கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முப்பொருள் உண்மை விளக்கம்

Page 1
தம் er 蚤
暑
A
| _____________ |-
,
·
·
 
 
 
 
 

துஇறுதிபர் இந்துக்கல்லூரி )

Page 2


Page 3

சிவமயம்
முப்பொருள் உண்மை விளக்கம்
(p. இளையதம்பி B. A, (Lond )
(இளைந்பாறிய துணையதிபர். காரைநகர் இத்துக்கல்லூரி )

Page 4
முதற் பதிப்பு-1978, பதிப்புரிமை ஆக்கியோனுக்கே.
சமர்ப்பணம் இந்நூலை எழுதுவதற்கு என்றும் ஊக்கமளித்த காலஞ்சென்ற எனது சிரேஷ்ட புத்திரியும் பேராதனைப் பல்கலைக் கழக B. A. சமஸ் கிருத சிறப்புப் பட்டதாரியுமான திருமதி வீ. உமாதேவியின் ஞாபகத்தை மனக் கண்பதித்து இது பூர்த்தியாவதற்குத் தோன்ருத் துணையாயிருந்த இறை வன் திருவடிகளுக்கு அன்
புடன் சமர்ப்பிக்கின்றேன்,
அச்சுப்பதிவு:
சைவப்பிரகாச அச்சியந்திரசாலே 450 காங்கேசன்துறை வீதி யாழ்ப்பாணம் fãs ou 10.so

faQuup uuub
முன்னுரை
சித்தாந்த சாஸ்திரம் முப்பொருளின் உண் மையை எடுத்தியம்புகின்றது. பதினன்கு சித்தாந்த சாஸ்திரங்களும் மெய்ஞ்ஞானிகளால், மக்கள் உய்யும் பொருட்டு உலகத்துக்கு அநுக்கிரகிக்கப் பட்ட அருட் செல்வங்களாம் பன்னிருதிருமுறை களும் பரம்பொருள் உள் நின்று உணர்த்தத் திரு வாய் மலர்ந்தருளப்பட்டன. ஒன்று சாஸ்திரமா கும். மற்றது தோத்திரமாகும். இவ்விரண்டும் சைவ சமயத்துக்கு இரு கண்கள் போன்றன. சிவனை முழுமுதற் கடவுளாக வழிபடும் சைவ சமயத்தவர் சித்தாந்த சாஸ்திரங்களையும் திருமுறைகளையும் நன் முகப் பயில வேண்டும். இந்நூல்கள் எக்காலத்துக் கும் நிலைக்கும் உண்மையை விளக்கி இருக்கின்ற மையால் அவைகளைக் கற்றுக் கேட்டுத் தெளிவடை தல் இன்றியமையாதனவாகும்,
சித்தாந்த சாஸ்திரங்கள் பதினன்கும் செய்யு ளில் அருளப்பட்டிருக்கின்றமையால் தமிழ் அறி வும் சமய அறிவும் ஒருங்கே பெற்ற அறிவுடை யோராலேயே விளங்கிக் கொள்ள முடியும். அந் நூல்களை உரையுடன் விளங்கிக் கொள்ள முற்படி னும் தெளிவாய் விளங்கிக் கொள்வது சுலப மாகத் தோன்றது. இயமம், நியமம் ஆகியவற் றைக் கடைப்பிடித்து வாழும் ஒழுக்கசீலருக்கே அவைகளிற் பொதிந்து மறைவாய்க் கிடக் கும் கூண்மை ஒருவாறு புலப்படும் திரு வருளின்

Page 5
V
துணைக்கொண்டே அறியலாம். குருவின் துணையும் வேண்டும்.
கத்விகரணங்கள் மூலம் அறிவும் நூல்களைக் கற்பதினுல் ஏற்படும் அறிவும் அபரஞானத்தைக் கொடுக்கின்றன. திருவருளின் துணைகொண்டு அறி யும் ஞானம் பரஞானமாகும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் ஆகிய குற் றங்களினின்று நீங்கி பரஞானம் கைவரப்பெற்ற மெய்ஞ்ஞானகுருவே உண்மைப் பொருளை விளக்க முடியும், அவ்விதப்பேற்றைப் பெறுபவர் ஒரு சிலரே. ஏனையோரும் திருவருட்துணையை நாட முயற்சிக்க வேண்டும், இம் மானிடப்பிறவி எடுத்த எமக்கு பாசஞானம், பசுஞானமாகிய eLT ஞானம் பரஞானத்தைப்பற்றி அறிவதற்கு வழி காட்டுகின்றது. கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூட்டுதல் என்னும் படிகள் ஒவ்வொன் றும் பரஞானத்தைப் படிப்ப்டியாக நல்கி இறை வன் திருவடி நீழலில் சேர்ப்பிக்கும் என்பது அநு பூதிமான்களுடைய துணிபு.
உரைநடையில் எழுதி முப்பொருளின் உண் மையைச் சிற்றறிவுக்கேற்றபடி விளங்கச் செய்வது நன்மை பயக்குமெனக் கருதி இந்நூலை எழுதுவ தில் ஈடுபட்டேன். சித்தாந்த சாஸ்திரத்தைக் கற் பதற்கு ஆவல் கொள்ளவும், பல வருடங்களாக ஆராய்ச்சி செய்யவும் திருவருள் ஊக்குவிக்க சுய முயற்சியும் உதவியாக இருந்தது. முருகப்பெருமா னிடம் எனக்குள்ள நிரம்பிய பக்தி பல விடயங் களைக் கிரகித்துக் கொள்ளவும் இடையிடையே தோன்றிய இடர்களைக் களைந்துவிடவும் உதவி

ty
யாய் இருந்ததை நான் உணர்ந்ததுண்டு. முப்பது கட்டுரைகளைக் கொண்டுள்ள இந்நூலின் அறிவி யற் பகுதியிற் காணப்படும் தூய்மை, கல்வி, கொல்லாமை என்னும் இவை போன்ற கட்டுரை கள் அறநெறி வாழ்க்கையின் அவசியத்தை வற் புறுத்துகின்றன. இரண்டாம் பகுதியாகிய சாஸ்திர வியலிற் காணப்படும் கட்டுரைகள் முப்பொரு ளின் உண்மையைச் சுலபமாய் விளங்கத்தக்கதாக இலகுவான உரைநடையில் எடுத்து விளக்குவது டன் மெய்கண்ட சாஸ்திரங்களை மேலும் ஆர்வத் துடன் கற்கும் நோக்குடையோர்க்கு மிகவும் துணை யாயிருக்கும் என்பது எனது நம்பிக்கை. மூன்ரும் பகுதியாகிய அநுபவவியலில் ஒழுக்க சீலராய் இறைவழிபாட்டில் ஈடுபட்டு வ்ாழுபவர்கள் அடை யக் கூடிய பயனைப்பற்றிக் கூறப்படுவதோடு அநு பூதிமான்கள் கண்ட உண்மைகளும் இடம் பெறு கின்றன.
இந்நூலை எழுதுவதற்கு பதினன்கு சித்தாந்த சாஸ்திரங்களும், பன்னிரு திருமுறைகளும். திருக் குறள், நாலடியார், தாயுமானவர், பட்டினத்தடி கள், அருணகிரிநாதர், யோகசுவாமிகளுடைய பாடல்கள் மிகவும் துணையாய் இருந்தன. நாயன் மார்களுக்கும் ஏனைய மெய்ஞானிகளுக்கும் எனது தாழ்மையான வணக்கம்,
முதன்நூல் எனக் கருத்ப்படும் சிவஞான போதத்தை, மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்ற எனது தமையனரும் சித்த வைத்தியருமாகிய பூரீமான் மு. அருளம்பலம் அவர்

Page 6
v1,
ளிேடமிருந்து கேட்டு அறிந்தமைக்கு அவருக்கு எனது நன்றியை முதற்கண் கூறுகின்றேன்.
மேலும் இந்நூலுக்கு அருளுரையையும் தமது ஆசியையும் வழங்கிய நல்லை ஆதீன குருமகா சந் நிதானம் பூரீலபூg சுவாமிநாத தேசிகஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன்.
இந்நூலை எழுதுங் காலத்தில் ஆங்காங்குத் தோன்றிய ஐயப்பாடுகளை நீக்குவதற்குத் துணை யாயும் வழிகாட்டியுமாய் இருந்ததோடு இந் நூலுக்கு அணிந்துரையும் நல்கிய பேரறிஞரும், யாவர்க்கும் அறிவுச் சுடராய் விளங்குபவருமான பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைப் பணிவுடன் சமர்ப்பிக்கின் றேன்.
தமது சிரமத்தையும் பாராது இந்நூலைப் பார்வையிட்டு ஆராய்ச்சி முறையில் தமது மனக் கருத்துக்களைக்கொண்டுள்ள மதிப்புரையை வழங் கிய பேராசிரியரும் இலங்கைப் பல்கலைக்கழக, யாழ்ப்பாண வளாக முன்னுள் தலைவருமான கைலாசபதி M A : Ph b, அவர்களுக்குப் பெரும் நன்றியுடையவனுக இருக்கின்றேன்.
இந்நூலே எழுதி முடிப்பதற்கு வேண்டிய ஊக்கமும் ஆதரவும் அளித்து மதிப்புரையுங் கொடுத்து உதவிய கொக்குவில் சைவப்புலவர் மணி பூரீமான் த. குமாரசாமிப்பிள்ளை அவர் களுக்கு. எனது நன்றியைச் செலுத்தக் கடமைப் பட்டுள்ளேன்.

νii
இந்நூலின் பெரும்பகுதியை எழுதுங் காலத் தில் வாழ்ந்து, 1974-ம் ஆண்டு கார்த்திகை மாதம் 11-ந் திகதி இவ்வுலக வாழ்வை நீத்தவருமாகிய எனது சிரேஷ்ட புத்திரியும், சமஸ்கிருதத்தில் இலங் கைப் பல்கலைக் கழக T. A. சிறப்புப் பட்டதாரியு மான திருமதி வீ, உமாதேவி சித்தாந்த சாஸ்திர உண்மைகளை ஆர்வத்தோடு கலந்துரையாடி எனக்கு அதிக ஊக்கம் அளித்தமைக்கும் பல கட் டுரைகளைப் பிரதிபண்ணி உதவியதற்கும் அவ ருக்கு எனது காணிக்கை என்றுமுளது.
இந்நூலிலுள்ள "தூய்மை ' என்ற கட்டுரை 18-10-71 லும், ஊழ் ' என்ற கட்டுரை 1972 இன் ஆண்டுமலரிலும் "பக்தி' என்ற கட்டுரை 13 2-75 லும் குமரகுருபரன் பத்திரிகையில் வெளிவந்தன, அப்பத்திரிகையின் ஆசிரியருக்கு எனது நன்றியைச் செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். மேலும், "மாணி டப் பிறவியின் மாண்பு’, ‘அன்பு", "இறை வழி பாடு ஆகிய கட்டுரைகளை சமயப்பணியை ஆற்றி வரும் இந்துசாதனப் பத்திரிகையில் பிரசுரித்த அப் பத்திரிகை ஆசிரியருக்குஎனது நன்றியைத் தெரிவிக் கின்றேன்.
ஈற்றில் இந்நூலைச் செவ்வனே அச்சிட்டு வெளி யிட உதவிய சைவப்பிரகாச அச்சகத்தாருக்கு
எனது நன்றியைக் கூறுவதில் மகிழ்ச்சி அடைகின் றேன்.

Page 7
.ان சிவமயம்
நல்லே ஆதீன குருமகாசன்னிதானம் ஞரீலழறி சுவாமிநாத தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வழங்கிய
அருள் உரை
முப்பொருள் உண்மை விளக்கம் என்னும் இந்நூல் பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் களையும் கற்ருேரும் மற்ருேரும் எளிதில் விளங் கக்கூடியவகையில் எழுதப்பட்டிருப்பது சைவசமய வளர்ச்சிக்குச் செய்யும் அரியதொண்டாகும். சைவ சித்தாந்த நூல்கள் பதினுன்கும் செய்யுள்களில் எழு தப்பட்டிருப்பதால் சித்தாந்த சாத்திரத்தைப் படிக்க ஆவலுள்ளவர்கள் படித்து விளங்குவது சுடினம் இந்நூல். சித்தாந்த சாத்திரக் கொள் கைகளைத் தெளிவாகவும் விளக்கமாகவும் கட் டுரை ரூபத்தில் எழுதப்பட்டுள்ளது: முப்பது கட் டுரைகளில் முதற் பத்தும் சித்தாந்த சாத்திரத் தைக் கற்க விரும்புவோர்க்கு ஆரம்ப அறிவைக் கொடுக்கக்கூடியவகையில் அமைந்துளது. இரண் டாம் பத்தும் சித்தாந்த அறிவை விளக்கமாக அறிந்துகொள்ள ஆவலுடையோருக்குச் சிறந்த நூலாக அமைகிறது. மூன்றும் பத்தும் அநுபூதி மான்கள் கண்ட உண்மைகளே எடுத்துக் கூறு கின்றன.
இந்நூலை எழுதி வெளியிடும் சித்தாந்த வித் தகர் திரு. மு. இளையதம்பி அவர்கட்கு எல்லா நலன்களும் கிடைக்க ஆசீர்வதிக்கின்ருேம்,
3-4-1976.

- ات
சிவமயம்
பண்டிதமணி கணபதிப்பிள்ளே அவர்கள் நல்கிய
அணிந்துரை
(கண்ணுெளி புற ஒளியோடு கலந்து அத்து விநப் பட்டாலன்றி எதனேயுங் காணுது. அதுபோலவே உயிரறிவு உயிர்க்குயிராய இறையொளியோடு கலந்து அத்துவிதப்பட்டாலன்றி எதனேயும் அறி யாது.
உயிர்க்குயிராகிய இறையொளி உயிரோடு அத்து விதப்பட்டு. உயிருள்ளிருக்கவும், உயிர் உயிர்க்குயி ராகிய இறையொளியோடு அத்துவிதப்பட வேண்டி யது அத்துவிதப்படுகின்றிலது. ஏன் ?
፳ት 苦
("బ్లీ தோடத்து விதமானபடி மெய்ஞ்ஞானத்
தாணுவினுே பத்துவிதம் ஆகுநா ளெந்நாளோ " என்ற தாயுமானவரில், உயிர், இறையொனியோடு அத்துவிதப்படாததன் காரணம் புலப்படுகின்றது.
உயிர் ஆணவத்தோடு அத்துவிதப்பட்டிருப் பதே காரணம். /
இது அநாதியான கேவலநிலை இந்நிலையில் உள்ளொளியும் இருளாம் ஊமன் கண்ணுக்கு "ஒளியும் இருளாம்" என்பது திருவருட்பயன். நாமன் - கூகை.

Page 8
உயிர் மெய்ஞ்ஞானத்தாணுவாகிய உள் ளொளியோடு அத்துவிதப்படுதலே அதற்கு உய்தி யாமென்பதும் பெறப்பட்டது.
诛 亲 镰
இறைவன் "நள்ளிருளில் நட்டம் பயின்ருடும் நாதன்’ நள்ளிருள் - ஆணவ இருள் ஆணவ இருளி லிருந்து உயிர்களை எடுத்தற்கு இறைவன் நட னஞ் செய்துகொண்டிருக்கிருன் அந்த நடனம் பஞ்சகிருத்திய நடனம்,
இந்த நடனத்தின் பயனே இந்தச் சரீரம்.
"இந்தச் சரீரம் நமக்குக் கிடைத்தது, நாம் கடவுளை வணங்கி முத்தியின்பம் பெறும் பொருட்டேயாம்'. இதில், ' கிடைத்தது" "முத்தி " என்ற வார்த்தைகள் அர்த்தபுஷ்டியானவை. முத்தி என்பதன் பொருள் விடுதல் அறியாமை யாகிய ஆணவவிருளை விடுதல் என்பது கருத்து.
பார்வை குறைந்த கண்ணுக்கு மூக்குக் கண் ஞடி புற ஒளியைத் தொடர்புபடுத்துகின்றது. அதுபோலவே இந்த மனிதசரீரம் உயிரறிவோடு இறை ஒளியை ஒரு அளவுக்குத் தொடர்புபடுத்து கின்றது. உயிரறிவு சரீர உதவியால் இறையொளி யோடு தொடர்புபட்டு அறிவை விருத்தி செய்கின் றது. சரீரம் கிடைத்ததன் நோக்கத்தைச் சிந்தித்து அறிவு வளர்த்தற்குப் பயன்படுத்த வேண்டும் - சரீரம் விடிவாம் அளவும் நமக்குக் கிடைத்த அரு மந்த விளக்கு. இது சகலாவஸ்தை. இந்த அவஸ் தையைப் பயன்படுத்தும் முறையிற் பயன்படுத் தினுல் சுத்தாவஸ்தை கைகூடும். அப்போது

xi
சரீர விளக்கின்றியே மெய்ஞ்ஞானத்தாணுரவினேடு உயிர் அத்துவிதமாகும்.
நம்நிலை சகலாவஸ்தை. சரீரத்தைப் பேணி அறிவை வளப்படுத்தலே இம்மனிதப் பிறவியின் பயன்,
器 ※ ཉི་
* முப்பொருள் உண்மை விளக்கம்" என்ற இந் நூலின் முதலாம் இயல் "அறிவியல் என்றிருப்ப தும் அவ்வியலின் இரண்டாம் அதிகாரம் " மனிதப் பிறவியின் மாண்பு' என்றிருப்பதும் இந்நூலாசிரி யரின் ஆழ்ந்த சிந்தனையை எடுத்துக் காட்டு கின்றன.
"யாம் மெய்யாகக் கண்டவற்றுளில்லை அறிவறிந்த
மக்கட் பேறல்ல பிற ?? என்பது வள்ளுவர் வாய்மொழி.
மனிதப் பிறப்பைப் பேணி அறிவை வளர்க்க வேண்டுவதன் முக்கியத்துவம் மேலே காட்டப் Lull-gil
நான்காம் அதிகாரம் அறிவின் தூய்மைபற்றி யது. ஏனைய அதிகாரங்கள் அறிவின் தூய்மையைக் காப்பதற்கு வழிவகைகள்
ஆரும் அதிகாரம் ‘அன்பு தூயஅறிவைப் பெற் றெடுக்கும் குழந்தை அன்பு, தூய அறிவில் நிஜத் தற்கு உபகாரமானது அன்பு. அறிவுநடை வேதம், அதனை அன்பு நடைசெய்வது தமிழ்.

Page 9
iiג
அறிவறிந்த வேத இருடியான அகத்தியர் சங் கச் சான்றேர்களின் தலைவராய்த் தமிழை வளர்த்து அன்புச் சாதகராயினர்.
வள்ளுவர் வேதத்தமிழ் செய்தவர்.
கடைச்சங்கத்துத் தலைமைப் புலவரான நக் கீரர், "அன்பினைந்திணைக் களவியல் தமிழ்நுதலிற்று" என்றது பெரிதுஞ் சிந்திக்கற்பாலது
தமிழ் அன்பு. "அன்பே சிவம் என்றர். திரு மூலர், " அருளென்னும் அன்பீன் குழவி' என்ருர் வள்ளுவr
அறிவின் குழந்தை அன்பு, அன்பின் குழந்தை அருள். ஆகவே அன்பே சிவம்.
இறுதி அதிகாரம் "ஊழ்', 'விதியே மதியாய் விடும்" என்ருள் உலகஅன்னை. ஆகவே, கண்ணும் கருத்துமாயிருந்து ஊழை உப்பக்கங் கண்டு அறி வைப் பாதுகாத்து அன்பு செய்யவேண்டும்.
அறிவியலிற் சொல்லப்பட்டமை உறுதி பயக் கும் உண்மைகள்.
இரண்டாவதாகிய சாத்திரவியல், அறிவியலிற் டேச பட்டவைகளை ஞானசாத்திர முகமாக வலி யுறுத்துவது.
崇 来源 米 இரு இயலிலும் பேசிய உண்மைகள் அநுபவத் திற் பயன்செய்வது பற்றியது. மூன்றுவதாய அநு
வவியல்,

kii
' குருவில்லா வித்தை பாழ்' என்பது பழ மொழி தம்முதல் குரு" என்பது சிவஞான போதம். 'குருவாய் வருவாய் அருள்வாய் குகனே" கந்தரனுபூதி
நாயன்மார்கள் சிறப்பாகச் சமய குரவர்கள் நமக்கு நல்ல வழிகாட்டிகள். அவர்களின் சிவாநு பவங்களைச் சிந்தித்துத் தவங் கிடப்போமாக.
"எல்லாம் நீ மூன்ரும் இயலின் இறுதி அதி காரம் - உயிர்க் குயிராயும்; உலகெலாமாகியும் உயிர்க்குறுதிசெய்யும் பரம்பொருளே நினைவுகூர்விக் கின்றது அந்த அதிகாரம்.
அவனன்றி அணுவும் அசையாது” உயிர் சிவாநுபவம் ஒன்றினுக்கே உரித்து " ‘இறைவன் எடுத்துச் சுமப்பவன்'
举 兴 兴
பத்துப்பத்து அதிகாரங்களைக்கொண்ட மூன்று இயல்கள் அமைந்தது இந்நூல்
அறிவியலின் முதலாம் அதிகாரம் "சைவ சித் தாந்தம்'. அது தன்னை வேதாந்தத் தெளிவு என் றும் தானே உண்மைச் சமயம் என்றும் நிமிர்ந்து மார்பில் தட்டுவதற்குப் போதியநியாயம் உண்டு. எல்லாச் சமயமும் இருப்பது நீதி என்று சொல்வது சைவசமயம் ஒன்றுமேயாம்.
யானை கண்ட குருடரைக் கண்ணுள்ளவன் நிந்திப்பதில்லை. கயிற்றைக் கண்டவன் அதனைப் பாம்பு என்பவன்மேற் பாய்வதில்லை,

Page 10
xiv
ஒவ்வொருவரும் தத்தம் நிலைக்கேற்பக் கண் டவைகளை ஆராய வழிசெய்வதே உண்மைச் சம யத்தின் போக்கு.
உண்மைச் சமயஇயல்பு " ஒதுசமயங்கள்' என்ற சித்தியார் பாட்டிற் சொல்லப்பட்டது அதன் விளக்கத்தைச் "செப்பரிய' என்ற தாயுமானவரிற் காணலாம். அதில் "இப்பரிசாஞ் சமயமுமாய் அல்லவாகி ' என்ற தொடர் சிந்தனைக்குரியது.
உண்மைச்சமயம் எல்லாச் சமயமுமாய் அதே சமயத்தில் அவைகள் அல்லாததாயிருக்கும்;
路 来 崇 சமயம் பொழுது போக்குக்குரியதன்று:
மண்ணில் நல்லவண்ணம் வாழ்வதற்கு வழி செய்வது சமயம். \
சமய ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொள் ளாத நடைமுறைகள் கவலை பெருக்குவதை நாடோறும் கண்ணுரக் கண்டுகொண்டிருக்கின் ருேமே! இதற்குச் சந்தேகமா ?
சமயம் மனக்கவல மாற்றும் மருந்து. 'தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றலரிது"
崇 ※ இந்நூல் "கதிப்பாற் செல்ல ஏதுநெறி" என்று விசாரிப்பார்க்கு உபகரிப்பதொரு கைந்நூல்.
இந்நூலாசிரியர் திரு மு: இளையதம்பி அவர் கள் *தாம் பெற்ற இன்பம்பெறுக இவ்வையகம்’ என்ற முறையில் இதனை உதவியிருக்கின்றர்கள். அவர்களின் சிரமத்துக்கு நன்றி தெரிவிப்போமாக 25-3-77

சிவமயம் இலங்கைப் பல்கல்ைக் கழக யாழ்ப்பாண வளாக முன்னுட் தலைவரும் பேராசிரியருமான கலாநிதி க. கைலாசபதி M.A Ph D அவர்கள் வழங்கிய
மதிப்புரை
தொன்மையும் சிறப்பும் வாய்ந்த உலகச் சம பங்களில் ஒன்ருகமட்டுமன்றித் தமிழர் வளர்த்த தனிச் சிறப்புடைய சமயநெறியாகவும் சைவசித் தாந்தத்தைக் கற்றறிந்த தமிழரல்லாதாரும் இவ் வுண்மையை ஏற்றுக்கொண்டுள்ளனர். சிந்துவெளி நாகரிகத்திலே சைவத்தின் தோற்றத்தைக் காண லாமாயினும் தென்னிந்தியாவிலேயே அது தழைத்து வளர்ந்தது. எனினும் ஈழத்துத் தமிழ்மக்களிடையே அதற்குத் தனிச்சிறப்பான இடமொன்றுண்டு. சைவத்தின் சிற்சில அம்சங்கள் தென்னிந்தியாவை விட ஈழத்திலேயே இன்றுவரை பேணிப்பாதுகாக் கப்பட்டு வருகின்றமை பலராலும் ஒப்பமுடிந்த உண்மையாகும். இக்காரணத்தினலேயே சென்ற நூற்றண்டின் பிற்பகுதியிலும் இந்நூற்றண்டின்முற் பகுதியிலும் "தமிழ் கூறு நல்லுகத்தில்’ நிகழ்ந்த சைவசமய மறுமலர்ச்சியில் ஈழத்து அறிஞர்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கமுடிந்தது.
இத்தகைய ஒரு சூழலிலே ஈழத்தவர்கள் சைவ சித்தாந்த சாத்திர சம்பந்தமாகக் குறிப்பிடத்தக்க நூல்கள் எழுதிவந்துள்ளமை வியப்பன்று, சைவ சமய நூல்களைப் பதிப்பித்தல், அவற்றுக்கு உரை காணுதல், சைவசமயத்தின் அடிப்படைகளை எளி மையாகக் கூறும் அறிமுக நூல்களை இயற்றுதல், சைவசமய தூஷணங்களைப் பரிகரித்தல், சைவசமய

Page 11
xvi
வளர்ச்சிக்கான நிறுவனங்களைத் தாபித்தல் முதலிய சிவ கைங்கரியங்களில் எம்மவர் பல காலமாகவே ஈடுபட்டு வந்திருக்கின்றனர் ஆயினும் அண்மைக் காலத்தில் இப்பணி - குறிப்பாக நூல் வெளியீட்டு முயற்சி - சிறிது தளர்வுற்றுள்ளது என்றே தோன் றுகிறது.
இந்நிலையில் திரு. மு. இளையதம்பி அவர்கள் சைவசமய சாரத்தைத் திரட்டிக் கூறும் நூலொன் றினை வெளியிட முன்வந்துள்ளமை பாராட்டத் தக்கதாகும். சமய உண்மைகள் நித்தியமானவை யாய்க் கொள்ளப்படுவன. ஆயினும் அவ்வுண்மை
களும் காலத்துக்குக்காலம் மாற்றமடையும் மொழி
நடையிலும் உலகாநுபவத்துக்கு ஏற்றவகையிலும் விளக்கப்பட்டாலன்றி அவற்றுக்கும் மனித வாழ்க் கைக்கும் உள்ள தொடர்பும் இயைபும் இலகுவில் துலக்கமாகா. சைவசமயத்தைப் பொறுத்தவரை யில் அதற்கும் அன்ருட வாழ்க்கைக்குமுள்ள தொடர்பு மிக முக்கியமானதாகும். ஏனெனில் வழிபாட்டுக்கு மட்டும் உரிய மதமாக அது என் றுமே இருந்து வந்ததில்லை தத்துவ சாத்திர ஆராய்ச்சியையும் சமய வாழ்க்கை வாழ்வதற்கான வழிவகைகளையும் அது ஒன்ருக இணைத்துள்ளது
அதன் தனிச்சிறப்பியல்பும் அவ்விணைப்பேயாகும்.
இவ்வடிப்படைச் செய்தியை மனங்கொண்டே ஆசிரியர் இளையதம்பி அவர்கள் இந்நூலை இயற்றி யுள்ளார். முப்பொருள் உண்மை விளக்கமாக அமைந்துள்ள நூலினை மூன்று இயல்களாக வகுத்து அவற்றிற்கு முறையே அறிவியல், சாத்திரவியல், அநுபவவியல் எனப் பெயரிட்டிருக்கிருர், ஒவ்வோர்

X Vil
இயலிலும் பப்பத்து அதிகாரங்கள் உண்டு. சிவ ஞானபோதப் பயிற்சியுடையோர் அந்நூலிற் காணப்படும் பிரமாணவியல் இலக்கணவியல் சாத னவியல், பயணியல் என்னும் பகுப்பினை நினைவு கூர்வர் இந்நூலிலே அறிவியல் என்னும் பகுதியில் வாழ்க்கையிற் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுக்க நெறிகளையும் இருவினை, ஊழ் முதலிய கோட்பாடு களையும் விபரிக்கிருர். இவ்வியலிலே, குறள், கும ரேசசதகம், நாலடியார் முதலிய நீதி நூல்களிலி, ருந்தும் ஒளவையார், பட்டினத்தடிகள், தாயுமா னவர் முதலியோர் பிரபந்தங்களிலிருந்தும் மேற் கோள்கள் எடுத்துக்காட்டப்படுகின்றன. சாத்திர' சம்பந்தமான பொருள்களைக் கற்குமுன் முதற்படி யாக ஒருவர் ஒர்ந்துகொள்ள வேண்டிய அறவி யல், ஒழுக்கவியற் கருத்துக்கள் இவ்வியலில் விப
சாத்திரவியலிலே, சைவசித்தாந்தத்தின் மூலா தாரமான விஷயங்கள் விரித்துரைக்கப்படுகின்றன. இவ்வியல், நூலின் உயிர்நிலைப்பகுதியாய் அமைந் துள்ளதெனில் அது மிகையாகாது. 'தத்துவங் கள்,' "அத்துவாக்கள், 'பஞ்சாட்சரத்தின்மகிமை முதலிய அத்தியாயங்கள் ஆசிரிவரது புலமைக்கும் பொருளறி திறனுக்கும், சான்றுறுதியாய் அமைந் துள்ளன. துறைருட்பக் கூறுகளும் கலைச் சொற் களும் மலிந்த இவ்வியலை இயன்ற ள வு எளிய முறையில் எழுத முயன்றிருக்கிருர் ஆசிரியர். இம் முயற்சியும் பாராட்டுக்குரியது.
அநுபவவியலிலே பக்தி மார்க்கத்தின் பண்பு களும் நாயன்மார் காட்டிய வழி சைவசமயாசா

Page 12
zviii
ரங்கள் முதலியனவும் விளக்கப்படுகின்றன "உலக் வாழ்க்கையும் அதன் பயனும், என்னும் அத்தியா யம் சமய வாழ்க்கையின் தன்மைகளைப்பற்றிப் பேசுகின்றது. "எல்லாம் நீ என்னும் அத்தியாயத் துடன் நூல் முற்றுப்பெறுகிறது. இறை தத்துவ விளக்கத்துடன் ஆசிரியர் இந்நூலை முடித்திருப்பது இசைவானதாகும்.
இந்நூலில் நான் காணும் நலன்கள் இரண் டொன்றை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும். சைவ சித்தாந்தம் மிகவும் அறிவுத் திறம் வாய்ந்த தத்துவக் கோட்பாட்டுத் தொகுதி என்பதில் ஐய மில்லை. அதனை விளங்கிக் கொள்வதற்கு முயற்சி யும் பயிற்சியும் அத்தியாவசிய்ம் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே. ஆயினும், இன்றைய உலகத் திலே எளிதில் அறியப்படமாட்டாத கடினமான விஷயங்களையும் எளிமைப்படுத்தித் தனித்துறை நிபுணர்களுக்குமட்டுமன்றிப் பொதுவான கல்வியறி வுடையோர்க்கும் புலனுகும் வகையில் நூல்கள் இயற்றவேண்டிய இன்றியமையாமை உண்டு. நமது சைவ சித்தாந்த அறிஞர்கள் இத்தேவையைப் போதியளவு உணர்ந்திருப்பதாய்த் தெரியவில்லை.
சென்ற நூற்றண்டில் இக்குறைபாட்டை நன் குணர்ந்த நாவலரவர்கள் அதனை நிவிர்த்தி செய் யும் முகமாகவே சைவவினுவிடை, பாலபாடம் முத லிய நூல்களைப் பிரசுரித்தார். அவர் மரபில் வந்த சைவப் பிரசாரகர்கள் சிலர் அவ்வப்போது சில வசன நூல்களை எழுதியுள்ளனர். யாழ்ப்பாணத்து மேலைப் புலோலி வ. கார்த்திகேயபிள்ளை இயற்றிய சைவசித்தாந்த சங்கிரகம் (1903) இத்தொடர்பில்

eviv
விதந்துரைக்கத் தக்கது. ஆயினும், அந்நூலின் வசனநடை நீண்டுமுடியும் தரத்ததாய்க் கடினமா யமைந்தது. அந்நூற் பிரதிகளும் இக்காலத்திற் கிடைப்பதரிது. அதன் பின்னர் வெளிவந்த சில நூல்கள் பெளராணிக மரபைத் தழுவியனவாய்த் தலங்கள், விரதங்கள் என்பவற்றின் பெருமையைக் கூறுவதுடன் அமைந்தன. இத்தகைய நூல்களுக்கு எடுத்துக்காட்டாகப் புங்குடுதீவு சி. குருமூர்த்தி சாஸ்திரியார் வெளியிட்ட அறிவானந்த ஞானகுரு தீபம் (1940), புலோலியம்பதி தி, க. கந்தையா பிள்ளை இயற்றிய சைவசமய சார சங்கிரகம் (1941), என்பவற்றைக் குறிப்பிடலாம். புலோலி நகர் சைவப் பெரியார் சு. சிவபாதசுந்தரம் இயற்றிய சைவசமயசாரம் (1947) சாமானியக் கல்வியறி வுடையோரும் அனயாசமாகப் படித்துணரக்கூடிய வகையில் அமைந்தது. இதுவரை ஏறத்தாழ இரு பதினயிரம் பிரதிகளுக்குமேல் விற்பனையாகியிருக் கிறது. ஆயினும் அதன் பொருட்பரப்பு ஓரளவு குறுகியதே. பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை அவர்களின் சமயக் கட்டுரைகள் (1961) சைவத்தைப் பற்றிய முக்கியமான நூல் கருத்துரைகள் நிறைந்த அந்நூல் கற்றேர்க்கும் சிந்தனையாளர்க்கும் சீரிய விருந்தாயமைவது (ஈழத்து அறிஞர் சிலர் சைவ சிந்தாந்தம்பற்றி ஆங்கிலத்திலும் நூல் வெளியிட் டுள்ளமை நினைந்துகொள வேண்டி:பதாகும்.) இவ் வாறு கடந்த காலத்தில் ஈழத்தவர் எழுதிய சில நூல்கள் வெளிவந்திருப்பினும் காலத்திற்கு இயைந்த நடையிலும் சமகால நோக்கிலும் இயற் றப்பட்டவை மிகச்சிலவே.

Page 13
இந்நூலாசிரியரது ஆக்கமானது கற்றேருக்குத் திருப்தி யளிக்கும் அதே வேஃாயில் பொதுக்கல்வியுடையோர்க்கும், புதி தாய் நமது சமயத்தைப்பற்றி அறிந்துகொள்ள விருப்புடை போர்க்கம் எற்ற முறையில் புதப்பட்டுள்ளது. விஷயத் தெளி வும் விக்கும் ஆற்றலும் இவ்வரிய சாதனக்கு ஏதுவாபுள்ளன 41) ஆகின்றேன்.
வேதாகமங்களினதும் தேவாரங்களின தும் சார மாகவே மெய்கண்ட சாத்திரங்கள் எழுந்தன என் பர். எனவே, சைவசித்தாந்த சாத்திர சம்பந்த ான நூலிலே திருமுளறப்பாடல்கள் அடிக்கடி எடுத்தாளப்படுதல் எதிர்பார்க்கக் கூடியதே. இத் நூலாசிரியர் பன்னி ரு திருமுறைகளிலிருந்து, மட்டுமன்றி நீதிநூல்கள், புராண நூல்களிலிருந்தும் அருணகிரிநாதர், தாயுமானவர் முதலிய இடைக் காலப் பக்திமான்களின் பாடல்களிலிருந்தும் இருப தாம் நூற்றண்டுப் புலவரான மகாகவி சுப்பிர மணிய பாரதியார் யாழ்ப்பாணத்து யோக சுவா மிகள் ஆகியோர் பாடல் ளிலிருந்தும் மேற்கோள் காட்டிச் செல்கிருர், நவீனர்களது பாடல்களை 11ம் சேர்த்துக் கொள் இத்தல் காலத்தோடொ " டிச் செல்லும் போக்கிஃக் காட்டுவதாகும்.
இன்று நமது நாட்டின் கல்வியமைப்பிலே பாலர் வகுப்பிவிருந்து பல்கலைக் கழகப்படிப்பு கிரை இந்து சமயம், இந்து நாகரிகம் என்பவற் றைக் கற்கும் வாய்ப்புகள் உண்டு எனவே, உயர் நிலயில் சைவசமயத்தைப் பற்றி அறிய விழையும் மானுக்கரும் உசாவ விரும்பும் ஆசிரியரும் பலர் இருப்பரென எதிர்பார்க்கலாம். இஃாயதம்பி அவர் களின் இந்நூல் முக்கியமான ஒரு தே ன வ  ைய

நிறைவேற்றுகிறது என்பது உறுதி. சைவசித் தாந்தத்தைப் பயிலும் மானுக்கர் அதிற் பாண் டித்தியம் அடைந்தபின்னர், சமயங்களை ஒப்பியல் நோக்கில் ஆராயும் மனப்பக்குவத்தையும் வளர்த் தல் வேண்டும். அறிவு வளர்ச்சியின் தருக்க ரீதி யான போக்கு ஒப்பியல் ஆய்வாகும். அதன் மூல மாகவே ஒன்றன் தனித்தன்மையைத் தெரிந்து கொள்ளல் சாலும்.
காலத்துக்கேற்ப பணி ஒன்றைச் செய்துள்ள இளையதம்பி அவர்கள் சைவாபிமானிகள் அனேவ ரினதும் இதய பூர்வமான பாராட்டுக்குரியவரா கிருர். இம்முயற்சியை வாசகர்கள் வரவேற்றுப் பாராட்டினுல் ஆசிரியர் இத்துறையில் மேலும் சில நூல்களை வெளியிட ஊக்கம் பெறுவார் என நம் புகிறேன்.
- 1 - 7

Page 14
சைவப்புலவர்மணி, சிவகதாப்பிரசங்கபூஷணம் பெருஞ்சொல் வித்தகனுர் ஹிமான். த. குமாரசாமிப்பிள்ளை அவர்கள் வழங்கிய
மதிப்புரை
பதி, பசு, பாசம் என்பவையே முப்பொரு ளாம். சைவசித்தாந்த சாத்திரங்கள் பதினன்கும் முப்பொருள் உண்மைகளையே கூறுவனவாம். அவை களை நன்முக ஆராய்ந்து வசன நடையில் எழுதிய மைக்குக் காரணம் சாத்திரங்களை முறைப்படி கற் பது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. ஆதலால் பல நூல்களையும் ஆராய்ந்து கற்பவர்கள் இலேசாக விளங்கத்தக்க முறையில் தெளிவாக எழுதப்பெற் றது இந்நூல். பல மேற்கோள் உதாரணங்கள் காட்டி படிப்பவர் LD60TLh நிச்சயஉணர்வு பெருகும் வண்ணம் இந்நூலை ஆக்கித் தந்த பெரியார் பூரீமான் மு. இளையதம்பி B, A, அவர்களுக்கு சைவ உலகம் நன்றிக் கடப்பாடு உடையதாகும். எனது பாராட்டையும் தெரிவிக் கின்றேன். 27-1-1976

பொருளடக்கம்
அறிவியல்
1. சைவசித்தாந்தம் 2. மானிடப்பிறவியின் மாண்பு 3. பிறப்பும் இறப்பும் 4. தூய்மை 5. அறம் 63 அன்பு 7. கொல்லாமை 8. கல்வி 9. நன்மையும் தீமையும் 10. ஊழ் சாஸ்திரவியல்
11. தத்துவங்கள்-98 12. பதி l3. J& 14 பாசம் 15. ஞானசாதனங்கள் 16. உண்மை ஞானமும் தசகாரியமும் 17. அத்துவாக்கள் 18. பஞ்சாட்சரத்தின் மகிமை 19. சித்தாந்த சாத்திரங்கள் 20. இறைவழிபாடு அநுபவவியல்
21. நாயன்மார் காட்டிய வழி 22. இறைவனின் காட்சி 23. பக்தி 24, இயற்கை தரும் அறிவு 25. உலக வாழ்க்கையும் அதன் பயனும் 26, சன்மார்க்கம்
7. தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் 28. சைவசமயாசாரங்கள் 2ழ, வெவழிபாடு தரும் அநுபவம் 30
பக்கம்
2. 27
33
4.
48
57
6组
73
93
106
28
147
67
8.
94
20
226
240 261
270
277
285 297 307
322 332 340

Page 15

சிவமயம்
விநாயகர் துதி
Glaussrur
எங்கும் நிறைந்துநல் இன்பங் கொடுத்தருளும் தொங்கும் கரமுடைய தும்பிமுகன் - இங்குநான் பதிபசுமுப் பாசப் பொருள்தன்மேல் நூல் எழுத அதிதுணையாய்ச் செய்யும் அருள்.
சுப்பிரமணியர் துதி
விருத்தம்
* உன்னைநான் நினைக்கும்போது உவந்துநீ அருள்புரிந்தாய்
என்னையும் முருகாவின்று இன்னருள் காட்டிநின்று முன்னேநான் அறிந்திராத முப்பொருள் விளக்கங்கொண்ட உண்மை நூல் எழுதயானும் உதவவே வேண்டுகின்றேன்.
அவையடக்கம்
வெண்பா
சிற்றறிவுக்கேற்றபடி சித்தாந்தக் கட்டுரையை கற்றறிந் தோர்தாங் கருதவைத்தேன் - மற்றதனின் குற்றங் களைந்து குணமெலாம் கொண்டிடுவர் தற்றவ மக்கள் நனி.
மூப்பது கட்டுரையால் முப்பொருளின் உண்மையைச் செப்பிட வேலன் செயுந்துணையால் - இப்புவியில் நற்றிருவை நல்குகின்ற நல்லநூல் சித்தாந்தம் கற்றிடுவர் என்றுமே காண்.

Page 16

SLSSLSSL
LLLLLLLL LLLLLLLLLLLLL LLLLLLLLL LLLLL LLLLLLLLS LSLS
Up

Page 17

á
சிவமயம்
1. சைவசித்தாந்தம்
சைவம் சிவம் சம்பந்தமானது. சிவலிங்க வழிபாடு கரப்பா, மொகஞ்சதாரோ நாகரிகம் மிளிர்ந்த காலத் திற்குப் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பாக இருந்தது என்பதனை அந் நகரங்களிலே அகழ்ந்து எடுக்கப் பெற்ற சிவலிங்கங்கள் சான்று பகர்கின்றன. விறன்மிண்ட நாய ஞர் புராணத்திற் சேக்கிழார்,
* ஒக்கநெடுநாள் இவ்வுலகில் உயர்ந்த சைவப் பெருந்தன்மை தொக்கநிலைமை நெறிபோற்றித் தொண்டுபெற்ற விறன்மிண்டர் தக்கவகையால் தம்பெருமான் அருளினுலே தாழ்நிழற் கீழ் மிக்ககண நாயகராகுந் தன்மைபெற்று விளங்கினர்." என்று சொல்வதிலிருந்து மேன்மை பொருந்திய சைவசமயம் இவ் வுலகத்தின் கண்ணே நீண்ட காலமாக விளங்கிவந்த தொன் மையான சமயமென நாம் அறிகின்ருேம்.
சிவம் என்பது அன்பு, இன்பம், ஆனந்தம் என்னும் பொருளைக் குறிக்கின்றது. ஆகையால் சிவ சம்பந்தமுள்ள சைவமும் அவ்வித பொருளைக் கொண்டதாகும். இறைவ னிடத்திலே அன்பு செலுத்துவதென்றல் இறைவனுக்கு உறைவிடமாகிய உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதாகும். சிற்றுயிர், பேருயிர் என்ற பேதங்காட்டாது அவ்வுயிர்களு டன் ஒன்ரு யும், உடனயும், வேரு யும் சிவம் நிற்கின்றமை யால் அவ்வுயிர்கள் மீது காட்டும் அன்பே சிவபெருமானி டத்துக் காட்டும் அன்பாகும். அதனலேயே ஏனைய சமயங் களைப் பார்க்கிலும் சைவசமயம் கொல்லாமையை வற்பு றுத்துகிறது. சிவசம்பந்தம் பெற்று, சிவசிந்தனையுடன் சிவ தோத்திரங்களாகிய திருமுறைகளை ஓதி உணர்ந்து சிவவழி

Page 18
é முப்பொருள் உண்மை விளக்கம்
பாடு செய்து அன்புநெறியில் வாழ்க்கை நடத்துபவர்களே உண்மைச் சைவர்களாவர். பிறப்பினல் மாத்திரம் எவரும் சைவசமயத்தவரல்லர். சிவவழிபாடு, சைவாசாரம் ஆகிய வற்றைக் கடைப்பிடித்து ஒழுகிவருபவரே சைவரெனப்படு வர். அன்னர் எக்குடியிற் பிறந்தாலும் உண்மைச் சைவ ராவர். அப்பர் சுவாமிகள்,
1 அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலேயரேனுங் கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்பராகில்
அவர்கண்டீர் நாம்வணங்குங் கடவுளாரே."
என்று கூறுவதிலிருந்து சிவப்பற்று சாதி பேதங்களுக்கப் பாற்பட்டது என அறியலாம்.
இனி சித்தாந்தம் என்பது யாது என்பதை நாம் அறிந்து கொள்ள முயலவேண்டும். சித்தாந்தம் என்பதன் பொருள் முடிந்த முடிபு என்பதாம். ஆகையால் சைவசித்தாந்தம் என்ருல் சைவசமயத்தின் முடிந்த முடிபு என்றுகூறலாம்" பதி, பசு, பாசம் என்ற திரிபதார்த்த நிச்சயமே சைவ சித்தாந்தமாகும். அவைகள் கடவுள் ஆன்மா, உலகு என்ற மூன்றையும் குறிக்கும். பாசம் என்பது ஆணவம், கன்மம், மாயை என மூவகைப்படும்.
வேதம், ஆகமம் இரண்டும் சைவசித்தாந்தத்திற்குப் டிரமான நூல்களாகும். சைவ ஆகமங்கள் இருபத்தெட் டாகும். கி. மு. 1500 ஆண்டுகளுக்கு முன்னரே ஆகமங்கள் நூல் வடிவு பெற்றன. சிவாகமங்கள் முப்பொருள் உண் மையையும், இயல்பையும் எடுத்துக் கூறுகின்றன. சிவாக மங்களிற் கூறப்பெற்ற முடிந்த முடிபு யாது என்பதைப் பற்றி மெய்கண்ட சாத்திரங்கள் எடுத்தியம்புகின்றன. அவை சிவஞானபோதம், திருவுந்தியார், திருக்களிற்றுப் படியார், சிவஞானசித்தியார், இருபா இருபஃது உண்மை விளக்கம், சிவப்பிரகாசம், திருவருட்பயன், விஞவெண்பா, போற்றிப்பஃருெடை கொடிக்கவி, நெஞ்சு விடு தூது
உண்மை நெறி விளக்கம், சங்கற்பநிராகரணம் என்ற பதி

அறிவியல் 3.
ஞன்குமாம். சிவாகமங்களே பதி, பசு, பாசமாகிய முப் பொருள் உண்மையை எடுத்துக் கூறும் முதனூல்களாகும். சிவாகமங்களின் முடிந்த முடிபாயுள்ள உண்மையை மெய் கண்டதேவர் சிவஞானபோதத்தின் மூலமாகத் தமிழில் விளக்கஞ் செய்தார். சிவஞானபோதம் சித்தாந்த சாத்தி ர்த்தை விளங்கிக்கொள்வதற்கு முதன்ாலாயும் சிவஞான சித்தியார் வழிநூலாகவும் அமையும். சிவப்பிரகாசம் சார்பு நூலெனப்படும். "பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தியிலே ஓர் விருத்தப்பாதிபோதும்' எனவும் 'நின்ற சிவம் ஒன்று, அதனைத் தேர்தல் ஞானம் நிகழ்போதம் தேர்ந்ததனைத் தெளிதலாகும்' எனச் சித்தியார், போதம் ஆகிய இரண்டின் சிறப்பையும் எடுத்தோதினர் சிவனடி யார். மெய்கண்ட சாஸ்திரங்களை அருளியவர்களுடைய திருநாமங்களையும் நாம் அறிதல்வேண்டும். மெய்கண்ட தேவரே சிவஞானபோதத்தை அருளிச் செய்தார். திருவுந் தியார், திருவியலூர் உய்யவந்த தேவநாயனரால் அருளப் பட்டது. திருகடவூர் உய்யவந்ததேவநாயனர் திருக்களிற் றுப்படியாரை அருளினர். சிவஞானசித்தியார், இருபா இரு பஃது ஆகிய இரண்டும் அருணந்தி சிவாசாரியரால் அருளப் பட்டன. உண்மைவிளக்கம், மெய்கண்டதேவருடைய சீட ராகிய திருவதிகை மனவாசகங்கடந்தாரால் அருளப்பட்டது. சிவப்பிரகாசம் உட்பட ஏனைய எட்டு மெய்கண்ட சாத்தி ரங்களும் உமாபதி சிவாசாரியரால் அருளப்பட்டன.
பதினன்கு சித்தாந்த சாத்திர நூல்களைவிட சைவசம யத்தவர்கள் கற்கவேண்டிய தோத்திரநூல்கள், தேவாரங் களும் திருவாசகமும் உட்பட்ட பன்னிரண்டு திருமுறை களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. முதல் ஏழு திருமுறைக ளும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய தேவாரங்சளாகும். மாணிக்கவாசக சுவாமிகள் பாடிய திருவாசகமும் திருக்கோவையாரும் எட் டாம் திருமுறையாகும். திருவிசைப்பா திருப்பல்லாண்டு ஒன்பதாம் திருமுறையாகும். திருமந்திரம் பத்தாம் திரு முறையாகும். நாற்பது பிரபந்தங்கள் பதினெராம் திரு

Page 19
4 முப்பொருள் உண்மை விள்க்கம்
முறையாகும். பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறை யாகும். வேதாகமங்களிலுள்ள ஞான அறிவினைப்பற்றி சைவ சாத்திரங்களும் திருமுறைகளும் விளக்குகின்றன. பதிஞன்கு மெய்கண்ட சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்வது எல்லோருக்கும் சாத்தியமாகாதெனினும், தமிழ் வேதங்க ளெனக் கருதப்படும் தேவார திருவாசகங்களைப் படிப்பது யாருக்கும் சுலபமாகும். வீட்டிலுஞ் சரி, தொழில் பார்க் கும் இடங்களிலுஞ் சரி, கோயில்களிலுஞ் சரி தேவார திருவாசகங்களை மனத்தினலோ அல்லது வாயினலோ ஒது வதனலும், இறைவன் திருநாமத்தைக் கூறுவதினுலும் அடி யrர்கள் இறைவனின் கிருபைக்காளாவர். 'அஞ்சு முகந்தோன்றி லாறுமுகந் தோன்றும் வெஞ்சமரில் அஞ்சலென வேல்தோன்றும் - நெஞ்சில் ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும் முருகா வென்றேது வார்முன்." என்று அருணகிரியார் கூறுவதிலிருந்து "எண்ணுவார் நெஞ் சில் நண்ணுவான் ஈசன்’ என்ற உண்மையை அறிந்து கொள்ளலாம்.
கொலை, களவு, கள், காமம், பொய் பேசுதல் ஆகிய பஞ்சமாபாதகங்களிலிருந்து விலகி ஒழுகுகின்றவர்களும், சைவாசாரங்களை, அனுஷ்டிக்கின்றவர்களும், சிவதீட்சை பெற்றவர்களுமே தமிழ் வேதங்களை ஒதி, சைவசமயத்த வர்களென்று சொல்லிக் கொள்வதற்குத் தகுதியுடையவ ராகும். மேற்சொல்லப்பட்ட கொல்லாமை, கள்ளாமை, வாய்மை, பிறமன விரும்பாமை ஆகியவைகளைக் கடைப் பிடிப்பதுடன் இரக்கம், வஞ்சனையில்லாமை, பொறையு டைமை, மனங்கலங்காம்ை, அற்பஆகாரம், சுத்தமுடைமை என்னும் நற்கருமங்களை அனுட்டிக்கவேண்டும் 6õ፩ Šቻ6Méቻ ̇ዚ[D யத்தவன் சிவபெருமானிலே நம்பிக்கையுடையவனுக இருப் பான். தவம், ஈகை, செபம், விரதம் ஆகியவற்றை அனுட் டிப்பதோடு, உண்மை நூல்களைக் கற்றல், கர்வமில்லாது ஒழுகுதல், தக்க ககாக காரியங்களைப் பகுத்தறிதல், மூத் தோரை வழிபடுதல், மனமுவந்திருத்தல் ஆகியவற்றைத்

அறிவியல் s
தவருது கடைப்பிடித்து நடந்து கொள்வான். இவ்விதமான ஒழுக்கமும், சிவசிந்தனையும் சைவசமயத்தவனுக்கு இன்றிய மையாதனவாகும். தாம் வாழும்பொழுது, பிறர் நலத் தையுங் கருதி மேலான கொள்கைகளைக் கடைப்பிடித்து ஒழுகுதலையும் சிவதொண்டு புரிதலையும், இறை வழிபாட் டையும் தியானத்தையும் சைவசமயம் வற்புறுத்துகின்றது. இவ்வித வாழ்க்கையைக் கடைப்பிடித்து நடப்பவர்கள் ஈற் றில் மெய்ஞ்ஞானமாகிய சிவஞானத்தைச் சிவ அனுக்கிர கத்தாற் பெற்று திருவடி நிழலிலமருவார். முற்பிறவி களிற் செய்த தவப்பயன் இப்பிறவியில் நன்னிலை எய்தச் செய்யும். இதைப் பெரியபுராணம் விளக்கமாகக் கூறுகிறது:
'சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவஞானம் பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம் உவமையில்லாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தாம் உணர்ந்தார் அந்நிலையில்"
திருஞானசம்பந்தருக்கு இறைவன் பார்வதி சமேத ராய்க் காட்சியளித்தபோது மெய்ஞ்ஞானம் உதயமாயிற்று என்பதை அறிகிருேம், "ஏடுடைய மலரான் முனைநாட் பணிந்தேத்தவருள் செய்த' என்ற தேவாரத்தின் மூலம் அவர் முற்காலத்திலே பூசித்ததன் காரணமாக இப்பொழுது தான் ஆட்கொள்ளப்பட்டதாகக் கூறுவதைக் கவனிக்கலாம். முன்னை நீ புரி நல்வினைப் பயனிடை’’ என்று இன்னுெரு தேவாரத்திலும் கூறப்படுகிறது. ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் தவப்பயனின் காரணத்தினுல் பேரின்பத்தை எய் தலாமென சைவசமயமே வற்புறுத்துகிறது. ஆணவம், கன் மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கப்பெற்று ஆன்மா சிவத்தோடு இரண்டறக் கலத்தலே நிலையான சிறந்த முத் தியென சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன. இக்கருத்தை மேல்வரும் செய்யுள் விளக்குகிறது.
'உள்ள மலநீக்கி யோங்கு சிவாநந்த வெள்ளந் திளைத்ததுவாய் மேவுதலே - கள்ளவிழ்பூங் கொத்தார் விரிசடையார் கூறு சிவாகமத்திற் சித்தாந்த முத்தியெனத் தேறு.'

Page 20
6 முப்பொருள் உண்மை விளக்கம்
இதன் மூலம் சித்தாந்தம் கூறும் முத்தி இன்னதென்பது தெளிவாகிறது.
சிவநாமத்தை ஒதிக் கொண்டிருப்பவன் சைவன். பிற விக் கட்லிலே தத்தளித்துக் கரையேற மாட்டாத ஆன்மாக் களுக்குத் தெப்பமாக விளங்குவது இறைவனது திருநாம மாகிய பஞ்சாட்சரமாகும்.
'காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி ஒதுவார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதநான்கினும் மெய்ப்பொரு ளாவது நாதன்நாம நமச்சி வாயவே." என்ற தேவாரத்திலிருந்து இறைவனது நாமம் ஆன்ம ஈடேற்றத்திற்கு உறுதுணையாக இருக்குமென்பது புலப்படும்.
'சிவசிவ என்கிலர் தீவினையாளர் சிவசிவ என்றிடத் தீவினைமாளும் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதிதானே"
திருமந்திரத்திலிருந்து சிவநாமத்தை ஒதுபவர் சிவகதி அடை வர் என்பதை அறியக்கூடியதாக இருக்கிறது.
சைவசமயம் ஆராய்ச்சியை உறுதுணையாயுள்ளது. ஆராய்ச்சி புற ஆராய்ச்சி, உள் ஆராய்ச்சி என இருதிறப் படும். தந்தை, தாய், மனைவி, மக்கள், உறவினர், வீடு, பொருள் மற்றும் உலகப் பொருட்கள் யாவும் நமக்குப் புறத்தேயுள்ளன. காட்சிக்குத் தென்படுவதை விளங்கிக் கொள்வது சுலபம். தந்தை, தாய், தமர், தாரம் என்பன கண்ணுல் நித்தியம் காணும் காட்சிகளாகும். அதனவுே அவர்களிலே பற்றுண்டாவதற்கு இடமுண்டு. புறத்தே தோன்றுவன நிலையற்றன. அவை தோன்றி மறைவன என்ற உண்மை விளக்கம் ஏற்படாமல், பற்று, தடை செய்கிறது. அவைகளின் அநித்தியத்தை உணரும்போது உள் ஆராய்ச்சி ஏற்படும். சைவசித்தாந்தம் உள் ஆராய்ச்சி யின் முடிவைத் தீர்க்கமாகக் கூறியுள்ளது. தத்துவங்களையே காட்சி எல்லையாகக் கொண்டுள்ள சமயங்களும் உண்டு,

அறிவியல் 7
ஆனல் சித்தாந்தசைவம் முப்பத்தாறு தத்துவங்களையும் கீழ்ப்பொருளாகக்கூறி மெய்ப்பொருளான சிவத்தை ஆன்மா அடையக்கூடிய வழியையும் தன்மையையும் எடுத்து இயம் புகிறது. அவ்விறைவன் எங்கிருக்கின்றன் என்பதை,
"எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை 'சிவனென்று
எவ்வுயிர்க்கும் அன்பாயிரு'; என்ற செய்யுளின் மூலம் இறைவன் எல்லாவுயிர்களிடத்து முளன் என்று நாம் அறிகின்றமையால் எவ்வுயிர் மீதும் அன்புடையவர்களாக இருந்து வாழப்பழக வேண்டும். சைவசமயமொன்றே, மிருகங்கள், பறவைகளைக், கொன்று தின்பதைக் கொடிய பாவமான செயல் எனக் கூறுகிறது. எங்குமிருக்கின்ற இறைவன் நம் உள்ளத்திலும் இருக்கின் முன். எங்களுடன் இருக்கின்ற இறைவனைக் காண முயற்ஓ செய்யாது அலைந்து திரிகின்றவர்களைப் பார்த்துப் பட்டி னத்தடிகள்
'ஆரூரனிங்கிருக்க அவ்வூர்த் திருநாளென்று ஊரூர்கள் தோறு முழலுவீர் - நேரே உளக்குறிப்பை நாடாத வூமர்காள் நீவிர் விளக்கிருக்கத் தீத் தேடுவீர்." என்று, இறைவன் தம் 'உள்ளத்தினுள்ளே நின்ற கருவே என்ற உண்மையை எடுத்தியம்பி அவரைக்காண இயலாது விளக்கிருக்க நெருப்பைத் தேடித் திரிகிறவர்களைப்போல் அங்கு திருநாள், இங்கு திருநாளென்று உலைந்து திரிவதன் பேதமையைச் சுட்டிக் காட்டுகிறர்.
சிவதொண்டர் இறைவனிடத்து இடையரு அன்பும் மன்னுயிர்க்குத் தம்மாலியன்ற தொண்டும் புரிகின்றவர் களாகும். அன்புமிக்க அடியவர்களை இறைவனது ஆலயமாக நாம் கருதவேண்டும்.
'மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயத்தானும் அரனெனத் தொழுமே.”*

Page 21
முப்பொருள் உண்மை விளக்கம்
என்று சிவஞானபோதம் கூறுவதிலிருந்து இறைவன் மீது அன்புமிக்காருடைய திருவேடத்தையும், சிவாலயத்தையும் சிவனென நினைந்து வழிபட வேண்டுமென்பது தெளிவா கிறது. அப்பருடைய பேரன்பும், திருத்தொண்டும் எத்தன்மைத்தென நாம் அறியக்கூடியதாகக் காஞ்சிப்புராணத்தி லுள்ள பின்வருஞ் செய்யுள் ஒன்று கூறுகிறது.
இடையறப் பேரன்பும் மழைவாரும் இணைவிழியும் உழவாரத்திண் படையருத் திருக்கரமும் சிவபெருமான் திருவடிக்கே பதித்தநெஞ் ag7ib நடையருப்பெருந்துறவும் வாகீசப்பெருந்தகை தன்ஞா னப்பாடல் தொடையறச் செவ்வாயும் சிவவேடப் பொலிவழகும் துதித்து
(வாழ்வாம்.?
சைவத்தை மேற்கொண்டு இடையரு அன்பும், பக்தியுமு டைய அடியார்கள் சாயுச்சிய பதவியை அடையமுடியுமென சமய குரவர்களே நமக்கு வழிகாட்டியுள்ளனர். உலக பந் தத்தினின்று நீங்கி சிவபெருமானின் திருவடியை அடை தற்கு, சரியை, கிரியை, யோக, ஞானம் என்னும் நான்கு வழிகளைச் சித்தாந்த நூல்கள் கூறியிருக்கின்றன. சரியை வழியைப் பின்பற்றும் நெறி தாசமார்க்கமெனவும், கிரியை வழியே நின்று ஒழுகுதல் சற்புத்திர மார்க்கமெனவும், யோக நெறியினின்று ஒழுகும்முறை சகமார்க்கம் எனவும், ஞானவழியைப் பின்பற்றும்முறை சன்மார்க்கம் எனவும் சித்தாந்த சாத்திரங்கள் கூறுகின்றன. அப்பர், சம்பந்தர். சுந்தரர், மாணிக்கர் முறையே அம்மார்க்க நெறிகளின் மூலம் இறைவன் திருவடிநீழலை அடைந்தனராகையால் அவர்களுடைய அருள் வாழ்க்கையைப்பற்றி அறிந்து, மக்கள் உய்தி பெறலாம். "மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்" என்று பிரார்த்திப்போமாக.

2. மானிடப் பிறவியின் மாண்பு
நாம் வசிக்கும் இவ்வுலகத்தில் எழுவகைப் பிறப்புக்கள் உண்டு. அவை சுரர். நரர். மிருகம், தாவரம், பறவை நீர் வாழ்வன, ஊர்வன என்பனவாம். நரர் என்று சொல் லப்படுபவர் மக்களாகும், "எண்ணரிய பிறவிதனில் மாணி டப்பிறவிதான் யாதினும் அரிது அரிது காண்’ என்ற தாயு மாணவருடைய கூற்றிலிருந்து மானிடப்பிறவி, ஏனைய பிற விகளிலும் பார்க்கச் சிறந்ததென அறியலாம். எவ்வகை யில் மானிடப்பிறவி விசேடமானது என்று நாம் ஆராய வேண்டும். 'மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு கல்லுண்டு மரமுண்டு மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்டு அநேக குல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு வானவரும் மனிதராய் வருவதுண்டு மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே அருமையென வகுத்தார் முன் IGos' என்ற ஆன்றேர் கூற்றிலிருந்து மனிதப் பிறவி எடுத்தவர் கள் பலரிடையே ஏனைய கீழ்ப்பிறவிகளுக்குரிய பண்புகள் காணப்படுகிறதென்றும் தேவுக்களும் மனிதராய்ப் பிறப் பதுண்டென்றும், இப்பிறவியிலேயே திருவடிப்பேற்றை அடையும் மனிதர் உண்டென்றும், அறியத்தக்கதாக இருக் கிறது. இறைவனுடைய திருவடியை அடைவதே மனிதப் பிறவி எடுத்ததன் பிரதான நோக்கமென அறிகிருேம்.
மனிதன் ஆறு அறிவுகளைப் பெற்றிருக்கின்றன். ஏனைய உயிர்களிற் சில ஒரு அறிவையும், சில இரண்டு, சில மூன்று, சில நான்கு, சில ஐந்து அறிவுகளையும் பெற்றிருக் கின்றன. சத்தம், ரூபம், பரிசம், ரசம், கந்தம் ஆகிய ஐந்து அறிவுகளையும் முறையே காது, கண், மெய், நாக்கு, மூக்கு ஆகிய ஐந்து பொறிகள் மூலம் பெறுகின்ருேம். புல், மரம் போன்ற உயிர்கள் பரிசம் என்னும் அறிவை மாத் திரம் பெற்றிருக்கின்றன. சிப்பி, சங்கு முதலியன பரிசம், ரசம் ஆகிய இரு அறிவுகளையும் உடையனவாகும், கறை யான் எறும்பு முதலியன பரிசம், ரசம், சந்தம் ஆகிய

Page 22
0. முப்பொருள் உண்மை விளக்கம்
மூன்று அறிவுகளைப் பெற்றிருக்கின்றன. தும்பி, வண்டு ஆகியன பரிசம், ரசம்,கந்தம்,ரூபம் என்னும் நான்கு அறிவுகளை யுடைய உயிர்களாகும். சத்தம், ரூபம், பரிசம், ரசம், கந் தம் ஆகிய ஐந்து அறிவுகளையும் மனிதரைப்போல் மிருகங் கள், பறவைகள் பெற்றிருக்கின்றன. ஆனல் மனிதன் மிரு கங்கள், பறவைகள் பெற்ற ஐந்து அறிவைவிடப் பகுத்த றிவைப் பெற்றதனுல் ஆறறிவு படைத்த மேம்பாடுடைய உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவனுவான். தன்னுடைய சிந்தனை களும் செயல்களும் சரியானவையா அல்லது பிழையான வையா என்பதை அறிந்து நடக்கக்கூடிய ஆற்றலை மணி தன் பெற்றிருக்கின்றமையால் அவன் சிறந்தவனுவான். மிரு கங்களுக்கும் பறவைகளுக்கும் பகுத்தறிவு கிடையா. அவை களுக்கு வாயாற் பேசும் ஆற்றலும் இல்லை. இவ்வித விசேட இலட்சணங்களோடு பிறந்த மனிதன் ஏனைய உயிர்ப் பிராணிகளிலும் பார்க்கச் செயற்கரிய செயல்களைச் செய் யும் வன்மையுடையவன் என்பது வெளிப்படை.
எவ்வகையில் மானிடப் பிறவி அருமையானது என்ப தைச் சிறிது சிந்திக்கவேண்டும். ஏனைய பிராணிகளிலும் பார்க்க மனிதன் அழகிய உடற் தோற்றத்தைப் பெற்றி ருக்கின்றன். உணர்ச்சியுடைய மனத்தைப் பெற்றிருக்கின் முன். ஆசை, அன்பு, இரக்கம், கோபம், பயம், வைராக் கியம், விருப்பு, வெறுப்பு என்பன மனத்திலே இடம்பெற் றிருக்கின்றன. யோசிப்பதற்கும் அறிவைப் பெருக்குவதற் கும் மூளை இருக்கின்றது. அயலவர்களோடு அளவளாவிப் பேசிச் சமுதாய வாழ்க்கையை நடத்த இயலும், தேக நலத்திற்காக நல்ல உணவை உண்டு முயற்சிசெய்து பொரு ளைத்தேடி இன்பமாக வாழ்ந்து ஈற்றில் இறப்பதைக் காண லாம், விசேட பிறவி எடுத்த மனிதனின் வாழ்க்கை இவ் வளவுதானு? மிருகங்களும் பறவைகளும் உடலை வளர்க்க வில்லையா? அவைகள் உண்டுண்டு உறங்குகின்றன. இவை களைப்போல் மக்களும் வாழலாமா?
உடலை எடுத்த நாம் நான்கு வகையான இன்பத்தை அறுபவிக்கமுடியும். பசி, தாகம் மேலிட்ட நேரம் ஆகா

மானிடப் பிறவியின் மாண்பு
ரமோ, நீரோ பருகித் திருப்தியடையலாம். இவ்விதமாக உடலோடு சம்பந்தப்பட்ட இன்பங்களை மக்களைப்போல் மிருகங்களும் பறவைகளும் அனுபவிக்கின்றன. கோபம், பயம், சந்தோஷம் போன்ற உணர்ச்சிகள் இருவகையின ரிடமும் காணப்படுகின்றன. ஆனல் மனிதனில் ஒரு வித்தி யாசம் உண்டு. மனிதன் தான் அனுபவிக்கின்ற உணர்ச்சி களைத் தன்னுடைய தோழர்களுக்கு வெளிப்படுத்தி அவர் களை உணர்ச்சிவசப்படுத்துவது போல் மிருகங்களிடம் அவ் விதம் எடுத்தியம்பும் சக்தி கிடையாது. உடலும் மனமும் கொடுக்கின்ற இன்பங்களை மாத்திரம் நுகர்ந்து இறக்கின்ற மனிதன் விலங்குகளைப் போலாகின்றன். ஆனல் ஒருசிலர் உடல் மனம் என்பவற்றைப் பயன்படுத்தியதோடு கல்வி பயின்று அறிவைப் பெருக்கிப் புத்திக்கூர்மையுடையவர்க ளாய் அதன் பயணுக ஒருவகை இன்பத்தை அனுபவிக்கின் றனர். மிருகங்களிலும் பார்க்க இது உயர்ந்தபடியாகும். இவைகள் எல்லாவற்றிலும் மேம்பட்ட இன்பத்தை அடை வதே மானிடப் பிறவியின் நோக்கமாகும். அதுவே பேரின் பம் எனப்படும். இறைவனுடைய பாதங்களைச் சேர்வதே மானிடப்பிறவியின் நோக்கமாகும்.
இதுபற்றியே அப்பரடிகள், •
' குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும் இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டு வதேஇந்த மாநிலத்தே'
என்று கூறுகிருர். எம்பெருமானைக் காணும்பேற்றைப் பெற் ருர் எமக்குக் காட்டும் திருவுருவத்தை இத்தேவாரத்தின் மூலம் ஒருவாறு அறியக்கூடியதாய் இருக்கிறது. எம்பெரு மானுடைய பணித்தசடை, குனித்தபுருவம், சிவந்தவாய், புன்முறுவல், பவளமேனி, மேனியிற் காணப்படும் வெண் ணிறு, துரக்கிய திருவடி, ஊன்றிய வலது திருவடி, ஊன் றிய பாதத்தின் கீழ் முயலகன், ஒரு கையில் உடுக்கை, 'அஞ்சேல்" என்று அமைந்த கை, வீசிய கரம், ஒரு கையில் அனல் என்பனவற்றை அத்திருவுருவங் காட்டுகிறது. சிவ

Page 23
முப்பொருள் உண்மை விளக்கம்
பெருமானின் நடனம் பஞ்சகிருத்தியங்களை உணர்த்துகிறது. எம்பெருமானுடைய திருக்கூத்தைக் காணமுடியுமென்ருல் மனிதப்பிறவியை விரும்பி எடுக்கவேண்டியதாகும். இதன லேயே மனிதப்பிறவி மாண்புடையதாகும்.
சிவபெருமானின் திருக்கூத்தின் சிறப்பியல்புகளைச் சிறி தளவு குறிப்பிடவேண்டியதவ9யம், தஞ்சமென்று சரண டைந்தவர்களைத் தாங்கி அருளும் தயாபரனகையால் பனித்த சடையெனக் கூறப்பட்டது. கலைவல்லார்க்கு வளைந்த புரு வங்காணப்படும் கவலை கொண்டவர்க்கும் அவ்விதம் வளைந் திருப்பதுண்டு. உயிர், உடல், கரணம், புவனம், போகம் ஆகியவைகளை ஈந்தும், அவற்றின் பெருமைகளை அறிந்தும் பயனடையாது, பாவிகள் அநேகர் விலகுகின்றன்ரே என்ற கருணையாலே எழுந்த கவலை எம்பெருமானுக்குப் புரவத்தை வளையச் செய்தது போலும். இனி மானிடப் பிறவியெடுத்த ஒருசிலர் தன்னும் பிறவிப் பெரும் பயனை அடைதற்கு உரிய வராகின்றனரே என்றதனல் முகமலர்ச்சியும் புன்முறுவலும் ஏற்படுகிறது. இடப்பட்ட பொருள் எதனையும் புனிதமாக் கும் தன்மையுடைய எரிகின்ற நெருப்பு பவளநிறமாகும் அது அடியவர்களுக்கு அருள் புரிவதற்காக எடுத்த மேனி யாகும். வெளியிலே பூசப்படும் நீற்றின் வெண்மைபோல உள்ளும் புனிதர் என்பது அறியப்படும் தூக்கியது இடது திருவடியாகும். ‘அருளல்" என்பது இறைவன் புரிகின்ற் பஞ்சகிருத்தியங்களில் ஐந்தாவது தொழிலாகும் ‘குஞ்சித பாதம்" என்னும் இத்திருவடி ஆன்மாக்களுக்கு அருள் செய்தலைக் குறிக்கும். ஆணவம் ஆகிய முயலகனை ஊன்றி நிற்பது வலது திருவடியாகும். இது இறைவனது நான்காவது தொழிலான மறைத்தல் அல்லது திரோதானத்தைக் குறிக் கிறது. வினைப்போகங்களைச் சிறிது சிறிதாக ஆன்மாக்கள் நுகரச் செய்யும் மாண்பை உடையது ஊன்றிய திருவடி அவருடைய கையிலிருக்கின்ற உடுக்கை படைப்புக்கடவுள் அவர் என்பதை விளக்குகிறது. ஆன்மாக்கள் பிறவித் துன் பத்தினின்று நீங்க வேண்டுமென்று பிரார்த்திக்கும்போது

மானிடப் பிறவியின் மாண்பு
*அஞ்சேல்' என்று ஒருகரம் உணர்த்துகிறது. வீசிய கரம் மாயையை உதறித்தள்ளும் குறிப்பைக்காட்டுகிறது. இக் கரத்தின் ஒருவிரல் தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டு கிறது. தூக்கிய திருவடியைமட்டும் கும் பிட்டாற் போதும் என்பதை அவ்விரல் காட்டுகின்றது. அனல் ஏந்திய கை 'அழித்தல்' தொழிலை உணர்த்துகிறது. இறைவனை மனம் வாக்குக் காயங்களாலே அன்புடன் வணங்குகின்ற ஆன்மாக் கள் மீது அவர் தனது பெருங்கருணையைக் காட்டி ஆணவ மலத்தை நீங்கச் செய்து மாயையை வெல்லத்தக்கதாகத் துணைபுரிந்து அவ்வான்மாக்களுக்குத் திருவடிப்பேற்றை நல்குவார் என்பதை இறைவனின் திருநடனங் காட்டுகிறது. மானிடப்பிறவி யெடுத்த ஆன்மாக்களே அப்பேற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்
'பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ னடிசேரா தார்'
என்பது வள்ளுவர் கூற்ருகும். இறைவனுடைய திருவடி யைச் சேர்ந்தவர்களே பிறவித் துன்பத்தினின்று நீங்கமுடி யும். ஏனையோர் மீண்டும் பிறவியை எடுக்கவேண்டும். பிற விக்கு அஞ்சியே ஞானிகள் இறைவனின் கருணை இல்லா விடத்துத் தங்களுக்கு உய்வில்லை எனப் பகர்கின்றனர்.
'யானேதும் பிறப்பஞ்சேன் இறப்பதனுக் கென்கடவேன்
வானேயும் பெறில்வேண்டேன் மண்ணுள்வான் மதித்துமிரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனேயெம் பெருமான்எம் மானேயுன்னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவனே'
என்று மணிவாசகப் பெருமான் தனது வருத்தத்தைத் தெரிவிக்கின்ருர், அருணகிரியார்,
'தெய்வத் திருமலைச் செங்கோட்டில் வாழுஞ் செழுஞ்சுடரே
வைவைத்த வேற்படை வானவனேமற வேணுனேநா 2னவர்க் கிடம்பெறக் காலிரண் டோட்டி யதிலிரண்டு கைவைத்த வீடு குலேயுமுன் னேவந்து காத்தருளே’

Page 24
l4 முப்பொருள் உண்மை விள்க்கம்
என்று முருகனை இறைஞ்சிக் கேட்கின்ருர். இந்த உடம் பாகிய வீடு அழிவதற்கு முன்னரே எழுந்தருளி வந்து காத் தருள வேண்டுமென்பதே இதன் பொருளாகும்.
மானிடப்பிறவியை விட மற்றும் எந்தப்பிறவியும் இறைவனைப் பற்றிச் சிந்திக்கவோ அவர் மீது பக்தி செலுத் தவோ இயலாது. மனிதப்பிறவி எடுத்த ஆன்மாவே பரமாத் மாவைச் சேர்வதற்கு விரும்பி நிற்கின்றது. அதனுலேயே மனிதப்பிறவி மாண்புடையதாகும்.
'என்ன புண் ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்து முன்னே நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடு மதனுலே" முற்பிறவிகளிற் செய்த புண்ணியத்தின் பயனுகவே இறை வணைத் தொழுதும் திருநாமங்களை உச்சரித்தும் வழிபடக் கூடிய மானிடப்பிறவியை எடுத்திருக்கின்ருேம் என்று இத் தேவாரத்திற் கூறப்பட்டிருக்கின்றது.
நாம் எடுத்த பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டுமென அவாவுறுவதற்குப் பதிலாக மிருகங்களைப் போல் இறக்கும்வரை உண்டு, உறங்கி ஆத்ம ஈடேற்றத் தைப்பற்றிச் சிந்தியாது காலங்கழிப்பவரைக் கண்டு இரங்க வேண்டி இருக்கிறது. எடுத்த பிறவியின் நோக்கத்தை நிறை வேற்ற நாம் எல்லோரும் முயல வேண்டும்.
ఖశాఖాభిక్ష

3. பிறப்பும் இறப்பும் மக்களாகிய நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளின் காரணமாகப் பிறந்தும், இறந்தும் மீண்டும் பிறவிகளை எடுத்தும் உலைகின்ருேம். பட்டினத்தடிகள், 'முன்னம் எத்தனை எத்தனை சென்மமோ
மூட ஞய் அடி யேனும் அறிந்திலேன் இன்னம் எத்தனே எத்தனே சென்மமோ
என்செய் வேன்கச்சி ஏகம்ப நாதனே ”
என்று கூறுகின்ருர். பிறவிக்கு ஏதுவான வழியில் நடந்து கொள்வதினலேயே நாம் பிறப்பை ஒழிக்க முடியாதிருக் கின்முேம், உலகத்திலுள்ள மக்கள் எல்லோரும் துற வறத்தை மேற்கொள்ள முடியாது. ஆகையால் இல்லறத்தி லிருந்துகொண்டு எவ்வாறு ஒழுகினுல் நாம் ஈற்றில் இறை வனை அடையலாம் என்பதைச் சிந்திக்க வேண்டும் * பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின்றரே'
என்று அப்பர்சுவாமிகள் கூறுவதைக் கவனிக்கலாம் நாளாந்த வாழ்க்கையில் நாம் விடுகின்ற தவறுகளேக் கவனிப்போம். இறைவனுடைய திருநாமமாகிய பஞ்சாட்சரத்தைத் தின மும் ஒத மறந்துவிடுகின்ருேம். இறைவனுடைய பெருமை யைப் புகழ்ந்துகூறும் தேவார திருவாசகங்களைப் படிப்பு தில்லை. கோயிலுக்குச் சென்று பிரார்த்திப்பதில்லை; போ னம் அருந்துவதற்கு முன்பாக ஒருபூவை இறைவன் பாதங் களிலே அன்புடன் சமர்ப்பிப்பதில்லை. நாம் முன் செய்த பாவங்கள் நீங்கத்தக்கதாகத் தினமும் திருநீற்றை அணிவ தில்லை. அவ்விதமான மக்கள் பெரும்நோய்களாற் பீடிக்கப் பட்டு இறந்து மீண்டும் பிறப்பு இறப்பாகிய இரண்டிற்கும் ஆளாய்த் துன்பப்பட நேரிடுகிறது. பிறவியை அறுப்ப பதற்கு இறைவனுடைய தியானமும் பிரார்த்தனையுமே துணைபுரியும். இல்லறத்திலிருக்கும் ஒருவன் எவ்வாறு ஆன்ம ஈடேற்றத்தைப் பெறலாம் என்பதைச் சிறிது ஆராய்வோம்.

Page 25
ᎥᏮ முப்பொருள் உண்மை விளக்கம்
* ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே
அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியன மழுமான் கரத்தனே மால்விடை யானே மனத்திலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே '
அநாதிதொட்டு என்றும் இருக்கின்ற கடவுளை மனத்தினுல் நினைந்து உருகிக் கண்ணினின்றும் நீர்விழ விம்மிவிம்மி அழு தால் அவருடைய கருணை உடனே கிடைக்கும். எத்தன்மை யருக்கு உடனே கிடைக்குமென்பது வெளிப்படையாகக் கூறப்படாவிடினும் அடிப்படையாக அமையவேண்டிய கட் டுப்பாடும் ஒழுக்கமும் உண்டு. முதலாவதாக, ஒர் உயிருக்கும் நாம் மனம், வாக்கு, காயத்தாலே தீமைசெய்யக்கூடாது. பொருமை, கோபம், காமம் ஆகியன விலக்கப்படவேண்டி யன. உறவினர், அயலார் அல்லது யார்மீதும் பொழுமை கொள்ளக்கூடாது. கோபத்தை அடக்காதுவிட்டால் செய் வது இன்னதென்று ஆராயாது தவருனசெயல்களைச் செய்ய நேரிடும். ஆனல் கோபம் அடைகிற நேரமும் உண்டு: அநீதியைக் கண்டவிடத்துக் கோபமடையவேண்டும். 'பிறர் பனை அஞ்சுமின்' என்பதற்கு உதாரணமாக ஒரு இல் லறத்தவன் ஒழுகவேண்டும். இவ்விதமாக ஒழுக்கரீதியில் நடக்கும் ஒருவன் மனம் உருகி அழுதால் இறைவனுடைய கருணைகிட்டும். இக்கருத்திற் கிணங்கவே, "வினையேன் அழு தால் உனைப் பெறலாமே" என்று மணிவாசகப்பெருமான் கூறுகிருர், p
வினை வசத்தாற் பிறந்த ஒவ்வொருவரும் பிராரத்துவ வினையை அனுபவித்தே தீர்க்கவேண்டும். ஆனல் பிராரத் துவம், சஞ்சிதம் என்னும் பழைய பிறவிகளிலே செய்த வினைப்பயனை அனுபவிக்குங்கால் மனம் வருந்தி இறைவனை நினைந்து அழுதால் அவர் அனுக்கிரகஞ் செய்வார். துன் பந் தாங்கக்கூடியளவுக்குக் குறைவதுமல்லாமல் இப்பிறவி யிலே தீவினைசெய்தல் கூடாதென்ற பயமும் உண்டாகும். அதனுல் நாளடைவில் திருத்தம் ஏற்பட்டு இறைவன் பிரார்த்தனையே தனக்கு ஈடேற்றம் தரும் என்ற உணர்ச்சி உண்டாகும். ஆகையால் இல்லறத்தவனும் குற்றங்சளி னின்று நீங்கி ஒழுகினற் பிறவிக்கடலை நீந்த வழியுண்டாகும்.

பிறப்பும் இறப்பும் 17.
'வினைப் போகமே ஒருதேகங் கண்டாய் வினேதா னுெழிந்தால் தினேப் போதளவு நில்லாது கண்டாய் சிவன் பாதநின ' எடுத்த இப்பிறவியிலேயே உடலைவிட்டு உயிர் நீங்கு முன் னரே சிவனுடைய பாதங்களை உண்மையான மனத்துடனே தியானிக்க வேண்டும் என்று நாம் அறியவேண்டியது அவ சியம். ۔
* உயிர்த்துணை நின்பதமே ' என்று கூறும் பட்டினத் தடிகள் நாம் விடுகின்ற தவறுகளை ஒரு செய்யுளிலே வெளிப் படையாகக் கூறுகின்ருர்,
* பொய்யை ஒழியாய் புலாலவிடாய் காளத் தி ஐயரே யென்னு யறஞ்செய்யாய் - வெய்ய சினமே ஒழியாய் திருவெழுத்தைந் தோதாய் மணமே உனக்கென்ன மாண்பு ** பொய் பேசுதலும் பஞ்சமா பாதங்களுள் ஒன்ருகும். நாளாந்த வாழ்க்கையில் மக்கள் பொய் பேசுகின்றனர், பொய் துன்பத்தைக் கொடுக்கும் என்பதை அவர்கள் உணர் வதில்லை. **உள்ளம் பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி" என்று திருவாசகத்திலும், 'கனவிலும் பொய் சொல் லாமல் ' என்று பட்டினத்தடிகள் பாடலிலும் கூறியிருப் பதைக் காணலாம், −
புலால் உண்ணல் இன்னெரு பாவச் செயலாகும். பல் வேறு தாவர உணவு இருக்கின்றபொழுது ஒர் உயிரைக் கொன்று ஊன உண்பது எவ்வளவு பாதகச்செயல், எவ் வளவு சீவகாருண்ணியமற்ற செயல், எவ்வளவு அறிவுக் குறைவு, எவ்வளவு இழிவான செயல் என்பது யாருக்கும் தெரிந்த ஒரு விஷயமாகும். இறைவனுடைய நாமத்தை உச்சரிப்பதில்லை, தருமஞ் செய்வதில்லை, அறவழியில் ஒழுக முயற்சிப்பதுமில்லை. கோபத்தை நீக்க முயல்வதுமில்லை. பஞ்சாட்சரத்தை ஒதுவதுமில்லை. இக்குற்றங்களுக்கீடான மனத்திற்கு என்ன பெருமை இருக்கிறதென்று இச் செய் யுளிலே கூறப்பட்டிருக்கின்றது.
பிராரத்துவவினை, இப்பிறவியிலும் பாவச்செயல்களிலீடு படச் செய்யும். உணர்ச்சி வேகத்தினுல் மனத்தைச் செல்ல விடாது அமைதியாகச் சிந்தித்துச் செயலாற்றினுல் பாவச்
ᏬᎵ ?

Page 26
a , , J8 முப்பொருள் உண்மை விளக்கம்
செயல்களைத் தவிர்க்கலாம். பாவச்செயல்கள் கடவுளுடைய கோபத்திற்கு ஆளாக்குமென்ற பயமும் மக்களுக்கு இருக்க வேண்டும். இவ்விதமான வாழ்வு இப்பிறவியில் அமைதி பான வாழ்க்கையைக் கொடுப்பதுமல்லாமல் பிராரத்துவ வினே தேய்ந்து போவதற்கும் உதவியாக இருக்கும்.
இவ்வுலகில் செல்வம், கல்வி, குலம், குடும்பம், நிலம் ஆகிய பல பற்றுக்கள் மனத்தை இழுத்துச் செல்வதால் பிறவியை நீக்குவதற்கு ஒரே ஒரு துணையாக இருப்பது இறைவனுடைய பாதங்கள் என்பதை மக்கள் மறந்து விடு கின்றனர். பற்றுள்ள பொருள்கள் நிலையற்றன. துன்பத் தைத் தருவன என்று எண்ணுது பைத்தியம் பிடித்தவர்கள் போல் உலகப்பற்றுக்களிலே அமிழ்ந்தி விடுவதைப் பார்த்து நாம் பரிதாபப்படவேண்டும். இவைகளைவிட இறப்பும் பிறப்பும் என்ற கலக்கமும் உண்டாகிறது. தன் பற்றை இறைவனிடத்து வைத்த மணிவாசகப் பெருமானுக்குச் சிவபெருமானே குருவாக எழுந்தருளி ஆட்கொண்டார்.
"வைத்த நிதிபெண்டீர் மக்கள் குலங்கல்வி யென்னும்
பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்
சித்த விகாரக் கலக்கந் தெளிவித்த வித்தகத் தேவர்க்கே சென்றுதாய் கோத்தும்பி"
என்ற திருவாசகத்திலிருந்து மணிவாசகப் பெருமான் கூறி யிருப்பதை அறியலாம். உலகவாழ்க்கையிலீடுபட்டிருக்கின்ற வர்கள் மனைவி, மக்கள், சொத்துக்கள் ஆகியவற்றிலே அதிக பற்றுடையவராகக் காணப்படுகின்றனர். பிறந்த நாம் இறப்பது திண்ணம் என்பதும் தெரியும் இறக்கும் பொழுது கூடச் செல்வது இருவினைப் புண்ணிய பாவமு மாகும். வேறு ஒன்றும் பின்தொடர்ந்து செல்லமாட்டாது. எடுத்தபிறவி ஒவ்வொன்றிலும் அனுபவிக்குங்கால் பழைய கன்மங்கள் தொலைந்தால் ஆன்மஈடேற்றம் படிப்படியாக ஏற்படும். அதற்குப் பதிலாக எடுத்த இம்மானிடப் பிறவி யிலேயே மீண்டும் பாவங்களைச் செய்து துன்பக்கடலிலே ஆளாக நேரிடுகிறது. ஆகையால் இல்லறத்திலிருக்கும் ஒருவன் திலேயற்ற பொருட்களிலே அளவுகடந்த பற்றை

பிறப்பும் இறப்பும் 19
வைக்காது, கனவிலும் பிற உயிர்களுக்குத் தீமை நினை யாது கடமை புரிகிறவனுக வாழவேண்டும். மண்ணுக்கும், பொன்னுக்கும். புகழுக்கும் தீயமுறைகளைக் கடைப்பிடித்து ஓயாது உழைக்கின்ற மாந்தரைப் பார்த்து இரங்கவேண்டும். உலகத்திலே இன்பமாக வாழ்வதற்கு இவைகள் இன்றிய மையாதன. ஆனல் அன்பு, இரக்கம், தருமசிந்தை கொஞ் சமேனும் இல்லாது பொருளைத்தேடி வைத்து இறக்கின்ற வர்களின் அறியாமையை என்னென்று சொல்லலாம்.
இல்லறத்திலிருக்கும் ஒருவர் பற்று ஒன்றுமில்லாது இருக்கமுடியாது. இல்லற வாழ்க்கையை நடத்துவதற்குப் பொருள் தேவை. மனைவி, மக்கள், உற்ருர், அயலார் ஆகிய பலருக்கும் செய்யவேண்டிய கடமைகளும் உண்டு. ஒரு பற்றுமற்ற ஞானிபோல் நடந்துகொள்ள முடியாது. ஆகையால் ஆன்ம ஈடேற்றத்திற்குத் தடை ஏற்படாத முறையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்று அறி தல் வேண்டும். ஒருவர் வாழும் இடத்திற்கருகே பலர் பெருஞ் செல்வத்தோடும், தேக செளக்கியத்தோடும் இடம், பொருள், ஏவல் ஆகியவற்றேடு சந்தோஷமாக வாழக் கூடும். அவர்கள் பூர்வத்தில் செய்து வைத்த புண்ணியத் தின் பலனுகவே அவ்விதம் வாழ்கிறர்கள் என்று யோசித் துத் தானும் புண்ணியத்தைச் செய்வதால் தனக்கும் அவ் வித வாழ்வு ஏற்படும் என்பதைச் சிந்தையில் வைத்து இப் பிறவியிற் புனிதமான பெரும் முயற்சிலீடுபடவேண்டும். அவ்விதம் ந்டந்து கொள்ளாது மற்றவர்களின் மீது பொருமை கொண்டு தீயவழிகளில் நடந்துகொள்ளும் ஒரு வர் மேலும் மேலும் பாவத்தைச் செய்து துன்பத்திற்கா ளாக நேரிடும். ஆனல் அவர்தன் நிலையைத் திருத்துவதற்கு விடாமுயற்சியிலீடுபடவேண்டும்,
* தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்" என்ற திருவள்ளுவரின் திருவாக்கை ஞாபகத்தில் வைத்துப் பிறரைப்பார்த்து மனத்தைத் துன்பப்படுத்தாமல் முயற்சியி லீடுபடவேண்டும். அதுவுமல்லாமல் முயற்சி செய்யும் பொழுது பலனை எதிர்பார்த்துச் செய்யவேண்டியதில்ஃ9

Page 27
·易0 முப்பொருள் உண்மை விளக்கம்
முயற்சியின் பலன் தானுக வந்துசேரும். 'முயற்றின்மை இன்மை புகுத்திவிடும் ' என்ற அப்பெரியாரின் திருவாக் கின் உண்மையை நாம் உலகத்திலே காணமுடியும்,
இல்லறத்தவன் பஞ்சமாபாதகங்களிலிருந்து விலகி ஒழுகுவதோடு இறைவனின் பாதங்களை எந்நேரத்திலும் நினைத்து வாழ்ந்தாணுகில் பிறவிக்கடலை நீந்துவதற்குரிய வழிதோன்றும்.
*" துஞ்சலுந் துஞ்சலி லாத போழ்தினும்
நெஞ்சக நைந்து நினைமின் நாடொறும் " என்று திருஞானசம்பந்தசுவாமிகள் கூறுவதைக் கவனிக் கலாம். நித்திரையிலும், விழிப்பாயிருக்கும்பொழுதும் மனத்தினுலுருகித் தினமும் இறைவனை நாம் நினைக்க வேண்டும். இறைவனுடைய நாமத்தை என்றும் கூறுவத ஞலே நாம் செய்த பழவினை தேய்ந்து போவதோடு இப் பிறவியில் பாவச் செயல்களிலிருந்து நீங்கி நடக்கவும் மறு மைக்கு: ஈடேற்றத்தைப் பெறுவதற்கும் அதுவே துணை புரியும்.
* நல்லவர் தீயவரெ ணுது நச்சினர்
செல்லல் கெடச்சிவ முத்தி காட்டுவ கொல்லந மன்றமர் கொண்டு போமிடத் தல்லல்கெ டுப்பன அஞ்செ முத்துமே ' என்ற சம்பந்தர் தேவாரத்தை உற்று நோக்கினல் உண்மை புலப்படும். --په لح
ஆகையால் மானிடப் பிறவியெடுத்த நாம் முன்சென் மங்களின் கன்மத்தின் பலனுகப் பிறந்துவிட்டோம் என் பதை உணர்ந்து இவ்வுலகத்தில் வாழும் காலத்திலே பாவங் களினின்று விலகி இறைவனே மனம் வாக்குக் காயத்தாற் பிரார்த்தித்து ஒழுக்க சீலராக வாழ்ந்து படிப்படியாகப் பிறவிக்கடலே நீந்திப் பேரின்ப வாழ்வை எய்த முயற்சிக்க வேண்டும் ஆன்மாக்கள் மீது கருணைகொண்ட இறைவன் துணைசெய்வதற்கு எந்நேரமும் சித்தமாயிருக்கிருர்,
స్తో

4 தூய்மை
அழகு, மெய்மை, தூய்மை ஆகியன பூரணமாய் நிறைந்து விளங்கும் பொருள் பரம் பொருளாம். மெய்யு ணர்வு பெற்ற அடியார்களே அதனை அறிய முடியும். உண்மைப் பொருளில் களங்கமற்ற அழகும், தூய்மையும் உண்டு, உண்மைப்பொருள் ஒன்றுதான் உலகில் உண்டு. அதுவே பரம் பொருள். சீவாத்மாக்கள் மலங்களினலே பந்திக்கப்பட்டு பிறந்திருக்கின்றமையினல் ஆதியிலுள்ள அழகையும், தூய்மையையும் இழந்துவிடுகின்றன. வெளிச் சத்திலிருந்து அதனுடைய சுகத்தை அனுபவித்த ஒருவன் இருளிலே வசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டா ல், வெளிச்சமுள்ள அவ்விடத்தை எப்போது அடைவேன் என்று அவாவுறுவான். ஆனல் ஒரு சிலர் இருளிலிருந்து சீவித்துப் பழகிவிட்டால் அது திருப்தியானதென்று எண்ண வுங்கூடும். தற்செயலாக இருளடர்ந்த இடத்தில் உலா வும் போது கல்லோடு மோதுண்டு விழுந்து காயமுறும் போது வெளிச்சத்தைப்பற்றிச் சிந்திப்பதுண்டு. பின்னர் அவ்விடரை மறந்து, தொடர்ந்து இருளில் வாழ விரும்பு வதுமுண்டு. ஆனல் ஒரு சிலர் வெளிச்சமுள்ள இடத்தை எவ்விதமாகுதல் போய்ச்சேர வேண்டுமென்று எத்தனஞ் செய்கின்றனர். இந்நிலை போன்றதே பிறவி எடுத்த ஆன்மாக்களின் நிலை தங்களுடைய பழைய பரிசுத்த மான நிலையை மறந்து மாயை என்ற இருளில் மேலும் மேலும் வாசஞ் செய்வதற்கு விழைகின்றனர்.
மக்களாகப் பிறந்த நாம் இவ்வாழ்வின் அநித்தி யத்தை உணரவேண்டும். இல்லறத்திலிருந்து கொண்டே நாளாந்தம் செய்யும் கடமைகள் முயற்சிகள் ஈ ற் றில் பேரின்ப வாழ்வை அளிக்கத் தகுந்தனவா என்று சிந் தித்தே செயலாற்றவேண்டும். மனம் வாக்குக் காயத்தி னல் செய்கின்ற ஒவ்வொன்றும் கடவுளால் ஏற்று க் கொள்ளக் கூடியனவாக இருந்தால், அவ்விதம் செய லாற்றுபவன் எந்நேரமும் கடவுளை வணங்குகிறன் என்றே

Page 28
29 முப்பொருள் உண்மை விளக்கம்
சொல்ல வேண்டும். மனம், வாக்கு, காயம் எத்தன்மை யவையாக இருக்க வேண்டும் என்பதைச் சிறிது சிந்திப் Gun b. '
காயம் என்பது தமது உடலாகும். அது பிருதிவி, அப்பு தேயு, வாயு, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களின் சேர்க்கையினல் உண்டானது. அது தூலதேகம் என்று கூறப்படும். அது அழுக்கு உடையதாகக் காணப்படுகி றது. ஆகையால் வெளிஉடம்பு நித்தியம் சுத்தப்படுத்தப் படவேண்டி இருக்கிறது. குளிப்பதனலும், கழுவுவதன லும் அழுக்கைத் தேகத்தினின்று அகற்றலாம். குளித்த பின்னரும் வேலைசெய்து அல்லது நடந்து களைப்புறுங் கால் உடலில் வியர்வை உண்டாகும், சில வேளைகளில் அது துர்நாற்றத்தைச் கொடுக்கும். அக்காரணம் பற் றியே பன்னீர், சந்தனம் அத்தர், மஞ்சள் போன்ற வாசனைப் பொருட்களே உடம்பில் பூசி நன்மணங் கமழக் கூடிய விதமாக மக்கள் வெளி இடங்களில் உலாவுகின்ற னர், ஆகையால் உடம்பில் இயல்பாகவுள்ள சிலகுற்றங் களை மற்றவர்கள் அறியாமல் நடந்து கொள்வதற்குப் புறத்தூய்மை தேவைப்படுகின்றது. புறத்தூய்மை அகத் தூய்மை உண்டாவதற்கும் துணையாக இருக்கின்றது. சமய ஆசார ஒழுக்கங்களின்படி நடந்து கொள்ள வேண்டு மென்ற அவாவோடு ஒரு கிராமத்திலே ஒரு பெண்மணி வசித்து வந்தார். அவர் காலையில் எழுந்தவுடன் குளிப் பது முதற் கடமையாகும். தோய்த்துலர்ந்த வஸ்தி ரத்தை உடுத்தபின் தேவார பாராயணங்களுடன் கடவுள் பிரார்த்தனை செய்துதான் காலைப் போசனம் அருந்துவது வழக்கம் வீட்டுவேலைகளிற் கவனம் செலுத்துவதற்கு முன்பாக வீட்டைச் சுத்தம் செய்வார். வீடு சுத்தமான தோற்றத்தை என்றும் அளிக்கும். இவ்விதமாகப் புறத் தூய்மையிற் பல வருடங்களாகக் கவனஞ் செலுத்தி வந்த அப் பெண்மணிக்கு மனத்தில் ஒருநாள் ஒரு சலனந்தோன் றியது, தனக்குள்ளே சிந்தித்து ஆழ்ந்த யோசனையில் வெகுநேரம் அமிழ்ந்திருந்தார். **நான் எனது உடலை யும், எனது உடை உணவு, வீடு சுற்ருடல் ஆகியன

தூய்ம்ை 23
யாவற்றையும் அதிக கவனம் எடுத்து மிகவும் சுத்தமாகச் சென்ற பல வருடங்களாக வைத்திருந்தேன். ஆணுல் என் மனம் சுத் திய டை யாத தின ல் எனக்கு மனச்சாந்தி இல்லையே. புறத்தூய்மையிற் கவனம் எடுத்தது போல் ஏரன் அகத்தூய்மையையும் பெற்றுக் கொள்ள முடி யாது. புறத்துரய்மை வெளிக்கு எவ் வள வு அ ழ கை க் கொடுக்கிறது அகத்தூய்மை இருந்தால் அதே போன்ற அழகை அகம் பெறுமல்லவா?" - இவ்வாறு சிந்திப்பதற் குப்பல வருடங்களாகப் பழகிய புறச் சுத்தமே காரண மாக இருந்தது. ஆகையால் புறச்சுத்தம், அகச்சுத்தத் தின் மகிமையைப்பற்றி அறிந்துகொள்ள உதவியாக இருக் கிறது, அக்காலந்தொட்டுத் தன்னுடைய மனத்திலே இடையிடையே தோன்றுகின்ற அழுக்காறு, *alfr, வெகுளி, இன்னச் சொல் ஆகிய தீய குணங்களை மனத்தி னின்று களைந்துவிடவும், அகிம்சையைக் கடைப்பிடித்து ஒழு கவும் மனவுறுதி கொண்டார். அவ்வித நாளாந்த வாழ்க்கை அகத்தூய்மையை அளிக்க வல்லது என அவ்வம் மையார் உணர்ந்தார். ܢܝ
இறைவனைத் தலையால் வணங்கி தமஸ் கரிப்பதனலும் கைகளைக் கூப்பி வணங்குவதனலும் அலகிடுதல், மெழுகு தல், கழுவுதல், பூப்பறித்தல், பூமாலை கட்டுதல், தீபம் பிடித்தல் ஆகிய திருத்தொண்டுகளைச் செய்வ தனுலும் தலை, கை ஆகிய உறுப்புகள் பரிசுத்தமடைகின்றன. சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தல், பிரதிஷ்டை செய்தல், காவடிஎடுத்தல், விரதம் அனுஷ்டித்தல் ஆகியன உடம்பைத் தூய்மையடையச் செய்கின்றன. அவரவரு டைய பக்குவநிலைக்குத் தக்கபடி ஒவ்வொருவரும் நடந்து
கொள்வர். ஒருவர் ஒருநாள் முழுவதும் மெளன விரதத்தை மேற்கொள்ளக் கூடும். இன்னுெருவர் அக்கி னியில் நடக்கக் கூடும். இவைகள் புற அவயவயங்சளி
ரூலே திருத்தொண்டுகளையும், வணக்சத்தையும் செய்வ தாகும். இவைகளேச் செய்பவர்கள் இறைவனிடத்து அன்

Page 29
24 முப்பொருள் உண்மை விளக்கம்
புடையவர்களாக இருப்பர். ஆகையால் படிப்படியாக அகமுந் தூய்மையடைந்து அவர்கள் இறைவனுடைய அருளுக்கு ஆளாவர்.
"வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்' என்று நாவுக்கர்சரும், "வேண்ட முழுதும் தருவாய் நீ" என்று மணிவாசகரும் கூறியதிலிருந்து இறைவன் அடிய வர்கள் விரும்பும் எவற்றையும் நல்குவதற்குச் சித்தமாயி ருக்கிருன் என்று தெளிவாகும். பாவவழிகளிலிருந்து விலகி மனத்தூய்மையுடன் வாழ்கின்ற மக்கள் விரும்பியவைகளைச் சீக்கிரத்தில் பெற்றுக் கொள்ளக்கூடும். நெஞ்சம் உமக்கே இடமாக வைத்தேன்' என்று அப்பர் சுவாமிகள் சொல் லும்போது தெஞ்சமானது தூய்மை பெற்றிருந்தமையாற் தான் இறைவனுக்கு அது உறைவிடமாக முடியும். அழுக்கு மனத்துடையோர் மனத்திலுள்ள மர்சு ஆனது அகலும் வரையும் விரும்பியவைகளைப் பெற்றுக்கொள்வது கஷ்டம். இக்கருத்துப் பற்றியே 'சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை' என்று மணிவாசகர் கூறுகின்மூர்.
பஞ்சபுலன்கள் மனத்தைத் தம்வசப்படுத்துவதஞலே மனத்தூய்மை அடைவது கஷ்டம். சொந்தமுயற்சியும், மன வுறுதியும், மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க விருப்பும் பலருக்குத் துணையாகஇருக்கும். கெட்டஉணர்ச்சிகள் தோன் றும்போது கவனமாகவிருந்து அவைகளே மனத்திலிருந்து அகற்றவேண்டும். நாங்கள் வசிக்கும் இடம் நித்திரை செய் யும்இடம் ஆகிய இடங்களுக்குச் சமீபத்தில் பாம்புபோன்ற விஷஜெந்துக்கள் இருப்பதை விரும்பமாட்டோம். அவை களை அகற்றிவிடுவோம். கண்டாற் கொன்றுவிடுவோம். அதேபோன்று காமம், வெகுளி, அவா, பொருமை முதலி யன எங்களுக்கு விஷஜெந்துக்கள் போன்றவை. மனத்திற் குடிகொள்ள விடுதலாகாது.
'தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது
funaitianup Grufil niigit''

தூய்மை 25
என்பது வள்ளுவர் கூற்று. யாதொன்றின் மாட்டும் அவா இல்லாதிருத்தலே மனத்தூய்மை எனப்படும். மெய்மையை விரும்புபவர்கள் எவ்வித அவாவையும் நீக்கமுடியும் என் பதே இதனுடைய பொருளாகும். உள்ளத்தினின்று உண் டாகின்ற சொல், அறநெறியிலிருந்து வழுவாத வாய்மைக்கு அத்தாட்சியாகும், இதை விளக்கியே வள்ளுவப் பெருந்தகை
"புறந்துய்மை நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்"
எனப் பகர்ந்தார் பண்பட்ட மனத்தையுடையவரே உண் மையை எப்பொழுதும் பேசுபவராவர்.
தியானம், பக்தி, யோகம் ஆகியன மனத்தைத் தாய். மைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். புலன்களை அடக்கி இறைவன் மாட்டு மனத்தைச் செலுத்துவதுதான் சிறந்த தியானமாகும். அவ்விதம் பழகிக் கொள்வதற்கு ஏற்படும் கஷ்டத்தைப் பட்டினத்தடிகள்,
கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்றெண்ண பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால்கமழும் மெய்யொன்று சாரச் செவியொன்று கேட்க விரும்புமியான் செய்கின்ற பூசையெவ் வாறுகொள் வாய்வினை தீர்த்தவனே"
இவ்விதமாக, தியானமோ, பூசையோ செய்கின்றபோது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகள்மூலம் புலன்கள் இழுத்துச் செல்கின்றன. ஆகையால் தியானம் மிகவும் கடினமானதென்று கைவிடாது நாளுக்கு நாளாக இறைவனில் நம்பிக்கை வைத்துச் சிறிது நேரமாகுதல் தியா னத்திலீடுபடுவதால் எங்களுடைய மனத்தைப் பண்படுத்த முடியும். தியானம், யோசம் கஷ்டமாக அநேகருக்குத் தோன்றக்கூடும். ஆகையால் இறைவன்மீது தேவாரம், திரு வாசகம், திருப்புகழ் ஆகிய தோத்திரங்களைப் பாராயணஞ் செய்து இறைவன்மீது பக்தியும் விசுவாசமும் உடையவர் களாக இருந்தால் மனத்தூய்மை பெற்றுத் திருவருளைப்
ᏬᎯ • Ꮞ

Page 30
26 முப்பொருள் உண்மை விளக்கம்
பேற்றுக்கொள்ளலாம், ' பக்திவலையிற் படுவோன் கண் டாய் ' என்று மணிவாசகர் கூறுவதைக் கவனிக்கலாம். "நாதன்நாம நமச்சிவாய' என்னும் பஞ்சாட்சரம் இறைவ னுடைய திருநாமம் என்று தேவாரத்திற் கூறப்பட்டிருக் கின்றது, திருவைந்தெழுத்தை எந்நேரமும் ஓதுவதனல் மனச்சுத்தம் ஏற்படும்; பாவந்தேயும்; இறைவன் , அருள் கிட்டும்
"கொல்வா ரேனும் குணம் பல நன்மைக
ளில்லாரேனு மியம்புவ ராயிடி
னெல்லாத் தீங்கையு நீங்குவ ரென்பரா
னல்லார் நாம நமச் சிவாயவே"
மன்னுயிருக்கு உறுதுணையாய் இருப்பது பஞ்சாட்சரமாகும்.
நாம் பல நூல்களைக் கற்கலாம், டெரியோர் பேசக் கேட்கலாம். கோயிற் கிரியை, விழாக்களிற் பங்குபற்ற லாம். ஆனல், நாம் பெற்றுக்கொள்ளுகின்ற அறிவு மனத் தைப் பண்பாடடையச் செய்கின்றனவா என்பதைத் தின மும் கவனிக்கவேண்டும். செயல்புரிவதற்கு மனமே காரண மாய் இருத்தலால் மனமானது தூய்மையும், அறநெறி வழு வாத பண்பாடும், நல்லுணர்ச்சிகளை உடையதுமாய் இருத் தல் வேண்டும்.

5. அறம்
மானிடப்பிறவி எடுத்த ஆன்மாக்களே இறைவனுடைய திருவடிகளைச் சேரமுடியும். மக்களுக்குப் பயன் அளிப்பன அறம், பொருள், இன்பம், வீடு என்பனவாம். முதலாவ தாகக் கூறப்படும், அறம் மூன்று வகையான இன்பத்தை அளிக்கக்கூடியது. அலை இம்மை இன்பம், மறுமைஇன்பம், பேரின்பம் என்பனவாம். இப்பிறவியிலே அடையும் இன்பம் இம்மை இன்பமாகும், இப்பிறவியிலே செய்யும் நல்வினை யின் பயணுக மறுபிறவியிலே அனுபவிக்கும் இன்பம் மறுமை இன்பமாகும். பிறப்பில்லாத நிலைத்த இன்பமே பேரின்ப மாகும். இறைவனுடைய திருவடிகளைச் சேர்வதினலேயே அப்பேரின்பம் உண்டாகும்.
அறநெறியில் வாழ்ந்து வருவதற்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது. சிறப்பான ஒழுக்கத்தையே அறம் என்று கூறலாம். இல்லறம், துறவறம் ஆகிய இரண்டிற்கு முரிய ஒழுக்கத்தை மேற்கொண்டு வாழ்ந்தால் ஈற்றில் பேரின்பத்தை அடைவதற்கு அவை துணையாய் இருக்கும். துறவறத்தை மேற்கொண்டு ஒழுகுவது எல்லாருக்கும் சாத் தியமான தொன்றல்ல, ஆகையால் இல்லறத்திலீடுபடுபவ னுடைய வாழ்க்கை எவ்வாறு அறநெறியின் அடிப்படை யில் அமையவேண்டு மென்பதைப் பற்றிச் சிந்திக்க வேண் டியதவசியம். மனம், வாக்கு, மெய் ஆகிய மூன்றினலும் அறம் செய்யவேண்டும். மனத்திலிருந்து வரும் சிந்தனையே ஏனைய சொல், செயல் ஆகிய இரண்டிற்கும் ஏதுவாய் இருக்கின்றமையால் அறவாழ்க்கைக்கு மனம் எவ்வாறு அமைந்திருக்க வேண்டுமென்று ஆராய்வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய பொறிகளின்மூலம் வரும் புலன் கள், வெளியுலகத்திலிருந்து மனத்துக்குக் கொண்டுவரப் படுகின்றன, அவ்விதம் பெறும் அறிவு நல்லதாயும் இருக் கும், கெட்டதாயும் இருக்கும்.
மதுவை அருந்தாத ஒருவர், மதுவை அருந்தி இராப் போசனம் உண்ணும் இருவருடன் புகையிரத LutonTrifis DT595

Page 31
28 முப்பொருள் உண்மை விளக்கம்
பிரயாணஞ் செய்ய நேர்ந்தது, அந்நண்பர்கள் இருவரும் தாங்கள் அருந்தும் குடிவகையில் ஒரு சிறிய அளவை, மது பானம் முன்னெருபோதும் அருந்தாத அந்நண்பனுக்குக் கொடுத்து அருந்தும்படி கேட்க அவர் மறுத்தார். ஆனல் மற்றைய இருவரும் அவரை மேலும், மேலும் தூண்டியும் அவர் அதற்கு இணங்காமையைக் கண்டு வாயில் வைத்து உருசிபார்க்கும்படி கேட்டனர். அவர் அதற்கிசைந்து உருசி பார்த்தா ரேயன்றி ஒரு சிறிதளவும் பருகவில்லை. ஆனல் அவர் தனது இல்லத்திற்குச் சென்றபின் தான் உருசி பார்த்த மதுபானத்தைப்பற்றி யோசித்து இரண்டு மூன்று நாட்களின் பின் அதை விலைக்கு வாங்கி வீட்டிலுள்ளவர்கள் ஒருவரும் அறியாமற் சிறிதளவு உபயோகித்தார் பின்னர் அவருடைய மனம் அதிலே விருப்பம் கொண்டது. சில மாதங்களின் பின் அவர் ஒருவித வெட்கமும் அடையாது மற்றவர்கள் காணக்கூடியதாக மதுபானத்தை அருந்தத் தொடங்கினர். இவ்விதம் நாவினூடாக மனத்திற்குச் சென்ற இரசம் என்ற புலன் மனத்தை அதன்வழித் திருப்பி யது. இதைப்போலவே கண்காணும் காட்சி யெல்லாவற் றையும் ரூபம் என்ற புலன் மனத்திற்கு இழுத்துச் செல்வத ல்ை மனம் நல்லறிவையோ கெட்டறிவையோ ஏற்றுக் கொள்ளுகிறது. ஏனைய புலன்களாகிய சத்தம், கந்தம், பரிசம் ஆகியனவும் மனத்தைத் தம்வசம் இழுத்துக்கொண் டிருக்கின்றன. மனமானது புலன்கள்வழியே செல்லுமாயின் அதற்கு ஆறுதலோ அமைதியோ கிடையா. அதனுலேயே மனம்போன போக்கெல்லாம் போகவேண்டாம் ?? என்று ஆன்றேர் கூறியிருக்கின்றனர் ஆசையால் மேலான அறி வின் உதவியைக்கொண்டு மனத்தைத் தம்வசப்படுத்த வேண்டும்.
மனம் தூய்மையடையும் போது தான் இறைவன் திரு வருள் கிட்டும். தூய்மை புறத்தூய்மை, அகத்தூய்மை என இரு வகைப்படும் உடம்பின் வெளிப் புறத்திலே படி யும் அழுக்கை நீரினுற் கழுவலாம். மேலும் வாசனைப் பொருட்களை உபயோகித்து நல்மணம் கமழக்கூடிய விதம்

அறம் 29
செய்துவிடலாம். இதுவே புறச்சுத்தமாகும். தேக ஆரோக் கியத்திற்கும் மனத் திருப்திக்கும் புறச்சுத்தம் தேவைப்படு கின்றது. அகச்சுத்தம் புறச்சுத்தத்திலும் பார்க்க மேம்பட்ட தாகும். மனமானது உணர்ச்சிகள் யோசனைகளுக்கு இருப் பிடமானது. நல்லசிந்தனைகள் நல்லஉணர்ச்சிகள் மாத்திரம் மனத்திற் தோன்றினல் அவை அகச்சுத்தம் ஏற்படுவதற்கு ஏதுவாக இருக்கும்.
"மணத்துக்கண் மாசிலஞத லனைத்து அறம்
ஆகுல நீர பிற '
என்பது வள்ளுவர் கூற்று. மனத்தினிடத்தே எவ்வித குற் றங்களுந் தோன்ரு மல் அவைகளைக் களைந்துவிட்டால் அதுவே அறமாகும். அதுவே மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதற்கு உதவியாய் இருக்கும். மனத்தை அவ் விதம் வைத்திருக்க இயலாத பலர் புகழுக்கும் பேருக்குந் தான தருமங்களே வழங்கக்கூடும். அது பிறர் அறிந்து புகழ வேண்டும் என்னும் விருப்பத்தையுடைய செயலாகும்,
மக்களாகிய நாம் ஒவ்வொருவரும் எங்களுடைய மனத் திலே தோன்றுகின்ற கெட்டஉணர்ச்சிகளாகிய பொழுமை, ஆசை கோபம் எவ்வாறு தீமையை விளைவிக்கின்றன என் பதை அறிவோம். ஒருவர் பிறரிற் பொருமை கொள்வதற்கு அறியாமையே காரணமாகும். துன்பத்திற்கு ஆசையே வித் தாகும். பாவச் செயல்களுக்குக் கோபம் காரணமாகிறது. கல்வியறிவு மாத்திரம் இத்தீயகுணங்களே அகற்றி விடுவ தற்குப் போதுமானதல்ல, மெய்யறிவுடையோரே தீய குணங்களை அடக்கமுடியும் நாம் சிந்திக்கின்ற செய்கின்ற யாவையும் கடவுளால் அவதானிக்கப்படுகின்றன என்பதை மறவாது அவருக்குப் பயந்து தீமையை விலக்கி நன்மையைக் கடைப்பிடித்து ஒழுகுவதனுல் இறைவனின் கருணைகிட்டும் ' கொலை, களவு, கட்காமம், கோபம் விட்டாலன்ருே, மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே ’என்று தாயுமானசுவாமிகள் கூறியவண்ணம் பஞ்சமாபாதகங்களி னின்று விலகவேண்டும், கொலை என்பது மனுஷனை மனு ஷன் கொல்வது மாத்திரமல்ல, உயிர்ப் பிராணிகளைக்

Page 32
80 முப்பொருள் உண்மை விளக்கம்
இகால்வதும் கொன்று தின்பதும் பாதகச் செயலாகிய கொலையாகும். களவு எடுக்க மனத்தில் யோசித்தாலும் அது பாவமாகும். கள் முதலிய மதுபானங்களை அருந்து மொருவன் இன்னது செய்வதென்றறியாமலே பல பாவங் க%ளச் செய்வான். தனது மனைவியைவிட ஏனைய பெண் களைத் தாய், சகோதரம் என்று நினைத்து நடந்து கொள் பவன் காமமயக்கத்திற்கு ஆளாகமாட்டான். அவ்வித மனக் கட்டுப்பாடு இல்லாத ஒருவன் பல பாவங்களைச் செய்து துன்பத்திற்கு ஆளாவான். பொய் பேசுதலும் பஞ் சமாபாதகங்களிலொன்ருகும். அதுவும் பல துன்பங்களைக் கொடுக்கும். இதனைப் பட்டினத்தடிகள் விளக்கமாகக் கூறு கின்றர்.
கொல்லாமற் கொன்றதைத் தின்னுமற் குத்திரங் கோள்களவு
கல்லாமற் கைதவரோ டிணங்காமற் கனவிலும் பொய்
சொல்லாமற் சொற்களைக் கேளாமல் தோகையர் மாயையிலே
செல்லாமற் செல்வந் தருவாய் சிதம்பர தேசிகனே?" பஞ்சமாபாதகங்களினின்று விலகி நடந்துகொள்ள அருள் புரிய வேண்டுமென்று அவர், இறைவனைப் பிரார்த்திக் கின்ருர்,
அறவழியிலே நடந்துகொள்ளும் ஒருவனுக்கு மனம் வாக்கு செயல் ஆகிய மூன்றும் தூய்மையாக இருக்க் வேண்டும்,
* முகத்தா னமர்ந்தினிது நோக்கி அகத்தானும்
இன்சொ லினிதே அறம்" கண்டவுடன் இனிதாகப் பார்த்து மனத்தோடு கலந்த இனிய சொற்களாற் பேசுதலே அறமாகும் என்பதே இக் குறளின் பொருளாகும். தூய்மையான மனமுடைய ஒருவன் இன்சொல் பேசுவதோடு நற்செயல்களையும் செய்வானுகில் அவன் மக்களாலும் இறைவனலும் விரும்பப்படுபவனவான்.
'ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும் வாயெல்லாம் செயல்’

அறம் 3.
தம்மாற் செய்யக்கூடிய அளவுக்கு நல்வினையைச் செய்யக் கூடிய இடமெல்லாம் செய்யவேண்டுமென்றும் அதுவே அறமா கும் என்றும் இக்குறள் வெண்பாவிலிருந்து நாம் அறிகிரூேம். வறியவனுக்கு வேண்டிய உதவியைச் செய்தலும் இரப் பவனுக்கு இல்லை யென்று சொல்லாமல் சிறிதளவாகுதல் கொடுத்தலும் தருமச் செய்கையாகும். புகழுக்காகத் தான தருமங்களேச் செய்வதனற் பயனில்லை. ஒரு செல்வன் இன் னுெரு செல்வனுக்கு உதவிசெய்வதிலே பயனில்லை. ஆனல் வறிவனுக்குச் செய்யும் சரீர உதவியோ, பொருளுதவியோ பலனை எதிர்பாராத உதவியாகையால் அது சிறந்த தரும மாகும்.
ஆகையால் இம்மையிலும் மறுமையிலும் துணையா யிருந்து ஈற்றிற் பேரின்பத்தை நல்கும் அறவாழ்க்கை மக் களுக்கு இன்றியமையாததாகும். அதர்மமான வாழ்வு துன் பத்தைத்தரும். அது பிறவிக்கு வித்தாகும். இறைவனின் கருணையும் கிடைக்காது. ஆகையால் அறமே உயிருக்குத் துணையாகும். இறைவனின் பாதங்களை அடைவதற்கும் அதுவே துணையாகும்.
ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழ்வதினுல் அறம் வள, ரும், அவ்விதவாழ்க்கையினுல் பாவமுந்தேயும். நித்தியம், அநித்தியம் என்பவைகளின் வேறுபாடு விளங்கும், இம்மை மறுமையில் அனுபவிக்கும் இன்பங்களின் நிலையாமையை அறிந்து அவைகளிலே வெறுப்பு உண்டாகி நிலையான பேரின்பத்தை அடையவேண்டும் என்ற ஆசையுண்டாகும் * மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே "" என்று மணிவாசகப்பெருமான் கூறுவதைக் கவனிக்கலாம். பேரின்பத்தை அடைய விரும்புவோர் தியானம் யோகம் ஆகியவைகளிலே ஈடுபடுவர். அதன் பலணுக அவர்களுக்கு மெய்யுணர்வு உண்டாகும. பற்று நீங்கும். புறப்பற்ருகிய *எனது" என்பனவும், அகப்பற்ருகிய "நான்' என்பதுவும் நீங் குவதற்கு மெய்யுணர்வு உண்டாகவேண்டும். உயர்ந்த பத வியை அடைவதற்கு ஒழுக்கம் அடிப்படையாக அமைந் திருக்கிறது. ஆகையால் அறம்வளரக்கூடிய நெறியில் மக்கள் ஒழுகவேண்டும்.

