பிள்ளைகளும்
59

Page 36
வாழ்ந்து கற்றும், வாழக் கற்றும், சிறந்த வாழ்க்கைப் பாடங்களைக் கற்றும் கொள்கின்றனர். பிரச்சினைகளுக்குட்படாத பிள்ளைகளாக வளர்ந்து, எதிர்நோக்கும் எப்பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கும் தைரியத்தையும், ஆற்றலையும் பெற்று விடுகின்றனர்.
பிள்ளைகளின் ஒழுக்கப் பிறழ்வுக்கும், வளர்ந்தபின் சமூக விரோ தக் குற்றங்களைப் புரிவதற்கும் காரணங்களை ஆராய்ந்தவர்கள், அத்தகையோர் உறுதிப்பாடற்ற குடும்பச் சூழலில் வளர்ந்தமை, பெற் றோரின் தவறான வழி நடத்தல், பெற்றோரின் அறியாமை, பெற் றோரின் கடும் போக்கு பெற்றோர் முன்மாதிரியாக நடந்து கொள் ளாமை, பிள்ளைகளுக்குப் பொறுப்புக்களை வழங்காமை போன்ற குடும்பத்தோடு தொடர்புடைய காரணிகளையே ஏதுக்களாகக் கூறு கின்றனர். அன்பு, பிணைப்பு, இரக்கம், பாசம், பந்தம் என்பன இல்லாத குடும்பங்களில் வளருகின்ற பிள்ளைகளிடம், நல்லொழுக் கத்தை எவ்வாறு எதிர்பார்க்க முடியும். எனவே மனிதப் பண்புகளை யும், மனித விழுமியங்களையும் வாழ்க்கையில் மேற்கொள்வதன்மூலம் நல்லதொரு ஒழுக்கமுள்ள எதிர்காலச் சந்ததியினர் உருவாவதற்கு உதவுவோமாக.

15. மனித விருத்தி
சமுதாயத்தில் எவை எவை வளர்ச்சி பெற வேண்டும் என்று விரும்புகிறோமோ, அவை வளர்வதாக இல்லை. எவை வளர்ச்சி பெறுவதால் தீமைகள் ஏற்படுகின்றனவோ, அவையெல்லாம் துரித மாக வளர்ந்து பயன்களைத் தருகின்றன. இதுவே இன்றைய சமுதாய நிலையாகிவிட்டது. தீயன யாவும் மலிந்தும், நல்லன அகன்றும் வருவதற்குச் சமுதாயத்தில் காணப்படுகின்ற இத்தகைய போக்கே காரணம் ஆகின்றது
மனிதனின் கள்ள மனம், கபடப் பேச்சு, வஞ்சகச் செயல்கள் என்பன தற்பொழுது அபரிமிதமான வளர்ச்சி கண்டுள்ளன. மனித குலத்திற்கு அவலத்தையும், அழிவையும் உண்டுபண்ணும் இந்த வளர்ச் சிகள் வேண்டற்பாலன அல்ல. எனவே, அவை தடுத்து நிறுத்தப்பட வேண்டியன. ஆனால் மனிதனிடம் ஒரு பழக்கம் தொற்றிவிட்டால், அந்தப் பழக்கத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கொள்ளுதல் இயலாத காரியம் ஆகிவிடுகின்றது. அதனால்தான் கெட்ட பழக்கங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே இடம் கொடுக்கக் கூடாது என்று ஆன்றோர்கள் கூறியுள்ளனர்.
**கெடுகுடி சொற் கேளாது, சாகிறவன் மருந்து குடியான்' என்ற பழமொழி உண்டு. கெட்டுத்தான் ஆவது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்பவன், எவரின் புத்திமதிகளையும் கேட்கமாட் டான். அது அவனவன் தலை விதி என்று கூறித் திருப்தியடைகின் றனர். தலை விதி மாற்றப்படக் கூடியதன்று என்பது அவர்கள் வாதம். கூர்ந்து நோக்கின், அது தலை விதியன்று. அதை மதியீனம், மடமை, பிடிவாதம் என்றே கூற வேண்டும்.
மருந்து கசக்குமே என்பதற்காக அதனைக் குடிக்க மறுத்தால்; சத்திர சிகிச்சை நோவைத் தரும் என்பதற்காக, அதனைச் செய்யப் பயந்தால், நோய் எப்படிக் குணமாகும் அதற்காக வாழ்நாள் முழு வதும் கொடிய நோயுடன் வாழ்ந்து துன்பப்படுவதா? இறப்பு என்பது நிச்சயம் என்பதற்காக முன் கூட்டியே அதனை நிகழச் செய்வதா? அதனையும் விதி என்று கூறிவிட்டு, வாழாவிருப்பதா? மருந்தைக் குடியாமல் விடுவதும், பிறர் கூறும் நல்ல புத்திமதிகளுக்குச் செவி சாய்க்காது அலட்சியப்படுத்துவதும் அவரவர் பிடிவாதப் போக் கினையே பிரதிபலிக்கின்றது. விளைவு துன்பத்தில் முடிகின்றது.
6

Page 37
'எனக்கு எல்லாம் தெரியும், மற்றவர் சொல்ல நான் என்னி கேட்பது? என்னிலும் பார்க்க மற்றவர்களுக்கு என்ன கூடத் தெரியும் .’’ என்ற ஒரு வகை விபரீதமான எண்ணம் கொண்ட வாழ்க்கை நடைமுறை தற்காலத்தில் மக்களிடையே பெருகி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது. இது, குறிப்பாக, இளைய தலைமுறையினர்கள் மத்தியில் பெரும்பாலும் மையம் கொண்டுள்ளது. இதற்கெல்லாம் காரணம், கர்வமும் அகந்தையும் தான்.
மனிதனிடம் ஆணவம் குடிகொண்டுள்ளது. "நான், எனது' என்னும் அகந்தை மமதைகளுக்கு ஊற்றாகவும்; உருக்கொடுத்து, உயிர்ப்புக் கொடுத்து வளர்க்கும் மூலமாகவும், ஆணவம் விளங்கு கின்றது. மனிதனிடம் உள்ள கர்வம், செருக்கு, பிடிவாதம், மூர்க்கம் என்னும் குணங்கள், ஆணவம் வழங்கிய 'வரப்பிரசாதங்கள்.”* இவை யாவும் கூட்டாக, மனிதனிடம் சுயநலத்தை ஓங்கி வளரச் செய்கின் றன. சுயநலம் மனிதனின் கண்ணை மறைக்க, அவன் அந்தகார இருளில் சிக்கிவிடுகின்றான். சூரியன் புறத்தே ஒளியைக் கொடுத்த போதும், மனிதன் கண்களை இறுகி மூடிக்கொண்டானாகில், மனி தனுக்கு உலகம் இருண்டு விடுகின்றதல்லவா? சுயநல நாட்டம்கொண்ட மனிதன், பிறரும் இந்த உலகில் வாழ்கின்றார்கள் என்பதைக் கண்டு கொள்ள முடியாத அளவிற்கு அந்தகார இருளில் சிக்கிவிடுகிறான். பிறரும் வாழ்கின்றார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியாத சுயநலவாதிகள், எப்படிப் பிறரின் வாழ்வில் கரிசனை கொள்வர்?
* பிறர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன? நான் வாழ்ந்தால் போதும்', என்ற உணர்வுதான் அத்தகையோரிடம் வளர்ச்சி பெற்றுக் காணப்படுகிறது. கல்வி சற்றவர்கள் மத்தியிலும் இச் சுயநல உணர்வு மேலிடுதல்தான் மேலும் விசனத்தைத் தருகிறது.
முன்னரிலும் பார்க்கப் பன்மடங்கு அறிவு வளர்ச்சி தற்கால மனிதர்களில் ஏற்பட்டுள்ளது என்கிறோம். ஏன், ஆற்றல் வளர்ச்சி, திறன் வளர்ச்சி என்பனவும் அதிகம்தான். இந்த வளர்ச்சிகள், விருத்தி கள், பெருக்கங்கள் யாவும் எந்த அளவிற்கு மனித சமுதாய மேம் பாட்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைந்துள்ளன? அத்தகைய மனித மேம்பாட்டிற்கு அத்துணை வளர்ச்சிகளும் உதவியிருந்தால், இன்று மனிதர்கள் நிம்மதியிழந்து தவிப்பானேன்? சமாதானம் குலைந்து கிடப்பானேன்? அகதிகள் முகாமில் அல்லல்படுவானேன்? அநாதரவாக அலைந்து திரிவது ஏன்? உலகின் பெரும்பாலான மக்கள் உணவும், உடையும் இன்றி உருக்குலைந்து நிற்கின்றார்களே? தற்காலத்தில் ஏற்பட்ட இந்த அபிவிருத்திகள் எல்லாம் இத்தகைய பலங்குன்றியவர் களுக்கு எந்த வகையில் உதவுகின்றன.
62

இந்த அறிவு வளர்ச்சி, ஆற்றல் விருத்தி உணர்வுப் பெருக்கம் என்பன சாதனைகள் புரியாமல் இல்லை. அவற்றுள் முதன்மையான சாதனை எதுவென்றால், மனித சமூகத்தில் பலம் பொருந்தியவர்களை மேலும் பலசாலிகள் ஆக ஆக்கியமையும்; பலம் குறைந்தவர்களை மேலும் பலவீனர்கள் ஆக உருவாக்கியமையும் ஆகும். அவற்றுடன், மனிதக் கொலைகள், வன்செயல்கள், நிட்டூரங்கள், மனித உரிமை மீறல்கள், மனித நேயமின்மை, அநீதிகள், ஊழல்கள் என்பவற்றை அதிகரிக்கச் செய்தமையையும் குறிப்பிட வேண்டும். இக்காலத்து, வளர்ச்சிகள், இத்தகைய நிகழ்ச்சிகளுக்குத்தான் பெருந்துணையாக , உள்ளன. அறிவும், ஆற்றலும், திறனும் பெருகி இன்று மனித சமு தாயத்தை, அழிவின் விளிம்பில், அநர்த்தத்தின் ஒரத்தில் கொண்டு சென்று வைத்து விளையாட்டுப் பார்க்கின்றன. இதில் வினோதம் என்ன என்றால், நாளைக்கு நடக்கப் போகின்ற விபரீதத்தைக் கவனத்தில் கொள்ளாமலும், கவலைப்படாமலும் மனித சமூகமானது இந்த விளையாட்டு, வேடிக்கைகளில் தாமும் கலந்து கொண்டு இரசனை கொள்வதுதான். விட்டில் பூச்சிகள் விளக்குச் சுடரைப், பூக்கள் என்று தப்புக் கணக்குப் போட்டு, தழுவப் போன சமயம், அச்சுடரில் எரிந்து சாம்பராகி விடுகின்ற காட்சியை நாம் கண்டுள்ளோம். பாவம், விட்டில் பூச்சிகள்; அக்கினிப் பூக்களை நிஜப் பூக்கள் என எண்ணிக் கெட்டன. இங்கு அறிந்து கொள்ளாமல், விட்டில் பூச்சிகள் விட்ட தவறிற்கு, இப்படியொரு மாபெரும் தண்டனை கிடைத்தது மரண தண்டனை. அதுவும் உடனேயே நிறைவேற்றப்பட்டு விடுகின்றது. இந்த நிகழ் வினைப் பார்த்த மனிதர்கள் பலர் உள்ளனர். ஆயினும் அதிலிருந்து கற்ற பாடம், எத்தனை பேருக்கு உதவியுள்ளது?
மனிதர்களில் பெரும்பாலோர் அறிந்துகொண்டும் தெரிந்துகொண் டும்தான் பிழைகள் செய்கிறார்கள்; குற்றங்கள் இழைக்கின்றார்கள். இவற்றால் பிறருக்குத் தொல்லைகளும் கஷ்டங்களும் பாதிப்புக்களும் ஏற்படுத்துவதுதான் பிரதான நோக்கம் ஆக உள்ளது. எதிர்பார்த்த வினைகள் நிகழா விட்டால் மீண்டும் மீண்டும் அவற்றைச் செய்கிறார் கள். வேண்டுமென்றே செய்கின்ற வினைகள் இவை. குற்றங்களையும் செய்துவிட்டுத் தாம் செய்ததுதான் சரி என்று நியாயங்களைக் காட்டு வதற்கும் அவர்கள் பெற்ற அறிவு, ஆற்றல் என்பன துணை நிற்கின்ற னவே. அதுதான் விந்தையிலும் விந்தையாக உள்ளது. பிறருடைய மனத்தை நோக வைக்காமலோ, புண்படுத்தாமலோ கழிக்கப்படுகின்ற ஒவ்வொரு நாளும் பிறவாத நாட்களாகவே கணக்கு வைக்கின்ற பேர்வழிகளாக அவர்கள் மலர்ந்துள்ளார்கள். மனித குலத்திற்கு ஏற் பட்டுள்ள இந்தத் தாழ் நிலையிலிருந்து மனிதர்களை விடுவிக்க வேண் டியது, இன்றைய முதன்மைப் பணியாகக் கருதி, ஆவன செய்ய வேண்டும்.
63

Page 38
கடந்த சில தசாப்தங்களாக, அபிவிருத்தி, வளர்ச்சி போன்றவற் றிற்குக் கொடுக்கப்பட்டிருந்த கருத்தும் அக்கருத்தை நோக்கிய செயற் பாடுகளுமே மனித குலத்தின் தாழ்நிலைக்கு வழி வகுத்தன என்பது தற்போது உணரப்பட்டு வருகிறது. அபிவிருத்தி என்பது மேன்மையான விருத்தியென்றும், அது பொருளாதாரத்தை விருத்தி செய்வதால் பெற்றுக் கொள்ள முடியும் என்றும் முன்னர் கருதப்பட்டது. இந்த ஆரவாரத்தில் மனிதன் மறக்கப்பட்டு வந்தான். மனிதனை ஒரு பொருட்டாக மதிக்கப்படாத நிலை தோன்றி வளர்ந்து வந்தது. மனிதனை ஒரு கருவி ஆக்கி அவனுக்கு அதற்குரிய படிப்பும், பயிற்சியும் மாத்திரமே, கல்வி எனும் பெயரால் வழங்கப்பட்டு வந்தது. எனவே அளிக்கப்பட்ட கல்வி, மனித மேம்பாட்டு வளர்ச்சிக்குத் துணை போகாதது ஆச்சரியப்படுதற்குரிய விடயம் அன்று. மனித விருத்தி புறக்கணிக்கப்பட்ட நிலையில், மற்றெந்த வளர்ச்சியும், முன்னேற்றமும் பயனற்றதாகி விடுகின்றன. பயனற்றதாகி விடுவது மாத்திரமல்ல, எதிர்மறை விளைவுகளையும் தர வல்லனவாக அமைகின்றன.
எனவே, மனிதன் தான் அபிவிருத்தியின் தலைமகன் ஆவான். மனித சக்தியே அபிவிருத்திக் கருமங்கள் ஒவ்வொன்றிலும் செறிந் திருக்க வேண்டும். மனித சக்தி செம்மையாக்கம் பெறும் போதுதான், அபிவிருத்தியும் செம்மையாக அமையும், அவற்றின் பயன்களும் முறை யாக அனுபவிக்கப்பட முடியும். மனித உழைப்புத் திறனை மாத்திரம் வளர்த்தால் போதாது. கூடவே, மனிதனில் மனிதத் தன்மை, மனிதத் தர்மம், மனிதப் பண்புகள் ஆகியவற்றையும் விருத்தி செய்ய வேண்டும். இவற்றைப் போஷிப்பது மனித விழுமியக் கல்வி ஆகும். மனித அபி விருத்தி, மனித விழுமியங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பும்போது தான் உலகில் தொல்லைகள் நீங்கும், இன்பம் பொங்கும்.
64

16. முதுசொத்துக்கள்
இன்று பத்திரிகைகளைப் புரட்டினால், வயதிற் குறைந்த சிறுவர் கள் பல்வேறு குற்றச் செயல்களையும் வன்செயல்களையும் புரிந்துள் ளமை பற்றிய செய்திகளைக் காண்கிறோம். வளர்ந்தவர்கள் போன்றே சிறுவர்களும் குற்றங்களைப் புரிகின்றார்கள். 'சிறியோர் செய்த சிறு பிழையெல்லாம் பெரியோர் ஆகிற் பொறுப்பது கடனே' என்ற ஒரு கூற்று நம்மிடையே இருந்து வருகிறது. முன்னைய காலங்களில் சிறி யோர்கள் சிறிய பிழைகளைத்தான் செய்தார்கள். அப்போதைய பெரிய வர்கள் அவற்றை மன்னித்து அந்தப் பிழை முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று கூறுவார்கள். அத்தோடு அமையாது அவர்கள் விட்ட பிழைகள் என்ன என்பதைச் சுட்டிக்காட்டி, அப்பிழைகளால் மற்றையோருக்கு ஏற்படக்கூடிய தீய விளைவுகள் யாவை என்பதையும் விளக்குவர். இவற்றையெல்லாம் பிழைகள் செய்தோரின் உள்ளத்தில் உறைக்கும்படி எடுத்துரைத்து, இனிமேல் அப்பிழைகளையோ, குற்றங் களையோ செய்யக் கூடாது என வற்புறுத்தி, நல்ல ஆலோசனைகளை யும் பெரியவர்கள் வழங்குவர். பெரியவர்களின் சொல்லைக் கேட்டுச் சிறியவர்களும் திருந்திய காலம் ஒன்று இருந்தது. கல்வியறிவு குறைந்த அக்காலத்தில் இன்றுபோல் உளவியல் அறிவோ, சமூகவியல் அறிவோ பெரியவர்களிடம் இருந்திருக்கும் என்று எண்ணுவதற்கில்லை. தாம் பெற்ற வாழ்க்கை அனுபவ அறிவைக் கொண்டே வளர்ந்தவர்களும், பெரியவர்களும் அனுபவங்கள் குறைந்த இளைய சந்ததியினரை வழிப் படுத்தி, அவர்களைக் கண்காணித்து, அவ்வப்போது வேண்டிய ஆலோ சனைகளையும் கூறிப் பயத்தாலும் நயத்தாலும் பேணி அவர்களை வாழ்வித்து வந்தனர். குடும்பக் கட்டுக் கோப்பும், சமூக உறுதிப்பாடும் இந்த வகையில் நிச்சயப்படுத்தப்பட்டன.
அக்காலத்துப் பெரியவர்கள் ஒவ்வொருவரும் ஒழுக்க நூல்கள் ஆக விளங்கினர். இளஞ் சந்ததியினர் அந்தப் பெரியவர்களைத்தான் கற்றனர். வேறு புத்தகங்களைப் படிக்க வேண்டிய தேவை இருக்க வில்லை. பெரியவர்களைக் கற்றதனால், நல்ல ஒழுக்கத்தைக் கற்றுக் கொண்டனர். பெரியவர்களின் நன்னடத்தை, நல்லொழுக்கம் ஆகிய வற்றைப் பார்த்து, அவற்றைக் கற்று, இளந்தலைமுறையினர், நல்ல முறையில் ஒழுகினர்.அதனால் குற்றச்செயல்கள் அன்றைய சமூகங்களில் மிகக் குறைவாகவே இருந்தன. தந்தை எவ்வழி, மைந்தனும் அவ்வழி: தான் எவ்வழி சேயும் அவ்வழி; சமூகப் பெரியவர்கள் எவ்வழி, இளைய
65

Page 39
சந்ததியினரும் அவ்வழி என்னும் நிலைப்பாடு இருந்த காலம் ஒன்றிருந் தது. பெரியவர்கள் நல்லபடியாக வாழ்ந்து காட்டினார்கள். சிறியவர் கள் அவர்கள் வாழ்வதைப் பார்த்து ஒழுக்கமாக வாழப் பழகினார்கள். மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்; மூத்தோர் முறையாக வாழ்ந்து காட்டுதல் அதைவிட அமிர்தம் என்பவற்றிற்குப் பெறுமதி தரப்பட்ட காலங்களில், நல்லொழுக்கம் உயிரினும் மேலாக ஒம்பப்பட்டது. ஒழுக் கச் சீர்கேடுகள், நடத்தைச் சீரழிவுகள் தவிர்க்கப் பெற்றன.
இதுவரை இங்கு கூறப்பட்வடவை நாம் வாழுகின்ற இக்காலத்தில் எந்த அளவிற்குச் சமூகங்களில் கைக்கொள்ளப்படுகின்றன என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதில்லை. கைப் புண்ணுக் குக் கண்ணாடி தேவையில்லை அல்லவா?
சமூகங்களில், முந்திய காலங்களைவிடப் பல்துறைகளிலும் வளர்ச் சிகள், முன்னேற்றங்கள், அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. அதை மறுப் பதற்கில்லை. மக்கள் தொகை அதிகரித்திருந்தும், வசதி வாய்ப்புகளுடன் மக்கள் வாழ்வதைக் காணக் கூடியதாக உள்ளது. மனித ஆற்றல்களும் பெரிதும் விருத்தியாகியுள்ளன. புதியனவற்றைக் கண்டுபிடித்ததன் பயனாக உற்பத்திப் பெருக்கம், நோய்களைத் தடுத்தல், அண்டவெளிப் பயணங்கள் என முன்னர்க் காலங்களில் சாத்தியப்படாதவை யாவும் இன்று சாத்தியமாகி வருகின்றன.
இருந்த போதிலும், ஒன்றேயொன்றினை இக்கால மனிதர்கள் சாத்தியப்படுத்த முடியாமல் திணறுகின்றனர். அதுதான், மனிதன் மனிதனாக, மனிதப் பண்புகளுடன், நல்லொழுக்கம் பேணி வாழுகின்ற காரியம். இத்துணை மகத்தான ஆற்றல், திறன், வல்லபம், சக்தி என்பனவற்றைப் பெற்றுள்ள இன்றைய மாமனிதன், மனிதனாக வாழ் தல் ஆகிய அந்த ஒரு காரியத்தை மட்டும், தன்னுடைய ஆற்றல், சக்தி முதலியவற்றிற்கு அப்பாற்பட்ட காரியமாகக் கொள்வதற்குரிய விந்தைதான் இன்றைய பெரும் புதிர் ஆக உள்ளது. மனித குலத்தைக் கீழ் நோக்கித் தள்ளி விழுத்திக்கொண்டும் இருக்கிறது. இந்த நேரத்தி லாவது விழிப்பு ஏற்படாவிட்டால், வீழ்தல் என்பது தவிர்க்க முடியாத தாகி விடும்.
மனிதன் மனிதனாக வாழுதல் எனும் நிலையை நாம் அடைதல் சாத்தியப்படாது இருத்தலால்,நம் முன்னோர்களைப்போல,அத்துணை அமைதியுடனும், நிம்மதியுடனும், மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் வாழ முடிவதில்லை. அந்த வகையில் நம் முன்னோர்களைக் காட்டிலும் நாம் ஆற்றல் குறைந்தவர்களாகவே உள்ளோம். இன்றைய விஞ்ஞான
66

வளர்ச்சியும், தொழில்நுட்ப விருத்தியும் எமக்குப் பல வகையிலும் உதவி செய்கின்றன என்பது உண்மை, இறந்த மனிதனை மீண்டும் உயிர் பெறச் செய்து எழுப்பும் அற்புத ஆற்றலை எமக்குத் தந்து, விஞ்ஞானம் உதவவில்லை. அதனையும் சொற்ப காலத்திற்குள் தந்து உதவி விடலாம்.
ஆனால், எம்முடைய வாழ்வின் அமைதிக்கும், நிம்மதிக்கும், விஞ்ஞானத்தினால் அவ்வளவாக உதவ முடியவில்லையே. மனிதர்கள் மனிதத் தன்மையைப் பெற்றுக் கொள்ள அதனால் உதவ முடிய வில்லையே. அவ்வாறு உதவாவிட்டாலும் பரவாயில்லை. அமைதியை யும், நிம்மதியையும் மனித சமுதாயத்திலிருந்து வல்லடி வழக்காகப் பறித்துக் கொள்ளாமலாவது விஞ்ஞானம் இருந்திருக்கலாம் அல்லவா? மக்கள் வளமாக வசதிகளுடன் வாழ்வதற்கு உறுதுணையாக விளங்கும் விஞ்ஞானம், மக்கள் சமூகத்தில் வாழ்வாங்கு வாழும் வழியைக் கற்றுக் கொடுக்க மறந்தது ஏனோ? இவ்வாறு மனித நேயங் கொண்ட, விரல் விட்டு எண்ணக்கூடிய, ஒரு சிறிய தொகையினர் இப்பொழுது சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். இது மனித மேம்பாட்டிற்கு ஒரு நல்ல அறிகுறி. வளரட்டும் என வாழ்த்துவோம்.
மனித வாழ்க்கையில் அன்பு, உண்மை, கருணை, நீதி, நேர்மை, நடுவு நிலைமை அஹிம்சை, அறம், பிறர்மனை நயவாமை, தாய் தந்தையரைப் பேணுதல், மூத்தோரைக் கனம் பண்ணல், மனிதநேயம், ஐக்கியம், நன்றியுணர்வு முதலியன மேற்கொள்ளப்பட வேண்டும். அதுவே வாழும் வழி என்று நம் முன்னோர்கள், சான்றோர்கள் கூறி வைத்துள்ளார்கள். திருக்குறள், நாலடியார், ஆசாரக்கோவை, ஏலாதி, இன்னா நாற்பது இனியவை நாற்பது முதலிய பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும்; ஆத்திசூடி, கொன்றைவேந்தன், வெற்றிவேற்கை, வாக் குண்டாம், நல்வழி, நன்னெறி போன்ற நீதி நூல்களும் அவற்றை உறுதியாக எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. எம்முள் வாழ்ந்த சான் றோர்கள் தமது பட்டறிவினையும், வாழ்க்கை அனுபவங்களையும் இத்தகைய நீதி நூல்களில் வெளிப்படையாகவும்; புராணங்கள், இதி காசங்கள் ஆகியவற்றில் உருவகங்கள், படிப்பினைகள், உட்கருத்துக்கள் ஆகவும் பதிவு செய்து, பிற்சந்ததியினர் கஷ்டமின்றி வாழ்வதற்கு வழங்கியுள்ளார்கள். இவைதான் நம்முன்னோர்கள் நமக்களித்த முது சம், சீர்தனங்கள் ஆகிய அருஞ் செல்வங்கள் ஆகும்.
இன்று நாம் முதுசங்களையும், சீர்தனங்களையும் கேட்டுப் பெற் றுக் கொள்கிறோம். அதனால் அவற்றில் ஓர் அலாதி மோகம்; பெறுமதி யும் கூட, கேளாமலே நமக்குக் கிடைப்பவைக்கு அத்துணை பெறு மதியை நாம் கொடுத்து விடுவதில்லை. நம் முன்னோராகிய சான்
67

Page 40
றோர்கள், நம்முடைய நல்வாழ்விற்காக நமக்களித்த நலந்தரும் செல் வங்கள், நாம் கேட்காமலே நமக்குக் கிடைத்தவை. அதனாலோ என்னவோ, நாம் அவற்றிற்கு மதிப்புக் கொடுப்பதுமில்லை; பெறு மானம் வாய்ந்தவையாக நம்புவதுமில்லை. அந்த நல்லவற்றையெல் லாம் பழைமையென ஒதுக்கி விடுகிறோம்.
நம்முடைய பழையனவற்றுள் வாழ்க்கைக்கு உகந்த நல்லன வற்றை, நிலையான விழுமியங்களையாதல் நம்பி ஏற்றுக் கொள்ள நாம் தயாராகவில்லை அதேவேளை, நல்ல, செம்மையான புதிய வாழும் வழிகளை, வாழ்க்கை விழுமியங்களை வகுத்துக் கொள்வதற் கேற்ற திராணியும் இல்லை. தற்கால மனிதர்களிடம் காணப்படுகின்ற இத்தகைய இரண்டும் கெட்டான் நிலையே, மனிதர்களை இன்றைய பரிதாப நிலைக்குள் அகப்படுத்தி வைத்துள்ளது.
இந்த உலகம் பழையது; நமக்கு ஒளி தந்து வாழ்விக்கின்ற சூரியன் பழையது; சந்திரனும் நட்சத்திரங்களும் பழையன நிலம், நீர், நெருப்பு காற்று, ஆகாயம் அனைத்தும் பழையன: இன்னும் சொல்லப்போனால் காதல் பழையது; கானம் பழையது; பணம் பண்டம் பழையன. இவற்றில் நம்பிக்கை கொள்வதை நிறுத்தி விட்டோமா? இவற்றையும் ஒதுக்கித் தள்ளி விட்டோமா? இல்லை. ஆனால் சான்றோர்கள் சொன்ன அறநெறிகளை, மனித விழுமியங்களை, வாழும் வழிகளை மாத்திரம் பழைமையென்றும், மூட நம்பிக்கைகள் என்றும் கூறுவதேன்? அவற்றை நம்ப மறுப்பதேன்? நையாண்டி பண்ணுவதேன்?
இன்றைய மாந்தர்கள் அறிவியல் கூறியவற்றை நம்புவது போல, அறநெறி கூறியவற்றை நம்புவதில்லை. விஞ்ஞானத்திற்கு அடிபணிவது போல; மனித விழுமியங்களுக்குப் பணிவதில்லை. நேற்று வந்த நண் பனின் வார்த்தை ஜாலங்களுக்கு மதிப்பளிக்கும் அளவிற்கு, பிறந்த நாட் தொடக்கம் பேணி வளர்த்து ஆளாக்கிய பிதா மாதாக்களின் பொன்னான வார்த்தைகளைச் செவிமடுப்பதில்லை. இவையெல்லாம் காலத்தின் கோலமா? அல்லது ஞாலத்தின் அழிவிற்குக் கால்கோளா? என ஏங்கும் நிலை தோன்றியுள்ளது. ‘இல்லை. இல்லை. நம்பிக்கை யைத் தளர விடாதீர்கள். மனிதர்கள் நல்லவர்கள். நல்ல விழுமியங் களை விரைந்து ஏற்பர். விரைவில் ஏற்பர். உலகம் வாழும். என்றென் றும் வாழும்.’’ எனும் மணியோசை போன்ற மன ஓசை என் உள்ளத் தில் ஒலிக்கிறது. அதே ஒசை உங்கள் உள்ளங்களிலும் ஒலிக்கின்ற தல்லவா?
ஒரு காலத்தில் பழஞ் சாமான்கள் என்று பரணில் ஏற்றப்பட்டுப் பரானிப்பாய் உறங்கிக் கிடந்த பித்தளைக் குத்து விளக்குகளும்,
68

தூண்டாமணி விளக்குகளும்; செப்புச் சருவங்களும், பெரிய கிடாரங் களும்; பஞ்சலோக விக்கிரகங்களும், இன்று நகரத்தார் மாளிகைகளின் நடுக்கூடங்களில் உல்லாசமாக வீற்றிருக்கின்ற நாகரிகத்தைப் பெற்று விட்டன. பழைமையின் சின்னங்கள் புதுமையின் பொக்கிஷங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டன. நாகரிகங்கள் அநாகரிகங்களாதலும், அநாகரிகங்கள் நாகரிகங்கள் ஆதலும் மனித மனங்களைப் பொறுத்த விடயங்கள். இவை நமக்கு உணர்த்துவது என்ன? மனித விழுமியங் களும், மனிதப் பண்புகளும் மிக விரைவில் மனித மனங்களில் நடு நாயகமாக வீற்றிருந்து செங்கோலோச்சும் என்ற நம்பிக்கையைத்தான் s உணர்த்துகின்றன. இவற்றிலும் விஷயம் இருக்கிறது என்று உணரும் நாள் வெகு விரைவில் புலரும்.
69

Page 41
17. நன்னடத்தை
சமூகத்திற்கும் தனக்கும் நன்மையே பயக்கும் வகையில் ஒழுகுதல் கருமங்களையாற்றுதல் நன்னடத்தையாகும். எஞ்ஞான்றும் நல்லவற் றையே சிந்தித்தல்; நல்லனவற்றையே பார்த்தல், பேசுதல், கேட்டல்: நல்ல தூய காற்றையே சுவாசித்தல்; நல்லனவற்றைச் செய்தல் என்பன யாவும் நன்னடத்தைப் பண்புகள். நல்லனவற்றைச் செய்யவோ, ஆற் றவோ இயலாவிட்டாலும், தீயனவற்றில் ஈடுபாடு கொள்ளாமல் அவற் றைத் தவிர்த்து வாழ்தலும் நன்னடத்தையேயாகும். மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் ஒருங்கிணையத் தூய்மையாக விளங்கும்போது தான் மனிதனிடம் நன்னடத்தை, நல்லொழுக்கம், நற்பண்புகள் என் பன ஏற்படுகின்றன.
நல்லொழுக்கம் மூலமே மனிதன் மனிதனாகின்றான். நல்லொழுக் கம் இல்லையேல், மனிதனும் விலங்கும் ஒன்றுதான். மனித வடிவம் மாத்திரம், மனிதனாக அமைவதற்குப் போதாது. அவ்வாறே, கல்வி யைக் கற்றுப் பட்டங்களைச் சேர்த்துக் கொண்டால் மட்டும், மனித னாகிவிட முடியாது. கற்க வேண்டியவற்றைக் கசடறக் கற்று, அவற் றின்படி வாழ்க்கையில் ஒழுகும்போதுதான், மனிதன் ஆகின்றான். மனிதன் அப்பொழுதுதான் சான்றோன் ஆகின்றான். சான்றோன் என்பவன் நன்னடத்தையுள்ளவன். நன்னடத்தையுள்ளவனே சான்
றோன்.
'ஈன்ற பொழுதிற் பெரிதுவப்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.”*
என்பது வள்ளுவர் வாக்கு. தன் பிள்ளை நல்லொழுக்கம் நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அப்பிள்ளையைப் பெற்றெடுத்த காலத்து உற்ற மகிழ்ச்சியை விடப் பன்மடங்கு மகிழ்ச்
சியை எய்துவாள்.
பெற்று வளர்த்த தாயையும், தந்தையையும் மகிழ்ச்சியாக இருக் கச் செய்வது பிள்ளைகளின் மாபெருங் கடமை. பொன்னையும், பொருளையும், பணத்தையும் வாரி வழங்கிப் பெற்றோரை மகிழ் விக்கின்றனர். வெளிநாட்டிலிருந்து தொலைபேசி மூலமும், கடிதங்கள் மூலமும் தங்கள் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் அள்ளிச்
70

சொரிந்து தாய் தந்தையரை மகிழ்விக்கின்றனர். இவையெல்லாம் ஒரு குறுகிய காலத்துக்குத்தான் அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லன. மீண்டும் பெற்றோர்களிடம் ஏக்கமும், அங்கலாய்ப்பும், அமைதியின்மை யும் ஏற்பட்டு விடுகின்றன. ஆனால், தாய் தந்தையர்கள், நிரந்தர மகிழ்ச்சியுடனும், இன்பமாகவும், வாழச் செய்வதற்கு ஒரே வழி, பிள்ளைகள் நல்லொழுக்கத்துடனும், நன்னடத்தையுடன், நற்பண்பு களுடனும் வாழ்தலேயாகும். பிள்ளைகளின் நன்னடத்தையைக் கண் டும், கேள்வியுற்றும், பெற்றோர் அடையும் மகிழ்ச்சி ஈடு இணை யற்றது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பற்புடை மக்கட் பெறின்.""
என்பது பொய்யாமொழி. தமிழ் வேதம் தரும் நல்வாக்கு. இங்கு, "பழிபிறங்காப் பண்பு' என்பது நன்னடத்தையையேயாகும். குற்ற மற்ற நன்னடத்தையை மேற்கொள்ளுகின்ற புதல்வர்களைப் பெற்ற தாய் தந்தையர்களுக்கும், குடும்பத்தினர்க்கும் எந்தப் பிறவிகளிலும் துன்பங்கள், துயர்கள் சென்றடையா என்பது தமிழ்மறை தரும் உறுதிமொழி. நன்னடத்தை தர்மம்; நன்னடத்தை நீதி, நன்னடத்தை மேலான அறம்.
மனிதர்களிடையே உயர்வும், தாழ்வும் பிறப்பினால் இல்லை; நிறத்தினால் இல்லை. சாதிப் பாகுபாடு, குலப் பாகுபாடு என்று மனித இனத்தைப் பாகுபாடு செய்தல் அறிவீனமும் மடமையும் செறிந்த பாதகச் செயல். ஆனால் மனிதர்களின் நடத்தையால், ஒழுக்கத்தால், பண்பால் மனிதர்களிடையே வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின் றன.
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்கிறார் வள்ளுவர். எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையினவே என்பது இதன் பொருள். எனவே, மக்களிடையே பிறப்பினால் வேற்றுமை இல்லை என்பதை உறுதியாகக் கூறும் வள்ளுவரும்; அவர்கள் ஆற்றுகின்ற நல்ல, தீய செயல்களால் மக்களிடையே வேறுபாடு உண்டு என்கின்றார்.
* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான்."
என்பது வள்ளுவர் கூற்று. நன்னடத்தையை மேற்கொள்பவர்களே உயர்ந்தோர். அவர்கள் நற்செயல், நற்கருமங்களில் ஈடுபடுபவர்கள்;
71

Page 42
பிறருக்குத் தீமை பயக்கும் செயல்கள், கருமங்களில் ஈடுபாடு கொள்ளா தவர்கள். அவர்கள் உயர்ந்தோர், மேலோர், பெரியோர் என்று கூறப் படுபவர்கள். நன்னடத்தையை மேற்கொள்ளாதோர் தீயோர், இழிந்த வர்கள், தாழ்ந்தவர்கள் ஆகின்றனர். அவர்கள் உயர்ந்தோர்களி லிருந்து வேறுபடுத்தப்பட்டவர்கள். இத்தகைய பாகுபாட்டில் தாழ்ந் தோர் என்றுமே தாழ்ந்த நிலையில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது நியதி இல்லை. Social Mobility எனும் சமூக நகர்வுக்கு இங்கு இடம் உண்டு. என்றைக்குக் கீழ்நிலையில் உள்ளோர் கெட்ட காரியங்களையும், ஈனச் செயல்களையும் தீங்கு மனப்பான்மையையும் துர்நடத்தைகளையும் கைவிட்டுத் திருந்தி நன்னடத்தையும், நல் லொழுக்கத்தையும் மேற்கொள்ளுகின்றனரோ, அக்கணமே அவர்கள் உயர்ந்தவர்கள், மேலோர், பெரியோர் ஆகிவிடுகின்றனர். அவ்வாறே உயர்ந்தவர்கள் என்று கணிக்கப்பட்டவர்களும், நன்னடத்தையிலிருந்து விலகுவோர்களேயாயின், கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவர். எனவே உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற மக்கட் பாகுபாடு, வாழ்க்கையில் அவரவர் மேற்கொள்ளும் நடத்தை முறைகளின் அடிப்படையிலேயே கொள்ளல் தகும்.
'தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.’’
என்பது குறள். தகுதியானவர், தகுதியற்றவர்; உயர்ந்தோர், தாழ்ந் தோர் என்பது அவரவர்க்குப் பின் எஞ்சி அழியாது நிற்கும் புகழாலும் அல்லது பழியாலும் கணிக்கப்படும் என்று கூறுவர். இக் குறளுக்கு வேறு விதத்திலும் கருத்துக் காண முடியும். தமிழ் இலக்கணத்தில் பெயரெச்சம், வினையெச்சம் என்று சில சொற்கள் வருகின்றன. அடைமொழிகள் என்றும் கூறுவர். பெயர்ச் சொல்லுக்கு முன் வரு கின்ற அடை அல்லது எச்சம், அப் பெயர்ச்சொல் எத்தன்மையது, எத்தகைய பண்பினைக் கொண்டுள்ளது என்பதை உணர்த்துவதாக உள்ளது. உதாரணமாக, நல்ல மனிதன், கெட்ட மனிதன்; கற்ற மனிதன்; கல்லாத மனிதன் என்ற சொற்றொடர்களில் உள்ள எச்சங் கள் குறித்த மனிதனைப் பற்றிக் கூறுகிறது. எனவே ஒரு மனிதனின் தகுதி, தகுதியீனம்; உயர்வு, தாழ்வு ஆகியவற்றைக் குறிப்பிடுபவை யாக, மனிதன் என்ற சொல்லுக்கு முன் வைக்கப்படுகின்ற நல்ல, கற்ற, பண்புள்ள கெட்ட, கல்லாத, பண்பற்ற எனும் அடைமொழிகள் அல்லது எச்சங்கள் விளங்குகின்றன. தக்கார், தகவிலர் என்பதைக் கண்டு கொள்வதற்கு, ஒவ்வொருவருக்கும் முன் நிற்கின்ற அடைச் சொற்களான, எச்சங்களே உதவுகின்றன. இந்த எச்சங்கள், அடைகள் யாவும் மனிதனின் நடத்தையைத் துலாம்பரமாகக் காட்டுவனவாகவே உள்ளன. எனவே, மனிதர்களுக்கு நன்னடத்தை எத்துணை சிறப்
72

பானது, எத்துணை வேண்டற்பாலது. எத்துணை மதிப்பையும் கெளர வத்தையும், பெறுமானத்தையும் தருகின்றது என்பது நோக்கற்பாலது.
நன்னடத்தை என்பது வையத்துள் வாழ்வாங்கு வாழுதல். அடுத்து, உலகத்தாருடன் இணங்கி வாழ்தல்; சமூகப் பொருத்தப் பாட்டுடன் வாழ்தல். சான்றோர் விலக்கி வைத்துள்ள பாதகச் செயல் களைச் செய்யாது விடுதல். பழி, பாவங்களுக்குப் பயந்து வாழ்தல். இத்தகைய நன்னடத்தைக்குத் தன்னலமறுப்பு, உண்மை, நேர்மை, தியாகம் என்பன அடிப்படையாகின்றன. உண்மை, வாய்ம்மை, மெய்மை எனும் விழுமியங்கள் செயல்ரூபம் பெறும்போது நன்னடத்தையாகின்றது.
'தன்னுயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர், எல்லாம் தொழும்.’’ என்கிறார் வள்ளுவர். எவனொருவன் 'தான்’ என்னும் செருக்கி1ை9 ஒழித்து பிறர் நலம் பேணி, பிறர் நலனில் கரிசனை கொண்டு வாழ் கின்றானோ, அவனை எல்லா உயிர்களும் தொழுது வாழ்த்தும். அவனே நன்னடத்தையாளன், மாதவத்தோன், மகாஞானி, மகாத்மா ஆவன்.
நன்னடத்தை பற்றிப் பொதுவாக அறிந்து கொண்ட நாம் வாழ்க்கையில் கடைப்பிடிக்கக் கூடிய சில நன்னடத்தைப் பண்புகள் பற்றி நோக்குவோம். இப்பண்புகள் சிறு பராயத்திலிருந்தே வளர்க்கப் பட வேண்டியன. உண்மை பேசுதல் முக்கியமான பண்பு. பிறருடன் உரையாடும்போது பண்பாகவும், அன்பாகவும், பணிவுடனும், இனிமை யாகவும் பேச வேண்டும். தானே எந்நேரமும் பேச வேண்டும் என எண்ணாது, பிறர் பேசுவதையும் பொறுமையுடனும் ஆர்வத்துடனும் கேட்க வேண்டும். சர்ச்சைக்குரிய பேச்சுக்களைத் தவிர்த்துக் கொள்ளு தல் நலம். விடாக் கண்டன், கொடாக் கண்டன் என்ற நிலைகளில் நிற்காது, விட்டுக்கொடுத்து நெகிழும் பண்பு வேண்டும். மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா என்ற பழமொழி நமக்குத் தெரிந்ததே. பிறர் பேச்சைச் செவிமடுத்து, மதிப்புக் கொடுக்கும் பண்பு வளர்க்கப் பட வேண்டியது. தனக்குச் சொந்தமோ, உரிமையோ இல்லாத பிறர் பொருட்களை எடுத்துத் தமது, என உரிமை பாராட்டுதல் தவறான செயல். இதனையே களவு என்றும் திருட்டு என்றும் சொல்வர். பொதுச் சொத்துக்களைத் தமதாக்கிக் கொள்ளலும் களவு எனும் குற்றத்தை இழைத்ததாகவே கொள்ளப்படும். பொய், களவு, நேர்மை யீனம், பொறாமை ஆகியவற்றை நீக்கி உண்மை, நேர்மை, அன்பு பணிவு ஆகிய நன்னடத்தைப் பண்புகளை மேற்கொள்வதன் மூலம் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வாழ்வில் மகிழ்ச்சி பெறுவோமாக.
73

Page 43
18. பிள்ளை வளர்ப்பு
சிறு பராயத்தில், பிள்ளைகள் நல்ல பழக்க வழக்கங்களைப் பழகிக் கொள்வதால், அவர்களின் நன்னடத்தைக்கு அவை வழி கோலுகின்றன. தொட்டிற் பழக்கம் வாழ்நாள் முழுவதும் நீடித்திருக் கும். முதலில் தாய், தந்தை மற்றும் குடும்ப உறுப்பினர் நல்ல பழக்கங் களைத் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.தவறுகள் விடும்போது அவற்றைச் சுட்டிக்காட்டி அன்பாகத் திருத்த வேண்டும். மேலும் அத்தவறுகளைப் பிள்ளைகள் செய்யாமல் பார்த்துக் கொள்ளு தல் அவசியம். குழந்தைகள் தெரிந்து தவறுகள் செய்வதில்லை. தெரியாமல்தான் செய்கிறார்கள். சில பெற்றோர்கள் தம் குழந்தைகள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாதவர்போல் இருக்கிறார்கள். குழந்தைகள் விடும் தவறுகளையும், பிழையான பழக்க முறைகளையும் வீட்டுக்கு வரும் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், அக்குழந்தை களின் முன்னிலையில், பெருமையாகக் கூறிக் கும்மாளமடிக்கின்ற பெற்றோர்களும் சிலர் இருக்கின்றனர். இவற்றைப் பார்க்கின்ற குழந்தைகள், மேலும் மேலும் பிழையான பழக்கங்களிலே ஈடுபடு கின்றனர். பின்னர் ஒரு நிலையில், பிள்ளைகளைக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் பெற்றோர் தவிக்கின்றனர். குறும்புகள் தானே என்று ரசித்த காலம் போய், குழப்படிகள் வந்தபோது, அடக்க முடியாமல் திண்டாடிப், பின்னர் துர்நடத்தையாகப் பரிணமிக்கும் போது, வளர்ந்த அப்பிள்ளைகளின் பெற்றோர் படும் வேதனைகள் சொல்லுந்தரமன்று.
‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?’’, வளையாது என்பதுதான் அதற்கு விடை. நம்முன்னோரின் பட்டறிவில் இருந்து முகிழ்த்த பழமொழியல்லவா?
ஒருநாள், நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். பலதும் பத்தும் பேசி மகிழ்ந்து கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில், குழந்தை கள் சகிதம் குடும்ப சமேதராய், என் நண்பரின் உறவினர் வருகை தந்தார். உடனே நண்பரும் மனைவிதும் வருகை தந்த உறவினர் குடும்பத்தை வரவேற்று உட்காரும்படி அன்புக் கட்டளை பிறப்பித் தனர். அவர்கள் உட்காரவில்லை. நின்று கொண்டே வீடு முழுவதையும் தம் கண்களால் அளந்தனர். இதற்கிடையில், அவர்களின் மூன்று பிள்ளைகளும் அங்குமிங்கும் ஒடித்திரிந்தனர். ஒரு பிள்ளை யன்னல்
74

மீது மள மள என்று ஏறிக் கீழே பாய்ந்தது. இன்னொன்று, அழகாக வைக்கப்பட்டிருந்த செற்றியின் மேல் ஏறி, சப்பாத்துக் கால்கள் படும்படி, துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. கடைசிக் குழந்தை. தொலைக்காட்சிப் பெட்டியைப் பதம் பார்த்துக் கொண்டிருந்தது, இத்துணை பயங்கரச் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்த போதி லும், அப்பிள்ளைகளின் பெற்றோர், அவற்றையெல்லாம் காணாதவர் கள் போல் வீட்டுக்காரர்களைக் குசலம் விசாரிக்கத் தொடங்கினர். ‘இந்த வீட்டுக்கு எவ்வளவு வாடகை? அட்வான்ஸ் எவ்வளவு கொடுத் தீர்கள்? வீட்டுச் சாமான்களையெல்லாம் ஊரிலே விட்டிட்டு வந்தும், அதுக்குள்ளே எல்லாம் புதிசாய் வாங்கிப்போட்டியள். . . . . . . ‘’ என்று தொடர்ந்து பேசிக் கொண்டே அங்குமிங்கும் உலாவித் திரிந்தனர். இத்தனைக்கும் மூன்று பிள்ளைகளும் என்ன செய்கிறார்கள், எங்கு தாவுகின்றார்கள், எவற்றை உடைக்கிறார்கள் என்ற கவனிப்பே, இல்லை. அவர்களை அவர்கள் பாட்டில் விட்டாயிற்று. வீட்டுக்கார நண்பரும் அவர் மனைவியும் இக்காட்சிகளைக் கண்டு மெல்லவும் முடியாமல், விழுங்கவும் இயலாமல், வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் உள்ளூரப் பொருமுவதை என்னால் அவதானிக்க முடிந்தது. வந்த விருந்தினரின் அரிய புத்திரர்கள் வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளையும் தட்டிக் கீழே விழுத்தும்போது, வீட்டுக்கார நண்பருக்கு. நெஞ்சில் பாறாங் கல்லைத் தூக்கிப்போட்ட மாதிரித் துணுக்குற்றார். பிள்ளைகளுக்கு விளையாட்டாம் சுண்டெலிக்குச் சீவன் போகுதாம் என்றொரு பழமொழியுண்டு. பொருளைத் தேடியவனுக்குத்தான் அதன் அருமை விளங்கும்.
இனியும் தாங்கமுடியாத நிலையில், வீட்டுக்கார நண்பர், விருந் தினருக்குத் தேநீரைச் சீக்கிரம் கொடுத்து அவர்களைப் போகச் செய்து தொல்லையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற தோரணை யில் தம் மனைவியை நோக்கினார். கணவனின் குறிப்பை உணர்ந்து செயற்படக் கூடியவர் அவரின் மனைவியார். உடனே மனைவியார் தேநீர் போடுவதற்குக் குசினிக்குச் சென்றார். விருந்தினரின் மனைவிக் குக் குசினியைப் பார்க்க வேண்டுமென்ற ஆசை. இதுதான் தக்க தருணம் என்று நினைத்து குசினியை நோக்கி நடந்தார். குசினிக்குள் சென்றதும், ஒவ்வொரு பொருளின் மீதும் தம் பார்வையைச் செலுத் தினார். பின்னர், 'அன்ரியின்ரை குசினி என்ன வடிவாயிருக்குது. எல்லாச் சாமான்களும் ஒழுங்காய் இருக்கிறது. வைச்ச வைச்ச இடத் தில் சாமான் கிடக்குது. குக்கர் புதுசு மாதிரி இருக்குது. என்ரை குசினியை அன்ரி வந்து பார்த்தால், எல்லாம் தலைகீழ்தான். உங்களுக் கென்ன, எல்லாரும் வளர்ந்த பிள்ளைகள். போட்டால் போட்ட இடத்திலேயே கிடக்கும். என்ரை பிள்ளைகள் சின்னன்கள். வீட்டைப்
75

Page 44
புரட்டி வைச்சிடுங்கள். ஒரே அமர்க்களந்தான். . . . . . . . . சின்ன வய திலை குழப்படி செய்யிற பிள்ளையஸ், பின்னுக்குக் கெட்டிக்காரராய் வருவினமாம். நான் கொஞ்சம் அடக்கினாலும், தகப்பன் என்னைத் தான் பேசுவர். உளவியலிலே அப்படி இருக்குதாம்', என்று பெருமை யுடன் கூறினாள். அப்போது, நண்பரின் மனைவி, ‘நீங்களும் உங் கடை உளவியலும்' என்று கூற நினைத்தும், விருந்தினராக வந்தவர் களை மனம் நோகச் செய்யக் கூடாது, என்பதினால் தொண்டைக் குள்ளேயே அடக்கிக் கொண்டாள். தேநீரையும் எடுத்துக் கொண்டு, பெரும் பிரயத்தனத்துடன், விருந்தினரையும் அழைத்துக் கொண்டு குசினியை விட்டுக் கூடத்திற்கு வந்தாள், நண்பரின் மனைவி.
இதற்கிடையில் வீட்டுக்கார நண்பருக்கும், விருந்தாளி உறவின ருக்குமிடையே நடந்த சம்பாஷணையை நீங்கள் அறிய வேண்டாமா? ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல் கழிந்து கொண்டிருந்தது நண்பருக்கு. அந்தவேளை, வந்த விருந்தாளி, ‘குழந்தைகள் என்றால் ஓரிடத்தில் கொஞ்ச நேரம் இருக்கமாட்டார்கள். ஒடி ஆடித்தான் திரிவர். சுறுசுறுப்பாகத்தான் இருப்பர். அது அவர்களது இயல்பு. இயல்புக்கு மாறாக, அவர்கள் அடக்கப்பட்டால், அவர்களின் விவேகம் பாதிக்கப்பட்டுவிடும்,' என்று தனக்குத் தெரிந்த உளவியல் கருத்தை வெளிப்படுத்தினார்.
‘என்ன இருந்தாலும், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதையும் தெரிந்து கொள்வது நல்லது, ’’ என்று கூறிவிட்டு, மேலும் தன் கருத்துக்களைக் கூறினால், விருந்தினரை அவமதித்ததாகிவிடும் என நினைத்து அமைதியாக இருந்தார் நண்பர். நண்பர் மெளனமாக இருந்தமையையே நான் அமைதியாக இருந்தார் என்று குறிப்பிட்டேன். ஆனால் அவரின் உள்ளம் அமைதிப்படவில்லை; குமுறிக் கொண்டே யிருந்தது. ஒரு சந்ததியை மண்ணாக்குகிறார்கள் என்பதுதான் நண் பரின் குமுறல். சின்ன வயதில் நல்ல பழக்கங்களைப் பழகாத பிள்ளை கள் வளர்ந்து நன்னடத்தையுள்ளவர்களாக வருவது எப்படி என்று எண்ணினார் போலும்.
விருந்தாளி உறவினர் விட்டபாடில்லை. தன்னுடைய குழந்தை உளவியல் அறிவை மேலும் வெளிப்படுத்தலானார். ‘குழந்தைகளிடம் போரூக்கம் இயல்பாகவே உள்ளது. இந்தப் போரூக்கம்தான் குழந்தை களில் விவேக ஆற்றலையும், துணிவையும் வளர்க்கிறது. ஓடுதல், பாய்தல், குழப்படி செய்தல், பொருட்களை உடைத்தல் என்பவை யெல்லாம் இந்த இயல்பூக்கத்தின் வெளிப்பாடுகள்தான். அவற்றைத் தடுக்கக் கூடாது. தடை செய்தால் வளர்ச்சி குன்றிவிடுவர். முளையிலே
76

கிள்ளியெறிபவர்கள் அறிவிலிகள் என்றே கூற வேண்டும். எனது பிள்ளைகளுக்கு உடைப்பதற்கும், நொருக்குவதற்கும் என்றே பொருட் களை வாங்கிக் கொடுப்பேன்’ என்றார். 'ஆகையினாற்தான் அடுத்த வீட்டுக்காரனின் பொருட்களையெல்லாம் தூக்கிக் கீழே போட்டு, உடைக்கக் குழந்தைகளை விட்டிட்டு, காணாதவர் போல் பேசாதிருக் கிறீர்களாக்கும்?' என்று ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று துடித் தேன். என்றாலும் நண்பரின் முகத்திற்காகப் பேசாதிருந்தேன். அந்த அளவிற்கு அங்கு நடைபெற்ற காரியங்கள் என் பொறுமையையே சோதித்து விட்டது.
‘பொன்னின் கத்தியென்றால், அதனால் வயிற்றில் குத்துவதா? தற்செயலாக இந்தக் குழந்தைகள் இப்படி ஏறிப் பாயும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டால், அல்லது படக் கூடாத அவயவங்களில் காயப்பட்டால், தீராத வியாதியாகி விடுமல்லவா? உளவியலைப்பற்றி யோசிக்கிறீர்கள். உடலியலைப் பற்றியோ, நல்ல பழக்க வழக்கங் களைப் பற்றியோ கருத்தைச் செலுத்துகிறீர்கள் இல்லையே. நல்ல பழக்க வழக்கங்கள், நன்னடத்தைகள் இல்லாமல் விவேகமும், துணிவும் வளர்ச்சி பெற்று என்ன பயன். மனிதப் பண்பாடுகளுக்கும் மனித விழுமியங்களுக்கும் இடம் கொடுக்காமல், இடம் பெறும் அறிவுப் பெருக்கமும், ஆற்றல் விருத்தியும், துணிவு வளர்ச்சியும், விவேக விருத்திக்கும் மனித குல நாசத்திற்குத்தான் இட்டுச் செல்லும். விபரீத புத்தி நாச காலம் என்பர். இக்கணம் இவையெல்லாம் எங்கே போய் முடியப் போகிறதோ?’ என்று நண்பர் ஒரு குட்டிப் பிரசங்கத்தையே செய்து முடித்து விட்டார்.
இந்த நேரம், நண்பரின் மனைவியும் தேநீருடன் வந்தார். வீட்டுக் கூடத்தில் பொருட்கள் சிதறிக் கிடந்தன. சில உடைந்தும் காணப் பட்டன. வீட்டை ஒழுங்காக வைத்திருக்கின்ற நண்பரின் மனைவிக்கு இந்த அலங்கோலத்தைப் பார்க்கச் சகிக்க வில்லை. ஆனால், வந்த விருந்தினருக்கு எவ்வித சலனமும் இல்லை. இதற்கிடையில் பிள்ளைகள் மூவரும் ஒருவருடன் ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டனர். கடைக் குட்டி வீரிட்டு அழுதான். என்னென்று பார்த்தால், தொலைக்காட்சிப் பெட்டி பையனின் மேல் விழுந்து விட்டது. பெட்டி மேலே அவன் கீழே.
நிலைமையை ஒருவாறாகச் சமாளித்துக் கொண்டு வந்து விருந் தினருக்குத் தேநீர் பரிமாறப்பட்டது. நான் தேநீர் அருந்துவதில்லை. அதனால் என் வருகை எவருக்கும் இடையூறாக இருப்பதில்லை. விருந்தினர் விடைபெறும் நேரம் வந்தது. அந்த நேரம் பார்த்து மழையும் ஆரம்பித்தது. மழையைச் சாட்டாக வைத்து மேலும்
77

Page 45
கொஞ்ச நேரம் தாமதித்துப் பார்த்தனர். தப்பிக் கிடக்கும் மீதிப் பொருட்களும் உடையாமல் பாதுகாக்க வேண்டுமே. உடனே அங்கிருந்த குடைகளையெல்லாம் சேகரித்து அவர்கள் கையில் கொடுத்து ஒருவாறாக அனுப்பி வைத்தனர். ‘அப்பாடா....... ' '. நண்பர் தம்பதிகளிடமிருந்து,சொல்லி வைத்தாற்போல், ஏக காலத்தில் வந்த நிம்மதிப் பெருமூச்சுத்தான் இது. அந்த அளவிற்கு அவர்களின் ஒருமைப்பாடு இருந்தது.
‘குழல் இனிது யாழ் இனிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர். ’’
e
என்ற குறளை நான் கூறினேன். நண்பர் இதற்கொரு அருமையான விளக்கம் தந்தார். 'குழலும், யாழும் உரிய முறையில், ஒழுங்காகச் சுரங்களை அவற்றில் வாசிக்கும் போதுதான் இனிய கானாமிர்தத்தை வழங்குகின்றன. யாழிலும், குழலிலும் அப சுரங்களை வாசித்தால், பிறக்கும் ஓசை கர்ண கொடூரமாகத்தான் இருக்கும். குழந்தைகளையும் வளர்க்குமாப்போல, நல்ல பழக்க வழக்கங்களைச் சொல்லிக்கொடுத்து வளர்த்தால்தான், அவர்களது சொல் மாத்திரமல்ல, ஒவ்வொரு செய லும் இனிமையையும் இன்பத்தையும் அளிக்கும். நன்னடத்தை என்பது இனிய கானம் போன்றது. யாழும், குழலும் தரும் நல்லிசை வாசிப்ப வரைப் பொறுத்தது. பிள்ளைகளின் நன்னடத்தை அவர்களை வளர்ப் பவர்களைப் பொறுத்தது ஆகும்.
78

19. மனித ஆளுமை
சமூகங்கள் மாற்றமடைந்து வருகின்றன. முன்னைய சந்ததி யினருக்கும், இன்றைய அல்லது எதிர்கால சந்ததியினருக்குமிடையி லுள்ள இடைவெளி அதிகரித்துக் காணப்படுகிறது. அதனால் வளர்ச்சி யும் உண்டு; பின்னடைவுகளும் உண்டு. விஞ்ஞான, தொழில்நுட்பங் களில் பெரு வளர்ச்சி காணப்பட்டுள்ளது. வாழ்க்கை வசதிகள் அதிகரித் துள்ளன. மனிதன் நாகரிக வளர்ச்சியில் முன்னரைக் காட்டிலும் பன்மடங்கு முன்னேறியுள்ளான். ஆனால், மனித விழுமியங்களைப் பேணுதல் மிகவும் பின்னடைந்து விட்ட மனித இனம், இன்று ஒழுங் கான மனித வாழ்வினை வாழ முடியாமல் திக்கித் திணறுகிறது. மனிதர்கள், மனிதத் தன்மைகளைக் கைவிட்டு வெகுதூரம் விலகிச் சென்றுவிட்டமையையே இது காட்டுகின்றது. நாகரிகம் முன்னேற, அதேவேளை பண்பாடு பின்னடைந்தால், மனித வாழ்க்கைச் சமநிலை
குலைந்துவிடும் என்ற உண்மை உணரப்பட வேண்டியது. இன்று உலகில் நடைபெறுவது, மனித வாழ்க்கையின் சமநிலைக் குலைப்பு ஆகும். அதன் விளைவுகளாகவே, சண்டை சச்சரவுகள், அமைதி
யின்மை, வன்செயல்கள், குழப்பங்கள், உலகின் பல பாகங்களிலும் காணப்படுகின்றன. அப்பாவி மக்கள் அல்லற்படுகிறார்கள்; அவதிக் குள்ளாகிறார்கள்; அனர்த்தங்களுக்கு, முகங்கொடுக்க வேண்டி யுள்ளார்கள். குடும்பங்களிலும் சரி, சமூகங்களிலும் சரி, உலகிலும் சரி; நிம்மதி இல்லை; சாந்தி இல்லை; சமாதானம் இல்லை, தனிப்பட்ட வாழ்விலும், பொது வாழ்விலும் நீதி நேர்மை, உண்மை, மானுட நேயம், நடுவு நிலைமை, பிறரில் கரிசனை கொள்ளல் போன்ற மனிதப் பண்புகள் பெரிதும் அருகிக் கொண்டே வருகின்றன. எவரையும் நம்ப முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளத்*
மனித வாழ்க்கையில் சமநிலையை மீண்டும் ஏற்படுத்த வேண்டி யது மிகவும் அவசரமும் அவசியமும் ஆகும். மனித விழுமியங்களை மீண்டும் மக்களிடையே மலரச் செய்ய வேண்டும். மனித விழுமியக் கல்விக்குப் பாடசாலைப் பாடவிதானத்தில் முக்கிய இடத்தை அளிப் பதன் மூலமும் வளர்ந்தோர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்ட ங் களில் மனித விழுமியங்களையும் போதிப்பதற்கான வாய்ப்பினை ஏற் படுத்திக் கொடுப்பதன் மூலமும், மனித விழுமியங்களையும், மனிதப் பண்புகளையும் மக்கள் உணர்ந்து கொள்ளச் செய்ய முடியும். ஞாயிறு
பாடசாலைகள், அறநெறிப் பாாடசலைகள் ஆகியவற்றின் போதனை
79

Page 46
களிலும் மனித விழுமியங்களை உணர்த்தும் அறிவுசார் செயற்பாடுகள் இடம் பெற வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும், பெற்றோர்கள் பெரும் பாலும் கற்றவர்கள். கற்றவர்களாக மாத்திரம் நின்றுவிடாது, அறி வுடையவர்களாகத் திகழ வேண்டும். குடும்பத் தலைவன் தாம் கற்ற அறிவு, பெற்ற அனுபவங்களைத் தினமும் சொற்ப நேரமாவது, தம் குழந்தைகள், மனைவி, மக்களுடன் பகிர்ந்து கொள்ளுதல் வேண்டும். குடும்பத் தலைவியும், தமது அறிவு அனுபவங்களைக் கணவன் மற்றும் பிள்ளைகளுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். வளர்ந்து வரும் குழந்தை களுக்கு நல்ல உணவும், உடையும், அணிகலன்களும் கொடுத்து,ஏனைய வசதிகளையும் வழங்கிப் பாடசாலைகளுக்கும் அவர்களை அனுப்பிவிட் டால், அத்துடன் தமது கடமைகள் தீர்ந்து விட்டன என்று பெற்றோர் கள் எண்ணிவிடக் கூடாது. அவ்வாறு எண்ணிய பலர், பிள்ளைகளின் பிறழ்வான நடத்தைகளைக் கண்டு செய்வதறியாது திகைக்கின்றனர்; வேதனைப்படுகின்றனர்.
‘‘கையினால் பிளக்கக் கூடிய பனங் கிழங்கு வளர்ந்து பனை மரம் ஆனால், பின் அப் பனை மரத்தைப் பிளப்பதற்கு ஆப்பும் வல்லிட்டுக் குற்றியும் தேவைப்படும்' என்றொரு கூற்று வழக்கில் உள்ளது. எதையும் பிஞ்சுப் பருவத்திலே புகுத்துவது இலகு. ஐந்தில் வளைக்க முடியும், ஐம்பதில் வளைக்க முடியாது. ‘இளமையிற் கல்’’ என்கிறார் ஒளவையார்.கற்கின்ற இளமைப்பருவத்தில் பிள்ளைகளின் பெரும்பங்கு நேரம் பெற்றோருடனேயே செலவிடப்படுகிறது.அப்படியாயின் பிள்ளை களின் கல்வியிலும்; ஒழுக்கம், நடத்தைகளிலும் பெற்றோர் பிள்ளை களை வழிநடத்த வேண்டிய பொறுப்புக்களிலிருந்து விலகிவிட முடி யாது. குழந்தைகளின் நடத்தை, ஒழுக்க வளர்ச்சியில் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரின் செல்வாக்கு மிக முக்கியமானது. குடும்பத்தவர்களின் செல்வாக்கு, வழிநடத்தல்களுக்குட்பட்டு; அவர் களின் சொல் வழி கேட்டு ஒழுகி வருகின்ற பிள்ளைகளின் நடத்தைகள் மிக நன்றாக அமைந்திருப்பதை நாம் அனுபவ மூலம் கண்டுள்ளோம். குடிப்பிறப்பு என்று முன்னர் குறிப்பிடப்பட்டு வந்தது. நல்ல, உயர் குடியில் பிறந்தவர்கள், நல்லொழுக்கம் உள்ளவர்களாக இருப்பர் என்று எண்ணப்பட்டு வந்த காலம் இருந்தது. பிறப்பினால் மாத்திரம் ஒருவர் நல்லொழுக்கமுள்ளவர் ஆக வந்துவிட முடியாது. உரிய முறையில், அவர்கள் வளர்க்கப்படவும் வேண்டும்.உரிய முறையில் வளர்க்கப்படுதல் என்பது பெற்றோரின் பணியாகின்றது. இப்பணியைச் செவ்வையாக ஆற்றுவதற்கு, ஆதாரமாகப் பெற்றோரும், குடும்பத்தவரும் தமது வாழ்க்கை முறைகளை ஒழுங்காக அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்.
80

பெரியவர்கள் வாழும் வகையறிந்து வாழ்ந்து காட்டுதல் மூலமே இளைய சமுதாயத்தினரை நெறிப்படுத்தவும், ஒழுங்காக வளர்த்தெடுக்கவும் (ւpւգ-պւb.
மனித விழுமியங்கள், சமநிலை கொண்ட ஆளுமை விருத்தியை வளர்ந்து வரும் பிள்ளைகளில் ஏற்படுத்த உதவுகின்றன. ஆளுமை என்று குறிப்பிடும்போது, ஐந்து புலங்கள் எமக்குத் தோற்றுகின்றன. உடல், உணர்வு, அறிவு, உள்ளம், ஆத்மா என்பனவே இவ்வைந்து புலங்களும் ஆகும். அவற்றின் வளர்ச்சியுடன் ஐந்து பிரதான மனித விழுமியங்கள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளன. அவையாவன நன் னடத்தை, சாந்தி, உண்மை, அன்பு, அஹிம்சை என்பன, மனித விழுமியங்கள் இன்னும் பல உள்ளன. ஆனால் அவை யாவற்றையும் இவ்வைந்தினுள் பெரும்பாலும் அடக்கி விடலாம்.
உண்மை எனும் மனித விழுமியம் பற்றி முதலில் சிறிது நோக்கு வோம். உண்மையே மிக உயர்வான மனித விழுமியம். மனிதர்களால் மட்டுமே உண்மையை அறியவும், உணரவும் முடியும். உண்மையை உணர நுண்ணறிவு தேவை. உண்மையை உணர்தல் என்பது அகவயப் பட்ட ஆத்மிகம் சம்பந்தப்பட்ட செயற்பாடு. தன்னுள் காணப்படு கின்ற உண்மை இப்பிரபஞ்சம் முழுவதிலும் வியாபித்துள்ளது என்பதை ஒருவன் உணரும் போது ஏனைய மனித விழுமியங்கள் உணரப்படுவது இலகுவாகி விடுகின்றது. உலகில் எவ்வுயிரையும் வெறுக்காத நிலை ஒருவனுக்கு ஏற்படுவது உண்மையை உணர்ந்து கொண்ட போதுதான் என்பது உணரற்பாலது. பிற உயிர்கள் மீது அன்பு செலுத்துவது தன்மீது அன்பு கொள்ளுதல் போன்றது. பிறரை வெறுப்பது அல்லது கொடுமைப்படுத்துவது தன்னைவெறுப்பது அல்லது கொடுமைப்படுத்து வதற்கு இணையானது. பிறருக்குச் சேவை செய்தலும் தனக்குச் சேவை செய்தலுக்கு ஒப்பானது.
மனித விழுமியங்களை உணர்த்துவதன் நோக்கமே, மனிதர்களை நன்னடத்தை உள்ளவர்கள் ஆக்குவதே. நன்னடத்தையாளர்களே மன் னுயிர் ஒம்புகின்ற பண்பைப் பெறுவர். எனவேதான், 'பண்புடையார்ப் பட்டுண்டுலகம்' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. இவ்வுலகம் இன்று வரை நிலைத்து நிற்கின்றதென்றால், நன்னடத்தையுள்ளோர் ஒரு சிலராவது இருப்பதே காரணம். 'நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை' என்ற ஒளவையாரின் வாக்கினையும் ஈண்டு நோக்கற்பாலது. பணிவு, உண்மை பேசுதல், அன்புடைமை, கருணை காட்டல், நேர்மை, இன்சொல் வழங்குதல் நற்கருமங்கள் ஆற்றுதல், ஒப்புரவு என்பன நன்னடத்தைப் பண்புகளில் சில. மனித குலத்திற்கே அவை உரிமையானவை. உரிமைகள் கட்டாய
81

Page 47
மாகப் பேணப்படுதல் வேண்டும். மகிழ்ச்சியும், திருப்தியும், நிறைவும் உள்ள வாழ்வு நன்னடத்தையுடையோருக்கே கிடைக்கின்றது.
மனிதரில் உணர்வுகள் கூடிக் குறையாமல் சமநிலையில் காணப் படும் போது சாந்தி உண்டாகின்றது. நாம் எஞ்ஞான்றும் நன்மையே கண்டு, நன்மையையே புரிந்து, நன்மையோடு இயைந்து வாழ்ந்தால், சாந்தி எம்முடன் தங்கி விடுகிறது. எதிர்மாறான நிலை ஏற்படும்போது சாந்தி நம்மை விட்டுத் தூர விலகி விடுகின்றது. சாந்தி பெறுவதற்கும், சாந்தியின்றித் தவிப்பதற்கும் நாமே, நம் உள்ள நிலையே காரணம். 'நன்றும் தீதும் பிறர்தர வாரா' என்பதை அறிந்தவர்கள் நாங்கள்.
அன்பு உலகின் மாபெரும் ஆற்றல் ஆகும். அன்பினால் ஆகாதது எதுவும் இல்லை. அன்பினாலேயே சேவைப் பண்பு ஒங்குகின்றது. மனித உறவுகள் மாண்பு பெறுகின்றன. சமூகத்தில் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு ஒரே வழி, அன்பு வழி. உலகின் சமயங்கள் யாவும் அன்பு மார்க்கத்தை வற்புறுத்துவதில் ஒத்த நிலைப்பாட்டினைக் கொண்டு விளங்குகின்றன.
அஹிம்சை என்பது கொல்லாமை மாத்திரமன்று; பிற உயிர்களுக் குத் தீங்குசெய்யாமையும், எந்த வகையிலும் எவருக்கும் இடைஞ்சலாக இருக்காமையுமாகும். ‘அறிவினால் ஆகுவதுண்டோ, பிறிதின் நோய் தன்னோய் போல், போற்றாக் கடை' என்கிறது வள்ளுவம். கல்வி அறிவைத்தர, அந்த அறிவு உயிர்க்கு உறுகண் செய்யாமை என்ற பண் பைத் தர வேண்டும் அல்லது பெற்ற அறிவினால் பயனில்லை. இன்று, எங்குமே பிறருக்குத் தொல்லை விளைவிப்பது, மேலோங்கிக் காணப் படுகிறது. பிறருக்குத் தொல்லை தருவதில், மகிழ்ச்சி காண்பவர்கள் மலிந்து விட்டனர். இவையெல்லாம் எந்த வகையிலும் மானுடம் ஆகா. பகிடி வதையாக இருந்தாலும், வதை வதைதான், தொல்லைதான், ஆய்க்கினைதான். ஒருவரை மற்றையோர் ஆய்க்கினைப்படுத்துவது அஹிம்சைக்குப் புறம்பானது. எனவே, மானிட விழுமியத்தை மீறும் செயலாகும். அஹிம்சை ஆத்மாவை, மகாத்மாவாக்கும் என்ற உண்மை யைக் காந்தியடிகளின் வரலாற்றிலிருந்து அறிகிறோம்.
அஹிம்சையைச் சற்று விரிவாக்கி நோக்கில் இயற்கை விதிகளை மீறுதல், சூழலை அழித்தல், மாசடையச் செய்தல் என்பனவும் அஹிம் சைக்கு எதிரான செயல்களே. சூழலைப் பாதுகாத்தல் அஹிம்சையின் பாற்பட்டதே.
மனித விழுமியங்கள் நமக்குப் பெரும் பாதுகாப்பினை அளிக்கின் றன. எனவே மனித விழுமியங்களை உணர்பவர்கள், பிறருக்கு உணர்த்துபவர்கள் பேணுபவர்கள் யாவரும் சமுதாயத்திற்குப் பெரும் பணி செய்தவர்கள் ஆவர்.
82

20. வாய்மை
சிந்தனையைத் தொடர்ந்து, வாய் மூலம், வார்த்தைகளாகச் சிந்திக்கப்பட்ட கருத்துக்கள் வெளிவருகின்றன. பேச்சு என்றும், வாக்கு என்றும், சொல் என்றும், மொழி என்றும் இச் செயற்பாடுகளைக் குறிப் பிடுகின்றனர். உள்ளத்து உணர்ச்சிகளும் இவ்வாறு வாய்மூலமும் வெளி யாகின்றன. வாயினால் வெளிப்படுத்தப்படுகின்ற எண்ணங்கள், கருத் துக்கள் என்பனவற்றிற்குப் பெரும்பாலும் மொழியே ஊடகமாக அமை கின்றது. எனவே, மொழியைக் கருத்துப் பரிமாற்றச் சாதனம் என்றும் தொடர்பாடல் கருவி என்றும் கொள்கின்றனர். மனித நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைத் தோற்றுவித்து அவற்றை வளர்த்து வந்தமை யில் மொழியின் பங்களிப்பு மகத்தானது.
மனதில் சிந்தித்தவற்றை வாயினால் மொழியப்படும்போது, அச் சிந்தனைகள் நல்லனவா, தீயனவா என்பதையும் அவற்றின் தன்மை களையும் அறிந்துகொள்ள முடிகின்றது. "அகந் தூய்மை வாய்மையால் காணப்படும்' என்கிறார் வள்ளுவர் பெருமான். வாயினால் வார்த்தை கள் வடிவில் வெளிவருகின்ற உண்மையைத்தான், வாய்மை என்கிறார் வள்ளுவர். மொழியப்படுவது வாய்மையாக இருக்கும் பட்சத்திலேயே, சிந்தனையில் தூய்மை உண்டு; உள்ளத்தில் உண்மை உள்ளது என்பன
வற்றை அறிந்து கொள்கிறோம்.
வாய்மை என்று சொல்லப்படுவது யாது? என்ற வினாவிற்கும், வள்ளுவரே விடை பகன்றுள்ளார்.
"வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.'
எனும் அவரின் திருவாக்கு, வாய்மை என்பதற்குத் தகுந்ததொரு
விளக்கத்தைத் தந்துள்ளது. பிறர்க்கு எந்த விதத்திலும், ஒரு சிறி தேனும் தீமை பயக்காத சொற்களைச் சொல்லுதல் ஆகிய அறம்தான் வாய்மை எனப்படுவது, என்பதே வள்ளுவர் தரும் விளக்கம். எனவே, நாம் பேசுகின்ற பேச்சுக்கள், குற்றம் தீர்ந்த நன்மைகளைப் பயப்பன வாக இருக்க வேண்டுமே தவிரப், பிறர்க்குத் தொல்லைகளையும், இடையூறுகளையும் விளைவிப்பனவாகவோ, பிறர் மனங்களைப் புண் படுத்துவனவாகவோ அமைதல் ஆகாது. குற்றங்களில் பாரதூரமான குற்றம், ஒருவரைப் பண்பு ரீதியாகக் கொலை செய்தல் எனலாம்.
83

Page 48
இதனை ஆங்கிலத்தில் ‘Character Assasination' என்பர். இது பொல்லாத பாதகச் செயல் ஆகும். இல்லாதவற்றையும் பொல்லாத வற்றையும் வார்த்தைகளால் கூறி, ஒருவரின் நல்ல இயல்புகளுக்கும், பண்புகளுக்கும் மாசு ஏற்படுத்துதலையே அவ்வாறு Character ASSasination என்கின்றனர். ஒருவரை உடல் ரீதியாகக் கொல்லுதல் பஞ்சமாபாதங்களுள் ஒன்றாகக் கொள்ளப்படுகிறது. பெருந் தண் டனைக்குரிய குற்றமும் ஆகும். ஒருவரைப் பண்பு ரீதியாக, அணு வணுவாகக் கொல்வதும் மாபெருங் கொலைக் குற்றமே என்பதைப் பலர் அறிந்து கொள்கின்றனர் இல்லை. இது வருந்தத்தக்க செயல் eg(g). D.
சொல்லால் வரும் குற்றம், சிந்தனையால் வரும் தோஷம் என்பன எத்துணை பாரதூரமான, பயங்கர விளைவுகளைச் சமுதாயத்தில் ஏற்படுத்துகின்றதென்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். செய்யத்தகாத செயல்களைப் போன்றே, சொல்லத் தகாத, பேசக் கூடாத சொற்களும் பேச்சுக்களும் உள்ளன. அவற்றை இனங்கண்டு, அத்தகைய தகாத பேச்சுக்களில் ஈடுபாடு கொள்ளாதிருத்தலே புத்தி சாலித்தனம். 'கெடுவான் கேடு நினைப்பான்'; அவ்வாறே கெட்ட பேச்சுக்களைப் பேசிப் பிறருக்குக் கேடு செய்பவர்கள், ஈற்றில் தாமும் கெட்டுவிடுவார்கள். எனவேதான் தீமை இலாத சொற்களைத் தேர்ந் தெடுத்துப், பண்பாகவும் பணிவாகவும் பிறருடன் உரையாடுவது மேலான அறம் ஆகின்றது.
"யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரைதானே' என்கிறார் திரு மூலர். அறம் செய்வதற்கு மனம் இருந்தாலும், பொருள், பணம் இல்லையே என்று பலர் ஏங்குகின்றார்கள். இது அவர்களின் அறி யாமையேயாகும். ‘ஈதல் அறம்' என்று சொல்லப்பட்டுள்ளது. ஈதல் என்பதற்குக் கொடுத்தல் என்று பொருள் கொள்கின்றோம். பிறருக்குக் கொடுப்பது பணம், காசு, பொருள், பண்டம் ஆகத்தான் இருக்க வேண்டியதில்லை. நாம் பிறருக்கு அன்பைக் கொடுக்கலாம்; நல்ல பண்புகளைப் பரிமாறலாம்; நல்ல வார்த்தைகளால் இனிய உரை களைப் பகன்று மகிழ்ச்சியை வழங்கலாம் இரக்கம், கருணை என்ப வற்றைக் காட்டி சாந்தியை அளிக்கலாம்; எல்லோரும் இன்புற்று வாழ வேண்டும் எனும் பிரார்த்தனையை வழங்கலாம்; பிறர் துன் புறும் போது ஆறுதல் வார்த்தைகள் கூறித் துயர் துடைக்கலாம். நல்லாசிகள் வழங்கலாம். சுருங்கக் கூறின் அன்பு மொழிக்கு, ஆசி மொழிக்கு, பண்பு மொழிக்கு, பணிவு மொழிக்கு, இன்ப மொழிக்கு, இனிய மொழிக்கு ஈடு இணையாக வேறெதுவுமே கிடையாது. ஏனெனில் இத்தகைய மொழிகள், வார்த்தைகள் பிறரை வாழ்விக்கும் வல்லமையைப் பெற்றுள்ளன. எனவேதான் இவையெல்லாம் மேலான
84

அறங்களாகக் கொள்ளப்படுகின்றன. இவ்வறங்கள் பொருட் செலவு இன்றிச் செய்யக்கூடியன. "மனம் உண்டானால் இடமுண்டு’ என்பர். ஒளவையார் கூறியபடி, அறம் செய விரும்ப வேண்டும். அறம் செய் வதற்குத் தேவையான ஒன்றேயொன்று, நாம் அறம் செய்ய வேண்டும் என்று மனமார விரும்புவதுதான். அந்த விருப்பம் ஏற்பட்டுவிட்டால் வழி தானகவே பிறந்துவிடும்; இடம், பொருள், ஏவல் ஆகிய அனைத் தும் வந்து விடும்.
மகாகவி பாரதியாரும், நிதி, மிகுத்தவர், நிதி குறைந்தவர், ஏதுமற்றவர் எவ்வாறு ஈகை செய்யலாம் என்பதைப் பின்வரும் பாடல் தொடரால் உணர்த்துகிறார்.
'நிதி மிகுத்தவர் பொற்குவை தாரீர்! நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்! அதுவு மற்றவர் வாய்ச் சொல் அருளிர்!’’ வாய்ச் சொற்கள் அன்புநுதலியனவாய், பண்பு தழுவியன
வாய், உண்மை மருவியனவாய், தண்மை மிகுந்தனவாய் அமையும் போது, அவை மக்களை வாழ்விக்கின்றன. எனவே, அவை அறங்கள் ஆகின்றன. அத்தகைய அறங்கள் ஆகிவிட்ட வாய்ச் சொற்களுக்கு மந்திர சக்தி உண்டு. மந்திர சக்தி வாய்க்கப் பெற்றவை நிறைமொழி கள். இந்த நிறைமொழிகளே ஈதலுக்குரியன என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
‘இனிய உளவாக இன்னாத கூறல் கணியிருப்பக் காய்கவர்ந் தற்று. ’’
என்பது தமிழ் மறை. நல்ல இனிய சொற்கள் வாய்ப்பாக இருக்கும் போது கடுஞ் சொற்களையும், சுடு சொற்களையும், கொடுஞ் சொற் களையும் தெரிந்தெடுத்துப் பேசுதல், முற்றிப் பழுத்த சுவைமிக்க கனிகள் தாராளமாக இருக்கும்போது, அவற்றை விட்டு விட்டு, சுவை யற்ற, கயர்ப்புள்ள காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றது.
பணிவுடையன், இன்சொலன் ஆதல் தான் மனிதனுக்குச் சிறந்த அணிகலன்கள். இனிய சொற்களைப் பேசுவதால் யாது பயன் எனில், அல்லவை தேயும், அறம் பெருகும் என்கிறார் வள்ளுவர். மனித வாழ்க்கை சிறப்பாகவும் செம்மையாகவும் அமைவதற்குச் சமுதாயத் தில் அல்லவை யாவும் மறைய வேண்டும், தர்மங்கள், நீதி ஓங்க வேண்டும். இத்தகைய உயர்ந்த விழுமிய நிலையினை, இன் சொற் களை ஈவதால் பெற்றுக்கொள்ள முடியுமாகில், நிச்சயமாக இன் சொற்களையே நாம் என்றும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய இன் சொற்களை, “செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்', என்றும்;
85

Page 49
"பண்பின் தலைப் பிரியாச் சொல்’’ என்றும் 'சிறுமையுள் நீங்கிய சொல்,' என்றும் வள்ளுவர் ஏற்றியும் போற்றியும் பேசுகின்றார்.
மனிதனின் நாக்கு சுவையறியும் தன்மையது. உணவைப் பொறுத்த வரை, நாக்குத் தன்னிடம் தரப்படுகின்ற உணவைச் சுவைத்துப் பார்த்துவிட்டு, அது சுவையுள்ளதாக இருந்தால், அதனை உள்ளே செல்ல அனுமதிக்கின்றது, சுவையற்றதாக இருப்பின், அதனை வெளியே துப்பித் தள்ளி விடுகின்றது. உணவின் நல்லதும், கெட்டதும் ஆன தன்மைகளை அதன் சுவை மூலம் அறிந்து, வேறுபடுத்தி மணி தனுக்கு நாக்கு உதவுகின்றது. நாக்கின் மற்றொரு தொழிற்பாடு பேசுதல். சுவைக்கத் தெரிந்த நாக்கிடம், பேசும் பொறுப்பும் ஒப் படைக்கப்பட்டமைக்குத் தகுந்த காரணம் உண்டு. சொற்களையும் வார்த்தைகளையும் நன்கு சுவைத்துப் பார்த்து, அவற்றின் சரியான பொருளுணர்ந்து; அவை நன்மை பயப்பனவா, தீமை விளைவிப் பனவா என இனங் கண்டு, நல்லனவற்றை மாத்திரம் பேசுதலும், அல்லாதனவற்றைப் பேசாது தவிர்த்தலும் நாக்கின் பொறுப்புவாய்ந்த கடமையாகும். அதனையே நாவன்மை, நாவாற்றல் என்கிறோம். உணவைச் சுவைத்துப் பார்த்துச் சரி, பிழை சொல்லும் நாக்கு, ஏனோ சொற்களைச் சுவைத்துப் பார்த்துச் சரி, பிழை கூறப் பெரும் பாலும் தவறிவிடுகிறது. நாவின் ஆற்றல் அங்கு செயலற்று விடுகின்றது. மாறாக நாப் பழக்கம் அங்கு இடம்பெற்று விடுகின்றது. பொய் பேசுதல், கடுஞ் சொல் வழங்குதல், ஏசுதல், திட்டுதல், அமங்கலமாகப் பேசுதல், புறங் கூறுதல், கடிந்துரைத்தல், சூளுரைத்தல், குத்திப் பேசுதல், தாக்கிப் பேசுதல், வம்பு பேசுதல், நையாண்டி பேசுதல் என்று இவ்வாறு பேசக் கூடாத பேச்சுக்களைப் பேசுதல் நாப்பழக்க மாகி விட்டது. இத்தகைய கூடாத நாப்பழக்கத்தை மாற்றுவதானால் நல்ல நாப்பழக்கத்தை உண்டு பண்ணுதல் வேண்டும்.
‘செந்தமிழும் நாப்பழக்கம்' என்று ஆன்றோர் கூறி வைத் துள்ளமையை ஈண்டு நினைவில் கொள்ளுதல் வேண்டும். செந்தமிழ் என்பது இனிமையான, செம்மையான, பண்பான, அமுதம் போன்று பிறரை வாழ்விக்கக் கூடிய மொழி, சொல், வாக்கு என்று கூறலாம். எனவே, எமது நாவில் இனிய சொற்களை மட்டும் பழக விடுவதன் மூலமே செந்நாப்பழக்கத்தை உண்டுபண்ண முடியும். அதேவேளை சொல்லத் தகாத வார்த்தைகளை எமது நாவுடன் பழகவோ, பரிச்சய மாகவோ எந்நேரத்திலும் அனுமதித்தல் ஆகாது. இதன் வெற்றிக்குத் தகுந்த சமூகச் சூழலும் தேவை. நாவன்மை, சொல்லாற்றல் எனும் போது நல்ல, இனிய, பயனுள்ள, பண்புள்ள, பெறுமதி வாய்ந்த சொற்களைத் தேர்ந்து பேசுவதில் ஆற்றலும், திறனும் பெறுதல் என்பதாகும். நல்லனவற்றையே பேசி மகிழ்ச்சியுடன் வாழ்வோமாக.
86

21. திருடாதே
*செல்லப் பிள்ளை சீலை உடாதாம்; பள்ளிக்குப் போனால் பாடங் கொடாதாம்' என்று நம்மிடையே பழமொழி ஒன்று வழங்கி வருகிறது. சிலர், தம் பிள்ளைகளைச் சிறு வயதில், அவர்கள் மனம் போன போக்கில் விட்டு விடுகிறார்கள். அவர்கள் சொல்வது, செய்வது எல்லாமே சரியென்று, பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டு விடுகின்றார். கள். பிள்ளைகள் செய்யும் பிழைகளைக் கண்டு, ஆசிரியரோ, அண்டை அயலாரோ, பெற்றோருக்கு எடுத்துக் கூறினால், அதை நம்ப மறுக் கிறார்கள். 'என் பிள்ளை அப்படியான தவறுகள் எதையும் செய்ய மாட்டாது. வேண்டுமென்றே பழியைச் சுமத்துகிறீர்கள்' என்று, பெற்றோர் சண்டைக்கு வருகிறார்கள். இவர்களுள், இன்னுஞ் சிலர், பிள்ளைகள் மேலும் பிழையாக நடந்து கொள்வதற்குத் தூண்டுத லாகவும், ஆதரவாகவும் கூட இருக்கிறார்கள். ஒரு சின்னம் சிறு பொருளை எங்கிருந்தாவது திருடிக் கொண்டு வந்து, பிள்ளை பெற் றோரிடம் காட்டும்போது, அப்பிள்ளையை வாரி அணைத்து, பாராட்டி மகிழ்ச்சி எய்துபவர்களும் உள்ளனர்.
அண்டை அயலாருடன் சண்டை பிடிப்பதற்குப் பிள்ளைகளைப் பழக்கிவிடும் பெற்றோரையும் காண்கின்றோம். ‘என் பிள்ளை இருக் கும் போது எனக்கென்ன பயம். எல்லாரையும் அடித்துத் தொலைத்து விடுவான்’ என்று வீரம் பேசுவதில் தாய் பெருமைப்படுகிறாள். தாய் கொடுக்கும் உற்சாகத்தில் தடியைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டு விடுகிறது அப்பிள்ளை. சிறு வயதில் தடி தூக்கிய பிள்ளை, வளர்ந்த பின் என்னென்னவோ எல்லாவற்றையும் தூக்குகிறது. ஆரம்பத்தில் குறும்பாக அரும்பிப் பின், சிறு வயதில் குழப்படியாக மலர்ந்து, மாணவப் பருவத்தில் பகிடி வம்பு வதைகள் ஆகக் காய்த்து, வளர்ந்த பின் குற்றச் செயல்கள் ஆகக் கணிகின்றமையைச் சமூகத்தில் காணக் கூடியதாக உள்ளது.
பழக்கங்கள் நல்லவையோ, கெட்டவையோ, சிறு வயதில் அதுவும் பெற்றோரின் ஆதரவோடு பழகியவை, வாழ் நாள் முழுவதும் நிலைத்து நிற்கும். இளமையில் பக்குவமாக வளர்க்கப்படாத பிள்ளை, வளர்ந்து பெரியவனான பின்னர், சமூகத்திற்குத் தொல்லைகளும் இடர்களும் தந்து கொண்டே இருப்பதைக் காண்கிறோம். வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது போன்று, வளர்த்துவிட்ட பெற்றோரையே மதிக்காமல் அவர்களுக்கு இடர்களைக் கொடுக்கின்றவர்களும் இருக்கின்றனர். சமூக
87

Page 50
விரோதச் செயல்களில் ஈடுபாடு கொள்பவர்கள் பிள்ளைப் பருவத்தில் பெற்றோரால் முறையாக வளர்க்கப்படாதவர்களாகவே தோன்றுகின் றர்.
அந்தக் குடும்பத்திற்குக் கண்ணன் ஒரே மகன். குறும்புகள் பல செய்வான். சின்னக் குழந்தைதானே என்று பொறுத்துக் கொள் வார்கள். தாய், தன் மகனின் குறும்புகளை எல்லாம் விஸ்தாரமாக வருவோர், போவோர்களுக்கெல்லாம் சொல்லி மகிழ்வாள். கண்ணனும் கேட்டுக் கேட்டுப் பெருமிதம் கொள்வான். அவனும் வளர, கூடவே குறும்புகளும் பெருகின. தாயின் செல்லமும் அதிகரித்தது.
பாடசாலையில் எவருக்கும் அடங்குவதில்லை. ஒருநாள் கண்ணன் அடுத்த வீட்டிலிருந்து ஒரு தையல் ஊசியைத் திருடிக் கொண்டு வந்து தாயிடம் கொடுத்தான். எனக்குத் தையல் ஊசி ஒன்று எப்படியோ தேவை என்று அறிந்து கண்ணன் கொண்டு வந்து தந்துவிட்டானே என்று மகிழ்ந்து, மகனின் சாமர்த்தியத்தைப் பாராட்டினாள், தாய். கண்ணனுக்கும் உற்சாகம் பிறந்தது. பாராட்டுக்கு யார்தான் எடுபட மாட்டார்கள்.
சில நாள்கள் சென்றன. கண்ணன் பாடசாலையிலிருந்து வரும் போது ஓர் அழகான பேனாவைக் கொண்டு வந்தான். அந்தப் பேனை அவனின் வகுப்பு மாணவனிடம் திருடியது.
"ஆண்டு மூன்றில் படிக்கும்போதே நீ இத்தனை புத்திசாலியாகி விட்டாயே. நீ பிழைத்துக் கொள்வாய்' என்று மகனைப் பாராட்டிய தாய் இம்முறை பூரித்தே விட்டாள். அந்தப் பேனாவைப் பார்த்துப் பார்த்து இருவரும் மகிழ்ந்தார்கள்.
தன் தொழிலுக்குத் தாயிடமிருந்து கிடைத்த ஆதரவும், ஆசீர் வாதமும் கண்டு கண்ணனும் திருட்டுத் தொழிலில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினான்.
பல்வேறு பொருட்கள், பண்டங்கள் என்பன சிறியனவாயும் பெரியனவாயும் தினசரி வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான். திருட்டுத் தொழிலில் ஆற்றலும் சாமர்த்தியமும் கொண்டு மகன் வளர்ந்து வருவதைக் கண்ட தாய், அவனை ஈன்ற பொழுதிலும் பெரிது உவந்தாள். மகன் பொருட்களைத் திருடிக் கொண்டு வரும் ஒவ்வொரு வேளையும் அவனை உச்சி மோந்து பாராட்டிச் சீராட்டத் தாய் தவறியது கிடையாது.
88

கண்ணன் வளர்ந்து குமரப் பருவம் எய்தினான். பாடசாலையில் அவன் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்தன. மாணவிகளுக்குக் கொடுக்கும் ஆய்க்கினைகளும், தொல்லைகளும் இம்மாத்திரம் என்று சொல்ல முடியாது. ஆசிரியர்களால் எதுவுமே செய்ய முடியாத நிலை. தாயைக் கூப்பிட்டு விசாரித்தால், தன் மகன் ஏதுமறியாதவன், அப் பாவி என்றெல்லாம் கூறிவிட்டுப் போய்விடுவாள். தன் மகனைக் கண்டு எல்லோரும் பயப்படுகிறார்கள் என்பதில் தாய்க்கு உள்ளூரப் பெருமையாக இருந்தது.
வரவரத் திருட்டுக்களில் மாத்திரமல்ல, பற்பல குற்றச் செயல் களிலும் ஈடுபடத் தொடங்கினான். பெண் பிள்ளைகள் மத்தியில் தன்னை ஒரு நவீன கண்ணனாகவே எண்ணிக் கொண்டு செயற் பட்டான். பக்கத்தில் நிற்பவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப் பார்கள்; சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமோ, அச்சமோ வெட்கமோ, நாணமோ இன்றிப் பொது இடங்களில் நடந்து கொண் டான். பாடசாலைக்கோ, கல்வி நிலையங்களுக்கோ பெண் பிள்ளைகள் செல்லும்போது, தாயோ, தந்தையோ உடன் செல்ல வேண்டிய அளவுக்குச் சூழ்நிலை மோசமாகி விட்டது. தொலைபேசி அழைப்புக் கள் மூலமும் தொல்லைகள் கொடுத்து வந்தான்.
தான் செய்த வீரப் பிரதாபங்களையெல்லாம் தாய்க்குச் சொல் லும் போது அவள் தன் மகனைப் பற்றிப் பெருமிதம் கொள்வாள். அட்டார வட்டாரங்களில் இன்னாருடைய தாய் என்று தலைநிமிர்ந்து நடந்து வந்தாள்.
காலப் போக்கில் மது, போதை வஸ்துப் பழக்கங்களுடனும் தன்னை இணைத்துக் கொண்டான் கண்ணன். ஒரு பயங்கரப் பேர்வழி யாகிவிட்டான்.
வீடுடைப்பு, கொள்ளை, வழிப்பறி, அபகரிப்பு மூலம் கண்ணன் நிறையப் பணம், நகைகள் சம்பாதித்து விட்டான். வேறு வேறு குற்றச் செயல்களுடனும் தொடர்பு கொண்டான். பலருக்கு அவன் வேண்டியவனாகவும் செல்வாக்குப் பெற்று விட்டான்.
பல நாட் கள்வன் ஒருநாள் அகப்பட்டே தீருவான். அதுதான் தெய் நீதி. நீதிக்குப் புறம்பாக நடந்து கொள்பவர்கள் ஒருநாளைக்கு தெய்வ நீதியிடம் தண்டனை பெற்றே ஆக வேண்டும்.
89

Page 51
கண்ணனைப் பொறுத்த மட்டில் அந்த நாளும் விரைவில் வந்தது. அன்று, ஒரு பெரும் பணக்காரரின் மாளிகையில் புகுந்து, இரும்பு அலுமாரியை உடைத்துப் பணம், நகைகள், தங்கப் பாளங்கள் ஆகிய வற்றைக் களவாடுவது கண்ணனின் திட்டம். திட்டமிட்டபடியே வீட்டி னுள் புகுந்து திருடிய வேளை, எப்படியோ பொலிஸாருக்குத் தகவல் கிடைத்து, வேகமாக வந்து கையும் களவுமாகக் கண்ணனைப் பிடித்து விட்டார்கள். அவனுக்குக் கைவிலங்கு இட்டுப் பொலிஸ் நிலையத்துக் குக் கொண்டு சென்று காவலில் அடைத்து வைத்தார்கள்.
கண்ணனின் அருமை அன்னை செய்தி அறிந்தாள். ஒடோடிச் சென்று தன் மகனைப் பார்க்கப் பொலிஸாரிடம் அனுமதி கேட்டாள். அழுதாள், புலம்பினாள், தன் மகன் குற்றமற்றவன், விட்டு விடுங்கள் என்று மன்றாடினாள். இவையனைத்தையும் பக்கத்து அறையில் கம்பி களுக்குப் பின்னால் நின்ற கண்ணன் கண்டான்.
பொலிஸாரும் தாயைக் கொண்டுபோய் தனயன் முன் விட்டனர். அப்போது திருட்டு மகன் கண்ணன், தாயை உற்றுப் பார்த்தான். 'அம்மா’’ என்று அலறினான். கண்ணிர் சொரிந்தான். பின் தாயை நோக்கி, ‘உன் இந்திர ஜாலம், மாய்ம்மாலம் ஒன்றும் இனி எடு படாது. நான் கையும் மெய்யுமாகப் பிடிபட்டு விட்டேன். வழங்கும் தண்டனையை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். உன்னை அம்மா என்று அழைக்க வெட்கப்படுகிறேன். ஒர் அன்னை தன் பிள்ளைக்குச் செய்ய வேண்டிய கடமையை நீ செய்யவில்லை. என்னை நல்லவனாக நீ வளர்க்கவில்லை. திருடனாக வளர்த்தாய். நான் சின்னப் பிள்ளை யாக இருந்தபோது, தையல் ஊசி ஒன்று, திருடிக் கொண்டு வந்து தந்தேன். பாராட்டினாய். உச்சி மோந்து முத்தமிட்டாய். அது இன் னும் என் நினைவில் இருக்கிறது. அன்று என்னைக் கண்டித்து, தையல் ஊசியைக் களவாடிய இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு வா, என்று என்னைத் துரத்தியிருந்தாயானால், இன்று நான் திருடனாக நிற்கும் அவல நிலை ஏற்பட்டிருக்காது. நான் குறும்புகளும், குற்றங் களும் செய்தபோது பாடசாலையிலும், சமூகத்திலும் என் பக்கம் நின்று எனக்காக வாதாடினாய். நீ தந்த தைரியத்திலேதான், நான் மீண்டும் மீண்டும் தொல்லைகள் செய்தேன். நீ செய்த பிழையை இப்போதுதான் உணர்கின்றேன். துள்ளித் திரிகின்ற வேளையிலே என் துடுக்கடக்கிப் பள்ளிக்கு வைக்க என் தந்தை எம்முடன் இருக்க வில்லை. செல்வம் சேர்க்க வெளிநாடு போய் விட்டார். அப்பணியைச் செய்யத் தவறிவிட்டார். தாயும் தந்தையுமாக இருந்த நீ, என் துடுக்கையடக்கி, சிறு வயதிலிருந்தே என்னை நல்லொழுக்கப் பாதை யில் செல்ல வழிகாட்டியிருந்தாயானால், இன்று என் கைகளில் விலங்கு
90

ஏறியிருக்காது. இத்தனை துன்பத்திற்கும் ஆளாக வேண்டி வந்திருக் காது. இதற்கெல்லாம் காரணம் நீ தான் என்பதை உணர்ந்து கொள். மற்றைய தாய்மார்களுக்கும் இது ஒரு பாடமாக இருக்கட்டும்' என்று உணர்ச்சி ததும்பக் கூறினான் கண்ணன்.
குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மகத்தானது. இதைப் பெற்றோர் உணர்ந்து கொள்ளாது பராணிப்பாக இருந்தால், அல்லது பிள்ளைகளைத் தவறாக வழி நடத்தினால் எத்துணை பார தூரமான விளைவுகள் ஏற்படுகின்றன என்பதற்கு இந்தக் கண்ணனின் வரலாறு சான்றாக அமைகின்றது.
9.