Page 33
32 முப்பொருள் உண்மை விளக்க
ஒருவன் இவ்வுலகத்திலிருந்து வாழும் ஒவ்வொரு கண மும் அறநெறியிலிருந்து விலகாதிருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். இனிமேற் செய்வோம் என்பது பிழை. இளம் பராயம், வாலிபம், வயோதிபம் ஆகிய மூன்றுபருவத்திலும் அறநெறியைத் தவழுது கடைப்பிடிப்பதனுல் பெரும்பயனை அடையலாம். இதற்கு நல்லோருடைய சிநேகிதம், இறைவ னிடத்து அன்பு, அறநூல் அறிவு ஆகியன மிகவும் துணையாக இருக்கும்.
என்றும் தருமசிந்தனை யுடையவர்களாக நாம் வாழ வேண்டும். ஈகை, நல்லொழுக்கம், அகிம்சை, அன்பு, இறை வழிபாடு என்பன அறவாழ்க்கையின் சின்னங்களாகும். அவ் விதம் ஒழுகுதலே தர்ம அடிப்படையில் அமையும் வாழ்க்கை யாகும். வேண்டிய இடத்து மனமுவந்து தருமச் செய்கையில் ஈடுபடவேண்டும். இவ்வுலக வாழ்க்கை அநித்தியமானது, நாளை தருமஞ் செய்யலாம் எனநினைப்பதற்கு இடமில்லை, மர னம் நேரிடும்நாள் ஒருவருக்குந் தெரியாது. ஆகையால் செய்ய வேண்டிய தருமங்களை உடனே செய்ய வேண்டும். இறக்கும்பொழுது புண்ணியம், பாவம் தொடருமேயன்றிக் கையிற்பொருள் உடன் செல்லமாட்டாது. இதனை அருண திரியார் சிறப்பாக விளக்குகின்ருர்,
வையிற் கதிர்வடி வேலோனே வாழ்த்தி வறிஞர்க் கென்று நொய்யிற் பிளவள வேனும் பகிர்மின்கணுங்கட் கிங்நுன் வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற் கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே'
வறியவர்க்கும் ஆதரவற்றவர்களுக்கும் உதவிசெய்தலே ஈகை எனக் கருதப்படும். புகழையோ அல்லது பிரதிஉபகாரத் தைக் கருதிச் செய்யப்படுவது ஈகையல்ல,
அறமே, இம்மை, மறுமை, வீடு ஆகிய மூன்றிற்குரிய பயன்களை அளித்தலால் அது மேம்பட்டதாகக் கருதப்பட வேண்டியது. உயிர்களுக்கு அறத்தினுஞ் சிறந்த வேறு துணை இல்லையெனலாம்,
(

tشويهي و6
அன்பு மனத்திலே தோன்றும் உணர்ச்சிகள் எல்லாவற் றினுஞ் சிறந்ததாகும். உண்மையான அன்பு தெய்வீகத் தன்மையுடையது. அது அடி உள்ளத்திலிருந்து பொங்கி எழும் உணர்ச்சி எனலாம். பாலிலிருந்து எவ்வாறு வெண் ணெய் திரண்டு வருகிறதோ அதேபோன்று நற்சிந்தனைகள், நல்லுணர்ச்சிகள் மனத்திலே நித்தியம் படிவதஞ்றல் அன்பு உண்டாக அது ஒருவனை மேன்மகன் ஆக்குகின்றது.
ஒரு தாய்க்குத் தன் பிள்ளையிடத்து அன்பு உண்டு: தந் தைக்கும் அவ்வித அன்புண்டு. பிள்ளைக்கும் தாய் தந்தைய ரிடம் அன்புண்டு. தாய் தந்தையர் காட்டும் அன்பு பிரதி உபகாரம் கருதாத அன்பு, சேய் தனதுபெற்றேர் வயே: திப மடைந்து நோயுற்றுத் துன்பம் அடையுங்கால் அவர்களுக்கு ஆதரவளித்துக் காட்டுமன்பு செய்ந்நன்றி மறவாத அன் பாகும். மணிவாசகப்பெருமான்,
"பால்நினேந் தாட்டுந் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே g) 53 Lus ஊனினை யுருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புற்ம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுணைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே" சின்று கூறும்போது தாய்க்கும் இறைவனுக்குமிடையே காணப்படுகின்ற பொதுத்தன்மையை எடுத்துக் காட்டுவதி லொரு தனிச்சிறப்பு அமைந்திருக்கின்றது. மறதி என்பது இயல்பாக இருப்பினும் தாய் தன்னுடைய குழந்தைக்குப் பசிக்கும் காலத்தே அது அழுது பசியை உணர்த்துவதற்கு முன்பாகப் பாலை ஊட்டுகின்ருள். வேறு காரியங்களில் மறதி ஏற்பட்டாலும் குழந்தைமீதுள்ள *ன்பு காரணமாக சிதற்குப் பாலூட்டுவதை மறப்பதில்லை. அதேபோல மற்ற
(P.

Page 34
34 w முப்பொருள் உண்மை விளக்கம்
என்பது ஒருபோதும் இல்லாத இறைவன் தாயிலும்பார்க்க அதிக உருக்கங்கொண்டு உடம்பையே உருக்கி உள்ளத்திலே அறவொளியை விளங்கச்செய்து பேரின்பமாகிய தேனைச் செல்லுமிடமெல்லாம் சொரிந்தாரென்று பெருமானுர் கூறு கிருர். பிரதியுபகாரம் கருதாது கருணைகூர்ந்து காட்டும் அன்பு உண்மையான அன்பு எனப்படும். ஞானிகள் இறைவ னிடம் காட்டும் அன்பு எத்தன்மையது என்பதை ஆராயு முன்னர் சாதாரண மக்களாகிய நாம் எவ்வாறு அன் புடையவர்களாய் வாழலாம் என்பதை ஆராயவேண்டும்.
மன்னுயிரைத் தன்னுயிர்போல் மதிக்கும் இயல்புடைய மனப்பான்மையும் கொள்கையும் அன்புடைமைக்கு அறி குறியாகும். ஒருவன் ஆரம்பத்தில் தனது குடும்பத்திலும் பின்னர் அயல், ஊர், நாடு, உலகம் ஆகிய இடங்களிலே படிப்படியாகத் தனது அன்பைக் காட்டி வாழலாம். * நான் ' 'எனது ' என்று ஒவ்வொருவரும் நினைப்பது இயல்பு. ஆணுல், ' என்னை " " என்னுடையதை’ என்று ஒருவர் யோசிப்பாராயின் தன்னையும் தன்னுடையனவாகிய சொத்துக்களையும் பிறருக்கும் பயன்படும்படி வாழலாம். " நான் " " எனது ' என்று சொல்லும்போது சுயநலம் மேலோங்கி நிற்கிறது. ' என்னை "" என்று நினைக்கும்போது தன்னைத் தனக்கு மாத்திரமல்ல மற்றவர்களுக்கும் பயன் படக்கூடியவன் எனக் கருதலாம். அதே பாங்கில் ' என் னுடையதை ’’ என்று சொல்லும்போது தன்னுடைய நேரம், சுகம், பொருள் ஆகியவற்றில் ஒரு பகுதியை ஈவ தற்குச் சித்தமுள்ளவர் என்பது கருத்து. தன்னைப்பற்றி யோசிக்கும் ஒருவன் தனது மனைவி மக்கள் மீதும் தனது பற்றை வைத்திருக்கிருன் தன் அயலிலுள்ள வேறு குடும்பத்தினர் படும் அல்லலைக் கண்டு அனுதாபப்படுகின் ருஞ? அல்லது அவர்களின் நன்னிலையைக் கண்டு பொரு மைப்படுகின்ருஞ ? பொருமைப்படுகின்றவன் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமாகமாட்டான், அயலவனுக்கு வேண் டிய காலத்திலே அன்புகாட்டி ஆதரவளிப்பாணுகில் நல்வினை ராயச் செய்கின்றவளுவான், மற்றவர்கள்மீது அனுதாபங்

Vdër
காட்டும் மனப்பழக்கமும் ஏற்படும். அவ்விதமாகப் பழகிய ஒருவர் தன்னுடைய ஊரிலுள்ள மக்கள்மீது பின்னர் அந் நாட்டின்மீது, பின்னர் உலக மாந்தர்மீது அன்புடையவ ராக வரலாம்.
அன்பும் சீவகாருண்ணியமும் உள்ளமனத்தை, செழிய் பாகவும், குளிர்மையாகவும் வளருகின்ற மரங்க்ஃளயுடைய தன்னில்லத்திற்கும், அவ்வித தன்மையற்றேரின் மனத்தை அதிகவெப்பமும். மரநிழலும் இல்லாத பாலைவனத்திற்கும் ஒப்பிடலாம், நன்னிலத்திலுள்ள மரங்களிற் பறவைகள் வசிக்கலாம். அவைகளிலுள்ள பழங்களையும் சாப்பிடலாம். குளிர்மையான நிழலின்கீழே, வழிநடந்து களைப்புற்றேரும், மிருகங்களும் தங்கிநிற்கலாம். பலருக்கும், பலவகையிலும் பயன்படக்கூடிய அழகுவாய்ந்த இடமாகத்திகழும். அன்னு ருடைய அகமலர்ச்சியை, முகமலர்ச்சி வாயிலாக அறி யலாம். பாலைவனத்தில் ஒரு சீவபிராணியும் வசிக்க முடி யாது. அதனுடாகச் செல்லும் பிராணி உயிருடன் வெளி யேறுவதுங் கஷ்டம். அவ்வித வெப்பமான மனநிலையை உடையவர்கள் பிற உயிர்கள் மீது அன்பில்லாதிருப்பதோடு கிட்ட அணுகும் உயிர்களுக்கு ஆபத்தையும் உண்டாக்கி விடுவர். * எட்டிபூத்தென்ன, ஈயாதார் வாழ்ந்தென்ன’’ என்பதற்கிணங்க வாழ்ந்து "காதற்ற ஊசியும் வாராதுன் கடைவழிக்கே’’ என்ற அறிவையும் பெற்றுக்கொள்ளாத வர்களாய் இறப்பார்கள்,
மக்கள்மீது மாத்திரமல்ல, மிருகங்கள் பறவைகள்மீதும் அன்புடையவர்களாக இருக்கவேண்டும் " அரியான அந் தணர்தம் சிந்தையான ' என்று நாவுக்கரசர் கூறுவதைக் கலனிக்கலாம். எவ்வுயிர்க்கும் செந்தண்மைபூண்டு ஒழுகு வோருடைய இருதய கமலத்திலே இறைவன் இருக்கின்ற மையினலேயே " அந்தணர்தம் சிந்தையான " என்று கூறி ஞர். எல்லாவுயிர்களும் இறைவனின் படைப்பாகும். பலத் தையும் விவேகத்தையும் மேலான அறிவையும்பெற்ற மணி தர் மிருகங்களையும் பறவைகளையுங் கொன்றுதின்பது எவ் வளவு சீவகாருண்யமற்ற செயலாகும். நித்தியம் கோயி

Page 35
36. முப்பொருள் உண்மை விளக்கம்
லுக்குச் செல்வதும், குளித்து விபூதி அணிவதும் விரதம் அனுட்டிப்பதும் தானதருமஞ் செய்வதும் மாத்திரம் இறைவனிடத்து அன்புகாட்டுஞ் சின்னங்களல்ல. பிற உயிர் களுக்குத் துன்பஞ் செய்ய யோசித்தாலென்ன செய்தா லென்ன, அற்ப பிராணிகளான ஆடு கோழிகளைக் கொலை செய்தா லென்ன இறைவனுக்கு நீசராவர், எவன் எல்லா உயிர்களிடத்தும் அன்புகாட்டி வாழ்ந்து வருகிருனே அவனே சிவசிந்தை உடையவனுவன். ஆகையால் அன்பு வேறு சிவன் வேறல்ல.
** அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் ' என்ற திருமூலர் வாக்கிலிருந்து, அன்பு என்ற திருவருள் சிவ னுடைய திருமேனியாகும் என்பதை அறியலாம். மக்கள் ஏனைய உயிர்கள் மீது காட்டும் அன்பு சிவனிடத்துக் காட் டும் அன்பை ஒக்கும்.
அன்பில்லாத வன்நெஞ்சினராக வாழ்பவர்களையும் அவ ரவர் நிலைக்குத் தக்கபடி துன்ப இன்பங்களை இறைவன் கொடுப்பான். மக்களாய்ப் பிறந்த ஆன்மாக்கள் இறைவ னிடத்துவைக்கும் இடையழு அன்பின் காரணமாக எல்லா உயிர்கள் மீதும் அன்புடையவர்களாக வாழ்ந்து வருபவர் களுக்குத் திருவருளேக்காட்டி இறைவன் அணுக்கிரகிப்பார். இதுபற்றியே திருமூலர், -
* இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும் உகந்தருள் செய்திடும் உத்தம நாதன் கொழுந்தன்பு செய்தருள் கூரவல் லார்க்கு மகிழ்ந்தன்பு செய்யு மருளது லாமே?* என்று கூறினுச்.
தன்னுயிர்போல் எல்லாவுயிர்களிடத்தும், பரிவுகாட்டி நடந்துகொள்பவர்க்கு இம்மையிலும் மறுமையிலும் இறை வனின் கிருபைகிட்டும், இதுபற்றியே வள்ளுவப் பெருத் தகை,

larly 器常
o “ Ludsiguîd ஓம்பி அருளாள்வாற் கில்லென்பு
தன்னுயி ரஞ்சும் வினே"
என்று கூறியிருக்கிறர். எல்லா உயிர்கள்மீதும் அன்புகாட்டி வாழ்ந்து வருபவர் தனது உயிர் பயப்படுவதற்குக் காரண மாகிய தீவினைகளாற் பாதிக்கப்படமாட்டார் என்பதே இதன் பொருளாகும்.
இவ்வுலகப்பற்றைப் படிப்படியாகக் குறைத்து இறை வன்பால் அன்புசெலுத்தி வாழும் இல்லறத்தவனுக்கும், முன்செய்த் தவத்தின் பயணுகக் கடவுளின் திருவருளைப் பெற்று இப்பிறவியிலேயே அவருடைய திருவடியைச் சேர் கிறவர்களுக்கும் இடையிலுள்ள நிலைமையைப் பற்றிச் சிந் திப்போம். பாவங்களை நீக்கி அறவழியில் வாழ்ந்து பற்றுக் களைக் குறைத்து இறைவழிபாட்டிலீடுபட்டு இவ்வுலக வாழ்வை விட்டு நீங்கும் ஒருவர் அடுத்த பிறவியில் முன் செய்த முயற்சியின் பயனைப்பெற்று வீடெய்த வழியுண் டாகும். பட்டினத்தடிகள்,
* மனயாளும் மக்களும் வாழ்வுந் தணமுந்தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானமட் டேவழிக் கேதுதுணை தினேயா மலவெள் ளளவா கீனு:முன்பு செய்ததவம் தணயாள வென்றும் பரலோகஞ் சித்திக்கும் சத்தியமே?
என்று கூறுவதைக் கவனிக்கலாம். இனி, முற்றுந்துறந்த ஞானி, தான் எடுத்த பிறவியிலேயே எவ்வாறு இறைவன் மீது அன்பு காட்டுகிருர் என்பதை நாம் அறியவேண்டும். இறைவனையன்றி வேறென்றையும்பற்றி நினையாத நிலையை ஞானி பெறுகின்ருர், மணிவாசகப்பெருமான், * உற்றரை யான் வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றரை யான் வேண்டேன் கற்பனவும் இனியமையும் குற்றலத் தமர்ந்துறையும் கூத்தாவுன் குரைகழற்கே கற்றவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே "

Page 36
8 முப்பொருள் உண்மை விளக்கம்
என்று கூறியிருக்கின்ருர், உறவினரையோ, ஊரையோ பேரையோ, திருவடிஞானம் பெருது கலைஞானம்மட்டும்
அறிந்தோரையோ நான் விரும்பமாட்டேன். கற்கவேண்டி
பனவும் போதுமானவை என்று சொல்லித் திருக்குற்ருலத்
திற் கோயில் கொண்டருளி இருக்கின்ற கூத்தப்பெருமானை
விளித்து அவருடைய திருவடியை நினைந்து, கன்றையுடைய பசுவைப்போல உருகி அழவே உன்னை விரும்பிக் கேட்கின்
றேன் என்பதே இதன் பொருளாகும். இதிலிருந்து ஞானிகள்
மனநிலையை நாம்அறிந்து கொள்ளலாம். அன்புப் பெருக்க
முள்ள தாயுமானவர் பின்வருமாறு கூறுகின்ருர்,
என்பெலாம் நேக்குடைய ரோமஞ் சிலிர்ப்ப2உடல்
இளகமன தழலின் மெழுகாய் இடையற துருகவரு மழைபோ லிரங்கியே
இருவிழிகள் நீரிறைப்ப அன்பினுல் மூர்ச்சித்த அன்பருக் கங்கனே
அமிர்தசஞ் சீவிபோல்வந்(து) ஆனந்த மழைபொழிவை உள்ளன்பி லாதவனே
யார்க்காக அடிமைகொண்டாய் புன்புலால் மயிர்தோல் நரம்பென்பு மொய்த்திடு
புலேக்குடிலில் அருவருப்புப் பொய்யல்ல வேஇதனை மெய்யென்று நம்பிஎன்
புந்திசெலு மோபாழிலே துன்பமா யலேயவோ உலகநடை ஐயவொரு
சொப்பனத்தினும் வேண்டிலேன் சுத்தநிர்க் குணமான பரதெய்வ மேபரஞ்
சோதியே சுகவாரியே. என்று கூறுகிருர் இவ்விதநிலை யாருக்கு ஏற்படும் என்று நாம் சிறிது ஆராய்வோம். ஒரு ஞானி இறைவனிடத்து அன்பு காட்டும்பொழுது மனம், வாக்கு, மெய் ஆகியவை களிலே மாற்றங் காணப்படுகின்றது, சரீரத்திலுள்ள கடின

அன்பு 39
மான் எலும்பு நெகிழ்ந்துபோவது போலவும், உரோமஞ் சிலிர்த்தும் இருப்பதை ஒரு மெய்யன்பரிடத்திற் காணலாம். நெருப்பிற்பட்ட மெழுகு எவ்வாறு உருகுகிறதோ அதே போல் மனம் உருகுவதனல் இரண்டு கண்களினின்று நீர் தாரைதாரையாகச் சொரிவதைக் காணலாம். அதே நேரத் தில் உயிருக்கு ஆதரவாகச் சஞ்சீவியைப்போன்று, பேரானந் தத்தை இறைவன் சொரிவதைக் கண்டு மகிழ்ச்சி யடை கின்ருர், முற்றுந்துறந்த ஞானிக்கு மயிர், தோல், தசை, இரத்தம் ஆகியவைகளை கொண்டுள்ள உடம்பில் வெறுப் புத் தோன்றுதலிஞலே இத்தூல சரீரத்தின் நிலையாமையை உணர்கிழுர், உலக இன்பத்தைக் கொடுக்கின்ற பொருட் களிலே பற்றைக் கனவிலும் வைக்கமாட்டார்.
இவ்விதமான நிலையை எய்திய மகான்கள் இறையன் பிலே திளைத்து இருக்கின்றமையால் உலகத்திலே என்ன நடக்கிறதென்றும் அவர்களுக்குத் தெரியாது. அவனுடைய காட்சியன்றி வேருென்றும் புலனுக்குக் கிட்டாது. இவ்வித உயர்ந்த நிலையைத் திருவாசகத்தின்மூலம் அறியக்கூடிய தாக இருக்கின்றது. ** என நாணென்ப தறியேன் பகல் இரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தோன் என மத்தோன் மத்த ஞக்கிச் சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறையுறையும் பணவனெனைச் செய்தபடி றறியேன் பரஞ்சுடரே'
* மனத்தையும் சொல்லையும் கடந்தவனும், திருமாலை வாகன மாகக் கொண்டவனும், திருப்பெருந்துறையில் வீற்றிருந்த வனுமாகிய வேதியன், என்னைக் களிப்பு மிகுந்த பித்தணுக்கி விட்ட சூழ்ச்சியிஞல் நான் யாரென்பதை அறிய முடியாத வஞயும் பகல் இரவு கழிவதையும் உணர்ந்திலேன்' என்று பெருமானுர் கூறுகின்ருர்
மாணிக்கவாசகசுவாமிகள் இவ்வாறு கூறும்போது Gutafio நிலையாகிய சுத்தாவத்தையை அடைந்துவிட்டாரென்பது தெளிவு. இவ்விடத்தில் அவத்தைகளப்பற்றிச் சுருக்கமாகக்

Page 37
40 முப்பொருள் உண்மை விளக்கம்
கூறவேண்டியது அவசியம், ஆன்மாவுக்குக் கேவலாவத்தை சகலாவத்தை, சுத்தாவத்தை என மூன்று நில்களுண்டு. ஆன்மா ஆணவத்தோடு மட்டும் சேர்ந்து நிற்கும் நில் கேவலால்த்தை எனப்படும். அவ்விதநிலையில் ஆன்மாவுச்கு அறிவு சிறிது கூட இல்லை.
இவ்விதம் மூலமலமாகிய ஆணவமலத்தோடு கிடந்த ஆன்மா, மாயை எனப்படும். ஒரு மூலப் பொருளிலிருந்து உடம்பைப் பெற்று உலகத்திலே இயங்கத் தொடங்கும். அப்பொழுது ஆணவத்தோடு மட்டுமன்றி கன்மம், மாயை யாகிய சகல மலங்களோடுஞ் சேர்ந்து நிற்கின்றது. ஆகை யால் அது சக லாவத்தை எனப்படும். இந்த அவத்தையில் இச்சை, ஞானம், கிரியை ஆகிய மூன்றும் உண்டு. இதுவே மானிடராகிய எங்கள் எல்லோருடைய நிலையுமாகும். கேவலாவத்தையில் முற்ருக அறிவைப் பெற்றுக்கொள் ராத ஆன்மா சகலாவத்தையில் நிலையற்ற அசத்துப் பொருள்களைப்பற்றி அறியும், இது ஒரு தெளிவான அறிவு அல்ல, இது ஒரு மயக்கமான அறிவு, உலக போகங்கள் நிலையுள்ளனவென்றும் மயங்கி நிற்கும் நிலையாகும். கேவ லாவத்தை இருள் நிலை என்றும் சகலாவத்தை மருள்நிலை என்றும் சொல்லப்படும்
அறியாமையையும், அரைகுறை அறிவையும் நீக்கிப் பூரண அறிவைப் பெறுவதே சுத்தாவத்தை எனப்படும். இந்நிலையை அடைவதற்கு இறைவனுடைய அருள்வேண்டும்
இந்நிலையை அடைவது இல்லற வாழ்க்கையில் இருக் கிறவர்களுக்குக் கஷ்டமாகத் தோன்றக்கூடும். ஆனல் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமும் கொண்டவ ஞக வாழ்வது கஷ்டமல்ல. அவ்விதம் வாழ் யாரும் பழ கிக்கொள்ளலாம் அதோடு இறைவன்பால் பக்தியுடைய வர்களாக இருந்தால் படிப்படியாக முன்னேறி ஈற்றில் உயர்ந்த நிலையாகிய சுத்தாவத்தை நிலையை அடையலாம்.
s

7. கொல்லாம்ை
சீரிய ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழும் மக்கள் தவிர்க்கும் பஞ்சமாபாதகங்கள் கொலை, களவு, கள், காமம் பொய்யாமை என்பனவாம். இவைகளிலீடுபடுபவர்கள் இம் மையிலும் மறுமையிலும் துன்பத்தை அனுபவிப்பர். எல் லாத் தீய செயல்களிலும் கொலை மிகவும் கொடியது. எல்லா உயிர்ப்பிராணிகளும் கடவுளாற் சிருஷ்டிக்கப்பட் டவை. விவேகம், புத்தி, சாதுரியம், பொது அறிவு ஆகிய மேலான குணங்களைப் பெற்றுள்ள மனிதன் கொலைத் தொழிலிலீடுபட்டாலோ அல்லது கொலை செய்வதற்கு உதவியாக இருந்தாலோ அவன் தான்பிறந்த பிறப்பின் பயனை இழந்து விலங்குகளைப் போலாகிருன், காட்டில் வாழுஞ் சிங்கம், புலி கரடியும் வீட்டில் வாழும் நாய், பூனையும் ' முறையே தம்மிலும் பலங்குறைந்த மான், மரை, முயல், அணில், எலி முதலியவைகளைக் கொன்று தின் கின்றன, அதேபோன்று மனுஷனும் தன்னிலும் பலம் குறைந்த மான், மரை, ஆடு, கோழி, ஆமை முதலிய அற்ப பிராணிகளைக் கொன்று தின்பதனல் அவனைக் காட்டு மிருகங்களுக்கு ஒப்பிடலாம்.
மனிதனிலே காணப்படும் சிறந்த குணங்கள் அன்பு, இரக்கம், சீவகாருண்ணியம் என்பனவாம், கொலை செய் கின்ற ஒருவனுக்கு இக்குணங்கள் அற்றுப் போகின்றன, அவன் செய்கின்ற பாவச் செயலின் பயணுக மீளா நரகத் துக்குச் செல்ல நேரிடும். இதுபற்றியே திருமூலநாயனுர்,
' கொல்லிடு குத்தென்று கூறிய மாக்களை
வல்லடிக் காரர் வலிக்கயிற்றற் கட்டிச் செல்லிடு நில்லென்று தீவாய் நரகிடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே '
என்ற திருமந்திரத்தின் மூலமாக விள்க்கியுள்ளார். கொல் லும்படியும், எறியும்படியும், குத்தும்படியும் கூறிக் கொலை
(p. 6

Page 38
42 முப்பொருள் உண்மை விளக்கம்
செய்வித்தும் கொலை செய்தும் வருகின்ற கொடியவர்களை இயமதூதர்கள் கயிற்றினுற் கட்டி உரத்த முழக்கத்தோடு நில்லென்று நரகின்கண்ணே தள்ளிவிடுவர் என்பதே இதன் பொருளாகும். உயிர்கள் எவ்வித கொடுமைகளைச் செய் கின்றனவோ அதற்கேற்ற துன்பத்திற்காளாக வேண்டி நேரிடுகிறது. துன்பத்தை அனுபவித்தே தீரவேண்டும்.
முற்பிறவியிற் செய்த நல்வினை தீவினைக்கேற்ப ஆன் மாக்கள் பிறவியை எடுக்கின்றன. எடுத்த பிறவியிலே இன்ப துன்பங்களை அனுபவிக்கும்போது தாம் முன்செய்த ஊழ்வினையின் பயனை அடைகிருேம் என்று மானிடப் பிறவியெடுத்த ஆன்மாக்களேயன்றி ஏனைய உயிர்வர்க்கங்கள் அறியமாட்டா. கடவுளைப்பற்றிச் சிந்திக்கவோ, அவரிற் பக்தி வைக்கவோ, முன்செய்த தீவினையினின்றுநிவாரணம் பெறுவதற்கு இறைவனே இறைஞ்சிக் கேட்கவோ, மனுஷப் பிறவி எடுத்த ஆன்மாக்களால் மாத்திரம் முடியும். அவ் வாறு இறைவழிபாட்டி லீடுபடுபவர்கள் மேற்கொள்ளக் கூடிய சிறந்த விரதம் கொல்லாமையாகும். இது பற் றியே ஒளவையார் 'நோன்பு என்பது கொன்று தின்னமை’ என்று வலியுறுத்தியுள்ளார். ஒரு உயிரையுங் கொன்று ஊனத்தின்னுமையே எல்லா விரதங்களிலும் சிறந்த விரதமாகும்.
'அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணுமை நன்று' என்று திருவள்ளுவர் கூறுவதைக் கவனிக்கலாம். நெய்யைச் சொரிந்து ஆயிரம் யாகங்கள் செய்து பெற்றுக்கொள்ளு கின்ற பலனிலும் பார்க்க ஓர் உயிரைக் கொன்று அதன் ஊனே உண்ணுது விடுதலினல் வரும்பயன் மிகப் பெரிதாகும்.
மக்கள் எத்தனையோ தீர்த்த யாத்திரைகளைச் செய்யக் கூடும்; தானதருமங்களை அளவுகடந்து செய்யக்கூடும்; தத் துவ நூல்கள் பலவற்றை ஆராயக்கூடும் இவ்விதமான

கொல்லாமை A
நற்காரியங்களைச் செய்தபோதிலும், மாமிசம் புசித்தலால் நரகில் வீழ்வார் என்பது பின்வரும் ஆன்ருேர் வாக்கி லிருந்து அறியலாம்.
**கங்கையிற் படிந்திட்டாலும் கடவுளைப் பூசித்தாலும்
மங்குல்போற் கோடிதானம் வள்ளலாய் வழங்கிஞலும் சங்கையில்லாத ஞானத் தத்துவமுனர்ந் திட்டாலும் பொங்குறு புலால் புசிப்போன்போய் நரகடைவனன்றே"
பிறர் அல்லற்படுவதைக் கண்ணுற் பார்த்துப் பரிதாபப் படாதார் வன் நெஞ்சராவர். ஆனல் அன்புடையோரு டைய கண்களினின்று நீர் விழும், அவர்கள் துன்பத்தைத் துடைப்பதற்கு வேண்டிய உதவியைப் புரிவர். அவ்வித இரக்கமுடையோரே இறைவனின் அருளைப் பெறுவர். இரங்குவதற்குப் பதிலாகப் பிற உயிர்களுக்குத் தீமை விளை விப்பவர்கள் அதன் பயனகத் துன்பத்தை அனுபவிக்க வேண்டும். தனக்குத் துன்பம் நேரிடினும் பிற உயிர்களைக் கொல்லுந் தொழிலை மேன்மக்கள் செய்யமாட்டார். கொலையுண்டவிடத்து பாவம் குறையும். ஆனல் கொலை செய்யுமிடத்து அது வளரும். கொலையினலே ஏற்படும் பாவம் அதிகமாகையால் கொலைத்தொழில் ஒருவனுக்குரிய நல்ல குணங்களை மங்கச்செய்யும். அது அவனைக் கீழ்மக ஞக்கும். அவனுடைய சிந்தை செயல் யாவும் மனுஷத்தன் மைக்கு மாருனவையாகும். அவனுக்கு மனத்தில் அச்சம் உண்டாகும். இயமபயம் ஏற்படும். மனச்சாந்தி கிடை யாது. நித்திரையும் ஆறுதலைக் கொடாது. ஆகையால் தன்னுயிர் போமெனினும் பிற உயிரைக் கொல்லவேண் டாம் என்று வள்ளுவர் வலியுறுத்தியுள்ளார்.
* தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர் நீக்கும் வினை" இறைவனுடைய அருள் பாலிக்க வேண்டுமென்றே அறி வுள்ள மக்கள் வேண்டுவர். அவருடைய அருளைப் பெறுவ தற்குப் பாதகச் செயல்களை ஒழிக்கவேண்டுமென்று &ո պ ழான சுவாமிகள் கூறுகின்றர்.

Page 39
44 முப்பொருள் உண்மை விளக்கம்
' கொலே, களவு கட்காமங் கோபம்விட் டாலன்றே
மலையிலக்கா நின்னருள்தான் வாய்க்கும் பராபரமே'
அருளற்ற முறையிலே வாழ்பவர்கள் இறைவன் அருளைப் பெறமாட்டார்கள். தீயவை எல்லாற்றிலும் தீயது கொலை யாகும்.
"கொல்லா விரதமொன்று கொண்டவரே நல்லோர்மற்
றல்லாதார் யாரோ வறியேன் பராபரமே ??
என்று மேலும் தாயுமானவர் கூறுவதைக் கவனிக்கலாம். கொல்லாமை என்ற விரதத்தைக் கைக்கொண்டவரே நல்லவர்கள் எனப்படுவர் என்றும் மற்றையோரை யாவர் என்று சொல்லவே முடியாதெனவும் பகருகின்ருர்,
* கொலை செய்தல் பாவம், கொன்றதை உண்பதும் பாவம். புலால் உண்ணுஞ் சிலர் தாங்கள் கொலைசெய்ய வில்லையென்றும், வேறு யாரோ செய்ததினலே தங்களுக் குப் பாவமில்லை யெனவும் போலிநியாயம் ' கூறுவதுண்டு. இதை வெளிப்படையாக, வள்ளுவப் பெருந்தகை கூறியுள் ளதை நோக்குவோம்.
"கொல்லான் புலாலே மறுத்தானக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும் "
உயிர்கள் எல்லாவற்றிலும் அன்புள்ளவன் இறைவனுடைய தன்மையைப் பெற்றவணுகும். ஆகையால் அன்பு நிறைந்த ஒருவனைக் கொடிய செந்துக்கள் உட்பட எல்லா உயிர் களும் வணங்கும். ஒருவர் வழக்கம்போற் தனது ஆசிரமத் தில் நிட்டையிலிருந்தார். விழிக்கும்பொழுது அவருக்கு முன்பாக ஒரு நாகபாம்பு படத்தை விரித்தநிலையில் அவ ருடைய முகத்திற்கு எதிரே தலையை உயர்த்தி நின்றது. சிறிது நேரத்தின்பின் அது அவரை வணங்குவதுபோல் தலை யைக் கீழேவைத்து மெதுவாக வெளியேசென்றது. அன்பே உருவமெடுத்திருந்ததுபோற் காணப்பட்ட ஞானியைக் கண்டதும் விஷசெந்துவாகிய அப்பாம்பு அவரைத் தீண்ட நினையாது பணிந்து சென்றது.

கொல்லாமை At
கொலையும் செய்யக்கூடாது. புலாலும் உண்ணக் கூடாது என்ற உண்மையைப் பட்டினத்தடிகள்,
*" கொல்லாமற் கொன்றதைத் தின்னுமற் குத்திரங் கோள்களவு கல்லாமற் கைதவ ரோடிணங்காமற் கனவிலும் பொய். "
என்று கூறியிருப்பதைக் கவனிக்கலாம். மிருகங்களின் ஊனைச் சாப்பிடுவதனுல் மக்கள் மாக்களுடைய குணங் களைப் பெறுவர். அதுவுமல்லாமல் உணர்ச்சிகளும் சிந்தனை களும் வேறுபாடடையும், உணவுமூலம் எவ்விதம் உடம்பு வளர்கிறதோ அதேபோல் உள்ளமும் அதற்கேற்ப வளரும், இறைவனைப் பிாார்த்திக்கும்பொழுது மலர்களை அவனிடம் சமர்ப்பிக்கிருேம். புற மலர்களாலே பூசை செய்வதிலும் பார்க்க உள்மலர்களாகிய அன்பு, இரக்கம், அகிம்சை அறிவு ஆகியவைகளுக்கு இருப்பிடமாகிய மனத்தினலே செய்யும் பூசையே சிறந்ததாகும். அது இறைவனுக்கு உகந்ததாகும்
உலகந் தோன்றிய காலந்தொட்டுப் பற்பல காலங் களிற் தோன்றிய ஞானிகள் புலாலுண்ணலைக் கண்டித் திருக்கிருர்கள். மானிடப்பிறவி யெடுத்த நாம் மற்றைய உயிர்ப் பிராணிகளிலும் பார்க்க விசேட அறிவைப் பெற். றிருக்கிருேம். இறைவனுடைய திருவடிகளைச் சேரக்கூடிய பிறவியே மானிடப் பிறவியாகும், அவ்விதம் அறிந்தும் முன்செய்த பாவத்தினலே இங்குத் துன்பத்தை அனுபவிக் கிருேம் என்பதை உணர்ந்தும், மேலும் பாவச்செயல்களி லீடுபட்டால் இறைவன் கிருபையைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக வாழ்ந்து இறக்க நேரிடும். ஆகையால் இறைவனுடைய திருவருளை வேண்டிநிற்கும் மக்கள் எல் லாவற்றிலும் கொடிய பாவமாகிய கொலையையும், புலா லுண்ணலையும் நீக்குவர். நாம் படிக்கின்ற நூல்களிலே நாம் விலக்க வேண்டிய பாவங்கள் இன்னவென்று கூறப் பட்டிருக்கின்றன. பலபெரியோர்கள் சொல்வதையும் கேட் கின்ருேம். அவ்விதம் இருந்தும் மனம் பண்பாடடையாத தன் காரணம் என்ன என்பதைச் சிந்திக்கவேண்டும் முற்

Page 40
*份 முப்பொருள் உண்மை விளக்கம்
பிறவியிலே பலவித பாவங்களைச் செய்தோர் இப்பிறவி யிலும் அப்பாவச் செயல்களினலுந்தப்பட்டு மேலும் பாவச் செயல்களிலே ஈடுபட நேரிடும். பாவங்களைக் குறைக்க வேண்டின் அவ்வாத்மாவே தனக்கு விமோசனம் தானே தேடவேண்டும். வேருெருவர் தீர்க்கமுடியாது. இரு வழி களாலேதான் தனக்கு ஈடேற்றத்தை உண்டாக்கலாம். தான்கற்ற கல்வியறிவைப் பயன்படுத்தி வாழ்க்கையிலே தன்னைத்தான் திருத்திக்கொள்ளவேண்டும். ஊழ் வினை நெருக்கக்கூடும்; அல்லல் துன்புறுத்தும்; நோய், வறுமை, கடுமையாய்த் தாக்கக்கூடும்; மேலும் பாவச் செயல்களைச் செய்யக்கூடிய நிலையை முன்செய்த தீவினைகள் உண்டாக் கக்கூடும். ஆனல், தான்கற்ற அறிவைப் பயன்படுத்தித் தன்னை எதிர்க்கும் கஷ்டங்களைப் பொறுமையுடன் நீக்கு பவர்கள் தங்களைக் காப்பாற்றிக்கொள்வர். இதுவேமுதல் வழியாகும். இறைவனை எந்தநேரத்திலும் மனத்தினலே நினைத்துப் பூசித்துச் செயலாற்றுவதே இரண்டாம் வழி யாகும். மனம், வாக்கு, செயலாகிய மூன்றினலும், பஞ்ச மாபாதங்களினின்று விலகி வாழ்வதும், தாம் அறியாமை யினுற் செய்யும் பிழைகளை மன்னிக்குமாறு பிரார்த்திப் பதுமே இறைவனே வழிபடும் முறையாகும். கோயில் வழி பாடு, விரதம் அநுட்டித்தல், தான தருமஞ்செய்தல் மாத் திரம் போதாது. ஒருவர் கொலே, புலாலுண்ணல், பொய் பேசுதல், களவெடுத்தல், கள்ளுண்ணல், ஒழுக்கவீனம் ஆகிய குற்றங்களைச் செய்தால் புறத்தே மற்றேர் காணக் கூடிய அவருடைய ஏனைய அனுட்டானங்கள் நன்மைபயக் மாட்டா,
பிறருக்குத் துன்பம்செய்ய விரும்புவதைச் சிந்தையிற் கூட வரவிடாது தடுப்பதற்கு மனக் கட்டுப்பாடும் மனப் பழக்கமும் வேண்டும் உள்ளத்தினுள்ளே இருக்கின்ற இறை வன், நாம்சிந்திக்கும். செய்யும், விடயங்களுக்குச் சாட்சியாக இருக்கின்றர் என்பதை உணர்ந்தால், நாம் தீமைசெய்யும் மனப்பான்மையை நீக்கிவிடுவோம். மற்ற உயிர்களுக்கு இம்சை உண்டாக்குவதஞலே தமக்குத் துன்பம்வந்தே தீரும்

கொல்லாம்ை 47
என்ற உண்மையை அறிந்தோர் அகிம்சாவிரதத்தை மேற் கொள்வர். அகிம்சையை நாளாந்த வாழ்க்கையிலே கடைப் பிடித்தொழுகினல் அது ஒரு தெய்விக மனப்பான்மையை ஆக்கிவிடும். கொலைத் தொழிலைப்புரிபவன் அல்லது கொலை நடைபெறுவதற்கு உதவியாய் இருப்பவன் கல்நெஞ்சஞய் மாறி நாளடைவிற் காட்டுமிருகங்களுக்கு ஒப்பானவளு வான் ஏனைய மிருகங்களைக்கொன்று அவைகளின் புலாலை உண்கின்ற சிங்கம், புலிக்கும்அவ்வித ஊனத் தின்னுகின்ற மனிதனுக்கும் பேதமில்லை.
ஈற்றில், திருமந்திரத்தில் "ஒன்றை ஆராய்ந்து கொலை யும் புலாலுண்ணலும் எவ்வாறு ஒரு மனிதனை நரகத்திலே அமிழ்த்திவிடும் என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்
' கொன்றி லாரைக் கொலச் சொலிக் கூறிஞர்
தின்றி லாரைத் திணச்சொலித் தெண்டித்தார் பன்றி யாய்ப்படி யிற்பிறந் தேழ்நரகு ஒன்று வார்.அரன் ஆணையி துண்மையே '
கொலைசெய்யும் குணமில்லாதவரைக் கொலை செய்யும்படி தூண்டியவரும். ஊனுண்ண அருவருப்புடையோரை உண் ணும்படி வற்புறுத்தினவரும், உண்ணுதவரைத் தண்டித் தவரும் இவ்வுலகத்திற் பன்றியாய்ப் பிறப்பர். பின்னர் ஏழ்நரகம் அவர்களைச் சாரும். இது அரன் ஆணையாகும். இது உண்மையுமாகும். ஆகையாற் கொல்லாமை என்ற விரதத்தை நாம் கைக்கொண்டு வாழ்வோமானல் இறைவ னுடைய அருள் நமக்குக் கிடைக்கும்.
space

Page 41
8. கல்வி
மக்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் உறுதுணையர் யிருப்பது கல்வியறிவாகும், இக்கருத்தை பின்வரும் திருக் குறள் வலியுறுத்துகிறது.
'ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ஏமாப் புடைத்து '
ஒரு பிறவியிலே ஒருவன் கற்கின்ற கல்வி, ஏழு பிறவிகளி லும் அவனுக்கு உதவியாயிருக்கும், நல்வினை, தீவினை எவ் வாறு ஓர் ஆன்மாவைத் தொடர்ந்து செல்கின்றனவோ அதேபோன்று கல்வியுந் தொடர்ந்துநிற்கும். கல்வியென்று சொல்லும்போது பிரதானமாகக் கல்வியால் ஏற்படும் ஞானஅறிவே குறிக்கப்படுகிறது. **நல்லாரிணக்கமும் நின் பூசைநேசமும், ஞானமுமே அல்லாதுநிலை வேறுளதோ " என்று பட்டினத்தடிகள் கூறுவதைக் கவனிக்கலாம்.
எக்காலத்திற் கல்வி கற்கவேண்டும். எவ்விதம் அறி வைப் பெற்றுக்கொள்கின்ருேம் என்பதைப்பற்றி முதலில் ஆராய்வோம். * இளமையிற் கல்வி சிலையிலெழுத்து ' என்று ஒளவைப்பிராட்டியார் கூறியதிலிருந்து இளமை யிலே பயிலும் ஆரம்பக்கல்வி நிலைபெற்று நிற்குமாயினும், வாழ்நாள் முழுவதும் ஒருவன் கற்கவேண்டியவை உண்டு
* கல்வி கரையில கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கிற் பிணிபல-தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப் பாலுண் குருகிற் றெரிந்து '
அன்னப் பறவையானது பாலிலுள்ள நீரை நீக்கிப் பாலை மாத்திரம் பருகுவதுபோல் அறிவுடையோர்கள், கல்வியோ கரையிலாதது, வாழ்நாளோ குறுகியகாலம் நோய்களும் சுகத்தைக் குறைக்கின்றன என்பதை உணர்ந்து பொய் நூல்களைநிக்கி, மெய்நூல்களை மாத்திரங் கற்பர். இயற்கை, மனுஷவாழ்க்கை கடவுள், ஆன்மா, உளம் கடல் ஆகிய

க்ல்வி 49
பல விஷயங்களைப்பற்றி அனுபவவாயிலாகப் பெரியமகான் கள் பலவுண்மைகளை உலகுக்கு ஈந்திருக்கின்றனர். ஐம் பொறிகள்முலம் இயற்கையிற் தோன்றுகின்ற விஷயங் களேப்பற்றி மனிதன் அறிவைப் பெறுகின்றன். அவ்விதங் கண்ட உண்மைகளே வானசாஸ்திரம், பூமிசாஸ்திரம், பெளதிகம், இரசாயனம், தாவரவியல், விலங்கியல் என்ற பலவகைப்பட்ட கல்வித் துறைகளாக விளங்குகின்றன. மனுஷவாழ்க்கைக்கு வழிகாட்டியாகத் திகழும் நூல்கள் திருக்குறள், நாலடியார், பஞ்சதந்திரம் போன்றனவாம். உடல், உளம், ஆன்மா ஆகியவைபற்றிய ஆராய்ச்சியும் அவைகள் ஒன்றே டொன்று தொடர்புடையன என்பது பற்றியும் பலநூல்கள் தோன்றியிருக்கின்றன. எல்லாவற் றிற்கும் மேலான இறைவனைப்பற்றி, திருவருள் கடாட்சம் பெற்ற பலஞானிகளும் எழுதியுள்ளனர். இவ்விதமாகப் பரந்த கல்வியைக்கற்று முடிவு காண்பவர் ஒருவரில்லை யென்றே சொல்லலாம். இந்த உண்மையையே, ஒளவையார் *" கற்றது கைம்மண்ணளவு கல்லாத துலகளவு ' என்று கூறினுர்.
சீவனுேபாயக்கல்வி, அறிவுக்கல்வி யெனக் கல்வியை இருபகுப்பாகக் கணிக்கலாம். கல்விகற்கும் இளைஞன் ஒரு வன் தனது பாடசாலையிற் பெற்றுக்கொண்ட அறிவு, தரா தரம் ஆகியவைகளைப் பயன்படுத்திச் சீவனத்தை நடத்து வதற்கு ஏற்ற ஒருதொழிலைப் பெற்றுக்கொள்ள விரும்பு கிமுன். பாடசாலைகளிலே அவ்வித சீவனுேபாயத்திற்கேற்ற கல்வியைப் பயிலுங் காலத்தில் அக்கல்வி அவனுக்குப் பல னளிக்கவேண்டும். களவெடுத்தல், பொய்பேசுதல் கூடா தென்று ஆன்ருே?ர் கூறியிருப்பதை அவன் ஆசரியரிடமிருந்து கேட்டறிந்திருப்பான். அவ்விதம் கற்றவை, வாழ்க்கையில் வழிகாட்டியாக அமையவேண்டும்
* கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக" என்று வள்ளுவப் பெருந்தகை கூறியிருப்பதைக் கவனிக்க வேண்டும். கற்பது ஒன்று, செயலில் நடந்துகொள்வது இன்
Փէ 7

Page 42
59 முப்பொருள் உண்மை விளக்கம்
னென்ருயின் கல்வி கற்றதாற் பயனில்லையென்றே சொல்ல வேண்டும், ஒரு பிரசங்கியார் ஒருவர் ஒருநாள் பிரசங்கஞ் செய்வதற்குப் புறப்பட்டுச் செல்லும்பொழுது வழியில் ஒரு காசுப்பையொன்று இருந்ததைக்கண்டு எடுத்து, இருபக்கமும் பார்த்தபின் தன்னுடைய வீட்டுக்கு விரைந்துசென்று மனைவி யிடம் விஷயத்தைச் சொல்லிக்கொடுத்துவிட்டுத் திரும்பி னுர், தனது வளவைக்கடந்து சென்றதும் பணப்பையைத் தவறவிட்ட மனிதன் இவர் அப்பையை எடுக்கும்போது அயல்வளவிலிருந்து கவனித்த சிறுபிள்ளைமூலம் அறிந்து பிர சங்கியாரை அப்பையைத் தரும்படி கேட்க அவர் தான் எடுக்கவில்லையென்று உர்த்த குரலிற் கூறியது அவருடைய மனைவி காதிற்பட்டது. பின்னர் பிரசங்கியார் விரைவிற் பிரசங்கஞ் செய்யுமிடத்திற்குச் சென்றுவிட்டார். அவ ருடைய பிரசங்கத்தைக் கேட்கத் திரளான மக்கள் கூடி யிருந்தனர். அவருடைய மனைவியாரும் அங்குச்சென்றிருந் தார், பிரசங்கியார் பேசும்பொழுது பல நீதிநூல்களி லிருந்து பல உண்மைகளை விளக்கும்பொழுது,
'தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்னெஞ்சே தன்னைச் சுடும்'
என்ற திருவள்ளுவர் கூற்றையும் எடுத்துக் காட்டினர். அதைக் கேட்டுக்கொண்டிருந்த அவரது மனைவியார் கூட்டம் முடிவதற்குமுன் எழுந்து தனது வீடு சென்றனர், தனது விட்டுக்குச் சமீபத்திலே, பணத்தை இழந்தவன் துக்கத்தில் மூழ்கியநிலையில் வீதியண்டையில் இருந்ததைக்கண்டு அவனை அழைத்துப் பணப்பையை அவனிடம் கொடுத்தார், அவன் முகமலர்ச்சியுடன் பெற்று, அதைத் திறந்து நானுாறு ரூபாவை அன்பளிப்பாக அவ்வம்மையாரிடம் கொடுக்க அவர் அதை வாங்கிக்கொள்ள மறுத்து அவன்போக அனு மதி அளித்தார். அவன் திரும்பிச் செல்லும்போது பிரசங் கத்தை முடித்தித் திரும்பிய அவருக்கு அவருடைய மனைவி uur (569)L-U நற்பண்புகளே எடுத்துக்கூறி அவரிடம் விடை பெற்றுச் சென்ருன். கோபாவேசத்துடன் வீடுசேர்ந்த பிர சங்கியாருக்கும் மனைவியாருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்ட்து. பிரசங்கத்தில் அவர் எடுத்தாண்ட உண்மை

கல்வி 5
களின்படி நடந்துகொள்ளத் தீர்மானஞ் செய்ததாகவும் அதஞலே பொய்பேசி இன்னெருவனுடைய பணத்தை வைத்திருப்பது சரியல்லவென நினைத்து அதையுரியவனிடம் ஒப்படைத்ததாக அவர் மனைவியார் கூறினர். பிரசங்கியார் அதிக சீற்றங்கொண்டு தான் அங்கு வந்திருந்த மக்களுக் குக் கூறியதைக்கேட்டு, மனைவி அவ்விதம் புத்தியினமாக நடக்கலாமா வென்று சொன்னர். இவ்விதக் கல்வியே பய னளிக்காத கல்வியாகும்.
சீவனுேபாயக் கல்விகற்ற சிலர் கண்ணுந் காணுகின்ற பொருட்களை நம்பலாமென்றும், கண்ணுற் காணுத கடவுள் இருக்கின்ற ரென்பதை நம்பமுடியாதென்றும் சொல்வர். ஓர் இடத்தில் ஒரு வீடு காணப்பட்டால் அதைக் கட்டி யவன் இருப்பானென்பது உண்மை. அதுபோன்று உலகத் தையும் அங்கு காணப்படுகின்ற பொருட்களையும்கொண்டு இவைகளைச் சிருஷ்டித்தவன் இருக்க வேண்டுமென்றே கூற வேண்டும். சந்திர மண்டலத்திற்கு எல்லாரும் போக முடி யாது. அங்குபோன ஒருசிலர் அங்குகண்டவற்றைச் சொன் ஞல் அவைகளை நாம்நம்பவேண்டும். கேட்போர், தாங்கள் அங்குபோய்க் காணுதபடியால் நம்பமுடியாதென்று சொல் வது அறிவுக்குறைவாகும். அதுபோன்று இறைவனை நேரே கண்டும், அவருடைய திருவருளையும் பெற்ற மணிவாச கரும் ஏனைய நாயன்மார்களும் தற்காலத்தில் இராமக் கிருஷ்ணரும் சொல்லியவைகளை எவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இறைவனில் நம்பிக்கை வைக்கவேண்டும் கற்கும் கல்வியெல்லாம் இறைவனடி சேர்வதற்குத் துணை புரிய வேண்டும்,
'கற்றதனுல் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றள் தொழாஅர் எனின் '
என்ற திருக்குறளிலிருந்து மெய்யறிவினையுடைய இறைவனை வணங்காதுவிட்டால் கல்வி கற்றதனல் பயனில்லை யென
இனி, கல்விகற்பதஞலே இம்மையிலும், மறுமையிலும் மக்களுக்கு ஏற்படக்கூடிய நன்மைகளை ஆராய்வோம். இவ்

Page 43
õ፱ முப்பொருள் உண்மை விளக்கம்
வுலகின்கண்னே கல்வியறிவுடையவனே யாவரும் மதிக்கின் றனர். கலங் குடியிற் தாழ்ந்தவனுயினும் கல்வியறிவு மிச்க வனை எவரும் கெளரவிப்பர்.
* எக்குடிப் பிறப்பினும் யாவரே ஆயினும்
அக்குடியிற் கற்றேரை மேல்வருக என்பர்" என்ற ஆன்ருேர் வாக்கிலிருந்து கல்விக்கிருக்கும் மதிப்பை அறிந்துகொள்ளலாம். கல்வி கற்ருேருக்குச் சென்ற இட மெல்லாஞ் சிறப்பு இருக்கும். கல்விகற்ருேன் தன்னுடைய நாட்டுக்கு மாத்திரமுரியவனல்ல, எந்நாட்டிற்குமுரியவ ஞவான். 'மன்னனிற் கற்றேன் சிறப்புடையன் ** மன்ன னுக்கு மரியாதை தன்தேசத்திலே மாத்திரமுண்டு. ஆகை யால் கற்றேனும் அரசனிலும் பார்க்கச் சிறப்புடைய வஞவன், கல்வியறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்து பழகுவதனலே அதிகபலனை ஒருவர் அடையலாம். அவர்க ளுடைய சினேகிதம் பழகப்பழக இன்பத்தை அளிக்கும். கரும்பை நுனிப்பக்கத்திலிருத்து சாப்பிடும் ஒருவனுக்கு அதனுடைய இனிப்பு அதிகரித்துக்கொண்டுபோகும். அடியி லிருந்து தின்பவனுக்கு ஆரம்பத்திலே இனிப்பாக இருப் பினும் படிப்படியாக முன்னிருந்த இனிமை குறைந்து போகும், இதை விளக்சியே,
* கன கடற் றண்சேர்ப்ப கற்றறிந்தார் கேண்மை நுனியிற் கரும்புதின் றற்றே - துணிநீக்கித் தூரிற்றின் றன்ன தகைத்தரோ பண்பிலா வீரமி லாளர் தொடர்பு' என்று நாலடியார் கூறுகிறது. ஒருவர் பெற்ற கல்வியறிவு உலகத்திற்குப் பயன்படவேண்டும். உலகம் இவர் மூலம் அறியாத விஷயங்களை அறிந்து மகிழ்ச்சியடையும், இவர் பெற்றுள்ள இன்பத்தை உலகமும் அனுபவிக்கின்றது. அத ஞலே கற்றவர்கள் கல்வியை மேன்மேலும் விரும்புவர். இக் கருத்தை விளக்கியே,
" தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்' என்று திருக்குறளிற் கூறப்பட்டிருக்கிறது. கல்வி கற்கு மொருவன் நூலின் நயத்தை விளங்கிச் சுவைப்பதுடன்

断战é岛 . 53
பெரும்அறிவையும் பெற்று, கற்றபடி ஒழுகுதலிஞலே ஈற் றில் முத்தியைப்பெறும் பேற்றையும் பெறுவதற்கு அக்கல்வி ஏதுவாயிருப்பதனல் எவ்வகைச் செல்வத்திலும் சிறந்த செல்வம் கல்விச் செல்வமாகும். கல்விகற்றேர் சிலர் கல் விச் செருக்குடையோராகக் காணப்படுகின்றனர். அவர்கள் ஆன்ருேர்கூறிய அறவுரையை மனத்திற் கொள்ளவேண்டும்.
*தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடமை
அம்ம! பெரிதென்று அகமகிழ்க - தம்மினும் கற்றரை நோக்கிக் கருத்தழிக தாம்கற்றவெல்லாம் எற்றே இவர்க்குநா மென்று ' செல்வத்தைப் பொறுத்தளவில் தன்னிலும் குறைவாகப் பொருளுடையோரைப் பார்த்துத் தன்னுடைய பொருள் எவ்வளவு அதிகமாக இருக்கின்றது என்று நினைத்து மனத் திருப்தியும் மகிழ்ச்சியும் அடையவேண்டும். ஆணுற் கல்வி யளவில் தம்மிலும்பார்க்கக்கூடிய அறிவுடையோரை நோக் கித் தன்னை அவர்களுடன் ஒப்பிடும்போது தான் கற்றவை எவ்வளவு குறைவாகக் காணப்படுகிறதென்று மனம்வருந்த வேண்டும். ஆகையாற் கல்வியினுற் செருக்கடையாமல் தாம் இன்னும் எவ்வளவோ கற்கவேண்டி இருக்கின்றன என்று என்று நினைக்கவேண்டும். ' அறிஞர்க்கழகு கற்று உணர்த்து அடங்கல் ’’ என்பதற்கிலக்காகக் கல்விகற்ற ஒரு வன் பலநூல்களையுங் கற்றுணர்ந்து அறிவைப் பெற்றபின் அடக்கமும், மனநிறைவும், சாந்தியும் உடையவனுகத் திகழ் வான். சீவனேபாயத்திற்காகக் கல்விகற்றவர்கள் அக்கல்வி பிம்ை பெற்ற அறிவையும், விவேகத்தையும் பிழையான வழியிலே உபயோகித்துச் சாதாரண மனிதனிலும் பார்க் கக் கெட்டவர்களாக ஒழுகக்கூடும். அடுத்துக் கெடுத்தல், ஏமாற்றஞ்செய்தல், பிழையான வழியிற் பணஞ் சம்பாதித் தல் போன்ற கதைகளையும் அவ்விதம் நடந்தவர்களின் சரித் திரத்தையும் நூல்களின் மூலமோ திரைப்பட மூலமோ அறிந்த பின்னர், அவர்கள் செய்த தீச்செயல்களினலே துன்பம் அவர்களுக்கு ஏற்பட்டது என்ற பகுதியை விலக்கி அவர்கள் கையாண்ட சூழ்ச்சிகளை மாத்திரம் அறிந்து கொண்டு தாமும் உலகத்தில் அவ்விதம் நடந்துகொள்வதை தாங்கள் காண்கின்முேம். ஆகையால் உண்மை அறிவை

Page 44
b4 முப்பொருள் உண்மை விளக்கம்
நாம் பெற்றுக்கொள்ளவேண்டும், மனிதப்பிறவியின் நோக் கமும் அதுவேயாகும். ஏழு வகைப்பட்ட பிறவிகளிலும் மானிடப்பிறவி எடுத்தவர்களே கல்வி கற்கும் ஆற்றலையும் அதனலே ஏற்படும் அறிவையும், அவ்வறிவைப் பயன்படுத்தி இறைவனைப்பற்றிச் சிந்திக்கவும், அவருடைய திருவருளின் உதவியுடன் இப்பிறவியை நீக்கி இறைவனடி சேரவும் (tpւգ պւb, V
'இப்பிறவி தப்பினுலெப்பிறவி வாய்க்குமோ வேது வருமோ வறிகிலேன்" என்ற தாயுமான சுவாமிகளுடைய கூற்றிலிருந்து மானிடப் பிறவி எடுத்த இப்பிறவியிலேயே இறைவன் திருவடிசேர்வதற்கு வாய்ப்பு உண்டாகுமென்பதை யும். வேறு பிறவிகள் எடுக்க நேரிட்டால் என்ன செய்ய முடி யுமென்று ஏங்கும் நிலையையும் அறியக்கூடியதாயிருக்கிறது. உண்மை அறிவைப் பெற்றுக்கொள்வதற்குக் கல்வி சாதன மாயிருக்கிறதென்பதை அறியலாம்.
'பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு' பிறப்பிற்குக் காரணமாகிய அறியாமை கெட்டுப்போவதற் கும் முத்தி அடைவதற்கும் காரணமாகிய ஞானம் உண் டாக வேண்டும். இதுவே மெய்யுணர்வு எனப்படும். இதனைத் திருக்குறளிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். சிவப்பேறு அடைதலே பிறப்பின் நோக்கமாகையால் நாம் வாழ்நாள் முழுவதும் பயிலும் கல்வி அதற்குத் துணையாய் அமைய வேண்டும். அதைக் கற்க வேண்டும் தெளிவு அடைய வேண்டும்; உணர வேண்டும்; வாழ்க்கையில் அவ்வண்ணம் நடந்து கொள்ளவேண்டும். இதுவே உண்மைக் கல்வியளிக் கும் பயனகும். மெய்யுணர்வுக்கு ஏதுவாய் கல்வியை எவ் வாறு பெற்றுக் கொள்ளலாம் என்பதைச் சிந்தித்தல் அவ சியம். திருமூலர்:
'நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார் பாலொன்று பற்றினுற் பண்பின் பயன்கெடுங் கோலொன்று பற்றினுற் கூடா வறவைகள் மாலொன்று பற்றி மயங்குகின் றர்களே,

கல்வி 55
என்று கூறுகின்ருர், தேவாரம் முதலிய புகழ்நூல்களும், மெய்கண்ட சாஸ்திரம் முதலிய பொருள் நூல்களும் இறைவனடிக்குச் சேர்ப்பிக்கக் கூடிய ஞானபூசைக்குரிய நிறை நூல்களாகும். இந்நூல்களின் உதவியோடு சிவபெரு மானுடைய திருவடியைச் சேரவேண்டும். அவ்விதம் சேர மாட்டாதவர்கள் பல்வகைப்பட்ட கொள்கைகளில் ஒரு விதக் கொள்கையைக் கடைப்பிடித்து அதிலே அதிகபற்று வைப்பதனுல் ஏனைய கொள்கையாளருடன் பகைக்க நேரி டும். திருவைந்தெழுத்தாகிய சிறந்த கோலைப் பற்றினல் ஜம்புலன்களாகிய பறவைகள் அடங்கிவிடும். நன்னெறி உய்விக்கும் இவ்விதக் கல்வியினை அறியாதவர்கள் மாயப் பொருள்களாகிய உடல், உலகு, ஊண் ஆகியவற்றிலே மயங்கிப் பிறப்பிறப்பாகிய தடுமாற்றத்துக்குள் சிக்குண்டு போ கிருர்கள். ஆகையால் சிவனருளைப் பெற்றுக் கொள் வதற்கு ஏதுவான கல்வியே, சிறந்த கல்வியாகும்:
பல்வகைப்பட்ட உலக நூல்களைக் கற்றும் அறிவு நூலா
திய சிவஞானம் படிக்காதவர்கள் வீணராவர். மலங்களி னின்று நீங்கமுடியாதவாறு சுற்றத்தாரை விட்டு நீங்கார், அதனல் மூன்று மலங்களின் பந்தத்தையும் நீக்கமுடியாத மூடர்களாவர். பல திசைகளிலுமிருந்து மெய்யுணர்வு பெற் றவர்களின் மாண்பினைக் கண்டோ கேட்டோ தெளிவு டையமாட்டார். அவர்கள் அறிவில்லாதவர்களாவர். திரு வடியுணர்வை அளிக்கும் திருமுறைகளைக் கற்று அவ்விதம் ழுகி சிவ அன்பில் உறுதியாக நிற்போரே உண்மையான அறிவும், முறைமையும் தெரிந்தவர்களாவர். இதை விளக் கும் திருமந்திரம்
கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
சுற்றமும் வீடார் துரிசறர் மூடர்கள்
மற்றும் பலதிசை காணுர் மதியிலோர்
கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே " ாணக் கூறுகின்றது. உலக நூல் உண்மை அறிவை அளிக் காது. அதைக் கற்பவனுக்கு ஒருவகைப்பயனைக் கொடுக்கு மல்லாது கல்வியின் முக்கிய அம்சமாகிய ஞான அறிவு

Page 45
56 முப்பொருள் உண்மை விளக்கம்
அல்லது பூரண அறிவை அளிக்காது. ஆகையால் மக்கள் உய்வுபெற வேண்டுமாயின் திருவடி உணர்வை அளிக்கும் கல்வியை மாண்பு மிகு ஞானசிரியனிடம் கற்க வேண்டும். அவ்வறிவைப்பெறும் பெருவிருப்பு காணப்படுங்கால் தக் கார்க்கு அருள் புரியும் இறைவனே ஞானசிரியனுக எழுந் தருளி மெய்யுணர்வு ஏற்படத் துணைபுரிவான்.
ஞானநிலையை எய்தக்கூடிய தன்மை எல்லோருக்கும் உடனே பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புக் கிடையாது. ஆகையால் ஒவ்வொருபிறவியிலும் தன் முயற்சியினலும் இறைவன் அருளாலுங் கிடைக்கப்பெறும் அறிவு படிப்படி பாக ஒரு ஆன்மாவை மேலோங்கச் செய்யும். ஆகையால் இம்மைக்கும் மறுமைக்கும் கல்வி துணையாயிருப்பது மல் லாமல் முத்தியைப் பெறுவதற்கும் அதுவே துணையாகும். ஆகையால் வாழ்நாள் முழுவதும் கல்வி அறிவைப் பெற்றுக் கொள்வதிலே சிரத்தை எடுக்க வேண்டும், இதுபற்றியே ஆன்ருேர்
'அறம், பொருள் இன்பம் வீடும் பயக்கும்
புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவ லொன்றுற் றுழியும்கை கொடுக்கும் கல்வியி னுரங்கில்லச் சிற்றுயிர்க் குற்றதுணை' இவ்வுலகத்தில் வாழ்பவன் அறவழியில் வாழ்ந்து பொரு ளிட்டி இன்பம் நுகர்ந்து, கீர்த்தி புகழையும் கல்வியின் பய. ஞகப் பெறலாம். மேலும் துன்பம் நேரிடும் பொழுதும், கல்வியறிவு மனச்சாந்தியை அளிக்கவல்லது. இவ்வுலக வாழ்க்கையிலீடுபடுபவனுக்கு என்னென்ன தேவையோ அவை எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வதற்கு கல்வி துணையாய் இருக்கும். மறுமையில் நன்மை பெறுவதற்கு இப்பிறவியிலே தீமைகளை விலக்கி, நன்மைகளைச் செய்ய வேண்டுமென்ற அறிவையும் கல்வி கொடுக்கக் கூடியது. இவைகள் எல்லாவற்றிலும் மேலான பேரின்பமாகிய வீட்டை அடைவதற்கும் அதுவே துணையெனில் கல்வியை ஒருவன் சாந்துணையுங் கற்க வேண்டுமென்பது வெளிப்
Lufoliurteb.
say

9. நன்மையும் தீமையும்
‘நன்மை கடைப்பிடி' என்பது ஒளவையார் திருவாக் காகும். நல்ல காரியங்களைச் செய்வதிலேயே மனம் உறுதி கொள்ளவேண்டும் என்பதே இதன் பொருள். அது தனக் கும் பிறருக்கும் பயன்படக்கூடிய நன்முயற்சியாகும். ஒரு தொழிலிலீடுபட்டு அதிக முயற்சியுடன் கடமை செய்பவ னும் அதனுற் பெறும் ஊதியத்தைத் தனக்கும் பிறருக்கும் பயன்படச் செய்து பழகி வருபவனும் சமுதாயத்திற்கும் உல கத்திற்கும் நற்காரியங்களைச் செய்பவனவான். சோம்பல் தீமை விளைவிக்கும் என்று அன்னருக்கே தெரியும், நீராவி இயந்திரம், வானெலி, ஆகாயவிமானம், விண்வெளிக்கப் பல், பல்வகை நோய்களுக்கேற்ற மருந்துகள், சத்திரசிகிச்சை முறை ஆகியவற்றைக் கண்டுபிடித்த விஞ்ஞான்ரிகள் தங்க ளுடைய வாழ்நாள் முழுவதையும் உலக நன்மைக்காக அர்ப்பணித்தனர். நேரம், பணம், தேக செளக்கியம் ஆகி யவற்றைக் குறைத்தும் ஆராய்ச்சியிலீடுபட்டுப் பல வருடங் கள் முயன்றமையினலேயே உலக மக்கள் பெரும் நன்மை யைப் பெற்றிருக்கின்றனர். நன்மை செய்வதிலேயே கண் ணும் கருத்துமாயிருக்கிற ஒருவர் எல்லா உயிர்களின் நன்மை யையும் கருத்தில் வைத்துச் செயலாற்றினுல், அவர் கருணை யுடைய இறைவனுக்கு ஒப்பாவர். இறைவன் பிரதி உப காரம் கருதாது எவ்வுயிர்க்கும் நன்மை புரிவதுபோல அறி ஞர்களும் தங்களுடைய ஆற்றலை, பல்ன் எதிர்பாராது உல குக்கு ஈந்துவிட்டுச் செல்கின்றனர். பெற்றேரும், ஆசிரிய ரும், வைத்தியரும் நன்மையைக் குறிக்கோளாகக்கொண்டே தத்தம் கடமைகளைப் புரிகின்றனர். பெற்றேர் தங்களுடைய பிள்ளைகளின் நலங் கருதியே எத்துணை இடர்ப்பாடுகள் ஏற் பட்ட பொழுதிலும் அவைகளைத் தாங்கிக்கொள்ளுகின்ற எார். ஆசிரியன், தான் கற்பிக்கும் மாணவன், அறிவில் முன் னேறிவரவேண்டுமென்ற ஆசையோடு கடமைபுரிகின்றன். வைத்தியன் நோயாளிக்குச் சீக்கிரத்தில் சுகம்கிடைக்க வேண்டுமென்று சிகிச்சை அளிக்கின்றன். இவ்விதமானமாப்
( ، )

Page 46
58 முப்பொருள் உண்மை விளக்கம்
பான்மையுடையோரை வேறு துறைகளிலும் காணலாம்.
அவர்களைச் சார்ந்தவர்கள் நல்லவர்களாய் மாறுவதுடன்
அவர்கள் குடும்பத்துக்கும் ஊருக்கும் நல்ல காரியங்களைச்
செய்பவராவர். இதுபற்றியே ஒளவையார்,
**நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க
நல்லார் சொற்கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே அவரோடு
w இணங்கி யிருப்பதுவும் நன்று. என்று கூறியிருப்பதைக் கவனிக்கலாம்,
நன்மை செய்ய உறுதி கொண்ட ஒருவன் தீய கருமங் களிலீடுபடமாட்டான். தீயசெயல்கள், அவைகளைச் செய் பவனுக்கோ பிறருக்கோ பயன்படமாட்டா, பொழுமை, ஆசை, கோபம் முதலிய தீய எண்ணங்களே ஒருவனைத் தீய செயல்களிலீடுபடத் தூண்டுகின்றது. தீ, எப்பொருளைப் பற்றி நின்ருலும் அது சாம்பராய்ப் போகும்வரை எரிந்து கொண்டே நிற்கும். எரியும் பொழுது ஒளிவிட்டுத் துலக்க மாக எரியும், அது விளக்கொளிபோலன்று. அது பற்றிய பொருள் முற்ருக எரியும்வரை வேகம் அதிகரித்துக் கொண்டு எரிந்து, அயலிலிருக்கும் புல் பூண்டு, மரம், செடியாவும் அழிந்து போகச் செய்கிறது. அத் தீ போன்றதே தீயசெயல் களாகும். தீமையைக் கடைப்பிடித்து ஒழுகுமொருவன் எரி யும் நெருப்பு பெரிய வெளிச்சத்தை அளிப்பதுபோல் சிறிது காலந் துலக்கமுற்றுப் பின்னர், எரிவது ஒழிந்து சாம்பர் எஞ்சியதுபோல் அழியும் நிலையை எய்துவான். இதுபற்றியே வள்ளுவப் பெருந்தகை,
தீயவை தீய பயத்தால் தீயவை தீயினும் அஞ்சப் படும்". என்று கூறுகிருர். ஒருவன் தனது மனநிலைக்கேற்றவாறு பிறருக்குத் தீமை செய்வதனல் அந்நேரத்தில் அவனுக்கு இன்பம் ஏற்படுவதுபோற் தோற்றிஞலும் பின்னர் அவனுக்

நன்மையும் தீமையும் 5鈴
குத் துன்பத்தையே அத் தீச்செயல் அடையச் செய்யும், ஆகையால் ஒருவன் நெருப்பைப்பார்க்கிலும் தீவினைகளுக் குப் பயப்பட வேண்டும். y
தீப்பற்றி எரியும் ஒரு பொருளை ஒருவர் அனுதாபங் கொண்டு அவ்விடம் சென்று தண்ணீர் ஊற்றி அப்பொருள் சாம்பராகாமற் தடுக்கலாம். அதேபோன்று தீவினையாள னும் இறைவழிபாட்டிலீடுபட்டால் தண்மையுடைய இறை வனின் கருணை தீவினையாளனை முற்ருக அழிந்துபோகாவண் ணம் தடுத்து நல்வழிப்படுத்தும், இறைவனுக்குப் பயப்படாது தொடர்ந்து தீவினையாற்றுபவர்கள் பொருமை காரணமாகத் இவினைகளை விளைத்து ஈற்றிலே துரியோதனனும், ஒழுக்கத் இனின்று தவறிய இராவணனும் அடைந்த அழிவை அடை வர் என்பது திண்ணம், மறந்தும் பிறன் கேடு சூழற்க** என்ற வள்ளுவரின் வாக்கிற்கமைய ஞாபகமற்ற நிலையிற் தன்னும் தீமை செய்தலாகாது என்று வற்புறுத்தியிருப்ப தைக் கவனிக்கலாம். ஞாபகமுள்ள நிலையில் தீய சிந்தனை யுடையவன் மறந்த நிலையிலும் தனக்குத் தெரியாமற் தீமை செய்வான்.
நாம் செய்யும் வேலையை ஆக்க வேலை, அழிவுவேை யென இருவகையாக வகுக்கலாம். தனக்கும் பிறருக்கும் பயனளிக்கக் கூடிய வேலை ஆக்க வேலையெனப்படும். வீட் டைக் கட்டுபவனும், பிள்ளையை வளர்க்குந் தாயும், கல்வி யறிவைப் புகட்டும் ஆசிரியனும், நோயை மாற்றும் வைத் இயனும் ஆக்க வேலையைச் செய்கின்றனர். தேன் கூட்டைக் கட்டி தேனைச் சேகரித்து வைக்கும் தேனீயும் ஆக்கவேலை யைச் செய்கின்றது. ஆக்கவேலையைச் செய்து முடிப்பதற்கு முன்பாக அதைப்பற்றிய திட்டம் ஒன்று தேவை. பணம், தொழிலாளி, பொருட்கள் தேவை. செய்து முடிக்க அதிக நேரமுந் தேவை. அவ்வித முயற்சியுடன் செய்யப்பட்ட வேலை அழிக்கப்படவேண்டின் சிறிது நேரத்திற்குள் அதை அழித்து விடலாம். ஒருநாள் பெருமழையில் குரங்கொன்று நனைந்து கஷ்டப்பட்டதைக் கண்ட சிறு தூக்கணங்குருவி

Page 47
80 முப்பொருள் உண்மை விளக்கம்
அதனைப்பார்த்து 'நான் ஒரு சிறு குருவியாக இருந்தபோதி லும் நான் கட்டிய கூட்டில் மழையில் நனையாமல் பாதுகாப் போடு இருக்கின்றேன். நீ என்னிலும் பார்க்கப் பெரிய பிரா ணியாக இருந்தபோதிலும் உனக்கு ஒரு இருப்பிடத்தைத் தேடாமல் விட்டபடியால் நனைகின்ருயே. இனிமேலாகுதல் ஒரு ஒதுக்கிடம் தேடுவது நல்லது" என்று சொன்னது. அதைக் கேட்டுக்கொண்டிருந்த குரங்கு அது கூறிய புத்தி பைப்பற்றிக் கொஞ்சமேனுஞ் சிந்தியாது மழை நின்றவு டன் தூக்கனங் குருவியின் கூட்டைப் பிடுங்கிப் பிய்த்தெறிந் தது. தூக்கணங் குருவி சத்தமிட்டுக்கொண்டு வெளியே பறந்தது. பல நாட்கள் எடுத்து ஆக்கப்பட்ட அதனுடைய கூடு ஒரு கணப்பொழுதில் குரங்கிஞல் அழிக்கப்பட்டது. ஆகையால் தீயவர்களுக்கு நல்ல புத்தியைச் சொன்னுலும் தீமையே விளையும்
"ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்
ஈனருக் குரைத் திடில் இடரதாகுமோ'. என்று ஆன்ருேர்கூறிய உண்மையை நாம் கவனிக்க வேண் டும். எட்டி போன்ற ஒரு நச்சு மரத்திற்குக் கிட்ட ஒருவரும் போவதில்லை. தீயவரும் அவ்வித நச்சுமரம் போன்றவர்களா வர். ஆனல் ஒரு ஊருணி ஒர் கிராமத்திலிருந்தால் அதனு டைய நன்னீரை அருந்துவதற்குப் பலர் அங்கு செல்வர். அது போன்று நல்ல மனிதன் ஒருவன் ஊரில் இருந்தாலே அவ்வூர் பெருமையடையும், அவருடைய உதவி எல்லோருக் கும் கிடைக்கும்.
'நல்லா ரொருவ ருளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை'. என்பது அறிவுடையோர் கருத்தாகும்:
நன்மையும் தீமையும் ஏற்படுவதற்கு அவரவரே பொறுப்புடையவராவர். ஆன்மா தான்செய்யும் வினையின் பலனை அனுபவிக்க வேண்டிய நியதியுண்டு. ஆகையால் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றினலுந் தீமை பயக்

நன்மையும் தீமையும் 8.
கும் காரியங்களைச் செய்யலாகாது. " நன்றுந் தீதும் பிறர் தரவாரா " என்பது முதுமொழியாகும். நாம் ஒவ்வொரு வரும்செய்யும் வினைக்கு நாமே பொறுப்புடையோம், பிறர் ஆற்றிய வினையின் காரணமாக நாம் இன்ப துன்பங்களை அனுபவிப்பதில்லை என்பது வெளிப்படை. இது பற்றியே,
"ஈண்டுநீர் வையத்து ளெல்லாரு மெத்தனேயும்
வேண்டார்மற் றிய விழைபய னல்லவை வேண்டினும் வேண்டா விடினு முறற்பால தீண்டா விடுத லரிது"
என்று நாலடியார் கூறுகிறது. உலகத்திலுள்ள மக்கள் தீமையின் பயன, அனுபவிக்க விரும்பமாட்டார்கள், நல் வினைப்பயனை விரும்புவர், வரவேண்டிய நல்வினை தீவினைப் பயன்கள் வந்தே சேரும், முன் செய்வினைப் பயன்களை அனுபவித்துக்கொண்டிருக்கும்பொழுது இப் பிறவியில் தீவினைபுரியாது விடுதலே மறுமையில் துன்பத்தினின்றும் நீங்கும் வழியாகும் என உணரவேண்டும்,
கல்வியறிவும் முன்னைய தவமுமற்ற மக்கள் அறி யாமை காரணமாகத் தீயசெயல்களிலீடுபடுவதைக் காணும் பெரியோர்கள் அவர்களுக்கு அறிவுபுகட்டி நன்னிலைப்படுத்த வேண்டிய கடமையுடையராவர் நூல்களைக் சற்கும் ஆற் றல் இல்லாதவர்கள் சமய விரிவுரைகளைக் கேட்டும், புரா ணப்படிப்பைக் கேட்டும், சமய நாடகங்களைப் பார்த்தும் பெரியோருடைய புத்திமதிகளைக் கேட்டும் அறிவைவளர்க்க முடியும். ஆனல், நூல்களைக் கற்றும் உண்மை அறிவைப் பெற்றுக்கொள்ளாத மக்கள் தீய செயல்களைப் புரிகின்றனர், அவர்களுடைய கல்வி அவர்களுக்குப் பயனளிக்கவில்ல்ா மையைக் கண்டு அவர்களைப் பார்த்து நாம் பரிதாபப்பட வேண்டும். அவ்வித மாந்தரின் தீய செயல்களுக்குக் காரணத்தை நாலடியார் மேல்வருஞ் செய்யுளாலே விளக்கு கிறது.

Page 48
6. முப்பொருள் உண்மை விளக்கம்
'அறியாரு மல்ல ரறிவ தறிந்தும்
பழியோடு பட்டவை செய்தல்-வளியோடி நெய்த னறவுயிர்க்கு மீள்கடற் றண்சேர்ப்ப ! செய்த வினையான் வரும் "
நூல்களை அறிந்தும் தீவினைகளைச் செய்தல் முன் செய்த வினைப்பயனும் என்பதே இதன் பொருள். கற்றுத் தீய செயல்களைச் செய்வோரைக் காணுமிடத்து அவர்கள் முற் பிறப்பிற் தீவினையாளர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மாயப் பொருள்களெல்லாம் அழியும் தன்மையை உடையன. அவைகளிற் குறைகளுண்டு. அவைகளும் முற் ருக நல்லதும் முற்ருகத் தீயதுங் கிடையா. இருவகைக் குணங்க ளு ம் கலந்தவையாகவே காணப்படுகின்றன. இனிமையான பழத்திலும் சிறிதளவு புளிப்புத் தன்மை யுண்டு. காசுக்கும் செழும்புண்டு. காலால்மிதிக்கும் பூண் டும் மருந்துக்குப் பிரயோசனப்படுகிறது. அழகான பூவை. யுடைய அலரிமரத்தின்வேர் நச்சுத்தன்மையுடையது. இவ் விதம் கலப்புரு து. நல்லதையே தம்வசம் உடையதும், நல்லதையே ஏனைஉயிர்களுக்கு நல்குவதும், என்றும் நிலைத் திருப்பதும் ஒரேயொரு தனிப்பொருளாம் அதுவே பரம் பொருளாகும். மக்கள் தாம் முன்செய்த வினைகள் தம்மை அணுகாவண்ணம் தீதில்லாததும், நல்லதையே தம்வசங் கொண்ட ஞானசொரூபராகிய சிவபெருமானுடைய பாதங்களைச் சேரவேண்டும். இதுபற்றியே,
" பேதமற நின்றுயி ருக்குயி ராகி யன்பருக்கே பேரானந்தக்
கோதிலமு தூற்றரும்பிக் குணம்குறி யொன்றறத்
தன்னைக் கொடுத்துக் காட்டும் திதில்பரா பரமான சித்தாந்தப் பேரொளியைச்
சிந்தை செய்வாம்"
என்று தாயுமானசுவாமிகள் பராபரனுடைய தன்மையை விளக்குகின்ருர். இறைவன் எங்களுடைய மனத்திலிருக்கின் ரூன் என்பதை உணர்ந்தோமென்ருல் நாம் நல்வினை தீவினை யென்ற பேதந்தருஞ் செயல்களிலீடுபட்டுக் காலத்தை

நன்மையும் தீமையும் 63
அவமே கழிப்பதற்கு இடமேயில்லை. தீவினை மறுமைக்கண் துன்பத்தைத்தரும்; நல்வினை இன்பத்தைத் தரும். ஆகை யால் இருவகை வினையும் பிறவிக்கு ஏதுவாகும். மயக் கத்தை உண்டாக்கும் பிறவியைவிரும்பாத ஞானி நல் வினை தீவினை இரண்டையும் விரும்பமாட்டார். நம்முள் இருக்கின்ற இறைவனைக் காணமுடியுமானல் நாம் உய்யும் நிலையை அடைந்துவிடுவோம். தாயுமானவர்,
நன்றெனவுந் தீதெனவு மெனக்கிங் குண்டோ
நாருகி நீயிருந்த நியாயஞ் சற்றே இன்றெனக்கு வெளியான
விறைவா நின்னடிய ருடனிருந் துவாழ்வேன்"
என்று கூறுவதிலிருந்து இறைவனை அடைந்துவிட்டால் நன்று தீது என்று சொல்லப்படும் உலக காரியங்களிலீடு படத் தேவையில்லை யென்பதை அறியலாம்,
ஞானியினுடையநிலையை ஒவ்வொரு மனிதனும் தாம்
எடுத்த பிறவியிலேயே அடைய முடியாது. ஆகையால், இல்லறத்திலீடுபட்ட மனிதன் எவ்வாறு ஒழுகவேண்டும்
ன்பதை நாம் சிந்திக்கவேண்டும், புண்ணியம்ஆம் பாவம்போம் போனநாள் செய்தஅவை
முண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள்-எண்ணுங்கால்
ஈதுஒழிய வேறில்லை; எச்சமயத்தார் சொல்லும்
தீதுஒழிய நன்மை செயல்' என்று ஒளவையார் கூறுவதைக் கவனிக்கலாம். புண்ணி ம் ஆக்கத்தைக் கொடுக்கும். பாவம் அழிவை உண் டாக்கும் முற்பிறவியிலே நாம்செய்த புண்ணிய பாவங் களே நமக்குத் தேடிவைத்த பொருளாகும். a 605 ஆராய்ந்து பார்த்தாற் பாவத்தை ஒழித்துப் புண்ணியத் தையே செய்யவேண்டுமென்று அறிகிருேம்.

Page 49
10 ஊழ் உலகத்திலே உள்ள மக்கள் ஒரே மாதிரியான ஒரேயள வான துக்கங்களை அனுபவிப்பதில்லை. சிலர் தங்களுடைய வாழ்க்கையிலே கூடிய சுகத்தையும், சிலர் கூடிய துக்கத் தையும் அனுபவிக்கின்றனர். தேக செளக்கியத்தோடும், செல்வம் செல்வாக்கோடும் ஒருசிலர் வாழவும் வேறுசிலர் நோய், வறுமை, பல்வகைப்பட்ட துன்பங்களாற் பீடிக்கப் பட்டு அல்லற்படுவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்ருேம். நல்லவர்கள் கஷ்டப்படுவதையும், தீயவர்கள் சுகமாக வாழ் வதையும் காணலாம். சிலர் குறுகிய ஆயுளையும், சிலர் நீண்ட ஆயுளையுமுடையவராகக் காணப்படுகின்றனர். அதிக பண்பாடும், கல்வி அறிவும் நற்குணுதிசயங்களும் ஒருங்கே அமையப்பெற்ற குடும்பத்திற் பிறந்து உயர்ந்த வகுப்பினரென்று மற்றையோர் மதிக்கத்தக்கதாகச் சிலர் வாழ்ந்து வருகின்றனர். கல்வியறிவு, நற்பழக்கங்கள், நல்ல பண்பாடு ஆகியன சிறிதேனும் இல்லாதவர்களாயும், புலா லுண்ணல், மதுஅருந்தல் முதலிய தவருண முறைகளைப் பின்பற்றுகிறவர்களாய்ச் சிலரும், வேறுசிலர் மேல்வகுப்பின ராகச் சமுதாயத்தாலே கணிக்கப்படக்கூடியவர்களாகவும் காணப்படுகின்றனர். இவைகள் எல்லாவற்றிற்கும் கார ணம் யாதெனச் சிந்திக்கும்போது ஊழ்வினையே காரணம் என்று புலப்படுகிறது. இதுபற்றியே உமாபதிகிவாசாரியார்,
* கன்மநெறி திரிவிதநற் சாதியாயு போகக்
கடனதென வருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன்மையது ழல்லதுண வாகா தானுந்
தொடங்கடைவி னடையாதே தோன்றுமாறித் தன்மைதரு தெய்விகமுற் பவுதிகமான் மிகமாந்
தகையிலுறு மசேதனசே தனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவனூ
ணுடிலத னுாழ்வினையா நணுகுந் தானே." என்று கூறுகின்ருர், ஒருவருடைய சூழல், ஆயுள், போகம், ஆகியவற்றிலிருந்து அவருடைய பழைய விண்ப்பயனைப்பற்றி அறியலாம், வழல்லாத வேருென்றும் ஆன்மாவுக்கு அனுப

b87) 65
வமாய் வருவதில்லை. முன்செய்தது பின்னும் பின்செய்தது முன்னுமாகப் பக்குவமுறையில் கன்மத்தின் பயன்வந்து சேரும். அது தெய்விகத்தாலும், ஆதிபெளதிகம், ஆதிஆன் மிகங்களோடு பொருந்துகின்ற சேதனம் (அறிவுடையன.) அசேதனம் வாயிலாகவும் வரும், ஆன்மா முற்பிறவிகளிற் செய்த வினையின் பயனகவே இப்பிறவியில் இன்ப துன்பங் களை அனுபவிக்கின்றது. ஆதிபெளதிகம் எனப்படுவது குளிர், வெப்பம், காற்றமழை, மின் இடி ஆகியவற்ருல் நேரிடும் துக்கமாம். தெய்விகம் எனப்படுவது, சனன, மரண இயம வேதனையாகும் உயிர்களால் வருவது ஆன்மிகம் எனப்படும். அது சரீரம், மனம் சம்பந்தப்பட்டதாகும். வியாதி. அரசர், மிருகங்கள், கள்வர், மனிதர், பசாசு ஆகியவை காரணமாக ஏற்படும் துக்கம் சரீர சம்பந்தமான துக்கமாகும். பிறருடைய செல்வம், செளந்தரியம், கல்வி ஆகியவற்றைப் பார்த்துப் பொருமை கொள்ளுதல் மனதிற்கு ஏற்படும் துக்கமாகும்.இவ்விதமாகக் கன்மம் ஏற்படுகின்றது.
முற்பிறவிகளிற் செய்த வினை செய்தவனையே தொட ரும். ஒருவர் செய்த வினை இன்னெருவரைப் பாதிப்பதில்லை, செய்த வினையின் பலனை ஒருவன் அனுபவித்தே தீர்க்க வேண்டும். ஆகையால் இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்கும்போது செய்வினையின் காரணமாகவே அனு பவிக்கின்ருேம் என்று நாம் அறியவேண்டும்.
" அறியாமை ஆணவந் ஆணசுக துக்கங்
குறியா வினையென்று கொள்' என்று உண்மை விளக்கங் கூறுவதைக் கவனிக்கலாம்.
விதியென்னும் சுழலிலகப்பட்டு இன்னசெய்வதென்று தெரியாது மக்கள் கலக்கம் அடைகின்றனர். அவ்விதமான நிலையிலும் பொய்யானதும் நிலையற்றதுமான வாழ்க்கை யிலே பற்றுவைத்து அவர்கள் இருக்கின்றனர். பலவகைப்
ᏬᏪ, 9

Page 50
முப்பொருள் உண்மை விளக்கம்
பட்ட அல்லல் தோன்றும்போது விதியை நொந்து மனம் நொந்து அழுகின்றனர். இந்நிலையை அருணகிரியார் மிக வுந் தெளிவாகக் கூறுகின்ருர்,
"கதிதனை யொன்றையுங் காண்கின்றிலேன் கந்தவேள்முருகா நிதிதனை யன்னபொய் வாழ்விலன்பாய் நரம்பாற் பொதிந்த பொதிதனையுங் கொண்டுதிண்டா டுமாறெனப் போதவிட்ட விதிதனைதொந்து நொந்திங்கே யென்றன் மனம் வேகின்றதே"
உலகத்திற் சிலர் முன்செய்த நல்வினையின் பயனுக இன் பத்தை அனுபவிப்பதைக் கண்டு சிலர் மனம் வருந்துவ தைக் காணலாம். தாம் செய்துவைத்த புண்ணிய பாவத் தின் அளவுக்குத் தக்கபடியே பலனை அனுபவிக்கமுடியும் வினையின் பயன் குறித்த அளவேயாகும். கடும் முயற்சி செய்தபொழுதிலும் ஊழ்வினை வலிமையுடையதாகக் காணப் படும். இதுபற்றியே குமரேச சதகத்தில்,
:வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒருகாசு மட்டன்றி அதிகமா
1Gupm வானேறி உயரப்பறந்தாலும் ஊர்க்குருவி வண்ணப்பருந்தா |குமோ ஆங்காசலந்தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரக்காய் நல்லசுரையாகுமோ
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடிற் காணுமோ
m (நால்நாழிதான் ஐங்காதம் ஓடினுந் தன்வினைகள் தன்னேடே அடையாமல் நீங்கி
(விடுமோ யாரிடஞ் சென்றலும் வெகுதொலைகள் சுற்றிலும் அமைத்த படியன்றிவருமோ மங்காத செந்தமிழ்க்கொண்டு நக்கீரர்க்கு வந்ததுயிர் தீர்த்த - (முருகா மயிலேறி விளையாடுகுகனே புல்வயல் நீடுமலைமேவு கும
ரேசனே"

AAyb°- ፀ?
என்று கூறப்பட்டிருக்கிறது. இதிலிருந்து விதித்தளவே கிடைக்குமென்றறிகிருேம், இளம் வயது தொட்டு வறுமை யிஞற் பீடிக்க பட்டு அதிக துன்பத்தை அனுபவித்த ஒரு வாலிபன், தனக்குப் பெற்றேருடைய சொத்துக்சுள் இல் லாமையினலேயே, தான் அத்துன்பமான நிலையை எய்த நேரிட்டது என்று ஒருநாள் யோசித்தான். சிறிது நேரத் தின் பின் அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. தான் சோம்பலை நீக்கி முயற்சி செய்தால் செல்வனுகலாமென்ற எண்ணத்துடன் ஒரு பெரியாரை அணுகி, தான் பயிரிடு வதற்கு ஏற்ற ஒரு நிலத்தைக் கொடுக்கும்படியும் தான் பெறும் வருமானத்தில் ஒரு பகுதியை நிலத்திற்காக அப் பெரியாருக்குக் கொடுப்பதாகவும் கூறி அவரிடம் நிலத் தைப் பெற்றன். அது நெல் செய்யும் நன்னிலமாகையா லும் அவ்வாலிபனுடைய விடாமுயற்சியின் காரணத்தாலும் முதல் வருடத்திலேயே பெரும் விளைவு அவனுக்குக் கிடைத் தது. இவ்வருவாய் வருவதற்குச் சில நாட்களுக்கு முன் யாக அவனுக்குக் குன்மநோய் உண்டானது. உணவு சீர ணிப்பதில்லை. சோறு சாப்பிட முடியவில்லை. அவன் தனக் குள்ளே சிந்தித்தான். "இளம் வயதில் நேரத்திற்குப் போசனம் அருந்த முடியாமல் வறுமைத் துன்பம் என்னே வாட்டியது. நான் விடாமுயற்சி செய்து பெற்ற ஊதிய மும் பயனற்றதாயிருக்கிறது.
*
* வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்த லரிது"
என்று சொன்ன உண்மையை இன்று நான் அறிகின்றேன் நான் துக்கப்படுவதில் ஒன்றுமில்லை. செய்தீவினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால் எய்த வருமோ இரு நிதியம்" என்று ஒளவையார் கூறியதை இளம் வயதிலே படித்திருக் கின்றேன். இன்றுதான் அனுபவ வாயிலாக அறிகிறேன். கன்மத்தின் பயனை அனுபவித்தே தீரவேண்டும். அனுபவிக் கும்போது முன்னை, வினையை ஒழிக்கும்படி இறைவனைக்

Page 51
முப்பொருள் உண்மை விளக்கம்
கேட்கவேண்டும் வினை யேன் அழுதாலுள்&னப் பெறலாமே" என்றல்லவா மணிவாசகப்பெருமான் கூறியிருக் இன்ருர் " இவ்வாறு அவ்வாலிபன் சிந்தித்தான்.
விதிவசத்தாற் துன்பக்கடலில் ஆழ்ந்து மேலும்மேலும் கலக்கமுற்று மனவேதனை அடைவார் பலர். ஆனல் முன் செய்த ஊழ்வினையை அனுபவிப்பதற்காக இச்சென்மத்தை எடுத்திருக்கிருேம். அனுபவிப்பதற்கேற்ற உடம்பைத் தந்து பிறவியெடுக்கத் தக்கதாகப் பிரமா விதித்திருக்கிருன், ஆகையால் நெஞ்சத்தைப் புண்ணுக்காமல் நிம்மதி அடைய வேண்டுமெனப் பட்டினத்தடிகளுடைய பாடலொன்று விளக்குகிறது.
அழுதாற் பயனென்ன நொந்தாற் பயனென்ன வாவதில்லை தொழுதாற் பயனென்ன நின்னைஒருவர் சுடவுரைத்த பழுதாற் பயனென்ன நன்மையுந் தீமையும் பங்கயத்தோன் எழுதாப் படிவருமோ சலியாதி ரென்னேழை நெஞ்சே'
முன்செய்த நல்வினை தீவினையின்படி நான்முகன் எழுதி விட்டதை அனுபவிக்க நேரிடும் என்பது திண்ணம்.
பிராரத்தம், சஞ்சிதம் என்பன பழைய வினைகளாகும், பல பிறவிகளிலும் அனுபவித்து முடிவுருது எஞ்சிநிற்கும் வினை சஞ்சிதமாகும். சஞ்சிதவினையிலிருந்து எடுக்கும் உடம் பானது இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்வது பிரா ரத்துவமாம். இப்பிறவியில் அனுபவிக்குங் காலத்தில் நான் செய்தேன் " " இது என்னுடைய வல்லமை " என்று ஆணவமுனைப்பினல் கூறுவதும் செய்வதும் இப்பிறவியிலே பாவஞ்செய்வதற்குக் காரணமாகும். அவ்வித வினையே ஆகாமியம் எனப்படும். இப்பிறவியிலே செய்யப்படும் ஆகா மியம் என்ற கன்மவினைக்கு பிராயச்சித்தமுண்டு செய்த பிழையை உணர்ந்து அதைப் பொறுத்தருளும்படி இறை வனை இறைஞ்சிநின்று இனிமேல் அவ்விதம் நடந்துகொள்

· Amb
ளாத மனவுறுதி கொண்டார்க்கு ஆகாமிய வினேயின் பயன் குன்றும். வேதஆகமங்களிற் சொன்னபிரகாரம் ஒழுக்க சீலராய் வாழ்ந்து வருபவர்களுக்கும் பாவம் படிப்படியாக நீங்கும். குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசினவன்போல் முன்செய்த அழுக்குகளை நீக்கிவிட எடுத்த இந்த சென்மத் திலும் பாவமாகிய அழுக்கைச் சேகரிப்பது எவ்வளவு அறி வுக்குறைவு. மனிதராய்ப் பிறந்தும் மாக்கள்போல நடந்து Glasтоiтета)тиот 7
விதியைவெல்ல யாரால் முடியுமென்பதை விளக்கி ஒளவையார் கூறியிருக்கின்றர்.
" வினைப்பயனை வெல்வதற்கு வேதம் முதலாய
அனைத்தாய நூலகத்தும் இல்லை-நினைப்பதுஎனக் கண்ணுறுவது அல்லாமல் கவலைப்படேல் நெஞ்சேமேய் விண்ணு றுவார்க்கு இல்லேவிதி'
முற்பிறவியிலே செய்த வினையின் பயனை வெல்லும்வழி வேதம் முதலாய ஒருநூலிலும் சொல்லப்படவில்லை. ஆனல் முத்திநெறியில் நின்று ஒழுகுவாருக்கு அவர் தம்முள் நினைப் பதுபோலத் தோன்றுமேயன்றி விதியென்று ஒன்றுமில்லை. ஆகையால் வினைப்பயனை வெல்வதற்கு ஈசுவர தியானமே வழியாகும். இந்த உண்மை,
'சிவாயநம என்று சிந்தித்து இருப்போர்க்கு
Jutub 555Tib 35ota-puntua அதுவே மதியாகும் அல்லாத எல்லாம் விதியே மதியாய் விடும் "
என்று ஒளவையார் கூறியிருப்பதிலிருந்து விளங்கும். சிவாய நம என்றுச்சரிப்போருக்குத் தீங்கு ஒன்றும் ஏற்படாதென் றும், துன்பத்தை வெல்லுவதற்கு அதுதான் ஒரேயொரு வழியென்றும் அவ்விதம் நடந்துகொள்ளாது கையாளும் மற்றும் யோசனைகளையெல்லாம் விதிகொண்டு செலுத்தும் வழிகளாகும் என்பதை நாம் இச்செய்யுள்மூலம் அறியலாம்.

Page 52
፵ዕ முப்பொருள் உண்மை விளக்கம்
நமச்சிவாய என்பது தூலபஞ்சாட்சரம் போகம் அளிப்பது அதுவேயாகும், சிவாயநம என்பது குக்குமபஞ் சாட்சரம். வீடு விரும்புவார் புகலும் நுட்பவைந்தெழுத் தாகும் சீவனும் அருளும் ஆன்மாவும், திரோதமும், மல மும் என்ற ஐந்து பொருள்களை இத்திருவைந்தெழுத்து உணர்த்துகிறது. அருளானது ஆன்மாவினுடைய இரு ளாகிய மலத்தை நீக்கிச் சிவத்தை அடையச்செய்யும், சிவாயநம என்பது குறிக்கும் பொருள் இதுவாகும். சிவா னந்த அனுபூதியைப் பெற்ற மாணிக்கவாசகர் திருவாய் மலர்ந்தருளிய திருவாசகத்திலிருந்து இது புலப்படும்.
நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன் தேஞய்இன் அமுதமாய்த் தித்திக்கும் சிவபெருமான் தானேவந் தெனதுள்ணம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊஞரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே ' தனது உள்ளத்திற் புகுந்து அருள்செய்ததின் பயனக உடம் போடுகூடிய உயிர்வாழ்க்கையை வெறுத்து நீக்கும்நிலை மணிவாசகப்பெருமானுக்கு ஏற்பட்டது. அவர் இன்னுெரு இடத்திலே 'வினையிலே கிடந்தேனை புகுந்து நின்று போது நான் வினைகேடன் என்பாய்போல' என்று சொல்லும் போது வினையினல் தாக்குண்ட ஆன்மாவுக்கு வினையைக் கெடுக்கின்றவர் சிவபெருமானே என்று அறியத்தக்கதாக
இருக்கிறது.
ஐம்பொறிகளின் வசமாகிக் கெட்டுப்போகின்ற நெஞ் சத்தை விழித்து உய்யும்வழி இன்னதென்று அருணகிரியார் கந்தரனுபூதியிற் கூறியிருப்பதைக் கவனிப்போம், உன்னை வந்து சேர்ந்தோருக்கு இல்லையென்று சொல்லாது உன்வசம் உள்ளதை அன்புடன்கொடு முருகனுடைய திருவடிகளைச் சிந்திக்கவேண்டும். பலவகைப்பட்ட துன்பங்களை முருக னுடைய திருவடித் தியானமாகிய நெருப்பாலே சுட் டெ ரிக்க வேண்டும். பிறப்பு இறப்புக்களுக்குக் காரண

க்வழ ケ#
மாகிய அஞ்ஞானத்தையும் வினைகள் எல்லாவற்றையும் மெய்ப்பொருள் உணர்ச்சியின் மூலமாக நீக்கவேண்டும். **இக்கருத்தையுடைய கீழே தரப்பட்டுள்ள பாடலே கந்தர் அனுபூதியிற் காணப்படுகிறது,
'கெடுவாய் மனனே கதிகேள் கரவா
திடுவாய் வடிவேல் இறைதாள் நினைவாய் சுடுவாய் நெடுவே தனதுாள் படவே விடுவாய் விடுவாய் வினையா வையுமே *
இதிலிருந்து முருகப்பெருமானுடைய திருவடித் தியானத் தின்மூலமே எங்களைப் பாதித்துக்கொண்டிருக்கும் வினையை நீக்கிவிடலாமென அறிகின்ளுேம். அவ்விதம் தியானத்தில் ஈடுபடும் ஒருவர் ஒழுக்கத்தினின்று சிறிதேனும் வழுவாத தேறியைப் பின்பற்ற வேண்டும். மனம், வாக்கு, செயல் ஆகிய திரிகரணங்கள் சுத்தியுடையனவாக இருக்க வேண் டும். அவ்விதம் செய்யின் தியானம் பலனளிக்கும். இல்லற வாழ்க்கை நடத்தும் ஒருவன் ஞானியைப்போன்று உலக வாழ்க்கையை உடனடியாக நீக்க முடியாது. ஆனல், ஒழுக்கசீலனக வாழலாம். அவ்விதம் வாழும்பொழுது பழையவினையை அனுபவிக்குங்கால் இப்பிறவியிலே தீவினை களை நீக்கி வாழவேண்டும்.
ஓர் ஆத்மா முற்பிறவிகளிலே செய்த கன்மவினையை அனுபவித்தே தீரவேண்டுமென அறிந்தோம். அவ்வித கொள்கை ஒருவன் விடாமுயற்சி செய்வதற்குத் தடை யாயும் இருக்கலாம். ஈசுவரதியானம் சீரியவொழுக்கம், மனவுறுதி ஆகியவைகளின்மூலம் கன்மத்தை ஒரளவுக்கு வெல்லலாம் என்ற நம்பிக்கை இருக்கவேண்டும், அளவு கடந்த பிரயத்தனத்தினுல் பகீரதன் ஆகாயகங்கையை உல குக் கொண்டுவந்தானெனக் கூறுவர். இக்கொள்கையை வற்புறுத்துஞ் செய்யுளொன்று திருக்குறளிற் காணப்படு கிறது.

Page 53
፳፰ முப்பொருள் உண்மை விளக்கம்
"தரகழயும் உப்பக்கங் காண்பர் உலேவின்றித்
தாழா துளுற்று பலர்'
அளவுகடந்த பக்தியுடைய மார்க்கண்டேயர் இயமனே வென்றர். ஒரே பிடிவாதமான பக்தியுடன் திருக்கயிலா யத்திற்குப் போய்க்கொண்டிருந்த அப்பர் சுவாமிகள் முன் பாக இறைவன் தோன்றிஞர். உண்மையான அடியவர் களுக்கு கோளும் நாளும் நன்மை செய்யுமென திருஞான சம்பந்த சுவாமிகள் அருளிய கோளறு பதிகமூலம் அறி ஒருேம். இல்லறத்திலுள்ளவன் ஆற்றிலோடும் தண்ணி ரோடு ஓடிச்செல்லும் பொருள்போலத்தான் விதியிலகப் பட்டு விட்டதாக எண்ணி மனந்தளரக்கூடாது. ë? - T முயற்சியும் அறவாழ்வும் பயனளிக்கும். எல்லாவற்றிற்கும் மேல் இறைநம்பிக்கை உற்ற நேரத்திற் துண்புரியும். மத்திரமும் தந்திரமும், மருந்துமாகித் தீராநோய் தீர்த் தருள் வல்லான்தன்னே' என்று அப்பர் தேவாரம் ஆறுதல் அளிக்கிறது. மாமூதநேரய் இருவகைப்படும். என்வித வைத் நிய ஒதிச்சையினுலும் குணமடையாத நோய் ஒன்ருதும் மற்றது பிறவிப் பிணியாகும், இருவகைப்பட்ட நோய்களுக் கும் அவுடதம் வழங்குபவர் இறைவனுகும். ஆகையால் தளராத உள்ளத்தோடும் நம்பிக்கையோடும் இறைவனேப் டிரார்த்தித்தால் கன்மவினேயின் பலங் குறைந்து பலன் இடைக்கும், என்பதை அனுபூதிமான்கள் கூறுவதிலிருந்து அறியலாம், உலகெங்கும் இறைவனருள் பாலிக்கவேண்டு மெனப் பிரார்த்திப்போமாக.
=nedi i spim


Page 54

熟 .ெ சிவமயம்
சாஸ்திரவியல்
11 தத்துவங்கள்--96 அகக் கருவிகள் (36)
இறைவன் ஆன்மாக்கள்மீதுள்ள கருணையினுல் அவை கள் கன்மங்களே அனுபவித்து ஈற்றில் மலபரிபாகம் அடையும் பொருட்டு, தனு, கரண, புவன போகங்களைக் கொடுக்கின் ருன், தனு என்பது நாம் பெற்றிருக்கும் தூல உடம்பாகும். கரணமாவது இந்திரியம், அந்தக்கரணம் முதலிய சூக்கும உடம்பாகும். புவனம் என்பது உலகு. போகமாவது உல கத்திலே நாம் அனுபவிக்கும் பொருள்களாம்.
மனுஷசரீரம் அவரவர்களுடைய கையினுல் எட்டுச் சாண் நீளமும் நாலுசாண் பருமனும் அல்லது தொண் ணுாற்ருறு வி ர ற் க ைட ப் பிரமாணமுமுள்ளது. இதற்குள் தொண்ணுாற்றறு தத்துவங்கள் அடங்கி இருக் கின்றன. அண்டத்திலுள்ளது உடலாகிய பிண்டத்திற் காணப்படுகிறது. மனுஷ் உடம்பு ஒரு நூதனமான இயந் திரம்போன்றது. அதனுடைய உட்கருவிகள், புறக் கருவி கள் யாவை எனவும் ஒவ்வொன்றின் தொழில்கள் யாவை யெனவும் அறியவேண்டும், வெளித் தோற்றத்துக்குக் காணப்படும் தூலவுடம்பை வளர்ப்பதில் மாத்திரம் கவ னஞ் செலுத்தினுல் நாங்கள் மிருகங்களுக்கு ஒப்பாவோம். சரி பிழையெனப் பகுத்தறிதல், யோசித்தல், 'கதைத்தல், சிரித்தல் ஆகியன மிருகங்களிடையே காணப்படாத குணங் களாம். ஆனல், இவைகளைச் செய்வதற்கு உதவியாய் இருக்கும் கருவிகளைப்பற்றி அறிதல்வேண்டும். அப்போது தான் மானிடப் பிறவியின் நோக்கத்தை அறிந்துகொள்ள முடியும். இன்பசொரூபியாயிருக்கின்ற சிவத்தோடு இரண் டறக் கலத்தலே பிறவியின் நோக்கமென அறிந்தபின் அற
(թ, 10

Page 55
74 முப்பொருள் உண்மை விளக்கம்
நெறி வாழ்க்கையை வாழ்ந்து அவருடைய கிருபைக்கு ஆளாக முயலுவோம். வாழ்நாள் முழுவதும் நமக்கு வெளியேயுள்ள இயற்கையின் இரகசியங்களை அறிந்து கொள்ளப் பிரயத்தனஞ்செய்யும் மனிதன், தனக்கெனக் கொடுக்கப்பட்ட உடம்பொடு வாழ்நாள் முழுவதும் வாழுமவன் அவ்வுடம்புக்குரிய தத்துவங்களை ஏன் அறிந்து கொள்ள முடியாது? ஆகையால் உட்கருவிகளாகிய முப் பத்தாறு தத்துவங்களைப்பற்றியும் புறக்கருவிகளாகிய அறு பது தத்துவங்களைப்பற்றியும் அறியவேண்டியது அவசியம், தத்துவங்கள் மூலப் பொருள்களாகும். அவற்ருல் ஆகிய காரியங்கள் யாவும் தாத்துவிகம் எனப்படும்,
உலகம் தோன்றுவதற்கு மாயை முதற்காரணமாகும். சக்தி துணைக்காரணமாகும். கடவுள் நிமித்தகாரணராவர். மட்குடத்திற்கு மண்ணெல்வாறு முதற்காரணமாகிறதோ அதேபோன்று உலகந் தோன்றுவதற்கு மாயை முதற் காரணமாகிறது. ஆகையால் மாயை என்பது யாது? அது என்றும் உள்ளதா ? அது அழிந்து தோன்றுகிறதா? என்ற பல ஐயப்பாடுகள் எழுவதற்கு இடமுண்டு.
மாயை இறைவனுடைய பரிக்கிரக சத்தி(வைப்புச் சத்தி)யாயும், ரூபமில்லாததாயும் நித்தமாயும் உள்ள தொன்ருரும். இறைவன், ஆன்மாக்கள், மாயை அநாதியா யுள்ளன.
* ஏகனநேக விருள்கரும் மாயையிரண்
டாகவிவை ஆருதியில் '
ஒருவளுகிய இறைவனும் பலவாகிய ஆன்மாக்களும் அறிவை மயக்குகின்ற ஆணவமும், கன்மமும், சுத்தமாயை, அசுத்த மாயை எனுமிரண்டும் ஆகிய இவையாறும் அனுதியான வைகளென்று "திருவருட்பயன் ' மூலம் அறிகின்றுேம்,
உயிர்களோடு அநாதியாயுள்ள ஆணவமலத்தை நீக்கும் பொருட்டு மாயை, கன்மமாகிய இருமலங்கள் தொழிற் பட்டு ஆன்மாக்கள் உய்யும்படி இறைவன் உதவிபுரிகின் முன் ஆணவமலம் அறிவை மறைக்கிறது. மாயை

சாஸ்திரவியல் - தத்துவங்கள் 98 7.
அறிவை விளக்குகிறது. கன்மமானது மாயை அறிவை விளக்குகிறதற்குத் துணைபுரிகிறது. விஞ்ஞானகலர், பிரள யாகலர், சகலர் என மூவகை உயிர்கள் இருத்தலின் அவற் றின் தனு, கரண, புவன, போகங்களும் மூன்று வகையாய் இருக்கும். இவற்றிற்கு முதற்காரணமான மாயையும் சுத்த மாயை, அசுத்தமாயை, பிரகிருதிமாயை என மூன்று வகைப்படும். பிரகிருதி மாயையே மூலப்பிரகிருதி எனப்
படும்.
சுத்தமாயை ஆணவத்தோடும் கன்மத்தோடும் கலப் புருது தூயதாய் இருக்கும். அசுத்தமாயை ஆணவத் தோடும் கன்மத்தோடும் கலந்துநிற்பதஞல் அது அப்பெய ரைப் பெறுகிறது. பிரகிருதிமாயை, அசுத்தமாயையினின் றும் தோன்றும் ' கலை தத்துவத்தின் காரியமாகும். சுத்தமாயையின் காரியங்கள் " வைந்தவம்’ எனப்படும். அசுத்தமாயையின் காரியங்கள் " மாயேயம் ' எனவும் பிர கிருதிமாயையின் காரியங்கள் 'பிராகிருதம் ' எனப்படும்.
இம்மும்மாயைகளினின்றும் தோன்றும் காரியங்களா கிய முப்பத்தாறு தத்துவங்களைப்பற்றி அறிதல்வேண்டும். பரிபூரண சச்சிதானந்தமாகிய சிவத்தினிடத்தே அக்கிணி யிற் சூடுபோல ஒரு சத்தியுண்டு, பிரபஞ்சத்தைத் தோற்று விப்பதற்குச் சிவனுக்குத் துணைக்காரணமாய் விளங்கு கின்ற அவ்வாதிசத்தியானது இச்சாசத்தி. கிரியாசத்தி, ஞானசத்தியென முத்திறப்படும். இம்மூன்றனுள் ஞான சத்தி சுத்தமாயையிற் பொருந்தித் தொழிற்படுதலால் அம் மா  ைய யி லி (ரு ந் து சர்வான்மாக்களுக்கு அறிவை எழுப்புவித்து நின்ற ஞானமாகிய நாத தத்துவம் தோன் றும், அந்த நாதத்திலே கிரியாசத்தி பொருந்தித் தொழிற் படுதலால் சர்வான்மாக்களுக்கும் உண்டாகிய தொழிலை எழுப்புவித்து நிற்கிற விந்து தத்துவம் தோன்றும். அவ்விந்து விலே ஞானசத்தியும் கிரியாசத்தியும் ஒத்துத் தொழிற்படு தலினல் சாதாக்கிய தத்துவந் தோன்றும், அச்சாதாக்கியத் திலே கிரியைகூடி ஞானங்குறைந்து தொழிற்படுதலால் மகேஸ்வர தத்துவந் தோன்றும். அம்மகேஸ்வர தத்துவத்

Page 56
76 முப்பொருள் உண்மை விளக்கம்
திலே ஞானங்கூடிக் கிரியை குறைந்து வியாபரித்தலால் சுத்தவித்தைத் தத்துவந் தோன்றும். ஆகையால் சுத்த மாயையிற் தோன்றும் சிவதத்துவங்கள் ஐந்தாகும்; அவை,
(1) நாதம் (2) விந்து (3) சாதாக்கியம் (4) மகேஸ்வரம் (5) சுத்தவித்தை
என்பனவாம். சுத்தமாயையே சுத்தப் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாகும். ஆணவமலம் தவிர்ந்த ஏனையமலங்கள் நீங் கப்பெற்ற ஆன்மாக்களாகிய விஞ்ஞானகலருக்கு உரிய தனு, கரண, புவன, போகங்கள் இச் சுத்தமாயையிற்தோன்றும். சுத்தமாயையின் காரியம் சொற்பிரபஞ்சம், பொருட் பிர பஞ்சம் என இருவகைப்படும். சொற்பிரபஞ்சம் எழுத்துக் களை உறுப்பாகக் கொண்ட சொற்களும், சொற்ருெடர் களுமாம். எழுத்துக்கள் வன்னம் எனப்படும். சொற்கள் பதம் எனப்படும். சொற்ருெடர்களிற் சிறப்புடையது மந் திரமாகும். ஆகையால் வன்னம், பதம், மந்திரம் எனச் சத்தப்பிரபஞ்சம் மூன்ருகும். சத்தப்பிரபஞ்சம் அறிவுக்காரண மாய் இருத்தலால் அது சுத்தமாயையின் காரியமாகும். வேதம், ஆகமம் புராண சாத்திரங்கள் சொற் பிரபஞ்சத் துள் அடங்கும், சொற்பிரபஞ்சம் வாக்கு எனப்படும். குக் குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என வாக்குகள் நால் வகைப்படும். இந்நான்கு வாக்குகளும் கிரியா சத்தியாற் செலுத்தப்பட்டு சுத்த தத்துவங்கள் ஐந்திலும் இருக்கும். சூக்குமை சிவதத்துவத்திலும், பைசந்தி சத்தி தத்துவத்தி லும், மத்திமை சாதாக்கிய தத்துவத்திலும், குக்குமை வைகரி, மகேஸ்வர தத்துவத்திலும், தூலவைகரி சுத்த வித்தையிலும் இருக்கும்.

சாஸ்திரவியல் - தத்துவங்கிள் = 98 77
நிவிர்த்திகல முதலிய பஞ்சகலைகளும், தத்துவங்களும் 224 புவனங்களும் பொருட் பிரபஞ்சமாகும். இது அர்த்தப் பிரபஞ்சம் என்றுங் கூறப்படும் சுத்த மாயையின் காரியம் சத்தபிரபஞ்சம், அர்த்தப்பிரபஞ்சம் அல்லது சொல்வடிவம் பொருள் வடிவம் என்பனவாகும், இந்தச் சுத்த மாயை குண்டலினி என்றும், குடிலே என்றும், 'மகாமாயை என் றும், ஊர்த்தவமாயை என்றும், விந்து என்றும் கூறப்படும்.
சுத்தமாயையிற் தோன்றும் சிவதத்துவம் ஞானமாய் இருக்கும். சக்தி தத்துவம் கிரியையாயிருக்கும். சிவதத்து வம் சிவனுக்கு இடம். அதுவே நாதம் எனப் பெயர்பெறும். சத்தி தத்துவம் காருண்ணியத்துக்கு இடம். இது விந்து எனப்படும். சாதாக்கிய தத்துவம் அணுக்கிரகத்துக்கிடம், அது சதாசிவம எனப்படும். ஈசுரதத்துவம் திரோபவத்துக் கிடம். அது மகேஸ்வரம் எனப்பெயர்பெறும். சுத்தவித்தை சங்காரத்துக்கு இடம். அது உருத்திரம் எனப்படும். இனி கலை முதல் பிருதிவி ஈருக முப்பத்தொரு தத்துவங் கள் சுத்த மாயையிலிருந்தே தோன்றிக் காரியப்படும். இவை அசுத்த மாயையிற் தோன்றும். கலை முதலிய தத் துவங்களின் வேரு ய்ச் சுத்த மாயா காரியமாகவே இருக்கும். சரீரம். இந்திரியம், அந்தக்கரணம் முதலியவை அவற்ருல் உண்டாகும். சிவதத்துவத்தைத் தோற்றுவித்துத் தொழிற் படுத்துங் கடவுள் சிவபெருமானேயாம். -
இனி அசுத்தமாயையைப் பற்றி அறிதல் வேண்டும். இது மலகன்மங்களோடு சேர்ந்து அசுத்தப் படுவதால் அசுத்தமாயை எனப்படும் அது உருவமில்லாத காய், ஒன்முய் சகல சகத்திற்கும் ஒரு காரணமாய், சடமாய், சர்வ் வியா பகமாய் பதிக்கு அடங்கி இருக்கும் வைப்புச் சத்தியாம். ஆன்மாக்களுக்குத், தனு, கரண புவன, போகங்களை உண் டாக்குவதாய் மலங்களிலொன்முய் விபரீத உணர்வை உண்டாக்குவதாய் அது விளங்கும். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களையுடைய சகலர் எனக் கூறப் படும் ஆன்மாக்களுக்குத் தனு, கரண, புவன, யோகங்களை இவ் அசுத்தமாயை கொடுக்கும்,

Page 57
ፖፀ முப்பொருள் உண்மை விளக்கம்
அசுத்த மாயையிற் தோன்றுந் தத்துவங்கள் எழாகும்.
(1) asb (2) நியதி (3) கல (4) வித்தை (5) அராகம் (6) புருடன்
(7) DT 65u
அசுத்த மாயையை இறைவன் அனந்தர் என்னும் வித்தியேசுரர் மூலம் காரியப்படுத்துகின் ருர், அத ஞ ல் வித்தியா தத்துவம் என்று இவ் ஏழும் கூறப்படுகின்றன. சுத்ததத்துவங்கள் ஐந்தனுள் சத்தி தத்துவம் கலையை எழுப்ப கலையானது ஆணவமலத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியாசத்தியை விளக்கி வினைக்கீடாக வரும் விடயபோகங் களிற் செலுத்திநிற்கும்.
சுத்தவித்தை வித்தையை எழுப்ப, வித்தையானது புத் தியின் வாயிலாக வந்து விடயபோகங்களை ஆன்மா பொருந் தும்படி ஆன்மாவுக்கு அறிவை உதிக்கச்செய்யும். இதனல் ஆன்மாவின் ஞானசக்தி விளங்கும்.
ஈசுரதத்துவம் அராகத்தை எழுப்ப, அராகம் ஆன்மா வுக்கு இச்சையை உண்டாக்கும். ஆன்மாவினுடைய இச்சா சக்தி விளங்கும்
சத்தி தத்துவம் காலத்தையும் நியதியையும் வரை யறுக்கும். காலம் இறப்பு நிகழ்வு, எதிர்வு என மூன்ருகி ஆன்மாவுக்குக் கன்மத்தைக் கூட்டி நிற்கும் அது உயிர்களின் வினைப்பயனை முற்றுப்பெறுவித்தல், நிகழ்த்துதல், தோற்று வித்தல் என்பவற்றைச் செய்யும். காலம் சுக துக்க போகங் கள் அனுபவிக்க வேண்டிய காலவரையறையைச் செய்து கொண்டிருக்கும். நியதி அவரவர் செய்த கன்மத்தை அவரவரே அனுபவிக்கச்செய்யும். அவரவர் செய்த கன்மத் தின் பயன் வேருெருவரை அடையாது என்பதாம்.

சாஸ்திரவியல் - தத்துவங்கள் - 96 79
ஆன்மா காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என் னும் ஐந்து தத்துவங்களினற் கட்டப்பட்டுச் செயற்படும். இவ் ஐந்து தத்துவங்களும் ஆன்மாவோடு ஒட்டிநிற்கும். இவை ஐந்தும் ஐந்து சட்டைகள் போல இருத்தலால் இவற்றைப் "பஞ்சகஞ்சுகம் ' என்பர். (கஞ்சுகம் என்பது சட்டையைக் குறிக்கும்) இவ் ஐந்து தத்துவங்களையும் பொருந்தி நின்று கன்மபலகைளைப் புசிக்கும் போது ஆன்மா புருடன் எனப்படும்.
மாயை பரந்து கிடக்கும் அசுத்த மாயையின் ஒருபகுதி. அது அனந்ததேவரால் ஏனைய தத்துவங்கள் தோன்றுதற் குத் தகுதியாய் உடையது. இது மோகினி என்றும் சொல் லப்படும்; இது ஒன்றையும் நினைக்கவொட்டாமல் மயக் கத்தைச்செய்யும்.
இனி ஆன்மதத்துவங்களைப்பற்றி அறிதல் வேண்டும். கஜல "என்னும் தத்துவத்தினின்று மூலப்பிரசுருதி தோன் றும். மூலப்பிரகிருதியை இறைவன் சீகண்டருத்திரர் மூல மாகத் தொழிற்படுத்துவர். சீகண்டருத்திரர் சகல ஆன் மாக்களுக்கும் தலைவர். ஆகையால் அவரால் தொழிற் படும் தத்துவங்கள் 'ஆன்மதத்துவம்' எனப்படும்.
ஆன்மதத்துவம் 24: அவை
(). பூதம் 5 - 1. பிருதிவி
2 அப்பு 3. தேயு 4. வாயு
5. ஆகாயம்
f2) ஞானேந்திரியங்கள் 5 - 1. செவி (சுரோத்திரம்)
2. உடம்பு துவக்கு) 8 as GT (சட்சு) 4. நாக்கு (சிங்குவை) 5, மூக்கு (ஆக்கிராணம்)

Page 58
80 முப்பொருள் உண்மை விளகசும்
(3) கன்மேந்திரியங்கள் 5 - 1 வாய் (வாக்கு)
2. கால் (பாதம்) 3. கை (பாணி) 4. அபானம் (பாயு)
5. குறி (உபத்தம்)
(4) தன்மாத்திரைகள் 5 - 1. ஒசை (சத்தம்)
2. ஊறு (பரிசம்) 3. ஒளி (ரூபம்) 4. சுவை (ரசம்) 5. நாற்றம் (கந்தம்)
(3) அந்தக்கரணங்கள் 4 - 1. மனம்
2. புத்தி 3. சித்தம் 4. அகங்காரம்
இவ்விருபத்தினுன்கு தத்துவங்களுக்கும் மூலகாரணமாகிய மூலப்பிரகிருதி சாத்துவிகம், இராசதம், தாமதம் என்னும் முக்குணவடிவாய் நிற்கும். அம் முக்குணங்களும் சூக்கும மாய் நிற்கும் நிலையே மூலப்பிரகிருதி. அது வெளிப்படாது நிற்றலால் 'அவ்வியக்தம்' எனப்படும்.
மூலப்பிரகிருதி என்னும் சத்தியினின்றும் சத்தத்தைத் தன்மாத்திரையாயுள்ள ஆகாயம் தோன்றிற்று. ஆகாயத் தினின்றும் பரிசத்தைத் தன்மாத்திரையாயுள்ள வாயு தோன்றிற்று. வாயுவினின்று ரூபத்தைத் தன்மாத்திரையா யுள்ள அக்கினி தோன்றிற்று. அக்கினியினின்று இரசத்தைத் தன்மாத்திரையாயுள்ள அப்பு தோன்றிற்று. அப்புவினின்று கந்தத்தைத் தன்மாத்திரையாயுள்ள பிருதுவி தோன்றிற்று. இந்தச்சூக்கும பூதங்களினின்றும் குக்கும சரீரங்களும் தூல சரீரங்களும் தோன்றும்.

சாஸ்திரவியல் - தத்துவங்கள் -98 8.
இனி, ஞானேந்திரியங்களைப்பற்றி அறிதல் வேண்டும். சுரோத்திரம் (செவி) ஆகாயத்தின் அம்சமான படியால் ஆகாயத்தின் குணமா ன சத்தத்தை அறியும். துவக்கு (உடம்பு) வாயுவின் அம்சமானபடியால் வாயுவின் குண மானபரிசத்தை அறியும், சட்சு (கண்) அக்கினியின் அம்ச மானபடியால் அக்கினியின் குணமான ரூபத்தை அறியும். சிங்குவை (நாக்கு) அப்புவின் அம்சமானபடியால் அப்புவின் குணமான இரசத்தை அறியும். ஆக்கிராணம் (மூக்கு) பிரு திவியின் அம்சமானபடியால் பிருதிவியின் குணமான கந் தத்தை அறியும். இவ்விதம் ஐந்தும் ஒன்ருே டொன் று கூடாமையால் ஒன்று மற்றென்றின் குணத்தைக் கிரகிக்க அறியாது. ஞானேந்திரியம் என்பது அறிவுப்பொறி. இவை பஞ்சேந்திரியங்கள் என்றுங் கூறப்படும் தத்துவங்களாகிய செவி முதலியன எங்களுடைய கண்ணுக்கு புலப்படும் செவி முதலியன அல்ல. அவ்விடங்களிலிருந்து கேட்டல் முதலியவற்றைத் தரும் சக்திகளாகும்.
இனி கன்மேந்திரியங்களைப்பற்றி அறிதல் வேண்டும். கன்மேந்திரியங்கள் வாக்கு, பாதம். பாணி, பாயு, உபத் தம் என ஐந்தாகும். செயற்கருவிகளாதலால் இவை கன் மேந்திரியம் எனப்படும். வாக்கு பேசுதற் கருவியாகும். பாதம் நடத்தற் கருவியாகும். பாணி இடுதல், ஏற்றல் செய்யும் கருவியாகும். பாயு மலசலாதிகளைக் கழிக்கும் உபத்தம் ஆனந்தத்தை உண்டுபண்ணுங் கருவி. கன் பேந் திரியங்கள் ஐந்தும் தனித்தனி மறுதொழில் செய்யமாட் t-no ஆனல் ஐந்து வாயுக்கள் ஒன்ரு ய்க்கூடி கன்மேந்திரியம் ஐந்தின் வழியினலும் ஐந்து தொழில்களைச் செய்து முடிக் கும். இந்த வாயுக்கள் ஐந்தும் கன்மேந்திரியங்கள் ஐந்தும் பூதங்களின் இராசத அம்சமாய்க் கிரியா சாதனமாயின.
இனி தன்மாத்திரைகளாகிய சத்தம், ரூபம், பரிசம், ரசம், கந்தம் ஆகிய ஐந்தையும் பற்றி அறியவேண்டும். இத்தன்மாத்திரைகள் பஞ்சபூதங்களுக்குத் தொடர்புடைய மையால் இவை குக்குமபூதம் எனப்படும். குக்குமநிலையில்
@p • 11

Page 59
82 முப்பொருள் உண்மை விளக்கம்
நிற்கும் இத்தன்மாத்திரைகளின் பெயரே செவி முதலிய ஞானேந்திரியங்கட்குப் புலனுய் விளங்குகின்ற ஐம்புலன் களுக்குப் பெயராய் நிற்கும். இவ்விரண்டையும் ஒன்றே என நினைக்கக் கூடாது. அவை வெவ்வேருகும்.
இப்பொழுது அந்தக்கரணங்களைப் பற்றி அறிதல் வேண்டும். அவை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்குமாம். பஞ்சபூதங்களுக்குரிய அம்சங்கள் இவ் அந்தக்கரணங்களிற் காணப்படுகின்றன. வாயுவின் அம்சம் கூடியதற்கு அடையாளம் மனம் என்ற அந்தக்கர எணமும் வாயுவைப்போல் அலைகின்றது. அக்கினியின் அம் சம் கூடினதற்கு அடையாளம் அக்கினியைப்போல் புத்தி என்ற அந்தக்கரணம் இன்ன தென்று விளங்குகின்றது. அப்புவின் அம்சம் கூடினதற்கு அடையாளம் சித்தம் என்ற அந்தக்கரணம், அப்புவைப் போல் விடயங்களிற் பற்றி இருக் கிறது. பிருதிவியின் அம்சம் கூடினதற்கு அடையாளம் அகங்காரம் என்ற அந்தக்கரணம் பிருதிவியைப்போல கடினமாக நின்று 'நான்' என்று அபிமானிக்கின்றது. இனி ஆகாயத்தைப் போன்று சகலமான கேள்விகளுக்கும் இடம் கொடுத்தலால் ஆகாயத்தின் அம்சம் உள்ளம் என் பதிற் காணப்படுகின்றது.
மனம் நினைத்தற் கருவியாகும். கண் முதலிய பொறி களாற் கண்டவற்றை நினைவிற் கொள்வதற்கும், காணும் பொருள் இதுதான அல்லது இன்னதொன்ரு என ஐயுறு தற்கும் மனம் கருவியாகும். பொறி வாயிலாக வரும் பொருளை மனம் உடனே ஐயுறுதலும், பின்னர் புத்தி இதுதானென துணிவு கொண்டு நிற்றலும், பின்னர் புத்தி யாற் துணியப்பட்டதை சித்தம் மீண்டும் சிந்தித்து இன்ப துன்பங்களை எய்துவிக்கும். அகங்காரம் "இதனைச் செய் வேன், இதனை ஆராய்வேன். இதனை நீக்குவேன்' எனச் செயற்படும் புத்தி தத்துவம் திட்டமாகத் துணிதற்குக் கருவியாகலானும் ஆன்மாவின் கொள்கைகள் பலவற்றிற் கும் அதுவே கருவியாகலானும் புண்ணிய பாவம் ஆகிய nıfbı3Ab(2 Ağv Lju) ö. 98ırl-7 (Elb. verildir 3ıÜllâf

சாஸ்திரவியல் & தத்துவங்கள் - 96 89
யிடமாகவே இன்ப துன்பங்களை நுகருகின்றது. புத்தி தத் துவத்திலும் முக்குணங்கள் உண்டு. அவற்றின் காரியமாகிய கொள்கைகள் இப்புத்தியின் கண்ணே தோன்றும்.அவை பாவ கம்" எனப்படும் புத்தியிற் தோன்றும் பாவகங்கள் தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம் என்னும் நான்கும் அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அநைசுவரியம் ஆகிய எட்டாகக் கூறப்படுகிறது. முதன் நான்கும் சாத்து விக குணத்தால் தோன்றுவன. அவைராக்கியம் இராசத குணத்தால் உளது ஏனைய மூன்றும் தாமத குணத்தால் உளது. உயிர் இப்பாவங்களில் அழுந்தி இன்ப துன்ப மயக்கத்தை அடையும். சாத்துவிகத்தால் இன்பமும், இரா சதத்தால் துன்பமும், தாமதத்தால் இவையிரண்டுமின்றியி ருக்கும் நிலையாகிய மயக்கம் ஏற்படும். அகங்காரம் சாத்துவிக, இராசத, தாமத அகங்காரம் என மூன்ருகும். சாத்துவிக அகங்காரம் "தைசதம்’ என்றும் இராசத அகங்காரம். "வைகாரிகம்' என்றும் தாமத அகங்காரம் "பூதாதி' என்றும் சொல்லப்படும்.
இவ்வாறு சொல்லப்பட்ட அந்தக்கரண விருத்தி ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் ஆகப்பத்தும் சூட்சும பூதங்களின் சத்துவ அம்சத்திலே தோன்றினமையால் ஞானசாதனமா யின. அந்தக்கரணமாவது அகத்தே இருக்கும் கருவியாம். அது உள் அந்தக்கரணம் புற அந்தக்கரணம் என இரு வகைப்படும். உள் அந்தக்கரணமாவது: கலை, வித்தை, அராகம், புருடன் முதலிய வித்தியா தத்துவங்களாகும். புற அந்தக்கரணமாவது: மனம், புத்தி அகங்காரம் சித் தம் என்பனவாம். இந்திரியத்தை நோக்க மனம் முதலியன அகத்திலிருப்பதால் அந்தக்கரணம் எனவும், கலை முதலிய தத்துவங்களுக்குப் புறத்தே இருப்பதால் அவை புற அந்தக் கரணம் எனவும் கூறப்பட்டன. கலை முதலிய தத்துவங் கள் மனம் முதலிய அந்தக் கரணங்களுக்கும் உள்ளாய் இருப்பதால் உள் அந்தக்கரணம் என்று சொல்லப்பட் هلاقصسا

Page 60
3. (p)(Lff(ßeh aske)10 fahld
ஞானேந்திரியம் 5, கன்மேந்திரியம் 5, அந்தக்கரணங் கள் 5, வாயுக்கள் 5 ஆகிய 20 தத்துவங்களும் சூக்கும சரி ரம் என்று சொல்லப்படும். துலசரீரம் 36 தத்துவங்களைக் கொண்டுள்ளது. சிவதத்துவம் 5, வித்தியாதத்துவம் 7, ஆன்ம தத்துவம் 24, ஆகியன 3 தத்துவங்களாகும். இந்த 36 தத்துவங்களும் சூக்குமமாய்த் தொழிற்படுவதை நாம் கவனிக்கலாம். இந்த 36 தத்துவங்களும் புறத்திலே புவன வடிவாயும் அகத்திலே குக்கும வடிவாயும் இருக்கும், அம் முப்பத்தாறனுள் பஞ்ச பூதங்களின் காரியம் தூலதேக மாசத் தோன்றும். புவனத்தில், பிருதிவி தத்துவ புவனம்மட் டும் தூலமாய்க் காணப்படும். ஏனைய புவனங்கள் சூக்கும மாய் உள்ளன, இந்தத் தத்துவங்கள் எல்லாம், பொது எனவும், சிறப்பு எனவும், பொதுச்சிறப்பெனவும் தனித் தனி மூவகைப்பட்டு உயிர்கள்தோறும் வேறு வேருக விளங்கும், இது எவ்வாறெனில் புவனவடிவாகிய தத்து வங்கள் எல்லாருக்கும் பயன் தருதலால் பொதுவெனப் படும். சூக்கும வடிவாகிய தத்துவங்கள் தனக்கு மட் டும் போகம் அனுபவிப்பதற்குக் கருவியாதலால் சிறப்பு எனப்படும். தூலதேக வடிவாகிய தத்துவங்கள். தனக்குப் போகம் அனுபவிப்பதற்கும் மனைவி முதலியோர் சந்தனம், பூமாலை போல அனுபவிக்கவும் காணப்படுதலால் பொதுச் சிறப்பு எனப்பட்டது.
36 தத்துவங்களுள் சுத்தமாயையின் காரியமாகிய சிவதத்துவம் ஐந்தும் இறைவனுக்கு இடமாகி, தமக்குக் கீழுள்ள தத்துவங்களை இயக்கி நிற்பதால் அவை பிரேரக காண்டம் எனப்படும். அசுத்தமாயா தத்துவங்களாகிய வித் தியா தத்துவங்கள் ஏழும் போகம் நுகர்வதற்கு ஆன்மாவைத் தகுதிபெறச் செய்வதால் அவை போசயித்திருகாண்டம் எனப் படும்,பிரகிருதி மாயையின் காரியங்களாகிய ஆன்ம தத்துவம் இருபத்துநான்கும் முக்குணவடிவாய் ஆன்மாவுக்கு அனுபவத் தைக்கொடுத்தலால் அவை போக்கிய காண்டம் என்று சொல் லப்படும் சிவதத்துவங்கள் ஆணவத்தோடும் சன்மத்தோடும் கலவாது நிற்றலால் 'சுத்தம்' எனப்படும். வித்தியாதத்

சாஸ்திரவியல் - தத்துவங்கிள் -98
துவங்கள் ஆணவத்தோடும் கன்மத்தோடும் கலந்திருப்பி னும் குணரூபமாயில்லாமையால் 'மிச்சிரம்" எனப்படும், ஆன்மதத்துவங்கள் ஆணவத்தோடும் கன்மத்தோடும்: கலந்து முக்குண ரூபமாய் நிற்றலால் அசுத்தம் எனப்படும்
மும்மலமுடைய சகலருக்கு வரும் சரீரம் அசுத்தமாத லால் அவை ஆன்ம தத்துவத்தினின்றுந் தோன்றுவன வாம். ஆகையால் சகலரது சரீரங்கள் பிரகிருதியின் காரி யமாகிய பிராகிருத சரீரமாம், இருமலமுடைய பிரள யாகலருக்கு வரும் தனு, கரண, புவன, போகங்கள் வித்தியா தத்துவங்களினின்று தோன்றும். ஆகையால் அவர்களு டைய சரீரங்கள் மாயையின் காரியமாகிய மாயேய சரீர மாம், ஆணவமலம் மாத்திரம் உடைய விஞ்ஞானசுலர் என்னும் உயிர்கட்கு வரும் தனு, கரண, புவன, போகங் கள் சுத்ததத்துவங்களினின்று தோன்றும். அவர்சளுடைய சரீரங்கள் விந்துவின் காரியமாகிய வைந்தவ சரீரமாம். விஞ்ஞானகலர், பிரளயாகலருடைய சரீரங்கள் பிரகிருதி போடு சம்பந்தமின்மையால் அவை அப்பிராகிருதம் எனப் படும்.
பிரகிருதியின் காரியங்களோ முக்குணவடிவாய் நின்று மயக்கத்தைச் செய்கின்றது. எல்லாம் இறைவன் செய லாய் இருக்க அதனை உணரமுடியாது எல்லாச் செயல்க ளுக்கும் தானும் பிறருமே செய்து முடிப்பதாக நினைப் பதே மயக்கமாகும். 'யான், எனது என்னும் செருக்கு?*ம் இதுவேயாகும். இது இவ்வுலகிலுள்ள மக்களுக்கு மாத்திர மன்றி வானுலகிலுள்ள தேவர்க்கும் உண்டு எனக் கருதப் படுகிறது.
சுத்தமாயை சூக்குமம். அரசுத்தமாயை தூலம். மூலப் பிரகிருதி மிகவும் தூலம். சூக்குமத்தில் தூலம் வியாப்பியம் அல்லது உள்ளடக்கம் எனப்படும். சுத்தமாயை வியாபகம் அசுத்தமாயை அதில் வியாப்பியம். பிரகிருதி மாயை அசுத்தமாயையின் வியாப்பியமாகும், தத்துவங்களில் முன்

Page 61
፴ፀ முப்பொருள் உண்மை விளக்கம்
னர் தோன்றியது மேலே உள்ளது. பின்னர் தோன்றுவது கீழே உள்ளது. இம்முறையில் சிவம் என்னும் தத்துவம் எல்லாவற்றிலும் மேலுள்ளது. பிருதிவி என்னும் தத்துவம், எல்லாவற்றிலும் கீழுள்ளது. சிவதத்துவம் நாதம் என்றும் சொல்லப்படுவதனல் நாதாந்தம் என்பது 36 தத்துவங்க ளும் கடந்த நிலையாகும்.
சரீரம், துரலசரீரம், சூக்கும சரீரம், அதிகுக்கும சரீரம் (பரசரீரம்)என மூவகைப்படும். பிருதிவி முதலிய 5, செவி முதலிய ஞானேந்திரியம் *, வாக்கு முதலிய கன்மேந் திரியம் 5 ஆகிய பதினைந்தும் தூலசரீரமாகும் தன்மாத்தி ரைகள் 5, மனம், புத்தி, அகங்காரம் என்னும் அந்தக் கரணங்கள் 3 ஆகிய எட்டும் சூக்கும சரீரமாகும், சூக்கும சரீரம் 8 தத்துவங்களாகியமைபற்றி அது "புரியட்டசரீரம்" என்றும் சொல்லப்படும். மூலப் பிரகிருதியும் வித்தியா தத் துவங்கள் ஏழும் ஆகியவை அதிசூக்குமம் அல்லது பரசரீ ரம் எனப்படும். இப் பரசரீரத்துள் மூலப் பிரகிருதி குண சரீரம் எனவும் காலம், நியதி. கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்தும் கஞ்சுகசரீரம் என்றும் மாயை 'காரண சரீரம்" என்றும் கூறப்படும்
தூலசரீரம் அன்னமயகோசம் எனப்படும். ஏனெனில் அது சோறு, நீர் ஆகிய ஆகாரங்களினுல் நிலைபெறுகின் றது. சூக்கும சரீரம் பிராண வாயுவினுற் தொழிற்படுத் தப்படுதலினல் அது பிராணமய கோசம் எனப்படும். குண சரீரம் அந்தக்கரணமாய் நின்று தொழிற்படுதலால் அது மனுேமயகோசம் எனப்படும். கஞ்சக சரீரம் ஆன்மாவின் அறிவு, இச்சை, செயல்களே விளக்கி நிற்றலால் அது *விஞ்ஞானமயகோசம்' எனப்படும். காரண சரீரம் கேவ லத்தில் அறிவு சிறிது மின்றிக் கிடந்த ஆன்மாவுக்கு சிறிது விழிப்புண்டாகி ஒருவகைக்களிப்பு ஏற்படுதலால் அது ஆனந்தமயகோசம் எனப்படும். கோசம் என்பது சட்டை போன்றதாகும்.

சாஸ்திரவியல் - தத்துவங்கள் - 96 87
புறக்கருவிகள் (60)
அகக்கருவிகளாகிய 6 தத்துவங்களைப் பற்றி இது வரையும் அறிந்து கொண்டோம். இனிப்புறக்கருவிகளா இய 60 தத்துவங்களைப்பற்றியும் அறிதல் வேண்டும், தத் துவங்களின் கூறு 60 தாத்துவிகங்கள் எனப்படும். மனித உடம்பு ஐம்பூதங்களின் சேர்க்கையை உடையது.
(1) பிருதிவியின் கூறு 5-மயிர், எலும்பு, தோல், நரம்பு,
தசை, பிருதிவியின் குணம் கடினம்.
(2) அப்புவின் கூறு 5-நீர், உதிரம், சுக்கிலம் அல்லது சோணிதம், மூளை, மச்சை (சப்ததாதுக் களில் ஒன்று). அப்புவின்குணம் நெகிழ்வு.
(3) தேயுவின் கூறு 5-ஆகாரம், நித்திரை, Լյաւն,
மைதுனம் (விவாகம்), சோம்பல். தேயு
வின் குணம் சுடுதல். (4) வாயுவின் கூறு 5- ஒடல், நடத்தல், இருத்தல்
கிடத்தல், நிற்றல், வாயுவின் குணம்
திரட்டல் (ஒன்று சேர்த்தல்) (5) ஆகாயத்தின் கூறு 3~ குரோதம். உலோபம், மோகம், மதம், மாச்சரியம். ஆகாயத்தின் குணம் நிரந்தரம்.
குரோதம் என்பது தன்பொருளை யாரா குதல் அழித்தால் அவர்கள்மீது கோபித்து உண்டாகிற சித்த விர்த்தியாம்.
உலோபமாவது தன்பொருளில் un Trir வது ஒன்றைக் கேட்டால் இல்லையென்று தோன்றுகின்ற சித்த விர்த்தியாம்.
மோகமாவது தான் சம்பாதித்த பொருள்
களின்மீது ஆசையை உண்டுபண்ணும் சித்தவிர்த்தியாம்,

Page 62
88 முப்பொருள் உண்மை விளக்கம்
மதம் என்பது ஐசுவரிய கர்வத்தினுல் யாரையும் அலட்சியமாக இகழ்ச்சி செய் யும் சித்தவிர்த்தியாம்.
மாச்சரியம் என்பது தன்னிலும் அதிக மாக மேன்மை பெற்றிருந்தால் அதைப் பொறுக்கமுடியாது வருகிற சித்த விர்த் தியாம்,
(6) வாயுக்கள் 10- பிராணன், அபாணன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்செயன்.
பிராணவாயு லலாட (புருவமத்தி) மத்தி யிற் தோன்றி மூலாதாரத்துக்குச்சென்று நாபித்தானமடைந்து, இ  ைட கலை, பிங்கலை நாடிகளில் ஒடி கபாலத்தைச் சுற்றி நாசியிற் 12 அங்குலம் புறப்பட்டு நாலங்குலம் கழன்று எ ட் டங்கு ல ம் மீண்டு தானிருந்த இடத்துக்குச் செல் லும். இவ்விதமாக இரவுபகல் 21600 சுவாசம் ஏற்படும். இதிலே 7200 சுவா சம் கழன்றுபோக 14400 சுவாசம் உள்ளே போகும்.
அபாணன் குதத்தையும் குய்யத்தையும் பற்றி நின்று மலசலத்தைக் கழிப்பிக்கும்.
வியானன் தோலில் நின்று பரிசங்களை அறிவிக்கும். உதானன் உதர அக் கினியை எழுப் பி உண்ட அன்னசாரத்தை 72000 நாடி நரம் புகளிலே கலப்பித்துச் சரீரத்தை வளர்க் கும்

சாஸ்திரவியல் - தத்துவங்கள் - 96 89
சமானன் எல்லா வாயுக்களையும் ஏறுதல் குறைத்தல் செய்யவொட்டாமற் சமனுக் கும் - -
நாகன் விக்கல், கக்கல் உண்டாக்குவது, கூர்மன் கண்ணிலே நின்று இமைப்பிப்பது
கிரிகரன் புருவ மத்தியைப் பற்றி நின்று தும்முவித்தலும் அழுவித்தலும் செய்வது.
தேவதத்தன் விழித்திருக்கும் போது ஒடு வித்தலும் உலாவுவித்தலும், யுத்தம் பண்ணுவித்தலும் செய்வது.
தனஞ்செயன் பிராணன் உடம்பை விட் டுப் போனலும் தான் பிரியாமல் நின்று உடம்பை வீக்குவித்தலும் விரிவித்தலும் செய்து 3 நாட்களுக்கப்பாற் கபாலத் தைப் பிளந்தோடிப்போவது
(7) நாடிகள் 10-இடைகலை, பிங்கலை சுழிமுனை, காந்தாரி,
(Մ. 12
அத்தி, அலம்புடை, சிங்குவை, புருடன்,
குரு, சங்கிணி.
இடைகலை நாடி வலதுகாற் பெருவிரலி னின்று கத்தரிக்கோல்போல மாறலாக இடதுநாசியைப் பற்றி நிற்பது. பிங்கலை இடதுகாற் பெருவிரலினின்று கத்தரிக்கோல்போல மாறலாக வலது நாசியைப் பற்றி நிற்பது. சுழிமுனை மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லாநாடிக்கும் ஆதாரமாய் நடுநாடி யாய்ச் சிரசளவு முட்டி நிற்பது. காந்தாரி இடது கண்ணளவாய் நிற்பது,
அத்தி வலது காதளவாய் நிற்பது.

Page 63
99 முப்பொருள் உண்மை விளக்கம்
(8) வசனுதிகள்
அலம்புடை இடது காதளவாய் நிற்பது. சிங்குவை உண்ணுக்கிலே நின்று சோறு, தண்ணீர் இவைகளை விழுங்கப்பண்ணு வது புருடன் வலது கண்ணளவாய் நிற்பது, குரு அபாணத்தளவாய் நிற்பது. சங்கினி குறியினளவாய் நிற்பது,
5 (தொழிற்கருவிகளின் செயல்) - கதைத் தல், நடத்தல், கொடுத்தல் அல்லது ஏற்றல், மலசலங்கழித்தல் மகிழ்ச்சி. இவைகள் வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆனந்தம் என்றுஞ் சொல்லப் படும். இவைகள் கன்மேந்திரியங்களின் உயிர்க் கூறுகள் அல்லது தொழில்கள் எனப்படும்.
(9) வாக்குகள் 4-சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி.
சூக்குமை சோதியாய் ஒன்றுசொல்ல எத் தனிக்கும்போது துரியத்தில் நாதமாய்த் தோன்றும். அவ்விதம் சூக்குமையிற் தோன்றிய நாதம் சுழுத்தி(நாபி)த் தானத்தைச் சேரும்.
பைசந்தியாவது சூக்குமையிற் தோன்றிய நாதம் உதான வாயுவினலே சிதறப்பட்டு மயில் முட்டையில் பஞ்சவர்ணம் அடங்கி இருப்பதுபோல, இனிச் சொல்லப் போகின்ற வசனத்துக்கு அக்கரசொரூபம் பிறக்கக் கருக்கொண்டிருப்பது, !
மத்திமையாவது அந்தச் சிதறச் செய்த வாயு சொப்பனத் தானத்திலே (கண்டம்) பிராணவாயுவுடன் சேர்ந்து அக்கரத்தி

சாஸ்திரவியல் - தத்துவங்கள் = 96 s
னுடைய சொரூபங்களைப் புத்தியில் ஒருங்குபட நிறுத்திச் செவியிற் கேளா மல் உள்ளே கேட்கத்தக்க ஒலியாய்க் கண்டத்திலே முழங்கி நிற்பது. வைகரி யாவது நாக்கு. கி.தடு, பல் கன்னம், மூக்கு என்னும் ஐந்து இடங்களிலேயும் புறப்பட்டுச் செவிக்குக் கேட்க வசனிக் கும்.
(10) குணங்கள் 3 -சாத்வீகம், இராசதம், தாமதம்.
சாத்வீகம் அருள், ஐம்பொறி யடக்கல், ஞானம், தவம், மேன்மை, பொறை,
மோனம், வாய்மை, கல்வி, கிருபை, சந் தோஷம் முதலிய குணங்கள் உண்டு,
இராசதம் ஊக்கம், வீரம், அபிமானம், கிருபையின்மை, இடும்பை, கல்வி, கேள்வி ஆகிய குணங்கள் உண்டு.
தாமதம் நித்திரை, காமம், கோபம், கொலை சோம்பல், பேருண்டி, பொய், மறதி, வஞ்சகம், ஒழுக்கமின்மை முதலிய தீக்குணங்கள் உண்டு,
(1)அகங்காரம் 3 - சாத்வீக அகங்காரம், இராசத அகங்கா ரம், தாமத அகங்காரம்,அல்லது முறையே தைசதம், வைகாரிகம், பூதாதி அகங் காரங்கள் என்றும் சொல்லப்படும்.
தைசத அகங்காரம். இதினின்று மனமும், ஞானேந்திரியம் ஐந்தும் தோன்றும். நினைத்தற்கருவியாக மனம் தோன்றிய பின், செவி, தோல், கண், நாக்கு, மூக்கு என்னும் அறிவுப் பொறியாகிய ஞானேந்திரியங்கள் தோன்றும்.

Page 64
92 முப்பொருள் உண்மை விளக்கம்
வைகாரிக அகங்காரம் இதினின்று வாக்கு பாதம், பாணி, பாயு, உபத்தம் என்னும் கன்மேந்திரியங்கள் தோன்றும்,
யூதாதி அகங்காரம் இதினின்று சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் ஒன்றன்பின் ஒன்ருகத் தோன்றும்.
இவ்வாறு புறக்கருவிகள் அறுபது ஆகும். அகக்கருவி முப் பத்தாறு. இரண்டும் சேர்த்து தொண்ணுாற்ருறு தத்து வங்கள் உsண்டு,
தத்துவங்கள் உற்பத்திக்கிரமம் (தோற்றமுறை), சங் காரக்கிரமம் (ஒடுக்கமுறை) என இருவகையுண்டு. தோற்றமுறையில் சிவதத்துவத்தை முதலாகவைத்து எண் ணுதலும் ஒடுக்கமுறையில் பிருதிவியை முதலாகவைத்து எண்ணுதலும் முறையாகும்.
சைவசித்தாந்தம் தவிர ஏனைய மதங்கள் யாவும் மூலப் பிரகிருதிக்குமேல் உள்ள தத்துவங்களை உணரவில்லை. அத ல்ை அவை, ஆன்மதத்துவம் இருபத்துநான்கை மட்டும் கொண்டுள்ளன.


Page 65
தத்துவமுறை விள
1 - 24 ஆன்ம தத்துவம் (டாசத்தக்துவம் பிரகிரு 25 - 81 வித்தியாதத்துவம் (அசுத்தமாயை தத்துவம்
82 - 36 சிவதத்துவம் (சுத்ததத்துவம், விந்து த
பதி, li பாசம் - -- ஆன வம் கன்பம்
சுத்தமானிய மாமாயை, குடிலே விந்து கு? டவி)
நாதம் 'சிவம்) 36
விந்து (சத்தி) 85 சாதாக்கியம் (சதாசிவம்)
ஈச்சம்
கூத்தவித்தை
ғлтф5ії: (ளதசித
வாக்கு பாதம் வாய் [ Ꮰ, Ꭲ Gil ) 』 마 ஒரனேந் திரியம்
, மனம் செவி பெட் கண் நார்து
:தம்) (சுரோத்திரம்) (துவக்கு) (ச) (சிங்குை
If: I

ாக்கப்படம்
தி தத்துவம்)
மோகினி தத்துவம், பசுதத்துவம்)
த்துவம், சுத்தமாயா தத்துவம்) (மூன்றும் அநாதியா புள்ளன)
LI TIL
-
அசுத்தமாயை (மாயை, மோகினி, அதோமாயை)
அசுத்தமாயைத் தத்துவம் 31
காலம்
பிரகிருதி -- -sâ (மூலப்பகுதி, மான்)
வித்தை 8ፕ குனம்
syyri f4 ri புத்தி
புருடன் துகங்க்ாரம் ேே
உ - - " -
f, r: இராசதம் தாமதம் ம் ங்ைகரியம் (பூதாதி
| சுன்பேந்திரியங்கள்
L - –-ܡ ܒܢܘܚ------------------- ܒ -----ܡܩ----- --------------------
Јлтахъf Er உபத்தம் கிை 'அபாணம்} குறி)
לו தன்ாத்திரைகள்
--------- -- மூக்கு ஓசை உவறு ரூபம் சுவை நTநிற வ) (ஆக்கிராணம்) (சத்தம் பரிசம்) (ஒளி) ரசம்) (கந்த
Ii 또 S r t
ஆகாயம் வாயு தேயு அப்பு பிருதி
品
--سپـــــــــــــــــا سے-------۔

Page 66

12. பதி
பதி. சச்சிதானந்த சொரூபியாவர். சத் என்பது முக் காலத்தும் ஒரு தன்மையாயுள்ள உண்மைப்பொருள் என் றும் சித் என்பது அறிவுப்பொருள் என்றும், ஆனந்தம் ஆனந்த உருவான பொருள் என்றும் கருதப்படும். அவர் புறப்பொருளோடு சம்பந்தப்படாது நிற்கும்நிலை சச்சி தானந்த சொரூபமாகும். அது அவருடைய குக்குமநிலை அல்லது சொரூபநிலை என்று கூறப்படும். பிறபொருளோடு சம்பந்தப்பட்டிருத்தல் தூலநிலை அல்லது தடத்தல்நிலை எனப்படும். புறப்பொருளை நோக்கிப் பஞ்சகிருத்தியஞ் செய்யும்போது பதியெனக் கூறப்படுவர். புறப்பொருள் ஒன்றையும் நோக்காது சுயப்பிரகாசமாயும் ஆனந்த சொரூபியாயும் இருக்கும்போது சிவம் எனப்படுவர். புறப் பொருள் என்பது ஆன்மாக்கள், மாயை என்பனவாம். ஆகமத்திற் கூறப்படும் பொருள் பொதுவியல்பு சிறப் பியல்பு என இருவகைப்படும். பதிக்குப் பொதுவியல்பு உயிர்களோடு ஒன்ரு யும் உடனயும் வேரு யும் நிற்றலாம், சிறப்பியல்பு சச்சிதானந்தமாய் நிற்றலாம். பொதுவியல்பு ஆராய்ச்சி அறிவாலும் சிறப்பியல்பு அநுபவ அறிவாலும் அறியப்படும்.
பதியின் சொரூப இலக்கணம்பற்றி உமாபதிசிவாசாரி யர் கூறுவதை உற்றுநோக்குவோம்.
' பலகலையா கமவேதம் யாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல் பதிபரமே யதுதான் நிலவுமரு வுருவன்றிக் குணம்குறிக ளின்றி நின்மலமா யேகமாய் நித்த மாகி அலகிலுயிர்க் குணர்வாகி யசலமாகி
யகண்டிதமா யானந்த யுருவா யன்றிச் செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் பெரிதாய்த் திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே?

Page 67
9. முப்பொருள் உண்மை விளக்கம்
வேதம் ஆகமம் மற்றும் வழிநூல்கள் முப்பொருள்களாகிய பதி, பசு, பாசம் என்பனவற்றின் இயல்பைக்கூறும். அவற் றுள் பதி என்பது உருவமும் அருவமும் இல்லாததாய்க் குணங்குறி இல்லாததாய், மலசம்பந்தமில்லாததாய், தனிப்பட்ட பொருளாய். அழிவில்லாததாய், உயிர்களுக்கு அறிவுக்கறிவாய், சலனமற்றதாய், கண்டிக்கப்படாததாய், ஆனந்தசொரூபமாய் உள்ள காம், அதுவுமன்றி மயக்கவறி விஞற் சென்றடைய முடியாததும் வழிபடுவோர் சென் றடையத்தக்கதுமாய், சிறிதுக்குச் சிறிதாய், மகத்துக்கு மகத்தாய் விளங்கும். அதனை அறிவாற் தெளிந்தோர் சிவம் என்று சொல்வர். இதுவே இதன் பொருளாகும்.
பதி ஒன்ரு ய், பரிபூரணமாய், நின்மலஞய் உயிருக் குயிராய் அருவும் உருவும் அருவுருவமாய் ஆனந்தமாய் விளங்கும் பரம்பொருளாம். சிவன் ஞானசத்தியைப் பொருந் தியபொழுது நிஷ்கள திருமேனி(அருவம்) உண்டாம். அவ் வருவத்திருமேனியுடையபோது சிவன் என்றும் சத்தர் என்றும் நிவுகள சிவனென்றும் பெயர்பெறுவர். சிவன் ஞான சத்தி கிரியாசத்தியைச் சமனய்ப் பொருந்திய பொழுது நிஷ்கள சகளத் திருமேனி ( அருவுருவம் ) உண் டாம். அவ்வருவுருவத் திருமேனியுடைய மூர்த்தி சதாசிவர் என்றும், நிஷ்கள சகள சிவனென்றும் பெயர் பெறுவர். ஞானசத்தி குறைந்தும் கிரியாசத்தி கூடியும் பொருந்திய பொழுது சகளத் திருமேனி உருலம்)யாகும். அவ்வுருவத் திருமேனியையுடைய மூர்த்தி மகேஸ்வரன் என்றும் அதி கார சிவன் என்றும் பெயர்பெறுவர். ஆன்மாக்களாலே வழிபடப்படுஞ் சதாசிவவடிவம் பீடமும் இலிங்கமுமாகிய வடிவத்தையுடையது. பீடம் சிவசத்தியையும் இலிங்கம் சிவத்தையும் குறிக்கும், மகேசுவர வடிவமானது சந்திர சேகரர், சபாபதி, அர்த்தநாரீசுரர், தட்சணுமூர்த்தி, நீல கண்டர் முதலிய இருபத்தைந்து வடிவங்களாகும்.

சாஸ்திரவியல் - பதி 95
சிவம், சதாசிவம், மகேசுவரம் ஆகியமூன்றுக்கும் தம் முட் பேதமில்லை. அருவுருவத்திருமேனியையுடைய சதா சிவமூர்த்தியின் ஐந்து திருவுருவங்களுள் தற்புருடம், அகோ ரம், வாமதேவம், சத்தியோ சாதம் என்ற நான்கிலிருந்தும் இருக்கு, யசுர், சாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங் களும், ஈசான முகத்திலிருந்து காமிகம் முதலிய இருபத் தெட்டாகமங்சளும் அருளப்பட்டன.
இனி சிவசத்தியைப்பற்றி அறிதல்வேண்டும். அக்கினி யிற் குடுபோலச் சிவத்தோடு பிரிப்பின்றியுள்ள வல்ல மையே சிவசத்தியாகும். சிவசத்தி ஒன்றே காரிய வேறு பாட்டால் பராசத்தி, ஆதிசத்தி, இச்சாசத்தி கிரியாசத்தி, ஞானுசத்தி என்னும் ஐவகைச் சத்திகளாகும். அவ்வச் சத்திகளோடு சேர்ந்த சிவமும் பல்வேறு பெயர்களைப் பெற்று விளங்கும். இவ்வாறு பரமசிவமும் பஞ்ச சத்திகளா கிய அருளும் பின்னமின்றிச் சூரியனும் அதனுடைய கிரண மும்போல ஒன்ருயிருக்கும், சூரியன் விஷயங்களை விளக்கு மிடத்துக் கதிர் எனவும் தன்னை விளக்குமிடத்துக் கதி ரோன் எனவும் இருதிறப்பட்டு நிற்றல்போலப் பேரறி வாகிய சிவம் ஒன்றே புறப்பொருளை நோக்கி நிற்கும்போது சத்தி எனவும், புறப்பொருளை நோக்காது நிற்கும்நிலை யில் சத்தன் எனவும் நிற்பர். சத்தியின் சொரூபம் ஞானம். இது பராசத்தி எனப்படும். இச்சத்தி ஆன்மாக் களுக்கு ஆணவமலம் பக்குவமாகும்படி போகத்தைக் கொடுப்பது. அப்பொழுது அது ஆதிசத்தி அல்லது திரோ தான சத்தி எனப்படும். பக்குவான்மாக்களுக்கு அனுக்கிர கஞ் செய்யும்போது அது பராசத்தி அல்லது அருட்சத்தி Uru Loir plub.
*" திரோதமலம் இறைசத்தி ஆன்மாவைக் கன்மம்
சேருமளவாகி மலச்செறிவு நீங்களவும விரோதமுறை போலொக்க மறைப்பாக நின்று
மிக்கதுதான் மிகுமாயை விரித்தறிவு பொருத்தி

Page 68
96 முப்பொருள் உண்மை விளக்கம்
வரோதயமாம் வேதங்கள் பலகலைகள் ஆய்ந்து
வரினும் அறியாதவகை நிரவும் அதனுல்இப் பராவருளை மலமெனவும் பகர்வர் அதுதானே
பரமனயுங் கருனையினுல் தெரிவுறப் பண்ணிடுமே 9
எவ்வாறு ஆன்மாக்களுக்கு மலபரிபாகம் அடையும்வண் ணம் திரோதான (மறைப்பு) சத்தியாய்நின்று பின்னர் பக் குவநிலை எய்திய காலத்தில் அருட்சத்தியாக மாறுகின்றது என்பதைப்பற்றித் தத்துவப்பிரகாசத்திலே கூறப்படுகிறது,
இச்சாசத்தியாவது உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் திவானுபவம் கொடுக்கும்பொருட்டுப் பரமசிவம் கொண்ட கருணையாகும், கிரியாசத்தியாவது கன்மத்துக்கீடாக ஆன் மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களைக் கொடுப்பு தாகும். ஞானசத்தி மலத்தை நீக்கிச் சிவானுபவத்தைப் பெறும்பொருட்டுச் செய்யவேண்டிய உபாயங்களை எல் லாம் அறியுஞ்சத்தி, சரஸ்வதி, இலக்குமி, உமாதேவி, மகேஸ்வரி, மனேன்மணி ஆகிய சத்திகள் முறையே பிரமா, விட்டுணு, உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் என்னும் ஐவருடைய சத்திகளாகும். இச்சிவசத்தியே சிவ காமியம்மையார் எனப்பட்டது. பரை, ஆதி, இச்சை, கிரியை ஆகிய சத்திகளாய்நின்று ஆன்மாக்சுளுக்கு அனுக் கிரகஞ் செய்யும்பொருட்டுத் திருவருளே திருமேனியாகக் கொண்டு விந்து (சுத்தமாயை), மோகினி (அசுத்தமாயை), மான் (பிரகிருதிமாயை) என்னும் மாயைகளைப் பொருந் திக் காரியப்படும். திருவருளாகிய சத்தியே பலவாகியும், தான் ஒன்றேயாய் மலமாயைகளிற் பொருந்தாது சுத்த மாய்ச் சிவனது பஞ்சகிருத்தியங்களுக்கும் உலகத்திலேயுள்ள ஆன்மாக்களது பிறவித்துன்பம் நீங்கும்படி பொன்னம்பலத் திலே நடராசப்பெருமான் ஆனந்த நடனஞ் செய்வதற்குக் காரணமாய் விளங்குகின்றது,

சாஸ்திரவியல் - பதி 97
சிவம் அறிவே வடிவாய்த் தன்னைவிட்டு நீங்காத திரு வருளாகிய ஆற்றலுக்குத்தானே நிலைக்களமாக நிற்கும். சத்திதத்துவமெனினும் விந்து எனினும் ஒன்றே. எப்போதும் சத்திதத்துவம் கிரியையாய் இருக்கும். சிவதத்துவம் ஆதாரஞானமாயிருக்கும், சிவம் சுட்டியறியப்படும் பொருள் களுக்கெல்லாம் அப்பாற்பட்டிருக்கும் இயல்புடையவர், தோற்றம், நிலை, இறுதி இல்லாத சத்து (அறிவு)ப்பொருளா யுள்ளவர். ஞானசொரூபியாவர். பிறரால் அறிதற்கரிய அதிசூக்குமசித்தாய் இருப்பவர் விருப்பு வெறுப்பில்லாத ஆனந்தசொரூபி, ஆன்மாக்களுக்குப் பரமான்மாவாயுள்ள வர். பசு பாசங்களினின்று வேறுபட்ட இயல்புடைய சச்சி தானந்த சொரூபியாய் நிற்றலின் ஐந்தொழிலுஞ் செய்யு மிடத்துத்தானே நினைத்ததொரு வடிவத்தைத் தானே நிறுத்திக்கொள்வர்.
பிரத்தியட்சம், அனுமானம், ஆப்தவாக்கியம் என்பவை களின்மூலம் ஒருபொருள் உண்டென்று நிரூபிக்கமுடியும். கடவுள் கண்ணினலும் மனத்தினுலும் காணக்கூடியவரல்ல. இதுபற்றியே மணிவாசகப்பெருமான் ' சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க, சிந்தையுஞ் செல்லாச் சேட்சியன் காண்க?' என்றும் "மனவாசகம் கடந்தோன்' என்றும், மனத்தினுலும் சொல்லினலும் "இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ஞதே' என்று அப்பரும் கூறினர். ஆகையால் பிரத்தியட் சத்தால் காணமுடியாத ஒன்றை அனுமானத்தாலும் ஆப்த வாக்கியத்தாலும் (அனுபூதிமான்களின் வாக்கியம்) அறிய லாம். ஒரு குடத்தைக் காணும்பொழுது e9/6085&iš ES LLDT கச் செய்தவன் உண்டென்று நம்பப்படத்தக்கவனுடைய வாக்கிலிருந்தும் அறியலாம். அதுபோன்று இப்பிரபஞ்சம் கண்ணுக்குக் காணப்பட்டும், கடவுள், காணப்படாவிடி றும் ஆப்தவாக்கியமாகிய ஆகமப் பிரமாணத்தாலும் அனு மாணப்பிரமாணத்தாலும் அவர் உண்டென்று அறிந்து
(p. 13

Page 69
98 முப்பொருள் உண்மை விளக்கம்
கொள்ளலாம். அவன், அவள், அது என்று கூறப்படும் சொல்லும், சொல்லுக்குரிய பொருளுமாகச் சொற்பிரபஞ் சம், பொருட்பிரபஞ்சம் ஆகிய இரு பிரபஞ்சங்களும் தோற்றுதல், நிலைத்தல், ஒடுங்குதல் என்னும் மூன்று நிலை களை அடைகின்றன. அவ்விதம் தொழிற்படுவதைக் காணும்பொழுது அறிவில்லாத அச்சடமாகிய அப்பிரபஞ் சம் தானே இயங்க ஆற்றல் இல்லை. ஆகையால் அப்பிர பஞ்சம் தொழிற்படுவதற்கு ஒரு கருத்தா வேண்டுமென்று நாம் அனுமானித்துக் கொள்ளலாம். அம்முத்தொழில்க ளில் பிரபஞ்சமானது தோற்றுதல், இருத்தல் ஆகிய
தொழில்களாற் தூலமாய் வெளிப்பட்டும், ஒடுங்குதல் சூக்கு மமாய் அடங்கியும், என்றைக்கும் உள்ள பொருளாதலால் அறிவில்லாத சடமாகிய அப்பிரபஞ்சம் தானே ஒடுங்கியும் தூலருபமாய் வெளிப்படவும் இயலாது என்ற காரணத் தால் ஒரு நிலைக்களமான கடவுளில் ஒடுங்கிப் பின்னர் ஆன்மாக்களின் மல நிவிர்த்தியின் பொருட்டு அவரே மீளத் தோற்றுவிப்பார். ஆகையால் காணப்பட்ட உல கத்தைக் கொண்டு காணப்படாத கடவுள் உண்டென்று கூறப்பட்டது. எவற்றையும் தன்னுள் ஒடுக்கிவைக்கும் அக் கடவுளே மீளத் தோற்றுவிப்பாராகையால் சங்காரக் கட வுளே உலகிற்கு முதற் கடவுளாவர். இவ்வுண்மையைச் சிவஞானபோத முதற் சூத்திரம் எடுத்து விளக்குகின்றது.
'அவன் அவள் அதுவெனும் அவைமு வினைமையிற்
ருேற்றிய திதியே யொடுங்கி மலத் துளாதாம் அந்தம் ஆதி யென்மஞர் புலவர்'
அக் கடவுள் அல்லாத பிரமா, விட்டுணு முதலிய ஏனை யோர் தத்தம் எல்லையளவும் கடவுளாவாரே யன்றி முதற் sanyamTIT FI DIT -- Trif

சாஸ்திரவியல் - பதி 9.
சிவனுெடொக் குந்தெய்வந் தேடினும் இல்ல அவனுெடொப் பார்இங்கு யாவரும் இல்லை புவனங் கடந்தன்று பொன்னுெளி மின்னுந் தவனச் சடைமுடித் தாமரையானே
இத் திரு மந்திரம் சிவபெருமானே முதற்கடவுள் என்பதை வற்புறுத்துகிறது.
இறைவன் சர்வவியாபகர். இது பற்றியே 'பார்க்கு மிடமெங்குமொரு நீக்கமற நிறைகின்ற பரிபூரண ஆனந் தமே" என்றும் 'அங்கிங்கெனதபடி எங்கும் பிரகாச மாய் ஆனந்த பூர்த்தியாகி" என்றும் தாயுமான சுவாமி கள் கூறுவதைக் காணலாம். பிரபஞ்சக்காட்சி கடவுளின் காட்சியாக எமக்குத் தோற்றுகின்ற தென் பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும். இறைவன் ஒருவரே எங்கும் எல்லா உயிர்களிலும் இருக்கிருர் என்பதை ஞானி ஒரு வரே உணர்வார். எங்கும் நிறைந்திருக்கின்ற பொருளை ஓர் இடத்திலிருந்து இன்னேர் இடத்திற்குக் கடத்த முடியாது. ஆகையால் அத்தகைய இறைவனை எங்கும் கண்டு தரிசிக்கலாம். அவன் உள்ளும் இருக்கின்றன்; புற மும் இருக்கின்றன். அறிவின்மையே அவ்விதம் காணமுடி யாது தடைசெய்கின்றது. பாரதியார் வெளியே தோற் றும் நிறங்கள், தொனிகள் ஆகிய எல்லாக் காட்சிகளை யும் இறைவனின் காட்சியாகக் காண்கின்ருர்,
'காக்கைச் சிறகினிலே நந்தலாலா!-நிந்தன் கரியநிறந் தோன்றுதையே நந்தலாலா! பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா!-நின்தன் பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா! கேட்குமொலியி லெல்லாம் நந்தலாலா!-நிந்தன் கீத மிசைக்குதடா நந்தலாலா!'

Page 70
100 முப்பொருள் உண்மை விளக்கம்
முழுமுதலாய் விளங்குகின்ற சிவம் எல்லா உலகங்களிடத் தும் அளவிறந்த உயிர்களிடத்தும் சூடு பொருந்திய நீர் போலவே இரண்டறக்கலந்து நிற்பன். ஆனல் அவற்றின் தன்மையைச்சாராது தன்தன்மையோடுநிற்பன். இக்கருத்தை திருவருட்பயன் S.
"எங்கு மெவையு மெரியுறுநீர் போலேகத்
தங்குமவன் ருனே தனி'
என்று விளக்குகிறது. எங்கும் இறைவன் வியாபித்திருந்து உயிருக்குயிராய் விளங்குகின்றர் என்பதைத் திருவாசகம் மூலம் நாம் அறியலாம்.
'வாணுகி மண்ணுகி வளியாகி யொளியாகி
ஊணுகி உயிராகி உண்மையுமாய் யின்மையுமாய் கோணுகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு வாகிை நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே'
எல்லாவற்றேடும் கலந்தும் எங்கும் நிறை ந் து ம் பரம் பொருள் இருக்கின்றமையால் அவனிடத்து மெய் யன் l உள்ளோரைத் தீமை தாக்காது. தாக்கினும் մաւյւյւ-ֆ தேவையில்லை. யோக சுவாமிகள்
"எல்லாஞ் சிவன்செயல் எல்லாம் சிவன்வடி
வெல்லா மவனன்றே அன்னே யென்னும் எல்லாம் அவன்வடி வெங்குமவ னென்றல் பொல்லாப் பிங்கேதடி அன்னே யென்னும் என்றும்
ஊனுமாய் உயிருமாகி உள்ளுமாய்ப் புறம்புமாகி நானுமாய் நீயுமாகி நடஞ்செயும் திருத்தாள் வாழ்க’
எனவும் கூறுவதிலிருந்து பரம் பொருள் எங்கும் இருக் Rašrapii என்றும் அவன் வடிவத்தை எங்கும் காண்கின்

சாஸ்திரவியல் - பதி 0.
ருேம் என்பதும் புலப்படுகிறது. எங்கும் சிவமயமாய் இருப் பதைக் காண்போர் எல்லா உயிர்கள் மீதும் அன்புடைய வராயிருப்பர். மலஇருள் நீங்க நீங்க அன்பும் வளர்ந் தோங்கும். எல்லா உயிர்களும் இறைவன் படைப்பெனத் தென்படும். ۔ہ۔ ^
பதி, பசு, பாசம் என்னும் மூன்றும் நித் தி யமான பொருள்களாதலின் அம் மூன்றும் சத்தேயாம். சத்து என் பது முக்காலத்தும் ஒரு தன்மையாய் உள்ளது. அசத்து என்பது முக்காலத்தும் ஒரு தன்மையில்லாதது. மூன்றும் சத்துப் பொருள்களேயாயினும் பதியும், பசுவும் மாத்தி ரம் சித்து (அறிவு) ப் பொருள்களாகும். பாசம் சடப் பொருளாகும். இனி, பசு தனித்துநிற்பதில்லை. பாசத்தை யேனும் பதியையேனும் சார்ந்தே நிற்கும். ஆகையால் பாசம் சடசத்தாகும். பதி சிவசத்தாகும். பசு சதசத் தாகும். சிவசத்து என்பது சித்துச் சத்து என் பதா ம், உயிரும் சித்துச்சத்து என்ருலும் தனித்து நிற்காத குறையை உடையது, இக் குறையே துன்பத்திற்கு ஏதுவாகும். குறையில்லாத சித்து சத்தாகிய சிவமே இன்பப்பொரு ளாகும். ஆகையால் பாசத்துக்குச் சத்துத் தன்மை மட் டும் உண்டெனவும் பகவுக்கு சித்துச் சித்துத் தன்மை பொதுவாக உண்டெனவும் பதிக்கு சித்து, சத்து, ஆனந்தம் மூன்றும் சிறப்பாக உண்டெனவும் அறியலாம்; சிவசத்தாகிய முதல்வனை பாசஞானம் பகஞானத்தால் அறியமுடியாது. சிவஞானத்தாலே மாத்திரம் முதல்வனை அறியலாம். இதைச் சிவஞான போதம் ஆருஞ் சூத்திரம் விளக்குகின்றது. --•- * ع.
'உணருரு வசத்தெனி னுணரா தின்மையி
னிருதிற னல்லது சிவசத் தாமென விரண்டு வகையி னிசைக்குமன் னுலகே’

Page 71
102 முப்பொருள் உண்மை விளக்கம்
முதற்பொருள் சுட்டியறியப்படும் தன்மையுடையது என்று கருதினல் அவ்விதம் அறியப்படும் பிரபஞ்சம் அழியப்படு வதுபோல் அழியும் பொருளாகிய அசத்தாகும். மேலும் எவ்வகையாலும் அறியப்படாதாயின் அறியப்படாத இன் மைப் பொருளாகும் ஆகையால் இவ்விருபகுதியுமின்றி ஒருவகையால் பசு ஞானம், பாசஞானத்தால் அறியப் படாமையும் ஒருவகையால் (பதிஞானத்தால்) அறியப்படு தலுமாகிய இருவகை இயல்பினை உடைய சிவசத்து முதற் பொருளாகுமென் மெய்யறிவுடையோர் கூறுவர் என்பது இச்சூத்திரத்தின் பொருளாகும்.
இனிமுதல்வனுக்குரிய சிறப்புக் குணங்கள் எட்டு என் பர். அவை (1) தன்வயத்தணுதல் (2 தூயஉடம்பின தைல் (3 இயற்கை உணர்வினணுதல் (4) முற்றுமுணர்தல் (5) பாசங்களினின்று நீங்கியமை (6) பேரருள் உடைமை (7) முடிவிலாற்றலுடைமை (8 வரம்பிலின்பமுடைமை, தன்வயமாம் தன்மை எக்காலத்தும் ஒரு தன்மையாயிருக் கும் சத்துப் பொருளின் தன்மையாகும். தூய உடம்பே சித்து எனப்படும். ஏனைய ஆறுகுணங்களும் சித் தி ன் பேதமாகும், ஆகையால் ஏழு குணங்களும் சித்தில் அடங்கும்.
இறைவனுடைய பஞ்ச கிருத்தியத்தைப் பற்றி நாம் அறிதல் வேண்டும். படைத்தல் காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியன பஞ்ச கிருத்தியங்களாகும். அண்ட பிண்டங்களின் தோற்றம், நிலைபேறு, ஒடுக்கம் ஆகிய மூன்ருேடு உயிர்களின் மறைப்பு அருள் ஆகிய இரண்டும் சேர்ந்த ஐந்தொழில்களே இறை வனுடைய திருநடனத்தின் பயன் என்பர். இதை உண்மை விளக்கத்தில் திருவதிகை மனவாசகங்கடந்தார் விளக்கியுள்ளார்.
*தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமாய்
ஊன்று மலர்ப்பதத்தே உற்ற திரோதம் முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு’

சாஸ்திரவியல் - பதி 103
சிவபெருமானுடைய ஒரு திருக்கரத்தில் விளங்குகின்ற துடி (உடுக்கை) பிரபஞ்சத்தோற்றத்தைக் குறிக்கிறது. அமைதி காட்டும் திருக்கரம் காத்தல் (திதி) தொழிலை உணர்த்தும். மற்ருெரு திருக்கரத்தில் காணப்படும் அக்கினி அழித்தலை உணர்த்தும், ஊன்றிய திருப்பாதம் மறைப்புத் தொழி லைக் குறிக்கும். அத்திருவடியின் கீழுள்ள முயலகன் ஆணவ மலத்தையும் அவ்வாணவமலம் அழிக்கப்படும் தன்மையை யுங் குறிக்கிறது. தூக்கிய திருவடி ஆன்மாவுக்கு இறை வன் நல்கும் அருளைக் குறிக்கும். இவ்விதமாகப் பஞ்ச கிருத்திய நடனத்தைச் சிவன் உயிர்கள் மீதுள்ள கருணை யினுல் அம்பலத்தில் நின்று ஆடுகின்ருன், அசைவு அல் லது இயக்கம் உள்ள இடமெல்லாம் அம்பலம் எனப்ப டும். அண்டபிண்டங்களின் பூதங்களின் இயக்கம் பொறி கள், புலன்கள், கன்மேந்திரியம், அந்தக்கரணம், வித் தியா தத்துவங்கள், சிவதத்துவங்கள் ஆகியவைகளின் இயக்கங்கள் ஆண்டவனின் நடனமாகும். அதுவே அம்ப லத் திருக்கூத்தாகும்,
* பூதங்கள் ஐந்தில் பொறியில் புல னந்தில்
வேதங்கள் ஐந்தில் மிகும் ஆகமம் தன்னில் ஒதும் கலே காலம் ஊழியுடன் அண்ட
போதங்கள் ஐந்தில் புணர்ந்து ஆடும் சித்தனே'
என்று திருமந்திரம் கூறுகிறது. இவ் அம்பலம், பேரம் பலம் சிற்றம்பலம் என இருவகைப்படும் தூலதத்துவங் களும் அவைகளைச் சார்ந்தனவும் பேரம்பலமாகும், சூக் கும தத்துவங்களாகிய அந்தக்கரணமும் அவைபோன்ற வையும் சிற்றம்பலமாகும். இவைகளுள் மிகநுண்ணிய, குக் கும தத்துவம் உயிரின் அறிவாகிய சித் ஆகும். அதுவே சித் சபை என்றும் சிற்றம்பலம், சிதம்பரம் என்றும்

Page 72
104 முப்பொருள் உண்மை விளக்கம்
கூறப்படும். சித் அறிவைக் குறிக்கும், அம்பரம் ஆகா யத்தை அல்லது பரவெளியைக் குறிக்கும். ஆகையால் உயிரறிவு இறைவனின் நடனசபையாகும்.
"எங்கும் திருமேனி எங்கும் சிவசக்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே'
என்பது திருமூலர் திருவாக்காகும், சிவனின் அருளாற்றல் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. சிவபெருமானும், திருவரு ளும், நுண்ணறிவு அம்பலமாகிய திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்றனர். அதனல் எங்கும் சிதம்பரம் என்று சொல் லப்பட்டது. அவன்செய்யும் திருக்கூத்தெங்கும் நிறைந்ததே. ஆகையால், அனைத்தும் சிவவண்ணமாகும். உலகமெல்லாம் சிவத்தின் திருக்கூத்தாகும். இதிலிருந்து ஒவ்வோர் உயிரி னிடத்தும் சிற்றம்பலமாகிய சிதம்பரம் இருப்பதை அறிய லாம், நாம் உள்ளும் புறமும் திருச்சிற்றம்பலத்தை இடை யமுது தரிசித்துக்கொண்டிருக்க முயலவேண்டும்.
இறைவன் ஐந்தெழுத்தாலே ஐந்தொழிற் திருநட னத்தை இயற்றுகிருர், நகர முதலாக யகரம் இறுதியாக வரும் ஐந்தெழுத்தும் திருவடிமுதல் திருமுடிவரையும் பொருந்தியிருப்பதைக் காணலாம்.
" சேர்க்கும் துடிசிகரஞ் சிக்கனவா விசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகஞர் தங்கும் மகரமது தான் "
என்று உண்மைவிளக்கம் கூறுகிறது. துடியை ஏந்திய திருக் கரம் சிகரத்தையும், வீசியகரம் வகரத்தையும், அபயம்

ச்ாஸ்திரவியல் - பதி 105
அளிக்கும் கரம் யகரத்தையும், அக்கினி ஏந்தியகரம் நகரத் தையும், முயலகனை மிதித்தபாதம் மகரத்தையும் குறிக்கும்.
" காதலாகிக் கசிந்து கண்ணிர் மல்கி
ஒதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேத நான்கினும் மெய்ப்பொரு :ளாவது நாதன்நாம நமச்சி வாயவே '
என்ற தேவாரத்திலிருந்து இறைவனுடைய நாமம் திரு வைந்தெழுத்தாகுமென்பது புலப்படுகிறது. அவருடைய நாமத்தை மறக்காது இருக்க வேண்டுமெனவே 'நற்றவா வுனை நான் மறக்கினும் சொல்லுநா நமச்சி வாயவே ' என்று சுந்தரமூர்த்திசுவாமிகள் கூறுகின்ருர்,
படைக்கல மாகஉன் நாமத் தெழுத்தஞ்சென் நாவிற்கொண்டே இடைக்கலம் அல்லேன் எழுபிறப்பும் உனக்காட்செய்கின்றேன் (ன் துடைக்கினும் போகேன் தொழுதுவணங்கித்து நீறணிந்துன் அடைக்கலங் கண்டாய் அணிதில்லைச் சிற்றம் பலத்தரனே '
என்ற அப்பருடைய தேவாரத்திலிருந்து எமக்குப் பாது காப்பளிப்பது இறைவனின் திருநாமமாகிய பஞ்சாட்சரம் என்பது தெளிவு. முற்பிறவிகளிலே எவ்வகைப் பாவஞ் செய்தோரையும் இப்பிறவியிலே பாவஞ் செய்யாமற் தடுத்து நல்வழிப்படுத்துவதும் இறைவனின் திருநாமமாம். * ஒதுவார் நெஞ்சில் உதிக்கும் பரஞ்சுடரே " என்று யோக சுவாமிகள் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.
4 י{U)

Page 73
13. Lugi
ஆன்மா பாசத்தாற் கட்டுண்டிருப்பதால் அது பசு என்று கூறப்படுகிறது. ஆன்மாவின் சொரூபம் அறிவு. அது சத்துப் பொருளாகும். ஆன்மாக்கள் எண்ணில்லா தவை. அவை அநாதியாயுள்ளன. என்றும் உள்ளன. இதை விளக்கியே திருமந்திரம்,
' பதிபசு பாசம் எனப்பகர் மூன்றிற்
பதியினைப் போற்பசு பாசம் அநாதி பதியினைச் சென்றணு காப்பசு பாசம் பதியணு கிற்பசு பாசம் நில்லாவே ' என்று கூறுகிறது.
ஆன்மாக்கள் கேவலம், சகலம், சுத்தம் என மூன்று அவத்தை அல்லது நிலையை அடைகின்றன. அவைகளுள் கேவலநிலையில், அநாதியாயுள்ள ஆணவம் என்னும் இருள் மலத்தில் அழுந்தி உடம்புகளின்றி ஒன்றையும் அறிய இய லாததாய் அவ்விருளை விட்டு நீங்க வழியில்லாமல் ஆன்மா இருக்கும். பரம்பொருளின் பெருங்கருணையால் அவைகளின் ஆணவமலம் நீங்கும்பொருட்டு உடம்புகளும், கரணங் களும், உலகமும், போகப்பொருள்களும் கொடுக்கப்படு கின்றன. அவ்வான்மாக்கள் பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்கின்ற தூலபூதங்களினின்றும் சர்மம், உதிரம், மாமிசம், சணுதி, அத்தி, மச்சை என்னும் ஆறு தத்துவங் களையுடைய அண்டசம் (முட்டை), சுவேதசம் (வியர்வை), உற்பிச்சம் (வித்து, வேர், கிழங்கு), சராசரம் (கருப்பை) என்னும் நால்வகையில் ஏழுவகைப் பிறவிகளை எடுக்கும். சுரர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீரில் வாழ் வன, தாவரம் என்பன ஏழுவகைப் பிறவிகளாகும்.
இவற்றுள் இம்மை, மறுமை ஆகிய இரண்டையும் பற்றிச் சிந்திக்கத்தக்கதாகவுள்ள மானிடசரீரத்தை எடுத்த ஆன்மாக்கள் உத்தமசாதியாகும். மறுமையை மறுத்து இவ்வுலகப் புத்தியை மாத்திரம் பெற்றிருக்கின்ற மிருதம்,

Fitcsv5freduá — LJðr 107
பட்சி முதலானவை மத்திமசாதியாகும். இரண்டு உலகங் களின் புத்தியும் மறைக்கப்பட்டிருக்கின்ற மரம், கொடி, செடி முதலியவை அதமசாதியாகும். பிருதுவி தத்துவமா யிருக்கின்ற பூலோகத்திலே மூன்றுவகை உயிர்வர்க்கங்கள் காணப்படுவதுபோல, அப்பு, அக்கினி, வாயு, ஆகாயம், ஆகிய தத்துவங்களாய், தேவலோகம், காந்தர்வலோகம், சித்தலோகம் ஆகியவைகளிலே நட்சத்திரமாகத் தோற்று கின்ற சந்திரன் முதலான பிதிர்கள், சூரியன் முதலான தேவதைகள், கந்தருவர், சித்தர் ஆகியோர் உத்தமசாதி யாகும். காமதேனு, ஐராவதம் முதலானவை மத்திம சாதியாகும். கற்பகவிருட்சம், பாரிசாதம் முதலானவை அதமசாதியாகும்.
இத்துரலவுடம்பு கெட்டவிடத்துப் படைப்புக் காலந் தொட்டு மகாசங்காரகாலமளவும் நிலைபெற்றிருக்கும் குக் கும தேகம் தேவலோகத்திற்குரிய பூதசார உடம்போடும், நரகலோகத்திற்குரிய யாதனுவுடம்போடும். மண்ணுலகத் திற்குரிய பூத பரிணும தூலவுடம்போடும் தோன்றும். உயி ரானது சூக்குமதேகத்தினின்று உண்டாகும் பூதசார சரீ ரத்தையும், யாதனுசரீரத்தையும் பொருந்திச் சுவர்க்க நர கங்களிற் சென்று இன்பதுன்பங்களை அநுபவிக்கும். அநுப வித்தபின் சுவர்க்க நரகங்களுக்குச் செல்வதற்கு முன்னுள்ள உடல் கெட்டதையும், பின்னர் சூக்கும தேகமே பூதசார முதலிய சரீரங்களாய்த் தோற்ற அச்சாரீரங்களை எடுத்துச் சுவர்க்க முதலியவற்றிற் சென்றதையும், அங்கு அநுபவித் ததையும் மறந்து அறிவு வேறுபட்டு முன்னே உடம்பு இறக்கும்பொழுது பக்குவப்பட்டிருக்கும் வினையானது கா ட் டு ங் க தி  ைய ஆன் மா விரு ம் பத் த க் கதா க மனம் செலுத்துதலால், தேவகதி, மக்கட்கதி, விலங் கின்கதி, நரகர்கதி ஆகியவைகளிற் செல்லும், சுவர்க்க நரகங்களிலே அநுபவித்து எஞ்சிநின்ற புண் ணிய பாவத்தை அனுபவிப்பதற்காக இம்மண்ணுலகத்தில் ஏற்ற கருவிலே உதிக்கும். அச்சரீரங்கள் வாயிலாக இருவினைப் போகங்களை அனுபவிக்கும்போது அவை வினைவயத்தால் நடக்கின்றனவென்று உணராமற் தமது செயலாலே நிகழ்

Page 74
፲ዕ8 , முப்பொருள் உண்மை விளக்கம்
கின்றன என எண்ணிக்கொள்வதஞல் மீண்டும் விருப்பு வெறுப்புக்குக் காரணமாகப் புண்ணிய பாவங்களைச்செய்து அவ்வினைக்கேற்றபடி சுவர்க்கம், பூமி, நரகம் என்னும் இடங்களுக்குப் போக நேரிடும். அதனுல் பிறவிக்கடலில் உழலவேண்டியதாகிறது.
உயிர்வர்க்கங்கள் மலபந்த வேறுபாட்டிஞலே விஞ் ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூவகைப்படுவர். சகலரிலிருந்து கன்மம், மாயை முழுவதும் நீங்கப்பெற்று ஆணவமலம் ஒன்றையுடையவர் விஞ்ஞானகலர் ஆவர். இவர்களுக்குரிய புவனங்கள் சுத்தவித்தைக்கும் அசுத்த மாயைக்கும் இடையேயுள்ளன. இவர்களுக்குக் கன்மம் இல்லையென்றது ஆகாமியகன்மம் இல்லையாம். DsT Gð) இல்லையென்றது பிரகிருதியின் காரியமாகிய முக்குணங் களின் மயக்கமும் சுகதுக்க போகங்களும் இல்லையாம். இவை இரண்டும் இல்லையேயாயினும் தனு கரண புவன போகங்களுண்டு. ஆனல், அவைகளின் பந்தத்தில் மயக்க முழுர், ஆகாமியகன்மம் (இப்பிறவியிற் செய்யும் கன்மம்) இல்லாமையால் இவர்கள் ஒரு பிறப்பிலேயே முத்தியடை வர். பரமசிவன் இவர்களுக்கு அறிவுக்கறிவாய் உண் ணின்று உணர்த்தி அநுக்கிரகஞ் செய்வர்.
பிரளயாகலர் ஆணவம், கன்மம் ஆகிய இருமலங்களையு முடையர். சகலரிலிருந்து பரிபக்குவ விசேடத்தால் மாயை யின் பந்தம் மாத்திரம் நீங்கி ஏனைய மலங்களிரண்டும்
உடையர். இவர்களுக்குரிய புவனங்கள் அசுத்தமாயை முதல் அராகம் ஈருன தத்துவங்களாகும். மாயாமலமில் லாமையால் இவர்களுக்கு முக்குணங்களின் மயக்கமும்,
சுகதுக்க மோகங்களும் இல்லையாம். ஆகாமியகன்மம் ஏறுவ தால் சிலபிறவிகளில் முத்தியடைவர். இவர்களுக்கு அருள் செய்வதற்காகச் சிவன், மான், மழு, காளகண்டம், திரி நேத்திரம் ஆகிய வடிவங்களோடு தோன்றி அருள்செய்வர்.

சாஸ்திரவியல் - பசு 109
சகலர் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களும் உடையராவர். கலை முதலிய தத்துவங்களோடு கூடியவர்களாகையால் இவர்கள் சகலரெனப்படுவர். இவர் கள் தேவர். மக்கள் முதலாகப் பல வகையாவர். இவர் களுக்குரிய புவனங்கள் மூலப்பகுதி முதல் பிருதுவி ஈருன தத்துவங்களிலுண்டு. (மூலப்பகுதி என்பது மூலப் பிரகிருதி யைக் குறிக்கிறது. இது அசுத்தமாயையினின்றுந் தோன்றி அசுத்தப்பிரபஞ்சத்திற்குக் காரணமாயுள்ளது. பிரகிருதி என்பது முதலிலுள்ளது என்னும் கருத்தையுடையது). மும் மலமயக்கமுடையராகையால் பல சென்மங்கள் பிறந்து இறந்து உழல்வர், இவர்களுக்கு மலபரிபாகமும், இருவினை யொப்பு, சத்திநிபாதமும் ஏற்படுங் காலத்து, பரமசிவன் குருவடிவாய்வந்து அநுக்கிரகஞ் செய்வர். சசலநிலையில் பிரபஞ்சத்தை அறிவித்தருளும் திருவருளை ஆன்மா அறி யாது. அவ்விதம் அறியாவண்ணம் தடைசெய்வது ஆணவ 1D a Ion Lb,
ஆன்மா நாதம் முதல் பிருதுவியீருக முப்பத்தாறு தத்துவங்களுடனும் லலாடத்தானத்தை (புருவமத்தி)ப் பொருந்தி விடயங்களை அறிந்து அநுபவித்து நிற்கும்நிலை சகலாவத்தை எனப்படும். ஆகையால் சகலாவத்தை நிக ழும் முறையைப்பற்றி நாம் அறிதல் வேண்டும்.
புகலுமல மொழிதற்குக் கலாதிமுதன் மாயை
பொருந்தியிடு மரணருளாற் போதத் தீபஞ்
சகலமெலா முடனுய வாறு போலுந்
தருமருளே மலமுயிர்கள் சாராமன் மறைக்கும்
இகலவரு மிவையுணரி னிருள் வெளியாந் தன்மை யெய்தும்வகை தன்செய்தி யிலங்கு விந்து
பகர்வரிய யுணர்வாகி யொளியா யுள்ளப்
பான்மையினு லொருநாதம் படருந் தானே"

Page 75
716 முப்பொருள் உண்மை விளக்கம்
என்று சிவப்பிரகாசத்திற் கூறப்படுகிறது. சிவன் ஆன்மாக் கள்மீதுள்ள் கருணையினுல் அவைகளின் ஆணவமல. மறைப்பை நீக்கும்பொருட்டு வாக்குகளும், கலை. வித்தை ஆகிய தத்துவங்களும் ஆன்மாவை வந்து பொருந்தச் செய் வர். தீபமானது எவ்வாறு நெய் திரி முதலியவற்றுடன் கூடிப் பிரகாசித்து எரிகிறதோ அதேபோல ஆன்மாவின் அறிவு இவ்வாக்குகள் தத்துவங்களோடுகூடி விளக்கமுறும். அவ்வாறு அறிவைத் தருகின்ற திருவருளே ஆன்மாக்கள். அறிந்து பொருந் தாவண்ணம் ஆணவமலம் மறைத்து நிற் கும். இவ்விதமாக மாறுபட்டு வரும் மலமாயைகளின் இயல்பு இருளும் ஒளியும் போன்றதாகும். ஆன்மா அறி வைப் பெற்றுக்கொள்வதற்காக மூலாதாரத்தில் விளங்கு கின்ற விந்து தத்துவத்திலிருந்து ஆன்மா அறியும் அறிவுக்கு உதவியாக ஒரு நாதம் தோன்றும். இதுவே இச்செய்யுளின் பொருளாகும். ஆணவமலம் உயிரோடு கலந்து நின்று அறிவு, இச்சை, செயல்களை மறைக்கும். ஆனல் மாயை யானது தனு, கரண, புவனங்களாய் உயிருக்கு வேருக நின்று அதனுடைய அறிவு இச்சை செயல்களை விளக்கி நிற்கும். இனி பரநாதம் ஆகிய ஞானசத்தியும், பரவிந்து எனப்படும் கிரியா சத்தியும் சுத்தமாயையைப் பொருந்து தலினலே அபரநாதமும் அபரவிந்துவும் உண்டாகும். அபர நாதம் தொணிவடிவாயுள்ளது. அபரவிந்துவிலிருந்து அக்க ரங்கள் தோன்றும் . அக்கரம் வன்னரூபமாயுள்ளது.
மூலாதாரத்தில் விளங்குகின்ற விந்து தத்துவத்தி லிருந்து தோன்றுகின்ற நாதமே சூக்குமை வாக்காகும். இவ்வாக்கு ஞானத்துக்கு (அறிவுக்கு) ஏதுவாயிருக்கும். இது தோன்றியபின் உந்தித் தானத்திற்குச் செல்லும். அவ்வாக் குப் பைசந்தி எனப்படும் அது உந்தித் தானத்தை அடைந்த பின் இருதய தானத்திற்குச் செல்லும். எவ்வாறு மயில் முட்டையினில் ஐந்து நிறங்களும் பிரித்தறிய முடியாத நிலையில் இருக்கின்றனவோ அதுபோன்று இருதய தானத் தில் எழுத்துக்கள் பிரிந்து தோன்றது மிகவும் சூக்குமமாய் உந்தியிலிருந்து வந்து சேர்ந்த வாக்கு இருதயத்திலிருக்கும். அந்நிலையில் அது மத்திமை எனப்படும் இது இனி. சொல்

சாஸ்திரவியல் - பசு 1 ti
லப்போகும் வசனத்துக்கு அக்கரருபம் பிறக்கக் கருக்கொண் டிருப்பது. பின்னர் உதாணவாயுவாற் சிதறப்பட்டு கண்டத் தானத்திற்குச் செலுத்தப்படும். அங்கு எழுத்துக்கள் பிரிந்து தன் செவிக்குக் கேட்கப்படுவதாய் பிறர் செவிக்குக் கேட் கப்படாததாய் மெல்லோசையாய்க் கண்டத்தில் விளங்கும். இந்நிலையில் அது சூக்குமை வைகரி எனப்படும். பின்னர் கண்டத்திலிருந்து பிரிந்து தோன்றிய எழுத்துக்கள் பிராண வாயுவாற் செலுத்தப்பட்டு தன் செவிக்கும் பிறர் செவிக் கும் கேட்கத்தக்கதாக விரும்பி நினைந்த பொருளைச் சொல் லும் சொல்லாகக் கேட்போர் செவிக்கு உணர்வு உண்டா கக் காரணமாயிருப்பது தூலவைகரி வாக்காகும். நாக்கு, கன்னம், உதடு, பல், மூக்கு என்னும் ஐந்திடங்களிலேயும் இவ்வாக்குப் புறப்படும். இந்த நான்கு வாக்குகளும் தோன் றுதற்குக் காரணமாய்ப் பஞ்சமை என்ருெரு வாக்கு உண்டு. இதற்குத் தானம் மூலாதாரம். அது பிரணவரூபம்,
இந்த ஐந்து வாக்குகளும் நிவிர்த்தி முதலிய பஞ்ச கலைகளைப் பற்றுக்கோடாகச் சார்ந்து சிவசக்திகளாற் செயற்படுத்தப்பட்டு சிவதத்துவ முதலிய ஐந்து தத்துவங், களிலுமிருக்கும். பஞ்சகலைகள் நிவிர்த்திகலை, பிரதிட்டா கலை, வித்தியா கலை, சாந்திகலை, சாந்தியதீதகலை என்பன வாம். வாக்குகள் நான்கும் எவ்வாறு கலையைப் பற்றி நிற்கும் என்பதை நாம் அறியவேண்டும். நிவிர்த்தி கலை யானது வாய் என்னும் தானத்திலிருந்து பிறருக்குத் தெரிய முடியாத சொல்லின் தடையை நிவிர்த்தித்துப் பிறருக்குத் தெரியும்படி சொல்ல உதவுகிறது. பிரதிட்டாகலை கண்டத் தானத்திலிருந்து வரும் சொல்லைத் தனக்குக் கேட்கும்படி நிலைக்கச் செய்யும். வித்தியாகலை இருதயத்தானத்திலிருந்து சொல்லவேண்டியதற்குரிய எழுத்துக்களைப் பிரித்து அறிவிக் கும். சாந்திகலை உந்தித்தானத்திலிருந்து எழுத்துக்களை அடக்கித் தோற்றுவிக்கும். சாந்தியதீதகலை நாபித்தானத் திலிருந்து எழுத்துக்களின் தோற்றத்திற்கு ஒலியைத் தோற்றுவிக்கும்,

Page 76
12 முப்பொருள் உண்மை விளக்கம்
இனி அகர முதலிய பஞ்சகலைகள் அகரம். உகரம், மகரம், விந்து, நாதம் என்னும் ஐந்துமாம். இவைகளுள் தூலவைகரி நிவிர்த்திகலையைப்பற்றி அகரவடிவாயும், சூக் குமை வைகரி பிரதிட்டாகலையைப்பற்றி உகர வடிவாயும் மத்திமை வித்தியாகலையைப்பற்றி மகரவடிவாயும் பைசந்தி சாந்திகலையைப்பற்றி விந்துவடிவாயும் சூக்குமை சாந்திய தீதகலையைப்பற்றி நாதவடிவா யும் நிற்கும்.
இவ் அக்கரங்கள் எவ்வாறு மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்களைச் செலுத்துகின் றன என்பதை அறியவேண்டும். தூலவைகரிவாயைத் திறத் தலால் அகரமாகித் தோன்றும். பிறர் அறிய தெரிவிப் பேன் என்ற எண்ணம் அகங்காரமாகிறது. ஆகையால் அகரம் அகங்காரத்தைச் செலுத்துகிறது. இவ்வாறு சூக்குமை வைகரி கண்டத்தானத்தில், அடங்கி வாயைச் சிறிது அசைத்தல் உகரமாகி நிச்சயித்தலால் புத்தியாகிறது. உக ரம் புத்தியைச் செலுத்துகிறது. இனி அக்கரங்களைப் பகுத் துக் காட்டும் மத்திமை இருதயத்தில் மெளனமாய் இருத் தலால் மகரம் மனமாகிறது. மனமாகிய மகரம் மனத் தைச் செலுத்தியதெனலாம். பைசந்தி உந்தியில் ஒரு குறி வடிவாயிருத்தலால் குறி விந்துவாகி நிருவிகற்பமாய்ச் சித்த மாகிறது. ஆகையால் விந்து சித்தத்தைச் செலுத்தியதென லாம். சூக்குமை நாபியில் ஒலி வடிவாயிருத்தலால் ஒலி நாதமாகி உயிர்த்தலாகிய விருத்தி புருடனகிறது. நாதம் புருடனைச் செலுத்துகிறது. ஆகையால் சூக்குமை முதலிய ஒலி நிவிர்த்திகலை முதலிய ஐந்து கலைகளையும் பற்றி நிற் பதால் அகர முதலிய அக்கரங்களின் வடிவாய் அந்தக்கர ணங்களைத் தொழிற்படுத்தும். இதுவரையும் ஆன்மா தூல உடம்பை எடுத்த முதல் எவ்வாறு நாதம் உண்டாகி சூக் குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய வாக்குசஞம் தோன்றினவென்றும் எவ்வாறு மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கரணங்கள் தொழிற்பட ஆரம்பித்தன என்றும் அறிந்தோம். ஆன்மாவுக்கு அறிவு உண்டாவதற்கு இதுவே முதற்படியாகும். இந்நிலையில்

armrahv (Tauluv -- Luar 18
ஞானசத்தி சிவதத்துவத்தை எழுப்பசிவதத்துவ்ம் மாயையை எழுப்ப அது குணரூபமாய்ச் சாத்வீகம். இராசதம், தாமதம் ஆகிய மூன்று குணங்களாய் நின்று மயக்க அறிவை உண் டாக்கிப் பொய்யை மெய்யென்று மயங்கச் செய்யும்,
அந்நான்கு வாக்குகளும் கிரியா சத்தியாற் செலுத்தப் பட்டு சுத்த தத்துவங்கள் ஐந்திலுமிருக்கும். குக்குமை சிவ தத்துவத்திலும், பைசந்தி சத்தி த த் துவத் தி லும், மத்திமை சாதாக்கிய தத்துவத்திலும், சூக்குமை, வைகரி மகேசுர தத்துவத்திலும், தூலவைகரி சுத்த வித்தையி லும் இருக்கும். சுத்த தத்துவங்கள் ஐந்தினுள் சத்திதத் துவம் கலையை எழுப்ப, கலை ஆணவ மலத்தைச் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சக்தியை விளக்கி வினையின் வசமாய் வரும் விடயபோகங்களை அனுபவிக்கச் செய்யும். இனி, சுத்தவித்தையானது வித்தையை எழுப்ப அது இந்தி ரியங்கள் மூலம் வரும் விடயங்களைப் புத்தி நிச்சயித்துக் கொடுக்க அவ்விடய போகங்களை ஆன்மா பொருந்தும் படி செய்யும். ஆன்மாவினுடைய ஞான சக்தியை விளக் கிப் போகங்களிற் செலுத்துதலே வித்தையின் தொழிலா கும். இனித் தத்துவங்களில் எஞ்சியுள்ள அராகம், நியதி, காலம், புருடன் என்பவைகளின் தொழிலை ஆராய வேண் டும். வித்தையின் வாயிலாக ஆன்மா அறிந்த போகத் தில் அராகம் இச்சையை உண்டாக்கும், நியதி அவரவர் செய்த கன்மங்களை அவரவரே அனுபவிக்கும்படி நிச்சயம் செய்துவிடும். காலம் ஆன்மாக்களுக்குக் க ன் மத்  ைத க் கூட்டி நிற்கும். சுகதுக்க போகங்களை அனுபவிக்க வேண் டிய காலவரையறையைச் செய்து கொண்டிருக்கும். உயிர் கள் போகங்களை நுகரும்போது இறந்த காலத்து எல்லை யையும், நிகழ்கால பலத்தையும் (இப்பொழுது அநுபவிக் கும் விடயபோகம்) எதிர்காலப் புதுமையையும் வரை யறை செய்து நிற்கும், புருடன் ஆசைப்பட்ட பதார்த்தங் களில் மயங்கும். பிரகிருதி போகங்களிலே அழுந்துவிக்கும். கலை, வித்தை, அராகம், நியதி, காலம் என்னும் ஐந்தும்
மு. 15

Page 77
14 முப்பொருள் உண்மை விளக்கம்
தத்துவங்களின் உதவியால் தன்னிடத்து வந்து பொருந்து கின்ற கன்ம பலன்களை ஆன்மா அனுபவிக்கும்போது அது புருடன், பஞ்சகஞ்சுகன், புருட தத்துவம் என்ற பெயர் களைப் பெறும்.
ஆன்மாவின் இயல்பை விளக்கி அது எவ்வாறு சாக் கிரம், சொப்பனம், சுளுத்தி, துரியம், துரியாதீதம் என்ற ஐந்தவத்தைகளைப் பொருந்தும் என்பதைச் சிவஞானபோ தம் நான்காஞ் சூத்திரம் விளக்குகிறது. -
அந்தக் கரணம் அவற்றினுென் றன்றவை சந்தித்த தான்மாச சகசமலத் துணரா தமைச்சர சேய்ப்பநின் றஞ்சவத் தைத்தே.
ஆன்மாவானது அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி, சித் தம் அகங்காரம் என்னும் நான்கனுள் ஒன்றல்ல. ஒர் அரசன், நுணுகிய அறிவுள்ள மந்திரிமாரை ஆலோசனை கூறுவதற்குத் தன்னுடன் வைத்திருந்து அரச கருமங்களை நடத்துவதுபோல அனுதியே ஆணவமலத்தினுல் அறிவின் றிக் கிடக்கும் ஆன்மாவுக்குக் கலை முதலிய தத்துவங் களினலே பொதுவகையால் உணர்வு நிகழ்ந்தாலும் சிறப்பு வகையால் உணர்வு நிகழ்வதில்லை. ஆகையால் ஆலோ சனைத் துணையாகிய அவ்வந்தக்கரணங்களோடு கூடிநின்று ஆன்மா சாக்கிரம், சொப்பனம், சுளுத்தி, துரியம், துரியா தீதம் ஆகிய ஐந்தவத்தையைப் பொருந்தும்.
ஆன்மா லலாடத்தானம் (புருவமத்தி) ஆகிய சாக் கிரத்தினின்று ஒவ்வோர் அவத்தையாகக் கீழ்நோக்கிச் சென்று துரியாதீதத்தை (மூலாதாரம்) அடைந்து பின்னும் அவ்வாறே ஒவ்வோர் அவத்தைப்பட்டு மேல்நோக்கிச் சென்று லலாடத் தானத்தை அடையும். இந்த ஐந் தவத்தைகளாகிய சாக்கிரம், சொப்பனம், சுளுத்தி, சரி யம், துரியாதீதம் முறையே நனவு, கனவு, உறக்கம் பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பனவாம். இனி, ஒவ்

ச்ாஸ்திரவியல் - பசு 115
வோர் அவத்தையிலும் உயிர் நிற்கும்போது அதனுடன் பொருந்தும் கருவிகள் யாவையென அறிதல் வேண்டும். சாக்கிரம் (நனவு) புருவநடுவில் நிகழும்போது உடன்நிற் கும் கருவிகள் ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து, ஐம்புலன்கள் ஐந்து, கன்மேந்திரியங்களுக்குரிய தொழில் ஐந்து, வாயுக்கள் பத்து, அந்தக்கரணம் நான்கு புருடன் ஆகிய முப்பத்தைந்து தத்துவங்களும் தொழிற் படும்.
சொப்பனத் தானமாகிய (கனவு) கண்டத்திலே ஞானேந்திரியம் ஐந்து, கன்மேந்திரியம் ஐந்து ஆகிய பத் தும் லலாடத் தானத்திலே நிற்க, மற்ற இருபத்தைந்து கருவிகளுடன் உயிர் தொழிற்படும்,
களுத்தி (உறக்கம்) என்னும் இதய தானத்திலே, பிராணவாயுவும், சித்தமும் புருடனைப் பொருந்திநிற்கும்.
துரியம் (பேருறக்கம் ) ஆகிய உந்தி ( கொப்பூழ் )த் தானத்தில் பிராணவாயுவாகிய ஒரு கருவி புருடனைப் பொருந்திநிற்கும்.
துரியாதீத (உயிர்ப்படங்கல்) த் தானமாகிய மூலா தாரத்தில் கருவிகள் ஒன்றுமின்றிப் புருடன் மாத்திரம் இருக்கும்.
அந்தந்த அவத்தையில் நிற்குங் கருவிகளோடு கூடியும் பிறிதொன்றைக் கூட்டாமலும் இருக்கின்ற அறிவு காணப் படும் இடமே உயிரிருக்கின்ற இடமாகும், ஆன்மா சாக் கிரம், சொப்பனம், சுளுத்தி, துரியம், துரியாதீதம் என் லும் ஐந்தவத்தைப்பட்டு ஓர் அவத்தையில் அறிந்ததைப் பிறிதோர் அவத்தையில் அறியாது அடங்கி மீளத் துரியா நீதத்தில் நின்று முறையே வெளிவந்து அறியும். துரியா தீதத்துத் தனித்துநின்ற புருடன் நனவுநிலைக்கு வந்ததும் மற்றவற்றை நினைவு கொள்வதற்குக் கருவியாக நிற்பது, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் நான்கு வாக்குகளுமாம். ஆன்மா சாக்கிரத் தானத்தினின்று கீழ்

Page 78
125 முப்பொருள் உண்ம்ை விளக்கம்
நோக்கிச் செல்வது கீழாலவத்தை எனப்படும். இக்கீழாலவத் தையில் சாக்கிரத்திற் தொழிற்படும் கருவிகள் முப்பத்துநான் கனுள் அந்தக்கரணம், ஞானேந்திரியம் கன்மேந்திரியம் ஆகிய பதினன்கும் அகக்கருவிகளாகும். ஏனைய இருபதும் புறக் கரு விகளாகும். மற்றப் புறக்கருவிகள் நாற்பதும், பூதங்கள் ஐந் தும் தமது சத்தி அடங்கித் தொழிற்படமாட்டா. சிவதத் துவங்களும் கலாதிகளும் அவத்தைகளுக்கு ஏதுவாக LDitlt-st
இனி, அகநிலைகள் ஆறையும்பற்றி அறிதல்வேண்டும். அவை, ஆதாரங்கள் எனப்படும், மூலாதாரம், சுவாதிட் டானம், மணிபூரகம், அணுகதம், விசுத்தி, ஆஞ்ஞை ஆகி யன ஆறு ஆதாரங்களாகும். இந்நிலைகளில் நினைந்து வழி படச் சிவபெருமானின் திருவடியைக் காணலாம்.
மூலாதாரம் என்பது குதத்திற்கும் குய்யத்திற்கும் நடுவேயுள்ள பகுதியாகும். இது முக்கோண வடிவாயுள் ளது. அத்திரிகோணத்திற்கு நடுவே நாலிதழுடைய ஒரு பூ வடிவாய நாலிதழ்க் கமலத்துக்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும். அந்த ஓங்காரத்துக்கு நடுவில் விக்கினேஸ்வரனும் குண்டலிசத்தியும் எழுந்தருளி இருப்பார்கள். மாணிக்க (பச்சை) நிறமுள்ளது. இவையெல்லாம் அவ்விடத்திற் தோன்றுவனபோலிருக்கும்.
சுவாதிட்டானம் மூலாதாரத்துக்கு இரண்டுவிரல் கனத் திற்கு மேலிருப்பது, கோசத்திற்கும் நாபிக்கும் நடுவிலுள் அாது. நாற்சதுரமானது அதன் நடுவே ஆறிதழ்களேயுடைய ஒரு பூ வடிவமும் அந்த ஆறிதழ்மத்தியில் இலிங்கபீடமும் அதன் நடுமத்தியில் நகார எழுத்து நிற்கும். அந்த நகரத் தின் நடுவிற் பிரமாவும் சரஸ்வதியும் வீற்றிருப்பார்கள், இது பிருதிவியின் கூழுகும். பொன்னிறமாகும். இவை யெல்லாம் அவ்விடத்தில் தோன்றுவனபோலிருக்கும்.
மணிபூரகம் சுவாதிட்டானத்துக்கு எட்டு விரல் பிர மாணத்துக்குமேல் இருப்பது இது உந்திக்கமலம் என்று

சாஸ்திரவியல் - பசு
சொல்லப்படும், ஏழாம்பிறை வடிவுள்ளது. இதன் நடுவே பத்திதழையுடைய ஒரு புஷ்பமும் அதன் நடுவே மகார எழுத்து நிற்கும். அந்த மகாரத்துக்கு நடுவில் மசாலிஷ்ணு வும் மகாலட்சுமியும் வீற்றிருப்பார்கள். பளிங்குநிறமுள் ளது. அவ்விடத்தில் இவ்ையெல்லாம் தோன்றுவனபோல் இருக்கும்.
அணுகதம் மணிபூரகத்துக்குப் புத்து விரற்கடைப் பித மாணமுள்ள இடத்துக்கு மேலுள்ளது அனுசுதமாகும். இது இருதயகமலமாம். முக்கோண வடிவுடையது. அதன் நடுவில் பன்னிரண்டிதழ்களையுடைய புஷ்பம் வட்டமா யிருக்கும், அந்தப் புஷ்பத்தின் நடுவில் சிகாரஎழுத்து நிற் கும். அந்தச் சிகாரத்தின் நடுவில் உருத்திரனும் பார்வதி யும் அமர்ந்திருப்பார்கள். அக்கிணி நிறத்தையுடையது. அவ்விடத்தில் இவையெல்லாம் தோன்றுவதுபோலிருக்கும்,
விசுத்தி அணுகதத்திற்குப் பத்துவிரற் பிரழான முள்ள இடத்துக்கு மேலுள்ளது. இது கண்டஸ்தானத்திலே அறு கோணமாயிருக்கும். அந்த அறுகோணத்தின் நடுவில் பதி குறு இதழுடைய ஒருபுஷ்பம் வட்டமாயிருக்கும். அந்தப் பு:பத்தின் நடுவே வகார எழுத்து நிற்கும். அந்த வகா ரத்தின் நடுவில் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் எழுந்தருளி இருப்பார்கள். அது மேக நிறமுடையது.
ஆஞ்ஞை விசுத்திக்குப் பன்னிரண்டு விரற்கடைப் பிர மாணமுள்ள தானத்திற்குமேல் லலாடLபீடத்திலிருக்கிறது. பொன்போன்ற வட்டவடிவமுற்று நிற்கும்: நெற்றிப் புரு வத்தின் வெளியாய் ஆகாயஸ்தானத்தில் மூன்றிதழை up 65- புட்பம்போலிருக்கும். அதன்நடுவில் யகார எழுத்து நிற்கும். அந்த யகாரத்துக்கு நடுவிற் சதாசிவமும் மனேன் மணியும் எழுந்தருளியிருப்பார்கள், படிக நிறமுடையது. இவையெல்லாம் அவ்விடத்திற் தோன்றுவதுபோலிருக்கும். இவ்வாறுதாரங்களையும்,

Page 79
ᎥᎥ8 முப்பொருள் உண்மை விளக்கம்
"நாலும் இருமூன்றும் ஈரைந்தும் ஈராறும் கோலிமேல் நின்ற குறிகள் பதினுறும மூலங் கண்டாங்கே முடிந்து முதல்இரண்டும் காலங் கண்டானடி காணலு மாமே '
என்று திருமந்திரம் விளக்குகிறது.
இவ்விதம் ஆதாரம் ஆறிலேயும், ஆறெழுத்தும், ஆறு தெய்வமும், ஆறுவீடும் ஐம்பத்தொரு அட்சரமும் காணப் படும். ஆதாரங்கள் ஆறிலுள்ள மலர்களில் மேலானது அழகிய பதினறு இதழ்களையுடைய மிடற்றின் கண்ணுள்ள மலராகும். அவ்விடத்தில் வழிபடும் தூயவறிவு சிவபேரின் பமாய்க் காணப்படும். அவ்வறிவு சிவவறிவினுள் அடங் கிச் சிவவறிவாய் விளங்கும். இதை விளக்கித் திருவுந்தி шигт гт,
'ஆதாரத்தாலே நிராதரத்தே சென்று
மீதானத்தே செல்கவுந் தீபற விமலற்கிடம தென்றுந் தீபற’.
என்று கூறுகிறது. மனம் பலவற்றிலும் வியாபியா வண்ணம் ஆழுதாரங்களிலும் அந்தந்தத் தேவதைகளைத் தியானித்த பழக்கத்தாலே நிராதார (திருவருளுணர்வு) மாகிய மனச் சலனமில்லாதவிடத்தே நீ சென்ற திருவருளிடத்திற் செல்ல முயற்சிக்கவேண்டும். அந்தத் திருவருளே இறைவனுக்கும் இருப்பிடம். இதுவே இதன் பொருளாகும்.
ஆதியும் அந்தமுமில்லாது அரும்பெரும் சோதியாம் எங்கும் வியாபித்து விளங்குகின்ற சிவம் உயிர்களோடு ஒன் முயும் வேரு யும் உடனயும் நின்று அருள்புரிகின்றன். சம் பந்தசுவாமிகளின் தேவாரம் இதை நன்கு விளக்குகிறது.
"ஈருய் முதலொன்றம் இரு பெண்ணுண் குணமூன்றப் மாருமறை நான்காய் வருபூதம் அவை யைந்தாய் ஆறர்சுவை யேழோசையொடெட்டுத் திசைதானுய் வேறயுட னுணுனிடம் விழிம் மிழலேயே'

Fmr 6ńv Spreâuudiv -- Luar 119
உலகத்து உயிர்களெல்லாம் தன்னிடத்து ஒடுங்கத் தான் ஒருவனே இறுதியாய் நிற்கும். அவனே உலகமெல்லாம் மீளத் தோன்றுதற்குக் காரணமாவான். பெண் ஆணுய், சாத்வீகம், இராசதம், தாமதம் ஆகிய குணங்கள் மூன் முய், இருக்கு முதலிய நான்கு வேதங்களாய், புலன்களி னின்று தோன்றுகின்ற பூதம் ஐந்தாய், உப்பு, உவர்ப்பு கார்ப்பு, கைப்பு, புளிப்பு, தித்திப்பு என்னும் ஆறுவகைச் சுவையாய், சட்சம், ரிஷபம் காந்தாரம், மத்யமம், பஞ்ச மம், நிஷாதம், தைவதம் என்று ஏழு ஒசைகளாய் மாய காரியமான உலகத்திற் காணப்படும் எட்டுத் திசைகளு மாய் ஒன்ருய் வேறய் உடனய் இறைவன் நிற்பன், இதுவே இதன் பொருளாகும். இறைவன் உயிர்களோடு கலந்திருக்கின்ற மூவகை நிலைகளைப்பற்றி நாம் அறியவேண் டும். சிவஞானபோதம் இரண்டாஞ் சூத்திரம் இதைப்பற்றிக் கூறுகிறது.
* அவையே தானே யாயிருவினையிற்
போக்குவரவு புரிய வாணேயி னிக்க மின்றி நிற்குமன்றே'.
இறைவன் கலப்பினல் அவ்வுயிர்களேயாய் பொருட் தன்மை யால் வேறுமாய் உடனுமாய் நின்று தனது சிற்சத்தியால் வரும் இருவினேகளுக்கீடாக ஆன்மாக்கள் இறத்தல் பிறத் தலைப் புரியும் வண்ணமாக சிற்சத்தியிற் பிரிப்பின்றி திரோ தான சத்திவடிவாய் நிற்பான் என்பது இதன் பொருளாம்.
ሥ -
உயிர் நீங்கியவிடத்து உடல் அழியும். ஆகையால் உடல் இருப்பதற்கு உயிர் அதனேடு கலந்து உடல்வேறு தான் வேறு என்னும் வித்தியாசமின்றி அவ்வுடலேயாய் நிற் றல் போல உயிர்கள் நிலைபெறுவதற்கு இறைவன் அவற் முேடு கலந்து உயிர்கள் வேறு தான் வேறு என்னும் வேறு

Page 80
20 (piya Lurrador Allahram In adará a b
பாடின்றி அவ்வுயிர்களேயாய் அல்லது ஒன்ருய் நிற்றலே யாம். இச் சூத்திரத்தில் 'அவையேயாதல்' இதுவேயாகும்.
இனி "தானேயாதல்" என்பது வேருய் நிற்றலாம். எங்களுடைய கண் உலகப் பொருள்களைக் காண்பதற்குச் சூரியனின் ஒளி தேவை, சூரியனின் ஒளி இல்லாவிட்டால் கண்ணின் ஒளி ஒன்றையும் காணமாட்டாது, அவ்விதம் கண் காண்பதற்குச் சூரியன் துணையாய் நிற்பினும் சூரியன் வேறு கண் வேருகும். அதுபோல உயிர்கள் அறிதற்கு முதல் வன் துணையாய் நின்று அறிவிக்கவேண்டும். அவன் அறிவித் தாலன்றி உயிர்கள் தாமாக அறியமாட்டா. முதல்வன் துணையாய் நின்று அறிவித்தாலும் முதல்வன் அவ்வுயிர் களின் வேருவான். இதுவே வேறய் நிற்றலாம்.
"அவையே தானேயாதல்' என்பது உடனய் நிற்ற லாம். கண்ணுெளியானது பொருளைக் காண்பதற்கு ஆன்ம போதம் (உயிரறிவு) கண்ணுெளியுடன் நின்று பொருளை அறிவதுபோல உயிர்கள் இன்பதுன்பங்களை அநுபவிப்பதற்கு முதல்வன் அவ்வுயிர்களுடன் கூடி உயிர் வேறு தான் வேறு என்னும் வேறுபாடின்றி உயிருக்குயிராய் நின்று அவ்வின்ப துன்பங்களுக்குக் காரணமான விடயங்களில் உடன் செல்லு தலாகும். இதுவே உடனுய் நிற்றலாம்,
இறைவன் ஒன்றினுந் தோய்வின்றிப் பிரகாசமாய் நிற் கும்போது சிவம் எனவும் உயிர்களோடு ஒன்ரு யும் வேரு யும் உடனயும் நிற்குந் தன்மையிற் சத்தி எனவும், ஐந் தொழில் செய்யும் பொது பதியெனவும் பெயர் பெறுவான். இங்கு சக்தி என்பது திரோதான சக்தியைக் குறிக்கிறது 'அவையே தானேயாதல்" என்ற மூன்று நிலைகளையும் சிவ ஞர்ன்போதம் மேலும் விளக்குகிறது. உருக்கிய அரக்கி ஞேடு சேர்த்த கற்பொடி பிரிக்க முடியாமலிருத்தலால் அது ஒன்ருய்க் காணப்படுகிறது, பிரிக்கமுடியாவிட்டாலும் கற் பொடியெனத் தெரிதலால் வேருய்க் காணப்படுகிறது. அரக்குமுழுதும் கற்பொடி தெரிதலால் அது உடனயும் நிற்

ச்ாஸ்திரவியல் - பல 28i
கிறது. அதுபோல் இம்மூன்று நிலைகளும் முதல்வனுக்கும் உயிர்களுக்குமுள்ள அத்துவித நிலையை உணர்த்துவனவாம். யோகசுவாமிகள் "எள்ளும் எண்ணையும் போன்ற இறை வன்" என்று கூறுகின்ருர், காரைக்கால் அம்மையார்,
"அறிவானுந் தானே அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றன் தானே - அறிகின்ற மெய்ப்பொருளுந் தானே விரிசுடர்பார் ஆகாயம் அப்பொருளுந் தானே அவன்'.
என்று கூறுவதைக் கவனிக்கலாம். அண்டத்திலும் பிண் டத்திலும் தத்துவங்களோடு இறைவன் விரவி நிற்பதை அறியலாம்.
'இருநிலனுய்த் தீயாகி நீரு மாகி
இயமான ஞயெறியுங் காற்று மாகி அருநிலைய திங்களாய் ஞாயி ருகி
ஆகாச மாயட்ட மூர்த்தி ஆகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆணும்
பிறருருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலையாய் இன்ருகி நாளே யாகி
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே".
என்ற அப்பர் தேவாரத்திலிருந்தும்."கூறும் நாவே முதலாக கூறுங் காரணம் எல்லாம் நீ" என்று மணிவாசகர் கூறுவதி லிருந்தும் எவ்வாறு இறைவன் ஒன்ருய் விரவி இருக்கின்ருர் என்பது புலப்படும்.
'சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க". என்ற மணிவாசகர் திருவாக்கிலிருந்தும் 'உலகெலாம் உணர்ந்தோதற் கரியவன்' என்று சேக்கிழார் கூறுவதி லிருந்தும் இறைவன் வேருய் நிற்கும் நிலையை அறியலாம். 'துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என்னெஞ்சம் துறப்பிப்பாய் நீ" என்று நாவுக்கரசர் கூறுவ திலிருந்தும் மு. 16

Page 81
i28 முப்பொருள் உண்மை விளக்கம்
'அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தகு
மதியினில் தண்மை வைத்தோன்':
என்ற திருவாசகத்தாலும் இறைவன் உடனுய் நிற்றலை அறி கின்ருேம். இச்சான்றுகளால் எவ்வாறு தனது அருள் ஆற் றல் கொண்டு தானே ஆடி உயிர்களை ஆட்டுவிக்கின்முன் என்பதை நாம் உணரமுடியும்.
பசுவுக்குப் பொது இயல்பு கருவி கரணங்களுடன் கூடி நிற்றலாம். சிறப்பியல்பு கருவிகளினின்றும் நீங்கி உட ஞய் நிற்கும் சிவமாய் நிற்றலாம். பசு தனித்து நிற்பதில்லை. பாசத்தையேனும் பதியையேனுஞ் சார்ந்து நிற்கும். அது சார்ந்த பொருளின் தன்மையாய் நிற்கும். அவ்விதம் உயிர்சாரும் பொருள் சத்தும் அசத்துமாம். தோற்றமாற்ற மின்றி என்றும் ஒருதன்மையாயிருப்பது சத்து எனப்படும். அது நிலையான உண்மைப் பொருளாகும். சுட்டறிவினல் அறியப்படுவது எல்ல்ாம் அசத்தாகும். அது மாற்றமுடை யது. ஆன்மா சத்தோடு கூடிச் சத்தாயும் அசத்தோடு கூடி அசத்தாயும் நிற்றலால் அது சதசத்து எனப்படும். ஆன்மா ஆற்றல் அற்றது. அறிவிக்க அறிவது. உயிர் சத்தையும் அசத்தையும் அறியக் கூடிய காரணத்தால் சதசத்து எனப் பட்டதேயன்றி சத்தும் அசத்துமாகிய மாறுபட்ட தன் மையை உடையதல்லதென்பதை அறிய வேண்டும். சத்து, பதியாகும். அசத்து மாயா காரிய உடலுலகுகளாகும். உயிர் அவ்விரண்டினையுஞ் சார்ந்து நிற்கும் நிலையை சிவஞான சித்தியார் விளக்குகிறது.
* அறியாமை சாரின் அதுவாய் அறிவாம்
நெறியான போதுதவாய் நிற்கும் - குறியா சதசத் தருளுணர்த்த தானுணரா நின்ற விதமுற் றறிவெனும் பேர்மெய்". என்று கூறுகின்றர்.
ஆன்மா ஒருவிடயத்தை நுகரும்போது ஐம்பொறிகளி லொன்றும், பஞ்சபூதங்களிலொன்றும், அந்தக்கரணங்கள் நான்கும், கலாதிகள் ஐந்தும் ஆகிய பதினுெரு தத்துவர்

சாஸ்திரவியல் - பசு 18.
களையும் பொருந்தி நின்று அவற்றின் உதவியால் அநுப விக்கும். முதல்வன் அக் கருவிகளைக் கூட்ட அவன் செய லால் அக்கருவிகளோடு கூடிநின்று ஆன்மா போகங்களே அநுபவிக்கும். ஆகையால் சிவன் அறிவிக்க ஆன்மா விட யங்களை அறியும், அப்படியிருந்தும் தன் செயலாற் தானே அறிந்து அனுபவிப்பதாக ஆன்மா நினைக்குமேயன்றி தன் னுள்ளே நின்று துணை புரியும் திருவருளே அறியமாட்டாது. துணையின்றி அறிய முடியாத குறையினையுடையது பசு ஞானம். துணையாகிய கருவி, கரணங்களினுல் அறிவது பாசஞானம். உலகப் பொருளைப் பற்றியும், நூல்களை ஆராய்ந்தும் கருவி கரணங்கள் துணைபுரியப் பெற்றுக் கொள்ளும் அறிவு பாசஞானம், பசுஞானமாகும். இவற்ருல் பரஞானம் உண்டாகாது. பரஞானத்தின் மூலமே திருவரு ளைப் பெற்றுக்கொள்ள முடியும். 'கற்றரை நான் வேண் டேன் கற்பனவும் இனி அமையும்" என்று மணிவாசகப் பெருமான், நூலறிவு பெற்ருேரைத் தான் விரும்பமாட் டேன் என்று சொல்லும்போது திருவடி ஞானமாகிய பர ஞானமுடையாரையே விரும்பவேண்டியது எனக் குறிப் பாக உணர்த்துகிருர் . இனி, அத்திருவருளும் "அவனரு லாலே அவன் தாள் வணங்கி" என்று மணிவாசகர் கூறு வதிலிருந்து திருவடிஞானத்தாலே தன்னறிவின் கண்ணே ஆராய்ந்தறியவேண்டும். அத்திருவருள் ஞானத்தால் இறை வனே அறிவதோடு பாசப்பொருள்களினின்று நீங்கவே அப் பதிஞானம் பிறவித் துயராகிய வெப்பத்துக்கு நிழலாய் வெளிப்பட்டு விளங்கும். பாசப்பொருள்கள் நீங்குவதற்கு முன் சென்மங்களிலே செய்த சரியா கிரியா யோகங்களின் பயனுல் நல்வினை, தீவினைகளாலே ஏற்படும் விருப்பு, வெறுப் புக்களை ஒரே தன்மையாக நினைக்கும் இருவினையொப்பு என்று சொல்லப்படும் நிலை ஏற்படும். இருவினையொப்பு ஏற்படுங் காலத்தில் அருட்சக்தி ஆன்மாவிற் பதியும். அதுவே சத்திநியாதமாகும். அந்நிலை ஏற்படுவது எவ்வாறு என்பதை அறியவேண்டும். ஒளியின் உதவியுடன் காணுகின்ற கண்
R
காணப்படும் பொருளுக்கும் ஆன்மாவுக்குமிடையே உள்

Page 82
1፥ፊ முப்பொருள் உண்மை விளக்கம்
ளது. அதுபோன்று ஞானஒளியானது ஆன்மாவுக்கும் இறை வனுக்கும் நடுவில் உள்ளது. அந்தத் திருவருளாகிய மெய்ஞ் ஞான ஒளியின் துணையின்றி இறைவனைக் காணமுடியாது.
அகத்திற் சிவனேடு ஒற்றுமைப்பட்டு ஏகஞகி நிற்ற லும் புறத்துப் பிராரத்தவினை தாக்குமிடத்து அவ்வினை தாக்காத வண்ணம் இறைவழி நிற்றலால், செய்வார்க்குத் தனக்கெனச் செயலில்லாமலும், தன்னுடைய அறிவால் அறிதலும் இச்சையால் விரும்புதலும் அற்றநிலை ஏற்படும். தன் அறிவால் அறிதல், விரும்புதல், செய்தல் தற்போத நிகழ்ச்சியாகும். உயிரின் அறிவு முற்பட்டுத் தோன்றுங் காலத்து முதல்வன் தான் இருக்கின்றதாகக் காணப்படா மல், தற்போதத்தால் முற்பட்டுத் தோன்றும் அவ்வுயிரின் உணர்வேயாய் நிற்பன். தற்போதம் இழந்த நிலையிற்தான் இறைவன் திருவருள் கிட்டும். தானெரு முதல் என்ற எண் ஓணம் எதுவரை இருக்கிறதோ அதுவரை சிவம் விளங்குவ தில்லை. இதுபற்றியே 'திருவுந்தியார் விளக்க மாக க் கூறுகிறது.
** நஞ்செயலற்றிந்த நாமற்ற பின்நாதன்
தஞ்செயல் தானேயென் றுந்தீபற தன்னையே தந்தானென் றுந்தீபற '
தாம் செயலாற்றுகின்ருேம் என்ற முனைப்பு அற்ற பின்னர் நம்முடைய செயலையெல்லாம் இறைவன் தன்செயலாக ஏற்றுக்கொள்வான். அதுவுமல்லாமல் தன்னுடைய திருவ டிப் பேரின் பத்தையே தருவான். இதுவே இதன் பொரு ளாகும்.
தன்னுணர்ச்சியின்றி இறையுணர்ச்சியே விளங்கும் நிலை சகலாவத்தையைக் கடந்து சுத்தாவத்தையை எய்திய நிலையாம்; M

JFrrow Spragudu - Lief
** எனநானென்ப தறியேன்பக லிரவாவதும் அறியேன் மனவாசகங் கடந்தான்என மத்தோன்மத்த ஞக்கிச் சினமால்விடை உடையான்மன்னு திருப்பெருந்துறை உறையும் பணவனெனைச் செய்தபடி றறியேன் ப ஞ் ail.C. '
என்ற திருவாசகத்தின் மூலம் எவ்வாறு'மணிவாசகப் பெரு மான் கரணங்கள் கொண்டுணரும் பகல். இரவு என்ற காலத்தின் இயல்பை அறிய முடியாத நிலையை எய்தினர் என்பதை அறிகிருேம். இது தற்போதம் இழந்து திருவருள் உயிரிற் கலந்த நிலையாகும். சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம் கூறுவதைக் கவனிக்கவேண்டும்.
** ஊனக்கண் பாசம் உணராப் பதியை
ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி யுராத்துனைத் தேர்த்தெனப் பாசம் ஒருவத் தண்ணிழலாம் பதிவிதி எண்ணுமஞ் செழுத்தே"
துணையின்றி அறியவாற்றலற்ற பசுஞானம் (தற்போத முனைப்பால் ஆன்மாவினிடத்து நிகழும் ஞானம்) பாச ஞானத்தால் (பாசமாகிய கருவிகளால் ஆன்மாவினிடத் தில் நிகழும் ஞானம்) பதியை அறியமுடியாது. ஆனல் பதிஞானத்தால் (திருவருளால் ஆன்மாவினிடத்து நிகழும் அறிவு) முதலவனை உயிராகிய தன்னறிவின் கண்ணே ஆராய்ந்தறிய வேண்டும். அதுவுமல்லாமல் பாசக்கூட்டத் தைக் கானல் நீர் போலப் பொய்யென உணர்ந்து அத னின்று நீங்கவே பதிஞானம் விளங்கும். அத்திருவடி ஞானத் தால் முதல்வனைக் கண்ட காட்சி நிலைத்தற்பொருட்டு திரு அஞ்செழுத்தை அறிந்து விதிப்படி செபிக்கவேண்டும். இதுவே இதன் பொருளாகும். பஞ்சாக்கரம் ஒதும் முறையை "உண்மை விளக்கம்" கூறுகிறது.
** அண்ணால் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பக லற்றின்பத்தே - நண்ணி அருளா னதுசிவத்தே யாக்கும் அணுவை இருளா னது தீர இன்று " メ

Page 83
126 முப்பொருள் உண்மை விளக்கம்
சிவ முதலாகச் சொல்லும் பொருளுடைய அழகு பொருந் திய அக்கரம் ஐந்தையும் இடைவிடாது தியானித்தால் அருளானது பொருந்கி, ஆன்மாவை மல இருளானது நீங்கும்படி செய்து ஆனந்த உருவத்தையுடைய சிவத்தின் கண்ணே சேர்க்கும். இங்கு சூக் சம பஞ்சாட்சரத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. அது சிவாயநம என்பதாம். நக ரத்தை முதலாகவுடைய நமச்சிவாய என்பது தால பஞ் சாக்கரமாகும். துல பஞ்சாட்சரம் போகத்தை அளிக்கும். சூக்கும பஞ்சாட்சரம் வீட்டை அளிக்கும். மணிவாசகப் பெருமான் 'நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப் பெற்றேன்.' என்று கூறியதிலிருந்து சூக்கும பஞ்சாட்சரம் எவ்வாறு பாசத்தை நீக்கி திருவடியைச் சேர்ப்பிக்கும் என் பது விளங்குகிறது.
ஆன்மா பெத்த நிலையில் (மலங்களாலே கட்டுண்ட நிலையில்) கருவி கரணங்களையும், முத்தி நிலையில் திருவரு ளையும் துணையாகக்கொண்டு விளங்கும். தத்துவங்களாகிய உடல், பொறி, கரணம் யாவையும் ஆன்மாவிடத்திலே, இரண்டற நிற்குந் தன்மை போல, சகசமலமற்ருர் முத்தி நிலையில் சிவனிடத்தில் இரண்டறப் பொருந்தி நிற்பார் கள் "உண்மை விளக்கம் இதைத் தெளிவாகக் கூறுகிறது.
" தத்துவங்க ளெல்லாம் சகசமா ஆன்மாவிற்
பெத்தத்தில் நிற்கின்ற பெற்றிபோல் - முத்திதனிற் சித்த மலமற்றர் செறிந்திடுவர் என்றுமறை சத்தியமா ஒதியிடுங் தான் " பெத்தநிலையில் முதல்வன் உயிராய் ஒற்றுமைப்பட்டு நிற்பான். முத்திநிலையில் உயிர் சிவமாய் ஒற்றுமைப்பட்டு நிற்கும். இதுவே அத்துவித சம்பந்தமாம். பண்ணும் அதனேடு பிரிப்பின்றி நிற்கும் ஓசை போலவும், பழமும் அதனேடு பிரிப்பின்றி நிற்கும் சுவை போலவும் எவ்விடத்தும் வியாபகமாய் முதல் வனுடைய திருவருள் உயிர்களோடு பிரிப்பின்றி நிற்கும். அந்நிலையை வேதங்கள் அத்துவிதமெனக் கூறும்,

சாஸ்திரவியல் in a 及27
பாச நீக்கத்தில், உயிரும் சிவமும் ஒரு பொருளாய் ஒற்று மைப்படும். பாலுடன் நீர் கலந்தவிடத்துபால் வேறு நீர்வேரு கப் பிரிக்கமுடியாதவாறு போலச் சிவத்துடன் உயிர் கலந்த விடத்துச் சிவம் வேறு உயிர் வேறு எனப் பிரிக்க முடியாத நிலை ஏற்படும். சிவனிடத்து உயிர் வைத்திருக்கும் அன்பி ணுலும் உயிரிடத்துச் சிவம் வைத்திருக்கும் அருளினலும் உயிரும் சிவமும் ஒற்றுமைப்படும். சிவஞானபோதம் பத் தாஞ் சூத்திரம்.
** அவனே தானே யாகிய வந்நெறி
யேக ஞகி யிறைபணி நிற்க
மலமாயை தன்னெடு வல்வினை யின்றே ?? என்று கூறுகிறது.
இறைவன் பெத்தநிலையில் உயிரோடு உடனுய் நின்று, அவ்வுயிருக்கு முதல்வன் இருக்கின்றன் என வேற்றுமை காணப்படாது உயிர் தானே அறிந்ததாக எண்ணும்படி அவ்வுயிரோடு ஒற்றுமைப்பட்டு நிற்கின்றன். அதுபோல முத்தி நிலையிலும் உயிர் அம் முதல்வனேடு உடனுய் நின்று இன்பத்தை அனுபவிக்கும். அவ்விதம் அனுபவிக்கின்ற தான் உண்டென வேருய்க் காணப்படாமல் அம்முதல்வணுேடு ஒற்றுமைப்பட்டு அம்முதல்வனேயாய் அவனது அருள் வழி யில் ஒழுகி நின்ருல் ஆணவமலம், மாயாமலம், கன்மமலம் ஆகியன ஒழிந்துபோம். இதுவே இதன் பொருளாகும்.
ஆன்மா சிவானந்தத்தை அனுபவிக்கும்போது தான் வேறு சிவன் வேறு என்னும் வேற்றுமையின்றி நிற்கும். அதோடு தான் என்னும் முனைப்புமின்றியும் நிற்கும். ஆகை யால் வேற்றுமையும் முனைப்பும் அற்று நிற்றலே சித்தாந்த முத்தியாகும்.