Page 52
22. சுயகட்டுப்பாடு
சுய கட்டுப்பாடு ஒரு மாபெரும் சக்தி, மனிதன் தனது வாழ்க்கை யைச் சீராகவும், செம்மையாகவும்; ஒழுங்காகவும், ஆக்கபூர்வமாகவும், வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கு, அவனிடம் உள்ள சுய கட்டுப்பாடுதான் வேண்டிய பலத்தையும், திறனையும், தீரத்தை யும், உறுதியையும் தொடர்ச்சியாகத் தந்துகொண்டிருக்கிறது.
வாழ்க்கைப் படகை உறுதியான, உரிய பாதையில் நெறிப்படுத்து வது சுய கட்டுப்பாடு.
சுய கட்டுப்பாடு தளர்ச்சியடையும்போது மனிதன் தன் பலத்தை இழக்கிறான்; சக்தியை வீணாக்கி விரயமாக்குகிறான். பாதை மாறு கிறது; நெறி கெட்டுப்போய் விடுகிறது. இருள் சூழ்கிறது. அநத இருளில் எதிரே வருவன எதுவுமே கண்ணுக்குத் தோன்றுவதில்லை. விபத்து, விபரீதம், அழிவு என்பனவற்றையே சந்திக்க நேரிடுகிறது. வாழ்க்கையில் இத்தகைய அனர்த்தங்களிலிருந்து மனிதரைப் பாது காப்பது, மீட்டெடுப்பது, உரிய வழியில் செலுத்துவது யாவும் மனித ரிடம் உள்ள சுய கட்டுப்பாடு என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
மனிதரிடம் காணப்படுகின்ற வேட்கைகள், ஆசைகள், அவாக்கள், அங்கலாய்ப்புகள் என்பன வேகம் மிகுந்தவை. இந்த வேகங்கள் அதி கரிக்க, கூடவே வேதனைகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய வேதனை களைக் குறைப்பதற்கும், ஈற்றில் அற்றுவிடச் செய்வதற்கும்; வேகங் களைத் தடுத்தும் கெடுத்தும் மனிதர் தமது ஆட்சியின் கீழ்க் கொண்டு வருதல் வேண்டும். இதனையே கட்டுப்படுத்துதல் என்கிறோம்.
வாழ்க்கையை நெறிப்படுத்துவது சுய கட்டுப்பாடுதான். நெறிப் படுத்தப்பட்ட வாழ்க்கையைத்தான் மனித வாழ்க்கை என்கிறோம். இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒர் ஒழுக்க நெறிக் கோவையை வகுத்துக் கொண்டு, வாழ்வதுதான் மனித வாழ்க்கை. ஒழுக்க நெறிக் கோவை மனித விழுமியங்களின் அடிப்படையில் வகுக்கப்படுகின்றது. ஒரு நாட்டினைப் பரிபாலனம் செய்வதற்கு அரசியல் யாப்பு எத்துணை முக்கியமானதோ, அத்துணை முக்கியமானது, மனிதர்களைப் பரி பாலனஞ் செய்வதற்கு மனித வாழ்க்கை நெறிமுறைகள் அடங்கிய கோவை. இதில் சுய கட்டுப்பாட்டின் பங்கு மகத்தானது நெறி
92

முறைகளை அனுசரித்து வாழ்க்கையைத் திசைகோட்படுத்தி, மணி தனை மனிதனாக வாழச் செய்ய உதவுவது மனித விழுமியங்களை அடிப்படையாகக் கொள்ளும் சுய கட்டுப்பாடு.
கட்டுப்பாடு என்பது குறிப்பிட்ட ஓர் அளவினைப் பேணுவதைக் குறிக்கிறது. அந்தக் குறிப்பிட்ட அளவுதான் என்ன, என்பதைத் தீர்மானித்துக் கொண்டு, அந்த அளவினை விஞ்சவிடாமல் பார்த்துக் கொள்ளுவதும், அதேவேளை அந்த அளவு குறைந்து விடாமல் சீர் செய்து கொள்வதும், குறிப்பிட்ட அளவைப் பேணி வருதலும் கட்டுப் பாடு என்பதில் அடங்குகின்றன. “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு' என்ற பழமொழியில் 'அளவு' என்னும் சொல் காத்திரம் மிகுந்தது. அளவினை அறிந்து கொண்டு அதைப் பேணுவதுதான் கட்டுப்பாடு ஆகும். அமிர்தமும், கட்டுப்பாடு இல்லாவிட்டால், நஞ்சு ஆகி விடும் என்பது உறுதி. வாழ்க்கையில் கட்டுப்பாடு எத்துணை அவசியம் என்பதை இம்முது மொழி உணர்த்துகின்றது.
சுய கட்டுப்பாடடின் மூலம் மனிதர்கள் அடையப் பெறுவது
அனைத்தும் நன்மைகளே. அந்த நன்மைகள் அவர்களை ஈடேற்றுவ தாகவே விளங்குகின்றன. சுய கட்டுப்பாடின்மை மனிதரைப் படு குழியில் வீழ்த்தி விடும். எனவே, கட்டுப்பாடு இன்மை ஓர் அழிவு சக்தி. ஆனால் கட்டுப்பாடு என்பது ஒர் ஆக்க சக்தி என்பதை மறந்துவிட லாகாது. பொதுவாக, எந்தச் சக்தியும், ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்தப்படுவதைக் காண்கிறோம். அணுசக்தி அவ்வாறு உள்ள மையை, ஓர் எடுத்துக்காட்டாகக் கூறலாம். ஆனால் சுய கட்டுப்பாடு எனும் மகா சத்திக்கு ஆக்கத் தெரியுமே தவிர அழிக்கத் தெரியாது.
கட்டுப்பாடு என்றால் அங்கு சுதந்திரம் இல்லை என்று சிலர் கவலை கொள்கின்றனர். இது தவறான அபிப்பிராயம். சுதந்திரம் என்றால் என்ன அதன் பரப்பு, எல்லைகள் என்ன, போன்ற விடயங் களைத் தெளிவாகத் தெரிந்து கொள்ளாமையே இத்தகைய கவலைக் குக் காரணம். நாம் சுதந்திரமுள்ளவர்கள்; அதனால் நாம் விரும்பிய படியெல்லாம் நடந்து கொள்ளலாம்; எம்மைத் தட்டிக் கேட்க ஆளில்லை என்று மனம் போன போக்கில் செல்வது காட்டுக் கழுதைச் சுதந்திரமே தவிர, மனித சுதந்திரம் அன்று. மனித சுதந்திரத்திற்கும் எல்லை இருக்கிறது; அளவு இருக்கிறது. அந்த அளவு மீறப்படலாகாது. அவ்வாறு மீறப்பட்டு சுதந்திரம் பறிபோகும் நிலை ஏற்பட்டால், ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவினைப் பேண உதவுவது கட்டுப் பாடு.
93

Page 53
கட்டுப்பாடு, சுதந்திரத்தைப் பறிப்பதல்ல, மாறாக, சுதந்திரத் தைப் பாதுகாக்க, பேண, ஒழுங்காக அனுபவிக்க மனிதர்களுக்கு உதவுவதாக உள்ளது. கட்டுப்பாடும், சுதந்திரமும் இரு துருவங்கள் அல்ல. இரண்டும் இணையக் கூடியன; இணைய வேண்டியன.
நாம் நம்மைக் கட்டுப்படுத்தும் சுதந்திரம் நமக்கு இருத்தல் அவசியம். அத்தகைய சுதந்திரம் இல்லாத மனிதன் பிறருக்கோ, பிறவற்றிற்கோ அடிமையாகி வாழ வேண்டி நேரிடும். சுதந்திரத்திற்கும் ஒரு வகையில் கட்டுப்பாடு அவசியம். சுதந்திர மனிதன், கட்டுப்பாடு உள்ளனவாக இருக்கும் பட்சத்திலேயே, அச் சுதந்திரத்தினால் பிர யோசனம் உண்டு. இல்லாவிட்டால் சுதந்திரமற்ற மனிதனாகி விடு
I
சுதந்திரத்திலே கட்டுப்பாடு என்பதை மனித விழுமியமாகக் கொண்டு, அதனை வாழ்க்கை நெறிகளுள் இடம் பெறச் செய்வதால் மனித வாழ்க்கை சிறக்கும். பொருளாதார, அரசியல், சமூகத்துறைகள் உள்ளிட்ட மனித வாழ்க்கையின் சகல துறைகளிலும், மனிதன் சுய கட்டுப்பாட்டினைப் பேணுவதன் மூலமே வளர்ச்சி காண முடியும். அவ்வாறு சுய கட்டுப்பாடு பேணப்படாத அல்லது பேண முடியாத சந்தர்ப்பங்களில் ஊழல்கள், சுரண்டல்கள், சீர்கேடுகள், இழப்புக்கள் என்பன தவிர்க்க முடியாதனவாக வந்து விடுகின்றன.
கட்டுப்பாடு என்பது குறிப்பிட்ட ஒர் அளவினைத் தரம் ஆகப் பேணுகிறது என்றால், அந்தக் குறித்த அளவு நியாயமான முறையில் தீர்மானிக்கப்பட வேண்டும். அது ஒரு வகைச் சமநிலையில் இருக்க வேண்டும். நியம அளவாகவும் அது அமைய வேண்டும். கட்டுப்பாடும் அந்த நியம அளவினை மீறுவதாக இருந்தால், சங்கடங்கள்தான் ஏற்படும். கட்டுப்பாடும் கட்டுக்கடங்கியதாக விளங்குதல் இன்றியமை
யாதது.
மனிதர்கள் கட்டுப்பாட்டினை விரும்பாமைக்குக் காரணம், கட் டுப்பாடு, குறித்த அளவினை மீறி, கட்டுக்கடங்காத கட்டுப்பாடு ஆக வந்து விடுவது ஆகும். இன்னொரு காரணம், சமூகத்திற்கு வேண்டாத கட்டுப்பாடுகளையும், மனித உரிமைகளைப் பறிக்கின்ற கட்டுப்பாடுகளையும், மனிதர்களைச் சமூகத்தில் ஒடுக்கி அடக்குகின்ற கட்டுப்பாடுகளையும், நம்பிக்கைகள், வழமைகள், கொள்கைகள், கோட்பாடுகள், சம்பிரதாயங்கள், சமூகச் சட்டங்கள் என்ற போர்வை யில் மக்களிடையே திணிக்கப்படுவதினாலும் ஆகும். இத்தகைய கட்டுப் பாடுகள் பெரும்பாலும் புற அழுத்தங்களின் விளைவாகவே காணப்
94

படுகின்றன. எனவே, அவை விரும்பி ஏற்றுக் கொள்ளப்படுவன அல்ல. அவற்றைக் கடைப்பிடிக்கும்படி மக்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் இவற்றை மீறுபவர்கள் புரட்சியாளர்களாகக் கணிக்கப்படுகின்றனர். நன்மையான விளைவுகளை, இப்புரட்சி ஏற்படுத்தினால், மக்களின் ஆதரவைப் பெற முடிகிறது. புரட்சியாளர்கள், சீர்திருத்தவாதிகள் ஆகிவிடுகின்றனர். வெளிக் கட்டுப்பாடுகள் அநேகமானவை, திணிக்கப் படுவனவாகவும், அளவினை மீறிக் கட்டுக்கடங்காத நிலையினை எய்தி விடுவனவாகவும் வந்து விடுகின்றன. அதனால் அத்தகைய கட்டுப்பாடு களின் பிடியிலிருந்து மீளுவதற்கும், கட்டுப்பாடுகளை மீறுவதற்கும் எத்தனித்துக் கொண்டே மக்கள் இருப்பர். கட்டுக்கடங்காத கட்டுப் பாடு, மக்களைச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட சிறைக் கைதிகள்போல் ஆக்கிவிடுகின்றது. அத்தகைய கட்டுப்பாடுகள் வெறுக்கப்படுவனவாயும் மீறப்படுவனவாயும் அமைந்து விடுகின்றன.
ஆனால், சுய கட்டுப்பாடு விரும்பி ஏற்கப்படுவது. எனவே, மக்களுக்கு நன்மையைத் தருகிறது. மனித வாழ்க்கையை ஒழுங்காக நடாத்துவதற்குச் சுய கட்டுப்பாடு உதவுகிறது. நம்மை நாமே நிர் வகிக்க, முகாமை செய்ய, ஒழுங்கு செய்ய மிக அவசியம் தேவைப் படுவது சுய கட்டுப்பாடு. அதனை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வெளி அழுத்தங்கள், நெருக்கிடைகள், செல்வாக்குகள், திணிப்புகள் என்பனவற்றிற்கு இடமில்லை. எனவே, சுய கட்டுப்பாடு நிலைத்து நிற்கக் கூடியது.
சுய கட்டுப்பாட்டினைச் சிறு பராயத்திலிருந்தே பிள்ளைகளில் விருத்தி செய்ய வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்கள் கட்டுப்பாடு களைப் பிள்ளைகளுக்கு விதிக்கிறார்கள். அதற்காகப் பல அழுத்தங் களையும், நெருக்குதல்களையும் மேற்கொள்ளுகிறார்கள். எப்பொழுது கட்டுப்பாடுகளை மீறலாம் என்று எதிர்பார்த்துப் பிள்ளைகள் வளர் கிறார்கள். இந்த நிலைமை நன்மையைத் தராது. பெற்றோர்கள், பிள்ளைகள் சுயமாகக் கட்டுப்பாடுகளை விருத்தி செய்யக்கூடிய தகுந்த சூழலைக் கட்டியெழுப்ப வேண்டும். தாமும் கட்டுப்பாட்டோடு முன் மாதிரியாக நடந்து காட்ட வேண்டும். கட்டுப்பாடுகளை மீறாமல், அளவாக வாழ்கின்ற பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிள்ளைகள் கண்குளிரப் பார்க்க வேண்டும். அத்தகைய ஒழுங்கும் கட்டுப்பாடும் நிறைந்த சீரிய வாழ்க்கையால் பெற்றுக் கொள்ளப்படுகின்ற சிறந்த நற்பண்புகளைக் கண்டு, தாமும் அத்தகைய கட்டுப்பாட்டினை வளர்த் துக் கொள்ள விரும்புவார்கள். தாமாக விரும்பி ஏற்று வளர்த்துக் கொள்கின்ற சுய கட்டுப்பாடு பிள்ளைகளில் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும். சுய கட்டுப்பாடு வாழ்நாட் கட்டுப்பாடு ஆக விளங்குவதால், வாழ்க்கை நலம் பெறும்.
95

Page 54
23. கடமைகளும் பொறுப்புக்களும்
சமூகம் என்பது மனிதர்களை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பு. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெறுவதற்கு ஒரேயொல் நிபந்தனையே உண்டு. மனித இனத்தைச் சார்ந்தவராக இருத்தரு வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. மனித இனம், இவ்வுலகின் கண் உள்ள எல்லா உயிரினங்களிலும், வளர்ச்சியால் மேம்பட்டது, அறிவால் உயர்ந்தது. நாகரிகம், பண்பாடு, கலாசாரம் எனும் முது சொத்துக்களையுடையது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறை களில் முன்னேறிக் கொண்டிருக்கின்றது.
மக்கள் அனைவரும் ஒரே மனித இனத்தினைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில், பிறப்பினால் அனைவரும் சமத்துவம் உடையவர்கள். மனித உரிமைகளில் சமமான உரித்துடையவர்கள். உயர்திணையினர். ஆண், பெண் என இரு பாலாராக இருப்பினும், மனித இனத்தினால் ஒன்றுபட்டவர். எனவே, அவர்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லை; சமத்துவம் உண்டு. 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்' என்று கொள்ளப்பட்டு வருவதிலிருந்து, பெண்ணையும், ஆணையும், சமூக மட்டத்திலிருந்து தெய்வீக நிலை வரை, சமத்துவம் உள்ளவர் களாக மதிக்கப்படுந் தன்மை தெளிவாகிறது. உரிமைகளைக் கோரு வதிலும், அனுபவித்தலிலும் சமத்துவம், சம சந்தர்ப்பம், சம வாய்ப்பு என்பன சமூக உறுப்பினர் ஒவ்வொருவருக்கும் உண்டு. எனினும் கடமைகள், பணிகள், பொறுப்புக்கள் என்பவற்றைப் பொறுத்தவரை யில், சமூக உறுப்பினர்கள் தத்தம் சமூகங்களில் தாம் வகிக்கும் நிலை என்ன என்பதை முன்னிட்டே அவை அமைகின்றன. ஒவ்வொருவரும் ஏற்றுக் கொண்ட கடமைகள், பொறுப்புக்கள், பணிகள் ஆகியவற் றைச் சரிவர நிறைவேற்றுவதனாலேயே, சமூகத்தின் கட்டுக்கோப்பு, உறுதி, ஒருமைப்பாடு என்பன பேணப்படுகிறது. சமூகத்தின் பலமும், பலவீனமும்; வளர்ச்சியும், தேய்வும்; பாதுகாப்பும், பாதுகாப்பின்மை யும்; ஒருமைப்பாடும் ஒற்றுமைக் குலைவும், அச்சமூக உறுப்பினர்கள் எந்த அளவிற்குத் தத்தம் சமூகக் கடமைகள், பொறுப்புக்கள், பணிகள் ஆகியவற்றை முட்டின்றி நிறைவேற்றுகிறார்கள் அல்லது நிறைவேற்ற வில்லை என்பதைப் பொறுத்தே அமையும்.
ஓர் இயந்திரத் தொகுதியில், அதன் ஓர் உறுப்பு அல்லது பகுதி ஒன்று இயங்க மறுத்தாலும், இயந்திரத் தொகுதி முழுவதுமே அதன் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. நமது உடலில் ஒரு பிரதான
96

உள்ளுறுப்பு இயங்காத நிலையில், முழு உடலுமே பாதிக்கப்படுகிறது. அவ்வாறே, சமூகத்தில், அதன் உறுப்பினர்கள் தமது கடமைகளை நிறைவேற்றாத பட்சத்தில், சமூகம் முழுவதுமே பாதிப்பிற்குள்ளா கிறது. சமூகஞ் சீரழிந்து விடுகிறது. எனவே, தனித்துவம், ஒருமித்தும் சமூக உறுப்பினர்கள் தத்தம் சமூகத்தின் உறுதிப்பாட்டிற்குப் பாத்திர மாணவர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். சமூகம் எனும்போது, குடும்பமும் ஒரு சமூகமே; பல குடும்பங்கள் சேர்ந்து வாழுகின்ற கிராமமும், நகரமும் சமூகந்தான். பாடசாலை, வேலைத் தலங்கள் என்பனவும் சமூகங்களே. நாடு, பிராந்தியம், உலகம்என்று சமூகம் எனும் எண்ணக்கரு விரிவடைகின்றது.
மனித விழுமியங்களை உணர்வதாலும், வாழ்க்கையில் கடைப் பிடிப்பதாலும், சமூகத்தின் உறுதிப்பாட்டையும், ஒருமைப்பாட்டை யும், நல்லுறவையும் பேண முடிகிறது. சார்ந்துள்ள சமூகத்தில் உறுதி யும், கட்டுக் கோப்பும் இருக்கும்போது, அமைதி நிலவுகிறது. உறுப் பினர்கள் பாதுகாப்புப் பெறுகின்றனர். வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படு கிறது. முரண்பாடுகள் மறைந்த நிலையில், வாழ்க்கை இன்பமயமாக விளங்குகின்றது. ஒவ்வொரு உறுப்பினரும், சரிவர ஆற்றுகின்ற சமூகக் கடமைகள், பொறுப்புக்கள், பணிகள் அனைத்தும் மிக்க பெறுமதிகள் வாய்ந்தவை. அவை யாவும் மனித விழுமியங்கள். எனவேதான் சமூகத் தினரை வாழ்விப்பனவாக விளங்குகின்றன. மனித விழுமியங்களை ஏற்க மறுப்பவர்கள்; தத்தம் கடமைகளையும் பொறுப்புக்களையும் ஆற்ற மறுப்பவர்கள் யாவரும், சீருஞ் சிறப்புமாக வாழ மறுக்கிறார்கள் என்பதே பொருள் ஆகும்.
குடும்பம் ஒரு சமூகம் ஆகும். தந்தை, தாய், பிள்ளைகள் அதன் பிரதான உறுப்பினர். ஒவ்வொருவருக்கும் எனக் கடமைகள், பொறுப் புக்கள், பணிகள் உண்டு. அவற்றைச் சிரத்தையுடன் நிறைவேற்றும் பட்சத்திலேயே, குடும்பம் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் விளங்கும். அவ்வாறு நடைபெறாத நிலையில் குடும்பத்தில் புயல் வீசுவது தடுக்க முடியாததாகி விடுகின்றது. குடும்பத்தில் புரிந்துணர்வு என்பது, அவர் களின் கடமைகளை உணர்த்துவதிலும், அவற்றைப் புரிவதிலுமே தங்கியுள்ளது. புரிந்துணர்வு குடும்பத்தினரிடையே ஏற்படும்போது, குடும்பத்தில் ஐக்கியம், ஒருமைப்பாடு, அமைதி என்பன நிலவுகின்றன.
'ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே’’
என்ற புறநானூற்று அடிகள், தாயினதும், தந்தையினதும் பிரதான குடும்பக் கடன்கள் எவையெனக் கூறுகின்றன. குடும்பத் தலைவியான
97

Page 55
தாயின் தலையாய கடமை, மகவினை ஈன்று புறந்தருதல். குழந்தை யைப் பெற்றெடுப்பதும், பேணி வளர்த்துச் சமூகத்திற்குத் தருதலும் என்ற இரண்டு கடமைகளும் ஈன்று புறந்தருதல் என்பதில் அடங்கும். இதனையே தாய்மை என்று சிறப்பித்துக் கூறுகின்றனர். தாய்மை, தாய்க்குலத்தின் தனிச் சிறப்பு: பெண் குலத்திற்குப் பெருமை தேடித் தருவது. அன்னையைத் தெய்வமாகவும், சிறந்த கோயிலாகவும் உயர்த் திப் பேசப்படுவதற்குத் தாய்மையே முழுமுதற் காரணம். அன்றியும், தாய்மை என்கின்ற தலைக் கடமையைத் தாயினால் மாத்திரமே ஆற்ற முடியும். அந்தக் கடமை தளராது நடைபெறுவதனாலேயே இந்த உலகம் நடைபெறுகிறது. தாய்மை பற்றிய கருத்தினைப் பிற் போக்கானது என்று கொண்டு தாய்மை எனும் புனிதமான பதத் தினைப் 'பிள்ளை பெறும் யந்திரம்' என்பதுடன் பொருத்திப் பேசி, தாய்க்குலத்தைத் தவறான பாதையில் தடுமாற வைப்பவர்களினால், தற்காலத்தில் குடும்ப விழுமியங்கள் மறக்கப்பட்டுக் குடும்பங்கள் சீர்குலைவுக்குள்ளாவதைக் காண்கின்றோம். குடும்பங்கள் சீர்குலையும் போது, அங்கு மகிழ்ச்சி ஏது, மதிப்புத்தான் ஏது?
ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் எனும் வாழ்க்கை விழுமியம், குடும்ப வாழ்க்கையைச் சீராகவும், செழிப்பாகவும்; ஒழுங் காகவும் கெளரவமாகவும் நடாத்துவதற்குப் பேருதவியாக இருந்து வந்துள்ளது. கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமல்ல; ஆணுக்கும் உரியது என்பது மிகச் சிறந்த விழுமியம் ஆகக் கொள்ளப்பட்டு வந்தது. இக்கருத்துக்கள் ஆணுக்குப் பெண் அடிமையென்றோ பெண்ணுக்கு ஆண் அடிமையென்றோ எவ்விதத்திலும் குறிப்பிடுவனவாக இல்லை.
இக்காலத்தில் குடும்பங்களில் அல்லல்களும் தொல்லைகளும் மலிந் துள்ளமைக்குப் பல காரணங்களைக் கூறலாம். குடும்ப உறுப்பினர் களிடையே பரஸ்பரம், விசுவாசம், நேர்மை, நம்பிக்கை குறைந்து கொண்டே வருகின்றன. கணவன், மனைவியையும்; மனைவி கண வனையும்; பிள்ளைகள் பெற்றோரையும்; பெற்றோர் பிள்ளைகளையும் ஏமாற்றும் வித்தைகள் பரவலாக நிகழ்கின்றன. எல்லோருமே காலை யில் தொழில் நிமித்தமாகவோ, படிப்பு நிமித்தமாகவோ வெளியே சென்று மாலையில் வீடு திரும்புபவர்கள். சிலர் நேரம் கழித்து வீடு திரும்புபவர்கள் ஆக உள்ளனர். ஒருவரை ஒருவர் கண்காணிக்கவோ ஆலோசனைகள் புத்திமதிகளைப் பரிமாறிக் கொள்ளவோ அவகாசம் இல்லை. பிள்ளைகள், புத்தகங்களுடன் பாடசாலைகளுக்கும், ரியூட்டரி களுக்கும் படிப்பதற்கென்று செல்லுகிறார்கள். அவர்கள் உண்மையில் பாடசாலைகளுக்குத்தான் செல்லுகிறார்களா, அல்லது வேறெங் காவது சென்று பொழுதைக் கழிக்கிறார்களா என்பது அவர்களுக்குத்
98

தான் வெளிச்சம், நிலைமை முற்றிப் பிரச்சினையாக வரும்போது தான், பெற்றோருக்குத் தெரிய வருகிறது. பெற்றோர் முழிக்கிறார் கள், வேதனைப்படுகிறார்கள். கண் கெட்டபின் சூரிய நமஸ்காரமா? என்ற நிலை ஏற்படுகிறது. 'சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே." தந்தைக்கு என்று கூறினாலும், தாய்க்கும் அந்தக் கடன் உண்டு. பெற்றோர் தங்கள் கடமைகளை, நேர அவகாசம் இல்லை என்பதைச் சாட்டாகக் கொண்டு, செய்யத் தவறினால், அதனால் ஏற்பட கூடிய விளைவு, பாரதூரமானவை என்பதை உணர்ந்து கொள்ளல் வேண்டும். பெற்றோர்களும், தங்கள் நடத்தைகள் சீராக உள்ளனவா என்பதைத் தாங்களே நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். இது தங்களின் குடும்பக் கடமைகள், பொறுப்புக்கள், பணிகள் எவை என்பதை அடிக்கடி நினைவிற் கொள்வதாலும், அவற்றை ஆற்றுவ தாலும் சாத்தியமாகின்றது.
கேட்போர், மேய்ப்போர் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிர தண்டம் என்றொரு கூற்று உள்ளது. பிள்ளைகளும் தமது கடமைகளை மறந்து, படிக்கப்போகின்றோமென்று சொல்லி, பெற்றோரை ஏமாற்றி விட்டு, வேறு ஒவ்வாத செயல்களிலோ துர்நடத்தைகளிலோ ஈடுபடு வார்களேயானால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றியவர்கள் ஆகின்றனர், என்பதையும் பிள்ளைகள் ஞாபகத்தில் வைத்திருத்தல் அவசியம். பெற்றோர் சொல் கேட்டு, அவர்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகித் தத்தம் கடமைகளை நிறைவேற்றும் பிள்ளைகளே வாழ்க்கையில் உயர்வு பெறுவர், உய்வு பெறுவர்.
'ஏமாறாதே, ஏமாற்றாதே' என்பதன் பொருளுணர்ந்து, குடும்பக் கடமைகளையும் பொறுப்புக்களையும் அறிந்து செவ்வையாக ஆற்றிவரும் உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், ஒரு பல்கலைக் கழகம், ஓர் ஆலயம், பூலோக சொர்க்கம் ஆகத் திகழும் என்பது உறுதி.
99.

Page 56
24. நயத்தக்க நாகரிகம்
சமூகங்களில் தற்பொழுது மனிதாபிமானமற்ற செயல்கள் அதி கரித்துச் செல்வதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. மனித வரலாறு தொடங்கிய கால கட்டங்களில், நாகரிகம் குறைந்த மனிதர்கள் இருந்திருக்கலாம்; ஆனால் மனிதப் பண்பாடுகள் நிறையப் பெற்றிருந் தனர். நாகரிகம் என்று இங்கு குறிப்பிடப்படுவது மனிதகுலம் அடைந்த உலகியல் சார்ந்த வாழ்க்கை வசதிகள், வாழ்க்கை முன்னேற்றங்கள் என் பவற்றை உள்ளடக்கிய நிலைமைகளையேயாகும். அன்றைய மனிதர் கள் மிகக் குறைந்த அளவு வாழ்க்கை வசதிகளையே கொண்டிருந்தனர். உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, சுகாதாரம், தொழில்கள் என்பவற்றில் இன்று போல் அன்று அபிவிருத்தி பெற்று இருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் விசாலமான மனங்களைப் பெற்றிருந் தனர். மனிதாபிமானம், மனிததர்மம், வாழ்க்கை அறங்கள் என்ப வற்றில் பெரிதும் முன்னேற்றம் கண்டிருந்தனர். சான்றாண்மையைப் போற்றி வாழ்க்கையிலும் கடைப்பிடித்தனர். சுருங்கக் கூறினால், அன்றைய மனிதர்கள் மனிதப் பண்பாட்டில் உயர்ந்து விளங்கினர்.
பண்பாடு என்பது அகம் சார்ந்தது. மனிதனிடம் உள்ளார்ந்து காணப்படுகின்ற உணர்வுகள், எண்ணங்கள் பண்படுத்தப்பட்டு, தூய் மைப் படுத்தப்பட்டு வெளிப்பாடாகும்போது பண்பாடு தோன்று கின்றது. மனித உள்ளங்களில் ஊற்றெடுத்து வெளிப்படுவதால், மனிதப் பண்பாடு எனப்படுகிறது. பண்பாடு வெளிப்படுதல் என்றால், ஒழுக்கத்தின் மூலமே அதனைக் காண முடிகிறது. பேச்சிலும் செயலிலும் பண்பாடு துலங்கும் போதுதான், அதனை மதிப்பீடு செய்ய முடியும். நல்ல பண்பாடு உடையவர்கள், பண்பாடு இல்லாதவர் கள் என மக்களைப் பாகுபாடு செய்து மதிப்பிடுவதற்கு அளவுகோல் ஆக உள்ளது ஒழுக்கம் ஆகும்.
வெறுமனே நாகரிக முன்னேற்றம் மாத்திரமே சமூகத்தில் ஏற் பட்டுவிட்டால், மனித வளர்ச்சி உயர்ந்துவிட்டது என்று கொள்ள முடியாது. விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் பெரு விருத்தியால் நாகரிகம் வளர்கிறது. இத்தகைய புற வளர்ச்சியின் பயனாக, மனிதர்கள் தாம் வாழுகின்ற பெளதிகச் சூழலைத் தமக்கு ஏற்றதாக மாற்றியமைத்துக் கொள்கின்றனர். இயற்கையைத் தமது விருப்பத்திற்கு இசைந்து கொடுக்கச் செய்கின்றனர். நாகரிக முன் னேற்றம், மனிதன் இயற்கையை எந்த அளவிற்கு வெல்லும் சத்தியைப் பெற்றுவிட்டான் என்பதைக் காட்டுவதாக உள்ளது.
100

மனிதன் இயற்கையை வெல்லும் ஆற்றலை அடைந்துவிட்டால் மட்டும் போதாது. வாழ்க்கை வசதிகளை அபரிமிதமாகப் பெற்று விட்டால் மட்டும் போதாது. விண்ணிலும் மண்ணிலும் விரைவாகப் போக்குவரத்துச் செய்து, “உலகம் இன்று சுருங்கிவிட்டது' என் கிறார்கள். உண்மையில் பூமியின் பருமன் அன்றிருந்த அளவிலேயே இன்றும் இருக்கிறது. ஆயினும் உலகம் சுருங்கி விட்டது என்று பொய் பேசுகின்றனர். சுருங்கியது உலகம் அல்ல, மனித மனம். விளைவு, மனிதப் பண்பாடு சுருங்கியமையேயாகும். மனிதப் பண்பாடு சுருங்க, மனித சமூகத்தில் அமைதி, நிம்மதி, சாந்தி, சமாதானம் என்பனவும் குறைந்து கொண்டே போகின்றது. எல்லாச் செல்வங் களும், வாழ்க்கை வசதிகளும், உல்லாசங்களும் முன்னெப்பொழுதை யும் விட இன்று மக்களுக்கு மிக அதிகமாகக் கிடைக்கின்றன. அதே வேளை மனிதர்கள் நிம்மதியின்றித் தவிக்கும் தவிப்பு, முன்னெப்பொழு தும் காணப்படாத அளவிற்கு இன்று பெருகிவிட்டது. மனித நாகரிக வளர்ச்சி பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. அதே சமயம், மனிதப் பண்பாடு பின்னடைவு பெற்றுள்ளது. இதனால் சமநிலை சீர்குலைந்து விட்டது. அதுவே இன்றைய உலகில் நிம்மதியும், அமைதியும் மறைந்து வருவதற்குக் காரணம். வன்செயல்களும், அழிவுகளும், குழப்பங்களும், கொந்தளிப்புகளும் கட்டுக்கடங்காமல் இன்றைய உலகில் பெருகிவரு வதற்கும் அதுவே ஏதுவாக அமைந்துள்ளது.
'கண்ணோட்டம்' என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர்
"பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்.' என்கிறார்.
இங்கு வள்ளுவர் குறிப்பிடும் நாகரிகம், நயத்தக்க நாகரிகம். நாம் தற்கால உலகில் பார்க்கின்ற நாகரிகம், நவநாகரிகம். நான் இன்று பண்பாடு என்று கொள்வதையும் வள்ளுவரின் நாகரிகம் உள்ளடக்கி யமையினால், அது நயத்தக்க நாகரிகம் ஆகியது. கண்ணோட்டம் பற்றிய அதிகாரத்தில், நாகரிகம் பற்றிப் பேசப்படுவதிலிருந்து, அதன் உண்மைான தாற்பரியத்தை விளங்கிக் கொள்ளலாம். பண்பாடு என்ற சொல், அண்மைக் காலத்து உருவாக்கம். அதனால் நம் முன்னோர் பண்பாடு பற்றி அறிந்திருக்கவில்லை என்ற முடிவுக்கு வந்துவிடலாகாது.
தற்பொழுது பண்பாடு என்னும் சொல்லால் சுட்டப்படுபவை, நம்முன்னோரினால் பண்பு, சீலம், ஒழுக்கம், பண்புடைமை, சால்பு, சான்றாண்மை, ஒப்புரவு, கண்ணோட்டம் முதலிய சொற்களினால் குறிப்பிடப்பட்டுள்ளன. வள்ளுவர் நயத்தக்க நாகரிகம் என்று பண்
101

Page 57
பாட்டினைக் குறிப்பிடுகிறார். அத்தகைய பண்பாடு உடையவர்களை அக்காலத்தில் சான்றோர்கள், ஒழுக்க சீலர்கள், அறிவர்கள், மாசற்ற காட்சியர் என்றெல்லாம் அழைத்தனர். எனவே நாகரிகம், பண்பாடு என இன்று வேறு வேறாகக் கருதப்படும் அம்சங்கள் அன்று இணைந்த நிலையில் ஒன்றாகக் கொள்ளப்பட்டன. அந்த நிலையிலேயே நாகரிகம் ஆனது, நயத்தக்க நாகரிகம் ஆக விளங்கியது.
நாகரிகமும் பண்பாடும் இரு வேறு துறைகளாக்கப்படாமல், அவை இணைய வேண்டும். அவை இணையக் கூடியன; உண்மையில் இணைய வேண்டியுள்ளன. இன்று நாகரிகத்தையும், பண்பாட்டையும் இணைத் துப் பார்க்காமையினால்தான், நாகரிகமுள்ளவர்களிடம் பண்பாடு அருந்தலாக விட்டமையையும்; பண்பாடு உள்ளவர்களிடமிருந்து நாக ரிகம் விலகி நிற்பதையும் காணக் கூடியதாக உள்ளது. மனித இனம் எதிர்நோக்கும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும், மனிதர்களிடம் நாகரிகமும் பண்பாடும் ஒன்றோடொன்று இணைந்து இருக்காமையே காரணம் எனலாம்.
நாகரிகத்தையும் பண்பாட்டையும் பிரித்து நோக்குவதாலேயே, பண்பாடு நல்லது என்றும், நாகரிகம் கூடாது என்றும் கருதுபவர்கள் தோன்றியுள்ளனர். 'இப்போதைய நாகரிகத்தினால்தான், நமது பண் பாடு, கலாசாரம் யாவும் அழிந்து கொண்டு போகின்றது.’’ என்று பலர் சொல்லக் கேட்கிறோம். நாகரிகத்தின் மீது பெரும் பழி வீழ் கிறது. உண்மையில், நாசரிகம் என்பதன் எண்ணக் கருவைச் சரியாகப் புரிந்து கொள்ளாதவர்களினால்தான் நாகரிகத்திற்கு இந்த அவப் பெயர் வந்தது.
நாகரிகம் சுட்டுவது மனித இனத்தின் அறிவு, ஆற்றல், திறன்கள், வல்லபங்கள் ஆகியவற்றின் விருத்தியையும், அவற்றின் துணையால் ஏற்பட்ட பல்துறை விருத்தியையுமே ஆகும். அபிவிருத்தியென்பது ஆக்க பூர்வமாக அமைவது; அழிவிற்கு உடந்தையாக இருப்பது அல்ல. துர் அதிட்டவசமாக, தற்காலத்தில், நாகரிகத்தை உருவாக்கும் அறிவு, ஆற்றல், திறன்கள் முதலியன பெரும்பாலும் அழிவிற்கே இட்டுச் செல்கின்றன. அதனால் நாகரிகம் என்றதுமே மக்கள் மனதில் எதிர் மறையான எண்ணமே தோன்றிவிடுகின்றது. உண்மையில், மனித அறிவும் செயலாற்றலும் இணைந்து மக்களின் உயர்வுக்கும் மேம் பாட்டிற்குமாக உருவாக்கப்படுவதுதான் நாகரிகம். மனிதனிடம் அறி வுப் புல்ம், செயல்திறன் புலம்; மனப்பாங்குப் புலம் என்ற மூன்று புலங்கள் உள்ளன. மனிதனின் நாகரிக வளர்ச்சியுடன் சம்பந்தப்
102

பட்டவை அறிவுப் புலமும் செயல்திறன் புலமும் ஆகும். மனப்பாங்குப் புலத்தில் விளைவன, பண்புகள், உணர்வுகள், விழுமியங்கள், சீலங்கள், ஒழுக்கங்கள் முதலியன. இவை யாவற்றினதும் ஒட்டு மொத்தமான அறுவடைதான் பண்பாடு எனலாம்.
அறிவு, செய்திறன், மனப்பாங்கு என்னும் மூன்று புலங்களும் வசதிக்காகப் பிரித்துப் பார்க்கப்படுகின்றபோதிலும், அவை வேறு வேறானவை அல்ல. அவை ஒன்றோடொன்று இணைந்தவை; தொடர் புள்ளவை; ஒன்றில் மற்றையது சார்ந்திருப்பது. நாகரிகம், பண்பாடு என்று பிரித்துப் பார்த்தாலும், மேற்கூறிய வகையில் நோக்கும்போது, அவையும் ஒன்றோடு ஒன்று இணைந்து நிற்பவை. ஒன்றில்லாமல் மற்றையதால் பயனில்லை, என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
நாகரிகத்தை மட்டும் வளர்த்துக் கொண்டு பண்பாட்டை உதா சீனம் செய்தல் இன்றைய நிலை. இதனால் அறிவு, திறன், மனப்பாங்கு என்பவற்றின் ஒருங்கிணைந்த வளர்ச்சி இல்லாமல் உள்ளது. எனவே மனித சமுதாயம் குறைபாடுகளைக் கொண்டு விளங்க ஏதுவாகின்றது.
நடை, உடை, பாவனை பற்றி ஒரு காலத்தில் ஒரே மாதிரியான எண்ணமே நிலவியது. தற்காலத்தில், நாகரிக நடை, நாகரிக உடை, நாகரிக பாவனையென்றும்; பண்பாட்டு நடை, பண்பாட்டு உடை, பண்பாட்டு செய்காரியங்கள் என்றும் பிரித்து நோக்க வேண்டியுள்ளது. எனவேதான் நாகரிக நடை, உடை பாவனைகள்; பண்பாட்டு நடை, உடை, பாவனையாளருக்குப் பிடிப்பதில்லை.
நாகரிகம் மட்டும் வளர்ப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தால், சமுதாயத்தில் குறை வளர்ச்சியே ஏற்படும். மனிதத் தன்மை இல்லாத மாக்களைக் கொண்ட சமுதாயத்தையே காண நேரிடும். எனவே பண்பாட்டையும் இணைத்துக் கொண்டு நாகரிகம் வளர்ச்சி பெறுமே யானால், அதாவது நாகரிகம், பண்பாடு ஆகிய இரண்டினதும் ஒருங் கிணைந்த சமநிலை வளர்ச்சி ஏற்படுமேயானால், உலகம் சகல துறை
களிலும் சுபீட்சம் பெறும்; எல்லோரும் அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, சமாதானம் பெறுவர் ஃப் ஹீரே"
103

Page 58
25 பேராண்மை
செல்வங்கள் நிறைய இருப்பினும்; உயர் பதவிகள் வகிப்பினும்; புகழும் அந்தஸ்தும், பட்டங்களும் விருதுகளும் பெற்றிருப்பினும்; பழுதற்ற நல்லொழுக்கம் அவர்கள் இடம் அருந்தலாகிவிட்டால், எல்லா வகைத் தேட்டங்களும், பெருஞ் செல்வங்களும் வழங்கும் அனுகூலங்கள் கணப்பொழுதில் கரைந்துவிடும். இந்த உண்மையை நன்கு உணர்ந்து கொள்பவர்கள் வாழ்வு, வளமும் அழகும் பொலிய விளங்கும். அலட்சியம் பண்ணுபவர்களின் வாழ்க்கை, இருள் சூழ்ந்த தாகிவிடும். புராண இதிகாசங்களில் வருகின்ற இராவணன், சூரபத் மன் கம்சன், துரியோதனன் ஆகியோரின் வரலாறு காட்டும் பாடமும் படிப்பினையும் இதுவாகும்.
நற்பண்புகள் இல்லாத மனிதன் விலங்கிற்கு நிகராவான். விலங்கு களிலும் கொடிய காட்டு விலங்கிற்கு ஒப்பாகி விடுகிறான். காட்டு விலங்குகள் கூடச் சிற்சில வேளைகளில் சில கட்டுப்பாடுகளைப் பேணக் கூடும். ஆனால் ஒழுக்கம் தவறிய மனிதன் தொடர்ந்து ஒழுக்கந் தவறிய படியே வாழ்கிறான். 'நக்கத் துணிந்த நாய்க்குச் செக்கு என்ன, சிவலிங்கம் என்ன?’ என்றொரு பழமொழி உள்ளது. நக்கிற நாய்க்குச் செக்குக்கும் சிவலிங்கத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லைப் போல, சில மனிதர்களுக்குப் பிற மகளிர்களுக்கும் தம் மனைவிமார்களுக்கும், பேதம் புரியாமல் பெரும் பிழை செய்கின்றனர்.
பிறர் மனை நோக்காமையே பேராண்மை என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. மாறாகப் பிறர் மனைவியையோ, அல்லது பிற பெண் களையோ நாடி அலைபவர்கள், நல்ல அறநெறியை மறந்து, கீழானதும் இழிவானதுமான வழியில் சென்று ஒழுக்கத்தில் தவறிய குற்றத்திற்கு ஆளாகின்றனர். தன்னிடம் எழுகின்ற காமத்தைத் தணிக்கத் தெரியாத வன், மனிதனாக வாழ முடியாதவன் ஆகின்றான். விலங்கினின்றும் வேறுபடாதவனாகி விடுகின்றான். அத்தகைய காமுகர்கள் செய்வதை யும் செய்துவிட்டு, சமூகத்தில் வெட்கமில்லாமல் நாலு பேர் முன்னிலை யில் நாகரிகமாகத் திரிகிறார்களே. அதை எண்ணும்போதுதான் வேடிக்கையாக இருக்கிறது. சிறிதேனும் வெட்கம், நாணம், அச்சம் இருந்தால் அப்படி வெளிப்படையாகத் திரிவார்களா? அத்தகைய ஒழுக்கம் கெட்டவர்களைச் சமுதாயமும் ஏற்றுக்கொள்வதைப் பார்க் கும்போதுதான் வேதனை ஏற்படுகிறது.
'அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரில் பேதையார் இல்.’
04

என்று வள்ளுவர் காமத்தால் அலைவுறுபவர்களை நோக்கிப் பழித் துரைக்கின்றார். நல்லொழுக்கங்களை விலக்கிக் கூடா ஒழுக்கங்களைப் புரிந்த யாவருள்ளும் பிறன் மனைவியையோ வேறு மகளிர்களையோ விரும்பி அவர்களின் வீட்டு வாயிலில் நின்றவரைப்போல் அறிவிலிகள் யாருமில்லை. அதனால் பிறன்மனை நோக்காதவன் பேராண்மை கொண்டவனாக, அறநேறியில் தழம்பாதவனாக, பேரறிஞனாக, ஒழுக் கத்தில் மிக உயர்ந்தவனாக, மிகச் சிறந்த புத்தி ஜீவியாக விளங்கு கிறான். எனவே, நல்லொழுக்கமுடைமையே மனிதர்க்கு உண்மையான செல்வமாகும். மற்றெல்லாச் செல்வங்கள் குறைவின்றியிருந்தும் நல் லொழுக்கமுடைமையாகிய பெருஞ்செல்வம் இல்லையென்றால், அம் மனிதன் தரித்திரன் ஆகி விடுவான். பெற்ற கல்வியும் அறிவும் பாழாகிவிடும். ஆனால் நல்லொழுக்கத்தைப் பொன்போலப் போற்றி வாழ்க்கையில் மேற்கொண்டு வாழ்பவர்களுக்கு இவ்வுலகில் ஆகாத தொன்றில்லை, அடைய முடியாதது எதுவுமில்லை. நல்லொழுக்கம் அளப்பரிய ஆக்க சக்தியை வழங்குகின்றது.
வள்ளுவரும்,
'ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி.’’ என்கிறார்.
ஒழுக்கத்தால் எல்லோரும் மேன்மை பெறுவார்கள். ஒழுக்கக் கேட்டி னால் பெரும் பழியை எய்துவார்கள் என்பது குறளின் பொருள். நல்ல ஒழுக்கமானது இன்பமான குடும்ப வாழ்வுக்கும் இதமான சமூக வாழ்விற்கும் வித்தாகும். கூடா ஒழுக்கம் எக்காலத்தும் துன்பத்தையே தரும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.
நல்லொழுக்கத்தைப் பேணுவதாலேயே மனிதன் பெறுமானம் உள்ளவன் ஆகின்றான். மாற்றுக் குறையாதவனாக விளங்குகின்றான். எனவே, மனிதன் நல்லொழுக்கத்தை வாழ்க்கையில் உபாசிக்க, வளர்க் கப், பெருக்க, பரிமாற்றம் செய்ய முயலல் வேண்டும்.
இன்று பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை வாசிக்கும் போது, மனித ஒழுக்கம் எந்த அளவிற்குத் தாழ்ந்த நிலையை அடைந்து விட்டது என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. சமூகத்தில் நல்லவர்கள், பொறுப்புள்ளவர்கள், பாதுகாவலர்கள், வழிகாட்டிகள் ஆக வேடங்கள் தாங்கிக் கொண்டு, கூடாவொழுக்கங்களில் ஈடுபடுபவர் கள் பற்றிய செய்திகள் அன்றாடம் செய்தித் தாள்களில் வெளிப்படுத் தப்பட்டு வருகின்றன.
105

Page 59
‘வானுயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தானறி குற்றப் படின்.’’ என்கிறார் வள்ளுவப்பெருமான்.
இன்று மறைந்தொழுகும் மாந்தர் பலராசிவிட்டனர். படிற்றொழுக்கம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பார்வைக்குப் பெரிய மனிதர் போன்ற தோற்றம், ஆனால் நடத்தையோ அருவருப்புக்குரியது. இத்தகைய பொய்யான நடத்தைகளையும், மறைவான தீயொழுக்கங்களையும் மேற்கொண்டு சமூகத்தை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர்கள் வேறு எவருமே இலர். கற்றவர்களும், வயதில் முதிர்ந்தவர்களும்கூட இத்தகைய மறைந்தொழுகும் மாந்தர்கள் வரிசையில் இடம் பிடித்துக் கொண்ட மையை நோக்கும்போது மனித அநாகரிகம் எந்த அளவிற்குப் போய்விட்டது என்பது தெளிவாகிறது.
ஒழுக்கம், வாழ்க்கையாகப் பரிணமிக்கும்போது, அந்த வாழ்வு சிறப்புப் பெறும். ஒழுக்கம், இல்லாத வாழ்க்கை வரண்ட வாழ்வு ஆகிவிடுகின்றது. நமது பண்பாடு, சமயம், கலாசாரம் யாவும் மனித ஒழுக்கத்திற்கு மிக உயர்ந்த முக்கியத்துவம் அளித்து வந்துள்ளது. கொலை, களவு, மது அருந்துதல், காமம், பொய் என்பன பஞ்சமா பாதகங்கள். இவற்றில் ஒன்றில் தன்னிலும் மனிதர்கள் ஈடுபாடு கொள்ளு தல் பெருங் குற்றமாகும். கூடா ஒழுக்கம் புரிபவர்களே இப்பாதகங் களுடன் தொடர்புகொள்வர். முன்பு அவர்களைச் சமூகம் இனங்கண்டு திருத்தியது; அவ்வாறு திருந்தாதவர்களைச் சமூகம் விலக்கி வைத்தது. ஆனால் இன்று யாரை, யார் திருத்துவது, அல்லது விலக்கி வைப்பது என்பது தெரியாத நிலையில், குழப்பமாக உள்ளது. தனிப்பட்டவர் களின் ஒழுக்கக் குறைபாடுகள், கண்டிக்கப்படும் நிலை, இன்றைய சமுதாயத்தில் வழக்கில் இல்லாது போய்விட்டது. அந்த அளவிற்குச் சமுதாயம் நெகிழ்ச்சியுடையதாகி விட்டது. விபச்சாரம், தன்னினச் சேர்க்கை; ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் சேர்ந்து வாழத் திருமண அந்தஸ்தைப் பெறுதல் ஆகியவற்றிற்குச் சட்டவலு கோரும் அளவிற்கு மனித சமுதாயத்தில் அதிசயங்கள் நிகழும் காலம்,இக்காலம். இதை நாகரிகம் என்பதா, அநாகரிகம் என்பதா என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராக உள்ளது. மேலும், இன்று வாழ்க்கை கொண்டதே கோலமாகி வருகின்றது. இயற்கைக்கு விரோதமாக நடை, உடை, பாவனைகளில் தம்மைக் காட்டிக் கொள்பவர்களையோ, ஒழுக்கமற்றவர்களையோ, பிறழ்வான நடத்தையை மேற்கொள்பவர் களையோ, உயர்நிலையில் இருந்து கொண்டு ஒழுக்கயினம் புரிபவர் களையோ இன்றைய சமூகத்தினர் மன்னித்து விடுகிறார்கள். அதனைப் பெருந்தன்மையென்று எண்ணுகிறார்கள் போலும். மன்னிப்பு என்பது ஒரு சிறந்த பண்பு என்பதில் மறுப்பு இல்லை. ஆனால் மன்னிப்பைத் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது.
106

ஒருமுறை மன்னித்தால், அதன் பின் அக்குற்றத்தை மீளவும் செய்யாமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு இன்று பெரும்பாலும் இல்லை. அதனால் இன்றைய சமூகத்தில் பல பிரச்சினை கள் காணப்படுகின்றன. ஒழுக்கமும் நடத்தையும் சீர்கெட்டு விட்டன. ஒழுக்கமற்றவரையும், நடத்தை கெட்டவரையும் கடிந்துரைப்பார் யாருமில்லை. அதனால் மேலும் மேலும் துர்நடத்தைகள் பெருகு கின்றன.
சென்ற காலங்களில் குற்றமற்ற ஒழுக்கம் உள்ளவர்கள் வாழ்ந் தார்கள். ஏனையோருக்கு முன் மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள். வாழும் வழி சொன்னார்கள். சரி பிழை சொன்னார்கள். நடுவு நிலைமையினின்றும் சரியமாட்டார்கள். தனக்கும் தன்னைச் சார்ந் தோர்க்கும் ஒரு நீதி, பிறர்க்கு ஒரு நீதி என்ற பாகுபாடு அவர்களிடம் இருந்ததில்லை. சிறந்த ஒழுக்கமுள்ளவர்களால் வகுக்கப்படும் இலட் சியங்கள், வாழ்வியல் முறைகள், சட்டதிட்டங்கள் என்பன மனித இனத்தின் பெருஞ் செல்வங்கள். அவை மனித குலத்தை வாழ்விப்பன. 'நான் சொல்வதையும், செய்வதையும் ஏனையோர் பின்பற்றலாம்' என்று துணிவாகக் கூறும் திறன் படைத்தவர்கள் நல்லொழுக்கம் நிறைந்தவர்கள். சமூகத் தலைவர்கள், பொறுப்பான பதவிகளை வகிப்போர், படித்தோர், நாட்டு மக்களை வழிநடத்துவோர் ஒழுக் கத்தை உயிரினும் மேலாக ஒம்பி வாழும்போதுதான் நாடு செழிக்கும்; மக்களும் வாழ்வாங்கு வாழ்வர்; நாட்டில் அமைதி நிலவும்; மக்களின் பாதுகாப்பு உறுதியாகும்; எல்லோரும் இன்புற்று இருப்பர்.
107

Page 60
26. செம்மையே அழகு
செம்மையான வாழ்க்கையை ஒழுங்கான வாழ்க்கை என்கின்றனர் இன்னொரு வகையில் கூறினால், வாழ்வில் ஒழுங்கு கடைப்பிடிக்கும் போதே, அந்த வாழ்க்கை செம்மையும் சீரும் பெறுகின்றது. வாழ்க்கை யில் ஓர் ஒழுங்கு முறைமையை அமைத்து, அதனைப் பேணி நடக்கக் கூடிய தன்மையும், தகுதியும் மனிதர்களுக்குத்தான் உண்டு. விலங்குகள் போன்ற ஏனைய உயிரினங்களுக்கு மனிதரைப் போல ஒழுங்கு பேணி வாழ முடிவதில்லை. மனிதர்களும் ஒழுங்கு பேணாத வாழ்க்கையை வாழ்ந்தால், மனிதர்களும் விலங்குகளாகி விடுகின்றனர். மிருக உணர்வு மிருக வெறி அத்தகைய விலங்கு மனிதர்களிடம் பீறிட்டுப் பெருக, கொடுமைகள், வன்செயல்கள், தொல்லைகள், இடர்கள் என்பவற் றைச் சமுதாயத்தில் ஏற்படுத்தி அமைதியையும் ஆனந்தத்தையும் கெடுப்பவர் ஆகிவிடுகின்றனர். தமது வாழ்க்கையில் ஒழுங்கைக் கடைப்பிடித்து வாழப் பழகிக் கொள்ளாதவர்களாலேயே உலக ஒழுங்கு பாதிப்படைகின்றது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஒழுங்கு என்றால் என்ன என்று வரைவிலக்கணம் கூறுவதிலும் பார்க்க. ஒழுங்கு பற்றி உதாரணங்கள் காட்டி விபரித்தால், அதன் விளக்கம் தெளிவாக இருக்கும் என நினைக்கிறேன். நாம் வீட்டிற்குள் நுழைகிறோம். அங்கு காணப்படுகின்ற காட்சி எமக்கு மிகவும் பிடித்த தாக உள்ளது. எல்லாப் பொருட்களும் எங்கு எங்கு இருக்க வேண்டுமோ அந்த அந்த இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு ஒர் அழகு தோன்றுகிறது. அந்த அழகுதான் எம்மையெல்லாம் கவர்ந்திழுத்து, ஈர்த்து எமக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது. உடனே, ‘எல்லாமே இங்கு ஒழுங்காக இருக்கின்றனவே' என்று வாய்விட்டுக் கூறிவிடுகிறோம். எனவே, எங்கு ஒழுங்கு காணப்படுகிறதோ, அந்த ஒழுங்கு எம்மை ஈர்ப்பது மட்டுமல்ல, வெளிப்படையாக, அந்த ஒழுங்கு நிலைமை எமது பாராட்டையும் பெற்று விடுகிறது. மாறாக, வீட்டில், பொருட்கள் அங்கும் இங்குமாக வீசப்பட்டுச் சிதறிக் கிடக்கக் காணப் பட்டால், மூக்கைச் சுளித்து எமது வெறுப்பைக் காட்டிக் கொள் என்று கேட்டும்
y is
கிறோம். ‘இது என்ன வீடா அல்லது குப்பை மேடா விடுகிறோம். பொருட்கள் ஒழுங்காக வைக்கப்பட்டு இருக்காமை இந்த உள்ளக் குமுறலுக்கு உரிய காரணம். இதிலிருந்து, ஒழுங்கினை விரும்புவதும், ஒழுங்கீனத்தை வெறுப்பதும் மனித இயல்பு என்பது புலப்படுகிறது. இதற்கு மாறாக, மனிதர்கள் ஒழுங்கை மறந்து, ஒழுங்
108

கீனத்தை அரவணைத்தால் அது மனித இயல்புக்கு முரண் ஆனது என்பதும் தெளிவாகின்றது.
நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு, உணவுப் பழக்கம், உடற் பயிற்சி, ஒய்வு, நித்திரை என்பன ஒழுங்காக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். காலந்தாழ்த்தி உண்பது, நேரங் கெட்ட நேரத் தில் உண்பது, எந்நேரமும் ஏதாவது கொறித்துச் சாப்பிட்டுக் கொண் டிருப்பது, கால நேரம் என்று இல்லாமல் உண்பது என்பன ஒழுங்கான உணவுப் பழக்கம் அன்று என்கின்றனர். உணவு உட்கொள்வதில் ஒழுங்கு கடைப்பிடிக்காவிடில், அஜீரணம் தோன்றி உடல் நலத்தைக் கெடுத்து விடுகிறது. உடற் பயிற்சியைச் சிலர் விட்டு விட்டுச் செய் வார்கள் அல்லது ஒரேயடியாகச் செய்வார்கள். உடற் பயிற்சியும் ஒழுங்காகச் செய்யப்படாவிட்டால் அதனாலும் நன்மையில்லை. நித் திரை செய்வதிலும் ஓர் ஒழுங்கு வேண்டும். இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருந்துவிட்டு நடுச்சாமத்தின்பின் நித்திரைக்குப் போவார் கள். அதிகாலையில் நித்திரைவிட்டு எழாது, காலை ஒன்பது பத்து மணி வரை உறங்குபவர்களையும் காண்கிறோம். இவ்வாறு நித்திரை செய்வதிலும் ஒழுங்கு பேணாதவர்கள் நோய்களை வருந்தி அழைத்து விருந்து வைத்தவர்கள் ஆகின்றனர். தூக்கமின்றிக் கஷ்டப்படவும் நேரிடும்.
குளிப்பு, முழுக்கு என்பனவற்றிலும் ஒழுங்கு இருத்தல் அவசியம். தந்த சுத்தி, மல சலம் கழித்தல், முகச்சவரம் செய்தல், முடியை வாரி விடுதல், நகம் வெட்டுதல் போன்றவையும் ஓர் ஒழுங்கில் நடை பெற வேண்டும். அன்றேல் உடல் அழகும், உடல் நலமும் கெட்டு விடும்.
இன்றைய நவ நாகரீக மோகத்தில், சில ஆண்களும் பெண்களும் நடை, உடை, பாவனைகளில் ஒர் ஒழுங்கு இன்றி நடந்து கொள்கின் றார்கள். ஒழுங்கீனத்தில் அழகு காண விழைகின்றனர். அழகு, ஒழுங் கில்தான் உண்டு, ஒழுங்கீனத்தில் இல்லை என்பது இவர்களுக்கு எங்கே தெரிகிறது. அலங்கோலம் ஒருபோதும் இலட்சணம் ஆக அமையப் போவதில்லை, என்பதை உணர்வார்களேயானால், ஒழுங்கு வந்து விடும். விநோத உடைப் போட்டிக்கு வேஷம் போடுபவர்களும் போட்டி முடிந்ததும் கலைத்து விடுவார்கள். அவர்கள் விநோத உடையில் மைதானத்தை விட்டு வெளியில் செல்வதில்லை. அவ்வாறு செல்வது ஒழுங்கில்லை என்பது அவர்களுக்குத் தெரியும். விநோத உடைப் போட்டி மைதானத்திற்கு வெளியிலும் நடைபெறுகிறதோ என்ற ஐயப்பாடு தோன்றியுள்ளதாக ஒருவர் எனக்குச் சொன்னபோதுதான்
109.

Page 61
அவரின் விநோதக் கருத்து எனக்குப் பிடிபட்டது. இயல்புக்கும், இயற் கைக்கும் மாறான எதிலும் ஒழுங்கு இருக்காது. விபரீதமும் குழப்பமும் தான் அதன் விளைவாக இருக்கும். ஒழுங்காக உடுக்கத் தெரியா விட்டால், ஒழுங்காக நடக்கத் தெரியாவிட்டால், ஒழுங்காகப் பேசத் தெரியாவிட்டால், ஒழுங்காகப் பிறருடன் பழகத் தெரியாவிட்டால், அவர்களைப் பிறர் எள்ளி நகையாடுகின்றனர், ஒழுங்குக்கு மாறாகக் காட்சி தருபவர்களைப் பைத்தியக்காரர் என்றுகூட அழைக்க நாம் தயங்குவதில்லை. அவர்களின் ஒழுங்கற்ற நடத்தைகள் வேடிக்கை யாகவும், அதேவேளை வேதனை தருவதாகவும் அமைந்து விடுகின்றன. ஒழுங்கின்றி வாழுகின்ற வாழ்க்கை பிறரின் பழிப்புக்கு உள்ளாகின் றது, என்பதை உணர்ந்து கொண்டால், ஒழுங்கு தானாகவே வந்து விடும்.
தங்கள் பிள்ளைகள் விசித்திரமான முறையில் நடந்து கொள்ளும் போதும்; மற்றையோர் நகைத்து ஏளனஞ் செய்யும்படியான நடை, உடை, பாவனைகளைப் பின்பற்றும்போதும் அவர்களின் பெற்றோர் கள் கவலையும் கிலேசமும் கொள்ளாமல் இருக்க முடியாது. அதே வேளை, இவற்றை ஊக்குவிக்கும் பெற்றோர்களும், வளர்ந்தோர் களும் இருக்கத்தான் செய்கிறார்கள். வயது வந்த பின்னரும் கூட அடிதலை மாறி, விசித்திரமாக நடந்து காட்டும்போது, அவர் தம் பிள்ளைகளும் அவ்வாறு பார்த்து நடப்பதில் ஆச்சரியம் இல்லை. இத்தகையவர்களைப் பார்த்து ஊர் சிரிக்கின்றது; அதன் மூலம் சமூகம் அதன் கவலையை வெளிப்படுத்துகின்றது.
ஒழுங்கான குடும்பம்; ஒழுங்கான நடத்தைகளைக் கொண்ட பெற்றோர்; ஒழுங்கான சூழல்; ஒழுங்கான பாடசாலைக் சமூகம் என்பவற்றைப் பெற்றுக் கொள்ளுகின்ற பிள்ளைகள் பாக்கியசாலிகள். அவர்கள் நடத்தையில்; பண்பில்; கருமங்கள் ஆற்றுவதில் நடை, உடை, பாவனையில்; பழக்க வழக்கங்களில் சிறந்த ஒழுங்குமுறைகளை மேற்கொள்பவர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டு, அவர்களைப் பார்த்து அவர்கள் போன்று நடந்து கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக் கிறது. அத்தகைய சந்தர்ப்பங்கள் தற்காலச் சூழ்நிலையில் எல்லோருக் கும் கிடைப்பதில்லை. அதனாலேயே அதிகமானோர் ஒழுங்கு என்றால் என்ன என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
படிப்பிலே ஒழுங்கு வேண்டும்; ஒழுங்காகப் படித்து வருபவர்கள், பரீட்சைக்குப் பயப்படமாட்டார்கள். உணவுப் பழக்கம், நடைப் பழக்
கம், வாழ்க்சைப் பழக்கம் என்பவற்றில் ஓர் ஒழுங்கைக் கறைப்பிடிப்
110

பவர்கள் நோய்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஒழுங்காக வேலைத் தலங்களில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளுக்குப் பயப்பட வேண்டிய தில்லை. வாழ்வில் நம் கடமைகளை ஒழுங்காக ஆற்றி, குற்றமற்ற ஒழுங்கான சீவியத்தை நடத்தி வந்தால் எவருக்குமே அஞ்ச வேண்டிய தில்லை. வாழ்வில் சுதந்திரம் பேண, தலைநிமிர்ந்து வாழ, உரமும் உறுதியும் பெற்று வாழ, அச்சமின்றி வாழ, புகழோடு வாழ, எமக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் வாழ்க்கையில் ஒழுங்கு. எதிலும் ஒழுங்கானவனே உயர்வானவன். எனவே, வாழ்வில் ஒழுங்கினைப் பேணி, உயர்வு, சிறப்பு, பெருமை, புகழ் யாவற்றையும்
எமதாக்கிக் கொள்வோம்.
1

Page 62
27. இளமை
'சக்தி பெற்றிருந்தும் அறியாதது இளமை; அறிந்து இருந்தும் சக்தியற்றது முதுமை’ என்று ஒரு முதுமொழி உண்டு. ஆற்றல், பலம், சக்தி என்பன இளமையில் சற்று அதிகம் தான். ஆனால் அறிவு, அனுபவம் என்பன கொஞ்சம் குறைவு என்றுதான் கூற வேண்டும். கல்வி கற்கும் பருவம்; அறிவைத் தேடிப் பெற்றுக் கொள்ளும் காலப் பகுதி, அனுபவங்களைச் சேகரிக்கும் பருவம்; திறன்களையும் மனப் பாங்குகளையும் விருத்தி செய்யும் காலம் என்று இளமைப் பருவத்தின் கோலத்தைக் கோடிட்டுக் காட்டலாம். எனவே, இளமைக் காலம் எதையும் அடைந்துவிட்ட பருவம் என்று கூறிவிட முடியாது. எல்லா வற்றையும் அடைவதற்கு முயற்சிக்கும் பருவமாகவே கொள்ள முடியும். வாழ்க்கையின் ஆயத்தப் பருவம் என்றும் கூறலாம்.
இளமைக் காலம் என்பதைக் குமரப் பருவம் என்றும் இளையோர் பருவம் என்றும் உளவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். குழந்தை, பிள்ளைப் பருவங்களைத் தொடர்ந்து குமரப் பருவம் வருகின்றது ஏறத்தாழப் பதின்மூன்று வயதில் இருந்து பத்தொன்பது வயது வரை இப்பருவம் இடம் பெறுகின்றது. Teen age என்று ஆங்கிலத்தில் கூறுவர். "பதின் வயதினர்' என்று இவர்களைக் குறிப்பிடலாம்.
இப்பருவத்தினரைக் குழந்தையாகவோ, பிள்ளையாகவோ கருத முடியாது. முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் தோற்றமும் உடலியல் தன்மைகளும் இப்பொழுது அவர்களிடத்தில் காணக்கூடிய தாக இருக்கும். அதேவேளை முழு முதிர்ச்சி பெற்ற மனிதராகவும் அவர்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையும் தோன்றும். உடல் வளர்ச்சியைப் பெற்றிருந்தும், போதுமான அனுபவ அறிவையும், உள முதிர்ச்சியையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. அன்றியும் மன வெழுச்சியிலும், சமூக நடத்தையிலும், மனித விழுமியங்களைப் பேணு வதிலும்கூட அவர்கள் இன்னும் சரியான முதிர்ச்சியை அடையாதவர் களாகவே இருப்பர்.
இளையோர் பருவம் அல்லது குமரப் பருவம் ஓர் இரண்டும் கெட்டான் நிலை. அதாவது பிள்ளைப் பருவத்திற்கும் முதிர்ச்சிப் பருவத்திற்கும் இடையேயுள்ள நிலைமாறு காலப் பகுதி எனலாம்.
இளையோர் பருவம், கவலையற்றதும் பொறுப்பற்றதுமான பருவம் என்று கொள்ளவும் முடியாது. இப்பருவத்தினர் தம்மைப்
2

பற்றிய பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம். இந்தப் புரிந்துணர்வு பெற்றோரிட மும் சமூகத்தினரிடமும் இருக்குமாயின் பல இளைஞர் பிரச்சினைகள் இலகுவாகத் தீர்ந்து விடும். அவ்வாறே, இளைஞர்களும் தம்மை அறிந்தும் புரிந்தும் கொள்ள வேண்டியது அவசியம். சமூகத்தினருடன் பொருந்தியும் இசைந்தும் வாழ வேண்டிய தேவையையும் உணர்ந்து கொள்ள வேண்டும். தம்முடைய உள்ளார்ந்த ஆற்றல்களையும் அவற் றின் வரம்புகள், எல்லைகளையும் நன்கு அறிந்திருத்தல் அவசியம். சமூகத்தின் பாலான தமது கடமைகள் யாவை? தமது பொறுப்புக்கள் யாவை? தமது பங்கு என்ன? என்பவற்றை உணர்ந்து நடந்துகொள் ளலே அவர்களின் பிரதான பணிகள் ஆகும்.
குமரப் பருவத்தினரின் தேவைகளுள் சுதந்திரம் பிரதானமான தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சுதந்திர உணர்வு தன்னிச்சையாகிவிடக் கூடாது. பிறரின் சுதந்திரத்தைப் பறித்துவிட்டுத் தனது சுதந்திரத்தைப் பெருக்க முயலக் கூடாது. சுதந்திரம் என்பது மனம் போன போக்கில் செல்லுகின்ற நிலையன்று. அது மனத்திற்கு அடிமையாகும் நிலை. மனத்திற்கு அடிமையாகாத நிலையின்தான் சுதந்திரம் நிலைநாட்டப் பெறும். சுதந்திரமாக விளங்க வேண்டிய இளைஞர்கள், பல்வேறு விசைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு, தம் வயம் இழந்து, சுதந்திரம் கெட்டு, மீளா அடிமைப்பட்டுக் காணும் நிலையிலேயே இக்காலத்தில் பெரும்பாலும் காண்கின்றோம். சுதந்திரம் வேறு; சுதந்திரம் என்று தற்காலத்தில் இளைஞர்கள் கொள்வது வேறு. இதனாலேயே பல பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே, சுதந் திரத்தைச் சரியான முறையில் உணர்ந்து, சுதந்திரமாக விளங்க வேண்டியது இளைஞர்களின் மற்றொரு பணியாகும். ஒருவரின் சுதந் திரம், மற்றவர்களுக்கு இடைஞ்சலாக இருக்காதபடி விளங்க வேண்டும் என்ற அடிப்படைத் தத்துவத்தை அறிந்து கொண்டால் பிரச்சினைகள் ஏற்பட நியாயமில்லை. சுதந்திரம் துர்ப்பிரயோகம் செய்யப்படும் போது, பலர் கஷ்டங்களை அனுபவிக்க நேரிடுகிறது. விளையாட்டுச் செயல்கள்தானே என எண்ணிச் செய்யப்படுகின்ற காரியங்கள் பிற ருக்கு வேதனையைத் தருபவையாக முடிந்து விடுகின்றன. எனவே சுதந்திர உணர்வுக்கும் ஒரளவு கட்டுப்பாடு தேவைதான். அந்தக் கட்டுப்பாடு புறத்தேயிருந்து திணிக்கப்படும் வரை காத்திராது; அகத் திலே மலரச் செய்து, சுய கட்டுப்பாடாக இருத்தல் நன்று. சமூக ஒழுங்கு முறைகள், நீதித்துறைச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் என்பவற்றை அனுசரித்து நடத்தல் நற்பிரஜைகளின் கடமையாகும். சுதந்திர மிகுதியால் ஒழுங்கு கட்டுப்பாடுகளை மீறி நடக்கலாம் எனக் கருதி, அவ்வாறு செய்வது தவறு என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
113

Page 63
இளையோர் பருவத்தினர் தம்மை இன்னமும் பிள்ளைப் பராயத் தினராக மற்றையோர் கருதி, நடத்துவதை விரும்புவதில்லை. முக்கிய மாகப் பெற்றோர்கள் தம் மக்கள் வளர்ந்து இளைஞர்கள் ஆன பின்பும் அவர்களைக் குழந்தைகளாகவே பாவித்து நடந்து கொள்வதை அவர் கள் பெரும்பாலும் வெறுக்கின்றனர். காரணம், பெற்றோர் பிடியி லிருந்து விடுபட்டு, சுதந்திரமாகத் திரிய வேண்டும் என்ற அவர்களின் பெரு விருப்பமேயாகும். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்ற நிலைப்பாட்டினை மறந்து விட்டு, டெல்லிக்கு ராஜாவாக இருப் பினும் எனக்குப் பிள்ளைதானே என்ற உரிமைத் தோரணையில் பெற்றோர் தம் வளர்ந்த மக்களை, எண்ணி நடத்துவது, குமரப் பருவத்தினருக்குப் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதாக உள்ளது. அதனை அன்புத் தொல்லையாகக் கொண்டாலும், தொல்லை தொல்லைதான் என்பது இளைஞர்களின் வாதம். இத்தகைய பாசம், பிணைப்பு, அன்புத் தொல்லைகளால் தங்களுடைய சுதந்திரம், சுயா தீனம் பாதிக்கப்படுகிறது என்கின்றனர். ஒவ்வொரு கருமத்தையும் முற்கூட்டியே எடுத்துரைத்து, பெற்றோரின் அனுமதியைப் பெற்று, அதன் பின்னரே செய்ய வேண்டும் என்ற நிலை குடும்பங்களில் இருத் தலை இளைஞர்கள் இடைஞ்சலாக எண்ணிக் குழம்புகின்றனர். அன் பினால் இடைஞ்சலும்தான், இன்பமும்தான், இவற்றையெல்லாம், சற்றுப் புரிந்துணர்வோடு அனுபவம் உள்ள பெற்றோர் அணுகினால், நல்லுறவைப் பேண முடியும். "நேற்று முளைச்ச காளான்களுக்கு என்ன தெரியும்' என்ற எண்ணம் மேலிட நடந்து கொள்ளும் பெற்றோர்கள் குட்டையைக் குழப்புவார்களே தவிர, நல்லுறவைப் பேணமாட்டார்கள். இளைஞர்கள் சக்திமிக்கவர்கள்; வலிமை உடைய வர்கள்; ஆனால் வாழ்க்கை அனுபவங்கள், பட்டறிவு என்பன குறை வாகப் பெற்றிருப்பவர்கள். எனவே, மூத்தோர், பெற்றோர், அனுப வஸ்தர்கள் ஆகியோரின் ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் தேவை யென்பதை அவர்கள் மறந்துவிடலாகாது. குமரப் பருவத்து மக்களை முன்போல் என்றும் குழந்தைகளாகவே பெற்றோர்கள் நினைத்துக் கொண்டு கரும மாற்றுவதால், அவர்கள் தன்னம்பிக்கையை இழக் கிறார்கள்; ஒரு செயலை முன்னெடுக்கும் ஆற்றலில் பின்தங்கி விடு கிறார்கள்; சுயமாகச் சிந்தித்துச் செயல்பட முடியாதவர்கள் ஆகி விடுகின்றனர். வளர்ந்த பின்னரும் எதற்கும் பெற்றோரை எதிர் பார்க்கும் நிலையிலேயே காணப்படுவர்.
இளையோர் பருவத்தில் உடல், உணர்வு, அறிவு, நடத்தை, உறவு தொடர்பாக எண்ணற்ற மாற்றங்களுக்கும் அனுபவங்களுக்கும் அவ் இளைஞர்கள் உட்படுகின்றனர். சின்னஞ் சிறுவர்களாக, விளை யாட்டுப் பிள்ளைகளாக இருந்த நிலை மாறி, உடல் வளர்ச்சிபெற்று,
14

புதிய உணர்ச்சிகளையும், ஆர்வங்களையும், கிளர்ச்சிகளையும் பெறு கின்றனர். இப்போதுதான் ஆண் பிள்ளைக்கும் பெண் பிள்ளைக்கும் பாலின உணர்வுகள் ஏற்படுகின்றன. அச்சம், பயம் என்பனவும் சிலருக் குத் தோன்றுகின்றன. தாய், தந்தையருக்குத் தமது பிரச்சினைகளை யும், பீதிகளையும், புதிய மாறுதல்களையும் எடுத்துக் கூறி ஆறுதல் பெறக் கூச்சப்படுகின்றனர். தமது நெருங்கிய நண்பர்களுடனும் சக பாடிகளுடனும் பகிர்ந்து கொள்ளும்போது, அவர்களுக்கும் அதே பிரச் சினைகள், அதே அனுபவங்கள் இருப்பதை அறிகின்றனர். u untrif யாருக்கு வழிகாட்டுவது என்ற நிலை.
சமூக, கலாசாரங்சளையும் பேண வேண்டும். எதிர்ப் பாலாருடன் சமூகம் ஏற்றுக் கொள்ளும் முறையில் பழகவும், தொடர்பு கொள்ளவும் வேண்டியவர்கள் ஆகின்றனர்.
இப்பருவத்தில் குடும்பத்தவர், உறவினர், சமூகத்தவர் ஆகியோர் தம்முடைய கருத்துக்களையும், பேச்சுக்களையும் ஏற்க வேண்டும் மதிக்க வேண்டும், கணிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவ்வாறு மதிக்கப்படாவிடத்து முரண்பாடுகள் ஏற்பட்டு விடுகின்றன. எனவே இப்பருவத்தினர் முரண்பாடுகளுக்கு உட்படாது, புரிந்துணர்வோடு செயல்பட வேண்டியது பெற்றோர் கடமை. இளையோர் பருவம் செவ்வையாகக் கழிந்தால், அடுத்துவரும் பருவங்களில் அவர்களின் வாழ்க்கை செம்மையாகவும், சீராகவும் விளங்கும். குடும்பமும், சமூக மும் இளையோரை நன்கு புரிந்து, அவர்கள் வாழ்வில் வளம் பெற வழி செய்ய வேண்டும்.
115

Page 64
28. மீட்சி
சில குழந்தைகள், பெற்றோரின் சொல்வழி கேளாதவர்களாகவும், குழப்படிகள் செய்பவர்களாகவும், மூர்க்கம் நிறைந்தவர்களாகவும் குற்றங்கள் புரிபவர்களாகவும் காணப்படுகின்றனர். தம் பிள்ளைகளின் அடங்காத்தனத்தைக் கண்டு கவலை கொள்ளும் பெற்றோர்களும் உண்டு. அவர்களைத் திருத்த முடியாமல் அவஸ்தைப்படும் பெற்றோர் களையும் காண்கின்றோம். 'உன்னைப் பெற்ற வேளை, ஒரு உலக்கை யைப் பெற்றிருக்கலாமே" என்று ஆற்றாமல் உதிர்க்கும் ஆதங்க வார்த்தைகளையும் கேட்கின்றோம். அதேவேளை தம் பிள்ளைகளின் வீரப் பிரதாபங்களைக் கூட்டிப் பெருக்கி வீடு வீடாக வித்தாரம் செய்கின்ற பெற்றோர்களும் உள்ளனர்.
குழப்படிப் பிள்ளைகள் அவ்வாறு பிறக்கின்றார்கள். பிறவிக் குணங்களையும் இயல்புகளையும் மாற்றவோ, திருத்தவோ முடியாது என எண்ணிய காலமும் முன்பு இருந்தது. ஆனால் இன்றைய ஆய் வாளர்கள் இக்கருத்தினை ஏற்றுக் கொள்வதில்லை. மாறாக, குழந்தை கள் எல்லாம் பிறக்கும்போது தூய்மையான இயல்பும் கள்ளம், கபடம், பொய், வஞ்சகம், சூது என்பன இல்லாத சுபாவமும் கொண்ட அற்புதப் படைப்புக்களாகவே விளங்குகின்றன. ஆனால் அவர்கள் நல்லவர்களாவதும், கெட்டவர்களாவதும் அவரவர் வாழ்கின்ற சமூகச் சூழலின் தன்மையிலேயே தங்கியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
சமூக ஆரோக்கியமற்றதும், சீர்கெட்டதும், நடத்தைப் பிழைகள் உள்ளதும், ஆன சமூகச் சூழலில் வளர்ந்தால் குழந்தைகள் நெறி தவறிய நடத்தையினர் ஆக நேரிடுகிறது. குழந்தை எங்கே பிறந்தது, யாருடன், எத்தன்மையருடன் வாழ்கின்றது என்பதுதான் முக்கியம். வாழுகின்ற சூழலில் யார், யாருடன் அக்குழந்தை பழகுகின்றது; வாழும் பயிற்சியை எவரிடம் பெறுகின்றது என்பவற்றைப் பொறுத்துத் தான், குழந்தையின் நடத்தைக் கோலங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை நடைமுறைகள் அமைந்து விடுகின்றன. சின்னஞ் சிறிய பராயத்தில் பெற்றுக் கொள்ளுகின்ற பயிற்சியும், கற்றுக் கொள்ளுகின்ற நடத்தைகளும்; அவை நல்லனவோ, கெட்டனவோ, நெடுங்காலம் நின்று நிலைக்கக் கூடியன. 'இளமையிற் கல்வி சிலையில் எழுத்து'; "தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்' என்னும் பழமொழிகளும் இவ்வுண்மையைச் சுட்டிக் காட்டுகின்றன. குழந்தைப் பருவத்தில்
116

ஏற்படுகின்ற நடத்தைகளுக்குப் பொறுப்பாக, அக்குழந்தை வாழுகின்ற குடும்பமே விளங்குகின்றது. குழந்தை தவறான வழியில் செல்கின்றது என்றால், அதற்குரிய பொறுப்பை அக்குடும்பத்தினரே ஏற்க வேண்டும்.
ஒரு குடும்பத்தில் ஆண் பிள்ளைகள் தந்தையையும், பெண் பிள்ளைகள் தாயையும் பின்பற்றுகின்றனர். தந்தையோ, தாயோ பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடந்து காட்டத் தவறினால், பிள்ளை களும் கெட்டுப் போகின்றனர். பெற்றோர்களின் அறியாமையினாலும், நடத்தைப் பிறழ்வுகளாலும், அவர்கள் விடுகின்ற தவறுகளாலும், அதிகமான பிள்ளைகள் தாமும் தம் பெற்றோர்களைப் போலத் தவறான நடத்தைகளில் ஈடுபடுகின்றனர். பெற்றோர் தம் பிள்ளை களின் நடத்தைப் பிழைகளைச் சுட்டிக் காட்டத் தைரியமற்றவர்களாக வும் உள்ளனர். புகைத்தல் கூடாது என்று தந்தை கூறவேண்டுமானால், முதலில் தந்தை புகைக்காதவராக இருக்க வேண்டும். மதுபானம் அருந்த வேண்டாம் என்று பிள்ளைகளுக்குச் சொல்லும் தந்தையும் தாயும்; தாமும் மதுபானத்தை அருந்தக் கூடாது. அவ்வாறே பொய் சொல்லக் கூடாது; திருடக் கூடாது; பிறரை இம்சித்தல் ஆகாது; போதை வஸ்துக்களைத் தீண்டக் கூடாது; இலஞ்சம் பெறக் கூடாது என்று இளைய தலைமுறையினருக்குப் போதிப்பவர்களும், ஆலோசனை கள் வழங்குபவர்களும் முதலில் தாம் இக்கொடிய பாதகச் செயல்களில் ஈடுபாடு கொள்ளாது பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.
*சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.' என்பது வள்ளுவம்.
பிறருக்குப் புத்தி புகட்டுதல், ஆலோசனை கூறல், போதனை செய்தல் என்பன மிக எளிதான காரியம். ஆனால் சொல்லியபடி நடந்து காட்டுதல் என்பதுதான் மிக மிகக் கடினமான காரியம். இன்று போதிப்பதற்கு ஆட் பஞ்சம் இல்லை; ஆனால் சாதிப்பதற்குத்தான் ஆட் பஞ்சமாக உள்ளது. குடும்பங்களிலும் பெரியவர்கள், வளர்ந்தவர் கள், தாய் தந்தையர் என்போர் சதா பிள்ளைகளுக்குப் போதித்துக் கொண்டிருப்பதைக் காண்கின்றோம். அப்போதனைகள் பெரும்பாலும் எடுப்படாமைக்குக் காரணம் என்னவென்றால், போதனையாளர்கள் சாதனையாளர்களாகவும் இல்லாமையேயாகும்.
ஒரு குடும்பத்தில் கணவன்-மனைவி இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டால்; தகாத வார்த்தைகளைப் பரிமாறிக் கொண் டால்; சந்தேக விபரீதங்களை வளர்த்துக் கொண்டால், இச்செயல் களை அடிக்கடி பார்த்து ஏங்கிக் கொண்டிருக்கின்ற அவர்களின்
117

Page 65
பிள்ளைகளின் பிஞ்சு உள்ளங்கள் சதா வேதனைக்குள்ளாகியிருக்கும் பரிதாபத்தை அப் பெற்றோர் உணர்வதில்லை. அன்பு, பந்தபாசம், பிணைப்பு, பாதுகாப்பு, நல்லெண்ணம் இல்லாத வரண்ட ஒரு சூழலில் வளர்ந்து வருகின்ற பிள்ளைகளிடமிருந்து நடத்தைப் பிறழ்வையும், குற்றச் செயல் நாட்டத்தையும் தவிர வேறு எவற்றை அப்பரிதாபத் திற்குரிய பிள்ளைகளிடமிருந்து எதிர்பார்க்க முடியும்?
ஒரு குடும்பத்தில், தாய்க்கும் தந்தைக்குமிடையே நிலவுகின்ற பரஸ்பர உறவு, அன்பு வயப்பட்டு, அறிவுமயப்பட்டதாக விளங்கினால், அவர்களின் பிள்ளைகளின் வளர்ச்சியும், விருத்தியும், நடத்தைப் போக்குகளும் உயர்வான நிலையில் திகழும். அவ்வாறில்லையெனில் அவற்றின் வீழ்ச்சி தடுக்கமுடியாததாகி விடும்.
இளம் பராயத்தில், கள்வர்களாகவும், வன்செயல்களில் ஈடுபாடு உடையவர்களாகவும், குற்றவாளிகளாகவும், போதை வஸ்துக்களுக்கு அடிமைப்பட்டவர்களாகவும், இவை யாவற்றிற்கும் மேலாக இளம் பிள்ளைகளாகவுள்ள பருவத்திலேயே பாலியல் ஒழுக்கக்கேடுகளைக் கொண்டிருப்பவர்களாகவும் பிள்ளைகள் சிலர் இருப்பதைக் காண்கின் றோம். வாழ வேண்டியவர்கள், இப்படிப் பிஞ்சில் வெம்பி வெதும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காணும்போது வேதனை கொள்ளாமல் இருக்க முடியாது. இத்தகைய இழி நிலைக்கு அப் பிள்ளைகளின் பெற்றோர்களே அவர்களை வழி நடத்துகின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பிள்ளைகளின் பாலியல் ஒழுக்கக் கேடுகளைக் கண்டும் காணாததுபோல இருக்கும் பெற்றோர்களும்; உற்சாகப்படுத்தி உழைக்கும் பெற்றோர்களும் கூட உள்ளனர். தமது கடமைகளையும், பொறுப்புக்களையும் முறையாகவும் சரிவரவும் நிறை வேற்றத் தவறுகின்ற பெற்றோர்கள்; அறியாமைால் பீடிக்கப்பட்ட பெற்றோர்கள்; பல வழிகளிலும் ஆற்றாமை மிகுந்த பெற்றோர்கள்; சுருங்கக் கூறின் பெற்றோர் பாத்திரத்தைத் தாங்குவதற்குத் தகுதியும் வல்லமையும் அற்ற பெற்றோர்களைக் கொண்ட குடும்பச் சூழலில் பிறந்து வளருகின்ற சிறார்கள் பரிதாபத்துக்குரியவர்கள். அவர்களின் வாழ்வு தமக்கும் பிறர்க்கும் அவலம் தருவதாகவே அமைந்து விடுகிறது. நெறி பிறழ்ந்த வாழ்க்கைதான் அவர்க்கு உரிமையாகி விடுகிறது. இவர்களுக்கு மீட்சி அவசியம் என்பதைச் சமூகம் உணர வேண்டும். மீட்சி அவர்களுக்கும் நல்லது, சமூகத்திற்கும் நல்லது. அவ்வாறே, இச்சிறார்களைக் கெடுதியின் பக்கமாகவும், குற்றங்களின் திசையிலும் வழிப்படுத்திய பெற்றோர்களுக்கும் மீட்சி அவசியம் அல்லது தொடர்ந்தும் அந்தத் துர்ப்பாக்கியப் பணிகளை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள். மீட்சி அல்லது மீட்புப் பணிகள் மூலம்
18

இத்துர்பாக்கியசாலிகளை அழிப்பது அல்ல நோக்சம். அவர்களிடம் உள்ள துர்க்குணங்களையும், துர்நடத்தைகளையும் நீக்கி, அவர்களை வாழ்வாங்கு வாழ்விப்பதே, மீட்பின் நோக்கமாக இருத்தல் வேண்டும்.
சிறுவர்கள், பாலியல் ஒழுக்கக்கேடுகளில் ஈடுபடுதல், தற்காலத்தில் வருவாய் தரும் தொழிலாகக் கொள்ளப்பட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அவர்கள் அவ்வாறு ஈடுபடுவது, வளர்ந்தவர்களின் துணையுடனும் அனுசரணையுடனும்தான் என்பதும் நோக்கற்பாலது. இந்த வளர்ந்தவர்கள் உற்றார், உறவினர், நண்பர்கள் ஆக இருக் கலாம். ஏன், சிலவேளைகளில் பெற்றார், பாதுகாவலர்களாகவும் . இருக்கலாம். அவர்களுக்குத் தேவை பணம்; சிறார்களின் வருங்காலம் அல்ல. வளர்ந்தவர்கள், வயது வந்தவர்கள், நன்மை தீமை தெரிந்தவர் கள், இத்தகைய கெடுதியும், கேடும் நிறைந்த கீழ்த்தரமான பாலியல் ஒழுக்கயினங்களில், இளம் பராயத்தினரை, அவர்கள் ஆண் பிள்ளை களாக இருந்தாலும் சரி, பெண் பிள்ளைகளாக இருந்தாலும் சரி, வருவாய் கருதியோ, கருதாமலோ ஈடுபடுத்தாமலும், துணை போகா மலும் இருப்பார்களேயானால், சமூகத்திற்குக் கோடி நன்மைகள் செய்தவர்கள் ஆவர்.
இளம் பிள்ளைகள் வளர வேண்டியவர்கள்; வாழ வேண்டியவர் கள், ஆரோக்கியமாகவும், ஆளுமையுடனும் நீண்ட காலம் சீவிக்க இருப்பவர்கள். நமது மனித சமுதாயத்தை நன்முறையில் தொடர வைப்பவர்கள். ஆகையால், குடும்பமும், பாடசாலையும், சமூகமும் அப்பிள்ளைகளுக்கு நல்லொழுக்கப் பயிற்சியளித்து, அவர்களை நல்ல வர்களாகவும்; ஒழுக்க நெறுமுறைகளில் வல்லவர்களாகவும் வளர்த்து விட வேண்டும். அவர்களுக்கு மூத்தவர்கள் வழங்கக் கூடிய பெருஞ் சொத்து நல்லொழுக்கப் பண்பாடு ஆகும். அதற்குரிய சிறந்த சமூகச் சூழலைக் கட்டியெழுப்ப நாம் அனைவரும் முயல்வோமாக.
119

Page 66
29. கூடி வாழ்
மனிதன் ஒரு சமூகப் பிராணி. ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தில். ஏனைய சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்தும் பொருந்தியும் வாழ வேண் டிய நிலையில் உள்ளான். அப்பொழுதுதான் அவன் தன் வாழ்க்கையில், திருப்தியையும், சுபீட்சத்தையும், வெற்றியையும் அடைய முடிகின்றண் இதனையே வாழும் முறை அறிந்து, வாழும் நெறி உணர்ந்து, விட்டுக் கொடுத்து, ஏனையோருடன் கூடி வாழ்தல் என்கின்றனர். பிணக்கு களின்றி, இணங்கி வாழும்போது, தான் மட்டும் சுபீட்சத்தைப் பெற்ற வனாகி விடவில்லை; மற்றையோரையும் சுபீட்சத்துடன் நல்வாழ்வு வாழ வழி செய்தவனாகின்றான். வாழ், வாழ விடு என் பார்கள். மிகுந்த கருத்துச் செறிந்த வாசகம். தானும் வாழ வேண்டும், மற்றவர் களையும் வாழவிட வேண்டும். சமூகத்தில் அமைதி, சுபீட்சம், மகிழ்ச்சி ஏற்படுவதற்கு, இக்கருத்தினை ஏற்றுக் கொண்டு விட்டால் மட்டும் போதாது; அதன்படி ஒழுகவும் வேண்டும்.
மனிதன் இன்று தனித்து வாழ முடியாதவனாகி விட்டான். எனவே, அவன் பிறரில் தங்கி வாழ வேண்டியவனாகவும், பிறரைத் தாங்கி வாழ வேண்டியவனாகவும் உள்ளான் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதனால் பிறருடன் கூடி வாழ வேண்டிய நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டுள்ளான். இன்றைய சமூக, பொரு ளாதார, பண்பாட்டு நிலைமைகள் அத்தகைய நிலைக்கு மனிதர்களை இட்டுச் சென்றுள்ளன. கூடி வாழ்தல், சேர்ந்து வாழ்தல் என்பன தவிர்க்க முடியாதன என்பதை உறுதி செய்த பின்னர், அவ்வாறு வாழ்தலுக்கு மனிதர்களுக்குத் தேவையான பண்புகள், நடைமுறைகள், விதிகள், சட்டதிட்டங்கள், ஒழுக்கநெறிகள் என்பன பற்றியும், மனிதர் கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. இவையனைத் தையும் ஒட்டு மொத்தமாக மனித விழுமியங்கள் எனலாம்.
வாழ்க்கைக்கு உறுதுணையாய் வருவன நல்ல மனித விழுமியங் களே. விழுமியங்கள் யாவுமே சமூகத்திற்கும், தனி மனிதனுக்கும் நன்மை பயப்பன. இன்னொரு வகையில் கூறப்போனால் தனி மனி தனுக்கும், சமுதாயத்திற்கும் நன்மையைத் தரவல்லன எவையோ அவையெல்லாம் மனித விழுமியங்கள். மனித விழுமியங்களின் பயன் களை நோக்கும்போது, அவற்றின் பெறுமதி, அளவிடற்கரியது.
120

மனிதர்கள் சமூகங்களில் கூடி வாழும்போது, சகிப்புத்தன்மை, பொறுமை, விட்டுக்கொடுத்து நடத்தல், புரிந்துணர்வு, ஐக்கியம், மதிப்பு, மரியாதை, பணிவு, இன்சொல் பேசுதல், நேர்மை, உண்மை, விசுவாசம், சட்டங்களை மதித்தல், கடமையுணர்வு, கண்ணியம், மானுட நேயம், பெரியோர் மூத்தோர் ஆகியோரைக் கணம் பண்ணு தல், பிறர் நலனில் ஆர்வம், சுற்றாடல் மாசடையாது பேணுதல் போன்ற மனித விழுமியங்களை அறிந்து, அவற்றைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய தேவை உள்ளது. மனித குலம் இன்று எதிர்நோக்கு கின்ற பிரச்சினைகளுக்கும், அவற்றிலிருந்து தம்மை மீட்டுக் கொள்ள வழி வகை தெரியாது தத்தளிப்பதற்கும் காரணம், மனித விழுமியங் களை வாழ்க்கையில் கைக்கொள்ளாமையேயாகும். 'கையிற் புண்ணுக் முக் கண்ணாடி தேவையில்லை' என்பர். அது இங்கும் பொருந்தும். மனிதர்களிடம் எல்லாம் உண்டு, மனிதத் தன்மையைத் தவிர, என்ற நிலையைப், பெரும்பாலும் அடைந்து கொண்டிருக்கிறது, இந்த உல
é}5ዚ ፫) .
இன்றைய உலகில், படிப்பறிவு பெற்றோரின் விகிதாசாரம் கூடி விட்டது. மரண விகிதம் நன்கு குறைக்கப்பட்டுவிட்டது. இயந்திரங் கள், முன்பு மனிதர்களால் ஆற்றப்பட்ட பல செயல்களை இன்று ஆற்றுவதால், மனிதர்களுக்கு ஒய்வு நேரம் அதிகம் கிடைக்கின்றது. உலகின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு மிக விரைவாகச் சென்றடையவும், அப்பகுதியுடன் தொடர்பு கொள்ளவும் மனிதனுக்கு இயலுகின்றது. ஏன், விண் வெளியையும் வெற்றிகொள்ள முதல் கின்றனர். சுருங்கக் கூறின் மனிதனின் ஆற்றல், திறன், வல்லமை, சக்தி என்பன அந்த அளவிற்கு வெகுவாக அதிகரித்துவிட்டது. இவை யெல்லாம் இன்றைய மனித வாழ்க்கையின் வரவுப் பக்கத்தில் பதியப் பட வேண்டியவை, அரும் பெரும் சாதனைகள்தான், சந்தேகமில்லை. ஆனால் மனித வாழ்க்கையின் செலவுப் பக்கத்தில் பதியப்பட்டுள்ளன வற்றைப் பார்க்கும்போது, அங்கு சந்தோஷமில்லை. ஒழுக்கச் சீர் கேடுகள், வன்செயல்கள், வாழ்க்கை நெருக்கடிகள் ஊழல்கள், அமைதி யின்மை, ஏக்கங்கள், அங்கலாய்ப்புக்கள், ஏய்புக்கள், பொய் புரட்டுக் கள் என்பன மலிந்து காணப்படுகின்றன. மனிதத் தன்மைகள் மறைந்து விட்ட சங்கதிகள், மனித உறவுகள் மறக்கப்பட்ட மாதிரிகள் ஆகியுள் ளன. மனித உயிர்கள் மதிப்பிழந்து விட்டன. கூட்டு வாழ்க்கையில் எவை எவை தலையெடுக்கக் கூடாதனவோ, அவையெல்லாம் தலை யெடுத்து ஆடுகின்றன. -
பொது வாழ்விலும் சரி, தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையிலும் சரி, பெரும்பாலும் ஒழுக்கப் பண்புகளுக்கும், மனித விழுமியங்களுக்கும் மதிப்புக் கொடுத்து அனுசரித்தல் குறைந்து கொண்டே செல்கின்றது.
121

Page 67
அங்கெல்லாம் ஒழுக்கக் குறைபாடுகள், தெளிவாகத் தென்படுகின்றன. பின்வருவன இதற்குச் சான்றுகளாக அமைகின்றன.
l.
குடும்பங்களில் உறுப்பினர்களிடையே பிணைப்புக்கள் குறைந்து, பிணக்குகளே மேலோங்கிக் காணப்படுகின்றன. கணவன், மனைவிக்கிடையில் கருத்து உடன்பாடு நிலவுவது மிக அரிது. அதனால் பூசல்கள் அதிகம், அவற்றின் மத்தியில் வளர்ந்து வரும் பிள்ளைகள் சமூக விரோதப் போக்குடை யோராகி, வன்செயல்களிலும், கெட்ட நடத்தைகளிலும் நாட்டம் கொள்கின்றனர். பெற்றோர்களுக்கோ பிள்ளை களைக் கட்டுப்படுத்த முடியாத அவல நிலை. பாடசாலை கள், பொது வீதிகள், விளையாட்டு மைதானங்கள்,பொழுது போக்கு நிலையங்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் ஒழுங்கு, கட்டுப்பாடுகள் பேணப்பட முடியாத நிலை. துர் நடத்தைகள், சட்டமுறிப்புகள், பயங்கரவாதச் செயல்கள் காரணமாக அமைதி விரும்பும் மக்கள் பல்வேறு இடர்ப் பாடுகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.
வேலைத் தலங்களில் ஊழியர்களிடையே கடமையுணர்வு குன்றி வருகின்றது. கைலஞ்சம், ஊழல்கள், கருமங்களை ஆற்றுவதில் தாமதம் என்பன பரந்து காணப்படுகின்றன. மக்கள் சேவை மகேஸ்வரன் சேவை என்பதெல்லாம் வாய்ப் பேச்சோடு நின்றுவிடுகிறது. பொதுச் சொத்துக்கள் சரி யாகப் பேணப்படுவதில்லை. விளையாட்டுத்துறையில் முறை யற்ற வழியிலேனும் வெல்வதே நோக்கமாக உள்ளது. வியாபாரத்தில் அறநெறிக்கு இடமில்லை. இலாபம் சம் பாதிப்பதிலேயே கண்ணுங் கருத்தும்; பதுக்கல், கலப்படம் என்பன சர்வ சாதாரணம். பொதுப்பணி மன்றங்களும் போட்டி, சுயநலம், பொறாமை, பணமீட்டல் ஆகியவற்றி லிருந்து விகிதலை பெற்றதாக இல்லை.
பொதுவாக நோக்கும்போது, மக்களிடையே பெரும்பாலும் சுயநலமே யாவற்றிலும் மேலாண்மை செலுத்துகிறது. பணம் முக்கியமே தவிர, பண்பு அல்ல என்ற நிலை ஏற் பட்டு விட்டது. வயது முதிர்ந்தவர்கள் பலர் பராமரிப்பு இன்றி அல்லல் படுகிறார்கள்.
சட்டம், பொது ஒழுங்கு, நீதி ஆகியவற்றை மீறுவது இயல் பான செயலாகிவிட்டது. தவறுகளைப் புரிந்து விட்டும், அவற்றைச் சரியென நியாயப்படுத்துவதையும் காணக்கூடிய

தாக உள்ளது. சுற்றாடல் மாசு அடையாமல் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற உணர்வே அருகிவிட்டது. அன்றாட வாழ்க்கையில் சுத்தம் பேணல், சுகாதார விதிகளைக் கடைப் பிடித்தல் என்பன மறைந்து வருகின்றன.
தகாத நடத்தைகள், போதைப் பொருட் பாவனைகள், என்பன மனித வாழ்க்கைக் கால அளவினைக் குறைக் கின்றது. வாழ்க்கையானது கண்டதே காட்சி, கொண்டதே கோலம் ஆகிவிட்டது.
சமூகத்தில் பெரியவர்கள், வளர்ந்தவர்கள், மூத்தவர்கள் தமது செல்வாக்கினை இளைய தலைமுறையினர் மீது பதிக் கத் தவறிவிட்டார்கள். நல்லவற்றை எடுத்துக்கூறி இளைய தலைமுறையினரை வழிப்படுத்தும் தகுதியை இழந்து விட் டார்களோ, அல்லது எடுத்துச் சொல்ல அஞ்சுகின்றார் களோ? என்று எண்ண வேண்டியுள்ளது. உண்மையில், அவ்வாறு வழிப்படுத்தக் கூடிய தலைமைத்துவம் இன்று அருகிக் கொண்டே செல்கின்றது.
இந்த நிலை நீடிக்க அனுமதிக்கப்படக் கூடாது. மறந்து விட்ட மனித விழுமியங்கள் மீளப் பெறப்பட வேண்டும். மனித விழுமியங்கள் மனித குலத்தின் மதிப்புமிக்க அரும் பெரும் சொத்து. அவற்றைப் பேணி இளந் தலைமுறை யினருக்குக் கையளிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. இதனை உணர்ந்து அனைவரும் விரைந்து செயற்படுவோ
LDGs.
123

Page 68
30. சாத்வீகம்
பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் குழப்பமடைகின்றோம்; கலக்க மடைகின்றோம்; உணர்ச்சி வசப்படுகின்றோம். வீட்டிலோ, வெளி யிலோ, வேலைத் தலங்களிலோ நடைபெறுகின்ற சில சம்பவங்கள் தான். அவ்வாறு எமது உணர்ச்சிகளைத் தூண்டி எம்மை அலைக் கழிக்கின்றன. அவ்வாறு உணர்ச்சிகள் தூண்ட ப்பெற்று, அவ்வுணர்ச்சி களுக்கு அடிமையாகும்போது, மனிதரகள் நிம்மதியற்று, சாந்தி குன்றி அவதிப்படுகின்றனர். தூக்கமின்றித் துயரப்படுகின்றனர். நோய்யாய்ப் பறவும் ஏதுவாகின்றது. பகைமை உணர்ச்சி, வெறுப்புணர்ச்சி மேலோங் கும்போது, வன்செயல்களுக்கு இட்டுச் செல்லப்படுகின்றனர். மனிதன் தன்னைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறான். சுருங்கக் கூறின் மனிதன், மிருகமாகின்றான். உணர்ச்சிகள் சமநிலை குன்றும்போது, மனிதனை எவ்வாறு ஆட்டிப் படைக்கின்றன என் பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். மனிதனுக்கு இப்பரிதாப நிலை ஏன் ஏற்படுகின்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
உணர்ச்சிகளை நடுவு நிலையில் அல்லது சமநிலையில் வைத்துக் கொள்வதற்கு வழிகளை வகுத்துத் தந்துள்ளனர் நம் பெரியோர்கள். எத்தகைய, சந்தர்ப்பங்களிலும் சாந்தியைக் கைக்கொள்ளுவதுதான் அதற்குச் சிறந்த வழியாகும். இந்த இடத்தில்தான் சாந்தி, ஒரு சிறந்த மனித விழுமியம் என்பது உறுதியாகின்றது. உணர்ச்சிகள், அன்புடன் இணைந்து அன்பினில் விளையும்போது தோன்றும் நிலை, சாந்தி எனப்படும். சாந்தியுள்ள இடத்தில், கூடவே அமைதி, அடக்கம், நிம்மது, சமாதானம் என்பனவும் வந்துவிடுகின்றன. பகைமை, வெறுப்பு, கோபம், பழிக்குப்பழி போன்றவை உடனே மறைந்து விடு கின்றன.
எவ்வாறான சூழ்நிலையிலும், எத்தகைய இக்கட்டான சந்தர்ப் பங்களிலும்; மனிதன் தூண்டப்படினும் சரி, சீண்டப்பட்டினும் சரி, தன்னை இழத்தல் ஆகாது. தன்னை இழக்காமை என்பது தன்னகத் துள் இயல்பாகவே உள்ள, சாந்தியை இழக்காமையாகும். இதற்குத் தற்கட்டுப்பாடு தேவை. 'இடுக்கண் வருங்கால் நகுக,' என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. 'உனது ஒரு கன்னத்தில் அடி விழுந்தால், மறு கன்னத்தைத் திருப்பிக் கொடு, ’’ என்கிறார் இயேசு பிரான். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல், அவர் நாண நன்னயம் செய்து விடல்,' என்கிறது தமிழ்மறை. ‘இன்று போய்ப், போர்க்கு நாளை வா’’ என்றான் கோசல நாடுடை வள்ளல், இராமன். இராவணன்
124

மாள வேண்டும் என்பதல்ல இராமனின் எண்ணம். அவன் பிழை
திருந்தி வாழ வேண்டும், என்றெண்ணியே இராவணனுக்கு உயிர்ப்
பிச்சை வழங்கப்பட்டது. திருவள்ளுவர் கூறியது போன்றோ, இயேசு
பிரான் மொழிந்தது போலவோ, இராமன் செய்தது போன்றோ,
சாதாரண மனிதர்களினால் அத்தகைய சூழ்நிலையில், துலங்க முடி
யுமா என்ற வினா எழலாம். சற்றுக் கடினம்தான். ஆனால், முயன்
றால் ஆகாததொன்றில்லை. உணர்ச்சிச் சமநிலை பேணப்படும் பட்சத்
தில், இத்தகைய துலங்கல்கள் சாத்தியமாகும். துன்பத்தைக் கண்டு
துவண்டுவிடாமலும்; மகிழ்ச்சியையெய்தி இறுமாப்புக் கொள்ளாமலும்
பகைமையினால் சீறிசி பாயாமலும்; வெறுப்பினால் ஒதுக்கித் தள்ளா மலும் இருக்கப் பயின்று கொண்டால், உணர்ச்சிகள், மனவெழுச்சிகள்
என்பன பக்குவம் பெற்றுவிடும். எந்த ஒரு உணர்ச்சிக்காவது, அளவுக்கு மிஞ்சும் நிலையினை அனுமதிக்கக்கூடாது. அப்போதுதான் உணர்ச்சிச் சமநிலை பேணப்பட முடியும். சாந்தி நிலவ ஏதுவாகும்.
தற்காலத்தில் நாம் வாழ்க்கையில் அவசரப்படுகிறோம்; அவதிப் படுகிறோம். அவதியும், அவசரமும் உள்ள இடத்தில் சாந்தி தோன்ற முடியாது. எனவே, சாந்தி பெறுவதற்கு முன் நிபந்தனையாக அவதி, அவசரம், ஏக்கம், அங்கலாய்ப்பு ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுதலை அடைய வேண்டும். நாம் வாழுகின்ற சூழ்நிலை அல்லது முகங் கொடுக் கின்ற சந்தர்ப்பங்கள் எமக்குப் பாதகமாக அமையினும்; ஏனையோரின் போக்குகளும் நடவடிக்கைகளும் எமக்கு முரண்பட்டனவாக இருப் பினும்; சிலரின் கெடுபிடிகள் எமக்குப் பிடிக்காதனவாக அமையினும் மேலும் சிலர் வேண்டுமென்றே சீண்டினாலும், ஆத்திரமூட்டினாலும் அவற்றையெல்லாம் நிலை தளராமல், சாந்தி குலையாமல், நிதானமாக எதிர்த்துலங்கள் இன்றி ஏற்றுக் கொண்டு, பொறுமையின் சிகரமாக, சகிப்புத் தன்மையின் சாரமாக நாம் இருப்பது மேன்மையைத் தரும். சாந்தி எம்முள் இருக்க வழி கோலும்.
எல்லாம் சரியாக இருக்கும்போது, அமைதியுடன் விளங்குவது இலகு. ஆனால் எதிர்மாறாக, முரண்பாடுகள் தோன்றும்போது அமைதியைக் கடைப்பிடிப்பதுதான் பெருமையைத் தரும். அதுவே செயற்கரிய செயலுமாகும். சாந்தியும், பொறுமையும் சோதனைக் குள்ளாகும்போது, தளம்பாமல், தடுமாறாமல் நின்று பிடிப்பது அரிய சாதனையாகும். "சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும், துன்பம் சுடச் சுடப், பொறுமையையும், சாந்தியையும் மேற்கொள்ளுபவர்க்கு என்று கூறினால், அதுவும் பொருத்தமாகவே அமைகின்றது. இத் தகைய இடைஞ்சலான சூழ்நிலைகளில், சாந்தியை விடாது பற்றும் போது, சாந்தி மேலும் வலிமை பெறுகிறது; அத்துடன் பூரணத்துவமும் அடைகின்றது. சத்திய சோதனை போன்று, சாந்திக்கும் சோதனைகள்
125