Page 84
14 ungb
பதி, பசு, பாசம் என்ற முப்பொருளின் உண்மையைச் சித்தாந்த சாஸ்திரம் எடுத்து இயம்புகின்றது. பதியாகிய சிவனும், பசுவாகிய ஆன்மாவும், ஆன்மாவைப் பந்தித்து நிற்கும் பாசமும் அநாதியாயுள்ளன. இதை விளக்குந் திருமந்திரம்,
* அறிவறி வென்ற அறிவு அணுதி
அறிவுக் கறிவாம் பதியும் அணுதி அறிவினைக் கட்டிய பாசம் அஞதி அறிவு பதியிற் பிறப்பறுந் தானே " என்று கூறுகிறது. அறிவாகிய ஆன்மாவும் அறிவுக்கறிவாய் விளங்கும் பதியும் அறிவினை விளங்கவொட்டாது தடை செய்து நிற்கும் பாசமும் தொன்மையாய் உள்ளன. பேர றிவாகிய பதி அவ்வறிவிற் பதியுங் காலத்து ஆருயிராகிய ஆன்மாவுக்குப் பிறப்பு நீங்கும், இதுவே இதன் பொரு ளாகும்.
அநாதியிலே இறையாகிய பதியும், உறையாகிய வும் சிறையாகிய பாசமும் ஓரிடமாகிய திருவருட் பெரு வெளியில் தங்கியுள்ளன. இங்கே அருள்வெளியெனப்படுவது பரவெளியாகும். பரவெளியென்பது எல்லாவற்றையும் தன் னுள் அடக்கி இருக்கும் வெளியாகும். இதிலிருந்து அவ் அருள்வெளி இறைவனது சந்நிதானம் என்பது புலப்படும். ஆகையால் போர்க்குமிடமெங்குமொரு நீக்கமற நிறை இன்ற பரிபூரணனந்தமாகிய சிவனுடைய சந்நிதானத்திலே எல்லா உலகங்களும் தோன்றி அடங்கும்.
அவ் அருள் வெளியில் உள்ள முப்பொருள்களுள் பாசம் என்பது பசுவைப் பற்றியுள்ளது. ஆன்மா பாசத் நஞலே பிணிக்கப்பட்டிருப்பதால் அது பசு எனக் கூறப் படுறைது. உயிர்கள் அவ்விதம் பந்திக்கப்பட்டிருப்பதால்

சாஸ்திரவியல் - பாசம் 129
அது அவைகளின் அறிவு, இச்சை, செயல்களை மயக்கிப் பிறவிப் பெருங்கடலுள் வீழ்த்துகிmது. பாசங்கள் ஆண வம், கன்மம், மாயை என்பனவாம். இவ்விதம் பாசக் கட் டிலிருந்து நீங்குவதே உயிருக்கு விடுதலை எனப்படும். அறி யாமையை நீக்கும் ஆசிரியன் போலவும் நோயை நீக் கும் மருத்துவன் போலவும் பதியே பசுக்களின் பாசத்தை நீக்குபவன் ஆகின்றன். ஆசிரியன் நூல் மூலமாயும், மருத் துவன் மருந்து மூலமாகவும் உடனய் நின்று நீக்குவர். பதி, வினையாகிய மருந்தைக் கொண்டும், உடல், உலகமாகிய இடங்களைக் கொண்டும் பாசத்தை அடக்கி அருள் புரிகின் ரு?ர். பேரிருளாகிய பாசம், பேரொளியாகிய பதியின்முன் நிற்கமாட்டாது. பதி, பசுக்களுடன் பிரிப்பின்றி நின்று அருளுகின்ருராயினும், பாசமானது பசுக்களைவிட்டு நீங்கா மைக்குரிய காரணத்தை அறியவேண்டும். ஞாயிறும் கண் ணும், கண்ணில் வளர்ந்த படலமும் ஓரிடத்திலிருப்பினும் கண்ணின் படலம் உரிக்கப்பட்ட பின்பே சூரியனின் ஒளி கண்ணிற் பட்டு கண் ஒளியை விளக்கும். இதில், கண் பசுவாகிய ஆன்மாவுக்கும். கண்ணின் படலம் பாசத்துக் கும், ஞாயிறு பதிக்கும் உவமானமாகக் கூறப்படுகிறது. கண்ணிலே வளர்ந்த படலத்தைக் கண் மருத்துவன் உடனே உரித்துவிடுவதில்லை. அப்படலம் முதிர்ந்த பின்னரே உரித்து நீக்குவான். அதுபோன்று சிவபெருமானும் தனது மறைப்பாற்றலாகிய திரோதான சத்தி மூலம் பாசத்தை முதிர்வித்து அதனை நீக்கி உயிர்களுக்கு அருள் புரிகின்றன். ஆகையால் பாசம், முன்கூறப்பட்ட ஆணவம், சன்மம், மாயை, மாயேயம் (மாயாகாரியம்) ஆகியவைகளையும், திரோதாயியையும் சேர்த்து ஐவகைப்படும். இதை விளக் கிச் சிவஞானசித்தியார், "மலமாயை கன்மம் மாயே யந்திரோ தாயி மன்னிச் சலமாரும் பிறப்பிறப்பில் தங்கியித் தரைகீழ் மேலும் நிலையாத கொள்ளி வட்டங் கறங்கென நிமிடத்தின்கண் அலமாரும் இறைவன் ஆணையால்உயிர் நடக்கும் அன்றே"
மு. 17

Page 85
130 முப்பொருள் உண்மை விளக்கம்
என்று கூறுகிறது. ஆன்மாவினிடத்து ஆணவம், கன்மம், மாயை, மாயேயம், திரோதாயி ஆகிய ஐந்து மலங்களும் நிலைபெற்று நிற்பதால் இறைவன் ஆணையினுல் நிலையில்லாத கொள்ளிவட்டமும், காற்ருடியும் போல கணப்பொழுதிற் பலமுறை சுழற்சியுற்று பிறப்பிறப்பில் அகப்பட்டு இவ்வுலக நிரய துறக்கங்களிலே போக்குவரவுடையதாய் அவ்வுயிர் செல்லும்,
நெல்லினிடத்து உமியும் செம்பினிடத்துக் களிம்பும் நெல்லும் செம்பும் என்று உள்ளனவோ அன்றே அவையும் உள்ளன. இடையில் அவைகள் போய்ச் சேர்ந்தனவல்ல. அதுபோல ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங் களும் ஆன்மா உள்ள அன்றே அவையும் உள்ளன. இதனை விளக்கியே சிவஞானபோதம் கூறுகின்றது.
'நெல்லிற் குமியு நிகழ்செம் பினிற்களிம்புஞ்
சொல்லிற் புதிதன்று தொன்மையே - வல்லி மலகன்மம் அன்றுளவாம் வள்ளலாற் பொன்வா ளலர்சோகஞ் செய்க மலத் தாம்"
உமியும் செழும்பும் எக்காலத்துள்ளனவென்று ஆராய்ந் தால் நெல்லும் செம்பும் உள்ளவன்றே அவையும் உள் ளன என்பது விளங்கும். தாமரைப்பூ சிலர்தலும் கூம்புத லும் ஞாயிற்றினலே ஏற்படுமாறு போல அவை முதல்வ அலே தொழிற்படுகின்றன. இதுவே இதன் பொருளாகும்:
ஆணவமலத்தின் சொரூபம் இருண்ட பேரிருள் வடிவம், அது ஆன்மாக்களுக்கு அஞ்ஞானத்தை உண்டாக்கும். வியா கமான ஆன்மாவை சிற்றறிவுடையதாக்கி சிறுத்தன்மைப் படுமாறு அது செய்கிறது. அது ஆன்மாவோடு அநாதியே சகசமாய் (கூடப்பிறந்தது) உள்ளது. மாயாமலம், தனு ன புவன போகங்களையும் கன்மமலம் சுகதுக்கங்களையும் கொடுப்பதற்கு ஆணவமலம் காரணமாய் இருத்தலால் அது மூலமலம் எனப்படும் ஆணவத்தின் குண2 இருபா இருபஃது விளக்கமாகக் கூறுகிறது. அவை

strieħ 5 presundb - lumrrub
(1) பிடித்தது விடாமை (2) மோகம் மிகுத்துச் செல்லுகை (3) கோபமிடையருமை (4) அறியா  ைம விஞ்சி நிற்றல் (5) கொலைத்தொழில் நினைவு விஞ்சுதல் (6) எப்பொழுதும் வருத்தமுறுதல் (7) யான், எனது என்று விஞ்சுதல் (8) மாச்சரியம் (பொழுமை) ஆகிய எட்டுமாம்.
ஆணவமலம் ஒன்முகும். அதன் சத்திகள் எண்ணில் லாதனவாகும். உயிர்கள் ஒவ்வொன்றிலும் பல சத்திகள் பொருந்தி நிற்கும். இதை விளக்கிச் சிவஞானசித்தியார்,
" ஒன்றதாய் அநேக சத்தியுடையதாய் உடனுய் ஆதி
அன்றதாய் ஆன்மா வின்தன் அறிவொடு தொழிலை ஆர்த்து நின்றுபோத் திருத்துவத்தை நிகழ்த்திச் செம்பினிற் களிம்
(பேய்ந்து என்றும்அஞ்ஞானங் காட்டும் ஆணவம் இயைந்து நின்றே"
என்று கூறுகிறது. ஆணவமலமானது எண்ணிறந்த சக்தி களையுடையதாய் எண்ணிறந்த உயிர்களினுஞ் சேர்ந்து செம்பிற் களிம்புபோல அநாதியே சேர்ந்து நிற்பதாய்க் கேவல நிலையில் அவ்வுயிர்களின் அறிவொடு தொழில்களை மறைத்து நின்று, சகலத்திலே போக நுகர்ச்சிக்குக் கார ணமாய் நின்று எப்பொழுதும் அஞ்ஞானத்தை உண்டாக் கும். இதுவே சித்தியார் கூறும் விளக்கமாகும். ஆணவ மலத்தின் சத்திகள் ஆன்மாவை மறைக்க இயலாத பரி பாக காலத்தில் வலி குன்றி நிற்கும், ஆன்மாக்களின் இச்சா, கிரியா, ஞான தொழில் முழுவதையும் தடுத்து நிற்கும் கேவலாவத்தையில் ஆணவமலம் ஒன்றே ஆன்மா வோடு நின்று அதனுடைய அறிவைக்கெடுத்து அணுவாக் குகிறது. அந்நிலையினின்று மீளும்வழி இறைவனுடைய கிருபையேயாம். இதை விளக்கித் தாயுமான சுவாமிகள்:
" நித்திரையாய் வந்து நினைவழிக்குங் கேவலமாஞ்
சத்துருவை வெல்லுஞ் சமத்தறிவ தெந்நாளோ " என்று கூறுவதைக் கவனிக்கலாம். கேவல நிலையாகிய பேரு றக்கத்தில் ஆழ்ந்திருக்கின்ற ஆன்மாவானது, செயலையும்

Page 86
1งอ முப்பொருள் உண்மை விளக்கம்
செய்யும் ஆற்றலுமற்று செயல் செய்யும் தன்மையோடி ருக்கும். ஆகையால் ஆணவமலம் அறியாமையை, உண்டு பண்ணிக்கொண்டு நிற்கும். கன்ம மலத்தின் பலன் சுக துக்கங்களாகும். இதை விளக்கி "உண்மை விளக்கம்* கூறுகிறது.
* அறியாமை ஆணவம்நீ யானசுக துக்கம்
குறியா வினயென்று கொள் '
இனி ஆணவ மலத்தின் இலக்கணம் சிறப்பு, பொது என இருவகைப்படும். சிறப்பிலக்கணம் கேவலத்தில் உயிருக்கு அறியாமையைச் செய்வது. சிறப்பியல்பு என்பது தன்னி யல்பைக் குறிக்கும். பொது இலக்கணம் சகலத்தில் கருவி களோடு கூடி விபரீத உணர்வைச் செய்வது. விபரீத உணர்வாவது ஒன்றைப் பிறிதொன்முக அறிதல். தானல் லாத கருவிகளைத் தானுக நினைத்தலாம். கண் கண்டதை நான் கண்டேன் என்றும் காது கேட்டதை நான் கேட் டேன் என்றும் அறிவது விபரீத அறிவாகும்.
کسی
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றனுள் ஆண வம் அநாதியே கூடி நின்றது. கன்மமும் மாயையும் ஆன் மாவை இடையே வந்து கூடின. இடையே வந்து கூடிய மாயை கன்மங்களினலே ஆன்மாவுக்கு உணர்வு உண்டா கிறது. ஆணவமலம்போல், இடையிலே ஆன்மாவை வந்து கூடும் மாயையும் கன்மமும் அநாதியாயுள்ளன. ஆணுல் ஆணவமலம்போல மாயை கன்மங்கள் உயிரோடு கலந்து நில்லாது இறைவனுக்கு அவை உடைமைப் பொருளாய் இறைவனுக்குள் அடங்கி இருந்து ஆணவமல நிவிர்த்தியின் பொருட்டு இறைவன் கூட்ட உயிரைக் கூடும். ஆகையால் இறைவனுள் அடங்கி இருத்தல் பற்றி அநாதி என்றும் உயிருக்கு இறைவனல் கூட்டப்படுதல் பற்றி இடையே, வந்து கூடினதென்றும் கூறுதல் பொருத்தமாகும் மாயை யும் கன்மங்களும்போல, அவைகளின் காரணமான தனு கரண புவன போகங்களும், இன்ப துன்பங்களும் இறை வனுக்கு உடைமையாகும். உடைமை என்பது உரிமைப் பொருளாகும், உரிமைப்பொருள் அறிவுடையதும் அறிவில்

லாததும் என இருவகைப்படும். அறிவுடைப்பொருள் அடிமை என்றும் அறிவில்லாத பொருள் உடைமை என்றும் கூறப்படும் ஆகையால் சிற்றறிவுள்ள பசுக்கள் மு த ல் வணு க்கு அடிமையாகும் அறிவில்லாத பாசம் முதல்வனுக்கு உடை மையாகும். ஆணவமலம், உயிரைப் பந்தித்தலினலும் அது திருவருளால் நீக்கப்படுதலினலும் உயிருக்கு அது அடங்கி யதுமன்றி, மேம்பட்டதுமன்றிச் சமமாய் உயிரின் அறிவு அளவில் கலந்து நிற்கும். ஆணவமலம் ஆன்மாவின் வியா பகமான அறிவை ஒரு சிறிது விளங்கவொட்டாது மறைக் கும்பொழுது திரோதான சத்தியும் அதற்கு உதவியாய் நின்று உயிர்களை மறைக்கும். மறைக்கும் மல சத்திக்கு திரோதான சத்தி வலிமை கொடுத்து நிற்கும். அதுவுமன்றி ஆணவமலசத்தி வலிகுன்றத்தக்கதாக அது சுத்த மாயா காரியங்களைத் தோற்றுவித்து ஆன்ம அறிவை எழுப்பும், பின்னர் கலை முதலியவற்றைத் தோற்றுவித்து அவ் அறி வுக்கு விளக்கத்தை உண்டு பண்ணும். கன்மங்களை நுகரச் செய்யும். இவ்விதமாக ஆணவமலத்தோடு கூடிநின்று வேண் டும் உபாயங்களைச் செய்தலாலே சிவசத்தியாகிய அத் திரோதான சத்தி மலம்போல் ஒன்முகக் கருதப்படுகிறது. ஆனல் அது மலம் அன்று. உயிர்கள் மேற் கருணை கொண்டு சிவபெருமானுடைய திருவடிகளை அடையும் வண்ணம் அதற்கேற்ற வழிவகைகளைச் செய்துகொண்டு பெ ரி பு பேரருளாகவே விளங்கும். அது ஆணவமலம் பரிபாகமடை யும் வண்ணம் உடன்நின்று அதனைத் தொழிற்படுத்தும் ஆணவமலம் பரிபாகமான பின் அச்சத்தியே அருட்சத்தி யாய் மாறிச் சிவபெருமானை அடையும்படி திருவருளை நல் கும். இதை விளக்கியே சிவப்பிரகாசம்,
" பாகமாம் வகைநின்று திரோதான சத்தி
பண்ணுதலான் மலமெனவும் பகர்வரது பரிந்து நாகமா நதிமதியம் பொதிசடையா னடிக
ணணுகும்வகை கருணைமிக நயக்குந் தானே "
என்று கூறுகிறது.

Page 87
194 முப்பொருள் உண்மை விளக்கம்
ஆணவம், திரோதாயி, மாயை, கன்மம், மாயேயம் என்னும் மலங்கள் ஐந்தினும் திரோதான சத்தியை ஆணவ மலத்தினும் மாயா காரியத்தை மாயையினும் அடக்கி ஆணவம், கன்மம், மாயை என மலங்களை மூன்றெனக் கூறலாம். மாயை உயிரின் அறிவோடு கூடி அவ் அறிவை மயக்கும் மாயா காரியம் அம்மயக்கத்திற்குரிய தனு கரண புவன போகம் ஆகிய பொருள்களாம். ஆகையால் இவ் விரண்டையும் ஒன்ருகக் கருதலாம். திரோதான சத்தி யானது உயிர்களுக்குப் பக்குவம் உண்டாக்கும் பொருட்டு ஆணவமலத்தின் வழியாய் நின்று ஆணவமலத்திற்குரிய மோகம் முதலிய எண் குணங்களையும் செய்விக்கும் சிவ சங்கற்பத்திற்கு ஏதுவாகும். திரோதானசத்தி இல்லையென் ருல் ஆணவமலத்திற்குரிய மோகம் முதலிய எண் குணங் களையும் தொழிற்படுத்த முடியாது. ஆகையால் மலம் என்று உபசரித்துக் கூறப்படும் திரோதாயியை ஆணவ மலத்துடன் அடக்கிக் கூறிவிடலாம்.
உயிர்களின் மும்மலங்களும் பரிபாகம் அடையும் பொருட்டு உலகம் ஒடுங்கித் தோன்றி நிற்கும் எனலாம். தோன்றுதலிஞலே ஆணவமலம் பரிபாகம் அடையும். ஆண வமலம் அறியாமையை உண்டாக்கும். அறியாமை என் பது கேவல நிலையில் அறிவு, இச்சை, செயல்கள் நடை பெருது தடுக்கப்படுதலாம். சிருட்டியினுல் அவ்வித தடை நீங்குதல் ஆணவ மலபரிபாகம் எனப்படும். ஆதலால் உல கத்தின் தோற்றம் ஆணவமலம் பரிபாகம் அடையும் பொருட்டு என்று கூறலாம் அதேபோல உலகம் ஒடுங்கு வதஞல் கன்ம மல பரிபாகம் அடையும். கன்மமலம் என் பது நல்வினை தீவினை என்ற இரு வினையுமாம், இவ் இரு வினையும் பரிபாகம் அடைதல் என்பது இவைகளாலே ஏற் படும் இன்ப துன்பங்களிலே சமபுத்தி தோன்றுதலாம். இன்ப துன்பங்களை நெடுங்காலம் அனுபவித்து அனுபவத் திலே அவ்விரண்டிலும் கைப்புத் தோன்றுதலே சமபுத்தி எனப்படும். அவ்விரு வினைகளும் பலனுக்கு வருங்காலத்து அவ் அனுபவத்திற்கேற்றவாறு உடல் முதலியவற்றை மாற்றிக் கொடுக்கவேண்டியது இறைவன் கருணையாகும்.

ச்ாஸ்திரவியல் - பாசம் 135
அவ்வ்ாறு மாற்றுங்கால் உண்டாகும் ஒடுக்கம் பக்குவமா யிருக்கும் கன்மபலனை அனுபவித்தற்கு ஏதுவாகும். ஆகை யால் ஒடுக்கம் கன்மமலபரிபாகத்தின் பொருட்டாகும். சென்மம் எடுத்தெடுத்து இளைத்துப் போகின்ற ஆன்மாக் களுக்கு ஒடுக்கம் ஆறுதலையும் அளிக்கிறது. தோற்றமும் ஒடுக்கமும் ஆணவமலம் கன்மமலம் பொருட்டென்றல் நிலைத்தல் மாயாமலம் பரிபாகம் அடைதற் பொருட்டா கும். மாயை என்பது மயக்கத்தைச் செய்வது. ஒன்றைப் பிறிதொன்முக உணரும். விபரீத உணர்ச்சியே மயக்கமா கும். நித்தமில்லாத உலகத்தை நித்தமென ೩೫ಶTಗೆ விபரீத உணர்ச்சியாகும். இவ்வித உணர்ச்சி நீங்குதலே மாயாமல பரிபாகமாகும். இவ்விதம் மயக்க உணர்ச்சி நீங் குதல் அனுபவத்திலேயே ஏற்படும். அவ்வித அனுபவம் உண்டாவதற்கு உலகம் சிறிது காலமாகுதல் நிலைத்திருக்க வேண்டும். ஆகையால் நிலைத்தல் மாயா மலபரிபாகத்தின் பொருட்டென அறிந்து கொள்ளலாம். இவ்விதமாக EØSøfat மலபரிபாகத்தின் பொருட்டு உலகந் தோன்றி மாயாமல பரிபாகத்தின் பொருட்டு நிலத்து கன்மமலபரிபாகத்தின் பொருட்டு ஒடுங்கும் என்பதை அறியலாம். இதை விளக்கி அருணந்திசிவாசாரியார், ×
" அழிப்பிளைப்பு ஆற்றல் ஆக்கம் அவ்வவர் கன்ம மெல்லாங்
கழித்திடல் நுகரச் செய்தல் காப்பது கன்ம ஒப்பில் தெழித்திடல் மலங்கள் எல்லாம் மறைப்பருள் செய்தி தானும் பழிப்பொழி பந்தம் வீடு பார்த்திடின் P(5GMT Guusimo o »
ஒடுக்கமாவது இளைப்பாற்றலும், தோற்றமாவது கன்மம் சழியத்தக்கதாக மலபரிபாகம் வரச்செய்தலும் நிலைத்தல் கன்மத்தை அனுபவிக்கச் செய்தலும், LD6თ [ptou பாவது இருவிண்யொப்பு வரத்தக்கதாக மலங்க% முதிர் வித்தலும், அருளாவது பந்தத்தினின்று நீங்கச்செய்து திரு வருள் கிட்டுதலும் என்னும் ஐந்தொழிலும் அருட்செய லாகு மென்பதால் இவற்றுட் ଶିତ) மறத்தொழில் போெ ாக் சுறுதல் தவருகும், இதுவே இதன் பொருளாகும்,

Page 88
136. முப்பொருள் உண்மை விளக்கம்
திரோதானசக்தி ஆணவமலத்தை எவ்வாறு பரிபக்கு வம் அடையச் செய்கிறதென்பதை நாம் அறியவேண்டும். அச்சக்தி இச்சா, ஞான, கிரியா, சத்தியாய்த் தொழிற் பட்டு சுத்தமாயை அசுத்தமாயைகளிற் தனு கரண புவன போகங்களைத் தோற்றுவிக்கும். அங்கு ஆன்மாக்களுக்குக் கன்மத்தைப் புசிப்பித்து மலபரிபாகம் அடைய உதவி புரியும்.
இனி மாயையைப்பற்றி அறிதல்வேண்டும். மாயை இறைவனுக்குப் பரிக்கிரக சத்தியாகும். பரிக்கிரகசக்தி என் பது வைப்புச் சக்தியாகும். அது இறைவன் விரும்பும் போது உபகாரப்படுவதாய் அவனுள்ளே அடங்கி இருக் கும் சக்தியாகும். மாயை உலகம். ஒடுங்குவதற்கும் தோற் றுவதற்கும் நிலைக்களமாயுள்ளது. மாயையில் ஒடுங்கித் தோன்றிய உலகம் மாயைக் காதாரமாய் நின்ற இறை வன் சத்தியில் ஒடுங்கித் தோன்றினதாகும். மாயை ஒரு வித்துக்கும் உலகம் அவ்வித்தின் முளைக்கும் உவமானங் கூறுவதுண்டு. நிலம் குளிர்ந்த காலத்திற்குத்தான் வித்தி விருந்து முளை தோன்றும். அதுபோன்று மாயைக்காதார மாய் நின்ற இறைவன் சக்தி சங்கற்பித்தவிடத்துத்தான் உலகம் மாயையினின்று தோன்றும். ஆகையால் நிலங் குளிர்ந்தவிடத்து வித்தினின்று முளை தோன்றுவது போல இறைவன் சக்தி சங்கற்பித்தவிடத்து மாயை அவரவர் வினைக்கீடாக காரியங்களைத் தோற்றுவிக்கும் வல்லமை உடைத்து. ஆனல் சங்கற்பியாதவிடத்துத் தோற்றுவிக்குஞ் சாமர்த்தியம் மாயைக்குக் கிடையாது. மாயையின் இயல் பைப்பற்றி சிவஞானசித்தியார் கூறுவதைக் கவனிக்க வேண்டும்.
நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத் திற்கோர் வித்துமாய் அசித்தாய் எங்கும் வியாபியாய் விமல னுக்கோர் சக்தியாய்ப் புவன போகந் தனுகர ணமும் உயிர்க்காய் வைத்ததோர் மலமாய் மாயை மயக்கமுஞ் செய்யுமன்றே"

சாஸ்திரவியல் - பாசம் 137
உலகிற்கு முதற்காரணமெனப்படும் மாயை, என்றுமுள்ள தாய் அருவமாய் ஒன்ருய் உள்ளதாயும் உலகம் தோன்று வதற்கு ஒரு வித்தாயும், சடப்பொருளுமாய் எவ்விடத்தும் வியாபகமாயும் இறைவனுக்கு ஒரு பரிக்கிரக சக்தியாய் புவனமும் போகமும், தனுவும் கரணமுமாக உயிர்களின் பொருட்டு விரிந்ததொரு மலமாகி விபரீத உணர்வினை உண்டாக்கும் தன்மை ஆகிய இலக்கணங்கள் அதற்கு உண்டு. இதுவே இதன் பொருளாகும்.
மாயை, சுத்தமாயை, அசுத்தமாயை என இருவகைப் படும். சுத்தமாயை விந்து, மகாமாயை, குடிலை என்னும் பெயர்களை உடையது. மலகன்மங்களோடு கலப்புழுது சுத்தமாயிருத்தலின் சுத்தமாயை எனப்படும். சுத்தமாயை யிலிருந்து சொல்வடிவும் பொருள்வடிவுமாகிய இருவகைப் பிரபஞ்சம் தோன்றும், பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கும் பொருட்டு ஆதிசக்தி தொழிற்படும்போது இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானுசக்தி என முத்திறப்படும். ஞானசக்தி சுத்தமாயையிற் பொருந்தித் தொழிற்படும்போது நாத தத்துவம் தோன்றும் அந்த நாதத்திலே கிரியாசக்தி ப்ொருந்தும்பொழுது விந்து தத்துவம் தோன்றும். அவ் விந்துவில் ஞானசக்தியும் கிரியா சக்தியும் சமமாய்த் தொழிற்படுதலால் சாதாக்கிய தத்துவம் தோன்றும், அச் சாதாக்கியத்திலே கிரியை கூடி ஞானங் குறைந்து தொழிற் படுதலால் மகேசுர தத்துவந் தோன்றும். அம்மகேசுவரத் தில் ஞானமேறிக் கிரியை குறைந்து தொழிற்படுதலால் சுத்தவித்தை தோன்றும். இவ்வாறு சுத்தமாயையில் சொல் லப்பட்ட இவ்வைந்து சிவதத்துவங்களும் நிவிர்த்தி பிர திட்டை, வித்தை, சாந்தி, சாந்தியதீதை, என்ற 5 கலை களும் சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் வாக்குகளும் 224 புவனங்களும் இச் சுத்தமாயையிற் தோன்றும். கலை, தத்துவம் புவனம் ஆகிய மூன்றும் பொருட்பிரபஞ்சமாம். சொல்லப்பட்ட சூக்குமை ஆகிய நான்கு வாக்குகளும் (வன்னம் அல்லது எழுத்து) பதம் மந்திரம் ஆகிய மூன்றும் சொற்பிரபஞ்சமாம், இவை
GᎯ• 18

Page 89
138 முப்பொருள் உண்மை விளக்கம்
புவனத்திற் தோன்றிய சரீரங்களேப் பற்றி நிற்கும். புவ னங்கள் தத்துவங்களால் உண்டாகும். சொல்வடிவும் பொருள்வடிவும் ஆகிய ஆறும் அத்துவா (வழி) எனப்படும்.
சுத்தமாயை விஞ்ஞானகலரிலிருந்து மலபரிபாகம் எய்தப் பெற்றும் அதிகாரம் செய்யவேண்டுமென்ற இச்சையுடைய அதிகாரமுத்தர்க்கும், அபரமுத்தர்க்கும் இருப்பிடமாகும். சுத்தவித்தை மகேஸ்வரம், சாதாக்கியம் என்னும் தத்துவங் களில் அதிகாரஞ் செய்து கொண்டிருப்பர். சுத்தவித்தை யில் சப்த கோடி மகாமந்திரர் நந்தி முதலிய கணநாதர் இந்திரன் முதலிய திக்குப் பாலகரும் இருப்பர். மகேசுரத் தில் அனந்தர் அட்டவித்தியேசுரர் இருப்பர். சாதாக்கியத் தில் அணுசதாசிவர் இருப்பரி. இனி அபரமுத்தர் என் போர் ஞானத்திற் சரியை கிரியை யோகங்களில் நின்ற வரும் ஞானத்தில் ஞானம் அடையப்பெருமையால் பரமுத்தி அடையாதாருமாவர்.
இனி அசுத்தமாயையைப் பற்றி அறியவேண்டும். மல கன்மங்களோடு விரவி அசுத்தப்படுதலால் இது அசுத்த மாயை எனப்படும். இம்மாயை தனு, கரணம், புவனம் போகம் ஆகியவைகளை ஆன்மாவுக்குக் கன்ம மலபரிபாகம் அடையும் பொருட்டுக் கொடுக்கிறது. தனு என்பது பஞ்ச பூதங்களின் சேர்க்கையையுடைய தேகமாகும். இந்திரியம் அந்தக்கரணங்கள், கரணம் எனக் கூறப்பட்டது. உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவித்தற்கு இடமாகிய உலகமே புவனம் எனப்பட்டது. இன்பதுன்பங்கள் அனுபவித்தற்கு ஏதுவான பொருள் க ளே போகம் எனப்படும். மாயையிலிருந்து கலை முதல் பிருதிவி ஈருகத் தோன்றும் முப்பது தத்துவங்களால் தனு, கரண, புவனம் உண்டா கும். தத்துவங்கள் துலகுக்கும முறையாய் நிற்கும். பூதங் கள் தூலமாகும். தன்மாத்திரைகள் சூ க்கு ம மா கும். ஏணேயத் தத்துவங்கிளும் அத்தன்மையனவாகும். உள் அந் தக் கரணங்கள், ஆன்மாவின் அறிவு இச்சையை ன்முப்பி புருடனே (ஆன்மாவை) போகத்திற் செலுத்தும். பிரபஞ் சம் மாயையினின்றும் தோன்றி, அழியுங்காலம் அம்மாயை

Frey6geßué am Lumrh 9
யிலே ஒடுங்கும். பிரபஞ்சம் அநித்தமென்றும் மாயை நித்தம் என்றும் சொல்லப்படும். தனு கரண, புவன போகங் கள் அருவமாயும் அருவுருவமாயும் உருவமாயும் தோன்றி நிற்கும். சங்கார காலத்தில் அ வை கள் அரு வ மா ய் மாயையில் ஒடுங்கும். மாயை என்றும் அருவமாகவே இருக் கும். கன்மத்தை அனுபவிக்கும் பொழுது தனு கரண போகம் மெய் என்று நினைக்கும் மயக்க அறிவை மாயை உண்டாக்கும். கன்மம் இல்லாதவரை மாயை மயக்காது. விஞ்ஞானகலருக்கு தனு கரண புவனங்கள் இருந்த பொழு திலும் கன்மமும் பிரகிருதிமாயையும் இல்லாமையால் மாயை மயக்கமாட்டாது. பிரளயாகலருக்கு தனு கரண புவனமும் கன்மமும் இருப்பினும் முக்குணங்களும் பிரகிரு தியுமில்லாமையால் மயக்கம் ஏற்படாது. சகலருக்கு பிரகிருதியும் முக்குணமயக்கமும் இருத்தலால் மாயை மயக்கும். தனு கரண புவன போகங்கள் ஒடுங்குங் காலத்து உயிரும் ஒடுங்கும். அந்நிலையே கேவலம் எனப் படும். கேவலநிலையில் ஆணவமேயன்றி மாயை கன்மம் இல்லை. அந்நிலையில் மாயையின் காரியமான தனு கரண புவனமும், கன்மத்தின் காரியமான போகங்களும் இல்லை. கன்மம் ஆனது சஞ்சிதமாய்த் தொழிற்படாது மாயை யிலிருக்கும். செய்வினையும், செய்தவனுடைய புத்தி தத் துவமும் மாயையும் பற்றுக் கோடாயிருக்கும். மாயை சட மாகலால் பிரபஞ்சத்தைத் தோற்ற ஒடுக்க அதனுலே முடி யாது. முதல்வனது அருளாகிய திரோதான சக்தியின் மூலமே மாயை தொழிற்படும். -
இனி மாயைக்கு உள்ள குணங்கள் யாவையென ஆராய்தல் வேண்டும். இதனை விளக்கமாக இருபா இரு பஃது கூறுகிறது.
"அஞ்ஞானம்பொய் அயர்வே மோகம்
பைசால சூநியம் மாச்சரி யம்பயம்
ஆவேழ குனனும்.ழாயைக் கருளின’

Page 90
40 முப்பொருள் உண்மை விளக்கம்
1. பல கலை கற்றும் அறியாமை 2. களவு செய்கை 3. கண்டது மறுத்தல் 4. அறிந்தது மறுத்தல் 5. இருந் தும் ஈயாஞகை 6. அத்தத்தின் (செல்வத்தின்) (மேலே மாச்சரியம் 7. அழுக்கருமை ஆகிய ஏழும் மாயைக்குரிய குனங்களாம்.
மாயையானது ஆன்மாக்கள் சன்மத்தை அனுபவிப்பதற் காகக் கொடுத்த தனு கரண புவன போகங்கள் மூலம்மயக் கத்தை உண்டுபண்ணிக் கொண்டு நிற்கும். இறைவன்மீது ஆன்மாக்கள் வைக்கும் அன்பே விடுதலை அளிக்கும். போகப் பொருள்களிலே காணப்படும் ஆசை மேலும் மேலும் கன்மத்தைச் செய்யத் தூண்டும் பொழுதெல்லாம் இறைவன் பெருங்கருணையே ஆதரவாய் நின்று காப்பாற்ற வேண்டும். இதுபற்றி தாயுமானவர்,
"...நான் நானெனக் குளறியே
யொன்றை விட்டொன்று பற்றிப் பாசற் கடற்குளே வீழாமல் மனதற்ற
பரிசுத்த நிலையை அருள்வாய்'
என்று கூறுவதைக் கவனிக்கலாம். மேலும் ஆன்மாக்களுக்கு ஆசையின் காரணமாக மனம் அலைவதினல் ஏற்படும் அவல நிலையை விளக்குகிறர்.
" ஆசையெனும் பெருங்காற் றுாடிலவம் பஞ்செனவ மனதலேயுங்
காலம் மோசம்வரு மிதனுலே கற்றதும் கேட்டதுந் தார்ந்து முத்திக்
(கான நேசமும்நல் வாசமும் போய்ப் புலனுயிற் கொடுமை பற்றி
- நிற்பரந்தோ தேசுயழுத்தருள் பழுத்த பராபரமே நிராசையின்றேற்
(தெய்வமுண்டே
ஆசையே ஆன்மாக்கள் முத்தியடைவதற்குத் தடையென் பதை அறியலாம். மாயைப் பொருள்கள் மீது ஆசைப் படுவதே மயக்கத்திற்குக் காரணமாகும்.

መffሐይgውፅህé - Lዘጥሇኔኔ 11
இனி மும்மலங்களில் ஒன்ருகிய கன்மத்தைப் பற்றி அறிய வேண்டும் ஆன்மாக்களுடன் அநாதியாயுள்ள ஆணவ மலத்தின் தொழிற்பாட்டால் ஏற்படும் விருப்பு வெறுப்புக் களே மூல கன்மம் எனப்படும். ஆன்மாக்கள் சரீரங்களே எடுப்பதற்குக் கன்மமே காரணமாகும். கன்மம் என்பது சஞ்சிதம் பிராரத்துவம், ஆகாமியம் என மூவகைப்படும். இப்பிறவியிலே செய்யும்வினை நல்வினேயா, தீவினையா என் பதை உணர்ந்து அறியுந் தன்மையை மனிதப் பிறவி எடுத்த நாம் பெற்றிருக்கின்றுேம். ஏனைய உயிர் வர்க்கங் களுக்கு கொடுக்கப்படாத பகுத்தறிவை இறைவன் மணி தனுக்கே கொடுத்திருக்கின்ருன். அவ்வித மேன்நிலையை அடைந்த மனிதன் இப்பிறவியிலேயே கன்மங்களைச் செய் யாமல் வாழலாம். வாழமுயல வேண்டும். கன்மத்தின் குணங்கள் யாவை என்பதை "இருபா இருபஃது"
" இருத்தலுங் கிடத்தலும் இருவினை யியற்றலும் விடுத்தலும் பரநிந்தை மேவலென் றெடுத்த அறுவகைக் குணனுங் கருமத்தருளின**
என்று கூறுகிறது. அவை 1. மடிவந்திருத்தல் 2. பொசிப் பற்றுக் கிடக்கை 3. புண்ணியத்தைச் செய்தல் 4. பாவத் தைச் செய்தல் 5. தொழில் செய்யாமல் விடுகை 6. பர நிந்தை என்னும் ஆறுமாம். அறம் பாவம் ஆகிய இரண்டும் இத்தன்மையென அறிந்தும் இப்பிறவியிலேயே கன்மத் தைத் தேடிக்கொள்கின்றனர். அவ்விதக் கன்மம் ஆகர்மி யம் எனப்படும். ஆகையால் ஆகாமிய கன்மத்தைப்பற்றி முதலில் ஆராய்வோம். மனம், வாக்கு, காயம் என்ற மூன்றினலும் மந்திரம், பதம் வன்னம், தத்துவம், புவ னம், கலை என்னும் ஆறு அத்துவாக்கள் (வழிகள்) மூல மாகச் செய்யப்படும் நல்வினை தீவினையாகிய இரு வினை களும் ஆகாமியகன்மமாகும். இவ் ஆகாமியகன்மம் தூல கன்மம் எனப்படும். முற்பிறவியிற் செய்த வினையின் பயனை அனுபவிக்கும்பொழுது விருப்பு வெறுப்பு நிகழ்தல் உண்டு. அவ்வித இன்பதுன்பங்களால் ஆகாமியம் ஏற்படும். இன்ப துன்பங்கள் முன்செய்த கன்மத்தின் பலனக ஏற்பட்ட

Page 91
4. முப்பொருள் உண்மை விளக்கம்
தெனச் சிந்திக்காது நான் செய்தேன், பிறர் செய்தார் என்று விருப்பு வெறுப்புக் காட்டுவதால் ஆகாமியகன்மம் உண்டாகும். வினை என்பது தெரிந்து செய்யும் வினை தெரி யாமற் செய்யும் வினை என இருவகைப்படும். பிற உயி ருக்கு நன்மை செய்தல் நல்வினையாகும். தீமை செய்தல் தீவினையாகும். இப்பிறவியிற் செய்யப்படும்போது அது ஆகாமியம் எனப்படும். இச்செயல்களால் இனிமேல் வரு வன புண்ணியமும் பாவமுமாம். அவை முன்னிருந்த வினை யோடு சேர்ந்து சஞ்சிதவினையாகும். புண்ணியம் இன்பத் தையும், பாவம் துன்பத்தையும் கொடுக்கும்போது அவை பிராரத்தமாம். பிராரத்தம் என்பது பிறவிக்குத் தொடக்க முடையது ஏனப்படும்.
இனி, ஈஞ்சிதம், பிராரத்துவம் என்னும் இருவகைக் கன்மங்களைப்பற்றி அறியவேண்டும். சஞ்சிதகன்மமாவது சங்கார காலத்தில் நல்வினை தீவினைகள் பக்குவம் அடை யும்வரை அது புத்தி தத்துவத்தைப் பற்றிநின்று மாயை யிற் கட்டுப்பட்டுக் கிடப்பதாம். அது அந்நிலையில் இருக் குங்கால் சூக்கும கன்மம் எனப்பெயர்பெறும், சஞ்சிதகன் மம் இன்ப துன்பங்களைத் தருவதற்குக் காரணமாய் இருத் தலால் அது புண்ணிய பாவம் என்ற பெயரையும் பெறும், சஞ்சிதவிண்யே இன்ப துன்பங்களை அனுபவித்தற்குரிய உயி ருக்கு உடம்பினைத் தோற்றுவித்தற்குக் காரணமாய் இருக் கும். ஆணுல் சடமாகிய உடம்பு இன்ப துன்பங்களை அனு பவிக்கமாட்டாது. சித்தாகிய உயிரே அவ்வுடம்பைப் பொருந்தி அனுபவிக்கும். முன்வினையின் அனுபவமும் வினைக்கு வித்துமாகித் தொன்றுதொட்டுவரும் அவ்வினைப் பயன்களை இறைவனே ஆன்மாக்களுக்குக் கூட்டுவான். ஆனல் வினை தானுக வந்து உயிர்களைப் பொருந்தமாட் டாது. இதுபற்றிச் சிவஞானசித்தியார்,
" இருவினை யின்பத் துன்பத் திவ்வுயிர் பிறந்திறந்து வருவது போவதாகு மன்னிய வினைப்பலன்கள் தருமரன் தரணி யோடு தராபதி போலத் தாமே மருவிடா லுடிவுக்கன்டி யூன்களும் மறுமைக்கண்ணே '

ச்ாஸ்திரவியல் - பாசம் us
என்று கூறுவதைக் கவனிக்கலாம். முற்பிறவிகளிற் செய்த இருவினைக்களுக்கீடாக இப்பிறவியில் இன்ப துன்பங்களை அனுபவிக்குங்கால் மேலும் வினைப்பயன் உண்டாவதால் மீண்டும் மீண்டும் பிறந்திறந்து சுவர்க்க நரகங்களுக்குச் சென்று பின்னரும் பூமிக்கு வருவதுண்டு. நிலையான அவ் வினைப்பயன்களை மருத்துவனும் வேந்தனும் போல இறை வனே சத்தி மூலமாக ஆன்மாக்களுக்குக் கூட்டுவான். ஆளுல் சடப்பொருளாகிய கன்மந் தாமே வந்து கூடமாட்டா என்பது இதன் பொருளாகும்
சஞ்சிதகன்மம் உயர்ந்தசாதி, தாழ்ந்தசாதி என்னும் சாதிகளிற் பிறப்பதற்கும், ஆயுட்பெருக்கம், ஆயுட்சுருக்க முடைய சரீரத்தைப் பொருந்துதற்கும் இன்பதுன்பங்களை அனுபவித்தற்கும் ஏதுவாய் இருக்கும். இங்கு சாதி எனப் பட்டது பிறப்பால் ஏற்பட்ட சாதி என நாம் கைக்கொள் வது சரியா என்பதைச் சிந்திக்கவேண்டும். மதுபானம், மாமிசம் அருந்துகின்ற குடும்பங்களைத் தாழ்ந்த குடும்பங் களாக சைவசமயிகள் கருதுவர்.
பிராரத்தகன்மமாவது, கட்டுட்பட்டிருந்த சஞ்சிதகன் மம் இன்ப துன்பமாகிய பயனை அளிக்க, அதை அனுபவிப் பதாம். இக்கன்மம் ஆதிதெய்வீகம், ஆதிஆன்மிகம், ஆதி பெளதிகம் என மூவகைப்படும். சனணம், மரணம், இயம தண்டனை, நரகவேதனை. நரைதிரை, வியாதி முதலியவற் ருல் வரும் துக்கம் ஆதிதெய்வீகமாம். மனிதர், மிருகம் அரசர் பசாசு, கள்வர் ஆகியனவற்ருல் உண்டாகும் துக் கம் ஆதிஆன்மிகமாகும். இதனுல் ஏற்படும் துக்கம் சரீரத் தோடும், மனத்தோடும் சம்பந்தப்பட்டதாகும். மனே துக் கமாவது பிறருடைய கல்வி, செல்வம் முதலியவற்றைக் கண்டு பொழுமை கொள்ளுதலால் உண்டாகும் துக்கமா கும். குளிர், வெப்பம், மழை, காற்று, மின், இடி என்

Page 92
144 முப்பொருள் உண்மை விளக்கம்
பனவற்ருல் வருவது ஆதிபெளதிகமாம். இதனை “சிவப்பிர காசம் தெளிவாக விளக்குகிறது.
* கன்மநெறி திரிவிதநற் சாதியாயு போகக்
கடனதென வருமூன்று முயிரொன்றிற் கலத்தல் தொன்மையகுர ழல்லதுண வாகா தானுந்
தொடங்கடைவினடையாதே தோன்று மாறித் தன்மைதரு தெய்விகமுற் பவுதிகமான் மிகமாந்
தகையிலுறு மசேதனசேதனத்தாலுஞ் சாரு நன்மையொடு தீமைதரு சேதனனுக் கிவணுா
ரூடிலதனுாழ்வினையா நணுகுந் தானே ‘
சாதி, ஆயுள், போகம் என்ற மூன்றும் கன்மத்தின் பய ஞகவரும் பழவினையினலேயே இவை ஆன்மாவைக் கூடி வருவதல்லாமல் வேறென்றும் ஆன்மாவுக்கு அனுபவமாய் வரமாட்டாது. கன்மத்தின் பயன் முன்செய்தன பின்னும் பின்செய்தன முன்னுமாக மாறிவருதலுண்டு. ஆதிதெய் விகம், ஆதிபெளதிகம், ஆதிஆன்மிகம் ஆகியவைகளின் ரயிலாக கன்மத்தின் பயன்வரும் முற்பிறவியிற் செய்த ஊழ்வினையே இப்பிறவியில் அனுபவிக்கும் இன்ப துன்பங் களுக்குக் காரணமாகும்.
மேலும் நல்வினையாவது உலகவினை, வைதிகவினை, அத்தியான்மிகவினே, அதிமார்க்கவினை, மாந்திரவினை என ஐந்து வகைப்படும். உலகவினையாவது கிணறு, தண்ணீர் பந்தல் முதலியன அமைத்தலாம். வைதிகவினையாவது வேள்வி முதலியன செய்தல். அத்தியான்மிகவினையாவது ஒவபூசை முதலியன செய்தல், அதிமார்க்கவினையாவது யோகஞ் செய்தல் மாந்திரவினையாவது மந்திரஞ் செபித் தல் ஞானநூல் ஓதல் முதலியனவாம். உலகவினையும் வைதிகவினையும் அசுத்த போகங்களைத் தரும். அத்தியான் மிகவினை, அதிமார்க்கவினையும் சுத்தமுங் அசுத்தமுங்

சாஸ்திரவியல் - பாசம் 145
கலந்த போகங்களைத் தரும். மாந்திரவினை சுத்த போகங் களைத் தரும். இந்நல்வினைக்கு மாறுபட்டவை தீவினையின் பேதமாகும்.
நல்வினை தீவினை ஆகிய இரண்டும் மனம் வாக்குக் காயங்களால் ஏற்படுவனவாகும். நல்வினையைச் செய்து தீவினையையும் தீவினையைச் செய்து நல்வினையையும் அழிக்க முடியாது, இவ்விரண்டு வினைகளும் அனுபவித்தே ஒழிய வேண்டும். ஆனல் வேத ஆகமங்களின் கன்மகாண்ட முறைப்படியே திரவியங்களைக் கொடுத்து மற்றவர்களைக் கொண்டு பிராயச்சித்தஞ் செய்வித்தால் பாவகன்மம் நீங் கும். பிராயச்சித்தமுஞ் செய்யாமல் வேத ஆகமங்களின் ஞானகாண்ட முறைப்படி ஒழுகின் அதிகமான பாவம் நீங் கும். நீங்காதன மேலும் செனனத்தை உண்டாக்கும். ஞானவழியில் நடந்துகொள்ளக்கூடிய சான்ருேர்க்கு இறை வன்கிருபையால் கன்மம் தாக்கமாட்டாதென மெய்ஞானி கள்கூறியதிலிருந்து அறியலாம். தாயுமானசுவாமிகள்,
'காகமானது கோடி கூடி நின்ருலு மொரு
கல்லின்முன் னெதிர் நிற்குமோ கர்மமானது கோடி முன்னே செய்தாலுநின்
கருணை ப்ரவாக வருளேத் - தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ"
என்று கூறுவதிலிருந்தும் யோகசுவாமிகள்,
"இருவினை வந்தென்னைத் தாக்காதிருக்கவும்
கருவி கரண மென்கட்டளை கேட்கவும்
அருவி கண்களி லாருய்ப் பெருகவும்
தருக வரு வீழத்தண் ணகரானே' என்று கூறுவதிலிருந்தும் இறைவன் திருவருள் எம்முடைய கன்மத்தை நீக்கவல்லது என்பதை அறியலாம். தன்னுள் இருக்கும் இறைவனைக் கண்டு கொள்வாரை முன்னைவினே தாக்காதென யோகசுவாமிகள்
19 م

Page 93
】46 முப்பொருள் உண்மை விளக்கம்
'முன்னை வினவந்து
மூண்டுதே என்பார்கள் தன்னை அறியாதார் - தங்கமே சஞ்சலத்தை நீக்கிவிடு" என்று கூறுகிருர்,
சிவனை வழிபடுவோரைப் பந்தித்தவினையானது அகலு மென சுந்தரமூர்த்திநாயனருடைய தேவாரத்தின் மூலம் அறியலாம்.
"சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள்
சிந்தையில் திக முஞ்சிவன் தன்னைப்
பந்தித் தவினை பற்றறுப் பானைப்
பாலொ டானஞ்சும் ஆட்டுகந் தான
அந்த மில்புக ழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்ற
கந்த வார்சடைக் கம்பனெம் மானைக்
காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.'

15. ஞான சாதனங்கள்
நன்மை கடைப்பிடி " என்பது ஒளவையா திரு வாக்காகும். சான்ருேர் தீமையை அறவே அகற்றி நன் மையை விரும்பி நிற்பர்: நன்மையென்று சொல்லப்படு வன எல்லாவற்றிலும், சிறந்த நன்மை வீடுபேறு என்ப தாம். வீடு என்பது பிறவிக் கடலினின்று விடுதலை அடைந்து இறைவனுடன் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையாம். அவ்வித நிலையை அடைவதற்கு ஞானமே ஏதுவாகும். முத்தி நெறியை அடைவதற்கு நான்கு சாதனங்கள் கூறப் பட்டிருக்கின்றன. அவை சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பனவாம் இந்நான்கு பாதங்களும் சீலம், நோன்பு செறிவு, அறிவு என்றும் கூறப்படுவதுண்டு. இது பற்றித் தாயுமான சுவாமிகள் கூறுவதைக் கவனிக்கலாம்.
" விரும்பும் சரியைமுதல் மெய்ஞ்ஞானம் நான்கும் அரும்பு மலர் காய்கனி போலன்றே u JarugGud ”
ஒரு மரத்தின் பழத்தை நாம் பெற்றுக்கொள்வதற்கு முன் பாக அம்மரத்திலே அரும்பு தோன்றும். அது பின்னர் பூ ஆக மலரும், அம் மலரிலிருந்து காய் தோன்றும் காய் முற்றிப் பின்னர் பழமாகும். இந்நான்கு நிலைகளும் ஒன்றி லிருந்து மற்முென்றக் மாறச் சில காலப் பொழுது செல்ல வேண்டும். அக்காலத்திலே இடையூறுகள் ஏற்படுவதற்கும் இடமுண்டு. இப்பருவம் ஒவ்வொன்றும் முறையே சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற சாதனங்களுக்கு ஒப்பி டப்பட்டிருக்கின்றன. கணியை உண்ண விரும்பும் ஒருவர் அரும்பு தோன்றியவிடத்து அது பழுதுருது கவனித்தல் வேண்டும். அது போன்று சரியை மார்க்கத்தில் நிற்போர் அதன் மூலம் திருவருள் வந்து சேர்வதற்கு அன்பொடு அதை ஆற்றிவருதல் வேண்டும். அதேபோன்று மற்றும் சாதனங்களும் உளவாம். சரியை முற்றியபின் கிரியையும் கிரியை முற்றியபின் யோகமும் ஒன்றன்பின் ஒன்ருய் முற்

Page 94
p"Gurreth A. aðferðun est disid
பிறவிகளிற் செய்த தவத்தின் பயனல் ஞானம் நிகழும். இந்த ஒரு பிறவியிற் செய்த தவத்தால் ஞானம் நிகழாது.
* ஐம்புல வேடரின் அயர்ந்தனை வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினில் உணர்த்தவிட் டன்னிய மின்மையின் அரன்கழல் செலுமே ??
என்று சிவஞானபோதம் எட்டாஞ் சூத்திரத்திற் கூறிய
பிரகாரம் முன் செய் தவத்தின் பயணுகவே இறைவன் குரு
வாக எழுந்தருளுவான். திருஞானசம்பந்த சுவாமிகள் முற்
பிறவியிற் தவஞ் செய்துள்ளார் என்பதனலேயே மூன்று
வயதில்ே, இறைவன் அம்மை அப்பராக அவர்முன் தோன்றி
அருளினர். இவ்வுண்மை ஏடுடைய மலரான் முனைநாட்
பணிந்தேத்த அருள் செய்த என்ற தேவாரத்தால் வற் புறுத்தப்படுகிறது. மேலும் தாயுமானவர்,
மூர்த்தி தலம்தீர்த்தம் முறையாற் ருெடங்கினர்க்கோர் வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே ’
என்று கூறுவதிலிருந்து சரியை முதலான சாதனங்களை முறையே கடைப்பிடித்து வந்தோர்க்கு இறைவன் குருவாக வருவார் என்பதை அறியலாம். இவைகளுள் ஞானமே மேலான நெறியாகும். சரியை, கிரியை, யோக மார்க்கங் கள் கீழான நெறியாயினும் அவைகளே மேலான நெறி யாகிய ஞானத்தைக் காட்டி அதன் மூலமேயே முத் தி அடையலாம் என்பது தெளிவு. ஒர் ஆலயத்துக்குள் செல் வதற்குப் புறவீதிகளாற் சென்று பின்னர் இரத வீதிக்குச் சென்று அதன் பின்னரே ஆலயத்துக்குள் செல்லமுடியும். அதுபோன்று, புறவீதி போன்ற சரியை, கிரியை, யோக நிலைகள் முற்பட்டு பின்னர் இரத வீதி போன்ற ஞான நிலையை எய்திய பின்னரே ஆலயம் போன்ற முத்தி நிலையை அட்ையலாம். இது பற்றியே திருக்களிற்றுப் படியார்

சாஸ்திரவியல் - ஞான சாதனங்க்ள் 149
" அன்பேயென் அன்பேயென்றன்பால் அழுதரற்றி அன்பேஅன்பாக அறிவழியும் - அன்பன்றித் தீர்த்தந்தியானஞ் சிவார்ச்சனைகள் செய்யுமவை சாற்றும் பழமன்றே தான் "
என்று கூறுகிறது. சிவனை அன்பே, அன்பே என்று அன் பொடு அழுது அழைத்தால் அந்தச் சிவனுகிய அன்பே தனக்கன்பாகத் தன்னுடைய போதங் கெடச் செய்யும். இதனைவிடத் தீர்த்தம் ஆடுகிறதும் சிவார்ச்சனை முதலிய பல பணிகள் செய்கிறதும் அன்பாகிய மரம் வளர்வதற் குரிய வித்தென்றே சொல்லவேண்டும். இதுவே இதன் பொருளாகும். இதிலிருந்து சரியை, கிரியை, யோகம் ஆகி யன அன்பு உண்டாவதற்குக் காரணமாகும் என்பது புலப் படும். இங்கு ஆன்மபோதம் என்பது உயிர்கள் "நான்? என்னும் முனைப்போடு தோன்றும் சிற்றறிவாகும்.
சரியை கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு மார்க்கங்களும் உபாயநிலை உண்மைநிலை என்ற இரு வழி களில் கடைப்பிடிப்பதுண்டு. உபாயநிலையாவது உலகப் பொருளை நோக்கிச் செல்வதாம். உண்மைநிலையாவது முத்தி காரணமாக ஒழுகும் வழியாகும். ‘தவமும் தவ முடையார்க்காகும்" என்ற உண்மையின்படி முற்பிறவிக ளிலே தவம் இயற்றி வந்தவர்களே இப்பிறவியிலும் உண்மை நிலையினின்று திருவருளை நாடி நிற்பர். ஏனையோர் மாயா பந்தங்களிலே சிக்கிநின்று ஆசைக்கயிற்றில் ஆடும் பம்பரம்" என்ற பட்டினத்தடிகள் கூற்றுக்கிணங்கச் செல் வம், இன்பம், புகழ், பெருமை ஆகியவைகளிலே மோகங் கொண்டு அவைகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டுமென இறைவனை வழிபட்டு நிற்பர். அவ்விதம் ஆற்றும் முறை கள் உபாயநிலை எனப்படும். சுருக்கமாகக் கூறின் உலகப் பயனை நோக்கிச் செய்யும் சிவ புண்ணியங்கள் உபாயச் சரியை முதலியன. பத்தி காரணமாகச் செய்யும் சிவபுண் ணியங்கள் உண்மைச் சரியை என்பனவாம். இதனை விளக் கிச் சிவப்பிரகாசம் கூறுவதைக் கவனிக்கலாம்:

Page 95
150 முப்பொருள் உண்மை விளக்கம்
' கிரியையென மருவுமவை யாவுஞானங்
கிடைத்தற்கு நிமித்தமெனக் கிளக்கு முண்மைச்
சரியாகிரி யாயோகத் தன்மை யோர்க்குச்
சாலோக சாமீப சாரூபங்கண்
மருவியிடுமுயர்ஞான மிரண்டா மாரு
மலமகல வகலாத மன்னுபோதத்
திருவருளொன் றென்றதனைத் தெளிய வோதுஞ் சிவாகமென் றுலகறியச் செப்புநூலே "
கன்ம யாகம், தவயாகம், செபயாகம், தியானயாகம், ஞானயாகம் எனச் சிவபெருமானை வழிபடும் முறைகள் ஐவகைப்படும். இங்கு யாகம் என்பது வழிபடுதலைக் குறிக் கும். கன்மயாகம் சிவசிந்தனை, சிவபூசை என்பதாகும். தவயாகம் விரதம் முதலியவற்றல் தேகத்தை மெலிவித்த லாம்: செபயாகமாவது மந்திரங்களை மனதாலும், வாயா லும் உச்சரித்துச் செபித்தலாம். தியாணயாகமாவது இரு தயத்தில் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனி களைத் தியானிப்பதாம். இவ்வழிபாடுகள் கிரியை பொருந் தினவாகும். இவை ஞானம் உண்டாவதற்குரிய சாதனங் க்ளாகும். சரியை, கிரியை, யோக வழிபாடுகளால் ஏற் படும் பயன் சாலோக, சாமீப சாரூப பதமுத்திகளாம். ஞானம் பரஞானம் அபரஞானம் என இரண்டாகும். ஆன்மாவின் மல இருளைப் போக்கும் திருவருள் பரஞான மாகும். அபரஞானம் திருவருளைப் பெற்றுக் கொள்வதற் குரிய நெறியை அறிவிக்கும் சிவாகமங்களாகும்.
முத்தி காரணமாகச் செய்யும் சாதனங்கள் உண்மைச் சிவபுண்ணியம் என்றும், உலகப்பொருள் காரணமாகச் செய்வன உபாயச் சிவபுண்ணியம் எனவும் அறிந்து கொள் ளலாம். ஆகையால் இரு வகையாலும் செய்யப்படும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன எட்டுவகைப்படும். சரியையிற் சரியை, சரியையிற் கிரியை, சரியையில் யோகம்,

ச்ாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 51
சரியையில் ஞானம் என் உபாயநிலை, உண்மைதிலை ஆகிய இருவகையிலும் எட்டாகும். அவ்விதமே கிரியை, யோகம் , ஞானம் என்பனவும் ஒவ்வொன்றும் எட்டாகும். ஆரம்பத் தில் இவைகளைப்பற்றிச் சுருக்கமாக அறிந்து, பின்னர் விரி வாக அறியலாம். சரியையிற் சரியையாவது திருக்கோயில் அலகிடுதல், மெழுகுதல் என்பனவாம் குப்பையை அப்புறப் படுத்தலே அலகிடுதலாம், சரியையிற் கிரியையாவது பரி வார மூர்த்திகளில் ஒரு மூர்த்தியை வழிபடுதலாம். சரியை யில் யோகமாவது நெஞ்சினிடத்தே சிவபெருமானுடைய உருவத் திருமேனியைத் தியானஞ் செய்தலாம். சரியையில் ஞானமாவது அவவிதத் தியான பாவனையின் பயணுக ஓர் அநுபவ உணர்வு ஏற்படுதலாம். கிரியையிற் சரியையாவது சிவபூசைச்கு வேண்டியனவெல்லாவற்றையுஞ் சேகரித்தலா கும். கிரியையிற் கிரியையாவது பூதகத்தி, தானசுத்தி, திர வியசுத்தி, மந்திரசுத்தி, லிங்கசுத்தி எனப்படும் ஐந்துவகைச் சுத்தியுஞ் செய்து சிவலிங்க வடிவிற் செய்யும் பூசனையாம். பூசிப்பவனகிய தன்னைச் சுத்தி செய்தலே பூதசுத்தி எனப் படும். இங்கே பூதம் என்பது ஆன்மாவைக் குறிக் கிறது. கிரியையில் யோகமாவது அகத்திலே பூசை, ஓமம், தியாணம் என்ற மூன்றினுக்கும் முறையே இருதயம் நாபி, புருவநடு என்னும் மூவிடங்களை வகுத்துக்கொண்டு செய்யும் அந்தரியாக பூசை எனப்படும் கிரியையில் ஞான மாவது அவ்வந்தரியாக பூசையின் பயணுக ஓர் அநுபவ உணர்ச்சி உண்டாவதாம். யோகத்திற் சரியையாவது இய மம், நியமம், ஆசமனம், பிராணுயாமம் என்னும் நான்கினை யும் பழகுதலாம். இயமம் என்பது கொல்லாமை, வாய்மை, கள்ளாமை, பிறர் மனைவியரை விரும்பாமையாகிய ஆண் டகைமை, வஞ்சணையில்லாமை, பொறையுடைமை, இரக் கம், மனங் கலங்காமை அற்பாகாரம், சுசியுடைமை என் னும் பத்துமாம். நியமம் என்பது தவம், மணம் உவந்திருத் தல் கடவுளில் விசுவாசம், சற்பாத்திரருக்குத் தருமஞ்

Page 96
152 முப்பொருள் உண்மை விளக்கம்
செய்தல், தன்னின் மூத்தோரை வழிபடுதல், உண்மை நூல்களைக் கேட்டல், குலம், செல்வம், அதிகாரம் என்ப வைகளினலே ஏற்படக்கூடிய கர்வம் ஏற்படாது அடங்கி ஒழுகுதல், தக்கவை தகாதவையைப் பகுத்தறிதல், செபம், விரதம் என்ற பத்துமாகும். ஆசமனம் என்பது வலதுகை யில் நீரை விட்டு மந்திரஞ் சொல்லி மூன்று முறை குடித்த லாகும். பிராணுயாமம் அஷ்டாங்க யோகத்திலொன்ருகும். அது பிராணவாயுவை இரேசக, பூரக, கும்பகஞ் செய்த லாம். யோகத்திற் கிரியையாவது பிரத்தியாகாரம், தாரணை என்னும் இரண்டினையும் பழகுதல். மனம் புலன்கள் வழியே செல்ல விடாது உள்நோக்குதலே பிரத்தியாகாரம் எனப் படும், இது அஷ்டாங்க யோகத்தில் ஒன்ருகும். இனி இரு தயம், கண்டம், கபாலம், நாபி, நெற்றி இவற்றுளொன் றில் சிந்தையை வைத்திருத்தல் தாரணை எனப்படும். இது வும் அட்ட யோகத்தில் ஒன்ரு கும். யோகத்தில் யோகமா வது தியானஞ் செய்வதாம். யோகத்தில் ஞானமாவது சமாதி கூடுதலாம்.
யோகம் சாலம்பம் நிராலம்பம் என இருவகைப்படும். சாலம்ப யோகமாவது சிவலிங்க வடிவத்தை ஆதாரமாய்க் கொண்டு செய்வதாம். நிராலம்பமாவது சோதியை ஆதார மாகக்கொண்டு செய்வதாம். யோகத்தின் உறுப்புக்சள் (1) இயமம் (2) நியமம் (3) ஆசமனம் (4) பிராணு யாமம்(5) பிரத்தியாகாரம், (6) தாரணை (7) தியானம் (8) சமாதி ஆகிய எட்டுமாம். ஞானத்திற் சரியையாவது ஞானசாத்திரப் பொருளைக் குருவினிடத்துக் கேட்டலாம். ஞானத்திற் கிரியையாவது ஏது, திருட்டாந்தங்களுடன் சிந்தித்தலாம். ஞானத்தில் யோகமாவது ஞானசாத்திரப் பொருளை ஐய விபரீதமின்றித் தெளிதலாம். ஞானத்தில் ஞானமாவது சிவபெருமானேடு கலந்து நிட்டை கூடுதலாம்.
சரியை, கிரியை, யோகழ் என்ற உண்மை நெறியில் நிற்போர்க்குப் பயன் முறையே சாலோக, சாமீப, சாரூபம்
என்னும் பதமுத்தியும் ஞானத்தின் ஞானத்துக்குப் பயன் சாயுச்சிய பரமுத்தியுமாம். உபாயச் சிவபுண்ணியத்தின்

ச்ாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 153
பயனையும் அறிதல் வேண்டும். உபாயநிலையில் நின்று இச் சாதனங்களைக் கடைப்பிடித்து ஒழுகுபவர் அவர்களுடைய நிலைக்குத் தகுந்தவாறு இப்புவன முதல் சுத்த மாயா புவ னம் வரையுமுள்ள புவனங்களிலே போகங்களை அநுபவிப் பர்.
இனி இதுவரையும் அறிந்துள்ள நான்கு மார்க்கங்க ளைப் பற்றியும் அவைகளால் ஏற்படும் பயன்களைப்பற்றியும் விளக்கமாக அறிதல் வேண்டும். சரியை, கிரியை, யோகம் ஞானம் என்பன முறையே தாசமார்க்கம், புத்திரமார்க் கம், சகமார்க்கம், சன்மார்க்கம் எனவும் கூறப்படும்.
தாசமார்க்கத்தைப் பற்றிச் சிவஞானசித்தியார் Taip வதைக் கவனிப்போம்,
" தாதமார்க் கஞ்சாற்றிற் சங்கரன்தன் கோயில்
தலம் அலகிட் டிலகுதிரு மெழுக்குஞ் சாத்திப்
போதுக்ளுங் கொய்துபூந் தார்மாலை கண்ணி
புனிதற்குப் பலசமைத்தும் புகழ்ந்து பாடித்
தீதில்திரு விளக்கிட்டுத் திருநந்த வனமுஞ்
செய்துதிரு வேடங்கண் டால்அடியேன் செய்வ
தியாதுபணி யீர்என்று பணிந்தவர்தம் பணியும்
இயற்றுவதிச் சரியைசெய்வோர் ஈசன்உல கிருப்பர் ,
சிவபெருமானது திருக்கோயிலிலே திருவலகிடுதல் (குப் பையை அப்புறப்படுத்துதல்), திருமெழுகிடுதல், திருவிளக் கிடுதல், நந்தவனங்கள் வைத்து மலர் கொய்தல், மாலை கட்டுதல், சிவபெருமானுடைய கீர்த்தியினைப் புகழ்ந்து பாடுதல் சிவனடியாருக்குக் குற்றேவல் செய்தல் முதலியன
சரியை மார்க்கநெறியில் ஆற்றும் தொண்டுகளாம். சரியை மார்க்கத்தார் தவிர்க்கவேண்டிய குற்றங்களும் உண்டு. நிருக்கோயிலின் நிழலே மிதித்தல், எச்சிலுமிழ்தல், சள்
cup. 0

Page 97
154 முப்பொருள் உண்மை விளக்கம்
டேசுரத்தானம், கோமுகத்தானம் இவற்றைக் கடத்தல், பலிபீடத்தை, இடபதேவரைக் குறுக்கிடுதல், தெய்வத் தானங்களிற் கால்நீட்டல், விரைய நடத்தல், மூன்று முறைக்குக் குறைய கோயிலைச் சுற்றி வலம் வருதல் முத லியன குற்றங்களாம், கவனித்து ஒழுக வேண்டியன யாவை எனவும் அறியவேண்டும். ஒன்றையும் கொலை செய்யாமை.இந்திரியங்களை அடக்குதல், பொறை, உண்மை அன்பு, தவம், தியானம், சத்தியம், சிவனேவலாக அறிவு கோடல் ஆகியவையைக் கவனித்து ஒழுகுதல் எட்டு ஞான புட்பம் எனப்படும். சரியை எனப்படும் சீல நெறியைப் பற்றித் திருமூலர் கூறுவதைக் கவனிப்போம்.
*" நாடு நகரமும் நற்றிருக் கோயிலுந்
தேடித் திரிந்து சிவபெரு மான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்தபின்
கூடிய நெஞ்சத்துக் கோயிலாக் கொள்வனே "
இப்பாட்டில் சரியா பூசை இன்னதென்பது கூறப்படுகிறது. மெய்யடியார்கள் உய்யும் பொருட்டுச் சிவபெருமான் ஆங் காங்கு வெளிப்பட்டு அருளுகின்ற திருநாடு, திருநகரம், திருக்கோயில் முதலியவற்றை அன்பால் தேடித்திரிந்து அவைகளை இடையருது தொழுவர். அவ்விதம் தொழுங் ல் பாடுதலும் பணிதலும் இன்றியமையாதன. அவர் களுடைய நல்லுள்ளங்களைச் சிவபெருமான் திருக்கோயி லாகக் கொண்டருள்வான். இறைவனுடைய உருவத்திரு மேனியை நோக்கி வழிபட்டுத் தம்மாலியன்ற தொண்டு செய்து சரியை முறையை அனுட்டிப்போர் சிவசாலோக மாதிய பதமுத்தியைப் பெறுவர். சாலோகமாவது புவன பதிகளின் உலகங்களை அடைந்து ஒருவர் மனையிற் பணி செய்யும் தொண்டர்க்குள்ள உரிமைபோல அவ்வுலகத்துள் எவ்விடத்துந் தடையின்றிச் சஞ்சரித்து அவ்விடங்களி லுள்ள போகங்களை அனுபவித்து வாழ்தலாம்.

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள்
இறைவனுடைய அருவுருவத் திருமேனியை நோக்கி அகத்தும் புறத்தும் செய்யும் வழிபாடு கிரியை எனப்படும். இப்புத்திர மார்க்கத்தைப் பற்றி சிவஞான சித்தியார் கூறு வதைக் கவனிப்போம்.
* புத்திரமார்க் கம்புகலிற் புதியவிரைப் போது
கையொளிமஞ்சனம்.அமுது முதல்கொண் டைந்து
சுத்திசெய்தா சனம்மூர்த்தி மூர்த்தி மானுஞ்
சோதியையும் பாவித்தா வாகித்துச் சுத்த
பத்தியிஞல் அருச்சித்துப் பரவிப் போற்றிப்
பரிவினுெடும் எரியில்வரு காரியமும் பண்ணி
நித்தலும்இக் கிரியையினே இயற்றுவோர்கள்
நின்மலன்தன் அருகிருப்பர் நினையுங் காலே '
வாசனையுடைய மலர்கள் தூபம், தீபம், திருமஞ்சனம், திருவமுது முதலியவைகளைக் கொண்டு ஆசனமிட்டு மூர்த் தியை எழுந்தருளச் செய்து மூர்த்திமானகிய பரஞ்சோதி யைப் பாவனைசெய்து ஆவாகித்து மெய் அன்போடு அருச் சனை செய்து துதித்து வழிபட்டு இவ்விதம் கிரியை இயற் றுபவர்கள் சிவ சாமீபமாகிய பதமுத்தியைப் பெறுவர். இதுவே இதன் பொருளாகும். சாமீபமாவது புத்திரர்க் குளதாகிய உரிமைபோல அப்புவணபதிகளுக்கு நெருங்கின வராய் இருந்து அவர் போ க ங் களை அனுபவித்து வாழ்தலாம்.
இக்கிரியை மார்க்கம் நோன்பு என்றும் கூறப்படு கிறது. அகத்தும் புறத்தும் செய்யப்படும் நோன்பு இன்ன தெனத் திருமூலர் கூறுவதை அறியவேண்டும்.
* பத்துத் திசையும் பரமொரு தெய்வமுண் டெத்திக் கிலரில்லை என்பதின் அமலர்க்கு
ஒத்துத் திருவடிநீழல் சரணெனத் தத்தும் வினைக்கடல் சாராதுகாணுமே ""

Page 98
முப்பொருள் உண்மை விளக்கம்
முழுமுதற் கடவுளாகிய சிவபெருமான் பத்துத் திக்குகளி லும் நீக்கமற நிறைந்திருக்கின்றர். அகத்திலே நற்பண்பு களாகிய கொல்லாமை, ஐம்புலனடக்கல், பொறுமை, இரக்கம் நல்லறிவு. மெய், தவம், அன்பு என்பனவற்றை மேற்கொண்டு புறத்தே அந்நற்பண்புகளைப் போன்ற நறு மலர்களைக் கொண்டு திருமுறைகளைப் பாடி இறைவன் திருவடி நீழலே ஆதாரமென அருச்சித்து வருதலே சிறந்த தோன்பாகும். அவ்விதம் அருச்சிப்பார்க்கு ஆகாமிய வினை சாராது.
இனி அருவத்திருமேனியை நோக்கி அகத்திலே செய் யும் வழிபாடு யோகமார்க்கம் எனப்படும். அது சகமார்க்க மென்றும் கூறப்படும். இதை விளக்கிச் சித்தியார் dial வதைக் கவனிக்கலாம்.
* சகமார்க்கம் புலனெடுக்கித் தடுத்துவளி யிரண்டுஞ்
சலிப்பற்று முச்சதுர முதல்ஆதா ரங்கள் அகமார்க்கம் அறிந்தவற்றின் அரும்பொருள்கள் உணர்ந்தங் கணேந்துபோய் மேலேறி மலர்மதிமண் டலத்தின் முகமார்க்க அமுதுடலம் முட்டத் தேக்கி
முழுச்சோதி நினைத்திருத்தன் முதலாக வினைகள் உகமார்க்க அட்டாங்க யோக முற்றும்
உழத்தல்உழந் தவர்சிவன்தன் உருவத்தைப் பெறுவர்
சகமார்க்கம் என்பது உச்சுவாசம் (சுவாசும் விடுதல்) நிச்சு வாசம் (சுவாச ஒடுக்கம்) ஆகிய இரண்டையும் அடக்கி நடுநாடியாகிய சுளுமுனையில் பிராணவாயுவை விடயங் களிலே மனத்தைச் செல்லவிடாது செலுத்தி நிற்றலாம். அவ்விதம் நிற்கும்நிலையில் மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனகதம், விசுத்தி, ஆஞ்ஞையாகிய ஆறு ஆதாரங்களின் முறையே விக்கினேஸ்வரன், பிரமா, விஷ்ணு உருத்திரன், மகேஸ்வரன், சதாசிவன் ஆகிய தேவதை

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 1s?
களைத் தியானித்து பிரமரந்திரம் (உச்சித்துவாரம்) அளவும் சென்றடைந்து அங்குள்ள தாமரை முகையை அலர்வித்து அங்குள்ள சந்திரமண்டலத்தை மூலாக்கினியினுல் இளகச் செய்து அவ்வழியாக ஒழுகும் அமிர்தத்தை உடல்முழுதும் நிரப்பிப் பூரணப் பிரகாசத்தைத் தியானித்தலாம். வினை கள் கெடுதற்குரிய மார்க்கமாகிய இயமம் நியமம் முதலிய அட்டாங்க யோகத்தைத்தழுவி உள்ளே அருவத்திருமேனி, நோக்கி வழிபடுதல் செய்தலினுலே சிவ சாரூபமாகிய பத முத்தியைப் பெறுவர். இதுவே இதன் பொருளாகும். யோகத்தின் நிலைகள் நான்கையும் திருமந்திரம் விளக்கு கிறது. அதனை அறியவேண்டும்.
" யோகச் சமயமே யோகம் பலவுன்னல்
யோக விசேடமே அட்டாங்க யோகமாம் யோகநிர் வாணமே யுற்ற பரோதயம் யோக அபிடேகமே ஒண்சித்தி யுற்றலே "
யோகம் என்பது சமயம், விசேடம், நிருவாணம், அபி டேகம் என நான்கு நிலைக்ளேயுள்ளது. இவைகளுள் சம் யம் என்பது பலவகையாக யோக முறைகளை நினைத்தல்: யோகத்தில் விசேடம் என்பது இயமம், நியமம், ஆசமனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்னும் அட்டாங்க உறுப்புக்களாம். யோகத்தில் நிருவாணம் என்பது முழுமுதலாகிய சிவம் தோன்றுதலாம். யோகத்தில் அபிடேகம் என்பது சித்தியைப் பெறுதலாம் இவ்வாறு திருமந்திரம் விளக்குகிறது. யோகநெறியில் நின் முேர் சிவசாரூபத்தைப் பெறுவர். சாரூபமாவது தோழரிக் குரிய உரிமைபோலப் புவனபதிகளோடு ஒத்த வடிவமும் ஒத்த போக அனுபவமும் பெற்று வாழ்தலாம்.
இனி, யோகத்தின் அட்டாங்க உறுப்புக்களைப்பற்றி அறிதல் வேண்டும், இயமம் முதற்படியாகும். கொல்

Page 99
15 முப்பொருள் உண்மை விளக்கம்
லாமை, களவு செய்யாமை, மனத்தைப் புலன்வழிச் செல்லவிடாது தடுத்தல். பிறர்தரும் கொடைகளைப் பெற் றுக்கொள்ளாமை ஆகிய இவைபோன்ற ஒழுக்கங்களைத் தவருது கடைப்பிடித்தலாம். யோகத்தின் இரண்டாம்படி நியமமாகும். அதன்படி ஒழுகுதற்கு உடலையும் மனத்தை யும் பரிசுத்தமாக வைத்திருத்தல், கற்கவேண்டியவைகளைக் கற்றல், பெற்ற்தற்கு உவத்தல், தவம்புரிதல், உடல் பொருள் ஆவியை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தல் ஆகி யன இன்றியமையாதன. இயமமும் நியமமும் நல்லொழுக் கத்தை அடிப்படையாக உள்ளன. இவ்வடிப்படை ஒழுக் கம் இல்லாவிடின் ஒருவகை யோகமும் கூடாது.
மூன்ருவதுபடி ஆசனமாகும். (இருக்கை) முள்ளந் தண்டு நிமிர்ந்திருக்கத்தக்கதாகத் தலையும் உடலும் மார் பும் கழுத்தும் ஒரே நேர்கோட்டில் இருக்கத்தக்கதாய் அமைந்த ஆசனமே தக்கதாகும். மார்பு உள்வளைந்து இருக்கக்கூடாது.
பிராணுயாமம் அடுத்தபடியாகும். grmrpulumrLD செய்வதற்கு முன்பு நாடியைச் சுத்தி செய்யப் பழகவேண் டும். அதனுல் பிராணுயாமம் அப்பியசிக்கத்தக்க சக்தி உண்டாகும். நாடி சுத்தியைத் தினமும் அப்பியசிக்கப் பழகவேண்டும். வலப்புறத்து நாசியைப் பெருவிரலிஞலே அடைத்துக்கொண்டு இடப்புறத்து நாசியினுல் கூடியவரை காற்றினை உள்ளிழுத்து ஒரு கணப்பொழுதும் நிறுத்தா மல் உடனே இடப்புறத்து நாசியை அடைத்துக்கொண்டு வலப்புறத்து நாசியில்ை உள்இழுத்த காற்றை இடப் புறத்து நாசியினல் விடவேண்டும். இதைத் தினமும் கால் உச்சிப்பொழுது மாலை அர்த்தராத்திரி ஆகிய நான்கு காலங்களிலும் மூன்று முறை அல்லது ஐந்து முறை அப் பியசித்தலால் ஒரு மாதத்திலே நாடி கத்தியடையுமென பெரியோர்கள் கூறுவர். இதன் பின்னர் பிராணுயாமம்
செய்தல் நன்று.

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் J53)
பிராணயாமம் அடுத்தபடியாகும். தேகமாகிய இந்த இயந்திரம் அனைத்தையும் இயக்குகிற சக்தியைப் பற்ற வேண்டும். அது பிராணனுகும். பிராணுயாமம் என்றல் பிராணனைத் தன்வயப் படுத்தலாம். உடலின் தொழிலா கவும் நரம்பிலுள்ள ஒட்டமாகவும் எண்ணத்தின் வலிமை, யாகவும் தோன்றும் பிராணசக்தியை அறிந்து அடக்கி ஆளுதலே உண்மைப் பிராணுயாமமாகும். பிராணன அடக்கி ஆளக்கூடியவன் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றை யும் அடக்கி ஆளுவான். பிராணன் சுவாசப்பைகளை இயக் குகிறது. அவைகளின் இயக்கத்தினுல் காற்று உள்ளிழுக்கப் படுகின்றது. பிராணுயாமத்தினுல் பிராணன் வசப்படும். அதனுல் உடலிலே பிராண இயக்கத்தினலே நடக்கின்ற தொழில் எல்லாம் வசப்பட்டுவிடும்.
முள்ளந்தண்டிலே இடைகலை பிங்கலை, என்னும் இரண்டு நரம்புக்கொடிகள் இருக்கின்றன. இவைகளைவிட முள்ளந் தண்டினுள்டே சுளுமுனையென்னும் துளை பொருந்திய நாளம் ஒன்றும் இருக்கின்றது. இந்தச் சுளுமுனை நாளத்தின் அடி யிலே "குண்டலினிக்கமலம் இருக்கின்றது. அது முக்கோண வடிவுடையது. அங்கு குண்டலின் என்னும் சத்தி வட்ட மிட்டுக் கிடக்கிறது. குண்டலினி விழித்தெழுந்து துளை, பொருந்திய நாளத்தின் வழியாகச் செல்ல முயலும். யோகி, அற்புத தரிசனங்களையும் வல்லமைகளையும் பெறுகின்மூன். அது மூளையை அடைந்தவுடன் யோகி உடலிலும் மனத் திலும் இருந்து பூரணமாகப் பிரிந்து நிற்பான்.
இனி, பிராணுயாமம் செய்யும் முறையை ஆராய வேண்டும். முதலில் நிமிர்ந்திருக்கவேண்டும். மார்பு. கழுத்து தலை என்னும் இவை ஒரு நேராக இருக்கவேண்டும். பின் னர் அளவான முறையாக மூச்சினை உள்ளிழுத்து வெளியே விடுதல் முதற்படியாகும். அதனுலே தேகம் வயப்படும்.

Page 100
i60 முப்பொருள் உண்மை விளக்கம்
பின்னர் "ஓம்" என்னும் மந்திரத்தை மூச்சிழுக்கும் போதும் மூச்சு வெளியே விடும் போதும் உச்சரித்தால் நல்லதெனப் பெரியோர் கூறுவர். இந்த் அப்பியாசத்தின் பயணுக முக இலட்சணத்திலே வேறுபாடு காணப்படும். அமைதியுண் டாகும். அழகிய குரலுண்டாகும். சில மாதங்களுக்கு இவ் விதம் அப்பியாசம் எடுக்கவேண்டும். பின்னர் இடது நாசி யினுல் 4 கணப்பொழுது நேரத்தில் மூச்சை உள்ளிழுத்து 16 கணப்பொழுது நேரம் உள்ளே நிறுத்தி 8 கணப் பொழுது நேரம் வெளியே விடவேண்டும். (1 : 4 : 2) இது ஒரு பிராணுயாமமாகும். அந்த நேரத்தில் மனமானது முக்கோண வடிவாயிருக்கிற மூலாதாரத் தாமரையில் செல்லவேண்டும். அடுத்தபடியாக மூச்சை மெல்லவாக உள்ளிழுத்து உடனே வெளியே தள்ளி பின்னர் மூச்சை வெளியே நிறுத்தி வைக்கவேண்டும். முன் சொன்ன கணக் கின் படியே செய்யவேண்டும். சுவாசப்பையில் மூச்சை நிறுத்திவைக்கும் அப்பியாசம் அடிக்கடி செய்தல் கூடாது. காலையில் நான்கு முறை மாலையில் நான்கு முறை மாத் திரம் ஆரம்பத்தில் செய்தால் போதுமானது. அதிக அப் பியாசம் அடைந்தபின் நேரத்தையும், அளவு முறையை யும் படிப்படியாகக் கூட்டிக் கொள்ளலாம். முயன்று அப் பியசித்தால் குண்டலினி எழக்கூடும். அவ்விதம் ஏற்படின் அறிவு விளக்கம் உண்டாகும்; சுழுமுனை நாடி திறந்து மேலாக எழுமாயின் புலன்களுக்கும். உனர்வுக்கும் அப்பால் மனம் செல்லும். சுழுமுனையைத் திறக்கச் செய்வதுதான் யோகியினுடைய முதற்படியாகும். இவ்வாறு யோகநூல் கூறுகிறது. இதை அப்பியாசஞ் செய்பவர்கள் குருவின் உதவியோடேயே செய்யவேண்டும்.
இனி யோகத்தின் அடுத்த படிகளாகிய பிரத்தியாகா ரம், தாரணை என்பவைகளைப் பற்றி அறிதல்வேண்டும். அகம், புறம் ஆகிய இருவகை இயற்கைகளையும் அடக்கி

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 15i
ஆளுகின்ற ஆதிக்கத்தை ஆத்மா ஒவ்வொன்றும் அடைய வேண்டும். அகக் கருவிகள், புறக் கருவிகள், மனம் ஆகிய மூன்றும் காணப்படுகின்றன. மூன்றுஞ் சேர்ந்து ஏதாவது புற ப் பொருளைப் பற்றும்போது நாம் அதனைக் காண்கின்ருேம். ஆனல் மனத்தை ஒருவழிப்படுத்தி ஒரு கருவியோடு மாத்திரம் தொடர்பாக்கி வைத்துக் கொள்வது அதிக கடினமாகும். மனம் புலன்களுக்கு அடி மையாகின்றது, எவனெருவன் புலன்களோடு மனத்தினை ஒன்று கூட்டவோ, பிரிக்கவோ வல்லமையுள்ளவனுக இருக்கமுடியுமோ அவன் பிரத்தியாகார நிலையை அடைந் தவனுவான். ஒன்று கூட்டுதலே பிரத்தியாகாரம் எனப்படும். புலன்களினுடைய அடிமைத்தனத்தினின்று மனத்தை விடு வித்து மனத்தை வெளியே செல்லாது தடுத்தல் வேண்டும். இதுவே முத்தியடையும் மார்க்கத்துக்கு வழிகோலும், ஆசை, பொருமை, பெருமை மனத்தை அலைத்துக் கொண் டிருக்கிறது. ஒருவன் ஒரு இடத்திலே சும்மா இருந்து மனத்தைத் தன் வழியே போகவிட்டால் அவனுடைய மனதுக்குப் பலவிதமான கொடிய எண்ணங்களும் வரக் கூடும். தன் நிலையைத் தானே உணரத் தொடங்க மனத் தின் தவறுகள் காலஞ் செல்லக் குறைந்து போகும். மனத்தை அடக்கிப் புலன்களோடு செல்லவிடாது நிறுத்து தல் பிரத்தியாகாரம் என்பதாம். அந்நிலையை அடையப் பல வருடங்கள் எடுக்கும்.
தாரணை என்பது குறித்த சில இடத்திலே மனத்தை நிறுத்தி வைப்பதாம். உதாரணமாக இதய கமலத்திலா வது, சிரத்தின் மத்தியிலாவது மனத்தை நிறுத்தி வைத் தல் தாரணையாகும். மனத்தை ஒரு நிலையத்தில் 12 கணப் பொழுது (செக்கன்ட்) வைத்திருப்பது ஒரு தாரணையாகும்
யோகி கவனிக்கவேண்டிய சில விடயங்கள் உள. தனித்திருக்க முயலவேண்டும். அதிகம் பேசுதல் கூடாது பேசினல் மனம் அலைவுறும். அதிக வேலை செய்தல் கூடாது. அதிக வேலை செய்வதாலும் மனம் அலைவுறும், மனத்தி னேக் கலங்கவிடாது, கலகத்தை உண்டாக்குவோரோடு சேராது இருப்பது முதற்படி எனலாம். சில மனிதரும்,
لهٔ ه بالا)

Page 101
i62 முப்பொருள் உண்மை விளக்கம்
சில இடங்களும், சில உணவுப் பொருள்களும் வெறுப்பை உண்டாக்குவன என்பதால் அவைகளை விட்டு விடுதல் வேண்டும், உயர்ந்த நிலையை அடைய விரும்பினேர், நல் லோர் தீயோர் என்ற இருபாலாருடைய கூட்டத்தையும் விட்டு விடுதல் வேண்டும். அனுகூலம் அடைவதற்கு பூரண பிடிவாதமும் பெரும் சித்த சக்தியும் வேண்டும்.
மேலும் யோகத்தின் அடுத்தபடிகளாகிய தியானம், சமாதியைப் பற்றி அறிதல் வேண்டும். இனித் தியானத் தைப்பற்றி அறிதல்வேண்டும். மனத்தை அகத்தோ அல் லது புறத்தோ ஓர் இடத்தில் நிலையாய் இருக்கப் பழகிய பின் அதற்கு அந்த இடத்தை நோக்கித் தொடர்ந்து ஒடு கிற ஒரு தன்மை உண்டு இதுவே தியானம் எனப்படும். தியானம் பலம் அடைந்தபின் காட்சியின் புறப்பாகத்தை விலக்கி உட்காணப்படும் அகப்பாகத்திலே நிலைபெற்றிருத் தல் சமாதியாகும். இவ்வித தியானத்தினலே உண்மை இன் பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். விலங்குகளுக்கு புலன் களிலும் மனிதனுக்குப் புத்தியிலும் தேவருக்கு ஆத்மீகத் தியானத்திலும் உவகையுண்டு. ஒன்றினையும் இச்சியாது ஒன்றினேடுங் கலந்து கொள்ளாது வாழ்கின்றவனுக்கு உல கம் உண்மையிலேயே அழகிய இடமாகின்றது,
மனிதராகிய நாம் உணர்வோடு சில அறிவு களை ப் பெற்றும் சிலவற்றை உணர்ந்து கொள்ளாமலும் இருக் கின்ருேம். உண்ணும்போது உணர்வோடு உண்கின்ருேம். அது சீரணிக்கும்போது அவ்வித உணர்வு ஏற்படுவல்லை. மனிதரின் மணமானது தொழில் புரியும் இடம் இருவகைப் படும். முதலாவது உணர்வோடு கூடியது, இது அகங் கார உணர்ச்சியோடு கூடியது, மற்றையது உணர்வற்ற இடம். இது அகங்கார உணர்ச்சியின்றி நடக் கி ன் றது. கீழான பிராணிகளிலே உணர்வற்ற தொழில் இயற்கை அறிவு த் தொழி லா கும். உயர்ந்த பிராணிகளா கிய மனிதரிலே உணர்வோடு கூடிய தொழில் அதிகமாகக் காணப்படுகிறது. அதோடு மனமானது தொழில்புரியக் கூடிய அதியுயர்ந்த இடம் ஒன்று உண்டு. அது உணர் வையும் கடந்து செல்வது. அங்கு அகங்கார உணர்ச்சி

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 63
யில்லை. நான் என்ற அகங்காரமானது இடைப்பட்ட இடத்திலே மாத்திரம் உண்டு. ஆகையால் மனமானது அகங்கார உணர்ச்சிக்கு அப்பாலே செல்லும் பொழுது சொல்லும் உணர்வுங் கடந்த "சமாதிநிலை' அடைகின் றது. ஆழ்ந்த நித்திரைக்குப் போகும் பொழுது ஒரு மணி தன் உணர்வுக்குக் கீழான நிலைமை அடைகின்ருன், நித்தி ரையில் மூச்சு விடுவதும் உடலை அசைப்பதும் அகங்கார உணர்வின்றி நிகழ்கின்றன. சமாதி நிலையில் மூ ட னு ம் ஞானவான வான்.
மனமானது உணர்வோடு கூடிநின்று தொழில் புரி கின்ற நியாயம் என்னும் எல்லை ஒரு சிறு வட்டமாகும். நியாயம் அதனைக் கடந்துபோக மாட்டாது. மக்கள் அரி யனவென்று கொள்ளுகின்ற அனைத்தும் நியாயம் ஆகிய வட்டத்துக்குப் புறம்பு உள்ளதாகும். ஆத்மா, கடவுள் பரஞானம் என்பனவற்றின் அறிவு, நியாயத்தின் எல் லைக்கு அப்பாற்பட்டது இயற்கை அறிவு, நியாயம் சமாதி என்னும் மூன்றும் முறையே உணர்வற்ற, உணர்வோடு கூடிய உணர்வினைக் கடந்த நிலைகளாக ஒரே மனத் தோடு பொருந்தி இருக்கின்றன.
இயமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியா காரம், தாரணை, தியானம், சமாதி என்பன இராசயோ கத்தின் படிகளாகும். உயிர்க்குத் துன்பம் செய்யாமை, உண்மை உரைத்தல், பிறர் பொருளை இச்சியாமை, பிரம் மச்சரியம், பிறரிடத்திலிருந்து ஒரு பொருளையும் பெற் றுக்கொள்ளாமை, மனச்சுத்தியை உண்டாக்கும். மனம், வாக்கு, காயங்களினல் சீவபிராணிகளுக்குத் துன்பம் விளைவிக்காதிருத்தல் அகிம்சை அல்லது இன்னசெய்யா மையாம். அகிம்சையிலும் சிறந்த தருமம் வேருென்றில்லை. எப்பொழுதும் எல்லா நிலையிலும் மனம் வாக்கு காயங்க ளினலே ஒழுக்கம் தவரு திருத்தல் பிரம்மச்சரியம் எனப் படும். மிகக்கடினமாகத் துன்புறும் பொழுதும் பிறரு டைய கொடையைப் பெற்றுக் கொள்ளாதிருத்தல் சுதந் திரத்தைக் காப்பாற்றுவதாகும். நற் பழக்கங்கள் நன் னடை ஆகியவையோடு கூடிய நியமம் தவம், கல்வி

Page 102
64 முப்பொருள் உண்மை விளக்கம்
தெய்வவழிபாடு, யோக அனுகூலத்துக்கு உதவியாகும். இங்கே கல்வியெனப்பட்டது வேதங்களையும் மந்திரங்களை யும் திருமுறைகளையும் ஓதுவதாம். மந்திரத்தைப் புறத்தே கேட்க உச்சரிப்பது குறைந்த படியாகும். மனத்திலே உச்சரிப்பது உயர்ந்த நிலையாகும். உதடுகளை அசைத்து ஒலி புறத்தே கேட்காது உச்சரித்தால் இடைப்பட்ட நிலை பாகும். ஆனல் மனத்திலே உச்சரித்து மந்திரத்தினது பொருளையுஞ் சிந்தித்தல் மானத உச்சாரணை எனப்படும். இது அதி உயர்ந்த நிலையாகும். உடலைச் சுத்தி செய்த லாகிய புறத் தூய்மையும் உண்மை முதலிய அறங்களால் உள்ளத்தைப் பரிசுத்தப் படுத்தல் அகத் தூய்மையும் யோகத்துக்கு இன்றியமையாதன. பிராணுயாமத்தில் மூச்சை உள்ளிழுப்பது பூரகம் எனவும் மூச்சை நிறுத்தி வைப்பது கும்பகம் எனவும் மூச்சை வெளியே விடுவது ரேசகம் எனவும் கூறப்படுகின்றன. மனத்தை ஒரு நிலையத் தில் (இருதய கமலத்தில் அல்லது சிரத்தின் மத்தியில்) பன்னிரண்டு வினடிகள் (செக்கன்ட்) வைத்திருப்பது ஒரு தாரணையாகும். பன்னிரண்டு தாரணை ஒரு தியானம், பன் னிரண்டு தியானம் ஒரு சமாதியாகும்.
சரியை, கிரியை, யோகமாகிய தவங்களைச் செய்த வர்கள் இறக்குங் காலத்திலே மனைவி, மக்கள், செல்வம் ஆகியவற்றிற் பற்று வைப்பின் அவ்வத் தவங்களின் பய ஞகச் சாலோக, சாமீப சாரூப பதங்களை அடைந்து அங் குள்ள இன்பங்களை அனுபவித்துப் பின்னர் முன்பற்று வைத்த வினைப்பயன்களே அனுபவித்தற் பொருட்டுப் பூமி யிலே உயர்ந்த குலத்திற் பிறந்து வினைப்பயனை அனுபவிப் பர். அப்பொழுதே முன்செய்த சரியை முதலியவையைச் செய்து அவற்றல் ஆசையை நீக்கி உண்மை ஞானத்தைப் பொருந்துவர். முன் இறக்கும் பொழுது உலகப்பற்று இல் லாதிருப்பின் சாலோக, சாமீப, சாரூப, பதங்களில் இருந் தபடியே ஞானத்தைப் பொருந்தி நிற்பர். சிவஞான போதம் எட்டாம் சூத்திரம் இக்கருத்தை விளக்குகிறது.

சாஸ்திரவியல் - ஞான சாதனங்கள் 16
" தவஞ்செய்தா ரென்றுந் தவலோகஞ் சார்ந்து
பவஞ்செய்து பற்றறுப்பா ராகத் - தவஞ்செய்த
நற்சார்பில் வந்துதித்து ஞானத்தை நண்ணுதலைக்
கற்றர்சூழ் சொல்லுமாங் கண்டு ' தவவினையாயினும், தவமல்லாத பிறவினையாயினும் இவ் வுலகத்திலே செய்த வினைகளெல்லாம் அவ்வினைப் பயனை அனுபவித்தற்குரிய அவ்வவ் உலகங்களிற் செலுத்தி அந்த வினைக்குரிய போகங்களை அனுபவிக்கும்படி செய்து விடும். வினை செய்தவர் எக்காலத்தும் அனுபவிக்காமல் தப்பித் துக் கொள்ளமாட்டார். இங்கே நற்குலம் என்று சொல் லப்படுவதை பிறப்பால் உள்ள குலம் என நாம் கருத முடியாது. ஏனெனில் தவஞ் செய்த சார்பில் வந்துதித்து" என்பதிலிருந்து தவஞ் செய்தோர் உயர் குலத்தோர் என் பதும் தவமிலாதார் கீழ்க் குலத்தவர் என்பதைக் குறிக் கும். சரியையாதிகளை அனுட்டித்த பின்னரே ஞானம் உண்டாகும். என்பது வெளிப்படை. ‘தவமும் தவமுடை யார்க்காகும்" என்பதைக் கருத்திற் கொள்ளவேண்டும்:
இனி அடுத்தபடியாகிய ஞான மார்க்கத்தைப் பற்றி அறிதல்வேண்டும். அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று திருமேனிக்கும் மேலாய் விளங்குகின்ற சச்சிதானந் தப் பிழம்பாயுள்ள சிவபெருமானிடத்திற் செய்யும் வழி பாடு ஞானமார்க்கம் எனப்படும். சித்தியார் கூறுவதைக் கவனிப்போம்.
' சன்மார்க்கஞ் சகலகல புராண வேத
சாத்திரங்கள் சமயங்கள் தாம்பலவும் உணர்ந்து
பன்மார்க்கப் பொருள்பலவுங் கீழாக மேலாம்
பதிபசுபா சந்தெரித்துப் பரமசிவனைக் காட்டும்
நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடா வண்ணம்
பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றி ஞானப்
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவர் காணே **
ஞானமார்க்கம் அல்லது சன்மார்க்கம் எனப்படுவது எல் லாக் கலைஞானங்கள் புராணங்கள், வேதாகமங்கள் சமய

Page 103
168 முப்பொருள் உண்மை விளக்கம்
சாத்திரங்கள் யாவையும் ஆராய்ந்து எப்பொருளும் கீழெ னக்கண்டு, பதி, பசு, பாசம் ஆகிய முப்பொருள்களையும் உணர்ந்து அம்மூன்றனுள் பதிப்பொருளே பசு, பாசங்க ளுக்கு மேலானதென்பதை அறிந்து நல்வழிக்கு ஏதுவான , ஞான நூல்களை ஒதல் கேட்டலுடன் சிந்தித்து அகத்தா லும் புறத்தாலும் வழிபடும் முறைகள் இல்லாத அறிவு மார்க்கத்தினலே சச்சிதானந்தப் பிழம்பாய் விளங்குகின்ற சிவபிரானிடத்துச் செய்யும் வழிபாடாகும். அவ்விதம் ஞானத்தினை அனுட்டித்தோர் சிவசாயுச்சியமாகிய பரமுத் தியைப் பெறுவார். சாயுச்சியம் என்பது சரியையில் ஞான முதல் யோகத்தில் ஞானம் ஈருகிய ஞானங்கட்குப் பய ஞகிய சாயுச்சியமும், ஞானத்தில் ஞானத்துக்குப் பயணு கிய சாயுச்சியமும் என இருதிறப்படும். இவைகளுள் முதற் கூறப்பட்ட சாயுச்சியமாவது புவன பதிகள் செய்யும் அதி காரங்களை அவர் போலவே செய்துகொண்டு வாழலாம்; பிற்கூறப்பட்ட ஞானத்தின் பயனக ஏற்படும் சாயுச்சிய மானது சிவபெருமான் திருவடியில் இரண்டறக் கலந்து சிவானந்தத்தை அனுபவித்தலாம்.

16. உண்மைஞானமும் தசகாரியமும்
ஆன்மாக்கள் முன்செய்த இருவினைப் பயன்களை நுக ரும் வண்ணம் இறைவன் தனு கரண புவன போகங்களை அளிக்கின்றன். எல்லாப் பிறவிகளிலும் பார்க்க மானிடப் பிறவியே சிறந்ததென்பதை யாரும் ஒப்புக்கொள்வர். பிறந் திறந்து மேலும் பிறவியையே எடுக்காது விடுவதற்கு ஒரே யொரு வழிதான் உண்டு. பேரின்ப சொரூபியாகிய சிவ பெருமானுடைய திருவருளினலே பிறவிப் பெருங்கடலை நீந்த முடியும். இதுபற்றியே பட்டினத்தடிகள்
"ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கியுழன்ற நெஞ்சே
அழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யநாதியன மழுமான் கரத்தனே மால்விடை யானே மனதிலுன்னி விழியாற் புனல்சிந்தி விம்மி யழுநன்மை வேண்டுமென்றே ??
என்று கூறுகின்ருர், நல்வினை செய்த காரணத்தினலேயே மானிடப்பிறவியை எடுத்து இறைவனுடைய தாளே வணங்க முடிகிறது.
"என்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே இருங்கடல்வையத்து
முன்னே நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித்தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனே வாயாரப் பன்னி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் மதனுலே " என்று ஞானசம்பந்தர் கூறுவதையும் "இனித்த முடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்ருல் மனித்தப்பிறவியும் வேண்டுவதே யிந்தமாநிலத்தே' என்று அப்பர் கூறுவதிலி ருந்தும் மனித்தப் பிறவியில் மாத்திரமே ஆன்மாவானது, பிறவிக்கடலினின்று தாண்டிச் செல்ல முடியுமென நாம் அறிகிருேம்.
பல பிறவிகளிலும் ஏற்பட்ட பழக்கத்தாலும், மல வாசனையாலும் தாக்குண்டு எடுத்த இம்மானிடப் பிறவி யிலேயே இறைவனை நினைந்து பேரானந்தப் பெருவாழ்வை எய்தத் தவறிப்போக நேரிடுகிறது. ஆன்மா எடுத்துக்

Page 104
iës முப்பொருள் உண்மை விளக்கம்
கோண்ட இந்த உடம்பின் சுத்ததத்துவம் ஐந்தும், வித் தியா தத்துவம் ஏழும், ஆன்ம தத்துவம் இருபத்து நான் கும் ஆகிய முப்பத்தாருேடும் அதுகூடி மயங்கி இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றது. ஆன்மா ஒரு விடயத்தை அறியும் போது ஐம்பொறிகளிலொன்றும் பஞ்சபூதங்களி லொன்றும் அந்தக்கரணங்கள் நான்கும் கலை முதலியன ஐந்தும் ஆகிய 11 தத்துவங்களையும் பொருந்தி நின்றே அவற்றின் உதவியால் நுகர்ச்சி பெறும். இம்முறைமை யின்றி ஆன்மா ஒன்றையும் அறியமாட்டாது. ஆனல் ஆன்மா இல்லாமல் அத்தத்துவங்களும் தாமாகத்தொழிற் படமாட்டா. இறைவன் உணர்த்தினலன்றி உணரமாட் டாத உயிர் இத் தத்துவங்களைத் தானே அறிந்து அவை களைச் சாரமாட்டாது. தத்துவங்களும் தாமாக உயிரைச் சாரமாட்டா. இறைவன் அக்கருவிகளைக் கூட்ட அவன் செயலால் அக்கருவிகளோடு கூடிநின்று ஆன்மா போகங் களை நுகரும். சவன் 4 வகைவாக்குகளாலும், கலை முத லிய தத்துவங்களாலும் ஆன்ம அறிவை விளங்கச் செய் வன். ஆன்மா இன்பதுன்பங்களே நுகரும் போது திருவரு ளினல் அனுபவிக்கின்றேன் என்பதை அறியாது. தன் அறி விஞலே தான் அறிந்து அனுபவிக்கின்றேன் என ஆன்மா நினைக்கும். ஆகையால் பெத்த நிலையிலுள்ள மலமறைப்பே அவ்விதம் எண்ணுவதற்குக் காரணமாகும்
மாயை கன்மங்களாற் தாக்குண்டு நிற்கும் ஆன்மா வின் மருள்நிலை உபாய மார்க்கத்தையே நாடி உலகப் பொருள்களை விரும்பி நிற்கும். அதுசெய்யும் சிவபுண்ணி யங்களும் உபாயச் சரியை, கிரியை, யோக, ஞானச் சிவபுண்ணியங்களாம். முத்திகாரணமாகச் செய்யும் சிவ புண்ணியமே உண்மைச் சரியை, கிரியை, யோக, ஞானம் எனப்படும், இவைகளுள் உண்மை ஞானம் பத்து வகைப்படும் இவை தசகாரியம் என்று சொல்லப்படும். இந்தப் பத்துச் செயலும் உண்மைஞானத்தின் பயனகும். ஞானச் செய லுக்கு வடிவமும் கருவியும் கிடையா. கீழ்வருவன உண்மை ஞானம் பத்துமாகும்,

சாஸ்திரவியல் - உண்மைஞானமும் தசகாரியமும் 169
1. தத்துவரூபம் 2. தத்துவ தரிசனம் 3. தத்துவசுத்தி 4. ஆன்மரூபம் 5. ஆன்மதரிசனம்
6. ஆன்மசுத்தி 7. சிவரூபம்
8. சிவதரிசனம் 9. சிவயோகம்
10. 66 GLumrassb முதலில் தத்துவரூபம் யாதென அறியவேண்டும், பிருதிவி முதல் நாதம் ஈழுக உள்ள முப்பத்தாறு தத்துவங்களின் தொழில்களையும் குணங்களையும், அவை தனக்கு வேருக உள்ளன என ஆன்மா அறியும் நிலையே தத்துவரூபமாகும். ஆன்மா அவ்விதம் அறிந்து கொள்வதற்குத் திருவருளே துணையாய் இருக்கிறது.
முப்பத்தாறு தத்துவங்களும், தன்னிடத்திலே நின்று சீவித்தமுறையை ஆன்மா காணும்போது அந்த 36 தத்து வங்களும் சுத்தமாயை அசுத்தமாயை மலங்களின் காரிய மென்றும் அவை சடம் (அறிவின்மை) என்றும் அறியும். இதுவே தத்துவதரிசனம் எனப்படும் இதுபற்றியே திருமூலர்
'தத்துவ ஞானந் தலைப்பட் டவர்கட்கே தத்துவ ஞானந் தலைப்பட் டலாய்நிற்குத் தத்துவ ஞானத்துத் தானவ ஞகவே தத்துவ ஞானுனந் தந்தான் தொடங்குமே" முப்பத்தாறு மெய்களின் உண்மையை உணரும் உணர்வு நிலை அடைந்தவர்க்கே திருவடியுணர்வாகிய த த் துவ ஞானம் கைகூடும். திருவடியுணர்வு கிடைக்கப்பெற்ருல் சிவனருளாலே உயிர் சிவஞவான். அதனுல் திருவடிக்கீழ் அமர்ந்து திருவடி இன்பத்தைப் பெறுவான்.
qupo 28

Page 105
WO முப்பொருள் உண்மை விளக்கம்
கான*லத் தண்ணீர் என்று நிஃனத்துப் பின்னர் கான லென அறிந்த ஒருவன் திரும்ப அதை விரும்ப மாட்டான். அதுபோல 86 தத்துவங்களும் தன்னின் வேறென்று, தன்னறிவிலே கண்டு அவைகளினின்று நீங்கி நிற்கலாம். இதுவே தத்துவசுத்தி எனப்படும். இதுபற்றித் திருக்களிற் றுப்படியார் கூறுவதைக் கவனிக்கலாம்.
" தூல உடம்பாய முப்பத்தோர் தத்துவமும் மூல உடம்பாம் முதல்நான்கும் - மேலேச் சிவமாம் பரிசினேபுந் தேர்ந்துணர்ந்தார் சேர்ந்த பவமாம் பரிசறுப்பார் பார் "
தாலசரீரமாகிய அசுத்தமாயையிலுண்டான 31 தத்துவமும் அதற்கு மூல சரீரமாகிய முதல் நான்கு தத்துவமும் அதற்கு மேலாகவுள்ள சிவதத்துவமும் ஆகிய 3 தத்துவங்களினு டைய தன்மையை விசாரித்து அறிந்தவர்கள் இதுவரையும் அவர்களேப் பொருந்தி நின்ற பிறவித் துயரை நீக்குவர். இது உண்மையாகும். இதுவே இதன் பொருளாகும். இதி லிருந்து தத்துவவிசாரமே பிறவியறுப்பதற்கு ஏதுவாகும் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.
மலபரிபாகம் ஏற்படும்போது திருவருள் தோன்றும் அப்பொழுது ஆன்மாதான் இதுவரையும் அறிந்தவை, கருவி களேக்கொண்டு அறிந்தனவென்றும் அக்கருவிகள் மாயா காரியம் என்றும் சடம் என்றும் தனக்கு வேறுனவை என் றும் இப்பொழுது இவ்விதமாக அறியச் செய்தது திருவருள் என்றும் அறியும். அவ்வருளின் உதவியாலே கருவிகளேயும் தன்னேயும் திருவருளேயும் ஆன்மா அப்பொழுது அறியும். இங்ஙனம் விளங்கக் காண்பது ஆன்மரூபய' எனப்படும். அப் பொழுதே ஆத்ம ஞானம் உண்டானதெனலாம். தத்துவங் கண் ஞானத்தாலேயே நீக்குவது தத்துவ கந்தியாகும். ஆகையால் தத்துவருபம், தத்துவதரிசனம், தத்துவசுத்தி, ஆன்மரூபம் ஏற்பட்ட நிலே நின்மலசாக்கிரம் எனப்படும். சாக்கிரம் என்பது நனவு நியோகும் நின் மலம் என்பது மலம் நீங்கிய நிலையாகும். ஆகையால் மலபரிபாகம் உற்ற ஆன்மாவின் நனவுதிலேயே நின்மலசாக்கிரம் எனப்படும்.

சாஸ்திரவியல் - உண்மைஞானமும் தசகாரியமும் 171
ஆன்மா 36 கருவிகள் தானல்லவென்றும் தனதல்ல வென்றும் திருவருளின் துணேகொண்டு அறிந்தபின் தனக் கெனச் செயல் இல்ஃயென அறியும். அப்பொழுது அவ் வருளோடு கூடிநிற்கும். இதுவே ஆன்மதரிசனமாகும். இது நின்மல சொப்டனர் எனப்படும். பலம் தீங்கிய கனவு நிஃ:பாகும்,
தத்துவங்கள் தனக்கு அந்நியமான சடப்பொருள் என்று ஆராய்ந்தறிய சிவஞானம் உதயமாகும். அவ்விதம் ஏற்படுவதற்கும் பிரபஞ்சப்பற்று நீங்குவதற்கும் பஞ்சாக்க ரத்தே விதிப்படி உச்சரிக்கவேண்டும் பற்று நீங்கியவிடத்து தனக்கொரு செயலுமில்லாததாய்த் தற்போதமிழந்து திரு வருவரில் அடங்கி அன்வருளே தாணுகி நிற்கும் நி:ே ஆன்ம சந்தியாகும். இது நின்மவிகளுத்தி எனப்படும். உறக்க நிஃபே கருத்தி எனப்படும். ஆண்களால் அது மலம் நீங் கிய உறக்கநிஸ்ே எனலாம். இங்கு சிவத்தினது அருளே நான்ம் எனப்பட்டது . ஒளியானது சூரியனேயன்றி நில்வா ததுபோல் சிஸ்த்தையன்றி அருள் தில்லாது. ஆகையால் நின்மலராகிய சிவனிடத்து விளங்கும் அருள் அவருடைய சத்தியாகும். அருட்சத்தி ஆன்மாவிற் பதிதலே சத்திநிபாதம் எனப்படும். இருவினேயொப்பும் மலபரிபாகமும் வரும்பொழுது சக்திதிபாதம் ஏற்படும்.
'' ፴፬ மிருவினேக னேராக நேராதல்
கூடுமிறை சத்தி கொளல் " என்று திருவருட்பனிலே கூறப்படுவதைக் கவனிக்கவேண் டும். ஒன்றை ஒன்று ஒன்வாத புண்ணிய பாவங்கள் ஆகிய இரண்டையும் சமணுக மதித்து விலக்கும் எண்ணம் ஆண் | உள்ளத்தில் உண்டாகும் நேரம் இறைவனுடைய திருவருட்சத்தி ஆன்மாவிற் பதியும் என்பதே இதனு ஈடய பொருளாகும். நல்வி:ன தீவினேசுகளிலும் (ஆகாயம்) அவற்றின் விஃளவாகிய புண்ணிய பாவங்களிலும் (சஞ்சிதம்) இவற்றின் பயணுகிய இன்ப துன்பங்களிலும் ஒன்றில் விருப் பும் ஒன்றில் வெறுப்புமின்றி ஆன்ம அறிவின்கண் ஒப்ப வெறுப்பு நிகழ்தல் இருவினேயொப்பு எனப்படும். திருவுத்தி யாரில் பின்வருமாறு கூறப்படுகிறது,

Page 106
17Ꮽ; மூப்பொருள் உண்மை விளக்கம்
* சித்தமுந் தீயகரணமுஞ் சித்திலே ஒத்ததே யொத்ததென் றுந்தீபற ஒவ்வாத தொவ்வாதென் றுந்தீபற ??
ஆன்மாவும் பொல்லாங்கு விளைக்கும் அந்தக்கரணங்களும் திருவருளுடனே பொருந்துதலே இருவினையொப்பாகும். இருவினையொப்பு ஏற்படாவிடின் திருவருளைப் பொருந்து தல் முடியாது.
சிவபெருமான் திருவடியை அடையவேண்டுமென்ற நாட்டம் சிவசத்தி ஆன்மாவிற் பதியக் காரணமாகும். ஒரு ஆன்மாவுக்குத் திருவடியடைய வேண்டியதற்குச் சத்திநிபாதம் நிகழ்ந்தால் அது அவ்வான்மாவை மனைவி, மக்கள், பணம் ஆகிய உலகப்பொருள்களினின்று அஞ்சி ஒடிச் சற்குருவைத் தேடும்படி செய்யும்; இருவினையொப்பு ஏற்படுங்காலம் மலபரிபாகம் உண்டாகும். மலபரிபாகமாவது ஆணவமலத்தினது சத்தி ஆன்ம அறிவை மயக்க இயலாது வலிகுன்றி நிற்பதாம். விளங்கக்கூறின் ஆணவமலத்திற் குரிய காமம், மோகம், மதம், குரோதம். லோபம், மாச் சரியம் ஆகிய குணங்கள் ஆன்ம அறிவைவிட்டு நீங்குத லாம். ஆணவமலம் பக்குவமாகும் பொருட்டு உதவியா யிருந்த திரோதானசத்தி ஆணவமலம் பரிபாகமுறுங் காலத் தில் அருட்சத்தியாய் மாறி ஆன்மாக்களிற் பதியும். அவ வித சத்திநிபாதம். மந்தரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்குவகைப்படும். மந்தர சத்திநிபாதமுடையோர் சமயதீட்சை பெற்று சிவபெருமானுடைய உருவத்திரு மேனியை நோக்கி வழிபடுதலாகிய சரியை நெறியில் நிற் பர். மந்த சத்திநிபாதமுடையோர் சரியை நெறியினின் றும் முன்னேறி விசேட தீட்சை பெற்று புறத்தும் அகத் தும் சிவபெருமானின் அருவுருவத் திருமேனியை நோக்கிக் திரியை முறையில் நிற்பர் தீவிர சத்திநிபாத நெறியில் நின்றேர் பக்குவநிலை எய்தி அகத்தே சிவபெருமானுடைய அருவத்திருமேனியை நோக்கி வழிபட்டு யோகநிலையில் நிற்பர். இம்மூன்றினலும் மேனிலை எய்தி இருவினையொப்பு, மலபரிபாகம் உண்டாகித் தீவிரதர சத்திநிபாதம் ஏற்ப டும். முத்தியடைதற்கு இந்நிலையே சிறந்ததாகும். இதைச் *சிவப்பிரகாசம் விளக்குகிறது.

சாஸ்திரவியல் - உண்மைஞானமும் தசகாரியமும் 178
" நாடியசத் திநிபாத நாலு பாத
நண்ணும்வகை யெண்ணரிய ஞான பாதங் கூடுமவர் தமக்குணர்வாய் நின்ற ஞானக் S.
கூத்தணுெரு மூர்த்திகொடு குறுகி மோக நீடியகே வலசகல நிகழா வாறு
நிறுத்திமல மறுக்குமிது நிலையார் சுத்தங் கேடில்புகழ் தருஞ்சரியை கிரியா யோகக்
கேண்மையரே லிவையுணர்த்தக் கிளக்கு நூலே "
பக்குவத்துக்கேற்ப சத்திநிபாதம் பொருந்தும்முறை மந்த -ரம், மந்தம், தீவிரம், தீவிரதரம் என நான்காகும். ஆனல் உயர் நிலையாகிய தீவிரதர பக்குவர்க்கும் பரமசிவன் குரு மூர்த்திாய் எழுந்தருளி வந்து கேவல சகலநிலை ஏற்ப டாதவாறு மலத்தை நீக்கி அருளுவார். இது சுத்தாவத் தையாம். சரியை கிரியை, யோகங்களைச் செய்து புண் னியப் பேறடைந்தோரே இந்நான்கு சத்திநிபாதத்துக்கும் உரியராவர்.
இனி ஆன்ம சுத்தியின் பயன் யாதென அறியவேண் டும். பாசம் நீங்கும். அதுவுமல்லாமல், ஆன்மாவின் வியா பக அறிவு விளங்கித் தோன்றும். கலை முதலிய வித்தியா தத்துவங்களால் பாசஞானம் உண்டாகும். இது ஏகதேச அறிவு என்றுங் கூறப்படும். மும்மலங்களே ஏகதேச அறி வுக்குக் காரணமாகும் மும்மலங்களும் நீங்கப்பெற்றநிலை துரியநிலை அல்லது அருள்நிலை எனப்படும். இது மலம் நீங் கிய பேருறக்க நிலையெனலாம். மும்மலங்கள் நீங்கியவிடத்து மீண்டும் அவை தாக்காவண்ணம் தன் பணி நீத்து இறை பணியில் நிற்கவேண்டும். தான் பணி நீத்தல் என்பது ஆன்மாவின் இச்சாஞானக்கிரியைகள் செயலற்று நடப்பன வெல்லாம் சிவபெருமானது இச்சாஞானக் கிரியைகளின் நிகழ்ச்சிகளென அறிந்து திருவருளில் அடங்கி நிற்றலாம். ஆன்மா தானென்ற வேறுபாடின்றி சிவனேடு ஒற்றுமைப் பட்டு நிற்றல் ஏகனகி நிற்றலாம். தான் பணி நீத்தலால் மாயை கன்மங்கள் தாக்கமாட்டா, ஏகனகி நிற்றலால் யான், எனது என்ற மயக்க உணர்விற்கு ஏதுவாகிய ஆண

Page 107
74 முப்பொருள் உண்மை விளக்கம்
வமல வாசனை நீங்கும். அது நீங்கினலன்றி சிவனது திரு வடியாகிய சிவானந்தத்தை அனுபவிக்கமுடியாது. இது பற்றியே திருவுந்தியார்,
" எட்டுக்கொண் டார்தமைத் தொட்டுக்கொண் டேநின்றர்
விட்டா ருலகமென் றுந்தீபற வீடேவீ டாகுமென் றுந்தீபற '
என்று கூறுகிறது. எட்டு மூர்த்தத்தைக் கொண்ட சிவ னைச் சார்ந்து நின்றவர்கள் தேக முதலிய பிரபஞ்சப் பொருட்களிலே பற்றுவிட்டவர்களாவர். இவ்விதம் பற்று விட்டவர்களே உண்மையாய்ப் பற்றுவிட்டவர்களாம்.
கேவல சகலம் பிறப்பு இறப்புக்கக் காரணமான நிலை களாம். மயக்கமாய் வந்து சேர்வது கேவலம். தானல்லாத தேகத்தைத் தானென்றும், தனதல்லாத போகத்தைத் தன தென்றும் நினைக்கச் செய்வது மயக்கமாகும். விகற்பமாய் வந்து சேர்வது சகலம், தேக போகங்களில் விருப்பும் வெறுப்பும் வரச்செய்வது விகற்பம். விருப்பு வெறுப்புக்க ளாலே இரு வினைகளும் இரு வினைகளாலே பிறப்பும் இறப் பும் விடாது வந்துகொண்டே இருக்கும். ஆகையால் மயக் கத்தையும் விகற்பத்தையும் தருகின்ற கேவலம், சகலம் ஆகிய நிலைகளே பிறப்பு இறப்புக்களுக்குக் காரணமாகும். பக்குவநிலை எய்திய ஆன்மாக்களுக்குப் பரமசிவன் குரு மூர்த்தியாய் மானிட உருவத்தில் எழுந்தருளிவந்து கேவல சகலம் நிகழாதபடி மலத்தை நீக்கி அருளுவார். சிவஞான போதம் எட்டாஞ் சூத்திரம் இதனை விளக்குகிறது.
" ஐம்புல வேட்ரி னயர்ந்தனை வளர்ந்தெனத்
தம் முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையினரன்கழல் செலுமே '
உயிரானது இதுவரையும் ஐம்பொறிகளிலே சிக்குண்டு தனது பெருமையையறியாது மயங்கித் துன்பப்பட்டது. அதனுடைய தன்மை இத்தன்மையது என்று குரு அறிவித் தவுடன் ஐம்பொறிகளைவிட்டு நீங்கி முதல்வனேடு பிரிக்க முடியாத தன்மையில் அம்முதல்வன் திருவடிகளை அணையும்.

சாஸ்திரவியல் - உண்மைஞானமும் தசகாரியமும் irs
உயிரானது அரன் திருவடியோடு பிரிப்பின்றி நிற்பினும் அந்நிலையை ஐம்பொறிகள் மறக்கச் செய்யும். ஆசிரியன் உபதேசத்தால், திருவடியோடு பிரிப்பின்றி நிற்பதை அறி யும் அவ்வாறு அடைதலே திருவடியை அடைதலாம். திருவடி என்பது திருவருளாகிய சத்தியாம். இங்கே தம் முதல் என்பது சிவம் என்பதாம். அம்முதலின் உருவமே சிவரூபம் ஆகையால் சிவகுருவே சிவரூபமாகும். இதுவரை யும் உயிருக்குயிராய் நின்ற அருளை உயிர் காணவில்லை. அவ்வுயிரானது அவ்வருளைக் காணும் பக்குவம் எய்தியவுடன் அருளே குருவாகத் தோன்றும். ஆகையால் தம்முதல் சிவம் எனவும், அருளுரு சிவரூபம் எனவும் அறியலாம். அருளுருவாகிய குரு, இறைவன், நாதன், வேந்தன் என்னும்  ெயர்களாலும் அழைக்கப்படுவார். ‘நாதன் ருள் வாழ்க’ என்று மணிவாசகர் தனக்குத் தோன்றியருளிய குருவை நாதன் என்னும் நாமத்தால் கூறுவதைக் கவனிக்கலாம்.
ஒன்றிலும் பற்றில்லாததாய் விளங்கித் தோன்றுவது பதிஞானத்தின் இயல்பாகும். பிரபஞ்சம் தானுமன்று, தன்னுடையதுமன்று என்று அறியவே சிவஞானம் விளங் கித் தோன்றும். ஆன்மாவோடு என்றும் பிரிப்பின்றி நிற் கும் சிவஞானம் என்றுந் தண்ணிழலாகவே இருக்கும். சிவ ஞானம் தண்ணிழலாய் விளங்கித் தோன்றுதலை அனுபவ அறிவால் அறியலாம். பிரபஞ்சம் நிலையற்றதென்றும் கானல் நீர் போன்றதென்றும் அறிந்தபின்னரும் அதை விட்டு நீங்குவது கஷ்டமென்பதை தாயுமான சுவாமிகள் சிவனிடத்து முறையிடுகின்றர்.
' பொய்யா ருலக நிலையல்ல கானற்புனலெனவே
மெய்யா வறிந்தென்ன வென்னுலிதனை விடப்படுமோ கையான் மவுனந் தெரித்தேகல் லானிழற்கண்ணிருந்த - ஐயாவப் பாவென் னரசே முக்கண்ணுடையாரமுதே " சிவரூபம் ஆன்மாவுக்கு ஞான தரிசனத்தை அளிக்கிறது. அந்த ஞான தரிசனம் பிண்டத்தில் திருவருளாலே நிகழ் கின்றது. அண்டத்தில் அருளால் நிகழ்வது பரை தரிசனம் (பக்குவ ஆன்மாக்களுக்கு அணுக்கிரகஞ் செய்யுஞ் சத்தி)

Page 108
176 முப்பொருள் உண்மை விளக்கம்
ஆகும். அத்தரிசனத்தோடு சிவதரிசனமும் உடனே நிகழும் அப்பரையின் உருவமாக ஆன்மா நின்று சிவத்தோடு கூடு கின்றது. அவ்விதம் சிவத்தோடு கூடுவது சிவயோகமாம். இவ்வுண்மையைப் பற்றித் திருமந்திரம் கூறுவதைக் கவனிக்கலாம்,
* சிவயோக மாவது சித்தசித் தென்று
தவயோகத் துள்புக்குத் தன்னுெளி தானுய் அவயோகஞ் சாராதவன்பதி போக நவயோக நந்தி நமக்களித்தானே ??
சிவனேடு கூடியிருக்கும் நிலையை எய்தினேர் பசு (சிற்றறிவு) பாசத் (அறிவில்லது) தன்மைகள் நீங்சப்பெற்று சிவயோ கத்தே நிலைத்துத் தன்னறிவு சிவனறிவாய்த் திகழ்வர். பிறப்பினுக்குக் காரணமாகிய ஆணவ கன்ம மாயைகள் சாரமாட்டா. அத்தசையோர் சிவமாம் நிறைவினையுடைய ராவர். அவ்விதப் பெருநிலையை நந்தி நமக்குக் கொடுத் தானே யென்று திருமூலநாயனர் கூறுவதைக் கவனிக்கலாம். சிவயோகத்தைப்பற்றி திருக்களிற்றுப்படியார் பின்வருமாறு கூறுகிறது.
" அம்மையிலும் இம்மையிலும் அச்சந் தவிர்த்தடியார்
எண்மையுமாய் எங்கும் இயங்குதலான் - மெய்ம்மைச் சிவயோக மேயோகம் அல்லாத யோகம் அவபோக மென்றே அறி ??
பரமுத்தியிலும்,சீவன் முத்தியிலும் உண்டான அச் களைத் தீர்த்து சிவனடியாருக்கு அடிமையுமாய் எவ்விடத் தும் வியாபித்திருக்கையினலே சிவனுேடு கூடுதலே சிறந்த பொருத்தமாகும். அதையொழிந்த யோகம் எதுவும் பிறப் பைத் தரும் கன்ம யோகமாம். இதுபற்றித் திருவுந்தியார் பின்வருமாறு கூறுகிறது.
' கள்ளரோ டில்ல முடையார் கலந்திடில்
வெள்ள வெளியாமென் றுந்தீபற விடும் எளிதாமென் றுந்தீபற ??

சாஸ்திரவியல் ܚܡܲܩ«ܫ உண்மைஞானமும் தசகாரியமும் 17?
இங்கு கள்ளரென்பது தோன்ற மல் என்றும் துணையாய் நிற்கும் திருவருளைக் குறிக்கிறது. இல்ல முடையாரென்பது உடம்பின் கண் காணப்படும் உயிரைக் குறிக்கிறது. உள் ந்ோக்கி அறியவல்லவர்க்கு உயிருக்குத் தோன்ருது மறைந்து நிற்கும் கள்வனகிய முதல்வனையும் தம்மையும் அறிந்து கொள்ளமுடியும். திருவருளோடு ஆன்மா கூடினுல் அந்த ஆன்மாவினுடைய இதயமானது மலமாயை கன்பங்களி னின்று நீங்கி வெட்டவெளியாயிருக்கும். அப்பால் சிவனைப் பொருந்துகிறது எளிது,
சிவதரிசனமும் சிவயோகமும் நிகழ்கின்ற காலத்திலே ஆன்ம சுத்தியும் உண்டாகும். இது நின்மல துரிய நிலை யாகும். அடுத்த நிலை பேரின்ப நிலையாகும். இதுவே நின் மலதுரியாதீதம் எனப்படும். சிவபோகம் என்பதும் இதுவே. சாயுச்சிய முத்திநிலை என்பதும் இதுவாகும். முத்தி அபர மூத்தி, பரமுத்தி என இருவகைப்படும். கேட்டல், சிந்தித் தல், தெளிதல் ஆகிய நிலையில் நின்று யாக்கை நீங்கப் பெற்றவர் அபரமுத்தி அடைவர். அவைகளுடன் நிட்டை யும் கைவரப் பெற்றவர் இம்மையிலேயே சீவன் முத்தராய் விளங்கி ஈற்றில் பரமுத்தி அடைவர்.
அபரமுத்தித் தானமாவது சுத்தவித்தை, ஈசுரம், சாதக் கியம், சத்தி, சிவம் என்னும் தத்துவங்களாம். கேட்டல் ஞானமுடையோர், சுத்தவித்தையை அடைவர். இந்தித் தல் என்னும் ஞானமுடையோர் ஈசுர தத்துவத்தை அடை வர். தெளிதல் என்னும் ஞானமுடையோர் சாதாக்கிய தத் துவத்தை அடைவர். ஞானத்தினல் ஞானமாகிய நிட்டை பூரணமடையாது இடையே தேகம் நீங்கப்பெற்றேர் சத்தி, சிவதத்துவங்களை அடைவர். ஞானத்தினுல் ஞானமாகிய திட்டை ಟ್ಗ முற்ருேர் சிவானுபூதி பெற்ற செல்வராழ்,
ᏬᎵ Ꮔ

Page 109
178 முப்பொருள் உண்மை விளக்கம்
அந்தப் பரமுத்திக்கு உரியரவர், ஆன்மலாபம், நீட்டை சிவப்பேறு, சிவானுபூதி என்பன ஒரு பொருட் சொற்க ளாகும். சிவானுபூதி பெற்ற செல்வருடைய இன்பமே பேரின்பம் என்பதை ஞானசம்பந்தர் கூறுவதைக் கவனிக் dSyntb. • • Ww
' செல்வ நெடுமாடஞ் சென்று சேணுேங்கி செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே "
சிவானந்த அமிர்தத்தை பருகிவரும் சீவன் முத்தர்கள் சிவ னடியார்களையும் சிவலிங்கம் முதலிய திருமேனிகளையும் சிவனென்று வணங்கி ஆனந்தக் கண்ணிர் சொரிந்து அச் சிவமொன்றையே தரிசித்திருப்பர். சிவஞானபோதம் பன் னிரண்டாஞ் சூத்திரம் இதனை விளக்குகிறது.
*" செம்மலர் நோன்ருள் சேர லொட்டா அம்மலங் கழிஇ அன்பரொடு மரீஇ மாலற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே "
விபரீத உணர்வை உண்டாக்கும் மும்மலங்களையும் நீக்கி விடுதலே முதலிற் செய்யவேண்டும். பின்னர் மல நீக்கத்தை நிலைபெறச் செய்வதற்கு மலம் நீங்கப்பெற்ற முத்தர்ச ளோடு இணங்க வேண்டும். அவர்களுடன் ஏற்பட்ட இனக் கத்தை நிலைபெறச் செய்வதற்கு சிவபெருமான் வெளிப் பட்டு விளங்கும் திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவ னெனக் கண்டு வழிபடவேண்டும்.
ஆன்மா எல்லாவற்றையும் மறந்து சிவனேடு அத்து விதமாய்க் கலந்து நிற்கும் நிலை இரவு பகலில்லா இன்ப வெளியாகும். இதைத் திருவுந்தியார் விளக்குகிறது.

சாஸ்திரவியல் - உண்மைஞானமும் தசகாரியமும் 179
** இரவு பகலில்லா இன்ப வெளியூடே
விரவி விரவிநின் றுந்தீபற விரைய விரையதின் றுந்தீபற"
இரவாகிய ஆணவமும் பகலாகிய மாயையும் இல்லாத இன்ப வெளியாகிய திருவருளுடனே சீக்கிரத்திலே கூடி நிற்பதே துன்பம் நீங்குவதற்குத் துணையாகும்.
" வான்கெட்டு மாருதமாய்ந்தழல் நீர் மண்கெடினும் தான்கெட்ட லின்றிச் சலிப்பறியாத தன்மையனுக் கூன்கெட் டுயிர்கெட்டுணர்வுகெட்டெ னுள்ளமும்போய் நான்கெட்ட வாயாடித் தெள்ளேணங் கொட்டாமோ "
என்று மணிவாசகர் கூறுவதிலிருந்து இறைவனேடு நிற்கும் நிலை இன்னதெனப் புலப்படும்.
சிவபோகம் இத்தன்மைத்து என்பதை "உண்மைநெறி" விளக்குகிறது.
' பாதகங்கள் செய்திடினும் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்றி வரினும்
சாதிநெறி தப்பிடினும் தவறுகள்வந் திடினும்
தனக்கெனஓர் செயலற்றுத் தான்.அதுவாய் நிற்கில்
நாதன்இவன் உடல்உயிராய் உண்டுறங்கி நடந்து நாஞபோ கங்களையுந் தானுகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானுக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே "
தசகாரியம் உண்மை ஞானத்தின் நிகழ்ச்சியாகும். இதைப் பட்டினத்தடிகள் பின்வருமாறு விளக்குகின்றர்.

Page 110
10 முப்பொருள் உண்மை விளக்கம்
"மாயநட் போரையும் மாயா மலம்எனும் மாதரையும் வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடியின் தாயைமறந் தேயும தேநிட்டை யென்ற னெழிற்கச்சி யேகம்பனே "
மும்மலங்களினின்று நீங்கி அருள் வழியே சென்று திரு வருளாகிய தாயுடன் கூடிப்போய் அதன் உதவியுடன் தந்தையாகிய சிவபெருமானை அடைந்து அவ்வருளினின்று நீங்கி நிட்டை கூடிப் பேரின்பம் துய்த்துப் பரமசிவனேடு உறுதியாய் நிற்பதாம். இதுவே இதன் பொருளாகும். மானிடப் பிறவி எடுத்து உண்மை ஞானம் பெற்றேர் "அவனே தானேயாகி" என்னும் அத்துவிதப் பெருநிலையை அடைவர் என்பது உறுதியாகும். அந்தப் பெருநிலையை அடைவதற்கு ஆன்மா பத்து நிலைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்பதை நாம் அறிகின்ருேம். அந்த பத்து நிலை களே தசகாரியம் எனப்படும்.

17. அத்துவாக்கள்
மாயையின் காரியங்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து அவை சொல்வடிவம், பொருள்வடிவம் என இருவகை யாய்க் காணப்படுகின்றன. அவ் இருவகைகளும் வன்னம், பதம், மந்திரம், புவனம், தத்துவம், கலை என்னும் ஆறு பகுதிகளாய் விளங்கும். வன்னம், பதம், மந்திரம், ஆகிய மூன்றும் சொற்பிரபஞ்சம் அல்லது சத்தப்பிரபஞ்சம் எனப் படும். புவனம், தத்துவம், கஃல என்பன பொருட்பிரபஞ்சம் அல்லது அர்த்தப்பிரபஞ்சம் எனப்படும்.
இந்த ஆறினையும் நன்குணர்ந்து ஒவ்வொன்முகக் கடந்து சென்ருல் இறைவனை அடையலாம். இவைகள் ஆன்மாக் களுக்குக் கன்மம் ஏறுவதற்கும். கன்மம் நசிக்கப்பட்டு திருவடி அடைதற்கும் வழியாயிருப்பதால் அத்துவா (வழி) எனக் கூறப்படுகிறது.
எழுத்துக்களை உறுப்பாகக் கொண்ட சொற்களும் சொற்தொடர்களுமே சொற்பிரபஞ்சம் (சோல் உலகம்) ஆகும். எழுத்துக்கள் வன்னம் எனப்படும். சொற்கள் பதம் எனப்படும். சொற்தொடர்களிற் சிறப்புடையன மந் திரம் எனப்படும். மந்திரம் என்பது யாது என்பதை அறி தல்வேண்டும். உலகத்திலுள்ள பொருள்கள் பலவகையான அலைவுகளை இடையருது எழுப்புகின்றன. பொருள்கள் எங் களுக்குப் புலப்படும் உருநிலை புலப்படாத அருநிலையை உடையன. ஒவ்வொரு பொருளும் புலப்படாத அருநிலையி னின்று புலப்படும் உருநிலையை அடையும்போது தணியான அசைவு வேறுபாட்டை உடையது. ஒரு பொருளின் அசை வால் உண்டாகும் காற்று அலையை, நாம் ஒலியாக உணர் கின்ருேம், சிலவற்றில் அசைவு மட்டும் புலப்படுகின்றது. சிலவற்றில் ஒலி புலனுகிறது. யோகிகள் நுண்ணிய இயக் கங்களையும் உணர்ந்து கொள்ளும் ஆற்றல் உடையவர்கள். நாற்றத்தின் செறிவால் மண் தோன்றும்போதும் சுவை யில் செறிவால் நீர் தோன்றும்போதும், ஊற்றின் செறி

Page 111
J&』 (yal'JG)Lurrqb6h &.ldña7aKDD «davrdasib
வால் காற்றுத் தோன்றும் போதும், ஒசையின் செறிவால் ஆகாயந் தோன்றும் போதும், ஒளியின் செறிவால் அனல் தோன்றும் போதும் உண்டாகும் அலைவு இயக்கங்களின் மூல ஒலிகளை அவர்கள் உணர்கின்ருர்கள். அந்த மூல ஒலிகளே பீஜ அட்சரம் எனப்படும். இவ்விதம் எல்லாப் பொருள்களுக்கும் மூல ஒலிகள் உண்டு. அவையே அவற்றிற்குரிய மந்திரங்க ளாகும். எழுத்து, பதம் மந்திரம் ஆகிய மூன்றும் சொற் பிரபஞ்சம் எனப்படும். வடமொழி, சைவ மரபுகளின்படி வன்னம் 51 எனவும், பதம் 81 எனவும், மந்திரம் 11 என வும் கூறப்படுகிறது. சொற்பிரபஞ்சம் அறிவுக்குக் காரண மாய் இருத்தலின் அது சுத்தமாயையின் காரியமாகும். சுத்தமாயையின் காரியம் சொற்பிரபஞ்சம் பொருட்பிர பஞ்சம் என இருவகைப்படும். ஆனல் அசுத்தமாயை பிர கிருதிமாயையின் காரியம் பொருட்பிரபஞ்சமேயாம்;
சொற்பிரபஞ்சம் வாக்கு எனப்படும். வாக்குகள் குக் குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என நால்வகை உண்டு பரமசிவனுடைய சத்தியின் தொழிற்பாட்டால் சுத்த மாயையில் (குடிலை) நாததத்துவம் தோன்றும். நாதம் சூக்குமை வாக்காகும். இது மூலாதாரத்தில் விளங்கும் விந்துவிலிருந்து ஞானத்திற்கேதுவாய் ஆன்மா அறியும் அறிவுக்குக் காரணமாய்த் தோன்றும். இந்தச் சூக்குமை வாக்கு மூலாதாரத்திற் தோன்றி உந்தித் தானத்தை அடைந்து அதன்பின் இதயத்தானத்திற்குச் செல்லும், இங்கு எழுத்துக்கள் பிரிந்து தோன்ருது மிகச் குக்கும மாய் இருக்கும். இது பைசந்தி எனப்படும். இது மயில் முட்டையின் நீருக்கு உவமையாய்க் கூறப்படுகின்றது. மயி லினிடத்து உள்ள பல நிறங்களும் முட்டையின் நீரிலிருந் தும், அப்பொழுது அவை விளக்கமுரு. அதுபோன்று பொருளுணர்வு எழுத்துக்களின் வடிவில் நன்குவிளங்கித் தோன்ருது. பின்னர் சூக்கும ரூபமாய் அக்கரங் கள் பிரிந்து தோன்றிச் சொல்பவன் தன்னுள்ளே உணரும் உணர்வுக்கு ஏதுவாய் மெல்லோசையாய்க் கண்டத்தில் விளங்குவது மத்திமை வாக்காகும். பின்னர் உதான வாயு வினுல் உந்தப்பட்டு மத்திமைத் தானத்தில் குக்கும ரூபா

சாஸ்திரவியல் அத்துவாக்கள் 183
மாய்ப் பிரிந்து தோன்றிய அக்கரங்கள் பிரான வாயு வினல் உந்தப்பட்டு எழுந்து தன் செவிக்குக் கேட்கத்தக்க தாக நினைந்தபொருள் சொல்வடிவாய் இருப்பது சூக்கும வைகரி வாக்காகும். பிறர் செவிக்குக் கேட்கத்தக்கதாகச் சொல்லுதல் தூலவைகரியாகும். இது பல், இதழ், நா ஆகிய உறுப்புக்கள்)ற்பட்டுச் சிதறி விகாரப்படுதலால் வைகரி எனப்பட்டது.
சொற்பிரபஞ்சம் முழுவதையும் பிரணவத்துள் (ஒம் என்பதனுள்) அடக்கிக் கூறுதல் வழக்கம். பிரணவம் சமட் டிப் பிரணவம், வியட்டிப் பிரணவம் என இருவகையாய்க் கூறப்படும். ஓம் எனக் கூறப்படுவது சமட்டிப்பிரணவ மாகும். அது அகாரம், உகாரம், மகாரம்: விந்து, நாதம் எனக் கூறப்படும்போது அது வியட்டிப் பிரணவம் எனப் படும். இவ் ஐந்து கூறுகளும் பிரணவ கலைகள் எனப்படும். இந்தப் பிரணவக் கூறுகள் ஐந்தும் அட்சரங்களாகும். அவ் அட்சரங்களாலேயே உள்ளத்தில் உணர்வுகள் தோன்றுசின்றன இவ் அக்கரங்கள் எவ்வாறு மனம், புத்தி, சித்தம், அகங் காரம் என்னும் அந்தக்கரணங்களை இயக்குகின்றன என் பதை அறியவேண்டும். தூலவைகரி வாயைத் திறத்தலால் அகரமாகித் தோன்றும். பிறர் அறியத் தெரிவிப்பேன் என்ற எண்ணம் அகங்காரம் ஆகின்றது. ஆகையால் அகரம் அகங் காரத்தை இயக்குகிறது. சூக்குமைவைகரி கண்டத்தானத் தில் அடங்கி வாயைச் சிறிது அசைத்தல் உகரமாகி நிச்ச யித்தலால் புத்தியாகிறது. உகரம் புத்தியைச் செலுத்து கிறது. மகாரம் மனமாகிறது மனமாகிய மகாரம் மனத்தை இயக்குகிறது. பைசந்தி உந்தியில் ஒரு குறி வடிவாய் இருத்தலால் குறி விந்துவாகி நிருவிகற்பமாய்ச் சித்தமா கிறது. ஆகையால் விந்து சித்தத்தைச் செலுத்துகிறது: சூக்குமை நாபியின் கீழ் ஒலி வடிவாய் இருத்தலால் ஒலி நாதமாகி உயிர்த்தலாகிய விருத்தி புருடனகிறது. நாதம் புருடனைச் செலுத்துகிறது. ஆகையால் சூக்குமை முதலிய ஒலி அகர முதலிய அக்கரங்களின் வடிவாய் அந்தக்கரணங் களைத் தொழிற்படுத்தும். இவ்வாக்குகளின் வழியே கன்மத் துக்டோன எண்ணங்கள் அந்தக்கரணங்களிற் தோன்றி வினை

Page 112
18ፈ முப்பொருள் உண்மை விளக்கம்
களே நுகர்தலும், ஈட்டுதலும் உண்டாம். பின்னர் அவ்வினை களுக்கேற்றவாறு நிவிர்த்திகலை பிரதிட்டா கலைகளில் உள்ள புவனங்களில் மாறிமாறிப் பிறந்து இறந்து வரும் நிலை உண்டாகும்.
இனி நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை , சாந்திகலை, சாந்தியதீதகலை என்னும் பஞ்சகலைகளைப்பற்றி அறிதல்வேண்டும் இறைவனுடைய திருவருள் நேரே ப்திந்து தொழிற்படுவதற்கு நிலைக்களமாக உள்ள பொருள் சுத்த மாயையாகும். சுத்தமாயை சாந்தியதீத கலை, சாந்திகலை, வித்தியாகலை, பிரதிட்டாகலை நிவிர்த்திகலை என ஐந்து பெரும் பிரிவாக நின்று எல்லா எழுத்துக்களையும், பதங் களையும், மந்திரங்களையும், தத்துவங்களையும் புவனங்களை யும் உள்ளடக்கி நிற்கும். இவ்வைந்து கலைகளும் நிலைக்கள மாக நின்று அவற்றின் தூலமூபமாகத் தோன்றுவன, ஆகா யம் முதலிய ஐம்பூதங்களுமாம். நிவிர்த்திகலைக்குரியது மண் ஆகும். அதுபோன்று மற்றவையாகும் ஐம்பூதங்களைக் கலைகளும், கலைகளைத் திருவருளும், செலுத்தும்.
ஆன்ம தத்துவம் இருபத்துநான்கில் பிருதிவி தத்துவம் ஒன்று மட்டும் நிவிர்த்திகலையில் அடங்கி நிற்கும். மற்றைய இருபத்து மூன்றும் பிரதிட்டாகலையில் அடங்கி நிற்கும். வித்தியா தத்துவம் ஏழும் வித்தியாகலையில் அடங்கி நிற் கும். சிவதத்துவம் ஐந்தில், சுத்தவித்தை, ஈசுரம், சாதாக் இயம் ஆகிய மூன்றும் சாந்திகலையில் அடங்கி நிற்கும். சத்தி சிவம் ஆகிய இரண்டு தத்துவங்களும் சாந்தியதித கலையில் அடங்கிநிற்கும். தத்துவங்களும் அவற்றின் காரியங் களாகிய தனு கரண புவன போகங்கள் பொருட்பிரபஞ்சமாகும்.
சூக்குமை, பைசந்தி, மத்திமை சூக்குமைவைகரி தூல வைகரி ஆகிய ஐந்து வாக்குகளும், நிவிர்த்திகலை, பிரதிட்டா க3ல, வித்தியாகலை சாந்திகலை சாந்தியதீதகலை ஆகிய பஞ்சகலைகளைப் பற்றுக்கோடாகச் சார்ந்து நிற்கும். அதை நாம் அறியவேண்டும. நிவிர்த்திகலையானது வாய் என்னுந் தானத்திலிருந்து பிறர் தெரிந்துகொள்ள முடியாத சொல்

திரவியல் -ண அத்துவாக்கள் i85
யின் தடையை நிவிர்த்தித்துப் பிறருக்குத் தெரியும்படி சொல்ல உதவுகிறது. பிரதிட்டாகலை கண்டத்தானத்தி லிருந்து வரும் சொல்லைத் தனக்குக் கேட்கும்படி நிலைக்கச்
செய்யும். வித்தியாகலை இருதயத்திலிருந்து சொல்லவேண் டியதற்குரிய எழுத்துக்களைப் பிரித்து அறிவிக்கும், சாந்தி கலே உந்தித்தானத்திலிருந்து எழுத்துக்கரே அடக்கித் தோற் றுவிக்கும் சாந்தியதீதகலை நாபித்தானத்தின் கீழிருந்து எழுத்துக்களின் தோற்றத்திற்கு ஒலியைத் தோற்றுவிக்கும்.'
இதுவரையும் ஆன்மா தூல உடம்பை எடுத்த முதம் எவ்வாறு நாதம் உண்டாகி சூக்குமை, பைசந்தி, மத்திமை வைகரி ஆகிய வாக்குகள் தோன்றின என்றும், எவ்வாறு மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என்னும் அந்தக்கர ணங்கள் தொழிற்பட ஆரம்பித்தன என்றும் அறிந்தோம் ஆன்மாவுக்கு அறிவு உண்டாதற்கு இதுவே முதற்படியாகும். இந்நிலையில் ஞானசத்தி சிவதத்துவத்தை எழுப்ப சிவதத் துவம் மாயையை எழுப்ப அது குண ரூபமாய்ச் சாத் வீகம், இராசதம் தாமதம் ஆகிய மூன்று குணங்களாய் நின்று மயக்க அறிவை உண்டாக்கி பொய்யை மெய்யென்று மயங்கச் செய்யும்.
இனி சூக்குமை வாக்கின் சிறம்பியல்பைப் பற்றி அறி தல்வேண்டும். குக்குமை வாக்கு சுத்த மாயா ரூபமாய் அழிவின்றி நிலைபெற்றிருக்கும். தவ விசேடத்தால் அதன்ை உள்ளபடி காணப்பெறுவார்க்கு நீங்காத பேரறிவும் ஆணத் தமும் சுதந்திரமும் நித்தியதத்துவமும் உடையதாய் சுத்த மாயா புவனத்தின் அபரமுத்திப் பெரும்போகம் உண்டாகும். இதைப்பற்றிச் சிவஞானசித்தியார்,
" சூக்கும வாக்க துள்ளோர் சோதியாய் அழிவ தின்றி
ஆக்கிடும் அதிகாரத்திற் கழிவினை தன்னைக் கண்டால் நீக்கமில் அறிவானந்த முதன்மைநித்தியமு டைத்தாய்ப் போக்கொடு ரவி?ளப்பும் விகாரமும் புருடன் இன்றம்"
P. 4

Page 113
முப்பொருள் உண்மை விளக்கம்
என்று கூறுவதைக் கவனிக்கலாம். மேலும் இக்கருத்தை விளக்கி
" ஓவிட விந்து ஞானம் உதிப்பதோர் ஞானம் உண்டெல் சேவுயர் கொடியிருன்தன் சேவடி சேர லாமே "
எனச் சித்தியார் கூறுகிறது. சவிகற்ப ஞானத்திற்கு ஏது வாகிய அவ்வாக்குகள் நீங்க அவைக்கு மேலாகியதோர் பேரறிவு ஒருவனுக்கு விளங்குமாயின் அவன் அப்பொழுது இடபக் கொடியையுடைய சிவபெருமான் திருவடியாகிய பரமுத்தியைச் சேருவான் என்பதே இதன் பொருளாகும்,
சுத்தமாயையில் ஞானசத்தியைச் சிவபெருமான் பொருந்தி நிற்பதால் அது சிவதத்துவம் என்றும் இலயித்த (சேர்ந்தொன்றித்தல்) மாத்திரையாய் நிற்றவின் இலயத் துவம் என்றும் வடிவமின்மையின் திட்கள்தத்துவம் என் றும் நால்வகை வாக்குகளிற் குக்குமை வாக்காகிய நாதத் திற்குப் பற்றுக்கோடாகிலின் நாத தத்துவம் என்றும் பெயர் பெற்று நிற்கும். முதல்வனும் இவ்வகைப் பெயரும் பெற்று நிற்பன். குக்குவிம முதலிய நான்கு வாக்குகளும் நிவிர்த்திகலே, பிரதிட்டாகலே, வித்தியாகஃ), சாத்திகலே, சாந்தியதீதகல் என்னும் ஐந்து கஃகளும், சிவம் (நாதம்) சத்தி (விந்து) சாதாக்கியம், ஈசுரம், சுத்தவித்தை என்னும் சிவதத்துவம் ஐந்தும், சுத்த காலம் முதல் சுத்த நிலம் முடிபாக அபர முத்தற்குரிய தத்துவம் முப்பத்தொன் றும் சுத்தமாயையிற் தோன்றும்.
" வித்தைகள் விந்தை HFJ சதாசிவ ரென்றி பர்க்கு
ஈவத்துறும் பதங்கள் வன்னம் புவனங்கள் மந்திரங்கள் தத்துவஞ் சரீரம் போகம் கரஈTங்கள் தாமெலாமும் உய்த்திடும் ரிைந்தவந்தான் உபாதானமாகிநின்றே "
என்று சிவஞான சித்தியார் கூறுவதிலிருந்து மந்திரேசுரர்
மந்திர மயேசுரர், அணு சதாசிவர் முதலிய அபரமுத்தர்க்கு வேண்டிய பதங்களும் அக்கரங்களும் புவனங்களும் மந்திரன்

சாஸ்திரவியல் - தத்துள்ாக்கள் IS 7
ாளும் தத்துவங்களும் சரீரங்களும் போகங்களும் கரணங் ாருமாகிய சுத்த அத்துவாக்கள் எவற்றினுக்கும் சுத்த மாயை முதற்காரனமாய் நின்று விளங்கும்
இவ்வாறு சுத்த மாயையில் சிவன் அருளால் வாக்கு கரும் கிலேயாதி கத்துவங்களும் ஆணவ மல பம்றைப்.ை ரீதம் பொருட்டு ஆன்மாவை வந்து சேரும். ஆன்மாவின் அறிவு இவ்வாக்குகளோடும் தத்துவங்களோடும் கூடி விளக்கமுறும். இவ்விதம் வாக்கு, கபே முதலியவற்ருல் அறிவைத் தருகின்ற திருவருளே ஆன்மாக்கள் அறிந்து அதனைப் பொருந்தாதபடி ஆணவமலம் மறைத்து நிற்கும். எனினும் குக்குமை வாக்கு, ஞானத்துக்கு ஏதுவாகி என் |றும் பிரகாசமாய் இருக்கும் இனி, சுத்த தத்துவங்கள் ஐந்தனுள் சத்தி தத்துவம் கலேயை எழுப்ப சுவேயானது ஆணவ மலத்தைத் சிறிது நீக்கி ஆன்மாவின் கிரியா சத்தியை விளக்கி வினேக்கீடாக வரும் விடய போகங்கஃனப் பொருந்தச் செய்யும் கலே, காலம், நியதி, வித்தை, அரா கம் ஆகிய ஐந்து தத்துவங்களினுல் ஆன்மாவானது பந்திக் கப்பட்டு போகங்களே அனுபவிக்கும் போது அது புருடன் எனப்படும்,
சிவன் அத்துவா மூர்த்தி என்றுங் கூறப்படுகிறர். இக் கருத்தைச் சிவஞானசித்தியார்,
" அந்துவா மூர்த்தி யாக அறைகுவதென்ன என்னின்
நித்தணுய் நிறைந்த வற்றின் நீங்கிடா நிலமை யாலுஞ் சித்துடன் அவித்திற் கெல்லாஞ் சேட்டிதன் ஆத வானும் வைத்ததாம் அத்து வாவும் வடிவென மறைகளெல்லாம் '
என்று விளக்கிக் கூறுகிறது. சிவனுக்குக் கருணே வடிவே யன்றி மாயவடிவு இல்லே. ஆஞல் அத்துவாக்கள் முழு தினுங் கலந்து எல்லாமாக நிற்றலினுல் சடசித்துக்களே எல்லாஞ் செலுத்தி உடனுமாய் நிற்றலாலும் முதல்வன் அத்துவா மூர்த்தியென்றும் அழைக்கப்படுவர்; அத்துவாக் களுள் மந்திரம் சிவனுக்குத் திருமேனியாகும். இக்கருத்

Page 114
முப்பொருள் உண்மை விளக்கம்
தையே சித்தியார் மத்திரம் அத்துவாவின் மிகுத்தொரு வடிவமாக" என்றுங் கூறுகிறது. அதஞலேயே "சொற் பிரகாசத் தனியை" என்று தாயுமானவர் கூறுகிருர்,
இரவி வன்னம் (எழுத்து) நான்கு வாக்குகளாலும் உண்டாகும். சுடிகார முதலாகிய வன்னம் ஐம்பத்தொன் றும், சத்தியோ சாதம் முதலிய பதினுெரு மத்திரங்களும் இருநூற்றிருபத்துநான்கு புவனங்களும் பிருதிவி தத்துவம் முதலிய தத்துவம் முப்பத்தாறும், நிவிர்த்திகவேகள் முத லிய ஐந்து கஃசரும் ஆறு அத்துவாக்களும் ஒன்ருே டொன்று எவ்வாறு தொடர்புடையன என்பதைப்பற்றித் திருபந்திரம் கூறுவதைக் கவனிப்போம்
" தத்துவம் ஆறுறு தன்மனு வேர்கோடி
மெய்தகு வன்னம் ஐம் பானுென்று மேதினி
த்திரு நூற்றிரு பான்நான்கெண் பானுென்று
வைத்த பதங்கம் யோரைந்தும் வந்தவே
ஒ
(மறு - மந்திரம், ஏழுகோடி - எழுவகை முடிவு)
மந்திரங்கள் நம, சுவாகிா, சுவதா படு, வவுசட, வசட் முதலிய முடிவையுடையன்.
சொற்பிரபஞ்சம், பொருட்பிரபஞ்சம் என்னும் ஆறு அத்துவாக்களிடமாக மனம், விாக்கு, காயம் என்னும் மூன்றிருதும் இப்பிறப்பிற் செய்யப்படும் நல்விஃன தீவிஃன என்னும் இருவிண்கள் ஆகாமியகன்மம் எனப்படும். இது துரலகன்மம் எனப் பெயர்பெறும். அவ்வாறு முற்பிறவி களிற் செய்யப்பட்ட இருவினேகள் பக்குவம் அடையும் வரை புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயையிற் கட் டுப்பட்டு இருக்கும்போது அது சஞ்சித கன்மமாகும். அப் பொழுது அது சூக்கும கன்மம் எனப்படும். ஆகையால் கன்மங்கள் ஏறுவதற்கு அத்துவாக்கள், வழியாக இருக் கின்றன. என்பதைக் கவனிக்கலாம். நல்வினே தீவினேயா கிய இருவினைகளுள் நல்வினேயானது ஐந்து வகைப்படும். அவை உலகவினே, வைதிகவிண், அத்தியான்மிகவின், அதி

சாஸ்திரவியல் - அத்துவாக்கிள் IES
மார்க்கவின, மாந்திரவினே என்பனவாம். இவற்றுள் உலகவினேயாவது தண்ணீர்ப்பந்தல் அமைத்தல், கிணறு வெட்டல் முதலியனவாம். வைதிகவினேயாவது வேள்வி முதலியன செய்தலாம். அத்தியான்மிகவினையாவது சிவ பூசை முதலியன செய்தலாம். அதிமார்க்கவினையாவது யோகஞ் செய்தல் என்பதாம். மாந்திரவினேயாவது மந்தி ரஞ் செபித்தல், ஞானநூல் ஓதல் என்பனவாம். இவை களுள் உலகவிஜன நிவிர்த்திகலேயிலும், வைதிகவின் பிர திட்டா கலேயிலும், அத்தியான்மிகவினே 'வித்தியாகலேயி லும், அதிமார்க்கவினே சாந்திகலேயிலும், மாந்திரவினே சாந்தியதிதகலேயிலும் அடங்கும். உலகவினேயும் வைதிக விண்யும் அசுத்தபோகங்கஃனத் தரும். அத்தியான்மிகவினை பும் அதிபார்க்கவினையும் சுத் தமும் அசுத்தமும் கலந்த போகங்களேத் தரும். மாந்திரவினே சுத்தபோகங்களைத் தரும். இத்தல்வினேக்கு மாறுபட்டனவ தீவினயின் ஐவ கைப் பேதமாகும்
வன்னம், பதம், மந்திரம் ஆகிய மூன்றும் புவனங் களிற் தோன்றிய சரீரங்களேப் பற்றி நிற்கும். புவனங்கள் தத்துவங்களாலுண்டாகும் தத்துவங்கள் கலேகளிலிருக்கும். கலேகன் எல்லாவற்றையும் வியாபித்து நிற்கும்
இனி, ஆன்மாக்களின் கன்மம் நசுக்கப்பட்டுத் திருவடி அடைதற்கு அத்துவாக்கள் எவ்வாறு வழியாய் இருக்கின் றன என்பதை ஆராய்வோம். பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவன், குருமூலம் அத்துவசுத்தி செய்து திருவடியை நல்கு வர். அத்துவசுத்தியாவது ஆறு அத்துவாக்களிலும் சஞ்சித மாயிருந்த கன்மங்களே நசிப்பித்தலாம். இதுபற்றியே "இருபா இருபஃது"
" அத்துவா மெத்தி படங்கா வினேகளுஞ்
சுத்திசெய்தனேயே ஒத்தகன் மத்திடை
என்று கூறுகிறது. கன்மம் நசுக்கப்படவே மாயையும் நீங் கும். ஆணவமசித் தடையும் ஒழியும். அறுவகை அத்து வாக்களுள் மந்திரம் பதத்திலும், பதம் வன்னத்திலும்,

Page 115
90 முப்பொருள் உண்மை விளக்கம்
வன்னம் புவனத்திலும், புவனம் தத்துவத்திலும், தத்துவம் கலேயிலும் அடங்க ஒடுக்கி, கலையைத் திரோதான சத்தி யிலும், திரோதானசத்தியை சிவத்திலும் ஒடுக்குவதால் தக்துவகத்தி ஏற்படும். ஆசாரியர் அத்துவ கத்தி செய்து சீடனது மலத்தை நீக்கி ஞானத்தைக் கொடுத்துப் பிற வியை ஒழிப்பர். இதுவே நிருவான தீக்கை என்று சொல் லப்படும். அறுவகை அத்துவாக்களையுஞ் சோதிக்கும் முக மாகப் பிறவிக்கு ஏதுவாகிய மலத்தைக் கெடுத்துச் சிவம் பிரகாசித்தற்கு ஏதுவாகிய ஞானத்தை அரன் குருமூர்த்தி மூலம் கொடுப்பர். இதுபற்றிச் சிவஞானசித்தியார் கூறு வதைக் கவனிப்போம்
* அழிவிலாக் கிரியையிஞன் ஆதல்சத்தி மத்தான்
ஆதல்அத்து வாசுத்தி பண்ணிமலம் அகற்றி ஒழிவிலாச் சிவப்பிரகா சித்தற்கு ஞானம்
உதிப்பித்துற் பவந்துடைப்பன் அரன்ஒரு மூவர்க்கும் வழுவிலா வழியாரும் மந்திரங்கள் பதங்கள்
வன்னங்கள் புவனங்கள் தத்துவங்கள் கலைகள் கழிவிலா துரைத்தமுறை யொன்றின்ஒன்று வியாத்தி
கருதுகல சத்தியின்கண் சத்திசிவன் கண்ணும் "
அவ்விதம் ஆசிரியர் தீக்கை செய்யும்பொழுது நிவிர்த்தி முதலிய கலைகள் ஐந்தினையும் சீடனது சரீரத்திலே ஐவ கைப்படுத்திக் கலாசோதனை செய்வர் ஆன்மாக்களேப் பிர பஞ்சப் பற்றுக்களினின்று நிவிர்த்தி செய்யும் சிவசத்தி நிவிர்த்தி எனப் பெயர்பெறும். அச்சத்திக்கிடமாகிய சுத்த மாயையின் விருத்தியும் நிவிர்த்தியெனப் பெயர்பெறும். பின்வருவன நிவிர்த்திகலையில் அடங்கிய தத்துவங்களாகும்.
1. தத்துவம் - பிருதிவி 2. புவனங்கள் - 108 3. வன்னம் - கடிகாரம் 4. பதங்க்ள் - ஓங்கார முதல் பவபவபதம் வரை

சாஸ்திரவியல் apaix அத்துவாக்கள் 19
5. மந்திரங்கள் - சத்தியோசாதம் இருதயம் 2 6. தெய்வம் - gt DnT பந்தத்தினின்றும் நிவிர்த்தி பெற்ற ஆன்மாக்கள் வாசனை பற்றி மீளப் பிரபஞ்சத்தை நோக்காதவண்ணம் பிரதிட்டை (நிலைபெறுதல்) செய்தலாற். பிரதிட்டாகலை எனப்படும். பிரதிட்டாகலையில் அடங்கிய தத்துவங்கள் பின்வருவன வாகும்.
1. தத்துவங்கள் - அப்புதத்துவம் முதல்பிரகிருதி தத் துவம் வரையிலுள்ள ஆன்மதத்து வங்கள் 23 2. புவனங்கள் - அமரேசபுவனம் முதல் சீகண்டி
புவனம் வரையில் 56 3. வன்னங்கள் - ஹகார முதல் டகாரம் வரை
uጛé) 88 4. பதங்கள் - சர்வ சர்வ என்னும் பதமுதல் வ்யாபின் என்னும் பதம் வரை ulio 21 5. மந்திரங்கள் - வாமதேவ மந்திரம், சிரோ மந்
திரம் 2 6. தெய்வம் - விஷ்ணு வித்தியாகலை சத்தி வடிவாகிய பஞ்சகலைகளில் ஒன்று. அது ஆன்மாக்களுக்குச் சுவானுபூதி ஞானத்தைப் பயப் பிப்பது. இதிலடங்கிய தத்துவங்கள்
1. தத்துவங்கள் - புருட தத்துவம் முதல் மாயா தத்துவம் வரையில் வித்தியாதத் துவங்கள் - 7 2. புவனங்கள் - 27 3. வன்னங்கள் - ஞகார முதல் வகாரம் வரையில் 7 4. பதங்கள் - வியோமின் பதம் முதல் ஓங்காரம்
ベベ வரையில் 7 5. மந்திரங்கள் என அகோரம் சிகை 2 8. தெய்வம் - உருத்திரன்

Page 116
92 முப்பொருள் உண்மை விளக்கம்
சாந்திகலை சத்தி வடிவாகிய பஞ்சகலைகளில் ஒன்று. அது சுவானுபூதி ஞானம் பெற்ற, ஆன்மாக்களுக்கு வெறுப்பு, சங்கற்பம், விகற்பம் முதலிய எல்லாத் துன்பங் களையுஞ் சாந்தமாகச் செய்வது. இதிலடங்கிய தத்துவங்கள் 1. தத்துவங்கள் என சுத்தவித்தை, ஈசுரம், சாதாக்
5)шић 3 2. புவனங்கள் - வாம புவனம் முதல் சதாசிவ புவ
னம் வரையில் 18 3. வன்னங்கள் - க்ககாரம், க்ககாரம், ககாரம் 3 4. பதங்கள் - தியா நாகார பதம் முதல் வியோ
மவியாபிதம் வரையில் 11 5. மந்திரங்கள் - தற்புருடம், கவசம் 2 8. தெய்வம் - மகேஸ்வரன்
சாந்தியதீதகலை சத்தி வடிவாகியபஞ்சகலைகளில் ஒன்று. அது விருப்பு, வெறுப்பு, சங்கற்பம், விகற்பம் முதலிய எல்லாத் துன்பங்களும், சாந்தமாகச் செய்யப்பட்ட ஆன் மாக்களுக்கு அவற்றை ஒழியச் செய்வது சாந்தியதீதக் கலையிலடங்கிய தத்துவங்கள்
1. தத்துவங்கள் - சத்தி தத்துவம் 2 2. புவனங்கள் - நிவிர்த்திபுவனம் முதல் அநாசிரித
புவனம் வரையில் 15 3. வன்னங்கள் - அஹ முதலாக கூடி வரையில் 16
4. பதம் ம்- ஓங்காரம் 5. மந்திரங்கள் - ஈசாமந்திரம், அஸ்திமந்திரம், சிவ
மந்திரம் 3 6. தெய்வம் - சதாசிவம்
ஆசாரியர் தீக்கை செய்யும் பொழுது சீடனது சரிரம் முழந்தாள் முதல் பாதம் வரையில் நிவிர்த்திகலைக்கு எல்லை யாகவும், நாபி முதல் முழந்தாள் வரையில் பிரதிட்டா கலைக்கு எல்லையாகவும், இருதயம் முதல் நாபி வரையில் வித்தியாகலைக்கு எல்லையாகவும் புருவம் முதல் இருதயம் வரையில் சாந்திகலைக்கு எல்லையாகவும், சிகை முதல் புரு

சாஸ்திரவியல் - அத்துவாக்கள் 193
வம் வரையில் சாந்தியதீதகலைக்கு எல்லையாகவும் வகுக்கப் பட்டு கலா சோதனை செய்யப்படும். மற்றைத் தத்துவங்க ளுடன் புருட தத்துவத்திற்கும் சுத்தி செய்யப்படும். பஞ்ச கலைகளுள் அடங்கிய தத்துவங்களே ஆராயுமிடத்து வன் னேம் 51, பதம் 81. மந்திரம் 11, புவனம் 224 என்பதை அறிந்து கொள்ளலாம்.
நிவிர்த்தி முதலிய ஐந்து கலைகளுக்கும் அதிதேவர், பிரமன், விட்டுணு, உருத்திரன், மகேஸ்வரன் சதாசிவன் என்பராவர். இக்கலைகள் உட்பட்ட புவனங்களில் உள்ள கடவுளர் தேவர் எனப்படுவர். அவரது சரீரம் பிராகிருத சரீரமாகும். வித்தியாகலையுட்பட்ட புவனங்களில் உள்ள உருத்திரர் எனப்படுவோருண்டய சரீரம் மாயேயம் எனப் படும். ஏனைய இரு கலைகளில் உள்ளோர் சிவர் எனப்படு வர். அவரது சரீரம் வைந்தவம் எனப்படும். நிவிர்த்தி, பிர திட்டாகலைகளில் படைத்தல், காத்தலைச் செய்வோர் பிர மனும் விட்டுணுவுமாவர். அழித்தலைச் செய்பவர் குணிருத் தினர் ஆகும். இம்மூவருக்கும் முதல்வரே சீகண்ட உருத் திரர் ஆகும். அவர்கள் இவ் இரு கலைகளிலும் உள்ளோ ருக்கு மகேஸ்வரனும் சதாசிவனுமாய் நின்று மறைத்தல் அருளலைச் செய்வர். வித்தியாகலையில் உள்ளவர்களுக்கு உருத்திரருட் சிறந்தோர் படைத்தல் முதலிய முத்தொழில் களைச் செய்ய அனந்ததேவர் மகேஸ்வரனும் சதாசிவனு மாய் மறைத்தல் அருளலைச் செய்வர். சீகண்டரும் அனந்த தேவரும் அபரஞானமாகிய வேதாகமங்களை உணர்த்தலே அருளலாகும். சாந்தி, சாந்தியதீத கலைகளில் உள்ளோர்க் குப் பரமசிவனே எல்லாவற்றையும் நேரே செய்வர்.
தத்துவம், தாத்துவிகம் ஆகியவற்றிற்கு நிலைக் களமாக சுத்தமாயையின் ஒரு பகுதி பஞ்சகலைகளாக விருத்திப்பட்டு அவைகளைத் தாங்கி நிற்கின்றன என்பதை அறிந்தோம். சொற்பிரபஞ்சங்களாகிய மந்திரம், பதம், வன்னம் இப் பஞ்சகலைகளுள் அடங்கி நிற்கின்றன. சுத்தம், மிசித்திரம், அசுத்தம் ஆகிய எல்லாப் பொருள்களும் இப்பஞ்சகலைக ளுள் அடங்கும் ×
ᏭᏪᎯ Ꮔ

Page 117
18. பஞ்சாட்சரத்தின் மகிம்ை
மானிடப் பிறவி எடுத்த நாம் முன்செய்த தீவினையின் பயனை அனுபவிக்குங்கால் துன்பப்படுகின்ருேம். துன்பம் தொடர்ந்தும் வருமோ என்று அச்சமுறுகின்ருேம். எங் கும் நீக்கமற நிற்கின்ற சிவபெருமானே அவ் அக்சத்தைத் தீர்க்கக்கூடியவர். ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன் றும் கருணையுடையவர். ஆகையால் அவருட்ைய திருநாம மாகிய திருவைந்தெழுத்தை ஓதித் துன்பத்தை நீக்கி உய்தி பெறலாம். ஞானசம்பந்தப்பெருமான் திருவாய் மலர்ந்தரு ளிய நமச்சிவாயத் திருப்பதிகம் சிவனுடைய திருநாமம் நமசிவாய எனக் கூறுகிறது. - ܀ - --
" காதலாகிக் கசிந்துகண் ணிர்மல்கி
ஒது வார்தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சி வாயவே "
என்பது அந்தத் திருப்பதிகத்தின் முதற்பாட்டாகும். அவ் விதமே ஒவ்வொரு பாட்டும், நாம் ஓத வேண்டிய நாமம் நமசிவாய எனக் கூறுகின்றது. நாவுக்கரசர் "படைக்கல மாக வுன்நாமத் தெழுத்தஞ்சென் நாவிற் கொண்டேன்’ என்றும் சுந்தரமூர்த்திநாயனர் "நற்றவாஉனை நான் மறக் கினும் சொல்லும்நா நமச்சிவாயவே" என்றும் மணிவாச கப் பெருமான் 'நமச்சிவாய வாழ்க, நாதன்தாள் வாழ்க’ என்று கூறுவதிலிருந்தும் திருவைந்தெழுத்தே இறைவனு டைய நாமம் என்று அறிகின்ருேம்.
தந்தையானவன், தன்னுடைய பிள்ளைகள் "அப்பா' என்று அழைக்கின்ற பொழுதெல்லாம் அவர்கள் வேண்டி யவற்றை மன அன்போடு கொடுப்பதுமல்லாமல் அவரி களுக்கு நேரிடும் துன்பத்தை எந்நேரத்திலும் துடைப்ப தற்கு ஆயத்தமாய் இருக்கிருன், அதுபோன்று எல்லா உயிர்களுக்கும் அம்மையப்பராகிய சிவபெருமாள் தனது நாமத்தைச் சொல்லி அழைக்கும் எவ்வுயிர்க்கும் கருணை கூர்ந்து வேண்டுவதை நல்கச் சித்தமாயிருக்கின்ருன், ஆசை

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 195
வால் இந்திருவைந்தெழுத்தின் மகிமை யாதென நாம் சித்திக்கவேண்டும்,
ஆன்மாக்களுக்கு மலம் நீங்கும் பொருட்டுப் பிறப்பி *னக் கொடுத்துத் தொழிற்படுத்துவது நமசிவாய என்னும் திருவைந்தெழுத்தாகும். இங்கு ந என்பது திரோதான (மறைப்பு) சத்தியையும், ம என்பது மலத்தையும், சி என் பது சிவத்தையும், வ என்பது அருட்சத்தி (திருவருள்) யையும், ய என்பது ஆன்மாவையும் குறிக்கும். இங்கு திரு வருட்-சத்தியானது திரோதான , சத்தியாக நின்று மல மானது உயிரை நீங்கும்பொருட்டு அம்மலத்தைத் தொழிற் படுத்தும் மறைத்தல் வினைப் போகங்களிலே அழுந்தச் செய்தலாம். அருளல் உயிர்களுக்கு மலத்தை நீக்கிச் சிவத் துவத்தை அள்த்தலாம். அழித்தல் ஆன்மாக்களின் இளைப்பை ஒழித்தற் பொருட்டாம். படைத்தல் மலபரிபாகம் வரு வித்தற்பொருட்டாம். காத்தல் வினைப்போகங்களை உண் பித்து வினைகளை ஒழித்தற் பொருட்டாம். ஆன்மாக்களைத் துன்பத்துக்குக் காரணமான செனன் மரண சாகரத்தி னின்றும் எடுத்து அருள்புரிதல் காரணமாகவே இறைவன் ஐந்தொழிலைப் புரிகின்றர்.
பூரீ பஞ்சாட்சரமே திருமூல மந்திரமாகும். பஞ்சாட் சரத்தைக் குருவினிடமே பெற்றுக்கொள்ளவேண்டும். அவ் விதம் குருவினிடம் சிவதீட்சை பெற்றவர்களே சைவசம யத்தவர்களென்று சொல்லப்படுவர். சிவதீட்சை பெற்றேர் 108 அல்லது 50 அல்லது 25 அல்லது 10 உருவாயினும் நியமமாகத் தினமும் குருவை வழிபட்டுச் செபித்தல்வேண் டும். ஆன்மாக்களுக்கு ஒவ்வொரு பிறவியிலும் இவ்வுலக இன்பத்தை நல்கக் கூடியதும் துன்பத்தை விளைக்கும் செனன மரண சாகரத்தினின்றும் காப்பாற்றக் கூடியதும் திருமூல மந்திரமாகும். நினைப்பவனைக் காப்பதே மந்திரம் நல்கும் tua (so)85th.
' கொல்வா ரேனுங் குணம்பல நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீங்குவரென்பரால்
தல்லார் நாம் நமச்சி வாயவுே ??

Page 118
முப்பொருள் உண்மை விளக்கம்
பஞ்சாட்சரத்தை ஒதுவோர் பெற்றுக்கொள்ளக்கூடிய நன் மைகளை இத்தேவாரம் விளக்குகிறது. தீக்கை பெற்றதும் உடனடியாக மலநோய் முற்ருக நீங்கிவிடாது. அது சிறிது சிறிதாகக் குறைந்து அகலும். பசிநோய் உணவினலும், உடல்நோய் மருந்தினுலும், அறியாமை கல்வியினலும் நீங் கும். அதுபோன்று மலநோயானது பஞ்சாட்சரத்தைத் தின மும் ஒதுவதல்ை சிறிது சிறிதாகத் தேய்ந்து உய்தி அளிக்கும்.
பஞ்சாக்கரம் ஒருவரின் பக்குவநிலைக்கேற்ற வண்ணம், தூலம், குக்குமம், காரணம், மகாகாரணம், மகாமனு என ஐந்து வகையாய் விளங்கும். அதை உச்சரிக்கும் முறை (1) மானதம் (2) மந்தம் (3) உரை என மூவ கைப்படும். மானதம் என்பது மனதினலே உச்சரித்தலாம். தன் செவிக்கு மாத்திரம் கேட்கத்தக்கதாக உச்சரித்தல் மந்தம் எனப்படும். இது உபாஞ்சு என்றுங் கூறப்படும். உரை என்பது பிறர் செவிக்குக் கேட்கத்தக்கதாகச் செபித் தலாம். இது வாசகம் எனவும் கூறப்படும். இவைகளுள் மானதம் மிகவும் சிறந்த முறையாகும். மானதம் கோடி மடங்குபலமும், மந்தம் பதினயிரம் மடங்கு பலமும், உரை நூறுமடங்கு பலமும் தரும்.
இனி, தூலபஞ்சாட்சரத்தைப் பற்றி அறிதல்வேண்டும். பஞ்சாட்சரத்தை உச்சரிப்பதால் அஞ்ஞானம் நீங்கி ஞானம் பிரகாசிக்கும். மந்திரங்கள் எல்லாவற்றிலும் பஞ்சாட்சர மந்திரம் சிறந்தது. ‘மந்திரம் நமச்சிவாய வாக நீறணியப் பெற்ருல்" என்று நாவுக்கரசர் கூறியுள்ளார். " நந்தி நாமம் நமச்சிவா யவெனும்
சந்தை யாற்றமிழ் ஞானசம் பந்தன்சொல் சிந்தை யயன்மகிழ்ந் தேத்தவல் லாரெலாம் பந்த பாசம் அறுக்க வல் லார்களே ' என்று ஞானசம்பந்தர் நமச்சிவாயப் பதிகத்தின் ஈற்றில் உயிர்களைப் பந்தித்த பாசம் நமசிவாய என்னும் சிவபெரு மானுடைய திருநாமத்தை ஒதுவதனல் நீங்குமெனக் கூறு கின்ருர், தூல பஞ்சாக்கரத்தைப் பற்றித் திருமூலர்,

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 1ፅ?
' ஒன்றுகண் டேனிவ் வுலகுக் கொருகனி நன்றுகண் டாயது நமச்சிவா யக்கனி மென்றுகண் டாலது மெத்தென் றிருக்கும் தின்றுகண் டாலது தித்திக்குந் தானன்றே" என்று கூறுவது நோக்கற்பாலது. உலகத்தோர்க்குப் பயன் படக் கூடிய நல்ல கனி ஒன்று உண்டு. அக்கனியின் திருப் பெயர் "நமசிவய' என்பதாம். அக்கணியினை உணர்வின் கண் விளங்கி மெல்லுதலைச் செய்தால் அது மென்மை யாக அமைந்திருக்கும். அழுந்தி அறிதலாகிய உண்பதனைச் செய்வார்க்குத் தெவிட்டாத இனிப்பாய்க் காணப்படும். இவ்வாறு இறைவனுடைய திருந்ாமத்தின் சிறப்பு எடுத் தோதப்படுகிறது.
உயிர்கள் திருவடிப் பேறுகிய கனியைத் தேடி உள்ளங் கனிந்து ஓயாது திரியும். அங்ங்ணம் திரியும்போது மாயா காரியங்களிலே சிக்கிக் கொள்கின்றன. விட்டில் பூச்சி விளக்கின் ஒளியைக் கண்டு மருட்சி அடைந்து பின்னர் மாண்டு போகின்றன. அதேபோல உலகப் பற்றுகிய கைவிளக்கை ஏற்றி மனம், புத்தி, சித்தம் அகங்காரம் என் னும் அந்தக்கரணங்கள் அவ்வுயிரைத் தம் வழிக்கு இழுக்கின் றன. ஆகையால் இறைவன் திருநாமம் ஒன்றே அவ்விடர்ப் பாட்டினின்று நீக்க வல்லது. நம முதலாக ஒதுவது தூலபஞ் சாக்கரமாகும். அது நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம் உயிர்ப்படங்கல் ஆகிய ஐந்து நிலைகளையும் ஆக்குவிக்கும். நம என்பதை உயிர் நோக்க ஊனநடனமாகும். உயிர் பாசத்தோடு கூடுவதனல் படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு என்னும் நான்கு தொழில்களிலும் அகப்பட்டு அதற்கும் பிறப்பு இறப்பு நிகழும். உயிர் சிவத்தை நோக்க சிவத்தின் ஞான நடனமாகும். அது அணுக்கிரகத்தை அரு ளும். அதனுற் பேரின்பப் பெருவாழ்வு உண்டாகும். இதுபற்றி, w
* ஊன நடனம் ஒருபால் ஒருபாலாம்
ஞானநடனம் தான்நடுவே நாடு ** என்று திருவருட்பயன் கூறுகின்றது. “சிவயநம என்பதில் உயிராகிய யகரம் நடுவே நிற்பதைக் காணலாம். சிவயநம

Page 119
19 முப்பொருள் உண்மை விளிக்கம்
என ஒதினல் பிறப்பு நீங்கிச் சிவத்தினைச் சார்ந்து மேல் நிலை எய்தும் பேறு கிட்டும். இதனலன்ருே.மணிவாசகர் * நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன் தேனுய்இன்னமுதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவந் தெனதுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊனுரும் உயிர்வாழ்க்கை ஒறுத்தன்றே வெறுத்திடவே ' என்று கூறுவதிலிருந்து முன்செய்த தவத்தின் பயனுலேயே குருவினிடமிருந்து சிவயநம என்ற உபதேசத்தைப் பெற்றுத் கொள்ளலாம் என்பதை அறிகின்ருேம்.
** நற்றவத்தோர் தாம்காண நாதாந்தத்தஞ்செழுத்தால்ஸ் உற்றுருவாய் நின்றடல் உள்ளபடி - பெற்றிடநான்." என்று உண்மைவிளக்கம் கூறுவதைக் கவனிக்கலாம்.சிவம் நோன்பு, செறிவு (சரியை, கிரியை, யோகம்) என்னும் சிவ புண்ணியங்களைச் செய்தோர் நற்றவம் செய்தவரrவன்; சிவயநம என்று ஒதுதலே முதற்படியாகும். இது சீலத் தார்க்குரியதாகும். சிவயசிவ. என்பது இரண்டாவது படி யாகும். இது நோன்பினர்க்குரியது. சிவய என்பது கெறி வினர்க்கும் சிவசிவ என்பது அறிவினர்க்கும் (ஞானநிலையி னர்) உரியதாகும். நமசிவய என்பது நலம் அருளும் பொது: வாகும். நகரமும் மகரமும் முதற்கண் நிற்பது. பிறப்பியல் பாகிய உலக நடைமுறையைக் குறிக்கின்றது. இது போகர் களைக் கொடுப்பது
* சிவ முதலாக உச்சரித்தால் செனண் மரண துன்பம் நீங்கும் "உன தருளால் திருவாய் பொலியச் சிவாயநம வென்று நீறணிந்தேன்." என்று நாவுக்கரசரி கூறுவது. நோக்கற்பாலது. சிவாயநம என்பது சூக்கும பஞ்சாக்கரம் அல்லது முத்தி பஞ்சாக்கரம் எனப்படும். விடய போகக் களில் வெறுப்பும் முத்தியின்பத்தில் விருப்பமுமுடிையவருக்கு" இப்பஞ்சாட்சரத்தை உபயோகிக்கலாம்.
" சிவமுதலே ஆமாறு சேருமேல் தீரும்
பவம்இதுநீ ஒதும் படி ** என்று திருவருட்பயன் கூறுகிறது. சிகரமும் வகரமும் முதற். கண் நிற்பது சிறப்பியல்பாகிய திருவடிப்பேற்றின்ப் குறிப்”

ச்சுஸ்திரவியல்-பஞ்சாட்சாத்தின் மகிமை 199
பதாகும். திரோதானசத்தியாகிய நகரமும் அதனுற் செலுத்தப்படும் மகரமும் நீங்கினவிடத்து சிவயசிவ என MYRILDub.
'சிவனருளாயசிவன்திரு நாமஞ்
*சிவனரு ளான்மாத்திரோத மலமாயை
சிவன்முதலாகச் சிறந்து நிரோதம் பவம தகன்று பரசிவஞமே "
என்று திருமந்திரம் கூறுகிறது. சிவாயநம என்னும் திரு வைந்தெழுத்து சிவபெருமானின் திருமேனியாகும். அத் திருவைந்தெழுத்துமுறை சிவன், அருள், ஆன்மா, திரோதம், மலமாயை என்பனவாம். இவ்வைந்து சொற்களின் முத லெழுத்துக்களே திருவைந்தெழுத்தாகும். சிவயநம என அன்புடன் தினமும் ஓதி நூற்றவம் புரிதல்வேண்டும். அவ் விதத்தவத்தின் பயனல் மலமாயை கன்மங்கள் அகன்று அடங்கும். அவை அடங்கவே பிறப்பறும். பிறப்பறவே திரு வடிப் பேறு பெற்று அவ்வுயிர் சிவனகி மீளா அடிமை யாய்விடும். சிவயநம என நோன்பு (கிரியை) நெறியில் நிற்போர் மேற்கொள்வதாகும். சூக்கும பஞ்சாக்கரத்தைச் செபித்தலினுல் ஆணவமலம் பரிபாகம் எய்தி நீங்கும். அப் பொழுது இதுவரையும் மலபரிபாகம் வரும்வரையும் உலக போகங்களிற் செலுத்திய திரோதானசத்தி அருட்சத்தி யாய் மாறி ஆன்மாவிற் பதியும். பின்னர் ஞானசாரியரின் உபதேசம் கிடைக்கும். அவை காரண பஞ்சாக்கரம் (சிவய சிவ), மகாகாரண பஞ்சாக்கரம் (சிவசிவ), மகாமனு (சி) என்பனவாம். சிவஞானபோதம் ஒன்பதாம் சூத்திரம் ஞாணு சாரியரின் உபதேசம் பெற்றேர் அஞ்செழுத்து ஓதுதலின் அவசியத்தை விளக்குகிறது.
** ஊனக்கண் பாசமுணராப் பதியை ஞானக் கண்ணினிற் சிந்தை நாடி யுராத்துணைத் தேர்த்தெனப் பாசமொருவத் தண்ணிழலாம் பதிவிதி யெண்ணுமஞ் செழுத்தே ? கருவி கரணங்களின் உதவியைக்கொண்டு அறியும் பாது அறிவாலும் துணையின்றியறிய இயலாத கு  ைற யி னே

Page 120
200 முப்பொருள் உண்மை விளக்கம்
உடைய பசு (ஆன்மா) அறிவாலும் பதியை அறியமுடி யாது. அவ்விருவழிகளாலும் அறிய முடியாத முதல்வனைத் திருவடிஞானத்தால் உயிராகிய தன்னறிவின்கண் ஆய்ந்து அறியவேண்டும். அவ்விதம் அறிவதோடு நில தத்துவம் முதலாக நாததத்துவம் ஈருகிய பாசக்கூட்டம் கானல் நீர் போன்றதென்று நீங்கி அப்பாசக்கூட்டத்தினின்று நீங்க வேண்டும். அத்திருவடி ஞானமாகிய பதிஞானம் பிறவித் துயராகிய வெப்பத்துக்குக் குளிர்ந்த நிழலாய்த் தோன் றும் பாசத்தினின்று நீங்கித் திருவடி ஞானத்தினுல் முதல் வனைக் கண்ட காட்சி நிலைத்தற்பொருட்டு திருவைந் தெழுத்தை விதிப்படி செபித்தல் வேண்டும். இதுவே இதன் பொருளாகும். பிரபஞ்சப் பொருள்களை அசத்து என்று கண்டு அவைகளே நீக்கியபின்னர் ஞானம் உண்டாகி அந்த ஞானக் கண்ணுக்குப் பதி விளங்கித் தோன்றியவிடத்தும் பழக்க வசத்தால் அவ்வுயிர்கள் பிரபஞ்ச உணர்வை நோக்கி நிற்கும். அப்பழைய வாசனையை நீக்குதற்பொருட்டு பூரீ பஞ்சாட்சரத்தை உச்சரிக்கவேண்டியது அவசியம்ாகும். சூக்கும பஞ்சாக்கரமாகிய சிவயநம என்ற மறை மொழியை அன்புடன் ஓதி வருவதனல் மலமாயை கன் மங்கள் அகன்றுவிடும். அவ்விதம் திரோதானசத்தியாகிய நகரமும் அதனுற் செலுத்தப்படும் மகரமும் நீங்க சிவய சிவ என அமையும். இதிற் சிகரவகரங்கள் இருபக்கத்திலு மிருக்க யகரம் நடுவே காணப்படுகிறது. இது காரண பஞ் சாக்கரம் அல்லது அதிசூக்கும பஞ்சாக்கரம் எனப்படும். இது செறிவினர் ஓதும் முறையாகும். சிவயசிவ என ஒதும் நற்றவம் கைகூட அருவினை அகலும், அருட்சத்தியாகிய வகரத்திற்கும் சிறப்பாகிய சிகரத்திற்கும் நடுவே உயிர்கள் நிற்கின்றன. இறைவன் அருளினல் தோன்றிய உயிர்கள் இறைவன் அருளால் மீண்டும் இறைவனை அடையும், சிவய சிவ என்பதில் நம இல்லாமையால், இறைவனை அடை யும் உயிர்களினின்று மாயையும் பாசமும் விலகி நிற்கும் என்பதை நாம் அறியலாம்.
பின்னர் யகரம் வகரமாகிய அருளிலே சேர்ந்து நிற்க அருளும் சிவமுமாகிய இரண்டும் மாத்திரம் விளங்கும்.

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 201
இதுவே சிவசிவ என்னும் மகாகாரண பஞ்சாக்கரம் எனப் படும். இதை ஒதுவதனுல் அடங்கா மனமும் ஒடுங்கா உயிர்ப்பும் அடங்கி ஒடுங்கும். இது அறிவு நெறியினர்க் காகும் திருமந்திரம்,
" சிவசிவ என்கிலர் தீவினை யாளர்
சிவசிவ என்றிடத் தீவின மாளுஞ் சிவசிவ என்றிடத் தேவருமாவர் சிவசிவ என்னச் சிவகதி தானே ?”
திருவருளின் துணையால் ‘சிவ சிவ*’ என்று ஒதாதவர்கள் தீவினையாளர்களாவர். அப்பிழையை உணர்ந்து அதனை ஒதி ஞல் தீவினை மாளும். இடையருது ஒதுவதனல் தேவரா வரி, ‘சிவ சிவ' என்று மேலும் ஒதினுல் சிவநிலை எய்தித் திருவடி இன்பத்தை அனுபவிப்பர் சிவகதி எய்துவதற்கு நாவுக்கரசர் கூறுவதையும் இன்று நாம் சிந்திக்கவேண்டும்.
'கேடு மூடிக் கிடந்துண்ணும் நாடது.
தேடி நீர்திரி யாதே சிவகதி கூட லாந்திருக் கோளிலி யீசனை பாடு மின்இர வோடு பகலுமே.”*
"சிவ சிவ' என்று எப்பொழுதும் ஒதுவதனலும் திருமறை களை எந்நேரமும் பாடுதலானும் சிவகதியை எய்த வழியுண் டாகும்.
மகாகாரண பஞ்சாக்கரமாகிய 'சிவ' என்பதில் வகர மாகிய அருளையும் சிகரம் தன்னுள் அடக்கிக்கொண்டு சிகர மாகிய எழுத்து மாத்திரமே தனித்து ‘சி’ என நிற்பதே மகாமனு எனப்படும். இது இறை எழுத்து எனவும், பெரு வெழுத்து எனவும், நாயோட்டு மந்திரம், பிரமபீசம் என வும் கூறப்படும். இந்நிலையை விளக்கும் பட்டினத்தடிகள் திருப்பாட்டையும், நினைவிற்சுர வேண்டும். " மாயநட் டோரையும் மாயா மலமெனும் மாதரையும் வியவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாந் தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந் தேயும தேநிட்டை யென்ற னெழிற்கச்சி யேகம்பனே." மு 26 s

Page 121
202 முப்பொருள் உண்மை விளக்கம்
இங்கு யகரமாகிய ஆன்மாவுக்கு நகாரமாகிய திரோ தான சத்தி நண்பனுகவும், மகரமாகிய மலம் மனைவியாக வும், வகரமாகிய அருட்சத்தி தாயாகவும், சிகரமாகிய சிவன் தந்தையாகவும் கூறப்பட்டுள்ளது. நகார, மகாரங் களினின்று நீங்கி அருள்வெளியே நின்று திருவருளாகிய தாயின் கிருபையைப் பெற்று நிட்டைகூடிப் பேரின்பத்தை அநுபவித்து அதனையுங் கடந்து வகாரமேயாய் பின்னர் அத னையும் மறந்து சிகாரமாய் நிற்கும் நிலையை இத்திருப் பாடல் விளக்குகின்றது,
பஞ்சாட்சரம் ஒதுவதனல் உண்டாகும் பயனை "உண்மை விளக்கம் தெளிவாக விபரிக்கிறது.
'அண்ணல் முதலா அழகார் எழுத்தைந்தும்
எண்ணில் இராப்பகலற் றின்பத்தே - நண்ணி
அருளா னதுசிவத்தே யாக்கும் அணுவை
இருளா னதுதீர இன்று." சிவமுதலாகச் சொல்லும் அழகு பொருந்திய பஞ்சாட்சரத் தையும் இடையருது தியானித்தால் அருளானது பொருந்தி ஆன்மாவை கேவல, சகலங்கள் நீங்கிய நிலையில் ஆனந்த உருவத்தையுடைய சிவத்தின்கண்ணே சேர்க்கும்:
இனி ஐந்தெழுத்தினல் அர்ச்சிக்க ஏற்படும் பலனைத் திருக்களிற்றுப்படியார் கூறுவதைக் கவனிக்கலாம்.
'அஞ்செழுத்து மேஆம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆருகப் பெற்றறிந்தே - அஞ்செழுத்தை ஒதப்புக் குள்ள மதியுங் கெடிலுமைகோன் கேதமற வந்தளிக்குங் கேள்"
பஞ்சாட்சரமே சத்தியையும் சிவனையும் காட்டுகிற படியி ஞலே அதைப் பேரின்பத்துக்கு வழியென நினேந்து அசை வற்றுத் தியானத்திலிருந்து பஞ்சாட்சரத்தைச் செபிக்க ஆன்மபோதங் கெடும். பின்னர் சிவனுடைய கிருபை கிட் டும். இதுவே இதன் பொருளாகும்.

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 209
இனி முத்திப் பஞ்சாக்கரத்தினுல் அர்ச்சிக்கும் முறையை அறிதல் வேண்டும். புறம்பே ஞானபூசை செய்வதற்குப் பூசைத்தானம், ஓமத்தானம், தியானத்தானம் வகுத்துக் கொண்டு பஞ்சாக்கரத்தினலே அர்ச்சனை செய்தல்போல உடம்பினுள்ளே இதயத்தைப் பூசைத்தானமாகவும், உந் தியை ஒமத்தானமாகவும், புருவ் நடுவைத் தியானத்தான மாகவும் கருதிக்கொண்டு பூசைத்தானமாகிய இதயத் தாமரையில் முத்திப் பஞ்சாக்கரத்தைத் திருமேனியாக வுடைய சிவபெருமான் வீற்றிருப்பதாகப் பாவித்து அர்ச் சிக்கவேண்டும். அர்ச்சிப்பதற்குப் புறத்தில் அட்ட புட்பங் கொண்டு அர்ச்சிப்பதுபோல கொல்லாமை, ஐம்பொறி அடக்கல், பொறை, அருள். அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் எட்டுப் புட்பங்களைக் கொண்டு அர்ச்சித் தல் வேண்டும். w
புறத்தே ஒரு விடயத்திற் சென்று பற்றுவதாகிய தன் னறிவை அவ்விதம் செல்லாதடக்கி அகத்தே ஒரு குறியின் கண் நிறுத்தி நிட்டைகூடி நிற்கும் முறைமையை ஐந் தெழுத்து ஒதுமுறையில் வைத்துக்கொண்டு சிந்திக்கச் சிந்திக்க, சிவதரிசனத்தை விளக்கிவிடும். ஆதலால் அது சிறந்த சாதனமாகும். காணப்படாத பதிப்பொருளாகிய முதல்வனைத் தன் இதயத்தின்கண் ஐந்தெழுத்து ஒதுமுறை யாற் காணலாம். ஒரு கோலை நட்டுக் கயிற்றினற் சுற்றிக் கடையவே காட்டகத்தினின்றும் தோன்றும் - நெருப்புப் போன்று அம்முதல்வன் அப்பொழுது தோன்றி அறிவுக்கறி வாய் விளங்கி நிற்பன். இதை விளக்கும் நாவுக்கரசர் தேவாரம்,
' விறகிற் தீயினன் பாலிற் படுநெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவு கோல்நட் டுணர்வுக் கயிற்றினுல் முறுக வாங்கிக் கடையமுன் னிற்குமே" என்று கூறுகின்றது. ஒரு விறகு கட்டையுள் நெருப்பு மறைந்து இருப்பதுபோல, பாலில் நெய் மறைந்து இருத் தல்போல, இரத்தினக் கல்லின் ஒளிபோல் சோதியுருவமாய்

Page 122
204 முப்பொருள் உண்மை விளக்கம்
விளங்குகின்ற சடவுள் உயிர்ப்பொருள்,உயிரில்லாத பொருள் யாவற்றிலுமிருந்து ஊனக் கண்ணுற் பார்ப்பவர்களுக்குத் தோன்முது மறைந்து நிற்கின்(?ன்.
ஒரு விறகு கட்டையை ஒரு கோலிற் கயிற்றைச் சுற் றிக் கடையும்பொழுது அதிற் தீ வெளிப்படுதல் போலவும், பாலை, மத்திற் கயிற்றைச் சுற்றிக் கடையும்போது நெய் வெளிப்படுதல் போலவும் மனிதர் தங்களுடைய உண்மை யான அன்பைக் கடவுளிடத்து தங்களுடைய அறிவு கடந்து செலுத்தினுல் அவர்களுடைய உண்மை அறிவுக் கண் ணுக்கு (ஞானக்கண்ணுக்கு) வேளிப்பட்டுக் கடவுள் நிற்பன்.
இதயத்துள் முப்பத்தாறு தத்துவங்களையும் ஆசனமா கக் கொண்டு அவற்றின்மேல் நிற்கும் இறைவனுடைய திரு வடிகள் அவ்விதயகமலத்தின்மேல் நிற்கும். இதனை அறிந்து பஞ்சாக்கரத்தாற் பூசை செய்யவேண்டும். 36 தத்துவங்க ளும் எவ்வாறு ஆசனமாக அமைந்தன என்பதை அறிய வேண்டும். பூதம் 5, தன்மாத்திரைகள் 5, ஞானேந்திரியம் 5. சன்மேந்திரியம் 5, அந்தக்கரணம் 4 ஆகிய 24 தத்துவங்க ளும் உந்தியில் நின்று தோன்றிய எட்டு விரல் அகல அளவு நீளமாயுள்ள தண்டு வடிவாம். வித்தியா தத்துவம் ஏழும் சிவதத்துவத்திலுள்ள சுத்தவித்தை ஒன்றும் ஆக எட்டுத் தத்துவமும் அத்தண்டின்மேல் உள்ள எட்டு இதழ் வடிவாம், ஈசுரம், சதாசிவம் என்னும் இரண்டும் அவ்விதழுக்குள்ளா கிய 64 பூந்தாது வடிவம். சிவதத்துவம் அவ்வித்தினுட் காணப்படும் 51 பீச வடிவாம். அத்தன்மையாகிய இதய தாமரையில் 36 தத்துவங்களையும் ஆசனமாகக் கொண்டு சிவசக்தி வீற்றிருக்குமாதலால் அச்சத்தியையுடைய சிவபெரு மானை முத்திப் பஞ்சாக்கரத்தால் அர்ச்சிக்க வேண்டும். அண்ட வடிவாகிய 36 தத்துவங்களும் இதயத்திற் கமல ரூபமாய் விளங்குமாதலால் 36 தத்துவங்களுக்கும் மேம் பட்டு வியாபகமாய் விளங்கும் முதல்வனை அவ்விதயகமலத் தின் மேலாகக் கண்டு பூசித்தல் வேண்டும்.
பஞ்சாட்சரத்தை எவ்விதம் விதிப்படி உச்சரிப்பதென் பதைக் ‘கொடிக்கவி'யில் கூறப்பட்டுள்ளது.

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 20
'அஞ்செழுத்தும் எட்டெழுத்தும் ஆறெழுத்தும் நாலெழுத்தும் பிஞ்செழுத்தும் மேலைப் பெருவெழுத்தும்-நெஞ்சழுத்திப்
பேசும் எழுத்துடனே பேசா எழுத்தினையும் கூசாமற் காட்டக் கொடி.'
இங்கு அஞ்செழுத்தென்பது 'சிவாயநம என்பதாம், ஒம், ஆம், ஒளம், சிவாயநம என்பது எட்டெழுத்தெனப்படும். "ஒம் நமசிவாய' என்பது ஆறெழுத்தாகும். 'ஓம் சிவாய' என்பது நாலெழுத்தாகும் இவ்விதம் விதிப்படி உச்சரிக் கிற முறைமையை விட்டு பஞ்சாட்சரத்தினுடைய சொரூ பத்தை (சி-சிவன், வ-சத்தி, ய-ஆன்மா, ந-திரோதம், ம-மலம்) அறிந்து பிஞ்செழுத்தாகிய வகாரத்தையும் (பரா சத்தி) பெருவெழுத்தாகிய சிகரத்தையும் (சிவம்) இருதயத் தில் தியானித்தால் பேசும் எழுத்தாகிய வகாரம் (சத்தி) பேசா எழுத்தாகிய சிகாரத்தை (சிவம்) இரண்டற அழுத் து விக்கும். பிஞ்சுமென்மையைக் குறிக்கிறது. பெரு எழுத்து பெருமை மிக்க எழுத்தென்பதாம். இதுவே இதன் பொரு ளாகும். பஞ்சாக்கரத்தினலே மோட்சத்தை அடையலாம் என்பது தெளிவு.
இருவினையாகிய எஞ்சுவினை (சஞ்சிதம்) ஏறுவினை (ஆகா மியம்) ஆகியவைகளினல் ஏற்படும் பாவம் நீங்கிப் பிறப்பறுப்பதற்கு பஞ்சாட்சரத்தை ஒதும் முறையைத் திருமந்திரம் விளக்குகிறது.
** நமவென்னு நாமத்தை நாவில் ஒடுக்கிச்
சிவமென்னு நாமத்தைச் சிந்தையுளேற்றப் பவமது தீரும் பரிசும தற்றல் அவமதி தீரும் அறும் பிறப் பன்றே '
சிவாயநம என்ற சூக்கும பஞ்சாட்சரத்தை ஒதும்போது சிவ என்னும் இரண்டு எழுத்தினையும் சிந்தையினுள்ளே அழுத்தமாகப் பதித்தல்வேண்டும். ய என்னும் எழுத்தை மிடற்றில் நிறுத்துதல் நம என்னும் இரண்டு எழுத் தினையும் நாவின் கண் அடங்கி ஒடுங்குமாறு ஒடுக்குதல் வேண்டும். . இதுவே ஓதும் முறையாகும். இவ்விதம்

Page 123
20 முப்பொருள் உண்மை விளக்கம்
ஒதிவர இருவினைப்பாவம் அணுகாது. அதஞல் அறியாமை இருளும் தீரும். அறியாமை நீங்கப் பிறப்பறும். பிறப்பற பேரானந்தப் பெருவாழ்வு கிடைக்கும்.
அண்டபிண்டம் முதலிய தத்துவங்களின் ஓயா இயக் கமே இறைவனின் திருசுத்தாகும். யான் எனது என்னும் செருக்கற்றவர்களே அதனை அறியமுடியும் தரிசித்தவர்க ளுக்குச் செனன மரணம் இல்லை.
* ஓங்கார மேநல் லதிருவாசி உற்றதனில்
நீங்கா எழுத்தே நிறைகடராம் - ஆங்காரம் அற்றர் அறிவர்அணி அம்பலத்தான் ஆடலிது பெற்றர் பிறப்பற்றர் பின் " என்று உண்மை விளக்கம் கூறுவதை ஆராயவேண்டும்: ஓங்காரம் என்று சொல்லப்படும் பிரணவம் திருவாசியாக ଉ||b அப்பிரணவத்தைவிட்டு நீங்காத பஞ்சாக்கரமே நிறைந்த உள்ளொளியாகவும் இருப்பதை யான் எனது என்னும் உரைமாய்த்தோர் அறிவர். திரு அம்பலத்தான் செய்யும் ஆடலைக் காணவல்லார் இறைவனடியைச் சேர்ந்தவராவர். அகர உகர மகரமும் விந்து நாதமும் ஆகிய ஐந்தும் கூடியநிலை ஓங்காரமாகும். இவை நுண்ணிய ஐந்தெ ழுத்தாகும். ஓங்காரம் திருவாசி எனப்படும். திருவாசி திருப் இமும்பைச் சூழ்ந்து காணப்படும், வனப்பமை வளைவு. இவ் வனப்பமை வளைவினுள் ஒளிவிட்டுக் கொண்டு திகழும் திருவைந் தெழுத்து அவ்வோங்காரத்திற்கு உயிராகும்.
சிகரத்தை முதலாகக் கொண்ட பஞ்சாக்கரமே திரு மேனியாகக்கொண்டு ஆன்மாக்கள் பிறவியை நீக்கும் பொருட்டு ஆன்மாவிடத்திலே பரமசிவன் நடனஞ் செய் கின்றன்.
8 எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் - சிட்டன் சிவாயநம வென்னுந் திருவெழுத்தஞ் சால அவாயமற நின்றடு வான் 11
என்று உண்மை விளக்கம் கூறும் வெண்பா ஆராயவேண் டியதொன்ருகும். தமிழில் அ எட்டு என்ற எண்ணைக் குறிக்

ச்ாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 2ዕ?
கும். உ இரண்டைக் குறிக்கும் எண். எட்டையும் இரண் டையும் கூட்டிய இலக்கம் பத்தாகும். ய பத்தைக் குறிக் கும் எண்ணுகும். ய ஆன்மாவைக் குறிப்பதால் பரமசிவன் ஆருயிர்களில் தங்கி நின்றே நடனத்தைச் செய்கின்ருன் என்பது தெளிவாகிறது. "மனமணி லிங்கமாக’ என அப்ப ருடைய தேவாரத்திலும் கூறப்படுவதைக் கவனிக்கலாம்"
இறைவனுடைய திருக்கூத்து திருவைந்தெழுத்தின் உரு வமாகும். திருவைந்தெழுத்தும் அம்பலக்கூத்தன் ஆடும். திரு மேனியிற் பொருந்தும் நிலைகளும் விரித்தோதப்படுகின்றன
* ஆடும் படிகேள்நல் லம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியிலேநகரம் - கூடும் மகரம் உதரம் வளர்தோள் சிகரம் பகருமுகம் வாமுடியப் பார் ' திருப்பாதத்தில் நகரமாகவும் திருவுந்தியில் மகரமாகவும் திருத்தோள் சிகரமாகவும் திருமுகம் வகரமாகவும் திருமுடி யகரமாவும் கொண்டு முதல்வன் திருநடனஞ் செய்கின் முன். இவ்விதம் பொருந்தி இருப்பது ஒரு வடிவம் . இது இலயாங்கம் என்னும் திருவுருவப்பிழம்பு ஆகும். இதினின்று அவயவங்களும் தொழில்களும் பிரிந்து கூடும்போது வருவது போகாங்கமாகிய வடிவம். அது சிகர முதலாகவரும் பஞ் சாட்சரத்தைப் பொருந்தி இருப்பதாம். அது ஐந்தொழில் புரியும் முறையாம்.
** சேர்க்கும் துடிசிகரஞ் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும் யகரம் அபயகரம்-பார்க்கிலிறைக்(கு) அங்கி நகரம் அடிக்கீழ் முயலகனுர் தங்கும் மகரமது தான்' , - - ஒலிக்கின்ற துடி(உடுக்கு)யை ஏந்திய கையிலே சிகரமும் நன்முக வீசிய கையில் வகாரமாகும், அமைத்த கையிலே யகரமாகவும் அக்கினி ஏந்திய கையிலே நகரமாகவும், முய லகனை மிதித்த பாத்த்திலே மகரமாகவும்கொண்டு திரு நிருத்தத்தைச் சிவன் புரிகின்ருர், இங்கு திருவுருவின் வலப் பாகம் சிவனுகவும் இடப்பகுதி சத்தியாகவும் உருவகிக்கப் படும். வலப்பால் அறிவையும் இடப்பால் ஆற்றலையும் குறிக்கும். திருவடியில் நகரம். முன்னர் கூறிய திருப்பாட்

Page 124
208 முப்பொருள் உண்மை விளக்கம்
டில் நகரம் ஊன்றிய திருவடியின் மேற்பகுதியையும் இத் திருப்பாட்டில், அத்திருவடியின் கீழ்ப்பகுதியைக் குறிக் கிறது. வலப்பகுதி சிறப்பியல்பையும் இடப்பால் பிறப்பியல் பையுங் குறிக்கும். வலப்பகுதியின் திருக்கையில் சிகரமும் அதனை அடுத்தது யகரமுமாகும். இது திருவருளினல் பந்த மறுக்கப்பட்ட ஆருயிரை சிவபெருமான் திருக்கையில் ஒப்பு விப்பதாம். நகரம் ஊன்றிய வலது திருவடியின் மேல் அமை யுங்காலத்து மலமாயா கன்மங்களேக் குறிக்கும். மகரம் திருவயிற்றின் கண் அமைகிறது. வயிறு உயிர்கள் பிறப் பெடுப்பதற்குரிய உடம்பமைக்கும் நிலைக்களம். ஆகையால் இது பிறப்பியல்பினைக் குறிக்கும்.
தவமுடைய ஆருயிர்கள் தரிசிக்கத்தக்கதாக நாத முடி யிலே பஞ்சாக்கரமே திருமேனியாகக் கொண்ட திருநட னத்தின் காரணமும் பயனும் யாவையென அறிதல் வேண் டும். அண்டபிண்டங்களின் தோற்றம், நிலைபேறு ஒடுக் கம் ஆகிய மூன்றினேடு உயிர்களின் மறைப்பும், அருளலும் ஆகிய இரண்டும் சேர்ந்த ஐந்தொழில்களே அத்திருக்கூத்து உணர்த்துவதாகும். இந்த உண்மையை விளக்குவதே சிவ பெருமானின் திருவுருவ அமைப்பாகும். இதைப்பற்றி உண்மைவிளக்கம்
" தோற்றம் துடியதனில் தோயும் திதிஅமைப்பில் சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமாய் ஊன்று மலர்ப்பதத்தில் உற்றதிரோ தம்முத்தி நான்ற மலர்ப்பதத்தே நாடு ' என்று விளக்குகின்றது. திருக்கைகள் மூன்றினலும் முத் தொழில்களும் குறிக்கப்பட்டன. திருவடி இரண்டினலும் மறைப்பும் அருளலும் குறிக்கப்பட்டன. உடுக்கு ஏந்திய கையில் மல சங்காரமும், ஊன்றிய பாதத்தில் பிரபஞ் சத்தை மறைக்கும் திரோதமும் தூக்கிய திருவடியில் அநுக் கிரகமும், ஆகியன குறிக்கப்படுகின்றன. நாத தத்துவமே. உலகதோற்றம். நெருப்பு சங்காரத்தைக் குறிக்கிறது. வீடு பேற்றின் காரணமாக நடைபெறும் மறைப்பு உலகப் பொருள்களேயாகும். உயிர்களுக்கு பொருள்களைக் காணு வதற்கு முன் ஏற்படாத விருப்பம் கண்டதும் தோன்று கின்றன. நாதம் முப்பத்தாருவது மெய்யாகும். அம்முப்பத்

சாஸ்திரவியல் - பஞ்சாட்சரத்தின் மகிமை 209
தாறு மெய்யும் கடந்த அப்வாலுள்ள திருவருட் பெரு வெளியே பரமேஸ்வரன் திருநடனஞ் செய்யும் இடம். ஞானிகள் முதல்வனுடைய கிருபையினுல் மூன்று மலங் களையும் நீக்கி ஆன்ம போதம் முடிந்தவிடத்திலே உதய மாகும் ஆனந்த வெள்ளத்தை அருந்தி அனுபவிப்பதுதான் திருஅம்பலத்தான் திருநடனத்தின் முறைமையாகும்.
பரமேஸ்வரன் அருளிய வேதம், ஆகமங்களும் புரா ணங்கள் அனைத்தும் ஆனந்த நடனமும் தத்துவ ஆதீத மாகிய மெளனமாயிருக்கும் பரமுத்தியும், பஞ்சாக்கரம் என்பதையும் அறியவேண்டும். ஒருவர் அறிந்து உய்ய வேண்டி ஒழுகும் வழிகளைக் குறிப்பன திருமாமறை எனக் கூறப்படும் வேதசிவாகமங்களாகும், இந்நூல்கள் திருவரு ளால் மெய்யடியார் மூலம் உலகத்துக்குக் கிடைப்பன வாகும் இவ்வகையில் வழிபாட்டு நூல், வழிபாட்டமைப்பு நூல், வண்மைப்பொருள்நூல், வாழ்க்கைநூல் என்ற நூல் களை நாம் கைக்கொள்ளலாம். மேற்கூறப்பட்ட முதல் மூன்று வகை நூல்களும் வகரத்துள் அடங்கும். அவைகள் சிவாகமங்கள் எனப்படும் திருமுறைகளாம். இவைகளுள் நால்வர் தந்த தேவார திருவாசகம் வழிபாட்டு நூலா கும் திருமூலர் அருளிய திருமந்திரம் வழிபாட்டமைப்பு நூலாகும், மெய்கண்டசாத்திரங்கள் வண்மைப்பொருள் நூல்களாகும். நான்காவதாகச் சொல்லப்படும் வாழ்க்கை நூல் திருவள்ளுவநாயனர் அருளிய செந்தமிழ்ப் பொது மறையாம் திருக்குறளாகும். வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாம நமச்சிவாயவே" என்ற திரு மறைத் திருவாக்குக்கிணங்க திருவைந்தெழுத்தினுள் அடங்காதன யாதும் இல்லையென்பதை அறியலாம். இறை வன் திருவடியை எய்து தற்கும் திருவைந்தெழுத்தே துணை Lrt S5 D.
* ஓசைதரும் அஞ்செழுத்தை விதிப்படி உச்சரிக்க
உள்ளத்தே புகுந்தளிப்பன் ஊனமெலாம் ஒட ' -
என்று சித்தியார் கூறுவதைச் சிந்தித்துத் திருவைந் தெழுத்தை ஒதிப் பிறவிப்பிணியை நீக்கி உய்திபெற நாம் முயலவேண்டும்,
மு 27

Page 125
19. சித்தாந்த சாத்திரங்கள்
பதி, பசு, பாசம் என்னும் திரிபதார்த்தங்களின் நிச் சயமே சித்தாந்தமாகும். மூன்றும் அநாதியாயுள்ளன. என் றும் உள்ளதும், பேரறிவுடையதும், ஆனந்த சொரூபமுடை யதும் பதியாகும். பசு, பதியைப்போன்று அநாதியாயுள் ளதும் அறிவுடைய பொருளுமாயினும் கன்மம், மாயையி னற் கட்டுப்பட்டதாகும். பாசம் அனுதியாயுள்ளதாயினும் அறிவில்லாச் சடப்பொருளாகும். இவ்வுண்மைகளைக் கூறும் நூல்களே சித்தாந்த சாத்திரமாகும்.
சித்தாந்த சாத்திர நூல்கள் பதினன்காகும். அவை (1) திருவுந்தியார், (2) திருக்களிற்றுப்படியார், (3) சிவ ஞானபோதம், (4) சிவஞானசித்தியார், (5) இருபா இரு பஃது, (6) உண்மைவிளக்கம், (7) சிவப்பிரகாசம், (8) திரு வருட்பயன், (9) வினவெண்பா (10) போற்றிப்பஃருெ டை, (11) கொடிக்கவி, (12) நெஞ்சுவிடுதூது, (13) உண்மை நெறிவிளக்கம், (14) சங்கற்பநிராகரணம்.
'உந்தி களிறு உயர்போதம் சித்தியார்
பிந்திருபா உண்மை பிரகாசம்-வந்தவருட் பண்புவினு போற்றிகொடி பாசிமிலா நெஞ்சுவிடு உண்மைநெறி சங்கற்ப முற்று' என்னும் வெண்பா சித்தாந்த நூல்கள் யாவை எனக் கூறு கின்றது.
திருவுந்தியார், திருவியலூர் சி.ய்யவந்த தேவநாயனரால் கி. பி. 1147 ல் ஆக்கப்பட்டதென்பது ஆராய்ச்தியாளர் கொள்கையாகும். இது சிவஞானபோதத்திற்கு முற்பட்ட தாகும். இந்நூல் 45 திருப்பாக்களை உடையது. இது திரு வடியுணர்வு ஒன்றனையே எடுத்துச் சிறப்பாக விளக்குகிறது. சிவபெருமானின் திருவடிகளை அடைதற்குரிய மார்க்கங்கள், சீலம் (சரியை), நோன்பு (கிரியை), செறிவு (யோகம்), அறிவு (ஞானம்) என்னும் நான்குமாம். இவற்றின் அறி வுப்படியாகிய ஞானத்திற் சரியை, - ஞானத்திற் கிரியை,

சாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள் 211
ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்பவைகளின் அமைவை இந்நூலிற் காணலாம். முதல் ஏழு பாட்டுக்களும் அறிவிற் சரியையைப்பற்றிக் கூறுகிறது. ஆட்கொள்ளும் பொருட்டு சிவகுருவாய் வருதல் சகளமாகும். முதற் பாட் டிலே 'சகளமாய் வந்ததென்றுந்தீபற' என்று கூறப்பட் டிருக்கிறது. சிவஞானபோத எட்டாஞ் சூத்திரமும் பக்குவ ஆன்மாக்களுக்குச் சிவன் குருவடிவாக வருத%க் கூறுகிறது.
'உள்ள முருகி லுடனுவர் அல்லது
தெள்ள அரியரென் றுந்தீபற சிற்பரச் செல்வரென் றுந்தீபற**
ஆன்மாக்கள், அக்கினியைச் சேர்ந்த மெழுகு எவ்வாறு உருகு கிறதோ அதேபோன்று மனங் கசிந்துருகிச் சிவனுடனே கூடி நிற்கிறதல்லாமல் தம்முடைய போதத்தால் சிவனை அறிய மாட்டா, அவ்விதம் அறிதலினலே ஞானச்செல்வத்தினையு முடையருமாவர்,
அறிவில் நோன்பு என்ற படியை எட்டு முதல் பதி னைந்து முடியவுள்ள திருப்பாட்டுக்கள் விளக்குகின்றன,
"கிடந்த கிழவியைக் கிள்ளி எழுப்பி
உடந்தை யுடனேநின் றுந்தீபற உன்னையே கண்டதென் றுந்தீபற.”*
என்றுமுள்ளதாய் உன்னிடத்திலே பொருந்திய திருவருளைச் சிவன் ஆசாரியனுக வந்து எழுப்பியதனலே நீ அத்திருவரு ளுடனே கூடிநிற்றலாம். சிவன் உன்னைக் கண்டுகொண்டு நிற்பவன் என்பதே இதன் பொருளாகும்.
அறிவில் யோகம் 16 முதல் 28 வரையுமுள்ள திருப்பாக் களில் விளக்கப்பட்டிருக்கின்றன.
"உழலா துணர்கின்ற யோகிகள் ஒன்றேடுந்
தழுவாமல் நிற்பரென் றுந்தீபற தாழ்மணி நாவேபோ லுந்தீபற."