Page 69
பல ஏற்படுகின்றன. இச்சோதனைகளில் வெற்றிபெறுபவர்களே, சாந்தி யின் முழுமையான பயன்களை அடைவர். உண்மைக்கு உள்ள வலிமை போன்று, தர்மத்திற்குள்ள ஆற்றல் போன்று அன்புக்கு உள்ள மகா சத்தி போன்று, சாந்திக்கும் வலிமை, ஆற்றல், சக்தி உண்டு. உண்மை, தர்மம், அன்பு போலவே, சாந்தியும் மனித விழுமியமாக விளங்குகின்றமையே இதற்குக் காரணம்.
இளமையிலிருந்தே, சாத்வீகப் பண்புகள் வளர்க்கப்பட்டு வருதல் வேண்டும். மனிதன் அடிப்படையில் ஒரு விலங்கு என்றும், பரிணாம வளர்ச்சி பெற்றே மனிதன் ஆனான், என்றும் கூறப்படுகிறது. எனவே இராஜதம், தாமதம் ஆகிய தாழ்ந்த குணங்களும் மனிதரிடம் உண்டு. கல்வியறிவு பெற்றுத் தம்மிடமுள்ள, இவ்விரு தாழ்ந்த, தீய இயல்பு களையும் படிப்படியாக அகற்றி, மனிதர்க்குரிய சாத்வீக குணத்தையும், பண்புகளையும் வளர்த்தல் மூலம் மனிதன், மனிதனாகின்றான். சாத் வீகம், மனிதனின் சகல செயற்பாடுகளிலும் கடைப்பிடிக்கப்படும் பட்சத்தில் அமைதி, சாந்தி, சமாதானம் நிலவும். மனிதனின் நடத் தைப் போக்குகளில் சாத்வீகம்; உண்ணும் உணவில், குடிக்கும் பானத் தில், உடுக்கும் உடையில், வாழும் இருப்பிடத்தில் சாத்வீகம்; சிந்தனை யில், பேச்சில், செயலில் சாத்வீகம் என எங்கும், எதிலும் நீக்கமற நிறைந்து, சாத்வீகம் வியாபித்திருக்குமேயானால் மனித வாழ்க்கை எத்துணை சீரும் சிறப்பும்; வளமும் வனப்பும்; அழகும் பொலிவும்; யில், பேச்சில், செயலில் சாத்வீகம் என எங்கும், எதிலும் நீக்கமற சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக விளங்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். சாத்வீகம் என்பது எவற்றிலும் தீவிரத் தன்மை இல்லாமையும், மிதமிஞ்சிய நிலைமையற்றதுமான ஓர் உயரிய நிலை. எதையும் சமரசமாக நோக்கும் இயல்பு. எல்லா உணர்வுகள், உணர்ச்சி களையும் சமநிலையில் பேணுதல், சமரச நோக்கினால் ஏற்படுகின்றது. சாத்வீகக் குண இயல்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம், சமரசம், சமத்துவம், சகோதரத்துவம், சம நீதி என்பன மலர்ச்சி பெறுகின்றன. அந்த மலர்ச்சியில் மணம் வீசுவது சாந்தி.
மனித குலத்திற்கே இயல்பான விழுமியம்தான் சாந்தி. மனிதருள் ஆழ்ந்து, புதைந்து, மறைந்து கிடக்கின்ற இந்த ஆற்றலை, மனித விழுமியத்தை வெளிக் கொணர வேண்டியது அவசியம். அதற்குப் பயிற்சி தேவை. சாதனை வேண்டும். சிறு வயதிலிருந்தே பயிற்சி மூலம், சாந்தியை வளர்த்துக்கொள்ள முடியும். பெற்றோர், ஆசிரியர்கள், சமய குருமார், சமூகப் பெரியவர்கள் உதவ வேண்டும். போதனை மூலம் மாத்திரமல்ல, வாழ்ந்து காட்டுதல் மூலம் இக் கைங்கரியத்தைச் செய்ய முடியும்.
2

எல்லோருடனும் பணிவாகவும், அன்பாகவும், அடக்கமாகவும், பிறர் நலம் பேணும் வகையிலும் பழகுதல்; உணர்ச்சிகளுக்கு இடம் கொடாது நடுவுநிலை நிற்றல்; பேச்சைக் குறைத்து, அமைதியாக இருத்தல்; உள்ளவை போதும் என்ற திருப்தியைக் கைக்கொள்ளல்; நல்லொழுக்கம், கட்டுப்பாடு பேணல்; வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்குந் தன்மையை வளர்த்தல்; மன ஒருமைப்பாட்டினை ஏற்படுத்த முயலுதல்; உடல் நலம் ஒம்புதல்; பொறுமை, சகிப்புத் தன்மையை வளர்த்தல்; சிந்தனை, பேச்சு, செயல் ஆகியவை ஒன்றாகவும் நீதி யாகவும் இருத்தல்; தன்னம்பிக்கை, சுய மரியாதை என்பவற்றை விருத்தி செய்தல்; எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டினைப் பற்றியிருத்தல்; மனத் தூய்மை பேணல்; தன்னலமற்ற சேவை செய்தல் ஆகியனவற்றைப் பயிற்சி, சாதனைகள் ஊடாகப் படிப்படியாக வளர்த்தல் மூலமே, சாந்தி, அனுபவிக்கக் கூடிய மனித விழுமியமாக விளங்குகின்றது. சமநிலையான ஆளுமை விருத்தி பெற்ற மனிதரிலேயே சாந்தி நிலவுகிறது.
சாந்தியை விரும்புவோர், இன்பம், துன்பம்; நயம், நட்டம்; விருப்பு, வெறுப்பு: புகழ், இகழ்; பிறர், தமர்; பகை, நட்பு; இன்னார். இனியவர் போன்ற உணர்வுகளைப் பொதியாகக் கட்டு எங்கேயாவது புதைத்துவிட வேண்டும். இவ்வளவற்றையும் களஞ்சியப்படுத்தி வைத் துக் கொண்டு, சாந்தி எங்கே என்று தேடுவது வீணான செயலாகும். மக்களுக்குப் பரோபகாரம் செய்கின்றோமென்று பாரபட்சம் காட்ட லும்; பொதுப் பணிகள் புரிகின்றோம் என்று கைம்மாறு எதிர்பார்த் தலும்; சமுதாயத்தைச் சீர்திருத்துகிறோம், வழிகாட்டுகிறோம் என்று, "எல்லாம் உனக்குத்தான், எனக்கல்ல’’ என்ற நிலைப்பாட்டினைக் கொள்ளலும் உள்ள தற்காலச் சூழ்நிலையில் மனித சமுதாயத்தில் சாந்தி காண்டல் மிக மிக அரிது. சாந்தியின் இன்றியமையாமையை உணர்ந்து விரைந்து செயல்பட்டு சாந்தியை நிலவச் செய்வோமாக.
127

Page 70
31. சான்றாண்மை
'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கை யிலே' என்ற கீழைத்தேயக் கவிஞனின் கருத்தும், ‘‘மனிதன் இயற்கை யில் தீயவனாகப் பிறப்பதில்லை; சமூகத்தின் குறைபாடுகளே அவனைத் தீயவனாக்குகின்றன,' எனும் மேலைத்தேயச் சிந்தனையாளர் ரூசோ வின் கருத்தும் ஒப்பு நோக்கற்பாலது. மனிதன் பிறக்கும்போது, நல்ல மானுட இயல்புகளுடனும், சுதந்திர உணர்வுகளுடனும்தான் திகழ் கின்றான். ஆயினும் அவன் வளர்ந்து வரும்போது சமூகச் சூழலின் தாக்கத்தினால், தன் மானுட இயல்புகளை மறந்து, சுதந்திர உணர் வினை இழந்து, ஈற்றில் தன்னையே இழந்து அடிமை நிலையில் அல்லல்களுடன் வாழ்கின்றான்.
மனித வாழ்க்கையின் குறிக்கோள்கள் யாவை? குறிக்கோள் இல் லாத வாழ்க்கை, மீகாமன் இல்லாத கப்பல் ஆழ்கடலில், அலைகளின் மத்தியில், செல்லுந் திசை தெரியாமல் தத்தளிப்பது போல; எவற்றை அடைய வேண்டும் என்ற திடமான நிலைப்பாடு இல்லாததாகவே இருக்கும். வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்குக் குறிக்கோள்கள் அவ சியம். இக் குறிக்கோள்கள் அடையப்படக் கூடியனவாகவும்; அவ்வாறு அவற்றை அடைவதற்கு மேற்கொள்ளப்படும் வழி, பயன்படுத்தப் படுகின்ற முறைகள், உத்திகள், கருவிகள் அனைத்துமே நீதியின் அடிப்படையில், அறம் சார்ந்தனவாகவும், மனித மேம்பாட்டிற்கு இட்டுச் செல்வனவாகவும் அமைய வேண்டியது இன்றியமையாத தாகும். எனவே, வாழ்க்கைக் குறிக்கோள்கள் விழுமியங்கள் சார்ந்தன வாக இருத்தல் வேண்டும். இதிலிருந்து பிறக்கும் கருத்து என்னவெனில் மனிதனாகப் பிறவியெடுத்த ஒவ்வொருவரும், வாழ்க்கைக் குறிக்கோள் களை வகுத்துக் கொள்ளுதல் அவசியம்; அவ்வாறு வகுக்கும்போது வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்ற சீரிய நிலைப் பாட்டினை உறுதியோடு வரையறுத்துக் கொள்ளுதல் வேண்டும். அதன் படி ஒழுகுதல் வேண்டும். மனிதப் பண்புகளோடு, மனிதர்களாக வாழ்வதற்கு இதுவே சிறந்த வழி. இவ்வாறு வாழ்ந்தால், குறிக் கோள்களும் நிச்சயம் அடையப்படும்; வாழ்வும் இன்பமயமாக அமை யும். மாறாக, இன்று பலர் எப்படியும் வாழலாம் என்ற நிலைப் பாட்டினைக் கொண்டிருக்கின்றனர். நேர்வழி இருக்கக் குறுக்கு வழி யைப் பயன்படுத்திக் கூடிய விரைவில் அதிக இலாபத்தைப் பெற முயற்சிக்கின்றனர். ஆரம்பத்தில் சிறிய இலாபங்கள் கிடைக்கப் பெற் றாலும், இறுதியில் ஏமாறப்போவது நிச்சயம். வாழ்க்கையில் தோல்வி
128

யைத் தழுவிய பின்னர், வந்த வழியைத் திரும்பிப் பார்த்துக் கவலைப் படுவதில் அர்த்தமில்லை. எனவே வரமுன் காக்க" என்ற ஆன்றோர் வாக்குப்படி, நல்ல வாழ்க்கைக் குறிக்கோள்களை வகுத்து; தூய மனத்தினராய், தூய பேச்சினராய், தூய செயலினராய், நேர் வழியில் செல்பவராய், மானுடம் நிறைந்தவராய், அக் குறிக்கோள்களை, அடைய முயன்றால் வெற்றி நிச்சயம்; வாழ்விலும் இன்பம் மலர்தல் உறுதி.
பண்டைய தமிழ் மக்கள், ஒவ்வொருவரும் சான்றோனாக, வாழ்க்கையில் திகழ வேண்டும் என்ற விழுமிய வாழ்க்கைக் குறிக் கோளை வைத்திருந்தனர்.
‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே'
என்ற புறநானூற்று அடியும்,
'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்'
எனும் திருக்குறட் பாவும், அதனை உறுதிப்படுத்துகின்றன.
வயது முதிர்ந்தும், அதற்குரிய அறிகுறிகளான நரை, திரை, தளர்வு என்பனவற்றைப் பிசிராந்தையார் என்ற சங்க காலப் புலவரில் கண்டுகொள்ள முடியாத நிலையில், இருப்பதைக் கண்ணுற்று, அவர் இளமையாகத் தோற்றமளிப்பதற்குரிய காரணத்தை வினவியபோது, அவர் கூறினார்: தனது குடும்பத்தில் நல்ல மனைவி, நன் மக்கள் இருப்பதாலும்; அதற்கும் மேலாகத் தான் வாழுகின்ற ஊரில் சான் றோர் பலர் வாழ்கின்ற காரணத்தினாலும் தான் மூப்பு எய்தாமல், இளமைப் பொலிவுடன் விளங்குவதாக அவர் குறிப்பிட்டார். இவ்வாறு புறநானூற்றுப் பாடல் ஒன்றில் பிசிராந்தையார் தனது இளமையின் இரகசியத்தை அழகாக விளக்குகிறார்.
உடல் நலம் பேணலுக்கு, உடலோம்புதல் அவசியம். சத்துள்ள உணவு, உடற்பயிற்சி, ஒய்வு, ஒழுங்கான பழக்க வழக்கங்கள், சுத்தம் என்பன மூலம் உடல் ஒம்பப்படுகிறது. ஆயினும் உடல் ஒம்பலுடன் மன ஓம்பலும், உடல்நலம் பேணலுக்கு அவசியம் என்பதை நாம் உணர்வோம். மனநலம் குன்றும்போது உடல் நலமும் பாதிக்கப் படுகிறது. இக்கால மருத்துவர்கள் இதனை அழுத்திக் கூறுகின்றனர். மனத்தை அமைதிப்படுத்துவதற்கு மாத்திரைகளைக் கொடுக்கிறார்கள். எனினும் நீடித்த மன அமைதியை மாத்திரைகள் தரமாட்டா. மன
129

Page 71
நலம் பேணுவதற்குச் செம்மையான, நிறைவான, அங்கலாய்ப்புகள் அற்ற வாழ்க்கையே தேவை. நல்ல குடும்பம், சான்றோர்கள் நிறைந்த சமுதாயச் சூழல் என்பன மன நிம்மதியான வாழ்க்கையைத் தரு கின்றன; மன நலம் பேண உதவுகின்றன. மன நலம், உடல் நலத்தைச் சீராக வைத்திருக்கின்றது. சங்ககாலத்துப் புலவர் பிசிராந்தையார் இக் கருத்தைத்தான் தன்பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
அதனால் பண்டைத் தமிழர்கள் எத்துணை சிறந்த வாழ்க்கைக் குறிக்கோளைக் கொண்டிருந்தனர் என்பது புலனாகின்றது. ஒவ்வொரு வரும் சான்றோன் ஆக வளர்த்தெடுக்கப்படும்போது, அவர்கள் சமு தாயக் கடமைகள், பொறுப்புக்கள், உரிமைகள் எவை என்பதை இனங் கண்டு அவற்றைத் தமது வாழ்க்கையில் மேற்கொள்ளக்கூடிய திறத் தினராக விளங்குவர். மனித விழுமியங்களுக்கு மதிப்பளித்துப் பேணும் பெற்றியராகத் திகழ்வர். பகைமை, சுரண்டல், ஆதிக்கம் என்பன மறைந்து விடும். அந்த நிலையில் சுயநலம் அகன்று பிறர்நலம் பேணுதல் மேலோங்குகின்றது. "நான்' 'எனது' என்ற அகங்கார, மமகார உணர்வு' களுக்குப்பதிலாக "நாங்கள்” “எமது' என்ற பொதுநல உணர்வு தோன்று கிறது. இவையே ஒரு சமுதாயத்திற்குச் சிறந்த அரண், பாதுகாப்பு என்று நம் முன்னோர் கொண்டமை எத்துணை விவேகமான செயற் பாடு, மக்கள், சான்றோர்கள் ஆகும்போது, வேறு பாதுகாப்புச் சேவையும் தேவைப்படாது; பாதுகாப்புச் செலவினங்களும் எற்படாது. ஒரு நாட்டிற்குச் சிறந்த பாதுகாப்பு மக்களின் சான்றாண்மையே. மக்கள், மனித விழுமியங்களை வளர்த்துக் கொள்ளச் செய்வதன் மூலமே அவர்களைச் சான்றோர்களாகப் பரிணமிக்கச் செய்ய முடியும். வளர்ந்தவர்கள், விழுமியங்களை அனுசரித்து வாழ்ந்து காட்டுவதன் மூலமும், மனித விழுமியங்கள் சார்ந்த கல்வியை வழங்குவதன்மூலமுமே இளைய தலைமுறையினரைச் சான்றோர்களாக வளர்ச்சி பெறச் செய்யலாம். குடும்பம், சமூகம், பாடசாலை, வழிபாட்டிடங்கள் ஆகி யன குழந்தைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதில் ஆர்வமும் சிரத்தையுங் கொள்ள வேண்டும்.
மனம், சொல், செயல் ஆகியவற்றில் தூய்மையைப் பேணுபவர் கள் சான்றோர். பிறருக்கு நன்மை தரும் நல்ல எண்ணங்களையே மனதில் தோற்றுவித்து; எல்லோருக்கும் இன்பம் தரும் இனிய, பண் பான சொற்களையே பேசி; நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் நற்பணி களிலும், நற்செயல்களிலுமே ஈடுபாடு கொண்டு விளங்குபவர்கள் சான்றோர்கள். உள்ளத்தில் உண்மையொளி உண்டாகில், வாக்கினிலே ஒளியுண்டாகும் என்கிறார் மகாகவி பாரதியார். உள்ளத்திலும், வாக் கிலும் ஒளியுண்டானால், ஆற்றப்படும் கருமங்களும், பணிகளும் ஒளி பொருந்தியனவாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
30

சான்றோர்கள் ஐந்து சால்புகளைக் கொண்டவர்கள் எனப் பின் வரும் திருக்குறள் கூறுகின்றது.
'அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்'
இவ்வைந்து பண்புகளும், சால்பு என்பதைத் தாங்குகின்ற உறுதி யான தூண்கள் ஆகும். சால்பு என்பது பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாததும், பிறருக்குத் தீங்கு எண்ணாததும் விளைவிக்காததுமான இனிய நற்பண்பு. இன்னா செய்தார்க்கும் இனியவே செய்தல்; ஆற்றல் மிகுந்திருந்தும் பணிதல்; ஊழிக்காலம் வந்து உலகம் புடை பெயர்ந் தாலும் சான்றாண்மையிலிருந்து விலகாதிருத்தல் என்பன சான்றோரின் சால்புக்கு உரைகல் போல மதிப்பிடும் கருவிகளாக உள்ளன.
சான்றோர்களே உயர்ந்தவர்கள். 'உலகம் என்பது உயர்ந்தோர் மேற்று' என்பர். எனவே நம்முன்னோர்கள் உலகம் என்று குறிப் பிட்டது, சான்றோர்களைக் கொண்ட உலகத்தையே. சான்றோர்கள் இல்லாத உலகத்தை அவர்களால் கற்பனை செய்தும் பார்க்க முடிய வில்லை. சான்றோர்கள் இல்லாத ஊர், ஊரல்ல, அது அடவிகாடே என்றனர். மனிதர்கள் வாழத் தகுந்த இடமன்று.
'உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்'
எனும் குறட் பாவில் உலகம் என்று குறிப்பிடப்படுவது உயர்ந்தவர் களாகிய சான்றோர் உலகத்தையே. ஆகவே, சான்றோர்களோடு பொருந்தி ஒழுகுகின்ற வாழ்க்கை முறையை அறிந்து கொள்ளாதவர் பல நூல்களைக் கற்றவராக இருந்தபோதிலும், கல்லாதவராக, அறிவு இல்லாதவராகவே கணிக்கப்படுவர். எனவே, ஒவ்வொருவரும் சான் றோராக வர முயல வேண்டும் என்பதே இதன் தாற்பரியம். வெறும் நூற் கல்வி மட்டும் ஒருவனைச் சான்றோனாக்கிவிட முடியாது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்குதவாது. நல்ல மனிதப் பண்புகளைப் பெற்று, ஒழுகும் போதுதான் சான்றோர் நிலையை அடைய முடிகின்றது.
“உள்ளத்து நேர்மை, உலகத்து உடன்பாட்டிற்காகத் தியாகம் செய்யப்படலாகாது’ என்கிறார் கிரேக்கத்துப் பேரறிஞர் பிளேற்றோ. ‘உலகம்’ என்று பிளேற்றோ குறிப்பிடுவது சாதாரண மக்கள் வாழும்
13

Page 72
உலகத்தை. வள்ளுவர் கூறும் உலகம், சான்றோர் உலகம். எனவே இந்த இரு வேறு உலகத்தையும் வேறுபடுத்தி உணர்ந்து கொள்ள வேண்டும்.
நற்பண்புகளும், நல்லொழுக்கமுமே சான்றோர் நிலைக்கு இட் டுச் செல்கின்றன.
'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்.'
ஒழுக்கம் உயர்வைத் தருகின்றது. அந்த ஒழுக்கம் ஒருவர்க்கு உயிரை விடப் பெறுமதி வாய்ந்தது. ஒழுக்கப் பண்புகள் விலைமதிப்பற்ற விழுமியங்கள். எனவே விழுமியங்கள் மனித உயிரை விடச் சிறந்ததாகப் போற்றப்பட வேண்டியவை.
132

32. முற்போக்கு
இவ்வுலகமும், அங்கு வாழுகின்ற மக்களும் சேமமுற வேண்டும், மேன்மை பெற வேண்டும், சுகமாக வாழ வேண்டும் என்று எம்மில் எத்தனை பேர் உள விசுவாசத்துடன் சிந்திக்கிறோம், என்பதைச் சற்றுப் பொறுமையுடன் எண்ணிப் பார்க்க வேண்டும். நாம், நாம் வாழ்ந்தால் போதும்; மற்றையோர் எப்பாடு பட்டாலென்ன? எக்கேடு கெட்டாலென்ன? என்ற நிலைப்பாடு, இன்று தனியாள், சமூக உணர் வாகி, சமூக நோக்காகி, வெகு வேகமாக வளர்ந்து வருவதை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. இது நல்ல அறிகுறி அன்று. மனித சமுதாய அழிவை ஏற்படுத்தக் கூடிய வலிமை இதற்கு உண்டு. அணுக் குண்டை விட ஆபத்தானது. எனினும், இந்தச் சுயநல நிலைப்பாட் டினைத் தடுத்து நிறுத்த, அவர்களை இனங் கண்டு ஆலோசனை கூற, ஆலோசனைகளை ஏற்றுக் கொள்ளாதவிடத்து, பல்வேறு தடைகளை யும் விதிக்க, ஆற்றல் படைத்த எந்தவொரு நிறுவனமோ, சர்வதேச மன்றமோ இதுவரை முன்வந்தமை அறியப்படவில்லை.
சமூகம் ஒரு குடும்பம்; உலகம் ஒரு குடும்பம் என்ற எண்ணமும், உணர்வும் எல்லோரிடமும் இருத்தல் வேண்டும் என்று கூறி வந்தோம்; தற்பொழுதும் கூறி வருகிறோம். குடும்பம் என்றால் அங்கு ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லுறவு, அன்பு, பற்று, கரிசனை, தியாகம், அர்ப் பணம் போன்ற நல்லனவெல்லாம் குடும்ப உறுப்பினர்களிடையே பூத் துக் குலுங்கும் என்ற ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் நெடுங்காலமாக மக்களின் உள்ளங்களில் இடம் பெற்று வளர்ந்துள்ளன. அந்த அடிப் படையிலேதான் சமூகம் ஒரு குடும்பம், உலகம் ஒரு குடும்பம் எனும் எண்ணக் கருவும், சித்தாந்தமும் அமைக்கப்பட்டிருத்தல் வேண்டும்.
இன்றைய நிலையில், எத்தனை குடும்பங்கள் சொல்லப்பட்ட இலட்சணங்களுடன் கூடி இருக்கின்றன என்பது சிந்தித்து ஆராயப் பாலது. குடும்ப உறுப்பினர்கள் இடையே உறவில், உடைவுகள், சிதைவுகள், வெடிப்புகள் உள்ளன. இடையிடையே ஒட்டல்கள், பொத் தல்கள் போட்டுச் சரிக்கட்டிக் கொண்டாலும், மீண்டும் மீண்டும் முறிவுகள் வந்து விடுகின்றன. அதனால் குடும்ப உறுப்பினர்களிடையே விசுவாசம், நம்பகத் தன்மை, பரஸ்பர மதிப்பு, மரியாதை என்பன வேகமாகக் குறைந்து கொண்டே செல்கின்றன. மக்கள், மாக்களாகி வருகின்றனர்; மனித விழுமியங்கள் மறைந்து வருகின்றன. குடும்
133

Page 73
பத்தில் மிக முக்கியமாகப் பின்பற்றப்பட வேண்டிய குடும்ப விழுமியங் கள் உதாசீனத்திற்கு உரியவையாகி விட்டன. அவ்வாறு செய்வது “நாகரிகம்’ என்றும் சிலர் கருதுகிறார்கள். குடும்ப விழுமியங்களை அனுசரிக்குமாறு கேட்பது, 'உரிமை மீறல்’’ என்றும் கொள்ளப் படுகிறது. புதுமை, நவீனத்துவம், விழிப்புணர்வு என்னும் காரணங்கள் கற்பிக்கப்பட்டு இக்கருத்துக்கள் எல்லாம் நியாயப்படுத்தப்படுகின்றன. ஆனால் இறுதி விளைவு என்னவாக இருக்கும்? குடும்பச் சிதைவு, சீரழிவு, மன முறிவுகள், பிறழ்வான நடத்தைகள், மன நோய்கள், அழிவுகள் என்பனவற்றில்தான் போய் முடியும். உரிமைகள் வேண்டும் தான்; ஆனால் அதற்காக அவரவர் கடமைகள் புறக்கணிக்கப்படல் ஆகாது. இன்று குடும்பங்களில் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. ஆனால் கடமைகள், பொறுப்புக்கள் அசட்டை செய்யப்படுகின்றன.
இதனால் குடும்பச் சீர்குலைவு தடுக்க முடியாததாகி விடுகிறது.
குடும்பத்தில் உள்ள பெரியவர்கள், மூத்தவர்கள் மிக்க மரியாதை, மதிப்புடன் பேணப்பட்டு வந்த காலம் முன்னர் இருந்தது. குடும்பத்தின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும், அவர்களின் அனுபவ பூர்வமான, ஆலோசனைகளும், வழிநடத்தல்களும் பெற்றுக் கொள்ளப்பட்டன. கருமங்களின் வெற்றிக்குப் பெரியோர்களின் நல்வாழ்த்துக்களும், நல் லாசிகளும் தேவைப்பட்டன. பிற்காலத்தில், முதுமையெய்தியபோதி லும், தாமும் குடும்பத்திற்குப் பயனுள்ளவராகவும், குடும்பத்தவரின் கணிப்பையும் கெளரவத்தையும் பெற்றுக்கொள்ள முடிபவராகவும், விளங்குவார் என்னும் திடமான மன நம்பிக்கை இருந்தது. அதனால் வயோதிபத்தை வரவேற்க அவர்கள் அஞ்ஞான்று தயங்கியதுமில்லை; பயந்ததுமில்லை. முதுமை, வாழ்க்கையில் பதவி உயர்வாகவும், அந் தஸ்து அதிகரிப்பாகவும் கொள்ளப்பட்ட காலம் ஒன்றிருந்தது. வயோதிபம் வளமாகக் கழிந்தது. ஆனால் இன்றைய நிலை வேறு. அதனைச் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. வாழ்க்கையில், மதியம் திரும்பிப் பிற்பகல் தோன்றியதும், வயோதிபம் வந்துவிட்டதே, இனிமேல் யார் தம்மை மதிக்கப் போகிறார்கள், தம் வாய்ச் சொல்லை யார் கேட்டு நடக்கப் போகிறார்கள், யார் தம்மைக் கவனிக்கப் போகிறார்கள்? கட்டிய மனைவியோ, கணவனோ, பெற்ற பிள்ளை களோ, உற்றார் உறவினரோ தம்மை எவ்வாறு பார்க்கப் போகிறார் கள், என்ன அந்தஸ்தை அளிக்கப் போகிறார்கள் என்றெல்லாம் பல்வேறு ஏக்கங்கள், எண்ண அலைகள் தோன்றி மோதுகின்றன. இது ஒன்றும் விநோதமல்ல; ஏனென்றால் இன்றைய வாழ்க்கைமுறை அப்படி எண்ணத் தூண்டுகிறது. குடும்பச் சீர்குலைவே காரணம் ஆகின்றது.
34

குடும்பத்தில் கடமையிலும் பார்க்க உரிமைக்கு முக்கியத்துவம் கோரும்போது, அங்கு அன்பு அகன்றுவிடும்; வன்பும் வம்பும் புகுந்து விடும். குடும்பம் சீர்குலைந்து விடும்.
'அன்பு அகத்தில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்தற்று'
என்பது வள்ளுவர் வாய்மை மொழி. குடும்பத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர் வாழ்க்கை, வெம்மை சூழ்ந்த பாலைவனத்தில், பட்ட மரம் மீண்டும் தளிர்த்தால் போன்றது என்பது இதன் பொருள். பாலை நிலத்தில் பட்ட மரம் மீண்டும் தளிர்விட்டு உயிர்க்கப் போவது மில்லை. குடும்ப அன்பு, குடும்ப பாசம், குடும்பப் பிணைப்பு என்பவை குடும்பத்தை விட்டு விலகிய பின்னர் அக்குடும்பம் ஒருபோதும் தழைத் துச் செழிக்கப் போவதுமில்லை. இவ்வரிய உண்மையை உணர்ந்து, உரிமைப் போராட்டம் என்னும் பெயரில் குடும்பத்தில் புயலை உற் பத்தி செய்யாமல், அவரவர் கடமைகளை முட்டின்றி ஆற்றி, அன்பு, பாசம், பிணைப்பு என்பவற்றால் அமைதியை உற்பத்தி செய்து வாழ்ந் தால் குடும்ப வாழ்வு எத்துணை இன்பந் தருவதாக இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்கும்போதே இனிப்பாக உள்ளது. செயற்படுத்தினால் மேலும் தித்திக்கும் என்பது உறுதி. -
உரிமை, பொதுவாகச் சுயநல அடிப்படையில் அமைகின்றது. ஆனால் கடமை பொதுநலம் பொதிந்தது. கடமையை ஆற்றுபவரும் நிறைவு கொள்கிறார்; அவ்வாறு கடமைகள் சரியாகச் செய்யப்படு வதால் பிறரும் நன்மை பெறுகிறார்கள்.
ஒருவரின் நல்ல வார்த்தைகளை மற்றவர் கேட்டு நடப்பது ஒரு தாழ்வான விடயமன்று. அதை அடிமைத்தனம் என்று எண்ணுவது அறிவுடைமையும் அன்று. அந்த நல்ல வார்த்தைகள் கணவனிடம் இருந்து வரலாம்; மனைவியிடம் இருந்தும் வரலாம். மனைவியிட மிருந்து வந்த வார்த்தைகளை, கேவலம் மனைவியின் சொற்களை நான் என்ன கேட்பது என்று அலட்சியம் செய்யும் கணவன், ஓர் அறிவாளியாக இருக்க மாட்டான். கணவனிடமிருந்து வருகின்ற, வார்த்தைகள், எப்போதும் ஆதிக்கப் பாங்கானவை என்று கொண்டு, கொதிப்படைந்து, அவற்றை உதாசீனம் செய்யும் மனைவி ஒரு குடும்ப விளக்காக அமைய மாட்டாள். ஒரு குடும்பத்தில், வார்த்தைகள் எங்கிருந்து வருகின்றன; யாருடைய வாயிலிருந்து உதிர்கின்றன என்ப தல்ல முக்கியம். வார்த்தைகளின் நல்ல பண்பும், வாழ்விக்கும் தன்மை யும்தான் முக்கியம். நல்ல வார்த்தைகளை, கணவன், மனைவி, மூத்
135

Page 74
தோர், இளையோர் ஆகியோரில் யார் கூறினாலும், பேதம் காட்டாது ஏற்று நடக்கும் பண்புள்ள உறுப்பினர்களைக் கொண்ட குடும்பம், ஒரு நல்ல குடும்பம், புனிதமான குடும்பம், முற்போக்குக் குடும்பம் ஆகும்.
முற்போக்கு என்றால் முரண்பாடுகளை வளர்ப்பது அன்று. , முரண்பாடுகளை வராமல் தடுப்பதும், அவை காணப்படும் பட்சத்தில் சமாதானமான முறையில் நீதியின் அடிப்படையில் தீர்வு காண்பதும் முற்போக்கு ஆகும். முற்போக்கில், உடன்பாட்டு அணுகு முறைகள் தான் இடம் பெற வேண்டும். முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்பதோ, பழிக்குப் பழி, இரத்தத்துக்கு இரத்தம் என்ற கோட் பாடுகளோ மிகவும் பழைமையானவை. அநாகரிகமானவை : எதிர்மறை அணுகுமுறைகள் அவை பிற்போக்குச் சிந்தனை கள். எவை மனித குலத்தை வாழ்விப்பனவாக அமைகின்றனவோ; எவை நற்பாங்கான வளர்ச்சியையும்; முன்னேற்றத்தையும் மக்களுக்கு நல்குகின்றனவோ, எவை ஏற்றத்தாழ்வுகளையும், முரண்பாடுகளையும் பேதங்களையும் களைந்து; சமூக நீதி, நடுவு நிலைமை, அமைதி, சத்தியம், தர்மம், சமத்துவம், மானுட நேயம் ஆகியவற்றை உலகில் நிலைபெறச் செய்ய உதவுகின்றனவோ அவையே முற்போக்குச் சிந் தனைகள், செயல்கள் ஆகும். ۔
136

33. நிறைவாழ்வு
இப்பூமியில் மனிதர்களாகச் சீவிப்பதற்குச் சில அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டியுள்ளது. அவையும் வேண்டற் பாலனவே. காற்று, நீர், உணவு, உடை, இருப்பிடம் என்பவற்றை மனிதனின் அடிப்படைத் தேவைகள் ஆகக் குறிப்பிடுகின்றனர். உயிர்
வாழ்விற்கு இவை அனைத்தும் தேவைதான். மனிதன் உயிர் வாழ்
வதற்கு மாத்திரம் பிறந்தவன் அன்று. அவன் உயர்வான வாழ்க்கையை வாழ்வதற்கென்றே படைக்கப்பட்டவன். மனித
வாழ்க்கைக்கு உயர் குறிக்கோள்கள் உண்டு. அக்குறிக்கோள்களை அடைவதற்குரிய வழி வகைகள், செயன்முறைகள் யாவும் பெரியோர் களால் வகுத்துத் தரப்பட்டுள்ளன.
மனிதனின் உயிர் வாழ்க்கை எத்துணை முக்கியமானதோ,
அதனிலும் பன்மடங்கு முக்கியமானது Lனிதனின் உயர் வாழ்க்கை.
மனிதனின் உயர் வாழ்க்கைக்கு அடிப்படையாக அமைவன யாவை, என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உண்மை, நீதி, அன்பு, கருணை, பிறரில் கரிசனை, எவர்க்கும் உதவும் மனப் பண்பு, தர்மம், நேர்மை, சுதந்திர உணர்வு, அமைதி முதலிய உயர் மனிதப் பண்புகள்தான் மனிதனின் உயர்தர வாழ்விற்கு அடிப்படைகளாக அமைகின்றன. இத்தகைய மனிதப் பண்புகள் பெறுமதி மிக்கவை; மதிப்பில் உயர்ந்தவை. எனவே அவற்றை மனித விழுமியங்கள் என் கின்றனர்.
மனிதனின் வாழ்க்கைக் குறிக்கோள்கள் உண்ண உணவும், உடுக்க உடையும், உறைவதற்கு வீடும், பொருளாதார சுபீட்சமும், உயர்ந்த பதவிகளும் பெற்றுக் கொள்ளுவதோடு நிறைவு செய்து கொள்ளப்பட்டு விடுகின்றன என்று எண்ணுவது தவறு. இவை அனைத்தும் சரிவரப் பெற்றும், வாழ்க்கையில் திருப்தி கண்டவர்கள் உள்ளனரா? மன நிம்மதி அடைந்தவர்கள் யாரும் உண்டா? குறையே இல்லாதவர் களைச் சந்திக்க முடியுமா? இவற்றிற்குப் பதில் ‘இல்லை’’, ‘இல்லை' என்பதுதான். இத்தகையோர் குறை வாழ்வு உடையோர். இவர்கள் நிறை வாழ்வு வாழ்வதற்கு மேலும் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளது. மனித வாழ்வு பூரணத்துவம் பெறுவதற்கு, உயர் மனிதப் பண்புகள் எனும் மனித விழுமியங்களின் தேவை பூர்த்தி செய்யப்பட வேண்டும். மனிதப் பண்புகளை விருத்தி செய்யாமல்
137

Page 75
புறக்கணிக்கப்பட்ட நிலையில், மனித வாழ்வு உயர்வு பெறமாட்டாது; முழுமை பெறவும் முடியாது என்பதை மனத்தில் நன்கு பதித்துக் கொள்ளுதல் வேண்டும்.
மனிதகுல வாழ்விற்கு வழிகாட்டிய சமயப் பெரியார்கள், தத்துவ ஞானிகள், பேரறிஞர்கள், முனிவர்கள் என்போர் யாவரும் மனிதர் களின் உயர் வாழ்க்கைக்குத் தேவையாக விளங்குகின்ற அறங்கள், நல்லொழுக்கம், உண்மை, நீதி, அன்பு என்பன பற்றியே எடுத்துரைத் தார்கள்; அவற்றை அடைவதற்கே வழிகாட்டினார்கள். மக்கள் செம்மை வாழ்வினை வாழ்வதன் மூலமே உய்வு, உயர்வு, பூரணத்துவம் பெற முடியுமென்று கூறினார்கள். அப் பெருந்தகைகள், உணவு, உடை, உறையுள், பொருளாதார சுபீட்சம், உயர் பதவிகள், புகழ், கீர்த்தி, பட்டங்கள் பெற்றுக் கொள்வது எப்படி என்பதை விளக்கும் நூல்களை எழுதி வைத்துவிட்டுச் செல்லவில்லை. அவற்றைப் பற்றிப் பிரசாரங்களையோ, போதனை நிலையங்களையோ நடத்தியதாகச்
சான்றுகளோ, ஆதாரங்களோ இல்லை.
சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், இந்து சமய ரிஜிகளும் முனிவர்களும்; புத்தர் பகவான், மகாவீரர், இயேசுபிரான், நபிகள் நாயகம் ஆகியோரும்; அருளாளர்களும், ஆத்மீக ஞானிகளும்; சோக் கிறற்றீஸ், பிளேட்டோ போன்ற கிரேக்க தத்துவ ஞானிகளும்; , அண்மையில் மகாத்மா காந்தியடிகளும் மனிதனின் உயர் பண்புத் தேவைகள் பற்றியே சிந்தித்தார்கள், எடுத்துக் கூறினார்கள், அவற்றை நிறைவு செய்யும் மார்க்கத்தை விளம்பினார்கள். தேவையேற்பட்ட பொழுது, நீதிக்கான போராட்டங்கள், தர்மப் போராட்டங்கள் நிகழ்த் தப்பட்டன. நீதியும் அறமும் வெல்லும்; அநீதியும், அதர்மமும் அழிந்து போகும் என்ற பேருண்மை நிலை நிறுத்தப்பட்டது. இந்த அடிப் படையிலேயே சமய நூல்கள், அற நூல்கள், இதிகாசங்கள், புராணங் கள், இலக்கியங்கள் என்பன எல்லாம் தோன்றின. நீதிக்கும், அறத் திற்கும் புறம்பானவற்றைப் பற்றிய நூல்கள், அண்மைக் காலம் வரை, எழுதப்படாத ஒரு உயர் மரபு வளர்ந்து வந்தது. மனித விழுமியங்கள் தான் நூல்களின் கருப் பொருட்களாக விளங்கின. விபரீத புத்தியினால் உந்தப்பட்டு, மனித விழுமியங்களைப் பொருளாகக் கொள்ளாது, பொருளற்றவற்றைப் பொருளாகக் கொண்டு நூல்கள் வெளிவரத் தொடங்கிய பின்னரும், பல்வேறு தொடர்புச் சாதனங்கள் ஊடாக அந்த இழிவான செய்திகள் மக்களைச் சென்றடையத் தொடங்கிய பின்னரும்தான் நாச காலம் உதயமானது. வைரஸ் கிருமிகள் போல எல்லோரையும் தொற்றியும் பற்றியும் கொண்டன. மனித விழுமியங்
38

களை மீளவும் கொண்டு வந்து, உட் செலுத்துவதன் மூலம் ஆபத்தான வைரஸ் கிருமிகளை அழிக்க முடியும். அவ்வாறு செய்யாவிடின் அழிவு நிச்சயமாகிவிடும் என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.
பண்டு தொட்டுக் கற்பிக்கப்பட்டு வந்த கல்வியும், அண்மைக் காலம் வரை மனித விழுமியங்கள் சார்ந்த கல்வியாகவே விளங்கி வந்தது. மனித விழுமியக்கல்வி மறுக்கப்பட்டும், மறக்கப்பட்டும் வரு கின்ற தற்காலத்தில் சமூகத் தொல்லைகளும், நடத்தைப் பிறழ்வு களும், ஒழுக்கச் சீர்கேடுகளும், கலாசாரச் சீரழிவுகளும், அமைதி யின்மையும் உலக சமூகங்களில் காணப்படுதல், ஆச்சரியத்திற்கு உரிய தன்று. விழுமியங்கள் சார்ந்த கல்வியைக் கற்ற காலத்தில் மக்கள் பொருளாதார பலம் குன்றியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் சமூகங்களில் அமைதி நிலவியது; சாந்தி, சமாதானம், மனித நேயம் என்பன ஒங்கியிருந்தன. மக்கள் மகிழ்ச்சியாக, பரஸ்பர ஐக்கியத்துடன் வாழ்ந்தார்கள். ஆனால், இன்றைய காலகட்டங்களில், பொருளாதார பலமும், விஞ்ஞான தொழில்நுட்ப அதிதீவிர வளர்ச்சியும், மனிதன் மனிதப் பண்புகளுடன் வாழுகின்ற பலத்தை இழக்கச் செய்து வருகின் றன. மனிதர்களுக்கிடையே இருக்க வேண்டிய பரஸ்பர நல்லுறவு, நம்பிக்கை, பிணைப்பு, மனித நேயம் என்பன இன்று காணமுடியாத நிலையில் உள்ளன.
அன்புக்காகத் தவிக்கும் உள்ளங்களைக் காண்கின்றோம். மறு புறத்தில் அன்பினை வழங்கத் தயாராக இல்லாத கொடுமையாளரைக் காண்கிறோம். ஏமாற்றுப் பேர்வழிகள் எத்தனை பேர்; வெளிநாடு களுக்குக் கூட்டிச் செல்லுகிறோம், திருமணம் செய்கிறோம் என்று கூறிப் பணத்தைக் கறந்து கொண்டு தலைமறைவாகி விடுபவர்கள் எத்தனை பேர்? எங்கும், எதிலும் ஏமாற்று வித்தைகள். இந்த ஏமாற் றுப் பேர்வழிகளிடம் அகப்பட்டு, ஏமாந்து, கைப் பொருளையும் இழந்து, மானம் மரியாதையையும் இழந்து, மதியையும் இழந்து, உள்ளம் கலங்கி, கண்ணிர் வடித்தே காலத்தைக் கழிக்கின்ற அபலைகள், அநாதரவாளர்கள் எத்தனை பேர்? எவரையுமே நம்பமுடியாத நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
யாரை யார் ஏமாற்றுகின்றனர்? ஒரு மனிதனை, மற்றோரு மனிதன் ஏமாற்றுகிறான். இருவரும் ஒரே மனித குலத்தைச் சேர்ந்த வர்களே. சற்று நிதான புத்தியுடன், ஒரு கணம், தனக்குத்தானே, ‘நான் யாரை ஏமாற்றுகிறேன்? என்னைப் போன்ற, என் குலத்தைச் சார்ந்த ஒரு மனிதனைத் தானே ஏமாற்றுகிறேன். இது சரியா, முறையா, தருமமா? ஏமாந்தவன் எவ்வளவு துன்பப்படுவான், எத் துணை கஷ்டங்களுக்குள்ளாவன்? அவனின் சாபம் என்னைச் சும்மா
139

Page 76
விட்டு விடுமா? பின்னடியில் என்னை வந்து சூழும் அல்லவா? நானும் அல்லற்பட வேண்டி நேரிடும் அன்றோ?' என்று சில வினாக்களை ஏமாற்ற விழைபவன் கேட்டுப் பார்ப்பானேயாகில், நிச்சயம் இந்த ஈனத் தொழிலில் இறங்காமல், தன்னைத் தவிர்த்துக் கொள்ளமுடியும். பிறரை ஏமாற்றுபவன், உண்மையில் தன்னைத் தானே ஏமாற்று கிறான் என்பதை உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.
மனிதனை மனிதன் ஏய்த்துப் பிழைப்பது தர்மம் ஆகாது. சுரண்டி வாழும் முறை, மனித வாழ்விற்கு உரியதன்று. நான் மனிதன்; எனவே மனித இயல்புக்கும், மனிதத் தன்மைக்கும் மாறான எதையும், பிற மனிதர்களுக் கெதிராக நான் செய்வதில்லை என்ற ஒரு நிலைப் பாட்டினை உறுதி மொழியாக ஒவ்வொரு மனிதனும் எடுத்து வாழ் நாள் பூராகவும் கடைப்பிடிக்க வேண்டும். ஒரு மனிதன், இன்னொரு மனிதனுக்கு நீட்டும் கரங்கள் நேசக் கரங்களாக விளங்க வேண்டுமே தவிர, மோசக் கரங்களாக அவனை முட்டக் கூடாது. இன்று நேசக் கரங்கள் எவை, மோசக் கரங்கள் எவை என்று இனங் கண்டு கொள்ள முடியாத நிலையில் மனிதர்கள் தடுமாற்றம் அடைகிறார்கள். எந்தப் புற்றுக்குள் எந்தப் பாம்பு உள்ளது என்று தெரிவதில்லை. வேடங்கள்
மலிந்து விட்டன.
ஆசாட பூதிகள், உருத்திராட்சப் பூனைகள் மேலாண்மை செய் கின்றனர். ‘அண்டங் காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரிய வில்லை’ என்ற கவிஞரின் கலக்கம், ஒவ்வொரு மனிதனிலும் துலக்கம்
பெறுகிறது.
உள்ளங்களில் சுயநலம், உதடுகளில் நஞ்சுருவில் பேச்சு, செயல் களில் வஞ்சகத் தன்மை-மனிதனின் சாராம்சம் இதுதான். மணி தனைச் சிறுமைப்படுத்த மனிதனே கங்கணம் கட்டிவிட்ட பரிதாப நிலை, இன்று காணப்படுகிறது.
மனிதனின் பெருமையை, எந்த வடிவத்திலும் சிறுமைப்படுத்த, எவருக்கும் உரிமை கிடையாது. அனுமதிக்கவும் முடியாது. எனவே, மனிதகுல மீட்சிக்கு மனிதர்கள் யாவரும் பாடுபட்டு உழைக்கவேண்டும். 15ணித விழுமியங்களை மனித வாழ்க்கையில் மறுபடியும் மலர்ச்சிபெறச் செய்வதன் மூலமே இது சாத்தியமாகும்.
140

34. மன அடக்கம்
சிந்தையில் தோன்றுகின்ற எண்ணங்கள் ஏராளம். இந்த எண்ணங் களில் நல்லனவும் உண்டு; தீயனவும் உண்டு. எண்ணங்களின் தன்மை யைப் பொறுத்தே மனிதனின் குண இயல்புகள் அமைந்து விடுகின்றன. மனிதனின் செயல்களும் அவ்வாறே வந்து விடுகின்றன.
இத்தகைய எண்ணங்களை மனதில் தோற்றுவிப்பவன் மனிதன் தான். எண்ணங்களைத் தோற்றுவிக்கும் மனிதனால், நல்ல எண்ணங் களை மாத்திரம் தோற்றுவிக்கவும், தீய எண்ணங்களைத் தோற்று விக்காமல் தவிர்க்கவும் முடியுமா? முடியாதா? முடியும். இந்த மகத் தான திறன் மனிதனிடம் இயல்பாக உண்டு. நல்லது, தீயது எனப் பிரித்தறியும் திறன் மனிதனிடம் இருக்கிறது. அந்த வகையில், நல்ல எண்ணங்களைத் தம் சிந்தையில் எழச் செய்யும் ஆற்றலும் மனிதனிடம் உண்டு.
மனிதன் தனது எண்ணங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வருவதன் மூலம்; அவற்றைச் சரிவரக் கண்காணித்து நிருவகிப்பதன் மூலம்; நன் முறையில் நெறிப்படுத்துவதன் மூலம், செம்மையான எண்ணங்களை உருவாக்கலாம். கெட்ட எண்ணங்
களைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியும்.
மனம் ஆனது, மனிதனின் இடத்தை எடுத்துவிட அனுமதிக்கப் படல் ஆகாது. அவ்வாறு அனுமதித்தால், மனிதன் மறைந்து விடு கிறான். மனிதன் தன் தலைமையை இழந்து விடுகிறான். மனம் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிடும். அப்பொழுது மனிதன், மனத் தின் ஆணைப்படி நடக்க வேண்டி நேரிடும். மனத்திற்குக் கொஞ்சம் இடம் கொடுத்தால் போதும், மனிதனின் தோளில் அமர்ந்துகொண்டு செவியைக் கடிக்கத் தொடங்கிவிடும். “குட்டி நாய்க்கும், குழந்தைப் பிள்ளைக்கும் அதிகம் இடங் கொடுக்கக் கூடாது' என்பார்கள். அவற்றுடன் மனத்தையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, மனக்கட்டுப்பாடு, மன அடக்கம், மனிதர்களுக்கு மிக முக்கியம் என் கிறார்கள். "மனம் போன போக்கிலே போக வேண்டாம்' என்று பெரியோர்கள் எச்சரிக்கைச் சமிக்ஞை தந்துள்ளனர். எச்சரிக்கைச் சமிக்ஞைகள் யாவும் நமது நன்மைக்காகவே உள்ளன என்பதை நம்மில் பலர் மறந்து விடுகிறார்கள்.
141