Page 126
முப்பொருள் உண்மை விளக்கம்
புலன்க்ஃா விடயங்களிலே செல்ல விடாது முயற்சித்துத் திருவருஃா பாத்திாம் அறிந்திருக்கின்ற சிவயோகிகள் கன்ம வசத்தால் விடயம் பொருந்தினலும் நாக்கு விழுந்த மணி யானது செயலற்றதுபோல் அதிற் பொருந்தாது நிற்பர்.
அறிவில் அறிவு (ஞானத்தில் ஞானம்) 29 தொடக்கம் 43 வரையுமுள்ள திருப்பாட்டுக்களாகும்.
'சிந்தையி னுள்ளுமென் சென்னியி லுஞ்சேர
வந்தவர் வாழ்கவென் றுந்தீபற மடவா ளுடனேயென் றுந்தீபற.'
என்னுடைய இதயத்திலேனும் தலையிலேனும் தன்னுடைய திருவடி சேரும் படிக்கு ஆசாரியராகத் திருமேனி கொண்டு வந்த சிவன் என்றும் பராசத்தியுடன் இருப்பாராக என் பதே இதன் பொருளாகும்.
கி. பி. 1177 வரையில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் திருக்களிற்றுப்படியாரைப்பற்றிச் சிந்திப்போம். இது திரு வுந்தியாரை அருளிய ஆசிரியருடைய மாணக்கராகிய திருக் கடவூர் உய்யவந்த தேவநாயனரால் எழுதப்பட்டது. இது திருவுந்தியாருக்கு விளக்கவுரைபோல் அமைந்திருக்கிறது. இதனுள் 100 வெண்பாக்கள் உண்டு. இவ் அருட்பெரு நூலை தில்லைத் திருச்சிற்றம்பலத்தின்கண் அம்மை அம்பல வாணர் திருமுன்னுள்ள திருக்களிற்றுப்படியார் என்னும் திருப்படியில் வைத்தனர். அப்பொழுது அம்பலவாணரின் திருவருளினல் அந்தப் படியோடு பொருந்திய கல்லா லமைந்த களிற்றினுடைய கையானது அம்பலவாணர் திரு வடியில் தூக்கி வைத்தது. யாவரும் வியப்படைந்து நூலின் பெருமையையும் உயர்வையும் உணர்ந்தனர்.
இந்நூலில் சமய குரவர்களைப் பற்றியும் ஏனைய திருத் தொண்டர்களைப்பற்றியும் கூறப்பட்டிருக்கிறது. அதுவுமன் றித் திருவருளைப் பெற்று அதன்மூலம் சிவானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுபற்றி இந்நூலிற் சிறப்பாகக் கூறப்பட்

சாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள்
டிருக்கிறது நாம் செய்யும் செயலை இறைவனுடைய செய லாக எண்ணி எங்களை இறைவனிடம் ஒப்படைத்தோமா யின் ஆன்மபோதமென்ற சுமையை இறக்கிவிட்டுச் சுகமா யிருக்கலாம். அவ்விதம் மேம்பட்ட சுகத்தை அனுபவிப்ப தற்கு வேண்டிய முறைகள் ஆதார யோகம் நிசாதார யோக மென்றும் இருவகையாம். கருவிகளை நீக்கிக் கரணங்க ளோடு நின்று செய்வது ஆதார யோகமாகும். கருவி, கர ணங்களனைத்தும் நீங்கித் திருவருட் துணைகொண்டு செய் வது நிராதார யோகம். கருவி கரணங்களனைத்தையுங் கொண்டு செய்வது சிவபுண்ணியமாம். பிரபஞ்சத்திலே யுள்ள விடயங்களெல்லாம் மாயையாகும் என்று ஆராய்ந் தறிந்தபின் நம்முடைய போதத்திஞலே சீவித்தோமென்கிற தன்மை கெட்டுத் திருவருளோடு ஒன்ருவோம், அவ்விதம் ஒன்ருகிற தன்மையே ஆதாரமாகும்.
ஆன்மபோதம் கெடுதற்கு இன்னேர் உபாயமும் கூறப் பிட்டுள்ளது. " அஞ்செழுத்து மேஆம்மை அப்பர்தமைக் காட்டுதலால்
அஞ்செழுத்தை ஆருகப் பெற்றறிந்தே-அஞ்செழுத்தை ஒதப்புக் குள்ள மதியுங் கெடிலுமை கோன் கேதமற வந்தளிக்குங் கேள்'
பஞ்சாட்சரமே சத்தியையும் சிவனையுங் காட்டுகின்றபடி யால் அந்தப் பஞ்சாட்சரத்தைப் பேரின் பத்துக்கு வழி யென்று நினைந்து தியானத்திலிருந்து டஞ்சாட்சரத்தைச் செபிக்க ஆன்மபோதங் கெடும், கெட்டவுடனே இறைவன் கிருபை புரிவான் .
இதிலுள்ள இன்னெரு திருப்பாட்டில் சைவசமயத்தின் மாண்பு எடுத்தியம்பப்படுகிறது. "இன்றிச் சமயத்தின் அல்லதுமற் றேழையுடன்
ஒன்றுசொலி மன்றத்து நின்றவரார்-இன்றிங்கே அங்கம் உயிர்பெறவே பாடும் அடியவர்கள் எங்குமிலே கண்டாய் இது '

Page 127
214 முப்பொருள் உண்மை விளக்கம்
திருவம்பலத்திலே ஊமைப் பெண்ணைப் பேசுவித்து அவ ளுடனே வார்த்தை பேசி நின்றருண்டோ? இப்பூமியிலே எலும்பு உயிர் பெறும்படிக்குத் தமிழ்பாடி உயிர்பித்தவர்க ளுண்டோ? இவ்வற்புதங்கள் கலியுகத்திலே சைவசமயத்தில் மாத்திரம் நடைபெற்றன. ஊமைப் பெண்ணை மணிவாச கப்பெருமான் திருச்சாழலைப் பாடுவித்து அருள் கொடுத் தார். பாம்பு கடித்ததினல் இறந்தபின் அவளுடைய எலும் பும் சாம்பலும் குடத்தில் வைக்கப்பட்டிருக்க ஞானசம்பந் தர் 'மட்டிட்ட புன்னையம் ?? என்னும் திருப்பதிகத்தைப் பாடி உயிர்ப்பித்தார்.
ஆன்மாக்கள் உய்யும்பொருட்டும் சைவசமயம் தழைத் தோங்கவும் சிவஞானபோதம் என்றநூலை மெய்கண்ட தேவர் கி. பி. 1215 இல் அருளிச்செய்தார். " நின்ற சிவ மொன்றதனைத் தேர்தல் ஞானம் நிகழ்போதம் தேர்ந்தத னைத் தெளிதலாம் ' என்ற அருள்வாக்கின் மூலம் அத னுடைய பொருளை அறியத்தக்கதாக இருக்கிறது, சிவம் ஒன்று. அவரைத் தேர்ந்தறிதல் சிவஞானமாகும். தேர்ந்த பின் தெளிதலே போதமாகும். ஆகையால் சிவமாகிய பொருளைத் தேர்ந்து தெளிதலே சிவஞானபோதம் எனப் படும் சிவம், அடிமையும், உடைமையுமாகிய பசு, பாசங் களைத் தழுவிநிற்கும். தேர்தலாகிய ஞானம் ஆகமங்களி ேைல நிகழும். பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள் களே ஆகமங்களினுற் தேர்ந்து அத்தேர்ச்சியால் உண் டாகும் ஐயங்களைத் தெளிவிப்பது சிவஞானபோதமாகும். இந்நூலின் சிறப்பு,
* வேதம் பசுவதன்பால் மெய்யா கமநால்வ
ரோதுந் தமிழதனி னுள்ளுறைநெய்-போதமிகு நெய்யினுறு சுவையா நீள்வெண்ணெய் மெய்கண்டான் செய்ததமிழ் நூலின் திறம்"
என்று கூறப்படுகிறது. வேதமானது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களையும் அறிதற்குக் கருவியாயுள்ளது. ஆகமம் முப்பொருள்களின் இலக்கணத்தை உணர்த்தும் நூலாகும். ஆ என்பது சிவஞானத்தையும் க என்பதுமோட்

ச்ாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள் 215
சத்தையும் ம என்பது மலநாசத்தையுங் குறிக்கும். ஆகை யால் மலத்தை நீக்கிச் சிவஞானத்தை உதிக்கச்செய்து மோட்சத்தைக் கொடுத்தல்பற்றி அது ஆகமம் என்று கூறப் படுகிறது. சிவாகமங்களிலே சரியை முதலிய நான்குபாதங் களும் சிறிதளவு வித்தியாசமாகக் கூறப்பட்டிருக்கிறது: "கற்பந்தோறும் படைப்பு வேறுபாடும் கேட்போர் கருத்து வேறுபாடும்பற்றி அவற்றிற்கு இயையச் சரியை முதலிய மூன்று பாதங்களும் ஆகமங்களின் வெவ்வேருகக் கூறப்பட் டிருக்கின்றன, ஆதலான் அவற்றுள் எவ்வாகமத்தின்வழி ஒருவர், தீக்கை பெற்ருரோ அவ்வாகமத்தின்வழி அவர் ஒழுகற்பாலர் " வேதம் உலகத்தவர்க்குரிய பொதுநூலா கும். ஆகமம் சத்தினிபாதர்க்கும் உரித்தாய சிறப்பு நூலாகும்.
வேதம் கன்மகாண்டம், ஞானகாண்டம் என இரு பகு தியை உடையது. ஞானகாண்டம் வேதாந்தம் எனவும், உபநிடதம் எனவும் பெயர்பேறும். உபநிடதங்களிற் சில அக்கினியையும், சில சந்திரனையும், சில சிவபெருமானையும் பிரமம் எனக் கூறுகின்றன. இவைகளுள் உண்மையான வேதாந்தம் சிவபெருமானையே பிரமம் எனக் கூறுவதாகும். அவ்வேதாந்தப் பொருளைச் சிவாகமங்கள் தனித்து எடுத் துக் கூறுவதால் 'சிவாகமங்கள் சித்தாந்தமாகும் ' என அருணந்திசிவாசாரியார் கூறினர். அதனுலேயே " வேதா கமத்துணிபிரண்டில்லை யொன்று ' எனத் தாயுமான சுவாமிகள் அருளிச்செய்தார். வேதத்தின் கன்மகாண்டத் திலே யாகாதிகன்மங்களே விரித்துக் கூறப்பட்டிருக்கின்றன. அக்கன்மத்தின் பயன் சுவர்க்க போகங்களாதலாலும் பல தெய்வங்களுக்கும் பரத்துவம் கூறுவதாலும் வேதம் உல கத்தவர்க்கே உரிய பொதுநூலாகும்.
சிவாகமங்கள் தந்திரகலை, மந்திரகலை, உபதேச கலை என மூன்று கலைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தந் திரகலையிற் சிவாலய நிர்மாணம், விக்கிரக அமைப்பு முத லியனவும் மந்திரகலையில் பிரதிஷ்டை, பூசை முதலியன வும் உபதேசகலையில் சிவபெருமானேடு இரண்டறக் கலத்

Page 128
216 முப்பொருள் உண்மை விளக்கம்
தற்குத் துணைபுரியும் ஞானமார்க்கத்தைப் பற்றிக் கூறப் படுகிறது. இம்மூன்று கலைகளும் சத்தினிபாதத்திற்குரிய சிறப்பு நூல்களாகும்.
இருபத்தெட்டு ஆகமங்களேயும் சிவபெருமானிடம் இருந்து நந்திதேவர் கேட்டறிந்தார். கேட்டு மெய்ப்பொருள் தெளிந்த நந்திதேவர் தம் மாணுக்கர் பலருள்ளுஞ் சிறந்த சனற்குமார முனிவர்க்கு அருளிச்செய்தார். அவர் தம் மானுக்கராகிய சத்தியஞானதரிசனிகளுக்கு அருளிச் செய் தார். அவர் தனது மாணுக்கராகிய பரஞ்சோதி முனிவ ருக்கு அருளிச் செய்தார். அவர் மெய்யுணர்வின் முதிர்ந் தவராகிய திருவெண்ணெய் நல்லூரில் இருந்த பூரீமெய்கண்ட தேவரிடத்து எழுந்தருளி வடமொழிச் சிவஞானபோதத் தைக் கொடுத்துத் தமிழில் மொழிபெயர்த்து எழுதும்படி உபதேசித்தருளினர். அது இரெளரவ ஆகமத்துள்ள 12 சூத்திரத்தாற் கூறப்பட்ட சிவஞானபோதமாகும்.அவராற் தமிழ்ச் சிவஞானபோதம் அருளப்பட்டது. மெய்கண்ட தேவர் அருணந்திசிவா சாரியருக்கு அருளிச்செய்தார், அவர் மறைஞானசம்பந்தசிவாசாரியருக்கு அருளிச்செய்தார். அவர் உமாபதிசவாசாரியருக்கு அருளிச்செய்தார். இந்நால்வரும் சந்தானகுரவர் எனப்படுவர்.
சரியை, கிரியை யோகம் என்னும் மூன்று பாதங்களை யும் ஆராயும் நூல்களுக்கு மேம்பட்டது சிவஞானபோதமா கும். தீட்சை பெற்றுச் சிவாகமங்களை ஓதிப் பின்னர் மூன்று பாதங்களையும் ஆராயும் நூல்களேக் கேட்டு அவ்விதம் ஒழுகி அதனல் மனத்துய்மை ஏற்படவேண்டும். நாளடைவில் உலகத்திலுள்ளவை அநித்தியமானவை என்பதும், நித்திய மான பொருள் கடவுள் என்ற உணர்வும் ஏற்படவேண்டும். அந்நிலையில் பிறவிக்கு அஞ்சி வீடுபேற்றையே விரும்பும் உயிர்களே உயர் சிவஞானபோதமாகிய இந்நூலைக் கேட்கத் தகுதியுடையவராகும்.
சிவஞானபோதம் எனனும் இப்பெருநூல் பன்னிரண்டு குத்திரங்களையுடையது. இவை பன்னிரண்டும் 40 அடிகளே

சாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள் 217
LLLTLLL LLLLLLLLS STTTT 00 TL TTT 000 TTTTTeTL aTTL LLTLS இந்த 216 சொற்களும் 824 எழுத்துக்களையுடையன. இது விளக்கும் பொருளோ அளவிறந்தது. இப்பெருநூல் உணர் தற்கரியது. சிவஞானபோதத்திலுள்ள பன்னிரண்டு சூத்தி ரங்களுள் முதல் ஆறு சூத்திரங்களும் முப்பொருளின் பொது இலக்கணத்தைக் கூறுவதால் அப்பகுதி பொது அதிகார மெனவும் பின் 6 சூத்திரங்களும் முப்பொருளின் சிறப்பு இல்க்கண்த்தைக் கூறுவதால் சிறப்பு அதிகாரமெனவும் கூறப் படும். முதல் ஆறு சூத்தரங்களில் முதன் மூன்றும் முப் பொருள்களின் உண்மையை விளக்குவதால் பிரமாண இயல் என்றும் பின் மூன்றும் அவற்றின் இலக்கணத்தைக் கூறுவ தால் இலக்கண இயல் என்றுங் கூறப்படும். சிறப்பு அதிகா ரத்தில் முதல் மூன்றும் அதிகாரி, சாதனம், சாதிக்கும் முறை ஆகியன கூறப்படுதலினல் அது சாதன இயல் என் றும், பின் மூன்று குத்திரங்களும் பாசவிடுதி, சிவப்பேறு சீவன்முத்தர் ஆகியவைபற்றிக் கூறுதலால் அது பயன் இயல் எனவும் கூறப்படும்.
முதற் சூத்திரத்தில் கண்ணுற் காணப்படும் உலகம் தோன்றி நின்று ஒடுங்குதலைக்கொண்டு, கண்ணுற் காணப் படாத கடவுள் உண்டென்று விளங்கப்படுத்தப்பட்டிருக் கிறது. உலகத்துக்குச் சங்காரக் கடவுளாகிய சிவனே கருத்தாவாகும். •
இரண்டாஞ் சூத்திரத்தில் இறைவன் உலகத்தைத் தோற்றுவிக்கும் காலத்து உயிர்களோடு ஒன்ருயும், வேழு யும், உடனயும் நின்று தனது சத்தியால் அவ்வுயிர்களின் இருவினைகளுக்கேற்பப் புதுச் சிருட்டியைச் செய்கின்றன். ஆகையால் உலகத்திற்கு இறைவன் நிமித்தகாரணஞவான். மாயை முதற்காரணமாகும். கன்மமும் திரோதானமும் துணைக்காரணங்களாகும். முதல்வன் சத்தியுடன் ஒன்ரு தற்கும் இரண்டாதற் தம் சூரியனும் அதன் ஒளியும் போலப் பொருளால் ஒன்ரு யும் தன்மையால் இரண்டாயும் is plair,
(p. 28

Page 129
முப்பொருள் உண்மை விளக்கம்
மூன்ரும் சூத்திரத்தில் உடம்பின்கண் ஆன்மா என்பது ஒன்றுண்டு என்பதைப் பல காரணங்கள் காட்டி விளக்கப் பட்டிருக்கின்றது. காணப்படும் உடம்பைக்கொண்டு காணப் படாத உயிர் உண்டென்று சாதிக்கலாம். இந்திரியங்கள் காரணங்கள் முதலியவற்றின் வேருய் உடம்பினுள் உயிர் உண்டு,
நான்காம் சூத்திரத்தில் உயிரின் இலக்கணம் கூறப் படுகிறது. உயிர், சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், துரியாதீதம், என்னும் ஐந்தவத்தைப்படும் என்று உயிரின் தடத்தில் இலக்கணம் கூறப்பட்டிருக்கிறது. அவத்தை என் பது நிலையைக் குறிக்கும். உயிரின்நிலை (1) ஆணவத்தோடு கூடி நிற்றலும் (2) கருவிகளோடு கூடி நிற்றலும் (3) விரு ளோடு கூடி நிற்றலும் என மூவகையால் அவைமுறையே கேவலம், சகலம், சுத்தம் என மூவகைப்படும்.
ஐந்தாம் குத்திரத்தில் இந்திரியங்கள் உயிரால் விடயங் த8 அறிவது மீபால உயிர் சிவனுல் விடயங்களே அறியு மெனப் பாச இலக்கணம் கூறப்பட்டுள்ளது.
ஆகும் தத்திரத்தில் பதியின் சொரூபம் சித்து சத்து எனச் சிறப்பு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. சிவசொரூபம் பாசஞானம். பசுஞானங்களால் அறியப்படாது சிவஞானம் ஒன்ருலேயே அறியப்படும்.
ஏழாம் சூத்திரத்தில் ஆன்மாவின் சொரூபஇலக்கணம் கூறப்பட்டுள்ளது. ஆன்மா சத்தோடு சார்ந்து சத்தாயும் பீசத்தோடு சேர்ந்து அசத்தாயும், சத்து அசத்து இரண்  ைபும் அறிமம்பொருள் ஆன்மாவாகும். ஆகையால் =ஆன்மா சதசத் எனப்படும்.
எட்டாம் குத்திரத்தில் ஆன்மா ஞானுசாரியனுல் உப தேசிக்கப்படும் ஞானத்தால் சிவபெருமான் திருவடியை அடையுமெனத் திருவடி அடைதற்குச் சாதனம் கூறப்பட் டுள்ாது,

சாஸ்திரவியல் - சீத்தாந்த சாத்திரங்கள் * 19
ஒன்பதாஞ் சூத்திரத்தில் ஆன்மாவானது தன் அறிவின் கிண்னே முதல்வனே ஞானக்கண்ணினுலே கண்டு கானல் நீர் போலும் நிலையில்லாத பிரபஞ்சத்தைவிட்டு சிவனது திருவடி நீழலே அடைந்து அந்நிலை தவரு வண்ணம் முத் திப்பஞ்சாட்சரத்தை தியானிக்கவேண்டும். இதில் ஆன்ம க்க்தி சுரப்பட்டுள்ளது. -
பத்தாம் சூத்திரத்தில் ஆங்ய சுத்தியினுல் ஏற்படும் பயன் பாசநீக்கம் எனக் கூறப்பட்டுள்ளது பாசநீக்கத்தில் முதல்வனுடன் ரகமாய் நிற்றலால் ஆனவயலம் நீங்கும். அவருடைய அருள் வழியாகிய இறைபணி நிற்றலால் மாயை கன்மங்களின் நீக்கம் உண்டாகும். இறைவன் திரு வருளே இன்றித் தனக்குச் செயலில்ஃயென அறிந்து எச் செயலும் அவன் செயலாகவே காணும். இறைபணி நிற்ப வர்க்கும் பிராரத் தவிஃன உயிரைத் தக்காமல் ஆகாமிய வினையும் வறுத்தவித்துப்போல் மேற்பிறவியை உண்டு பண்ணுது.
பதினுெராம் சூத்திரத்தில் பாசம் நீங்கப்பெற்ற ஆன் மாவுக்குச் சிவப்பேறு உண்டாகும், பாசம் நீங்கப்பெற்ற தஞல் ஆன்மாவானது தன்ளுேடு சிவன் அத்துவிதமாய் நின்று காட்டியும் கண்டும் வரும் பேருபகாரத்தை இடை விடாத அன்பினுல் நினேந்து அவன் திருவடியாகிய சிவா னேந்தத்தை அடைதலே சிவப்பேறுகும். அது அயரா அன் பினுற் கிடைக்கும். பாசம் நீங்கித் திருவடி அடைதல் உடம்பு உள்ள பொழுதே கூடும் என்பது கவனிக்க வேண்டிய தொன்றுகும்.
பன்னிரண்டாஞ் சூத்திரத்தில் அயரா அன்பினுல் முத்தி நிலை எய்தக்கூடியவர் இறைவன் திருவடியை அனைதற்குத் தடைசெய்யும் மும்மல அழுக்கை சூான நீரினுற் கழுவ வேண்டும். என்று முதற்சண் கூறப்பட்டுள்ளது. பின்னர் மல நீக்கத்தை நிலைபெறச் செய்வதற்குத் தன்னைப்போல் அயரா அன்பினுல் முதல்வன் பாதமடைந்த மெய்ஞானி களோடு சேரவேண்டும், அம்முத்தர்களோடு பெற்ற இனக்

Page 130
9. முப்பொருள் உண்மை விளக்கம்
கம் நிலைபெறுதற்கு சிவபெருமான் வெளிப்பட்டு விளங்கும் திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவன் எனக் கண்டு வழிபடவேண்டும்.
சிவஞானசித்தியார் அருணந்திசிவாச்சாரியரால் a ளப்பட்டது. அவர் மெய்கண்டதேவரின் முதல் மாணவ ராவர். அவருடைய பக்குவநிலையை அறிந்து மெய்கண்ட தேவர் அவருக்குச் சிவஞான போதத்தை உபதேசஞ் செய்து அருணந்திசிவாச்சாரியர் என்னும் தீட்சா நாமத்தை யும் கொடுத்து, " நீ இச் சிவஞானபோத நூற்பொருளை விரித்துப் பிற்காலத்தார்க்கு இனிது விளக்கமாறு ஒரு நூல் செய்க " " என்றருளிச் செய்தார். இந்நூல் விளக்க மாகவும் தெளிவாகவும் சிவாகமங்களின் கருத்தைக் கூறு கின்றது. "பார்விரித்த நூலெல்லாம் பார்த்தறியச் சித்தி யிலே ஓர் விருத்தப்பாதி போதும்’ என்று இந்நூலின் பெரு மையைப்பற்றி தருமை ஆதீன முதற் குரவரான குருஞான சம்பந்த மூர்த்திகள் கூறியிருக்கிறர். இந்நூல் பரபக்கம், சுபக்கம் என்னும் இருபகுதிகளையுடையன. பரபக்கம் பிற சம க்கொள்கைகளை எடுத்துக்கூறி அக்கொள்கைகள் பொருந்தாமையாகிய மறுதலையையும் விளக்குகின்றது. இது 301 விருத்தங்களையுடையது. பரபக்கத்தில் எடுத்துக் கொண்ட மதங்கள் உலகாயதம், செளத்திராந்திகம், யோகாசாரம், மாத்தியமிகம், வைபாடிகம், நிகண்டவாதம், ஆசீவகம், பட்டாசாரியம், பிரபாகாரம், சத்தப்பிரமவா தம், மாயாவாதம். பாற்காரியம், நிரீச்கரசாங்கியம், பஞ்ச ராத்திரம் என்னும் பதினுன்குமாம்.
சுபக்கம் சித்தாந்த சைவ உண்மைகளை விளக்குகின்
றது. இது 328 திருவிருத்தங்களையுடையன. இது முதலுரலா கிய சிவஞானபோதத்திற்கேற்ப 12 சூத்திரங்களையுடையது.
இருபா இருபஃது என்ற நூலும் அருணந்திசிவாச்சாரி யராலேயே அருளப்பட்டது. இது இருவகைப் பாக்களா லும் இருவகைக் செய்யுட்களாலும் அமைந்துள்ளது. ஒன்று. வெண்பா, மற்றது அகவற்பாவாகும். சித்தாத்ததுணுக்கங்.

சாஸ்திரவியல் ஆக சித்தாந்த சாத்திரங்கள்
களை விளக்கும் அரிய நூலாகும். இதிலே தம் குருவாகிய மெய்கண்டதேவரை விஞவுதல் போலவும் அவர் விடை கூறுதல் போலவும் சித்தாந்தக் கருத்துக்கள் தெளிவாக விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன.
உண்மைவிளக்கம் மெய்கண்டதேவரின் மாணவரான திருவதிகை மனவாசகங்கடந்தார் என்பவரால் அருளிச் செய்யப்பட்டது. இவர் கி. பி. 1245ல் வாழ்ந்தார். இந்நூல் 53 வெண்பாக்களை உடையது. இது எளிதாகக் கற்பதற் குச் சிறந்ததாகும். ஆசிரியர் 8 பெரிய வினக்களைத் தம் ஆசிரியரிடக்துக் கேட்கின்றர். ஆசிரியரும் தக்கவாறு விடை அளிக்கின்ருர். முப்பொருள்களின் உண்மைகளும் தன்மைகளும் நன்கு விளங்கக் கூடியதாயிருக்கிறது.
· ** «გb(ლფეუI தத்துவமே தாணவமே தன்றேதான் மாரு வினையேது மற்றிவற்றின் - வேருகா நானேது நீயேது நாதன்நடம் அஞ்செழுத்துத் தானேது தேசிகனே சாற்று "
இவ்வெண்பா 8 வினுக்களைக் கொண்டுள்ளது. 36 தத்து வங்கள் யாவை? ஆணவமலம் யாது? வினை யாது? இம் மலங்களுக்கு வேரு காமல் ஒன்றுபட்டிருக்கும் என்னுடைய சொரூபம் யாது? சிவத்தின் திருநடனம் யாது? பஞ்சாட் சரத்தின் உண்மை யாது? குருமூர்த்தியே நீ அருள் கூர்ந்து விளங்கச் செய்யவேண்டுமென்ற பான்மையில் இவ்வினுக்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
உமாபதிசிவாசாரியரால் ஆக்கப்பட்ட எட்டுச் சித் தாந்த நூல்களுள் சிவப்பிரகாசம் என்ற நூல் சறந்ததா கும். முதனூல் ஆகிய சிவஞானபோதத்திலும் வழி நூலா கிய சிவஞானசத்தியாரிலும் கூறப்பட்ட விஷயங்கள் சார்பு நூலாகிய சிவப்பிரகாசத்தில் சுருக்கமாகவும் விளக்கமாக வும் கூறப்பட்டுள்ளது. செய்யுள் நடையும் மிக இலகு வானது. பாசம் நீங்க ஞானம் பெற்றுத் திருவடியை அடையும்முறை தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

Page 131
முப்பொருள் உண்மை விளக்கம்
" மற்றிரண்டுமாய்ந்து மறுவிலுமாபதியார்
சொற்ற சிவப்பிரகாசத் தொன்னூ - லற்றநிலை ஆங்கதுவே சிவன்முத்தளுக்குவிக்கு மந்நூலே ஓங்குநீடுழியும்பின்னும் "
என்று இந்நூலின் பெருமை கூறப்பட்டுள்ளது. இந்நூலுக்கு முன்னுள்ள இரண்டு உரைகளை விட யாழ்ப்பாணத்துத் திருவிளங்கம் அவர்கள் சிறந்த உரையொன்று எழுதியுள் ளார். இந்நூல் 100 விருத்தங்களையுடையது. முதல் ஐம் பதும் பொது அதிகாரம் என்றும் பின் ஐம்பதும் உண்மை அதிகாரம் என்றும் கூறப்படும். பொது அதிகாரத்தில் பதி, பசு, பாச இலக்கணம் கூறப்பட்டுள்ளது உண்மை அதி காரத்தில் ஆன்ம இலக்கணம், ஞானவாய்மை, ஞானத் தால் வரும் பயன், புனித நாமம் என்பவை விளக்கப்பட் டிருக்கின்றன.
திருவருட்பயன்" இவ்வாசிரியர் இயற்றிய மற்ருெரு நூலாகும். இதிற் சித்தாந்த உண்மைகள் குறள் வெண் பாக்சளால் விளக்கப்பட்டிருக்கின்றது. இது பத்துத் தலைப்பு களைக் கொண்டுள்ளது. திருக்குறளைப் போன்று ஒவ்வொரு தலைப்பும் பததுக் குறள்களைக் கொண்டுள்ளது. எளிதாகக் கற்கக் கூடியன. இனிமையுடையன. மனத்திற் பதியக் கூடியன
வினவெண்பா" இவ்வாசிரியராலேயே ஆக்கப்பட்ட இன்னுெரு நூலாகும். இது 13 வெண்பாக்களைக் கொண் டுள்ளது. சித்தாந்த உண்மைகளின் சாரத்தை இதன்மூலம் அறியமுடியும். சித்தாந்த மாணவனுெருவன் தன்னுடைய ஆசிரியரை வினவுவது போல உமாபதிசிவாச்சாரியர் தனது ஆசானுகிய மறைஞானசம்பந்தரை விஞவி அருளுகின்றர்.
போற்றிப்பஃருெடை" என்ற இன்னொக நூலும் இவ் வாசிரியராலேயே ஆக்கப்பட்டது இது பஃருெடை வெண் பாவாற் பாடப்பட்டது. போற்றி என முடிவு பெறுகிறது. இது இறைவனது சிறப்பும் அவன் குருவாய் எழுந்தருளி

ச்ாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள் 223
வந்து ஆட்கொள்ளுந் தன்மையும் கூறப்படுகின்றது. ఇష్టడి நினையாமையால் நரகத் துன்பமும் நினைக்கும்படி நினைப் பூட்டப்படலும் இன்னும் பிறவும் விளக்கப்பட்டுள்ளன.
எண்ணுங் கலைகாலம் எப்பொருளும் - முன்னம் எனக்கு இல்லாமை காட்டிப்பின் பெய்தியவா காட்டிஇனிச் செல்லாமை காட்டுஞ்செயல்போற்றி "
என்று கேவலாவத்தை சகலாவத்தை சுத்தாவத்தை ஆகிய மூன்றின் நிலையுங் கூறப்படுகிறது. அறிவை விளக்கும் கலை காலதத்துவங்களும் முன்னில்லாத கேவலாவத்தையை முன்னே அறிவித்துப் பின்னர் தேக முதலிய கருவி கரணங் களுடன் கூடின சகலாவத்தையும் அறிவித்து தேக முத லான கருவி கரணுதிகளிற் செல்லாத சுத்தாவத்தை நிலை ஏயையும் அறிவித்த செயல் எம்மைக் காக்க என்பதே இதன் பொருளாகும். . .
"கொடிக்கவி’ என்ற நூலும் இவ்வாசிரியராலேயே ஆக்கப்பட்டது. இது 4 திருப்பாட்டுக்களைக் கொண்டுள் ளது. இதிலே முப்பொருள் உண்மையும் அவைகளின் தன் மையும் ஐந்தொழில் மாண்பும் விளக்கப்பட்டுள்ளன. கொடியிற் காணப்படும் இடபத்தின் வடிவம் அறத்தின் மெய்ம்மையை உணர்த்தகின்றது. அஞ்செழுத்து ஐம் பொருளை உணர்த்தும் ஆதிமந்திரமாகும். கொடியேற்று விழாவிலே இதனை ஓதிக் கொடியேற்றுதல் மிகவும் நனறு.
*நெஞ்சுவிடுதூது" இவ்வாசிரியர் ஆக்கிய 8 நூல்களில் ஒன்ருகும். இதுவும் குறள் வெண்பா யாப்பால் அமைந் தது. 125 கண்ணிகளைக் கொண்டுள்ளது சித்தாந்தசைவத் தின் பெருமை எடுத்தாளப்பட்டிருக்கிறது. மாயா காரிய தனு கரண புவன போகம் ஆகியனவும் 36 தத்துவங்களும் உயிர்களின் செயல்களுக்கு எவ்விதம் கருவியாக அமைந் துள்ளன என்பதும் விளங்கப்படுத்தப்பட்டிருக்கின்றன சிவ பெருமானின் முழுமுதற் தன்மை நன்கு விளக்கம் பெற்றி ருக்கின்றன. தம்மை ஆட்கொண்ட மறைஞானசம்பந்தரி

Page 132
24 முப்பொருள் உண்மை விளக்கம்
டத்து தன்நிலையினை உணர்த்தித் திருக்கொன்றை மாலை வாங்கி வருமாறு தன் நெஞ்சைத் தூதுவிடுத்த தன்மை யாய் அமைந்துள்ளது. அவ்விதம் தூதாய்ச் செல்லும் தன் நெஞ்சத்துக்கு எடுத்துரைக்கும் உரைகள் உய்யும் நோக்கு டைய எவரும் கைக்கொண்டு ஒழுகுதற்கு உரியனவாகும். இது ஒரு அருள் நூலாகும். " ..உளக் கண்ணுக்
கல்லாது தோன்ற அமலன் அகிலமெல்லாம்
நில்லாமல் நின்ற நிலையிஞன். ' அறிவின் கண்ணே தோன்றுவதன்றி ஊனக் கண்ணுக்குக் காணப்படாதவன். அஞகிமலமில்லாதவன் அண்டங்கள் புவனங்கள் யாவையினும் தோன்றத் துணையாய் நிற்பது தானே நிலைமையானவன். இதுவே இதன் பொருளாகும்.
உண்மைநெறிவிளக்கம் இவ்வாசிரியராற் செய்யப் பட்ட நூல்களில் ஒன்ருகும். இது முப்பொருளின் உண்மை யினை விளக்குகின்றது. இதில் ஆறு திருப்பாட்டுக்கள் உள் ளன. ஏனைச் சித்தாந்த நூல்களையும் திருமுறைகளையும் தினமும் ஒது தற்கு இந்நூல் வழிகாட்டியாகும். இந்நூலின் கண் தத்துவரூபம், தத்துவ ரிசனம், தத்துவசுத்தி ஆன்ம ரூபம், ஆன்மதரிசனம், ஆன்மகத்தி, சிவரூபம், சவதரிசனம், வயோகம், சவபோகம் என்பன உணர்த்தப்பட்டிருக்கின் றன. இவை தசகாரியம் எனப்படும். ரூபம், தரிசனம், சுத்தி, ஆகிய மூன்றும் காண்டல், கருதல் கைக்கொள்ளல் அல் லது திரியக்காண்டல், இரட்டுறக்காண்டல், தெளியக்காண் டல் எனப்படும்.
"சங்கற்ப நிராகரணம்" என்ற நூலும் உமாபதிகிவாச் சாரியராலேயே ஆக்கப்பட்டது. நன்னெறியில் ஒழுகுபவர்க்கு முடிந்த கொள்கைகளைக் கடைப்பிடித்தொழுகுவது இன்றி யமையாததாகும். இவ்விதக் கொள்கைகளே சங்கற்பமா கும். அக்கொள்கைகளை மறுத்துரைத்தல் நிராகர்ண்ம் எனப்படும். சிறந்த கொள்கைகளில் நாட்டங் கொள்ளச் செய்வதற்கு வழிகாட்டும் வழிமுறையே இவ்வித மறுப்பி குற் பெறக்கூடிய பயஞகும்,

சாஸ்திரவியல் - சித்தாந்த சாத்திரங்கள் 2沙5
சித்தாந்த சைவர் உலகச் சமயங்களை எல்லாம் நான்கு பெரும் பிரிவாக்கினர். அகம், அகப்புறம், புறம், புறப் புறம் என்பனவாம். புறம், புறப்புறம் என்னும் இருவகைக் கொள்கைகளும் சிவஞானசத்தியார் பரபக்கத்துள் விளங் கப்படுத்தப்பட்டிருக்கின்றன. சங்கற்பநிராகரணம் அகச் சமயத்தை விளக்குகின்றது. ஐக்கியவாதி, பாடானவாதி. சங்கிராந்திவாதி ஈசுவர அவிகாரவாதி, நிமித்தகாரணபரி ஞமவாதி. சைவவாதி, என்னும் அறுவரின் கொள்கைகள் இந்நூலின்கண் விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் நன் னெறி எய்த விரும்புவார் பயிலவேண்டிய ஒரு சிறந்த நூலாகும்.
முப்பொருள் உண்மையையும் அவைகளின் தன்மை யையும் அறிய அவாவுடையோருக்கு பதினன்கு சித்தாந்த சாத்தரங்களும் அதிக பயனை அளிக்கக் கூடியன. உயிர்கள் ஆணவமலமறைப்பினின்றும் விடுபட்டுத் திருவடியை எய்தி உய்யும் பொருட்டு கருணைகொண்டு உடல், உறுப்பு, உல கம், உண்பொருள். ஆகிய நான்கையும் மாயா காரியங்க ளாக இறைவன் அளித்திருக்கின்றன். பாசத்தினின்று நீங் கப்பெற்று முதல்வன் திருவடியை அடையக்கூடிய மார்க் கத்தைக் கடைப்பிடித்து ஒழுக விரும்பும் நன்னெறியா ளர்க்கு இச்சித்தாந்த சாத்திரங்கள் பிறவி நோயைத் தீர்க் கும் அவுடதங்கள் போன்றன. அவைகளைக் கற்று உய்தி பெற இறைவன் துணை புரிவாராக
(p. eo

Page 133
20. இறைவழிபாடு
இறைவனுடைய திருவடியை அடைதலே மானிடப் பிறவியின் நோக்கமாகும். இறைவனை வழிபடுதல்மூலமே நாம் அக்குறிக்கோளை எய்தலாம். விழுமிய ஒன்றைக் குறி யாக நினைத்தே வழிபாடு செய்யவேண்டும். . கடவுளுக்கு மேல் விழுமிய பொருள் கிடையாது. எல்லாவற்றையுங் கடந்து எல்லையற்றதாயிருக்கிற தன்மையினுல் அவரைக் கடவுள் என்று கூறுகிருேம் அவுதுமன்றி எல்லாவுள்ளங் களையும் உயிர்களையும செலுத்தலாலும் (கடவுதல்) கடவுள் என்ற பெயர் அவருக்கு உண்டு. ஆகையால் நாம் வழிபடுங் கடவுள் எல்லாவற்றையுங் கடந்தும் எல்லாவற்றுள்ளுங் கலந்தும் நிற்கின்றர். எல்லாவற்றையுங் கடந்து நிற்கும் நிலை சிவபெருமானின் சொரூபநிலையாகும் எல்லாவற்றுள் ளும் கலந்து நிற்கும்நிலை தடத்தல்நிலை எனப்படும்.
கடவுள் உருவம் உடையவரா அல்லது உருவம் அற்ற வரா என்ற கேள்வி எழ இடமுண்டு. கடவுளுக்கு உருவம் இருக்குமாயின் எல்லை உடையதாயும் அழியும் தன்மை உடையதாயும் இருக்கும். ஆனல் கடவுள் அவ்விருதன்மையு மில்லாதவர். கடவுள் உருவமற்றவராயின் எப்படி நாம்வழி படுவது என்ற கேள்வி எழுகின்றது. உருவம் இல்லாததை மனம் நினைக்கமாட்டாது இயல்பாக உருவம்மூலம் வழி படும் மனிதர் உருவமற்ற கடவுளை வழிபட GPLUTI உருவமற்றதை எவ்வாறு மனம் நினைக்கும். கடவுள் உரு வம் உடையவரெனக் கூறினல் அவருடைய விழுமிய இயல் புக்கு ஊருகத் தோன்றும். உருவமற்றவரென்முல் வழி பாடுசெய்ய இயலாது. 'அதுவுமன்றி எல்லையுடைய எமது வாக்கும் மனமும் எல்லையற்ற கடவுளை tsun self fogyisulu தல்ல. ஆனல் அனுபூதிமான்கள் கூறுவதைக் கவனிப் போம். நாவுக்கரசர்,

சாஸ்திரவியல் - இறைவழிபாடு ፡፡? .
* பின்னு சடைமேற் பிறைசூடி குன்காண் பேரருணன்காண்
பிறப்பொன் றில்லா தான்காண்
முன்னி யுலகுக்கு முன்னு னுன்காண் மூனயிலுஞ்
செற்றுகந்த முதல்வன் தான்காண்
இன்னவுரு வென்றறி வொண்ணுதான்காண் ஏழ்கடலும் ஏழுலகு மாயினுன்காண்
மன்னும் மடந்தையோர் பாக்த் தான்கான்
மாகடல்சூழ் கோகர்னம் மன்னிஞனிே ??
என்று கூறுகிருர், காரைக்கால் அம்மையார் கூறுவதைக் கவனிப்போம்.
** அன்றுந் திருவுருவங் காஞதே ஆட்பட்டேன்
இன்றுந் திருவுருவங் காண்கிலேன்-என்றுந்தான் எவ்வுருவோ தும்பிரான் என்பார்கட் கென்னுரைப்பேன் எவ்வுருவோ நின்னுருவம் ஏது"
இவ்வாறு கூறுவதிலிருந்து இறைவனுடைய திருவுருவம் யாதெனத் தெரியாது. ஆகையால் எல்லாவற்றையுங் கடந்த சொரூபநிலை உருவமில்லாத நிலையாகும். உருவம் அற்றது எவ்வாறு உள்ளத்திற் படியுமென்று நாம் யோசிக்க வேண்டும். அனுபூதிமான்களுடைய தெய்வீக வாக்கியங் களிலிருந்து கடவுளுக்கு உருவ மில்லாத சொரூபநிலையும் உருவமுள்ள தடத்தல்நிலையும் உண்டென்று அறியலாம்
சொரூபநிலை எல்லநவற்றையுங் கடந்ததும் மனத்துக்கு எட்டாததும் பேச்சற்றதுமாகும். இந்நிலையிலுள்ள ஒன்றை மனக்கண்மூலம் அறிதல் முடியாது தடத்தல்நிலையில் உரு வம் உண்டு. உருவத்துக்குத் தோற்றம் அழிவுண்டு. ஆஞ்ல் தோற்றம் அழிவுள்ள விகாரநிலை கடவுளுக்கில்லை என்பதால் கடவுளுக்குத் தடத்தம் என்னும் உருவநிலை எவ வாறு உண்டெள்பதை நாம் ஆராய வேண்டும்.
கடவுள் வருவம் அற்றவர். ஆணுல் மாயாகாரிய தத் துவ புவனமெல்லாம் உருவமாகும். மண்முதல் நாததத்து தும் ஈருக* கள்ள தத்துவங்கள் எல்லாம் உருவமாகும்.

Page 134
al முப்பொருள் உண்மை விளக்கம்
கருவி கரணங்கள் உருவம்; பொறி புலன்கள் உருவம்: ஒலி உருவம் எண்ணம் உருவம்; உடல் உருவம் உலகம் உரு வம் அண்டங்கள் யாவும் உருவம். மாயாகாரிய தத்துவம் எல்லாம் தாமாக இயங்கமாட்டாத சடம் ஆகும். ஆகையால் சட உலகத்தை இயக்கும் அறிவுப்பொருள் ஒன்றிருக்கவேண்டும். அதுவே கடவுள் ஆவர். அவர் ஒரு இடத்திலிருந்து கைகால் கொண்டு இயக்கவில்லை. அவர் நீக்கமற எங்குமுள்ளார் நாவுக்கரசருடைய தேவாரம் இதை விளக்குகிறது.
* அருந்தவர்கள் தொழுதேத்தும் அப்பன் தன்னை
அமரர்கள்தம் பெருமானை அரணைமூவா மருந்தமர்க் கருள்புரிந்த மைந்தன் தன்னை
மறிகடலும் குலவரையும் மண்ணும் விண்ணும் திருந்தொளிய தாரகையும் திசைக ளெட்டும் திரிகடர்கள் ஓரிரண்டும் பிறவு மாய பெருந்தகையைப் பெரும்பற்றம் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே”
மாயையினல் ஆக்கப்பட்ட மாயாகாரியம் எவ்வளவு தூரத் துக்கும் எங்கும் உள்ளதோ அங்கெல்லாம் நீக்கமற நிற் பதை உணர்த்துகிறது. "எங்கும் " என்று சொல்லும் போது மாயாகாரியம் யாவைக்கும் மேலே கடந்தும் கட வுள் நிற்கிருர் என்பது வெளிப்படை. ' எங்கும் " என்று சொல்லும்போது அவருடைய தடத்தல் நிலையை உணர்த்து இறது. அதற்கு அப்பால் தனித்து விளங்கும்நிலை சொரூபம் எனப்படும்,
உருவம் இல்லாக கடவுளுக்கு ' எங்கும் ' என்று சொல்லப்படும் மாயாகாரியம் உடலாக அமைகிறது. இவ் வுடலேக் கடவுளின் உருவம் எனக் கூறலாம். கடவுள் ஒரு வர். ஆன்மாக்கள்மீதுள்ள கருணையினல் அவர் தடத்தம் என்ற உருவநிலையை நமக்கு அளித்திருக்கிருர், மாயை என்று சொல்வதை இயற்கை என்று கூறுவது பொருத்த மானதாகும்; ஆகையால் இயற்கை கடவுளின் உடலாக

சார்நிரவியல் - இறைவழிபாடு 19
அமைகிறது. கடவுள் உயிராகநின்று அதை இயக்குகிருர், மனிதனுடைய உடலை நாம் காண்கிருேம். அதனுள் உயிர் நின்று அதை இயக்குகிறது- இயக்குகின்ற அந்த உயிரை நாம் கண்ணுற் காண்பதில்லை. காணக்கூடிய உடலை க் கொண்டே அதனை இயக்குகிற உயிர் இருக்கென்று உணரு கிருேம். உடலின் தொடர்பைவிட்டு உட்யிரை உணர முடி யாது. அதுபோன்று உடலாகிய இயற்கைமூலம் உயிராகிய கடவுளை உணரலாம், உருவமில்லாக் கடவுளைப்பற்றி அறி தற்கு அவரது உடலாகிய இயற்கையைப் பற்றியே நாம் அறிய முடியும். இயற்கையைவிட்டுக் கடவுள் உண்மையை உணர முடியாது. அவ்விதம் பற்றுவது வழிபாடு என்று - சொல்லப்படும். வழிபாடு கடவுளைக் குறித்தே நடைபெறு கிறது. தடத்தல்நிலையில் கடவுள் இயற்கை உடல் பெறுவ தால் அதை உருவநிலையென்று சொல்லலாம். உலக உயிர் கள் வழிபாடுசெய்து உய்யும்பொருட்டே இயற்கையுடன் இறைவன் கலந்திருக்கின்றன். கடவுள் தனித்தும் மாயா காரியங்களிற் கலந்தும் இருப்பதன் உண்மையை ஞானசம் பந்தப்பெருமான் அருளிய தேவாரம் தெளிவுபடுத்துகிறது.
"ஈருய்முத லொன்றயிரு பெண்ணுண்குண மூன் முய்
மாருமறை நாள்காய்வரு பூதம்.அவை ஐந்தாய்
ஆறர்சுவை ஏழோசையொ டெட்டுத்திசை தானுய்
வேறய்உடன் ஆணுன்இடம் விழிப் மிழ லையே " இனி, கடவுளின் உருவநிலை யாதென அறியவேண்டும். உருவம் (சகளம்) அருவம் (நிஷகள) அருவுருவம் (சகள நிஷ்களம்) எனும் மூன்றும் தடத்தல் நிலைகளாம். இம் மூன்றும் உருவமுடையன. உருவம், பருமை உருவம், நுண்மை உருவம் என இருவகைப்படும். பருமை உருவம் கண்ணுக்குத் தென்படுவது. நுண்மை உருவம் கண்ணுக் குத் தென்படாது. நீர் பருமை உருவம் உடையது.நுணமை யும் பருமையுங் கலந்தது. அரு யுருவம் எனப்படும். ஆகை யால் மூன்றுநிலைகளும் உருவம் உடையன.
வழிபாட்டுக்குத் துணையாய் இருக்குங்கருவி மனமாகும், அதனுடைய இயல்பை அறிதல் அவசியம், புறமணம், நடு

Page 135
3. முப்பொருள் உண்மை விளக்கம் w
மனம் அடிமணம் என மனத்தின்நிலை மூன்றெனக் éña 6 துண்டு. நடுமணம், அடிமணம இரணடையுஞ் சேர்த்து அக மனம் எனவுங் கூறலாம் புறமணம் பொறி புலன்களுடன் கூடித் தொழில்புரிகின்றது. இந்நிஜலயில் இதைக் கட்டுப் படுத்துவது கஷ்டம், தாயுமான சுவாமிகள் கூறுவதைக் கிவனிப்போம்.
"நீானென்று நீயென் றிரண்டில்லை யென்வே
நடுவே முளைத்த மனதைக் கட்டவறி யாமலே வாடினே னெப்போது
கருணைக் குரித்தாவனுே கருதரிய சிற்சபையி லானந்த நிர்த்தமிடு
கருணு கரக்கடவுளே "
அவர் இன்னெரு இடத்தில் பாழான என்மனங் குவிய வொரு தந்திரம் பண்ணுவதுனக் கருமையோ" என்று பகர் கின்றர். ஒடித்திரியும் இயல்புடைய பொல்லாத புறமணம் குவிந்து நடுமணமாகி படிப்படியே விடுதலையடையும் இயல் புடையது. நடுமணம் நல்வழியிற் செல்ல அது பலவித அருஞ்செயல்சளை நிகழ்த்தும் நிலை எய்தும். படிப்படியாக அது அடி மனமாய் அரும்பும்போது எல்லா நலன்களும் தோற்றும் இடமாய் அமையும். 3.
புறமனம் பொறிபுலன் கருவிகளுடன் கலந்தே உலகு டன் தொடர்புகொள்ளும. நடுமணம் பொறிபுலன்களின் கலப்பில்லாமல் இயங்கக் கூடியது. புறமணம் குவிந்து நடு மனம் எழுச்சிபெற்ருல் காணுதனவும் கேளாதனவும் எளி தில் விளங்கும். நடுமன விளக்கம் மான தக்காட்சி என்று சொல்லப்படும். நடு மனம் ஒடுக்கமுற்றுத் துரய்மையடைந்து அடிமணமாகும். அந்நிலையில் தூய்மை துலங்கும். சிலம் விளங்கும். அடிமனம் எழுச்சிபெறுவதினுல் சில uDinTipså கள் நிகழும். காமம், வெகுளி, மயக்கம் நீங்கிவிடும். ♔i് மனம் உயிரை அறவண்ணமாக்கும் பின்னர் 's-9#GOE y grrr“ னனுடன் சேர்த துவிட்டு அது மறைந்துவிடும் இதைத் தாயுமானவர் பாடல் ஒன்று விளக்குகிறது.

சாஸ்திரவியல் - இறைவழிபாடு 礎湖囊
* பற்றுவன அற்றிடு நிராசையென்றெருபூமி
பற்றிப் பிடிக்கும் யோகம் பாங்கிற் பிராணலயம் என்னுமொரு பூமிஇவை
பற்றின்மன மறும் என்னவே . சுகவாரியே...”*
பின்னர் உயிர் விந்துவின் துணைபெறும் பின்பு விந்து நாத மென்னும் பிரணவத்துடன் உயிரைச் சேர்த்துவிடும். பின் னர் தோன்றுவது ஒரு ஒளியாகும். அதுவே உள்ஒளி எனப் படும். அதுவே பரவெளியாகும். அந்நிலையில் அதை எண் ணுதற்கு மனம் இல்லை. மனஓடுக்கம் என்பது அதனுடைய வேகமான செயல்கள் அற்றுப்போகும் நிலையை எய்துத லாம். மனங்கட்கெல்லாம் மூலமாய் இருப்பது மனவெளி. அதுவே அறிவுவெளி, அருள் வெளி, ஆகாயவெளி எனப் பலவாருகக் கூறப்படுகிறது. மனமானது தூய்மையடையும் போது அது மனவெளியில் ஒன்றும். புறமணம் நடுமணமாகி அடிமன எழுச்சிபெறுமபோது மனவெளியின் தொடர்பு ஏற்படும். இதுபற்றித் தாயுமானசுவாமிகள் கூறுவதைக் கவனிப்போம்.
விண்ணிறைந்த வெளியாயென் மனவெளியிற்
கலந்தறிவாய் வெளியினூடுந் தண்ணிறைந்த பேரமுதாய்ச் சதானந்தமானபெருந்
தகையே நின்பா லுண்ணிறைந்த பேரன்பா லுள்ளுருகிமொழிகுளறி
யுவகை யாகிக் கண்ணிறைந்த புனலுகுப்பக் கரமுகிழ்ப்ப நின்னரு
2ளக் கருத்தில்வைப்பாம் ??
அலையும் உள்ளத்திற்கு அதுபற்றிப் பிடிப்பதற்கு ஒரு ஆதாரந் தேவை. மனமானது உருவத்தைப் பற்றும் Luar tjealogs. உருவம் எல்லேயுடையது. அழியுந்தன்மையுடை யது. உருவமற்ற ஒன்றை உணர்வதற்கு உருவத்துணை அவசியம் தேவை. கடவுள் வழிபாட்டுக்கு 2-(258/issar

Page 136
92 முப்பொருள் உண்மை விளக்கம்
தேவை. வழிபாடு புறவழிபாடு, அகவழிபாடு என இாண்டு வகையுண்டு. புறமனவழிபாடு, அகமனவழிபாட்டுக்குத் துணேபுரிகிறது. புறமணம் அமைதிபெருது அலேயும்நிலையில் இருந்தால் அகவழிபாடு செய்தல் முடியாது. புறவழிபாடு அகவழிபாட்டுக்கு எவ்வாறு துணையாயிருப்பதென்பதும் இரண்டுக்குமுள்ள தொடர்பு யாதென்பதும் நாவுக்கரசர் தேவாரத்திலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
" சகமலா தடிமையிலே தாளலால்
நகமெலாந் தேயக் கையால் நாண்மலர் தொழுது தூவி முகமெலாம் கண்ணீர் மல்க முன்பணிந் தேத்துந் தொண்டர் அகமலாற் கோயிலில்லே ஐயன்ஐ யாற்ணுர்க்கே சா
திருவையாற்றிலே கோயில் கொண்டருளியிருக்கின்ற பெரு மானுக்கு தோன்றியறியுந் தன்மையுடைய இந்த நிலவுல கத்திலுள்ளவர்களல்லாமல் சிறந்த அடியாரெனப் படுவா சிவபெரும~னுடைய பாதங்களேயன்றி 9 Giuauiguurrrif சளுக்கு வேறு துணையுமில்லை. நகங்கள் தேயும்படியாக அளவுகடந்த அன்றலர்ந்த பூக்களைச் சேகரித்து அவர் (уройт தூவி முசத்திற் கண்ணிர் 6ớp 9 auri pair பணிந்து அவ ருடைய புகழைப்பாடி வணங்கும் அடியார்களுடைய உள்ள மல்லாது வேறு சிறந்த கோயில் இல்லை என்பதே இப் பாசுரததின் பொருளாகும். தேவர்களிலும் பார்க்க Ա6վ லகத்து அடியவர்களும் இறைவனுடைய திாளும் தொண் டர் அகமும் சிறந்தவை என்பது வெளிப்படை,
புறவழிபாடு கடவுளைத் தன்னின்று பிரித்து வழிபடு வது அகவழிபாடு தன்னின்று பிரியாது தன்னுள் கடவுனை வழிபடுவது. முதலாவது துவித வழிபாடென்றும் இரண் -ாவது அத்துவித வழிபாடென்றும் கூறப்படும்.
"ஒதரிய துவிதமே அத்துவித ஞானத்தை
யுண்டுபணு ஞானமாகும்.
இகபர மிரண்டிலு முயிரினுக் குயிராகி
யெங்கு நிறைகின்ற பொருளே !

ச்ாஸ்திரவியல் - இைற்வழிபாடு &#岛
என்று தாயுமான சுவாமிகள் கூறுவது நோக்கற்பாலது. பிரிந்து வணங்குதல் புறவழிபாடு என்பதை "பிரியாது வணங்குவ னெப்பொழுதும் என்று நாவுக்கரசர் கூறுவதி லிருந்து அறியலாம். "எனது உள்ளங்கவர் கள்வன்" என்பது அகவழிபாட்டையே குறிக்கிறது. புறவழிபாட்டை அலட் சியஞ் செய்வோர்க்ரு அகவழிபாடு அனுகூலமாகாது,
புறவழிபாடு நிகழ்தற்குரிய இடம் புறக்கோயில். புறக் கோயிலின் அமைப்பு உடற்கோயிலின் பரிணுமம் ஆகும். உடலைப் பாதுகாத்தல் போல கோயிலையும பாதுகாக் வேண்டும். கோயில் வழிபாட்டினல் பல நன்மைகள் உள. கோயிலுக்குச் செல்லும் ஒருவன் தீய எண்ணங்களே அப் பொழுது அகற்றுகிருன். உள்ளம் தூய்மை அடைகிறது. அங்குள்ள மூர்த்தியின் ஒவியம் கண்ணில் படுகிறது. புலன்கள் ஒன்றுபட்டு நிற்கின்றன. மனஅமைதி காணப்படுகிறது. தினந்தோறும் இவ்வாறு வழிபாடு செய்வதால் மனங் குவிந்து நிலைபெறுகிறது. சுந்தரரைப்பற்றிச் சேக்கிழார் கூறுவதைக் கவனிப்போம்.
* ஐந்துபே ரறிவும் கண்களே கொள்ள அளப்பருங் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமேயாக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் தி:ளத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் ’
இங்கு கோயில், உருவம், வழிபாடு ஒன்றுசேர்ந்து விபரிப் பதற்கரிய ஒரு நிலையை அளித்தது. கோயில்களிற் பல ஆண்டுகளாகப் பல்லாயிரம் மக்கள், இறைவனை நினைத்து வாழ்த்தியும் வணங்கியும் வந்ததினுல் அந்தத் தெய்வீக எண்ணங்கள் திரண்டு சத்தியுடையனவாகின்றன. ஒவியத் தில் அவை ஒன்றியிருக்கின்றன பக்தியுள்ள பூசகர்கள் ஞானிகள் நோக்கினுலும் சத்திவல்லமை அதிகரிக்கிறது.
(p. 50

Page 137
234 முப்பொருள் உண்மை விளக்கம்
இடையருக் கோயில் வழிபாட்டால் மக்களிடத்துள்ள தெய்வீக சக்தி எழுச்சியடையும், சமயகுரவர் நால்வரும் திருவருட் சத்திமயமானவர்கள். அவர்கள் கோயில்களுக் நேரே சென்றும், செல்லாமலும் தமிழ் மறைகளை ஒத உலகம் உய்ய வைத்தனர்.
உலகில் நாம் காணும் எந்தப் பொருளுக்கும் உருவ மும் பெயரும் இருக்கின்றன. பொறிகளாலும் அறிவாலும் உணரப்படும் பொருளையே உருவம் என்று சொல்கின்முேம், தனக்கென்று உருவம் இல்லாதவன் இறைவன். ஆளுல் மெய்யடியார்களுடைய தவத்துக்கும் அன்புக்கும் இரங்கி அவர்களுடைய கண்ணுக்குப் புலப்படும் திருவுருவங்களோடு எழுத்தருளும் ஆற்றல் அவனுக்குண்டு. நடு புறக்கண்ணுற் தரிசித்து நன்மை பெற்றுக்கொள்ளும்படி திருக்கோயில் களில் விக்கிரக உருவத்தில் இறைவன் எழுந்தருளி இருக் கிருர், ஒருவன் முருகனைத் தொழுகிருன். இன்னுெருவன் கணபதியை வழிபடுகிமுன், இன்னெருவன் சதாசிவ மூர்த் தியை வழிபடுகிருன். இவ்வுருவ வேற்றுமையெல்லாம் ւմD மனங் குவியும்வரை உண்டு.
அகவழிபாடு ஈற்றில் உள் ஒளியை விளங்கம் செய்யும், உள் ஒளி விளக்கத்துக்குப் பல துணேகள் தேவை. அவை களுட் சிறந்தது உடல் நலம் ஆகும். உடல் நலங் குறைந் தோர் உள் ஒளி விளக்கம் பெறுதல் சிஷ்டம் இதுபற்றியே திருமூலர் கூறுவதைக் *olaof Gurb.
' உடம்பின முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில்கொண் டானென்று உடம்பின பாணிருந் தோம்புகின் றேனே ??
உடம்பிலுள்ளே சிவபெருமான் உயிருக்குயிராய்க் கோயில் கொண்டிருக்கின்ருர், இவ்வுண்மையை உணர்ந்து அவ் வுடம்பை அவனுடைய உடமையென்று பேணுகின்றேன். இவ்வுண்மையை உணர்வதற்கு முன்னர் உடம்பை இழுக்

சாஸ்திரவியல் - இறைவழிபாடு 露岛5
குலடயதென்று எண்ணியிருந்தேன். இதுவே இதன் பொரு ளாகும். நம் உடம்பு திருவடியுணர்வு பெறுதற் பொருட்டே தரப்பட்டுள்ளது என்பது உணரற்பாஸ்து.
வழிபாடு எல்லாவற்றிலும் விழுமியது தியானயோகம், மனம் மொழி மெய்யில்ை வழிபடுவதே வழிபாடு. மனத்தை நிலைபெறச் செய்வதற்கு வாயால் தமிழ்மறைகளை ஒதி, கையால் கும்பிட்டு மெய்யால் வனங்கலாம். நாளடை வில் வாயும் மெய்யும் ஒய்வுபெறும். மனம் ஒன்றே வழி பாட்டில் நிலைபெறும். இதுவே தியானயோகம். அகவழி பாட்டையும் அதனுல் வரும் பயனைப் பற்றியும் அறிவ தற்கு திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிய தேவாரத்ை ஆராய்ந்து பார்ப்போம்.
** காயமே கோயிலாகக் கடிமணம் அடிமை யாக
வாய்மையே தூய்பை யாக மனமணி லிங்க மாக தேயமே நெய்யும் பாலா நிறையநீரமைய வாட்டிப் பூசனை ஈசனுர்க்குப் போற்றவிக் காட்டி குேமே "
உயிர் தனக்காக அகத்திலும் புறத்திலும் வழிபாடு செய் வது ஆன்மார்த்தபூசை என்று சொல்லப்படுகிறது: பிறர் பொருட்டு கோயிலிற் செய்யப்படும் வழிபாடு பரார்த்தபூசை எனப்படும். பிறர் பொருட்டு புறவழிபாடு கோயிலில் லிங்க மாகிய உருவில் புறப்பொருளைக் கொண்டு செய்வதாம். ஆனல் அகவழிபாடு தன் பொருட்டு மனமாகிய லிங்கத் தைக் குறியாக நினைந்து அறிவு, அன்பு, பண்பு ஆகியவை களைக் கொண்டு செய்யப்படுவதாகும். இத்தேவாரத்தில் பிறர் பொருட்டுச் செய்யும் கோயில் வழிபாட்டுக்கும் தன் பொருட்டுச் செய்யும் அகவழிபாட்டுக்கும் தொடர்பு காட் டப்படுகிறது. அகவழிபாடு வழுவாமல் உறுதிப்படுத்தற் பொருட்டே புறவழிபாடு செய்யப்படுகின்றது. புறவழிபாடு செய்யும் மக்களுக்கு கோயில் இடமாக அமைந்துள்ளது போல அகவழிபாடு செய்வோருக்கு உடல் இடமாக உள் ளது. காமம் வெகுளி மயக்கம் ஆகிய குற்றங்களிலிருந்து நீங்கிய மனம் அகக்கோயிலில் வழிபடும் அடியவகிைன்றது.

Page 138
bag முப்பொருள் உண்மை விளக்கம்
மனம் அாய்மையடைந்து உண்மைத் தன்மையாகிய “今必” தன்மையடையவேண்டும் மணியில் ஒளி விளங்குவதுபோல தூய்மையடைந்த மனிதனிடத்து லிங்கமெனக் கருதக்கூடிய அருள் ஒளி விளங்கும், Hறவழிபாட்டில் எவ்வாறு லிங்க 19ானது பசுவின் நெய், பால், தயிர், சிறுநீர், சாணம் ஆகிய ஆனேந்தினுல் தூய்மை செய்யப்படுகின்றதோ அதே போன்று அகவழிபாட்டில் உயிரானது சிவம் தனக்கு அருள் காரணமாகச் செய்துவரும் செயல்களை நினைந்து உருகி தன்னறிவு முனைப்பின்றி சிவத்தில் அடங்கி நிற்கும். அன்பா னது மனத்தைச் தூய்மை செய்கின்றது. ஆன்மசுத்தியே உயிர்த்தூய்மை எனப்படும். தேவர்களுக்குப் பிரியமாகக் கொடுக்கப்படும் உணவு அவி எனப்படும். இங்கே ஆன்ம நிவேதனத்தைக் குறிக்கிறது. புறவழிபாட்டில் அன்னம் முதலிய பொருள்கள் லிங்கத்துக்கு நிவேதனஞ் செய்வது போல அகவழிபாட்டில் உயிர் தன்னறிவைச் சிவத்தினிடத் தில் அடங்குப் படி செய்தல் அவி ஆகின்றது. உயிரானது தனக்குச் சிவபெருமான் செய்யும் அருளை நோக்கி மனங் குழைந்து உருகி அன்பு செய்தலும் அவ்வித அன்பு மேலிட் டினுல் செய்தலால் அவனுடைய திருவடி அடைந்து பேரின் பம் நுகர்தலே அவ்வழிபாட்டின் பயணுகும். இந்தத் தேவாரத்தில் புற வழிபாடு அகவழிபாடுகளின் தொடர்பு காட்டப்பட்டிருக்கிறது.
மனம் உருவத்தைச் சார்ந்தே நினைக்கும் இயல்புடை யது. அது உருவமற்றதை நினைக்க இயலாதது. இயற்கை கடவுளின் உடலாகும். ஆகையால் இயற்கை வாயிலாக உயிராக உள்ள கடவுளை உணர்தல்வேண்டும். இயற்கை பரந்ததொன்ரு கும். ஆகையால் நாம் வழிபடுதற்கு இயற்கை ஓவியந் தேவை. இயற்கை மாயாகாரியம். கள் 96 தத்துவங்களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. அவை கள் 36 தத்துவங்களாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இவைகளெல்லாம் சேர்ந்த ஒன்றே இயற்கையாகும். இயற்கை கடவுளின் கோயில். அதன் ஒவியம் அல்லது படம் கடவுளின் கோயிலாகவே அமையும்,

சாஸ்திரவியல் - இறைவழிபாடு 237
இயற்கை உலகில் புல் முதல் மக்கள் ஈருக உள்ள யாவும் ஆண் பெண் மயமாகக் காணப்படுகின்றன. பெண் ஆண் ஆகிய இரண்டும் விளங்கும் ஒவியம் அர்த்தநாரீசுரம், உலகத்தில் எவ்வித வர்ணங்களுக்கும் அடிப்படையாயுள் ளன சிவப்பும் நீலமாகும். அனுபூதிமான்கள் தங்களுடைய அனுபவ வாயிலாகக் கண்டு இடப்பாகம் பெண்மையும் வலப்பாகம் ஆண்மையும் இருப்பதாகக் கூறுகின்றனர். இவை சந்திர, சூரிய கலைகளாக இயங்குகின்றன. அர்த்த நாரீசுரத்தைக் குறிக்கொண்டு தியானஞ் செய்வோர் முத லில் நீல ஒளியையும் பின்னர் சிவப்பு ஒளியையும் காண லாம் என் அனுபூதிமான்கள் கூறுவதுண்டு. தடத்தல் நிலை யிலுள்ள சிவப்பும் நீலமும் முறையே ஒளியாயும் இருளா யும் உயிரிலும் உள்ளத்திலும் உடலிலும் உலகிலும் படிந் துள்ளன. இதை,
*" வேதமும் வேள்வியு மாயினுர்க்கு
சோதியு மாயிரு ளாயிஞர்க்கு "
என்ற திருவாசகம் விளங்கச் செய்கிறது.
நாதத்துக்கு மேல் தத்துவங் கிடையாது. நாதம் ஒலி மயமாய் இருப்பது. விந்து ஒளிமயமாய் இருப்பது. நாதத் தத்துவத்தைக் கடந்து இருப்பதே தெய்வம். தனக்கு அணித் தாயுள்ள நாததத்துவத்தை இயக்குவதால் மற்றத் தத்து வங்கள் இயங்கி உலகங்களாகின்றன. உயிரானது மூர்க்க ஆண்மையை இழந்து பெண்மை (சாந்தி) எய்திய பின்னரே கடவுளை அடையமுடியும். கடவுள் இயற்கையில் நீக்கமற நின்று நாதத்தை இயக்குகின்ருர், மூர்க்கம் நீங்கினல் அந்த நாதங் கேட்கும். அதுவே பிரணவ உபதேசம். அனுபூதி மான்கள் கண்ட உண்மையென நாம் அறிந்துகொள்ளலாம்.
ஒளி, புறஒளி அகஒளி என இருவகைப்படும். புறஒளி புறஇருளே நீக்கும். அகஒளி அக இருளை நீச்கும். புறஇருள் இருப்பதைக் காண்கின்ருேம். அகஇருள் இருத்தவே உணர் கின்ருேம். அறியாமையே அகஇருள் ஆகும். அறிவு ஒளி

Page 139
முப்போருள் உண்மை விளக்கம்
உண்டாகும்போதே அறியாமை இருள் நீங்கும். புறஒளி அறிவற்றது. அது சடமாகும். அதற்கு ஆதாரமாய் இருப் பது அறிவு. ஒளிக்கு ஆதாரமாப் இருப்பது உள்ளொளி. உள் ஒளியானது பாஒளி, பாவெளி, கடவுள் என்னும் பல பெயர்களால் போற்றிக் கீரப்படுவது, உள்ளொளி அறிவாகும், அது அறியாமையே இல்லாதது. அது சித்" எனப்படும்.
சடம் அறிவில்லாதது. "சித் முழு அறிவு ஆகும். உல கம் நிகழ்வதற்குத் தேவையான மூன்றுவது பொருள் உயிர் ஆகும். உயிர் சடத்தைச் சாரும்போது அது மயமாய் இருக்கும். சித்தைச் சாரும்போது அது அம்மயமாகும். உயிர்தான் சார்ந்ததன் வண்ணமாகும். உயிரைச் சூளும் இருளே அறிாமை எனப்படும். அது அறியாமை அஞ் ஞானம், ஆணவம் என்றுங் கூறப்படும். உயிரானது அறி யாமையினின்று விடுதஃ: அடைந்தால் அது "சித்" ஆகும். உயிர் ஒளி உடையது. அது ஆனவ இருளால் விழுங்கப் படுகிறது. இறைவன் உயிர்களின் நிஃக்கிரங்கி அதன் இருளே அகற்றித் தன்னப்போல் ஆக்கத் திருவுளங் கொள் கிருன். ஆகையால் இறைவனுடைய அருட் சத்தியானது உயிருடன் பாயாசத்தியைச் சேர்க்கிறது. மாயை உடலா கவும், கரணமாகவும், உலோக போகமாகவும் தோற்ற மளிக்கிறது. அதனுல் உயிர் சிற்றறிவைப் பெறுகிறது. மாயை ஒருவித இருள். அது உயிரின் இருஃாச் சறிது குறைக்கும் இயல்புடையதாகையால் மாயா இருளிலும் ஒருவித ஒளி உண்டு. அப்படி இல்லேயாயின் உயிருக்கு ஒளி யாக அறிவு விளக்கம் அடையாது. அதனுல் அது மாயா தணு விளக்கு" என்று கூறப்படுகிறது. உயிருடன் இருளா கிய மாயையைச் சேர்த்துவிடும் அருட்சத்தி நீலநிறமுடை யது. பேரொளியாகிய இறைவனிடத்து நீலஓளியும் திகழ் கிறது. இடப்பக்கத்தில் நீல நிறமும் வலப்பக்கத்தில் சிவப் பும் உள்ளன. யோகஞ் செய்வோர் முதலில் கருநீலங் கண்ட பின்னரே சிவப்பு ஒளி காண்பர் எனக் கூறப்படுகிற

சிாஸ்திரவியல் - இறைவ ழிபா டு
இனி, உள்ளொளி எவ்வாறு படிப்படியாக விளக்கமுறும் என்பதைப்பற்றி யோசிக்கவேண்டும். புறமனம் குறிக்கோ ளிேல் ஒன்றிவர அது குவியும். நடுமணம் எழுச்சிபெறும். நடுமணம் குறிக்கோளில் ஒன்றும்போது ஒருவித ஒளி தோன்றும். நடுமனமும் அவ்வொளியுங் குவிந்து அடிமனத் திற் படியும். அப்பொழுது ஒருவித ஒளி தோன்றும். తొu్క மனமும் ஒளியும் மறைந்து பிரானனில் ஒடுங்கும். அப் போது பிரானஒளி விளங்கும். அது விந்துவில் ஒடுங்கி ஒளியாகி அது நாதத்திற் புகுந்து ஒருவித ஒ5ளி எழும். இவ்வொளிகள் யாவும் சம்பந்தம் பெற்றவை. மாறுதல் தன்மை உடையன. நாதங் கடந்தால் ஓர் ஒளி விளங்கும். அதுவே மாயா சம்பந்தமற்ற தூய தனிஒளி அதுவே உள் ஒளி. அது இரவற்றது பகலற்றது. இதுபற்றியே திரு இந்தியார்,
" இரவு பகலில்லா இன்ப வெளியூடே
விரவி வீரவி நின் றுந்திபற
விரைய விரைய நின் றுந்தீபற ' என்று கூறுகிறது.
இரவுபகலற்ற உள்ஒளி விளக்கத்துக்கு, இரவு பகலுள்ள உலகத்தை இறைவன் கொடுத்திருக்கிமூர், இவ்வுலகை நல் வழியிற் பயன்படுத்தினுல் இரவும் பகலற்ற உள்ஒளியைப் பெறலாம். இயற்கை மாயா உலகந் தோன்றும்போது உள்ளொளி தோன்றுவதில்லே. இது தோன்றும்போது அது தோன்றுவதில்லை.

Page 140
அநுபவவியல்
21. நாயன்மார் காட்டியவழி
பீப்பர், சுந்தரர், சம்பந்தர், மானிக்கர், சமயகுரவர்க "ோவர். முதல் ஆவரும் தேவாரங்கஃனயும், பா எரிக்கவாசக :ோமிகள் திருவாசகத்தையும் உம்' ம் உப்பும் போருட் டும். :) சவசமயம் நீழிேத்தோங் எம் திருபாப்லர்ந்தரு எர். சம்பந்தர் அருளிய தேவாரங்கள் முதலாம், இரண் டாம். மூன்றும் திருமுறைகளாகும். நாக்கரசர் நமக்கு அகுயிரிய தேவாரங்கள் நான்காம், ஐந்தாம், ஆரும் திரு திருமுறைகளாகும். ந்ேதரர் தேவாரம ஏழாத் இருமுறை யாகும். மாணிக்கவாசக சுவாமிகள் திருவா ய்மர்ந்தருளிய கிருவாசகம் எட்டாத் திருமுறையாகும்.
இத்திருமுறைகள் சிவத்தின்மேல் தெய்வம் வேறில்ஃ: ாேன்ற உண்மையை லினக்குகின்றன.
"வெற்றரை புழல்வர் துவர்ஆடைய
வேடத்தாரவர்கள் உரைகொன்னன்மின் மற்றவருகின் அவலமறுவை மாற்றகீல்வார்
சுற்றவர்தொழு நேத்துசிற்றம்பலம் காதலற்கமுற் சேவடி கைதொழ
*ற்றவர் லகின் உறுதிகொள வரே !
*ன்பது சம்பந்நீர் தேவாரம், ஐ லவிற்பித்திறந்து பூன்று துன்பப்படுவோர். சின்ாசுட்பங்கஃக் ாத்து சரியை, கிரிபை, யோக ஞானநெறிகளினின்று பிறழாது ஒழுகிச் சைவர் களாய்ச் சிற்றம்பலத்தின் கண்ணே தொழுது வணங்கி அன் போடு குஞ்சிதபா தந்தை நினேந்தால் அத்துயரம் நீங்கி மானிடப்பிறவி எடுத்த பயனை அடைவர். ஏனேய மார்க் கங்கள் பிறவித் துன்பத்தை நீக்கமாட்டா என்று கூறுவதி லிருந்து சிவத்தின்மேல் தெய்வமில்லே என்பது தெளிவு.


Page 141

அநுபவவியல் - நாயன்மார் காட்டியவழி 241
* சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோஞ், சிவபெருமான் திருவடியே சேரப்பெற்ருேம் ' என்று அப்பர் தேவாரத்திலிருந்தும் **** எந்தையை எந்தை தந்தைபிரானை ஏதமாய இடர் தீர்க்க வல்லானை, முந்தியாகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல்காண்பரியான "" என்று சுந்தரர் தேவாரத்திலிருந்தும், " உள்ளேன் பிறதெய்வ முன்னே யல்லா தெங்க ளுத்தமனே' என்று மணிவாசகர் கூறுவதி லிருந்தும் சிவமே முழுமுதற்கடவுள் என்பதைத் தேவாரம் திருவாசகம் வலியுறுத்தியிருக்கின்றன. ஆகையால் மானி டப்பிறவி எடுத்த ஆன்மாக்கள் இவ்வுண்மையை அறிந்து உய்திபெறுவதற்கு நால்வர் அருளிய திருப்பாடல்கள் என் றுந் துணையாயிருக்கின்றன.
திருவருள் உள்நின்று உணர்த்தவே தேவாரங்கள் அரு ளப்பட்டன. திருவடிஞானத்துைப் பெற்றவர்கள் கூறுவது இறைவன் திருவாக்காகும். ' கற்ரு ரை நான் வேண்டேன், கற்பனவும் இனி அமையும் ' என மணிவாசகர் சொல்லும் போது திருவடிஞானத்தையன்றி, பாசஞானம் பசு ஞானத்தையுடைய நால்வல்லாரைத் தான் விரும்பவில்லை என்று அவர் கூறு வ ைத நோக்குவோம். இவ்வித மான உயர்ந்த ஞானத்தை அளிக்கக்கூடிய தேவார திரு வாசகங்களை நாம் தினமும் பாராயணஞ் செய்வதணுற் கிடைத்தற்கரிய பயனைப் பெறலாம். அவை மனத்தைக் கனியவைக்கும். இறைவன்மீது பக்தி உண்டாக்கும். கவலை நீங்கிக் களிப்பு உண்டாகும். மனிதமனம் தெய்வமனமாக மாறும்.
உலக வாழ்க்கையில் இன்ப துன்பம், புண்ணிய பாவம், அறிவு, அறியாமை, ஒளி இருள் கலந்திருப்பதைக் காண் கின்ருேம். இவைகளில் உயர்ந்ததெதுவோ அதில் அவா வுற்று மயங்குகிருேம். பொன்னும் போகமும் மாயப் பொருள்களென மதித்து இன்பதுன்பம் மீது சமபுத்திவரச் செய்யவே கலப்புற்ற வாழ்க்கை ஏற்பட்டது. ஒன்றில் விருப்பும் மற்றதில் வெறுப்பும் ஏற்பட்டு வாழும் மக்க ளுக்கு இருவினையொப்பு ஏற்படுவதற்கு தேவார பாrாய
(p. 81

Page 142
24 முப்பொ ருள் உண்மை விளக்கம்
ண்ம் சிறந்த துனயாகும். பொருளுணர்ந்து தேவார திருவாசகங்களே ஒதுவோரை பழவிண்கள் தாக்க இயலாது வலியற்றுப்போம். பூரண நம்பிக்கையோடு பாராயணஞ் செய்யவேண்டும். திரிகரணசுத்தி ஏற்பட்டு திருவருளின் துனே கிட்டும்.
"தோடுடைய செவியன்." என்று தொடங்கும்
* தேவாரப்பதிகத்தைப் பாராயணஞ் செய்யும் அடியார்க
- ஆளுக்குப் பழவினே நீங்குமென ஞானசம்பத்தரே கூறுகிருர் .
" அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கை யலர்மேய பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மான் இவன்றன்னே ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம்பந்தன் உரைசெய்த திருநெறியதமிழ் வல்லவர்தொல்விரீன திர்த லெளிதாமே "
அரிய நெறிகஃாக் கூறும் மறைகளில் வல்ல முனிவராகிய பிரயன் தாமரை மலருள்ள தடாகத்தையுடைய பிரமா புரத்தில் விரும்பியிருந்த முதல்வனுகிய சிவபெருமானிடம் ஒன்றுபட்ட மனத்துடனே சிந்தையைப் பதித்து ஞானசம் பந்தராலே அருளப்பட்ட சிவநெறியே செலுத்தும் இப்பதி கத்தைப் பாராயணஞ் செய்யவல்லவர் சஞ்சிதம், ஆகாமி யம், பிராரத்தசேடம் ஆகிய வினைகளே நுகரமாட்டார். பழவினை நீக்கமே இப்பதிகத்தின் பயனென அறிகிருேம்.
முதலில் திருஞானசம்பந்தசுவாமிகளுடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரீ திருவாய் மலர்ந்தருளிய தேவாரங் களேயும் நாம் படிப்பதால் ஏற்படும் நன்மைகளைப்பற்றி அறிதல்வேண்டும். சேக்கிழார் சுவாமிகள் அவரைப்பற்றிக் கூறுவதைக் கவனிப்போம்.
" வேதநெறி தழைந்தோங்க மிருசவத் துறைவிளங்கப்
பூதபரம் பரைபொலியப் புணிநவாப் மலர்ந்தழுத சிதவள வயற்பு: லித் திருஞான சம்பந்தம் பாதமலர் தக்கோண்டு திருத்தோண்டு பர nпшпф **

அநுபவவியல் - நாயன்மார் கீாட்டியவழி
வேதநெறியும் சைவநெறியும் தழைத்தோங்கும் பொருட்டு மூன்று வயதிலே சிவஞானத்தின் இன்னமுதம் குழைத்து ஊட்டப்பட்ட திருவாயிலிருந்து தேவார இன்னபு:தத்தை வாரி வழங்கிர்ை. ‘சிவனடியே சிந்திக்குந் திருப்பெருகு சிவ ஞானம்" மனர்ந்த 'தவமுதல்வர் சம்பந்தீர்" உலகின்கள் லுள்ள ஆன்மாக்கள் கப்பரம்பொருட்டுப் பல பதிகிங் கஃப் .ாபு ஒர்.
உபநயனம் நடைபெற்ற வேளேயின் அங்குள்ள அந்தி ாைர்க்கு ஐந்தெழுத்தின் பெருமையை ஐயந்திரிபற உப தேசித்தார்.
* மந்திர நான்மறை பாகி வானவர்
சிந்தையுள் நின்றவர் தம்மை யாள்வன செந்தழ லோம்பிய செம்மை வேதியர்க் கந்தியுள் மந்திரம் அஞ்செ பூத்துமே '
மறையிற் கூறும் அசீனத்தும் ஐந்தெழுத்தில் அடங்கும். காஃவ, நண்பகல், மாஃப் ஆகிய சந்திவேளே மூன்றிலும் செந்நெறி நிற்கும் வேதியர் செபிக்கத்தக்க மந்திரம் கிரு ஐந்தெழுத்தாகும்.
இனி, நமச்சிவாயப் பதிகத்திலே சிவ லு  ைடய நாமத்தை அன்பு கொண்ட மனத்துடனே உருகிக் கண் rைர் உகுத்து ஒதுவாரை அது நன்னெறியிற் செலுத்தும் எல்லாத் நீங்குகளும் நீங்கும். பாசங்களாற் கட்டுண்ட வர்தாமும் சிவன் நாமத்தை உச்சரிப்பதால் வேண்டிய ரெ ஸ் வங்க &ள ப் பெறுவர். ஆ  ைகி யா ன் அவரு டைய தேவாரங்கள் மும்மல நோயின் வலிமையைக் குறைத்து இன்பமளிக்கும் திருமருந்தாகும். எல்லா சிவாக் களும் அடங்கிப் பிறவிக்கடலேக் கடந்து செல்வதற்கு அவ ருடைய தேவாரம் மரக்கலம் போன்றதாகும் திருப்பட் டிச்சரத்திருப்பதிகத்தில்
வேடதிலே கொண்டவரை விடுநெறி காட்டி வினே வீடுமவரே "

Page 143
d முப்பொருள் உண்மை விளக்கம்
தமது வே. க்திற்கேற்ப ஒழுக்கத்தில் நிற்கும் அடியவரை அடைதற்குரிய முத்தி மார்க்கத்தையும் அறிவித்து அவர் களது கன்மங்கள் தாமே யொழியும்படி செய்ய வல்லவ ராபர் என் தே இதன் பொருளாம்.
பலம் நீங்கிய உயிரின் அறிவில் நிறையுணர்வு (வியா பகtரு விம்) உண்டாக்குவது அருட்சத்தியாகும், வியாக ஞா:மே உயிர்கள் அடையும் பேரின் பத்துக்கு உருவம் . அப்பேரின்ப நுகர்ச்சியே சிவானந்தது பூதி எனப்படும். அள் வநுபூதியே திருடிே எனப்படும். பான், எனது என்னும் இருள் 35 கப்பற்றும் அற்று சிவானந்தத்தை நுகரும் அன்பரே அடி பார் எனப்படுவர். அடியார் வேறு ஆண்டவன் வேறு அன் வர். rண், நீர், ,ே கால், விண், ஞாயிறு, திங்கன், :ேள்ளித்தலேவன் (சிவபூசாதுரத்திரன், 'சிவஞானி) ான் லும் காட்டும் இறைவனின் சி டிசெங்களாகும், "நிறைபெற்ற
அடியிார்கள் நெஞ்சுளானே' இன்றும்
" அகனமர்ந்த வன்பினரா பாறுபணிக செற்
றைம்புலனு மடங்கிஞானம் l கலுடையோர் தம்முள்ளப் புண் டரிகத்
துள்ளிருக்கும் புரானர்கோயில் தகைைடநீர் மணித்தலத்துச் சங்குளவர்க்
கந்திகழச் சலிசத்திபுi மிகவுடைய புன்குமலர்ப் போரியட்
1ானாஞ்செட்பு மிழ'ையாமே
என்று ஞானசம்பந்தர் கூறுவதிலிருந்து உள்ளன்புடையவர் அருடைய இதயம் இறைவனின் இருப்பிடமாகும், அத் தகையோருக்கு நாளும் சோளும் நன்மை பயக்குமேயன்றித் துன்பம் விளக்கமாட்டா என்ற உண்மையை அவர் திரு வாய் மலர்ந்தருளிய கோளறு பதிகம்" இறைவனடியாருக் குப் புலப்படுத்துகிறது "வேயுறு தோழிபங்கன்." என்று தொடங்கும் இப்பதிகத்தில் ஒவ்வொரு பாடலிலும் இறை வின் "எதுளமே புகுந்த அதனுல்" கோள்கள் எல்லாம் அடி

அநுபவவியல் - நாயன்மார் கீாட்டியவழி
யவருக்கு மிகவும் நல்லன என்று கூறுகிருர், அவர் பாண்டி நாட்டில் இருந்த காலத்தில் சமணர்கள் செய்த வஞ்சனே கள் அச்சபனரையே துன்புறுத்தினதல்லாது அவருக்குத் துன்பம் ஏற்படவில்லை. இறைவனருள் உடன் நின்று வெற்றிபெறத் துனே செய்தது. இன்றும் முன்னிஃனயின் பயணுகத் துன்பத்தை அனுபவிக்குங்கால் எவரேனுங் கோளாறு பதிகத்தை நிதமும் பாராயணஞ் செய்து ஆறு தன் அடைகின்றனர். ஆறுள் சிவன்+பார்களுக்குத் தீக் கிரகங்களும் தன் 'ப் படிக்கும்.
நாம் அடியவர்களாவதற்குக் கடைப்பிடித்தொழுக வேண்டியன சிலவுள. முதலாவது வேட்கை, வெகுளி, மயக்கம், இவறுதல் (உலோபம்) செருக்கு பகை என் ஒனும் ஆறும் அழிதல் வேண்டும். இரண்டாவது புலனடக் கம் வேண்டும் "நன்புலன் ஒன்றி தாதவென்றரற்றி" என்று மணிவாசகர் கூறுவதைக் கன்னிக்கலாம். சிவகுநா னம் கிடைக்கவேண்டுமென்று இறைவனே இறைஞ்சி நிற்க வேண்டும், மன உருக்கம் வேண்டும். அத்தோடு பாடி ஆடிப் பரவவேண்டும்.
" பாடி பாடிப் பரவுவாருள்ளத்
தாடி சோற்றுத் துறைசென்ற டைவோமே '
இi வாறு கிருச்சோற்றுத்துறையிற் பாபு ய திருப்பதிகத் திற் சுறுகிருர், தியானிப்பவர் உள்ளத்தில் ஆடுபவன் என்பதே இதன் கருத்தாகும். இவ்விதம் ஞானவழிகளேக் கடைப்பிடித்தொழுகுவோருக்கு முதல் பின் மீண்டுளிருந்து டிடர் வீசி பேரின் த்தை விஃப்பான் என்பது உண்மை.
பாண்டியனுடைய வெப்பு நோயைத் தீர்ப்பதற்காக அவனுக்குத் திருநீற43ரிந்து திருநீற்றுப்பதிசுத்தைப் பாடித் திருநீற்றின் பெருமையை உலா மக்கள் உய்யும் பொருட்டு எடுத்துக்காட்டினூர், "பேணியணிபவர்க்கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு" என்றும் புண்ணியர் பூசும் வெண்னிறு" என்றும் கூறுவதிலிருந்து திருநீற்றை அணிவதால் நாம் பெற்றுக்கொள்ளக்கூடிய நன்மை யா தே ல் ப ை 点
அறிகிருேம்,

Page 144
46 முப்பொருள் உண்மை விளக்கம்
இனி உலகம் உய்யும்பொருட்டு நாவுக்கரசர் காட்டிய வழி யாதென ஆராய்வோம். நாவுக்கரசர் இளமைப் பரு வத்திலே கல்வியிலே அதிக சிறப்புற்று உலகநிலையாமையை உணர்ந்து மெய்யறிவு பெற்றுத் துறவு நெறியை நாடினர். பிற சமய நுண் பொருள்களை அறிய விரும்பிச் சமண நூல் களைக் கற்று அச்சமயத்தைச் சார்ந்தார். அவரது சகோ தரியாகிய திலகவதியார் தம்பியாரின் மாற்றத்தால் மனம் வருந்தி சிவபெருமானிடம் முறையிட அவர் திருவுளம் இரங்கி நாவுக்கரசருக்குச் சூலை நோயைக் கொடுத்து அவரை ஆட் கொண்டார். அவர் 'கூற்ருயினவாறு. ’ என்று தொடங் கும் திருப்பதிகத்தைப் பாடி அக்கொடிய நோய் நீங்கப் பெற்ருர். ‘ஏற்ரு யடிக்கே இரவும் பகலும் பிரியாது வணங் குவனெப்பொழுதும் 'நெஞ்சம் உமக்கே இடமாக வைத் தேன் நினையாதொருபோதும் இருந்தறியேன் 'நலந்தீங்கி லுமுனை மறந்தறியேன்” என்றெல்லாம் சிவபெருமானிடத் துத் தமக்குண்டான அன்பால் மனமுருகி செந்தமிழ்ப் பாமாலை பாடினர். அவர் திருத்தாண்டகம், திருவிருத்தம் திருநேரிசை, திருக்குறுந்தொகை முதலிய பல பாவினங் களைப் பாடி நாம் உய்யும்வண்ணம் எமக்குத் தந்தருளினர். இவர் பாடிய தாண்டகத்தைப்போல் யாருமே பாடவில்லை. அதனுல் இவர் 'தாண்டகவேந்தர்" என்றழைக்கப்படுவார். அவர் 81 வயது வரையும் உலகத்தில் இருக்காவிடின் அமு தஞ் சுரக்குஞ் செந்தமிழ்ப் பாமாலைகளை எப்படி நாம் பெற்றுக்கொள்ள முடியும்? 'நாவுக்கரசர்" என்று சிவபெரு மானல் அருளப்பெற்ற திருப்பெயரைத் தாங்கிய சொல் வேந்தர் சவபெருமான் திருவடிக்கே பதித்த நெஞ்சின ராய் அவர் மீது 'திருவே என் செல்வமே." போன்ற இனிமையான தேவார க்களைப் பாடித் தந்துள்ளார்.
அப்பர் சுவாமிகள் சமணரால் விளைவிக்கப்பட்ட துன் பங்களினின்று நீங்கியமை, சிவனடியாரைப் பகைவரோ அல்லது பழவினையோ தாக்கித் துன்பப்படுத்த முடியாதென் பதற்கு எடுத்துக் காட்டாகும். சொற்றுணை வேதியன் " * மாசில் வீனையும் " என்று தொடங்கும் தேவாரப் பதிகங் களைப் பாடியவுடன் கல்லோடு கட்டப்பட்டுக் கடலிலே

அநுபவவியல் -- a நாயன்மார் á有 ட்டியவழி 247
விடப்பட்ட பரமனடியார் மிதக்கவும். நீற்றறை அவருக் குக் குளிர்மையாகவும் காணப்பட்டன. என்றும் அத்திருப் பதிகங்களை அன்புடன் படிக்கும் அடியாருக்குத் துன்பம் அணுகமாட்டாது. இக்கருத்துப் பற்றியே நாவுக்கரசர்,
அல்லல் என்செயும் அருவினை என்செயும் தொல்லை வல்வினைத் தொந்தந்தான் என்செயும் தில்ல மாநகர்ச் சிற்றம் பலவஞர்க்
கெல்லை யில்லதோ ரடிமைபூண் டேனுக்கே
என்று கூறுகிருர்,
"என்கடன் பணி செய்து கிடப்பதே" என்பதை அவர் தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். பயனைக் கருதாது பணிசெய்ய வேண்டுமென்னும் கருத்துத் தெளி வாகிறது, அவருடைய இத்திருவாக்கு மக்கள் அனைவருக் கும் ஒரு வழிகாட்டியாக அமையவேண்டும். அவர் உழ வாரத் தொண்டை உடல் தளர்ந்த காலத்தும் செய்தார். ஆண்டான் அடிமை என்ற தாசமார்க்கம் மூலம் தன் அனுபவங்களாலே இறைவனைத் தரிசித்துப் பேரின்பப் பெரு வாழ்வை எய்தினுர். அவர் காட்டிய தாசமார்க்கவழி எவருக்கும் பயனை அளிக்கும்.
ஈசன், கனிபோன்று இனிமையுடையவர். யாவரும் அவரை வணங்கிப் பயனடையலாம்.
* மனிதர் காளிங்கே வம்மொன்று சொல்லுகேன்
கணிதந் தாற்கனி யுண்ணவும் வல்லிரே புனிதன் பொற்கழல் ஈசனெ னுங்கனி இனிது சாலவும் ஏசற் றவர்கட்கே ’’
என்று கவாமிகள் கூறுகின்ருர், இவ்விதம் பழம்போன்ற சுவையை அளிக்கும் ஈசனடியை இடையரு அன்போடு தொழுவோர் இம்மை மறுமைப்பயனை அடைவது திண் சணம். இதுபற்றியே,

Page 145
248 முப்பொருள் உண்மை விளக்கம்
** இம்மை வானவர் செல்வம் விளைத்திடும் அம்மை யேற்பிற வித்துயர் நீத்திடும் எம்மை யாளும் இடைமரு தன்கழல் செம்மை யேதொழு வார்வினை சிந்துமே ??
என்று கூறுவதிலிருந்து இறைவனை நினைந்து வழிபடுவோ ருக்கு அவர்கள் வினைகள் தீர்ந்து இப்பிறவிக்குரிய செல் வத்தையும் மறுமையில் பிறவித்துன்பத்தினின்றும் நீங்குவர்.
இறைவன் எங்குள்ளான் என்ற கேள்விக்கு * நீருமாய்த் தீயுமாகி நிலனுமாய் விசும்பு மாகி
ஏருடைக் கதிர்களாகி இமையவர் இறைஞ்ச நின்று ஆய்வதற் கரிய ராகி அங்கங்கே ஆடு கின்ற தேவர்க்கும் தேவ ராவர் திருப்புக லூர ஞரே **
என்னும் விடை கிடைக்கிறது. அதுவுமல்லாது அவரது இன்னெரு திருத்தாண்டகம் கூறுவதையுங் கவனிப்போம்.
" நற்பதத்தார் நற்பதமே ஞான மூர்த்தி
நலஞ்சுடரே நால்வேதத் தப்பால் நின்ற
சொற்பதத்தார் சொற்பதமுங் கடந்து நின்ற
சொலற்கரிய சூலமாய் இதுவுன் தன்மை
நிற்பதொத்து நிலையிலா நெஞ்சந் தன்னுள் நிலாவாத புலாலுடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யானுன்னே விடுவேன் அல்லேன்
கனகமா மணிநிறத்தெங் கடவுளானே ‘
இறைவன் சிறந்த ஞானிகள் சென்றடையும் பேருக இருக் கின்றன். வேதத் தினுச்சியினையுங் கடந்து சொல்லுதற் கரிய சோதியாய் உள்ளவன். ஆனல் நிலையில்லாத நெஞ் சத்திடை புலாலுடம்பைத் தன் கருணையினல் புகுந்து இருக்கின்ற பரமசிவனைத் தாம் பற்றிக்கொண்டதாக அவர் கூறுகிருர்,

அநுபவவியல் - நாயன்மார் காட்டியவழி ”纷4姆
சிந்தைக்கும் சொல்லுக்கும் அப்பாற்பட்ட இறைவனே திருவருளின் துணைக்கொண்டே காணமுடியும் என்பதை
" .அவனருளே கண்ஞகக் காணினல்லாற்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ னுதே "
என்ற தேவாரத்தின் மூலம் விளக்கிக் காட்டுகிருர், உள் ளத்தினுள்ளே இருக்கின்ற அவ்வீசனை பக்தியுடன் தியானஞ் செய்தால் திருவருளின் துணைகொண்டு அறிய முடியுமென்று சுவாமிகள் அருளியிருக்கின்ருர்,
' உடம்பெனும் மனேயகத்துள் உள்ளமே தகளி யாக
மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனும் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை கழலடி காணலாமே '
என்ற தேவாரத்தில் தியானத்தின் தன்மை கூறப்பட்டிருக் கிறது. இனிப் பேரின்பப் பேருகிய சிவகதியை நாம் அடை வதற்கு நாம் செய்யவேண்டியவைகளை உழவு பற்றிய உரு வகம் மூலம் விளக்கிக் காட்டுகிருர்,
** மெய்ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப் பொய்ம்மையாம் களேயை வாங்கிப்
பொறை யெனும்நீ ரைப்பாய்ச்சி தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி யிட்டுச் செம்மையுள் நிற்ப ராகிற்
சிவகதி விளயு மன்றே '
இனி ஞான சாதனங்களின் முதற்படியாகிய சரியையின் பயனை விளக்கி மக்கள் திருத்தொண்டில் ஈடுபட வழிகாட் டுகின்றர்.
(pg 33

Page 146
50 பூப்பொருள் உண்மை விளக்கம்
" விளக்கிருர் பெற்ற இன்பம் மெழுக்கினுற் பதிற்றி யாகும்
துளக்கில் நன் மலர்தொடுத்தால் தூயளிண்னேற லாகும் விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந் நெறி தானமாகும் அளப்பில தேஞ் சொன்குர்க் கடிகள்தாம் அருளு மாறே "
இங்கு சரியை நெறியில் நிற்போர் அடையும் பலன் இன்ன வென்பதை அறியலாம். சைவசமயத் நின் மேன்மையை எடுத்தியம்/மிடத்து
" விரிவிலா அறிவினுர்கள் லேறுெரு சமயத் செய்து
எரிவினுற் சொன்னு ரேனும் எம்பிராற் கேற்றதாகும் "
என்று அடிகள் சொல்லுகின்பர். எச் சமயத்தையும் தன் T அடக்கிக்கொள்ளும் சைவசமயத்தின் நிறைந்திات الإنت தன்மை இங்கு கூறப்படுகிறது. இங்கு இவரது சமயப் பொது நோக்கு புலனுகிறது. சிவனடியார்கள் எக் குலத்த வரெனினும் நாம் வணங்கத்தக்க தகுதி நடையரென்றும் அதறல் சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பா ற்பட்டவ ரென்ற கருத்தைத் தேவாரம் மூலம் விளக்குகின்ருர்,
* அங்கமெலாங் குறைந்தழுரு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலேயரேனுங் ஆங்ாகவார் கிடைக்கரந்தார்க் இன்ப ராகில்
அவர்கண்டீர் நாம் வணங்கும் கடவு எ ாரே "
அவருடைய சிசிப்பற் றுச் சிறந்ததொன்றுகும். உலர்ப் பாசத்திலும் கட்டுண்டு பிறந்திரிந்துழி இாமி பனிதருக்கு ஓர் அறிவுரை கூறுகிறர்.
11 மனேவிதாய் தந்தை மக்கள் மற்றுள் சுற்ற மென்னும் வினயிலே விழுந்த ழுந்தி வேதனேக்கிடமா காதே களே புயா கடல்சூழ் நாண்க மன்னுடா ரோனத் தானே
நுனயுமா வல்லி ராகில் உய்யலாம் நெஞ்சி ரே "
இறைவனே வழிபடுவதாலேயே பாசங்களே நீக்கி பேரின்ப
வாழ்வை எய்தலாமென்று தெளிவாகக் கூறப்பட்டிருப்ப தைக் கவனிக்கலாம்
 

அநுபவவியல் - நாயன்மார் காட்டியவழி 25i
திருநீறணித்து சிவநாமத்தையும் ஒதுவோருக்கு எவ் வகைத் துன்பத்தினின்றும் பாதுகாப்பு உண்டு. அருநோய் கள் கெடலென்ன ரணியாராகில்" என்றும் பண்ணிைய உலகினிற் பயின்ற பாவத்தை, நண்ணி நின்றறுப்பது நமச்சிவாயவே" என்று கூறுவதிலிருந்தும் திருநீறு சிவநாமம் ஆகிய இரண்டும் மனிதருக்கு வல்வினே நீங்குவதற்கு 3y 9, து:ளயாய் இருக்குமென்பது தெளிவு.
" பாடங்கல மாகவுன் நாமத்
தெழுத்தஞ்சென் நாவிற் கொண்டேன் இடைக்கல மல்லேன் எழுபிறப்
பும் உனக் காட்செய்கின்றேன் துண்டக்கினும் போகேன் தொழுது
வனங்கித்து நீறணிந்துன் அடைக்கலங் கண்டாய் அளிதில்லச்
சிற்றம்பலத் தரனே " என்று நாவுக்கரசர் கூறுவதே மனதில் பதிப்போம்.
இனித் தம்பிரான் தோழராகிய சுந்தரமூர்த்தி நாயணு ரைப்பற்றி அறியவேண்டும். சுந்தரருடைய தேவாரம் ஏழாந் இருமுறையாகும். சுந்தரர் அவதாரஞ் செய்ததைப் பற்றிக் சுறும்போது சேக்கிழார் 'ததகன்றுலக முய்யத் திருஅவ தாரஞ் செய்தார்" என்று கூறுகின்ருர்,
மால், அயன் தேடியும் காணமுடியாத "ஐயர் தாம் வெளியே ஆடுகின்றுரை' கந்தரர் கண்ட காட்ச சித்தள் மையது என்று சேக் கிழார் சொல்வதை உற்று நோக் குவோம்.
" ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பருங் சரணா ங்கள் நான்கும் பிந்தையே ஆகக் குணம் ஒரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த எல்லேயில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள் தினத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார் '

Page 147
252 முப்பொருள் உண்மை விள å ab
இவ்விதங் கண்டு ஆனந்த சாகரத்தில் மூழ்கிய சுந்தரர் "மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம் ஆம்? என்று கண்ணில் அருவி பாயப் பதிகம் பாடினர்.மனிதப் பிறவி எடுத்தபொழுதே அம்பலவன் அடிக்கமலத்தைத் தரிசித்து பிறவிப்பயனை அடைய முயலவேண்டுமென்பது தெளிவு.
சுந்தரமூர்த்தி நாயனர் பரவையாரோடு கூடி வாழ்ந் திருக்குங்காலத்தில் ஒருநாள் திருக்கோவிலை அடைந்தபோது சிவனடியார்கள் அங்கு இருந்ததைக் கண்டு அவர்களிலே பக்தியுண்டாகி "இவர்க்கியான் அடியேனுகப் பண்ணுநாள் எந்நாள்" என்ற நினைவுடன் கோயிலினுட் புகுந்தார். இவ ருடைய உளக்குறிப்பை அறிந்த ஈசன் அவருக்குக் காட்சி கொடுத்து அவ்வடியார்களை வணங்கி அவர்கள் மேற் பதிகம் பாடும்படி அருளிஞர். அதற்கு அவர் அடியார்களுடைய வரலாறு இன்னதென்றும் அவர்கள் தன்மை இப்படிப்பட்ட தென்றும் தெரியச்செய்ய வேண்டுமெனப் பிரார்த்திக்க அவர் களுடைய வழித்தொண்டை அவர் அறியும்படி செய்தார்.
' பெருமையால் தம்மை ஒப்பார் Gustsoso எம்மைப் பெற்றர் ஒருமையால் உலகை வெல்வார் ஊன்மேல் ஒன்றும் இல்லார் அருமையாம் நிலையில் நின்றர் அன்பினுல் இன்பம் ஆர்வார் இருமையுங் கடந்து நின்றர் இவரைநீ அடைவாய் '
என்று கூறி 'தில்லைவாழந்தணர்தம் மடியார்க்கு மடியேன்" என்று முதலடியை எடுத்துக் கொடுத்தார். இறைவன் அரு ளினலே திருத்தொண்டத் தொகை என்ற திருப்பதிகத்தைப் பாடியருளினர். திருத்தொண்டர்கள் யாரென்பதை நாம் அறியத்தக்கதாகத் திருத்தொண்டத் தொகை என்ற திருப் பதிகத்தைப் பாடியருளினர்.
சிவபெருமானுடைய திருவடி. பூமியிற் தீண்டும்படி கந்தரர்க்குமுன் அவர் தோன்றி பரவையிடம் தூது சென் ரூர். மெய்யடியார் விரும்பும் எவற்றுக்கும் துணை புரிய ஈசன் சித்தமாய் இருக்கிருர் என்பது உண்மை, சுந்தர மூர்த்தி நாயனர்மாட்டு அவருக்கு இருந்த அன்பின் கார ஈரமாக குண்டையூர்க் கிழார் என்பவர் பரவையார் வீட்

அநுபவவியல் - நாயன்மார் காட்டியவழி 253
டுக்கு நெல். பருப்பு ஆகியனவற்றை நெடுங்காலமாக அனுப்பி வந்தார். மழை வளங் குன்றிய ஒரு காலத்திலே போதிய நெல் விளையாமையால் வழக்கம்போல் சுந்தரர்க்கு நெல் அனுப்ப இயலாமை கண்டு மனம் வருந்திச் சிவபெரு மானை நினைந்து போசனமில்லாமல் ஓரிரவு கழித்தார் சிவ பெருமான் சொப்பனத்திலே தோன்றி "சுந்தரனுக்கு அனுப் பும்படி உனக்கு நெல்லுத் தந்தோம்' என்று சொல்லி யருளினர். மறுநாட்காலை ஆகாயம் அளவக்கூடிய தெற் குவியல் காணப்பட்டது, நிகழ்ந்தவற்றை அறிந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் அவ்விடஞ் சென்று அது மனிதரால் எடுத்துச் செல்ல முடியாத அளவாகையால் சிவபெருமாளே வணங்கி
** நீள நினேந்தடியே னுமை நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண்மடவா ளவள் வாடி வருந்தாமே கோவிலி யெம்பெருமான் குண்டையூர்ச்சிலநெல்லுப்பெற்றேன் ஆளிலே யெம்பெருமான் அவை யட்டித் தரப்பணியே **
என்று தொடங்குந் திருப்பதிகத்தைப் பாடினர், அன்றிரவு அந்நெல் முழுவதும் சிவபெருமான் திருவருளினலே பரவை யார் வீடு சேர்ந்தது. "அடியார்க்கெளியன் சிற்றம் பலவன் என்பதற்கிணங்கச் சிவபெருமான் மெய்யடியனும் தோழனு மாகிய சுந்தரருக்கு வேண்டியதை உடனே செய்தருளினூர். சிவபெருமான் அவருடைய தோழர் என்பதை அவருடைய தேவார மூலமாய் அறிகிருேம்.
4 ஏழிசையாய் இசைப்பயணுய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந் துரிசுகளுக்குடனுகி மாழைஒண்கண் பரவையைத்தந்தாண்டானே மதியில்லா ஏழையேன் பிரிந்திருக்கேன் என்னுரூர் இறைவனேயே "
அடியவர்கள் நினைக்கும்போதெல்லாம் ஈசன் உடன் நின்று அருள்புரிகிருன். வினையை ஒழித்துத் திருவடி சேர்ப்பிப்பவு றும் அவனேயாவன்.

Page 148
254 முப்பொருள் உண்மை விளக்கம்
" எங்கேனும் இருந்துன் அடியேன் உனநினைந்தால்
அங்கே வந்தென்ணுெடும் உடனுகி நின்றருளி இங்கே என்வினையை அறுத்திட்டெனையாளும் கங்கா நாயகனே கழிப்பாலை மேயானே ??
என்ற தேவாரம் சிவனடியாருக்கு இறைவன் தோன்குத் துணையாய் இருக்கின்முன் என்பதைக் காட்டுகிறது.
சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்பதையும் அவரே பேரின்பப் பெருவாழ்வு அளிக்க வல்லாரென்பதையும் அவ ருடைய தேவாரங்கள் மூலம் அறியலாம். அதனுற் சைவ சமயத்தின் உண்மைகளும் வற்புறுத்தப்படுகின்றன. அவர் சிறந்த சமயாசாரியராவர். சுந்தரமூர்த்தி நாயனுர் முதலை வாயிலிருந்து பிள்ளையை மீட்ட அற்புதத்தை அறிந்த சேர மான் பெருமானுயனர் 'திருவாரூரிற் சைவசிகாமணியார் எழுந்தருளி வருகின்ருர் உலகமெல்லாம் உய்யும்பொருட் டுத் திருவவதாரஞ் செய்தருளிய பரமாசாரியர் எழுந்தருளி வருகின்ருர்' என்று நகரமெங்கும் முரசறைவித்தார். சைவம் மேலோங்கச் செய்தார் என்பது வெளிப்படை
இறைவனுடைய திருநாமத்தை ஒதுவோருக்கு இடர் தீரும்; பற்று நீங்கும்; பிறவித்துயர் விலகும்; பேரின்ப வாழ்வு கிட்டும். இறைவனின் திருப்பாதத்தைவிட வேருெரு பற்றும் மனத்தில் இடம்பெறவில்லையென்றும், இனிப் பிற வாத தன்மையை எய்தியதாகவும், ஆதனுல் "நமசிவாய" என்று சொல்லத் தான் மறந்தாலும் நா அதனை என்றும் உச்சரிக்க வேண்டுமென விரும்புகிருர் இக் கருத்தைக் கொண்ட தேவாரம்
மற்றுப் பற்றெனக்கின்றிநின்திருப்பாதமேமனம் 17 வித்தேன் பெற்றலும் பிறந்தேன்இனிப்பிறவாத தன்மைவந் தெய்தினேன் கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடி நற்ற வாஉனை நான்மறக்கினும் சொல்லும் நாநமச்சி வாயவே" என்பதாகும். பழவினைகள் தாக்குவதற்கு முன்பாக பஞ்
சாட்சரத்தை ஒதிச் சிந்தையை இறைவனிடத்துச் செலுத்தி இறைவனிடம் சேர்வது எக்காலமோ என விஞவுர் தேவாரம்

அனுபவவியல் - நாயன்மார் காட்டியவழி
அந்தியும் நண்பகலும் அஞ்சும் தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்திரு வாரூர்புக் கெந்தை பிரானுரை என்றுகொல் எய்துவதே"
என்பதாகும். பஞ்சாட்சரத்தை ஓதுவதனல் ஆன்மாக்கள் இறைவன் அருளேப் பெறும் என்பதை அவருடைய தேவா ரம் மூலம் அறிகிருேம். -
இறைவன் தன்மையைப்பற்றிக் கூறும் தேவாரம் சிறந்த தொன்ருகும்
* நாதனே நாதமிகுத் தோசையதானவன
ஞான விளக்கொளியாம் ஊன்உயிரைப்பயிரை மாதனை மேதகுதன் பத்தர் மனத்துறையும்
பற்றுவிடாதவனேக் குற்றமில் கொள்கையனைத் தூதனே என்றனேயாள் தோழனே நாயகனத்
தாழ்மகரக்குழையுந் தோடும் அணிந்ததிருக் காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே '
பத்தர் மனத்துறையும் பற்றுவிடாதவனை" என்று சுந்தரர் கூறுவதும் "பத்தி வலேயிற் படுவோன் கண்டாய்" என்று மணிவாசகர் கூறுவதும் ஒத்த கருத்துடையனவாகும்
இனி, சன்மார்க்க நெறியைப் பற்றிநின்ற மாணிக்க வாசக கவாமிகஃாப் பற்றி அறிதல் வேண்டும். அவர் இள மையிலேயே கல்வி கற்று பல நூல்களையும் ஆராய்ந்து பேர றிஞராய் விளங்கினர். அவர் சிவபக்தியுடையவர். அவர் முதன்மந்திரிப் பதவியிலிருந்தபோதிலும் உலகப் பொருள் களில் அவருக்கு நாட்டஞ் செல்லவில்லை. கடவுளிடத்தி லேயே தனது அன்பைச் செலுத்தினர். திருவருளைப் பெறு வதற்குக் குருவருள் வேண்டுமென அறிந்து ஒரு நற்குரு வைத் தேடினர்.

Page 149
56 முப்பொருள் உண்மை விளக்கம்
இன்பமும் துன்பமும் ஒருநிகரானவை என நினைத்து வெறுப்புத் தோன்றுங்கால் இருவினையொப்பு ஏற்படும். இருவினையொப்பு ஏற்பட்ட விடத்து அறியாமையாகிய ஆணவ மலம் நீங்கும் நிலை உண்டாகும். அது மலபரிபாகம் எனப்படும். அவ்விருநிலைகளும் எய்தியக்கால் உயிரின் அறி வின்கண்ணே திருவருள் பதிதல் ஏற்படும். அதுவே சத்தி நிபாதம் எனப்படும். அது நால்வகைப்படும். உலகப் பய னேக் கருதாது வீடுபேற்றை விரும்பி நின்று தஞ்செயலற்று இருத்தல் முதற்படியாகும் இறைவனை அடையும் வழி யாதென ஆராய்ந்து அவ்வழி நின்று முன்னேற முயற்சி செய்தல் இரண்டாம் படியாகும் அகத்தினல் முற்றும் உலகப் பாசத்தை நீக்கி அருள்வழி நின்று புறத்தே உலக வாழ்க்கையை நடத்துதல் மூன்மும் படியாகும். அகத்தும் புறத்தும் துறவு நிலையுற்று ஞானுசிரியனைத் தேடித் திரியும் நிலை நான்காம் படி எனலாம். மணிவாசகப் பெருமான் நான்காம் படி எய்தியிருந்தமையால் சற்குருவைத் தேடி நின்று வருந்தினர்.
* நிருத்தனே நிமலா நீற்றனே நெற்றிக்
கண்ணனே விண்ணுளோர் பிரானே ஒருத்தனே உன்னே யோலமிட் டலறி
யுலகெலாந் தேடியுங் காணேன் '
என்று கூறுவதிலிருந்து அவர் உலக வாழ்க்கையில் தாமரை இ&லயின் நீர்போல நின்று அதனைப் புறத்தே தழுவி அகத்தே துறவுபூண்டிருந்தார் என்பது வெளிப்படை திருப்பெருந் துறையில் திருவடித் தீட்சை பெற்றபின் தற்போதம் இழந்த நிலே உண்டாகித் தன்ஃன ஆட்கொண்ட அருட்குரவன. அன்றி வேறென்றையும் நினையாதவராகையால் 'எனை நான் என்பதறியேன், பகல் இராவாவது மறியேன்" என்று உயிருண்ணிப் பத்திற் கூறுவதைக் கவனிக்கலாம். உலகப் பாசத்தை நீக்கி இறைவனருளே விரும்பி நிற்போர் நிலை இன்ன தன்மையது என்பதைச் சித்தியார் கூறுவதைக் கல னிப்போம்.

அனுபவவியல்-நாயன்மார் காட்டியவழி es?
* ஞாலமதின் ஞானநிட்டை யுடையோ ருக்கு
நன்மையொடு தீமையிலே நாடுவதொன் றில்லே சிலமில. தவமில்ல. விரதமொடாச் சிரமச்
செயலில்லே தியானமில்லே சித்தமல மில்லை கோலமிலை புலனில்லே கரண மில்லே
குணமில்ல குறியில்லே குலமுமில்ல பாலருடன் உன்மத்தர் பிசாசர் குணம் மருவிப்
பாடலிஞெ டாடலிவை பயின்றிடினும் பபில்வார்" அகத்தும் புறத்தும் துறவு பூண்டு நிட்டையிலிருப்பவர்த ளுடைய தன்ம்ையை இப்பாடல் விளக்குகின்றது.
அமுதத்தை உண்ண விரும்பிய ஒருவருக்கு அதில் ஒரு துளியைக் கொடுத்த பின்னர் அதற்கு மேல் கொடுக்க மறுத்ததுபோல, இறைவன் அவருக்குக் காட்சியளித்து சிதத மலமறுத்துத் திருவடி நல்கி உடன் நின்ற அடியாரை அங்கு தோன்றிய சோதியுட் புகச் செய்து மணிவாசகப் பெருமா னைத் தில்லைக்கு வரும்படி பணித்தமைக்குக் காரனந் தெரி யாது தவித்துத் தாங்க முடியாத நிலை அவருக்கு ஏற்பட்
-Silo
** செழுக்கமலத் திரளனநின் சேவடிசேர்ந்தமைந்த
பழுத்தமனத் தடிய்ருடன் போயினர்யான் பாவியேன் புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா அழுக்குமணத் தடியே னுடையாயுன் னடைக்கலமே " என்று அடைக்கலப்பத்தில் கூறுவதைக் கவனிக்கலாம். இறைவன் அவ்விதம் உலகத்தில் சிலகாலம் அவரை விட் டமையாலன்ருே, ' வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்தேன் ஊன்கலந்து வுயிர்கலந்து வுமட்டாம லினிப்பதுவே **
எனக் கூறப்படும் திருவாசகத்தை உலகம் பெற்றது,
(p. 3

Page 150
38 முப்பொருள் உண்மை விளக்கம்
உலகத்தில் எல்லாமாய் எல்லாவற்றேடுங் கலந்து உள் நின்று உணர்த்துகிருர் எம் ஈசன்.
*" வாணுகி மண்ணுகி வளியாகி-ஒளியாகி
ஊணுகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய் கோணுகி யானெனதென்றவரவரைக் கூத்தாட்டு வாணுகி நின்றயை என்சொல்லி வாழ்த்துவனே " என்ற திருவாசகத்தின் மூலம் இறைவனே எல்லாமாய் இருக்கின்ருன் என்பது விளங்கும். இன்னுெரு திருவாசகம் இறைவன் ஆன்மாவோடு ஒன்ருய் நிற்கின்ருன் என்பதை விளக்குகின்றது.
" கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம்நீ தேறும் வகைநீதிகைப்புநீ தீமை நன்மை முழுதுநீ வேறேர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மையுன்னே விரித்
துரைக்கில் தேறும் வகையென் சிவலோகா திகைத்தால் தேற்ற வேண் டாவோ இவ்வாறு எல்லாச் சக்தியையும் அவனே நமக்கு அளிக்கிள் முன் என்பதை அறிந்து நாம் அவனிடத்துச் சரண்புகுந்து உய்திபெறும்நிலை உண்டாகும்.
பத்தி மார்க்கம் மூலம் சிவன் திருவடியைச் சேரலாம் என்பதைத் திருவாசக மூலம் அறிகிருேம்,
*" சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க
சிந்தையுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்தி வலையிற் படுவோன் காண்க "
என்று கூறுவதிலிருந்தும்
"மொட்டரு மலர் பறித் திறைஞ்சிப்
பத்தியாய் நிணந்து பரவுவார் தமக்கும் பரகதி கொடுத்தருள் செய்யும்
சித்தரேசா . .

அநுபவவியல் - நாயன்மார் காட்டியவழி 259
என்பதிலிருந்தும் சிவபெருமானிடத்து அளவுகிடந்த பக்தி செலுத்துபவர்கள் அவன் திருவருளைப் பெற்று உய்தியடை வர் என்பது தெளிவு "அன்பினுலடியேன் ஆவியோடாக்கை யானந்தமாய்க் கசிந்துருக, என்பாமல்லா இன்னருள் தந் தாப்" என்றும் 'வினையேன் அழுதாலுன்னைப் பெறலாமே" என்று கூறுவதிலிருந்தும் அவன்மீதுள்ள காதலால் கசிந் துருகும் பக்தர்களுடைய கண்களினின்று நீர்த் துளிகள் விழுமோனுல் அவன் கருணை கிட்டும் என்று திருவாசகத் தின் மூலம் அறிகின்ருேம்.
மணிவாசகப் பெருமான் தில்லையில், புத்தரை வாதில் வென்று ஊமைப்பெண்ணைப் பேசச்செய்து சைவசமயத்தின் பெருமையை விளங்கச் செய்தார். தூல பஞ்சாட்சரத்தை ஒதுவோர் உலகப் பயனைப் பெறுவார். இறைவன் திருவடி யினை அடைய விரும்புவோர் சூக்கும பஞ்சாட்சரத்தை ஒதுவர். குருவருளினுல் அதைப் பெற்றுக்கொள்ளுதலே தகுந்த முறையாகும். மணிவாசகப் பெருமானுக்குச் சிவ பெருமானே குருவாய் எழுந்தருளி வந்து உபதேசித்தமை பால், அவர்
" நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம வெனப்பெற்றேன் தேனுய்இன் ன்முதமுமாய்த் தித்திக்குஞ் சிவபெருமான் தானேவத் தென்னுள்ளம் புகுந்தடியேற் கருள்செய்தான் ஊருைம் உயிர்வாழ்க்கை ஒறுந்தன்றே வேறுத்திடவே "
என்று உள்ளுருகிப் பாடுகின்ருர்,
குக்கும பஞ்சாட்சரத்தை ஒதுவோர் பெறும் பயனத் திருவாசக மூலம் அறிகின்ருேம். ஆன்மாக்களின் மலங்கள் நீங்கப்பெறும் நிலையில் மறைப்புச்சத்தி அருட்சத்தியாய் மாறி இறைவன் திருவடியைச் சேர்ப்பிக்கும். அப்பொழுது சிவத்துக்கும் அருட்சத்திக்குமிடையில் ஆன்மா காணப்படும், அதுவே அதிகுக்கும பஞ்சாட்சரமாகும். இக்கருத்தை

Page 151
பூங்ாேருள் உண்மை dafar da lä
"1டையாளுன்ற னடுவிருக்கும் உடையாள் நடுவுள் நீயிருத்தி
அடியே னடுவுளிருவிரு மிருப் பதாரு லடியேன்டன் அடியார் நடுவு விருக்கும் அருஃப்புரிபால்பொன் னம்பலத்தெம் முடியா முதலே என்கருத்து முடியும் வண்னம் முன்னின்றே" என்ர திருவாசகம் விளக்குகிறது.
" கண்ணு வியானுங் கண்டேன் காண்க புவளியிற் சேவடி நீண்டினன் நாண்க சிவனென் பானுந் தேறினான் இாண்க அவனேனே பாட்கொண்டருளினன் காண்க "
என்று திருவண்டப்டgதியில் கூறப்படுகிறது. மணிவாசகப் பெருமான் முன் சினே தோன்றி ஆட்கொண்டார் என் பதை அறிகிறுேம். ஆகையால் பக்குவ ஆன்ம ாக்களுக்கு இறைவன் அருள்புரிவான் என்பது தெளிவு.

戟 22, இறைவனின் காட்சி கடவுள் எங்கிருக்கின்ருர்? அவரைக் காணமுடியுமா என்ற பல கேள்விகள் எழ இடமுண்டு. மணிவாசகப் பெருமான் கூறுவதை உற்று நோக்குவோம். " பூதங்கள் தோறும்நின் ருபெனி எல்லாற்
போக்லேன் வரவில னெனநிளேப் புலவோர் தேங்கள் பாடுத வாடுதலல்லாற்
கே.ட்டறியோம் உனக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்திருப் பெருந்துறை மன்னு சிந்தளேக் கும்அரி பாயெங்கள் முன்வந் தேதங்களறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
எம்பெரு மான்பள்ளி எழுந்தருளாயே " இதிலே ' கேட்டறியோம் உனேக் கண்டறிவாரை " என்று சொல்வதிவிருந்து சிவபெருமானே நேரிற் பார்த்தறிந்தவர் கஃன நாங்கள் கேட்டறியவில்ஃயே என்பதாக அடிகள் கூறுகின்றர். அவர் ஒன்று யும், வேறு யும் உடனுயும் உயிர்களுடன் இருக்கின்றர் என்றும் அடிரி உள்ள மதில் இருப்பதை அறிய முடி:ென முற்றுத் துறந்த ஞானிகள் கூறுகின்றனர். காரைக் கால் அர்னார்
" பிரானவன் நோக்கும் பெருநெறியே பேணி
பிரானவன்தன் பேரருளே வேண்டிப் - பிரானவஃகா பங்குற்ரன் என்பீர்கள் என்போல்வா சிந்தையினும் இங்குற்றுன் காண்பா'க் கெவிது ' என்று சாள்வதிலிருந்தும் நாசிக்காசர் ' உள்ளத்தி ஒனுள்ளே நின்ற கருவே வான் கற்பசுடே' என்று சொல் வதிவிருத்தும் பட் :த்தபுகள்
" ஆரூரன் இங்கி ஆக்க அவ்வூர்த் திருநாளேன்று
ஒருள்கள் தோறும் உளறுவிர்-நேே உளக்குறிப்பைக் காணுறு ஒாமர்காண் நீளிர் விளக்கிருக்கத் தீத்தேடுவி "

Page 152
ᏭᏮᏪ அநுபவவியல் - இறைவனின் காட்சி
என்று கூறுவதிலிருந்தும் எங்களுடன் இறைவன் இருப் பதை அறிந்துகொள்ள முடியும். ஆளுல் அவ்விதம் அறிந்துகொள்ள முடியாதிருப்பதற்குரிய இடர்ப்பாடுகளே wg.prn Gairb.
உடல், உள்ளம், உணர்ச்சி, ஆசை ஆகியன எத்துணை உதவியாயும் தடையாயும் நம்முன்னேற்றத்திற்கு இருக் கின்றன என்பதைப்பற்றிச் சிந்திக்கவேண்டும் ஆன்மா தன்னுடைய கன்மத்தை அனுபவித்து ஈற்றில் இறைவ ண்டியைச் சேர்வதற்காகவே இவ்வுடம்பு இறைவனுற் கொடுக்கப்பட்டிருக்கிறது. இத்தேகம் பஞ்சபூதங்களா லாகியது. அது அழியும் தன்மையை உடையது. கொடுக் கப்பட்ட கால இறுதி வந்தவுடன் ஆன்மா உடம்பை விட்டு நீங்க உடம்பு செயலற்றுக் கிடக்கும். ஆனல், ஆன்மா குடிகொள்ளும் வீடாகிய'இவ்வுடம்பு நன்னிலையில் இருக்க வேண்டும் ஒரு வீட்டிலே கறையான், பாம்பு ஆகியன குடிகொள்ளாது தடுப்பதற்கு வேண்டிய காலத் திலே திருத்தஞ் செய்து அதை நன்னிலையில் வைத்திருக் கின்றேம், அதுபோன்று குடியிருப்போனுகிய ஆன்மாவுக் கும் இவ்வுடம்பு நன்னிலையிலிருக்க வேண்டும். தேவையான அளவு நல்லுணவு, ஆறுதல், சுகாதாரம் முதலியவைகள் மூலம் தேகத்தின் சுகம் கெடாது வைத்திருக்க வேண்டும். அளவுகடந்து உணவு உண்ணுதல் பாவம். நோய் அணு காமற் தடுப்பதற்கும், வேலைசெய்வதற்கும் தேகநிலை சாதகமாய் இருத்தல்போதுமானது. தேக பலத்தைக் கொண்டு பிறருக்கு இடர்செய்தல் அதர்மமான வழியா கும். தேக பலத்தினுல் உந்தப்பட்டுத் துன்மார்க்க வழி யில் நடப்பவனும் , தனக்குக் கெடுதியை உண்டாக்குகின் முன். ஆன்மா கன்மத்தை அனுபவிப்பதற்கு உடம்பு நன்னிலையில் இருக்கவேண்டும். மனுஷ் உடம்பை எடுத்த ஆன்மா அப்பிறவியிலேயே இறைவன் திருவடி சேரவேண் டும். இக்கருத்துப்பற்றியே நாவுக்கரசரும்,
* இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவதேஇந்த மாநிலத்தே"

அநுபவவியல் இைற்வனின் காட்சி 263
என்று திருவாய் மலர்ந்தருளினர். ஆகையால் ஆன்ம ஈடேற்றமடைவதற்கு மனிதப் பிறவியெடுத்த இவ்வுடம்பு நன்னிலையிலிருக்க வேண்டும். நோயும் இடர் செய்யும். நோயற்ற செளக்கியமுள்ள நல்ல உடம்பே இறைவனே வழிபட உதவியாயிருக்கும்.
இனி உள்ளத்தின் தன்மையை உற்றுநோக்குவோம்.
நாம் விழிப்பாய் இருக்கின்ற நேரத்தில் மனம் ஒரு நிலை யில் இருக்கமாட்டாது. பொறிவழியே செல்கின்ற புலன் கள் புற உலகிற் காணப்படும் காட்சிகளையும் பொருட் களையும் மனதிற்கு இழுத்துச் செல்கின்றன. கண்ணுக்குப் புலப்படும் ஒரு காட்சிப்பொருள் மனதிற் பட்டவுடன் அதில் விருப்பு அல்லது வெறுப்பு உண்டாகச் செய்கிறது. அழகிய பூ ஒன்றைக் கண்டு அதிலே விருப்பங் கொண்ட மனம் அதைப் பெற்றுக்கொள்ள முயற்சிக் கிறது. ஆகையால் விழிப்ப்ான நிலையில் LD607 LDirargy அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்று நிலைகஃா அ.ை கிறது - துயில் செய்யாத நேரத்தைவிட மற்றும் விழிப் பான நேரமெல்லாம் மனம் ஒரு நிலையில் நில்லாது ஒடிக் கொண்டே இருக்கிறது. இவ்விதமான நிலை மனிதருக்கு நன்மையா அல்லது தீமையா பயக்கிறது என்பதை ஆராய வேண்டும். விழிப்பான நேரமெல்லாம் ஒரு கொப்பி லிருந்து இன்னெரு கொப்புக்குப் பாய்ந்துகொண்டிருக்கும் குரங்குபோன்ற மனம் ஒரு விஷயத்திலிருந்து தொட்ர்ந்து பல விஷயங்களுக்கு எந்நேரத்திலும் சென்றுகொண் டிருப்பதால் ஒரு நூலை வாசித்து விளங்கவோ அல்லது ஓர் உபந்நியாசத்தைக் கேட்கவோ அல்லது சிறிது நேர மாகுதல் மனச்சாந்தியுடன் இருக்கவோ அல்லது இறை வனைப்பற்றிச் சிந்திக்கவோ எங்களால் முடியவில்லை. இதை விளக்கும் பாசுரம் ஒன்று கந்தர் அலங்காரத்திற் காணப்படுகிறது. - " ஒரவொட்டா ரொன்றை யுன்னவொட்டார் மலரிட்டுன்தாள்
சேரவொட்டா ரைவர் செய்வதன்யான் சென்று தேவருய்யச்
சேரநிட்ரேனைச் சூரனைக் காருடல் சோரிகக்கக்
கூரகட்டாசியிட்டோரிமைப் போதினிற் கொன்றவனே

Page 153
264 முப்பொருள் உண்மை விளக்கம்
தேவருய்யத் தக்கதாக ஒரு கணப்பொழுதில் சூரனைக் கொன்ற வேலாயுதனே 1 ஐந்து புலன்களும், உன்னுடைய பெருமையைப்பற்றி ஆராயவோ மலர் கொண்டு உனது திருவடியைச் சேரவோ விடாது தடுக்கின்றன. அடியேன் என்செய்வது என்று கூறவேண்டும். இதுவே இதனுடைய பொருளாம்,
" சிந்தையை அடக்கியே கம்மா இருக்கின்ற திற மரிது ' என்று தாயுமானவர் சொல்வதைக் கவனிக் கலாம். ஆசையால் ஒரு இடத்திலிருந்து தியானஞ் செய்யவோ சிந்திக்கவோ சிறிதுநேரம் தன்னும் இடங் கொடுக்காது இழுத்துச் செல்கின்ற மனத்தை எவ்வாறு அடக்கி எம் வசப்படுத்தலாம் என்பதைப்பற்றி அறிய வேண்டும். எக்காரியத்தில் எவருக்கு விருப்பமும் அக் கறையும் இருக்கின்றதோ அதிலே மனம் செல்லத் தக்க தாக அதை நாம் செலுத்திவிடல் சுலபம். நூல்களே வாசிப்பதில் ருசி உள்ளவருக்கு ஒரு நூலை வாசிப்பதிற் கஷ்டம் ஏற்படாது. ஒரு பேச்சாளன் நகைச்சுவையுட ஜம் தெளிவாகவும் பேசினல் கேட்போருடைய மனத் தைத் தன்னுடன் இழுத்துச் செல்லலாம். எத்தனேயோ மாணவர்கள் முன்னேற்றமடையாமலிருப்பதற்கு மனத்தை ஒருநிலைப்படுத்த இயலாமையே காரணமாகும். அலர்கள் வேறு விஷயங்களில் அக்கறை செலுத்தாமல் கல்வியிலேயே கூடிய கவனத்தைச் செலுத்தினுல் மனமானது கல்வி கற் கும் நேரத்தில் ஒரு நிலைப்படும். இறைவனை நினைந்து தியானம் செபம் கூட்டு வழிபாடு செய்வதற்கும் இறை வனிடத்துப் பேரன்புடையராய் இருப்பின் மனத்தை ஒரு வழிப்படுத்த முடியும், படிப்படியாக அதைப் பழகிக் கொள்ளவேண்டும், உலக விவகாரங்கள், தொல்லைகள் குறுக்கிட்டுத் தடைசெய்யாவண்ணம் மனத்தில் உறுதி கொண்டு இறைவழிபாடு செய்யவேண்டும். இயற்கையாக இம்மனம் ஒடித்திரிவதால் அவ்விதம் ஒடித்திரியும் மனம் யாதேனும் நன்மை அளிக்கிறதா என்று யோசிக்குமிடத்து அது பெரும் நன்மையையும் அளிக்கிறதென்று அறியத் தக்கதாக இருக்கிறது. ஒரு பெரும் நஷ்டத்தை அடைந்த

அநுபவவியல் - இறைவனின் காட்சி 265
ஒருவர் எந்நேரமும் அதைப்பற்றியே யோசிப்பதுண்டு. அதஞல் அவருடைய மனநிலையும் தேகநிலையும் அதிகம் பாதிக்கப்படுகிறது; மனத்திற்கு ஒடித்த ரியும் இயல்பு இல்லாவிட்டால் ஒரு விஷயத்தைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்து மனவருத்தம் அடையும் ஒருவனுக்குச் சித்தப் பிரமையும் ஏற்படக்கூடும்" ஆகையால் பல விஷயங் களிலும் மனம் ஒடிக்கொண்டிருப்பதால் துன்பம் கஷ்டங் களேப் பற்றித் தொடர்ந்து யோசிப்பதற்கு இடமில்லை.
எங்கள் எல்லோரிடமும் இருக்கின்ற இறைவனை நாங் கிள் காண்பதற்கு மன* , உணர்ச்சி ஆசைகள் எவ்வாறு தடையாய் இருக்கின்றனவென்றும் அத்தடைகளை எவ்வாறு நீக்கிக் கொள்ளலாமென்பதையும் சிறிது சிந்திக்க வ்ேண்டும். ஒரு மாடு வெளியில் உலாவும்போது புல்லை மேய்ந்து கொண்டே நிற்கும். அது ஒரு இடத்தில் ஆறிக் கிடந்தால் இரை மீட்டுக்கொண்டே இருக்கும். அதுபேஎன்று மன மானது புலன்கள் மூலம் வெளியுலகிலுள்ள காட்சிகளையும் விடயங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது ஒரு மனிதன் ஒரு இடத்தில் ஆறுதல் எடுக்கும் நோக்கத்துடன் படுத் திருந்தால் முன்கண்ட காட்சிகளெல்லாம் மனதிற்கு வந்து கொண்டேயிருக்கும். அதுபோல் பழைய ஞாபகங்களும் வந்து சேரும் கடலிலுள்ள அலை போன்று சிந்தனைசள் ஒன்றன்பின் ஒன்ருக வருதலால் உள்ளிருக்கின்ற இறை வனைக் கண்டு கொள்வதற்குத் தடையாய் இருக்கின்றன. நாம் மனஉறுதி கொண்டு மனத்தில் எழுகின்ற எண்ணங் களைச் சிறிது நேரமாகுதல் தடுத்து நிறுத்தப் பழகவேண் டும். அவ்வழியில் முயற்சி செய்வோர் கண்களை மூடி ஒரு இடத்திலிருந்து தியானஞ் செய்வ்ர். ஐந்து புலன்களுள்ளும் கண் மூலமே அதிகமான விஷயங்கள் மனத்திற்குச் செல் கின்றன. கட்புலனை நிறுத்தியவுடன் மனத்தை அலையவிடா மல் ஓரளவிற்குத் தடுக்கலாம். பழைய ஞாபகங்கள் சிந் தனைகள் வரவொட்டாமற் தடுப்பதால் மனத்தின் வேகங் குறையும் மனத்திஞல் வழிபடுவது சரியான வழிபாடல்ல, உள்ளிருக்கும் ஆத்மாவே வழிபாடு செய்யவேண்டும் எங் களுடனிருக்கும் இறைவன் அப்பொழுதுதான் காணமுடி
மு. 34

Page 154
ይ88 முப்பொருள் உண்மை விளக்கத்
யும். இவ்வழியில் நீ-க்துகொள்ளும் பக்தர்களின் உதவி யோடுதான் இச்சிாதனேயிலீடுபடுதல் நன்று. சுயமுயற்சி பானது இருட்டில் நின்று கொண்டு ஒரு வெளியிடத்திவி ரூக்கும் ஒரு பொருளேத் தேடித் திரிகின்ற ஒருவனுடைய முயற்சியை ஒக்கும்.
இனி உணர்ச்சிகள், ஆசைகள் நம்மை எவ்வாறு பாதிக் கின்றன என்பதை அறியவேண்டும். அன்பு, மகிழ்ச்சி. இரக்கம், துக்கம், கோபம், பொருமை. rயநலம் கர்வம், கொடுமை என்பன மனத்தில் இயற்கையாகத் தோன்றும் உண்ர்ச்சிகளாகும், இவைகளிற் சில மனத்திற்குச் சாந்தி சிரிப்பன. சில கலக்கத்தையும் அமைதிக் துறைவையும் உண்டுபண்ணும். எல்லா உயிர்கள் மீதும் அன்பும் இரக் கமும் உடையோன் இறைவனிடத்து அன்புடையவனுவான். பொருமை பெரும் கெடுதியை உண்டுபண்ணும் நெருப் புப் பற்றிய இடம் எவ்வாறு எரிந்து சாம்பராகிறதோ *தேபோன்று பொருமை குடிகொண்ட மனத்தையுடைய வனே அப்பொருமை பலவழியிலும் துன்பத்தைக் கொடுத்து *ற்றில் அழித்துபோகச் செய்யும். கோபமுடையோர் ஒரு கருமத்தையும் ஆராய்ந்து செய்யமாட்டார். பாவச் செயல் கிளேச் செய்வதற்கும் அது காரணமாகிறது. அடிக்கடி கோபம், பொருமை, கர்வம் ஆகிய குணங்கள் ஏற்பட இடங்கொடுப்போருடைய மனமும், தேகமும் அதிகம் பாதிக் *ப்படுகின்றவ. ஆகையால் மனம் சலனமடைய விடுவதால் உள்ளிருக்கும் இறைவனேக் கீாணமுடியாது. இதுபோன்றே மனத்திலே எழுகின்ற ஆசைகள் தன்மையையும் இமையை யும் செய்யக் காரணமாயிருக்கின்றன. புதிய விஷயங்க ளேக் கண்டு பிடிப்பதால் விஞ்ஞானிகள் உ லகத்திற்கு rjaä art (syri II ஆசைப்படுகின்றனர். ஒருவன் கள்வி பயின்று அறிவை வளர்க்கவேண்டுமென்று ஆசைப்படுகின் முன். இன்னுெருவன் நன்மையைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டுமென்று அவாவுறுகிமுன். இன்னுெருவன் ஆத்ம ஞானத்தை வளர்த்து ஈற்றில் இறைவன் திருவடி நீழலை WFடயளிரும்புகின்றன். இல் விதமா ஈகிரீசருடைய FFFF"

மீது-கிளியல் - இறைவனின் காடச் 晶**
நன்மையைப் பயக்கும். பிறருக்குத் தீமை செய்வதிலும், நல்ல காரியங்கள் முன்னேருது திடுப்பதிலும், பிறருடைய நிலம், பணம் முதலியவற்றை அபகரிப்பதிலும் ஆசை கொள்பவர்கள் இருக்கிறர்கள். இவ்வித உணர்ச்சிகளும் ஆசைகளும் உற்பத்தியாகும் இடம் மனம். ஆகையால் கல்வியறிவு. பெரியோர் சகவாசம், சமய அறிவு ஒான அறிவு ஆகியவை ஏற்படச் செய்வதால் மனத்தை அடக்கி நல்வழியில் செலுத்துதலே சன்மார்க்கம்ாகும். அதுவே இறைவனேக் காணத் துண் புரியும்.
எல்லா மனிதரும் ஒரே தன்மையுடையர் என்று நாம் விளங்கிக்கொள்ள முடியாது. மனிதரிலே மிருக் குணம், மனித குணம், தேவகுணம் என்பன உண்டு. எது மேலோங்கி நிற்கிறதோ அவனே இத்தன்மையவெனப் பிரித்து அது காட்டும். மனிதனிலே மறைந்திருக்குங் குரங்கஃனக் காண்" போ மாயின் மனிதர் எல்லோரையும் மனிதராகக் கணிக்க முடியாத நிஃ' ஏற்படும்.
மனிதரிலும் பறவையுண்டு விலங்குண்டு கல்லுண்டு மரமுண்டு மனிதரிலும் நீர்வாழுஞ் சாதியுண்டு அநேக குல மனிதருண்டு மனிதரிலும் மனிதருண்டு வானவரும் மனிதராய் ருேவதுண்டு மனிதரிலே பிறப்பறுக்க வந்ததே அருமையென வகுத்தார்
(முன்ஞேர் 1
என்று சிவவாக்கியர் பாடல் கூறுகின்றது. கொல், கனவு பொய் ஆகிய பாதகச் செயல்களுக்கு அஞ்சாதவர்கள் மிருகக்குன்னம் மேலோங்கியவர்களர் இரக்கம், அன்பு, கல்வியறிவு, பிறர்பொருள் நயவாமை, பொருமை கொள் ாாமை பிறருக்குத் துன்பஞ் செய்யாழை ஆகிய குணங்க ளேக் கடைப்பிடித்து நடப்பவர் ஜேவிர்குணமு.ையவரெ லைாம். எல்லா உயிர்மீதும் அன்பும் இறைவனிடத்துப் பக் நியும் எடுத்த பிறவியிலே திருவருட் பேற்றை விரும்பி நிற் போர் தேவ குணமுடையரென்பர். ஆகையால் தேவகுண் முவடயோருக்கும் 'ஜிவுகுணமுடையோருக்கும் இறைவ ஒனுடைய அணுக்கிரகம் அவரவர் திலேக்குத் தக்க திரி கீ க் கிடைக்கும்,

Page 155
முப்பொருள் உண்மை விளக்கம்
இப்படியன், இந் நிறத்தின், இவனிறைவன் என்றெழு திக் காட்டொளுதே' என்று கூறப்படும் சிவம் பரிபக்குவ மடைந்தோர்க்கு மனித உருவத்தில் குருவாக எழுந்தருள் யாரொது மெய்கண். சாஸ்திரங்கள் கூறுகின்றன.
"ஐம்புல வேடரீன யர்ந்தனே வளர்ந்தெனத்
தம் முதல் குருவு மாப் தவத்தினி லுனர்த்தவிட் டன்னிய மின்மயி ரைன்சுழல் செலுமே"
என்று சிவஞான போதம் எட்டாஞ் குத்திரத்திற் கூறப்படு கிறது உயிரானது முன்சென்மங்களிற் செய்த புண்ணியங் டிவிடி பது குறுக இதுவரையும் உள்நின்று உணர்த்திவந்த பரம் போடி இப்பொழுது குருவடிவங் கொண்டு எழுந்தருளி வந்து சிவதீக்கை செய்து இது வரையும் ஐம்பொறிகளா கிய வேடருக்குட்பட்டு மயங்கித் துன்பப்பட்டு வந்து மீது தன்னுடைய தன்மை இன்னதென அறிந்து அவ்வேடரை விட்டு நீங்கி முதல்வணுகிய சிவத்தோடு பிரிக்கமுடியாத தன்மையில் அம்முதல்வன் திருவடிகஃளச் சேரும் என்பதே இச் சூத்திரத்தின் பொருளாகும். மணிவாசகப் பெருமா துக்குத் திருப்பெருந்துறையில் குரு வடிவங் கொண்டு இறைவன் காட்சியளித்தார்.
'யாதுஞ் சுவடுபடாமல் ஐ பா ற டை சின்ற போது, காதன் மடப்பிடியோடுங் களிறு வருவான கண்டேன்" என நாவுக்கரசர் கூறுவதைக் கவனிக்கலாம். சுந்தரமூர்த்தி நாயனருச்கு வயோசிபபிாா மன வடிவிற் தோன்றி மனப் பந்துவில் தடுத்தாட்கொண்டதோடு நிருவேண் ைெகப் நூல் .ருக்குச் சென்று கோபிரிட்ை புகுத்து மின்நந்தார் ای தாசைப் பந்தருக்கு அம்மை அப்பராகக் காட்சியளித்தார்.
சிவானுபூதி பெற்ற சிவநெறிச் செல்வர்கள் தங்களூர் டைய உள்ளத்திலுள்ளே இறைவனக் காண்பர் 'தேடிக் ஆேடெரனுத் தேவனே என்னுளே தேடிக் கண்டுகொண் டேன்" என்று நாவுக்கரசர் கூறுவதைக் கவனிக்கலாம்: மணிவாசகப்பெருமான்

அநுபவவியல் - இறைவனின் காட்சி ፶፭፵
மாறிநின் றென்னே மயக்கிடும் வஞ்சப்
புலனேந்தின் வழியடைத் தழுதே
தளறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி в, кітятsuт зѣпят31һнђ தருளாய்
தேறலின் தெளிவே சிவபெரு மானே திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்க வியா:புங் கடந்த இன்பமே சுன்னுடை யன்பே "
என்று சுநுவதையும் உற்று நோக்குவோம். அறிவுமபங் கச்செய்யும் ஐம்புலன்களே அடைத்து ஞான அமுதமே சாந்து நிற்கும்படியாக என்னுள்ளத்தின் கண்னே தோன்று கின்ற ஒளியே, உன்னே நாள் காணும் படி வந்து அருள் செய்யவேண்டுமெனக் கேட்கின்ருர். அவ்விதம் உள்ளத் இன் கண்ணுள்ள ஒளியைக்கான தாம் எல்லோரும் முயற் சிக்க வேண்டும். ஈற்றில் நாவிக்கரசர் கூறுவதைக் கவனிப் டோம்,
* உடம்பெனும் மனேயசுத்துள் உள்ளமே தகளியாக மடம்படு உணர்நெட்பட்டி உயிரெTந் திரிமயக்கி இடம் படுஞானத்தியால் li f'GT, FI-iinr இருந்து நோக்கில் ஆடம்பர்களே தாதை கழலடி கானலாமே '
இத்தேவாரத்தில் திானத்தின் தன்மை சுரப்படுகிறது, உண்rைான தியானத்தின் அனுபilத்தால் இறைவ:
. , .

Page 156
23 பக்தி
உயிர்களிடத்து இயல்பாய் அமைந்துள்ள பெருங் குஜாங் களில் அன்பு சிறந்ததாகும், அவ் அன்பு நாளடைவில் பக்தியாய் மாநகின்றது. பெத்ருேர், குரு, தெய்வம் என் போர் மீது ஒருவன் செலுத்தும் அன்பு அவனே மேல்நி: அடையச் செய்கிறது. கண்ணுற் காணப்படும் தெய்வம் போன்றவரே பெற்ருேரா வர். அவர்கள் பிள்ஃrகள் மீது செலுத்தும் துன்பும் தியாகமும் பிள்ளேகள் அவர்களிடத் துப் பக்தியுடையவர்கrாக வாரத் துரேயாய் இருக்கின் நன. அறிவு வளர்வதற்கு உதவிசெய்யும் குருவிடத்து மாணவர்கள் என்றும் பக்தியுடையவர்களாகக் காரப்பட வேண்டும். ஆன்மா ஈடேற்றத்திற்கு என்றும் தோன்ருத் துணேயாய் இருக்கும் இறைவன்பது நாம் காட்டும் பக்தியே தஃ:பிறந்ததெனலாம்.
ஆன்மாக்களிடத்து இயல்பாகக் காணப்படும் அன்பு உயிருக்கு ஒளிய: ப் நிற்கும் சிற்சக்தி எனப்படும் , இள் அன்பை இறைவரிடத்துச் செஆத்தினுள் அது பக்தி க"ை படும். ஆஜல் பின் அன்பை உலக ஆசைகளில் செலுத்தி விட்டால் நாம் உலகபந்தித்துக்கு ஆளாகி விடுகிருேம். துன்பத்துக்கும் பிறப்புக்கும் ஆசையே காரணமாகும், பண் டாத ம87ம் லேக ஆசைகஜரக்கு அடிமையாகிறது. பன் பட்ட மனம் இறைஐைக்த அடிமையாகிறது, உலகவாழ்க் கையில் இதை நாம் கவனிக்கலாம்.
பேரானந்தப்பெருவாழ்வை விரும்பிநிற்கும் உயிரிகள் தெய்வத்திலேயே கங்சீ நுட்பட பக்தியைச் செஆரத்த விரும்பி நிற்பர். ஒருவன் மலரிட்டு இறைவனே வளங்குவான்; தோத்திரங்க"ேப்பாடிப் பணிவான் இயமம், நியமம் என்ற ஒழுக்க நெறியிரிங் நு வழிபடுபவர்கள் உண்டு அல்லா உயிர்கள் மீதும் அன்புகிாட்டி அகிம்சா வாதத்தை மேற் கொண்டு ஒழருபவர்கள் உண்டு. சிவாலய வழிபாடு, சிவ தொண்டரை உபசரித்தல் ஆகியவற்றில் தினமும் ஈடுபட்டு வாழ்பவர்களும் உண்டு. இவ்வித ஒழுக்கங்களினின்று வழு

அநுபவவியல் - பக்தி EY
வாது நடந்துகொள்வது இறைவன் மீதுள்ள பக்திக்கு சிறிகுறியாகும். அறுபத்துமூன்று நாயன்மார்களும் சிவ பெருமான் மீது அவர்சளுக்குள்ள அளவுகடந்த பக்தியின் மூலமே இரண்டறக்கலந்தனர். ஒருவன் பக்தியுடையவருக ஒழுகிவரத் தவறினுள் அவன் பிறந்திறந்து உழல நேரிடும்.
"பிரபஞ்சமென்னுஞ் சேற்றைக் கறிய வழிவிட்டவா" என்று கூறும் அருணகிரிநாதர் அருளிய
"பக்திபால் புராணுவப் பலகாலும் பற்றியே மாதிாப் புகழ்பாபு முத்தணு மாறென்னேப் பெருவாழ்வில் முத்தியே சேர்வதற் கருள்வாயே
என்ற திருப்புகழ் முத்திப்பேறு எய்த வேண்டின் முருக லுடைய புகழைப்படிப் பக்திசெய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறது முத்தியை அடைவது சீவன் முத்தருக்கே உரிய பேருகும். திருவருள் ஆன்மாளிற் படியும் அந்தி: இன்றரை :கனடய புகழை இடையgது பாடிப் பணிபவர்க்குக் கிடைக் நம் இதுவன் மீது பத்தி செலுத்துபவர்க்குப் பரகதி கிடைக்கும் என்ற உண்மை நிருவாசகத்தின் மூலம் புலப் படுகிறது.
"முத்தனே முதல்வா முக்களு முனிவ:
Gır'ıt'L'ı மலப்பறித் நிறைஞ்வி பக்தியாய் நினேந்து பரவுவாப் தமக்குப்
பரகநி கொடுத்தருள் செப்புஞ் சித்தனே செல்வத் நிருப்பேருந் துறையில்
செழுமலர்க் குருந்தமே விபவிப் அத்தனே அடியே ரூதரித் தழைத்தால்
அதெந்துவே என்றரு ளாயே"
பக்தியுடன் அர்ச்சித்துத் தொழுப3ர்க்குச் சிவபதம் அாரித்து இறைவன் அருளேப் பாலிச கின்றன் என்பதம் பwபு பவர்கள் இாைஞ்சி ஒழிபட்டால் அபயம் சிரிப்பார்

Page 157
முப்பொருள் உண்பை விளக்கம்
என்பதையும் அறிகின்ருேம் உலகப்பற்றை நீக்குவதற்கு இறைபக்தி ஒன்றே தாஃணயாகும். "ஆசைக்கயிற்றிலாடும் பம்பரம்' என்று உலகமாற்கரின் நிசீலயைப் பட்டினத் தடிகள் அழகாகச் சொல்லுகின்ருர். கொடுக்கப்பட்ட விசையானது குறையுமனவும் பம்பரம் ஆடிக்கொண்டே நிற்பதுபேர ல ஆசையானது ஆருவரின் பினந்துள்:ே புகுந்துவிட்டால் அதைப் பெற்றுக்கொள்ளுமனவும் மனமானது அதிபர் றிருக்கும். உபாய நி ஃ பி ' ஆன் று இறைவன்மீது பக்தி
செலுத்துபவர்கருக்கும் " வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாப் " என்பதற்கிணங்க கேட்பவற்றைக் கடல்புள் கொடுக்கின் ஓர், மயக்க அறிவுடைய மாந்தர்
உலகப் பொருள்கள் யாவும் இன்பதுன்பங்களே மாறிமாறிக் கொடுக்கும் என்பதைச் சிந்திய7 து மேலும்மேலும் அள் விதப் பொருள்கஃயே விரும்புகின்றனர் ஆளுல் பேரின் பத்தை நல்கும் திருவருளே இறைஞ்சி நிற்பவர்கள் மிகக் குறைவு. இதுபற்றியே பட்டினத்தடிகள்
" போன்ன நினேந்து வெருவாகத் தேடுவர் பூஷ்ையன்னுள்
தன் நிகோந்து வெகுவாய் உருகுவர் தாரணிையில் உன்னே நிடைத்திங் குணப்பூவி பாத உலுத்தரெனலாம்
என்ன இருந்துகண் டாய்இறை வாகச்சி யேரம் பனே.
என்று உலக மாந்தரின் உண்:Ltயான மனநிஃபை எடுத் தியம்புகின்றர். ஆணுல் உண்மை நிலையில் நின்று அவ னருளே விருப்புவோர் உலகத்தில் ஒரு சிலராவர் மணிவாச கப்பெரும. வின் " மானே புன்னருள் பெறுநாள் என்றென்றே வருந்துவேன்" என்று கூறுவது நோக்கற்பானது. ஆசை யால் பக்திசெய்து நிற்பதும் அவரவர் பக்குவநிலக்கு ஏற்று தாகும் பாவஞ் செய்தோரும் மனங்கசிந்துருகி அழுதால் இறைவனுடைய கருனே கிடைக்கும் " என்பெலாம் நெக் குடைய. ரோமரு சிலிர்ப்ப உடலளசு மனம் அழலின் மெழு காய் இடையறு துருக வருமழைபோலிரங்கியே இருவிழிகள் நீரிறைப்ப" என்று தாயுமானசுவாமிகள் கூறுவதை நாம் து துளிக்க ஆேண்டும்.

சிதுபவன்யங் - பு 2.
நித்திய பேரானந்தத்தைப் பெறுவதற்குப் பக்கி பார்க் கம் சிறந்த ஒரு வழியாக விளங்குகிறது. பு:த்திலே தோன்றுகின்ற சந்தேக விபரீதமயக்கங்கள் ஆகிய அலகள் இறைவனுடைய இன்பக்கடலில் மூழ்குவதலே தெளிவு அடையும் இதுபற்றியே அருணகிரியார்
* பத்தித் துறைபிழிந் தாநந்த வாரி படிவதணுல்
புத்தித் தரங்கந் தெளிவதென் முேபொங்கு hெங்குருதி மேத்திக் குறிகொள்ள வெஞ்சூ ரனவிட்ட சுட்டிடர்லே குத்தித் தரங்கொண் டமராவதிகொண்ட தொற்றவனே "
என்று கூறுகின் ஈர். பக்திவழியக் கடைப்பிடித் தொழு பிறல் இன் பக்கடனில் மூழ்கலாம். பிறவியின் நோக்சத்தை /ாம் அடைய அது "தவியாயிருக்கின்றது. பக்தி செப்வு தாலேயே ஆன்மாக்களுக்கு இறைவன் பேரின் பத் த அளிக்கின்ரூன்.
சமயகுரவர்கள் இறைவன் மீது அன்பும் பக்திசம் உடையவராக என்றும் கானப்பட்டார். அவர்கள் நிஃனக் தம்போதெல்லாம் அருஃப் பாவித்துக் கொண்டிருந்தார். சுந்தரர் தேவாரத்தின் மூலம் இறைவன்மீது அவரு க் கு இருந்த பக்தியும் அன்பும் எத்தன்மையதென அறியலாம். "எங்கே னும்இருந்துன் அபேன் உனேநினந்தால்
அங்கே வந்தேன்னுெடும் உடனுகி நின்றருளி இங்கே என்வினைய அறுத்திட் டெனேயாளும்
t
கங்கா நாயகனே கழிப்பாலே மேயானே - பவனுகிய சுந்தரருக்குத் தம்பிரான் தோழஜகக் காsyப் பட்டார். மனம் Tெ க்குக்கு அப்பாற்பட்ட திரைன்
பக்திசெய்யும் அடியவர்களுக்கு அகப்படுவாங் என்பதை
" சொற்பதங்கடந்த தோல்லோன் காண்க
சித்தமுஞ் செல்லாச் சேட்சியன் காண்க பத்திவலேபிற் படுவோன் காண்க " மு. 32

Page 158
24 மூப்பொருள் உண்மை விளக்கம்
எனற மாணிக்கவாசகர் திருவாக்கியிருந்து அறியலாம். மீன், ஆமை முதலியன வீசப்பட்ட வ0ே களிற் தாமேவந்து சிக்குண்டு இருக்கும். அதனுல் அவை வலேஞனுக்குச் சுலப மாசு அகப்படுகின்றன. " இப்படியன், இந்நிறத்தன். இவ் வண்னத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ஜகே " என்று சொல்லப்படுகின்ற ஈசன் பத்தியாகிய வலே யொன்றிலேயே அகப்படுகிருண். காமம், வெகுளி, மயக்கம் ஆகிய அகக்குற்றங்கஃாயும் புறப்பற்றுக்களேயும் நீக்கி இறைவன்பால் பக்தி செலுத்த வல்லவர்களுடைய அகத் திலே இறைவன் தோன்றுவான். பக்குவநிவேயினின்று பக்தி செலுத்துபவர்களுக்கு இகபரசுகம் கிடைப்பது திண்னம். பக்தன் அழுதால் உடனே அருஃாப் பாவிப்பான் " காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி" என்று சம்பந்தரும் "நெஞ் சக்கன நல் நெகிழ்ந்துருக தஞ்சத்தருள் சண்முகலுக்கு" என்று அருணகிரியார் கூறுவதையுங் கவனிக்கலாம்
கல்வியறிவு. சமய அறிவு, தியானம், யோகம் ஆகிய வற்றைப் பயின்று கொள்ளாமல் ஒருவன் இறைவனிடத் துத் தஞ்சம் புகுந்து தன்மூலாவது ஒன்றுமில்ஃ' என்பதை Tர்த்து இறை3:ளிடத்துத் தொடர்ந்து பக்தி செலுத்து வணுகில் சு:ை க்கு இறைவனருள் கிட்டும். மூட பக்தி என்று துஞ்சரி அறிவைக்கொண்டு செலுத்தும் பக்தி என் மூலுஞ் சரி, மனந்தளராத பக்தி' நம்பிக்கையும் உடை பாருக்கு இறைவன் துனே பாய் இருக்கின்றன். அவ்வித பக்தியுடையோர் தம்முடைய வாழ்க்கையில் அவ்வுண் பையை அறியக்கூடும். பக்தி செய்யவல்லார் பெற்றுக் கொள் எக்கூடிய நன்னைய யோகசுவாமிகள் திருப்பாடல் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம்.
" பத்திசெய்து பந்தத்தை நீக்கினேன் பக்தி செய்து பரமனக் கண்டேன் பக்திசேய்யும் பாக்கிபம் பேற்றேன் பக்திக் கடலி' பந்திருந்தோே'

து நடபள்ளியஸ் - பக்தி
எங்க்ஃாப் பிடித்திருக்கும் வினேயானது பக்தியினுலே நீங்கும் அளவுகடந்த பக்தியினலே பரமனயுங் காணலாம். அவ எருளாலே அவன்தாள் வனங்கி என்றதற்கினங்கப் பக்தி செய்யக்கூடிா பாக்கியத்தைாம் அவனே நல்கவேண்டும். பக்தியானது ஆழமற்ற நீரையுடைய தடாகம் அல்லது ஆறு வான்.சிங்க்: ' வர்க்கப்படாது : 'fiள் கீதுக்கே வானாேகிக் சுரப்பட்டிருக்கிறது. பீடர்ேதான் முற்gசு மூழ்கலாம். ஆகையால் பக்தியாவிய க - வி வே ாழ்க முடிந்தோருக்கு முத்தி கிட்டும், என்பதை விளக்கும் அவருடைய இன்ஞெரு திருப்பாடல் மூலம் 3.5L G.I.T.
சிவபக்திபூாலே சிந்தை குவிந்தது சிவபக்திலே சிந்தை தெளிந்தது
. . . . விவபக்திடாலே சிந்ாத இறந்த,
சிவபத்தியாலே சிவன் முக்திடே'
சத்தைகய ஒடுங்கச் செய்வதும் பிங் ஸ்ட்ர் தெளிiன். பச் செய்வதும் சிந்தை தன் சே1ற்றுப் டோ தெற்கும். சீனி' 1றக்தி நி3லயை அடைவதற்கும் சிவ3ரிடத்துச் செய்யும் டக் தியே துனேயாக இருக்கின்றதென்பதை இப்பாடலின் மூலம் அறியலாம்.
பக்தி செய்ய அருஃாப் ரிடாவிலும் இறைவனுவன். பக்கி பினுல்தாமடையும் பயனர் அவனே நல்கின்றன். பலவித Tகப் பெறும் சித்தியும் அவனேயாகும். சித்தர்களாய் விளங்குகின்றவர்களுக்கு அவ்வல்லமையைக் கொடுக்கின்றவ ஆதும் பக்குவ நிலேயெய்தியவர்களுக்கு முத்தியும், அம்முத்திக் குரிய முதல்வலும் அவனேயாவான். உலக உபாயங்களே விட்டு நீங்குதற்குரிய புத்தியை அளிப்பவ:றும் இறைவணு வன். ஆதலால் தன்னுற் செய்யக்கூடியது உலகத்தில் யாதே ஆறும் ஒன்று உளதோவொரத் தாயுமான சுவாமிகள் இறை வ&னக் கேட்கின்ரூர். இதுவே இப்பொருளே எடுத்தியம்பும் அருட்பாவாகும்.

Page 159
E!?፥ኛ ஆழப்பொருள் உள்ளடி விளக்கிம்
'பத்திந் பத்திக்கான பலனுநீ பலவாச் சொல்லும் சித்திந் சித்தர்சித்தித் திறமுநீ திறமார் மோன புத்திநீ முத்திக்கான முதலுநீ முதன்மையாள புத்திரீ பெனக்கொன் றுண்டோ பூரனைந்த வாழ்வே' லகத்திலே மனிதன் பிறந்து இறத்துபோஃதை நாம் நித் தியம் கண்டும் பிறப்பதற்கு ஆ3ாாகி இறக்கின்றுேம் இந் நிஃயைத் தவிர்த்துப் போன நீ தப் பெரு வாழ்வை அடை வதற்கு இசுரவுன் என்றும் து: யாப் இருக்கின்றன். எங் சு:ஆக்டிய அறிவு, இச்சை, செயல்கஃன அநித்திய யாகிய பTAப் பொருள்களில் செல்லவிடாது நித்தியமானதும் *பிருக்கு டில் நும் துனே பாபும் இருக்கின்ற இறைவன்மீது li jiġi செலுத்தி ஒழிக் வேண்டும்.
'பக்தியை எனக்கருளி, முத்திLை பளித்துவவர் பச்சை மயிலுற்று வரவேணும்"
என்பதற்கினங்க முத்திநிஃ அடைவதற்குரிய பக்தியை அ ஆதரவேண்டு:ெனப் பிரார்த்திப்போமாக,
-la „a-

24. இயற்கை தரும் அறிவு
நாம் வசிக்கும் உலகம் நிதமும் பல காட்சிகளே அளிக் கின்றது. மலேகள், காடுகள் ஆறுகள், கடல், வானம் கிராமங்கள் ஆகியன இயற்கை அளிக்கும் வனப்பாகும். மனுஷனுடைய முயற்சியினுல் நகரங்கள் பட்டணங்கள் தோன்றுகின்றன இயற்கை, செயற்கை ஆகிய இரண்டும் பல்வகைப்பட்ட அறிவை நமக்குத் தருகின்றன.
ஒரு வீதி வழியே செல்லும்போது இருமருங்கும் வெயில் மனr, பணி ஆகியவற்றிற் தோய்ந்து கொண்டும் வருடக் கணக்காக நிலத்திருக்கும் மரங்களேக் காண்கினருேம். நாம் நடந்து செல்லும் வழிகளிலுள்ள டல்லானது பாதங் களால் மிதிக்கப்படுகிறது. பாரவண்டிகஃன இழுத்துச்செல் லும் மாடுகள் வெயிலில் கண்ப்புடன் செல்கின்றன. தொழிலாளி வெயிலில் வேர்வை சாதிக் கஷ்டப்பட்டு வேலே செய்கின்றன் முடவன். குருடன், ராமை நோயாளி, ஏழை, வபோதிபன் வெயிலில் மழையில் தோய்ந்தும் மற் றவர்களிடம் இரந்து பணத்தைப் பெறுகிருன், வேறுசிலர் காலநிலைக்குத் தகுந்த குடை, செருப்பு முதலிய பாதுகாப் புகளுடன் சிலர் போட்டார் ரதத்தில் சொக்கியமாகச் செல்கின்றன்ர். சிலர் தேவைக்கு மேலான பொருள், பனம், உனவு நிடையவராய் நேரத்தை எவ்விதம் கபூரிப்பதென்று தெரியாது "ஃ"க்கின்றன்ர். சிலர் தம்மிடமுள்ள பொருள் போகாதென்று நினைத்துப் பேரவா கொண்டு நிம்மதியின்றி நிற்கின்றனர்:
பறவைகள் ஆகாயத்தில் இஷ்டப்படி பறந்து திரிசின் றன. ரத்தில் ஈடு"ஃக் கட்பு காற்று, மிழை, வெயில் பனி ஆகிய கிா 1 நிவேகளுக்கு அஞ்சிாது அங்கு வாழ்கின் றது. காட்டு கிருகங்களுள் சிங்கம், புலி, கரடி போன்ற மூர்க்கான மிருகங்களும், மான், ரை போன்ற சாது பாரத மிரு+ங்களும் உண்டு வீடுகளில் ஆடு, மாடு, குதிரை, பூண், நாய் போன்ற மிருகங்கரேயும் நிதமும் காண்கின் ஜேம், அவைகள் பாவும் பகலில் உணவை உண்டு இரவில் உறங்கிக் காலத்தை ஈழிக்கின்றன.

Page 160
4.JPurYJ) 4h B. **ra L. de kar:
இயற்கை அளிக்கும் வன விலங்குகளேயோ, வீட்டு மிருகங்கள், பறவைகஃயோ அல்லது எவ்வித இயற்கைச் சத்தியையோ அடக்கி ஆளும் ஆற்றல் மனிதனுக்கே உண்டு. மனிதருக்குள்ளே புண்ணியவான்களும் உண்டு; பாளிகளும் உண்டு செல்வந் தரும் உண்டு. வறியரும் உண்டு. கல்விமான்களும் உண்டு அறிவிலிகளும் உண்டு. ஞானிகளும் உண்டு அஞ்ஞானிகளும் உண்டு. ஆன்மாக் சுளே, நரம் நிதமும் காண்கின்ற பலவிதப்பட்ட பிறளி களே எடுத்திருக்கின்றன.
* புல்லாகிப் பூடாப்ப் புழுவாப் மரமாகிப்
பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாடுக் கல்லாப் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாப் வல்லசுர ராசி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற விக் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்தி:ளத் தேனெக்பெருமான்'
என்று மணிவாசகப்பெருமான் கூறுவதிலிருந்து ஆன்மாக் கள் பலவகைப்பட்ட கீழ்ப்பிறவிகள், பேற்பிறவிகள் எடுக் கின்றன என்பதை அறிகின்ருேம்.
பல்வகைப்பட்ட பிறவிகஃா ஆன்மா எடுப்பதற்குரிய காரணத்தை நாம் அறியவேண்டும். ஆணவம் கன்மம் ாயை என்பவைகளாற் பந்திக்கப்பட்ட ஆன்மாவானது பிறவிகளே எடுக்கின்றது. ஒவ்வொரு பிறவியிலும் செய்யும் கன்மம் மேலும் பிறவிக்குக் காரணமாய் இருக்கிறது. கன் மத்திற் கேற்ற பிறவியே எடுக்கவேண்டிய நியதியுண்டு பரங்கள் பரிச மாத்திரமுள்ள ஒரறிவோடு பல்லாண்டு *ளாக நிஃத் திருக்க நேரிடுகிறது. ஆல், அரசு, வேம்பு. பனே முதலிய மரங்கள் .ொயிலிலும், மழையிலும் பணி யிலும் வருடக்க3ை க்காக நிற்கின்றன. பக்கத்தே செல்லும் ரனேய உயிர்ப் பிரானிகள் அவைகளின் நிஃயை உயைர் வதில்லே. முன்செய்த வினேயின் காரணமாக அவைகள் ஓரறிவு வர்க்கமார்ப் பிறந்து நூறு. இருநூறு வருடங்க ாாக இருக்கவேண்டிய நிலே ஏற்படுகிறது அறிவு, இச்சை, செயல் அற்ற உயிர் வர்க்கமாக அவை விளங்குகின்றன.

அநுபவவியல் - இயற்கை தரும் அறிவு 규!
இப்பி சங்கு போன்றவை பரிசம், ரசம், கந்தம் ஆகிய மூவறிவுயிர்களாகும். தும்பி. வண்டு. பரிசம், ரசம், சத்தம் ரூபம் என்னும் நாலறிவுயிர்களாம். ஆணுல் தேவர், மனி தர், நரகர், மிருகங்கள் பறவைகள், சத்தம் ரூபம் Luf சம், ரசம் கந்தம் என்னும் ஐந்து அறிவுகளேயும் பெற்றி ருக்கின்றன. இவ்வகையான பலவகைப்பட்ட உடம்புகே எடுத்த ஆன்மாக்கள் ஆதியில் வியாபகமான நல் அறிவைப் பெற்றிருந்தன. பின்னர் அறிவு கு?றந்த பிரானரிகளாக உல்கத்திற் தோன்றுவதற்கு அவ்வான்மாக்கள் செய்த சன் நமே காரணமாகும் என்பதை அறிவுடையோர் விளங்கிக் கொள்வர் ஆன்மாக்கள் பலவுள. ஒவ்வொரு ஆன்மாஷ்ம் செய்துகொண்ட கன்மத்திற்கேற்ப தணு சுர" H போங்க3ளக் கொடுத்து கன்மங்கள் சழிந்து போவதற்கு இறைவன் துனே புரிகின்றன். இவ்வித பிறவி எடுத்த உயிர்ப்பிரானிகளும் ஒரேவித ஆயுள் இன்ப துன் பங்கள் ஒரே குலம் ஆகியவ ற்றைப் பெற்றிருக்கவில்ஃப், ஆடு, கோழி, போல்வன குறுகிய ஆயுளே உடையனவாக இருக்கின்றன அட்டை, எறும்பு. கறையான் முதலியன பருத்த உடம்புள்ள மனிதர், மிருகங்களின் பாதங்களில் அகப்பட்டு இறக்கின்றன.
ஐந்து அறிவுகஃாப் பெற்ற மிருகங்கள் பறவைகளி லும் பார்க்க மனிதனே தான் அல்லது இன்ஞெருவன் செய் பும் செயல் சரியா பிழையா என விதாங்கிக் கொள்ளும் பகுத்தறிவைப் பெற்றிருக்கின்றன் - கீசை பால் மனிதப் பிறவியே உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிலும் உயர்ந்த பிறவியாகும். மனிதன் கல்வி கற்று அறிவைத் தேட முடி பும். அன்புள்ளவனுக வாழி முடியும் ஒரனேய கீழ்ப் பிறவி களுக்குத் துன்பஞ் செய்யாது துணைபுரியும் நண்பனுக வாழ முடியும். எவ்வுயிர்மீதும் கருனே கொண்ட கடவுஃாப்பற்றிச் சிந்தித்து வழிபடமுடியும். பிறவியாகிய சாகரத்தை இறை வனுடைய உதவி கொண்டே கடக்க முடியும்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவ எாடி சேராதார்'

Page 161
ጳ8ሀ முப்பொருள் உண்மை விளக்கம்
என்பது பொய்யா மொழியாகும். மனிதப் பிறவியின் மூலமே தான் இறைவனடியைச் சேரலாம். திருவருளே உணர்த்தும் வேதாசுமங்கஃாக் கற்றுணர்ந்து தெளிவடையவும் முத்தி படைவதற்கும் மானிடப் பிறவியே துணேயாயிருக்கிறது
"இனித்தமுடைய எடுத்தபோற் பாதமுங் காணப் பெற்றல் மனித்தப் பிறவியும் வேண்டுவதே யிந்த மாநிலத்தே' என்பது அப்பர் சுவாமிகளின் திருவாக்காகும்.
மணிக்னேவிட உலகத்திலுள்ள மற்றும் எவ்வுயிர்வர்க்க மும் கல்வி கற்க, சிந்திக்க, ஞான அறிவைப் பெற்றுக் கொள்ள முடியாது ஒரு பிறவியிலேயே ஒருவன் கற்ற கல்வியானது நல்வினேப் பயன் இருப்பின் ஏழு பிறவிக்கும் அவஃனத் தொடர்ந்து நிற்கு' , ஒருவருடைய வாழ்க்கையில் தீவினேயோங்கி நிற்பின் அடுத்த பிறவி கீழ்ப்பிறவிகளாய்ப் பிறக்க நேரிடின் முன் கற்ற கல்வி பயனற்றதாய் விடும். இதுபற்றிய வள்ளுவப் பெருந்தகை
"ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்
கெழுமையும் ரமாப் புடைத்து"
என்று கூறுவதைக் கவனிக்கலாம் "இப்பிறவி தப்பினு
லெப்பிறவி வாய்க்குமோ ஏதுவருமோ அறிகினேன்" எனத் தாயுமான சுவாமிகள் எடுத்த IEதப் பிறவியிலேயே இறைவனே அடையவேண்டும். அன்றேல் வேறு பிறவி கிடைத்துவிட்டால் யாது சேய்வதென்று திகைப்புறுகின் ருர்
அறிவு. அருள் ஆசை. அச்சம், நானம், நிறை, பொறை. ஓர்ப்பு (ஓர்மம்), கடைப்பிடித்தல் (உறுதி) மையல் (மோகம்), நிஃசி, வெறுப்பு, உவப்பு, இரக்கம், வெகுளி, துணிவு. பீயூஃகாறு, அன்பு, எளிமை, எய்த்தல் (இளேத்தில்) துன்பம் இன்பம், இளமை, முப்பு, இகல், வென்றி பொச்சாப்பு. ஊக்கம், மறம், மதம், மறதி ஆகி பவை போன்ற பிறவும் உயிர்களின் குணங்களாம். இக் குணங்கள் இயல்பாய் அமைந்திருப்பதையும், தர்னியல்

அநுபவவியல் - இயற்கை தரும் அறிவு
பையும் செயஃபு:ம் ஆராய்ந்து அறியும் சக்தியையும் பெற்று திருவடி ஞானத்தையும் பெற்றுக்கொள்ளக்கூடிய பிறவி மானிடப் பிறவியாகும். மஓருெள்ளும் செவிடு, குருடு, முடம், பிணி ஆகிய குறைபாடுகளில்லாத நிலயி லுள்ள மனிதன் மேன்மகனுக நடந்துகொள்கின்றனு என் பதைக் கவனிக்க வேண்டும். தேகத்தைப் பற்றியே அதிக கவனம் எடுத்து உணவு, உடை, குடிவகை களியாட்டம் போன்றவைகளிலே மிகவும் ஈடுபட்டு இாழ்வதிலேயே பgர் மகிழ்ச்சி அடைகின்றனர். ஒரு சிலர் கல்வி கற்றுப் பட் டம் பதவி பெற்றவுடன் நிறைவெய்தி விட்டதாக எண்ணு கின்றனர். மிகச் சிலரே ஆன்ம லாபத்தைப்பற்றிச் சிந்திக் கின்றனர். இடம், பொருள், ஏவல் முதலிய செளகரியல் களிருப்பதால் சிலர் இறைவனேப் பற்றிச்சிந்திப்பதேயில்&) 'தவமும் தவமுடையார்க்காகும்" என்பதற்கினரங்க முற் பிறவிகளிற் செய்த புண்ணியம், தவம்தான் இப்பிறவி யில் துணேயாய் நின்று மேலும் இறைபக்தியூைஉண்டுபண் ணும் பல நூல்களேக் கற்றவர்களுக்கும் முன்வினேப் பயன் களின்படி கிடைத்த அறிவே மேலோங்கி நிற்கும். இது பற்றியே,
" நுண்ணிய நூல்பலகற்பினும் மற்றுந்தன்
உண்மையறியவே அறிவு"
என்று வள்ளுவர் கூறுவது நோக்கற்பாலது. *ஜல் முன்பு தவஞ்செய்யாத ஒருவர் இம்மாவிடப் பிறவியிலே தனது 1.குத்தறிவு, நூலறி;ை சீ3 பவசிரிவு ஆகியவை கரின் துணகொண்டு இச்சிதரவனிடத்து *ன் செலுத்தலாம், மன்னுயிர்மேல் அன்புடையவனுசு நடந்தால் இறைவணு விட, நீருளுக்கு ஆளாகலாம்.
நித்தியம் நாம் காணும் உலகமும் வெவ்வேறு உயிர் ாளின் குணங்களும் வாழ்க்கையும் எ மக்கு ப் போதிய அறிவைத்தர வேண்டும். மக்களுடைய பொருள் கல்வி. இயற்கை விவேகம், செல்வம், செல்வாக்கு, தேகாரோத் சியம், ஆயுள் ஆகியவைகளில் ஏற்றத்தாழ்வு ஏன் இருப்
tչ, 55

Page 162
A82 முப்பொருள் உண்மை விளக்கம்
பான் எனச் சிந்திக்கவேண்டும். சிலர் ஏழைகளாய்ப் பிச்சை எடுக்கின்றனர், சிலர் அங்கக்குறைவுள்ளவர்களாய் வருந்து கின்றனர். சிலர் நேரத்துக்கு உணவில்லாதவர்களாய் இருக்கின்றனர். சிலர் அளவுக்கு மிஞ்சிய உணவை உண் கின்றனர். சிலர் சோம்பலாயும் சிலர் விடாமுயற்சியுடைய வர்களாயும் இருக்கின்றனர். சிலர் அறிவுடையோராயும் சிலர் ஞானிகளாயும் இருக்கின்றனர். இவ்வித உயர்வு தாழ்வுக்குப் பல பிறவிகளிலுஞ் செய்த புண்ணிய பாவமே காரணமென உணர்வோர் மிகச் சிலரே. அவ்விதம் உணர் பவர்களே இப்பிறவியில் ஆகாமியகர்மம் ஏழுது தம்மைப் பாதுகாத்துக்கொள்வர். வெய்யிலில் அதிகநேரம் நின்று களைப்புற்ற ஒருவர் அவ்வெய்யிலே மீண்டும் விரும்பமாட்டார் அதுபோன்று இப்பிறவியில் ஆற்ருெளுத் துன்பத்தை அனு பவிக்கும் ஒருவர் தான் முற்பிறவிகளிற் செய்த சன்மமே காரணமென்பதை உணர்ந்து இப்பிறவியில் தீவினைசெய் யாது வாழ்ந்து இனிமேல் வரும் பிறவியை மேலானதொன் ருக்கலாம். இனிமேல் வரும் பிறவியைப் பற்றிச் சிந்திப் பது மூடத்தனம் என்று கூறும் அறிவிலிகளுமுண்டு. குற் றஞ் செய்து சிறைத்தண்டனை பெற்றுவருந்துமொருவனுக்கு இனிமேல் குற்றஞ்செய்தால் தான் துன்பமடைய நேரிடும் என்பது தெரியும். ஆகையால் குற்றஞ்செய்யாது தன்னைக் காப்பாற்றிக் கொள்வது அவனது கடமையாகும். அது போன்று இப்பிறவியிலே பிராரத்துவவினை அனுபவிக்கும் போது இனிமேல் கன்மஞ் செய்யாது வாழ உறுதிகொள்ள வேண்டும்.
மா  ைய யி ஞ ற் பந்திக்கப்பட்ட ஆன்மா ஜின்மை அறிவைப் பெற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. ஆனல் கோயில் வழிபாடு, சன்மார்க்கரின் உறவு, சமயநூலறிவு, கேட்டல், சிந்தித்தல், தெளிதல் ஆகியன மாயையின் மயக்கத்தையும் வாழ்க்கையின் அநித்தியத்தையும் அறிந்து கொள்வதற்கு உதவியாய் இருக்கின்றன.

அநுபவவியல் - இயற்கை திரும் அறிவு 总8°
* நல்லா ரிணக்கமும் நின்பூசை நேசமும் ஞானமுமே அல்லாது வேறு நிலையுள தோவக மும்பொருளும் இல்லாளுஞ் சுற்றமும் மைந்தரும் வாழ்வு மெழிலுடம்பும் எல்லாம் வெளிமயக் கேயிறை வாகச்சி யேகம்பனே "
என்று பட்டினத்தடிகள், நாம் உலகத்திற் காணும் பாசப் பொருள்களின் நிலையாமையை யுணர்வதற்கு நல்லவர்க ளுடைய சேர்க்கையும், இறைவனுக்குச் செய்யும் அகப் பூசையும், ஆத்மஞானமும் இன்றியமையாதன என்று கூறு இன்ரூர் ر
அண்ட பகிரண்டமெலாம் மாயையின் தோற்றமாகும். இவைகள் எல்லாவற்றையும் நீக்கமற நிறைகின்ற ஒரு கடவுள் ஆன்மாக்கள் மீது கொண்ட கருணையினல் இவை களை இயக்குகிருரென்று நாம் அறிகின்ருேம். அவ்விதம் அறிந்தபின் நாம் செய்கின்ற எச்செயலும் இறைவன்துணை கொண்டு செய்தோம் என நினைக்காது நாமே செய்து முடித்தோமென ஆணவ முனைப்பினுல் கர்வமடைகிருேம். ஒரு கணப்பொழுதேனும் கண்களை மூடி புலன்களை வெளியே செல்லவிடாது தடுத்து பக்தி செலுத்தி திருவருளை அறிந்து கொள்வதற்கும் மலவிருள் தடைசெய்கின்றது. இயற்கை யாக இவ்விதநிலை, எல்லா அறிவையும் பெற்றுள்ள மணி தருக்கு இருப்பதைக் காண்கின்ருேம். அறிவினலும் இறை பக்தியாலும் இவ்வித இடர்ப்பாடுகளைத் தடுத்து ஆன்ம ஈடேற்றம் பெற்றுக்கொள்ள முடியும். இவ்வுலகத்திலே மக்களாய்ப் பிறந்த சிலர் திருவடிப்பேற்றைப் பெற்று இறைவனுடன் இரண்டறக் கலந்தனர். மணிவாசகப் பெரு மான் * மெய்யே உன்பொன்னடிகள் கண்டின்று வீடுற் றேன் " என்று கூறுவதைக் கவனிக்கலாம். ஒரு வாலிபன் தனது சொந்த வீட்டை விட்டுப் பிறதேசஞ் சென்று பல இன்பதுன்பங்களே அனுபவித்துக் களைப்புற்றிருந்தான். பல வருடங்கள் சென்றபின் தனத சொந்த வீட்டைப் பற்றி பும் தந்தை தாயரைப்பற்றியும் ஒரு நண்பன் மூலம் அறிந்து தனது வீட்டுக்குப் போய்ச்சேர வேண்டுமென பெரும் ஆவல் கொண்டான். அங்குள்ள பல தட்ைகளை

Page 163
4'Garzał M.A., dras)
4ம் மனப்பிடிவாதித்தோடு, நீக்கிவிட்டு அவன் சோந்த ஜிட்டை வந்து சேர்ந்ததும்; அவனுக்கு இருந்த ஆனந்தத் இற்கு அளவில்லை. தந்தை திரியரும் அன்புடன் அவ&ரச் சேர்த்துக்கொண்டனர். அதுபோன்று ஆன்மாக்கள் தங் கஃாச்சார்ந்த மாசுக்ாே, பன்னெடுங்காலம்முயற்சி செய்து அசிற்றி அவைகளுக்கு வீடுபோப்ர் சேரும்நிலே ஏற்பட்டு விட்டால் பேரும் ஆனந்தம் அடைவர். வீடு என்ற முத்தி கிடைத்துவிட்டால் நித்தியானந்தநிலை உண்டாம். இவ்வித பேருநிலயை எய்து விரும்பாமல்,
" மக்களே மணந்த தரம் அவ்வயிற் றவரை போம்பும் விக்குளே முழுந்தி ஈசன் திறம்படேன் தவம தோரேன் கொப்புளே போலத் தோன்றி யதனுளே மறையக் கண்டும் இக்களே பரந்தை போம்ப என்செய்வான் தோன்றினேனே
என்ற அப்பர்சுவாமிகளில் தேவாரத்திற் சொல்லப்பட்ட கற்கிணங்கப் பாசபந்தத்துள் உழன்று செய்வது இன்ன தென்று தெரியாது உயிர்கள் இடர்ப்படுகின்றன.
கொப்புள்-நீரீக்குமிழி) (களேபரம் . elth)

25. உலக வாழ்க்கையும் அதன் பயனும்
முற்பிறவிகளிற் செய்த வினேப்பயன்களே அனுபவிக்கும் பொருட்டே ஆன்மாக்கள் மீண்டும் பிறவி எடுக்கின்றன. மனிதப் பிறவி எடுத்த ஆன்மாக்களே பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள்களின் உண்மையை உணரமுடியும். அவ்விதம் மனிதப் பிறவி எடுத்தவர்களுள்ளும் சிலர் செல் வந்த விட்டிலும் சிலர் வறிய குடும்பங்களிலும், சிவர் நோயாளிகளாயும், சிலர் தேகாரோக்கியமுள்ளவர்களாயும், சிலர் கல்வியறிவு உள்ள குடும்பத்திலும், சிலர் கல்வியறி வில்லாத குடும்பத்திலும் இன்னும் பசாவிதமான ஏற்றத் தாழ்வு உள்ள சமுதாய மத்தியிற் தோன்றுகின்றனர். ஆகையால் ஒருசிலர் பல செளகரியங்களுக்கிடையிலும் வேறு சிலர் பல கஷ்டங்ளுக்கிடையிலும் வாழவேண்டி நேரிடுகிறது.
இவ்விதம் வேறுபட்ட சூழலில் வளர்ந்து வரும் பிள்ஃா கள் ஒரே தன்மையான பழக்கs ழக்கங்களேயும் ஒரேவித மான அறிவு, செல்வம், அன்பு, இரக்கம் தரும் சிந்தனே உடையவர்களாயும் இருக்கமுடியாது. மிருகங்களேயும் பறவைகளேயும் கொன்று தின்பவருடைய வீட்டில் வளரும் பின்ஃாக்கும், பின்பு, இரக்கம், தரும சிந்தனே ஆகிய நதி பண்புகளேயுடைய குடும்பத்தினர் மத்தியில் வளர்ந்துவரும் பிள்ளேக்கும் ஏற்படும் அறிவு ஒரே தன்மையாய் இருக்க மாட்டாது இளமைப் பருவததிற் காணும் காட்சிகள் வளர்ந்த பின்னரும் மனத்தைவிட்டு அகலமாட்டா. கீழ்ப் பட்ட பிராணிகஃாக் கொல்வாதத் தினமுங் காணுஞ் சிறு பிள்ஃா அச்செய்கை பாவம் என்பதை உணரக் கல்வியறி வும் நல்ல சூழலும் தேவையாகிறது. அவ்வித மாற்றம் சீக்கிரத்தில் ஏற்படாது. மனிதராகப் பிறந்து பாவம் எது, புண்ணியம் எது என்று பருத்தறிந்து பாவச் செயல்களே நீக்கிவிடத் தெரியாது. அல்லற்படும் மக்களேக் காண்கின் முேம் இனிச் சூழல்தரும் அறிவைவிட இயற்கை அறிவும் மூன்செய்த விளக்கிேற்றதாகும். ஒரு பிறப்பிலே ஒருவன் பெற்ற கல்வியறிவு ஏழு பிறப்புக்கும் பயன்படுமென்பர்.

Page 164
As a bylo j "righ go fy MP LL dari kah &
" ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்து
எழுமையும் ஏமாப் புடைந்து '
என்பது வள்ளுவர் வாக்காகும். ஆனூல் நல்வி*ள செய்து மானிடப்பிறவி எடுத்தவர்க்கே அது பயன்படும். பாவஞ் செய்யின் கீழ்ப்பிறவிகஃன எடுக்க நேரிட்டு முன்பெற்ற கல் வியறிவையும் மறக்கவேண்டிய நிலே ஏற்படக்கூடும்.
முன்செண்மங்கனிலே செய்த நல்வினே ਪੰਡਜ ਸੰ காரணமாகப் பெற்றுக்கொண்ட இயற்கை அறிவும் குழி லும் அடிப்படையாய் அமையப்பெற்ற ஆன்மாவாது எடுத்த மானிடப் பிறவியில் பல இடர்ப்பாடுகள் நேரிட்ட போதிலும் இறைவன் பாதத்தை அடையமுடியும். அல் விடர்ப்பாடுகள் யாவை என்பதை ஆராயவேண்டும் ஆன்" வோடு அநாதியாயுள்ள ஆணவமலம் பேரின்பப் பெரு வாழ்வை அடைவதற்குத் நடைபாயிருக்கின்றது. சஞ்சித பிராரத்துவ கன்மத்தை அனுபவிக்குங்கால் இப்பிறவியில் ஏற்படும் ஆகாமியம் என்று சொல்லப்படும் புதிய கன்மம் ஏற்பட இடமுண்டு. அதுவந்து சேராதவண்ணம் வாழ வேண்டும். இனி உலகப் பொருட்களாகிய மாயை என் னும் வ&லயில் முற்றுகச் சிக்குண்டு பிறப்பதற்கே ஆளாகி இறக்கின்றுேம் ' என்ற அவலநிலையைத் தவிர்க்க முயல ச்ெசீராடும்.
" புண்ணிய பாவம் பொருந்துமிக் கான்மியமு
மண்முதன் மா:ைபகாண் மாயையுங் - கண்ணிய வஞ்ஞானங் காடடுமிவ் வாணவமு மிம்மூன்று மேஞ்ஞானிக் காகா ፵ሸ፰ '' என்று சிவஞானபோதம் பன்னிரண்டாம் சூத்திரத்தின் முதலாம் அதிகரணம் கூறுகிறது பிராரத்தவினே விருப்பு sெறுப்பையும், மாயை பிரபஞ்ச த்தையும், ஆணவம் விப ரீத உணர்வையும் உண்டுபண்ணும். ஆகையால் மெஞ்ஞா னத்தை விரும்ப நிற்போர் சிம் மலங்களேயும் தவிர்க்க ,FiRT(Brhق قا

த்துபவவியல் -உலக வாழ்க்கையும் அதன் பயனும் 8ேர்
ஆணவமானது மதம், மோகம், இராகம், கவலே. தாபம், வாட்டம், விசித்திரம் என்னும் ஏழு வகையான மயக்கங்களே உண்டுபண்ணும். மதம் என்பது தன்கிேப் போல் ஒருவருமில்ஃப் என்று நின்க்கும் மயக்க அறிவை உண்டாக்கும். மோகம் என்பது குரு, நூல்கள் மூலம் நீயன வென்றறிந்தவற்றிவிருந்து நீங்காமல் அவைகளேப் பற்றி நிற்கும் மயக்கமாகும் இராகம் என்பது கிடையாத பொரு வினிடத்து ஆசைப்படுதலாம். கவல என்பது தனக்குக் கிடைத்த பொருள் பிரிந்தவிடத்து வருந்துதலாம் தாபம் என்பது சுற்றத்தாரை விட்டுப் பிரிந்தமைக்கும், பிரிவதற் கும் ஆற்றுமை ஏற்படும் நில வாட் ம் என்பது சுற்றத் தாரின் பிரிவினுலேற்பட்ட ஆற்றுமையால் மலர்ச்சியின்றி வாடி நிற்றலாம். விசித்திரம் என்பது எச்செயலும் விஃன யின் வழியாய் நிகழ்வதென்றெண்ணுது தான் செய்ததா பும் பிறர் செய்ததாகவும் எண்ணும் நிலேயாகும்.
இவ்விதமான மன இயல்புகள் ஆணவத்தின் காரிய மாகையால் அவ்வானாவம் இறைவனேப் பற்றிச் சிந்திக்க விடாதுதானே மேலோங்கி நிற்கும். ஆகையால் நாளாந்த வாழ்க்கையில் அது :யக்க அறிவை உண்டாக்கி நிற்கும். இது ஒரு பெரிய இடர்ப்பாடாகும். மெய்யுணர்வு மூலம் இதனை வெல்லலாம்.
இனிக் கன்மம் வாழ்க்கையில் எவ்வாறு இன்பத்தை பபும் துன்பத்தையும் கொடுத்துக் பொண்டிருக்கிறது. என் பதைப் பற்றி அறிதல்வேண்டும் பிராரத்துவவினே அணுப வித்தே தீர்க்கவேண்டும் நல்வினேயின் பயணுகிய இன்பத்தை அனுபவிக்கும்போது தனது வல்லமை செயல் ஆகியவை களினூலேயே தான் சுகத்தை அனுபவிப்பதாகப் பலர் எண் ஆறுவதுண்டு. தீவினேயின் பயணுகத் துன்பத்தை அனுபவிக் கும்போதுதான் முன் செய்த வினேயே அந்நிலக்குக் காரண மென்று கூறுவதுண்டு. அதுவும் தாங்கொணுத் துன்பம் ஏற்பட்டவிடத்து இறைவன் தன் மீது இரங்கவில் லேயே என அழுது இறைவனே வணங்கப் பணிந்து நிற்பர். ஆகை ால் வாழ்க் ஈகயில் நிழலும் சுெப்பிலும் போன்ற இன்ப

Page 165
28s முப்பொருள் உண்மை விளக்கம்
துன்பங்கள் இரண்டையும் இறைவனே. ஊட்டுவிக்கின்றன். என நினைந்து அவைகளைப் பொ றுமையுடன் தாங்கிக் கொண்டு இன்பதுன்பங்கள் இரண்டின் மீதும் சமமான மன நிலையை வைத்திருத்தலே அறிவுடைமையாகும். தனது வல் லமையினல் வினையை வெல்லமுடியாது.
" ஊழிற் பெருவலி шпарат மற்றென்று
சூழினுந் தான் முந்துறும்
என்பது வள்ளுவர் வாக்காகும். ஆகையால் வாழ்க்கையில் இடர்கள் நேரிடுவதற்குக் கன்மமும் காரணமாகும். இறை வழிபாடு ஒன்றே ஆறுதல் அளிக்கும். ヘ
உலகத்திற் காணப்படும் பொருட்கள் தோன்றி மறை வனவாகும். அவை மாயை எனப்படும். கல்வியறிவு 32-6) யோரும் கல்வியறிவு அற்றேரும் மாயைப் பொருட்களிலே அளவு கடந்த பற்று வைத்து வாழ்நாள் முழுவதும் மன அமைதி அற்றுவாழ நேரிடுகிறது. அவ்விதம் பற்றுவைத்த முன்னேர்கள் எல்லாவற்றையுங் கைவிட்டு இவ்வுலகினின்று நீங்கினரென்று அறிந்துகொண்டும் தாமும் அவ்விதம் மனத் தைப் பறிகொடுத்து இறக்கின்றனர். அதுவுமல்லாமல் பொய்யானவற்றை மெய்யென்றெண்ணச் செய்வதே மாயை யாம். இளம் பராயம் நீங்கி வாலிபப் பகுவம் எய்தியக் கால், பற்றுக்கள், ஆசைகள், உணர்ச்சிகளால் மனமானது கவரப்படுகின்றது. உண்மையை அறிந்த ஒரு சிலரே 5ft to ரையிலை நீர் போல உலகத்தில் வாழமுடியும் தேகபலம் பொருட்பலம், ஆட்துணை செல்வாக்கு ஆகியவைகளைக் கொண்டு ஆசையின் காரணமாக பாவச்செயலில் அகப் பட்டு மீளாப் பிறவிக் கடலில் வீழ்கின்றனர் பகுத்தறி வைப் பெற்ற மனிதர் தம்மைக் கட்டுப்படுத்தி வாழும சீரிய வாழ்க்கையினலேயே மிருகங்களினின்று தாம் உயர்ந்த பிறவி எடுத்து விட்டதாகக் கூறலாம. "மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் " என்பதற் கிணங்க ஒழுகமுடியாத மாந்தர் இழிவுற்ற நிலையை அடைய நேரிடும்

அநுபவவியல் - உலக வாழ்க்கையும் அதன் பயனும் 289
ஆகையால் மாயைப் பொருட்கள் பிறவிப்பயனை அடைய விடாது தடுக் கின்றன, இறைவனருளை வேண்டி நிற் போர்க்கு உய்தி உண்டாம், s
பிறருடைய செல்வம், செளந்தரியத்தைப் பார்த்துப் பொழுமைப்படுதல். அப்பொருமையின் கார ண மா கப் பிறருக்குத் துன்பம் விளைவிக்க நினைத்தல், செய்தல், அற்ப காரியங்களுக்குக் கோபமடைதல் ஆகியனவும் அமைதி யான வாழ்க்கைக்கு இடையூருகும். நல்ல அறிவிஞல் இவ்வித உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தக் கூடியவர்களே சந்தோஷமான வாழ்க்கையை வாழமுடியும். கோபம் அடையவேண்டிய நேரங்களும் உண்டு, கொடுமை, அநீதி, தீங்கு ஆகியனவற்றைக் கண்டவுடன் ஒழுக்கநெறி தவழுத சன்மார்க்கத்தினர் சீற்றம் அடைவர்.
* குணமென்னும் குன்றேறி நின்றர் வெகுளி
கணமேயுங் காத்த லரிது "
என்பது வள்ளுவர் கூற்ருகும். நற்குணங்கள் அமையவாழும் பெரியோர் கோபங் கொள்வாரானல் தாங்ச முடியாத துன் பம் நேரிடும், அத்தகையோர் தீமையைககண்டு காய்வர்.
பிராரத்துவ கன்மத்தை அனுபவிப்பதற்காகவே இறை வன் நமக்குத் தனு, கரண, புவன, போகங்களை ஈந் திருக்கின்ருன், தனு என்பது உடம்பாகும். அது பஞ்ச" பூதங்களா லாயது. அது ஞானேந்திரியம் கன்மேந்திரியம் தசவாயுக்கள், தசநாடிகள் முதலிய தத்துவங்களைப் பொருந்தி இருக்கிறது! இவைகளில் யாதேனும், மிகினும், குறையினும் உடலில் நோய் காணப்படும். நோய் தேக சுகத்தைக் குறைத்து அமைதி வாழ்க்கைக்குப் பங்கம் விளைக்கின்றது. நல்ல ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு நல்ல ஆகாரம், தேசாப்பியாசம், நல்லநீர், காற்று ஒட்வு இன்றியமையாதன. சோம்பலாய் இருந்தால் நல்ல பலனைப் பெற்றுக்கொள்ள முடியாது. தேகாரோக்கியம் குன்றும்
மு. 37

Page 166
Ž9u முப்பொருள் e.g. air sat asid
வினேப்பயனுனது வரவேண்டிய பலஃனக் குறைத்தாலும் நாம் செய்யும் முயற்சிக்குரிய பலன் கிடைக்கும். இதுபற்
றியே,
"தெய்வத்தா லாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருந்தக் கூவி தரும்"
என்று திருவள்ளுவநாயனூர் கூறுகிமூர், கன்மபலனினுல் ஏற்படும் நோய்களுண்டு. பிறவியிலேயே குறைவுள்ளவரீக ாோக இருக்கிவிங் கூடும். அவர்களுக்கு இறைவனே ஏற்ற ஒள-தீத்தை அளிக்கவல்பொன். இடையகுப் பக்தி அன் ஆறுர்க்கு ஏற்படும் இடர்களே நீக்கத் துணேபுரியும்.
உடல் நோயுற்றவிடத்து மனமும் பாதிக்கப்படுகிறது. அவ்வகைப்பட். மரம் எத்தன்மையது என்பதை அறிய வேண்டும். மனம், புத்தி. சித்தம், அகங்காரம் என்னும் நான்கு தத்துவங்களுள். அவை அந்தக் கரணங்கள் எனப் படும். மனம் ஒன்றில் விருப்பங்கொள்ளும்; சித்தம் அதைப் பற்றிச் சிந்திக்கும். புத்தி அதை நிச்சயித்தபின் அகங்காரம் அதைப் பெற்றுக்கொள்வதற்குக் கொண்டு செல் ஆம். இவைகளுள் சந்தோ 3 ம் துக்கம், கோபம், ஆசை, வெறுப்பு, பிடிவாதம். இரக்கம், அன்பு ஆகிய உணர்ச்சி கன் தோன்றுவதற்குத் தானமாயுள்ள மனத்தைப்பற்றி அறிதல் அவசியமாகும் சத்தம், ரூபம், பரிசம், ரசம், கந்தம் ஆகிய புவியின்கள் பொறிகளின் வாயிலாக விழிப்பாய் இருக் கும் நேரமெல்லாம் வெளியிற் காணப்படும் விஷயங்களே மனத்திற்குக் கொண்டு வருகின்றன. ஒரு பரீட்சையிற் சித்திபெறகு ல், காத்திராப்பிரகாரம் யாதேனும் பொருள் வத்து சேர்ந்தால், La gJT L'ÉF j j 57 ஏற்படுவதைக் கr:ன் ருேம் . பாதேதும் துக்கசெய்தி கிடைக்கும் நேரங் களில் மனத்திற் 3: ஏற்படுகிறது. இவ்விதம் பலவித உ3ணர்ச்சி+ளுக்கே இருப்பிடமாக உள்ள மனத்தை தன்னியே யில் வைத்திருப்பது சாலவும் நன்று. LCGIT I DT&T. FL-Š திரியும் இயல்புடையது. அத்தன்மையானது மனிதனுக்கு ஒருவழியிற் தடையாயும் காணப்படுகிறது. துன்பத்தில் மூழ்சியிருக்கும் ஒரு வருக்கு மாதானது ஆங்கும் இங்கும்

சிபவவியல் - டிஸ் டிார்க்கையும் சிதள் 1.துக் 8ே
ஓடித்திரியாது ஒன்றையே யோசித்துக்கொண்டிருக்குமாயின் அவர் மனநோயால் வருந்த நேரிடவுங்கூடும். சிறிது நேரம் துன்பப்பட இன்னுெரு விஷயம் மனத்தில் உதித்தவுடன் சிறிது நேரமாத ஆல் துன்பத்தினின்று அவர் விஜதும்நில ஏற்படுகிறது. ஆகையால் மனத்தில் அவ்வியல்பு இவனுக் குச் சாதகமாய் இருக்கிறது இனி, இம்மாபா உலகிலுள்ள பொருள்கள் மீது புலன்சள் எந்த நேரமுஞ் சேன்து கோள் டிருக்கின்றன. அவைகளே அடக்குதல் மிகவுங் கள்:டம். *" வென்றி:ேன் புலன்க ஃளந்தும் " என்று நாவுக்கரசரும், " ஒரவோட்டா ரோன்றை உன் காவொட்டார் மலரிட்டுகள் தாள் சேரவொட்டா ரைஆர் செய்வதென் பான் " என்று அருணகிரிநாதரும் கூறுவதிலிருந்து பு:ன்களே அடக்குவது கஷ்ட:ென்பது வெளிப்படை. புலங்களே ஒருநிஃப்படுத்தா விட்டால் பு:திண்ம் ைேதிட3டயாது. ஆகையால் இறை வ3 நி: க்கத் தடை ஏற்படுகிறது Liந்தைப் புலன்வழியே சேல்லவி-ாது ஒருநிஃப் படுத்துவதே சிம்மா இருத்தலாம். " .ன்னத்தினுள்ளே ' இருக்கின்ற இறைவரே ஒருநிப்ே படுத்தும் மனநியிேல் அரக்கண் ணுவே அறியமுடியும் என்பர்
இல்லறத்திற்குரிய ஒழுக்கநெறியில் நின்று வாழும்
ஒருவர் டோனிலே அடையலாம். சொத்த முயற்சிசெய்து நல்வழியிற் பொரு: ஈட்ட வேண்டும். நீநெறிமுலம் பொருள் கிடைத்தாலும் அதைத் தவிர்த்துவிடும் மன புறுதி வேண்டும் நல்வழியில் ஈட்டிய பொருளில் ஒரு பாகத்தை வறியோர் முதியோ , அங்கவீரரி ஆகியோருக் கும், கோயில்கள் மடங்கள்போன்ற பொதுத் தாபனங் சுருக்கும் மனம் உவந்து கொடுக்க வேண்டும். பொருள் பேட்கை, நற்செய்கைகளுக்குத் தடையாய்க் கானப்படும் போதெல்லாம், கல்வியறிவு, தருமசித்தனே ஆகியவற்றின் மூலம் அதை அடக்கி எடுத்த தருமச்செய்கையை முடிக்க வேண்டும் , 'வையிற் கதிர்வடி வேலோனே வாழ்த்தி வறிஞர்க்கேன்றும்
நொய்யிற் பிளவள வேணும் பகிர்மின்க ஒதுங்கட்கிங்நுன்
வெய்யிற் கொதுங்க அதவா டெம்பின் வேறுநிழல்போல்
கையிற் பொருளு முதவாது காணும் கடைவழிக்கே"

Page 167
முப்பொருள் உண்மை விளக்கம்
என்பது அருணகிரியார் திருவாகீகாகும். உள்ள பொருளிற் தருமஞ்செய்து இல்லற வாழ்க்கைக் கரிய செலவு போக மிகுதியைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும். தீவினேப்பயன் தாக்குங்காஃப அப்பொருள் உதவியாய் இருக்கும். நாம் உலகத்திலே வாழுங் காலத்திலே செய் கின்று புண்ணியத்தைத் தவிர்ந்த வேறு எப்பொருளாவது இறக்கும்போது கூட வரமாட்டாது. "காதற்ற ஊசியும் வாாாதுன் கடைவழிக்கே "" என்றும், "ா பற்றித் தொட கும் இருவினப் புண்ணிய பாவமுமே" என்றும் பட்டினத் தர்கள் கூறுவதைக் கவனக்கலாம்.
உலு:த்தில் வாழுங் காலத்திலே தனது கடமைசன் யானைடென அறிந்து அவைகளேச் செய்கல் வேண்டும். நாம் செய்யும் தொழிலே நேர்மையுடன் செய்யவேண்டும். அதிவிருத்துவரும் ஜாதியத்தைத் தனக்கும் குடும்பத்திலுள்ள வர்க்கும் செலவழிப்பதோடு தரும வழியிலும் இயன்றளவு செலவு செய்தல்வேண்டும். ஒழுக்கத்; எனின்று கவிருது வாழவேண்டும். சேற்றில் நடக்கும்போது வழுக்கிவிழாமல் கவனத்தோடு நடப்பதுபோல உலர் வாழ்க்கையின் தவறு தல்கள் ஏற்படாது மனக்கட்டுப்பாட்டுடன் நடந்துகொள் ாப் பழகுதல் வேண்டும். பொருட் செல்வத்தினுலோ அல் இது கல்விச் செல்வத்தினுலோ கர்வமடைாது வாழ்வது சிறந்த முறையாகும், செல்வச் செருக்கிஒவ் மற்றவர்களுக் குத் துன்பம் விளேத்தல் கூடாது. பாவத்திற்கஞ்சி நடக்க வேண்டும்.
நான், எனது என்று அகப்பற்று, புறப்பற்றுக்களால் ஆகா மிய கன்மம் கூடும். உள்ளிருந்து .பினர்த்தும் இதை வன் நடத்துகிருன் என்ற எண்ணம் எம் மனத்தில் இருக்க வேண்டும். ஆனவம் எனதயும் தான் செய்தேன் என்று சொல்லத் துரண்டுகிறது.
காண்பான் ஒளிஇருளிற் காட்டிடவும் தான்கண்ட விண்பாவம் எந்நாள் விரும் "

அநுபவவியல் - உலக வாழ்க்கையும் அதிள் பயலும் 28
என்று திருவருட்பயன் சுறுகிறது. ஒளி போன்ற ஞான மானது ஆன மொகிய இருளின் பயங்கி நிற்கும. ஆன்மாக் களுக்குத் தன்னேக் காட்டவும் தன் வல்லமையாலே தாள் கண்டதாக எண்ணும் பாலமானது எப்பொழுது நீங்கப் போகின்றது. இதுவே இதன் பொருளாகும்.
உலக வாழ்க்கையைச் சிறப்புற வாழ உத்தேசிக்கும் ஒருவர் இறைவன் மீது இடையரு அன்பும் நம்பிக்கையு முடைவராய் இருத்தல் வேண்டும். இம்மையிலே கன்ம வினேகளின் கட்டை நெகிழச் செய்து தனது சிருபையைக் காட்டுவதோடு "மெய்யும் பொய்யாகி விடுகின்றபோது" உயிர்த்துஃணயாய் இருப்பதும் இறைவனேயாவன். "வேண்ட முழுதுந் தருவோய் நீ" என்று மணிவாச சுப் பெருமான் கூறுவதனக்க் #R கணிக்கலாம். திரிகரண சுத்தியுடைய ஒழுச்சு சீலராப் வாழ் தோடு ஏஃனபு ஐ பயிர்கள் மீது அன்புடைய வர்களாபும் வாழ முடியுமெனில் கருனே வள்ளலாகிய ஈசன் விரும்பியவற்றையெல்லாம் எமக்கு ஈவான்.
ஒரு கிராமத்திலே இரு நண்பர்கள் இருந்தார்கள் இரு சில் சிவச்செல்வன் என்பவர் உலகநாதர் என்ற மற்ற வரிற் பார்க்க மூன்று வயதாற் கூடியவர். சிவச்செல்வன் வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்சவர். கடவுள் மீது நிரம்பிய பக்தியுடையவர். பல இன்னல்களுக்கூடே வாழவேண்டிய நிலே அவருக்கு ஏற்பட்டுள்ளது ஆணுல் இறைவன் மீது உள்ள பக்தி அவருக்கு மேலும் அதிகரித்தது. ஒழுக்சசீல ராய் வாழ்ந்தார். அவர் செய்து வந்த தொழில் பவிக் கீாத காலத்தில் பல சஷ்டங்கன் நேர்ந்திருந்தும் இறைவ ஓடைய சுருனேயில் நம்பிக்கை வைத்திருந்தார். உலக நாதருக்கு வயது இருபத்திரண்டான்பொழுது பெருஞ் செல் வத்தைத் தேடி வைத்த தந்தை இறந்தார் ஏக புத்திர னை உலகநாதர் அப்பெருஞ் செல்வத்திற்கு உரியவரானுர்,

Page 168
# சட்சி' யூனி டி.சீன விக்சும்
அவருக்குச் செல்வச் செருக்கு ஏற்பட்டது ஒழுக்கம் கெட்டது. மதுபானம் *நந்தத் தொடங்கினுf. பல நண் பர்கள் வந்து சேர்ந்தனர் அந்நிஐல் இருந்த அவருக்குத் தனது பழைய நண்பன் சிவச்செய்வுன் கோயில் வழிபாடு ஒழுங்காய்ச் செய்வதைக் காணும் பொழுதெல்லாம் அவ ரைப் பார்த்து பரிகாசஞ் செய்வதுண்டு. "சிடபிள் கடவுள் என்று எத்தண்போ வருடங்களாகச் சொல்லித் திரிகிருய் ஆணுல் உன் கஷ்டம் நீங்கவில் ஃபயே. நீ இவ்வாறு நேரத்தை வீணிற் செலவழிக்கிருய், உன்னேப்போல் பல மிலேச்சர் கள் உலகத்தில் இருக்கிருர்கள். நான் எவ்வளவு சந்தோ ஷமாய் இருக்கிறேன் விடு, பனம், நல்ல டணவு, வீஃப உமர்ந்த உடை, வாகனம் ஆகியவை என்னிடம் உண்டு. நான் கோவிலுக்குப் போவதி :). கட ஃோக் ஃவி அழைப் பதுமில்லே நீ கஷ்டமல்லாது கரீம் என்பதை அரியமாட் டாய்." இவ்வாறு உலகநாதர் இது நாள் சிவச்சேல் ஆக்டிக் கூறிஞர் "என்ன துன்பங்கள் நேரிட்டாலும் க. :ள் வழி பட்டைக் கைவிட மாட்டேன்" என்றும் " அவரே நீனெக்கு ன்ேதும், இன்றும், என்று துரே பாய் உள்ளார்" ன்ேறும்
சிவச்செல்வர் பதிலளித்தார்
நில நாட்கள் சென்றன. ஒருநாள் மாஃப்பொழுது உலகநாதர் தனது வாகனததை ஒடடிச்செல்லுய பொழுது அவருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அதனுல் அவருடைய வசதுகாவில் ஒரு முறிவு ஏற்பட்டது வைத்தியசாஃபிஜ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த உலசநாதரைப் பார்ப்ப தற்குச் சிவசெல்வன் சென் ரூர் தீன் துல் அந்த நோவைத் தாங்க முடியவில்லே என்றும் கடவுளும் இரங்கவில்லையே எனக் கூறிய உலகநாதருக்கு நண்பன் *றுதல் கூறியபின் வீட்டுக்குத் திரும்பினுf.
மூன்று மாதம் சிகிச்சை பெற்றுச் சுகம் பெற்ற பின் னரும் தொண்டிக்கொண்டுதான் அவரால் நடக்கமுடியும்,

அநுபவவியல் - உலக வாழ்க்கையும் அதன் பய3றும் !
3ጏ!
இது அவருக்குக் கவலேயாய் இருந்தது அக்கீாலந்தொட்டு அவருக்குக் கடவுளில் நம்பிக்கை உண்டானது. மதுபT ரத்தை விட்டார் பொகுரேயும் அதிகம் செல்வழித்து விட்டார் இவரைச் சந்திக்கும்போதெல்லாம் tே 2 சேல் வன் கடவுளின் மகிமையைப்பற்றிக் கூறுவார். தான் முன் வறியவரூப் இருந்தபோதிலும் இறைவனுடைய சுருனே யிருந்தான் நிாயமான பொருளேச் சம்பாதித்திருப்பதா கச் சொன்னுர், தான் செய்த தொழில் இரண்டு மூன்று வருடங்களில் பெரும் ஆதாபத்தைக் கொடுத்தது என்று சோன்ஜர் ஆச்சரியமடைந்த உலகநாதருக்கு சிவச்செல் வ:ன் பின்வருமாறு சொன்குர் "உரேக வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் மாறிமாறி ஏற்படுகிறது இயற்கையும் அப்படித்தான், இரவு பகல் என்றும் மாரி கோடை என் றும், இருள் நிலவு என்றும் காணப்படுகின்றன. முள் உள்ள ருே சாமரத்தைப்பார், yேசா மலர் எவ்வளவு அழ கானது. மரத்தினில், பல பூக்கள் மலர்ந்திருக்கும் போது அம்மலர்களின் அழகு அம்மரத்திற்கே சிறந்த பொலிவைக் கொடுக்கிறது. அம்மரத்திலிருந்து பூக்களப் பிடுங்குபவ ருச்ரு அச்செடியிலுள்ள முட்கள் குத்துகின்றன ஆகுறுல் மன மும் அழகும் பொருந்திய அப்பூவைப் பிடுங்க விருப்பங் கோண்ட ஒருவனுக்கு மாத்திலுள்ள முட்கள் சூத்தும் என்ற பயம் ஏற்படுவதில்லே அதேபோன்று வாழ்க்கையில் நேரிடும் துன்பங்கள் முட்கள் போன்றன. :33 மணி டய கடவுள் எங்களுடைய பொல்லாக் தனங்களே நீக்குவதற் காக துன்பங்களேத் தந்து தன்னே நிரேக்கச் செய்கின்ருf. இறைவன் திருவடியை அடைந்து விடுதலே பெறுவதே மனுஷப்பிறவியின் நோக்கமாகும் பிழையான வழியிற் செல்லும் மாந்தருக்குத் துன்பங்களேக் கொடுத்து நல்வழிப் படுத்துகின்ருர் ருே சாப்பூவைப் பிடுங்குகின் வ" ள் ருக் குத்துவதைச் சட்டை செய்வதில்ஃ. அதே போன்று இறைவனுடைய பாதமலர்களே எய்த விருப்பமுடையோர் பல இன்னல்களே அனுபவிப்பதில் மனந்தனராது பிறவி பூஜின் நோக்கத்தை எய்த முயற்சிக்க வேண்டும் சமிமை பத்தைக்  ைக க் கொ அண் ட திருநாவுக்கரசருக்குச் சூலே 'ஆாதுத் கொடுத்துத் தன்னே நிரேந்துருச்ேசெய்தி கீட்

Page 169
:lt: முப்பொருள் உண்மை விளக்கம்
G) R.Tački i Tri. ஆகையால் நீ முன்செய்த பாவங்களே பன் விக்குமாறு இறைவனே நினேந்து "விழிடாற் புனல் சித்தி" அழுவாயாளுல் துன்பங்கள் நீங்கும். காவிலே ஏற்பட்ட குறையும் நீங்கும் இறைவனில் நம்பிக்கை வை.யாவையும் இன்பகரமாய் விளங்கும்."
இதனேக் கேட்ட உலகநாதர் தனது நண்பன் சொன் னவைஈஃாப்பற்றிச் சிந்தித்து உணர்ந்து தான் இதுவரை பும் செய்து வந்த தவறுகள் யாவற்றையும் நீக்கிவிட்டு இறைபக்தியிடுேபட்டார். சிறிது காலத்திற்குள் முன் னேற்றமடைந்து அவர் சமுதாயத்திலுள்ளஸ்.ர்சளுக்கு ஒரு முன்மாதிரியாக ஒழுகினூர்.
ஒழுக்கம். இறைபக்தி, இன்பதுன்பங்கள், ஆகித இரண்டையும் சமமாகக் கருதுதல் உயிர்கள் மீது அன்பு காட்டுதல், பஞ்சாபாதகங்களினின்று விலகி வாழ்தல், ஞானநூல்களேக்சேட்டு, சிந்தித்து, தெளிதல் ஆகிய ஈ வாழ்க்கையின் பிரதான அ சங்களாக அமைய .ேண்டும். வீட்டு நெறிக்கு இவை அதிக பயனுள்ளனவாகும்.

26. சன்மார்க்கம்
உண்மை நெறியே சன்மார்க்கம் எனப்படும். சத் என் பது உண்மை, மார்க்கம் என்பது நெறி கடவுள் நெறி அல்லது ஞானமார்க்கம் என்றும் அதனேக் கூறலாம்.
தெய்வ உலகுக்கும் விலங்கு உலகுக்கும் இடையில் இருப்பதே மனித உசகாகும் மனிதவில் அபா, பெருமை பகை வெகுரிே, மயக்கம் முதலிய விலங்கியல்புகள் காசாப் படுகின்றன. அன்பு, அருள், தொண்டு, மண்க்ரிப்பு தியா கம் முதலிய தேய்வ இயல்புகளும் மனிதனின் உண்டு. ஆகையால் மனிதன் விலங்கியலிலிருந்து தெய்வ இயலப் பெற்றுக்கொள்ள முயற்சீக்கவேண்டும். சன்மார்க்கம், மக் களுடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்துநின்(ஒற்றுன் ஒழுக்கசிவராய் அவர்கள் வாழமுடியும். ஒழுக்கத்தைப் பற்றிக் கூறு மிடத் து இளங்கோவடிகள் சொல்வதைக் கவனிப்போம்,
" பரிவும் இடுக்கணும்; பாங்குற நீங்குமின்
தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் பொப்புரை அஞ்சுமின் புறஞ்சொற் போற்றுமின் ஊனுண் துறமின் உயிர்க்கொலே நீங்குமின்; தானஞ் செப்மின்: தவம்பல தாங்குமின்; செய்ந்நன்றிகொல்லன்மீன்: தீநட் பிகழ்மின் பொப்க்கரி போகன்மின் போருள்மொழி நீங்பூன்சின் அறவோர் அவைக்களம் அகலாதறுதுமின்; பிறவோர் அவைக்களம் பிழைத்துப் பெயர்மின் பிறர்மனே அஞ்சுமின் பிழையுயிர் ஒம்புமின் அறமன காமின் அல்லவை கடிமின்: $ள்ளும் களவும்; காமமும் பொப்யும் வெள்ளக் கோட்டியும்; விரனிேல் ஒழிமின் இளமையுஞ் செல்வமும் UT ITT: :fih Jiā?ოMüJII;
மு. 88

Page 170
ese முப்பொருள் உண்மை விளக்கம்
உளநாள் வரையா; தொல்லுவ தோழியாது; செல்லும் தேளத்துக்; குறுதுனே தேடுமின்; மல்லன்மா ஞாலத்து: வாழ்வி ரீழ்கென்,
ஒழுக்கநெறிக்கு இன்றியமையாதன இதிற் கூறப்பட்டிருப் பதால் இதனுடைய பொருஃா நன்கு அறிதல் வேண்டும். கவலேயும், துன்பமும் பிறர்க்குச் செய்யாதிருக்க வேண்டும். கடவுள் இருக்கின்ருர் என்பதை உணரவேண்டும், அல் விதம் கடவுளே உணர்ந்தோருடன் சேரவேண்டும், பொய் உரைப்பதற்கு அஞ்சவேண்டும் புறங்கூறுதல் நீக்கிவிட வேண்டும். ஆனன் உண்ணுதலே விடவேண்டும். உயிர்க் கொலே செய்யாதிருக்கவேண்டும். தானஞ்செய்ய வேண் டும் தவநெறியே ஒழுசவேண்டும். பிறர் செய்த உதவியை மறக்கக் கூடாது. தியோருடைய நட்பை விரும்பக்கூடாது. பொய்ச்சாட்சி சொல்லக்க டாது. உண்மை மொழியினே உரைச்க வேண்டும். அறவிழி ஒழுகும் சான்ருேர் கூட் டத்தைச் சேரவேண்டும். தீயோர் சுட்டத்தை விலக்கிவிட வேண்டும். பிறர் மனேவியரை விரும்புவதை அஞ்சி ஒதுங்கி விடவேண்டும். துன்புற்ற உயிர்களுக்கு உதவிபுரிய வேண் டும். இல்லறத்தைப் போற்றுமின். பாவச்செயல்களே நீக்க வேண்டும். கள், களவு, காமம் பொய் பயனில்லாதவற் சிறைக் கூறும் கூட்டத்தினர் ஆகிய இவற்றைத் திறமை யுடன் கைவிடவேண்டும். இளமை, பொருள், உடல், நிலே யற்றன. வாழ்நாட்கள் என்றும் சென்றுகொண்டே இருக் கும் சேரவேண்டிய துன்பம் வந்துசேரும். வரப்போகின்ற மறுமைக்கு உற்றது:ணயைத் தேட வேண்டும் வளமிக்க இவ்வுலகில் வாழ்கின்ற மக்களே! இப்பாடலில் செய்யத் தகுவனவும், செய்யத்தகாதனவும் யாவை என்பது விளக் எப்பட்டிருக்கின்றன.
ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடிப்படையாக சீனமந் துள்ள குரங்கள் யாவையென அறிந்து அதன்படி ஒழுகு தல் ஞானமார்க்கித்துக்கு முதற்படியாகும். சைவசமயத்தை அதுவுடிக்கும் ஒருவன் கவனிக்கவேண்டிய முக்கிய கருமங் நீர் இயமம், நிமம், தேவார திருவாசக பாராராம்

நுபவவியல் - சர் மார்க்க الثالث
சிவாலயத்தொண்டு, ஆலயதரிசனம் என்பனவாம், தீது இவையென அறிந்து அவைகளே நீக்கி ஒழுகுதலே இயமம் எனப்படும். நல்லவை யாவையென ஒழுகுதலே நியமம் ஆதம். -
கொல்வாமை, பொய்மொழி உரையா ம்ை, இரக்கம் வஞ்சனேயில்லாமை, பொறையுடமை, மனங்கலங்காமை, ாற்பாகாரம், சுத்தமுடைமை, கள்ளாமை, பிறர் பெண் கீஃா விரும்பாமையாகிய ஆண்தகைமை ஆகிய அருஞ் செயல்களேக் கடைப்பிடித்தல்ே இயமமாகும். இவைகள், " கொல்லான்பொப் கூருன் களவிலான் எண்குனன்
நல்லான் அடக்க முடையான் நடுச்செய்ப எல்லான் பருந்துண்பான் மாசிலான் கட்காமம் இல்லான் இLமத் திடையின்நின் ருனே'
என்ற திருமந்திரத்தில் விளக்கப்பட்டிருக்கின்றன. உயிரி தும் பார்க்க விரும்பியதாக இவைகஃனக் கைக்கொண்டு ஒழுகுபவன் நன்னெறியாளனுவான். இதுபற்றியே வள்ளுவர்
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஒம்பப்படும்" என்று கூறுவதை உற்று நோக்கவேண்டும். தியான யோகத் நிற்கு தெஞ்சம்பண்பட்டு வரவேண்டும். பாழ் மனத்தை ஒழுக்கம் ஒன்றே பண்படுத்தும் "நன்றிக்கு வித்தாகும் நஷ் ஜொழுக்கம் "" நல்லொழுக்கம் அறத்திற்குக் காரணமாய் ஒருவலுக்கு அது இம்மை, மறுமை இரண்டிலும் இன் டத்துைக் கொடுச்கும். நீயொழுக்கம் பாவத்துக்குக் காரண 1ாய் இருமையிலும் துன்பத்தை விவிேக்கும்; ஆகையால் நல்லொழுக்கத்திற் பண்பட்ட நெஞ்சம் திரையற்ற 禹巾 போலிருக்கும் ஒரு தடாகத்தின் அடிப்பாகத்தை, திரை மில்லாத அசைவற்ற நிலேயில் காணமுடியும், நீரானது கலங்கிய நோத்தில் அடிப்பாகத்தைக் காணமுடியாது. அதுபோன்று உள்ளிருக்கும் இறைவனே அகக்கண்ணுவே காண்பதற்கு ஒருமைப்பட்ட மனத்துடன் தியானஞ்செய்ய

Page 171
துப்பொருள் ம்கி கிங் வியக்கம்
வேண்டும், அத்தியானத்துச்கு அலேவற்றமனம் வேண்டும் மனத்தில் அமைதி பெறுவதற்கு நல்லொழுக்கம் அடிப் டாடாாக அமையும்.
நrற்றும்பண்பே நியமம் எனப்படும் தவம், செபம், :ம் டிவத்திருத்தல், கடள்ை உண்டென்னும் நம்பிக்கை, தானர், விரதம், உண்ணிம நூல்களக் கேட்டல், விருந்து முதலிய ஐம்பெரும் வேள்வி இயற்றுதல், தக்கனவும், தகா தனவும் பகுத்தறிதல் ஆகிய பத்தும் நன்றற்றலுக்கு வித் தாகும். இவ்வித நியமநெறிகஃ அறியச் செய்தவனும் இறைவனுகும். அப்பர் தேவாரம் இதை வளிறுேத்துகின்றது.
ஆதியான அமரர் தோழப்படும் நீதியான நியம நெறி களே ஐதியான உணர்தற் கரியதோர் சோதியானே கண்டீர் தொழிற்பாலதே "
கடவுன் நெறியே சன்மார்க்கம் என்று சொல்லப்படும். வாழ்க்கையில் எல்லாத்துறைகளிலும் அந்நெறியைக் கடைப் டிேத்து நடப்பவர் சீலச்செல்வராவர். லேம் தியானத் துக்கு வேர் போன்றது. தியானம் ஆன்ம விடுதலேக்குத் துஃனாய் இருக்கிறது தியானத்துக்கு ஒழக்கம் அடிப் படையாகவுள்ளது. ஒழுக்கமற்ற உள் ள் ம் அலேந்து கொண்டே இருக்கும். நியானத் செய்வதற்கு அவேற்ற நெஞ்சம் தேவை. தியானயோசத்துக்குத் தூய உள்ளந் தேவை. தாய் உள்ளத்திற்கு நல்லுடல் தேவை. இயற்கை மோடியைந்த வாழ்வு வேண்டும். இயற்கையோடு பொருந் இது உணவு வேண்டும் ஒழுக்கசீலராப் வாழவேண்டும். இநவகனால் ஒருவற்கு நல்லுடல் அமையும் நல்லுடலேப் பெற்றேர் துன்மார்க்கவழியிற் சென்ருல் துன்பம் வந்து சேரும். கொடுமைசஃள விலக்கக்கூடியது தியானமாகும். தியானத்துக்கு அமைதி வேண்டும். அதனுள் வரும் பயன் மேலானது. ஆயிரக்கணக்கானுேரின் தேகசக்தியானது ஒரு தியான யோகியின் ஆன்மாக்திக்கு நிகராகாது.

ا لثل فلا تلد فيه لأ، T، في الأة " سد أو للشد الطالله بق.
சன்மார்க்க வாழ்வு தன்நலத்தைச் சிதைக்கும் ஆற்ற லுடையது. அது படிப்படியாக ஒப்புரவு போன்ற நற் தினங்களே விருத்திசெய்யும. ஒப்புரவு எனப்படும். உப காரசேவை ஒரு அறத்தொண்டாகும் உயிர்களுக்கு நவஞ் செய்வது அறத் தொண்டாகும். இக்தொண்டு சிறந்த இறை வழிபாடாகும். வி*னகளே அறுக்கும் ஆற்றல் இறை வரிைல் அருள் ஒன்றுக்கே ஐ.ண்டு. வெனடி பாரை வினே கள் தாக்கமாட்டா
"" அல்லல் என்செய்யும் அருவினேதான் என்செப்யும்
தொல்'ஸ் வல்வினத் தொந்தந்தான் என்செய்யும்
நில்லே'மாநகர்ச் விற்றம்பலவ ஞர்க்ரு
எல்லே பில்லதோர் அடிமை பூண்டேனுக்கே ' என்பது அப்பர் திருவாக்காகும். அகக் குற்றங்களாகிய காமம், வெகுளி, மயக்கங்களினின்று நீங்கிய து யமனத்து டன் சிவசித்தனே, சிவவழிபாடு அறத்தொண்டு உண்மை முறையீடு, தியானம் ஆகியவைகளேக் கடைப்பிடித் தொழு கும் ஒருவன் இறைவன் அடியவனுய் வாழமுடியும்.
முறையீடு தியானத்தின் உயிர் திா4.பாகும் சன் மார்க்க நெறியிற் செல்வதற்கும் அது வழி திறக்கும். தான் செய்த குற்றங்களே இறைவனிடம் முறையிட்டு வருந்துதலே உண்மையான முறையீடாகும் பிறர் குற்றத் தைப் பாராட்டாது தன் குற்றங்கஃனக் கருதி அழ நேரிட் டால் அது உண்மையான முறையீடாகும் பொய்யான முறையிடும் அழுகையும் இறைவனின் மன்னிப்பைப் டெ நீர் றுக் கொள்ளமாட்டர். செய்த பிழைகளே உணர்த்து அத குல் மனம் மெய்ம்பை யாற் திருப பிய முறையீட்டினின் றும் எழும் அழுகை ஒன்றே மன்னிப்புப் பெற முடியும்.
" யானே பொய்என் நெஞ்சும் பொப்யென் னன்பும்போப்
ஆணுல் வினேயே னழுதால் உன்னேப் பெறலாமே தேனே அமுதே கரும்பின் தெளிவே த்திக்கும் மானே அருளா படியேனுனே வந்துறு மாறே " என்று மணிவாசகரும்

Page 172
$9 முப்பொருள் i skreve samtakstk
பொய்யினேன் புலையினேன் கொலையினே னின்னருள்
புலப்பட வறிந்து நிலையாப் புன்மையேன் கல்லாத நன்மையே நன்மைபோற்
பொருளாலாப் பொருளை நாடும் வெய்யனேன் வெகுளிபோன் வெறியனேன் சிறிய
னேன் வினயினே னென்றன்னேநீ விட்டுவிட நினேவையேற்றட்டழிவ தல்லாது
வேறு கதியேது புகலாய் துய்யனே மெய்யனே யுயிரினுக் குயிரான
துணைவனே யினை யொன்றிலாத துரியனே துரியமுங் காணுவதீதனே
கருதி முடிமீ திருந்த வையனே யப்பனே யெனுமறிஞரறிவைவிட்
டகலாத கருணை வடிவே யண்ட பகிரண்டமு ம. க்கவொரு நிறைவாகி
யானந்தமான பரமே "
என்று தாயுமானவரும் செய்யும் முறையீட்டைக் கவனிப் போம். இது மேய்ஞ்ஞானிகளின் முறையீடாகும்.
முறையீடு என்பது ஒருவர் தாம் முற்பிறப்பிலோ அல் லது இப்பிறவியிலோ செய்த பாவங்களை உணர்ந்து இறை வனிடம் முறையிட்டு மன்னிப்புக் கோருவதாகும். அது மெய்ம்மையான உணர்ச்சியாகும் பாவத்தை நீக்கும்முறை கள் பலவுள. அவைகளுள் கிரியை, யோகம் முறையீடு சிலவாகும். நாம் முறையீட்டால் எளிதில் மன்னிப்பைப் பெற்று வினையின் தாக்குதலை விலக்கலாம்
இறைவன் ஒருவனவன். அவனுடைய உடல் இயற் கையாகும். ஆனல் இயற்கைக் காரியங்கள் பலவிதமாகப் பிரிந்து நிற்கின்றன மக்களின் புறத்தோற்றம் ஒழுக்க முறைகள் ஆகியனவும் பலவிதமாகப் பிரிந்து நிற்கின்றன. இவ்விதம் மக்களின் புறத்தோற்ற அமைப்பு, ஒழுக்க முறை

க்நுபவவியல் - சன்மார்க்கம் კ0ჭ
கள் பலவகைப்படினும் அவர்களுடைய அகத்தே உள்ள ஆன்மாவில் ஒருமையே காணப்படுகிறது. பலவகைப்பட்ட சமயங்களும், பலவகையான புறத்தோற்றங்கள் போன் றன. ஆன்மா ஒருமைபோலக் கடவுள் நெறியும் ஒன்ரு கும் பலவகைப்பட்ட புறப்பன்மைத் தோற்றங்கள் போன்ற சமயங்களும் கடவுள் நெறியும் தொடர்புடை யன. கடவுள் நெறியே சன்மார்க்கம் எனப்படும்.
சன்மார்க்கமும் உலகமார்க்கமும் ஒன்று இரண்டை யும் பிரிந்து வாழ முடியாது. 'பார்க்குமிடமெங்கும் நீக்க மற நிறைகின்ற பரிபூரணனந்தம்ே என்று கூறப்படும் கடவுளைப்பற்றி, உலகத்தை விட்டு எவ்சாறு நினைக்கமுடி யும்? உயிர்கள் சன்மார்க்க நெறியில் ஒழுகிப் பிறவிக் கட லைக் கடந்துசெல்ல வேண்டுமென்றே இவ்வுலகம் அவை களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. உள்ளம், உடல் கரணம் அதற்காகவே அளிக்கப்பட்டன. இவை சன்மார்க்க வாழ்க் கைக்குத் துணையாயிருப்பன. உலகம் கடந்த நிலையில் மார்க்கம் என்பதற்கிடமில்லை. அங்கே ஒரே வெளி அவ் வெளியை அடைவதற்கென்றே கொடுக்கப்பட்ட இவ்வுல குக்கே சன்மார்க்கம் வேண்டும் உலகமார்க்கம் சன்மார்க் கம் இரண்டையும் பிரிந்து வாழ்வோர் விடுதலை அடைதல் அரிது.
பொறிப் புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்படுத்து நினைந்தவர் சிந்தையுள் அறிப்புறு மமுதா யவன் ஏகம்பம் குறிப்பினுற் சென்று கூடித் தொழுதுமே "
என்று அப்பர் சுவாமிகள் கூறுவதைக் கவனிக்கலாம்,
சன்மார்க்க நெறியே எல்லாவற்றிலும் சிறந்த நெறியா கும் ஞானத்தை நல்குவது அதுவே. அதுவே திருவருள் துணை கொண்டு இறைவனடி நீழலில் அமரச்செய்யும். சிவஞான சித்தியார்

Page 173
4 முப்பொருள் உண்மை விளக்கம்
* சன்மார்க்கஞ் சகலகல புராண வேத
சாத்திரங்கள் சமயங்கள் தாம் பலவும் உணர்ந்து பன்மார்க்கப் பொருள்பலவும் கீழாக மேலாம்
பதிபசுபா சந்தெரிந்துப் பரமசிவனைக் காட்டும் நன்மார்க்க ஞானத்தை நாடி ஞான
ஞேயமொடு ஞாதிருவும் நாடாவண்ணம் பின்மார்க்கச் சிவனுடனும் பெற்றி ஞான "
பெருமையுடை யோர்சிவனைப் பெறுவார் காணே'
என்று கூறுவதை ஆராய்வோம். சன்மார்க்கம் என்பது நன்னெறியாகும். எல்லாக்கலைகள், புராணங்கள், வேதங் கள், சமயசாத்திரங்கள் ஆகிய யாவையும் ஆராய்ந்து பல் வகையான பொருள் யாவும் கீழானவையென அறிந்து மேலான பதி, பசு, பாசம் என்பவைகளுள் மேலான பதிப் பொருளே விளங்கச்செய்யும். நல் வழி க்கு ஏதுவானது ஞானமே என்று அறியலாம். ஞானசாத்திரத்தை ஓதல், கேட்டல், சிந்தித்தல் மூலம் உருவத்திருமேனியை நோக்கச் செய்யும். புறத்தொழில் வழிபாட்டையும், அருவுருவத் திருமேனியை நோக்கிச்செய்யும் அகத்தொழில் வழிபாட் டையும் விட்டு, அறிவுமூலம் அம்மூன்று திருமேனிக்கும் மேலாய் சிவபிரான்மாட்டுச் செய்யும் வழிபாடாகும. அவ் விதம் மேலான ஞானத்தை அநுட்டிப்பவர் சிவசாயுச்சிய
மாகிய பரமுத்தியைப் பெறுவர்.
சிவவழிபாட்டிற்குரிய முறைகள் ஐந்தெனக் கூறலாம். அவை (1) கன்மயாகம் (2) தவயாகம் (3) செபயாகம் (4) தியானயாகம் (5) ஞானயாகம் எனபனவாம். இவை கள் ஒன்றற்கொன்று ஏற்றமுடையன. இவைகளுள் கன்ம யாகம் என்பது சவ சிந்தனை சிவபூசை முதலியனவாம் தவயாகம் என்பது விரதங்களால் உடம்பை மெலிவித்த லாம். செபயாகம் மந்திரங்களைச் செபித்து வழிபடுதலாம். தியானயாகம் இருதயம், முர் லிய தானங்களிற் சதாசிவன் முதலிய மூர்த்திகளின் திருமேனிகளைத் தியானிப்பதாகும் இந்நான்கு வகை வழிபாடுகளும் போகத்தை ஊட்டுவிக்

அநுபவவியல்  ைசன்மார்க்கம்
கும். ஞானயாகம் ஒன்றே வீடுபேற்றை நல்குவதாகும். ஆகையால் எய்தற்கரிய அவ்வீடுபேற்றை அடைய விரும்பு பவர்கள் மேலான ஞானயாகத்தின்மூலமே சிவனை வணங் குவர். அந்த ஞானவேள்வி ஐந்துவகைப்படும். (1) ஞான நூலைத் தாம் ஒதுதல் (2) அந்நூலைப் பிறருக்கு ஒதுவித்தல் (3) அந்நூற் பொருளைத் தமது அறிவினல் உணர்ந்து பிற ருக்கு உரைத்தல் (4) ஆசிரியனிடம் அந்நூற் பொருளே தாம் விளக்கமாகக் கேட்டல் (3) அப்பொருளைச் சிந்தித் தல் ஆகிய ஐந்துமே ஞானபூசைக் குரியனவாகும். மேலும் தெளிதல், நிட்டை ஆகிய இரண்டிற்கும் நூல் வேண்டிய தில்லை என்பது வெளிப்படை. இவ் ஐவகைப்பட்ட யாகங் களைப் பற்றியும் சித்தியார் கூறுவதைக் கவனிப்போம்.
ஞானநூல் தனயோதல் ஒதுவித்தல்
நற்பொருளேக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்ற
ஈனமிலாப் பொருள்தனைச் சிந்தித்தல் ஐந்தும்
இறைவன்அடி அடைவிக்கும் எழின்ஞான பூசை
ஊனமிலாக் கன்மங்கள் தபஞ்செபங்கள் தியானம் ஒன்றுக்கொன் றுயரும்இவை யூட்டுவது போகம்
ஆனவையான் மேலான ஞானத்தால் அரனே
அருச்சிப்பர் வீடெய்த அறிந்தோர் எல்லாம் ?
மேற்சொல்லப்பட்ட ஞானவேள்வி ஐந்தனுள் முதல் Dör றிஞலும் உண்மை ஞானம் உண்டாகாது. கேடல், கிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடுதல் ஆகிய நான்குமே உண்மைஞானமாகும் நிட்டை கூடினுேர் வீட்டினைப் பெறு வர். ஏனையோர் பதமுத்தியைப் பெறுவர். அது நீங்கிய காலத்து ஆசிரியனிடத்துக் கேட்டல் முதலிய நெறிகளில் நின்று நிட்டை கூடி வீடு பேறு கிடைக்கப் பெறுவர்;
மு. 39

Page 174
3.06 ஆகப்போரும் உண்மை விளக்கம்
போகசுவாமிகள் சன்மார்க்கத்தைப் பற்றிக் கூறுவது நோக்கற்பானது.
" மார்க்க ஒன்மார்க்கம்
மகரிஷிகள் ஆண்டமார்க்கம் - சன்மார்க்கம்
மூர்க்கமான குனம் போக்கும்
முழுதும் உண்மையென ஆக்கும் - மார்க்கம் "
சன்மார்க்கநெறி மனிதனேச் சிறந்தவனுக்கும். இம்மையிற் சிறந்தவருக ஒழுகி வாழவும் மறுமைப்பயனே அடைவதற் கும் அது ஏதுவாய் இருப்பதால் சன்மார்க்கநெறி யாவர்க் கும் பிறந்த நெறியாகும்.