Page 77
மனிதன் பலம் உள்ளவனாக இருப்பதும், பலவீனன் ஆக இருப் பதும், பொதுவாகக் காணப்படுகின்ற நிலைதான். இந்நிலைகளுக்கும் மனிதன்தான் காரணம் ஆகின்றான். அதிலும், மனிதனின் மனம்தான் காரணம் என்றால், அதுவே சரியான நிலைப்பாடு எனலாம். அதில் தவறில்லை. மனம் பலமாக இருக்க வேண்டுமானால், மனக் கட்டுப் பாடு இருத்தல் அவசியம். கட்டுப்பாடு இல்லாத மனம், பலவீனமான மனம் ஆகி விடுகின்றது. மனம் பலவீனம் ஆகும்போது முழு மணி தனுமே பலவீனன் ஆகி விடுகின்றான். கட்டுமஸ்தான உடல் தோற்றம் இருந்து விட்டால் மாத்திரம் ஒருவன் பலம் பெற்று விடுவதில்லை.
கண், வாய், மூக்கு, செவி, உடல் என்பனவும், மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பனவும் மனிதனின் கருவி கரணங்கள் மாத் திரமே. அவை மனிதனுக்கு உதவும் சாதனங்களே தவிர, மனிதனை ஆளுகின்ற எசமான்களாக வர விடக் கூடாது. அவற்றை அந்நந்த இடங்களில் வைத்து உரிய முறையில் கட்டுப்படுத்திப் பரிபாலனம் செய்ய வேண்டியது மனிதனின் பொறுப்பு ஆகும்.
சுய கட்டுப்பாட்டின், ஆரம்பம், அடித்தளம் யாவுமே மனக் கட்டுப்பாடுதான். இதனைச் சரியாகப் புரிந்து கொள்ளும் மனிதனே, தனக்கே தான் விதித்துக் கொள்ளும் பல்வேறு கட்டுப்பாடுகள் நிலைக் கவும், நீடிக்கவும் வழி சமைக்கின்றான் எனலாம்.
மனக் கட்டுப்பாடு தரும் பெரும் விளைச்சல்தான் மன அமைதி, மனச் சாந்தி, மனத் தூய்மை ஆகும். இந்த நிலையை அடைந்த ஒருவன் கோபம் கொள்ளமாட்டான், எனவே, பாவஞ் செய்யச் சந்தர்ப்பம் இல்லை. ஆசை கொள்ள மாட்டான்; அதனால் அவனிடம் கவலைகள் இருக்க நியாயம் இல்லை. தோல்வியடைய மாட்டான், அதனால் துன்பம், துயர் ஏற்பட வாய்ப்புக்கள் இல்லை.
மன அமைதி பெற்ற மனிதன், தானும் நல்லபடி வாழ்கிறான், எடுத்த கருமங்களில் வெற்றியடைகின்றான். அவ்வாறே, ஏனையோரை யும் வாழ விடுகிறான்; அதனால் வாழ்விக்கிறான். எல்லோருடைய அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும், நல்லெண்ணத்தையும் பெற்றுக் கொள்கிறான். சமூகத்தில் உயர்ந்து நிற்கின்றான்.
மனிதன் சுயகட்டுப்பாட்டில், நீதியில்,ஒழுங்கில், நேர்மையில், நடுவு நிலைமையில் உயர்ந்து நிற்கும்போது, அவன் மேற்கொள்ளும் எந்தத் தொழிலிலும், முன்னேறுவதைக் காண்பான். ஒரு சாதாரண சிறிய வியா பாரி தன்னிலும், கட்டுப்பாட்டுடனும் நாணயமாகவும் நயமாகவும் வியா 1.ாாத்தைச் செய்வானாகில் அவனிடம் பொருட்களைக் கொள்வனவு

செய்ய மக்கள் பெருமளவில் முன்வருவர். வியாபாரம் பெருக வழி ஏற்படும். 'வியாபாரத்திற்கு அழகு விளம்பரம் செய்தல்' என்பர். ஆனால், சுய கட்டுப்பாடும், சத்தியமும், ஒழுங்கும் உயர்ந்து நிற்கும் போது, வியாபாரத்திற்கு வேறு விளம்பரம் தேவையில்லை. அதுவே மிகச் சிறந்த விளம்பரம், ஆகி விடுகின்றது. இவ்வாறே, ஒவ்வொரு துறையிலும் மனிதர்கள் உயர்வதற்கும் வளர்ச்சியடைவதற்கும் சுய கட்டுப்பாடு உறுதுணையாக உள்ளது.
சக்தியும், ஆற்றலும் நிறைந்தது மனிதனின் இளமைப் பருவம். வேகமும், வேட்கையும் அலைமோதும் காலமும் அதுவே. வாழ்க்கை யின் ஆயத்தப் பருவம், ஆரம்பப் பருவம் என்று இளமைப் பருவத்தைக் கூறுகின்றனர். மிக அவதானமாக இருக்க வேண்டிய காலப் பருவம் இது. இளமைப் பருவம் கட்டுப்பாட்டுடன் கூடியிருந்து விட்டால், மனிதனின் முன்னேற்றம், உயர்வு, மகிழ்ச்சி என்பன உறுதியாகிவிடும். வாழ்வு முழுவதும் இன்பமயமாக இருக்கும். அற்ப சுகங்களை நாடி, கட்டுக்கடங்காத காளை போல, தான்தோன்றித்தனமாக, எவரையும் எதனையும் பொருட்படுத்தாது; கண்டதே காட்சி, கொண்டதே, கோலமாக, இளமை முறுக்கோடு நடந்து கொள்பவர்கள், இளமை யைப் பாழடித்தவர்களாக, வாழ்க்கை முழுவதும் துன்பச் சுமையைச் சுமப்பவர்களாக வந்துவிடுகின்றனர். எனவே, வாழ்வு, சுவையுள்ள தாக, இன்பம் நிறைந்ததாக, வாழ்நாட் பூராவும் அமைவதற்கு, இளமையில் கட்டுப்பாடு தேவை என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ளுதல் அவசியம். இது சுய கட்டுப்பாடாக இளமையில் வளர்ந்து வருமானால், அதற்கு ஈடு இணையாக வேறெதுவும் இருக்கமாட்டாது. பயத்தினால், புற அழுத்தங்களினால் ஏற்படுத்தப்படும் கட்டுப்பாடு, போலிக் கட்டுப்பாடாக அமைந்து விடுகிறது. ஆசிரியருக்குப் பயந்தோ, பெற்றோரின் தண்டனைகளுக்கு அஞ்சியோ, பிள்ளைகள் மேற்கொள் ளும் கட்டுப்பாடான நடத்தைகள், அவர்களுக்கு முன்னால் ஒழுங் காகவும், அவர்கள் இல்லாதவிடத்தில் அக் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு வேறு விதமாகவும் நடந்தும் கொள்ளும் நிலையைக் காண் கிறோம். எனவேதான், சுய கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது. பிள்ளைகளை இத்தகைய நல்ல நிலைக்குப் பெரியவர்கள் இட்டுச் செல்லுதல் அவசியம். கொட்டிவிட்ட பால் எவ்வாறு திரும்பவும் பெற்றுக்கொள்ள முடியாதோ, அப்படியே இழந்து விட்ட இளமையை யும் மீளக் பெற்றுக் கொள்ளுதல் முடியாத காரியம்.
சிற்றின்ப விடயங்களில் மனக் கட்டுப்பாடு இல்லாதவர்கள், தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கிறார்கள். ஆண் பெண் உறவு என்பது புனிதமான ஒரு கைங்கரியம். காதல் இருவர் கருத்து ஒருமித்து ஆதரவு பட்டதே இன்பம் ஆகும். அத்தகைய தூய வாழ்க்கையை,
143

Page 78
இல்லற வாழ்க்கையை, நெறிப்படியும், முறைப்படியும் அளவறிந்து வாழ வேண்டும். மிருக உணர்ச்சிகளை மடக்கத் தெரிந்தவன்தான் மனிதன். இங்குதான் சுய கட்டுப்பாடு அவனை மனிதனாக வாழ் விக்கிறது.
மனிதன் தனது வருமானத்திற் கேற்றபடி செலவுகளைக் கட்டுப் படுத்த வேண்டும். விரலுக்குத் தக்க வீக்கம் என்பார்கள். உண்பதில் கட்டுப்பாடு வேண்டும்; உடுப்பதில் கட்டுப்பாடு வேண்டும்; உறங்கு வதில் கட்டுப்பாடு வேண்டும்; ஏன் விழித்திருப்பதிலும் கூடக் கட்டுப் பாடு தேவை. பிறரோடு பேசுவதில், பழகுவதில், உறவு கொள்வதில் எல்லாம் கட்டுப்பாடு வேண்டும்.
உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு பேணாதவர்கள் நோய்வாய்ப் படுகிறார்கள். சுவையாக இருக்கிறது என்பதற்காக உணவுகளை வகை தொகையின்றி உண்டால் உடல்நிலை பாதிப்படையத்தான் செய்யும். வயது முதிர்ந்தவர்களும், பட்டுத் தெளிந்தவர்களும் கூட, உணவைப் பொறுத்தளவில் கட்டுப்பாட்டினைச் சுயமாக மேற்கொள்ளச் சிரமப் படுகிறார்கள்.
மனத்தில் எழுகின்ற ஆசைகளையும் அவற்றின் தூண்டுதல்களை யும் முற்று முழுதாகத் தவிர்த்துக் கட்டுப்பாட்டுடன் வாழ்வது, தற் காலச் சூழ்நிலையில் அத்துணை எளிதன்றுதான். இருப்பினும், சிறிய அளவிலேனும் முயற்சிகளை மேற்கொள்ளாது மக்களில் பலர் இருக் கிறார்கள் என்பதுதான் விசனத்திற்குரியதாக உள்ளது. மனிதன் மேம் பட்ட உயிரினத்தைச் சார்ந்தவன். முடியும் என்று தன்னம்பிக்கையோடு செயற்பட்டால் மனிதனுக்கு முடியாதது என்று ஒன்றில்லை. வாழ்க்கை போராட்டம்தான். மனத்தோடு சதா போராடி மனத்தை வெற்றி கொள்பவன்தான் மனிதனில் உயர்ந்து விளங்குகின்றான். அத்தகைய மனக் கட்டுப்பாட்டுடன் உள்ள மனிதன்தான் உலகில் சாதனைகளைப் புரிகின்றான்.
4

35. நடுவுநிற்றல்
சிந்தனை, பேச்சு, செயல் என்பவற்றில் நடுவு நிலைமை எனும் மனிதப் பண்பினைப் பேணுதல் நல்லொழுக்கம் ஆகும். இவ்வாறு நடந்து கொள்பவர்கள் சான்றோர்கள். மிக எளிமையாக விளக்குவ தானால், நடுவு நிலைமை என்றால் பக்கம் சாராமை என்றும் எதிலும் தீவிரமாகவும் கண்மூடித்தனமாகவும் தம்மை ஈடுபடுத்திக் கொள் ளாமை என்றும் கூறலாம். நல்ல கல்வியைக் கற்பதனால் எய்தப்படு கின்ற பயன், நடுவு நிலைமை எனும் நற்பண்பினைப் பெறுதலும் அவ்வாறு ஒழுகுதலும் ஆகும்.
'' . . . . . . . . . . . . . . . . . . . . . . நெஞ்சத்து நல்ல யாம் என்னும் நடுவு நிலைமையால் கல்வி யழகே அழகு.'
என்கிறது நாலடியார். எல்லா வகை அழகுகளுக்குள்ளும் கல்வியழகே ஒருவர்க்கு மிகுந்த அழகையும் சிறப்பையும் தருவது எதனால் என்று ஆராயின், நெஞ்சத்தில், வாக்கில், செய்கையில் ஒருவரை நடுவு நிலைமையில் நிற்கக் கல்வி துணை செய்வதால் ஆகும் என்பது தெளிவாகும். கல்வி கற்றும் நடுவு நிலைமையில் நிற்காதவர்கள் கல்லாதவர்களே.
"சமன் செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க் கணி.'
சமநிலை, ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் இருக்க வேண்டியது அவ சியம். தன்னைத் தான் சமன் செய்து, தன்னை முதலில் சீர் செய்து கொள்ளுதல் சமநிலையை ஏற்படுத்துவதற்கு முதற்படியாகும். தன் னைச் சமன் செய்தல் என்பது தன்னைத் திருத்துதல், சீர் செய்தல் ஆகும். இவ்வாறு தன்னைச் சமன் செய்யாது, பிறரைச் சமன் செய்ய முற்படக் கூடாது. துலாக் கோல் அல்லது தராசு அதன்மீது வைத்துள்ள பொருளை நிறுத்துச் சரியான நிறையை இவ்வளவு என்று சுட்டிக் காட்டுவதற்கு முன், துலாக் கோலையோ தராசையோ சமன் செய் வதை நாம் பார்க்கிறோம். நிறுக்கும் கருவி சமன் செய்யப்படா விட்டால், அதில் நிறுக்கப்படும் பொருளின் நிறையும் சரியாக அமை யாது. தன்னைச் சமனாகச் சீர் செய்து கொண்டு பொருளைச் சீர்
145

Page 79
தூக்கிக் காட்டும் துலாக் கோல் போல அமைத்து ஒரு பக்கம் சாயாதிருத் தல், அதாவது நடுவு நிலைமையோடு இருத்தல், சான்றோரின் வியத் தகு பண்பு ஆகும்.
'நடுவுநின் றார்க்கன்றி ஞானமும் இல்லை
நடுவுநின் றார்க்கு நரகமும் இல்லை நடுவுநின் றார்நல்ல தேவரும் ஆவர் நடுவுநின் றார்வழி நானும்நின் றேனே."
என்கிறார் திருமூலர். உலக நீதியுடன் ஒழுகுதல்; மனித தர்மங்களைக் கடைப்பிடித்தல்; இன்னார் இனியவர் என்று ஒரு தலைப் பட்சமாகத் தன்னை இணைத்துக் கொள்ளாமை எவரையும் சமமாக மதித்தல் ஏற்றத்தாழ்வு, வேற்றுமை, பேதம் பாராட்டாமை; தீர்ப்பு, தீர் மானங்கள் வழங்கும்போது விருப்பு வெறுப்பின்றிச் செயல்படல் என் பன நடுவு நிற்போரின் இலட்சணங்கள் ஆகும். இவர்கள் உலகினை ஒன்றாகக் காண்பவர்கள்; பிரித்துப் பார்க்கத் தெரிந்து கொள்ளாதவர் கள். இவ்வாறு வாழ்பவர்களே உண்மை ஞானம் படைத்தவர்கள். சிறந்த ஞானிகள் எனப்படுபவர்கள். ஞானிகள் உலக வாழ்க்கையைத் துறந்தவர்கள், துறவிகள் ஆக இருப்பவர்களே, என்று பலர் எண்ணு கிறார்கள். அது தவறு. ஞானம் பெறுவதற்கு வாழ்க்கையைத் துறக்கத் தேவையில்லை; சமூகத்தை விட்டு ஓடி விடவும் தேவையில்லை. அவ் வாறு செய்தல் சுயநலம் ஆகும். சமூகத்திலே வாழ்ந்து, சமூகத்திற்கு நடுநிலையில் நின்று தொண்டுகள், பணிகள் புரிபவர்கள்தான் உண்மை யாண ஞானிகள் உத்தமமான மனிதர்கள். ஒவ்வொருவரும் மனிதத் தன்மைகளோடு மனிதராக வாழ்ந்தால் அதுவே பெரும் பேறு ஆகும். நடுவுநின்று வாழ்வோர்க்கு எவ்வித துன்பங்களும், இடர்களும் வாராது. அவர்களால் பிறருக்கும் எவ்வித தீங்குகளும் இழைக்கப்படமாட்டாது. அவ்வாறாயின் இன்றைய குழப்பங்களுக்கும், அமைதியின்மைக்கும், தீயனவற்றின் பெருக்கத்திற்கும் என்ன காரணம்? என்ற வினா எழு கின்றது.
இவ்வினாவிற்கு விடை மிக எளிது. சமூகத்தில் வாழுகின்ற மக்கள் இன்று நடுவு நிலையில் இருந்து தவறிவிட்டார்கள்; சமூக நீதியைக் கைவிட்டுவிட்டார்கள்; தனக்கொரு நீதி, பிறர்க்கொரு நியா யம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது; எவரையும் நம்ப முடிவதில்லை, பக்கம் சாரும் இயல்பு அதிகரித்து விட்டது. பொது வாழ்விலும் சரி, குடும்ப வாழ்விலும் சரி ஊழல்களும், பாரபட்சங்களும் மலிந்து விட் டன. உலகம் சமநிலையை இழந்து தத்தளிக்கின்றது. இதுவே, எங்கும்
146

பரவலாகக் காணப்படுகின்ற அமைதியின்மைக்கும், அத்துமீறிய அடா வாடித்தனங்களுக்கும், சமூகச் சீர்கேடுகளுக்கும், துன்பங்கள் துயரங் களுக்கும் காரணம் ஆகும்.
“நடுவு நில்லாது இவ்வுலகம் சரிந்தது. . . . . . . . . . 莎 然
என்று உலகின் குழப்பத்தின் காரணத்தை எப்பவோ திருமூலர் கூறி விட்டார். உலகம் நிமிர்ந்து சமநிலையில் நிற்பதற்கு, தேவையானது நடுவு நிற்றலேயாகும்.
எல்லோராலும் நடுவு நிலைமை கைக்கொள்ளப்படுதல் அவசியம். சமூகத்திலும், நாட்டிலும் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் இருப்பவர் கள், தலைவர்கள், மற்றும் சமூகப் பணியாளர்கள் ஆகியவர்கள் நடுவு நிலைமை என்னும் பண்பினைக் கண்ணுங் கருத்துமாகக் கடைப் பிடிக்க வேண்டும். எவரையும் பாதிக்கக் கூடிய வகையில் இவர்களின் எந்தச் செயல்பாடும் அமைந்துவிடக் கூடாது. இன, மத, சாதி, பால், நட்பு, குடும்பம் என்ற சக்திகளால் ஈர்க்கப்படாதும், அவற்றின் செல் வாக்குகளுக்கு உட்படாமலும் இருத்தல் நடுவு நிலைமையைப் பேணு தலுக்கு முன் நிபந்தனையாகும். சுய விருப்பு, வெறுப்பு; காய்தல், உவத்தல்; வேண்டியவர், வேண்டாதவர் என்னும் உணர்வுகளுக்கு அடிமைப்படக் கூடாது. எந்த விதத்திலும் பிறருக்குக் கடமைப்படுதல் தவிர்க்கப்படல் வேண்டும். பரிசில்களோ, பாராட்டு வைபவங்களோ, வரவேற்பு உபசாரங்களோ, மாலை மரியாதைகளோ அவற்றை ஏற்றுக் கொள்பவர்களின் நடுவு நிலைமையை ஏதோ விதத்தில் பாதிக்கத்தான் செய்யும். எவற்றையோ எதிர்பார்த்துத்தான் இவை செய்யப்படுகின் றன. இந்த எதிர்பார்ப்புக்களில் பெரும்பாலானவற்றை நிறைவு செய்வ தானால், நடுவு நிலைமையினின்றும் தவறவேண்டி வரும். எனவே தான், நடுவு நிலைமையில் நிற்க விரும்புபவர்கள் உபசாரங்களை ஏற்கக் கூடாது. "நக்குண்டான் நாவிழந்தான்' என்பது பழமொழி. ஆம். நாவை மட்டுமல்ல, நடுவு நிலையையும் இழக்கவேண்டி நேரிடும்.
கைலஞ்சம், கைக்கூலி, சந்தோஷம் என்பன சிறிய அளவிலோ, பெரிதாகவோ, இன்று தாராளமாகப் பரிமாறப்பட்டு வருகின்றன. காரியங்களை மிக எளிதாகச் செய்து முடிப்பதே இதன் நோக்கம். பல்வேறு துறைகளிலும் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவரின் நடுவு நிலைமை, இத்தகைய ஊழல்களினால் சரிந்துவிடுவதை நாம் பார்க் கிறோம். நடுவு நிலைமையைப் பேணுபவர்கள் இத்தகைய போதை களுக்கு இடம் கொடுத்து, தம் உணர்ச்சிகளுக்கு ஆட்படாமல்; அறி விற்கு முதன்மை கொடுத்துத் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண் டும்.
147

Page 80
சிலரின் செல்வாக்கு, நெருக்குதல்கள், கட்டளை, பயமுறுத்தல், பசப்பு வார்த்தைகள் காரணமாகவும் பொறுப்பானவர்கள், பொறுப் பற்ற முறையில் நடந்து கொள்ளுகிறார்கள். விளையாட்டுத்துறை, கல்வித்துறை, நீதித்துறை, சமூக நலன்துறை போன்றன, நடுவு நிலை மையை ஆதாரமாகவும், அநுசரணையாகவும் கொள்ளாவிடில் சரிந்து விட நேரிடும். விளையாட்டுக்களில் நடுவர்கள் தீர்ப்பு வழங்குகின்றனர். கல்வியில், பரீட்சைகளில் ஆசிரியர்கள் தீர்ப்பு வழங்குகின்றனர். இவர் கள் அணுவளவேனும் நடுவு நிலைமையில் பிசகினால், அதனால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்தல் அவசியம். விழிப்புடன் இருப்பதன் மூலமும், தீய சக்திகளால் இழுக்கப்படாமல் இருப்பதன் மூலமும் நடுவுநிலை தளம்பாமல் இருக்க முடியும். இவ் வாறே வாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் நடுவுநிற்றல் முக்கியம் sg24Gğ5 LD.
மிதமிஞ்சிய கருணை, பாசம், நேசம் என்பன ஒருவரின் நடுவு நிலைமையைப் பாதித்துப் பக்கம் சாரத் தூண்டுகின்றன. அவ்வாறே பகைமையுணர்ச்சி, வெறுப்பு, அவசரம் என்பனவும் நடுவுநிலைமையைப் பாதிப்பன.
நடுவு நிலைமையிலிருந்து தவறுதல் போலவே, நடுவு நிலையில் இருந்து விலகிப் பக்கம் சார்ந்து செயற்படுமாறு ஒருவரை அணுகு தலும், நிர்ப்பந்தித்தலும் குற்றமாகும். குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகளிடையேயும்; பாடசாலைகளில் ஆசிரியர்கள் மாணவர்களி டையேயும்; வேலைத்தலங்களில் நிர்வாகிகள் பணியாளர்களிடையே யும் பாரபட்சம் காட்டி நடந்து கொள்ளுதல் மாபெருந் தவறு ஆகும். நடுவுநிலைப் பண்பினைப் பேணி வாழ்தல் மூலம் உலகினை வாழத் தகுந்த இடமாக மாற்றுவோமாக.
148

36. பணிசெய்தல்
சேவை என்பது மனித விழுமியங்களுள் மகத்துவம் நிறைந்ததாக உள்ளது. அதிலும், தன்னலம் அற்றதும், பயனை எதிர்பாராததுமான சேவை மிக மிக மாட்சிமைப்பட்டது. சேவை அன்பு தழுவியது; அருள் தழுவியது. சேவை செய்பவர்கள் சமூகத்தில் உயர்ந்து நிற்கின் றனர். சேவை மூலம், அதனைப் பெறுபவரும், வழங்குபவரும் உலப் பிலா உவகை அடைகின்றனர். அதனால் மனிதர்களாகப் பிறந்தவர் கள், ஏனையோருக்கு இயன்ற அளவில் சேவை செய்ய வேண்டியது இன்றியமையாததாகும்.
சேவை என்பது ஒருவகையில் வழிபாடு எனலாம். மனிதர்களிடம் காணப்படுகின்ற இழிவான தன்மை, நான், எனது என்கின்ற அகங் காரமும், மமகாரமும் ஆகும். மனிதனை மூர்க்க குணம் உள்ளவ னாக்குவது இந்த இழிவான தன்மைகள்தான். அவை மனிதனை விலங்கிலும் கேவலமான நிலைக்குக் கீழிறக்கி விடுகின்றன. இத்தகைய வர்களும் மனித சேவை செய்வதாகக் கூறிக்கொள்கின்றனர். இலட்சக் கணக்கான ரூபாய்களைச் செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள்.இந்த வகையில் செய்யப்படுகின்ற சேவை ஆனது, புகழ், விலாசம், பெயர், கீர்த்தி, பட்டம், பதவி என்பவற்றை எதிர்பார்த்தே செய்யப்படு கின்றது. பயனை எதிர்பார்த்து ஆற்றப்படுவது உண்மையான சேவை யாகாது. அத்தகைய சேவையினால் மனிதனிடம் காணப்படுகின்ற நான், எனது என்ற அகங்கார, மமகாரங்கள் நீங்கப் போவதுமில்லை. உண்மையான சேவையானது, பயனை எதிர்பாராதது; அதேவேளை மனிதனிடம் காணப்படுகின்ற அகங்காரம், மமகாரம், மூர்க்கத்தனம் என்பவற்றையும் நீக்க வல்லது. அதனாலேயே சேவையும் ஒரு வகையில் வழிபாடு ஆகின்றது. மனிதனில் மனிதத் தன்மையை உறுதி செய்வ தோடு, மனிதனைத் தெய்வீக நிலைக்கும் இட்டுச் செல்ல வல்லது, சேவை.
வாழ்க்கையில் ஒழுங்கு, கட்டுப்பாடு, சீரான தன்மை என்ப வற்றைக் கொண்டு வருவதற்கு மிகச் சிறந்த வழி சேவை செய்வதே எனலாம். சேவை செய்யும்போது இன்னார், இனியவர்; வேண்டியவர், வேண்டாதவர் என்றெல்லாம் பார்ப்பதில்லை. அவ்வாறு பிரித்துப், பார்த்து வேண்டியவர்களுக்கு மாத்திரம் செய்கின்ற சேவை, சேவை யாகாது. மனித இனம் ஒன்று; ஏற்றத் தாழ்வுகள், பேதங்கள் மனிதர் களிடையே இல்லை; எல்லோரையும் இணைத்து வைப்பது அன்பு
149

Page 81
எனும் மகா சத்தி; அன்பிற்கு அடைக்குந் தாழ் இல்லை; எல்லோரும் ஓர் இனம், அதுதான் மனித இனம்; எல்லோரும் உறிவினர், அதுதான் சகோதர உறவு; எல்லோருக்கும் ஒரே நீதி, அதுதான் மனித நீதி என்கின்ற விழுமிய கோட்பாட்டின் அடிப்படையில் ஆற்றப்படுகின்ற மனித சேவைதான் உண்மையான, சிறந்த சேவையாகும். அந்த நிலையிலேயே சேவை, வழிபாடு ஆகவும், தவம் ஆகவும், தானம் ஆகவும் மலர்ச்சியும் உயர்ச்சியும் பெறுகின்றது. இல்லாதவர்க்கு ஈதலே, ஈதல். அத்தகைய ஈதலே அறம். ஈவது விலக்கேல் என்பது ஒளவை மொழி.
அன்பும் அருளும் செயலாதல், சேவை எனப்படுகிறது. ஒருவருக்கு உதவ வேண்டும், சேவை செய்ய வேண்டும் என்று நம்மிடம் ஏற்படு கின்ற விருப்பு, அவர் மாட்டு எமக்கு ஏற்படுகின்ற அன்பினால் எழுவது. எனவே சேவை செய்கின்றோம், என்றால் அன்பினை வாழ்க்கையில் செயற்படுத்துகிறோம் என்பது அர்த்தம். அன்பு என்பது கருத்து நிலையிலோ, அல்லது கோட்பாடு ஆகவோ, மனிதர்களிலும், நூல் களிலும் மண்டிக் கிடக்கும் வரை, அந்த அன்பு உறங்கிக் கொண்டே இருக்கும். அதனால் மனிதகுலத்திற்கோ, பிற உயிரினங்களுக்கோ எவ்வித பிரயோசனமுமில்லை. அன்பின் சிறப்புப் பற்றி அழகான வார்த்தைகளில், மணித்தியாலக் கணக்கில் சொற்பொழிவுகள் நிகழ்த்து வது அரிதான செயலல்ல. அந்த அன்பினை ஒரு சிறிதளவேனும் வாழ்க்கையில் பிரயோகிக்கும்போதுதான் அன்பு அதன் உண்மையான பெறுமதியைப் பெறுகிறது. எனவே அன்பிற்கும் பெறுமதியைத் தருவது சேவையாகும். சேவையில்தான், அன்பு வாழுகிறது. வாழும் மொழி என்று குறிப்பிடப்படுவது எதனால்? அந்த மொழி பேச்சாக, எழுத்தாக மக்களிடையே பயன்பாட்டில் இருப்பதனாலேயே ஆகும். அவ்வாறு அன்பும், வாழும் அன்பாக, உயிர்ப்புள்ள அன்பாக, இருக்கவேண்டு மெனில், அன்பு, சேவையாக வேண்டும்; அன்பு பயன்படுத்தப்பட வேண்டும்.
'- ••••••••••• அன்புடையார்
என்பும் உடையர் பிறர்க்கு."
என்கிறார், வள்ளுவப் பெருந்தகை. அன்பு இல்லாதவர், எல்லாப் பொருள்களையும் தமக்குரியனவாக ஆக்கி வாழ்வர். அத்தகையவர், இருந்தும் இல்லாதவர்களேயாவர். அவர்கள் சுயநலமிகள். ஆனால் அன்பு உடையவர்கள் தமது உடம்பையும் பிறர்க்கு உரிமையாக்கி, எல்லோருக்கும் சேவை செய்து வாழ்வர். அவர்களே மனிதருள் சஞ் சீவியை ஒத்தவர்கள். கற்பூரம், மெழுகுவர்த்தி, மேகம் என்பன வற்றின் கைம்மாறு கருதாத, அதேவேளை தம்மையே முற்றுமுழுதாக
150

அர்ப்பணஞ் செய்கின்ற அரிய செயலை, சேவையை எண்ணிப் பாருங் கள். அன்புடையார், அதாவது பிறர்க்கு உதவ வேண்டுமென்று எண்ணுபவர்கள், தம் உடல், பொருள், ஆவி அனைத்தையும், பிறரின் நலத்திற்காக அர்ப்பணம் செய்யச் சித்தம் கொள்ள வேண்டும். அப் பொழுதுதான், வள்ளுவரின் ‘என்பும் உடையர் பிறர்க்கு’ எனும் கூற்று மெய்ம்மை பெறுகிறது.
எனவே மனித சேவையில், அன்பின் மாண்பினைக் காண வேண்டும்; அன்பினில், மனிதசேவையின் மகத்துவத்தைக் காண வேண்டும். இந்த நிலையில் மனிதன் தன் தீய தன்மைகளையெல்லாம் கழைந்துவிட முடிகிறது. மனிதன் மனிதத் தன்மையைப் பெறுகின் றான். சேவையின் மகத்துவம் என்னே! மந்திரமும், தந்திரமும், மருந்துமாகித் தீரா நோய் தீர்த்தருளும் வல்லமையைச் சேவை பெற் றுள்ளது. மனித உய்விற்கும், ஈடேற்றத்திற்கும் சேவை உறுதுணை யாகின்றது. சேவை, அன்பினில் விளைந்த ஆரமுது அல்லவா?
"எல்லோர்க்கும் நன்றாம் பணிதல், அவருள்ளும்
செல்வர்க்கே செல்வந் தகைத்து.'
என்பது தமிழ் மறை. பணிதல் என்னும் மனிதத் தன்மை, மனித னாகப் பிறந்த யாவரிடமும் இருக்க வேண்டியது. பணிவு, அடக்கம் என்பன மனித விழுமியங்கள். அவை மனிதர்களைச் சிறப்புடன் வாழ்விக்கும் உறுதிப் பொருள். பணிதல் என்ற அரிய பண்பினைப் பணம் படைத்த செல்வந்தர்களும், அதிகாரம் கொண்டுள்ள பதவி யணியினரும் அவசியம் பெற்றிருத்தல் வேண்டும். அத்தகையோர் பணிவுடையவராகவும் அமைந்துவிட்டால், அது அவர்களுக்கு மற்றொரு செல்வம் போன்றதாகிவிடும். அதுவே, அவர்களுக்குச் சிறந்த பாது காப்பாகவும் ஆகிவிடுகிறது. அத்தகைய பணிவு என்னும் சிறந்த இயல்பினைப் பெற்றுக்கொள்வதற்குச் சேவை செய்தல் சிறந்த வழி யாகும். சேவையாற்றும்போது பணிவுடன் ஆற்ற வேண்டும்; அதே வேளை சேவையால், பணிதல் எனும் பண்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
பணமும், அதிகாரமும் உள்ளவர்களால்தான் மக்கட் சேவை செய்ய முடியும்; ஏழைகளும், அதிகாரமற்றவர்களும், சேவை செய்ய வேண்டுமென்ற விருப்பம் இருப்பினும், எவ்வாறு செய்ய முடியும் என அங்கலாய்ப்போரும் உள்ளனர். பொருள் வலிமையும், அதிகார வலிமை யும் இல்லாதவர்களாலும் மனித சேவை செய்ய முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பும் பணிவும் அவசியம் இருத்தல் வேண்டும். அதற்குப் பணம் தேவையில்லை, பண்புதான் தேவை.
151

Page 82
"யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் இன்னுரைதானே."
என்பது திருமூலர் வாக்கு. நாம் உண்ணும் உணவில் ஒரு கவளம் மாத்திரம், பசித்திருப்பவர்க்கு வழங்குவது முடியாத காரியமா என்ன? பகுத்துண்டு பல்லுயிர் ஒம்பும் வழக்கத்தை எல்லோரும் கைக்கொள்ள முடியும். அவ்வாறே, பிறருக்கு நல்ல இன்சொற்களை நயமாக வழங்குவது எவர்க்கும் முடியாத காரியமல்ல. இன்சொல் வழங்குவதும் ஈகைதான். கணவன் மனைவியைக் கடிந்து கொள்வதும், மனைவி பதிலுக்குச் சுடுசொல் பாய்ச்சுவதும் குடும்பத்தில் தேவைதானா என் பது சிந்திக்கற்பாலது. இனிய உளவாக இன்னாது கூற வேண்டிய அவசியம்தான் என்ன? இதனால் யாருக்குத்தான் நன்மை ஏற்படுகிறது? பார்த்துக் கொண்டிருக்கின்ற பிஞ்சு உள்ளங் கொண்ட குழந்தைகள் எத்துணை வேதனையை அனுபவிக்கின்றன. அவர்களின் பிற்கால வாழ்வு உருவாகும் காலம் அல்லவா? அது. அந்த நேரத்தில் பெற்றோர் கள், தம் பிள்ளைகளின் நன்மை கருதி, ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அமைதி பேணி, முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டி யது அவசியமாகின்றது. அன்புதான், பணிவு ஏற்படுவதற்கும் காரணம். பணிதலினால், அன்புப் பிணைப்பு இறுக்கமாகிறது. கணவன், மனைவி இருவரில் ஒருவர் பணிந்து செல்வதால், அவர் தோல்வி அடைகிறார் அல்லது ஆண் பெண் சமத்துவத்திற்குப் பங்கமேற்படுகிறது, என எண்ணுவது தவறு. குடும்பத்தில் மகிழ்ச்சியும், பிள்ளைகளின் உடல், உள வளர்ச்சியில் ஆரோக்கியமும் இருக்க வேண்டுமாகில், குடும்ப உறுப்பினர்களிடையே, பரஸ்பரம், அன்பு, பணிவு, கரிசனை, நட்பு, அமைதி என்பன நிலவ வேண்டும். வீண் சந்தேகம், ஏட்டிக்குப் போட்டி மனப்பான்மை, கோபம், ஏற்றத்தாழ்வுச் சிக்கல், சண்டை சச்சரவுகள் என்பன முற்றிலாக ஒழிக்கப்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள், தங்கள் குடும்ப நலனுக்காகச் செய்கின்ற மாபெரும் சேவை இதுவாகும். இன்றைய காலகட்டத்தில், வளர்ந்து வரும் குழந்தைகளை மனிதப் பண்புகள், நல்ல பழக்க வழக்கங்கள், நல்லொழுக்கம் உள்ளவர்களாக வும், மனித விழுமியங்களை உணர்பவர்களாகவும் வளர்த்துவிடுவதே சேவைகள் அனைத்திலும் மகத்தான சேவையாகும். இதனால் மக்கள் யாவரினதும் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை உணர்ந்து விரைந்து செயற்படுவோமாக.
வீட்டிலே தொடங்குகின்ற இச்சேவை, வெளிச் சமூகத்திலும் பரவ வேண்டும். இந்த வகையில், மனித சேவை, சிறந்த விழுமிய வளர்ச்சியாக மனிதர்களிடையே பரவும்போது மனிதகுலம் மேன்மை பெறும் என்பதில் ஐயமில்லை.
152

37. ஆன்மிகம்
இப்பூமியில் வாழுகின்ற மக்களிடையே முன்னர் எப்போதும் இல்லாத அளவில், எல்லா நிலைகளிலும், எல்லாத் தரப்பிலும்; முரண்பாடு இன்றி, ஒத்த உணர்வோடு, ஒன்று கானப்படுகின்றது என்றால், அதுவே வன்மை,-வன்செயலில் உள்ள விருப்பும் ஈடுபாடும் எனலாம். வன்செயல்கள் உலகளாவிய ரீதியில் செல்வாக்குப் பெற்று விட்டது. சாதி, இன, மத, மொழி, நிற, பிராந்திய வேறுபாடுகள் யாவற்றையும் கடந்து, உலகப் பொதுமையைப் பெற்றுவிட்ட பெருமை யில், இவ் வன்செயல்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. தனி மனிதன், குடும்பம், சமூகம், நாடு, மண்டலம், உலகம் என்ற எந்த நிலையிலும் இன்று பிரச்சினைகள், முரண்பாடுகள், சிக்கல்கள் ஆகியவற்றைத் தோற்றுவித்தல், வளர்த்தல், காத்தல், அழித்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களையும் ஆற்றுகின்ற சக்தி படைத்த இறைமையாக வன்மை விளங்குகின்றது. வன்மை என்பது வன் சிந்தனை, வன் பேச்சு, வன்செயல் ஆகியவற்றை அதிட்டித்து நிற்கின்ற மூலப் பொருள். எந்த விதச் சலசலப்போ, கொள்கை பரப்புதலோ, பிரச்சாரமோ, திணிப்போ இன்றி உலகத்தவரால் விரும்பி ஏற்று, நடைமுறைப் படுத்தப்படுகின்ற உலகப் பொது மதம், தத்துவம் ஆக இந்த வன்மை வந்துவிட்ட போது, மனிதர்கள் எந்த அளவுக்கு கல்வி கற்றும், கல்லாதவர்களாக, விவேகம் இருந்தும் இல்லாதவர்களாக; நயத்தக்க நாகரிகம் பெற்றிருந்தும், வன்கணாளர்களாக; நல்லபடி வாழப்பிறந் தும், வாழாதவர்களாக, வாழ முடியாதவர்களாக, சுதந்திரமாகப் பிறந்தும் அடிமைகளாக, அல்லல் படுகின்றார்கள், அவலத்திற்கு உள் ளாகிவிட்டார்கள் என்பதை நோக்கும்போது பரிதாபமும் பச்சாத் தாபமும் கொள்ளாமல் இருக்க முடியாது. வன்மிக ஒருமைப்பாடு எய்தப்பட்டு விட்டதுபோல் தோன்றுகிறது. அப்படியானால், ஆன்மிக ஒருமைப்பாடு என்று பெரிதாகப் பேசப்படுகின்றதே, அதற்கு என்ன நேர்ந்தது என்பது தெரிந்துகொள்ள முடியாதுள்ளது.
உலகம் ஒன்று, மனிதகுலம் ஒன்று என்னும் ஒருமைப்பாட்டு உணர்வை ஆன்மிக அடிப்படையில் புரிந்துகொள்ள முடியாதுள்ளமை வருந்தத்தக்கது. அதனாலேயே, மனிதர்களிடையே அவ்வப்போது, ஏற்படுகின்ற முரண்பாடுகள், வேறுபாடுகள், பிரச்சினைகள் ஆகிய வற்றிற்குச் சமாதான முறையில், அஹிம்சை வழியில் தீர்வு காண முடியாமல், மனிதர்கள் தத்தளிக்கின்றனர். அதேவேளை, வன்செயல் மூலம் தீர்வுகாண விழைகின்றனர். இதன் விளைவு, உலகளாவிய
153

Page 83
ரீதியில், வன்மிக ஒருமைப்பாடு காணப்படுதல் ஆகும். உலகில் உள்ள மாந்தர்கள் ஒற்றுமைப்பட்டு, ஆன்மிக அடிப்படையில் ஒருமைப்பாட் டினைக் காண்பார்களேயானால், உலகம் எத்துணை மகிழ்ச்சியும், அமைதியும், அன்பும் பூத்துக் குலுங்கும் பூங்காவாகத் திகழும் என்பதை எண்ணிப் பார்க்கக்கூட ஏனோ பின்னிற்கின்றோம் என்பது புரிய முடியாமல் உள்ளது.
அதிகாரம், ஆற்றல் படைத்த எவரும், தம்முடைய அதிகாரங்கள் அதனால் பெறப்பட்ட சக்தி, வல்லமையுடன் ஆன்மிகப் பண்புகளை யும் கொண்டிருக்காவிடின், துர்ப்பிரயோகங்கள், ஊழல்கள், வன் முறைப் பிரயோகம் என்பன சமூகங்களில் தவிர்க்க முடியாதனவாகி விடும். வெளியிலிருந்து கொடுக்கப்படும், எத்துணை நெருக்குதல் களும், சட்டபூர்வமான நடவடிக்கைகளும் அவற்றைக் கணிசமான அளவு குறைக்கலாம் என எதிர்பார்க்க முடியுமே தவிர, முற்றிலாக வேரோடு அவற்றைக் களைந்து விடும் என உறுதி கூற முடியாது. எனவே மனிதர்கள் ஆன்மிகத்தின்பால் நம்பிக்கை வைத்து, உள்ளார்ந்த நிலையில் ஆன்மிகப் பண்புகளை வளர்த்து, அப்பண்புகளை வாழ்க்கை யில் வெளிப்படுத்தி, அவற்றைக் கைக்கொண்டு வாழ்தல் மூலமே ஊழல்கள், வன்முறைகள், துர்நடத்தைகள் என்பவற்றைப் பூண்டோடு அகற்ற முடியும். இங்கு நான் குறிப்பிடுகின்ற ஆன்மிகம் எந்தவொரு சமயத்தோடோ, ஐதீகத்துடனோ தொடர்புபடுத்திக் கூறப்படவில்லை. மனிதப் பண்புகள், மனித விழுமியங்கள், மானுடம், மனிதாபிமானம், மனித தர்மம், மனித நீதி போன்ற பல்வேறு சொற்களைக் குறிப்பதற் காகப் பயன்படுத்தப்படுகின்ற ஒரு சொல்தான் ஆன்மிகம் என்பதை உணர்ந்து கொண்டால் ஆன்மிகம் எனும் சொல் பற்றிய அச்சம் நீங்கிவிடும்.
ஆன்மிகம் எங்கே, சாதாரண மனிதர்களாகிய நாம் எங்கே? ஆன்மிகத்தை எம்மோடு இணைத்துப் பார்க்கவே பயமாக உள்ளதே? அது பெரிய வார்த்தை, என்றெல்லாம் கூறுபவர்கள் நம்மிடையே உண்டு. இவர்கள் ஆன்மிகம் பற்றித் தவறான எண்ணம் கொண் டிருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆன்மிகம் நம்மோடு கூடப் பிறந்தது. அதனால் நமக்கு அன்னியமானது அன்று. ஒவ்வொரு மனிதனும் ஆன்மிகத்தை உள்ளார்ந்த நிலையில் கொண்டிருப்பவன். ஆனால் அதனை வெளிப்படுத்தி வாழ்க்கையில் மேற்கொள்வதில்தான் மனிதர்களிடையே வேறுபாடு உள்ளது. ஆன்மிகத்தைத் தம்முள்ளே வைத்துக் கொண்டு, அதனை அறிந்து கொள்ளாது, வெளியே தேடும் முயற்சியில் ஈடுபட்டால், அம்முயற்சி எப்படிக் கைகூடும்? ஆன்மிகம் மனிதனுக்கு இயல்பானது; ஆன்மிகம் மனித உரிமை என்று கொள்ள வேண்டும். ஆன்மிகத்தை விட்டுக் கொடுப்பவர், மனித உரிமையை
154

மழக்கின்றார். ஆன்மிகத்தை மதிப்பவனே மனிதப் பண்புகளையும், இனித விழுமியங்களையும் மதிப்பவன் ஆகின்றான். அப்போதுதான் ஊழல் அற்ற, குழப்பம் இல்லாத, தூய மனிதன் ஆக மிளிர்கிறான். ஒவ்வொரு மனிதனும் ஆன்மிகத்தைக் கடைப்பிடிக்க, ஆன்மிக வாழ்வு வாழ முடியும். ஒவ்வொரு மனிதனும் ஆன்மிகச் செல்வந்தன். ஆனால் ஆன்மிக வறுமையில் வாடுகிறான். இதுதான் இன்றைய பரிதாப நிலை. இல்லாவிட்டால் துன்பப்பட நேரும். ஆனால் இருந்தும் மனிதன் துன்பப்படுவது அவனது அறியாமையே. −
மனிதன் நல்ல குணங்கள், நல்ல பண்புகள், நல்ல இயல்புகள் ஆகியவற்றுடனேதான் உள்ளான். அவை பெரும்பாலும் மறைக்கப் பட்டும், பயன்படுத்தப்படாமலும் அடங்கிய நிலையில் உள்ளன. மணி தன் அவற்றைப் பயன்படுத்த மறுப்பதனால்தான் இன்று உலகம் ஊழல்கள் நிறைந்துவிட்ட நிலையில் உள்ளது. மனிதனிடம் உள்ள நல்ல பண்புகளை, நல்ல மனிதத் தன்மைகளை, நல்ல விழுமியங்களை வெளிக்கொணரவும், பயன்படுத்தவும், மனிதன் ஊக்குவிக்கப்படுதலே இன்றைய தலையாய தேவை. அந்தத் தேவை நிறைவு செய்யப்படும் பட்சத்திலேயே ஊழல்கள், திருட்டுத்தனங்கள், அநியாயச் செயல்கள் என்பனவற்றை ஒழிக்க முடியும்.
மனிதன் தமது நல்ல குணங்களையும், நற்பண்புகளையும், விழுமியங்களையும் தமது சொந்த நலனுக்காகத் தன்னிலும் பேணு கின்றானோ என்றால், அதுவுமில்லை. மனிதன் தன்னலம் கருதுபவன், சுயநலவாதி என்றெல்லாம் கூறப்படுகின்றது. ஆனால், தனது மனித உரிமைகள் ஆகிய மனிதப் பண்புகளையும், மானுடத்தையும் தன்னலம் சிறிதும் இன்றி உதாசீனஞ் செய்தலைக் காண்கின்றோம். மனிதப் பண்புகள் பேணப்படுவதால் தன்னலம், பொதுநலம் ஆகிய இரண்டும் உண்டு. மனிதப் பண்புகளைப் பொறுத்தவரையில் தன்னலத்திலிருந்து தான் பொது நலமும் ஆக வேண்டும். ஆனால், மனிதப் பண்புகளை அனுசரிப்பதில் தன்னலமே குன்றியிருக்கும் இன்றைய சூழலில் பொது நலம் எப்படித் தோன்ற முடியும். வள்ளுவரும்,
'தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.’
என்கிறார். ஒருவன் தன்னைத்தான் விரும்பி நேசித்து வாழ்பவன் ஆயின் ஒரு சிறிய தீமையையும் மற்றையவர்களுக்குச் செய்ய நினைக்க வும் மாட்டான், செய்வதாகச் சொல்லவும் மாட்டான்; செய்யவும் மாட்டான். தன்னைத் தான் காதலிப்பவன் அடிப்படையில் ஒரு சுயநலமிதான். எனினும் பிறருக்குத் தான் தீங்கு செய்தால், தீங்கு
155

Page 84
செய்யப்பட்டவர்களிலும் பார்க்கக் கூடிய நட்டமும் தாக்கமும் தனக் குத்தான் ஏற்படும் என்று எண்ணுவது சுயநலம் ஆக இருந்தாலும் அதனால் ஏற்படப் போகின்ற விளைவு பொதுநலமாக விளையப் போகி நறது என்பதால் சுயநலமும் சில சந்தர்ப்பங்களில் பொது நன்மைக்கு வழிவகுக்கின்றது. தன்னுடைய சொந்த நலனுக்காக, பிறருக்குத் தீமை செய்யாமல் விடுதல் இந்தச் சுயநலத்தினால் ஏற்பட்ட விளைவு. எனவே விளைவுதான் முக்கியம், அது சுயநலமோ இல்லையோ என்பது அல்ல. பிறருக்கு ஒரு நன்மை செய்வதும், ஒரு தீங்கு செய்யாமல் விடுவதும் அடிப்படையில் சுயநலப் பற்றும் உந்துதலுமே காரணம். தன்னை நேசியாதவனால் மற்றையோர் தேசிக்கப்படுவர் என்பது வீண் கதை.
தானும் வாழ வேண்டும், மற்றையோரும் வாழ வேண்டும். தன்னிலும் பற்றுள்ளவனாதல் அவசியம். பிறரிலும் மனித நேயம் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஆன்மிகம் தழைக்கும்; வன்மிகம், வன்முறைகள் அகலும்.
156

38. நற்சிந்தனை
சிந்தனைகள், பல ஆயிரக்கணக்கில், நம் உள்ளங்களில் தின மும் தோன்றிய வண்ணம் இருக்கின்றன. இவற்றுள் நல்ல சிந் தனைகளும் உண்டு. கெட்ட சிந்தனைகளும் இருக்கின்றன. பய னுள்ள சிந்தனைகளும் காணப்படுகின்றன. பயனற்ற வெற்றுச் சிந்தனைகளும் இருக்கத்தான் செய்கின்றன.
சிந்திக்கும் உயிரி மனிதன் மட்டும்தான் என்ற வகையில், மனிதன் பெருமை கொள்கிறான். ஏனையவற்றிலிருந்து தான் வித்தியாசமான வன் என்று நினைப்பதில் பெருமை கொள்ளும் மனிதன் ஏனைய மனிதர்களிலிருந்தும் தான் வித்தியாசமானவன் என்று எண்ணுவதிலும் பெருமைகொள்ளுவதிலும் மனிதனுக்கு நிகர் மனிதன்தான்.
சிந்தனை, மனித இனத்திற்குப் பீடும் பெருமையையும் அளிக்கும் அதேவேளை, இழிவையும் தாழ்வையும்கூட ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடலாகாது. எவ்வெவற்றால் நன்மைகள் உண்டோ, அவ் அவற் றால் தீமைகளும் உண்டு என்பது பொது விதி. மின்சாரம் மிகவும் பிர யோசனமானது. ஆனால் மின்சாரத்தை தாம் தீண்டினால், நமது உயி ரையே போக்கிவிடும் தன்மையையும் கொண்டுள்ளது. அதனால், மின் சாரத்தைப் பயன்படுத்தாமல் எவரும் விட்டு விடுவதில்லை. எல்லாக் கருவிகளும், சாதனங்களும் நல்ல பக்கத்தையும், தீய பக்கத்தையும் கொண்டுதான் காணப்படுகின்றன. தீயதை விலக்கல், நன்மையை ஏற்றல் மனிதப் பண்பு.
குத்துவிளக்கின் சுடரொளியில் திருக்குறள் நூலையும் கற்று, அறிஞர் ஆகலாம். அதே குத்துவிளக்கிலிருந்து பெறப்படும் தீயைக் கொண்டு ஊரையே எரித்துச் சாம்பர் ஆக்கலாம். பஞ்ச பூதங்களுள் ஒன்றான தீக்கு விருப்பு, வெறுப்புக் கிடையாது. நல்ல தீ, தீய தீ என்று இரண்டு வகையான தீ உலகில் இல்லை. தீ ஒன்று தான். ஆனால் தீயைப் பயன்படுத்துபவர்களின் நோக்கு, உணர்வு, தன்மை என்பவற்
றைப் பொறுத்து, தீயானது நல்லதும், கெட்டதும் ஆகின்றது.
சிந்தனைகளும், நல்லன, கெட்டன; பயனுள்ளன, பயனற்றண என அமைந்து விடுவதற்கெல்லாம் மனிதன்தான் காரணன். சிந்தனை களைத் தோற்றுவிப்பவனும் மனிதன்தான்; அவற்றைப் பயன்படுத்து பவனும் மனிதன்தான்; அவற்றின் விளைவுகளை அனுபவிப்பவனும்
157

Page 85
மனிதன்தான். அதனால், சிந்தனைகள் மனிதனுக்குக் கட்டுப்பட்டவை: அப்பாற் பட்டவையல்ல. எனவே, மனிதன் தனக்கு விருப்பமான முறையில் சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளும் சுதந்திரம் படைத் தவன். அப்படியாயின் மனிதனின் உண்மையான விருப்பம்தான் என்ன? மனிதனின் உண்மையான விருப்பம், நன்மையான சிந்தனைகளை உரூவாக்குதல்தான் என்றால்; அதேவேளை, மனிதனுக்குச் சிந்தனைச் சுதந்திரம் பூரணமாக உண்டு என்றால், மனிதன் நல்ல சிந்தனைகளைப் பிறப்பிப்பதற்கும், தீய சிந்தனைகளைப் பிறப்பிக்காமல் தவிர்த்துக் கொள்வதற்கும் தயங்குவது ஏன்? என்ற வினா எழுகின்றது. மனிதனுக் கும் மேலான ஆற்றல் ஒன்று, மனிதன் நல்லனவற்றையே, அவன் விருப்பப்படி சிந்திக்க விடாமல், அவனின் சுதந்திரத்தைக் கட்டுப் படுத்துகிறதா? ஆராய்ந்து பார்ப்பின், அப்படியான கட்டுப்படுத்தும் சக்தி ஒன்று இல்லை என்பது புலனாகும். உள்ளதைச் சொன்னால், மனிதனுடைய உள் விருப்பம், நாட்டம், நோக்கம் யாவும் தீய சிந்தனைகளை மாத்திரம் உருவாக்குதல் என்பதேயாகும் என்ற முடி விற்கே வர வேண்டியுள்ளது. எதிர்மறையாகச் சிந்திப்பதையே, தியா னிப்பதையே; பழக்கமாகவும், ஏன் தொழிலாகவும் மனித இனம் கொண்டு விட்டது. மனித குலம் இன்று எதிர்நோக்கும் பிரச்சினைகள், அழிவுகள், அமைதியின்மை, அவலங்கள் அத்தனைக்கும் காரணம், இன்னும் சொல்லப் போனால் மூலகாரணம், மனிதர்கள் எதிர்மறை யாகச் சிந்திக்கும் மரபு முதிர்ச்சியடைந்து விட்டமையேயாகும்.
இதிலிருந்து பிறக்கும் ஒரு கருத்து என்னவென்றால், மனிதனால் உடன்பாடாகச் சிந்திக்க முடியும் என்பதாகும். அதேவேளை, எதிர் மறைச் சிந்தனைகளைச் சிந்திக்காமல் தவிர்க்கவும் மனிதனுக்கு முடியும் என்பதும் ஆகும். மனிதன் அத்துணை வல்லபங்களைக் கொண்டுள் ளான். ஆனால் மனித குலத்தின் துர் அதிர்ஷ்டமோ, என்னவோ, மனிதன் தன்னிடமுள்ள வல்லமைகளைப் பிரயோசனப்படுத்த முன் வருவதில்லை.
மனிதர்கள் உடன்பாடாகச் சிந்திக்க முயற்சிக்க வேண்டும், என் கிறோம். அப்படியானால், உடன்பாடாகச் சிந்தித்தல் கடின காரியம் என்று எண்ணிவிடக் கூடாது. உண்மையில், அதுதான் மிக இலகு வானது என்று சொல்ல வேண்டும். ஏனென்றால், உடன்பாடாகச் சிந்திப்பதுதான் மனித இயல்பு ஆகும். மனிதனுக்கு இயல்பானது எதுவோ, அது அவனுக்கு இலகுவானதும் கூட. இயல்புக்குப் புறம் பானது, எதுவோ, அது மனிதனுக்குச் சிரமமானது. ஆனால், மனி தனின் இயல்புக்கு மாறானவற்றை, சிரமமானவற்றைத் தேடி, நாடி, ஆர்வத்துடன் கற்றுக்கொள்ளுந் திறனை இன்றைய மனிதன் விருத்தி செய்துள்ளான். அதன் விளைவு என்னவெனில், மனிதன் தனக்கு
158