27. தன்ன அறிந்தால் தலவனே அறியலாம்
ஆன்மாவுக்கு கேவலம், சகலம், சுத்தம் என மூன்று நி&கள் உள். கேவலத்தில் ஆனவ சில மறைப்பினூல் ஆன்மாவுக்கு இயல்பாயுரி. வியாபக அறிவு குன்றிப்போசி றது. ச.சீலக் கடந்து மறு கரையைச் சேர்வதற்கு எவ் வாறு கப்பல் துனேயாக இருக்கிறதோ அதுபோன்று சேவல நினேயிலிருக்கும் ஆன்மாக்களுக்கு இறைவன் தனு, கரன புவன போகங்களே மாயையினின்று ஆக்கி அவை ஈடே நும்பொருட்டு அளிக்கின்ருன், மேலும் மீகாமன் கப்பலேச் செலுத்துவது போல இறைவனும் இவைகளேச் செலுத்து கின்முன், ஐம்பொறிகள் அந்தக்கரணங்கள் ஆகிய கருவி களின் துனேக்கொண்டு விடய போகங்களே ஆன்மா நுகரு கின்றது. கலே, காலம், நியதி, வித்தை, அராகம் என்னும் கத்துவங்களாலும், ருக்குமை, பைசந்தி மத்திமை, வைகரி ஆகிய வாக்குகளாலும் இறைவன் உயிர்களுக்கு அறிவை விளங்கச் செய்கின்றன். ஆணுல் அப்போகங்களே அனுபவிக் கும்போது திருவருளின் துனேக்கொண்டே அவைகஃாத் தானருந்துகிறேன் என்பதை அது அறியாது. ஆணுல் அது தன் முசீனப்பின் காரணத்தால் தானே அறிந்து தானே அநுபவிப்பதாக நினேக்கும். மலமறைப்புடைய பெத்தநில யில் ஆன்மாவின் இயல்பு இதுவாகும்.
-ஆன்மாவானது கண்ணுற் காணப்படும் பொருளன்று. அது யாதென்பதை ஆராய்ச்சி வழியிஞலும் உணர்வு வழி மிஞலும் அறியலாம். ஆராய்ச்சி வழியை நோக்குமிடத்து உலகின் மேல் வைத்து பதி உண்டென்று எவ்வாறு கூறப் படுகிறதோ அதே போன்று உடலின்மேல் வைத்து உயிர் உண்டென்று கூறலாம்,
உடல், பொறி முதலியவற்றை ஆராய்ந்து அது ஆன்மா அல்லவென்று ஒவ்வொன்ருய்க் கழித்து ஒன்றுக் காணவில்லே யென்று அறியுமறிவு ஒன்றுண்டு. அதுவுே ஆன்மாவாகும். நிலமுதலிய காரியங்களாய் விளங்கி நிற்

Page 175
முப்பொருள் உண்மை விளக்கம்
கும் மாயை இந்த அஞ்ஞானகாலத்தில் ஆன்மாவுக்கு அறிவை விளக்கி நிற்கிறது. அம்மாவை தானேயொன்றை யும் அறிவதில்லை. ஆகையால் ஆன்மா மாயையன்று. மாயாகாரியத்திஞல் அறிவு விளங்கப்பெற்று அறியுந் தன்மையுடைய ஆன்மா அவ்வறிவுக்கு அப்பாற்பட்ட சிவ மும் அல்ல. ஆகையால் மாயை, சிவம் ஆகிய இரண்டின் வேறுயுள்ளது ஆன்மாவாகும்.
இனி, உடம்பு ஆன்மாவல்லவென்பது வெளிப்படை,என். உடம்பென்று வேற்றுமைப்படக் கூறுவதால் உடம்பின் வேருய் ஜி.யிருண்டு என்பது புலப்படுகிறது.
ஒவ்வொரு விடயங்களாகிய சத்தம், ரூபம், பரிசம், ரசம், கந்தம் என்பவற்றை அறியும் மெய் வாய், கண், மூக்கு. செவி ஆகிய இந்திரியங்களின் வேருய் உயிருண்டு ஒவ்வொரு இந்திரியமும் தனக்குரிய ஒவ்வொரு விடயத்தை யும் அறிவதேயன்றி எல்லாவிடயங்களேயும் அறியமாட்டா, ஐந்து இந்திரியங்களின் துணைக்கொண்டு ஐந்து பயனையும் அறிவது ஆன்மாவாகும். ஒரு இந்திரியம் அறிந்த விட யத்தைப் பிறிதொரு இந்திரியம் அறியமாட்டாது. ஒரு விடயத்தை அறிந்தேனென அது அறியாது. அதன் பயனை யும் அது அறியமாட்டாது. ஆணுல் ஐந்து இந்திரியங்களை புங்கொண்டு ஐந்து விடயங்களையும் அறிந்து பயனை அறி விப்பது ஆன்மாவாகும். ஆகையால் ஆன்மா இந்திரியங் களின் வேறதாகும்.
ஆராயுமிடத்து ஆன்மாவானது சூக்கும தேகமும் அன்று என்பது புலப்படும். சூக்கும தேகமாகிய புரியட்ட உடம்பு சித்தம், ரூபம், பரிசம், ரசம், கந்தம் என்னும் தன்மாத்திரைகள் ஐந்தும் மனம், புத்தி, அகங்காரம் என்ற அந்தக் கரணங்களும் ஆகிய எட்டை உடையதாகும், சூக் கும. உடம்புபோல், உயிர் என்றும் ஒருதன்மையாய் இருப்ப தில்லை. சில தத்துவங்களேவிட்டு அகத்துச் செல்லுதலும், விட்ட அத்தத்துவங்களோடு கூடிப் புறத்துச் செல்லுதலும் ஆகிய வேறுபாடு உயிருக்குண்டு. உயிர். சாக்கிரம், சொப்

அநுபவவியல்கதன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் 309
பணம், சுளுத்தி. துரியம், துரியாதீதம் என்று ஐந்தவத்தைப் படும். சாக்கிரம் என்பது நனவுநிலை. சொப்பனம் கனவு நிலை. சுளுத்தி உறக்கநிலை. துரியம் பேருறக்கம் ஆகும். துரியாதீதம் உயிர்ப்படங்கல் என்ற நிலையாகும். சாக்கிரத் தானமாகிய லலாடத்தில் (புருவமத்தி) ஆன்மா, ஞானேந் திரியம் 5. கன்மேந்திரியம் 5 ஆகிய பத்தும் அவற்றிற் குரிய ரசம் (சுவை), ரூபம் (ஒளி), பரிசம் (ஊறு), சத்தம் (ஓசை), கந்தம் (நாற்றம்), பேசல் (வசனம்), நடத்தல் (க்ம னம்), கொடுத்தல் வாங்கல் (தானம்), கழித்தல் (விசர்க் கம்), இன்புறல் (மகிழ்தல்) ஆகிய பத்தும் பிராணன், அபா ணன் வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன், தேவதத்தன், தனஞ்சயன் ஆகிய வாயுக்கள் பத் தும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தக் கரணங்களும் புருடனும் ஆகிய 35 கருவிகள் தொழிற் படும். சொப்பனத் தானமாகிய கண்டத்தில் ஞ னேந் திரியம் ஐந்தும் கன்மேந்திரியம் ஐந்தும் லலாடத்தானத் தில் நிற்க ஏனைய 25 கருவிகளும் தொழிற்படும். சுளுத்தி (நெஞ்சு)யில் பிராணன் சித்த b புருடன் ஆகிய மூன்றும் தொழிற்படும். துரியத்தில் (கொப்பூழ்) பிராணனும், புரு டனும் ஆகிய இரண்டு கருவிகள் தொழிற்படும். துரியா இதத்தில் (மூலாதாரத்தில்) புருடன் மட்டும் தொழிற்படும். இவ்விதமான வேறுபாடுபற்றிக் கனவிலே கண்டவற்றை நனவின்கண் வேறுசில தத்துவங்களோடு கூடுதலால் உயிர் மயங்கி அறிதல்கூடும். அவ்விதம் மயங்கியறியும் உயிர் குக்கும உடம்பின் வேரு யுண்டு, தூலதேகத்தைக்கொண்டு புறத்து விடயங்களேயும் சூக்கும தேகத்தைக்கொண்டு அகத்து விடயங்களையும் அறிகின்ற ஆன்மா தூலதேகத்தின் வேற தல்போல குக்கும தேகத்தினும் வேருகும் !
இனி, பிராணவாயு ஆன்மா அன்று என்பதையும் ஆராய்ச்சிமூலம் அறிந்து கொள்ளலாம். சுளுத்தியாகிய நித்திரையில் பிராணவாயு இயங்கிக்கொண்டிருப்பினும் விடயங்களின் வழியாய்வரும் இன்ப துன்ப அனுபவத்தை யும் உடம்பின் தொழிப்ப ட்டையும் 2 இடைய ஆன்ம இப் பிராண வாயுவின் வேரு யது,

Page 176
910 முப்பொருள் உண்மை விளக்கம்
மேலும் பிரமம் ஆன்மாவன்று கருவிகளில்லாத துரியா தீதமாகிய கேவலத்தில் அறியாமலும் சகலத்தில் கலை முத லிய கருவிகளைக்கொண்டு அறிவதுமாய் நிற்கும் உயிர் என் றும் ஒரு தன் ையாய்த்தானே அறியும் பிரமம் ஆகாது என்பதனுல் உயிர் வேறுண்டு. அறிவிக்க அறியும் ஆன்மா வானது கருவிகளோடு கூடியவிடத்தும் விடயங்களை அறி வதேயன்றி தன்னையும் முதல்வனையும் அறிவதில்லை.
இனி உடம்பு, இந்திரியம், குக்குமதேகம், பிராணவாயு எல்லாங்கூடிய சமுதாயத்தின் வேரு ய் உயிர் உண்டு • மாயையின் காரியங்களாகிய தத்துவங்களாற் கட்டுப்பட் டுப் பொருந்திய உடம்பின்கண்ணே அத்தத்துவங்களின் வேரு ய் ஆன்மா உண்டு. சமுதாயம் உடம்பெணப் பெயர் பெறுதலேயன்றி ஆன்மாவெனப் பெயர் பெறுதலில்லே. ஆதலால் அவ்வுடம்பு உயிருக்கு அறிதற்தொழில் நிகழ் தற்கு கருவியாதலால் சமுதாயத்தின் வேருய் ஆன்மா உண்டு. சமுதாயத்திற்குத் தனிததனி பெயரிருத்தலாலும் அனைத்துங்கூடிய கூட்டத்திற்கு ஆன்மா என்னும் பெயரில் லாமல் உடம்பு என்று பெயரிருத்தலால் அது உயிருக்குக் கருவியாதலால் சமுதாயத்தின் வேருய் ஆன்மா உண்டு.
அந்தக்கரணமும் ஆன்மா அல்லவென ஆராய்ந்து அறியலாம். ஆன்மா அந்தக்கரணங்களாகிய மனம், புத்தி சித்தம், அகங்காரம் ஆகியவையோடு கூடி நின்று ஐந்தவத் தைப்படும். (சாக்கிரம் முதலிய ஐந்தவத்தைப்படுதல் உயி ருக்குத் தடத்தல் இலக்கணமாகும்.) ஆன்மா என்னும் சொல்லுக்குப் பொருள் வியாபகம் என்பதும் சித்தசித் என் பதுமாம். மனம் முதலிய புற அந்தக்கரணங்கள் சாக்கி ரம், சொப்பனம், சுளுக்தி வரையுந்தான் தொழிற்படும். துரியம் துரியாதீதத்திற் தொழிற்படுவதில்லை. ஆன்மா அந்தக்கரணங்களில் ஒன்றன்று. அனுதியே ஆணவ மலத் திஞல் அறிவின்றிக் கிடக்கும். ஆன்மாவுக்கு கலே முதலிய தத்துவங்களினல் பொதுவகையான உணர்வு ஏற்படும். ஆன்மா அந்தக்கரணங்களோடு கூடி நின்ற சாக்கிரம் முத லிய ஐந்து அவத்தைகளைப் பொருத்துவதால் சிறப்பு வகை

அநுபவவியல்-தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் 31
யால் உணர்வு நிகழும். கண்ணுலே ஒருபொருள் காணப் படும் பொழுது ஆன்மா மனத்தோடு கூட, மனமானது கண்ணுேடு கூடும்பொழுது அப்பொருளை ஆன்மா காணும், உயிர் அந்தக்கரணங்களைச் செலுத்த அவ்வந்தக் கரணங் கள் இந்திரியங்களின் வழியாய் விடயத்தை அறியும். இந் திரியங்கள் தாமே அறியமாட்டா. இந்திரியங்களின் வழி யாக விடயத்தை உணரும் அக்தக்கரணம் இந்திரியத்தி னும் விடயத்தினும் வேருணுற் போல அந்தக்கரணத்தின் வழியாக விடயத்தினலேற்படும் சுகதுக்கங்களை உணரும் ஆன்மாவானது அவ்வந்தக்கரணங்களின் வேரும். அந்தக்கர ணங்களினுல் உண்டாகும் உணர்வு கடலின் அலைபோல் ஒன்றின்பின் ஒன்றகத் தோற்றும். அவற்றை உயிர் அறி யும். ஆனல் அந்தக்கரணங்கள் ஒன்றனுடைய தொழிலை மற்றது அறியாது. உயிர் அந்நான்கின் தொழிலையும் அறி தலால் அது அந்தக்கரணங்களின் வேழுகும். சிவஞான சித்தியார்,
" உணர்வன கரணம் என்னில்
ஒன்றையொன்று உணரா வெவ்வேறு
அணைதருஞ் செயல்கள் நான்கும்
அறிந்தவை அடக்கி ஆக்கி
புணரும் உட் கருவி ஆக்கிப்
புறக்கரு வியினும் போக்கி
இணைதரும் இவற்றின் வேறய்
யான்என தென்ப தான்மா ??
என்று கூறுவதைக் கவனிக்கலாம். அந்தக்கரணங்கள் உண ரும் என்று கூறிஞல் அவையும் ஐம்பொறிகள் போலே ஒன்றனையொன்று உணரா. உயிர் இவற்றின் வேரூய், யான், எனது என்று சொல்லச் செய்யும். ஆணவமலத்து டன் இணைந்து நிற்பதால் தனக்கென அறிவின்றி நிற்கும், இந்த அந்தக்கரணங்களால் உண்டா கும் நான்கு தொழிலையும் அவையோடு கூடி அறிந்து அவைகளே அடிக்க

Page 177
32 முப்பொருள் உண்மை விளக்கம்
வேண்டியவிடத்து அடக்கி அவைகளை உட்கருவிகளாக்கியும் புறக்கருவிகளிற் போகச் செய்தும் ஆன்மா வெவ்வேறு அவத்தையுறும். இதுவே இதன் பொருளாகும்.
உயிர் சூனியம் என்று சொல்வதாயின் அவ்வாறு சொல்லக்கூடியதொன்று உளது என்பது தெளிவு, அதுவே ஆன்மா. ஆசையால் இவ்வுடம்பின் கண் இவையனைத்திற் கும் ஆன்மா வேருனது என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ளலாம்.
உயிரின் அறிவு ஆராய்ச்சி அறிவு, அனுபவ அறிவு என இருவகைப்படும. இதுவரையும் ஆராய்ச்சி மூலம் உயி ரானது இவ்வுடலின் வேறயது என்பதை அறிந்து கொண் டோம். இனி உயிர் தன்னை அறிந்துகொள்ள அனுபவ அறிவு. எவ்வாறு துணையாய் இருக்கிறது என்று அறிய முயலவேண்டும். சத்து, அசத்து, சதசத்து என மூவகைப் பொருள் உண்டு. இறைவன் சத் (என்றுமுள்ள உண்மைப் பொருள்) எனப்படுவர். பிரபஞ்சப் பொருள்களெல்லாம் அசத்தாகும் (அழியுந்தன்மையையுடையன). உயிர் சதசத் தாகும். உயிர் சார்ந்ததன் வண்ணமாய் இருக்கும். அசத் தோடு சேர்ந்து அசத்தாயும், சத்தோடு சேர்ந்து சத்தா யும் இருக்கும். இறைவன் சூக்குமசித்து எனப்படுவர் உயிர் தூலசித்து எனப்படும். அசத்தெல்லாம் சிவசத்தின் முன் சூனியமாம். பிரபஞ்சம் முதல்வனுக்குத் திருமேனி யாகும். இதனை அப்பர் சுவாமிகளினுடைய தேவாரத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
இருநிலனுய்த் தீயாகி நீருமாகி
இயமானணு யெறியுங் காற்றுமாகி அருநிலைய திங்களாய் ஞாயிருகி
ஆகாசமாயட்ட மூர்த்தியாகிப் பெருநலமுங் குற்றமும் பெண்ணும்ஆணும்
பிறருருவந் தம்முருவுந் தாமேயாகி நெருநலையாய் இன்றகி நாளையாகி
நிமிர்புன்சடையடிகள் நின்றவாறே "

அநுபவவியல்-தன்ன்ை அறிந்தால் தலைவனை அறியலாம் 313
அவ்ன், அவன், அது என்று ஒவ்வொன்றையும் நாங்கள் சுட்டிக்காட்டி அறிவது போல, பிரபஞ்சம் முதல்வனுல் சுட்டியறியப்படுமாறு வேருக நில்லாது. இதுபற்றியே சிவ ஞானபோதம் ஏழாஞ் சூத்திரம்,
* யாவையுஞ் சூனியஞ் சத்தெதி ராகலிற்
சத்தே யறியா தசத்தில தறியா W திருதிறன் அறிவுள திரண்டலா வான்மா"
என்று கூறுகிறது. சூனியம் என்று சொல்லப்பட்டது. இங்கு பிரபஞ்சம் வேருய் நில்லாமை பற்றியாகும். பரிக் கிரக சத்தி (வைப்புச்சத்தி) யாகிய மாயை இறைவனின் திருவருளில் இருக்கும். அசத்தாகிய பிரபஞ்சம் அறிவில் லாச் சடமாகையால் சத்தாகிய சிவத்தை அறியமாட் டாது. சத்து அசத்து ஆகிய இரண்டையும் அறியும் அறிவு ஒன்றுண்டு. இதனை "உண்மை விளக்கம் * நன்முக விளக்குகின்றது.
* நன்ற உரைக்கக்கேள் நல்லசித்தின் முன்அசித்திங் கொன்றது சித்தசித்தை ஒராது - நின்றிவற்றை அன்றே பகுத்தறிவ தான்மாவே என்றுமறை குன்றமல் ஒதுங் குறித்து "
நல்ல சித்தாகிய சிவத்தின் முன்னே அசித்தாகிய பாசம் நில்லாது. சித்தாகிய சிவத்துக்கு அசத்தாகிய பாசத்தை அறியவேண்டுவதில்லை. சித்தாகிய சிவத்தையும் அசித்தா கிய பாசத்தையும் விசாரித்தறிவது ஆன்மாவாகும் என்று சிவாகமங்கள் கூறுகின்றன. இதுவே இதன் பொருளாகும்
சத்தோடு கூடிச் சத்தாயும் அசத்தோடு கூடி அசத் தாயும் நிற்பது உயிரினியல்யு. ஆகையால் சத்தை அடை யும் இயல்பும், தன்மையும் உயிருக்கு உண்டென்று அறி யலாம். உயிரானது சத்து அசத்து இரண்டையும் அறிந்து அவ்விரண்டையும் அறியும் வழியால் தன்னையும் அறியும். சத்து அசத்து ஆகிய இரண்டின் வழியாலும் உயிருக்கு அறிவு விளங்கும், அசத்தால் அறிவு விளங்குமிடத்து பிரத்தி
(p. 40

Page 178
ತಿ:14 முப்பொருள் உண்மை விளக்கம்
பேட்சம், அனுமானம், ஆகமம் (ஆப்தவாக்கியம்) ஆகிய பாசஞானம் மூன்றும் ஆன்மா அறிவுக்குத் துக்கணகளாகும் இவைகள் வேரூப் நின்று துண்புரியும். சத்தால் அறிவு விளங்குமிடத்து வேறின்றித் தன்குேடு உடனின்று விளங் கும் சிவஞானம் ஆன்ம அறிவுக்கு துனேயாகும். ஆதலால் பிரத்தியட்சம், அனுமானம், ஆகமம் என்னும் பாசஞானத் தைத் துணையாகக்கொண்டு சிவத்தையும் உயிர் அறியும். பாசஞானம் உயிருக்கு வேரு யும் சிவஞானம் உயிரோடு உடனுயும் நிற்கும்.
ஆணவமல திவிரித்தியின் பொருட்டு இறைவன் மரி யை கன்மங்களேக் கூட்ட அவை உயிரைச்சேரும், மாயையின் காரியமாகிய தனு, கரண, புவதுபோகம், கன்மத்தின் காரியமாகிய இன்பதுன்பங்கள் இறைவன் ஆஃனயின் வண் கணமே வந்துசேரும். சகலநிஃUயில் கருவிகளோடு கூடின விடத்து அது ஆன்மாவுக்கு விபரீத உாைர்வை உண்டாக்கு கின்றது. தானல்லாத கருவிகஃாத்தானுக நினைத்து கண் கண்டதை "நான் கண்டேன்" என்று நி3னக்கச் செய்கிறது. ஐம்பொறிகள் விடயவிளக்கத்தைக் கொடுக்கும். ஆளுல் ஆன்மாவின் உண்மை விவாக்கம் உண்டாவதற்கு அவை துஃனபுரியமாட்டா. ஆங்மா ஐம்பொறிகளால் மயங்கித் தம்மையு57ரமாட்டா. உயிர் மாயா காரியமாகிய உடம்பை விளக்காகக்கொண்டு விடயங்களே அறியும். மாயை விளக் குப்போன்றது. ஆனம்ை, இருள் போன்றது. படலமாகிய மாசுபடர்ந்த கண்ணுனது சூரியன் முன்னிலேயில் சூரியனு டைய ஒளியினுற் பயன் அடையாது. இருளில் அழுந்துவது போல ஆணவமலத்தினுற் பந்திக்கப்பட்ட உயிர் அறியா மையில் அழுந்தும். அவ் ஆணவம் உயிருக்குப் பந்தமாயிற்று. உலகவாழ்க்கையில் மாயைப் பொருள்களில் மயங்கி ஆன்மா தன்னியல்பை அறியமுடியாத நிக்லயில் தத்தனிக்க நேரிடு கிறது. கன்மத்தின் பயணுகிய இன்பதுன்பங்கள் அஃபத்துக் கொண்டே இருக்கின்றன. ஆழமான சேற்றினுள் புதைத்த கால்களை வெளியே எடுக்க இயலாத நிலையில் நிற்கும் ஒருவருக்கு வெளியே செல்வதற்கு இன்னுெருவருடைய துரோ சான் துளவுக்கு தத்தியாவசியமோ அதே போன்று

அநுபவவியல்-திண்க் அறிந்தால் தலைவன் அறியலாம் :
பத்தபாசத்தில் அமிழ்ந்து வாழ்நாஃாக் கழிக்குங் காலத்தில் "உங்ாாறும் உனரிவை நல்காப் ஒற்ரியூர் உடையகோவே" என்று அப்பர்சுவாமிகள் இறைவனிடம் சமர்ப்பிக்கும் வேண்டுகோஃா டினத்தின்கள் வைத்து அவனருன்ே வேண்டி நிற்பது அவசியமாதம்,
தத்துவங்களாகிய உடல் பொறி க்ரன்சைம் எல்லாம் இயேந்து வேறற நிற்கின்றன.அரிவில்லாத தத்துவக் கூட்டங் கள் ஒன்ஜய் நிற்கின்ற தன்மையிஃத் தாம் உணரா. அத் தன்மையினே உயிரே உணரக்கூடியது. இதனே "உண்மை விளக்கம்"
" ஆறு சுவையும் அருந்தி அவைதம்மே
வேறேருவன் கூறியிடும் மேன்மைபோல் - ஆறுறும் ஒன்றென்ற நாடியுணர்ந் தோதில் அதில் உற்றறிவாய் நின்றபொருள் தானே காண் நீ
என்று விளக்கமாகக் கூறுகிறது. அறுசுவைச் சுவையும் புசித்து சுவையும் இன்னதென் ஒருவன் சொல்வது போல 30 தத்துவங்களேயும் ஒவ்வொன்குய் விசாசித்தறிந்து அம் முப்பத்தாறு தத்துவங்களிலும் பொருந்தி அறிந்து வரு கிற அறிவு நீயாகிய ஆன்மாவாகும். இதுவே இதன் பொருளாம்.
உயிர் திருவருளின் துவக்கொண்டு 36 தத்துவங்களின் தொழிலேயும் இயல்பையும் விசாரித்து அறியும்போது அவை தனக்கு அந்நியமான சடப்பொருள் என ஆராய்ந்தறியும், அவ்விதம் திருவருள் தோன்றுமிடத்துத் தித்துவங்கள் மாயாகாரியமென்றும் அழியுந் தன்மையுடைய தென்றும் நினேந்து ஆன்மா அந்தத் தத்துவங்களினின்று விட்டு நீங்கி நிற்றல் தத்துவ கத்தியாரும் அதன் பின்னரேயே ஆன்மா தின்னே அறிய முடியும். கருவிகள் தத்துவங்கன் ஆகியவற் நின் இயல்பை அறியச்செய்தது நிருவருள் என்று அறிந்த பின் அகக்கருவிகளைப்போற் சடமுமன்றி திருவருாேப்போற் பேரறிவுமன்றி நின்று அறிந்தது "தான்" என்றும் தத்து

Page 179
SF துப்பொரும் டிங்கம விளக்கம்
வங்களேயும் திருவருளேயும் தன்னையும் அந்த அருளின் துனே கொண்டு ஆன்மா கானும் சிவஞானசித்தியார் நான்காம் சூத்திரத்தின்கண் இக்கருத்து விளக்கப்பட்டுள்ளது.
" கருவிஆம் மனமும் புத்தி அகங்காரஞ் சித்தம் நான்கும்
மருவிஆன் மாவே என்னவருந்தீபம் எனத்தெ ரிந்தங்கு F ஒருவிஆன் மாவின் உண்மை உணர்ந்தவர் தமையுணர்ந்தோர் தரும்இது பசுஞானம்பின் சிவஞானந் தனக்கு மேலாம் " ஒருவிடயத்தை அறிந்து கொள்வதற்கு மனம் புத்தி கங் தாரம் சித்தம் என்ற நான்கும் கருவியாக நின்று இவையே ஆன்மா என்று சொல்லும்படிக்கு உயிரோடு ஒன்றிநிற்கின் றன சுண்ணுக்கு விளக்குப்போல உயிருக்கு இவை வேருய் நிற்பன என அறிந்து நீங்கிநின்று ஆன்மாவின் உண்மை இன்னது என்று ஆராய்ந்தறிந்தவரே ஆன்ம சொரூபத்தை டினர்ந்தவராவர். அவ்விதம் அறியும் அறிவு பசுஞான்மா கும். அவ்வித அறிவைத் தருவது யாதெனத் தேர்வார்க்குச் சிவஞானம் அதற்குமேலாய் விளங்கும்.
கருவிகளையும் திருவருளேயும் தன்ஃனயும் அந்த அருளின் துஜனக்கொண்டு தன்னறிவாரே விளங்கக் காண்பது ஆன்ம சூபம் எனப்படும். கருவிகள் நானல்லவென்றும் தனதல்ல வென்றும் அருளால் அறிந்த ஆன்மா தனக்கெனச் செய லொன்றில்லாது அவ்வருளோடு கூடிநிற்றல் ஆன்மதரிசன மாகும். இதை விளக்கியே "சிதுப்பிரகாசம்'
*" தன்னறி வதணு லேதுந் தாக்கறி வில்லே யேனும் தன்னறி வாக வெல்லாந் தனித்தனி பயனருந்தும் தன்னறி வறியுந் தன்மை தன்னுலே தானேய நிந்தால் தன்னயுந் தானே கானுந் தனது வாகி நின்றே " என்று கூறுவதைக் கவனிக்கலாம்.
பிரபஞ்சப்பற்றுக் கழிந்தவிடத்து ஆன்மா தனக்கொரு
செயலுமின்றி தற்போத நிகழ்ச்சியின்றி நிருவருளேயே ஆதாரமாகக் சொண்டு அவ்வருளில் அடங்கி அவ்வருனே

சிநபங்னிகி-த** அறிந்தால் தடிேரே அறியவரம் 1
தானுக நிற்றல் ஆன்மசுக்கியாகும் திருவருட்சத்தியானது ஞானப்பிரகாசம யிருக்கும். அச்சத்தி ஆன்மாவைப் பத் தித்த மும் மலங்களேயும் தேய்த்துச் சிவத்தை ஆன்மாவுக்குக் காண்பிக்கும். எங்கும் பரவியிருக்கின்ற பேரிருளானது சூரியனுடைய பிரகாசத்தினுல் நீங்குவதுபோல சிவப்பிர கிாசிம் ஆன்மானைப் பந்தித்த மலங்கஃன் நீங்கச்செய்து முதல்வனே ஆன்மா தரிசிக்கச் செய்யும் கண்ணுனது தன க்கு முன்பு காணப்படும் பொரு" உயிராற் காட்டப் பட்டுக் காணும், அக்கண்ணுனது கன்னியல்பையும் கருத் தாவாய் நின்று காட்டும் உயிரையும் *ாணமாட்டாது. அதுபோல முதல்வஞல் அறிகின்ற உயிர் கன்னியல்,ை பும் அறிவித்து நிற்கும் முதல்வரே பர் "வியபாட்டாது. கண் சடப்பொருளாகும். உயிர் அபிவுப்பொருள் கண் 3றுக்கு உள்நோக்கும் தன்மையில்ஃ! உயிருக்கு உள்நோக் குங்தன்மை இருத்தலால் உள்நோக்கி அறிய வல்லார்க்கு தோன்முது மறைந்து நிற்கும் முதல் எனுடைய பிள்ாத் நீர்ந்து தம்மையும் முதல்வனே புங் காணமுடியும். ஆன்: தன்ஃன அறிந்தபின்னரே த* வ&ன அறியும். இதுபற்றி தாக்கரசர் கூறுவதைப்பற்றி நோக்குவோம்,
!" மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனு வித்தைனித்தி பொய்ம்மைபாங்களேயைவாங்கிய பொ87றபெறும் நீரைப் பாய்ச் தம்மையும் நோக்கிக் கண்டு தகவெனும் வேலியிட்டுச் (வித் செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விaபுமன்றே
பேரின்ப விருப்பமுடையவன் கடவுளேப் பற்றிக் கேட்ட உண்மைகஃாச் சித்தனே செய்து அவரிடம் ன்ேபு செலுத் துகின்ருன். பின்னர் உயிரறிவிற் பயின்ற உண்மைாஃளப் பற்றிய ஐயங்களேக் கண்ாந்து வினேப்ப என்களே து கிரும் போது கடவுளிடத்து வைத்த அன்பு சேரர் ேெட பாது பாத்துக் கொள்ளுகின்ருன். அதன் பின்னர் உயிரறி வில், கடவுளேப் பற்றிய அறிவும் அன்பு: E! றுதியடைந்து தூய்மையடை க்கு உள்ளுணர்வு ஆகிய அான நிவை, பேறு
கின்றன். இந்த அருளறிவிஞலே தி திைவிலே கடவுள்

Page 180
J. *ப்போதுள் .ேண்டே விளக்கபூ
ந்ேதுவிதமா பு இரண்டறக் சிலந்து நிற்கும் உண்மையை உணர்கின்றன். J-safiTIsi 3T அறிந்து films, LT STI சிற்றலே தன்ன :ே *திலாகும் பழைய வாச8 firfish Tri சிவோகம்பாவண்யும் சிஞ்செழுத்தும் ஒத வேண்டும். இங்கு செeை என்பது வீட்டு நெறியையும், சிவகதி என்பது வீட்டின்பத்தையுங் குறிக்கின்றன.
சிவதரிசனமாவது சிவனுடைய திருவடி திருமுகம் திரு ?ே என்பவைகளின் உண்மையை சிறந்து தெளிதலாம். இதஃா 'உண்மைநெறிவிளக்கம்" தெளிவாக விளக்குகிறது.
" பஈரடியிரி யானெனதொன் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமே குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
?-ரேயிறந்த சுகமதுவே முடியாகும் என்றங்
?ேமயினே மிகத்தெளிந்துபொருள் வேறென்றின்றித்
சீரமுதலிற் போகாது நிலபிளி நில் லாது
*ற்ரையினின்றழுந்தா தற்புதத்தி குருபூ
தெரிவரிய பரமானந் தத்திற் சேர்தல்
சிவனுண்னமத் தெரிசனமாய்ச் செப்பும் நூலே "
யான், எனது என்பன நீங்கி நிற்கும் நி3 திருவடியாம்: பாசப்பொருள் எல்லாம் சிவமாய்த் தோன்றல் திருமுகமாம். தன்னக் கவருகின்ற விடயபோகங்களே பீவன், அவள் அதுவாய் நோக்குமிடமெல்லாம் இறைவன் அணுக்கிரகத் தேக் விண்-ஐபவிப்பதே எங்கும் சிவமாய்த் தோன்றல் என்பதாம், எப்பொருளும் அவன் வண்ணமாகவே STEPH டடும். சிவானந்தத்திரி நிாேத்து நிற்றல் திருமுடியாகும். அந்தச் சிவப்பேற்றினுல் வாக்குக்கும் மனத்திற்கும் ஓர் ஆனந்தம் உண்டாகும். இவைகளேத் தெளிந்து அறிந்தபின் மண் முதலிய தத்துவங்களிலே மீண்டும் செல்லாது புக் ஞானமான தன்னிலேயில் நில்லாமலும் திருவருளிலும் நின்றழுந்தாது பரமானந்தத்தைச் சேர்தல் சிவனைத் தடு சிப்பதாம்,

அநுபவவியல்-தன்னை அறிந்தால் தலைவனே அறியலாம் 319
உயிரானது அரன் நிருவடியோடு என்றும் பிரிப்பின்றி நிற்கின்றது. ஆணுல் அது ஐம்பொறி வசப்பட்டு நிற்கின் றமையால் அதனே மறக்கின்றது. முன்சென்மங்களிற் செய்த புண்ணிய விசேடத்தின், பயணுக உள் நின்று உணர்த்தி வந்த பரம்பொருளே குருவடிவங் கொண்டு சூான உபதேசஞ் செய்வர். உயிரினியல் இத்தன்மையது என்று அறிவித்தபின் தான் நிருவடியோடு பிரிப்பின்றி நிற் றஃ) அறியும். அந்நிலேயிலேயே உயிர் தன்னை அறியும் அவ்வாறு அறிதலே திருவடி அடைதல் என்பதாம். திரு வடி என்பது திருவருளாகிய சிற்சத்தியாகும். இதுபற்றியே சிவஞானபோதம் எட்டாஞ் சூத்திரம்,
" ஐம்புல வேடரி னயர்ந்தனே வளர்ந்தெனத்
தம்முதல் குருவுமாய்த் தவத்தினி லுணர்த்தவிட் டன்னிய மின்மையிாரன்கழல் செலுமே "
என்று கூறுகிறது. தணு கரண புவன போகங்கள் உயிருக்கு இறைவனே அடைதற்குரிய வழியாகும். அவ்வழியே செல் ஆம்போது ஐம்பொறிகளாகிய வேடரிடத்துச் சிக்குண்டு அவ்வுயிர் இறைவனே அடைதற்குரிய அறிவாகிய பெருஞ் செல்வத்தை இழக்கின்றது. அதுவுமல்லாமல் அவ்வுயிரை அன்வேடர் துன்பத்துக்குள்ளாக்கி இழிந்த செயல்களிற் பிரவேசிக்கும் படியும் செய்வர். கடவுளே குருவாய் வருவ ரென்பதும் கூறப்பட்டுள்ளது. உயிரின் பக்குவத்தை உயிருக் கு-பிராகிய கடவுள் சிறித்து உணர்த்துவரன்றி ஏஃபோர் குருவாக வந்து ஞானத்தை உணர்த்த முடியாது. சரியை ரிெயை யோகமாகிய மூன்றையும் அனுட்டித்து முற்றுப் பெற்றபின் மலபரிபாகமும் சத்திநிபாதமும் தோன்றி உண்மை ஞானத்தை விரும்பி நிறகும் உயிருக்குப் பரம் பொருளே குருவாக வந்து உண்மை ஞானத்தை உணர்த் தார். இது பற்றியே இருக்களிற்றப்படியார்,

Page 181
920 முப்பொருள் உண்மை விளக்கம்
4 என்னை உடையவன்வந் தென்னுடனுய் என்னளவில் என்னையுந்தன் னுளாகக் கொள்ளுதலால் - என்னை அறியப்பெற்றேனறிந்த அன்பருக்கே ஆளாகிச் தெறியப்பெற்றேன்குருவிற் சென்று "
என்று கூறுகிறது. அநாதியே என்னை அடிமையாக உடை யவன் இப்பொழுது மானிடணுய் வந்து, எனது போதம் நீங்கி யான் மாத்திரம் நின்றளவில் என்னை அடிமையாக கொள்ளுதலினல் என்னுடைய சுபாவத்தை அறிந்தேன். சிவயோகிகள் கூட்டத்தில் கூடி இருக்கப்பெற்றேன். இவ் வாறு இங்கு விளக்கப்பட்டிருக்கின்றது.
ஆன்மா ஐந்துவிக உணர்வைச் செய்யும் இந்திரியங்க ளால் மயங்கித் தன்னை உணராது. அறிவாயும் வியாபக மாயும் உள்ள தனது சிறப்பியல்பை இந்திரியத்துக்குத் தான் வேறென உணரும் நிலை சற்குரு உபதேசத்தாலேயே உண்டாகும். அந்நிலையில் முதல்வன் திருவடியை அது அணையும், ஊஞ்சலில் ஆடும ஒருவனுக்கு ஊஞ்சல் அறுந் தால நிலமே ஆதாரமாகும் அதுபோன்று தன்னியல் பை அறிந்து ஐம்புலன்சளினின்று நீங்கிய விடத்து ஆன்மாவுக் குத் திருவடியே துணையாகும் ஆன்மா தன்னியல்பையும் தன்னையும் அறிந்தபின் இறைவன் திருவருளை அணைந்து அதன் மூலம் தலைவனை அறிகின்றது, அத்திருவடி ஞானம் பிறவித் துயராகிய வெப்பத்துக்கு குளிர்ந்த நிழலாய் விளங் கும. திருவடி ஞானத்தால் முதல்வனைக் காணும் காட்சி நிலைக்கும் பொருட்டு ஐந்தெழுத்தை விதிப்படி செபித்தலே சிறந்த முறையாகும்.
இனி, சிவானுபூதிமான்கள் அநுபவவாயிலாகக் கண்ட உண்மைகள் நோக்கற்பாலன. என்னை அறிவித்தெனக் கருள் செய்து " என்று ஒளவையார் அருளிய * விநாயசர் அகவல் " கூறுகிறது. மேலும் பட்டினத்துப் பிள்ளையார்
திருவிடை மருதூர் மும்மணிக்கோவை " யில்

அநுபவவியல்-தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம் 3
*" தெய்வத் திருவருள் கைவந்து கிடைத்தலின்
மாயப் படலங் கிறித் தூய ஞான நாட்டம் பெற்றபின் யானும் நின்பெருந் தன்மையும் கண்டேன் காண்டலும் என்னையுங் கண்டேன் பிறரையுங் கண்டேன் நின்னில் அனைத்தையுங் கண்டேன் என்னே நின்னைக் காணு மாந்தர் தன்னேயுங் காணுத் தன்மை யோரே "
என்று கூறுவதைக்கவனிக்கும்போது திருவருட்துணை கிட்டிய விடத்து பிரபஞ்சப்பற்றை விட்டு நீங்கிய பொழுதே பதிஞானம் கிடைக்கும் என்பது தெளிவு, பின்னர் இறை வன் பேரருளையும் அறிந்து தன்னையும் காணும் நிலை ஏற் பட்டதாகக் கூறுகின்றர். தன்னைக் கண்டவர் தலைவனைக் காண்பர், அவனைக் காணுதார் தன்னைக் காணுதாரென் பது உண்மையாகும்.
முன் செய்த தவப்பயனலேயே ஒருவருக்குத் தன்னைத் தானறியும் நிலை ஏற்படுகின்றது. இதனை யோக சுவாமிக ளுடைய திருப்பாவிலிருந்து அறியலாம்.
" தவஞ்செய்து தன்னைத் தன்ஞலே - கேளும்
தானுயறியும் சலாக்கியம் உண்டே '

Page 182
28. pasušicLIT5njub
ஆன்மா என்றும் உள்ளது, அறிவுள்ளது, அழிவில்லா அது சீது மலங்களாற் கட்டுண்டிருக்கிறது. சிசத்தாகிய மாயா உலகத்தைச் சார்ந்து நிற்கின்றபொழுது அசத்தா யும் மலபரீடாக முற்றுச் சிவப்பேறு ைேடயும்போது சத்தா ம்ே சிற்கும். ஓயாப்பிறவித் துன்பத்துள் அமிழ்ந்து அல்ற்ை படும் ஆன்மா கடைத்தேற வே ஒர டு மெனு ம் க கு ஃகா கொண்ட சிவன் வேதம், ஆச மங்க3 ஓதி அருளினூர், அவை களிற் கூறப்பட்டவண்ணம் ஒழுகி வி ரு ப வர் வி ைபு த ம்
ைேடத்து பிறவிப்பய: 'ய்துள் என்பது துணிவு,
வேதங்களின் முடிந்த முடிபாகிய ஒவ சித்தாந்தத்தை துேட்டிப்போருச்கு ஆன்மா மனபந்தங்களினின்று நீந்தி அப்தி அடைதற்குச் சாதகமா 'ள் பு: ஆசார விதிகள் விதிக் கப்பட்டிருக்கின்றன. வழிபாட்டு முறைகள், புண் ணியச் செயல்கள் பாவச்செயல்கள் இவையென அறிந்து செய்யத் தி கீாதிவேற்றை நீக்கிச் செய்து: f? ILI 337 els &: &NT LLSarth, வாக்கு காயங்களால் இவ்வுலகில் வாழுங்காலத்தில் குற்ற மறச் செய்வோர் இறைவன் அருளேப்பெற்று உய்தி பெறுவர்.
சைவ சமயிகள் கவனிக்கவேண்டிய ஆசாரங்கள் உன. விபூதி அணிவது முதற்கடயையாகும். அவ் விதம் நடந்து கொள்ளாதவர் சைவசமயத்தவர் என்று சொல் அருகதையுடையரல்லர், விபூதி தரிக்கும் பொழுது கிழக்கு அல்லது வடக்கு முகமாக இருந்து கொண்டு நிலத்திற் சித் தாவண்ணம் வலக்கை நடுவிரல்மூன்றினுலும் : என்று சொல்வித் திரித்தல் வேண்டும். வழி நடக் து ம் போதும். கிடக்கும் போதும் தரிக்கக் கூடாது! இன்னுெருவ ரிடமிருந்து விபூதியை வாங்கும்பொழுது இரண் டுகைகஃள பும் நீட்டி வாங்கித் தரிக்க வேண்டும் விபூதி தரித்தல், ஞானுக் கினியினுல் ஆன்மாவின் வம் நீங்கும் காலத்தில் கிடைக் தம் சிவபேற்றிற்கு அறிகுறியாகும். சிவகதியை அளிக்கும்
ஈன்பாத ஞான சம்பந்தர் ਪੰ।' ਨੂੰ ਜੋ ਜਾ। | ,

#3 شط الرأته، بل لا تق من الاقة حسبة للمة -اقته فقال التقى بقي
" வேதத்திலுள்ளது நீறு வெந்துவர் தீர்ப்பது நீறு போரந் தருவது நீறு புன்னம தவிர்ப்பது நீறு ஓதத் தகுவது நீறு உண்ாமபி லுள்ளது நீறு சிதப் புளlவ: சூழ்ந்த திருஆஸ் வார் திருந்தே"
கிருநீறு வேதத்திலே சிறப்பாக் எடுத்து ஓதப்பெற்றது. அது கொடிய பிறவித் துன்பத்தைத் தீர்க்கக்கூடியது. பேணி அணியும் பக்தர்களுக்குச் சிவஞானத்தைக் கொடுக்கிறது. அது
ஆணவ மலத்தை நீக்கத் துனே செய்கிறது. ஆ சி ரி ப பாணுக்கர் சுருக்கு ஒதக்கூடிய அளவு பேருமை வாய்த்த தாக அது க சணப்படுகிறது. உண்மையின் நி3லபெற்றிருப்பு தும் அதுவாகும் குளிர்ச்சி பொருத்திய நீர் வளங்கொண்ட வயல் சஃபி 7 டய திருவாலவாய்க் கோயிலின்சண் எழுந்த ருளி இருப்பவருடைய திருநீறு பேர்சோல்லப்பட்ட நன் ஈமகஃாப் பேணி அணிைபவர்களுக்கு அனி க் கும் என்பது இதன் பொருளாகும்!
கிருமத்திரம் திருநீற்றின் மகிமையை நன்கு விளக்குகி
' கங்காளன் பூசுங் கவசத் திருந்த்றை மங்காமற் பூச மகிழ்வரே யாமாகில் தங்கா வினேகளுஞ் சாருஞ் சிவகதி சிங்கார மான திருவடி
அயன் அசி ஆகியோரின் முழு எலும்புக் கூட்டினேச் சுமக் கின்ற சிவபெருமான் சுங்காளன் எனப்படுவான். உயிர்கள் உய்வதற்குக் காவலாயுள்ளது நிரு வெண் ணி நூறு என்று விளக்குவதற்காக அவ்வெண்ணீற்றைக் கவசமாக்கிச் சிவ பெருமான் அணிந்து கொள்கின்ஜர் . அத்திருநீற்றை மகிழ்ந்து பூசுபவரை விண்ணத் துன்பங்கள் தாக்கமாட்டா. தி ரு வ டி ப் பேறும் அவர்களுக்குக் கிடைக்கும். அரும்பெரும் பயனே அளிக்கின்ற திருநீற்றைப் பூசும் பழக்கத்தை மக்கள் தவருது அநுட்டிக்கவேண்டும்.

Page 183
ji“ puðurgh Lrable dardas
சமய தீட்சை பெற்றவர்களே சைவசமயத்தவர் என்று தம்மைக் கூறிக்கொள்ளத் தகுதியுடையவர். சைவ சமயிகள் நித்தியம் செபிக்க வேண்டியது சிவமூல மந்திரமாகிய பஞ் சாட்சரமாகும். அதைச் செபிக்க விரும்புகிறவர் கவனிக்க வேண்டிய முக்கிய கடமைகள் உண்டு. சிவதீட்சை பெற்ற வராய் இருக்கவேண்டும். ஸ்நானஞ் செய்து விபூதி அணிந்து புனிதமான இடத்தில் அமர்ந்து செபஞ்செய்தல் வேண் டும், மதுபானமும் மாமிசபோசனமும் நீக்கியவராய் இருத்தல் வேண்டும் பஞ்சமாபாதகங்களாகிய கொலை, களவு, கள், காமம், பொய்பேசுதல் ஆகியவற்றிற்கஞ்சி ஒழுக வேண்டும். சிவ மூலமந்திரத்தை ஓதுவதஞல் அவர் களுக்குப் பலன் கிடைக்கும்.
கொலைகளவுகள்காமம் கோபம் விட்டாலன்றே மலேயிலக்கா நின்னருடான் வாய்க்கும் பராபரமே ??
என்று தாயுமானவர் கூறுவதைக் கவனிக்கலாம். முற்பிற விகளிற் பஞ்சமாபாதகங்களிலெவையேனும் செய்தோரு டைய பாவங்களும் சிவபஞ்சாட்சரத்தை ஒ துவ த ஞ ல் நாளடைவில் தேய்வுறும்.
சைவ சமயத்தவர்களென்று சொல்லிக்கொண்டு சீவ காருண்யமற்ற முறையில் மிருகங்கள் பறவை களை க் கொன்று புசித்தல் பாவச் செயலாகும்.
* அவிசொரிந்தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்துண்ணுமை நன்று "
என்று வள்ளுலர் கூறுவது நோக்கற்பாலது. மதுபானமும் அருந்திப் புலாலும் உண்பவர் சைவசமயத்தவர் என்று தம்மைக் கூறிக்கொள்வது தவருகும். ஆகையால் இக்குற் றங்களினின்று அவர்கள் அவசியம் நீங்க வேண்டும். சைவம் சிவசம்பந்த முடையது. சிவம் எல்லா உயிர்களிலும் கலந் திருச்கின்ருர், ஊனத்தின்னும் அவாவினல் உயிரை உட லினின்றும் நீக்கும் தொழிலிலீடுபடுவோர் சிவனருளுக்கு ஆளாக மாட்டார். ஆகையால் புலால் மறுத்தலைச் சைவசம ழிகள் கடைப்பிடித் தொழுகவேண்டும்,

அநுபவவியல் - சைவசமயாசாரம் seg
கொல்லாமையைக் கடைப்பிடித்து ஒழுகுபவன் மது பானமும் அருந்தாத ருத்தல் வேண்டும் பொய் பேசா து சத்தியத்தை நிலைநிறுத்த வேண்டும். *பிறர்மனைஅஞ்சு மின்’ என்றதற்கிணங்க ஆண் தகைமையுடையோனுக ஒழுக வேண்டும் இரக்கம் பொறை வஞ்சனையில்லாமை, மனங் கலங்காத சாந்த மனநிலை, அற்பாகாரம், சுசியுடமை (கத்தம்) ஆகிய குணங்கள் அமைந் சிருக்க வேண்டும. இய மம் என்று சொல்லப்படும் ஒழுக்க சீலத்துக்குரிய இப் பத்துக் கருமங்களையும் வைசமயத்தவர் அநுசரிக்கவேண் டும். இவைகளினின்று விலகுதல் குற்றமாகும்.
இன்னும் அநுட்டிக்க வேண்டிய நியமம் எனப்படும் கருமங்களும் உண்டு. கடவுள் உண்டு என்ற நம்பிக்கை செபம், விரதம். தவம் உயிருக்கு உறுதிபயக்கும் உண்மை பயக்கும் உண்மை நூல்களைக் கேட்டல் கர்வ மின்றி அடங்கி ஒழுகுதல், மனமுவந்திருத்தல், சிற்பாத்திரருக்குப் பொருள் கொடுத்தல் மூத்தோரை வழிபடுதல், தக்கன, தகாதன ஆகியவையைப் பகுத்தறிதல் ஆகியன சைவ சமயத்தளிர்களுக்குரிய விசேட கருமங்களாம்.
மேற்சொல்லப்பட்ட இயம,நியம கருமங்களை அனுஷ்டிக் கும் சைவசமயத்தவர் விலக்கவேண்டிய சில கருமங்களும் உண்டு. சிவநிந்தை, சிவனடியார் நிந்தை, குரு நிந்தை, சிவசாத்திர நிந்தை, விலக்கவேண்டியனவாகும். சிவசொத் துக்களை அனுபவித்தலும் பாவமாகும். சமய தீட்சை பெற்று இயம நியம கருமங்களை முறைப் படி கடைப்பிடித்து ஒழு கிய பின்னர் விசேட திட்சை பெறுவர். இவர்கள் சந்தி யாவந்தனம் சிவலிங்கப்பூசை இரண்டும் அநுட் لافـكـاfiه மூன் ரு வது தீட் சையா கி ய நிருவாண தீட்சை பெற்றவர் சந்தியா வத்தனம், சிவலிங்கப் பூசை, ஞான பூசை மூன்றையும் அநுட்டிப் பார்கள், ஞானப்பொருளைக் கேட்டல், கேட்பித்தல், சிந்தித்தல் ஆகியன ஞான பூசைக்குரியன,
ஆலய தரிசனம் சைவசமய ஆசாரங்களில் முதன்மை யானது. சிவாலய இறையருளைப் பெறுவதற்கு இன்றிய

Page 184
see துப்பொருள் a das e dada à
மையாதது ஒரு ஊரிலே தவருது காணப்படவேண்டி வன யாவை என்று கூறும் பொழுது திருக்கோயிலேயே முதலாக வைத்துக் கூறப்படும் அப்பர் தேவாரம் நோக் கற்பாலது.
"திருக்கோயி லில்லாத திருவி லூரும்
திருவெண்ணி றணியாத திருவிலூரும் பருக்கோடிப் பத்திமை யாய்ப் பாடாவூரும் பாங்கினுெடு பலதளிக ளில்லா வூரும் விருப்போடு வெண்சங்கம் ஊதா ஊரும்
விதானமும் வெண்கொடியு மில்லா வூரும் அருப்போடு மலர்பறித்திட் டுண்ணு வூரும்
அவையெல்லாம் ஊரல்ல அடவி காடே"
இதில் ஒரு ஊருக்கு இன்றியமையாதவைகள் கூறப்பட்டி ருக்கின்றன.
வழிபாட்டிற்குச் சிறந்த இடம் கோயிலாகும், வழி பாடு அகவழிபாடு, புறவழிபாடு என இருவகைப்படும். புறவழிபாட்டை ஒழுங்காகச் செய்துவரும் ஒருவர் படிப் படியாக அகவழிபாடு செய்யும் ஆற்றலைப் பெறுவர். இது பற்றியே
'சகலா தடிமை யில்லை தாளலாற் துணையு மில்லி நகமெலாந் தேயக் கையால் நாண் மலர் தொழுது தூவி முகமெல்லாங் கண்ணிர் மல்க முன் பணிந் தேத்துந்தொண்டர் அகமலாற் கோயிலில்லை ஐயன்ஐ யாற ஞர்க்கே’’
என்று அப்பர் சுவாமிகள் கூறுவதிலிருந்து புற வழி பாட் டின் பெருமை கூறப்படுகின்றது. ܫ
உருவ வழிபாட்டுக்குச் சிறந்த இடம் கோயிலாகும். அலையும் மனம் நிலைபெற உருவ வழிபாடு வேண்டும் மனம் நிலை பெற்று அமைதி ஏற்படும். மனதிலுள்ள குற்றங்கள் அகன்று மனம் தூய்மையடைய உருவ வழிபாடு தேவை.

அநுபவவியல் - சைவசமயாசாரம் $27
இறைவன் மீது பக்தி உண்டாகும். அதனுல் மற்ற உயிர் கள்மீது இரக்கம் உண்டாகும். தொண்டுசெய்யும் மனப் பான்மை ஏற்படும். கோயிற் தொண்டுகள் புரியமனம் இசையும். பூப்பறித்தல். விளக்கேற்றல், கோயிலின் உட் புறம் வெளிப்புறங்களைச் சுத்தமாக வைத்திருத்தல் முதலி யண கோயிற் தொண்டுகளாம். இதை விளக்கியே.
" நிலைபெறுமா றெண்ணுதியேல் நெஞ்சே நீவா
நித்தலுமெம் பிரானுடைய கோயில் புக்குப்
புலர்வதன்முன் அலகிட்டு மெழுக்குமிட்டுப்
பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்துபாடித்
தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடிச்
சங்கரா சயபோற்றி போற்றியென்றும்
அலேபுனல்சேர் செஞ்சடையெம் ஆதியென்றும் ஆரூரா என்றென்றே அலருநில்லே "
என்று அப்பர் சுவாமிகள் கூறுகிருர்,
இனிக் கோயில்களிலே உருவத்தைக் கண்ணுற்று அன் புடன் வழிபடுதலால் புலன்கள் ஒடுங்குகின்றன. நாளாந் தம் அவ்விதம் செய்துவர மனம் ஒருமைப்பட்டுக்குவியும். உருவத்தைப் பற்றுக் கோடாக வைத்து வழிபடும் அடியார் ஈற்றில் இறைவன் திருவடி யொன்றே தமக்குப் பற்றுக் கோடாகிறது என்ற உண்மையை அறிகின்றனர். <数605 யால் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோயில்களுக்குச் சென்று தவருது வழிபாடு செய்யவேண்டும்,
நாம் வழிபடும் திருக்கோயில்களுக்குச் செல்லும் பொழுது நாம் கவனிக்க வேண்டிய சம யா சா ஸ்' யாவை யென அறிதல் வேண்டும். கோயிலுக்குச் செல்லு வதற்குமுன் ஸ்நானம் செய்து தோய்த்து வெயிலிலுலர்ந்த வஸ்திரத்தை அணிய வேண்டும், சைவசமயாசாரத்திற்கு ஒவ்வாத உடைகள் அணிதல் கூடாது. மாமிசம் 7 போர் கோயிலுக்குச் செல்லும் தா நம் அதற்கு (PAñ

Page 185
828 முப்பொருள் உண்மை விளக்கம்
நாளும் மாமிசம் அருந்தாது இருக்கவேண்டும் அசெளசம் உள்ள காலங்களிலும் கோயிலுக்குப் போதல் குற்றமா கும்.
கோயிலைச் சமீபித்தபின் கால்கைகளைக் கழுவிக் கை யிற் றிதளவு தண்ணீர் எடுத்துப் பருகிப் (ஆசமனம்) பின் னர் திருக்கோபுரத்தை (தூலலிங்கம்)த் தரிசிக்க வேண்டும். தூலலிங்கத்தைத் தரிசிதத பின்னர் சிவநாமங்களை உச்ச ரித்த வண்ணம் கோயிலினுள்ளே செல்ல வேண்டும் உள்ளே சென்றபின்பு பலிபீடத்துக்கு இப்பால் நின்று பலிபீடத் தையும் துவசத்தம்பத்தையும் (கொடிமரம்) இடபதேவரை யும் கும்பிட்டு ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரம், பெண் கள் பஞ்சாங்க நடிஸ்காரம் 3, 5, 7, 9 அல்லது 12 தரமா யினும் செய்யவேண்டும். ஒருதரய இருதரம் செய்வது குற் றம கும். அபிஷேசம் நடக்கும் பொழுதும், நிவேதனம் நடைபெறும்பொழுதும் நமஸ்காரம் செயதல் குற்றமாகும்" தலை, இரு கைகள், இரு செவிகள், மே வாய், இருபுயங் கள், என்னும் எட்டும் நிலத்தில் பொருந்தும்படி வணங்கு தல் விட்டாங்க நமஸ்காரமாகும். தலை, இரு கைகள் முழந் தாளிரண்டும் ஆகிய ஐந்து அவயங்களும் நிலத்திற் பொருந் தும்படி வணங்குதல் பஞ்சாங்க நமஸ்காரமாகும்.
நமஸ்காரம் செய்தபின் எழுந்து கைகளைக் குவித்த வண்ணம் பஞ்சாட்சரத்தை உச்சரித்துக்கொண்டு 3,5,7,9, 15 அல்லது 21 தரமாயினும் கோயிலைச் சுற்றிக் கும்பிட் டுச் சந்நிதானத்தில் மீண்டும் நமஸ்காரம் செய்யவேண்டும். பின்னர் துவாரபாலகர் நந்திதேவரை விக்கினேஸ்வரரை வணங்கிப் பின்னர் சிவபெருமானையும் உமாதேவியாரை யும் தரிசித்து அருச்சனை செய்வித்துக் கற்பூர தீபாராதனை யும் தரிசித்தபின்னர் விபூதி வாங்கித் தரித்துக்கொள்ள வேண்டும். மற்ற மூர்த்திகளையும் சமயகுரவர் நால்வரை யும் ஈற்றில் சண்டேசுவரரையும் கும்பிட்டு சிவதரிசன பயனை தரும் பொருட்டுப் பிரார்த்திக்கவேண்டும். இவ்வித மாக நித்தியம் ஆலய தரிசனஞ் செய்வது நன்று. இயலாத வர்கள் சுக்கிரவாரம், பிரதோஷ விரதம்; மாதப்பிறப்பு,

அநுபவவியல் - சைவசமயாசாரம் 329
சிவராத்திரி, நவராத்திரி, விநாயக சதுர்த்தி முதலிய புண் னிய காலங்களிலாகுதல் தரிசனஞ் செய்யவேண்டும்.
திருக்கோயிலிற் செய்யத்தகாத குற்றங்கள் யாவை என அறியவேண்டும். கோயிலுக்கு ஆசாரமில்லாது போதல், கால் கழுவாமல் உட்செல்லுதல், குற்றமாகும். எச்சில் உமிழ்தல், மூக்கு நீரி சிந்துதல், பாக்கு வெற்றிலே உண் டல், நித்திரை செய்தல், கால்களை நீட்டிக்கொண்டிருத் தல், மயிர் கோதி முடித்தல், சிரசிலே தோளிலே வஸ்தி ரந் தரித்தல், சட்டை போட்டிருத்தல் பாதங்களிற் செருப்பு இட்டுக் கொள்ளுதல் குற்றமாகும். இன்னும் கோயிலினுள் துவசத்தம்பம், பலிபீடம், இடபவிக்கிரகம் என்பவைகளின் நிழலை மிதித்தல் வீண் வார்த்தை பேசுதல், சண்டையிடு தல், சிரித்தல், சுவாமிக்கும் பலிபீடத்திற்கும் குறுக்கே போதல், நமஸ்கரித்தல், திரையிட்டபின் வணங்குதல், அபி ஷேக காலம், நிவேதன காலத்தில் வணங்குதல், திருவிளக்கு அஃணந்து போவதைக் கண்டும் தூண்டாது விடுதல், திரு விளக்கில்லாதபோது வணங்குதல் குற்றங்களாகும்.
சைவாசாரத்தோடு ஆலயஞ் சென்று தேவாரம், திரு வாசகம், திருப்புகழ் ஆகிய தோத்திரங்களை அன்புடன் பாடி இறை வழிபாடு செய்கின்ற சிவனடியாருக்கு அவர் கள் வேண்டும் வரங்கள் கிடைக்கும். தூயமணமும், தல் லொழுக்கமும், சிவனடியை அயரா அன்பும் கொண்ட மெய் யடியார்களுக்கு என்றும் உய்தி அளிக்கும் என்பதிற் சந்தே கமில்லை. சிவன் வெளிப்பட்டருளும் குறியிடங்களாகிய குருலிங்கசங்கமம் ஆகியவைகளும் அடையாளங்களாகிய் நிருவுருவம் ஆடை அணிகள் ஆகியனவும். கோயில்களும் இருந்தும், வேதாகம நூல்களிலிருந்தும், அவற்றை ஓதி யும், உண்மை விளங்காததற்குக் காரணம், அவ்விதம் ஒது வோர்களுக்கு இறைவன் அருள் கிடைக்காமையேயாகும். இதை அப்பர் தேவாரம் விளக்குகிறது.
'குறிகளும் அடை யாளமும் கோவிலும் நெறிகளும் அவர் நின்றதோர் நேர்மையும் அறிய ஆயிரம் ஆரணம் ஒதினும் பொறியி லீர் மா மென்கொல் புகாததே" (p. 48

Page 186
முப்பொருள் உண்மை விளக்கம்
கோயில் வ்ழிபாடு செய்து அதன் பயனேப் பெற்றுக் கொள் வதற்கும் ஒருவருடைய மனம் வழிபாடு செய்ய ஒருப்பட வேண்டும். அதற்கும் அவன் அருள் வேண்டும். அருள் கிடைப்பதற்கு ஒழுக்க சீலராய் அகம் புறம் இரண்டிலும் ஆசாரமுடையவராய் வாழ வேண்டும்.
இறைவனுடைய திருவடிகளைச் சேரவிடாது தடுக்கும் மும்மலங்களை ஞானநீரினுற் கழுவி இறைவன்மீது அன்புமிக்கு டையராகிய சிவனடியாரையும் சிவனென நினேந்து வழி படுபவரே சீவன் முத்தராகும், இதைச் சிவஞானபோதம் பன்னிரண்டாம் குத்திரம் தெளிவாக விளக்குகின்றது.
செம்மலர் நோன்முள் சேர லோட்ட அம்மலங் கழிஇ அன்பரோடு மரீஇ மாவற நேயம் மலிந்தவர் வேடமும் ஆலயந் தானும் அரனெனத் தொழுமே"
இதிலிருந்து ஆலயத்தின் பெருமையையும், மெய்யடியாரும் அவர்களுடைய திருவேடத்தின் மகிமையையும் அறியத் தக்கதாக இருக்கிறது.
குரு, சிவாலயம் சிவனடியார் கூட்டம் இம்மூன்றும் வழிபாட்டிற்குரியனவாகும். திட்சைவைக்கும் குருவும் குரு வெனப்படுவர். வித்தை கற்பிப்பவரும் குருவெனப்படு வர். ஞான சாத்திரங்களக் கற்பிப்பவரும் குரு வென்று கூறப்படுவர். இருவினேயொப்பு மலபரிபாகம் ஏற்படுங் காலத்தில் அருள்புரிய மானிடரூபத்தில் வரும் சிவனும் குருவாக எழுந்தருளுவர். முன்னர் கூறப்பட்ட குரு வென் பவர்களால் அபரஞானம் ஏற்படும். ஆணுல் ஆன்மா பக் குவ நில அடையுங்கால் சி! பந்தருளும் குருவினுள் L[* ஞானம் ஏற்பட்டு முத்திகிட்டும். ஆகையால் குரு வாக் கத்திற்குரியவராவர். இனிச் சிவலிங்க வழிபாட்டினுல் ஏற்படும் பயன் யாது என அறியவேண்டும் கோயில்களில் எழுந்தருளியிருக்கும் ஒவலிங்கம் போன்ற திருமேனிகளேச் இவன் என வழிபடுவதகுல் அவர் வெளிப்படாது நின்று அருள் புரிவர். இதுபற்றியே சித்தியார்,

aguayadun — a) Polaj fue & Tofio Pol* s
திருக்கோபி லுள்ளிருக்குத் திருமேனி தன்னச்
சிவனெனவே காண்டவர்க்குச் சிவனுறைவன் அங்கே" என்று கூறுகிறது.
சங்கமம் என்பது சிவபக்தர்கள் திருக்கூட்டத்தைக் குறிக்கிறது. பெரிய புராணம்கூறும் திருக்கூட்டச் சிறப்பில் அடியார் பெருமை கூறப்படுகிறது
1. சி. லாத மனிதிகழ் மேனிமேல்
பூசு நீறு போல் உள்ளும் புனிதர்கள் தேரி குல் எத்திசையும் விளக்கினும் பேச ஒண்ணுப் பேருமை பிறங்கினுள் "
2. பூதம் ஐந்தும் நிலயிற் கலங்கினும்
மாதெர் பாகர் மலர்த்தாள் மறப்பிலார்
ஒது காதல் உறைப்பின் நெறி நின்றர்
கோதிலாத குணப் பெருங் குன்றினுப்' மெய்யடியார்கள் தூய்மை புடையவர்கள் துன்பம்வந்து தாக்கினுலும் சிவனே மறக்காதவர். உறுதியான அன்பை யுடையர். மண் ஓடும் செம்பொன்னும் அவர்களால் ஒன் முக மதிக்கப்படும். அவ்வித பேரன்புள்ள சிவனடியாரைக் கண்டவுடன் மற்றும் சிவபக்தர்கள் சிவபெருமானேக் கண் டதாக மதித்து அவர்களுக்குண்டான அன்பு மேலீட்டிகுலே ஒலிக்கும் கண்களினின்று நீர்த தும்பி அருவிபோல ஓடும் உரைதடுமாறும் ஆகையால் அடியார் கூட்டத்தைச் சேர் எதல்ை இறைவனிடம் மேலும் மேலும் அன்பு உண்டா கும். இது பற்றியே யோக $fଛାitlfଣfit.
இவனடியாருடன் கூடி * ங்கள் சித்தந் தெளிந்திட நாடி’ என்று கூறுகின்றர்
சது சமயிகள் தங்களுடை-! வாழ்க்கை முழுவதும்
உள்ளும் புறமும் ஆசாரமாயும், ஒழுக்க சீலராயும் வாழ முடியுமாயின் மானிடப்பிறவியின் பயனே எய் துதற்கு இறை இன் கருணைபுரிவான்.
SAABs eae

Page 187
29. சிவ வழிபாடு தரும் அனுபவம்
தாய உள்ளமுடைய சிவபக்தர்கள் தம் வாழ்க்கையிற் சில அனுபவங்களப் பெற்றுக் கொள்ள முடியும், இறை வன் உள்ளிருந்து உணர்த்துவதை அவர்கள் உணருகின்ற னர். உண்மை, நேர்மை சத்தியம், ஒழுக்கம் ஆகியவற்றை தம் வாழ்க்கையின் இலட்சியங்களாகக் கடைப்பிடித்து வாழ்பவர்களும் உண்டு. அரிச்சந்திரன், இராமன், காந்தி ஆகியோர் தழுவி வாழ்ந்த சிறந்த இலட்சியங்களத் தம் முடைய நாளாந்த வாழ்க்கையிற் தவருது கவனித்து வாழும் பெருமக்கள் நம் மத்தியில் இருக்கக்கூடும். பிறர் அறியத்தக்கதாக அவ்விதம் வாழ்பவரை உலகம் பாராட் டும். சிலர் பிறர் அறியாதவண்ணம் அவ்வித வாழ்க்கையை வாழ்ந்து சிவானுபூதிமான்களாய் மறைந்திருக்கக்கூடும்.
ஒருநாள் ஒரு நண்பரை வெகு காலத்தின் பின் சந்திக்க நேரிட்டது அவருடன் முப்பொருள் உண்மையைப் பற்றிப் பேசும் சந்தர்ப்பம் கிடைத்ததை நினேந்து சந்தோஷமடைந் தேன். அவர்,
" மனமெனும் தோணி பற்றி மதியெனும் கோலேயூன்றிச் சினமெனுத் சரக்கை ஏற்றிச் செறிகடலோடும்போது மதனெனும் பாறை தாக்கிமறியும்போதறியவொண்ணு உனயுனும் உணர்வை நல்காய் ஒற்றியூருடையகோவே '
என்ற அப்பருடைய தேவாரத்தைப் பாடிக் காட்டினூர்" மனிதன் உலக வாழ்க்கையிலிடுபட்டிருக்குங் கால மனமா னது ஐம்புல இன்ப ஆசைகளில் அவனை இழுத்துச் செல் நின்றது. அந்நேரங்களிலும் இறைவனே நினேக்கும் உணர்வு கிடைக்கவேண்டுமென்று பிரார்த்திக்கவேண்டும். இல்லே யேல் மாய வாழ்க்கையில் அமிழ்ந்து பனிப்படலத்தில் அகப்பட்டு வழி தெரியாது தடும்ாறும் ஒருவனேப்போல், தயங்கி நிற்க ஏற்படும். ஏழுவகைப் பிறவிகளில் மனுஷப் பிறவியொன்றே பிறவிக்கடல் நீந்தி இறைவனடி சேரத் துணையாய் இருக்கின்றது. ஆகையால் மனிதன், தான் நித
Fi

83 தீரும் சிதுபடிம் قا لم يلد القديمة حديد له به لك لعلطاقته
மும் செய்யும் பணியெல்லாம் இறைவனுக்கு சீர்ப்பணித்துத் நான் செய்ததாகக் சிருதாமல் ஒழுக பழகிக்கொள்ள வேண்டும். இயமம் நியமம் ஆகியவற்றைக் கீடைப்பிடித்து வாழ்நாள் முழுதும் ஒழுகுதல் இறைவனருாேப் பெறுவ தற்குத் துணேயாய் இருக்கும். அதனல் அகத்தூய்மை 町血 படும். அவ்விதம் தூய்மையடைந்த &ள்ளத்தோடு திய விஞ் செய்வதால் உள்ளத்தினுள்ள்ே இறைவன் இருப்
TAF FFFITTFr.
சி. விகித்தை மெய்யென்று மயங்கி அறிதல் உலக *றி விாகும் அது உண்மை அறிவை நோக இயலாத அறி யாமையைத் தரும் அறியாமையை அழிக்கக்கூடியது .F1-aiT தனர்வாம். அது உள்ளத்தினுள்ளே உணர்தலாம். கற்று கேட்டுச் சிந்தித்துப் பயின்றதினூலே தூய்மை 983 L -i. Ei sir இரத்தில் இறைவனது சீருள் ஒளி வந்து சேர்தலால் உள் ளூணர்வு ஏற்படுகிறது தூய்மை என்பது உயிரினிடத்து உள்ள தன்முனைப்பாகிய மிவித்தைப் போக்குவதும். தூய்மை அடைந்த உள்ளத்தாற் தியானஞ் செய்து இறை வின் நிருவடியைச் @平raprü, தாவுக்கரசர் அருளிய தேவா ரம் அவ்வித கியானத்தின் தின்சை விளக்குகிறது.
" elli.GLISY), ur'r பகத்துள் உள்ளமே தகளியாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிமயக்ே இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை சீரிஸ்டி காண்பே இத்தேவாரத்தில் உள்ளமானது ***32y dÈg, tb (aF :1y அறி பாமையைப் போக்குகின்ற உள்ளுணர்வு நெய்க்கும், உடு ரானது திரிக்கும், திரியின் விளக்கொளி உண்ை அறிவுக் ம்ே உவமை சிறப்பட்டிருக்கிறது. உயிரினிடத்து உண் யறிவு விளங்கி A. IL-ħTIġI isir QBgmr இருக்கிற இறைவ& ந்ேத உயிருக்குக் கீாட்டும் திரி எரிவதற்கு நெய் தேவைப்படுதல் போஸ் உண்மை அறிவு உயிரில் விளங்குவதற்கு மீறியா மையை நீக்குகிற உள்ளுணர்வு வேண்டு நெய் இருக்கிற

Page 188
394 முப்பொருள் டின்மை விளக்கம்
இங்கு ஞானத்தீ என்பது உண்மை அறிவைக் குறிக் கும். அது அருள் ஒளியை விளங்கச் செய்யும். தியானம் மூலம் உள்ளே மறைந்து உள்ள இறைவனைக் காணமுடியும், எங்கும் நிறைந்துள்ள இறைவனுடைய அறிவு வலிக்குள் தனது அறிவு வலியும், செயல் வலிக்குள் தனது செயல் வலியும் அடங்கித் தன் முனைப்பின்றி நிற்றலே அடி காணு தலாகும். அடி காணுதலே வீடு பேருகும்.
பசுவாகிய ஆன்மா மலங்களினுற் கட்டுண்டு இருப்ப தால் பதியாகிய இறைவனை அடைய முடியாத நிலையில் அது உள்ளது. காமம், வெகுளி, மயக்கம் ஆகிய குற்றங் களே வெல்லும் பொழுதே மனத்தூய்மை ஏற்படும். மணி யில் ஒளி விளங்குதல் போல தூய்மையடைந்த மனத்தி டத்தே அருள் ஒளி விளங்கும். சூரியனைச் சூரியனின் ஒளி யாலே பார்க்கமுடியும். கடவுளையும் அவனுடைய அருளறி வினற் பார்க்கமுடியுமேயன்றி உயிரறிவிஞல் அறியமுடி யாது. அவனருளே கண்ணுகக் காணினல்லால் " என்று நாவுக்கரசர் தேவாரமும் " அருட்கண்ணில்லா தோர்க்கு அரும்பொருள் தோன்ற என்று திருமந்திரமும் கூறுகின் றன. எத்தன்மையர் இறைவனைக் காணலாம் என்பதை அப்பர் தேவாரம் விளக்குகிறது.
' விறகிற் றீயினன் பாலிற்படு நெய் போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான் உறவுகோல் நட்டு உணர்வுக் கயிற்றினுல் முறுக வாங்கிக் கடைய முன்னிற்குமே ’
ஒரு விறகு கட்டையில் நெருப்பு மறைந்து இருப்பது போல பாலில் நெய் மறைந்து இருத்தல் போல, இரத்தி னக்கல்லின் ஒளிபோல் சோதியுருவமாய் விளங்குகிற கட வுள் உயிர்ப்பொருள் உயிரில்லாதபொருள் யாவற்றிலு மிருந்து ஊனக்கண்ணுற் பார்ப்பவர்களுக்குத் தோன்ருது மறைந்து நிற்கின்ருன்.
ஒரு விறகு கட்டையை, ஒரு கோலிற் கயிற்றைச் கற் றிக் கடையும்போது தீ வெளிப்படுதல் போலவும் மணி

சிநுபவவியல் - சிவ வழிபாடு தரும் அனுபவம் 336
தர் தங்களுடைய உண்மையான அன்பைக் கடவுளிடத்து அளவுகடந்து செலுத்தினல், அவர்களுடைய உண்மை அறி வுக் கண்ணுக்கு (ஞானக்கண்ணுக்கு) வெளிப்பட்டு கடவுள் நிற்பர். உணர்வு என்பது இங்கு உண்மையறிவைக் குறிக் கிறது. தூயமனத்தினுல் குறையாத அன்போடு தன்னறிவு முனைப்பின்றி வழிபாடு செய்வதனல், அவனருள் ஒளியை உணரமுடியும்
வழிபாடு, அகவழிபாடு, புறவழிபாடு என இருவகைப் படும். அகவழிபாடு வழுவாமல் உறுதிப்படுத்தற்பொருட்டே புறவழிபாடு செய்யப்படுகின்றது. ஒருவர் தனக்காக அகத் திலும் புறத்திலும் செய்யும் வழிபாடு ஆன்மார்த்தபூசை எனப்படும். பிறர்பொருட்டுக் கோயிலில் செய்யப்படும் பூசையும், வழிபாடும் பிராரத்த பூசை எனப்படும். பிறர் பொருட்டு புறவழிபாடு கோயிலில் லிங்கமாகிய உருவில் புறப்பொருளைக் கொண்டு செய்யப்படுகிறது. அகவழிபாடு தன்போருட்டு மனமாகிய விங்கத்தைக் குறியாக நினைந்து அன்போடு செய்வதாம். அகவழிபாடு வழுவாமல் உறுதிப் படுத்தற்பொருட்டே புறவழிபாடு செய்யப்படுகின்றது புறவழிபாடு செய்யும் மக்களுக்கு எவ்வாறு கோயில் இடமாக அமைந் துள்ளதோ அதேபோனறு அகவழிபாடு செய்வோருக்கு உடலானது இடமாக அமைந்திருக்கிறது. உ யி ரா ன து தனக்குச் சிவபெருமான் செய்யும் அருளை நோக்கி மனங் குழைந்து உருகி அன்பு செய்தலும் அவ்வன்பு மேலீட்டினல் அவனது திகுவடியை அடைந்து பேரின்பம் நுகர்தலே அவ் வழிபாட்டின் பயணுகும்,
இறைவனுடைய திருவடியை அடைவதற்கு மனங் குழைந்து அன்புசெய்தல் வேண்டும். பிற உயிர்களின் துன்பத்தைக் கண்டவிடத்துக் காட்டும் இரக்கம் கல் போன்ற மனத்தைக் கசியச்செய்யும். அக்கசீவே இறைவன் மீது காதலாகிக் கண்rைர் மல்கும் நிலையை அளிக்கவல்லது தூய்மை அடைந்த உள்ளமானது செலுத்தும் அன்பே இறையருள் கிடைக்கத் துணை புரியும். மனத் தூய்மைக்கு நல்லொழுக்கம் இன்றியமையாதது. காமம், வெகுளி, மயக்

Page 189
3器份 முப்பொருள் உண்மை விளக்கம்
கம் நல்லொழுக்கத்துக்கு இடையூறு விகளவிக்கும். நல்லறிவு மேலோங்கி நிற்கும் பொழுது உட்பகையாகிய காமம், வெகுளி, மயக்கம் வலியிழந்து விடும். நூல் அறிவு மாத் திரம் நல் அறிவைத் தரமாட்டாது. நூல் அறிவு துணை புரியும், ஆனல் ஞானநூல்களைச் கற்றல், கேட்டல், சிந் தித்தல், சிவனடியாரோடு பழகுதல் ஆகிய மனத்துரப் மைக்கு வழிவகுத்து உண்மை அறிவைத்தரும், சுருங்கக் கூறின் வாழ்க்கை முழுதும் இயமம் நியமம் என்பவற்றை அனுசரித்துவரின் அதனற் தூய்மை அடைந்த எவரும் சில அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது தன்னு டைய நம்பிக்கை என அந்நண்பர் கூறிஞர்,
தான் இறைவன் அணுக்கிரகத்தாலே பெற்றுள்ள சில அனுபவங்களை எனது வேண்டுகோளுக்கிணங்கி அவர் கூறிய சில சம்பவங்கள். கடவுளிடத்து அளவிலா அன்பைச் செலுத்தத்தக்கதாக என்னையும் தூண்டிவிட்டன. தான் கண்களைமூடி இறைவனைப் பிரார்த்திக்கும் போதெல்லாம் வட்டமான சிவப்பு ஒளி தோற்றி இருப்பதாகச் சொன்னர் இரண்டொரு முறை அவ்வெளிச்சம் நீலநிறமாகக் காணப் பட்டதென்ருர், கண்களே விழித்தவுடன் அவ்வெளிச்சம் மறைந்துவிடும். பகலிலுஞ்சரி இருளிலும்சரி தியானிக்கும் போதெல்லாம் கண்ணெ தி ரே அவ்வித ஒளியைக் காண்பதுண்டு என்றுங் கூறினர். தான் வணங்கும் முருகன் படத்தைச்சாற்றி ஓர் வெளிச்சம் சில நேரங்களிற் காணப் பட்டதாகவும் தனக்குக் கஷ்டங்கள் ஏற்படுங் காலத்தில் ஒருமனத்துடன் ஊன்றி வழிபடும்பொழுது அவைகளைக் நீக்கக்கூடிய சில வழிகள் உள்ளிருந்து உணர்வுக்கு வந்த தாகவும் இன்னும் சில அனுபவங்களையும அறியச் செய்தார். இவ்விதமாக முருகவழிபாடு தன்னிடத்து நாளடைவிற் பலமடைந்துகொண்டு போனது, மனப்பயம் ஏற்பட்ட ஒருநாளிரவு கனவுநிலையில் கையில் வேலைத்தாங்கிய வண் ணம் தன் கண்ணெதரே முருகன் தோற்றியதாகவும் அதன் பின் மனச்சாந்தம் ஏற்பட்டதெனவுங் கூறினர். அவர் கூறிய இன்ஞெரு அனுபவம் மாத்திரம். கூறிமுடிக்கின்றேன்.

க்நுபவவியல் - சைவசிமயாசாரம் 33ž
சில வருடங்களுக்கு முன்பு தன்கிட்டிய உறவினர் ஒருவருடனும் இன்னெரு நெருங்கிய நண்பருடனும் இந்தியாவிற் சில தலங்களைத் தரிசித்தேன் என்றர். " பழனி மலைக்குச் செல்லவிரும்பிக் காலையில் ஸ்நானஞ் செய்தோம். அங்கிருந்து புறப்பட்ட நேரம் காலை 7 மணி. ஒரு மைல் தூரம் நடக்க வேண்டியிருந்தது. சிறிது தூரம் நடந்த பின் எனக்குக் களைப்பு ஏற்பட்டது. மேலுஞ் செல்லச் செல்லக் களைப்புச் கூடியது. மற்றைய இருவரும் ஒருவித களைப்புமின்றி நடந்து செல்வதைக் கண்ட நான் ஒன்றும் பேசாது நடந்தேன். கோயிலைச் சேர்வதற்குச் சிறிது தூரம் மாத்திரமிருந்தது. கிட்டப்போய்ச் சேர்ந்தவுடன் சிறிது களைப்பாறி மேலும் செல்லவேண்டுமென்று மற்றைய இருவருக்கும் சொல்ல யோசித்தேன். பழனி மலையை அண் மியவுடன் அவ்விடத்திருந்த அடி யார் ஒருவர் புன் சிரிப்புடன் என்னைப்பார்த்து களைத்தவர்கள் ஆனைப்பாதை யால் செல்லலாமெனக் கூறித் தனது கரத்தினற் பாதையை யுங்காட்டினர். மூவரும் அவ்வழியே சென்ருேம். உடனே எங்களுக்குப் பின்னே வயது முதிர்ந்த பாட்டி ஒருவர் ஒரு கையிற் தடியொன்றைத் தாங்கிய வண்ணம் தளர்ந்த நடையுடன் 'அரோகரா" என்று சொல்லிக் கொண்டு தொடர்ந்து நடந்து வந்தார். என்னுடைய களைப்பும் நீங்கி உற்சாகத்துடன் நடக்கத் தக்கதாக இருந்தது. அப்பாட் டியின் தளர்வுற்ற நடையைக்கண்டு நான் அவருக்குச் சமீ பத்தில் நடந்து சென்றேன். கோயிலினுட் புகுந்தபின் அரோ கராச் சத்தம் கேட்கவுமில்லை, பாட்டியையும் காண வில்லை". மேலும் சில அனுபவங்கள் ஏற்பட்டனவென்றும் தாம் அவைகளைச் சொல்ல விரும்பவில்லையெனவும் அந் நண்பர் கூறிஞர்.
மற்றவர்கள் ஏன் அவ்வித அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமலிருக்கின்றதென்று வினவியபோது மக் கள் கடைப்பிடித்தொழுக வேண்டிய மூக்கிய இலட்சி யங்கள் சில உள. அவைகளைப் பின்பற்றி ஒழுகி வருபவர்
களுக்கு அவ்வித அனுபவங்களைப் பெற்றுக் கொள்ள முடி
மு. 43

Page 190
3à முப்பொருள் உண்மை விளக்கம்
யும். அகிம்சை, சத்தியம், அன்பு, இரக்கம், பிறர்பொருள் விரும்பாமை பிறர்மனே விரும்பாமை, தீயவைகடிதல், நில்லவை செய்தல், சகிப்பு, மனத்திருப்தி, இறைவனுக்குச் சரண் அடைதல் ஆகியன எம்மாற் கடைப்பிடிக்க வேண் டிய இலட்சியங்களாகும்,
மண்ம் வாக்கு காயத்திகுல் பிற உயிர்களுக்குத் துன் பம் விஃாயாதிருத்தல் வேண்டும். பிறர் துன்பம் செய்த பொழுதிலும் சிவர்பீருக்குத் துன்பம் செய்யநிஃணக்காது அவர்கள் வெட்கமடையத் தக்கதாக நன்மை செய்தலே உத்தமருண்டய கொள்கையாகும்.
"இன்னுசெய்தாரை ஒறுத்தல் அவர்நான நன்னயஞ் செய்துவிடல்"
என்பது பொய்யாமொழியாகும். மற்ற உயிர்கள் வருந்தும் இன்ன&லக்கண்டு அன்புள்ள மனம் இரக்கம் அடையும், அவ்விதம் மன்னுயிர்து அன்பு காட்டுவோர் மிருகங்க ளேக் கொன்று அவைகளின் மாமிசத்தைப் புசிக்க மாட் டார்கள், பிறர்மனே விரும்டாமை ஒழுக்க நெறிக்கு இன்றி மையாததாகும். தியகாரியங்களே நீக்கி, நல்லு காரியங்களேச் செய்யவேண்டும். அதுவே அறிவுடையோரிடத்துக் கானப் படும் சிறந்த இலட்சனமாகும், எல்லாத் துன்ப இன்பங் கஃனயும் சகிக்கும் குணம் வேண்டும். அவ்விதமனப்பான்மை இன்ட துன்பம் இரண்டையும் சமமாகக் கருதும் நிஃபை உண்டாக்கும். சீது ஆத்ம ஈடேற்றத்திற்குத் துEேபுரியும், இன்:மனமானது சந்தோஷமான நிஃ பயிலிருப்பதற்கு மனத் திருப்தி வேண்டும். தன்னுடைய இச்சை செயல் எல்லாம் இறைவன் இச்சை செயலில் அடங்க வேண்டும். அதுவே தன்முனைப்பு அற்ற இடமாகும். எல்லாம் அவன் செயலென நினைந்து சரண் அடைவதால் ஆாவத்தின் வரிமை தன் நிப்போகும்.

சதுபவவியல் - சைவசமயாசிாரம்
இவ்விதமாக ஒழுக்கநெறி தவறாத எவரும் இறைவழி பாட்டினுல் சில அற்பவங்கஃா அடையலாம் ஒ மு க் + த் தைக் கடைப்பிடியாது இறைவனருாே வேண்டிநிற்போர் . அத்திவாரமிடாது வீட்டைக்கட்டி முடிச்க் லாமென எண்ணி மாற்றமடைகிரஷர்கஃாப்போன்றர்ெகளாவர். ஆகையால் இறைவன் அருஃாப்பேற்றுக் கொள்ள அங்ானெடதுே.ாரக்கு ஒழுக்கநெறி அ ப்படையாக சிப்பு:சிறது

Page 191
لملا ទំព៌, សំនាក ត្រី
நாம் எம்முடைய உடம்பைக் கள்ளூற் காண்கின் முேம். இந்த உடம்பை எடுத்த ஆன்மாவை எங்கனாற் கிான முடியவில்ஃப், ஒன்று தாலப்பொருள். மற்றது குக் தப்பொருள். ஆணுல் கண்ணுற் காணமுடியாத அப் போருஃா உயிரலாம். இறைவன் உள்ளும் புறமும் உள் ளான். அவன் அதி சூக்குமப் பொருளாவான். அவனேக் கண்ணுற் காணப்படும் உலகத்தின்மீது வைத்து அறியலாம் அல்லது அகக்கண் விஜலே உள்நோக்கி உணர்ந்து கொள்
Irels rf,
அவனுக்கு இடம் காம்ெ என்னும் எல்லே இல்ஃல. 'பார்க்குமிடமெங்கு மொரு நீக்கமற நிறைகின்ற பரீபூரணு னந்தமே " என்ற தாயுமானவர் கூற்றுக்கினங்க எல்லா அண்டங்களிலும் அங்குள்ள சட வித்துப் பொருள்களெல்லா வற்றிலும் அவன் வியாபித்திருக்கின்றன். " தன்னருள் வெளிக்குள்ளே அகிலாண்ட கோடியெல்லாம் தங்கும்படிக் கிச்சைவைத்து உயிர்க்குயிராய்" நிற்கின்ற நிலே கூறப்படு கிறது. எண்ணற்ற அண்டங்களெல்லாம் அவனுடைய அருள் வெளியில் அடங்கியிருக்கின்றன, இதுவே பரவெளி யென்றும் சிதாகாசம் என்றும் சிதம்பரம் என்றும் கூறப் படுகின்றது, அருள்வெளி என்பது இறைவனுடைய சந்நி தானமாகும், இறைவன் நீக்கமற எங்கும் காணப்படுகின்ற மையால் எங்கும் எல்லா இடங்களும் அவனுடைய சந்நி தானமாகும.
இப்பது வெளியினின்றும் அண்டவெளி தோன்றி, அதி hன்றும் மண்வெளி தோன்றும். மனவெளி என்பது மனம் விரிந்த இடம். அண்டவெளி என்பது ஒவ்வோர் அண்டத் ஒதச் சூழ்ந்திருக்கும் வெளி பரவெளி எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியிருக்கும் வெளியாகும், இறைவனுடைய வியாபகத்தை நாவுக்கரசர்,

த்துபங்சியக் - எல்லாம் நீ 出盛岛
* இருநிலகுய்த் தீயாகி நீரு மாகி
இயமான ஞயேறியுங் காற்று மாகி அருநிலய திங்களாய் ஞாயி ருகி
ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப் பெருநி லமுங் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறவுருவுந் தம்முருவுந் தாமே யாகி நெருநலேயாய் இன்ருகி நாளே யான்
நிமிர்புன் சடையடிகள் நின்ற வாறே ""
என்று கூறுவதிலிருந்து இறைவன் இடம், காலம் ஆகிய வற்றிற்கு அப்பாற்பட்டவன் என்பது விளங்குகிறது. ஞானசம்பந்தர்,
** மண்ணுெடுநீ ரனல்காலோ டாகாபம் மதிஇரவி
எண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும் பெண்ணினுேடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன் விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே"
என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கின்மூர், இத்தேவாரங் களிலே இறைவனுடைய அட்டமூர்த்தங்களும் குறிக்கப் படுகின்றன. அவன் இல்லாத இடம் இல்ல.
' எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்குஞ் சிதம்பரம் எங்குந் திருநட்டம் எங்குத் சிவமாயிருத்தலால் பிங்கெங்குந் தங்குஞ் சிவனருட் டன்விளே யாட்டதே "
என்று திருமந்திரம் கூறுகிறது. சிவபெருமா அக்குத் திருமேரி சிவசக்தியேயாகும். அச்சிவரின் ருேவானது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது, சிவபெருமானின் திரு வருட் தொழில் எல்லாம் சிவசக்தியின் வாயிலாகவே செய்யப்படு கின்றன. சிவபெருமானும் திருவருளும் திருச்சிற்றம்பலத் தின் கண்ணே விளங்கி அருள்கின்றனர் அவனுடைய திருக் சுத்தும். எங்கும் நிறைந்ததாகும். அ&னத்தும் சிவவண்ண மாகும் எல்லாம் எங்குந் தங்கும் சிவனருளின் விளையா -Tதும்

Page 192
பூப்டொ முள் தி க் விட விரீக்சு
எங்கும் பரந்து பேரொளியாய் நிற்கின்ற இறைவள் எத்தனேயோ பலகோடிப் பொருட்களிலும் அவ்வவற்றின் தன்மையை அன்வவற்றின் இடமாக நிஃக்கச் செய்தான். -lിTF#f്
'' . . . . . . . . . . . . . . . . . . 1, .......... " - 5TGL-TÜ'ıh
அருக்களிற் சோதி அமைத்தோன் திருத்தத மதியில் தண்மை வைத்தோன் திண்திறல் இயில் வெம்மை செட்தோன் பொப்திப் வானில் கலப்பு வைத்தோன் மேதகு காவின் ராக்கங் கண்டோன் நிழல்நிகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் இண்மை வைத்தோன். "
சூரியனுக்கு ஒவ்வொரு நாளும் ஒளியினேயும் அழகுபொருத் திய சந்திரனுக்குக் குளிர்ச்சியையும் நெருப்புக்கு வெப்பத் தையும், பூதங்களுள்ளே நியோன வானிலே எல்லாவற்றிற் கும் இடங்கோடுத்துக் கiந்து நிற்கும் இயல்பினோம், காற்றுக்குக் கிளர்ச்சியையும், நீருக்கு இரிேபு சுனையும் புலப்படுத்தும் தன்வியைபும் நிலத்திற்குக் கடினத்தையும் அவன் அமைத்திருக்கின் குன், புற இருனா ரது நீ'கும்படி மாகச் சூரியன்ேபும் சந்திரஃபும் இறைவன் அமைத்திருக்
కrgy it .
கண்ணுக்குக் காட்சிபரிக்காத பரம்பொருள் ஆன் மாக்கள் துேள்ள கருஃனயால் ஐந்தொழிப்ே புரிகின்ருடன்
ாண்பத்து நான்கு இலட்சபேதமான் உடல்களிடத்தே இறை வன் ஐந்தொழில் செய்வது தாலம் என்றும் அத்து: டம் ன்ே அவத்தைக் கருவிகளில் ஐந்தொழில் செய்வது ஆக் குமர் என்றும் சொல்லப்படும்.
" ஆக்க மளவிறுதி பில்லா பனோத்துலகும்
ஆக்குவாப் காப்பாய் அளிப்பா பருள் தருவாய்
என்று மணிவாசகம் கூறுகிறது. என்றுமுள்ள இறைவன் எல்லா உஸ் கிங்களேயும் படைத்துக் காத்து ஒருங்கே அழித்து பனறத்தல் அணுக்கிரகம் ஆகிய தொழில்கஃா,

சிநுபவவியல் - எல்லாம் நீ نہ تق
புரிகின்மூன். ஆன்மாக்களேப் பந்தித்த மூலமலமாகிய ஆணவமலம் குன்றிப்போவதற்காகப் படைத்தற் தொழி *லச் செய்கின்றன். ஆன்மாக்கள் பிறவி எடுத்து இன்ப துன்பங்கஃன அனுபவித்துப் பரிபக்குவம் அடையும் பொருட்டு ஆலகத்தை நிலைக்கச் செய்கின்றன். மாறிமாறிப் பல பிறவிகளே எடுத்த இளேப்பை ஆன்மாக்களுக்கு நீக்கும் போருட்டு இறைவன் உலகத்தை ஒடுக்குவான் உயிரை உலகபோகத்தில் அமிழ்த்தி அதற்குப் பக்குவம் சிறிது சிறிதாக முதிரும்படி திரோதானசத்தி செய்கிறது. இதுவே மறைத்தல் தொழிலாகும் பக்குவமான காலம் திரோதான சக்தியே அணுக்கிரக சக்தியாய் மாறி அணு க் கி ர க தி தை ஆன்மாவுக்குச் செய்கிறது.
ஆன்மாக்கள் பிறவியறத்தக்கதாகச் சிவபெருமான் பஞ்சாக்கரமே திருமே8ரியாகக்கொண்டு திருத்தஞ் செய் கின்மூர்
* எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் - விட்டன் சிவாயநம என்னுந் திருவெழுத் தஞ்சாலே அபாயமற நின் ருடுவான் '
எட்டும் இரண்டுஞ் சேர்ந்த தொகை பத்தாகும். ய என்ற எழுத்தே பத்தைக் குறிக்கிறது. யகரமாகிய ஆன்மாவிடத் திலே சிவாயநமவென்னும் திருவைந்தெழுத்தாலே ஆன் மாக்களின் பிறவித்துன்பம் நீங்கும்டொருட்டு நிருத்தஞ் செய்கின்றன். கேவலநியிேல் ஆணவத்தினூலே மறைப் 1ண்டு கிடந்த ஆன்மாவுக்குத் தணு சுரண புவன போகங் பிளேக் கொடுத்து கருவிகரணங்களின் உதவியுடன் அறிவு இச்சை செயல் விளங்கச் செய்பவனும் அவனேயாகும். இந்தச் சகலாவத்தை நிஃபிலிருந்து சுத்தாவத்தை நிஃயை அடையச் செய்பவனும் அவனேயாகும்,
" ஆடும் படி கேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதம் வசிார்தோள் சிகரம்
Li ne , 4p kit no T Fo Lite! Ĉio | Pri ili '"

Page 193
ஆப்டோருள் கஃசிட விளக்கம்
எங்கும் பரந்து பேரொளியாய் நிற்கின்ற இறைவன் எத்தனேயோ பலகோடிப் பொருட்களிலும் அவ்வவற்றின் தன்மையை அவ்வவற்றின் இடமாக நிஃக்கச் செய்தான். --- I'm sfigħ TITFAEiri
"" • . . . . . . . ............. ... ******... . . . . .-- 15 TGFL-fr Efyth
அருக்கனிற் சோதி அமைத்தோன் திருத்தது மதியில் தண்மை வைத்தோன் திண்திறல் தியில் வெம்மை செய்தோன் பொப்திப் வாவில் கலப்பு வைத்தோன் மேதகு காவின் ஒளக்கங் கண்டோன் நிழல் திகழ் நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட மண்ணில் திண்மை வைத்தோன். "
சூரியனுக்கு ஒவ்வொருநாளும் ஒளியினேயும் அழகுபொருந் திய சந்திரனுக்குக் குளிர்ச்சியையும் நெருப்புக்கு வெப்பத் தையும், பூதங்களுள்ளே நிலேயான வானிலே ராஸ்லாவற்றிற் கும் இடங்கொடுத்துக் கலந்து நிற்கும் இயல்பினேயும், காற்றுக்குக் கிளர்ச்சியையும், நீருக்கு இனிய கலையையும் புலப்படுத்தும் தன்மையையும் நிலத்திற்குக் கடினத்தை/ம் அவன் அமைத்திருக்கின்ருன் புற இருளானது நீங்கும்படி யாகச் சூரியனே யும் சந்திரனேயும் இறைவன் அமைத்திருக் கின்றன்.
சுண்ணுக்குக் காட்சியளிக்காத பரம்பொருள் ஆன் மாக்கள் மீதுள்ள கருஃணயால் ஐந்தொழிஃப் புரிகின்ீன் எண்பத்துபூான்கு இலட்சபேதமான உடல்களிடத்தே இறை வன் ஐந்தொழில் செய்வது தாலம் என்றும் அத்துரவ உடம் பின் அவத்தைக் கருவிகளில் ஐந்தொழில் செய்வது சூர் குமம் என்றும் சொர்விப்படும்.
" ஆக்க மளவிறுதி யில்லா யனேத்துலயூம்
ஆக்குவாய் காப்பாய் அளிப்பா பருள் தருவாய் "
என்று ம:ரிவாசகம் கூறுகிறது என்றுமுள்ள இறைவன் எல்லா உலகங்களேயும் படைத்துக் காத்து ஒருங்கே அழித்து மறைத்தல் அணுக்கிரகம் ஆகிய தொழில்கண்

கீநுபவவியல் - எல்லாம் நீ 品星品
புரிகின்மூன். ஆன்மாக்களேப் பந்தித்த மூலமலமாகிய ஆணவமலம் குன்றிப்போவதற்காகப் படைத்தற் தொழி லேச் செய்கின்றன். ஆன்மாக்கள் பிறவி எடுத்து இன்ப துன்பங்க*ள அனுபவித்துப் பரிபக்குவம் அடையும் பொருட்டு உலகத்தை நிலைக்கச் செய்கின்றன். மாறிமாறிப் பல பிறவிகளே எடுத்த இளேப்பை ஆன்மாக்களுக்கு நீக்கும் பொருட்டு இறைவன் உலகத்தை ஒடுக்குவான் உயிரை உலகபோகத்தில் அமிழ்த்தி அதற்குப் பக்குவம் சிறிது சிறிதாக முதிரும்படி திரோதானசத்தி செய்கிறது. இதுவே மறைத்தல் தொழிலாகும் பக்குவமான காலம் திரோதான சக்தியே அணுக்கிரக சக்தியாய் மாறி அணு க் கி ர க த்தை ஆன்மாவுக்குச் செய்கிறது.
ஆன்மாக்கள் பிறவியறத்தக்கதாகச் சிவபெருமான் பஞ்சாக்கரமே திருமேனியாகக்கொண்டு நிருத்தஞ் செய் கின்றர்
* எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே நட்டம் புதல்வா நவிலக்கேள் - கிட்டன் சிவாயநம என்னுந் திருவெழுத் தஞ்சாலே அபாயமற நின் ருடுவான் '
எட்டும் இரண்டுஞ் சேர்ந்த தொகை பத்தாகும். ய என்ற எழுத்தே பத்தைக் குறிக்கிறது. யகரமாகிய ஆன்மாவிடத் திலே சிவாயநமவென்னும் திருவைந்தெழுத்தாலே ஆன் மாக்களின் பிறவித்துன்பம் நீங்கும்பொருட்டு நிருத்தஞ் செய்கின்ருன், கேவலறிலேயில் ஆனவத்தினுலே மறைப் புண்டு கிடந்த ஆன்மாவுக்குத் தனு காண புவன போகங் க3ளக் கொடுத்து கருவிகரணங்களின் உதவியுடன் அறிவு இச்சை செயல் விளங்கச் செய்பவனும் அவனேயாகும். இந்தச் சகலாவத்தை நிலேயிலிருந்து சுத்தாவத்தை நிலையை அடையச் செய்பவனும் அவனேயாகும்,
" ஆடும் படி கேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருவடியி லேநகரம் - கூடும் மகரம் உதரம் வசிார்தோள் சிகரம்
பகருமுகம் வாழடிப் In ""

Page 194
55 plan Luriya RLAR" adlı adlar" dedib
இறைவன் எங்கு இருக்கிருf? அவரைக் காணமுடி யுமா? எனப் பல கேள்விகள் எழ இடமுண்டு. சிவனுடைய அருஃாப் பெற்றுச் சிவனுடன் இரண்டறக் கலந்தவர்களு டைய நிருவாக்கு இவ்விதமான கேள்விகளுக்கு விடை அளிக்கின்றன. "அவனருளே கண்ணுகக் காணினல்லால் இந் நிறுத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொனுதே' என்று நாவுக்கரசர் கூறுகிருர், அவனு டயை அருஃாப் பெற்றுக் கொள்ளும் நாள் எந்நாளோ, அன்றே இறைவனே உள்ளே உணர்ந்து கொள்ளலாம்,
"காண்பார்க்குக் காணலாம் தன்னமயனே கைதொழுது காண்பார்க்குக் காணலாம் காதலாற் - காண்பார்க்கு சோதியாட்ச் சிந்தையுட் தோன்றுமே தொல்லுலகு காதிபா நின்ற அரண்'
ான்று காரைக்கால் அம்மையார் திருவாய் மலர்ந்தருளி ணுர். இங்கு தரிசிப்பவர், தொழுபவர், தியானஞ்செய்பவர் என்னும் மூவகையினருக்கு இறைவன் காட்சியளிப்பர்.
ஆன்மாக்கள் பிறவிப்பெருந்துயரினின்று நீங்குவதற் ' ம் துனேயாய் இருப்பான் அவனே,
'. . . . பொய்கெட்டு மெப்பாளுர் மீட்பங்கு வந்து வினேப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே "
என்று மள்ளிவாசகர் கூறுவதைக் கவனிப்போம். மும்மலங்க எாாற் பிசளிக்கப்பட்டு மீண்டும் பல பிறுவிகளே எடுத்து உழன்று நிற்கும் ஆன்டா சிவனுடைய திருவடியைப் பெறு வதினூலேயே பிறவித்துயரை நீக்க முடியும். பேரானந்தப் பெருவாழ்வில் சேர்ப்பிப்பவனும் அவனேயாவன். பெத்த "லேயிலும் தோன்ருத் துண்யாய் இருக்கின்றன்.

அநுபவவியல் எல்லாம் நீ Ꭶ4 7
அப்பன்நீ அம்மைநீ ஐயனும்நீ அன்புடைய மாமனும்
மாமியும்நீ
ஒப்புடைய மாதரும் பொண்பொருளும்நீ ஒரு குலமும்
சுற்றமும் ஒருரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய்நீ துண்யாய்
என் நெஞ்சம் துறப்பிப்பாய்நீ
இப்பொன்நீ இம் மணிந் இம்முத்தும்நீ இறைவ நீ
ஏறார்ந்த செல்வன் ፰Gu''
என்பது அப்பரி தேவாரம், ஒவ்வொரு ஆன்மாவுக்கும் முன்செய்த புண்ணிய பாவத்திற்கேற்ற வண்ணம். தந்தை தாய், மாமன், மாமி, மனேவி. பொருள், குலம், சுற்றம்,மற் றும் அனுபவிப்பன யாவும் இறைவன் ஆஃணயால் கிடைக் கப்பெறுகின்றன. ஆகையால் சொல்லப்பட்ட யாவும் அவனேயாவன். அவனருளே துனேயாய் நின்று உள்ளிருக் கும் இறைவனே நாம் உணரச் செய்கின்றது, உலகத்திற் காணப்படும் எப்பொருளும் அவனேயாவன்,
உலகத்திலே வாழும் உயிர்களின் பக்குவ நிலேக்கு ஏற்றவண்ணம் இறைவழிபாடு நடைபெறும், ஒரறிவு உள்ள மரம், ஈரறிவுள்ள சங்கு சிப்பி, மூவறிவுள்ள கறை யான் எறும்பு நான்கறிவுள்ள வண்டு, ஐந்தறிவுள்ள மிரு சும் பறவை ஆறறிவுன்ன மனிதர் ஆகிய எல்லா உயிர் களுக்கும் இறைவன் தோன்றத்துணையாய் எக்காலத்தும் அவைகளேவிட்டு நீங்காது நின்று அருஃாப் பாவிக்கின்மூன். ஆறறிவு பெற்ற மனிதரே இறைவனே வணங்கவும் அவர் கள் மீது அவன் காட்டும் கருஃனயையும் உணர்ந்துகொள் ளவும் முடியும். அருபியாயுள்ள சிவன் உயிர்கள் ஈடேறும் பொருட்டுத் திருவுருவங்கண் எடுத்துக் கோயில் கொண் டெழுந்தருளியிருக்கின்ருர், விநாயகர், முருகன், வயிரவர், வீரபத்திரர், சிவன், தேவி ஆகியோருக்கு அமைக்கப்பட்ட கோயில்களில் மக்கள் அத் திருவுருவங்களைத் தினமும் ரண்டு தரிசிப்பதால் அவர்களுடைய மனம் அதிலே இவ

Page 195
348 முப்பொருள் உண்மை விளக்கம்
யித்து நிற்கும். பக்தர்கள் எவ்வுருவத்தை மனக்கண்பதித்து வழிபடுகின்றனரோ அவ்வுருவத்தில் இறைவன் காட்சிய ளித்து அருள் புரிவான்.
"எவ்வுருவில் யாரொருவர் உள்குவார் உள்ளத்துள் அவ்வுருவாய்த் தோன்றி அருள் கொடுப்பான். எவ்வுருவும் தானேயாய் நின்றளிப்பான் " " 99. ? ?
என்று 'திருக்சுைலாய ஞானஉலா'வில் சேரமான்பெரு மாள் நாயனர் கூறுவது கவனிக்கற்பாலது மேலும் பதிப் பொருள் ஒன்றே என்றும் ஒரே தன்மையாய், பிறப்பு இறப்பு இல்லாததாய் இருத்த லிஞல் அவ்விறைவன் ஒரு வனே அவ்வத் தேவரிடமாக நின்று உயிர்கட்கு வேண்டிய வற்றைக் கொடுக்க வல்லவன் ஆவன் இது பற்றியே சிவ ஞான சித்தியார்
"யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வம் ஆதி அங்கே மாதொரு பாக ஞர் தாம் வருவர் மற் றத்தெய் வங்கள் வேதனைப்படும்இ றக்கும் பிறக்கும் மேல்வினையுஞ் செய்யும் ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வான் அன்றே" என்று கூறுகின்றது,
'வேண்டுவார் வேண்டுவதை ஈவான் கண்டாய்' என்ற பெரும் உண்மையை நாவுக்கரசர் தேவாரம் கூறுகிறது. உலக இன்பங்களை விரும்புகிறவர்களுக்கும், வீட்டின்பத்தை விரும்புகிறவர்களுக்கும் அவரவருடைய பக்குவத்துக்கேற்ப அளிக்கும் தண்ணளியுடையவர் சிவபெருமான் ஆவர். ஒவ் வொரு ஆன்மாவும் கன்மவினையை அனுபவித்தேதீர வேண் டும். உண்மைநிலையில் நின்று ஒழுகும் பக்த ர் களு க் கும் உபாய நிலையில் நின்று வேண்டுபவர்க்கும் கேட்டவண். ணம் அளிக்க இறைவன் சித்தமாயிருக்கிருன் காமம் , கோபம், குரோதம், லோபம், மதம், மாச்சாரியம்ஆகிய உட் பகைகளை இயலக்கூடிய அளவு நீக்கிப் ப டி ப் படி யாக pனத்தூய்மை அடையும் பக்தர்களுக்கு விரைவிலும் ஏனை

அநுபவவியல் - எல்லாம் 岛 349
யோர்க்கு ஆறுதலாகவும் வேண்டுபவற்றை ஈசன் கொடுக் கிருன். எல்லோருக்கும் அவன் கருணை காட்டுகிமுன், என் பது உண்மை. நம்பிக்கையுடனும் இடையருப் பக்தியோ டும் தூய சிந்தையோடும் சன்மார்க்க நெறியில் நின்று வேண்டி நிற்போருக்கு இறைவனுடைய அனு க் கி ரக ம் கிடைக்கும்.
இறையருள் வசப்பட்டு நின்ற நிலையில் மாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருவாசகம் இதனைப்பற்றிக் கூறு வதைக் கவனிப்போம்.
"வேண்டத் தக்கதறிவோய்நீ வேண்ட முழுதுந் தருவோய்நீ வேண்டு மயன்மாற் கரியோய்நீ வேண்டி யென்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீயா தருள்செய்தா யானுமதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னி லதுவு முன்றன்
விருப்பன்றே"
நான் விரும்பத்தக்கவற்றை அறிபவன் நீயே. உன்னிடம் இரந்து நான் விரும்பியவற்றைக் கேட்க முழுவதையும் தருபவன் நீயே. உ னை க் கா ண விரு ம் பி ய பிர ம னு க்கு ம் திருமாலுக்கும் காணுதற் கரியவனுய் நின்ற வனும் நீயே, என்னை நீயே விரும் பி வந்த ரட் கொண்டாய். என்னை விரும்பி அருள் செய்தாயே. நானும் அதனையே விரும்புவதல்லாமல் வேருென்றில்லை. மேலும் நான் விரும்பக்கூடியது யாதும் இருக்குமாகில் அதுவும் உன்னுடைய விருப்பத்தின்படி நிகழ்வதல்லவா எனத் தன் செயலற்று எல்லாம் அவன் செயலாலே நிகழ்வது என்ற உண்மையை விரித்தோதியுள்ளார். யான் எனது என்னும் உட்பற்றும் வெளிப்பற்றும் அற்ற நிலையில் 'என்னே நான் என்பது அறியேன்" என்ற நிலையுண்டாம். திருவருள் வசப் பட்டு நிற்கையில் தனக்கு யாது தேவையோ அதை நல்குப வன் அவனேயாவன்,

Page 196
350 முப்பொருள் உண்மை விளக்கம்
இறைவனுக்கு வேருக யாதொரு பொருளுமில்லை. எல் லாவற்றையும் இயக்குபவனும் எல்லாம் நிகழ்வதற்குக் கார ணமானவனும் இறைவனவன். எல்லாவற்றேடும் அத்துவித மாய்க் கலந்திருத்தலால் கருவி கரணங்கள் எல்லாம் அவ னேயாவான். உண்மையாக அவன் தன்மையை விரித்துச் சொல்லின் நன்மை தீமை முழுதும் அவனேயாவன். அவ னுக்கு வேருக யாதொரு பொருளையோ, தன்மையையோ, இயல்பையோ கூறுவதற்கிடமில்லை. வீடுகிடைக்குமோ என்ற திகைப்பை அவனே மாற்ற வேண்டும். அதிலிருந்து தெளிவடையும் வழியும் அவனுக்கே உரியது. இக்கருத்துக் கொண்ட திருவாசகம் இறைவனுடைய வியாபகத்தையும் அத்துவித நிலையையும் எல்லாம் அவஞய் நிற்கும் நிலையை யும் உணர்த்துகிறது.
"கூறும் நாவே முதலாகக் கூறும் கரணம் எல்லாம் நீ தேறும் வகைநீ திகைப்பும்நீ தீமை நன்மை முழுதும்நீ வேறேர் பரிசிங் கொன்றில்லை மெய்ம்மை உன்னை விரித்துரைக்கில் தேறும் வகைஎன் சிவலோகா திகைத்தால் தேற்ற
வேண்டாவோ??
எல்லாம் நீயே என்ற உண்மையை இத்திருவாசகம் எடுத்துரைக்கின்றது. உலகத்திலே நன்மையும் உண்டு தீமையும் உண்டு இரண்டும் கலந்து இருக்கின்றன. முள் ளுள்ள பூச்செடிகள் உள, அழகும் மணமும் உள்ள பூக்கள் கண்ணைக் கவருகின்றன, அப்பூக்கள் இறைவனுக்குச் சமர்ப் பிக்கவும். நற்கருமங்களுக்கு உபயோகிக்கவும் பயன்படு கின்றன. பூவைக்கொய்யும்போது செடியில் உள்ள முள் ளானது குத்தி வேதனைப்படுத்துகின்றது. அதனையும்பாராது தேவைக்குரிய நல்ல பொருளை எடுக்கின்ருேம். அதுபோன்று நல்ல காரியங்களைச் செய்யும்போதெல்லாம் இடையூறுகள் நேரிடுவது இயல்பு அவைகளை விலக்கிவிட்டுத் தொழில் புரிபவர்க்கு எடுத்துக்கொண்ட முயற்சி அனுகூலமாகும் முள்ளும் பூவும் போல தீமையும் நன்மையும் அவனேயாவன்

அநுபவவியல் - எல்லாம் நீ 85.
ஞானசம்பந்தர்
"குற்றம்நீ குனிக்கள்நீ கூடலால வாயிலாய் சுற்றம் நீ பிரானும்நீ தொடர்ந்திலங்கு சோதிநீ கற்றநூற் கருத்துநீ அருத்த மின்ப மென்றிவை முற்றுநீ புகழ்ந்துமுன் னுரைப்பதென்மு கம்மனே"
என்று திருவாய்மலர்ந்தருளியுள்ளார். இதிலே எல்லாவற் றையுங் கூறி ஈற்றில் " முற்று நீ " எனக் கூறியிருப் பதைக் கவனிக்க வேண்டும். ' அவனன்றி ஓரணுவும் அசையாது " என்ற உண்மையை அறிந்து அவனிடம் சரணடைந்து திருவருட் துணைகொண்டு சிவபெருமானின் திருவடி அடைதலே எங்களுடைய வாழ்க்கையின் குறிக் கோளாய் இருக்கவேண்டும். அவனருளாலே அவன்தாளை வணங்குவோமாக, எல்லாம் சிவமயம்.
'உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!"
"எந்தாயு மெனக் கருடந் தையுநீ சிந்தா குலமானவை தீர்த் தெனையாள் கந்தா கதிர்வே லவனே உமையாள் மைந்தா குமரா மறைநாயகனே"
-கந்தரநுபூதி

Page 197


Page 198


Page 199