இயல்பானவற்றை, உரிமையானவற்றை, இலகுவானவற்றை, படிப் படியாக மறந்து வருகிறான். இதில், வேடிக்கை என்னவென்றால், விரைவில் ஒரு கட்டத்தில், தான் மனிதன், என்பதையே முற்றாக மறந்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மனிதனில் உள்ள *மனிதன்' அழிக்கப்பட்டுவிட்டால், எஞ்சியிருப்பது என்ன என்பதைச் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்பதல்ல. மனிதனின் இந்த நடவடிக்கை, நல்ல சுவைமிக்க கனிகள் கையில் இருக்க, அவற்றை விட்டுவிட்டு, கயர் மிகுந்த காய்களைத் தேடிப் பெறுவதை ஒக்கும். இது, மனிதனின் விசமத்தனமா, அல்லது அறிவீனமா, என்பது விமர் சனத்திற்குரியது.
இனி, உடன்பாடாகச் சிந்தித்தால் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? நல்ல சிந்தனைகள், நல்ல பயன்களை விளைவிக்கும் சிந்தனைகள், ஆக்க பூர்வமான சிந்தனைகள், யாவரை யும் வாழ்விக்கும் சிந்தனைகள் என்பன உடன்பாட்டுச் சிந்தனைகள் எனப்படுகின்றன. ‘ “ Positive thinking”” 6TGör gp g83560) GIr sgjši கிலத்தில் கூறுகின்றனர். இவற்றுக்கு எதிர்மாறான சிந்தனைகள், தீய விளைவுகளை ஏற்படுத்தும் சிந்தனைகள், பிறரைக் கெடுக்கும் சிந்தனைகள் என்பன எதிர்மறைச் சிந்தனைகள் ஆகும்.
உண்மை, அன்பு, இரக்கம், பிறருக்கு உதவுதல், மன்னிக்கும் மனநிலை, நல்லவற்றையே காணுதல், எல்லோரும் இன்புற்றிருக்க விரும்புதல், பிறரில் கரிசனை கொள்ளுதல், ஈதல், இனியவை பேசுதல், கருணை கொள்ளல், அமைதி, சாத்தி முதலியன நல்ல விளைவுகளைப் பயப்பவை மனிதகுலத்தை உய்விப்பவை. மனிதன், என்பதால், அவை யாவும் அவனிடம் இயல்பாகவே உள்ள சொத்துக்கள். மனிதனாக விளங்கும் வரை, அவன் அவற்றின் மீது உரிமை கொண்டாட வேண்டிய வன். இந்த மனிதச் சொத்துரிமையை மனிதன் இழந்துவிட்டால், அதன்பின் அவன் மனிதன் எனும் அந்தஸ்தினையும் இழந்து விடுகிறான். இந்த நல்லனவற்றோடு சம்பந்தப்பட்ட மனித உரிமையோடு தொடர்புபெற்ற மனித விழுமியங்கள் யாவும் உடன்பாட்டுச் சிந்தனை யிலிருந்து கட்டியெழுப்பப்பட்டவையேயாகும்.
மாறாக, பொய்ம்மை, பொறாமை, வஞ்சனை, காமம், கோபம், மயக்கம், பழிவாங்குதல், சூழ்ச்சி, கொலை, களவு, கர்வம், தற் புகழ்ச்சி முதலியன எதிர்மறைச் சிந்தனைகளும், அவற்றோடு சம்பந் தப்பட்டவையும் ஆகும். தீய எண்ணங்களினால் கட்டியெழுப்பப்படு வன, மனிதனுக்கு ஒவ்வாதன; மனித குலத்தைத் தாழ்விப்பன. இவற் றோடு மனிதன் சம்பந்தப்படும்போது, சமூகத்திலும் உலகிலும் அமைதி யின்மை, குழப்பம், நெட்டூரம், கொடுமை, பயம், பீதி, வன்செயல்கள், அழிவுகள், அவலங்கள், துன்பங்கள் என்பன ஏற்படுகின்றன.
1.59

Page 86
உலகில் ஏற்பட்ட அத்தனை போர்களும், சமூகக் குழப்பங்களும் மனித மனங்களில் கருக்கொண்டவைதான். அவ்வாறே, அமைதி, சாந்தி, சமாதானம், அன்பு, அஹிம்சை என்பனவும் மனங்களிலேதான் கருக்கொள்ள வேண்டியவை. மனத்தின் முக்கியத்துவத்தை மனிதர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மனித வாழ்க்கையில் மனத்தின் முக்கி யத்துவத்தை உணர்ந்து கொண்டு விட்டால், மனத்தைத் தூய்மை யாக வைத்திருக்க வேண்டியதன் அவசியம் தாமாகவே உணர்ந்து கொள்ளப்பட்டு விடும். வள்ளுவப் பெருந்தகையும், ‘‘மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி' என்கிறார். மனமது செவ்வையானால், மந் திரம், தந்திரம், யந்திரம், மருந்து, மாயம் எதனையும் நாட வேண்டிய அவசியம் மனிதனுக்கு ஏற்படாது. மனம் செம்மையானால், பொய் புரட்டுக்கள், குறுக்குவழிகள், இசக்குப் பிசக்குகள், ஏமாற்றுதல்கள், குழி தோண்டுதல்கள், குற்றங் காணல், குளறுபடிகள், கோணல் எண்ணங்கள் என்பன மனிதனில் இடம்பெற மாட்டா. மனம் ஒழுங் காகிவிட்டால், உலகில் காண்பவையெல்லாம் ஒழுங்காகத் தெரியும்.
உணவுகளைக் கண்ட கண்ட நேரத்தில், வகை தொகையில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டு இருந்தால், வயிற்றில் மந்திப்பு உண்டாகும். வயிற்றில் ஏற்படுகின்ற மந்தம், உடலின் பல நோய்களுக்கு ஏது வாகின்றது. அவ்வாறே, கண்ட கண்ட நேரத்தில், தீய எண்ணங்களை யும், கெட்ட சிந்தனைகளையும் மனத்தில் எழுப்பி, அங்கே களஞ்சியப் படுத்துக் கொண்டிருக்கும் மனங்கள் வெந்திப்புக்களையே சந்திக்க வேண்டி நேரிடும். இந்த வெந்திப்புகள் கள்ளம், கபடம், வஞ்சகம், பொறாமை, கோபம், கர்வம், செருக்கு, அவா போன்ற மன நோய் களை ஏற்படுத்த ஏதுவாகின்றன. இவையெல்லாம் மனித வாழ்க்கை யின் நிம்மதியையும், மகிழ்ச்சியையும் கெடுக்கும் ஆற்றல் வாய்ந்தன. ‘‘கெடுவான், கேடு நினைப்பான்' என்பது நூற்றுக்கு நூறு உண்மை யான கூற்று. 'தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்றதன்படி, அவ்விரண்டும் நமது சம்பாத்தியங்கள். அவற்றைப் பிறர் தர, நாம் பெற்றுக் கொள்ளக் கூடியவையல்ல. தனி வாழ்வுக்கும், பொது வாழ் வுக்கும் இக்கருத்துக்கள் பொருந்தக் கூடியன. இத்தகைய நல்ல விழு மியங்களைச் சிறிய பராயத்திலிருந்தே பிள்ளைகள் கற்றுக்கொள்ளவும், வாலாயம் செய்யவும், வாழ்வில் பேணிக் கடைப்பிடிக்கவும் பெரியவர் கள் வழிகாட்ட வேண்டும், வகை செய்ய வேண்டும். அப்பொழுதுதான் இவ்வுலகில் மனிதர்கள் இருப்பார்கள்.
160

39. சினம் வேண்டாம்
சினம் எனும் சேர்ந்தாரைக் கொல்லி, மனிதனிடம் உள்ள மிருக உணர்வின் வெளிப்பாடு ஆகும். சினம் பொங்கியெழும்போது, மனிதன் மிருகம் ஆகின்றான். மனிதன் எந்நேரமும் மிருகமாக இருப்பதில்லை. மிருக உணர்வும், மிருகத்தனமும் தற்காலிகமாகவே, மனிதனிடம் இடம் பெறுகின்றன. அந்தச் சொற்ப நேரத்திற்குள், மனிதனை என்ன பாடுபடுத்துகின்றன. மனிதன் தன் வயத்தை இழந்து விடுகின் றான். அவனின் செயற்பாடுகள் அவனின் கட்டுப்பாட்டிற்கு அப்பால் சென்றுவிடுகின்றன. பைத்தியம் பிடித்தவனின் நிலை; போதையூட்டப் பட்டவனின் வெறித்தன்மை, சினம் கொண்டவனின் நிலை என்பன மனித நிலையிலிருந்து வேறுபட்டன; கட்டுக்கடங்காதவை.
‘முற்கோபி, பின்னிரங்கி’ என்று சிலரைப் பார்த்துக் கூறு கின்றனர். முதலில் திடீரெனக் கோபம் வரும்; பின் சிறிது நேரத்தில், ஏன் கோபித்தேன், என்று இரக்கம் கொள்ளும் சுபாவம் உடையவர் களை இவ்வாறு குறிப்பிடுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் அநேகரை இன்று சந்திக்கின்றோம். இவர்கள் ஆரம்பத்தில் மிருக உணர்வினால் உந்தப்பட்ட போதிலும், விரைவில் 'தாம் மனிதர்' என்பதை உள்ளூர உணர்ந்து கொள்கின்றார்கள். மனிதராகி விடுகின்றனர். தமது தவறான செயற்பாட்டினை உணர்ந்து, அவ்வாறு செயல் பட்டமைக்காக வருந்தி, இரங்குகின்றார்களே, அதுதான் மனிதாபி மானம் ஆகும்.
இவர்களை நோக்கித்தான் வள்ளுவப் பெருந்தகையும்,
‘எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. ’’ என்கிறார் போலும்
பின்பு எண்ணி எண்ணி இரங்குவதற்கோ, வருந்துவதற்கோ காரண மான செயல்களைச் செய்தல் ஆகாது. அவ்வாறே. அத்தகைய தீய உணர்வுகளுக்கு உட்படுதல் கூடாது. சில வேளைகளில் அத்தகைய இழிவுள்ள செயல்களையோ, உணர்வுகளையோ வரிக்க நேரிடினும் மீண்டும் அவை தம்மை நெருங்காதவாறு நடந்து கொள்ளுதல் மணி தத்துவம் ஆகும்.
161

Page 87
ஆனால் நம்மில் பலர் தொடர்ந்தும் முற்கோபிகள் ஆகவே இருந்து வருகிறோம். பின் இரங்குகின்றோம். இதனை ஒரு தொடர் நிகழ்வாகக் கொள்வதை நிறுத்தி, இயன்ற வரையிலாவது முற்கோபத் தைத் தவிர்த்துக் கொள்வது விவேகமானதாகும். “கறந்த பால் மடிக்கு ஏறாது' என்பர். ஓரிரு தடவைகள் பிழைகளைச் செய்து, பின் இரங்குதல் போன்ற அனுபவங்களைப் பெற்றவர்கள், அத்தகைய அனுபவங்களின் உதவியால், மீண்டும் மீண்டும் அதே தவறுகளை இழைக்காது பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். அதைவிடுத்து, எஞ் ஞான்றும் முன்னுக்குக் கோபிப்பவர்களாகவும், பின்னுக்கு அதனை யிட்டு இரங்குபவர்களாகவும் தம்மை வழக்கப்படுத்திக் கொள்வதால் யாருக்கும் நன்மையில்லை.
"அவர் மிகவும் நல்லவர்; ஆனால் கொஞ்சம் முற்கோபம் உள்ள வர். பிறகு எல்லாம் சரியாய் விடும். நல்ல உதவியும் செய்வார்." என்றும்,
‘போனவுடனே, அவர் சீறி விழுவார், சினங்கொள்வார், கண்ட படி பேசுவார். அப்படிச் செய்தால் போன காரியம் வெற்றிதான் என்று எண்ணிக் கொள்ளலாம்.
’’ என்றும்,
"அவர் நன்றாக வரவேற்பார்; உபசார வார்த்தைகள் தேன் ஒழுகப் பேசுவார். அவ்வளவுதான், எந்த உதவியும் செய்யமாட்டார்." என்றும், மனிதர்கள் விமர்சனம் செய்யப்படுவதை நாம் கேட்கிறோம். இந்த விமர்சனங்கள் உளவியல் ரீதியானவையாகவும், காணப்படு கின்றன. மனித நடத்தைகளை நன்கு உணர்ந்து கொண்டவர்கள், அவற்றுக்கு ஏற்றபடி நடந்து நன்மை பெறும் சந்தர்ப்பங்களாக இவை உள்ளன.
"முற்கோபம், பின் இரக்கம்' எனும் நடத்தை ஒருவரிடம் வழக்கமாகி விடும்போது, அது அவரிடமுள்ள பலவீனம் ஆகப் பிறருக் குத் தோன்றுகிறது. அந்தப் பலவீனத்தைச் சிலர் பயன்படுத்தி நிலைமையைத் தமக்குச் சாதகமாக ஆக்கிக் கொள்கின்றனர். அத் தகைய 'திறமை'யற்றவர்கள் பாதகமான விளைவுகளுக்கு முகங் கொடுக்கின்றனர்.
முன்னுக்குச் சினங் கொள்வதால், சில காரியங்களைச் சாதுரிய மாகச் சாதித்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றார்கள். பொறுப்பான தலைமைப் பதவிகளை வகிப்பவர்களிலிருந்து குடும்பத் தலைவர்கள் வரை இந்த உத்தியைப் பாவிக்கிறார்கள். தங்கள் தலை மையைத் தப்ப வைக்கலாம் என்று கருதுகிறார்கள். நமது முன்னைய
l62

தலைமுறையினர் சிலரை எடுத்துக் காட்டாகவும் குறிப்பிடுகின்றனர். கோபத்தை மூலதனமாகக் கொண்டு, றிறுவனங்களுக்கும், குடும்பங் களுக்கும் தலைமை தாங்கியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் புகழஞ்சலிகள் செலுத்துகின்றனர். அத்தகைய திறமைமிக்க தலைவர் கள் இன்றில்லையே என்று ஏங்குகின்றனர்.
காலம் மாறுகிறது, கருத்து மாறுகிறது, உத்திகளும் மாறுகின்றன என்னும் அடிப்படை எண்ணம் அற்றவர்களே அவ்வாறு சிந்திக்கின் றனர். தலைமைத்துவம் என்பது அருமையான கலை. அது தனித்துவம் மிக்கது. இன்று மிக உயர்வாக வளர்ந்துள்ளது.
தலைமைத்துவம், தலைமைத்துவப் பண்புகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படுகிறது. தலைமைத்துவப் பண்புகள் யாவும் மனிதப் பண்புகள் ஆகும். மனிதப் பண்புகள், மனித விழுமியங்களைத் தழுவி யவை. எந்த ஒரு கட்டிடமும் உறுதியாக விளங்குவதற்கு, அதன் அத்திபாரம் பலமாகவும், ஸ்திரமாகவும் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறே தலைமைத்துவம் சிறப்பாகவும், ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகவும், உறுதியானதாகவும் மிளிர்வதற்கு, மனித விழுமியங்கள் தழுவிய மனிதப் பண்புகள் எனும் அத்திபாரம் அதற்கு இன்றியமை யாதது.
ஊழல், துர்நடத்தை, அதிகார தோரணை, சுயநலம், ஒழுங் கீனம், சினம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் தலைமைத்துவம், சொரி மணலில் நிர்மாணிக்கப்படும் கட்டிடம் போன்று விரைவில் சரிந்து விழுந்து விடும். சினத்தையும், அதிகார பலத்தையும் நம்பித் தலைமைத்துவத்தைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்று நினைப்பது தவறு. ஒருவருடைய நற்குணங்களும், நற்பண்பு களும், நல்லியல்புகளும், நன்னடைத்தையும்தான், அவரைத் தலை மைத்துவத்திற்கு உயர்த்துகின்றன. பிறப்பினால் மாத்திரம் இவ்வாறு உயர்ந்துவிட முடியாது. தாம் கொண்டுள்ள பண்புகளினாலேயே ஒரு வரின் ஆளுமை நிர்ணயிக்கப்படுகின்றது. பிறர் ஏற்றுக் கொள்வதனால் தான், தலைமை கிடைக்கிறது. அவ்வாறு பிறர் ஏற்றுக்கொள்ளு வதற்கு, இன்றியமையாததாக இருக்க வேண்டியது நல்லொழுக்கம். எனவே, குடும்ப வாழ்விலும் சரி, பொது வாழ்விலும் சரி, தலைமை தாங்கி வழிநடத்துபவர்கள் நல்லொழுக்கங்களில் வழுவாது இருத்தல் வேண்டும்.
முற்கோபியாக இருந்தால் என்ன, முழுக்கோபியாக இருந்தால் என்ன, கோபி, கோபிதான். கோபம் ஒன்றே போதும் ஒருவனைக்
163

Page 88
கெடுப்பதற்கு, கோபம் கொள்பவன் நல்லவனாக இருத்தல் இயலாத காரியம். ஆகவேதான் வள்ளுவரும்,
'தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.' என்கிறார்.
ஒருவன் தனது ஆளுமையைப் பாதுகாத்துக் கொள்ள விரும்பின், சினம் தன்னை அணுகாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். கோபம் ஆனது ஆளுமையையோ, தலைமைத்துவத்தையோ வளர்க்க உதவும் என்று எதிர்பார்ப்பது அறியாமை. அப்படி எண்ணிச் செயல் பட்டவர்களும் இருந்திருக்கின்றனர். மனிதாபிமானமற்ற சர்வாதி காரப் போக்கு நிலைத்ததுமில்லை, நீண்ட பயன் தந்ததும் இல்லை. இதற்கு உதவும் கருவியாகச் சினம் இருப்பதே காரணம். சினம், ஒருவனின் அறிவை மழுங்கச் செய்கின்றது; அன்புணர்வினை அறவே அகற்றி விடுகின்றது; உள்ளத்தில் அருள் ஏற்படாமல் தடுக்கின்றது. அமைதியையும் நிம்மதியையும் குலைக்கின்றது. சமாதானத்தைச் சகித்துக் கொள்ளும் ஆற்றல் கோபத்திற்கு இல்லை. அது குழப்பத் திற்குத் துணை போகும் தன்மையது என்பது உணர்தற்பாலது.
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.' என்கிறார் வள்ளுவர்.
இவ்வாறு வள்ளுவர் ஏன் சொன்னார்? நல்ல குண இயல்புகளை நிறையப் பெற்றுள்ள பெரியோர்களுக்குக் கணப்பொழுது தன்னிலும் கோபம் வரலாமா? வந்தால் அவர்கள் குணத்தில் எவ்வாறு குன்றாக இருக்க முடியும்? என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது. வள்ளுவரின் உட்கருத்தை விளங்கிக் கொண்டால், இப் பிரச்சினைகளுக்கு இடமே இருக்காது. குணக் குன்றுகளாக விளங்குகின்ற பெரியோர்கள் நிச்சய மாகக் கோபப்பட மாட்டார்கள் என்பதை வள்ளுவர் நன்கு உணர்ந் திருந்தார். அதனாலேயே இப்படித் துணிந்து கூறினார் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக மகாபாரதத்தில், தரும புத்திரரைக் கூறலாம். தமது மனைவி திரெளபதி, அரச அவையில், துச்சாதனனால் துகில் உரிந்து மானபங்கத்திற்கு உள்ளாக்கப்பட்ட போதும், தருமர் கோபப்படாமல் பொறுமையைக் கடைப்பிடித்தாரே, அதுதான் பொறுமையின் சிகரம். பொறுமைக்குத் தருமர் என்ற பெயரையும் பெற்றார். தருமரின் பொறுமைதான் திரெளபதியின் மானத்தைக் காப்பாற்றியது. பொறுத்தார் அரசாள்வார் என்ற கூற்று மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. பொறுமைக்கு அத்துணை அளப்பரிய வலிமை உண்டு என்பதை உணர்வோமாக.
64

40. செயல் மூலம் உணர்த்தல்
சமூகமாகக் கூடி வாழ்பவன் மனிதன். எனவே, மனித விருத்தி யில், வாழுகின்ற சமூகம் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது. பேசுகின்ற மொழி, குண இயல்புகள், வாழ்க்கைமுறைகள், நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள் என்பன யாவுமே, வாழுகின்ற சமூகச் சூழலின் செல்வாக் கிற்கு உட்பட்டே, மனிதர்களில் விருத்தியாகின்றன. மனித ஆளுமை விருத்தி என்பது உடல், உள, விவேக, ஒழுக்க, சமூக, பொருளாதார, கலாசார, ஆத்மீக அம்சங்களின் ஒருங்கிணைந்த சமநிலையிலான வளர்ச்சியாகும். சிறு குழந்தைப் பராயத்திலிருந்தே, ஆளுமை வளர்ச்சி கட்டியெழுப்பப்படுகிறது. வாழுகின்ற சூழல் இதில் பெரும் பங்கு கொள்கின்றது. ஒரு குழந்தை, நல்லவனாதலும், தீயவனாதலும், அது வாழுகின்ற சமூகத்தைப் பொறுத்ததே என்று சமூகவியலாளரும், உளவியலாளரும் கூறுகின்றனர். எனவே, மனித வளர்ப்பிலும், வளர்ச்சி யிலும் சமூகத்திற்குப் பெரும் பொறுப்பு இருக்கிறது. அது கடமையும் ஆகும். சமூகம் அந்தப் பொறுப்பையும், கடமையையும் நீள நினைந்து, செவ்வையாக நிறைவு செய்யும்போது, நல்ல பண்புகள் நிறைந்த, நல்லொழுக்கமுள்ள இளைய சமுதாயம் உருவாக்கப்படுகிறது. எனவே, சமூகத்திலுள்ள வளர்ந்தவர்கள், மூத்தவர்கள், பெரியவர்கள் ஆகியோர் தத்தம் சமூகக் கடமைகளையும், சமூகப் பொறுப்புக்ளையும் உணர்ந்த வர்களாக விளங்க வேண்டும். அவற்றை நிறைவு செய்ய வேண்டும். சமூகத்தில் வாழுகின்ற வளர்ந்தவர்கள் எவ்வழியோ, இளையவர்களும் அவ்வழியிலேயே செல்வர். எனவே, இளைய தலைமுறையினரிடையே ஒழுக்கச் சீர்கேடுகள், நடத்தைப் பிறழ்வுகள், தீய பழக்க வழக்கங்கள் காணப்படுகின்றன என்றால், அதற்குரிய பொறுப்பினை அவர்களுக்கு வழிகாட்ட வேண்டிய முன்னைய தலைமுறையினரே ஏற்க வேண்டும்.
* தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்படும்.’’ என்பது வள்ளுவர் வாக்கு,
பிற்சந்ததியினர் சமூகத்தில் எவ்வாறு ஒழுகுகின்றார்கள் என்பதைக் கொண்டு, அவர்களின் முற் சந்ததியினரின் ஒழுக்கம், நடத்தை தொடர் பான தகுதி, தகுதியீனம் பற்றி அறிந்து கொள்ள முடியும். எனவே, இளைய தலைமுறையினரின் ஒழுக்கம், நடத்தை, பண்புகள், விழுமியங் களின் உணர்வு ஆகியவற்றைப் பொறுத்தவரையில், அவற்றை அவர்
165

Page 89
களில் உருவாக்கும் பொறுப்பிலிருந்து, சமூகத்தில் வாழ்கின்ற வளர்ந்த வர்கள், பெரியவர்கள், மூத்த பரம்பரையினர் ஆகியோர் விலகிக் கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
"எங்கள் காலம் போய்விட்டது; இந்த இளந் தலைமுறையினர், அவர்கள் காலத்தில் எப்படித் தலைகீழாக நடந்தாலும் எமக்கென்ன? நாங்கள் இருந்து பார்க்கவா போகிறோம்’-என்ற மனப்பாங்கு, இன்றைய வளர்ந்தவர்களிடம் பெரும்பாலும் காணப்படுவதை அவ தானிக்கக் கூடியதாக உள்ளது. இது, அவர்களிடம் காணப்படுகின்ற கையறுநிலையின் எதிரொலியாகவே தோன்றுகிறது. ஆனால், அத் தகைய மனப்பாங்குகளை வளர்ந்தவர்கள் மாற்றிக் கொள்ளவேண்டும். அல்லது கடமையினின்றும் விலகியவர்களாகவும், பொறுப்பினைத் தட் டிக் கழித்தவர்களாகவும் கருதப்படுவர்.
‘துள்ளித்திரிகின்ற வேளையில் என் துடுக்கடக்கிப்
பள்ளிக்கு வைத்திலனே' என்தந்தையாகிய பாதகனே.”*
இவ்வாறு, ஓர் ஒப்பாசாரத்திற்காகப் பாடப்பட்டதல்ல. இது ஓர் உள்ளக்கொதிப்பின், உள்ளக் குமுறலின் பிரதிபலிப்பாகக் கொள்ள வேண்டும். எரிமலைக் குமுறலுக்கு ஒப்பானது இப்பாடல். சிறுவனாக இருந்த காலத்தில் தனது குளப்படிகளையும், சொல்வழி கேளாமையை யும், கண்டித்துத் தன்னை வழிப்படுத்திப், பாடசாலைக்கு அனுப்பிப் படிக்க வைக்காதது தந்தையின் குற்றமாகும். அது சாதாரண குற்ற மன்று. ஒரு பாதகச் செயலைச் செய்வது எத்துணை குற்றமோ, அத்தகைய மாபெருங் குற்றம் இதுவாகும். அதனாலேயே, தந்தை யைப் பாதகனுடன் சமப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கல்வியின் நோக்கம் சான்றோரை உருவாக்குதல். கல்வியைப் பெறு வதற்கு ஒழுங்கு செய்ய வேண்டிய கடமை தந்தையுடையது. எனவே தான், ‘சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே' என்ற புற நானுாற்றுக் கூற்றுத் தமிழ் மரபு ஆகியுள்ளது. "தந்தையொடு கல்வி போம்' என்பதின் உண்மையும் நோக்கற்பாலது.
"தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல். ' என்பது திருக்குறள்.
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க பேருதவி, கற்றோர் நிறைந்த அவையில், தன் மகன், தான் பெற்ற கல்வியறிவின் காரண மாக, யாவராலும் மதிக்கப்பெற்று, முந்தியிருக்கும்படியான நிலைக்கு இட்டுச் செல்லுதலுக்கான விழுமியக் கல்வியில் அவனை மேம்படச் செய்தலாகும்.
166

இத்தகைய நல்ல கல்வியை வழங்குதலான பெருங் கடமையினின் றும் தவறிய ஒரு தந்தையையே, ஒருவன், தன் பிள்ளைப் பருவத்தின் துடுக்குகளையெல்லாம் அவ்வப்போது அடக்கி, தன்னைப் பள்ளிக்கு வைக்கவில்லையே, தன் தந்தையாகிய பாதகனே, எனத் தன் மனக் குமுறலைக் கொட்டுகிறான். எனவே, பெற்றோர், சமூகத்தில் வளர்ந்த வர்கள், மூத்தோர், பெரியோர் ஆகியோர், நல்ல மனிதப் பண்பு களையும், மனித விழுமியங்களையும் இளந் தலைமுறையினருக்குச் சொல்லிக் கொடுத்து அவர்களை நெறிப்படுத்த வேண்டும். போதனை யோடு அமையாது, தாமும் நல்ல முறையில் வாழ்ந்து காட்டவேண்டும். நல்லொழுக்கப் பண்புகளைப் பெரியவர்கள் கடைப்பிடித்து ஒழுகு தலைக் கண்டு, கற்றுக்கொள்வதுதான் சிறந்த முறை என்பர்.
குடும்பம் தான், ஒரு குழந்தை சந்திக்கின்ற முதலாவதும் முக்கிய மானதுமான சமூகம். தாய், தந்தை, சகோதரர்கள், பாட்டன், பாட்டி என்பவர்களே குடும்ப உறுப்பினர்கள். ஏனைய உறவினர், நண்பர்கள், சுற்றத்தவர் ஆகியோர் அவர்களின் வீட்டிற்கு வந்து போவார்கள். இவர்கள் அனைவருடனும் குழந்தை ஊடாடுகின்றது. சமூகப் பழக்க வழக்கங்கள், பேச்சுக்கள், நடைமுறைகள் என்பவற்றைக் குழந்தை கூர்த்து அவதானித்துத் தாமும் அவற்றைப் போலப் பிரதி செய்ய முயல்கிறது. இந்த நேரத்தில் வளரும் குழந்தையுடன் ஊடாடு பவர்கள், மிக அவதானமாகவும்; பேச்சு, நடத்தையில் ஒழுங்காகவும் நடந்து கொள்வதுடன், முரண்பாடுகள் தோன்றாதவாறும் நடந்து கொள்ளுதல் முக்கியமாகும். அவ்வாறு முரண்பாடுகள் தோன்றுமிடத் துப் பெற்றோர்கள், அவ்வப்போது, குழந்தைகளுக்குச் சரியான விழு மியங்களையும், நடத்தை முறைகளையும் சொல்லிக் கொடுத்து முரண் பாடுகளுக்குப் பரிகாரம் காண வேண்டும். தொலைக்காட்சியில் பிற நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பார்க்கும்போதும்; வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியவர்கள் வீடுகளுக்கு வந்து பிள்ளைகளுடன் ஊடாடும் போதும், உற்று நோக்கும் பிள்ளைகள், தாம் வாழும் சூழலில் காணப் படுகின்ற பழக்க வழக்கங்கள், பண்பாடுகளுக்கும் அவற்றிற்கும் வேறு பாடுகள் இருப்பதை உணர்வர். இச் சந்தர்ப்பங்களில், பிள்ளைகள் புதுமை நோக்கித் தவறான விழுமியங்களினாலும், பொருந்தாப் பழக் கங்களினாலும் கவர்ந்து செல்லப்படாதவாறு பெற்றோர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். நவீன தொலைத்தொடர்பு வசதிகளாலும், பல பண்பாட்டுச் சமூகங்களுடனான தொடர்புகள் விரைவாக ஏற்படுவ தாலும், நமது சமூகத்தில் கலாசாரச் சீரழிவுகள், விழுமியச் சீர்கேடு கள், ஒழுக்கப் பிறழ்வுகள் வேகமாகத் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப் புதிய அலைகளினால் பல இளைஞர்கள் அள்ளிச் செல்லப்படுவதையும் தற்பொழுது காண்கின்றோம். பெரி யோர்கள், அறிஞர்கள், தலைவர்கள் தொடக்கம் பெற்றோர்கள் வரை
167

Page 90
இளைய தலைமுறையினருக்குத் தகுந்த புத்திமதிகள் கூறி, அன்பாகவும் பண்பாகவும், புதிய சீரழிவுகளினால் ஏற்படும் தீமைகளையும்; மனித குலத்திற்கே உரித்தான சீரிய மனித விழுமியங்களையும், மனிதப் பண்புகளையும் ஏற்று ஒழுகுவதினால் ஏற்படும் நன்மைகளையும் எடுத் துக் கூறி அவர்களை நல்வழிப் படுத்துதல் வேண்டும்.
விலங்கு உணர்வுகளை நீக்கி, மனிதாபிமான உணர்வுகளைக் குழந்தைகளிலும், இளைஞர்களிலும் வளர்க்க ஆவன செய்தல் வேண் டும். இருபத்தோராவது நூற்றாண்டில் இவ்வுலகம், மனிதர்கள் வாழத் தகுந்த இடமாக விளங்க வேண்டுமாகில், இப்பொழுதிலி ருந்தே, உண்ணும் உணவோடு மனித விழுமியப் பண்புகளையும் சேர்த்துக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். இந்த அருமையான உலகினை, மனித விழுமியங்களும், மனிதப் பண்புகளும், மானுடமும் நிறைந்த, மனிதர்களின் புகலிடமாக அமைக்க நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்; போதனையால் மட்டும் அல்ல, சாதனையால் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும். குழந்தைகள் மற்றவர் களைப் பார்த்துத்தான் தாமும் அவர்களைப் போல ஒழுகுகின் றார்கள். ஒவ்வொரு பெற்றோரும், குடும்ப உறுப்பினரும் இதனை உணர்ந்து வீட்டிலும், சமூகத்திலும் நல்லபடி ஒழுக வேண்டும். அதுவே வளரும் குழந்தைகளை நன்னடத்தை உள்ளவர்களாக வளரச் செய்வதற்குச் சிறந்த வழி. குழந்தைகளின் உள்ளங்களில் நற்பண்புகள் பதிக்கப் பெற்றுவிட்டால், நிச்சயம் அவர்கள் வாழ்நாள் முழுவதும் நல்லவர்களாகவே வாழ்வார்கள்.
68

41. மனித ஆக்கம்
சுவாமி விவேகாநந்தர், கல்விக்கு வரைவிலக்கணம் கூறும்போது 'மனிதனுள் ஆழ்ந்து கிடக்கின்ற பூரணத்துவத்தை வெளிப்படுத்துவது கல்வி' என்று குறிப்பிடுகின்றார். இங்கு இரண்டு விடயங்களை நாம் நோக்க வேண்டியுள்ளது. ஒன்று பூரணத்துவம் பற்றியது. பூரணத்துவம் ஆனது மனிதனில் ஏற்கனவே உள்ளார்ந்த நிலையில் உள்ளது. ஆனால் மனிதனால் வெளிக் கொணரப்படாத நிலையில், பூரணத்துவம் மனித னுள் ஆழ்ந்து, புதைந்து கிடக்கிறது. இவ்வாறு அது உள்ளே கிடக்கும் வரை, எவ்வித பயனும் மனிதனுக்குக் கிடைக்கப் போவதில்லை. மற்றைய விடயம், கல்வி ஆகும். மனிதனுள் மறைக்கப்பட்ட நிலையில், பயனற்றுக் கிடக்கின்ற பூரணத்துவத்தை, வெளிப்படுத்தி, மனிதனின் வாழ்க்கையிலும், நடத்தையிலும் அது ஒழுக்கமாகப் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் அதனை மனிதனுக்குப் பயனுள்ளதாக ஆக்குவது கல்வியாகும். எனவேதான், கல்வியில்லாதவனை 'இரு கால் விலங்கு' கற்க மறுப்பவன் வாழ மறுக்கிறான்' என்றும்; “கல்லார் நெஞ்சில் நில்லான்
A. A
என்றும்; அவன் முருக்கம் பூவுக்குச் சமமானவன் என்றும்;
ஈசன்' என்றும்; ‘கல்வியழகே அழகு" என்றும் ‘ஒதுவது ஒழியேல்' என்றும்; ‘வாழ்க்கைக்கு உறுதுணையாக வருவது தூய நற் கல்வியே" என்றும் எமது ஆன்றோர்கள் கல்வியின் மதிப்பிடற்கரிய பெறுமதியை நன்கு உணர்ந்து கூறியுள்ளார்கள். நாகரிகம் அடைந்த சமூகத்தினர், எங்கிருப்பினும், ஒரு முகமாகப் பெரும் மதிப்பினைக் கல்விக்கே அளித் தனர். மனிதன் ஆயுள் முழுவதுங் கல்வியைக் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மனிதன், மனிதனாக வாழ்வதற்கு, இந்த நிபந் தனைக்குட்படுதல் அவசியமாகின்றது.
மனிதனில் உள்ளார்ந்து புதைந்து கிடக்கின்ற பூரணத்துவம் யாது? என்ற வினா இப்பொழுது எழுகின்றது. அதற்கு விடை காண வேண்டியது அவசியம். எல்லா விதமான அறிவும்; ஆற்றல்கள், திறன் கள், வல்லபங்கள் என்பனவும்; மனப்பாங்குகள், விழுமியங்கள், ஆத் மிகம் என்பனவும் மனிதனுக்குள்ளேயே இருக்கின்றன என்று வேதாந் தம் தொடக்கம் தற்காலக் கல்வியியலாளர்கள் வரை சொல்லியும் ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள். அப்படியாயின் ஒவ்வொரு மணி தனும் அறிவு வளம், ஆற்றல் வளம், ஆத்மிக வளம், விழுமியங்களின் வளம் கொண்டவன் என்பது தெளிவாகின்றது. மனிதன் வளமற்றவன்
169

Page 91
அன்று, வளம் கொண்டவன். இவ்வளங்கள் அனைத்தும் மனிதனிடம் இயல்பாகவே உள்ளன. இயல்பாகவே உள்ள இவ்வளங்கள் யாவும் ஒருங்கிணைந்து இருத்தலே பரிபூரணத்துவம் ஆகும்.
வளங்கள் கண்டு பிடிக்கப்படாமலும், பயன்படுத்தப்படாமலும் இருக்கும் வரை, அவற்றினால் யாருக்கும் பிரயோசனமில்லை. இறுதி யில், அவ்வளங்கள் அழிந்தொழிந்து போகின்ற பரிதாப நிலைதான் எச்சமாகும். மனித வளமும் இவ்வாறே பெரும்பாலும் கண்டுபிடிக்கப் படாமலும், பிரயோசனப்படுத்தப்படாமலும் விடப்பட்டு, காலகதி யில் அழிந்தொழிந்து போகின்றது. இயற்கை மூலவளங்களைப் போலன்றி மனிதனுள் ஆழ்ந்து கிடக்கின்ற அறிவு, ஆற்றல், ஆத்மிகம், விழுமியங்கள் போன்ற வளங்கள் உரிய முறையில் வெளிக் கொணரப் பட்டு, ஆக்கபூர்வமாக மனித வாழ்க்கையில் செறியச் செய்து, பயன் படுத்தப்படா விட்டால்; அவ் வளங்கள் தேடுவாரற்றுத் தேங்கிக் கிடந்து தேய்ந்துபோய் விடுவதோடு மனித குலம் வையத்தில் வாழும் நெறியறிந்து, வாழும் முறை தெளிந்து வாழ்வாங்கு வாழமுடியாத நிலையும் ஏற்பட்டு விடுகின்றது. அதேவேளை அறியாமையினால் ஏற் படுகின்ற அனர்த்தங்கள், வாழ்க்கைப் பிறழ்வுகள், எதிர்மறை விளைவு கள் என்பன மனித குலத்தை நாசத்தின் விளிம்பிற்குத் தள்ளி விடுகின் றன. மனிதனுள் உள்ள பூரணத்துவத்தை வெளிப்படுத்துவதன் மூலமே, மனிதகுல நாசத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும். இந்தப் பூரணத்து வத்தை வெளிக் கொணரும் பணி கல்வியினுடையது ஆகும். கல்வியின் மகத்துவத்தை இதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.
“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்
சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே.'
என்பது ஒல்காப் பெருமைத் தொல்காப்பியரின் திருவாக்கு. மனிதன் உடன்பாடான முறையில் பெருமிதம் கொள்ளும் தகுதியைப் பெற்றுக் கொள்வது எப்போதெனில் அவன் மனித விழுமியங்கள் சார்ந்த வாழ்க்கையின் உச்சிப்படியில் நிற்கும்போதுதான். நல்லொழுக்கத்தில், நன்னடத்தையில், மனிதன் சிறிது தவறும் போதும், மனிதன் தனது வாழ்க்கையைப் பெருமிதம் நிறைந்த உயர்ந்த வாழ்க்கையாக எண்ணிக் கொள்ள முடியாமல் போய்விடும். கல்வி கற்றவர்கள், சமூகத் தலைவர் கள், பதவிகளில் உள்ளவர்கள் போன்ற சமூகத்தின் மதிப்பைப் பெற்ற வர்களும், நம்பிக்கையாளர்களும் ஒரு கடுகு அளவிற்கூடத் தம்முடைய ஒழுக்கத்திலும், நடத்தையிலும் தவறுவார்களானால், அவர்கள் இது வரை பெற்ற நற்பெயர், மதிப்பு, கெளரவம், மாட்சி, கண்ணியம் யாவுமே ஒரு கணத்தில் தவிடு பொடியாகிவிடும். சமூக மதிப்பில் அதள பாதாளத்திற்குத் தள்ளப்பட்டு விடுவார்கள். கொட்டி விட்ட
170

பால், கடந்துவிட்ட காலம், விட்டுவிட்ட இளமை என்பவற்றை எப்படித் திரும்பவும் மீட்டுக் கொள்ள முடியாதோ, அவ்வாறே இழந்து விட்ட மானம், மரியாதை, கெளரவம், கண்ணியம், மதிப்பு என்ப வற்றைச் சமூகத்தில் மீளவும் பெற்றுக் கொள்வது என்பது சிரம சாத்தியம். அவ்வாறு சிறிதளவு அவற்றைச் சம்பாதித்துக் கொள்ள நேரினும் உலகம் சந்தேகக் கண் கொண்டே பார்க்கும். அவ்வாறு பார்ப்பது உலக இயல்பு. ஆகவேதான், நற்பண்புகளையும், மனித விழுமியங்களையும், நல்லொழுக்கத்தினையும் உயிரினும் மேலாக ஒம் பிப், பேணிக் கட்டிக் காத்து வரவேண்டிய கடப்பாடு உடையவர்களாக உள்ளோம். இதற்கு அறிவு, ஆற்றல், மனப்பாங்கு, விழுமியங்கள் என்பன வேண்டும். இவை மனிதனுள்தான் உள்ளன. இவற்றை வெளிப்படுத்துவது கல்வியாகும். எனவேதான், மனித வாழ்க்கைக்குப் பெருமிதத்தைக் கொடுக்கின்ற கல்வி, தறுகண், இசைமை, கொடை என்ற நான்கினுள் கல்வியை முதலாவதாக வைத்துப் பேசுகிறார் தொல்காப்பியர். கல்வி பெறுமானம் மிக்கதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மனிதப் பெறுமானம் மிக்கவை யாவும் மனித விழுமியங்களுக்குள் அடங்குகின்றன. எனவே, கல்வியும் மனித விழுமியமே.
மனித விழுமியம் ஆகிய கல்வி, அதன் மனித விழுமியம் சார்ந்த பணியிலிருந்து விலகிச் செல்வதாகத் தற்காலத்தில் கல்விமீது குறை கூறப்படுகிறது. மனித விழுமியக் கல்வியாகவே, கல்வி ஆரம்பிக்கப்பட்டு நெடுங் காலமாக மனித விழுமியக் கல்வியாகவே வளர்ச்சிபெற்று வந்த கல்வி, அண்மைக் காலத்தில் உலகியல் தொடர்பான விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொருளியல் போன்ற துறைகளையும் அணைத்துக் கொண்டது. அது தவறில்லை. ஆனால் கல்வி, பண்டுதொட்டு ஆற்றி வந்த மனித விழுமியம் சார்ந்த பணிகளைக் கைநழுவ விட்டுவிட்டு, அண்மையில் அணைத்துக் கொண்ட உலகியல், விஞ்ஞானம் சார்ந்த பணிகளுடன் மட்டும் ஒட்டிக் கொண்டு, அவற்றின் பெருக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் மாத்திரம் துணைபோவது என்ற நிலைப்பாடுதான் பெரும் விசனத்தைத் தருகின்றது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் ஆக்கபூர்வமானவையாகவும், மனிதகுல முன்னேற்றத்திற்கு உதவுவன வாகவும் விளங்க வேண்டுமானால், மனித விழுமியங்களின் அடிப்படை யில் அவை கட்டியெழுப்பப்பட வேண்டும். மனித விழுமியங்களினால் தான் விஞ்ஞான, தொழினுட்பத்துறைகள் அழிவுப் பாதையில் செல் விாது தடுக்க முடியும். இன்று உலகம் எதிர்நோக்கும் பெரும் ஆபத்தி னின்றும், அழிவினின்றும், பாதுகாக்கப்படுவதற்கு மனித விழுமியங் களில் நம்பிக்கை வைப்பதினாலும், மனித விழுமியங்களைப் பேணி வாழ்க்கையில் மேற்கொள்வதினாலுமே சாத்தியமாகும்.
17

Page 92
எந்த ஒரு கல்வி முறைமையும் மனிதனின் அறிவு, திறன்கள் சார்ந்த தேவைகளை மாத்திரம் பூர்த்திசெய்து விட்டு, மனிதனின் மனப்பாங்கு, ஒழுக்கம், விழுமியங்கள் உள்ளிட்ட மன எழுச்சிசார் தேவைகளைப் புறக்கணிக்குமேயானால், அக்கல்வி முறைமையினால் நிறை மனிதனையோ, பூரணத்துவம் பெற்ற மனிதனையோ உருவாக்க முடியாது. தனி மனித, குடிமகனாக வளர்ச்சி பெற வேண்டும். தனி மனிதனாக வளர்வதனால் சுயநலமே மேலோங்குகிறது. தானும் தன் குடும்பமும் மட்டும் செழிப்பாக வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய நோக்கில், எத்தகைய வழிகளையும் பயன்படுத்திப் பணம், காசு, பொருள், புகழ் ஆகியவற்றைச் சம்பாதிக்கவே தனி மனிதன் எத்தனிக்கிறான். நீதி, நேர்மை, நடுவு நிலைமை, உண்மை, அன்பு, பிறரில் கரிசனை என்பனவெல்லாம் தனி மனித வளர்ச்சிக்குக் குந்தகம் விளைவிப்பனவாகவே, அத்தகைய சுயநலவேட்கை மிகுந்த தனி மனி தனால் கருதப்படுகின்றன. இத்தகைய தனி மனித வளர்ச்சியால் சமுதாயத்திற்கு நலன் கிட்டுவதில்லை. எனவே தனி மனிதன், குடி மகன் ஆக உருவாக்கப்பட வேண்டியது அவசியம். குடிமகன் என்பவன் சமூகத்தில் தமக்குள்ள கடமைகளையும், பொறுப்புக்களையும் சரிவர அறிந்து கொண்டவன். மனித விழுமியங்கள், சமூகப் பெறுமானங்கள், மனிதப் பண்புகள் பற்றிய அறிவினை உடையவன். அவற்றை வாழ்க்கை யிலும் மேற்கொள்பவன். பிறர்நலம் பேணலை வாழ்க்கைப் பழக்க மாகக் போற்றுபவன், குடும்பத்திலும், சமூகத்திலும், நாட்டிலும் தனது பங்கு என்ன என்பதையும், பணிகள் யாவை என்பதையும் அறிந்து, அவற்றிற்கு ஏற்ப ஒழுகுபவன். கடமைகளைச் சேவையாகக் கொள்பவன். எனவேதான், கல்வியானது நல்ல குடிமகனை அதாவது நற்பிரஜையை உருவாக்குதலையே அதன் பிரதான குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்று கல்வியியலாளர்கள் கூறுகின்றனர். ஒரு குடிமகன் முழுமையான ஆளுமை விருத்தி பெற்றுத் திகழ்கின்றான். எனவே அறிவு, திறன்களுடன், விழுமியங்கள், பண்புகள், மனப்பாங்கு கள் ஆகியனவும் ஒருங்கிசைந்து மனிதனில் வளர்ச்சிபெறும் போது தான், முழுமையான ஆளுமை விருத்தியை மனிதன் பெறுகிறான்.
சுவாமி விவேகாநந்தர் ‘‘மனித ஆக்கம்' (Man Making) என்று குறிப்பிடும்போது, மனிதனில் உள்ளார்ந்து காணப்படுகின்ற உயர் மனிதப் பண்புகளையும், விழுமியங்களையும் வெளிப்படுத்தி, அவற்றை மனிதனின் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடித்து ஒழுகச் செய்யக்கூடிய வகையில் மனிதனை உருவாக்குதல் எனும் பொருள் தொனிக்கக் கூறியுள்ளார். எனவே, கல்வியானது Money Making, அதாவது பண ஆக்கத்திற்கு துணைபோனால் மட்டும் போதாது, Man Making அதாவது நல்ல மனிதவாக்கத்திற்கும் துணையாதல் வேண்டும் என்று கொள்வோமாக.
172

42. ஒழுக்க வளர்ச்சி
சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும். அகப்பையில் வந்ததைத்தான் மற்றையோர்க்குப் பரிமாறலாம். இல்லாத ஒன்றினை வழங்கு, என்று வற்புறுத்துவதில் பயனில்லை. அவ்வாறு வற்புறுத்து வது அறியாமை, மனிதப் பண்புகளைப் பொறுத்தளவிலும் இதே நிலைப்பாடுதான். பண்புகள் என்றால் ரூபாய்க்கு எத்தனை என்று கேட்பவர்களும் உள்ளனர். அத்தகையவர்களைப் பண்புகளைப் பரி மாறச் சொன்னால் அவர்கள் எங்கு போவார்கள். எனவே பண்புகள் பற்றிய அறிவு வேண்டும், பின்னர் அவற்றை உணர்தல் வேண்டும். அடுத்து பண்புகளை ஏற்றுக் கொள்ளும் நிலை தோன்றும். அதன் பின்னரே, பண்புப் பரிவர்த்தனை நிகழ்கின்றது. சிறு பராயத்தி லிருந்தே நல்ல மனிதப் பண்புகளில் பரிச்சயம் ஏற்படும் அளவிற்குப், பிள்ளைகளுக்குத் தேவையான சூழலையும் ஏற்படுத்தி, அனுபவங்களை யும் வழங்கும் பொறுப்பு, குடும்பம், பிள்ளை வாழுகின்ற சுற்றம், பாடசாலை, கோயில் ஆகியவற்றைச் சார்ந்தது. இச் சமூக நிறுவனங் கள் இளந் தலைமுறையினரின் பண்பு வளர்ச்சியிலும், ஒழுக்க வளர்ச்சி யிலும் சிரத்தை எடுக்கும் போதே, பண்புள்ள, ஒழுக்கமுள்ள சமுதாயம் உருவாக முடிகிறது. இதற்கு இச் சமூக நிறுவன உறுப்பினர்கள் சிரத்தை எடுத்தால் மட்டும் போதாது, தாமும் ஒழுக்க சீலர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். மனிதப் பண்புகளும், ஒழுக்க சீலங்களும் வாழ்கின்ற சூழலில், வளர்ந்து வருகின்ற இளஞ் சந்ததியினர் தாமும் அவற்றை அறிந்து கொள்ளவும், அவற்றுடன் பரிச்சயம் பெறவும், உறவு கொண்டாடவும் முயல்வர். அந்தவகையில், நல்லொழுக்கத் தைக் கற்றுக் கொள்வதிலும் கற்றபடி ஒழுகுவதிலும் பிள்ளைகளுக்குச் சிரமம் தோன்றாது.
வாழும் மொழி என்று ஒரு மொழியைப் பற்றிக் கூறும்போது, நாம் விளங்கிக் கொள்வது என்ன? அம்மொழி வழக்கில் உள்ளது; பயன்படுத்தப்படுகிறது; பேசப் படுகின்றது என்பதை விளங்கிக் கொள் கின்றோம். வழக்கில் இல்லாத மொழி, இறந்த மொழி என்கிறோம். அது போலவே, மனித விழுமியங்களும், மனிதப் பண்புகளும் வாழும் விழுமியங்களாகவும், வாழும் பண்புகளாகவும் மனிதர்களிடையே விளங்க வேண்டும். மனித வாழ்க்கையில் அவை வழக்கில் இருக்க வேண்டும். போதனையில் மட்டுமல்ல, சாதனையிலும் மனித விழு மியங்கள் உயிர்ப்பாக விளங்க வேண்டும். அவை வாழ வேண்டும்;
173

Page 93
அப்போதுதான் மனித வாழ்க்கை பெறுமதி வாய்ந்ததாக விளங்கும். மனித வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாகப் போய்விடாமல் தடுக்கும் ஆற்றல் மனித விழுமியங்களுக்கு உண்டு. மனிதர்களிடமிருந்து மனித விழுமியங்களைப் பிரித்தெடுக்கும் முயற்சி அனுமதிக்கப்படலாகாது.
ஒவ்வொரு மனிதனும் பண்பு வளமும், ஒழுக்க வளமும் கொண்ட வன். இன்னொரு வகையில் கூறுவதானால், ஆத்மிக வளம் கொண்ட வன் மனிதன் எனலாம். இவ்வரிய வளங்கள் மனிதனிடம் ஆழ்ந்து கிடக்கின்றன. அவ்வளங்கள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பயன் படுத்தப்படாமல் மண்டிக் கிடக்கின்றன. மனிதர்களில் பெரும்பாலோர் தம்மிடமுள்ள அளப்பரிய வளத்தையும் பலத்தையும் அறியாது உள் ளனர்; பெறுமதியை உணராது உள்ளனர். மனிதச் சுரங்கத்திலுள்ள இவ்வரிய வைர மனிதர்களைத் தோண்டி எடுத்து, வெளியே கொண்டு வருபவர்களே மனிதருள் மாணிக்கம் ஆகின்றனர்; மனிதர்களுள் தெய் வங்கள் எனப் போற்றப்படுகின்ற;-இந்த நிலையை எய்துவதற்குச் சிறு பராயத்திலிருந்தே பிள்ளைகளுக்கு ஒழுக்க வழிகாட்டல் அவசியம். ஒழுக்க சீலங்களுக்குப் பிள்ளைகள் அறிமுகமாக வேண்டும்; அவற்றுடன் பரிச்சயம் கொள்ள வேண்டும். ஒழுக்க சீலர்களுடன் ஊடாட வேண்டும். நல்ல ஒழுக்கச் சூழல், வாழும் சூழலாகப் பிள்ளைகளுக்கு அமைந் திருத்தல் அவசியம். பெற்றோர்கள், வளர்ந்தவர்கள், ஆசிரியர்கள் என்போர் அறிவோர். அவர்கள் எத்தகைய அர்ப்பணங்களையும், தியாகங்களையும் புரிந்தாகுதல் வருங்காலத் தலைமுறையினருக்குச் சிறந்த பண்புச் சூழலை அமைத்துக் கொடுப்பதன் மூலம்; அவர்கள், நல்லவர்களாகவும் மனிதப் பண்புள்ளவர்களாகவும் வளர்வதற்குப் பேருதவி புரிந்தவர்கள் ஆகின்றனர். பிள்ளைகள் மனித விழுமியங் களை மதிக்குந் திறன் வாய்ந்தவர்கள்; தகுதியுள்ளவர்கள். இயல் பாகவே அது அவர்களிடம் உண்டு. அவ்வாறிருந்தும் அவர்கள் மனித விழுமியங்களை அறியாமலும் அவற்றை மதித்துப் பேணாமலும் இருப் பதற்கு வளர்ந்தவர்களே காரணம் என்பது மேலே கூறியவற்றி லிருந்து தெளிவாகின்றது. வளர்ந்தவர்கள் சிறார்களை ஆற்றுப்படுத் தாமல் விட்டால், அதற்குரிய பொறுப்பை ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
சிறுவர்கள் வாழுகின்ற புறச்சூழல் அவர்களின் ஒழுக்கப் பண்பு வளர்ச்சியில் எத்துணை செல்வாக்கைச் செலுத்துகின்றதோ, அதே போன்று சிறுவர்களின் உள வளர்ச்சிக்கும், ஒழுக்கப் பண்பு வளர்ச்சிக் கும் நெருங்கிய தொடர்பு உண்டு. புகழ் வாய்ந்த உளவியல் ஆராய்ச்சி யாளர்களான ஜீன் பியாஜே என்பவரும், லோரன்ஸ் கோல்பேர்க் என்பவரும் பல பரிசோதனைகளையும், ஆய்வுகளையும் செய்து முடிவு களை வெளியிட்டுள்ளனர்.
174

பியாஜே, 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களில், அவர்களின் ஒழுக்க விழுமியங்களின் வளர்ச்சிக்கும் உள வளர்ச்சிக்கும் இடையிலான தொடர்புகளை நான்கு படிமுறைகளாக வகுத்துள்ளார்.
முதலாவது படிநிலை, 2 வயது வரையிலான காலப் பகுதியாகும். இப்பருவக் குழந்தைக்கு, மிக எளிமையான ஒழுக்கப் பண்பு பற்றிய விடயத்தைத் தன்னிலும் கிரகிக்க முடியாத நிலை உள்ளது. இரண் டாவது படிநிலை, 2 வயது முதல் 6 வயது வரையிலாகும். வளர்ந்த வர்கள் சொல்லிக் கொடுக்கின்ற ஒழுக்க விதிகளைக் குழந்தைகள் மனனம் செய்யும் ஆற்றல் இப் பருவத்தினர்க்கு உண்டு. ஆனால் அவற்றின் கருத்துக்களை விளங்கிக்கொள்ளுந் திறனோ, நடைமுறை யில் எல்லா நேரங்களிலும் அவற்றைக் கடைப்பிடித்தொழுகுகின்ற, தன்மையோ ஏற்படுவதில்லை. எனவே ஒழுக்க விதிகளைக் குழந்தை களுக்கு அடிக்கடி சொல்லிக் கொடுக்க வேண்டியுள்ளது. அடுத்து, ஏழு முதல் பத்து வயதுப் பருவத்துப் பிள்ளைகள் சமூகச் செயற்பாடு கள் சரியாக நடைபெறுவதற்கு விதிகள், ஒழுங்குமுறைகள் முக்கிய மானவைதான் என்பதை ஏற்றுக் கொள்ளுகின்றனர். இப்பருவத்தினர் ஒழுக்கச் சட்ட விதிகளை மீறி நடக்கின்றார்கள் என்றால், அதற்குக் காரணம் அந்த ஒழுக்க விதிகளை அவர்கள் தெரிந்துகொள்ளாமையே யன்றி அவர்கள் ஒழுக்க விதிகளை மதிக்கவில்லை என்பதல்ல. எனவே இப்பருவத்துப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்களும், ஆசிரியர்களும், வளர்ந்தவர்களும் ஒழுக்க விதிகள் பற்றிய அறிவைப் புகட்ட வேண்டும். அதேவேளை, அவர்கள் அறியாமலோ, தெரியாமலோ செய்த தவறு களை, ஒழுக்கயினங்கள் என்று கொள்ளாமல் அவர்களை மன்னித்து, திருத்தும் நோக்குடன் அவர்களுக்கு உரிய ஒழுக்கப் பண்புகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தாமும் அதன்படி முன்மாதிரியாக ஒழுகிக் காண் பிக்க வேண்டும். ஒழுக்க விதிகளை அறிந்து கொண்டதும், அவற்றை ஏற்று மதிக்கும் இயல்பு பிள்ளைகளிடம் உண்டு. இப்பிள்ளைகள் ஏனைய ஒத்த வயதினருடன் சேர்ந்து விளையாடவும், கூடிப் பணி புரியவும் சந்தர்ப்பங்கள் பெறும்போது, அவர்கள் கூடி வாழும் பண்பு களையும் சமூகவயமாகும் நிலையினையும் அடைகிறார்கள். தனித்து வாழ முடியாது என்பதையும், கூடி வாழ வேண்டிய தேவையையும் உணர்ந்து கொள்கின்றனர். அதற்குரிய சட்டதிட்டங்களையும் தாமே ஆக்கிக் கொள்கிறார்கள். எல்லோருடைய விருப்பின் பேரிலும் உரு வாக்கப்பட்ட ஒழுக்க விதிகள் என்பதால் அவற்றை மதித்து அதன்படி ஒழுகுகின்றார்கள். இந்த நிலையில், தீய சக்திகளுடன் கூட்டுச் சேராத படி பிள்ளைகள் கண்காணிக்கப்பட வேண்டியதும் அவசியம். தீங்கினர் தம் கண்ணுக்குத் தெரியாத தூரத்தில் பிள்ளைகள் வாழுமாறு, பெரிய
175

Page 94
வர்களால் நெறிப்படுத்தப்பட வேண்டும். அடுத்த பருவம் 11-12 வயதுப் பருவத்தினர் பருவம் ஆகும். இப் பருவப் பிள்ளைகளிடம் கருத்து நிலையில் நல்லது கெட்டது உணரும் தன்மையும், நியாயிக்கும் ஆற்றலும் காணப்படும். ஒழுக்க விதிகளில் நாட்டம் செலுத்துவதிலும், மீறாதிருத்தலிலும் ஆர்வம் கொள்வர். தாம் ஒரு சமூகத்தின் உறுப்பினர் என்ற உணர்வும், கடமைகள், பொறுப்புக்கள், உரிமைகள் பற்றிய விளக்கமும், அவற்றைப் பேண வேண்டும் என்ற நிலைப்பாடும் உரிய வர்களாக இருப்பர். தாம் வாழும் சமூகச் சூழலுக்கேற்ப புதிய ஒழுக்க விதிகளை ஏனையோருடன் சேர்ந்து ஆக்கி அவற்றை அநுசரிப்பர். பெற்றோரும் ஆசிரியர்களும் இவற்றை நன்குணர்ந்து பிள்ளைகளை வழிப்படுத்தினால் அப்பிள்ளைகளில் சிறந்த ஒழுக்கப் பண்புகளின் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். பிள்ளைகள் தூண்டப்பட வேண்டும், ஊக்கப்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் துலங்குவார்கள். இக் கைங்கரியங்களைப் பெற்றோரும், ஆசிரியரும் மேற்கொள்ள, வேண்டும். எரிகின்ற விளக்கானாலும், அதன் திரியை யாராவது தூண்டும் போதுதான் அது மேலும் பிரகாசிக்கின்றது. இயல்பாக நல்ல பண்புகளைப் பெற்றுள்ள குழந்தைகள், ஊக்குவிக்கப்படும் போதும், வழி காட்டப்படும் போதும் அப் பண்புகள் மேலும் வளர்ச்சி பெற வழி பிறக்கின்றது.
லோரன்ஸ் கோல்பேர்க் எனும் அமெரிக்க உளவியலாளர் பியாஜேயின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு மேலும் பல ஆய்வுகள், பிள்ளைகளின் ஒழுக்க வளர்ச்சிக்கும், உள நிலை விருத்திக் கும் உள்ள தொடர்பு பற்றிச் செய்துள்ளார். அவர் ஆறு வளர்ச்சிப் படிகளை இனங் கண்டுள்ளார். முதலாவது படிநிலையில் குழந்தைகள் நல்லது எது, கெட்டது எது என்று வளர்ந்தவர்கள் சொல்வதை ஏற்று நடக்கின்றனர். வெகுமதியை எதிர்பார்த்தோ, தண்டனைக்குப் பயந்தோ குழந்தைகள் ஒழுகுகின்றனர். இரண்டாவது நிலையில், எந்தச் செயல் நன்மையை அளிக்கிறது, அதுவே சரியான செயல் என எண்ணுகிறது குழந்தை. ஏனையோருக்கும் நன்மை பயப்பனவாக இருக்கும் எனவும் கொள்கிறது. பிறருக்கு நன்மை பயக்கும் செயல் களைச் செய்வதற்கு விழைகிறது. மூன்றாவது நிலையில் தானும் சமூகத்தில் வாழ்வதால், தனது நடத்தைகளைச் சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதைப் பிள்ளை உணர்கிறது. சமூகம் விரும்பாதவற்றை, தாமும் தள்ளி வைக்க வேண்டிய நிலை உருவாகிறது. நான்காவது வளர்ச்சி நிலையில், ஒழுக்க விதிகள், மனிதப் பண்புகள், பொதுச் சட்டதிட்டங்களை ஏற்று நடப்பதால், சமூக நலன்களும், சமூகத்தில் உறுதிநிலையும் ஏற்படுகிறது. மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படு கின்றன. விதிகளை மீறுவதால் சமூக ஒழுங்கு சீர் கெட்டு விடுகிறது போன்ற எண்ண வளர்ச்சிகள் தோன்றுகின்றன.
176

இந் நான்கு நிலைகளிலும், பயம், வெகுமதி எதிர்பார்ப்பு சமூக அங்கீகாரம், மரபுச் சட்ட விதிகள் என்பன நடத்தைகளைத் தீர்மானித்தன. தான் தனியாகத் தீர்மானம் எடுக்குமளவிற்கு இன்ன மும் உள வளர்ச்சியடையவில்லை. ஐந்தாவது படிமுறை வளர்ச்சி, ஒழுக்கம் நடத்தை பற்றிய சரியான தீர்மானத்தை எடுக்கக் கூடிய நிலைக்குப் பிள்ளைகளை இட்டுச் செல்கிறது. ஆறாவது படி மிக உயர்ந்த, முதிர்ந்த ஒழுக்க வளர்ச்சி நிலை. உலகளாவிய முறையில் மானுட நேயம், மனித இனம் ஒன்று எனும் விழுமிய உள நிலை உண்டாகின்றது. எனவே, சிறுவர்களின் ஒழுக்க வளர்ச்சியில் பங்கு கொள்கின்ற பெற்றோர், சமூகத்தினர், ஆசிரியர்கள், ஒழுக்க வளர்ச்சி படிகளை அறிந்து, உரிய முறையில் வழி காட்டினால், நிச்சயம் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தினை உருவாக்க முடியும்.
177

Page 95
43. விளையாட்டும் விபரீதமும்
**வாழும் பிள்ளைகளை மண்விளையாட்டிலே தெரியும்’ என் பார்கள். ஒவ்வொரு பிள்ளையும் பெரியவராக வளர்ந்து எத்தகைய வர்களாகவும், எவ்வாறும் வாழப்போகிறார்கள் என்பதை அவர்கள் பிள்ளைப் பருவங்களில் செய்கின்ற செயல்களிலிருந்து உணர்ந்து கொள்ள முடியும். சிறு பராயத்திலே பிள்ளைகள் தங்கள் இயல் பூக்கங்களுக்கேற்ப, பல்வேறு செயல்களிலும் ஈடுபடும்போது, அச் செயல்கள் தமக்கும் பிறருக்கும் நன்மை பயப்பனவாக இருப்பின், அவர்களைத் தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்த வேண்டியது வளர்ந் தோர் கடமையாகும். அவ்வாறின்றி, அவர்களின் செயல்கள் நெறி பிறழ்ந்தவையாகக் காணப்படும் போதும், பிறருக்குத் தீங்குகளையும் இடையூறுகளையும் விளைவிப்பனவாக இருக்கும் போதும், அத்தகைய செயல்களைத் தடுத்து நிறுத்தி, அப்பிள்ளைகளுக்குச் சரியான வழி முறைகளைச் சொல்லிக் கொடுத்து, சீரிய முறையில் ஒழுக்கங்களைப் பேணுவதற்கு அவர்களை வழிப்படுத்த வேண்டியதும் சமூகத்தில் உள்ள வளர்ந்தவர்கள், பெரியவர்கள் ஆகியோரின் கடமை. 'பிள்ளைக்கு விளையாட்டாம் சுண்டெலிக்குச் சீவன் போகுதாம்' என்றொரு பழ மொழி நம்மிடையே உண்டு.
பிள்ளைகளுக்கு விளையாட்டுக்களில் விருப்பம் இருப்பது இயல்பு தான். அவர்கள் விளையாட வேண்டியதும் அவசியமே. விைையாட்டு களும் கல்வியின் ஒரு முக்கியமான அம்சமே என்பதை இன்றைய கல்வியியலாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். விளையாட்டுக்கள் வாயி லாகப் பல மனித விழுமியங்களைக் கற்றுக் கொள்வதற்கும் வாய்ப் பேற்படுகின்றது என்பது மறுப்பதற்கில்லை. கூட்டுணர்வு, பரஸ்பர புரிந்துணர்வு, தலைமைக்குப் பணிதல், விதிமுறைகளை அனுசரித்தல், வெற்றி தோல்விகளைச் சமமாக ஏற்றல், நடுவு நிலைமை, அன்பு, கரிசனை, கூட்டாக வேலை செய்தல், விட்டுக் கொடுத்தல், நீதியை மதித்தல் ஆகிய வாழ்க்கை விழுமியங்களை அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளவும், அவற்றைச் சாதனையில் செயல்படுத்தவும் விளையாட் டுக்கள் வாய்ப்புக்களைத் தருகின்றன.
எத்தகைய விளையாட்டுக்களும், விளையாட்டாகச் செய்யப்படு கின்ற செயல்களும், பிறரை வருத்துவதாகவோ, துன்புறுத்து வதாகவோ, அவர்களின் சுதந்திரத்தைப் பாதிப்பனவாகவோ இருத்தல் ஆகாது. விளையாட்டு வினையாகிவிடக் கூடாது என்று பெரியவர்கள்
178

கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம். சும்மா விளையாட்டுக்குத்தானே செய்தார்கள், அவற்றைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றெல்லாம், சமாதானம் சொல்லும் மனிதர்களையும் நாம் வாழ்க்கையில் சந்திக் கிறோம். ஒன்றைச் சொல்லிவிட்டு, அதனால் ஒருவருக்குத் துன்பம் ஏற்படும்போது, விளையாட்டுக்குத்தானே சொன்னேன் என்று கூறிச் சமாளிப்பவர்களும் உண்டு. அவர்களின் கருத்துப்படி, "விளையாட்டு’ என்ற போர்வையில் பாதகமானவற்றைச் செய்துவிட்டு, தந்திரமாகத் தப்பித்துக் கொள்ளும் உத்தியாகவே விளையாட்டினை நோக்குகிறார் கள். இது தவறானது ஆகும்.
தகாத செயல்களில் ஈடுபாடு கொண்டு விட்டு, அவற்றை விளை யாட்டுக்காகவும், பகிடிக்காகவும், முஸ்பாத்திக்காகவும் செய்ததாகக் கூறி, பிறர் துன்பங்களில், தாம் இன்புறும் நிகழ்வுகள் இன்று மலிந்து காணப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். அவற்றைக் கண்டும் காணாததுபோல் நடிப்பதும்; சிறு பராயத்து விளையாட்டுக் கள்தானே என்று அக் கொடுஞ் செயல்களை ஏற்றுக்கொள்வதும்; அத் தவறுகளைச் சுட்டிக் காட்டி, அத்தகைய முறைகெட்ட செயல் களில் ஈடுபடுவோரைக் கண்டித்து அவர்களைத் திருத்தாது விட்டு விடுவதும்; குற்றங்களையும், தவறுகளையும் பெரும் மனதுடன் சகித் துக் கொள்வதும், இன்றைய வளர்ந்த தலைமுறையினரின் இயல்பு ஆகிவிட்டது. இந்த இயல்பும், விட்டுக் கொடுத்துத் தப்பித்துக் கொள் ளும் மனப்பாங்கும், தமக்கு வரும் தொல்லைகளையும், இடைஞ்சல் களையும் தற்காலிகமாகத் தவிர்த்துக் கொள்ள உதவலாம். அவை யாவும் சமூகத்தில் பெருந் தீங்குகளாகிவிடுவதை, அவ்வாறு வளர்ந்த வர்கள் வாழாவிருப்பதன் மூலம் தவிர்த்துக் கொள்ள முடியாது. சுட்டிக்காட்டித் திருத்துவதன் மூலமே, சமூகத்தில் ஒழுங்கு, கட்டுப் பாடுகளைப் பேண முடியும்.
விளையாட்டுக்கள், வினைகளாகித் தீய விளைவுகளை ஏற்படுத் திய சம்பவங்கள் பல நமது இதிகாசங்களிலும், வரலாறுகளிலும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. சகுனியுடன் தருமர் சொக்கட்டான் ஆடியது ஒரு விளையாட்டாகத்தான் என்பதை நாம் அறிவோம். ஆனால் நடந்தவை என்ன? பஞ்ச பாண்டவர்கள் தமது நாடு, நகரங்கள், ஏன் முழு அரசையும் இழந்தார்களே! ஈற்றில் கட்டிய மனையாளையும் மானபங்கம் செய்யப்படுமளவிற்கு நிலைமை சென்று விட்டதே. ஒரு சொக்கட்டான் விளையாட்டு, கெளரவர் பாண்டவர் களுக்கிடையே மகாபாரதப் பெரும்போர் ஏற்படுவதற்கு ஏதுவாயிற்று. சூதாட்டத்தினால், நள மகாராசன் பட்ட பாடுகள், அவலங்கள் என்பன சொல்லில் அடங்கா. 'சூதும் வாதும் வேதனை செய்யும்’ என்ற கூற்று எத்துணை பொருள் பொதிந்தது என்பதை நாம்
179

Page 96
உணர்ந்து கொள்ளுதல் அவசியம். பொதுவாகச் சூது ஆனாலும் சரி, வாதம் செய்தல் ஆனாலும் சரி விளையாட்டாகத் தொடங்கப்படு கின்றன. ஆனால் இறுதியில் அவை முற்றிச் சண்டை சச்சரவுகள், கோபதாபங்கள் ஆகியவற்றில் போய் முடிகின்றன. விளையாட்டுப் பேச்சுக்கள், சில சமயங்களில் விபரீதமாகி விடுகின்ற சந்தர்ப்பங்களும் உண்டு.
கணவன் மனைவிக்கிடையே விளையாட்டாக நடைபெறும் உரை யாடல்கள் பின் தாங்கமுடியாத அளவிற்கு முற்றி விடுகின்றன. மண முறிவுக்கும் இத்தகைய வீண் விளையாட்டுப் பேச்சுக்கள் வழி வகுத்து விடுகின்றன. நண்பர்கள்கூட, அவர்களுக்கிடையே நடைபெறும் விளை யாட்டுப் பேச்சுக்கள், வீம்புப் பேச்சுக்களாக மாறி சீவிய காலம் முழுவதும் ஒருவர் முகத்தில் மற்றவர் முழிக்காத அளவிற்குப் பகைமை ஏற்பட்டு விடுகிறது. எனவேதான் விளையாட்டு வினையாகிவிடக் கூடாதே என்று அங்கலாய்க்கின்றனர்.
பொய் சொல்லல் ஆகாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயந்தான். எனவே, பொய் சொல்பவர்கள் தாம் சொல்வது பொய் என்று தெரிந்து கொண்டுதான் சொல்கிறார்கள், என்பதும் உண்மையே. சிலரைக் கேட்டால், ஏன் பொய் சொல்கிறீர்கள் என்று, உடனே அவர்கள், விளையாட்டுக்குத்தான் பொய் சொல்கிறோம் என்பார்கள். இதனாலோ என்னவோ, விளையாட்டிற்காகவும் பொய் சொல்லாதே என்ற ஆணித்தரமான வாசகம் அடுத்து எழுந்தது போலும்.
ஒருமுறை வசிட்டரும், விசுவாமித்திரரும் விளையாட்டு ஒன்றில் இறங்கினார்கள். விளையாட்டு என்று வந்தால், அங்கு பந்தயம் கட்டுவதும் கூடவே வந்துவிடுகிறது. பந்தயம் என்பது ஒர் உடன் படிக்கை. வென்றவருக்குத் தோற்றவர் பந்தயப் பொருளையோ, பணத்தையோ அந்த உடன்படிக்கையின்படி வழங்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் சூதுதான். வசிட்டரும், விசுவாமித்திரரும் பந்தயம் கட்டி ஆடிய விளையாட்டு என்னவெனில் அயோத்தியை ஆண்ட, என்றுமே பொய் சொல்லியறியாத, ஏன், விளையாட்டுக்குத் தன்னி லும் பொய் பேசத் தெரியாத, அரிச்சந்திர மன்னனைப் பொய் பேச வைப்பது என்ற விளையாட்டுத்தான். அரிச்சந்திரனை விளையாட்டுக் குத் தன்னிலும், பொய் பேச வைக்க, விசுவாமித்திர முனிவரால் முடியவில்லை. கதியிழக்கினும் கட்டுரை இழக்காதவன் என்ற முறை யில் அரிச்சந்திரன் புகழ் இன்றும் நின்று நிலவுகிறது. ஆகவே, விசுவா மித்திரர் தோற்றார். ஆயினும், அந்த விளையாட்டினால் நேர்ந்த விபரீதங்களை நாம் நன்கு அறிவோம்.
180

விளையாட்டுக்காக எதையும் செய்யலாம், பொய்யையும் பேச லாம், பின் மன்னிப்பும் பெறலாம் என்று நினைப்பது தவறு ஆகும். அவற்றால் ஏற்படக்கூடிய விபரீதங்கள், வேதனைகள், துன்பங்கள், இழப்புக்கள் என்பன பாரதூரமானவையாக இருக்கும் என்பதை உணர்ந்து கொள்ளுதல் அவசியம்.
விளையாட்டாகத் தொடங்கப்படுகின்ற பல பழக்கங்கள், நாளடைவில் வழக்கங்களாகி விடுகின்றன. பின்னர், அப்பழக்க வழக் கங்களிலிருந்து விடுபட முடியாமல் போய் விடுகிறது. புகைத்தல், மது அருந்துதல், போதைப் பொருட்களைப் பாவித்தல் என்பன வெல்லாம் தொடக்கத்தில் விளையாட்டாகத்தான் ஆரம்பிக்கப்படு கின்றன. ஆனால் பின்னர் அவற்றின் கோரப்பிடியிலிருந்து விடுவிக்க முடியாமல் தவிக்கிறார்கள். ஆகவே, எத்தகைய தீய பழக்கங்களையும் *சும்மா ஒருக்கால் செய்து பார்ப்போமே" என்று கூடக் கனவிலும் நினைத்துவிடக் கூடாது. அவ்வாறு கெட்டவை பற்றி நினைக்காமல் இருப்பதற்கு ஒரே வழி, எந்நேரமும் மனத்தினால் நல்லவற்றைப் பற்றி மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருத்தல் ஆகும். ஒளி பிரகாசிக்கும் இடத்தில் இருளுக்கு ஏது இடம்? நல்லன வீற்றிருக்கும் உள்ளத்தில், ஒருபோதும் தீயன உட்கார்ந்து கொள்ள இடமே இருக்காது. சிறு பராயத்திலிருந்தே நல்லவற்றையே சிந்தித்து, நல்லவற்றையே பார்த்து, நல்லவற்றையே கேட்டு, நல்லவற்றையே கற்று, நல்லவற்றையே செய்து, நல்லபடி ஒழுகி வந்தால் வாழ்க்கையில், நிம்மதியும் இன்பமும், மலர்ச்சியும் கிடைப்பது திண்ணம். விளையாட்டுக்காகவேனும் தீய நடத்தைகளில் ஈடுபாடு கொள்ளல் ஆகாது என்பதில் உறுதியாக இருத்தல் மிக அவசியம். மனித விழுமியங்கள் யாவும் நல்லவை. அவற்றைப் பேணி நல்வாழ்வு வாழ்வோமாக.
18

Page 97
44. அச்சம்
அச்சம் என்பது ஒரு வகை உள்ளக் கிளர்ச்சி. உள்ளக் கிளர்ச்சி, மனதில் கிளர்ந்து எழுகின்றபோதிலும், அது உடல் முழுவதும் பாய்ச் சப்படுகிறது. அச்சத்தினால் இரத்தம் உறைந்து போகிறது என்பார் கள்; உடல் முழுவதும் நடுங்குகிறது என்கின்றனர். உடலில் வியர்வை கொட்டுகிறது என்பர். அச்சம் ஏற்படும்போது உள்ளம் மட்டுமல்ல. உடல் முழுவதும் நிலைகுலைகின்றது.
சில ஏதுக்கள் அச்சத்தை அதிகப்படுத்துகின்றன. பொதுவாக அபாயம், இடையூறு என்பன ஏற்படும்போதும்; அபாயம் வரக்கூடும் என்று எதிர்நோக்கும்போதும், அச்சம் தோன்றிப் பெருகுகின்றது. அபாயங்கள் நீங்க அச்சமும் நீங்கிவிடும். சிலர் வேண்டாததற்கெல்லாம் அஞ்சி அஞ்சிச் சாவர். அஞ்சாதவர்க்கு ஒரு மரணம்; அஞ்சினவர்க்குச் சத மரணம் என்ற கூற்றைக் கேள்வியுற்றுள்ளோம். ‘அச்சம் என்பது மடமை' யென்றும், 'அச்சந் தவிர்' என்றும் வாக்குகள் உள்ளன. 'உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதிலும், அச்சமில்லை, அச்ச மில்லை அச்சமென்பதில்லையே' என்கிறார் பாரதியார்.
அச்சம் முன்னேற்றத்தைத் தடை செய்வது, அதனால் அச்சம் வேண்டாம் என்கின்றனர். குழந்தை பிறந்ததும் அச்சத்தினால் அழு கின்றது. தக்க பாதுகாப்பு இல்லாத காரணத்தினால் அச்சம் உண் டாகின்றது. சிலர் கரப்பான் பூச்சிக்குப் பயம்; இன்னும் சிலர் இருட்டுக் குப் பயம். வேறு சிலர் கயிற்றைப் பாம்பு என்று கருதிப் பயப்படு கின்றனர். நீருக்கும் நெருப்புக்கும் பயம்; கொடிய விலங்குகளுக்குப் பயம்; துட்டர்களுக்குப் பயம்; பேய் பிசாசுகளுக்குப் பயம். இவ்வாறு பயங்கள் பல வகையாக இருப்பினும், ஒட்டு மொத்தமாகப் பார்ப்பின் எல்லோருமே ஏதோ வகையில் பயம் கொண்டவர்களாகவே காணப் படுகின்றனர்.
வளர்ந்தவர்கள் குழந்தைகளைப் பயப்படுத்துகிறார்கள். குழந்தை கள் குழப்படி செய்யாமல் இருப்பதற்கு இந்தப் பயமூட்டுகின்ற முறை பண்டைக் காலத்திலிருந்து வளர்ந்தவர்களால் கையாளப்பட்டு வருகின் றது. இதனால் பல குழந்தைகள் வளர்ந்து வரும்போது கோழைகள் ஆகி விடுகின்றனர். துணிவு, தைரியம் என்பன தூர விலகிவிடுகின்றது, எதையும் முன்னெடுத்துச் செல்லக்கூடிய முனைப்பு மழுங்கிவிடுகின்றது. குழந்தை நிலையில் தோன்றுகின்ற அச்சம் திக்குவாய் போன்ற பேச்சுக் குறைபாடுகளையும் ஏற்படுத்திவிடும்.
182

வளர்ந்த பின்னர், அறிவும், கற்பனையும் வளர, வளர, எதிர் காலத்தில் என்ன நிகழுமோ என்ற ஏக்கங்களாகவும், அங்கலாய்ப்புக்கள் ஆகவும் அச்சங்கள் மாறுகின்றன. குமரப் பருவ அச்சங்கள் பொது வாகப் பாலியல் சம்பந்தமானவையாக இருக்கும். பின் தொழிலில் அமர்ந்த பொழுதும், விவாகமான பின்னரும் புதுப்புது அச்சங்கள் தோன்றுகின்றன. பகைமை, நோய், குற்றம், பிறழ்வான நடத்தைகள் என்பன அச்சத்தை விளைவிக்கின்றன. மரண பயம் யாவற்றிலும் மேலாக, மனிதருக்கு அச்சத்தைச் சதா ஊட்டிக் கொண்டே இருக் கின்றது. இந்த வகையில் மனிதர் அச்சத்திலே வாழ்ந்து அச்சத்திலேயே மடிகின்ற நிலையை, ஏற்றுக் கொண்டவர்களாக விளங்குகின்றனர்.
இயற்கைக்கு மனிதர்கள் அஞ்சியதாலேயே இயற்கை வழிபாடும், கடவுள் வழிபாடும் தோன்றின. இயற்கையையும், கடவுளர்களையும் சாந்தப்படுத்துவதால், வாழ்வில் பாதுகாப்புக் கிட்டும் என்று எண்ணி னர். சமூகத்திற்கு மனிதர் பயப்பட்டு வாழ்ந்து வருகின்றமையினா லேயே, மனிதர் மனிதராகவும், மனித விழுமியங்களை அனுசரித்தும் பேணியும் வாழ்ந்து வருகின்றனர். சமூகம் பழிக்கும் என அஞ்சியே மனிதர்கள் குற்றம் இழைக்காமல் இருக்கின்றனர். நீதிக்கும், சட்டத் திற்கும் அஞ்சியே மனிதர்கள் நீதிக்குக் கட்டுப்பட்டும், சட்டத்தை முறிக்காமலும் வாழ முயல்கின்றனர். பாவங்கள் புரியப் பயப்படுபவர் கள்தான், வாழ்க்கையை ஒழுங்காக நடத்துகின்றனர். அச்சம் காரண மாகவே மனிதன் விழிப்புடனும் கவனத்துடனும் இருக்கும் நிலை ஏற்படுகின்றது. எது நடந்தாலும் பரவாயில்லை, நடக்கிறது நடக் கட்டும் என்று இருட்டில் கண் மூடிச் செல்வது அறிவீனத்தையும் மடமையையும் காட்டுகிறது. அளவான அச்சம் மனிதனை விழிப்பாக இருக்கச் செய்து, கவனத்தோடு செயலாற்றச் செய்து வாழ்வில் வெற்றி யையும், மேன்மையையும் தேடித் தரும். ஆனால் அளவற்ற வீண் அச்சம் மனித முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து விடும்.
சூடுகண்ட பூனை பாலைக் கண்டு அஞ்சுவது போல, எத்தனை தடவை, எத்தனயோ பேர் எடுத்து இயம்பியும் செவி சாய்க்காத ஒருவன் ஒருமுறை துன்பத்தில் துவண்டு பின் தப்பிப் பிழைத்தால் அதனால் வரும் அச்சம் எனும் அனுபவம் அவனுக்கு வாழ்நாள் பூராகவும் வழிகாட்டியாக அமைந்துவிடும். சிறு குழந்தைகள் பெரியவர் களின் சொற்கேளாது, தமது ஆற்றலுக்கு அப்பாற்பட்ட செயல்களை மேற்கொண்டு இடர்ப்படுவதைக் காண்கிறோம். இளமறி பயமறியாது என்பார்கள். பயம் அறியாத குழந்தைகளும் சரி, இளைஞர்களும் சரி, வளர்ந்தவர்களும் சரி துன்பம் எய்துகின்றனர். எனவே அச்சம் மனிதர் களைக் கவனம் பேணுபவர்கள் ஆக்குகின்றது.
183

Page 98
அச்சம் மனிதர்களைக் கோழைகள், துணிவற்றவர்கள் ஆக்கு கின்றன என்றும் கண்டோம். அதேவேளை அச்சம், மனித வாழ்வின் முன்னேற்றத்திற்குத் தேவையான கவனம், விழிப்பு, அவதானம், செம்மை, நன்னடத்தை என்பனவற்றையும் தருகின்றன என்றும் கொண்டோம். அச்சத்தினால் நற்பயன்களும் உண்டு; தீப்பயன்களும் உண்டு என்பது தெளிவாகின்றது.
இந்த இடத்தில் வள்ளுவரின் பின்வரும் குறளை நோக்குவோம்:-
'அஞ்சுவ தஞ்சாமை பேதமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்.'
அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமை, அது மடமையிலும் மடமை. நெருப்பென்று தெரிந்துகொண்டு அதற்கு அஞ்சாமல் அதனுள் கையை வைத்தால் நெருப்புச் சுடத்தான் செய்யும். பாவங்களுக்கும், ஈனச் செயல்களுக்கும் அஞ்சுவது அறிவுடைமை, அவ்வாறு அஞ்சுவதால்தான் மனிதர்கள் பாவங்களையும் தீச்செயல் களையும் செய்யாது விடுகிறார்கள். அதேவேளை அஞ்சத் தேவை யில்லாதவற்றிற்கு அஞ்சுவது பெரும் பேதமை ஆகும். இந்த இடத்தில் தான் 'அஞ்சந் தவிர்’ எனும் கூற்றுப் பொருள் பெறுகிறது.
பலர் அச்சம் காரணமாகவே பொய் சொல்கின்றார்கள். உண்மை யைச் சொன்னால் தண்டனை கிடைக்கும் எனும் அச்சத்தால் உண்மை பேசுவதில்லை. பாடசாலை மாணவர்கள், வளர்ந்த உத்தியோகத்தர் கள், தொழிலாளர்கள் என்போரும் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். குடும்பங்களிலும், குற்றம் செய்யும் கணவன், மனைவி, பிள்ளைகள் ஆகியோர் அச்சம் காரணமாக மூடி மறைக்கின்றனர். குடும்ப வாழ் விலுஞ் சரி, பொது வாழ்விலும் சரி குற்றங்களை அச்சம் காரணமாக மூடி மறைக்க முயல்வதிலும் பார்க்க, அச்சம் காரணமாகக் குற்றங் களைப் புரியாமல் தவிர்த்துக் கொள்வது மிக மேலான காரியம்.
மனிதனிடமுள்ள பாதுகாப்புத் தேவை பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில், அச்சம் என்பது நீங்கிவிடும். குழந்தையும் பிள்ளைகளும் தாய் தந்தையருக்கோ, நம்பிக்கை வாய்ந்த பெரியவர்களுக்கோ பக்கத் தில் இருக்கும்போது அச்சப்படுவதில்லை. இங்கு உடலியல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகின்றது. வளர்ந்தபின் உடற் பாதுகாப்புடன், தொழில் பாதுகாப்பு, சமூக அந்தஸ்துப் பாதுகாப்பு, பொருளாதாரப்
184

பாதுகாப்புப் போன்ற பல்வேறு வாழ்க்கைப் பாதுகாப்புக்கள் உறுதி யாகும் பட்சத்திலேயே அச்சம் நீங்கப்பெறும். அன்பு, ஆதரவு, கரிசனை என்பனவும் பயத்தைப் போக்க உதவும்.
எவனொருவன் தீவினைக்கு அச்சம் கொள்கின்றானோ, எவ னொருவன் உலகம் பழித்தவற்றைச் செய்யவோ அடையவோ பயப் படுகிறானோ, எவனொருவன் தீய பாதையில் கால் வைக்க அஞ்சு கிறானோ, அவன் உலகில் உயர்ந்து நிற்பான். மனிதர் நடத்தையில் பிழைவிடாமல் வாழ்வதற்கு அவனிடமுள்ள சமூகப் பயப்பாடு காரண மாகின்றது. சமூகத்திற்குப் பயப்படாதவன் நல்லவனாக வாழ முடி யாது. ஒழுக்கம், கட்டுப்பாடு, நன்னடத்தையுடன் வாழ்பவர் யாவரும், சமூகத்தின் மதிப்பினை அவாவி நிற்பவர்களே.
கீழ் மக்கள் மேன் மக்கள் ஆவது அவர்கள் ஒழுக்கம், ஆசாரம் என்பவற்றைப் பொறுத்தே ஆகும். எனவே ஒழுக்கம், ஆசாரம், பண்புகள், விழுமியங்கள் ஆகியவற்றில் சிறிதளவேனும் குறைந்தால் எங்கே மேல்நிலையில் உள்ளவர்கள் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சுவர். அந்த அச்சம்தான் மேன் மக்களைத் தொடர்ந்தும் மேன் மக்களாக இருக்க உதவுகின்றது.

Page 99
45. மனிதப் பெறுமானம்
இவ்வுலகில் மதிப்பு உள்ளவைகள், பெறுமானம் கொண்டவைகள், பெறுமதி வாய்ந்தவைகள் எனப் பலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். மாறாக, மதிப்பு, பெறுமானம், பெறுமதி அற்றவைகள் என்றும் பலவற்றைக் கூறுகிறார்கள். இவ்வாறு குறிப்பிடப்படுபவைகளுள் பொருட்கள், பண்டங்கள், குண இயல்புகள், செயற்பாடுகள், வாழ்க் கைத் தத்துவங்கள், நடைமுறைகள் மற்றும் உயிரினங்கள், உயிரற்றவை கள் யாவும் அடங்குகின்றன. அவற்றை வகைப்படுத்தும்போது ஓர் அளவுகோல் அல்லது அடிப்படை கைக்கொள்ளப்பட்டிருக்கும். எள் வாறாயினும், அவற்றின் பெறுமானம் அல்லது மதிப்புத் தொடர்பான தீர்மானத்தை எடுப்பவன் மனிதனே. மனிதர்களுக்கு அவற்றின் தேவை கள், அவை கிடைக்கப்பெறும் அளவு அல்லது தொகை, அவை நல்கும் பயன்கள் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டும்; தீர்மானிக்கும் மனிதர் களின் அறிவு நிலை, மனப்பாங்கு, வாழும் சூழல் ஆகியவற்றிற்கு இயைபாகவும், மதிப்பு அல்லது பெறுமானம் பற்றிய தீர்மானம் எடுக்கப்படுகின்றன.
வைரம், தங்கம், இரத்தினம் என்பவை பெரிதும் பெறுமானம் வாய்ந்த பொருட்கள் என்றும், அதனால் அவை விலையுயர்ந்தன வென்றும் மதிக்கப்படுகின்றன. ஆயினும், ஞானிகளுக்கும் துறவிகளுக் கும் ஒடும் பொன்னும் சமமான மதிப்பைக் கொண்டனவாகவே தோன்றுகின்றன. வைரக் கற்களுக்கும் சாதாரண கற்களுக்கும் இடையே அவர்கள் பெறுமதியில் வேறுபாட்டைக் காண்பதில்லை. ஆகவே ஒன்றன் பெறுமதி பற்றிய தீர்மானம் எடுப்பதில் மணிதர்களுக் கிடையிலேயே வித்தியாசம் இருக்கிறது.
மனிதர்கள் பெறுமானம் மிக்கவர்கள் என்று கூறப்படுகின்றது. ஏனைய படைப்புக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அக்கூற்றுச் சரியானதே. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறார் வள்ளு வப் பெருந்தகை. பிறப்பினால், மனிதர்களிடையே பேதங்களோ, வேற்றுமைகளோ இல்லை. எல்லோரும் சமம் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே. ஆயினும் எல்லா மனிதர்களும் நடை முறையில் ஒரே பெறுமானமுடையவர்களாகக் கணிக்கப்படுவதில்லை. ஒருவரின் பதவி, அந்தஸ்து, குணம், சமூகநிலை, புகழ், கீர்த்தி, பொருள் நிலை, அறிவு நிலை, ஒழுக்கம் போன்றனவற்றைப் பொறுத்து மனிதர்களின் மதிப்பும் பெறுமானமும் ஆளுக்காள் வேறுபடுகின்றன.
186

உடல் தோற்றம், உளநிலை, உணர்வு நிலை, விவேகம் என்பவற்றில் தனியாள் வேறுபாடுகள் உண்டு. அதனாலும், மனிதர்களின் மதிப்பு ஒரே விதமாக அமைய முடிவதில்லை. பெயர்களின் மூன்னால் இடப் படுகின்ற சொல்லடைகள் பலவிதம். கெளரவ, திரு, உயர்திரு, தவத் திரு, வணக்கத்திற்குரிய, அதிமேதகு, மேதகு, மாண்புமிகு, மாட்சிமை தங்கிய, கனந்தங்கிய, மேன்மை தங்கிய போன்ற சொற்கள் மனிதர் களின் வேறுபட்ட பெறுமாணங்களைச் சுட்டி நிற்கின்றன. வரிசை யறிந்துதான் அதற்கேற்ப அச்சொற்கள் பிரயோகிக்கப்படுகின்றன.
பண்டைய காலங்களில் பெறுமானங்கள் என்று கொள்ளப்பட் டவை சில, தற்காலத்தில் பெறுமதிகளை இழந்துள்ளன. காலந்தேஈறும் ஏற்படும் பல்வேறு மாற்றங்களே அதற்குக் காரணம். 'பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல“ என்ற மேற்கோளைக் காட்டி அதனை நியாயப்படுத்துகின்றனர். புதிதாகப் பல பெறுமானமுள்ளவை நம்மிடையே புகுந்துமுள்ளன. பழையன என்பதால் அவை கூடாதனவு மல்ல, புதியன என்பதால் அவை நிச்சயமாக நல்லனவாகவே இருக்கும் என்று கூறுவதற்கு மில்லை. கால, தேச, வர்த்தமானங்களைக் கடந்து, அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பெறுமானம் வாய்ந்தவை களாக விளங்குவதையும் காணக்கூடியதாக உள்ளது.
'முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பரம்பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பெயர்த்துமப் பெற்றியனாய்.”*
என்று கூறியவாறு, எஞ்ஞான்றும் மாற்றுக் குறையாமல், மதிப்புக் குன்றாமல், உரிய பெறுமானத்தோடு உள்ளவைகளும் சில உள்ளன. அவை தொடர்ந்து வருங்காலங்களிலும் பெறுமதி வாய்ந்தனவாகவே திகழும்.
இதுவரை கூறிய கருத்துக்களின், பின்னணியில், பார்க்கும்போது, நிரந்தரமாகப் பெறுமானங்கள் உள்ளவை, தற்காலிகமாகப் பெறு மானங்கள் வாய்ந்தவை என இரண்டாக வகுத்துப் பார்க்க முடி கின்றது. அத்தோடு சில பெறுமானங்கள் பற்றி ஆளுக்காள், சமூகத் திற்குச் சமூகம், நாட்டுக்கு நாடு வேறுபட்டதும், முரண்பட்டதுமான கருத்துக்களும் உண்டு. சிலர் ஏற்பர், சிலர் ஏற்காத நிலையுமுண்டு. அதேவேளை, எல்லோராலும் கருத்தொருமித்த நிலையில் ஏற்றுக் கொள்ளப்படுகின்ற பெறுமானங்களும் உண்டு. அத்தகையனவே பெரு மதிப்பு வாய்ந்தவை. சுருங்கக் கூறின் எவையெல்லாம் மனிதர்களுக்கு நன்மை பயக்கின்றனவோ; மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கின்றனவோ; மனிதர்களால் விரும்பி ஏற்கப்படுகின்றனவோ; மனிதர்களுக்கு அருமை
187

Page 100
யும் பெருமையுமானவையோ, உயர்வையும் உய்வையும் கொடுக்க வல்லனவோ, அவையெல்லாம் பெறுமானங்கள், பெறுமதிகள், மதிப்புக் கள் எனலாம்.
சமூகப் பெறுமானங்கள், அரசியல் பெறுமானங்கள், பொரு ளாதாரப் பெறுமானங்கள், ஒழுக்கப் பெறுமானங்கள், அறிவுப் பெறு மானங்கள், ஆத்மிகப் பெறுமானங்கள், கலை கலாசாரப் பெறுமானங் கள், பண்புப் பெறுமானங்கள் எனப் பலவாறான பெறுமானங்கள் காணப்படுகின்றன.
மக்களுட் சிலர், பொருட் பலத்தாலும் பணப் பலத்தாலும் தமது பெறுமானத்தை அதிகரித்துக் கொள்கின்றனர். இன்னுஞ் சிலர் அர சியல் பலத்தாலும், சமூகப் பலத்தாலும் தமக்குப் பெறுமதியைச் சேர்த்துக் கொள்கின்றனர். மேலும் சிலர் ஒழுக்கம், நற்பண்புகள் நிறைந்து காணப்படுவதால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் சமய, ஆத்மிகப் பெறுமானங்களைப் பெற்றுத் திகழ்கின்றனர்.
இன்னொரு வகையில் கண்ணோட்டத்தைச் செலுத்தும்போது, பெறுமானங்கள் என்று கொள்ளப்படுபவை உலகியல் சம்பந்தமானவை யாகவும், மனிதப் பண்புகள் சார்ந்தவையாகவும் உள்ளன. பொருள், பணம், அதிகாரம், அந்தஸ்து, பதவி, புகழ் ஆகியவற்றினால் மனிதர் களுக்குக் கிடைக்கின்ற பெறுமானம் உலகியல் சார்ந்தவை. நல்லொழுக் கம், நற்பண்பு, நற்குணம், நற்செய்கை, நீதி, தூய்மை, உண்மை, அஹிம்சை ஆகியவற்றினால் மனிதர்கள் பெறுகின்ற பெறுமானம், மனிதப் பண்புகள் சார்ந்தவை ஆகும். மனிதப் பண்புகள், மானுடம், மனித தர்மம் சார்ந்த அல்லது உள்ளடக்கிய பெறுமானங்களை மனித விழுமியங்கள் என்பர். மனித விழுமியங்கள், மனித வாழ்க்கை யைப் பெறுமதி வாய்ந்ததாகவும்; மதிப்பும் கண்ணியமும் நிறைந்த தாகவும் ஆக்குகின்றன. ‘‘மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே' எனும் விழுமிய உளநிலை ஏற்படுவது எப்போதெனில்; மனித சமுதாயத்தில் அன்பு மேலோங்கி ஆட்சி செய்யும்போதும்; பிறர் நலனில் கரிசனையும், ஆர்வமும் ஏற்படும்போதும்; சமுதாயத்தில் சாந்தியும் சமாதானமும் நிலவும்போதும் என்று கூறலாம். அத்தகைய சீரிய நிலை நிலவுவதற்கு, மக்கள், வாழும் நெறியறிந்து, வாழ்வாங்கு வாழ வேண்டும். வையத்தில் வாழ்வாங்கு வாழ்தல் என்பது மணித விழுமியங்களை மதித்து, வாழ்க்கைப் பெறுமானத்தை உணர்ந்து, அவற்றின் அடிப்படையில் ஒழுகுதல் என்பதாகும்.
உலகியல் பெறுமானங்கள் மனித வாழ்க்கைக்குத் தேவையில்லை என்று கூற முடியாது. மனிதர்கள் வளமாக வாழ வேண்டும் அவ்வாறு
88

வாழ்வதற்கு அவர்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அவற்றுள் அனேகமானவை உலகியல் சார்ந்தவை. மனிதர்கள் உலகத் தில் இன்பமாக வாழ வேண்டியவர்கள். அவர்களுக்குப் பொருள், பண்டம், பணம், புகழ், கீர்த்தி, பதவி, அந்தஸ்து என்பனவும் தேவை தான். "பொருளிலார்க்கு இவ்வுலகமில்லை' என்றும் ‘தோன்றில் புகழொடு தோன்றுக’’ என்றும் வாழ்வியல் உணர்ந்த வள்ளுவர் கூறவில்லையா? ஆமாம், பொருளும், புகழும் வாழ்க்கைக்குத் திருவும், பொலிவும் தருகின்றன. எனவே அவையும் வேண்டியவைதான். ஆனால், பொருளும் புகழும் மாத்திரம் அல்லது உலகியல் பெறுமானங் களுள் அடங்குபவை மாத்திரம் மனிதர்களை வாழ்விக்கும் என்றும் 6TGiorgo)I56) -ga5Tgl. “Man does not live by bread alone” 6T6rpi ஆங்கிலத்தில் ஒரு கூற்று உள்ளது. மனித வாழ்விற்கு உணவு தேவைதான்; ஆனால் உணவு மாத்திரம் மனிதனை வாழ்வித்து விடாது என்பதையும் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும். அதற்கு அப்பாலும் மனிதனுக்கு ஆத்மிகத் தேவைகள், பண்பாட்டுத் தேவை கள், ஒழுக்கத் தேவைகள் என்று உண்டு. அத் தேவைகளும் நிறைவு செய்யப்பட வேண்டும்.
பொருளும், புகழும் வாழ்க்கைக்குத் தேவையே என்ற வள்ளுவர், அவற்றை அறவழியில், நீதி நெறியில் நின்றே சம்பாதித்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் உள்ளார். அவற்றிற்கு மாறான வேறு வழியில், பெற்ற சம்பாத்தியங்கள், மனிதரோடு ஒட்டிக் கொண்டு நிற்காமல் இடையிலேயே விட்டு நீங்கிவிடும். வள்ளுவரும், "அழக் கொண்ட எல்லாம் அழப்போம்' என்கிறார். ஒருவன் பிறரை வருத்தி, அழவைத்துப் பெற்ற பொருள், அவ்வாறு பெற்றவனை வருந்துமாறு செய்தும், அழவைத்து விட்டும் அவனை விட்டுப் போய் விடும். ‘தீவினை விட்டு ஈட்டல் பொருள்' என்கிறார் இன்னொரு தமிழ்ப்
புலவர்.
அறவழியில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொருள், புகழ், பதவி, அந்தஸ்து என்பன அறவழியில் மனித ஆக்கத்திற்காகவே பயன்படுத் தப்பட வேண்டியது இன்றியமையாதது. அத்தகைய உலகியல் சார்ந்த பெறுமானங்கள் எக்காரணம் கொண்டும், எத்தேவையின் பொருட்டும் துஷ்பிரயோகம் செய்தல் ஆகாது. 'ஈதல் அறம்' என்றும் "ஐய மிட்டுண்'; 'ஒப்புரவொழுகு' என்றும், "பகுத்துண்டு பல்லுயிர் ஒம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை' என்றும் 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்றும் நீதி வாக்கிய
189

Page 101
கள் இருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் ஏட்டளவில்தான்; சாதனையில் இல்லை. விளைவு, மனிதர்கள் சோதனைக்கும் வேதனைக் கும் உட்படுத்தப்பட்டு வருகின்றமைதான். இன்று, ஒருவரிடம் பொருள், புகழ், பதவி என்பன நிறைவாகக் காணப்பட்டால், அவற் றைப் பயன்படுத்திப் பிறரை வாழ்விப்பதற்குப் பதிலாக, அவர்களைத் தாழ்விப்பதிலும், வருத்துவதிலுமே கருத்தாக இருக்கும் நிலையே மக்களிடம் தென்படுகிறது. இதற்குக் காரணம், உலகியல் பெறுமானங் களுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள், மனித விழுமியங்களையும், மானு டத்தையும் தம்முடன் அணைத்தும் இணைத்தும் கொள்ளாமையே யாகும். உலகியல் பெறுமானங்களும், மனித விழுமியங்களும் ஒன்று சேரும் நன்னாளே அமைதியும் சாந்தியும் தோன்றும் திருநாளாகும்.
190


Page 102


Page 103
ஸ்டார் லைன் பிறிண்டர்ஸ் (பிறை

வேட் லிமிட்டட்) கொழும்பு-14.